<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-21T22:12:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படவில்லை: நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் மீறியதாகக் குடும்பத்தினர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787344002"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787344002</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாகிஸ்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாகிஸ்தான் அரசு பின்பற்றத் தவறிவிட்டதாக அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட
மருத்துவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 73 வயதான இம்ரான்
கானுக்கு, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக சிறப்பு மருத்துவ
சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவக் குழு பரிந்துரைத்திருந்தது.</p><h2>&nbsp;மீண்டும் சிறைக்கு</h2><p>

இதன் அடிப்படையில், அவரை 'அடியாலா' சிறையிலிருந்து 'ஷிஃபா சர்வதேச
மருத்துவமனைக்கு' உடனடியாக மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.
</p><p>
எனினும், இம்ரான் கான் ஷிஃபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல்,
அரசினால் நிர்வகிக்கப்படும் 'பிம்ஸ்' மருத்துவமனைக்கு நள்ளிரவில் அழைத்துச்
செல்லப்பட்டு சில மணிநேர பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கே
கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d483971-2cf0-4d68-90d6-fd2411a9f1d8/26-6a88b4840fa4a.webp' /></p><p>
</p><p>
வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட
இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் மற்றும் அவரது தனிப்பட்ட மருத்துவர் பைசல்
சுல்தான் ஆகியோர், அரசாங்கம் நீதிமன்ற உத்தரவை முழுமையாக மீறியுள்ளதாகக்
குறிப்பிட்டனர்.
</p><p>
ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டதால்
ஏற்பட்ட பாதுகாப்புச் சூழல் காரணமாகவே அவர் பிம்ஸ் மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டதாக பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார்
விளக்கமளித்துள்ளார்.
</p><p>
அத்துடன், அவர் தகுதிவாய்ந்த மருத்துவக் குழுவினால் பரிசோதிக்கப்பட்டு
ஆரோக்கியமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரே மீண்டும் சிறைக்கு
அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
</p><p>
இருப்பினும், அரசின் இந்த நடவடிக்கையானது நீதிமன்ற அவமதிப்பு எனத்
தெரிவித்துள்ள இம்ரான் கானின் 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' கட்சி, இதற்கு
எதிராக உச்ச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T21:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பியின் இறுதி நாடாளுமன்ற உரை..! பகிரங்க மன்னிப்பும் கோரினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-mp-s-final-parliamentary-speech-1787343796"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-mp-s-final-parliamentary-speech-1787343796</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப்
பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அவைக்கு வராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப்
பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அவைக்கு வராமல் தட்டிக் கழிக்கின்றனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத்
தவறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

நேற்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.</p><h2>பகிரங்க மன்னிப்பு&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,
</p><p>
"நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களின்
போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்குச் சமூகமளிக்காமல் தட்டிக்
கழிக்கின்றனர்.
</p><p>
கடந்த 2021ஆம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில்
தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டுக்குச் சட்டபூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான
அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள்
காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d112ead-d9f8-47d1-a037-02bd311965e7/26-6a88b3b60250b.webp' /></p><p>
இதுவே நாடாளுமன்றத்தில் தான் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக்
குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தனது பேச்சினால் யாருடைய
மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்துக்கு ஏதேனும் பங்கம்
ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும்
மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்தார்.</p><p>

கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான
குரலாகத் தான் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட
மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்தினார்.
</p><p>
நாட்டின் பொருளாதாரச் சீரழிவு மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்குப்
பொறுப்பானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-08-21T20:23:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு VIP நுழைவாயில்! நீதிமன்றத்தில் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180"></link>
            <id>https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180</id>
            <summary type="text">முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் சென்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p>பல்லேகம ஹேமரத்தன தேரர் தனது சட்டத்தரணியின் காரில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்தநிலையிலே,&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரர் மாத்திரம் எப்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>அத்தோடு, நீதிபதியின் நுழைவாயில் ஊடாக செல்வதற்கு சந்தேகநபரான&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு யார் சிறப்புரிமை வழங்கியது என்பது தொடர்பில் விசாரிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DbqlkAYMDWI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T20:05:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்தத் தவறும் செய்யாத நாமல் நிதிக் குற்றப் பிரிவில்! அரசாங்கத்திற்கு பொறாமையாம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fcid-investigation-into-namal-rajapaksa-1787335761"></link>
            <id>https://tamilwin.com/article/fcid-investigation-into-namal-rajapaksa-1787335761</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசாங்கம், அவரை நிதிக் குற்றப் பிரிவிற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றது என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசாங்கம், அவரை நிதிக் குற்றப் பிரிவிற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிவிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>நாமலின் வெற்றி&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p>நாமல் ராஜபக்சவை தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு அழைப்பது அரசாங்கத்தின் ஒரு தோல்வியுற்ற முயற்சி.&nbsp; நாமல் ராஜபக்சவின் வெற்றியை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கையே இது.&nbsp;&nbsp;</p><p>இந்த சதி நடவடிக்கைகளின் எதிர்விளைவுகள் எதிர்காலத்தில் தெரியவரும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14ae15be-9832-40d0-a9d0-95f2b67d5b98/26-6a88a26a2fd04.webp' /></p><p>மேலும், நானும் எனது குழுவினரும் எந்த தவறும் செய்யவில்லை.&nbsp; விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போதெல்லாம் நாங்கள் வருகின்றோம்.&nbsp; நாங்கள், எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே விசாரணைகளை அச்சமின்றி எதிர்கொள்கின்றோம். இது ஒன்றும் எமக்கு புதிதல்ல.</p><p>நாமல் ராஜபக்சவுக்காக இப்போது மக்கள் பெருமளவில் அணி திரள்கின்றனர். எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாத அரசாங்கத் தரப்பால் இது போன்ற சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருகின்றன. இதற்கான விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T19:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இராணுவ பலம் குறித்து ஆசிய நட்பு நாடுகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asian-allies-us-military-might-middle-east-1787337347"></link>
            <id>https://tamilwin.com/article/asian-allies-us-military-might-middle-east-1787337347</id>
            <summary type="text">ஆசிய பசிபிக்
பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ தளவாடங்கள் மற்றும்
போர்க்கப்பல்கள் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு வருவதால் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிய பசிபிக்
பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ தளவாடங்கள் மற்றும்
போர்க்கப்பல்கள் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு வருவதால் ஆசிய
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மிகுந்த கவலையடைந்துள்ளன.</p><p>

ஜப்பானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் கடைசி விமானம் தாங்கி
போர்க்கப்பலான 'யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வொஷிங்டன்' அங்கிருந்து மத்திய கிழக்கு
பிராந்தியத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், தென் கொரியாவில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ஏவுகணை
அமைப்புகளின் பாகங்களும், அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்புகளும் மத்திய
கிழக்கு போர்த்தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><h2>இராணுவ நடவடிக்கை</h2><p>

அமெரிக்காவின் இந்த நகர்வானது, தென் சீனக் கடல் மற்றும் அதனை ஒட்டிய
பிராந்தியங்களில் சீனாவின் ஆதிக்கத்தையும் இராணுவ நடவடிக்கைகளையும் மேலும்
அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8250a5bb-4c5c-4c46-b2ef-c1cefa02d719/26-6a889f9299d7a.webp' /></p><p>

அமெரிக்காவின் பிராந்தியப் பாதுகாப்பு உத்தரவாதம் பலவீனமடைந்து வருவதாகக்
கருதும் ஜப்பான், தாய்வான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள்,
தங்களது சொந்த பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை கணிசமாக உயர்த்தி வருகின்றன.</p><p>

இருப்பினும், இந்த நகர்வு ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், ஆசிய
பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னமும் பொருளாதார
நலன்களும் தொடர்ந்தும் வலுவாகவே இருக்கும் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T18:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் மிகத் தீவிர எல் நினோ நிலைமை! பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-most-intense-el-ni-o-event-in-history-1787332077"></link>
            <id>https://tamilwin.com/article/the-most-intense-el-ni-o-event-in-history-1787332077</id>
            <summary type="text">இந்த ஆண்டில் உருவாகிவரும் எல் நினோ காலநிலை மாற்றம், கடந்த ஒரு
நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகத் தீவிரமான நிகழ்வாக அமையும் என
பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் உருவாகிவரும் எல் நினோ காலநிலை மாற்றம், கடந்த ஒரு
நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகத் தீவிரமான நிகழ்வாக அமையும் என
பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p>

வழமையாக எல் நினோ நிகழ்வின் போது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 1
முதல் 2 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.</p><p>எனினும், எதிர்வரும் மாதங்களில் இது
3 பாகை செல்சியஸிற்கும் (5.4°F) அதிகமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.</p><h2>கடுமையான வறட்சி&nbsp;</h2><p>இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள நீண்டகால வானிலை கணிப்புப் பிரிவின்
தலைவர் பேராசிரியர் ஆடம் ஸ்கைஃப், "இது முன்னெப்போதுமில்லாத ஒரு தீவிரமான
காலநிலை நிகழ்வாகும். எனது கணிப்புகளில் இவ்வளவு வலுவான எல் நினோ சமிக்ஞையை
நான் இதுவரை கண்டதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த எல் நினோ தீவிரமடைவதால், தென்னமெரிக்கா, மேற்கு பசிபிக் பிராந்தியம்,
தென்னாப்பிரிக்கா மற்றும் வடகிழக்கு அவுஸ்திரேலியா போன்ற பகுதிகளில் கடுமையான
வறட்சி ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a332cca-6c9f-4fd6-acd0-3826cfe8805e/26-6a8885ef14073.webp' />&nbsp; &nbsp;</p><p>

