<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-20T14:24:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-light-lamps-and-pray-for-anojan-s-release-1789910009"></link>
            <id>https://tamilwin.com/article/people-light-lamps-and-pray-for-anojan-s-release-1789910009</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை
செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை
செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித்
தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.</p><p>

வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று(19) இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச்
சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக்
காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப்
பிரார்த்தனை செய்தனர்.</p><h2>பிரார்த்தனை</h2><p>

அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி
தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மனுவிலும்
மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eba0a6d-ac11-4164-ad1a-396559f03775/26-6aafde6047312.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு மீட்டு வர வேண்டும் என
வலியுறுத்தி கல்முனை, நற்பிட்டிமுனை உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும்
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள்
ஒன்றிணைந்து பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T13:33:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை விடுதலை செய்யக் கோரி யாழில் நாளை மெழுகுவர்த்திப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-updates-tamil-1789909411"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-updates-tamil-1789909411</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி, நாளை (21) மாலை 5 மணிக்கு ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி, நாளை (21) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்திப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மெழுகுவர்த்திப் போராட்டம்</h2><p>
</p><p>
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77821797-d74f-424a-a7e0-180eefb09cd2/26-6aafdc1030ec4.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் இந்த மெழுகுவர்த்திப் போராட்டத்தில் கலந்துகொண்டு அனோஜனுக்கான ஆதரவை வெளிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6e5fdd-e0dc-45fa-bbb7-389dc45e56d6/26-6aafdc1106713.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T13:13:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெக்கிராவை சுதஸ்ஸன தேரர் துறவறத்திலிருந்து நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kekkirawa-sudassana-thero-expelled-monastic-order-1789907930"></link>
            <id>https://tamilwin.com/article/kekkirawa-sudassana-thero-expelled-monastic-order-1789907930</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் பிரதான விமர்சகர்களில் ஒருவரான கெக்கிராவை சுதஸ்ஸன தேரர், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துறவறத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் பிரதான விமர்சகர்களில் ஒருவரான கெக்கிராவை சுதஸ்ஸன தேரர், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துறவறத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கெக்கிராவை சுதஸ்ஸன தேரர், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வர முன்னதாக அக்கட்சியின் தீவிர ஆதரவாளராகவும், பிரச்சாரப் பேச்சாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.</p><p>

எனினும் பின்வந்த காலங்களில் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் பிரதான விமர்சகர்களில் ஒருவராக மாறிப் போயிருந்தார்.</p><h2>பொருத்தமற்ற வார்த்தை</h2><p> அதற்காக அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் பௌத்த துறவிகளுக்கு பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் என்ற விமர்சனமும் எழுந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a82201-51a2-4f1b-ab10-b353fe800026/26-6aafd9b668c7e.webp' /></p><p> </p><p>அதன் காரணமாக அவரை பௌத்த சாசனத்தில் (துறவறத்தில்) இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி ஏந்தியிருந்தனர்.
</p><p>
இவ்வாறான பின்னணியில் பௌத்த தர்மத்தின் சிற்சில நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தியதாக தெரிவித்து, கெக்கிராவை சுதஸ்ஸன தேரரை மகாசங்கத்திலிருந்து -துறவறத்தில் இருந்து- உடனடியாக நீக்குவதாக ராமயண நிகாய உயர்பீடம் அதிரடியாக அறிவித்துள்ளது.</p><h2>பௌத்த நம்பிக்கை</h2><p>
</p><p>
இந்தியாவில் பிறந்த புத்தர் வான் வழியாக இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பதைப் போன்ற சிற்சில பௌத்த நம்பிக்கைகளை குறித்த தேரர் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d1c78b5-c8a0-4433-99ad-b405698e1ddc/26-6aafd7037027d.webp' /></p><p>
</p><p>
அவ்வாறான அவரது தர்மபோதனைகள் பௌத்த மக்களை தவறாக வழிநடத்தும் தன்மை கொண்டவை என்று குற்றம் சாட்டப்பட்டே தற்போது அவர் துறவறத்தில் இருந்து நீக்ககப்பட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையே ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான ராஜாங்கனே சத்தாதிஸ்ஸ தேரரும் தனது காவியுடையைக் களைந்து சாதாரண வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T13:04:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை..! ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-sri-lanka-anura-speech-today-1789908441"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-sri-lanka-anura-speech-today-1789908441</id>
            <summary type="text">ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அக்குரஸ்ஸையில் இன்று (20) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>எரிபொருளின் விலை&nbsp;</h2><p>
</p><p>
சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் அடிப்படையில், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் விலை மற்றும் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் செலவைக் கணக்கிடும்போது, ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711d9c7c-59dd-405e-8bef-d6e23191c2e9/26-6aafd801b5316.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்த விலை உயர்வினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்கள் மீது பெரும் சுமை ஏற்படும்போது, அந்தச் சுமையை முழுமையாக அவர்களிடமே சுமத்த முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் சில உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p><br><br><b><i>You may like this..<br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zo6oa5L9e30" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-20T12:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/liberationof-eelam-tamils-buried-depths-deep-sea-1789904264"></link>
            <id>https://tamilwin.com/article/liberationof-eelam-tamils-buried-depths-deep-sea-1789904264</id>
            <summary type="text">இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன வன்முறை என்பது எழுமாற்றாக நடந்தேறியதோ, அல்லது தற்செயலான சம்பவங்களினால் நடந்ததேறியதோ அல்லவெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன வன்முறை என்பது எழுமாற்றாக நடந்தேறியதோ, அல்லது தற்செயலான சம்பவங்களினால் நடந்ததேறியதோ அல்லவென்றும், அது இலங்கையின் வரலாற்றில் சிங்கள பௌத்தமத எழுச்சியும், மகாவம்சம் என்ற சிங்களவர்களுடைய புனித நூலின் விருப்புவாதமாகிய "தம்மதீப" கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு திட்டமிட்ட முறையில் ஈழத் தமிழர்களை படிப்படியாக இலங்கைத் தீவில் அழிக்கின்ற செயல்முறையே என்பதை அழுத்தம் திருத்தமாக மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை“ என்ற நூல் வரையறை செய்கிறது.</p><p>

இலங்கைத் தீவின் வரலாற்றில் மொழிவழி தேசிய இனங்கள் இரண்டும் தமக்கான அரசை பதினாறாம் நூற்றாண்டு வரை வைத்திருந்தனர். இலங்கைத்தீவின் மீது இந்திய பேரரசர் அசோகர் பௌத்த மதப் படையெடுப்பை செய்தபோதும், வட-கிழக்கு தமிழர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லை.</p><h2>தமிழ் இனப்படுகொலை</h2><p> பௌத்தத்தை வடக்கிலே வரவேற்று அதனை தெற்கே அனுராதபுர அரசுக்கு செல்வதற்கு வழிவிட்டார்கள். அதன் மூலம் பௌத்தம் சிங்கள தேசத்தில் பரவி நிலைபெற்றது. </p><p>அதேபோல பின்னாட்களிலே சேர, சோழர், பாண்டிய, கலிங்கர்கள் படையெடுத்தபோதும் அந்த இந்திய மன்னர்களுக்கு எதிராக ஈழத்தமிழ் மன்னர்கள் வாளேந்தவில்லை. மாறாக அவர்களை வரவேற்று தென்னிலங்கை நோக்கிச் செல்ல வழிகாட்டி அனுப்பினர். இலங்கை வரலாற்றில் தமிழ் மன்னர்கள் யாரும் இந்திய மன்னர்களுடன் போரிட்ட வரலாறு இல்லை.</p><p> 

