<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-12T01:36:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி பலி - படுகாயமடைந்த நிலையில் தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-kids-drown-and-dead-1786497114"></link>
            <id>https://tamilwin.com/article/2-kids-drown-and-dead-1786497114</id>
            <summary type="text">புத்தளம், கற்பிட்டியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம், கற்பிட்டியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.</p><p>

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரகன்ஹேன பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நேற்று பிற்பகல் படகு கவிழ்ந்துள்ளது.</p><p>

அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
</p><h2><b>
சிறுவர்கள் பலி</b></h2><p>நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் 7 வயதுடைய சிறுவனும் 13 வயதுடைய சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3ef7bf0-0838-4828-b684-4f2d0f5c397c/26-6a7bc9b2aa90e.webp' /></p><p>மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவத்தில் காயமடைந்த தந்தை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

</p>]]></content>
            <updated>2026-08-12T01:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேவிபியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் உறவினர் அதிரடியாக கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/k-d-lalkantha-arrested-1786490460"></link>
            <id>https://tamilwin.com/article/k-d-lalkantha-arrested-1786490460</id>
            <summary type="text">ஜேவிபியின் பிரதான பாத்திரங்களில் ஒருவரும் அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சரின் உறவினர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.கமத்தொழில், கால்நடை வளங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேவிபியின் பிரதான பாத்திரங்களில் ஒருவரும் அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சரின் உறவினர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனரே கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>சுசந்த சுதர்சன எனப்படும் குறித்த நபர் அமைச்சர் லால் காந்தவின் மனைவியின் தங்கையின் கணவர் ஆவார்.
</p><p></p><h2>வாகன மோசடி</h2><p>அரச வாகன ஏலத்தின் போது நபர் ஒருவரிடம் 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக அமைச்சர் லால் காந்தவின் மைத்துனருக்கு எதிராக சுரங்க ரஞ்சித் சமரவீர என்பவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>நேற்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அனைத்துக் காரணிகளும் வெளிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை&nbsp;கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85ee431a-e320-4cd5-ba58-9eef436b7f05/26-6a7bae5ec2678.webp' /></p><p>கைது செய்யப்பட்ட அமைச்சரின் மைத்துனரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாததால் நேற்று இரவு&nbsp; அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.</p><p><span style="color: inherit;">அமைச்சர் லால் காந்த தரப்பிலிருந்து எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.&nbsp;</span>யாருக்கும் சட்டம் சமமாக இருக்க வேண்டும். அமைச்சர்களுக்கோ அல்லது அவர்களுடைய ஆட்களுக்கோ மட்டுமல்ல, சொந்தக் காரர்களுக்கும் அதுவே நிலைமை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T00:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-officer-arrest-supply-drugs-magazine-prison-1786494999"></link>
            <id>https://tamilwin.com/article/prison-officer-arrest-supply-drugs-magazine-prison-1786494999</id>
            <summary type="text">பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட அதிகாரியிடமிருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;சிறை அதிகாரி கைது</h2><p>

இந்தச் சம்பவம் தொடர்பில், தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் முதலில் கல்கிசை பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதியொருவர் வட்ஸ்அப் அழைப்பு மூலம் போதைப்பொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய இடம் தொடர்பில் தகவல் வழங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b877cfa1-af07-41d3-b3fc-5e8be601270a/26-6a7bc199ceaa4.webp' /></p><p>

அதற்கமைய, குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்டு, அதனை பொரளை வனாத்த வீதியில் வைத்து மற்றொரு நபரிடம் ஒப்படைக்கத் தயாராகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, சிறைச்சாலை விளையாட்டு உடையில் வந்த நபரொருவர் சந்தேகநபருக்கு அருகில் சென்று போதைப்பொருள் அடங்கிய பொதியைப் பெற முற்பட்டுள்ளார்.</p><p>

அப்போது மறைந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe3bf0a-482d-4db2-a190-05658a590f0c/26-6a7bc19abc46f.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரி கடந்த ஜனவரி மாதமே மெகசின் சிறைச்சாலையில் பணியில் இணைந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
தங்காலை – பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய குறித்த சிறைச்சாலை அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T00:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழில் சார் கற்கைகள் தொடர்பான பல்கலைக்கழக பீடம் துரித கதியில் அமைக்கப்படும்..! கடற்தொழில் அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishing-studies-faculty-be-set-up-soon-sri-lanka-1786493922"></link>
            <id>https://tamilwin.com/article/fishing-studies-faculty-be-set-up-soon-sri-lanka-1786493922</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒழுங்கிணைப்புக்குழுக்கூட்டம்
இன்று(101.08.2026) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்
தலைமையில் நடைபெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒழுங்கிணைப்புக்குழுக்கூட்டம்
இன்று(101.08.2026) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்
தலைமையில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற
உறுப்பினர்களான காதர்மஸ்தன்,செல்வம் அடைக்கலநாதன்,து.ரவிகரன் ஆகியோருடன்
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த ஹகவத்த மற்றும்
திணைக்கள அதிகாரிகள் பொலிசார்,கடற்படையினர் கடற்தொழில் சமூக அமைப்புக்களின்
பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.</p><h2>கடற்தொழில் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை
கடற்படையினரின் உதவியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3d1f9e3-2989-4578-b452-3054813e2c4f/26-6a7bbe4a4f572.webp' /></p><p> நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் மீன்வளப்பினை மேம்படுத்தல்நடவடிக்கை
மேற்கொள்ளல்

சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 54 வீடுகள் இந்த மாத
இறுதிக்குள் கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக முல்லைத்தீவு மாவட்ட
கடற்தொழில் நீரியல்வளப்பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதி
ஒதுக்கப்பட்டு இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது விரைவில் அது அமையவுள்ளது என
அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;கடற்படையினரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும்
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களதின் ஆளணி பற்றாக்குறையினை
நிவர்த்தி செய்ய இந்த மாதம் 19 ம் திகதி 8 பேர் புதிய நியமனம் பெறவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தில் 4542 கடற்றொழிலாளர்&nbsp; குடும்பங்கள் ஊடாக இந்த ஆண்டு ஒகஸ்ட்
மாதம் வரை 8220.49 மெட்ரிக்தொன் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளபோது இந்த அளவு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களும்
உள்ளடங்கப்பட்டுள்ளது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T00:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் மாதத்தில் சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில் வர்த்தகம் செய்தல்: EUR/USD-க்குப் பொறுமை தேவை கணிப்பு அல்ல அது ஏன்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eur-usd-trading-in-august-why-patience-matters-1786492114"></link>
            <id>https://tamilwin.com/article/eur-usd-trading-in-august-why-patience-matters-1786492114</id>
            <summary type="text">சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை
அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான
போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை
அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான
போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடினமான
வர்த்தகச் சூழல்களில் சிலவாகும். </p><p>ஓகஸ்ட் மாதம் நெருங்கி வரும்
நிலையில், பணவீக்கம் மத்திய வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட அளவைக்
காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது, அதேவேளையில் பல முக்கியப்
பொருளாதாரங்களில் விலை மாறும் வேகம் குறைகிறது.</p><p> ஐரோப்பிய
மத்திய வங்கி மற்றும் யுஎஸ் ஃபெடரல் ரிசர்வ் ஆகிய இரண்டின்
மீதான எதிர்பார்ப்புகளையும் சந்தைகள் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து
வருவதால், யூரோ/டொலர் பரிமாற்ற வீதமானது, ஒன்றுக்கொன்று
முரண்படும் பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டங்களுக்கு இடையில்
சிக்கியுள்ளது.</p><p> யூரோ அல்லது யுஎஸ் டொலர் ஆகிய இரண்டுமே
தீர்க்கமான பேரியல் சாதகத்தைக் கொண்டிருக்காதபோது​ தற்போதும்
வணிகத்தை மேற்கொண்டுவரும் வர்த்தகர்கள் தங்கள் கவனத்தைத்
திசைசார் கணிப்பிலிருந்து, ஒழுங்குபடுத்தப்பட்ட செயலாக்கம் மற்றும்
புறநிலை இடர் மேலாண்மைக்கு மாற்ற வேண்டும்.
</p><h2>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலைப் புரிந்துகொள்ளுதல்
</h2><p>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழல்-பாணி நிலைமைகள் நாணயச்
சந்தைகளுக்கு ஒரு விரக்தி தரும் பொறியை உருவாக்குகின்றன,
கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் பலவீனமடையும் பொருளாதார
வளர்ச்சி ஆகியவற்றின் கலவையானது, மத்திய வங்கிகள் கடினமான
கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளுகிறது. இந்தச்
சூழல் ஒவ்வொரு வாரமும் முரண்பாடான பொருளாதாரச்
சமிக்ஞைகளை உருவாக்குகிறது. </p><p>ஒரு நாள், எதிர்பார்த்ததை விட
அதிகமான பணவீக்கக் குறியீடு இருப்பது, உயர் வட்டி வீதங்களைச்
சுட்டிக்காட்டி, நாணயத்தின் வலிமையை அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fbca282-f3d0-4e81-94c8-fbefc65c05ea/26-6a7bb80d667a2.webp' /></p><p> அடுத்த நாள்,

