<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-11T10:15:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ள அபாய முன்னறிவிப்புகள் - உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆளுர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-instructions-to-local-government-councils-1786441528"></link>
            <id>https://tamilwin.com/article/governor-instructions-to-local-government-councils-1786441528</id>
            <summary type="text">குறுகிய காலத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு
ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில்&amp;nbsp; உள்ளூராட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறுகிய காலத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு
ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில்&nbsp; உள்ளூராட்சி மன்றங்கள் தயார்நிலையில் இருக்குமாறு&nbsp;ஆளுர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p> வெள்ள அபாய முன்னறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம்,
நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில்
இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
வலியுறுத்தியுள்ளார்.</p><p>

வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி,
வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம்,
கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும்
போக்குவரத்து அமைச்சுகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (11.08.2026)
ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.</p><h2>&nbsp;உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள்</h2><p>

கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக
ஆராயப்பட்டதுடன், தெருநாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சை வேலைத்திட்டத்தின்
முன்னேற்றம் மற்றும் லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b704d006-fdb3-45b9-bf17-ea475654e8a5/26-6a7af4b9e50ce.webp' /></p><p> </p><p>லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்துவதில்
முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அதனை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை
இருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> இதற்கமைய, 2027ஆம் ஆண்டு தொடக்கம்
மேலும் கடுமையான அமுலாக்க நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக உள்ளூராட்சி
ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசங்களில்
நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளங்களை உள்ளூராட்சி மன்றங்கள்
ஊடாகத் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்
உள்ளூராட்சி ஆணையாளர் ஆளுநருக்கு அறிவித்துள்ளார்.</p><h2>கட்டட அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைபடங்களுக்கும் நடைமுறை</h2><p>

கட்டட அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைபடங்களுக்கும் நடைமுறையில்
நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக
குடிபுகு சான்றிதழ்களை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டட
அனுமதிக்கு முரணாக அமைக்கப்பட்ட கட்டுமானங்களுக்கு எதிராக உள்ளூராட்சி
மன்றங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூட்டத்தில்
தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc958bf9-99d2-4713-95e1-b548a8d5c0e9/26-6a7af4bab727f.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வடகிழக்கு பருவமழை
தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், இடர்நிலை
முகாமைத்துவத்துக்குத் தேவையான அனைத்து முன்னாயத்தங்களையும் மேற்கொள்ளுமாறு
ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி
ஆணையாளர் தெரிவித்துள்ளார். </p><p>அவசரநிலைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள், வாகனங்கள்,
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறும்
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

'பிராஜா சக்தி' வேலைத்திட்டத்தின் கீழ் மாகாண சபைக்குச் சொந்தமான வீதிகள்
மற்றும் கட்டடங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதே
பணிகள் ஏனைய நிதி மூலங்களின் கீழ் மீள இடம்பெறாதவாறு திட்டங்களை ஒருங்கிணைத்து
நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்
வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம்
மீளாய்வு செய்யப்பட்டது.</p><p> இரண்டாம் கட்ட வீடமைப்புத் திட்டம், டிட்வா
மீள்கட்டுமானத் திட்டம், நிரல் அமைச்சு மற்றும் மாவட்டச் செயலகங்கள் ஊடான நிதி
ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் திருப்திகரமாக
முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> அதேவேளை, உள்ளூராட்சி
மன்றங்கள் தங்களது தொழில்நுட்பக் கொள்ளளவை மீறிய அளவில் அபிவிருத்திப் பணிகளை
முன்னெடுத்து வருவதாகவும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

உள்ளூராட்சி மன்றங்களுக்கு சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்களை
கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துமாறு அலுவலர்களுக்கு தெளிவான
அறிவுறுத்தல்களை வழங்குமாறும் ஆளுநர் வலியுறுத்தினார். </p><p>இது தொடர்பாக தனக்குப்
பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற
கலந்துரையாடலில், வீதிப் பணிகளுக்குத் தேவையான தாரைப் பெற்றுக்கொள்வதில்
நிலவும் சிக்கல்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட சிலர்
கடமைகளைப் பொறுப்பேற்காத நிலை குறித்தும் ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வு
நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
</p><p>
தொடர்ந்து கிராமிய அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகாரசபை, வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் மற்றும்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாட்டு முன்னேற்றங்களும்
விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.
</p><h2>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை</h2><p>
தற்போதைய காலப்பகுதி வடக்கு மாகாணத்துக்கு அதிகளவிலான உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் பருவமாக இருப்பதால், தமது
எல்லைக்குட்பட்ட சுற்றுலாத் தலங்களின் தூய்மையை உறுதிப்படுத்துவதில்
உள்ளூராட்சி மன்றங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர்
அறிவுறுத்தியுள்ளார். </p><p>மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டும்
சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி. காணொலிப் பதிவுகளை உரிய பொலிஸ்
நிலையங்களுக்கு விரைவாக அனுப்பி சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும்
அவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/874c69e3-89e9-402e-84b3-edf694e7102a/26-6a7af4bc7f2b7.webp' /></p><p>

இதனுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தூய்மை இலங்கை செயலணி
வழங்கியுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைந்த
கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும்
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,
உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம்,
திட்டமிடல் மற்றும் பொறியியல்), உள்ளூராட்சி ஆணையாளர், திட்டமிடல் பணிப்பாளர்,
மாநகர சபை ஆணையாளர்கள், நகர சபைகளின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள்,
பொறியியலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்
கலந்துகொண்டனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்படவுள்ள இலந்தைக் குளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/40-year-renovation-ilanthai-kulam-rs-20-million-1786440668"></link>
            <id>https://tamilwin.com/article/40-year-renovation-ilanthai-kulam-rs-20-million-1786440668</id>
            <summary type="text">நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் விவசாயத் துறையில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்பட்டு
வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் விவசாயத் துறையில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்பட்டு
வருவதாக வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர்
அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலந்தைக் குளத்தின்
புனரமைப்புப் பணிகளை சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று(11)
உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு
குறிப்பிட்டார்.</p><h2>புனரமைப்புத் திட்டம் முழுமையடையும் போது</h2><p>

குச்சவெளி பிரதேச செயலாளர் U.L. சியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,&nbsp;"நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டிருந்த இலந்தைக் குளத்தைச்
செப்பனிடுவதற்காக அரசாங்கத்தினால் ரூ. 20.1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48476823-28b0-4729-ad90-499cd5468533/26-6a7aefcc669fb.webp' /></p><p>
இப்புனரமைப்புத் திட்டம் முழுமையடையும் போது, சுமார் 120 ஏக்கர் வயல் நிலங்கள்
நேரடி நீர்ப்பாசன வசதியைப் பெறவுள்ளன.</p><p>

இதன் மூலம் அப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதோடு, பல
விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கணிசமாக வலுப்பெறும்.
</p><p>
தற்போது திருகோணமலை மாவட்டத்திலும், குச்சவெளி பிரதேசத்திலும் பல்வேறு
உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்தினால்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சி</h2><p>அதன் ஒரு முக்கிய அங்கமாகவே இக்குளப் புனரமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இது மாவட்டத்தின் நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சிக்கு பெரும் வழிகோலும்" எனத்
தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a385c02-5c98-4ba1-86fb-0483cfb27d84/26-6a7aefcd6c2e6.webp' /></p><p>
குச்சவெளி பிரதேச மக்களின் நீண்டகால அபிவிருத்தி எதிர்பார்ப்புகளில் ஒன்றாக
இருந்த இக்கோரிக்கைக்கு இப்புனரமைப்புப் பணியின் மூலம் தீர்வு
காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்,
இத்திட்டத்தினைத் துரிதமாக முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குச்சவெளி
பிரதேச செயலாளர் மற்றும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அரச
அதிகாரிகளுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
</p><p>
இந்நிகழ்வில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் என்.
விஸ்ணுதாசன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள்
மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af5e9c4-d198-4eb0-a702-8263553ca8ed/26-6a7af00f9f52b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ef73ba-7464-48c9-a3e5-1fd932c32fc8/26-6a7af010b57fb.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T10:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளை முகாமை செய்வது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-waste-management-1786440725"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-waste-management-1786440725</id>
            <summary type="text">மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தில்
சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமை செய்து அவற்றை அகற்றுவது
தொடர்பில் துறைசார்ந்த அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தில்
சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமை செய்து அவற்றை அகற்றுவது
தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும்
கூட்டம் இன்று (11.08.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.</p><p>மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்
தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கரையோரம்
பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பொலிஸார், கடற்படை, பிரதேச
செயலகம், சுற்றாடல் பிரிவு, உள்ளிட்ட பல திணைக்களைங்களைச் சேர்ந்த அதிகாரிகள்
இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867375ae-35b8-4d30-944b-632ead9dba22/26-6a7af0361983a.webp' /></p><h2>நாளாந்தம் சேகரிக்கப்படும் கழிவுகள்</h2><p>


மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபையினால் நாளாந்தம் சேகரிக்கப்படும்
கழிவுகள் இதுவரைகாலமும் களுவாஞ்சிகுடி கடற்கரைப் பகுதியில் கொட்டப்பட்டு
வருவதானல் அப்பகுதியைச் சூழவுள்ள மக்கள் பெரும் சுகாதாரப் பிரச்சினைகளை
எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c1e5c33-c7c1-40f0-850f-28ec1ab151f5/26-6a7af036e6960.webp' /></p><p> </p><p>அவற்றைத் தடுக்கும் முகமாகவும், எதிர்காலத்தில்
இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுளை சிறந்த முறையில் முகாமை செய்வதற்காக வேண்டி
இதன்போது கலந்து கொண்டிருந்த திணைக்கள அதிகாரிகள் கருத்துக்களையும்,
ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
</p><p>


