<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-07T07:24:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை சீர்ப்படுத்த நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/improve-transport-service-nuwara-eliya-bus-stand-1788763950"></link>
            <id>https://tamilwin.com/article/improve-transport-service-nuwara-eliya-bus-stand-1788763950</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில்
பேருந்துகள் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு
சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில்
பேருந்துகள் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு
சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸ்
பிரிவினர் மற்றும் மத்திய மாகாண போக்குவரத்துச் சபை அதிகாரிகள் பேருந்து சேவை
வழங்குநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் தனியார் பேருந்துகள், இன்று(07.09.2026) நுவரெலியா பிரதேச போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய
மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் சாலை ஆய்வாளர்களால் திடீர்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
</p><h2>பயணிகள் பாதுகாப்பாக ஏறி</h2><p>
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பேருந்து சேவைகளை மேலும் ஒழுங்குபடுத்தி, பயணிகளுக்கு பயனுள்ள போக்குவரத்து
சேவையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d2c20e2-348f-460c-8725-a2939ac7e0e8/26-6a9e655dda4a3.webp' /></p><p>இதில் பேருந்துக்காகக் காத்திருக்கும் போது முறையான வரிசையைப் (Queue)
பின்பற்றுதல், பேருந்தை அதற்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடப் பெட்டிக்குள் சரியாக
நிறுத்த வேண்டும். </p><p>வீதியின் நடுவில் நிறுத்தக் கூடாது, பயணிகள் பாதுகாப்பாக
ஏறி, இறங்கும் வரை பேருந்தை முழுமையாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும்,
பேருந்தில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட
ஒலியெழுப்பிகள் (Horns) மற்றும் அதிக சத்தம் எழுப்பும் உதிரிபாகங்களைப்
பயன்படுத்துவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார்
எச்சரித்துள்ளனர்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகள் உரிய முறையில் சென்று
கொடுக்கப்பட்டுள் ள நேரத்தில் தரித்து நின்று, அங்கு காத்திருக்கும் பயணிகளை
ஏற்றிச் செல்வதுடன், பயணிகளுக்குத் தேவையான சரியான பயணத் தகவல்கள் மற்றும்
வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56cdc3d9-9391-47ed-b192-ba070cd547d7/26-6a9e655eb82ab.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பேருந்து தரிப்பு நிலையங்களுக்கு வெளியே பயணிகளை ஏற்றிச் செல்வதைத்
தவிர்த்து, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்திற்கொள்ளவு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலே குறிப்பிட்ட அனைத்து அறிவுறுத்தல்களுக்கு இணங்கிச் செல்லத் தவறும்
பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T07:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788764910"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788764910</id>
            <summary type="text">அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சந்திக்க அடுத்தடுத்து சிறைச்சாலைக்கு சென்ற அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-went-to-prison-another-to-meet-namal-1788763332"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-went-to-prison-another-to-meet-namal-1788763332</id>
            <summary type="text">தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்திக்க அரசியல்வாதிகள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று வருவதாக தகவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்திக்க அரசியல்வாதிகள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

எயார்பஸ் ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்சவின் நலம்&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் நலம் குறித்து விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு இன்று காலை சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a5f4ac-e999-4cff-b225-0ace2fc35d63/26-6a9e61d717af1.webp' />&nbsp;</p><p> 

இதனையடுத்து பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவும் நாமல் ராஜபக்சவை சந்திக்க சற்றுமுன் வெலிக்கடை சிறைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் நலன் குறித்து விசாரிப்பதற்காக அவர் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தனவும் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நேற்று முன் தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:05:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது மகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-arrested-for-killing-father-1788764543"></link>
            <id>https://tamilwin.com/article/son-arrested-for-killing-father-1788764543</id>
            <summary type="text">சொந்தத் தந்தையைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை, உக்குவளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொந்தத் தந்தையைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
மாத்தளை, உக்குவளை - குறிவல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
இச்சம்பவத்தில் உக்குவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
</p><p>தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே, மகன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
கைது செய்யப்பட்ட 16 வயது சந்தேகநபர் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் அடைத்து வீழ்த்த முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-not-down-1788763973"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-not-down-1788763973</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்து வீழ்த்தி விட முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்து வீழ்த்தி விட முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>வெலிக்கடை சிறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை பார்வையிட சென்ற போது ஊடகங்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.</p><p>
அரசியலில் மரணிப்பதற்கும் சிறையில் செல்வதற்கு அடைபடுவதற்கு அஞ்சாதவர்களினால் மட்டுமே ஆபத்துக்களை எதிர்நோக்கி முன்னோக்கி செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6298575-7142-496a-aea7-0005f40c9241/26-6a9e5f47149da.webp' /></p><p>
</p><p>துரதிஸ்டவசமாக அவ்வாறு தைரியமானவர்கள் அரசியலில் வெகு சிலரே உள்ளதாகவும் அவ்வாறான தைரியமான ஒருவரே நாமல் ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்த விடயத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்பதே தென்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நாமல் ராஜபக்சவை பொய்யான ஓர் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைப்பதற்கான முயற்சி மூலம் ஜனாதிபதிக்கு இந்த விடயம் புரியவில்லை என்பது புலனாகின்றது என உதய கமன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T06:53:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த இலங்கை அகதிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-refugee-in-sea-off-thalaimannar-1788763005"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-refugee-in-sea-off-thalaimannar-1788763005</id>
            <summary type="text">இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட 11 பேருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தினால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட 11 பேருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த சம்பவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள் மணல் தீவுகளில் சிக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


குழந்தைகள் உட்பட 11 பேர் மீட்பு</h2><p>

தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, மணல் தீவுகளில் நின்ற 2 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5
சிறுவர்கள் அடங்கலாக 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d5a8870-e301-4275-855f-06b4585776da/26-6a9e5c60a30a8.webp' /></p><p> </p><p> 

