<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-09T08:26:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது சர்வதேச அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pressure-on-sri-lanka-at-un-human-rights-council-1788939661"></link>
            <id>https://tamilwin.com/article/pressure-on-sri-lanka-at-un-human-rights-council-1788939661</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கம் வழங்கிய மனித உரிமைகள் சீர்திருத்த வாக்குறுதிகளை உடனடியாக
உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என இங்கிலாந்து தலைமையிலான
&#039;இலங்கைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் வழங்கிய மனித உரிமைகள் சீர்திருத்த வாக்குறுதிகளை உடனடியாக
உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என இங்கிலாந்து தலைமையிலான
'இலங்கைக்கான முக்கிய குழு' வலியுறுத்தியுள்ளது.

​</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63வது கூட்டத்தொடரில்,
இங்கிலாந்தின் மனித உரிமைகளுக்கான தூதர் எலினோர் சாண்டர்ஸ் இங்கிலாந்து, கனடா,
மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகளின் சார்பில் இந்த
கூட்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.

​​</p><h2>உடன்படிக்கையில் காட்டிய ஈடுபாடு</h2><p> </p><p>பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச தொழிலாளர்
அமைப்பின் (ILO) 190வது உடன்படிக்கையை இலங்கை ஏற்றுக்கொண்டதையும்,
மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கையில் காட்டிய ஈடுபாட்டையும் இந்த குழு
வரவேற்றுள்ளது.</p><p>

​அத்துடன் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படாமல்
இருப்பது, கூட்டுக்குழிகள் கண்டறியப்படுவது, சிவில் சமூக அமைப்புகள் மற்றும்
ஊடகவியலாளர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த குழு பெரும்
கவலையை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b31fcd8a-54e5-4b72-92fb-b2d1726cb403/26-6aa113eb7e491.webp' /></p><h2>வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்</h2><p>

பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பொறுப்புக்கூறல் செயல்முறையை
முன்னெடுப்பது, நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தடுப்புக்காவல்
நிலையங்களில் மனித உரிமைகளைப் பேணுவது மற்றும் சுயாதீன நிறுவனங்களை
வலுப்படுத்துவது போன்ற சட்ட சீர்திருத்தங்களை உடனே மேற்கொள்ள இந்த அறிக்கையில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

​</p><p>இதன் மூலம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மீண்டும்
சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வ அமைப்பல்ல : ஹர்ஷன சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commonwealth-lawyers-association-is-not-official-1788939295"></link>
            <id>https://tamilwin.com/article/commonwealth-lawyers-association-is-not-official-1788939295</id>
            <summary type="text">பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால்
உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல எனவும், அது தனிப்பட்ட
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால்
உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல எனவும், அது தனிப்பட்ட
நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும் எனவும் நீதி மற்றும்
தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(08.09.2026) நடைபெற்ற அமர்வில், பொதுநலவாய
நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>அமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "எதிர்க்கட்சித் தலைவர் வழமை போன்று பல விடயங்களைச் சபையில்
குறிப்பிடுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942d8a2c-a884-45dc-9569-0023c52e0aa4/26-6aa10fc84ef4d.webp' /></p><p> பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம்
தவறானது என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஆனால், இது பொதுநலவாய
உறுப்பு நாடுகளினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல,
மாறாக, தனிப்பட்ட நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும்.&nbsp;</p><p>இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இங்கு வந்து பல விடயங்களைக் குறிப்பிட்டுச்
சென்றுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை நாம் ஆராய
வேண்டும்.
</p><p>
இந்த அமைப்பின் தலைவர் என்னைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில்,
நானும் அதற்கு அனுமதியளித்திருந்தேன். எனினும், அன்றைய தினம் நான் கொழும்பில்
இல்லாத காரணத்தால் அவர் அந்தச் சந்திப்பை மறுத்துவிட்டார். </p><p>ஆகவே, இந்தச்
சங்கத்தின் நிலைப்பாட்டைப் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ
நிலைப்பாடாக ஏற்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள்.. அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-ships-among-47-vessels-near-sri-lanka-1788867082"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-ships-among-47-vessels-near-sri-lanka-1788867082</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
</p><p>
வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நேற்று (08) இத்தகவலை வெளியிட்டார்.
</p><p>
இக்கப்பல்கள் இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு 24 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.</p><h2>இலங்கைக்கு அருகில்..&nbsp;</h2><p>

இவற்றில் ஈரானிய கப்பல்கள் மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் அடங்கியுள்ளன என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c202b0-e6a8-4909-905b-bc5f5f97a2e3/26-6aa10cc2d90b0.webp' /></p><p>

