<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-21T14:59:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் பெரும் பரபரப்பு! ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rahul-and-priyanka-gandhi-arrested-1784644956"></link>
            <id>https://tamilwin.com/article/rahul-and-priyanka-gandhi-arrested-1784644956</id>
            <summary type="text">டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஜூன்20&nbsp; &nbsp;திகதி முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.</p><h2>பொலிஸாரின் அராஜகப் போக்கு</h2><p> </p><p>இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நாடாளுமன்றத்தில் நோக்கி பேரணியாக சென்ற நிலையில்&nbsp; பேரணியின்போது பொலிசார் இளைஞர்கள் மற்றும் பெண்கள்மீது சராமாரி தாக்குதல் நடத்தினர்.</p><p> இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து இன்று காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc70eb86-0ea1-4d77-88b1-bdea5dd61352/26-6a5f876e1c670.webp' /></p><p>

போராட்டக்காரர்கள் மீதான&nbsp; பொலிஸாரின் அராஜகப் போக்கிற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலகவேண்டும் என வற்புறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="in" dir="ltr">BREAKING || Rahul Gandhi Detained During Protest Near 7, Lok Kalyan Marg. <a href="https://t.co/1Lx7LHd3Zy">pic.twitter.com/1Lx7LHd3Zy</a></p>&mdash; TIMES NOW (@TimesNow) <a href="https://x.com/TimesNow/status/2079555584568041979?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மல்லிகார்ஜூனே கார்கே, பிரியங்கா காந்தி, வேணுகோபால், கர்நாடகா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களும் மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.</p><h2>ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி கைது</h2><p>
</p><p>
போராட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராகுல் காந்தியிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தை ஒத்திவராத நிலையில் கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b5843e-741c-47e3-9f89-66012449627d/26-6a5f876ef0104.webp' /></p><p> </p><p>தொடர்ந்து பிரதமரின் இல்லத்தை நோக்கி பேரணியாக சொல்ல முற்பட்டனர்.
</p><p>
இந்தப் பேரணியை கலைக்க முற்பட்டபோது காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பொலிசாரால் கைது செய்தனர். மேலும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வையும் கைது செய்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T14:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக் கிண்ணம் 2026: 47 நாடுகளை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-world-cup-2026-1784643490"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-world-cup-2026-1784643490</id>
            <summary type="text">ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து,
FIFA உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து,
FIFA உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
</p><p>
மூன்று நாடுகள் இணைந்து நடத்திய இந்த பிரம்மாண்ட தொடரில் 48 நாடுகளைச் சேர்ந்த
1,039 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

16 மைதானங்களில் நடைபெற்ற 104 போட்டிகளில் மொத்தம் 308 கோல்கள்
அடிக்கப்பட்டு, கடந்த கால சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>

Golden Boot விருது பெற்ற வீரர்</h2><p>
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே இந்தத் தொடரில் மொத்தம்
10 கோல்களை அடித்து, தனது இரண்டாவது 'தங்கப் பூட்' (Golden Boot) விருதை
வென்றுள்ளார். 

இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 22 கோல்களுடன் அதிக கோல்கள்
அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/652c925b-7d03-4738-a2df-cb079878ec13/26-6a5f801b91841.webp' /></p><p>

அவரைத் தொடர்ந்து ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 8 கோல்களையும்,
இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் மற்றும் நோர்வேயின் எர்லிங் ஹாலண்ட் தலா 7
கோல்களையும் அடித்து இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.</p><p>

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் தொடர் முழுவதும் தலா 20 கோல்களை அடித்து
தாக்குதல் ஆட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.</p><p> அதில் இங்கிலாந்து அணி 14 அசிஸ்ட்களையும், பிரான்ஸ் அணி 18 அசிஸ்ட்களையும் பதிவு செய்துள்ளன.

மேலும், ஆர்ஜென்டினா அணி 19 கோல்களையும், சம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி
14 கோல்களையும் பதிவு செய்துள்ளன.</p><h2>

அதிகமான மஞ்சள அட்டை பெற்ற ஆர்ஜென்டினா&nbsp;</h2><p>
சம்பியன் ஸ்பெயின் அணியின் உனாய் சிமோன் சிறந்த கோல்கீப்பருக்கான 'தங்கக்
கிளவுஸ்' (Golden Glove) விருதை வென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4eec986-f4bc-43b7-9285-771fb52ac631/26-6a5f801c62de1.webp' /></p><p> </p><p> 

இருப்பினும், பராகுவே அணியின் ஆர்லாண்டோ கில் அதிகபட்சமாக 28 கோல்
தடுப்புகளைச் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

ஒழுங்கு நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், ஆர்ஜென்டினா அணி அதிகபட்சமாக 15
மஞ்சள் அட்டைகளையும், எகிப்து அணி 12 மஞ்சள் அட்டைகளையும் பெற்றுள்ளன.</p><p>

கத்தார் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 2 சிவப்பு அட்டைகளைப் பெற்றுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1018416397707770%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-in-the-vadamaradsi-vallipuram-area-1784642769"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-in-the-vadamaradsi-vallipuram-area-1784642769</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுர கோவிலை அண்மித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதங்கேணி பருத்தித்துறை வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுர கோவிலை அண்மித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன எரிந்து கொண்டிருக்கின்றன.</p><p>

அண்மைக்காலமாக விஷமிகளால் தீ மூட்டப்பட்டு பல ஏக்கர் மேச்சல் தரைகள், வயல் நிலங்கள் வயல் வேலிகள் எரிந்து நாசமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T14:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் அம்பலமான வீரவன்சவின் மோசடிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimal-avoid-courts-7th-time-1784600133"></link>
            <id>https://tamilwin.com/article/wimal-avoid-courts-7th-time-1784600133</id>
            <summary type="text">தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச நேற்று நீதிமன்றத்தில் ஏழாவது தடவையாகவும் முன்னிலையாகவில்லை என தெரியவந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச நேற்று நீதிமன்றத்தில் ஏழாவது தடவையாகவும் முன்னிலையாகவில்லை என தெரியவந்துள்ளது. </p><p>

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கின் முக்கிய சாட்சியான, சர்ச்சைக்குரிய சொத்தை பிரதிவாதிக்கு விற்ற நபர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று தெரியவந்துள்ளது. </p><p>

பிரதிவாதிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் சில காணிகள் தொடர்பில் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் சாட்சி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.</p><p> </p><h2><b>

பிரதிவாதியான விமல்</b></h2><p>எனினும், தனக்கு தொற்று காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அறிவித்து பிரதிவாதியான விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f01f397-ec53-4247-8481-209ab09ffc66/26-6a5f7aee245dc.webp' /></p><p>பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில், விமல் வீரவங்ச கடந்த 17 ஆம் திகதி முதல் கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளார்.</p><p> 

உயிரிழந்த சாட்சிக்கு மேலதிகமாக, மக்கள் வங்கியின் தொல்கஹவத்தை கிளை முகாமையாளர், மாகாண காணி மதிப்பீட்டாளர் உள்ளிட்ட மூவர் நேற்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். </p><p>

அடுத்த வழக்கு தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கௌசல்யா ஹெட்டியாராச்சி, சுரேகா தரங்கனி, ஜே. லியானகே ஆகிய மூன்று சாட்சிகளுக்கும் நீதிபதி எச்சரித்துள்ளார்.</p><p> </p><h3><b>

