<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-22T02:36:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் மகன்! பின்னணியில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-s-son-arrested-for-cheating-foreigner-1784685252"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-s-son-arrested-for-cheating-foreigner-1784685252</id>
            <summary type="text">கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து, கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்டதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசாரணை அதிகாரிகளின் தகவல்களுக்கமைய, இந்தக் கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனே திட்டமிட்டு முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
 மூவர் கைது</b></h2><p>இதன்போது கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் ஒருவர் பிரபல முன்னாள் வர்த்தகர் ஒருவரின் பேரன் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நான்கு சந்தேகநபர்களில் மூவர் முதலில் கைது செய்யப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a30a56-ce22-43a2-9290-3fc4cfc91c12/26-6a6027c211c20.webp' /></p><p>அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
அதற்கமைய, குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் அவர் சட்டத்தரணிகள் ஊடாக நேற்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.</p><p>

2 கோடி ரூபாய் இலங்கைப் பணத்திற்கு அமெரிக்க டொலர்களை மாற்றித் தருவதாகக் கூறி, இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

அதற்கமைய, குறித்த சீன நாட்டவரை கொள்ளுப்பிட்டி பகுதிக்கு வரவழைத்தவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><h3><b>
விசாரணை அதிகாரிகள்</b></h3><p>அதன் பின்னர் ஏனைய மூன்று பேரும் கைவிலங்குடன் சென்று, தாங்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறிக்கொண்டு, சீன நாட்டவரிடம் இருந்த 2 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd3b7004-6014-4b50-9757-b19fccc81a6e/26-6a6027c2cda22.webp' /></p><p>இது தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செயற்பட்ட நிலையப் பொறுப்பதிகாரி மூவரை முதலில் கைது செய்தனர்.</p><p> முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-22T02:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lady-ridgeway-hospital-emergency-instructions-1784686333"></link>
            <id>https://tamilwin.com/article/lady-ridgeway-hospital-emergency-instructions-1784686333</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு வைத்தியசாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினால் அவசர அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
தற்போது சிறுவர் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அவசர அறிவித்தல்</h2><p>

இந்த சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ffe6756-3b79-49d7-b612-29c2246d39ee/26-6a6026ffa566e.webp' /></p><p>
</p><p>
அதன்படி, சிகிச்சை அல்லது மருத்துவ பணிகளுக்காக தங்கள் பிள்ளைகளை வைத்தியசாலைக்கு அழைத்து வரும்போது பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வருமாறு வைத்தியசாலை நிர்வாகம் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>முக்கிய ஆவணங்கள்</h2><p><b>

தனிநபர் சுகாதார எண் (PHN) அல்லது பார்கோடு அட்டை
</b></p><p><b>குழந்தை சுகாதார மேம்பாட்டுக் குறிப்பேடு அல்லது எடை குறிப்பேடு
</b></p><p><b>மருந்து அல்லது உணவு ஒவ்வாமை பதிவேடுகள்</b></p><p><b>
மருத்துவக் குறிப்பேடுகள்
</b></p><p><b>வைத்தியசாலை வெளியேற்ற அட்டைகள் அல்லது நோய் கண்டறிதல் அட்டைகள் </b>என்பனவற்றினை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலதிக தகவல்களுக்கு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்தை 011 2693711 (307) என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T02:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் மகன் - சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-ministers-son-arrested-1784682951"></link>
            <id>https://tamilwin.com/article/ex-ministers-son-arrested-1784682951</id>
            <summary type="text">ஹபரணை - அலுத்ஓய பகுதிகளில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹபரணை - அலுத்ஓய பகுதிகளில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கடந்த 20ஆம் திகதி இரவு வேளையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், தற்போது உயிரிழந்த முன்னாள் புத்தசாசன மற்றும் காணி அமைச்சரொருவரின் 50 வயதுடைய மகன் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><h2><b>
அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி</b></h2><p>ஏனைய சந்தேகநபர்கள் 25, 26, 31 மற்றும் 44 வயதுடைய கந்தளாய், அலுத்ஓய மற்றும் இப்படுகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e11b620-54f9-4130-9820-f5355704046e/26-6a601bc66bb2f.webp' /></p><p>ஹபரணை - திருகோணமலை வீதியில், யகா வங்குவ அருகில் அமைந்துள்ள காணி ஒன்றிலேயே இந்த அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்ற சந்தர்ப்பத்திலும் சந்தேகநபர்கள் 8 அடிகள் வரை ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். </p><p>

