<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-20T20:21:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/peru-earthqake-today-1787254722"></link>
            <id>https://tamilwin.com/article/peru-earthqake-today-1787254722</id>
            <summary type="text">
பெரு நாட்டின் தெற்கு அண்டிஸ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  


 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பெரு நாட்டின் தெற்கு அண்டிஸ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. </p><p> 


 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சேத விபரங்கள் குறித்த தகவல் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.
</p><p>
உள்ளூர் நேரப்படி, மதியம் 1 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><h2>சேத விபரங்கள்..</h2><p> </p><p> 

பெருவின், அயகுச்சோ பிராந்தியத்தின் பரினகோச்சாஸ் மாகாணத்தில் உள்ள உபஹுவாச்சோ நகரத்திற்கு வடமேற்கே 38 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e82511d-52df-4924-835a-3a75a7f37407/26-6a875b83afdbe.webp' /></p><p> </p><p> 

இகா மற்றும் அரேகிபா உள்ளிட்ட தெற்கு பெருவின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.</p><p>

நாட்டின், குடிமைப் பாதுகாப்புத் தலைவர் லூயிஸ், உள்ளூர் வானொலி ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை எவ்வித சேதமும் பதிவாகவிலலை என்று தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T19:54:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபம் கடலில் படகு கவிழ்ந்து முதியவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-boat-capsizes-in-sea-off-chilaw-1787253473"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-boat-capsizes-in-sea-off-chilaw-1787253473</id>
            <summary type="text">சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகாமையில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற
சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர்
உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகாமையில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற
சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><p>இந்தச் சம்பவம் நேற்றையதினம் (20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சிலாபம் – சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 67 வயதான முதியவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கடலில் ஏற்பட்ட திடீர் சீற்றம் மற்றும் கடுமையான நீரோட்டத்தின் வேகத்தைக்
கட்டுப்படுத்த முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக்
காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த இருவரில் ஒருவர் துரிதமாகச் செயற்பட்டு
உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e2ce5f9-23f9-4535-ad37-417bd2537f53/26-6a87562a2f093.webp' /></p><p>
</p><p>
காப்பாற்றப்பட்ட மேற்படி கடற்றொழிலாளர் காயங்களுடன் உடனடியாகச் சிகிச்சைக்காக சிலாபம்
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள் அமைச்சர்களே காரணம் : மனோ எம்.பி. பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-that-the-anura-government-will-fall-1787253809"></link>
            <id>https://tamilwin.com/article/warning-that-the-anura-government-will-fall-1787253809</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள்
அமைச்சர்களே காரணம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள்
அமைச்சர்களே காரணம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>இந்த ஆட்சி தொடர வேண்டும்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"நண்பர் ஜனாதிபதி அநுரவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

பாதாள உலகக் செயல்களும் போதைப் பொருளும் ஒழியும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும்.

