<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-12T16:22:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் இறுதிக்கட்டம்: நடுக்கத்தில் பிள்ளையான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-law-and-order-1786547574"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-law-and-order-1786547574</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் மிக முக்கியமான பிரதான விசாரணை நிறைவடைந்துள்ளது.நவுஃபர் மௌலவி உட்பட 24 எதிரிகளுக்கு எதிராகக் கொழும்பு மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் மிக முக்கியமான பிரதான விசாரணை நிறைவடைந்துள்ளது.</p><p>நவுஃபர் மௌலவி உட்பட 24 எதிரிகளுக்கு எதிராகக் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையான இருந்தார்கள் என்கின்ற அடிப்படையில் பிள்ளையான், சுரேஸ் சலே போன்றோர் விசாரிக்கப்படுகின்றனர்.அத்தோடு, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் தப்பித்துக் கொ்ணடு இருப்பதாக கூறப்படுகின்றது.</p><p>மேலும்,&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடைமுறைப்படுத்திய ஒரு இராணுவ அதிகாரி இன்னும் தப்பித்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் பின்னணி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றிய முழுமையான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F4tJB1jZvCA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T16:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஸ்கெலிய ஓல்டன் தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/leopard-carcass-recovered-at-maskeliya-1786544986"></link>
            <id>https://tamilwin.com/article/leopard-carcass-recovered-at-maskeliya-1786544986</id>
            <summary type="text">மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்டத்தின்
கிங்கோரா பிரிவில், சிறுத்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(12...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்டத்தின்
கிங்கோரா பிரிவில், சிறுத்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இன்று(12) பிற்பகல் சுமார் 2 மணியளவில் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த
தொழிலாளர்கள் குழுவினர், வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில்
கிடப்பதை அவதானித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, தொழிலாளர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர், தோட்ட முகாமையாளர் சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமாரவிற்கு அறிவித்துள்ளார்.</p><p></p><h2>சடலம் கண்டெடுப்பு</h2><p>
</p><p>
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் வனவிலங்கு
அதிகாரிகள் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed1ae3d3-7804-49d8-938b-7f2ec8c31cb6/26-6a7c88b2ed527.webp' /></p><p>

நல்லத்தண்ணியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளின் தலையீட்டுடன், இறந்த நிலையில்
காணப்பட்ட சிறுத்தையின் சடலம் தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச்
செல்லப்பட்டுள்ளது.
</p><p>எவ்வாறாயினும், சிறுத்தை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை
உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T15:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு கும்பலுடன் தொடர்புடைய நபரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-at-peko-saman-s-mother-mitheniya-1786542777"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-at-peko-saman-s-mother-mitheniya-1786542777</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.</p><p>

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8.2026) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4cd45d-559a-4438-89d9-b556e587d15c/26-6a7c7fed2b8bb.webp' /></p><p>கேஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், பெக்கோ சமன் என்ற நெதுன்கொட நிர்மல பிரசன்ன என்பவரும் அக்குழுவில் இருந்தார்.</p><p>பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>இதேவேளை, பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T14:07:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூற்றாண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய போர்க்கப்பலின் சிதைவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wreckage-of-a-british-warship-discovered-1786541666"></link>
            <id>https://tamilwin.com/article/wreckage-of-a-british-warship-discovered-1786541666</id>
            <summary type="text">கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான
&#039;ஹெச்.எம்.எஸ் டைகர்&#039; என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான
'ஹெச்.எம்.எஸ் டைகர்' என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழு
கண்டுபிடித்துள்ளது.
</p><p>
1908-ஆம் ஆண்டு கடற்படைப் பயிற்சியின் போது, மற்றொரு போர்க்கப்பல் மீது
தற்செயலாக மோதியதில் 'ஹெச்.எம்.எஸ் டைகர்' இரண்டாகப் பிளந்து கடலில்
மூழ்கியது.

இதில் 57 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>சிதைவுகள்&nbsp;</h2><p>

'புரோஜெக்ட் எக்ஸ்ப்ளோர்' என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த லியோ ஃபீல்டிங்
மற்றும் டான் மெக்முலன் ஆகியோர் ஐந்து ஆண்டுகள் வரலாற்று ஆவணங்களை ஆய்வு
செய்து, வைட் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் இந்த போர்க்கப்பலின்
எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701ffd79-4e0d-4689-88d6-bb364ba6064d/26-6a7c7968ca0e1.webp' /></p><p>

தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள 'ஆயுதப் படைகள்
சட்டத்தின்' கீழ், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க போர்க்கப்பல் சிதைவுகள்
சேதப்படுத்தப்படாமல் 'பாதுகாக்கப்பட்ட பகுதியாக' அறிவிக்கப்பட்டு
பராமரிக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியில் 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/day-50-third-phase-of-semmani-mass-grave-1786540493"></link>
            <id>https://tamilwin.com/article/day-50-third-phase-of-semmani-mass-grave-1786540493</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(12.08.2026) நடைபெற்றுள்ளது.

