<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-28T06:31:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[400 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு..! அடுத்த சில வருடங்களில் நாடு திவாலாகிவிடும் என பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-bankrupt-1785220052"></link>
            <id>https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-bankrupt-1785220052</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி டொலர்களை வாங்கிக் கொண்டே இருக்கிறது, இதன் காரணமாக டொலரின் மதிப்பு அதிகரித்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாக பிவிதுறு ஹெல உறுமய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி டொலர்களை வாங்கிக் கொண்டே இருக்கிறது, இதன் காரணமாக டொலரின் மதிப்பு அதிகரித்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். </p><p>

சந்தையில் இருந்து இவ்வளவு பெரிய அளவில் டொலர்கள் வாங்கப்பட்டொல், டொலரின் மதிப்பு நிச்சயமாக 400 ரூபாயைத் தாண்டும் அபாயம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>கடனை திருப்பிச் செலுத்தல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 2027ஆம் ஆண்டிலிருந்து, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான கடனைத் திருப்பிச் செலுத்த நமக்கு 11.1 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது. நம்மிடம் கையிருப்பில் 5 பில்லியன் டொலர் மட்டுமே உள்ளது. எனவே மீதமுள்ள தொகையை சந்தையிலிருந்து டொலர்களை வாங்குவதன் மூலம் திரட்ட வேண்டும்.</p><p>இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தேவையான டொலர்களைக் கண்டறிய, மத்திய வங்கி அந்நியச் செலாவணி சந்தையிலிருந்து டொலர்களை வாங்க வேண்டும்.</p><p></p><p> மத்திய வங்கி டொலர்களை வாங்கிக் கொண்டே இருக்கிறது, டொலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து வருகிறது.</p><p>

சந்தையில் இருந்து இவ்வளவு பெரிய அளவில் டொலர்கள் வாங்கப்பட்டால், டொலரின் மதிப்பு நிச்சயமாக 400 ரூபாயை தாண்டும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால், ஏற்கனவே வாழ்க்கைச் செலவால் நெருக்கடியில் இருக்கும் மக்களின் வாழ்க்கைச் சுமை மேலும் அதிகரிக்கும். 

இப்போது வெளிநாட்டுக் கடன்களை அடைக்க டொலர்களே இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f73b1ed-c587-443b-b50f-a316717de605/26-6a684c8922363.webp' /></p><h2>டொலரின் மதிப்பு</h2><p> </p><p>சந்தையில் இருந்து டொலர்களை வாங்கச் சென்றால், டொலரின் மதிப்பு 400ஐத் தாண்டும், பொருட்களின் விலைகள் உயரும், வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும், அரசாங்கம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். </p><p>

நாம் டொலர்களை வாங்கவில்லை என்றால், 2027ஆம் ஆண்டுக்குள், அல்லது 2028-29ஆம் ஆண்டுக்குள், நாட்டினால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மீண்டும் திவாலாகிவிடும்.</p><p> 

2027ல் நாம் 2.5 பில்லியன் டொலர்களை மட்டுமே செலுத்த நேர்ந்தால், நமது டொலர் வருவாயை அதிகரிப்பதன் மூலமும், டொலர் இறக்குமதியின் செலவைக் குறைப்பதன் மூலமும் இந்தச் சூழ்நிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T06:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வு வயது உயர்வு திருத்தம் நிராகரிப்பு - நீதி அமைச்சருக்குக் காட்டமான கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-retirement-age-of-judges-rejected-1785219549"></link>
            <id>https://tamilwin.com/article/increase-retirement-age-of-judges-rejected-1785219549</id>
            <summary type="text">இலங்கையில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை அமைப்பான இலங்கை நீதிச்சேவை சங்கம்,
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை அமைப்பான இலங்கை நீதிச்சேவை சங்கம்,
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள அரசமைப்புத்
திருத்தத் திட்டத்தை முற்றாக நிராகரித்துள்ளது.</p><p>

இந்த முன்மொழிவு தேவையற்றது மட்டுமன்றி, நாட்டின் நீதித்துறை சுதந்திரம்
மற்றும் நடுநிலைமைக்குப் பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறி,
ஒன்பது முக்கிய காரணங்களை முன்வைத்து இந்த சங்கம் தனது எதிர்ப்பை அரசுக்குத்
தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சங்கம்
இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது, கீழ்மட்டங்களில் பணிபுரியும்
தகுதியான இளம் நீதிபதிகளின் தொழில்முறை முன்னேற்றத்தைக் கடுமையாகப் பாதிக்கும்
என்று சங்கம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad49c91b-2b9c-4269-98f3-7676d0803eea/26-6a684a7baecbf.webp' /></p><p>
</p><p>
 இது நீதித்துறையின் இயல்பான மறுமலர்ச்சியைத்
தடுத்து, பதவிகளில் தேக்கநிலையை உருவாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சூழலில் இவ்வாறானதொரு திருத்தம் அவசரசரமாகக்
கொண்டுவரப்படுவதன் பின்னணியிலுள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் நோக்கங்கள்
குறித்தும் இலங்கை நீதிச்சேவை சங்கம் கேள்விகளை எழுப்பியுள்ளது.</p><h2>

நிராகரிப்பதற்கான 9 காரணிகள்</h2><p>
இதற்கமைய, </p><p>

01. நீதித்துறையின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும்
சாத்தியம்.</p><p>

02. இளம் நீதிபதிகளின் பதவி உயர்வுகளில் தேக்கநிலை ஏற்படுதல்.
</p><p>
03. திருத்தச் சட்டமுறைகளில் தெளிவான அணுகுமுறை இல்லாமை.</p><p>

