<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-22T03:30:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான ஐவர்..! விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monaragala-accident-death-update-1787361613"></link>
            <id>https://tamilwin.com/article/monaragala-accident-death-update-1787361613</id>
            <summary type="text">மொனராகலை - கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கும்புக்கன பகுதியில் உழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை - கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கும்புக்கன பகுதியில் உழவு இயந்திரமும், டிப்பர் லொறியொன்றும் மோதிக்கொண்டதில் ஐவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
டிப்பர் லொறியில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><h2>இருவர் கைது</h2><p>
</p><p>
இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இவர்கள் பூஜை வழிபாட்டிற்காக குடும்பமாக டிப்பர் லொறியில் சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c38517e-2dff-48e8-b1a0-c3bb95f790cf/26-6a8909e3b120d.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த,
ஆர்.டி.ஷெஹான் எரங்க (20), நிரோஷன் தேவேந்திர (55), ஏ.எம். திலகரத்ன பண்டார (56), பசிந்து தினேஷ் (வயது 21) மற்றும் தாரக மதுஷான் (31 வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஏ.எம். திலகரத்ன பண்டார (56) மற்றும் பசிந்து தினேஷ், தந்தை மற்றும் மகன் ஆவர்.
</p><p>
இதனையடுத்து விபத்திற்குள்ளான டிப்பர் லொறி சாரதி மற்றும் பயணிகளை ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T03:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமடைந்துள்ள சுரேஷ் சலேவின் உடல்நிலை! மனைவி விடுத்துள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sale-health-condition-request-president-1787367322"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sale-health-condition-request-president-1787367322</id>
            <summary type="text">அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்க வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் ஆகஸ்ட் 20 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்&nbsp;</h2><p>
</p><p>
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd3af394-d83d-4829-b6ff-8ec84372e5d2/26-6a8913cd4ea5d.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.</p><h2>அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
</p><p>
இருதய பிரச்சினைகள் காரணமாக அவருக்கு இதயக்கருவி பொருத்தப்பட்டதாகவும், தற்போது தேசிய வைத்தியசாலையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44bd53e-9173-4d22-b66c-51a0a24c74ce/26-6a8913ce1ff74.webp' /></p><p>
</p><p>
எனவே சலேவை நீதிமன்ற கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்கு தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
அத்துடன், சலே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யமாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.&nbsp; </p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T03:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பெருந்தொகை தங்கம், பணம் கொள்ளை - ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-robbery-at-a-house-in-mount-lavinia-1787365110"></link>
            <id>https://tamilwin.com/article/massive-robbery-at-a-house-in-mount-lavinia-1787365110</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பீரிஸ் வீதி பகுதியில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து, 2 கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 20ஆம் திகதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளின் ஒரு பகுதி மற்றும் 15,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்கிஸ்ஸ தர்மபால வீதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

தங்கம், பணம் கொள்ளை</b></h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை, ஓபன் பகுதியில் வசிக்கும் 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2038685-6c18-4206-8504-74bcf123333c/26-6a890e72b315d.webp' /></p><p>அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>சந்தேக நபர் திருடிய பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாவை செலவிட்டு, 18 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றையும், அப்பிள் ரக 3 கையடக்கத் தொலைபேசிகளையும், மற்றுமொரு கையடக்கத் தொலைபேசியையும் கொள்வனவு செய்துள்ளார்.</p><p>

