<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-31T19:00:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-court-order-today-1785519190"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-court-order-today-1785519190</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p>இலங்கை வரலாற்றிலேயே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருவரும் பதிவாகியுள்ளனர்.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக இவர்கள் இருவரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>முன்னதாக&nbsp;2022ஆம் ஆண்டில், மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இருவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்துத் தீர்ப்பளித்தது. </p><p>அதனை தொடர்ந்து, இதற்கு எதிராக அரசு தலைமை சட்டத்தரணி தாக்கல் செய்த மேல்முறையீடு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த வழக்கில் எதிர் தரப்பின் சாட்சியங்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமையே இதற்கு ஆரம்பமாகும்.&nbsp;</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tNtQzCV29AI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T17:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் ஜயசுதந்தர - ஹேமசிறி பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-jayasudantara-prison-hemasiri-fernando-1785515975"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-jayasudantara-prison-hemasiri-fernando-1785515975</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்திலிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2>மரண தண்டனை&nbsp;</h2><p>ஈஸ்டர் ஞாயிறன்று நிகழவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்கத் தவறியது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றங்களுக்காக, இருவருக்கும் கொழும்பு நிரந்தர மூவர் உயர் நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் இன்று (31) மரண தண்டனை விதித்தனர்.</p><p>இந்நிலையில், இருவரும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b64c72-1ef2-4930-bf05-3494fd58ab1d/26-6a6cd52a587ac.webp' /></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T16:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து எல்லை மோதல்: 20000இற்கும் அதிகமான கம்போடிய மக்கள் வீடு திரும்ப முடியாது துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thai-border-clash-leave-20-000-cambodians-stranded-1785511714"></link>
            <id>https://tamilwin.com/article/thai-border-clash-leave-20-000-cambodians-stranded-1785511714</id>
            <summary type="text">தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற
மோதல்களால் 20,000க்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற
மோதல்களால் 20,000க்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் இருப்பதாக
ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி டாம் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

கம்போடியாவின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஆய்வு செய்யச் சென்ற ஐ.நா
சிறப்புப் பிரதிநிதி டாம் அண்ட்ரூஸ், அந்நாட்டின் தலைநகர் புனோம் பென்னில்
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.</p><p></p><h2>கம்போடிய மக்கள்&nbsp;</h2><p>
</p><p>
கடந்த ஆண்டின் இறுதியில் எல்லைப் பகுதியில் சுமார் 6,50,000 மக்கள்
இடம்பெயர்ந்த நிலையில், பெரும்பான்மையானோர் திரும்பினாலும் 20,000க்கும்
அதிகமானோர் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவுவதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ea2e8c-a71f-42eb-a796-de9da36dc7b8/26-6a6cc05dc7557.webp' /></p><p>சில நகரங்கள் மற்றும் கிராமங்களை தாய்லாந்து இராணுவத்தினர் இன்னமும் தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறிய அவர், ஆயுத மோதல்களால் இடம்பெயர்ந்த
மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது சர்வதேச சட்டப்படி அவர்களின் உரிமை
என்றும், தாய்லாந்தும் கம்போடியாவும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை
விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

