<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-28T02:20:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-recognition-for-sri-lanka-1785204542"></link>
            <id>https://tamilwin.com/article/international-recognition-for-sri-lanka-1785204542</id>
            <summary type="text">இலங்கை பொருளாதார அளவில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நாணய நிதியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதலீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொருளாதார அளவில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நாணய நிதியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

2026 ஆம் ஆண்டின் முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p></p><p> </p><p>

தொடர்புடைய அறிக்கையின்படி, மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.</p><h2>

இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்</h2><p>

இதன்படி, வியட்நாம் முதலிடத்திலும், பெலிஸ் இரண்டாம் இடத்திலும், மொசாம்பிக் மூன்றாம் இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a005680-c372-4e55-971b-56d6afb37152/26-6a680f7eac8d9.webp' /></p><p>
</p><p>
கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டு உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை இதுவரை விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.</p><p>

கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசைகளிலும் இலங்கை 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய மோசடியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் - முக்கிய அரசியல்வாதி மீது வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/500-luxary-vehicles-illegally-imported-1785200922"></link>
            <id>https://tamilwin.com/article/500-luxary-vehicles-illegally-imported-1785200922</id>
            <summary type="text">பல கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 சொகுசு வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சுங்க வரியை ஏய்த்து,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 சொகுசு வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>சுங்க வரியை ஏய்த்து, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 500 வாகனங்கள் வீதிகளில் செலுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p></p><h2>சட்டவிரோதமாக வாகன இறக்குமதி</h2><p>நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அதிநவீன சொகுசு வாகனங்கள் எனவும் இவை பாகங்களாகப் பிரிக்கப்பட்டு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>இந்த சட்டவிரோத நடவடிக்கைக்குச் சில ஊழல் நிறைந்த சுங்க அதிகாரிகளும், வாகனங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1adc73a6-fd85-4d93-8cb8-05460c3bf22c/26-6a68011bc9b23.webp' /></p><p>
சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது வீதிகளில் செலுத்தப்பட்டு வரும் பெரும்பாலான வாகனங்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே அடையாளப்படைத்தியுள்ளது.
</p><p>அடையாளம் காணப்பட்டுள்ள சொகுசு வாகனங்களை விரைவில் பொலிஸ் பொறுப்பில் எடுப்பதற்குப் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தயார் நிலையில் உள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்த சட்டவிரோதப் பதிவுகள் அனைத்தும் கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியின் போதே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சுங்க அதிகாரிகள் மீது பாயும் சட்டம்</h2><p>

போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர்கள் இருவர் உட்படப் பல அதிகாரிகள் அண்மையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77dce21f-ced4-4cda-8d71-fe408272e62a/26-6a680cd3d8a47.webp' /></p><p>
</p><p>கடந்த 2023 ஆம் ஆண்டு பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனைகளில், இரகசியமாக கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 100 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. </p><p>
அவற்றில் பெரும்பாலான வாகனங்களை அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய நபர்களே பயன்படுத்தி வந்துள்ளனர்.</p><p>
அப்போதைய சோதனைகளின் போது மேலும் 400 போலி வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்ட நிலையில், அன்றைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அந்த விரிவான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T01:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு: NPPயின் தலைமைத்துவ குழுவிலிருந்து வந்த எதிர்ப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-npp-lawyer-judges-retirement-age-extension-1785200192"></link>
            <id>https://tamilwin.com/article/senior-npp-lawyer-judges-retirement-age-extension-1785200192</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்திகுள்ளேயே எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விடயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்திகுள்ளேயே எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>இவ்விடயம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றி NPPயின் தலைமைத்துவ குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
</p><p>இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர் 
இந்தப் போராட்டம் கட்சிகளுக்கு இடையிலான போராட்டமோ அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமோ அல்ல. இந்தப் போராட்டத்தின் அர்த்தம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</p><h2>