சொத்துக்கள் மற்றும் உடைமை</b></h3><p>இது தவிர, முறைப்பாட்டின் 38ஆவது சாட்சிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50ae3032-2978-47ea-9744-fa515071f686/26-6a5f7aeec79c4.webp' /></p><p>விமல் வீரவன்ச அமைச்சராக பதவியாற்றிய 2010 - 2014ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டு காலப்பகுதியில் தனது சம்பளம் மற்றும் பிற வருமானங்கள் மூலம் ஈட்டிக்கொள்ள முடியாத சுமார் 75 மில்லியன் ரூபாய் சொத்துக்கள் மற்றும் உடைமைகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p> இந்தச் சொத்துக்களுக்கு இடையில், பிரதிவாதியின் மனைவி, அவரது சகோதரி மற்றும் மைத்துனர் இணைந்து 18 இலட்சம் ரூபாய்க்கு ஹோமாகம பிரதேசத்தில் கொள்வனவு செய்த காணியொன்றும் உள்ளடங்குவதாக சாட்சிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9CicqDIELO8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-21T13:58:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கித் தூதுவருடன் திலித் ஜயவீர எம்.பி. சந்திப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-dilith-jayaweera-meets-turkish-ambassador-1784641003"></link>
            <id>https://tamilwin.com/article/mp-dilith-jayaweera-meets-turkish-ambassador-1784641003</id>
            <summary type="text">இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட்டை, சர்வஜன அதிகாரம்
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சந்தித்துக்
கலந்துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட்டை, சர்வஜன அதிகாரம்
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது இன்று(21.7.2026) துருக்கித் தூதரகத்தில் இடம்பெற்றது.</p><p>இந்தச் சந்திப்பில், தற்போதைய பிராந்திய மற்றும்
சர்வதேச அரசியல் நிலவரங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக்
கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஒத்துழைப்பு&nbsp;</h2><p>
இதன்போது, இலங்கை ஒரு தொழில்முனைவு நாடாக பரிணமிக்கும் பயணத்தில் துருக்கி
குடியரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் விசேட
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c0f8bf4-4e30-4730-8040-1b7fd8ce6c70/26-6a5f798096fd4.webp' /></p><p>

துருக்கித் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சர்வஜன அதிகார
கட்சியின் ஊடகச் செயலாளர் ஹசன் அல்அல்தீனும் கலந்துகொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய அரசியலில் கிரிப்டோ சர்ச்சை: சிக்கலில் நைஜல் ஃபரேஜ் மற்றும் ரீஃபோர்ம் கட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crypto-controversy-british-politics-nigel-farage-1784638770"></link>
            <id>https://tamilwin.com/article/crypto-controversy-british-politics-nigel-farage-1784638770</id>
            <summary type="text">பிரித்தானியாவின் &#039;ரீஃபோர்ம் யூகே&#039; (Reform UK) கட்சியின் தலைவரான நைஜல்
ஃபரேஜ், கிரிப்டோ கோடீஸ்வரர் கிறிஸ்டோபர் ஹோர்போர்னிடமிருந்து பெறப்பட்ட 5
மில்லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் 'ரீஃபோர்ம் யூகே' (Reform UK) கட்சியின் தலைவரான நைஜல்
ஃபரேஜ், கிரிப்டோ கோடீஸ்வரர் கிறிஸ்டோபர் ஹோர்போர்னிடமிருந்து பெறப்பட்ட 5
மில்லியன் பவுண்டுகள் (சுமார் 6.7 மில்லியன் டொலர்) மதிப்பிலான தனிப்பட்ட
நன்கொடையை நாடாளுமன்றத்தில் முறையாக அறிவிக்கத் தவறியதால் கடும் நிதிச்
சர்ச்சையில் சிக்கியுள்ளார்.</p><p>

மேலும், அவரது கட்சிக்கு ஹோர்போர்ன் நேரடியாக வழங்கிய 25 மில்லியன் பவுண்டுகள்
நிதி மற்றும் குற்ற வழக்கில் தண்டனை பெற்ற ஜார்ஜ் காட்ரெல் உடனான தொடர்பு ஆகிய
குற்றச்சாட்டுகள் பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p></p><h2>&nbsp;கிரிப்டோ சர்ச்சை</h2><p>
</p><p>
இந்த அழுத்தங்களைத் தொடர்ந்து ஃபரேஜ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பதவி விலகல் செய்து, மீண்டும் கிளாக்டன் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடப்
போவதாக அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1d18b0-71a6-4fa1-8094-63e9666d4bb8/26-6a5f74178f79f.webp' /></p><p>
</p><p>
ஃபரேஜின் இந்த நடவடிக்கை ஒரு அரசியல் நாடகம் என்று விமர்சித்துள்ள பிற முக்கிய
பிரித்தானிய அரசியல் கட்சிகள், கிளாக்டன் இடைத்தேர்தலில் அவருக்கு எதிராக
வேட்பாளர்களை நிறுத்த மறுத்துவிட்டன.
</p><p>
இதனால் ஃபரேஜை எதிர்த்துப் போட்டியிடும் முதன்மை அரசியல் போட்டியாளராக
'கவுண்ட் பின்ஃபேஸ்' என்ற கிண்டல்/நகைச்சுவை வேட்பாளர் மட்டுமே களத்தில்
உள்ளார்.</p><p></p><h2>தீவிர ஆய்வு</h2><p>

ஃபரேஜ் மீதான நிதி மோசடி மற்றும் நாடாளுமன்ற விதிமீறல்கள் குறித்த குற்றவியல்
மற்றும் நாடாளுமன்ற விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7d39b96-00cc-466f-8225-63e52770f357/26-6a5f741848bff.webp' /></p><p>

