<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-05T18:38:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு வழக்கில் திருப்பம்: சாரா ஜஸ்மினின் உடல் தொடர்பில் நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-sunday-attacks-sara-jesmin-alive-1785951605"></link>
            <id>https://tamilwin.com/article/easter-sunday-attacks-sara-jesmin-alive-1785951605</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின் உடல் இடம்பெறவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
</p><p>
மேலும், சாரா ஜஸ்மின் விசாரணையாளர்களைத் தவறாக வழிநடத்த முயன்றமை விமான நிலைய சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சாரா ஜஸ்மினின் உடல் சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்டதாகக் காட்டும் நோக்கில் மூன்றாவது முறையாக DNA பரிசோதனை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரி விரிவான சாட்சியங்களையும் வழங்கியுள்ளார்.

சாரா ஜஸ்மின் தற்போது எங்கு சென்றார் என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை இல்லை. </p><p>எனினும், அவர் சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சஹ்ரானின் குடும்பத்தினர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேனில் வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> ஆனால், வெடிப்புக்குப் பின்னர் தீக்கிரையான நிலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

இதனால், மற்றொரு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி சாரா ஜஸ்மின் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணையாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JWvv8rw3YDg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T17:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமனுடான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-s-deputy-foreign-minister-kazem-gharibabadi-1785950676"></link>
            <id>https://tamilwin.com/article/iran-s-deputy-foreign-minister-kazem-gharibabadi-1785950676</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
கடல்சார் கப்பல்கள் நுழைவது மற்றும் வெளியேறுவதற்கான வழிகள் உட்பட பெரும்பாலான முக்கிய அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி தெரிவித்துள்ளார்.
</p><p>ஈரானின் அதிகாரப்பூர்வ 'இர்னா' செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் "நிறைவடையும் தருவாயில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dff3dfc2-9171-4ac0-9f2e-1f58c7d56ec3/26-6a7371d5aab91.webp' /></p><p>
இது தொடர்பான அவரது கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p>எவ்வாறெனினும் இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா தனது அதிகாரபூர்வ நிலைப்பாடை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-05T17:24:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானின் பாதுகாப்பு வெள்ளை அறிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-strongly-opposes-japan-s-defense-white-paper-1785949063"></link>
            <id>https://tamilwin.com/article/china-strongly-opposes-japan-s-defense-white-paper-1785949063</id>
            <summary type="text">ஜப்பான் வெளியிட்ட புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் (Defence White Paper)
சீனாவை அச்சுறுத்தலாகச் சித்தரித்துள்ளதாகவும் தாய்வான் விவகாரம் தொடர்பாகத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் வெளியிட்ட புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் (Defence White Paper)
சீனாவை அச்சுறுத்தலாகச் சித்தரித்துள்ளதாகவும் தாய்வான் விவகாரம் தொடர்பாகத்
தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகவும் கூறி, ஜப்பானிய அரசாங்கத்திடம்
சீனா உத்தியோகபூர்வமாகத் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது.
</p><p>
ஜப்பான் ஆண்டுதோறும் வெளியிடும் இந்தப் பாதுகாப்பு அறிக்கையில், தாய்வானைச்
சுற்றி சீனா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இதனால்
இரு தரப்பிற்கும் இடையிலான இராணுவச் சமநிலை சீனாவுக்குச் சாதகமாக விரைவாக
மாறிவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p></p><h2>சீனா கடும் எதிர்ப்பு</h2><p>
</p><p>
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சு, தாய்வான் விவகாரம்
சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் தலையிட ஜப்பானுக்கு எவ்வித
உரிமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c148219c-c502-454c-bcdc-d5dd734ffc27/26-6a736d1352a36.webp' /></p><p>
</p><p>
ஜப்பான் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, ஆயுத உற்பத்தியின் மூலம்
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் தனது இராணுவ பலத்தை
அதிகரித்து வருகின்றது.</p><p>