04. நீடிக்கப்பட்ட பதவிக் காலத்தைப் பெறும் நீதியரசர்கள் மீது அரசியல்
செல்வாக்கு செலுத்தப்படக்கூடிய அபாயம்.
</p><p>
05. சட்ட ரீதியான ஓய்வுபெறும் விதிகளில் மாற்றம் செய்வதால் ஏற்படும் பிற
சிக்கல்கள்.
</p><p>
06. நீதித்துறை அமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை பாதிக்கப்படல்.
</p><p>
07. நீதித்துறை சார்ந்த முக்கிய பங்குதாரர்களுடன் பரந்த அளவிலான பேச்சுள்
நடத்தப்படாமை.
</p><p>
08. முன்மொழிவு கொண்டுவரப்படும் காலம் மற்றும் அதன் பின்னணியிலுள்ள நோக்கம்
குறித்த கவலைகள்.</p><p>

09. நீதிமன்றங்களின் வழக்குகளை நிர்வகிக்கும் திறன் மற்றும் ஒட்டுமொத்த
செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய தொய்வு.</p><h2>

திருத்தங்களுக்கு எதிரான போராட்டம்</h2><p>
குறுகிய கால நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொள்ளாமல், நீதித்துறையின் நீண்டகால
நலன் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு
சட்டவாக்காளர்களையும் அரசு அதிகாரிகளையும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/468dae20-0264-4512-abc8-3a10d83057ab/26-6a684a7c78ab1.webp' /></p><p>

அரசமைப்பு ரீதியாக நீதித்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும்போது, சட்டச்
சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் விரிவான கலந்தாலோசனைகளை நடத்திய பின்னரே 
முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டில் அரச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை உணர்வுபூர்வமான
விவாதமாக உருவெடுத்துள்ள நிலையில், நீதித்துறையில் மறைமுகமாகத் தலையிடும்
எந்தவொரு முயற்சியும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் விமர்சனங்களைச்
சந்திக்கும் என்று தெரிவித்துள்ள இலங்கை நீதிச்சேவை சங்கம், தங்களது
கவலைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்தத் திருத்தத்துக்கு எதிரான
போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாவட்ட வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-players-records-youth-sports-festival-1785216935"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-players-records-youth-sports-festival-1785216935</id>
            <summary type="text">தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் விளையாட்டு
விழாவின் இவ்வாண்டுக்கான 36ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழா குழுப்
போட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் விளையாட்டு
விழாவின் இவ்வாண்டுக்கான 36ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழா குழுப்
போட்டிகள் இடம்பெற்று வருகின்றது.</p><p>
அந்த வகையில் 36ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழாவின் கபடி போட்டிகள்
இம்மாதம் 11,12 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்றது.
</p><h2>தேசிய ரீதியாக இரண்டாம் இடம்</h2><p>
தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட இவ் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில்
மொத்தமாக 26அணிகள் பங்குபற்றியதுடன், அப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள்
அணி சிறப்பாக விளையாடி தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf82b7e6-500e-4e91-85e6-bffeaaf41e9b/26-6a6843d107607.webp' /></p><p>வீரர்களை கௌரவிக்கும் முகமாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் தேசிய
இளைஞர்கள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட அரசாங்க
அதிபர் தலைமையில் நேற்றையதினம்(27) மாவட்டச் செயலக மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>இந்நிகழ்வில் தேசிய மட்ட கபடிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்
கொண்ட கிளிநொச்சி மாவட்ட வீரர்கள் பாண்ட் வாத்தியத்தியத்துடன் மாவட்ட செயலக
நுழைவாயிலிருந்து மாநாட்டு மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு பதக்கம்
அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
</p><p>நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற
கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,தேசிய சம்மேளன உபதலைவர், இளைஞர் கழக
சம்மேளனத்தின் உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள்,
விளையாட்டு துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T05:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிடமாக உள்ள 8 நீதியரசர் பதவிகளையும் நிரப்புங்கள் : அரசிடம் அஜித் பி பெரேரா எம்.பி. வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-vacant-judicial-posts-1785217521"></link>
            <id>https://tamilwin.com/article/8-vacant-judicial-posts-1785217521</id>
            <summary type="text">அரசு தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நீதித்துறையின் சுயாதீனத்தில்
தலையிடுவதைத் தவிர்த்து, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நீதித்துறையின் சுயாதீனத்தில்
தலையிடுவதைத் தவிர்த்து, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் வெற்றிடமாக உள்ள நீதியரசர்களின் பதவிகளை உடனடியாக நிரப்ப
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.
</p><p>
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவானது, நீதித்துறையின்
திறனை மேம்படுத்துவதற்காக அல்லாமல் அரசின் குறுகிய அரசியல் நோக்கங்களை
நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கொண்டுவரப்படுகின்றது.</p><p></p><h2>வெற்றிடங்களை நிரப்புங்கள்..</h2><p> </p><p>கீழ் நீதிமன்ற நீதிபதிகளைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிச்சேவை அதிகாரிகள் சங்கம், இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் என்பன இந்தத்
திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும், அரசு எதிர்வரும்
டிசம்பர் 1ஆம் திகதிக்கு முன்னர் இதனை நிறைவேற்றத் துடிப்பது பெரும்
சந்தேகங்களை எழுப்புகின்றது.
</p><p>
அரசும் ஜனாதிபதியும் உண்மையிலேயே நீதித்துறையின் சுயாதீனத்தையும் வழக்கு
விசாரணைகளின் வேகத்தையும் உறுதிப்படுத்த விரும்பினால், தற்போது உயர்
நீதிமன்றத்தில் வெற்றிடமாக உள்ள 4 பதவிகளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்
வெற்றிடமாக உள்ள 4 பதவிகளையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b42f63c9-617e-4d6e-9347-3e14985b38c5/26-6a684438e4f70.webp' /></p><p> வரலாற்று ரீதியாக
இவ்வளவு அதிகமான நீதிமன்ற வெற்றிட பணியிடங்கள் நிரப்பப்படாமல்
வைக்கப்பட்டதில்லை.
</p><p>
ஓய்வுபெறும் வயதை இரு வருடங்களால் உயர்த்துவது, ஓய்வுபெறும் நிலையிலுள்ள
குறிப்பிட்ட ஒரு நீதியரசரைப் பாதுகாப்பதற்காகவே செய்யப்படுவதாக விமர்சனங்கள்
எழுந்துள்ளன. </p><p>அவ்வாறு ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் அத்தியாவசியம் எனக்
கருதுவது, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள ஏனைய
தகைமை வாய்ந்த, அனுபவமிக்க நீதியரசர்களின் திறனைக் கேள்விக்குள்ளாக்கும்
செயலாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/162cbb3f-1939-48c2-9530-1fbf5bead048/26-6a6844383f106.webp' /></p><p>

