<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-16T07:17:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவினால் ஓரங்கட்டப்பட்ட முக்கியஸ்தர்! பதவியை துறந்த பின்னர் கிடைத்த பெரிய வாய்ப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prominent-figures-sidelined-by-gotabaya-1786854568"></link>
            <id>https://tamilwin.com/article/prominent-figures-sidelined-by-gotabaya-1786854568</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினேன் என்று அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தனியார்&nbsp; ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்து&nbsp; கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் என்ற பதவியை வைத்துக் கொண்டு நான் ஒருபோதும் அரசியல் செய்ததில்லை. இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்கு அறிவார்.&nbsp;</p><h2>அமெரிக்கத் தூதுவர் பதவி&nbsp;</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வெறும் பின்வரிசை உறுப்பினராகவே நான் இருந்தேன். எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை.&nbsp;</p><p>அந்த&nbsp; ஆட்சியில் கடும் அதிருப்தியடைந்ததாலேயே நானாக சுய விருப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து அரசியலில் இருந்து வெளியேறினேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43f746e7-5c3b-4a05-835f-6899a47bbdff/26-6a814bb66e615.webp' /></p><p> </p><p>இதனையடுத்தே அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டேன். தூதுவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நான் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை.&nbsp;&nbsp;</p><p>தூதுவராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து பதவி விலகும் வரை இலங்கைக்கு பயன்பெறும் வகையில் செயற்பட்டேன். அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு பல ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.&nbsp;</p><p>தூதுவராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் நாட்டுக்கு என்னால் முடிந்த சேவைகளை ஆற்றியுள்ளேன். தூதுவராக நான் பணியாற்றியதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T06:53:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி பிரதேச சபை உப தவிசாளர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-arrested-with-drugs-in-mullaitivu-1786861158"></link>
            <id>https://tamilwin.com/article/five-arrested-with-drugs-in-mullaitivu-1786861158</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயின் போதைப்பொருளுடன் கொக்கிளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயின் போதைப்பொருளுடன் கொக்கிளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை நேற்று(15.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>

ஐவர் கைது</h2><p>
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில்
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கொக்குளாய் பொலிஸார் சோதனை
நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a33edccd-ab34-4170-ba03-fd73c405753e/26-6a815846db825.webp' /></p><p>
</p><p>
இதன்போது, 2 கிராம் அளவிலான ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களும் சான்றுப் பொருட்களுடன் கொக்குளாய் பொலிஸ்
நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் பொலிஸார்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின் வோனஸ் ஆசனத்தின் ஊடாக சபைக்கு வருகைதந்து உபதவிசாளராக
தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T06:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிகுறிகள் தொடர்ந்தால் அவதானமாக இருக்கவும்..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengu-fever-urgent-warrning-srilanka-people-1786857912"></link>
            <id>https://tamilwin.com/article/dengu-fever-urgent-warrning-srilanka-people-1786857912</id>
            <summary type="text">நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதாக&amp;nbsp;தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதாக&nbsp;தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> அத்துடன் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்ந்துள்ளது.</p><p>இதேவேளை, தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

&nbsp;</p><h2>டெங்கு அபாயம் கொண்ட மாகாணம் அடையாளம்</h2><p>இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள&nbsp; டெங்கு நோயாளர்களில் 52.96%&nbsp; என்ற வகையில் 48,725 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக இது மாறியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc0b848f-965a-46fc-a824-d0775f03ac0b/26-6a81522abf6e0.webp' /></p><p>இரண்டாவதாக தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 13,533 ஆகப் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதற்கு மேலதிகமாக மத்திய மாகாணத்தில் 8,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,558 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p>கொழும்பு மாவட்டத்தில் 18,245 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,613 நோயாளர்களும், மாத்தறையில் 6,036 நோயாளர்களும், களுத்துறையில் 5,951 நோயாளர்களும், காலியில் 5,039 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,935 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
இவ்வருடத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,968 ஆகும்.
</p><p>இதேவேளை, காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் தகுதியுள்ள வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T06:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பொலித்தீனுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/it-has-reduced-polythene-usage-by-10-million-units-1786858571"></link>
            <id>https://tamilwin.com/article/it-has-reduced-polythene-usage-by-10-million-units-1786858571</id>
            <summary type="text">இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு குறைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. 

