<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-30T16:54:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜே.ஆரை விடவும் தற்போதைய அரசாங்கம் அதிக சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/current-govt-more-authoritarian-than-jr-1788107526"></link>
            <id>https://tamilwin.com/article/current-govt-more-authoritarian-than-jr-1788107526</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கூட பிரயோகிக்காத அளவிலான சர்வாதிகார ஆட்சியை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக &#039;சர்வஜன பலய&#039; கட்சியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கூட பிரயோகிக்காத அளவிலான சர்வாதிகார ஆட்சியை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக 'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>நாட்டின் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கூட செவிமடுக்க மறுக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>புத்தல பொது விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b04bc3-fec5-49bc-8414-33183d24ae7c/26-6a945b07bf7f5.webp' /></p><p>
மொணராகலை மாவட்டத்தில் 'சர்வஜன பலய' அமைப்பின் தொகுதி மட்ட தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. </p><p>
சர்வஜன பலய அமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளும் நிர்வாகப் போக்கும் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிப்பதையும், நாட்டின் ஸ்தாபன அமைப்புகள் மற்றும் ஆலோசனைகளைப் புறக்கணிப்பதையுமே தெளிவுபடுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.</p><p>
இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் அரசியல் அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எல்லை மீறிச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
நாட்டின் உயரிய மதத் தலைவர்களான மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களைக் கூட அரசாங்கம் ஏற்க மறுப்பது மிகவும் தீவிரமான ஒரு நிலைமையாகும் எனவும் இது தொடர்பில் பொதுமக்கள் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் எனவும் திலித் ஜயவீர வலியுறுத்தியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22-வது அரசியலமைப்பு திருத்தத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை – அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22-amendment-will-imposed-says-govt-1788106852"></link>
            <id>https://tamilwin.com/article/22-amendment-will-imposed-says-govt-1788106852</id>
            <summary type="text">&amp;nbsp;22-வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையிலிருந்து ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22-வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையிலிருந்து ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>பதுளையில் இன்று நடைபெற்ற 'ரட்ட ஹதன ஜன பலய' (நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் சக்தி) மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p><p>
ஆட்சியைப் பொறுப்பேற்ற போது, கடந்த 30-40 ஆண்டுகளாக சீர்குலைந்து கிடந்த ஒரு அமைப்பையே எதிர்கொண்டோம். ஊழல்வாதிகளையும் மோசடிக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எங்களின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8803e6c5-8ebd-4721-87d7-a0129e99e26a/26-6a9458658b2ad.webp' /></p><p>
</p><p>அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது சுமார் 11 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பது தெரியவந்துள்ளதாகவும், நீதிமன்ற அமைப்பை விரைவுபடுத்தவும் திறம்படச் செயல்படுத்தவும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
ஓய்வுபெறும் வயதை மட்டும் அதிகரிப்பது முழுமையான தீர்வாகாது என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஏனைய சீர்திருத்தங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது நீதிபதிகளின் அறிவும் அனுபவமும் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>குறிப்பிட்ட ஒரு நபரை இலக்கு வைத்தே இந்த திருத்தம் கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சியினர் போலியான அச்சத்தை உருவாக்கி வருகின்றனர் என அமைச்சர் சாடியுள்ளார்.
</p><p>நீதிமன்ற அமைப்பியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதும் 2 ஆண்டுகளால் அதிகரிக்கப்படுமே தவிர, தனிப்பட்ட ஒருவருக்காக இது செய்யப்படவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
</p><p>பிரதம நீதியரசர் சூரசேனவின் பதவிக் காலத்திற்குப் பின்னர் இத்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சியினர் கூறுவதன் மூலம், உண்மையில் ஒரு தனிநபரை இலக்கு வைப்பது அரசாங்கமா அல்லது எதிர்க்கட்சியா என்ற கேள்வி எழுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இப்போது கொண்டுவந்தால் தவறாகத் தெரிவது, டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் எவ்வாறு சரியாகும்?" என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p> இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்கள் இதற்கான நல்ல முடிவுகளைக் காண்பார்கள் எனவும், நீதியை நிலைநாட்டுவதில் அரசாங்கம் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது என உறுதியளிப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘போராட்டம்’ – Trailer வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.


இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>
</p><p>

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். 

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>

போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01dbd2e7-0591-45bf-88aa-2bb00e835aa3/26-6a93f9dcab12a.webp' /></p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p>

ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

‘போராட்டம்’ திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T16:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற இரு கொடூர கொலைகள்.. பல வருடங்களுக்கு பிறகு இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்டனை விதித்துள்ளார்.
</p><p>
திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை
மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்.</p><h2>குற்றச்சாட்டு நிரூபிப்பு&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
குறித்த 09 நபர்களையும் சந்தேகநபர்களாக பெயர் குறிக்கப்பட்டு, மேல் நீதிமன்றில்
சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள்
இடம்பெற்று வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ef98676-cc5a-4e82-9101-b326019060e9/26-6a94598800977.webp' /></p><p> </p><p>இந்நிலையில், குறித்த வழக்கு நேற்றைய வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்து
கொள்ளப்பட்ட வேளை, 09ஆம் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபிக்கப்பட்டமையால், அவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, ஏனைய 08
சந்தேகநபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், 08 பேரையும் மன்று விடுவித்தது.</p><p>

அதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை
கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இளைஞன்
மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால்,
இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து, மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T16:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளும் கட்சி அமைச்சர் மீது அர்ஜூன் மகேந்திரன் சுமத்தும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187"></link>
            <id>https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187</id>
            <summary type="text">&amp;nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தினை ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
தான் சட்டப்பூர்வமாக பெயரை மாற்றிக்கொண்டதாக அரசாங்க அமைச்சர் வெளியிட்ட கூற்றை "முற்றிலும் பொய்" என நிராகரித்து, அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f239d7-e8c4-4b65-b228-f2bad936715b/26-6a9455ccc92ab.webp' /></p><p>
</p><p>ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தன் மீதான இந்த குற்றச்சாட்டை உறுதியாக மறுத்துள்ள அவர், அந்த மறுப்பு அறிக்கையை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கில் தேடப்படும் அர்ஜுன் மகேந்திரன், 'ஹர்ஜன் அலெக்சாண்டர்' (Harjan Alexander) என தனது பெயரை மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
</p><p>நான் பெயரை மாற்றியுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பகிரங்கக் கூற்று வெளியிட்டுள்ளமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பதை உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் அறியத் தருகிறேன்" என மகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சிங்கப்பூர் முகவரியைக் குறிப்பிட்டுள்ள அவர், "லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன்" (Lakshman Arjuna Mahendran) என்ற தனது அதிகாரப்பூர்வ பெயரிலேயே இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என குறித்த ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பாக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான தடைகள் நிலவி வருகின்றன.
</p><p>இந்த நிலையில், அவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான மாற்று வழிகளை இலங்கை அதிகாரிகள் ஆராய்ந்து வரும் வேளையில், அவரது அடையாளத்தை மையப்படுத்தி அரசாங்கம் முன்வைத்த கூற்றை அர்ஜுன் மகேந்திரன் நேரடியாக மறுத்துள்ளார்.
</p><p>சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அமைச்சரின் கருத்தை நிராகரித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பின் நிலைப்பாடு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இந்த மறுப்பு அறிக்கையை அர்ஜூன் மகேந்திரன் வெளியிட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதனையும் குறித்த ஊடகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையைச் சூறையாடிய குடும்ப அரசியலின் கறுப்புப் பக்கம்! பதவிகளை விட்டு ஓடிய குடும்ப சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dark-side-the-family-politics-plundered-sri-lanka-1788101604"></link>
            <id>https://tamilwin.com/article/dark-side-the-family-politics-plundered-sri-lanka-1788101604</id>
            <summary type="text">சுதந்திரத்திற்குப் பிறகு சேனாநாயக்க மற்றும் பண்டாரநாயக்க குடும்பங்கள் மூலம் இலங்கையில் வாரிசு அரசியல் வேரூன்றியது எனலாம்.

