<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-22T07:18:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-arrested-in-vavuniya-1784701502"></link>
            <id>https://tamilwin.com/article/three-arrested-in-vavuniya-1784701502</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(21.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>திருட்டு சம்பவம்</h2><p>
</p><p>
கடந்த மூன்று நாட்களுக்கு முன் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக&nbsp; நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. </p><p>

அத்துடன் இறம்பைக்குளம் பகுதியில் உள்ள கருமாரி அம்மன் கோயில் மற்றும் அதே பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் கோயில், குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோயில், வவுனியா நகர் இலுப்பையடி பகுதியில் உள்ள உணவகம் என பல இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c5f26ea-1d59-44fc-b73e-317032821fb3/26-6a6069617e809.webp' /></p><p> 

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், உணவக உரிமையாளர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர்,&nbsp; வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். </p><p>

குறித்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை&nbsp; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள்&nbsp; விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>பொலிஸ்&nbsp;விசாரணை</h2><p> 

இதன்போது தேக்கவத்தை பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய நபர் ஒருவர் மற்றும் சகோதரர்களான கள்ளிக்குளம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய தம்பி மற்றும் மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அண்ணா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60acb585-5ad4-450d-b511-27d8173ef78f/26-6a606960c9597.webp' /></p><p>

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சபாரி மோட்டார் சைக்கிள் உட்பட ஏனையப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-22T07:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – யாழ். அரசாங்க அதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-unite-to-create-drug-free-jaffna-government-1784698652"></link>
            <id>https://tamilwin.com/article/all-unite-to-create-drug-free-jaffna-government-1784698652</id>
            <summary type="text">போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
</p><p>
புனர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(21.07.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>புனர்வாழ்வு பணியகம்</h2><p>
</p><p>
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
</p><p>
புனர்வாழ்வு பணியகத்தின் செயற்பாடுகள் தலைமையகத்தின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டாலும், மாவட்ட மட்டத்தில் அவை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>
குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் புனர்வாழ்வு பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதற்கு புனர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ்.அமித்துக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c922792-6c93-4883-bd0f-5b3e32ced1d5/26-6a606176b7342.webp' /></p><p> </p><p>

மேலும், இந்தச் செயலமர்வு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீள்சமூகமயப்படுத்துதல், அவர்களை சரியான முறையில் வழிநடத்துதல் மற்றும் சமுதாயத்தை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பு குறித்து இந்தச் செயலமர்வில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.</p><p>

புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதிக்கப்படுபவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலில் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றப்படுவதாகவும், புனர்வாழ்வில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.</p><p></p><h2>போதைப்பொருளற்ற சமூகம்</h2><p>

யாழ். மாவட்டத்தை போதைப்பொருளற்ற சமூகமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் "அழகான வாழ்க்கை – போதைப்பொருளற்ற தேசம்" தேசிய வேலைத்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க இரண்டு முக்கிய அம்சங்கள் அவசியம்.
 முதலாவதாக இளைய தலைமுறையினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுக்கும் வகையில் தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c98f466d-4d45-4084-a8bf-e7f135f44440/26-6a60617611b3f.webp' /></p><p> இரண்டாவதாக புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து சமூகத்திற்குத் திரும்பியவர்களை உரிய முறையில் ஆற்றுப்படுத்தி மீள்சமூகமயப்படுத்த வேண்டும்.
</p><p>

பாடசாலை மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு உள்ளது.

பிரதேச செயலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் தடுப்புடன் மட்டுமல்லாது, உளவள ஆலோசனை, ஆற்றுப்படுத்தல் மற்றும் புனர்வாழ்வு பெற்றவர்களை சமூகத்துடன் மீண்டும் இணைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
மேலும், புனர்வாழ்வு பெற்றவர்களை குறைந்தது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டிய அவசியம். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உத்தியோகத்தர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியவர்கள்.</p><p></p><h2>போதைப்பொருள் பாவனை விகிதம்</h2><p>
</p><p>
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயற்பட்டால் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளும் இன்னும் காணப்படுகிறது.
</p><p>
கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மேம்பாட்டு குழுக்கள் உள்ளிட்ட சமூக மட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் போதைப்பொருள் பாவனையை மேலும் கட்டுப்படுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bc83f73-2e0f-4928-82f9-2486efd5f6a9/26-6a60617544de3.webp' /></p><p> 

தற்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதுடன், அந்த நிலையை மேலும் மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
</p><p>
இறுதியாக, புனர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம். எஸ். அமித் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து இந்தச் செயலமர்வை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி.
</p><p>
போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும்.

இந்தச் செயலமர்வில் பகிரப்பட்ட கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T07:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இருவர் பலி - ஆபத்தான நிலையில் மூன்று மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-killed-in-an-accident-2-injured-1784691164"></link>
            <id>https://tamilwin.com/article/2-killed-in-an-accident-2-injured-1784691164</id>
            <summary type="text">புதிய இணைப்புநல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப்பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சிக்கு அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப்பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சிக்கு அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நாவலப்பிட்டி/டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>விபத்து நடந்த போது முச்சக்கர வண்டியில்&nbsp; 5 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த முதியவர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.</p><p>அதிவேகமாக சென்ற முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நல்லதன்னி பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நல்லத்தண்ணியில் இருந்து மஸ்கெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோகினி எல்லயிலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

முச்சக்கர வாகனம் வீதியிலிருந்து விலகிச் சென்று பள்ளத்தில் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் சிறுவர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2><b>
பொலிஸார் விசாரணை</b></h2><p>காயமடைந்த இரண்டு சிறுவர்களும் தற்போது கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e45f68-087f-4905-b7ce-1b13f68712b2/26-6a6040e92161e.webp' /></p><p>விபத்து குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T07:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்திக்கு சர்வதேச ஏலம் கோர தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-bidding-trincomalee-oil-development-1784700496"></link>
            <id>https://tamilwin.com/article/international-bidding-trincomalee-oil-development-1784700496</id>
            <summary type="text">திருகோணமலை எண்ணெய் தாங்கிவளாகத்தில் உள்ள 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக, டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) அடுத்த மாதத்திற்குள் சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை எண்ணெய் தாங்கிவளாகத்தில் உள்ள 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக, டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) அடுத்த மாதத்திற்குள் சர்வதேச ஏலம் கோர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><p>

