<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-16T07:30:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் நிதியுதவி! வடக்கு ஆளுநரின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-hospital-financial-india-north-1789542676"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-hospital-financial-india-north-1789542676</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற
உணர்வுடன் இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறிக்
கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற
உணர்வுடன் இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறிக்
கொண்டிருக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்&nbsp; தெரிவித்தார்.</p><p>மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா
நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்
பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16.09.2026) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபா நன்கொடை உதவியுடன் உருவாகவுள்ள இந்தப்
பிரிவு, அவசர நிலைகளில் எமது மக்களுக்கு விரைவானதும் ஒருங்கிணைந்ததுமான
மருத்துவ சேவையை வழங்குவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.</p><h2>நிதியுதவி</h2><p> மன்னார் மாவட்ட
மக்களின் சார்பில், இந்தப் பெறுமதியான உதவிக்காக இந்திய மக்களுக்கும், இந்திய
அரசாங்கத்துக்கும், இந்தியப் பிரதமர் மேன்மைதங்கிய நரேந்திர மோடிக்கும், இங்கு பிரதி நிதித்துவப்படுத்தும் இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மன்னார் மாவட்டத்தின் சுகாதாரத் தேவைகளிலும் இதே அணுகுமுறை காணப்படுகிறது.
ஜனாதிபதி தலைமையின் கீழும், சுகாதார அமைச்சர்&nbsp; நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்களிப்புடனும், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின்
மேம்பாட்டுக்காக நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993f0fb0-48ed-426b-9ac0-2d632827d383/26-6aaa44aa27f72.webp' /></p><p>மன்னார் மாவட்டத்தின் சுகாதாரத் துறையை இன்னும் வலுப்படுத்துவதில் நாம்
அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம். </p><p>இன்று நடுகை செய்யப்படும் இந்த
அடிக்கல் விரைவில் ஒரு நவீன மருத்துவக் கட்டமைப்பாக எழுந்து, ஆயிரக்கணக்கான
எமது மக்களின் உயிருக்கும் நலனுக்கும் பாதுகாப்பாக அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p>]]></content>
            <updated>2026-09-16T07:26:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-s-medical-report-submitted-to-court-1789542137"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-s-medical-report-submitted-to-court-1789542137</id>
            <summary type="text">தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பான சுரேஷ் சலேவுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>
</p><p>இதற்கு முன்னரான வழக்கு விசாரணையின் போது கடந்த நூறு நாட்களாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d701d964-f5e2-449f-b975-28e5c9a6b911/26-6aaa4434d581b.webp' /></p><p>

எனினும் நேற்றைய வழக்கு விசாரணையின் போது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.</p><p>இதனைக்கருத்திற் கொண்ட நீதிபதி பசன் அமரசேன, மருத்துவ அறிக்கைகள் தொடர்பான விபரங்களை வழங்குவதற்காக 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அறிவித்தல் விடுத்ததுடன், வழக்கு விசாரணையை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.</p><p>
இதற்கிடையே நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கை பிற்பகல் சுமார் 3:15 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-johnston-adjourned-1789542545"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-johnston-adjourned-1789542545</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 28 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது, சொகுசு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 28 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது, சொகுசு வாகனமொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><h2>இறுதி முறையாக விசாரணை</h2><p>
</p><p>
அதன்போது கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, குறித்த வழக்கை ஒக்டோபர் 28 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
</p><p>
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/873b380b-1273-4807-a7a4-336b2055fafe/26-6aaa42c5a9288.webp' /></p><p>

சந்தேக நபருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இது மோட்டார் வாகனங்கள் அவசரச் சட்டத்தின் கீழ் வரும் வழக்கு என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், இந்த வழக்கு ஒக்டோபர் 28 அன்று இறுதி முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகும் ஞானசார தேரர்.. விடுக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/date-fixed-hearing-case-involving-gnanasara-thero-1789540962"></link>
            <id>https://tamilwin.com/article/date-fixed-hearing-case-involving-gnanasara-thero-1789540962</id>
            <summary type="text">பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான விசாரணை இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என கொழும்பு மேல் நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான விசாரணை இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><h2>கைது நடவடிக்கை..&nbsp;</h2><p>

இவ்வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1f424f-1276-448e-ba15-2d82e60440b2/26-6aaa40053b4a3.webp' /></p><p>

குற்றஞ்சாட்டப்பட்டவரான கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நேரில் முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என்று உயர் நீதிமன்றம் இம்மாதம் 10 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.</p><p>

