<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-25T23:21:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பலரையும் கதி கலங்க வைத்த கதறல்! யாரும் அறியாத பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-protest-tamils-missing-person-1787697648"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-protest-tamils-missing-person-1787697648</id>
            <summary type="text">காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடுமையான எதிர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடுமையான எதிர்ப்புக்களையும், தமது மனக்குமுறல்களையும் வெளிப்படுத்தி இருந்தனர்.</p><p>காணாமல் போனவர்கள் குறித்த 2007ஆம் ஆண்டு நினைவுகள் எப்போதும் மனதினை வதைத்த வண்ணம் உள்ளன. அத்தோடு, OMP அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்சியாக கூறி வருகின்றனர்.</p><p>அத்தோடு, இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கோரி வடக்கு கிழக்கிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர்.</p><p>காணாமல் போனோர் விடயமாக இருக்கலாம் அல்லது நாட்டை சீரழித்த விடயமாக இருக்கலாம் இவை அனைத்திற்குமே காரணகர்த்தாவாக ராஜபக்ச குடும்பத்தினரே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு,&nbsp; ராஜபக்ச குடும்பத்தினரே இந்த விவகாரங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.</p><p>இந்தப் பொறுப்பு இயற்கையாக கிடைக்குமா அல்லது&nbsp; கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா அல்லது கடந்த கால அரசாங்கம் போன்று தற்போதைய அரசாங்கமும் நடந்து கொள்ளுமா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலே எழுகின்றது.</p><p>காணாமல் போனவர்கள் குறித்த 2007 நினைவுகள் மற்றும் தற்போதைய சூழல் பற்றிய விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NT4jM-nb1qE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T23:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 30 வருடங்கள் வாழ்ந்த வெளிநாட்டவரை நாடு கடத்த உத்தரவு - தமிழர்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-took-mans-permanent-residency-1787673215"></link>
            <id>https://tamilwin.com/article/canada-took-mans-permanent-residency-1787673215</id>
            <summary type="text">கனடாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். 

செக் குடியரசை சேர்ந்த 58 வயதான ஸ்லெப்சிக் என்பவரே இவ்வாறு நாடு கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். </p><p>

செக் குடியரசை சேர்ந்த 58 வயதான ஸ்லெப்சிக் என்பவரே இவ்வாறு நாடு கடத்தல் உத்தரவை பெற்றுள்ளார். </p><p>

கனடாவில் புகலிடம் கோரிய நிலையில், தனது சொந்த நாட்டுக்கு அடிக்கடி சென்று வந்தமையே அவர் இந்த உத்தரவை பெற காரணமாக அமைந்துள்ளது.</p><p> </p><h2><b>

பாதுகாப்பு அச்சுறுத்தல்</b></h2><p>செக் குடியரசில் தனக்கு ஆபத்து உள்ளதாக புகலிடம் பெற்ற நிலையில், அந்த நாட்டு கடவுச்சீட்டில் நாட்டுக்கு சென்று வந்தமை கனடா எல்லை பாதுகாப்பு முகவர அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db49a5f-f0aa-49d2-b292-9c5789f17fe5/26-6a8dcd598b29c.webp' /></p><p>இதன்மூலம் அவரின் சொந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையெனுவும், கனடாவில் வாழ வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அவரது நிரந்தர குடியுரிமை அந்தஸ்து மற்றும் பாதுகாப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ளன. </p><p>

இந்தச் சட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட போதும், அதனை விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் ஸ்லெப்சிக்கை நாடு கடத்தும் நடவடிக்கையில் குடிவரவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்தத் தீர்ப்பின் மூலம் கனடாவில் புகலிடம் கோரிய நிலையில், இலங்கை உட்பட வெளிநாடுகளுக்கு சென்று வரும் தமிழர்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-25T22:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்க்கு 2 நாட்கள் கால அவகாசம் - உயர் நீதிமன்றம் விடுத்த இறுதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-nadu-chief-minister-vijay-gets-2-days-time-1787696702"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-nadu-chief-minister-vijay-gets-2-days-time-1787696702</id>
            <summary type="text">தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இது தொடர்பான வழக்கு நேற்று(25.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்குறிப்பிட்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

