<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-15T19:16:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் 30 இல் சர்வதேச மாநாடு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-on-august-30-1786818028"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-on-august-30-1786818028</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக
வடக்கு-கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக
வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்
தெரிவித்துள்ளனர்.</p><p>

வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு -
கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரும், வவுனியா
மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெனிற்றா இவ்வாறு தெரிவித்தார். </p><p>அவர் மேலும்
தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாம் நீதிக்காக தொடர்ந்து போராடி
வருகின்றோம். உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச நீதியை
வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>ஐ.நா மனித உரிமைகள் பேரவை</h2><p> காணாமல்
ஆக்கப்பட்டோர் தினத்திலும் வடக்கு - கிழக்கு பகுதிகளில் நாம் பெரியளவிலான
போராட்டங்களை நடத்தி வந்திருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce052efa-cc3a-43ad-a945-2e834fa215a3/26-6a80b265c7025.webp' /></p><p> காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல
அறிக்கைகளையும், வெளியிட்டு உள்ளோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும்
சாட்சியங்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. நியாயமான நீதி
கிடைக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தாய்-தந்தையர்
இதுவரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>கலந்துரையாடல்</h2><p>
</p><p>
இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும்
முன்னாள் போராளிகள், நலன்புரிச் சங்கத்தினர் பங்கேற்று முழு ஆதரவை
அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44a3efbf-3951-4cce-8ce9-786a3b2243fc/26-6a80b26502555.webp' /></p><p>
</p><p>
அது போல், மதகுருமார்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி
உரிமையாளர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்
இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று ஓகஸ்ட் 30 அன்று திரளாகப் பங்கேற்குமாறு அவர்
கேட்டுக் கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T19:01:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துப்பாக்கிச் சூடு: படுகாயமடைந்தவர் சற்றுமுன்னர் பலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-in-mount-lavinia-1786817353"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-in-mount-lavinia-1786817353</id>
            <summary type="text">மவுண்ட் லெவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மவுண்ட் லெவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று (15) இரவு சுமார் 9.50 மணியளவில், ஹுலுதாகொட வீதியில் உள்ள வீடொன்றுக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce9513a-1bf2-4ebf-bf7a-41e46678ff3c/26-6a80ad5f9c637.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.[</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-15T18:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தாழ்த்தி பேசிய விடயம் கண்டிக்கத்தக்கது! பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/video-remarks-about-the-post-development-officers-1786815166"></link>
            <id>https://tamilwin.com/article/video-remarks-about-the-post-development-officers-1786815166</id>
            <summary type="text">வட மாகாண சபையிலே அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பதவி பற்றியும் அவர்களுடைய பணி
தொடர்பாகவும் தரம் தாழ்த்தி பேசிய விடயம் கண்டிக்கத்தக்கது என&amp;nbsp;அகில ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண சபையிலே அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பதவி பற்றியும் அவர்களுடைய பணி
தொடர்பாகவும் தரம் தாழ்த்தி பேசிய விடயம் கண்டிக்கத்தக்கது என&nbsp;அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர்
க.அனிரன் தெரிவித்துள்ளார்.</p><p>மட்டு.ஊடக அமையத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து
கொண்டபோது இதனை தெரிவித்தார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபையிலே உயர்மட்ட
அதிகாரிகள் கலந்துரையாடல் முடிவுற்றதன் பிற்பாடு, பொதுவாக இலங்கையிலே
இருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பதவி பற்றியும் அவர்களுடைய பணி
தொடர்பாகவும் தரம் தாழ்த்தி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களிலே பரவலாக பதிவேற்றம் செய்யப்பட்டு கொண்டு வருகின்றது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இது தொடர்பான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும், இதற்குரிய சட்ட நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd2d1692-47cb-4638-95b7-d107cca40e51/26-6a80a59497908.webp' /></p><p>அதன் அடிப்படையில், எங்களுடைய அகில இலங்கை பட்டதாரி
ஒன்றியம் என்கின்ற அடிப்படையிலே இது தொடர்பான விடயங்களை இந்த ஊடக வாயிலாக
வெளிப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கோடு இன்று இந்த மட்டக்களப்பு ஊடக
மையத்திலே இந்த ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.</p><p>அபிவிருத்தி சார்ந்தும் கதைக்கப்பட வேண்டிய அந்த சந்தர்ப்பங்களில் அரசினால்
ஒதுக்கப்பட்டிருக்கின்ற பணி நேரத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அந்த
நியமனதாரர்களை தரம் தாழ்த்தி பேசுவதோடு மாத்திரமல்லாமல், அவர்களுக்கு சம்பளம்
வழங்கப்படுவது ஒரு வீண், இவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டால் அரசுக்கு இலாபம்
என்கின்ற அந்த தேவையில்லாத கேவலமான அந்த விடயங்களை பேசி இருக்கின்றார்கள் இது
கண்டிக்கத்தக்க விடயம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T17:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[USS Abraham Lincoln கப்பல் 9 மாதங்களாக கடலில்..! வளைகுடா நோக்கி செல்லும் USS George Washington கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uss-george-washington-replace-uss-abraham-lincoln-1786814072"></link>
            <id>https://tamilwin.com/article/uss-george-washington-replace-uss-abraham-lincoln-1786814072</id>
            <summary type="text">அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் மற்றும் கடற்படையினர் நீண்டகால ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் மற்றும் கடற்படையினர் நீண்டகால பணியமர்த்தலால் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
 இதையடுத்து, அவர்களுக்கு மாற்றாக யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வோஷிங்டன் USS George Washington விமானம் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்படுகிறது.</p><p></p><h2>

