<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-20T05:43:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787203198"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787203198</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்றைய தினத்திற்கான வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>

இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்</h2><p> </p><p>

அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். </p><p>

அதேவேளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னராக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a861c671-ca0c-44e1-83be-e9a342b22645/26-6a86923fe53a1.webp' /></p><h2>பலத்த காற்று வீசக்கூடும்</h2><p> </p><p>

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-20T05:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-visits-parliament-1787203434"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-visits-parliament-1787203434</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று நேரத்திற்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

 

நாடாளுமன்றம் காலை 9:30 மணிக்குக் கூடியதுடன், தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று நேரத்திற்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
</p><p>
 

நாடாளுமன்றம் காலை 9:30 மணிக்குக் கூடியதுடன், தற்போது வாய்மொழி பதில்களுக்கான வினா நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8b946a2-567b-4c77-9901-2b74d63b1142/26-6a8691523a5ed.webp' /></p><p>

 

பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வேலைவாய்ப்பு (திருத்த) மசோதாவின் இரண்டாம் வாசிப்பை, இன்று காலை 11:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை சபை எடுத்துக்கொள்ள உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T05:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி அபகரிப்பு மற்றும் கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்! எதிர்க்கட்சித்தலைவர் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-condemns-land-grab-kalmunai-hospital-issue-1787198919"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-condemns-land-grab-kalmunai-hospital-issue-1787198919</id>
            <summary type="text">தனியார் காணிகளை எடுத்து உப்பு உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதை விட அரச காணிகளை எடுத்து இதனை செய்யுங்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் காணிகளை எடுத்து உப்பு உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதை விட அரச காணிகளை எடுத்து இதனை செய்யுங்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். </p><p>நேற்று(20.08.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;அவர் மேலும் தெரிவிக்கையில், </p><h2>உப்பள அமைப்பும் காணிப் பிரச்சினைகளும்</h2><p>வடமாகாணத்தின் வன்னி மாவட்டத்திலும், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில்,
கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் 54 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம்
அமைக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f2c6afd-3efc-4d79-ad84-0c7f1850f49b/26-6a8687cf983df.webp' /></p><p>இது தொடர்பில் சம்மந்தப்பட்ட
அமைச்சர் ரவிகரனுடன் பேசி குறைபாடுகளை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை
எடுக்க வேண்டும். மேலும், வட மாகாணத்தில் பாரிய காணிப் பிரச்சினைகள் நிலவுகின்றன.</p><p> கடந்த காலங்களில் பொதுமக்களின் தனியார், விவசாய மற்றும் வதிவிடக் காணிகள்
அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உரிய நிவாரணத்தையும் தீர்வையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.</p><h2>கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்</h2><p>கல்முனை வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களைச்
சீருடை தொடர்பான விவகாரத்தில் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளமை
பொருத்தமற்ற நடவடிக்கையாகும். எமது
நாட்டில் அவரவர் மத மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றும் உரிமை அனைவருக்கும்
உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c179faa-7fee-4228-a2d3-d4e8e520ff4c/26-6a8687cebe7af.webp' /></p><p> இந்த அரசு தமது தேர்தல் மேடைகளில் இனம், மதம், குலம், வகுப்பு ரீதியான எந்தப்
பாரபட்சமும் பார்க்காமல் செயற்படுவதாகக் கூறிவிட்டு, தற்போது புதிதாக நியமனம்
பெற்ற 9 பேரை சீருடை விவகாரத்துக்காக இடமாற்றம் செய்வது கொள்கை
விளக்கங்களுக்கு முரணானது.</p><p>
எனவே, உடனடியாக மேற்படி 9 ஊழியர்களையும் மீண்டும் கல்முனை வைத்தியசலையிலேயே
பணியில் அமர்த்தி, அவர்களின் கலாச்சாரத்துக்கேற்ப சீருடை அணிய அனுமதிக்க
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T05:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட மீது குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/filed-against-yoshitha-rajapaksa-wasantha-1787202635"></link>
            <id>https://tamilwin.com/article/filed-against-yoshitha-rajapaksa-wasantha-1787202635</id>
            <summary type="text">இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச ஆகியோர் மீது ஊழல் குற்றச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>

குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிணையில் செல்ல அனுமதிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44318d9-360d-422e-a7ce-2d6c7d179759/26-6a868ea957dd1.webp' /></p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) இந்தக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T05:21:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொக்குத்தொடுவாய் காணி விவகாரம் : ஆளும் தரப்பு வெளிப்படுத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kokkuthoduvai-land-issue-1787200194"></link>
            <id>https://tamilwin.com/article/kokkuthoduvai-land-issue-1787200194</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய்
மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய்
மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின்
பூர்வீக வயல்நிலங்கள் ஆக்கிரபிக்கப்பட்டு தனியார் ஒருவரால் சட்டவிரோதமாக
அத்துமீறி உப்பளம் அமைக்கப்படுகின்ற விடயம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம்
சுட்டிக்காட்டியிருந்தார்.
</p><p>அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் இவ்வாறு
தமிழ் மக்களின் தனியார் வயல்காணிகளை அத்துமீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து
தனியார் ஒருவர் உப்பளம் அமைக்கின்றமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்
சுனில் ஹந்துன்னெத்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.</p><h2>அத்துமீறி அமைக்கப்படும் உப்பளம்</h2><p>இதன்போது வன்னிப் பகுதியிலோ வடமாகாணத்திலோ தனியார் காணிகளை ஆக்கிரமித்து
உப்பளங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி
தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95fe414a-98e3-456e-b194-73162f04be9e/26-6a868a2e02344.webp' /></p><p>அதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்டு, அந்தப் பிரச்சினை தொடர்பில்
ஆராயப்படுமென அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.</p><p>அதனைத்தொடர்ந்து உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விடயம்
தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் உள்ள
கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவில் அத்துமீறி அமைக்கப்படும்
உப்பளம் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக முல்லைத்தீவில் குரல் எழுப்பி
வருகின்றோம்.
</p><p>
இது தொடர்பில் மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால்
தடுத்து நிறுத்துவதற்குரிய கடிதங்கள் உரிய தரப்பினருக்கு அனுப்பப்பட்டன.
</p><p>
இவ்வாறான அடாத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவது மகாவலி அதிகார சபை தான். இது
தொடர்பாக கடந்த 03.12.2026 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் தலைமையில்
நடைபெற்ற விசேட கூட்டத்தில்&nbsp; அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும்
தெரியப்பட்டது.</p><h2>சான்றுகளை உரிய தரப்பினருக்கு வழங்க</h2><p>குறித்த பகுதி தனியார் காணியில் அமைக்கப்படவில்லை என மகாவலி அபிவிருத்தி
அதிகார சபையினரால் அன்றைய தினம் குறிப்பிடப்பட்டது.</p><p>

அமைச்சரால் இப்பிரச்சினையை மாவட்டச் செயலாளர் தலைமையில் ஆராயுமாறு
அன்றைய நாள் அமைச்சரால் பணிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e79aa9a2-a444-433a-baae-eb9ba4ea85d0/26-6a86881b2f871.webp' /></p><p>
பின்னர் எமது, கோரிக்கைக்கு அமைய , மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று
பிரதேச செயலாளர் ஆகியோரின் உத்தரவுக்கு அமைய குறித்த பகுதி தனியார் காணியே என
நில அளவை அத்தியேட்சகரால் உறுதிப்படுத்தப்பட்டது.
</p><p>
அதன் அடிப்படையில், தனியார் காணியில் அமைக்கப்படும் மேற்படி உப்பளம் அமைக்கும்
நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர்
நாயகத்துக்கு 28.07.2026 அன்று கடிதம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால்
கடிதம் அனுப்பப்பட்டது.
</p><p>
அதன் பின்னரும் இலங்கை மகாவலி அதிகார சபை அதற்கு இணங்காத வகையில் தன்னிச்சையாக
செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.
</p><p>
மகாவலி அதிகார சபை இங்குள்ள அரசாங்கத்துக்கும் கட்டுப்படாமல்
வடக்கு கிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் எண்ணத்தோடு தன்னிச்சையாக செயற்படும் ஓர்
அமைப்பாகவே செயற்படுகிறது.
</p><p>
கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் அடாத்தாக அமைக்கப்பட்ட
உப்பளமும் அதற்கு ஒரு சான்று என இப்பேரவையில் மீண்டும் பதிவுசெய்கிறேன்.
</p><p>தேவைப்பட்டால் இவற்றுக்கான சான்றுகளை உரிய தரப்பினர்க்கு வழங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T05:05:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-delegation-denied-permission-sri-lanka-1787201633"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-delegation-denied-permission-sri-lanka-1787201633</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான
கனேடியத்தூதரகத்தின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்த போதிலும், அரசிடமிருந்து
முறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான
கனேடியத்தூதரகத்தின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்த போதிலும், அரசிடமிருந்து
முறையான அனுமதி கிடைக்காத காரணத்தால் சித்துப்பாத்தி இந்து மயான வாயில் வரை
வந்து திரும்பிச்சென்றுள்ளனர்.
</p><p>
செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகளின் இறுதி நாளான 56
ஆம் நாள் அகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. </p><p>மதிய உணவு இடைவேளையின் போது
கனேடியத்தூதரக அதிகாரிகள் அங்கு வருகை தந்திருந்தனர்.</p><h2>அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான கோரிக்கை</h2><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காகக் கனேடியத் தூதரகம் தரப்பில்
உரிய அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb3f4ef6-1c3a-4806-8127-1c06d776777a/26-6a868a860e976.webp' /></p><p>
எனினும், இலங்கை அரசிடமிருந்து அதற்குரிய அனுமதி கிடைக்கவில்லை.

