<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-11T09:22:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றிப்போகும் கிணறுகள்: சீனிபுர பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wells-dried-up-drought-trinco-drinking-water-1789117308"></link>
            <id>https://tamilwin.com/article/wells-dried-up-drought-trinco-drinking-water-1789117308</id>
            <summary type="text">தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கந்தளாய் சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கந்தளாய் சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அத்தோடு,&nbsp;அப்பகுதியிலுள்ள
கிணறுகளின் நீர்மட்டம் வற்றியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>
இந்நிலையில், கந்தளாய் பிரதேச சபையினால் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் கொண்டு
வந்து விநியோகிக்கப்படுவதாகவும், எனினும் தற்போதைய தேவைக்கு அது போதுமானதாக
இல்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>

மேலும், வறட்சி காரணமாக காடுகளிலும் நீராதாரங்கள் குறைந்துள்ளதால், குடிநீரைத்
தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளுக்குள் நுழையும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக
மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d7b6291-4349-4dfd-bef8-03b16a26a285/26-6aa3c6d84e672.webp' /></p><p>சீனிபுர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக
நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T09:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் மற்றுமொரு ஆடம்பர வீடு : அவரது தந்தை சற்று முன்னர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789101993"></link>
            <id>https://tamilwin.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789101993</id>
            <summary type="text">புதிய இணைப்புபோதைப் பொருள் கடத்தல்காரர், ஷிரான் பாசிக்கின் தந்தை அப்துல் ரசாக் முகமது பாசிக் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;மத்தியக் குற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2><b>புதிய இணைப்பு</b></h2><p>போதைப் பொருள் கடத்தல்காரர், ஷிரான் பாசிக்கின் தந்தை அப்துல் ரசாக் முகமது பாசிக் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளார்.&nbsp;</p><p>கம்பஹா பகுதியில் உள்ள 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடொன்றினை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இன்று மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கம்பஹா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில், ஷிரான் பாசிக் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.</p><h2>குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலை&nbsp;</h2><p> </p><p>மேலும், அந்த வீடு அவரது தந்தையின் பெயரில் வாங்கப்பட்டதும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/660c0cbb-68da-4c4b-a9cd-1264a13c9e44/26-6aa392cbb05cf.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தை இன்று (11) மத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதம நீதியரசருக்கு அழுத்தம் கொடுக்கும் அரசின் தனிநபர்..! பிரசாத் சிறிவர்தன சபையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-individual-acting-pressuring-the-chief-justice-1789116494"></link>
            <id>https://tamilwin.com/article/an-individual-acting-pressuring-the-chief-justice-1789116494</id>
            <summary type="text">பிரதம நீதியரசரின் மகனை இலக்காகக் கொண்டு அரசிலுள்ள “டிஜிட்டல் பயங்கரவாதிகள்”
குற்றச்சாட்டுக்களைப் பரப்பி வருகின்றனர் என்றும், தமக்கு ஏற்றாற்போல்
தீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசரின் மகனை இலக்காகக் கொண்டு அரசிலுள்ள “டிஜிட்டல் பயங்கரவாதிகள்”
குற்றச்சாட்டுக்களைப் பரப்பி வருகின்றனர் என்றும், தமக்கு ஏற்றாற்போல்
தீர்ப்பளிக்காவிட்டால் சிறை செல்ல நேரிடும் எனக் கூறி பிரதம நீதியரசருக்கு
அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது என்றும் ஐக்கிய மக்கள்
சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(10.09.2026) வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல்
சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

அரசின் தனிநபர் மூலம் கடும் அழுத்தம்</h2><p>
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தேசிய மற்றும் சர்வதேச
மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அரசின் முக்கிய
தரப்பினருக்குத் தற்போதைய பிரதம நீதியரசரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப்
பதவியில் நீடிக்கச் செய்யும் தேவை காணப்படுகின்றது.</p><p>

நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவராகவும், உயர்நீதிமன்றத்தின் தலைவராகவும் பதவி
வகிக்கும் பிரதம நீதியரசர் நாட்டின் ஜனநாயகத்துக்கு நேரடிச் செல்வாக்குச்
செலுத்தும் ஒருவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9346ab26-892a-4a2b-be3f-7fd346d15e87/26-6aa3c0be7dde4.webp' /></p><p> </p><p>

எனினும், தமக்கு ஏற்ற வகைத் தீர்ப்புகளை வழங்கவும்,
சட்டங்களை இயற்றவும் அரசின் தனிநபர் ஒருவர் மூலமாக அவருக்குக் கடும்
அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.</p><p>

அரசில் உள்ள டிஜிட்டல் பயங்கரவாதிகள் பிரதம நீதியரசரின் மகனை இலக்காகக் கொண்டு
பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். தமக்குச் சாதகமான
தீர்ப்புகள் வழங்கப்படாவிட்டால் சிறை செல்ல நேரிடும் என்ற மிரட்டல்
விடுக்கப்படுவதே இப்போதைய உண்மையாகும்.</p><h2>
பிரதம நீதியரசருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்</h2><p>

இந்த நெருக்கடியான நிலையில் இருந்து பிரதம நீதியரசரை உடனடியாகப்
பாதுகாக்காவிட்டால், நீதித்துறையின் முழுக் கட்டமைப்பையும் அரசு
கைப்பற்றிவிடும். </p><p>இது நாட்டின் ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாக
அமைவதுடன், அரசின் இந்த முறையற்ற செயற்பாட்டைத் தோற்கடிக்காவிட்டால் முழு
நாடும் அழிவைச் சந்திக்கும்.

ஜனாதிபதி நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவே செயற்படுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c40df07-b2c7-4973-936f-78b82855b779/26-6aa3c0bf54d85.webp' /></p><p>
</p><p>நீதிமன்றம் ஒரு விடயம் தொடர்பில் தீர்ப்பளிப்பதற்கு முன்பே, ஜனாதிபதி
முன்கூட்டியே அரசியல் மேடைகளில் தீர்ப்புகள் குறித்துக் கருத்துத்
தெரிவிக்கின்றார்.
</p><p>
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ், டிஜிட்டல்
பயங்கரவாதம் மற்றும் 80ஆம் ஆண்டு காலப்பகுதியின் உண்மையான பயங்கரவாதக்
கூறுகளைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு ஜனாதிபதி செயற்படுகின்றார். இத்தகைய
முறையற்ற செயற்பாடுகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:50:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் FCID-ல் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-appeared-before-the-fcid-1789098506"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-appeared-before-the-fcid-1789098506</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சற்றுமுன்னர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இருந்து வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சற்றுமுன்னர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b1e7f0c-1a3a-4261-81e4-90c70cd83690/26-6aa3bc9f1a1fa.webp' /></p><p> </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><h2>வாக்குமூலம்..</h2><p> 

மிக் ரக விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Y01YyJJ7wLE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இதேவேளை, மிக் ரக விமானக் கொள்வனவு தொடர்பான வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலகவும் நேற்று முன்தினம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b784fc7f-1bf6-40e7-a227-3746acc5f00e/26-6aa37ed3b37a2.webp' /></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lh-7Hx2sMkw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 








</p>]]></content>
            <updated>2026-09-11T08:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/solomon-pappaiah-has-passed-away-1789114678"></link>
            <id>https://tamilwin.com/article/solomon-pappaiah-has-passed-away-1789114678</id>
            <summary type="text">
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இன்று(11.09.2026) காலமானார்.

மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இன்று(11.09.2026) காலமானார்.
</p><p>
மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை வென்று மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் சாலமன் பாப்பையா.
</p><p>
 இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். </p><p>இவரது மனைவி வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். </p><h2>

சாலமன் பாப்பையாவின் மறைவு</h2><p>

இந்த நிலையில் சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக இன்று(11) காலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fd44f16-5a9f-45d3-89ea-6ba3dd0c0299/26-6aa3ba905417e.webp' /></p><p>
</p><p>
 அவரது மறைவு தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தொலைக்காட்சி மற்றும் மேடைகளில் நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த தமிழ்ப் பட்டிமன்றங்களை நடத்தி, உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் புகழ் பெற்றவர் என்பதும் இதன்போது நினைவுக்கூறப்பட்டுள்ளது. </p><p>

மேலும், இவர், ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-09-11T08:24:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீழ்ச்சியடையும் தமிழர்களின் எண்ணிக்கை! - நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srithran-mp-statement-about-tamil-people-1789110571"></link>
            <id>https://tamilwin.com/article/srithran-mp-statement-about-tamil-people-1789110571</id>
            <summary type="text">தமிழர் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை அறிய முடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p> 

நாடாளுமன்றத்தில் நேற்று (10.09.2026) நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>யுத்த விதவைகள்</h2><p>
</p><p>
மேலும் தெரிவிக்கையில், எனக்கு முன்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் மகளிர் விவகார பிரதி அமைச்சராக இருந்தவர். அப்போது அவர் இந்தச் சபையில் வடக்கு மற்றும் கிழக்கில் 90 ஆயிரம் யுத்த விதவைகள் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். 

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்த விதவைகள் இருப்பது என்பது சாதாரணமானது அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c20e6ca-36c8-4d41-a19e-b4ab8e1d08c0/26-6aa3ba2b28337.webp' /></p><p> </p><p>கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதனை புரிந்துகொள்ளலாம். 

இது எமது மண்ணில் எந்தளவுக்குப் பாதிப்பானது என்பதனையும் அறியலாம். இதேவேளை இவ்வளவு காலம் இல்லாத புதிய விடயமான பெண்கள் பற்றிய இந்தத் தேசிய ஆணைக்குழு வரவேற்கத்தக்கது. </p><p>இவர்கள் யுத்த விதவைகள் விடயத்தில் எவ்வாறு நடக்கப் போகின்றனர்? இவர்களின் செயற்றிட்டங்கள் எவ்வாறு இருக்கப் போகின்றன? 

பல பெண்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் தலைவிகளாக இருக்கின்றனர். பிள்ளைகளைப் படிப்பித்து வளர்த்துள்ளனர். பரீட்சை பெறுபேறுகளில் அவற்றை அறியலாம். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வரும் போது பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கணவன் இறந்த பின்னர் குடும்பத்தை அந்தப் பெண்கள் கொண்டு சென்றனர்.</p><h2>மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்</h2><p> </p><p>

ஆனால், அவர்களுக்கான வாழ்வாதார உதவி இன்று வரையில் சரியான முறையில் வழங்கவில்லை. இவர்கள் விடயத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அமைச்சர் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும். 

தமிழர் பண்பாட்டில் குங்குமப் பொட்டு அடையாளமாக இருக்கின்றது. எத்தனையோ பெண்கள் கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் குங்குமப் பொட்டுடனும் தாலியுடனும் இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f5d5934-9135-4a5c-bec8-d4b0ad42f132/26-6aa3ba2bd43bb.webp' /></p><p> </p><p>இதனால் இந்த ஆணைக்குழுவினால் செய்யப்படவுள்ள பணிகள் ஏனைய ஆணைக்குழுவைப் போலல்லாது எமது பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும். 

கடந்த 2017.02.20ஆம் திகதி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் தொடர் போராட்டங்களை ஆரம்பித்தனர். அது இன்று 10 வருடங்களாகின்றன. இந்தத் தொடர் போராட்ட காலத்தில் 420 இற்கும் மேற்பட்ட தாய், தந்தைகள் இறந்துள்ளனர்.</p><p> இந்தப் போராட்டத்துக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்தும் போராடுகின்றனர். 

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்கள் இரட்டிப்பாக வேண்டிய சூழல் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் நீதி கிடைக்க வேண்டிய பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இதனால் நீதிக்காகப் போராடும் பெண்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதியான நேர்மையான இனங்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் தமது செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T08:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3711-bullets-found-in-a-pit-at-old-vip-residence-1789094917"></link>
            <id>https://tamilwin.com/article/3711-bullets-found-in-a-pit-at-old-vip-residence-1789094917</id>
            <summary type="text">கண்டி, கஹபத்வல பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகளுடன் மிக நெருக்கமான பிரபல வர்த்தகர் ஒருவரின்&amp;nbsp; பங்களா ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, கஹபத்வல பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகளுடன் மிக நெருக்கமான பிரபல வர்த்தகர் ஒருவரின்&nbsp; பங்களா ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p> 

பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் குழுவொன்று, பங்களாவில் கொங்கிறீட் போட்டு மூடப்பட்டிருந்த குழி ஒன்றை தோண்டியுள்ளனர்.</p><p> 

இதன்போது, அதற்குள் இருந்த துப்பாக்கிகள், பிஸ்டல்கள், தானியங்கித் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் உள்ளிட்ட பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><h2><b>

ஆயுதங்கள் மீட்பு </b></h2><p>அவற்றில் 409 டி-56 ரவைகளும், 2310 பிஸ்டல் ரவைகளும், 384 ரிவோல்வர் ரவைகளும், பொலிஸ் விசேட அதிரடிப்படையால் பயன்படுத்தப்படும் MPMG ரக 167 ரவைகளும், எம்16 ரக 411 ரவைகளும், 22 - 28 பொயிண்ட் போரில் 12 துப்பாக்கித் ரவைகள் இரண்டு உட்பட மேலும் பல ரவைகளும் 4 தகரப் பெட்டிகளும் இந்த பொருட்களில் அடங்கியிருந்தன.</p><p> </p><p>குறித்த வெடிபொருட்கள் மற்றும் ரவைகள் தொகுதி குறித்து பங்களாவின் உரிமையாளரான வர்த்தகரால் கலகெதர பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a837a0-f6d4-41d4-8fe9-d3ce148a1b91/26-6aa36f84d91ea.webp' />&nbsp;&nbsp;</p><p>

இதனை அடுத்து, பொலிஸ் அதிகாரிகள் அந்தத் துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் உள்ளிட்ட ஆயுதப் பெட்டிகளைப் பரிசோதித்து அவற்றை பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர். </p><p>

இந்த வெடிபொருட்கள் இருந்த வீடு, கண்டியைச் சேர்ந்த மற்றுமொரு&nbsp; வர்த்தகர் ஒருவரால் 2022 ஆம் ஆண்டு, சமூகத்தில் பிரபலமான ஒருவரின் உறவினரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்து மேலதிக விசாரணைகளை கலகெதர பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T08:12:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் 1.89 பில்லியன் டொலர்களாக உயர்ந்த கடன்தொகை - திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tissa-attanayake-allegations-against-npp-goverment-1789114106"></link>
            <id>https://tamilwin.com/article/tissa-attanayake-allegations-against-npp-goverment-1789114106</id>
            <summary type="text">1971 மற்றும் 1988/1989 காலப்பகுதிகளில் வன்முறைகள் மூலம் நாட்டின்
பொருளாதாரக் கட்டமைப்புகளைச் சீரழித்தவர்கள், இன்று பொருளாதாரத்தைச்
சீரமைப்பதாகக் கூற...</summary>
            <content type="html"><![CDATA[<p>1971 மற்றும் 1988/1989 காலப்பகுதிகளில் வன்முறைகள் மூலம் நாட்டின்
பொருளாதாரக் கட்டமைப்புகளைச் சீரழித்தவர்கள், இன்று பொருளாதாரத்தைச்
சீரமைப்பதாகக் கூறுவது வேடிக்கையானது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய
அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் நேற்று(10.09.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

1.89 பில்லியன் டொலர்களாக கடன்தொகை அதிகரிப்பு</h2><p>

அவர் அங்கு மேலும் கூறுகையில்,</p><p>

2026 மார்ச் மாதமளவில் நாட்டின் கடன் சுமை 3,198 பில்லியன் ரூபாவாகவும்,
அதில் வெளிநாட்டுக் கடன் மட்டும் 1.89 பில்லியன் டொலர்களாகவும்
அதிகரித்துள்ளது. </p><p>

கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது கடன்
வாங்குவதைக் கடுமையாக எதிர்த்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, ஆட்சிக்கு
வந்த கடந்த 24 மாதங்களில் 76 ஆண்டுகால வரலாற்றை விட வேகமான விகிதத்தில்
பெருமளவு கடன்களைப் பெற்று நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e006f3e5-6b3d-45f6-aeec-d6e6c9043ad3/26-6aa3b77e02ce3.webp' /></p><p>

கடந்த கால அரசுகள் கடன் பெற்று மகாவலி, நெடுஞ்சாலைகள், வீட்டுவசதி மற்றும்
மின்சார உற்பத்தி போன்ற பெரிய அளவிலான அபிவிருத்திகளைச் செய்தன. ஆனால்,
தற்போதைய அரசு அத்தகைய எந்தவொரு புதிய வளர்ச்சித் திட்டங்களையும்
முன்னெடுக்கவில்லை.
</p><h2>
அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி</h2><p>
பெறப்படும் கடன்களாலும் அத்தியாவசியப் பொருள்கள் மீது சுமத்தப்படும் மறைமுக
வரிகளாலும் திறைசேரி நிரப்பப்படுகின்றது. பால்மா, கோதுமை மா மற்றும் எரிபொருள்
விலைகள் அதிகரிக்கப்படுவதால் பொதுமக்கள் மீது தாங்க முடியாத பொருளாதாரச் சுமை
திணிக்கப்பட்டு, தனிநபர் கடன் வீதம் கணிசமாக உயர்ந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc9dcece-2a8d-4118-9a19-980698f66d00/26-6aa3b77ed4d21.webp' /></p><p>
</p><p>
நாட்டின் பொருளாதாரத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி
முதுகெலும்பாகத் திகழும் தனியார் துறையை, ஊழல் நிறைந்ததாகச் சித்தரித்து
பலவீனப்படுத்த அரசு முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
</p><p>
தனியார் துறை மீது குறைகூறுவதற்கு முன், நுரைச்சோலை நிலக்கரி கொள்முதல்
முறைகேடுகள் மற்றும் 325 கொள்கலன்கள் வரியின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் போன்ற
அரச துறை சார்ந்த ஊழல்களையே அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
</p><h2>
 22 ஆவது திருத்தத்தின் உள்நோக்கம் இதுவே..</h2><p>
கடந்த 76 ஆண்டுகளாக நாட்டில் 'கறுப்புப் பொருளாதாரம்' மட்டுமே இருந்ததாக
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுவது மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.</p><p> 1948இல்
சுதந்திரம் அடைந்தது முதல் விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் ஆடைத் தொழில்
ஆகியவற்றில் நாடு அடைந்த பிரமாண்ட வளர்ச்சியே இன்றுவரை நாடு செயற்படக் காரணம்.
1971 மற்றும் 1988/89 காலப்பகுதிகளில் வன்முறைகள் மூலம் நாட்டின் பொருளாதாரக்
கட்டமைப்புகளையும் பேருந்துகளையும் தீக்கிரையாக்கிப் பொருளாதாரத்தைச் சீரழித்த
வரலாற்றைக் கொண்டவர்களே இன்று பொருளாதாரத்தைச் சீரமைப்பதாகப் பேசுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe903da-f05f-4d15-8b66-c3597429c0e1/26-6aa3b77f8a4e3.webp' /></p><p>

அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது நீதிமன்றங்களின் வழக்குத் தாமதத்தைக்
குறைப்பதற்கோ மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கோ கொண்டுவரப்படவில்லை. </p><p>இது
அரசின் இருப்பைப் பாதுகாக்கவும், நீதித்துறையின் அதிகாரத்தில் தலையிடவுமே
கொண்டுவரப்படுகின்றது.

கீழ் நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்க உயர்மட்ட
நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை மட்டும் அதிகரிப்பது உள்நோக்கம் கொண்டது.</p><p>

எனவே, பொய்ப் பிரசாரங்களை நிறுத்திவிட்டு, மாகாண சபைத் தேர்தலையோ அல்லது
சர்வஜன வாக்கெடுப்பையோ நடத்தி மக்கள் தீர்ப்பை அரசு எதிர்கொள்ள வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:10:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-increase-in-electricity-bills-next-quarter-1789110384"></link>
            <id>https://tamilwin.com/article/no-increase-in-electricity-bills-next-quarter-1789110384</id>
            <summary type="text">அடுத்த காலாண்டில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த காலாண்டில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அதிக மழைவீழ்ச்சி</h2><p>கடந்த காலத்தில் அதிக மழைவீழ்ச்சி கிடைத்தமையால் மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளமையினால், அடுத்த காலாண்டிற்கு மின்சார கட்டண அதிகரிப்பு தேவையில்லை என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e36b533e-fa4f-450a-80e7-cdcf3b701ed3/26-6aa3b4919aaba.webp' />&nbsp;</p><p> அதற்கமைய மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அத்துடன், எதிர்வரும் ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:58:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பியங்கர மீண்டும் நீதிமன்றில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/piyankara-jayaratne-appearing-in-court-1789112226"></link>
            <id>https://tamilwin.com/article/piyankara-jayaratne-appearing-in-court-1789112226</id>
            <summary type="text">சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு ஊழல் வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு ஊழல் வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் இன்று (11.09.2026) சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f14214-4cdc-419e-b080-fbe8bd0f9c5f/26-6aa3b44d4d024.webp' /></p><p>
அங்கு சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஒரு திகதியை நிர்ணயித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறக்குமதி பொருட்கள் மீதான செஸ் வரி நீக்கம் - விரைவில் அரசு கொண்டுவரும் புதிய கட்டண முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/removal-of-cess-on-imported-goods-1789113242"></link>
            <id>https://tamilwin.com/article/removal-of-cess-on-imported-goods-1789113242</id>
            <summary type="text">உள்ளூர் தொழிலதிபர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த செஸ் வரியை நீக்கி, ஒரு புதிய கட்டண முறையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்ளூர் தொழிலதிபர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த செஸ் வரியை நீக்கி, ஒரு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>



இந்த செஸ் வரிகள் படிப்படியாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். </p><h2>



உள்ளூர் தொழிலதிபர்களுக்கு வெளியான அறிவிப்பு</h2><p>
உள்ளூர் தொழிலதிபர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது செஸ் வரிகள் விதிக்கப்பட்டாலும், பெரும்பாலான உள்ளூர் தொழில்கள் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களையே சார்ந்துள்ளன என்றும், அந்தப் பொருட்களின் விலையும் அதே அளவில் அதிகமாக இருப்பதால், செஸ் வரிகளைப் படிப்படியாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7a6d250-0a3b-4dd9-b806-fb8f2de97d5b/26-6aa3b41430403.webp' /></p><p>
</p><p>


இதன் அடிப்படையில், இடைநிலைப் பொருட்களுக்குச் சலுகைக் காலத்துடன் படிப்படியாக செஸ் வரிகளை முதலில் நீக்குவதன் மூலம், உள்ளூர் தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும், படிப்படியான உற்பத்தி செயல்முறைக்கு உற்பத்தியாளர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும், அத்தியாவசிய மூலப்பொருட்களின் செலவுகளைக் குறைக்கவும் வழிவகை செய்யும் ஒரு அணுகுமுறையை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.</p><p>

செஸ் மற்றும் கலால் வரிகளை நீக்குவதோடு ஒரு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும், அதன்படி 4 பிரிவுகளின் கீழ் கட்டண முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

