<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-01T13:37:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-military-aircraft-crashes-in-california-1785590088"></link>
            <id>https://tamilwin.com/article/us-military-aircraft-crashes-in-california-1785590088</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மிராமர் கடற்படை விமான தளத்திற்கு
அருகே அமெரிக்க மரைன் கோர்ப்பிற்குச் சொந்தமான எஃப்-35பி ரக அதிநவீன ஸ்டெல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மிராமர் கடற்படை விமான தளத்திற்கு
அருகே அமெரிக்க மரைன் கோர்ப்பிற்குச் சொந்தமான எஃப்-35பி ரக அதிநவீன ஸ்டெல்த்
போர் விமானம் விபத்துக்குள்ளானது.
</p><p>
விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, சரியான நேரத்தில் பராசூட் மூலம்
குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.</p><p>காயமடைந்த அவர், உடனடியாக
சிகிச்சைக்காகக் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான
நிலையில் உள்ளார்.</p><p></p><h2>விபத்து</h2><p>

விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அப்பகுதியில் கடும் புகை மூட்டம்
ஏற்பட்டதுடன், அதைச் சுற்றியுள்ள புல்வெளிகளில் தீப்பற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5f7a2f6-bfc7-4e82-a663-c50dd8347b3e/26-6a6df2fd5d2ed.webp' /></p><p> சம்பவ
இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில்
ஈடுபட்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T13:28:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் பதற்ற நிலை! கைதிகள் பலர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-in-mahara-prisons-1785584349"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-in-mahara-prisons-1785584349</id>
            <summary type="text">புதிய இணைப்புமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் உள்ள ஒரு கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் உள்ள ஒரு கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்தச் சம்பவத்தில் கைதிகள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக ராகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;விசேட அதிரடிப்படை</h2><p>

முன்னதாக, மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலைமை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்தவும் விசாரணைகளை முன்னெடுக்கவும் பல சிறப்பு பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

அத்துடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da0b6414-e9dc-4b3d-8e54-b31f51b6ded9/26-6a6df3a9e9c1b.webp' /></p><p>

சிறைச்சாலை திணைக்களத்தின் தகவலின்படி, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

இன்று (01) மாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்த பதற்ற நிலைக்கு காரணமாக இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதனைத் தொடர்ந்து, மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பொலிஸார் மற்றும் STF அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;உத்தியோகபூர்வ அறிக்கை</h2><p>

இதேவேளை, கைதிகள் சிறைச்சாலையின் முதன்மை சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மற்றொரு புறம், இன்று பிற்பகல் கைதிகளைச் சந்திக்க வந்திருந்த உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341b10d6-5610-46e4-b012-2f04563f510a/26-6a6df3a912f9a.webp' /></p><p> </p><p>இதனால் அவர்கள் தற்போது சிறைச்சாலைக்கு வெளியே காத்திருக்கின்றனர்.

சிறைச்சாலைக்கு வெளியே இருந்த கைதிகளின் உறவினர்கள், சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடவில்லை.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
நிலைமையை விசாரிக்க பல சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக&nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;பதற்ற நிலை</h2><p>எனினும், அமைதியின்மைக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6020b5c-ecea-4580-a8ee-f7653beafbd9/26-6a6de7317730d.webp' /></p><p>

நிலைமை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>
 </p>]]></content>
            <updated>2026-08-01T13:25:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்யை விரைவில் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-with-tamil-nadu-cm-vijay-planned-soon-1785584270"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-with-tamil-nadu-cm-vijay-planned-soon-1785584270</id>
            <summary type="text">தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட பல அரசியல்
தலைவர்களை சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட பல அரசியல்
தலைவர்களை சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், இலங்கையிலுள்ள பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள், தமிழ் பேசும் கட்சிகளின் பேரவையாக இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுச் செயலாளரை விரைவில் சந்திக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.</p><p>
நேற்று திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்த அவர்,
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.</p><p></p><h2>முக்கிய பிரச்சினை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>
"எதிர்வரும் திங்கட்கிழமை அன்று, தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துத் தமது சமூகங்கள் எதிர்நோக்கும் முக்கிய
பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளன. அதேநாளில் எதிர்க்கட்சித்
தலைவரையும் சந்திக்க முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/036c6db6-c4f8-43fb-80b4-317caccede3a/26-6a6dee44cb7d0.webp' /></p><p>

இலங்கைக்கு விரைவில் வருகை தரவுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்தித்து,
13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல் மற்றும் தமிழ் மக்களின் காணிப்
பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்துப் பேசத்
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும்
சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடற்றொழிலாளர் பிரச்சினை</h2><p>
யுத்தக் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை உடனடியாக விடுவிப்பது
தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்வைக்கவுள்ளோம்.</p><p>

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினை இரு நாடுகளின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன்
தொடர்புடைய மனிதாபிமான விடயம் என்பதால், இராஜதந்திரப் பேச்சுகள் மூலம் நிரந்தர
தீர்வு காணப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/160aa7c5-24d2-4201-886b-064d2cc28795/26-6a6dee45b4f2c.webp' /></p><p>
</p><p>
இந்தியாவின் அபிவிருத்தி உதவிகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும்
மக்களுக்கும் உரிய முறையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T13:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிந்தவூரில் வீதிப் பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcycles-involved-in-street-racing-in-ninthavur-1785587508"></link>
            <id>https://tamilwin.com/article/motorcycles-involved-in-street-racing-in-ninthavur-1785587508</id>
            <summary type="text">அம்பாறை- நிந்தவூர் பகுதியில் நேற்று (31) இரவு வீதிகளில்
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்ட இளைஞர்களை இலக்கு
வைத்து நிந்தவூர் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- நிந்தவூர் பகுதியில் நேற்று (31) இரவு வீதிகளில்
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்ட இளைஞர்களை இலக்கு
வைத்து நிந்தவூர் பொலிஸார் அதிரடி சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.</p><p>

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மற்றும் சட்டவிரோதமாக
உருமாற்றம் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகப் பயணித்த
இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்ததுடன், இதுவரை 5 மோட்டார் சைக்கிள்களைத்
தம்வசம் பறிமுதல் செய்துள்ளனர்.
</p><p>சோதனை நடவடிக்கையின் போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர்
பயணித்தமை,தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம்
செலுத்தியமை,வாகன இலக்கத்தகடுகள் இன்றிப் பயணித்தமை,பொலிஸாரின் கட்டளையை
மீறித் தப்பிச் செல்ல முயன்றமை
உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நபர்கள் அடையாளங்காணப்பட்டு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொலிஸார் எச்சரிக்கை</h2><p>
</p><p>
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடும்
முறையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மோட்டார்
சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f45ed901-85ff-4785-878a-a140f29a35ba/26-6a6de9bce6980.webp' /></p><p>
</p><p>
பொது வீதிகளில் பிறருக்கு இடையூறாகவும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும்
மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவோருக்கு எதிராக இத்தகைய அதிரடிச் சோதனைகள்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T13:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-ratmalana-1785586237"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-ratmalana-1785586237</id>
            <summary type="text">இரத்மலானை கந்தவல வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை கந்தவல வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;துப்பாக்கிச் சூடு</h2><p>

சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4527ff-24aa-4589-8a2e-6a758a763d15/26-6a6de41f5f783.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-01T12:18:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீளப் பெறப்பட முடியாத சமஸ்டி தீர்வு வேண்டும்: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-need-an-irreversible-federal-solution-1785584028"></link>
            <id>https://tamilwin.com/article/we-need-an-irreversible-federal-solution-1785584028</id>
            <summary type="text">தமிழ் மக்கள் 13ம் திருத்தத்தின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் வடக்கு
கிழக்கில் கெளரவமான உரிமைகளுடன் வாழக்கூடிய மீலப் பெற முடியாத சமஸ்டி தீர்வை
அனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்கள் 13ம் திருத்தத்தின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் வடக்கு
கிழக்கில் கெளரவமான உரிமைகளுடன் வாழக்கூடிய மீலப் பெற முடியாத சமஸ்டி தீர்வை
அனைத்து தரப்பினரும் ஓரணியிலிருந்து நின்று வலியுறுத்த வேண்டுமென வடக்கு
கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்தது.
</p><p>
வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவினால் 8 மாவட்டங்களிலும் சமஸ்டி
தீர்வை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட 100 நாள் செயற்திட்டத்தின் நான்கு வருட
பூர்த்தியை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.</p><p>

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையை
முன்மொழிந்து இவ்வருடத்துடன் 75 வருடங்கள் ஆகின்றன.

1900களின் ஆரம்ப முதலே சிங்கள பௌத்த அரசியல் தலைமைகளின் தமிழர் எதிர்ப்பு
பரப்புரைகளும் எழுத்துக்களும், தமிழ் மக்களின் அரசியல், சமுதாய நலன்களைக்
காப்பதற்கான தனித்துவமான அரசியல் அமைப்பொன்றின் அவசியத்தை தமிழ் அரசியல்
தலைமைகளுக்கு உணர்த்தியது.</p><h2>நில அபகரிப்புகள்</h2><p>
</p><p>
1921ம் ஆண்டு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை
முன்னெடுப்பதற்காக சேர். பொன். அருணாச்சலம் தலைமையில் “தமிழர் மகாஜன சபா”
உருவாக்கப்பட்டது.</p><p>

சுதந்திரத்தின் பின் ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள தலைமைகள் மேற்கொண்ட திட்டமிட்ட
அரசியல் ஓரங்கட்டல்கள், நில அபகரிப்புகள், வடக்கு கிழக்கில் அபிவிருத்தி எனும்
பெயரில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆகியன தமிழ் மக்களின்
இறைமையை அபகரித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/668f30b7-00b9-4008-9700-4c4e7ac7b98b/26-6a6dddfc6da11.webp' /></p><p> </p><p>இந்த இறைமை மீறலை நிறுத்துவதற்காக அன்றைய தமிழர் தலைமைகள்
சமஷ்டிக் கொள்கையை 1951ம் ஆண்டு முன்வைத்தனர்.

ஒரு மக்கள் சமூகம் தமது வாழ்விடப் பிரதேசத்தில் தமக்கான அரசியல் வாழ்வை தாமே
தீர்மானித்து, தம்மைத் தாமே நிர்வகித்து, கௌரவமாகவும் உரிமைகளுடனும் வாழ்வதே
இறைமையாகும்.</p><p>

ஒற்றை ஆட்சி முறையில் இறைமை பகிர்ந்துகொள்ளப் படுவதில்லை. அதிகாரம் மத்திய
அரசிடம் இருக்கும். மத்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் மாநிலத்துக்கு
வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப்பெற முடியும். 13வது திருத்தச்சட்டம்
இத்தகையாதாகும்.
</p><p>
இதன் மூலம் வடக்கு கிழக்குக்கு இறைமை பகிரப்படவில்லை. அன்று தொட்டு
இன்றுவரையிலும் இலங்கையில் ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள அரசியல் தலைமைகள்
இறைமையைப் பகிர்ந்துகொள்ள முன்வராத நிலையில் கானல் நீர்போன்ற 13வது
திருத்தத்தின் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்.</p><p>
</p><p>
ஒரு நாட்டின் இறைமை என்பது அந்நாட்டு மக்களுக்குள்ள உரிமைகள், மக்கள் தமக்கான
அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அவர்களைக் கொண்டு தமக்கேற்ற அரசியல் சமூக
பொருளாதார கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கி
தமக்கான முன்னேற்றத்தை எட்டுவதாகும்.சுருங்கக் கூறின் தமது அரசியல் தலைவிதியை
தாமே தீர்மானிப்பதற்கு மக்களுக்குள்ள அதிகாரமாகும்.</p><h2>நாட்டின் இறைமை</h2><p>
</p><p>
இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் இறைமையை வெறுமனே
நிலத்துடன் குறுக்கிக்கொண்டுள்ளனர்.

இலங்கையின் நிலத்தொடர்ச்சியை பாதுகாப்பதுதான் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பது
எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.</p><p>

இறைமை என்பது மக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். தமது நாட்டிலோ மாநிலத்திலோ
தமக்கான அரசாங்கத்தை தெரிவுசெய்யவும், தமக்கான வாழ்வியலை தீர்மானிக்கவும்,
உரிமைகைள பிரயோகிக்கவும் மக்கள் கொண்டுள்ள அதிகாரப் பலமே இறைமையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8106b7f-fd66-42db-b04a-d6169f7f0257/26-6a6dddfd3e1e6.webp' /></p><p>

மக்களைத் தவிர்த்துவிட்டு நிலத்தை மாத்திரம் பார்க்க முடியாது. மக்களைப்
பாதுகாப்பதே இறைமையை பாதுகாப்பதாகும். இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த
பெரும்பான்மை அரசுகள், வடக்கு கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளன.

தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் தமக்கான அரசியல் தீர்வை அடைவதற்கு மக்களுக்குள்ள
அதிகாரத்தை புறக்கணித்துள்ளன.</p><p> உரிமைகளை அத்துமீறுகின்றன.

