<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-10T11:25:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு! உண்மையை அம்பலப்படுத்தினால் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630</id>
            <summary type="text">இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடராதிருப்பதற்கு அல்லது வழக்குகளை மீளப் பெறுவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. </p><p>

இந்தத் திருத்தமானது, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 விசாரணை ஆணைக்குழு</b></h2><p>திருத்தங்களுக்கமைய, இதுவரை மேல்நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக மட்டுமே காணப்பட்ட அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04921074-3974-4a86-a40e-d6d45f0e8a31/26-6a7938852d7b5.webp' /></p><p>அத்துடன், ஊழல் மூலம் பெறப்பட்ட அல்லது ஊழல் மூலம் வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பினை அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>

மேலும், ஊழல் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது பிற இலாபங்கள் என்பவற்றை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாக கருதுவதற்கும் இத்திருத்தங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது தவிர, மாகாண அரச சேவையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இத்திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-10T11:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை நிறைவேற்றத்தை எதிர்க்கும் கர்தினால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-inquires-are-going-well-1786360265"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-inquires-are-going-well-1786360265</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை எதிர்ப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை எதிர்ப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.</p><p>
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்துத் திருப்தியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அதேநேரம் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டலில் கொழும்பு பேராயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7a35b5e-3f6a-4b2d-8ba0-e3e81cc132e3/26-6a79b1cb9b583.webp' /></p><p>
தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முறையான விசாரணைகள் குறித்து கொழும்பு மறைமாவட்டம் பூரண திருப்தியடைகிறது. </p><p>
இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் அதற்கு உதவி செய்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணை அறிக்கை அல்லது விசாரணைச் செயல்முறைகள் தொடர்பில் எழும் புதிய தகவல்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> 
மேலும், இத்தகைய கொடூரமான குற்றங்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல் தடுப்பதற்கான அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி விதிகளின் 2267 ஆம் பிரிவின்படி, மரண தண்டனையானது மனித கண்ணியத்தைப் பாதிக்கும் செயலாகும் என்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p>
அமைதியான சூழலில் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஒருபோதும் உடன்பட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், இலங்கை நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை முழுமையாக நம்புவதாகவும், நீதிமன்றங்களின் முடிவுகளில் தலையிடுவது தமது நோக்கமல்ல என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>கத்தோலிக்கக் கோட்பாடுகளின்படி, மனித உயிரைப் பாதுகாப்பதும், சட்டப்பூர்வமான நீதி அமைப்பின் மூலம் சமூக அமைதியையும் நீதியையும் உறுதிப்படுத்துவதே சரியான வழிமுறையாகும் என அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T11:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்திக்கு மீண்டும் விளக்கமறியல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ishara-chevwanthi-appears-court-1786358946"></link>
            <id>https://tamilwin.com/article/ishara-chevwanthi-appears-court-1786358946</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைபடுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கொழும்பு நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் முக்கிய சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>இவர் மீது, சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியைக் கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/980ce20d-6e94-44bd-a3f5-6cb92ed89b2f/26-6a79af6a45fb5.webp' /></p><p> தலைமறைவாக இருந்த அவர், 2025 ஒக்டோபரில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் மீண்டும் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WN2N0yCjLcg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:02:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் கனமழையால் பிரதான வீதிகள் தாழிறக்கம் - மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-maskelia-main-road-1786359503"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-maskelia-main-road-1786359503</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹட்டன் மஸ்கெலியா
பிரதான வீதியின் இரு பகுதிகளில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹட்டன் மஸ்கெலியா
பிரதான வீதியின் இரு பகுதிகளில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் பல
இடங்களில் புதிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் வனராஜா தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அருகாமையில் வீதியின் ஒரு பகுதி பாரியளவில் தாழிறங்கியுள்ளது.</p><h2>