அகழ்வுப் பணி நடைபெறும் பகுதிக்கு வருகை தருவதாக இருந்தால், முதலில் அரசின்
அனுமதியைப் பெற்று நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.</p><p> ஆனால், கனேடியத்
தூதுவராலயத்துக்கு அரசின் அனுமதி கிடைக்காததால், நீதிமன்றத்தில் முறையான
விண்ணப்பங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை.</p><p>

இதன் காரணமாக, செம்மணி வாயில் வரை வருகை தந்த கனேடியத் தூதுவராலயப்
பிரதிநிதிகள், அரசின் அனுமதி பெறப்படாத சூழ்நிலையில் புதைகுழிப் பகுதிக்குப்
செல்லாமல் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T05:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய நபரின் வாக்குமூலம்! கொழும்பு வீடொன்றில் சிக்கிய ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dangerous-object-found-in-a-house-in-colombo-1787199801"></link>
            <id>https://tamilwin.com/article/dangerous-object-found-in-a-house-in-colombo-1787199801</id>
            <summary type="text">வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட &#039;சமித்புர சத்து&#039; என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரிடம் முன்னெடுக்கப்பட்ட வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 'சமித்புர சத்து' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த திமுது சதுரங்க என்ற சமித்புர சது, ஓமானில் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.</p><p>குறித்த சந்தேகநபர், மட்டக்குளியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>சிவப்பு அறிவித்தல்&nbsp;</h2><p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்து இவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8d1f46f-77f2-4efc-a20d-b263a05042d7/26-6a86845742d7f.webp' /></p><p>இதற்கமைய, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வெளிநாடொன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>திமுத்து சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார். </p><p>

அவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேக நபர்களில் ஒருவராவார் என்பதுடன், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரான ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-to-check-shiran-basik-s-account-1787197561"></link>
            <id>https://tamilwin.com/article/order-to-check-shiran-basik-s-account-1787197561</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான ஷிரான் பாசிற்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

அதற்கமைய ஷிரான் பாசிக்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான ஷிரான் பாசிற்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.</p><p> 

அதற்கமைய ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான அனைத்து வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் பெருந்தொகை பணத்தை ஈட்டிய ஷிரான் கொழும்பு உட்பட பல இடங்களில் சொத்துக்களை வைத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

