<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-09T16:20:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opening-of-kotmale-airlocks-1786287465"></link>
            <id>https://tamilwin.com/article/opening-of-kotmale-airlocks-1786287465</id>
            <summary type="text">கொத்மலையில் உள்ள காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன.குறித்த வான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலையில் உள்ள காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த வான்கதவுகள் இன்று (09.08.2026) மாலை 7.00 மணி அளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>வான் கதவுகள் திறப்பு</h2><p>
</p><p>
இந்த வான்கதவுகளின் ஊடாக வினாடிக்கு சுமார் 20 கன மீட்டர் என்ற விகிதத்தில் கொத்மலை ஓயாவின் உபரி நீர் வெளியேற்றப்படும் என இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்க செயல்பாடுகள் பிரிவு அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dac085d9-1aa3-488e-a1c0-32d2e5bf04d3/26-6a7898885c77b.webp' />&nbsp;</p><p>

இந்த சூழ்நிலையின் விளைவாக, கொத்மலை ஓயா மற்றும் நீர்த்தேக்கத்திற்குக் கீழ் உள்ள மகாவலி ஆற்றின் நீர்மட்டம் சிறிதளவு அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு அதிகார சபைகள் கேட்டுக்கொண்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T15:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் காட்டுத்தீ தீவிரம்: அனைத்து சுற்றுலா வழிகளும் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-in-indonesia-all-tourist-routes-closed-1786286070"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-in-indonesia-all-tourist-routes-closed-1786286070</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பிராந்தியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ
எரிமலை தேசிய பூங்காவில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து,
அப்பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பிராந்தியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ
எரிமலை தேசிய பூங்காவில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து,
அப்பகுதிக்கான அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளும் தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த திங்கட்கிழமை முதல் பரவி வரும் இந்தக் காட்டுத்தீ, எரிமலையின் பள்ளப்
பகுதியைச் சுற்றி இதுவரை சுமார் 176 ஹெக்டேயர் (434 ஏக்கர்) நிலப்பரப்பை
எரித்து சாம்பலாக்கியுள்ளது.
</p><p>
வியாழக்கிழமை வரை 60 ஹெக்டேயராக இருந்த தீப்பரவல், தற்போது மிகவும் வேகமாகவும்
விரிவடைந்துள்ளது.</p><p></p><h2>தீ விபத்து</h2><p>
</p><p>
பார்வையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பைக்
கருத்திற்கொண்டு சனிக்கிழமை மாலை முதல் இந்த மூடல் நடவடிக்கை
அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
ஏற்கனவே நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்தவர்கள் பயண திகதியை மாற்றிக்கொள்ள
அல்லது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/187eb181-753b-4b98-97e6-47940bc599bd/26-6a789414beed2.webp' /></p><p>

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகொப்டர்கள் மற்றும் நீர் தெளிக்கும்
ட்ரோன் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கிழக்கு ஜாவா பேரிடர் மேலாண்மை
முகவரகம் தெரிவித்துள்ளது.
</p><p>
மலைச்சரிவுகளில் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் போதிலும், இதுவரை எவ்வித
உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும்
தெரிவிக்கப்படவில்லை.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T15:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் திட்டத்தை அதிரடியாக நிராகரித்த நெதன்யாகு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-rejects-donald-trump-15-point-proposal-1786285227"></link>
            <id>https://tamilwin.com/article/israel-rejects-donald-trump-15-point-proposal-1786285227</id>
            <summary type="text">​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட காசாவுக்கான 15 அம்ச
அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட காசாவுக்கான 15 அம்ச
அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு அறிவித்துள்ளார்.

​</p><h2>படைகளை திரும்பப் பெறல்..&nbsp;&nbsp;</h2><p>ஹமாஸ் அமைப்பு முழுமையாகத் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுப் பணியாத வரை காசா
முனையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்பட மாட்டாது என அவர்
திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da1d312c-d0f4-4127-baa9-59c873127d9c/26-6a7894077c8a2.webp' /></p><p>போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்திற்குத்
திருப்புமுனை எட்டப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் கையளிக்கச்
சம்மதித்துள்ளதாகவும் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