4 பிரிவுகளின் கீழ் புதிய வரிகள்</h2><p>
0%, 10%, 20% மற்றும் 30% ஆகிய 4 பிரிவுகளின் கீழ் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பொருட்களுக்கு 0% வரியும், முடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்சமாக 30% வரையிலான புதிய வரிகளும் விதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35724f14-6905-43dd-8acd-5dc1959d95e8/26-6aa3b4151d1e2.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, இந்தத் திட்டங்கள் மூலம் உள்ளூர் தொழிலதிபர்களைப் பாதுகாக்க அரசு மேலும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு: நான்கில் இரு பிரிவினருக்கு மாத்திரமே பணம்..! வெளிவந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aswesuma-beneficiaries-drops-to-1-2-million-1789110804"></link>
            <id>https://tamilwin.com/article/aswesuma-beneficiaries-drops-to-1-2-million-1789110804</id>
            <summary type="text">குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணமாக வழங்கப்பட்ட அஸ்வெசுமவின் நான்கு பிரிவு பயனாளிகளில், இரு பிரிவைச் சேர்ந்த பயனாளிகளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணமாக வழங்கப்பட்ட அஸ்வெசுமவின் நான்கு பிரிவு பயனாளிகளில், இரு பிரிவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மாத்திரமே கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். </p><p>

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் அஸ்வெசும நிவாரணத்தை நீக்குமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய தினம் (11.09.2026) நாடாளுமன்றில் வைத்து கேள்வியெழுப்பியுள்ளார்.</p><p>

இதற்கு பதிலளிக்கும் போதே அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அஸ்வெசும வேலைத்திட்டம்</h2><p> 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2023ஆம் ஆண்டில் அஸ்வெசும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் போதே அதில் மீள் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்டத்தின் ஊடாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17585163-4813-4ca3-b5c1-5ae80dec91f9/26-6aa3afa1359a6.webp' /></p><p>

இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை இம்மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். </p><p>

இந்த வேலைத்திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போது 1,773,445 பயனாளிகள் இருந்தனர். எனினும் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும் போது அது 1,761,116 ஆகப் பதிவாகியிருந்தது.</p><p>
கடந்த 2025ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆகப் பதிவாகியிருந்த போதிலும், இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் ஆகும் போது பயனாளிகளின் எண்ணிக்கை 1,251,522ஆக குறைந்துள்ளது.

இதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.</p><h2>கொடுப்பனவு</h2><p> </p><p>அதற்கமைய, அதிவறிய, வறிய, பாதிப்படையக்கூடிய மற்றும் இடைக்கால ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அஸ்வெசும நன்மைகள் வழங்கப்பட்டன.

இடைக்காலப் பிரிவினருக்காகச் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திலும், பாதிப்படையக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்திலும் நிறைவடைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8f8900-67d3-427b-8ce1-8d41b1500834/26-6aa3afa1e81cb.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, தற்போது அதிவறிய மற்றும் வறிய ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரம் அஸ்வெசும கொடுப்பனவுகளைச் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அதற்கு மத்தியில் மீள் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:37:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiya-sumanarathana-thero-released-on-bail-1789109858"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiya-sumanarathana-thero-released-on-bail-1789109858</id>
            <summary type="text">மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இது தொடர்பான வழக்கு இன்று (11.09.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>அச்சுறுத்தல் விடுத்த அதிகாரிகளுக்கான உத்தரவு</h2><p>
</p><p>
இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a706a249-d60c-47ae-a23b-c757f324d916/26-6aa3a824030b2.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p><b><i>மேலதிக தகவல் -ருசாத்</i></b></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகர் பதவியில் தொடர்வதற்கு ஜகத் விக்ரமரத்னவுக்கு எந்த அருகதையும் இல்லை! முஜிபுர் ரஹ்மான் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-remarks-regarding-the-speaker-1789111233"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-remarks-regarding-the-speaker-1789111233</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை
ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்
தொடர்ந்து சபாநாயகர் ஆச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை
ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்
தொடர்ந்து சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல்
சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"நாடாளுமன்ற சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதிலிருந்து கடந்த
இரண்டு வருட காலப்பகுதியில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் மற்றும்
சம்பவங்கள் தொடர்பிலேயே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன.</p><h2>சட்டம் பொதுவானது&nbsp;</h2><p>
</p><p>
ஊழல் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்ட
உயர் அதிகாரி விசாரணைகளுக்கு வழிவிட்டுத் தற்காலிகமாகப் பதவியிலிருந்து விலக
வேண்டும் என்பதே நியதியாகும். ஆனால், சபாநாயகர் இந்த ஆசனத்தில் தொடர்ந்தும்
இருப்பது பிரச்சினைக்குரியதுடன் சட்டப்படியும் கேள்விகளை எழுப்புகின்றது.
</p><p>
நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் மேடைகளில் கூறியது இதனைத்தானே?
சட்டம் அனைத்துக்கும் பொதுவானது என்று கூறிவிட்டு, தற்போது அதற்கு முரணாக
நடப்பது ஏற்புடையதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c82131e-c1be-4564-afd9-62973124e8ca/26-6aa3abc30f7aa.webp' /></p><p>
</p><p>
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்குச் சபாநாயகர் இடமளிக்க மறுத்தால்,
அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் நிலையியல் கட்டளைகள்
தொடர்பான பாரிய பிரச்சினையாகும்.</p><p>

எதிர்க்கட்சியில் இருக்கும் போது நீங்கள் இவ்வாறான உரிமை விடயங்கள் தொடர்பில்
கதைத்தவர்கள். உங்களால் சபாநாயகர் ஆசனத்தில் அமர்த்தப்பட்ட ஜகத் விக்ரமரத்ன
இப்போது சர்வாதிகாரி போன்று நடக்கின்றார். எந்தவொரு சபாநாயகரும் இவ்வாறு
சர்வாதிகாரி போன்று நடந்துகொண்டதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30623b2f-9ffa-4224-b97a-24625e824e61/26-6aa3abc3b78bc.webp' /></p><p>
</p><p>
இதற்கு முன்னர் இந்தச் சபாநாயகர் ஆசனத்தில் இருந்தவரைச் சான்றிதழ் இல்லை எனக்
கூறி நீக்கியது அநியாயமானது என்றே இப்போது தோன்றுகின்றது.