எனினும், ஜப்பான் தனது வரலாற்றுப் பிழைகளிலிருந்து பாடங்கற்காமல் மீண்டும்
இராணுவமயமாக்கலை நோக்கிச் செல்வதாகச் சீனா குற்றம் சாட்டியுள்ளதுடன்,
ஜப்பானின் இந்த நகர்வுகளைக் கட்டுப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை
விடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T17:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்மன்பில, விமல் உள்ளிட்ட சிலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-seeks-contempt-proceedings-against-wimal-1785949079"></link>
            <id>https://tamilwin.com/article/court-seeks-contempt-proceedings-against-wimal-1785949079</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக, அரசியல் பிரமுகர்கள் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

கோட்டை நீதவான் பசன் அமரசிங்க முன்னிலையில் இன்று இந்தத் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜகச்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரஅஸங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண,&nbsp; உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/761ce0d8-bc55-42e9-81e8-a02317c41d93/26-6a736c32eb2cd.webp' /></p><p>
</p><p>குறித்த நபர்கள் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நடத்திய ஊடக சந்திப்புகள் மற்றும் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை ஆய்வு செய்த நீதவான், அவர்கள் "வெளிப்படையாகவே நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே உள்ளதால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அங்கு சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்கு, நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p>

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போது மூன்று பிரதான சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
சுரேஷ் சலே (முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர்), சரத் சமந்த (மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி), ஜெக்கில் பாஸ் (தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் அதிகாரி) ஆகியோர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பலருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் மீதான விசாரணைகளும் தொடர்கின்றன.</p><p> 
இவ்வாறான ஒரு பின்னணியில், விசாரணைகளைத் திசைதிருப்பும் வகையிலும் நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையிலும் கருத்து வெளியிட்டதாக கம்மன்பில, வீமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T17:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த இலக்கு மைத்திரி! அரசாங்கத்தை உசுப்பேற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-gets-caught-in-easter-attack-case-1785907068"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-gets-caught-in-easter-attack-case-1785907068</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><h2>வழக்குத் தொடர பரிந்துரை</h2><p>2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விஜித மலல்கொட அறிக்கைக்கு அமைவாகவே இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனினும், அந்த அறிக்கையில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. </p><p>

மேலும், 2019ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று, 2022இல் நிறைவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd226b0d-82ef-44a8-bdb1-9ccb1e69b84b/26-6a72db6349d17.webp' /></p><p> </p><p> அந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர். </p><p>

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றப் போது, பூஜித் மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கு நட்டஈடு செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. </p><p>

ஆனால் அப்போது உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் இணைக்கவில்லை.</p><p> 

இதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது. தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010a33fa-478c-4295-9cfa-57f818b09e22/26-6a72db64037a2.webp' /></p><p> </p><p>அவ்வாறு எப்படி நடக்க முடியும்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் நிலந்த ஜயவர்தன மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. </p><p>

தாக்குதல் சம்பவம் நடக்கும் போது பாதுகாப்பு அமைச்சு, முப்படைகளும் மைத்திரிபால சிறிசேனவிடமே இருந்தது. அவர் எப்படி பொறுப்பில் இருந்து விலக முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும்.</p><p> அந்த விசாரணைகள் நடக்கும் போதே 2022இல் தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் எப்படி விடுவிக்கப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் தெளிவாக தனது கடமைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T15:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-foreign-secretary-vikram-misri-sri-lanka-1785938996"></link>
            <id>https://tamilwin.com/article/indian-foreign-secretary-vikram-misri-sri-lanka-1785938996</id>
            <summary type="text">மாகாண
சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று, பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின்
தலைவர்களிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண
சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று, பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின்
தலைவர்களிடம் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இதன்போது, தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் கைவிடப்படாமல் படையினரின் ஆக்கிரமிப்பில்
இருக்கும் நிலங்கள் பற்றிய விபரங்களை அவர் தமிழ்த் தேசியக் கட்சிகளின்
தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
</p><p>
இன்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
</p><p>
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் பதில் பொதுச்செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவர் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப.சத்தியலிங்கம், கவீந்திரன் கோடீஸ்வரன்
ஆகியோர் பங்குபற்றினர்.</p><h2>தமிழ்க் கட்சிகள்&nbsp;</h2><p>
</p><p>
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
எம்.பியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன்
எம்.பி., தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் பங்குபற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6c3ba6-3940-47c8-96d6-69f456c9873f/26-6a734d610dd7e.webp' /></p><p>

