<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-17T11:31:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராஜதந்திர பொருளாதாரப் பாலமாக அமையும் இலங்கை - நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-on-sri-lankan-economy-1784286647"></link>
            <id>https://tamilwin.com/article/namal-on-sri-lankan-economy-1784286647</id>
            <summary type="text">ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கக் கண்டங்களை இணைக்கின்ற ஒரு நம்பகமான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற்றம் பெற வேண்டும் என நாமல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கக் கண்டங்களை இணைக்கின்ற ஒரு நம்பகமான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற்றம் பெற வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.</p><p>

உலகப் பொருளாதாரக் ஒத்துழைப்புக்கான கிழக்கு உச்சி மாநாடு அண்மையில் சிங்கப்பூரில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற்றுள்ளது. 

சர்வதேச பொருளாதார நிபுணர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் முக்கிய கலந்துரையாடல் குழுவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், மில்கன் இன்ஸ்டிடியூட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான கேர்டிஸ் எஸ்.சின் ஆகியோருடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிராந்தியத்தின் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>



 பொருளாதாரப் பாலமாக மாறும் இலங்கை</h2><p>


அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 


நாம் இந்தியப் பெருங்கடலின் ஒரு தசாப்தத்துக்குள் மாத்திரம் நுழையவில்லை. மாறாக, ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடலின் நூற்றாண்டுக்குள்ளேயே நாம் கால் தடம் பதிக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea811139-e102-4f87-bd3c-41720f7db4b8/26-6a5a0df969812.webp' /></p><p>
</p><p>பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாகரிகங்களை ஒன்றிணைத்த பெருமை இந்த இந்தியப் பெருங்கடலுக்கு உண்டு.

தற்போதைய சூழலில், அது உலகத்தின் எதிர்காலத்தை இணைக்கும் மையப்புள்ளியாக மாற வேண்டும்.
</p><p>
அதே போன்று ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கக் கண்டங்களை இணைக்கின்ற ஒரு நம்பகமான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற வேண்டும். </p><p>இதற்கான மூலோபாயத் திட்டமிடல்களை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T11:12:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் வீடு புகுந்து கொடூரத் தாக்குதல் : இரு பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mullaitivu-attack-five-people-admit-hospital-1784283131"></link>
            <id>https://tamilwin.com/article/mullaitivu-attack-five-people-admit-hospital-1784283131</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ)
பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25இற்கும்
மேற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ)
பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25இற்கும்
மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர்
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்றையதினம்(16.07.2026) மாலை இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட
வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த தாக்குதல்
சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>
தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் முல்லைத்தீவு
மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>அதில்
ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F912591798539843%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>தாக்குதலின் போது வீட்டின் கூரையை உடைத்து உள்நுழைந்த கும்பல், வீட்டின்
கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பெறுமதியான மரத்
தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0532fb1-596b-497a-8ad8-ee10f46ff072/26-6a5a03eda4a24.webp' />&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T10:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[திசைகாட்டி அரசை வீட்டுக்கு அனுப்பும் காலம் கனிந்துவிட்டது - சஜித் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-time-has-come-to-send-npp-government-home-1784278947"></link>
            <id>https://tamilwin.com/article/the-time-has-come-to-send-npp-government-home-1784278947</id>
            <summary type="text">தற்போதைய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு,
அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு,
அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். </p><p>இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை
விவசாயிகளே தொடங்கிவிட்டனர் என்றும், கடந்த காலங்களில் மக்கள் எவ்வாறு
தங்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஜனாதிபதிகளை விரட்டியடித்தார்களோ, அதே கதி
இவர்களுக்கும் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>அம்பாந்தோட்டை, வீரவில பிரதேசத்தில் நேற்று(16) நடைபெற்ற விவசாயிகளுடனான
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே&nbsp; இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>அரசின் போலியான வாக்குறுதிகள்</h2><p>மேலும் உரையாற்றுகையில்,&nbsp;"நெல் ஒரு கிலோவை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகும் நிலையில், அரசு 120
ரூபாவையே உத்தரவாத விலையாக வழங்குகின்றது. </p><p>இதனால் ஒரு கிலோவுக்கு 17 ரூபா
நட்டம் ஏற்படுகின்றது. தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 150 ரூபா
உத்தரவாத விலை வழங்கப்படவில்லை.

தரமற்ற உரம் மற்றும் கிருமிநாசினிகளின் இறக்குமதி, உர மானியம் சரியான
நேரத்தில் கிடைக்கப்பெறாமை மற்றும் உர உபகரணங்களின் விலை உயர்வு காரணமாக
விவசாயிகள் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a77fc34-6c3c-460a-a143-b631402d7cb8/26-6a59f5d937c97.webp' /></p><p>நாட்டின் 30வீதம் முதல் 40வீதம் மக்கள் வறுமையில் வாடுவதற்கு அரசின் தவறான கொள்கைகளே காரணம்.&nbsp;விவசாயப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும்
வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. </p><p>விவசாய அமைச்சர் ஊடகவியலாளர்களைப் பார்த்து
விரல் நீட்டும் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றார்.&nbsp;கடந்த காலங்களில் மக்கள் எவ்வாறு
தங்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஜனாதிபதிகளை விரட்டியடித்தார்களோ, அதே கதி
இவர்களுக்கும் ஏற்படும்.
</p><p>
எத்தகைய தடைகள் வந்தாலும், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்
விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இந்த அரசின்
போலியான வாக்குறுதிகளை நம்பி இனியும் ஏமாற வேண்டாம் என விவசாயிகளிடம்
கேட்டுக்கொள்கின்றேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T09:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் மா அதிபரின் மரணம் - பொலிஸ் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-death-police-1784279297"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-death-police-1784279297</id>
            <summary type="text">மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்கிரம வீதத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று(17) அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்கிரம வீதத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று(17) அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) சி.டி. விக்ரமரத்னவின் மரணத்தை இலங்கை பொலிஸ் இன்று ஒரு உத்தியோகப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமரத்ன, அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக பொலிஸாரர் தெரிவித்துள்ளனர். </p><p></p><h2>35வது பொலிஸ் மா அதிபராக</h2><p>இச்சம்பவம் தொடர்பாக மாலபே பொலிஸ் நிலையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27b04fa6-d62e-443c-a37c-7e0cf07ed399/26-6a59f40201907.webp' /></p><p> மேலும், மேற்கு மாகாண தெற்குப் பிரிவு குற்றப்பிரிவு, மாலபே பொலிஸாருடன் இணைந்து இதுகுறித்த மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.
</p><p>
விக்ரமரத்ன, 2020 நவம்பர் 27 முதல் 2023 நவம்பர் 23 வரை இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T09:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-easter-attack-1784268227"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-easter-attack-1784268227</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலைமையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலைமையில் செயற்பட்ட பிரதான குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவும் இருந்துள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.</p><p>&nbsp;அதன் முழு விபரங்கள்...</p><p>
அன்றைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சுக் கட்டடத்தின் மேல் மாடியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், காலை ஒன்பது மணிக்கு குறித்த குழு கூடியுள்ளது. </p><p>அந்தக் குழுவில் சரத் வீரசேகர, ஜெனரல் ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன, சி.டி. விக்ரமரத்ன அன்று பொலிஸ் மா அதிபர் (IGP) ஆகியோரே முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலங்கையின் பொலிஸ் மா அதிபர் அன்று குற்றவாளிகளைப் பிடிக்கும் இடத்தில் இருக்கவில்லை. </p><h2>


