<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-04T06:27:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-coordinating-committee-meeting-1788502467"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-coordinating-committee-meeting-1788502467</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (206.09.04) காலை
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (206.09.04) காலை
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம்
சந்திரசேகர் வடமாகான ஆளுனர் நாகலிங்கன் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில்
ஆரம்பமாகியுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
</p><p>
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால்
மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள்
தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.
</p><p>
ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற
போது நாடாளுமன்ற உறுப்பினர் அரசன் இராமநாதன் கடற்தொழில் அமைச்சர் ஆகியோரிடையே
ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கூட்டம் இன்று ஆரம்பி
ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும்: தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-disappered-peoples-request-1788496667"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-disappered-peoples-request-1788496667</id>
            <summary type="text">தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

வவுனியாவில் 3483 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

இந்த நிலையில் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குறித்த கொட்டகைக்கு முன்பாக நேற்று (03.09) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது காணாமல்போன தமது உறவுகளின் படங்களையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கையில் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a66eb33c-f46e-4a88-a703-efbde2b56163/26-6a9a603375a21.webp' /></p><h2>உண்மையைத் தேடி காத்திருக்கிறோம்</h2><p> </p><p>

இதன்போது போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில், பேச்சு வேண்டாம் - நடவடிக்கை வேண்டும். காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க கனடா உதவ வேண்டும். 

வவுனியாவில் ஏ9 வீதியோர போராட்டக் கொட்டகையில், காணாமலாக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தேடி 3483வது நாளாக நாங்கள் தொடர்ந்து காத்திருக்கிறோம். </p><p>

பல ஆண்டுகளாக வாக்குறுதிகளையும், அரசியல் பேச்சுகளையும் கேட்டுவிட்டோம். ஆனால் எங்கள் பிள்ளைகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. எங்களுக்கு இனி வெறும் பேச்சுகள் தேவையில்லை. </p><p>

சர்வதேச சமூகத்திடமிருந்து நடைமுறை நடவடிக்கை வேண்டும். எங்கள் பார்வையில், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் நிலையான தீர்வு, காலனித்துவ நீக்கத்தின் அடிப்படையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட வழிமுறையை முன்னெடுப்பதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e528ef4-b689-4639-abc7-94e6d4d5afe4/26-6a9a6034606b5.webp' /></p><p> 

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடுகள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் தீர்வை வழங்கத் தவறி விட்டன என்பதைக் கூறி, இந்தப் பிரச்சினையை சர்வதேச சட்டத்தின் கீழ் நீதிமன்ற வழிமுறைக்கு எடுத்துச் செல்ல பிரித்தானியா தனது வரலாற்றுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அண்மையில் லண்டனிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.</p><h2>கனடாவிற்கு அனுப்பப்படும் கடிதங்கள்</h2><p> 

இப்போது எங்கள் அழைப்பு கனடாவுக்கு இன்று, செப்டம்பர் 3, 2026 கனடாவின் பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் எங்கள் தாய்மார்களின் சார்பில் முறையான கடிதங்களை அனுப்புகிறோம். 

தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98a1738-f746-43f8-b337-158a39a373bd/26-6a9a60353d0dc.webp' /></p><p> </p><p>பிரித்தானியாவிடம் நாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு கனடாவும் ஆதரவளித்து, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு தீர்வைத் தேடுவதற்கு உதவ வேண்டும். எங்கள் செய்தி தெளிவானது. பேச்சு மட்டும் போதாது - நடவடிக்கை வேண்டும்.</p><p> எங்கள் பிள்ளைகளுக்கு உண்மை மற்றும் நீதி வேண்டும். தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் எதிர்காலம் வேண்டும். காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட நடவடிக்கை வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe8749cf-edd5-40e1-b250-ed6b1b083fa1/26-6a9a603620465.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மேயரின் திடீர் மரணத்தின் சந்தேகம்! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eraj-fernando-body-samples-further-examination-1788488312"></link>
            <id>https://tamilwin.com/article/eraj-fernando-body-samples-further-examination-1788488312</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பின் நீதித்துறை வைத்திய அதிகாரியால் நேற்று (3) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த பரிசோதனையின் போது, ​​மேலதிக விசாரணைகள் மற்றும் சோதனைகளுக்காக எராஜ் பெர்னாண்டோவின் உடலிலிருந்து மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு நீதித்துறை வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.</p><h2>முன்னாள் மேயரின் திடீர் மரணம்</h2><p>
</p><p>
திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில், முன்னாள் மேயரின் உடல் நேற்று முன் தினம் (2) காலை கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbe9b078-4470-4c09-ab70-435bbbd43934/26-6a9a5fc533350.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையின் படி, குடியிருப்பில் உள்ள அறைகளில் ஒன்றின் அருகே கதவில் கட்டப்பட்டிருந்த பட்டியினால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
முன்னாள் மேயருடன் மற்றொரு நபரும் அந்த குடியிருப்பில் தங்கியிருந்ததாக பொலிஸ் மேலும் கூறியுள்ளது.
</p><p>
இருப்பினும், அந்த நபர் முந்தைய நாள் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு பயணம் செய்திருந்த நிலையில், நேற்று காலை அந்த நபர் தொலைபேசி மூலம் பெர்னாண்டோவை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் விளைவாக, அந்த நபர், குடியிருப்பில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணைத் தொடர்புகொண்டு, குடியிருப்பை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.</p><p>
இதன்போதே முன்னாள் மேயரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><h2>பல சர்ச்சைக்குரிய வழக்குகள்</h2><p>இந்த பின்னணியில் எராஜ் பெர்னாண்டோ மீது பல சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp; &nbsp;</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27aae27-235a-447a-8f85-706199dd6237/26-6a9a5fc480a31.webp' /></p><p>
</p><p>இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச்சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இவர் துப்பாக்கி மேயர் என்று பரவலாக அறியப்பட்டார்</p><p>

இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>இதனையடுத்து பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/selection-urban-council-for-vavuniya-town-north-1788501687"></link>
            <id>https://tamilwin.com/article/selection-urban-council-for-vavuniya-town-north-1788501687</id>
            <summary type="text">வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு இன்று இடம்பெற்றது.

வவுனியா, பூந்தோட்டம் பொது நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கல்வி, உயர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு இன்று இடம்பெற்றது.
</p><p>
வவுனியா, பூந்தோட்டம் பொது நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
</p><p>
கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில், வட்டார சபையின் தலைவராக கோணேஸ்வரலிங்கம் தெரிவு
செய்யப்பட்டார்.</p><p>