ஆகவே இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கில் மீளப் பெற முடியாத சமஷ்டி தீர்வே
நிலையானது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
</p><p>
குறித்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கை சேர்ந்த எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த
சமூகம் அட்ட அமைப்பினர் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு
இணை இணைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-01T11:52:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயில் வீதி மீண்டும் மூடல் - இளங்குமரன் எம்.பி. வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palali-raja-rajeshwari-amman-temple-road-closed-1785584818"></link>
            <id>https://tamilwin.com/article/palali-raja-rajeshwari-amman-temple-road-closed-1785584818</id>
            <summary type="text">இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ
இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக
திறக்கப்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ
இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக
திறக்கப்பட்ட நிலையில் நேற்று(31.07.2026) மீண்டும் மூடப்பட்டது.</p><p>

ஏற்கனவே கடந்த ஆண்டு, ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் செல்லும் வீதி
 தற்காலிக பாதையூடாக செல்லும் வகையில் திறக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அத்துடன், நிரந்தர பாதை மூடப்பட்டே இருந்தது. எனினும் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் தங்கள் காணியை சுற்றி வேலியை அமைத்த காரணத்தினால் அந்த வழியை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. </p><h2>

பாதை தற்காலிகமாக திறப்பு</h2><p>

இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர், இராணுவத்தினரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்
இளங்குமரனிடமும் கோரிக்கை விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbbc610-9572-43d3-9f4a-9f95a3b2ca98/26-6a6dddd48588f.webp' /></p><p> 

இது தொடர்பில், இராணுவத்தினருடன்
கலந்துரையாடியதையடுத்து, நிரந்தர பாதை தற்காலிகமாக திறக்கப்பட்டது.</p><p> 

அதன்பின்னர், ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்டதன் பின்னர், அந்த வீதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். </p><p>

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம்(30.07.2026) திருவிழா முடிந்த நிலையில்
நிரந்தர பாதை மூடப்பட்டுள்ளது.
</p><h2>
காணிகள் விடுவிப்பதற்கு நடவடிக்கை</h2><p>
இதேவேளை, பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

“ கடந்த காலத்தில் மக்கள் கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக திருவிழாவுக்காக
தற்காலிகமாக அந்த பாதை திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab00502-d439-44e7-98b6-5d2caa15cf52/26-6a6dddd54bbd8.webp' /></p><p> குறித்த பாதையானது நிரந்தரமாக
திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஒரு மாத்திற்குள் அந்த பாதை நிரந்தரமாக திறக்கப்படும்.
</p><p>
மேலும், இரண்டு மாதத்திற்குள் குறித்த வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள
பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன” என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்ச தனது தம்பியின் சட்டத்தரணிக்கு நீதித்துறையில் வழங்கிய உயர் பதவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-supreme-court-mahinda-rajapaksa-1785583856"></link>
            <id>https://tamilwin.com/article/justice-supreme-court-mahinda-rajapaksa-1785583856</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் சில வெற்றிடங்கள் ஏற்பட்டன. குறித்த வெற்றிடங்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் சில வெற்றிடங்கள் ஏற்பட்டன. குறித்த வெற்றிடங்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டப்பட்டவர்களை நிமித்துள்ளதாக வெளிநாட்டில் இருந்து இயங்கும் புலனாய்வு வலையொளி செய்தித் தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அதில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலதிக தகவல்கள்.. 

அரசு நீதித்துறையில் அதிகாரத்தை பிரயோகிப்பதாகவும் அல்லது தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. </p><p>ஆனால் அரசு நீதித்துறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு தலையீட்டையும் செய்யவில்லை என்பது தெளிவான காரணியாகும். </p><p>ஆனால், இந்த எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, நீதிபதிகளை நியமிப்பதற்கு அல்லது வழக்குத் தீர்ப்புகளுக்கு எவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகித்தது, தலையீடுகளைச் செய்தது என்பது இன்று சாட்சிகளுடன் தெரியவந்துள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>மகிந்த வழங்கிய நியமனம்</h2><p>அந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகளுக்கான வெற்றிடங்களுக்கு மகிந்த ராஜபக்ச பியந்த ஜயவர்தன என்பவரை நீதிபதியாக நியமித்தார். </p><p>உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட பியந்த ஜயவர்தன என்பவர், நீதித்துறை படிநிலைகளான நீதவான், மாவட்ட நீதிபதி, மேல் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியிலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு வந்த ஒருவரல்ல. </p><p>இந்த பியந்த ஜயவர்தன என்பவர் நீதித்துறை சேவைக்கு வெளியே இருந்த ஒரு சட்டத்தரணி ஆவார். அத்துடன், இவர் பசில் ராஜபக்சவின் சட்டத்தரணியாவார்.
</p><p>
தனது சகோதரரின் சட்டத்தரணியை நாட்டின் உயர் நீதித்துறை பீடமான உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் வழங்கியது அரசியல் தலையீடு இல்லையா? </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca88ae3d-0375-4e24-846f-58982657e4a3/26-6a6dd8f2b8add.webp' /></p><p>அதில் ராஜபக்சவினர் நீதித்துறையில் அரசியல் தலையீட்டைச் செய்யவில்லையா?
இந்தச் சந்தர்ப்பங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதைக் காணவில்லையா? </p><p>அவை சட்டத்தின் மேலாதிக்கத்திற்கோ அல்லது சட்டத்தின் சுயாதீனத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தாத விடயங்களா? அவை குறித்து அக்காலத்தில் ஒன்றுமே பேசவில்லை.
</p><p>அத்தோடு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோதும் இதே போன்ற ஒரு நியமனத்தை செய்தார். அதாவது, உயர்நீதிமன்றத்திற்கு பிரசன்ன ஜயவர்தன என்பவரை நியமித்தார். </p><p>
எனவே, பிரசன்ன ஜயவர்தன - பியந்த ஜயவர்தன ஆகிய இருவருமே அரசியல் தேவைகளுக்காக, உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள். ஆனால், அதற்கு எதிராக யாரும் பேசவில்லை. இவ்வாறு ஆர்ப்பாட்டங்களும் செய்யவில்லை.&nbsp; </p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T11:35:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஏற்றுமதி இலக்கு குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-export-target-for-2030-1785580879"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-export-target-for-2030-1785580879</id>
            <summary type="text">2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடப்பதே தமது இலக்கு என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடப்பதே தமது இலக்கு என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக அதிகாரிகளைச் சந்தித்த போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 23 சந்தைகளில் நிறுவப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தக அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர், சர்வதேச சந்தையில் இலங்கையின் வர்த்தகம் மற்றும் பரந்த பொருளாதார நலன்களை முன்னோக்கி கொண்டு செல்வதில் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><h2>ஏற்றுமதி வருமானம்&nbsp;</h2><p>சந்தை அபிவிருத்தி, ஏற்றுமதி ஊக்குவிப்பு, முதலீட்டு வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றினூடாக அளவிடக்கூடிய பெறுபேறுகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206ba744-b080-4b07-b77e-82c86bd64c99/26-6a6dd6f1d7993.webp' /></p><p> </p><p>

