<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-22T00:49:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு வாரத்திற்கு மாத்திரமே எம்பி பதவி! சபையில் அர்ச்சுனா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archchuna-may-leave-parliament-within-weeks-1784680535"></link>
            <id>https://tamilwin.com/article/archchuna-may-leave-parliament-within-weeks-1784680535</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் அதிக காலம் சட்டமன்றத்தில் நீடிக்கப் போவதில்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் அதிக காலம் சட்டமன்றத்தில் நீடிக்கப் போவதில்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியேறிவிடக்கூடும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “நான் இன்னும் அதிக காலம் இந்த நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டேன். </p><p>நான் உங்களை நீண்ட காலத்திற்குத் தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நான் இங்கு இருப்பேன்” என்று கூறினார்.</p><p>
மாவட்ட ஒருங்கமைப்புக் குழு (DCC) கூட்டத்தின் போது பொதுமக்களின் கவலைகளை எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>DCC&nbsp;கூட்ட சலசலப்பு&nbsp;</h2><p> </p><p>மேலும், வடக்கில் முன்வைக்கப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகளையும் ஆவண ஆதாரங்களையும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை ஆணைக்குழுவிடமும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடமும் சமர்ப்பித்ததாகவும், ஆனால் எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a53a054-ed9d-4f84-bb4a-f09f815b48c3/26-6a60133e513eb.webp' /></p><p>
</p><p>
அத்துடன், யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இப்பிரச்சினையை எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>

தன்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்கக் கோரும் சட்ட நடவடிக்கையானது, வடக்கிலிருந்து வரும் சுயேட்சைப் பிரதிநிதிகள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற எண்ணத்தை சில தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்று அர்ச்சுனா மேலும் கூறினார்.</p><p>மேலும், இந்தக் கவலைகளைக் களைந்து, சுயேட்சைப் பிரதிநிதிகளுக்குச் சமமான உரிமைகளை உறுதி செய்யுமாறு அவர் அரசை வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motion-against-justice-minister-nalinda-jayatissa-1784678734"></link>
            <id>https://tamilwin.com/article/motion-against-justice-minister-nalinda-jayatissa-1784678734</id>
            <summary type="text">நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று
அமைச்சரவைப் பேச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.</p><p></p><h2>நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும்
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவும், அவர்
பதவியிலிருந்து விலகவும் எதிர்க்கட்சிகள் முயன்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8baae89c-c827-4b29-a4ec-d3d1d1ab7e5f/26-6a600d1a81698.webp' /></p><p> எனினும், அந்த முயற்சி
இறுதி வரை வெற்றி பெறவில்லை.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக இருந்த குமார ஜயக்கொடிக்கு எதிராகவும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர். </p><p>எனினும், அரசு எடுத்த
தீர்மானத்தின்படி, சுயாதீனமான விசாரணைக்கு வழிவகுக்கும் வகையிலேயே அவர்
அவராகவே பதவி விலகினாரே தவிர, எதிர்க்கட்சிகளின் பிரேரணையால் அரசுக்கு எந்தப்
பாதிப்பும் ஏற்படவில்லை.
</p><p>
தற்போது நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்
பிரேரணையும் முந்தைய முயற்சிகளைப் போன்றதுதான். இதனால் அரசுக்கு எந்தவித
தாக்கமும் ஏற்படப்போவதில்லை"என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/probe-against-thilanga-and-shammi-1784679709"></link>
            <id>https://tamilwin.com/article/probe-against-thilanga-and-shammi-1784679709</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் பல்வேறு அக்கிரமங்கள் தொடர்பாக இலஞ்ச, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் பல்வேறு அக்கிரமங்கள் தொடர்பாக இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணை, சமூக ஆர்வலரான தனீஷ் அலி சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு அமையவே தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விசாரணைக்கு அமைவாக, 2023 செப்டம்பர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி விரிவான வாக்குமூலம் அளிப்பதற்காக, தனீஷ் அலியை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி உரிய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் திலங்க சுமதிபாலவின் தலைமையிலான காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் இந்த முறைப்பாட்டின் மூலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aecda31-859f-4769-9c2c-63ef41e5fee5/26-6a600d1eb4d4e.webp' /></p><p>
குறிப்பாக, அப்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் சட்டவிரோத தொடர்புகள், போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் தனீஷ் அலி ஆணைக்குழு முன்னிலையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T00:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரினி அமரசூரியவை இரகசியமாக கண்காணித்த மூவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-arrested-allegedly-spying-pm-through-binoculars-1784676171"></link>
            <id>https://tamilwin.com/article/3-arrested-allegedly-spying-pm-through-binoculars-1784676171</id>
            <summary type="text">பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாகக் கூறப்படும் மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாகக் கூறப்படும் மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று சென்றிருந்தபோது, ​​இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சந்தேக நபர்களான மூவரையும் கொம்பனித் தெரு பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (21) முன்னிலைப்படுத்தினர்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை..&nbsp;</h2><p>

