<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-25T03:47:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்த பயணி! கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த பொதியில் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-passenger-arrested-in-bia-1784945336"></link>
            <id>https://tamilwin.com/article/spain-passenger-arrested-in-bia-1784945336</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கொகைன் குறித்த வெளிநாட்டவர் இலங்கைச் சுங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கொகைன் குறித்த வெளிநாட்டவர் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விவசாய பொறியியலாளரான 79 வயதுடைய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>பயணப் பை</b></h2><p>கடந்த 22ஆம் திகதி சியரா லியோனில் இருந்து அடிஸ் அபாபா மற்றும் தோஹா ஊடாக கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR654 விமானம் மூலம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4794e3d-5c61-4bb2-85df-e5cb60db52c7/26-6a642f2392621.webp' /></p><p>சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பையை சுங்க அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும், சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருட்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், அவரது மற்றைய பயணப் பை குறித்த விமானத்தில் வராத காரணத்தினால், உரிய வருகை நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
தாமதமாக வந்த பயணப் பை பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன், அதைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு வந்துள்ளார்.
</p><h3><b>
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு</b></h3><p>குறிப்பிட்ட பயணப் பையை விடுவிப்பதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் அது எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cdd66a2-9a3c-4a78-b494-19165c2e0c3f/26-6a642f244435e.webp' /></p><p>இதன் போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவதானிக்கப்பட்டதையடுத்து, அது முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பயணப் பையினுள் மிகவும் நுட்பமான முறையில் முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கொகைன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன் மொத்த எடை 2.198 கிலோகிராம் எனவும் இதன்பெறுமதி 109.9 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பாக&nbsp; ஆரம்ப விசாரணைகளை&nbsp;இலங்கைச் சுங்கம் தொடங்கியுள்ளது.
</p><p>
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட கொகைன் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-07-25T03:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணொளி எடுக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-killed-in-elephant-attack-1784947790"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-killed-in-elephant-attack-1784947790</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் – மன்னகண்டல் நெல்
வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் – மன்னகண்டல் நெல்
வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் சென்றிருந்த நபர் ஒருவர்,
அதே யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம்&nbsp; நேற்று(24.07.2026) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நபர் ஒருவர் வசந்தபுரம் – மன்னகண்டல் நெல் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9c5a61e-6155-47a4-874a-dfa48cd3f970/26-6a642d0fa37b7.webp' /></p><p>இதன்போது குறித்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளார்.</p><p>இந்நிலையில் காயமடைந்த அவர் முதலில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். </p><p>பின்னர் மேலதிக சிகிச்சைக்காக
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், மாலை 4.00
மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>உயிரிழந்தவர் கைவேலி, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பூபாலசிங்கம் கமலேஸ்வரன்
(வயது 49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T03:27:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு - பல கோணங்களில் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodies-of-two-women-recovered-in-ampara-1784947028"></link>
            <id>https://tamilwin.com/article/bodies-of-two-women-recovered-in-ampara-1784947028</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணைகளின் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக சடலம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><h2>மருதமுனை சம்பவத்தில் தீவிர விசாரணை</h2><p>மருதமுனையை சேர்ந்த (வயது 20) திருமணமாகாத பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2956c5-d0bd-4a39-b682-424fc85e6fbc/26-6a6427f4cccc6.webp' /></p><p>இந்த மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் மற்றும்
விமர்சனங்கள் பரவியதை தொடர்ந்து சம்பவம் குறித்து பல கோணங்களில் பொலிஸாரும், அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p>இந்நிலையில், கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் சம்பவ இடத்திற்குச்சென்று
மரண விசாரணை மேற்கொண்டார். </p><p>உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம்
நிலவுவதனால் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு
அனுப்புமாறு உத்தரவிட்டார்.</p><h2>அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பு </h2><p>அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை
முன்னெடுக்கப்பட்டது. </p><p>இதன்போது உயிரிழப்பின் துல்லியமான காரணத்தைக்
கண்டறிவதற்காக சடலத்தின் சில உயிரியல் அவயங்கள் கொழும்பிலுள்ள அரச
பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் புதன்கிழமை (22) மாலை உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூபாலசிங்கம்
கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5c0759-3fba-47ac-b00d-314cb0e9a957/26-6a6427f581754.webp' /></p><h2>ஒரு பிள்ளையின் தாய் மரணம்</h2><p>
இதேவேளை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தாய் வியாழக்கிழமை
(23) மாலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
</p><p>
வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சம்மாந்துறை நீதிமன்ற
நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
</p><p>உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் மரணத்திற்கான
பின்னணி குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ்
குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T03:11:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய நாட்டவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russian-arrested-in-sri-lanka-1784946825"></link>
            <id>https://tamilwin.com/article/russian-arrested-in-sri-lanka-1784946825</id>
            <summary type="text">அளுத்கம, மொரகல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அளுத்கம, மொரகல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்து இணையம் ஊடாக பணம் உழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 35 வயதுடைய ரஷ்ய நாட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