 இது உயர் பதவிகள் ஒரு குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதந்திரத்திற்குப் பிறகு சேனாநாயக்க மற்றும் பண்டாரநாயக்க குடும்பங்கள் மூலம் இலங்கையில் வாரிசு அரசியல் வேரூன்றியது எனலாம்.

 இது உயர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வழிவகுத்தது.</p><p>

இல் ஜே.ஆர். ஜெயவர்தனாவால் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, அதிகாரங்கள் ஒருவரிடம் குவியவும், பிற்காலத்தில் சர்வாதிகாரப் போக்குக்கும் வழிவகுத்தது.
</p><p>
 2005 முதல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குடும்பத்தினர் நாட்டின் மிக முக்கியமான அமைச்சுகளைத் தங்கள் வசப்படுத்தினர்.</p><p> 

பல பிரம்மாண்ட கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் பெரும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
</p><p>
அறிவியல் பூர்வமற்ற தன்னிச்சையான பொருளாதார முடிவுகள் (வரி குறைப்பு மற்றும் உரத் தடை போன்றவை) 2022-இல் நாடு திவாலாவதற்குக் காரணமாயின.
</p><p>
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் (அரகலய), குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியது.</p><p>

முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PO3VtzCPTMY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T15:48:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தையின் மோசமான செயல் - 8 வருடங்களாக போராடிய மகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-sexually-abused-his-daughter-1788102709"></link>
            <id>https://tamilwin.com/article/father-sexually-abused-his-daughter-1788102709</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. </p><p>

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>

தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeac3f49-1434-44a3-952f-15194a375326/26-6a94492793d0f.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய்
இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T15:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட நெதன்யாகுவின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-son-urgently-evacuated-from-the-us-1788102510"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-son-urgently-evacuated-from-the-us-1788102510</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு
விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு
விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக
இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பான
ஷின் பெட் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுந்த கணிசமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை
மதிப்பீடு செய்த பின்னரே, அவரது பாதுகாப்புப் படையினருடன் அவரை உடனடியாக
தாயகம் திருப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவசரமாக வெளியேற்றம்</h2><p>
</p><p>
கடந்த டிசம்பர் மாதம் புளோரிடாவில் வசித்து வந்த யாயிர் நெதன்யாகுவைக் இலக்கு
வைத்து ஈரானிய சதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டதாக முன்னதாக அமெரிக்க ஊடகங்கள்
செய்தி வெளியிட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cba172-73a7-4d0b-8d2f-4b020c92aa4a/26-6a94487b39e52.webp' /></p><p>

வலதுசாரி செயற்பாட்டாளரும் பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடத்துனருமான யாயிர்
நெதன்யாகு, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் புளோரிடாவில் சொகுசு வாழ்க்கை
வாழ்ந்து வந்தமை இஸ்ரேலில் பலத்த விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.
</p><p>
குறிப்பாக காசா போர் தீவிரமடைந்த வேளையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய
இராணுவத்தினர் போருக்கு அழைக்கப்பட்ட நிலையில் இவர் வெளிநாட்டில்
தங்கியிருந்தமை அரசாங்க எதிர்ப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
</p><p>
இதேவேளை, தமது மகன்களில் ஒருவரைக் கொல்ல ஈரான் முயற்சிப்பதாக பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் தெரிவித்திருந்த கூற்றை உறுதிப்படுத்தும்
வகையில் இந்த அவசர வெளியேற்ற நடவடிக்கை அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T15:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இப்போ எங்கே அநுர..! நாட்டை மீண்டெழ முடியாத நிலைக்கு தள்ளியதாக அசாத் சாலி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/azad-sali-criticized-the-anura-government-1788102081"></link>
            <id>https://tamilwin.com/article/azad-sali-criticized-the-anura-government-1788102081</id>
            <summary type="text">அநுரவை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக பெண்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி வாக்கு கேட்டனர். ஆனால், அவர்களுக்காக அநுர என்ன செய்திருக்கிறார் என முன்னாள் மேல் மாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுரவை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக பெண்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி வாக்கு கேட்டனர். ஆனால், அவர்களுக்காக அநுர என்ன செய்திருக்கிறார் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் முகமது அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியபோது, நாட்டை மீட்பதற்காக சஜித்தோ அல்லது அநுரவோ முன்வரவில்லை. மாறாக, எமது நாட்டு மக்களுக்காக ரணில் விக்ரமசிங்கவே ஆட்சிக்கு வந்தார்.
</p><p>
ஆனால், தற்போது நாம் அவரை மறந்துவிட்டோம். வீதிகளில் இறங்கி அநுரவுக்காக வாக்கு கேட்ட பெண்களுக்காக இதுவரை அநுர ஒரு அமைச்சரவையைக்கூட சரியாக அமைக்கவில்லை.
</p><p>
அதேபோன்று, இனிவரும் காலங்களில் மாகாண சபைகள் இருக்காது என்பது போன்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.</p><p>

நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்தால், அநுரவையும் அவரது கட்சியையும் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றார்.&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p4KAtEJ4-UY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T15:03:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயதில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - 4 ஆண்டுகளுக்குப் பின் வந்த நீதிமன்றத் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sexual-abuse-of-a-14-year-old-girl-1788100850"></link>
            <id>https://tamilwin.com/article/sexual-abuse-of-a-14-year-old-girl-1788100850</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>
24 வருட சிறைத்தண்டனை</h2><p>
இந்த விடயம் தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தால், யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5a6b744-faa7-4214-9be5-e091a504f45a/26-6a944139cd26d.webp' /></p><p> </p><p>


சம்பவம் மீதான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T14:42:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்: உயிரிழப்பு 38 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-toll-russian-airstrike-kyiv-region-rises-38-1788099502"></link>
            <id>https://tamilwin.com/article/death-toll-russian-airstrike-kyiv-region-rises-38-1788099502</id>
            <summary type="text">உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக்
கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின்
எண்ணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக்
கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின்
எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி
தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் காணாமல் போயுள்ள நால்வரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>வான் தாக்குதல்</h2><p>
</p><p>
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கீவ் நகரை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் மேற்கொண்ட
இந்த தாக்குதலே, நடப்பாண்டில் அப்பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாக
பதிவாகியுள்ளது.
</p><p>
பீரங்கி குண்டுகள், மிதிவெடிகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளடங்கலாக பல்வேறு வெடி
பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் மீதே இந்த குண்டுவீச்சு
நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df077810-ec3e-4761-af3a-ad4265fb0584/26-6a943ff3719e0.webp' /></p><p>
</p><p>
தாக்குதலால் ஏற்பட்ட தீ பரவலை தீயணைப்புப் படையினர் பெருமளவில்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதிலும், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள
அழிவுகளும் பாதிப்புகளும் மிக அதிகமாக காணப்படுவதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி
குறிப்பிட்டுள்ளார்.</p><p> அத்துடன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும்
தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

கடந்த வாரம் முழுவதும் ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 2,000 ட்ரோன்கள், 1,600
வான்வழி குண்டுகள் மற்றும் 31 ஏவுகணைகளை ஏவி கடுமையான தாக்குதல்களை
நடத்தியுள்ளது.
</p><p>
ரஷ்யாவின் இத்தகைய ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் உரிய பதிலடி
நிச்சயம் வழங்கப்படும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T14:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் பேரழிவில் சிக்கிய நேபாளம் - 750 பேர் பலி: உதவிக்கரம் நீட்டும் நட்பு நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-is-caught-in-a-major-disaster-1788100169"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-is-caught-in-a-major-disaster-1788100169</id>
            <summary type="text">நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறை சரிவு
காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளில் சிக்கி
உயிரிழந்தவர்களின் எண்ணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறை சரிவு
காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளில் சிக்கி
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750ஆக அதிகரித்துள்ளதுடன், 3 000
மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இமாலயப் பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த கோர விபத்தினால்
சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம்
மதிப்பிட்டுள்ளது.
</p><p>
நேபாளப் பகுதியில் 734 பேரும், சீனப் பகுதியில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும்
பல்லாயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளனர்.</p><h2>