அதேவேளையில், கம்போடிய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கவில்லை என்றும்,
இருதரப்பு போர்நிறுத்த ஒப்பந்தப்படியே செயல்படுவதாகவும் தாய்லாந்து தெரிவித்து
வருகிறது.</p><p> எல்லை மூடல் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் வர்த்தகமும் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கம்போடியாவில் அதிகரித்து வரும் இணைய மோசடி மையங்கள் பெரும் மனித
உரிமைச் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், இதில் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகள்
மற்றும் செல்வாக்குமிக்க நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் ஐ.நா பிரதிநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் மலையேற்றப் பகுதியில் பனிச்சரிவு: 10 பேர் மாயம்! நால்வர் சடலமாக கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/avalanche-in-pakistan-trekking-area-1785511106"></link>
            <id>https://tamilwin.com/article/avalanche-in-pakistan-trekking-area-1785511106</id>
            <summary type="text">பாகிஸ்தானில் உள்ள உலகின் 12ஆவது மிக உயர்ந்த மலையான &#039;பிராட் பீக்&#039; பகுதியில்
ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ் பெற்ற நேபாள மலையேற்ற வீரர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானில் உள்ள உலகின் 12ஆவது மிக உயர்ந்த மலையான 'பிராட் பீக்' பகுதியில்
ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ் பெற்ற நேபாள மலையேற்ற வீரர்
நிர்மல் புர்ஜா உட்பட 10 வீரர்கள் மாயமாகியுள்ளனர்.</p><p> தீவிர தேடுதல்
வேட்டைக்குத் பிறகு 4 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.</p><p></p><h2>பிராட் பீக் மலை</h2><p>
</p><p>
பிரபல நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான "14 Peaks: Nothing Is Impossible" மூலம்
உலகப் புகழ்பெற்ற 43 வயதான நிர்மல் புர்ஜா, உலகின் மிக உயரமான 14
சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் ஏறி உலக சாதனை படைத்தவர் ஆவார்.
</p><p>
நேற்று நண்பகல் வேளையில் 8,051 மீட்டர் உயரமுள்ள பிராட் பீக் மலையில் சுமார்
6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு
ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb93e9f-19dd-40c7-916a-02f268cca9d4/26-6a6cbd8741625.webp' /></p><p>மாயமான 10 பேரில் நேபாளம், பாகிஸ்தான், ஓமன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய
நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் அடங்குவர்.</p><p>இதில் 6 பேர் நேபாளத்தைச்
சேர்ந்தவர்கள்.

பாகிஸ்தான் இராணுவத்தின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் சிறப்புத் தேடுதல்
குழுவினர் கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் உள்ள கடினமான நிலப்பரப்பில் தீவிர
மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்களில் இருவரின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள
நிலையில், நிர்மல் புர்ஜா உட்பட மாயமான எஞ்சிய 6 வீரர்களை மீட்க பாகிஸ்தான்
அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:33:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA தலைவரின் மூத்த ஆலோசகர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-president-s-senior-advisor-resigns-1785510388"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-president-s-senior-advisor-resigns-1785510388</id>
            <summary type="text">&amp;nbsp;FIFA தலைவர் ஜியானி
இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கர்லோஸ் கோர்டேரோ உடனடியாகத் தனது பதவி விலகியுள்ளார்.
FIFA உலகக் கிண்ணம் மற்றும் பிற தொடர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;FIFA தலைவர் ஜியானி
இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கர்லோஸ் கோர்டேரோ உடனடியாகத் தனது பதவி விலகியுள்ளார்.</p><p>
FIFA உலகக் கிண்ணம் மற்றும் பிற தொடர்களை நடத்த 'FIFA Forward Enterprise'
என்ற 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள துணை நிறுவனத்தை உருவாக்கி, அதில் 20
சதவீத பங்கை தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்க FIFA திட்டமிட்டுள்ளது.</p><p></p><h2>FIFA தலைவர் பதவி விலகல்</h2><p>
</p><p>
இந்தத் திட்டத்திற்கு செப்டெம்பர் 19-க்குள் அனுமதி அளிக்கும் ஒவ்வொரு
உறுப்பினர் சங்கத்திற்கும் தலா 40 மில்லியன் டொலர் வழங்கப்படும் என
இன்ஃபான்டினோ அறிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் அமெரிக்க சாக்கர் சம்மேளன துணைத் தலைவரான கர்லோஸ் கோர்டேரோ, இது
கால்பந்து விளையாட்டின் எதிர்காலத்தை அடகு வைக்கும் மோசமான ஒப்பந்தம் எனக்
கூறி பதவி விலகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ecbc1d5-bd40-45d4-ba6b-26feee778619/26-6a6cbb4345783.webp' /></p><p>

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) இத்திட்டத்திற்கு மிகக் கடுமையான
எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

FIFA விளையாட்டின் ஆன்மாவை விற்பனை செய்ய முயல்வதாகக் கூறி, உலகக் கிண்ணம்
உள்ளிட்ட FIFA தொடர்களைப் புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது.</p><p>

இதேபோல் வட அமெரிக்க மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்புகளும் (AFC)
இத்திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையிலும், 211 உறுப்பினர் சங்கங்களின்
ஜனநாயகப்பூர்வ வாக்களிப்பு மூலமே முடிவு எடுக்கப்படும் என FIFA
தெரிவித்துள்ளது.</p><p>
மேலும், நாங்கள் கால்பந்தையோ அல்லது உலகக் கிண்ணத்தையோ விற்பனை செய்யவில்லை
என்றும், விளையாட்டின் வணிக வாய்ப்புகளை உலக அளவில் மேம்படுத்தவே முயல்கிறோம்
என்றும் FIFA தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு.. ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-mirissa-one-injured-1785513191"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-mirissa-one-injured-1785513191</id>
            <summary type="text">மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் இன்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.&amp;nbsp;வைத்தியசாலையில் அனுமதி&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் இன்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.&nbsp;</p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p>
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec199fe-dd52-44ff-bec7-4c1d7ce45f62/26-6a6cc879f0e7b.webp' /></p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p> 