வீதி தாழிறக்கம்</h2><p>
கடந்த காலங்களில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியின் தாக்கத்தின் போதும் இந்தப்
பகுதியில் வீதி பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போதைய
சீரற்ற காலநிலையால் அதே பகுதியில் மீண்டும் பாரியளவில் வீதி தாழிறக்கம்
ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c6298ec-3249-48c6-a566-63c22a851017/26-6a79af4f3b093.webp' /></p><p>
</p><p>
இதனுடன், வீதியின் பல பகுதிகளில் புதிதாக வெடிப்புகள் மற்றும் சிறியளவிலான
பிளவுகள் ஏற்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நோர்வூட் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையிலும் ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, மண்ணுக்குள் நீர் தேங்கி, வீதியின் கீழ்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, இந்த தாழிறக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><h2>
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>
குறிப்பாக, மத்திய மலைநாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும்
தொடருமானால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீதி தாழிறக்கம் மேலும் அதிகரிப்பதுடன், புதிதாக பல இடங்களிலும் வீதி சேதமடையும் அபாயம் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d75a8ab-3da9-4549-94f1-89060cc66d6d/26-6a79af501d858.webp' /></p><p>

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதி, மஸ்கெலியா, நோர்வூட் உள்ளிட்ட பல பகுதிகளை
இணைக்கும் முக்கிய போக்குவரத்து பாதையாக காணப்படுவதால், வீதியில் ஏற்படும்
இவ்வாறான பாதிப்புகள் அன்றாட போக்குவரத்துக்கும் பொதுமக்களின்
பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
</p><p>
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு
செய்து, வீதி மேலும் தாழிறங்குவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்துவரும் நிலையில், வீதியில் பயணிக்கும் வாகன
சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும், குறிப்பாக வீதியில் புதிதாக
ஏற்பட்டுள்ள வெடிப்புகள் மற்றும் தாழிறங்கிய பகுதிகளுக்கு அருகில் வாகனங்களை செலுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் பொதுமக்கள்
அறிவுறுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72cff87d-8d4d-451b-a683-05aa0e72f7ac/26-6a79af50e63a4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d8f28e3-ebc6-48da-996c-87f97fab7604/26-6a79af51b77d8.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T11:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11th-world-tamil-studies-conference-in-next-year-1786358180"></link>
            <id>https://tamilwin.com/article/11th-world-tamil-studies-conference-in-next-year-1786358180</id>
            <summary type="text">11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அரசர் அருளாளர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அரசர் அருளாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும்,
தமிழி அமைப்பும் இணைந்து நடத்திய தனிநாயகம் நினைவரங்க நிகழ்வு யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நேற்று(09.08.2026) நடைபெற்றபோது,
அதில் கலந்துகொண்டு தொடக்க வுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
</p><h2>தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டது</h2><p>
இதேவேளை, முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு மலேசியாவில்
கோலாலம்பூரிலும், நான்காவது மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6182eb73-9f07-49ea-b75f-ac7fe7736ac2/26-6a79ab8ed0701.webp' /></p><p>உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவுநரான
தனிநாயகம் அடிகளார் இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அவர் பங்குபற்றிய இறுதி
மாநாடாகவும் இதுவே அமைந்தது.</p><p>யாழ். குடா நாடே விழாக் கோலம் பூண்டு பேரெழுச்சியுடன் அந்த மாநாடு நடைபெற்றதாக
அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். </p><p>இம் மாநாட்டின் இறுதி
நாளன்று நடந்த தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரச் சம்பவமும்
வரலாற்றில் பதிவாகியிருந்தது.
</p><p>
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்காவின்
சிக்காக்கோ நகரில் சிறப்பாக நடந்தேறியிருந்தது. இந்நிலையிலேயே 11ஆவது உலகத்
தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் 2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T10:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-assistance-in-arresting-death-row-inmate-1786356396"></link>
            <id>https://tamilwin.com/article/public-assistance-in-arresting-death-row-inmate-1786356396</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டில் ராகம பொலிஸ் பிரிவின் வல்பொலவில் வசிக்கும் ஒரு பெண்ணைத் தாக்கி கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய, ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டில் ராகம பொலிஸ் பிரிவின் வல்பொலவில் வசிக்கும் ஒரு பெண்ணைத் தாக்கி கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய, பொலிஸ் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது.
</p><p>
நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>ஏதேனும் தகவல் தெரிந்தால்</h2><p>
பொலிஸாாரால் தேடப்படும் குற்றவாளி, ரணேபுர தேவகே ரணுக எரண்ட விஜேதுங்க என்ற 38 வயதுடைய ஆண் ஆவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa5ed06-3da7-4f72-967f-40a9bdd6aa52/26-6a79a7cab3546.webp' /></p><p>
அவரது முகவரி: எண் 35/1, உக்கஹேன, வல்பொல, ராகம.
</p><p>
குற்றவாளி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், ராகம பொலிஸ் பொறுப்பதிகாரியை 071 859 1604 என்ற எண்ணிலோ அல்லது குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை 071 962 7561 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T10:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பூட்டப்பட்ட வீட்டை உடைத்து திருட்டு - விசாரணையில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/burglary-breaks-into-locked-house-in-tamil-area-1786357310"></link>
            <id>https://tamilwin.com/article/burglary-breaks-into-locked-house-in-tamil-area-1786357310</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரதிதிபுரம் கிராமத்தில் போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் வீடு ஒன்றைய உடைத்து திருடிய இருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரதிதிபுரம் கிராமத்தில் போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் வீடு ஒன்றைய உடைத்து திருடிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதன்போது, பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் திருட்டு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். </p><h2>

இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 கடந்த 7ஆம் திகதி போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் குறித்த பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களும் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5522c426-c6d0-4002-8a97-0a8afa2d6368/26-6a79a6c65882c.webp' /></p><p> 

இதன்போது, 125 ஆயிரம் ரூபாய் பணம், 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் திருட்டு போயுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

இதனைத் தொடர்ந்து, குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில், வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h2> 


நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை</h2><p>
புதுக்குடியிருப்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலீஸ் பரிசோதகர் சிறீவன்ச,பொலீஸ்
சாயன்ட் 45555 அஜித் 88582 ஜெனன் உள்ளிட்டவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக
நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்கள் 80 ஆயிரம் பெறுமதியான தொலைபேசியை, 8 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3006d85b-acc2-473f-a920-91b2f9b86645/26-6a79a6c72f252.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரில் ஒருவர் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்ட பின்னர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T10:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805"></link>
            <id>https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805</id>
            <summary type="text">புதிய இணைப்புபயணக் கொடுப்பனவு அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) நாடளாவிய ரீதியில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பயணக் கொடுப்பனவு அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த
சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக, கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு
சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.</p><p>

இன்று பொதுமக்கள் தினமாக இருப்பதால், கிராம உத்தியோகத்தர்களின்
சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு 10 முதல் 15
கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.
</p><p>
எனினும், கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்ததால், அவர்களுடன் தொடர்புடைய எந்தவொரு சேவையும் இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a812a8d-5fd8-4d7f-9697-c217e10c34f8/26-6a79a05f7028e.webp' /></p><p>
</p><p>இதனால், தூரப் பகுதிகளில் இருந்து அதிகளவு பணம் செலவிட்டு போக்குவரத்து
வசதிகளைப் பெற்றுக்கொண்டு வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடனும் அதிருப்தியுடனும்
வீடு திரும்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5553729f-1480-40b1-880f-2741eb5b1aea/26-6a79a0604f36e.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.</p><p> 

கொழும்பில் நேற்று (09.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். </p><h2>எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவு</h2><p>கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/747f02ad-a45f-4d2f-9929-b5a307fb7dc1/26-6a79334733501.webp' /></p><p>

2024ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. </p><p>

இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5553729f-1480-40b1-880f-2741eb5b1aea/26-6a79a0604f36e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85392ddc-afff-49a6-8b6f-1b42ba3ad31d/26-6a79a061263e2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd78784e-c712-4e7a-bc8f-ca4af3364e82/26-6a79a0620241b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T09:59:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் புதிய பீடாதிபதி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-new-dean-of-management-studies-1786355724"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-new-dean-of-management-studies-1786355724</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின்
பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின்
பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த நிகழ்வு இன்று(10.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p> 


முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக
பீடச்சபைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 15 வாக்குகளால்
முன்னிலை பெற்றுப் பேராசிரியர் பி. பிரதீப்காந் பீடாதிபதியாகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>