நேபாளத்தில் உயர்வடையும் ஆற்று நீர்மட்டம்</h2><p>
தொடர்ச்சியான மோசமான வானிலை மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால்
மீட்புப் பணிகளில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9db217c-d5f1-430c-823e-e1c19b719652/26-6a943e9caeca4.webp' /></p><p>
</p><p>
வெள்ளத்தால் சேதமடைந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளில்
நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை மீட்கும்
பணிகளுக்கு சர்வதேச உதவிகள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
இதனிடையே, மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பான்மையானவை அடையாளம் காண முடியாத
அளவிற்கு சிதைவடைந்துள்ளதால், அவற்றின் டி.என்.ஏ மாதிரிகள் மற்றும்
புகைப்படங்களை சேகரித்த பின்னர் நேபாளத்தில் உடல்களை நல்லடக்கம் செய்யும்
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
உலக வெப்பமயமாதல் காரணமாகவே இமயமலையில் பனிப்பாறை உறுதியிழந்து இந்த பேரழிவு
ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9859dfae-2932-4d1f-b63d-a145a166a184/26-6a943e9d7f5f9.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் - தகப்பன் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியை அதிர வைத்த நீதிமன்ற தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-sexually-assaulted-5-year-old-boy-1788098200"></link>
            <id>https://tamilwin.com/article/youth-sexually-assaulted-5-year-old-boy-1788098200</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

பெற்றோர் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனை, இளைஞர் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><h2>
19 வருட சிறைத்தண்டனை</h2><p>
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8264e4-b3b5-4afc-acf8-9e94989ced88/26-6a9437f95db38.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த சிறுவனை தவறாக வழி நடத்திய குற்றத்திற்காக 7 வருட சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குறித்த சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 12 வருட சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட
சிறுவனுக்கு 05 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும், தவறும் பட்சத்தில் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கின் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் - பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீள்நிர்மாணப் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/industrial-renaissance-of-the-north-1788097032"></link>
            <id>https://tamilwin.com/article/industrial-renaissance-of-the-north-1788097032</id>
            <summary type="text">பல தசாப்தங்களாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நவீன தொழிற்துறை மையமாக உருவாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தசாப்தங்களாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நவீன தொழிற்துறை மையமாக உருவாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது வடக்கின் தொழில்துறை மறுமலர்ச்சிக்கான முக்கிய ஆரம்பமாக அமையும் எனவும் கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு நேற்று நேரில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்கு இடம்பெற்று வரும் முதற்கட்ட கட்டுமான மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.</p><h2>பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை</h2><p> 

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் தலைவர் சதானந்தன் நேசராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

“பல ஆண்டுகளாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை இன்று மீண்டும் உயிர்பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d50d233-3291-417f-9266-bab1bee2072b/26-6a94355bf2cab.webp' /></p><p> </p><p>இது ஒரு தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் மாத்திரமல்ல. வடக்கின் தொழில்துறை வளங்களை மீண்டும் மக்களின் பொருளாதாரத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்.”

“இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் கடந்த ஜனவரி 21ஆம் திகதி நாட்டப்பட்டது. </p><p>தற்போது சுமார் ரூ.263 மில்லியன் பெறுமதியான முதற்கட்ட உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முழுமையான திட்டத்தை விரைவில் நிறைவு செய்து உற்பத்தியை ஆரம்பிப்பதே எமது நோக்கமாகும்.</p><p>

“நாட்டுக்குத் தேவையான பல அத்தியாவசிய இரசாயனப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.</p><h2>நேரடி வேலைவாய்ப்புகள்</h2><p>

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் முழுமையான உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, காஸ்டிக் சோடா, திரவ குளோரின் உள்ளிட்ட முக்கிய இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். </p><p>இதன் மூலம் இறக்குமதி சார்பைக் குறைத்து நாட்டின் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும்.

“குறிப்பாக குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கிலும் முக்கியமானதாகும்.
</p><p>
“இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான நோக்கம் வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும். தொழிற்சாலை நிர்மாணப் பணிகளிலும், எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகளிலும் பல்வேறு துறைகளில் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92557f7e-0f0a-4ae8-975a-234abcc04aad/26-6a94355d1869f.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக கிளிநொச்சி மற்றும் வடக்கு மாகாண இளைஞர்கள் தமது பிரதேசத்திலேயே தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.</p><p>

“வடக்கின் வளங்கள் வடக்கின் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட தொழிற்துறை வளங்களை மீண்டும் உயிர்ப்பித்து, உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
</p><p>
“பரந்தன் மீண்டும் இயங்கும் போது, அது ஒரு தொழிற்சாலையின் வெற்றி மாத்திரமாக இருக்காது.
</p><p>
கிளிநொச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கும், வடக்கின் தொழில்துறை முன்னேற்றத்திற்கும், நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கும் அது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

மக்களின் வளத்தைக் கொண்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே எமது இலக்கு” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae6e9ea2-b1f3-42e5-8b75-275590032593/26-6a94355dec551.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b557c2f4-8f42-4339-ae28-088298257d66/26-6a94355ece997.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T13:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருந்தூர் ரஜமகா விகாரை விவகாரம் - விசேட பொலிஸ் பாதுகாப்பு கோரும் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurundi-rajamaha-viharaya-affair-1788097282"></link>
            <id>https://tamilwin.com/article/kurundi-rajamaha-viharaya-affair-1788097282</id>
            <summary type="text">முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரையிலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த நடவடிக்கை எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரையிலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சு கலந்துரையாடி முடிவை அறிவித்துள்ளது.</p><h2> 


பொலிஸ் பாதுகாப்பு</h2><p>

கோயிலிலிருந்து அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்தக் கோரி, அதன் தலைமைப் பொறுப்பாளர் கல்கமுவே சந்தபோதி தேரர் அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de9da111-9113-4ae8-b400-c4c8e3adb86d/26-6a9433418c243.webp' /></p><p>

இதன் அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், இந்த துறைக்குப் பொறுப்பான அமைச்சர் டாக்டர் ஹினிடும சுனில் செனவி, கோயிலுக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைமைப் பொறுப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:43:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட சைப்ரஸ் கடற்பகுதியில் 270 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-carrying-270-people-capsizes-off-northern-1788095712"></link>
            <id>https://tamilwin.com/article/boat-carrying-270-people-capsizes-off-northern-1788095712</id>
            <summary type="text">வட சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

வட சைப்ரஸின் கிரினியா துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுசு துறைமுகம்
நோக்கி பயணித்த தனியார் சொகுசு படகு ஒன்றே, துறைமுகத்திலிருந்து புறப்பட்ட
சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.</p><h2>


படகு கவிழ்ந்து விபத்து</h2><p>
குறிப்பிட்ட படகில் 259 பயணிகளும் 8 பணியாளர்களும் அடங்கலாக மொத்தம் 267 பேர்
பயணித்துள்ளதாக வட சைப்ரஸ் போக்குவரத்து அமைச்சர் எர்ஹான் அரிக்லி
தெரிவித்துள்ளார்.</p><p>

கடலில் கவிழ்ந்த படகின் மீது சிவப்பு நிற உயிர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்தவாறு பயணிகள் அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf75a91b-1505-43ed-a2b9-a98c869ee7ed/26-6a942d376d095.webp' /></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரப் காவல்படையினரும் மீட்புக் குழுவினரும்
படகிலிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக கிரினியா துறைமுகத்திற்கு கொண்டு
செல்லப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>

விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மீட்புப்
பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்.. 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palaly-people-s-protest-enters-11th-week-1788094353"></link>
            <id>https://tamilwin.com/article/palaly-people-s-protest-enters-11th-week-1788094353</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு பலாலி காணி இழந்த மக்கள் இன்று(30) 11ஆவது வாரமாகவும் தமது தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாலி பகுதியில் இராணுவப் பயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு பலாலி காணி இழந்த மக்கள் இன்று(30) 11ஆவது வாரமாகவும் தமது தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>
பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப்பெற்று, தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, காணி உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>பலாலி மக்களின் போராட்டம்</h2><p>

பலாலி சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது பூர்வீக நிலங்களை நீண்டகாலமாக இழந்து, சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4211ac-03b5-4499-956d-4344e3931ee6/26-6a942a5c2e562.webp' /></p><p>

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே; அதை எப்படி உங்களுடையதாக மாற்ற முடியும்?”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படை”, “மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே?”, “வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
</p><p>
மேலும், தேர்தல் காலங்களில் மக்களின் காணிகள் மீள வழங்கப்படும் எனக் கூறி ஆதரவைப் பெற்ற அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்த பின்னர் காணி இழந்த மக்களின் பிரச்சினையை மறந்து செயற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.</p><h2>தொடர் போராட்டம்</h2><p>
</p><p>
பல தசாப்தங்களாக தமது காணிகளை இழந்து வாழ்ந்து வரும் நிலையில், பல்வேறு அரசாங்கங்கள் மாறினாலும் தமது அடிப்படைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
தமது பூர்வீக நிலங்களை விடுவிப்பது வெறுமனே காணி உரிமை தொடர்பான பிரச்சினை அல்ல என்றும், அது தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததிகளின் உரிமையுடன் தொடர்புடையது என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/199976ff-7026-4b75-a71d-0187834cd340/26-6a942a5d095ae.webp' /></p><p>

அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய செயற்றிட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும், இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் விரைவாகக் கையளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் காணி இழந்த பலாலி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்நிலையில், 11ஆவது வாரமாகவும் இடம்பெற்றுள்ள இந்த தொடர் போராட்டம், பலாலி மக்களின் காணி உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T13:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பேருந்து சாரதிகளுக்கு புதிய எச்சரிக்கை - மீறினால் நடவடிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-warning-to-jaffna-bus-drivers-1788094360"></link>
            <id>https://tamilwin.com/article/new-warning-to-jaffna-bus-drivers-1788094360</id>
            <summary type="text">&amp;nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும்
பேருந்துகள் அனைத்தும் “சிசுசெரிய”சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும்
பேருந்துகள் அனைத்தும் “சிசுசெரிய”சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிய
அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், பதிவு
செய்யப்படாமலும் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலும் இவ்வாறான சேவையில்
ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை
கடுமையாக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><h2>

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான
போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகாரசபையில் முறையாகப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். </p><p>

எனினும், உரிய அனுமதியோ அல்லது பதிவோ இன்றி, “சிசுசெரிய” சேவையின் கீழ் இடம்பெறாமல் சில
பேருந்துகள் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவது
கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59b0c19-a1fd-46b1-a349-6031f76df633/26-6a9427fea36cf.webp' /></p><p>
</p><p>

இத்தகைய பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து
மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும்
வழங்கப்பட்டுள்ளன. </p><h2>


தகுதிகளை பெற செய்ய வேண்டியவை..</h2><p>

இருந்தபோதிலும், இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத மற்றும்
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத தரப்பினர் தொடர்ந்து பாடசாலை
சேவையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக அதிகாரசபையால் உடனடியாக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

எனவே, பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்லும் பேருந்து
சேவைகளை நடத்தும் அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு
அமைவாக தங்களைப் பதிவு செய்து, தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகளைப்
பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் கேட்டுக்கொண்டார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி முறையில் பல நெருக்கடிகள்! மீண்டும் சிந்திக்க வேண்டும் - ஜோசப் ஸ்டாலின் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/josep-starlin-statment-about-education-1788091062"></link>
            <id>https://tamilwin.com/article/josep-starlin-statment-about-education-1788091062</id>
            <summary type="text">தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களை கொண்டு வருவதாயின் அது குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களை கொண்டு வருவதாயின் அது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். </p><p>

அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் இதுவரை முறையான தயார்நிலை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த ஆண்டு முதல் முதலாம் மற்றும் 6 ஆம் தரங்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. எனினும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.</p><h2>ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடு</h2><p>
</p><p>
இந்த சீர்திருத்தங்கள் அடுத்த வருடம் கொண்டுவரப்பட்டாலும், 1ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் எப்படியும் அடுத்த வருடம் வரவுள்ளன. 

ஆனால், அதற்கான ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடு இன்னும் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது.</p><p> இந்த சீர்திருத்தங்கள் தெளிவாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கொண்டுவந்த சீர்திருத்தங்களின் நீட்சியாகவே உள்ளன. 

நடைமுறைப்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகவே இது காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f201c3c-63b7-4bfa-a51e-a1fb35f79eb0/26-6a942527c869e.webp' /></p><p> </p><p>அதேபோன்று, இந்த கல்வி சீர்திருத்தங்களுக்காக விசேட கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு கடந்த நாட்களில் ஜனாதிபதி தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தேசிய கல்வி ஆணைக்குழு அதனைத் தயாரித்து முடித்துள்ளதா என்பது எமக்குத் தெரியாது.</p><h2>எந்தவொரு திட்டமும் இல்லை</h2><p> </p><p>அது இன்னும் மக்கள் மத்தியில் வரவுமில்லை, அதுபற்றிப் பேசப்படவுமில்லை. 

எந்தவொரு திட்டமுமின்றி கடந்த அரசாங்கங்கள் கொண்டுவந்த சீர்திருத்தங்களையே இவர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர். அதற்கான எவ்வித தயார் நிலையும் இன்னும் தென்படவில்லை.</p><p> இது ஒரு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. 

தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாயின் அது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் வந்துள்ள நடைமுறை! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/avoid-the-use-of-single-use-plastic-water-bottles-1788090058"></link>
            <id>https://tamilwin.com/article/avoid-the-use-of-single-use-plastic-water-bottles-1788090058</id>
            <summary type="text">ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்கால சந்ததிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>
ஒரு சிறுபொழுது வசதிக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், அழியாமல் பல நூறு ஆண்டுகள் சூழலில் நிலைத்திருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>சூழலுக்கு உகந்த மாற்று வழி</h2><p>இது தொடர்பான அறிவிப்பில் மேலும், குறித்த போத்தல்களுக்கு மாற்றாக, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடிப் போத்தல்கள் அல்லது சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விசேட சுற்றுநிருபம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55350194-65a8-481d-968b-5a4be35535f5/26-6a94198094e9d.webp' /></p><h2>விசேட திட்டங்கள் நடைமுறை</h2><p>
</p><p>
அத்துடன், திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டத்தின் ஊடாக, உற்பத்தியாளர்களின் இணக்கப்பாட்டுடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விசேட நாடளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சட்டதிட்டங்களுக்கும் அப்பால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தலை உடன் எடுத்துச் செல்வது போன்ற சிறிய அன்றாட பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் உறவுகளுக்காக லண்டனில் வெடித்த போராட்டம் - மக்களின் முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-london-1788093469"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-london-1788093469</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30.08.2026) இலங்கையில் இடம்பெற்ற இன
அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30.08.2026) இலங்கையில் இடம்பெற்ற இன
அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் மாநாடு இடம்பெற்றன.</p><p>

இதனைத் தொடர்ந்து, லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி” எனும் தொனிப்பொருளுடன்
சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>