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:08:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-virus-outbreak-intensifies-in-congo-1785509880"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-virus-outbreak-intensifies-in-congo-1785509880</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, உலக
வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய அலை என தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, உலக
வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய அலை என தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் மீறி
பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p><p>

தற்போது வரை கொங்கோவில் எபோலா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3,532 ஆக
உயர்ந்துள்ளதுடன், 1,556 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பு
அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பாதிப்பு</h2><p>அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை விட உண்மையான பாதிப்பு
எண்ணிக்கை 4 மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு
எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/699d923d-f204-4c87-8b9d-a87325986083/26-6a6cbed20b5e0.webp' /></p><p>
</p><p>போதுமான நிதி மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாமை, வாகனப் பற்றாக்குறை
மற்றும் உள்நாட்டு ஆயுதக் குழுக்களின் மோதல்கள் காரணமாக சில பகுதிகளை அணுக
முடியாமை ஆகியவை நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T15:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லையை மீறி வேறு நாட்டிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர்! பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/60-000-migrants-arrive-in-ceuta-spanish-1785510507"></link>
            <id>https://tamilwin.com/article/60-000-migrants-arrive-in-ceuta-spanish-1785510507</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்தில் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் சுமார் 60,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அந்த நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்தில் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் சுமார் 60,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, இந்த பயணத்தின் போது குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஸ்பெயினின் மற்றொரு தனித்தீவான மெலிலாவை அடைய முயற்சிக்கும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த வருகை அதிகரித்துள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத நடவடிக்கை</h2><p> </p><p>அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த நிலைமையை ஒரு "தாக்குதல்" என்று விவரித்துள்ளதுடன் அனைத்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae81a0f-0381-4d0c-9a54-7b843303f3f9/26-6a6cbd308383a.webp' /></p><p>சட்டவிரோதமாக நுழைந்தவர்களைத் திருப்பி அனுப்பும் திட்டங்களுக்கு மொராக்கோ அதிகாரிகள் ஒத்துழைத்து வருவதாக அவர் கூறினார்</p><p>கடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமாக இப்பகுதிக்குள் நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T15:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-overturns-in-algeria-25-killed-in-accident-1785508659"></link>
            <id>https://tamilwin.com/article/bus-overturns-in-algeria-25-killed-in-accident-1785508659</id>
            <summary type="text">அல்ஜீரியாவின் பூமெர்டெஸ் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக&amp;nbsp;அந்த நாட்டின் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்ஜீரியாவின் பூமெர்டெஸ் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக&nbsp;அந்த நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன், 44 பேர்
படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக
அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அல்ஜீரியப் பிரதமர் சிஃபி கிரீப்
காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பூமெர்டெஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு
நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.</p><p></p><h2>விசாரணை</h2><p>