</h2><p></p><h2>கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>கட்சியினால் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. யாரோ தனிநபர்கள் அல்லது ஏதேனும் தரப்பினர் மத்தியில் அப்படி ஒரு யோசனை இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.
</p><p>இவ்விடயம் தொடர்பில் என்னை அமைதியாக இருக்குமாறு கூறியபோது, நான் எனது நிலைப்பாட்டைத் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் தலைமைக் குழு கூட்டத்திலும் நான் கூற வேண்டியதைக் கூறிவிட்டேன்.</p><p>நான் இதற்கு எதிராக செயற்படுவேன் என்று தெளிவுபடுத்தினேன்.
நான் 45 ஆண்டுகளாக சட்டத்தரணியாகப் பணியாற்றியுள்ளேன். அதற்கு மேலாக சுமார் 50 ஆண்டுகள் இடதுசாரி இயக்கத்தில் செயற்பட்டுள்ளேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f86e71b-32d8-4187-b86f-86011b391848/26-6a68000800eab.webp' /></p><p>நாகரிகமான சமூகத்தில் நாகரிகமான மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே எமது அரசியலின் நோக்கமாகும். எனது அரசியலிலும் நான் அதையே பின்பற்றி வந்துள்ளேன்.
</p><p>எனது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதிக்கும் வழங்கியுள்ளேன். 1970களில் பண்டாரநாயக்க அதன் பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் நிஹால் ஜயவிக்ரம போன்றவர்களுக்கு எதிராக நாம் போராடியது நினைவிருக்கிறது. </p><p>நாகரிகமான சமூகத்தில் நாகரிகமான மனிதர்களாக வாழ்வதற்கு நீதிமன்ற சுதந்திரம் அவசியம் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாம் போராடினோம்.
</p><p>நீதிமன்ற சுதந்திரம் இல்லாவிட்டால் நாம் அடிமைத்தனத்திற்கு தள்ளப்படுவோம். நிறைவேற்று அதிகாரம் தனக்கு வேண்டியதைச் செய்ய முடியும். </p><p>அத்தகைய சூழ்நிலை நாட்டில் அராஜகத்தையே ஏற்படுத்தும்.
எனவே, நாட்டில் மிகவும் முக்கியமான விடயம் நீதிமன்ற சுதந்திரமாகும். அது வீழ்ச்சியடைந்தால், நீதிமன்ற சுதந்திரம் என்ற ஒட்டுமொத்தக் கோட்பாடும் முற்றாகச் சரிந்துவிடும். </p><p>அதன் பின்னர் நாம் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு சர்வாதிகார சமூகம் உருவாவதற்கான சூழலையே விட்டுச் செல்வோம் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T01:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjuna-ramanathan-granted-bail-appearing-court-1785195727"></link>
            <id>https://tamilwin.com/article/arjuna-ramanathan-granted-bail-appearing-court-1785195727</id>
            <summary type="text">கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>

கோட்டை நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, கடந்த 24ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிடியாணை பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4347b215-5c0b-45c2-92ad-9e1d998f67c8/26-6a67f7f2f3bf5.webp' /></p><p>

இவ்வழக்கில் அர்ச்சுனா இராமநாதன் மட்டுமல்லாமல், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>
அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பிடியாணை பிறப்பித்திருந்தது.
</p><p>
இந்நிலையில், நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நாடாளுமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை வழங்கப்பட்டது.

அத்துடன் இவ்வழக்கு ஒக்டோபர் 09 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T00:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்தவிற்கு எதிரான 100 கோடி ரூபா ஊழல் குற்றச்சாட்டில் சாட்சியமளித்த முக்கிய பிரமுகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajin-vaas-give-statement-against-mahinda-1785198091"></link>
            <id>https://tamilwin.com/article/sajin-vaas-give-statement-against-mahinda-1785198091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சாட்சியமளித்துள்ளார்.
</p><p>லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் அவர் மூன்று மணித்தியாலங்கள் சாட்சியமளித்துள்ளார்.</p><p>
இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை 'ஷாங்க்ரி-லா' ஹோட்டலுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையின் போது, சுமார் 100 கோடி ரூபா லஞ்சமாகப் பெறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af6c33c3-ef3e-429b-9926-c6244d466d50/26-6a67f60d6a761.webp' /></p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நேற்றைய தினம் லஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.</p><p>
ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அங்கு சென்ற அவர், சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p>
குறித்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
 ‘லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி’ அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.</p><p>
சிங்கப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியின் படி, TPL Itma நிறுவனம் மற்றும் Heliat எனும் ஆலோசனைக் நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>சஜின் வாஸ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>
மேலும், அப்பணம் தங்கல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் சீ.எஸ்.என். ஊடக வலைப்பின்னலுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை அழைத்திருந்தது.</p><p>
வாக்கு மூலத்தில் எவ்வாறான விடயங்களை சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T00:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நான் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறேன் - இம்ரான் மகரூப் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-maghroob-committed-to-people-s-needs-1785195174"></link>
            <id>https://tamilwin.com/article/imran-maghroob-committed-to-people-s-needs-1785195174</id>
            <summary type="text">கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் தொடர்ச்சியாக 
முயற்சி செய்து வருகிறேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் தொடர்ச்சியாக 
முயற்சி செய்து வருகிறேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(27.07.2026) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கிண்ணியா தள வைத்தியசாலை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

திருகோணமலையில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேசம்
மட்டுமன்றி, அதனைச் சூழவுள்ள பல கிராமங்களின் மக்களும் தங்களது அத்தியாவசிய
சுகாதார சேவைகளுக்காக கிண்ணியா தள வைத்தியசாலையையே நம்பியுள்ளனர்.</p><p>

