<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-30T01:36:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 ஆண்டுகளில் ஓருநாளும் துப்பாக்கியை கேட்டதில்லை சீ.டி.விக்ரமரத்னவின் பாதுகாவலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cd-wickramaratnes-body-gourd-tells-the-story-1785375186"></link>
            <id>https://tamilwin.com/article/cd-wickramaratnes-body-gourd-tells-the-story-1785375186</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை சாட்சியாளரான மெய்ப்பாதுகாவலர் நீதிமன்றில் வெளியிட்டுள்ளார்.
சி.டி. வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை சாட்சியாளரான மெய்ப்பாதுகாவலர் நீதிமன்றில் வெளியிட்டுள்ளார்.</p><p>
சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையில், அவரது மெய்ப்பாதுகாவலர் அதிகாரியான பொலிஸ் சார்ஜன்ட் ஆர்.எம். பிரசன்ன கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.</p><p>
மேற்கு தெற்கு விசேட விசாரணைப் பிரிவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த பாதுகாப்பு அதிகாரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது துப்பாக்கியைப் பயன்படுத்தித் தானே சுட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/306bc7f0-2be6-4c26-b043-59df16f9e671/26-6a6aa9d8d0fc9.webp' /></p><p>
தான்,16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
</p><p> இந்த நீண்ட காலத்தில் அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் துப்பாக்கியைக் கேட்டதில்லை. </p><p>உடற்பயிற்சி செய்யச் செல்லும் போது தண்ணீர் போத்தல் எடுத்துச் செல்வதுமில்லை; என்னை எடுத்து வரச் சொல்வதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஆனால், சம்பவம் நடந்த அன்று அவர் உடற்பயிற்சிக்கான ஆடைகளை அணிந்திருந்தார். வழக்கமாக உடற்பயிற்சிக்கு ஆயத்தமாகும் போது காலணி அணிவது வழக்கம், ஆனால் அன்று அவர் காலணி அணிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அப்போது அவர் என்னிடம், 'பிரசன்ன, உனது துப்பாக்கியைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும், அதைக் கொடு' எனக் கேட்டார். நான் துப்பாக்கியை மட்டும் கொடுத்தேன், தோட்டாக்களைக் கொடுக்கவில்லை. பின்னர், 'பரிசோதிப்பதற்குத் தோட்டாக்கள் அடங்கிய மெகசினையும் கொடு' எனக் கேட்டதால், அதையும் வழங்கினேன்.</p><p>
துப்பாக்கியையும் மெகசினையும் கையிலெடுத்த அவர், 'பிரசன்ன, உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும், ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வா' என்று கூறியுள்ளார்.</p><p>நான் தண்ணீர் போத்தல் எடுக்கச் சென்ற கணத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. ஓடிவந்து பார்த்தபோது அவர் துப்பாக்கிச் சூட்டுடன் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை முல்லேரியாவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறியக் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.</p><p>சாட்சியமளித்த வேளையில், பொலிஸ் சார்ஜன்ட் பிரசன்ன பலமுறை உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குள்ளானார்.</p><p>
மேற்கு தெற்கு விசேட விசாரணைப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சாரதி மற்றும் சமையல்காரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
</p><p>மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மெகசின் மற்றும் வெற்றுத் தோட்டா உறை ஆகியவற்றை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T01:33:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமிந்த விஜேசிறி தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chaminda-wijesiri-appeals-1785373275"></link>
            <id>https://tamilwin.com/article/chaminda-wijesiri-appeals-1785373275</id>
            <summary type="text">ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தண்டனைக்கு எதிராக பதுளை மேல்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தண்டனைக்கு எதிராக பதுளை மேல்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னை குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்யுமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
</p><p>மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ள அவர், அது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, தன்னை பிணையில் விடுவிக்குமாறும் பதுளை மேல்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657cc45a-e6cc-4156-beb0-bb2345e17ab3/26-6a6aa25c9006f.webp' /></p><p>
</p><p>சட்டவிரோதமான முறையில் வீதியை மறித்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி, அவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளுக்காக, சமிந்த விஜேசிறிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பதுளை மேல்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.</p><p>
2019ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதியை ஒட்டிய ஒரு நாளில், பண்டாரவளை நகரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் வண்டியைச் சட்டவிரோதமாக மறித்து, அவர்களைத் தாக்கி, திட்டி, மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டி சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p>
இத்தீர்ப்புக்கு எதிராக, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் சமிந்த விஜேசிறி சார்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டைச் சமர்ப்பித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T01:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/singer-attacks-police-flees-operation-catch-him-1785371825"></link>
            <id>https://tamilwin.com/article/singer-attacks-police-flees-operation-catch-him-1785371825</id>
            <summary type="text">ஹொரணை ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்தில்&amp;nbsp;பிரபல பாடகர் ஒவரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்தில்&nbsp;பிரபல பாடகர் ஒவரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>பொலிஸாரின் தகவல்களின்படி, குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையைப் பார்ப்பதற்காக, சந்தேகநபரான பாடகர் மதுபோதையில் சென்றுள்ளார்.</p><p>இதன்போது, அவர் வைத்தியசாலை ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதுடன், ஒழுங்கீனமாகச் செயற்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>அதிகாரியுடன் முரண்பாடு&nbsp;</h2><p>அதன் காரணமாக, அவரை வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேற்ற பாதுகாப்பு ஊழியர் ஒருவர் முயன்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0682f937-20da-424b-aa4b-946374290897/26-6a6a9fd80fad4.webp' /></p><p>இதன்போது, ஏற்பட்ட பதற்ற நிலைமையைக் கட்டுப்படுத்த முற்பட்ட வைத்தியசாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது சந்தேகநபர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இச்சம்பவத்திற்கு முன்னர் குறித்த சந்தேகநபர் வைத்தியசாலை வைத்தியர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>இந்நிலையில், தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்காக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T00:55:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 12 பேர் - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/12-people-arrested-by-police-in-mannar-area-1785367453"></link>
            <id>https://tamilwin.com/article/12-people-arrested-by-police-in-mannar-area-1785367453</id>
            <summary type="text">மன்னார் - சவுத்பார் கடற்கரை பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 14,072...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - சவுத்பார் கடற்கரை பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், 3 டிங்கி படகுகளும் 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>12 சந்தேக நபர்கள் கைது</h2><p>

சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்டு, அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாக கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397d7fd5-ead8-4754-abd3-f097f44f2d0f/26-6a6a8d998737b.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த சந்தேகநபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 36ஆவது நாளாக தொடரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keppapilavu-land-protest-enters-36th-day-1785362646"></link>
            <id>https://tamilwin.com/article/keppapilavu-land-protest-enters-36th-day-1785362646</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

இன்று (29.07.2026) அந்தப் போராட்டம் இரண்டாவது கட்டத்தின் 36ஆவது நாளை எட்டியுள்ளது.</p><p></p><h2>36ஆவது நாளாக தொடரும் போராட்டம்</h2><p>கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக
வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய
வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.
</p><p>
தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி
உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2bbc1d-9926-4d84-801d-909dd8bf7d1f/26-6a6a7ac249b32.webp' /></p><p>தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை
உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான
கோரிக்கையாகும்.
</p><p>
இந்த நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை
அதிகாரிகளிடமிருந்து எந்தவித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில்,
போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>காணிவிடுவிப்பு</h2><p>
</p><p>
இதன்போது போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ”இன்று
இரண்டாம் கட்டத்தின் 36 வது நாளாக போராடிக்கொண்டு இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eac4205-48a9-48fa-8482-41453d9af538/26-6a6a7ac199615.webp' /></p><p> 

எமது
நியாயமான கோரிக்கைகளை ஏற்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் இவ்விடத்திற்கு வருகை
தருவதாக உறுதியளித்திருக்கின்றார். அவரின் வருகைக்காக நாம்
காத்திருக்கின்றோம்.</p><p> 

அவர் எமது காணிவிடுவிப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான
செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எனவே எமது
சாத்வீகமான போராட்டத்திற்கு செவிசாய்த்தமைக்கு அவருக்கு நன்றிகளை தெரிவித்து
கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமடையும் டெங்குதொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரமாக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-dengue-cases-rise-to-83-000-1785360795"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-dengue-cases-rise-to-83-000-1785360795</id>
            <summary type="text">இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
மேலும் அதிகரித்து வருகின்றது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை
வெளியிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
மேலும் அதிகரித்து வருகின்றது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை
வெளியிட்டுள்ளது.</p><p>

