<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-06T13:22:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் கிழமைகளில் காத்திருக்கும் அபாயம்! பிணை பெறுவதில் பாரிய சிக்கல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-judgement-1788699794"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-judgement-1788699794</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது முதலாவது விடயம். இரண்டாவது விடயம். கிரிஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது முதலாவது விடயம். இரண்டாவது விடயம். கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கும் இலஞ்ச ஊழல் வழக்காக பதிவு செய்யப்படவுள்ளது.
</p><p>இவை மிகவும் விசேடமானதும் தீர்க்கமானதாகும்.கிரிஷ் வழக்கில் 70 மில்லியன் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்விடயம் சம்பந்தமாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் 
பணிப்பாளர் நாயகத்தால் 'பீ' அறிக்கை சமர்ப்பித்தால் அந்த வழக்கும் இதனுடன் சேர்ந்தால் அவருக்கு பிணை கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்படும்.</p><h2> 
</h2><p></p><h2>'எயார்பஸ்' நிறுவனத்தின் பிரதிநிதிகளின் வருகை</h2><p>இந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் ஒன்று நிகழவுள்ளது. உலகின் மிகப்பெரிய இரு விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'எயார்பஸ்' நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துஇ வாக்குமூல சாட்சியங்களை வழங்கவுள்ளனர். </p><p>
தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே நாமல் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார் என்பதல்ல. நாமலை இதில் தொடர்புபடுத்துவதற்கு பிரதானமாக மேலும் பல சான்றுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. </p><p>அதாவது இலங்கையில் உள்ள மேலும் சில சாட்சியாளர்கள் வாக்குமூலம் வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு சாரதியும் அடங்கியுள்ளனர். </p><p>எனவே இது நிமலின் வாக்குமூலம் மட்டுமல்ல. எயார்பஸ் நிறுவனத்தின் சாட்சியங்களில் நாமலுடன் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் கலந்துரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற பல விடயங்கள் சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cee8cdb-1e8e-4087-8437-a05aee318e2c/26-6a9d6494e913a.webp' /></p><p>நீதிமன்ற தகவல்களின் படி எயார்பஸ் நிறுவனத்தில் சாட்சியம் அளிப்பது யார் அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதாவது ஒரு இலஞ்ச வழக்கில் இலஞ்சம் கொடுத்த தரப்பு தான் இலஞ்சம் கொடுத்ததாகக் கூற வேண்டும்.</p><p>மேலும் அந்த இலஞ்சம் கொடுத்த நபருடன் இந்த குறிப்பிட்ட நபர் எவ்வாறு தொடர்புபடுகிறார் என்பது பற்றிய தெளிவான சான்றுகளையோ அல்லது இலஞ்சம் கொடுத்த தரப்பின் வாக்குமூலத்தையோ சமர்ப்பிக்க வேண்டும்.தற்போது கூறப்படும் தகவல்களின் படி இதுவரை வெளிப்படுத்தப்படாத பல விடயங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T13:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திரைமறைவில் களமிறங்கும் மகிந்த! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-takes-to-the-stage-in-anuradhapura-1788677676"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-takes-to-the-stage-in-anuradhapura-1788677676</id>
            <summary type="text">&amp;nbsp;அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய&nbsp; இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ச&nbsp; (04) திகதி கைது செய்யப்பட்டார்.
</p><h2>12 ஆம் திகதி பேரணி நிச்சயமாக நடைபெறும்&nbsp;</h2><p>
இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc229498-1916-4a01-ba11-2a8a88d7e348/26-6a9d3b149f880.webp' /></p><p>
</p><p>
இந்த பின்னணியில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாபெரும் பேரணியில் நாமல் ராஜபக்சவின் வெற்றிடத்தை ஈடுசெய்ய மகிந்த ராஜபக்ச அநுராதபுரத்திற்கு வருகை தருவார் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி 12 ஆம் திகதி நிச்சயமாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

பிரதான மேடைக்கு சென்று மக்களிடையே உரையாற்றுவதற்கு பதிலாக, மேடைக்கு முன்பாகவோ அல்லது மற்றொரு தளத்திலோ இருந்து பேரணியில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T12:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு பணம் குறித்து சிஐடியின் அதிரடி நடவடிக்கை.. ஜனாதிபதி இன்று வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-stopped-dollars-flowing-black-economy-anura-1788697354"></link>
            <id>https://tamilwin.com/article/govt-stopped-dollars-flowing-black-economy-anura-1788697354</id>
            <summary type="text">கறுப்பு பொருளாதாரம் மூலம் சட்டவிரோதமாக டொலர்கள் வெளியேறுவதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சுங்கத்திணைக்களத்தின் நடவடிக்கைகள் மூலம் அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு பொருளாதாரம் மூலம் சட்டவிரோதமாக டொலர்கள் வெளியேறுவதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சுங்கத்திணைக்களத்தின் நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
</p><p>மேலும், நாட்டின் வருடாந்த தேயிலை ஏற்றுமதி வருவாய்க்கு சமமான சுமார் 1 பில்லியன் டொலர் தொகையானது சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டிருந்ததாகக் கூறினார். </p><p>சட்டவிரோத வழிகள் மூலம் டொலர்கள் வெளியேறுவதைத் தடுக்க CID மற்றும் சுங்கத் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திறைசேரிக்கு வர வேண்டிய ஒவ்வொரு சதமும் முறையாக வந்து சேர்வதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>நிதி ஒதுக்கீடு&nbsp;</h2><p>
</p><p>
முறைகேடான பொருளாதாரத்தை முடக்கியதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 16.7 வீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத சாதனையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.[<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A6qZIoUMNZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p> </p><p>மேலும், செலவினங்களைக் கட்டுப்படுத்தி வருவாயை அதிகரித்ததன் மூலம் 1957 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
அடுத்த ஆண்டு மூலதனச் செலவினங்களுக்காக வரலாற்றுச் சாதனையாக 2 டிரில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்ட அளவிலான அபிவிருத்திப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T12:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தினசரி மின்சாரத் தேவையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/daily-electricity-demand-drops-1788695121"></link>
            <id>https://tamilwin.com/article/daily-electricity-demand-drops-1788695121</id>
            <summary type="text">தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. </p><p>

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய அறிக்கையொன்றின் மூலம் இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.</p><h2>மின்சாரத் தேவை</h2><p>

இதற்கமைய, ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மின்சாரத் தேவை 2947 மெகாவோட்டாகக் காணப்பட்டதுடன், அது செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 2936 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளது. </p><p>

அதேமாதம் இரண்டாம் திகதி அந்த பெறுமதி 2934 மெகாவோட்டாக பதிவாகியிருந்தது. செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி தினசரி மின்சாரத் தேவை 2920 மெகாவோட்டாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08c2e722-abab-476a-9ef8-0aaa8a76bca4/26-6a9d5b3a7edc0.webp' /></p><h2>மின்சார உற்பத்தி</h2><p> </p><p>