எனவே, இந்த
வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதன் தரத்தையும்
சேவைகளையும் மேம்படுத்த வேண்டும் என்பது நீண்டகாலமாக மக்களால்
முன்வைக்கப்பட்டு வரும் நியாயமான கோரிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84295278-69b3-4006-bd30-0084e79ab9a1/26-6a67eae08bf7e.webp' /></p><p>
</p><p>
இந்த மக்களின் கோரிக்கையை நான் ஒரு அரசியல் கோஷமாக அல்லாது, மக்களின் அடிப்படை
உரிமையாகக் கருதி பல வருடங்களாக தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றேன்.
</p><p>
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உரைகளிலும், நாடாளுமன்ற ஒத்திவைப்பு
பிரேரணைகளின் போதும், திருகோணமலை மாவட்ட மக்களின் சார்பில் பலமுறை இந்தக்
கோரிக்கையை முன்வைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.</p><h2>தொடர் முயற்சி</h2><p>

அதேபோன்று, ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும்
கிழக்கு மாகாண ஆளுநர்களை பலமுறை நேரில் சந்தித்து இந்த விடயத்தின் அவசியத்தை
வலியுறுத்தியுள்ளேன்.
</p><p>
இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி
மற்றும் நிர்வாகச் சவால்கள் காரணமாக இந்த முயற்சி எதிர்பார்த்த வேகத்தில்
முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce30087-00ad-4d93-9ff1-d0237abc78ca/26-6a67ebd9695f7.webp' /></p><p>

இருந்தபோதிலும், மக்களின் நலனுக்கான இந்தக் கோரிக்கை கைவிடப்படாமல்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நான் செயல்பட்டு
வந்துள்ளேன்.
</p><p>
அதன் ஒரு முக்கிய அங்கமாக, 2025 டிசம்பர் 15 ஆம் திகதி கிழக்கு மாகாண 
ஆளுநருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, கிண்ணியா தள வைத்தியசாலையை
மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை
விடுத்தேன் என குறிபப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-28T00:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடிக்கடி பழுதடையும் அரச பேருந்து.. கடும் சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/students-delayed-getting-school-due-broken-bus-1785194363"></link>
            <id>https://tamilwin.com/article/students-delayed-getting-school-due-broken-bus-1785194363</id>
            <summary type="text">பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>குறித்த பேருந்து, பருத்திதுறையில் இருந்து மாலை 6 மணிக்கு சேவையை ஆரம்பித்து கட்டை காட்டில்
தரித்து காலையில் பருத்தித்துறையை நோக்கி சேவையில் ஈடுபடும்.
</p><p>
இந்த பேருந்தில் பாடசாலை மாணவர்கள், அரச
உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் என பலர் பயணம் செய்து
வருகின்றனர்.</p><p>இந்நிலையில், நேற்று (27.07.2026) காலை முதலாவது சேவையாக கட்டைக்காட்டிலிருந்து ஆரம்பித்து
பருத்தித்துறை நோக்கி செல்லும் வழியில் நாகர்கோயில் குடியிருப்பு பகுதியில்
பழுதடைந்ததால், அதில் பயணத்தினை மேற்கொண்ட மாணவர்கள் உட்பட பலரும் 45
நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதிக்கப்படும் பயணிகள்&nbsp;</h2><p> இதனால் பருத்தித்துறையில்
உள்ள பல உயர்தர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் வழமையாக கிளினிக்
சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் உட்பட அரச
உத்தியோகத்தர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dedb48c-7aa9-4a87-902d-3ef19adcaa4d/26-6a67eae52baa4.webp' /></p><p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 762 வழி சேவை மக்களின் நலன் கருதி
குடியிருப்புகள் ஊடாக தங்களுடைய சேவைகளை செய்து வருகின்ற போதும் இரவு தங்கல்
சேவைக்காக ஈடுபடும் குறித்த பேருந்து பழைய பேருந்தாக இருப்பதினால் அடிக்கடி காலை
நேரங்களில் பழுதடைந்து வருகின்றது.</p><p>

இதேவேளை பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்ற மாணவர்கள் கேவிலிலிருந்து
பருத்தித்துறை நோக்கி செல்கின்ற பேருந்து தாமதமாக செல்வதனால் பெரிதும்
பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
நேற்றைய தினம் நாகர்கோவில் பகுதியில் பேருந்து பழுதான நிலையில் பிறிதொரு
பேருந்து ஒரு மணித்தியாலம் தாமதித்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T23:34:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்திதுறை நகரசபை அமர்வில் வழங்கப்பட்ட முக்கிய அனுமதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-approvals-granted-municipal-council-1785193427"></link>
            <id>https://tamilwin.com/article/important-approvals-granted-municipal-council-1785193427</id>
            <summary type="text">பருத்திதுறை நகரசபை அமர்வு தவிசாளர் வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று(27.07.2026) பிற்பகல் 2 மணியளவில் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்திதுறை நகரசபை அமர்வு தவிசாளர் வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று(27.07.2026) பிற்பகல் 2 மணியளவில் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்றுள்ளது.</p><p>இதில் முதல் நிகழ்வாக கடந்த கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்
நிதி குழு கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களுக்கான சபை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><h2>வழங்கப்பட்ட அனுமதிகள்</h2><p>
மேலும் இலங்கை போக்குவரத்துச் சபையின் நேர கணிப்பாளருக்கான நவீன சந்தை
தொகுதியில் இடவசதி வழங்குவதற்கான சபை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் வெளிவாரியாக ஒப்பந்த
ஆட்களை பதிவு செய்வதற்கான சபை அனுமதி, பருத்தித்துறை மீன் சந்தையில் உள்ள
கூலர் கேள்வி கோரலுக்கான சபை அனுமதி மற்றும் சபை எல்லைக்குள் கழிவு நீர் வாய்க்காலுக்குள் கழிவுநீர் தவிர்ந்த ஏனைய
கழிவுகளை அகற்றுபவர்களுக்கு தண்டம் விதிப்பதற்கான அறிவித்தலுக்கான சபை
அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38ada52-a85a-4f7b-8ac8-d599c0c8009c/26-6a67e5b4cbdd8.webp' /></p><p>வீதியோரங்களில் வெட்டப்டுகின்ற மரங்கள் அகற்றப்படாமல் பிரதேச சபை அவற்றை
அகற்றுவதாகவும் அதற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை, இலங்கை தொலைத் தொடர்பு
நிறுவனம் ஆகியவற்றிடம் அறவீடு செய்வதற்கான சபை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.</p><p>அதுமட்டுமல்லாது வீதி விளக்குகளை
திருத்துவதற்கான நிதிக்கான அனுமதியும்,