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும்
இருந்து இதுவரை 83 ஆயிரத்து 661 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>வேகமாகப் பரவி வரும்&nbsp;டெங்கு</h2><p>டெங்குக் காய்ச்சலின் தீவிர தாக்கத்தினால் இதுவரை 61 பேர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21efa92d-72cb-45a3-8a45-cf8fbc8cc644/26-6a6a746921803.webp' /></p><p>கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை
17 ஆயிரத்து 779 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p> இதற்கு
அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 665 நோயாளர்கள்
கண்டறியப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. டெங்கு நோயால் மேல் மாகாணம் தொடர்ந்து பெரும் பாதிப்பைச் சந்தித்து
வருகின்றது.</p><p></p><h2>பொதுமக்களுக்கு எச்சரிக்கை</h2><p>மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 44 ஆயிரத்து 359 டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 12
ஆயிரத்து 586 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ef20bf2-91ba-45f9-9bba-5d5f3cf4ac9b/26-6a6a7469ca5ff.webp' /></p><p>இலங்கை முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் தற்போதைய சூழ்நிலையைக்
கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் 175 பகுதிகள் 'அதிஅபாய மண்டலங்களாக'
சுகாதாரத் துறையினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றாடலையும் சுத்தமாகப் பேணுவதுடன்,
நீர் தேங்கும் இடங்களை அகற்றி கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த விழிப்புடன்
செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-indian-deputy-high-commissioner-meet-sajith-1785359645"></link>
            <id>https://tamilwin.com/article/new-indian-deputy-high-commissioner-meet-sajith-1785359645</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(29.07.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(29.07.2026) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும்
வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆழமான
கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>இருதரப்பு உறவு</h2><p>
</p><p>
கடந்த வருட இறுதியில் இலங்கைக்கு ஏற்பட்ட 'டித்வா' அனர்த்த நிலைமையின் போது,
அயல் நாடு என்ற முறையில் இந்தியா பெற்றுத் தந்த துரிதமான மற்றும் மனிதாபிமான
உதவிக்கு 220 இலட்சம் மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தனது நன்றியையும் பாராட்டுக்களையும் இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகரிடம்
குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b940b1-f7e1-4534-9ab7-be26bc2a0838/26-6a6a6ddc33335.webp' /></p><p>அத்துடன், கொவிட்-19 தொற்றுநோய் பரவற் காலத்திலும், கடுமையான பொருளாதார
நெருக்கடியின் பொழுதும் நெருங்கிய அயல் நாடொன்றாக இந்தியா இலங்கைக்கு நல்கிய
பெறுமதியான ஆதரவுக்கும் அவர் விசேடமாகப் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், பரஸ்பர நம்பிக்கையையும்
மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்திலும் அபிவிருத்தி, பொருளாதாரம் மற்றும்
மக்கள் நலன்புரித் துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதன்
முக்கியத்துவம் தொடர்பிலும் இரு தரப்பினரும் இதன்போது விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:46:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பியோடிய வாகனம்.. பலியான முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-thandikulam-accident-old-man-died-1785368184"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-thandikulam-accident-old-man-died-1785368184</id>
            <summary type="text">வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;அதேநேரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம், விபத்தை
ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>உயிரிழந்தவர், கனகராயன் குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><h2>பொலிஸார் நடவடிக்கை..&nbsp;</h2><p>
</p><p>சம்பவத்தின் போது, மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் இருந்து பின்னால் வந்த கப் ரக வாகனம்,
மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4d48434-039a-45d5-81e1-e4c9186263d4/26-6a6a90b33ce0a.webp' /></p><p>

