<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-16T15:21:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் புதிய திருப்பம் – புதைந்திருந்த மர்மங்களை கிளறும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-case-updates-1789564821"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-case-updates-1789564821</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

 உயிர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
 உயிர்த்த தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணையில், இராணுவ மற்றும் அரச புலனாய்வுப் பிரிவுகளுக்கு தாக்குதல் தொடர்பான முன் தகவல்கள் கிடைத்திருந்தும், அவை உரிய பாதுகாப்புத் தரப்புகளுடன் பகிரப்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் அலாவுதீன் ஆகியோரின் தொடர்புகள் குறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அலாவுதீன், உயிர்த்த தாக்குதலில் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இன்சாப் அஹமட்டின் மாமனார் என குறிப்பிடப்பட்டுள்ளார்.</p><p> 

அவரது படகுகள் மூலம் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோர் தாக்குதல்களுக்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்றனரா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலாவுதீனின் மகள் பின்னர் விடுவிக்கப்பட்டது தொடர்பிலும் விசாரணையாளர்கள் தகவல்களை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனிடையே, ரிஷாட் பதியுதீன் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கனவே மறுத்துள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.</p><p>

 2022ஆம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக அவர்மீது முன்னெடுக்கப்பட்டிருந்த தனி வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
</p><p>
 இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fw1BpKSyByI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T15:11:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதில் தொடரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-recovered-bodies-1789570703"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-recovered-bodies-1789570703</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் பின்னர் மீட்கப்பட்ட சடலங்களில்
சுமார் 7 சதவீதமான சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக
அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் பின்னர் மீட்கப்பட்ட சடலங்களில்
சுமார் 7 சதவீதமான சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக
அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை
1,399 பேர் உயிரிழந்துள்ளதுடன், 636 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 5,200 பேர்
வரை இன்னமும் காணாமல் போயுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களிடமிருந்து 1,206 டி.என்.ஏ மாதிரிப் பரிசோதனைகளும், காணாமல்
போனவர்களின் உறவினர்களிடமிருந்து 1,889 மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ள
போதிலும், 105 சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><h2>பெரும் சவால்கள்&nbsp;</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட மலைப்பிரதேசங்கள் மற்றும் நீர்மின் நிலையப் பகுதிகளில்
சிக்கியுள்ளவர்களை மீட்க உலங்குவானூர்திகள் மற்றும் அதிநவீன ட்ரோன்கள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/437efcf2-69a6-4f3b-90bd-df65d9d18587/26-6aaaae91711e0.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கடுமையான புவியியல் அமைப்பு மற்றும் மலைப்பகுதிகளில்
குவிந்துள்ள பாறை இடிபாடுகள் காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும்
சவால்கள் நிலவுவதாக நேபாளத் தேசிய பேரிடர் மேலாண்மை முகவரகம்
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T14:58:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகள் குறித்து தென்னாப்பிரிக்கா கவலை வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/south-africa-expresses-deep-concern-over-us-visa-1789569185"></link>
            <id>https://tamilwin.com/article/south-africa-expresses-deep-concern-over-us-visa-1789569185</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்கப் பிரஜைகள் சிலர் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய விசா
கட்டுப்பாடுகள் தொடர்பில் தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு தனது கவலையை
வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்கப் பிரஜைகள் சிலர் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய விசா
கட்டுப்பாடுகள் தொடர்பில் தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு தனது கவலையை
வெளியிட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவினால் அறிவிக்கப்பட்ட இந்தத் தடை
குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு,
தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்துச் சில தீவிரவாதக்
குழுக்களால் பரப்பப்படும் தவறான கருத்துக்களையே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை
பிரதிபலிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.</p><p>

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்படும் சவால்களைத்
தன்னிச்சையான நடவடிக்கைகளால் அன்றி, இராஜதந்திர ரீதியிலான சுமுகமான
பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>விசா கட்டுப்பாடுகள்</h2><p>
</p><p>
தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட இனச்
சமத்துவச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி, அங்குள்ள வெள்ளைப்பினச்
சிறுபான்மையினருக்கு எதிராக இனரீதியான அடக்குமுறைகள் இடம்பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/400b89a2-34d4-48f3-aef8-425a4ebd03ce/26-6aaaabfc4698d.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தற்போதைய விசா கட்டுப்பாடுகள் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே என்றும்,
அடுத்துவரும் நாட்களில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும்
தென்னாப்பிரிக்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T14:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருதங்கேணி ஏரியில் இறந்து கிடக்கும் நன்னீர் மீன்கள் – கடற்றொழிலாளர்களுக்கு பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fish-are-dying-and-floating-on-the-surface-1789568748"></link>
            <id>https://tamilwin.com/article/fish-are-dying-and-floating-on-the-surface-1789568748</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடல் நீர் ஏரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்து நீரில் மிதப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடல் நீர் ஏரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்து நீரில் மிதப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

இதனால், குறித்த பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>

வடமராட்சி கிழக்கு பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தற்போது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fcc12da-c1c2-4360-939b-7b657ca53238/26-6aaaaa07cab4a.webp' /></p><p>
</p><p>
அண்மைக்காலமாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நன்னீர் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், இதற்கான காரணம் தொடர்பில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் நன்னீர் மீனினங்கள் உயிரிழந்து நீரில் மிதக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T14:39:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள்..ஜெனீவாவில் திரண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamils-protest-in-switzerland-1789562593"></link>
            <id>https://tamilwin.com/article/tamils-protest-in-switzerland-1789562593</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் காலத்தை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கவனயீர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் காலத்தை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
“எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்து, ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.</p><h2>நூற்றுக்கணக்கான தமிழர்கள்&nbsp;</h2><p> </p><p>

இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.</p><p>

2026 செப்டெம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பூங்காவில் இருந்து கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமானது.