Chopper மெஷின் கொள்வனவு செய்வதற்கான மேல் அதிக நிதிக்கான சபை அனுமதியும்,
தும்பளை - கிழக்கு பகுதியில் மலசலகூட அமைப்பில் பற்றாக்குறைக்கான நிதியை
வழங்குவதற்கான சபை அனுமதியும் சபையில் வழங்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் 195
மீட்டர் பொது பாதையாக பதிவு செய்யப்பட்டுள்ள பாதையானது தற்போது 121. 5
மீட்டர் காணப்படுவது தொடர்பாக மிக நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T23:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிட்ணன் செல்வராஜ் எம்.பி தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-meeting-held-under-mp-kitnan-selvaraj-1785192274"></link>
            <id>https://tamilwin.com/article/public-meeting-held-under-mp-kitnan-selvaraj-1785192274</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட்டார சபை அமைக்கும் மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.இதன் போது
கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட்டார சபை அமைக்கும் மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.</p><p>இதன் போது
கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,&nbsp;</p><p></p><h2>நம்பிக்கையில்லா பிரேரணை</h2><p> இன்று விசேஷமாக எதிர்க்கட்சிகள் ஆடிப்போயிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் தழம்பல்
நிலையில் இருக்கின்றன. </p><p>எதிர்க்கட்சிகள் ஒன்று சேர முடியாத நிலைமையிலும், ஒன்று
சேரும் நிலைமையிலும் இருக்கின்றன. இதற்கு இவர்கள் காலத்திற்கு காலம் ஒவ்வொரு
தலைப்புகளை தங்களுடைய கையிலே எடுக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82362964-52c3-4f20-9bf4-6aaff0ff1c54/26-6a67e12894063.webp' /></p><p> எடுக்கும் எந்தவொரு தலைப்பும்
எதிர்க்கட்சிக்கு பிரயோசனமாக போகப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும்.
</p><p>
இதில் நாங்கள் விசேஷமாக அண்மை நாட்களில் நீதி அமைச்சருக்கு எதிராக மகாணசபை
சிறைச்சாலை தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து,
அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம். அந்த
நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சிகள் சுக்குநூறாகின.</p><p></p><h2>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தெரிவு</h2><p> </p><p>60-க்கும்
குறையாத எதிர்க்கட்சி ஆசனங்களைக் கொண்ட எதிர்க்கட்சி, 36-க்கு வரையறுத்தது.
அதுமட்டுமல்ல எதிர்க்கட்சியிலே அமர்ந்திருந்த ஒரு நாடாளுமன்ற
உறுப்பினரும் சஜித் அணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95db1e01-c565-462e-8c85-3b715cecc688/26-6a67e1296b784.webp' /></p><p>அடுத்த கட்டமாக இவர்கள் தூக்கியிருப்பது உயர்நீதிமன்ற நீதியரசர்களின்
தெரிவு சம்பந்தமாகவும், அடுத்து அவர்களுடைய பதவிகாலம் நீடிப்பு சம்பந்தமான
கருத்தியலையுமாகும்.</p><p>ஆனால், இலங்கையின் 1978-ஆம் ஆண்டு
யாப்பின் பிரகாரம் ஒருசில நீதிமன்றங்களுக்கு மட்டுமே, அந்த 78-ஆம் ஆண்டு
யாப்பின் பிரகாரம் நீதியரசர்களை தேர்வு செய்யக்கூடிய கட்டளைகள் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T23:15:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நிறுவனத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! நான்காவது இடத்துக்கு முன்னேற்றம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-records-fourth-biggest-improvement-1785193804"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-records-fourth-biggest-improvement-1785193804</id>
            <summary type="text">சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. </p><p>
இலங்கை, முதலீட்டாளர் உறவுகள் (Investor Relations) மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) ஆகியவற்றில் விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளது.
</p><p>
சர்வதேச நிதி நிறுவனத்தால் (IIF) வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, இத்துறையில் மிக அதிக முன்னேற்றத்தை அடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>IIF இன் அறிக்கை</h2><p>IIF இன் “Investor Relations and Debt Transparency Report 2026: The Transparency Dividend” அறிக்கையின்படி, உலகின் வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகள் 57 இல் இலங்கையின் ஒட்டுமொத்த முதலீட்டாளர் உறவுகள் புள்ளி எண்ணிக்கை 2025 இல் 37.33 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2026 இல் 43.67 வரை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. </p><p>