இந்த ஆட்சிக்கு வெளி நபர்களால் எந்த ஆபத்துமில்லை. உள்ளகத்திலேயே ஆபத்து
இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6afd531a-8159-49d1-83a5-815484d737e1/26-6a8754329dff1.webp' /></p><p>
</p><p>
நாங்கள் இன்று எதிர்க்கட்சி இல்லை, தாமே அரசு, அதிகாரம் தம்மிடம்தான் உள்ளது
என்பதை உணராத, ஆளத் தெரியாத முட்டாள் அமைச்சர்கள் காரணமாகச் சிங்கள மக்கள்
மத்தியில் அரசின் செல்வாக்கு சரிந்து வருகின்றது.
</p><p>
இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எம்மைக் குறை
கூறுவதைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத, செய்யாத மந்திரிகள் காரணமாக அரச
செல்வாக்கு குறைந்து வருகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T19:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்த மூன்று நாட்களை துக்க தினமாக பிரகடனப்படுத்திய அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-days-of-mourning-in-sri-lanka-1787248436"></link>
            <id>https://tamilwin.com/article/three-days-of-mourning-in-sri-lanka-1787248436</id>
            <summary type="text">இலங்கையில் நாளை(21) மற்றும் 22, 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அரசாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நாளை(21) மற்றும் 22, 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><h2>துக்க தினம்&nbsp;</h2><p>பிரபல பாடகி நந்தா&nbsp; மாலினியின் மறைவையொட்டி&nbsp; குறித்த மூன்று தினங்களையும் துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான மேலதிக விபரங்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5658160-ac1e-46f0-aa6d-364d11b99937/26-6a8741598112b.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-people-arrested-in-kilinochchi-dig-for-treasure-1787248573"></link>
            <id>https://tamilwin.com/article/8-people-arrested-in-kilinochchi-dig-for-treasure-1787248573</id>
            <summary type="text">கிளிநொச்சி-இரணைமடு 55 ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட&amp;nbsp;8 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி-இரணைமடு 55 ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட&nbsp;8 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(19.8.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><p>கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற
இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார்
குறித்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைது</span></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு சிலாபம், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம்
பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/471099a6-f90e-43db-8e63-c32d4f0f65e7/26-6a8740cdbfce7.webp' /></p><p>குறித்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல்
தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும் சிறிய ரக வாகனம் ஒன்றும்
பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பிரதிவாதிகளினுடைய வாக்குமூலத்தில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/funeral-of-renowned-singer-nanda-malini-1787244957"></link>
            <id>https://tamilwin.com/article/funeral-of-renowned-singer-nanda-malini-1787244957</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இருக்கின்ற 23270 குற்றச்சாட்டுக்கள் இதுவரை விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இருக்கின்ற 23270 குற்றச்சாட்டுக்கள் இதுவரை விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.</p><p>நேற்றையதினம்(19) பிரதிவாதிகள் தற்காப்பு வாக்குமூலங்களை வழங்கினர்.இந்தநிலையிலே, நெளபர் மெளலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் இதுவரையில் சாட்சியல் அளித்துள்ளனர்.</p><p>குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தங்களை தாக்கி கட்டாய வாக்குமூலம் பெற முயன்றதாகவும், சஹ்ரானுடன் தொடர்பு இல்லை என்றும் சில பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>அத்துடன் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் முக்கிய சாட்சியான முரளியின் சாட்சியம் இன்று பதிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-Q7Q47e-ps0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T17:46:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரம் இருக்கும்போது தலைக்கனம் அதிகரிக்கும் : ரோஹித அபேகுணவர்தன எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pride-increases-when-there-is-power-1787245296"></link>
            <id>https://tamilwin.com/article/pride-increases-when-there-is-power-1787245296</id>
            <summary type="text">அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த
பின்னரே தமது தவறுகள் குறித்துச் சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த
பின்னரே தமது தவறுகள் குறித்துச் சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.</p><p>

தாங்கள் தவறு செய்தால் அதனைத் தவறு என ஏற்றுக்கொண்டு உணரக்கூடிய மனப்பக்குவம்
கொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், "அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம்
அதிகரிக்கின்றது. அதிகாரம் கையை விட்டுச் செல்லும்போதுதான், 'நமக்கு என்ன
நடந்தது?' எனச் சிந்திக்கத் தோன்றுகின்றது.</p><p> அதிகாரம் இருக்கும் இடத்தில்
புத்தி இருப்பதில்லை, புத்தி வரும்போது கையில் அதிகாரம் இருப்பதில்லை" என்று
தெரிவித்தார்.</p><h2>வாய்ப்பு இல்லை</h2><p>
</p><p>
தற்போது ஆட்சியில் இருப்பவர்களிடம் உண்மையைச் சொன்னால், சாரைப்பாம்பு மீது
மண்ணெண்ணெய் ஊற்றியது போலத் துடிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டிய அவர்,
கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும்
இருந்து மக்களுடன் பயணித்த அனுபவம் தமக்கு உண்டு என குறிப்பிட்டார்.
</p><p>
எதிர்காலத்தில் ஆளும் தரப்பினருக்கு அதிகாரமும் நாடாளுமன்ற ஆசனங்களும் இல்லாத
நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9153530-9ce6-465a-bf58-f31445a7942b/26-6a8732f29d970.webp' /></p><p>