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கான சட்ட திருத்தங்கள், வழக்கு விசாரணைகளை
விரைவுபடுத்துவதற்கான சிபாரிசுகள் மற்றும் தேர்தல் காலத்தில் வாக்குறுதி
அளிக்கப்பட்ட புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் அனைத்தும் வரைவு
செய்யப்பட்டுத் தயார் நிலையில் உள்ள போதிலும், அவற்றை ஓரமாகத் தள்ளிவிட்டு
இந்த ஒரு குறிப்பிட்ட திருத்தத்தை மட்டும் அவசர அவசரமாகக் கொண்டுவருவது
நியாயமற்றது.</p><p>

கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர்கள் மற்றும் அரசியல்
நெருக்கடிகளின்போது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்த வரலாற்றுச்
சிறப்புமிக்க நீதித்துறையில் அரசு நியாயமற்ற முறையில் தலையிடுவதால், இதுவரைக்
காலம் தமது கௌரவத்தைப் பாதுகாத்துச் சேவை செய்த நீதியரசர்கள் தமது பெயரைக்
கெடுத்துக்கொண்டு ஓய்வுபெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>எனவே, இந்த அவசர
அரசமைப்புத் திருத்தத்தைக் கைவிட்டு, வெற்றிடமாகவுள்ள 8 நீதியரசர் பதவிகளையும்
உடனடியாக நிரப்பி, அரசு தனது நல்லெண்ணத்தை நிரூபிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:55:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliamentarian-chaminda-wijesiri-sentenced-1785217599"></link>
            <id>https://tamilwin.com/article/parliamentarian-chaminda-wijesiri-sentenced-1785217599</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் வழிமறித்தமை, பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

சட்டவிரோதமான முறையில் வழிமறித்தமை, பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவரது சாரதி மற்றும் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p>
</p><h2><b>
பொலிஸாருடன் வாய்த்தர்க்கம்</b></h2><p>வழக்கை விசாரித்த பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெய்ராம் ட்ரொட்ஸ்கி, சமிந்த விஜேசிறி மற்றும் சாரதி பந்துல ரத்நாயக்க ஆகிய இரு பிரதிவாதிகளையும் 4 குற்றச்சாட்டுகளுக்கும், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ரசிக்க கருணாதிலகவை 3 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளியாகத் தீர்ப்பளித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f9cb4c5-b4b6-486c-983a-ae405702ed29/26-6a6843ce7f6ca.webp' /></p><p>எனினும், சாரதி பந்துல ரத்நாயக்க உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதியன்று பண்டாரவளை நகரின் வட்டவளைக்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்டோர் ஜீப் வண்டிகளில் பயணித்துக்கொண்டிருந்தனர். </p><p>

இதன்போது, அவரது ஜீப் வண்டியை பொலிஸ் ஜீப் வொன்று முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே குற்றச்செயலுக்கான காரணமாக அமைந்தமை வழக்கு விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>சமிந்த விஜேசிறி, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:54:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெவிநுவர ஸ்ரீவிஷ்ணு தேவாலய பெரஹராவில் காவடி ஆட்டக் குழுக்கள் பங்கேற்பதற்கு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/permission-granted-to-kavadi-dance-groups-1785215611"></link>
            <id>https://tamilwin.com/article/permission-granted-to-kavadi-dance-groups-1785215611</id>
            <summary type="text">தெவிநுவர (தேவேந்திரமுனை) ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹராவில் காவடி ஆட்டக் குழுக்கள் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிடைக்கப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெவிநுவர (தேவேந்திரமுனை) ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹராவில் காவடி ஆட்டக் குழுக்கள் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கிடைக்கப் பெற்ற புலனாய்வு அறிக்கைகளின் பிரகாரம் பாதுகாப்பு காரணங்களுக்காக காவடி ஆட்டத்தை நீக்குமாறு பொலிஸார் முதலில் பரிந்துரைத்திருந்த போதிலும், தற்போது அந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டு அனைத்து காவடி குழுக்களுக்கும் பெரஹரவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>பாதாள உலக&nbsp;தரப்புகளுக்கு இடையில் மோதல்</h2><p>
ஆரம்பத்தில், குறிப்பிட்ட சில குழுக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் தீர்மானத்தினால், அதனுடன் தொடர்புடைய சில பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே உரசல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டன.
</p><p>
இல்லிகாரம் தொடர்பில் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவுக்கு, கஞ்சிபானி இம்ரான் மரண அச்சுறுத்தல் விடுத்தமையை அடுத்து இவ்விவகாரம் நாட்டின் முழுக் கவனத்தையும் ஈர்த்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a613f0-f1ba-49d0-b61d-01b3bfa026ea/26-6a683d3488b65.webp' /></p><p>இம்ரானின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து தெவுந்தர பகுதியைச் சேர்ந்த பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவனும், போதைப்பொருள் கடத்தல்காரனாகவும் அறியப்படும் தெஹிபாலே மல்லி மற்றும் கஞ்சிபானி இம்ரான் ஆகிய தரப்புகளுக்கு இடையில் மோதல் வெடித்தது.
</p><p>
தமது மத நம்பிக்கைகள் தொடர்பில் தலையிட வேண்டாம் என கஞ்சிபானி இம்ரானுக்கு பாலே மல்லி வெளியிட்டுள்ள ஓடியோ ஒன்றும் வெளியாகியிருந்தது. </p><p>இந்தப் பின்னணியில், கஞ்சிபானியின் கூட்டாளி எனக் கூறப்படும் ஷான் பிரமித்தின் மாமாவின் வீட்டை இலக்காகக் கொண்டு, தெஹிபாலே மல்லியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் சிலரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>மேலதிக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை</h2><p>