அதற்கிணங்க அனைத்து திரணைக்கள அதிகாரிகளும் தற்போது கழிவுகள் கொட்டப்படும்
இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின் அவற்றை முகாமை செய்வது
தொடர்பில் மிகக் குறுகிய காலத்திற்குள் தீர்க்கமான முடிவெடுக்கப்பட்டு
அதற்குரிய திட்டம் தயாரிக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச
சபைக்கு வழங்குவது என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5150e81-47ab-41c5-a071-297765dbba43/26-6a7af037b9bca.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/907390a8-802f-437a-8ddf-f27a48ee3e60/26-6a7af038922b9.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T09:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-for-government-teacher-vacancies-1786437816"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-for-government-teacher-vacancies-1786437816</id>
            <summary type="text">நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை&nbsp;</h2><p>இதற்கமைய, ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பாடசாலைகள் மற்றும் பிரதேசங்களை உடனடியாக அடையாளம் கண்டு, அங்குள்ள வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb25550-8919-422e-bc02-6c9dd0ededac/26-6a7aeb2cd42ba.webp' />&nbsp;</p><p>மேலும், ஆசிரியர் இடமாற்ற முறைமையை ஒழுங்குபடுத்துவதுடன், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடமாற்றங்களை முன்னெடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p>அத்துடன், பாடசாலைகளை கஷ்டப் பிரதேசங்களாக வகைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவு வழங்கும் முறைமை குறித்தும் மீளாய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்ச இரதமேறி வீதியுலா வந்த மாவைக் கந்தன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maavaikandhan-pancha-ratham-1786434548"></link>
            <id>https://tamilwin.com/article/maavaikandhan-pancha-ratham-1786434548</id>
            <summary type="text">மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம்(11.08.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்பத்தில் முருகப்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம்(11.08.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது.
</p><p>
ஆரம்பத்தில் முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை
வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன.</p><h2>நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி</h2><p> அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான்
பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51d8a6d9-8371-4c85-aa2a-ee34432e204c/26-6a7ad9685511a.webp' /></p><p>
இந்த திருக்காட்சியை காண்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து
மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து
முருகப் பெருமானை தரிசித்தனர்.</p><p>

அத்துடன் பக்தர்கள் காவடிகள், அங்கம் பிரதிஷ்டைகள், கற்பூரச் சட்டிகளை
எடுத்துவந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5d4f380-451d-4e9d-9715-ab0128021a2f/26-6a7ad969638ab.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9470c0fa-2a58-42ad-815d-c50083598ec2/26-6a7ad96a3edba.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0f1e3e-6699-4faa-85fc-c280d35e398e/26-6a7ad96b2078a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-11T09:16:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chargesheet-former-minister-rajitha-senaratne-1786438808"></link>
            <id>https://tamilwin.com/article/chargesheet-former-minister-rajitha-senaratne-1786438808</id>
            <summary type="text">முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஊழல் குற்றச்சாட்டு&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>ஊழல் குற்றச்சாட்டு&nbsp;</h2><p>ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>ராஜித சேனாரத்ன, கடற்றொழில் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், கிரிந்த கடற்றொழில் துறைமுகத்தில் மணல் அகழும் பணியை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் குற்றம் சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T09:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் கொள்முதல் தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-decision-petrol-crude-oil-and-diesel-1786438225"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-decision-petrol-crude-oil-and-diesel-1786438225</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருள் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருள் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பெட்ரோல் 92 யு.என்.எல் (Petrol Octane 92 - UNL),மர்பான் வகை கச்சா எண்ணெய் மற்றும் டீசல்&nbsp; (0.05% M.S.) ஆகியவற்றை நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2>அமைச்சரவை ஒப்புதல்</h2><p> 

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து, வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி கொள்முதல் நடைமுறையின்படி ஏலங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39bb28d6-2e55-4104-bca7-461b1d6fef08/26-6a7ae55e97233.webp' /></p><p> 

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட ஏலங்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர் மட்ட நிலைக்கொள்முதல் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. </p><p>

அதன்படி, குறைந்த விலைக்கு ஏலம் கோரியவர்களுக்கு உரிய கொள்முதல்களை வழங்குவது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T09:03:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meteorological-department-warns-1786433026"></link>
            <id>https://tamilwin.com/article/meteorological-department-warns-1786433026</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>

அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும், சிலாவிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை கடல் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec4957ca-a07c-4266-91b8-0aa38b4a1eb1/26-6a7ae1d8bc5fe.webp' /></p><h2>விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையினர் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

