<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-15T02:30:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/restrictions-on-fuel-supply-at-500-fuel-stations-1789436026"></link>
            <id>https://tamilwin.com/article/restrictions-on-fuel-supply-at-500-fuel-stations-1789436026</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. </p><p>

தனியார் எரிபொருள் நிறுவனங்களால் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான 250 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சினொபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 150 மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனத்திற்கு சொந்தமான 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என மொத்தம் 500 நிலையங்களுக்கு டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

எரிபொருள் இறக்குமதி</b></h2><p>குறித்த நிறுவனங்கள் நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விலைக்கும், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யும் விலைக்கும் இடையில் காணப்படும் பாரிய இடைவெளியே இந்த நிலைக்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee50eb56-0873-4b1c-a1a4-115e18ff3a09/26-6aa8a3c55c954.webp' /></p><p>நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> “இதன் காரணமாகப் பொதுமக்களும், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.</p><p> தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. </p><h3><b>விலை சூத்திரம்</b></h3><p>தற்போதைய அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருளை விற்பனை செய்வதனால் தமக்கு பாரிய நட்டம் ஏற்படும் என குறித்த தனியார் நிறுவனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c55659-d546-4418-8ddf-be395f36e788/26-6aa8a3c6183d0.webp' /></p><p>இவ்வாறு ஏற்படும் நட்டத்தைக் குறைத்துக் கொள்வதற்காகவே குறித்த நிறுவனங்கள் சந்தைக்கான எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. </p><p>எனினும், இந்த நிறுவனங்கள் எமக்குத் தொடர்ந்தும் எரிபொருளை வழங்குவதாக உறுதியளித்திருந்தன” என குமார் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T02:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலட்சக்கணக்கானோருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1-20-000-people-recruited-goverment-job-this-year-1789436693"></link>
            <id>https://tamilwin.com/article/1-20-000-people-recruited-goverment-job-this-year-1789436693</id>
            <summary type="text">இந்த ஆண்டு பரீட்சைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தகுதியின் அடிப்படையில் 1,20,000 க்கும் மேற்பட்ட புதிய நபர்கள் அரச சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு பரீட்சைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தகுதியின் அடிப்படையில் 1,20,000 க்கும் மேற்பட்ட புதிய நபர்கள் அரச சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>இதன்படி, தனிப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் அரச சேவையில் சேர்க்கும் கலாச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>கேகாலை, ருவன்வெல்லாவில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>பொதுமக்களுக்கு&nbsp;&nbsp;வழங்கப்படும்&nbsp;சேவைகள் </h2><p>
உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூராட்சி திணைக்களங்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71ed0dc0-9ab3-4432-9db8-262204466860/26-6aa8a7c6e7a5b.webp' /></p><p>
</p><p>
பொது நிதிகளை சிக்கனமாகவும் வீணாக்காமலும் பயன்படுத்தி, 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் பிரதான நோக்கத்தை அடைவதற்கு பொதுச் சேவையும் உள்ளூராட்சி நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>பிறப்பு முதல் இறப்பு வரையிலும், இறப்பிற்கு பிறகும் கூட, பல தேவைகளில் இந்த உள்ளூராட்சி நிறுவனங்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. இது மக்களின் வாழ்க்கையுடன் மிகவும் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. </p><p>இருப்பினும், சில சமயங்களில், இந்த உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் சேவைகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததைக் காண்கிறோம். எனவே, இந்த உள்ளாட்சி வாரத்தை மீண்டும் செயல்படுத்த நினைத்தோம். இதை ஒரு வாரத்திற்குள் மட்டுப்படுத்தாமல், இந்தத் திட்டம் வழங்கும் அறிவு, புரிதல் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, வரும் ஆண்டு முழுவதும் இந்தச் சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.</p><h2>அரச சேவைக்காக ஆட்சேர்ப்பு</h2><p>
</p><p>
இன்று, நடமாடும் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. எதிர்காலத்தில், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்வேறு கல்வித் திட்டங்கள், கலை, கலாச்சார மற்றும் விளையாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட, மக்களைப் பாதிக்கும் அத்தியாவசிய சேவைகளை ஒரே வளாகத்தில் வழங்குவது மற்றும் அவற்றை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வது உட்பட, இந்த வாரம் ஏற்பாடு செய்யப்படும்.