மேலும், எஞ்சிய பணத்தில் ஒரு பகுதியை இரவு நேர கேளிக்கை விடுதிகளில் செலவிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>கடந்த 18ஆம் திகதி வீட்டில் வசிப்பவர்கள் தமது உறவினர் ஒருவரின் நெதிமால பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்றுள்ளனர்.</p><h3><b> பொலிஸில் முறைப்பாடு</b></h3><p>மறுநாள், 19ஆம் திகதி பீரிஸ் வீதியில் உள்ள தமது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் கலைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc7cc24b-6b42-46fc-bda3-4e1c948388a8/26-6a890e736b093.webp' /></p><p>இதனையடுத்து வீட்டை சோதனையிட்டபோது, மேல் மாடியில் அமைந்திருந்த ஜன்னல் ஒன்றை உடைத்து வீட்டுக்குள் திருடன் நுழைந்துள்ளார். ஒரு கோடி ரூபா பணத்தையும், ஒரு கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அனைத்து தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p> திருட்டில் ஈடுபட்ட நபர் அதே ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக கல்கிஸ்ஸ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். </p><p>இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பிச் சென்ற சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T02:50:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு போர்ட் சிட்டி மோதலில் கொலை செய்யப்பட்ட சீனப்பிரஜை! சந்தேகநபர்களை கைது செய்ய உதவிகோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512"></link>
            <id>https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p>இவ்வாறு கொலை செய்யப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது&nbsp;&nbsp;</p><p>இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f167eac-85bf-4175-a965-3cd9ba1fba06/26-6a89048ab3c50.webp' /></p><h2>வான் அல்லது கடல் வழி ஊடாக நாட்டைவிட்டுத்தப்பியோடக்கூடும்</h2><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். </p><p>

இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்&nbsp;சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/725f6ad8-6e4e-4af9-82e9-12d4da94009d/26-6a89048b64725.webp' /></p><p>குறித்த மூன்று சீன நாட்டவர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதுடன், சுற்றுலா விசாவில் வருகை தந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

எனவே மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழி ஊடாகச் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்பதால், அவர்களைக் கைது செய்யப் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.</p><p>அதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு - 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு&nbsp; பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T02:08:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரமாக டுபாயிக்கு பறந்த CCIB அதிகாரிகள் குழு! இலங்கைக்கு அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-central-crime-investigation-bureau-1787358493"></link>
            <id>https://tamilwin.com/article/the-central-crime-investigation-bureau-1787358493</id>
            <summary type="text">மத்திய குற்றப்புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளனர். 
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்டமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய குற்றப்புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளனர். </p><p>
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p></p><h2>அழைத்துவரவுள்ள ஆபத்தான நபர்</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை அவசரமாக இலங்கைக்கு கொண்டு வரமுடியாது என்றும், அங்குள்ள சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலேயே அவரைக் பொறுப்பேற்க விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ள நிலையில் அதிகாரிகள் அவசரமாக டுபாய் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>'லலித் கன்னங்கர' அல்லது 'பஸ் லலித்' என்று அழைக்கப்படுபவரையே இவ்வாறு அழைத்து வரச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6306fb9-ffd6-432c-83b0-4fb70345b258/26-6a88ed1f87d86.webp' />&nbsp;&nbsp;</p><p>இவர் அவிசாவளை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவராவார். </p><p>இந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்திருப்பது இலங்கை பொலிஸாருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஏனெனில், அவரை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p>இவர் சட்டத்தரணிகள் ஊடாக தப்பிச் செல்வதற்கு பலமுறை முயன்றபோதிலும் அது பலனளிக்கவில்லை என்றும், டுபாயில் அவரது வழக்கு முடிவுக்கு வந்துள்ளதுடன், தற்போது அவரை அழைத்து வருவதே எஞ்சியுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><h2>பாதாள உலகக்குழுவை சேர்ந்த பல முக்கிய நபர்கள் கைது</h2><p>கடந்த காலத்தில் அவர் வந்து சென்றதாகவும் தகவல்கள் பரவின. இவர் ஹோமாகம, அதுருகிரிய மற்றும் அவிசாவளை வரையிலான பகுதிகளில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவராவார். குறித்த பகுதிகளில் இவரும் 'ஹந்தா' என்பவருமே செயற்பட்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1fac2f-cdf1-4ddd-93d0-3675c5bd2530/26-6a88fffc44de7.webp' /></p><p>எவ்வாறாயினும் இன்று (22.08.2026) அல்லது 24 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>பிரதான பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர். </p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவினர் வெளிநாடுகளில் உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக மிகவும் சுறுசுறுப்பாகவும் அர்ப்பணிப்புடனும் உரிய உத்திகளின் படி செயற்பட்டு வருகின்றனர்.</p><p>எனவே, இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுவதுடன், பலரது உயிர்களைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T01:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-temple-issue-1787361148"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-temple-issue-1787361148</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில்
இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID)
வெளிப்பாட்டினால் ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில்
இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID)
வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய
நிபுணர் மலரவன் தெரிவித்துள்ளார்.</p><p>