ஒரு மோசமான உற்பத்தி அறிக்கையானது பொருளாதாரச் சுழற்சி
மெதுவாக இருப்பதை உணர்த்தி, உடனடியாக நாணய மதிப்பின்
பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.
யூரோ மண்டலத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம் மறுக்க
முடியாதபடி நிலையற்றதாகவே உள்ளது.</p><p> சமீபத்திய OECD
பகுப்பாய்வானது, பலவீனமான உலகளாவிய வளர்ச்சிச் சூழலைச்
சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐரோப்பா குறிப்பாக எரிசக்தி விலையின்
சடுதியான மாற்றங்கள் மற்றும் மந்தமான தேவை ஆகியவற்றால்
பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில், யுஎஸ்
தரவுகளும் இது போன்ற ஒரு சிக்கலான சித்திரத்தை அளிக்கின்றன.</p><p>
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட சமீபத்திய தரவு, ஜூன் மாதத்தில் யுஎஸ்
நுகர்வோர் பணவீக்கம் 3.5% ஆகக் குறைந்துள்ளதைக் குறிக்கிறது.
</p><p>ஒருங்கிணைந்த உலகளாவிய வளர்ச்சிக் கண்ணோட்டம் இல்லாததால்,
EUR/USD இன் பாரம்பரிய உந்தும் காரணிகளைப் புரிந்துகொள்வது
கடினமாகிறது. பொதுவாக, ஒரு பிராந்தியத்தில் காணப்படும் வலுவான
வளர்ச்சியும் உயரும் வட்டி வீதங்களும் அதன் நாணயத்தின் மதிப்பை
உயர்த்துகின்றன. </p><p>இன்று, இரு பிராந்தியங்களும் வளர்ச்சி
மந்தநிலையையும் குறையாத பணவீக்கத்தையும் எதிர்கொள்கின்றன.
மாறிவரும் இந்தச் சூழலால், யுஎஸ் மற்றும் ஐரோப்பா இடையிலான
வட்டி வீத வேறுபாடுகள் சந்தையால் தொடர்ந்து மறுமதிப்பீடு
செய்யப்பட்டு வருகின்றன. எண்ணெய் விலையில் மீண்டும்
ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு மத்தியிலும், வட்டி வீதங்கள் ஏற்கனவே
பொருத்தமான நிலையில் இருப்பதாகக் கொள்கை வகுப்பாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளதால், ஜூலை மாதத்தில் ECB எச்சரிக்கையுடன்
செயல்படும் என்று சந்தைகள் பரவலாக எதிர்பார்க்கின்றன. இதனால்,
EUR/USD ஜோடிக்கு நிலையான போக்குகளை உருவாக்க முடியாமல்
சிரமம் ஏற்படுகிறது. </p><p>ஒவ்வொரு புதிய பொருளாதார வெளியீடும் சந்தை
எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்து, திட்டவட்டமான ஏற்றங்களுக்குப்
பதிலாக அடிக்கடி தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.</p><h2>

நிச்சயமற்ற தன்மையின் உளவியல்
</h2><p>விலைகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மாறும் போக்குடைய
சூழல்களைவிட, இழுபறியான சந்தை நிலவரங்கள் வர்த்தகர்கள்மீது
பெரும்பாலும் அதிக உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>ஒரு
தெளிவான சந்தைப் போக்கு நிலவும்போது, ​​வர்த்தகர்கள் தங்கள்
வர்த்தகத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகாட்டும்
ஆதரவையும் எதிர்ப்பு நிலைகளையும் எளிதாக அடையாளம் காண
முடியும். ஒரு சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில், ஒரு குறிப்பிட்ட
திசையை நோக்கிய தெளிவான போக்கு இல்லாத நிலை
விரக்தியையும், அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடிய நடத்தை சார்ந்த
தவறுகளையும் ஏற்படுத்துகிறது.
</p><p>விலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாறிக்கொண்டிருக்கும் சூழலில்,
அளவுக்கு அதிகமாக வர்த்தகம் செய்வது மிகவும் பொதுவான ஓர்
ஆபத்தாகும். அடுத்தப் பெரிய சந்தை நகர்வைப் பிடித்து லாபம்
பெறலாம் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள் ஒவ்வொரு மேக்ரோ
தலைப்புச் செய்தியையும் அடிக்கடி பின்பற்றிச் செல்கிறார்கள். இந்த
உறுதிப்படுத்தும் சார்புநிலை, உண்மையில் சீரற்ற சந்தை ஏற்றத்
தாழ்வுகள் மட்டுமே உள்ள இடங்களில் போக்குகளைக் காண
அவர்களைத் தூண்டுகிறது. </p><p>எதிர்பார்ப்பைவிடச் சிறந்த ஒரு
வேலைவாய்ப்பு அறிக்கை, ஒரு தீவிரமான நீண்டகால முதலீட்டு
நிலையைத் தூண்டக்கூடும்; ஆனால், சில மணித்தியாலங்களிலேயே
ஒரு மோசமான கொள்முதல் முகாமையாளர்கள் குறியீட்டுக்
கணக்கெடுப்பு அந்த நகர்வைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும். அடுத்த
ஏற்றத்தைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற அச்சம், தொடர்ச்சியான
தவறான சமிக்ஞைகள் மூலமாக மூலதனத்தை வற்றச் செய்கிறது.</p><p>
EUR/USD ஜோடி பல வாரங்களாக ஒரு குறுகிய வரம்பிற்குள்
தேக்கமடைந்திருக்கும்போது, ​​கட்டாயப்படுத்தி வர்த்தகம் செய்ய
வேண்டும் என்ற உளவியல் உந்துதல் மிகத் தீவிரமாகிறது.</p><p> குறுகிய
கால வேக மாற்றத்தை ஓர் அடிப்படை மாற்றமாகக் தவறாகக் கருதி,