பேரணியில் பங்கேற்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தையும் பல்வேறு பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றனர்.</p><p> 

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான காட்சிப்படுத்தலும் பேரணியில் இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/559238d5-c8a7-47cb-a5b8-0e75276c3e64/26-6aaa9c0b39e34.webp' /></p><p>
</p><p>
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.</p><p>

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை சென்றடைந்தனர்.

அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், தேசியக் கொடியேற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. </p><p>

தொடர்ந்து தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் மற்றும் ஈகைப்பேரொளிகளின் நினைவாக ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன.</p><h2>ஈழத்தமிழர்களின் வரலாறு</h2><p>
</p><p>
இதன்போது மலர்மாலை அணிவித்தல், அகவணக்கம் மற்றும் மலர்வணக்கம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், பங்கேற்பாளர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த தமிழ் இளையோர்களும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்றனர்.</p><p> அவர்கள் தங்களது வாழிட நாடுகளின் மொழிகளில் உரையாற்றியதுடன், ஒன்றுகூடலுக்கான பிரகடனத்தையும் வாசித்தனர்.

இதனிடையே, பிரித்தானிய பிரதமரின் இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஊடாக ஐக்கிய நாடுகள் சபை நோக்கி முன்னெடுக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணத்தில் பங்கேற்ற செயற்பாட்டாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d7cea2-21a6-4d4b-ab30-70fbbf6d9e2b/26-6aaa9c0bf0cdd.webp' /></p><p>
</p><p>
தாங்கள் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரதிநிதிகளிடம் ஈழத்தமிழர்களின் வரலாறு, தற்போதைய நிலைமை மற்றும் தமிழர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
தமிழ் மக்களுக்கு நீதியும் அரசியல் இறைமையும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பாடல்கள் மற்றும் கோஷங்களுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களை போலி வாக்குறுதிகளால் ஏமாற்றும் அரசாங்கம்! துமிந்த திசாநாயக்க விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-public-false-promises-duminda-1789564122"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-public-false-promises-duminda-1789564122</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக பொதுமக்களை போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றி, ஒருபோதும் நனவாகாத கனவுலகில் மிதக்க வைத்திருப்பதாக துமிந்த திசாநாயக்க விமர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக பொதுமக்களை போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றி, ஒருபோதும் நனவாகாத கனவுலகில் மிதக்க வைத்திருப்பதாக துமிந்த திசாநாயக்க விமர்சித்துள்ளார்.
</p><p>
முன்னாள் அமைச்சரும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தருமான துமிந்த திசாநாயக்க, இன்று(16.9.2026) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.</p><p>

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைக்கு அரசாங்கம் இரண்டு வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் பேரணிகளை நடத்தி வருகின்றது.

இதுவரைக்கும் இந்த அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.</p><h2>அரசாங்கத்தின் பேரணி</h2><p> </p><p>இனியாவது ஏதாவது செய்யுமா என்ற எதிர்பார்ப்புடனேயே அரசாங்கத்தின் பேரணிகளுக்கு பொதுமக்கள் வருகை தருகின்றனர். எனினும் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.

இந்த அரசாங்கம் இதுவரை பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.இனியும் செய்யப்போவதில்லை.
</p><p>
வெறுமனே போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி, பொதுமக்களை ஒருபோதும் நனவாகாத கனவுலகில் சஞ்சரிக்க வைப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் செயற்பாடாகும்.</p><p>

ஜனாதிபதியாக முன்னர் பொய் கூறியது பரவாயில்லை. ஆனால் இப்போது ஜனாதிபதியான பின்னரும் பொய் கூறிக் கொண்டிருப்பதுதான் தவறானது.</p><h2>மொட்டுக் கட்சி</h2><p>
</p><p>
அதே போன்று அநுராதபுரத்தில் மொட்டுக் கட்சி நடத்திய கூட்டத்தைக் கொண்டு அக்கட்சி தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அநுராதபுரத்துக்கு எவரும் வரலாம், போகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/933fe539-8802-4308-aec7-0d62ce98ae38/26-6aaa98961ca6a.webp' /></p><p> </p><p>ஆனால் பொதுமக்கள் சிந்தித்தே வாக்களிப்பார்கள்.

இன்றைக்கு மொட்டுக் கட்சியில் வீரர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிப்பவர்கள், மஹிந்தவுக்கு ஜனாதிபதியாக ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் யார் என்பதை சற்று பின்னோக்கிப் பார்த்து அறிந்து கொள்வது நன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வங்கிக் கணக்குகளை தாண்டி நாமலை சென்றடைந்த பெருமளவு பணம்.. அச்சத்தில் சாட்சியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-remanded-airbus-case-1789562638"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-remanded-airbus-case-1789562638</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை வரும் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. </p><p>இதே பரிவர்த்தனை தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கின் கீழ் அவர் ஏற்கனவே செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p>

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நாமல் ராஜபக்ச மற்றும் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கு கோட்டை நீதவான் பிரசன்ன அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ச சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.</p><p></p><h2>சத்தியக் கடதாசி..&nbsp;</h2><p> </p><p>இதன்போது, விசாரணைகளின் அறிக்கைகள் ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/077d94d1-d9ba-4931-9f6e-7913f346cf8d/26-6aaa96529e7dc.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டார சமர்ப்பித்த அறிக்கையின்படி, பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடையே 16 விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் சிறையில் வைத்து சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தனி விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போதைய வழக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் பணமோசடி குறித்து விசாரிக்க அதிகாரம் கிடைத்துள்ளதால், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இணைந்து இந்த விசாரணையை நடத்தி வருகின்றன.
</p><p>தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கிய சத்தியக்கடதாசியின் மூலம், இந்த பரிவர்த்தனைக்காக நாமல் ராஜபக்ச 800,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 100 மில்லியன் ரூபா) இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பல வங்கிக் கணக்குகள்..&nbsp;</h2><p> </p><p>எயார்பஸ் நிறுவனம் வழங்கிய 1.454 மில்லியன் யூரோ இலஞ்சப் பணம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலியின் சிங்கப்பூர் கணக்கிற்கு மாற்றப்பட்டு, பின்னர் நிமல் பெரேராவின் நிறுவன கணக்கிற்கு அனுப்பப்பட்டு, இறுதியாக நாமல் ராஜபக்சவைச் சென்றடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03df8a6-46e1-4ed1-9d7e-058e6f382605/26-6aaa96537a237.webp' /></p><p> </p><p>மேலும், பிரியங்காவின் கணக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கிற்கு 160,400 யூரோ அனுப்பப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