குறிப்பாக, ஹோர்போர்னின் 'டெதர்' கிரிப்டோகரன்சியுடன் ஃபரேஜுக்கு உள்ள
தொடர்புகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் மற்றும் நிதி மோசடிகளுக்கு இந்த கிரிப்டோ
நாணயம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,
பிரித்தானிய அரசியலில் தனியார் கிரிப்டோ நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்
அபாயம் குறித்து ஆய்வாளர்களும் வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T13:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.வந்த அவுஸ்ரேலிய அமைப்பு: அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விபரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australian-organization-visits-jaffna-projects-1784639468"></link>
            <id>https://tamilwin.com/article/australian-organization-visits-jaffna-projects-1784639468</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை
மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற
நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை
மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற
நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவித்த போதே குறித்த அமைப்பின் ஸ்தாபகரான டேஷ் பாலசுப்ரமணியம் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>மேலும் தெரிவித்த அவர், யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை வரையிலான ஆயிரம் கிலோமீட்டர்
சைக்கிள் பயணத்தை அவுஸ்ரேலிய பிரஜைகள் உட்பட்ட நூல் அமைப்பின் தோழர்களோடு நாம் நிறைவு செய்துள்ளோம்.</p><p></p><h2>செயற்றிட்டங்கள்</h2><p>குறித்த பயணம் தமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த
உதவுவதாகவும் குறிப்பிட்ட அதேவேளை குறித்த பயணத்திற்கான ஒவ்வொரு
கிலோமீட்டருக்கும் வெளிநாட்டு வாழ் மக்களின் நிதி அன்பளிப்புகள்
கிடைக்கப்பெறுவதாகவும் குறித்த உதவி மூலம் இங்குள்ள செயற்றிட்டங்களை மேற்கொள்ள
திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e1072d9-c7f6-4d6e-83f4-334779cc2e70/26-6a5f726403c6c.webp' /></p><p>
</p><p>இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூலை மாதமும் நடாத்தப்படும் எனவும்
தெரிவித்த டேஷ் பாலசுப்பிரமணியம் இதன்மூலம் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய
மாகாணங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டு கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டுத்
திட்டங்களை ஏற்படுத்தும் நீண்டகால இலக்கினைக் கொண்டிருப்பதாகவும்
குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T13:22:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 தொண்டு நிறுவனங்களை குறி வைத்த இஸ்ரேல் - ஊடகங்கள் கையில் சிக்கிய முக்கிய ஆவணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-targets-15-charities-1784638453"></link>
            <id>https://tamilwin.com/article/israel-targets-15-charities-1784638453</id>
            <summary type="text">உலகளவில் செயல்பட்டு வரும் முன்னணி மனிதநேய மற்றும் தொண்டு நிறுவனங்களை
இஸ்ரேலிய அரசு எவ்வாறு நுணுக்கமாகக் கண்காணித்து ஆய்வு செய்தது என்பதை
அம்பலப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் செயல்பட்டு வரும் முன்னணி மனிதநேய மற்றும் தொண்டு நிறுவனங்களை
இஸ்ரேலிய அரசு எவ்வாறு நுணுக்கமாகக் கண்காணித்து ஆய்வு செய்தது என்பதை
அம்பலப்படுத்தும் இரகசிய ஆவணம் ஒன்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


2013ஆம் ஆண்டு இஸ்ரேலின் நலன்புரி மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சக இணையத்
தளத்திலிருந்து பெறப்பட்ட இந்த இரகசிய ஆவணத்தில், உலகம் முழுவதும் செயல்படும்
150க்கும் மேற்பட்ட சர்வதேச தன்னார்வ அமைப்புகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு
பட்டியலிடப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>

குறி வைக்கப்படும் 15 தொண்டு நிறுவனங்கள்</h2><p>
இந்த ஆவணத்தில் “ஒக்ஸ்ஃபாம்“, பிரான்ஸின் “பிரீமியர் அர்ஜென்ஸ்” மற்றும்
ஜெர்மனியின் “மெடிகோ இன்டர்நேஷனல்” போன்ற சுமார் 15 சர்வதேச தொண்டு
நிறுவனங்கள் பிரத்தியேகமாகக் குறி வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdf88a7-22e8-48fb-8a67-114806530810/26-6a5f6cc4318e6.webp' /></p><p>
</p><p>
இஸ்ரேலுக்கு எதிரான “பாய்காட், டைவெஸ்ட்மென்ட், சாங்க்ஷன்ஸ்” (BDS)
இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுதல், இஸ்ரேலை விமர்சித்தல் மற்றும்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அனுமதியின்றி திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆகிய குற்றச்சாட்டுகள் அந்த ஆவணத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
</p><p>
இருப்பினும், ஒக்ஸ்ஃபாம் உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் குற்றச்சாட்டுகளை
முற்றிலுமாக மறுத்துள்ளன.</p><h2>

மனித உரிமை ஆர்வலர்களின் சுட்டிக்காட்டல்</h2><p>
பாலஸ்தீனத்தில் உயிர்காக்கும் பணிகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களை இஸ்ரேல்
பல ஆண்டுகளாகக் கண்காணித்து வந்ததற்கு இந்த ஆவணம் ஒரு தெளிவான சான்றாகும் என
மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05a2d6f5-6b53-47c6-b31b-cb19365489b7/26-6a5f6cc4e7021.webp' /></p><p> 

BDS இயக்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும்
சட்டத்தை 2017ஆம் ஆண்டு இஸ்ரேல் இயற்றுவதற்கு முன்பாகவே, இத்தகைய அமைப்புகளைப்
பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை அந்நாடு தீவிரமாகத்
தொடங்கியிருந்ததை இந்த அறிக்கை வெளியில் கொண்டு வந்துள்ளது.&nbsp; </p><p></p><p></p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T12:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sales-petition-adjourned-1784637136"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sales-petition-adjourned-1784637136</id>
            <summary type="text">ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக தன்னை கைது செய்து தடுத்து வைப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக தன்னை கைது செய்து தடுத்து வைப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு திகதியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>மனு பரிசீலனை</h2><p>

 

இம்மனு இன்று (21.07.2026) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தனது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5be7222-5c21-4d2e-9fc5-5d0d9b755d44/26-6a5f6a84815e4.webp' /></p><p>
</p><p>
 

இதனைத் தொடர்ந்து, மேலதிக மனு பரிசீலனையை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் - செம்மணியில் களமிறங்கும் போராட்டக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protesters-taking-to-the-streets-in-chemmani-1784637343"></link>
            <id>https://tamilwin.com/article/protesters-taking-to-the-streets-in-chemmani-1784637343</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப்
பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை(22....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப்
பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை(22.07.2026) 
காலை செம்மணியில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்தப்
போராட்டத்தில், அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>

454 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்</h2><p>

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் இதனுடன் தொடர்புடைய உண்மைகள்
வெளிவந்த வண்ணமுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af6495b-fb1e-4446-b1a5-b543cff902f7/26-6a5f67d529fb7.webp' /></p><p>
</p><p>
எனவே, இந்தப் புதைகுழியைப் பார்வையிட நாளை(22) வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப்
பிரதிநிதிகள் குழுவினர் ஊடாக சர்வதேச விசாரணைக்கு வழியேற்படுத்த வேண்டும் எனக்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, நாளை காலை 8 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமடையும் டெங்கு தாக்கம்! பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-outbreak-intensifies-death-toll-rises-1784634643"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-outbreak-intensifies-death-toll-rises-1784634643</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் இந்த வாரம் மேலும்
தீவிரமடைந்துள்ளதுடன், 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின்
மொத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் இந்த வாரம் மேலும்
தீவிரமடைந்துள்ளதுடன், 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின்
மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
நாடளாவிய ரீதியில் இதுவரை 77 ஆயிரத்து 28 பேர் இந்நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளமை தற்போதைய சுகாதார நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக
அமைகின்றது.</p><p></p><h2>56 ஆக உயர்வு</h2><p>
</p><p>
டெங்கு நோயாளர்களின் மரண வீதம் 0.07 சதவீதம் என்ற ஒப்பீட்டளவில் குறைந்த
மட்டத்தில் காணப்பட்ட போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து
வருவதால் வைத்தியசாலைகளில் கடுமையான நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என்று
சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe114859-0ead-4390-b1ab-de55bf4073da/26-6a5f6669478a3.webp' /></p><p>
</p><p>
மாகாண ரீதியில், மேல் மாகாணம் தொடர்ந்து டெங்கு பரவலின் பிரதான மையப்
பகுதியாகத் திகழ்கின்றது. </p><p>இங்கு மாத்திரம் 40 ஆயிரத்து 573 டெங்கு நோயாளர்கள்
பதிவாகியுள்ள நிலையில், அதிகூடிய எண்ணிக்கையாகக் கம்பஹாவில் 16 ஆயிரத்து 164
பேரும், கொழும்பில் 15 ஆயிரத்து 341 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறையில் படுகொலைச் செய்யப்பட்டவர்களுக்கு சிலை வைக்க நடவடிக்கை - நீதிமன்றில் வழக்கு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murdered-in-welikada-prison-1784636305"></link>
            <id>https://tamilwin.com/article/murdered-in-welikada-prison-1784636305</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின்
உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை
நீதவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின்
உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு நேற்று(20.07.2026) திங்கட்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது, ஏற்பாட்டு குழுவை சேர்ந்த வல்வெட்டித்துறை நகர
சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