இதன்போது 05 மனித எலும்புக்கூடு இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(12.08.2026) நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன்போது 05 மனித எலும்புக்கூடு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><h2>அகழ்வு பணிகள் முன்னெடுப்பு</h2><p>
அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007248ea-719e-4e6a-ab86-e8f4346417c2/26-6a7c74eb9693c.webp' /></p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 544 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13de944-ebe8-47f2-bd59-5c7ac3866e9a/26-6a7c74ec73893.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d946238e-7dbd-4ec9-a514-1d05471703d3/26-6a7c74ed536d6.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ துறைசார் கற்கைநெறிகளுக்கான கல்வி நிறுவனம் ஏறாவூரில் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/educational-institute-medical-courses-in-eravur-1786535944"></link>
            <id>https://tamilwin.com/article/educational-institute-medical-courses-in-eravur-1786535944</id>
            <summary type="text">தாதிய உதவியாளர் கல்வி நிலையம், திறந்து வைக்கப்படுவது சேவை
செய்யத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு நல்வாய்ப்பாய் அமையும் என
மட்டக்களப்பு போதனா வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாதிய உதவியாளர் கல்வி நிலையம், திறந்து வைக்கப்படுவது சேவை
செய்யத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு நல்வாய்ப்பாய் அமையும் என
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்&nbsp; எஸ்.எல்.
தாஹிறா சபியுதீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு 
புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் மருத்துவ துறைசார் பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தாதியர் பயிற்சி நெறி</h2><p>
</p><p>
கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் தராதரத்துடன் கூடிய இந்தப் பயிற்சி நெறிக்கு
நாடெங்கிலுமிருந்தும் 35 தாதிய உதவியாளர் பயிலுநர்கள் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்கள்.
</p><p>
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தாஹிறா,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb79388c-c93b-4afd-9500-c2b762cd72e6/26-6a7c69e7b510b.webp' /></p><p> </p><p>மூன்றாம் நிலைக் கல்வி
தொழில்சார் கல்விச் சான்றிதழுடன் கூடிய இந்த தாதிய உதவியாளர் பயிற்சியைப்
பூர்த்தி செய்வதற்குரிய பணியிடப் பயிற்சிகளுக்கு சகல உதவிகளையும் வழங்க
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
</p><p>
இந்தப்
பயிற்சி நெறி அரச, தனியார் வைத்தியசாலைகளிலோ
அல்லது வெளிநாடுகளிலுள்ள வைத்தியசாலைகளிலோ பணியாற்றுவதற்கும், உங்கள்
வாழ்க்கையை பொருளாதார ரீதியில் வளப்படுத்திக் கொள்வதற்கும் 
உங்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.</p><h2>மனித நேயம் மிக்க கற்கை</h2><p>

சூம் தொழிநுட்பத்தின் வாயிலாக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு
புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் தவிசாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.எம். பௌஸ், 

தாதிய சேவை என்பது வெறும்
சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றுவதல்ல. </p><p>அது அன்பு, மனித நேயம் ஆகியவற்றின்
ஊற்றாக இருக்கும்.

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அன்பு, பண்பு, கருணை, கனிவு,
மனித நேயம், சேவை மனப்பான்மை ஆகியவற்றுடன் பராமரிப்பு செய்யக்கூடியதாக
இருந்தால் அது பெரும் பாக்கியமாக இருக்கும். அதனாலேயே நாம் இந்தக் கல்வி
நிலையத்தை ஏறாவூரில் ஆரம்பிக்கிறோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b6cab31-21dd-4fb3-b51f-34aae50e60a3/26-6a7c69e8892d9.webp' /></p><p>எதிர்காலத்தில் இந்தக்
கல்வி நிலையம் மனித நேயத்தின் கலங்கரை விளக்காகத் மிளிர்ந்து முழு
நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழும் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த நிகழ்வில், ஏறாவூர் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்
வானதி கிரிதரன், கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய முகாமையாளர் யூ.எல்.
நூகுலெப்பை, திட்ட ஆலோசகர் யூ. முஜிபுர்றஹ்மான், கற்கை நெறிகளுக்கான
இணைப்பாளர் இஸ்ஸத் முஸ்தபா, காதி நீதிவான் அலிமுஹம்மத், முன்னாள் அதிபர்
எம்.எம்.ஜலால்தீன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய 22ஆவது சட்டமூலத் திருத்தம்.. ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-president-anura-kumara-1786540023"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-president-anura-kumara-1786540023</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவு, ஒரு தனிநபருக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவு, ஒரு தனிநபருக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காகவே எடுக்கப்பட்டது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
முழு அமைப்பின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விரிவான சீர்திருத்தங்களில் இந்தத் திருத்தம் ஒரு அங்கம் மட்டுமே என்றும், இது தனது தனிப்பட்ட கருத்தோ அல்லது அரசாங்கத்தின் ஒரே கருத்தோ அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>

இன்று பிற்பகல் (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இலங்கை சட்டத்தரணி சங்கத்துடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதைத் தெரிவித்துள்ளார்.</p><h2>வயது நீடிப்பு&nbsp;</h2><p> </p><p>

