<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-23T19:18:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமாக மறைந்த மகிந்தவுக்கு எதிரான 450 கோப்புகள்! 2 வருடங்களில் என்ன ஆனது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/450-files-against-mahinda-missing-1787506237"></link>
            <id>https://tamilwin.com/article/450-files-against-mahinda-missing-1787506237</id>
            <summary type="text">கடந்த தேர்தல் காலத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து பிரசாரம் செய்த அரசாங்கம் தற்போது அதனை மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த தேர்தல் காலத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து பிரசாரம் செய்த அரசாங்கம் தற்போது அதனை மறந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.</p><p> 

மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எங்கே மகிந்தவுக்கு எதிரான ஆதாரங்கள்&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெருந்தொகை இலஞ்சப் பணம் பெற்றதாகவும், அதனுடன் தொடர்புடைய காசோலைகளின் இலக்கங்கள் மற்றும் மகிந்தவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து கடந்த தேர்தல் காலத்தில் இந்த அரசாங்கம் பிரசாரங்களை முன்வைத்து வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/702baed3-3a69-491c-87d0-bc1f80ea1fed/26-6a8b3389bbbeb.webp' /></p><p> </p><p>

எனினும், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகியுள்ள நிலையில் தற்போது அந்தப் போலி பிரசாரங்களையெல்லாம் இந்த அரசாங்கம் மறந்து விட்டது.
</p><p>
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிவிப்பையும் வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
</p><p>
விவசாயிகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தற்போது விவசாயிகளை கசிப்பு குடிப்பவர்கள் என் கூறி அவமானப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-23T18:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடியில் தொடர்ந்து சிக்கும் நாமல் - 6 மணிநேரம் சி.ஐ.டி விசாரணையில் நடந்தது என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p> கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தங்காலை பே ஹோட்டல் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக நாமல் அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய CSN தொலைக்காட்சி ஊடாகப் ஈட்டப்பட்ட பணத்தை கொண்டே இந்த ஹோட்டல் வர்த்தகப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><h2><b>

வாக்குமூலம் பதிவு </b></h2><p>இதனடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றுள்ளார். </p><p>அத்துடன் நாமலுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74269162-f58b-44a6-9f60-c9ec104d4e02/26-6a8b2bf985a63.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச, இதற்கு முன்பும் பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

Krish Lanka நிறுவனத்தால் ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது. </p><p>

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>மேலும் NR Consultancy நிறுவனத்துடன் தொடர்புடைய 15 மில்லியன் ரூபாய் பணமோசடி பரிமாற்றம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. </p><p>எவ்வாறாயினும், Gowers Corporation நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். </p><p>அவரது சட்டத் தகுதிகள் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கொள்வது தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்தது. </p><p> எனினும் அந்த குற்றச்சாட்டுகளை நாமல் வன்மையாக மறுத்துள்ளார். இந்த புதிய அழைப்பு முற்றிலும் தங்காலை பே ஹோட்டல் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு மட்டுமே என தகவல்கள் வெளியாகி உள்ளன. </p>]]></content>
            <updated>2026-08-23T17:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/phis-strike-tommorow-1787504864"></link>
            <id>https://tamilwin.com/article/phis-strike-tommorow-1787504864</id>
            <summary type="text">&amp;nbsp;பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாளைய தினம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாளைய தினம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
</p><p>கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, பொது சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டதனை எதிர்த்துத்து, நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் தீவிர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p> இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bed6a7f-50a6-4870-a471-2e68c89f158e/26-6a8b28e29116a.webp' /></p><p>
இப்பிரச்சனை குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவித்தும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கவில்லை என அச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>
நாட்டின் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்திற்கு வழங்கும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எந்தவொரு தரவு அமைப்பையும் (Data systems updating) புதுப்பிக்கும் பணிகள் இடைநிறுத்தப்படும். இந்தப் போராட்டக் காலத்தில் விடுபடும் எந்தவொரு தரவுகளும் மீண்டும் ஒருபோதும் அமைப்புகளில் சேர்க்கப்படாது எனச் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
</p><p>அதிகாரி பி.எச். மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
</p><p>கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>எனினும், இப் பிரச்சினைகள் குறித்து நியாயமான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T17:08:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசாங்கமே பொறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-responsible-if-suresh-sallay-is-harmed-1787503768"></link>
            <id>https://tamilwin.com/article/president-responsible-if-suresh-sallay-is-harmed-1787503768</id>
            <summary type="text">தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தினால் இந்த பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை மூன்றாவது முறையாகத் தடுத்து வைக்கும் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்த்து, அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அந்த அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec69a46-c306-4f65-a9d7-33a68fa274b1/26-6a8b2499be26d.webp' /></p><p>
</p><p>கொழும்பில் நடைபெற்ற “சலேவுக்கான நீதி - உரையாடல் அரங்கம்” என்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் அவ்வமைப்பின் பிரதிநிதிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.</p><p>
மேலும் தாமதிக்காமல் அவரை உடனடியாக சட்டத்தின் முன், அதாவது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் இந்த அரசாங்கத்தினை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர குற்றம் சாட்டப்பட்டுள்ள மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை - உடனடியாக விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-consideration-for-pallegama-thero-1787491679"></link>
            <id>https://tamilwin.com/article/special-consideration-for-pallegama-thero-1787491679</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. </p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு அங்கு வந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி. தர்மசிறிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

