<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T05:19:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எமது மக்கள் அறிவால் பலம் பெற வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-political-1788842845"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-political-1788842845</id>
            <summary type="text">நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எமது
மக்கள் அறிவால் பலம் பெற்றவர்களாக மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எமது
மக்கள் அறிவால் பலம் பெற்றவர்களாக மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

எதுல்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில்
ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தினருக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டில் ஏமாற்று அரசியலே தொடர்ந்தும் காணப்படுகின்றது. துறைமுகத்தில்
இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எண்ணெய் வழங்குவோம் என்று தேர்தல் காலத்தில்
பிரதாபித்தாலும், இன்று அந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70cdb139-1e93-47d6-b034-23b58a9f9e77/26-6a9f99aa9810c.webp' /></p><h2>மின் உற்பத்தி நிலைய மாபியா</h2><p>

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை குறையும் நிலையிலும், தொடர்ந்தும்
எரிபொருள்கள் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன. மின்சாரக் கட்டணத்தை 33
வீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு அதனை அதிகரித்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிவிட்டு, இன்று
அரசும் எரிபொருளில் தங்கியிருக்கும் மின் உற்பத்தி நிலைய மாபியாக்களுக்கு
அடிமையாகியுள்ளது.
</p><p>
அன்று விவசாயிகளுடன் இணைந்து நெற்கதிர்களை வாயில் கடித்துக்கொண்டு, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலை பெற்றுத் தருவதாகக் கூறினார்கள். எனினும்,
ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது என விடயத்துக்குப்
பொறுப்பான அமைச்சரே தெரிவித்த நிலையில், 120 ரூபாவை நிலையான விலையாக
அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை
ஏற்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be6bbb9-0471-42cc-95dd-7b4fb2a05b93/26-6a9f99ab792e9.webp' /></p><p> </p><p>பிரஜைகள் சமகாலத்தில் உரிய விழிப்புணர்வைப் பெறாமல்
இருப்பதே இவற்றுக்கெல்லாம் காரணமாகும். நாம் அறிவால் பலம்பெற்ற சமூகமாக மாற
வேண்டும்.

கல்வித் துறையில் பிரதானமாக 6 பிரிவினர்கள் காணப்படுவதுடன், அவற்றுள் பாரிய
குறைபாடுகளும் முரண்பாடுகளும் நிலவுகின்றன. நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம்
ஆசிரியர்களும், 15 ஆயிரம் அதிபர்களும், சுமார் 10 ஆயிரத்து 145 பாடசாலைகளும்
உள்ளன. சில பாடசாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.</p><h2>கவர்ச்சிகரமான வார்த்தை</h2><p> </p><p>ஐக்கிய மக்கள்
சக்தி எவருக்கும் பொய் வாக்குறுதிகளையோ கானல் நீர் கனவுகளையோ வழங்காது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு கொடுப்பனவை நாம்
பெற்றுக்கொடுப்போம். கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி ஆசிரியர்களை
நடுவீதியில் விடமாட்டோம்.

இலவசக் கல்வியிலும் பேதங்கள் காணப்படுகின்றன. தேசிய மற்றும் மாகாண
பாடசாலைகளுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளில் தெளிவான இடைவெளிகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689d7436-e0bf-4b50-8549-c8ba93f4a1b8/26-6a9f99ac4c832.webp' /></p><p>
</p><p>அரசாங்கங்கள் மாறும்போது பல திட்டங்கள் வந்தாலும், கல்வியைப் பாதுகாக்கும்
ஆசிரியர்களும் மாணவர்களுமே இறுதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பக்
கல்வியிலிருந்தே கல்வி நவீனமயமாக்கப்பட வேண்டும். மனப்பாட முறையில் இருந்து
விடுபட்டு சவால்களுக்கு முகம் கொடுத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்
கல்வி முறைக்கு நாம் செல்ல வேண்டும்.

இன்று பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான போதிய உபகரணங்கள் இல்லை. </p><p>அவற்றை
வாங்குவதற்காகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படுகின்றது. மாணவர்களில் 40
வீதமானோருக்குக் கூட ஸ்மார்ட் கருவிக்கான அணுகல் வசதி இல்லை. ஆங்கில மொழியிலான
கல்வியை ஊக்குவிப்பதுடன், பிற்போக்கான காலாவதியான கருத்துக்களிலிருந்து நாம்
வெளியேற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9275a6d-a5c2-4068-bdae-e0244f2cc40b/26-6a9f99ad24d45.webp' /></p><p> </p><p>பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் கல்வியை
மேம்படுத்தி, அத்தகைய வசதிகள் இல்லாத பிள்ளைகளுக்கான வசதிகளைத் தொடர்ந்து
பெற்றுக்கொடுப்போம். இலவசக் கல்வியை வலுப்படுத்தி, எமது பிள்ளைகள் உலகை
வெல்லக்கூடிய முறையான கல்வியை உருவாக்குவோம் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் அநுர அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்! மொட்டுக்கட்சி எம்.பி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pothujana-peramuna-party-mp-chanaka-warning-1788842470"></link>
            <id>https://tamilwin.com/article/pothujana-peramuna-party-mp-chanaka-warning-1788842470</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது தற்போதைய
அநுரகுமார திஸாநாயக்க அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமையும்
என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது தற்போதைய
அநுரகுமார திஸாநாயக்க அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமையும்
என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக
தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நேற்று திங்கட்கிழமை
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனம்</h2><p>
</p><p>
"இந்த அரசு தனது இயலாமையை மறைப்பதற்காகவே நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை
இல்லாமலாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42169bb-5870-4e96-ab9e-ef9f05f38938/26-6a9f95e7ae001.webp' /></p><p> </p><p>ஆரம்பத்தில் பொலிஸ்
திணைக்களத்தின் சுயாதீனத்தை இல்லாமலாக்கியவர்கள், தற்போது நீதித்துறைக்கு
அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.</p><p> ஏகாதிபத்திய நடவடிக்கை
ஒன்றுக்கே இவர்கள் தயாராகி வருகின்றார்கள் என்பதை மக்கள் தற்போது புரிந்து
கொண்டுள்ளனர்.</p><h2>அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்&nbsp;</h2><p>

நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைப்பது அரசுக்குப் பாரிய தாக்கத்தை
ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியவர்கள், சுயாதீன நிறுவனங்களை
அடக்கும் செயற்பாடுகளிலேயே குறியாக உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1e39b34-7b44-4eb9-816a-516be390327f/26-6a9f95e87ca5f.webp' /></p><p>
</p><p>
அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
விவசாயிகள் தங்களின் உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரிவரும் நிலையில்,
எதனையும் பொருட்படுத்தாமல் இந்த 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள
முயற்சிக்கின்றார்கள். </p><p>இதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்
போவதில்லை. அரசின் இத்தகைய திட்டங்களை நீதிமன்றத்திலும் வீதிகளிலும்
தோற்கடிக்க மக்களுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியுடன் சஜித் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-sajith-meets-sri-lankan-representative-1788843046"></link>
            <id>https://tamilwin.com/article/un-sajith-meets-sri-lankan-representative-1788843046</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும்
பொருட்டு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி புன்ட்சோ
வங...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும்
பொருட்டு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி புன்ட்சோ
வங்ஜெல்லுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட
சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், பெண்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல
முக்கிய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.</p><h2>பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த</h2><p>

குறிப்பாக, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம், பாலின
அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை ஒழித்தல், தொழிலாளர் படையில்
பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் பாலின சமத்துவத்துக்குப்
பதிலளிக்கும் வகையிலான கொள்கை வகுப்பை உறுதி செய்தல் தொடர்பாகவும்
கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/959b9132-fa64-4bf7-9b93-dfd056f1dc67/26-6a9f966a9dccc.webp' /></p><p>இலங்கையின் அரசமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குள் பெண்கள், சிறுமிகள் மற்றும்
சிறுவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதையும் பாதுகாப்பதையும் மேலும் வலுப்படுத்த
வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இங்கு
வலியுறுத்தினார்.</p><p> அத்துடன், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய
விழிப்புணர்வை நாடாளுமன்றத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் நாடு முழுவதும்
உள்ள சமூகங்களிடையே கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர்
சுட்டிக்காட்டினார்.
</p><p>
பெண்களின் சுகாதாரம், அதிகாரமளித்தல், பாலின சமத்துவம் மற்றும் வன்முறைகள்
குறித்த விழிப்புணர்வைச் சிவில் சமூகத்திற்கு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய
நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிபுணர்களுடன் இணைந்து தொடர்ச்சியான அறிவுசார்
தகவல் பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற யோசனையை எதிர்க்கட்சித்
தலைவர் இதன்போது முன்வைத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹங்வெல்ல மயானத்திலிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/guns-and-bullets-recovered-from-hangwella-cemetery-1788840620"></link>
            <id>https://tamilwin.com/article/guns-and-bullets-recovered-from-hangwella-cemetery-1788840620</id>
            <summary type="text">கொழும்புக்கு அருகே ஹங்வெல்ல மயானத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

துபாயில் இருந்து நாடு கடத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புக்கு அருகே ஹங்வெல்ல மயானத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு தற்போதைக்கு தடுப்புக்காவலில் உள்ள 'பஸ் லலித்' என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>

அதனடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி56 துப்பாக்கிகள் மூன்றும் மற்றும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0050629-0d16-4244-b902-e9a3e1d59ad5/26-6a9f959408873.webp' /></p><p>
</p><p>
ஹங்வெல்லை பிரதேசத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு படுகொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு இந்தத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:57:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamal-rajapaksa-arrives-at-bribery-commission-1788841943"></link>
            <id>https://tamilwin.com/article/chamal-rajapaksa-arrives-at-bribery-commission-1788841943</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, சற்று நேரத்திற்கு முன்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, சற்று நேரத்திற்கு முன்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.</p><p><br></p><p><br></p><hr><p>You May Like This Video..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4cFwOIR-RHQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் சிறைச்சாலை வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-visit-parliament-from-prison-1788841306"></link>
            <id>https://tamilwin.com/article/namal-visit-parliament-from-prison-1788841306</id>
            <summary type="text">இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். </p><p>

இன்று (08) நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகவே 


சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hzIOuv44RZg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>பதிலளிக்க மறுப்பு</h2><p>இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாமல் பதிலளிக்க மறுத்துள்ளார்.</p><p> </p><p> 