இருப்பினும், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு எதுவும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) எஃப்.யு. வூட்லர் அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை! தீவிரமடையும் எல்நினோ தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-intensifying-el-ni-o-climate-1789541436"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-intensifying-el-ni-o-climate-1789541436</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல்நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில்
உலகெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல்நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில்
உலகெங்கிலும் கடுமையான வெப்பம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற வானிலை
மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.
</p><p>
இந்த நிகழ்வானது 2026 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் உச்சத்தை அடைந்து
‘மிகவும் வலுவானதாக’ மாறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2027 பெப்ரவரி வரை
தொடர்வதற்கான வாய்ப்பு 100 சதவீதத்தை எட்டியுள்ளதாக கணிப்பாளர்கள்
தெரிவிக்கின்றனர்.</p><h2>வானிலை மாற்றங்கள்</h2><p>
</p><p>

வெப்பமண்டல பசிபிக் பகுதியின் மேற்பரப்புக்குக் கீழே அசாதாரணமாக வெப்பமான
நீரின் பாரிய இருப்பு காணப்படுகின்றது. </p><p>ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில்
மேற்பரப்புக்குக் கீழே உள்ள நீரின் வெப்பநிலை இயல்பை விட 8°C (14°F) வரை
அதிகமாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef28e8b7-ce51-418b-beae-61584a847c1c/26-6aaa3f38e1619.webp' /></p><p>
“பூமி தற்போது அறிமுகமில்லாத காலநிலை மாற்றத்திற்குள் நுழைந்துள்ளது, கடல்
நீரும் தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது” என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ
குட்டெரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>

பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் இந்த இயற்கையான காலநிலை
மாற்றம், இம்முறை பெருங்கடல்கள் ஏற்கனவே அதிக வெப்பத்துடன் காணப்படுவதனால் மிக
மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. </p><p>மே முதல் ஒகஸ்ட் வரையிலான
காலப்பகுதியில் பசிபிக் கடலின் வெப்பநிலை இயல்பை விட 2.6°C வரை உயர்ந்துள்ளது.</p><h2>வெள்ளப் பெருக்குகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன் காரணமாக உலகளவில் விவசாயம், பொது சுகாதாரம், நீர் விநியோகம் மற்றும்
எரிசக்தித் துறைகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. </p><p>வறட்சி மற்றும்
திடீர் வெள்ளப் பெருக்குகள் மூலம் சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்திற்குப்
பெரியளவிலான பாதிப்புகள் ஏற்படக் கூடுமென WMO தலைவர் செலஸ்டே சவுலோ
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f3d7dc7-dc35-41ab-bc60-97d9124681c8/26-6aaa3f3995288.webp' /></p><p>
இவ்வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் தேசிய
வானிலை முகமைகள் மற்றும் அரசுகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளன.</p><p>

இதேவேளை, நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் வெப்பநிலை
தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ்
கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் சிறுத்தைகளின் நடமாட்டத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-action-leopards-and-tigers-nuwara-eliya-1789541171"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-action-leopards-and-tigers-nuwara-eliya-1789541171</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும்
சிறுத்தைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள்
திணைக்களம் உடனடியாக நடவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும்
சிறுத்தைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள்
திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக தொழிலாளர்
முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்ப விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கொட்டகலை பகுதியில் இன்று(16.9.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்கனவே குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலர்
உயிரிழந்துள்ள நிலையில், அதனை தடுப்பதற்கு வனஜீவராசி அதிகாரிகளோ அரசாங்கமோ,
தோட்ட நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><h2>கோரிக்கை</h2><p>இந்தநிலையில் தற்போது
சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளமை தொழிலாளர்களுக்கு பாரிய
அச்சுறுத்தலாக மாறியுள்ளது.</p><p>
சிறுத்தைகள் தற்போது தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புப்
பகுதிகளுக்குள் நுழைந்து, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் உள்ளிட்ட
செல்லப்பிராணிகளை கவ்விச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e921d8f-1265-4438-95aa-03035bc4cf6a/26-6aaa3df9dafb1.webp' /></p><p>எனவே, சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம்,
வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தோட்ட நிர்வாகங்கள் இணைந்து உடனடி மற்றும்
முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என புஸ்ப விஸ்வநாதன் வலியுறுத்தினார்.
</p><p>
தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சிறுத்தைகள்
உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீண்டகாலத் தீர்வொன்றை
நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை இதன் போது விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழரசுக் கட்சிக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ariyanethiran-case-against-sivagnanam-sumanthiran-1789540722"></link>
            <id>https://tamilwin.com/article/ariyanethiran-case-against-sivagnanam-sumanthiran-1789540722</id>
            <summary type="text">இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். </p><p>

 தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p><h2>அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்</h2><p> 

கடந்த வருடம் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியின் உப விதிகளுக்கு எதிராக நீக்கியமைக்கு எதிராக தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொது செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் தமிழரசுக் கட்சிக்கும் எதிராக சிரேஸ்ட சட்டத்தரணி பிறேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1ced3ce-723c-4576-833b-f10657c48657/26-6aaa3ad868857.webp' /></p><p>
</p><p>
இந்த வழக்கினை இன்று எடுத்துக் கொண்ட மாவட்ட நீதவான் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு அடுத்த வழக்கினை திகதியிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்: இளைஞர்கள் குழு அட்டகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-students-of-a-popular-school-in-vavuniya-1789539607"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-students-of-a-popular-school-in-vavuniya-1789539607</id>
            <summary type="text">வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று
தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று
தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் நேற்று (15.09) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த இரு மாணவர்களும் பாடசாலை முடிவடைந்து வீடு செல்ல முற்பட்ட போது
பாடசாலைக்கு வெளியே நின்ற 10ற்கும் மேற்பட்டவர்களை கொண்ட இளைஞர் குழு
அவர்கள் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.</p><h2>பெற்றோர்&nbsp;&nbsp;விடுத்துள்ள&nbsp;கோரிக்கை </h2><p>
</p><p>
இதில் உயர்தரத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46fff04f-8a8a-4ed2-88d1-21fa53fa37ff/26-6aaa3a648ae09.webp' /></p><p>

வவுனியா நகரை அண்மித்த பாடசாலைகளில் பாடசாலை முடிவடைகின்ற நேரங்களில் அதற்கு
தொடர்பில்லாத இளைஞர்கள் குழுவாக வந்து நிற்கும் நிலைமை தொடர்ச்சியாக அவதானிக்க
முடிகின்றதாகவும், அவர்களால் குழு மோதல் சம்பவங்களும் இடம்பெற்று
வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எனவே இந்த விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகமும்,பொலிஸாரும் உரிய நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-issues-warrants-for-aravinda-1789539516"></link>
            <id>https://tamilwin.com/article/court-issues-warrants-for-aravinda-1789539516</id>
            <summary type="text">முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு கோட்டை நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p>ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணையில் சந்தேகநபராக உள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு வழங்கப்பட்ட பிணையில், அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் பிணையாளர்களாக கையெழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
பிரியங்கா நியோமாலி நீதிமன்றத்தில் முன்னிலையாகாததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.</p><h2>முன்வைக்கப்பட்ட கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதனையடுத்து, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி தங்களது பிணையாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.</p><p>அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக அவர்களது சட்டத்தரணி முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.</p><p>
இந்த வழக்கில் தொடர்புடைய பிணைப் பத்திரத்தின் பெறுமதி 2 கோடி&nbsp; ரூபா என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a0e5da3-624c-4a02-be94-801ba50b1637/26-6aaa3b5cde3ae.webp' />&nbsp;&nbsp;</p><p> பிணைத் தொகையைப் பறிமுதல் செய்வதற்கு முன்னர் விளக்கம் அளிக்க இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
</p><p>அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமாகி இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில் அரவிந்த மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த விடயத்தை அரவிந்த மற்றும் அவரது மனைவியின் சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேவேளை, பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது இவ்விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:35:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்கு பிரதமர் ஹரிணி விடுத்துள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-harini-speech-in-international-day-democracy-1789539586"></link>
            <id>https://tamilwin.com/article/pm-harini-speech-in-international-day-democracy-1789539586</id>
            <summary type="text">95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று
தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும்
புதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று
தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும்
புதிய பாதையில் அடி எடுத்து வைத்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய
தெரிவித்தார்.
</p><p>
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு
செய்யப்பட்ட சிறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
இந்நிகழ்வில், தேர்தல் மின்னணு சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள்
நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையும் முதன்நாள் உறையும்
வெளியீடும் இடம்பெற்றன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் உரையாற்றுகையில்,

"ஜனநாயகத்தின் இதயமாகச் சட்டத்தின் ஆட்சியே திகழ்கின்றது.</p><p> சட்டத்தின் முன்
அனைவரும் சமம் என்பதுடன், எந்தவொரு தரப்பினரும் சட்டத்துக்கு மேலானவர்கள்
அல்ல. கடந்த காலத்தில் சீர்குலைந்திருந்த சட்டத்தின் மீதான மக்களின்
நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பத் தற்போதைய அரசு பல நடைமுறைச் சாத்தியமான
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><h2>சாத்தியமான நடவடிக்கைகள்&nbsp;</h2><p>