இதனைத் தொடர்ந்து, இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.</p><p>

இவ்வாறு மீட்கப்பட்ட 11 பேரும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்ட நிலையில், நேற்று(06.09.2026) மன்னார் பதில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். </p><h2>

நீதிமன்ற உத்தரவு</h2><p>

இதன்போது, மீட்கப்பட்ட 11 பேரில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தலா 2
இலட்சம் ரூபா ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்னார் பதில் நீதிவான், அடுத்த
தவணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்கும்போது கிராம சேவகர்களிடம் பதிவு செய்து,
அதற்கான பதிவுகளை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78dc3f70-d035-43b7-99a4-74a12f96322a/26-6a9e5c615de3e.webp' /></p><p> </p><p>அத்துடன், , வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு மன்னார் பதில் நீதிவான்
ஒத்திவைத்தார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் - மனோ கணேசன் எம்.பி முழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-defeated-election-itself-mano-ganesan-1788761977"></link>
            <id>https://tamilwin.com/article/government-defeated-election-itself-mano-ganesan-1788761977</id>
            <summary type="text">சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக
வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக
ரீதியிலான தேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக
வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக
ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும் தமிழ்
முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் நான்காவது
தேசிய மாநாடு நேற்றுமுன்தினம்(05.09.2026) இலங்கை மன்றக் கல்லூரியில்
நடைபெற்றது. </p><p>அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்
கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எந்தவித அச்சமும் இல்லை</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும்
மத்தியில் எதிர்க்கட்சிகள் செயற்பட வேண்டியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e94664-008e-4acc-853e-4c3c8f217034/26-6a9e5c5f32917.webp' /></p><p>இரண்டுக்கு மூன்றாக
வளைந்துகொடுக்குமாறு எமக்குக் கூறப்பட்டால், அதற்கு அஞ்சி வளைந்துகொடுக்க
வேண்டிய அவசியமோ, சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியமோ எமக்குக்
கிடையாது. </p><p>எமக்கு எந்தவித அச்சமும் இல்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள
விரும்புகின்றேன்.</p><p>அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்தைப்
பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்தே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
</p><p>அஞ்சுவதும் இல்லை, வளைந்துகொடுப்பதும் இல்லை என்பதில் நாம் மிகவும் உறுதியாக
இருக்கின்றோம்.

வேறுவேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளாகிய எமக்குள் கருத்து
வேறுபாடுகளும் உள்முரண்பாடுகளும் காணப்படலாம். </p><p>ஆனால், தனிப்பட்ட அல்லது கட்சி
நலன்களுக்கு அப்பால் தேசியப் பற்றும் நாட்டின் ஜனநாயக உரிமைகளும் எமக்கு மிக
முக்கியமாகும். அந்த வகையில், மக்கள் நலன் சார்ந்து நாம் கொள்கை ரீதியாக
இணைந்து செயற்படுவதில் எந்தவிதப் பிரச்சினையோ அல்லது தயக்கமோ எமக்கு இல்லை.&nbsp;</p><h2>தேர்தலில் வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பம்</h2><p>அதேவேளை, மக்கள் ஆணையினால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்றைச்
சட்டவிரோதமான முறையிலோ, வன்முறைகள் மூலமாகவோ அல்லது வீதியில் இறங்கி கலவரங்களை
ஏற்படுத்தியோ நாம் ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/851f1f02-395e-4708-a167-3627d0ba9478/26-6a9e5c5fdf8b4.webp' /></p><p>
எமது கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களோ அல்லது கட்சிகளோ வரலாற்று ரீதியாக அவ்வாறான
வன்முறை அரசியலை முன்னெடுத்ததும் இல்லை, அதனை ஆதரித்ததும் இல்லை. </p><p>ஆனால், அரசை
நடத்தி வரும் தற்போதைய ஆட்சியாளர்களே கடந்த காலங்களில் வீதிகளில் இறங்கி
ஆர்ப்பாட்டங்களையும் கலவரங்களையும் செய்து, அன்றைய அரசுகளை நிலைகுலையச்
செய்தனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
</p><p>
எனவே, எமது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து யாரும் தேவையின்றிப்
பதற்றமடையவோ அல்லது தேவையற்ற அச்சம் கொள்ளவோ வேண்டியதில்லை.&nbsp;</p><p>அரசமைப்புக்கு உட்பட்டு, தேர்தல் மூலம் ஜனநாயக வழியிலேயே நாம் இந்த அரசி
வீழ்த்துவோம். அது அரசமைப்பு ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கும் இந்த நாட்டின்
மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையாகும்.
</p><p>
சரியான முறையில், சட்டபூர்வமான தேர்தல் களத்திலேயே இந்த அரசைத் தோற்கடிப்போம்
என்ற செய்தியை உறுதியாகக் கூற விரும்புகின்றோம்.

தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான நிர்வாக நகர்வுகளும் முடிவுகளுமே, அவர்களைத்
தேர்தலில் வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தித் தரும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T06:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய ஆவணங்களுடன் இறுதிக்கட்டத்தில் எயார்பஸ் விவகாரம்! மற்றுமொரு ராஜபக்சவை கைது செய்ய களமிறங்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-case-5-countries-investigation-of-bribery-1788750575"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-case-5-countries-investigation-of-bribery-1788750575</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த விவகாரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள&nbsp;விசாரணை </h2><p> 

இந்நிலையில், அஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச உதவியுடன் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/967c6952-b27e-4958-b1f2-cdfa9fd9fee8/26-6a9e584c51a7b.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இந்த பரிவர்த்தனை தொடர்பான அனைத்து ஆவணங்கள், மின்னஞ்சல்கள், கணக்கு விவரங்கள் போன்றவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
</p><p>
மேலும், விசாரணையின் போது, ​​நாமல் ராஜபக்சவிற்கு எதிராக கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யும் எயார்பஸ் (Airbus) ஒப்பந்த ஊழல் வழக்கில், நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த வேளையில், கபில சந்திரசேன மே 08 அன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.</p><p>