</h2><p></p><h2>சாட்சியங்களை அழித்த விதம்</h2><p>சீருடையை அணிந்து கொண்டு சரத் வீரசேகர போன்றவர்களுடன் இணைந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பெருமளவிலான சாட்சியங்களை அழித்துள்ளார்.</p><p>அதில் முக்கியமானது உயிருள்ள சாட்சியாக இருந்த 'சாரா ஜஸ்மின்' இறந்துவிட்டார் என்று காட்டுவதற்காக, மூன்றாவது டி.என்.ஏ (DNA) பரிசோதனையைச் செய்வதற்கு முன்பு முதலாவது, இரண்டாவது என்று சிலவற்றை செய்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b50a0300-9b43-4df3-aab4-59da944ebf33/26-6a59f3f0b5af8.webp' />&nbsp;</p><p> </p><p>
இந்தக் கும்பல் நடத்தும் கூட்டத்திற்கு வேறு யாருமே செல்ல முடியாது. அன்றைய தினம் அந்தக் கட்டடத்திற்கு சுரேஷ் சலே வந்தவுடன், அனைத்துக் கதவுகளும் முழுமையாக மூடப்படும். இராணுவம் நிறுத்தப்படும். </p><p>இந்தக் கலந்துரையாடல் முடியும் வரை கமாண்டோக்கள் (Commandos) கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். அந்தக் கலந்துரையாடலில்தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. </p><p>சாரா ஜஸ்மின் இறந்துவிட்டார் என்பதை காட்ட வேண்டும் என்பதுதான் சுரேஷ் சலேயின் தீர்மானமாக இருந்தது. 
எந்த வழியில் இவர்கள் சூழ்ச்சி செய்தாலும், </p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துச் சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன்னும் மிக வலுவான, உறுதியான சான்றுகளாக இருக்கின்றன. இதனால் தான் சலேயின் மனைவி இப்போது காணாமல் போயுள்ளார்.</p><h2>
 ஜகத் அல்விசின் வெள்ளை வான் கடத்தல்</h2><p>மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். வெள்ளை வான் கடத்தல்களைச் செய்தவர் தான் இவர். ஜகத் அல்விஸ்தான் நேரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். </p><p>ஜகத் அல்விஸ்தான் கோட்டாபயவின் தேவைக்கேற்ப போத்தல ஜயந்த போன்றவர்களின் கை-கால்களை உடைக்க உத்தரவிட்டார். கோட்டாபயவின் மிக நெருங்கிய நண்பன், அத்தனை விசுவாசி.
</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எந்தெந்தச் சாட்சியங்களை அழிப்பது? எந்தச் சாட்சியங்களை நாம் புதிதாகக் கொண்டு வருவது என்று ஒவ்வொறு திங்கட்கிழமையும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e331bf-ad28-4213-b6c8-3c315a717561/26-6a59c5c54a462.webp' /></p><p>இப்படித்தான் நௌபர் மௌலவி போன்றவர்களை முழுமையாக கோர்த்து விட்டு, 33 ஆயிரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். அதற்குப் பொருத்தமாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தும் அவர்களுக்கு தேவையான ஆட்களை கண்டு பிடித்தார்கள். </p><p> சுரேஷ் சலே போன்றவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சென்று விரிவுரைகள்நடத்தினார்கள். விரிவுரைகள் நடத்திய ஆட்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வரவழைத்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். </p><p>இதை ஒரு மிக கட்சிதமான நாடகமாக உருவாக்கினார்கள். 
 குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுரேஷ் சலே, சி.டி. விக்ரமரத்ன, ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன ஆகியோர் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் திங்கட்கிழமை காலையில் நடத்திய அந்த இரகசியக் கலந்துரையாடல்கள் என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_2SIDUbs3cs" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T09:08:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-mayor-of-colombo-municipal-council-1784277488"></link>
            <id>https://tamilwin.com/article/former-mayor-of-colombo-municipal-council-1784277488</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க நியமிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று(17.07.2026) முன்னிலையாகியுள்ளார். </p><p>

கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​அவர் மேயராக இருந்த காலத்தில், சதொச எனும் அரசாங்க நிறுவனம் மூலம் குறைந்த வருமானம் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கிய திட்டம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு</h2><p>
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், </p><p>


"நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​நாங்கள் சதொச மூலம் ஏழைகளுக்கு உணவு வவுச்சர்களை வழங்கினோம். 

அந்தத் திட்டம் தொடர்பான அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே நான் அழைக்கப்பட்டேன் என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c4dd44-1b81-48d2-94e0-ef78236da308/26-6a59e9f2b8518.webp' /></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dl6pEb__B7U" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-17T08:39:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாடசாலை மாணவனை மிரட்டி போதைப்பொருள் கடத்திய கும்பல்..! விசாரணையில் சிக்கிய பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-threatens-school-student-in-colombo-1784276481"></link>
            <id>https://tamilwin.com/article/gang-threatens-school-student-in-colombo-1784276481</id>
            <summary type="text">கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவரொருவரை மிரட்டி போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திக் கொண்ட கும்பலொன்று தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவரொருவரை மிரட்டி போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திக் கொண்ட கும்பலொன்று தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. </p><p>

கொலை அச்சுறுத்தல் விடுத்து 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவரைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான தகவல் கடலோரப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>


கொழும்பில் சிக்கிய மாணவன்</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கொழும்பு வடக்கு பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பொலிஸ் போர் மோட்டார் சைக்கிள் பிரிவு குழுவினர், புதுச் செட்டித் தெரு பகுதியில் அண்மையில் விசேட ரோந்து நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மாணவன் தொடர்பில் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது. 

இதனையடுத்து, குறித்த மாணவனை விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b2a314-5513-4912-9404-42ba40916e85/26-6a59e715a3b5c.webp' /></p><p>
</p><p>
குறித்த மாணவர் வைத்திருந்த மெழுகுப் பையில் அதிக அளவிலான பண நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீது வலுவான சந்தேகம் எழுந்ததால் பொலிஸ் நிலையத்திற்குக் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
அதன் பின்னர் நடத்தப்பட்ட உடல் சோதனையின்போது, ​​அவர் அணிந்திருந்த உள்ளாடைக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><h2> 

மிரட்டிப் போதைப்பொருள் கடத்தல்</h2><p>

கைது செய்யப்பட்ட மாணவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை வெளியிடப்படாத பல முக்கிய தகவல்கள் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/323b2104-5b88-4bf5-bc6a-7def5a803299/26-6a59e7166fd35.webp' /></p><p> 

சந்தேகத்திற்குரிய மாணவரின் பெற்றோர் பேலியகொட மீன் சந்தையில் ஒரு உணவகத்தை நடத்தி வருகின்றனர், மேலும் மாணவரும் அவரது தங்கையும் மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர்.
</p><p>
சில மாதங்களுக்கு முன்பு, பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இந்த மாணவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அணுகி, அவரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.</p><h2>


பணம் கொடுத்து நபர்</h2><p>
பின்னர் மாணவரின் கைபேசி எண்ணைப் பெற்ற அந்த நபர், அவரிடம் ஒரு பொதியைக் கொடுத்து, அதை வீட்டில் மறைத்து வைக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

