<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-10T12:24:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் சமூகத்தில் அதிகரிக்கும் மரணங்கள் - பொதுமக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-suicide-prevention-1789042607"></link>
            <id>https://tamilwin.com/article/world-suicide-prevention-1789042607</id>
            <summary type="text">இன்றைய தினம்(10.09.2026) நாடளாவிய ரீதியில் உலக தற்கொலை தடுப்புத்தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த தினத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய தினம்(10.09.2026) நாடளாவிய ரீதியில் உலக தற்கொலை தடுப்புத்தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இந்த தினத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன், எம் உறவுகளுக்காக இந்த தினத்தை அனுஷ்டிக்க வேண்டும்.</p><p> 

தமிழ் மாவட்டங்களில் சமீபக்காலமாக தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.</p><h2> 

விவரங்களை பெற..</h2><p>

இதுபோன்ற சம்பவங்களை குறைப்பதற்கு எம்மால் முடிந்த வரையில் முயற்சிப்போம். </p><p>

இந்த நிலையில், சர்வதேச தற்கொலை தடுப்புத்தினத்தை முன்னிட்டு, நாளைய தினம் 3 மணியளவில், சிவகுரு ஆதீனத்தில் உள நல மருத்துவர்களால் பயிற்சியொன்று இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f043ac-094a-4bf2-9092-6cc06240b791/26-6aa29ff54d74a.webp' /></p><p> </p><p>

இதில், சிவ சகோதரிகள், தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துக்கொள்வார்கள்.
</p><p>
அத்துடன், இந்த முயற்சி திட்டம் தொடர்பில் மேலதிக விவரங்களை தெரிந்துக் கொள்ள நிர்வாக உத்தியோகத்தரை <b>0776943179 </b>என்ற இலக்கம் மூலம் தொடர்புக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T12:18:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் யோசிதவுக்கு ஆதரவாக வந்த நபருக்கு நேர்ந்த கதி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individuals-who-gave-false-testimony-in-yoshitha-1789040605"></link>
            <id>https://tamilwin.com/article/individuals-who-gave-false-testimony-in-yoshitha-1789040605</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோசித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச்சாட்சியம் வழங்கிய சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோசித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச்சாட்சியம் வழங்கிய சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது தொடர்பான வழக்கு இன்று(10.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>

யோசிதவிற்கு ஆதரவாக பொய் சாட்சியம்</h2><p>

வழக்கு விசாரணையின் போது, சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த கறுப்புப் பணத்தை, முறையான மற்றும் சட்டப்பூர்வமான பணம் போன்று மாற்றும் யோசித வழக்கில், பாலித கமகே என்பவர் முக்கிய சாட்சியாளராக முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a481a1-3473-49d8-957d-b572313bd0ea/26-6aa29ac62f2bc.webp' /></p><p> </p><p>

இவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் முரணான கருத்துக்கள் இருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

இதன் அடிப்படையில், பொய்யாக சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 


அதன் பின்னர், குறித்த சாட்சியாளரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-09-10T11:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல இடங்களில் அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hot-weather-warning-sri-lanka-1789039216"></link>
            <id>https://tamilwin.com/article/hot-weather-warning-sri-lanka-1789039216</id>
            <summary type="text">நாட்டின் பல மாவட்டங்களில் இன்று மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானிக்க வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல மாவட்டங்களில் இன்று மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானிக்க வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அந்த திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் இதனைத் தெரிவித்தார். </p><p>

இதன்படி, இன்றைய தினத்தில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதான நிலையை எட்டியுள்ளதால், அதுகுறித்து பொதுமக்கள் விசேட அவதானம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2>எச்சரிக்கை</h2><p> 

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மட்டுமின்றி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கிடையில், நாடு முழுவதும் நிலவும் வறட்சியான வானிலை தணிவதற்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பெய்யவுள்ள இடைப் பருவமழைக் காலம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b05a27e-80b2-4bb4-920f-456344442bdc/26-6aa2997069965.webp' /></p><p> </p><p>

தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்துள்ளதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்ற போதிலும், அதனால் நிலவும் கடுமையான வறட்சி நிலைமை தணியும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதேவேளை,&nbsp;வரலாற்றில் இதுவரை பதிவான மிக வெப்பமான மாதமாக கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T11:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாணின் எடை குறித்து எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-weight-of-the-bread-to-the-consumer-1789036252"></link>
            <id>https://tamilwin.com/article/the-weight-of-the-bread-to-the-consumer-1789036252</id>
            <summary type="text">விற்பனை செய்யப்படும் பாணின் எடையை வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் நுகர்வோருக்கு தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>விற்பனை செய்யப்படும் பாணின் எடையை வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் நுகர்வோருக்கு தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>

அதன்படி, முழுமையான ஒரு பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை 450 கிராம் ஆகும்.
</p><p>
அதேவேளை, அரை பாணின் நிலையான எடை 225 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f87daad-c669-42d6-a45a-20ec4804dee1/26-6aa28d7f4c301.webp' /></p><p>
எனினும், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவான எடையில் பாண் விற்பனை செய்த வர்த்தகர்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி உறுதிப்பத்திரம் வழங்குவதாக கூறி ஏமாற்றுகின்றதா அநுர அரசு..! ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-provide-to-fake-land-certificates-1789039025"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-provide-to-fake-land-certificates-1789039025</id>
            <summary type="text">அண்மையில் பண்டாரவளை - கபரகலை தோட்டத்தில் வழங்கப்பட்ட 50 புதிய வீடுகளுக்கு இதுவரையில் காணி உரிமைப்பத்திரம் கொடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் பண்டாரவளை - கபரகலை தோட்டத்தில் வழங்கப்பட்ட 50 புதிய வீடுகளுக்கு இதுவரையில் காணி உரிமைப்பத்திரம் கொடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.</p><p> 

நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2> 


கபரகலையில் வழங்கப்பட்ட 50 வீடுகள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

மலையகத்தில் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 50 வீடுகளில் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. மாறாக, அந்த வீடுகளுக்கான காணி உரிமைப்பத்திரம் இதுவரையில் கொடுக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de07192c-49d1-4871-a4e2-24df20873199/26-6aa2968637649.webp' /></p><p> 


அன்று, 163 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த 163 காணி உறுதிப்பத்திரங்களும் 2015 முதல் 2025 வரையான
காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்ட
வீடுகளுக்கான காணி உரிமை ஆவணங்களாகும்.
</p><p>
அப்படியானால், அன்று கபரகலையில் திறந்து வைக்கப்பட்ட 50 புதிய வீடுகளுக்கான
காணி உறுதிப்பத்திரங்கள் எங்கே?