260 நாட்களுக்கும் மேலாக கடலில்
</h2><p>
USS Abraham Lincoln கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக கடலில் உள்ளது. சுமார் 200 நாட்களாக எந்த துறைமுகத்திலும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து பயணித்து வருகிறது.

இந்த கப்பல் சுமார் 260 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e19b98e3-aed4-4e56-aa98-b78b82e05774/26-6a80a11b9135c.webp' /></p><p> இது அமெரிக்க கடற்படையில் கவலையை ஏற்படுத்தியுள்ள நீண்டகால பணியமர்த்தலாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க செனட்டர் ரிச்சர்ட் புளூமென்தால், பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்திடம் கப்பலில் உள்ள நிலைமை குறித்து கடிதம் மூலம் கவலை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதில் அடிப்படை பொருட்களின் பற்றாக்குறை, குடிநீர் மாசுபாடு, கழிவறை மற்றும் குழாய் பிரச்சினைகள், மாலுமிகளின் மோசமடைந்து வரும் மனநலம், கப்பல் தள பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் தபால் சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><h2>
USS George Washington மத்திய கிழக்கு நோக்கி</h2><p>

இந்த நிலையில், USS George Washington கப்பல் ஏற்கனவே மத்திய கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
</p><p>
அது கடந்த வாரம் வியட்நாமின் Da Nang துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436de93e-824c-455f-a751-287b249663a3/26-6a80a11c88447.webp' /></p><p> </p><p>பின்னர் ஒரு க்ரூசர் மற்றும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பலுடன் Singapore Strait வழியாக பயணித்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர், அந்த விமானம் தாங்கிக் கப்பல் தற்போது Malacca Strait பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அங்கிருந்து அது இந்தியப் பெருங்கடல் வழியாக மத்திய கிழக்கு நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

The Wall Street Journal தகவலின்படி, மத்திய கிழக்கில் தற்போது பணியில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான USS Abraham Lincoln-க்கு பதிலாக USS George Washington களமிறக்கப்பட உள்ளது.
</p><h2>
மாலுமிகள் கடுமையான அழுத்தத்தில்</h2><p>

நீண்டகால பணியமர்த்தல் மற்றும் தொடர்ந்து நீட்டிக்கப்படும் பணிக்காலம் காரணமாக மாலுமிகளின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