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தனது மருத்துவ அறிக்கையில் இந்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


 தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><h2>அதிகரித்துள்ள எண்ணிக்கை</h2><p>
சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை இரவு 9.30
மணி நிலவரப்படி 400ஐ தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 400ஐ
கடந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T01:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைக் காப்பாற்ற யோஷிதவை பலிகடாவாக்கிய மகிந்த! புது புதுக் காரணம் கூறும் ராஜபக்ச தரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-reason-why-mahinda-joined-yoshitha-in-the-navy-1787358358"></link>
            <id>https://tamilwin.com/article/the-reason-why-mahinda-joined-yoshitha-in-the-navy-1787358358</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்தார் என்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்தார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். </p><p>

பொதுஜன பெரமுனவின் கட்சி அவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நாட்டைக் காப்பாற்ற களமிறக்கப்பட்ட யோஷித&nbsp;</h2><p> </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

கடந்த காலத்தில் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்ட வந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர்கள் மீதும், அதில் பங்கெடுத்த இராணுவ வீரர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b105c12-1348-4a02-930e-1f145b5e5727/26-6a88f39d4f63d.webp' /></p><p> </p><p> 

அன்று மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தார். </p><p>

அப்படிச் செய்யாவிட்டால், பிரபாகரன் இந்த நாட்டைத் தனது அரசாங்கமாக மாற்றியிருப்பார். 

வடக்கு சென்று இனறு குட்டிக் கரணம், அடிக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட எவராலும் அங்கு சென்றிருக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0e088bb-97a1-4da5-8b24-211445b47167/26-6a88f39e035cb.webp' /></p><p>ஆனால், நாட்டைக் காப்பாற்றிய யோஷித ராஜபக்ச மீது இன்று தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p> 