வர்த்தகர்கள் குறைந்த கால அளவுகளுக்கு மாறத் தொடங்குகிறார்கள்.
நிச்சயமற்ற பேரியல் பொருளாதாரச் சூழல்களில் மூலதனத்தைப்
பாதுகாப்பது, பெரிய திசைசார் நகர்வுகளைக் கைப்பற்றுவதைப்
போலவே பல நேரங்களில் மதிப்புமிக்கது என்பதை அனுபவமிக்க
வர்த்தகர்கள் புரிந்துகொள்கிறார்கள். </p><p>பொறுமையும், தேர்ந்தெடுக்கப்பட்ட
வர்த்தக நிறைவேற்றமும் அதயாவசியமானவையாகின்றன. இத்தகைய
சூழல்களில், குறைவாக வர்த்தகம் செய்வதே பெரும்பாலும் அதிக
லாபம் தரும் மூலோபாயமாக அமைகிறது.</p><h2>
அமைப்பு தெளிவாக இல்லாதபோது, ​​சூழல் அதிக முக்கியத்துவம்
பெறுகிறது</h2><p>
நிலையற்ற பேரியல் சூழல்களில் செயல்படுவதற்குப் பொறுமைக்கு
அப்பால் கூடுதல் திறன்கள் தேவைப்படுகின்றன.</p><p> உண்மையற்ற
தொடக்கங்கள், முக்கியச் செய்திகளின் தலைகீழ் மாற்றங்கள், திடீர்
விலை மாற்றங்கள் ஆகியவற்றைத் தாங்கக்கூடிய ஒரு வர்த்தகச்
செயல்முறை இதற்குத் தேவைப்படுகிறது. பணவீக்கத் தரவுகள்,
வளர்ச்சிகுறித்த கவலைகள், மத்திய வங்கியின் சமிக்ஞைகள், வட்டி
வீதம்குறித்த மாறிவரும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே
EUR/USD ஜோடி இழுபறிக்கு உள்ளாகும்போது, ​​வர்த்தகச் சூழலின்
ஒவ்வொரு அம்சமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
</p><p>
இங்குதான், விஷயத்தைத் திணிக்காமல் Exness-ஐ அறிமுகப்படுத்த
முடியும். EUR/USD போன்ற ஒரு சந்தையில், அடுத்தடுத்த தரவு
வெளியீடுகளின் அடிப்படையில் சூழல் மாறக்கூடும் என்பதால், CFD
வர்த்தகர்களுக்கு நிதானத்துடன் செயல்பட உதவும் சூழல்
தேவைப்படுகிறது. </p><p>ஒரு தரகரால் பேரியல் சித்திரத்தை மேலும்
தெளிவுபடுத்த முடியாது, ஆனால் முடிவெடுப்பது தொடர்பான
பின்வரும் கவனச்சிதறல்களைக் குறைக்க அவரால் உதவ முடியும்:
அதாவது, பிழையின்றி ஓர்டர் செய்யப்பட்டதா, செலவுகள்

புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றனவா மற்றும் CFD வர்த்தகர்
கவனத்தைச் சிதறடிக்காமல் இடர் அபாயத்தை நிர்வகிக்க முடியுமா
என்பன.</p><p>
இது முக்கியமானது, ஏனெனில் வரம்பு-பிணைக்கப்பட்ட நாணயச்
சந்தைகள் பெரும்பாலும் தயக்கம் மற்றும் அதிகப்படியான
எதிர்வினையைச் சம அளவில் தண்டிக்கின்றன. ஒரு CFD வர்த்தகர்
ஏற்கனவே ஓர் உண்மையான கொள்கைச் சமிக்ஞையை மற்றொரு
தவறான நகர்விலிருந்து பிரித்தறிய முயற்சிக்கும்போது, ​​அந்த
வர்த்தகத்தின் செயல்முறைகள் நிச்சயமற்ற தன்மைக்கு மற்றொரு
ஆதாரமாக மாறிவிடக் கூடாது. மிகவும் சீரான செயலாக்கமும்
தெளிவான விலை நிர்ணயமும் பின்வருவனவற்றின் மீதான
கவனத்தை அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க உதவலாம்:
</p><p>அமைவு, ஆபத்து மற்றும் வர்த்தகத்தில் இருப்பதற்கான காரணம்.
EUR/USD ஜோடி உண்மையில் வர்த்தகம் செய்யப்படும் விதத்தின்
அடிப்படையில், Exness Terminal கூட இந்த விவாதத்திற்குப்
பொருத்தமானதாக அமைகிறது. </p><p>அந்த ஜோடி அரிதாகவே ஒரே ஒரு
சமிக்ஞையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. CFD
வர்த்தகர்கள் ஒரே நேரத்தில் டொலர், யூரோஸோன் தரவுகள், ஃபெட்
குறித்த எதிர்பார்ப்புகள், ECB-இன் கருத்துகள், தங்கம், கச்சா எண்ணெய்,
பங்குச் சந்தை மனநிலை ஆகியவற்றைக் கவனிக்க
வேண்டியிருக்கலாம். </p><p>வரைபட பகுப்பாய்வு, செயல்படுத்துதல், நிலை
முகாமைத்துவம், கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கான ஒற்றைப்
பணிச்சூழல், அந்தப் பரந்த பேரியல் கண்ணோட்டத்தை ஒன்றிணைத்து
வைத்திருக்க உதவுகிறது.</p><p> குறிப்பாக, EUR/USD கூடிக் குறையாமல்,
கிடைமட்டமாக நகரும்போதும், ஒவ்வொரு நகர்விற்கும் பின்னால்
இருக்கும் காரணங்கள் மாறிக்கொண்டே இருக்கும்போதும் இது மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
இடர் கட்டுப்பாடானது வகுத்த அதே திட்டத்தின் ஒரு பகுதியாக
மாறுகிறது. தெளிவான போக்கு நிலவும் ஒரு சூழலில், CFD