சந்தேகநபர்களுடன் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டிகள், இரும்புத் கம்பிகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பல வழக்குப் பொருட்களும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:54:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[2016இல் சுரேஷ் சலே சமர்ப்பித்த அறிக்கை.. உயர் அதிகாரி ஒருவரின் செயலால் மறைக்கப்பட்ட உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-easter-attack-2016-police-report-1784682787"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-easter-attack-2016-police-report-1784682787</id>
            <summary type="text">2016இல், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் நடவடிக்கைகள் குறித்து&amp;nbsp;சுரேஷ் சலே முன்வைத்த அறிக்கையை உயர் அதிகாரி ஒருவர் நிராகரித்ததாக நீதிமன்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2016இல், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் நடவடிக்கைகள் குறித்து&nbsp;சுரேஷ் சலே முன்வைத்த அறிக்கையை உயர் அதிகாரி ஒருவர் நிராகரித்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதை எதிர்த்து அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, "சுரேஷ் சலே, 2016 ஆம் ஆண்டில் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்தபோது, இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கை பரப்பப்படும் விதம் குறித்து கவனம் செலுத்தினார்.</p><p></p><h2>சிரிய விமானத் தாக்குதல்</h2><p>அந்தச் சித்தாந்தங்கள் நாட்டில் எவ்வாறு பரவுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட, ஐ.எஸ் அமைப்போடு தொடர்புடைய இலங்கை நபர் ஒருவர் குறித்து இராணுவப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7479d927-1de6-428e-891f-1cb9c8cde8fa/26-6a601cdbb4fc4.webp' /></p><p>பின்னர், இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சுரேஷ் சலே தயாரித்தார். </p><p>அதற்காக ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். இவை அனைத்தையும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சிவிடம் அவர் சமர்ப்பித்தார்.
</p><p>
இருப்பினும், இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பாக சுரேஷ் சலே செய்த விளக்கமளிப்புகளுக்குப் பாதுகாப்புச் சபையில் உள்ள உயர் மட்ட நபர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.</p><p></p><h2>கிறிஸ்தவ தாய்..&nbsp;</h2><p> </p><p>இதனை அப்போதைய இராணுவத் தளபதி ஜகத் கிரிஷாந்த டி சில்வா, ஜனக் டி சில்வா ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800e1a21-6618-42c2-b80e-a688bf883d5c/26-6a601cdcc5926.webp' /></p><p> இதன் காரணமாக, இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து சுரேஷ் சலே பாதுகாப்புச் சபையில் முன்வைத்த தகவல்களில் சில குழப்பங்கள்/திரிபுகள் ஏற்பட்டதாக அப்போதைய இராணுவத் தளபதி ஆணைக்குழுவின் முன் தெரிவித்திருந்தார்.
</p><p>
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு மலேசியாவிற்கு அனுப்பப்பட்டார். அது அரசியல் காரணங்களுக்காகவே நடந்தது. </p><p>அவ்வாறு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்பட்ட ஒருவரை, ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என்று எவ்வாறு குறிப்பிட முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>குறித்த உயர் அதிகாரி தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படாத நிலையில்,&nbsp;சுரேஷ் சலேவின் தாயார் ஒரு கிறிஸ்தவப் பெண்மணி எனவும், ஈஸ்டர் தாக்குதல் நடந்த அன்று அவரும் தேவாலயத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் ஏற்பட்ட பரபரப்பு.. தென்னிலங்கையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-devinuwara-gandhara-this-morning-1784681548"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-devinuwara-gandhara-this-morning-1784681548</id>
            <summary type="text">தேவினுவர - கந்தார பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவினுவர - கந்தார பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இன்று அதிகாலை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p>ஒரு மோட்டார் வாகனத்தில் வந்த ஒரு கும்பல், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03223118-53f0-43ca-89a9-825e7bc39c7f/26-6a6015e27bd98.webp' /></p><p>

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
கந்தார பொலிஸ் பிரிவு, எடண்டா வீதி, தேவினுவராவில் உள்ள கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த ஒருவரின் வீட்டில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு வாரத்திற்கு மாத்திரமே எம்பி பதவி! சபையில் அர்ச்சுனா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archchuna-may-leave-parliament-within-weeks-1784680535"></link>
            <id>https://tamilwin.com/article/archchuna-may-leave-parliament-within-weeks-1784680535</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் அதிக காலம் சட்டமன்றத்தில் நீடிக்கப் போவதில்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் அதிக காலம் சட்டமன்றத்தில் நீடிக்கப் போவதில்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியேறிவிடக்கூடும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “நான் இன்னும் அதிக காலம் இந்த நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டேன். </p><p>நான் உங்களை நீண்ட காலத்திற்குத் தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நான் இங்கு இருப்பேன்” என்று கூறினார்.</p><p>
மாவட்ட ஒருங்கமைப்புக் குழு (DCC) கூட்டத்தின் போது பொதுமக்களின் கவலைகளை எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>DCC&nbsp;கூட்ட சலசலப்பு&nbsp;</h2><p> </p><p>மேலும், வடக்கில் முன்வைக்கப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகளையும் ஆவண ஆதாரங்களையும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை ஆணைக்குழுவிடமும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடமும் சமர்ப்பித்ததாகவும், ஆனால் எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a53a054-ed9d-4f84-bb4a-f09f815b48c3/26-6a60133e513eb.webp' /></p><p>
</p><p>
அத்துடன், யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இப்பிரச்சினையை எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>