இதனைத் தொடர்ந்து அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதி வழக்கு திகதியிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


கைதிகளால் படுகொலை</h2><p>
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ
விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு
தினமான எதிர்வரும் 25ஆம் திகதி அவர்களின் சிலை வல்வெட்டித்துறையில் திறந்து
வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8367a3c2-3a2b-446c-883f-06343f1bfc58/26-6a5f63c92f242.webp' /></p><p>

 இந்நிலையிலேயே வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்சக் கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல்
கைதிகள், ஜூலை 25மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளால் மோசமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்! உரிய தீர்வு அவசியம் - குமார் ஜெயக்குமாரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanyya-hot-spring-issue-1784634368"></link>
            <id>https://tamilwin.com/article/kanyya-hot-spring-issue-1784634368</id>
            <summary type="text">கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கவலைக்கு உரிய தீர்வு
அவசியம் என இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார்
ஜெயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கவலைக்கு உரிய தீர்வு
அவசியம் என இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார்
ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.</p><p> இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்&nbsp; அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம்
வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல்
நாட்டும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள்
மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>முக்கிய மரபுரிமைச் சின்னம்</h2><p>இது தொடர்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினரான குமார் ஜெயக்குமாரனின் அறிக்கையில் மேலும், கன்னியா என்பது ஒரு மதத் தலம் மட்டுமல்ல; அது திருகோணமலையின் வரலாறு,
பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்களின் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு
முக்கிய மரபுரிமைச் சின்னமாகும்.</p><p>இதுபோன்ற வரலாற்று மற்றும் மத உணர்வுகள்
சம்பந்தப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் அனைத்து
தரப்பினருடனும் கலந்தாலோசித்து, சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும், தொல்லியல்
மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p></p><p>இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும்
முன்வைக்கும் கவலைகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய முறையில்
கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து இனங்களும் மதங்களும் பரஸ்பர மரியாதையுடனும்
நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.</p><h2>நடவடிக்கை எடுக்க வேண்டும்</h2><p>
மேலும், கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகள்
குறித்து வெளிப்படையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்
என்றும், எந்தவொரு அபிவிருத்தி அல்லது கட்டுமான நடவடிக்கைகளும் சட்ட
நடைமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அனைத்து சமூகங்களின் மத, பண்பாட்டு
உணர்வுகளை மதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21d1bd0-db2a-49aa-9b60-680474d1a08e/26-6a5f6136e645d.webp' /></p><p>

அதேவேளை, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி,
மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

</p><p>இது யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்பட்ட கோயிலைப் போன்றது அல்ல. இப்போது
அவர்கள் அதைக் கட்டப் போகிறார்கள். எனவே, அரசியல் பிரமுகர்கள் யாரும் ஏன்
இதைப் பற்றிப் பேசவில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தீ விபத்தில்5 பேர் பலி..! விசாரணையை தீவிரப்படுத்திய பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-killed-in-homagama-fire-accident-1784633367"></link>
            <id>https://tamilwin.com/article/5-killed-in-homagama-fire-accident-1784633367</id>
            <summary type="text">ஹோமாகம - கட்டுவன தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம - கட்டுவன தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, தொழிலாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் இன்று(21.07.2026) இடம்பெற்ற நிலையில், இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>

அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விபத்து தொடர்பில் தீவிர விசாரணை</h2><p> </p><p>

உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதி அமைச்சர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a301b8c1-d123-4f5f-b225-98a54b2a0f62/26-6a5f61a1b8a20.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் சில அறிவுரைகளை பிரதி அமைச்சர் வழங்கியுள்ளதாக தெரவிக்க்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, தீ விபத்துக்கு வழிவகுத்த உடனடிக் காரணிகள், தொழிற்பேட்டையில் தீ பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்புத் தரநிலைகள் பேணப்பட்டதா என்பது,&nbsp; ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால வெளியேறும் நடைமுறைகளுக்கான தேவையான வசதிகள் இருந்தனவா என்பது,&nbsp; தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் அது தொடர்பான தொழில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும், ஏதேனும் அலட்சியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் விசாரிக்குமாறு, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் நதீக வத்தலியத்தவுக்கு பிரதியமைச்சர&nbsp;் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>மேலும், அபாயகரமான மற்றும் இடர் நிறைந்த பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர்&nbsp; குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தில் ஏற முயன்ற சிறுமி பரிதாபமாக பலி - தாய் மற்றும் சகோதரனுடன் சென்றபோது துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-kid-dies-in-an-accident-1784631711"></link>
            <id>https://tamilwin.com/article/school-kid-dies-in-an-accident-1784631711</id>
            <summary type="text">மாத்தறை, திக்வெல்ல - கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, திக்வெல்ல - கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>இன்று தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து, பாடசாலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயரிழந்துள்ளார். </p><p>இவ்வாறு உயிரிழந்தவர், கொடஉட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2><b>சிறுமி பரிதாபமாக பலி</b></h2><p> திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் அவர், காலையில் பாடசாலை செல்வதற்காக தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். </p><p>மாத்தறையில் இருந்து மித்தெனிய நோக்கிச் சென்ற தனியார் பேருந்துக்கு கை காட்டி, அவர்கள் அதன் முன்கதவு வழியாக அதில் ஏற முயன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f86ced4-4502-4787-a724-2fcf6bc84a76/26-6a5f59f410d9f.webp' />&nbsp;&nbsp;</p><p>முதலில் தாயாரும் சகோதரனும் பேருந்தில் ஏறியதை அடுத்து, இரண்டாவதாக சிறுமி பேருந்தில் ஏற முற்பட்டவுடன் பேருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. </p><p>இதன் போது அவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து அதே பேருந்தின் பின் சக்கரத்திற்குள் சிக்கியதாகவும் ஆரம்ப கட்டப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இந்த விபத்தில் சிறுமியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:06:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைக்குடா நாடுகளை குறி வைத்து தாக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-targets-gulf-countries-1784634979"></link>
            <id>https://tamilwin.com/article/iran-targets-gulf-countries-1784634979</id>
            <summary type="text">பஹ்ரைன் - ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் இன்று(21.07.2026) தாக்கதல்களை ஆரம்பித்துள்ளது. 