கைது செய்யப்பட்ட போது கபில சந்திரசேன நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மற்றும் அதன் பின்னணியில் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.</p><h2>சந்தேகநபர்களுக்கு திறந்த பிடியாணை&nbsp;</h2><p> </p><p>

இதற்கிடையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28650489-31c3-4f75-b672-3e511daf1bb2/26-6a9e584d02872.webp' />&nbsp;</p><p>
</p><p>
பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்து நாட்டிற்கு திரும்பக்கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த விசாரணையில், மற்றொரு சந்தேகநபரான ஷமிந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும், கேள்விக்குட்பட்ட எயார்பஸ் பரிவர்த்தனை தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க எயார்பஸ் தாய் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 அதன்படி, விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எயார்பஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 3 முறை அந்நாட்டிற்குச் சென்று 4 வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p> </p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T06:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளை அச்சுறுத்தும் போதைப்பொருள்..! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drugs-threatening-schools-shocking-information-1788760015"></link>
            <id>https://tamilwin.com/article/drugs-threatening-schools-shocking-information-1788760015</id>
            <summary type="text">கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகள் மட்டுமன்றி, கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் போதை மாத்திரைகளின் பரவல் விரிவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகள் மட்டுமன்றி, கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் போதை மாத்திரைகளின் பரவல் விரிவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>40,000 கைதிகள் தற்போது சிறைச்சாலையில்</h2><p>தற்போது சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70 சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8420115f-c35a-44be-8703-82b6fbbdd8db/26-6a9e559366b75.webp' /></p><p>
</p><p>
அவற்றில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 40,000 கைதிகள் தற்போது சிறைச்சாலைகளில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T06:11:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி சோதனை.. 7 சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seven-suspects-arrested-with-drugs-1788760593"></link>
            <id>https://tamilwin.com/article/seven-suspects-arrested-with-drugs-1788760593</id>
            <summary type="text">அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட
சிறப்புச் சோதன நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட
சிறப்புச் சோதன நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 8000
மில்லிகிராம் ஹெரோயினுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>

திஸ்ஸபுர பாலம் கடௌரா சந்தி அருகில் 2,800 மில்லிகிராம் ஹெரோயினுடன் 21 வயது
இளைஞன் கைது செய்யப்பட்டார்.</p><h2>சோதனை நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
பாலம் கண்டுவ பகுதி மின்மாற்றி அருகே ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த
சமனபெட்டாவைச் சேர்ந்த நபர் 3000 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் கடத்தலுக்குப்
பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee02fca-8c96-486c-bde4-794c1f679e35/26-6a9e534b62cec.webp' /></p><p>
</p><p>
பிரிட்ஜ் கேம்ப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் 2,200 மில்லிகிராம்
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உஹன பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;உஹன சோதனையை முடித்துவிட்டு பொலிஸார் திரும்பியபோது, கரங்கவா கிராமத்தில்
சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வரைச் சோதனையிட்டனர்.</p><p> இதன்போது அவர்களிடம்
இருந்து முறையே 100, 110, 90 மற்றும் 95 மில்லிகிராம் வீதம் மொத்தம் 395
மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
</p><p>
அம்பாறை நகரைச் சேர்ந்த இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு,
மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T06:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலுக்கு சிறப்பு அனுமதி! சிறைக்கூடத்திற்கு விசேட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-is-allowed-to-receive-food-from-home-1788759615"></link>
            <id>https://tamilwin.com/article/namal-is-allowed-to-receive-food-from-home-1788759615</id>
            <summary type="text">
கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின்தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு, வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின்தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு, வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.</p><h2>சந்திப்பதற்கு அனுமதி&nbsp;</h2><p> </p><p>

மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba668078-6957-4260-94ec-893bde825494/26-6a9e52b3ea9cf.webp' /></p><p> 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p> 

இதேவேளை, நாளைய தினம்(08.09.2026) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் நாமல் ராஜபக்ச கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p><p> 