அத்துடன், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. </p><p>

அது செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரம் வரை உயர்வடைந்துள்ளது. </p><p>

எனினும், செப்டெம்பர் மாதம் 2 மற்றும் 3ஆகிய திகதிகளில் முறையே 58.34 மற்றும் 58.08 கிகாவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T12:24:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவர் கூட விடுபடமாட்டார்! ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-2nd-year-anniversary-anura-speech-1788691268"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-2nd-year-anniversary-anura-speech-1788691268</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;அரசாங்கத்தால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஊழல்கள் மற்றும் தவறுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டால், அதற்குப் பொறு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>அரசாங்கத்தால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஊழல்கள் மற்றும் தவறுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவர் கூட விடுபடமாட்டார் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.&nbsp;</p><p>
புளத்சிங்களவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, ஆட்சிக்கு வந்து அரசாங்கத்தின் உள்விவகாரங்களை ஆராய்ந்த பின்னரே, இடம்பெற்றுள்ள தவறுகளின் அளவை அரசாங்கம் கண்டறிந்ததாகக் கூறினார்.</p><p>"நாங்கள் வெளியே இருந்தபோது ஊழல்களைப் பற்றிப் பேசினோம். ஆனால் உள்ளே வந்து நமது நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்று ஒவ்வொன்றாக ஆராயும்போது, நமது நாடு எவ்வளவு பெரிய தவறுகளை எதிர்கொண்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது" என்று திசாநாயக்க தெரிவித்தார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.</p><p>இந்நிலையில், "எங்கள் அரசாங்கம் - இரண்டு ஆண்டுகள், நாட்டிற்கு நன்மை” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (06) புலத்சிங்களவில் ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இந்நிகழ்வில் பெருமளவிலான அமைச்சர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். </p><p>இதேபோல், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நிகழ்ச்சிகளைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A6qZIoUMNZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T12:12:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா..! சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sathyalingam-mp-statement-1788692861"></link>
            <id>https://tamilwin.com/article/sathyalingam-mp-statement-1788692861</id>
            <summary type="text">கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா என நாடாளுமன்ற
உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பிய நிலையில், பயிர்செய்கைக்காக
அநுர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா என நாடாளுமன்ற
உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பிய நிலையில், பயிர்செய்கைக்காக
அநுராதபுர மாவட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் என திட்ட அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு
தலைவரும், பிரதியமைச்சருமாகிய உபாலி தலைமையில் வவுனியா
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
</p><p>
இதன்போது செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தை
அண்மித்த பகுதியில் வனவள திணைக்களத்தால் சுமார் 1650 ஏக்கர் காணிகள்
விடுவிக்கப்பட்டுள்ளதாக தாம் அறிந்துள்ளதாகவும் அதன் உண்மைத்தன்மை தொடர்பாக
சபைக்கு அறிவிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் சபையில்
தெரிவித்திருந்தார்.
</p><p>
“கீழ் அருவியாறு (கீழ் மல்வத்து ஓயா) நீர்பாசன திட்டம்”எனும் பெயரில் 2019ம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட நீர்பாசன திட்டமானது மீண்டும் தற்போது
நடைமுறைப்படுத்தப்படுகிறது.
</p><p>
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக கட்டப்படும் நீர்த்தேக்கத்திலிருந்து
மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளம் மற்றும் அகத்திமுறிப்பு குளங்களுக்கு
நீர்வினியோகத்தை பரிபாலனம் செய்வது, நீர்மின்சாரத்தை பெறுவது,
மதவாச்சி, செட்டிகுளம் பிரதேசங்களுக்கான குடிநீர் வழங்கல், மேட்டு நீர்பாசன
வசதியை ஏற்படுத்தல் என்பன திட்ட நோக்கமாக சொல்லப்படுகிறது.</p><h2>திட்டங்களுக்காக விடுவிக்கப்படும் காணி</h2><p>
</p><p>
இந்த திட்டத்தினூடாக கட்டப்படும் அணையின் கீழ் வவுனியா மற்றும் அநுராதபுர
மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம் நீரேந்து பகுதிக்குள் உள்வாங்கப்படுகிறது.
குறிப்பாக வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 450
ஏக்கர் வயல் மற்றும் மேட்டுக்காணிகள் நீரேந்து பிரதேசத்திற்குள் செல்கின்றது.
</p><p>
இவ்வாறான சூழலில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கப்பாச்சி
கிராமத்தை அண்மித்த பிரதேசத்தில் சுமார் 1650 ஏக்கர் வனப்பகுதியை மேற்படி
திட்ட தேவைகளுக்காக விடுவிப்பதாக அறியக்கூடியதாக உள்ளது.

எனவே நீரேந்து பிரதேசத்திற்குள் செல்கின்ற சுமார் 450 ஏக்கர் காணிகளுக்குப்
பதிலாக சுமார் 1650 ஏக்கர் காணியை வனவள திணைக்களத்தினைக்களம் விடுவிப்பது
தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குறித்த கூட்டத்தில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.
</p><p>
உரிய பதில் கிடைக்காததால், அநுராதபுரம் மாவட்டத்தில் மேற்படி திட்டத்தினால்
காணிகளை இழக்கும் மக்களை செட்டிகுளத்தில் குடியேற்றம் செய்யவா இந்த மேலதிகமான
காணிகள் விடுவிக்கப்பட்டன என நேரடியாக கேள்வியெழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddbc7998-584d-4484-b675-6441dac1273d/26-6a9d505b0f29b.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலளித்த மல்வத்து ஓயா திட்டத்துக்குப் பொறுப்பான அதிகாரி,

செட்டிகுளத்தில் தாம் குடியேற்றம் எதனையும் செய்யவில்லை எனவும், அனுராதபுரம்
மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் வயல் காணிகளை இழக்கும் மக்களுக்கு
செட்டிகுளத்தில் வயல் காணிகளை வழங்கவே திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே இந்த
காணிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
</p><p>
இதனால் ஆவேசமடைந்த சத்தியலிங்கம் எம்பி,

இன்னொரு மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு, இந்த மாவட்டத்துடன் சம்மந்தப்படாத
ஒருவருக்கு எதற்காக இந்த மாவட்டத்தில் காணிகளை வழங்குகின்றீர்கள். நீங்கள்
மீண்டும் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என கடிந்தார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,

இலங்கை என்பது ஒரு நாடு, இங்கு யாருக்கும் எங்கும் காணி வழங்கலாம், அதற்குரிய
அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது என தெரிவித்தார்.
</p><p>
இதனால் மீண்டும் விசனம் தெரிவித்த சத்தியலிங்கம் எம்.பி,

இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றும் வயற்காணிகள்
இல்லாது உள்ளனர். அவர்களுக்கு குறைந்தது ஒரு ஏக்கர் வயற்காணியாவது வழங்க
வேண்டும் என கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றோம். நான் மாகாணசபையில்
இருக்கும் போது 5 வருடங்களாக இதைக்கோரி வந்தேன்.</p><h2>கோரிக்கை முன்வைப்பு</h2><p> </p><p>தற்போது மீண்டும் கடந்த
இரண்டு வருடங்களாக நான் இந்த கோரிக்கையினை முன்வைத்து வருகின்றேன். நாடாளுமன்றத்திலும் இவ்விடயத்தை முன்வைத்தேன், சம்மந்தப்பட்ட அமைச்சின்
ஆலோசனைக்கூட்டத்தில் இக்கோரிக்கையை முன்வைத்தேன், அமைச்சரிடமும்
பேசியிருக்கின்றேன். ஆனால் இதுவரை ஒரு ஏக்கர் காணி கூட எமது மாவட்ட மக்களுக்கு
வழங்கப்படவில்லை.
</p><p>அதுமட்டுமல்ல யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறும் மக்களின்
வயல்காணிகளை வனவளத்திணைக்களமும் ஏனைய திணைக்க்களங்களும் கையகப்படுத்தி
வைத்துள்ளீர்கள், அக்காணிகளை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியிருக்கிறோம்,
ஆனால் நீங்கள் அவற்றை விடுவிக்காமல் மேலும் மேலும் எமது மக்களின் விளைநிலங்களை
கையகப்படுத்துகிறீர்கள்.
</p><p>இவ்வாறு மிகமோசமாக நடந்துகொள்ளும் நீங்கள் எவ்வாறு வெளிமாவட்ட மக்களுக்கு
வவுனியா மாவட்டத்தில் காணிகளை வழங்குவீர்கள்?
நான் இனவாதம் பேசவில்லை. எனது மாவட்ட மக்களுக்காக அவர்களின் பிரதிநிதி எனும்
வகையில் இதனை கேட்கும் பொறுப்பும் உரிமையும் எனக்குள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c9edc1-a5db-472a-9ad8-70c501bdfaaf/26-6a9d505be1fa2.webp' /></p><p>
</p><p>
இந்த திட்டத்தின் மூலம் செட்டிகுளத்தில் சின்னசிப்பிக்குளம், ஆனைவிழுந்தான்
உள்ளிட்ட 5 குளங்கள் நீரேந்து பகுதிகளுக்குள் செல்லும் எனக்காரணம் காட்டி
கடந்த 7 வருடங்களாக விவசாயிகள் பயிரிடுவதை தடுத்து வருகிறீர்கள். அந்த
விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது?
</p><p>குறித்த விவசாயிகளுக்கு பயிர்செய்கை தடுக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் பொருளாதார
சரிவை ஈடுசெய்ய ஒவ்வொரு போகத்திற்கும் நட்டஈடாக ஏக்கருக்கு ரூபா 35,000/-
வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை ஒரு சதமேனும் வழங்கப்படவில்லை.
அதேநேரம் வயல்செய்கை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.</p><p>

அதுமட்டுமல்ல இந்த திட்டம் சம்மந்தமாக இதுவரையில் வெளிப்படையாக எந்த
கூட்டங்களிலும் பேசப்படவில்லை. மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும்
தெளிவுபடுத்தப்படவோ, அனுமதி பெறப்படவோ இல்லை. ஏன் இவ்வாறு இரகசியாக இந்த
வேலைகளை செய்கின்றீகள்? </p><p>அநுராதபுர மாவட்ட மக்களை குடியேற்றும் நோக்கமே இந்த
திட்டம் என்பது இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது என தெரிவித்தார்.
</p><p>
இதனையடுத்து நீண்ட வாதபிரதிவாதங்களின் பின்னர் அடுத்த மாவட்ட அபிவிருத்திக்
குழு கூட்டத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படுமென திட்ட
அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T11:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் இடிந்து விழுந்த 6 மாடி மாணவர் விடுதி.. 50இற்கும் மேற்பட்டோர் இடிபாடுக்குள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/several-trapped-6-storey-building-collapses-delhi-1788693737"></link>
            <id>https://tamilwin.com/article/several-trapped-6-storey-building-collapses-delhi-1788693737</id>
            <summary type="text">தென்மேற்கு டெல்லியில் 75 படுக்கைகள் கொண்ட 6 மாடி மாணவர் விடுதி கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்கு டெல்லியில் 75 படுக்கைகள் கொண்ட 6 மாடி மாணவர் விடுதி கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இப்பகுதியில் பெரும்பாலான மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், இடிபாடுகளுக்குள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><h3>பலர் ஆபத்தில்..&nbsp;</h3><p>

தகவலறிந்த தீயணைப்புப் படையினர், பொலிஸார், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/BREAKING?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BREAKING</a>: 🇮🇳 PG hostel caves in at Satya Niketan, Delhi, India <br><br>Officials say none confirmed dead yet but unconfirmed reports claim three dead, two girls and one boy, with several rescued and three critically hurt at AIIMS<a href="https://x.com/hashtag/Delhi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Delhi</a> <a href="https://x.com/hashtag/SatyaNiketan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SatyaNiketan</a> <a href="https://x.com/hashtag/BuildingCollapse?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BuildingCollapse</a> <a href="https://t.co/AZkxrt0YCp">pic.twitter.com/AZkxrt0YCp</a></p>&mdash; Twilight (@TwilightDewy) <a href="https://x.com/TwilightDewy/status/2096543490218008627?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>இதுவரை சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. </p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கட்டிடங்களும் காலியாக்கப்பட்டு, நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு முதன்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1d1e23-4fb8-47bd-8299-a8281c683bb5/26-6a9d4e6d76653.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T11:29:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த பெயரை கூறுமாறு கபில சந்திரசேனவிற்கு அழுத்தம்! மரணத்திற்கு முன் பிரமாணப் பத்திரத்தில் அம்பலம் - சாகரவின் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-statement-about-namal-1788689626"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-statement-about-namal-1788689626</id>
            <summary type="text">இலங்கையை விட்டுத் தப்பி சென்று 13 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் தொழிலதிபர் நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே, நாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை விட்டுத் தப்பி சென்று 13 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் தொழிலதிபர் நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே, நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம் தெரிவித்துள்ளார். </p><p>