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய வெளியுறவுச்
செயலாளர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.</p><p>
</p><p>
தேர்தலை இப்போதைக்கு நடத்தும் எண்ணம் அரசுக்கோ அரசு தலைவருக்கோ இல்லை என்பதைத்
தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மக்களால் கைவிடப்பட்டவை என்ற
சாரப்பட கருத்துக் கூறப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ்த்
தலைவர்களிடம் கேட்டார்.</p><p>

"ஜனாதிபதியினாலும் பிற தென்னிலங்கைத் தலைவர்களாலும் அத்தகைய கருத்து
கூறப்படுவதாக அறிகின்றோம். ஆனால் அது தப்பு. சம்பந்தப்பட்ட காணிகளை இராணுவம்
ஆக்கிரமித்து நீண்ட காலமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அந்த மக்கள்
வேறு இடமில்லாமல் இடம்பெயர்ந்து இருக்கின்றார்கள்.</p><h2>காணி விடுவிப்பு&nbsp;</h2><p> </p><p>சில சமயங்களில்
வெளிநாட்டில் இருக்கின்றார்கள். அதன் காரணமாக அவை கைவிடப்பட்ட காணிகள் என்று
கூறுவது அர்த்தமற்றது." என்று தமிழ்த் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c67e78a-bb1e-4a3f-b8e0-62f173484adf/26-6a734d61beb4f.webp' /></p><p>
</p><p>
மக்கள் குடியிருக்காத தமிழர் தாயக நிலங்களைக் கபளீகரம் செய்ய கொழும்பு
ஆட்சிப்பீடம் முனைகின்றது என்று சுட்டிக் காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
எம்.பி., ஏற்கனவே அரசு அப்படி ஒரு முயற்சியை எடுத்தது, அதை மேற்கொள்ள மாட்டோம்
என்று பிரதமர் கூட எமக்கு வாக்குறுதி தந்தார், ஆனால் அதையும் மீறி அப்படி
நிலத்தை சுவீகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது, சந்தர்ப்பவசமாக
சுமந்திரன் வழக்குப் போட்டு அந்த முயற்சியை முறியடித்தார் என்று மேலும்
சுட்டிக்காட்டினார்.</p><p>

"மக்களின் காணிகளை அவர்களிடமே விடுவிக்க வேண்டும் என்பது தங்களுடைய அரசின்
தேசிய கொள்கை என்று அறிவிக்கின்றார் ஜனாதிபதி. ஆனால் மறுநாள் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதிப் பாதுகாப்பு
அமைச்சர் அந்தக் காணிகளை விடுவிக்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்துகின்றார்." என்று சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இன்றைய கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், போன்றோரும் கருத்துக்களை வெளியிட்டனர்.

கொழும்புக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவும் இந்தச் சந்திப்பில்
பங்குபற்றினார்.</p>]]></content>
            <updated>2026-08-05T14:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த குடும்பப் பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-for-selling-drugs-1785938237"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-for-selling-drugs-1785938237</id>
            <summary type="text">அம்பாறை - இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த கைது நடவடிக்கை நேற்று(04....</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கைது நடவடிக்கை நேற்று(04.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>

 
28 வயது குடும்ப பெண் கைது</h2><p>
குறித்த பெண், இங்ஹினியாகல பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் 
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றும் இங்ஹினியாகல பொலிஸார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.</p><p>இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 10,000 மில்லிகிராம் (10 கிராம்) ஐஸ் போதைப்பொருளும்,
10,000 மில்லிகிராம் (10 கிராம்) ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c5d1989-3188-400d-88d1-0eabad18be15/26-6a73419e56cdd.webp' />&nbsp;&nbsp;</p><p>
இந்த சந்தேக நபர் நீண்டகாலமாக கொழும்பிலிருந்து அம்பாறை பகுதிக்குப்
போதைப்பொருட்களைக் கடத்தி வந்து விநியோகித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது. </p><h2>