</p>]]></content>
            <updated>2026-09-07T05:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் பரவும் குற்றச்சாட்டு - விளையாட்டுத்துறை அமைச்சர் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sports-minister-denies-spreading-allegations-1788757688"></link>
            <id>https://tamilwin.com/article/sports-minister-denies-spreading-allegations-1788757688</id>
            <summary type="text">தனக்கு பாதணிகளோ அல்லது ஈட்டியோ இல்லை என்றும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை
என்றும் தடகள வீரர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்துறை அமைச்சர்
சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனக்கு பாதணிகளோ அல்லது ஈட்டியோ இல்லை என்றும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை
என்றும் தடகள வீரர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்துறை அமைச்சர்
சுனில் குமார கமகே முற்றாக நிராகரித்துள்ளார்.
</p><p>
குறித்த வீரர் ஏற்கனவே தேசிய அணியில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தேவையான
அனைத்து விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><h2>அரசாங்கத்தின் உதவி</h2><p>
</p><p>
இதேவேளை 'மிஷன் ஒலிம்பிக் 2028' திட்டத்தின் கீழ் தடகள வீரர்களுக்கு மாதம் ரூ.
110, 000 முதல் ரூ. 210, 000 வரை நிதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3807664d-42a1-4016-9602-0fdfdb9f4b6c/26-6a9e4d1c32b7a.webp' /></p><p>
</p><p>
மேலும் சுமார் 370 வீரர்களுக்கு மாதம் ரூ. 60000 ஊட்டச்சத்து உதவித்தொகையும்,
1,500 பாடசாலை மாணவர்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித்தொகையும் அரசாங்கத்தால்
வழங்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இந்த நிலையில் அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு இதுபோன்ற தவறான தகவல்களை
சமூக வலைத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ பரப்புவது உண்மைக்கு புறம்பானது என
அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் தன் மகனை சந்திக்கச் சென்ற ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shirandhi-rajapaksa-visited-namal-welikada-prison-1788758010"></link>
            <id>https://tamilwin.com/article/shirandhi-rajapaksa-visited-namal-welikada-prison-1788758010</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நலம் விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு சென்றுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நலம் விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு சென்றுள்ளார்.&nbsp;</p><p>கடந்த 4ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய&nbsp;நாமல் ராஜபக்ச, விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><h2>நலம் விசாரிப்பு&nbsp;</h2><p>இதனை தொடர்ந்து, கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், அவரை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77cc5796-859f-45f9-a7af-e8a3bfcb8404/26-6a9e4b762d75b.webp' /></p><p>இதற்கமைய, அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் அதிதீவிர பாதுகாப்பு கொண்ட விசேட அறையில் காவலில் வைக்கப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில், நேற்று முன்தினம், தனது மகனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த சிறைச்சாலைக்கு சென்றிருந்த வேளை, இன்று நாமலின் தாயான&nbsp;ஷிரந்தி ராஜபக்ச அவரை சந்தித்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xdG52g_uPcc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T05:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த 8 மாதங்களில் வீதி விபத்துகளில் 1600 இற்கும் மேற்பட்டோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1600-people-died-in-road-accidents-last-8-months-1788757607"></link>
            <id>https://tamilwin.com/article/1600-people-died-in-road-accidents-last-8-months-1788757607</id>
            <summary type="text">டெங்கு நோயைக் காட்டிலும் வீதி விபத்துகளால் நாட்டில் ஏற்படும்
உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று மருத்துவ மற்றும்
சிவில் உரிமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு நோயைக் காட்டிலும் வீதி விபத்துகளால் நாட்டில் ஏற்படும்
உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று மருத்துவ மற்றும்
சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர்,
விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகங்களுக்கு நேற்று(06.09.2026) கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><h2>குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரம்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயினால் நாட்டில் சுமார் 60 உயிரிழப்புகள்
மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் வீதி விபத்துகள் காரணமாக
1,600 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f41347-9866-4ab9-b2f3-43c611d91b57/26-6a9e4a2cc5e20.webp' /></p><p>இது டெங்கு உயிரிழப்புகளை விட
சுமார் 30 மடங்கு அதிகமாகும். மேலும், சராசரியாகத் தினமும் 4 முதல் 5 பேர் வரை
வீதி விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.&nbsp;</p><p>இந்த விபத்துகளில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் நாட்டின் பொருளாதாரத்துக்கு
நேரடியாகப் பங்களிக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும்
கிராமப்புற மக்களாவர்.</p><p> குறிப்பாக முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், உழவு
இயந்திரங்கள் மற்றும் சைக்கிள்களைப் பயன்படுத்துவோரே அதிகளவில்
பாதிப்புக்குள்ளாகின்றனர்.
</p><p>
குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரமாக இருக்கும் தந்தை அல்லது சகோதரன்
உயிரிழக்கின்றமையால், அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் குழந்தைகளின்
கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது.
</p><p>
</p><h2>பெருமளவிலான நிதியைச் செலவிட</h2><p>உயிரிழப்புகள் தவிர்த்து விபத்துகளால் நிரந்தர அல்லது தற்காலிக
ஊனத்துக்குள்ளாவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
இவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசு பெருமளவிலான
நிதியைச் செலவிட வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/352bfbd9-cf98-4e50-92e9-62e83f420fdb/26-6a9e4a2daf61f.webp' /></p><p>தனியார் பேருந்துகளுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டி, சாரதிகளின் வீதி
ஒழுக்கமின்மை, கவனக்குறைவாகத் திடீரெனத் திரும்பிடும் 'யூ டர்ன்'
செயற்பாடுகள், பாதைகளில் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணாமை
மற்றும் முறையான பயிற்சியின்மை ஆகியவையே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மை
காரணமாக அமைகின்றன.
</p><p>
எனவே, சுகாதார அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் போக்குவரத்து
ஒழுங்குபடுத்தல் அதிகார சபைகள் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை உடனடியாக
நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T05:27:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசிடம் சிக்கியுள்ள ராஜபக்சர்களின் மறைக்கப்பட்ட இரகசியங்கள் - கலக்கத்தில் மகிந்த குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nimal-perera-have-rajapaksa-family-secrets-1788745345"></link>
            <id>https://tamilwin.com/article/nimal-perera-have-rajapaksa-family-secrets-1788745345</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்தின் சார்பான நபராக கோடிஸ்வர வர்த்தகர் நிமல் பெரேரா மாறியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்தின் சார்பான நபராக கோடிஸ்வர வர்த்தகர் நிமல் பெரேரா மாறியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>

ராஜபக்சர்கள் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அறிந்த நபர்களில் ஒருவராக நிமல் பெரேரா உள்ளமையே இதற்கு காரணமாகும். </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்வதற்கு முக்கிய காரணமாக நிமல் பெரேரா வழங்கிய சாட்சியமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b>

அநுர அரசாங்கத்திடம் வாக்குமூலம்</b></h2><p>இந்நிலையில் ராஜபக்சர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1661bc46-a360-48fd-968b-5b625e6a7a50/26-6a9e20793047c.webp' /></p><p>ஒரு காலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் மிக நெருங்கிய நண்பராகவும் அவர்களது அனைத்து நிதி நடவடிக்கைகளையும் கையாண்டவராக நிமல் பெரேரா உள்ளார்.
</p><p>
நிமல் பெரேரா என்பவர் ராஜபக்சர்களின் அனைத்து இருண்ட இரகசியங்கள், மறைக்கப்பட்ட கணக்குகள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து அனைத்தையும் அறிந்த தனித்துவமான நபராகும்.</p><p> 

அவர் தற்போது அவுஸ்திரேலியாவின் தீவிர பாதுகாப்பின் மத்தியில வசித்து வருவதுடன், நாமலுக்கு எதிராக தீர்க்கமான 2 சாட்சிகளையும் நீதிமன்றத்திற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>