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec47bad9-6875-4f6f-8c6f-e6adbe58cff2/26-6a9f8f50ae312.webp' /></p><p>அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த செல்வதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:28:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கடத்தி கொலை: சதித்திட்டம் தீட்டிய மனைவி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wife-arrested-kidnapping-and-murdering-soldier-1788837467"></link>
            <id>https://tamilwin.com/article/wife-arrested-kidnapping-and-murdering-soldier-1788837467</id>
            <summary type="text">கம்பஹா - கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவியை குற்றப் புலனாய்வுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.</p><p> 

நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த கொலை கடந்த 2018.09.09 அன்று இடம்பெற்றுள்ளது.
</p><h2>மனைவி கைது </h2><p>
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88e96284-0561-41b2-b10d-8b4239dbaff9/26-6a9f8dcaa5add.webp' /></p><p> 

இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபரான கொல்லப்பட்ட நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என்பதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் OICயை தேடும் EROS செயலாளர்நாயகம் : அநுர அரசில் யாரும் தப்ப முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eros-prabha-police-oic-no-one-can-escape-in-anura-1788840587"></link>
            <id>https://tamilwin.com/article/eros-prabha-police-oic-no-one-can-escape-in-anura-1788840587</id>
            <summary type="text">அநுர அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறி இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் மூன்று வருடங்களில் நியாயமான வேலைத்திட்டங்கள் நடந்து முடியும் என ஈரோஸ் கட்சியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறி இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் மூன்று வருடங்களில் நியாயமான வேலைத்திட்டங்கள் நடந்து முடியும் என ஈரோஸ் கட்சியின் செயலாளர்நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால் பல கொடூரங்கள் தனக்கு இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது சகோதரங்களை இவர்கள் என்ன செய்தார்கள் என தெரியாமல் இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பொத்துவில் பொலிஸ் OICயிடம் 1990 காலப்பகுதியில் இருந்த பொலிஸ் OIC யார் என கேட்டதாகவும் அது குறித்து பல தகவல்களை அறிந்து கொண்டதாகவும் கூடிய விரைவில் அது தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rEOD30qdNyg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மற்றும் ரணில் மீதான ஊழல் விசாரணைகள் குறித்து UNHRC அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136"></link>
            <id>https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136</id>
            <summary type="text">இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது வழக்கமான அமர்வில் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 ஊழல் விசாரணை ஆணைக்குழு</b></h2><p>இதேவேளை, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfd58f6-158c-4e64-823d-ac4ede5572a9/26-6a9f8af8dc64c.webp' /></p><p>மிகவும் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான பொதுப்பண முறைக்கேடு விசாரணைகள் குறித்தும் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
அத்துடன் நாட்டில் நிலவும் நிதி அழுத்தம் மற்றும் அரச வருமான பகிர்வு தொடர்பில் பிரதான விடயங்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன:</p><p>

2026 ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கமைய நாட்டின் அரச வருமானத்தில் 49.38 சதவீதம் பெறப்பட்ட கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டியுள்ளதெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h3><b>மேலதிக அழுத்தம்</b></h3><p>அரச வருமானத்தில் பெரும்பகுதி கடன் சேவைக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம், கல்வி, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1.9 முதல் 2.4 சதவீதம் என்ற சிறிய தொகையே ஒதுக்க முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0a2a5b-4255-4bb7-b1ca-8e82989806c3/26-6a9f8c13865f4.webp' /></p><p>வரையறுக்கப்பட்ட அரச நிதி வெளிப்பாட்டின் மத்தியில் சக்திவள, உணவு மற்றும் உர விலையேற்றம் காரணமாக மக்கள் மீது மேலதிக அழுத்தம் ஏற்படக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து இலங்கைக்குள் சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், நிறுவனங்களை வலுப்படுத்துதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் ஊடாக ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தச் சீர்திருத்தங்களை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T04:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 100 புதிய ஊழியர்களுக்கு நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/employees-appointed-at-foreign-employment-bureau-1788839818"></link>
            <id>https://tamilwin.com/article/employees-appointed-at-foreign-employment-bureau-1788839818</id>
            <summary type="text">இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பவும், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கான சேவைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பவும், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கான சேவைகளை வலுப்படுத்தவும் 100 புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நேற்றைய தினம் (07.09.2026) நடைபெற்றது.</p><h2>வழங்கப்பட்டுள்ள நியமனம்</h2><p> </p><p>மேலாண்மை உதவியாளர்கள், தகவல் தொழிநுட்ப அதிகாரிகள், ஓட்டுநர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் போன்ற பதவிகளுக்கு நியமனம் அளிக்கப்பட்டது.</p><p> தேவையான கல்வி மற்றும் தொழில்முறைத் தகுதிகளின் அடிப்படையில் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39227af6-8024-4a31-8794-a527ecd85293/26-6a9f8c2cb5e87.webp' /></p><h2>பணியமர்த்தல்</h2><p> புதிய ஊழியர்கள் அவர்களின் தேவைக்கேற்ப பணியகத்தின் தலைமை அலுவலகம், மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள். </p><p>இதேவேளை புலம்பெயர் தொழிலாளர்கள், வருங்கால வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மிகவும் திறமையான, தடையற்ற சேவையை வழங்குவதையே இந்த நியமனங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய சம்பவங்களுக்கு வழக்குத் தொடரக் கூடாதாம்! நாமல் கைது தொடர்பில் ரணில் தரப்பின் வியாக்கியானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788840364"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788840364</id>
            <summary type="text">ஏழு, எட்டு ஆண்டுகள் பழைய சம்பவங்களைக் கிளறி வழக்குகளைத் தொடுப்பது தவறான முன்னுதாரணம் என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஐக்கயி தேசியக் கட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏழு, எட்டு ஆண்டுகள் பழைய சம்பவங்களைக் கிளறி வழக்குகளைத் தொடுப்பது தவறான முன்னுதாரணம் என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஐக்கயி தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்த்தன விமர்சித்துள்ளார்.
</p><p>
எயார்பஸ் விமானக் கொள்வனவு சம்பவத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவைப் பார்வையிடுவதற்காக&nbsp; &nbsp;வஜிர அபேவர்த்தன நேற்று திங்கட்கிழமை (07) மாலை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.</p><h2>ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p>
</p><p>
அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது,
</p><p>
இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பாலும் விசாரணைகள் நிறைவடைய முன்னரே சந்தேக நபர்களைக் கைது செய்யும் வழக்கமொன்று காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd6444c-4591-4b66-93bf-776f0573ec00/26-6a9f89ad717b1.webp' /></p><p>
</p><p>
அதன் காரணமாக இலங்கையில் நூறுபேர் கைது செய்யப்பட்டால் அதில் 98 பேர் நிரபராதிகளாக வெளியே வந்து விடுகின்றனர்.</p><p>

