<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-29T08:29:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து இடம்பெற்ற கோர விபத்துகள்! இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் பரிதாபப் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-accidents-six-people-lose-1785312154"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-accidents-six-people-lose-1785312154</id>
            <summary type="text">இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம்(27) இடம்பெற்ற வாகன
விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார்
தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம்(27) இடம்பெற்ற வாகன
விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் 21 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களும் அடங்குகின்றனர் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

நேற்றுமுன்தினம் காலை திருக்கோவில் - பொத்துவில் வீதியின் விநாயகபுரம் 01
பகுதியில், பொத்துவில் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து
வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் 49 வயதுடைய
பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, பின் இருக்கையில் பயணித்த இரு பெண்கள்
மற்றும் இரு சிறுவர்கள் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே
இந்த பெண் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p>
ஏனைய பெண்ணும் இரு சிறுவர்களும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63678e2c-8165-45c6-9c6a-ffd71b4c5697/26-6a69b9d50cb25.webp' /></p><p>

இதற்கிடையில், நேற்றுமுன்தினம் காலை புறக்கோட்டை - கொதட்டுவ வீதியில் கொதட்டுவ
நகருக்கு அருகில் புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்துடன் எதிர்த்திசையில் வந்த பேருந்து மோதியதில் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
</p><p>
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த ஒரு ஆண்
மற்றும் பெண் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சாரதி ஏற்கனவே
உயிரிழந்திருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T08:29:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவை தாக்க பாதாள குழுக்கள் மறைமுக திட்டம்! நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த சதிவலை....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-npp-1785309651"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-npp-1785309651</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச பயணிக்கும் வாகனம் மீதோ அல்லது அவர் பங்கேற்கும் கூட்டம் மீதோ தாக்குதல் நடத்தப்படலாம் என சர்வதேச புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி IODPP ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச பயணிக்கும் வாகனம் மீதோ அல்லது அவர் பங்கேற்கும் கூட்டம் மீதோ தாக்குதல் நடத்தப்படலாம் என சர்வதேச புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி IODPP Police&nbsp; (இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பு) என்ற புலனாய்வு வலையொளித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள மேலதிக தகவல்கள்:&nbsp; இது குறித்து தீவிர அவதானம் செலுத்தப்பட வேண்டும். நாமல் ராஜபக்ச எந்த அரசியல் கட்சியில் இயங்குகிறார்
என்பது முக்கியமில்லை. </p><p>அவருக்கு இலங்கையின் அரசியல் களத்தில் இயங்குவதற்குக் உரிமை உண்டு. அதற்கு இடமளிக்க வேண்டும். எதிர்க்கட்சியில் உள்ள அனைவருக்கும் அந்த உரிமை உண்டு. </p><p>அந்த உரிமையை அரசியல் ரீதியாகவோ அல்லது பாதாள உலகக் குழுக்கள் மூலமாகவோ தடுக்க முயன்றால் அதற்கு இடமளிக்கக் கூடாது.
</p><h2>
</h2><p></p><h2>அம்பலமான சதித்திட்டம்</h2><p>அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் இந்தத் தாக்குதல் நடந்தால் பழியை அரசாங்கத்தின் மீது போடுவார்கள். ஜே.வி.பி.யினர் தான் கொலை செய்கிறார்கள் என்று கூறுவார்கள். </p><p>இவ்வாறான சம்பவங்களில் பழி அரசாங்கத்தின் மீதே விழுகிறது. இது ஒரு பாரதூரமான நிலைமை.
நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். அரசிற்கும் ஆதரவாளர்கள் உள்ளனர். </p><p>இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு நாடு குழப்ப நிலையை அடையும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி நடந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள், கைதுகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் அப்படியே நின்றுவிடும். </p><p>எனவே இது மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.
இலங்கையின் முன்னணி துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள் இரகசியக் கொலையாளிகள் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85f5275e-f466-44d8-bb87-188af476c60f/26-6a69a9d51d427.webp' /></p><p>இந்தியாவின் புலனாய்வு அமைப்பின் தகவலின்படி அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கைக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>இவ்வாறான சம்பவங்கள் அரசுக்கு பாரிய அச்சுறுத்தலாகும்
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை முற்றிலும் அடக்கி ஒழிக்க வேண்டும். அவர்கள் யார் என்பது முக்கியமில்லை உள்நாடா வெளிநாடா என்பதும் முக்கியமில்லை. </p><p>
ஏனெனில் ஒரு சம்பவம் நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை. அந்த முறையை மாற்ற வேண்டும். அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பே அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.சம்பவம் நடந்த பின்னர் விசாரணைக் குழுக்களை அமைப்பதில் அர்த்தமில்லை.
</p><p>எனவே பொலிஸ் அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்று பாதாள உலக மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு விசேட அதிரடிப்படையை ஈடுபடுத்த வேண்டும். இதில் காலத்தைக் கடத்தக் கூடாது. நிலைமை தொடர்ந்தால் நாடு பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்கலாம்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T08:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசித நிரோஷன எம்.பியின் குற்றச்சாட்டுக்கு எதிராக கூடுகின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bar-association-of-sri-lanka-mp-asitha-niroshana-1785311318"></link>
            <id>https://tamilwin.com/article/bar-association-of-sri-lanka-mp-asitha-niroshana-1785311318</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித
நிரோஷன நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கைகள் குறித்து ஆராய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித
நிரோஷன நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை
இன்று(29.7.2026) கொழும்பில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை
நீடிப்பதற்கு அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்டத்தரணிகள்
சங்கம் அண்மையில் விசேட பிரேரணையொன்றை நிறைவேற்றியிருந்தது.</p><p></p><h2>குற்றச்சாட்டு</h2><p>