மீண்டும் விசாரணை</b></h2><p>தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e075c43e-aec1-47f1-b811-efd9a182de07/26-6a8afc6b4e102.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.<br><br><b><i>you may like this..<br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HLy_ny-xG4I" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-23T16:46:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்கைத் துரிதப்படுத்தும் அநுர தரப்பு! விபரங்களை வெளியிட்டு வரும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-mps-case-to-be-heard-1787503492"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-mps-case-to-be-heard-1787503492</id>
            <summary type="text">தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம் செலுத்தி வருகின்றது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>மக்களின் வாழ்க்கைத் தரம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மக்களுக்கு வளமான வாழ்க்கையை வழங்குவதாக வாக்குறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதியினதும், 159 ஆளும் தரப்பு உறுப்பினர்களது வாழ்க்கை தான் வளமாகியுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கை ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a1453f6-4982-4778-a06f-f3ffc6b12e4e/26-6a8b2385b0812.webp' /></p><p> 

திறைசேரி நிரம்பிவழிகின்றது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால், மக்கள் வாழ்க்கைத் தரம் வறுமையால் நிரம்பி வழிகின்றது. </p><p>

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவுப்படுத்தவும், தண்டனைப் பெற்றுக் கொடுக்கவும் மாத்திரமே இந்த அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:45:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/born-in-1909-worlds-oldest-living-person-1787503011"></link>
            <id>https://tamilwin.com/article/born-in-1909-worlds-oldest-living-person-1787503011</id>
            <summary type="text">&amp;nbsp;உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.</p><p> 
இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் ஆகஸ்ட் 21 அன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இவர் இந்த வரலாற்றுச் சாதனையை மகிழ்வோடு கொண்டாடினார்.</p><p> 
ஆகஸ்ட் 21, 1909 அன்று ஹாம்ப்ஷயரில் பிறந்த இவர், 117 வயதை எட்டிய முதல் பிரித்தானிய நபர் என்ற புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e866399-a42c-4f55-ba4e-788ad57531a1/26-6a8b21a5089b9.webp' /></p><p> </p><p>
ஏப்ரல் 2025-இல் பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபாரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானதைத் தொடர்ந்து, எதேல் கேட்டர்ஹாம் உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக மாறினார்.</p><p> 
இரண்டு உலகப் போர்களையும் கடந்து வாழ்ந்துள்ள இவர், தனது 110-வது வயதில் கொரோனா தொற்றிலிருந்தும் மீண்டு வந்தார். </p><p>
1927-ஆம் ஆண்டு, தனது 18-வது வயதில் தனியாக இந்தியாவிற்குப் பயணம் செய்து, ஒரு பிரித்தானியக் குடும்பத்திற்குப் பராமரிப்பாளராக வேலை பார்த்துள்ளார். </p><p>
தற்போது இவர் 117 வயதை எட்டியிருந்தாலும், வரலாற்றிலேயே மிக அதிக காலம் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டின் ஜீன் கால்மென்ட் என்பவரின் 122 ஆண்டுகள் 164 நாட்கள் என்ற சாதனையை விட இவர் சில ஆண்டுகள் குறைவாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:37:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மேலதிகமாக 300,000 வீரர்களை திரட்டத் திட்டம்: உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukrainian-president-zelensky-warns-1787498711"></link>
            <id>https://tamilwin.com/article/ukrainian-president-zelensky-warns-1787498711</id>
            <summary type="text">ரஷ்யா, உக்ரைன் போருக்காக செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்
தேர்தலுக்குப் பிறகு மேலதிகமாக 300,000 இராணுவ வீரர்களைத் திரட்டுவதற்குத்
திட்டமிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, உக்ரைன் போருக்காக செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்
தேர்தலுக்குப் பிறகு மேலதிகமாக 300,000 இராணுவ வீரர்களைத் திரட்டுவதற்குத்
திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>

செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>ஆட்சேர்ப்பு நடவடிக்கை</h2><p> அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய நகரங்களைத் தவிர்த்து
ரஷ்யாவின் தொலைதூரப் பிராந்தியங்களைக் குறிவைத்து இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை
முன்னெடுக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08f60b3c-3588-4687-9993-c0d5472e8911/26-6a8b1373f3b91.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஏவுகணை
எதிர்ப்பு அமைப்புகளின் பற்றாக்குறை நிலவுவதாகவும், நடப்பு ஆண்டில்
பாதுகாப்புச் செலவீனங்களுக்காக 27 பில்லியன் டொலர்கள் நிதிப் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T15:38:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடுபிடிக்கும் வரிப்போர்: அமெரிக்காவுக்கு கனடாவின் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-canada-trade-war-intensifies-canada-impose-1787490035"></link>
            <id>https://tamilwin.com/article/us-canada-trade-war-intensifies-canada-impose-1787490035</id>
            <summary type="text">அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள் மற்றும்
மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள் மற்றும்
மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம்
திகதி முதல் பதிலடி வரிகளை விதிக்கவுள்ளதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி
அறிவித்துள்ளார்.</p><p>

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் டொலர்கள் பெறுமதியான
பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்ததைத் தொடர்ந்து, அதற்குப்
பதிலடி கொடுக்கும் வகையிலேயே கனடா இந்த முடிவை எடுத்துள்ளது.</p><h2>தீவிர பேச்சுவார்த்தை</h2><p>

ஒட்டாவாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி,
</p><p>கனடாவின் தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப்
பாதுகாப்பதற்காக அமெரிக்காவின் வரிகளுக்கு நிகரான வரியை கனடாவும் விதிக்கும்
எனத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e23fa52e-e7be-4460-9132-17246423d050/26-6a8af46f6e145.webp' /></p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான பல நாட்கள் தீவிர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த
நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா
அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இல்லாமல், அதன் அனைத்துச் சலுகைகளையும் அனுபவிக்க
விரும்புவதாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் இந்த கடுமையான வரி விதிப்பினால் கனடாவில் பொருட்களின் விலைகள்
மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என அஞ்சப்படும் அதேவேளை, கனடா
பிரதமர் ஏனைய ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை
பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T15:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-9-magnitude-earthquake-eastern-japan-37-injured-1787493517"></link>
            <id>https://tamilwin.com/article/5-9-magnitude-earthquake-eastern-japan-37-injured-1787493517</id>
            <summary type="text">கிழக்கு ஜப்பானில் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பிராந்தியங்களை உலுக்கிய 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்
காரணமாகக் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு ஜப்பானில் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பிராந்தியங்களை உலுக்கிய 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்
காரணமாகக் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இப்பாராகி பிராந்தியத்தை மையமாகக் கொண்டு நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 70
கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>
</p><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d66d75e-20e8-4261-b383-58619f44bc7a/26-6a8afda764d77.webp' /></p><p>

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கான
ரயில் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், பின்னர்
அவை வழமைக்கு திரும்பின.</p><p>

நிலநடுக்க அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கியதில் தளபாடங்கள் விழுந்ததாலும்,
மக்கள் பீதியடைந்து வெளியேற முயன்றதாலுமே பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T15:15:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் மனித உடலால் உணரப்படும் வெப்பம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-districts-to-remain-extremely-hot-tomorrow-1787495865"></link>
            <id>https://tamilwin.com/article/some-districts-to-remain-extremely-hot-tomorrow-1787495865</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இன்றைய தினம் (23.08.2026) வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p> 