இவ்விபத்தில் கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும்
அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. அன்னதான நிகழ்வில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sword-attack-on-food-donors-in-batticaloa-temple-1785366019"></link>
            <id>https://tamilwin.com/article/sword-attack-on-food-donors-in-batticaloa-temple-1785366019</id>
            <summary type="text">ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன்
ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன்
ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நேற்று (29) பிற்பகல் நடந்த இத்தாக்குதலில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>வாள்வெட்டு நடத்திய குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி
பிடித்துள்ளதுடன் ஏனையவர்கள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>முற்றிய வாக்குவாதம்..&nbsp;</h2><p>
குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பகல் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee3dcd91-9225-48ea-ac5f-bb57de7085eb/26-6a6a8b601c2b1.webp' /></p><p>இதன்போது, அன்னதானம் வாங்கி உண்ட இளைஞர் ஒருவர், உணவு சரி இல்லை என தெரிவித்துள்ள நிலையில் அன்னதானம்
வழங்கியவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, அந்த இளைஞருடன் 7 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழு அன்னதானம் வழங்கியவர்கள்
மீது தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இச்சம்பவத்தில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த
நிலையில் அவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை
நடத்தியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிபிடிக்க முயன்றபோது ஒருவர் மாத்திரம் சிக்கியுள்ளார்.&nbsp;</p><p>அதனை தொடர்ந்து மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T23:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 வருடமாக அடிப்படை வசதி இல்லாத கடற்றொழில் எழுச்சி கிராம மக்கள்.. ஜனாதிபதிக்கு அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishermen-batticaloa-20-years-village-issue-1785362718"></link>
            <id>https://tamilwin.com/article/fishermen-batticaloa-20-years-village-issue-1785362718</id>
            <summary type="text">மட்டக்களப்பு - பாலமீன்மடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல்
கடந்த 20 வருடமாக வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை போக்குமாறு ஜனாதிபதி
மற்றும் மாவட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - பாலமீன்மடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல்
கடந்த 20 வருடமாக வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை போக்குமாறு ஜனாதிபதி
மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை
அனுப்பியுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில்
ராஜ்குமார் தெரிவித்தார்.</p><p>பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (29) இடம்பெற்ற வாராந்த ஊடக மாநாட்டில் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்
சிவானந்தராஜா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்ட
போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
</p><p>அவர் மேலும், "மட்டக்களப்பு கடற்றொழில் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம் கடந்த 2000ஆம் ஆண்டு
உருவாக்கி குடியேற்றப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.</p><p></p><h2>&nbsp;தனிநபருக்கு குத்தகை</h2><p> </p><p>இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம்
பாதிக்கப்;பட்டதையடுத்து ஒரு சிலருக்கு மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ்
கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/930e05b1-0dc7-4b86-ae45-f438f2b30f0b/26-6a6a7c7cc961e.webp' /></p><p>

அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட கடற்றொழில் கிராமத்தில் ஒரு சிலர்
குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர்
இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.</p><p>

இந்த கடற்றொழில் எழுச்சி கிராமாக அமைக்கப்பட்ட அந்த காணியில் உல்லாச விடுதி ஒன்று
நிர்மாணிப்பதற்காக 2014ஆம் ஆண்டு அப்போது இருந்த பிரதேச செயலாளர் ஒரு
தனிநபருக்கு குத்தகைக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி
வழங்கப்பட்டு இருந்தது.
</p><p>
இதன்போது பாலைமீன் மடுவில் உள்ள பொது நல அமைப்புகள் ஆலய நிர்வாகம் அதற்கு
எதிர்த்து அதனை தடை செய்ய வேண்டும் என அப்போது இருந்த ஜனாதிபதியின்
கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கிய பிரதேச
செயலாளரால் அது இரத்து செய்யப்பட்டது.
</p><p>
இன்று அந்த மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்காமல் இது அனர்த்த வலயமாக அதிகாரிகள்
சுட்டிக்காட்டுகின்றனர். எனவே அந்த இடம் ஹோட்டல் கட்ட அப்போது அனர்த்த வலயம்
இல்லை அனுமதி வழங்குகிறார்கள் அந்த ஊரிலே பிறந்த காணி இல்லாத மக்கள்
குடியிருப்பது அனர்த்த வலயமா?” என கேள்வி எழுப்பினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T22:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடி பகுதியில் 28 வயதுடைய இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-28-year-old-youth-in-the-kattankudy-area-1785358859"></link>
            <id>https://tamilwin.com/article/death-28-year-old-youth-in-the-kattankudy-area-1785358859</id>
            <summary type="text">காத்தான்குடி - நூராணிய்யா மையவாடி
முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர்
ஒருவர் சம்பவ இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காத்தான்குடி - நூராணிய்யா மையவாடி
முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர்
ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று(29.07.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்த&nbsp;இளைஞர் </h2><p>
</p><p>
உயிரிழந்தவர் மட்டக்களப்பு - ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய
இளைஞர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe09e46b-3e02-4f40-a5d4-ab7c15921d40/26-6a6a6b6649ad0.webp' /></p><p>

