<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-16T12:10:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம் - சர்வதேச விசாரணையை வலியுறுத்திய போராட்டம் நாளையுடன் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-cry-protest-ends-tomorrow-1786871543"></link>
            <id>https://tamilwin.com/article/justice-cry-protest-ends-tomorrow-1786871543</id>
            <summary type="text">தாயகச் செயல் அணியின் ஏற்பாட்டில், செம்மணி பகுதியில் கடந்த 14ஆம் திகதி
ஆரம்பிக்கப்பட்ட&amp;nbsp; “நீதியின் ஓலம்” போராட்டம் நாளையுடன் (17.08.2026) முடிவடைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாயகச் செயல் அணியின் ஏற்பாட்டில், செம்மணி பகுதியில் கடந்த 14ஆம் திகதி
ஆரம்பிக்கப்பட்ட&nbsp; “நீதியின் ஓலம்” போராட்டம் நாளையுடன் (17.08.2026) முடிவடைகிறது.</p><p>இந்தப் போராட்டமானது சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்று
வருகின்றது.</p><h2>நீதியின் ஓலம்&nbsp;போராட்டம்</h2><p>
போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, வடக்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து
வருகை தந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்கேற்புடன் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
இந்த நிலையில், போராட்டத்தின் இறுதி நாளான நாளை 17ஆம் திகதி காலை 10.30 மணிக்கு
யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdca9b81-c0c6-4110-99bf-93813c490ef1/26-6a818442814a7.webp' /></p><p> </p><p>பேரணி யாழ்ப்பாணம்
கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அலுவலகத்தை
சென்றடைந்து, அங்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் மகஜர் ஒன்றும்
கையளிக்கப்படவுள்ளது.
</p><p>கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் மற்றும் காணாமல்
ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கிடைக்க வேண்டும்
என்பதுடன், உள்நாட்டு விசாரணைகளுக்கு அப்பால் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.
</p><p>இறுதி நாள் பேரணியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, நீதிக்கான
குரலை வலுப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T11:59:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசா பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் தலைவர் கெய்ரோ பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hamas-leader-travels-to-cairo-for-gaza-talks-1786870506"></link>
            <id>https://tamilwin.com/article/hamas-leader-travels-to-cairo-for-gaza-talks-1786870506</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜாரெட் குஷ்னரின் மத்திய
கிழக்கு விஜயத்திற்கு முன்னதாக, எகிப்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜாரெட் குஷ்னரின் மத்திய
கிழக்கு விஜயத்திற்கு முன்னதாக, எகிப்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர்
கலீல் அல்-ஹய்யா கெய்ரோ சென்றுள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாத பிற்பகுதியில் ஹமாஸ் அமைப்பின் தலைமை பொறுப்பை
ஏற்றுக்கொண்டதன் பின்னர், கலீல் அல்-ஹய்யா எகிப்திற்கு மேற்கொள்ளும் முதலாவது
விஜயம் இதுவாகும்.</p><h2>15 அம்ச அமைதித் திட்டம்</h2><p>
இதன்போது அவர் எகிப்திய உளவுத்துறைத் தலைவர் ஹசன் ரஷாத்தை சந்தித்துப்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6853c583-5847-4813-910e-c57765d24efa/26-6a817d66d8a6b.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாஹு பகிரங்கமாக நிராகரித்துள்ள நிலையிலேயே இந்த இராஜதந்திர
நகர்வுகள் இடம்பெறுகின்றன.
</p><p>
அதேவேளை, காசாவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்களில்
உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதுடன், ஹமாஸ் அமைப்பு பூரணமாக ஆயுதங்களைக் களையும் வரை காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் விலகாது என நெதன்யாஹு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T11:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதியின் புனரமைப்பு பணிகள் 60 சதவீதம் பூர்த்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-reconstruction-works-60-percent-complete-1786877572"></link>
            <id>https://tamilwin.com/article/railway-reconstruction-works-60-percent-complete-1786877572</id>
            <summary type="text">கொட்டகலை சுரங்க பாதைக்கு சமீபமாக சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி
தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை புனரமைப்பு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை சுரங்க பாதைக்கு சமீபமாக சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி
தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை புனரமைப்பு
பணிகளை மேற்பார்வை செய்யும் தொழிநுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சீரான காலநிலை தொடருமானால், எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதியளவில் பணிகளை
முழுமையாக நிறைவு செய்து ஒப்படைக்க எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மலையக தொடருந்து சேவையை மீண்டும் முழுமையாக வழமைக்கு கொண்டு வருவதற்கான
புனரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள்</h2><p>
</p><p>
கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அண்மித்த பகுதியில் சீரற்ற காலநிலை மற்றும்
மண்சரிவு காரணமாக சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த மே
மாதம் ஆரம்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bfef288-29b3-4a7a-9797-3568445f283b/26-6a81a1cf862d4.webp' /></p><p>
</p><p>
எனினும், ஜூலை மாதம் முதல் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும்
மழை காரணமாக பணிகளை திட்டமிட்ட வேகத்தில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.</p><p>

தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால், புனரமைப்பு பணிகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து சீரான காலநிலை நிலவினால் எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியளவில் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்து ஒப்படைக்க
எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p>
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து நாட்டின் பல
பகுதிகளிலுள்ள தொடருந்து பாதைகள் கடுமையாக சேதமடைந்தன.

குறிப்பாக மலையக தொடருந்து பாதைகளில் பல இடங்களில் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு
உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாரிய சேதங்கள் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ff7978-7964-41f0-a931-17f6614ff3cc/26-6a81a1d0a4c03.webp' /></p><h2>மீள ஆரம்பிப்பு</h2><p>
</p><p>
இதனையடுத்து, சேதமடைந்த பகுதிகள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்பட்டு, சில
பகுதிகளில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


தற்போது மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பதுளை முதல் நானுஓயா வரையிலும்,
நாவலப்பிட்டி முதல் வட்டவளை வரையிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p>
எனினும், கொட்டகலை மற்றும் கிரேட்வெஸ்டன் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக
தொடருந்து பாதைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக மலையகத்திற்கான முழுமையான தொடருந்து சேவையை தொடர்ச்சியாக
முன்னெடுப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24ba2916-4cbb-4852-9783-3436e3360dac/26-6a81a1d17ddc9.webp' /></p><p>

குறிப்பாக கொட்டகலை மற்றும் கிரேட்வெஸ்டன் ஆகிய இரண்டு பகுதிகளிலும்
புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தால், பதுளையிலிருந்து நாவலப்பிட்டி வரையான
தொடருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க முடியும் என தொடருந்து திணைக்கள
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>மலையகத்தின் பொருளாதாரம், கல்வி, தொழில் மற்றும் அன்றாட போக்குவரத்துடன்
நெருங்கிய தொடர்புடையதாக காணப்படும் தொடருந்து சேவை, நீண்டகாலமாக ஏற்பட்டுள்ள
இந்த தடையால் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18fa6570-cc30-4e90-bc74-abe6483bfd53/26-6a81a1d259570.webp' /></p>]]></content>
            <updated>2026-08-16T11:43:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை - போதைப்பொருள் வர்த்தகர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ice-drug-bust-in-trincomalee-1786875111"></link>
            <id>https://tamilwin.com/article/ice-drug-bust-in-trincomalee-1786875111</id>
            <summary type="text">திருகோணமலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த நடவடிக்கை நேற்று(15.08.2026) முன்னெடுக்கப்பட்டது.
</p><h2>
போதைபொருளுடன் வர்த்தகர் கைது</h2><p>
</p><p>
உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை, புளியங்குளம், தேவநகர், மடுமை வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு வாள், இரும்புப் குழாயில் இரும்புப் பல்சக்கரத்தைப் பொருத்தி தயாரிக்கப்பட்ட அபாயகரமான கூர்மையான ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46d433a7-6266-41d5-b960-1655d6ba1e73/26-6a8195078a6ba.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், தேவநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2>

பாதாள உலகக் குழு தலைவர்</h2><p>இவர் அப்பகுதியை மையமாகக் கொண்டு “குட்டிப்புலி” மற்றும் “விஜய் டீம்” எனும் பெயர்களில் இரு பாதாள உலகக் குழுக்களை உருவாக்கி, அவற்றின் தலைவராகச் செயற்பட்டு வந்துள்ளார்.</p><p> 

அத்துடன், அப்பகுதி மக்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
 கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட சான்றுகளும் மேல் விசாரணைகளுக்காகவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகவும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T10:47:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று பிற்பகலுக்குள் வெப்பநிலை 45 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1786873364"></link>
            <id>https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1786873364</id>
            <summary type="text">இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று (16.08.2026) பிற்பகலுக்குள் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று (16.08.2026) பிற்பகலுக்குள் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