இன்றைய தினம் (23.08.2026) வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளைய தினம் (24.08.2026) பி.ப 4 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை அறிவித்தல்</h2><p> </p><p>

இதற்கமைய, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccea5eaf-8411-4068-a61d-6cbf76924809/26-6a8b0a827a770.webp' /></p><p> </p><p>

அப்பகுதிகளின் சில இடங்களில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அல்லது வெப்பச் சுட்டெண் அவதானம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இதன் காரணமாகப் பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், வெப்பமான வானிலை நிலைமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:58:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக முதலீட்டாளர்களை குறிவைக்கும் இலங்கை - துறைமுக நகரில் குவியும் பில்லியன் டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-reforms-investments-amounting-us-2-1-billion-1787496130"></link>
            <id>https://tamilwin.com/article/tax-reforms-investments-amounting-us-2-1-billion-1787496130</id>
            <summary type="text">புதிய வரி சீர்திருத்தங்களின் பின்னணியில், இதுவரை கொழும்பு துறைமுக நகரில் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய வரி சீர்திருத்தங்களின் பின்னணியில், இதுவரை கொழும்பு துறைமுக நகரில் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை பெற்றுக்கொள்வதை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;முக்கிய முதலீடு</h2><p>

இந்த இலக்கை அடைவதற்காக தற்போது இரண்டு பாரிய வீடமைப்புத் திட்டங்கள், நவீன ஹோட்டல் ஒன்றின் திட்டம் மற்றும் மாநாட்டு மையம் ஒன்றை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f63fc0f-a651-44ef-b337-ba24231b023e/26-6a8b09760c105.webp' /></p><p>
தனது சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில், துறைமுக நகரம் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பல முக்கிய முதலீடுகளும் உள்ளடங்குவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;புதிய முறை</h2><p>
</p><p>
துறைமுக நகரில் வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகைகளை சர்வதேச தரங்களுக்கு ஏற்பவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்படி, முதன்மை முதலீடுகளுக்கு 15 முதல் 23 ஆண்டுகள் வரையிலான வரிச் சலுகைகளும், இரண்டாம் நிலை முதலீடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு குறைந்த வரி விகிதமும் வழங்கப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b308c3b-f389-455f-8870-794b8a77cf59/26-6a8b0976be96f.webp' /></p><p>

இந்த முதலீடுகள் அனைத்தும் இலங்கை முதலீட்டு சபை (BOI) ஊடாக கிடைக்கும் முதலீடுகளுக்கு மேலதிகமானவை எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் வரிச் சலுகைகள் மட்டுமன்றி, நிலைத்தன்மை, நம்பிக்கை, தொடர்பாடல் மற்றும் தெளிவான பொருளாதார நோக்கு ஆகியவையும் முக்கியமானவை எனவும், தற்போதைய அரசாங்கம் இத்தகைய முதலீட்டுக்கு சாதகமான சூழலை உருவாக்கி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/preventing-prison-conflicts-protecting-prisoners-1787492450"></link>
            <id>https://tamilwin.com/article/preventing-prison-conflicts-protecting-prisoners-1787492450</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் வன்முறைகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் வன்முறைகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
</p><p>

கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் ஆகஸ்ட் 18ஆம் திகதி மஹர சிறைச்சாலை உள்ளிட்ட மேலும் சில சிறைச்சாலைகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
</p><p>

பாதுகாப்பு, நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் பிரதிநிதிகள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி பொலிஸ் மா அதிபர், சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளர் நாயகம் மற்றும் பல சிறைச்சாலை ஆணையாளர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.</p><h2>கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விடயம்</h2><p>
</p><p>

2018ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையும் 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளும் ஆணைக்குழுவின் தலைவரால் இதன்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc331086-0355-4a4f-980d-d2c263b4f5da/26-6a8b0486a1016.webp' /></p><p>

இதன்போது 2021 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிக்கும்போது, குறித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டுமென ஆணைக்குழு ஏற்கனவே யோசனை முன்வைத்துள்ளதோடு, அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>

அத்துடன், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் போதுமான சுகாதார பாதுகாப்பு மற்றும் நீர் வசதிகள் இன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><h2>புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கான நடவடிக்கை</h2><p>