வணிக ரீதியான பயன்பாட்டை நோக்கிய ஒரு படியாக, இந்தத் திட்டத்திற்கான முதலீட்டாளர்களுக்கான அழைப்பிற்கு அமைச்சரவை கலந்துரையாடல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.</p><p></p><h2>61 தாங்கிகளில் ஒரு பகுதி அபிவிருத்தி&nbsp;</h2><p>
</p><p>
TPTL சொந்தமான 61 தாங்கிகளில் ஒரு பகுதி இந்த முறையில் அபிவிருத்தி செய்யப்படும். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட ஏலங்கள் மதிப்பீட்டிற்குப் பிறகு இறுதி முடிவிற்காக அமைச்சரவை குழுவிற்குத் திருப்பி அனுப்பப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f83c473-dd39-4203-942a-a12fd9b4f38b/26-6a606a2ce1df2.webp' /></p><p>
</p><p>
2021-ல் நிறுவப்பட்ட TPTL-ன் 51% பங்குகள் இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கும், 49% பங்குகள் லங்கா IOC-நிறுவனத்துக்கும் சொந்தமாகும்.
</p><p>
1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் தொடங்கிய இந்த ஒத்துழைப்பு, பின்னர் தொடர்ந்தும் வலுப்பெற்றுள்ளது.</p><h2>மத்திய கிழக்கில் அமைதியின்மை</h2><p> </p><p>கடந்த ஆண்டு, இரு தரப்பிற்கும் எரிசக்தியை வழங்கக்கூடிய ஒரு பல்நோக்கு குழாய் அமைப்பை உருவாக்குவதற்காக இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒரு முத்தரப்பு ஒப்பந்தமும் எட்டப்பட்டது.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவிவரும் அமைதியின்மையின் பின்னணியில், பிராந்திய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த பெட்ரோலிய மையத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதில் இலங்கையும் இந்தியாவும் விசேட கவனம் செலுத்தியுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் - போராட்டக்காரர்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protesters-gather-in-chemmani-jaffna-1784701721"></link>
            <id>https://tamilwin.com/article/protesters-gather-in-chemmani-jaffna-1784701721</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், யாழ்ப்பாணம் - செம்மணி,
சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், யாழ்ப்பாணம் - செம்மணி,
சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளனர். </p><p>

இந்த நடவடிக்கை இன்று(22.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 



போராட்டக்காரர்களின் போராட்டம்</h2><p>மயானத்துக்கு வெளியே, ஏ-9 வீதியில் போராட்டம் ஒன்று அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், 

எமக்கு உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான 
அலுவலகம் என்பது வெறும் கண்துடைப்பாகவே காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7023caf8-da02-4eda-867e-28ce6e49ddfc/26-6a60656830038.webp' /></p><p>எனவே எமது
பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.

தினம் தினம் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து வெவ்வேறு விதத்திலான
கொடூரங்களை எடுத்துக்காட்டும் மனித என்புத் தொகுதிகள் வெளிப்படுகின்றன.</p><p>

கடந்த கால சிங்கள படைகளாலும் அரசாங்கத்தினாலும் இந்த கொடூரம்
அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே இதற்கு சர்வதேச தீர்வு வேண்டும் என்றார்கள்.</p><h2>



 
போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பிரதிநிதிகள்</h2><p>

போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக
மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbcdad19-52d7-4158-94b1-cb50c926648d/26-6a6065690ee6e.webp' /></p><p> </p><p>

இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில்
பொலிஸார் செயற்பட்டதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>


சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட
தூதுக்குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பிரதிநிதிகள் இருவருடன்
கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
ஊடகவியலாளர்கள் அந்த குழுவினரிடம் கேள்வியெழுப்ப
முயற்சித்தவேளை அதற்கு இடமளிக்காது அவர்கள் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b6c164-3e2f-411f-92fe-25a985181df8/26-6a606569db474.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/512b0795-3a40-492e-b86c-4e5433dce05e/26-6a60656aac80f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4d1c39-1201-4471-8dc1-75a2939f392f/26-6a60656b7d88a.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T06:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-delegation-meets-with-tamil-parties-1784701945"></link>
            <id>https://tamilwin.com/article/eu-delegation-meets-with-tamil-parties-1784701945</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள்,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள்,
தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.</p><p>

இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் (21.07.2026) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் நடைபெற்றது.</p><p></p><h2>கலந்து கொண்ட பிரதிநிதிகள்</h2><p>

இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,
யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மதிவதனி மற்றும் பல கட்சிகளின் யாழ். மாநகர சபை
உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் மற்றும்
ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் கலாநிதி க.சர்வேஸ்வரன் உள்ளிட்ட பல பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.
</p><p>
சமகால அரசியல் நிலவரம், செம்மணியில் அகழப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான
விசாரணைகளில் சர்வதேச நாடுகளின் பங்கு மற்றும் பங்களிப்பு குறித்து இதன்போது
விசேடமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:36:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrest-warrant-issued-for-jaliya-wickramasuriya-1784700659"></link>
            <id>https://tamilwin.com/article/arrest-warrant-issued-for-jaliya-wickramasuriya-1784700659</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்து முன்னிலைபடுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவினை பிறப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்து முன்னிலைபடுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் வழக்கு இன்று (22) விசாரணைக்கு வந்தபோது பிடியாணை பிறப்பித்துள்ளது.</p><p></p><h2>குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு</h2><p>அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய&nbsp;குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eb4508e-8e28-4b4c-8a68-0e3d1e7c918e/26-6a6063c2a0720.webp' /></p><p>
இந்த வழக்கு தொடர்பாக சட்டத்துறை தலைவரிடம் ஆலோசனை பெற்ற பின்னர், டிசம்பர் 9ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்&nbsp; வைத்து 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழில் அமைச்சின் முன்மொழிவுகள் : ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்தாய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/projects-of-the-ministry-of-fisheries-1784701350"></link>
            <id>https://tamilwin.com/article/projects-of-the-ministry-of-fisheries-1784701350</id>
            <summary type="text">கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில்
ஒதுக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ்
நடைமுறைப்படுத்தப்படும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில்
ஒதுக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ்
நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும்,
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும்
ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில்&nbsp; செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
</p><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் உள்ள கடற்றொழில்
மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு
அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
முகவர் நிலையம், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை
மீன்பிடிக் கூட்டுத்தாபனம், சீ - நோர் நிறுவனம், மத்திய மீன் விற்பனை வளாகம்
உள்ளிட்ட நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மீண்டெழும் மற்றும்
மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.</p><p></p><h2>விரிவான கலந்துரையாடல்&nbsp;</h2><p>

