<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-04T22:40:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வருகை தரவுள்ள தமிழ்நாட்டின் தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/industrialists-and-business-leaders-tamil-nadu-1785881891"></link>
            <id>https://tamilwin.com/article/industrialists-and-business-leaders-tamil-nadu-1785881891</id>
            <summary type="text">தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

சுமார் 20 பேர் கொண்ட இந்தக் குழு, எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
</p><p>
சுமார் 20 பேர் கொண்ட இந்தக் குழு, எதிர்வரும் செப்டம்பர் 16 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கைக்கு விஜயம்</h2><p>
</p><p>
வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.
</p><p>
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களுடன் கடந்த மாதம் 29 ஆம் திகதி கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e563b5b9-c9a0-4767-8aad-aad4573d525a/26-6a7268894f2bd.webp' /></p><p>
</p><p>
கோயம்புத்தூரில் உள்ள மில்லட் ஃபவுண்டேஷன் மற்றும் பிஸ்நெட் சொல்யூஷன் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவினரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
</p><p>
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஜே.சி.ஐ. நிர்வாக உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.</p><p>

இந்த விஜயத்தின் போது வர்த்தகம், முதலீடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆராயப்படவுள்ளன.
</p><p>
மேலும், சுற்றுலா, விவசாயம், உணவு பதப்படுத்தல், உற்பத்தி மற்றும் தொழில்முனைவு துறைகளிலும் புதிய வாய்ப்புகளை கண்டறிவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T22:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை அச்சுறுத்தும் டொல்பின் சூறாவளி: தீவிரமடையும் கனமழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-dolphin-threaten-japan-heavy-rains-1785872197"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-dolphin-threaten-japan-heavy-rains-1785872197</id>
            <summary type="text">​பசிபிக் பெருங்கடலில் உருவான &#039;டொல்பின்&#039; தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி
அதிவேகமாக நகர்ந்து வருவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் உடனடியாகப்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பசிபிக் பெருங்கடலில் உருவான 'டொல்பின்' தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி
அதிவேகமாக நகர்ந்து வருவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் உடனடியாகப்
பாதுகாப்பு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

​</p><p> இந்த சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடியதென ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல்&nbsp;வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>ஜப்பான் வானிலை ஆய்வு மையம்</h2><p>ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பொனின் தீவுகளை
ஏற்கனவே கடந்துள்ள இந்த சூறாவளி, வார இறுதியில் ஒகினாவா தீவில் முழுமையாகக்
கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
இதனால் ஏற்படும் கடல் அலை சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக விமானம்
மற்றும் படகுப் போக்குவரத்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60299677-155f-45e6-9036-327682f07864/26-6a7243e3adced.webp' /></p><p>

​அத்துடன், இந்த சூறாவளியின் தாக்கம் காரணமாக தாய்வானின் வடக்கு மற்றும்
கிழக்கு பகுதிகள், சீனா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை மற்றும் காற்று
வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆங்காங்கே மின் தடை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
உள்ளதால், கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்ளூர்
நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T22:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனத் தரவு மைய சாதனங்களுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-plans-to-ban-chinese-data-center-equipment-1785870405"></link>
            <id>https://tamilwin.com/article/us-plans-to-ban-chinese-data-center-equipment-1785870405</id>
            <summary type="text">சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

​செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

​</p><p>செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியை அடுத்து, நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு அமைப்புகளைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.</p><p></p><h2>சேவை&nbsp;முடக்கம்</h2><p>