செயலாளராக கிறிஸ்ரலாவும் உறுப்பினர்களாக கிருபாநிதி, றயிந்தன், சுகுமார்,
நற்குணசீலி, ரஜனி, சுப்பிரமணியம், ஶ்ரீரஞ்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சருடனான பொதுமக்கள் சந்திப்பும் இடம்பெற்றது. </p><p>இந்
நிகழ்வில் வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.கிருஸ்ணதாஸ், சு.விஜயகுமார்,
மற்றும் தேசியமக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது மாணவி கடத்தல் - இளைஞனை தேடும் பொலிஸார் - தாய் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-kidnapped-mother-arrested-1788492882"></link>
            <id>https://tamilwin.com/article/student-kidnapped-mother-arrested-1788492882</id>
            <summary type="text">எல்ல, கினலன்வத்தையை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல, கினலன்வத்தையை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். </p><p>இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
</p><p>
சந்தேகநபரின் தாயார் குற்றத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2><b> மாணவி கடத்தல்</b></h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பண்டாரவளை, பூனாகல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bc7fa56-c627-4f14-805c-789c967bd48e/26-6a9a5d54c3e38.webp' /></p><p>கடத்தப்பட்டவர் எல்லப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவியாவார். </p><p>பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> கடந்த ஜூலை 18 ஆம் திகதி குறித்த மாணவி பண்டாரவளையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். </p><p>தந்தை வீட்டின் அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்த போது சந்தேகநபரான இளைஞன் அவரைக் கடத்திச் சென்றுள்ளார். </p><p>சந்தேகநபர் எல்.ஜி. பிரிவைச் சேர்ந்த 18 வயதுடைய கூலித் தொழிலாளியாவார். அவர் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொழும்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். </p><p>கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் சட்டபூர்வமான பொறுப்பாளர் அனுமதியின்றி சில வாரங்கள் மாணவியை தடுத்து வைத்துள்ளார். </p><h3><b>தாய் கைது</b></h3><p>இந்நிலையில் மகள் காணாமல் போனமை குறித்து தந்தை எல்லப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/406ca794-f71a-48c4-b44b-d25e90eeb83d/26-6a9a5d557749d.webp' /></p><p>விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரின் வீட்டிலிருந்த மாணவியைக் மீட்டுள்ளனர்.&nbsp;</p><p>அதற்காக உதவி புரிந்த சந்தேகநபரின் தாயாரையும் பொலிஸார் கைது செய்தனர். </p><p>சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான இளைஞன் பிரதேசத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். </p><p>அவரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p>]]></content>
            <updated>2026-09-04T05:56:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-human-rights-office-about-srilanka-1788499853"></link>
            <id>https://tamilwin.com/article/un-human-rights-office-about-srilanka-1788499853</id>
            <summary type="text">இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும்,
நல்லிணக்கத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த
வேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும்,
நல்லிணக்கத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த
வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

​</p><p>அக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த
அறிக்கையில், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அரசியல் படுகொலைகள் மற்றும் 2019
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அடைந்த முன்னேற்றங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன.</p><h2>தன்னிச்சையான கைது, நீண்டகால தடுப்புக்காவல்கள்</h2><p>
</p><p>
இருப்பினும், அடக்குமுறையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) பயன்பாடு
தொடர்ந்து நீடிப்பதாகவும், தன்னிச்சையான கைதுகளும் நீண்டகால
தடுப்புக்காவல்களும் தொடர்வதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebdaffdb-4463-4646-a8d3-78bef6439cdb/26-6a9a5b3ea9c01.webp' /></p><p>
இந்தநிலையில்,​ இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 2025இல்
602 சித்திரவதை சம்பவங்களும், 18 காவல் மரணங்களும் பதிவாகியுள்ளதுட ன், 2026
ஏப்ரல் வரை மேலும் 138 சித்திரவதைகளும், 3 மரணங்களும் நடந்துள்ளன.

​</p><p>மேலும் ஜூலை மாதம் நீரகொழும்பு சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 32 பேர்
உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அவசர சிறை சீர்திருத்தங்களின்
அவசியத்தை அறிக்கை வலியுறுத்துகிறது.</p><h2>கண்காணிப்புகளும் அச்சுறுத்தல்களும்</h2><p>
</p><p>
இதேவேளை ​சிவில் சமூகப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜெனீவா ஐ.நா
கூட்டங்களில் பங்கேற்போர் மீதான இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினரின்
கண்காணிப்புகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/359cc228-2c1a-4c8d-b729-98102736212d/26-6a9a5b3f5ceec.webp' /></p><p>

அத்துடன் ​ பேராசிரியர் சுப்பிரமணியன் ரவீந்திரநாத் படுகொலை வழக்கில்
'பிள்ளையான்' மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்றாலும், 17
உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட முத்தூர் வழக்கு போன்ற முக்கிய குற்றங்கள் பல
ஆண்டுகளாகத் தேக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​</p><p>இதேவேளை, நீடித்து வரும் நிறைவேற்று அதிகார துஷ்பிரயோகம் மற்றும்
தண்டனையின்மையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், பயங்கரவாதத்
தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும், மனித உரிமை
மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளை உயர் பதவிகளிலிருந்து விலக்கி
வைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:46:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114"></link>
            <id>https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114</id>
            <summary type="text">புதிய இணைப்பு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு </h2><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (4) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு கடுமையாகப் பாதிப்பு! நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-electricity-system-movement-warns-1788496802"></link>
            <id>https://tamilwin.com/article/national-electricity-system-movement-warns-1788496802</id>
            <summary type="text">தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. 

அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. </p><p>

அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பில் மேலும்,

பட்டங்கள் மற்றும் நூல்கள் உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கியதன் காரணமாக பல மின் பாதைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளன.</p><h2>கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>

அத்துடன், இது தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddbbf00e-cda1-427e-8981-75fd7fdf3dcd/26-6a9a4dff357aa.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அவசரகால நடவடிக்கையாக சில மின் விநியோகப் பாதைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட வேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குப் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டை பெற வரிசையில் காத்திருந்த முக்கியஸ்தர்! அதிகாரிகள் தொடர்பில் வெளியிட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-ambassador-mahinda-queues-passport-1788495909"></link>
            <id>https://tamilwin.com/article/former-ambassador-mahinda-queues-passport-1788495909</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதர் மஹிந்த சமரசிங்க பாராட்டியுள்ளார்.

சமூக வலைத்தள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதர் மஹிந்த சமரசிங்க பாராட்டியுள்ளார்.</p><p>

சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினையிட்டு அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,</p><h2>பாராட்டு</h2><p>
அண்மையில் இலங்கை கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சென்றிருந்தேன். அங்கு பணியாற்றிய அனைத்து அதிகாரிகளும் மிகவும் உதவிகரமாகவும் திறமையாகவும் செயற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/815bf8be-2cd3-4845-9426-1de037153dc3/26-6a9a4c41a065f.webp' />&nbsp;</p><p> </p><p>

எனவே அனைவருக்கும் தனது நன்றியை சமூக ஊடகப்பதிவின் மூலம் வெளிப்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T04:43:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பள அதிகரிப்பு! நாட்டை விட்டு வெளியேறும் அரச ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employees-leaving-the-country-1788494836"></link>
            <id>https://tamilwin.com/article/government-employees-leaving-the-country-1788494836</id>
            <summary type="text">

உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைச் சரியாகப் பராமரிப்பதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 50 முதல் 70 ரூபா வரை குறைப்பதற்கான சாத்தியங்கள் இருந்தும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது.</p><h2>உரிய சம்பள அதிகரிப்பு இல்லை</h2><p> </p><p>

பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன் காரணமாக, பொதுமக்கள் இரட்டைச் சுமைகளுக்குள் உள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6e52409-7a13-4288-8d0d-5335f9c2d3e9/26-6a9a4baf5b6ea.webp' /></p><p>

மேலும், உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமையினால், வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றனர். </p><p>

இவ்வாறான பல்வேறு நெருக்கடி நிலைகளைப் பொருட்படுத்தாமல், அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன் அவர்களது சம்பளத்தையும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AyVMfG2ngNk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-04T04:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல்! குவிந்துள்ள ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்புசற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp;</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T04:07:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-oil-and-naphtha-prices-change-1788492118"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-oil-and-naphtha-prices-change-1788492118</id>
            <summary type="text">எரிபொருள் எண்ணெய் (Fuel Oil) மற்றும் நாஃப்தாவின் (Naphtha) விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (04) நள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் எண்ணெய் (Fuel Oil) மற்றும் நாஃப்தாவின் (Naphtha) விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.</p><h2>விலை விபரம்</h2><p>
</p><p>
அதன்படி, ஒரு லீற்றர் நாஃப்தாவின் விலை 210 ரூபாயிலிருந்து 35 ரூபாய் குறைக்கப்பட்டு 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df023be-7004-4922-bc45-1220ae4484d3/26-6a9a3d9b6dade.webp' /></p><p>