தொலைபேசி அழைப்புகளில் அறிவுறுத்தப்பட்டபடி, மட்டக்குளி, கிராண்ட்பாஸ் மற்றும் பேலியகொட போன்ற பகுதிகளுக்கு அவ்வாறான பொதிகளை எடுத்துச் செல்லுமாறு மாணவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

மரண பயத்தின் காரணமாக அந்தப் பொதிகளைத் தான் திறந்து பார்க்கவே இல்லை என்று அந்த மாணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c2530ee-bf78-47e0-9ee1-3862a14462dd/26-6a59e7171d0a8.webp' /></p><p>

கடத்தல்காரர்கள் இந்த செயற்பாடுகளுக்காக மாணவருக்கு அவ்வப்போது பல்வேறு தொகைகளைக் கொடுத்துள்ளனர். </p><p>கொத்து ரொட்டி போன்ற உணவுகளை வாங்கிச் சாப்பிட அந்தப் பணத்தைப் பயன்படுத்தியதாக அந்த மாணவர் கூறியுள்ளார்.
</p><h2>
விசாரணையில் சிக்கிய 2 பெண்கள்</h2><p>
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பணப்பை தொடர்பில் விசாரணை செய்தபோது, ​​இரண்டு பெண்கள் அந்தப் பணப் பையை மாணவரிடம் கொடுத்து, அதனுள் இருக்கும் போதைப்பொருள் பொட்டலத்தைத் தன் உடலில் மறைத்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இலக்காகியுள்ள குறித்த மாணவர் கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாணவர் என்பதுடன், அவர் க.பொ.த. உயர்த் தரப் பரீட்சை எழுதி, அதில் ஒரு 'ஏ' (A) தேர்ச்சியும், இரண்டு 'பி' (B) தேர்ச்சிகளும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a78c901e-fa75-4db0-b363-2e98fd80bd7a/26-6a59e717c2dd3.webp' /></p><p>சந்தேகத்திற்குரிய அந்த மாணவர், கடலோரப் பொலிஸ் நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியான விவேகானந்த மாவத்தையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் கடலோர பொலிஸ் நிலையப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T08:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் கைதிகள் அல்ல! வெளிவந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-violence-1784258790"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-violence-1784258790</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் &#039;தண்டனை பெற்ற கைதிகள்&#039; என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் 'தண்டனை பெற்ற கைதிகள்' என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர். </p><p>
ஆனால், உயிரிழந்த 21 பேரும் சந்தேக நபர்கள் ஆவர்.
அதாவது, உயிரிழந்த அதிகாரிகளைத் தவிர ஏனைய 21 பேரும் சந்தேக நபர்கள் என தென்னிலங்கை ஆங்கில பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமிந்தர பேர்டினென்டோ (Shamindra Ferdinando) கண்டுபிடித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>சிறைச்சாலைத் திணைக்களம் வழங்கிய&nbsp; தகவல்</h2><p>இவ்விடயம் தொடர்பில் அவர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் குறிப்பிட்ட விடயங்கள்.
</p><p>கைதிகளுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். ஆனாலும் கைதிகள் என்ற வரையறைக்குள் தடுத்து வைத்திருப்பவர்களும் அடங்குகின்றனர்.</p><p>ஆனால் அரசாங்கம் இவர்களை சந்தேக நபர்கள் என்று ஏன் சொல்லவில்லை. இவர்கள் சந்தேக நபர்களா அல்லது தண்டனை கைதிகளா என்பது தொடர்பில் சிறைச்சாலை ஆவணங்களில் குறிப்பெடுக்கப்படும்.ஆனால் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5521889e-affb-43ae-890a-0dc68d3e51a3/26-6a59a0e8859c9.webp' /></p><p>சிறைச்சாலைத் திணைக்களத்திலிருந்து கிடைத்த விசேட தகவல்கள் மூலம் நாம் இதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.
'சந்தேக நபர்' என்பவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் அல்ல. </p><p>நீதிமன்ற விசாரணை செயல்முறையின் மூலம் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை, அவர் குற்றம் செய்யாத ஒரு நிரபராதியாகவே கருதப்படுவார். அதேபோல காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சந்தேக நபர்கள் தான்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T08:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரகித ராஜபக்ச மற்றும் சரித உள்ளிட்ட மூவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rakitha-rajapakshe-charith-abeysinghe-remanded-1784273636"></link>
            <id>https://tamilwin.com/article/rakitha-rajapakshe-charith-abeysinghe-remanded-1784273636</id>
            <summary type="text">முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி(SJB) ஹொரன அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி(SJB) ஹொரன அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகியோரை ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) சமீபத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.</p><p></p><h2>குரல் பதிவுகள் கசிவு</h2><p>

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து குறித்த சந்தேகநபர்கள் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85007df0-0ab9-40ae-9f36-5ed9c5b9e25f/26-6a59df487ec93.webp' /></p><p>

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வெளியான குரல் பதிவுகள் கசிந்தமையை அடுத்து சந்தேகநபர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அண்மையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p> 