இதுவரை எந்தவொரு கப்பலும் இலங்கையிடம் வசதிகளையோ அல்லது உதவிகளையோ கோரவில்லை என்றும், இலங்கை தரப்பிலிருந்து அவற்றுக்கு எந்தவித வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
இருப்பினும், கடற்படை தற்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை என்றும் உறுதியளித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி தலைமையில் அரச இலக்கிய விருது விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/state-literary-awards-ceremony-of-president-1788938949"></link>
            <id>https://tamilwin.com/article/state-literary-awards-ceremony-of-president-1788938949</id>
            <summary type="text">இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புகளால் வளப்படுத்திய
இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி
அநுரகுமார திஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புகளால் வளப்படுத்திய
இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
</p><p>
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள்
திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கியக் குழு ஆகியவை இணைந்து
67ஆவது முறையாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.</p><h2>அரச விருதுகள்</h2><p>
</p><p>
2025ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய
எழுத்தாளர்களைப் பாராட்டி, 50 இற்கும் மேற்பட்ட பிரிவுகளில் அரச விருதுகள்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ac28720-8e35-4be3-a138-bfac3424103c/26-6aa10cb22bdb0.webp' />&nbsp;</p><p>

இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றியமைக்காக, வாழ்க்கையில் ஒருமுறை
மட்டுமே வழங்கப்படுகின்ற உயரிய 'சாஹித்யரத்ன' கௌரவ விருதுகள் மூன்று மொழிப்
படைப்பாளிகளுக்கு ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டன.</p><p>

சிங்கள மொழிப் பிரிவில் பராக்கிரம கொடித்துவக்குக்கும், தமிழ் மொழிப் பிரிவில்
கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கும், ஆங்கில மொழிப் பிரிவில்
பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகாவுக்கும் மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன.</p><h2>2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது</h2><p>
</p><p>
இதன்போது 2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்குரிய நூற்தொகுதி, நினைவுமலர்
மற்றும் மும்மொழிகளிலான 2026 இலக்கிய இதழ் ஆகியவை ஜனாதிபதியிடம்
உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.</p><p>

மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, புத்தசாசன, சமய மற்றும்
கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும்
கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, கலாசார அலுவல்கள்
பணிப்பாளர் கே.எஸ். தில்ஹானி, இலங்கைக் கலைக் கழகத்தின் தலைவர் கீர்த்தி
வெலிசரகே, தேசிய இலக்கிய உப கழகத்தின் தலைவர் கமல் பெரேரா ஆகியோருடன்,
நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை பிச்சைக்காரருடன் ஒப்பிட்ட கம்மன்பில.. 800,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-vijitha-hearath-responds-gammanpila-1788937122"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-vijitha-hearath-responds-gammanpila-1788937122</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன் ஒப்பிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார். </p><p>அரசியல் விடயம் தொடர்பில் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொள்வதை பிச்சைக்காரனுக்கு பணம் கொடுப்பதுடன் ஒப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், அவ்வாறு பார்த்தால் நாமல் ராஜபக்ச ஒரு பிச்சைக்காரராகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான ஒப்பீட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.&nbsp;</p><h2>&nbsp;800,000 அமெரிக்க டொலர்..&nbsp;</h2><p> பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதற்கும் அரசியல்வாதிக்கு பணம் கொடுப்பதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளதுடன், அரசியல்வாதிகள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவர் என்பதால் கம்மன்பிலவின் தர்க்கத்தையே கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9a91fe-b6c8-4f7f-a36b-e5a64a9fb301/26-6aa107e6076ed.webp' /></p><p> </p><p>அத்துடன், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் Gen Z தலைமுறையினர் ஆதரவாக இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்படவில்லை மாறாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் போதே தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p> முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த கம்மன்பில, தொழிலதிபர் நிமல் பெரேராவினால் நாமல் ராஜபக்சவுக்கு 800,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தொகையை எவ்வாறு தரகு எனக் கூற முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p>அத்துடன், நன்கொடைகளைப் பெறுவது சட்டவிரோதம் என்றால் வீதியிலுள்ள பிச்சைக்காரர் கூட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என வாதிட்டிருந்தமைக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
</p><p>
இன்று காலை (09) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b476ebc-f478-4ebf-b383-16c7ad5cd7af/26-6aa107cf821fb.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி' டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

</p><p>இன்று (09) காலை 8.00 மணிக்கு அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயற்சி</h2><p>'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f3d237-d22b-4484-83e9-bfe334436d18/26-6aa0c473cf192.webp' /></p><p>
</p><p>இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கொண்டா ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:17:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! எண்ணெய் கப்பல்கள் மீது தீவிர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-between-iran-and-the-us-1788937019"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-between-iran-and-the-us-1788937019</id>
            <summary type="text">கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.​</p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்தானில் உள்ள ‘அல் அஸ்ராக்’ (Al Azraq) இராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.</p><h2>கப்பல்களை அப்புறப்படுத்துமாறு எச்சரிக்கை</h2><p>​ 