​தரவுகளை ஃபைபர்-ஒப்டிக் கேபிள்கள் மூலம் அதிவேகமாக அனுப்ப உதவும் 'ஒப்டிகல்
டிரான்சீவர்ஸ்' என்ற சீன தரவு மைய சாதனங்களுக்கு தடை விதிக்க அமெரிக்க தகவல்
தொடர்பு ஆணைக்குழு (FCC) நடவடிக்கை எடுத்துவருகிறது.
</p><p>
அமெரிக்க தரவு மையங்களில் இருந்து சீன நிறுவனங்கள் தரவுகளைத் திருடுவதையும்,
வைரஸ் அல்லது தீம்பொருள்களை நிறுவுவதையும், சேவைகளை முடக்குவதையும் தடுப்பதே
இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6e5e19-b4d4-48a0-9696-cd97586296dc/26-6a723a7586940.webp' /></p><p>இந்த தடையால் சீன நிறுவனமான 'ஜாங்ஜி இன்னோலைட்' பெரிதும்
பாதிக்கப்படக்கூடும். அதேவேளையில், அமேசான் போன்ற அமெரிக்க கிளவுட் சேவை
நிறுவனங்களுக்கான செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
</p><p>
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள வொஷிங்டனில்
உள்ள சீனத் தூதரகம், "சீன நிறுவனங்கள் மீதான வீண்பழி சுமத்துதலையும்
தடைகளையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும், எங்கள் நாட்டின் நலன்களுக்குப்
பாதிப்பு ஏற்பட்டால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்" என எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T21:55:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[துரத்தித் துரத்தி தாக்கிய ரஷ்ய ட்ரோன்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russian-drone-chases-and-attacks-street-vendor-1785868144"></link>
            <id>https://tamilwin.com/article/russian-drone-chases-and-attacks-street-vendor-1785868144</id>
            <summary type="text">தெற்கு உக்ரைன் நகரமான கெர்சனில் தெரு வியாபாரி ஒருவரை ரஷ்ய ட்ரோன் துரத்திச்
சென்று தாக்கிய காணொளி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு உக்ரைன் நகரமான கெர்சனில் தெரு வியாபாரி ஒருவரை ரஷ்ய ட்ரோன் துரத்திச்
சென்று தாக்கிய காணொளி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த கொடூர சம்பவத்தை சுட்டிக்காட்டி ரஷ்யா போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக
உக்ரைன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.</p><p></p><h2>ரஷ்ய ட்ரோன் தாக்குதல்</h2><p>

உக்ரைன் பொலிஸார் வெளியிட்ட அந்த காணொளியில், விற்பனைக்காக பயன்படுத்தப்படும்
வாகனம் ஒன்றின் அருகே நின்றிருந்த 50 வயதுடைய நபரை ரஷ்ய ட்ரோன் துரத்துவதும்,
அவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வாகனத்திற்கு பின்னால் மறைந்தபோது அது
வெடித்துச் சிதறுவதும் பதிவாகியுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலில் அந்த வியாபாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியபோதிலும், குண்டு
சிதறல்களால் காயமடைந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a5917ea-07be-4ced-aad0-d9756781ed71/26-6a7230fa0d67d.webp' /></p><p>இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா ஆகியோர் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
பொதுமக்களை பயமுறுத்துவதற்காகவே ரஷ்யா இத்தகைய ட்ரோன் தாக்குதல்களை
திட்டமிட்டு நடத்தி வருவதாகவும், ட்ரோனை இயக்கிய நபருக்கு அவர் தாக்குவது ஒரு
சாதாரண பொதுமக்கள் என்பது தெளிவாகத் தெரிந்தே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும்
உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T21:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய 'பாயிஸ்'! வெளியான அதிர்ச்சி அறிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remand-ordered-3-individuals-including-pillayan-1785867710"></link>
            <id>https://tamilwin.com/article/remand-ordered-3-individuals-including-pillayan-1785867710</id>
            <summary type="text">பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) உட்பட மூவருக்கு எதிரான விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) உட்பட மூவருக்கு எதிரான விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>

காத்தான்குடியைச் சேர்ந்த 'பொலீஸ் பாயிஸ்' (முகமது பாயிஸ்) என்பவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச பிடியாணைக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

'பொலிஸ் பாயிஸ்' என்பவர் பல்வேறு கொலைகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே மோதல்களைத் தூண்டிய சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பலீல் உள்ளிட்டோரின் படுகொலைகளுடன் இவருக்குத் தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

'ஈமானிய நெஞ்சங்கள்' எனப்படும் தீவிரவாத அமைப்புடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வன்முறைகளை முன்னெடுத்ததாகச் சொல்லப்படுகிறது .


பலர் அரசு சாட்சிகளாக மாறியுள்ளது இந்த விசாரணைகளுக்குப் பெரும் வலு சேர்த்துள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wyDBgwtC3Hc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:59:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் பிரதீப் ராவத் காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeep-rawat-dies-at-74-after-cancer-battle-1785876140"></link>
            <id>https://tamilwin.com/article/pradeep-rawat-dies-at-74-after-cancer-battle-1785876140</id>
            <summary type="text">பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக 74 வயதில் காலமானார். 



