<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-03T22:38:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று கைது செய்யப்படுவாரா நாமல்..! பாதுகாப்புக்காக கொழும்பில் கூடப்போகும் ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

 இதேவேளை, நாமல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

 இதேவேளை, நாமல் ராஜபக்ச
தனக்கு எதிராக 12-ஆம் திகதிக்கு முன்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இலங்கை விமான சேவை தொடர்பான மோசடி அல்லது அவுஸ்திரேலிய ஊடகமொன்று வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் (அம்பாந்தோட்டை வைத்தியசாலை திட்டம்) தொடர்பாக விசாரணைகள் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகும்போது பதற்றமான சூழல் நிலவக்கூடும் என்றும், அவருடைய ஆதரவாளர்கள் கொழும்பில் கூடத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அவுஸ்திரேலியாவின் ஊடகத்தின் Four Corners ஆவணப்படத்தில், அம்பாந்தோட்டை வைத்தியசாலை கட்டுமானத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

 இதில் பல மில்லியன் டொலர் பணப்பரிமாற்றங்கள் முறையற்ற வகையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p>

 நிமல் பெரேரா (Nimal Perera) என்பவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாயைப் பெற்ற விவகாரம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.</p><p> ரக்பி போட்டித் தொடரை நடத்துவதற்காக இந்தப் பணம் பெறப்பட்டதாக அவர் கூறினாலும், அதில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>

நீதிமன்ற வழக்குகள்: கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்துள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்ச இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருவதுடன், இவை அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றும் கூறி வருகிறார்.</p><p>