​</p><p>எனினும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட
போதிலும், காசா பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை
நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T14:51:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[டச்சு மண்ணை அதிரவைத்த ஈழத்தமிழர்: பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bhaskaran-kandiah-sri-lankan-tamil-ealam-1786271325"></link>
            <id>https://tamilwin.com/article/bhaskaran-kandiah-sri-lankan-tamil-ealam-1786271325</id>
            <summary type="text">நெதர்லாந்து நாட்டின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான Quote Net, ஐரோப்பாவில் தொழிலதிபராய் பரிணமித்துள்ள ஈழத்தமிழரான பாஸ்கரன் கந்தையாவின் வணிகச் சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்து நாட்டின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான Quote Net, ஐரோப்பாவில் தொழிலதிபராய் பரிணமித்துள்ள ஈழத்தமிழரான பாஸ்கரன் கந்தையாவின் வணிகச் சாம்ராஜ்யத்தையும், தாய்நிலம் மீதான அவரது நன்றியுணர்வையும் பாராட்டி சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>நெதர்லாந்தின் முன்னணி பணக்காரர்களை வரிசைப்படுத்தும் Quote 500 பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்துப் பெருமைப்படுத்தியுள்ள அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு திரைப்படம் போல வர்ணித்துள்ளது. </p><p>டச்சு ஊடகத்தின் நிதி மதிப்பீட்டின்படி, அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 165 மில்லியன் யூரோக்கள் (சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாய்) ஆகும். இதன் மூலம் அவர் நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437ஆவது இடத்தில் உள்ளார்.</p><h2>கிடைத்துள்ள அங்கீகாரம்..&nbsp;</h2><p> </p><p> யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் எளிய குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், இலங்கையில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43633a6f-b70c-4e51-b02e-6e5c3ef497c5/26-6a785cb3675a1.webp' /></p><p> </p><p>தனது 30ஆவது வயதில் இரண்டு நண்பர்களுடன் இணைந்து லெபாரா மொபைல் (Lebara Mobile) தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார். புலம்பெயர் மக்களை குறைந்த செலவில் தாய்நாட்டோடு இணைத்த இவரது வணிக உத்தி ஐரோப்பா முழுவதும் வரவேற்பைப் பெற்றது.</p><p> 2017இல் இந்நிறுவனத்தை சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்ற பிறகு, 2014இல் IBC தமிழ் ஊடகக் குழுமத்தைக் கொள்வனவு செய்து, எல்லை கடந்த பேரூடகமாக அதை இயக்கி வருகிறார்.</p><p>தொழிலில் ஈட்டிய பிரமாண்ட வெற்றியின் பின்னரும், போரினால் பாதிக்கப்பட்ட தாய்நிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் வட இலங்கையில் ரீக்சா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையத்தை உருவாக்கியுள்ளார்.</p><h2>பல்வேறு வணிகங்கள்&nbsp;</h2><p> </p><p>இயற்கை உரம் கொண்ட கரிமப் பண்ணைகள், மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க், நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் ஸ்பா உள்ளிட்ட பல அம்சங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13146808-1296-46ae-8068-16ffe8c5abf3/26-6a785cb4518a6.webp' /></p><p>"முப்பதாண்டு கால போருக்குப் பிறகு நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீடுகள் நடக்கவில்லை. என் மண்ணுக்கும் மக்களுக்கும் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற எண்ணமே இத்திட்டத்தின் பின்னணி" என பாஸ்கரன் கந்தையா Quote இதழிடம் குறிப்பிட்டுள்ளார். </p><p> இந்த ரீக்சா மையத்தின் மூலம் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதி நேர வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளன. மேலும் 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டதால், உள்ளூர் சிறு வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் கைவினைஞர்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்த இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.</p><p>வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி, பாஸ்கரன் கந்தையா சமூகத்தின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.</p><p><b>News link..&nbsp;</b></p><p><b><a href="https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/" target="_blank">https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/</a></b></p>]]></content>
            <updated>2026-08-09T13:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க மக்களிடையே ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-american-public-social-media-1786279335"></link>
            <id>https://tamilwin.com/article/support-american-public-social-media-1786279335</id>
            <summary type="text">சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம்
கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்க மக்களில்
பெரும்பான்மையானோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம்
கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்க மக்களில்
பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>சிறுவர்களைப் பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்ட பயனாளர்களுக்கு வயதுப்
பரிசோதனை கருவிகளை கட்டாயமாக்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு இரு
கட்சிகளையும் சேர்ந்த மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மெட்டா மற்றும் யூடியூப் போன்ற நிறுவனங்கள் சிறுவர்களை அடிமையாக்கும் வகையில்
தமது செயலிகளை வடிவமைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்ட ரீதியான
அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்
வெளியாகியுள்ளன.</p><p></p><h2>பரிசோதனை முறை</h2><p>
</p><p>
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 61 சதவீதமானோர் சமூக ஊடகங்களுக்குக்
கடுமையான கண்காணிப்பு தேவை எனத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், 66 சதவீதமானோர் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க
வயதுப் பரிசோதனை முறையைக் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1d488f9-e1d2-4dfd-b588-e7a69c5f1479/26-6a7880ba8ac1e.webp' /></p><p> அத்துடன், சமூக ஊடகங்கள் சிறுவர்களுக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்துவதுடன்,
அவர்களின் மனநலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என 85 சதவீதமான
அமெரிக்கர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனினும், பெரும்பாலான மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தமக்கு
மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள போதிலும், நாளாந்தம் அதில் அதிக நேரத்தைச்
செலவிடுவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T13:34:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்.. நிதி அமைச்சு எடுத்துள்ள புதிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/30-year-old-government-payroll-system-modernized-1786263633"></link>
            <id>https://tamilwin.com/article/30-year-old-government-payroll-system-modernized-1786263633</id>
            <summary type="text">30 ஆண்டுகள் பழமையான அரச ஊதிய முறைக்கு (GPS) மாற்றாக, ஒரு நவீன தகவல் தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>30 ஆண்டுகள் பழமையான அரச ஊதிய முறைக்கு (GPS) மாற்றாக, ஒரு நவீன தகவல் தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.</p><p>நிதி அமைச்சகத்தின் பொதுக் கணக்குகள் திணைக்களம் (DSA), “அரச நிறுவனங்களுக்கான ஊதிய முறையின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயலாக்கம்” என்ற தலைப்பில் இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>குறித்த திணைக்களம், தற்போதைய முறை தொழில்நுட்ப ரீதியாக காலாவதியானதுடன், நவீன செயல்பாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை அல்லது வளர்ந்து வரும் தகவல் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><h2>ஏற்படும் சிக்கல்கள்..&nbsp;</h2><p>அதன்படி, 1996இல் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய அரச ஊதிய முறையானது, அரச அமைச்சகங்கள், துறைகள், சிறப்புச் செலவினப் பிரிவுகள், மாகாண சபைகள், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பூர்வ சபைகள் உள்ளிட்ட ஏராளமான அரச நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eebc315e-b934-479f-aaf2-c54cd14b2fdd/26-6a7844940ad54.webp' /></p><p> இருப்பினும், அதன் காலாவதியான தொழில்நுட்பக் கட்டமைப்பு மேலும் மேம்படுத்தல்களைத் தடுத்துள்ளது, மேலும் அதன் பலவீனமான பாதுகாப்பு வழிமுறைகள் மோசடி, ஊழல் மற்றும் தரவு மாற்றம் போன்ற அபாயங்களுக்கு அதை உள்ளாக்கியுள்ளன.</p><p> இது அரச நிதிகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், தற்போதைய அமைப்பானது ஒரு ஒருங்கிணைந்த மனிதவள மற்றும் ஊதிய மேலாண்மைத் தளமாகச் செயல்படுவதற்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையையோ அல்லது விரிவாக்கத் திறனையோ கொண்டிருக்காததால், அரசாங்க நிறுவனங்களின் உற்பத்தித்திறனும் செயல்திறனும் பாதிக்கப்படுகின்றன. </p><p>உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போக்குகளுக்கு ஏற்ப, பாதுகாப்பான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஒருங்கிணைந்த ஊதிய அமைப்புக்கு மாற வேண்டிய அவசரத் தேவை இருப்பதாக பொதுக் கணக்குத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.</p><p></p><h2>போலி ஊழியர்கள்</h2><p>