சான்றிதழ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அசோக ரன்வலையையே தொடர்ந்து அந்தப்
பதவியில் வைத்திருந்திருக்கலாம்.</p><p> அல்லது, நடுநிலையாகவும் தகுதியுடனும் சபையைத்
தற்போது நடத்திச் செல்லும் பிரதி சபாநாயகரைச் சபாநாயகராக நியமிக்குமாறு
கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:20:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-bomb-attack-information-released-police-1789093479"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-bomb-attack-information-released-police-1789093479</id>
            <summary type="text">புதிய இணைப்புதெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த முச்சக்கரவண்டி பாதுக்க - பஹல போபே பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இன்று (11) அதிகாலை 3 மணியளவில், தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாதநபர் ஒருவர் கைக்குண்டை வீசியுள்ளார்.</p><h2>சிசிடிவி கமராவில் பதிவு</h2><p>சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் வந்து இறங்கி வீட்டின் கதவை தட்டி, வீட்டிற்குள் குண்டை வீசியமை சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad045ab-70dc-442f-8126-b5d7b7435cb9/26-6aa3aac9c74ce.webp' /></p><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.</p><p>இருப்பினும், காயமடைந்த நபர் மீது எந்த குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;இதன்படி, சந்தேகநபர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் செயல்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>தெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணமென&nbsp;பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><p>தவறான இலக்கு காரணமாகவே குறித்த இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>அவர்களின் தந்தை (55) களுபோவில போதனா வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>போதைப்பொருள் வலையமைப்பு</h2><p>காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5069f853-508f-4fdd-b139-207331bf889b/26-6aa3980e2132a.webp' /></p><p>மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>&nbsp;குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் செயல்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93ecd2e0-b149-4e89-b955-65a99900e3bc/26-6aa3980d6037d.webp' />&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தெஹிவளை - சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.</p><p>இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கைக்கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2>தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள்</h2><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed2e9d97-0e0b-4c8c-8a8f-6766da0c7b9e/26-6aa36a66f0f2b.webp' /></p><p>உயிரிழந்தவர்கள் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் என பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-11T07:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் 3 நாள் பிரமாண்ட உணவுத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-2026-1789109497"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-2026-1789109497</id>
            <summary type="text">றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் ஏற்பாட்டில், வடக்கு கிழக்கின் முக்கிய
பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை, இம்முறை “றீச்சா
உணவுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் ஏற்பாட்டில், வடக்கு கிழக்கின் முக்கிய
பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை, இம்முறை “றீச்சா
உணவுத் திருவிழா 2026” எனும் பிரமாண்டமான 3 நாள் உணவு திருவிழாவை நடத்துவதற்கு
தயாராகியுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று(11.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் றீச்சா ஒருங்கிணைந்த
பண்ணை முகாமைத்துவ குழுவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
</p><h2>செல்லுபடியாகும் டிக்கெட்டை பெற்றவர்கள்</h2><p>
மேலும் தெரிவிக்கையில்,
2026 ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்தில் நடைபெறவுள்ள இவ்விழா, பாரம்பரிய உணவுகளின் சுவையையும் நவீன உணவு
அனுபவங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1ec0d8-9306-4572-adda-7bb19d100115/26-6aa3a6a048947.webp' /></p><p>
றீச்சா உணவுத் திருவிழா 2026 இல் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு பல்வேறு
பாரம்பரிய மற்றும் சிறப்பு உணவு வகைகளை வரையறையற்ற முறையில் சுவைத்து மகிழ
வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.&nbsp;</p><p>உணவு திருவிழாவின் பிரதான வரையறையற்ற உணவு சேவை மாலை 6.00 மணி முதல் இரவு
10.00 மணி வரை நடைபெறும். ஒரே டிக்கெட்டினால் பார்வையாளர்கள் இச்சிறப்பான உணவு
அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
உணவு திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட்டை பெற்றவர்கள் காலை 8.00
மணிமுதல் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்திற்குள் வருகை தர முடியும்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0PVB_oleMao" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
பகல் நேரத்தில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பொழுதுபோக்கு
நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுக்களை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும்
அனுபவிக்க முடியும். </p><p>விளையாட்டுகளில் பங்கேற்க விரும்புவோர் அதற்கான
விளையாட்டு டிக்கெட்டுகளை தனியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்மூலம், உணவு திருவிழா டிக்கெட் பெற்றவர்கள் காலைமுதல் இரவு வரை றீச்சா
வளாகத்தில் முழுமையான குடும்ப மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறுவதற்கான
வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>டிக்கெட் தொகை திருப்பிச் செலுத்தப்படமாட்டாது</h2><p>ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்திற்குள் உணவு திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட் பெற்றவர்கள்
மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
</p><p>எனவே, ஏற்பாட்டாளர்கள், உணவு திருவிழா டிக்கெட் இல்லாத ஏனைய பார்வையாளர்கள்
மேற்குறிப்பிட்ட 3 நாட்களிலும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிடுவதைத்
தவிர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ec1bba-8889-46cb-8a94-c5d1d9c9e2e7/26-6aa3a8d155af4.webp' /></p><p>

பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் ஒழுங்கான நிகழ்வு நிர்வாகத்தையும்
உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 1,500 பார்வையாளர்கள்
மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
</p><p>இதன்படி, 3 நாட்களிலும் மொத்தமாக 4,500 பார்வையாளர்கள் மட்டுமே உணவு
திருவிழாவில் பங்கேற்க முடியும்.
குறிப்பிட்ட எண்ணிக்கை பூர்த்தியடைந்த பின்னர் மேலதிக டிக்கெட்டுகள்
வழங்கப்படமாட்டாது.
</p><p>
'றீச்சா உணவுத் திருவிழா 2026'இற்கான அனைத்து டிக்கெட்டுகளும் இணைய வழி மூலம்
மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
ஆர்வமுள்ள பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து
பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.&nbsp;</p><p>டிக்கெட் வாங்கிய பின்னர் நிகழ்வில் கலந்துகொள்ளாதது அல்லது தனிப்பட்ட
காரணங்களுக்காக வருகை தரமுடியாதது போன்ற சந்தர்ப்பங்களில் டிக்கெட் தொகை
திருப்பிச் செலுத்தப்படமாட்டாது.
</p><p>எனவே, டிக்கெட் வாங்குவதற்கு முன் நிகழ்வின் அனைத்து விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகளையும் கவனமாக வாசித்து, அவற்றை புரிந்துகொண்டு டிக்கெட் கொள்வனவு
செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
</p><p>
விழாவில் கலந்துகொள்ளும் அனைத்து பார்வையாளர்களும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்தின் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் ஏனைய பார்வையாளர்களின் வசதியை
கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ, லா நினா தாக்கங்கள் தொடர்பில் சபையில் விசேட கேள்விகளை எழுப்பிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789107821"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789107821</id>
            <summary type="text">எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள்
தொடர்பில் அரசு எடுத்துள்ள முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும்
முன்னறிவுறுத்தல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள்
தொடர்பில் அரசு எடுத்துள்ள முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும்
முன்னறிவுறுத்தல்கள் என்ன என்பது குறித்து நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றைய தினம் (10.09.2026) நாடாளுமன்றத்தில் விசேட கேள்விகளை
எழுப்பினார்.
</p><p>
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எல் நினோ காலநிலை நிகழ்வினால் ஏற்படக்கூடிய நீர், மின்சாரம் மற்றும் உணவு
நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய கடந்த 2026 ஜூன் 22ஆம் திகதியன்று சுற்றாடல்
அமைச்சர் தலைமையில் விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும்
நியமிக்கப்பட்டன. </p><p>எனினும், இந்தக் குழு நியமிக்கப்படுவதற்கு 6 மாதங்களுக்கு
முன்பிருந்தே ஐக்கிய மக்கள் சக்தி இதுகுறித்த எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.</p><h2>பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?</h2><p>
</p><p>
அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்
ஆகியவற்றின் தரவுகளின்படி, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை மாவட்ட
வாரியாக எவ்வளவு? இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2571e27c-ce6a-4de8-8ee0-93a04728b1ef/26-6aa3a833d0c9d.webp' /></p><p>
</p><p>
எல் நினோ தாக்கம் குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் மிக அண்மைய
உத்தியோகபூர்வ முன்னறிவிப்பு என்ன? இது அதன் உச்சபட்ச தீவிரத்தை அடைய
எதிர்பார்க்கப்படும் காலம் யாது?</p><p>

வறட்சியைத் தொடர்ந்து அக்டோபர் - நவம்பர் இடைப்பருவ காலத்தில் திடீர் வெள்ளம்
மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ளதால், மொனராகலை, பதுளை, அம்பாறை மற்றும்
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான முன்எச்சரிக்கை மற்றும் வெளியேற்றும்
திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா?</p><h2>நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர்மட்டம் என்ன?</h2><p>

2026 ஜூன் 30ஆம் திகதி நடைபெற்ற முதலாவது உப குழு கூட்டத்தில் அரச
நிறுவனங்களிடம் கோரப்பட்ட செயற்றிட்டங்கள் குறித்த கால எல்லைக்குள்
பெறப்பட்டதா? அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைகளின் கால அட்டவணை என்ன?

ரந்தெனிகல, விக்டோரியா, கொத்மலை உள்ளிட்ட மகாவலி நீர்த்தேக்கங்களின் தற்போதைய
நீர்மட்டம் என்ன?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69856fe7-1e6d-4d14-945d-5da6e3343348/26-6aa3a83490931.webp' /></p><p> </p><p>அனல் மின் நிலையங்களைச் சார்ந்திருப்பதால் ஏற்படும் மேலதிக
செலவுகள் எதிர்வரும் மாதங்களில் நுகர்வோரின் மின்சாரக் கட்டணத்தில் தாக்கத்தை
ஏற்படுத்துமா?