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகள் தீவிரமாக
வழங்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4507cad2-0f17-4507-b6b9-3b3b66317fd5/26-6a6cb33515063.webp' /></p><p>
</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T14:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜிதவுக்கு மரண தண்டனை: கலக்கத்தில் ராஜபக்சர்கள் - ஆட்டத்தை ஆரம்பித்ததா அநுர அரசு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-first-sentence-of-the-easter-sunday-attack-1785502005"></link>
            <id>https://tamilwin.com/article/the-first-sentence-of-the-easter-sunday-attack-1785502005</id>
            <summary type="text">இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட முதலாவது தண்டனைக்கான&amp;nbsp; நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கின்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட முதலாவது தண்டனைக்கான&nbsp; நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கின்றது. </p><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்தும் அதனை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு, முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும்&nbsp; கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(31.07.2026) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>கடந்த 2019ஆம் ஆண்டு&nbsp; ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட மிக மிலேச்சத்தனமாக கொடூர தாக்குதல் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்.&nbsp;</p><p></p><h2>அரசியல் மாற்றத்திற்கான தாக்குதல்</h2><p>ஆரம்பத்தில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாளடைவில் இது இலங்கையின் ஒரு சாராரின் அரசியல் தேவைக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்ற வாதம் வலுப்பெற்றது.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்தது. அந்த ஆட்சி இடைநடுவே கவிழ்ந்து போக அடுத்ததாக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ddbe68c-cdf5-4e10-8f23-aae5001db469/26-6a6cb44f6d49a.webp' /></p><p>இப்படி வந்த அரசாங்கங்களிடத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான உண்மையான&nbsp; சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர மக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த ஆட்சிகளின் போது இது தொடர்பான விசாரணைகள் மந்த கதியிலேயே இடம்பெற்றன.&nbsp;</p><p>எனினும், 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கத்திடமும் இதே கோரிக்கையை மக்கள் முன்வைத்ததோடு, அநுர தரப்பும் இது தொடர்பில் மிகத் தீவிரமான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.</p><p>இதன் அடிப்படையில், ஆட்சிக்கு வந்தபின்னர் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்&nbsp; தொடர்பான விசாரணைகளை அநுர அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டியது.&nbsp;&nbsp;</p><p>இதன் தொடர்ச்சியாக,&nbsp; முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மிக முக்கியத் தலைகளின் பெயர்கள் வெளிவந்தன.</p><h2>அம்பலத்தப்படுத்தப்பட்ட சூத்திரதாரிகள்&nbsp;</h2><p> </p><p>இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், அரச புலனாய்வு சேவைகளின் முன்னாள்&nbsp; பணிப்பாளர் சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோர் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது அரசாங்கம்.&nbsp;&nbsp;</p><p>இதில், சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஏலவே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக,&nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a12853-fd70-4b19-9e2e-52ed30f1c7d9/26-6a6cb4501f373.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, ராஜபக்ச விசுவாசிகளான தென்னிலங்கையின் காலாவதியான பல அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும்&nbsp; போராடியும் ஓய்ந்து போயினர்.&nbsp; கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பயணத் தடையின் பின்னரே இந்த எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன.&nbsp;</p><p>எனினும், விசாரணைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அநுர அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்ததுடன், தொடர் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.&nbsp;</p><h2>இரகசியமாக நடத்தப்பட்ட கூட்டம்</h2><p>இப்படியான நிலையில் தான்,&nbsp; உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடந்த 7 வருடங்களின் பின்னர் இன்று அவருக்கு&nbsp; மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> எனவே, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஊடாக அடுத்து கைது செய்யப்படப் போகின்ற, தண்டனை விதிக்கப்படப்போகின்ற முக்கிய புள்ளிகள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.&nbsp;</p><p>அதேசமயம், அண்மையில்,&nbsp; முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணத்தின் பின்னர் ஒரு சில தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c30e685-380a-4785-8a04-7fc7b48ae7ad/26-6a6cb450c9a90.webp' /></p><p> </p><p>குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.&nbsp; </p><p>அந்தக்கூட்டத்தில், சுரேஷ் சலே, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைப்பது தொடர்பில் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><h2>ஆசாத் மௌலானா வெளியிட்ட&nbsp; தகவல்</h2><p>இந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் ராஜபக்சர்களின் தீவிர விசுவாசிகள் என்பதோடு,&nbsp; சுரேஷ் சலே,&nbsp; கோட்டாபய ராஜபக்ச நினைப்பதை மாத்திரம் செய்யக்கூடிய ஒருவராக இருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p>முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு இடையிலான&nbsp; நெருக்கம் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார். கோட்டாபய ராஜபக்ச ஒரு கட்டளையிட்டால் அதற்கு மறுப்பேச்சின்றி சுரேஷ் சலே அந்தக் கட்டளையை செய்து முடிப்பார் என சரத் பொன்சேகா&nbsp; குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38ca5785-3492-454a-919e-d6a084fb01a3/26-6a6cb4517aa8d.webp' /></p><p>அது மாத்திரமல்ல, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு பிரதானமாக தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வந்தவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்.</p><p>இதன்போது, பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய ஆசாத் மௌலானா சனல் 4 ஊடகத்தின் ஊடாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விபரங்களை வெளியிட்டிருந்தார்.&nbsp;&nbsp;</p><p>அதனடிப்படையில், ஐரோப்பிய நாடொன்றில் இருக்கும் ஆசாத் மௌலானாவைத் தேடிச் சென்ற இலங்கை&nbsp; குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரிடம்&nbsp; விசாரணைகளை மேற்கொண்டதிலும், ராஜபக்ச குடும்பத்திற்கும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் இடையிலான தொடர்பு குறித்த பல தகவல்கள் வெளியாகியிருந்தன.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நடுக்கத்தில் ராஜபக்சர்கள்</span></h2><p>இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்&nbsp; நடந்து முடிந்த பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானை,&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,&nbsp; முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும்,&nbsp; கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர்&nbsp; பிள்ளையானை விடுவிப்பது தொடர்பான உத்தரவாதம் ஒன்றை அவரிடம் வழங்கிவிட்டு வந்ததாகவும் ஆசாத் மௌலானாவிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளிவந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22e651ce-a27e-48de-afaa-4324fedb2bf9/26-6a6cb4522d03b.webp' /></p><p>இப்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளின் முடிவுகளை எந்தக் கோணத்தில் வைத்துப் பார்த்தாலும் அது ராஜபக்சர்களையே கைகாட்டி நிற்கின்றது.</p><p> இழந்த ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்தி, மக்களின் உயிரைக் கேடயமாக வைத்து ஆட்சியைப் பிடித்ததாக&nbsp; கோட்டாபய ராஜபக்ச தரப்பு மீது அரசியல்வாதிகளும், மக்களும் என குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இந்த விசாரணைகளின் தொடர்ச்சி ராஜபக்சர்களையே கைகாட்டி நிற்கும் நிலையில்,&nbsp; அடுத்து கைது செய்யப்படப் போவது யார்? என்ற கேள்வி எழுகின்றது.&nbsp; பொறுத்திருந்து பார்க்கலாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை சூத்திரதாரிகள் யார்..?? ராஜபக்சர்கள் தப்புவார்களா..??&nbsp; அடுத்தடுத்த தண்டனைகள் உறுதியாகுமா என்பதை..&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T14:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785507297"></link>
            <id>https://tamilwin.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785507297</id>
            <summary type="text">முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பு</h2><p>கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da702191-badf-46d6-8dce-1355440f5c0c/26-6a6caeb1dd789.webp' /></p><p> </p><p>
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக, உளவுத்துறை எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. </p><p>
இவ்வழக்கில், உத்தியோகபூர்வ கடமைகளைப் புறக்கணித்து உயிரிழப்புகளுக்குத் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. </p><p>
இதனைத்தொடர்ந்து, அதே வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T14:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்: கண்டுகொள்ளாமல் சென்ற ஊடகப் பிரதி அமைச்சர் - எழும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/journalists-protest-in-jaffna-1785506646"></link>
            <id>https://tamilwin.com/article/journalists-protest-in-jaffna-1785506646</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் ஊடக பிரதி அமைச்சர் சென்று க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் ஊடக பிரதி அமைச்சர் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. </p><p>


ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவின் பங்கேற்புடன் அரசாங்க தகவல்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
</p><h2>
போராட்டக்காரர்களை கண்டுக் கொள்ளாத பிரதி அமைச்சர்</h2><p>
இந்நிலையில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு
ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக
நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ்
ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e9e3d7-4de1-4e9a-afdf-44b1ccdb0d14/26-6a6cac095d6aa.webp' /></p><p>
</p><p>
மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி
பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.</p><p>

போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7520469-f026-4102-af28-e6b866be9ddf/26-6a6cac0a4b815.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd83f3cd-43f5-4095-9d46-4b3d3b55e5d4/26-6a6cac0b1d5c7.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T14:07:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடியில் இருந்து புறப்பட்ட கொலைக்குழு! 18 வருடங்களின் பின் விலகும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-nadu-manohar-s-murder-history-1785505763"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-nadu-manohar-s-murder-history-1785505763</id>
            <summary type="text">மட்டக்களப்பு - ஆரையம்பதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை (தமிழ்நாடு மனோகர்) படுகொலைக்கு பின்னால் பிள்ளையான் இல்லை என்றும், இதன் பின்னணியில் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - ஆரையம்பதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை (தமிழ்நாடு மனோகர்) படுகொலைக்கு பின்னால் பிள்ளையான் இல்லை என்றும், இதன் பின்னணியில் ஒரு கும்பலின் சதி இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