மேலும், ஒரு லீற்றர் எரிபொருள் எண்ணெயின் விலையை 248 ரூபாயிலிருந்து 38 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை ,210 ரூபாயாக நிர்ணயிக்கவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:48:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனின் கொடூர செயல் - கர்ப்பிணிப்பெண் குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-wife-and-baby-1788486637"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-wife-and-baby-1788486637</id>
            <summary type="text">புத்தளம் கல்பிட்டி, எஸ்.பி.ஆர்.வத்தை, தலவில பகுதியில் கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். 

இரண்டு பிள்ளைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் கல்பிட்டி, எஸ்.பி.ஆர்.வத்தை, தலவில பகுதியில் கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். </p><p>

இரண்டு பிள்ளைகளின் தாயான கர்ப்பிணிப் பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பொலிஸாரின் அவசர தொலைபேசி சேவையான 119 இற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், உடனடியாக செயற்பட்ட கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.</p><p> </p><h2><b>

கர்ப்பிணிப்பெண் குத்திக் கொலை </b></h2><p>45 நிமிடங்களுக்குள் துரத்திச் சென்று சந்தேக நபரையும் குற்றத்திற்கு பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55acc1bb-8c19-4f11-a391-5d0218e60078/26-6a9a33b7d0e6e.webp' /></p><p>இவ்வாறு உயிரிழந்தவர் களாப்பள்ளி, தலவில முகவரியை சேர்ந்ததிலினி தில்ருக்ஷி என்ற 26 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T02:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரிப்பு: இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-import-amount-hiked-1788488532"></link>
            <id>https://tamilwin.com/article/oil-import-amount-hiked-1788488532</id>
            <summary type="text">நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
</p><p>2025 ஆம் ஆண்டின் ஜனவரி - ஜூலை காலத்தில் 2,265.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த எரிபொருள் இறக்குமதி செலவு, 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 3,621.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.</p><h2>கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு</h2><p>
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்தமையே இந்த உயர்வுக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae63d40f-0e27-4bfd-baac-7f0baa76847e/26-6a9a2b55bbf38.webp' /></p><p>
</p><p>2026 ஜூன் மாதத்தில் 465 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான மாதாந்த எரிபொருள் இறக்குமதி செலவு, ஜூலை மாதத்தில் 453 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்றே குறைந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு - பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217"></link>
            <id>https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
துப்பாக்கி சூடு</b></h2><p>துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e0266b-93c9-4a97-a0c7-a527bd40c2f2/26-6a9a1deda8785.webp' /></p><p>இந்தத் துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட காரணத்திற்காக நடத்தப்பட்டதாகவும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து கொழும்புப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடிக்குள் சிக்கவேண்டாம்! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warn-public-fake-traffic-fine-payment-1788486106"></link>
            <id>https://tamilwin.com/article/police-warn-public-fake-traffic-fine-payment-1788486106</id>
            <summary type="text">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு கோரும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.

போக்குவரத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு கோரும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.
</p><p>
போக்குவரத்து பொலிஸார் தரப்பிலிருந்து அழைப்பதாக கூறி மோசடியாளர்கள் இந்த மோசடியை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் (Traffic Control and Road Safety Range) பொறுப்பதிகாரி டி.ஐ.ஜி. செனதீர விளக்கமளிக்கையில்,</p><h2>போக்குவரத்து விதிமீறல்கள்</h2><p>

பெறுநர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும் கூறி செய்திகள் பரப்பப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad810053-6dbf-4ad6-952a-7a64e15f575c/26-6a9a29aeeb448.webp' /></p><p>
</p><p>
சில நாட்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால் அபராதம் அதிகரிக்கும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அச்சுறுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