மேலும், அந்த 50 வீடுகளின் பயனாளிகளிடம் வழங்கப்பட்ட ஆவணம் காணி
உறுதிப்பத்திரம் அல்ல, மாறாக ஒப்பந்தம் என்பது போன்றே தெரிகின்றது. 





காணி உறுதிப்பத்திரம் என்பது வேறு, ஒப்பந்தம் என்பது வேறு என்பதை இந்த இடத்தில் பதிவுச் செய்துக் கொள்ள விரும்புகின்றேன்.</p><h2>53 வருட ஒப்பந்தம்</h2><p> 


எனவே, கபரகலை தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளுக்கான காணி
உரிமை எவ்வாறு பயனாளிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது? அவர்கள் பெற்றுள்ள
ஆவணம் உண்மையில் காணி உறுதிப்பத்திரமா அல்லது ஒப்பந்தமா? என்பதை சம்பந்தப்பட்ட
தரப்பினர் மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/335ac5c4-56ae-40a4-9bce-14ebf4f06bd9/26-6aa29686edb20.webp' /></p><p>
</p><p>

தோட்டத்தொழிலாளர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிராக இருப்பது நாங்களோ
நீங்களோ தொழிற்சங்கங்களோ அல்ல தோட்ட நிர்வாகம் தான். இன்றும் காணிகளை
பெற்றுக்கொடுக்க தடையாக உள்ளது.
</p><p>
இந்த நிலையில் ஜனாதிபதி, தோட்ட முதலாளிமார்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம்
2044ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் தற்போது நேரகாலத்தோடு இந்த ஒப்பந்தத்தினை
மீண்டும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>


பெருந்தோட்டங்களை பெற்றுக்கொண்டு 20 நிறுவனங்களில், 16 நிறுவனங்கள் தாங்கள்
தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதாகவும் காட்டியுள்ள நிலையில், 
அவர்களுடனான ஒப்பந்தம் நீடிப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை மக்கள்
மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:39:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை - விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/33-year-old-man-hacked-death-vadamarachchi-jaffna-1789027407"></link>
            <id>https://tamilwin.com/article/33-year-old-man-hacked-death-vadamarachchi-jaffna-1789027407</id>
            <summary type="text">புதிய இணைப்புயாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து
வெட்டிப் படுகொலை செய்யப்பட்டமை முன் பகை காரணமாக என தெரியவந்துள்ளது.
வடமராட்சி கிராம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து
வெட்டிப் படுகொலை செய்யப்பட்டமை முன் பகை காரணமாக என தெரியவந்துள்ளது.</p><p>
வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் நேற்றையதினம்(09.09.2026) இரவு
இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன்
(வயது 33) என்பவரே படுகொலை செய்யப்பட்டார்.</p><p>
துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின்
ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிராம கோடு பகுதியில் 33 வயது இளைஞன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த சம்பவம்
நேற்று(09.09.2026) இரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
</p><h2>பொலிஸார் தீவிர விசாரணை</h2><p>
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,&nbsp;</p><p> கொலை செய்யப்பட்ட நபர் கடைக்கு வெற்றிலை வாங்கிக்கொண்டு வெளியே மோட்டார்
சைக்கிளில் ஏறிப் புறப்பட முற்பட்ட போது எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை
வழிமறித்து வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad3956ff-e3ad-4805-af30-9a62a149e0fe/26-6aa265e782e96.webp' /></p><p>குறித்த சம்பவம்
பருத்தித்துறை பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சம்பவம் நடந்த இடத்திற்கு காலை 11:00 மணியளவில் சென்ற பருத்தித்துறை
நீதாவான் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார்.
</p><p>
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டு வருவதுடன் தடயவியல் ஆய்வு பொலிஸாரும் சம்பவ இடத்தை ஆய்விற்கு
உட்படுத்தி வருவதுடன் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் தீவிர
விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.</p><p><b><i>மேலதிக தகவல் - தீபன்</i></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கத்தால் இலங்கையிலும் தீவிரமான மாற்றங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-regarding-el-nino-conditions-1789037416"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-regarding-el-nino-conditions-1789037416</id>
            <summary type="text">உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் &#039;எல் நினோ&#039; (El Niño) வானிலை
நிகழ்வு, இலங்கையிலும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் 'எல் நினோ' (El Niño) வானிலை
நிகழ்வு, இலங்கையிலும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுவதாக&nbsp;புவியல் துறை பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>எல்நினோ நிலைமை தொடர்பாக கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை
இன்று 10.09.2026 மேற்கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை எல்
நினோ மிக வலுவாக இருக்கும் என வானிலை கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><h2>முக்கிய காலகட்டங்கள்</h2><p>

இலங்கையில் இதன் தாக்கத்தை மூன்று முக்கிய காலகட்டங்களாக பிரிக்கலாம்:

ஜூலை முதல் அக்டோபர் தொடக்கம் வரை: வறண்ட வானிலை நிலவும்.
</p><p>
அக்டோபர் முதல் டிசம்பர் முற்பகுதி வரை: தீவிரமடைந்து கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கு ஏற்படும்.</p><p>

டிசம்பர் நடுப்பகுதி முதல் 2027 ஜூன் வரை: மீண்டும் தீவிர வறட்சி தொடரும்.
</p><p>
எதிர்பார்க்கப்படும் முக்கிய பாதிப்புகள்