முன்னதாக, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து எண்ணெய் கப்பல்களின் ஊழியர்களும், தங்கள் கப்பல்களை உடனடியாக அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்துமாறு IRGC எச்சரிக்கை விடுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13d0e7bd-3399-44e2-ac59-0507791a4e6d/26-6aa10767430e5.webp' /></p><p>
</p><p>
மேலும் இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்! கைபேசியில் உள்ள இரகசிய தரவுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834"></link>
            <id>https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834</id>
            <summary type="text">மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவு, ஆப்பிள் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

குற்றப் புலனாய்வுத்திணைக்களம் இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.</p><h2>நீதவான் விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (09) மீண்டும் தொடங்கப்பட்டபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த உண்மைகளை கூடுதல் அறிக்கையுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c615cb3-09cb-417c-af69-20b988f18787/26-6aa1062f762c6.webp' /></p><p>

சம்பந்தப்பட்ட கைபேசியின் தரவுகள் தொடர்பாக முந்தைய நாள் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவு, ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p>

இச்சம்பவத்தில் காலஞ்சென்ற சந்தேகநபரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>பிரேத பரிசோதனை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை</h2><p>
அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரேதப் பரிசோதகருக்கும் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை வழங்கியுள்ளது.</p><p>இந்த வழக்கை அக்டோபர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:09:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைவாய்ப்பு மாபியாவால் இஸ்ரேல் கனவுகள் கலைந்தன!- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dreams-of-israel-shattered-by-the-employment-mafia-1788937734"></link>
            <id>https://tamilwin.com/article/dreams-of-israel-shattered-by-the-employment-mafia-1788937734</id>
            <summary type="text">தற்போதைய அரசின் பலவீனமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கைகளாலும்,
செயற்றிறனற்ற செயற்பாடுகளாலும் நாட்டின் வேலைவாய்ப்பு மாபியா தீவிரமடைந்து,
இஸ்ரேல் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசின் பலவீனமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கைகளாலும்,
செயற்றிறனற்ற செயற்பாடுகளாலும் நாட்டின் வேலைவாய்ப்பு மாபியா தீவிரமடைந்து,
இஸ்ரேல் செல்லும் இளைஞர்களின் கனவுகள் கலைந்துவிட்டன என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
</p><p>
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த
'இஸ்ரேலிய உட்கட்டமைப்புத் துறை லொட்டரி எதிர்பார்ப்பு ஐக்கிய அமைப்பினரைச்'
சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"இதற்குக்கூட நிர்மாணத் துறையைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 பேருக்காக நான் குரல்
கொடுத்தேன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் உட்கட்டமைப்புத்துறைக்கு எந்தவொரு
வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.</p><h2>திருத்திக் கொள்ள வேண்டிய பலவீனங்கள்</h2><p>வேலைகளுக்குச் செல்ல
எதிர்பார்த்திருப்போர் பொலிஸ் அறிக்கைகள் மற்றும் தகுதிப் பரிசோதனைகளைப்
பெற்றுக்கொண்டும் கூட அவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
</p><p>தற்போது 560 பேர் இந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன், மேலும்
1,200 பேர் உட்கட்டமைப்பு லொட்டரி முறையில் காத்திருக்கின்றனர்.
</p><p>
அரசின் ஊடாக இந்த வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும்போது 10 இலட்சம் ரூபா போன்ற
குறைவான தொகையே செலவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5968ee86-0ec0-4a5f-802e-2009306a5a1f/26-6aa10607b0b2b.webp' /></p><p> </p><p>ஆனால், தனியார் நிறுவனங்கள் ஊடாகச் செல்வதாயின் 35
இலட்சம் ரூபா வரை செலுத்த வேண்டியுள்ளது. </p><p>இந்த வேலைத்திட்டத்தில் பாரிய
சுரண்டல்களும் சூறையாடல்களும் இடம்பெறுகின்றன. இந்த அநீதிக்கு எதிராக நான்
எப்போதும் முன்நிற்பதுடன், சபா பீடத்துக்குள்ளும் சென்று இந்தப் பிரச்சினைகளை
வலுவாக முன்வைப்பேன்.
</p><p>
முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த
தற்போதைய அரசு, இந்தச் சுரண்டல் முறையை உடனடியாக ஒழித்து, 10 இலட்சம் ரூபா
செலவில் இஸ்ரேல் செல்லும் வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9467708-1145-4160-a204-458d3fa3fca4/26-6aa106086cd44.webp' /></p><p> பொய்
கூறும் அரசியலை நிறுத்திவிட்டு, இந்தப் பலவீனங்களை உடனடியாகத்
திருத்திக்கொள்ளுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்த அமைதி வழியிலான ஆர்ப்பாட்ட இடத்துக்கு நேரடியாக வருகை தந்த
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநீதிக்குள்ளாகி வேலைவாய்ப்பை
எதிர்பார்த்துக் காத்திருப்போரைச் சந்தித்து அவர்கள் முகங்கொடுத்துள்ள
பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதிக்கு பதிலாக அமைச்சர் விஜித ஹேரத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-will-not-participate-un-general-assembly-1788936911"></link>
            <id>https://tamilwin.com/article/president-will-not-participate-un-general-assembly-1788936911</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்
கூட்டத் தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும்,
அவருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்
கூட்டத் தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும்,
அவருக்குப் பதிலாக இலங்கை சார்பில் அமைச்சர் மட்டத்திலான பிரதிநிதித்துவம்
இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய(08.09.2026) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்
தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை
சார்பில் தாம் கலந்துகொண்டு, செப்டெம்பர் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளார் என்று
கூறியுள்ளார்.
</p><h2>நியூயோர்க் புறப்பட</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740b6be8-b995-4f04-9a92-73ca3d9da1a1/26-6aa10560bef2f.webp' /></p><p>
இந்த வருடாந்த ஐ.நா. மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டெம்பர் 26 ஆம் திகதி தாம்
நியூயோர்க் புறப்படத் திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defense-minister-sri-lanka-after-38-years-1788934223"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defense-minister-sri-lanka-after-38-years-1788934223</id>
            <summary type="text">மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
</p><p>
இந்தக் கூட்டம் இன்று காலை (09.09.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>இருதரப்புப் பேச்சுவார்த்தைகள்</h2><p>ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FRajnathSinghBJP%2Fposts%2Fpfbid0tTZb4N86Q7oqsWodjXcHLHr6BoLXNzq6uDxiRUzbmEUxxC6N447ofKAkXJa7JV1Wl&show_text=true&width=500" width="500" height="787" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
</p><p>
இந்தப் பயணத்தின்போது, ​​இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் ஹரினி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த மற்றும் ஒரு குழுவினரையும் சந்திக்க உள்ளார்.</p><p>

