<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-14T23:30:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் நிறுவன மின்னஞ்சலால் ஆபத்தில் நாமல் ராஜபக்ச! முக்கிய பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769</id>
            <summary type="text">எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் 
ராஜபக்ச இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூற முனைந்தாலும்
சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 
2013 மார்ச் 23 ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் (Email) ஒன்றின் மூலம் பல கதைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச விமானங்களை கொள்வனவு செய்யும் யோசனையை ஜனாதிபதி மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து விடயத்தை முடித்து தருவதாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
அது தொடர்பில் எயார்பஸ் (Airbus) நிறுவனம் அனைத்து மின்னஞ்சல்களையும் வழங்கியுள்ளது. எயார்பஸ் கொள்வனவு தொடர்பான வேலையை நான் தந்தைக்குச் சொல்லி செய்து தருகிறேன் தந்தை மூலமாக அல்லது ஜனாதிபதி மூலமாக இதற்குத் தேவையான அமைச்சரவை அனுதியை பெற்று தருவதாக கூறியுள்ளார்.
</p><h2>நாமலின் பங்களிப்பு</h2><p>இதற்கு இணையாக 2013 மார்ச் 27 ஆம் திகதி அன்றைய சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இக்கொள்வனவுக்கான அனுமதியைக் கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பpத்துள்ளார். </p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 13 ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. என்னவென்றால் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாதீன பணிப்பாளர் சபையைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல் இலங்கைக்கு வந்த எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் இந்த பாரிய அளவிலான விமானக் கொள்வனவின் போது விமான ஓட்டும் பயிற்சி மையம் (Pilot Training Centre) ஒன்றும் பெருந்தொகை செலவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>
ஹம்பாந்தோட்டையில் விமான ஓட்டும் பயிற்சி</h2><p>அந்தப் பயிற்சி மையத்தை தனது சொந்த தேர்தல் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் நிறுவுமாறு எயார்பஸ் நிறுவன பிரதிநிதிகளிடம் நாமல் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>மின்னஞ்சல் சான்றுகள் மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளதாகவே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நிமல் பெரேரா அளித்துள்ள வாக்குமூலம் தனக்கு எயார்பஸ் நிறுவனத்துடனோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனோ எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f8eb70-d0ad-4b6a-a54c-4d4f3d98ea46/26-6aa7f39bafd6d.webp' /></p><p>ஆனாலும் நாமல் ராஜபக்ச வெளிநாட்டு ஆலோசனைச் சேவை ஒன்றின் மூலம் பணம் கிடைக்கவுள்ளதாகவும் அப்பணத்தை வைப்பு செய்வதற்கு வெளிநாட்டு கணக்கு ஒன்றைத் தருமாறும் கோரியுள்ளார்.</p><p>தனக்கு வெளிநாட்டு ஆலோசனை சேவை மூலம் பணம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே நிமல் பெரேரா தனக்குச் சொந்தமான 'SABREVISION' என்ற நிறுவனத்தின் கணக்கு இலக்கத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>
இந்தக் கணக்கிற்கு 'Biz Solutions' எனும் நிறுவனம் மூலம் அதாவது அப்போதைய கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க பணிப்பாளராக இருந்த புரூணையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் நிமல் பெரேராவின் வெளிநாட்டு கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளது. </p><p>பின்னர் அந்த பணத்தை இலங்கையில் 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jpF2dBCZozI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-14T23:26:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் கூட்டத்தில் நடந்த அட்டகாசம் - அநுரவின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869"></link>
            <id>https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
</p><p>
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் குடிப்பது அவர்களது உரிமை அதை யாரும் தடுபக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
</p><p>மேலும் அநுரவுக்கு எதிரான பேரணியில் நாமலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.</p><p>.இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DM_VJcCmwvE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவை அவசரமாக அழைத்த ஷிரந்தி! மகிந்தவின் மாளிகையில் திடுக்கிடும் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-urgently-summons-police-officer-anura-1789426268"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-urgently-summons-police-officer-anura-1789426268</id>
            <summary type="text">தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், குறித்த சிடி ஸ்கேனர் இயந்திரம் சீன அரசாங்கத்தினால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>ஏற்கனவே நாமல் ராஜபக்ச விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதுதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/e_N3-34LArk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் : ஐ.நா. கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-strongly-condemns-killing-of-two-children-1789420673"></link>
            <id>https://tamilwin.com/article/un-strongly-condemns-killing-of-two-children-1789420673</id>
            <summary type="text">கொழும்பு, தெஹிவளையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள்
கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை கடும்
கண்டனத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, தெஹிவளையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள்
கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை கடும்
கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன் இந்தக் கொடூர செயலுக்குப்
பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது
வலியுறுத்தியுள்ளது.