</p><p>மத்திய அரசின் கீழ் இது தான் நிலை. மாகாண சபைகளின் கீழும் இதே நிலை தான். எனவே, ஒரு அரசாங்கமாக, இந்த ஆண்டு மட்டும் அரச சேவைக்காக 1,20,000-க்கும் மேற்பட்டோரை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.சில ஆட்சேர்ப்புகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.</p><p>செப்டம்பர் 01, 2019 நிலவரப்படி 180 நாட்களை நிறைவுசெய்த, தற்காலிக, பதவி, ஒப்பந்தம் போன்ற அடிப்படையில் இருந்த அனைவரையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T02:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18-years-old-boy-killed-brutally-1789434493"></link>
            <id>https://tamilwin.com/article/18-years-old-boy-killed-brutally-1789434493</id>
            <summary type="text">கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><h2><b>

 ஆரம்பகட்ட விசாரணை</b></h2><p>உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4f3026-8f5a-4b8f-9d24-5272bb4f78b1/26-6aa89c8eeeaa4.webp' /></p><p>தனிப்பட்ட தகராறு ஒன்று முற்றியதன் காரணமாக இருவரால் இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
 இந்த கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><h3><b>

பழைய தகராறு </b></h3><p>இதேவேளை, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eef92656-57cb-41af-8789-135f041a1ab7/26-6aa89c8fa3950.webp' /></p><p>யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யக்கலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 பழைய தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மர்ம பொதி - தப்பியோடிய பயணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mystery-box-in-katunayake-airport-1789435229"></link>
            <id>https://tamilwin.com/article/mystery-box-in-katunayake-airport-1789435229</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6 ஆம் இலக்கப் பொதி பகுதியில் அருகில் மர்மமான முறையில் கைவிடப்பட்டிருந்த பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த பொதிக்குள் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6 ஆம் இலக்கப் பொதி பகுதியில் அருகில் மர்மமான முறையில் கைவிடப்பட்டிருந்த பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p> அந்த பொதிக்குள் பெருமளவு குஷ் ரக போதைப்பொருள் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p> இரண்டு பொதிகளுக்குள் காற்றுப்புகாதவாறு 60 பொட்டலங்களாக பொதியிடப்பட்டிருந்தது. </p><h2><b>தப்பியோடிய பயணி</b></h2><p>இந்தப் போதைப்பொருள், நேற்று தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-405 விமானத்தில் வந்த பயணி ஒருவரால் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/349ea38a-d730-44c7-abd5-e1cde87819d2/26-6aa89ffcd1764.webp' /></p><p>விமான நிலையத்திற்குள் வைத்து சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தின் காரணமாகவே குறித்த பயணி இந்தப் போதைப்பொருளைக் கைவிட்டுத் தப்பியோடியிருக்கலாம் எனப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். </p><p>குறித்த பொதிகளைக் கொண்டுவந்த விமானப் பயணி யார் என்பதைக் கண்டறிவதற்காக தற்போது விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் தொகுதி இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது. 