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:44:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலையை நினைவு கூரும் முகமாக ஹட்டனில் நடைப்பெற்ற விசேட நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-event-promotes-black-july-reconciliation-1785357944"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-event-promotes-black-july-reconciliation-1785357944</id>
            <summary type="text">கறுப்பு ஜூலையின் போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக்
காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜூலையின் போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக்
காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை
ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நிகழ்வு, 'இனவாதம் வேண்டாம் – இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபடுவோம்' என்ற தொனிப்பொருளில் நேற்று(29.07.2026) ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றுள்ளது.</p><p></p><h2>கையெழுத்துப் பெறும் நடவடிக்கை&nbsp;</h2><p>

நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை
ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த கையெழுத்துப் பெறும்
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமதத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் கலைச்செல்வி மற்றும்
மஞ்சுல சுரவீர ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ccf5d9-a7a0-427b-8a3a-d6a8a41083a2/26-6a6a67a701bc4.webp' /></p><p>பின்னர், பிரதேச மக்கள் மற்றும்
இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து
கையெழுத்திட்டுள்ளனர்.
இதனுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும்
துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்
அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுல சுரவீர, ”கறுப்பு ஜூலையினால் நாட்டில்
ஏற்பட்ட வடுவை போக்கி, மக்கள் மத்தியில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும்
சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், பல தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளினால்
அப்பாவி மக்களின் உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டதாகவும், அந்தச்
சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தின சிறப்பு பூஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-pooja-at-neeraviyadi-pillayar-temple-1785356965"></link>
            <id>https://tamilwin.com/article/special-pooja-at-neeraviyadi-pillayar-temple-1785356965</id>
            <summary type="text">முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை
முன்னிட்டு&amp;nbsp; (29.07.2026) சிறப்பு பூஜைகள் மற்றும் விசேட வழிபாட்டு
நிகழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை
முன்னிட்டு&nbsp; (29.07.2026) சிறப்பு பூஜைகள் மற்றும் விசேட வழிபாட்டு
நிகழ்வுகள் பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி பூர்வமாக நடைபெற்றிருந்தது.</p><p>

இதனையடுத்து, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள
வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு, ஆலய வளாகத்தை சுத்தம் செய்து
ஒழுங்குபடுத்தும் பணிகள் ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின்
பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>ஆலயத்தின் வருடாந்த பெருவிழா</h2><p>

ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை சிறப்பாக நடத்தும் நோக்கில் வளாகத்
தூய்மைப்படுத்தல், சுற்றுப்புற பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு
நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p>