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் கடப்பது உள்ளிட்ட தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் இலக்குகளுடன் தங்களது நடவடிக்கைகளை சீரமைக்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T11:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரிக்கு நெருக்கமானவரால் ஏழு தடவை மறைக்கப்பட்ட இரகசிய உளவுத்துறை தகவல்..! ஹேமசிறியின் உருக்கமான வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-row-convict-hemasiri-s-confessions-1785576925"></link>
            <id>https://tamilwin.com/article/death-row-convict-hemasiri-s-confessions-1785576925</id>
            <summary type="text">2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p>இதன்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது வாக்குமூலத்தில் முன்வைத்ததாக கூறப்படும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதன்பின்னர் மரண தண்டனை விதிப்பதற்கு முன் பிரதிவாதிக்கு ஏதேனும் கூற உள்ளதா என நீதிமன்றம் வினவிய நிலையில், அதற்கு பதிலளித்த ஹேமசிறி பெர்னாண்டோ பல தகவல்களை&nbsp;வாக்குமூலமாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட கருத்துக்களாவது,&nbsp;</p><p>&nbsp;</p><p> </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வாக்குமூலத்தில் வெளியிட்ட தகவல்</span></p><p>"தலைமை நீதிபதி முன்வைத்த கருத்துக்களை நான் ஏற்கவில்லை. கனம்பொருந்திய நீதிபதி அவர்களே.. பாதுகாப்புச்செயலாளர் என்று ஒரு பதவி இல்லை. நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவே பணியாற்றினேன். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்பது மற்ற அமைச்சுகளின் செயலாளர்களைப் போன்றதே. சிறப்பு அதிகாரங்கள் எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107be1b3-7e3c-449a-9f4a-4183a4286a3c/26-6a6dc4fa2b8e5.webp' /></p><p> </p><p>அமைச்சரின் அறிவறுத்தலின் படியே நான் செயல்பட்டேன். அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றிருந்தார். பதில் அமைச்சராக எவரையும் அவர் நியமிக்கவில்லை. அமைச்சர் இல்லாத போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் செயல்பாடுகள் முடங்கிவிடும். </p><p>நிலந்த ஜயவர்தன ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயல்பட்டார். நான் நியமிக்கப்பட்டதும் புலனாய்வு தகவல்கள் குறித்து எவ்வாறு செயல்படுவது என்று ஜனாதிபதியிடம் கேட்டேன். அதற்கு ஜனாதிபதி, 'புலனாய்வு தகவல்களை நிலந்த எனக்குத் தெரிவிப்பார், நீங்கள் நிர்வாக வேலைகளைக் கவனியுங்கள்' என்றார்.</p><p> நான் அமைச்சின் நிர்வாகக் கடமைகளை மட்டுமே செய்தேன். நான்கு ஆண்டுகளில் புலனாய்வு தகவல்களை ஜனாதிபதியிடம் நிலந்தவே வழங்கி வந்தார். தாக்குதலுக்கு முந்தைய நாள் நிலந்தவிடமிருந்து எந்த ஆவணமும் எனக்கு வரவில்லை. இரண்டு வாட்ஸ்அப் செய்திகள் மட்டுமே வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11173bba-7b7e-4e6d-8d58-1733a4dc9568/26-6a6dc5b60cb51.webp' />&nbsp;</p><p> ஏப்ரல் 9 ஆம் திகதி நடந்த புலனாய்வு ஆய்வுக் கூட்டத்தில் நிலந்த இந்தத் தாக்குதல் பற்றி எதையும் கூறவில்லை. கூறியிருந்தால் அங்கிருந்த இராணுவ, கடற்படை புலனாய்வு பிரதானிகளுக்கும் தெரிந்திருக்கும்.எங்கள் குழுக்களில் ஒன்று கிழக்குப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தும் என்றும் அவர் எங்களுக்குத் தெரிவித்தார்.</p><h2>ஏழு தடவை மறைக்கப்பட்ட தகவல்</h2><p> இந்தத் தகவல் கிடைத்த ஏப்ரல் 1 முதல் 16 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி இலங்கையில் இருந்தார். ஆனால், நிலந்த ஜயவர்தன இந்தத் தகவலை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருக்கலாம். அவர் அதை வேண்டுமென்றே மறைத்தார். இந்தத் தகவலை அவர் ஏழு முறை மறைக்க முயன்றார்.</p><p> அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரே இப்படிச் செயல்பட்டால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலையில், நிலந்த ஜயவர்தன என்னை அழைத்து, நடத்தப்படவிருந்த தாக்குதல்கள் குறித்து எனக்கு தெரிவித்தார். இதை நம்ப முடியுமா என கேட்டேன். இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிப்போம் என்று அவர் கூறினார்.</p><p> நிலந்த ஜயவர்தனவின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1500 புலனாய்வு அதிகாரிகள் உள்ளனர். இதை விசாரித்து உறுதிப்படுத்தும்படி அவர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5625db01-c9b2-4f83-b781-38c2af2a37f6/26-6a6dc4face695.webp' />&nbsp;</p><p>இராணுவத்தை வரவழைக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் கூட எனக்கு இல்லை. தலைமை நீதிபதி அவர்களே, நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால், நீங்களும் அதையே செய்திருப்பீர்கள்.</p><p> 

"தாக்குதலுக்குப் பிறகு ஜனாதிபதி விஜித் மலல்கொட குழுவை நியமித்தார். அந்த குழு 14 அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியது. ஆனால் மற்றவர்களை விட்டுவிட்டு எனக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி கூறினார்.</p><p> ஏப்ரல் 22 இல் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் நானும் பொலிஸ் மா அதிபருமே பொறுப்பு என்றும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார். அந்த முடிவின் இறுதி விளைவே இந்தத் தீர்ப்பு.</p><p> இந்த தீர்ப்பைக் கேட்டு இருவர் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவர் நிலந்த ஜயவர்தன, மற்றையவர் மைத்திரிபால சிறிசேன. சட்டமா அதிபர் திணைக்களம் ஆரம்பத்திலிருந்தே நிலந்த ஜயவர்தனவைப் பாதுகாத்தது. சாதாரண அறிவு கூட இல்லாத ஒருவனால் மட்டுமே இதில் மகிழ்ச்சியடைய முடியும்.</p><p>"எனக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. காயம் இன்னும் ஆறவில்லை. எனக்கு 76 வயதாகிறது. சிறையிலடைத்தாலும் தேவையான சிகிச்சைகளை வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தூக்கிலிடப்படுவதற்காவது நான் உயிரோடு இருக்க வேண்டுமே. வரலாறு என்றாவது ஒரு நாள் என்னை விடுவிக்கும்" எனக் கூறி குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>&nbsp;</p><p><b>இதன்பின்னர் தீர்ப்பை அறிவித்த தலைமை நீதிபதி பிரியந்த லியனகே,</b></p><p>"குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உள்ளது. இந்த பிரதிவாதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆவார். எனவே அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T11:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் இடைநிறுத்தப்பட்ட விசாரணை..! அடுத்து தண்டனை கைதியாகும் முக்கிய பிரமுகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-calls-for-probe-into-shani-abeysekara-1785578995"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-calls-for-probe-into-shani-abeysekara-1785578995</id>
            <summary type="text">குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக நேற்றைய தினம்(31) நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பில் இன்று(01.08.2026) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர குற்றவியல் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால், ஷானி அபேசேகர மற்றும் ரவி சேனவிரத்ன ஆகியோருக்கும் அதேபோன்ற அல்லது அதனை விட வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம்.</p><h2>
அடுத்தடுத்து சிக்கப்போகும் NPP ஆட்சியில் உள்ள அதிகாரிகள்</h2><p>
மேலும், தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மேற்குறிப்பிட்ட&nbsp; இரு அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec860ae-d7c3-4ab0-a287-4444fd476f1e/26-6a6dd6430ca83.webp' /></p><p> அதே சமயம், உளவுத்துறை மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் பல்வேறு தவறுகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>