பதவிக் காலம் நிறைவு</h2><p>
தற்போதைய பீடாதிபதி பேராசிரியர் ந.கெங்காதரனின் பதவிக்காலம் எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க,
பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் (திருத்தப்பட்ட) படி புதிய பீடாதிபதியைத் தெரிவு
செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85b699b0-c358-428f-bf0b-03a8075caeab/26-6a79a05c9cb02.webp' /></p><p> 

இந்த நிலையில், இன்று(10) காலை இடம்பெற்ற தெரிவுக் கூட்டத்தில் பேராசிரியர்
பி. பிரதீப்காந் எதிர்வரும் 15.08.2026 முதல் செயற்படும் வகையில்
பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishermen-languishing-in-prison-1786355164"></link>
            <id>https://tamilwin.com/article/fishermen-languishing-in-prison-1786355164</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணாகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>


இந்த விடயம் தொடர்பில், தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

கைதியாக இருக்கும் 38 தமிழக கடற்றொழிலாளர்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 


38 தமிழக கடற்றொழிலாளர்கள் வெலிக்கடை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இலங்கை சிறைகளில் உள்ளனர். அதில் 16 விசாரணை கைதிகளும், 21 தண்டனை கைகளும் அடங்குகிறார்கள்.
</p><p>
இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் நடந்த கலவரங்களில் 33 பேருக்கு மேல்
கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e070edf-b8b4-4463-83e8-a692f5365fc0/26-6a799e3e03a27.webp' /></p><p>



நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறைச்சாலையில் இருந்த
உன்னிகிருஷ்ணன் என்ற இந்திய கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.</p><h2>

தமிழக முதல்வரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை</h2><p>
இந்த நிலையில் பல்வேறு சிறைச்சாலையில் இருந்த 600 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள்,
யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட வடகிழக்கு தமிழ் மாகாண சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/045b30ee-fe58-468e-97b8-8194dc1bc0e1/26-6a799e3ee37a0.webp' /></p><p>
</p><p>
மேலும் இலங்கை சிறைச்சாலைகளில் வெளியில் இருந்து சதிசெய்து, திட்டமிட்டு
கலவரம் நடத்தப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.


இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைச்சாலைகள் உள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
</p><p>

எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய வெளியுறவு துறை
அமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழக கடற்றொழிலாளர்களை மீட்டு அவர்கள் குடும்பங்களிடம்
சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்காலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-died-accident-in-the-mullivaikkal-area-1786353158"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-died-accident-in-the-mullivaikkal-area-1786353158</id>
            <summary type="text">முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p> 