இன்று(4) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகவுள்ள சூழலில், இவை மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tmeEO-Dq2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T22:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் உறவுகளின் போராட்டத்திற்கு வெற்றிலைத் தட்டோடு அழைப்பிதழா: பதில் தலைமைகளின் போலி அரசியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-persons-day-tamil-protest-1788435678"></link>
            <id>https://tamilwin.com/article/missing-persons-day-tamil-protest-1788435678</id>
            <summary type="text">சிறிலங்கா படைத்தரப்புக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் கண்ணீரும், வலியும் போராட்டமும், மாநாடும் கடந்த (30.08.2026) அன்று உணர்வெழுச்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா படைத்தரப்புக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் கண்ணீரும், வலியும் போராட்டமும், மாநாடும் கடந்த (30.08.2026) அன்று உணர்வெழுச்சியோடு நடந்து முடிந்துள்ளது.</p><p> ஆனால், இந்தப் புனிதமான மக்கள் போராட்டக்களத்திற்கு 'எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை' என்று சிறுபிள்ளைத்தனமான காரணத்தைக் கூறிப் போராட்டம் மற்றும் மாநாட்டைப் புறக்கணிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தனர். </p><p>ஒட்டுமொத்தத் தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>போராட்டம்</h2><p> </p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் என்பது திருவிழாவா அல்லது விளையாட்டு விழாவா, வெற்றிலை பாக்கு வைத்துத் தட்டோடு வந்து அழைப்பதற்கு இது என்ன கல்யாண வீடா, இது ஓர் இனத்திற்கு நீதி வேண்டிய போராட்டம். உணர்விருப்பவர்கள் பங்குகொள்வார்கள், உணர்வற்றவர்கள் ஒதுங்கியிருப்பார்கள்.</p><p>தமிழினப் படுகொலைக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் எதிராக உள்ளத்தில் உணர்வில்லையெனில், காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் சிறிலங்கா அரசைப் பன்னாட்டு அரங்கில் பொறுப்புக் கூற வைப்பதற்குத் திராணியில்லையெனில், அன்று முதல் இன்றைய அநுர அரசு வரையுள்ள சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் உள்நோக்கத்தோடு பச்சைத் துரோகம் செய்யும் எண்ணம் இருப்பின், தாராளமாக ஒதுங்கியிருங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d15b075-f24b-42b8-9484-3125f860dd30/26-6a996363f3f35.webp' /></p><p> அதைவிட்டுவிட்டு, மக்கள் திரளும் போராட்டக்களத்தைப் பார்த்து 'எங்களை யாரும் கூப்பிடவில்லை' என்று அறிக்கை விடுவது என்ன நியாயம்.</p><p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி எனப் பல கட்சிகளும் எந்தவித கட்சி வேறுபாடுகளுமின்றி மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று பங்கெடுத்திருந்தன. அவர்களுக்கு யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்தார்கள், மக்களுக்காக நிற்க வேண்டும், போராட வேண்டும் என்ற இன உணர்வு இருந்ததால் அவர்கள் மனமுவந்து பங்குகொண்டார்கள். </p><p>இதைவிட முக்கியமாக, தமிழரசுக் கட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்த வெற்று அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் மக்களோடு களத்தில் பங்குகொண்டது தான் இங்கு கவனிக்கத்தக்க கூடுதல் விடயமாகும். </p><h2>பதில் தலைவர்கள்</h2><p>தமிழரசுக் கட்சி என்ற பெயரில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டு அறிக்கையை விட்டவர்கள் யார், கட்சியின் பொதுக்குழுவா, மத்திய குழுவா, அரசியற்குழுவா, இவை எதுவுமே இல்லை. </p><p>அறிக்கை விட்ட இருவரும் மக்கள் மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா அல்லது கட்சியில் கட்சி உறுப்பினர்களால் முறைப்படி பதில் பொறுப்புக்களிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா என்றால் அதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae77ab3d-b5ec-4855-82c8-86000503d369/26-6a9963657cb54.webp' /></p><p> தம்மிடம் சட்டம் இருக்கிறது என்பதற்காகச் சட்டத்தின் குறுக்குச் சந்துகள் ஊடாகப் பொறுப்புக்களைக் கைப்பற்றி நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள். </p><p>மக்கள் பிரதிநிதிகளின் வெளிப்படையான பதிலடி இந்த போலியான புறக்கணிப்பு அறிக்கையையும் மீறி, தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்குத் தாயகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதை போராட்ட மற்றும் மாநாட்டு ஒளிப்படங்கள் தெளிவாக உறுதி செய்கின்றன.