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் செயலாக்கம் குறித்தும் இந்தப் பயணத்தின்போது ஆய்வு செய்யப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p> 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூலில் தவறான தொழிலை ஊக்குவித்த இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18-year-old-arrested-for-promoting-work-facebook-1788933447"></link>
            <id>https://tamilwin.com/article/18-year-old-arrested-for-promoting-work-facebook-1788933447</id>
            <summary type="text">சமூகவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களை நடத்தி வந்த 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூகவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களை நடத்தி வந்த 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குற்றப் புலனாய்வுத் துறையின் இணையக்கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, மேலும் பல சமூக ஊடகக்குழுக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><h2>குடும்ப உறுப்பினர்களை பற்றிய திரிபுபடுத்தப்பட்ட கருத்து</h2><p>
</p><p>
மேலும், அவற்றில் ஈடுபட்டுள்ள அனைவரும் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8d0b21-6153-4ebe-88a5-9a6ae3a9831c/26-6aa0fc5adb39a.webp' />&nbsp;</p><p>
</p><p>
சமூக விரோத பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பல சமூக ஊடகக்குழுக்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, நடத்தப்பட்ட விசாரணைகளில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த குழுக்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை பற்றியே திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.</p><p>

குறித்த விசாரணைகளின் போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சமூக ஊடகக்குழுவை நடத்தி வந்த ஒருவர் வெயங்கொட பகுதியில் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளக பொறிமுறைக்கே ஆதரவளியுங்கள் என ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-assertion-at-the-geneva-session-1788933189"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-assertion-at-the-geneva-session-1788933189</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு
வரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட எந்தவொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு
வரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட எந்தவொரு
வெளியகப் பொறிமுறையையும் இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க
தெரிவித்தார்.
</p><p>
ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
63 ஆவது கூட்டத் தொடரில் நேற்றைய அமர்வின்போது 'இலங்கையில் நல்லிணக்கம்,
பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில்
அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்து மூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர்
அவா டபோவினால் வாசிக்கப்பட்டது.</p><p>

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்குப் பதிலளித்து இலங்கை
அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றும்போதே நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித்
திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>வெளியகப் பொறிமுறை</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம்
முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப் பொறிமுறையானது
இனங்களைத் துருவமயப்படுத்துவதுடன், நாட்டுக்குள் தேவையற்ற பிளவுகளைத்
தோற்றுவிக்கும். எனவே, இத்தகைய பொறிமுறைகள் தேசிய செயன்முறைகளைப்
பலவீனப்படுத்தும் என்பதால் அவற்றை நாம் நிராகரிக்கின்றோம்.</p><p>