வர்த்தகர்கள் பெரும்பாலும் சந்தை அமைப்பையே தங்கள் பணிகளைச்
செய்ய அனுமதிக்க முடியும். EUR/USD சந்தையில் ஏற்ற இறக்கங்கள்
அதிகமாக இருக்கும்போது, ​​சந்தை அமைப்பு சாதகமான
வாய்ப்புகளைக் குறைவாகவே வழங்குகிறது. </p><p>பிரத்தியேகமான விலை
நிலைகள் அடிக்கடி சோதிக்கப்படுகின்றன, சந்தைகுறித்த உறுதிப்பாடு
விரைவாகக் குறைகிறது; இதனால், வர்த்தகம்
நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே திட்டத்தை மாற்றியமைக்க CFD
வர்த்தகர்கள் தூண்டப்படலாம்.</p><p> வெளிப்பாடு, மார்ஜின் மற்றும் கணக்கின்
நிலைகுறித்த தெளிவான புலப்படுநிலையானது, வர்த்தகத்தை
உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளின் அடிப்படையில் அல்லாமல்,
விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ள உதவுகிறது.
உட்கட்டமைப்பானது நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்கின்றன என்பது
விஷயமல்ல. அது தீர்ப்பதில்லை.</p><p> முக்கியமான விஷயம்
என்னவென்றால், நிலையற்ற சந்தைகள் ஏற்கனவே CFD வர்த்தகரிடம்
போதும் என்கிற அளவுக்குச் சவால்களை முன்வைக்கின்றன. EUR/USD
ஜோடியானது இரண்டு பலவீனமான கண்ணோட்டங்களுக்கு இடையே
சிக்கியிருக்கும்போது, ​​கையாள வேண்டிய மற்றொரு காரணியைச்
சேர்ப்பதற்குப் பதிலாக, வர்த்தக ஒழுக்கத்தைக் காக்க அந்தத் தளம்
உதவ வேண்டும்.</p><p>
முடிவுரை
பணவீக்க மந்தநிலையின்போது வெற்றிகரமான EUR/USD வர்த்தகம்
என்பது, ஒவ்வொரு பொருளாதார வெளியீட்டையும் கணிப்பதை விட,
சந்தைகள் ஒரு வழிகாட்டலைத் தேடும்போது ஒழுக்கத்தைக்
கடைப்பிடிப்பதைப் பற்றியதே ஆகும். ஓகஸ்ட் மாதத்தில் சேதம்
ஏற்படுத்தும் சந்தைச் சூழலானது, பேரியல் முதலீட்டாளர்கள் மற்றும்
சில நாட்கள் அல்லது வாரங்கள் வரை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள்
ஆகிய இரு தரப்பினரின் பொறுமையையும் சந்தேகமின்றிச் சோதிக்கும்.</p><p>
வர்த்தகர்கள் இத்தகைய நிச்சயமற்ற பேரியல் சூழல்களை ஒரு

புறநிலை சார்ந்த பகுப்பாய்வுடனும், கட்டாயப்படுத்தி வர்த்தகம்
செய்வதை உறுதியாகத் தவிர்த்தும் அணுக வேண்டும். </p><p>சீரான
நிறைவேற்றலை ஆதரிக்கும் ஒரு வலுவான வர்த்தக
உள்கட்டமைப்பைச் சார்ந்திருப்பதன் மூலம், வர்த்தகர்கள் சவாலான,
ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் கட்டுண்ட சந்தைகளைச் சமாளித்து,
தங்கள் மூலதனத்திற்குப் பாதிப்பின்றி வெளிவர முடியும்.</p>]]></content>
            <updated>2026-08-12T00:02:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிச்சத்திற்கு வந்த பாதாள உலகத்தின் அரசியல் தொடர்புகள்..! மரண தண்டனை மீண்டும் நடைமுறையாகுமா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-regardin-death-penalty-drug-trafficking-1786470851"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-regardin-death-penalty-drug-trafficking-1786470851</id>
            <summary type="text">இலங்கையில் தற்பொழுது&amp;nbsp; மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளாகியுள்ளன.