அதனையடுத்து, மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் மேல்
மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கவுள்ளதாக வாக்களித்துள்ளதாகவும், அதற்கு அமைவாகவே
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு
குறித்துத் தவறான விடயங்களைச் சமூகமயப்படுத்துவதாகவும் தேசிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன கடந்த வாரம் நாடாளுமன்றத்தில்
குற்றம் சாட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a2a5312-f3fc-41d0-8564-ab8742dad699/26-6a69b2d264efa.webp' /></p><p>

இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்து அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம், அரசியல் நோக்கத்துடனான இவ்வாறான அவதூறுகளை வன்மையாகக்
கண்டிப்பதாகத் தெரிவித்திருந்தது.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷனவின்
கருத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், எதிர்காலத்தில்
முன்னெடுக்கக்கூடிய சட்ட மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில்
ஆராய்வதற்காகவும் கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் இந்தக்
சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:59:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நபர் ஒருவர் கொடூரமாக கொலை - சகோதரியின் மகனின் கொடூரச் செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-brutally-1785291583"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-brutally-1785291583</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே நப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே நபர் ஒருவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>நேற்று(28.07.2026) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் கம்பளை, கீரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><h2><b>

குடும்ப வன்முறை</b></h2><p>காயம் அடைந்த நபர் ஒருவர் கீழே விழுந்து கிடப்பதாகக் கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக செயற்பட்ட பொலிஸார், காயமடைந்தவரை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13829db9-86d6-435d-9658-c6dbc49399da/26-6a6964f7a3745.webp' /></p><p>இந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, சகோதரியின் மகனால் கத்தியால் தாக்கி இந்தச் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:43:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆபத்தாக மாறும் நோய் நிலைமை: அதிகரிக்கும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-dengue-patients-has-crossed-83-000-1785310244"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-dengue-patients-has-crossed-83-000-1785310244</id>
            <summary type="text">நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 3,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், டெங்கு நோய் காரணமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 3,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன், டெங்கு நோய் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,779 ஆகும்.</p><p></p><h2>டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p>