அரசியல் தலையீடுகள் இன்றிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப் பொலிஸ், குற்றப்
புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறைக்கு முழுச் சுதந்திரம்
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d1c4f8-6bcf-4c2f-8e84-abe4baa34bfe/26-6aaa366aa0059.webp' /></p><p> </p><p>அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் குற்றவாளிகள் மற்றும்
ஊழல்வாதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும், ஆனால் இதுவரை
வாக்களிக்கும் உரிமையற்றிருந்த வெளிநாடவாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை
வழங்குவதற்கான வழிமுறைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
அரச கொள்முதல் செயல்முறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் முழுமையாக டிஜிட்டல்
மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஊழலுக்கான வழிகள் அடைக்கப்பட்டு, அரச சேவையானது மக்களுக்குக் கௌரவமான முறையில்
வழங்கப்பட்டு வருகின்றது.
</p><p>
அரசின் 'எவரையும் கைவிடாத' கொள்கையின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக
நலன்புரித் துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, குடிமக்களின்
அடிப்படை உரிமைகளும் சம வாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
2024 ஆம் ஆண்டில் மக்கள் எடுத்த தீர்க்கமான முடிவு, இன்று வெளிப்படைத்தன்மை,
சட்டத்தின் ஆட்சி மற்றும் உண்மையான மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக மலர்ந்து
வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இனம், மதம், சாதி வேறுபாடின்றி
அனைவருக்குமான நியாயமான இலங்கையை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதே
அனைவரினதும் இலக்காக இருக்க வேண்டும்." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:27:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் புதிதாக உருவான நவீன அடுக்குமாடி குடியிருப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apartment-housing-complex-officially-handed-over-1789538927"></link>
            <id>https://tamilwin.com/article/apartment-housing-complex-officially-handed-over-1789538927</id>
            <summary type="text">கொழும்பு நகர்ப்புற மக்களுக்கு சிறந்த வீடமைப்பு வசதிகளை வழங்கி வைக்கும்
நோக்கில், கொழும்பு 14, கிராண்ட்பாஸ், ஸ்டேடியம்கம பகுதியில் புதிதாக
நிர்மாணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகர்ப்புற மக்களுக்கு சிறந்த வீடமைப்பு வசதிகளை வழங்கி வைக்கும்
நோக்கில், கொழும்பு 14, கிராண்ட்பாஸ், ஸ்டேடியம்கம பகுதியில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட 'Port View Residencies' அடுக்குமாடி வீடமைப்புத் தொகுதி
நேற்று மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.</p><p>

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் பிமல்
ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகர்ப்புற வளர்ச்சி பிரதி
அமைச்சர் இரங்க குணசேகர உள்ளிட்ட பல முக்கிய அழைப்பாளர்கள் கலந்து
சிறப்பித்தனர்.</p><h2>வீடமைப்புத் தொகுதி</h2><p>
</p><p>
இதன்போது தகுதிபெற்ற பயனாளிகளுக்கு உரிமப்பத்திரங்களும் வீடுகளுக்கான
சாாவிகளும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சின் வளர்ச்சித்
திட்டமிடலுக்கு அமைவாக, நகர்ப்புற வளர்ச்சி அதிகாரசபையின் வழிகாட்டலில்
கொழும்பு நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்திற்கு ஆதரவளிக்கும் திட்டத்தின் மூலம்
இந்த வீடமைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb6297f-a119-4a5a-a2bc-c19c9777a14c/26-6aaa341b0f20c.webp' /></p><p>
</p><p>
9,866 மில்லியன் ரூபா மொத்தச் செலவில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான
நிதிப் பங்களிப்பு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடன் உதவியின்
கீழ் பெறப்பட்டுள்ளது.

15 மாடிகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் திட்டத்தில், தலா 500 சதுர அடி
பரப்பளவைக் கொண்ட 1,000 வீட்டு அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன.</p><h2>கட்டுமானப் பணிகள்</h2><p>