இத்துறையில் 6.3 புள்ளிகள் என்ற பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இலங்கை, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக "வேகமாக முன்னேறும் நாடுகளின்" பட்டியலில் இணைந்துள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34d0447-a1e1-41d6-a82f-5bd73cc64657/26-6a67e54ebcafc.webp' /></p><p>கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) தரவுகள் மற்றும் கொள்கைகளை முறையாகப் பரப்புரை செய்தமையே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><h2>
கடன் வெளிப்படைத்தன்மை</h2><p>
2025 இல் 19 ஆம் இடத்தில் இருந்த இலங்கை, கடந்த ஆண்டில் பின்பற்றிய முறைசார்ந்த கடன் முகாமைத்துவ நடைமுறைகள் காரணமாக 2026 இல் 5 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.
</p><p>
இந்த முன்னேற்றத்திற்கு அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் ஏனைய அரசு நிறுவனங்கள் இணைந்து முதலீட்டாளர்களுடன் பேணிய முறைசார்ந்த உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடன் தகவல்களை வழங்கியமை பெரிதும் உதவியுள்ளது.
</p><p>
</p><p></p><p>இலங்கை அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் சர்வதேச மூலதனச் சந்தையில் நாட்டின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, முதலீட்டாளர் தளத்தை விரிவுபடுத்தவும், கடன் வாங்கும் செலவைக் குறைக்கவும் எதிர்காலத்தில் இது பெரும் பக்கபலமாக அமையும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T23:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approves-retirement-age-high-court-judges-1785192518"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approves-retirement-age-high-court-judges-1785192518</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
</p><p>
குறித்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை அதன்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>

அதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும்.</p><p></p><h2>14 நாட்கள் அவகாசம்..&nbsp;</h2><p> </p><p>வர்த்தமானி வெளியிடப்பட்டு குறைந்தபட்சம் 14 நாட்கள் கடந்த பிறகு, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9fa03a2-6459-4e8c-810a-dfa13b45c40b/26-6a67e141b4135.webp' /></p><p> </p><p>நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 7 நாட்களுக்குள், எந்தவொரு பிரஜைக்கும் தொடர்புடைய வரைவை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். </p><p>உயர் நீதிமன்றம் அந்த மனு மீதான தனது கருத்தை 14 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் வழங்க வேண்டும்.

அதன்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதிலிருந்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடரவும், அது குறித்த அறிவிப்பை வெளியிடவும் சுமார் 35 நாட்கள் ஆகும் என்று கருதப்படுகின்றது. </p><p>அதன் பிறகு, அது குறித்த நாடாளுமன்ற விவாதமும், தேவைப்பட்டால் பொதுமக்கள் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் - சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள நான்கு பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-four-named-as-suspects-1785190944"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-four-named-as-suspects-1785190944</id>
            <summary type="text">அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 10 சிறை அதிகாரிகளும் 22 கைதிகளும் கொல்லப்பட்டனர். மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p></p><h2>பொலிஸார் தகவல்&nbsp;&nbsp;</h2><p>

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (27) நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46ef2a6-3eab-471c-b504-4bcd5b73c27b/26-6a67dbba4beb9.webp' /></p><p>மேலும் அரசுத் தரப்பு சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்னிலையானது.&nbsp;</p><p>