ஷானி அபேசேகர மற்றும் ரவி சேனவிரத்ன ஆகியோரின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த விசாரணை, ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட நிலையில், அந்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும்.</p><p>
அத்துடன், விசாரணை நடைபெறும் காலப்பகுதியில் ஷானி அபேசேகரை CID பணிப்பாளர் பதவியிலிருந்தும், ரவி சேனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்குமாறும் கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-01T11:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-arrested-in-vavuniya-with-100g-of-ice-drug-1785582373"></link>
            <id>https://tamilwin.com/article/2-arrested-in-vavuniya-with-100g-of-ice-drug-1785582373</id>
            <summary type="text">வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் கிராமத்தில்
100 கிராம் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது
செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் கிராமத்தில்
100 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று(1) தெரிவித்தனர்.</p><p>

பூவரசன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்
முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும்
கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p> </p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20771d26-9148-4095-895b-86293b4d7893/26-6a6dd52db5af4.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவம் குறித்து பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T11:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயலில் பட்டம் விட்ட 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி - பொலிஸ் உத்தியோகத்தர் மகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-dead-two-missing-as-fishing-boat-negombo-1785576136"></link>
            <id>https://tamilwin.com/article/one-dead-two-missing-as-fishing-boat-negombo-1785576136</id>
            <summary type="text">கடவத்தை பகுதியில் தனது வீட்டின் பின்புறமாக உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களால் தாக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடவத்தை பகுதியில் தனது வீட்டின் பின்புறமாக உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கடவத்தை பகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறமாக உள்ள நெல் வயலில் பட்டம் கொண்டிருந்த 17 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.</p><p></p><p> </p><h2>

17 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
இந்த தாக்குதலின் போது கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன்,&nbsp; தாக்குதலில் கழுத்தில் காயமடைந்த சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக இராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c943ccfe-faa4-4452-aa82-5647b4aa8daa/26-6a6dd224195ff.webp' /></p><p> 

காதல் விவகாரம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
 இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். </p><h2>

மூன்று இளைஞர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
தப்பியோடிய மற்ற இரண்டு சந்தேக நபர்கள் பின்னர் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d28cb74-33d5-4f47-95f7-f481871cd23b/26-6a6dd224dae0e.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரின் தந்தை தற்போது பணியில் இருக்கும் பொலிஸ் அதிகாரி என்றும் பொலிஸார் விசாணையில் தெரியவந்துள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் நேற்று(31.07.2026) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-01T11:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளியங்குளம் சந்தியில் பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-motorcycle-collision-at-puliyankulam-1785579044"></link>
            <id>https://tamilwin.com/article/bus-motorcycle-collision-at-puliyankulam-1785579044</id>
            <summary type="text">வவுனியா- புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக&amp;nbsp; பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தானது நேற்று(31) மாலை இடம்பெற்றுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா- புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக&nbsp; பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த விபத்தானது நேற்று(31) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் நேற்று மாலை பயணித்த சொகுசு
பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார்
சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில்,
புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d149d710-35d3-4389-a2d2-45c68c2a0743/26-6a6dc626851a3.webp' /></p><p>
</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T10:11:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் பிரபல உணவகத்தில் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-restaurant-in-sainthamaruthu-1785576515"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-restaurant-in-sainthamaruthu-1785576515</id>
            <summary type="text">சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள்,
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் மற்றும்
பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் தீவிரமாக
ஈடுபட்டனர்.
</p><p>
இந்தத் தீ விபத்துக்கான பின்னணி மற்றும் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள்
இதுவரை வெளியாகவில்லை.</p><p>இதேவேளை, தீ விபத்து இடம்பெற்று அனைத்தும் எரிந்து சாம்பலான பின்னரே கல்முனை
மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக அப்பகுதி
மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p></p><h2>தீ விபத்து</h2><p> </p><p>கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப்
பிரிவினரின் இத்தகைய மந்தமான செயற்பாடு தொடர்கதையாகி வருவதாக மக்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89e63cd-54f3-42e5-b59a-75a45d45a81b/26-6a6dc275c4b28.webp' /></p><p>
</p><p>
பாரிய வர்த்தக நகரமாக விளங்கும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதி மக்களின்
பாதுகாப்பு கருதி, மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினை வினைத்திறன் மிக்கதாக
மாற்றியமைக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச
மக்களும் வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீகவாபியில் பயிர்ச்செய்கைகள் நாசம்: நெல் வயல்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crops-destroyed-in-deegavapi-wild-elephants-1785575707"></link>
            <id>https://tamilwin.com/article/crops-destroyed-in-deegavapi-wild-elephants-1785575707</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில்
காணப்பட்ட பல ஏக்கர் நெல் வயல்கள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாகச்
சேத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில்
காணப்பட்ட பல ஏக்கர் நெல் வயல்கள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாகச்
சேதமடைந்துள்ளன.</p><p>

இரவு வேளையில் காட்டுப் பகுதியிலிருந்து கிராமத்திற்குள் புகும் காட்டு யானைக்
கூட்டங்கள், அறுவடைக்குத் தயாராகவுள்ள பயிர்ச் செய்கைகளுக்குள் புகுந்து
நெற்பயிர்களை உட்கொண்டதுடன், அவற்றை மிதித்து நாசப்படுத்தியுள்ளதாகப்
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>உடனடியாக நடவடிக்கை</h2><p>
</p><p>
வங்கிக் கடன்களைப் பெற்றுப் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட
பயிர்ச்செய்கைகள், அறுவடைக்குச் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறு
நாசமாகியுள்ளமையினால் தம்மைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு
உள்ளாக்கியுள்ளதாக விவசாய சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d777246a-5677-4967-ae8a-d73ed8623f11/26-6a6dba91afe9b.webp' /></p><p>

இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக்
கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர
அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:21:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியர்கள் மூவர் கைது..! 292 கிலோகிராம் கஞ்சா மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-arrested-for-trying-to-illegally-kerala-1785575198"></link>
            <id>https://tamilwin.com/article/indian-arrested-for-trying-to-illegally-kerala-1785575198</id>
            <summary type="text">



இலங்கைக்கு சட்டவிரோதமாக கேரள கஞ்சாவை கொண்டு வர முயற்சித்த மூவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இந்தியாவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



இலங்கைக்கு சட்டவிரோதமாக கேரள கஞ்சாவை கொண்டு வர முயற்சித்த மூவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த கைது நடவடிக்கை இந்தியாவில் உள்ள இராமநாதபுரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

மூவர் கைது</h2><p>

இலங்கைக்கு, கடல் வழியாக கடத்த திட்டமிடப்பட்டிருந்த 292 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b711b5-1abf-43a4-b48b-812760856d60/26-6a6db9a542635.webp' /></p><p>
</p><p>
கடற்கரைக்கு கொண்டு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​ரகசியத் தகவலின் பேரில் இந்திய பொலிஸார் நடத்திய சோதனையில் கஞ்சா கடத்தல் இடம்பெறுவது தெரியவந்துள்ளது.</p><p> 

இதற்கமைய, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p> 



</p>]]></content>
            <updated>2026-08-01T09:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் தாக்குதல்! ட்ரம்ப்பின் புதிய எச்சரிக்கையால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-to-bomb-iran-this-weekend-trump-gives-hit-1785574113"></link>
            <id>https://tamilwin.com/article/us-to-bomb-iran-this-weekend-trump-gives-hit-1785574113</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சில ஊடக அறிக்கைகளின்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p> 

சில ஊடக அறிக்கைகளின்படி, இந்த தாக்குதல் இந்த வார இறுதியிலேயே நடைபெறக்கூடும் என கூறப்படுகிறது.</p><p></p><h2>அமெரிக்க இராணுவம்</h2><p>
</p><p>
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலின்படி, ஈரானை சரணடைய வற்புறுத்தும் நோக்கில் புதிய தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்க இராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மெரிலாந்தில் உள்ள கேம்ப் டேவிட் ஜனாதிபதி ஓய்வு மையத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ட்ரம்ப்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bff930ad-9abc-4a6a-a8e6-328869255be7/26-6a6db7b4887ee.webp' /></p><p>நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம். ஒரு கட்டத்தில் அவர்கள் இனிமேல் இதைத் தாங்க முடியாது என்று கூறுவார்கள். எங்களின் நோக்கம் வெற்றி பெறுவதுதான் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், "ஈரான் தொடர்ந்து பொய் கூறி உண்மைகளைத் திரித்துக் கூறுவதால், அவர்கள் மீது நான் நம்பிக்கையை இழந்து வருகிறேன் என்றும் தெரிவித்தார்.</p><p></p><h2>நேரடி தாக்குதல்</h2><p>


CBS News வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இதுவரை இல்லாத அளவிலான கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதலை திட்டமிட்டு வருகின்றன.</p><p>
</p><p>
இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அமெரிக்கா–ஈரான் இடையிலான மென்மையான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் மீண்டும் நேரடி தாக்குதலில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74a7c302-747a-4456-9fdf-8f71471f7a37/26-6a6db7b537de6.webp' /></p><p>
</p><p>
உலகளாவிய மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படாத வகையில், திங்கட்கிழமை நிதிச் சந்தைகள் திறக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கைகளை நிறைவு செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், எனினும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>&nbsp;ஈரான் மீது நடத்திய தாக்குதல்</h2><p>


தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனினும், தாக்குதலை தொடங்குவதற்கான இறுதி அனுமதி (Go Order) யை ட்ரம்ப் இதுவரை வழங்கவில்லை.
</p><p>
இதற்கிடையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலைன் லெவிட், அமெரிக்கா வெற்றி பெறும்; ட்ரம்ப் பதவியில் இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாது" என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890bd9e6-8e8b-431b-8ec6-64369a555e2a/26-6a6db7b5dd39a.webp' /></p><p>
</p><p>
அதேபோல், பென்டகனின் தலைமை பேச்சாளர் ஷான் பார்னெல், அமெரிக்க பாதுகாப்புத் துறை முழுமையாகத் தயாராக உள்ளது என கூறினார்.
</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னரும் இரு தரப்பும் தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டதால் பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T09:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் நேற்றிரவு நடந்த இரகசிய கலந்துரையாடல்: நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என அச்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tiran-alas-secret-meeting-1785574423"></link>
            <id>https://tamilwin.com/article/tiran-alas-secret-meeting-1785574423</id>
            <summary type="text">கொழும்பு 07லில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் இரசிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இரவு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
டிரான் அலஸின் அலுவலகத்திலே இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 07லில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் இரசிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இரவு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
டிரான் அலஸின் அலுவலகத்திலே இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. </p><p>அதில் கம்மன்பில- விமல் வீரவன்ச- தயாசிறி ஜயசேகர மற்றும் மேலும் நான்கு அல்லது ஐந்து பேர் இருந்துள்ளனர். சிலர் வெளிச்சத்தில் தங்களின் முகம் தெரியாமல் இருக்க இருள் சூழ்ந்த பகுதியில் தங்களின் காரை நிறுத்தி இறங்கிச் சென்றுள்ளனர். அதனால் அவர்களைச் சரியாக அடையாளம் காண முடியாமலிருந்துள்ளது.</p><h2>

</h2><p></p><h2>சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்</h2><p>இவர்கள் எதற்காக இச்சந்திப்பை நடத்தினார்கள் என இன்னும் தெரியவரவில்லை. டிரான் அலஸ் என்பவர் எதற்கும் தயாரான பிரதான தரகர். அரசில் அல்லது எதிர்க்கட்சியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழும் ஒரு நபர். </p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வந்ததும் இவை அனைத்தும் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. </p><p>

குறிப்பாக டிரான் அலஸ் என்பவர் நாட்டிற்குப் பல மில்லியன் டொலர்களை நட்டப்படுத்திய ஒரு பாரிய மோசடிக்காரர். பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களான கொஸ்கொட சுஜீ- கரந்தெனிய சுதா போன்றவர்களுடன் நேரடியாகத் தொடர்பிலிருந்தவர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8bca9c-8be0-4c45-b886-ee7c6d7456dc/26-6a6db41927b6d.webp' /></p><p>டிரான் அலஸின் பத்திரிகை அலுவலகத்தில் மாலை 6:43 மணிக்கே இச்சந்திப்பு நடந்துள்ளது. 17 பேர் வரை அங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>டிரான் அலஸ் ஒரு நேரத்தில் ஜனாதிபதி அநுர திசாநாயக்கவுடன் இருக்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்சவுடன் இருக்கிறார். இது அரசியலை விட ஒரு மோசடி. ஏனெனில் அவருக்குத் தேவை இவர்கள் அனைவரையும் அருகில் வைத்துக் கொண்டு தனது காரியங்களைச் சாதிப்பதுதான்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு - எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-fuel-price-1785570287"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-fuel-price-1785570287</id>
            <summary type="text">ஒரு லிட்டர் டீசலுக்கு 70 முதல் 63 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்ட போதிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டாம் என கூட்டுத்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு லிட்டர் டீசலுக்கு 70 முதல் 63 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்ட போதிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டாம் என கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.</p><p>

