<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-17T18:23:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளப் பதிவுக்காக கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-anojan-arrested-over-social-media-post-1789667060"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-anojan-arrested-over-social-media-post-1789667060</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. </p><p> 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(17.09.2026) அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2>

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு</h2><p>
அவருக்கான தண்டனையைக் குறைப்பதற்காக அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518a39ea-fb8d-49c9-9eca-1884c69c8058/26-6aac27c08d854.webp' /></p><p>
</p><p>
இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாகவும், அனோஜனுக்காக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் பிற முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் இன, மத அடிப்படையிலான இழிவான அல்லது தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் இலங்கை மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T17:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பயணச்சீட்டுக்களி்ல் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/online-train-tickets-1789664454"></link>
            <id>https://tamilwin.com/article/online-train-tickets-1789664454</id>
            <summary type="text">இனிவரும் காலங்களில் இணையவழியினூடாக தொடருந்து பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் தொடருந்து திணைக்க பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனிவரும் காலங்களில் இணையவழியினூடாக தொடருந்து பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கைப் தொடருந்து திணைக்க பொதுமுகாமையாளர் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இன்று(17.09.202) தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.</p><h2>பயணச்சீட்டுக்களை இணையவழியில்</h2><p>

அதன் பிரகாரம் தொடருந்துப் பயணிகள் பயணச்சீட்டுப் பெற்றுக் கொள்வதற்காக இனிவரும் காலங்களில் தொடருந்து நிலையங்களுக்குச் செல்லத் தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c51f9b-1f91-42f5-8e85-aa964039cd13/26-6aac228ebc63c.webp' /></p><p>
</p><p>
அதற்குப் பதிலாக தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தொடருந்து பயணச்சீட்டுக்களை இணையவழியினுடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>அதன்பிரகாரம் www.pravesha.lk எனும் இணையத்தளத்தை அணுகுவதன் ஊடாக பயணிகள் தங்கள் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
</p><p>
அதேபோன்று pravesha மொபைல் செயலி ஊடாகவும் தங்களுக்கான பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T17:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் புலிதான் ஆனால் விடுதலைப் புலி அல்ல: சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை கிளப்பும் அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-m-a-tiger-but-not-an-ltte-tiger-1789663763"></link>
            <id>https://tamilwin.com/article/i-m-a-tiger-but-not-an-ltte-tiger-1789663763</id>
            <summary type="text">&amp;nbsp;மேடையில்&amp;nbsp; தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி&amp;nbsp; தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேடையில்&nbsp; தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி&nbsp; தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
</p><p>‘புலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியமை மற்றும் புலம்பெயர் மக்கள் தொடர்பான பேச்சு குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
</p><p>தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.</p><h2>புலனாய்வுப் பிரிவினரை சந்திக்க தயார்..</h2><p>சிங்கள மக்கள் தங்களை ‘சிங்கம்’ எனக் கூறிக்கொள்வது போல, தான் ‘புலி’ எனக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை எனவும், அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் குறிக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3889a67-7240-4207-89f1-1dbd9e60eb87/26-6aac1a1537951.webp' />&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>தாம் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p>நாட்டின் மறுசீரமைப்பிற்கு அவர்கள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் ஒரு மருத்துவராக களுபோவில, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றி, சிங்கள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>
</p><p>ஆயுதம் ஏந்தும் எண்ணம் கொண்டவன் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கோ அல்லது கைதுக்கோ தான் அஞ்சவில்லை எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தன்னை விசாரிக்க விரும்பினால் வாட்ஸ்அப் மூலம் இருப்பிடத்தை அனுப்பினால் போதுமானது எனவும், செருப்பு மற்றும் சாதாரண உடையில் தானாகவே நேரில் வரத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாதாரண மனிதர்களை இலக்கு வைப்பதை விட்டுவிட்டு, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரன் போன்ற பெரிய குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்ததற்காகத் தற்போது வெட்கப்படுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xed1HPmRx3w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-17T16:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரச அலுவலக காலதாமதங்களை குறைக்க அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-for-people-of-jaffna-1789663298"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-for-people-of-jaffna-1789663298</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களில் ஏற்படும் காலதாமதங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, இன்று (17.09.2026) முதல் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.</p><h2>