ஒப்பந்த விவரக்குறிப்புகளின்படி, புதிய அமைப்பானது ஸ்தாபனங்கள் சட்டம், அரசாங்க நிதி ஒழுங்குமுறைகள், திறைசேரி, பொது நிர்வாகம் மற்றும் வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கைகள் போன்ற பொதுத்துறை கொள்கைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d160cc44-60b5-416b-93aa-f41578acd72d/26-6a784494c5cde.webp' /></p><p> </p><p>மேலும், இது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தரவுகளை உள்ளீடு செய்யவும், மென்பொருளைப் பயன்படுத்தவும், உத்தியோகபூர்வ பதிவுகளைப் பராமரிக்கவும் கூடிய ஒரு பன்மொழி அமைப்பாக இருக்க வேண்டும். </p><p>உயர் மட்ட நிதிப் பொறுப்புக்கூறலைப் பராமரிக்க, பல காரணி அங்கீகாரத்தைச் செயல்படுத்துவதும், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களுக்கு மாறும் பாதுகாப்பு நீர்முத்திரைகளைச் சேர்ப்பதும், அனைத்துப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான தணிக்கைப் பதிவுகளைப் பராமரிப்பதும் கட்டாயமாகும். </p><p>கூடுதலாக, இந்த புதிய அமைப்பானது போலி ஊழியர்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.