2013ஆம் ஆண்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>உடன்படிக்கை இரத்தானதால் இழப்பு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக 08 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டதாகவும், 2015ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த உடன்படிக்கையை இரத்து செய்தபோது, ​​அரசாங்கத்திற்கு 116 மில்லியன் டொலர்கள் (37 பில்லியன் ரூபாய்க்கும் மேல்) இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்தப் பரிவர்த்தனையில் குற்றம் சாட்டப்பட்ட நிமல் பெரேரா, சம்பந்தப்பட்ட கணக்குகளுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என முன்னர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8acfe1-745e-4e53-bf62-e3aab9eb6502/26-6a9d43bfb33e6.webp' /></p><p> </p><p>இருப்பினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 13 ஆண்டுகள் கழித்து அவுஸ்திரேலியாவிலிருந்து நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டது ஒரு கடுமையான பிரச்சினை என்று செயலாளர் குறிப்பிட்டார்.</p><h2>மகிந்தவின் பெயரை கூறுமாறு அழுத்தம்</h2><p> </p><p>

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான கபில சந்திரசேன, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும், மகிந்த ராஜபக்சவின் பெயரை கூறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், தனது மரணத்திற்கு முன்பு ஒரு பிரமாணப் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என சாகர கரியவசம் வெளிப்படுத்தினார்.</p><p> 

எந்தவொரு அறிவியல் சான்றுகளோ அல்லது வங்கிப் பதிவுகளோ இன்றி, தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மட்டுமே இந்தச் செயல்முறையை நடத்துகிறது என்றும், இது ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T10:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தால் நீதிபதிகளுக்கு எழுந்துள்ள சவால் - கேள்விகளை முடக்க அரசு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/challenge-posed-to-judges-by-the-22nd-amendment-1788690450"></link>
            <id>https://tamilwin.com/article/challenge-posed-to-judges-by-the-22nd-amendment-1788690450</id>
            <summary type="text">22 ஆவது திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்கு உள்ளாக்குவதோடு அதன் நோக்கத்தில் உண்மைத் தன்மை உள்ளதா என்பது தொடர்பிலும் ஐயப்பாடுகள் உள்ளதாக சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்கு உள்ளாக்குவதோடு அதன் நோக்கத்தில் உண்மைத் தன்மை உள்ளதா என்பது தொடர்பிலும் ஐயப்பாடுகள் உள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். </p><p>

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

22 வது திருத்தம் தொடர்பான விவாதம் நீதித்துறையின் சுயாதீனமான முடிவா என கேள்வியெழுப்பப்படுகின்றது, மாறாக, அறிமுகக் கருத்துக்களில் நான் மூன்று விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
</p><h2>

அரசாங்கத்தின் நோக்கம்</h2><p>
முதலாவது, 22-வது திருத்தத்தின் கூறப்பட்ட நோக்கம் உண்மையில் அதன் உண்மை நிலைக்கு ஏற்ப உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.</p><p> 

“ அரசாங்கத்திலிருந்தும், அரசுடன் தொடர்புடையவர்களிடமிருந்தும் கூறப்பட்ட கருத்து என்னவென்றால் நீதித் தாமதங்களை, சட்டத் தாமதங்களைக் குறைப்போம் என்பதுதான்.

 இது நீதித்துறை சுயாதீனத்திற்கு இழுக்கு என்று வாதிடுபவர்களில் சிலர் கூட, இது சட்டத் தாமதங்களுக்குச் சற்றேனும் உதவும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7db3546-f40c-4f8c-b0d5-bd952f103998/26-6a9d409ac620f.webp' /></p><p>
</p><p>
 ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மேம்பட்ட நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பையும், இப்போது கீழ்நிலை நீதித்துறை உறுப்பினர்களின் வயது வரம்பையும் உயர்த்துவது சட்டத் தாமதப் பிரச்சினையைச் சமாளிக்க உதவுமா என்பதில் எனக்கு அடிப்படை ஐயம் உள்ளது.</p><p> 

அதற்கான காரணத்தை விளக்குகிறேன், வயது வரம்பை உயர்த்துவது இந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதில்லை, அதே எண்ணிக்கையிலான நீதிபதிகள் தான் பணியாற்றுவார்கள்.
</p><p>
 சமீபத்திய காலத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்த அரசியலமைப்புத் திருத்தம் ஏற்கனவே கொண்டு வரப்பட்டது என்பதை நாம் அறிவோம்.</p><p>

 அதேபோன்று, கீழ்நிலை நீதித்துறை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றின் வயதை உயர்த்துவதால் நீதிமன்ற வளாகங்களின் எண்ணிக்கையோ, நீதிபதிகளின் எண்ணிக்கையோ அதிகரிக்காது. 

வழக்குகளை விசாரிக்க அதிக நீதிபதிகள் கிடைப்பதில்லை என்றால், தாமதங்களும் குறையாது” </p><h2>

தீர்ப்பின் தாமதம்</h2><p>
ஆகவே, அதே நீதிபதிகள் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றப் போகிறார்கள் என்றால், தாமதத்தைக் குறைக்க அது எப்படி உதவும் என கேள்வியெழுப்பப்படுகின்றது. </p><p>

“ தீர்ப்பு வழங்கும் தரத்தை இது உயர்த்தும் என்று வாதிடப்பட்டால், அது தற்போதைய நீதித்துறை உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தரத்தில் நீதி வழங்குகிறார்கள், புதிதாக நீதித்துறையில் நுழைபவர்கள் அந்தத் தரத்தைத் தக்கவைக்க முடியாது என்று முன்னரே கருதுவதாகும். 

அந்த வாதம் எங்கிருந்து வருகின்றது என்று எனக்குத் தெரியவில்லை. </p><p>நீதித்துறையில் நுழைபவர்களின் தரம் மிகச் சிறந்ததாக இல்லை என்று வாதிடப்பட்டால், நீதித்துறைக்கான நுழைவுத் தேவைகள் குறிப்பாக மேம்பட்ட நீதிமன்றங்களுக்கானவை மாற்றப்பட வேண்டும் என்பதே அதன் பொருள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04527ee3-4184-44d7-8198-9eec68f995c1/26-6a9d409b974ed.webp' /></p><p>
</p><p>
மேம்பட்ட நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, நான் நீண்ட காலமாகச் சொல்லி வருவது என்னவென்றால், மேம்பட்ட நீதிமன்றங்கள் பெரும்பாலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தே நீதிபதிகளைப் பெறுகின்றன.

 ஜனாதிபதி சட்டத்தரணிகளை சாடியவர்கள், இந்த விடயத்திற்கு மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.</p><p> கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையிலான நீதிமன்ற நீதிபதிகளை வழங்கிய ஒரே அரசு நிறுவனம் அதுவே.