Military Times வெளியிட்ட தகவலின்படி, சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதிக்க முயன்றதாகவும் அல்லது அதுபற்றி சிந்தித்ததாகவும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
</p><p>
ஒரு மாலுமியின் மனைவி Annabelle Loma, தனது கணவர் பலமுறை பணிக்காலம் நீட்டிக்கப்பட்ட பின்னர் கப்பலில் இருந்து குதிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cb0b310-f4b8-4d1b-aec2-62ea5938c67e/26-6a80a11d3a8ea.webp' /></p><p>
</p><p>
அவர் கடுமையாக சோர்வடைந்திருந்ததாகவும், இந்த சம்பவம் தனது 13 ஆண்டுகால இராணுவப் பணியை பாதித்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் அவர் கூறினார்.
</p><p>
மற்றொரு சம்பவத்தில், கப்பலில் இருந்த ஒருவர் கடலில் குதிக்க முயன்ற சக மாலுமியை பிடித்து இழுத்து மீட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இதற்கிடையில், ஈரானுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க கடற்படை தனது பணிகளைத் தொடர்வதற்காக கப்பல்களை மாறி மாறி அனுப்பும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T17:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா-நிலாவினி விவகாரம்: பெண் தளபதியின் இரகசிய வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/contraceptive-pill-karuna-female-commander-1786804279"></link>
            <id>https://tamilwin.com/article/contraceptive-pill-karuna-female-commander-1786804279</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா முரண்பட்டபோது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.அவற்றில் மிக முக்கியமாக அந்தக்கால கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா முரண்பட்டபோது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.</p><p>அவற்றில் மிக முக்கியமாக அந்தக்கால கட்டத்தில் மகளிர் அணித்தலைவியாக இருந்த நிலாவினி என்ற பெண்ணுடன் கருணாவிற்கு இருந்த முறைகேடான உறவும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டு இருந்தது.</p><p>கருணா-நிலாவினி விவகாரம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாத்திரம் அல்ல சிறிலங்கா தரப்பிற்கு கூட தெரிந்த ஒரு விடயம் தான்.</p><p>அத்தோடு,&nbsp;கருணா தன்னோடு தறவான உறவில் இருந்ததாகவும், பல தடவைகள் தனக்கு அவர் கர்ப்பத்தடை மாத்திரை தந்ததாகவும் நிலாமினி விசாரணையில் தெரிவித்துள்ளார்.</p><p>விடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்திய ‘கருணா பிளவு’ சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நிகழ்வுகள் பற்றிய விடயங்களை உண்மைகள் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wuWF75v1fAc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T17:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/impact-of-drought-intensifies-risk-ponds-drying-up-1786811460"></link>
            <id>https://tamilwin.com/article/impact-of-drought-intensifies-risk-ponds-drying-up-1786811460</id>
            <summary type="text">இலங்கையின் பல பிரதேசங்களில் வறட்சியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுத்தப்படுகின்றது.அத்தோடு, வறண்ட வானிலை காரணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல பிரதேசங்களில் வறட்சியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுத்தப்படுகின்றது.</p><p>அத்தோடு, வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.</p><p> இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><h2>கடுமையான வறட்சி</h2><p>

 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de136b7e-f73c-4e7e-8d17-d3c67b5a1443/26-6a809a269ff87.webp' /></p><p>

 

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>&nbsp;தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலையின் தாக்கம் சிறிய குளங்களையே பெரிதும் பாதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T16:57:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா - குறிசுட்டகுளம் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-man-dies-in-elephant-attack-in-vavuniya-1786811047"></link>
            <id>https://tamilwin.com/article/family-man-dies-in-elephant-attack-in-vavuniya-1786811047</id>
            <summary type="text">வவுனியா- குறிசுட்டகுளத்தில் யானை தாக்கியதில்
குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(15.8.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா- குறிசுட்டகுளத்தில் யானை தாக்கியதில்
குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த சம்பவமானது இன்று(15.8.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,