மேலும் இன்று (11.08.2026) மதியம் 12 மணியளவில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை மதியம் 12 மணி வரை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T08:48:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-job-vacancies-2026-1786434224"></link>
            <id>https://tamilwin.com/article/government-job-vacancies-2026-1786434224</id>
            <summary type="text">அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதன்போது, அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.&nbsp;</p><h2><b>72,000 புதிய ஊழியர்கள்&nbsp;</b></h2><h2><p><span style="font-size: 14px;">கடந்த காலங்களில் முறையான தகுதிகளின் அடிப்படையில் நியமனங்களும் பதவி உயர்வுகளும் வழங்கப்படாததால், அரச சேவையின் தரம் வெகுவாக வீழ்ச்சியடைந்திருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.</span></p></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc15e7c-001f-4201-bf5a-8a1829638ad2/26-6a7ad62fbc6b4.webp' /></p><p>நாட்டின் முக்கிய நிர்வாகக் கட்டமைப்பாகத் திகழும் சிவில் சேவையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என்றார்.&nbsp;</p><p>
அத்துடன், அரச சேவையில் சுமார் 72,000 புதிய ஊழியர்களைப் புதிதாகச் சேர்த்துக் கொள்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
</p><p>
எதிர்காலத்தில் அரச ஊழியர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை சேர்க்கைகள் என்பன அரசியல் தலையீடுகள் இன்றி, சரியான வழிமுறைகள் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என பிரதியமைச்சர் நளின் ஹேவகே உறுதியளித்துள்ளார்.
</p><p>
அரச ஊழியர்கள் அவர்களின் திறமைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும், அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு நேர்மையுடன் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் மட்டுமே அரசாங்கம் தலையிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T08:17:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம்! இம்ரான் எம்.பி அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-mp-statement-regard-muslim-girl-dress-1786433207"></link>
            <id>https://tamilwin.com/article/imran-mp-statement-regard-muslim-girl-dress-1786433207</id>
            <summary type="text">முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு
வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்
தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு
வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்
தெரிவித்துள்ளார்.
</p><p>
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தடை குறித்து
இன்று (11.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரச உத்தியோகத்தர்களால் தேவையற்ற தலையீடு</h2><p> அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் சில அரச உத்தியோகத்தர்களால் தேவையற்ற
தலையீடுகளுக்கு உள்ளாகின்றது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
</p><p>
ஒவ்வொரு சமூகத்தவரதும் சமய கலாசார உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பை பேணி நடக்க வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரதும்
பொறுப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7a8bdc7-8797-43e9-a495-b49c95a782e2/26-6a7ad8af2e057.webp' /></p><h2>நடவடிக்கை எடுக்கும் நடைமுறை</h2><p> </p><p>இதனை மீறும் அரச உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்
நடைமுறைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். சில அரச உத்தியோகத்தர்களின் இது போன்ற செயற்பாடுகள் சமூகங்களிடையே மீண்டும்
முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தும்.
</p><p>
இது அரசாங்கத்தின் வளமான நாடு கொள்கையை கேள்விக்குறியாக்கும்.

எனவே, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் அடிக்கடி தேவையற்ற தலையீடு செய்யப்படுவதால் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T08:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பாரிய விபத்திற்கு உள்ளான பேருந்து : இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-leaving-colombo-two-killed-1786431528"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-leaving-colombo-two-killed-1786431528</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று&amp;nbsp;மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பாரிய விபத்திற்கு உள்ளாகியுள்ளது.இந்த விபத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று&nbsp;மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பாரிய விபத்திற்கு உள்ளாகியுள்ளது.</p><p>இந்த விபத்து இன்று(11.08.2026) அதிகாலை 1.30 மணிக்கு சம்பவித்துள்ளது.</p><h2>பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழப்பு</h2><p>பொலன்னறுவை தமனபாய பக்கமுவ பகுதியூடாக பயணித்த போது திடீரென வீதியைக் கடந்த மோட்டார்சைக்கிளுடன் மோதியதால் பாரிய விபத்து சம்பவித்ததுடன் பேருந்து வீதியை விட்டு வீதியோரமாக சென்று வாய்க்காலின் நடுவே அந்தரத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be4886b-d5fa-4aee-8bc9-798b65ace9b0/26-6a7acf53d375f.webp' /></p><p>விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆணும் பெண்ணும் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T07:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[45 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேருந்து - பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-in-monarakala-fell-into-ditch-1786431650"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-in-monarakala-fell-into-ditch-1786431650</id>
            <summary type="text">மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.புத்தல – மஹகொடய பகுதியில் இன்று (11) செவ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>புத்தல – மஹகொடய பகுதியில் இன்று (11) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03f52c30-391e-417e-ba23-2ed8190c958a/26-6a7ad012c4fa0.webp' /></p><p>
</p><p>இந்த விபத்தில் பேருந்து சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்து இடம்பெற்ற விதம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p> சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><b>YOU MAY IIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9dCk-6sCo9M" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T07:28:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/demands-removal-of-rs-50-tax-on-fuel-1786423127"></link>
            <id>https://tamilwin.com/article/demands-removal-of-rs-50-tax-on-fuel-1786423127</id>
            <summary type="text">எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை பெட்ரோலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போது சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த விடயத்தை கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9cac7fd-a564-4ea4-b75f-cccdbc33156a/26-6a7ab79436248.webp' /></p><p>

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால், 50 ரூபா வரியை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.</p><h2>பொதுமக்களுக்கு பெரும் சிரமம்</h2><p> </p><p>

அதேபோன்று தற்போது நடைமுறையில் உள்ள QR முறையும், எரிபொருள் விநியோகத்திற்கான வரம்புகளும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் அவற்றையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89360573-f688-4b78-b804-0f4fbfa7f741/26-6a7ab793800fe.webp' /></p><p>
</p><p>
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத பெறுமதி சேர் வரி மற்றும் எரிபொருள் விநியோகத்தர்களுக்கான சேவை வழங்கியமைக்கான சேவை கட்டணம் 3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், தாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.
</p><p>
இதேவேளை, நாட்டில் எரிபொருள் விநியோகத் துறையில் உள்ள சினொபெக், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் போன்ற நிறுவனங்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.

இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:50:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாமாங்கேஸ்வரர் ஆலய தேர் திருவிழா! விண்ணைப்பிளந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mamangeswara-temple-cultural-event-1786427847"></link>
            <id>https://tamilwin.com/article/mamangeswara-temple-cultural-event-1786427847</id>
            <summary type="text">கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம் இன்று (11.08....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம் இன்று (11.08.2026) காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள்
புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p>
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப
பூஜையும் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><h2>அருள்பாலித்த&nbsp;மாமாங்கேஸ்வரர்</h2><p>அதனைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்
'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி
மாமாங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2911c757-1899-4da3-bc3f-6ef2dccc913e/26-6a7ac2497625a.webp' /></p><p>
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் ஒருங்கே கொண்ட
இவ்வாலயத்தின் மஹோற்சவமானது கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
</p><p>
இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு,
பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத்
தொடர்ந்து சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.
</p><p>
அதனைத் தொடர்ந்து வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் தேரில் ஆரோகணிக்க, அங்கு
விசேட பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பெண் மற்றும் ஆண் பக்தர்கள்
வடமிழுக்கத் தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d016fc92-991b-474a-b0a8-32e0dd4c1920/26-6a7ac24a7180a.webp' /></p><h2>ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவம்</h2><p>
</p><p>ஸ்ரீராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும், பிதுர்க்கடன்
தீர்க்கும் புனிதத் தீர்த்தக் கேணியைக் கொண்ட தலமென்ற புகழினையும் உடையதாக
இம்மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகின்றது.
</p><p>
இவ்வாலயத்தின் ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவம் நாளை (12.08.2026) நண்பகல் வரலாற்றுச்
சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6388f0d5-b7c7-4eb1-9744-312ccc573656/26-6a7ac24b46b11.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a51c30d-8ff2-42f1-9bb7-397e4b8ab083/26-6a7ac24c1a983.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dbd06d7-3b8e-4dff-96c8-c8b45ba4f446/26-6a7ac24ce7be9.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/427b72b3-b18d-4099-9861-1db802e269b6/26-6a7ac24dc0725.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9a1c06-ccb8-4604-9d71-491ad045dd19/26-6a7ac24e9857d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கான செலவு பொருளாதார ரீதியில் பயனற்றது: தேசிய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-audit-office-sri-lanka-n-p-commission-1786427981"></link>
            <id>https://tamilwin.com/article/national-audit-office-sri-lanka-n-p-commission-1786427981</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய பொலிஸ் ஆணைக்குழு இயங்கி வரும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள கட்டிடம் மற்றும் பிற கட்டிடத்திற்காகக் கடந்த ஆண்டில் 6...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய பொலிஸ் ஆணைக்குழு இயங்கி வரும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள கட்டிடம் மற்றும் பிற கட்டிடத்திற்காகக் கடந்த ஆண்டில் 6 கோடி 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் இது பொருளாதார ரீதியில் பயனற்ற ஒரு செலவீனம் என்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த வாடகைத் தொகையானது ஆண்டின் மொத்த வரவு-செலவுத் திட்டச் செலவில் சுமார் 30 சதவீதமாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கடந்த ஆண்டில் செலுத்தப்பட்ட வாடகைப் பணம்</h2><p>தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள பண்டாரநாயக்க தேசிய அறக்கட்டளையின் கட்டிடமொன்றில் வருடாந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் வாடகைக்கு இயங்கி வருவதாகவும் 2025 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி ஆணைக்குழு அலுவலகம் இயங்கும் கட்டிடம் மற்றும் பிற கட்டிடத்திற்காக மாதமொன்றுக்கு 57 இலட்சத்து 162 ரூபா (ரூ. 57,00,162) செலுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>இதேவேளை ஆணைக்குழுவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் போதுமான மனித வளங்கள் இன்மையால் கடந்த ஆண்டில் இலங்கை பொலிஸைச் சேர்ந்த 30 அதிகாரிகள் அதன் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3abd75b0-28e7-4c8a-b268-f2b594551a9f/26-6a7aba4f712df.webp' /></p><p>இலங்கை பொலிஸுக்கு எதிராகத் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு 10,737 முறைப்பாடுகள் கிடைத்திருந்த பின்னணியில்இ பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் புலனாய்வு அதிகாரிகளாகப் பொலிஸ் அதிகாரிகளையே ஈடுபடுத்தியிருப்பதால் குறித்த விசாரணைகளைச் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>மொத்தமுள்ள 240 ஒழுக்காற்றுக் கோப்புகளில் 123 கோப்புகளுக்கு மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்இ மேலும் ஒழுக்காற்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டிய கோப்புகளின் எண்ணிக்கை 117 ஆக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>ஐந்து பொலிஸ் மா அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்றுக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZNAmarB4FPI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-11T06:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை நேர்ந்த கோர விபத்தில் தாயும் மகனும் பலி - ஆபத்தான நிலையில் குழந்தை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-son-die-in-accident-in-bakamuna-1786427686"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-son-die-in-accident-in-bakamuna-1786427686</id>
            <summary type="text">தம்புள்ள - மஹியங்கனை பிரதான வீதியில், தமனயாய பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ள - மஹியங்கனை பிரதான வீதியில், தமனயாய பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

இன்று அதிகாலை (11) நிகழ்ந்த இந்த விபத்தில் 63 வயதான தாயும், அவரது 43 வயதான மகனும் உயிரிழந்துள்ளனர்.</p><h2>பேருந்து சாரதி கைது</h2><p>
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் ஒன்றரை வயது மகனும் படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d2269c1-1b36-442d-bf22-4349bf3467ff/26-6a7ac3eb2965a.webp' /></p><p>