கடந்த ஐந்து ஆண்டுகளாகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக 74 வயதில் காலமானார்.</p><p> 



கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர் சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டு வந்திருந்தார்.</p><p></p><h2>நடிகர் பிரதீப் ராவத்</h2><p> 

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் நோய் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். </p><p>


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (4) மாலை அவர் உயிரிழந்ததாக அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f809285f-1a69-43af-8e2c-81cf35a08071/26-6a725133b3e62.webp' /></p><p> </p><p>

அவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

பிரதீப் ராவத்தின் மறைவு குறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><h2>வில்லன் கதாபாத்திரங்கள்</h2><p>&nbsp;1952-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் திகதி பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர்.சோப்ராவின் 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமனாக நடித்துத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419f27fc-7c94-49ff-9ed8-7f694bc8a97c/26-6a72513465119.webp' /></p><p>

'லகான்' படத்தில் தேவா சிங் சோதி என்ற கதாபாத்திரத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்துத் தமிழ், இந்தி திரையுலகில் பெரும் புகழ்பெற்றார்.
</p><p>
பின்னர் அஜித் நடித்த ‘வீரம்’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். 

மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிப் படங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:53:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியன்மாருடன் மீண்டும் பேச்சுவார்த்தை: தாய்லாந்து பிரதமர் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thai-prime-minister-urges-talks-with-myanmar-1785869193"></link>
            <id>https://tamilwin.com/article/thai-prime-minister-urges-talks-with-myanmar-1785869193</id>
            <summary type="text">மியன்மாருடன் &quot;கணக்கிடப்பட்ட மறுகட்ட பேச்சுவார்த்தை&quot; அவசியமானது என
தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விரகுல் வலியுறுத்தியுள்ளார்.

​பிராந்திய அமைதியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியன்மாருடன் "கணக்கிடப்பட்ட மறுகட்ட பேச்சுவார்த்தை" அவசியமானது என
தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விரகுல் வலியுறுத்தியுள்ளார்.

​</p><p>பிராந்திய அமைதியை நிலைநாட்டவும், மியன்மாரின் தற்போதைய கள
நிலவரத்தைக் கருத்தில் கொண்டு உதவிகளை வழங்கவும் பேச்சுவார்த்தைக் கதவுகள்
திறந்திருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மியன்மாருடனான பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
ஆசியான் அமைப்பின் 'ஐந்து அம்சக் கொள்கை' வழிகாட்டுதலின் படியே இந்த அணுகுமுறை
மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

​</p><p>மியன்மார் இராணுவ ஆட்சிக் குழுவின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மின் ஆங்
லைங்கை, தாய்லாந்து பிரதமர் அனுதின் சந்திக்கவுள்ள நிலையில் இந்த கருத்து
வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5a44071-fe5c-4800-b95a-c2c4499d2df3/26-6a72354db0229.webp' /></p><p>அதேவேளையில், மியன்மாரின் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கப் பிரதிநிதியைச் சந்தித்துப் பேசியதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன்
இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இ​ராணுவ ஆட்சியாளர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது அவர்களுக்கு
சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும் என்று அரசியல் வல்லுநர்கள்
எச்சரித்துள்ளபோதிலும், பிராந்திய ஒற்றுமையைப் பேண இந்த நெகிழ்வுத்தன்மை
அவசியம் என தாய்லாந்து பிரதமர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுரிமையை முடக்குவதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு: 75 நீதிமன்ற தீர்ப்புகளில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/75-court-rulings-accuse-trump-curbing-free-speech-1785871432"></link>
            <id>https://tamilwin.com/article/75-court-rulings-accuse-trump-curbing-free-speech-1785871432</id>
            <summary type="text">பேச்சுரிமையைப் பாதுகாப்பதாகக் கூறி பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்பின் நிர்வாகம், அதற்கு மாறாக மக்களின் பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேச்சுரிமையைப் பாதுகாப்பதாகக் கூறி பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்பின் நிர்வாகம், அதற்கு மாறாக மக்களின் பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில்
செயல்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றங்களின் தொடர் தீர்ப்புகள்
மூலம் தெரியவந்துள்ளது.</p><p>

ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றது முதல், முதலாம் அரசியலமைப்புத்
திருத்த உரிமைகளான பேச்சுரிமை, மத சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை
அவரது நிர்வாகம் மீறியதாக 75 கூட்டாட்சி நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி
செய்துள்ளன.</p><p></p><h2>வழக்குகளின் தீர்ப்புகள்</h2><p>

பலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள், பல்கலைக்கழகங்களுக்கான நிதியுதவி இரத்து,
சட்ட நிறுவனங்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பாளர்கள்
மீதான கெடுபிடிகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளிலேயே இந்தத் தீர்ப்புகள்
வழங்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7465916-663d-4f99-b99b-2bb47460af0d/26-6a723e764999a.webp' /></p><p>இதில் பெரும்பாலான தீர்ப்புகள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்ட
நீதிபதிகளால் வழங்கப்பட்டவை என்றாலும், குடியரசுக் கட்சியினரால்
நியமிக்கப்பட்ட நீதிபதிகளும் 10 வழக்குகளில் ட்ரம்ப் அரசுக்கு எதிராகவே
தீர்ப்பளித்துள்ளனர்.
</p><p>
எனினும், நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்புகளை "அரசியல் செயல்பாடுடையவை" என
விமர்சித்துள்ள வெள்ளை மாளிகை, தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துவருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-son-fled-the-country-and-his-wife-1785873297"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-son-fled-the-country-and-his-wife-1785873297</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த நாட்களில் அவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
</p><p>
கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
</p><p>
இந்தநிலையில்,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் மற்றும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
தஹாம் திருமணம் செய்துகொண்ட குடும்பத்தின் வணிக நிறுவனமான எல்காடோ (Elcato), ஆரம்பத்தில் நுழைவாயில்கள் (gates) தயாரிக்கும் நிறுவனமாக இருந்து, பின்னர் வாகன இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அகில ரவிநக வீரரத்ன மற்றும் அஸ்வினி டயஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BCAwXNr7v-g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-s-support-for-dengue-control-efforts-1785867155"></link>
            <id>https://tamilwin.com/article/india-s-support-for-dengue-control-efforts-1785867155</id>
            <summary type="text">இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, டெங்கு
பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 500
லிட்டர் தொழில்நுட்ப மலத்தியோனை (Technical Malathion) இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, டெங்கு
பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 500
லிட்டர் தொழில்நுட்ப மலத்தியோனை (Technical Malathion) இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம்
கையளித்துள்ளார்.</p><p>

இந்த நிகழ்வானது நேற்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>இந்திய நிறுவனமான UPL Limited&nbsp;</h2><p>
</p><p>
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கமும் இந்திய
மக்களும் வழங்கிய அன்பளிப்பாக இந்த மருந்து இலங்கை அரசாங்கத்திற்கும்
மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்திய நிறுவனமான UPL Limited இந்த மருந்தை
வழங்கியதுடன், கோரிக்கை விடுக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களுக்குள் கொழும்பை
வந்தடைந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f600fd9-4de1-40ee-afbd-5e999bf2d0d2/26-6a722ce2bf284.webp' /></p><p>நெருக்கடி காலங்களில் முதன்முதலில் உதவி வழங்கும் நாடாக இந்தியா
தொடர்ந்து செயல்படுவதை இது மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
</p><p>
2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் சுமார் 86,000 டெங்கு நோய்த்தொற்றுகள்
பதிவாகியுள்ளன.

 இதில் மேற்கு மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
ஒன்றாகும்.</p><p></p><h2>தொழில்நுட்ப மலத்தியோன்</h2><p> இந்த தொழில்நுட்ப மலத்தியோன், டெங்கு பரவலைக்
கட்டுப்படுத்துவதற்காக இலங்கை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பரவலான
புகைமூட்டல் (Fogging) மற்றும் தெளிப்பு (Spraying) நடவடிக்கைகளுக்கு உதவியாக
அமையும்.
</p><p>
நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள்
மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்கான இந்தியாவின்
உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/570b04e2-88fb-4488-bd10-56e6d11c50e2/26-6a722ce1e814a.webp' /></p><p>மேலும், இந்த மருந்துத் தொகுதியை
விரைவாக வழங்குவதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய இலங்கை சுகாதார
அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட அனைத்து இலங்கை அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத்
தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இந்தியாவின் "Neighbourhood
First" (அயல்நாடுகள் முதன்மை) கொள்கையின் கீழ் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி
வரும் உறுதியான ஆதரவை இது பிரதிபலிக்கிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T19:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-of-jaffna-palaly-airport-1785864847"></link>
            <id>https://tamilwin.com/article/development-of-jaffna-palaly-airport-1785864847</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலான கலந்துரையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த கலந்துரையாடலானது இன்று(04.07.2026) வலிகாமம் - வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில்
இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>காணி உரிமையாளர்கள்</h2><p>