'ஹரக் கட்டா' தடுப்புக் காவலில் இருந்தபோது அவருக்குச் சலுகைகளை வழங்குவதற்காக இந்த இலஞ்சப் பணம் பெறப்பட்டதாக சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சந்தேகநபர்கள் முன்னதாக விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T07:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பெண் கைதிக்கு சிறையில் நடந்த கொடுமை! ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்த கவலைக்குரிய சம்பவம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hirunika-premachandra-welikada-prison-1784271401"></link>
            <id>https://tamilwin.com/article/hirunika-premachandra-welikada-prison-1784271401</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தான் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த போது நடந்த சம்பவங்கள் தொடர்பில் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தான் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த போது நடந்த சம்பவங்கள் தொடர்பில் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பல கொடூரமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
</p><p>அதில் தமிழ் பெண் கைதி ஒருவர் தனது கையை பிடித்து கொண்டு விம்மி விம்மி அழுது கொண்டு சொன்ன கதை தன்னை மிகவும் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>“அவள் ஒரு அமைதியான அப்பாவிப் பெண், நிதிமோசடி ஒன்றில் அவரை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளனர். அந்த குற்றத்திற்காகவே அவர் சிறைக்கு வந்திருந்தார்.</p><h2>
</h2><p></p><h2>அழுதுகொண்டு கூறிய விடயம்</h2><p>ஒரு நாள் நீதிமன்றத்திற்குச் சென்று வந்துவிட்டு எனது கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார், "எனக்கு முடியாது, என்னை இதிலிருந்து எப்படியாவது காப்பாற்றுங்கள். </p><p>நீங்கள் வெளியில் சென்றாலும் எனக்கு உதவி செய்யுங்கள். "நான் ஒருபோதும் எனது கணவர் முன்னிலையில் கூட உடைகளை முழுமையாகக் களைந்தவள் அல்ல. </p><p>எனக்கு இப்படி செய்துவிட்டார்கள் என்று அழுதார் " அவருக்குச் சிங்களம் தெரியாது. அவர் என்னிடம் ஆங்கிலத்தில்தான் கூறினார்.
தமிழ் பெண்கள் கூச்ச சுபாவத்துடன் வாழும் மிகவும் நாகரீகமானவர்கள். </p><p>பாவம் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார்.
என்னை சிறைச்சாலை பொலிஸார் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசியதாகவும் மிகவும் அருவருக்கத்தக்க கேலிகளை செய்து கருப்பு, அசிங்கம் என்று பேசியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07beb29b-d62b-419c-af31-c2819aafc2e7/26-6a59d22b4a975.webp' /></p><p>அப்போது அவர் அதைச் சொல்லும் போது எனக்கும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இப்போது அந்த பெண் வெளியில் வந்து விட்டார்.
</p><p>அதாவது சிறைச்சாலைக்குள் போதைப் பொருட்களை தங்களின் மறைவிடங்களில் வைத்து கடத்துவதை தடுப்பதற்காகவே சிறைச்சாலை பொலிஸார் இவ்வாறான சோதனைகளை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
சிறைச்சாலை பொலிஸாரின் கொடுமைகள்</h2><p>வழக்கு இருக்கும் நாளில், அதிகாலையில் விழித்துக்கொண்டு வழக்குக்குச் செல்கிறார்கள். வழக்குக்குச் சென்று அங்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வருகிறார்கள், சாப்பிட ஒன்றும் கொடுப்பதில்லை. </p><p>வழக்கு முடிந்து, மற்றவர்களின் வழக்குகளும் எல்லாம் முடிந்து, திரும்பி வரும்போது மாலை நான்கு ஐந்து மணி ஆகிவிடும். சிறைக்கு வந்த உடனே அங்கு தினமும் செய்யும் பரிசோதனையின் போது உடைகள் அனைத்தையும் களைந்து, டார்ச் லைட் (Torch) அடிக்கிறார்கள். இருமச் சொல்கிறார்கள்.</p><p>எனவே, அந்த நேரத்தில் அது, கடமை என்று கூறலாம். ஆனால் ஒரு பெண்ணின் உடலை இன்னொரு பெண் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்றால் அதுதான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் என்கிறார்.
</p><p>பத்து பேர் இருக்கும் இடத்தில் 50 பேர் நெரிசலாக அடைபட்டு, கழிவறைக்குச் செல்ல முடியாது, கழிவறைக்கு நீண்ட வரிசை. இது போன்ற பல பிரச்சினைகளுடன் இருக்கும் கைதிகள் பெரும் மன அழுத்தத்தில்தான் இருக்கிறார்கள். </p><p> ஒழுங்கான உணவும் இல்லை. நாம் முதலில் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். நீர்கொழும்பில் நடந்த சம்பவத்தின் போது கைதிகள் இவ்வாறான சம்பவங்களை மனதில் வைத்திருந்திருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T07:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஆளுநர் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/east-governor-meets-united-nation-representative-1784268275"></link>
            <id>https://tamilwin.com/article/east-governor-meets-united-nation-representative-1784268275</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம்
(UNDP) பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத்னசே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம்
(UNDP) பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத்னசேகரவுக்கும் இடையே, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர்
செயலகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.<br></p><p>இந்தக கலந்துரையாடலானது&nbsp;நேற்று முன்தினம்(15.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மருத்துவக் கழிவுகளின் முகாமைத்துவம்</h2><p>

இந்தக் கலந்துரையாடலின் போது ​​இலங்கையின் சுகாதாரத் துறையில் மருத்துவக்
கழிவுகளின் முகாமைத்துவத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான முறையில்
வலுப்படுத்துவதற்கான திட்டத்தை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மற்றும்
UNDP ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65ebd8e2-e7f9-4433-ac3b-e1dec3748cae/26-6a59ca011479d.webp' /></p><p>

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாகச்
சேகரித்தல், கொண்டு செல்லுதல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றல் ஆகியவற்றுக்கான
நவீன முறைகளை அறிமுகப்படுத்துதல், எண்ணிம மேலாண்மை அமைப்புகளைப்
பயன்படுத்துதல், நிறுவனத் திறன் மேம்பாடு மற்றும் மாகாண அளவில் ஒரு
மையப்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையத்தை நிறுவுதல் ஆகியவை
குறித்துக் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
</p><p>
இந்தத் திட்டத்தின் மூலம், பொது சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், சர்வதேசத் தரங்களுக்கு இணங்க கிழக்கு
மாகாணத்தில் உள்ள சுகாதார நிறுவனங்களில் மருத்துவக் கழிவு மேலாண்மையை
வலுப்படுத்தவும் தேவையான ஆதரவை வழங்குவதில் UNDP பிரதிநிதிகள் குழு தனது
உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T07:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியா ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kinniya-base-hospital-under-the-central-government-1784271856"></link>
            <id>https://tamilwin.com/article/kinniya-base-hospital-under-the-central-government-1784271856</id>
            <summary type="text">திருகோணமலையில் அதிக சனத்தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேச மக்கள்
நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக,
கிண்ணியா தள வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் அதிக சனத்தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேச மக்கள்
நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக,
கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்குரிய பூர்வாங்க
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு
வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று (16.07.2026) மாலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>மக்களின் நியாயமான கோரிக்கை</h2><p>தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர்,&nbsp;"திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசம் அதிக சனத்தொகையைக் கொண்ட ஒரு
பகுதியாகும்.</p><p> கிண்ணியா பிரதேச மக்களுக்கு மாத்திரமன்றி, அதனைச் சுற்றியுள்ள பல
கிராமப்புற மக்களுக்கும் கிண்ணியா தள வைத்தியசாலையே பிரதான சுகாதாரச் சேவைகளை
வழங்கி வருகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04deae5b-6f5d-4f59-be1d-5aa6f904f992/26-6a59d8710c527.webp' /></p><p>
சுனாமி அனர்த்தத்தின் பின்னர், இட நெருக்கடியானதொரு சூழலில் இத்தாலிய மக்களின்
நன்கொடையின் மூலம் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு தற்போது இயங்கி
வருகின்றது. </p><p>இந்தநிலையில், இந்த வைத்தியசாலையின் தரத்தினை உயர்த்துமாறு
பிரதேச மக்களால் பல வருடங்களாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளைச் சரியான முறையில் ஆராய்ந்து, இந்த
வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர முடியுமா என்பது குறித்துப்
பரிசீலிப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நிபுணர் குழுவின் அறிக்கை</h2><p>வைத்தியசாலையின் நிலைமைகளை ஆராய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
குறித்து மேலும் விளக்கிய அவர்,

"மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக
ஆராய்வதற்கு விசேட உப குழு (நிபுணர் குழு) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/329c943c-9b45-410b-bebb-303eb02da8df/26-6a59d871df5fa.webp' /></p><p>எந்தவொரு
தீர்மானத்தையும் நாம் அரசியல் இலாபங்களுக்காக எடுக்க விரும்பவில்லை. அதனாலேயே
இந்த நிபுணர் குழுவை நியமித்துள்ளோம்.
</p><p>
இந்தக் குழுவின் அறிக்கை சாதகமாக அமையும் பட்சத்தில், சுகாதார அமைச்சுடன்
விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அடுத்தகட்ட முன்னெடுப்புகளைச் செய்வோம்.</p><p>
ஏற்கனவே கந்தளாய் ஆதார வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே, கிண்ணியா வைத்தியசாலைக்கும் இதனைச் செய்யக்கூடிய சாதகமான நிலைமை
ஏற்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.
</p><p>
நிபுணர் குழுவின் அறிக்கையின் பிரகாரம் எமது அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்"
என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-17T07:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலரின் பொறுப்பற்ற நடத்தை வருத்தமளிக்கிறது : கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-create-development-fisheries-minister-1784267220"></link>
            <id>https://tamilwin.com/article/we-create-development-fisheries-minister-1784267220</id>
            <summary type="text">மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மாவட்டத்தின் எதிர்கால
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட
அபிவிருத்திக் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மாவட்டத்தின் எதிர்கால
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட
அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற
நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கிறது என
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.</p><p>

அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்</h2><p>
</p><p>குறித்த பதிவில் அவர் மேலும்,&nbsp;</p><p>

மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், கடற்றொழில், கல்வி, சுகாதாரம்
உள்ளிட்ட அத்தியாவசிய அபிவிருத்தி விடயங்கள் விவாதிக்கப்படும் உயர்மட்ட
நிர்வாக மேடைகள், தனிப்பட்ட அரசியல் நாடகங்களுக்கான அரங்குகளாக மாற்றப்படக்
கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5828bc52-5697-4e74-832b-dd4392984b7b/26-6a59c3ca23f9a.webp' /></p><p>
</p><p>
கூட்டங்களில் கலந்துகொள்வது என்பது வெறுமனே சத்தமிடுவதோ, குழப்பம் விளைவிப்பதோ
அல்ல, ஜனநாயக மரபுகளையும், நிர்வாக நடைமுறைகளையும், அதிகாரிகளின் கௌரவத்தையும்
மதித்து செயல்பட வேண்டிய பொறுப்புணர்வாகும்.</p><p>
</p><p>
அதற்கான அரசியல் நாகரிகத்தையும், நிர்வாக பண்பாட்டையும் சிலர் இன்னும்
கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
தொடர்ச்சியாக அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து,
அபிவிருத்திப் பணிகளை திசைதிருப்பும் முயற்சிகள் எந்த வகையிலும்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.</p><p></p><h2>அபிவிருத்தியை உருவாக்குவோம்</h2><p>
</p><p>
அரசியல் இலாபத்திற்காக மக்களின் எதிர்காலத்தோடு விளையாட அனுமதிக்க
முடியாது.இன்று நடைபெற்ற சம்பவம், இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக
உரிய நடவடிக்கை அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
சிலர் குழப்பத்தை உருவாக்கலாம், ஆனால் நாம் அபிவிருத்தியை உருவாக்குவோம்.
சிலர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றலாம், ஆனால் நாம் மக்களின் வாழ்க்கையை
மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5176f5bd-582c-489c-b372-22338415899d/26-6a59c3caeef3c.webp' /></p><p>
</p><p>
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, முன்னேற்றம் மற்றும் இருப்பு தொடர்பில்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நாங்களும் கூடுதல் கவனம் செலுத்துவோம்.</p><p>
கிளிநொச்சியை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

மீண்டும் விரைவில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். மக்களின்
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உறுதியான தீர்மானங்களும், முன்னேற்றப் பாதையும்
அங்கே உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T07:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் கியூஆர் முறைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-qr-system-1784272752"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-qr-system-1784272752</id>
            <summary type="text">எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் (QR) முறையை உடனடியாக நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

உலகளாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் (QR) முறையை உடனடியாக நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
</p><p>
உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையின்மையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>
கியூஆர் முறைமை</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

கியூஆர் முறையின் பயன்பாடு எரிபொருள் மற்றும் டொலர் கையிருப்பு இரண்டையும் கட்டுப்படுத்தும் நிலையில், போர்ச் சூழல் மீண்டும் மோசமடைந்தால் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையைத் தடுக்கவும் உதவியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1c194c4-762d-41f0-9941-4bf79eb3b678/26-6a59d7c0a2e6b.webp' /></p><p> </p><p>

 மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும் கியூஆர் முறைமை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளது. </p><p>

மேலும், போர்ச் சூழல் மீண்டும் உருவானதால் நாட்டின் எரிபொருள் விநியோக வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், எரிபொருள் விலையில் மீண்டும் உயர்வு ஏற்படுமா என்பதை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை மாத்திரைகளுடன் 23 வயது யுவதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-arrest-with-drugs-in-gampaha-1784266107"></link>
            <id>https://tamilwin.com/article/women-arrest-with-drugs-in-gampaha-1784266107</id>
            <summary type="text">கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேசத்தில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் 23
வயதுடைய யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேசத்தில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் 23
வயதுடைய யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>இந்த கைது நடவடிக்கையானது நேற்று(16.07.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைது செய்யப்பட்ட யுவதி</h2><p>
அத்தனகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதி, தனியார் நிறுவனம் ஒன்றில்
பணியாற்றி வருபவர் எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p>
இவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த பெருமளவு போதை மாத்திரைகள்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ce3c11-7498-4dec-861a-758224c0e34f/26-6a59bed3360da.webp' /></p><p>கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவருடைய
தந்தை ஹெரோயின் போதைப்பொருளுடன் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள
பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T07:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை தவறு..! ரஜீவன் எம்.பி காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajeev-s-criticism-of-archuna-mp-1784271324"></link>
            <id>https://tamilwin.com/article/rajeev-s-criticism-of-archuna-mp-1784271324</id>
            <summary type="text">இராமநாதன் அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனவே மக்கள் சில கேள்விகளை
அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக கேட்பார்கள். எனவே அவர் அந்த கேள்விகளை
மக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராமநாதன் அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனவே மக்கள் சில கேள்விகளை
அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக கேட்பார்கள். எனவே அவர் அந்த கேள்விகளை
மக்கள் சார்பாக கேட்க வேண்டிய தேவை இருக்கின்றது. </p><p>

அவ்வாறான கேள்விகளை
கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் அதனை தடுப்பது ஜனநாயகம் அல்ல. அந்த
இடத்திலிருந்து அர்ச்சுனாவை வெளியேறச் சொல்வதற்கு அமைச்சருக்கோ அல்லது வேறு
எவருக்குமோ அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்றையதினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் அவரை தொடர்புகொண்டு வினவியபோது கருத்து
தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>

கிளிநொச்சி கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>




அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளும் சரியான வகையில் பதில் கூற வேண்டும்.
அவ்வாறு அதிகாரிகள் பதில் கூறும் பொழுது அதற்கு அந்த மக்கள் பிரதிநிதியும்
கட்டுப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa8fed96-eb2f-4bc9-bf14-54b8f28bff69/26-6a59d2e662b63.webp' /></p><p> </p><p>ஒரு வாரத்தில் விசாரணை செய்கிறோம், அல்லது ஒரு விசாரணை
குழு அமைக்கிறோம் என்று அதிகாரிகள் கூறும்போது அவர் அதனை ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
</p><p>
அதேவேளை கூட்டத்தை தலைமை தாங்கும் தலைவரும் அந்த கூட்டத்தை
கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு
கட்டுப்படுத்தாவிட்டால் அங்கு தலைமைத்துவம் இல்லாமல் போய்விடும்.</p><h2>