</p><h2>தமிழரசுக் கட்சி</h2><ol><li>யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் (தமிழரசுக் கட்சியின் தெரிவுநிலைத் தலைவர்)</li><li> மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் </li><li>மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் </li><li>வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் </li><li>அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் </li><li>திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் ஆகியோர் (யாழில் நடைபெற்ற மாநாட்டிற்கு நேரில் வருகை தர இயலாத போதும், ஊடக சந்திப்பினை நிகழ்த்தித் தனது ஆதரவை வெளிப்படுத்தியதோடு, அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்விலே நேரில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடததக்கது)</li></ol><p>தமிழரசுக் கட்சியிலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எவருமே வெற்று அறிக்கையைப் பொருட்படுத்தாது பங்கெடுத்துள்ளனர். இதிலிருந்தே கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது வெட்டவெளிச்சமாகிறது. சட்டத்தின் ஓட்டைகள் வழியே தமிழரசுக் கட்சியின் பதவிகள் மட்டுமே அவர்களிடம் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3e379b0-a0ef-4f83-94c1-00c0fe4ee9f1/26-6a996364c5c77.webp' /></p><p> ஆனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் மக்களும் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது நேற்றைய நிகழ்வில் முழுமையாகத் தெளிவாகிவிட்டது. </p><p>சனநாயகப் பாரம்பரியத்தின் சீரழிவு மக்கள் என்று வந்துவிட்டால் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் போராட்டக்களத்தில் முன்னிற்பதுதான் ஓர் அரசியல் கட்சியின் அடிப்படைப் பண்பு. ஓர் அரசியல் கட்சி மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்ட வேண்டும். அந்த குறைந்தபட்ச அரசியல் சனநாயகப் பண்புகூட இல்லாத நிலையில்தான் தற்போதைய தமிழரசுக் கட்சி உள்ளது. </p><p>அழைப்பிதழ் வைத்தால் மட்டுமே போராட வருவோம் என்பது என்ன மனநிலை, இவர்கள் யாருக்கானவர்கள், இவர்கள் செய்யும் அரசியல் யாருக்கானது.</p><p>வழக்கறிஞர் என்பதால் சிறிலங்காவின் நீதிமன்றங்களுக்குள் மட்டும் தனது சட்ட வித்துவத்தைக் காட்டுவதுதான் அரசியல் என்று எண்ணுபவர்களின் கைகளில் ஒரு சனநாயக இயக்கம் சிக்கியுள்ளது.</p><p> தார்மீக உரிமையற்று, அடிப்படை சனநாயகத்திற்கு முரணாகச் சிக்கித் தனது நீண்ட நெடிய சனநாயகப் பாரம்பரியத்தை தமிழரசுக் கட்சி இழந்து கொண்டிருக்கின்றது என்பதைத் தவிர சொல்வதற்கு ஏதுமில்லை.</p><h2>ஐ.நா. மனித உரிமைகள் பேரவை</h2><p> </p><p>மக்களின் வலியை உணராதவர்கள் யாருக்கானவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 'இனப்படுகொலைக்குச் சான்று இல்லை', 'புலிகளையும் விசாரிக்க வேண்டும்' என்று சிறிலங்கா அரசாங்கத்தை உலக அரங்கில் பிணையெடுக்கத் திரிந்து கொண்டிருந்த சின்னக் கதிர்காமருக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான போராட்டத்தின் வலி எப்படிப் புரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a137a43-5c34-424a-9f43-cce45144fe4c/26-6a9963662f15b.webp' /></p><p>வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள் நடக்கும் போதும், நடந்த பின்னரும் மக்கள் முகாம்கள் மற்றும் ஐ.நா. அலுவலகங்கள் தோறும் கால்கடுக்க நடந்து திரிந்த துயரக் காலங்களில், தமிழினப்படுகொலைப் போரை முன்னின்று நடத்திய மகிந்த ராஜபக்ச, பிள்ளையான், கருணாவின்&nbsp; படங்களுடன் தேர்தல் வாக்குக் கேட்ட மட்டக்களப்பின் இளம் இரத்தத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி எப்படிப் புரியும்.</p><p>தென்னிலங்கையில் ஏதேனும் ஒரு சிறு சனநாயக உரிமை மீறல் என்றால் கூட 'சர்வஜன நீதி' என்ற பெயரில் சிங்கள செயற்பாட்டாளர்களுடன் இணைந்து களமிறங்கி அறிக்கை விடும் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க சிந்தனையாளர்களுக்கு, சொந்தத் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் வலியும்.</p><p> நீதிக்கான போராட்டத்தின் வலியும் புரியாமல் இருக்கிறது என்றால் இவர்கள் யாருக்காக அரசியல் செய்கிறார்கள் அது அவர்கள் தவறல்ல அதை உணர்ந்த தமிழ் மக்கள் அவர்களை மக்கள் மன்றத்திலிருந்து ஏற்கனவே அகற்றிவிட்டார்கள். அதை உணர்ந்த தமிழரசுக் கட்சியினரும் கட்சித் தலைவர் தேர்தலின் ஊடாக அவர்களை ஓரங்கட்டிவிட்டார்கள்.</p><p> தமிழ் மக்கள் எப்போதும் தெளிவானவர்கள். இதற்குப் பிறகும் அவர்களை அந்தப் பதில் பொறுப்புக்களில் நீடிக்க விடுவதா இல்லையா என்பதை தமிழரசுக் கட்சியினரின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T22:06:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவு நெருங்கிவிட்டது.. விரைவில் வீழ்ச்சியடையவுள்ள ஈரானின் ஆட்சி - நெதன்யாகு அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-says-iran-weaker-than-ever-1788465776"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-says-iran-weaker-than-ever-1788465776</id>
            <summary type="text">ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். </p><p>

