<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-14T15:48:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்திற்குள்ளேயே நடந்த சதியால் துரோகத்தில் சிக்கிய கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> 

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக இந்த சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட, ஷிராந்தி, மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 துரோகத்தில் சிக்கிய கோட்டாபய </b></h2><p> அதற்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் அவர்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd68079-94c4-423f-b672-9bfcb0d30177/26-6aa7e23d370c4.webp' /></p><p>எனினும், வியத்மக அமைப்பை நிறுவி, அரசியல் களத்தை அமைத்துக்கொண்டு முன்னோக்கி வந்த கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தனது வேட்புமனுவை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று கோட்டாபய ராஜபகச் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
இந்த நிலையில் கோட்டாபயவிற்கு எதிராக, நாமல் ராஜபக்சவின் அரசியல் பெரிய அண்ணா என்று வர்ணிக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் அரசாங்கத்திற்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.</p><h3><b>

ராஜபக்சவின் அரசியல்</b></h3><p>இதனால், 2022ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431da20b-02c7-4d83-b5dd-592b770adb59/26-6aa7e23ded411.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்கள் இருவரும் இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் அரசியல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
</p><p>
ஆனால், தற்போது கோட்டாபய ராஜபக்சவை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவர்கள் இருவரும் உள்ளிட்ட தரப்பினர் தற்பொழுது நாமல் ராஜபக்சவுடன் கைகோர்த்து கொண்டதன் ஊடாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T15:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு சிறை ஒன்றும் புதிதல்ல..! நாட்களை எண்ணிக் காத்திருக்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/for-namal-prison-is-not-new-place-1789396666"></link>
            <id>https://tamilwin.com/article/for-namal-prison-is-not-new-place-1789396666</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவிற்கு சிறை ஒன்றும் புதிய இடம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்கள் நாமல் தொடர்பில் எழுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவிற்கு சிறை ஒன்றும் புதிய இடம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.</p><p>ஊடகவியலாளர்கள் நாமல் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நாமல் ராஜபக்ச மூன்று தடவைகள் விளக்கமறையில் அடைக்கப்பட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>எனவே அரசியல் செய்யும்போது இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்சவிற்கு பிணை</h2><p>நாமல் ராஜபக்ச நல்ல தேக ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று இயங்கி வருவதாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc3b762-98b0-4c93-a161-d436c9615d80/26-6aa806bc62f27.webp' />&nbsp;&nbsp;</p><p>
எனவே எதிர்வரும் 18 ஆம் திகதி நாமல் ராஜபக்சவிற்கு பிணை கிடைக்கும் என நம்புவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>
நாமலின் சட்டத்தரணிகள் பிணை பெற்றுக் கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: சஜித் அறைகூவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-sajith-1789394114"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-sajith-1789394114</id>
            <summary type="text">இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால்,
அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக்
கோரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால்,
அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக்
கோரமான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.</p><p>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம
ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று(14.9.2026) நடைபெற்ற இலங்கைக் காலநிலை பற்றிய நாடாளுமன்ற
ஒன்றியக் கூட்ட அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"மனித வளம், விலங்குகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலைப் பாதுகாப்பது மிக
முக்கியமான தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளாகும்.</p><h2>அனர்த்த அபாயங்கள்</h2><p> </p><p>பேதங்களின்றி,
வெளிப்படைத்தன்மையுடன் தேசிய உரையாடல் திட்டமொன்றை இலங்கைக் காலநிலை பற்றிய
நாடாளுமன்ற ஒன்றியம் முன்னின்று ஆரம்பிக்கும்.

மக்கள் மாத்திரமன்றி, வாக்களிக்கும் உரிமை இல்லாத விலங்குகளையும், வன
வளங்களையும் பாதுகாப்பது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு
இன்றியமையாதது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/046c97e6-5bab-488f-a3f2-c9ff53beba0c/26-6aa80566571b6.webp' /></p><p>

அனர்த்தங்கள் ஏற்படும்போது நாட்டின் முகாமைத்துவப் பொறிமுறை சிறப்பான
சேவையாற்றும் போதிலும், உலகளாவிய அனர்த்த அபாயங்கள் கிடைத்தவுடன் முன்கூட்டியே
பதிலளிக்கும் முறையும், துரிதமான வெளியேற்றத் திட்டமும் அவசியமாகும்.</p><p>

அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் நிவாரணம் வழங்கும் வழமை மாறி, மனிதர்கள்,
காடுகள், குடிதண்ணீர், நீர்ப்பாசனம், உணவு மற்றும் வலுச்சக்திப்
பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்கூட்டியே எதிர்கொள்ளும் முறையான
எதிர்வினைத் திட்டம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T14:36:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எம்.பி பதவியைத் துறந்து போட்டியிடத் தயார்..! நளின் பண்டார அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalin-bandara-on-the-provincial-council-election-1789394352"></link>
            <id>https://tamilwin.com/article/nalin-bandara-on-the-provincial-council-election-1789394352</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய
அனுபவம் தனக்கு இருப்பினும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய
அனுபவம் தனக்கு இருப்பினும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான
பணிகளைத் திறம்படச் செய்ய முடியாது என்றும், அதற்கு ஆட்சி அதிகாரமே அவசியம்
என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
முதலமைச்சர் பதவி</h2><p>
நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு மண்டலமான பிங்கிரிய பகுதியில் 1,000 ஏக்கரில்
மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பிரதி அமைச்சராகத் தான் ஆற்றிய
பங்களிப்பை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1af333b0-1463-4648-bf39-c651bc635e09/26-6aa7fe000c73d.webp' /></p><p>
</p><p>
தம்மிடம் வேலை செய்யக்கூடிய உண்மையான திறன் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியில்
இருக்கும்போது அதிகார வரம்புகள் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன என்று
குறிப்பிட்ட அவர், அரசில் அதிகாரம் இருந்தால் மட்டுமே மக்களுக்கு முழுமையாகப்
பணியாற்ற முடியும் என்றார்.</p><p>