எந்தவொரு சட்டபூர்வமான விசா அனுமதியும் இன்றி சுமார் 7 ஆண்டுகளாக இவர் இவ்வாறு நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.</p><h2><b>சட்டபூர்வமான விசா அனுமதி</b></h2><p>

கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, வெளிநாட்டவரிடம் இருந்த 5 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சா பொதியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/166e34f4-e241-4d8c-8597-7a3a0d5ade84/26-6a6423dbc697f.webp' /></p><p>அவரது கடவுச்சீட்டைப் பரிசோதித்தபோது, அவர் 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்துள்ளார். அத்துடன், அன்றிலிருந்து நீண்ட காலமாக விசா இன்றித் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேக நபர் இணையம் ஊடாகப் பணம் உழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் சஞ்சீவ தெரிவித்தார்.</p><p> 

இது தவிர, சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான ரஷ்ய நாட்டவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி, இரண்டு மடிக்கணினிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-25T02:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 17இற்குள் விண்ணப்பிக்கவும் - பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-from-the-mahapola-fund-1784946369"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-from-the-mahapola-fund-1784946369</id>
            <summary type="text">மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான&amp;nbsp; இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான&nbsp; இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் இதனை அறிவித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026 ஆகஸ்ட் 17இற்குள் தங்களது இணையவழிப் பதிவை நிறைவு செய்யுமாறு நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p></p><h2>இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளில் மாத்திரம்&nbsp;</h2><p>
இறுதித் தெரிவுப்பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, இறுதி திகதிக்கு முன்னதாக <a href="https://mahapola.lk/BankApp2025/" target="_blank">https://mahapola.lk/BankApp2025/</a>&nbsp;என்ற மஹாபொல இணையதளத்தில்&nbsp;பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355673bf-2d34-4ede-9db1-48414b25a80d/26-6a642206a3a50.webp' /></p><p>
</p><p>
இணையவழிப் பதிவை நிறைவு செய்த பிறகு, மாணவர்கள் விண்ணப்பத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழுடன் அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>