கணவர் விளக்கமறியலில்..</h2><p>
அத்துடன், இவரின் கணவரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கின்
கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த எம். மதுஷானி திசாநாயக்க என்ற 28
வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:59:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகள் சுவீகரிப்பு தொடர்பில் மாகாண சபைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-acquisition-1785936476"></link>
            <id>https://tamilwin.com/article/school-acquisition-1785936476</id>
            <summary type="text">மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளை “தேசிய பாட சாலைகள்” என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளை “தேசிய பாட சாலைகள்” என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் படி, கல்வி என்பது மாகாண
சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும். எனினும், யுத்தகாலத்தில் மத்திய கல்வி
அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 350
பாடசாலைகளையும் (வடக்கில் 20 பாடசாலைகள்) நிர்வாக வழிகளினூடாகத் தேசிய
பாடசாலைகளாகத் தன் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.</p><p>

அன்றைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமா சுமாராக 650 பாடசாலைகளைச் சேர்த்து
1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தை அறிவித்தார். 

இந்த திட்டத்தை ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்த்தன ஆகியோரும் தீவிரமாக முன்னெடுத்தனர்.
</p><h2>
மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்</h2><p>
மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராகக்
க. சர்வேஸ்வரன் 2022 மே மாதத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில்
வழக்குத் தாக்கல் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e7b7d8a-5adf-4bd0-84f9-ace2fede15cd/26-6a733ac686342.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, வழக்கின் தொடர்ச்சியாக கடந்த 18.08.2023 மற்றும்
20.02.2024 திகதியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக
அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை அகற்றுமாறும், அதிபர்கள் தேசிய
பாடசாலை முத்திரையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சு
உத்தரவிட்டது.</p><h2>

தடுத்து நிறுத்தப்பட்ட 650 பாடசாலைகளிள் சுவீகரிப்பு</h2><p>
2025 மே 23 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலி சிட்டர் ஜெனரல், 

"குறிப்பிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தற்போது சட்டம் இல்லை” எனச் சட்டமா
அதிபர் தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13a15261-4e90-410d-870d-a2e03e02a68e/26-6a733ac754349.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர வேறு எதனையும் சுவீகரிக்கும்
உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்ற எழுத்து மூல உறுதிப்பாட்டையும் சட்டமா
அதிபர் நீதி மன்றத்துக்குச் சமர்ப்பித்தார். </p><p>