நல்லிணக்கத்தையும் சுபீட்சத்தையும் அடைவதற்கான தேசிய பொறிமுறைக்கே ஐ.நா. மனித
உரிமைகள் பேரவை தனது ஆதரவை வழங்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை அரசு வெளிப்படைத்தன்மையுடனும்
ஒத்துழைப்புடனும் இணைந்து செயலாற்றி வருகின்றது. அதேவேளை, தேசிய ரீதியிலான
உள்ளகப் பொறிமுறைகளையே நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75619318-1c23-4213-8b63-6230fba46a18/26-6aa0fad3b5e1d.webp' /></p><p> </p><p>அதற்கமைவாக,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டுப் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள
சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அது
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில்
மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களும் முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>அரசாங்கத்தின் முற்போக்கான நடவடிக்கை</h2><p>
</p><p>
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய
ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவை அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள
ஆணைக்கு அமைவாகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.
</p><p>
மேலும், உள்நாட்டு யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச்
சென்றவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
வரலாற்றில் முதன்முறையாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை
இலக்காகக் கொண்டு அரசாங்கம் முற்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
</p><p>
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பீடமேறி இரண்டு ஆண்டுகள்
பூர்த்தியடைந்துள்ள நிலையில், டித்வா சூறாவளி மற்றும் உலகளாவிய நெருக்கடி நிலை
போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி
நகர்த்தி வெற்றிகரமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வு : வடக்கு மாகாண ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/graduate-teacher-interview-northern-province-1788932525"></link>
            <id>https://tamilwin.com/article/graduate-teacher-interview-northern-province-1788932525</id>
            <summary type="text">பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத்
தீர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத்
தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத்
தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடலானது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (08.09.2026) ஆளுநர்
செயலகத்தில் நடைபெற்றது.
</p><h2>பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்&nbsp;</h2><p>
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்
வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், இலங்கை ஆசிரியர் சேவைக்கு 23 ஆயிரத்து 344
பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393690cc-231b-4cc0-bb18-367d510b8299/26-6aa0f4f469350.webp' /></p><p>
இதனடிப்படையில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளுக்கான
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் போட்டிப் பரீட்சை
நடத்தப்பட்டிருந்தது.</p><p>அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்
நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறும் பட்டதாரிகளை அழைத்தல், நேர்முகத்
தேர்வுகளை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.</p><p>
இவற்றை காலதாமதமின்றி மேற்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர், ஆளுநரின்
செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின்
செயலாளர், பிரதம செயலாளருக்காக பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், மாகாண
கல்விப் பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், ஆளுநரின் உதவிச்
செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-case-politicians-in-risk-1788929226"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-case-politicians-in-risk-1788929226</id>
            <summary type="text">டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p> 

ஷிரான் பாசிக் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், சிலரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><h2><b>
கறுப்புப் பணம்</b></h2><p>அதற்கமைய, தெஹிவளை, கல்கிஸ்சை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மற்றும்&nbsp;புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணைக் குழுக்கள் அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c81b70-feeb-45a3-97b1-4fd1f2d1dcfb/26-6aa0e808903fb.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் தனசிறி அமரதுங்க, ஷிரான் பாஸிக்கின் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை சட்டப்பூர்வ சொத்துகளாக மாற்ற உதவி செய்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடற்கரைகளில் ஹோட்டல்களை அமைக்க ஷிரான் பாஸிக்கிற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் அதிகாரிகளால் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.</p><p>
</p><h3><b>
அநுர அரசின் நடவடிக்கை</b></h3><p>ஷிரான் பாஸிக்கின் தொலைபேசி மற்றும் வங்கிப் பரிமாற்றங்களின் தரவுகளும் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/408a329a-07ff-4b2b-bbd4-1c2937549901/26-6aa0e809441cc.webp' /></p><p>பாஸிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மேலும் 3 முன்னணி அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் நாட்களில் நேரடியாக வாக்குமூலம் பெற விசாரணைக் குழுக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.</p><p>வெள்ளவத்தை முதல் தெஹிவளை, கல்கிஸ்ஸ கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத ஹோட்டல்களை நீக்கப் போவதாக சமகால அநுர அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><i><b>you may like this video </b></i></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3P6P7mu8JVo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i></i></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதியின் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை : சுனில் ஹந்துன்நெத்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amentment-1788929705"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amentment-1788929705</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதில் எந்த
முரண்பாடும் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதில் எந்த
முரண்பாடும் இல்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.</p><p>

களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய
விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>22 தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
"உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அரசமைப்புத்
திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
வாக்குகள் அவசியமானவை என்பதால், அதனை நாடாளுமன்றத்தில் விரைவாகச் சமர்ப்பித்து
நிறைவேற்றுவதாகவே ஜனாதிபதி குறிப்பிட்டார்.
</p><p>
ஒருவேளை உயர்நீதிமன்றம் இந்தச் சட்டமூலத்துக்குச் சர்வஜன வாக்கெடுப்பு (மக்கள்
தீர்ப்பு) அவசியம் என உத்தரவிட்டால், அதனை எதிர்கொள்வதிலும் அரசுக்கு எவ்வித
ஆட்சேபனையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea47dfc9-43ea-49ef-9cd9-aec5404ecce2/26-6aa0f3ca511c9.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், அரசின் இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத்
தெரிவித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான
நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகச் சுதந்திர செயற்பாட்டு மையம், இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளது.</p><p>