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடலின் போது, ​​நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மீது கவனம் ஈர்க்கப்பட்டதோடு, இது தொடர்பாக இலங்கை சட்டசபையினரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6bb1eb7-a1d9-4194-98ae-1cee7a914fbd/26-6a7c74a057fc6.webp' /></p><p>இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவ்விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டையும், நீதித்துறையை மேம்படுத்துவதற்காக அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளையும் விளக்கினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
நீதி வழங்கும் செயல்முறையானது நீதிமன்றங்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுவதில்லை, மாறாக அது புலனாய்வு, வழக்குத் தொடர்தல் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுச் செயல்முறையாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கங்கை தீர்த்தப் படிக்கட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ganga-theertha-staircase-officially-opened-1786530761"></link>
            <id>https://tamilwin.com/article/ganga-theertha-staircase-officially-opened-1786530761</id>
            <summary type="text">திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர்
சுவாமி தேவஸ்தானத்தின் “கங்கை
தீர்த்தப் படிக்கட்டு” உத்தியோகபூர்வமாக திறந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர்
சுவாமி தேவஸ்தானத்தின் “கங்கை
தீர்த்தப் படிக்கட்டு” உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வானது இன்று(12.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>கங்கை தீர்த்தப் படிக்கட்டு</h2><p>

இந்த தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது 100 ஆண்டுகளுக்கும்
மேலாக பொதுமக்கள் மற்றும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களால்
தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கோரிக்கையாகும்.
</p><p>
இதுகுறித்து கருத்து தெரிவித்த குமார் ஜெயக்குமரன்,

கங்கை தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது இன்று நேற்று எழுந்த
கோரிக்கை அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c549be5-f126-4a87-8f4b-508fd8006467/26-6a7c4f812a5c0.webp' /></p><p> </p><p>

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களும் பக்தர்களும்
இதற்காக எதிர்பார்த்து வந்துள்ளனர். 

இந்த நீண்டகால தேவையை நிறைவேற்றுவதற்கான
ஒரு சிறிய பங்களிப்பையாவது நாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே நானும் எனது
குழுவினரும் முன்வந்துள்ளோம்.
</p><p>
இந்தப் பணியின் நோக்கம் எந்தவொரு தனிநபருக்கும் புகழ் தேடுவதோ, அரசியல்
அல்லது வேறு எந்த தனிப்பட்ட நோக்கத்திற்காகவோ அல்ல.</p><h2>பொதுமக்களின் கோரிக்கை</h2><p> </p><p>

பொதுமக்களின் நீண்டகால
கோரிக்கையை நிறைவேற்றுவதும், பக்தர்களுக்கு சிறந்த வசதியை ஏற்படுத்துவதும்,
ஆலயத்தின் புனிதத்தன்மை மற்றும் சிறப்பை மேலும் மேம்படுத்துவதுமே எங்களுடைய
நோக்கமாகும்.</p><p>
</p><p>
ஆலயம் என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ சொந்தமானது
அல்ல. அது மக்களின் ஆன்மீக மற்றும் பண்பாட்டு அடையாளத்துடன் தொடர்புடைய ஒரு
புனிதத் தலம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3134aa29-2e86-4e89-8421-a1848471e2ba/26-6a7c4f8215714.webp' /></p><p> எனவே, ஆலயத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில்
அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும்.</p><p>

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வந்த இந்த
கோரிக்கைக்கு தற்போது ஒரு நடைமுறைத் தொடக்கம் கிடைத்திருப்பது முக்கியமான
விடயமாகும். இந்த முயற்சிக்கு பொதுமக்களிடமிருந்து ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என
நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் - மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் ஆண்டகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/preserve-madu-shrine-traditions-says-bishop-1786517677"></link>
            <id>https://tamilwin.com/article/preserve-madu-shrine-traditions-says-bishop-1786517677</id>
            <summary type="text">மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை
ஏற்படுத்தக் கூடாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு
அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை
ஏற்படுத்தக் கூடாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு
அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(11.08.2026) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன்
தலைமையில் மடுவில் இடம் பெற்ற மடு பெருவிழாவிற்கான ஆயத்த நடவடிக்கைகள்
குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>திருவிழாவுக்கான ஆயத்தங்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பெரு நிலப்பரப்பில் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் முறைகள் வழிபாடுகளுக்கான சட்ட திட்டங்களுக்கு ஒப்பாக மடு விழாவை சிறந்த முறையில்
நடத்துவதற்கு அரசு உதவி எமக்கு தேவை. இதற்காகத்தான் நாம் இதை வர்த்தமானியில்
பிரசுரிக்கப்பட்ட பெருவிழா என்கின்றோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f637543c-7701-48b8-ba20-4940f317652a/26-6a7c19065eda0.webp' /></p><p>அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மடு பாரம்பரியத்தை கடைப்பிடித்து அதற்கமைய
இந்த திருவிழாவுக்கான ஆயத்தங்களை பல நூற்றாண்டு காலமாக ஒழுங்குபடுத்தி
முன்னெடுத்து வருகிறோம். </p><p>இதற்கு உங்கள் ஒத்துழைப்பு எமக்கு மிக மிக அவசியம்.

சுகாதாரம், மருத்துவம், சாரணர் சேவை, ஜோன் ஆம்புலன்ஸ், கழிவு அகற்றும்
நடவடிக்கை,பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் மின்சாரம், உணவு
மற்றும் கடைகள், போக்குவரத்து, சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடயங்கள்
போன்றவற்றில் உங்கள் உதவிகள் அவசியம் தேவையானது.</p><h2>சட்ட திட்டங்கள்&nbsp;</h2><p>