இதன் காரணமாக, மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக
இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், வெறும் மாகாண சபை உறுப்பினராக இல்லாமல், முழுமையான அதிகாரமிக்க மாகாண
முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றி மக்களுக்குச் சேவையாற்றுவதே தனது பிரதான
இலக்கு என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/w7aPcSr_N0Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் நிறுவன மின்னஞ்சலால் ஆபத்தில் நாமல் ராஜபக்ச! முக்கிய பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769</id>
            <summary type="text">எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் 
ராஜபக்ச இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூற முனைந்தாலும்
சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 
2013 மார்ச் 23 ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் (Email) ஒன்றின் மூலம் பல கதைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச விமானங்களை கொள்வனவு செய்யும் யோசனையை ஜனாதிபதி மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து விடயத்தை முடித்து தருவதாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
அது தொடர்பில் எயார்பஸ் (Airbus) நிறுவனம் அனைத்து மின்னஞ்சல்களையும் வழங்கியுள்ளது. எயார்பஸ் கொள்வனவு தொடர்பான வேலையை நான் தந்தைக்குச் சொல்லி செய்து தருகிறேன் தந்தை மூலமாக அல்லது ஜனாதிபதி மூலமாக இதற்குத் தேவையான அமைச்சரவை அனுதியை பெற்று தருவதாக கூறியுள்ளார்.
</p><h2>நாமலின் பங்களிப்பு</h2><p>இதற்கு இணையாக 2013 மார்ச் 27 ஆம் திகதி அன்றைய சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இக்கொள்வனவுக்கான அனுமதியைக் கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பpத்துள்ளார். </p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 13 ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. என்னவென்றால் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாதீன பணிப்பாளர் சபையைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல் இலங்கைக்கு வந்த எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் இந்த பாரிய அளவிலான விமானக் கொள்வனவின் போது விமான ஓட்டும் பயிற்சி மையம் (Pilot Training Centre) ஒன்றும் பெருந்தொகை செலவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>
ஹம்பாந்தோட்டையில் விமான ஓட்டும் பயிற்சி</h2><p>அந்தப் பயிற்சி மையத்தை தனது சொந்த தேர்தல் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் நிறுவுமாறு எயார்பஸ் நிறுவன பிரதிநிதிகளிடம் நாமல் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>மின்னஞ்சல் சான்றுகள் மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளதாகவே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நிமல் பெரேரா அளித்துள்ள வாக்குமூலம் தனக்கு எயார்பஸ் நிறுவனத்துடனோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனோ எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f8eb70-d0ad-4b6a-a54c-4d4f3d98ea46/26-6aa7f39bafd6d.webp' /></p><p>ஆனாலும் நாமல் ராஜபக்ச வெளிநாட்டு ஆலோசனைச் சேவை ஒன்றின் மூலம் பணம் கிடைக்கவுள்ளதாகவும் அப்பணத்தை வைப்பு செய்வதற்கு வெளிநாட்டு கணக்கு ஒன்றைத் தருமாறும் கோரியுள்ளார்.</p><p>தனக்கு வெளிநாட்டு ஆலோசனை சேவை மூலம் பணம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே நிமல் பெரேரா தனக்குச் சொந்தமான 'SABREVISION' என்ற நிறுவனத்தின் கணக்கு இலக்கத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>
இந்தக் கணக்கிற்கு 'Biz Solutions' எனும் நிறுவனம் மூலம் அதாவது அப்போதைய கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க பணிப்பாளராக இருந்த புரூணையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் நிமல் பெரேராவின் வெளிநாட்டு கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளது. </p><p>பின்னர் அந்த பணத்தை இலங்கையில் 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jpF2dBCZozI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-14T13:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகலை அறிவித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789391035"></link>
            <id>https://tamilwin.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789391035</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய
பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித், இன்று (14) முதல் நடைமுறைக்கு வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய
பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித், இன்று (14) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.</p><p>
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச
அபேரத்னவிடம் முறைப்படி கையளித்துள்ளார்.</p><p>

அப்துல் வாஹித் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் எம்.பி பதவியிலிருந்து
விலகியுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின்
தவிசாளருக்கு கடிதம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>நாடாளுமன்றத் தேர்தல்கள்&nbsp;</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பத்தாவது நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக
பதில் செயலாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffaafed3-4fc7-4427-90b2-552c3b22e2a1/26-6aa7f3da1b01a.webp' /></p><p>
</p><p>
1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம்
பிரிவின் விதிகளுக்கமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெற்றிடமாகவுள்ள தேசிய பட்டியல் அமைச்சர் இடத்தை நிரப்ப தேர்தல் ஆணைக்குழு
சட்ட விதிகளின்படி தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T13:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு சாரதியாகக் கூட செல்வேன்..! ராஜபக்சர்களுக்காக குரல் கொடுத்த அர்ச்சுனா எம்.பியால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strong-condemnation-of-arjuna-s-remarks-1789391886"></link>
            <id>https://tamilwin.com/article/strong-condemnation-of-arjuna-s-remarks-1789391886</id>
            <summary type="text">தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்று, தற்போது அவர்களையே ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “நாமல் ராஜபக்சவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்று, தற்போது அவர்களையே ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “நாமல் ராஜபக்சவிற்கு கார் சாரதியாகக் கூட இருப்பேன்” என மேடையில் பேசியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, காணி சுவீகரிப்பு , காணால் ஆக்கப்பட்டோர் போன்ற தமிழர்களின் வரலாற்றில் மோசமான நிலையை ஏற்படுத்தியவர்களாக கருதப்படும் ராஜபக்சர்களைப் போற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனா செயற்படுகிறார். </p><p>

இந்த செயற்பாடு, தமிழ் மக்களுக்காக இதுவரை காலமும் போராடி வரும் தலைவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பணத்திற்காகவும் பதவிக்காகவும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களால் தமிழ் மக்களுக்கான நீதி எவ்வளவு காலம் கடந்தாலும் கிடைக்காது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாக இருக்கின்றது. </p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல வருடங்கள் கடந்தும் தங்களது உறவுகளின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர்.