இந்நாட்டின் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல், மக்களின்
புரதத் தேவையை உறுதிப்படுத்துதல் மற்றும் கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தை
உயர்த்துவதை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின்
முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்தும் இங்கு
விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
மேலும், மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டம், கந்தரை மீன்பிடி
துறைமுக அபிவிருத்திப் பணிகள், ரெக்கவ மீன்பிடி நங்கூரமிடும் தளத்தை அமைத்தல்,
காரைநகர் படகு கட்டும் தளத்தை நவீனமயமாக்கல் மற்றும் புனரமைத்தல் உள்ளிட்ட
பிரதான திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், கடற்றொழில், நீரியல் மற்றும்
கடல் வளங்கள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஆராய்ச்சி மற்றும்
அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான நிதி
ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2036899f-f187-4732-971b-e1d27ed2e1c6/26-6a6063140215a.webp' /></p><p>
</p><p>
மேலும், டித்வா அனர்த்தத்தால் சேதமடைந்த மீன்பிடித் துறைமுகங்களை புனரமைத்தல்,
மீன்பிடிச் சமூகத்தின் வாழ்வாதாரங்களை வழமைக்குக் கொண்டுவருவதற்காக
நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பாதிக்கப்பட்ட
மீன்பிடி மக்களுக்குப் படகுகள் மற்றும் வலை உபகரணங்களை வழங்குவதற்காக 189
மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.
</p><p>
'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட படகுகள் மற்றும் ஏனைய ஃபைபர் கழிவுகளை
மீள்சுழற்சி செய்யும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் கவனம்
செலுத்தப்பட்டது.
</p><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான&nbsp; அனில்
ஜயந்த பெர்னாண்டோ, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்
ரத்ன கமகே, ஜனாதிபதியின் செயலாளர்&nbsp; நந்திக சனத் குமாநாயக, ஜனாதிபதி
பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்&nbsp; ஹர்ஷன சூரியப்பெரும,
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர்&nbsp; கோலித
கமல் ஜினதாச ஆகியோருடன், நிதி அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும்
கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சகல துறைகளிலும் அரசு படுதோல்வி : நாடாளுமன்றத்தில் சஜித் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-failure-in-all-sectors-sajith-1784697989"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-failure-in-all-sectors-sajith-1784697989</id>
            <summary type="text">நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப்
பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று
எதிர்க்கட்சித் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப்
பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயத் துறை, மலையக தோட்டத் தொழிலாளர் சமயம், சுகாதாரம், சுதேச மருத்துவம்
மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு தோல்வியடைந்துள்ளது
என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>பொருளாதார ரீதியில் வங்குரோத்து</h2><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(21) ஆற்றிய உரையின் முக்கிய
அம்சங்கள் பின்வருமாறு,&nbsp;"தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையாகப் பெற்றுத்
தருவதாகக் கூறிய அரசு, இன்று விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில்
120 ரூபாவுக்கு நிலையான விலையை நிர்ணயிக்க முற்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02e2d5f7-c72c-42f2-a55f-acfb8a4c5c4d/26-6a605b513d746.webp' /></p><p>
விவசாய அமைச்சரே ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது
என ஒப்புக்கொண்டுள்ள நிலையில், விவசாயிக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபா
நட்டம் ஏற்படுகின்றது.</p><p> விவசாயிகளைப் பாதுகாப்போம் என்று கூறியவர்கள், இன்று
அவர்களைப் பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளனர்.&nbsp;</p><p>தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, அவர்களைக்
காணி மற்றும் குடியிருப்புகளில் இருந்து விரட்டும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> ராகல லெனார்ட் தோட்டத்தில் நீண்ட காலமாக
வழ்ந்து வந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதுடன், அவர்களின் காணி
உரிமையையும் சட்டரீதியாக உறுதிப்படுத்த வேண்டும்.</p><h2>சுகாதாரத்துறையின் மௌனம்&nbsp;</h2><p>
நாட்டில் டெங்கு தொற்றுநோய் வேகமாகப் பரவிவரும் நிலையில், இதுவரை 77
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 56 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>இந்த
நிலைமை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ள போதிலும், இதனைக்
கட்டுப்படுத்த சுகாதாரத் துறையிடம் தெளிவான வேலைத்திட்டம் இல்லை. மேலும்,
டெங்கு ஒழிப்புப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர வேலைவாய்ப்பு
வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e85c53-8fa0-4e52-9068-aeeaa1eeb82a/26-6a605b520ab7d.webp' /></p><p>பாரம்பரிய சுதேச மருத்துவத் துறை கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 700
மாணவர்களுக்கான பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. </p><p>இலவச பாரம்பரிய வைத்திய
பயிற்சிக்காக இயங்கிய 11 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. வெளிநாட்டு மருந்துகளை
இறக்குமதி செய்வதால் அந்நிய செலாவணி இழக்கப்படுவதுடன், பாரம்பரிய மருத்துவ
முறையைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் அவசியமாகும்.&nbsp;</p><p>தொகுதி முறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை
தேசியப் பாடசாலைகளில் பிரதான மற்றும் கட்டாயப் பாடங்களாக மாற்ற வேண்டும்.
அதற்கான காலச் சட்டகத்தை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் முடிவடைந்து விட்டது! மீண்டும் ஒரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை - வடக்கு மாகாண ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-governor-statement-regarding-lands-1784699883"></link>
            <id>https://tamilwin.com/article/north-governor-statement-regarding-lands-1784699883</id>
            <summary type="text">போர் முடிவடைந்து விட்டது, இனியுமொரு போர் ஏற்படும் என தான் நம்பவில்லை என&amp;nbsp;வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;அத்துடன், இராணுவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவடைந்து விட்டது, இனியுமொரு போர் ஏற்படும் என தான் நம்பவில்லை என&nbsp;வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே
கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை
மக்களுக்கு வழங்குவதாக' இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். </p><p>ஆனால்,
இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின்
காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான
செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும்
நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வட மாகாண ஆளுநரை ஆளுநர்
செயலகத்தில் நேற்று (21.07.2026) நேரில் சந்தித்துக்
கலந்துரையாடினர்.</p><p></p><p> இச்சந்திப்பின் போதே ஆளுநர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>அபிவிருத்திப் பணிகள் குறித்து நேரில் ஆராய்வு</h2><p>
</p><p>
வடக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்கள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும்
அபிவிருத்திப் பணிகள் குறித்து நேரில் ஆராய்ந்து அறிந்து கொள்வதே தமது இந்தப்
பயணத்தின் பிரதான நோக்கம் எனத் தூதுக்குழுவினர் இதன்போது குறிப்பிட்டனர்.
</p><p>
இதற்குப் பதிலளித்த ஆளுநர், கடந்த காலங்களை விட தற்போது வடக்கு மாகாணத்தின்
அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச்
சுட்டிக்காட்டியதுடன், அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு
அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தார். </p><p>குறிப்பாக, வனவளத்
திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் கடந்த காலங்களில்
ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்டக் குழுக்களில்
எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் ஆளுநரால் தெளிவுபடுத்தப்பட்டது.</p><p></p><p>
அத்துடன், பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும்
சுட்டிக்காட்டிய ஆளுநர், இந்த விடயங்களை அரசாங்கம் மிகவும் நேரிய
சிந்தனையுடனேயே அணுகி வருவதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவது தொடர்பிலும், செம்மணிப்
புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர்
ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள், குறிப்பாக
இந்தியாவின் பங்களிப்புடனான செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில்
விரிவாக ஆராயப்பட்டது.</p><h2>கலந்துரையாடப்பட்ட விடயம்</h2><p> </p><p>காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான இந்திய
அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, துறைமுகம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது,
அதன் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம், விமான
சேவைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.</p><p>