அதன்படி நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு குறைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. </p><p>

அதன்படி நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டு பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.</p><h2>மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம்</h2><p> </p><p>

இந்த சந்திப்பின் போதே நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75792735-dea5-440f-a056-a8ff29247fd9/26-6a8150faa5bfa.webp' /></p><p>
</p><p>
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

சுற்றாடல் தாக்கத்தை மேலும் குறைக்கும் நோக்கில், பொலித்தீனுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

அத்துடன், உணவு மற்றும் பானங்களின் தரநிலைகள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அதிகாரிகள் விழிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T05:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-import-costs-increase-srilanka-1786855287"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-import-costs-increase-srilanka-1786855287</id>
            <summary type="text">இந்த ஆண்டின் (2026) முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்), எரிபொருள் இறக்குமதி செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்து 3,168.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் (2026) முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்), எரிபொருள் இறக்குமதி செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்து 3,168.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
</p><p>
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலக்கரி இறக்குமதி</h2><p>
</p><p>
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 1,995.7 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d1c783-c0f7-4dca-8720-81710fc10897/26-6a81488bbd881.webp' /></p><p>

இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.</p><p>

இந்த காலகட்டத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவினம் 7.5 சதவீதம் அதிகரித்து 479.5 மில்லியன் அமெரிக்க டொலராகவும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிச் செலவினம் 78.7 சதவீதம் அதிகரித்து 2538.6 மில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்ந்துள்ளது.
</p><p>
நிலக்கரி இறக்குமதிச் செலவினமும் 16.1 சதவீதம் அதிகரித்து 150.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T05:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் திடீரென வழிமறிக்கப்பட்ட வாகனம்! வசமாக சிக்கிய ஐவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-arrested-with-heroin-in-mullaitivu-1786856185"></link>
            <id>https://tamilwin.com/article/5-arrested-with-heroin-in-mullaitivu-1786856185</id>
            <summary type="text">முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று (15.08.2026) மாலை பதிவாகியுள்ளது. 

சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

குறித்த சம்பவம் நேற்று (15.08.2026) மாலை பதிவாகியுள்ளது. </p><p>

சந்தேகநபர்கள் செம்மலை - கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த வேளை பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது சிக்கியுள்ளனர்.</p><h2>ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றல்</h2><p> 

இதன்போது அவர்களிடமிருந்து 2 கிராம் அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5c3c37-4f26-49fc-93ed-f18969627dbc/26-6a8146b3c37c4.webp' /></p><p>

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட சான்று பொருளும் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T05:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pafferal-warns-govt-1786856544"></link>
            <id>https://tamilwin.com/article/pafferal-warns-govt-1786856544</id>
            <summary type="text">அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்படுகின்றது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் பேரவையின் (பெபரல்) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்படுகின்றது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் பேரவையின் (பெபரல்) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.</p><p>
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பாக அரசாங்கம் ஒரு தீர்க்கமான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பழைய விகிதாசார முறையின் கீழ் இத்தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் அதைத் தவிர்த்து செயல்படுவது ஜனநாயக விரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa785904-5f48-4b7a-9c47-27a11b79bc6e/26-6a814462338f9.webp' /></p><p>
</p><p>எதிர்க்கட்சியில் இருந்தபோது தேர்தல்களை கோரி தீவிரமாக போராடிய அரசாங்கம், தனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவதே மக்களின் வாக்குரிமைக்கு அளிக்கும் மரியாதையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தற்போதைய மாகாண சபை முறைமை பொருத்தமற்றது என கருதினால், அரசியலமைப்புத் திருத்தம் மூலம் அதனை ரத்து செய்ய வேண்டும்; இல்லையெனில், தற்போதைய நடைமுறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கத்திற்கு விருப்பமிருப்பின், மிகக் குறைந்த காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தேர்தலை நடத்துவதற்காக இரண்டு தனிநபர் நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிவுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. </p><p>
எனினும், இத்தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அழுத்தங்களை வழங்க வேண்டும்.
தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் ஜனநாயகப் பண்புகளுடன் நடந்துகொள்வதே மிகவும் முக்கியமானதாகும் என ரோஹண ஹெட்டியாரச்சித் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T05:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி - மற்றொருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-for-a-swim-in-the-ma-oya-1786854323"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-for-a-swim-in-the-ma-oya-1786854323</id>
            <summary type="text">மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.
</p><p>
 

நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.</p><h2>&nbsp;வைத்தியசாலையில் அனுமதி</h2><p>அவர்களில் இருவரை பிரதேசவாசிகள் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba5c3eb8-ce1c-4f35-bfdc-9b7df90ee919/26-6a813e628a1ba.webp' /></p><p>
</p><p>
 

இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய மீரிகம பகுதியை சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>நீரில் மூழ்கி காணாமல்போன மற்றைய நபரை தேடும் பணியில் மீரிகம பொலிஸார், பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T04:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோவால் இலங்கை எதிர்கொள்ளப்போகும் தாக்கம்! அவசரமாக அரசாங்கம் தயாரிக்கும் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-ni-o-impact-plan-to-prevent-food-shortages-1786851915"></link>
            <id>https://tamilwin.com/article/el-ni-o-impact-plan-to-prevent-food-shortages-1786851915</id>
            <summary type="text">இலங்கையில் எல்நினோ வானிலையால் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அதன்படி எதிர்காலத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல்நினோ வானிலையால் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படி எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பை பேணுவதற்கும் உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கும் விவசாய அமைச்சு குறித்த திட்டத்தைத் தயாரித்துள்ளது.</p><p>
இதற்காக ஒரு சாகுபடித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.</p><h2>சிறப்பு கவனம்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நீர் மேலாண்மை மற்றும் நீர் வளங்களின் நீடித்த பயன்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>

நீரைத் திறம்படப் பயன்படுத்துவது மற்றும் வீணாவதைத் தடுப்பது குறித்து விவசாயிகளுக்குக் கல்வி புகட்டுவதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/335f54a4-448c-4508-a9b0-fa647d520976/26-6a813b0e30090.webp' /></p><p>இதேவேளை இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பயிர்ச் சேதங்கள்</h2><p> இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.
</p><p>
 

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T04:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்ய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-npp-govt-1786852104"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-npp-govt-1786852104</id>
            <summary type="text">உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
</p><p>இதற்கமைய, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியின் கூட்டணிக் கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இந்த மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.</p><h2>எதிர்க்கட்சிகளின் தீர்மானம்&nbsp;</h2><p>
இவ்விடயத்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bdea788-8474-45e2-8770-12e30ff05ed6/26-6a813309e0366.webp' /></p><p>
</p><p>இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக 6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்ப ஒன்றை அமைத்துள்ளன.</p><p>
இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்த இக்கட்சியினர், இது குறித்து அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
</p><p>மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பதற்கு ஆதரவளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுதல் ஆகிய 3 பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T03:49:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து சென்றவர் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181"></link>
            <id>https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181</id>
            <summary type="text">இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். 