</p>]]></content>
            <updated>2026-09-15T01:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்களுக்குப் பைத்தியமில்லை – ஐக்கிய மக்கள் சக்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-chance-for-rajapakshes-any-more-1789435638"></link>
            <id>https://tamilwin.com/article/no-chance-for-rajapakshes-any-more-1789435638</id>
            <summary type="text">ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றுவதற்கு மக்களுக்கு பைத்தியம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றுவதற்கு மக்களுக்கு பைத்தியம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>2022 ஆம் ஆண்டு நாட்டை பொருளாதார ரீதியாக வங்ரோத்தடையச் செய்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் நாட்டின் ஜனாதிபதி பீடமேற்றுவதற்கு இந்த நாட்டு மக்களுக்குத் பைத்தியம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed46766-9178-4fbb-a4e7-7eec218cef40/26-6aa89ef7b8bf4.webp' /></p><p>
</p><p>தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகள் உண்மையென்றால், அவர் பத்து சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதைக் கூடத் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
</p><p>2029-இல் இவர்தான் நல்ல பையன் எனக் கூறி, அவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு யாராவது ஆதரவாகக் கையை உயர்த்தினால், அவர்கள் சோறு சாப்பிடும் மனிதர்களாக இருக்க முடியாது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
</p><p>தங்களைப் போல் அல்லாமல் ராஜபக்சக்களிடம் அதிகளவில் பணம் உள்ளது. அதனால், எந்நேரத்திலும் பேருந்துகளில் ஆட்களை ஏற்றிவந்து பிரம்மாண்டமான பேரணிகளை நடத்த அவர்களால் முடியும்.</p><p> ஆனால், அத்தகைய செயற்கையான கூட்டங்களைக் கண்டு அச்சப்படவோ அல்லது பெரிதாக யோசிக்கவோ தேவையில்லை ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T01:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்காகவே மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்..! ரோஹித அபேகுணவர்தன எம்.பி விடுத்த அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-have-united-again-for-the-sake-of-mahinda-1789430564"></link>
            <id>https://tamilwin.com/article/we-have-united-again-for-the-sake-of-mahinda-1789430564</id>
            <summary type="text">சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்சவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த
நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு
அனுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்சவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த
நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு
அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப் போவதில்லை என்று புதிய
ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது, "நாங்கள் மகிந்த வேண்டாம் என்று கூறிவிட்டு ரணில் விக்ரமசிங்கவின் பக்கம்
செல்லவில்லை.</p><h2>நெருக்கடியான சந்தர்ப்பத்தில்</h2><p>கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவித்த அந்த
இக்கட்டான காலகட்டத்தில்தான் நாட்டைப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, மிகக்
குறுகிய காலத்துக்குள் நாட்டை அந்தப் பேராபத்திலிருந்து வெற்றிகரமாகப்
பாதுகாத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72410334-94a2-4d26-a1e6-96972e9b0cfb/26-6aa892585138b.webp' /></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எங்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் சில
கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகள் காணப்பட்டமை உண்மையே.</p><p> அதற்காக இத்தகைய
ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாம் பிரிந்து நிற்க முடியாது. </p><p>மகிந்த
ராஜபக்சவுக்காகவே நாம் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.

தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் எழுந்துள்ள நெருக்கடியான
சந்தர்ப்பத்தில் சகல எதிர்க்கட்சிகளும் எந்தவித பேதமுமின்றி ஒன்றுபட வேண்டும்.</p><p>
அந்த ஒற்றுமையே எதிர்காலத்தில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பாக அமையும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T00:34:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் நிறுவன மின்னஞ்சலால் ஆபத்தில் நாமல் ராஜபக்ச! முக்கிய பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769</id>
            <summary type="text">எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் 
ராஜபக்ச இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூற முனைந்தாலும்
சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 
2013 மார்ச் 23 ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் (Email) ஒன்றின் மூலம் பல கதைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச விமானங்களை கொள்வனவு செய்யும் யோசனையை ஜனாதிபதி மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து விடயத்தை முடித்து தருவதாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
அது தொடர்பில் எயார்பஸ் (Airbus) நிறுவனம் அனைத்து மின்னஞ்சல்களையும் வழங்கியுள்ளது. எயார்பஸ் கொள்வனவு தொடர்பான வேலையை நான் தந்தைக்குச் சொல்லி செய்து தருகிறேன் தந்தை மூலமாக அல்லது ஜனாதிபதி மூலமாக இதற்குத் தேவையான அமைச்சரவை அனுதியை பெற்று தருவதாக கூறியுள்ளார்.