ஆகஸ்ட் மாத எரிபொருள் விலை திருத்தம் குறித்து நேற்று (31 ஆம் திகதி) பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்துள்ள போர்&nbsp;</h2><p>
</p><p>
மத்திய கிழக்கில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில மாதங்களில் உலக சந்தையில் டீசல் விலை (110%) அதிகரித்ததாலும், நாட்டில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்றும் மேலும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95a1268-4dfa-4d25-a55d-4e8d83b6a295/26-6a6da84960642.webp' />&nbsp;</p><p>

போர் தற்காலிகமாக முடிவடைந்து, தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக உலகச்சந்தையில் டீசல் விலை 58.9 சதவீதம் அதிகரித்திருந்தாலும், உள்நாட்டு சந்தையில் விலை 35 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் பெட்ரோல் விலை 41.35 சதவீதம் அதிகரித்திருந்தாலும், உலகச் சந்தை மற்றும் உள்ளூர் சந்தையில் இம்மாத இறுதிக்குள் அதே அளவில் விலை பராமரிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>ஆகஸ்ட் மாத எரிபொருள் விலை மாற்றம்</h2><p>

அதன்படி, மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fed9127d-527b-4b8e-b14c-c0bfa356b4ff/26-6a6da84a14c1c.webp' /></p><p> ஒரு லிட்டர் 92 ஆக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 414.00 என்ற அதே விலையில் நீடிக்கின்றது.

அதேபோல், ஒரு லிட்டர் லங்கா வைட் டீசலின் விலை ரூ. 382.00 ஆகவும், ஒரு லிட்டர் 95 ஆக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 495.00 ஆகவும் நீடிக்கின்றது.
</p><p>
இதேவேளை, சூப்பர் டீசலின் விலை ரூ. 478.00 ஆகவும், மண்ணெண்ணெயின் விலை ரூ. 285.00 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FgX3UNJXixA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-01T08:25:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பூஜித் ஜயசுந்தரவின் குடும்ப நிலைமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785562785"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785562785</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று (31.07.2026)முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று (31.07.2026)முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p>குறித்த வழக்கில் பூஜித் ஜயசுந்தர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரோஷன் தெஹிவள மற்றும் பூஜித் ஜயசுந்தர தெரிவித்த கருத்துக்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>பூஜித் ஜயசுந்தர வாடகை வீட்டிலே மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.</p><p>35 வருடங்கள் பொலிஸ் சேவையில் பணியாற்றியதோடு இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. </p><h2>

</h2><p></p><h2>வறுமையில் வாடும் குடும்பம்</h2><p>290 வழக்குகளில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளுக்காக பல இலட்சம் ரூபாய்களை அவர் நஷ்ட ஈடாகச் செலுத்தியுள்ளார் என்று சட்டத்தரணி ரோஷன் தெஹிவள சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5688373-7aaa-47ce-bc52-81de16d0cabe/26-6a6d86a32a014.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>
பூஜித் ஜயசுந்தர சோகத்துடனும் விரக்தியுடனும் உரையாற்றிபோது,&nbsp;</p><p>“ நான் ஒருபோதும் எந்தவொரு மனிதனையும் கொன்றதில்லை. மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு எழுந்ததில்லை. </p><p>நான் நம்பும் மதத்தின் நம்பிக்கைகளின்படி இது எனது பூர்வ ஜென்ம கர்ம காரணமாகவே நிகழ்ந்தது. நான் பொலிஸ் சேவையில் இணைந்த நாள் முதல் பொதுமக்களுக்காகவும் பொலிஸ் திணைக்களத்திற்காகவுமே அர்ப்பணித்து சேவையாற்றினேன்.
</p><p>இந்தச் சம்பவத்துடன் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தேன். பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து என்னைச் சட்டப்பூர்வமாக நீக்கவில்லை. </p><p>அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் எடுத்ததாகவும் கூறினார். இறுதியில் சட்டத்தரணியின் ஆலோசனையின் பேரில் வழக்கை விலக்கிக் கொண்டதாக குறிப்பிட்டார்.</p><p>இதனால் தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் FR (அடிப்படை உரிமை) வழக்குகளுக்கு அமைவாக நஷ்டஈடு செலுத்த வேண்டியிருந்தது. பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். </p><p>எக்காலத்திலும் எவருக்கும் எந்தவொரு தவறையும் செய்யாத தனக்கு, இவ்வாறு நேர்ந்துள்ளதாகவும் தனது வயதையும் தற்போதைய ஆதரவற்ற நிலையையும் கருத்தில் கொண்டு பொருத்தமான தீர்ப்பை வழங்குமாறும் அவர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T08:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-stealing-money-russian-tourists-1785570446"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-stealing-money-russian-tourists-1785570446</id>
            <summary type="text">இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப்
பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி
நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப்
பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி
நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.</p><p>நேற்றையதினம்(31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு
மகள்கள் அறுகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில்
தங்கியுள்ளனர். </p><p>குறித்த நபர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில்
குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள்
மற்றும் 1,620 யூரோக்கள் அடங்கிய பணப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.</p><p></p><h2>கைது</h2><p>
</p><p>
சந்தேகநபர் பணப்பையைத் திருடித் தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த
ஒருவர், உடனடியாக அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல்
வழங்கியுள்ளார்.</p><p>

அதற்கமையச் செயற்பட்ட அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி
தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி
நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை பிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37404e68-1ae9-4afe-b67a-0d21a435aa20/26-6a6da879c357c.webp' /></p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணமும் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொத்துவில்
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T08:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோயில் விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudumalai-bhuvaneswari-amman-temple-issue-1785571259"></link>
            <id>https://tamilwin.com/article/sudumalai-bhuvaneswari-amman-temple-issue-1785571259</id>
            <summary type="text">சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோயிலையின் திருப்பணி வேலைகள் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதிகளின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டு ஐந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோயிலையின் திருப்பணி வேலைகள் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதிகளின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டு ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலக் கட்டளை தொடர்பான விசாரணை, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் நேற்று(31.07.2026) எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