தேர்தல் வெற்றி</h2><p>
தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். </p><p>

இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bba779c2-df03-48e7-a673-54a1d681e25c/26-6a8e170bde777.webp' /></p><p>
</p><p>
இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று(25) நீதியரசர் தி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><h2>

தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>
அந்தத் தருணத்தில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என முதல்வர் விஜய் தரப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.</p><p>

இதனை ஏற்க மறுத்த நீதியரசர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 86ஆவது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ecc9c25-4b61-49d7-8492-9d7267acbddd/26-6a8e170b2f48c.webp' /></p><p> 

கடந்த முறை வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருந்தேன் என்றார்.


இதனைத் தொடர்ந்து இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதியரசர், எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை வரை அவகாசம் வழங்கினார். </p><p>அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T22:28:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை நீடிக்க அரசாங்கம் சதி! சம்பிக்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-conspiring-holding-elections-champika-1787691505"></link>
            <id>https://tamilwin.com/article/government-conspiring-holding-elections-champika-1787691505</id>
            <summary type="text">&amp;nbsp;தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில்
மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில்
மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்பட்டு
வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல், தங்களது ஆட்சிக்
காலத்தை நீடித்துக்கொள்வதற்காகவே அரசு 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக்
கையில் எடுத்துள்ளது.</p><p>

சில அமைச்சர்கள் தேர்தல்கள் வராது எனப் பிரகடனம் செய்த போதிலும், ஜனாதிபதியோ
அரசின் பேச்சாளரோ அதனை இதுவரை மறுக்கவில்லை.</p><h2>பொருளாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல்களின்படி, நாட்டின் அந்நியச் செலாவணி
கையிருப்பு 2026இல் 8.6 பில்லியன் டொலர்களாகவும், 2027இல் 12 பில்லியன்
டொலர்களாகவும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தவித உற்பத்தி வளர்ச்சியோ
புதிய முதலீடுகளோ இல்லாமல் வெறும் சமூக வலைத் விளம்பரங்களைக் கொண்டு நாட்டை
நடத்த முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a59ba4f-49d4-4064-a802-86f212ed089f/26-6a8e147a97762.webp' /></p><p>

கடந்த 2022 மார்ச் 7 அன்று இலங்கை வங்குரோத்தாகும் நிலை குறித்து சர்வதேச நாணய
நிதியம் இரகசியக் கடிதம் மூலம் எச்சரித்திருந்தும், அதற்குக் காரணமான எவர்
மீதும் தற்போதைய அரசு இதுவரை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.</p><p>

உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைத்து மக்களின் கவனத்தை வேறு
திசைக்குத் திருப்புவதற்காகவே அரசு இத்தகைய நாடகங்களை நடத்துகின்றது.
</p><p>
அரசின் இந்த ஏமாற்று வேலைகளுக்கு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. கூட்டு
எதிர்க்கட்சியாக நாடு முழுவதும் சென்று மக்களை விழிப்புணர்வூட்டவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T22:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதி - குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-completely-affected-by-el-nino-impact-1787692456"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-completely-affected-by-el-nino-impact-1787692456</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில்
மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு
மண்டபத்தில் நேற்று(25.08.2026) இடம்பெற்றது. </p><h2>

விசேட தீர்மானங்கள்</h2><p>

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த மே மாதம் மட்டக்களப்பு
மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக, நிகழ்நிலை
ஊடாகக் கலந்து கொண்ட அமைச்சரினால் விசேட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
</p><p>

இதன்போது விசேடமாக எல் நினோ தாக்கம் குறித்தும் அதற்காக
முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97f0b24-fc60-495c-bf89-3e28c8eeb9d1/26-6a8e06400da2b.webp' /></p><p>
</p><p>

மேலும் பிரஜா சக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு
வரும் அபிவிருத்தித் திட்டங்கள், புதிய வீடமைப்புத் திட்டங்கள், சிறு
குளங்களைப் புனரமைத்தல், மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கான திட்டங்கள், விவசாய நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
</p><h2>
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், 

மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப்
பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனத்
தெரிவித்தார்.
</p><p>
மேலும், மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல்
தரையை விடுவித்தல், முந்தானையாற்றை அபிவிருத்தி செய்தல், கிரான்
பொண்டுகள் - சேனைப் பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், மண்டூர் - குருமண்வெளி
மற்றும் பட்டிருப்பு பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம்,
அம்பிளாந்துறை - குருக்கள்மடம், திக்கிலிவெட்டை- சந்திவெளி மற்றும் நரிப்புல்
தோட்டம்- பங்குடாவெளி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய பாலங்களின்
நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4719aa24-8408-4546-8684-5913550ac714/26-6a8e0640b9a95.webp' /></p><p>
</p><p>

அத்துடன், மனித - காட்டு யானை மோதல்கள், நெல் கொள்வனவு, களப்பு வாவியைத்
தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது மீளாய்வு
மேற்கொள்ளப்பட்டது.
</p><p>

மேலும், எல் நினோ தாக்கத்தினால் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக்
குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு
இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மக்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்க
வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p>

இந்த நிகழ்வில் மாவட்ட திட்டமில் பணிப்பாளர் எஸ்.நவநீதன், பிரதேச செயலாளர்கள்,
மூப்படை உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து
கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192a2372-de19-4e51-9caa-ecd8d1335afa/26-6a8e0641704d0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a66d459-a031-4203-a3a5-24588abcddcf/26-6a8e06424e5ae.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T21:17:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027-ஐ நோக்கி தீவிரமடையும் விசாரணை - காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று(25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p> 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2> 

உறவுகளை இழந்தவர்களுக்கு கொடுக்கப்படும் நிதி</h2><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

பல ஆண்டுகளாகத் தங்களது உறவுகளைத்
தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை நாம் முழுமையாக உணர்கின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கிச் செயற்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd5398fa-6d70-4c33-8996-7d34c608ceeb/26-6a8e009b7fdda.webp' /></p><p> </p><p>

அதன் வெளிப்பாடாகவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு
வருகின்றன. </p><p>


ஒரு குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கலாம். எனவே, உண்மையைத் தேடும் விசாரணைக்கு இணையாக, அந்த குடும்பங்களின் பொருளாதார
மற்றும் சமூக வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.


இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.</p><p> அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன.</p><p> 

இவ்வாறான இடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக
ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச்
செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும். 

உண்மை, நீதி, நிவாரணம்,
கண்ணியம், மீள்நிகழாமை ஆகியன ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என்றார்.</p><h2> 


57 மில்லியன் செலவில் மனித புதைகுழி ஆய்வு</h2><p>

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய நீதி
அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, 


எமது அரசாங்கத்திலே முக்கியமான ஒரு கொள்கை இருக்கின்றது, சட்டம் அனைவருக்குமே
சமன். சட்டத்துக்கு மேலாக ஒருவரும் இல்லை. காணாமலாக்கப்பட்ட பிரச்சனைகள் போன்ற
சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் சட்டம் சரியான முறையிலே
நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c3964a2-c24e-4a63-9d18-a423ed76dd80/26-6a8e009c72e1d.webp' /></p><p> </p><p>

அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதே எமது
எதிர்பார்ப்பு, நாட்டு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியதும் இந்த
எதிர்பார்ப்பிலாகும். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளைப்
பலப்படுத்தும் நோக்கில் அலுவலகத்தின் ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி
செய்யப்பட்டுப் புதிதாக 69 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக
2025ஆம் ஆண்டில் சுமார் 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், செம்மணி சமூகப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞான
ரீதியாக முன்னெடுப்பதற்காக 57 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை
உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.</p><p> 

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய
தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
</p><h2>
2027 முழுமையாக நிறைவடையும் விசாரணைகள்</h2><p>

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்துத்
தெரிவிக்கையில், 

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற சுமார் 19,000
முறைப்பாடுகளில் 9,000க்கும் மேற்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவான 2,300 பேரில் 1,940 பேருக்கான
விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657ae54b-9430-421c-95e9-b83fe70d4a4f/26-6a8e009d599e3.webp' /></p><p>

இடைநிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
எஞ்சியுள்ள அனைத்து விசாரணைகளையும் 2027ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு
செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன்,
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள், வடக்கு மாகாணப் பிரதிப்
பிரதம செயலாளர் - நிர்வாகம், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின்
தலைவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும்
பங்கேற்றிருந்தனர்.
</p><p>
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ
முகாம் ஒன்றும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:53:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஸ்கோவில் அமெரிக்க இராணுவப் போக்குவரத்து விமானம் தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-military-transport-aircraft-lands-in-moscow-1787687540"></link>
            <id>https://tamilwin.com/article/us-military-transport-aircraft-lands-in-moscow-1787687540</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போக்குவரத்து விமானமொன்று மொஸ்கோவின்
நுக்கோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக ஃப்ளைட்ரேடார் 24 விமானக்
கண்காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போக்குவரத்து விமானமொன்று மொஸ்கோவின்
நுக்கோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக ஃப்ளைட்ரேடார் 24 விமானக்
கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
07-7181 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த போயிங் குளோப்மாஸ்டர் ரக இராணுவ
விமானம், லத்வியாவின் ரிகா நகரிலிருந்து நேரடியாகப் புறப்பட்டு மொஸ்கோவில்
தரையிறங்கியுள்ளது.
</p><p>
எனினும், இவ்விமானத்தில் பயணிகள் அல்லது பொருட்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதா
என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p><h2>அமைதிப் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
அத்துடன், இப் பயணம் தொடர்பில் தமக்கு இதுவரை எவ்விதத் தகவலும்
கிடைக்கப்பெறவில்லை என ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
</p><p>முன்னதாக, வொஷிங்டனில் உள்ள கெம்ப் ஸ்ப்ரிங்ஸ் விமானத் தளத்திலிருந்து
புறப்பட்ட இவ்விமானம் ரிகாவை வந்தடைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb24c20b-3ac3-4e9b-ac41-132ce4ec08cd/26-6a8dfff0c452f.webp' /></p><p>
</p><p>
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக விசேட பிரதிநிதிகள் வருகை தந்ததனைத்
தொடர்ந்து, ஐரோப்பாவிலிருந்து ரஷ்யாவிற்கு நேரடியாக அமெரிக்க விமானமொன்று
பயணித்துள்ளமை இதுவே முதன்முறையாகும்.
</p><p>
ஈரானில் இடம்பெற்று வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும்
ரஷ்யாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இப் திடீர்
பயணம் பிராந்திய அரசியல் களத்தில் அவதானத்தைப் பெற்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:49:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் உகண்டா பணத்தை தேடும் பிக்கு - கொழும்பு பேருந்து நிலையத்தில் சிக்கிய 1029 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1029-people-trapped-at-colombo-bus-station-1787689626"></link>
            <id>https://tamilwin.com/article/1029-people-trapped-at-colombo-bus-station-1787689626</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகள் மிகத் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் மக்களுக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகள் மிகத் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் மக்களுக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோன்று, கொழும்பு - புறக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதுடன், அவர்களது குற்றச் செயல்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
“க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலாலி காணி விவகாரம் தொடர்பில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்க முடியாத நிலையும், இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய பதிலடி கொடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், இதுவரை நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுக்காத சில அரசியல் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அநுர அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பி வருவதை அவதானிக்க முடிகிறது.
</p><p>இதுபோன்று, நாட்டில் நாளாந்தம் இடம்பெறும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது “நாட்டு நடப்பு” நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ul2MFwzqDoY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T20:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வெடித்த சிறைச்சாலை மோதல் - யாழில் கள ஆய்வு செய்த நீதியமைச்சரின் முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-conducts-inspection-in-jaffna-1787686243"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-conducts-inspection-in-jaffna-1787686243</id>
            <summary type="text">யாழ்ப்பாண சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.</p><p> 

இந்த விஜயம் இன்று(25.08.2026) மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆய்வு நடவடிக்கையையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கலந்துரையாடல்</h2><p>