இச்சம்பவங்களை அடுத்து, புலனாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டியும், நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டும், காவடி நடனத்தை மாத்திரம் பெரஹராவிலிருந்து நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் பரிந்துரை செய்திருந்தார்.
</p><p>
ஆனால், தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திங்கட்கிழமை (27) காலை அனைத்து காவடி குழுக்களுக்கும் பெரஹராவில் கலந்துகொள்ளும் அனுமதியை வழங்குவதற்கு திடீர் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd025f71-1a72-449d-bf14-79cbf727a0ad/26-6a683d353d6f2.webp' /></p><p>இந்த பரஸ்பர முரண்பாட்டை அடுத்து, இன்று மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன, உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். </p><p>இதில் மேற்கொண்ட தீர்மானத்தின் படி அனைத்து காவடி குழுக்களுக்கும் பெரஹரவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:28:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பை மீறியுள்ள ஜனாதிபதி : எழுந்துள்ள அதிரடி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-not-obey-the-constition-says-basl-1785215897"></link>
            <id>https://tamilwin.com/article/anura-not-obey-the-constition-says-basl-1785215897</id>
            <summary type="text">ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறியுள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறியுள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது</h2><p>
</p><p>நீதிமன்ற அமைப்பின் திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று எந்தவொரு அறிக்கையிலோ அல்லது தரப்பிலோ முன்மொழியப்படாத நிலையிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்குத் தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
வெற்றிடங்களை நிரப்பாமல் இந்த வயதெல்லை நீடிப்பை மேற்கொள்வது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நேரடி அரசியலமைப்பு மீறல் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3784c78e-cc31-4274-b296-e81bff334a1d/26-6a68427a82193.webp' /></p><p>
</p><p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் 8 நீதிபதி வெற்றிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. வழக்கமாக ஒரு நீதிபதி ஓய்வுபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அடுத்த நியமனத்திற்கான பெயரை ஜனாதிபதி பரிந்துரைப்பதே மரபு. ஆனால், அந்த அரசியலமைப்பு கடமையை ஜனாதிபதி செய்யத் தவறியுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
நிலுவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்பாமல், வேறு வழிகளில் நீதித்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசு முயல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
ஜனாதிபதியின் இந்தச் செயல் அரசியலமைப்பை மீறும் செயல் எனவும், இது ஒரு வகையான ஊழல் எனவும் தாம் பொறுப்புடன் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
</p><h2>தெளிவான அரசியலமைப்பு மீறல்</h2><p>ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நீதி அமைச்சு இணைந்து, நீதிபதிகளின் ஆலோசனையுடன் தயாரித்த விரிவான அறிக்கையில் கூட ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.</p><p> சட்டம் தொடர்பான மாற்றங்களின் போது சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனை பெறப்படும் என்ற வாக்குறுதியும் மீறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff6ecb27-0df5-41c3-a3ab-cfbaed8f64ad/26-6a68427b38589.webp' /></p><p>
</p><p>ஊடகங்கள் மூலம் இச்செய்தியை அறிந்த பின்னர், இது குறித்து விளக்கம் கேட்டு 2026 மார்ச் 30 அன்று நீதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>
இதனைத் தொடர்ந்து, சட்டத்தரணிகள் சங்கம் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி, கடந்த மே 25 அன்று ஜனாதிபதிக்கே நேரடியாகத் தமது கடுமையான எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாகப் பதிவுசெய்துள்ளதாக ராஜிவ் அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இவ்வளவு வெற்றிடங்களை வைத்துக்கொண்டு ஒரு நீதித்துறை நிறுவனத்தை எவ்வாறு இயக்க முடியும்? இன்றளவிலும் அந்த வெற்றிடங்களை ஜனாதிபதி நிரப்பவில்லை. அதைப்பற்றிப் பேசாமல் தேவையில்லாத காரணங்களைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள என ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>
 அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பெயர்களைப் பரிந்துரைத்து அனுப்ப வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பது தெளிவான அரசியலமைப்பு மீறலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் நல்ல நடவடிக்கைகளுக்கு தடையாகச் செயற்படும் எதிரணிகள்! வாசுதேவ கடும் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-obstructs-government-s-good-initiatives-1785215106"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-obstructs-government-s-good-initiatives-1785215106</id>
            <summary type="text">அரசு நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுக்கும்போது, அதனால் பாதிப்படையக்கூடியவர்கள் வேறு விடயங்களை
முன்னிலைப்படுத்திக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுக்கும்போது, அதனால் பாதிப்படையக்கூடியவர்கள் வேறு விடயங்களை
முன்னிலைப்படுத்திக்கொண்டு அரசைச் சுற்றிவளைத்து வருகின்றனர் என்று ஜனநாயக
இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார
தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்</p><p>