நிமல் பெரேராவின் இந்தத் தீர்க்கமான நடவடிக்கையுடன் அவரைக் எப்படியாவது மௌனிக்க செய்ய சர்வதேச நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h3><b>

 சர்வதேச நடவடிக்கை</b></h3><p>நாமல் ராஜபக்சவின் மற்றுமொரு மிக நெருங்கிய நண்பரான தற்போது மெல்பர்னில் வசிக்கும் பிரசித்தி பெற்ற சட்டத்தரணியாக செயற்படும் இந்திக கருணாஜீவ ஊடாக நிமல் பெரேராவுக்கு கடுமையான அழுத்தங்களைக் பிரயோகிக்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d13922e2-2fb4-4ed6-9b95-f9d9a4190f03/26-6a9e2358c3d14.webp' /></p><p>ராஜபக்சர்களுக்கு எதிராக எந்தவொரு சாட்சியத்தையும் வழங்க வேண்டாம் என வேண்டிக்கொண்டு நிமல் பெரேராவுக்கு தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பல அனுப்பப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நிலையில் நிமல் பெரேராவிடம் இருந்து நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் மட்ட விசேட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிய வருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T05:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியை விரைந்து வழங்கவே அரசமைப்புத் திருத்தங்கள்! கைதுகள் பழிவாங்கல்கள் அல்ல என்றும் ரில்வின் சில்வா விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rilwin-silva-explains-that-arrests-not-retaliation-1788755348"></link>
            <id>https://tamilwin.com/article/rilwin-silva-explains-that-arrests-not-retaliation-1788755348</id>
            <summary type="text">நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற
வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை
வழங்குவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற
வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை
வழங்குவதற்காகவே அரசமைப்புத் திருத்தங்களை முன்னெடுக்க அரசு நடவடிக்கை
எடுத்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின்
சில்வா தெரிவித்தார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்
பூர்த்தியாகும் நிலையில், 'நமது அரசு: ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி'
எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம்
நேற்று (06.09.2026) களுத்துறை - பேருவளைப் பிரதேசத்தில் நடைபெற்றது.
</p><p>அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>அரசமைப்புத் திருத்தங்கள்</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தவும், பொதுமக்கள் எதிர்நோக்கும்
காலதாமதங்களையும் செலவினங்களையும் தவிர்த்து மிக விரைவாக நீதி வழங்கவுமே
தற்போதைய அரசு அரசமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றது. மாறாக,
கடந்த காலத்தில் தங்களது அதிகாரத்தை நீடித்துக்கொள்ளவும், ஜனாதிபதியின்
பதவிக்காலத்தை வரம்பின்றி நீடிக்கவும் 18ஆவது திருத்தத்தைக்
கொண்டுவந்தவர்களும், 20ஆவது திருத்தத்தின் மூலம் அதிகாரங்களை மேலும்
அதிகரித்துக்கொண்டவர்களும்தான் இன்று அரசின் மீது சர்வாதிகார முத்திரை குத்த
முற்படுகின்றனர்.
</p><p>
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில்
நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவரைப் பதவியிலிருந்து அநியாயமாக
வெளியேற்றியவர்கள் அன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பேசவில்லை. ஜனநாயகத்தை மீறி
நீதிபதிகளின் வீடுகளுக்கு முன்னால் சென்று கல்லெறிந்து கூச்சலிட்ட வரலாற்றைக்
கொண்டவர்கள்தான் இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பாடம் எடுக்கின்றார்கள். </p><p>தேசிய
மக்கள் சக்தியே உரிமைகளையும் ஜனநாயகத்தையும் துயரங்கள் ஊடாகப் புரிந்துகொண்ட
ஓர் இயக்கம் என்பதால், ஆட்சியாளர்களின் விருப்பமல்லாது பொதுமக்களின்
தேவைகளையும் நிவாரணங்களையுமே ஜனநாயகம் என்று கருதுகின்றோம்.

தற்போது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள்
யாவும் அரசியல் பழிவாங்கல்கள் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/544e991e-1180-48f2-9b73-8af68ea28b5d/26-6a9e44e0a3b9c.webp' /></p><h2>தீர்மானம் நீதிமன்றத்திடமே உள்ளது</h2><p> </p><p>மாறாக, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும்
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற சுயாதீன நிறுவனங்கள் முறையான
விசாரணைகளை நடத்தி, சாட்சியங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கின்றனவே தவிர, அரசு இதில் எங்குமே தலையிடுவதில்லை.

நீதிமன்றமே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதையா அல்லது பிணையில்
விடுவிப்பதையா என்பதைத் தீர்மானிக்கின்றது. </p><p>மாறாக, கடந்த காலத்தில் மஹிந்த
ராஜபக்ஷ தரப்பினர் தங்களது அரசியல் எதிரிகளைச் சட்டரீதியாகக்
கையாள்வதைவிட்டுவிட்டு, லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்ற
ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தும், கடத்தியும், ஊடக நிறுவனங்களுக்குத் தீ
வைத்ததுமே அவர்களது ஜனநாயகமாகக் இருந்தது. அவ்வாறான வரலாற்றைக் கொண்டவர்கள்
யார் என்பது முழு நாட்டுக்கும் தெரியும்.
</p><p>
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்
முடிந்த பின்னரும் எந்தவொரு வன்முறைச் சம்பவமும் மனிதப் படுகொலைகளும் இன்றி
அமைதியான முறையில் தேர்தல் வெற்றிகள் கொண்டாடப்பட்ட பெருமை தேசிய மக்கள்
சக்தியையே சாரும்.