சர்வதேச உதவிகளுடன் நடத்தப்பட்ட தடயவியல் விசாரணையின் போது, நாமல் ராஜபக்சவிற்கும் எயார்பஸ் அதிகாரிகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களும் மீட்கப்பட்டுள்ளன. </p><p>முதலாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டாவது சந்தேகநபர் அவுஸ்திரேலியாவிலும், மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவிலும் தலைமறைவாக உள்ளனர். </p><p>மேலும், சாட்சிகள் உயிருக்கு பயந்து சாட்சியமளிக்க அஞ்சுகின்றனர் என்பதால் நாமலுக்கு பிணை வழங்க அரசு தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:20:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-suspects-arrested-fish-caught-using-explosives-1789559770"></link>
            <id>https://tamilwin.com/article/2-suspects-arrested-fish-caught-using-explosives-1789559770</id>
            <summary type="text">மன்னார்- முழங்காவில் கடற்கரை பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார்- முழங்காவில் கடற்கரை பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இலங்கை கடற்படையினரால் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கெப் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனேக நிறுவனத்திற்கு
கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல்
நடவடிக்கையின் போது, முழங்காவில் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான கெப்
ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>

இதன்போது, வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்
370 கிலோ கிராமிற்கும் அதிகமான மீன்களை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த,
மன்னார் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 48 வயதுடைய இரண்டு (02) சந்தேக
நபர்களுடன் அந்த கெப் வாகனமும் கைது செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/885439d4-e0b7-41db-9a1e-933367e31c16/26-6aaa8bd320d1f.webp' /></p><p>


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கெப்
மற்றும் மீன் தொகை என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி
திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T12:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் 'மிக்' விமான கமிஷன் பணத்திற்கு நடந்தது என்ன! அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;மிக்&#039; விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'மிக்' விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பல மணிநேர வொக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.</p><p>இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் மறைந்துள்ள கமிஷன் பணம் யாருடைய கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது? எங்கே சென்றது?
'டி.எஸ். அலையன்ஸ்' (DS Alliance) நிறுவனம் ஒரு போலி நிறுவனமாக உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய 'பெலிமிசா' (Bellimissa) நிறுவனத்திற்கு இலங்கையின் விமானப்படை 15.66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அனுப்பியுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கொடுக்கல் வாங்கல் எப்படி நடந்தது</h2><p>அதில் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கலுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டுள்ளது 7.83 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
அப்படியானால் எஞ்சிய பணம் எங்கே சென்றது? யாருடைய கணக்கில் வைப்பிலிடப்பட்டது?
மேலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் விசாரணைகள் நிறுத்தப்பட்ட விதம் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கொள்முதல் கொடுக்கல் வாங்கலானது குளிர் அறைகளில் இருந்த சில நபர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி அவர்களின் சுகபோகத்திற்காகவே தீர்மானிக்கப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கலா? </p><p>
இந்தக் கொடுக்கல் வாங்கலானது உண்மையிலேயே இலங்கை விமானப்படையின் தாக்குதல் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்திலா செய்யப்பட்டது? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பைகளை நிரப்பும் நோக்கத்திலா செய்யப்பட்டது? எனும் கேள்வி எழுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d646032-44b9-4263-bd4a-e36548308477/26-6aaa830b491f4.webp' /></p><p>2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இந்த மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் விசாரணையை நிறுத்தினார். அவ்வாறு நிறுத்துவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சில முக்கிய தடயங்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
</p><p>இந்த 'டி.எஸ். அலையன்ஸ்' எனும் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தினரால் சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வங்கிப் கணக்கிலிருந்து குறைந்தபட்சம் 4,39,000 டொலர்கள் பணம் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் கம்பஹா கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
</p><p>கம்பஹா கிளையில் லெலும் துமிந்த மான்னப்பெரும எனும் கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் இவ்வளவு பாரிய தொகையா யார் இந்த லெலும் துமிந்த?.
</p><p> சிங்கப்பூர் 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனம் தங்களது கணக்கொன்றின் மூலமாகவே இலங்கையின் கம்பஹா கொமர்ஷல் வங்கி கிளைக்கு இந்தப் பணத்தை அனுப்புகிறது.&nbsp;</p><h2>டுபாயில் வாங்கப்பட்ட சொத்து</h2><p>இந்த லெலும் துமிந்த மான்னப்பெரும என்பவர் உதயங்க வீரதுங்கவின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். உறவுமுறையின் படிஇ இந்தப் பணம் வைப்பிலிடப்பட்ட நபர் உதயங்க வீரதுங்கவின் மைத்துனர் ஆவார்.
</p><p>இந்த மான்னப்பெரும என்பவரின் வங்கிப் கணக்கில் வீழ்ந்த பணத்திற்கும் மிக் கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்களால் முடியாமல் போகிறது.
</p><p>ஆனால் மிக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்கிலிருந்தே பணம் வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இந்த மான்னப்பெரும என்பவர் இந்தப் பணத்திலிருந்து 324,971.6 டொலர்களை
ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாய் நகரில் சொத்து விற்பனை செய்யும் 'டார்கெட் எஸ்டாப்ளிஷ்மென்ட்' (Target Establishment) எனும் நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார். </p><p>
ஐக்கிய அரபு இராஜியத்தின அஜ்மான் நகரில் உள்ள 'கோல்ட் கிரஸ்ட் வியூஸ் 2' (Goldcrest Views 2) எனும் சொகுசு வீட்டுத் தொகுதியின் 'பென்ட் ஹவுஸ்' (Penthouse) அடுக்குமாடி குடியிருப்பு இலக்கம் 3403 ஐக் கொள்முதல் செய்வதற்காகவே இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. </p><p>2018 ஆம் ஆண்டு இந்த வீட்டிலிருந்து டுபாய் பொலிஸாரால் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்படுகிறார்.இந்த பிரம்மாண்டமான கமிஷன் தொகையில் மிகச்சிறிய ஒரு பகுதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களாகவே இவை கிடைத்துள்ளதாக நம்புகின்றனர். </p><p>
இந்த கமிஷன் தொகையில் கணிசமான ஒரு பகுதி லத்வியாவில் (Latvia) உள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விடயமும், அதற்கு மேலதிகமாக நியூசிலாந்து, பனாமா, உக்ரைன், ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands) ஆகிய நாடுகளிலுள்ள பல வங்கிக் கணக்குகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இயக்கப்படவிருந்த ஏழு தொடருந்து சேவைகள் இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seven-train-services-cancelled-tonight-1789560437"></link>
            <id>https://tamilwin.com/article/seven-train-services-cancelled-tonight-1789560437</id>
            <summary type="text">இன்று இரவு சேவையில் ஈடுபடுத்தப்படவிருந்த இரவுநேர ஏழு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இன்று (16) இயக்கப்படவிருந்த 6 இரவு அஞ்சல் தொடருந்துகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று இரவு சேவையில் ஈடுபடுத்தப்படவிருந்த இரவுநேர ஏழு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>இன்று (16) இயக்கப்படவிருந்த 6 இரவு அஞ்சல் தொடருந்துகள் உட்பட 7 தொடருந்து சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>இந்த தொடருந்து சேவைகளை தொடருந்து பொது முகாமையாளர் இரத்து செய்துள்ளதாக தொடருந்துகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>வெளியான அறிவிப்பு&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த மூன்று இரவு அஞ்சல் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccd03a5-e966-47a7-88f3-be4d23107172/26-6aaa886f9a301.webp' /></p><p>