நிலவும் வறண்ட வானிலை அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.</p><h2>சில பகுதிகள் கடுமையாக பாதிப்பு</h2><p> </p><p>

இதற்கிடையில், நிலவும் வறண்ட வானிலை அனுராதபுரம், பொலன்னருவை, யாழ்ப்பாணம், அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e4448ec-3e7a-48a5-ae2f-f5590db5260e/26-6a81902477689.webp' /></p><p> </p><p>

ஏறக்குறைய நான்கு மாதங்களாக மழை இல்லாததால், அந்த மாவட்டங்களில் உள்ள பல சிறிய குளங்கள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. 

இதன் விளைவாக, கால்நடைகள் மற்றும் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>

வறண்ட வானிலை காரணமாக மிஹிந்தலையில் சுமார் 30 ஏக்கர் நெல் வயல்களும் சேதமடைந்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T10:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி முகத்திடல் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம்! பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-found-on-galle-face-beach-1786874138"></link>
            <id>https://tamilwin.com/article/body-found-on-galle-face-beach-1786874138</id>
            <summary type="text">காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சடலத்தை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>

குறித்த நபர் இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையையும், அரைக்கால் சட்டையையும் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55167d26-4608-4a5b-adaa-8633efef27e6/26-6a818ce3a0fa1.webp' />&nbsp;</p><p> </p><p>குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T10:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாணத்தில் தொடரும் மோசடி குற்றச்சாட்டு - விசாரணைக்கு புதிய குழு நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-province-fraud-probe-to-be-intensified-1786864180"></link>
            <id>https://tamilwin.com/article/central-province-fraud-probe-to-be-intensified-1786864180</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் ஒரு தணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் ஒரு தணிக்கை குழுவை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நிதி மோசடிகள்</span></p><p>மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,&nbsp;&nbsp;</p><p>நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலக அலுவலகங்களில் 2023 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் தணிக்கைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் “அஸ்வெசும” கொடுப்பனவுகளில் இடம்பெறும் மோசடி தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறித்து ஆராயப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cb80864-2d6a-40da-a8fb-1cf9da1c0d19/26-6a817763b4c96.webp' /></p><p>மேலும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரணக் கொடுப்பனவுகள் முறையாக விநியோகிக்கப்பட்டதா என்பதையும், கோவிட்-19 பெருந்தொற்றின் போது சமுர்த்தி திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5,000 உதவித்தொகை குறித்தும் இந்தத் தணிக்கை ஆராயவுள்ளது.&nbsp;</p><p>
அத்துடன், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அரசாங்க மானியங்கள் உரியவர்களுக்கு முறையாக ாஎன்பதையும் இந்தக் குழு விசாரணை செய்யவுள்ளதாகவும்&nbsp; குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T10:02:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணம் வரை அதிகாரம் இருக்காது! ஜனாதிபதி அநுரவுக்குச் சென்ற எச்சரிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-president-anura-1786863754"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-president-anura-1786863754</id>
            <summary type="text">159 பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கின்றன என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரை அதிகாரம் நிலைத்திருக்காது என்று பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஜனாதிபதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>159 பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கின்றன என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரை அதிகாரம் நிலைத்திருக்காது என்று பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஜனாதிபதி அநுர குமார மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரின், ஜனாதிபதியுடனான சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் அண்மையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.</p><h2>ஜனாதிபதிக்கு எச்சரிக்கை</h2><p> </p><p>

இந்த சந்திப்பில், ஜனாதிபதி பேசிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி ஊடகப் பிரிவு மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளது. </p><p>ஆனால், இந்த சந்திப்பில், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்களை மக்களுக்கு வெளிப்படுத்தாது ஜனாதிபதி ஊடகப் பிரிவு மூடி மறைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311ecf8e-1f6a-4aac-9b39-59d5c1be87ac/26-6a8173d2aef5f.webp' />&nbsp; &nbsp;</p><p> 

ஜனாதிபதியை மட்டும் போற்றிப் புகழும் இந்த அதிகாரிகளால், மக்களிடத்தில் விமர்சனத்திற்கு உள்ளாவது ஜனாதிபதியே ஆகும்.

எனவே, ஜனாதிபதி அநுர குமார தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.</p><p>நாட்டின் தற்போதைய நிலையில், நீதபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது அவசியமற்றது.</p><p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. 

எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு இந்த சட்டமூலம் வருகின்றது. இதற்கு ஆளும் தரப்பினரும் கை உயர்த்தக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f660512d-93dd-45ac-a119-8b85e3c83f4c/26-6a8175ff9bcdd.webp' /></p><p>

மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயற்பட விரும்பாதவர்கள், 18ஆம் திகதி விடுமுறை எடுத்துக் கொண்டு மண்வெட்டியோடு தங்களுடைய வயலுக்குச் சென்று விவசாய வேலையாவது செய்யுங்கள்.</p><p>

அதைவிடுத்து 159 பெரும்பான்மை இருக்கின்றது என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரையில் அதிகாரம் நிலைத்திருக்காது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HYpHXIw2L-o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-16T09:49:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் புத்தர் சிலை வைக்க தொடர் முயற்சி- அரசிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attempt-to-erect-a-buddha-statue-in-omanthai-1786861675"></link>
            <id>https://tamilwin.com/article/attempt-to-erect-a-buddha-statue-in-omanthai-1786861675</id>
            <summary type="text">வவுனியா - ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அந்தக் காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் முன்னெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அந்தக் காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>

இதனையடுத்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்ட குழுவினர் ஓமந்தை பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வொன்றை செய்துள்ளார்.</p><h2>புத்தர் சிலை அமைத்தல்</h2><p>
</p><p>
இது தொடர்பான அவசர முறைப்பாடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனத்திற்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p>

அரசங்குளத்தில் பொலிஸ் நிலையத்தின் பயன்பாட்டிற்காக 5 ஏக்கர் காணியும்
கட்டிடங்களும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், பொலிஸார் அங்கு செல்லாமல்
தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40c62eb7-583c-4fce-94e9-ed6bd111fce8/26-6a815e7da0342.webp' /></p><p>
</p><p>
தற்போது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான காணியிலேயே பொலிஸ்
நிலையம் இயங்கி வருகிறது.
</p><p>
இந்நிலையில், பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மேலதிக காணியையும்
ஆக்கிரமித்தால், ஓமந்தை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள்
கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் அச்சம்
வெளியிட்டுள்ளனர்.</p><p>

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி
ந.காண்டீபன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் வி. சஞ்சுதன், பிரதேச
சபை உறுப்பினர் க. பிரதீபன், வவுனியா மாநகர சபை உறுப்பினர் தர்மா மற்றும்
மாவட்ட அமைப்பாளர் வி.எஸ். தவபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள
ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு மற்றும் புத்தர் சிலை அமைக்கும் முயற்சிக்கு
எதிராக உடனடி சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும் என இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T09:16:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசியலில் மொசாட் தலையீடு..! தமிழ் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mossad-intervention-in-sri-lankan-politics-1786870772"></link>
            <id>https://tamilwin.com/article/mossad-intervention-in-sri-lankan-politics-1786870772</id>
            <summary type="text">வைத்தியர் கு.சுகுணன், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புடன் இணைந்து செயற்படுகிறாரா என்றும், 
நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் அமைப்பின் தாக்கம் இருகின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வைத்தியர் கு.சுகுணன், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புடன் இணைந்து செயற்படுகிறாரா என்றும், 
நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் அமைப்பின் தாக்கம் இருகின்றது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.&nbsp; </p><p>அம்பாறை - கல்முனையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
தமிழ் - இஸ்லாமியர்களின் பிரிவு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>

1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையேயிருந்த பரஸ்பர
நட்பையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்க “மொசாட் அமைப்பு” செய்த வேலையே காரைதீவு
சந்தியில் இரு சமூகங்களையும் பிரித்தமையாகும்.</p><p>


அப்போது,&nbsp; ஆயுதமேந்திய சிலர் எடுத்த முடிவுகள் தமிழ் மக்களின் விடுதலைப்
போராட்டத்திற்கே பாரிய சவாலாக அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/627d65cc-b23f-4577-9f9b-b420d82d11a9/26-6a817d0948b49.webp' /></p><p>

தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது
முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தமது மத மற்றும் கலாசார ஆடையுடன் கடமையைப்
பொறுப்பேற்க அனுமதிக்கப்படாத விவகாரத்தில், வைத்தியர் சுகுணன் அவ்வாறான ஒரு
பின்னணியில் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>



கல்முனைப் பிராந்தியத்தில் உருவெடுத்துள்ள இந்தச் சர்ச்சை தமிழ்-முஸ்லிம்
ஐக்கியத்தை விரும்பும் அனைவருக்கும் பெரும் கவலையளித்துள்ளது.
</p><h2>
உடனடி நடவடிக்கை தேவை</h2><p>

தமிழ் அரசியல் தலைமைகள் உடனடியாக இதில் தலையிட்டுச் சுமுகத் தீர்வைக் காண வேண்டும்.