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, கடந்த காலங்களில்
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட
அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள்,
துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு
ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7180e4d0-75f4-42af-9726-d4a236d18975/26-6a8dedec4299f.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும்
ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
</p><p>
தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள
நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர், கைதிகளுடனும் கலந்துரையாடினார். </p><h2>

கைதிகளின் பிரச்சினைகள்</h2><p>
இதன்போது சிறைச்சாலையின் வளங்கள், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b90b9ab-a576-4ad7-879f-b7f33e1becd0/26-6a8deded47e89.webp' /></p><p>
</p><p>
இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன்
இளங்குமரன் மற்றும் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலை ஆணையாளர், யாழ்ப்பாண
பிரதேச செயலாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ மற்றும் பொலிஸ்
அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
</p><p>
அண்மையில் நாட்டின் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத்
தொடர்ந்து, சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப்
பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/421b7ac2-d6cb-441e-9668-9c760a924057/26-6a8dedee1e495.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e3700a-7f53-4bd9-b574-f35261b48545/26-6a8dedeee5eef.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c4631c-5a28-4081-abd1-b0c53f770a9c/26-6a8dee4395d31.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T19:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடுப்புக்காவலில் சுரேஷ் சலேவுக்கு அநீதி..! சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அடம்பிடிக்கும் மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/injustice-to-suresh-salley-in-detention-1787685432"></link>
            <id>https://tamilwin.com/article/injustice-to-suresh-salley-in-detention-1787685432</id>
            <summary type="text">தேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைமையகத்தில் இன்று(25.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கவலை தெரிவித்துள்ளார்.
</p><h2>
சுரேஷ் சலே மனைவி அனுப்பிய கடிதம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய 180 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

தற்போதைய அமைச்சரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ள நிலையில், இந்த மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடையும் இந்த 180 நாள் தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீடிப்பது பொருத்தமற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1318fa56-f038-4302-a4c5-56c0f3832e71/26-6a8deafc9d9a7.webp' /></p><p>
</p><p>
சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தடுப்புக் காவல் உத்தரவின்றி அவரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவ்வாறு செய்தால் விசாரணைகளுக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>

இந்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை</h2><p>
180 நாட்கள் கடந்தும் இதுவரை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமலும், நீதிமன்ற நடவடிக்கை தொடங்கப்படாமலும் இருந்தால், அவரை விளக்கமறியலில் வைத்து சட்ட நடவடிக்கைகளைத் தொடருமாறு நாமும் வலியுறுத்துகிறோம்.
</p><p>
சஹ்ரான் மற்றும் நௌஃபர் மௌலவி இணைந்து இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளமை குறித்து 2015 முதலே குற்றப்புலனாய்வுத் துறை (CID) அறிந்திருந்தது.

தாக்குதலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வனாத்தவில்லுவில் 100 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fb7b36e-fc64-4b88-bbcf-16395ca940de/26-6a8deafd74cf6.webp' /></p><p> </p><p>மாவனல்லையில் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு இந்திய உளவுத்துறையும் எச்சரித்தது.
</p><p>
இவை அனைத்தையும் அறிந்திருந்தும் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், 2016 முதல் 2019 டிசம்பர் வரை மலேசியா மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த சுரேஷ் சலேவை எந்த அடிப்படையில் கைது செய்துள்ளனர் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
</p><h2>
அசாத் மௌலானா வழங்கிய பேட்டி</h2><p>
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட 7 உள்நாட்டுக்குழுக்களின் அறிக்கைகளிலோ அல்லது தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களிலோ சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. </p><p>

மேலும், 2 ஆண்டுகள் ஆய்வு செய்த எஃப்பிஐ (FBI) மற்றும் ஆஸ்திரேலிய பொலிஸ் போன்ற சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் இது 'ஐஎஸ்ஐஎஸ்' (ISIS) தாக்குதல் என்றே முடிவுக்கு வந்தன, அவற்றிலும் சலேவின் பெயர் இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5bc92b-605b-4572-aad4-ececcca6ed14/26-6a8deafe631b6.webp' /></p><p>
</p><p>
சேனல் 4 (Channel 4) ஊடகத்திற்கு எல்.டி.டி.ஈ முன்னாள் உறுப்பினரான அசாத் மௌலானா அளித்த பொய் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இமாம் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>


சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்படும் அநீதி</h2><p>
சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் (Writ) மனுவுக்கு எதிராக பேராயர் கார்டினல் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7e2ec75-cb2e-4c5f-a813-a598ccd155a4/26-6a8deaff17d8b.webp' /></p><p> </p><p>

தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே அரச புலனாய்வுத் தலைவராக இருந்தார் என்ற தவறான தகவலின் அடிப்படையிலேயே பேராயர் அதனைச் செய்துள்ளார்.
</p><p>
நாட்டின் பயங்கரவாத வலையமைப்பை அழிக்க பாடுபட்ட ஒரு படைவீரருக்கு இழைக்கப்படும் இந்த அநீதி கவலையளிக்கிறது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_9MgXOwQM-Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T19:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் திடீரென வீசிய சூறாவளி - 1400 வீடுகளுக்கு மின்சாரம் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hurricane-in-france-1787684360"></link>
            <id>https://tamilwin.com/article/hurricane-in-france-1787684360</id>
            <summary type="text">பிரான்ஸின் தென்மேற்குப் பிராந்தியத்திலுள்ள ஓட் மாவட்டத்தில் வீசிய அரிய
வகைச் சூறாவளி காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 39 பேர்
காயமடைந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் தென்மேற்குப் பிராந்தியத்திலுள்ள ஓட் மாவட்டத்தில் வீசிய அரிய
வகைச் சூறாவளி காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 39 பேர்
காயமடைந்துள்ளதாகப் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஓட் மாவட்டத்தில் அமைந்துள்ள பொமாஸ் என்ற கிராமத்தைத் தாக்கிய இந்த 
சூறாவளியினால் இருவர் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அந்த கிராமத்திலுள்ள சுமார் 300 வீடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும்
சேதமடைந்துள்ளதுடன், மக்களின் பாதுகாப்பு கருதி கிராமத்தில் உள்ள அனைவரும்
தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><h2>
 வானிலை அவதான நிலையம் வெளியிட்ட தகவல்</h2><p>
அந்த பகுதியில் வீசிய கடுமையான வெப்ப அலை நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட
இடி மின்னலுடன் கூடிய காலநிலை மாற்றமே இந்த சூறாவளிக்குக் காரணம் என வானிலை
அவதான நிலையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc2ffcc-9c2d-4e8b-b9a5-e191c76f89a7/26-6a8de6571c16a.webp' /></p><p>

இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள 1,400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சார
விநியோகம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்ஸில் சுழல் சூறாவளித் தாக்குதல்கள் ஏற்படுவது மிகவும் அரிதான ஒரு
நிகழ்வு என்பதுடன், இது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும்
பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T19:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் தீவிரமடையும் வெள்ளப்பெருக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/floods-intensify-in-southern-china-1787682072"></link>
            <id>https://tamilwin.com/article/floods-intensify-in-southern-china-1787682072</id>
            <summary type="text">நாரா சூறாவளி காரணமாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து தெற்கு சீனாவில்
வெள்ளப்பெருக்கு மிக தீவிரமடைந்துள்ளது.அத்துடன், குடியிருப்புகள் மற்றும் வணிக
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாரா சூறாவளி காரணமாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து தெற்கு சீனாவில்
வெள்ளப்பெருக்கு மிக தீவிரமடைந்துள்ளது.</p><p>அத்துடன், குடியிருப்புகள் மற்றும் வணிக
நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான
இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
சீனாவின் குவாங்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள சொங்சுவோ நகரில் 2008 ஆம் ஆண்டு
பதிவான அதிகபட்ச வெள்ள நீர்மட்டத்தை விடவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத்
தொடர்ந்து, அங்குள்ள 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக
வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>கனமழை</h2><p>

அத்துடன், குவாங்சி பிராந்தியம் முழுவதிலும் இதுவரை 54,000 க்கும் அதிகமான
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சீன அரசுத்
தொலைக்காட்சி அறிவித்துள்ளது.</p><p>