பௌர்ணமி தின சிறப்பு பூஜையின் போது கொக்குளாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி
உட்பட பொலிஸார் கலந்து கொண்டிருந்தனர்.</p><p> இதன்போது ஆலய பூசகர் ஆலய வளாகத்தினை
அண்டிய பகுதியில் மீன் ஏற்றும் கூலர்ரக வாகனங்கள் தரித்து நிற்பதனை அகற்றுமாறு
கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9e1135-ac1b-4e97-b836-0a113351d7b5/26-6a6a631d6e936.webp' /></p><p> அதன்போது ஆலய பொங்கல் நிகழ்வுக்கும், பூஜை
வழிபாடுகளுக்கும் எவ்வித இடையூறும் விளைவிக்காமால் ஆதரவு வழங்குவதாகவும்
பொலிஸார் இதன்போது தெரிவித்திருந்தனர்.
</p><p>
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகம் கடந்த காலங்களில்
அபகரிக்கப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டதாகவும்,
அதனைத் தொடர்ந்து ஆலய வழிபாடுகளுக்கு பல்வேறு தடைகள் மற்றும் நெருக்கடிகள்
ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இருப்பினும், ஆலய நிர்வாகத்தினரின்
வழிநடத்தலிலும் பக்தர்களின் ஒத்துழைப்புடனும் தற்போது ஆலயத்தில் வழமையான
வழிபாடுகளும் சமய நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது
குறிப்பிடத்தக்கதாகும்.</p>]]></content>
            <updated>2026-07-29T21:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்திற்கு சஜித் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-public-warning-to-anuradhapura-government-1785356352"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-public-warning-to-anuradhapura-government-1785356352</id>
            <summary type="text">&amp;nbsp;நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில்
அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில்
அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ&nbsp;தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
ஊடகங்களுக்கு நேற்று(29.07.2026) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களிடமிருந்து அரசுக்கு ஆணை கிடைத்தது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி
முறையை ஒழிப்பதற்காகவே தவிர,&nbsp; நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின்
கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15bb8fca-9520-4a71-be0b-983cce3bf098/26-6a6a61d5b603d.webp' /></p><p>அத்துடன் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தின் மீது
நிறைவேற்று அதிகாரம் செல்வாக்குச் செலுத்த முற்படுவது வெட்கக்கேடான செயலாகும்.
</p><p>
சட்டம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் மீதே
ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp; அதிகாரப்
பகிர்வு மற்றும் சமன்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கோ அல்லது நீதி அமைச்சருக்கோ
புரிதல் இல்லாவிட்டால், மொன்டெஸ்கிவின் நூலைப் படித்துப் பாருங்கள்.</p><p></p><h2>சர்வாதிகார செயற்பாடு</h2><p>
</p><p>
அரசின் இந்த ஒருதலைபட்சமான சர்வாதிகாரப் போக்குக்காக நாட்டு மக்கள்
கைகட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். இந்தியாவில் அண்மையில் வேலையற்ற இளம் சந்ததியினர் அவமதிக்கப்பட்ட
போது, இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.</p><p>

அதேபோன்று, நீதிமன்றத்தின் சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு
எதிராக இலங்கையின் இளைஞர்களும் சிவில் சமூகமும் ஒன்றுபட்டு மக்கள் பலத்தால்
அதனைத் தோற்கடிப்பார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67bdfeba-b119-4836-b744-cc021ed52eec/26-6a6a61d66a08d.webp' /></p><p>ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றோம் என்ற பெயரில் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை
முடக்கும் சர்வாதிகாரச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.</p><p>நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும், நீதிமன்றத்தைப் பாதுகாப்பதற்கும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள்
சக்தி எந்தவொரு தியாகத்துக்கும் முகம்கொடுக்கத் தயார்“ என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் மீது அமெரிக்கா - சவூதி நடத்திய பயங்கர கூட்டுத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/joint-us-saudi-attack-on-iraq-1785354470"></link>
            <id>https://tamilwin.com/article/joint-us-saudi-attack-on-iraq-1785354470</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு
மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு
மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>

ஃபொக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய அவர், "நாங்கள்
அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம் அவர்கள் பலத்த அடியை வாங்குவார்கள்"
என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கூட்டுத் தாக்குதல்</h2><p>
</p><p>
இதற்கிடையே, சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட
தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற
ஆயுதமேந்திய குழுக்கள் மீது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து இரவோடு
இரவாகக் கூட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93fa925a-45ae-44a6-a9d9-f1e8c6b3bb9e/26-6a6a5a93c03cd.webp' /></p><p>

இந்தத் திடீர் தாக்குதல்களாலும், இரு நாட்டு அதிகாரிகளின் தீவிரமான
எச்சரிக்கைகளாலும் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இருப்பினும், வெள்ளை மாளிகையின் தற்போதைய நிலைப்பாட்டில் பெரிய மாற்றம்
எதுவுமில்லை என்றே தெரிகிறது.</p><p> இராணுவ ரீதியிலான அழுத்தத்தையும் பொருளாதாரத் தடைகளையும் தொடர்ந்து பராமரித்து
வரும் அதே வேளையில், ஈரானுடன் இராஜதந்திர ரீதியிலான அமைதி
பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் "மிக மிக அருகில்" இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப்
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:17:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மனியில் பெரும் பதற்றம் - மக்கள் வீதியில் இறங்கி தீவிர போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thousands-of-audi-employees-in-germany-protest-1785353587"></link>
            <id>https://tamilwin.com/article/thousands-of-audi-employees-in-germany-protest-1785353587</id>
            <summary type="text">ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான &#039;அவுடி&#039; (Audi), தனது
நெக்கார்சல்ம் நகரில் உள்ள தொழிற்சாலையை மூடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான 'அவுடி' (Audi), தனது
நெக்கார்சல்ம் நகரில் உள்ள தொழிற்சாலையை மூடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து,
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>நேற்று(29.07.2026) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 6,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><h2>நெக்கார்சல்ம் ஆலை</h2><p>

