<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-17T01:22:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: பிரதமரின் மௌனம் ஏற்படுத்தியுள்ள சந்தேகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-amarasuriya-22nd-constitutional-amendment-1786929523"></link>
            <id>https://tamilwin.com/article/harini-amarasuriya-22nd-constitutional-amendment-1786929523</id>
            <summary type="text">பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காதது அரசியல் களத்தில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காதது அரசியல் களத்தில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக எதிரணி அரசியல் அவதானிகள் சுட்டுக்காட்டியுள்ளனர்.</p><p>இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்: ஆனால் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவை அதற்குத் தூண்டியவர் அவரா என்ற சந்தேகம் பெலவத்தை தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பில் பெலவத்தையின் தலைவர்கள் பெரும் கவலையடைந்துள்ளதாக குறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p></p><h2>ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்</h2><p>தேசிய மக்கள் சக்தியிலிருந்து மாத்தறை மாவட்டத்திற்காகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவரும், ஜனாதிபதியின் நெருங்கிய சட்டத்தரணிகள் வட்டத்தில் உள்ளவருமான சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும 22க்கு ஆதரவாகப் பேசாமல் இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>ஜனாதிபதிக்கு, தினசரி புலனாய்வு அறிக்கைகள் மூலம் இது தொடர்பான சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e9c20a0-bd86-4775-bb53-3aabccc7e2dd/26-6a826175c377b.webp' /></p><p>எவ்வித அழுத்தத்தைப் பிரயோகித்தாவது எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்திற்குள் பிரதமரைக் கொண்டு 22வது திருத்தத்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிடச் செய்வதே இதற்குச் சிறந்த தீர்வாகும் என பெலவத்தை தீர்மானித்துள்ளது. </p><p>அதற்கமைய, எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்திற்குள் பிரதமரைக் கொண்டு குறித்த அறிக்கையை வெளியிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T01:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்ட11 இளைஞர்கள் வழக்கில் அதிரடி திருப்பம்.. சிஐடி வெளிக்கொணர்ந்த அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-youngsters-kidnapped-case-trincomalee-gun-site-1786926986"></link>
            <id>https://tamilwin.com/article/11-youngsters-kidnapped-case-trincomalee-gun-site-1786926986</id>
            <summary type="text">2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்கள்&amp;nbsp;வெளிக்கொணரப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்கள்&nbsp;வெளிக்கொணரப்பட்டுள்ளன.&nbsp;</p><p> குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளில், கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலை கடற்படையின் கன்சைட் (Gunsite) முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை நீதிமன்றத்தில் உறுதி. </p><p>அத்துடன், அங்குள்ள சுவரொன்றில் எழுதப்பட்டிருந்த முகவரி கடத்தப்பட்ட சாந்த சமரவீர என்பவரின் கையெழுத்து என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
இந்த விசாரணைகளின் போது, குறித்த முகாமில் ஆறு பெண்களும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>கொடூரக் கொலைகள்..&nbsp;</h2><p>தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவர் விடுவிக்கப்பட்டால் கடற்படை மீது குற்றம் சுமத்தப்படும் என்ற அச்சத்தினால் கொலை செய்யப்பட்டதாகவும்&nbsp;குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a94f0d1-f7f4-4de6-b2a4-491a8184eeb3/26-6a825a4d09349.webp' /></p><p>போதிய ஆதாரங்கள் இன்மையால் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த வழக்குகள், இந்தத் தகவல்கள் வெளிவந்ததையடுத்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
கடற்படைக்குள் இயங்கிய கப்பம் பெறும் கும்பலினால் இழைக்கப்பட்ட இந்தக் கொடூரக் குற்றம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதிகளான வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் நிஷாந்த உலுகேதென்ன ஆகிய மூவருக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>சட்டமா அதிபரினால் 667 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு இந்தக் கடத்தல்கள் பற்றித் தெரிந்திருந்ததாகவும், தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டு மாநகர சபை வழங்கிய சுகாதார தொண்டர் நியமனம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-municipal-council-complaint-1786925912"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-municipal-council-complaint-1786925912</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாநகரசபை தாதியர் நியமனங்கள் தொடர்பான முறைகேடு குறித்து கொழும்பில் உள்ள இலஞ்ச
ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி குற்ற பிரிவில் முறைப்பாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாநகரசபை தாதியர் நியமனங்கள் தொடர்பான முறைகேடு குறித்து கொழும்பில் உள்ள இலஞ்ச
ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி குற்ற பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக
ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார்
தெரிவித்தார்.</p><p>

மட்டக்களப்பு ஈ.பி.டிபி. கட்சியின் வாராந்த ஊடக மாநாடு பாலைமீன்மடுவில் உள்ள
காரியாலயத்தில் நேற்று (16) இடம்பெற்றது.</p><h2>கொடுப்பனவுகள்&nbsp;&nbsp;</h2><p> இதன்போது கருத்து தெரிவித்த அந்தனிசில் ராஜ்குமார், "மட்டு மாநகர சபையின் 16ஆவது அமர்வில் சபை உறுப்பினர்கள் தங்களுக்கு தெரியாமல் 16
சுகாதார தொண்டர்களுக்கு முறையற்ற விதத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டதாக தங்களது
ஆதங்கங்களை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9daef193-3f0d-43d4-b625-4c0edf83a591/26-6a82551737c64.webp' /></p><p>இது ஊடகங்கள் ஊடாக அறியக்கூடியதாக இருந்தது. இதனை
அறிந்த பின்னர் தகவல்களை தேடிய போது சுகாதார தொழிலாளர்கள் என நியமனங்கள்
வழங்கி அவர்களுக்கு மாநகரசபைக்குள்ளும் வாசிகசாலைக்குள்ளும்; கடமையாற்றுவதற்கு
அமர்த்தப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த முறைகேடு தொடர்பாகவும் மாநகர சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற
உத்தியோகத்தர் ஒருவருக்கு அங்கு மீண்டும் ஓப்பந்த அடிப்படையில் வேலைக்கு
அமர்த்தப்பட்டதுடன் மாமாங்க ஆலய வருடாந்த உற்சவ காலத்தில் அவருக்கு
மேலதிகமாக தினம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை வழங்கி ஒரு திணைக்களத்தில்
ஒருவருக்கு 3 வேதனங்கள் வழங்கிய முறைகேடு உட்பட 5 மோசடிகள் தொடர்பாக
கொழும்பிலுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி குற்றப் பிரிவில்
முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:26:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deshabandu-tennakoon-drugs-crime-1786925811"></link>
            <id>https://tamilwin.com/article/deshabandu-tennakoon-drugs-crime-1786925811</id>
            <summary type="text">பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் &#039;சோல் பீச்&#039; (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் 'சோல் பீச்' (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கியதில் மறைக்கப்பட்ட உண்மை கதையொன்றை புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க வெளியிட்டு பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் குறிப்பிட்ட மேலதிக தகவல்கள்,</p><p>சவேந்திர சில்வாவின் கோரிக்கையின் பேரில்தான் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதை இடித்தார் என்று குறித்த ஹோட்டலின் முகாமையாளர் ரிபா காதர் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
</p><p></p><h2>பழிவாங்கிய சம்பவம்</h2><p>அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டாகும்.அதாவது தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய போது ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கோட்டுள்ளார். அதை கொடுக்க மறுத்ததால் பழி தீர்க்கும் முகமாக தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கினார்.</p><p>தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்ற பின்னர், அவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊடகப் பிரசாரத்திற்குத் தேவையான கூட்டங்கள் அனைத்தும் 'சோல் பீச்' ஹோட்டலிலேயே நடைபெற்றன.
</p><p>அந்தப் பிரசாரங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் 'சோல் பீச்' ஹோட்டலே வழங்கியது. அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதும், "இதை நிரந்தரமாக்கிக் கொள்ள எனக்கு இவ்வளவு தொகை பணம் வேண்டும்" என்று கேட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d3c367-cb7b-41c4-8e3d-2cdd12638cd7/26-6a8252f52914c.webp' /></p><p>அதற்கு ஷிரான் பாஷிக், "இந்த நேரத்தில் அவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேசபந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. </p><p>இதை நிராகரித்த பின்னர் இத்தனை காலம் தனக்கு உதவிய நபரைப் பழிவாங்குவதற்காக இந்த ஹோட்டலை இடித்தார்.தான் கேட்ட பணம் கிடைக்காததால் பழிவாங்கும் நோக்கில் இதைச் செய்தார்.