இணைய இணைப்புத் தடங்கல்கள் ஏற்படும் சமயங்களிலும் அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, ஒஃப்லைனில் இயக்கக்கூடிய ஒரு கூடுதல் கருவியையும் இது கொண்டிருக்க வேண்டும்.</p><p> இது, மண்டல சம்பள அலுவலகங்கள் ஒரு எளிய எக்செல் தாள் மூலம் அடிப்படை சம்பளத் தகவல்களைப் புதுப்பிக்கவும், செல்லுபடியாகும் வங்கிப் பரிமாற்றக் கோப்பைத் தயாரிக்கவும் உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T13:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சிறைச்சாலைகள் விவகாரம்.. முக்கிய பொறுப்பேற்கும் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senaka-pallethenna-new-prison-media-spokesperson-1786279108"></link>
            <id>https://tamilwin.com/article/senaka-pallethenna-new-prison-media-spokesperson-1786279108</id>
            <summary type="text">சிறைச்சாலைகள் ஆணையாளர் செனக பல்லெதென்ன, சிறைச்சாலைத் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் இன்று (09) முதல் நடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகள் ஆணையாளர் செனக பல்லெதென்ன, சிறைச்சாலைத் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நியமனம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இவர் இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலைகளின் கண்காணிப்பாளராகவும் பயிற்சி பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.</p><h2>கல்வித் தகைமை&nbsp;</h2><p>

செனக பல்லெதென்ன, காலி ரிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffdd2cb7-b6bf-4ede-be36-bb74e39558b0/26-6a7878ad195fd.webp' /></p><p> </p><p>கொழும்புப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த பட்டயப் படிப்பையும் அவர் நிறைவு செய்துள்ளார்.</p><p>

அவர் இந்தியாவின் கேரளாவில் சீர்திருத்தம் மற்றும் சீர்திருத்த மேலாண்மை குறித்த பட்டயப் படிப்பையும், இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலத்தீவுகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த பல பட்டயப் படிப்புகளையும் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T13:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பிறகு இலங்கையின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786277635"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786277635</id>
            <summary type="text">இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுத்துறையின் வானிலை ஆய்வாளர் ஸ்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுத்துறையின் வானிலை ஆய்வாளர் ஸ்ரீமல் ஹெரத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையைப் பாதித்துள்ள எல்நினோ நிலை அடுத்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வரை தொடரலாம். இதனால், தற்போது வறண்ட வானிலையை அனுபவிக்கும் பகுதிகள் மேலும் பாதிக்கப்படும்.</p><h2>உடல் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு</h2><p> </p><p>தொடர்ந்து நிலவும் வறண்ட நிலை காரணமாக, எதிர்காலத்தில் காற்றின் வேகம் குறையக்கூடும். இதனால் ஈரப்பதத்துடன் உடல் வெப்பநிலையும் மீண்டும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/246fa09b-8843-4b02-afa8-406fcb729524/26-6a7874423e8ff.webp' /></p><p>இதேவேளை தற்போது நுவரெலியா, கண்டி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக&nbsp; மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றதுடன்,&nbsp;அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T12:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை அச்சுறுத்தும் டொல்பின் சூறாவளி: ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-dolphin-threatens-china-flights-cancelled-1786275548"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-dolphin-threatens-china-flights-cancelled-1786275548</id>
            <summary type="text">சீனாவின் கிழக்குக் கரையை &#039;டொல்பின்&#039; சூறாவளி தாக்கவுள்ள நிலையில், அங்கு
1,600க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சுமார்
ஐந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் கிழக்குக் கரையை 'டொல்பின்' சூறாவளி தாக்கவுள்ள நிலையில், அங்கு
1,600க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சுமார்
ஐந்து இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
சூறாவளியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் தேசிய வானிலை
மையம் ஞாயிற்றுக்கிழமை காலையில் மிகக் கடுமையான 'சிவப்பு எச்சரிக்கை'
அறிவிப்பை விடுத்துள்ளது.
</p><p>
அதிக மக்கள் தொகை கொண்ட கிழக்குக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய
கனமழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள்
ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விமானச் சேவை இரத்து</h2><p>
</p><p>
சீனாவின் ஷங்காய் நகரின் முக்கிய விமான நிலையங்களில் 1,400க்கும் மேற்பட்ட
விமானச் சேவைகளும், ஹொங்சோ விமான நிலையத்தில் 270க்கும் மேற்பட்ட விமானச்
சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b7431d-bbea-4bfc-bfb1-5d0776167c48/26-6a786ec4d930f.webp' /></p><p> </p><p>அத்துடன், ஜெஜியாங் மற்றும் ஃபூஜியான்
மாகாணங்களில் 200க்கும் மேற்பட்ட படகுச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெஜியாங் மாகாணத்தின் தாய்சோ நகரில் இருந்து
சுமார் 3,90000 மக்களும், ஷங்காய் மற்றும் ஃபூஜியான் மாகாணங்களின் ஆபத்தான
பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் பாதுகாப்பாக
வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