 தென்னிந்திய மன்னர்களுடன் ஈழத்தமிழர்கள் போரிடாமையும், அவர்களுடன் நட்புரிமை பாராட்டியமையும்தான் மகாநாம தேரர் இந்தியர்களை எதிர்ப்பதோடு, இந்தியப் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நட்பு உறவு கொண்ட ஈழத் தமிழர்களையும் சிங்களவர்களுடைய பொது எதிரியாக வகைப்படுத்தினார். </p><p>இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் கருவிகளாக ஈழத் தமிழர்கள் உள்ளார்கள் என்று மகாநாமதேரர் கருதியமையினால் தமிழர்களை இலங்கைத் தீவிலிருந்து அகற்ற வேண்டும் என்ற இலட்சிவாத நோக்கிலேயே மகாவம்சம் என்ற நூலை எழுதினார். 


தமிழின எதிர்ப்புத்தான் மகாவம்ச நுாலிலே “தம்மதீபக்“ கோட்பாடாக இனக்குரோத மனப்பாங்கோடு எழுதப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd21b256-b823-40ea-b52b-5958bc561fdd/26-6aafcfa51f678.webp' /></p><p> </p><p>இலங்கைத்தீவு பௌத்தத்தை பாதுகாப்பதற்காக புத்தபிரானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு, இலங்கைத்தீவு விஜயனும் அவனுடைய சந்ததிகளுக்கே சொந்தமானது, இலங்கை அரசு சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது என்ற மகாநாமதேரரின் விருப்பு வாதத்தை இலட்சிய வாதமாக மகாவம்ச நுாலினுாடாக சிங்கள மக்களின் மனதிலே பதிய வைத்துவிட்டார்.</p><p> இதன் விளைவாகவே சிங்களதேசம் இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தையே ஈழத்தமிழர் மீது திணித்து தமிழ் இனப்படுகொலையை நடாத்துகிறது.</p><h2>ஈழத்தமிழருடைய இறையாண்மை</h2><p> </p><p>சிங்களதேசத்தின் இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தையே ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டு அழிந்துவருகின்றனர் என்பதையும் இந்த நுால் கோடிட்டுக் காட்டுகிறது.</p><p> 

ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் இந்துசமுத்திரம் என்பதும், பாக்குநீரணை என்பதும் வெறும் மீன்பிடிக் கடலாகவும், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான கடல் போக்குவரத்து மற்றும் ஆள், பொருள், கள்ளக்கடத்தல் கடலாகவுமே இன்றுவரை பார்க்கப்படுகிறது. அதனை ஒரு அரசியல் கடலாக தமிழர்கள் ஒருபோதும் பார்க்கவில்லை. </p><p>ஏன் தமிழீழ விடுதலைக்காக போராடப் புறப்பட்ட எந்த ஒரு போராட்ட இயக்கங்களும் அதனை அரசியல்க் கடலாக பார்க்கவில்லை, தெரிந்திருக்கவுமில்லை. </p><p>அத்தகைய ஒரு கருத்து மண்டலம்தான் ஈழத் தமிழர்கள் மத்தியில் இன்றுவரையும் நிலை பெற்றிருக்கிறது.

ஈழத்தமிழரின் இறுதி அரசான யாழ்ப்பாண நல்லுார் இராசதனியின்மீது 1560, 1591, 1619 ஆகிய மூன்று காலகட்டங்களிலும் போர்த்துக்கேயர்களினால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைப் போர்களின்போதும், தென்னிந்திய நிலத்திலிருந்து பாக்குநீரிணை ஊடாக சேதுபதி மன்னர்களும், குஞ்செலி மரக்காயர்களும், மதுரை நாயக்கர்களும், கரையார்படைகளும்(மறவர்படை) ஈழத் தமிழர்களுக்கு கைகொடுக்க படைகளை அனுப்பினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/681cdfb2-e130-4e34-b30f-6e47c18d8d10/26-6aafcfa5c85e2.webp' /></p><p> ஆயினும் தொடர்ந்து யாழ்ப்பாண இராச்சியத்திற்கு படை உதவி வழங்கல்களை செய்வதற்கு போர்த்துக்கீச கடற்படை பாக்குநீரிணையில் தரித்து நின்று தென்னிந்திய தொடர்பை துண்டித்தமையே நல்லுார் இராச்சியம் வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதானமான காரணமாகும்.
</p><p>
அவ்வாறே 1619ல் நல்லுார் கைப்பற்றப்பட்ட பின்னரும் போத்துக்கேய ஆட்சியை வீழ்த்தி மீண்டும் நல்லுார் அரசை நிறுவற்காக 1620-1621 காலப்பகுதியில் யாழ்ப்பாண உள்ளூர் தலைவர்கள், வல்வெட்டித்துறை கரையார் தலைவர்கள், மற்றும் தஞ்சாவூர் நாயக்கர் படைகள் இணைந்து யாழ்ப்பாண அரியணைக்கு உள்ளூர் இளவரசரை மீண்டும் அமர்த்த பலமுறை கிளர்ச்சிகளை மேற்கொண்டனர்.</p><p> ஆயினும் போர்த்துக்கீச கடற்படை பாக்குநீரிணையில் தரித்து நின்று தென்னிந்திய கடல்வழி வழங்கல்களை துண்டித்தமையே நல்லுார் இராச்சியத்தை மீள்நிறுவ முடியாமைக்கான காரணமாகும். </p><p>ஆகவே தமிழர்களுடைய இறைமை தோற்கடிக்கப்பட்டது தரையில் அல்ல கடலிலேதான். ஈழத்தமிழருடைய இறையாண்மை பாக்கு நீரிணையின் அடியாளத்திலேயே வீழ்த்தப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது.</p><p> எங்கு ஈழத்தமிழனுடைய இறையாண்மை புதைக்கப்பட்டுள்ளதோ, எங்கு வீழ்த்தப்பட்டதோ அந்த பாக்குநீரிணை அரசியலில் இருந்துதான் ஈழத்தமிழரின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாய் ஜனநாயக அரசியலில் தொடர்ந்து தோல்வி அடைவதற்கான காரண காரியங்களை தெரிந்து கொள்ளாமல் வரலாற்றை வெற்றிகரமான பாதையில் ஒருபோதும் இட்டுச் செல்ல முடியாது.</p><h2>முள்ளிவாய்க்கால் மண்</h2><p> </p><p>" வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது" ("History is written by the victors") என்பதற்கிணங்க தொடர் தோல்விகளில் இருந்து விடுபட்டு வெற்றியடைவதற்கான பாதையை ஈழத் தமிழினம் உடனடியாக கண்டறிய வேண்டிய இறுதிக் காலகட்டம் இது.</p><p> கடந்த நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாய் கடலின் அடியாளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்தின் இறையான்மையை தரையில் தேடும் அறிவீனமே இன்றுவரையான ஈழத்தமிழினத்தின் அரசியலாய் உள்ளது.
</p><p>