குடியிருப்பாளர்களின் அன்றாட மற்றும் பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்
வகையில் சுகாதார மையம், சமூகக் கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம், பொலிஸ்
சாவடி, கிராம நிலதாரி அலுவலகம், தீயணைப்புப் பிரிவு, சூப்பர் மார்க்கெட்,
சிறுவர் பூங்கா மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு
வசதிகளுடன் இது கட்டப்பட்டுள்ளது.</p><p>
மேலும், சுற்றியுள்ள வீதிப் பின்னல் மற்றும் கால்வாய் அமைப்புகளை அபிவிருத்தி
செய்தல், புதிய சமூகக் கூடத்தை அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதானத்தை
மேம்படுத்துதல் போன்ற விரிவான உள்கட்டமைப்புப் பணிகளும் இத்துடன் இணைந்து
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3daac9ec-7e59-4fa5-b5e4-4718a81430b1/26-6aaa341be1bee.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடந்த
2020 ஆம் ஆண்டு மே மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இத்திட்டம், நாட்டின்
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவில் தடைப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
</p><p>
இங்குள்ள 1,000 வீடுகளில் 250 வீடுகளுக்கு நேற்று குடியிருப்பாளர்கள் குடியேற
சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 750 வீடுகளிலும் அடுத்த 8
மாதங்களுக்குள் கட்டம்படமாக மக்கள் குடியேற்றப்படுவர் என்றும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnstons-slams-npp-govt-1789538122"></link>
            <id>https://tamilwin.com/article/johnstons-slams-npp-govt-1789538122</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு, நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு, நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>அரசாங்கம் காட்டுச் சட்டத்தை அமல்படுத்த முயற்சித்தால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்துடன் மக்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>அண்மையில் ஜனாதிபதி தலைமையில் பொலனறுவையில் நடைபெற்ற கூட்டம் தொடர்பில் அவர் தனது விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.</p><h2>அநுரவின் கூட்டம்..&nbsp;</h2><p>
</p><p>பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேனவினால் நடத்தப்படும் தன்சல்களுக்கு இருக்கக்கூடிய மக்கள் கூட்டம் கூட அநுரவின் கூட்டத்தில் இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f828dac3-5660-40c2-86f2-ceeed2dd4174/26-6aaa2f4b65575.webp' /></p><p>
</p><p>எனினும், அனுராதபுரத்தில் தங்களது கட்சி ஏற்பாடு செய்த கூட்டத்தில் மாபெரும் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததனர் எனவும் மக்கள் தற்பொழுது தங்கள் பக்கம் திரும்பி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>தற்பொழுது அரசாங்கம் கூறிய பொய்கள் அம்பலமாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் ஒன்றையும் அனுராதபுரத்தில் வேறொன்றையும் ஜனாதிபதி கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கத்தின் காலம் முடிந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார் அரசாங்கம் சிறைச்சாலைகளை காண்பித்து தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியில் அரசாங்கம் எவ்வாறான ஓர் முடிவை எதிர்நோக்கும் என்பதை பாருங்கள் என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:05:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா - அலியாமருதமடுக் குளம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் தலைமையில் உயர்மட்டச் சந்திப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-aliyamarudhamadu-kulam-1789538456"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-aliyamarudhamadu-kulam-1789538456</id>
            <summary type="text">வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அலியாமருதமடுக்
குளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் பல்வேறு முறைப்பாடுகளை ஆராய்ந்து,
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அலியாமருதமடுக்
குளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் பல்வேறு முறைப்பாடுகளை ஆராய்ந்து,
அவற்றுக்கு ஒழுங்குமுறையானதும் நிரந்தரமானதுமான தீர்வை எட்டுவதற்கு உரிய
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில்
நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அலியாமருதமடுக் குளம் தொடர்பில் சிலரால் தொடர்ச்சியாக பல்வேறு அரச
திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில்,
பிரச்சினையின் உண்மை நிலையை நேரில் ஆராய்ந்து, அப்பகுதி மக்களுடன்
கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற
மீளாய்வுக் கூட்டத்தின் போது ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். அதற்கமைவாக,
நேற்று செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது, ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா
மாவட்ட செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மேலதிக மாவட்டச்
செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப்
பணிப்பாளர், வவுனியா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி பிரதி
ஆணையாளர், கிராம அலுவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் குளப்பகுதிக்கு
நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினர்.
</p><p>
இதன்போது, தனிநபர் ஒருவரால் ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இடையூறுகள்
தொடர்பில் பொதுமக்களாலும் பொது அமைப்புக்களாலும் பல்வேறு முறைப்பாடுகள்