இதற்கமைய, வடக்கு மாகாண முன்னாள்
கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப்
போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்துள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில்
கையகப்படுத்தப்படவிருந்த 650 பாடசாலைகளும் (வடக்கில் 48 பாடசாலைகள்) மத்திய
அரசால் பறிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு.. மின்சக்தி அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continuous-power-cuts-mannar-letter-to-minister-1785935589"></link>
            <id>https://tamilwin.com/article/continuous-power-cuts-mannar-letter-to-minister-1785935589</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வரும்&amp;nbsp;மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாத்திலக்கவுக்கு மன்னார் மாவட்ட பொது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வரும்&nbsp;மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாத்திலக்கவுக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர்
வி.எஸ்.சிவகரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். </p><p>குறித்த கடிதத்தில், "மன்னார் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள்
பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.</p><p>பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பாதிக்கப்படுவதுடன் பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள்
செயலிழப்பதுடன் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
</p><p>
குறிப்பாக ஆண்டு ஐந்து மற்றும் கா.பொ.த உயர்தர பரீட்சைக்கு தயாராகும்
மாணவர்களும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் மின்வெட்டு சட்டவிரோத நடவடிக்கைக்கும்
சாதகமாக அமைந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் பல தடவைகள் மின் துண்டிப்பு
ஏற்படுகிறது.</p><h2>கடும் சிரமத்தில் மக்கள்..&nbsp;</h2><p>
</p><p>
அரசியல்வாதிகளும் மாவட்ட நிர்வாகமும் உறக்கத்தில் உள்ளனர். மக்கள் நிலை பற்றி
அவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. மன்னார் மக்களின் விருப்பமின்றி அதிகார
வர்க்கத்தின் அடக்குமுறையால் அமைக்கப்பட்ட 40 காற்றாலைகளில் தினமும் பல
மில்லியன் ரூபாவை வருமானமாக பெறுகிறீர்கள். ஆனால் மன்னார் மக்களை வேண்டுமென்றே
வஞ்சிக்கிறது மின்சார சபை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94958c61-381f-4e50-b272-f9402aa44edf/26-6a7339be0601a.webp' /></p><p>
</p><p>
தடையற்ற மின்சாரம் தருவோம் என உத்தரவாதம் அளித்த அரசாங்கம் மின் தடையை
ஏற்படுத்துகிறது. பல அமைச்சர்கள் மன்னாருக்கு வருகை தந்து மக்களுக்கு ஏமாற்று
கதைகள் கூறிவிட்டு போகிறார்களே தவிர இந்த மக்களுக்கு எந்தப் பலனும்
கிடைப்பதில்லை.
</p><p>
வட கிழக்கிற்கு வெளியே இவ்வாறு ஏமாற்று வேலையை மின்சார சபையால் செயல்படுத்த
முடியுமா? அரசியல் ரீதியிலும் சரி நிர்வாக ரீதியிலும் எமது மக்களை ஏமாற்றி
வஞ்சிக்கிறார்கள்.பல மாதங்களாக ஜனநாயக ரீதியாக போராடிய எமது மக்களின்
உணர்வுகளை மதிக்காத அரசும் மின்சார சபையும் இப்பொழுது மன்னார் மக்களை
தொடர்ந்து வஞ்சிப்பதாகவே நாம் உணர்கிறோம்.
</p><p>
எம்மிடமிருந்து வருமானம் பெறும் தாங்கள் எமது மக்களுக்கு போதிய மின்சார
கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும்
ஆகும்.அந்தப்
பொறுப்பில் இருந்து மின்சார சபை விலகுவது வேதனைக்குரிய விடயம்.</p><p>

ஆகவே உடனடியாக மின் கட்டமைப்புகள் சீர் செய்யப்பட்டு தடையற்ற மின்சாரம்
கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் தினமும்
பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.</p><p>இல்லையேல் இழப்பீடு
கோரி நீதிமன்றம் நாட வேண்டி வரும்.

தொடர்ந்து மன்னார் மக்களை வஞ்சிப்பது அரசு நிர்வாகத்தின் இயலாமை.