அதேபோல், காங்கேசன்துறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த மூன்று இரவு அஞ்சல் தொடருந்துகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், இன்று இரவு 11.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனைக்கு இயக்கப்படவிருந்த தொடருந்து சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, 6 இரவு அஞ்சல் தொடருந்து பயணங்கள் மற்றும் ரம்புக்கனைக்கு இயக்கப்படவிருந்த ஒரு தொடருந்து பயணம் உட்பட, இன்று 7 தொடருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T12:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் போது நாமல் வெளியிட்ட விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-namal-said-while-leaving-the-court-1789551409"></link>
            <id>https://tamilwin.com/article/what-namal-said-while-leaving-the-court-1789551409</id>
            <summary type="text">அதிகாரிகளுக்கு பிரச்சினை வரும் என்பதால், உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரிகளுக்கு பிரச்சினை வரும் என்பதால், உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை&nbsp; பேருந்தில் திரும்பிச் செல்லும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொள்முதல் வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p>இதனையடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40a430a5-2c16-4b0b-8727-3bd36e538eed/26-6aaa69d81503e.webp' /></p><p>நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்துச் செல்லப்படும்போது ஊடகவியலாளர்கள்&nbsp; நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.</p><p>இதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச, “உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும், ஆனால், அதிகாரிகளுக்கு(சிறைக்கு அழைத்து வந்த அதிகாரிகள்) பிரச்சினை வரும் என்பதால் பதிலளிக்க முடியவில்லை” என தெரிவித்துச் சென்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T12:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரிலிய சவிய கணக்கு சர்ச்சை - ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லையாம்! மொட்டுக்கட்சி அம்பலப்படுத்திய உண்மை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-siriliya-case-1789558102"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-siriliya-case-1789558102</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி நடத்திச் சென்ற சிரிலிய சவிய அமைப்பின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி நடத்திச் சென்ற சிரிலிய சவிய அமைப்பின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் கொழும்பில் இன்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.</p><h2>சிரிலிய சவிய அமைப்பு</h2><p>
</p><p>
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p>

சர்ச்சைக்குரிய 'சிரிலிய சவிய' கணக்கில் உள்ள பணம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. அது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவாலோ அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராலோ பயன்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce045c5f-5334-48c3-9bd2-3e5257e84cf0/26-6aaa81a1c82e9.webp' /></p><p>
</p><p>
சர்ச்சைக்குட்படுத்தப்பட்ட பணம் இன்னும் கணக்கில் பாதுகாப்பாக இருக்கின்றது. இது தொடர்பாக அரசாங்கம் ஒரு தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றது.