தொடர்ந்து குழப்பும் வாய்ப்பு</h2><p>


நேற்றைய கூட்டத்திற்குள் கமக்கார அமைப்பினர் என்று கூறிக்கொண்டு சிலர் உள்ளே
வந்துள்ளனர். அவர்கள் சிறீதரன் எம்.பியின் ஆட்களாக சுட்டிக்காட்டப்பட்டனர். </p><p>அவர் கடந்த காலங்களில்
இடையிடையே கூட்டத்தை விட்டுவிட்டு எழும்பி சென்று விடுவார், அதன்போது அவரது
ஆட்களும் எழும்பி சென்று விடுவார்கள். அது பிழை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50725044-e82d-43ac-acde-4df194b907f4/26-6a59d2e7194c4.webp' /></p><p>

வடக்க மாகாணத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் தமது நேரத்தினை ஒதுக்கி நேற்றைய
கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அதற்காக எரிபொருள் செலவு என பல செலவுகள்
உள்ளன.</p><p> 

இந்நிலையில் கூட்டம் நிறுத்தப்பட்டது தவறு. சிறீதரனோ அர்ச்சுனாவோ
வெளியே போனாலும் கூட்டம் முழுமையாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும். </p><p>இவ்வாறு
தொடர்ச்சியாக கூட்டத்தை நிறுத்தி பழக்கினால் அது கூட்டத்தை குழப்பலாம்
என்ற சிந்தனை வந்துவிடும். அதற்கு இடமளிக்க கூடாது.

ஒரு விடயத்தை கூட்டத்தில் பேசும்போது அதனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்
தலைவரோ அல்லது மாவட்ட செயலாளரோ அல்லது பிரதேச செயலர் ஊடாகவோ நிகழ்ச்சி
நிரலுக்குள் கொண்டு வந்து அதனை பேச வேண்டும்.</p><h2> 


இடைநிறுத்தப்படும் கூட்டங்கள்</h2><p>
ஒரு அதிகாரி தவறு செய்தால் அதனை
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விசாரணை செய்ய முடியாது. அதற்காக
முறைப்பாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளது, பொலிசார்
உள்ளார்கள், வேறு வேறு இடங்கள் உள்ளன. </p><p>


அந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும்
விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் குற்றவாளியா இல்லையா என்று கூற முடியும், அதனை
விட்டு ஒரு பொது வெளியில் குற்றவாளி என்று யாரையும் குற்றம் சாட்ட முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ed11d5c-2ef1-4d62-9846-75b33c70bb46/26-6a59d2e7bc65a.webp' /></p><p>
</p><p>
அரசாங்க அதிகாரிகளை விரக்திக்கு உள்ளாக்க கூடாது. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு
குழு தலைவர் இருக்கும்போது அவரை மீறி அர்ச்சுனா பேசியிருக்கக் கூடாது. அவரது
கருத்துக்கு அர்ச்சுனா கட்டுப்பட வேண்டும்.</p><p>

 அதனை கட்டுப்படுத்த ஒரு பொறிமுறை
வேண்டும். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக
அர்ச்சுனா குழப்புவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நாங்கள் கூடி பேசி ஒரு
முடிவு எடுக்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-found-dead-in-homagama-canal-1784267988"></link>
            <id>https://tamilwin.com/article/man-found-dead-in-homagama-canal-1784267988</id>
            <summary type="text">
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம - கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம - கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(15.07.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>சடலமாக கிடந்த குறித்த நபர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2><b>கொலை செய்யப்பட்ட நபர்&nbsp;</b></h2><p> 

ஆடைத் தொழிற்சாலையில் முழுநேரப் பணியாளராகவும், பகுதிநேரமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பணியில் ஈடுபட்டு வந்தவராகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b8e2fe-a444-4415-8619-9298cdbb0d75/26-6a59d2d2bd657.webp' /></p><p>குறித்த நபர் கடந்த 15ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் பயணியை ஏற்றிச் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்&nbsp;</p><p>
சடலம் கண்டெடுக்கப்பட்ட கால்வாய்க்கு அருகில் உள்ள காணியிலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>

பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிய பின்னரே கொலையாளிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்கேம் வெளியிட்டுள்ளனர்.</p><h3><b>

பிரேத பரிசோதனை</b></h3><p>சம்பவம் நடந்த இடத்தில், உயிரிழந்தவருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் 20 ரூபாய் நாணயத்தாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a90feda3-af30-406d-a28c-915d5f3fbed7/26-6a59d2d374a66.webp' /></p><p>ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கழுத்தறுக்கப்பட்டதால் ஏற்பட்ட பலத்த காயங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
</p><p>
கொலையாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் குற்றவாளிகளை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T06:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் - இளைஞர் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-died-motorcycle-accident-1784270343"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-died-motorcycle-accident-1784270343</id>
            <summary type="text">கொழும்பு, கோமாகமை பிரதேசத்தில் நேற்று(16) இடம்பெற்ற
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.

கெஸ்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கோமாகமை பிரதேசத்தில் நேற்று(16) இடம்பெற்ற
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
</p><p>
கெஸ்பவை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த விபத்தில்
உயிரிழந்துள்ளார்.
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது,
எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீதான கட்டுப்பாட்டை இழந்துள்ளார். </p><p>இதன்
விளைவாக, மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த மதில் ஒன்றின் மீது பலமாக
மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd80118-62bb-4549-a20f-54dd05c19b22/26-6a59d19f08508.webp' /></p><p>இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மேற்படி இளைஞர், சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
</p><p>
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசைக் கவிழ்க்க சஜித் எடுக்கும் முயற்சி தோல்வி! மக்களின் ஆணை இருக்கும் வரை பதவியில் நீடிப்போம் - ருவான் ரணசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-s-attempt-to-overthrow-the-government-fails-1784270354"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-s-attempt-to-overthrow-the-government-fails-1784270354</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுக்களையும் திட்டமிட்ட குற்றச் செயல்களையும் ஒழிக்கும்
நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு
வழங்காது எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுக்களையும் திட்டமிட்ட குற்றச் செயல்களையும் ஒழிக்கும்
நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு
வழங்காது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மக்கள் மத்தியில் தவறான
கருத்துகளைப் பரப்பி கேலி அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் என்று
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
</p><p>
"கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தற்செயலானவை
அல்ல. அவை திட்டமிட்ட முறையில் பாதாள உலகக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டவை.
தற்போது வீதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்துவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைக்குள் இருந்து சதித்திட்டம்</h2><p>
</p><p>சட்ட நடவடிக்கை எடுக்கும்போது பாதாள உலகக் குழுவினர் சிறைக்குள் இருந்து
சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர். சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி,
புலனாய்வு அதிகாரிகளைக் கொலை செய்வதன் மூலம் அரசின் நடவடிக்கைகளைத்
தடுத்துவிடலாம் என அவர்கள் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
</p><p>
நாட்டின் பாதுகாப்புச் சூழல் குறித்த தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்
இவ்வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றார்.
</p><p>
எதிர்க்கட்சித் தலைவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகளை
வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதிலும், ஊடகங்களில் பேசுவதற்கு
வாய்ப்புத் தேடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dc36d58-47a9-4493-834a-1a83cf30cccb/26-6a59d187d5d4b.webp' /></p><p> </p><p>அரசு பதவி விலக
வேண்டும் என அவர் கூச்சலிடுவது, தங்களின் போதைப்பொருள் வலை அமைப்புகள் மற்றும்
பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள், இலஞ்சம், கொலைகள் தொடர்பான உண்மைகள்
வெளிவரும்போது தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வதற்கான முயற்சியாகும்.
</p><p>தங்களின் திருட்டை மறைக்கவே அவர் இவ்வாறு செயற்படுகின்றார்.