 தனியார் பார் உறுப்பினர்களை மேம்பட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்த அழைப்பது மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வருகின்றது. </p><p> 

உதாரணமாக, இந்தியாவில் தனியார் பார் உறுப்பினர்களை மேம்பட்ட நீதிமன்றங்களில் அமர்த்துவதில் இன்னும் திறந்த அணுகுமுறை உள்ளது. </p><p>

ஆகவே, மேம்பட்ட நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தோ அல்லது கீழ் நீதிமன்றங்களிலிருந்தோ மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

 இந்தத் தேர்வு முறை மாறாவிட்டால், பிரச்சினை தரம் பற்றியதாக இருந்தால், அதைச் சமாளிக்க முடியாது”.
</p><h2>
22ஆவது திருத்தம்</h2><p>
தற்போதைய நீதிபதிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற அனுமதிப்பது திறமையான, அனுபவமிக்க நீதிபதிகளைத் தக்கவைக்கும் என்று சொல்பவர்களிடம் என் கேள்வி,

 மேம்பட்ட நீதிமன்ற நியமனப் பிரச்சினையை இந்தத் திருத்தம் கையாளாதபோது, தீர்ப்புத் தரத்தை அது எப்படி மேம்படுத்தும்?
</p><p>
எனவே, 22-வது திருத்தம் சட்டத் தாமதங்களைக் குறைப்பது பற்றியதல்ல என்று நான் நினைக்கிறேன். தகுதியான, திறமையான நீதிபதிகளைத் தக்கவைப்பது பற்றியதும் அல்ல 

 அது மிகவும் ஆபத்தான வாதம். </p><p>எனவே இரு விஷயங்களிலும் 22-வது திருத்தம் அதன் கூறப்பட்ட நோக்கத்தில் தோல்வியடைகின்றது என்று நான் கருதுகிறேன்.
</p><h2>

ஜனாதிபதியின் முடிவில் சிக்கல்</h2><p>
பின்னர் இந்தத் திருத்தம் எதைப் பற்றியது? ஜனாதிபதி இது ஒரு பெரிய கட்டமைப்புச் சீர்திருத்தத்தின் பகுதி என்று நம்பச் செய்ய விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.
</p><p>
 சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பில் சட்டத் தாமதங்களைக் குறைக்க அவர் மேற்கொள்ளும் பிற சீர்திருத்த முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டதாக ஊடகங்களில் கண்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a7a540d-d80c-47a8-9f75-fee1b00f4197/26-6a9d409c48bb6.webp' /></p><p> </p><p>

அந்தச் சீர்திருத்த முயற்சிகள் எவ்வாறு தாமதங்களைக் குறைக்கும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும், அந்தப் பட்டியலில் இந்தத் திருத்தம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை நான் காணவில்லை.</p><p> 

இது விதிவிலக்கான ஒன்று. தாமதங்களைக் குறைக்க இது பங்களிக்கிறது என்ற எந்த நியாயமான காரணத்தையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை. இது நம்மை பதவிக் காலப் பாதுகாப்பு என்ற கேள்விக்கு அழைத்துச் செல்கின்றது. 

சாலிய பீரிஸ், ஊடக நேர்காணல்களில் இதைச் சிறப்பாக விளக்கியுள்ளார்.</p><p>நீதித்துறை சுயாதீனம் பதவிக் காலப் பாதுகாப்புடன் தொடர்புடையது.

 அதனால்தான் அரசியலமைப்பின் 175-வது பிரிவு உச்ச நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதைக் கையாள்கின்றது என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் வரப்போகும் நாமல்! வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788687758"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788687758</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார். அதன்போது, அநுதாரபுரத்தில் நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார். அதன்போது, அநுதாரபுரத்தில் நாட்டு மக்களுக்கு அவர் கூறவிருந்த சக்திவாய்ந்த செய்தியை சபையில் பகிரங்கமாக அறிவிப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p>ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் பழிவாங்கல்.&nbsp;</p><h2>அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல</h2><p>12ஆம் திகதி அநுராதபுரத்தில்&nbsp; மாபெரும் கூட்டம் ஒன்றை பொதுஜன பெரமுன நடத்தவிருந்த நிலையில், தற்போது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.&nbsp;</p><p>12ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஆற்றவிருந்த சக்திவாய்ந்த உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பகிரங்கமாக சபையில் வைத்து நாமல் ஆற்றுவார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CWIGW7iZQtY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>தான் அமைச்சராக இருந்த கடந்த அரசாங்கத்தின் போது, இது போன்ற நிகழ்வு நடந்திருந்தாலும் நான் அதனையும் அனுமதித்திருக்க மாட்டேன். ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல.&nbsp;</p><p>எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச உரையாற்றவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி முற்றிலும் பொய்யானது. அவை ஆதாரமற்றவை.</p><p>செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ச ஆற்றவுள்ள உரையை சரியாக செவிமடுக்குமாறு அரசாங்கத்திடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec306d82-3523-4653-b84c-36dcef26b87b/26-6a9d3f5975255.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது ஜனநாயகத்துக்கு எதிரானது.. மொட்டுக் கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-batti-district-organizer-condemns-1788688834"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-batti-district-organizer-condemns-1788688834</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தமை ஜனநாயகத்துக்கு எதிரானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தமை ஜனநாயகத்துக்கு எதிரானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு. மாவட்ட அமைப்பாளர், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று (06) ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><h2>மகிந்தவால் சுதந்திரம்..&nbsp;</h2><p>அதில், "குறித்த கைது, இந்த நாடு ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் இன்று
சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவே இருந்து வந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b203309-6190-47cc-a106-5c805d05a1e5/26-6a9d3e4c98944.webp' /></p><p>இந்த நிலையில் நாடு அழிவு
பாதையில் செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நாட்டிற்கு
உண்மையான சுதந்திரம் 2009ஆம் ஆண்டு கிடைத்தது.
</p><p>
அவர் வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் என பல அபிவிருத்திகளை செய்து நாட்டை
அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றவர் அவ்வாறான அவரது மகன் நாமல் ராஜபக்ச எதுவித உண்மை காரணங்களும் இல்லாமல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இது ஜனநாயகத்துக்கு எதிரானது எமது இளைய சமுதாயத்தை வரவிடாமல் தடுப்பதே
தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

நாமல் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:20:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் சென்ற பெண்களை அச்சுறுத்திய இளைஞர்கள் - தங்கச் சங்கிலியால் ஏற்பட்ட ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/robbery-incident-in-batticaloa-1788688973"></link>
            <id>https://tamilwin.com/article/robbery-incident-in-batticaloa-1788688973</id>
            <summary type="text">மட்டக்களப்பு - ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள ஆலய வீதி வழியாக நடந்து சென்ற பெண்களின் தங்க சங்கிலியை அறுத்தச்செல்ல முற்பட்டதாக தெரிவிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள ஆலய வீதி வழியாக நடந்து சென்ற பெண்களின் தங்க சங்கிலியை அறுத்தச்செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் நேற்று (05.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