இந்த மாபெரும் போராட்டத்தில் லண்டனில் வாழும் ஈழத்தமிழர்கள், இளைஞர்கள், சமூக
ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பெருமளவில் கலந்து கொண்டு தமது ஆதரவையும்
எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
</p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், உண்மை வெளிப்படுத்தப்பட
வேண்டும், குற்றவாளிகள் பொறுப்புக்கூற வேண்டும்&nbsp; உள்ளிட்ட பல கோரிக்கைகள்
போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டன.</p><p> சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
நாளான இன்று, தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும்,
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிக்குரல் லண்டன் வீதிகளில் மீண்டும்
வலுவாக ஒலித்தது.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - யாழில் கூடிய சர்வதேச பிரதிநிதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111"></link>
            <id>https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111</id>
            <summary type="text">புதிய இணைப்புவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு
இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு
இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில்
"நீதிக்கான நீள் பயணம்" எனும் சர்வதேச மாநாடு இடம்பெற்றுள்ளது.</p><p>

இந்த மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின்
தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் மற்றும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ்
உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர். </p><p>

மாநாடு இடம்பெற்ற மண்டபத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாவனை
பொருட்கள், அவர்கள் விரும்பி சேகரித்த பொருட்கள், அவர்களின் நினைவாக இன்றும்
உறவுகளிடம் உள்ள பொருட்கள் என்பவற்றை காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றையும் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f874b2-3625-4d57-9fa5-c50202e94dc2/26-6a942206e2ba1.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான
நீள்பயணம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு தற்போது யாழ்ப்பாணம் தந்தை
செல்வா கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.&nbsp;</p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் மாநாடு நடைபெற்று வருகின்றது.</p><p>இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள்
பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி
நடைபெற்று வருகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ejyJXTi2tFs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட
குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில்
சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.</p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் பேரணியின்
முன்னிலையில் சென்றதுடன், உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை
ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.</p><h2>உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணி</h2><p>
</p><p>
பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள்,
உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணியில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197f43f3-3b8c-4f3c-83ae-34df0549769a/26-6a93c66a82665.webp' /></p><p>

உலகளவில் அதிகளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள்
பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்படும்
நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீதி கோரிக்கை இதுவரை
நிறைவேற்றப்படவில்லை.
</p><p>
யாழ்ப்பாண நகரின் ஊடாக முன்னேறிய பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச்
சென்றடைந்தது. அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்
என்றும், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற
குடும்பங்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் குறித்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UU565u-hlBQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:29:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sinhala-buddhist-leaderships-designed-genocide-1788090486"></link>
            <id>https://tamilwin.com/article/sinhala-buddhist-leaderships-designed-genocide-1788090486</id>
            <summary type="text">ஒரு பௌத்தனே இலங்கை அரசின் தலைவனாக இருக்க வேண்டும் என்பது இலங்கை அரசியல் சாசனத்தில் வரையப்படவில்லைத்தான். ஆயினும் ஒரு பௌத்தம் மட்டுமே இலங்கை சிம்மாசனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு பௌத்தனே இலங்கை அரசின் தலைவனாக இருக்க வேண்டும் என்பது இலங்கை அரசியல் சாசனத்தில் வரையப்படவில்லைத்தான். ஆயினும் ஒரு பௌத்தம் மட்டுமே இலங்கை சிம்மாசனத்தில் அமர முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது. </p><p>ஆயினும் இலங்கை அரசியலில் 12ம் நூற்றாண்டில் ஒரு பௌத்தன் மாத்திரமே சிம்மாசனத்தில் அமரமுடியும் என்பதை சட்டமாக்கி கல்வெட்டாக பொறிக்கப்பட்டும் விட்டது.</p><h2>தமிழினப் படுகொலை</h2><p> </p><p>அது நவீன அரசியல் சாசனத்தில் எழுதப்படவில்லை ஆயினும் பௌத்த மகா சங்கத்தின் ஊடாகவும், பௌத்த தர்மத்தின் ஊடாகவும் சிங்கள பௌத்தர்களின் சமூகச் சட்டமாக நிலைபெற்றுவிட்டது.</p><p> அதுவே இன்றைய தமிழினப் படுகொலைக்கு காரணமாகவும் இருப்பதோடு அரசின் தலைவர்களே அதன் அச்சாணியாகவும், யார் எத்தகைய நல்மனம் கொண்டவராக இருப்பினும் இலங்கை சிம்மாசனத்தில் அமர்ந்தாதும் அவர்கள் இனப்படுகொலையின் பங்குதாரராகவும், அதனை வழிநடத்திச் செல்பவராகவுமே செயலாற்ற முடியும். </p><p>

இந்தப் பின்னணியை ஆழமாக வரலாற்று உணர்வோடும், வரலாற்றுப் போக்கிலும், வரலாற்று தத்துவவியல், மற்றும் சமூகவியல் மனப்பாங்கு ஆகிய முறைகளுக்குள்ளால் ஆராய்கின்றபோது இலங்கை அரசியலில் பௌத்தத்தின் செல்வாக்கினால் இனக்குரோதம் எத்தகைய ஆழமான தாக்கத்தை செலுத்துகிறது என்பதை உணர முடியும்.
</p><p>
இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் பௌத்தன் அல்லாத யாரும் பிரதமமந்திரியாகவோ, ஜனாதிபதியாகவோ இலங்கை அரசுத் தலைவராக அமரவில்லை. அமரவும் முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b5c847-3e1a-4871-8a2f-13d8adefc71d/26-6a94214eb1e07.webp' /></p><p> </p><p>சிங்கள அரசியல் தலைவர்களை வரிசைப்படுத்தி பார்க்கின்றபோது ஆச்சரியமான அரசியல் அதிகார அவாவின் உச்சங்களை காணமுடியும். </p><p>அந்த அரசியல் அதிகார அவாவின் நிமித்தம் மதம் மாறியவர்களையும் காணமுடியும், மதத்தின் பெயரால் அவர்கள் மேற்கொண்ட அயோக்கியத்தனங்களையும் காணமுடியும், பார்வைக்கு பௌத்தனாகவும் சொந்த வாழ்க்கை முறையால் கிறிஸ்தவனாகவும், மேற்கத்திய கலாச்சாரத்தை வரித்துக் கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணமுடியும். </p><p>அரசியல் அதிகாரத்திற்காக பௌத்தராகவும், சிங்களவனாகவும், தமிழினம் எதிர்பாளனாகவும், இந்திய எதிர்பாளராகவும் தம்மை காட்டிக் கொண்டவர்களை காணமுடியும். </p><p>அதே நேரத்தில் இந்திய எதிர்ப்பை காட்டியவர்கள் இந்திய அரசியல் தலைவர்களுடன் குடும்ப உறவை அன்னியோன்னியமாக பேணியதையும் காணமுடியும்.</p><p>

இந்த வகையிலானதம் அனம் சார்ந்த போக்கு முற்றிலும் மாறான போக்கே தமிழ் அரசியல் தலைவர்களிடம் உண்டு.</p><h2>சிங்கள பௌத்த தலைமைகள்</h2><p> பெயரால் தமிழனாக வாழ்ந்து கொண்டு சிங்கள தேசத்தில் சிங்களவனாகவும், மேற்குலக கலாச்சாரத்தையே வாழ்க்கை முறையாக கொண்டவர்களாகவும், தேர்தலுக்கு வரும்போது வேட்டி சட்டை போட்டவர்களாகவும், அதே நேரத்தில் கிறிஸ்தவனாக வாழ்ந்து கொண்டு அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொண்டு, சிங்கள தேசத்தில் ஆதரவையும் பெற்றுக் கொண்டு, தனது மரணக்கிரியை தமிழ் சைவம் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று முன்கூட்டியே கூறிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்தையும் அரசியல் தலைவராக நாம் கொண்டாடியிருக்கிறோம்.</p><p> இப்போதும் தமிழின அரசியல் பேசிக் கொண்டு வாழ்க்கை முறையால் சிங்கள தேசத்தில் வாழ்ந்து சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் திளைத்து, வீட்டில் தனது வாரிசுகளை சிங்கள பௌத்தத்தில் கலந்துவிட்டவர்களையும் தலைவராக ஏற்று அரசியல் தற்கொலை செய்ய இப்போதும் மானங்கெட்ட தமிழர்கள் தயாரகின்றனர். அதுவும் முடஇடாள்கள் கோளோச்சும் அன்னைய காலத்தில் நடந்தே தீரும். </p><p>“கொடுகுடி செற்கேளா“ என முனுமுனுத்து மனதை ஆற்றுப்படுத்திக்கொள்வோம்.