அதன்போது, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சுபுன் மதுசங்க என்ற ஹீனட்டியன சுபுன், அஷான் பெர்னாண்டோ என்ற களு மல்லி, சமீர சம்பத் என்ற பபா மற்றும் ஷேன் திலன் சில்வா ஆகியோர் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களாக தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-27T22:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/icc-faces-challenge-in-choosing-new-prosecutor-1785187606"></link>
            <id>https://tamilwin.com/article/icc-faces-challenge-in-choosing-new-prosecutor-1785187606</id>
            <summary type="text">சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை அரசுத்தரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய கரீம் கான் கடுமையான நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை அரசுத்தரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய கரீம் கான் கடுமையான நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்
பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இதன் காரணமாக, புதிய அரசுத்தரப்பு சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதில் சர்வதேச
குற்றவியல் நீதிமன்றம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின்&nbsp;இராஜதந்திர அழுத்தம்</h2><p>
</p><p>
மேலும், அமெரிக்காவின் கடுமையான இராஜதந்திர அழுத்தம் மற்றும் உறுப்பு நாடுகள்
தொடர்ச்சியாக அமைப்பிலிருந்து வெளியேறி வருவது நீதிமன்றத்திற்கு மேலும்
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
வெனிசுலா, புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, சாட்
நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி வெளியேறுவதற்கான
நடவடிக்கைகளைத் தொடங்கிய ஐந்தாவது நாடாக மாறியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2790877b-c4d7-4a59-9514-70199b47b549/26-6a67cec6d0fb2.webp' /></p><p>இந்த நாடுகள் அனைத்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேல்லை நைஜீரிய அல்லாத
நாடுகளுக்கு எதிராக மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
</p><p>
அதேவேளையில், நீதிமன்றத்தின் 125 உறுப்பு நாடுகளில் 82 நாடுகள் வாக்களித்து
கரீம் கானைப் பதவியிலிருந்து நீக்கின.
</p><p>
புதிய சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் குறித்து இன்னும்
இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றபோதிலும், வரும் புத்தாண்டுக்கு முன்பாக
இதற்கான வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்</h2><p>
</p><p>
காசாவில் போர் குற்றங்கள் புரிந்ததாக இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராகப்
பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அமெரிக்கப்
படைகள் தொடர்பான விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்றும் வொஷிங்டன் தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறது.
</p><p>
மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து நாடுகள் வெளியேற அமெரிக்க
அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7036443f-ec18-4ec3-8c28-42885686f69a/26-6a67cec785006.webp' /></p><p>
</p><p>
புதிய சட்டத்தரணி தேர்ந்தெடுக்கப்படும் வரை, ஃபிஜி நாட்டைச் சேர்ந்த நஜாத்
ஷமீன் கான் மற்றும் செனகல் நாட்டைச் சேர்ந்த மாமே மண்டியாக் நியாங் ஆகிய
இரண்டு துணை அரசுத்தரப்பு சட்டத்தரணிகளும் இந்த அலுவலகத்தைத் தற்காலிகமாக
நிர்வாகம் செய்வார்கள்.
</p><p>
இத்தகைய பின்னடைவுகளுக்கு மத்தியிலும், "மனிதகுலத்தின் மனசாட்சியைப் உலுக்கும்
குற்றங்களுக்கு நீதியை வழங்கி, தவறு செய்தவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதில்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உறுதியுடன் தொடர்ந்து செயல்படும்" என்று
நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனக் கனிமங்களுக்கு அமெரிக்காத் தடை - ட்ரம்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-ban-on-chinese-minerals-pressure-on-trump-1785186522"></link>
            <id>https://tamilwin.com/article/us-ban-on-chinese-minerals-pressure-on-trump-1785186522</id>
            <summary type="text">சீனாவில் இருந்து அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அரிதான பூமி காந்தங்கள்
இறக்குமதி செய்வதை ஜனவரி 1, 2027-க்குள் முற்றிலும் நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி
டொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் இருந்து அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அரிதான பூமி காந்தங்கள்
இறக்குமதி செய்வதை ஜனவரி 1, 2027-க்குள் முற்றிலும் நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தித் திறன் தேவையானதை விட மிகக்
குறைவாக இருப்பதால், இந்த கெடுவைச் சந்திப்பதில் பெரும் சவால் எழுந்துள்ளது.</p><p></p><h2>உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை</h2><p>
சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள்
மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான கனிமங்களை வாங்குவதைத் தவிர்க்க
பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் எவ்வித விலக்கும்
அளிக்கப்படாது என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545c18ec-4dc5-4dff-b318-cafd19c354dd/26-6a67cb9a9168a.webp' /></p><p>
இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.

2025-ல் அமெரிக்காவின் அரிதான பூமி காந்தங்களின் தேவை சுமார் 48,000 மெட்ரிக் டொன்கள் ஆகும்.</p><p>ஆனால், அமெரிக்க உள்நாட்டு நிறுவனங்களால் 300 மெட்ரிக் டொன்கள் மட்டுமே விநியோகிக்க முடிந்தது. மேலும், அமெரிக்கா 2015-க்குப் பிறகு டங்ஸ்டனையும், 1959-க்குப் பிறகு டான்டலத்தையும் உற்பத்தி செய்யவில்லை.</p><p>

இவற்றை மீண்டும் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் இன்னும் தொடக்கக் கட்டத்திலேயே உள்ளன. உலகளவில் கனிமங்களைச் சுத்திகரிக்கும் துறையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.</p><p></p><h2>கனிமச் சுத்திகரிப்பு</h2><p>
</p><p>
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை பில்லியன் கணக்கில் டொலர்களை முதலீடு
செய்திருந்தாலும், கனிமங்களைச் சுத்திகரித்து காந்தங்களாக மாற்றும்
தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்குவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என
நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p><p>
சீனா மானியங்கள் வழங்கி குறைந்த விலையில் கனிமங்களைச் சந்தையில் விற்பனை
செய்வதால், அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்கள் பொருளாதார ரீதியாகச் செயல்பட
கடினமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a86864-293f-45fa-83b4-7f5ae1edbaa2/26-6a67cb99e0da8.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா கனிமங்களைச் சேமித்து வைப்பதற்காக 12 பில்லியன் டொலர் மதிப்பிலான
'புரொஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தை ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம்
தொடங்கியுள்ளது.
</p><p>
ஆரம்பக் கட்டத்தில் சீனாவில் இருந்தும் கனிமங்களை வாங்க வேண்டியிருக்கும்
என்பதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p>