இந்த விபத்து நேற்று(09.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>பொாலிஸார் விசாரணை</h2><p>இந்த விபத்தில் 6ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 18 வயதுடைய மதிமாறன் பிறைசுடர் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a344ea-9f10-4e6a-a48d-132bd7962edc/26-6a799c480c540.webp' /></p><p>காயமடைந்த மற்றைய நபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொாலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T09:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா.. சிசிடிவியில் கிக்கிய நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-maligawatte-police-report-1786350613"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-maligawatte-police-report-1786350613</id>
            <summary type="text">புதிய இணைப்புமாளிகாவத்தையில் சற்று முன்னர் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<h3><span style="color: inherit; font-size: 1.5rem;">புதிய இணைப்பு</span></h3><p>மாளிகாவத்தையில் சற்று முன்னர் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியமை காணொளியில் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>குறித்த நபர், தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G2Dp-v_fuic" width="640" height="360" class="note-video-clip"></iframe><span style="color: inherit; font-size: 1.5rem;"><br></span></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">மூன்றாம் இணைப்பு&nbsp; &nbsp;</span></p><p>மாளிகாவத்தையில் உள்ள பிசிசி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரானின் மாமா என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cef8f80-3cc3-4741-8d77-82d56d392378/26-6a799a30ab5f9.webp' /></p><h3><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு&nbsp;</span></h3><p>மாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><h3>முதலாம் இணைப்பு&nbsp;</h3><p>கொழும்பு - மாளிகாவத்தை பிசிசி பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p></p><p><b style="">YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9TZ74vr3KG8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-10T09:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கு செல்லும் நாட்களை எண்ணும் முன்னாள் அரசியல்வாதிகள்..! சுனில் ஹந்துன்னெத்தி பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-fight-against-corroupt-1786344245"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-fight-against-corroupt-1786344245</id>
            <summary type="text">குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
மக்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.</p><p>
மக்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையின்படி, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதற்கும் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>மத்திய வங்கி பிணைமுறி மோசடி&nbsp;</h2><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய குற்றங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8fa630-b57b-46e6-8485-3b48f47e0087/26-6a797637cc413.webp' /></p><p>
அரச அதிகாரத்தைப் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஊழல்களும் மோசடிகளும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டுத் தண்டிக்கப்படுவது அரசாங்கத்தின் முதன்மையான பணியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் நாட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டு, அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றால் எதிர்கட்சியினர் உண்மையிலேயே மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சிறைக்கு&nbsp; செல்லும் வாய்ப்பு அதிகம்&nbsp;</h2><p>
</p><p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதைத் திருத்துவது தொடர்பான எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p> ஏனெனில் அது அவர்களுக்கு ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d676aa97-b6e7-4952-ad56-62a6d6b347f0/26-6a797637277b6.webp' /></p><p> </p><p>ஆனால் இங்கு நடப்பது நாட்டிற்கு அழிவல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். சட்டம் நடுநிலையாகச் செயல்படும் போது, தாங்கள் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற பயமே அவர்களின் இந்த எதிர்ப்பிற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் முழுப் பொறுப்பேற்கும் என்றும், இத்தகைய சட்டத் திருத்தங்களின் மூலம் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் திருத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் வலுப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக நகரில் குடியேறுவோருக்கு வாக்களிக்க முடியாத நிலை..! மரிக்கார் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/migrants-in-port-city-not-have-the-right-to-vote-1786347997"></link>
            <id>https://tamilwin.com/article/migrants-in-port-city-not-have-the-right-to-vote-1786347997</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்தில் எதிர்காலத்தில் குடியேற திட்டமிடுவோருக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதாக&amp;nbsp;உட்கட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்தில் எதிர்காலத்தில் குடியேற திட்டமிடுவோருக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவதாக&nbsp;உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இதன் காரணமாக அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>துறைசார் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>வாக்களிக்க முடியாத நிலை</h2><p>மேலும் தெரிவிக்கையில், துறைமுக நகரத்தில் குடியேறக்கூடியவர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட போதிலும், அவர்களால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62f20f56-4b5c-4647-a561-273ab26eb44a/26-6a798c94a978a.webp' /></p><p>ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றால், அவர்களால் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வாக்களிக்க முடியும்.

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு இடம் எதுவும் இல்லை. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.</p><p>துறைமுக நகரத்துக்காக பிரத்தியேகமாக தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>துறைமுக நகர நிலப்பரப்பு</h2><p>இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்ட 2019ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம், துறைமுக நகர நிலப்பரப்பு ஏற்கனவே கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்ட ரீதியிலான பிரதிநிதித்துவம் தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5436ff2c-dd4e-412d-b109-a0639e2bb13d/26-6a798c93d6d5a.webp' /></p><p>
இதற்கு எஸ்.எம்.மரிக்கார் கூறுகையில், வர்த்தமானி அறிவித்தலானது நாடு தழுவிய மற்றும் மாவட்ட ரீதியிலான தேர்தல்களுக்கான சேர்க்கையை உறுதிப்படுத்திய போதிலும், உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதித்துவப் பிரச்சினையை அது தீர்க்கவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டால், அது துறைமுக நகரத் திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T08:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் நீதிமன்றில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-to-appear-before-cid-today-1786338239"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-to-appear-before-cid-today-1786338239</id>
            <summary type="text">புதிய இணைப்புகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சற்றுமுன்னர் கடுவெ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சற்றுமுன்னர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் தெரிவிக்கப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XF3PPtKhn-s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு&nbsp;</span></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (10.08.2026) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் கூறப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டார்.&nbsp;</p><h2>வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம்</h2><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9800c54-49f4-41f5-bc89-631f5f5930b1/26-6a7960114cd7d.webp' /></p><p>