சிறுபோகப் பருவத்தில் பாசன நீர் பற்றாக்குறையால் சேதமடைந்த நெல் மற்றும்
பயிர்ச் செய்கைகளின் பரப்பளவு எவ்வளவு? </p><p>பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை
இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? பெரும்போகத்துக்கான விதை, உர மானியம் மற்றும்
பாசன நீர் வழங்கும் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா? என பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் புதிதாக சிம் அட்டை வாங்குவோர் கவனத்திற்கு..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-activities-using-fake-sim-cards-trc-1789104547"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-activities-using-fake-sim-cards-trc-1789104547</id>
            <summary type="text">புதிதாக சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.</p><h2>சிம் அட்டைகள் தொடர்பான ஒழுங்குமுறை</h2><p>இதன் காரணமாக, சிம் அட்டைகள் தொடர்பான ஒழுங்குமுறை நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைமை பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>நேற்று (10) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0f0957-d85a-42a0-9ced-bff25addcd25/26-6aa3a62ca80c6.webp' />&nbsp;</p><p>சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம். ஏனெனில், பொலிஸ் போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால் சிம் விதிமுறைகளைப் புதுப்பித்துள்ளோம்.</p><p>கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், கூறப்பட்டது. </p><p>குறிப்பாக இது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் மட்டுமே அந்தச் சிம் அட்டையைப் பெற முடியும்.</p><h2>தொலைபேசி மற்றும் சிம் பயனர்களுக்கான அறிவிப்பு</h2><p>அதற்குப் பிறகு, 2027-ல் அனைத்து தொலைபேசி மற்றும் சிம் பயனர்களுக்கும் 100 சதவீத வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிசெய்யும் ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம்.</p><p>
இது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டவர்களுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/147a0d60-a37c-44bc-b645-573b7772c112/26-6aa3a62d7f55a.webp' /></p><p> நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம்.</p><p>
நாட்டில் கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் இந்த சிம்களைப் பயன்படுத்துகின்றனர். சேவை தரம் குறைவாக இருப்பதாக மக்களிடமிருந்து முறைப்பாது வருகின்றன.</p><p>தற்போது சேவை வழங்குநர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே இயங்கி வருவதனால் அதனை மேலும் துல்லியமாகக் கண்டறிவதற்கான கட்டமைப்பு எம்மிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T06:58:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பிய தயாசிறி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dayasiri-issue-breach-parliamentary-privilege-1789107755"></link>
            <id>https://tamilwin.com/article/dayasiri-issue-breach-parliamentary-privilege-1789107755</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு
விசாரணையொன்றை முன்னெடுத்துள்ள நிலையில், அவர் சட்டமன்றத்துக்குத் தலைமை
தாங்கவோ அல்லது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு
விசாரணையொன்றை முன்னெடுத்துள்ள நிலையில், அவர் சட்டமன்றத்துக்குத் தலைமை
தாங்கவோ அல்லது அரசமைப்புச் சபையின் தலைவர் பதவியை வகிக்கவோ சட்டப்படியோ
ஒழுக்கவியல் பிரகாரமோ உரிமையில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
சபாநாயகருக்கு எதிரான இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளைச் சுட்டிக்காட்டி,
நாடாளுமன்றத்தில் நேற்று(10.09.2026) சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை அவர்
முன்வைத்தார்.
</p><h2>சபாநாயகர் பதவிக் காலத்தில்&nbsp;</h2><p>
அவர் முன்வைத்த சிறப்புரிமைப் பிரச்சினையின் முக்கிய அம்சங்கள் வருமாறு, சபாநாயகர் பதவியை வகித்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குதல்
மற்றும் அரசமைப்புச் சபையின் தலைவராகச் செயற்படுதல் தொடர்பில் எழுந்துள்ள
சட்ட, ஒழுக்கவியல் மற்றும் நிறுவன நம்பகத்தன்மை சார்ந்த சிறப்புரிமைப்
பிரச்சினையாக இது அமைகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94439b78-af29-4aff-865f-eb4036cc4155/26-6aa3a2ba09721.webp' /></p><p> 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க நாடாளுமன்ற
(அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும்
நிலையியல் கட்டளை 29 இன் பிரகாரம் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>சபாநாயகர் பதவிக் காலத்தில் அரச வளங்கள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்தியதில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே ஆணைக்குழு
விசாரித்து வருகின்றது. </p><p>ஆணைக்குழு விசாரணை நடத்துவதனால் மாத்திரம் ஒருவர்
குற்றவாளியாக மாட்டார் என்பதையும், சட்டபூர்வ நடைமுறைகள் முடியும் வரை
அவருக்குக் குற்றமற்றவர் என்ற அனுமானம் உண்டு என்பதையும் ஆரம்பத்திலேயே
தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.</p><p>

சுதந்திரமான ஆணைக்குழுக்களுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கும் அரசமைப்புச்
சபையின் தலைவராகவும், விசாரணைக்குத் தேவையான சாட்சியங்களை வழங்கும்
நாடாளுமன்றத்தின் தலைவராகவும் அவர் தொடர்வது நம்பகத்தன்மை தொடர்பில் பல
கேள்விகளை எழுப்புகின்றது.</p><h2>கடுமையான சட்ட மற்றும் ஒழுக்கவியல் பிரச்சினை</h2><p> </p><p>2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச்
சட்டத்தின் 162 ஆம் பிரிவின் கீழ் சபாநாயகரும் 'அரசு ஊழியர்' என்ற
வரையறைக்குள் அடங்குவதால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 107 ஆம் பிரிவின்படி
விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட
முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79572592-9cef-4934-9e37-63905e814caf/26-6aa3a2bab63f2.webp' /></p><p>எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல்
எதிர்ப்புச் சட்டத் திருத்தத்துக்கு அரசமைப்பின் 79 ஆம் உறுப்புரையின்படி
சபாநாயகர் தனது கையொப்பத்துடன் சான்றளிக்க வேண்டும். </p><p>எனினும், தற்போதைய சட்ட
ஏற்பாடுகளின்படி சபாநாயகரால் அந்தச் சான்றிழைப் பதிவு செய்ய முடியாது.
</p><p>
மேலும், ஆணைக்குழுவின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட
மதிப்பீடுகளைச் சபையில் சமர்ப்பித்தமை போன்ற நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட
முடியாது.
</p><p>
இது வெறுமனே அரசமைப்புச் சார்ந்த பிரச்சினை மட்டுமல்லாது, நலன் முரண்பாடு
தொடர்பான கடுமையான சட்ட மற்றும் ஒழுக்கவியல் பிரச்சினையாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T06:45:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! பதிவாகியுள்ள புதிய விலை நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1789106815"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1789106815</id>
            <summary type="text">கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.09.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.சந்தை நிலவரங்களின்படி, நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.09.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.</p><p>சந்தை நிலவரங்களின்படி, நேற்றுடன் (10) ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 4000 ரூபா குறைந்துள்ளது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>
</p><p>
இதன்படி, இன்று (11) காலை 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 343,200 ரூபாவாகக் குறைந்துள்ளது.
</p><p>இதேவேளை நேற்றைய தினம் இதன் விலை 347,000 ரூபாவாக இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3df7b03-5297-40aa-8677-bdcedba8b47b/26-6aa39db3e5e9f.webp' /></p><p> அதேவேளை, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று 377,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 373,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T06:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-people-power-mc-members-joint-request-1789105171"></link>
            <id>https://tamilwin.com/article/national-people-power-mc-members-joint-request-1789105171</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் கருவறை
தொடக்கம் கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் கருவறை
தொடக்கம் கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும்
செய்யவில்லை. எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் எங்களிடம்
ஒப்படைக்கவும் என தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