வடக்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் தூதுக்குழுவினர்
ஆளுநரிடம் கேட்டறிந்தனர். வடக்கு மாகாணமானது விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய
துறைகளில் அதியுயர் வளங்களைக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர்,
அத்துறைகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகள் தற்போதும்
காணப்படுவதாகத் தெரிவித்தார். </p><p>அத்துடன், இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக
வடக்கு மாகாணத்தில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கு
உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் தூதுவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.</p><p></p><p>
</p><p>
இம்முக்கிய கலந்துரையாடலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் அதிமேதகு கார்மென்
மொரேனோ, ஜேர்மனி தூதுவர் அதிமேதகு கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர்
அதிமேதகு ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் அதிமேதகு டாமியானோ பிராங்கோவிக்,
நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு விபே டி போயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>இவர்களுடன், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ், தொடர்பாடல்
ஒருங்கிணைப்பாளர் செல்வி சாரா பொன்சேகா சில்வா ஆகியோரும், வடக்கு மாகாண
ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோரும்
பங்கேற்றிருந்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T06:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீர் ஊற்றையும் விட்டு வைக்காத அரசாங்கம் - புத்த விகாரை கட்டுமானப்பணிகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/buddhist-temple-near-kaniya-hot-spring-1784700575"></link>
            <id>https://tamilwin.com/article/buddhist-temple-near-kaniya-hot-spring-1784700575</id>
            <summary type="text">கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகிலுள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்படும் பகுதியில் புத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகிலுள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்படும் பகுதியில் புத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த நடவடிக்கை&nbsp;இன்று(22.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p></p><p>

இதேவேளை, குறித்த பகுதியில் தொல்பொருள் ஆய்வுப் பணிகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் என்றும், அங்கு புத்த சிலையோ புத்த விகாரையோ அமைக்கப்படாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f2a3d7a-a724-45fd-8b4f-8d15ca8fd47d/26-6a605f1ab23f1.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f360289-5939-4b04-a95e-6f215ede1219/26-6a605f1b8491f.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T06:11:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் புத்த விகாரை கட்டுப்படுமா..! குகதாசன் எம்.பி சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/buddhist-temple-near-kaniya-hot-spring-1784699979"></link>
            <id>https://tamilwin.com/article/buddhist-temple-near-kaniya-hot-spring-1784699979</id>
            <summary type="text">கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும்
இடத்தில் இன்று(22.07.2026) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளும்
இடத்தில் இன்று(22.07.2026) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.
</p><p>
இது தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

இந்த விடயம் தொடர்பாக தான் அரசாங்கத்தின் உயர் மட்டத்தோடு தொடர்புகொண்டு பேசிய போது அவர்கள் இந்த இடத்தில் புத்த விகாரை கட்டுப்படமாட்டாது என உறுதியளித்தார்கள்.</p><p></p><p>
</p><h2>
புத்த விகாரை கட்டும் பணி முறியடிப்பு</h2><p>
அத்துடன், தொல்பொருட்கள் சிதைவடையாமல்
இருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/183dad05-8ada-4c56-a78d-fdbf249877ec/26-6a605ce0ba7ad.webp' /></p><p> எவ்வாறாயினும் 202 ஆம் ஆண்டின் நீதிமன்ற தீர்ப்புக்கமைய அந்த
இடத்தில் எந்தச் சமய கட்டடங்களும் கட்டாதிருப்பதை நீதிமன்றம் உறுதி செய்ய
வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தேன். </p><p>