 

இரண்டாவது அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 16,665 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இதேவேளை, அதிகளவான நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணம் தொடர்ந்து நீடிப்பதுடன், இந்த ஆண்டில் இதுவரை மேல் மாகாணத்தில் 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac30b68c-0ab4-49be-a976-f0eb6885d21a/26-6a69ae7b7a01b.webp' /></p><p>
</p><p>
 

இரண்டாவதாக தென் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்தப் பிராந்தியத்தில் 12,586 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வரும் இந்த வேளையில், 175 அதி-அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கிய ஆண்கள் : பொலிஸ் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-female-security-jaffna-teaching-hospital-1785307500"></link>
            <id>https://tamilwin.com/article/attack-female-security-jaffna-teaching-hospital-1785307500</id>
            <summary type="text">யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகஸ்தரை தாக்கி, காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாண பொலிஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகஸ்தரை தாக்கி, காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம்(28.07.2026) மாலை யுவதியொருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில், குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அவசர
சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை முன்னெடுப்பு</h2><p>
நோய்வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும், 5
ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சை
பிரிவின் வாயிலில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a2bb63-4dd8-47a7-a9bc-951070df4b21/26-6a69a761bdbde.webp' /></p><p>அதன்போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர், யுவதியின்
தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார்.
</p><p>இந்நிலையில், அங்கிருந்தவர்கள் யுவதியுடன் முரண்பட்டு அதனை தமது தொலைபேசியில் காணொளியையும் பதிவு செய்துள்ளனர். </p><p>அதற்கு பெண்
பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு
உத்தியோகஸ்தரை ஒருவர் அவரை தாக்கியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.</p><p>

இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு
உத்தியோகஸ்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன் , தனது பாதுகாப்பு
சேவை நிறுவனத்திற்கும் அறிவித்த நிலையில் , அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய
பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு
செய்துள்ளார்.
</p><p>
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ,
சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:10:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-1785307158"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-1785307158</id>
            <summary type="text">நாட்டின் பல&amp;nbsp;மாவட்டங்களுக்கு பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி, வடக்கு, வட-மத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல&nbsp;மாவட்டங்களுக்கு பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

இதன்படி, நாட்டின் மீது நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக குறித்த பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cbc7282-2148-42c5-9655-41b4f92bfdd9/26-6a69a3d55e6b6.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T06:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் இடம்பெற்ற தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டமும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-genocide-book-launch-in-london-1785305522"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-genocide-book-launch-in-london-1785305522</id>
            <summary type="text">தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப் போராட்டமும்
லண்டன், ஈஸ்காம் நகரில் இடம்பெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப் போராட்டமும்
லண்டன், ஈஸ்காம் நகரில் இடம்பெற்றது.
</p><p>
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
</p><p>
இதன்போது தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் தகவல்களை உள்ளடக்கிய தமிழின நீதிக்
கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நூல் வெளியிடப்பட்டது.
</p><p></p><h2>நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்</h2><p>
அத்துடன், கறுப்பு ஜுலை உள்ளிட்ட இனப் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு
போராட்டமும் இடம்பெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65159a51-9ab1-4779-9384-63fb95b8b350/26-6a699bb848d7a.webp' /></p><p>
இந்நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் சடடதரணி விசுவநாதன்
உருத்திரகுமாரன் காணொளி ஊடாக உரையாற்றி இருந்ததுடன் தமிழின செயற்பாட்டாளர்கள்
பலரும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T06:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-prices-increased-in-sri-lanka-1785302209"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-prices-increased-in-sri-lanka-1785302209</id>
            <summary type="text">மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களைக் கருத்திற் கொண்டு விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>எனினும், உலக சந்தையில் எரிபொருள் விலையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக,&nbsp; இலங்கையில் அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு எதிர்பார்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>விலை குறையாது..&nbsp;</h2><p>இது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர், மயூர நெத்திகுமார தெரிவிக்கையில்,&nbsp; “இம்முறை மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தத்தில் நுகர்வோர் அதிக நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>ஜூலை மாதம் முழுவதும் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad7ca12-4cfa-47c8-b830-f0455e42d890/26-6a69924865339.webp' /></p><p>உலக சந்தை நிலவரத்திற்கு அமைவாக,&nbsp; இலங்கையில் எரிபொருள் விலையை குறைப்பதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவாகவே உள்ளது என்றும் மயூர நெத்திகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடத்தில் எழுந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T06:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கப்படும் ஒரு சில அரச ஊழியர்களின் ஓய்வு வயது! ஜனாதிபதி அநுரவின் முக்கிய அறிவிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/retirement-age-of-government-employees-1785297388"></link>
            <id>https://tamilwin.com/article/retirement-age-of-government-employees-1785297388</id>
            <summary type="text"> 
அரச சேவையில் அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட வல்லுநர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் ஓய்வூதிய வயதை உயர்த்துவது கு...</summary>
            <content type="html"><![CDATA[<p> 
அரச சேவையில் அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட வல்லுநர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