எனினும், இதுபோன்ற அரசியல் தலைவர்கள் மக்களுக்காக செயற்படுவதாகக் கூறிக்கொண்டு, சுயலாபம் அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இவ்வாறான பல்வேறு விடயங்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகளையும் உங்கள் கண்முன் கொண்டுவருகிறது அதிர்வு நிகழ்ச்சி.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nBnFADoN9QE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T13:19:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருநாகலில் திடீர் விபத்து - விரைந்து செயற்பட்ட பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-accident-in-kurunegala-1789390322"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-accident-in-kurunegala-1789390322</id>
            <summary type="text">குருநாகல் - மஹாவா நகரில் உள்ள மூன்று கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இன்று(14.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - மஹாவா நகரில் உள்ள மூன்று கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் இன்று(14.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

தீ விபத்து</h2><p>
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், மஹாவா பிரதேச சபைக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff9418c6-0c9e-4b8e-bd48-5c075834df71/26-6aa7ee24d116e.webp' /></p><p> 

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக குருநாகல் மாநகர சபையிலிருந்து தீயணைப்பு வாகனங்களும் மஹாவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக எந்தவித தகவலும் உறுதிச் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன அழிப்பை மேற்கொண்டவர்களுடன் சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர்: சிறீதரன் எம்.பி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/genocide-speech-shritharan-mp-1789388877"></link>
            <id>https://tamilwin.com/article/genocide-speech-shritharan-mp-1789388877</id>
            <summary type="text">எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும்
நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல்
ஆக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும்
நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல்
ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே
மேடையில் ஏறி நிற்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் விசனம்
தெரிவித்தார்.
</p><p>
கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்துக்கான மக்கள் சந்திப்பு பொதுநோக்கு மண்டபத்தில்
நேற்று(13.9.2026) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ,

"மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றும்
நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 இலிருந்து 67 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம்
முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>கடுமையான எதிர்ப்பு</h2><p> இதற்குப் பல்வேறு தரப்பினரும், வழக்கறிஞர்கள் சங்கமும்
கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த விடயம் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம்
திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வருகின்றது. </p><p>இதன்போது அந்தத்
திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதற்கு எமது
ஆதரவு எப்போதுமே இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661f3978-b0bf-41b2-9973-2b6e7ed65542/26-6aa7eb1811946.webp' /></p><p>தேர்தல் காலங்களில் மக்கள் சில நேரங்களில் ஆராயாமல் அல்லது கோபத்தின்
அடிப்படையில் சிலரைத் தெரிவு செய்கின்றனர். ஆனால், பின்னர் அவர்கள் எவ்வாறான
நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள் என்பதை மக்கள் கவனமாக உன்னிப்பாகக் கவனிக்க
வேண்டும்.
</p><p>
எங்களை அழித்தவர்களுடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்ற இவ்வாறானதொரு
கடினமான அரசியல் சூழலில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:47:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[15ஆம் திகதி முதல் தொடர்ச்சியான சுகயீன விடுமுறையில் வட மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-veterinary-surgeons-sick-leave-protest-1789388468"></link>
            <id>https://tamilwin.com/article/northern-veterinary-surgeons-sick-leave-protest-1789388468</id>
            <summary type="text">வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்


வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும்
நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்


வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும்
நிர்வாக மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத
நிலையில், 2026 செப்டம்பர் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியான சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இன்றையதினம் (14.09.2026) வடக்கு
மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள
அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>
எமது முக்கிய கோரிக்கைகள்:
</h2><p>
* வடக்கு மாகாணத்தின் புவியியல் நிலைமை, நீண்ட தூரக் களப்பணிகள்,
பண்ணையாளர்களின் தேவைகள் மற்றும் சேவையின் தன்மைக்கு ஏற்ற பொருத்தமான கடமைப்
பட்டியலை வழங்குதல்.
</p><p>* அரச கால்நடை வைத்திய அலுவலகங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைத்
தீர்த்தல்.
</p><p>* பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்குவதற்கான
பொருத்தமான மருந்துப்பொறிமுறையை ஏற்படுத்துதல்.
</p><p>* களப்பணிகளுக்கு போதுமான பொருத்தமான வாகனங்களை வழங்குதல். தற்போது
பயன்படுத்தப்படும் வாகனங்கள் பழையதாகவும் அடிக்கடி பழுதடைவதாகவும் இருப்பதால்,
அதற்குத் தீர்வு காணுதல்.</p><p>
* கால்நடை வைத்தியர்களின் உயர் பதவிகளை நிரப்புவதற்கான நேர்முகத்
தேர்வுக்குரிய புள்ளியிடல் நடைமுறைகள் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணாக
அடிக்கடி மாற்றப்படுவதைத் தடுத்து, உயர் பதவிகளை உரிய முறையில் நிரப்புதல்.
அத்துடன் தற்போது வெற்றிடமாகவுள்ள பதவிகளை காலம் தாழ்த்தாது நிரப்புதல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd8c4b9-b76f-4362-bcc8-830c4136c86a/26-6aa7ea7ec62d9.webp' /></p><p>
* 2026 ஜூலை 1ஆம் தேதி இடம்பெற்ற சுகயீனப் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதம
செயலாளர் அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
மற்றும் இணக்கப்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல்.
</p><p>* எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி தன்னிச்சையாக எமது சம்பளங்களை குறைத்தலை
நிறுத்துதல்.</p><p>
* விரல் அடையாளப் பதிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்.