சூறாவளி ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமையளவில் மணிக்கு 162
கிலோமீற்றர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் சீனக் கரையை அடையும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T12:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remittances-from-foreign-workers-exceed-5-billion-1786275675"></link>
            <id>https://tamilwin.com/article/remittances-from-foreign-workers-exceed-5-billion-1786275675</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றம் 5000 மில்லியன் அமெரிக்க டொலர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றம் 5000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.</p><p>இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h2>மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம்</h2><p>அந்த வகையில் ஆண்டின் குறித்த காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 5,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e341d8-0fb9-437a-be0e-9187bdeccc5f/26-6a786acf7b050.webp' /></p><p> </p><p>

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியைக் காட்டுகின்றது. கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தன. </p><p>

இதன்படி, கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 947.2 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.</p><h2>வளர்ச்சி போக்கு</h2><p> </p><p>

இதேவேளை, ஜூலை மாதத்தில் மட்டும் நாட்டிற்குப் பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca5b2a2-6636-4fa7-b4b6-373d64bedf37/26-6a786ad0437fe.webp' /></p><p> </p><p>

இது கடந்த ஜூன் மாதம் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்துடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய வளர்ச்சியைக் காட்டுகிறது. ஜூன் மாதத்தில் நாட்டிற்குப் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. </p><p>

இதற்கமைய, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 80.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வளர்ச்சியைக் காட்டி, ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் டொலர்கள் பதிவாகியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T11:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. நேருக்கு நேர் சென்ற இரு பாரிய விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jetstar-qatar-airways-planes-sydney-airport-1786258329"></link>
            <id>https://tamilwin.com/article/jetstar-qatar-airways-planes-sydney-airport-1786258329</id>
            <summary type="text">சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும் அபாயத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளன. இச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும் அபாயத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளன. </p><p>இச்சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
</p><p>
காலை 7 மணியளவில் கோல்ட் கோஸ்ட் நோக்கிய திட்டமிடப்பட்ட விமானப் பயணத்திற்காக ஜெட்ஸ்டார் ஏர்பஸ் ஏ320 ரக விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, இழுவை ஊர்தியால் இழுத்துச் செல்லப்பட்ட கட்டார் ஏர்வேஸ் போயிங் 777 விமானத்தை நேராக சந்தித்துள்ளது.</p><h2>உடனடி நிறுத்தம்..&nbsp;</h2><p>

அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகத்தின் (ATSB) தகவலின்படி, இரண்டு விமானங்களும் உடனடியாக அவசரமாக நிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b120a35-b986-4f4f-8069-fb1ab0dfa88e/26-6a7867b1a9543.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவத்தின் போது ஜெட்ஸ்டார் விமானத்தின் பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A Jetstar Airbus A320 and a Qatar Airways Boeing 777 narrowly avoided a collision during ground operations at Sydney Airport at around 07:00 local time this morning.<br><br>The Jetstar A320, operating flight JQ402 to the Gold Coast, was taxiing under its own power toward the runway for… <a href="https://t.co/JwGURCZGIO">pic.twitter.com/JwGURCZGIO</a></p>&mdash; Turbine Traveller (@Turbinetraveler) <a href="https://x.com/Turbinetraveler/status/2086351156075208794?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>மேலும் கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் முன்பக்க சக்கரத்திற்கும், அதை இழுத்துச் சென்ற ஊர்திக்கும் இடையிலான இணைப்பிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியே தமது விமானம் பயணித்ததாகவும், மற்றொரு விமானம் மிக அருகில் வந்ததால் விமானிகள் அவசரமாக பிரேக் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஜெட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தடுக்கப்பட்ட விபத்து&nbsp;</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து குறித்த ஜெட்ஸ்டார் விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டு, பயணிகள் பிந்தைய விமானச் சேவைகளுக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bf33c43-ad5c-4ffc-815d-adc0ea52292d/26-6a7867b25ff85.webp' /></p><p>
</p><p>
அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் (ATSB) இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விமானப் ஊழியர்கள், இழுவை ஊர்தி ஓட்டுநர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் இதர சாட்சிகளிடம் விசாரணைகளை நடத்தவுள்ளதோடல்லாமல் காட்சிகளையும் ஆய்வு செய்யவுள்ளது.
</p><p>
சிட்னி விமான நிலையத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையினால் கடுமையான தாமதங்கள் ஏற்பட்டு வரும் பின்னணியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><p>மேலும், கடந்த ஜூலை 27 ஆம் திகதியும் இதே விமான நிலையத்தில் குவாண்டாஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் மோதும் அபாயத்திலிருந்து தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T11:46:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/security-in-all-33-prisons-sri-lanka-1786273932"></link>
            <id>https://tamilwin.com/article/security-in-all-33-prisons-sri-lanka-1786273932</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்தும் பலப்படுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
சிறைச்சாலை அமைப்பின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதிசெய்யும் பொருட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இதேவேளை, அண்மையில் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் பல்வேறு குழுக்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பலத்த பாதுகாப்பு</h2><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் பல்வேறு வெளித்தரப்பினரின் தலையீடுகள் இருந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் நிலவுகிறது.
</p><p>
மோதல்கள் வெடித்த சமயங்களில், கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறைச்சாலைகளுக்கு அருகில் நடமாடியமை அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa66f57-a64d-4682-82aa-9a6a6add572f/26-6a7863b56b227.webp' /></p><p>

இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சிறைச்சாலை அமைப்பைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அல்லது அதன் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
</p><p>
ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக, நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையான நேரங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T11:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்து - இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/helicopter-involved-in-wildfire-control-crashes-1786274624"></link>
            <id>https://tamilwin.com/article/helicopter-involved-in-wildfire-control-crashes-1786274624</id>
            <summary type="text">அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் பரவி வரும் பாரிய காட்டுத்தீயைக்
கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று
விபத்துக்குள்ளானதில், இருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் பரவி வரும் பாரிய காட்டுத்தீயைக்
கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று
விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
அமெரிக்க வன சேவைத் திணைக்களத்தின் ஒப்பந்தத்தின் கீழ் இயக்கப்பட்ட
'சிகோர்ஸ்கி எஸ்-64 ஸ்கைக்ரேன்' ரக ஹெலிகொப்டரே, ரிச்ஃபீல்ட் பகுதிக்கு
அருகில் உள்ள வைட்மௌத் 2 காட்டுத்தீ எல்லைப் பகுதியில் நேற்றுமுன் தினம் விபத்துக்குள்ளானது. </p><h2>


24 மணித்தியாலங்களுக்கு சடலங்கள் மீட்பு</h2><p>
கடுமையான தீப்பரவல் மற்றும் கரடுமுரடான மலைப்பகுதி காரணமாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை உடனடியாகச் சென்றடைவதில் கடும் சிரமம் ஏற்பட்டது.</p><p>

இதன் காரணமாக, விபத்து நடந்து 24 மணித்தியாலங்களுக்கும் மேலாகிய நிலையிலேயே சனிக்கிழமையன்று உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a57159-c773-4e02-958d-ae58e7112173/26-6a78637a545f7.webp' /></p><p>