முன்வைக்கப்பட்டன. அரச திணைக்களங்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகச்
செயற்படாமல் தன்னிச்சையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் ஏனைய
விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T06:01:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaks-left-country-family-statement-1789535027"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaks-left-country-family-statement-1789535027</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும்&amp;nbsp;இன்று அதிகாலை (1...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும்&nbsp;இன்று அதிகாலை (16) நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக வெளியாகும் ஊடகச்செய்திகள் பொய்யானவை என ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.</p><p>எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வெளிநாடு சென்றதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை</h2><p>மேலும் அவருடன் ரோஹித ராஜபக்சவின் அத்தையும் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87b4c53d-34fd-41e6-a992-e3c14ecaef60/26-6aaa28b58fc4a.webp' /></p><p>கடந்த சில தினங்களாக உடல்நல குறைவாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p>இந்நிலையில், அவர் ஒரு தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாகவும்,&nbsp; இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் FCID இன் கடிதத்தை திடீரென வழங்கியதாகவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அதன்படி, அவர் நாட்டை விட்டு வெளியேறவிருந்த நேரத்திலேயே குறித்த அறிவிப்பு கடிதம் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இருப்பினும், அதற்கு முன்பு ஷிரந்தி ராஜபக்ச FCID-யால் அழைக்கப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே சம்பந்தப்பட்ட கடிதம் வழங்கப்பட்டதாகவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>FCID-யின் முன்னைய அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள செய்திகளை குடும்ப உறுப்பினர் மறுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T05:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி FCIDயில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-mp-tissakutty-arachchi-fcd-1789536654"></link>
            <id>https://tamilwin.com/article/former-mp-tissakutty-arachchi-fcd-1789536654</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.இன்று (16) காலை அவர்&amp;nbsp;முன்னிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.</p><p>இன்று (16) காலை அவர்&nbsp;முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பான வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>வெளியிட்ட தகவல்</h2><p>இதன்போது அங்கு வருகை தந்த அவர், பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dc57657-38aa-4889-8934-96d58217292d/26-6aaa2e9e03337.webp' /></p><p>"உள்ளே அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னரே செய்தியாளர்களிடம் பதிலளிக்க முடியும் என்றும், நான் எந்தவிதமான மோசடியிலோ அல்லது ஊழலிலோ ஈடுபடவில்லை," என்று அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T05:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் புதிய சட்டங்கள் தேவை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/social-media-use-have-to-be-controlled-1789537083"></link>
            <id>https://tamilwin.com/article/social-media-use-have-to-be-controlled-1789537083</id>
            <summary type="text">ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் மட்டுமன்றி, தனிநபர் சுதந்திரத்திலும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் காரணமாக முறையான சட்ட ஏற்பாடுகள் அவசியமாகவுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் மட்டுமன்றி, தனிநபர் சுதந்திரத்திலும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் காரணமாக முறையான சட்ட ஏற்பாடுகள் அவசியமாகவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;புதிய சட்டங்கள்&nbsp;</h2><p>இந்தக் கோரிக்கையானது ஒரு தரப்பிடம் இருந்து மட்டுமன்றி, மதத் தலைவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களிடமிருந்தும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728c9bea-eabc-44f4-a4fb-6ffc81108d40/26-6aaa2b3d56004.webp' /></p><p>
 இதற்கமைய, ஒருவரின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கும் இத்தகைய சட்டக் கட்டமைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் சில செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், எனவே அச்சட்டங்களை புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>அத்துடன், இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான வரைவுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளதாக தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
மேலும், எதிர்வரும் சில மாதங்களுக்குள் அப்பணிகளை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T05:38:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல்போன ஞானசாரர் மீண்டும் வந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-missing-gnanasara-has-returned-1789534937"></link>
            <id>https://tamilwin.com/article/the-missing-gnanasara-has-returned-1789534937</id>
            <summary type="text">