ஈழத் தமிழர்களின் இறையாண்மை வீழ்ச்சியையும், விடுதலைப் போராட்ட தோல்வியையும் கடலிற்தான் தேடவேண்டும் என்றும், இலங்கைத்தீவை ஆக்கிரமித்து, ஆளவந்த அந்நியர்களும், தற்போது ஆண்டு கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் தமிழ் மக்களுடைய உரிமைகளை கடலிலே புதைத்து விட்டார்கள் என இந்நுால் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44691107-0ef3-45bb-9316-652420315350/26-6aafcfa681866.webp' /></p><p> </p><p>புவியியல் எதார்த்தத்தில் காணப்படும் கடல்சார் அரசியலின் ஆணிவேரிலிருந்து முற்றிலும் அறிவார்ந்த வகையில் ஈழத் தமிழரின் கடந்தகால தோல்விகளுக்கான அடிச்சுவடுகளையும், எதிர்கால வெற்றிகளுக்கு தகுந்த வழிவரை படத்தையும் இந்நுாலில் வரையப்பட்டுள்ளது.</p><p> இந்நூலாசிரியரின் கடந்த 40 ஆண்டு கால எழுத்துக்கள் அனைத்திலும் இந்த கடல் சார்ந்த அரசியல் நீரோட்டம் அப்படியே தெளிவாய் தொடர்ந்து ஓடுகிறது.

கடலிலே புதைக்கப்பட்ட தமிழர்களுடைய இறையாண்மையையும், சுதந்திரத்தையும், இனவிடுதலையையும் குறிப்பாக பாக்குநீரிணைக் கடலிலேதான் தேடவேண்டும் என்கிறாது இந்நுால். </p><p>அறிஞர்களுடைய நூல்களில் எழுதப்பட்ட வரிகளைவிட அந்த எழுதப்பட்ட வரிகளுக்கிடையே தெறித்துக்கொண்டு தொக்குநிற்கும் எழுதப்படாத வரிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பர்.</p><p> அவ்வாறே இந்நுாலும் எழுதப்பட்டவைகளுக்கு இடையே தொக்குநிற்கும் எழுதப்படாத வரிகள் ஆய்வு கலையின் மிகமுக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் பிரயோகம்.

ஈழத்தமிழர்கள் பாக்குநீரிணையில் இழந்துபோன இறைமையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தெரிந்தோ, தெரியாமலோ பாக்கு நீரிணை ஊடாகவே ஆரம்பித்தனர். </p><p>ஆயினும் ஈழத் தமிழர்கள் பாக்குநீரிணையின் முக்கியத்துவத்தை தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்ற துயரகரமான உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.</p><p> அந்தப் புரிதல் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படாததன் விளைவுதான் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது. ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது என்பது முள்ளிவாய்க்கால் மண்ணிலல்ல. </p><p>போராட்டம் தோல்வி அடைந்தது முதலாவது பாக்கு நீரிணையில், இறுதியாக தோல்வியடைந்தது இந்து சமுத்திரத்தில். ஆக மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்தது தரையிலல்ல அது கடலில்த்தான்.</p><p> இந்த தத்துவார்த்த உண்மை புரியாத வரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியாது என இந்நுால் கூறுகிறது. 

தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பின்தளமாக ஆரம்ப காலத்தில் தமிழகமே இருந்து வந்தது. தமிழகத்தின் பிந்தளத்தை ஈழத்தமிழர்கள் இழந்த பின்னரும் பாக்குநீரிணையின் முக்கியத்துவம் கருத்திற் கொள்ளப்படவில்லை. </p><p>மாறாக இந்து சமுத்திரம் எங்கள் கையில் உள்ளது என்று ஈழத் தமிழர்கள் நம்பினர். ஆயினும் மாறிவரும் உலக அரசியல் ஒழுங்கில் இந்துசமுத்திரத்தில் ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை 2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கையிலிருந்து 2006 வரையான நான்கு ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுத வழங்களைச் செய்த விடுதலைப் போராட்டத்திற்கு சொந்தமான 9 கப்பல்கள் இந்து சமுத்திரத்திலே தாக்கி அழிக்கப்பட்டன. அவற்றில் மூன்று கப்பல்களைத் தவிர ஏனைய கப்பல்கள் உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் தாக்குதல்களினாலேயே அழிக்கப்பட்டன.</p><h2>ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு</h2><p> மூன்று கப்பல்கள் மாத்திரமே இலங்கை கடற்படையால் அழிக்கப்பட்டது என்ற உண்மையை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழிழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்பது கடலிலே என்றால் நாம் அந்த கடலை எவ்வாறு கையாள வேண்டும்? என்பதைப் பற்றி நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.</p><p> விடுதலைப் போராட்டம் இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டுவிட்டது என்றால் அங்கிருந்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். ஆகவே ஈழத் தமிழர்கள் கடலை கையாள கற்றுக்கொள்ளவில்லை என்றால், வெற்றிக்கான பாதையை நாம் கண்டறியவில்லை என்பதே அர்த்தமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be6cfefa-a886-4f54-b28b-4809d55ad3c5/26-6aafcfa737e25.webp' /></p><p> 


ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு பாக்குநீரிணையும், இந்துசமுத்திர அரசியலும் அச்சாணியாக உள்ளது என்பதனால் அந்த பார்க்குநீரிணையையும், இந்துசமுத்துவத்தையும் இணைத்த ஒருங்கிணைந்த கடல்சார் அரசியலை தமிழ் மக்கள் முன்னெடுப்பதுதான் விடுதலைக்கான ஒரேவழி. “கடலை நம்மால் கையாளமுடியவில்லை என்றால் ஈழத் தமிழர்களுக்கு இலங்கை தீவில் எதுவும் மிஞ்சாது“ என்ற எழுதப்படாத அந்த தொக்குநிற்கும் வரிகளை அடிநாதமாக கொண்டிதிருப்பதுதான் இந்நூலின் விசேட பண்பாகும்.</p><p>

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்ட ரீதியில் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக தத்துவார்த்த ரீதியில், வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த அத்தனை விடயங்களையும் உள்ளடக்கி இந்நுாலில் பதிவுசெய்கிறது. மாக்ஸியத்தை புரிந்துகொள்வதற்கு மாக்ஸ்சை பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். </p><p>அதேபோல இந்த நூலை புரிந்து கொள்வதற்கு மு.திருநாவுக்கரசு அவர்களின் ஈழப் போராட்டம் சார்ந்த அவரின் வகிபாகமும், அவருடைய ஈழப் போராட்டம் சார்ந்த தரிசனங்களை தத்துவார்த்த ரீதியிலும், வரலாற்று ரீதியிலும், தீர்க்க தரிசனத்தோடு அவர் எழுதிய 20க்கு மேற்பட்ட நூல்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமானது.</p><p>

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சார்ந்தும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சார்ந்தும் தீர்க்கமான முடிவுகளை சொல்லவல்ல இந்நுாலாசிரியர் ஈழப் போராட்டம் காலத்திற்குகாலம் சந்தித்த பல்வேறு நெருக்கடிகளுக்கு அக்காலகட்டத்திலேயே அவற்றிற்கான தீர்வுகளை மிகத்தீர்க்கமாக முன்வைத்ததில் முதன்மையானவர்.</p><h2>&nbsp;மத்திய கிழக்கின் யுத்தம்</h2><p> </p><p>ஈழத்தமிழ் மக்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் போராட்டம் நெருக்கடிகளை சந்தித்த காலங்களில் எல்லாம் நெருக்கடிகளை தீர்க்கவல்ல அறிவியல் சார்ந்தும், தத்துவார்த்தம் சார்ந்தும் தனது முடிவுகளை அவரது நூல்களின் மூலமாக வெளிப்படுத்தியவர். 