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>

இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b149eb57-6225-4c67-8dab-eadb06dc8a69/26-6aac187425811.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பொதுமக்கள் அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை 076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நேரடி அழைப்பின் ஊடாகப் பதிவு செய்யலாம்.
</p><p>
அத்துடன், WhatsApp அழைப்பு மூலமாகவும் தொடர்புகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு விரைவாக உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0VExnTldYAE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஹோட்டலில் போதைப்பொருளுடன் பிடிபட்ட பிரபல நடிகர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/actor-fined-rs-5-000-over-cocaine-1789661401"></link>
            <id>https://tamilwin.com/article/actor-fined-rs-5-000-over-cocaine-1789661401</id>
            <summary type="text">கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார&amp;nbsp; கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார&nbsp; கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான வழக்கு இன்று(17.09.2026)&nbsp; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கல்கிஸ்ஸ பிரதான நீதவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><h2>போதைப்பொருளுடன் கைது</h2><p>
வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தை கடற்கரை வீதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c819c88d-8d6e-4740-8734-a26cd9a8a0ea/26-6aac152bdb945.webp' /></p><p>
</p><p>கைதான போது விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கோகோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டால், எவ்வித மன்னிப்பும் இன்றி நேரடியாகப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் என நீதவான் சந்தேகநபர்களுக்குப் பகிரங்க நீதிமன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>விஷ்வ கொடிகார பல்வேறு சிங்களத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் என்பனவற்றில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T16:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் சேமிப்பில் கடும் கட்டுப்பாடு - பாகிஸ்தான் மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-government-s-drastic-spending-cuts-1789661242"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-government-s-drastic-spending-cuts-1789661242</id>
            <summary type="text">பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இந்த விடயம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் இன்று(17.09.2026) அமைச்சரவையில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவு 50% குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வரம்பு ஆயுதப் படைகள், சட்ட அமலாக்க முகமைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் மத்திய வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.</p><h2>


இறுக்கமான நடைமுறைகள்</h2><p>
தொடர்புடைய அறிக்கையின்படி, 2026/27 நிதியாண்டிற்கான திரும்பத் திரும்ப வராத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்திலிருந்து மாதத்திற்கு 5% குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bac8803-2aaa-4dba-862a-bd692cb58400/26-6aac13219b0a8.webp' /></p><p>
</p><p>
புதிய வாகனங்கள் மற்றும் சில நீடித்த பொருட்கள் வாங்குவதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுப்பாடுகள் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பொருந்தாது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. </p><p>

வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் தேவைப்பட்டால், அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் விமானங்களில் சாதாரண பயணிகளுடன் ஒரே வகுப்பில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><h2>
மட்டுப்படுத்தப்படும் அரசக் கூட்டங்கள்</h2><p>
அரசு நிறுவனங்களின் கூட்டங்களை முடிந்தவரை காணொளிக் கருத்தரங்குகள் மூலம் நடத்தவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுக்கள் வருகை தரும்போது தவிர, அதிகாரப்பூர்வ அரசு விருந்துகளை நடத்த வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00aa8c1f-f227-4d08-9251-9b7eca7593c8/26-6aac132269084.webp' /></p><p>
</p><p>

அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ மாநாடுகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அரங்குகள், குழு அறைகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ வசதிகளை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கூடுதலாக, திருமணங்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் ஒரே ஒரு வகை உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான கடைகளின் தற்போதைய மூடும் நேரங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><h2>

இரவு 10 மணிக்கு பின்னர் மூடப்படும் சேவைகள்</h2><p>
அதன்படி, பொதுக் கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9 மணி வரையிலும், பொழுதுபோக்கு இடங்கள் இரவு 10 மணி வரையிலும் மூடப்பட வேண்டும்.</p><p>