தேர்தல் வெற்றிகளின் போது எவரும் பட்டாசுகளைக் கொளுத்தியோ, வன்முறைகளில்
ஈடுப்பட்டோ எவருக்கும் துன்புறுத்துகளை வழங்கவில்லை.</p><h2>சாதாரண மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு</h2><p> </p><p>மாறாக, எதிர்கால
சந்ததியினருக்கு முன்மாதிரியான ஜனநாயக அரசியல் கலாசாரத்தை இந்த அரசு
நாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது ஒரு கட்சியின் வெற்றிக்காக
மட்டுமல்ல, பல தசாப்தங்களாகத் தாழ்த்தப்பட்டு, மாற்றத்தை எதிர்நோக்கியிருந்த
சாதாரண மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பின் வெளிப்பாடு இது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d62c758c-0239-45d2-b9a9-cc337a4920e8/26-6a9e44e168c87.webp' /></p><p> எனவே, இந்த அரசு
குறிப்பிட்ட ஓர் அரசியல் இயக்கத்துக்கு மட்டுமே சொந்தமானதல்ல, மாறாக,
இந்நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களுக்குமானது.

ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததோடு வாக்காளர்களின் பங்கு முடிந்துவிடுவதில்லை.
</p><p>வழக்கமான அரசியல் கலாசாரத்தில், மக்கள் வாக்களித்து ஆட்சியாளர்களைத்
தேர்ந்தெடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவார்கள். குறைகளைச்
சுட்டிக்காட்டுவதோடு தங்களது கடமை முடிந்துவிட்டதாக நினைப்பார்கள். ஆனால்,
அதற்கு மாற்றமாக, நாட்டைப் கட்டமைப்பதில் அரசுக்கு நிகரான சம பங்கு
பொதுமக்களுக்கும் உண்டு. </p><p>திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பு அரசினுடையது
என்றாலும், அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது மக்களின் பொறுப்பாகும்.

எனவே, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'க்ளீன் ஸ்ரீ லங்கா' போன்ற
திட்டங்கள் மற்றும் கிராம மட்ட அபிவிருத்திகள் வெற்றிகரமாக
முன்னெடுக்கப்படுவதற்கு அரசின் பொறிமுறைகளுடன் பொதுமக்களும் முழுமையான
பங்களிப்பை வழங்க வேண்டும். நாட்டைத் தூய்மையாகவும் ஒழுக்கமிக்கதாகவும்
மாற்றுவது அரசின் மாத்திரமன்றி, ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T05:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/additional-military-personnel-president-s-security-1788755345"></link>
            <id>https://tamilwin.com/article/additional-military-personnel-president-s-security-1788755345</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மேலதிக இராணுவப்பிரிவொன்று ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மேலதிக இராணுவப்பிரிவொன்று ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
</p><p>
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாம் வருட பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் நேற்று (06) முதல் பொது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.</p><h2>இராணுவத்தளபதியிடம் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
அவ்வாறான பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது ஜனாதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெலவத்தை அலுவலகத்தில் இருந்து இராணுவத்தளபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e86a15ff-2aa6-4021-b731-daa8f94aceb5/26-6a9e4071007c2.webp' />&nbsp;</p><p>
</p><p>இதனையடுத்து ஜனாதிபதி கலந்துகொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் 1000 இராணுவ வீரர்களைப் பணியில் அமர்த்த இராணுவத்தளபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p>

இந்த கூட்டங்களுக்கான அரச வசதிகள் வழங்குவது தொடர்பாக எந்தவொரு எழுத்துப்பூர்வ பரிவர்த்தனையும் செய்யப்படக்கூடாது என்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்களும் அனுப்பப்பட்டுள்ளன.</p><h2>பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய தடை&nbsp;</h2><p>
</p><p>
இந்த கூட்டங்களின் போது, ​​ஜேவிபி அமைப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எவரும் மேடைக்கு அருகிலுள்ள பாதுகாப்பு வளையத்திற்கு அருகில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a923f01d-0146-4362-83e6-0f15176ca6b4/26-6a9e4071af4e3.webp' /></p><p>குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு கட்டமாக நேற்றைய தினம் பேருவளையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஜனாதிபதி வந்து மேடையை விட்டுச்செல்லும் வரை எந்த படகும் பேருவளை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.</p><p>தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரின் போது அப்போதைய ஜனாதிபதிகள் கூட இத்தகைய கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T04:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் மீதான மக்கள் நம்பிக்கை சிறிதளவும் குறையவே இல்லை! மார்தட்டிக்கொள்ளும் ரில்வின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rilvin-statement-about-srilanka-government-1788753738"></link>
            <id>https://tamilwin.com/article/rilvin-statement-about-srilanka-government-1788753738</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிறிதளவும் குறையவில்லை என்றும்,
மாறாகத் தேர்தல் காலத்தை விட தற்போது மக்களின் ஆதரவும் நம்பிக்கையும்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிறிதளவும் குறையவில்லை என்றும்,
மாறாகத் தேர்தல் காலத்தை விட தற்போது மக்களின் ஆதரவும் நம்பிக்கையும்
பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்
ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்
பூர்த்தியாகும் நிலையில், 'நமது அரசு: ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி'
எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம்
நேற்று (06.09.2026) களுத்துறை - பேருவளை பிரதேசத்தில் நடைபெற்றது.</p><p> அந்தக்
கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb9b972-4afe-4a66-8c64-495776d9d1d7/26-6a9e3c9ab07b1.webp' /></p><h2>எதிர்க்கட்சியின் கருத்து</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் ஆணை குறைந்துவிட்டது என்றும், ஆதரவு குறைந்துவிட்டது
என்றும், மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும்
எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
அவ்வாறான கருத்துக்களுக்கும் பொய்ப் பிரச்சாரங்களுக்கும் முற்றுப்புள்ளி
வைக்கும் வகையிலும், அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை
வெளிப்படுத்தும் வகையிலும் திரண்டுள்ள இலட்சக்கணக்கான மக்களை நேரில் வந்து
இன்று பார்வையிடுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6ad0085-512a-4c57-b0fa-84299ba8f8ea/26-6a9e3c9b8a0a4.webp' /></p><p> </p><p>இதுவே மக்களின் உண்மையான பலமாகும். அரசின் மீதான
நம்பிக்கை ஒரு சிறு துளியளவும் குறையவில்லை.