தெற்கு ஈரானைக் குறிவைத்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஹ்ரைன் - ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் இன்று(21.07.2026) தாக்கதல்களை ஆரம்பித்துள்ளது. </p><p>


தெற்கு ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p></p><h2> 

வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்</h2><p>
மேலும், தாக்கப்பட்ட கப்பல்களில் இரண்டு, ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e28d8ef-7d2a-4fdc-814a-af5ad0a371f1/26-6a5f5f05cb8c6.webp' /></p><p>

இதற்கிடையில், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதித்ததால், வளைகுடாப் பகுதியில் ஒரு புதிய போர்முனை உருவாகும் அபாயம் நிலவி வருகின்றது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் அபாய நிலை.. அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-infection-risk-continues-for-three-weeks-1784631780"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-infection-risk-continues-for-three-weeks-1784631780</id>
            <summary type="text">அடுத்த மூன்று வாரங்களுக்கு டெங்கு அபாய நிலை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மூன்று வாரங்களுக்கு டெங்கு அபாய நிலை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே&nbsp; அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>டெங்கு அபாயம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>டெங்கு தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரையிலான அபாய நிலை தொடரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/217d3f73-2ad9-4ecc-be42-28151d50f452/26-6a5f5d6f3429f.webp' /></p><p>கடந்த சில வாரங்களை விட தற்போது பதிவாகி வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிலைமை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.&nbsp;</p><p>எனினும்,&nbsp; டெங்கு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர வேண்டும்.&nbsp; அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>டெங்கு என்பது ஒரே நாளில்&nbsp; தீர்க்கக்கூடிய ஒன்று அல்ல.&nbsp; எனவே தொடர்ச்சியான அவதானம் தேவை. டெங்கு நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T11:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கலாக மாறிய புதிய குடியேற்ற விதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-visa-rule-f-1-j-1-students-return-by-sept-15-1784631856"></link>
            <id>https://tamilwin.com/article/us-visa-rule-f-1-j-1-students-return-by-sept-15-1784631856</id>
            <summary type="text">அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்தியர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள்,தற்போது விடுமுறைக்காக தங்கள் சொந்த நாடுகளில் இருந்தால், செப்டம்பர் 15-க்கு முன்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்தியர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள்,தற்போது விடுமுறைக்காக தங்கள் சொந்த நாடுகளில் இருந்தால், செப்டம்பர் 15-க்கு முன்பாக அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
</p><p>
புதிய குடியேற்ற விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள சலுகைகளை இழக்காமல் இருக்க இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மாணவர் விசா</h2><p>



இதுவரை F-1 மாணவர் விசா மற்றும் J-1 பரிமாற்ற விசா வைத்திருப்பவர்கள், தங்கள் கல்வி தொடரும் வரை "Duration of Status (D/S)" என்ற முறையின் கீழ் அமெரிக்காவில் தங்க அனுமதி பெற்றிருந்தனர்.
</p><p>
ஆனால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ள புதிய "Final Rule" படி, செப்டம்பர் 15 முதல் மாணவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654020ed-bf51-4c5c-a271-4d0752a0271a/26-6a5f5864c346b.webp' /></p><p> </p><p>அதற்கு மேல் தங்க வேண்டுமெனில், USCIS-இன் (Form I-539) மூலம் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

மேலும், படிப்பு முடிந்த பிறகு நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்டிருந்த 60 நாட்கள் அவகாசம், இனி 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
</p><p>


இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வரும் நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில்,

புதிய விதிமுறை 60 நாட்களில் நடைமுறைக்கு வருகிறது.</p><p></p><h2>&nbsp;புதிய குடியேற்ற விதி</h2><p> </p><p>எனவே, வகுப்புகள் தொடங்கும் செப்டம்பர் 8-க்கு முன்பாகவே அனைத்து மாணவர்களும் நியூயார்க்கு திரும்ப வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.</p><p>

DHS விளக்கத்தின் படி, செப்டம்பர் 15-ஆம் திகதி அமெரிக்காவில் D/S முறையின் கீழ் ஏற்கனவே இருக்கும் மாணவர்கள், தங்கள் Form I-20-ல் குறிப்பிடப்பட்டுள்ள படிப்பு முடியும் நாள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட OPT/STEM OPT பயிற்சி காலம் முடியும் வரை தங்கலாம்.

ஆனால், இந்த சலுகைக்கும் ஒரு வரம்பு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5abfc22-5dcc-4b6b-bb02-a4946acd58ba/26-6a5f5865ae8a2.webp' /></p><p> புதிய விதியின் கீழ் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், எந்த சூழ்நிலையிலும் 2030 நவம்பர் 14-க்கு பிறகு இந்த சலுகை நீடிக்காது.



இந்த புதிய விதிமுறை இந்திய மாணவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

குறிப்பாக முனைவர் பட்டம் (PhD), மருத்துவப் பயிற்சி மற்றும் நீண்டகால ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>Foundation for India and Indian Diaspora Studies (FIIDS) அமைப்பின் கொள்கை மற்றும் திட்டப் பிரிவு தலைவர் கந்தேராவ் கந்த் கூறுகையில்,

"நான்கு ஆண்டுகள் என்ற வரம்பு, தற்போதைய உயர்கல்வி அமைப்பின் நடைமுறைக்கு பொருந்தாது.</p><p></p><h2>அமெரிக்க அரசு </h2><p>இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க சராசரியாக 52 மாதங்களும், முனைவர் பட்டத்திற்கு சுமார் 5.7 ஆண்டுகளும் தேவைப்படுகிறது.

 இதனால் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை உருவாகலாம். </p><p>ஆராய்ச்சி திட்டங்களும், அமெரிக்காவின் கண்டுபிடிப்பு வளர்ச்சியும் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/583de604-b071-4d1b-bd94-472615f1c0bd/26-6a5f58665ea14.webp' /></p><p>
</p><p>
அதேபோல், ஆராய்ச்சி ஆய்வகங்கள் திறமையான மாணவர்களை இழக்கும் அபாயம் இருப்பதுடன், பட்டமளிப்பு தாமதம், ஆசிரியர் நியமனங்களில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் உருவாகலாம் என FIIDS எச்சரித்துள்ளது.</p><p>