</p><h2>நாமலின் பங்களிப்பு</h2><p>இதற்கு இணையாக 2013 மார்ச் 27 ஆம் திகதி அன்றைய சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இக்கொள்வனவுக்கான அனுமதியைக் கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பpத்துள்ளார்.</p><p>VZMHUS</p><p> </p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 13 ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. என்னவென்றால் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாதீன பணிப்பாளர் சபையைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல் இலங்கைக்கு வந்த எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் இந்த பாரிய அளவிலான விமானக் கொள்வனவின் போது விமான ஓட்டும் பயிற்சி மையம் (Pilot Training Centre) ஒன்றும் பெருந்தொகை செலவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>
ஹம்பாந்தோட்டையில் விமான ஓட்டும் பயிற்சி</h2><p>அந்தப் பயிற்சி மையத்தை தனது சொந்த தேர்தல் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் நிறுவுமாறு எயார்பஸ் நிறுவன பிரதிநிதிகளிடம் நாமல் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>மின்னஞ்சல் சான்றுகள் மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளதாகவே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நிமல் பெரேரா அளித்துள்ள வாக்குமூலம் தனக்கு எயார்பஸ் நிறுவனத்துடனோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனோ எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f8eb70-d0ad-4b6a-a54c-4d4f3d98ea46/26-6aa7f39bafd6d.webp' /></p><p>ஆனாலும் நாமல் ராஜபக்ச வெளிநாட்டு ஆலோசனைச் சேவை ஒன்றின் மூலம் பணம் கிடைக்கவுள்ளதாகவும் அப்பணத்தை வைப்பு செய்வதற்கு வெளிநாட்டு கணக்கு ஒன்றைத் தருமாறும் கோரியுள்ளார்.</p><p>தனக்கு வெளிநாட்டு ஆலோசனை சேவை மூலம் பணம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே நிமல் பெரேரா தனக்குச் சொந்தமான 'SABREVISION' என்ற நிறுவனத்தின் கணக்கு இலக்கத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>
இந்தக் கணக்கிற்கு 'Biz Solutions' எனும் நிறுவனம் மூலம் அதாவது அப்போதைய கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க பணிப்பாளராக இருந்த புரூணையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் நிமல் பெரேராவின் வெளிநாட்டு கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளது. </p><p>பின்னர் அந்த பணத்தை இலங்கையில் 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jpF2dBCZozI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-15T00:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை பிற்போடவே செயற்குழுவை பயன்படுத்தும் அநுர அரசு - எழும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-uses-executive-committee-postpone-elections-1789429072"></link>
            <id>https://tamilwin.com/article/govt-uses-executive-committee-postpone-elections-1789429072</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு
நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு
நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் பொதுச்செயலாளரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற
விசேட செயற்குழுவின் உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
</p><p>
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் கால
அவகாசம் நீடிக்கப்பட்டமை மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்தக் குழு
கூட்டத்தைப் புறக்கணித்தமை குறித்து ஊடகங்கள் வினவியபோதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><h2>பழைய முறைமையின் கீழ்</h2><p>
அவர் மேலும் கூறுகையில்,&nbsp;"மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்று
ஆராய்ந்து விதப்புரைகளையும் யோசனைகளையும் முன்வைப்பதற்காக இந்த நாடாளுமன்ற
விசேட குழு கடந்த 8 மாத காலமாகக் கூடியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7aeae2f-e9d7-4d90-820a-4ffb4b9aaf50/26-6aa8893f3d1b5.webp' /></p><p>
மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று
குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவும், சட்டமா அதிபர் திணைக்களமும் தெளிவாக
அறிக்கை சமர்ப்பித்துள்ளன.</p><p> பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாயின்
அதற்குரிய சட்ட திருத்தங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>அந்தப் பரிந்துரைகள்
குறித்துக் கவனம் செலுத்தினால் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு உடனடியாகத்
தீர்வு காணலாம்.</p><h2>காலத்தை வீணடிக்கும் விசேட செயற்குழு</h2><p>ஆனால், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த
பரிந்துரைகள் எதைக் குறித்தும் அரசு எந்தவொரு கவனமும் செலுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/802346a6-0095-4a76-9fe1-51ae8733aa6b/26-6aa8893fea5ee.webp' /></p><p> தேர்தலை
எப்படியாவது பிற்போடுவதற்கான யோசனைகளுக்கு மாத்திரமே அரசு
முன்னுரிமையளித்துச் செயற்பட்டது.