மாநகரசபையின் 17ஆவது சபை அமர்வு நேற்று(10.09.2026) மாநகரசபை முதல்வர்
சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.</p><p>இதன் பின்னர் மாநகரசபையின்
எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான முத்துலிங்கம்
துதீஸ்வரன், முனுசாமி உதயராஜ், பிரேம்குமார், ஜெம்ஸ், லதீப் ஆகியோர்
ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.</p><h2>எல்லைக்குள் இருக்கும் வீதிகள்</h2><p>

இன்று மாநகர சபையின் 17ஆவது சபை அமர்வு இடம்பெற்றுள்ளது. இந்த மாநகர சபை
ஆட்சியை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாக இந்த முதல்வருடன்
எதிர்கட்சி இல்லாமல் அனைத்து வேலைகளுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கி வந்தோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98dab5c-fc08-4b0c-ad50-7b7bbd7ab716/26-6aa398f04e862.webp' /></p><p>இருந்தபோதும்; கருவறை தொடங்கி கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகரசபையின்
செயற்பாடுகள் எவையுமே செயல்படுத்தப்படவில்லை. நீங்களும் சபையில்
இருக்கின்றீர்கள். பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என மக்கள் கடும் விசனங்கள்
தெரிவித்து வருகின்றனர்.</p><p>
மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் வீதிகள், கழிவகற்றல், வீதி மின்விளக்கு,
வடிகான் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.</p><p>வீதி மின்விளக்கு ஒளிராததால் இன்று வீதி விபத்துக்கள் மற்றும் பல
அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றது. கட்டாக்காலி மாடுகள் தொல்லை தொடர்பாக
எதுவும் நடைபெறவில்லை.

இந்த மாநகர சபை அமர்வில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது எதுவும் முற்றுப்
பெறவில்லை.</p><p>கடந்த வருடம் மாநகர சபை உட்பட்ட பிரதேசங்கள் பல மழை வெள்ளத்தில்
மூழ்கியது. காரணம் வடிகான்கள் துப்பரவு செய்யவில்லை. இது தொடர்பாக கடந்த
காலத்தில் முதல்வரிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை.</p><h2>பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை</h2><p>இந்த வருடம் மாநகரசபை பகுதிகளில் உள்ள பிரதேசம் பல மழை வெள்ளத்தில் மூழ்கப்
போகிறது. எனவே மழை வெள்ளத்தால் தாண்டால் அதற்கான முழு பொறுப்பும் முதல்வர்
எடுக்க வேண்டும்.</p><p>

மட்டு மாநகர சபைக்கு சொந்தமான மஞ்சம் தொடுவாய் பிரதேசம் அதனை காத்தான்குடி
நகரசபை அத்துமீறி அபகரித்து வருகிறது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக
தெரிவித்து இதுவரை ஒன்றும் செய்யவில்லை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb8e403-c381-47ff-99db-8477a53aca31/26-6aa398f17b71b.webp' /></p><p>அவ்வாறே பணம் படைத்தவர்கள் காணிகளை பிடித்து அடைத்துள்ளனர். ஏழைகள்
துன்பப்படுகின்றனர். குறுக்கு வீதிகள் 10 அடி அகலம் கொண்டதாக நில அளவீடு
செய்திருந்த போதும் பணம் உள்ளவர்கள் அதை அபகரித்துள்ளனர்.</p><p> இதனால் அந்த
வீதியில் உள்ள ஏனைய மக்கள் சடலத்தை கூட கொண்டு வர முடியாத அளவிற்கு
ஆக்கிரமித்துள்ளனர். மாநகரசபை சட்டத்தை ஏன் பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.</p><p>இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதை
வன்மையாக கண்டிக்கின்றோம்.&nbsp; எனவே இந்த மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் தேசிய மக்கள் சக்தியிடம்
ஒப்படைத்தால் 6 மாதத்துக்கு வீண் விரயங்களை நிறுத்தி நாட்டைக் கட்டியெழுப்பிய
மாதிரி இந்த மாநகரசபையையும் கட்டியொழுப்புவோம். </p><p>இது மக்கள் அரசாங்கம் மக்கள்
ஆணையின்படி மக்களுக்கு சிறந்த சேவையை செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T06:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ஆலயமொன்றில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போன மாம்பழம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mango-auctioned-five-hundred-thousand-in-vavuniya-1789105344"></link>
            <id>https://tamilwin.com/article/mango-auctioned-five-hundred-thousand-in-vavuniya-1789105344</id>
            <summary type="text">வவுனியா - வேப்பங்குளம், சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக
தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வேப்பங்குளம், சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக
தொகைக்கு ஏலம்போயுள்ளது.</p><p>

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழ திருவிழா நேற்று இடம்பெற்றுள்ளது.</p><h2>கோவில் வளர்ச்சி நிதி</h2><p>
</p><p>இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக
ஏலத்தில் விடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e81b009-dd22-4ecf-920f-560524aa33ba/26-6aa399fd9bc9a.webp' /></p><p>
</p><p>அந்த மாம்பழம் 505000/=( ஐந்து இலட்சத்து ஐந்தாயிரம் ) ரூபாய்க்கு ஏலத்தில்
விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியாவை சேர்ந்த இ.மோகனதாஸ்
குடும்பத்தினர் குறித்த தொகையை வழங்கி மாம்பழத்தை பெற்றுக்கொண்டனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e81b009-dd22-4ecf-920f-560524aa33ba/26-6aa399fd9bc9a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eba441b4-b726-42fd-b9c0-c461dbd83b58/26-6aa399fe718ae.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T06:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிநுட்ப ஆளணிப் பற்றாக்குறைக்கு வடக்கில் உடனடித் தீர்வு காண வேண்டும் - ஆளுநர் வேதநாயகன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-vedanayagam-s-request-1789104161"></link>
            <id>https://tamilwin.com/article/governor-vedanayagam-s-request-1789104161</id>
            <summary type="text">வட மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள
வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து,
ஒதுக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள
வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து,
ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் தரமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத்
தடையாக உள்ள தொழிநுட்ப ஆளணிப் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு காணப்பட
வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
</p><p>
வட மாகாணத்தில் பல்வேறு நிதி மூலங்களின் கீழ் ஒரே நேரத்தில்
முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழிநுட்ப
மற்றும் நடைமுறை சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் ஆளுநர்
செயலகத்தில் நேற்றைய தினம் (10.09.2026) நடைபெற்றது.</p><h2>பணிச்சுமை</h2><p>
</p><p>
வடக்கு மாகாணத்திற்கு 2026ஆம் ஆண்டில் கிடைக்கப்பெறும் அபிவிருத்தி நிதியும்
பணிச்சுமையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில்,
உள்ளூராட்சி தொழில்நுட்ப ஆளணியிடம் தற்போது 1034 வேலைத்திட்டங்களுக்கான
சுமார் 7 ஆயிரத்து 6 மில்லியன் ரூபா பெறுமதியிலான பணிச்சுமை காணப்படுவதாகவும்,
இவற்றில் பல்வேறு புதிய நிதித் திட்டங்களின் கீழான வேலைகளும்
உள்ளடங்குவதாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p>

எனினும், இவ்வளவு பெரிய பணிச்சுமைக்கு ஏற்றளவில் தொழில்நுட்ப ஆளணி இல்லாததால்
மதிப்பீடு தயாரித்தல், கேள்விகோரல் நடைமுறை, மேற்பார்வை, சான்றளித்தல் மற்றும்
பணிகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட பல கட்டங்களில் தாமதங்கள் ஏற்படுவதாகக்
குறிப்பிடப்பட்டது. </p><p>தற்போது அங்கீகரிக்கப்பட்ட 141 தொழில்நுட்பப் பதவிகளில்
129 பேர் மட்டுமே பணியில் இருப்பதுடன், மேலும் 194 தொழில்நுட்ப ஆளணி
தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வன்னிப் பகுதிகளில் சில தொழில்நுட்ப
உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து விலகியுள்ளமையும் நிலைமையை மேலும்
சிக்கலாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ffc3140-cd84-4c90-84b8-4725ff8501e6/26-6aa397d559df6.webp' /></p><p>
</p><p>
பல வேலைத்திட்டங்கள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதால் தொடர்ச்சியான தள
மேற்பார்வையை மேற்கொள்வதிலும் சிரமம் காணப்படுவதாகச்
சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதனால் எந்தவொரு திட்டத்தின் தரமும் பாதிக்கப்படாத
வகையில் தேவையான கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப மேற்பார்வை உறுதி செய்யப்பட
வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.</p><h2>மனித வளத்தை உறுதிப்படுத்தல்</h2><p>
</p><p>
இதனிடையே, பல்வேறு நிதி மூலங்களிலிருந்து கிடைக்கும் நிதியை மீளச்
செலுத்தாமல், அவற்றை முழுமையாக அபிவிருத்திப் பணிகளாக மாற்றுவதற்கான
மனிதவளத்தை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆளுநர்
வலியுறுத்தினார். </p><p>தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்களைப்
பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் தொடருமானால், கிடைக்கும் நிதியை உரிய
காலத்தில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது சவாலாகும் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.</p><p>