காலி மாவட்டச் செயலகத்தில் நேற்றையதினம்(28) இடம்பெற்ற மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அரசாங்கத்தின் விசேட கவனம்&nbsp;</h2><p> </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

திறைசேரிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாவும் நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படுவதே எமது எதிர்பார்ப்பு. </p><p>எதிர்கால சந்ததியினர் கடன் செலுத்த அவசியமற்ற, நிதி ஒழுக்கத்தைக் கொண்ட நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02cf49ed-921a-4b8c-8306-d4a51341e4b7/26-6a6999ad88248.webp' /></p><p>
சர்வதேச அறிக்கைகளில் தற்பொழுது இலங்கைப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் சமூகக் குறியீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் சிறந்த மட்டத்தில் காணப்படுகின்றது. </p><p>

 ஒரு காலத்தில் கடன் செலுத்த முடியாத, ஊழலும் சமூகக் குற்றங்களும் நிறைந்த நாடாக சர்வதேச அளவில் பேசப்பட்ட நமது நாடு, இன்று சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஊழல் குறைந்த நாடாக சர்வதேச அளவில் பாராட்டைப்பெற்று வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db9b4125-b1e7-4f3d-87d7-68c692e0fd22/26-6a6999af4b3e3.webp' /></p><p> </p><p>

அரச துறையின் செயல்திறனை மேம்படுத்துவதுடன் மக்கள் வீட்டிலிருந்தவாறே தமது சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு, அரசாங்கம் எதிர்கால வரவு - செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளது.</p><p>

 அரச சேவையில் அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaa40616-bddf-4e88-9257-bf5eaae89f83/26-6a6999ae6749b.webp' /></p><p> </p><p>

அரச துறையை வேலைவாய்ப்புகளை நிரப்பும் இடமாக மாற்றியதன் மூலம் அரச கட்டமைப்பு பாதகமான பொருளாதாரப் பின்விளைவுகளை முகங்கொடுக்க நேரிட்டது.
</p><p>
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வெளிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதன் ஊடாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 

 

</p>]]></content>
            <updated>2026-07-29T06:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் 17 வயது சிறுவனை காணவில்லை : பொாலிஸ் நிலையத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/17-age-old-boy-missing-mullaithevu-1785303686"></link>
            <id>https://tamilwin.com/article/17-age-old-boy-missing-mullaithevu-1785303686</id>
            <summary type="text">முல்லைத்தீவு கேப்பாப்பிலவு , பிலக்குடியிருப்பு, பகுதியை சேர்ந்த ர.ரதன் (17
வயது) என்ற சிறுவன், கடந்த 26ஆம் திகதி இரவு முதல் காணாமல்
போயுள்ளதாக அவரது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு கேப்பாப்பிலவு , பிலக்குடியிருப்பு, பகுதியை சேர்ந்த ர.ரதன் (17
வயது) என்ற சிறுவன், கடந்த 26ஆம் திகதி இரவு முதல் காணாமல்
போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