இதேவேளை, நீதி மன்றத்தில் சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்குத்
தாக்கல் செய்வதற்குரிய ஒழுங்குகள் மேற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T06:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் வந்த அவுஸ்திரேலிய அமைப்பு - அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விபரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australian-organization-arrives-in-jaffna-1784696547"></link>
            <id>https://tamilwin.com/article/australian-organization-arrives-in-jaffna-1784696547</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதார, சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை
மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதார, சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை
மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற
நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(21.07.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவித்த போதே குறித்த அமைப்பின் ஸ்தாபகரான டேஷ் பாலசுப்ரமணியம் இதனைத்
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கல்வி, பொருளாதார, சமூக முன்னேற்றம்</h2><p> அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வரையிலான 1000கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை
அவுஸ்ரேலிய பிரஜைகள் உட்பட்ட நூல் அமைப்பின் தோழர்களோடு நாம் நிறைவு
செய்துள்ளோம்.</p><p>இந்தப் பயணம் எமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த
உதவும் அதேவேளை இந்தப் பயணத்திற்கான ஒவ்வொரு
கிலோமீட்டருக்கும் வெளிநாட்டு வாழ் மக்களின் நிதி அன்பளிப்புகள்
கிடைக்கப்பெறுவதுடன் குறித்த உதவி மூலம் இங்குள்ள செயற்றிட்டங்களை மேற்கொள்ள
திட்டமிட்டிருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e34e37e4-c155-4059-8309-e2012bb4bb89/26-6a60569d2439f.webp' /></p><p>அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூலை மாதமும் நடாத்தப்படும். இது வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய
மாகாணங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டு கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுத்
திட்டங்களை ஏற்படுத்தும் இலக்கினைக் கொண்டுள்ளது.</p><p>
மேலும், எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு - பம்பலப்பிட்டியில், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கையின் பல்வேறு
பகுதிகளில் உள்ள கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் ஓர்
நிகழ்வு நடத்தப்படவுள்ளது.</p><p> அதேவேளை குறித்த நிகழ்வில் எமது பயணத்தின் அனுபவங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் விடயங்கள் தொடர்பாக
கலந்துரையாடவுள்ளதுடன் எம்முடன் இணைந்து பல கலைஞர்களினால் வரையப்பட்ட
ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம்! ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோக அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/price-determination-for-sand-in-mannar-district-1784698259"></link>
            <id>https://tamilwin.com/article/price-determination-for-sand-in-mannar-district-1784698259</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய
மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய
மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>இதனடிப்படையில், மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ்ப்பாண
மாவட்டத்துக்குத் தேவையான மணலை பெற்றுக்கொள்வதற்கு துரித நடவடிக்கை
எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். </p><p>அத்துடன், கிளிநொச்சி
மாவட்டத்திலிருந்தும் வெகுவிரைவில் ஏனைய மாவட்டங்களுக்கான மணல் விநியோகம்
ஆரம்பிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விநியோகம்</h2><p>

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது
தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன்
ஜெயசிங்கவின் பங்குபற்றுதலுடன் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின்
தொடர் முன்னேற்றங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று (21.07.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32a65ccd-ea19-414f-b6d7-ddc14dd74e7a/26-6a605a9f5b7d1.webp' /></p><p>
</p><p>
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர், மணல் விநியோக அனுமதிகளைப்
பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளைச சுட்டிக்காட்டினார். </p><p>பொதுமக்கள் குறைந்த விலையில், இலகுவாக மணலைப்
பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்காகவே புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்
பணியகத்தின் தலைவருடனான ஆரம்பக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்த ஆளுநர், அதற்கான தொடர் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி விநியோகத்தை
உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

'சூம்' தொழில்நுட்பத்தின் ஊடாக இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்ட
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர்
நாயகம் ஆகியோர், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக
மாவட்டச் செயலாளர்கள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும்
அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.</p><h2>மாவட்டங்களின் தற்போதைய நிலைமைகள்</h2><p>
</p><p>
இதன்போது ஒவ்வொரு மாவட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக
ஆராயப்பட்டன.</p><p> யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நிதி மூலங்களினூடாக ஆயிரக்கணக்கான வீட்டுத்
திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றின் நிர்மாணப்
பணிகளுக்குப் பெருமளவிலான மணல் தேவைப்படுவதாகவும் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர்
சுட்டிக்காட்டினார்.</p><p> எனவே, இந்தப் பெரிய தேவையைக் கருத்திற்கொண்டு தடையற்ற
மணல் விநியோகத்தை உறுதிசெய்து அதனைச் சீராக ஒழுங்குபடுத்துவது மிகவும்
அவசியமானது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a7eb1bb-dd79-4dc3-8c76-dd16b7ca4b13/26-6a605aa030999.webp' /></p><h2>மன்னாரில் மணல் விநியோகம் </h2><p>
</p><p>
மன்னாரில் மணல் விநியோகம் சீராக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. விலை நிர்ணயக்
குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக மணலுக்கான விலையும், வெளி மாவட்டங்களுக்குக்
கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணங்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.</p><p>
அத்துடன், வெளி மாவட்டங்களுக்கு மணலைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த
தடையும் நீக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், குளங்களிலிருந்து மணலைக் கழுவி
எடுப்பதற்கான செயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச்
செயலாளர் தெரிவித்தார்.
</p><p>
மணல் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதேச சபையின் ஊடாக மணல்
விநியோகத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>எனினும், பிரதேச சபையின் விண்ணப்பங்களில் காணப்பட்ட சில
குறைபாடுகள் காரணமாகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அவற்றை
திருப்பி அனுப்பியுள்ளமையால் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாக கிளிநொச்சி மாவட்டச்
செயலாளர் சுட்டிக்காட்டினார்.</p><p> மேலும், குளங்களில் மணலைக் கழுவி எடுப்பதற்கான
ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், நீர்மட்டம் குறையாமையால் அம்முயற்சி
தாமதமாகியுள்ளதாகவும், இம்மாத இறுதியில் அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விநியோகம்
சீராக நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>முல்லைத்தீவு மாவட்ட மணல் விநியோக&nbsp;அனுமதி </h2><p>
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் விநியோகத்திற்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய தரப்பினரின் கள ஆய்வுக்குப் பின்னர் ஒரு வார
காலத்தினுள் அதற்கான அனுமதிகள் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர்
தெரிவித்தார். </p><p>வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மணல் விநியோகத்தில் பாரிய
பிரச்சினைகள் ஏதுமில்லை என வவுனியா மேலதிக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.
</p><p>
விநியோக அனுமதிகளைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலொன்றை வழங்குமாறு
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்துக்கு ஆளுநர் இதன்போது
பணிப்புரை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9143178-e690-4496-bd3e-991155fe1f40/26-6a605aa1040a5.webp' /></p><h2>மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை</h2><p> </p><p>அத்துடன், மணல் மற்றும் கிரவல் விநியோக ஒழுங்குபடுத்தல்
கூட்டங்களை தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மாதத்துக்கு
ஒருமுறையேனும் நடத்துமாறு மாவட்டச் செயலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
</p><p>இச்செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்கள் போதிய அக்கறையின்றிச் செயற்பட்டால்,
ஏனைய பொது அமைப்புகளின் ஊடாக இதனை முன்னெடுப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறும்
ஆளுநர் மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.</p><p>