இந்த விடயத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகர், மத்திய மற்றும்
மாகாண நிறுவனங்கள் என்ற வேறுபாடுகளைக் கடந்து ஒருங்கிணைந்து செயற்பட்டு
தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை விரைவாகத் தேசிய
மட்டத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
இதனையடுத்து, தொழில்நுட்ப ஆளணியினரை தற்காலிகமாக அரச நிறுவனங்களுக்கு இடையே
பகிர்ந்து பயன்படுத்துதல் மற்றும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்
தற்போதைய தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு காலவரையறுக்கப்பட்ட சிறப்பு
ஊக்கத்தொகை வழங்குதல் ஆகிய இரு அவசரத் தீர்வுகளை முன்னெடுப்பது தொடர்பில்
கவனம் செலுத்தப்பட்டது.</p><h2>சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான முன்மொழிவு</h2><p>
</p><p>
தகுதியான பணியாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவில்
சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இனிவரும் பணிகளை மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச
செயலகங்களில் உள்ள தொழில்நுட்ப ஆளணியின் ஊடாக முன்னெடுப்பதற்கும்,
மாகாணத்துக்குச் சொந்தமான சில வீதிகளைத் தற்காலிகமாக உரிய நிறுவனங்களுக்கு
கையளித்து பணிகளை மேற்கொண்ட பின்னர் மீளப் பொறுப்பேற்பதற்கும் இணக்கம்
காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219dd915-1a3c-4f76-924a-c5fef6380b49/26-6aa397d643de0.webp' /></p><p>
</p><p>
ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் மேற்கொள்ள வேண்டிய
பணிகளைத் துரிதப்படுத்துவதுடன், தொழில்நுட்ப ஆளணியுடன் இயங்கும் மாகாண வீதி
அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களங்களின்
தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்துக்கு மேலும் அதிகளவு அபிவிருத்தி நிதி
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தகைய சவால்கள் மீண்டும்
ஏற்படாத வகையில் நிரந்தரமான தொழில்நுட்ப மனிதவளத் திட்டமொன்றை உருவாக்குவது
தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. </p><p>இதற்குத் தேவையான சிறப்பு தொழில்நுட்ப
ஊக்கத்திட்டம் மற்றும் தற்காலிக ஆளணி பகிர்வு முறை குறித்து தொடர்புடைய
அமைச்சுக்கள் மற்றும் திறைசேரியுடன் அவசரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க
வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதி மீளச் செல்லாமல், அது தரமான
பணிகளாகவும் பயனுள்ள உட்கட்டமைப்புகளாகவும் காலதாமதமின்றி மக்களைச் சென்றடைவதே
இம்முயற்சிகளின் பிரதான நோக்கமாகும் என்று ஆளுநர் வலியுறுத்தினார்.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,
மாவட்டச் செயலர்கள், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், உள்ளூராட்சி
அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாகாண நீர்ப்பாசனப்
பணிப்பாளர், மாகாண வீதி அபிவிருத்திப் பணிப்பாளர், உள்ளூராட்சித் திணைக்களப்
பொறியியலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T05:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு குறித்து மனம் திறந்த மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-dont-know-about-gnasara-thero-case-1789104336"></link>
            <id>https://tamilwin.com/article/i-dont-know-about-gnasara-thero-case-1789104336</id>
            <summary type="text">அரசியல் அமைப்பின் பிரகாரமே, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் அமைப்பின் பிரகாரமே, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
</p><p>கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக்காலத்தில், பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
</p><p>இந்த பொது மன்னிப்பானது உரிய விதிகளை பின்பற்றி வழங்கப்படவில்லை என தற்பொழுது நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>மைத்திரியின் பதில்</h2><p>
</p><p>இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரி&nbsp; இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எவ்வாறு எனினும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான தனது தீர்மானம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்&nbsp; என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e89875-0afc-439d-b672-8dc57eb93cd1/26-6aa39936d8f51.webp' /></p><h2>ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் நடைமுறை</h2><p>
</p><p>19ஆம் திருத்த சட்டத்தை சட்டத்தின் பிரகாரம் காணப்பட்ட அதிகாரங்களை குறைத்ததாகவும் பதவி காலத்தை குறைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தனக்கு பின்னர் வந்த அரசாங்கம் 19ஆம் திருத்தச் சட்டத்தில் தம்மால் அகற்றப்பட்ட அதிகாரங்களை மாற்றியமைதத்தாகவும், அதன் பின்னர் மீண்டும் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் தமக்கு எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PCwqMA0Awjs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அநுராதபுரப் பேரணியில் பங்கேற்பது குறித்து விமலின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-peoples-rally-1789103812"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-peoples-rally-1789103812</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அநுராதபுரத்தில் நடத்தப்படவுள்ள கூட்டத்தில்
கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில், கட்சியின் அரசியல்
குழுவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அநுராதபுரத்தில் நடத்தப்படவுள்ள கூட்டத்தில்
கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில், கட்சியின் அரசியல்
குழுவுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்று தேசிய சுதந்திர
முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் தேசிய
சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையில் நேற்று
வியாழக்கிழமை தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் விசேட சந்திப்பு
நடைபெற்றது. </p><p>இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு&nbsp;</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில்
பங்கேற்குமாறு எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து
கட்சியின் அரசியல் குழு கூடி ஆராய்ந்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை காலை எமது
உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்போம்.
</p><p>
இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் அரசியல் ரீதியாக
ஒன்றிணைவதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக, அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும்,
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்குத்
தீர்வு காண்பது தொடர்பிலும் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில்
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்தே தற்போது
கலந்துரையாடப்படுகின்றது.
</p><p>
கடந்த கால நல்ல விடயங்களை முன்னெடுத்துச் செல்லும்போது, கடந்த காலத் தவறுகளை
மீண்டும் தொடரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bb2df9c-7909-4679-9b67-06b838be1980/26-6aa390d479665.webp' /></p><p> </p><p>அரசியல் கூட்டணி அமைப்பது
குறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை.

தேர்தலொன்றுக்கான அறிகுறியே இல்லாத நிலையில் அரசியல் கூட்டங்கள்
நடத்தப்படுவதாக விமர்சிப்பவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமே கேள்வி
எழுப்ப வேண்டும். மக்கள் ஜனாதிபதியைத் தெரிவு செய்வது கூட்டங்களை
நடத்துவதற்காகவன்றி, நாட்டை முன்னேற்றுவதற்காகவே ஆகும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
நீதித்துறையின் சுயாதீனம் மிக முக்கியமானது எனவும், ஒரு நீதிபதி தனது
மனச்சுதந்திரத்துடன் சுயாதீனமாகத் தீர்ப்பளிக்கும் உரிமை பாதுகாக்கப்பட
வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p><p> இது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமன்றி அனைத்து
நாட்டு மக்களுக்கும் முக்கியமான பிரச்சினை என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T05:26:24+00:00</updated>
        </entry>
    </feed>