தங்க சங்கிலியை பறிக்க முயற்சி</h2><p>
ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள ஆலய வீதி வழியாக இரண்டு பெண்கள் நடந்து செல்லும் பொழுது அவர்களின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அறுத்துச்செல்ல முற்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d8c48f8-dfe1-4100-899c-bc015e8d8d5c/26-6a9d3ac701001.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து செல்ல முயற்சி செய்த பொழுது அவர்கள் தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[EV வாகனங்களின் பச்சை நிற தகட்டை ஆராய்ந்த பொலிஸார் - அரசாங்கத்தால் சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-examine-green-license-plates-of-ev-vehicles-1788688130"></link>
            <id>https://tamilwin.com/article/police-examine-green-license-plates-of-ev-vehicles-1788688130</id>
            <summary type="text">இலங்கையில் மின்சார EV வாகனங்களுக்கு வழங்கப்படும் புதிய பச்சை நிறப்
பதிவுத் தகடுகள் தொடர்பில் சில பொலிஸ் அதிகாரிகளிடையே போதிய
விழிப்புணர்வு இல்லை என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மின்சார EV வாகனங்களுக்கு வழங்கப்படும் புதிய பச்சை நிறப்
பதிவுத் தகடுகள் தொடர்பில் சில பொலிஸ் அதிகாரிகளிடையே போதிய
விழிப்புணர்வு இல்லை என வாகன சாரதி ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது தொடர்பில் அவர் சமூக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p> 

வெலிவெரியா பகுதியில் பயணத் தடுப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், தமது
மின்சார வாகனத்தை மறித்து, அதில் பொருத்தப்பட்டிருந்த பச்சை நிறப் பதிவுத் தகடு தொடர்பில் விசாரணை நடத்தினார்கள். </p><p>

மேலும் மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிறத் தகடுகள் வழங்கப்படுவது தொடர்பில் 
ஆரம்பத்தில் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.</p><h2>போலி வாகன தகடு</h2><p>
அந்தப் பதிவுத் தகடு போலி அல்லது சட்டவிரோதமானதா என்று அவர்கள் சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறார்கள்.</p><p> 

அத்துடன் அந்தப் பதிவுத் தகடு அதிகாரப்பூர்வமாகமோட்டார் போக்குவரத்துத்
திணைக்களத்தால் வழங்கப்பட்டது என்பதை நிரூபிக்க, தகட்டைப்
பெற்றுக்கொள்வதற்காகத் தனக்கு வந்த அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியை (SMS) பொலிஸாரிடம் காட்டி நிலைமை விளக்கமாக எடுத்து கூறினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83181136-5668-4663-a868-729367ed0230/26-6a9d373f68a4a.webp' /></p><p> </p><p>



இந்தச் சம்பவத்திற்காக தான் பொலிஸ் அதிகாரிகளைக் குறை கூறவில்லை, மாறாக வாகன சாரதிகள் மோட்டார் வாகனப் பதிவு மற்றும் பதிவுத் தகடுகளில்
செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உடனுக்குடன் அதிகாரப்பூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டும்.
</p><p>

 இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமே, எதிர்காலத்தில் பிற மின்சார வாகன
உரிமையாளர்கள் தேவையில்லாத அலைச்சல்களையும் சிரமங்களையும் சந்திப்பதைத் தவிர்க்க முடியும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய முக்கிய அரசியல்வாதி - சிஐடியினருக்கு கசிந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-minister-premalal-jayasekara-left-country-1788684125"></link>
            <id>https://tamilwin.com/article/former-minister-premalal-jayasekara-left-country-1788684125</id>
            <summary type="text">&amp;nbsp;மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உயர் நீதிமன்றம் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே நாட்டை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உயர் நீதிமன்றம் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

குற்றவியல் புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையின் போது இது தெரியவந்ததாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dc6d20b-cda3-4e72-8c87-ea213d801d04/26-6a9d2b79679fc.webp' /></p><h2>வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு</h2><p>
</p><p>
 கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்று, பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர உட்பட மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aee670-a53c-41eb-b47e-0d038db0d968/26-6a9d2b78b740b.webp' /></p><p>
</p><p>
உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பயணத்தடையை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.</p><p> 

இதற்கு கூடுதலாக, பிரேமலால் ஜெயசேகர உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கும் அக்டோபர் 21 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்புகள் அனுப்புமாறும் அந்த அமர்வு உத்தரவிட்டது.</p><p> </p><p>

இந்த உத்தரவுகளின்படி, குற்றவியல் புலனாய்வுத் துறை சட்ட நடவடிக்கைகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ​​முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.</p><h2>நாடு திரும்பி விமான டிக்கெட் முன்பதிவு</h2><p> </p><p>

இருப்பினும், பிரேமலால் ஜெயசேகர, திரும்பி வருவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பின்னரே வெளிநாடு சென்றதாக குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aee670-a53c-41eb-b47e-0d038db0d968/26-6a9d2b78b740b.webp' /></p><p> 

2015 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு அரசியல் பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததற்காக, பிரேமலால் ஜெயசேகரவுக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. </p><p>

அந்த தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜெயசேகரவும் பிரதிவாதிகளும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது. </p><p>

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும், தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.</p><p> 

அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில், பிரதம நீதிபதி தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T09:21:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதாரமின்றி கைது செய்யப்படும் பெரும் புள்ளிகள்.. ரணில் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-ranil-blames-anura-government-1788681579"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-ranil-blames-anura-government-1788681579</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கமானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட செயன்முறையொன்றில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கமானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட செயன்முறையொன்றில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இது தொடர்பில் அவர்&nbsp; மேலும், "அரசாங்கம் தற்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), வைத்தியர்கள் மற்றும் பௌத்த துறவிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதுடன், அரசியல் கட்சிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வருகின்றது.&nbsp;</p><p> மேலும், அரசியல்வாதிகள் போதிய ஆதாரங்களின்றி கைது செய்யப்படுகின்றனர், இந்நடவடிக்கைகள் ஜனநாயகம், எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.&nbsp;</p><h2>அரசாங்கத்தின் இலக்கு..&nbsp;</h2><p>இன்று மேற்கொள்ளப்படும் அனைத்தும் நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை. அத்துடன் சுயாதீன தொழிற்சங்கங்களை ஒழிக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b840e241-28a9-4c18-8692-a06b7fa40e21/26-6a9d290dbac1b.webp' /></p><p>

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கான ஏற்பாட்டைச் சேர்க்காததால் ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்த்தது.</p><p>எனவே, இதன் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காகத் தமது கட்சி நீதிமன்றம் ஊடாக சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியுள்ளது.</p><p>
அத்துடன், சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்முறை அமைப்புகளை அரசாங்கம் இலக்கு வைக்கின்றது. பௌத்த துறவிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் கவலையளிக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc31d59-37d9-4088-b253-fbfa50687b39/26-6a9d290e8a6c3.webp' /></p><p> இவ்வாறான செயற்பாடுகள் அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் சீர்குலைக்கும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பேசுவதற்குப் போதிய சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன.&nbsp;</p><p>எதிர்க்கட்சித் தலைவரால் அழைக்கப்பட்ட போதிலும் ராஜீவ் அமரசூரிய நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

</p><p>இந்த மாற்றங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, இந்நாடு நாடாளுமன்றத்தில் இருந்தா அல்லது பெலவத்தையில் இருந்தா ஆட்சி செய்யப்படுகிறது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:53:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்க திமோர்-லெஸ்டே பயணமாகிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-jayatissa-leaves-for-timor-leste-1788683424"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-jayatissa-leaves-for-timor-leste-1788683424</id>
            <summary type="text">உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது
அமர்வில் பங்கேற்பதற்காக, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர்
நள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது
அமர்வில் பங்கேற்பதற்காக, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர்
நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு இன்று (செப்டம்பர்) 6 ஆம்
திகதி திமோர் - லெஸ்டேயின் திலி நகருக்குப் புறப்படுகிறது.