மின்னல் தாக்கியதன் காரணமாக கடந்த ஜூலை 27 ஆம் திகதி ஃபிஷ்லேக் தேசிய
வனப்பகுதியில் ஆரம்பமான இந்த காட்டுத்தீ, இதுவரை 111,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை எரித்து சாம்பலாக்கியுள்ளது.</p><h2>

தீ பரவலால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு</h2><p>
தற்போது வரை தீயின் 24 சதவீதமான பகுதி மட்டுமே கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பலத்த காற்றினால் தீ மேலும் பரவும் அபாயம்
காணப்படுகின்றது.
</p><p>
காட்டுத்தீயை அணைக்கும் பணி உலகின் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஒன்று எனக் குறிப்பிட்ட யூட்டா மாநில ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், உயிரிழந்தவர்களின்
குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்த கோடைகாலத்தில் யூட்டா மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது பலிச்
சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.</p><p> 

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற காட்டுத்தீ அசம்பாவிதங்களில் நான்கு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருந்தனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T11:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arrested-counterfeit-currency-money-1786272587"></link>
            <id>https://tamilwin.com/article/person-arrested-counterfeit-currency-money-1786272587</id>
            <summary type="text">மிரிஹானை, கோட்டே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு திசை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிரிஹானை, கோட்டே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு திசை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

மேல் மாகாண தெற்கு திசை குற்றப் குற்றவியல் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, மிரிஹானை, கோட்டே வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவராவார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

இதன்போது போலியாக அச்சிடப்பட்டிருந்த 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் 07, 1,000 ரூபாய் நாணயத்தாள்கள் 06, 500 ரூபாய் நாணயத்தாள் 01, கணினியொன்று, ஸ்கேனர் இயந்திரம் மற்றும் அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f1c7734-e7e7-41ca-b2ed-20bf4f480714/26-6a785dab71525.webp' /></p><p>அத்தோடு, சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T11:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களுடன் கடலுக்கு சென்ற வெளிநாட்டவருக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-tourist-found-dead-1786271168"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-tourist-found-dead-1786271168</id>
            <summary type="text">வெலிகம கடற்பகுதியில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது வலுவான அலை மற்றும் நீரோட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் அடித்து செல்லப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிகம கடற்பகுதியில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது வலுவான அலை மற்றும் நீரோட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் அடித்து செல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் இன்று(09.08.2026) வெலிகம பழைய கடை கடற்கரையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இவ்வாறு உயிரிழந்த வெளிநாட்டவர், 21 வயதுடைய டுனிசிய நாட்டை சேர்ந்தவர் என்றும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>

 உயிரிழந்த இளைஞர் நேற்று(08) சனிக்கிழமை பிற்பகல் தனது டுனிசிய நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து வெலிகம பழைய கடை கடற்கரைப் பகுதியில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.</p><h2> 

சீரற்ற காலநிலையால் சேர்ந்த விபரீதம்</h2><p>
நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் சீற்றமான கடல் நிலைமை காரணமாக உருவான பலத்த நீரோட்டத்தில் சிக்கி அவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95bcb2f7-8eb7-4185-9b43-7c09f13d9be1/26-6a785782c6267.webp' /></p><p>
</p><p>
பொலிஸ் கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர், கடலோரக் காவல்படையினர் மற்றும் தனியார் டைவிங் குழுவினர் இணைந்து அவரைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும் நேற்றைய தினம் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>

இந்த நிலையில், இன்று(09) காலை அவரது சடலம் கரை ஒதுங்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக வெலிகம தலைமைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டு.மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு: உடனடி விசாரணைக்கு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-inquiry-batti-municipal-council-1786270013"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-inquiry-batti-municipal-council-1786270013</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக சுகாதார தொண்டர் 16 ஆட்சேர்ப்பில்
முறைகேடு இடம்பெற்றிருக்கின்றது.எனவே இது தொடர்பாக துரிதமாக விசாரணை ஒன்றை
மேற்கொள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக சுகாதார தொண்டர் 16 ஆட்சேர்ப்பில்
முறைகேடு இடம்பெற்றிருக்கின்றது.எனவே இது தொடர்பாக துரிதமாக விசாரணை ஒன்றை
மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை
அனுப்பியுள்ளதாக ஈ.பி.டி.பி. கட்சி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டு. மாநகர சபை அமர்வு கடந்த 6ம் திகதி நடைபெற்றது அதில் அதன் உறுப்பினர்கள்
தங்களுக்கு தெரியாமல் 16 சுகாதார தொண்டர்கள் புதிதாக வேலைக்கு நியமித்ததாக
குற்றச்சாட்டை முன்வைத்தனர்.</p><p> இதனை ஊடகங்கள் ஊடாக அவதானிக்க முடிந்தது.எனவே மாநகர சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் சுகாதார தொண்டர் என்ற
அடிப்படையில் 16 பேரை நியமித்துள்ளனர்.</p><p></p><h2>நியமனங்கள்&nbsp;</h2><p>இதில் ஒரு மோசடி நடைபெற்றிருக்கின்றதா
என்ற சந்தேகம் எழுகின்றது ஏன் என்றால் உயரிய சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல்
இந்த நியமனங்கள் வழங்கப்பட்டது.</p><p> உண்மையில் ஒரு முறைகேடான விடயமாக
கருதுகின்றோம். எனவே இது சம்பந்தமாக துரிதமாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு
கோரி கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22cee9a2-9bcd-4af1-bfe1-16b9ff263af0/26-6a7855eff4119.webp' /></p><p>