ஆனால் ஜப்பானில் 100 பேர் கைது செய்யப்பட்டால் 98 பேர் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 100 பேர் கைது செய்யப்பட்டால் 57 பேர் குற்றவாளிகளாக தண்டிக்கப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeefb0e5-3667-42f0-ab5c-a8d55f4ad4ce/26-6a9f89ae2e68e.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான பின்னணியில் ஏழு அல்லது எட்டு வருடங்கள் பழைமையான சம்பவமொன்றின் அடிப்படையில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், கைது செய்யப்படுவது தவறானது. அது ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
</p><p>
அவ்வாறான சம்பவங்கள் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும். அதன் காரணமாகத் தான் நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய ஊழல் மோசடியில் சிக்கப்போகும் பிரபல பெண் அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rossy-senanayake-in-investigation-1788755776"></link>
            <id>https://tamilwin.com/article/rossy-senanayake-in-investigation-1788755776</id>
            <summary type="text">கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>

இதனை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளன.</p><p>

குறித்த விசாரணைகளுகளுக்கமைய, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேருக்கு மேற்பட்டோரிடம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.</p><p>
</p><h2><b>
மோசடிகள், முறைகேடுகள்</b></h2><p>விசாரணைகளில் சிக்கியவர்களில் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க முக்கியமானவராக உள்ளவராக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e354273-fbc7-44e6-8086-2f639eb5db6a/26-6a9e4d4eef9bc.webp' /></p><p>அத்துடன், அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.
</p><p>
கொழும்பு மாநகரசபைக்குள் இடம்பெற்ற பல மோசடிச் செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 3,500 வீதம் பணம் வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p> 

எனினும், அங்கு உண்மையான குறைந்த வருமானம் பெறுவோருக்குப் பதிலாக முன்னாள் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட பட்டியலுக்கே வழங்கப்பட்டுள்ளது. </p><h3><b>நிதி மோசடி</b></h3><p>முன்னாள் உறுப்பினர்களின் அரசியல் ஆதரவாளர்களின் பட்டியல்களுக்குரிய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கான சாட்சிகள் வெளிவந்துள்ளன.
 
உறுப்பினர்கள் பலரும் தமது உத்தியோகபூர்வ அலுவலகங்களை நடத்திச் செல்வதாகக் கூறியும் ஏமாற்றியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea52bc21-b4d4-4fdb-a21f-eafb7aa2460d/26-6a9e4d4fc344b.webp' /></p><p>கொழும்பு பிரதான நகரங்களை அண்மித்த வர்த்தக மதிப்புமிக்க இடங்களில் வாகனத் தரிப்பிடத்திற்காகக் காணிகளை ஒதுக்கியுள்ளனர்.
</p><p>
பின்னர் அந்த இடங்களை பெருமளவு பணத்திற்குத் தனியார் வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்து நிதித் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் மற்றும் முறைகேடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படும் முன்னாள் உறுப்பினர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்க சாட்சி விசாரணை ஒன்றை நடத்துவதற்கும் ஆணைக்குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-08T04:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vajira-says-arrests-are-not-perfect-1788839780"></link>
            <id>https://tamilwin.com/article/vajira-says-arrests-are-not-perfect-1788839780</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் 98 வீதமானவர்கள் குற்றமற்றவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் 98 வீதமானவர்கள் குற்றமற்றவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேகுணவர்தன ஊடகங்களிடம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p>
இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் 98 வீதமானவர்கள் குற்றமற்றவர்கள் என பின்னர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a1c2356-7fdc-48e3-ac2a-61ee8a6eb2d5/26-6a9f8766047b5.webp' /></p><p>
இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவது ஓர் பாரதூரமான விடயம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.</p><p>
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் இலங்கையின் சட்ட சமூகமும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>உதாரணமாக ஜப்பானில் 100 பேர் கைது செய்யப்படுபவர்களில் 98 பேர் குற்றவாளிகளாகின்றனர் எனவும் இந்தியாவில் 100 பேர் கைது செய்யப்படுபட்டால் 57 பேர் குற்றவாளிகள் ஆகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இலங்கையில் விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாது கைதுகள் மேற்கொள்ளப்படுவதாக வஜிர அபேகுணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் பார்வையிட்டு திரும்பிய பின்னர் ஊடகங்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T03:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் நிகழ்வுக்குப் பதில் ஆன்மீக நிகழ்வு! நாமலின் மனைவி லிமினியின் புதிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/limini-rajapaksa-s-new-resolution-1788839726"></link>
            <id>https://tamilwin.com/article/limini-rajapaksa-s-new-resolution-1788839726</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச, எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச, எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் போராட்டப் பேரணி நடைபெறவுள்ளது.</p><p>