"வருமான வரி செலுத்தாமல் புறக்கணிப்பவர்களை அதற்கு உட்படுத்தும் வகையில்
சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p></p><h2>மக்களை தூண்டிவிடும் எதிர்க்கட்சி</h2><p> </p><p>பழைய சட்டங்களின்படி வரி
மேன்முறையீட்டு வழக்குகள் முடிவடைய 15 ஆண்டுகளுக்கும் மேல் சென்ற நிலையில்,
குற்றவியல் வழக்குத் தொடுக்கும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. </p><p>அதேபோல்,
வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பணத்தை 30
நாள்களுக்குள் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என வெளிநாட்டுச் செலவாவணிச்
சட்டத்தின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு எதிராகக்
கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d8806ef-2229-440b-9b72-4ebf5224c1ff/26-6a683b766c0f8.webp' /></p><p>
அரசு நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளில்
இறங்கும்போது, இதனால் பாதிக்கப்படுபவர்கள் அரசுக்கு எதிரான
குற்றச்சாட்டுக்களைப் பிரசாரம் செய்து மக்களைத் தூண்டிவிடுகின்றனர்.
</p><p>
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சிக்கு எதிரான எதிர்ப்புகள், விவசாயிகளின்
பிரச்சினைகள் மற்றும் புத்தசாசனத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் தமது
சுயநலனுக்காக அரசின் மக்கள் நல நடவடிக்கைகளுக்குத் தடையாகச் செயற்பட்டு
வருகின்றன"&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/construction-work-on-the-central-expressway-1785214135"></link>
            <id>https://tamilwin.com/article/construction-work-on-the-central-expressway-1785214135</id>
            <summary type="text">மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர - கலகெதர இடையிலான நிர்மாணப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் மத்திய அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர - கலகெதர இடையிலான நிர்மாணப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்பிரகாரம் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் மிக முக்கியமான பகுதியான பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான 3 ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் தற்போதைக்கு 85% வரை நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வெற்றிகரமாக முடிவடைந்துள்ள சில பணிகள்</h2><p>
</p><p>
மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியே செல்லும் இந்த வீதிப் பகுதியில் நீண்ட பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6675519-46ca-462c-baa7-3002cd411d19/26-6a683ac8d21b5.webp' /></p><p>
</p><p>
இந்தப் பகுதி திறக்கப்படுவதன் மூலம் கொழும்பில் இருந்து கண்டிக்கு பயணிப்பதற்கான நேரம் ஒன்றரை மணி நேரமாகக் (1.5 மணி நேரம்) குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரகித ராஜபக்ச உட்பட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-four-people-rahitha-rajapaksa-1785214256"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-four-people-rahitha-rajapaksa-1785214256</id>
            <summary type="text">முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p> </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(28.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் சமகி ஜன பலவேகய (SJB) ஹொரன தேர்தல் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை வரையறுக்கப்பட்ட முன்னாள் நிறைவேற்று இயக்குனர் அருண ஸ்ரீ வருஷஹென்னடிகே ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da756029-c3c2-4a01-b3aa-e00e2a2a95f4/26-6a68358334bd0.webp' /></p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T04:52:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக்கைதிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1021-prisoners-died-in-prison-last-five-years-1785211969"></link>
            <id>https://tamilwin.com/article/1021-prisoners-died-in-prison-last-five-years-1785211969</id>
            <summary type="text">சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.</p><p>

அவர்களில் 552 பேர், அதாவது ஐம்பத்து நான்கு சதவீதம் பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.</p><p>[HRWSSYY[</p><p>
</p><h2>
தண்டனை பெற்ற கைதிகள்
</h2><p>
உயிரிழந்தவர்களில் 469 பேர் தண்டனை பெற்ற கைதிகள் ஆவர்.
</p><p>
உயிரிழந்த கைதிகளில், 384 பேர் ஐஸ், ஹெரோயின் அல்லது பிற சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்த, விற்ற அல்லது வைத்திருந்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a0500a0-9d2c-483f-be44-9dc3f2359652/26-6a6833cadc421.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையே தடயவியல் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, கடந்த ஆண்டு இறுதிக்குள் 15,117 சந்தேகநபர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T04:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் முன்னாள் அமைச்சரை கதற விட்ட மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shantha-bandara-about-his-son-1785212806"></link>
            <id>https://tamilwin.com/article/shantha-bandara-about-his-son-1785212806</id>
            <summary type="text">கொழும்பில் சீன நாட்டவர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சீன நாட்டவர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

இந்நிலையில் தனது மகனான அனுத ஜனாதித் பண்டாரவிற்கு எதிராக எந்தவொரு சாட்சிகளும் இல்லை எனத் தனது சட்டத்தரணிகள் தெரிவித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நேற்று நீதிமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.</p><p> </p><h2><b> 

சட்ட நடவடிக்கை</b></h2><p>“என் மகன் மட்டுமல்ல, தவறு யார் செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a44dc7f-8d75-41f0-871b-a86d6c1b7404/26-6a68324f578ba.webp' /></p><p>ஆனால் கடந்த சில நாட்களாக பல பொய்யான செய்திகள் வெளிவருகின்றமை குறித்து மிகவும் வருத்தத்தில் உள்ளேன்.</p><p> 