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசின் சார்பில் திட்டமிட்ட தாமதம்
எதுவும் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறைகளில் ஏற்படும்
இயல்பான நடைமுறைத் தாமதங்களே இதற்குக் காரணம். இது நீண்டகால யுத்தம்,
பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பரந்த விடயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315872ef-7922-430f-a1fa-ff0528e9763a/26-6aa0f3c98296a.webp' /></p><p>
</p><p>
மேலும், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வடக்கு, கிழக்கு
மக்களுக்கு நேரடியாகத் தொடர்புடையது என்பதால், அனைத்துத் தரப்பினரின்
கருத்துகளையும் கேட்டு விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டியுள்ளது.
</p><p>
சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பான பொலிஸாரின் நடைமுறை விளக்கங்களும் சட்ட
வரையறைகளும் சிக்கலானதாக அமைந்திருப்பதும் தாமதத்துக்கு மற்றொரு காரணமாகும்.
</p><p>எவ்வாறாயினும், அரசு அளித்த வாக்குறுதியின்படி, பொதுமக்களின் ஆலோசனைகளைப்
பெற்று நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் வகையில் மிக
விரைவில் இதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா உறுதியாகத் துணை நிற்கும்! பாதுகாப்புத் துறை அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-statement-1788930351"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-statement-1788930351</id>
            <summary type="text">இலங்கை எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். </p><p> 

இலங்கைக்கான விஜயத்தின் போது நேற்றைய தினம் (08.09.2026) கொழும்பில் இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி</h2><p>
</p><p>
இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த உறவுகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa4754e-f3d5-475c-b233-bc9c5ad0d998/26-6aa0f1ca0e7fd.webp' /></p><p> </p><p>

இந்தியாவின் வேகமான பொருளாதார மாற்றத்தை எடுத்துரைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர், உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாகவும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.</p><h2>இந்தியாவின் பொருளாதாரம்</h2><p>
</p><p>
2014ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் அது இரட்டிப்பாகி தற்போது சுமார் 4 டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d75d2e0-ca5e-45a5-b7db-733a75454fee/26-6aa0f1cae0864.webp' /></p><p> </p><p>மேலும், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:43:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-progress-violations-armed-conflict-sri-lanka-1788930706"></link>
            <id>https://tamilwin.com/article/no-progress-violations-armed-conflict-sri-lanka-1788930706</id>
            <summary type="text">இலங்கையில் ஆயுத மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஆயுத மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும்
பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், முக்கிய வழக்குகள் குறித்த
குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைந்து வருகின்றன என்றும் ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது
கூட்டத்தொடரில், 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித
உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை பிரதி
உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் நேற்று(08.09.2026) வாசிக்கப்பட்டது.
</p><h2>பொறுப்புக்கூறலில் தாமதம்</h2><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,&nbsp;ஆயுதமோதல் காலத்து மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் இன்னும்
உறுதிப்படுத்தப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bffab68-3030-4cd0-80ce-a36bf2959fc9/26-6aa0ee52b63d0.webp' /></p><p>ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகச்
சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்ட சுயாதீன வழக்குத்தொடுநர்
அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை. </p><p>எனினும், கிழக்கு பல்கலைக்கழக
உபவேந்தர் படுகொலை மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான சில
முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுவதால் நியாயமான வழக்கு
விசாரணை மற்றும் முறையான நீதிமன்ற மேற்பார்வை உள்ளிட்ட நபர்களின் அடிப்படை
உரிமைகள் மீறப்படுகின்றன. </p><p>மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்
பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்துத்
தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>காணாமல்போனோர் அலுவலகம்</h2><p>அண்மைய காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள
நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை
இழந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2a79f81-9f35-4994-a2f2-eddb9c9852fb/26-6aa0ee538f49a.webp' /></p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி
இன்னமும் பதிலின்றித் தொடர்வதால், அந்த அலுவலகத்தின் மீது மக்களின்
நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அதனைப் பலப்படுத்த வேண்டியது
அவசியமாகும்.
</p><p>
போர்க் காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள்
பேரவையின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.</p><h2>மலையக சமூகத்துக்கு நிதி ஒதுக்கீடு</h2><p>2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் பிரகாரம் நாட்டின்
வருமானத்தில் 82 வீதமானவை கடன் மீள்செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள
நிலையில், சுகாதாரம், கல்வி மற்றும் அனர்த்தங்களால் சீர்குலைந்த நாட்டை
மீளக்கட்டியெழுப்புவதற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை தீவிர
கரிசனைக்குரியது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/755702bc-c1ea-4733-ad56-9f375bdc3e91/26-6aa0ee5448ba8.webp' /></p><p>குறிப்பாக மலையகச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நிதி
ஒதுக்கீடு அவசியமாகும்.
</p><p>
நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்
கூற்றுக்கு வரவேற்கத்தக்கது.</p><p>

இலங்கையில் ஆழமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட
வேண்டும்.