இதற்கிடையே குறித்த நிகழ்வில் தலைமை வகிக்கவிருந்த நாமல் ராஜபக்ச தற்போதைக்கு கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கும் காரணத்தினால் அவரது மனைவி லிமினி ராஜபக்ச, தன் கணவருக்குப் பதிலாக அரசியல் மேடையேற இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.</p><h2>சமய வழிபாடுகள்&nbsp;</h2><p>

இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் இருந்து எதிர்கொள்ள நேர்ந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதி லிமினி அரசியல் மேடையில் ஏறமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நாமல் மற்றும் லிமினியின் திருமண ஆண்டு விழாவும் செப்டம்பர் 12ஆம் திகதியே இடம்பெறுவதால், அன்றைய தினம் அவர் அநுராதபுரத்தில் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed8700c-ac50-4cd4-8a26-1dc0fdb14547/26-6a9f87302547b.webp' /></p><p>நாமல் ராஜபக்சவுக்குப்பதிலாக அநுராதபுர பேரணியின் மேடையில் லிமினி உரையாற்றுவார் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p> எனினும், தற்போதைய புதிய தகவல்களின்படி, அவர் அந்த மேடைக்கு வருகை தந்து உரையாற்றவோ, பொதுமக்களைச் சந்திக்கவோ மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-09-08T03:55:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்சி தாவல் தடைச்சட்டத்தின் பின்னரே அமைச்சரவை மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-reshuffle-only-after-ban-on-party-jumping-1788837088"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-reshuffle-only-after-ban-on-party-jumping-1788837088</id>
            <summary type="text">கட்சி தாவல் தடைச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டதன் பின்னரே அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்சி தாவல் தடைச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டதன் பின்னரே அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொண்டு முக்கிய அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் அண்மைக்காலமாக தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
</p><h2>அமைச்சரவை மாற்றத்தின் போது&nbsp;</h2><p>
அதன்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பொறுப்பை தற்போதைய அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c07f8385-aae6-46c0-aafd-497d5d8eb2dc/26-6a9f8385657b4.webp' /></p><p>
அதேபோன்று தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அதிகாரமிக்க பதவியொன்று வழங்கப்படவுள்ளது.
</p><p>
குறித்த அமைச்சரவை மாற்றத்தின் போது அதிருப்தியுறும் எந்தவொரு அரசியல்வாதியும் எதிர்க்கட்சி வரிசைக்கு தாவுவதைத் தடுக்கும் வகையிலேயே அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக கட்சித் தாவல் தடைச்சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T03:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பில் சிறைச்சாலையிலிருந்து நாடாளுமன்றம் வரும் நாமல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-allowed-attend-parliament-sessio-1788834583"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-allowed-attend-parliament-sessio-1788834583</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, நாமல் ராஜபக்சவை அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள்&nbsp;</h2><p>நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு, நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc83830f-c132-4a17-8cc4-0c77d7f448bd/26-6a9f7cf92950f.webp' /></p><p>&nbsp;எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமையநாடாளுமன்றத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள மரபுகளின்படி, இது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p>
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (08) நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்முதல் மோசடியில் சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T03:14:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி : சஜித் கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judiciary-through-the-22nd-amendment-1788835886"></link>
            <id>https://tamilwin.com/article/judiciary-through-the-22nd-amendment-1788835886</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின்
அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து
வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின்
அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து
வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

