<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-29T03:40:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம்! அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-implement-22nd-amendment-minister-samantha-1787971378"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-implement-22nd-amendment-minister-samantha-1787971378</id>
            <summary type="text">இலங்கையில் 22ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 22ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று(28.08.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>22ஆவது திருத்தச் சட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் சட்டம் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்
வகையிலும், செல்வந்தர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் விலக்கு
அளிக்கும் வகையிலுமே காணப்பட்டது. </p><p>ஆனால், தற்போதைய ஆட்சியில் பெரியவர்,
சிறியவர் அல்லது பணக்காரர் என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி சட்டம் அனைவருக்கும்
சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be5fb34-544e-47aa-a36e-3b24dfea48c0/26-6a924dbae33c2.webp' /></p><p>

சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயற்படுவதன் காரணமாகவே, பழைய ஊழல்வாதிகளும்
குற்றவாளிகளும் அச்சமடைந்து 22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கூச்சலிட்டு
வருகின்றனர். </p><p>நீதிமன்ற சுதந்திரம் சீர்குலைக்கப்பட்ட கடந்த கால நிலையை
மாற்றி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகவே இந்தத் திருத்தம்
கொண்டுவரப்படுகின்றது.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>
</p><p>
நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக வரலாற்று ரீதியாக மிக அதிகமான நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய 2026ஆம் ஆண்டில் மூலதனச்
செலவினங்களுக்காக 1.3 டிரில்லியன் ரூபாவும், அடுத்த ஆண்டில் 2 டிரில்லியன்
ரூபாவும் நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81d8aec3-912b-45aa-95bc-3a24a6f23871/26-6a924dbb95974.webp' /></p><p>இதன் மூலம்
வீடுகள், வீதிகள், பாடசாலைகள் மற்றும் குளங்கள் அமைக்கும் பணிகள்
வேகமாக்கப்படும்.

கடந்த காலத்தில் போதைப்பொருள், பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் ஊழல் போன்றவையே
ஊக்குவிக்கப்பட்டன.</p><p> ஆனால், தற்போதைய அரசு அவற்றை முழுமையாக கட்டுப்படுத்தி சட்டத்தை நிலைநாட்டி வருவதால், கட்சி பேதங்களை கடந்து நாட்டின் எதிர்கால
சந்ததியினரின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T03:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிராபத்தை தடுக்க 21 தொழிலதிபர்கள்'பஸ் லலித்'துக்கு கொடுத்த கோடிக்கணக்கான பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lalith-kannangara-alias-bus-lalith-ccib-1787973892"></link>
            <id>https://tamilwin.com/article/lalith-kannangara-alias-bus-lalith-ccib-1787973892</id>
            <summary type="text">&amp;nbsp;டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் 'பஸ் லலித்' இலங்கையிலுள்ள 21 முன்னணி தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாயை கப்பமாகப் பெற்றுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. </p><p>
இருப்பினும் 'பஸ் லலித்' மீதான பயம் காரணமாக இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>தனது சகபாடிகளை பயன்படுத்தி பஸ் லலித் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட 5 துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.</p><p>அந்தத் துப்பாக்கிகளைக் கண்டறிவதற்காகப் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p></p><h2>தொலைபேசியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்</h2><p>வர்த்தகர்கள் கொழும்பு பகுதியில் அதிக மதிப்புள்ள காணிகளை வாங்கும்போது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்றுள்ளதாகவும் ஒரு நபர் அரசுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்திருந்த சந்தர்ப்பத்தில் 'பஸ் லலித்' என்பவர் தனது சகபாடிகளை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக அந்தக் காணியைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df2ba03-314e-4d5e-aaf3-8d1939416dc1/26-6a9251069862c.webp' /></p><p>சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். </p><p>குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரன்மல் கொடிதுக்குவின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு ஆகியோரின் வழிகாட்டலில் அப்பிரிவின் பணிப்பாளர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T03:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/brothers-fight-2-killed-1787970066"></link>
            <id>https://tamilwin.com/article/brothers-fight-2-killed-1787970066</id>
            <summary type="text">&amp;nbsp;தென்னிலங்கையில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

காலி பொலிஸ் பிரிவின் கல்வலா பகுதியில் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தென்னிலங்கையில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். </p><p>