இதன்பின்னர், பெறுநர்கள் மோசடி இணையதளங்களுக்கு வழிநடத்தப்பட்டு, அங்கு அவர்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகின்றார்கள்.
</p><p>
இதுபோன்ற இணைப்புகள் மூலம் மக்கள் தங்கள் வங்கி விவரங்களை உள்ளிட்டு, பின்னர் தங்கள் கணக்குகளிலிருந்து பணத்தை இழந்ததாக பொலிஸார்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
</p><p>
போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக வாகன சாரதிகளை இணையதளங்களுக்கு வழிநடத்தும் நடவடிக்கையை இலங்கை போக்குவரத்து பொலிஸார் அனுப்புவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அபராதங்களை செலுத்துவதற்கான&nbsp;ஒரே இணையவழி வழிமுறை</h2><p>
</p><p>
போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு தற்போது கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒரே இணையவழி வழிமுறை GovPay ஆகும்.
</p><p>
இதில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஒரு பொலிஸ் அதிகாரியால் வழங்கப்படும் தகவல்களை பயன்படுத்தி பணம் செலுத்தப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f25b7cfa-55d0-4bde-84b2-74e4f7beddfc/26-6a9a29afa6c82.webp' />&nbsp;</p><p>

"இலங்கை போக்குவரத்து பொலிஸ் துறையினால் அனுப்பப்படும் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்குத் தனி இணையதளம் எதுவும் இல்லை.