​</p><p>செப்டம்பர் 7 முதல் 10 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த உயர்மட்ட
மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரோஸ்
அதானோம் கெப்ரேயஸ், பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட
அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.</p><h2>தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்</h2><p>
</p><p>
மேலும் ​2025ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 78வது அமர்வில் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய தலைவர்
தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த அமர்விலும் தலைவராகச் செயல்படுவார்.
</p><p>
அத்துடன் ​இலங்கைத் தூதுக்குழுவில் சுகாதார அமைச்சகச் செயலாளர் மருத்துவர்
அனில் ஜசிங்க உட்பட அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ
நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501725a8-4bf5-4863-b3b9-9927aa4e0bc7/26-6a9d2832264d3.webp' /></p><p>இந்த நிலையில் ​ சிறப்பு மருத்துவச் சேவைகளுக்கான சமமான அணுகலை உறுதி
செய்யும் ‘திலி பிரகடனத்தை’ ஏற்றுக்கொள்வது குறித்து இம்மாநாட்டில்
பரிசீலிக்கப்படுவதுடன்
​ சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துதல், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு,
எண்ணிம சுகாதாரம் (Digital Health), செயற்கை நுண்ணறிவு, மீள்திறன் கொண்ட
சுகாதார வசதிகள் மற்றும் காசநோய் உள்ளிட்ட நோய்களை ஒழிப்பது குறித்து
ஆலோசிக்கப்படும்.

​</p><h2>பிராந்திய ஒத்துழைப்பு</h2><p>மேலும் நாட்டின் இலவச சுகாதாரச் சேவை அனுபவங்களையும் பிராந்திய
ஒத்துழைப்புக்கான முன்மொழிவுகளையும் இலங்கை முன்வைக்கும்.
​ </p><p>இந்த பயணத்தின் போது இந்தியா, மாலைத்தீவுகள், பங்களாதேஷ் பூட்டான்,
இந்தோனேசியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனும், WHO
பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸுடனும் அமைச்சர் தனிப்பட்ட இருதரப்புப்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது இடத்தை பறிக்க வேண்டாம்! கொட்டகலை - ரொப்கில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-space-lokhill-estate-residents-protest-1788680875"></link>
            <id>https://tamilwin.com/article/public-space-lokhill-estate-residents-protest-1788680875</id>
            <summary type="text">கொட்டகலை - ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி
வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை
எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை - ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி
வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (06.09.2026) பொதுமக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
ரொப்கில் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயில் பகுதியில் இந்த
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><h2>பொதுத் தேவைக்காக பயன்படுத்தப்படும் இடம்</h2><p>
</p><p>ரொப்கில் தோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில், குறித்த இடம் கடந்த
பல வருடங்களாக தங்களின் பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98c083b-60c1-4660-b888-51e56a722d33/26-6a9d23622648d.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, அப்பகுதியில் அமைந்துள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் விசேட
நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்த
இடத்தில் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
அத்துடன், சீரற்ற காலநிலையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளையும் குறித்த இடத்திலிருந்தே
முன்னெடுத்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1856f74-acb8-46fe-9e32-2f14b7d2a742/26-6a9d2363dcd9b.webp' /></p><h2>ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு</h2><p>
</p><p>
இந்நிலையில், தாங்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் இந்த பொது இடத்தை தோட்ட
நிர்வாகம் தனியாருக்கு வழங்கி, அங்கு மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்ட இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என
300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/181feb48-7dd0-4c7b-8def-918fd006d088/26-6a9d2364c33ab.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24f7b1c-441f-47b0-b6d1-42380a69dd17/26-6a9d23659bf5a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டைமண்ட் லீக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diamond-league-mens-javelin-throw-competition-1788682955"></link>
            <id>https://tamilwin.com/article/diamond-league-mens-javelin-throw-competition-1788682955</id>
            <summary type="text">டைமண்ட் லீக் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த ருமேஷ் தரங்க பத்திரகே சாதனைப் படைத்துள்ளார்.

இந்தப் போட்டி நேற்று (05.09.2026) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டைமண்ட் லீக் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த ருமேஷ் தரங்க பத்திரகே சாதனைப் படைத்துள்ளார்.
</p><p>
இந்தப் போட்டி நேற்று (05.09.2026) நடைபெற்றுள்ளது.
</p><p>
இதில் ருமேஷ் தரங்க பத்திரகே 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ளார்.
</p><h2>
சாதனை படைத்த வீரர்</h2><p>
உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவரான ருமேஷ் தரங்க, போலந்தின் டேவிட் வெக்னரை விட 1.57 மீற்றர் அதிக தூரம் எறிந்து இந்த வெற்றியை உறுதி செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43143bbc-31c7-4a6e-8dd7-c88880446421/26-6a9d22f98d5dd.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, கடந்த ஜூன் 4ஆம் திகதி ரோமில் நடைபெற்ற போட்டியில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்ததே, இந்த ஆண்டில் உலகளவில் பதிவான சிறந்த பெறுபேறாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:23:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 வருடங்களாக போராடும் யாழ். மக்கள் - அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-palali-1788682316"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-palali-1788682316</id>
            <summary type="text">வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 12 வாரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டமானது, இன்று(06.09.2026) பலாலி சந்தியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 12 வாரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(06.09.2026) பலாலி சந்தியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><h2>