</p><h2>உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினர்</h2><p>
இது குறித்து இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் -
அன்ட்ரூ பிரெஞ்ச் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்,

"தெஹிவளையில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் மனவேதனையளிக்கின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5a6ddaf-343e-44e2-ad24-1443b96b04b2/26-6aa8744cf0c0b.webp' /></p><p>எந்தவொரு குழந்தையும் இத்தகைய கொடூர வன்முறைக்கு இரையாகக் கூடாது. இதற்குப்
பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதில் கூறியாக
வேண்டும். </p><p>உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும்
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" - என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வேறு ஒரு வீட்டை இலக்கு வைத்து</h2><p>
</p><p>
தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை ஓட்டோவில்
வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டு வீசித் தாக்குதல்
நடத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2892d584-b1a6-474a-8d65-afea50dacd53/26-6aa8744da510c.webp' /></p><p>இந்தத் தாக்குதலில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய
இரண்டு சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தமையுடன் அவர்களின் தந்தையும்
படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
தாக்குதலாளிகள் வேறு ஒரு வீட்டை இலக்கு வைத்துத் தவறுதலாக இந்தத் தாக்குதலை
நடத்தியிருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம்
வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T22:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் பெண்ணை கொடூரமாக தாக்கிய இலங்கை இளைஞனை துரத்தி பிடித்த பொலிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538</id>
            <summary type="text">இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்தச் சம்பவம்&nbsp; Vicolo Fossetto பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த இலங்கையர் அலுமாரிகளில் இருந்த பல மதுபானப் போத்தல்களை எடுத்து தனது பைக்குள் மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><h2><b>பெண் மீது தாக்குதல்</b></h2><p>பணம் செலுத்தாமல் காசாளர் பகுதியைக் கடந்து வெளியேறும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார். ஊழியர் ஒருவர் அவரை அணுகி திருடப்பட்ட பொருட்களைத் திருப்பி தருமாறு கோரியுள்ளார். எனினும் அவர் ஊழியரை உடல் ரீதியாக தாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a03fafc-08cd-4e3e-aa39-7d9d716c3277/26-6aa81c6181bf1.webp' /></p><p>ஊழியரை கீழே தள்ளியதோடு, திருடப்பட்ட பொருட்களுடன் இலங்கையர் தப்பியோடியுள்ளார். </p><p> கீழே விழுந்த பெண் எழுந்து, தனக்கு உதவ நின்ற வாடிக்கையாளர் ஒருவரின் காரில் இலங்கையரை துரத்தத் தொடங்கினார். </p><p>அங்கு வசிப்பவர் ஒருவர் சந்தேக நபரை அடையாளம் கண்டு, சந்தேக நபர் எங்கு பதுங்கியிருக்கின்றார் என்பதை அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h3><b>சட்டவிரோத குடியேற்றவாசி</b></h3><p>சோதனையின் போது, பையில் திருடப்பட்ட இரண்டு மதுபானப் போத்தல்களைக் கண்டெடுத்தனர். தப்பியோடும்போது கைவிடப்பட்ட மூன்றாவது மதுபான போத்தல் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef89cfd9-9a3d-4d28-976c-4469b8d7f026/26-6aa81c6272d81.webp' /></p><p>இந்நிலையில் விற்பனை செய்யக்கூடிய நிலையில் இருந்த அனைத்துப் பொருட்களும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. </p><p>விசாரணையை தொடர்ந்து பல குற்றப் பின்னணியை கொண்டவரும் சட்டவிரோதமான குடியேற்றவாசியுமான இலங்கையர் கைது செய்யப்பட்டார். </p>]]></content>
            <updated>2026-09-14T21:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணுசக்தி மாநாட்டில் ஈரான் பங்கேற்பதற்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bans-iran-participating-in-nuclear-conference-1789414569"></link>
            <id>https://tamilwin.com/article/us-bans-iran-participating-in-nuclear-conference-1789414569</id>
            <summary type="text">வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) வருடாந்த
பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி பங்கேற்பதைத்
தடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) வருடாந்த
பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி பங்கேற்பதைத்
தடுக்கும் வகையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமைக்கு
ஈரான் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
</p><p>
ஈரான் மீது மீண்டும் விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பயணத்
தடைகளிலிருந்து மொஹமட் எஸ்லாமிக்கு விலக்கு அளிக்குமாறு மாநாட்டை நடத்தும்
ஆஸ்திரியா விடுத்த கோரிக்கையை, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத்
தடைக்குழுவில் அமெரிக்கா நிராகரித்துள்ளது.