இலங்கையின் இனப்பிரச்சினை சார்ந்து அறிய வேண்டுமானால், ஆய்வு செய்ய வேண்டுமானால் திருநாவுக்கரசை கடந்து அல்லது அவரை தவிர்த்து, அவர்களுடைய நூல்களை வாசித்தறியாமல் ஈழப் பிரச்சனை பற்றி முழுமையாக ஆய்வு செய்திட முடியாது.</p><p> அத்தகைவரால் எழுதப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்ற இந்நூலினுாடாக ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழிமுறையை அழுத்தம் திருத்தமாக தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளார்.</p><p> இதனை குத்தச்சாக் கொண்டே ஈழத் தமிழரின் விடிவுக்கான அரசியல் ஒளிவட்டத்தை தரிசிக்க வேண்டும் என்பதில் அணு அளவும் சந்தேகமில்லை. 

இற்றைக்கு 2400 வருடங்களுக்கு முன்னர் கிரேக்கத்தில் பிளேட்டோ எழுதிய குடியரசு நூல் உலகளாவிய கண்ணோட்டத்தில் பிரபஞ்சம் தழுவிய ரீதியில் மனிதன் பற்றிய பார்வையை மிகத் தெளிவாகச் சொல்கிறது. தொடர்ந்து காலத்துக்கு காலம் பல்வேறு நூல்கள் உலகம், பிரபஞ்சம், மனிதன் பற்றியய நோக்கில் எழுந்திருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b09d05d4-17be-4fea-bc89-e98c2f0b9903/26-6aafcfa89c86d.webp' /></p><p> </p><p>அந்த அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் ராகுல சங்குத்தியா எழுதிய “வொல்கா முதல் கங்கை வரை“ என்ற நூல் ஒரு முழுநீள மனிதகுல வரலாற்றை சொல்கிறது. </p><p>அவ்வாறே அண்மைய காலங்களில் பிரான்சிஸ் புக்குஜாமா(Francis Fukuyama) எழுதிய The Origins of Political Order (2011). இதன் தொடர்ச்சியாக Political Order and Political Decay (2014) ஆகிய இரண்டும் நூல்களிலும் பிரபஞ்சம் தழுவிய மனிதகுல அரசியல் ஆதிக்க வரலாற்று வளர்ச்சியை விரிவாகப் பார்க்கலாம். 

அத்தகை உலகப்பிரசித்தி பெற்ற நுால்களுக்கு சற்றும் குறைவின்றி காத்திரமான வகிவாகத்தை கொண்டதாக 2015ல் மு.திருநாவுக்குக்கரசு எழுதிய “பூகோள வாதமும் புதியதேசியவாதமும்“ என்ற நூல் அமைகிறது. </p><p>இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் போராட்ட நோக்கு நிலையில் இருந்துகொண்டு, உலகம் தழுவிய பார்வையில் அண்டப் பிரபஞ்ச உணர்வோடும், மனித குலவரலாற்றுப் படிமங்களோடும், வரலாற்றையும், தத்துவங்களையும், கோட்பாடுகளையும், மனித குலத்தின் வெற்றிகளையும், தோல்விகளையும், உயர்வுகளையும், தாழ்வுகளையும், சீரழிவுகளையும், நீதி நியாயங்களையும் மனிதகுலம் கடந்து வந்த பாதையில் அதன் எழுச்சிகளை, வீழ்ச்சிகளை, நல்லவைகள், கெட்டவைகள் அனைத்தையும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான பாதைக்கு வழிசமைக்கும் நோக்கில் உலகம் தழுவிய பார்வையில் மனிதகுல வரலாற்றையும் அந்த வரலாற்றுக்குள் அடங்குகின்ற ஈழத் தமிழர் போராட்டத்தையும் ரத்தமும் சதையுமாக நடைமுறை சார்ந்து ஈழப் போராட்டத்தின் நோக்கு நிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களிடம் “புதிய தேசியவாத“ என்ற கருத்தியலை துணிந்து முன் வைத்துள்ளார். </p><p>இந்நூல் ஈழத் தமிழர்களுடைய அறிவியல் வளர்ச்சியின் முதிர்ச்சிக்கு சான்றாகவும் அமைந்துள்ளது.
</p><p>
அதேபோன்று “ஒற்றைமைய உலகில் போரும் சமாதானமும்“ என்ற நூல் கடந்த ஒரு நூற்றாண்டு கால தத்துவம், அரசியல், பொருளாதாரம், யுத்தம் என்பவற்றை முற்றிலும் தத்துவார்த்த கண்ணோட்டத்தில் நடைமுறை சார்ந்த ரீதியில் “மத்திய கிழக்கில் மேற்குலகின் அழித்தொழிப்பு யுத்தம்“ என துணிந்து தன் கருத்துக்களை தீர்க்கதரிசனத்தோடு முன்வைத்திருக்கிறார். குறிப்பாக இன்றைய மத்திய கிழக்கின் யுத்தத்தை 20 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த நூலில் நுண்மான் நுழைபுலனோடு முன்வைத்திருக்கிறார்.</p><p>விருப்பு வெறுப்புகளை கடந்து மார்க்சிசத்தையும் கம்யூனிசியத்தையும் சரிவர எடை போடுவதோடு அவற்றிடையே உள்ள குறைபாடுகளை துணிந்து சொல்கிறது. கால் மார்க்ஸ் இந்த பிரபஞ்சத்தின் தன்னிகரற்ற தத்துவ ஞானிதான் ஆயினும் அவருடைய தத்துவத்தில் உள்ள சரி-பிழைகளை, குறைபாடுகளை நடைமுறை சார்ந்து முன்வைக்கிறது. </p><p>இத்தகைய மிக காத்திரமான அந்த நூல் பலராலும் வாசிக்கப்பட்டாலும் அது பற்றி பொதுவெளியில் பெரியளவில் பேசப்படாமல் உள்ளது என்பது ஈழத் தமிழர் சார்ந்த அறிவியலின் துரதிஷ்டமான பக்கங்களே. ஆயினும் அந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் அதன் கனதியும் காத்திரமும் அதிகரிக்கும் என நம்பலாம்.</p><h2>இந்துமாகடலின் அடி ஆழம்</h2><p> </p><p>இத்தகைய ஒர் அறிய நூலை எழுதியவர்தான் தற்போது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்ற இந்நூலை எழுதுகின்ற போது அதற்கான பார்வையும், பரிமாணமும், தனித்துவமும், கனதியும் கனகாத்திரமாக இருக்கும் என நம்பலாம்.