தென் சீனக் கடலின் பெங்பு வளைகுடாப் பகுதியில் சில நாட்களாக நிலை கொண்டிருந்த
நாரா சூறாவளி, ஹாய்னான் தீவுப் பகுதியில் கரையை கடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda15043-8dc1-4a1c-b8a7-00026749f1a2/26-6a8de5243408f.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாகக் குவாங்சி, ஹாய்னான் மற்றும் குவாங்டாங் ஆகிய மாகாணங்களில்
இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது.</p><p>இதேவேளை, சௌடெல் என்ற பிறிதொரு சூறாவளி ஜப்பானின் தென் பகுதியையும் தாய்வானின்
வட பகுதியையும் நோக்கி நகர்ந்து வருவதாகப் வானிலை அவதான நிலையங்கள்
எச்சரித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T18:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி தரவுகளால் சிக்கப்போகும் முக்கிய தலைகள்..! கெஹெல்பத்தர பத்மே விவகாரத்தில் அநுர அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-takes-action-in-the-kehelbaddara-padme-case-1787682160"></link>
            <id>https://tamilwin.com/article/anura-takes-action-in-the-kehelbaddara-padme-case-1787682160</id>
            <summary type="text">கெஹெல்பத்தர பத்மே கைது செய்யப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட அவரது தொலைபேசியில் இருந்து ஏராளமான தரவுகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில், சிஐடியினர் அவற்றைப் பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெஹெல்பத்தர பத்மே கைது செய்யப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட அவரது தொலைபேசியில் இருந்து ஏராளமான தரவுகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில், சிஐடியினர் அவற்றைப் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும், அதில் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்புடைய தரவுகள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவியதாகக் கூறப்படும் சுரேஷ் சலே மீண்டும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் சில முக்கிய தலைவர்கள் கோயில்கள் மற்றும் பௌத்த நிகழ்வுகளில் அதிகளவில் கலந்துகொள்வதை அவதானிக்க முடிகிறது.</p><p>

இதேவேளை, பல்வேறு விடயங்களை அநுர அரசாங்கம் அம்பலப்படுத்தி வருவதுடன், ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வரும் நிலையில், ஹேமரத்ன தேரரின் அறையில் இருந்து பெண்ணொருவரின் தலைமுடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள் தொடர்பிலும், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலும் அநுர அரசாங்கம் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p>

இவ்வாறான பல பரபரப்பான விடயங்களை தொடர்ந்து காணொளியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_9MgXOwQM-Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T18:24:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் வீட்டு முற்றத்தில் சக்தி வாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-mortar-shell-recovered-batti-1787679017"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-mortar-shell-recovered-batti-1787679017</id>
            <summary type="text">மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.தாழங்குடா வேடர் குட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில் வீடொன்றின் முறாற்தில்
இன்று மதியம்(25) வீட்டு உரிமையாளர் பயிர்ச் செய்கைக்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது
சக்தி வாய்ந்த 81ரக மோட்டார் கொண்டு மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோட்டார் குண்டு மீட்பு!</h2><p>
</p><p>
வீட்டு உரிமையாளர் காத்தான்குடி பொலிசாருக்கு குறித்த குண்டு தொடர்பாக
அறிவித்ததையடுத்து ஸ்தலத்துககு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0f22a8d-8179-42a3-ac17-ad24e75fbe50/26-6a8dd95e7f31c.webp' /></p><p>விடுதலைப் புலிகளின் காலத்தில் இக்குண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என
தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிசார் மேலதிக விகுண்டு மீட்புசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T18:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சொல்லை வழங்க மறுக்கும் சுரேஷ் சலே! நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-not-cooperating-1787678394"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-not-cooperating-1787678394</id>
            <summary type="text">தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>சட்ட மா அதிபர் திணைக்களம் இது தொடர்பில் இன்றைய தினம்(25.08.2026) நீதிமன்றில், குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>
தம்மை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதனை எதிர்த்து சலே தாக்கல் செய்த ரீட் மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>சுரேஷ் சலேவின் இலத்திரனியல் சாதனங்களின் கடவுச் சொற்களை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சுரேஷ் சலேவுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும்..</h2><p>பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c7dcfa0-1750-44c9-a252-d2c85950c3a8/26-6a8dcebbb819f.webp' />&nbsp; &nbsp;</p><p>
குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, சந்தேக நபரான சலே தொடர்பில் குரோத உணர்வுடன் செயற்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த வழக்கு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்ற தவிர அனைத்து மனுக்களும் சலேவிற்கு சலுகை வழங்க வேண்டும் என்றே கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>வழக்குத் தொடர்புபடாத இந்த இடையீட்டு மனுதாரர்களின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>இதேவேளை, சுரேஷ் சலேவின் மனுவை பரிசீலனை செய்வது தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_9MgXOwQM-Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-25T17:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு எதிராக பதில் வரிகளை அறிமுகப்படுத்திய கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-introduced-retaliatory-tariffs-against-us-1787677631"></link>
            <id>https://tamilwin.com/article/canada-introduced-retaliatory-tariffs-against-us-1787677631</id>
            <summary type="text">அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா அறிவித்துள்ளது. 