இங்கே தென் இலங்கையின் சிங்கள பௌத்த அரசியலில் அரசியல் தலைவர்கள் எம் மதத்திற்கு போனாலென்ன? எந்த கலாச்சாரத்தை பின்பற்றினால் என்ன?, அவர்கள் மகாவம்சத்தின் தம்மதீபக் கோட்பாட்டை கைவிட்டதுகிடையாது. </p><p>அதனை மேலும் மேலும் பலப்படுத்தி அந்தக் கோட்பாட்டின் இலட்சியத்தை அடைவதற்கான அனைத்து வகையான அரசியல் முன்னெடுப்புக்களையும் தமது அரசியல் வாழ்க்கைக்காலம் முழுவதிலும் முன்னெடுத்து இருக்கிறார்கள் என்பது சிங்கள மக்களுக்கு அவர்களின் தலைவர்கள் பற்றி பெருமிதம் அடையக்கூடிய வரலாற்றுத் பெருமைதான். </p><p>எந்தச் சிங்களத் தலைவர்களும் சிங்கள பௌத்தத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய எந்த ஒரு அரசியல் முடிவையோ, செயற்பாட்டையோ எந்தச் சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5c0fb6-a085-44e6-8173-13bdcafae12e/26-6a94214f75789.webp' /></p><p> இலங்கையின் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட சோமநாமதேரர் என்ற பௌத்த துறவி தனக்கு மரணதண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் கிறிஸ்தவனாக மாறி பீட்டர் என்ற பெயருடன் தூக்கு கைக்கில் தொங்கி மரணித்தார்.</p><p> அவர் மரணத்திலும் கூட தான் பின்பற்றிய பௌத்த மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படக் கூடாது என்பதில் திடமாக இருந்துள்ளார் என்பதை தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் மக்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.
</p><p>
இலங்கை சிங்களத் தலைவர்களின் பரம்பரையினர் காலனிய ஆட்சிக்காலத்தில் அரச பதவி அதிகாரங்களை பெறுவதற்காக கிறிஸ்தவர்களாக மதம் மாறி பதவிகளை பெற்றுனார்.</p><p> அவர்கள் பௌத்தத்தின் வளர்ச்சிக்கும் சிங்கள மொழி வளர்ச்சிக்கும் பெரும்பணியாற்றினர். அவர்களின் வரிசுகள்தான் சுதந்திரத்திற்கு பின்னர் அரசியல் அதிகார பதவிகளை பெறுவதற்காக மீண்டும் பௌத்தர்களாக மாறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள் அல்லது பெற்றுக்கொண்டார்கள். </p><p>இத்தகைய அரசியல் அதிகார அவா என்பது 12ம் நூற்றாண்டில் நிசங்கமல்லன் மன்னன் கையாண்ட political philosophical strategic ன் அரசியல் அதிகார தன்முனைப்புக்களின் ஒரு சுவாரசியமான வரலாற்றுத் தொடர்ச்சிதான். </p><p>சிங்களத் தலைவர்களின் செயற்பாடுகள் உண்மையில் நிசங்கமல்லனின் அதிகார-அரசியல் கோட்பாட்டு மூலோபாயத்தின்(Power-political theoretical strategy) தொடர்ச்சி” என்பதை நிரூபிப்பதாகவே சிங்களத் தலைவர்களின் வாழ்க்கை முறையும் அரசியல் முன்னெடுப்புக்களும் உள்ளன.</p><p>

இலங்கையின் சிம்மாசனத்தில் ஒரு பௌத்தன் மாத்திரமே அமர வேண்டும் என்ற எழுதப்பட்ட சட்டம் எப்போது ஆரம்பம் ஆகிறது என்றால் இப்போது நமக்கு கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பொல்லனார்வை ராஜதானியில் கி.பி 1187-1196 ல் நிசங்கமல்லனின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பொலநறுவை வடக்கு வாயில் கல்வெட்டு (North Gate Slab Inscription), மற்றும் கல்பொத்த (Gal Pota) கல்வெட்டு ஆகியவை இரண்டும் அவரது அரசுரிமை, பௌத்தம், வம்ச உரிமை ஆகியவற்றை இணைத்துக் காட்டுகின்றன.</p><h2>&nbsp;ஜனாதிபதிகளின் தனிப்பட்ட சமய அடையாளம்</h2><p> </p><p>
1. “பௌத்தனே அரசனாக வேண்டும்”என்பதை வடக்கு வாயில் கல்வெட்டில், சோழர், கேரளர் முதலிய நாடுகளைச் சேர்ந்த பௌத்தரல்லாத இளவரசர்களை இலங்கை அரியணையில் அமர்த்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதே கல்வெட்டு, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரச பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே, “இலங்கையை ஆளுபவன் பௌத்தனாக இருக்க வேண்டும்” என்ற கருத்து நேரடிக் கல்வெட்டு ஆதாரமாகிறது.</p><p>
2. “தர்மத்தைப் பாதுகாப்பது அரசனின் கடமை”என்பதை நிசங்கமல்லனின் ஹதாதகே (Hatadage) கல்வெட்டு அதன் தொடக்கத்திலேயே“This Dhamma … should always be preserved.” என்று பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
</p><p>
 இங்கு “பௌத்தனே அரசனாக வேண்டும்“ என்பதம் “அரசன் பௌத்த சாசனத்தின் பாதுகாவலன்“ என்ற அரசியல்–மதக் கருத்து வெறும் பின்னாளில் உருவாக்கப்பட்ட விளக்கம் அல்ல அது நிசங்கமல்லனின் கல்வெட்டு மரபிலேயே உள்ளது என்பதே முக்கியமாக கவனிக்கத்தக்கது.</p><p> இவை இரண்டும் ஒரே அரசியல் அதிகார அமைப்பியலாக இணைக்கப்படுகின்றமை நிசங்கமல்லனின் political philosophy மற்றும் power politics கருத்தியல் வலுவடைகிறது தொடர்வதை காட்டுகிறது.