நாம் விரல் அடையாளப் பதிவு முறைக்கு எதிரானவர்கள் அல்லர். 2019ஆம் ஆண்டு
அன்றைய வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதனுடன் இடம்பெற்ற
கலந்துரையாடல்களின் பின்னர், கால்நடை வைத்தியர்களின் களப்பணியின் தன்மையை
கருத்திற்கொண்டு திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் விரல்
அடையாளப் பதிவு மேற்கொள்ளும் நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது இன்றுவரை
பின்பற்றப்பட்டு வருகின்றது.</p><p>

எனினும், தற்போது அந்த நடைமுறையைப் புறந்தள்ளி அனைத்து நாட்களிலும் விரல்
அடையாளப் பதிவு செய்ய வேண்டும் என நிர்வாக அழுத்தம் வழங்கப்படுவதுடன்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்நடை வைத்தியர்கள் உண்மையாகக் கடமையாற்றியிருந்த
போதிலும், விரல் அடையாளப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படவில்லை என்ற
காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலிருந்து பல
மாதங்களுக்கான நாட்கள் விடுமுறையாகக் கணிக்கப்பட்டுள்ளன.</p><h2>உத்தியோகபூர்வ பதிவுகள்</h2><p>
</p><p>
கால்நடை வைத்தியர்கள் கடமையாற்றியமைக்கான தினக்குறிப்பு பதிவேடு (Diary),
எதிர்கால நிகழ்ச்சி திட்டம் (Advance Programme), விலகல் பதிவுகள்
(Deviation), வாகனப் பதிவுகள் (Running Chart), அலுவலக வரவுப் பதிவுகள்
(Attendance), திட்டங்களுக்குரிய கொடுப்பனவுச் சீட்டுகள், ஆவணங்கள் மற்றும்
வவுச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு உத்தியோகபூர்வ பதிவுகள் உள்ளன.
</p><p>
மேலும், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களால் சமர்ப்பிக்கப்படும்
சான்றுப் பொருட்கள் தொடர்பான அறிக்கைகள், DCC கூட்டங்கள், பிரதேச
ஒருங்கிணைப்புக் கூட்டங்கள், பல்வேறு திணைக்களங்களின் கூட்டங்கள் மற்றும்
செயற்பாடுகளில் பங்கேற்று மேற்கொண்ட பணிகள், எமது திணைக்களத்தின் திட்டங்கள்
மற்றும் ஏனைய திணைக்களங்களின் திட்டங்களுடன் இணைந்து மேற்கொண்ட பணிகள்,
அத்துடன் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தமை தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகள்
உள்ளிட்ட ஏராளமான பணிச்சான்றுகள் எம்மிடம் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ade30bc-9e0b-4beb-9220-be24a7506d73/26-6aa7ea7f93f69.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான உத்தியோகபூர்வ பதிவுகள் மற்றும் பணிச்சான்றுகள் மூலம் உண்மையில்
கடமையாற்றியமை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில், விரல் அடையாளப் பதிவு
செய்யப்படவில்லை என்ற ஒரே காரணத்தை அடிப்படையாகக் கொண்டு உண்மையில் பணியாற்றிய
நாட்களை பல மாதங்களுக்கான விடுமுறையாகக் கணிப்பது நிர்வாக ரீதியாக முரணானதும்
முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.
</p><p>
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் உள்ள பல துறைகளில், குறிப்பாக மேலதிக
கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்குக் கூட, அவர்களது
பணியின் தன்மைக்கு ஏற்ப விரல் அடையாளப் பதிவு தொடர்பில் பொருத்தமான மாற்று
நடைமுறைகள் அல்லது விலக்குகள் நடைமுறையில் உள்ளன. இத்தகைய நிலையில், மேலதிக
கொடுப்பனவு எதுவும் பெறாமல், அலுவலக நேரத்திற்கு அப்பாலும் தொடர்ந்து
அதிகளவில் களப்பணிகளில் ஈடுபடும் கால்நடை வைத்தியர்களுக்கு மட்டும் அனைத்து
நாட்களிலும் விரல் அடையாளப் பதிவு செய்ய வேண்டும் என இந்நடைமுறையைத் திணிப்பது
நியாயமானதல்ல. </p><p>இது கால்நடை வைத்தியர்களின் தொழில் உரிமை மற்றும் பணியுரிமை
சார்ந்த முக்கியமான பிரச்சினையாகும்.

எமது போராட்டம் பண்ணையாளர்களுக்கு எதிரானது அல்ல. பண்ணையாளர்களுக்கு
தொடர்ச்சியான, விரைவான மற்றும் தரமான கால்நடைச் சேவையை வழங்குவதற்குத் தேவையான
சரியான நிர்வாக மற்றும் சேவை ஏற்பாடுகளை உறுதி செய்வதே எமது நோக்கமாகும்.

எமது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டால், பண்ணையாளர்களின் நலனை
முன்னிறுத்தி எமது தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர நாம் தயாராக
உள்ளோம் என அறியத்தருகிறோம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 நாட்களில் 2 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் - பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-cross-2-000-in-13-days-1789389062"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-cross-2-000-in-13-days-1789389062</id>
            <summary type="text">இலங்கையில் இதுவரையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. 

இதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இதுவரையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. </p><p>

இதற்கமைய, நாட்டில் 9 மாதங்களில், 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு</h2><p>
அத்துடன், இந்த காலபகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb8814c9-ef5e-47e2-ba52-01417e20b537/26-6aa7e908c4e83.webp' /></p><p>

இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தின் தொடங்கிய, 13 நாட்களில் மட்டும் 2,146 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,742 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 19,235 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,291 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,247 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:31:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் நகரில் வாடகை நிலுவை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-shops-in-hatton-sealed-for-non-payment-of-rent-1789387793"></link>
            <id>https://tamilwin.com/article/10-shops-in-hatton-sealed-for-non-payment-of-rent-1789387793</id>
            <summary type="text">ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு இன்று(14.9.2026) சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்தார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு இன்று(14.9.2026) சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்தார்.
</p><p>
ஹட்டன் நகர சபைக்கு சொந்தமான கடை அறைகளுக்கான வாடகை நீண்ட காலமாக
செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை அறவிடும் நடவடிக்கையின் ஒரு
கட்டமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, ஹட்டன்–டிக்கோயா நகர சபைக்கு சொந்தமான
வர்த்தக நிலையங்களில் இருந்து நிலுவையில் உள்ள வாடகை மற்றும் ஏனைய கட்டணங்களை
அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர சபை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சிவப்பு அறிவித்தல்</h2><p>