</p><p>அக்காலத்தில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் (OIC) என பொலிஸில் உள்ள அனைவரும் வந்து சாப்பிட்டு, குடித்தது இந்த 'சோல் பீச்' ஹோட்டலில்தான். </p><p>இது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால், அதற்கு அடுத்ததாக உள்ள 'பரகுடா' (Barracuda) உணவகத்தில் பொலிஸாரால் சும்மா ஒரு தேநீர் கூட குடிக்க முடியாது என பல தகவல்களை குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒவ்வொரு இலங்கையருக்கும் ஒரு வாகனம்! வாகன விலைக் குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-price-in-sri-lanka-decrease-wijitha-herath-1786916159"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-price-in-sri-lanka-decrease-wijitha-herath-1786916159</id>
            <summary type="text">ஒவ்வொரு குடிமகனும் வாகனம் பயன்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;

மத்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு குடிமகனும் வாகனம் பயன்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் முடிவுக்கு வந்தவுடன், வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று அமைச்சர்&nbsp; குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விதிக்கப்பட்டுள்ள வரி&nbsp;</h2><p>
</p><p>
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனக் கண்காட்சி மற்றும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67353625-2e43-4a31-a3d8-ae4dd6a99269/26-6a825047794ef.webp' />&nbsp;</p><p>சிறிய கார்கள் முதல் சூப்பர்கார்கள் வரையிலான பல்வேறு வகையான வாகனங்கள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. இது துறைமுக நகர வளாகத்திலிருந்து வாட்டர்ஸ் எட்ஜ் வரை சென்றது.</p><p>
சமூகத்தில் பொறுப்பான வாகனப் பயணக் கலாசாரத்தையும், சுய ஒழுக்கத்துடன் கூடிய ஓட்டுதலையும் உருவாக்கும் நோக்கத்தில் இந்த வாகனக் கண்காட்சியும் அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து பிரதேசங்களிலும் நிர்வாகத் தீர்மானங்கள் பொறுப்புடன் எடுக்கப்பட வேண்டும்: பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-north-hospital-easten-province-1786913372"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-north-hospital-easten-province-1786913372</id>
            <summary type="text">கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும், பல மதங்களும் ஒன்றாக வாழும்
பிரதேசங்களில் நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நுண்ணுணர்வுடனும் மிகுந்த
பொறுப்புடனும் எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும், பல மதங்களும் ஒன்றாக வாழும்
பிரதேசங்களில் நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நுண்ணுணர்வுடனும் மிகுந்த
பொறுப்புடனும் எடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>கல்முனை
வடக்கு ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில்
ஊடகங்களுக்கு இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp;தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சில விதிமுறைகளும் சுற்றறிக்கைகளும் எமது
அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டவை அல்ல.</p><h2>நிர்வாகப் பிரச்சினை</h2><p> அவற்றில் காலத்திற்கேற்ற மாற்றங்கள்
தேவைப்பட்டால் அவற்றை மீளாய்வு செய்து, சட்டம், தொழில்சார் தேவைகள், மத
உரிமைகள் மற்றும் தனிநபர் மரியாதை ஆகிய அனைத்தையும் சமநிலைப்படுத்தும்
முற்போக்கானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகளையும் கலந்துரையாடல்களையும் நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.
</p><p>ஒரு நிர்வாகப் பிரச்சினையை தமிழ்–முஸ்லிம் அல்லது வேறு எந்த
சமூகங்களுக்கிடையிலான மோதலாக மாற்றுவதற்கும், அதன் மூலம் அரசாங்கத்தின் மீது
அவநம்பிக்கையை உருவாக்குவதற்கும் எவரையும் அனுமதிக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7267aae-2f3f-445b-a609-2f4673d83655/26-6a822783f33ca.webp' /></p><p>
</p><p>
இனவாதத்திற்கும் மத அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் இந்த அரசாங்கத்தில்
எந்தவித இடமும் இல்லை என்பதே எங்களது உறுதியான கொள்கையாகும்.