நிசங்கமல்லனின் கல்வெட்டுகளில் மூன்று கருத்துகள் ஒன்றோடொன்று இணைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7794d79-a53c-42c8-b511-b03017741964/26-6a94215049c1e.webp' /></p><p>
(1)யாருக்கு இலங்கை அரியணையில் உரிமை?
(2) பௌத்தரல்லாத சோழ/கேரள ஆட்சியாளர்கள் அரசனாகக் கூடாது.
(3) அரசனின் கடமைகளில் புத்த சாசனத்தைப் பாதுகாப்பது முக்கியமானது.
மேலும் கல்பொத்த கல்வெட்டில் நிசங்கமல்லன் தனது வம்ச உரிமையை விஜயன் மற்றும் கலிங்க வம்சத்துடன் இணைத்துக் காட்டுகிறார். அதே கல்வெட்டில் தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.</p><p>எனவே அவரது அரசியல் தர்க்கமானது கலிங்க வம்ச உரிமை என்பது பௌத்த அரசுரிமை, புத்த சாசனப் பாதுகாப்பு என்பவற்றால் இலங்கையின் அரியணைக்கான அரசியல் சட்டபூர்வத்தன்மை(legitimacy) வலியுறுத்துவதாக அமைந்த பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைக்கொள்ளும் கல்வெட்டு ஆதாரமாகும்.
</p><p>
 முன்கூறிய நிசங்கமல்லனின் “strategic move” எப்படி தொடர்புபடுகிறது என்றால் அதற்கான ஒரு முக்கியமான ஆதாரமாக இந்திய அரசாங்கத்தின் Indira Gandhi National Centre for the Arts (IGNCA) வெளியிட்ட நிசங்கமல்லனின் இராமேஸ்வரம் கல்வெட்டு ஆய்வு அவரது கல்வெட்டுகளின் புகழுரைகள் வெறும் அரசனைப் புகழ்வதற்காக மட்டும் அல்லாமல், “Kalinga dynasty” இலங்கை ஆட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் பிரச்சாரமாகவும் செயல்பட்டதாக ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.</p><p> இதுவும் ஏற்கனவே குறிப்பிட்டநிசங்கமல்லனின் power politics / strategic legitimacy கோட்பாட்டிற்கான இன்னுமொர் வலுவான ஆதாரம்.
</p><p>
நிசங்கமல்லனின் கல்வெட்டுகள், இலங்கை அரியணை பௌத்த அரசரால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அரசனின் முக்கியக் கடமைகளில் புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் அடங்கும் என்றும் காட்டுகின்றன; </p><p>அதேவேளை, கலிங்க வம்சத்தின் இலங்கை அரசுரிமையையும் அவர் வலியுறுத்துகிறார் “அரசன் என்பவன் பௌத்த சாசனத்தின் பாதுகாவலன்” என்ற அரசியல் கோட்பாடு இன்றைய இலங்கை சிங்கள பௌத்த இனவாத அரசியலின் கட்டமைக்கட்ட இனப்படுகொலை அரசியல் செயல்முறைக்கு அத்திவாரம் இடப்பட்டுவிட்டது என்பதும், அதுவே கட்டமைக்கப்பட்ட தமிழின இனப்படுகொலையாக வளர்ச்சி அடைந்துள்ளது என்ற உண்மையும் புரியும்.
</p><p>

நிசங்கமல்லன் தன்னை ஒரு தீவிர பௌத்தனாக காட்டியதே தனது அரசியல் அதிகார நலன்களின் அடிப்படையில்த்தான். </p><p>அந்த அரசியல் அதிகார நலன் என்பது இலங்கை அரசாட்சி அதிகாரத்தை கைப்பற்றவும், அந்த ஆதிகாரத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்குமான அரசியல் தத்துவார்த்த மூலோபாயம் வியூகம் (political philosophy strategic move).</p><p> இதனை புரியாமல் மேலெழுந்தவாரியாக நிசங்கமல்லனின் பௌத்த மதப் படிமத்தை வெறும் “தீவிர பௌத்தமதப் பக்தி” என்று எடுத்துக்கொள்வது அவரது அரசியல் அதிகார நலன் உத்தியை மறைத்துவிடுவதாகவே அமையும். </p><p>அவர் பௌத்தத்தை தனது அரசியல் அதிகார அடைதலுக்கான கருவியாக பயன்படுத்தினார்.</p><p> ஆனால் அவர் காலவோட்டத்தில் பௌத்தத்திற்குள் அமிழ்ந்துபோனார். 

 அந்த அரசியல் போக்கிற்கு அமைவாகவே காலணி ஆட்சியின் முடிவுக்கு பின்னான சுதந்திர இலங்கையின் அனைத்து பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் தனிப்பட்ட சமய அடையாளம், மற்றும் அவர்களின் பரம்பரையினர் சில நூற்றாண்டுகளின் முன்னர்தான் இலங்கைத்தீவில் குறியேறினர் என்பதையும் துல்லியமாக நிரூபிக்க முடியும். </p><p>குறிப்பாக சேனநாயக்கா, கொத்தலாவல, ஜெயயவர்த்தனா, பண்டாரநாயக்கா, ரணில் விக்ரமசிங்க, ரஜபக்சேக்கள் போன்ற தலைவர்களின் மத அடையாளம், குடும்பப் பின்னணி, அரசியல் அடையாளம் ஆகியவை ஒத்த தன்மையுடையவை என்ற கட்டமைப்பு ரீதியான வாதம்(structural argument) மிகவும் சுவாரசியமானதும் ஆச்சரியமானதுமான உண்மைதான்.</p><h2>&nbsp;அரசியல் அதிகார பதவி</h2><p> </p><p>ஆயினும் இந்த ஒத்த முறைமைக்குள் பலரும் புரிந்து கொள்ள முடியாத அரசியல் தத்துவார்த்த (political philosophy) உண்மைகள் பொதிந்துள்ளது என்பதுதான் இங்கே முக்கியமானது.
</p><p>
காலனித்துவத்திற்கு முந்தைய தேவநம்பிய தீசன் ஆட்சிக் காலத்தில் இருந்து சிங்கள இராச்சியத்தில் அரச அதிகாரத்தின் சட்டபூர்வத்தன்மைக்கு(legitimacy) பௌத்தம் முக்கிய ஆதாரமாக இருந்தது. </p><p>பின்னர் ஐரோப்பிய காலனித்துவ காலத்தில் உயர்கல்வியையும், அரசியல் அதிகாரத்தைப் பெறவும் கிறிஸ்த்தவராக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டபோது உயர்குழத்து குடும்பங்கள் கிறிஸ்தவமயமாகி அரசியல் அதிகார பதவி, பட்டங்களை பெற்றன.</p><p> அதே உயர்குழம் சுதந்திரத்திற்குப் பின்னர் அரசியல் சட்டபூர்வத்தன்மை மீண்டும் பௌத்த மதத்திற்கு மாறி பௌத்த அடையாளத்துடன் இணைந்து அதிகார பீடத்தில் அமர்ந்தனர். இந்த மாற்றத்தை வரலாற்று ரீதியாக ஆராய்வதும் அறிவதும் விடுலைக்காக அதாவது அரசியல் அதிகாரத்தை மீட்கப்போராடும் ஈழத்தமிழர்களுக்கு நிச்சயமாக பயனுள்தாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1defc1-a35a-498b-bef2-f351fd19f718/26-6a942150ed089.webp' /></p><p>
</p><p>
12ம் நூற்றாண்டின் நிசங்கமல்லனுடைய அரசியல் போக்குத்தான் காலனித்துவ காலத்தில் அரசியல் அதிகார அவா குணாம்சத்திலோ, அதிகார கையிருப்பிலோ வர்க்க அடிப்படையிலோ மறவில்லை. கற்புல அடையாள மாற்றம் அதவது பௌத்தத்திற்கு பதிலாக கிறிஸ்தவ அடையாளம் மட்டுமே மறியது் இதனை மஞ்சல் அடை அணிந்தவர் வெள்ளை ஆடை அணிந்ததான தோற்றப்பாட்டு மாற்றமேயன்றி ஆள் மற்றமல்ல என்பதே உண்மையாகும்.</p><p>

போர்த்துக்கேயர், டச்சுக்கார்ர், பிரித்தானியர் என்ற காலனித்துவ அரசுகள் பாரம்பரிய இலங்கை அரச அதிகார அமைப்பை உடைத்து அதிகார மையம்தை தாம் எடுத்திக்கொண்டாலும் மக்கள் மீது அரகார்ப் பிரயோக்கத்தை காலணித்துவத்தின் பெயரால் பழையா அதிகாரவர்க்கமே பிரயோகித்தது. </p><p>இதற்காகவே புதிய கல்வி, நிர்வாகம், சட்டம், நில உரிமை, வணிகம் ஆகியவற்றின் மூலம் ஒரு புதிய மேற்கத்திய கல்வியறிவு பெற்ற, கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ உயர்குடியாக அவர்களே உருவானார்கள். அவர்களின் குடும்பங்கள் காலனித்துவ நிர்வாகத்தில் உயர்ந்த பதவிகளைப் பெற்றனர்.</p><p> இது “அரசியல் அதிகாரத்திற்காக மதமாற்றம்” என்ற ஒரு சாத்தியமான தந்திர விளக்கத்தைக் கொண்டிருக்கிறது.</p><p>