இவர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
</p><p>
பேருந்து கொழும்பிலிருந்து கல்முனைக்கு சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதியில் திரும்பமுற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>

 இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் நெருக்கமான நாமல் - சரித் அபேசிங்கவின் நட்பு! அம்பலமாகியுள்ள பல இரகசிய தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் &#039;ஹரக் கட்டா&#039; என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ள சரித் அபேசிங்க முதன் முறையாக வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தனக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் இருந்த நெருங்கிய தொடர்பு மற்றும் அவரிடம் இணைந்து பணியாற்றிமை தொடர்பில் முதல் முதலாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
</p><p> 2005-இல் தான் எனக்கு அரசியலில் முதல் நண்பர்கள் கிடைக்கிறார்கள். லண்டனில் நாமல் ராஜபக்ச. அவர் 2005இல் இலங்கையிலிருந்து லண்டனுக்கு வருகிறார். அதற்குப் பிறகு 2006 முதல் 2008 வரையான காலப்பகுதியை நான் அவர்களோடுதான் கழித்தேன்.
</p><h2>
</h2><p></p><h2>லண்டனில் நெருக்கமான நாமலின் உறவு</h2><p>அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரும்போது நான் திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். அந்தத் திரைப்படத்தின் பிரீமியர்&nbsp; காட்சிப் புகைப்படங்கள் வலையொளி தளத்தில்&nbsp; இருக்கின்றன. </p><p>அந்த பிரீமியர் காட்சியில் நாமல் உட்பட்ட அன்றைய அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் நான் இலங்கையின் கலாசாரக் குழுவில் இருந்தேன். மகிந்த யாப்பா அபேவர்தன என்னுடன் லண்டன் வந்தார். </p><p>அந்தச் சமயத்தில் ரன்மிதன்ன திரைப்பட கிராமம் தொடங்கப்பட்டிருந்தது. அதன் முதல் தலைவராக நான் இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் என்னை அதிலிருந்து நீக்கினார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f896b974-b264-43b2-a148-a97b84f2ea6e/26-6a7ac07410de3.webp' /></p><p>இளம் வயதான எனக்கு குறித்த பதவி பொறுத்தமில்லை என்ற வாதம் வலுப்பட்டது.
அப்போது மகிந்த ராஜபக்ச என்னை அழைத்து "சரித்இ நீங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவர். </p><p>நீங்கள் என்னோடு கோபித்துக் கொண்டால் என்னால் அரசியல் செய்ய முடியும். ஆனால் எனது பங்குதாரர்கள் கோபித்துக் கொண்டால் என்னால் இந்த நேரத்தில் அரசியல் செய்ய முடியாது. </p><p>அதனால் நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். நான் சரி என்று சொன்னேன்.
நாமல் ராஜபக்ச இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் அவரிடம் கேட்கலாம். </p><p>எனக்கும் நாமலுக்கிடையே மிக நெருக்கமான ஒரு நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. எனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அன்றே அவர்களிடம் சொல்லியிருக்கலாம் "மச்சான் எனக்கு அரசியல் செய்ய வேண்டும்" என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7be6d4c-62aa-4dc0-9b6a-2f0e60fdf0f2/26-6a7ac074da87d.webp' /></p><p>2010ல் நாமல் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடும் போது முழுநேரப் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.பிரசாரத்தை முடித்துவிட்டே சென்றேன்.</p><p>நான் சமீபத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னவுடனேயே நாமலிடமிருந்து வந்த முதல் அழைப்பு "அடேய் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இவ்வளவு நாளாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்பதுதான். </p><p>நான் சொன்னேன் "உண்மையிலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் அப்போது இருக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:26:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[90000ஐ கடந்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை : 65 டெங்கு மரணங்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-90-000-in-sri-lanka-1786427236"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-90-000-in-sri-lanka-1786427236</id>
            <summary type="text">இலங்கையில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,306 ஆக உயர்ந்துள்ளது.

 

தற்போது வரை நாடு முழுவதும் 65 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,306 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
 

தற்போது வரை நாடு முழுவதும் 65 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளிகளின் இறப்பு வீதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
</p><h2>மாவட்ட ரீதியில் அதிகளவிலான பாதிப்பு</h2><p>
 

ஆண்டின் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 29,973 ஆகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c338f39b-a26b-427a-adbf-1c3b005fae6a/26-6a7abfd0c8f38.webp' /></p><p>
 

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 4,959 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

மொத்த நோயாளர்களில் 52.96 சதவீதம், அதாவது 47,824 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். </p><p>

 

தென் மாகாணத்தில் 13,361 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,027 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p>அத்துடன், மாவட்ட ரீதியில் அதிகளவிலான பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 19,204 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 