வவுனியா, குளவிசுட்டான் பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தில் தோட்ட வேலைக்கு
சென்ற போதே குறித்த குடும்பஸ்தர் மீது யானை தாக்கியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
இதில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நபரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db19c56-870c-4e19-b3a6-0f0259de225c/26-6a8092a9a540f.webp' /></p><p>இது தொடர்பில்
நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T16:28:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி அறிவிப்பிற்கு ஈரானின் கடுமையான பதிலடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-trump-will-soon-declare-hormuz-us-territory-1786810125"></link>
            <id>https://tamilwin.com/article/iran-trump-will-soon-declare-hormuz-us-territory-1786810125</id>
            <summary type="text">ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது, அது ஈரானுக்குச் சொந்தமானதாகவே உள்ளது தொடர்ந்து ஈரானுக்கே சொந்தமானதாக இருக்கும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாதி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்த அவர், “ஒரு ட்வீட் மூலமாகவோ, விமானந்தாங்கிக் கப்பல் மூலமாகவோ, உத்தரவு பிறப்பிப்பதன் மூலமாகவோ அல்லது தேர்தல் பிரசார உரையின் மூலமாகவோ ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற முடியாது” என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், ஈரான் சந்தித்துள்ளதாக அமெரிக்கா கூறும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத வரை, ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை ஈரான் தொடர்ந்து அமல்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eca50a7-7690-426a-a44b-346781b58de7/26-6a8090721f46a.webp' /></p><p>
</p><p>

இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு “முழுமையான கட்டுப்பாடு” இருப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

“நாம் இதை தொடர்ந்து வைத்திருப்போம் என்று நினைக்கிறேன்.</p><p> எங்கள் கடற்படை முற்றுகை ‘இரும்புச் சுவர்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.

 இதை ஈரான் எதுவும் செய்ய முடியாது” என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஈரான் இராணுவம் ட்ரம்பின் கூற்றை “பொய் மற்றும் கட்டுக்கதைகள்” என்று மறுத்துள்ளது.</p><h2>ட்ரம்பிற்கு பதிலடி</h2><p>

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து ஈரான் இஸ்லாமிய குடியரசின் முழுமையான நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் ஆயுதப்படைகளின் அனுமதி மற்றும் கண்காணிப்பு இல்லாமல் எந்தவொரு வர்த்தகக் கப்பல் அல்லது எண்ணெய் கப்பலும் இந்த நீரிணை வழியாக பாதுகாப்பாக செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7315299c-b144-4f58-848a-a9b121f959b0/26-6a809072e693c.webp' /></p><p>
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்கா “மிகப்பெரிய தவறான கணக்கீட்டை” மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ட்ரம்பின் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான கருத்து நகைச்சுவையாக கூறப்பட்டது என்று பின்னர் விளக்கம் அளித்ததாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
தற்போதைய அமெரிக்கா–ஈரான் மோதலின் முக்கிய பதற்றப் பகுதியாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது. 

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T16:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreigner-arrested-in-katunayake-airport-1786807966"></link>
            <id>https://tamilwin.com/article/foreigner-arrested-in-katunayake-airport-1786807966</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 14,600 வெளிநாட்டு சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2><b> போதைப்பொருள் தடுப்புப் பிரிவு</b></h2><p>சந்தேகநபர் 52 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/002e539d-eb22-45a5-8122-a7536fd92fb9/26-6a8087bbc8c5b.webp' /></p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-15T15:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்மாந்துறையில் மாடுகளைக் கடத்திச் சென்ற இரு இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-youths-arrested-smuggling-cattle-in-sammanthurai-1786807031"></link>
            <id>https://tamilwin.com/article/2-youths-arrested-smuggling-cattle-in-sammanthurai-1786807031</id>
            <summary type="text">சொகுசு காரைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச் சென்ற இரு
இளைஞர்களைச் சம்மாந்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அத்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொகுசு காரைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச் சென்ற இரு
இளைஞர்களைச் சம்மாந்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
</p><p>அத்தோடு, சந்தேகநபர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.&nbsp;</p><p>அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
நீண்டகாலமாக நடைபெற்றுவந்த விலங்குத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இத்திடீர்
சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.</p><h2>கைது</h2><p>இந்தச் சோதனையின் போது, மாடுகளைக் கடத்தப்
பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் அதிலிருந்த மாடுகளையும் பொலிஸார்
முதற்கட்டமாகக் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d121f694-eab9-4da1-b9d0-07e016f6423a/26-6a8082f9d8162.webp' /></p><p> பொலிஸாரைக் கண்டதும் காரில் வந்த இருவர்
தப்பியோடியபோதிலும், பொலிஸார் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி அவர்களை
விரைவாகக் கைது செய்தனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 கிராம் 430
மில்லிகிராம் மற்றும் 5 கிராம் 150 மில்லிகிராம் என மொத்தம் 10 கிராம் 580
மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.</p><h2>விசாரணை</h2><p>


சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம் கடத்தலுக்குப்
பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், 7 மாடுகள் மற்றும் வங்காமம், இறக்காமம் ஆகிய
பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆடுகள் என்பன பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a12cdef-a3e8-4f2a-8292-91d77d5dd5d2/26-6a8082fa908c7.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட நபர்கள் போதைப்பொருள் வியாபார வலையமைப்புடன்
தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும், பகுதி சார்ந்த விலங்குத் திருட்டுகள்
குறித்தும் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T15:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் - குழு மோதலால் ஏற்பட்ட விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-brutally-killed-in-colombo-1786797110"></link>
            <id>https://tamilwin.com/article/man-brutally-killed-in-colombo-1786797110</id>
            <summary type="text">கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இராஜகிரிய பிரதேசத்தில் குழுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இராஜகிரிய பிரதேசத்தில் குழுக்களுக்கு இடையில் இன்று ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலில் உயிரிழந்தவர் இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த&nbsp;27 வயதான இளைஞன் என வெலிக்கடை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><h2><b> 

 நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்</b></h2><p>குறித்த நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையைத் தொடர்ந்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e423df7-4854-4bbf-853f-f800f96f5781/26-6a806810a13b8.webp' /></p><p>தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T14:34:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[25-க்கு மேல் வெற்றிடங்கள்..! பரீட்சைக்கான தீர்வை நம்பி காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374"></link>
            <id>https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374</id>
            <summary type="text">கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள்
கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதே பரீட்சைக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விண்ணப்பதாரர்களுக்கான பதில்</h2><p>மாறாக, இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் பரீட்சாதிகளுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96dfef27-c9d0-4694-8bad-546a40dc1367/26-6a80434804db6.webp' /></p><p>


இது தொடர்பில் மாகாண பொதுச் சேவை
ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக இது தொடர்பில் விளக்கம்
கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கான பதிலாக "நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட
2020.02.25 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றரிக்கை
மற்றும் 2022.04.26 ஆம் திகதிய 03/2022 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட
சுற்று நிரூபத்துக்கு அமைவாக நியமனங்கள் அனைத்தும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

25-க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்</h2><p>
கிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய
மாவட்டங்களில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதுடன்,
இதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். </p><p>

தற்போது வரை கிழக்கு மாகாணத்தில்
மொத்தமாக 25க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் கவனம்
செலுத்தி இந்த போட்டிப் பரீட்சையை விரைவில் நடத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T14:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறு அறிவிப்பு வரை தொடரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் - கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grama-sevaks-strike-1786789519"></link>
            <id>https://tamilwin.com/article/grama-sevaks-strike-1786789519</id>
            <summary type="text">பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கிராம நிலதாரிகள் தொடங்கியுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியதால், சனிக்கிழமைகளில் வேலைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கிராம நிலதாரிகள் தொடங்கியுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியதால், சனிக்கிழமைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த அறிவிப்பு இன்று(15.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.
</p><h2>


மறு அறிவிப்பு வரை..
</h2><p>
மறு அறிவிப்பு வரும் வரை சனிக்கிழமைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட கிராம உத்தியோகத்தர்கள் முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd9311cf-20c5-44ff-a455-a36b52c02a0f/26-6a8072d5567cd.webp' /></p><p>