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,
உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், பிரதிப் பிரதம
செயலாளர் (பொறியியல்), நீர்ப்பாசனத் திணைக்களம், கட்டடங்கள் திணைக்களம்
மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றின் மாகாணப் பணிப்பாளர்கள்,
உள்ளூராட்சி ஆணையாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மத்திய சுற்றாடல் அதிகார
சபையின் பிரதிநிதிகள், வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச சபைகளின்
செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T05:53:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravindra-wijegunaratne-granted-bail-1784697478"></link>
            <id>https://tamilwin.com/article/ravindra-wijegunaratne-granted-bail-1784697478</id>
            <summary type="text">முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு கொழும்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்கு தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><p> </p><p>

முன்னர் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.</p><h2>பிணையில் விடுவிக்க உத்தரவு</h2><p> </p><p> 

அதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்குத் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததை அடுத்து, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9202c27c-20f9-4106-940a-c33cea3f4daf/26-6a605a7a9c889.webp' /></p><p>
</p><p>
மேலும் இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T05:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[1000 குளங்கள் திட்டத்தில் ஒதியமலைக் குளம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/after-many-years-the-1000-ponds-project-1784696528"></link>
            <id>https://tamilwin.com/article/after-many-years-the-1000-ponds-project-1784696528</id>
            <summary type="text">1000 குளங்களைப் புனரமைக்கும்
திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், ஒதியமலைக் குளத்தின்
புனரமைப்புப் பணிகள் நேற்று (20) கூட்டுறவு அபிவிருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>1000 குளங்களைப் புனரமைக்கும்
திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், ஒதியமலைக் குளத்தின்
புனரமைப்புப் பணிகள் நேற்று (20) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி
சமரசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
</p><p>
பல வருடங்களாகப் புனரமைக்கப்படாமல் இருந்த இக்குளம் அழிவடையும் அபாயத்தில்
இருந்த நிலையில், விவசாயிகளால் அமைச்சரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு
இணங்கவே இப்புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்த&nbsp;</h2><p>
விவசாயப் பிரிவுகளின் விவசாயச் செழிப்பையும் கிராமியப் பொருளாதாரத்தையும்
மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e09448e2-34d4-422b-81e4-6e8e69b730a4/26-6a60513a8980f.webp' /></p><p>இக்குளத்தைப் புனரமைப்பதன் மூலம் 300இற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள்
நேரடி மற்றும் மறைமுகப் பயனடைவதுடன், 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில்
சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகிய இரு போகங்களிலும் விவசாயம் செய்ய முடியும்.
</p><p>
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், மகாவலி
அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ். ஏ. ஜி. டி. கெனிசியஸ் உட்பட
ஒதியமலைப் பகுதி விவசாயிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T05:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503</id>
            <summary type="text">வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
</p><p>
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரியளவிலான முறைகேடுகள்</h2><p>

குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519db4b7-f595-4db2-8995-cbf8183fe716/26-6a6051d1a9cbc.webp' /></p><p>
</p><p>
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இந்ருவன்திலக ஜயகொடிதத் திட்டத்தின் கீழ், 640 வாகனங்களை இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புரிமைகள் வழங்கப்பட்டதாக, பிரதம கணக்காய்வாளரின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>இந்த செயல்முறை தொடர்பான சரியான தகவல்கள் பிரதம கணக்காய்வாளருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

வெளிநாடு செல்லாத நான்கு நபர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, விண்ணப்பத்தில் தொழில் குறிப்பிடப்படாத 60 நபர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, சிலருக்கு இரண்டு வீதம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது மற்றும் 4 மாதங்கள் போன்ற மிக குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டது போன்ற பல ஊழல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
</p><p>
எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி சொகுசு வாகனங்களுக்கான 6 மில்லியனிலிருந்து 12 மில்லியன் ரூபாவாக வரி வரம்பு உயர்த்தப்பட்டதால், அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி குற்றம்சாட்டிள்ளார்.</p><h2>சொகுசு வாகனங்கள் இறக்குமதி</h2><p>இது இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03021692-38f3-49f4-a5c0-5f9b08956d59/26-6a6051d273187.webp' /></p><p>
இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
CAB 7373 மற்றும் CAB 7171 ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்கள் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவ்வாறாக பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mp0jpPJOagE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T05:15:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் மகன்! பின்னணியில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-s-son-arrested-for-cheating-foreigner-1784685252"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-s-son-arrested-for-cheating-foreigner-1784685252</id>
            <summary type="text">கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து, கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்டதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசாரணை அதிகாரிகளின் தகவல்களுக்கமைய, இந்தக் கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனே திட்டமிட்டு முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><p>
</p><h2><b>
 மூவர் கைது</b></h2><p>இதன்போது கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் ஒருவர் பிரபல முன்னாள் வர்த்தகர் ஒருவரின் பேரன் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நான்கு சந்தேகநபர்களில் மூவர் முதலில் கைது செய்யப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a30a56-ce22-43a2-9290-3fc4cfc91c12/26-6a6027c211c20.webp' /></p><p>அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
அதற்கமைய, குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் அவர் சட்டத்தரணிகள் ஊடாக நேற்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.</p><p>