இதன் அடிப்படையில், ஹட்டன் நகரில் நீண்ட காலமாக வாடகை நிலுவையை செலுத்தாத கடை
உரிமையாளர்களுக்கு பல தடவைகள் அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், இறுதி
எச்சரிக்கையாக சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66f1628d-811f-492a-923d-77d207b44d2a/26-6aa7e67a4c8ed.webp' /></p><p>
</p><p>
எனினும், உரிய காலத்திற்குள் நிலுவைத் தொகையை செலுத்தாத 10 கடைகளுக்கே இன்று
சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகர சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p><p>ஹட்டன்–டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவிக்கையில்,

நகர சபைக்கு சொந்தமான கடைகளில் இருந்து இதுவரை சுமார் 14 கோடி ரூபாய் வரையிலான
வாடகை நிலுவைத் தொகை அறவிடப்பட வேண்டியுள்ளது.</p><h2>நிலுவைத் தொகை</h2><p>&nbsp;நீண்ட காலமாக பெருந்தொகையான வாடகை நிலுவையை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு
பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், நிலுவைத் தொகை
செலுத்தப்படாத நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99e69896-5816-4e04-8aab-e50914791055/26-6aa7e67b27c21.webp' /></p><p>மேலும், சில கடை உரிமையாளர்கள் சீல் வைக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட தொகையை
செலுத்தி, மீதமுள்ள நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம்
கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலநிலையில் வாழ்வாதாரங்களை இழந்த இலங்கை மக்கள் - அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-lost-their-livelihoods-due-el-ni-o-1789387662"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-lost-their-livelihoods-due-el-ni-o-1789387662</id>
            <summary type="text">தற்போது நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், வறட்சி காரணமாக தோட்டச் செய்கைகளுக்குப் போதுமான நீர் கிடைக்காத நிலையில், நிலங்கள் வறண்டு வருவதால் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இதனால், சிலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c5c235c-b35a-4794-97a9-e094068c413f/26-6aa7e3e7f001b.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தென்னைப் பயிர்ச்செய்கை, தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக காய்ந்து போகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தப் பிரச்சினையை அரசாங்க அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கினால் தங்களது வாழ்வாதாரங்களைத் தொடர முடியும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36e1e48e-6565-40a6-865c-dbb4e2c739be/26-6aa7e3e8da45d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலரி மாளிகை வளாகத்தில் விழுந்து கிடந்த றக்பி வீரர் தாஜுதீன்! சிரந்தியால் மூடிமறைக்கப்பட்ட சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851"></link>
            <id>https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851</id>
            <summary type="text">அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த சம்பவத்தை விபத்தாக மாற்றுவதற்கு உதவி செய்தார் என்ற 
திடுக்கிடும் தகவலை புலனாய்வு ஆதரங்களை மேற்கோள் காட்டி இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் லண்டனில் அமைந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><h2>

</h2><p></p><h2>அநுர சேனாநாயக்க என்ன சொன்னார்</h2><p>2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க - மைத்திரிபால இருவருடைய நல்லாட்சியில் தாஜுதீனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு மேல் செல்வதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் இடம் கொடுக்கவில்லை.</p><p>

அண்மையில் இந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>

இதற்கமைய, மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அநுர சேனநாயக்க, தாஜுதீன் வழக்கில் வெலிக்கடை சிறைச்சாலையின் சிறப்புச் செல்லில் இருந்தபோது அவர் கூறியதே இந்த சம்பவமாகும்.
</p><p>
அநுர சேனநாயக்க அன்று காலை உடற்பயிற்சிக்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளை நிற காற்சட்டையும் காலணியும் அணிந்திருந்த வேளையில் “சிரந்தி மேடம்” அழைப்பதாக பொலிஸ் காவலர் ஒருவர் கூறினார்.
</p><p>
அநுர சேனநாயக்க தொலைபேசியை எடுத்தபோது “அநுர நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? விரைவில் வீட்டிற்கு வாருங்கள் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என சிரந்தி ராஜபக்ச கூறினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ecbb19f-52a9-4fb1-a4c3-7f8b02c1f5ab/26-6aa7a5cdaa625.webp' /></p><p>&nbsp;அநுர சேனநாயக்க அந்த ஆடையுடனேயே அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார். 

அங்கு சென்றபோது “ஒரு சம்பவம் நடந்துவிட்டது எமது பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்” என்று சிரந்தி கூறினார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது, ரக்பி வீரர் தாஜுதீன் படுகாயமடைந்து விழுந்து கிடந்தார். அநுர சேனநாயக்க தொட்டுப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.</p><p> 

“சிரந்தி மேடம் இந்த பையன் இறந்துவிட்டான்” என்று கூறியதும் “ஏதாவது செய்யுங்கள் அநுர” எனக் கூறினார். 

உடனடியாக அநுர சேனநாயக்க மேலும் சிலருடன் பேசி உடலை நாரஹேன்பிட்டியில் விபத்து நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு கொண்டு சென்று காரின் சாரதி ஆசனத்திற்குப் பக்கத்தில் (இடது பக்க ஆசனத்தில்) வைத்து சம்பவத்தைச் சித்தரித்துள்ளனர்.
</p><p>
நல்லாட்சியில் தாஜுதீன் கடுமையாக தாக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்றும், விபத்தில் நடந்த மரணம் இல்லை என்றும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>சி.ஐ.டி விசாரணை</h2><p>நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான ஐ.பி. சுமித்த சில்வாவை அழைத்து அநுர சேனநாயக்க இந்த சம்பவத்தை ஒரு வாகன விபத்தாக மாற்றி, கார் தீப்பற்றி எரிந்த காரணத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.</p><p> 