நாட்டில் நிலவும் வரிச்சுமை குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், சாதாரண
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண விருந்துக்காக விடுதிக்குச் சென்று
உணவருந்தும்போது கூட அந்த உணவுக்கும் 18 சதவீத பெறுமதி சேர் வரி
விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.</p><p> வியாபாரிகளுக்குச் செலுத்திய வரியை
மீளப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளபோதிலும், சாதாரண நுகர்வோருக்கு அந்த
வாய்ப்பு இல்லை என்றார்.
</p><p>
வரிச்சுமையின் தாக்கம் காரணமாக மக்கள் படும் துயரத்தைக் குறிப்பிட்ட அவர்,
திருமண விருந்துக்குச் சென்றுவிட்டு பின்னர் விவாகரத்து செய்ய வேண்டிய
நிலைக்குச் சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று நகைச்சுவை கலந்த தொனியில்
தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T17:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை உயர்வு: நாமல் எம்.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raising-the-retirement-age-limit-for-judges-1787241774"></link>
            <id>https://tamilwin.com/article/raising-the-retirement-age-limit-for-judges-1787241774</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின்
முன்மொழிவானது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும்,
தங்களது பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின்
முன்மொழிவானது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும்,
தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>இன்றையதினம்(20.8.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து நீதிமன்ற நடவடிக்கைகளில்
செல்வாக்கு செலுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த
நடவடிக்கைக்கு மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய
நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>முறைப்பாடுகள்</h2><p>அவர் மேலும் உரையாற்றுகையில்,

"16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை
அதிகரிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4545d2f4-bfd7-4822-ad10-2ee84ac5f657/26-6a872d462966a.webp' /></p><p> எனினும், இது தொடர்பாக
இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள
நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைக்காத சூழ்நிலை
நிலவுகின்றது.</p><p>தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, விவசாயிகள் மற்றும்
கடற்றொழிலாளர்கள் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும்
சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/v9WLT_Ja8gI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மருந்துகளுக்கு தட்டுப்பாடு</h2><p>
</p><p>
அரச வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும்
தட்டுப்பாடு நிலவுகின்றது எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84cacef-17b8-4684-a95d-0c2ea4b743cc/26-6a872d46d2370.webp' /></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த
கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்
தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு உடனடியாகத்
தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statements-were-recorded-cid-1787239511"></link>
            <id>https://tamilwin.com/article/statements-were-recorded-cid-1787239511</id>
            <summary type="text">மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம்
மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம்
வாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம்
மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம்
வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த
புதைகுழி முகாம் அமைந்துள்ள பகுதியில் அகழ்வுப்பணிகளை
முன்னெடுக்குமாறும் கடந்த ஆண்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில்&nbsp; நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர் வைரமுத்து
குழந்தை வடிவேல் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.</p><p>

இதனடிப்படையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கடந்த
14ஆம் திகதி குற்றப்புலனாய்வுத்துறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த
நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக தன்னால் பாதுகாப்பு காரணங்களினால்
அங்கு வரமுடியாது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பில் இன்றைய தினம்
குற்றப்புலனாய்வுத்துறையினரால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.</p><h2>படுகொலை&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சத்துருக்கொண்டான் படுகொலை
நினைவேந்தல் குழு உறுப்பினர் தயாளகௌரி,சிவில் சிவில் சமூக செயற்பாட்டாளர்
கண்டுமணி லவகுகராசா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்
சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார் ஆகியோரும்
வருகை தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2aaeac6-6f2b-46bb-84af-ee27d13473ca/26-6a87222d86a27.webp' /></p><p>
</p><p>வாக்குமூலம் வழங்கிய பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் இது தொடர்பான ஊடக
சந்திப்பும் நடைபெற்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அதிரடி சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raid-in-london-tamil-people-arrested-1787232646"></link>
            <id>https://tamilwin.com/article/raid-in-london-tamil-people-arrested-1787232646</id>
            <summary type="text">பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
சட்டவிரோதமாக தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

2026 ஆம் ஆண்டின் கடந்த மாதம் வரையான காலப்பகுதியில் லண்டன் முழுவதும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

பெருந்தொகையானவர்கள் கைது</b></h2><p>உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிரித்தானியாவில் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான சோதனைகளின் எண்ணிக்கை 7,270 ஆக உயர்ந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d6e08b-9667-4b0b-9dbb-677d35188e6b/26-6a87168605130.webp' /></p><p>இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத அதிகரிப்பாகும். இச்சோதனைகள் மூலம் 4,756 கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன், 2024 ஜூலைக்குப் பின்னரான மொத்தக் கைதுகளின் எண்ணிக்கை 17,000 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதம் பிரித்தானியா முழுவதும் குடிவரவு குற்றங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கூட்டுச் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: அகற்ற காலக்கெடு - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegally-dumped-waste-in-keerimalai-1787238971"></link>
            <id>https://tamilwin.com/article/illegally-dumped-waste-in-keerimalai-1787238971</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம்
திகதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம்
திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து வலி.
வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.</p><p>