புதிய விதிமுறையை உடனடியாக நடைமுறைபடுத்தாமல், மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பாதிக்கப்படாத வகையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-21T11:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வை அறிவித்த இலங்கையின் அதிவேக வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yupun-abeykoon-announces-retirement-1784633722"></link>
            <id>https://tamilwin.com/article/yupun-abeykoon-announces-retirement-1784633722</id>
            <summary type="text">&amp;nbsp;100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 10 செக்கன் இலக்கை முதன்முறையாகக் கடந்த தெற்காசியாவின் அதிவேக வீரரான இலங்கையின் யுபுன் அபேகூன், சர்வதேச தடகளப் போட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 10 செக்கன் இலக்கை முதன்முறையாகக் கடந்த தெற்காசியாவின் அதிவேக வீரரான இலங்கையின் யுபுன் அபேகூன், சர்வதேச தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். </p><p>செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உருக்கமான அறிக்கையொன்றில், 31 வயதான அவர், தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிவிட்ட மனநிறைவுடன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தாய் நாட்டுக்குத் தான் எதையும் நிலுவையில் வைக்கவில்லை என்றாலும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தெற்காசியாவில் 10 செக்கன்களுக்குள் 100 மீற்றரைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை எட்டியது எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; அது முழு தேசத்திற்குமான வரலாற்றுத் தருணம் என அவர் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p> 
தமது விளையாட்டுப் பயணத்தில் உறுதுணையாக இருந்த பெற்றோர், படித்த பாடசாலைகள், இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படைப்பிரிவு, இலங்கை தடகள சங்கம் மற்றும் கிளாடியோ லிச்சியார்டெல்லோ தலைமையிலான இத்தாலிய பயிற்றுவிப்பாளர் குழு ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p> 
அத்துடன், தனது சர்வதேசப் பயணத்தின் போது தொடர்ச்சியாக ஆதரவளித்த கோடிக்கணக்கான இலங்கை மக்களுக்கும் தனது நன்றிகளை உரித்தாக்கினார். </p><p>
2022 ஆண்டு சுவிட்சர்லாந்தின் லா சோ-டி-ஃபோன்ஸில் (La Chaux-de-Fonds) நடைபெற்ற போட்டியில் 100 மீற்றர் தூரத்தை 9.96 செக்கன்களில் கடந்து, 10 செக்கன் எல்லைக்குக் கீழ் ஓடிய ஒரே தெற்காசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.</p><p> 
2022ம் ஆண்டில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 100 மீற்றர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, பல தசாப்தகால இலங்கையின் பதக்க வறட்சியைப் போக்கினார். </p><p>
2020ம் ஆணடி்ல் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் 100 மீற்றர் பிரிவில் தகுதிபெற்றுப் போட்டியிட்ட முதல் தெற்காசிய ஆண் ஓட்டப்பந்தய வீரரானார். </p><p>
இன்னமும் போட்டிகளில் பங்கேற்கும் திறன் தமக்கு இருக்கும் நிலையிலும், இலங்கை தடகள கட்டமைப்பில் நிலவும் சவால்கள் மற்றும் பின்னடைவுகள் காரணமாகவே இந்த கடினமான முடிவை எடுக்க நேரிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 
மேலும், இலங்கை விளையாட்டுத் துறையின் தற்போதைய நிலைமை மற்றும் தனது அனுபவங்கள் குறித்த விரிவான தகவல்களை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாகவும் யுபுன் அபேகூன் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T11:35:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-friend-shocks-girl-friend-1784559527"></link>
            <id>https://tamilwin.com/article/boy-friend-shocks-girl-friend-1784559527</id>
            <summary type="text">பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் பிரதேசத்தில் காதலியுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை பேஸ்புக் மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் பிரதேசத்தில் காதலியுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை பேஸ்புக் மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>காதலியான இளம் பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கோனாபினிவல பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

காதல் தொடர்பு</b></h2><p>அலுபோமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த இளம் பெண், சந்தேக நபருடன் சுமார் மூன்று ஆண்டுகள் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f591d4f-be07-49f7-8c79-b9112a5be852/26-6a5ed03a646a0.webp' /></p><p>அப்போது தமக்கிடையேயான தகாத காட்சிகள் அடங்கிய வீடியோவை, சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி தன்னுடைய பெயரில் இருந்த போலியான பேஸ்புக் கணக்கு மூலம் தனது தோழிக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 பின்னர் அந்த முறைப்பாட்டை மீளப் பெறுமாறும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட வீடியோவை முழுமையாக சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் எனவும் கான்ஸ்டபிள் தமக்குத் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாகப் பெண் கூறியுள்ளார்.</p><p> 

இதனைத் தொடர்ந்து அவர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> சந்தேக நபரான கான்ஸ்டபிள் பொலிஸ் நிலையத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினரிடமிருந்தும் விசாரித்து தகவல்கள் பெறப்பட்டன.</p><p> </p><h3><b> தண்டனைச் சட்டக்கோவை</b></h3><p>இதன்போது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 486 பிரிவுகளின் கீழ் பாலியல் செயற்பாடு மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ea331ad-539e-447b-be82-1f84dbb04320/26-6a5ed03b21c57.webp' /></p><p>எப்படியிருப்பினும், சம்பந்தப்பட்ட வீடியோ பெண்ணின் விருப்பத்தின் பேரில் அவரது சொந்த கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இதன் காரணமாக, இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முறைப்பாட்டாளரான பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச வைத்தியசாலையில் பறிப்போன தாயின் உயிர் - ஊழியரை தாக்கி சடலத்தை கொண்டு செல்ல முயன்ற மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hospital-management-and-staff-protest-in-kinniya-1784632580"></link>
            <id>https://tamilwin.com/article/hospital-management-and-staff-protest-in-kinniya-1784632580</id>
            <summary type="text">கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை
உறுதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தக் கோரியும் போராட்டம் ஒன்று வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(21.07.202) காலை 11 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2> 


வைத்தியசாலையில் நடந்த மோசமான சம்பவம்</h2><p>
சிகிச்சைக்காகத் தனது தாயாரை அழைத்து வந்த நபர் ஒருவரிடம், அவரைப் பரிசோதித்த
வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.</p><p> 

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தாயாரின் உடலை உடனடியாக அங்கிருந்து எடுத்துச் செல்ல
அந்நபர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d277aa6f-3d78-449a-806c-c6372857fd53/26-6a5f55949b20c.webp' /></p><p>
</p><p>
இதன்போது, அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் நடைமுறைகள்
மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே உடலைக் கொண்டு செல்ல முடியும் எனத்
தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர், ஊழியருடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று நண்பகல் 1 மணியளவில் கிண்ணியா தள
வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரத்துறை ஊழியர்கள்
இணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8ce0c4c-1c49-4deb-b6f8-fb9b78c004fb/26-6a5f5595a1158.webp' /></p><p> </p><p> 

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில், வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற
இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.</p><h2> 



வைத்தியசாலை ஊழியர்கள் மீதான நடவடிக்கை</h2><p>
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், 

வைத்தியசாலையில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் பல்வேறு
தியாகங்களுக்கு மத்தியிலேயே பொதுமக்கள் நலன் கருதி நாங்கள் சேவையாற்றி
வருகிறோம். ஆனால், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது
ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும், சேவையில் ஈடுபடுவதில் தயக்கத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0565aab1-8a81-4074-9d2d-fa723197d1b7/26-6a5f55967c8a7.webp' /></p><p>
</p><p>
எனவே, எமக்கான பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். முக்கியமாக,
வைத்தியசாலை வளாகத்தினுள் பொலிஸ் பாதுகாப்புச் சாவடி ஒன்றினை அமைத்துத் தர
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
</p><p>
போராட்டக்காரர்கள் "நிறுத்து நிறுத்து... ஊழியர்கள் மீதான தாக்குதலை
நிறுத்து!", "வேண்டும் வேண்டும்... வைத்திய ஊழியர்களுக்குப் பாதுகாப்பு
வேண்டும்!" போன்ற கோஷங்களை எழுப்பியதுடன், தமது கோரிக்கைகள் அடங்கிய சுலோக
அட்டை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d54fc7-db54-4935-bae8-2785a3d184fb/26-6a5f559760414.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de14725-5335-4d64-9e83-c9b3b23992c8/26-6a5f5598333fc.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-fishermen-requests-tamil-nadu-cm-vijay-1784629285"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-fishermen-requests-tamil-nadu-cm-vijay-1784629285</id>
            <summary type="text">தமிழக மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள்
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள்
வரும் தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை, புதிதாக தமிழகத்தை
பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என
யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (21.07.2026) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு
கூறிய அந்த அமைப்பின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா,

சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் குறிப்பாக
புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் எமது தொழிலாளர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர் என குறிப்பிட்டார்.</p><p></p><h2>தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்கு&nbsp;</h2><p>இதை இலங்கையின் கடற்படையினரும் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.</p><p>

இதைவிட கடற்றொழில் அமைச்சரும் கடற்றொழிலாளர் விடயத்தில் ஒரு நழுவல் போக்குடன்
செயற்படுகின்றார் என எண்ணத் தோன்றுகின்றது.