ஸ்கேனரை வாங்குவதற்காகச் சேகரிக்கப்பட்ட இந்த சிரிலிய கணக்கிலிருந்து ஷிரந்தி ராஜபக்ச ஒரு ரூபாயைக் கூட தனது சொந்தப் பயன்பாட்டிற்கோ அல்லது வேறு எந்தப் பயன்பாட்டிற்கோ எடுக்கவில்லை. </p><p>மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாய் உட்பட, சேகரிக்கப்பட்ட அனைத்துப் பணமும் இன்றும் அந்தக் கணக்கில் பாதுகாப்பாக உள்ளது.</p><h2>ராஜபக்சகுடும்பத்தினர்&nbsp;</h2><p>&nbsp;''உதாரணமாக, கிராமக் கோயிலில் ஒரு கோபுரம் கட்டுவதற்காக நன்கொடையாளர்களிடமிருந்து சிறிது பணம் சேகரிக்கப்படுகிறது.</p><p> </p><p>ஆனால், யாராவது வந்து ஒரு கோபுரத்தைக் கட்டியவுடன், அந்தக் கோயிலில் சேகரிக்கப்பட்ட பணம் மீண்டும் நன்கொடையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை. அந்தப் பணம் கோயிலின் அறப்பணிகளுக்காக வைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.''</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0f7d80-070e-4575-aee2-75c1aef3145e/26-6aaa81a27f566.webp' /></p><p>

அதுபோலவே, நன்கொடையாளர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாததால், வசூலிக்கப்பட்ட இந்தப் பணம் புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஒரு வார்டைக் கட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்சஅதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை. </p><p>அந்தப் பணம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. ராஜபக்சகுடும்பத்தினர் இந்தப் பணத்தை உண்பதற்கோ குடிப்பதற்கோ எடுக்கவில்லை.</p><h2>&nbsp;ஷிரந்தி ராஜபக்ச&nbsp;</h2><p>
</p><p>
அதே போன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும் ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற ஊடக அறிக்கைகள் பொய்யானவையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c281d5-b311-4d6c-987c-c548e7e86512/26-6aaa81a337f3d.webp' /></p><p>
</p><p>சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றுவிட்டார் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. ஷிரந்தி ராஜபக்ச சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
</p><p>
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், முன்னாள் முதல் பெண்மணி தனது விமானத்தில் புறப்படுவதற்கு சில கணங்களுக்கு முன்புதான் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அவருக்கு எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வழங்கியது என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2oosx-SVZ_o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T11:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-found-wounds-in-kotmale-passes-away-1789558039"></link>
            <id>https://tamilwin.com/article/youth-found-wounds-in-kotmale-passes-away-1789558039</id>
            <summary type="text">கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

குறித்த இளைஞர் நேற்று (15) வெதமுல்ல சந்திக்கு அருகில், மதுபான விற்பனை நிலையத்தை அண்மித்த பகுதியில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.</p><p>அதனையடுத்து கொத்மலை 1990 அவசர நோயாளர் காவுவண்டி மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்தநிலையில், குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மருத்துவமனை பொலிஸார் இன்று (16) கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06196fc6-6e0b-4ce1-b4dc-523baf1b5726/26-6aaa811ddde68.webp' /></p><p>

வெததமுல்ல தோட்டம், ரம்பட பகுதி, லிலீஸ் லேன் பிரதேசத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயகிருஷ்ணா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T11:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/salary-issue-of-unprotected-level-crossing-staff-1789558164"></link>
            <id>https://tamilwin.com/article/salary-issue-of-unprotected-level-crossing-staff-1789558164</id>
            <summary type="text">பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு
கிடைக்காவிட்டால் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு
கிடைக்காவிட்டால் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கடந்த ஜனவரி மாதம் முதல் தொடருந்து திணைக்களத்தின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில், பல
தொழிலாளர்களுக்குச் சரியான முறையில் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
</p><p>
சேவை பாதுகாப்பு: கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுமக்களின் உயிரையும்
சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் ஈடுபட்டு வரும் சுமார் 1,000
ஊழியர்களின் பணிக்கான நிரந்தரத்தன்மை மற்றும் முறையான தினசரி சம்பளம் உறுதி
செய்யப்பட வேண்டும்.</p><p>

அதிகாரிகளின் அலட்சியம்: பிரச்சினை குறித்து தொடருந்து பொது முகவரிடமும்,
ஜனாதிபதி செயலகத்திலும் பலமுறை கடிதங்கள் அளித்தும் இதுவரை எந்தவித சாதகமான
பதிலும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் கிடைக்கவில்லை.:
</p><p>தங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து உடனடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
விடுக்காவிட்டால், பிற தொடருந்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து அடுத்த
மாதத்தின் முதல் வாரத்தில் நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடவுள்ளதாகச் சங்கம் எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-16T11:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பயணத் திகதி! ஷிரந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-s-foreign-trip-pre-scheduled-date-1789556372"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-s-foreign-trip-pre-scheduled-date-1789556372</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்ச முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்பட்ட சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் பயணமாக தீர்மானித்தார்&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்ச முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்பட்ட சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் பயணமாக தீர்மானித்தார்&nbsp; என்று பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். </p><p>

கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

ஷிரந்தி ராஜபக்ச, மருத்துவ ஆலோசனையில் அடிப்படையில் முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த சிகிச்சைக்காகவே வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாறாக எந்தவொரு விசாரணையையும் தவிர்ப்பதற்காக அல்ல.</p><h2>திடீரென கிடைத்த அறிவிப்பு&nbsp;</h2><p> </p><p>

அவர் விமான நிலையத்திற்கு வருகைத் தந்து, அங்கிருந்து புறப்படத் தயாரான நேரம் வரை எந்தவொரு விசாரணைக்குழுவும், அவருக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை. 

விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிய சந்தர்ப்பத்தில்தான் திடீரென அவருக்கு விசாரணைக்கான அழைப்புக் கிடைத்துள்ளது. </p><p>


இதற்கு முன்னர் அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் ஆணைக்குழுக்களின் முன் பிரசன்னமாகியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47a1f748-ad65-464f-9433-7cd7fe3d42fe/26-6aaa7bbc156f2.webp' /></p><p> </p><p>

விசாரணைகளைத் தவிர்த்தார், விசாரணைகளுக்கு இடையூறு செய்தார் என்ற எந்தவொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கவில்லை. </p><p>

ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, அவருக்கான தனியுரிமை என்பது மிகவும் முக்கியமானது. எனவே, அந்தத் தனியுரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.</p><p>
மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில், ஏற்கனவே திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த சிகிச்சையைப் பெறுவதற்காகவே அவர் வெளிநாடு செல்லத் தயாரானார் என்பது தெளிவானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 


 

</p>]]></content>
            <updated>2026-09-16T11:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி - மகன்கள் பெயரில் 180 மில்லியன் பெறுமதியான சொத்து சேர்த்த நபர்.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/180-million-properties-bathala-heen-mahattaya-1789556202"></link>
            <id>https://tamilwin.com/article/180-million-properties-bathala-heen-mahattaya-1789556202</id>
            <summary type="text">பெருந்தொகையான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பத்தல ஹீன்கடயா என அழைக்கப்படும் நபரால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் 180 மில்லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருந்தொகையான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பத்தல ஹீன்கடயா என அழைக்கப்படும் நபரால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் 180 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது. </p><p>சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><h2>பாரிய மோசடிகள்..&nbsp;</h2><p>
</p><p>
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், தம்புத்தேகம, கிராவல்வத்தை மற்றும் மிதெனிய ஆகிய பகுதிகளில் சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட காணிகள், கட்டடங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உட்பட எட்டு சொத்துக்களை இரண்டு வாரங்களுக்கு முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ea83f01-8bdf-4753-b074-39de6a1c8a52/26-6aaa7aafadf8a.webp' /></p><p>

மேலும், சந்தேகநபரின் இரண்டாவது மகனின் பெயரில் 35 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர ஜீப் வண்டி ஒன்றும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த மகனுக்கு எதிராக ஏற்கனவே போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளதுடன், சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தியே இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>அதற்கமைய, 2006ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், அந்த ஜீப் வண்டியும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T11:24:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் பரிதாபப் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-women-killed-train-accident-in-kalutara-1789554664"></link>
            <id>https://tamilwin.com/article/two-women-killed-train-accident-in-kalutara-1789554664</id>
            <summary type="text">களுத்துறை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில்
தாயும் அவரது உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில்
தாயும் அவரது உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த விபத்தானது இன்றையதினம்(16.9.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
அனுராதபுரம் புனித நகரத்தில் நடைபெறவுள்ள மத நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக
மதுகம பகுதியிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும்
உறவுக்கார மகள் ஆகியோர் களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்துக்கு அருகில்
வந்துள்ளனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
அனுராதபுரம் நோக்கிச் செல்லும் தொடருந்தில் ஏறுவதற்காக, தொடருந்து நிலையத்தின் வலது
பக்க நடைமேடைக்குச் செல்வதற்காக இவர்கள் தொடருந்து பாதையில் நடந்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0348c10b-75d1-4ebd-94ee-172ea9ad6d36/26-6aaa748d68a9a.webp' /></p><p>
</p><p>அப்போது மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்து மோதியதிலேயே
இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.</p><p>

இந்த விபத்தில் தாயும் உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
என்று களுத்துறை தொடருந்து நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>தொடருந்து பாதையின் வழியே கவனக்குறைவாக நடந்து சென்றமையே இத்தகைய விபத்துக்குக்
காரணம் எனக் கூறப்படுகின்றது.</p><p>

உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுத்துறை தெற்கு தொடருந்தில் நிலையத்தில்
வைக்கப்பட்டுள்ளன.அவற்றை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் களுத்துறை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae05eed4-6575-4974-ae58-323746f7c1df/26-6aaa7852ce03b.webp' /></p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:07:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக வெப்பநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/climate-change-in-sri-lanka-1789555024"></link>
            <id>https://tamilwin.com/article/climate-change-in-sri-lanka-1789555024</id>
            <summary type="text">தற்போதைக்கு நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் வெப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைக்கு நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் வெப்பநிலை அதிகரிப்பால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகளும் ஏற்படுவதாக மனநல வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
தொடர்ந்து அதிக வெப்பநிலைக்கு ஆட்படுவது கோபத்தை அதிகரிக்கிறது என்பதை மனநலம் குறித்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><h2>வெப்பமான காலநிலை</h2><p> </p><p>சாலையில் வாகனம் ஓட்டும்போது மற்றும் பாதசாரிகளாக நடந்து செல்லும்போது ஏற்படும் பல்வேறு மோதல்களில் அதீத கோபம் உண்டாகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மனநல வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f2a3a7-91fc-43e8-9e8c-042c1c3d9dce/26-6aaa748a89286.webp' /></p><p>
</p><p>
மேலும், வெப்பத்திற்கு ஆட்படுவதால் குழந்தைகளால் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் மற்றும் அவர்களின் நினைவாற்றல் குறையலாம் என்று மனநல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>அத்துடன், அதிக வெப்பநிலையானது குடும்பச் சண்டைகளையும், குடும்ப வன்முறையையும் கூட அதிகரிக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் பரிதாப நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pitiful-situation-for-shiranthi-rajapaksa-1789534564"></link>
            <id>https://tamilwin.com/article/pitiful-situation-for-shiranthi-rajapaksa-1789534564</id>
            <summary type="text">இலங்கையின் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, சமகால அரசாங்கத்தின் கீழ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதியாகி உள்ளது.

நோயினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, சமகால அரசாங்கத்தின் கீழ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதியாகி உள்ளது.
</p><p>
நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்ச இன்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகி உள்ளார். </p><p>

மேலதிக வைத்திய நடவடிக்கைக்காக இன்று அதிகாலை 1.30 மணியளவில் உறவினர் என தெரிவிக்கப்படும் பெண்ணுடன் அவர் சென்றுள்ளார்.</p><p> </p><h2><b>

ஷிரந்தியின்&nbsp;பரிதாப நிலை</b></h2><p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் செல்லும் பாதை ஊடாக பயணித்த ஷிரந்தி, தனது உடமைகளை தானே தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. </p><p>கடந்த ஆட்சிக்காலத்தின் தீவிர பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ வலம் வந்த ஷிரந்தியின் இன்றைய நிலை பரிதாபமாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8751322-2f45-49a4-bf3e-1fc16d53ba92/26-6aaa21e43b441.webp' />&nbsp;&nbsp;</p><p>

அதிகாரம் மற்றும் நிதி துஷ்பிரயோகங்களில் சிக்கியுள்ள ராஜபக்ச குடும்பம், தற்போது பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் குடும்பமாக சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறான நிலையில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக அழைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ச இன்றையதினம் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>you may like this</p><p><a href="http://&lt;iframe src=&quot;https://www.facebook.com/plugins/video.php?height=476&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1803278644181541%2F&amp;show_text=false&amp;width=267&amp;t=0&quot; width=&quot;267&quot; height=&quot;476&quot; style=&quot;border:none;overflow:hidden&quot; scrolling=&quot;no&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;true&quot; allow=&quot;autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share&quot; allowFullScreen=&quot;true&quot;&gt;&lt;/iframe&gt;" target="_blank"><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1803278644181541%2F&amp;show_text=false&amp;width=267&amp;t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></a><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் சுற்றுலாப் பயணிகள் செய்த நெகிழ்ச்சி செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-tourists-respect-for-local-islamic-culture-1789553091"></link>
            <id>https://tamilwin.com/article/young-tourists-respect-for-local-islamic-culture-1789553091</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம் பொத்துவில், அருகம்பை பகுதிக்குச் சுற்றுலா வருகை தந்த
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுலாப் பயணிகள் இருவர், உள்ளூர்
இஸ்லாமிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம் பொத்துவில், அருகம்பை பகுதிக்குச் சுற்றுலா வருகை தந்த
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுலாப் பயணிகள் இருவர், உள்ளூர்
இஸ்லாமியக் கலாச்சாரத்தை மதித்து ஹிஜாப் ஆடை அணிந்து மகிழ்ந்த நெகிழ்ச்சியான
சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>

அருகம்பையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடல் பயண மேற்கொண்டு பொழுதைக் கழித்துள்ளனர்.</p><h2>நெகிழ்ச்சி சம்பவம்</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, இஸ்லாமியர் ஒருவர் வீட்டிற்கு விஜயம் செய்த அவர்கள், அவரது
குடும்பத்தினரின் உபசரிப்பிலும், விருந்தோம்பலில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea880de-a310-4eb6-8824-cf15def12b31/26-6aaa6d86a50a9.webp' /></p><p>
</p><p>
இதன்போது, பொத்துவில் மக்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும்
ஆச்சரியத்துடன் நோக்கிய அந்த இளம் பெண்கள், உள்ளூர் கலாச்சாரத்தின் மீதான
விருப்பத்தினால் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ‘ஹிஜாப்’ ஆடையைக் கேட்டு வாங்கி
அணிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துத் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து
கொண்டனர்.</p><p>