மடு திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை
ஏற்படுத்தக் கூடாது. சில சட்ட திட்டங்கள் மடு
திருத்தலத்திற்கு உரித்துடையதாக இருக்கிறது.
</p><p>
இந்த சட்டத்திட்டங்களை நாங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறியத் தந்திருக்கிறோம்.
இந்த பாரம்பரியத்தை நாம் ஒரே மனப்பான்மையுடன் ஒருமித்து
செயற்பட்டால்தான் சிறந்த முறையில் நடத்த முடியும்.
அதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6378d40f-dce7-4b50-85f0-3ff8526ad8aa/26-6a7c190734971.webp' /></p><p>குறிப்பாக இங்கு கழிவு அகற்றுதல் மற்றும் பாதுகாப்பு போன்றவைகள் அவசியமாகிறது. சில
கடைகள் இந்த மடுத்திருத்தல பகுதிக்குள் வர முடியாது.</p><p> 

ஐஸ்கிறீம்
வியாபாரம் அன்று தொட்டு இங்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. சிறு
பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்தல் தடை
செய்யப்பட்டுள்ளது. ஆனால் மடு எல்லைப் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்டவைகள்
விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-12T13:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த கடற்படையினரின் ஆதரவு வேண்டும்! ஆளுநர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-navy-support-to-control-indian-fishermen-1786540173"></link>
            <id>https://tamilwin.com/article/governor-navy-support-to-control-indian-fishermen-1786540173</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த
கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த
கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.
</p><p>
புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல்
எம்.டி.கே.விஜேவர்த்தன, இன்று (12.08.2026) புதன்கிழமை மாலை ஆளுநர்
செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை மரியாதை நிமித்தம்
சந்தித்து கலந்துரையாடியபோதே ஆளுநர் இந்த விடயங்களை வலியுறுத்தினார்.
</p><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல்வளப்
பாதுகாப்புக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலாக காணப்படுவதாக
சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>சட்ட&nbsp; நடவடிக்கை</h2><p> குறிப்பாக, சட்டவிரோத கடற்றொழில் முறைகள் கடல் வளங்களை
அழிப்பதுடன், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய கடற்தொழிலையும் பாதித்து
வருவதாக அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94c36f9-d957-4f3a-b407-76cde2ec6632/26-6a7c739c986dc.webp' /></p><p>

மேலும், வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும்
நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் ஆளுநர் கவனம் செலுத்தினார்.
</p><p>இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்றொழில் மற்றும்
நீரியல் வளத் திணைக்களத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயற்பட்டு, சட்ட
அமுலாக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் வட மாகாண கடற்படைத்
தளபதியிடம் கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shootout-yala-national-park-1786538582"></link>
            <id>https://tamilwin.com/article/shootout-yala-national-park-1786538582</id>
            <summary type="text">யால தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு நடவடிக்கையின் போது வேட்டைக்காரர்களுக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு நடவடிக்கையின் போது வேட்டைக்காரர்களுக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> 

இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த நடவடிக்கை நேற்று (11) தனமல்வில யால தேசிய பூங்கா தலைமையக அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் வனப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>

பூங்காவிற்குள் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரைக் கைது செய்ய முயன்றபோதே, வேட்டைக்காரர்கள் வனவிலங்கு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடியாக அதிகாரிகளும் தற்காப்பிற்காக மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/262968bc-bdea-4329-802e-77b5e8e72ab7/26-6a7c6ecb05c7a.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டின் போது சந்தேகநபர்கள் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், எல்லகல இடதுகரை, திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து இரு மான்களின் 41 கிலோகிராம் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-a4QqXcx3KQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகைகளைதான் மாகாணசபைகளுக்கு ஒதுக்கீடு செய்து வந்தார்கள்! பிரபு எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prabu-mp-statement-1786537069"></link>
            <id>https://tamilwin.com/article/prabu-mp-statement-1786537069</id>
            <summary type="text">இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகை நிதி ஒதுக்கீடுகளை மாகாணசபைகளுக்கு வழங்கி வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி
அரசாங்கம் இந்த நாட்டை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகை நிதி ஒதுக்கீடுகளை மாகாணசபைகளுக்கு வழங்கி வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி
அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்றுதன் பின் மாகாணசபைகளுக்கான அதிக நிதி
ஒதுக்கீடுகள் எந்த ஒரு தங்கு தடையும் இன்றி தொடர்ச்சியாக
வழங்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>




மட்டக்களப்பில் இன்றைய தினம் (12.08.2026) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அதிக நிதி விடுவிப்பு</h2><p> </p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற தொகையிலும் பார்க்க அதைவிட அதிகமான தொகை 2026ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதுபோன்று எதிர்வரும்
காலங்களிலும் 2027ஆம் ஆண்டுக்கு இன்னும் அதிகமான நிதி விடுவிப்பதற்கு நாம்
தயாராக இருக்கின்றோம்.
</p><p>


மாகாணசபையின் ஊடாக மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்தி செயல்பாடுகள்
அங்கிருக்கின்ற திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி
செயற்பாடுகள், அதுபோன்று பிரதேச மட்டத்தில் இருக்கின்ற சபைகள் உள்ளிட்ட
அனைத்துக்கும் நாங்கள் அதிகமான நிதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a25f6247-2cdc-4518-8864-80de9def52b6/26-6a7c6a30346f7.webp' /></p><p>



இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகைகளைதான் மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வந்திருந்தார்கள். ஆனால் இப்போது இந்த
நாட்டை சரியான பொருளாதார கட்டமைப்பு உட்படுத்தி அரச வருமானம் மட்டும் துறைகளை
அதிகரித்து அந்த நிதிகளைக் கொண்டு சரியாக முகாமை செய்து அதனூடாக அபிவிருத்தி
செய்யும் வேலைத்திட்டங்களையும் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.
</p><p>