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9yppdAAjxog" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-10T08:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் முக்கிய கோரிக்கை.. நீதிமன்று எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-petiotion-court-reviewed-1786349036"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-petiotion-court-reviewed-1786349036</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் இன்று (10) மேல்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டன.</p><h2>ஒத்தி வைப்பு&nbsp;</h2><p>இடைநிலை மனுதாரர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ec6b52d-0906-4df6-a506-f00aec202a2c/26-6a798894c162d.webp' /></p><p>
அதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றம், இவ்விடயம் மீதான மேலதிக பரிசீலனையை இந்த மாதத்தின் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டது.&nbsp;&nbsp;</p><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அவர் இந்த மனுத்தாக்கலை செய்திருந்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T08:22:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் - ஈரானின் அதிரடி திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-oil-refinery-in-saudi-arabia-1786349270"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-oil-refinery-in-saudi-arabia-1786349270</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை, ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலை, ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><h2>
இரண்டு நாட்களுக்கு பின் தொடரும் தாக்குதல்</h2><p>
சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20c45847-c808-4013-a94f-5b82846cb549/26-6a798882ed27e.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, நேட்டோ பாதுகாப்பு கூட்டணிக்கு இணையான பாதுகாப்பு ஒப்பந்தம், மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றில் தாக்குதல் நடத்தினால், அது மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும். </p><p>

இதேவேளை, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல் மாண்டேப் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள மொகா துறைமுகமும் ஹவுதிகளின் தாக்குதல்களால் பெருமளவு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-10T08:15:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கின்றது! நாமல் கடுமையாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-trying-suppress-the-opposition-1786348142"></link>
            <id>https://tamilwin.com/article/govt-trying-suppress-the-opposition-1786348142</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p>இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் பொலிஸாரை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது தெளிவாக அம்பலமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒருபுறத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து செல்வதாக தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>எனினும் பொலிஸாரோ அல்லது பொலிஸ் மா அதிபரோ இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>வெளியிட்ட கருத்திற்காக விசாரணை</h2><p>
</p><p>எனினும் கட்சி ஒன்றின் பொதுச்செயலாளர் ஒரு கருத்தை வெளியிட்டவுடன் மிக வேகமாக விசாரணை நடத்தி வாக்குமூலம் அளிப்பதற்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
88-89 ஆம் ஆண்டு காலப்பகுதி போல் தற்போது துப்பாக்கிச் சூடு மட்டுமன்றி வீடுகளுக்கு குண்டு வீசும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
இது நாட்டின் மக்களது பாதுகாப்பிற்கு பிரச்சினையாக உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத அரசாங்கம் பொலிஸார் கட்சி ஒன்றின் பொதுச்செயலாளர் கருத்து வெளியிட்டவுடன் தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5dd404a-65ca-4b88-b09a-657fcccef8b2/26-6a79827036a9e.webp' /></p><h2>அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் பொலிஸார்</h2><p>
</p><p>இதன் மூலம் அரசாங்கம் பொலிஸாரை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது தெட்டத் தெளிவாக அம்பலமாகின்றது எனவும் அதனையே சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்திரலோகத்தில் வாழும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தேசிய பாதுகாப்பும் பொது பாதுகாப்பும் இரு வேறு விடயங்கள் என அண்மையில் கூறி இருந்தார் எனவும், தான் இந்திரலோகத்தில் இருப்பதாக அவரே கூறியிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>அரசாங்கம் சர்வாதிகார ஆட்சி ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T07:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் : 20 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-roundup-operations-carried-out-1786346007"></link>
            <id>https://tamilwin.com/article/special-roundup-operations-carried-out-1786346007</id>
            <summary type="text">நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று இனம் காணப்பட்ட 20 பேர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று இனம் காணப்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>சுற்றிவளைப்பின் போது சுமார் 25, 482 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்களுள் சந்தேகத்தின் அடிப்படையில் 461 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்பு உடையவர்கள் என 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>போக்குவரத்து சட்டங்களை மீறிய&nbsp;</h2><p>