கொழும்பு மாவட்டத்தில் 17,955 நோயாளர்களும், கண்டியில் 6,413 நோயாளர்களும், மாத்தறையில் 5,971 நோயாளர்களும், களுத்துறையில் 5,871 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T06:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளிகாவத்தையில் பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-maligawatte-police-investigation-1786413141"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-maligawatte-police-investigation-1786413141</id>
            <summary type="text">புதிய இணைப்புமாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் போதைப்பொருள் கும்பல் கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் போதைப்பொருள் கும்பல் கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பயணித்த இருவரரால் நேற்று (11) பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
</p><p>
இதில் பாதாள உலகத்தலைவர் காஞ்சிபானி இம்ரானின் இம்ரானின் தந்தையின் சகோதரரின் மகனான 54 வயதான முகமது அஸ்மி மொஹிதீன் உயிரிழந்திருந்தார்.</p><p>

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மாளிகாவத்தையில் உள்ள சங்கராஜ மாவத்தை பகுதியில் நீண்ட காலமாக இரும்பு வியாபாரம் செய்து வந்தவர் என்றும், இவர் மீது பாதாள உலகக்குற்றங்களில் தொடர்பு இல்லை என்றும் பொலிஸ் கூறுகின்றது.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.&nbsp;</p><p>இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பயணித்த இருவரரால் நேற்று (11)&nbsp; மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>விசாரணையில் வெளியான காரணம்&nbsp;</h2><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத்தலைவன் கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் என தெரியவந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7d0b40-25ad-423c-88f5-2aa95c9aea63/26-6a7a85702488a.webp' /></p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 54 வயதானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.&nbsp;</p><p>மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.&nbsp;</p><h2>சிசிடிவி காட்சி வெளியீடு</h2><p>அண்மையில் இரத்மலானை பகுதியில் 'குடு அஞ்சு'வின் நெருங்கிய சகா ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p><p>&nbsp;அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கமராவிலும் இந்த துப்பாக்கிச்சூடு பதிவாகியுள்ளது.
</p><p>
கொழும்பு மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர்&nbsp; நிஷாந்த சொய்சாவின் தலைமையிலும், கொழும்பு மத்தியப் பிரிவுப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மகேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் பெற்ற பிரதேச சபை உத்தியோகத்தர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-sabha-official-arrested-accepting-bribe-1786425216"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-sabha-official-arrested-accepting-bribe-1786425216</id>
            <summary type="text">அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப
உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின்
பேரில் இலஞ்ச அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப
உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின்
பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின்
அதிகாரிகளால்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(10.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>

பொறிவைத்து பிடிபட்ட சம்பவம்
</h2><p>
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து
செயற்பட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், திட்டமிடப்பட்ட பொறிமுறையைப்
பயன்படுத்தி குறித்த உத்தியோகத்தர் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போதே அவரை
கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d8712bf-90dc-44e3-8d99-8150e2f94884/26-6a7ab5066a293.webp' /></p><p>கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் தற்போது அதிகாரிகளின் பொறுப்பில்
வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீதான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று
வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி
மன்றங்களிலும் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், வரும் நாட்களில் மேலும் பல அரச
உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:38:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து வெடித்த கலவரம்! எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/psychiatrist-s-advice-to-reduce-inmates-violence-1786420346"></link>
            <id>https://tamilwin.com/article/psychiatrist-s-advice-to-reduce-inmates-violence-1786420346</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் மோசமான நடத்தையை குறைப்பதற்காக, மனநல மருத்துவர்களின் சேவைகளை அடிக்கடி பெறுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

கடந்த மாதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் மோசமான நடத்தையை குறைப்பதற்காக, மனநல மருத்துவர்களின் சேவைகளை அடிக்கடி பெறுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறை உட்பட ஐந்து சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இந்த கலவரங்கள் காரணமாக ரூ. 255 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>சிறைகளில் வெடித்த கலவரம்</h2><p>இதற்கமைய, சட்டத்துறையில் தாமதங்களை தவிர்ப்பதற்காக, 2007ஆம் ஆண்டின் புனர்வாழ்வுச் சட்டத் திருத்த மசோதா எண் 54-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் செயல்முறையை விரைவுபடுத்துமாறும், ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி அச்செயல்முறையை விரைவுபடுத்துமாறும் நீதித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf7e16e-0f6d-4ad8-b60a-37866eeb0ec7/26-6a7ab3448406a.webp' />&nbsp;</p><p>
நீர்கொழும்பு, மஹர, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை சிறைகளில் வெடித்த கலவரத்தில் பத்து சிறை அதிகாரிகளும் 25 கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

இதற்கமைய, மேலும் 100 க்கும் மேற்பட்ட கைதிகளும் சிறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிஸ்ஸங்க சேனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nissan-senadhipathi-bribery-commission-1786423335"></link>
            <id>https://tamilwin.com/article/nissan-senadhipathi-bribery-commission-1786423335</id>
            <summary type="text">அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய நிசங்க சேனாதிபதி, இன்று காலை (11) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.&amp;nbsp;

கிரிஷ் பரிவர்த்தனை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய நிசங்க சேனாதிபதி, இன்று காலை (11) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.&nbsp;</p><p>