வெப்பநிலை உயர்வு: இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 3
.
C வரையிலும், நிலப்பரப்பு வெப்பநிலை 2.5
∘
C வரையிலும் அதிகரிக்கும்.</p><h2>வெள்ள அபாயங்கள்</h2><p>
</p><p>
கனமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: அக்டோபர் - டிசம்பர்
காலகட்டத்தில் 3 புயல்கள் மற்றும் 7 குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்
உருவாக வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c21e20-a780-4163-a355-f383aaae03a1/26-6aa2918cc9638.webp' /></p><p>
</p><p>
அதிக மழைப்பொழிவு: வடகிழக்கு மற்றும் இரண்டாவது இடைப்பருவக் காற்று காலத்தில்
வட மாகாணங்களில் சராசரியாக 700 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகலாம்.
குறைந்தபட்சம் 2 பெரிய வெள்ள அபாயங்கள் ஏற்படக்கூடும்.</p><p>
விவசாயம் மற்றும் மீன்பிடித் துறை பாதிப்பு: வட, கிழக்கு மாகாணங்களில் காலபோக
நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டு, விளைச்சல் இழப்பு ஏற்வடையக்கூடிய
சூழல் உள்ளது. மீன்பிடித் தொழிலும் இதனால் கடுமையாக பாதிக்கப்படலாம்.</p><h2>கோரிக்கைகள்
</h2><p>
உலகளாவிய ரீதியில் தானிய உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் என
எதிர்பார்க்கப்படுவதால், இலங்கையின் உணவுத் தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி
செய்ய வேண்டியது அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba10bdd1-c5a5-44ca-9f1e-353b9c0fdb99/26-6aa2918d88d54.webp' /></p><p>
</p><p>
எனவே, விவசாயிகள் நஷ்டத்தால் தொழிலைக் கைவிடாமல் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும். </p><p>காலநிலை மற்றும் விவசாயக் காப்பீட்டுத் திட்டங்களை முறையாக
நடைமுறைப்படுத்துவதுடன், உரிய மானியங்களையும் வழங்கி, விவசாயிகளின்
வாழ்வாதாரத்தையும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவின் மேடையில் அர்ச்சுனா எம்.பி..! நாமலின் மோசடி குறித்து சபையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307"></link>
            <id>https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307</id>
            <summary type="text">


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நாமலுக்காக மேடை ஏறுவேன்..</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

சமூக வலைத்தளங்களில் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறுவது குறித்து பல பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p> </p><p>

அது, மகிந்த ராஜபக்ச அல்ல, நாளை ரணில் விக்ரமசிங்க அழைத்து அவருடயை மேடையில் ஏறச் சொன்னாலும் அந்த மேடைக்குச் செல்வேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eefc24be-d809-4d3e-b204-a7971f9dcf2d/26-6aa28e4f082cd.webp' /></p><p>
</p><p>
எமது அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச, அவர் அழைத்தாலும் அவருடைய மேடைக்கும் நான் செல்வேன். எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசியல்வாதிக்கும் எனது ஆதரவு இருக்கும். அதேபோலத்தான் நாமல் ராஜபக்சவும். </p><p>

நாமல் ராஜபக்ச மோசடியில் ஈடுபட்டிருந்தாலோ, அவர் மீதான தனிப்பட்டக் குற்றங்களையோ நான் ஆதரிக்கவில்லை. அது எனக்குத் தொடர்பற்றது. </p><p> எதிர்க்கட்சி உறுப்பினராக அவரை நான் ஆதரிக்கின்றேன்.

நாமல் ராஜபக்ச அல்ல, எனது மக்களுக்காக யாருடைய மேடையிலும் ஏறத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:03:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLS சான்றிதழ் இல்லாமல் வியாபாரம் செய்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/verdict-against-a-company-sold-extension-cords-1789035621"></link>
            <id>https://tamilwin.com/article/verdict-against-a-company-sold-extension-cords-1789035621</id>
            <summary type="text">பண்டாரவளை பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்று, இலங்கையின் தர நிர்ணய சான்றிதழ் (SLS) முத்திரை இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த குற்றத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரவளை பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்று, இலங்கையின் தர நிர்ணய சான்றிதழ் (SLS) முத்திரை இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் ரூ. 400,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><h2>

4 பிரிவுகளில் வழக்குப் பதிவு</h2><p>
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
</p><p>
கடந்த ஒகஸ்ட் 28 அன்று நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​கட்டாய SLS சான்றிதழ் தேவைப்படும் நீட்டிப்புக் கம்பிகள், SLS முத்திரை இல்லாமல் ரூ. 2,790 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f407e13-64dd-4183-9d64-ea0816be6526/26-6aa28d5812f6e.webp' /></p><p>
</p><p>
மேலும், குறைந்தபட்ச உத்தரவாதக் காலத்தை வழங்காதது மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து சட்டப்பூர்வ ரசீதுகள் இல்லாமல் பொருட்களை விற்பனைக்கு வைத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
</p><h2>
சட்டப்பூர்வ ரசீதுகள் இன்மை</h2><p>
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து, பிரதிவாதி நிறுவனத்திற்கு ரூ. 400,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2017 டிசம்பர் 7 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு அரசிதழ் எண் 2048/39-இன் ஆணை எண் 63-இன் கீழ், 250 வோல்ட்டுகளுக்கு மிகாத பல மின் சாதனங்களுக்குக் கட்டாய SLS தரச் சான்றிதழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1aca49f-3bcf-4b5d-9a89-9b5047e6b835/26-6aa28d58d1a2f.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, பிளக்குகள், சாக்கெட் அவுட்லெட்டுகள், மின் நீட்டிப்புக் கம்பிகள், அடாப்டர்கள், உருகி இணைப்பு அலகுகள், மாற்றி பிளக்குகள் மற்றும் கேபிள் ரீல்கள் ஆகியவை தொடர்புடைய SLS தரச் சான்றிதழைக் கொண்டிருப்பது கட்டாயமாகும்.</p><p>