குறிப்பாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 231 பேரும் இதில் அடங்குவர். திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 116 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1974815-b479-47f4-b58d-067336afca86/26-6a798075c9b12.webp' /></p><p>&nbsp;மேலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்திய 78 சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன், பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய 89 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்நிலையில், போக்குவரத்து சட்டங்களை மீறிய மற்றும் வேறு குற்றச் செயல்களுக்காக 3,917 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T07:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு காருடன் கைது செய்யப்பட்ட இளம் தம்பதி - தனமல்வில பகுதியில் இருந்து கிடைத்த இரகசிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-couple-caught-smoking-driving-1786345478"></link>
            <id>https://tamilwin.com/article/young-couple-caught-smoking-driving-1786345478</id>
            <summary type="text">தன்னுடைய சொகுசு காரில் கஞ்சா போதைப்பொருள் கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னுடைய சொகுசு காரில் கஞ்சா போதைப்பொருள் கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை, புத்தளம் - சிலாபம் வீதியில் பத்துலு ஓயா பொலிஸ் சோதனைச் சாவடியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, தம்பதியினரின் சொகுசு காரில் 17 கிலோகிராம் மற்றும் 985 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. </p><h2>

இளம் தம்பதியினர் கைது</h2><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 26 வயது ஆணும், 22 வயது பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08dcd190-458d-4445-b144-79727a493258/26-6a797dc67ddcc.webp' /></p><p> 

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

பொலிஸாரால் மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள், தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டது என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. </p><p>

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இளம் தம்பதியினர், இன்று(10.08.2026) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/niy7eEn0MSo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் - வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/results-of-scholarship-exam-1786345408"></link>
            <id>https://tamilwin.com/article/results-of-scholarship-exam-1786345408</id>
            <summary type="text">

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். </p><p>

இன்று காலை(10.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

 ஆகஸ்ட் 20 முதல் 25 வரை ..</h2><p>

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டை ஆகஸ்ட் 20 முதல் 25 வரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00de3cd2-ce2d-4f13-863c-2540178e59d1/26-6a797a6790ff3.webp' /></p><p> </p><p>

இதேவேளை, இந்த ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 தேர்வு மையங்களில் நேற்று(09) இடம்பெற்றது. </p><p>