தன்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்கக் கோரும் சட்ட நடவடிக்கையானது, வடக்கிலிருந்து வரும் சுயேட்சைப் பிரதிநிதிகள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற எண்ணத்தை சில தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்று அர்ச்சுனா மேலும் கூறினார்.</p><p>மேலும், இந்தக் கவலைகளைக் களைந்து, சுயேட்சைப் பிரதிநிதிகளுக்குச் சமமான உரிமைகளை உறுதி செய்யுமாறு அவர் அரசை வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motion-against-justice-minister-nalinda-jayatissa-1784678734"></link>
            <id>https://tamilwin.com/article/motion-against-justice-minister-nalinda-jayatissa-1784678734</id>
            <summary type="text">நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று
அமைச்சரவைப் பேச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.</p><p></p><h2>நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும்
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவும், அவர்
பதவியிலிருந்து விலகவும் எதிர்க்கட்சிகள் முயன்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8baae89c-c827-4b29-a4ec-d3d1d1ab7e5f/26-6a600d1a81698.webp' /></p><p> எனினும், அந்த முயற்சி
இறுதி வரை வெற்றி பெறவில்லை.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக இருந்த குமார ஜயக்கொடிக்கு எதிராகவும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர். </p><p>எனினும், அரசு எடுத்த
தீர்மானத்தின்படி, சுயாதீனமான விசாரணைக்கு வழிவகுக்கும் வகையிலேயே அவர்
அவராகவே பதவி விலகினாரே தவிர, எதிர்க்கட்சிகளின் பிரேரணையால் அரசுக்கு எந்தப்
பாதிப்பும் ஏற்படவில்லை.
</p><p>
தற்போது நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்
பிரேரணையும் முந்தைய முயற்சிகளைப் போன்றதுதான். இதனால் அரசுக்கு எந்தவித
தாக்கமும் ஏற்படப்போவதில்லை"என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/probe-against-thilanga-and-shammi-1784679709"></link>
            <id>https://tamilwin.com/article/probe-against-thilanga-and-shammi-1784679709</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் பல்வேறு அக்கிரமங்கள் தொடர்பாக இலஞ்ச, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் பல்வேறு அக்கிரமங்கள் தொடர்பாக இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணை, சமூக ஆர்வலரான தனீஷ் அலி சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு அமையவே தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விசாரணைக்கு அமைவாக, 2023 செப்டம்பர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி விரிவான வாக்குமூலம் அளிப்பதற்காக, தனீஷ் அலியை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி உரிய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் திலங்க சுமதிபாலவின் தலைமையிலான காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் இந்த முறைப்பாட்டின் மூலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aecda31-859f-4769-9c2c-63ef41e5fee5/26-6a600d1eb4d4e.webp' /></p><p>
குறிப்பாக, அப்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் சட்டவிரோத தொடர்புகள், போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் தனீஷ் அலி ஆணைக்குழு முன்னிலையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T00:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரினி அமரசூரியவை இரகசியமாக கண்காணித்த மூவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-arrested-allegedly-spying-pm-through-binoculars-1784676171"></link>
            <id>https://tamilwin.com/article/3-arrested-allegedly-spying-pm-through-binoculars-1784676171</id>
            <summary type="text">பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாகக் கூறப்படும் மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாகக் கூறப்படும் மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று சென்றிருந்தபோது, ​​இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சந்தேக நபர்களான மூவரையும் கொம்பனித் தெரு பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (21) முன்னிலைப்படுத்தினர்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை..&nbsp;</h2><p>