படுகொலை செய்யப்பட்ட தமிழ்நாடு மனோகர் ஒரு தமிழ் பற்றாளர் என்பதுடன், காத்தான்குடி இஸ்லாமியர்களுக்கு எதிராக அக்காலப்பகுதியில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p> </p><p> 

இந்நிலையில், அவர் தனது வீட்டில் மனைவி மற்றும் மகளுடன் இருந்தபோது, அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த இளைஞர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார். </p><p>

அதன் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
</p><p>
எனினும், தமிழ்நாடு மனோகரின் படுகொலைக்கு பிள்ளையான் காரணம் இல்லை என்றும், இதன் பின்னணியில் இஸ்லாமியர்களை உள்ளடக்கிய ஒரு கும்பல் இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

தமிழ்நாடு மனோகரின் படுகொலை மற்றும் அவர் முன்னெடுத்த சமூகப் பணிகள் தொடர்பான விடயங்களை மேலும் ஆழமாக ஆராய்கிறது “உண்மைகள்” நிகழ்ச்சி.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UaGkXMiTPO0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T13:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் விவகாரம் - கொழும்பில் இளைஞர் மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-arrested-for-stabbing-youth-in-kadawatha-1785503333"></link>
            <id>https://tamilwin.com/article/three-arrested-for-stabbing-youth-in-kadawatha-1785503333</id>
            <summary type="text">கொழும்பு - கடவத்தை பகுதியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்கள் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கடவத்தை பகுதியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்கள் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

கொழும்பு - கடவத்தை பகுதியினை சேர்ந்த 17 வயது இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.</p><p></p><h2>பலத்த கத்திக்குத்து காயம்</h2><p>
</p><p>
இதன்போது கழுத்தில் பலத்த கத்திக்குத்து காயத்துடன் இருந்த இளைஞரை அப்பகுதியிலிருந்த மக்கள் மீட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99a21bb6-1c36-4fb9-bcaf-1c72c8320a0d/26-6a6ca425f1d69.webp' />&nbsp;</p><p>

குறித்த இளைஞர், தனது வீட்டின் பின்புறம் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கத்திக்குத்து நடத்தியதாக சந்தேகப்படும் இளைஞரையும், அவருடன் வந்த மேலும் இரண்டு இளைஞர்களையும் கடவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இந்த சம்பவம் காதல் விவகாரத்தினால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2be5d68-1174-454f-9fb4-62753308d6bb/26-6a6ca426a68b4.webp' /></p><p>