மனுதாரர்கள் தமது மனுவில், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் உடனடியாக இடித்தழிக்கப்பட வேண்டுமென்றும், கோவில் திருப்பணிகள் தொடர்ந்து எதுவும் இடம்பெறக் கூடாது என்றும் இடைக்காலக் கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p> </p><h2> 


கட்டடங்களை இடித்தளிப்பு நடவடிக்கை</h2><p>
இந்த வழக்கில், மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையாகியிருந்தார். நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர்மனுதாரர்களான கோவில் அறங்காவலர் சபையின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca0f7fc-95b5-496e-a5b3-0442431952bb/26-6a6da86b55691.webp' /></p><p>
</p><p>
விசாரணையின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கு.குருபரன், 

கட்டுமான அனுமதி தொடர்பிலான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றம் வசமே உள்ளது என்றும், அதனை மேல் நீதிமன்றம் பிரயோகிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p> 

எது எவ்வாறாயினும், அனுமதியின்றிப் பெறப்பட்ட கட்டடங்கள் என்றாலும்கூட அவற்றை இடித்தளிக்குமாறு கட்டளையிடுவதற்கான அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார். </p><h2>

ஆலய நிர்வாகத்தினரின் கோரிக்கை</h2><p>
மேலும், எழுத்தாணை மனு வழக்கொன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது இல்லாதொழிப்பதற்கோ விண்ணப்பிக்க முடியும் என்றும், ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை பிரதேச சபையினால் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரரினால் செய்யப்பட்ட இந்த விண்ணப்பம் முன்முதிர்வானது என்றும் வாதிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca4dec4-c394-4362-9afa-26d2ba6f5dde/26-6a6da86c10433.webp' /></p><p>
</p><p>
எனவே, இடைக்காலக் கட்டளைகளை நிராகரிப்பது மட்டுமன்றி, எதிர்மனுதாரர்களுக்கு முறைசார் அறிவித்தல் அனுப்ப வேண்டிய அனுப்பப்பட வேண்டிய வழக்கொன்று மனுதாரர்களால் விண்ணப்பிக்கப்படவில்லை என்பதனையும் கருத்திற்கொண்டு, வழக்கினை நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சட்டத்தரணி கு.குருபரன் வலுவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.</p><p>

மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளைக்கான விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து கட்டளையிட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T08:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டதில் கடும் மழை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rains-in-nuwara-eliya-district-reservoir-1785569703"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rains-in-nuwara-eliya-district-reservoir-1785569703</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இதன் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.</p><p>

இதன் விளைவாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;வான் கதவுகள்</h2><p>
</p><p>
நேற்று இரவு (ஜூலை 31) பெய்த தொடர் கனமழையால், விமலசுரேந்திர மற்றும் கெனியோன் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து அவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. </p><p>அதேவேளை, லக்ஸபான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86cc0a5e-a086-40db-8ee1-753406839141/26-6a6da5e110fec.webp' /></p><p>
</p><p>
தொடர்ந்தும் மழை பெய்து வருவதால், எந்த நேரத்திலும் அந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இதன் காரணமாக, நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும், வெள்ள அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மையமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.</p><p></p><h2>இயல்பு வாழ்க்கை</h2><p>

இதற்கிடையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால், பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24e06179-9316-4207-8ebc-d1aa8fc4fa1d/26-6a6da5e2359e2.webp' /></p><p>
</p><p>
மறுபுறம், தொடர்ச்சியான மழை காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை பறிக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>

தொழிலாளர்கள் வழமையான முறையில் பணிகளை மேற்கொள்ள முடியாததால், தேயிலை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தோட்டத் தொழிலாளர்களின் வருமானமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1562146765359232%2F&show_text=true&width=380&t=0" width="380" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>

இதேவேளை, மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையை எட்டியுள்ளது.</p><p></p><h2>&nbsp;வானிலை முன்னறிவிப்புகள்</h2><p>
</p><p>
குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனால், சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0785920e-8dc9-472f-bbd5-7c0ff8104f51/26-6a6da5e30aae2.webp' /></p><p>
</p><p>
மேலும், மலைச்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிப்பதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொண்டு, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்புடன் செயல்படுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T07:59:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு கடூழிய சிறைத் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-year-prison-sentence-for-person-of-heroin-1785569283"></link>
            <id>https://tamilwin.com/article/4-year-prison-sentence-for-person-of-heroin-1785569283</id>
            <summary type="text">ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு&amp;nbsp; 4
ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு&nbsp; 4
ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் ரூபா 2
லட்சம் பிரகாரம் 4 லட்சம் ரூபாய் அபராதமும், அத் தொகையை செலுத்த தவறின்
தனித்தனியே ஒரு ஆண்டு கால சிறைத்தண்டணையும் வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற
நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.</p><p>

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா பறையனாளங்குளம் பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூயநிறை 1.8 கிராம் ஹெரோயினை உடமையில்
வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்ய முற்பட்டமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>வழக்கு</h2><p>இதனையடுத்து, அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 2021 ஆண்டு
வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த வழக்கு தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை
(31.07) திகதியிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bfe4b98-001b-47ae-9d29-c89dab099038/26-6a6da3341800d.webp' /></p><p>இதன்போது குறித்த குற்றச் சாட்டுக்கள் அரச சட்டவாதியினால் எதிரிக்கு எதிராக
நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மேல்
நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.</p><p>,தூயநிறை 1.8 கிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை
மற்றும் வியாபாரம் செய்ய முற்பட்ட நபருக்கு தனித் தனியே 4 ஆண்டுகள் கடுழீய
சிறைத் தண்டணையும், ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் ரூபா 2 லட்சம் பிரகாரம், 4
லட்சம் ரூபாய் அபராதமும், அத் தொகையை செலுத்த தவறின் தனித்தனியே ஒரு ஆண்டு கால
சிறைத்தண்டணையும் வழங்கி தீர்ப்பளித்தார்.</p><p></p><h2>சிறைத் தண்டனை</h2><p> குறித்த வழக்கினை சட்டமா அதிபர்
திணைக்களம் சார்பில் அரசு சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ
நெறிப்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c900c943-f105-4f96-bf4c-c16fa94f6d35/26-6a6da334ba310.webp' /></p><p>
</p><p>
எதிரி குறித்த வழக்குடன் தொடர்புடையதாக எற்கனவே 2 ஆண்டுகளும், 3 மாதமும்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை போன்ற விடயங்களை மேல் நீதிமன்ற நீதிபதி
ஏ.ஏ.ஆனந்தராஜா குறித்த வழக்கின் தண்டணை தீர்ப்பின் போது
சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p>

சமூகத்தில் பெருகி வரும் போதைப் பொருள் பாவனையும் அதனால் ஏற்படும்
தாக்கங்களுக்கு இவ்வாறான தீர்ப்புக்கள் முன்மாதிரியானவை என்பதும்
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T07:42:11+00:00</updated>
        </entry>
    </feed>