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்பொழுது&nbsp; மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளாகியுள்ளன.</p><p>


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு அரசியல்வாதிகளின் அனுசரணை இல்லாமல் இவ்வளவு பெரிய வலையமைப்பு இயங்க முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
 மாக்கந்தர மதுஷ் போன்ற பாதாள உலகத் தலைவர்கள் அரசியல்வாதிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் இதற்கான முக்கிய சான்றாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இலங்கையில் மரண தண்டனை சட்டம் புத்தகத்தில் இருந்தாலும், 1976 முதல் நடைமுறையில் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
</p><p>
போதைப்பொருள் குற்றங்களைக் குறைக்க மரண தண்டனையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதற்கு ஆதரவாகவோ அல்லது நிறைவேற்றுவதாகவோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
</p><p>
 மரண தண்டனைக்கு எதிரான வாதங்களில் மனித உரிமை கவலைகள், நீதித்துறை தவறுகள் நிகழ்ந்தால் அதைத் திருத்த முடியாது என்ற அம்சம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் (ICCPR) ஆகியவை முதன்மையாக உள்ளன.
</p><p>
வெறும் மரண தண்டனை மட்டுமே தீர்வாகாது; போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்களைக் கண்டறிதல்,பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளில் ஊழலை ஒழித்தல், விசாரணை மற்றும் நீதிமன்றச் செயல்பாடுகளை விரைவுபடுத்துதல் போன்ற கட்டமைப்பு ரீதியான மாற்றங்களே அவசியமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DEmhAJm0O5s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T23:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..! அதிரவைக்கும் காணொளி - புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/180-dead-in-colombia-earthquake-1786490585"></link>
            <id>https://tamilwin.com/article/180-dead-in-colombia-earthquake-1786490585</id>
            <summary type="text">கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 570க்கும் மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்தநிலையில் நிலநடுக்கம் தொடர்பான பல திடுக்கிடும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>சக்திவாய்ந்த நிலநடுக்கம்</h2><p>
</p><p>
மேற்கு கொலம்பியாவின் சொகோ (Choco) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே பூமிக்கு அடியில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

தொடர்ந்து பல நில அதிர்வுகள் பதிவாகின. </p><p>இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.


அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">NEW footage is circulating from a magnitude 7.4 earthquake that struck Colombia&#39;s Pacific region today. <br><br>The epicenter was near San José del Palmar in Chocó department, at a depth of around 96 km. <br><br>It was felt strongly across much of Colombia—including Bogotá, Medellín, and… <a href="https://t.co/X03limcIts">pic.twitter.com/X03limcIts</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2086811623902052811?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.


கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது.இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><h2>அவசரநிலை பிரகடனம்</h2><p>குறிப்பாகக் காளி (Cali) மற்றும் பெரேரா (Pereira) நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் நடைமுறையில் உள்ளது.


நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,

நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.</p><p> அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. </p><p>18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A powerful earthquake struck Colombia, and several buildings appeared to be about to collapse due to the powerful tremors. <a href="https://x.com/hashtag/Earthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Earthquake</a> <a href="https://x.com/hashtag/colombia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombia</a> <a href="https://x.com/hashtag/colombiaearthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombiaearthquake</a> <a href="https://t.co/Kp2jWEuXlf">https://t.co/Kp2jWEuXlf</a> <a href="https://t.co/10A3kYSs2D">pic.twitter.com/10A3kYSs2D</a></p>&mdash; Bara (@Reueus) <a href="https://x.com/Reueus/status/2087024035591041294?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>


நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
காளி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
</p><p>
 ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T23:35:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி இயங்கும் 10 பேருந்துகள் அடையாளம்! வடக்கில் விரைவில் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-be-taken-against-private-bus-drivers-1786488410"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-be-taken-against-private-bus-drivers-1786488410</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துச் சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.</p><p>

இவ்வாறான பேருந்துகளுக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><h2>பரிசோதனை நடவடிக்கைகள்</h2><p>

இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் 10 பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டவிரோத பேருந்துச் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf22a95-adad-4f75-9582-92367c71ee05/26-6a7ba8c01b9ba.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் இது அநீதியை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயக்குவதற்கு ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
எனினும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><h2>விசேட நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து பேருந்துகளை பரிசோதிக்கவுள்ளனர்.</p><p>

இதன்போது, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும்.

அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abced9ba-a9aa-4cac-a279-eacf261f40bf/26-6a7ba8c0c491e.webp' /></p><p>

அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே பேருந்துச் சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-11T22:57:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா ஊடாக தாயகத்தில் முதலீடு..! பலருக்கு தொழில்வாய்ப்பு வழங்கிய கந்தையா பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economic-investment-tamil-diaspora-essential-home-1786464771"></link>
            <id>https://tamilwin.com/article/economic-investment-tamil-diaspora-essential-home-1786464771</id>
            <summary type="text">புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தமிழர் தாயகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அவசியம் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தமிழர் தாயகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அவசியம் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,</p><p>


யுத்தத்தாலும், இனவழிப்பு செயற்பாடுகளாலும் எமது தாயக மண்ணில் இருந்து பல இலட்சக் கணக்கான தமிழர்கள் புலம் பெயர்த்து வெளிநாடுகளில் வாழுகின்றனர்.</p><p></p><h2>புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள்</h2><p> 

யுத்தத்தில் பின்னர், எமது தாயகம் பொருளாதார,சமூக, கலாசார,அரசியல் ரீதியாக சீர்குலைந்துள்ளது அல்லது சீர்குலைக்கப்பட்டுள்ளது.

 இதனைக் கட்டி எழுப்புவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளின் பாரியளவான முதலீடுகள் அவசிய தேவையாகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/985dbd7f-b490-45a4-9ebf-7f33a8e38823/26-6a7b4bbe75bc6.webp' /></p><p> </p><p>

இந்த முதலீட்டுக்குத் தடையாக அரசியல் தீர்வு இன்மை, பேரின அடிப்படை வாதம்,குறுகிய அரசியல்,வணிகப் போட்டி,தனிப்பட்ட காழ்ப்புணர்வு போன்றவை காணப்படுகின்றன.
</p><p>
 அப்படி இருந்தும் சில தமிழ் உறவுகள் அந்த சவால்களையெல்லாம் முகங்கொடுத்து தமிழர் தாயகத்தில் முதலீடுகளைச் செய்து எமது மக்களுக்கு தொழில்வாய்ப்புகள்,வாழ்வாதாரம் என்பவற்றை வழங்கி முன்மாதிரியாகச் செயற்படுகின்றனர்.</p><p></p><h2>கிளிநொச்சியில் றீச்சா&nbsp;</h2><p> </p><p>

எடுத்துக்காட்டாக, தனது கடின உழைப்பினால், பொருளாதார மேம்பாடு அடைந்த கந்தையா பாஸ்கரன் , நெதர்லாந்தில்(ஹொலன்ட்) இருந்து தாயகம் வந்து கிளிநொச்சியில் றீச்சா என்ற அமைப்பின் பெயரில் முதலீடு செய்து சுமார் 500 தமிழ் உறவுகளுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிசமைத்துள்ளார்.</p><p>இதனைப் பார்த்து இன்னும் பல தமிழ் முதலீட்டார்கள் தாயக மண்ணில் முதலீடுகள் செய்வதற்கு தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். 

இதற்குத் தாயக மண்ணில் பலத்த ஆதரவுகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f046620f-4e4c-45c1-ac3e-dd65fadc3230/26-6a7b4bbf45151.webp' /></p><p>ஆனால் சில சுயநலமிக்கவர்கள், முரண்நிலைவாதிகள், காழ்ப்புணர்வாளர்கள் குறுகிய சிந்தனையோடு நல்லவல்ல முலீடுகளை குழப்ப நினைக்கின்றனர்.</p><p> 

முதலீட்டாளர்கள் சிறுதவறுகள் செய்தால், அவற்றை முறையாக அணுகி, ஆலோசனைகள் கூறி திருத்த வேண்டியது சமூகப் பொறுப்பாகும்.</p><p></p><h2>தமிழ்த்தேசிய உணர்வு மிக்க தமிழர்கள்&nbsp;</h2><p> </p><p>அதனை விடுத்து முதலீட்டார்களை திட்டமிட்டு வருத்துவது, அவர்களது முதலீடுகளை முடக்கி சீர்குலைக்க நினைப்பது, சமூகத்துக்கு இழைக்கின்ற கெடுதியாகும்.</p><p> இதனை தமிழ்த்தேசிய உணர்வு மிக்க தமிழர்கள் ஒரு போதும் செய்யமாட்டார்கள். 

ஆனால்,தன்னல வாதிகள், காழ்ப்புணர்வாளர்கள்,எதிர்மறை முகவர்கள் முதலீடுகளின் முக்கியத்துவத்தையோ,அதனால் சமூகம் பெறும் தொழில்வாய்ப்பு களையோ, சுற்றுலா மூலம் கிடைக்கும் டொலர் வருமானத்தையோ சிந்திக்க மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc2caa87-369b-4c58-88c6-0db09c68d41b/26-6a7b4bbfeeb4b.webp' /></p><p> 

இப்படியானவர்கள் பற்றி முற்போக்கான தமிழ் உணர் வாளர்கள் விழிப்பாக இருந்து தடைகளை உடைத்து, தமிழ் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி எமது தாயக மண்ணை வலுவூட்டி வளப்படுத்த வேண்டும்.</p><p> 