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம், ஆனால் பார்சல் மற்றும் வீட்டு விநியோக சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e407e2cd-9717-4ea5-9b06-80bd52d86352/26-6aac13231c0e1.webp' /></p><p>
</p><p>
மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள், மருத்துவப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள், மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போது, ​​தேவைப்படும் பட்சத்தில் ஒவ்வொரு வழக்கையும் பொறுத்து விலக்குகள் பரிசீலிக்கப்படலாம் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மோசமாக நடந்துக் கொண்ட கனேடிய பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பயணப் பையுடன் மருத்துவ மையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண் தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார். </p><p>அவர் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் அவசர உதவி எண் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. </p><h2><b>பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணை</b></h2><p>இந்த முறைப்பாட்டிற்கமைய, சுற்றுலாப் பிரிவுப் பொறுப்பதிகாரி மிலன் ராஜபதிரன தலைமையிலான குழுவினர் அந்த மருத்துவ ஆய்வகத்திற்கு சென்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99912ebe-e67a-47aa-a7d4-a88ed96e73f7/26-6aac11a3a15df.webp' /></p><p>கனேடிய பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் செல்லுபடியாகும் விசா அல்லது கடவுச்சீட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது. </p><p>சந்தேக நபர் பல ஆண்டுகளுக்கு முன்பு அஹங்கம பகுதியில் வசித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. </p><p>

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கனேடிய பெண், நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. </p><p>இந்தக் காலப்பகுதியில் அவரை வெலிசர பகுதியில் உள்ள வெளிநாட்டினருக்கான தடுப்பு முகாமிற்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. </p>]]></content>
            <updated>2026-09-17T16:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா- ஈரான் போர் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. கண்டனம் - விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-condemns-us-iran-military-actions-1789660336"></link>
            <id>https://tamilwin.com/article/un-condemns-us-iran-military-actions-1789660336</id>
            <summary type="text">ஈரானில் உள்ள பாடசாலை மற்றும் விளையாட்டு மையமொன்றின் மீது அமெரிக்கா நடத்திய
இராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், அதேவேளை அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள பாடசாலை மற்றும் விளையாட்டு மையமொன்றின் மீது அமெரிக்கா நடத்திய
இராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், அதேவேளை அரச
எதிர்ப்புப் போராட்டங்களை அடக்குவதற்கு ஈரான் மனிதகுலத்திற்கு எதிரான
குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக
ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த பெப்ரவரி மாதம் ஈரானின் மினாப் நகரில் அமைந்திருந்த பாடசாலையொன்றின்
மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 120 பாடசாலை சிறுவர்கள் உட்பட
150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
</p><p>
குறித்த பாடசாலை பொதுமக்கள் பயன்படுத்திய கட்டிடம் என்பதை உறுதிப்படுத்தாமல்
அமெரிக்கா நடத்திய இந்த இலக்குத் தவறான தாக்குதல், சர்வதேசச் சட்டத்தின் கீழ்
போர்க்குற்றமாகும் என ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>

மக்கள் மீதான சித்திரவதை</h2><p>

இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் ஈரானில் வெடித்த அரச எதிர்ப்புப்
போராட்டங்களின் போது, பொதுமக்கள் மீது ஈரான் அரசாங்கம் மேற்கொண்ட
அடக்குமுறைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27df25f9-cd13-402f-aac3-b45eba15a574/26-6aac0dc132ad0.webp' /></p><p>
</p><p>
இதில் சட்டவிரோதப் படுகொலைகள், சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும்
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் போன்றவை உள்ளடங்குவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஈரான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விடவும், இந்த
அடக்குமுறைகளில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக
இருக்கும் என ஐ.நா குழு கவலை வெளியிட்டுள்ளது.</p><p>

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்
சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T15:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணாமல் போன மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-missing-in-katunayake-airport-1789620426"></link>
            <id>https://tamilwin.com/article/women-missing-in-katunayake-airport-1789620426</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். பிங்கிரிய பகுதியின் வீரபோகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். </p><p>காணாமல் போன அப்பெண் தமரி செவ்வந்திகா விஜேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> முறைப்பாட்டிற்கமைய, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5.12 மணியளவில் அவர் தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.</p><p> </p><h2><b>பெண்ணின் உடைமைகள்</b></h2><p>வீடு திரும்பும்போது தங்கள் ஐந்து பிள்ளைகளுக்கும் சொக்லட் வாங்கி வருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5777e0a-d409-4d34-b288-217120fe2ccd/26-6aab74a31c8c7.webp' /></p><p>குறித்த பெண்ணின் உடைமைகள் காணாமல் போனமை குறித்தும் விமான நிலையப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். </p><p>ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக நாடு திரும்பியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>தனது மனைவியை கண்டுபிடிப்பதில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுத்து உதவுமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