அருகம்பைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுபோக்குச்
சேவைகளை வழங்குவதுடன் மட்டுமன்றி, பிராந்தியத்தின் தனித்துவமான
கலாச்சாரத்தையும் நற்பண்புகளையும் அவர்களிடம் எடுத்துரைத்து நன்மதிப்பைப்
பெற்று வரும் இந்த செயற்பாடு அப்பகுதி மக்களிடையே பெரும்
பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:24:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச..! மீண்டும் நாடு திரும்புவது தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-details-on-shiranthi-summons-to-fcid-1789548655"></link>
            <id>https://tamilwin.com/article/police-details-on-shiranthi-summons-to-fcid-1789548655</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச செப்டெம்பர் 24 திகதி நிதி குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச செப்டெம்பர் 24 திகதி நிதி குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>ஷிரந்தி ராஜபக்ச இன்று காலை (16) சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்ற நிலையில், விமான நிலையத்தில் வைத்து அவருக்கு&nbsp; அழைப்பாணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>மீண்டும் நாடு திரும்பும்&nbsp;ஷிரந்தி </h2><p>இதற்கமைய, ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b11af81c-1e85-48cd-b1f0-f6e4449e3192/26-6aaa6cdcf055c.webp' /></p><p>ஷிரந்தி ராஜபக்சவுடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச்சென்றுள்ளதுடன், அவர் ஷிராந்தி ராஜபக்சவை சிங்கப்பூரில் சிகிச்சைக்காக பரிந்துரைத்த பின்னர், நாளை மறுநாள் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது.</p><p>பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சிறிலிய சவியா கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>வாக்குமூலம் அளிக்குமாறு&nbsp;அழைப்பாணை </h2><p>
அதன்படி, வாக்குமூலம் அளிப்பதற்காக செப்டெம்பர் 24 ஆம் திகதி தங்கல்லே கார்ல்டன் இல்லத்திற்கு வருமாறு ஷிரந்தி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.</p><p>ஷிரந்தி ராஜபக்ச தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூருக்கு புறப்படுவதற்காக சென்றிருந்தார்.</p><p>
இதன்போது, செப்டம்பர் 24 அன்று முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் விமான நிலையத்தில் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்கங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valikamam-north-resettlement-committee-1789551564"></link>
            <id>https://tamilwin.com/article/valikamam-north-resettlement-committee-1789551564</id>
            <summary type="text">தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு வலி. வடக்கு மீள்
குடியேற்ற குழு சங்கங்களை&amp;nbsp; அழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு வலி. வடக்கு மீள்
குடியேற்ற குழு சங்கங்களை&nbsp; அழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம்(பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ச.
சிறிபவானந்தராசா தலைமையில் நடைபெற்ற போது வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்க பிரதிநிதிகளை கூட்டங்களுக்கு
அழைப்பதில்லை என மயிலிட்டி மீள் குடியேற்ற சங்கம் ஒன்றின் பிரதிநிதி குற்றம்
சாட்டினார்.
</p><p>
அதற்கு , ஒருங்கிணைப்பு குழு தலைவர் , நீங்கள் வந்துள்ளீர்கள் தானே என கூறிய
போது , தான் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் வந்தேன் எனவும் , மீள்
குடியேற்ற குழுக்களை கூட்டங்களுக்கு திட்டமிட்டு புறக்கணிப்பதாக குற்றம்
சாட்டினார்.</p><h2>கூட்டத்திற்கு அழைப்பு</h2><p>அதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் , மீள்
குடியேற்ற குழுக்களை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் , அவர்கள் தமது காணிகளை
விடுவிக்க கோரி கூட்டத்தில் குரல் கொடுத்தால் அவர்களின் மைக்கை பறித்து ,
அவர்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
</p><p>
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மீள்குடியேற்ற
குழுக்களை கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f63c798a-1aaf-4af6-aacb-76668820c9f5/26-6aaa6c90e21ba.webp' /></p><p>&nbsp;அதனை அடுத்து எதிர்வரும் கூட்டங்களில் அவர்களை அழைப்பதாக ஒருங்கிணைப்பு குழு
தலைவர் ச. சிறிபவானந்தராசா உறுதி அளித்தார்.
</p><p>
அதேவேளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும்
வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில்
கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில்
இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள்
அழைக்கப்படவில்லை எனவும் எம்மை கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என கடந்த 11ஆம்
திகதி வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு சங்க பிரதிநிதிகள் தெல்லிப்பழை பிரதேச
செயலரிடம் மனு கையளித்திருந்த போதிலும் , இன்றைய கூட்டத்திற்கு&nbsp; அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:19:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் மணற்கொள்ளை.. ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pudhukudiyiruppu-sand-smuggling-raviharan-mp-1789551867"></link>
            <id>https://tamilwin.com/article/pudhukudiyiruppu-sand-smuggling-raviharan-mp-1789551867</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில்
சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள்
அதிகரித்துள்ளதாக&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில்
சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள்
அதிகரித்துள்ளதாக&nbsp; வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்&nbsp;சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (15.09.2026) இடம்பெற்றது.&nbsp;</p><p>இக்கூட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரால் வெளிப்படுத்தப்பட்டது.&nbsp;&nbsp;</p><h2>பாதுகாப்பற்ற நிலை..&nbsp;</h2><p>இதன்போது,&nbsp; கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், ”பொலிஸாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த
முடியாதெனில் எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுங்களைக் கையளித்தால் அவர்கள்
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6dbc9e4-6038-4993-83e4-65ce04d72937/26-6aaa67c0ae1d6.webp' /></p><p>தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள்
இருந்திருக்கவில்லை, நடுநிசியில் கூட பெண்கள் உலவக்கூடிய
நிலையிலிருந்தது, தற்போது அத்தகைய
நிலை இல்லை" என்றார்.&nbsp;</p><p>இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், "சட்டவிரோத மணல் அகழ்வென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய
பிரச்சினையாகவுள்ளது.</p><p>
விசுவமடு நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல் கெருடமடுவரைக்கும் சட்டவிரோத மணல்
அகழ்வு மிக அதிகளவில் இடம்பெற்று வருகின்றது.
</p><p>
அத்தகைய சில சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளை பொலிசார் கைதுசெய்தாலும்,
அதையும் தாண்டி அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள்
இடம்பெறுகின்றன” என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:58:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-trans-alus-adjourned-1789551482"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-trans-alus-adjourned-1789551482</id>
            <summary type="text">தனியார் நிறுவனமொன்றுக்கு 290 மில்லியன் ரூபா தொகையைச் செலுத்தாத குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் நிறுவனமொன்றுக்கு 290 மில்லியன் ரூபா தொகையைச் செலுத்தாத குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
செய்தித்தாள் அச்சிடுவதற்குத் தேவையான காகிதம் மற்றும் அட்டை இறக்குமதிக்காக கேசர லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 290 மில்லியன் தொகையைச் செலுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><h2>மீண்டும் விசாரணை</h2><p>
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பாக கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (16)வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக, இவ்வழக்கை 2027 மார்ச் 3 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ​​நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பாக, கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று(16) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c381b0-d975-47c3-9de8-ccb46231830c/26-6aaa6597a89e8.webp' /></p><p>
</p><p>&nbsp;டிரான் அலஸ் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து நீதிமன்றத்தில் சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சாட்சியங்களைச் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இச்சம்பவம் தொடர்பாக டிரான் அலஸ் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும், அவரது கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காக ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><h2>&nbsp;பிணையில் செல்ல அனுமதி</h2><p>
</p><p>
இந்தப் பரிவர்த்தனை ஒரு வணிகப் பரிவர்த்தனை என்றும், இது ஒரு குற்றவியல் வழக்கு அல்ல என்றும் தாங்கள் விசாரணை அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளதாகவும், ரிட் மனு எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூறியது.
</p><p>
அதே நேரம் டிரான் அலஸின் சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் ஒரு சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fc56975-cb16-4df8-aec2-bf5d4dfb253e/26-6aaa65985c1f6.webp' /></p><p>
குறித்த வழக்கு தொடர்பில் ஜனவரி 29 ம் திகதி குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, டிரான் அலஸை ஒரு சந்தேக நபராகப் பெயரிட்டு, வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டிருந்தது.
</p><p>
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சிலோன் செய்தித்தாள் நிறுவனத்தின் கணக்காளர் மற்றும் நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:47:23+00:00</updated>
        </entry>
    </feed>