மின் விபத்துகள் மற்றும் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக, நுகர்வோர் விவகார ஆணையம், அத்தகைய மின் சாதனங்களை வாங்கும் போது SLS தரச் சின்னம் மற்றும் உத்தரவாதக் காலத்தைச் சரிபார்த்து, சட்டப்பூர்வ ரசீதைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T10:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scanning-machines-for-palaly-airport-and-harbour-1789036469"></link>
            <id>https://tamilwin.com/article/scanning-machines-for-palaly-airport-and-harbour-1789036469</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றில் உடல் பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றில் உடல் பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அதற்கமைய, இலங்கைச் சுங்கம் இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
அண்மைய காலமாக பயணிகள் பரிமாற்றம் அதிகரித்துள்ளமையை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><h2><b>
 உடல் பரிசோதனை </b></h2><p>கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe374ab-5990-4252-bd0c-ad6df0ac4041/26-6aa28a6ab0abf.webp' /></p><p>புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியாவில் இருந்தும் பெருமளவு சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக பயணங்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T10:46:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுகாதாரத்துக்கு முரணாக தயிர் விற்பனை: இருவருக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curd-sold-in-violation-48-000-fine-1789033810"></link>
            <id>https://tamilwin.com/article/curd-sold-in-violation-48-000-fine-1789033810</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>சன்னதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி
1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலன் மற்றும் பொதுச் சுகாதார
பரிசோதகர்களான உதயபாலா, சால்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட
பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை
செய்தமை கண்டறியப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு எதிராக அச்சுவேலி 1ஆம்
பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50875538-0471-4cee-88f0-bd7beac7638f/26-6aa284933a7bd.webp' /></p><p>
</p><p>குறித்த வழக்கு இன்று (10.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு
எதிரிகளுக்கும் மன்றினால் தலா 24,000
ரூபா வீதம் மொத்தம் 48,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:26:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொன்ற சம்பவம்! சிசிடிவி காட்சியில் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-and-killing-kanjipanis-cousin-in-kotahena-1789033973"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-and-killing-kanjipanis-cousin-in-kotahena-1789033973</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் காஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போதைப்பொருட்களுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் காஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இந்த துப்பாக்கிச்சூடு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் ஒரு கடைக்கு முன்பாக ஆகஸ்ட் (10) பிற்பகல் நடைபெற்றுள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் மட்டக்குளியை சேர்ந்த 23 வயதுடையவர் ஆவார்.</p><h2>பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்</h2><p> </p><p>இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர், கொழும்பு 05, கிருலப்பனையை சேர்ந்த 33 வயதான முகமது அஸ்மின் மொஹிதீன் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13b8f37-db31-4c9c-b381-d3594e78f172/26-6aa2857f673e9.webp' />&nbsp;</p><p> 

இவர் காஞ்சிபானி இம்ரானின் மாமா என்று பொலிஸ் விசாரணையில் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.</p><p>துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததை சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் கூறுகின்றது.</p><h2>சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலை&nbsp;</h2><p>

சந்தேகநபரை கைது செய்த நேரத்தில், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 12 கிராம் மற்றும் 470 மில்லிகிராம் போதைப்பொருட்களும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைபேசிகளும் வழக்கு ஆதாரங்களாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது. </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (10) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவிருந்தார்.
</p><p>
மேலும், கொட்டாஞ்சேனை பொலிஸ் மற்றும் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-for-students-selected-for-universities-1789032064"></link>
            <id>https://tamilwin.com/article/notice-for-students-selected-for-universities-1789032064</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.</p><h2>செப்டெம்பர் 17ஆம் திகதிக்கு முன்</h2><p> 

இந்தச் சுற்றின் கீழ் பல்கலைக்கழகப் படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 2026 செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f9b8ee5-7aa0-445b-b45e-60adbcd543a9/26-6aa27ce776c1e.webp' /></p><p>

சம்பந்தப்பட்ட பெறுபேறுகள், பல்கலைக்கழக அனுமதி மற்றும் பதிவு செய்வதற்குத் தேவையான மேலதிக விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் <a href="www.ugc.ac.lk" target="_blank">www.ugc.ac.lk</a> ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:50:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajnath-singh-seetha-amman-temple-in-nuwara-eliya-1789032821"></link>
            <id>https://tamilwin.com/article/rajnath-singh-seetha-amman-temple-in-nuwara-eliya-1789032821</id>
            <summary type="text">இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்
ராஜ்நாத் சிங் இன்று(10.9.2026) நுவரெலியாவிற்கு விஜயம் செய்து வரலாற்றுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்
ராஜ்நாத் சிங் இன்று(10.9.2026) நுவரெலியாவிற்கு விஜயம் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க
சீதையம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
</p><p>
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக செப்டம்பர் 8ஆம் திகதி இலங்கைக்கு வருகை
தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அரச தலைவர்களுடன்
இருதரப்பு உறவுகள் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட
பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.</p><p>இந்நிலையில் அவரது இலங்கை விஜயத்தின் இறுதி நாளான இன்றுஇ நுவரெலியா சீதா எலிய
பகுதியில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.</p><h2>இந்தியா – இலங்கை உறவு</h2><p>

இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஆலய
நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்டதுடன்இ ஆலயத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வில்
கலந்துகொண்டு சீதையம்மனை தரிசித்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff81d5a-07fc-49d8-9da5-ab66a9d20f28/26-6aa27ba40ba30.webp' /></p><p>முன்னதாக கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய
உள்ளிட்ட இலங்கை அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் இந்தியா –
இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.
</p><p>
மேலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு கடல்சார்
ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புத் தொடர்புகளை மேலும்
வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:43:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 டொலரை கடந்து செல்லும் மசகு எண்ணெய் விலை! உலக சந்தை ஸ்தம்பிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lubricant-prices-cross-100-1789032774"></link>
            <id>https://tamilwin.com/article/lubricant-prices-cross-100-1789032774</id>
            <summary type="text">ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) வட்டி வீதக் கொள்கை அறிவிப்பு வெளிவரவுள்ள
நிலையில், சர்வதேச நாணயச் சந்தையில் யூரோவின் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) வட்டி வீதக் கொள்கை அறிவிப்பு வெளிவரவுள்ள
நிலையில், சர்வதேச நாணயச் சந்தையில் யூரோவின் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களில்
இல்லாதவாறு உயர்வடைந்து உறுதியான நிலையில் காணப்படுகின்றது.</p><p>

அதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும்
பெரல் ஒன்று 100 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளமையால்
உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பிணைப்பத்திர விளைச்சல்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><h2>தீவிரமடைந்துள்ள போர்ச்சூழல்</h2><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே
தீவிரமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக வளைகுடாப் பகுதிகளூடான எரிபொருள்
விநியோகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633325b2-5a47-4eff-ac93-a7293246c5dd/26-6aa2794863320.webp' /></p><p>
</p><p>
வரவிருக்கும் ஐரோப்பிய குளிர்காலத்தை முன்னிட்டு வெப்பமூட்டும் எண்ணெய்
மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதால், பணவீக்கக்
கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி வீதங்களை மேலும்
உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>
அமெரிக்காவின் மத்திய வங்கியான 'பெடரல் ரிசர்வ்' இந்த மாத இறுதியில் வட்டி
வீதங்களை அதிகரிக்கும் சாத்தியக்கூறு 60 சதவீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>எரிபொருள் விலையேற்றம்</h2><p>ஜப்பானிய யென் நாணயத்தின் மதிப்பும் கடந்த ஜூலை மாத தலையீட்டிற்குப் பின்னர் 6
சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவுசெய்து 7 மாத உயர்வை எட்டியுள்ளது.
</p><p>
எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாகச் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட
வல்லரசு நாடுகளின் பணவீக்கம் மீண்டும் உயர்வடைந்து வருவதால் உலகளாவிய
நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பான சூழல் நிலவுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய முன்னாள் அரச ஜோதிடர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-government-astrologer-ciaboc-investigation-1789023747"></link>
            <id>https://tamilwin.com/article/former-government-astrologer-ciaboc-investigation-1789023747</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன&amp;nbsp;சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன&nbsp;சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளார்.</p><p>இவர் இன்று காலை (10) சுமார் 10.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p>மேலும், தொடர்புடைய விசாரணை சம்பந்தமான சுமனதாஸ அபேகுணவர்தனவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K4kYZlRMH8A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் மனைவி லிமினியின் அரசியல் பயணம் தொடர்பில் திலக் வீரசிங்க வெளியிட்ட பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/limini-weerasinghe-namal-1789019323"></link>
            <id>https://tamilwin.com/article/limini-weerasinghe-namal-1789019323</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை என லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்சவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை என லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்சவின் மாமனாருமான பிரபல தொழிலதிபர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>வலையொளிதளம் ஒன்றுக்கு நேற்று(09.09.2026) வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதில் அவர் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது</p><h2>
</h2><p></p><h2>லிமினி தந்தை பதிலடி</h2><p>நான் லிமினியிடம் கேட்டபோது அவர் அப்படி ஆயத்தமாக இல்லை என்று சொன்னார். இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. எங்கள் நிலைமை என்னவென்றால் இவை்வாறான தகவல் எங்கிருந்து வெளியே வருகின்றது? எனக்கு தெரிந்தவரையில்&nbsp;லிமினி 12ஆம் திகதி அநுராதபுர மேடையில் ஏறமாட்டார்.</p><p>இன்று வரை அவர் மேடை ஏறுவாரா என்று எனக்கு தெரியாது. லிமினி நாமலை விட்டுவிட்டு மேடையில் ஏறி அரசியலில் மேலே வரப்போகிறாரா? என்பது சாத்தியமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9360d246-97a0-48d1-a9ac-0138d2998974/26-6aa244bde0050.webp' /></p><p>இப்போது எங்களது கடமை என்னவென்றால் லிமினியை பார்த்துக் கொள்வதும், அவரது பிள்ளைகளை பார்த்துக்கொள்வதும் தான். தற்போது அவர்கள் அனைவரும் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் இருந்து தான் உணவு அனுப்புகிறோம், வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் தான் சமைக்கிறார்கள்.</p><p> 
2029 ஜனாதிபதி வேட்பாளர் எனது மகள் லிமினி என குறிப்பிடுகிறார்கள். நான் அதனை ஏற்றுக்கொள்வதும் இல்லை. வீட்டில் அப்படி ஒரு உரையாடலும் நடக்கவில்லை. இது எங்கிருந்து இந்த அளவுக்கு வெளியே வந்தது என்பது தான் என்னுடைய கேள்வியாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp;</p><p><b><i>you may like this video&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DBVX8pLX51w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:16:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-missing-person-recovered-in-puthukkudiyiruppu-1789031100"></link>
            <id>https://tamilwin.com/article/body-missing-person-recovered-in-puthukkudiyiruppu-1789031100</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 7ஆம் திகதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு
இன்று (10) தென்னங்காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு
விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36cde177-04c3-4d1b-8785-0abf498c059c/26-6aa272bf30dab.webp' /></p><p>
</p><p>
மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் நண்பருக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/assets-worth-crores-shiran-basik-s-partner-frozen-1789029355"></link>
            <id>https://tamilwin.com/article/assets-worth-crores-shiran-basik-s-partner-frozen-1789029355</id>
            <summary type="text">தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளியின் சொத்துக்கள்&amp;nbsp;சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளியின் சொத்துக்கள்&nbsp;சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் முடக்கப்பட்டுள்ளது. </p><p>நளின் அர்ஜுன என்பவருக்கு சொந்தமானதாக குறிப்பிடப்படும் இரண்டு வீடுகள் இன்று (10) முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>இரண்டு வீடுகளும் முடக்கம்</h2><p>கடவத்தை மற்றும் களனி பகுதிகளில் அமைந்துள்ள குறித்த இரண்டு வீடுகளும் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdd98835-4d9d-4198-aa8d-7199a09c1e45/26-6aa27094192ea.webp' /></p><p>சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
&nbsp;</p><p>இந்த விசாரணைகளின் போது, ​​சம்பந்தப்பட்ட சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட பின்வரும் சொத்துக்களை, அவை வேறு யாருக்கும் விற்கப்படுவதையோ, மாற்றப்படுவதையோ அல்லது திருத்தப்படுவதையோ தடுப்பதற்காக முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்த சொத்துக்கள் தொடர்பான உண்மைகளை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும், அவற்றை செயலிழக்கச் செய்யும் உத்தரவை நீட்டித்து அவை தொடர்ந்து நடைமுறையில் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T08:59:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மீது சஜித் அணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-faction-allegations-against-npp-government-1789029575"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-faction-allegations-against-npp-government-1789029575</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது
என்று ஐக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது
என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா
குற்றம் சாட்டினார்.</p><p>