அந்த வகையில் அவ்வாறான நிதிகளை மாகாணங்களுக்கு நாம் பகிர்ந்து அளித்துக்
கொண்டிருக்கின்றோம். அவ்வாறு வழங்கப்படுகின்ற நிதி உதவிகளைக் கொண்டு
வைத்தியத்துறை சார்ந்த திட்டங்கள், கல்வித்துறை சார்ந்த செயற்பாடுகள், மற்றும்
ஏனைய விடயங்களுக்காகவும் தாராளமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><h2>சுதேச வைத்தியம்</h2><p>
</p><p>குறிப்பாக எங்களது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகள் சில
தேவைகளோடு இயங்குகின்றன அவ்வாறான தேவைகளையும், வரும்காலங்களில் பூர்த்தி
செய்து வைக்கப்படும்.



பிரதேச மக்கள் பழமை மாறாது சுதேச வைத்தியத்திலே அவர்களது ஆர்வத்தை
காட்டுகின்றார்கள். </p><p>என்னதான் ஆங்கில மருத்துவத்துறை வளர்ச்சி
அடைந்திருந்தாலும் மக்கள் சுதேச வைத்தியத்துறையில் நாட்டம் செலுத்தி
வருகின்றார்கள். அதற்காக வைத்தியர்கள் அவர்களது கடமைகளையும் சிறப்பாக
மேற்கொண்டு வருகின்றார்கள் அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை கிழக்கு மாகாண
சபையின் ஊடாக ஆளுநர் பங்களிப்பினை வழங்கி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed3d9eb2-58a7-46ec-a1d3-4ffe57ae731b/26-6a7c6a314a334.webp' /></p><p>
</p><p>


கிழக்கு மகாண ஆளுநர் ஊடாக வீதி அபிவிருத்தி, பாடசாலை கட்டிடங்கள் அமைத்தல்,
உள்ளிட்ட பல அபிவிருத்தித் இடத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் அதிகளவு நிதி தேங்கி இருக்கின்றன.
அந்த நிதியை பயன்படுத்தி தவிசாளர் மக்களுக்கு பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள
வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். </p><p>அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற
சட்ட திட்டங்களை சரியான முறையில் முன்னெடுக்கின்ற சபையாக மண்முனை தென் எருவில்
பற்று சபை திகழ்கின்றது. அதன் தவிசாளர் கட்சி பேதங்களை கடந்து மக்கள் சேவையை
முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T12:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை 7 மாவட்டங்களில் கடும் வெப்பம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/caution-level-heat-alert-issued-for-07-districts-1786534929"></link>
            <id>https://tamilwin.com/article/caution-level-heat-alert-issued-for-07-districts-1786534929</id>
            <summary type="text"> வளிமண்டலவியல் திணைக்களம் நாளை (13.08.2026) பல பகுதிகளில் நிலவவுள்ள கடும் வெப்பம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை,...</summary>
            <content type="html"><![CDATA[<p> வளிமண்டலவியல் திணைக்களம் நாளை (13.08.2026) பல பகுதிகளில் நிலவவுள்ள கடும் வெப்பம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதை</h2><p>
அறிவுறுத்தலின்படி, பகல் நேரங்களில் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355cc93e-42a0-49a4-876c-04f6f236e166/26-6a7c6441ec418.webp' /></p><p>ஆகவே பொதுமக்கள் முடிந்தவரை நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், பகலின் வெப்பமான நேரத்தில் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T12:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.55 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்படும் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bambalapitiya-railway-station-renovation-1786531989"></link>
            <id>https://tamilwin.com/article/bambalapitiya-railway-station-renovation-1786531989</id>
            <summary type="text">பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் போக்குவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
இத்திட்டம் போக்குவரத்து மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் ஒரு பொது - தனியார் கூட்டாண்மையாகச் செயல்படுத்தப்படுகிறது.</p><h2>உள்ளூர் சமூகத்தின் நிதிப் பங்களிப்பு&nbsp;</h2><p>மேலும் இதற்கான நிதி உள்ளூர் சமூகத்தின் நிதிப் பங்களிப்புகள் மூலம் வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3eef4f3-8478-4d45-b4a2-918ef68472a1/26-6a7c5841b0a39.webp' /></p><p>
பிரதான தொடருந்து நிலையம், சுகாதார வசதிகள், கூரை, நடைமேடைகள், சிறப்பு மதில் சுவர்கள் மற்றும் மரைன் டிரைவ் மீது மேம்பாலம் கட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய புனரமைப்புப் பணிகள் மொத்தம் ரூ.55 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T11:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பல்கலைக்கழகத்தில் பழிவாங்கும் செயற்பாடு.. முன்னாள் மாணவர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-university-student-complaint-compensation-1786531135"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-university-student-complaint-compensation-1786531135</id>
            <summary type="text">தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக தனக்கு தேர்வு மதிப்பெண்களை சரியாக வழங்கவில்லை என கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக முன்னாள் மாணவர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக தனக்கு தேர்வு மதிப்பெண்களை சரியாக வழங்கவில்லை என கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக முன்னாள் மாணவர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர், நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்கள் குழுவினரின் தேர்வு முறைகேடுகள், தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளால் தனது நேரமும், உழைப்பும், பணமும் வீணடிக்கப்பட்டதாகக் கூறி, நுவகொட மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
இந்த முறைப்பாட்டை, சனத் குமார அதுகொரல என்ற மாணவர், சட்டத்தரணி தனோஷா பெரேரா மூலம் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு..&nbsp;</h2><p>கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தர் இந்திகா மகேஷ் கருணாதிலக, முன்னாள் பிரதிவேந்தர் எச்.டி. கருணாரத்ன, மேலாண்மை மற்றும் நிதியியல் பீடத்தின் பீடாதிபதி எஃப்.டி.எம். நிஹால் சஹபந்து, பிரிவுத் தலைவர் சசிதா அபேதீர மனோரத்ன, விரிவுரையாளர்கள் டி.சி.எல். தியகுவாராச்சி மற்றும் டபிள்யூ. பி. பிரேமரத்ன, தேர்வுகள் பிரிவின் மேலதிக பதிவாளர் வஜிர ஹபுகின்ன ஜெயரத்ன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/034996b6-f20d-4ec4-8c40-e67241c8a19f/26-6a7c59d7eab7f.webp' /></p><p>
</p><p>
மனுதாரர், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் நிதியியல் பீடத்தால் நடத்தப்பட்ட 2022/2023ஆம் ஆண்டுக்கான தொழில்முனைவு மற்றும் சிறு வணிக மேலாண்மை உயர் பட்டயப் படிப்பை முடித்துள்ளார். </p><p>முதல் மதிப்பீட்டில் எந்தப் பிரச்சினைகளும் எழவில்லை என்றாலும், இரண்டாவது மதிப்பீடு தொடர்பான 'சிறு வணிகங்களுக்கான செயல்பாட்டு மேலாண்மை' (508) மற்றும் 'வணிக உத்தி மற்றும் நிலைத்தன்மை' (510) ஆகிய பாடங்களில் தனக்குக் கடுமையான பாரபட்சமான மதிப்பீடு வழங்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.</p><p>

நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, மற்றொரு மாணவர் மூலம் ரூபா 80,000ஐ தனது கணக்கில் வரவு வைக்குமாறு 508ஆம் பாடத்திற்கான பொறுப்பாசிரியர் விடுத்த கோரிக்கையைத் தான் நிராகரித்ததாக மனுதாரர் மாணவர் கூறுகிறார்.</p><h2>வசூலிக்கப்பட்ட பணம்..&nbsp;</h2><p> </p><p>பின்னர், மே 2024இல், கிரிஎல்லவில் நடைபெற்ற ஒரு பயிலரங்கில், பல்கலைக்கழகத்துடன் தொடர்பில்லாத விரிவுரையாளரின் கணவரைத் தனது அறையில் தங்கவைக்க அவர் விடுத்த கோரிக்கையையும் அந்த விரிவுரையாளர் எதிர்த்ததால், அந்தப் பெண்ணுக்கு அவர் மீது மனக்கசப்பு ஏற்பட்டதாக இந்த வழக்கில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc519cf4-485e-4db6-b4e8-e8ce0b2ffc93/26-6a7c59d8b9ac6.webp' /></p><p>
இந்த மனக்கசப்பின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விரிவுரையாளர், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் வழங்கும் முறையிலிருந்து விலகி, தன்னிச்சையாகவும் பழிவாங்கும் நோக்கத்துடனும் அவருக்குக் குறைந்த மதிப்பெண்களை வழங்கி, அவரைத் தேர்வில் தோல்வியடையச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> தேர்வுக்கு முன்பு மற்றொரு மாணவர் குழுவிடம் வினாத்தாளின் விவரங்களை வெளிப்படுத்தியதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், பாடம் 510ல் ஒரு குழுத் திட்டப்பணிக்காக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ரூபா 35,000 வசூலிக்கப்பட்டதாகவும், அந்தத் திட்டப்பணியில் தீவிரமாகப் பங்கேற்காத சில மாணவர்களுக்கு விரிவுரையாளர் முழு மதிப்பெண்களையும் வழங்கியதாகவும் குறித்த மாணவர் மேலும் குற்றம் சாட்டுகிறார்.</p><p>

2025 ஜனவரியில் தான் தேர்வில் தோல்வியடைந்ததாக முடிவுகள் வெளியான பிறகு, அது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறைப்பாடு அளித்ததாகவும், பின்னர், எந்தவொரு மறுதேர்வும் நடத்தப்படாமல், 2025 ஏப்ரலில் தன்னையும் சேர்த்து பல மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகக் கூறி புதிய தேர்வு முடிவு ஆவணம் வழங்கப்பட்டதாகவும் மனுதாரர் கூறுகிறார்.</p>]]></content>
            <updated>2026-08-12T11:34:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் காதலர்கள் செய்த பெரும் பணமோசடி! சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-businessmans-bank-card-defrauding-1786527741"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-businessmans-bank-card-defrauding-1786527741</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் தொழிலதிபரின் வீட்டிலிருந்து இரண்டு வங்கி அட்டைகளை திருடி பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் தொழிலதிபரின் வீட்டிலிருந்து இரண்டு வங்கி அட்டைகளை திருடி பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த பெண் தொழிலதிபரின் வீட்டிலிருந்து இரண்டு வங்கி அட்டைகளை திருடி 19 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேகத்திற்குரிய பெண்ணின் காதலர் தொழிலதிபரின் கீழ் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவசர தேவைக்காக கொழும்பு வந்த தனது காதலிக்கு, தொழிலதிபரின் வீட்டில் ஓர் நாள் தங்குமிடம் வழங்குமாறு கோரியுள்ளார்.
</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
இருப்பினும், தான் வீட்டில் தனியாக வசிப்பதால், தனியாக தங்குமிடம் வழங்க முடியாது என்றும், அதனால் அவரது தாயாருடன் வந்தால் தங்குமிடம் வழங்க முடியும் என்றும் தொழிலதிபர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd8b1b24-79aa-4213-bd2f-54e942547193/26-6a7c4a2b4dd3e.webp' /></p><p>