இதுவரை இலங்கையில் ஆட்சி அமைத்த எந்தவொரு கட்சியும் வடக்கையும் மலையகத்தையும்
முழுமையாக அரவணைத்துத் தாமே நேரடியாக ஆட்சி அமைத்ததில்லை.</p><h2>ஆட்சி கைப்பற்றல்</h2><p> </p><p>இதற்கு முன்னர்
ஆட்சியமைத்தவர்கள் உடைந்த கட்சிகளுக்கும், வடக்கிலும் மலையகத்திலும் உள்ள வேறு
கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கியே ஆட்சியைக்
கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a356263b-cac2-437d-aa5b-cb2a24593825/26-6a9e3c9c8bdeb.webp' /></p><p>
</p><p>
ஆனால், தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தலில் நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில்
21 ஐக் கைப்பற்றி, வரலாற்றில் முதல்முறையாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக
மக்களின் சகல வாக்குகளுடன் இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>தேர்தல்
காலத்தை விடவும் தற்போது மக்களது ஆதரவும் நம்பிக்கையும் பன்மடங்கு
அதிகரித்துள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கான, அழகான நாட்டை உருவாக்குவதை
நோக்கி மிக வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6207e1ca-af37-4a21-964b-68719cc7e38c/26-6a9e3c9d724ff.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T04:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினிக்குப் பதில் கோட்டாபயவை களமிறக்க மொட்டுக் கட்சி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-replaces-limini-1788750677"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-replaces-limini-1788750677</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்குள் இழுத்து வர மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்குள் இழுத்து வர மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>
இலங்கையின் முப்படைகள், அவர்களின் குடும்பத்தார் மட்டுமன்றி பெரும்பான்மை இன சிந்தனைக் கொண்ட சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தனி செல்வாக்கொன்று உள்ளது.</p><h2>மீண்டும் கோட்டாபய&nbsp;</h2><p>
</p><p>
கடந்த காலங்களில் மொட்டுக் கட்சியின் வாக்கு வங்கியில் குறித்த பிரிவின் வாக்குகள் கணிசமான செல்வாக்குச் செலுத்தியிருந்தன.</p><p>

இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களின் போது அதனை மீண்டும் மொட்டுக் கட்சியின் வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34630ec-e281-4d11-9381-78234873537a/26-6a9e385eef912.webp' /></p><p>
</p><p>
அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதரபுரத்தில் ஆரம்பமாகவுள்ள மொட்டுக்கட்சியின் மக்கள் போராட்டப் பேரணி தொடக்கம் ஏனைய முக்கிய நிகழ்வுகளில் கோட்டாபய ராஜபக்சவை கலந்து கொள்ள வைக்கும் தீர்மானத்தை மொட்டுக் கட்சி மேற்கொண்டுள்ளது.
</p><p>
அதே நேரம் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க, ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்தவர் என்ற வகையில் அவர் அரசியல் களத்தில் பிரபலம் பெறுவதை ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கிய சக்திகள் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T04:07:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையரொருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-arrested-at-international-airport-1788753288"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-arrested-at-international-airport-1788753288</id>
            <summary type="text">இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக பறவைகளை கடத்த முயன்ற இலங்கை நாட்டவர்
ஒருவர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் பான்டென் (Ba...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக பறவைகளை கடத்த முயன்ற இலங்கை நாட்டவர்
ஒருவர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

இவர் பான்டென் (Banten) பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையதில் வைத்தே கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><h2>தீவிரப்படுத்தியுள்ள விசாரணை</h2><p>
</p><p>
சூட்கேஸினுள் 15 சிறிய பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 101 அரிய வகை
பறவைகள், இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf35dca3-743c-49d4-b3c9-25226df89ab9/26-6a9e36bb39028.webp' />&nbsp;</p><p>

இதேவேளை கைப்பற்றப்பட்ட பறவைகளில் சில வகைகள் இந்தோனேசிய வனவிலங்கு
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட அரிய உயிரினங்களாகும்.</p><p>

தற்போது இந்தோனேசிய தனிமைப்படுத்தல் அலுவலகமும், இயற்கை வளப்பாதுகாப்பு
முகமையும் இணைந்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளன.</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T03:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்கலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-important-notice-to-passengers-1788749283"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-important-notice-to-passengers-1788749283</id>
            <summary type="text">லண்டனிலிருந்து 4 ஆம் திகதி புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 504 இல் பயணித்த பயணிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனிலிருந்து 4 ஆம் திகதி புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 504 இல் பயணித்த பயணிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த விமானம், 5 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில்,விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமானோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் விளைவாக, சில பயணிகளால் இருக்கைகள் இல்லாமல் ஹீத்ரோவிலிருந்து கட்டுநாயக்கவிற்கு பயணிக்க முடியவில்லை என்றும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h2>பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள்</h2><p>
</p><p>
சில பயணிகளை 4 ஆம் திகதி விமானத்தில் ஏற வேண்டாம் என்றும், 5 ஆம் திகதி பயணிக்குமாறும் அவர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்திருந்ததாக பயணிகள் கூறியுள்ளனர்.</p><p>பயணிகள் தாங்கள் பதிவு செய்த உணவிற்குப் பதிலாக வேறு உணவு வழங்கப்பட்டதாகவும் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b702c4-63b2-4196-83da-0c79242f9fdb/26-6a9e301f727ab.webp' /></p><h2>பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்</h2><p>இது தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவன தகவல் தொடர்பு தலைவர் தீபால் பெரேரா விளக்கமளிக்கையில்,</p><p>
''வழக்கமாக, எந்தவொரு விமானத்திலும் அளவுக்கு அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்லது இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். அத்தகைய நேரங்களில், நாங்கள் அந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் அடுத்த நாள் பயணிக்க விரும்பினால், அதற்கான சிறப்பு வசதிகளை வழங்குகிறோம்.