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(20.08.2026) தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
</p><h2>
கழிவுகளை அகற்ற நடவடிக்கை</h2><p>

இதன்போது, சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc65aee8-98e6-4812-8738-9880dfa9101f/26-6a871acd4a1fa.webp' /></p><p>
</p><p>
இதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர் எதிர்வரும்
13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் என்றும், அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றுமு் சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பு கூட்டத்தினை நடத்துவது என்றும்,
13ஆம் திகதிக்கு முன்னர், வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது
விடின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அன்றைய கூட்டத்தில்
தீர்மானிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T15:18:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை வைத்து மிரட்டும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டார் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threatening-actions-involving-the-strait-of-hormuz-1787237090"></link>
            <id>https://tamilwin.com/article/threatening-actions-involving-the-strait-of-hormuz-1787237090</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போருக்கு முன்னர்
இருந்த நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து மீண்டும்
கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போருக்கு முன்னர்
இருந்த நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து மீண்டும்
கொண்டுவரப்பட வேண்டும் என்று கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தெரிவித்துள்ளார். </p><p>அத்தோடு, மோதலில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பும்
மற்றுமொரு தரப்பை மிரட்டக்கூடாது என்றும் கட்டார் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எகிப்தின் எல் அலமைன் நகரில் நடைபெற்ற உயர் மட்டப் பேச்சுவார்த்தையின் பின்னர்
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கடுமையான பாதிப்பு</h2><p>
</p><p>
இந்த போரின் விளைவுகள் வளைகுடா பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது உலகளாவிய
ரீதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f99b2328-a57e-4279-b867-ddb409231811/26-6a87156ee753e.webp' /></p><p>நிலைமை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டியது அவசியமானது என்றும், இதில்
ஏற்படுத்தப்படும் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் தமது நாடு
கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தின் இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை – வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-officers-union-vows-continue-protest-1787236371"></link>
            <id>https://tamilwin.com/article/development-officers-union-vows-continue-protest-1787236371</id>
            <summary type="text">கடந்த திங்கட்கிழமை (17.08.2026) தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான தீர்வு கிடைக்கும் வரை எவ்வித விட்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த திங்கட்கிழமை (17.08.2026) தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான தீர்வு கிடைக்கும் வரை எவ்வித விட்டுக்கொடுப்புகளுமின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

ஊடகங்கள் வாயிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>பல்வேறு நெருக்கடி</h2><p>

நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநருடன் இடம்பெற்ற சந்திப்புக்கும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

தமது போராட்டத்தின் பிரதான கோரிக்கையான, குறித்த அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a81ffc1-2b97-4fc9-90ef-a5eba540706e/26-6a87122da7579.webp' /></p><p>

இதனை தமது சக உத்தியோகத்தர்கள், போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p>தொழிற்திணைக்களத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, வடக்கு மாகாணம் முழுவதும் மாகாண மற்றும் மத்திய சேவைகளில் கடமையாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமது சங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்களை மாத்திரமே முன்னிறுத்தி தமது செயற்பாடுகள் தொடரும் எனவும், போராட்டத்தின் இலக்கை அடைவதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் சங்கம் அறிவித்துள்ளது.</p><h2>முறையான அழைப்பு</h2><p>

இதேவேளை, நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்ட கலந்துரையாடலுக்கு வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்திற்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தமது போராட்டத்தையும் மலினப்படுத்தும் நோக்கில் பிரதான தொழிற்சங்கமான தங்களை தவிர்த்து பிறிதொரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbc2b11a-e1ea-4297-8c0f-53c4184bdf1a/26-6a87122e5af31.webp' /></p><p>

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் ஆளுநர் முன்னெடுக்க மாட்டார் என தாம் நம்புவதாகவும், ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர்,</p><p> தமக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் நேர்மையான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என ஆணித்தரமாக நம்புவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
“வாய்மையே வெல்லும்” என்ற நோக்குடன் தமது செயற்பாடுகள் தொடரும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:41:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல் கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-held-by-farmers-will-be-procured-1787236852"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-held-by-farmers-will-be-procured-1787236852</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் நெல்
கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் நெல்
கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.</p><p> குறித்த கலந்துரையாடலில் கமநல அபிவிருத்தி உதவி
ஆணையாளர், வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபை முகாமையாளர், அரிசி ஆலை
உரிமையாளர்கள்,,பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர்கள் ,கமக்காரர்
அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.</p><p>கலந்துரையாடலின் போது