இதனையடுத்து தாயாருடன் குறித்த பெண் தொழிலதிபரின் வீட்டிற்கு சென்ற நிலையில், வங்கி அட்டைகளை திருடுமாறு காதலன் தனது காதலிக்கு அறிவுறுத்தியிருந்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

அதன்படி, வீட்டில் ஒரே ஒரு இரவு மட்டும் தங்கியிருந்த சந்தேகத்திற்குரிய பெண்ணும் அவரது தாயாரும், வங்கி அட்டைகளை திருடிய பின்னர் இரவு வீட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
</p><p>
இவர்கள் தப்பிச்செல்லும் வழியில், காதலனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு, திருடப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி ஐம்பதாயிரம் ரூபாயைப் பெற்று பின்னர் வடுவ பகுதியில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.</p><h2>சிசிடிவி காட்சிகள் ஆய்வு&nbsp;</h2><p>
</p><p>
அடுத்த நாள், வெலிகம பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​சந்தேகத்திற்குரிய பெண்ணின் காதலன் என்று கூறப்படும் நபர் பல பிடியாணை உத்தரவுகளின் பேரில் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0c3c80-a2d9-410f-9cad-4766be862a6f/26-6a7c4a2bf250f.webp' />&nbsp;</p><p>
தனது காதலன் கைது செய்யப்பட்ட பிறகு, சந்தேகத்திற்குரிய பெண் மாத்தறை பகுதிக்கு சென்று அங்கு, திருடப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்தி இரண்டு நவீன கைபேசிகள், தங்கப் பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கியதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>
வங்கி அட்டைகள் பயன்படுத்தப்பட்ட கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், அத்துருகிரிய பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர், ஹம்பாந்தோட்டை, சிறிபோபுரத்தைச் சேர்ந்த, 26 வயதான, ஒரு குழந்தையின் தாய் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

இதற்கமைய, அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Oz211DSzy-4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-12T11:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுர்வேத சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு பெரிய சந்தர்ப்பம் இருக்கின்றது! கிழக்கு மாகாண ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-province-governors-statement-1786528468"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-province-governors-statement-1786528468</id>
            <summary type="text">இலங்கையில்
இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படவில்லை, கிழக்கு மாகாணத்திலே
ஆயுர்வேத சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு பெரிய சந்தர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில்
இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படவில்லை, கிழக்கு மாகாணத்திலே
ஆயுர்வேத சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு பெரிய சந்தர்ப்பம்
இருக்கின்றது என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>


மட்டக்களப்பு - ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபா நிதி
ஒதுக்கீட்டில் புதிதாபக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கான விடுதி
இன்று (12.08.2026) திறந்து வைக்கப்பட்டது. </p><p>இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,


தேசிய மக்கள் கட்சி அரசாங்கமும் கிழக்கு மாகாண சபையும் ஆங்கில
மருத்துவத்தையும் சுதேச மருத்துவத்தையும் ஒரே அளவான சந்தர்ப்பத்தை வழங்க
வேண்டும் என தீர்மானித்திருக்கின்றோம். 2024ஆம் ஆண்டு 119 மில்லியன்
மாத்திரமே சுதேச மருத்துவ தொலைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்
இந்த வருடத்தில் 257 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>அதுபோல்
அரச நிறுவனங்களுக்குரிய கட்டடங்களை நிர்மானிக்கும் போது அதனை அந்த உரிய
காலப்பகுதிக்குள்ளேயே பூர்த்தி செய்ய வேண்டுமென நாம் தீர்மானித்து
இருக்கின்றோம்.



கிழக்கு மாகணத்திலே இந்த வருடத்திற்குள் நான்கு வைத்தியசாலை மருத்துவ
விடுதிகள் இந்த சுதேச மருத்துவ துறையிலே பூர்த்தி செய்யப்பட இருக்கின்றன.
அதுபோல் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ துறையை அபிவிருத்தி செய்வதற்காக
இந்தியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. </p><p>திருகோணமலையிலே ஆயுளவேத கிராமம்
ஒன்றை உருவாக்க உள்ளோம்.



எக்கோ சுற்றுலா, அக்றோ சுற்றுலா என்றெல்லாம் கதைக்கின்றோம் ஆனால் இலங்கையில்
இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படவில்லை. கிழக்கு மாகாணத்திலே
ஆயுர்வேத சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு பெரிய சந்தர்ப்பம்
இருக்கின்றது. பஞ்சகர்ம வைத்தியம் செய்வதற்காக பலர் வெளிநாடுகளில் இருந்து
வருவார்கள்.</p><h2>இனபேதம், சமயபேதம் இல்லை</h2><p> ஒயில் சிகிச்சைகள் செய்வதற்கும் வெளிநாடுகளில் இருந்து
வருவார்கள். அதனை விசேடமாக கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்வதற்கு பிரதான
தூர நோக்கோடு செயற்பட்டு வருகின்றது. அது தொடர்பில் சுற்றுலாத்துறை
அமைச்சரிடமும் கதைத்து இருக்கின்றேன்.