எதிர்மறைப் போக்குகளை நேரிடை செயற்பாடுகளால் முறியடித்து முதலீடுகளை வரவேற்போம்.நல்லவை செய்வோம், அல்லவை களைவோம்.தமிழர் தாயக மண்ணை வளப்படுத்துவோம், அதற்கு உதவியாக இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T22:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அச்சுறுத்தல்: துருக்கியில் இருந்து ரகசிய விமானத்தில் ட்ரம்ப் பயணம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-secretly-fled-turkey-amid-iran-threat-1786467290"></link>
            <id>https://tamilwin.com/article/trump-secretly-fled-turkey-amid-iran-threat-1786467290</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் துருக்கியில் இருந்து ரகசியமாக வேறு விமானத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் துருக்கியில் இருந்து ரகசியமாக வேறு விமானத்தில் பயணித்ததாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் கட்டாரால் வழங்கப்பட்ட புதிய விமானத்தில் துருக்கியின் அங்காராவுக்குச் சென்றிருந்தார்.</p><p></p><h2>ஈரான் அச்சுறுத்தல்&nbsp;</h2><p> எனினும், அங்கிருந்து புறப்படும் போது எதிர்பாராத விதமாக பழைய Air Force One விமானத்தை பயன்படுத்தியிருந்தார்.</p><p>

அங்காரா விமான நிலையத்தில் ஊடகங்கள் முன்னிலையில் பழைய Air Force One விமானத்தில் ஏறிய ட்ரம்ப், பின்னர் விமான நிலைய உணவு விநியோக வாகனம் மூலம் ரகசியமாக மற்றொரு சிறிய விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21efe32f-9ae9-4b2c-bc78-bb4c1b9cb509/26-6a7b5519a84a8.webp' /></p><p>
</p><p>
அந்த விமானம் அமெரிக்க விமானப்படையின் C-32A விமானம் எனவும், அதில் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு பயணித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

ஈரானுடனான பதற்றம் அதிகரித்திருந்த காலகட்டத்தில் இந்தப் பயணம் இடம்பெற்றதுடன், ஈரான் துருக்கியின் அண்டை நாடாகவும் உள்ளது.</p><p></p><h2>உயர்மட்ட பாதுகாப்பு</h2><p>

இதனிடையே, கட்டார் வழங்கிய புதிய விமானம் ஜனாதிபதி மற்றும் அவரது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உயர்மட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0741377-e485-41ae-8b12-e63fea5d4bf4/26-6a7b551a5d689.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பல எதிரிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தங்களிடம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவதாக வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஸ்டீவ் சியுங் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-11T21:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல! மணிவண்ணன் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-solution-for-the-tamil-people-1786479754"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-solution-for-the-tamil-people-1786479754</id>
            <summary type="text">மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன்
தெரிவித்துள்ளார்.
</p><p>வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய
கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>


மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட முடியாது. உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது.</p><p></p><h2>மாகாண சபை தேர்தல்கள்&nbsp;</h2><p>2017 கிழக்கு மாகாண
சபை பதவியை இழந்திருந்தது
கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல் அரசாங்கங்கள்
வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது. அவர்களைப் பொறுத்தவரையில் இந்த
நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும்.</p><p> இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட
பகிரக்கூடாது. அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு
பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை
செயற்படுத்த கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb58efe-8edb-4ebf-b5bf-48b0726f23b5/26-6a7b944654d38.webp' /></p><p> </p><p>அந்த
அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா
அரசாங்கங்களாலும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
</p><p>
2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது மைத்திரிபால சிறிசேன ரணில்
விக்ரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி. அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த
சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல்
நடைபெறாமல் இருக்கிறது.</p><p> ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச்
சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.
13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும் நான் 100 வீதம்
ஏற்றுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்காக உயிரை கொடுப்பேன்.! நாமலின் மக்கள் சந்திப்பில் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-meeting-attended-by-namal-rajapaksa-1786480669"></link>
            <id>https://tamilwin.com/article/public-meeting-attended-by-namal-rajapaksa-1786480669</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற நபர் ஒருவர், நாமல் ராஜபக்சவின் தந்தையைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற நபர் ஒருவர், நாமல் ராஜபக்சவின் தந்தையைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>
அதாவது, மகிந்த ராஜபக்ச சொன்னால் தான் உயிரையும் கொடுக்கத் தயார் என்று கூறினார்.</p><p> 

குறித்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது.
</p><p>

இத்தகைய தீவிர விசுவாசமான கருத்துக்கள் தற்போதைய சமூக மற்றும் அரசியல் சூழலுக்கு தேவையற்றவை என்றும், இத்தகைய உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள் சிக்கலானவை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>

இதேவேளை நாட்டில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயாராகி வருகின்றார்.</p><p>

இந்த வியடங்கள் மற்றும் நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய விடயங்களை பற்றி பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sUqdox2fSjw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T20:41:41+00:00</updated>
        </entry>
    </feed>