</p>]]></content>
            <updated>2026-09-17T15:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபா ஒப்பந்தம்! இரு சிறுவர்களை பலியெடுத்த தெஹிவளை குண்டுவீச்சின் பின்னணி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwalla-crime-1789655015"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwalla-crime-1789655015</id>
            <summary type="text">தெஹிவளையில் அண்மையில் இரண்டு அப்பாவிச் சிறுவர்களைப் பலியெடுத்த கைக்குண்டுத் தாக்குதல் விவகாரம் வெறும் ஒரு லட்சத்தி இருபதினாயிரம் ரூபா ஒப்பந்தத்துக்காக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளையில் அண்மையில் இரண்டு அப்பாவிச் சிறுவர்களைப் பலியெடுத்த கைக்குண்டுத் தாக்குதல் விவகாரம் வெறும் ஒரு லட்சத்தி இருபதினாயிரம் ரூபா ஒப்பந்தத்துக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p>

குறித்த குண்டுவீச்சுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விபரம் வெளிப்பட்டுள்ளது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>

தெஹிவளையில் கடந்த 11ஆம் திகதி ஒரு வீட்டின் மீது கையெறி குண்டை வீசிய நபர், பொலிசாருக்கு பல தகவல்களை அளித்துள்ளார்.
</p><p>
இந்தக் கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு அப்பாவிச் சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களது தந்தை படுகாயம் அடைந்தார்.

பொலிஸ் மா அதிபரின் (IGP) அறிவுறுத்தலின் பேரில், இந்தச் சம்பவம் குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு அனுப்பப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/872fa23f-44f1-4979-9329-a87ab1fb9c21/26-6aabff2406f86.webp' /></p><p>

இத்தகைய சூழலில், குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p>
விசாரணையின் போது, ​​2025ஆம் ஆண்டு நெதிமாலை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததும், ஜூலை 19ஆம் திகதி பிணையில்&nbsp; செல்ல அனுமதிக்கப்பட்டமை தெரியவந்தது.</p><p>

பின்னர், ஒகஸ்ட் 1ஆம் திகதி, ரத்மலானையில் குடு அஞ்சுவின் நெருங்கிய கூட்டாளியை அவர் சுட்டுக் கொன்றுள்ளார்.</p><h2>தெஹிவளை குண்டுத் தாக்குதல்&nbsp;</h2><p>

போதியாவத்தே அவிஷ்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோர் தனக்கு ஐந்து லட்சம் ரூபா பணமும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தெஹிவளை வீட்டில் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான ஒப்பந்தத்தை போதியாவத்தே அவிஷ்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோர் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce61ef7-3112-40e0-b666-009cce761cd8/26-6aabff24d1342.webp' /></p><p>

அதன்படி, தாக்குதல் நடத்தச் சென்ற முச்சக்கர வண்டியிலும் கையெறி குண்டுகள் ஏற்றப்பட்டிருந்தன.</p><p> மேலும், தாக்குதலுக்குத் தொடர்புடைய வீட்டைக் காட்டுவதற்காக மற்றொரு நபர் அங்கு இருந்ததாகவும் சந்தேக நபர் கூறியதாகத் தெரிகிறது.

இருப்பினும், அந்த நபர் தனக்குத் தவறான வீட்டைக் காட்டியதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.</p><p>

தாக்குதலுக்குப் பிறகு, போதியாவத்தேஅவிஷ்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோர் தனக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து, பிபிலே பகுதிக்குத் தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
பிபிலேயில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.</p><p>

இதற்கிடையில், தாக்குதலுக்காக வீட்டைக் காட்டிய நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2936695-bcfe-4d35-bd16-e761af1c9087/26-6aabff233ae7e.webp' /></p><p>
</p><p>
விசாரணையின் போது, ​​அவிஷ்கவும் கொஸ்மல்லியும் அதற்காக அவருக்கு 20,000 ரூபா கொடுத்தது தெரியவந்தது.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவால் நடத்தப்பட்டு வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T14:55:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் உல்லாசம் - ஒரே நாளில் குணமடைந்த ஷிரந்தி! அம்பலமான ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-enjoying-in-singapore-1789650949"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-enjoying-in-singapore-1789650949</id>
            <summary type="text">சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. </p><p>

கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றையதினம் நாட்டில் இருந்து சிங்கபூருக்கு சென்றிருந்தார். </p><p>

இந்நிலையில் இதயம் தொடர்பான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சிங்கபூரில் மிகவும் பிரபல்யம் பெற்ற மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h2>

கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி</h2><p>ஆனால் மிகவும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7U6bvzOx1AE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

நோயாளியாக சென்ற ஒரே நாளில் குணமடைந்து பொருட்களை கொள்வனவு செய்யும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.</p><p> </p><h3><b>

புதிய புகைப்படங்கள்</b></h3><p>ஏற்கனவே நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே ஷிரந்தி சிங்கப்பூர் சென்றுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f8ef4d-5d63-49fd-889d-69f3cde1e3e7/26-6aabf2da4ea2e.webp' /></p><p>இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஷிரந்தியின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. </p><p>

நிதி மோசடி குற்றச்சாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3087eea-7ff8-431e-9cdc-de9a87d5a283/26-6aabf2d99a43e.webp' />&nbsp;&nbsp;</p><p> </p>]]></content>
            <updated>2026-09-17T14:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் துறைமுகத்தால் வீழ்ந்த இலங்கை - சிக்கலில் அநுர..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற ஏற்கனவே இருந்த முக்கிய உட்கட்டமைப்புகள் முழுமையான திறனை எட்டுவதற்கு முன்னதாகவே அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்ற பாரிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>

அத்தகைய திட்டங்களுக்காக வர்த்தகக் கடன்களைப் பெற்றுக்கொண்டு முதலீடு செய்தமை நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்பார்த்த அளவில் வருமானத்தை ஈட்டாத நிலையில், அதனை 99 வருட குத்தகைக்கு வழங்கியமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

ஒரு திட்டத்தை அமைப்பதற்காக கடன் பெற்று, பின்னர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்தச் சொத்தையே குத்தகைக்கு வழங்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
குறிப்பாக, ஊழலை கட்டுப்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vV22r-uibKE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T14:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார அமைச்சரால் வவுனியாவில் தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foundation-stone-nurses-hostel-vavuniya-1789650321"></link>
            <id>https://tamilwin.com/article/foundation-stone-nurses-hostel-vavuniya-1789650321</id>
            <summary type="text">வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இன்று (17.09)
இடம்பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இன்று (17.09)
இடம்பெற்றது.
</p><p>
வவுனியா வைத்தியசாலையின் நான்கு மாடிகளை கொண்ட குறித்த விடுதிக்காக மாகாண
குறித்து ஒதுக்கப்பட்ட நிதியாக 114.9 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி நிகழ்வை
ஆரம்பித்து வைத்தார்.
</p><p>
அதனைத்தொடர்ந்து சிறுவர் மருத்துவ விடுதிக்கான பூங்கா ஒன்றையும் அவர் திறந்து
வைத்திருந்தார்.
</p><p>
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான்,
மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, பல்கலைக் கழக துணைவேந்தர் அற்புதராஜா,
வைத்தியசாலை பணிப்பாளர் நிலக்சன், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை
சமூகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T13:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காட்டிக்கொடுத்த கோடீஸ்வர வர்த்தகரை பழிவாங்க ராஜபக்சர்கள் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawsuit-in-australia-against-nimal-pererah-1789648782"></link>
            <id>https://tamilwin.com/article/lawsuit-in-australia-against-nimal-pererah-1789648782</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற லஞ்ச விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற லஞ்ச விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வழக்குத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவினர் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2><b>நிதி மோசடி</b></h2><p> 

மேலும், நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படும் விசாரணையில் அவர் நான்காவது சந்தேக நபராகவும் பெயரிடப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d685ff8-dfca-4b49-b13c-755dac402ce9/26-6aabe1c21fd02.webp' /></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனாவின் மனைவிக்கு எயார்பஸ் நிறுவனம் வழங்கிய இலஞ்ச&nbsp; பணத்தில் ஒரு பகுதியான 800,000 அமெரிக்க டொலர்கள், தனது நிறுவனத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதை நிமல் பெரேரா தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார்.</p><p>

அத்துடன், அதற்கு இணையான தொகையான 100 மில்லியன் ரூபாயை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார். </p><p>