அப்போது சந்தேக நபர்களான மூவரையும் இன்று (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டதோடு, இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாளை சமர்ப்பிக்குமாறு கொம்பனி தெரு பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b1b0b18-9295-4e9c-bfd4-842bcf01d072/26-6a60024ebc1b3.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர்களான மூவரில் இருவர் சகோதரர்கள் என்றும், அவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர்கள் மூவரும் கொழும்புப் பகுதியில் பணிபுரிவதாகக் கூறியிருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித் தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சிறைக்கூடத்தை காணொளி எடுத்த சந்தேக நபர்.. நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-filmed-police-cell-escapes-court-order-1784674491"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-filmed-police-cell-escapes-court-order-1784674491</id>
            <summary type="text">கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த
சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் காணொளி எடுத்த 24 வயதுடைய இளைஞரைச்
சரீரப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த
சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் காணொளி எடுத்த 24 வயதுடைய இளைஞரைச்
சரீரப் பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர் பகுதியைச் சேர்ந்த இரு
தரப்பினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணைக்காக இரு
தரப்பினரும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
</p><p>இதன்போது இரு தரப்பினரும் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சமாதானமாகச் செல்ல
இணக்கம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தின் பல்வேறு குற்றத்தடுப்பு
பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம் முஸ்தபா கல்முனை
தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரியின் அலுவலக அறையினை நோக்கி
அழைத்துச் சென்றுள்ளார்.</p><p></p><h2>ஒத்திவைப்பு..</h2><p>
</p><p>

இவ்வாறு பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியினால் தலைமையக பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ்
நிலையத்திற்குள்ளேயே பொதுமக்களும் ஏனையோரும் வேடிக்கை பார்க்கும் வகையில் இரு
தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd1ffd1a-7414-4234-81bd-41fbe5f5199d/26-6a5ffc6622b52.webp' /></p><p>
</p><p>
இதனால் அதிர்ச்சியடைந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த
களுவாராய்ச்சி பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றத்திற்காக இரு
தரப்பினரையும் கைது செய்து, பொலிஸ் நிலையத்திலுள்ள இரு வேறு சிறைக்கூடுகளில்
அடைத்தார்.
</p><p>
இச்சம்பவத்தின் போது பொலிஸ் நிலையம் வந்திருந்த சந்தேக நபரான 24 வயதுடைய
இளைஞர் இச்சம்பவத்தில் கைதாகி சிறைக்கூடத்தில் இருந்தவர்களைத் தனது
கைத்தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார். </p><p>இதனை அவதானித்த பொலிஸார் அவரை சம்பவ
இடத்தில் கையும் மெய்யுமாகப் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திங்கட்கிழமை (20) கல்முனை நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார். </p><p>வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேகநபரைச்
சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் காணொளி எடுக்கப் பயன்படுத்தப்பட்ட
கைத்தொலைபேசியைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு
உத்தரவிட்டார்.