36 வருடங்களாக போராடும் மக்கள்</h2><p>
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192f36d5-b1e3-4549-820a-7833b5e4ed1b/26-6a9d20987a3c9.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ade5600a-750a-4e2c-a8be-dd3f90e1314d/26-6a9d20998e739.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கிரிக்கெட் போட்டிகள்.. பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disable-people-cricket-chathuranga-abeysinga-1788681053"></link>
            <id>https://tamilwin.com/article/disable-people-cricket-chathuranga-abeysinga-1788681053</id>
            <summary type="text">கொழும்பில் இலங்கை பார்வையற்றோர் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “எல்லைகளைக்
கடந்து” அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் நிகழ்வில், பிரதி அமைச்சர் சதுரங்க
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இலங்கை பார்வையற்றோர் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “எல்லைகளைக்
கடந்து” அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் நிகழ்வில், பிரதி அமைச்சர் சதுரங்க
அபேசிங்க கலந்துகொண்டு பார்வையற்றோர் கிரிக்கெட்
விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p>கிரிக்கெட் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு
என்றும், அதில் மாற்றுத்திறனாளிகள் பின்தங்கிவிடக் கூடாது என்றும்,
இவ்விளையாட்டு தடைகளை உடைத்து அனைவரையும் உள்ளடக்க உதவுகிறது என்றும் பிரதி
அமைச்சர் குறிப்பிட்டார்.</p><h2>பார்வையற்றோரின் திறமை&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன் பந்து இயக்கத்தைக் கண்காணிக்க உதவும் சத்தத்தை எழுப்பும் கடினமான
பிளாஸ்டிக் பந்துகள் மற்றும் ஒலி எழுப்பும் எஃகு விக்கெட்டுகள் இதில்
பயன்படுத்தப்படுகின்றன.

இதேவேளை பந்துவீச்சு அண்டர்ஆர்ம் (Underarm) முறையில் செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a26ab51d-ed19-40c6-9653-dabafd3429e8/26-6a9d1cb796a4b.webp' /></p><p>

இதற்கமைய முற்றிலும் பார்வையற்றவர்கள் (இவர்கள் எடுக்கும் ஒட்டங்களுக்கு
கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்).

மிகவும் குறைந்த பார்வை கொண்டவர்கள்.
</p><p>அதிக பார்வை வசதியும் குறைந்த தெளிவும் கொண்டவர்கள் என 11 பேர் கொண்ட அணியில்
3 B1, 4 B2 மற்றும் 4 B3 வீரர்கள் இடம்பெறுவர்.
</p><p>
மேலும் வீரர்களின் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் வியப்பளிப்பதாகக் கூறிய
பிரதி அமைச்சர், இலங்கையின் முதல் பார்வையற்ற பாராளுமன்ற உறுப்பினரான சுகத்
வசந்தா போன்றவர்கள் கொள்கை மாற்றங்களுக்கும் சமூக உள்ளடக்குதலுக்கும்
ஆற்றிவரும் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய 21ஆம் நாள் திருவிழா நிறைவு - நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festival-1788681284"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festival-1788681284</id>
            <summary type="text">&amp;nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா இன்று(06.09.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா இன்று(06.09.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.</p><p> 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கான சிறப்பு பூஜைகள் இடம்பெறும் நிலையில், இன்று(06) கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் நடைபெற்றுள்ளது. </p><p>

காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, அன்னப்பட்சி வாகனத்தில் கஜவல்லி மஹாவள்ளி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
</p><p>
அதேவேளை, இன்று மாலை தங்க ரத உற்சவமும், நாளைய தினம்
காலை மாம்பழத் திருவிழாவும், மாலை ஒருமுக திருவிழாவும்
இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரிப்பு - 6 இலட்சம் பெறுமதியான வலைகள் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/encroachment-by-tamil-nadu-fishermen-1788680808"></link>
            <id>https://tamilwin.com/article/encroachment-by-tamil-nadu-fishermen-1788680808</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்பதாக உள்ளூர் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் நேற்றைய தினம்(05.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><h2>

6 இலட்சம் பெறுமதியான வலை சேதம்</h2><p>
தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இந்திய கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்களின் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce143b9e-f045-41dd-b50b-50191dc86bfe/26-6a9d1a9aa1619.webp' /></p><p> </p><p> 

அதே போன்று, வலைகளை இந்திய கடற்றொழிலாளர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>


 குறித்த சம்பவம் தொடர்பில், தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 


இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:47:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொண்டாட்டத்தில் ரணில் தலைமையிலான குழு - ஒரே இடத்தில் ஒன்றுகூடிய பல அரசியல் முக்கியஸ்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-led-group-at-the-celebration-1788678892"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-led-group-at-the-celebration-1788678892</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை (06) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை (06) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>
முன்னாள் பிரதமர் மேதகு டி.எஸ்.சேனநாயக்க மற்றும் பிற தலைவர்களால் 1946 செப்டெம்பர் 6 அன்று நிறுவப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, இன்று தனது 80வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.</p><h2>நினைவு விழா</h2><p>
</p><p>இதனை முன்னிட்டு பிட்டகோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று காலை நினைவு விழா நடைபெற்றுள்ளது.</p><p>

இந்த நிலையிலை குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தினபுரியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.. தொடரும் தேடுதல் பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-missing-drowning-in-ratnapura-1788678516"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-missing-drowning-in-ratnapura-1788678516</id>
            <summary type="text">இரத்தினபுரி - எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற
இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளார் என்று
பொலிஸார் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற
இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளார் என்று
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>தம்புளுவன, மாரலிய பகுதியைச் சேர்ந்த, கடந்த ஆறு மாதங்களுக்கு
முன்னர் திருமணம் முடித்த 32 வயதுடைய பிரசாத் சம்பத் விஜேரத்ன என்பவரே இவ்வாறு
காணாமல் போயுள்ளார்.</p><h2>தேடுதல் பணி..&nbsp;</h2><p>

இவர் இரத்தினபுரி நகரில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் ஊழியராகக்
கடமையாற்றி வந்தவர் ஆவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45477dd8-2e0d-4f5e-8a07-3d8aa35d1749/26-6a9d14db545dd.webp' /></p><p>
நேற்று அந்தப் பகுதியில் நண்பர்கள் சிலர் மாணிக்கக் கற்கள் தோண்டிக்
கொண்டிருந்த வேளையில், அங்கு நீராடச் சென்ற மேற்படி இளைஞர் ஆழமான குழியில்
சிக்கி நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
</p><p>
இளைஞர் திடீரெனக் காணாமல் போனதைத் தொடர்ந்து, மாணிக்கக் கல் தோண்டும் பணியில்
ஈடுபட்டிருந்தவர்களும் பிரதேச மக்களும் இணைந்து நேற்று இரவு 8 மணி வரை
தேடியும் அவர் கிடைக்கவில்லை.
</p><p>
இது குறித்து எலபாத்த பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார்
படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை அவரைக்
கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து - பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-fire-accident-in-kilinochchi-1788679943"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-fire-accident-in-kilinochchi-1788679943</id>
            <summary type="text">கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த பதிப்பகமொன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது.

இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த பதிப்பகமொன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது.</p><p>

இன்று அதிகாலை (6) 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
இதன் காரணமாக கடையில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a8c701-0bbf-4fd4-9cf6-6f88f3f0d0de/26-6a9d170be6137.webp' />&nbsp;</p><p>

இந்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:32:37+00:00</updated>
        </entry>
    </feed>