அப்போது சந்தேக நபர்களான மூவரையும் இன்று (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டதோடு, இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாளை சமர்ப்பிக்குமாறு கொம்பனி தெரு பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b1b0b18-9295-4e9c-bfd4-842bcf01d072/26-6a60024ebc1b3.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர்களான மூவரில் இருவர் சகோதரர்கள் என்றும், அவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர்கள் மூவரும் கொழும்புப் பகுதியில் பணிபுரிவதாகக் கூறியிருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித் தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சிறைக்கூடத்தை காணொளி எடுத்த சந்தேக நபர்.. நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-filmed-police-cell-escapes-court-order-1784674491"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-filmed-police-cell-escapes-court-order-1784674491</id>
            <summary type="text">கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த
சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் காணொளி எடுத்த 24 வயதுடைய இளைஞரைச்
சரீரப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த
சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் காணொளி எடுத்த 24 வயதுடைய இளைஞரைச்
சரீரப் பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர் பகுதியைச் சேர்ந்த இரு
தரப்பினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணைக்காக இரு
தரப்பினரும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
</p><p>இதன்போது இரு தரப்பினரும் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சமாதானமாகச் செல்ல
இணக்கம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தின் பல்வேறு குற்றத்தடுப்பு
பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம் முஸ்தபா கல்முனை
தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரியின் அலுவலக அறையினை நோக்கி
அழைத்துச் சென்றுள்ளார்.</p><p></p><h2>ஒத்திவைப்பு..</h2><p>
</p><p>

இவ்வாறு பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியினால் தலைமையக பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ்
நிலையத்திற்குள்ளேயே பொதுமக்களும் ஏனையோரும் வேடிக்கை பார்க்கும் வகையில் இரு
தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd1ffd1a-7414-4234-81bd-41fbe5f5199d/26-6a5ffc6622b52.webp' /></p><p>
</p><p>
இதனால் அதிர்ச்சியடைந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த
களுவாராய்ச்சி பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றத்திற்காக இரு
தரப்பினரையும் கைது செய்து, பொலிஸ் நிலையத்திலுள்ள இரு வேறு சிறைக்கூடுகளில்
அடைத்தார்.
</p><p>
இச்சம்பவத்தின் போது பொலிஸ் நிலையம் வந்திருந்த சந்தேக நபரான 24 வயதுடைய
இளைஞர் இச்சம்பவத்தில் கைதாகி சிறைக்கூடத்தில் இருந்தவர்களைத் தனது
கைத்தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார். </p><p>இதனை அவதானித்த பொலிஸார் அவரை சம்பவ
இடத்தில் கையும் மெய்யுமாகப் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திங்கட்கிழமை (20) கல்முனை நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார். </p><p>வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேகநபரைச்
சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் காணொளி எடுக்கப் பயன்படுத்தப்பட்ட
கைத்தொலைபேசியைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு
உத்தரவிட்டார்.