எனினும் நீதிமன்றம் மீது எங்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. அதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் வந்துள்ளோம்.
</p><p>
எனது மகனுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்துவதற்கு முறையான சாட்சியங்கள் எதுவும் இருக்கவில்லை என எனது சட்டத்தரணிகள் என்னிடம் கூறினார்.
</p><p>
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இந்த வழக்கில் இருந்து நாம் விடுபடுவோம்.</p><p> பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கு எமது கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 
</p>]]></content>
            <updated>2026-07-28T04:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வகுப்பு உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/private-class-owner-arrested-with-ice-drugs-1785213386"></link>
            <id>https://tamilwin.com/article/private-class-owner-arrested-with-ice-drugs-1785213386</id>
            <summary type="text">ஹொரணை நகரப் பகுதியில் பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், 44 வயதுடைய ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை நகரப் பகுதியில் பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கைது செய்யப்பட்டவர், 44 வயதுடைய ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை நகரில் பிரபல மேலதிக வகுப்பு நிலையமொன்றை நடத்திவரும் நிலையில், ஹொரணை பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என்றும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2> 

ஐஸ் போதைப்பொருளுடன் கைது</h2><p>
சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை மற்றும் இலத்திரனியல் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a633574-bc8d-4f15-9d26-269ad87c5c2c/26-6a68320915bc2.webp' /></p><p>

நர்த்தனகல பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்குப் பொலிசார் சென்ற போது, அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், குறித்த சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p>
சந்தேகநபரைத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/d8hZgTzKV6A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-28T04:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vaccine-for-dengue-1785209951"></link>
            <id>https://tamilwin.com/article/vaccine-for-dengue-1785209951</id>
            <summary type="text">புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

நாட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. </p><p>

நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.</p><h2>தடுப்பூசியை பெறுவதற்கான அனுமதி</h2><p></p><p> </p><p>

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போதைக்கு குறித்த தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. நடப்பு ஜுலைமாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும். அதேநேரம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5233f2e4-cb05-4fed-955b-d33576a9d920/26-6a682960bd6a5.webp' /></p><h2>டெங்கு நோய்க்கான தடுப்பூசி</h2><p> </p><p>தற்போதைக்கு டெங்கு நோய்க்கான தடுப்பூசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நோய் ஏற்படுவதற்கு முன் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் பாதுகாப்புப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. </p><p>இதுவொரு புதிய தடுப்பூசி என்பதால், நோய் தடுப்பில் இது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்று தற்போது கூறுவது கடினம். 

இருப்பினும், பல நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. எனவே, இலங்கைக்கு இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T04:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயும் இளவயது மகளும் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-daughter-arrested-1785209639"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-daughter-arrested-1785209639</id>
            <summary type="text">அளுத்கம - தர்கா நகர பிரதேசத்தில் தாயொருவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வீடொன்றில் பதுங்கியிருந்த போதே களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அளுத்கம - தர்கா நகர பிரதேசத்தில் தாயொருவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

வீடொன்றில் பதுங்கியிருந்த போதே களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 நிதி மோசடிகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

மேலதிக விசாரணை</b></h2><p>மாகலந்தாவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தாயும், அவரது 15 வயதுடைய மூத்த மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/698b5aa3-fafd-44bb-8d0f-dfb0ef330a76/26-6a6824126b5a2.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3iCqdcQLNXU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-28T03:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 நாட்களுக்கு தொடர் தாக்குதல் - ட்ரம்ப் அறிவிப்பால் சரிந்த கச்சா எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-prices-fall-due-to-trump-s-announcement-1785209109"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-prices-fall-due-to-trump-s-announcement-1785209109</id>
            <summary type="text">13 நாட்கள் தொடர் தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ட்ரம்பின் அறிக்கைகளாலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>13 நாட்கள் தொடர் தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ட்ரம்பின் அறிக்கைகளாலும் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன.</p><h2>பதிவாகியுள்ள விலை&nbsp;</h2><p>
</p><p>
ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 0.8% சரிந்து, 81.95 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
</p><p>
ஒரு பரல் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 0.6% குறைந்து, 87.82 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/475c3688-f611-4598-a46e-7f780711eb5e/26-6a6821c29ddf5.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T03:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் பாதுகாப்பு சவாலா..! பாதாள உலகக் குழுக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-to-underworld-groups-1785207804"></link>
            <id>https://tamilwin.com/article/warning-to-underworld-groups-1785207804</id>
            <summary type="text">ஜனநாயகத்தையும் நாட்டின் கலாசார உரிமைகளையும் சீரழிக்கும் வகையிலேயே இந்த அரசு
செயற்பட்டு வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகத்தையும் நாட்டின் கலாசார உரிமைகளையும் சீரழிக்கும் வகையிலேயே இந்த அரசு
செயற்பட்டு வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

அத்துடன், நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலைகள்
மற்றும் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்குப் பெரும்
அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் எச்சரித்துள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

பாதாள உலகக்கும்பலின் தலையீடு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

அரசைத் தவிர நாட்டின் ஏனைய அனைத்துத் தரப்பினரும் தற்போதைய அபாயகரமான
சூழ்நிலையை உணர்ந்துள்ளனர். நாட்டில் நிலவும் பாதுகாப்பின்மை காரணமாக,
பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளைக் கூட சுதந்திரமாக நடத்த முடியாத சூழல்
உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de69657e-75bb-4fcd-80dc-b02c0340af38/26-6a681c8196ae2.webp' /></p><p> </p><p>

பாதுகாப்பை பலப்படுத்துவதற்குப் பதிலாக ஊர்வலங்களுக்குக்
கட்டுப்பாடுகளை விதிப்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகின்றது.
</p><p>பாரம்பரிய ஊர்வலங்களில் என்னென்ன கலாசார அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பதை
பாதாள உலகக் குழுக்களா தீர்மானிக்கின்றன?</p><h2>


நீதிபதிகளின் வயது எல்லை அதிகரிப்பு</h2><p>
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை உயர்த்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சி, நீதித்துறையை முழுமையாகத்
தங்களது அரசமைப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டமிட்ட
செயலாகும். </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச அமைப்புகள் மற்றும்
நீதிபதிகள் சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
வரும் நிலையில், அரசு தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப்
பயன்படுத்தி இதனை நிறைவேற்ற முயல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3393dc-4b2d-4d81-bf9e-bf4e616eb505/26-6a681c826e2bf.webp' /></p><p>
</p><p>
அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்துத் தைரியமாகச் செயற்படும் இலங்கை
சட்டத்தரணிகள் சங்கத்தின் மீது, ஆளும் தரப்பினர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப்
பயன்படுத்தி அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். </p><p>நாட்டின் ஜனநாயகத்தைப்
பாதுகாக்கவே அச்சங்கம் குரல் கொடுத்து வருகின்றது.