2015-2016 காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபயசேகர நடத்தப்பட்ட விசாரணையில் சுமித்த சில்வா கைது செய்யப்பட்டார்.
</p><p>
அப்போது அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் அநுர சேனநாயக்கவின் வழிகாட்டலிலேயே தான் இதைச் செய்ததாக நீதிவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். </p><p>ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், ஷானி அபயசேகரவும் அவரது குழுவினரும் தன்னைப் பயமுறுத்தியதாலேயே அவ்வாறு கூறியதாக சுமித்த சில்வா மாறுப்பட்ட கருத்தை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8663d16-78b4-4475-bc59-c3c9989329d4/26-6aa7a5ce5f7fc.webp' /></p><p>தற்போதைய நிலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும்போதும் சுமித்த சில்வா எவ்வாறு அவுஸ்திரேலியாவிற்குச் சென்றார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
</p><p>மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட மருத்துவ அதிகாரி ஜேம்ஸ் சமரகோன், அநுர சேனநாயக்க மற்றும் சம்பவ இடத்தை சுத்தம் செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். </p><p>இருப்பினும் தாஜுதீன் கொலைச் சம்பவத்தின் விசாரணைகள் இன்னும் முழுமை பெறவில்லை.</p><p>குறித்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டிருந்தவர்கள் மரணமடைந்துள்ள நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் தகவல்களின் படி மிகவும் பாரதூரமானதாக தோன்றுகிறது.</p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5sC3lP4KtB4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:53:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் கடற்தொழிலாளரின் வலையில் சிக்கிய 300 கிலோகிராம் நிறையுடைய பிரம்மாண்ட கொப்பறா மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/300-kg-koppara-fish-caught-in-mannar-1789386233"></link>
            <id>https://tamilwin.com/article/300-kg-koppara-fish-caught-in-mannar-1789386233</id>
            <summary type="text">மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் இன்று (14.09.2026) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பறா” என அழைக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் இன்று (14.09.2026) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பறா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது.
</p><p>
சுமார் 300 கிலோகிராம் எடையுடைய குறித்த மீன் ஆழ் கடலில் வாழ்ந்து வரும் நிலையில்
குறித்த கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியுள்ளது.</p><h2>அகப்பட்டுள்ள மீன்</h2><p>இது வேகமாக நீந்தக்கூடிய நீளமான
மூக்குடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது.
</p><p>இந்த நிலையில் குறித்த பிரம்மாண்டமான மீன் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்
கவனம் பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T11:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டேலாவுடன் தன்னை ஒப்பிட்ட நாமல் ராஜபக்ச - கொந்தளிப்புடன் பதிலடிக் கொடுத்த நஜித் இந்திக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-compared-himself-to-mandela-1789385996"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-compared-himself-to-mandela-1789385996</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, தன்னை முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, தன்னை முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>

நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுகை தவறு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

தற்போது நாமல் ராஜபக்ச சிறையில் இருப்பதும், அந்தக் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா சிறையில் இருந்ததும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.

“சிலரைச் சிரமங்கள் உடைத்துவிடுகின்றன. ஆனால், மற்றவர்களை அவை மேலும் வலிமையாக்குகின்றன” என நெல்சன் மண்டேலா கூறியதை நாமல் ராஜபக்ச மேற்கோள் காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/605fdbd6-8d28-49df-a1f6-e6114e87af75/26-6aa7dd741ff75.webp' /></p><p>
</p><p>
தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்காக நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். எனினும், நாமல் ராஜபக்ச தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது.
</p><p>
அடக்குமுறை மற்றும் இனவெறி கொண்ட ஓர் அமைப்புக்கு எதிராகப் போராடியதற்காக மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாகி, இனவெறி ஆட்சியிலிருந்து நாடு மாற்றமடைவதற்கு தலைமை தாங்கினார்.</p><h2>

 செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியல்</h2><p>
அதேவேளை, ராஜபக்சர்களின் குடும்ப ஆட்சிக் காலத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டே அவர்கள் செயற்பட்டனர்.

இவ்வாறான நிலையில், நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டுவது மறைந்த அந்த தென்னாப்பிரிக்கத் தலைவருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60ec789a-1231-4d5f-99e7-d7817c66d051/26-6aa7dd74e313c.webp' /></p><p>

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு விசாரணையின் அடிப்படையில், செப்டெம்பர் 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவான CIABOC ஆல் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

அவர் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
விமானக் கொள்முதல் பரிவர்த்தனை தொடர்பான நிதியில், தொழிலதிபர் ஒருவரின் ஊடாக நாமல் ராஜபக்ச 100 மில்லியன் ரூபாயைப் பெற்றதாக CIABOC குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BrahnWpodwE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:42:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வழக்குகளுடன் தொடர்புடைய குழு அநுராதபுரத்தில்! ஒன்றுகூடியவர்களின் பின்னணி தொடர்பில் பிரதி அமைச்சர் கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-minister-arun-hemachandra-1789384164"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-minister-arun-hemachandra-1789384164</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றுகூடியவர்களின் பின்னணி என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய குழுவினரை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றுகூடியவர்களின் பின்னணி என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய குழுவினரை அங்கு காண முடிந்தது என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். </p><p>

தேசிய மக்கள் சக்தியின் சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் மூதூர் தொகுதிக்கான இளைஞர் மாநாடு நேற்று (13.09.2026) மாலை மூதூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. </p><p>

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>மக்களுக்கான ஆட்சி</h2><p> </p><p>

மேலும் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஊழல்வாதிகளிடமிருந்து பொறுப்பேற்ற நாட்டை, எதிர்கால இளைஞர்களுக்கு செழிப்பான நாடாக கையளிக்க வேண்டும். இந்த நாட்டில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இனிமேல் இடமளிக்க முடியாது. எங்களுக்கு வாக்களித்த மக்களின் அரசியல் மாற்றத்தை நாம் செய்தே தீருவோம். 

இது மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி; மக்களுக்கான ஆட்சி. பரம்பரை குடும்ப அரசியலை தோற்கடித்தே தீருவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1cd65ad-fd27-4938-8b2e-b3024a306ec2/26-6aa7dbb51f120.webp' /></p><p> </p><p>கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் பிழையான அரசியல் கலாசாரத்துக்கும் இனவாதத்துக்கும் இனிமேல் இந்த நாட்டில் இடமளிக்கக்கூடாது. இதற்காகவே தூய்மையான மக்கள் நலன் கொண்ட இளைஞர் படையணியை உருவாக்கி வருகின்றோம். அவர்களின் கைகளில் நாட்டை ஒப்படைக்க வேண்டும். </p><p>

இந்த நாட்டில் பல்வேறு சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில், அரசியல் நோக்கங்களுக்காக மக்களிடையே இனவாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கி, இன ஒற்றுமையையும் தேசிய ஐக்கியத்தையும் சீர்குலைத்தனர். எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இனவாத மற்றும் மதவாத அரசியலை மக்கள் தோற்கடித்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை நிறுவினர்.</p><h2>ஊழல் குற்றச்சாட்டு</h2><p> </p><p>

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்க காலத்திலும் அரசியல்வாதிகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை. அந்த அரசியல் கலாசாரத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இனிமேல் அரச சொத்துக்களை களவாடுபவர்களுக்கும் சூறையாடுபவர்களுக்கும் நிச்சயமாக சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7bd86d7-60d5-428b-ac93-b47a4e9b405f/26-6aa7dbb6036db.webp' /></p><p> </p><p>அவ்வாறான புதிய அரசியல் கலாசாரத்தை நாம் நாட்டில் உருவாக்கி வருகின்றோம். 