வலிகாமம் - வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி மேற்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும் குரும்பசிட்டி ஆகிய நான்கு கிராம சேவகர்
பிரிவுகளில், 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக வர்த்தமானி
அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட 267 ஏக்கர் காணிகளின் 436 காணி
உரிமையாளர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
இதன்போது, வலி. வடக்கில் இன்னும் காணிகளை மீளப் பெறாத காணி உரிமையாளர்களும்
பிரதேச செயலகத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46eaf33e-8390-498f-9401-e13024450271/26-6a72252e68d60.webp' /></p><p> 

அவர்கள் கூட்ட மண்டபத்திற்குள்
அனுமதிக்கப்படாத நிலையில், மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை
நடத்தியதையடுத்து கூட்டம் முடிந்ததும் உங்களோடு கலந்துரையாடுவதாக அரசாங்க அதிபர்
தெரிவித்திருந்தார் ஆனால் அந்த சந்திப்பு இடம் பெறவில்லை.
</p><p>
1986ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்
அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தொடர்ந்து,
இழப்பீடு வழங்குவதற்கான சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுமாறு காணி
உரிமையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு காணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு விபரங்கள்
வழங்கப்படாத நிலையில் சத்தியக் கடதாசியில் கையொப்பமிட முடியாது என காணி
உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மீளக் குடியேற்ற நடவடிக்கை</h2><p>

மேலும், சத்தியக்கடதாசியின் உள்ளடக்கம்
தெளிவற்றதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதால் கூட்டத்தில்
பரபரப்பும் குழப்பநிலையும் ஏற்பட்டுள்ளது.
</p><p>
குழப்பநிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கூட்ட மண்டபத்திற்குள் பொலிஸார்
வரவழைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையே இடம்பெற்ற
கலந்துரையாடலை அடுத்து , காணி உரிமையாளர்கள் தரப்பில் ஏழு பேர் கொண்ட
குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ea1fdeb-7195-4ee6-adad-9fbac7d41718/26-6a72252f362e2.webp' /></p><p>அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சத்தியக்கடதாசியில்
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை காணி மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு
அனுப்பப்பட்டதையடுத்து மீண்டும் காணி உரிமையாளர்களை அழைப்பது என
தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், சில காணி உரிமையாளர்கள் இழப்பீடு பெறுவதில் இணக்கம் தெரிவிக்காமல்
கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.</p><p> 

அவர்கள், தங்களுக்கு இழப்பீடு மட்டும்
வழங்காமல், காணிகளை மீள வழங்கி மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், அதன் பின்னரே விமான நிலையத் தேவைக்காக காணிகளை வழங்குவது குறித்து
பரிசீலிக்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>

மேலும், சத்தியக்கடதாசியில் தெளிவின்மை காணப்பட்டமை மக்களிடையே
நம்பிக்கையின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக காணி உரிமையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T19:15:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் கடற்படையினரின் அதிரடி: ஆங்கிலக் கால்வாயில் தீப்பற்றி எரிந்த படகு- 157 அகதிகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/french-coast-guard-operation-157-refugees-rescued-1785868702"></link>
            <id>https://tamilwin.com/article/french-coast-guard-operation-157-refugees-rescued-1785868702</id>
            <summary type="text">பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக்
கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை
எதிர்பாராதவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக்
கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை
எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது.
</p><p>
தகவலறிந்து உடனடியாகச் செயல்பட்ட பிரான்ஸ் கடற்கரை காவல்படை, மூன்று மீட்புக்
கப்பல்களை அனுப்பி படகில் இருந்த 157 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள்</h2><p>
அண்மைக்காலமாக ஆபத்தான இந்த கடல் வழியைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள்
நுழைய முயலும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.</p><p>

சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள் தகுதியற்ற சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமான
மக்களை ஏற்றிச் செல்வதால் இத்தகைய கொடூர விபத்துகள் தொடர்ந்து நிகழ்கின்றன.
கடந்த வாரம் கூட இதேபோன்று சிறிய படகில் கால்வாயைக் கடக்க முயன்ற மூன்று பேர்
உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcbf63ab-34d3-48cd-879f-c35d62ce6124/26-6a723a0098831.webp' /></p><p>
இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு செய்தித்
தொடர்பாளர், "இந்த சம்பவம் சிறிய படகுகள் மூலம் கடல் கடப்பதில் உள்ள பயங்கர
ஆபத்தை உணர்த்துகிறது.