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக இலஞ்ச ஆணையம் நடத்தி வரும் விசாரணை குறித்த அறிக்கையை வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>குறித்த பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என கூறப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e5a9e7-66c9-4b41-b432-dc179135b65f/26-6a7ab0d5b3b12.webp' /></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rD1ppHbtztg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-11T05:20:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு எச்சரிக்கையில் மலேசியாவில் சிக்கிய ரத்மலானை சைமா - பேராதெனிய பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rathmalana-saima-arrest-handed-over-police-1786416101"></link>
            <id>https://tamilwin.com/article/rathmalana-saima-arrest-handed-over-police-1786416101</id>
            <summary type="text">&amp;nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ரத்மலானை சைமா மேலதிக விசாரணைகளுக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர் நேற்றிரவு (10) பேராதெனிய பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>சிவப்பு எச்சரிக்கை விடுப்பு</h2><p>
</p><p>
மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, மலேசிய பொலிஸ் மற்றும் இன்டர்போலின் ஆதரவுடன் சமீபத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94537af-41f0-4f3c-ad48-82be6cd18503/26-6a7a9436ba18d.webp' /></p><p>

இதன்போது அவருடன் இருந்த ரத்மலானை பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டு, மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>சந்தேகநபர், ரத்மலானையை சேர்ந்த 41 வயதானவர் ஆவார். இவர், 2014-ஆம் ஆண்டில் பேராதெனிய பொலிஸ் பிரிவில் ஒருவரைத் துப்பாக்கி முனையில் கடத்தி காயப்படுத்தியமை மற்றும் 2016 ஆம் ஆண்டில் ஒருவரைச் சுட்டுக்கொன்ற ஆகிய இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு குற்றவாளி ஆவார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>அதன்படி, கேள்விக்குட்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
இதற்கிடையில், மலேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு சந்தேகநபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T05:17:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தெய்வாதீனமாக தடுத்த காவலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-accident-avoided-by-gatekeeper-1786419268"></link>
            <id>https://tamilwin.com/article/train-accident-avoided-by-gatekeeper-1786419268</id>
            <summary type="text">அனுராதபுரம் - தஹியாயகம சந்திக்கு அருகில் தொடருந்து கடவை இயங்காமையினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தொடருந்து&amp;nbsp; கடவை காவலாளியின் சாதுரியமான செயலால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - தஹியாயகம சந்திக்கு அருகில் தொடருந்து கடவை இயங்காமையினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தொடருந்து&nbsp; கடவை காவலாளியின் சாதுரியமான செயலால் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.</p><p> கெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரஜரட்ட தொடருந்து நேற்று பிற்பகல் அனுராதபுரம் புதிய நகர் தொடருந்து நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த போதே இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. </p><p> இதன்போது தொடருந்து கடவை இயங்காததன் காரணமாக, மக்களும் வாகனங்களும் தொடருந்து பாதையைக் கடந்து இருபுறமும் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b> சாரதிக்கு எச்சரிக்கை</b></h2><p>எனினும், அந்தச் நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த தொடருந்து கடவை காவலாளி உடனடியாகச் செயற்பட்டு, தொடருந்து சாரதிக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், தொடருந்து பாதையைக் கடந்து கொண்டிருந்த வாகனங்களையும் பொதுமக்களையும் எச்சரித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7883a48-86c9-4c05-a24a-a17478f62982/26-6a7aa129780df.webp' /></p><p>அதற்கமைய, எந்தவித ஆபத்துமின்றி தொடருந்து பாதையைக் கடப்பதற்கு வாகனங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர், ரயிலில் பாதுகாப்பாக இயக்கப்பட்டுள்ளது. </p><p>தொடருந்து கடவைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தொடருந்து கடவை இயங்காமல் போனதாக தொடருந்து கடவை காவலாளி தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-11T05:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் குளத்தில் திடீர் சோதனை: 4000 மீட்டர் தடைசெய்யப்பட்ட நைலோன் வலைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/checking-at-kanthalay-banned-nylon-nets-recovery-1786423634"></link>
            <id>https://tamilwin.com/article/checking-at-kanthalay-banned-nylon-nets-recovery-1786423634</id>
            <summary type="text">திருகோணமலை - கந்தளாய் குளத்தில் தடை செய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கந்தளாய் குளத்தில் தடை செய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்
அடிப்படையில், சுமார் 4000 மீட்டர் நீளமான நைலோன் மீன்பிடி வலைகளை கந்தளாய்
பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>இது தொடர்பான விசேட சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் (10.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை</h2><p> </p><p>நேற்று மாலை கந்தளாய் குளப் பகுதியில் தடை செய்யப்பட்ட நைலோன் வலைகளைப்
பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய்
பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8829e2b7-c9b3-45b0-bebf-4905e06a1161/26-6a7aae670b1ec.webp' /></p><p>

இதனையடுத்து, கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர்
லக்மால் விஜேரத்னவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், கந்தளாய் பொலிஸ்
நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் குழுவினர் கந்தளாய் குளப் பகுதியில் விசேட
சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><h2>மீட்கப்பட்ட வலைகள்</h2><p>
</p><p>
இதன்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த சுமார் 4000 மீற்றர் நீளமான
தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுக்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a39ffd-9901-49d6-a8ad-2a5cdee84176/26-6a7aae67cbf0c.webp' /></p><p>
</p><p>
கைப்பற்றப்பட்ட வலைகள் இன்றைய தினம் (11.08.2026) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e488fff-f2c5-4c2c-863b-30df190fe00c/26-6a7aae6897c95.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313dd6f6-cc73-4c42-bf00-459a11eb693e/26-6a7aae696adec.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:09:29+00:00</updated>
        </entry>
    </feed>