மேலும், வழக்கின் விசாரணைகளை மறுதவணைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T23:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! போராட்டத்திற்கு அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-call-for-protest-semmani-mass-grave-1784668014"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-call-for-protest-semmani-mass-grave-1784668014</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம்(22.7.2026) போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம்(22.7.2026) போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>வடக்கு
கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் நிறைவுற்று பல வருடங்களாகியும் நீதி தரப்படாதிருக்கின்ற வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கும், தற்போது 454 மனித எலும்புக்கூடுகள்
அகலப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழி விடயத்திற்கும் உடனடியாக சர்வதேச நீதி
விசாரணை வேண்டும். </p><p>தமிழ் இன அழிப்பின் சான்றாதாரமாக இருக்கின்ற இவ்விடயங்களை
மூடிமறைத்து நீர்த்துப்போகச்செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகள்
அதிருப்தியளிக்கின்றன.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கவனயீர்ப்பு போராட்டம்</span></p><p> </p><p>நீதி கோரி தொடர்ச்சியாகப் போராடிவரும் ஏமாற்றும் அரசின்
கபட நாடகங்களுக்கு சர்வதேச சமூகம் ஏமார்ந்து போகக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a6c4ec-de3a-44f3-a307-413bc6def9a5/26-6a5fe0948af8e.webp' /></p><p> </p><p>அந்த வகையில் இன்றையதினம் காலை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட
வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை
ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை
முன்னெடுக்கவுள்ளோம். </p><p>காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகும் இப்போரட்டத்தில் தமிழ்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக
பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றோம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T21:11:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிற்கு சிலை வேண்டும் - 2029இல் சிறையில் நாமல் ஜனாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-namal-rajapaksa-family-2029-election-1784662229"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-namal-rajapaksa-family-2029-election-1784662229</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகின்றது.&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகின்றது.&nbsp;</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல முக்கிய அதிகாரிகளின் மர்ம மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.&nbsp;</p><p>இது தொடர்பில் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினர் மீது சில தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இந்நிலையில், பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டிற்கு ஜனாதிபதி ஆவாரோ இல்லையோ, சிறைச்சாலைக்கு ஜனாதிபதி ஆவார் என விமர்சித்துள்ளார்.&nbsp;</p><p>இவை உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/T-2cqHMz4ss" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முன்னணி தொழிலதிபர் எப்படி வீழ்ந்தார்! லலித் கொத்தலாவலவின் அதிர்ச்சி கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-mahinda-lalith-kotelawala-1784666942"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-mahinda-lalith-kotelawala-1784666942</id>
            <summary type="text">இலங்கையின் முண்ணனி தொழிலதிபரான&amp;nbsp;லலித் கொத்தலாவவல மகிந்த ராஜபக்சவினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.மகிந்த ராஜபக்ச ஓமாகமவில் கட்டப்பட்ட விளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முண்ணனி தொழிலதிபரான&nbsp;லலித் கொத்தலாவவல மகிந்த ராஜபக்சவினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மகிந்த ராஜபக்ச ஓமாகமவில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை பார்வையிடுவதற்காக தன்னை உலங்குவானூர்தி யில் அழைத்து சென்றதாகவும் மைதானம், ஓட்டப்பந்தய தடம் அமைப்பதற்குமான 10 கோடி ரூபா பணத்தை தாம் அவர்களுக்கு கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.</p><p>இந்தநிலையிலே,&nbsp;லலித் கொத்தலாவவல செய்த உதவிக்காக அவரது பெயரை மைதானத்திற்கு சூட்டப்படும் என மகிந்த கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>பின்னர் மைதானம் திறக்கப்படும்போது தனது பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும்&nbsp; லலித் கொத்தலாவவல குறிப்பிடார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியுஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/O94aalPiYWc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:01:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் இரகசிய நகர்வு! பறிபோகும் மற்றுமொரு தமிழர் பாரம்பரிய சின்னம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanniya-hot-springs-trinco-tamils-1784654738"></link>
            <id>https://tamilwin.com/article/kanniya-hot-springs-trinco-tamils-1784654738</id>
            <summary type="text">திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் நாளை(22.7.2026) புத்த விகாரைக்கான அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் நாளை(22.7.2026) புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தகவல்&nbsp;வெளியாகியுள்ளது.</p><p>இந்தநிலையிலே, தமிழர்களின் தொன்மை வாய்ந்த பண்பாட்டு, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>அத்தோடு, குறித்த பகுதியிலே எந்தவிதமான கட்டுமானப்பணிகளும் செய்யக் கூடாது என திருகோணமலை நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p>இதனையடுத்து, தொால்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலே குறித்த இடத்திலே விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அத்தோடு, இந்த நிகழ்விற்கு அரச அதிகாரிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக தமிழர்களின் பாரம்பரியம், மரபு சார்ந்த இடங்கள், வரலாறு சார்ந்த இடங்கள் கையகப்படுத்தும் நிகழ்வு தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்சியாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.</p><p>எனவே இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன்,&nbsp;பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SAmU-uev_Fg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:57:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெற்ற சிறப்பு யோகாசனப் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-yoga-practic-reecha-integrated-farm-1784665552"></link>
            <id>https://tamilwin.com/article/special-yoga-practic-reecha-integrated-farm-1784665552</id>
            <summary type="text">றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊழியர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்தும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.பாஸ்கரன் கந்தையாவின் ஏற்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊழியர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்தும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.</p><p>பாஸ்கரன் கந்தையாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், 75க்கும் மேற்பட்டவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.</p><p></p><h2>யோகா பயிற்சிகள்..&nbsp;</h2><p> ஆரம்பத்தில் சில ஆசனங்கள் கடினமாக இருந்தபோதிலும், பயிற்சியின் முடிவில் உடல் நெகிழ்வுத்தன்மையையும் மன அமைதியையும் அடைந்ததாக ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36a80513-6353-4a34-99a3-dd447371147f/26-6a5fd7b853c48.webp' /></p><p>இதனை தொடர்ந்து, ஊழியர்களின் நலன் கருதி, பண்ணையில் தொடர்ச்சியாக யோகா பயிற்சிகளை நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
</p><p>அதேநேரம், ஊழியர்களின் ஆர்வத்தைக் கண்டு யோகா பயிற்றுவிப்பாளர் கலைஞர் குமாரு யோகேஸ்வரன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்; ஆரோக்கியமே நமது மிகப்பெரிய செல்வம்."

நமது அன்றாட பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அனைவரும் யோகாவைத் தொடர்ந்து செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம் என இதன்போது&nbsp; சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:37:02+00:00</updated>
        </entry>
    </feed>