அமெரிக்க உற்பத்தி இயல்பு நிலைக்கு வரும் வரை தென்கொரியா, ஜப்பான் போன்ற நட்பு
நாடுகளுடன் இணைந்து கனிம விநியோகத்தைப் பூர்த்தி செய்ய நிபுணர்கள்
பரிந்துரைக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - மூவர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-america-three-people-tragically-died-1785185311"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-america-three-people-tragically-died-1785185311</id>
            <summary type="text">அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவின்
போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவின்
போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு வயது குழந்தை உட்பட 4 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சியாட்டில் நகரின் 'ஸ்பேஸ் நீடில்' பகுதியின் கீழ் நடைபெற்ற 'பைட் ஆஃப்
சியாட்டில்' உணவுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த போது
இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
இரண்டு சந்தேக நபர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கி மோதலே இதற்குக் காரணம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.</p><p>

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் பொலிசிடம் சரணடைந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றொரு நபர் சம்பவ
இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d7882c-2a40-412c-9221-b76338d206d6/26-6a67c63b391f1.webp' /></p><p>

தப்பியோடிய நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தில் 19 மற்றும் 44 வயதுடைய இரு ஆண்களும், 56 வயதுடைய பெண் ஒருவரும்
உயிரிழந்துள்ளனர்.
</p><p>
காயமடைந்த 2 வயது குழந்தை உட்பட 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பயங்கரமான வன்முறை</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சியாட்டில் நகரின் மேயர் கேட்டி வில்சன்
(Katie Wilson),</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a048c561-d5f7-4008-9ad7-5f9c35423072/26-6a67c63a8384a.webp' /></p><p> </p><p>"இது ஒரு பயங்கரமான வன்முறைச் சம்பவம். நமது நகரிலும்
நாட்டிலும் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவது
பெரும் கவலையளிக்கிறது," என தெரிவித்துள்ளார்.
</p><p>
உணவுத் திருவிழாவில் கடை அமைத்திருந்த ஒருவர் நேரலை செய்து கொண்டிருந்த போது
இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததால், மக்கள் அலறியடித்து ஓடும் பயங்கரக்
காட்சிகள் கெமராவில் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மாணவர்களின் போராட்டத்திற்கு லண்டனில் இருந்தும் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/london-supports-indian-students-protest-1785184292"></link>
            <id>https://tamilwin.com/article/london-supports-indian-students-protest-1785184292</id>
            <summary type="text">இந்தியாவில் &#039;காஃக்ரோச் ஜனதா கட்சி&#039; தலைமையிலான மாணவர் அமைப்பினர் நடத்திய
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் 'காஃக்ரோச் ஜனதா கட்சி' தலைமையிலான மாணவர் அமைப்பினர் நடத்திய
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா
துன்பெர்க் லண்டனில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
</p><p>
இந்தியாவில் கல்வி முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தியும் புதுடெல்லியில் மாணவர்கள் பல நாட்கள் தீவிரப்
போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக இந்தியாவின் கல்வி அமைச்சர் தனது பதவியிலிருந்து விலகினார்.</p><p></p><h2>இந்தியக் கல்வி அமைச்சரின் பதவி விலகல்</h2><p>
லண்டனின் டிராஃபால்கர் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் உரையாற்றிய
கிரெட்டா துன்பெர்க்,</p><p> "இந்திய மாணவர்களின் போராட்டம் நம் அனைவரையும்
பெருமையடையச் செய்துள்ளதுடன், புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/209faf3b-a785-4b67-9a12-c94d5e62505b/26-6a67c2619b190.webp' /></p><p>
</p><p>
மக்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்த்து நிற்கும் போது என்ன சாதிக்க முடியும்
என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். </p><p>மக்களின் உண்மையான அதிகாரத்தை அவர்கள்
உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்," என பாராட்டியுள்ளார்.
</p><p>
இந்திய மாணவர்களின் நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான இந்த போராட்டம்
ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமானது என்று குறிப்பிட்ட அவர், இந்திய இளைஞர்களுடன்
தாம் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T21:58:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக அச்சுறுத்தலுக்கு மத்தியில் அநுர அரசு எடுத்த அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-threat-anura-govt-takes-bold-step-1785181663"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-threat-anura-govt-takes-bold-step-1785181663</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கூட்டங்கள் மற்றும் சம்மேளனங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி சட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கூட்டங்கள் மற்றும் சம்மேளனங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஒரு அவசரமான ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.</p><p>