நான் சட்டத்திற்கு அஞ்சி எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மேல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நான் சட்டத்திற்கு அஞ்சி எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். </p><p>மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எதனையும் எதிர்கொள்ளத் தயார்&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சி காணாமல் போய்விட்டதாக இணையம் முழுவதும் செய்திகள் பரவுவதை நான் பார்த்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d80963f6-a9b5-43ba-8b80-e42af46ef2d9/26-6aaa2812494f0.webp' /></p><p>
</p><p>
ஆனால், பலவீனமானவர்களே ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள். நாட்டிற்காக உழைத்த நாங்கள் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.</p><p>

நாங்கள் எந்த நடவடிக்கைக்கும் அஞ்சப் போவதுமில்லை. ஓடி ஒளிந்து கொள்ளப் போவதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-16T05:24:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒரே மேடையில் ரணில் மற்றும் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-and-sajith-on-the-same-stage-again-meet-1789533940"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-and-sajith-on-the-same-stage-again-meet-1789533940</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நாளை (17) நடைபெறவுள்ள அரசியல் நிகழ்வொன்றில் ஒரே மேடையில் சந்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நாளை (17) நடைபெறவுள்ள அரசியல் நிகழ்வொன்றில் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி தனியாக பிளவுபட்டதன் பின்னர் , ரணிலும் சஜித்தும் பொதுவெளியில் எந்தவொரு நிகழ்விலும் ஒன்றாகக் கலந்துகொள்ளவில்லை.</p><h2>அதிதிகளாக ஒரே மேடையில்&nbsp;</h2><p>

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள அரசியல் ரீதியான ஒரு நிபுணத்துவ கலந்துரையாடல் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்தும் பிரதம அதிதிகளாக ஒரே மேடையில் கலந்து கொள்ளவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91daa459-7637-490a-af67-ab87a871c125/26-6aaa1fe325b14.webp' /></p><p>

மகாமான்ய டி. எஸ். சேனாநாயக்க அரசியல் பீடத்தின் பழைய மாணவர் சங்கம் (DSSPA Alumni Club) முதன்முறையாக ஏற்பாடு செய்யும் 'ஜே.ஆர். ஆளுகையும் நடுநிலையும்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
</p><p>
கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும் இந்த நிபுணத்துவ கலந்துரையாடல் நாளை பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அரசியல் தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பல முன்னணி சிரேஷ்ட தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தம் இந்த ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கே வழிவகுக்கும் : ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amentment-sri-lanka-1789533055"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amentment-sri-lanka-1789533055</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும் அரசின் தற்போதைய
நடவடிக்கையானது, இந்த ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கே உறுதியாக வழிவகுக்கும்
என்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும் அரசின் தற்போதைய
நடவடிக்கையானது, இந்த ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கே உறுதியாக வழிவகுக்கும்
என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.</p><p>

நீதித்துறையின் சுயாதீனத்தை முற்றிலுமாகச் சுருக்கி, நாட்டில் உள்ள அத்தனை
ஜனநாயக நிறுவனங்களையும் திட்டமிட்டு வலுவிழக்கச் செய்யும் சதி முயற்சியாகவே
இத்தகைய சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய வரலாற்றுத் தேவை</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும்,
பொதுமக்களும் எவ்வித பேதமுமின்றி ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய
வரலாற்றுத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af3b9f7-fe4d-47f9-a7a6-8bfec285121a/26-6aaa1df772ddc.webp' /></p><p>
</p><p>
இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலத்துக்கு எதிராக எதிர்வரும் 24 ஆம் திகதி
கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத்
தரப்பினரும் பெருமளவில் அணிதிரள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழலில், அரசு கொண்டுவரும்
இந்தச் சர்ச்சைக்குரிய அரசியல் சட்டத் திருத்தம் நாட்டின் அரசியல் களத்தில்
புதிய கொந்தளிப்புக்கும், ஆட்சியாளர்களுக்கு எதிரான பலத்த மக்கள்
எழுச்சிக்கும் வித்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T04:41:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bags-found-in-katunayake-airport-1789528325"></link>
            <id>https://tamilwin.com/article/bags-found-in-katunayake-airport-1789528325</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு அருகில் கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில் பை ஒன்று நேற்று பிற்பகலில் விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு அருகில் கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில் பை ஒன்று நேற்று பிற்பகலில் விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>

அந்த பையை சோதனையிட்ட அதிகாரிகள் ஒரு கோடி 68 லட்சத்து 3750 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையொன்றும், மனித தோலை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் கிறீம் வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

 குறித்த பொருட்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

கண்டுபிடிக்கப்பட்ட பைகள்</b></h2><p>குறித்த சிகரெட்டுகள் மற்றும் கிரீம்கள் அனைத்தும் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c510c4a-0832-4acf-8b55-43a625654286/26-6aaa193802989.webp' /></p><p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகுதியில், 111,400 சிகரெட்டுகள் அடங்கிய பெட்டிகளும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் முறையான அனுமதியின்றி நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தோலை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் 125 கிறீம் போத்தல்களும் காணப்பட்டுள்ளன.</p><p> 