போகம்பரை மற்றும் மஹமோதர ஆகிய சிறைச்சாலைகளின் புனர்நிர்மாணப் பணிகள், காலி, மாத்தறை மற்றும் வாரியபொல சிறைச்சாலைகளை பரந்த அளவிலான இடங்களுக்கு மாற்றுவது மற்றும் களுத்துறை மற்றும் பூசா சிறைச்சாலைகளில் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda59b08-0498-48ef-8310-57d474adab03/26-6a8b04875931a.webp' /></p><p>

சிறைச்சாலை நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட சட்டங்களை திருத்துவதற்கும், வீட்டுக் காவலில் வைப்பதற்காக தடுப்பு காவலுக்கான மாற்று வசதிகளை வழங்குவதற்குத் தகுந்த தொழில்நுட்ப நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:34:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபர் - உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-obstructing-kandy-perahera-1787492155"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-obstructing-kandy-perahera-1787492155</id>
            <summary type="text">கண்டி தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்றைய தினம் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

சந்தேகநபர் பெரஹெராவிற்காக பணியில் இருந்த பல பொலிஸ் அதிகாரிகளை வாய்மொழியாக திட்டியதோடு, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குழப்பமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சந்தேகநபர் கைது</h2><p> </p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc3a9c54-f8f0-4f2d-b04c-480aeb3da031/26-6a8b0187b64a8.webp' /></p><p>தலதா மாளிகை வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை அந்த நபர் வாய்மொழியாகத் திட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><p>
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும் அவர் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sixteen-iranian-oil-tankers-positioned-sri-lanka-1787470651"></link>
            <id>https://tamilwin.com/article/sixteen-iranian-oil-tankers-positioned-sri-lanka-1787470651</id>
            <summary type="text">ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் தனியார் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2> ஈரானிய எண்ணெய் கப்பல்கள்</h2><p>

காலி துறைமுகத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு அருகே இந்தக் கப்பல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) விதித்துள்ள தடைகளுக்கு உட்பட்ட ஈரானின் ‘Dark Fleet’ உடன் தொடர்புடைய இந்தக் கப்பல்கள், அமெரிக்காவின் சர்வதேச தடைகளை மீறி எண்ணெயை ஏற்றிச் செல்வதாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7187a046-e3c8-4bd5-ad6c-ed61cdc0b34f/26-6a8aa92b6a806.webp' /></p><p>
</p><p>
குறித்த பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் டொக்டர் ஜனித ருவன் கொடிதுவக்கு, குறித்த கப்பல்கள் தற்போது இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு வெளியே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், இந்த எண்ணெய் கப்பல்களுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கும் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் அல்லது அவற்றுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா தடை</h2><p>

“அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட கப்பல்கள் எவை என்பதை அடையாளம் காண எங்களிடம் நேரடி வழிமுறை இல்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் பட்டியல் மட்டுமே எங்களுக்குக் கிடைக்கிறது.</p><p>
</p><p>
 அமெரிக்கத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அதிகாரப்பூர்வமாக எங்களுக்குத் தகவல் வழங்கினால், அந்தக் கப்பல்கள் தொடர்பில் உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும்” என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b355a6c0-b124-406b-81a1-8a24c28625dd/26-6a8aa92ab7573.webp' /></p><p>

இதற்கிடையில், இலங்கை கடற்படை இந்தக் கப்பல்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை இவ்வாறான கப்பல்களை இடைமறிக்க முயற்சித்தால், இலங்கையின் கடற்கரைக்கு அருகில் மோதல் நிலைமை ஏற்படக்கூடும் எனவும், இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்ற பாரிய கடல் மாசுபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><h2>காலி கடற்பரப்பு</h2><p>
</p><p>
நிபுணர்களின் கருத்துப்படி, மலேசியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தக் கப்பல்கள், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் அமெரிக்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் தங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91f47919-9636-4f97-8951-3426c3034cb5/26-6a8aa929e2f78.webp' /></p><p>
</p><p>
‘MT Amber’ உள்ளிட்ட சில கப்பல்கள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியிலிருந்தே காலி கடற்பரப்புக்கு அருகில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தீவிரமான நிலைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அல்லது துறைமுக அதிகார சபையின் உயர்மட்ட அதிகாரிகளிடம் கருத்துகளைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T13:24:47+00:00</updated>
        </entry>
    </feed>