அதேவேளை தேரர்களுடைய சங்க சம்மேளனம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த சங்க சம்மேளனமானது ஐக்கிய தேசிய கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அவ்வாறெனில் இந்த சங்க சம்மேளனத்தின் பின்னணியிலும் ஒரு அரசியல் தலையீடு காணப்படுவதுடன் தற்போதைய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த சம்மேளனம் செயற்படுவது புலனாகிறது. </p><p>

இது இவ்வாறு இருக்க தெவிநுவர - உற்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் 769 ஆவது எசல மகா பெரஹரவிற்கு பாதாள உலகத்தினரிடமிருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் காவடி நடனத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த அரசாங்கமானது ஒரு காவடி நடனத்தைக் கூட உரிய பாதுகாப்புடன் நடத்த முடியாது என்று கூறுவதிலிருந்து இது எப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கும் என்றொரு கேள்வி எழுவதாக நாமல் ராஜபக்ச தனது மேடைப் பேச்சொன்றில் தெரிவித்திருந்தார்.
</p><p>
இந்த விடயங்கள் குறித்து மேலதிக விபரங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாக பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/43yk7cEO69E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T21:58:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி விவகாரம்.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி வெளியிட்டுள்ள பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-special-facebook-update-1785176501"></link>
            <id>https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-special-facebook-update-1785176501</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமை மற்றும் நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் 
கஜேந்திரகுமார் பொன்னம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமை மற்றும் நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், "இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும்.</p><p></p><h2>ஜனநாயக விரோதமான செயல்</h2><p>
</p><p>
எனவே,
நாளை நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபைக்கான புதிய உபதவிசாளர் தெரிவு தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பாக உள்ள ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டை ஆதரித்து, தமிழ்த் தேசிய பேரவை செயற்படும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba621c7-b7e2-46ac-93ea-7f152f2a1bf2/26-6a67c06cd257d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T21:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த குடும்பத்திற்கு பதற்றத்தை ஏற்படுத்தும் நீதிபதிகள் விவகாரம் - முடிவில் மாறாத அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-anura-government-cid-inquiry-1785177615"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-anura-government-cid-inquiry-1785177615</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.&amp;nbsp;
குறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>
</p><p>குறிப்பாக, இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதா தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு எட்ட முடியும் என அரசாங்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படியே, இந்த மசோதா முன்வைக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறான கண்டனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படலாம். அதனாலேயே இவ்வாறு அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qQPDt_r7lfI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T21:55:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் - 1405 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/congo-ebola-death-toll-reaches-1-405-1785182644"></link>
            <id>https://tamilwin.com/article/congo-ebola-death-toll-reaches-1-405-1785182644</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,200 ஆக அதிகரித்துள்ளதுடன்&amp;nbsp; 1,40...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,200 ஆக அதிகரித்துள்ளதுடன்&nbsp; 1,405 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள்
தெரிவிக்கின்றன.
</p><p>
அங்கு பரவி வரும் 17ஆவது எபோலா அலையைக் கட்டுப்படுத்த மருத்துவக் குழுவினர்
தீவிரமாகப் போராடி வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 1,000
பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>எபோலா வைரஸ்</h2><p>

கடந்த மே 15 அன்று கண்டறியப்பட்ட இந்த எபோலா அலை, 'புண்டிபுக்யோ' என்ற வைரஸ்
வகையால் ஏற்படுகிறது.

இந்த குறிப்பிட்ட வகை எபோலா வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ
அல்லது சிகிச்சைகளோ இல்லை என்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e917dd-2430-4749-b889-25a5563f3f33/26-6a67bce2499f6.webp' /></p><p>பாதிக்கப்பட்ட வழக்குகளில் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தெற்கு
சூடான் மற்றும் உகாண்டா எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இடூரி மாகாணத்திலேயே
பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. </p><p>மேலும் இந்த
வைரஸ் இதுவரை 5 மாகாணங்களுக்குப் பரவியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் நிலவும் போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும்
மருத்துவ பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்கள்
நிலவுகின்றன.</p><p></p><h2>புதிய தடுப்பூசி</h2><p>அத்துடன், ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து சில மருத்துவமனை ஊழியர்கள்
மேற்கொண்டு வரும் போராட்டங்களும் தடுப்பு நடவடிக்கைகளைப் பாதித்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a73f020-0d42-4b28-b0de-c32314c641fe/26-6a67bce2ef8b4.webp' /></p><p>இந்த
எபோலா அலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எபோலா 'புண்டிபுக்யோ' வைரஸைக் கட்டுப்படுத்த ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட
பல்வேறு சர்வதேச ஆய்வுக் குழுக்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.</p><p>

ஆக்சுஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள சோதனை அளவிலான புதிய தடுப்பூசி
முதற்கட்டமாகச் தன்னார்வலர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T20:23:08+00:00</updated>
        </entry>
    </feed>