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(9.9.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, தேசிய மக்கள் சக்தி அரசு நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றது.
இருப்பினும், இந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் நன்மை ஏற்பட்டுள்ளதே தவிர, நாட்டுக்கு எந்த நன்மையும்
கிடைக்கவில்லை.</p><h2>அரிசி இறக்குமதி</h2><p>

ஆட்சிக்கு வருவதற்கு முன் நெல்லுக்கு 152 ரூபா சான்றிதழ் விலை வழங்கப்பட
வேண்டும் எனப் போராடிய ஜே.வி.பி., ஆட்சிக்கு வந்தபின் 120 ரூபா விலையை
நிர்ணயித்ததுடன், அந்த விலையில்கூட நெல்லைக் கொள்முதல் செய்ய எவ்விதத்
திட்டமும் வைத்திருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e723ec19-c555-42af-9b56-76dfa2079477/26-6aa26f09655dd.webp' /></p><p> </p><p>அரிசி மாஃபியாவை ஒழிப்பதாகக் கூறியும், அரிசியை
இறக்குமதி செய்ய மாட்டோம் என உறுதியளித்தும் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
</p><p>
அத்தியாவசிய உணவுகளுக்கான வற் வரியை நீக்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை 30
முதல் 35 சதவீதம் வரை குறைப்பதாகவும், எரிபொருளுக்கான வற் வரியை நீக்கிக்
குறைந்த விலையில் வழங்குவதாகவும் கூறினர்.ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும்
அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் குறைக்கப்படவில்லை.</p><h2>வாகன இறக்குமதி</h2><p>
</p><p>இளைஞர்களுக்கு ஜப்பானிய மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுத் தருவதாகக் கனவு
காட்டிய ஜனாதிபதி, இன்று ஒரு சைக்கிளைக்கூட வாங்க முடியாத நிலையையே
உருவாக்கியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், அதன் பலன் பணக்காரர்களுக்கே
சென்று சேர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2984e0e-c9e3-4353-8e30-1e15aab8cc71/26-6aa26f0a1e526.webp' /></p><p> புதிய 50 சதவீத குத்தகை கட்டுப்பாட்டு விதிமுறை காரணமாக,
சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் ஒரு சிறிய கார், த்ரீவீலர் அல்லது மோட்டார்
சைக்கிளைக்கூட தவணை முறையில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு அபிவிருத்தியும் நடக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T08:49:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகதிகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலைக் கொடுத்தாரா அநுர..! எதிர்த்தரப்பு கேள்விகளுக்கு சமந்த வித்யாரத்ன பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-who-gave-land-and-houses-to-50-families-1789029777"></link>
            <id>https://tamilwin.com/article/anura-who-gave-land-and-houses-to-50-families-1789029777</id>
            <summary type="text">&amp;nbsp;நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு
சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு
சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும்
அரசாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது என கைத்தொழில் மற்றும்
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(09.09.2026) புதன்கிழமை இடம்பெற்ற பிரதமருடமான கேள்வி நேரத்தில்
மனோ கணேசன் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பிரதமர் தரப்பில் பதிலளித்து
உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

வாழ்வாதாரங்களை இழந்த மலையக மக்கள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாம் 6 ஆயிரம் வீடுகளை மலையக மக்களுக்காக வழங்குவோம் எனத்
தெரிவித்திருந்தோம். எனினும் அது இடம்பெறவில்லை என மனோ கணேசன் எம்.பி.
தெரிவிக்கின்றார்.</p><p> உண்மையில் அது அவ்வாறில்லை. அதைவிட அதிகமான வீடுகளை நாம்
மலையக மக்களுக்காக வழங்கவுள்ளோம்.

வீடு ஒன்றை நிர்மாணிப்பது என்றால் அது ஒரு நாள், இரண்டு நாட்களில் முடியாத
காரியம். ஹப்புத்தளையில் ஹல்துமுல்ல, கபரகலை பகுதிகளில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி
அதனை அந்த மக்களுக்குக் கையளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/555f112b-38b6-41ff-8e81-39df2dabe7c7/26-6aa26d93b5b71.webp' /></p><p>
</p><p>
2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடும் மழை, வெள்ளம் காரணமாக ஒரு லயன் தொகுதி
முற்றாக அழிந்தது. அதில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள். </p><p>அப்போதைய அரசின்
காலத்தில் அதற்கு மாற்றீடாக மூடப்பட்டு மிக மோசமான நிலையிலிருந்த தேயிலைத்
தொழிற்சாலையில் அந்த மக்களைத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
</p><p>

பிள்ளைகளுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
உண்மையில் அந்த மக்களின் மொழியில் கூறுவதானால் அது ஒரு அகதிகள் முகாமே.
</p><h2>
அகதி முகாமில் வாழ்ந்தவர்களுக்கு விடுதலை</h2><p>
இதுவரை காலமும் அந்த மக்கள் அந்த முகாமில் தான் வாழ்ந்து வந்தனர். ஏதோ
காரணங்களால் அப்போதைய அரசால் அவர்களுக்கு வீடு வழங்க முடியாமல் போனது.
</p><p>
எமது அரசு 2025 மார்ச் மாதம் 15ஆம் திகதி அந்த வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி,
இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு மூன்றரை வருடங்களாக அகதி
முகாமில் வாழ்ந்த மக்களுக்கு 50 வீடுகள் வழங்கப்பட்டன.