இதன்மூலம், தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீதான 300இற்கும் மேற்பட்ட கொள்கலன் கடத்தல், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-full-financial-review-of-shiran-basik-1787316585"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-full-financial-review-of-shiran-basik-1787316585</id>
            <summary type="text">&amp;nbsp;ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட்சம் ரூபாய் வாடகை செலுத்தியுள்ளார். </p><p>தனது சொந்தத் தந்தைக்கு எவ்வாறு ஒரு நபர் வாடகை செலுத்த முடியும்? என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இது பணச்சலவை நடவடிக்கையாகவே இடம்பெற்றுள்ளது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவிப்பதுடன் அது தொடர்பிலும் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>
</h2><p></p><h2>'சோல் பீச்' ஹோட்டல் கட்டட காணி</h2><p>
'சோல் பீச்' ஹோட்டல் தொடர்பான சாட்சியங்களை வழங்கிய போது இதை உடைத்து அகற்றியது தொடர்பாக கடந்த காலத்தில் பெரும் பேச்சுகள் எழுந்தன. அந்தப் பேச்சுகளுக்கு அப்பால் இதன் உரிமையாளர் யார் என்பது குறித்து ஷிரான் பாசிக் தனக்கு முன்னுரிமை கொடுத்துக் கூறியுள்ளார்.
</p><p>ஹோட்டல் அமைந்துள்ள காணி தனது தந்தையிடமிருந்தே கிடைத்தது என்றும் தந்தைக்கு ஆனந்த என்பவரால் நன்கொடை உறுதிப்பத்திரம் மூலம் அது வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>அவ்வாறு கிடைத்த காணியிலேயே இந்த உணவகம் அமைக்கப்பட்டு ஒரு திட்டமாக செயற்படுத்தப்பட்டதாக அவர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளில் வெளிவந்த பிரதான விடயம் என்னவெனில்இ இந்த நன்கொடை உறுதிப்பத்திரம் என்பது முற்றிலும் பொய்யான ஒன்றாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14ae6d57-b84e-4ac9-bf65-f5c9425c9a5c/26-6a88496bdcbdf.webp' /></p><p>இது ஒரு போலி உறுதிப்பத்திரம் என தெரிவிக்கின்றன. மேலும்இ இந்தக் காணியின் உரிமை எந்தவொரு தனிநபருக்கும் உரியது அல்ல என்றும் இது பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரச காணியாகும.</p><p>
'சோல் பீச்' ஹோட்டல் அமைந்துள்ள அதே வளாகத்திலேயே இந்த ஓமhன் ஓல்டிங்ஸ் நிறுவனத்திற்குரிய கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. 
அரசுக்குச் சொந்தமான காணியை பலவந்தமாக ஆக்கிரமித்து இவ்வாறான கட்டடம் உயர்த்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இது தொடர்பாக போலி நன்கொடை உறுதிப்பத்திரத்தைத் தயாரித்தமைக்காக ஷிரானின் தந்தை மற்றும் இதற்கு உதவிய சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர புலனாய்வு அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
</p><h2>
பெறப்பட்ட சட்டவிரோத ஆவணங்கள்</h2><p>அத்துடன் இதில் பல்வேறு நபர்கள் தொடர்புபட்டுள்ளதுடன் அவர்களின் தகவல்களும் வெளிவந்துள்ளன. மேலும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இதற்காக எவ்வித முறையான அனுமதியும் பெறப்படவில்லை.
</p><p>குறிப்பாக இந்த ஹோட்டல் தொடருந்து பாதைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அப்படியிருக்க பிரதான வீதியிலிருந்து தொடருந்து பாதையைக் கடந்து உணவகத்திற்குச் செல்வதற்காக இவர்கள் தொடருந்து திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். </p><p>இது பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலிருந்து உள்ள ஒரு சட்டமாகும் என புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர். அந்தச் சட்டத்தின்படி அதனை ஒரு அனுமதியாகக் கொண்டு உணவகத்திற்கு மின்சாரம் மற்றும் நீர் வசதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>ஆனால் இவை அனைத்துமே போலி மற்றும் சட்டவிரோதமானவை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த உணவகத்திற்காகப் பெறப்பட்ட மதுபான உரிமங்கள் கூட முற்றிலும் சட்டவிரோதமானவை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>
ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான இந்த உணவகத்திற்கு வந்து சென்ற ஒரு முன்னாள் பிரதி அமைச்சர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்திலேயே இந்த உணவக வளாகத்திற்கு வந்து சென்றுள்ளார். </p><p>அவர் அங்கு வந்து சென்றமைக்கான புகைப்படங்கள் உணவகத்தில் இருந்து புலனாய்வு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் வதந்தியை பரப்பிய நபர் மகிந்த வீட்டின் செல்லப் பிள்ளையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rumor-of-an-ltte-training-camp-in-palai-1787348906"></link>
            <id>https://tamilwin.com/article/rumor-of-an-ltte-training-camp-in-palai-1787348906</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் புலிகள் பயிற்சி முகாம் இயங்கி வருவதாகவும் ,ஆறுமாடி கட்டடம் இருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.</p><p>ஒருவேளை, விடுதலைப்பிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் அவ்வாறான கட்டடங்கள் இருக்கின்றதோ தெரியாது என்று கூறப்பட்டது.</p><p>இந்த தகவலை வெளியிட்டவர் தென்னிலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சங்கீத் ஜயசேகர என்பவராவர்.</p><p>தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதிகள் அத்தியாவசியத் தேவையாக இருப்பது உடனடியாக வடக்கு, கிழக்கில் ஏதாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.</p><p>மேலும், பளைப்பகுதியிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமாக மாற்றப்போகின்றார்களா, அல்லது, வெடிகுண்டுகள் தயாரிக்கப்போகின்றார்களா என அங்கிருக்கும் அதிகாரிகள் தமக்கு தெரிவிப்பதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த வதந்தியை பரப்பிய பின்னணியில் இருப்பது யார், அவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் வீட்டோடு தொடர்புடையவரா என்பது தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mhuzVa404WY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் இன்று யாழ். விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-to-visit-jaffna-today-1787344290"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-to-visit-jaffna-today-1787344290</id>
            <summary type="text">பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
செய்யவுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
செய்யவுள்ளார்.
</p><p>
பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும்
நிகழ்வு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார்.
</p><p>
இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளன.
</p><p>
அதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம்
இடம்பெற்று வரும் நிலையில், பிரதமர் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடு செய்வார்
எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7d4c988-f847-485f-b05b-3f14336b2850/26-6a88def5cf669.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T23:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்! அரிசி இறக்குமதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/do-not-hit-farmers-where-it-hurts-rice-sajith-1787351795"></link>
            <id>https://tamilwin.com/article/do-not-hit-farmers-where-it-hurts-rice-sajith-1787351795</id>
            <summary type="text">விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.</p><p>