யுத்தத்தின் போது தனது தந்தையையும், பின்னர் தாயையும் இழந்த ரதன், தனது
அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்த நிலையில், வெட்டில் ஏற்பட்ட சிறு
முரண்பாட்டினால் வீட்டை விட்டு சென்ற சிறுவன் இதுவரை வீடு திரும்பவில்லை என
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>

சிறுவன் எங்கு சென்றுள்ளார் என்பது தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத
நிலையில், அவரைக் கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான ஏதேனும் தகவல் அறிந்தவர்கள்
தயவுசெய்து உடனடியாக கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்
வழங்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>தொடர்புக்கு - 0764643116
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ab797e-c3b8-47ed-b07f-b3fb9dc506dc/26-6a6994776a1fe.webp' /></p><p>குறித்த சிறுவன் காணாமல் போனமை தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T06:09:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/moto-bike-accident-young-man-death-1785302047"></link>
            <id>https://tamilwin.com/article/moto-bike-accident-young-man-death-1785302047</id>
            <summary type="text">சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்
சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று(28.07.2026) இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்
சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று(28.07.2026) இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சிலாபம் – ஆனமடுவை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், திடீரெனக்
கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வடிகானுக்குள் தூக்கி
வீசப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும்</h2><p>

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை சம்பவ இடத்தில்
நின்றவர்கள் உடனடியாக மீட்டு சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e97a005-5964-43a2-b1da-96b64002a111/26-6a698e266bd78.webp' /></p><p>எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அந்த
இளைஞர் உயிரிழந்தார் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பள்ளம, பொத்துக்குளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய
மொஹொட்டி பத்திரன்னஹேலாகே கயான் புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T05:24:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது! சர்வஜன வாக்கெடுப்பு அவசியமே இல்லை - ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-referendum-is-not-necessary-minister-harshana-1785299344"></link>
            <id>https://tamilwin.com/article/a-referendum-is-not-necessary-minister-harshana-1785299344</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்துக்காகச் சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய
ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்துக்காகச் சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
</p><p>
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை
தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்
தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்காகச் சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை.</p><p></p><h2>சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவில்லை</h2><p>
</p><p>
அரசமைப்பின் 83ஆவது சரத்தில் எவற்றுக்கு மக்கள் தீர்ப்பு அவசியம் என்று
தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசு மேற்கொள்ளும் இந்த ஓய்வுபெறும் வயதெல்லை
நீடிப்பு மற்றும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்தங்கள் அந்த
எந்தவொரு சரத்திலும் உள்ளடங்கவில்லை.</p><p> கடந்த காலத்தில் 20ஆவது அரசமைப்புத்
திருத்தத்தின் மூலம் நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போதும் சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்லவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/520d20af-e647-41ba-8716-cb136721f61e/26-6a6981922ea97.webp' /></p><p>
</p><p>
இந்தத் திருத்தத்தை எவரேனும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தி,
அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால்
மட்டுமே அரசு அத்தகைய நடைமுறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். எனினும்,
தற்போதைய சட்டச் சூழலின்படி அவ்வாறு தீர்ப்பு வரும் என்று நான் நினைக்கவில்லை.
</p><p>
நீதிமன்றங்களில் வழக்குகள் மாதக்கணக்கில், வருடக் கணக்கில் தாமதமாவதால்
பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நீதித்துறை அமைப்பும் ஏனைய துறைகளைப்
போலவே திறமையாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.</p><p>