உடனடியாக மின் தடையை நிவர்த்தி செய்ய வழி ஏற்படுத்த வேண்டும் என
கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-america-war-1785935101"></link>
            <id>https://tamilwin.com/article/iran-america-war-1785935101</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை
முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும்
சாதக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை
முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும்
சாதகமாக அமைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த ஆலோசனைகளின் மூலம், சர்வதேச மசகு எண்ணெய் போக்குவரத்திற்கு மிக
முக்கியமான ஹோர்முஸ் நீரிணை விரைவில் கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும்
திறக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த நேர்காணலில், பேச்சுவார்த்தைகள்
நல்ல முறையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், ஒருவேளை ஈரான் ஒப்பந்தத்தில்
இருந்து மீண்டும் பின்வாங்கினால் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்
என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>அமைதிப் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த நேர்மறையான தகவல்களைத் தொடர்ந்து,
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளதோடு
பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன.
</p><p>
ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான
இடைக்கால ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்காவும் ஈரானும் இறுதி கட்டத்தை
நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832e8ba6-768b-41c0-aadf-d56afd52c4a5/26-6a73389009f55.webp' /></p><p>
</p><p>
எனினும், அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வரும் வரை ஒப்பந்தம்
இறுதியாவதில் தாமதம் ஏற்படும் என ஈரானிய அரசு ஊடகங்கள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதுகாப்பான கப்பல் பாதை</h2><p>
</p><p>
ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறுகையில்,
பாதுகாப்பான கப்பல் பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் நடத்தப்படும்
பேச்சுவார்த்தைகள் நேர்மறையாகத் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனிடையே, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் தொலைபேசியில்
உரையாடிய ஜனாதிபதி ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக்
குறைப்பது குறித்தும் பிராந்திய அமைதியை ஏற்படுத்துவது குறித்தும்
ஆலோசித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:24:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vikram-misri-meets-with-foreign-affairs-minister-1785934284"></link>
            <id>https://tamilwin.com/article/vikram-misri-meets-with-foreign-affairs-minister-1785934284</id>
            <summary type="text">ஒரு நாள் பயணமாக இன்று(05.08.2026) கொழும்பை வந்தடைந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நாள் பயணமாக இன்று(05.08.2026) கொழும்பை வந்தடைந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துப்
பேச்சு நடத்தியுள்ளார்.
</p><p>
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய மற்றும்
முன்னுரிமை பெற்ற துறைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு
ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்தாலோசித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc72c8e-2730-4fb6-a3eb-a40649a51c26/26-6a7335a625722.webp' /></p><p>முன்னதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலை வாய்ப்பு தேடி கனடா சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - பிரதான சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-in-search-of-employment-kidnapped-1785934214"></link>
            <id>https://tamilwin.com/article/canada-in-search-of-employment-kidnapped-1785934214</id>
            <summary type="text">கனடாவில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி 3 வடக்கு இளைஞர்களை
எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் சென்று கடத்த முற்பட்ட, ஆள்கடத்தல்
வலையமைப்புடன் தொடர்புடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி 3 வடக்கு இளைஞர்களை
எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் சென்று கடத்த முற்பட்ட, ஆள்கடத்தல்
வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆலோசனையின் பேரில், துபாய் ஊடாக
எத்தியோப்பியாவுக்கு மூவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். </p><p>

இவர்கள், சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்
கும்பல் ஒன்றினால் எத்தியோப்பியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்ததுடன், இது
தொடர்பில் முறைப்பாடு ஒன்று கடந்த மே 27ஆம் திகதி பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aac94175-758c-471f-a517-059a972cfd69/26-6a7332066d603.webp' /></p><p>
</p><p>
குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் 64 இலட்சம் ரூபா
பணத்தைப் பெற்றுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களை மீட்க வேண்டும் எனக் கூறி,
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இருந்தும் சுமார் 20 மில்லியன் ரூபா
பணத்தையும் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><h2>

பிரதான சந்தேக நபர் கைது</h2><p>

இதனைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், நெடுங்கேணிப் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், உரிய இராஜதந்திர அதிகாரிகளுடன் இணைந்து
மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள்
மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea89d865-71b9-46f0-848b-0c133754caed/26-6a7332072b62d.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, கடந்த ஜூன் 06 ஆம் திகதி எத்தியோப்பிய அதிகாரிகளால்
இந்த 3 இலங்கையர்களும் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பாகிஸ்தான் பிரஜைகளும், ஒரு எத்தியோப்பியப்
பிரஜையும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.</p><p>

 மேலும், யாழ்ப்பாணம், வவுனியா
மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 34 வயதுக்கு
இடைப்பட்ட இந்த 3 இலங்கை இளைஞர்களும் கடந்த முதலாம் திகதி மீள நாட்டிற்கு
அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:53:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலடிக் கொடுத்த அரச தரப்பு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-warns-againt-sara-kariyavasam-1785934246"></link>
            <id>https://tamilwin.com/article/npp-warns-againt-sara-kariyavasam-1785934246</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு ஆளும் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொலிஸ் மா அதிபருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு ஆளும் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இலங்கையின் தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளமை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