காலி பொலிஸ் பிரிவின் கல்வலா பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த ஒருவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக காலி பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர் காலி பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2><b>இரு குழுக்களுக்கு இடையில் மோதல்</b></h2><p>
பழைய பகை காரணமாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது என இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66d199ce-7ea1-495e-a76e-577685b3593e/26-6a9245ec0209e.webp' /></p><p>மேலும், இந்த மோதலில் காயமடைந்த மேலும் இருவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக, வலவத்தை பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 29 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T03:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் தொழிலதிபரின் மர்ம மரணம்: மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் ஏற்பட்டுள்ள திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dinesh-schaffter-case-cid-npp-1787971838"></link>
            <id>https://tamilwin.com/article/dinesh-schaffter-case-cid-npp-1787971838</id>
            <summary type="text">கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்&amp;nbsp;மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்&nbsp;மீண்டும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p>கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பல கோணங்களில் விசாரணைகள்&nbsp;</span></p><p>இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு பணிப்பாளரும், பிரபல தமிழ் தொழிலதிபருமான தினேஷ் சாப்டர் மரணமடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38b6b40-39fc-4819-8b3f-bf964c8c87a8/26-6a924d660a9db.webp' />&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இச்சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கடந்த அரசாகத்தில் மந்த நிலையை அடைந்து மறைக்கப்பட்டிருந்தன.&nbsp;</p><p><span style="font-size: 14px;">இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மரணம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு முன்னேற்றமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</span></p><p>தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தினேஷ் ஷாப்டர் தொடர்பான புதிய விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றது.</p><p>கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கும் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கும் இடையே பாரிய வித்தியாசம் இல்லாத வகையிலேயே விசாரணைகள் இடம்பெறுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், சில சம்பவங்கள் அதாவது சில அறிவியல் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p>இந்த சான்றுகளின் அடிப்படையில் இது ஒரு கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சில ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>அவற்றில் அவருக்கு கிடைத்த மற்றும் அவரிடமிருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் மின்னஞ்சல்கள் (Email) தொடர்பான தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள்&nbsp;&nbsp;</h2><p>உயிரிழந்த நபர் வழக்கமாகப் பயன்படுத்தும் மொழி மற்றும் பாணிக்கு முற்றிலும் பொருந்தாத வேறு ஒரு பாணியிலேயே அந்த SMS மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>எனவே, உண்மையிலேயே அதை அவர் தான் அனுப்பினாரா அல்லது இதில் மூன்றாம் தரப்பு ஏதும் தலையிட்டுள்ளார்களா என்பது குறித்தே தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ca7608-1c36-4df8-82d4-fa491e419e94/26-6a924900c3acc.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p><span style="font-size: 14px;">மின்னஞ்சல்களுக்கு மூன்றாம் தரப்பு யாரேனும் தலையிட்டிருந்தால் நிச்சயமாக இது ஒரு கொலை என்பதை உறுதிப்படுத்தி விசாரணைகள் முடுக்கி விடப்படும் என்பதன் காரணமாக, அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக தேவையான அனைத்து தகவல்களும், அறிக்கைகளும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</span></p><p>இருப்பினும், விசாரணைகளில் சில விடயங்கள் நம்பகத்தன்மையற்றதாக தோன்றினாலும், அவற்றை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>எனவே, இந்த விசாரணை சரியாக முன்னெடுக்கப்பட்டு எதிர்காலத்தில் ஒரு சரியான அறிக்கை கிடைக்கும் என்றும், அவை அரச இராசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையுடன் ஒப்பிடப்பட்டு உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T03:15:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு இடம்பெற்ற மோதல் - கொடூரமாக அடித்து ஒருவர் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-was-brutally-beaten-to-death-1787969923"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-was-brutally-beaten-to-death-1787969923</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை - தங்காலை பொலிஸ் பிரிவின் மஹாகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர், தங்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை - தங்காலை பொலிஸ் பிரிவின் மஹாகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த கொலை நேற்று இரவு (28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

இந்த தாக்குதலில் மஹாகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce965449-bfdf-4a81-a299-4af6bbff8843/26-6a9248477300b.webp' /></p><p>
தங்கல்லே பொலிஸ் நிலையத்தில் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>

உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் 28 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T02:47:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த நேரத்தில் வெளியில் செல்லும் போது அவதானம்! நாட்டின் பல பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sun-will-be-at-its-highest-point-many-areas-today-1787968004"></link>
            <id>https://tamilwin.com/article/sun-will-be-at-its-highest-point-many-areas-today-1787968004</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் இலங்கையின் பல்வேறு அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் இலங்கையின் பல்வேறு அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, இன்று (29) நண்பகல் 12:11 மணியளவில் பல்லவநாயகன்கட்டு, அக்கரயன்குளம், அறிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சிகொடுக்கவுள்ளது.</p><h2>சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு</h2><p>இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18bce024-262a-4f98-81c8-b3ea0a11f8e3/26-6a923f8e4aabf.webp' /></p><p>

வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம்</h2><p>

மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T02:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி.. அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-un-concerns-judges-retirement-age-1787964301"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-un-concerns-judges-retirement-age-1787964301</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் எழுப்பிய கவலைகளை இலங்கை அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் எழுப்பிய கவலைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.</p><p>ஒகஸ்ட் 21ஆம் திகதி அன்று அனுப்பிய பதில் கடிதத்தில் இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p> </p><p>22வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்த சட்டமூலம் ஆகியவை வழக்கின் தேக்கநிலையைக் குறைக்கவும் நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுமே கொண்டுவரப்படுகின்றன என்றும், குறிப்பிட்ட சில நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கம் இதில் இல்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>அரசாங்கத்தின் தீர்மானம்..&nbsp;&nbsp;</h2><p> இத்திட்டத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c672bb8-5665-4d6b-bea9-35304bca1998/26-6a922ebeaa11e.webp' /></p><p> தலைமை நீதிபதியின் பதவிக்காலம் 67 வயது வரை அல்லது நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் என வரையறுக்கப்படும். </p><p>மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் மாற்றப்படவுள்ளதுடன், மேன்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது. </p><p> தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளுக்கும் இதைப் பயன்படுத்துவது அரசியல் தலையீடாகாது என்றும், அனுபவமிக்க நீதிபதிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கே இது அவசியம் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. </p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல தரப்பினர் இந்த சட்டமூலங்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் முழுமையாக மதிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T01:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/united-nations-sri-lankan-people-1787961973"></link>
            <id>https://tamilwin.com/article/united-nations-sri-lankan-people-1787961973</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண்
அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7
சதவீதமானோர் கல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண்
அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7
சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய
துறைகளின் கீழ் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தினன தகுன
அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, </p><p>நாட்டில் வறுமை விகிதம் 25 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதுடன், மக்கள்
தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் உணவு மற்றும் மருந்துகள் போன்ற
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கடன் பெறவோ அல்லது பொருள்களை
அடகு வைக்கவோ தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
நாட்டின் வறுமை குறைந்துள்ளது என்றும், திறைசேரி நிரம்பி வழிகின்றது என்றும்
அரசு தொடர்ந்து கூறி வந்தாலும், மேற்சொன்ன அறிக்கைகள் இலங்கையின் உண்மையான கள
யதார்த்தத்தையே வெளிப்படுத்தியுள்ளன.
</p><p>
உத்தியோகபூர்வ நுண்பொருளாதார அறிவிப்புகளுக்கும் உழைக்கும் மக்கள்
எதிர்கொள்ளும் உண்மையான வாழ்க்கைத்தர வீழ்ச்சிக்கும் இடையே கவலைக்குரிய
இடைவெளி உள்ளது.</p><h2>உழைப்பு கொள்வனவு திறன்..&nbsp;</h2><p>
</p><p>
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், கொள்வனவுத் திறன் சமநிலை
முறைப்படி தயாரிக்கப்பட்ட புதிய உலகளாவிய குறைந்தபட்ச ஊதியச் சுட்டெண்ணில்,
உலகின் 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51f4fe65-7244-41ab-b6b4-029244e796d6/26-6a9225d379553.webp' /></p><p> இதன்படி
இலங்கையின் உண்மையான கொள்வனவு திறனின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம்
மாதத்துக்கு 200 டொலர்களாக மட்டுமே பதிவாகியுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் உண்மையான உழைப்பு கொள்வனவு திறனில் இலங்கை மிகக்
குறைந்த மட்டத்துக்கே வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>இதன்படி, குறைந்தபட்ச ஊதியமானது
பாகிஸ்தானில் 570 டொலர்களாகவும், நேபாளத்தில் 490 டொலர்களாகவும், பங்களாதேஷில்
379 டொலர்களாகவும், இந்தியாவில் 233 டொலர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை விரிவுபடுத்துதல், மறைமுக வரிகளை உயர்த்தல்
மற்றும் பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமே அரசு உபரி வருவாயை
எட்டியுள்ளது.</p><p> நிதிக்கட்டுப்பாடுகள் அவசியமானது என்றாலும், வீடுகளின் உண்மையான
வருமானத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி எட்டப்படும் இலக்குகளை உண்மையான பொருளாதார
வெற்றியாகக் கருத முடியாது என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
</p><p>
பொருளாதார ஆரோக்கியம் என்பது வெறும் நிதி இலக்குகளை மட்டும் அடிப்படையாகக்
கொண்டிராமல், உண்மையான ஊதிய வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் மக்களின்
கொள்வனவுத் திறன் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்வதிலேயே
தங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T00:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் கைதுகளுக்கான கோப்புகள் தயார்! அதிரடியாக களமிறங்கும் புலனாய்வு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-cid-investigations-to-arrest-1787943637"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-cid-investigations-to-arrest-1787943637</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்பலப்படுத்துவோம் என்பதே.&nbsp;</p><p>அந்தவகையில், தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்களில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்தி பலரை கைது செய்து வருவதில் அதிரடியாக செயற்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக, ராஜபக்சக்களின் பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்களை புலனாய்வு அதிகாரிகள் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில், விரைவில் பல முக்கிய அரசியல் புள்ளிகளை கைது செய்வதற்கான பட்டியல்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l94xWZPoc0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T23:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை காட்டுக்குள் அழைத்து சென்று கொடூரமாக படுகொலை செய்த கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-takes-wife-forest-and-brutally-murders-her-1787952081"></link>
            <id>https://tamilwin.com/article/husband-takes-wife-forest-and-brutally-murders-her-1787952081</id>
            <summary type="text">அநுராதபுரம் - கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது மனைவியை கொலை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் - கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
</p><p>
நேற்று (28) முற்பகல் குறித்த நபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து அவர் மனைவியை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த கணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283fe285-64b3-4168-a701-45e6a8807660/26-6a91fe0919828.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர் உளுக்குலம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாவார்.</p><p>