 பயணப்படியை உயர்த்தாதது, சம்பளத்தை குறைந்தபட்ச தகுதியாக ஆக்குவது, கிராம உத்தியோகத்தர்களின் படிகளையும் உள்ளடக்கிய கம்மன்பில குழு பரிந்துரைத்த படிகளைப் பெறுவது, சனிக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஆற்றிய பணிக்கு ஒரு நாள் சம்பளம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் காரணமாக, கிராம நிலதாரிகள் கடந்த 10 மற்றும் 11 நாட்களாக உடல்நலக்குறைவு விடுப்பில் பணிக்கு வரவில்லை. </p><p>

இருப்பினும், இரண்டு நாட்கள் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியதாலும், தங்களது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வை வழங்கத் தவறியதாலும், கிராம உத்தியோகத்தர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.</p><h2>

கள பணிகள் இடைநிறுத்தம்</h2><p>

இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிராம நிலதாரிகள் சங்கத்தின் செயலாளர் நெவில் விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
ஒரு சங்கமாக நாங்கள் முடிவு செய்துள்ளோம், மேலும் பிற சங்கங்களையும் இன்று முதல் தங்களது சனிக்கிழமை அலுவலகப் பணிகளைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce18d9e-6fc9-487e-acfd-b89fc4b74e13/26-6a8072d607861.webp' /></p><p>

இதற்கமைய, எந்தவொரு கூடுதல் படியையும் பெறாமல் எங்களது விடுமுறையைத் தியாகம் செய்து அந்த அலுவலக நாளை நாங்கள் நீக்குவோம்.</p><p>

மேலும், அன்று நாங்கள் களப்பணிகளையும் செய்ய மாட்டோம். 