அதேவேளை, பிரித்தானியா உள்ளிட்ட வடமேற்கு ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும்
இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் அதிக மழையும் புயல் சூழலும் உருவாகும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமடைதலுடன் இந்த எல் நினோ நிகழ்வும்
சேர்வதால், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டானது உலக வரலாற்றிலேயே மிக அதிக வெப்பமான
ஆண்டாகப் பதிவாக அதிக வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் சந்திப்பு அழைப்பிற்கு வடகொரியா அமைதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-korea-silent-on-trump-s-meeting-invitation-1787330423"></link>
            <id>https://tamilwin.com/article/north-korea-silent-on-trump-s-meeting-invitation-1787330423</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை
மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கு வடகொரியா உடனடி
ஆர்வம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை
மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கு வடகொரியா உடனடி
ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இரு தலைவர்களுக்கும் இடையே சிறந்த தனிப்பட்ட உறவு நிலவியபோதிலும்,
பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை வடகொரியா கடினமாக்கும் என்பதை இது
உணர்த்துகின்றது.
</p><p>
தென்கொரியாவுடனான கூட்டுப் இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா திடீரெனக்
குறைத்ததுடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க
எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

இருப்பினும், அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவரை இவ்வாறான
சந்திப்புகள் நன்மையளிக்காது என வடகொரியத் தலைவரின் சகோதரியான கிம் யோ ஜாங்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1bd0b85-259c-4310-8e40-f76d0ffe00f8/26-6a88847931940.webp' /></p><p>
</p><p>
இரு தலைவர்களுக்கும் இடையிலான நல்உறவு நாட்டின் பாதுகாப்பு நலன்களிலோ அல்லது
இராணுவத் திறன்களை வலுப்படுத்தும் முயற்சிகளிலோ எந்தவொரு தாக்கத்தையும்
ஏற்படுத்தாது என வடகொரியா தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
மேலும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு அமெரிக்கா தன் மீதான விரோதப்
போக்கைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளை வடகொரியா
முன்வைத்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:01:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143"></link>
            <id>https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143</id>
            <summary type="text">புதிய இணைப்புபண்டத்தரிப்பு- பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண்
பாதிப்பு சம்பவத்தையடுத்து, இந்த நேரம் வரை 385 பேர் பாதிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு- பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண்
பாதிப்பு சம்பவத்தையடுத்து, இந்த நேரம் வரை 385 பேர் பாதிக்கப்பட்டு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><h2>ஆறாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த ஒளிக்கு காரணமான மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர்
இளவாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம்(21) மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><p> அந்தவகையில் அவரை எதிர்வரும் மூன்றாம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>ஐந்தாவது இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் தற்போதுவரை 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.<br><br>பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்து ஒன்றும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நான்காவது இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது
நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய
வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின்
விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WQ7bM1YT4SA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது
தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற
திருவிழாவில் அதிகளவு ஒலி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும்
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை
மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c9126fe-085d-4814-86c6-16b9041742f6/26-6a8843de7f133.webp' /></p><p>
</p><p>கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு
மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள்
தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று
ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள்
மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55
பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84d11e32-fddd-485e-bc99-2487af8f2a96/26-6a8843df65f63.webp' /></p><p>
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக
வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>
மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும்
தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>இரண்டாவது இணைப்பு&nbsp;</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு
காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
</p><p>இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர்&nbsp; எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.</p><p>
️ கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf0db8c-637c-4ee7-a408-b2a7e2bc8c8e/26-6a880a998b5a2.webp' /></p><p>
</p><p>உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து
கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்
சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களை தேய்க்க வேண்டாம்.
</p><p>சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
</p><p>“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன்
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக
வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை&nbsp;</h2><p>

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
</p><p>அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஆலயத் திருவிழா</h2><p>
</p><p>
மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4f5d61-1510-4a3f-bdb4-a5434702ed78/26-6a87f1b62cc5d.webp' /></p><p>
</p><p>இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>&nbsp;மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
</p><h2>பார்வை பிரச்சினை</h2><p>
இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96d6b16-a4d5-4f7b-9533-87ec33cef535/26-6a87f1b55bdf5.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CFWVi5B8mkE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T16:33:24+00:00</updated>
        </entry>
    </feed>