விசாரணைகளை துரிதப்படுத்தி, நீதித்துறையை வலுப்படுத்தி, சுயாதீனமான நீதித்துறையை பாதுகாத்து கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. உறுதியான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, நாளைய இளைஞர்களிடம் வளமான நாட்டை ஒப்படைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.</p><p> 

2025ஆம் ஆண்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டியுள்ளோம். வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேலும் வலுவான துறையாக மாற்றியுள்ளோம். ஏற்றுமதி பொருளாதாரத்திலும் முக்கியமான முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாகவும் 2025 அமைந்துள்ளது.</p><h2>அநுராதபுர கூட்டம்</h2><p> </p><p>வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன.

மத்திய கிழக்கு மோதல் எமது நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும், அதனை அரசாங்கம் சாமர்த்தியமாக கையாண்டு, அந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccde1e17-ced8-4e55-a65a-f96e9e699e2b/26-6aa7dbb6d2e3e.webp' /></p><p> அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றுகூடியவர்களின் பின்னணி என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய குழுவினரை அங்கு காண முடிந்தது.</p><p> 

‘அடுத்த ஜனாதிபதியாக நாமலே ஆக்குவோம்’ என்ற கோஷத்துடன் அவர்கள் வந்திருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தோற்கடித்து, தங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கமே அவர்களின் அரசியல் ஒன்றுகூடலின் பின்னணியில் காணப்படுகிறது. எத்தகைய வேடம் போட்டாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுடைய அரசாங்கம். அதனை எவராலும் தோற்கடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/255efa8e-cf62-4620-9b05-43566f0f4fa9/26-6aa7dbb7b980e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T11:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலத்தில் தளம்பல் நிலை: நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rainfall-exceeding-sri-lanka-tomorrow-1789384007"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rainfall-exceeding-sri-lanka-tomorrow-1789384007</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கைக்கு அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டின் பல பிரதேசங்களில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கைக்கு அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நாட்டின் பல பிரதேசங்களில் நாளை (15) மழை உடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

இதற்கமைய, நாளைய தினம் மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என்பதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முன்னெச்சரிக்கை</h2><p> </p><p>

குறிப்பாக இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5416f93-901a-4b7a-9a4f-ad698a086bcf/26-6aa7da432f823.webp' /></p><p> 

இது தவிர, நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T11:33:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருள் கண்டுபிடிப்பு - சிறைக்காவலர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drugs-discovered-inside-welikada-prison-1789384377"></link>
            <id>https://tamilwin.com/article/drugs-discovered-inside-welikada-prison-1789384377</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த கைது நடவடிக்கை இன்று(14.09.2026) ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கைது நடவடிக்கை இன்று(14.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறை ஆணையரும் ஊடகப் பேச்சாளருமான எஸ்.கே. பல்லெதென்ன தெரிவித்துள்ளார். </p><h2>


போதைப்பொருள் கடத்தல்</h2><p>

இதன்போது, குறித்த சிறைக்காவலரின் காலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 98 கிராம் ஐஸ் மற்றும் 16 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faad2dae-044d-4c28-9eff-ba396657958a/26-6aa7d6f1132fc.webp' /></p><p>
</p><p>
தொடர்ந்து, சிறை அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, ​​சிறையின் பிரதான நுழைவாயிலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
</p><p>
சந்தேகத்திற்குரிய சிறைக் காவலர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:14:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதி விபத்துக்களில் ஐவர் பரிதாபப் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-killed-tragically-in-road-accidents-1789381477"></link>
            <id>https://tamilwin.com/article/five-killed-tragically-in-road-accidents-1789381477</id>
            <summary type="text">இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று(13.9.2026) இடம்பெற்ற வீதி
விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிந்த, ஹபரணை, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று(13.9.2026) இடம்பெற்ற வீதி
விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

கிரிந்த, ஹபரணை, அனுராதபுரம், மதவாச்சி மற்றும் ஹக்மனை ஆகிய பொலிஸ்
பிரிவுகளிலேயே இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
</p><p>
கிரிந்த - திஸ்ஸமஹாராம வீதியின் விலமுல்ல பகுதியில் நேற்று அதிகாலை வேளையில்
மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி
விபத்துக்குள்ளானது.</p><h2>மேலதிக சிகிச்சை</h2><p> </p><p>இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் தெபரவெவ
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கேக்கிராவைப் பகுதியைச் சேர்ந்த 21
வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக
அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e654ce4a-dc3e-4bda-89bb-19f7323fcdab/26-6aa7d2c8e0484.webp' /></p><p>

ஹபரணை - கந்தளாய் வீதியின் அலுத்ஓய பகுதியில் கந்தளாய் நோக்கிச் சென்ற சொகுசு
கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியுடன் நேருக்கு
நேர் மோதியுள்ளது. </p><p>இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட அஃபோபுரவைப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
அனுராதபுரம் - ரம்பேவ வீதியின் சாலியபுர பகுதியில் பஸ் ஒன்றை முந்திச் செல்ல
முயன்ற மோட்டார் சைக்கிள், அந்த பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/941e6186-7307-48b3-b017-6e0f673f3bbb/26-6aa7d2c99f39d.webp' /></p><p>
</p><p>இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பஸ்ஸின் சக்கரங்களில் சிக்கி சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாலியபுரவைப் பகுதியைச் சேர்ந்த 25
வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த விபத்துக்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T10:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படப் போகின்றாரா.. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது ஏன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-visited-the-hospital-before-arrested-1789382189"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-visited-the-hospital-before-arrested-1789382189</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது&amp;nbsp; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது&nbsp; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாம். கைது செய்யப்படப் போவதை அறிந்தால் அனைவருக்கும் நோய் வந்து விடுகின்றது என்று பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். </p><p>

