<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-06T23:15:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் மர்மமாக செத்து கரையொதுங்கும் லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/washing-ashore-hundreds-thousands-dead-small-fish-1788730981"></link>
            <id>https://tamilwin.com/article/washing-ashore-hundreds-thousands-dead-small-fish-1788730981</id>
            <summary type="text">முல்லைத்தீவு – மாத்தளன் சிறுகடல் கரைப் பகுதியில் கடந்த சில நாட்களாக
லட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் செத்து கரையொதுங்கி வருகின்றமை அப்பகுதி
மக்களிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு – மாத்தளன் சிறுகடல் கரைப் பகுதியில் கடந்த சில நாட்களாக
லட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் செத்து கரையொதுங்கி வருகின்றமை அப்பகுதி
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

தற்போது நிலவும் அதிக வெப்பநிலையின் காரணமாகவே இவ்வாறு மீன்கள் பெருமளவில்
உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><h2>லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள்&nbsp;</h2><p>
</p><p>
மாத்தளன் சிறுகடல் கடற்கரைப் பகுதியில் சிலாப்பி, நெத்தலி, மணலை, சூடை, காரல்
உள்ளிட்ட பல்வேறு வகையான சிறிய மீன்குஞ்சுகளே அதிகளவில் இறந்து
கரையொதுங்கியுள்ளன.
</p><p>
அத்துடன், கடற்கரைப் பகுதியில் உப்பு உறைந்து படிந்த நிலையில் காணப்படுவதும்
அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ff9414-e6ce-4726-bdf3-b08b51db4a7f/26-6a9ddf61cbec5.webp' /></p><p>
லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் கரையோரத்தில் இறந்து கிடப்பதை பார்வையிடுவதற்காக
மக்கள் அப்பகுதிக்கு சென்று வருவதுடன் சிலர் கரையொதுங்கிய மீன்குஞ்சுகளை
அள்ளிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. </p><p>எனினும், மீன்களின் திடீர்
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T22:23:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல் மீது ஈரான் அதிரடி தாக்குதல்! முற்றிலும் பொய்யானது என மறுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/total-lie-us-military-after-iran-claims-attack-1788721312"></link>
            <id>https://tamilwin.com/article/total-lie-us-military-after-iran-claims-attack-1788721312</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் ஆளில்லா கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்தக் கூற்றை அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் ஆளில்லா கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> எனினும், இந்தக் கூற்றை அமெரிக்க இராணுவம் “முற்றிலும் பொய்யானது” என மறுத்துள்ளது.</p><h2>மோதல் தீவிரம்</h2><p>
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக மூன்று ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் ஆரம்பமானது. ஜூன் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் தொடர்ந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d32cdfc-2a94-496a-a402-dd6ed709c0eb/26-6a9dbace501f2.webp' /></p><p> </p><p>ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் கடந்த வாரம் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன.

இதனால், உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மோதலின் முக்கிய மையமாகியுள்ளது. </p><p>தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் இந்த வார ஆரம்பத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p>

இதனிடையே, அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணை மீதான தாக்குதல்களுக்கு இராணுவ ரீதியாக பதிலளிப்பதுடன், ஈரானின் நிதிப் பரிவர்த்தனைகளைக் கையாளும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பல தசாப்தங்களாக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரான், தனது எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்காக ‘நிழல் கப்பற்படை’ உள்ளிட்ட வழிகளைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c382e105-b6ac-4d9a-95a3-b8931bc095ba/26-6a9dbacf0bef9.webp' /></p><p>
</p><p>
மேலும், போருக்கு முக்கிய காரணமான ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்தில் அமெரிக்கா–ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின்னர் முறிவடைந்தன.
</p><p>
ஈரான் அணு ஆயுதப் பரவல் தடுப்பு கடமைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஈரானை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க முயற்சித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவத்தை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதை ஈரான் தனது முக்கிய உத்தியாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T22:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகப் பிரமாண்ட போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-protest-in-bangladesh-1788728109"></link>
            <id>https://tamilwin.com/article/massive-protest-in-bangladesh-1788728109</id>
            <summary type="text">பங்களாதேஷில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசியப்
பொருட்களின் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணக் கோரி, அந்நாட்டின் தலைநகர்
டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசியப்
பொருட்களின் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணக் கோரி, அந்நாட்டின் தலைநகர்
டாக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளிலிறங்கிப் பிரம்மாண்ட போராட்டமொன்றை
முன்னெடுத்துள்ளனர்.</p><p>

பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து இடைக்கால நிர்வாகத்தை
வழிநடத்தி வரும் பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசாங்கம்
எதிர்கொள்ளும் முதலாவது மிகப்பெரிய மக்கள் போராட்டம் இதுவெனச்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>அரசுக்கு நெருக்கடி</h2><p>
தலைநகர் டாக்காவில் திரண்ட போராட்டக்காரர்கள், நாட்டில் நிலவும் சமையல்
எரிவாயு, மின்சாரம் மற்றும் விவசாயத்திற்கான உரத் தட்டுப்பாடுகளை உடனடியாகத்
தீர்க்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து முழக்கங்களை எழுப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b1e58eb-7008-418b-befe-002e63a2202a/26-6a9dd7c479789.webp' /></p><p>
</p><p>
கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார
நெருக்கடிகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள
நிலையிலேயே இப் போராட்டம் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அத்தியாவசியப் பொருட்களின்
விநியோகத்தைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்
தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-06T21:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – இந்திய உறவில் முக்கிய நகர்வு! இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-is-set-to-visit-sri-lanka-1788726207"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-is-set-to-visit-sri-lanka-1788726207</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி
வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை
தரவுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி
வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை
தரவுள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விடயங்கள்
தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.</p><h2>&nbsp;பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>அத்துடன், கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய
புலம்பெயர் சமூகத்தினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட
அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்றுக்கும் ராஜ்நாத் சிங் தலைமை
தாங்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/057f46ce-7f8f-431a-a679-fc887cd4d680/26-6a9dd08db90d1.webp' /></p><p>
</p><p>
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக்
கொண்டுள்ளதுடன், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம்,
வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்துறை
ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.
</p><p>
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலகட்டத்தில் இந்தியா வழங்கிய
உதவிகளும், 2025ஆம் ஆண்டு இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளியின் பின்னர்
முதலாவது உதவிகளை வழங்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா செயற்பட்டமையும் இரு
நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கு மேலும் வலுசேர்த்தன.</p><h2>&nbsp;இலங்கை விஜயம்</h2><p>
</p><p>
இது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ (Neighbourhood First) என்ற
கொள்கை மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘மஹாசாகர்’ (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வை — பிராந்தியங்களுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும்
வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் — ஆகியவற்றின் மீதான
இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e27bac-fd7b-42a6-80e9-8254fcc0c16d/26-6a9dd08ecab96.webp' /></p><p>

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான
பாரம்பரியமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், பரஸ்பர நன்மை பயக்கும்
பல்வேறு துறைகளில், குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T20:47:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 கைதிகளுடன் நாமல்! மோசமடையும் சூழல் - அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 இந்த கைது நடவடிக்கை மட்டுமல்லாது, 2016-ல் தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் குரூப் (Krrish Group) தொடர்பான 70 மில்லியன் ரூபா வழக்கு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.
</p><p>
இந்த வழக்குகள் அனைத்தும் நல்லாட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதும் அதன் பணிகளைத் தொடர்கிறது.