கல்வி உதவித்தொகை கொடுப்பனவுகள், விண்ணப்பதாரரின் பெயரில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தனிநபர் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று மஹாபொல நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், 2024 - 2025 மஹாபொல கல்வி உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தத்தமது பல்கலைக்கழகங்கள் மூலம் தங்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
</p><p>
பல்கலைக்கழகங்கள் அத்தகைய மேன் முறையீடுகளை 2026 ஒக்டோபர் 15, அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T02:40:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உச்சத்தை தொட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இலங்கையில் பதிவான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-and-silver-prices-change-1784945966"></link>
            <id>https://tamilwin.com/article/gold-and-silver-prices-change-1784945966</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (25) சடுதியாக அதிகரித்துள்ளன.அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,054.89 அமெரிக்க டொலராக ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (25) சடுதியாக அதிகரித்துள்ளன.</p><p>அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,054.89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 58.31 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.</p><p></p><h2>இலங்கையில் இன்று தங்கத்தின் விலை</h2><p>
</p><p>
அமெரிக்க டொலரின் மதிப்பு மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்கள் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்றும் குறிப்பிடுகின்றன.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b350517-9429-4827-bf9a-399c154c0691/26-6a642032a39ed.webp' /></p><p>இதேவேளை,&nbsp;சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.</p><p>இதற்கமைய,&nbsp;இலங்கையில் இன்று (ஜூலை 25, 2026) நிலவரப்படி, ஒரு கிராம் 24 கரட் தங்கத்தின் விலை தோராயமாக ரூ. 46,070 ஆகவும், 8 கிராம் (ஒரு பவுன் ) 24 கரட் தங்கத்தின் விலை ரூ. 368,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-25T02:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு போர்ட் சிட்டியில் ஏற்பட்ட மோதல்! படுகொலை செய்யப்பட்ட சீனப்பிரஜை குறித்து அம்பலமான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murdered-china-citized-is-cyber-criminial-1784941545"></link>
            <id>https://tamilwin.com/article/murdered-china-citized-is-cyber-criminial-1784941545</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் வைத்து சீன பிரஜைகள் குழுவொன்றினால் கடத்திச்செல்லப்பட்டு, எஹெலியகொட - கரதன காட்டுப்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு தாக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் வைத்து சீன பிரஜைகள் குழுவொன்றினால் கடத்திச்செல்லப்பட்டு, எஹெலியகொட - கரதன காட்டுப்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும்&nbsp;சீனப்பிரஜை குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், சர்வதேச கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடி வலையமைப்பின் பிரதானியான "ஹாஃபோங்" (Hao Feng) எனப்படும் சீனக் கோடீஸ்வரர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இந்த கொடூர கொலையானது சர்வதேச கணினி குற்ற வலையமைப்பை சேர்ந்த மாஃபியா கும்பல் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடிகள்</h2><p>
</p><p>கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடிகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம் தொடர்பான தகராறே இந்த படுகொலைக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af1fe06a-f639-4e24-8cdc-0b34e1fce68f/26-6a6418ff2ad32.webp' /></p><p>இந்த சீனப் பிரஜையை கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவத்துடன் சுமார் 20 சீனர்கள் தொடர்புபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் எஹெலியகொட பொலிஸாரும் பரந்த அளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>
விசாரணைகளின்படி, குறித்த சீன கோடீஸ்வரர் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், கொழும்பு துறைமுக நகரின் பாலத்தின் மீது அவருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு சீனநாட்டவர்களும் இக்குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p> 
இவர்கள் தங்களை அவரது நண்பர்களாக காண்பித்துக்கொண்டே அவரை துறைமுக நகருக்கு அழைத்து சென்றுள்ளனர்.</p><p>
மேற்படி இரு சீனர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
துறைமுக நகரில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், திட்டமிட்ட சீனக் கும்பலால் கடத்தப்பட்ட இந்தக் கோடீஸ்வரர், எஹெலியகொட - கரதன பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>அதன் பின்னர், அவரது உடலை அப்பகுதியிலுள்ள காட்டுக்குள் கற்களை கொண்டு மூடிவிட்டு அக்கும்பல் தப்பிச்சென்றுள்ளது.
</p><p>எஹெலியகொட கரதன பகுதியில் சட்டவிரோத மதுபான முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று, கற்களுக்கு இடையே மனித கை ஒன்று வெளியே தெரிவதைக் கண்டு சோதனை செய்தபோது, அது கடத்தப்பட்ட சீனப் பிரஜையின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.</p><p> </p><p>இதனைத் தொடர்ந்தே இக்கொலை தொடர்பான பரந்த அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><h2>கொலையாளிகளுக்கு வெளிநாட்டு பயணத்தடை</h2><p>
</p><p>கொலையாளிகள் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, அவர்களுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெறுவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56b1388-21cf-4571-8de5-cfa403b0e09e/26-6a640bea8c0fa.webp' />&nbsp; &nbsp;</p><p>
இதேவேளை, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இச்சம்பவம் தொடர்பில் விரைவான மற்றும் முறையான விசாரணைகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>மேலும், சந்தேகநபர்களான சீனப்பிரஜைகளுக்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படாத வகையில் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சீனத் தூதரகம் இலங்கை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய திட்டமிட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T02:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதியுயர் அபாயமிக்க பகுதிகள் அடையாளம்..! கொழும்பு உள்ளிட்ட பல மாவட்ட மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-warning-many-districts-including-colombo-1784943753"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-warning-many-districts-including-colombo-1784943753</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு காய்ச்சலால் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு காய்ச்சலால் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (23) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 114 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> இம்மாதத்தில் கடந்த 23 நாட்களில் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை காணக்கூடியதாக உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு</h2><p>அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 59 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8b79c50-abe3-4d24-9e83-4f7ab5ddc2e6/26-6a6416b71fc2c.webp' /></p><p> </p><p>மேல் மாகாணத்தில் 42,414 (52.84 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 12,154 (15.17 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, குருநாகல், அம்பாந்தொட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்</p><h2>இரத்தப்பரிசோதனை</h2><p>&nbsp;இதேவேளை, காய்ச்சல் ஏற்படுமாயின் கட்டாயமாக அவர் ஓய்வெடுப்பது அவசியம் என்றும், டெங்கு நோய் உறுதிப்படுத்தப்படும் வரை தகுதியுள்ள வைத்தியர் ஒருவரை நாடி, அவரின் ஆலோசனைக்கு அமைவாக இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதும், அவர் அறிவுறுத்தும் பட்சத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதும் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றாத போதே, நோய் நிலைமை தீவிரமடைவதோடு, அதனால் உயிரிழப்புகள் ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுகிறது. தகுந்த நேரத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டால் டெங்கு காய்ச்சலால் ஏற்படக் கூடிய மரணங்களைக் குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T01:51:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கிய 100 வழக்குகளின் முழுப் பட்டியல்.. திடீரென ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-sri-lanka-politics-ranil-sajith-1784922155"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-sri-lanka-politics-ranil-sajith-1784922155</id>
            <summary type="text">புதிய ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். 

நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். </p><p>

நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை எடுக்கவே இந்த குழு என தெரிவிக்கப்பட்டது. </p><p>

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், ஒன்றுகூடிய எதிர்க்கட்சியினருடனான கூட்டத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.&nbsp;</p><p>இந்த திடீர் கூட்டம் தொடர்பிலும் அதன்போது முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>கூட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்க, "நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை முன்வைத்து, அதை அடுத்த சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் நான் கூறுகிறேன்.
</p><p>
இந்த நாட்டில் உள்ள இந்த 1.1 மில்லியன் வழக்குகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்கவும்” என எதிர்க்கட்சி தலைவரிடம் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AcM1A-O8k4Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருமகனால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் பேரிடி - சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>

இந்த வாக்குமூலத்தின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார்.</p><p>
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மருமகன் தொடர்பில் வெளியிட்ட தகவல், அவரின் மருமகன் வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாகவுள்ளது. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RdSZsItywV0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/annual-pongal-festival-chemmalai-pillayar-temple-1784930552"></link>
            <id>https://tamilwin.com/article/annual-pongal-festival-chemmalai-pillayar-temple-1784930552</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச்
சிறப்புமிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச்
சிறப்புமிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளது.&nbsp;</p><p>எதிர்வரும் ஆடி மாதம் 17ஆம் நாள் (02.08.2026), சங்கடஹர
சதுர்த்தி திதியை முன்னிட்டு மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபை
அறிவித்துள்ளது.</p><p>