"ஒரு சமூகத்தின் அறிவியல் கொள்ளளவு என்னவோ அதற்குள் இருந்துதான் அச்சமுகத்தினுடைய சமூக பிரதிநிதிகளும், தலைவர்களும் தோன்றுவர். </p><p>ஒரு சமூகத்தின் அறிவியல் மட்டம் என்னவோ அந்த மட்டத்துக்கு உட்பட்டுதான் அச்சமுகத்தினுடைய அறிஞர்களும், ஞானிகளும், தீர்க்கதரிசிகளும் தோன்றுவர். விதிவிலக்காக தமிழினத்திலும் இந்நுாலாசிரியர் போன்று ஓரிருவர் அந்த கொள்ளளவை தாண்டியும், விஞ்சியும் தோன்றியிருக்கிறார்கள். ஆயினும் அறிவியல் மடடத்தை விஞ்சித் தோன்றுவது என்பதும் அரிதினும் அரிதே.</p><p> கடந்துபோன இறந்தகாலத்தை போற்றிப் புகழ்ந்து பேசி காலத்தைக் கழிக்கும் ஒரு இனத்திலிருந்து எப்படி முற்போக்கு சிந்தனையை எதிர்பார்க்க முடியும்? எப்படி எதிர்காலத்தைப் பற்றி அவர்களால் சிந்திக்க முடியும்? அறிவியலையும், சிந்தனையையும் கடந்தகாலம் புகழ்ச்சியினால் காயடிக்கும் தமிழ்ச்சமூகம் அறிவியலில் முன்னேறுவது மிகக்கடினமானது. </p><p>

அறிவியல் வளர்ச்சி எதிர்க்கணிய வளர்ச்சியடைந்து அறிவியலில் வறுமைப்பட்ட தமிழ்ச் சமுகத்தை தலைமைதாங்க எந்த ஒரு அறிவார்ந்த முற்போக்காளனும் முன்வரமாட்டான் என்பது மட்டுமல்ல அதற்கு அந்த சமூகத்தின் முட்டாள் பிரமுவர்களும் அனுமதிக்க மாட்டார்கள். </p><p>அதையும் மீறி தமிழ்ச் சமூகத்தை அறிவியல் மயப்படுத்த முனையும் முற்போக்காளர்களை தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களினால் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிடுவர். இத்தகைய சூழ்நிலையில் ஓடுகாலிகளே தலைமை தாங்க முன்வருவர். அந்த ஓடுகாலிகளுக்கு புகழாரம் சூட்டி புகழ்ந்து பேசுவதற்கு ஆயிரம் முட்டாள்கள் ஒன்று சேர்வர். அந்த முட்டாள் கூட்டம் அறிவியளாலர்கள் மீது கல்லெறிந்து சமூகத்திலிருந்து தூரத்தூரத்திவிடுவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70358a82-34ba-4d6b-adeb-3ade34fe0d3e/26-6aafcfa7e4b94.webp' /></p><p> அத்தகைய போக்கைக் கொண்ட ஈழதமிழர்களை தோல்வியடைந்த சமூகமாக உலகம் அடையாளப்படுத்துவதில் தவறில்லைத்தான்.</p><p>

இன்று ஈழத்தமிழர்களால் பேசப்படக்கூடிய ஆயிரம் பெருமகளுக்கும் புகழ்ச்சிகளுக்கும் அப்பால் நிஜவாழ்வில் எதிரிகளின் காலடிகளில் அடிமைகளாக வீழ்ந்து கிடப்பதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்த தலைவர் என்று கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாய் எவரும் இல்லை என்பதே நடைமுறை உண்மையாகும்.
</p><p>
இந்துமாகடலின் அடி ஆழத்துக்குள் மூழ்கிப் புதைந்துபோன துயரகரமான தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றக்கொள்ளாமல் ஒருபோதும் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையை கண்டறிய முடியாது என்பதை இந்த நூல் முற்றிலும் அறிவார்ந்த வகையில் படம்பிடித்துக் காட்டுகிறது. </p><p>அளவால் சிறிதாக இருந்தாலும் இந்நூல் முன்வைக்கும் ஆழமான பார்வையையும், கடல்சார் அரசியல் வழிகாட்டலையும் பின்பற்றாமல் ஈழத்தமிழர்களுக்கு விடுதலைக்கான வேறு மார்க்கங்கள் எதுவுமே இல்லை என்பதை திடசித்தத்துடன் கூறிட முடியும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T12:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-meet-khaled-nasser-sulaiman-alameri-1789904227"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-meet-khaled-nasser-sulaiman-alameri-1789904227</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான
தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.க...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான
தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(20.9.2026)இந்தச் சந்திப்பு
நடைபெற்றது.</p><p>

இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது
விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p><h2>புதிய துறை</h2><p>
</p><p>
வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளும்
இணைந்து செயற்படக்கூடிய புதிய துறைகளைக் கண்டறிவது குறித்தும் விரிவாக
ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c82ad19-aa94-4603-a6e6-329d8341de59/26-6aafc85f3bd7d.webp' /></p><p>
</p><p>
சுற்றுலா மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் நிலவும் ஒத்துழைப்பைக்
கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் குறித்தும், அண்மைக் காலத்தில் நடைபெற்ற
பேச்சுகள் ஏற்படுத்தியுள்ள விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள்
குறித்தும் இதன்போது பேசப்பட்டன.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி
விலைகளில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும், அது இலங்கையின்
பொருளாதாரத்துக்கும் நுகர்வோருக்கும் எந்த வகைகளில் தாக்கங்களைச் செலுத்தும்
என்பது குறித்தும் இரு தரப்பினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தினர்.</p><h2>பொருளாதார வாய்ப்பு</h2><p>
</p><p>
பிராந்தியத்தில் எழுந்துள்ள தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளுக்கு மத்தியில்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும்
அவர்களின் சீரான வாழ்வுரிமை தொடர்பாகவும் பல முக்கிய கருத்துக்கள் பரிமாறிக்
கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/237c5851-323b-4ad7-8352-ea27a5d4825d/26-6aafc85e67a4a.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் கணிசமான அளவிலான இலங்கைச் சமூகம் அந்த
நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆற்றிவரும் பங்களிப்புகளும் இதன்போது
பாராட்டப்பட்டன.
</p><p>
இரு நாடுகளுக்கும் அதிக பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில்
நெருக்கமான உறவுகளைப் பேணுவதன் மற்றும் புதிய ஒத்துழைப்பு வழிகளைக் கண்டறிவதன்
அவசியத்தை இரு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T12:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வெளியே சக்திவாய்ந்த தமிழ் புலம்பெயர் சமூகம்! தோல்வியை பகிரங்கமாக வெளிப்படுத்திய மொட்டுக்கட்சி முக்கியஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/geneva-human-rights-convention-2026-slpp-1789864461"></link>
            <id>https://tamilwin.com/article/geneva-human-rights-convention-2026-slpp-1789864461</id>
            <summary type="text">இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஒரு தமிழ் புலம்பெயர் சமூகம் (Diaspora) இருக்கின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தை விடவும் சக்திவாய்ந்த சமூகமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஒரு தமிழ் புலம்பெயர் சமூகம் (Diaspora) இருக்கின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தை விடவும் சக்திவாய்ந்த சமூகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் திகழ்கிறார்கள் என நாமல் ராஜபக்சவின் விடுதலைக்காக ஜெனீவா சென்றதாக பேசப்பட்ட மொட்டுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் நாமலின் நெருங்கிய நண்பருமான மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>ஜெனீவா சென்று வந்த பின்னர் வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் அவர் தொடர்ந்து பேசியதாவது. </p><h2> 
</h2><p></p><h2>ஜெனீவாவில் நடந்த பெனல் கலந்துரையாடல்</h2><p>தமிழின படுகொலை மற்றும் தமிழீழத்திற்கான போராட்டத்தில் அவர்களின் பெரும் முயற்சியை நான் ஜெனீவாவில் 2022 இலும் பார்த்தேன். அந்த விடயத்தில் நாம் இப்போது தோற்றுப்போயிருக்கிறோம். </p><p>நான் கலந்துகொண்ட ஒரு விவாத அரங்கில் (Panel Discussion), "துர்கா" என்ற பெண் தமிழின படுகொலை தொடர்பில் பேசினார். அவர் மிகவும் புத்திசாலி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். </p><p>அவரைப் போல மூன்று நான்கு தமிழ் யுவதிகள் பேசினார்கள். அவர்கள் ஒரு வகையில் "சிறிய லக்ஷ்மன் கதிர்காமர்" போன்றவர்கள் அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் அதாவது பிரிவினைவாத கோட்பாட்டில்.
</p><p>அவர்களுடன் போட்டியிட அல்லது மோத வேண்டுமானால், நமது தேசியவாதக் முகாமிலிருந்தும் (Nationalist camp) ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், லண்டன் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் போன்ற சிறந்த இடத்தில் பயின்ற, திறமையான, புத்திசாலித்தனமான, இந்த கருத்தியலைச் சரியாகப் புரிந்துகொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும். </p><p>அது உடனடியாக நடக்கக்கூடிய ஒன்றல்ல.
ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தே அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் சில ஆளுமைகளை உருவாக்கினார்கள் . </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf9e17d5-ef51-40e3-9084-61b7ad08f1b5/26-6aaf2a0f8db0a.webp' /></p><p>உதாரணமாக இப்போது கனடாவில் கெரி ஆனந்தசங்கரி அமைச்சராக இருக்கிறார். 
இப்போது அவர்கள் இருக்கும் நாட்டில் இரண்டு மூன்று அரசியல் கட்சிகள் இருந்தால், அந்த எல்லா கட்சிகளிலுமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானர்கள் இருக்கிறார்கள். </p><p>அதனால் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. 
எனவே இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட (Organized) ஒரு விடயம். </p><p>இதற்கு முகங்கொடுப்பது எப்படி என்பது குறித்து நாம் தனியாகப் பேச வேண்டும். பல்கலைக்கழகங்களில் பயின்ற, தேசியவாதச் சிந்தனையுள்ள புத்திசாலி இளைஞர்களாகிய உங்களுக்கு இதை முன்னெடுத்துச் செல்வதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.</p><p>இலங்கையின் மனித உரிமைகள் அறிக்கை என்பது ஒவ்வொருவரும் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T11:40:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disposal-of-hazardous-medical-waste-keerimalai-1789902589"></link>
            <id>https://tamilwin.com/article/disposal-of-hazardous-medical-waste-keerimalai-1789902589</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில்
கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு
மாகாண உள்ளூராட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில்
கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு
மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து,
குறித்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது.</p><p>கீரிமலையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில்
முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், அது தொடர்பான தகவல்கள் சமூக
வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன.
</p><p>
இதனையடுத்து, வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் நேற்று (19.09.2026)
சனிக்கிழமை, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை
அன்றைய தினத்துக்குள் அகற்றுமாறும், அவை தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் வலிகாமம்
வடக்கு பிரதேச சபையிடம் கோரப்பட்டிருந்தது.</p><h2>மருத்துவக் கழிவுகள்</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள்
அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின்
செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
</p><p>
சுகாதாரத் துறை சார்ந்த கழிவுகளை முறையற்ற வகையில் கையாளுதல் என்பது பொதுச்
சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக
இருப்பதால், அவற்றை முறையான வகையில் சேகரித்து, பிரித்து, பாதுகாப்பாகக்
கையாள்வதும் இறுதியாக உரிய முறையில் அகற்றுவதும் அவசியமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd37c2a-2c60-4b3c-91fd-50e2e5799034/26-6aafc3084c393.webp' /></p><p> </p><p>இலங்கை
சுகாதார அமைச்சின் தேசிய சுகாதாரக் கழிவு முகாமைத்துவத் திட்டமும், சுகாதாரக்
கழிவுகளை முறையாகக் கையாளாதது நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள்
மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிடுவதுடன்,
கழிவுகளைப் பிரித்தல், பொதியிடுதல், கையாளுதல், சேமித்தல், சிகிச்சையளித்தல்
மற்றும் அகற்றுதல் ஆகியவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.
</p><p>
மேலும், சுகாதார நிலையங்களால் உருவாக்கப்படும் மருத்துவக் கழிவுகள் இறுதி
அகற்றல் வரை முறையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதும் சுகாதார அமைச்சின்
வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் வெளியாகும் 22ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/supreme-court-s-determination-22nd-amendment-bill-1789902865"></link>
            <id>https://tamilwin.com/article/supreme-court-s-determination-22nd-amendment-bill-1789902865</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றுமுன்தினம்(18) வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு
அனுப்பி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றுமுன்தினம்(18) வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பைச் சபாநாயகர் ஜகத்
விக்ரமரத்ன நாளைமறுதினம்(22) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில்
உத்தியோகபூர்வமாகப் பகிரங்கப்படுத்துவார்.</p><h2>&nbsp;22 ஆவது திருத்தச் சட்டமூலம்&nbsp;</h2><p>

இதனைத் தொடர்ந்து, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதமானது எதிர்வரும்
செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் (வியாழன், வெள்ளி) நாடாளுமன்றத்தில்
நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/163b59fc-61dc-4d31-b22a-2e9167283726/26-6aafc32ba7759.webp' /></p><p>

இதேவேளை, ஊழல் ஒழிப்புச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான மனுக்கள் மீதான
தீர்ப்பும் உயர்நீதிமன்றத்தால் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று
தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1789901243"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1789901243</id>
            <summary type="text">செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் நடைபெறலாம் என என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&amp;nbsp;உலக சந்தையில் எரிபொருள் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் நடைபெறலாம் என என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் திருத்தி அமைக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

காலி பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிபொருள் விலை இன்னும் அதிகமாக இருப்பதால், மேலும் விலை உயர்வை மக்களால் தாங்க முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் விவாதம் நடைபெற்று வருவதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:13:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522"></link>
            <id>https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522</id>
            <summary type="text">கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்&nbsp;</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிரேன்ட்பாஸ், கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/297e803a-1910-4394-9a0a-3c5af0b52e15/26-6aafbcfa51686.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 39 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,&nbsp; குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுக்கு தயாராகும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-for-fuel-subsidy-amid-rising-prices-1789900149"></link>
            <id>https://tamilwin.com/article/imf-for-fuel-subsidy-amid-rising-prices-1789900149</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத் திட்டமொன்றை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நாளிதழ் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நிலைமையை கருத்திற்கொண்டு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>எரிபொருள் விலைகள்</h2><p>
</p><p>
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் இராணுவ பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.</p><p>

இந்த நிலையில், அதிகரித்து வரும் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஐஎம்எப் உடனான கலந்துரையாடல்கள் அவசரமாக ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee47dea-e562-44b4-81f4-a22fa7bc4b7f/26-6aafb9f53c1c1.webp' /></p><p>
</p><p>
எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்தால், அது பொதுமக்கள் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதுடன், தொழிற்துறை நடவடிக்கைகள், மின்சார உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனவே, தற்போதைய நிலைமை சீராகும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குவது தொடர்பில் ஐஎம்எப் உடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
</p><p>
மேற்கு ஆசிய நெருக்கடியால் எரிசக்தித் துறை கடும் அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 100 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணத் திட்டத்தை அறிவித்திருந்தது.