யாராவது ஏதேனும் காரணத்திற்காக பயணிக்க நேர்ந்தால், நாங்கள் நிச்சயமாக அவர்களை அனுப்பி வைப்போம்.</p><p> உணவைப் பொறுத்தவரை, பயணிகளின் தேவைக்கேற்ப மிக உயர்ந்த தரத்தில் நாங்கள் அதை வழங்குகிறோம். 

ஆனால் ஏதேனும் சிக்கல் இருந்தால், வாடிக்கையாளர் சேவை மையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அவர்களிடம் கூறுகின்றோம்.</p><p>

பயணிகளுக்கு தண்ணீர் போத்தல் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு, பயணச்சீட்டு எண் மற்றும் விமான எண்ணை குறிப்பிட்டு முறைப்பாடு அளிக்கலாம். அங்கு, நாங்கள் அந்த பயணிகளின் முறைப்பாடுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T03:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் விலை குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tea-price-increased-1788750081"></link>
            <id>https://tamilwin.com/article/tea-price-increased-1788750081</id>
            <summary type="text">லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டமையைக் கருத்திற்கொண்டு, ப்ளேன் தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டமையைக் கருத்திற்கொண்டு, ப்ளேன் தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.</p><p>
இதன்படி, உணவகங்களில் தற்போது விற்கப்படும் விலையிலிருந்து 5 ரூபா குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ப்ளேன் தேநீரின் தற்போதைய விலை: 40 – 50 ரூபாவாகவும், பால் தேநீரின் தற்போதைய விலை: 100 – 120 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e39e65-a267-4c4f-90a9-870bcd47af3e/26-6a9e29030cdc6.webp' /></p><p>
</p><p>தேநீருக்கென தனியாகக் கட்டுப்பாட்டு விலை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், உணவகங்களில் விற்கப்படும் தற்போதைய விலையிலிருந்து 5 ரூபாவைக் குறைக்குமாறு அனைத்து உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், எதிர்காலத்தில் உணவு மூலப்பொருட்களின் விலைகள் குறையுமாயின், உணவக உணவுகளின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T03:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக இலங்கை வந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி - 4 வயது சிறுவன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-kid-dies-in-sri-lanka-1788744037"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-kid-dies-in-sri-lanka-1788744037</id>
            <summary type="text">வெலிகம பிரதேசத்தில் வளர்ப்பு மீன்களைப் பிடிப்பதற்கு சென்று, வீட்டின் அருகில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிகம பிரதேசத்தில் வளர்ப்பு மீன்களைப் பிடிப்பதற்கு சென்று, வீட்டின் அருகில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். </p><p>இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளவர் குவைத் நாட்டைச் சேர்ந்த அம்மார் எனப்படும் நான்கு வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. </p><p>சிறுவனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்களுடன் அவர்கள் குவைத்தில் வசித்து வந்துள்ளனர்.</p><p> </p><h2><b>திருமண நிகழ்வு</b></h2><p>இந்த நிலையில் வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உறவினர் ஒருவரின் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கை வந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573c57a3-e8e9-4279-a17d-2b69c0a27efd/26-6a9e18b1b084b.webp' /></p><p>கடந்த வாரம் குறித்த நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் மீண்டும் குவைத் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இதன் போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p> வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் நேற்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவன், வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றிற்குச் சென்று பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் சிறிய வலையின் உதவியுடன் மீன்பிடிக்க முயன்றுள்ளார்.</p><p> இதன்போது அவர் தவறுதலாக ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கியிருக்கலாம் எனப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><h3><b> சிறுவன் பலி</b></h3><p>சிறுவன் வீட்டில் இல்லாததால் பதற்றமடைந்த உறவினர்களும் அயலவர்களும் சுற்றுப்புறத்தைத் தேடியபோது, ​​சிறுவனின் சடலம் ஆற்றில் மிதப்பதாக தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcfbae40-d406-4c2e-a396-00cf17263134/26-6a9e187219200.webp' /></p><p>உடனடியாக சிறுவனை வெலிகம மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரியவந்துள்ளது.</p><p> பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சடலம் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T02:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து நாமல் எழுதிய அவசர கடிதம்..! தீவிர ஆலோசனையில் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-letter-to-the-secretary-general-parliament-1788747220"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-letter-to-the-secretary-general-parliament-1788747220</id>
            <summary type="text">

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவிருக்கும் நாட்களில் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவிருக்கும் நாட்களில் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிற்கு கடிதமொன்றினை அனுப்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்த கடிதம் இன்று (7) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>சட்டரீதியான தடை&nbsp;</h2><p> </p><p>

நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவர் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு சட்டரீதியான தடை ஏதுமில்லை என சட்ட வட்டாரங்கள் கூறுகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64006fd1-d3c7-4b73-99b9-1c69de5789a5/26-6a9e2271115a1.webp' /></p><p>

நாடாளுமன்ற அமர்வுகள் செவ்வாய்க்கிழமை (08) முதல் 11ஆம் திகதி வரை கூடவிருக்கின்றது.</p><p> 

 எயார்பஸ் ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அந்த அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><p>





</p>]]></content>
            <updated>2026-09-07T02:38:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் நாமலுக்கு ஆபத்து - அநுர அரசு எடுத்துள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-security-for-namal-rajapaksa-1788743426"></link>
            <id>https://tamilwin.com/article/special-security-for-namal-rajapaksa-1788743426</id>
            <summary type="text">
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சேனக பல்லேதென்ன தெரிவித்தார்.
</p><p>
அதற்காக முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்ச விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் வேறு சிலருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 தனி சிறை</b></h2><p>எனினும் அவரது பாதுகாப்பிற்காக தனி சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ed66e5-78a6-4f18-99ea-5a6d2d8aa6c6/26-6a9e10ed02bc4.webp' /></p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸவின் நலம் விசாரிப்பதற்காக அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் வருகை தந்ததாகவும் பல்லேதென்ன மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறையில் உள்ள நாமல் கொலை செய்யப்படலாம் என எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-07T02:19:58+00:00</updated>
        </entry>
    </feed>