2026ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசுக்குத் தேவையான
7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகச்
சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் நேற்று(21) பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p>

76 ஆண்டு கால விவசாயிகளின் சோகத்தைச் சுபீட்சமான நிலைக்கு மாற்றித் தருவோம்
எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளின் வாழ்க்கை மற்றும்
ஜீவனோபாயத்தைப் பொருளாதாரப் படுகொலையாக மாற்றியுள்ளனர் என்று அவர் குற்றம்
சாட்டினார்.</p><h2>அரிசி இறக்குமதி</h2><p>
</p><p>
அரசின் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி, சிவப்பு நாடு மற்றும்
வெள்ளை நாடு போன்றவற்றுக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது,
விவசாயிகளுக்குக் கிடைக்கும் குறைந்த இலாபத்தைக் கொண்டு எவ்வாறு வாழ முடியும்
என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07371cad-ebd8-4e07-8358-73611577f5f6/26-6a88d9281333f.webp' /></p><p>

கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்கு உரிய கட்டுப்பாட்டு விலைகள்
பிறப்பிக்கப்படாததற்குக் காரணம், அத்துறையுடன் தனவந்தர்கள்
சம்பந்தப்பட்டிருப்பதே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>நாட்டின் உண்மையான அரிசித் தேவை 2.5 மில்லியன் மெற்றிக் தொன்னாக இருக்க, 3.2
மில்லியன் மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்படுகின்றது.</p><p>5 இலட்சம்
மெற்றிக் தொன் மேலதிக கையிருப்பு உள்ள நிலையிலும் 3 இலட்சத்து 40 ஆயிரம்
மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை விவசாயிகளின் வயிற்றில்
அடிப்பது போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படவில்லை: நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் மீறியதாகக் குடும்பத்தினர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787344002"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787344002</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாகிஸ்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாகிஸ்தான் அரசு பின்பற்றத் தவறிவிட்டதாக அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட
மருத்துவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 73 வயதான இம்ரான்
கானுக்கு, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக சிறப்பு மருத்துவ
சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவக் குழு பரிந்துரைத்திருந்தது.</p><h2>&nbsp;மீண்டும் சிறைக்கு</h2><p>

இதன் அடிப்படையில், அவரை 'அடியாலா' சிறையிலிருந்து 'ஷிஃபா சர்வதேச
மருத்துவமனைக்கு' உடனடியாக மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.
</p><p>
எனினும், இம்ரான் கான் ஷிஃபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல்,
அரசினால் நிர்வகிக்கப்படும் 'பிம்ஸ்' மருத்துவமனைக்கு நள்ளிரவில் அழைத்துச்
செல்லப்பட்டு சில மணிநேர பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கே
கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d483971-2cf0-4d68-90d6-fd2411a9f1d8/26-6a88b4840fa4a.webp' /></p><p>
</p><p>
வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட
இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் மற்றும் அவரது தனிப்பட்ட மருத்துவர் பைசல்
சுல்தான் ஆகியோர், அரசாங்கம் நீதிமன்ற உத்தரவை முழுமையாக மீறியுள்ளதாகக்
குறிப்பிட்டனர்.
</p><p>
ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டதால்
ஏற்பட்ட பாதுகாப்புச் சூழல் காரணமாகவே அவர் பிம்ஸ் மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டதாக பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார்
விளக்கமளித்துள்ளார்.
</p><p>
அத்துடன், அவர் தகுதிவாய்ந்த மருத்துவக் குழுவினால் பரிசோதிக்கப்பட்டு
ஆரோக்கியமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரே மீண்டும் சிறைக்கு
அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
</p><p>
இருப்பினும், அரசின் இந்த நடவடிக்கையானது நீதிமன்ற அவமதிப்பு எனத்
தெரிவித்துள்ள இம்ரான் கானின் 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' கட்சி, இதற்கு
எதிராக உச்ச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T21:41:54+00:00</updated>
        </entry>
    </feed>