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாவட்ட
நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்தின் ஊடாக இதுவரை ஏறத்தாழ 2,600 மெட்ரிக்
தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>நெல் கொள்வனவு</h2><p>

இருப்பினும், மாவட்டத்தில் சுமார் 30,000 ஏக்கரில் விவசாயம்
மேற்கொள்ளப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களின் உற்பத்தியை நியாயமான விலையில்
விற்பனை செய்ய அரசாங்கத்தால் மீண்டும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>இதன்படி, மாவட்டத்தில் உள்ள தனியார் சிறு நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல்
கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/695326bf-9a27-4776-9f07-2987ce57be92/26-6a8711f654c94.webp' /></p><p>
</p><p>கலந்துரையாடலில், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் 3 நெல்
ஆலை உரிமையாளர்களும், தனியார் தரப்பில் 8 நெல் ஆலை உரிமையாளர்களும்
பங்கேற்றிருந்தனர். </p><p>இவர்கள் ஊடாக விரைவாக நெல் கொள்வனவு செய்வதற்கான
ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், ஒவ்வொரு நெல் ஆலை உரிமையாளருக்கும் 25 மில்லியன் ரூபாய் கடன்
நிதியாக வழங்கப்பட்டு, விவசாயிகள் வசமுள்ள நெல் கொள்வனவு செய்யப்படும்.</p><p>இதன்
மூலம் மேலும் சுமார் 10,000 மெட்ரிக் தொன் நெல்லை விவசாயிகள் சந்தைப்படுத்த
முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-20T14:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரர் இருந்த விகாரையில் நடந்த துயரச் சம்பவம் - தீவிரப்படுத்தப்படும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1787235749"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1787235749</id>
            <summary type="text">நாவல சத்தர்ம ராஜமகா விகாரையைப் பாதுகாக்கும் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவல சத்தர்ம ராஜமகா விகாரையைப் பாதுகாக்கும் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம், இன்று(20.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு</h2><p>அத்துடன், நாவல சத்தர்ம ராஜமகா விகாரையில், கலகொடாத்தா ஞானசார தேரர் இருக்கிறார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75a2141-97ca-4388-bba9-fc6bcdee0e9c/26-6a870e3e41d32.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று பிற்பகல் வேளையில், இராஜகிரிய பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம் - அர்ச்சுனா எம்.பியின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/this-my-last-parliamentary-speech-archuna-mp-1787231680"></link>
            <id>https://tamilwin.com/article/this-my-last-parliamentary-speech-archuna-mp-1787231680</id>
            <summary type="text">“இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(20) நாடாளுமன்றத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>“இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.</p><p>

இன்றையதினம்(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>இறுதி நாடாளுமன்ற உரை</h2><p>

தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த இனவாத அரசாங்கங்கள் அடக்குமுறையையும் இன அழிப்பையும் முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3d0c89-465b-4f0d-8833-6133733babba/26-6a870c489f51a.webp' /></p><p>நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையை கோரிய இராமநாதன் அர்ச்சுனா எம்.பி, இந்த உரை தனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.
</p><p>
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை, சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத இரண்டு இனங்கள் நாட்டில் வாழ்ந்து வருகின்றன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HnU85SOkkus" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>தமிழ் மக்கள்</h2><p>

இன ரீதியாக வேறுபட்டிருந்தாலும், மொழி ரீதியாக இரு இனங்களும் ஒன்றிணைந்துள்ளன. எனினும், இந்த இரண்டு இனங்களையும் வேறுபடுத்தி ஆட்சி செய்வதே பெரும்பான்மை இனத்தின் பலமாக இருந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a27e3e-06e1-4538-bcbf-310e15f39cf7/26-6a870c47ec211.webp' /></p><p>
</p><p>காலம் காலமாக ஆட்சிக்கு வந்த இனவாத அரசாங்கங்கள் அடக்குமுறையையும் இன அழிப்பையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வேறுபடுத்தி ஆட்சி செய்வது பெரும்பான்மை இன அரசியல்வாதிகளின் அரசியல் தந்திரமாக இருந்து வருகின்றது.</p><p>

இதன் அடிப்படையில், தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடுகளை அடையாளம் காண்பதும், முஸ்லிம் மக்களை பாதுகாப்பதும் காலத்தின் கட்டாயமாகும் என இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:17:19+00:00</updated>
        </entry>
    </feed>