இந்த பரீட்சையில் 94,089 மாணவர்கள் பங்கேற்றதாகவும், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் பரீட்சை எழுதியுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T07:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-in-risk-1786329862"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-in-risk-1786329862</id>
            <summary type="text">உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் அரசாங்கங்களைச் சேர்ந்த பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துக்களும் இல்லை என்ற ஆரம்ப ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு, சதொச வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.</p><p> </p><h2><b>தீர்ப்பிற்கு எதிராக மேன்முறை</b></h2><p>அதனைத் தொடர்ந்து, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் அந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657d2885-8e73-41f0-ab04-81e9a7af64a0/26-6a7979da45060.webp' /></p><p>அத்துடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளரின் கையெழுத்துடனும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என குறித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>அதற்கமைய, குறித்த நிபந்தனையின் அடிப்படையில் விலக்கிக் கொள்ளப்பட்ட மகிந்த ராஜபக்சவின் சொத்து வழக்கு, கோட்டாபய ராஜபக்சவின் சொத்து வழக்கு, பஸில் ராஜபக்சவின் 5 சொத்து வழக்குகள், நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோரின் 3 வழக்குகள், ரோஹித அபேகுணவர்தனவின் வழக்கு ஒன்று, கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கு ஒன்று உள்ளிட்ட பல வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே ஆணையாளரின் கையெழுத்துடன் வழக்கு தொடரப்பட்டமை காரணமாக அவை வாபஸ் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T07:12:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தம் : சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் எதிர்க்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-22nd-constitutional-amendment-1786342352"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-22nd-constitutional-amendment-1786342352</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், குறித்த அரசியலமைப்பு திருத்த வரைவு சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக</h2><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,&nbsp;வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தமது கட்சி தொடர்ச்சியாக எதிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1c5523-add8-48fc-9314-541b5c8b0bfa/26-6a7971eebcec2.webp' /></p><p>
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பைக் கட்டியெழுப்பும் வகையில் அரசியல் பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து எமது சட்டத்தரணிகளுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T07:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்..! பரீட்சை ஆணையாளர் நாயகம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/al-exam-results-by-end-of-this-year-1786345285"></link>
            <id>https://tamilwin.com/article/al-exam-results-by-end-of-this-year-1786345285</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>இன்று(10.08.2026) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p>
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் செப்டெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><h2>கடமையில் தவறும் ஊழியர்கள் மீது</h2><p> 
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் ஆரம்பமானது. இது செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p>இம்முறை 264,496 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 107,814 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
பரீட்சை மண்டபங்களுக்குள் கைப்பேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள் அல்லது குறிப்புகளை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dd71553-00b1-436a-972d-f6c93d768358/26-6a7977475851f.webp' /></p><p>மண்டபத்தினுள் பேசுதல், விடைத்தாள்களைப் பரிமாறிக்கொள்ளுதல் அல்லது இடையூறு விளைவித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு எதிராகப் பரீட்சை முடிவுகளை இடைநிறுத்துவது உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>பரீட்சை கடமையிலுள்ள அதிகாரிகளில், மண்டப மேலதிகாரிகள் மற்றும் மேலதிக உதவி மேலதிகாரிகளுக்கு மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடமையில் தவறும் ஊழியர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இதுவரை சீற்றமான காலநிலை அல்லது அவசரச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அசாதாரண சூழ்நிலைகள் உருவானால் உடனடியாகச் செயல்பட அனைத்து நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T07:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அநுரவின் தீர்மானம்.. ஜி.எல். பீரிஸ் விடுத்த பகிரங்க சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-npp-government-g-l-peiris-1786342064"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-npp-government-g-l-peiris-1786342064</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நாட்டில் முடங்கியுள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நாட்டில் முடங்கியுள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை விரைவாக முடிப்பதற்கே என்ற அரசாங்கத்தின் கூற்றை நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் ஜி.எல்.பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.</p><p>கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதன்போது அவர், "அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடும் 1.1 மில்லியன் வழக்குகளில், மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் வெறும் 1 சதவீதம் மாத்திரமேயாகும்.</p><h2>1 வீத வழக்குகள்..&nbsp;</h2><p> </p><p>இந்த உண்மையைத் மறைத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் அப்பட்டமான பொய்களைக் கூறி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a52a5d38-1ec7-4e7c-a16d-ad692ed73902/26-6a7974260f78f.webp' /></p><p> </p><p>மேலும், நீதிமன்ற வழக்குகளின் தாமதம் குறித்து அரசாங்கத்திற்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் காலியாக உள்ள 8 நீதிபதி இடங்களை இந்நேரம் நிரப்பியிருக்கும்.</p><p>அதனைச் செய்யாமல் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முற்படுவது அவர்களின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p>
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. </p><p>அத்துடன் தலைமை நீதிபதி 67 வயதை அடைந்தவுடன் அல்லது 6 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்தின் திட்டம்..&nbsp;</h2><p> நீதித்துறையை நிறைவேற்று அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே இந்த 22ஆவது திருத்தத்தின் உண்மையான நோக்கமாகும். இது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான முதற் படி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d29dfc-7d50-4c73-85bb-1a3cf67553c6/26-6a79772c3d7fe.webp' /></p><p>வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இந்தத் திருத்தச் சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யவுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அதேவேளை, நிலுவையில் உள்ள 1.1 மில்லியன் வழக்குகளில் சுமார் 96 சதவீதமானவை நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே காணப்படுவதாக பாட்டாலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>அரசாங்கம் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளைப் புறந்தள்ளி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதே 22ஆவது திருத்தத்தின் மறைமுக நோக்கம் என குற்றம் சாட்டியுள்ள அவர், ஸ்டாலினிச பாணி நிர்வாகத்தை நிறுவ முனையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள் எனச் சித்தரித்து அழிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T06:54:38+00:00</updated>
        </entry>
    </feed>