சந்தேகநபர்களில் ஒரு இளைஞரின் தந்தை பொலிஸ் அதிகாரி என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T13:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடு அன்னையின் ஆவணித் திருவிழா குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-regarding-the-aavani-festival-madhu-1785503109"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-regarding-the-aavani-festival-madhu-1785503109</id>
            <summary type="text">எதிர்வரும் ஆவணி 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடு அன்னையின் ஆவணித் திருவிழா
தொடர்பாக விசேட முதலாவது கலந்துரையாடல் இன்று (31) இடம்பெற்றது.மருதமடு அன்னையின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஆவணி 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடு அன்னையின் ஆவணித் திருவிழா
தொடர்பாக விசேட முதலாவது கலந்துரையாடல் இன்று (31) இடம்பெற்றது.</p><p>மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் இடம் பெற்று 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் அதனை தொடர்ந்து 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட உள்ளது. </p><p>இந்த நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவிற்கு வருகை தர உள்ள தோடு,எதிர்வரும் மடு அன்னையின் திருவிழா காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை என்பதினாலும் இம்முறை பல இலட்சக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தர உள்ளார்கள் என்பதன் அடிப்படையில் அனைத்து வித ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.</p><p></p><h2>உரிய நடவடிக்கை</h2><p> </p><p>குறிப்பாக சுகாதாரம் , மருத்துவம், சாரணர் சேவை,கழிவு அகற்றும் நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் , மின்சாரம், உணவு மற்றும் கடைகள் , போக்குவரத்து, சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p> இதன் போது கலந்து கொண்ட திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.</p><p>இந்த நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 11 மணிக்கு மடு திருத்தலத்தில் 2 ஆவது கலந்துரையாடலை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba222cec-fcc2-4a0d-8549-64eece4cc254/26-6a6ca0520098d.webp' /></p><p>
</p><p>
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த
கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து
நேசரத்தினம் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை
எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
</p><p>
மேலும் திணைக்கள தலைவர்கள்,பிரதேச சபைகளின் செயலாளர்கள்,தவிசாளர்கள்,திணைக்கள
தலைவர்கள்,கடற்படை ,இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள் ,வைத்தியர்கள் என பலர்
கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T13:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[உளவுத்துறை எச்சரிக்கைகளை புறக்கணித்த குற்றம் : 854 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியான பூஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-jayasundara-from-sri-lanka-1785501518"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-jayasundara-from-sri-lanka-1785501518</id>
            <summary type="text">நாட்டின் மிக உயர்ந்த பதவியில் முன்னர் இருந்த பொலிஸ் அதிகாரியான முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பூஜித் ஜயசுதந்தர, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் மிக உயர்ந்த பதவியில் முன்னர் இருந்த பொலிஸ் அதிகாரியான முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பூஜித் ஜயசுதந்தர, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் பெரும்பான்மைத் தீர்ப்பின்படி இன்று(31) மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
</p><p>
1960ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி குருநாகலில் பிறந்த பூஜித், இப்பாகமுவ மத்தியப் பாடசாலை மற்றும் கண்டியில் உள்ள தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற பின்னர், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
</p><p></p><h2>முன்கூட்டிய உளவுத்துறை எச்சரிக்கைகள்</h2><p>
பூஜித்1985ஆம் ஆண்டில் இலங்கை பொலிஸ் பரீட்சையில் உதவி பொலிஸ் கண்காணிப்பாளராக (ASP) சேர்ந்து, தனது 35 ஆண்டு காலப் பணியில் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5287e66e-a84e-42da-8038-8951bb135805/26-6a6c9c2f502e3.webp' /></p><p>2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பு சபையால் அவர் 34ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
</p><p>
இலங்கையின் வரலாற்றில் மிக இருண்ட காலகட்டங்களில் ஒன்றான, 2019 ஏப்ரல் 21 அன்று ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்புகளின் போது ஜயசுந்தர பொலிஸ் தலைவராகப் பணியாற்றினார். </p><p>

அத்தாக்குதல்களில் 260இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். </p><p>தாக்குதல்கள் குறித்த முன்கூட்டிய உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்திருந்த போதிலும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினார்களா என்பது குறித்துப் பின்னர் விசாரணைகள் கவனம் செலுத்தின.
</p><p>
தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜயசுந்தராவை பதவி விலகுமாறு உத்தரவிட்டார். அவர் மறுத்ததால், 2019 ஏப்ரலில் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, அவருக்குப் பதிலாக பதில் பொலிஸ்மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.</p><h2>854 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறிந்து</h2><p>பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான உளவுத் தகவல்களைப் பகிர்வதில் ஏற்பட்ட தோல்விகளே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்று ஜயசுந்தர தொடர்ந்து கூறிவந்தார்.</p><p>

பின்னர் அவர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுடன் கைது செய்யப்பட்டு, தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd831a2a-d6d4-4a94-9e27-348986a120ba/26-6a6c9c3014f61.webp' /></p><p>
 2022இல், அவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அழைக்கப்படாமலேயே, வழக்கறிஞர் மன்றத்தால் விடுவிக்கப்பட்ட போதிலும், தலைமை வழக்கறிஞர் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். </p><p>அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம், அந்த விடுவிப்பு சட்டப்படி குறைபாடுடையது என்று தீர்ப்பளித்து, விசாரணையைத் தொடர உத்தரவிட்டது.
</p><p>
2026, ஜூலை 31 அன்று, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு, பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம், பூஜித் ஜயசுந்தர மீது சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் ஏற்பட்ட குற்றவியல் அலட்சியம், கடமையில் இருந்து தவறியது மற்றும் மரணங்களுக்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>அரசுத் தரப்பு வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கவில்லை என்று கண்டறிந்த ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார்.
</p><p>
ஜனவரி 2023இல், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக, அவர்களுக்கு ரூ.75 மில்லியனை தனிப்பட்ட முறையில் இழப்பீடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிட்டபடி அவர் முழுத் தொகையையும் செலுத்தி முடித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T13:11:30+00:00</updated>
        </entry>
    </feed>