எனவே சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், வங்கி மற்றும் பிற இரகசியத் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த மோசடிக்கு பலியானவர்கள், விசாரணைக்காகத் தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
போக்குவரத்து அபராதங்கள் எனக்கூறப்படும் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறு வரும் அழைப்புகளை புறக்கணிக்குமாறு பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இருவர் அபுதாபியிலிருந்து நாடு கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-deportees-abu-dhabi-brought-back-to-sri-lanka-1788484985"></link>
            <id>https://tamilwin.com/article/two-deportees-abu-dhabi-brought-back-to-sri-lanka-1788484985</id>
            <summary type="text">இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.நேற்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்துள்ளனர்.</p><h2>கையடக்க தொலைபேசிகளில் சிக்கிய காணொளி</h2><p>
</p><p>இரு சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்தபோது, ஈரான் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான காணொளிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee6cc27-157a-4ca9-9b51-28575b4aadaa/26-6a9a2100af27c.webp' />&nbsp;</p><p>
</p><p>
நாடு கடத்தப்பட்ட இரு சந்தேகநபர்களும் 36 மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இவர்களிடம் மேலதிக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T01:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மனைவிக்கு நபர் செய்த மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-husband-arrested-for-leaking-photos-1788485292"></link>
            <id>https://tamilwin.com/article/ex-husband-arrested-for-leaking-photos-1788485292</id>
            <summary type="text">கண்டியில் பெண்ணொருவரின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டியில் பெண்ணொருவரின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் கண்டி உப அலுவலக அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபர் நேற்று கினிகத்தேனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>பொலிஸார்&nbsp;விசாரணை</b></h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்தவராகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab3170e6-20d8-49c4-b286-50da127f0b10/26-6a9a2de145503.webp' /></p><p>சந்தேகநபர் முறைப்பாட்டாளருடன் திருமணம் செய்திருந்தார். எனினும் சட்டப்பூர்வமாக பிரிந்திருந்த நிலையில் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T01:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் இளைஞர்கள் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் முன்னிலையான பெண் சட்டத்தரணிக்கு அரசினால் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyer-achala-seneviratne-attorney-general-1788483145"></link>
            <id>https://tamilwin.com/article/lawyer-achala-seneviratne-attorney-general-1788483145</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இந்த அரசாங்கத்திலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவரைச் சிறையில் அடைத்து, பல்வேறு துன்புறுத்தல்களைச் செய்வதற்கான தீட்டப்பட்ட திட்டம் ஒன்று கசிந்துள்ளது.</p><p>
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவறுகள் குறித்து துணிச்சலாக நேருக்கு நேர் பேச கூடிய ஒரு பெண் தான் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன.</p><p>அவருக்கு எதிராக அவரை பாதுகாக்க வேண்டிய தரப்பே செயற்பட முற்படுகிறது. 
சூழ்ச்சிக்கு மேல் சூழ்ச்சி செய்கிறார்கள், ஒரு புறம் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த, மறுபுறம் மக்களைக் கடும் விரக்திக்கு உள்ளாக்க. இதுவும் ஒரு வகையான 'டீப் ஸ்டேட்' (Deep State)ஆக இருக்கலாம். </p><h2>
</h2><p></p><h2>பழிவாங்க காத்திருக்கும் குழுக்கள்</h2><p>“டீப் ஸ்டேட்” என்பது அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சிகளில் மட்டும் இயங்குவதில்லை. இவை பல்வேறு அரச நிறுவனங்களுக்குள், நீதிமன்றங்களுக்குள், பொலிஸ் திணைக்களத்திற்குள், சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் என எந்தவொரு அரச நிறுவனத்திற்குள்ளும் இயங்க முடியும்.
</p><p>கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலைசெய்த வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணவர்தன போன்றவர்களைச் சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்தது.</p><p>ரவீந்திர விஜேகுணவர்தனவிற்குத் தூதுவர் பதவி வழங்கி, மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்திருந்த போது, கடந்த காலங்களில் அச்சலா தனது வழக்கில் ரவீந்திர விஜேகுணவர்தனவை ஒரு சந்தேக நபராகப் பெயரிடுமாறு கோரினார்.
</p><p>அவர் இன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராகப் பேசி, எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததன் விளைவாக,இன்று கடும் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689e707e-e749-49c6-b75a-632fdf092428/26-6a9a164b0c1f9.webp' /></p><p>இன்று அவரைச் சுற்றி வளைத்து, தாக்கத் தொடங்கியுள்ளார்கள். ஏனெனில் சமூக நீதி மற்றும் சட்டத்தைப் பற்றி அவர் பேசுவதால்.அவர் யாருடைய பணத்திற்கும் சோரம் போகாத ஒரு பெண்மணி. </p><p>
கோட்டாபய காலத்தில் எந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்த ஒரு பெண் சட்டத்தரணி.உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் வாழ்க்கையைக் கழித்த ஓர் இரும்புப் பெண்மணி. இன்று என்ன நடந்துள்ளது? அதை விட இன்று மோசமாகியுள்ளது. </p><p>தொழில்ரீதியாக அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பல்வேறு குழுக்களைப் பயன்படுத்தி, முக்கியமாக அதற்கு ஏற்ற சில பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகவும் கேவலமான முறையில் தாக்குதலுக்கு மேல் தாக்குதல் நடத்த, வழக்குகளில் சிக்க வைக்கக் கடுமையான முயற்சி நடக்கிறது.&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You May Like THis Video..<br></i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jnKI70IglD4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T00:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவிற்கு எதிராக கருணாவின் வாக்குமூலம்: நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241</id>
            <summary type="text">தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>திடுக்கிடும் தகவல்கள்</h2><p>

உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஓருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) சிஐடியினருக்கு வழங்கிய மிக உணர்வுபூர்வமான வாக்குமூலத்தின் விபரங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0707941-ee83-4b2a-92aa-c5d979e04cfe/26-6a99b11aacf4d.webp' /></p><p>
</p><p>
அதில், சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இல்லாத நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாகக் காட்டிப் பாரிய நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
</p><p>
கருணா&nbsp; லண்டனுக்குச் செல்வதற்காகச் சிங்களப் பெயர் கொண்ட போலி கடவுச்சீட்டையும், அதற்கான விசா வசதிகளையும் சுரேஷ் சலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 கருணா லண்டன் சென்றடைந்த பின்னர், சுரேஷ் சலேயும் அங்கு சென்று, கருணாவின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், லண்டன் பொலிஸாருக்குக் கருணாவின் போலி கடவுச்சீட்டு விபரங்களை வழங்கி, அவரை அங்கு கைது செய்து சிறையிலடைக்க சுரேஷ் சலே திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருணா&nbsp; தனது வாக்குமூலத்தின் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>கருணாவின் வாக்குமூலம்</h2><p>
</p><p>
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் சட்டமா அதிபர் திணைக்களம்; நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 5 ஆம் திகதி முதல் அவர் உணவை உட்கொள்ள மறுத்து, தனது உடல்நிலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுபோயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd5863b-091f-456f-b846-d4c339dc4875/26-6a9a16233d8ab.webp' /></p><p>
</p><p>
தற்போது விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை, மேலும் அங்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், சுரேஷ் சலே தனது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளின் கடவுச்சொற்களை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தடுப்புக் காவல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சலே தொடர்பில் கருணா அம்மான் நீதிமன்றில் குற்றம் சுமத்தியதாக சிங்கள இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருணா தரப்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MGfXDBgbP70" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-04T00:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று கைது செய்யப்படுவாரா நாமல்..! பாதுகாப்புக்காக கொழும்பில் கூடப்போகும் ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

 இதேவேளை, நாமல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

 இதேவேளை, நாமல் ராஜபக்ச
தனக்கு எதிராக 12-ஆம் திகதிக்கு முன்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இலங்கை விமான சேவை தொடர்பான மோசடி அல்லது அவுஸ்திரேலிய ஊடகமொன்று வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் (அம்பாந்தோட்டை வைத்தியசாலை திட்டம்) தொடர்பாக விசாரணைகளுக்காக இவர் அழைக்கப்பட்டிருக்கலாம்&nbsp; என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகும்போது பதற்றமான சூழல் நிலவக்கூடும் என்றும், அவருடைய ஆதரவாளர்கள் கொழும்பில் கூடத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அவுஸ்திரேலிய ஊடகத்தின் Four Corners ஆவணப்படத்தில், அம்பாந்தோட்டை வைத்தியசாலை கட்டுமானத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

 இதில் பல மில்லியன் டொலர் பணப்பரிமாற்றங்கள் முறையற்ற வகையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p>

 நிமல் பெரேரா (Nimal Perera) என்பவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாயைப் பெற்ற விவகாரம் தொடர்பாக நாமல் ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.</p><p> ரக்பி போட்டித் தொடரை நடத்துவதற்காக இந்தப் பணம் பெறப்பட்டதாக அவர் கூறினாலும், அதில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>&nbsp;கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்துள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்ச இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருவதுடன், இவை அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றும் கூறி வருகிறார்.</p><p>

இன்று(4) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகவுள்ள சூழலில், இவை மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tmeEO-Dq2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவனின் உயிரைப் பறித்த நாவற்பழம் - மட்டக்களப்பில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dies-eating-suspected-venom-tainted-fruit-1788481574"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dies-eating-suspected-venom-tainted-fruit-1788481574</id>
            <summary type="text">நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>11 வயது
சிறுவன்</h2><p>
</p><p>
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த, 37ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி பயின்று வந்த ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15fe789e-d689-42a0-b497-3350e173fcf8/26-6a9a1296dcb04.webp' /></p><p>

சம்பவ தினமான நேற்று மாலை, சிறுவனின் வீட்டிற்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த நாவற்பழம் ஒன்றை சிறுவன் எடுத்து உண்டுள்ளார்.
</p><p>
இதனையடுத்து சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><h2>ஆரம்பகட்ட விசாரணைகள்</h2><p>
</p><p>
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நிலத்தில் கிடந்த நாவற்பழத்தின் மீது பாம்பின் விஷம் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c380020e-4cea-4b28-b24f-37cbca7ec364/26-6a9a1297b44ee.webp' /></p><p>
</p><p>
சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:36:45+00:00</updated>
        </entry>
    </feed>