இதன்படி, சனிக்கிழமை அலுவலக நாளை நாங்கள் புறக்கணிப்போம். </p><p>அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை கிராம உத்தியோகத்தர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே பிரிவு அலுவலகங்களில் இருப்பார்கள் என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-15T14:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flag-hoisting-ceremony-thellippalai-durga-amman-1786802062"></link>
            <id>https://tamilwin.com/article/flag-hoisting-ceremony-thellippalai-durga-amman-1786802062</id>
            <summary type="text">&amp;nbsp;வரலாற்று சிறப்புமிக்க. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம்
இன்று (15) கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.&amp;nbsp;தெல்லிப்பழை துர்க்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வரலாற்று சிறப்புமிக்க. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம்
இன்று (15) கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.</p><p>&nbsp;தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2026 மகோற்சவ பெருவிழாவில் இன்று
காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வசந்த
மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான் ஆகியோருக்கு
விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளது.</p><p> வசந்த மண்டபத்தில் இருந்து மூர்த்திகள் கொடிக்
கம்பத்திற்கு எழுந்தருளி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று
காலை 10.00 மணிக்கு இனிதே நடைபெற்றது.</p><h2>கொடியேற்றம்</h2><p>12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோசவத்தில் பத்தாம் நாள் திருவிழாவாக எதிர்வரும்
24 ஆம் தேதி சப்பறத் திருவிழாவும் 11ஆம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 25 ஆம்
தேதி ரத உற்சவமும் 12-ஆம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 26ஆம் தேதி தீர்த்த
உற்சவமும் சிறப்பாக நடைபெற உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4da943a2-eabc-4e4e-a2ef-d3115ed21eee/26-6a8071f94c341.webp' /></p><p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாலய மகோற்சவ விழாவில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T14:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-explanation-cry-for-justice-protest-1786800913"></link>
            <id>https://tamilwin.com/article/police-explanation-cry-for-justice-protest-1786800913</id>
            <summary type="text">யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா
நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா
நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று&nbsp; (15) வலிகாமம் கிழக்கு
பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எவ்வகையில் போராட்டத்திற்கு
அனுமதியளிக்க முடியும் விளக்கம் கேட்டு யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்தில் அவரது
அலுவலகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் தவிசாளரிடம் கேட்டபோது, யாழ்ப்பாண தலைமைப் பிரதான பொலிஸ்
பொறுப்பதிகாரியின் கடிதத்துடன் எனது அலுவலகத்திற்கு வருகை தந்த பொலிசார் என்னை
பதிலளிக்குமாறு கோரும் கடிதத்தினை கையளித்தனர்.</p><p></p><h2>ஐக்கியநாடுகள் சபை</h2><p>
</p><p>
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது செம்மணியில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராடுவதுடன்
பேரணியாக யாழிலுள்ள ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தில் மனு
கையளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7e2d5c6-cbc3-43d8-a7cb-55ddbeecb290/26-6a806e89a062f.webp' /></p><p> அந்தப் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகிய நீங்கள்
அனுமதி வழங்கியுள்ளமை பொலிஸ் தரப்பிற்குத் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இவ்வாறான
போராட்டத் தொடர் நடத்தப்படுவதன் மூலம், இலங்கையினுடைய வெவ்வேறு
இனத்தவர்களுக்கிடையே ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும்இ பொது
அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என பொலிஸ் கருதுவதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>விளக்கம்</h2><p>
</p><p>
மேலும் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடிதத்தில், பொலிஸ் தரப்பின் அனுமதியின்றி
இவ்வாறான போராட்டத் தொடரை நடத்துவதற்கு உங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா
எனக் கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>அத்துடன் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பின் அதற்கான
சட்டபூர்வமான அடிப்படை என்ன, இவ்வாறானதொரு போராட்டத் தொடரை எம்மால்
எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d50bc3b-2a97-4925-97d5-685abd2f8ab4/26-6a806e8a5563f.webp' /></p><p>
</p><p>
இந்தநிலையில் ஜனநாயக ரீதியிலான நீதி கோரிய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
நீதி கோரிய போராட்டத்தினை எமது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நடத்துவதற்கு
கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜனநாயக ரீதியிலான மனித உரிமைகளை வலியுறுத்திய
மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளைக் கருத்தில்
கொண்டு தான் அனுமதியளித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்
தியாகராஜா நிரோஷ் பொலிஸ் தரப்பிற்கு எழுத்து மூலம் பதிலளித்தள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T13:50:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய காகித கடைக்கு சென்ற 8 இலட்சம் பெறுமதியான புத்தகங்கள் - சாரதி உட்பட ஐவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/textbooks-worth-rs-8-lakh-sold-1786800112"></link>
            <id>https://tamilwin.com/article/textbooks-worth-rs-8-lakh-sold-1786800112</id>
            <summary type="text">கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களை, அவை கொண்டு செல்லப்பட்ட வழியில் வேறு ஒருவருக்கு குறைந்த வில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களை, அவை கொண்டு செல்லப்பட்ட வழியில் வேறு ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>

கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சுமார் 19,000 பாடநூல்கள், வெறும் 47,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தலங்கம பொலிஸாரால் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h2>
பழைய காகித கடைக்கு சென்ற பாடசாலை புத்தகங்கள்</h2><p>
ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, குறித்த பாடநூல்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, புத்தகங்கள் அனைத்தையும் பழைய காகிதங்களை கொள்வனவு செய்யும் நபர் ஒருவருக்கு விற்பனை செய்து, அதற்காக 47,000 ரூபாவைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c11b50-0f6b-4942-890c-d040a29356f5/26-6a806d765c2ea.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
</p><p>
இதன்போது, அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-15T13:45:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-work-chemmani-mass-grave-1786800379"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-work-chemmani-mass-grave-1786800379</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15.8.2026) முன்னெடுப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15.8.2026) முன்னெடுப்பட்டன.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><p>இந்தநிலையில், 53ஆவது நாளான இன்றைய தினம் 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வு
பணிகளின் போது, 562 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ac119c-6fbd-46f1-9612-30cd9ab870e7/26-6a806a44e0772.webp' /></p><p>இந்தநிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 557 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T13:31:54+00:00</updated>
        </entry>
    </feed>