இது தொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொண்ட விமான நிலையச் சுங்க அதிகாரிகள், சிகரெட் மற்றும் கிறீம் தொகையை பறிமுதல் செய்து, அவற்றை எதிர்வரும் நாட்களில் அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 
</p>]]></content>
            <updated>2026-09-16T04:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் போலி காணி ஆவணங்களை தயாரித்து கோடிக்கணக்கில் பணமோசடி - சிஐடியிடம் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-for-millions-of-rupees-fake-deeds-1789529583"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-for-millions-of-rupees-fake-deeds-1789529583</id>
            <summary type="text">கொழும்பு 07, பார்ன்ஸ் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்கு போலி உறுதியைத் தயாரித்து நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் குற்றப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 07, பார்ன்ஸ் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்கு போலி உறுதியைத் தயாரித்து நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இன்று புதன்கிழமை (16) களுத்துறை நகரில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப்புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h3>நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு&nbsp;போலி ஆவணங்கள்</h3><p>களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffb4ff25-57cc-4415-8adf-9f7038546db4/26-6aaa191f89491.webp' /></p><p>
சந்தேகநபர் போலி ஆவணங்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளதுடன், சுமார் 01 கோடி ரூபா பெறுமதியான சொத்தினை விற்பனை செய்து பணத்தை மோசடி செய்துள்ளார்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T04:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிஷாத்துக்கும் சஹ்ரானுக்கும் நெருங்கிய தொடர்பு - நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-and-sahran-had-close-relationship-1789526024"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-and-sahran-had-close-relationship-1789526024</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினருக்கு உள்ள தொடர்புகள் குறித்து மேலும் 2 சிறப்புக் சாட்சியங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினருக்கு உள்ள தொடர்புகள் குறித்து மேலும் 2 சிறப்புக் சாட்சியங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p>
அவற்றில் ஒரு சாட்சியம், அப்போதைய இராணுவ உளவுத்துறையின் தகவல் வழங்குநர் ஒருவரால் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் பாதுகாப்பின் கீழ் பல சந்தர்ப்பங்களில் சஹ்ரான் ஹாசீம் மன்னார் கடல் வழியாக இந்தியா சென்றிருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.</p><p>
</p><h2><b>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்</b></h2><p>அரச சேவையில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவிற்கு வெளிநாட்டு பயணத் தடையையும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கோரியிருந்தார். அந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b7c756-4431-4a77-8d92-18c5967fbe32/26-6aaa16758523f.webp' /></p><p>
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்த வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
சந்தேகநபரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, விசாரணைகளின் முன்னேற்றம் எனக் கூறி சமர்ப்பிக்கப்படும் பி அறிக்கைகள் பொய்யான கூற்றுகள் என தெரிவித்தார்.
</p><p>
இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-09-16T04:09:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் நாமல்! பொலிஸார் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245"></link>
            <id>https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.</p><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p>நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவினால் கொழும்பு காவல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்ட உத்தரவின்படி முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.</p><h2>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்&nbsp;</h2><p>
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/054778a2-ae82-4d7a-afef-871a00c2411c/26-6aaa09826bcb0.webp' /></p><p>இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>நீதிமன்றத்திற்கு அறிக்கை </h2><p>

இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.</p><p>

இதற்கமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்! விலை திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-fuel-price-change-announcement-1789525963"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-fuel-price-change-announcement-1789525963</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை என&amp;nbsp;அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை என&nbsp;அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(15) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,&nbsp;</p><h2>எரிபொருள் விலை திருத்தம் </h2><p>இதுவரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d934443-bf28-4771-9435-87e135c57b18/26-6aaa018ca0b03.webp' /></p><p>எனவே எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம்.</p><p>இதற்கு முன்னர் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களே தற்போது நாட்டை வந்தடைகின்றன. எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தற்போதுள்ள விலையில் எரிபொருட்களை விநியோகிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளன.</p><h2>உலக சந்தை நிலவரம்</h2><p> கடந்த 3 மாதங்களாக எரிபொருள் விலையில் அரசாங்கம், நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கியிருக்கின்றது.


இதற்காக 57 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. </p><p>எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T02:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறிய மகிந்தவின் மனைவி ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaks-left-the-country-1789524390"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaks-left-the-country-1789524390</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இன்று அதிகாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p> 

இன்று அதிகாலை அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

கடந்த சில தினங்களாக உடல்நல குறைவாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். </p><p> </p><h2><b>

நிதிக் குற்றங்கள்</b></h2><p>இந்நிலையில் உறவினர் ஒருவருடன் ஷிரந்தி ராஜபக்ச சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddcfc96e-d28d-404a-ada0-c0c9c9056364/26-6aaa034862488.webp' /></p><p>குறித்த இருவரும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் SQ469 என்ற விமானத்தில், அதிகாலை சுமார் 1.10 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டனர்.</p><p>எதிர்வரும்&nbsp;நாட்களில்
 நிதிக்குற்றங்கள் தொடர்பான விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T02:34:08+00:00</updated>
        </entry>
    </feed>