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஈரானின் இஸ்லாமிய குடியரசு</h2><p>

இஸ்ரேலிய இராணுவத் தலைவர்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றிய நெதன்யாகு, இந்த ஆட்சி தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக உள்ளது.தனது உயிர்வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.</p><p>
மேலும், இந்த அச்சுறுத்தலை ஒருமுறை மற்றும் நிரந்தரமாக அகற்ற முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதாவது, இந்த ஆட்சியை வீழ்த்த முடியும்.

 அதுதான் எமக்கு இன்னும் முன்னால் இருக்கும் முக்கியப் பணியாகும். ஆனால் அது மிக அருகில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56e4fed-8e0b-4d3e-8254-c03f0fa1dbc7/26-6a99d55e7a213.webp' /></p><p> </p><p>அது சாத்தியமற்றதல் எமது கட்டுக்குள் உள்ளது என அவர் கூறினார்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
</p><p>
தற்போது அமெரிக்கா ஈரான் மீது மேலதிக பொருளாதார அழுத்தங்களை விதித்துள்ளதுடன், இந்த வாரம் மீண்டும் தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.</p><h2>இஸ்ரேல் மீது தாக்குதல்&nbsp;</h2><p> 

இதற்குப் பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகள், ஜோர்தான் மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகளைத் தாக்கியுள்ளது. </p><p>எனினும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் எங்களைத் தாக்கவில்லை என்றால், அது தற்செயலானது அல்ல. அவர்கள் அனைவரையும் தாக்குகிறார்கள், ஆனால் எங்களைத் தாக்கவில்லை என நெதன்யாகு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e62b7932-5b42-4bd0-b9b3-66d946449821/26-6a99d55f2ea98.webp' /></p><p>எமது சக்தியையும், எமது ஆயுதங்களின் வலிமையையும், எமது உறுதியையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நெதன்யாகுவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.</p><p> 

சில கருத்துக்கணிப்புகளில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரான் விவகாரத்தில் நெதன்யாகு தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் குறித்து ஐ.நா. பிரதிநிதி – நீதி அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-representative-holds-talk-with-justice-minister-1788466404"></link>
            <id>https://tamilwin.com/article/un-representative-holds-talk-with-justice-minister-1788466404</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய
அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய
அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்ச், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் விரிவாகக்
கலந்துரையாடியுள்ளார்.
</p><p>இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(03.09.2026) கொழும்பில் நடைபெற்றுள்ளது.</p><h2>மறுசீரமைப்புத் திட்டங்கள்</h2><p>

இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம், சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான
அலுவலகத்தின் பணிகள் என்பன உள்ளடங்கலாக சட்ட ஆட்சி சார்ந்த மறுசீரமைப்புக்கள்
குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி
தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7afb8180-2f0b-47fc-b7c5-69d7728deaa0/26-6a99d5e093b87.webp' /></p><p>அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்டோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சட்டத்தின்
ஆட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக
இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:36:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மூவருக்கு ஒரே நாளில் கடூழிய சிறைத் தண்டனை: வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-high-court-delivers-swift-verdict-1788464456"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-high-court-delivers-swift-verdict-1788464456</id>
            <summary type="text">16 வயதுக்குக் குறைவான சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துர்நடத்தைகளை மேற்கொண்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 வயதுக்குக் குறைவான சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துர்நடத்தைகளை மேற்கொண்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p>

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து, 14 வயது சிறுமியை பாரிய பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடூழிய சிறைத் தண்டனை</h2><p>
</p><p>
இதனுடன் 50,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு நந்திமித்த கிராமத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3da52002-2c23-4e00-af03-7d18cf702b10/26-6a99e10f057d4.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது மற்றும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 50,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>மூன்று குற்றவாளிகள்</h2><p>

மூன்றாவது சம்பவத்தில், 14 வயது சிறுமியை இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.</p><p>