இது குறித்துத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்பிக்களான மனோ
கணேசன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடி, சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு
உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a384430-003b-4a92-9bc5-30c9d176dd54/26-6a817d0a1e818.webp' /></p><p>

கல்முனை மண்ணில் கடற்கரைப் பள்ளிவாசல் விழாக்கள் மற்றும் பாண்டிருப்பு திரௌபதி
அம்மன் ஆலய உற்சவங்களில் இரு சமூகத்தினரும் பரஸ்பரம் பங்கேற்கும் நீண்டகால
நல்லிணக்க வரலாறு உள்ளது.

அரசியலமைப்பின் அடிப்படை
உரிமைகளை மீறி எந்தவொரு அரச நிறுவனமும் முடிவெடுக்க முடியாது.
</p><p>
எனவே, சட்டநடவடிக்கைகளுக்குச் செல்ல முன்பாக அரசியல் மற்றும் நிர்வாக
மட்டத்தில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றார்.</p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/olESuUh6KlA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-16T09:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை - நாடு முழுவதும் பொலிஸ் நிலையங்களுக்கு பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-action-against-vehicles-obstruct-bus-stops-1786866514"></link>
            <id>https://tamilwin.com/article/police-action-against-vehicles-obstruct-bus-stops-1786866514</id>
            <summary type="text">பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி பொதுப் பேருந்துகளுக்கு இடையூறு விளைவிக்கும் வாகன ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி பொதுப் பேருந்துகளுக்கு இடையூறு விளைவிக்கும் வாகன ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> 

பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பயணிகளின் பாதுகாப்பினை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முக்கிய பிரச்சினை</h2><p> 

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதியுள்ள பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தப் பிரச்சினை மேலும் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

அத்தகைய பேருந்துகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு ஏதுவாக, பேருந்து நிறுத்தங்கள் தடைகள் இன்றி இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பேருந்து நிறுத்தங்கள் மற்ற வாகனங்களால் தடுக்கப்படும்போது, ​​மாற்றுத்திறனாளிகளும் மற்ற பயணிகளும் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58db76c5-63a2-4aad-95a2-6ab0c721644f/26-6a8178615f9be.webp' /></p><p> </p><p>

ஒரு சிறப்பு அரசாங்க வர்த்தமானி அறிவிப்பின்படி, பேருந்து நிறுத்தத்தை அணுகும் இடத்திலிருந்து 30 மீட்டருக்குள்ளும், வெளியேறும் இடத்திலிருந்து 15 மீட்டருக்குள்ளும் வாகனங்கள் நிறுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><h2>பயணிகளின் பாதுகாப்பு</h2><p> </p><p>

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக ஏறி இறங்குவதை அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, பேருந்து நிறுத்தங்களை மறிக்கும் ஓட்டுநர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

மேலும், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை முறையாக நிறுத்துமாறும், பேருந்துகள் செல்வதற்கு ஏதுவாக நிறுத்தங்களை தடையின்றி வைத்திருக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T08:46:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயிலிருந்து வரும் உத்தரவில் போதைப்பொருள் கடத்தல் - இரகசிய தகவலில் சிக்கிய கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-vehicle-number-plates-arrested-with-crime-1786866895"></link>
            <id>https://tamilwin.com/article/fake-vehicle-number-plates-arrested-with-crime-1786866895</id>
            <summary type="text">&amp;nbsp;கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு வாகனங்களின் போலி ஆவணங்களுடன் குற்றக்கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலிப்பதிவுத்தகடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு வாகனங்களின் போலி ஆவணங்களுடன் குற்றக்கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