மாத்தளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பாரிய அளவிலான முதலீட்டாளர்கள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"ஜனநாயகத்துக்கான வெளியை இந்த அரசு இல்லாமல் செய்துள்ளது. 22ஆவது
திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி கொடுத்து,
நிறைவேற்றுத்துறையின் அதிகாரங்களைப் பலப்படுத்திக்கொண்டு, நீதித்துறையை
ஜனாதிபதியின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்த அரசு முயற்சிக்கின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f807f6c-186e-4803-ba7b-84ac1ace4993/26-6a9f7b2390db5.webp' /></p><p>இது 220
இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைக்குப் பாரிய சவால்களை விடுகின்றது.
</p><p>
இந்த அரச தரப்பினர் பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை, தாம் விசுவாசம் கொள்ளும்
கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றை இல்லாமல் செய்து, நாட்டை ஜே.வி.பியின்
சர்வாதிகார ஆட்சிக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றனர்.&nbsp;</p><p>இந்த அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றுத்துறை நீதித்துறையில் தாக்கம்
செலுத்துகின்றது என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைத்தால், நாட்டுக்கு
வரவிருக்கும் முதலீடுகளும் இல்லாது போய்விடும். </p><p>தற்போதும் கூட அரசால் பாரிய
அளவிலான முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்துவர முடியாமல் போயுள்ளதை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
</p><p>
தேர்தல் காலத்தில் பல கூட்டங்களை நடத்தி மக்களுக்கு வெற்றுப் பொய்
வாக்குறுதிகளை வழங்கி, தற்போது 2 வருட நிறைவைக் கொண்டாடும் இந்த அரசு, மேலும்
பல கூட்டத் தொடர்களை நடத்தி அந்தப் பொய்களை உறுதிப்படுத்திக்கொண்டு
செல்கின்றது.&nbsp;</p><h2>புள்ளடி இட்ட மக்களுக்கு</h2><p>இந்த அடக்குமுறைசார், ஏதேச்சதிகாரம் சார்ந்த அரசை நாம் தோற்கடிக்க வேண்டும்.
விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் என 220 இலட்சம் மக்களையும், மக்களின் நலன்களையும்
பாதுகாக்கும் அரசைக் கொண்டுவர வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8ba3e76-2fe2-4b55-ba93-5bbbb237273e/26-6a9f7b246730c.webp' /></p><p>
தற்போதைய அரசின் பொய் உரைக்கும் கூட்டங்களுக்கு ஏமாந்து நாட்டின் ஒட்டுமொத்த
மக்களும் அநாதரவாகியுள்ளனர். </p><p>வயல் நிலங்கள் செழிப்படையும், தொழிற்சாலைகள்
உருவாகும் யுகம் முடிவடைந்து, தொழிற்சாலைகள் நாட்டை விட்டுச் செல்லும் யுகமே
இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டில் ஏற்கனவே அமைந்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகளைப் பாதுகாத்துக்கொள்ள
முடியாத அரசாக இது காணப்படுகின்றது. முறைமையில் மாற்றத்துக்காகப் புள்ளடி இட்ட
மக்களுக்கு மேற்பார்வைக்கு மாத்திரம் சில விடயங்களைக் காட்டிவிட்டு, உண்மையான
மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்காமல் தடம்மாறிச் செல்கின்றனர்.</p><p>அரசுக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் போயுள்ளது.
வாக்குறுதியளித்தபடி 'விட்ஸ்' ரக கார் கிடைத்தபாடில்லை, 33 வீதத்தால்
மின்சாரக் கட்டணம் குறைந்தபாடில்லை, துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு
எண்ணெய் கிடைத்தபாடில்லை. அஸ்வெசும பயனாளர்கள் கூட இன்று பட்டியல்களிலிருந்து
வெட்டப்படுகின்றார்கள்.
</p><p>
மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணங்களும் துண்டிக்கப்படுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில், ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு 17 ஆயிரத்து 315 ரூபாவை
வைத்துக்கொண்டு 30 நாள்களுக்கு வாழ முடியும் என அரசு கூறுவது வேடிக்கையானது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T03:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள்..! இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-accounts-have-been-stolen-from-the-owners-1788834716"></link>
            <id>https://tamilwin.com/article/bank-accounts-have-been-stolen-from-the-owners-1788834716</id>
            <summary type="text">இலங்கையில் இணையம் வழியாக தனிநபர்களின் ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கு எண்களை பயன்படுத்தி நடந்த பல நிதி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இணையம் வழியாக தனிநபர்களின் ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கு எண்களை பயன்படுத்தி நடந்த பல நிதி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>

குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் மோசடி விசாரணைப்பிரிவும் இணைந்து நடத்திய தீவிர சோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
</p><p>
வாடகை அடிப்படையில் பணம் செலுத்தி வாங்கப்பட்ட வெளிநாட்டு வங்கிக்கணக்குகளிலிருந்து, மோசடிக்காரர்கள் பல மில்லியன் ரூபாய் பணத்தை மாற்றியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><h2>பெரிய அளவிலான நிதிக்குற்றங்களுக்குப் பயன்படுத்தல்</h2><p>இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், தனிநபர்களை இலாபகரமான வணிகங்களுடன் இணைப்பதாகவும், அவற்றிலிருந்து பெறப்படும் பணம் அந்த கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் கூறி, அவர்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f437d11-3fb6-4847-a36f-f196c884273b/26-6a9f786113526.webp' /></p><p>
இதன்பின்னர், அந்த கணக்குகளில் சிறிதளவு தொகையை வரவு வைப்பதன் மூலம், கணக்கு வைத்திருப்பவரின் நம்பிக்கையை பெற்று கணக்கு வைத்திருப்பவரின் 'பின் எண்' மற்றும் பிற இரகசியத் தகவல்களைத் துல்லியமாகப் பெற்று, கணக்கு வைத்திருப்பவருக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படாதவாறு, அந்த கணக்கு எண்களைப் பெரிய அளவிலான நிதிக் குற்றங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். </p><p>

குற்றப்புலனாய்வுத் துறைக்கு இதுபோன்ற சுமார் 500 முறைப்பாடுகள் வந்துள்ளன. </p><p>

வங்கிக் கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பலர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>&nbsp;சமூக ஊடகங்களில் விளம்பர மோசடி</h2><p> </p><p>

வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் தொழில்களில் சேருவதற்காக, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, இணைய மோசடியாளர்கள் இந்த நோக்கத்திற்காக மக்களைத் திரட்டி வருவது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6af1eaa-5f91-4952-b6c7-6d9ffeb7c3c7/26-6a9f7861c2139.webp' /></p><p> 

இந்த மோசடியாளர்கள், தாங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், லாபத்தின் ஒரு பகுதியை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதாகவும் கூறுகின்றனர். </p><p>

இறுதியில், அந்த கணக்கு எண்கள் கிரிப்டோகரன்சிகள் மூலம் வெளிநாட்டு கடத்தல்காரர்களின் கைகளுக்கு செல்கின்றன. </p><p>

கணக்கு வைத்திருப்பவர்கள் தெரிந்தே அல்லது தெரியாமலேயே மோசடிக்கு உடந்தையாகும் பட்சத்தில் அவர்களும் சட்டத்தின் முன் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை கூறியுள்ளது.</p><p>

எனவே ஒருவருக்குச் சொந்தமான எந்தவொரு வங்கிக்கணக்கையும் எந்த வகையிலும் வெளித் தரப்பினருக்கு மாற்றக்கூடாது என்று குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T02:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மனைவியின் ஜாதகத்தில் ராஜயோகம் - ராஜபக்சர்களை நிலைகுலைய வைத்துள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. </p><p>

அதில் முக்கியமானதாக நாமல் ராஜபக்சவின் மனைவி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக அதிகளவில் பேசப்பட்ட வந்த நிலையில், அதனை நாமலின் ஊடகப் பிரிவு முற்றாக மறுத்துள்ளது. </p><p>

நாமல் மற்றும் அவரது மனைவி தொடர்பிலான செய்திகள் பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p> </p><h2><b>

லிமினி ராஜபக்சவின் ஜாதகம் </b></h2><p>சமூக வலைத்தளங்களுக்கு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், நாமல் ராஜபக்ச சுகயீனமுற்றுள்ளதாகவும், அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9622954d-3bcf-4cdd-b4cd-634de6ecedc9/26-6a9ec2abbad22.webp' /></p><p>அத்துடன், மற்றுமொரு பேஸ்புக் பக்கம் ஊடாகப் பரவிய பதிவில், நாமல் ராஜபக்சவின் இடத்தை நிரப்புவதற்காக அவரது மனைவி லிமினி ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுரராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் மேடையில் ஏறவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>

மற்றுமொரு செய்தி இணையத்தளம், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவிகளான சிறிமா பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரைப் போல பலத்தன்மை வாய்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் அவரது வருகை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. 

இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டு பகிரப்படும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p> 

குறித்த தகவல்கள் முழுமையாக திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் பொய்யான பிரச்சாரங்கள் என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு மேலும் உறுதிப்படுத்துகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T02:35:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக்கும்பல் தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்! மயானத்திலிருந்து அடுத்தடுத்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/several-guns-bus-lalia-murders-were-recovered-1788831849"></link>
            <id>https://tamilwin.com/article/several-guns-bus-lalia-murders-were-recovered-1788831849</id>
            <summary type="text">டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்&nbsp;சில துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p> ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது.</p><h2>மூன்று சந்தேகநபர்களும் கைது</h2><p>நாடு முழுவதும் 'பஸ் லலியா' செய்த கொலைகளில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டி-56 ரக துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் நேற்று (7) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6df5dd5b-3d07-43d9-b318-3ff93b8dd41c/26-6a9f6ec174619.webp' /></p><p>இந்த ஆயுதங்களுடன், லலித் கண்ணங்கரவின் பாதாள உலகக்கும்பலுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இலங்கையில் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர் டுபாயில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.</p><p>இதனையடுத்து டுபாய் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2026 ஆகஸ்ட் 25 அன்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு, தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T02:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நட்சத்திர வீரருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-about-dilantha-1788830405"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-about-dilantha-1788830405</id>
            <summary type="text">இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>
கொழும்பு பகுதியில் போலி ஆவணங்களைத் தயாரித்து காணிகளை விற்பனை செய்யும் மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாக டிலந்த உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இக்கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, குறித்த நபர்களை முதலில் இவ்வழக்கின் சந்தேகநபர்களாகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் அறிவுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ad2af7-f0f6-4554-867d-a8ffba8a5efa/26-6a9f62c7209e8.webp' /></p><p>
போலி ஆவணங்கள் மூலம் கொழும்பிலுள்ள காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி விற்பனை செய்யும் பாரிய மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் போது இவர்கள் வெளிநாடு சென்றால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் எனவும் கூறி இந்த பயணத்தடையைக் கோரப்பட்டது.
</p><p>டிலந்த மாலகமுவவைத் தவிர சாந்த விதானகமகே, டெஸ்மண்ட் அமரசிங்க மற்றும் சமன் ஜெயவீர ஆகிய நால்வருக்கு எதிராகவே இப்பயணத்தடை கோரப்பட்டிருந்தது.
</p><p>கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் இலக்கம் 18 இல் அமைந்துள்ள 43 பேர்ச் காணியொன்றை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து, பிரபல வாகன விற்பனை நிறுவனமொன்றிற்கு 1 பில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>
இக்காணியின் உண்மையான பெறுமதி 250 கோடி ரூபாய்க்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பன்னிபிட்டியவைச் சேர்ந்த 80 வயதான ஆரியபால திஸாநாயக்க என்ற நபர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>காணி விற்பனை மூலம் கிடைத்த பணம் குறித்த நால்வரில் மூவருக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், டிலந்த மாலகமுவ என்பவருக்குப் பணத்திற்குப் பதிலாக 14 ஆடம்பர சொகுசு மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்ட மேலதிக நீதவான், விளக்கமறியலில் உள்ள ஆரியபால திஸாநாயக்கவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
</p><p>மேலும், வெளிநாட்டு பயணத்தடை கோரப்பட்டுள்ள நபர்களை இச்சம்பவத்தின் சந்தேகநபர்களாகப் பெயரிட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண தர பரீட்சையின் மீள்மதிப்பீட்டு முடிவுகள்! மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/speedy-re-correction-exam-results-requested-1788829589"></link>
            <id>https://tamilwin.com/article/speedy-re-correction-exam-results-requested-1788829589</id>
            <summary type="text">&amp;nbsp;2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்மதிப்பீட்டு முடிவுகளை விரைவாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்மதிப்பீட்டு முடிவுகளை விரைவாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
இப் பரீட்சை முடிவுகள் தாமதமாவதால், வேறு பாடசாலைகளுக்கு மாற எதிர்பார்க்கும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதன் காரணமாகவே இக்கோரிக்கையை மாணவர்கள் முன்வைப்பதாக என தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><h2>பரீட்சை முடிவுகள்&nbsp;&nbsp;</h2><p>2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையானது 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்றதுடன், அதற்கான முடிவுகள் 2026 ஜூன் 19 அன்று பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34885aa3-92ee-43a4-ac07-61788da7b238/26-6a9f5f96d22d1.webp' />&nbsp; &nbsp;</p><p>
அதனைத் தொடர்ந்து, குறித்த பரீட்சை முடிவுகளின் மீள்மதிப்பீடு செய்வது தொடர்பில் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 08 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
</p><p>இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையும் நிறைவடைந்து தற்போது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், சாதாரண தர மீள்மதிப்பீட்டு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T01:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752</id>
            <summary type="text">வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. </p><p>