2022 ஆம் ஆண்டு கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eee9f314-d77c-43f7-842d-1a3b2944865a/26-6a99e10fe6ff1.webp' /></p><p>

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான கடுமையான தண்டனைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-fishermen-arrest-release-on-bail-1788449541"></link>
            <id>https://tamilwin.com/article/india-fishermen-arrest-release-on-bail-1788449541</id>
            <summary type="text">தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால்
கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09
இந்திய கடற்றொழிலாளர்களையும் நிபந்தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால்
கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09
இந்திய கடற்றொழிலாளர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த உத்தரவானது இன்று(03.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில்
வைத்து இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில்
திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa62531-421e-4475-bfec-81b4165e7567/26-6a99accf29f17.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதனையடுத்து குறித்த 9 கடற்றொழிலாளர்களும் தொடர்ச்சியாக விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம் மன்னார்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து நிபந்தனையின் அடிப்படையில் மன்னார்
நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T20:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூச்செப்பரக் கார்த்திகை திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karthigai-festival-at-nallur-kandaswamy-temple-1788463642"></link>
            <id>https://tamilwin.com/article/karthigai-festival-at-nallur-kandaswamy-temple-1788463642</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், கார்த்திகை திருவிழாவான
18ஆம் திருவிழா நடைபெற்றுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், கார்த்திகை திருவிழாவான
18ஆம் திருவிழா நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>இந்த நிகழ்வானது நேற்றைய தினம்(03.09.2026) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.</p><h2>கார்த்திகை திருவிழா</h2><p>
கார்த்திகை திருவிழாவின் போது , வள்ளி தெய்வானையும், முத்துக்குமார சுவாமி
பூச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் ,
தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f05757b-de8c-499d-bbef-b5e81e4b0c1c/26-6a99ccd730f91.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec81ca1-2256-4602-87f4-6e4735473a3d/26-6a99ccd6181fa.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T20:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[6ஆம் வகுப்பு சேர்க்கை - இணையவழி விண்ணப்பங்கள் குறித்து கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-6-admission-online-applications-open-1788462361"></link>
            <id>https://tamilwin.com/article/grade-6-admission-online-applications-open-1788462361</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு எழுதிய மாணவர்களின்
பெற்றோர், 2027ஆம் ஆண்டிற்கான 6ஆம் வகுப்பு சேர்க்கை தொடர்பான
இணையவழி விண்ணப்பச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு எழுதிய மாணவர்களின்
பெற்றோர், 2027ஆம் ஆண்டிற்கான 6ஆம் வகுப்பு சேர்க்கை தொடர்பான
இணையவழி விண்ணப்பச் செயல்முறை தொடர்பில் அறிவுறுத்தல்கள் வரும்
வரை காத்திருக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

இதன்படி ​2026 புலமைப்பரிசில் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், பாடசாலை
இடங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி அமைப்பின் மூலமாகவே பெறப்படும்
என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

​</p><h2>இணையவழி அமைப்பு முறை</h2><p>இதன்படி, அடுத்த ஆண்டு 6ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான
விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் இந்த இணையவழி அமைப்பு முறை
மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

​.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af24941-64ff-4e35-a852-5f7403bdeff8/26-6a99c917af90c.webp' /></p><p>அத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப திகதிகள், கடைசி நாள்
மற்றும் அதற்கான விரிவான வழிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T19:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறித்து எழுந்த சர்ச்சை: ட்ரம்பின் அதிரடி பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trumps-latest-rant-reports-of-weapons-shortage-1788459354"></link>
            <id>https://tamilwin.com/article/trumps-latest-rant-reports-of-weapons-shortage-1788459354</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போரின் போது அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போரின் போது அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், பெயர் குறிப்பிடாத நபர்கள் மற்றும் அமைப்புகளை துரோகக் கும்பல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரித்த ஊடகங்கள் மற்றும் நபர்களை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.</p><h2>ட்ரம்ப் அதிரடி</h2><p> 