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான நபரே இவ்வாறு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.</p><p> </p><h2><b>குடிவரவு&nbsp;சோதனை</b></h2><p>விமானத்தில் இருந்து இறங்கியவர் குடிவரவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளை முடித்துவிட்டு, பிராட்வே செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்திற்கு சென்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be94a1e-4545-4af1-847b-5edf6154e5b9/26-6a8124e84e5a8.webp' /></p><p>அங்குள்ள டிக்கெட் கவுண்டர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகளும், மெட்ரோ நிலைய ஊழியர்களும் உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் முதலுதவி வழங்கிய போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p>சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். </p><p>இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T03:47:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரமாக இடமாற்றப்பட்ட இஷாரா செவ்வந்தி! தொடர்பை பேண ஆர்வமாகும் பெண் கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sewwandi-arrest-investigation-prison-1786849374"></link>
            <id>https://tamilwin.com/article/sewwandi-arrest-investigation-prison-1786849374</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் 
சூட்கேஸ் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் 
சூட்கேஸ் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>
பெண்களை சிறைக்கு அழைத்துச்செல்லும்போது அவர்களுக்கு கைவிலங்கு இடப்படுவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><h2>இஷாரா செவ்வந்திக்கான சலுகை&nbsp;</h2><p>