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>

இச்சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T23:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சர்வதேசக் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-officers-to-visit-sri-lanka-next-month-1787949898"></link>
            <id>https://tamilwin.com/article/imf-officers-to-visit-sri-lanka-next-month-1787949898</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப்
பயணம் மேற்கொள்ளவுள்ளது.கடன் தவணை

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப்
பயணம் மேற்கொள்ளவுள்ளது.</p><h2>கடன் தவணை</h2><p>
</p><p>
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான
பயணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கொழும்பு வரவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5f36cd2-d2c6-4d49-912c-9e09ace9af82/26-6a91f34bc2ea2.webp' /></p><p>

இந்த வருகையின் போது, அந்தக் குழுவினர் ஏழாவது ஆய்வை நடத்துவதோடு, எட்டாவது
கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர்.
</p><p>
இந்த ஆய்வில் திருப்தியடைந்தால், இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க
டொலர் நிதியை சர்வதேச நாணய நிதியம் விடுவிக்கும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T23:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறையில் பாரியளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி மையம் முற்றுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-liquor-production-center-busted-kalutara-1787949620"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-liquor-production-center-busted-kalutara-1787949620</id>
            <summary type="text">களுத்துறை மாவட்டத்தின் மொரொந்துடுவைப் பிரதேசத்தில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த சட்டவிரோத மதுபானஉற்பத்தி மையமொன்றை பொலிசார் திடீர் முற்றுகையிட்டு, ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மாவட்டத்தின் மொரொந்துடுவைப் பிரதேசத்தில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த சட்டவிரோத மதுபானஉற்பத்தி மையமொன்றை பொலிசார் திடீர் முற்றுகையிட்டு, சோதனை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இதன்போது அங்கிருந்த 6,048 லிட்டர் கோடாவுடன் 5 செப்புச் சுருள்கள் மற்றும் 3 எரிவாயு அடுப்புகள் என்பனவும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
மொரொந்துடுவ பகுதியில் நடத்தப்பட்ட ஒரு விசேட சோதனையில், குறித்த சட்டவிரோத மதுபான மையம் கண்டறியப்பட்டு, திடீர் சுற்றிவளைப்பு மூலம் மேற்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd07ff51-dbc5-4b7f-b742-841148eece5c/26-6a91f23620ad7.webp' /></p><p>
</p><p>
களுத்துறை மாவட்டத்தில் இவ்வளவு பெரிய அளவிலான கோடா ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது, இதுவே முதல் தடவையாகும் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறிப்பிட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி மையத்தின் பின்னால் உள்ள முக்கிய வலையமைப்பையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காண விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-28T22:30:38+00:00</updated>
        </entry>
    </feed>