</p><p>
இதற்கமைய, இந்தக் குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17
ஆம் திகதி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறையற்ற
செயலாகும்.
</p><p>
தேர்தலை நடத்தும் உண்மையான நோக்கம் அரசிடம் சிறிதும் கிடையாது. குழு அறிக்கை
சமர்ப்பித்தவுடன் தேர்தலை நடத்தத் தயார் என்று கூறிக்கொண்டு அரசு
திட்டமிட்டுக் காலத்தை இழுத்தடித்து வருகின்றது.</p><p>

எனவே, இவ்வாறு காலத்தை வீணடிக்கும் இந்த விசேட செயற்குழுவில் தொடர்ந்து
பங்குபற்றுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த
நான்கு உறுப்பினர்களும் இனி அந்தக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டோம்
என்று ஒருமித்தமாகத் தீர்மானித்துள்ளோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:55:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் கூட்டத்தில் நடந்த அட்டகாசம் - அநுரவின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869"></link>
            <id>https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
</p><p>
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் குடிப்பது அவர்களது உரிமை அதை யாரும் தடுபக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
</p><p>மேலும் அநுரவுக்கு எதிரான பேரணியில் நாமலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.</p><p>.இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DM_VJcCmwvE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிராந்தியை நெருங்கும் நிதிக் குற்றப் பிரிவு! மகிந்தவின் மாளிகையில் திடுக்கிடும் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-urgently-summons-police-officer-anura-1789426268"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-urgently-summons-police-officer-anura-1789426268</id>
            <summary type="text">தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், குறித்த சிடி ஸ்கேனர் இயந்திரம் சீன அரசாங்கத்தினால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>ஏற்கனவே நாமல் ராஜபக்ச விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதுதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/e_N3-34LArk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் : ஐ.நா. கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-strongly-condemns-killing-of-two-children-1789420673"></link>
            <id>https://tamilwin.com/article/un-strongly-condemns-killing-of-two-children-1789420673</id>
            <summary type="text">கொழும்பு, தெஹிவளையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள்
கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை கடும்
கண்டனத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, தெஹிவளையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள்
கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை கடும்
கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன் இந்தக் கொடூர செயலுக்குப்
பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது
வலியுறுத்தியுள்ளது.
</p><h2>உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினர்</h2><p>
இது குறித்து இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் -
அன்ட்ரூ பிரெஞ்ச் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்,

"தெஹிவளையில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் மனவேதனையளிக்கின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5a6ddaf-343e-44e2-ad24-1443b96b04b2/26-6aa8744cf0c0b.webp' /></p><p>எந்தவொரு குழந்தையும் இத்தகைய கொடூர வன்முறைக்கு இரையாகக் கூடாது. இதற்குப்
பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதில் கூறியாக
வேண்டும். </p><p>உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும்
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" - என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வேறு ஒரு வீட்டை இலக்கு வைத்து</h2><p>
</p><p>
தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை ஓட்டோவில்
வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டு வீசித் தாக்குதல்
நடத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2892d584-b1a6-474a-8d65-afea50dacd53/26-6aa8744da510c.webp' /></p><p>இந்தத் தாக்குதலில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய
இரண்டு சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தமையுடன் அவர்களின் தந்தையும்
படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
தாக்குதலாளிகள் வேறு ஒரு வீட்டை இலக்கு வைத்துத் தவறுதலாக இந்தத் தாக்குதலை
நடத்தியிருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம்
வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T22:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் பெண்ணை கொடூரமாக தாக்கிய இலங்கை இளைஞனை துரத்தி பிடித்த பொலிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538</id>
            <summary type="text">இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்தச் சம்பவம்&nbsp; Vicolo Fossetto பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த இலங்கையர் அலுமாரிகளில் இருந்த பல மதுபானப் போத்தல்களை எடுத்து தனது பைக்குள் மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><h2><b>பெண் மீது தாக்குதல்</b></h2><p>பணம் செலுத்தாமல் காசாளர் பகுதியைக் கடந்து வெளியேறும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார். ஊழியர் ஒருவர் அவரை அணுகி திருடப்பட்ட பொருட்களைத் திருப்பி தருமாறு கோரியுள்ளார். எனினும் அவர் ஊழியரை உடல் ரீதியாக தாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a03fafc-08cd-4e3e-aa39-7d9d716c3277/26-6aa81c6181bf1.webp' /></p><p>ஊழியரை கீழே தள்ளியதோடு, திருடப்பட்ட பொருட்களுடன் இலங்கையர் தப்பியோடியுள்ளார். </p><p> கீழே விழுந்த பெண் எழுந்து, தனக்கு உதவ நின்ற வாடிக்கையாளர் ஒருவரின் காரில் இலங்கையரை துரத்தத் தொடங்கினார். </p><p>அங்கு வசிப்பவர் ஒருவர் சந்தேக நபரை அடையாளம் கண்டு, சந்தேக நபர் எங்கு பதுங்கியிருக்கின்றார் என்பதை அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h3><b>சட்டவிரோத குடியேற்றவாசி</b></h3><p>சோதனையின் போது, பையில் திருடப்பட்ட இரண்டு மதுபானப் போத்தல்களைக் கண்டெடுத்தனர். தப்பியோடும்போது கைவிடப்பட்ட மூன்றாவது மதுபான போத்தல் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef89cfd9-9a3d-4d28-976c-4469b8d7f026/26-6aa81c6272d81.webp' /></p><p>இந்நிலையில் விற்பனை செய்யக்கூடிய நிலையில் இருந்த அனைத்துப் பொருட்களும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. </p><p>விசாரணையை தொடர்ந்து பல குற்றப் பின்னணியை கொண்டவரும் சட்டவிரோதமான குடியேற்றவாசியுமான இலங்கையர் கைது செய்யப்பட்டார். </p>]]></content>
            <updated>2026-09-14T21:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் கைது தாமதம் ஏன்..! 80 இலட்சம் ஊழல் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381"></link>
            <id>https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381</id>
            <summary type="text">தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள் விவகாரத்திலே பிள்ளையானை மட்டும் ஏன் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இவர்கள் ஏன் பிள்ளையானின் தலைவனான கருணாவை கைது செய்யவில்லை. அதாவது தற்பேோது எடுபிடிகளையும் அடியாட்களையும் தான் கைது செய்கின்றார்கள்.</p><p>

யாழ்ப்பாணத்தில் பல கடத்தல்களையும் கொலையையும் செய்த டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zJao2wvCNU4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T20:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்திற்குள்ளேயே நடந்த சதியால் துரோகத்தில் சிக்கிய கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> 

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக இந்த சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட, ஷிராந்தி, மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 துரோகத்தில் சிக்கிய கோட்டாபய </b></h2><p> அதற்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் அவர்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd68079-94c4-423f-b672-9bfcb0d30177/26-6aa7e23d370c4.webp' /></p><p>எனினும், வியத்மக அமைப்பை நிறுவி, அரசியல் களத்தை அமைத்துக்கொண்டு முன்னோக்கி வந்த கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தனது வேட்புமனுவை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று கோட்டாபய ராஜபகச் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
இந்த நிலையில் கோட்டாபயவிற்கு எதிராக, நாமல் ராஜபக்சவின் அரசியல் பெரிய அண்ணா என்று வர்ணிக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் அரசாங்கத்திற்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.</p><h3><b>

ராஜபக்சவின் அரசியல்</b></h3><p>இதனால், 2022ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431da20b-02c7-4d83-b5dd-592b770adb59/26-6aa7e23ded411.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்கள் இருவரும் இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் அரசியல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
</p><p>
ஆனால், தற்போது கோட்டாபய ராஜபக்சவை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவர்கள் இருவரும் உள்ளிட்ட தரப்பினர் தற்பொழுது நாமல் ராஜபக்சவுடன் கைகோர்த்து கொண்டதன் ஊடாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T20:39:22+00:00</updated>
        </entry>
    </feed>