இலங்கை கடற்படையைக் கொண்டு இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றே நாம் அனுர அரசாங்கத்திடம் கோருகின்றோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61894ed3-4b60-4952-97a4-97946f63c4ae/26-6a5f4ced150f6.webp' /></p><p>ஆனால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசித்திரிகின்றாரே தவிர எதையும் இதுவரை செய்யவில்லை.
</p><p>
தேர்தல் காலத்தில் கடற்தொழிலாளர்களிடம் வாக்குக் கொடுத்ததை இந்த சந்திரசேகர் அமைச்சரும் அவர்சார் தரபினரும் மறந்துவிட்டனரென்றே தோன்றுகின்றது.
</p><p>
அப்பாவி கடற்றொழிலாளர்களாகிய நாம் ஏமாற்றத்துடன் எமது இருப்பையும்
இழந்து வருகின்றோம். இனிவரும் நாட்களில் இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையே
முரண்பாடுகள் முற்றி வன்முறையாக மாறுவதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது.</p><p>
எனவே அவ்வாறானதொரு நிலை வரும் முன்னர் எல்லை தாண்டி நெடுந்தீவுக்
கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துவரும் தமிழக கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளைத்
தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T10:54:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Nillanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/things-that-happen-at-the-coordination-meeting-1784630400"></link>
            <id>https://tamilwin.com/article/things-that-happen-at-the-coordination-meeting-1784630400</id>
            <summary type="text">சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக பகட்டாகக் கொண்டாடினார்.

ஊருக்கும் விருந்து கொடுத்தார்.விழா ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக பகட்டாகக் கொண்டாடினார்.

ஊருக்கும் விருந்து கொடுத்தார்.</p><p>விழா நாயகியாகிய பெண்ணை குதிரை தேரில் அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த ஊர்வலத்தில் யானை வந்தது, மாட்டு வண்டி ஊர்வலம் வந்தது&nbsp; “இன்னியம்” என அழைக்கப்படுகின்ற நடை பவனி அணி வந்தது.
</p><p>
 ஒரு யூடியூப்பரை வேலைக்கு அமர்த்தி அந்த நிகழ்வுக்கு டிஜிட்டல் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் தமது தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு யானையை ,குதிரையை, ஹெலிகாப்டரை, பல்லக்கை வாடகைக்கு அமர்த்துவது புதியதல்ல.

தேவையான காசு இருக்கிறது.</p><p></p><p>சினிமாப் பாணியில், சினிமாத் தனமாக நிகழ்வை ஒழுங்கமைத்து படம்பிடித்து படங்காட்டி மகிழ்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தனிப்பட்ட வைபவங்களில் மட்டுமல்ல பொது வைபவங்களில், அரசியலில், குறிப்பாக சமய நம்பிக்கைகளில் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.</p><h2>ஆலங்களை புனரமைக்கும்&nbsp; புலம்பெயர் தமிழர்கள்</h2><p>2009க்குப் பின்னரான பெரும்பாலான ஆலயப் புனரமைப்பு வேலைகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி உண்டு. 

ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரையிலும் அந்த உதவி கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65dcf098-47b2-4ecc-ad3b-1ffaf2f68803/26-6a5f4ed20d4be.webp' /></p><p> வடக்கு - கிழக்கு ஊடாகப் பயணம் செய்த ஓர் அமெரிக்கப் புலமையாளர் என்னிடம் கேட்டார் “வழியெல்லாம் காணப்படும் சிறிய மற்றும் பெரிய கோயில்களைப் புனமைக்கும் நிதி புலம்பெயர்ந்த தமிழர்களுடையதா ?” என்று

தாம் பிறந்து வளர்ந்த அல்லது திருமணம் புரிந்த கிராமங்களில்,திருவிழாக்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தாராளமாக செலவழிக்கப்படுகிறது.</p><p> ஊர்க் கோவில்களின் திருவிழாக் காலங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களோடு தொடர்புடைய உபயகாரர்கள் தமது திருவிழாவை நமது பண பலத்தைக் காட்டும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கிறார்கள். </p><p>

அதனால் இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.தென்னிந்தியாவை நோக்கி பலாலியில் இருந்து திறந்து விடப்பட்டிருக்கும் வான்வழியூடாக இந்திய சினிமாப் பண்பாடு வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே அது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பரவி விட்டது.

கோவில் திருவிழாக்களில் மயிலாட்டம் முதல் கொண்டு பெயர் தெரியாத பலவிதமான ஆட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. </p><p>அவற்றில் சில போருக்கு முந்திய தசாப்தங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சின்ன மேளக் கச்சேரிகளை நினைவூட்டுகின்றன


தமிழகத்திலிருந்து கலைஞர்களைக் கொண்டு வந்து தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் கொண்டாடுவது என்பது புலப்பெயர்ச்சிக்குப் பின்னரான புதிய போக்கு அல்ல.</p><p></p><p>அது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே இருந்தது, தமிழகத்திலிருந்து நடனக் கலைஞர்கள், சின்னமேளக் கச்சேரிகள், பிரபல சினிமாப் பாடகர்கள் இங்கு அழைத்து வரப்பட்டார்கள்.

எனவே அது புலம்பெயர்ச்சியின் விளைவு அல்ல. புலப்பெயர்ச்சியால் மேலும் தூண்டப்பட்ட ஒரு விளைவு.
</p><p>
அதேசமயம்,புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது தனிப்பட்ட வைபவங்களை சினிமாத்தனமாக ஒழுங்கமைப்பதிலும் சமயச் செயற்பாடுகளிலும் அரசியலிலும் மட்டும் தமது செல்வத்தை முதலீடு செய்கிறார்கள் என்பதல்ல. 

மேற்சொன்ன அனைத்தையும் விட முக்கியமாக, தமிழ்ப் பகுதிகளில் தேசத்தை நிர்மாணிக்கத்தக்க செயல் திட்டத்தின் பகுதிகள் என்று வருணிக்கத்தக்க விதத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது நிறுவனங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் தாராளமாகக் காசு கொடுக்கிறார்கள்.</p><p> 

தாயகத்தில் இயங்கும் கணிசமான தொகை தன்னார்வ நிறுவனங்களின் பின்பலமாக புலம்பெயர்ந்த தமிழ் வள்ளல்களை உண்டு.</p><h2>



நிதியுதவி</h2><p>
கடந்த மே மாதம் 20ஆம் திகதி நீர்வேலியில்,”கருவி” நிறுவனத்தின் தலைமைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. “கருவி” என்று அழைக்கப்படுவது விழிப்புலன் மற்றும் செவிப்புலன் இழந்தவர்களுக்கான ஒரு கட்டமைப்பு ஆகும்.