அத்துடன் கடந்த அரச காலத்தில் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியே
வழங்கப்பட்டது. எனினும் எமது அரசு அதனை மேலும் அதிகரித்து 10 பேர்ச் காணியை
அந்த மக்களுக்கு வழங்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c50021-eaf4-452a-aee3-c4a1c7a0eff0/26-6aa26d947a57e.webp' /></p><p>
</p><p>
நாம் பூணாகலை பகுதியில் நிர்மாணித்துள்ள வீடுகளின் பெறுமதி காணியுடன் சேர்த்து
83 இலட்சமாகும். அதில் காணிக்கு 5 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் அந்த நிகழ்வின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம்
ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல, அது வெறும் காகிதம் மட்டுமே என மனோ கணேசன் எம்.பி.
கூறினார். அந்தக் கூற்றை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
</p><h2>

காணி உரிமம் வழங்க நடவடிக்கை</h2><p>

 நாம் அந்த
மக்களுக்கு நிரந்தர காணி உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் அன்று பூணாகலை நிகழ்வில் வைத்து அவ்வாறான 168 காணி உறுதிப்
பத்திரங்களையும் வழங்கியுள்ளோம்.</p><p>

மேற்படி காணிகள் தோட்ட நிறுவனங்களின் கீழ் உள்ளமையால் அதற்கான விதிமுறைகள்
பின்பற்றப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காணி சீர்திருத்த ஆணைக்குழு எமது விவசாய அமைச்சின் கீழ் உள்ளது. </p><p>அந்த
நிறுவனத்துடன் கலந்துரையாடி தொடர்ச்சியாக காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் சாதாரண உறுதிப் பத்திரமே
வழங்கப்படும். எனினும் பின்னர் நிரந்தர காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும்
என்பதைக் குறிப்பிட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c7e9c4-df85-41cc-931f-3cb21c4c276d/26-6aa26d95300da.webp' /></p><p>
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே மலையக மக்களுக்கு அனைத்து
உரிமைகளும் நலன்களும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன என்பதால் அந்த மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு வேதனையாக இருக்கலாம்.

மலையக மக்களுக்கு எமது அரசு உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதை நாம்
குறிப்பிட வேண்டும்.</p><p> அதிகமான வீடுகள் எமது அரசின் காலத்திலேயே
நிர்மாணிக்கப்படுகின்றன. அந்த மக்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுத்ததும்
எமது அரசாகும்.</p><p>

எவ்வாறாயினும் நாம் மலையக மக்களுக்குக் காணி வழங்குவோம், வீடுகளையும்
வழங்குவோம். சம்பளத்தையும் அதிகரிப்போம். அனைத்து உரிமைகளையும்
பெற்றுக்கொடுப்போம் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி விவகாரம்: ஐ.நா. விசாரணையை தீவிரப்படுத்தக் கோரி பேரணிக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-burial-ground-issue-1789028276"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-burial-ground-issue-1789028276</id>
            <summary type="text">செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் பேரணியொன்றுக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>

தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று (09.09.2026) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><h2>
சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் மீட்பு</h2><p>

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன.

இவ்வாறான முக்கியமான சான்றுப் பொருட்கள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது, அவை சேதப்படுத்தப்பட்டு குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e15f24e9-8eea-4232-bd26-e15c369720ef/26-6aa2689d04ec0.webp' /></p><p>
</p><p>
எனவே, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை அரசின் தலையீடுகள் எதுவுமின்றி, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளிலும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், சர்வதேச தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார் நிபுணர்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது கட்டாயமாகும்.
</p><h2>
ஐ.நா.வின் முழுமையான பொறுப்பின் கீழ் விசாரணை</h2><p>

இதனைத் தொடர்ந்து, தடயங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த உடனடியானதும் அவசரமானதுமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5200d0-f2f4-4733-af39-4cbdf5e8f5ea/26-6aa2689dd2978.webp' /></p><p>

தமிழ் தேசியப் பேரவையும் குடிசார் அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்தப் பேரணியில், அனைத்து குடிசார் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், கல்வி மற்றும் உயர் கல்விச் சமூகத்தினர், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h2>
செப்டெம்பர் 13ஆம் திகதி பேரணி</h2><p>
எதிர்வரும் 2026 செப்டெம்பர் 13ஆம் திகதி காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
அங்கிருந்து கோவில் வீதி ஊடாக பேரணி சென்று, முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.</p><p>

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுக! அரசிடம் மனோ வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-fulfill-promises-up-country-people-1789026017"></link>
            <id>https://tamilwin.com/article/government-fulfill-promises-up-country-people-1789026017</id>
            <summary type="text">கடந்த காலங்களில் மலையக அரசியல் பிரதிநிதிகள் மலையகத்துக்கு ஏதும்
செய்யவில்லை என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. அது
முற்றிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் மலையக அரசியல் பிரதிநிதிகள் மலையகத்துக்கு ஏதும்
செய்யவில்லை என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. அது
முற்றிலும் தவறானது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று(09.09.2026) நடைபெற்ற அமர்வில் பிரதமருடனான கேள்வி
வேளையின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள வீடுகள்</h2><p>மேலும் உரையாற்றுகையில்,

"தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்
நிறைவடையவுள்ளது. </p><p>இந்த நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள எமது மலையக
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் கேள்விகளை முன்வைக்கின்றேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fbb04bc-a87b-4862-b3ce-2bfb2ca535e2/26-6aa2627394bbd.webp' /></p><p>
கடந்த அரசுகளால் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுப்படுத்தாத வீடுகள்
இந்தக் காலப்பகுதிக்குள் முழுமையாக புனரமைக்கப்பட்டு,பயனாளர்களுக்கு
கையளிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அதன் எண்ணிக்கை எத்தனை?