திருவிழா நாளான 02ஆம் திகதி காலை 7.00 மணிக்கு விசேட அபிஷேகத்துடன் உற்சவ
நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.</p><p> </p><p>தொடர்ந்து காலை மற்றும் நண்பகல் நேரங்களில்
விநாயகப் பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று,
விபூதிப் பிரசாதம் மற்றும் காழாஞ்சிப் பிரசாதம் வழங்கப்படுவதுடன், மதியம்
11.30 மணியளவில் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
</p><p>
மாலை 3.30 மணிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய பிரதம பூசகரால் பாரம்பரிய
முறைப்படி, நீராவியடிப் பிள்ளையாரின் அருளனுமதியுடன் நாயாறு முனியப்பர்
ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்படும்.</p><p></p><h2>இடம்பெறவுள்ள பூஜைகள்..&nbsp;</h2><p> </p><p>பின்னர் மாலை 6.00 மணிக்கு
கச்சை நேருதல், இரவு 7.00 மணிக்கு மடை பரவுதல், இரவு 8.00 மணிக்கு வளந்துக்கு
நூல் சுற்றுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு வளந்து நேர்ந்து பொங்கல் நிகழ்வு
இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16d1292f-1295-45e4-90dc-7879f264cd60/26-6a63e4134e786.webp' /></p><p> </p><p>பின்னர் 03.08.2026 அதிகாலை 12.30 மணிக்கு சிறப்பு பூஜை
வழிபாடுகளும், அதிகாலை 2.00 மணிக்கு பரிகலம் வழிவிடுதல் நிகழ்வும் நடைபெற்று
வருடாந்த பொங்கல் உற்சவம் நிறைவடையவுள்ளது.</p><p>

இவ்வுற்சவத்தில் பிரதம குருவாக "சிவாகம கிரியா கிராமஜோதி" சிவசிறி
திருஞானசுந்தர திருஞானசம்பந்தக் குருக்கள் (ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம் –
குழுழமுனை) தலைமையேற்கவுள்ளதுடன், ஆலய பூசகராக சிவபாதம் கணேசபுவன்
(நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் – பழைய செம்மலை) வழிபாடுகளை முன்னின்று
நடத்தவுள்ளார்.
</p><p>பொங்கல் தினத்தன்று ஆலயத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும்
அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

மேலும், பக்தர்கள் பால், தயிர், இளநீர், பூக்கள், பூமாலைகள் மற்றும் பழவகைகள்
உள்ளிட்ட உபயங்களை வழங்கி இறைபணியில் பங்கேற்று விநாயகப் பெருமானின்
திருவருளைப் பெற்றிடுமாறு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன
சபை அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:15:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை அங்கியுடன் மீட்கப்பட்ட என்புக்கூடு: ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்பே அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-grave-raincoat-boy-skeleton-1784929544"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-grave-raincoat-boy-skeleton-1784929544</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம்
காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட்
4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம்
காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட்
4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.</p><p>

இது தொடர்பில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர்
சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,</p><p>
</p><p>
"செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட மேற்படி சிறுவரின்
என்புக்கூடு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உடனடியாக அகழ்ந்து
எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>அகழ்வதற்கான நடவடிக்கை</h2><p> </p><p>இது தொடர்பாகத் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற
பின்னரே அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38218ea-4216-4323-b9ac-bbc8c5ba0be7/26-6a63df2bb33b0.webp' /></p><p>

இந்த என்புக்கூடு சட்ட ரீதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம்
காணப்படுவதால், அது தொடர்பான விவரங்கள் அல்லது தகவல்கள் எவருக்கேனும்
தெரிந்திருந்தால், உடனடியாக நீதிமன்றப் பதிவாளருக்காவோ, சட்டத்தரணி ஊடாக
நீதிமன்றத்துக்கோ அல்லது காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான உண்மையான தகவல்கள் ஏதேனும் வெளிச்சத்துக்கு வந்தால்,
அது செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பான பல முக்கிய உண்மைகளைக் கண்டறிய உதவும்" என்றார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T21:54:59+00:00</updated>
        </entry>
    </feed>