தற்போதைய சூழலில், நாமல் ராஜபக்சவுக்கு உடனடியாக பிணை கிடைப்பது கடினம் போன்று காணப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் 10 கைதிகளுடன் தங்கியிருக்கிறார்.அவருக்கு சிறைச்சாலைக்குள் எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.</p><p>

மேலும், அவர் எந்தவிதமான நோய் பாதிப்புகளும் இன்றி நலமாக இருப்பதாக சிறைச்சாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>

 இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T20:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் மீது பல்முனைத் தாக்குதல்! ஈரானின் புதிய திட்டம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-planning-bigger-october-7-style-attack-1788718280"></link>
            <id>https://tamilwin.com/article/iran-planning-bigger-october-7-style-attack-1788718280</id>
            <summary type="text">இஸ்ரேலிய உளவுத்துறை மதிப்பீடுகளின்படி, ஈரான் தனது பிராந்திய ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து ஒக்டோபர் 7 தாக்குதலைப் போன்ற ஒருங்கிணைந்த பல்முனைத் தாக்குதலொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலிய உளவுத்துறை மதிப்பீடுகளின்படி, ஈரான் தனது பிராந்திய ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து ஒக்டோபர் 7 தாக்குதலைப் போன்ற ஒருங்கிணைந்த பல்முனைத் தாக்குதலொன்றை இஸ்ரேல் மீது நடத்துவதற்கான திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்காக லெபனானின் ஹிஸ்புல்லா, யேமனின் ஹூதிகள், ஹமாஸ் மற்றும் ஈராக், சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை ஒரே நேரத்தில் களமிறக்க ஈரான் திட்டமிட்டு வருவதாக Jerusalem Post செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>பல்முனைத் தாக்குதல்</h2><p>
</p><p>
ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னர் ஈரானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தாக்குதல் குறித்த முழுமையான தகவல்கள் அல்லது அதன் திகதி தெரிவிக்கப்படாததால், அன்றைய தாக்குதல் பல்முனைத் தாக்குதலாக மாறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b00623ec-ce3c-4001-8d8f-f07e0eaee744/26-6a9db24f23881.webp' /></p><p> </p><p>ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், ஹமாஸின் ஆரம்பகட்ட வெற்றி ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவை முழுமையான பிராந்தியப் போரில் இணைக்கும் என எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், அப்போது ஏற்பட்ட ஒருங்கிணைப்புக் குறைபாடுகளை சரிசெய்து, ஹிஸ்புல்லா, ஹூதிகள் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் முதல் நாளிலேயே ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பிக்கும் வகையிலான திட்டத்தை ஈரான் உருவாக்கி வருவதாக இஸ்ரேலிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்&nbsp;</h2><p>

மேலும், ஈரானின் உதவியுடன் ஹமாஸ்–ஹிஸ்புல்லா ஒருங்கிணைப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47bea477-53a6-4b39-9c32-cfbed4c310b9/26-6a9db24fc9d1e.webp' /></p><p>

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) குத்ஸ் படை அதிகாரிகள், ஹிஸ்புல்லா, ஹூதிகள் மற்றும் ஈராக் ஆயுதக் குழுக்களின் தளபதிகளுடன் காணொளி மாநாடுகள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், முந்தைய மோதல்களில் சேதமடைந்த இராணுவ திறன்களை மீளக் கட்டியெழுப்ப ஈரான் முயற்சித்து வருவதுடன், கூட்டு பயிற்சிகள் மற்றும் செயற்பாட்டு ரீதியான தொடர்புகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், ‘எதிர்ப்பின் அச்சு’ என அழைக்கப்படும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு இடையிலான ஒட்டுமொத்த இராணுவ ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T19:11:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைவசமயத் தலைமைக்கு அகத்தியர் அடிகளார்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saiva-leaders-back-agathiyar-adigalar-in-jaffna-1788716105"></link>
            <id>https://tamilwin.com/article/saiva-leaders-back-agathiyar-adigalar-in-jaffna-1788716105</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சைவ அமைப்புகளின் தலைமைப் பிரதானிகளின் முக்கிய கூட்டம் இன்று (06) வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சைவ அமைப்புகளின் தலைமைப் பிரதானிகளின் முக்கிய கூட்டம் இன்று (06) வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்றது.</p><p>