சர்வதேச இலஞ்ச பரிவர்த்தனை மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை தனது சொந்தக் கணக்கில் வைப்பிலிட்டதன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டதை நிமல் பெரேரா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
இதற்கு பழிவாங்கும் நோக்கில் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-17T12:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா இராமநாதன் எம்.பிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-mp-archuna-1789647952"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-mp-archuna-1789647952</id>
            <summary type="text">பேஸ்லைன் வீதியில் கார் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி, ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்லைன் வீதியில் கார் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி, ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வழக்கின் பிரதிவாதித் தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கார் விபத்து</h2><p>

2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி லசந்த அபேவர்தன என்பவர் பேஸ்லைன் வீதியில் காரை செலுத்திச் சென்றபோது, அவரது காரை விபத்துக்குள்ளாக்கி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602c5feb-8cd1-4399-a362-d3a134edc242/26-6aabe0fb7d40e.webp' /></p><p>
</p><p>
கிராண்ட்பாஸ் பொலிஸார் இந்த வழக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று (17) முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவடைந்தது.</p><p>

இதனையடுத்து, பிரதிவாதித் தரப்பு சாட்சிய விசாரணைக்காக வழக்கு நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:45:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர் - இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-chinese-ambassador-meets-prime-minister-harini-1789647512"></link>
            <id>https://tamilwin.com/article/new-chinese-ambassador-meets-prime-minister-harini-1789647512</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16.09.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16.09.2026) அலரி மாளிகையில் நடைபெற்றது.
</p><p>
2027ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள இலங்கை - சீன இருதரப்பு இராஜதந்திர
உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்வி, டிஜிட்டல்மயமாக்கல்
மற்றும் அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து
இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.</p><h2>உதவியை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p>
</p><p>
பாடசாலை மாணவர்களுக்காகச் சீன அரசு வழங்கும் சீருடை உதவி தொடர்பில் விசேடமாகக்
கலந்துரையாடப்பட்டது. வருடாந்த தற்காலிக ஏற்பாட்டுக்குப் பதிலாக, கல்வி
ஆண்டின் ஆரம்பத்தில் உரிய நேரத்தில் சீருடைகளை வழங்கும் வகையில், 3 முதல் 5
வருடங்கள் வரையான நீண்டகாலக் கட்டமைப்பின் ஊடாக இந்த உதவியை
நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e1205af-d0c4-448e-8eb8-e2cd22503d68/26-6aabdced4bd6c.webp' /></p><p>
</p><p>
கல்வித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கையாக, சீனாவின் உதவியுடன்
நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் முன்னேற்றம் மீளாய்வு
செய்யப்பட்டது.</p><p> இதன் கீழ், நாடளாவிய ரீதியிலுள்ள 500 டிஜிட்டல்
வகுப்பறைகளுக்காக 900 ஸ்மார்ட் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. </p><p>அத்துடன், கல்வி
டிஜிட்டல்மயமாக்கல் கொள்கைகளைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல்
செயலணிக்குழு குறித்துப் பிரதமர் தூதுவருக்கு விளக்கமளித்ததுடன், சீன அரசின்
முழுமையான ஆதரவையும் தூதுவர் உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d86cc73-b1e1-4c24-ab4d-b2ae13ec7d41/26-6aabdcee61f10.webp' /></p><h2>இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு</h2><p>
</p><p>
சீன அரசின் புலமைப்பரிசில் திட்டம் மற்றும் சீனத் தூதுவர் புலமைப்பரிசில்
திட்டம் மூலம் இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்
குறித்தும், பிள்ளைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பிராந்திய மற்றும்
சர்வதேச மட்டங்களில் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும்
பேசப்பட்டது.
</p><p>
'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது சீனா வழங்கிய ஒத்துழைப்பைப்
பிரதமர் பாராட்டியதுடன், திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள்
மற்றும் வெள்ள நிலைமையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச்
சேதங்களுக்குத் தனது கவலையையும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் திறனை மேம்படுத்த இரு
நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3be3413-70c2-4028-9acd-e02aca0a01ff/26-6aabdcef369da.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95940024-be8b-457f-b3ac-03b6b2661c07/26-6aabdcf00abc0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:32:18+00:00</updated>
        </entry>
    </feed>