இத்தகைய ஆபத்தான பயணங்களைத் தடுக்க பிரான்ஸ் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன்
இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.</p><p>

2015-16 காலகட்டத்தில் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடிக்குப் பிறகு ஐரோப்பாவில்
குடியேற்றம் மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T19:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-death-rises-to-7-rescues-intensify-1785860616"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-death-rises-to-7-rescues-intensify-1785860616</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர்
காணாமல்போயுள்ளார் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர்
காணாமல்போயுள்ளார் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு
ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள்</h2><p>அனர்த்தத்தின் போது&nbsp; உயிரிழந்தவர்களுள் 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று
பெண்களும் 22 வயதுடைய இளைஞரும் உள்ளடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்குக் குறுக்கே உள்ள
பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் ஆற்றில் அடித்துச்
செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்</p><p>கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பொலிஸ் ஊடகப் பிரிவு&nbsp;</h2><p>
</p><p>
நாவலப்பிட்டி - பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில்
மற்றுமொரு 67 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளார் என அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தின் கண்டி மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர
உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f975e28e-567e-4f63-b3c4-4559a01dc327/26-6a721cebbe42f.webp' /></p><p>இதனிடையே, கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் நீரில்
அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது. </p><p>அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த அனர்த்தங்களால் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T18:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை - உதயநிதி ஸ்டாலினுக்கு பிணையில் செல்ல அனுமதி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-1785863090"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-1785863090</id>
            <summary type="text">தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.</p><p>

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு பொலிஸ் நிலைய பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரபரப்பான சூழல்</h2><p>

பொலிஸ் நிலைய வளாகத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான திமுகவினர் திரண்டிருந்ததால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7814d651-708e-4a1d-b2f8-243c77a57c95/26-6a721d60c92fe.webp' /></p><p>

 பாதுகாப்பு பணிக்காக கூடுதல் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரவு சுமார் 8.15 மணியளவில் உதயநிதி பொலிஸ் நிலையத்தில் இருந்து சென்றுள்ளார்.</p><p>

தனது காரில் இருந்தபடியே அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை நோக்கி கையசைத்தபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><h2>&nbsp;கைது</h2><p>
</p><p>
தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08f7435-62cf-4b66-a2a7-ff354dee1174/26-6a721d617c028.webp' /></p><p>
</p><p>
அதனால் அவர் இன்று(4) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-04T17:55:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் குற்றமற்றவர் என வழங்கப்பட்ட நீதிமன்ற தீா்ப்பு ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnstons-case-re-hearing-again-1785864591"></link>
            <id>https://tamilwin.com/article/johnstons-case-re-hearing-again-1785864591</id>
            <summary type="text">சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.</p><p>
இதன்படி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பதில் பணிப்பாளர் மொஹமட் சகீர் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரிக்குமாறு ஐந்து நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>
குறித்த வழக்குகளில், சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ பணிகளில் இருந்து விலக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்தியதுடன், அவர்களுக்கு அரசுப் பணத்தில் ஊதியம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22da8d0c-840c-4d8e-90f8-1a783ae27beb/26-6a72219174543.webp' /></p><p>
</p><p>இந்த வழக்குகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p><p>
எனினும், விசாரணையை ஆரம்பிப்பதற்கும் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையொப்பங்களும் இடம்பெறவில்லை என்ற பிரதிவாதி தரப்பின் ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று, கொழும்பு மேல் நீதிமன்றம் 2023 மே 19ஆம் திகதி பிரதிவாதிகளை விடுவித்திருந்தது.
</p><p>அந்தத் தீர்ப்புக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 1994ஆம் ஆண்டின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 2(8) பிரிவின்படி, ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்த மூன்று ஆணையாளர்களும் ஒரே நேரத்தில் இருப்பது கட்டாயமல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>
மேலும், ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தனித்தனியாக அமர்ந்தாலும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்றும், அத்தகைய நடவடிக்கை முழு ஆணைக்குழுவின் நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>அத்துடன், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாக்கத்தை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை; அவ்வாறான அதிகாரம் அதனை விடவும் அதிகாரம் கூடிய நீதிமன்றங்களுக்கே உரியது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p>
மேலும், ஒவ்வொரு விசாரணைக்கும் மற்றும் வழக்குத் தாக்கலுக்கும் மூன்று ஆணையாளர்களின் கையொப்பமும் கட்டாயம் என்ற நிலைப்பாடு நீதித்துறை செயல்முறையை தேவையற்ற வகையில் தாமதப்படுத்தும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:33:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-says-good-progress-made-in-talks-with-oman-1785863885"></link>
            <id>https://tamilwin.com/article/iran-says-good-progress-made-in-talks-with-oman-1785863885</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் மற்றும் ஓமன் இடையே உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>
ஓமனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28a27615-1a5b-4c6b-ae3a-c59fc9042e41/26-6a721ecf4390a.webp' /></p><p> </p><p>
சில கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்த போதிலும், பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் செல்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>
இடையூறு விளைவிக்கும் சில தரப்பினரின் நடவடிக்கைகளைத் தெஹ்ரானில் உள்ள ராஜதந்திர வட்டாரங்கள் விமர்சித்த போதிலும், ஒப்பந்தம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளதாகவும், நாளைய தினத்தின் இறுதிக்குள் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். </p><p>
இந்த ஒப்பந்தம் வெறும் உடன்படிக்கை என்பதை விட, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல்சார் வர்த்தக நடைமுறையை சீரமைப்பதையே முதன்மையாகக் கொண்டுள்ளது. </p><p>
ஈரான் - ஓமன் இடையிலான இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மேலும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.
</p><p>எனினும், மோதல்கள் மீண்டும் மீண்டும் தொடர்வதைத் தவிர்க்கவும், நிரந்தர தீர்வை எட்டவும் பின்வரும் சிக்கல்கள் ராஜதந்திர வழியில் தீர்க்கப்பட வேண்டும் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் பேக்கரி உரிமையாளரின் துணிகர செயல்: கொல்ல வந்தவரின் துப்பாக்கி பறிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-shooting-attemt-foiled-1785863156"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-shooting-attemt-foiled-1785863156</id>
            <summary type="text">தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>

இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>
இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், துப்பாக்கி செயல்படாததால், பேக்கரி உரிமையாளர் உடனடியாக எதிர்த்து தாக்குதலாளியுடன் போராடி, அவரது கையில் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ef7d9a-c469-45ef-9bb4-5717963b3fa5/26-6a721bf5af824.webp' /></p><p>
</p><p> இந்த மோதலின் போது பேக்கரி உரிமையாளருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இரு சந்தேகநபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், தாக்குதலுக்கு இலக்கான பேக்கரி உரிமையாளரின் மகன், "கொஸ் மல்லி" என அழைக்கப்படும் பாதாள உலகக்குழு குழு உறுப்பினரின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனவும், அவர் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், இந்த தாக்குதலை "சாண்டோ" தரப்பு அல்லது "படோவிட்ட அசங்க" தரப்பைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
எனினும், இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எவரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவில்லை.</p><p>
தப்பியோடிய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்வதற்காக தெஹிவளை பொலிஸார் இரண்டு விசேட விசாரணைக் குழுக்களை நியமித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண ஒப்பந்த விவகாரம்: ட்ரம்ப் உதவியை கோரியதாக எழுந்த முறைப்பாட்டுக்கு ஃபிஃபா மறுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-cup-contract-fifa-denies-allegations-trump-1785862044"></link>
            <id>https://tamilwin.com/article/world-cup-contract-fifa-denies-allegations-trump-1785862044</id>
            <summary type="text">&amp;nbsp;ஃபிஃபா (FIFA) அமைப்பின் உலகக் கிண்ண வணிக உரிமைகளைத் தனியார்
முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து,
அமெரிக்க ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஃபிஃபா (FIFA) அமைப்பின் உலகக் கிண்ண வணிக உரிமைகளைத் தனியார்
முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவை அதன் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ
கோரியதாக வெளியான செய்திகளை ஃபிஃபா நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.</p><p>
உலகக் கிண்ணத்தின் வணிகப் பங்குகளை விற்பனை செய்து சுமார் 4.2 பில்லியன் டொலர்
நிதியைத் திரட்ட ஃபிஃபா திட்டமிட்டிருந்தது.</p><p></p><h2>பிஃபா மறுப்பு</h2><p> இருப்பினும், பல்வேறு
தரப்பிலிருந்து எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக இந்த நடவடிக்கை
கைவிடப்பட்டது.</p><p>
இதன் தொடர்ச்சியாக, இன்ஃபான்டினோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொலைபேசியில்
தொடர்புகொள்ள முயன்றதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில்
செய்திகள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8b745bb-f1cc-4475-a55f-ee7b2e0bc7d4/26-6a7219c1bca5c.webp' /></p><p>