2 கோடி ரூபாய் இலங்கைப் பணத்திற்கு அமெரிக்க டொலர்களை மாற்றித் தருவதாகக் கூறி, இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

அதற்கமைய, குறித்த சீன நாட்டவரை கொள்ளுப்பிட்டி பகுதிக்கு வரவழைத்தவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><h3><b>
விசாரணை அதிகாரிகள்</b></h3><p>அதன் பின்னர் ஏனைய மூன்று பேரும் கைவிலங்குடன் சென்று, தாங்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறிக்கொண்டு, சீன நாட்டவரிடம் இருந்த 2 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd3b7004-6014-4b50-9757-b19fccc81a6e/26-6a6027c2cda22.webp' /></p><p>இது தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செயற்பட்ட நிலையப் பொறுப்பதிகாரி மூவரை முதலில் கைது செய்தனர்.</p><p> முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-22T05:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நிலையத்தினுள் மோதல் - ஐவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-people-involved-in-clash-inside-police-station-1784694310"></link>
            <id>https://tamilwin.com/article/5-people-involved-in-clash-inside-police-station-1784694310</id>
            <summary type="text">கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்டு
அமைதிக்குப் பங்கம் விளைவித்த குடும்பத் தகராறுடன் தொடர்புடைய 5
சந்தேகநபர்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்டு
அமைதிக்குப் பங்கம் விளைவித்த குடும்பத் தகராறுடன் தொடர்புடைய 5
சந்தேகநபர்களுக்குத் தலா 300 ரூபாய் அபராதமும் 5 வருடங்களுக்கு
ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துக் கல்முனை
நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த இரு
தரப்பினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணைக்காக அவர்கள்
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.</p><p></p><h2>வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர்</h2><p>அங்கு
வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்ல
இணக்கம் தெரிவித்தனர். </p><p>இதனையடுத்து பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம்
முஸ்தபா தலைமையகப் பொறுப்பதிகாரியின் அறைக்கு அழைத்துச்
சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8356c2e2-5b88-4b6d-8fed-224486feee61/26-6a604b27c6471.webp' /></p><p>அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே
பொதுமக்களும் ஏனையோரும் வேடிக்கை பார்க்கும் வகையில் இரு தரப்பினரும் மீண்டும்
தகராறில் ஈடுபட்டு மோதிக்கொண்டுள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>இதனை அவதானித்த கல்முனை தலைமையக பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம்
விளைவித்த குற்றத்திற்காக இரு தரப்பையும் சேர்ந்த 5 பேரையும் உடனடியாகக் கைது
செய்து நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸ் நிலையத்திலுள்ள இரு வேறு
சிறைக்கூடுகளில் அடைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77fbc47b-ec87-465f-8c35-747f0b43afc2/26-6a604b2881a5b.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டு 5 சந்தேகநபர்களும் திங்கட்கிழமை (20) கல்முனை
நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது சந்தேகநபர்கள் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டுச் சமாதானமாகச் செல்ல
விரும்புவதாக மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
</p><p>
இருப்பினும் வழக்கை விசாரித்த நீதிவான் 5 சந்தேகநபர்களுக்கும் தலா 300 ரூபாய்
அபராதம் விதித்ததுடன் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத
கடூழியச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T04:53:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டம் மிக விரைவில் நீக்கப்படும்! நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prevention-of-terrorism-act-to-be-repealed-soon-1784694293"></link>
            <id>https://tamilwin.com/article/prevention-of-terrorism-act-to-be-repealed-soon-1784694293</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள்
விரைவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான சட்டமூலம் வெகுவிரைவில்
நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள்
விரைவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான சட்டமூலம் வெகுவிரைவில்
நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார&nbsp; தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின்போது, வாய்மூல
விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப்
பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விசேட நிபுணர் குழு</h2><p>
</p><p>
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்ட
வாக்குறுதிக்கு இணங்க, பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என்று
அமைச்சர் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d0eb1a1-6df7-4da3-ab63-e0b1e36bfe79/26-6a6049b71a65a.webp' /></p><p>
</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை
சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவை அங்கீகாரத்துடன் விசேட நிபுணர் குழு ஒன்று
நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அந்த நிபுணர் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரைகளுக்கு அமைவாக மிக விரைவில்
சட்டமூலம் வெளியிடப்படும் என்றும், இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும்
என்பதில் அரசு தீவிரமாக உறுதியுடன் இருக்கின்றது என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T04:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியில் அமர்ந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் குறித்து விரிவான ஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1784694059"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1784694059</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுகளின்
போது, கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுகளின்
போது, கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம்
காணப்பட்ட என்புத் தொகுதிகளை ஒப்பிட்டுத் தொல்லியல் பேராசிரியர்
ராஜ்சோமதேவாவினால் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளில்,
கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையிலான என்புத் தொகுதி
ஒன்று அடையாளம் காணப்பட்டது. இதன் தாடை பிளவடைந்த நிலையிலும் காணப்பட்டது.</p><p></p><h2>நேரில் ஆய்வு</h2><p>
</p><p>
இந்த என்புத் தொகுதி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா நேற்று
(21.07.2026) நேரில் ஆய்வுகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அது அகழ்ந்து
எடுக்கப்பட்டது.
</p><p>
இந்த என்புத் தொகுதியுடன் சான்றுப்பொருள்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
எனினும், இதன் பின்னால் மேலும் இரண்டு என்புத் தொகுதிகள் இருப்பது
கண்டறியப்பட்டுள்ளமையால், அது தொடர்பான ஆய்வுகள் எதிர்வரும் நாட்களில்
இடம்பெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10d34806-0938-4771-b835-7f63793e5b05/26-6a6047f829fbb.webp' /></p><h2>விரிவான ஆய்வு</h2><p>