அவுடி நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'வோக்ஸ்வேகன்', தொழில்துறையில் நிலவும்
கடும் சவால்களைச் சமாளிக்க பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கவும்,
செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.</p><p>தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து வோக்ஸ்வேகன் நிர்வாகம்
உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3721e257-0cef-4b3b-bf60-da0671903880/26-6a6a56e8453e5.webp' /></p><p>மாற்று வழிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், 2030-க்குப் பிறகு ஜெர்மனியில்
மூடப்பட வாய்ப்புள்ள 4 தொழிற்சாலைகளில் நெக்கார்சல்ம் ஆலை ஒன்றாகும் என
வோக்ஸ்வேகன் தலைமைச் செயல் அதிகாரி ஆலிவர் புளூம் எச்சரித்துள்ளார்.
</p><p>
நெக்கார்சல்ம் ஆலையில் தற்போது சுமார் 15,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு அவுடி A5, A6, A8 மற்றும் மின்சார காரான e-tron GT ஆகியவை
தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>பொருளாதாரப் பேரழிவு</h2><p>

இந்த ஆலையை மூடினால் அப்பகுதியில் பெரும் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும்
என்றும், பிற வர்த்தகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதியின்
மேயர் ஸ்டீபன் ஹெர்ட்விக் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c9f346-4628-4a60-9e0d-96c22733a6e4/26-6a6a56e8efdb0.webp' /></p><p>உயர் உற்பத்திச் செலவு, சீன நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் அமெரிக்காவின்
வரி விதிப்புகள் போன்ற காரணங்களால் ஜெர்மனியின் கார் உற்பத்தித்துறை கடுமையான
நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
</p><p>
அவுடி நிறுவனம் மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ, போர்ஷே மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ்
ஆகிய முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது
தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து கைதாகப் போவது யார்..! அநுரவின் அதிரடியால் திணறும் அரச அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-officers-anura-kumara-decision-1785348860"></link>
            <id>https://tamilwin.com/article/government-officers-anura-kumara-decision-1785348860</id>
            <summary type="text">தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், முந்தைய அரசாங்கங்களில் நடந்த பல்வேறு&nbsp;ஊழல் முறைக்கேடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டும் வருகின்றது.&nbsp;</p><p>இதற்கிடையில், அரசாங்க அதிகாரிகள் பலரின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>ஜனாதிபதி அநுர குமாரவுடனான கலந்துரையாடலின் போது சில முக்கிய அதிகாரிகளிடம் அவர் எழுப்பிய கேள்விகளின் மூலம் இவை அம்பலமாகியுள்ளன.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2iVdgos_NAE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:05:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு தீர்ப்பின் பின் சவூதியில் நடக்க போவது என்ன - கையை விரித்த அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-sri-lanka-government-1785344616"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-sri-lanka-government-1785344616</id>
            <summary type="text">சவூதி நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞன், தனது முகப்புத்தக பதிவால் அந்நாட்டில் அண்மையில் கடுமையான தண்டனைக்கு&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞன், தனது முகப்புத்தக பதிவால் அந்நாட்டில் அண்மையில் கடுமையான தண்டனைக்கு&nbsp; உள்ளாக்கப்பட்டார்.&nbsp;</p><p>முகம்மது நபிகள் தொடர்பில் அவர் ஒரு தவறான கருத்தை முகப்புத்தகத்தில் முன்வைத்த நிலையில், இத்தண்டனையை அந்நாடு அவருக்கு வழங்கியது.&nbsp;</p><p>இருப்பினும், குறித்த இளைஞன் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அதை உணர்ந்து நீக்கியிருந்தார்.&nbsp;</p><p>பின்னர், இது குறித்து அனைத்து இஸ்லாமியர்களும் தன்னை மன்னிக்குமாறும் அவர் கோரி ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார்.&nbsp;</p><p>ஆனால், அக்கருத்துப் பகிர்வை பகிர்ந்த பலர் அவருக்கு தண்டனை வழங்குமாறு தொடர்ந்து கோரி வந்த நிலையில்&nbsp;சவூதி அரசாங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p>இந்நிலையில், அவரை விடுதலை செய்ய உதவுமாறு தமிழ் மக்கள் பலரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FEmpzSo6sJU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T20:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரகீத் எக்னெலிகொட வழக்கில் திருப்பம் - விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சுரேஷ்குமாரின் அதிர்ச்சி சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eknaligoda-case-member-shocking-testimony-1785351370"></link>
            <id>https://tamilwin.com/article/eknaligoda-case-member-shocking-testimony-1785351370</id>
            <summary type="text">அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்பிலிருந்து பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த விவகாரம் குறித்து குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் பல முக்கிய விடயங்களை சாட்சிகளாக தெரிவித்திருக்கின்றார்.
</p><p>
அவர் தனது வாக்குமூலத்தில், ஜூலை 15ஆம் திகதி மதிய உணவு வேளையில் முகத்தை மூடிய சுமார் 15 பேர் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனை அடுத்து மறுநாள் காலை சிறை அதிகாரிகள் இல்லாமல் கைதிகளே உணவை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பின்பு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கைதிகள் தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.</p><p>இந்த நீர்கொழும்பு கலவரம் குறித்து இன்னும் சிலர் சாட்சியங்களாக மாறி தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான பல முக்கிய சாட்சியங்களின் பதிவுகளை கொண்டு வருகிறது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q56Hn1ODi7Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:59:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம் - ஐரோப்பிய தூதுக்குழுவின் சந்திப்பு தவறானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thenmarachchi-abuse-witness-alleges-eu-meeting-1785350817"></link>
            <id>https://tamilwin.com/article/thenmarachchi-abuse-witness-alleges-eu-meeting-1785350817</id>
            <summary type="text">வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் விஜயகுமார் தெரிவித்திருந்தார்.
</p><p>
ஐபிசி தொலைகாட்சியின் களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், "இப்பொழுது காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமான ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களில் அன்றைய காலங்களில் இருந்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை.</p><p>
நாங்கள் நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து பல போரட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் பல்வேறுபட்ட தரப்பினரை நேரிலும் சந்தித்து அவர்களுக்கான நியாயங்களை கேட்டிருந்தோம்.</p><p> 