இந்த குற்றச்சாட்டுகளை "முற்றிலும் கற்பனையானவை" என்று வர்ணித்துள்ள ஃபிஃபா,
ஜியானி இன்ஃபான்டினோ சமீப நாட்களில் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அவரது
நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களையோ தொடர்புகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை
என்று தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

இருப்பினும், இந்த ஒப்பந்த விவகாரத்தால் ஃபிஃபா தலைவர் பதவியில் இன்ஃபான்டினோ
தொடர்வது குறித்து கால்பந்து அமைப்புகளிடையே தொடர்ந்து விவாதங்கள் வலுத்து
வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T16:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளமான நாடும் அழகான வாழ்க்கையும் வெறும் ஏமாற்றுத் தேர்தல் வாக்குறுதிகளே - அரசாங்கத்தை சாடிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-govt-s-promises-are-election-deception-1785856137"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-govt-s-promises-are-election-deception-1785856137</id>
            <summary type="text">அரசால் வளமான நாடும் அழகிய வாழ்க்கையும்
உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்
எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசால் வளமான நாடும் அழகிய வாழ்க்கையும்
உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்
எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று(04.08.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விவசாயிகளின் பிரச்சினை</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், "2024ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி நாட்டில் 39 இலட்சம்
முதியோர் சமூகம் காணப்படுகின்றனர். </p><p>இவர்களுக்குக் கடந்த காலத்தில் 15 இலட்சம்
சேமிப்புக் கணக்கிற்கு 15 சதவீத வட்டி கிடைத்த போதிலும், இன்று அந்த வட்டி 7
சதவீமாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79813c06-32d0-4bd8-b21f-707ebafa8d73/26-6a720397481d7.webp' /></p><p> அரசாங்கம் கூறும் ஸ்திரத்தன்மையும் வளமான நாடும்
இதுதானா?

விவசாயிகளுக்குச் சிறந்த உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என
வாக்களித்துவிட்டு, வயல்வெளிகளுக்குள் இறங்கி நெற்கதிர்களைக் கடித்துக்கொண்டு
நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறிவிட்டு இன்னும்
அதனை நிறைவேற்றவில்லை. </p><p>உரிய நேரத்தில் விதை நெல் கிடைக்காததுடன், அவை தரம்
குறைந்தவையாகவும் உள்ளன. விவசாய இரசாயனப் பொருட்களின் விலையேற்றம், தரமின்மை,
உபகரணங்கள் மீதான வற் வரி மற்றும் மனித - யானை மோதல்களால் விவசாயிகள் பெரும்
இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p>சர்வதேச நாணய நிதியம் முதன்மை மீதியை 2.5 ஆக இருக்கச் சொன்ன போதிலும், அரசு
அதனை 5.4% வரை அதிகரித்து மக்கள் மீது எல்லையற்ற வரிச் சுமையைச்
சுமத்தியுள்ளது.</p><p></p><h2>அரசின் வருமான இலக்குகள்</h2><p>அரசின் வருமான இலக்குகளும் வரி மூலமே பெறப்படுகின்றன. இதனால்
மொத்த உள்நாட்டு உற்பத்திற்க்கு 52% பங்களிப்பு வழங்கும் நுண், சிறிய மற்றும்
நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்பட்டு
வருகின்றன.
</p><p>
மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்ற வாக்குறுதியும்
நிறைவேற்றப்படவில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு
எரிபொருளைப் பெற்றுத்தரவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f096be4a-f6df-49de-bc15-fb48199fbefd/26-6a720398681c3.webp' /></p><p>ஈரான் மோதல்கள் காரணமாக ஏனைய நாடுகள் வரிகளைக்
குறைத்த போதிலும், நம் நாட்டில் அது நடக்கவில்லை. 'டித்வா' சூறாவளியால்
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பில்லியன்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டதாகக்
கூறப்பட்டாலும், களத்தில் எந்த உதவியும் சென்றடையவில்லை.
</p><p>பொய் கூறாமல், மக்களை ஏமாற்றாமல், இப்போதாவது மக்களுக்கு வழங்கிய 'வளமான நாடு,
அழகான வாழ்க்கை' வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T16:49:01+00:00</updated>
        </entry>
    </feed>