இது அமெரிக்காவினால் விதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா அறிவித்துள்ளது. </p><p>

இது அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட புதிய தீர்வை வரிகளுக்கு நிகரான டொலர் மதிப்பைக் கொண்டுள்ளது.</p><p>அத்துடன், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரில் பாதிக்கப்பட்டுள்ள கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும் கனடா வெளியிட்டுள்ளது.</p><h2>பதில் வரி</h2><p> 

அமெரிக்கப் பொருட்களுக்கான இந்த பதில் வரிகள் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% வரிகள் விதிக்கப்படும் என்றும் அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ce0f40-8fd4-4dd5-91dc-0f3390e6bdb0/26-6a8dd007370aa.webp' /></p><p> </p><p>

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான நிதி ஆதரவைப் பொறுத்தவரை, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான ஆதரவு, நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்கு நிதியளிக்கும் வழிமுறை மற்றும் புதிய வரிகளால் ஆபத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கான ஆதரவு உள்ளிட்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை கனடா அறிவித்துள்ளது. </p><p>

வரிகளைத் தவிர்ப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய 50% வரிகள் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன.</p><p> 

இந்த பரஸ்பர பழிவாங்கும் வரிகள் கனடா-அமெரிக்க உறவில் ஒரு புதிய பின்னடைவைக் எடுத்துக்காட்டுகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T17:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நடைமுறைக்கு வரும் மின் ஸ்மார்ட் மீட்டர் - அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pilot-project-to-install-300-000-smart-meters-1787677018"></link>
            <id>https://tamilwin.com/article/pilot-project-to-install-300-000-smart-meters-1787677018</id>
            <summary type="text">நாடு முழுவதும் 300,000 ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதற்கமைய, இந்த திட்டத்தை 02...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் 300,000 ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p> 

இதற்கமைய, இந்த திட்டத்தை 02 ஆண்டுகளில் மின்சார விநியோக லங்கா பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்படுத்துவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. </p><p> 

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான துணைத் திட்டங்களுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நுண் கடன் வசதி மூலம் 15 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு, கடந்த ஆண்டு 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கோரியுள்ளது. </p><h2>

அமைச்சரவை ஒப்புதல்&nbsp;</h2><p>
இதனைத் தொடர்ந்து, மகா ஓயா நீரேற்று மின் உற்பத்தி நிலையத்தின் அபிவிருத்திக்காக, கடனிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தவும் கடந்த ஆண்டு 03 ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e535de9d-c549-4305-9362-5ced92b8bb21/26-6a8dcf1058050.webp' /></p><p> </p><p>

நாட்டின் ஸ்மார்ட் மின்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையான, பயன்பாட்டு நேரக் கட்டண முறையுடன் கூடிய ஸ்மார்ட் மீட்டரிங் அமைப்புகளை நிறுவ, மீதமுள்ள 12.5 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தவும் அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-25T17:21:27+00:00</updated>
        </entry>
    </feed>