இதயசுத்தியுடனான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைக்குத்
தேவையான ஒத்துழைப்பை வழங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தயாராக இருக்கின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:33:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஜெர்மனியில் தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-ul503-diverted-to-frankfurt-1788923147"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-ul503-diverted-to-frankfurt-1788923147</id>
            <summary type="text">பிரித்தானியா சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL503 விமானம் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.  

பிரித்தானியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL503 விமானம் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. </p><p> 

பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.</p><p> 


பிரித்தானிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு வழங்குநரான NATS நிறுவனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.</p><h2><b>விமானப் பயணங்கள் தாமதம்&nbsp;</b></h2><p> 

இதன் காரணமாக நாடு முழுவதும் விமானப் பயணங்கள் தாமதம் அடைந்துள்ளதுடன், பல சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11be3417-dce2-4f26-a373-e09c90d0aa32/26-6aa0ed0506e44.webp' /></p><p>இந்த செயற்பாடு ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் விமானப் போக்குவரத்தை பாதித்துள்ளது.
</p><p>
 இந்த நிலையில் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL503 விமானம் பாதிக்கப்பட்ட விமானங்களில் ஒன்றாகும்.
</p><p>
 இந்த இடையூறுகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. </p>]]></content>
            <updated>2026-09-09T05:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பில் காணாமல்போன கைதி வெலிக்கடையில் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-negombo-prisoner-found-in-welikada-1788929800"></link>
            <id>https://tamilwin.com/article/missing-negombo-prisoner-found-in-welikada-1788929800</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயிருந்த கைதியொருவர் நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயிருந்த கைதியொருவர் நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த ஜுலை 05,06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது 26 வயதுடைய கைதியொருவர் காணாமல்போயிருந்தார்.</p><p>

சிறைச்சாலை ஆவணங்களின் பிரகாரம் மட்டுமன்றி நீர்கொழும்பு சிறைச்சாலையின் பதிவேடுகளின் பிரகாரம் அவர் தொடர்ந்தும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கைதிக்கு என்ன நடந்தது</h2><p> </p><p>எனினும் அவரது பெற்றோர் பல தடவைகள் தமது புதல்வனை பார்வையிட நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு சென்றபோதும் அவர் அங்கில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af936130-6da8-4706-b348-890dcb8b8a00/26-6aa0edef8ed7a.webp' /></p><p>

அத்துடன் குறித்த கைதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய மேலதிக தகவல்களை வழங்கவும் சிறைச்சாலை நிர்வாகம் தவறியுள்ளது.</p><p>

இதனையடுத்து குறித்த கைதியின் பெற்றோர் காணாமல்போனோருக்கான அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றின் ஊடாக மேற்கொண்ட முயற்சியின் பிரகாரம் அவர்களது புதல்வன் தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.</p><p>

சிறைச்சாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கு காரணமாக வயோதிப பெற்றோர் சுமார் இரண்டு மாதங்கள் அநாவசிய மன உளைச்சல் மற்றும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாக சிறைச்சாலைக் கைதிகளின் உரிமைகளுக்கான அமைப்பு கண்ட்னம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களுக்கு நெருக்கமான மற்றுமொரு நபருக்கும் சிக்கல் - விசாரணைக்காக துரத்தும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tissa-kuttiarachchi-investigation-ccib-1788921555"></link>
            <id>https://tamilwin.com/article/tissa-kuttiarachchi-investigation-ccib-1788921555</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி விசாரணையொன்றிற்காக நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி விசாரணையொன்றிற்காக நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>ஊவா கேப்பிட்டல் கூட்டுறவு வங்கியில் (Uva Capital Co-operative Bank) நிகழ்ந்த சில முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.</p><h2>வாக்குமூலம் அளிக்கத்தவறினால் சட்ட நடவடிக்கை</h2><p>இருப்பினும், நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b493b23-2fc2-4a5f-9aed-e1b121ab73e6/26-6aa0cc527e26b.webp' /></p><p>இதற்கமைய, அவரை மற்றொரு திகதியில் மீண்டும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்&nbsp;சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.</p><p>அவர் தொடர்ந்து வாக்குமூலம் அளிக்கத்தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T05:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கோரி துண்டுபிரசுரம் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seeking-support-for-the-protest-against-the-army-1788928763"></link>
            <id>https://tamilwin.com/article/seeking-support-for-the-protest-against-the-army-1788928763</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரிலுள்ள நீதிமன்றம், தபாலகம்
ஆகியவற்றிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரிலுள்ள நீதிமன்றம், தபாலகம்
ஆகியவற்றிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையில் எதிர்வரும் 11.09.2026
அன்று இடம்பெறவுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கோரும் நடவடிக்கையில் பருத்தித்துறை நகர பிதா
விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.&nbsp;</p><h2>துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை</h2><p>அதன்படி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கோரி&nbsp;பருத்தித்துறை நகரில் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a57f79ac-dd1d-4579-bc79-42e23d2969c2/26-6aa0e8510c271.webp' /></p><p>துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கையில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் இணைந்திருந்தனர்.</p><p>யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கழிந்தும் இதுவரை பருத்தித்துறை பிரதான
தபாலகம், மற்றும் பருத்தித்துறை நீதிமன்றம் ஆகியவற்றிற்கான காணிகள்
விடுவிக்கப்படாமையினாலேயே குறித்த மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:02:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச கைது விவகாரம்! மக்களை திசை திருப்பும் நடவடிக்கை - ரோஹித விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapksa-arrested-latest-update-1788928170"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapksa-arrested-latest-update-1788928170</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள
நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று
எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள
நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், </p><p>"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தே தற்போதைய
அரசு ஆட்சிக்கு வந்தது. எனினும், கடந்த இரண்டு வருடங்களில் மக்களின்
எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>நாமல் ராஜபக்சவின் கைது&nbsp; நடவடிக்கை&nbsp;</h2><p>