மேலும், வழக்கின் விசாரணைகளை மறுதவணைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T23:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! போராட்டத்திற்கு அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-call-for-protest-semmani-mass-grave-1784668014"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-call-for-protest-semmani-mass-grave-1784668014</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம்(22.7.2026) போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம்(22.7.2026) போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>வடக்கு
கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் நிறைவுற்று பல வருடங்களாகியும் நீதி தரப்படாதிருக்கின்ற வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கும், தற்போது 454 மனித எலும்புக்கூடுகள்
அகலப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழி விடயத்திற்கும் உடனடியாக சர்வதேச நீதி
விசாரணை வேண்டும். </p><p>தமிழ் இன அழிப்பின் சான்றாதாரமாக இருக்கின்ற இவ்விடயங்களை
மூடிமறைத்து நீர்த்துப்போகச்செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகள்
அதிருப்தியளிக்கின்றன.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கவனயீர்ப்பு போராட்டம்</span></p><p> </p><p>நீதி கோரி தொடர்ச்சியாகப் போராடிவரும் ஏமாற்றும் அரசின்
கபட நாடகங்களுக்கு சர்வதேச சமூகம் ஏமார்ந்து போகக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a6c4ec-de3a-44f3-a307-413bc6def9a5/26-6a5fe0948af8e.webp' /></p><p> </p><p>அந்த வகையில் இன்றையதினம் காலை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட
வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை
ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை
முன்னெடுக்கவுள்ளோம். </p><p>காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகும் இப்போரட்டத்தில் தமிழ்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக
பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றோம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T21:11:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிற்கு சிலை வேண்டும் - 2029இல் சிறையில் நாமல் ஜனாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-namal-rajapaksa-family-2029-election-1784662229"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-namal-rajapaksa-family-2029-election-1784662229</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகின்றது.&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகின்றது.&nbsp;</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல முக்கிய அதிகாரிகளின் மர்ம மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.&nbsp;</p><p>இது தொடர்பில் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினர் மீது சில தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இந்நிலையில், பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டிற்கு ஜனாதிபதி ஆவாரோ இல்லையோ, சிறைச்சாலைக்கு ஜனாதிபதி ஆவார் என விமர்சித்துள்ளார்.&nbsp;</p><p>இவை உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/T-2cqHMz4ss" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முன்னணி தொழிலதிபர் எப்படி வீழ்ந்தார்! லலித் கொத்தலாவலவின் அதிர்ச்சி கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-mahinda-lalith-kotelawala-1784666942"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-mahinda-lalith-kotelawala-1784666942</id>
            <summary type="text">இலங்கையின் முண்ணனி தொழிலதிபரான&amp;nbsp;லலித் கொத்தலாவவல மகிந்த ராஜபக்சவினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.மகிந்த ராஜபக்ச ஓமாகமவில் கட்டப்பட்ட விளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முண்ணனி தொழிலதிபரான&nbsp;லலித் கொத்தலாவவல மகிந்த ராஜபக்சவினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மகிந்த ராஜபக்ச ஓமாகமவில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை பார்வையிடுவதற்காக தன்னை உலங்குவானூர்தி யில் அழைத்து சென்றதாகவும் மைதானம், ஓட்டப்பந்தய தடம் அமைப்பதற்குமான 10 கோடி ரூபா பணத்தை தாம் அவர்களுக்கு கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.</p><p>இந்தநிலையிலே,&nbsp;லலித் கொத்தலாவவல செய்த உதவிக்காக அவரது பெயரை மைதானத்திற்கு சூட்டப்படும் என மகிந்த கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>பின்னர் மைதானம் திறக்கப்படும்போது தனது பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும்&nbsp; லலித் கொத்தலாவவல குறிப்பிடார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியுஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/O94aalPiYWc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:01:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் இரகசிய நகர்வு! பறிபோகும் மற்றுமொரு தமிழர் பாரம்பரிய சின்னம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanniya-hot-springs-trinco-tamils-1784654738"></link>
            <id>https://tamilwin.com/article/kanniya-hot-springs-trinco-tamils-1784654738</id>
            <summary type="text">திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் நாளை(22.7.2026) புத்த விகாரைக்கான அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் நாளை(22.7.2026) புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தகவல்&nbsp;வெளியாகியுள்ளது.</p><p>இந்தநிலையிலே, தமிழர்களின் தொன்மை வாய்ந்த பண்பாட்டு, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>அத்தோடு, குறித்த பகுதியிலே எந்தவிதமான கட்டுமானப்பணிகளும் செய்யக் கூடாது என திருகோணமலை நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p>இதனையடுத்து, தொால்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலே குறித்த இடத்திலே விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அத்தோடு, இந்த நிகழ்விற்கு அரச அதிகாரிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக தமிழர்களின் பாரம்பரியம், மரபு சார்ந்த இடங்கள், வரலாறு சார்ந்த இடங்கள் கையகப்படுத்தும் நிகழ்வு தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்சியாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.</p><p>எனவே இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன்,&nbsp;பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SAmU-uev_Fg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:57:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெற்ற சிறப்பு யோகாசனப் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-yoga-practic-reecha-integrated-farm-1784665552"></link>
            <id>https://tamilwin.com/article/special-yoga-practic-reecha-integrated-farm-1784665552</id>
            <summary type="text">றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊழியர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்தும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.பாஸ்கரன் கந்தையாவின் ஏற்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊழியர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்தும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.</p><p>பாஸ்கரன் கந்தையாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், 75க்கும் மேற்பட்டவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.</p><p></p><h2>யோகா பயிற்சிகள்..&nbsp;</h2><p> ஆரம்பத்தில் சில ஆசனங்கள் கடினமாக இருந்தபோதிலும், பயிற்சியின் முடிவில் உடல் நெகிழ்வுத்தன்மையையும் மன அமைதியையும் அடைந்ததாக ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36a80513-6353-4a34-99a3-dd447371147f/26-6a5fd7b853c48.webp' /></p><p>இதனை தொடர்ந்து, ஊழியர்களின் நலன் கருதி, பண்ணையில் தொடர்ச்சியாக யோகா பயிற்சிகளை நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
</p><p>அதேநேரம், ஊழியர்களின் ஆர்வத்தைக் கண்டு யோகா பயிற்றுவிப்பாளர் கலைஞர் குமாரு யோகேஸ்வரன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்; ஆரோக்கியமே நமது மிகப்பெரிய செல்வம்."