இத்தகைய கூற்றுகள் துரோகத்தனமானவை என்றும், அவை 100 சதவீதம் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>நாங்கள் எளிதாக வெற்றி பெற்று வரும் போரில் அமெரிக்கா தோல்வியடைவதை அவர்கள் விரும்புகிறார்கள். நான் வெற்றி பெறுவதைப் பார்ப்பதைவிட அதையே அவர்கள் விரும்புகிறார்கள் என ட்ரம்ப் Truth Social தளத்தில் பதிவிட்டார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117207687594983323/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>
</p><p>
மற்றொரு பதிவில், துரோகக் கும்பல் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்காவிடம் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்தார்.</p><p>

மேலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை குறித்து சரியாக செய்தி வெளியிடாதவர்களை விமர்சித்த அவர், தங்களிடம் அதிக மற்றும் நடுத்தர தரத்திலான வெடிமருந்துகள் பெருமளவில் இருப்பதாகக் கூறினார்.</p><p>

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நீடித்த போர் தொடங்கியதிலிருந்து, ஆயுதங்கள் குறைவாகக் கிடைப்பது குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.</p><h2>ஆயுதக் கையிருப்பு</h2><p>
</p><p>
வியாழக்கிழமை அவர் மீண்டும், அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வெடிமருந்துகளை உற்பத்தி செய்து வருவதாக தெரிவித்தார்.

“எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் ஆயுதங்களை சேமித்து வருகிறோம். </p><p>அவற்றை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்குப் பதிலாக, அமெரிக்காவுக்காகவே வைத்திருக்கிறோம். எனினும், நட்பு நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கும்” என ட்ரம்ப் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf4742c7-65f0-4c8d-90c7-a08c4fffc28c/26-6a99bda1551f9.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தையும் ட்ரம்ப் விமர்சித்தார். </p><p>தனது நிர்வாகம் ஈரானுடனான போரில் பயன்படுத்தியதைவிட அதிகமான ஆயுதங்களை பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு இலவசமாக வழங்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>
மேலும், நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கும் நேட்டோவுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.</p><p> ஐரோப்பா கேட்டிருந்தால் அதற்கான பணத்தை செலுத்தியிருக்கும். தற்போது அந்தப் பணத்தை நாங்கள் கோரப் போகிறோம், சற்று தாமதமாக இருந்தாலும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T18:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு இணையான ஆபத்து இலங்கையிலும்.. வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901</id>
            <summary type="text">எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமர்தலிங்கம் தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,</p><p> 


இதனால் உணவு உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். 

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, பாதுகாப்பற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மலைப் பிரதேசங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.
</p><p>
 குளங்கள் புனரமைக்கப்பட்டாலும், முறையான நீர்வள முகாமைத்துவம் இல்லாததால் ஒரே மாவட்டம் வறட்சியையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

கொழும்பு போன்ற நகரங்களில் நீர் வரத்து குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KY07L6-GGow" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T18:13:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள்: நெருக்கடியில் ஈரான் பொருளாதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-us-economic-sanctions-iran-s-economy-crisis-1788456156"></link>
            <id>https://tamilwin.com/article/severe-us-economic-sanctions-iran-s-economy-crisis-1788456156</id>
            <summary type="text">அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்
காரணமாக ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான
நெருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்
காரணமாக ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான
நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.</p><p>

அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதி
நாளொன்றுக்கு 1.7 மில்லியன் பீப்பாய்கள் இருந்து வெறும் 2.6 லட்சம்
பீப்பாய்கள் குறைந்துள்ளது.</p><h2>கடும் நெருக்கடி</h2><p>
</p><p>
மேலும், ஈரானுக்கு முக்கிய வர்த்தக மற்றும் நிதி மையமாக இருந்த ஐக்கிய அரபு
இராச்சியம் அனைத்து வணிகத் தொடர்புகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது அந்த
நாட்டிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/995054cb-11c7-4392-ba52-6d5919eebf60/26-6a99b37e3e82c.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க டொலருக்கு எதிரான ஈரானிய ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச்
சரிந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்து பணவீக்கம்
69.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
</p><p>
ஒரு குடும்பத்தின் குறைந்தபட்ச மாதச் செலவு 450 டொலராக இருக்கும் நிலையில்,
சராசரி மாதச் சம்பளம் 125 டொலராக மட்டுமே உள்ளதால் மக்கள் அன்றாடத்
தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
</p><p>
சொந்தமாகச் சுத்திகரிப்புத் திறன் குறைவாக இருப்பதால், பெட்ரோலை இறக்குமதி
செய்யும் ஈரானிடம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பெட்ரோல் கையிருப்பு
உள்ளது.</p><p>

இந்தத் தீவிரப் பொருளாதார நெருக்கடி ஈரானில் மீண்டும் பெரிய அளவிலான மக்கள்
போராட்டத்தை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T17:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவிற்கு எதிராகக் கருணா வாக்குமூலம்: நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா அம்மான் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா அம்மான் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஓருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சிஐடியினருக்கு வழங்கிய மிக உணர்வுபூர்வமான வாக்குமூலத்தின் விபரங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0707941-ee83-4b2a-92aa-c5d979e04cfe/26-6a99b11aacf4d.webp' /></p><p>
</p><p>
அதில், சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இல்லாத நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாகக் காட்டிப் பாரிய நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
</p><p>
கருணா அம்மான் லண்டனுக்குச் செல்வதற்காகச் சிங்களப் பெயர் கொண்ட போலி கடவுச்சீட்டையும், அதற்கான விசா வசதிகளையும் சுரேஷ் சலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 கருணா லண்டன் சென்றடைந்த பின்னர், சுரேஷ் சலேயும் அங்கு சென்று, கருணாவின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், லண்டன் பொலிஸாருக்குக் கருணாவின் போலி கடவுச்சீட்டு விபரங்களை வழங்கி, அவரை அங்கு கைது செய்து சிறையிலடைக்க சுரேஷ் சலே திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருணா அம்மான் தனது வாக்குமூலத்தின் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் சட்டமா அதிபர் திணைக்களk; நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 5 ஆம் திகதி முதல் அவர் உணவை உட்கொள்ள மறுத்து, தனது உடல்நிலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுபோயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.
</p><p>
தற்போது விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை, மேலும் அங்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், சுரேஷ் சலே தனது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளின் கடவுச்சொற்களை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தடுப்புக் காவல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சலே தொடர்பில் கருணா அம்மான் நீதிமன்றில் குற்றம் சுமத்தியதாக சிங்கள இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருணா தரப்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MGfXDBgbP70" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-03T17:40:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்புத் திருத்தம் செய்யத் தயங்க மாட்டோம்: ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923"></link>
            <id>https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்கம் தயங்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கை பொலிஸ் சேவையின் 160வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>போதைப்பொருள் சோதனை</h2><p>
</p><p>சந்தேகநபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடைமுறையை அரசாங்கம் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும், கைது செய்யப்படுவதற்கும் தண்டனை வழங்கப்படுவதற்கும் இடையிலான காலதாமதம் இருப்பதாக ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>
</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் பொலிஸார் சாதனை அளவிலான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/537f0ecd-cdc9-46a5-a6a4-3850801afe26/26-6a99abf8cfc67.webp' /></p><p>எனினும், வழக்கு விசாரணைகளும் தண்டனை வழங்குவதும் நீண்ட காலம் நீடித்தால், இந்தக் கைதுகளால் பெரிய பலன் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தண்டனை கிடைக்கத் தாமதமாகும் என்பது குற்றவாளிகளுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதிச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் மேலும் திறம்படச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இந்த நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஏற்கனவே புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T17:19:46+00:00</updated>
        </entry>
    </feed>