இதன்போது, தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவ சமயிகளின் தலைவராக ஏகமனதாக முன்மொழிந்து ஏற்றுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.</p><h2>அகத்தியர் அடிகளார்</h2><p>
</p><p>
அத்துடன், இந்த தீர்மானத்தை சைவ சமய மக்கள், இந்து கலாசாரத் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அரச உயர் மட்டத்தினருக்கு தெரியப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.</p><p>

தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அருளாட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகிலாண்டேசுவரர் ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா, திருக்கோணேசுவர ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன், நயினை நாகபூசணி ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2efa0bd1-d23f-44d6-9658-07afd8f7575e/26-6a9da694e8294.webp' /></p><p>
</p><p>
மேலும், சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன், இலண்டன் கனகதுர்க்கை ஆலய அறங்காவலர் மருத்துவர் பரமநாதன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார், அகில இலங்கை சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
</p><p>
கிளிநொச்சி திருநெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம், வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன், சிவ சகோதரர்கள், சிவதொண்டர்கள் மற்றும் சிவமங்கையர் மாவட்ட இணைப்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.</p><h2>முக்கிய தீர்மானம்</h2><p>

இதேவேளை, யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிவகுரு ஆதீனம், சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சங்கம், மலையகத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிவசகோதரர் அமைப்பு, கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம் உள்ளிட்ட நாடளாவிய சைவ அமைப்புகளும், பிராந்திய மற்றும் நாடளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவ சமயிகளின் தலைமையாக ஏற்றுக்கொள்வதற்கான தமது ஆதரவை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36510e65-e682-4dc6-93ad-f72ac9c1e170/26-6a9da695c236f.webp' /></p><p>

அதேபோன்று, கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றமும் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்றுக்கொள்வதற்கான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
</p><p>
இதனிடையே, வெற்றிடமாக உள்ள நல்லை குருமகா சந்நிதானத்தின் அருளாட்சியை ஏற்று வீற்றிருக்குமாறு பல சைவ சமய அமைப்புகளும் நல்லை ஆதீன நம்பிக்கைப் பொறுப்புச்சபையும் தவத்திரு அகத்தியர் அடிகளாரிடம் விண்ணப்பித்திருந்தன.
</p><p>
அந்த விண்ணப்பத்தை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதனை நல்லை ஆதீன நம்பிக்கைப் பொறுப்புச்சபை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சைவ அமைப்புகளின் இணையம் வலியுறுத்தியுள்ளது.</p><h2>&nbsp;சைவ சமய மக்கள்</h2><p>
</p><p>
மேலும், திருக்கோவில்களில் ஆபாசமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கும் அயல் பிரதேச மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதிக ஒலி, ஒளி நிகழ்வுகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
அத்துடன், அனைத்து ஆலயங்களும் சைவ சமய மக்களுக்கு அறப்பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. </p><p>இதற்கு நயினை நாகபூசணி, வவுனியா சிவன், இலண்டன் கனகதுர்க்கை மற்றும் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்கள் முன்னுதாரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6920b2-c8c2-40df-86e7-7c751efff783/26-6a9da69698d46.webp' /></p><p>

மேலும், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட எதிர்கால அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் சைவ சமய மக்களின் அபிலாஷைகளை சட்டரீதியாக அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

திருக்கோணேசுவர ஆலயத்தின் தலைவர் சட்டத்தரணி துசியந்தன் இந்தக் குழுவின் இணைப்பாளராக செயற்படவுள்ளார். </p><p>மூத்த சட்டத்தரணிகளான இரட்ணவேல், ஜெயரூபன், தயாபரன் மற்றும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சைவ சமய விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் உள்ளிட்டோர் குழுவில் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

இறுதியாக, வவுனியா சிவன் கோவிலில் இடம்பெற்ற மகேசுவர பூஜையைத் தொடர்ந்து, பயனுறுதியான கலந்துரையாடல்களுடன் கூட்டம் ஏகமனதான தீர்மானங்களையும் கொள்கைப் பிரகடனத்தையும் நிறைவேற்றி பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:45:06+00:00</updated>
        </entry>
    </feed>