நாடாளுமன்றத்தைக் கூத்து மேடையாக மாற்றாமல், சீர்குலைந்து வரும் தேசிய
பாதுகாப்பையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசு உடனடியாக
முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T03:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நிறுவனத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! நான்காவது இடத்துக்கு முன்னேற்றம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-records-fourth-biggest-improvement-1785193804"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-records-fourth-biggest-improvement-1785193804</id>
            <summary type="text">சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. </p><p>
இலங்கை, முதலீட்டாளர் உறவுகள் (Investor Relations) மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) ஆகியவற்றில் விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளது.
</p><p>
சர்வதேச நிதி நிறுவனத்தால் (IIF) வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, இத்துறையில் மிக அதிக முன்னேற்றத்தை அடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>IIF இன் அறிக்கை</h2><p>IIF இன் “Investor Relations and Debt Transparency Report 2026: The Transparency Dividend” அறிக்கையின்படி, உலகின் வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகள் 57 இல் இலங்கையின் ஒட்டுமொத்த முதலீட்டாளர் உறவுகள் புள்ளி எண்ணிக்கை 2025 இல் 37.33 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2026 இல் 43.67 வரை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. </p><p>

இத்துறையில் 6.3 புள்ளிகள் என்ற பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இலங்கை, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக "வேகமாக முன்னேறும் நாடுகளின்" பட்டியலில் இணைந்துள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34d0447-a1e1-41d6-a82f-5bd73cc64657/26-6a67e54ebcafc.webp' /></p><p>கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) தரவுகள் மற்றும் கொள்கைகளை முறையாகப் பரப்புரை செய்தமையே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><h2>
கடன் வெளிப்படைத்தன்மை</h2><p>
2025 இல் 19 ஆம் இடத்தில் இருந்த இலங்கை, கடந்த ஆண்டில் பின்பற்றிய முறைசார்ந்த கடன் முகாமைத்துவ நடைமுறைகள் காரணமாக 2026 இல் 5 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.
</p><p>
இந்த முன்னேற்றத்திற்கு அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் ஏனைய அரசு நிறுவனங்கள் இணைந்து முதலீட்டாளர்களுடன் பேணிய முறைசார்ந்த உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடன் தகவல்களை வழங்கியமை பெரிதும் உதவியுள்ளது.
</p><p>
</p><p></p><p>இலங்கை அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் சர்வதேச மூலதனச் சந்தையில் நாட்டின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, முதலீட்டாளர் தளத்தை விரிவுபடுத்தவும், கடன் வாங்கும் செலவைக் குறைக்கவும் எதிர்காலத்தில் இது பெரும் பக்கபலமாக அமையும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T03:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சந்தைப் பொருட்களுக்கு அதிரடி சோதனை - அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-issued-by-the-ministry-of-science-1785205844"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-issued-by-the-ministry-of-science-1785205844</id>
            <summary type="text">தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சந்தையில் விற்பனை செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் தரநிலைகளைச் சரிபார்க்கும் ஒரு சிறப்புத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சந்தையில் விற்பனை செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் தரநிலைகளைச் சரிபார்க்கும் ஒரு சிறப்புத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது</p><p>இது தொடர்பான அறிவிப்பு இன்று(28.07.2026) வெளியிடப்பட்டுள்ள நிலையில், பெட்டா பொதுச் சந்தை வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>


உணவுப் பொருட்கள் உட்பட சோதனை</h2><p>


இதன்போது, சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் பொம்மைகள் போன்ற நுகர்வோர் பொருட்கள், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குகின்றனவா என்பதைச் சரிபார்க்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0376d6bc-f1c1-4242-9521-4fead4ce1b65/26-6a68151cdd4e6.webp' /></p><p> 

நுகரப்படும் உணவுப் பொருட்களில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் உள்ளனவா என்பதை ஆராய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றது. 


அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள இலங்கைத் தர நிர்ணய நிறுவனம் (SLS) மற்றும் தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ITI) ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களும் இந்தத் தரச் சோதனைத் திட்டத்தில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
பொருட்களின் நிலை குறித்து நுகர்வோருக்கு நேரடியாகத் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குத் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><h2>


பெட்டாவில் ஆரம்பமாகும் சோதனை நடவடிக்கை</h2><p>
இது தொடர்பான நிகழ்வில் கலந்துக் கொண்ட பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

"உணவுப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆகியவை ஒரே தரத்தில் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது நாங்கள் செய்யும் பணிகளில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea2a87b-bd33-4147-af51-4293f52c7b35/26-6a68151db2fba.webp' /></p><p> </p><p>

எங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள எஸ்.எல்.எஸ் நிறுவனம் மற்றும் ஐ.டி.ஐ நிறுவனம் ஆகியவை, தொடர்புடைய பிற நிறுவனங்களுடன் இணைந்து கோட்டைக்குச் சென்று, உணவில் ஏதேனும் கலக்கப்பட்டுள்ளதாக என்பதையும், மற்ற பொருட்களின் தரநிலைகள் அதற்கேற்ப உள்ளதா என்பதையும் சரிபார்க்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.</p><p>