அதன் கீழ், ஒரு லீற்றர் டீசலுக்கு அதிகபட்சமாக 100 ரூபாவும், பெட்ரோலுக்கு 20 ரூபாவும் மானியம் வழங்கப்பட்டது.</p><h2>&nbsp;எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை</h2><p> 

இதற்காக மூன்று மாத காலப்பகுதியில் திறைசேரிக்கு சுமார் 60 பில்லியன் ரூபா செலவாகியிருந்தது. இந்த நிவாரணத் திட்டம் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் நிறைவடைந்தது.
</p><p>
இதேவேளை, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் ஐஎம்எப் முக்கிய நிபந்தனையொன்றை விதித்துள்ளது.
</p><p>
 அதன்படி, எரிபொருள் விலைகள் உண்மையான செலவு மாற்றங்களை பிரதிபலிக்கும் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0cffb8a-2892-4af4-8020-10a46194b258/26-6aafb9f47cae0.webp' /></p><p>

எனினும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதுடன், கட்டுமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளும் உயர்ந்துள்ளதால், தற்போதைய விலை மட்டத்தில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிப்பது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.
</p><p>
குறிப்பாக, தற்போது ஒரு லீற்றர் டீசலுக்கு சுமார் 100 ரூபா நட்டத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள், டீசல் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:48:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/release-of-lands-in-valikamam-north-npp-1789898903"></link>
            <id>https://tamilwin.com/article/release-of-lands-in-valikamam-north-npp-1789898903</id>
            <summary type="text">மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட நாடகம் ஆடுவதாக பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து
கொண்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
</p><p>இன்றையதினம்(20.9.2026)பலாலி காணி விடுவிப்பு கோரி மக்கள் போராட்டம் 14ஆவது வாரமாக
இடம்பெற்ற நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்
இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
</p><p>
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து
17 வருடங்கள் கடக்கின்ற நிலையில் எமது நிலத்தை விட்டு சென்று 35 வருடங்கள்
கடக்கின்றது.</p><h2>வாக்குறுதி</h2><p>

இன்றும் நாம் அனாதைகளாக வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் எங்களின்
வளமான காணிகளுக்குள் இராணுவம் விவசாயம் செய்து மேலதிக வருமானத்தை உழைத்து
வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c858ab6b-8f82-4906-9896-2c2ce35eb3b6/26-6aafb9304f05a.webp' /></p><p>

தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி
தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள மக்களின்
காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.

கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இரண்டு வருடங்கள் கடந்து
விட்டது.&nbsp;</p><h2>கோரிக்கை</h2><p>கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ்
மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கிய நிலையில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை
உதாசீனம் செய்துவருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98f6f315-676c-4a7e-9ef6-c78cf3425299/26-6aafb9313327d.webp' /></p><p>
</p><p>
கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம் மிகக் குறைவான
காணிகளை விடுவித்துள்ள நிலையில் வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற
வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-sluice-gates-several-reservoirs-opened-1789900393"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-sluice-gates-several-reservoirs-opened-1789900393</id>
            <summary type="text">நுரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து
வருகிறது.&amp;nbsp;இந்நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து
வருகிறது.&nbsp;</p><p>இந்நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும்
கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.</p><h2>கடும் மழை..&nbsp;</h2><p>
குறித்த நீர்த்தேக்கத்தில் ஒரு செக்கனுக்கு சுமார் 80 கன அடி நீர்
வெளியேற்றப்படுவதாகவும் எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கு கீழ்
தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என
நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ebea32f-5c6f-43b9-b9ff-560d016d1d99/26-6aafb8df8fb85.webp' /></p><p>
</p><p>தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர, காசல்ரி, மவுசாகலை, கெனியோன்
லக்சபான, பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வேகமாக
உயர்ந்து வருவதாகவும் எனவே நீர்த்தேக்களுக்கு கீழ் பகுதியில் வாழும் மக்கள்
மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலைய
தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>இதேவேளை மழை தொடரச்சியாக பெய்து வருவதனால் டெவோன் சென்கிளையார் ஆகிய நீர்
வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்துள்ளது. எனவே இந்த நீர்
வீழ்ச்சிகளுக்கு அருகாமையில் செல்வதனை தவிர்த்து கொள்வதன் மூலம் விபத்துக்களை
தவிர்த்துக்கொள்ளலாம் என பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:44:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக முதல் மரணம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-death-due-to-heavy-rain-1789899285"></link>
            <id>https://tamilwin.com/article/first-death-due-to-heavy-rain-1789899285</id>
            <summary type="text">இன்று பெய்த கனமழையினால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததன் காரணமாக ரிட்டிகஹ ஓயாவில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அம்பகலவைச் சேர்ந்த 44 வயதுடைய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று பெய்த கனமழையினால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததன் காரணமாக ரிட்டிகஹ ஓயாவில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

அம்பகலவைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
 அவிசாவளை - புலத்கொஹுபிட்டிய வீதியின் அருகே ஓடும் ரிட்டிகஹ ஓயாவில் அவர் விழுந்ததையடுத்து, அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் 
அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e7fb013-30d9-4959-aa94-bef7eebcf2fa/26-6aafb714f30aa.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

மேலும், கரவனெல்ல மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:32:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நமது அரசாங்கம் 2 ஆண்டுகள்: ஜனாதிபதி அநுர பங்கேற்கும் பிரம்மாண்ட மக்கள் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-years-anura-government-grand-public-rally-1789898771"></link>
            <id>https://tamilwin.com/article/2-years-anura-government-grand-public-rally-1789898771</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் &quot;நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி&quot; என்ற தொனிப்பொருளின்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் "நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி" என்ற தொனிப்பொருளின்&nbsp;கீழ், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதன்படி, மாத்தறை - அக்குரஸ்ஸ பகுதியில் மாபெரும் மக்கள் பேரணி இன்று, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்று வருகின்றது. </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஊழலற்ற சுபிட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l-ip0cLvNk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி விசாக்களைத் தயாரித்ததற்காக முன்னாள் அரச அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-department-gov-employee-arrested-1789895758"></link>
            <id>https://tamilwin.com/article/ex-department-gov-employee-arrested-1789895758</id>
            <summary type="text">போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதிய கடவுச்சீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>புதிய கடவுச்சீட்டு</h2><p>

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளரான குறித்த சந்தேக நபரிடமிருந்து 48 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும், பாதுகாப்பு முத்திரைகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2e4c841-6c21-4edc-a7ae-0e415ddb0a66/26-6aafa6446fcde.webp' /></p><p>