போலிப்பதிவுத்தகடுகள், காப்பீட்டுச்சான்றிதழ்கள் மற்றும் வருமான சான்றிதழ்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>போதைப்பொருள் கடத்தல்&nbsp;</h2><p>
</p><p>
சந்தேகநபருடன், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள், 5 லொரிகள் மற்றும் 2 முச்சக்கர வண்டிகளுக்குச் சொந்தமான போலிப் பதிவுத் தகடுகள், பதிவு எண்களை போல இருக்கும் போலி வருமான சான்றிதழ்கள் மற்றும் காப்பீட்டுச்சான்றிதழ் அட்டைகள், அத்துடன் 5400 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c502b117-0a5a-4306-b7f5-49123013ceae/26-6a81751a28f01.webp' /></p><p>
</p><p>
டுபாயிலிருந்து நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வரும் டுபாய் சுத்தா மற்றும் அவரது சகோதரர் தங்களது வீட்டில் 'ஐஸ்' போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் நடத்திய சோதனையில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர் வசித்து வந்த வீட்டில் பொலிஸார் நடத்திய முழுமையான சோதனையின் போது, ​​கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத போலி வாகன பதிவுத்தகடுகளையும் பிற ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
சந்தேகநபரிடம் விசாரணை நடத்தியபோது, ​​தேவைப்படும்போது பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி, டுபாய் சுத்தா இந்த ஆவணங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T08:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரம்பரிய மரபுடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்த புனிதக் கொடிச்சீலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sacred-flagpole-nallur-kandaswamy-1786867642"></link>
            <id>https://tamilwin.com/article/sacred-flagpole-nallur-kandaswamy-1786867642</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தின் மகோற்சவ கொடியேற்றத்திற்கான புனிதக் கொடிச்சீலை, பல தலைமுறைகளாகப்
பேணப்பட்டு வரும் செங்குந்தர் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தின் மகோற்சவ கொடியேற்றத்திற்கான புனிதக் கொடிச்சீலை, பல தலைமுறைகளாகப்
பேணப்பட்டு வரும் செங்குந்தர் பரம்பரையின் பாரம்பரிய மரபின்படி, கல்வியங்காட்டில் அமைந்துள்ள இல்லத்திலிருந்து எடுத்துவரப்பட்டது.
</p><p>
இந்த நிகழ்வு இன்று(16.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.
</p><p>

கல்யாண்காட்டில் உள்ள இல்லத்தில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட
பின்னர், கொடிச்சீலை பக்திபூர்வமாக தலையில் சுமந்து சட்டநாதர் வீதியில்
அமைந்துள்ள வேல் முருகன் மடத்திற்கு கொடிச்சீலைக்கு கொண்டுவரப்பட்டது.</p><h2>சிறப்பு பூஜை வழிபாடுகள்</h2><p>
</p><p>

அங்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பாரம்பரிய முறையில்
சிறிய தேரில் கொடிச்சீலை வைத்து, பக்தர்கள் புடைசூழ நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6953a22c-c25b-4bb0-bef9-da3f8bec9635/26-6a81719f3e15a.webp' /></p><p>
</p><p>

தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வரும் இந்த மரபு, நல்லூர் கந்தசுவாமி ஆலய
மகோற்சவத்துடன் இணைந்துள்ள பண்பாட்டு, ஆன்மிக மற்றும் பாரம்பரியத்தின் அழகிய
அடையாளமாக பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c79b58f-e42e-4d30-a9b9-e4e169324d98/26-6a8171a01d458.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e921be7d-665c-42c1-b2b0-e3d1a55bc34a/26-6a8171a0e3515.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3c70f4-75a8-4a94-b18c-f37b8a5ba76a/26-6a8171a1c7191.webp' /></p>]]></content>
            <updated>2026-08-16T08:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்குச் செல்ல வேண்டாம்..! கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-notice-to-the-fishing-and-naval-community-1786865529"></link>
            <id>https://tamilwin.com/article/special-notice-to-the-fishing-and-naval-community-1786865529</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு இன்று(16.08.2026) காலை 10.30...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த அறிவிப்பு இன்று(16.08.2026) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டது.</p><p> இது நாளை (17) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 முதல் 60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd5e1777-57d2-4efe-af4e-54318a538466/26-6a816a4107e9b.webp' /></p><p> மேலும், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக மாறக்கூடும்.
</p><p>அதேபோன்று, தீவைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். </p><p>மேலும், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக மாறக்கூடும்.
</p><p>இதற்கமைய, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் இது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T07:44:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கையில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-tops-the-list-of-tourists-1786863915"></link>
            <id>https://tamilwin.com/article/india-tops-the-list-of-tourists-1786863915</id>
            <summary type="text">இந்த ஆண்டு இதுவரை இந்தியாவிலிருந்து தான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு இதுவரை இந்தியாவிலிருந்து தான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. </p><p>