 நாங்கள் பெட்டாவுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலை குறித்த தகவல்களை வழங்குவோம். மேலும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அதில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்கும் போதுமான விளக்கங்களையும் கொடுக்கவுள்ளோம் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய மோசடியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் - முக்கிய அரசியல்வாதி மீது வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/500-luxary-vehicles-illegally-imported-1785200922"></link>
            <id>https://tamilwin.com/article/500-luxary-vehicles-illegally-imported-1785200922</id>
            <summary type="text">பல கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 சொகுசு வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சுங்க வரியை ஏய்த்து,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 சொகுசு வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>சுங்க வரியை ஏய்த்து, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 500 வாகனங்கள் வீதிகளில் செலுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p></p><h2>சட்டவிரோதமாக வாகன இறக்குமதி</h2><p>நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அதிநவீன சொகுசு வாகனங்கள் எனவும் இவை பாகங்களாகப் பிரிக்கப்பட்டு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>இந்த சட்டவிரோத நடவடிக்கைக்குச் சில ஊழல் நிறைந்த சுங்க அதிகாரிகளும், வாகனங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1adc73a6-fd85-4d93-8cb8-05460c3bf22c/26-6a68011bc9b23.webp' /></p><p>
சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது வீதிகளில் செலுத்தப்பட்டு வரும் பெரும்பாலான வாகனங்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.</p><p>அடையாளம் காணப்பட்டுள்ள சொகுசு வாகனங்களை விரைவில் பொலிஸ் பொறுப்பில் எடுப்பதற்குப் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்த சட்டவிரோதப் பதிவுகள் அனைத்தும் கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியின் போதே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சுங்க அதிகாரிகள் மீது பாயும் சட்டம்</h2><p>

போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர்கள் இருவர் உட்படப் பல அதிகாரிகள் அண்மையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77dce21f-ced4-4cda-8d71-fe408272e62a/26-6a680cd3d8a47.webp' /></p><p>
</p><p>கடந்த 2023 ஆம் ஆண்டு பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனைகளில், இரகசியமாக கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 100 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. </p><p>
அவற்றில் பெரும்பாலான வாகனங்களை அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய நபர்களே பயன்படுத்தி வந்துள்ளனர்.</p><p>
அப்போதைய சோதனைகளின் போது மேலும் 400 போலி வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்ட நிலையில், அன்றைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அந்த விரிவான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T01:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு: NPPயின் தலைமைத்துவ குழுவிலிருந்து வந்த எதிர்ப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-npp-lawyer-judges-retirement-age-extension-1785200192"></link>
            <id>https://tamilwin.com/article/senior-npp-lawyer-judges-retirement-age-extension-1785200192</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்திகுள்ளேயே எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விடயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்திகுள்ளேயே எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>இவ்விடயம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றி NPPயின் தலைமைத்துவ குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
</p><p>இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர் 
இந்தப் போராட்டம் கட்சிகளுக்கு இடையிலான போராட்டமோ அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமோ அல்ல. இந்தப் போராட்டத்தின் அர்த்தம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</p><h2>

</h2><p></p><h2>கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>கட்சியினால் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. யாரோ தனிநபர்கள் அல்லது ஏதேனும் தரப்பினர் மத்தியில் அப்படி ஒரு யோசனை இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.
</p><p>இவ்விடயம் தொடர்பில் என்னை அமைதியாக இருக்குமாறு கூறியபோது, நான் எனது நிலைப்பாட்டைத் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் தலைமைக் குழு கூட்டத்திலும் நான் கூற வேண்டியதைக் கூறிவிட்டேன்.</p><p>நான் இதற்கு எதிராக செயற்படுவேன் என்று தெளிவுபடுத்தினேன்.
நான் 45 ஆண்டுகளாக சட்டத்தரணியாகப் பணியாற்றியுள்ளேன். அதற்கு மேலாக சுமார் 50 ஆண்டுகள் இடதுசாரி இயக்கத்தில் செயற்பட்டுள்ளேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f86e71b-32d8-4187-b86f-86011b391848/26-6a68000800eab.webp' /></p><p>நாகரிகமான சமூகத்தில் நாகரிகமான மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே எமது அரசியலின் நோக்கமாகும். எனது அரசியலிலும் நான் அதையே பின்பற்றி வந்துள்ளேன்.
</p><p>எனது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதிக்கும் வழங்கியுள்ளேன். 1970களில் பண்டாரநாயக்க அதன் பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் நிஹால் ஜயவிக்ரம போன்றவர்களுக்கு எதிராக நாம் போராடியது நினைவிருக்கிறது. </p><p>நாகரிகமான சமூகத்தில் நாகரிகமான மனிதர்களாக வாழ்வதற்கு நீதிமன்ற சுதந்திரம் அவசியம் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாம் போராடினோம்.
</p><p>நீதிமன்ற சுதந்திரம் இல்லாவிட்டால் நாம் அடிமைத்தனத்திற்கு தள்ளப்படுவோம். நிறைவேற்று அதிகாரம் தனக்கு வேண்டியதைச் செய்ய முடியும். </p><p>அத்தகைய சூழ்நிலை நாட்டில் அராஜகத்தையே ஏற்படுத்தும்.
எனவே, நாட்டில் மிகவும் முக்கியமான விடயம் நீதிமன்ற சுதந்திரமாகும். அது வீழ்ச்சியடைந்தால், நீதிமன்ற சுதந்திரம் என்ற ஒட்டுமொத்தக் கோட்பாடும் முற்றாகச் சரிந்துவிடும். </p><p>அதன் பின்னர் நாம் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு சர்வாதிகார சமூகம் உருவாவதற்கான சூழலையே விட்டுச் செல்வோம் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T01:06:12+00:00</updated>
        </entry>
    </feed>