இரண்டாம் கட்ட அகழ்வின்போது இதேபோன்று (கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக
அமர்ந்திருந்த நிலையில்) கண்டெடுக்கப்பட்ட என்புத் தொகுதியையும், தற்போதைய
மூன்றாம் கட்டத் தொகுதியையும் ஒப்பிட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
இந்த ஆய்வுகளுக்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கைகள் பீடத்தின்
உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T04:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பில் நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/postponement-of-the-advanced-level-examination-1784692888"></link>
            <id>https://tamilwin.com/article/postponement-of-the-advanced-level-examination-1784692888</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போட்டு நவம்பர் மாதம் நடத்துவதால் பாரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது
என்று ஐக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போட்டு நவம்பர் மாதம் நடத்துவதால் பாரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது
என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொதுமனுக்கள் பற்றிய குழுவின் நடவடிக்கைமுறை
மற்றும் செயலாற்றுகை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும்போதே அவர்
இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>உயர்தரப்பரீட்சைக்கு 800 நாட்கள்&nbsp;</h2><p>
</p><p>
"கடந்த காலங்களில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு 800 நாட்களுக்கு மேற்பட்ட
காலம் வழங்கப்பட்டிருந்த போதிலும், 2026 ஆம் ஆண்டுக்கான அவகாசம் 709
நாட்களாகவே வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/180826f8-eb44-4769-bf4a-2ba6c95d069f/26-6a6043896b1d2.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றங்கள் ஊடாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதால்,
அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலமே இதற்குத் தீர்வுகாண வேண்டும்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்தபோது மாணவர்களின் உரிமைகள்
குறித்து குரல் கொடுத்தது.</p><p> எனவே, தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள்
சக்தி அரசு மாணவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு உரிய முடிவை எடுக்க
வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T04:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் : உடனடி சர்வதேச விசாரணை கோரி கவனயீர்ப்புப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-grave-protest-demanding-1784691760"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-grave-protest-demanding-1784691760</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
காலை 8.00 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், போர் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத நிலை தொடர்வதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p></p><h2>தமிழ் இன அழிப்பின் முக்கிய சான்றாக</h2><p>
மேலும், செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இதுவரை 467 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இவ்விடயம் தமிழ் இன அழிப்பின் முக்கிய சான்றாக இருப்பதாகவும், அதனால் சுயாதீனமான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66622d6-095d-4350-a3f1-33d90c2fb97a/26-6a603ffa9d24a.webp' /></p><p>
இந்த விடயங்களை மூடிமறைத்து அல்லது நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், நீதி கோரி நீண்டகாலமாகப் போராடி வரும் பாதிக்கப்பட்ட மக்களை அரசின் வாக்குறுதிகளும் நடவடிக்கைகளும் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
இதேவேளை, இன்று காலை சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சர்வதேச சமூகத்திடம், செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரங்களில் பாரபட்சமற்ற, நம்பகமான சர்வதேச விசாரணையை உடனடியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T03:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி தலைமையில் பொதுச்சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா! மைத்திரிபாலவும் பங்கேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/centenary-of-health-service-leadership-anura-1784691227"></link>
            <id>https://tamilwin.com/article/centenary-of-health-service-leadership-anura-1784691227</id>
            <summary type="text">இலங்கையின் பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
</p><p>
தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது கள சுகாதாரப் பிரிவாக 1926 ஆம் ஆண்டு
களுத்துறை தேசிய சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டமையுடன் இலங்கையின் பொதுச்
சுகாதார சேவை ஆரம்பமாகியுள்ளது.</p><p></p><h2>362 இற்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள்</h2><p> </p><p>தற்போது இப்பெரிய வலையமைப்பு 362 இற்கும் மேற்பட்ட
சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை கொண்டு விரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/952737fd-1104-4330-bcb5-d0fd608e2c6c/26-6a603cb6e3122.webp' /></p><p>
</p><p>
இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில்,
நூற்றாண்டு காலமாக நாட்டின் ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காகச் சிறந்த
சேவையாற்றிய 36 சமூகச் சுகாதார தொழில்முறைக் குழுக்கள் பாராட்டி
கௌரவிக்கப்பட்டன.
</p><p>
நூற்றாண்டு நினைவு மலர் மற்றும் இலங்கை சமூகச் சுகாதார சேவையின் எதிர்கால
வழிகாட்டலை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை உள்ளிட்ட பல வெளியீடுகள் ஜனாதிபதியால்
வெளியிடப்பட்டன.
</p><p>
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள், நாடாளுமன்ற
உறுப்பினர்கள், தூதுவர்கள், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள்
சபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T03:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/compensation-must-pay-for-prisoners-1784691241"></link>
            <id>https://tamilwin.com/article/compensation-must-pay-for-prisoners-1784691241</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த கலவரத்தின் போது உயிரிழந்த 21 கைதிகளின் குடும்பங்களுக்கும் உடனடியாக நியாயமான இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>நீதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்களிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக அக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8387454a-3586-4e3a-8beb-b11b72c02ac6/26-6a603a2f89ba2.webp' /></p><p>
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இக்கைதிகளின் உயிர்களுக்கு அரசாங்கமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>சிறைச்சாலைக்குள் நிகழும் மரணங்களுக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதியும் முன்னர் தெரிவித்திருந்ததாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களின் நலனுக்காக இழப்பீடு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அக்குழு, இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகளும், 2020 ஆம் ஆண்டு மஹர சிறைச்சாலையில் 11 கைதிகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களையும் நினைவூட்டியுள்ளது.</p><p>
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகள் சரிவர நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாகவே இவ்வாறான துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதாக அக்கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
இலங்கை அரசாங்கமும் கையொப்பமிட்டுள்ள கைதிகளை நடத்துவது தொடர்பான குறைந்தபட்ச சாசனமான 'நெல்சன் மண்டேலா' சர்வதேச விதிகளின் படியும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளதாக அக்குழு வலியுறுத்தியுள்ளது.</p><p>
"கைதிகளும் மனிதர்களே" என்ற அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில், உயிரிழந்த கைதிகளுக்கு நீதியை நிலைநாட்ட உடனடியாக தலையிடுமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு நீதி அமைச்சரிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T03:34:38+00:00</updated>
        </entry>
    </feed>