ஆகஸ்ட் 13 ஆம் திகதி நிலவரப்படி, மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,436,926 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களில் 358,608 பேர் இந்திய சுற்றுலாப் பயணிகள் என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><h2>
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு</h2><p>
மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 140,892 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 94,890 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 83,965 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்த நாடுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p> 

இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 13 நாட்களில் 93,511 சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa7d89b7-e637-4133-9507-0a97d80b4615/26-6a816654adc02.webp' /></p><p>
</p><p>இதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் 49,759 சுற்றுலாப் பயணிகளும், இரண்டாம் வாரத்தின் 6 நாட்களில் 43,752 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p>



இந்த மாதத்தின் 13ஆம் திகதி நிலவரப்படி, 20,378 இந்திய சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன் மூலம் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் என பதிவாகியுள்ளது.
</p><p>
இரண்டாவது அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிலிருந்து 10,491 பேரும், பிரான்சிலிருந்து 7,198 பேரும், சீனாவிலிருந்து 6,383 பேரும் வருகை தந்துள்ளதாக தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-16T07:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு தனியார் பேருந்துகள் முந்திச்செல்ல முற்பட்டமையினால் நேர்ந்த விபரீதம் - சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kandy-hatton-road-accident-1786863019"></link>
            <id>https://tamilwin.com/article/kandy-hatton-road-accident-1786863019</id>
            <summary type="text">கண்டியிலிருந்து ஹட்டனுக்குச் சென்று கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள், கினிகத்ஹேன பகுதியில் ஒன்றையொன்று முந்திச்செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டியிலிருந்து ஹட்டனுக்குச் சென்று கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள், கினிகத்ஹேன பகுதியில் ஒன்றையொன்று முந்திச்செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>இந்த விபத்து நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>&nbsp;சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை</h2><p>இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்றும், இரண்டு பேருந்துகளும் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f9115aa-07a4-48b0-9d47-5613cd041be8/26-6a8166448a442.webp' />&nbsp;</p><p>
அதிவேகமாக கவனக்குறைவாக வாகனங்களை செலுத்திய இரண்டு தனியார் பேருந்துகளின் சாரதிகள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.
</p><p>
மத்திய மலை நாட்டில்&nbsp; பெய்து வரும் கனமழையின் காரணமாக, அந்த வீதிகளில் செல்லும் வாகன சாரதிகள கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>பேருந்துகளை கவனக்குறைவாகவும் பொறுப்பற்ற முறையிலும் செலுத்தியதால், சாரதிகள் மீது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கினிகத்ஹேன பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T07:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயமாகும் நடைமுறை! உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vat-tax-in-sri-lanka-1786862776"></link>
            <id>https://tamilwin.com/article/vat-tax-in-sri-lanka-1786862776</id>
            <summary type="text">திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி (VAT) இன்வொய்ஸ் படிவம் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி (VAT) இன்வொய்ஸ் படிவம் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p>

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி இன்வாய்ஸ் படிவத்தை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், வணிக சமூகத்திற்கும் வரி செலுத்துவோருக்கும் அமைப்புகளை தயார்படுத்திக் கொள்ள சலுகைக் காலம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வெளிப்படைத்தன்மையை உயர்த்தும் நோக்கம்</h2><p>டிஜிட்டல் வரி வசூல் செயல்முறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வரி வலையமைப்பின் வெளிப்படைத்தன்மையை உயர்த்தும் நோக்கில் கடந்த மார்ச் 27ஆம் திகதி இந்த புதிய இன்வாய்ஸ் வடிவம் அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d202ff7-798f-41b0-8e44-743a6e530e8a/26-6a81659fa89f3.webp' /></p><p>
</p><p>
எனினும், இதற்காக நிறுவன மட்டத்தில் மென்பொருள் அமைப்புகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>வர்த்தகர்களுக்கு அறிவிப்பு</h2><p> 