</p><p>
இந்த விடயத்தில் நாம் ஏற்கனவே செயல்பட ஆரம்பித்துள்ளோம். அனைத்து தரப்பினரின்
உரிமைகளையும், தொழில்சார் தேவைகளையும், தனிநபர் மரியாதையையும், சமூக
நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் முற்போக்கான, நியாயமான மற்றும் நடைமுறைக்கு
ஏற்ற தீர்வை ஏற்படுத்த தேவையான அனைத்தையும் நாம் மேற்கொள்வோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T21:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொனால்டோவின் 1,000 கோல்கள் இலக்கு.. ஓய்வு குறித்து எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cristiano-ronaldo-hints-retirement-at-end-season-1786913789"></link>
            <id>https://tamilwin.com/article/cristiano-ronaldo-hints-retirement-at-end-season-1786913789</id>
            <summary type="text">கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போதைய பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போதைய பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.</p><h2>வரலாற்றுச் சாதனை&nbsp;</h2><p> 20 ஆண்டுகளுக்கும் மேலான தனது கால்பந்து பயணத்தை நிறைவு செய்யவுள்ள 41 வயதான ரொனால்டோ, "இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கலாம், ஒரு வரலாற்றுப் பெருமையுடன் விடைபெற விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதுவரை கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளில் 976 கோல்களை அடித்துள்ள அவர், 1,000 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையை எட்ட இன்னும் 24 கோல்களே தேவைப்படுகின்றன. </p><p>சவுதி அரேபியாவின் அல் நசர் (Al-Nassr) அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் (146) அடித்த சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T21:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குறுதிகளை மீறி மக்கள் மீது வரிச்சுமை: கந்தளாயில் பேரணியுடன் கையெழுத்து வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-burden-on-the-people-rally-in-kantalai-1786909290"></link>
            <id>https://tamilwin.com/article/tax-burden-on-the-people-rally-in-kantalai-1786909290</id>
            <summary type="text">கந்தளாய் நகரில் அரசாங்கத்தின் நியாயமற்ற மற்றும் அநீதியான வரிப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் நகரில் அரசாங்கத்தின் நியாயமற்ற மற்றும் அநீதியான வரிப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் சுமைகளைக்
குறைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 'மக்கள் போராட்ட இயக்கம்'&nbsp; சார்பில் கந்தளாய் நகரில் இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டமும்
கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>போராட்டம் குறித்து மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதி தட்சில
தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில்:


"தற்போதைய ஜனாதிபதி முன்னர் வேட்பாளராக இருந்தபோது சுகாதாரம், உணவு
மற்றும் கல்விக்கான வரிகள் நாகரிகமடைந்த உலகிற்குப் பொருத்தமானவை அல்ல
என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் அவ்வரிகள் முற்றாக நீக்கப்பட்டு
பூஜ்ஜியமாக்கப்படும் என்றும் ஊடகங்கள் வாயிலாக வாக்குறுதி அளித்திருந்தார்.</p><h2>அநீதியான வரி</h2><p>
ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று
ஆட்சியில் இருக்கும் அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சுகாதாரம் மற்றும்
கல்விக்கு மட்டுமன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் தொடர்ந்து வரிகளை
அதிகரித்து வருகிறார்.</p><p>எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் மீண்டும் வரிகள் உயர்த்தப்படவுள்ளதாகச்
சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் பெரிய நிறுவனங்களுக்கும், பெரிய
தொழிலதிபர்களுக்கும், தமக்கு நெருக்கமான செல்வந்தர்களுக்கும் வரி நிவாரணங்களை
வழங்கிவிட்டு, ஏழை எளிய பொதுமக்கள் மீது பல்வேறு வரிகளைச் சுமத்தி அவர்களைத்
தொடர்ச்சியாகப் பீடித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d4113a4-e872-4454-a1bb-8677a8419035/26-6a82133d9b1c4.webp' /></p><p>
</p><p>

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'அநீதியான வரிக்கு எதிரான
வாரத்தின்' ஒரு பகுதியாகவே கந்தளாய் நகரில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோத வரி கொள்கைக்கு எதிராகப் பொதுமக்கள் தங்கள்
எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எதிர்ப்புப் பதாகையில் கையெழுத்துச்
சேகரிக்கும் நடவடிக்கைகளும் இதன்போது இடம்பெற்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரின் தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டப்பட்டது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rooster-flag-hoisted-arches-of-nallur-gate-1786908658"></link>
            <id>https://tamilwin.com/article/rooster-flag-hoisted-arches-of-nallur-gate-1786908658</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு இன்று (16)
சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>
இதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி
நாட்டப்பட்டது. </p><p>தொடர்ந்து நல்லூரன் தெற்கு மற்றும் நல்லூரன் வடக்குவாசல்
வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டன.
</p><p>
நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தின் வெளி
வீதிகள் திருவிழாக் கோலம் பூணும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு பக்தர்களின்
கவனத்தை ஈர்த்தது.
</p><p>
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் பக்தி மற்றும்
திருவிழா உணர்வுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-16T19:31:02+00:00</updated>
        </entry>
    </feed>