பின்னர் 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பௌத்த மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் பௌத்த அடையாளம் மீண்டும் அரசியல் மற்றும் தேசிய அடையாளத்தின் முக்கிய கூறாகியது.</p><h2>&nbsp;தமிழ் அரசியல் பரப்பு</h2><p> இதுதான் சிங்களவர்களின் அதிகார அவா மிகவும் வலுவடைந்து கட்டமைப்பு ரீதியான இணைப்புத்(structural parallel) தன்மை வெளிப்படுத்துகிறது. சிங்கள மன்னர்கள் காலத்தில் பௌத்தம் -அரச அதிகார சட்டபூர்வத்தன்மை (legitimacy) என்று இருந்த நிர்பந்தம் காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவம்/மேற்கத்திய கல்வி - காலனித்துவ அதிகார பதவி நுழைவு என்ற வழியே பின்பற்றப்படுகிறது. </p><p>இதன் தொடர்ச்சி இலங்கை சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான கலத்தில் பௌத்த மறுமலர்ச்சி - பௌத்த சிங்களத் தேசிய அரசியல் சட்டபூர்வத்தன்மை மறுவடிவம் பெறுகிறது.
</p><p>
இதை “நிசங்கமல்லனின் மூலோயம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் இடையறாது தொடர்ந்தது” என்று கூறுவது நிசங்கமல்லன் காலத்தில் தெளிவாகக் காணப்படும் அரச அதிகாரத்தையும் பௌத்த சட்டபூர்வத்தன்மையையும் இணைக்கும் அரசியல் கருத்து, பின்னாளில் உறங்குநிலையிலிருந்து முற்றிலும் அதே வடிவில் இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னான அரசியல் கலாச்சாரத்தில் மீண்டும் வலுப்பெற்று நிறுவன அமைப்பு முறையாக(institutional pattern) நிலைத்தது விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e20c5661-19ba-42d6-8db4-6ac27dadaa4d/26-6a9421519d5e3.webp' /></p><p>
</p><p>
அரசியல் மேடையில் ஆடை மாற்ற வேறுபாடே அன்றி ஆனால் ஆட்டம் பழையதே. காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவம் ஏற்றுக்கொண்ட இலங்கை உயர்குடும்பங்களின் வாரிசுகள் சுதந்திரத்திற்குப் பின்னர் பௌத்தர்களாக மாறியது என்ற கூற்றையும் குடும்பம் குடும்பமாக ஆதாரத்துடன் ஆராய்ந்தால் உண்மை பட்டவர்த்தனமாக தெரியவரும்.
</p><p>
நிசங்கமல்லன் வெளிப்படுத்திய “பௌத்தமதம் + அரச அதிகார சட்டபூர்வத் தன்மை + தீவின் அரச இறைமை” என்ற அரசியல் வடிவம், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் நீண்டகால நிறுவனமயமான நினைவுகளாக(institutional memory) நிலைத்துள்ளது. காலனித்துவ காலத்தில் அது தற்காலிகமாக சவாலுக்கு உட்பட்டாலும், பௌத்த மறுமலர்ச்சி மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய பெரும்பான்மை அரசியலின் வழியாக புதிய வடிவில் மீண்டும் அரசியல் சட்டபூர்வ தன்மையின் முக்கிய ஆதாரமாகியது.</p><p> இதுதான் சிங்கள பௌத்த அரசியல் தத்துவார்த்த நடைமுறையாக உருப்பெற்றிருக்கும் மிகவும் வலுவான வடிவம்.

ஆனால் தமிழ் அரசியல் பரப்பில் தாம் பின்பற்றிய மதத்திற்கும், தன்னை பின்தொடர்ந்த மக்களுக்கும் உண்மையா நடக்காத, விசுவாசம் இல்லாதவர்களை தலைவனாக ஏற்ற தமிழ் மக்கள் இப்போது வெட்கி தலை குனிகின்றனர். </p><p>“தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்“ என்ற தலைவர்களுக்கு நாம் “தந்தை“ எனபட்டம் சூட்டியிருக்கிறோம். </p><p>எதையுமே தத்துவார்த்த அணுகுமுறைக்கூடாக பார்க்காமல் வெறும் கட்புலப் பார்வைக்கூடாக பார்த்து வீட்டில் பூச்சிகளாக பறந்து நெருப்பில் விழுந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினம் தன்னை சுய பரிசீலனை செய்து அவசியம். </p><p>தமது கடந்தகால தலைமைகளின் தலைமைத்துவ ஆளுமையை பகுப்பாய்வு செய்வதன் மூலமே ஆளுமை மிக்க புதிய தலைமைத்துவ உருவாக்கத்திற்கான அகப் புறச் சூழலை தமிழ அரசியல் பரப்பில் ஏற்படுத்த முடியும் அதுவே நமக்கு உடனடி தேவையாகவும் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T12:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு.. முடக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/66-suspects-involved-in-organized-crime-1788076816"></link>
            <id>https://tamilwin.com/article/66-suspects-involved-in-organized-crime-1788076816</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் 2024 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி முதல் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான 113 விசாரணைகளுடன் தொடர்புடைய சுமார் 6,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இந்தக் காலப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளன.</p><h2>சிவப்பு அறிவித்தல்கள்</h2><p>
</p><p>
இதன்படி, 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 5,423 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை எனவும், மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான 209 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பிரமிட் மோசடி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 367 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/906fc762-a5a2-4671-9c2c-de2ba6b09781/26-6a93f53ac4a8a.webp' /></p><p>
</p><p>
முடக்கப்பட்ட சொத்துக்களில் 2 கிலோ 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணிகள், 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
</p><p>
2024 செப்டெம்பர் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில் 28 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஏனைய 38 சந்தேகநபர்கள் சிவப்பு அறிவித்தல்கள் இன்றி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸ் அறிக்கைகள்</h2><p>
</p><p>
இதேவேளை, 2024 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக 110 புதிய சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி வரையில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டு நடைமுறையில் உள்ள மொத்த சிவப்பு அறிவித்தல்களின் எண்ணிக்கை 236 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ea3074-906a-4c7e-a0ff-4d8e3ec62645/26-6a93f53b8bffb.webp' /></p><p>
</p><p>
 அவற்றில் 96 சிவப்பு அறிவித்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்காக பெறப்பட்டுள்ளன.</p><p>

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களில் 35 பேர் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p> 

அதன்படி, 18 சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், 11 பேர் இந்தியாவிலும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒரு சந்தேகநபர் வீதம் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T11:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இளைஞர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான விசேட உரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-youth-mp-dialogue-held-in-batticaloa-1788086938"></link>
            <id>https://tamilwin.com/article/special-youth-mp-dialogue-held-in-batticaloa-1788086938</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
இடையிலான குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல் எனும் உயர்மட்டக்
கலந்துரையாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
இடையிலான குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல் எனும் உயர்மட்டக்
கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.</p><p>இந்த நிகழ்வானது நேற்றைய தினம்(29.08.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.</p><h2>இளைஞர்களின் பங்கேற்பு</h2><p> இந்த நிகழ்வில், இளைஞர்களின் பங்கேற்பை நாட்டின் அரசியல் மற்றும் தேசிய
கொள்கை உருவாக்கச் செயற்பாடுகளில் வலுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக்கிக் கொண்டு கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176909dd-3396-4b68-bdf9-0838ba2ebc35/26-6a940fc05010d.webp' /></p><p>இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள், அவர்களின்
எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால தொலைநோக்குகள் தொடர்பான ஆலோசனைகள்,
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாக முன்வைக்கப்பட்டு கொள்கை ரீதியிலான
தீர்வுகளைப் பெறுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் உட்பட நாட்டின் பல்வேறு
பாகங்களிலிருந்தும் வருகை தந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, இளைஞர்
தலைவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரடியாக கேட்டறிந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T11:28:28+00:00</updated>
        </entry>
    </feed>