நாட்டு வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் ஆணையை நாம் பெற்றுள்ளோம். </p><p>பொதுமக்கள்
எப்போது நாங்கள் செய்தது போதும் என்று சொல்கின்றார்களோ, அன்றுதான் நாங்கள்
பதவியிலிருந்து விலகுவோம். அதைவிடுத்து, எதிர்க்கட்சியினரின்
தூண்டுதல்களுக்காக அரசு வீட்டுக்குப் போகத் தயாரில்லை&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sdig-waruna-jayasundara-transferred-1784268998"></link>
            <id>https://tamilwin.com/article/sdig-waruna-jayasundara-transferred-1784268998</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் நடைமுறைக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் நடைமுறைக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இனிவரும் காலங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/729dc046-38d9-4b90-bc7a-e8425110fcd2/26-6a59cb21d4fae.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணித் தகராறால் இளம் குடும்பஸ்தர் கொலை! மனைவியின் சகோதரனால் பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-family-man-murdered-wife-s-brother-kills-him-1784267766"></link>
            <id>https://tamilwin.com/article/young-family-man-murdered-wife-s-brother-kills-him-1784267766</id>
            <summary type="text">அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம்
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம்
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று(16.07.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச்
சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய</h2><p>

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து
இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7915b19d-fe52-4055-81c7-5df34f825751/26-6a59c6c0e3de0.webp' /></p><p>
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி சந்தேகநபர், மோதலின் போது கூரிய
ஆயுதத்தால் தாக்கியதில் அவரின் மைத்துனர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் எம்.பி முன்வைத்த கோரிக்கைகள் - விரைவில் நடைமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/demands-made-by-imran-mp-1784267937"></link>
            <id>https://tamilwin.com/article/demands-made-by-imran-mp-1784267937</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கடலரிப்பு விவகாரம், இராணுவத்தின்
வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் விவசாயிகளின் வரிப் பிரச்சினை
உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கடலரிப்பு விவகாரம், இராணுவத்தின்
வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் விவசாயிகளின் வரிப் பிரச்சினை
உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருப்
கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

நேற்று(16.07.2026) வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா
தலைமையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே
நாடாளுமன்ற உறுப்பினரால் இப்பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>
முன்வைக்கப்பட்ட பிரேரணைகள்</h2><p>
இதன்போது, சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் விபரங்கள் வருமாறு, </p><p>


1. கிண்ணியா - உப்பாறு கரையோர கடலரிப்பை தடுக்க அவசர நடவடிக்கை
"கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கரையோரப் பகுதி மிக வேகமாக
கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.</p><p> 

தற்போது இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள
வீதியானது 3-வது வீதியாகும். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இரண்டு வீதிகள்
ஏற்கனவே கடலரிப்பினால் முற்றாகச் சேதமடைந்து கடலுக்குள் மூழ்கிவிட்டன.</p><p> </p><p>

எனவே,
தற்போதைய வீதியும் சேதமடைவதற்கு முன்னர், கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு
பாலம் வரையான பகுதியில் கடலரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தரத் தடுப்புச் சுவரினை
அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d086fdf6-2233-4bbd-b8a9-837f956aef35/26-6a59c586b62be.webp' /></p><p>
2. சூரங்கல் இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரிக்கை
"கிண்ணியா சூரங்கல் பிரதான வீதியில் இரண்டு தனிநபர்களுக்கும்,
பள்ளிவாயலொன்றுக்கும் சொந்தமான 4 ஏக்கர் காணியில் இராணுவ முகாம்
அமைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த காணிகளுக்கு முன்னர் வாடகை செலுத்தப்பட்ட போதிலும், கடந்த 2014 ஆம் ஆண்டு
குறித்த காணியை இராணுவத் தேவைக்காகச் சுவீகரிப்பதாக வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்டதன் பின்னர் வாடகை செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p> 

எனவே,
அந்த வர்த்தமானியினை இரத்துச் செய்து, காணியை அதன் உண்மையான உரிமையாளர்களிடம்
ஒப்படைக்க வேண்டும் அல்லது அதற்குப் பதிலாகப் பொருத்தமான மாற்றுக்காணிகளை
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."</p><p>

3. முத்துநகர் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு
"நீண்டகாலமாக முத்துநகர் கிராமத்தில் குடியிருந்து, பின்னர் அங்கிருந்து
வெளியேற்றப்பட்ட பல குடும்பங்கள் தற்பொழுது தங்குமிட வசதியின்றிப்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அந்தக் குடும்பங்கள்
மீண்டும் சுமுகமாக வாழ்வதற்கு ஏதுவாக, அவர்களுக்குக் குடியிருப்பதற்காக மாற்று
இடங்களில் காணிகளை வழங்குவதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a3bed78-d03d-4ffc-8040-e9b579b6c7c5/26-6a59c5876cdee.webp' /></p><p>4. ஜெயந்திபுர விவசாயிகளுக்கு வரி செலுத்த கால அவகாசம் வழங்குக!
"கந்தளாய் பிரதேச செயலக பிரிவின் ஜெயந்திபுர கிராம சேவகர் பிரிவில், காணி
சீர்திருத்த ஆணைக்குழுவினால் விவசாய நோக்கத்திற்காக 58 பேருக்குக் காணிகள்
வழங்கப்பட்டிருந்தன.</p><p> 

எனினும், கடந்த சில வருடங்களாக அவர்கள் வரி செலுத்தவில்லை
எனக் கூறி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வட்டி மற்றும் வரிப்பணத்தை இம்மாத
இறுதிக்குள் செலுத்துமாறு கந்தளாய் உதவி காணி ஆணையாளரினால் கடிதம் மூலம்
உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்தத் திடீர் உத்தரவு
விவசாயிகளைப் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.</p><p>எனவே, இந்த ஏழை விவசாயிகள் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால
எல்லையை நீடித்துக் கொடுப்பதோடு, நிலுவைகளைச் சலுகை மற்றும் சகாய அடிப்படையில்
தவணை முறையில் செலுத்துவதற்கும் ஆவணம் செய்ய வேண்டும்."
</p><p>
இந்த கலந்துரையாடலில் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துக் கொண்டுள்ளதுடன், 
நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருபினால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணைகள்
தொடர்பில் ஆராய்ந்து தகுந்த தீர்வுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T06:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய உயர் பொலிஸ் அதிகாரியின் மரணம் - பின்னணி குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-police-officers-death-1784266119"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-police-officers-death-1784266119</id>
            <summary type="text">இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன&amp;nbsp; உயிரிழந்துள்ளமை பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன&nbsp; உயிரிழந்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விக்ரமரத்ன தனது மெய்க்காப்பாளரின் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;&nbsp;</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">துப்பாக்கிச்சூடு&nbsp;</b></p><p>

இன்று காலை 7.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>உயிரிழந்த சி.டி. விக்ரமரத்னவின் உடல் முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p>தனது புதல்வர் ஒருவரின் வழக்கு விவகாரம் தொடர்பான கவலை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாகவே சி.டி. விக்ரமரத்ன இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எனினும் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் சி.டி. விக்ரமரத்னவுக்கும் தொடர்புகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. </p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஆதாரங்களை அழிப்பதற்காக, கோட்டாபாய தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாக சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p> </p><h3><b>