கடந்த 10-15 வருடங்களாக எதிர்காலத் தேவைகளைக் கணித்து நீதியரசர்களின்
எண்ணிக்கையை உயர்த்தாததாலேயே இன்று வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/520d20af-e647-41ba-8716-cb136721f61e/26-6a6981922ea97.webp' /></p><p>
</p><p>
இந்த ஓய்வுபெறும் வயது நீடிப்பானது மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்
நீதிமன்றத்துக்கு மட்டும் அல்லாமல், நீதித்துறை அமைப்புச் சட்டத்தைத் திருத்தி
மாவட்ட நீதிபதிகள், நீதிவான் நீதிபதிகள் உள்ளிட்ட அனைவருக்குமே ஓய்வுபெறும்
வயதை 2 ஆண்டுகள் நீடிக்கின்றோம். 1978ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஓய்வுபெறும்
வயது திருத்தப்படவில்லை. </p><p>பெரும்பான்மையான சர்வதேச நாடுகளில் ஓய்வுபெறும் வயது
70 ஆக உள்ளதால், அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் சேவையை மேலும் சில ஆண்டுகள்
பயன்படுத்திக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
</p><p>
நீதித்துறைச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதுடன், இரசாயன பகுப்பாய்வாளர்
திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழக்குகள் தாமதமாகும்
பிரச்சினைகளைத் தீர்க்கவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன"&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LNAbK0VBHs4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-29T04:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகாலையில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்! மற்றுமொரு பொலிஸ் அதிகாரி உயிர் மாய்ப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1785293966"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1785293966</id>
            <summary type="text">பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;பாணந்துறை, வலான ஊழல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PYfwzooO_Uw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>உயிர் மாய்ப்பு..</h2><p>இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a497ef73-2800-4b15-bb0c-ee8b307eae2f/26-6a6972136d997.webp' /></p><p>இதனையடுத்து,&nbsp; காயமடைந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பாணந்துரை தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>பேராதனைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், அருக்கு வழங்கப்பட்டிருந்த டி 56 ரக துப்பாக்கியை வைத்த அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb610af-5ba3-4f70-803d-8ee460c1893d/26-6a69721472690.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T03:19:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலகு தவணையில் வீடு கட்ட காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி! தனியார் நிறுவன பணிப்பாளர் ஒருவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-fraud-by-promising-to-build-house-1785292592"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-fraud-by-promising-to-build-house-1785292592</id>
            <summary type="text">இலகு தவணைக் கொடுப்பனவு முறையில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்து பல்வேறு நபர்களிடம் பெருந்தொகைப் பணம் மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலகு தவணைக் கொடுப்பனவு முறையில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்து பல்வேறு நபர்களிடம் பெருந்தொகைப் பணம் மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய, தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
குறித்த சந்தேக நபர், இலகு தவணைக்கொடுப்பனவு முறையில் வீடுகளையும் காணிகளையும் வழங்குவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் வாக்குறுதியளித்து, பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பாரியளவிலான பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணைகள் </h2><p>முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களுடன் சந்தேக நபர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, ஆரம்பத்தில் வீடு மற்றும் காணியின் மொத்த மதிப்பில் 60 சதவீதத்தை முன்பணமாகப் பெற்றுள்ளார்.</p><p>

பணத்தைப் பெற்ற பிறகு, வாக்குறுதியளித்தபடி எந்த வீடும் கட்டப்படவில்லை. அதன் காரணமாக ஒரு கட்டத்தில் பணத்தைத் திரும்பக் கோரிய வாடிக்கையாளர்களுக்கு சந்தேக நபரால் வழங்கப்பட்ட காசோலைகளும் வங்கியில் போதிய பணமின்றி நிராகரிக்கப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9c8f54d-9772-40c0-a5bc-9a9417ece66a/26-6a696c40a68d7.webp' /></p><p>
</p><p>
மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 5 புகார்களைப் பெற்றுள்ளது. </p><p>மேலும், இந்த மோசடியில் சிக்கியுள்ள பாதிக்கப்பட்ட மற்ற நபர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் புகார்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மிரிஹானா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நேற்று (28) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T02:58:26+00:00</updated>
        </entry>
    </feed>