இந்த கட்டமைப்பின் தலைமையகத்தை நிர்மாணிக்கத் தேவையான 60 விகிதமான நிதியை புலம்பெயர்ந்த தமிழர்களே வழங்கினார்கள்.
</p><p>
அதுபோன்றே இந்த மாதம் 14 ஆம் திகதி, தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில், “அரவணை” என்று பெயரிடப்பட்ட நோய்த் தடுப்புச் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6b2ec1-c39b-4501-a751-235e2a058ceb/26-6a5f4ed2b8d91.webp' /></p><p>
</p><p>
நோயாளிகள் தமது இறுதிக் காலத்தை கண்ணியமாகவும் அமைதியாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த வலியோடும் கழிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பு அதுவாகும்.

ஒஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளான “பாலம்”, “வன்னி ஹோப்” ஆகிய இரண்டு அமைப்புகளும் இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கியுள்ளன.
</p><p>
எனவே தொகுத்துப் பார்த்தால் தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழ் நிதியானது ஒருபுறம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிர்மாணப் பணிகளுக்கு உதவுகிறது. ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நிதிப் பலத்தையும் உளவியல் உறுதியையும் கட்டியெழுப்ப உதவுகிறது.</p><h2>யாழ்ப்பாண பாடசாலைகள் புனரமைப்பு</h2><p>
இன்னொருபுறம், தமது பண பலத்தைக் காட்ட விரும்பும் புலம்பெயர்ந்த தமிழர்கள் காசை அள்ளி வீசுகிறார்கள். தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் தங்களுடைய செல்வாக்கை காட்டும் குறிகாட்டிகளாக மாற்றுகிறார்கள்.</p><p></p><p>
</p><p>
ஆலய திருவிழாக்களில், பழைய மாணவர் சங்கங்களில், சன சமூக நிலையங்களில், சமூகத்தின் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்தும் நிதி அதிகாரமுடைய உபயகாரர்களாக காணப்படுகிறார்கள்.
</p><p>
சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறிய பாடசாலைக்கு புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர் ஒருவர் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு நிதி உதவி செய்தார். ஆனால் அந்தக் கண்காணிப்புக் கமராக்களை இயக்குவதற்கு தேவையான கடவுச் சொல் அவரிடம் தான் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c991f509-b087-45f8-96ec-4b31b0d02c06/26-6a5f4ed365b42.webp' /></p><p>
</p><p>
பாடசாலை அபிவிருத்திக் குழுக்களுக்குள்,பழைய மாணவர் சங்கங்களுக்குள், ஆலய அறக்கட்டளைகளுக்குள்,அரசியல் கட்சிகளுக்குள்,சிவில் சமூகங்களுக்குள்,தங்களால் ரிமோட் செய்யப்படக்கூடிய குழுக்களை, நபர்களை உருவாக்கி மேற்படி அமைப்புகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொலை இயக்கி உபயகாரர்களும் உண்டு.
</p><p>

தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் பிரதான விடயங்களில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி காணப்படுகிறது. </p><p>

ஆயுதப் போராட்டத்தின் காசு காய்க்கும் மரமாக அது இருந்தது. ஆனால் 2009க்கு முன்புவரை தாயகத்தை மையமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. தாயகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளும் ஏனைய உதவிகளும் ஒருங்கமைக்கப்பட்டன.
</p><h2>

புலம்பெயர் அமைப்புகளில் ஒற்றுமையின்மை</h2><p>

ஆனால் இப்பொழுது தாயகத்தில் அவ்வாறான ஒன்றிணைந்த மையம் எதுவும் கிடையாது.புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள்.</p><p>அங்கேயும் ஒன்றிணைந்த செயல்பாடுகள் இல்லை.

 வள்ளல்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.உபயகாரர்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca00dd4-ae6c-4d1d-bdaa-929befd83b4b/26-6a5f4ed4175ab.webp' /></p><p> 

இந்தப் பாரதூரமான வெற்றிடம் உள்ளவரை ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல் வாழ்வெனப்படுவது,சினிமாப் பண்பாட்டின் வீச்செல்லைக்கு வெளியே வராது உருப்படாது.
</p><p>
இந்த நிலை தொடரும்வரை,தமிழ் மக்கள் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் சட்ட லீலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது மயிலாட்டத்தை,சின்ன மேளக் கச்சேரிகளை,டிஜே கும்மிகளைப் பார்த்துப் ரசிக்கலாம் அல்லது,ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடக்கும் சண்டைக்கு காட்சிகளை அல்லது நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துச் சிரிக்கலாம் அல்லது குருதி அழுத்தத்தை உயர்த்திக் கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T10:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் டெங்குத் தொற்று! பெற்றோருக்கு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-warning-issued-to-parents-1784629872"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-warning-issued-to-parents-1784629872</id>
            <summary type="text">நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தொற்று குறித்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோரை எச்சரித்துள்ளது.தொடர்ந்து பரவி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தொற்று குறித்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோரை எச்சரித்துள்ளது.</p><p>தொடர்ந்து பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்&nbsp; சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் இயக்குனர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>ஆவணங்களை கொண்டு வாருங்கள்&nbsp;</h2><p>இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு உடனடி&nbsp; சிகிச்சையை வழங்குவதற்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>எனவே, சிகிச்சைக்காக தங்களுடைய பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர் வைத்தியசாலையால் கோரப்படும் ஆவணங்களை சரிவர கொண்டுவருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60847fc6-c758-46c1-af1c-3fad3ccb9bf9/26-6a5f4e83649ba.webp' />&nbsp;</p><p>இதன்படி, தனிநபர் சுகாதார எண், குழந்தையின் சுகாதார மேம்பாட்டுக் குறிப்பேடு(எடை குறிப்பேடு),&nbsp; உணவு ஒவ்வாமை அல்லது மருத்துவ பதிவுகள்,&nbsp; இதற்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை சரிவர எடுத்து வருமாறு பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>அத்துடன் மேலுதிக தகவல்களுக்கு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்&nbsp;<b> 011 2693711&nbsp;</b>என்று அலுவலக இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T10:49:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரணவாய் கிராமம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-eradication-campaign-across-karanawai-1784629873"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-eradication-campaign-across-karanawai-1784629873</id>
            <summary type="text">கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கரணவாய் கிராம சேவையாளர்
பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கரணவாய் கிராம சேவையாளர்
பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>நாடு முழுவதும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள
நிலையில் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு பகுதிகளில் டெங்கு நோயின் பரவல்
அதிகரித்துள்ளது.</p><h2>&nbsp;டெங்கு ஒழிப்பு</h2><p>
</p><p>
கடந்த இரண்டு மாதத்தில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சுமார் 60
வரையான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51d74d2-da70-4265-a992-a99ab5e93552/26-6a5f4b31ede07.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த டெங்கு நோய்
கட்டுப்படுத்தும் நடவடிக்கை காரணவாய் பகுதியில் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
</p><p>
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கரவெட்டி
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும்
உத்தியோகத்தர்கள், நெல்லியடி போலீசார், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் வீடு வீடாக சென்று டெங்கு நோயை
காட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன் வீட்டுக் காரர்களுக்கு
டெங்கு நோயிலிருந்து வருமுன் காத்தல் தொடர்பான சுகாதார விழிப்புணர்வு
அறிவுறுத்தல் வழங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/566840bc-f536-4504-ad1c-29f93f27bffd/26-6a5f4b32cadc8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f78d477-83d9-419e-a81d-b46cc0d8dcb0/26-6a5f4b33a0e2e.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T10:34:31+00:00</updated>
        </entry>
    </feed>