ஆனால் எங்களுக்கான நியாயம் இதுவரையிலும் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியினாலேயே தற்போதைய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களில் எங்களுடைய காலத்தில் இருந்தவர்கள் பங்கேற்பதில்லை" என தான் நினைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் அவர் வழங்கிய இன்னும் பல விடயங்கள் மற்றும் அவருடைய அனுபவங்களை தொகுத்து வழங்குகிறது களம் நிகழ்ச்சி..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HjyzbYWrhvI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான மோதலுக்கு மத்தியில் சீனாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பெறும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-air-defense-missiles-china-standoff-us-1785346534"></link>
            <id>https://tamilwin.com/article/iran-air-defense-missiles-china-standoff-us-1785346534</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு
அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும்
4...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு
அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும்
400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>

சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ்,
சீனாவின் QW-12 மற்றும் FN-16 வகை ஏவுகணைகள் அடங்கிய 300 முதல் 400 மேன்பேட்ஸ் அமைப்புகள் இன்னும் சில வாரங்களில் ஈரானுக்கு முதற்கட்டமாக
விநியோகிக்கப்படவுள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>
</p><p>
ஹொங்கொங்கைச் சேர்ந்த இடைத்தரகு நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த ஒப்பந்தம்
கையெழுத்தாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830b9d8e-ffa2-4975-b9e1-711127125054/26-6a6a56e4a638c.webp' /></p><p>
குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களைத்
தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், ஈரானின் இராணுவ மற்றும்
எரிசக்தி உள்கட்டமைப்பு மையங்களைப் பாதுகாக்கப் பயன்படும் என பாதுகாப்பு
வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

இருப்பினும், இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ள சீன வெளியுறவு
அமைச்சகம், "இந்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது. </p><p>பிராந்தியத்தில் அமைதியை
ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து முயன்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், பாகிஸ்தான் வழியே இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியான
தகவல்களையும் பாகிஸ்தான் இராணுவம் முற்றிலும் பொய் என மறுத்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:51:18+00:00</updated>
        </entry>
    </feed>