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>சட்டம் அனைவருக்கும் சமம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

சிறைச்சாலைக்குச் செல்லும் நேரம் நெருங்கும் போதுதான் வைத்தியசாலைக்குச் செல்ல முயற்சி செய்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eab23770-dabe-4df7-930f-f563ad402fa0/26-6aa7d1817e7f7.webp' /></p><p> </p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறுதான். அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. இலங்கையில் புதுமையான முறையில் ஏதாவது நோய் வருகின்றதா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.</p><p>

நாட்டில் தற்போது சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை இவர்கள் புரிந்து கொண்டார்கள். 

முன்னாள் ஜனாதிபதியாகட்டும், இன்னாள் ஜனாதிபதியாகட்டும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும். அதிகாரம் எதுவாக இருந்தாலும் அது பொருட்டல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b52a2e9-8c12-48ee-9124-f81a4c00296d/26-6aa7d18233ad7.webp' /></p><p>

முன்பு கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் இதுபோன்றவர்கள், சிரித்துக் கொண்டே கையசைத்து விட்டு சிறைக்குச் செல்வர். அவர்களுக்கு தெரியும் உடனடியாக வெளியே வந்துவிடலாம் என்று. அப்போதைய அரசாங்கங்கள் இப்படித்தான் சட்டத்தை நடைமுறைப்படுத்தின.</p><p> 

ஆனால், தற்போதைய நிலவரம் அப்படியல்ல. முன்புபோல சிரித்துக் கொண்டு கையசைத்துவிட்டு யாரும் சிறைக்குச் செல்வதில்லை. 

பொதுமன்னிப்பும் கிடையாது, ஜனாதிபதியின் மன்னிப்பும் கிடையாது. காப்பாற்றுவதற்கும் யாரும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T10:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசல் விற்பனையால் நெருக்கடியில் இலங்கை பொருளாதாரம் - மீண்டெழ வழிதேடும் டி.ஜே. ராஜகருணா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-diesel-sales-1789379253"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-diesel-sales-1789379253</id>
            <summary type="text">&amp;nbsp;டீசல் விற்பனையால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டீசல் விற்பனையால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். </p><p>


இன்று(14.09.2026) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றினைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
ஒரு லிட்டருக்கு ரூ. 60 நஷ்டம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

தற்போது எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் ரூ. 60 நஷ்டம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/190baf59-17ad-49a4-943a-403d299cdc1c/26-6aa7d1c83dcfe.webp' /></p><p> </p><p>

கடந்த காலங்களில் சுத்திகரிப்பு மூலம் கிடைத்த இலாபத்தைக் கொண்டு இந்த நஷ்டத்தைச் சமாளிக்க முடியும்.
</p><p>
இருப்பினும், பெட்ரோல் விற்பனை மூலம் எந்தவொரு தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படாது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:52:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வயோதிபப் பெண் கட்டையால் அடித்து படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-woman-death-with-a-piece-of-wood-1789380332"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-woman-death-with-a-piece-of-wood-1789380332</id>
            <summary type="text">அச்சுவேலி- புத்தூர் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் கதவுக்கு
வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அச்சுவேலி- புத்தூர் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் கதவுக்கு
வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் மேற்கு சிவன் கோவில் வீதியிலுள்ள 74 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
வயோதிப தாயும் அவரது மகனும் வாழ்ந்து வந்த நிலையில் மகனின் மகனால் குறித்த
கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9ade597-8f50-43a7-8feb-f0f91037e242/26-6aa7ca49881df.webp' /></p><p>

குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் ஒப்பந்த முறைகேடு - சந்தேக நபராக அறிவிக்கப்பட்டார் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-is-questionable-1789379651"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-is-questionable-1789379651</id>
            <summary type="text">ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் பணமோசடி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் பணமோசடி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, குறித்த சம்பவத்தில் இலஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/W8TkdqfwQtQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதியிடம் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-11th-national-scout-jamboree-1789379189"></link>
            <id>https://tamilwin.com/article/anura-11th-national-scout-jamboree-1789379189</id>
            <summary type="text">இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான&amp;nbsp; அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான&nbsp; அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு கையளிக்கப்பட்டது.
</p><p>இந்நிகழ்வின் போது, உத்தியோகபூர்வ இலச்சினையைக் கொண்ட நினைவுச் சின்னம், தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ்
நாயக்கக்காரவால் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
</p><p>ஹோமாகம், தியகமவில் 2027ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டது.</p><h2>அழைப்பு&nbsp;</h2><p> </p><p>இந்த ஜம்போரியுடன் இணைந்து, இலங்கை சாரணர் இயக்கத்தின் 115ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இடம்பெறவுள்ளது.
</p><p>இந்த தேசிய ஜம்போரியில் சுமார் 10,000 உள்ளூர் சாரணர்களும், வெளிநாடுகளிலிருந்து சுமார் 3,000 சாரணர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86da8f9e-f3b6-4ca9-a6e4-377d37cfbff9/26-6aa7c455c19de.webp' /></p><p>
</p><p>இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனாதிபதியை இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
</p><p>இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொசான கமகே, இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதித் தலைமை ஆணையாளர் சட்டத்தரணி கபில கல்யாண பெரேரா, மன்றக் குழுவின் தலைவர் பொறியியலாளர் கமலநாத் ஜினதாச, ஜம்போரியின் இணை ஏற்பாட்டாளர் ஆணையாளர் பொறியியலாளர் அமில் அபிசுந்தர மற்றும் பல சிரேஷ்ட சாரணர் ஆணையாளர்களும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T09:54:36+00:00</updated>
        </entry>
    </feed>