பழைய கடவுச்சீட்டுகளிலிருந்து அகற்றப்பட்ட விசாக்களை புதிய கடவுச்சீட்டுகளில் பொருத்தி, தூதரகங்களில் சமர்ப்பித்து பல்வேறு நாடுகளுக்கு மோசடியாக வீசா பெற்றுக் கொள்ள அவர் உடந்தையாக இருந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T09:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமடையும் காலநிலை - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766</id>
            <summary type="text">இரண்டாம் இணைப்பு&amp;nbsp;&amp;nbsp;நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையை&amp;nbsp;தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இரண்டாம் இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையை&nbsp;தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

</p><p>இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கட்டம் 2&nbsp;மண்சரிவு&nbsp;எச்சரிக்கை</span></p><p>காலி மாவட்டம்: நாகொட, நெளுவ
</p><p>கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை
</p><p>கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல
</p><p>மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு
</p><p>இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட
</p><p>களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள</p><h2>கட்டம் 1 மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
</p><p>களுத்துறை மாவட்டம்: இங்கிரிய
</p><p>கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய
</p><p>மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ
</p><p>இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை
</p><p>காலி மாவட்டம்: தவலம</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு&nbsp;தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98a27f1-9ead-4a8d-8327-4584a5246bc2/26-6aaf4a777695b.webp' /></p><h2>பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை</h2><p>காலி மாவட்டத்தின் நாகொட</p><p>களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர</p><p>கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை</p><p>கேகாலை மாவட்டத்தின் தெரணியகல</p><p>இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789895492"></link>
            <id>https://tamilwin.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789895492</id>
            <summary type="text">குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

விசா இல்லாமல் சட்டவிரோதமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.</p><p>

விசா இல்லாமல் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தபோது குவைத் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்களே இன்று காலை (20) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர்.</p><p>
வீட்டுப் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக குவைத்திற்குச் சென்றிருந்த இவர்கள், தங்களது ஒப்பந்தப் பணியிடங்களிலிருந்து தப்பித்து, வேறு இடங்களில் சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p><h2>நாடு கடத்தல்</h2><p>
</p><p>
குவைத் நகரிலிருந்து இன்று காலை 03.10 மணிக்கு வந்தடைந்த ஜசீரா எயார்வேஸ் விமானம் JN-551 (J9-551)) மூலம் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39ea4d8-020e-4b32-a2d5-c48071ae3685/26-6aafa5c2dc8d4.webp' /></p><p>
</p><p>
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களைத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேவையான போக்குவரத்து மற்றும் நிதி ஆதாரங்களை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T09:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்து இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-was-cremated-is-alive-again-1789782914"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-was-cremated-is-alive-again-1789782914</id>
            <summary type="text">அனுராதபுரம் -&amp;nbsp;&amp;nbsp;கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் -&nbsp;&nbsp;கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொருவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவமொன்று குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>குறித்த நபர்&nbsp;இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், சுமார் 02 மாதங்களின் பின்னர் திடீரென உயிருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.</p><p>குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியே சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் வராததால் அவரது மனைவி கொக்காவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h2>மீட்கப்பட்டுள்ள சடலம்&nbsp;&nbsp;</h2><p>இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஹபனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காப்பகப்பகுதியில் நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f87b5f9-7e2e-4673-b71d-0adb69fcdaaf/26-6aaf56d48ec32.webp' /></p><p> புத்தாண்டிற்கு மகன் வாங்கிக்கொடுத்த ஆடைகளுடன் அச்சடலத்தின் ஆடைகள் ஒத்துப்போனமையினால், சடலம் தனது கணவருடையது என எண்ணி மனைவி மற்றும் உறவினர்கள் தவறாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, ஓகஸ்ட் 31 ஆம் திகதி பொலன்னறுவையில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் தான சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இவ்வாறான பின்னணியில், குறித்த நபர் திடீரென தனது சகோதரியின் வீட்டை சென்றடைந்துள்ளார்.</p><p>இதன்போது அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து கொக்காவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட சடலம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T09:02:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி தாழ்நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864</id>
            <summary type="text">புதிய இணைப்புநாவலப்பிட்டியின் அருகே பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாவலப்பிட்டியின் அருகே பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளது.
</p><p>
அதன் காரணமாக அதனை அண்டிய பிரதேசத்தில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
</p><p>
இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34d15d8d-1dcd-4a67-9ff4-057fdc6d69a7/26-6aafad6909c5a.webp' /></p><p>
</p><p>
நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகப் பதிவாகியுள்ளது</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சூழவுள்ள மேலும் பல பிரதேசங்களுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ளது.
</p><p>
 

இதற்கமைய, கங்க இஹள கோரளை, உடபலாத்த, தொலுவ, உடநுவர, யடிநுவர, கங்கவட்ட கோரளை, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

எனவே, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனவே மகாவலி ஆற்று பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.&nbsp;</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1ae49f-8eaa-4bde-b72a-cfbc97e155f0/26-6aaf512bc1da2.webp' /></p><p>

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T08:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறியாமையில் செய்த தவறு..! மரணதண்டனை வழங்குவது மனித உரிமை மீறல் - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-capital-punishment-in-saudi-arabia-1789892271"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-capital-punishment-in-saudi-arabia-1789892271</id>
            <summary type="text">அறியாமையில் அல்லது தவறுதலாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமைக்காக மரணதண்டனை
வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள்
சக்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அறியாமையில் அல்லது தவறுதலாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமைக்காக மரணதண்டனை
வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.</p><p>

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கைப் பிரஜையான
சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே
அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p></p><h2>சவூதிச் சட்டம்</h2><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"சவூதிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடுகள் காணப்படலாம் என்றாலும், இந்தச்
சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை (இலங்கைப் பிரஜை)
என்பதால், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்தும்
சவூதி அரசு அவதானம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/987c7d9c-b4fd-46b6-9b9c-b7416562da52/26-6aaf9962d3f62.webp' /></p><p>

வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், அது
சர்வதேசத்தின் மத்தியில் தவறானதொரு முன்னுதாரணமாகிவிடும்.
</p><p>
மத நிந்தனை என்பது நியாயப்படுத்தக் கூடியதோ அல்லது அங்கீகரிக்கப்படக் கூடியதோ
அல்ல. எனினும், இந்த விவகாரம் முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட
வேண்டும்.

எனவே, இந்த விவகாரத்தில் இலங்கை அரசு நேரடியாக இராஜதந்திர ரீதியில் துரிதமாகத்
தலையிட வேண்டும்.</p><p>

ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் இந்த விடயம் அணுகப்பட
வேண்டும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T08:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-in-nuwara-eliya-normal-life-disrupted-1789891324"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-in-nuwara-eliya-normal-life-disrupted-1789891324</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் (19),நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற
காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து
வருகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் (19),நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற
காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து
வருகிறது.</p><p>இதன் விளைவாக இன்று (20) காலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக
உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும்
பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின்
பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையை எட்டியுள்ளது.</p><h2>கடும் பனிமூட்டம்</h2><p>
</p><p>
குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை,
தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான
வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா
பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால், சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக்
கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப்
பேணுமாறும், தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும்
பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7cf206b-a0de-41d2-925f-46a6f44fe6b8/26-6aaf95509d5a5.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள்
மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால், பல இடங்களில்
மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட சேவைகள்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும்
சிரமத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T08:26:38+00:00</updated>
        </entry>
    </feed>