</p><h2>அரசியல் நோக்கம் கொண்டது என</h2><p>
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவினால் அவருக்கு வழங்கப்பட்ட விசா இரத்து
செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c41e2bcf-1116-407f-81d7-f71e11978af7/26-6aa853d01a708.webp' /></p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது எனவும்,
சர்வதேச அமைப்பினைத் தனது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாகவும் ஈரான்
குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>இருப்பினும், ஈரானிய பிரதிநிதி மாநாட்டைத் தனது பிரச்சார மேடையாகப்
பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த விலக்கு கோரிக்கை
நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T20:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய கப்பல் விபத்தில் 129 பேரைக் காணவில்லை - தேடுதல் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/129-missing-in-indonesian-ship-accident-1789410705"></link>
            <id>https://tamilwin.com/article/129-missing-in-indonesian-ship-accident-1789410705</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த கப்பலொன்று சீரற்ற
வானிலை காரணமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 129 பேர் காணாமல்போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த கப்பலொன்று சீரற்ற
வானிலை காரணமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 129 பேர் காணாமல்போயுள்ளதாக
அந்நாட்டு தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
</p><p>
சுராபாயா நகரிலிருந்து போர்னியோ தீவின் பஞ்சார்மாசின் துறைமுக நகரை நோக்கிப்
பயணித்த 'வர்ஜோ ட்ரான்ஸ்போர்ட் 8' (Virgo Transport 8) என்ற கப்பலே இவ்வாறு
விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><h2>மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில்</h2><p>
இதுவரை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கைகளின் போது 108 பேர் பத்திரமாக
மீட்கப்பட்டுள்ளதுடன், ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/090071a2-2da1-4492-aa05-104594ab84bb/26-6aa847bd08a04.webp' /></p><p>
காணாமல்போனவர்களைத் தேடும் பணிகளில் 600இற்கும் மேற்பட்ட மீட்புப்
பணியாளர்களும் 12 கப்பல்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>

இருப்பினும், அப்பகுதியில் நிலவும் பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் அலைகள்
மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும்
சவால்கள் நிலவுவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க கனடா பிரதமர் மார்க் கார்னி தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mark-carney-effort-to-attract-global-investors-1789408257"></link>
            <id>https://tamilwin.com/article/mark-carney-effort-to-attract-global-investors-1789408257</id>
            <summary type="text">நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க்
கார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க்
கார்னி டொரான்டோவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
</p><p>
சுமார் 160 க்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்களுக்காக 1 டிரில்லியன் கனடிய
டொலர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் திரட்டுவதை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதில் பிளக்ரொக் தலைமை நிர்வாகி லாரி ஃபிங்க் மற்றும் பிளக்ஸ்டோன் தலைவர் ஜோன்
கிரே உள்ளிட்ட உலகின் முன்னணி நிதி நிறுவனங்களின் தலைவர்கள் பலர்
கலந்து கொண்டுள்ளனர்.</p><h2>வர்த்தக உறவு</h2><p>
</p><p>
சுரங்கம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய
துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதையே கனடா முதன்மையாக நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அல்பர்ட்டா மற்றும் நியூ பிரன்சுவிக் பகுதிகளில் தரவு மையங்கள்,
ஆல்பர்ட்டாவின் ஹைட்ரஜன் திட்டங்கள் மற்றும் கல்கரிக்கும் எட்மண்டனுக்கும்
இடையிலான அதிவேக போக்குவரத்துத் திட்டம் போன்றவை இம்மாநாட்டில் சர்வதேச
முதலீட்டாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1349d293-b5dc-4a33-9b52-d055079278b3/26-6aa8383fd6a6c.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை
ஈடுசெய்யவும், உலகளாவிய முதலீடுகளை அதிகரிக்கவும் மத்திய கிழக்கு, ஆசியா
மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்த கனடிய அரசாங்கம்
நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>
எனினும், இம்மாநாட்டின் மூலம் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும்,
மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் வரை
ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் கைது தாமதம் ஏன்..! 80 இலட்சம் ஊழல் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381"></link>
            <id>https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381</id>
            <summary type="text">தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள் விவகாரத்திலே பிள்ளையானை மட்டும் ஏன் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இவர்கள் ஏன் பிள்ளையானின் தலைவனான கருணாவை கைது செய்யவில்லை. அதாவது தற்பேோது எடுபிடிகளையும் அடியாட்களையும் தான் கைது செய்கின்றார்கள்.</p><p>

யாழ்ப்பாணத்தில் பல கடத்தல்களையும் கொலையையும் செய்த டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zJao2wvCNU4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி ராஜபக்ச பொய் சொல்லி பெற்ற 1 கோடி! நாமலுக்கு ஏற்படவுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-admit-hospital-cid-namal-1789406625"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-admit-hospital-cid-namal-1789406625</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வைத்தியசாலைக்கு சென்றாரா என்கின்ற கேள்வி எழுகின்றது.</p><p>கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>இந்த விசாரணை&nbsp;ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தரப்பினரை மையப்படுத்தியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p>மேலும்,&nbsp;CT ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக&nbsp;தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து பெறப்பட்ட ஒருகோடி ரூபாய் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9Poe2i6CulQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T17:48:36+00:00</updated>
        </entry>
    </feed>