நமது அன்றாட பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அனைவரும் யோகாவைத் தொடர்ந்து செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம் என இதன்போது&nbsp; சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:37:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[64 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணம்: கால்பந்தாட்ட விரிவாக்கம் குறித்து FIFA பரிசீலனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-considering-expansion-football-world-cup-1784664085"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-considering-expansion-football-world-cup-1784664085</id>
            <summary type="text">48 அணிகள் பங்கேற்ற முதலாவது உலகக் கிண்ணக் கால்பந்து தொடர் நிறைவடைந்த
நிலையில், வருங்காலத்தில் உலகக் கிண்ணத் தொடரை 64 அணிகளாக விரிவாக்கம் செய்வது
குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>48 அணிகள் பங்கேற்ற முதலாவது உலகக் கிண்ணக் கால்பந்து தொடர் நிறைவடைந்த
நிலையில், வருங்காலத்தில் உலகக் கிண்ணத் தொடரை 64 அணிகளாக விரிவாக்கம் செய்வது
குறித்து பரிசீலிக்கப்படலாம் என FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ
தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அது சர்வதேச கால்பந்தாட்டத்தின் நிதி
மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணத்தில் 64 அணிகள் பங்கேற்கும் போது, முன்னணி நாடுகள் தகுதி பெறுவது
எளிதாகும். </p><p>இதனால் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையின் வணிக
மதிப்பு குறையக்கூடும்.

இதன் காரணமாக பிராந்திய கால்பந்து கூட்டமைப்புகள் நிதித்தேவைகளுக்காக FIFA
அமைப்பை அதிகளவில் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

இது FIFA அமைப்பின் நிதி ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் மேலும் அதிகரிக்கும்.</p><p></p><h2>போட்டிகளின் எண்ணிக்கை</h2><p>

இருப்பினும், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA மற்றும் ஆசிய கால்பந்து
கூட்டமைப்பு ஆகியவை இந்த விரிவாக்க யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

64 அணிகள் பங்கேற்றால் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 128 ஆக உயரும்.

இது கடந்த காலங்களை விட இருமடங்காகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cba0fba-bbb9-4a0c-a9c1-3234b4c8bd47/26-6a5fd4217d4ec.webp' /></p><p> இதனால் போட்டிகளை நடத்த கூடுதல்
மைதானங்கள், ஹோட்டல்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும்.