அந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, எதிர்வரும் அக்டோபர் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட விவரக் குறிப்புகளுக்கு ஏற்ப தங்கள் கணக்கியல் மற்றும் பில்லிங் அமைப்புகளைத் தயார்படுத்தி கொள்ளுமாறு தொடர்புடைய வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0e46f06-7e33-4fc2-b28d-125e6c52d9ea/26-6a8165a06be69.webp' /></p><p>
</p><p>
போலி திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி இன்வாய்ஸ் படிவ பயன்பாட்டைத் தடுத்தல், பரிவர்த்தனைகள் குறித்து உரிய நேரத்தில் கண்காணிக்கும் திறன் மற்றும் வரி கசிவைக் குறைத்தல் ஆகியவை இதன் நோக்கமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T07:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிகுறிகள் தொடர்ந்தால் அவதானமாக இருக்கவும்..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengu-fever-urgent-warrning-srilanka-people-1786857912"></link>
            <id>https://tamilwin.com/article/dengu-fever-urgent-warrning-srilanka-people-1786857912</id>
            <summary type="text">நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதாக&amp;nbsp;தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதாக&nbsp;தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> அத்துடன் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்ந்துள்ளது.</p><p>இதேவேளை, தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

&nbsp;</p><h2>டெங்கு அபாயம் கொண்ட மாகாணம் அடையாளம்</h2><p>இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள&nbsp; டெங்கு நோயாளர்களில் 52.96%&nbsp; என்ற வகையில் 48,725 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக இது மாறியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc0b848f-965a-46fc-a824-d0775f03ac0b/26-6a81522abf6e0.webp' /></p><p>இரண்டாவதாக தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 13,533 ஆகப் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதற்கு மேலதிகமாக மத்திய மாகாணத்தில் 8,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,558 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p>கொழும்பு மாவட்டத்தில் 18,245 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,613 நோயாளர்களும், மாத்தறையில் 6,036 நோயாளர்களும், களுத்துறையில் 5,951 நோயாளர்களும், காலியில் 5,039 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,935 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
இவ்வருடத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,968 ஆகும்.
</p><p>இதேவேளை, காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் தகுதியுள்ள வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T07:01:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவினால் ஓரங்கட்டப்பட்ட முக்கியஸ்தர்! பதவியை துறந்த பின்னர் கிடைத்த பெரிய வாய்ப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prominent-figures-sidelined-by-gotabaya-1786854568"></link>
            <id>https://tamilwin.com/article/prominent-figures-sidelined-by-gotabaya-1786854568</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினேன் என்று அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தனியார்&nbsp; ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்து&nbsp; கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் என்ற பதவியை வைத்துக் கொண்டு நான் ஒருபோதும் அரசியல் செய்ததில்லை. இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்கு அறிவார்.&nbsp;</p><h2>அமெரிக்கத் தூதுவர் பதவி&nbsp;</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வெறும் பின்வரிசை உறுப்பினராகவே நான் இருந்தேன். எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை.&nbsp;</p><p>அந்த&nbsp; ஆட்சியில் கடும் அதிருப்தியடைந்ததாலேயே நானாக சுய விருப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து அரசியலில் இருந்து வெளியேறினேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43f746e7-5c3b-4a05-835f-6899a47bbdff/26-6a814bb66e615.webp' /></p><p> </p><p>இதனையடுத்தே அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டேன். தூதுவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நான் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை.&nbsp;&nbsp;</p><p>தூதுவராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து பதவி விலகும் வரை இலங்கைக்கு பயன்பெறும் வகையில் செயற்பட்டேன். அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு பல ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.&nbsp;</p><p>தூதுவராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் நாட்டுக்கு என்னால் முடிந்த சேவைகளை ஆற்றியுள்ளேன். தூதுவராக நான் பணியாற்றியதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T06:53:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி பிரதேச சபை உப தவிசாளர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-arrested-with-drugs-in-mullaitivu-1786861158"></link>
            <id>https://tamilwin.com/article/five-arrested-with-drugs-in-mullaitivu-1786861158</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயின் போதைப்பொருளுடன் கொக்கிளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயின் போதைப்பொருளுடன் கொக்கிளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை நேற்று(15.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>

ஐவர் கைது</h2><p>
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில்
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கொக்குளாய் பொலிஸார் சோதனை
நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a33edccd-ab34-4170-ba03-fd73c405753e/26-6a815846db825.webp' /></p><p>
</p><p>
இதன்போது, 2 கிராம் அளவிலான ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களும் சான்றுப் பொருட்களுடன் கொக்குளாய் பொலிஸ்
நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் பொலிஸார்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின் வோனஸ் ஆசனத்தின் ஊடாக சபைக்கு வருகைதந்து உபதவிசாளராக
தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T06:27:56+00:00</updated>
        </entry>
    </feed>