அரசால் காணிகள் வழங்கப்பட்டு, நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு
கையளிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனை? </p><p>தேசிய மக்கள் சக்தியின்
ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி ஒதுக்கீட்டு பயனாளிகளின்
எண்ணிக்கை எத்தனை ?</p><h2>ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்</h2><p>டித்வா புயல் தாக்கத்தைத் தொடர்ந்து மலையகத்தில் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை
அமைக்க அரசு அனுமதியளித்துள்ளதா? 2025 ஆம் ஆண்டுக்குள் 6 ஆயிரம் வீடுகளை
நிர்மாணிப்பதாகப் பெருந்தோட்டத்துறை அமைச்சர் கடந்த ஆண்டு குறிப்பிட்டார்.</p><p>
ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4082fd3e-c0f7-4aed-b1ab-216a62213167/26-6aa262744b2f9.webp' /></p><p>கடந்த காலங்களில் மலையக அரசியல் பிரதிநிதிகள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை
என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. அது முற்றிலும்
தவறானது. </p><p>கடந்த காலங்களில் இந்திய அரசுடன் கலந்துரையாடி 10 ஆயிரம்
வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம். காணி டெல்லியில் இருந்து வராது. இங்குதான் காணியை வழங்க வேண்டும்.
</p><p>

பெருந்தோட்ட மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள்.
அதனை விடுத்து கடந்த காலத்தை விமர்சித்துக் கொண்டிருக்காதீர்கள் என்று அரசிடம்
கேட்டுக்கொள்கின்றேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:55:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒலுவில் துறைமுகத்தை மீளச் செயற்படுத்த துரித நடவடிக்கை - நாடாளுமன்றில் பிரதி அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-action-to-reactivate-oluville-port-1789026673"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-action-to-reactivate-oluville-port-1789026673</id>
            <summary type="text">இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப்
பாதுகாப்பதுடன், நாட்டின் கடல் மற்றும் நீரியல் வளங்களை நிலைபேன்தகு முறையில்
முகாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப்
பாதுகாப்பதுடன், நாட்டின் கடல் மற்றும் நீரியல் வளங்களை நிலைபேன்தகு முறையில்
முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே
தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்றைய தினம்(09.09.2026) நாடாளுமன்ற அமர்வின்போது, துறைமுகங்களின் தற்போதைய நிலை, மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சுருக்கு வலைப்
பயன்பாட்டுக்கான அனுமதிப்பத்திர விதிமுறைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 


அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தகத்
துறைமுகம் நீண்டகாலமாக மணல் படிவத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது பயன்பாடற்ற
நிலையில் காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவக் குடும்பங்கள்
பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><h2>

வர்த்தகக் கப்பல்கள் வருவதில் உள்ள சிரமம்</h2><p>
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, </p><p>

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட
காலப்பகுதியில் அலைகளின் வேகம், காற்றின் வேகம், கடல் நீரோட்டங்களின் தன்மை
மற்றும் மணல் நகர்வு உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் போதுமான அறிவியல் மற்றும்
முறையான சாத்தியக்கூறு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதமையே துறைமுகத்தின்
தற்போதைய நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a45971-91ad-4663-8f3b-085d59e6a722/26-6aa261d75d621.webp' /></p><p>

சுமார் நான்கு தசாப்தங்களாக துறைமுக நிர்மாணம் மற்றும் அபிவிருத்திப் பணிகள்
முன்னெடுக்கப்பட்ட போதிலும், போதிய அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும்
அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்படாததன் காரணமாக துறைமுகத்தின் நுழைவாயிலில் பாரியளவில் மணல் படிந்துள்ளது. </p><p>


மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் மாதிரி ஆய்வுகள், கிடைக்கப்பெற்ற அறிவியல்
தரவுகள் மற்றும் மீனவ சமூகத்தினரின் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து
உரிய முறையில் திட்டமிடப்படாததன் விளைவாக, தற்போது வர்த்தகக் கப்பல்கள்
மற்றும் மீன்பிடிப் படகுகள் துறைமுகத்திற்குள் நுழைவதிலும் வெளியேறுவதிலும்
பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றன.</p><h2>

துறைமுகங்களில் உள்ள மணலை அகற்ற நடவடிக்கை</h2><p>
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள்
முன்வந்துள்ள நிலையில், துறைமுகப் பகுதியில் தேங்கியுள்ள மணலை அகற்றி அதனைப்
பெறுவதில் அவை அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றன. </p><p>எனினும்,
கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த
மணலில் முக்கியமான கனிமப் பொருட்கள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதால்,
அவற்றை வெளிநாடுகளுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்களும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d76dd78-2192-43dc-9f13-1752f6830975/26-6aa261d81dd2a.webp' /></p><p>


இதனால், தற்காலிகத் தீர்வுகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக, ஒலுவில் துறைமுகப்
பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் நிலையானதும் விஞ்ஞானப்பூர்வமானதுமான
தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.</p><p> 

இதற்காக ஜனாதிபதி அலுவலகம், சுற்றாடல் அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில்
விமான சேவைகள் அமைச்சு, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை கடற்றொழில்
துறைமுகக் கூட்டுத்தாபனம், கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட
தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு அமைப்பொன்று
உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசாரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கொடுத்த சலுகை! இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gnanasara-thero-s-court-order-1789019313"></link>
            <id>https://tamilwin.com/article/gnanasara-thero-s-court-order-1789019313</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், இன்று (10.09.2026) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன&nbsp;</h2><p>
 

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43cb4fc-f2ab-45c5-96b8-21ddbc9583ba/26-6aa248a136726.webp' /></p><p>
</p><p>
 

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை அடுத்து, ஞானசார தேரர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
</p><p>இந்நிலையில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை நிலைநிறுத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:47:14+00:00</updated>
        </entry>
    </feed>