2030 உலகக் கிண்ணத்தை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள்
இணைந்தும், 2034 உலகக் கிண்ணத்தை சவுதி அரேபியாவும் நடத்தவுள்ள நிலையில்,
இவ்வளவு பெரிய தொடரை நடத்துவது பெரும் சவாலாக அமையும்.
</p><p>
போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வீரர்களின் பணிச்சுமை அதிகரித்து
காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், தொடர் நீண்ட நாட்கள் நடைபெறுவதால் பங்கேற்கும் நாடுகளின் கால்பந்து
சம்மேளனங்களுக்கு தங்குமிடம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் கணிசமாக உயரும்.
</p><p>
சிறிய நாடுகளுக்கு உலக மேடையில் வாய்ப்பு கிடைத்தாலும், போட்டியின் தரம்
மற்றும் முக்கியத்துவம் குறையக்கூடும் என்ற கவலையும் விளையாட்டு
வல்லுநர்களிடையே எழுந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:18:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றவாளிகளை கைது செய்வதில் ஏற்படும் தாமதம்.. பாதுகாப்புப் பிரதி அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aruna-jayasekara-explains-federation-anura-1784654044"></link>
            <id>https://tamilwin.com/article/aruna-jayasekara-explains-federation-anura-1784654044</id>
            <summary type="text">சமஷ்டியைத் தருவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க பெறவில்லை எனவும், மாறாக அவர் நேர்மையாகச் செயற்பட்டதன்
அடிப்படையிலேயே மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமஷ்டியைத் தருவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க பெறவில்லை எனவும், மாறாக அவர் நேர்மையாகச் செயற்பட்டதன்
அடிப்படையிலேயே மக்கள் அவரை ஆதரித்துள்ளனர் எனவும் பாதுகாப்புப் பிரதி
அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், அரசு எப்போதும் ஜனநாயக
அம்சங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது.
</p><p>மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக
ஏன் விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.</p><p>&nbsp;</p><h2>சட்டபூர்வமான முறை</h2><p>
</p><p>எனினும், அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமான முறையிலேயே இடம்பெறுவதால் சில
தாமதங்கள் ஏற்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb91dd3-227f-4781-b8e3-41d9902afc31/26-6a5fabbc33701.webp' /></p><p>

கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றபோது, அங்குள்ள மக்கள் அவருக்கு
உற்சாகமான வரவேற்பை அளித்தமையுடன் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர்.</p><p>

13ஆவது திருத்தத்தைத் தருகின்றோம், சமஷ்டி தருகின்றோம் என்றெல்லாம் வாக்குறுதி
அளித்து ஜனாதிபதி மக்களின் ஆதரவைப் பெறவில்லை. வடக்கில் ஒரு பேச்சும்,
தெற்கில் வேறு பேச்சும் பேசும் அரசியல் கலாசாரம் அவரிடம் கிடையாது. </p><p>உண்மையின்
அடிப்படையில் செயற்படுவதாலும், அவரது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையாலுமே
மக்கள் அவரை ஆதரிக்கின்றனர்.</p><p> அதுமட்டுமன்றி, மலையகம் மற்றும் கிழக்கு
மாகாணங்களிலும் ஜனாதிபதிக்கு மக்கள் தொடர்ந்து தமது வலுவான ஆதரவை வழங்கி
வருகின்றனர்" என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mexican-drug-trafficker-sentenced-life-us-court-1784663947"></link>
            <id>https://tamilwin.com/article/mexican-drug-trafficker-sentenced-life-us-court-1784663947</id>
            <summary type="text">மெக்சிகோவின் மிகவும் கொடூரமான மற்றும் பயங்கரமான போதைப்பொருள் கடத்தல்
கும்பலான &#039;சினாலோவா கார்டெல்&#039; அமைப்பின் தலைவரான இஸ்மவேல் &#039;எல் மாயோ&#039;
ஜம்பாடாவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்சிகோவின் மிகவும் கொடூரமான மற்றும் பயங்கரமான போதைப்பொருள் கடத்தல்
கும்பலான 'சினாலோவா கார்டெல்' அமைப்பின் தலைவரான இஸ்மவேல் 'எல் மாயோ'
ஜம்பாடாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத்
தீர்ப்பளித்துள்ளது.</p><h2>நீதிமன்ற&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
சுமார் 40 ஆண்டுகளாகப் போதைப்பொருள் பேரரசை நடத்தி வந்த எல் மாயோ, தனது
கடத்தல் நடவடிக்கைகளுக்காகப் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாக
இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00dadb8f-4d5d-444a-9d51-60102dc803ec/26-6a5fcf8d8942d.webp' /></p><p>

கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, பல மில்லியன்
கிலோகிராம் கொக்கையின் போதைப்பொருளை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகக்
கடத்தியதை எல் மாயோ ஒப்புக்கொண்டார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த இறுதியான ஆயுள்
தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்த முக்கிய புள்ளிகளில்
ஒருவரான எல் மாயோவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த ஆயுள் தண்டனை, சர்வதேச
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க நீதித்துறைக்குக்
கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட நான்கு பாடசாலை மாணவர்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-students-released-on-police-bail-1784659420"></link>
            <id>https://tamilwin.com/article/four-students-released-on-police-bail-1784659420</id>
            <summary type="text">வல்வெட்டுத்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டுத்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு மாணவர்களும் இரவாகியும் நீதிமன்றத்தில்
முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.</p><p> இந்த நிலையில் பல்வேறு
அழுத்தங்கள் பெற்றோர் மற்றும் உறவுகளால் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பிணை</h2><p> சிறுவர் என்ற காரணத்தினால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
எனினும் நாளை காலை 7:00 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை நாளைய தினம் எடுக்கப்பட
உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ec3efa7-f205-4a46-bf5b-5331caca0c9b/26-6a5fbf954fc03.webp' /></p><p>இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த
நிலையில் தற்போது பொலிஸ் பிணையில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:25:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் என்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-day-39-13-bone-cages-identification-1784651080"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-day-39-13-bone-cages-identification-1784651080</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(21.7.2026) நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(21.7.2026) நடைபெற்றது.</p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்றைய தினம் அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
சில என்புக்கூடுகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் சில
என்புக்கூடுகளுக்கு மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>என்பு கூடுகள் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>அதேவேளை குவியலாக காணப்பட்ட என்பு குவியலுக்குள் மண்டையோடுகளும்
காணப்படுவதனால், ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பில் மேலதிகமான தகவல் கூற
முடியும் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43e799a7-e229-4909-857a-b75ddb4a57a5/26-6a5fa084c461d.webp' /></p><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 03 சிறுவர்களின் என்புக்கூடுகள் 04
என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 93 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
467 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 444 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:18:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய அரசியல்வாதி நேர்காணலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australian-politician-dog-video-1784658624"></link>
            <id>https://tamilwin.com/article/australian-politician-dog-video-1784658624</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் ஒன் நேஷன் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப்
பிரதமருமான பார்னபி ஜாய்ஸ், தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்றுப்
பேசிக் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் ஒன் நேஷன் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப்
பிரதமருமான பார்னபி ஜாய்ஸ், தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்றுப்
பேசிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தனது செல்லப் பிராணியான நாயை நோக்கிச்
சத்தமிட்டு அதட்டிய சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>

செய்தியாளர் தீவிரமான அரசியல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த வேளையில்,
கெமராவிற்கு அப்பால் குரைத்துக் கொண்டிருந்த நாயைப் பார்த்து, கீழே உட்கார் (Sit down) எனத் திடீரென உரத்த குரலில் கத்தினார்.</p><p></p><h2>&nbsp;சர்வதேச அரசியல்&nbsp;</h2><p>
</p><p>
காரசாரமான விவாதமும் நாயின் குறுக்கீடும் ஒன் நேஷன் கட்சியின் தலைவரான பாலின் ஹேன்சன், பிரித்தானியாவின் தீவிர
வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சனைச் சந்தித்தது தொடர்பாகவும், சர்வதேச அரசியல்
சூழல்கள் குறித்தும் செய்தியாளர் கடினமான கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Barnaby Joyce yelling at his dog off camera… <a href="https://x.com/hashtag/abc730?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#abc730</a> <a href="https://t.co/T63fMidAym">pic.twitter.com/T63fMidAym</a></p>&mdash; Andrew Hawkins (@AndrewNJHawkins) <a href="https://x.com/AndrewNJHawkins/status/2079144626062250001?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அந்த நேரத்தில் நாயின் குறுக்கீட்டால் கவனச்சிதறல் அடைந்த பார்னபி ஜாய்ஸ்,
செய்தியாளரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பேட்டியைத் தொடர முயன்றார்.
</p><p>
இருப்பினும், தொடர்ந்து இடையூறு ஏற்பட்டதால் "தயவுசெய்து மரியாதையாகப்
பேசுங்கள், இல்லையென்றால் இந்த நேர்காணல் பாதியிலேயே நின்றுவிடும்" என்று
கோபத்துடன் செய்தியாளரை எச்சரித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகப்
பேசப்பட்டு வருகிறது.
</p><p>
நேரலையில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம், தீவிரமான அரசியல் விவாதத்தின் இடையே
பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நேர்காணலின்
காணொளி, தற்போது சமூக வலைத்தள பயனாளர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:11:55+00:00</updated>
        </entry>
    </feed>