கோட்டபாய தலைமையிலான அரசாங்கம்</b></h3><p>அதற்கமைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய அதிகாரிகள் குழு ஒன்று திங்கள்கிழமை தோறும் காலை 9 மணிக்கு ரகசியக் கூட்டங்களை நடத்தியதாக இலங்கையின் பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரியான அஜித தர்மபால குற்றம் சாட்டியிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51c7c4a5-80b1-4c34-8e3b-6a8e78446be2/26-6a59c2d832da2.webp' /></p><p>

இந்த கூட்டங்களில் சுரேஷ் சலே, சரத் வீரசேகர, ஜெகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன மற்றும் சி.டி. விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை நெருங்கியுள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p>

இவ்வாறான பின்னணியில் விக்ரமரத்ன இன்று காலை உயிரை மாய்த்துள்ளார். அண்மைக்காலமாக ராஜபக்சர்களுடன் நெருக்கிய தொடர்பில் இருந்த நிலையில் பல்வேறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் இவ்வாறான முறையில் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dc66dbd-dfd6-4873-894c-fef15dcad288/26-6a59bfaaef62c.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;&nbsp;</p><p><b>YOU MAY LIKETHIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/o7F9xl_bJV0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-07-17T05:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான வீழ்ச்சிப் பாதையில் தேயிலை தொழில்துறை - நெருக்கடியில் சிக்கிய தொழிலாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tea-industry-down-fall-1784264528"></link>
            <id>https://tamilwin.com/article/tea-industry-down-fall-1784264528</id>
            <summary type="text">இலங்கையில் தேயிலைத் தொழில் துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தேயிலைக் கொழுந்துத் தட்டுப்பாடு மற்றும் கடுமையான தொழிலாளர் பற்றா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தேயிலைத் தொழில் துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தேயிலைக் கொழுந்துத் தட்டுப்பாடு மற்றும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 250 தேயிலை தொழில் துறைச்சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக தேசிய தேயிலை பயிர்ச்செய்கையாளர்கள் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட தேயிலை ஆலோசகருமான சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.</p><h2>200 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி</h2><p> 
இதனால் இந்த ஆண்டுக்கான தேயிலை ஏற்றுமதி இலக்கை அடைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61504c61-8487-4493-9648-d22dd7c52548/26-6a59b75293d99.webp' /></p><p>
இலங்கை ஆண்டுதோறும் சுமார் 220 மில்லியன் கிலோ கிராம் பதப்படுத்தப்பட்ட தேயிலையை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்கிறது.</p><p>
இதன் மூலம் வருடத்திற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களும், மாதத்திற்கு 110 முதல் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வருமானமாகப் பெறப்படுகிறது.
தற்போது தொழிற்சாலைகள் மூடப்படுவதால் இந்த வருமானம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.</p><p>
நாள் ஒன்றுக்கு 30,000 கிலோ தேயிலைக் கொழுந்துகளை அரைத்து உற்பத்தி செய்யும் பல பெரிய தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.</p><p>
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
</p><p>இந்தச் சூழ்நிலையைப் சாதகமாக்கிக் கொள்ளும் சில பெரிய அளவிலான தொழிற்சாலை உரிமையாளர்கள், இலங்கை தேயிலைச் சபையின் விலை நிர்ணயங்களை மதிக்காமல், மிகக் குறைந்த விலைக்கு கொழுந்துகளைக் கொள்வனவு செய்து சிறு உற்பத்தியாளர்களைச் சுரண்டுவதாக சமன் கீகனகே கவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T05:42:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-fishermen-s-livelihood-1784265615"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-fishermen-s-livelihood-1784265615</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும்,
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மற்றும் முறையற்ற மீன்பிடி
நடவடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும்,
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மற்றும் முறையற்ற மீன்பிடி
நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடற்றொழில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இந்த
முறைப்பாட்டினை நேற்றைய தினம்(16) கையளித்துள்ளனர்.
</p><p></p><h2>கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதார உரிமைகள்</h2><p>தாம் பல்வேறு திணைக்களங்களிடம் இது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்த
போதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25bcd89f-aa02-4a35-baea-cabf7631cd95/26-6a59bf0dad1a9.webp' /></p><p>இதன்காரணமாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதுடன் கடற்றொழிலாளர்களை
பாதுகாக்குமாறு கோரியே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
</p><p>
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமூக செயல்பாட்டாளர் ஜோபின்,
கடல் வளங்களையும் கடற்றொழிலாளர்களி்ன்&nbsp; வாழ்வாதார உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார்.</p><p>எமது முன்னோர்கள் இந்த இயற்கை வளங்களை முறையான வகையில் பயன்படுத்தி,
போஷாக்குள்ள உணவோடு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். எமது எதிர்கால சந்ததியினரும்,
எமது பிள்ளைகளும் இதே போன்றதொரு போஷாக்கான வாழ்வைப் பெற வேண்டுமாயின், எமது
கடல் வளங்களையும் நீர்நிலைகளையும் (வாவி வளங்களையும்) பாதுகாக்க வேண்டியது
எமது தார்மீக பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.
</p><p>
சட்டவிரோத மீன்பிடி மற்றும் வாழ்வாதார அச்சுறுத்தல்
மட்டக்களப்பு வாவி மற்றும் கடல் பரப்புகளில் அண்மைக்காலமாக சட்டவிரோத மீன்பிடி
முறைகளும், முறையற்ற செயல்பாடுகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக கடற்றொழிலாளர்கள்
கவலை வெளியிட்டுள்ளனர்.</p><h2>கையெழுத்துக்களுடன் கூடிய விரிவான மனு</h2><p>கடல் மற்றும் வாவி வளங்கள் வேகமாக அழிவடைந்து வருகின்றன.கடற்றொழிலாளர்களி்ன் அன்றாட
வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. </p><p>எதிர்காலத்தில் ஆரோக்கியமான
மற்றும் பாதுகாப்பான உணவு முறை இல்லாமல் போகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82bf2ff2-33d3-4047-8d1b-5cff2bdfe337/26-6a59bf0ea73aa.webp' /></p><p>
இது தொடர்பாக கடற்றொழிலாளர் குழுக்கள், சமூக மட்ட அமைப்புகள் மற்றும் அரச
அதிகாரிகளுடன் பல கட்டக் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை
எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை என செயல்பாட்டாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இதன் காரணமாகவே, தங்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்தக் கோரி, இறுதிக் கட்ட
நம்பிக்கையாக மனித உரிமை ஆணைக்குழுவை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>கடற்றொழிலாளர்களி்ன் கையெழுத்துக்களுடன் கூடிய விரிவான மனு மற்றும் முறையீட்டு
ஆவணங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணைக்குழு உரிய தலையீட்டை மேற்கொண்டு, சட்டவிரோத
மீன்பிடியைக் கட்டுப்படுத்தவும் தங்களது பாரம்பரிய வாழ்வாதார உரிமைகளை
நிலைநாட்டவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்ற பலத்த நம்பிக்கையை
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சமூகம் கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T05:38:48+00:00</updated>
        </entry>
    </feed>