இது இன ரீதியான மோதல்களைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்று
கூறப்படுகின்றது,
 
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
இந்தக் கிராமம் வரலாற்று ரீதியாகவே விவசாய நிலமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. 

இத்தகைய சம்பவங்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான ரொஷான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திலித் ஜெயவீர ஆகியோரின் செயற்பாடுகள் இருக்கலாம் எனத் தொடர்ந்து சந்தேகம் வெளியிடப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bPcMV8QJimw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T01:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-people-arrest-attempting-dig-treasure-mullaitivu-1788828694"></link>
            <id>https://tamilwin.com/article/5-people-arrest-attempting-dig-treasure-mullaitivu-1788828694</id>
            <summary type="text">முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட சோதனை
நடவடிக்கையின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றுடன் 5
பேர் சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட சோதனை
நடவடிக்கையின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றுடன் 5
பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.</p><p>வாகனம் ஒன்றில் ஸ்கானர் இயந்திரம் காணப்பட்டுள்ளமையினை தொடர்ந்து வாகனத்தில் இருந்து 5 பேரும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;&nbsp;</p><h2>&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>இவர்கள் வவுனியா,முள்ளிவாய்க்கால்,கொழும்பு,தம்புள்ள பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;&nbsp;</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a27eec9-8df5-4811-b18d-ee1a7aa20274/26-6a9f5cedb994c.webp' /></p><p>
</p><p>இவர்கள் மீதான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலிசார்
மேற்கொண்டு வருகின்றார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T01:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை வரை நீளும் நாமல் கைது விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-s-milinda-rajapaksha-in-geneva-1788828884"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-s-milinda-rajapaksha-in-geneva-1788828884</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குரல் எழுப்பும் நோக்கில் ஸ்ரீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குரல் எழுப்பும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச சுவிட்சர்லாந்து விஜயம் செய்துள்ளார்.
</p><p>இலங்கையின் முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம், முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்து குரல் கொடுப்பதற்காக ஜெனிவா சென்றுள்ளார்.</p><h2>எதிர்க்கட்சியின் அரசியல் குரல்கள்</h2><p> </p><p>
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இந்த விடயங்களை எழுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9a819f-853a-41c6-be3c-e5fcd23e0996/26-6a9f5cd572950.webp' /></p><p>இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் குறித்தும் கவனத்தை ஈர்க்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>
இது தொடர்பில் எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மிலிந்த ராஜபக்ஷ, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தாம் மீண்டும் ஜெனிவா திரும்பியுள்ளதாகவும், நாட்டில் "அடக்கப்பட்ட எதிர்க்கட்சியின் அரசியல் குரல்களைப்" பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே இம்முறை வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>
மேலும், தாம் சுட்டிக்காட்ட விரும்பும் இந்த விடயங்களை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் பரந்த சூழலில் அணுக வேண்டும் என மிலிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T00:54:49+00:00</updated>
        </entry>
    </feed>