அறுகம்பையில் 23 மில்லியன் ரூபாவில் பஞ்சகர்மா வைத்தியசாலை ஒன்றை
நிர்மாணிப்பதற்கு இந்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள்
கட்சி அரசாங்கத்திடம் இனபேதம், சமயபேதம் இல்லை. </p><p>நாங்கள் மக்களுக்குத்தான்
சேவை செய்கின்றோம். ரி.என்.ஏ என்.பி.பி என்பது தேர்தல் மட்டத்தோடு முடிந்து
விட்டது. தேர்தலின் பின்னர் நாங்கள் ஒற்றுமையாக மக்களுக்கு வேலை செய்ய
வேண்டும்.



மண்மனை தென் எருவில் பற்றி பிரதேச சபையில் 600 மில்லியன் ரூபாய் நிதி
இருக்கின்றது. அதனை வைத்துக் கொண்டு அதிக அளவு வேலைகளை செய்யலாம்.</p><p>



தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கிழக்கு மாகாணத்திலும் விசேடமாக தென்
மாகாணத்திலும் எல்லோர் இடத்திலும் ஒற்றுமையாகதான் மக்களுக்கு சேவை செய்து
வருகின்றோம். அவ்வாறு ஒற்றுமையாக வேலை செய்வோம் என்று தான் மன்முனை தென்
எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரும் உறுதியளித்திருக்கின்றார்.</p><h2>மக்கள் மத்தியில் பிரச்சினைகள்</h2><p>



சுதேச மருத்துவத்துறைக்காக கிழக்கு மாகாண அடுத்த வருடத்திலும் இதே போன்று
நாங்கள் நிதி ஒதுக்கீடுகளை செய்கின்றோம். எனவே தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மக்கள் மத்தியில் பல பிரச்சினைகள் இருக்கின்றது. ஆனால் நாம்
அனைவரும் இலங்கையர்களாக செயற்பட வேண்டும். </p><p>அவ்வாறு செயற்பட்டு நாம் இலங்கையை
அபிவிருத்தி செய்ய வேண்டும், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்,
களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தையும், அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கு அனைவரும்
நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
</p><p>


இழக்கு மாகாண சுதேச மருத்துவத்துறை ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி
பிரபு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் கேசுந்தரம்
வினோராஜ், பிரதி ஆணையாளர் வைத்தியர் அன்ரன் அனஸ்தின், மற்றும் வைத்தியர்கள்,
உத்தியோகஸ்த்தர்கள். பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T11:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pramodya-to-take-legal-action-1786529117"></link>
            <id>https://tamilwin.com/article/pramodya-to-take-legal-action-1786529117</id>
            <summary type="text">தனது பதவிக்காலம் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்காக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, இலங்கை கிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது பதவிக்காலம் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்காக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் கிரிக்கெட் உருமாற்றக் குழு ஆகியவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.
</p><p>
தான் தலைமை தாங்கிய தேர்வுக் குழு நீக்கப்பட்ட விதம், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததோடு, நிதி மற்றும் தொழில்ரீதியான இழப்புகளையும் ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
</p><h2>ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே</h2><p>
தனது ஒப்பந்தம் தன்னிச்சையாக முறிக்கப்பட்டதாகக் கூறி, அது தொடர்பாக முன்னர் ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் சாதகமான பதில் எதுவும் பெறப்படவில்லை என்றும் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283f09bd-53f3-47b6-ae9c-908ec53d265f/26-6a7c4a109a2f3.webp' /></p><p>

விக்ரமசிங்க, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக 2025 டிசம்பரில் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார். </p><p>அக்குழுவில் தரங்க பரணவிதான, இந்திகா டி சாரம், வினோதன் ஜோன் மற்றும் ரசஞ்சலி டி அல்விஸ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
</p><p>
இருப்பினும், தேசிய தேர்வு அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பைத் தொடர்ந்து, 2026 மே மாதம் அந்தக் குழு மாற்றப்பட்டது.
</p><p>
விக்ரமசிங்க அந்த நேரத்தில் இந்த நடவடிக்கை குறித்து கவலைகளை எழுப்பியதோடு, தனது ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே தனது பதவிக்காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையிடம் இருந்து எழுத்து பூர்வமான விளக்கத்தை முறைப்படி கோரியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T10:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்தின் பழிவாங்கல்களுக்கு உதவும் இலங்கை பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-government-misleading-police-1786527770"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-government-misleading-police-1786527770</id>
            <summary type="text">இலங்கை பொலிஸார், அநுர அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸார், அநுர அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியளார் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஜனநாயக விரோத செயற்பாடுகள்&nbsp;</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

அரசாங்கத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ளவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாகவே தொடர்ச்சியான கைது சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1884cd2-5fac-4eda-9392-e689c6e48de2/26-6a7c4b1211a54.webp' /></p><p>
</p><p>
அரசாங்கத்தின் குறைபாடுகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அரசாங்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.</p><p> 

இதற்காக, நாம் அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை நிச்சயம் சுட்டிக்காட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T10:29:54+00:00</updated>
        </entry>
    </feed>