இதேவேளை, அவர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது சட்டவிரோதமான எதுவும் நடக்கவில்லை என்பதால் எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcce3955-be7f-429b-837c-c1ac6767f577/26-6a813066b4c3e.webp' /></p><p>அவர் தற்போது அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறையில் ஏனைய சந்தேகநபர்களுடன் தங்கியிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதற்கிடையில், அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறையில் உள்ள பல கைதிகள் இஷாரா செவ்வந்தியை பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>
இருப்பினும், சிறைச்சாலை அதிகாரிகள் இஷாரா செவ்வந்தியை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதனால் அவருடன் அதிக தொடர்பைப் பேண முடியாது என்றும் அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T03:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை நாசப்படுத்திய ரணில் - மைத்திரி: பல தகவல்களை வெளியிட்ட முக்கிய புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asp-liyanage-ranil-wickremesinghe-sirisena-1786842167"></link>
            <id>https://tamilwin.com/article/asp-liyanage-ranil-wickremesinghe-sirisena-1786842167</id>
            <summary type="text">மைத்திரி - ரணி ஆட்சியில் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் அவர்களின் குடும்ப சண்டையால் இழக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கட்சியின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மைத்திரி - ரணி ஆட்சியில் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் அவர்களின் குடும்ப சண்டையால் இழக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று (15.08.2026) தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>நான் கட்டாருக்கான இலங்கை தூதுவராக இருந்தபோது, கட்டார் மன்னரிடம் ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்தது எனக்கு நினைவிருக்கிறது. "மன்னரே, நமது நாட்டிற்கு வந்து நமது எண்ணெய் வளங்களை ஆய்வு செய்யுங்கள்" என்று கோரினேன். </p><p>அன்றைய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தனர். இவர்கள் இருவருக்குள்ளும் மோதல்கள் நிலவியது. ஒருவர் எடுக்கும் தீர்மானத்தை மற்றவர் எதிர்த்தனர்.
</p><h2>
</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைவிட்டுப்போன திட்டங்கள்</span></p><p>மேலும் கட்டார் அரசு இலங்கையில் "கட்டார் சிட்டி" என்ற மிகப்பெரிய திட்டத்தைத் தொடங்க 
முயற்சித்தது. ஆனால், ரணில் - மைத்திரி மோதலால் அதுவும் கைநழுவிப் போனது. அது மட்டுமல்ல அன்றைய மத்திய மாகாணத்தின் பெண் ஆளுநரை நான் கட்டார் மன்னரிடம் அழைத்துச் சென்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10dbc6f2-74d4-45ca-8051-bbc3ce3c6b89/26-6a810c3958f24.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>நுவரெலியாவில் ஒரு அழகிய 'கேபிள் கார்' (Cable Car) திட்டத்தைச் செயல்படுத்துமாறு அவர் யோசனை தெரிவித்தார். ஆனால், இவர்கள் இருவரின் சண்டையினால் அதுவும் நடக்காமல் போனது.இதனால் நாடு மென்மேலும் பாதாளத்தை நோக்கி நகர்ந்தது.</p><p>எனவே, தற்போதைய ஜனாதிபதி உறுதியான, தனித்து தீர்மானம் எடுக்கக்கூடிய ஒரு நபர் என நான் நினைக்கிறேன்.
இன்று எதிர்க்கட்சி ஒன்றில்லை.</p><p>நமக்கு சுதந்திரம் கிடைத்து சுமார் 75 ஆண்டுகள் ஆகின்றன. பல ஜனாதிபதிகள் இந்நாட்டை ஆட்சி செய்தார்கள், ஆனால் நாளுக்கு நாள் நாட்டை நெருக்கடிக்கே தள்ளினார்கள்.</p><h2>நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு</h2><p>
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போன்ற ஒரு தலைவர் 30 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தோன்றியிருந்தால், இன்று நாமும் சிங்கப்பூரைப் போன்ற ஒரு நாடாக மாறியிருப்போம். </p><p>அதனால் நான் நினைக்கிறேன், இவர் மிகவும் நன்றாக அரசு நிர்வாகத்தைச் செய்கிறார். இன்று ஊழல், மோசடி இல்லை. மாயாஜாலக்காரரைப் போல திடீரென இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. </p><p>நிச்சயமாக இந்த அரசு தான் இந்ம நாட்டை இன்னும் 10 ஆண்டுகள் வரை ஆட்சி செய்யும்.
நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பை எடுத்துக் கொண்டால் உதாரணமாக இங்கிலாந்தில் 75 வயது வரை நீதிபதிகளுக்கு பணியாற்ற முடியும். </p><p>அமெரிக்காவில் வயதாகும் வரை செய்ய முடியுமென்றால், ஏன் நம் நாட்டில் அப்படி செய்வதில் என்ன தவறு உள்ளது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T02:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் சுற்றித்திரியும் ஆபத்தான நபர்கள் - பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாமென எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dangerous-persons-roaming-the-country-1786846847"></link>
            <id>https://tamilwin.com/article/dangerous-persons-roaming-the-country-1786846847</id>
            <summary type="text">2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.</p><p> சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை இதனை அறிவித்துள்ளது.</p><h2>பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்</h2><p>இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அலுவலகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65145ea2-fed8-44e6-b2f0-43f606b7b561/26-6a811f5225b87.webp' /></p><p>கடந்த 6 ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிவதற்குள் சட்டவிரோதமாக சிறைகளில் இருந்து தப்பிச் சென்ற அல்லது தலைமறைவான கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை 1, 181 ஆக காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 709 பேர் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டில் மட்டும் 825 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், மெகசின் மற்றும் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வசதிகளின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அதிகாரிகளும் கைதிகளும் கடும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T02:24:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவீதியில் திடீரென பேருந்தை மறித்து சாரதியை வாளால் தாக்க முயற்சித்த பெண் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-attack-the-bus-driver-with-sword-1786844269"></link>
            <id>https://tamilwin.com/article/woman-attack-the-bus-driver-with-sword-1786844269</id>
            <summary type="text">திவுலப்பிட்டிய நகரில் பேருந்து சாரதி ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திவுலப்பிட்டிய நகரில் பேருந்து சாரதி ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>திவுலப்பிட்டிய நகரில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றிற்கு பின்னால் வந்த கார் ஒன்று, திடீரென பேருந்து மறித்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்து இறங்கிய பெண் ஒருவரும் இரு ஆண்களும் வாளுடன் பேருந்து சாரதியை தாக்க முயன்றுள்ளனர்.</p><h2>விளக்கமறியல் உத்தரவு</h2><p>இச்சம்பவத்தை பேருந்திலிருந்த பயணி ஒருவர் முழுமையாகத் தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்ததுடன், அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07102a68-b28c-4d08-a7b6-84d2a07369cb/26-6a81178a64b48.webp' /></p><p>இந்த காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த திவுலப்பிட்டிய பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (14) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 18 வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>

</p>]]></content>
            <updated>2026-08-16T01:51:11+00:00</updated>
        </entry>
    </feed>