டீசல், பெட்ரோல் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசு வாக்குறுதி
அளித்திருந்த போதிலும், தற்போது அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>எரிபொருள் விலை உயர்வின் காரணமாகப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன.
தேநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abe3901a-2c56-4689-842c-225d9f4dcc80/26-6aa0e1ea1b17a.webp' /></p><p>
</p><p>
வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் விவசாயிகளுக்காக ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியைத் தடுக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசு
முயற்சிக்கிறது.</p><p> எனினும், இத்தகைய நடவடிக்கைகளால் திட்டமிட்டபடி மக்கள்
பேரணியைத் தடுத்துவிட முடியாது.

2015ஆம் ஆண்டிலும் அரச பலத்தை வெளிப்படுத்தித் தமக்கு மக்கள் ஆதரவு
இருப்பதாகக் காட்டிய அரசு இறுதியில் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தற்போதைய அரசு
நினைவில் கொள்ள வேண்டும்.
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் ஊடாக
எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிப்பது தற்காலிகமான நடவடிக்கையாகவே அமையும். அது
நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-sri-lankans-arrested-in-kuwait-1788928345"></link>
            <id>https://tamilwin.com/article/two-sri-lankans-arrested-in-kuwait-1788928345</id>
            <summary type="text">குவைத் நாட்டின் சல்மியா நகரில் போதைப் பொருட்களைத் தம் வசம் வைத்திருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் நாட்டின் சல்மியா நகரில் போதைப் பொருட்களைத் தம் வசம் வைத்திருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 37 போதைப் பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>சந்தேகநபர்களில் ஒருவர் தப்பியோட முயற்சி</h2><p>
சம்பவம் தொடர்பில் குவைத் உ‌ள்துறை நேற்று (08|09|26) வெளியிட்டுள்ள செய்தியில், ஹவாலி ஆளுநரக பாதுகாப்பு பணியகத்தின் ரோந்துப்படை சார்பில், அப்பகுதியில் வழக்கமான சோதனை பணிகளை மேற்கொண்டிருந்த போது இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b47fabec-03fc-4af2-8801-1af0ae5b3a2d/26-6aa0e15b8eb84.webp' /></p><p>

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இந்த இருவரையும் ஒரு திறந்த வெளியில் எதையோ தேண்டிக்கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.</p><p>இந்த விசாரணைக்காக பொலிஸார் அவர்களை அணுகியபோது ​​சந்தேகநபர்களில் ஒருவர் தப்பியோட முயன்ற போது பொலிஸார் துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர்.</p><h2>&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>இதனைத்தொடர்ந்து இரு நபர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 37 பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>இவற்றில், முதல் நபரிடமிருந்து 27 பொதிகளும், இரண்டாவது நபரிடமிருந்து 10 பொதிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கூடுதல் சட்ட நடவடிக்கைக்காக இருவரும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏ9 வீதியில் வீதியை விட்டு விலகி கார் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-veered-off-the-a9-road-1788926356"></link>
            <id>https://tamilwin.com/article/car-veered-off-the-a9-road-1788926356</id>
            <summary type="text">முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. 

குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. </p><p>

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (09.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

விபத்தின் போது கார் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.</p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p> </p><p>

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da42966f-f5b9-47d1-892a-7cd198301bfd/26-6aa0e13cb2528.webp' /></p><p> </p><p>

ஏ9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் முன்னரும் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:32:25+00:00</updated>
        </entry>
    </feed>