அச்சுறுத்தலுக்கான பிரதான காரணம் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><h2>மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஊழல் மோசடி விசாரணை</h2><p>நீண்டகாலமாக ஊழல், இலஞ்சம் மற்றும் மோசடிகளில் சிக்கியிருந்த இந்த நாட்டில், பல அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட மூடிமறைக்கப்பட்ட வழக்குகளும் விசாரணைகளும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b614096-bc6b-4e4b-a715-06de93bf81d9/26-6a7331a793f43.webp' />&nbsp; &nbsp;</p><p>
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அவர்களை நாட்டுக்கு அழைத்து வந்து சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கான முனைப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விசாரணைகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>“நடு வீதியில் வைத்து கொல்ல வேண்டும்" என்ற கொடூரமான வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிடுவது நீதிக்கும், சட்டவாட்சிக்கும் விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும் என அமைச்சர் சாடியுள்ளார்.
</p><p>போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மக்களின் சொத்துக்களை அபகரித்த நபர்களே இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><h2>படுகொலை சம்பவங்களுடன் தொடர்புட்ட அரசியல்வாதிகள்</h2><p>
</p><p>
சாகர காரியவசம் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியின் சில அரசியல்வாதிகள், உண்மையில் நாட்டின் பாரிய படுகொலைச் சம்பவங்கள் மற்றும் பாரிய கொள்ளைகளுக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab72ddc-8c40-4ea0-8a78-49de2dafacbd/26-6a73385d4db78.webp' /></p><p>
</p><p>
எந்தவொரு தரப்பினரின் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது அவற்றைக் குழப்பவோ எந்தவொரு அரசியல் கட்சிக்கும் உரிமை கிடையாது அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:51:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி - தங்கத்துரை ஆகியோரின் சிலை தொடர்பான தடை.. நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuttymani-thangadhurai-statue-ban-court-order-1785931605"></link>
            <id>https://tamilwin.com/article/kuttymani-thangadhurai-statue-ban-court-order-1785931605</id>
            <summary type="text">வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>வேலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸாரால் அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான
கந்தசாமி சதீஷுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.&nbsp;</p><h2>கால அவகாசம்&nbsp;</h2><p>இந்நிலையில், குறித்த வழக்கில் இன்று வரை
வழங்கப்பட்டிருந்த சிலை அமைப்பதற்கான தற்காலிக தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/766eb7ac-fb09-4838-be84-ab6fd01b3ac0/26-6a732e17b9b64.webp' /></p><p>
</p><p>
கடந்த 22.7.2026 அன்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p>வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு
நேற்றும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் மேலும்
ஆதாரங்களை சமர்ப்பிக்க 14 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டது. </p><p>எனினும், 106ஆம் இலக்க சட்ட
பிரிவின் கீழ் 14 நாட்களுக்கு மேல் தடை உத்தரவு வழங்க முடியாது என்ற
அடிப்படையில், பொலிஸார் எந்தவிதமான ஆதாரங்களையும் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை
உத்தரவு இல்லாதாக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T12:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்ற மத்திய மாகாண ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harsha-suranga-fernando-central-province-governor-1785932534"></link>
            <id>https://tamilwin.com/article/harsha-suranga-fernando-central-province-governor-1785932534</id>
            <summary type="text">மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற சமூக சுகாதார சிகிச்சை நிபுணரான ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ&amp;nbsp;பதவியேற்றுள்ளார் இன்று(05.08.2026) ஜனாதிபதி செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற சமூக சுகாதார சிகிச்சை நிபுணரான ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ&nbsp;பதவியேற்றுள்ளார்</p><p> இன்று(05.08.2026) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் புதிய ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23a820c4-0e4f-469c-a682-d4ff51d5aff4/26-6a732f52b8575.webp' /></p><p>இவர் உலக சுகாதார அமைப்பில் பல நாடுகளில் தடுப்பூசி நிபுணராகப் பணியாற்றியதோடு, கண்டி மாவட்டத்தின் சமூக மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T12:41:26+00:00</updated>
        </entry>
    </feed>