மாமாங்கத்தை பிறப்பிடமாக கொண்ட ஒருவர் குறித்த வேலைக்கான நேர்முக பரீட்சைக்கு
தொற்றியதாகவும் அவர் க.பொ.தர.சாதாரண தர பரீட்சையில் 5 பாடங்கள்
சித்தியடைந்துள்ளார் எனவும் அவருக்கு அந்த வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.</p><p>எனவே அவரை விட இந்த 16 பேரும் தகுதியுடையவர்களா அல்லது அதிகார தலையீடு
இருக்கின்றதா என ஆளுநர் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T10:28:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் அதிரடி தீர்மானம்.. தேரர்களுக்கும் சிக்கலா..! பதற்றத்தில் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-22nd-amendment-mahanayake-theros-1786260814"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-22nd-amendment-mahanayake-theros-1786260814</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரர், திப்பத்துவவ ஸ்ரீ சுமங்கல மகா தேரர் உறுதிப்படுத்தினார். </p><p>இதுவரை அத்தகைய கடிதம் எதுவும் ஜனாதிபதியால் பெறப்படவில்லை என்று அரசாங்கம் கூறியிருந்த சூழலில், தேரர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>

இருப்பினும், சம்பந்தப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டிருந்தாலும், அது ஜனாதிபதியால் பெறப்பட்டதா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை என்று, ஊடகத்தினரிடம் பேசியபோது தேரர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அவசரக் கூட்டம்..&nbsp;</h2><p>
</p><p>
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் எதிர்ப்புப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் குழு ஒன்று, மல்வத்தை மற்றும் அஸ்கிரி உபய மகா விகாரையின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து கலந்துரையாடியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab4c13d-4e02-4383-af13-5dcb7c4cabfc/26-6a78322a62afb.webp' /></p><p>முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து மக்களின் கருத்தை அறிய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது.
</p><p>
இந்தப் பிரதிநிதிகள் குழுவில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், பாட்டாலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, லசந்த அழகியவன்ன மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.</p><p> கலந்துரையாடலின் போது, ​​சம்பந்தப்பட்ட கடிதம் ஊடகங்களுக்கும் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>சிக்கலான பின்விளைவுகள்..&nbsp;</h2><p> இதற்குப் பதிலளித்த மகாநாயக்க தேரர், பிக்குகள் கடிதத்தை அனுப்பியிருந்த போதிலும், அது ஜனாதிபதிக்குக் கிடைத்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc1eb4a-8af8-4628-84d2-dc0f90342a64/26-6a78322b25622.webp' /></p><p> </p><p>மேலும், அக்குழுவினர் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கரான வரக்ககோட ஸ்ரீ ஞானரத்ன மகா தேரோவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
</p><p>
கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜி. எல். பீரிஸ், அரசியல் கட்சிகள், சட்ட சமூகம் அல்லது மதத் தலைவர்கள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரையும் கலந்தாலோசிக்காமல் அரசாங்கம் இந்தத் திருத்தத்தை அவசரமாக அறிமுகப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். </p><p>அரசாங்கம் நீதித்துறையை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிப்பதாகவும், இது ஒருமுறை தொடங்கிவிட்டால், எங்கு போய் முடியும் என்று சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், இது ஒரு சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் செயல்முறை என்றும் அவர் எச்சரித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T10:25:29+00:00</updated>
        </entry>
    </feed>