வங்கிக் கணக்குகள்</b></h2><p>இவ்வாறான நிலையில் ஷிரான் பெயரில் நேரடியாக உள்ள வங்கிக் கணக்குகள் மற்றும் பினாமி பெயரிலுள்ள சேமிப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf6634b-6313-41ac-b6ba-8b8dab49a98e/26-6a8680593645d.webp' /></p><p>இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களால் கூட்டாக நடத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட ஷிரான் பாசிக் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில் நாட்டுக்கு இழுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p> </p>]]></content>
            <updated>2026-08-20T04:19:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்திற்கு வரப்போகும் சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-with-all-mps-regarding-22nd-amendment-1787198504"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-with-all-mps-regarding-22nd-amendment-1787198504</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் வெற்றிடமாகவுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநித...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் வெற்றிடமாகவுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் (20.08.2026) நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர். </p><p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கைக்கு இணங்க, நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்கள் தெளிவுபடுத்தவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>உத்தியோகபூர்வ அறிவிப்பு</h2><p> </p><p>இது தொடர்பில் சபாநாயகருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் நேற்றைய தினம் (19.08.2026) நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார். </p><p>இதற்கமைய, திட்டமிடப்பட்டவாறு இன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சட்டத்தரணிகள் சங்கத்தினர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து கலந்துரையாடவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0346398b-dd84-455b-801a-488ede6e1be9/26-6a867f7638146.webp' /></p><h2>எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ள விடயம்</h2><p> </p><p>இந்தக் கலந்துரையாடலில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியைச் சந்தித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது போன்றே, இம்முறையும் சுமூகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக வருகை தரும் சட்டத்தரணிகளுடன் ஏனைய உறுப்பினர்களையும் இணைந்து கொள்ளச் செய்யுமாறு வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T04:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-people-including-a-girl-died-in-a-accident-1787196113"></link>
            <id>https://tamilwin.com/article/three-people-including-a-girl-died-in-a-accident-1787196113</id>
            <summary type="text">மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புது கண்டி வீதியின் தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில், 07 வயது சிறுமி உட்பட மூன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புது கண்டி வீதியின் தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில், 07 வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நேற்று (19.08.2026) பிற்பகல், பியகமவிலிருந்து தெல்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வாகனம் ஒன்று வீதியில் வலதுபுறம் திரும்பும்போது, ​​எதிர்திசையில் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><h2>ராகம வைத்தியசாலையில் அனுமதி</h2><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உடனடியாக உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,&nbsp;முச்சக்கர வண்டி சாரதி, ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a7343d-9cba-4233-8d9b-5174962a8c63/26-6a867a8b1fbd8.webp' /></p><p>உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டி சாரதி 69 வயதுடைய தெல்கொட சேர்ந்தவர் எனவும், 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 07 வயது மகள் சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.</p><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காரில் பயணித்த சிறுமி ராகம வை்ததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>சம்பவம் தொடர்பில் மீகஹாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T03:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை தாதியர்களின் சீருடை விவகாரம் : அவசர சந்திப்பை நடத்திய தமிழ் எம்.பிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-nurses-uniform-dispute-resolved-1787193825"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-nurses-uniform-dispute-resolved-1787193825</id>
            <summary type="text">சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். 
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். </p><p>
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>சுகாதார அமைச்சருடனான சந்திப்பு</h2><p>இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5e2375-fd89-4e58-a616-604f97baa20f/26-6a866c6a095e4.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T03:24:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-ccid-sri-lanka-court-1787184715"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-ccid-sri-lanka-court-1787184715</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் கோட் பாதர் என போற்றப்பட்ட ஷிரான் பாசிக் டுபாயில் இருந்து அனுப்பப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்பு காவலில் வைக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலில் கோட் பாதர் என போற்றப்பட்ட ஷிரான் பாசிக் டுபாயில் இருந்து அனுப்பப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>அதன்படி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. </p><p>அந்த வகையில் ஷிரான் பாசிக் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p></p><h2>நீதிபதி பிறப்பித்த உத்தரவு</h2><p>ஷிரான் பாசிக்கின் சட்டத்தரணி வசந்த பிடிகல நீதிமன்றில் இவ்வாறு கூறியுள்ளார், தனது கட்சிக்காரர் தினமும் காலையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொலிஸார் நடைபயணமாக அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தார். </p><p>இந்நிலைமை மிகவும் ஆபத்தானது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் உடனடியாக அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
</p><p>இதற்கமைய, கொழும்பு மேலதிக நீதவான் அசங்க போதரமக உடனடியாக பொலிஸாருக்கு உத்தரவிட்டு, ஷிரான் பாசிக்கின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13d16f9f-a035-460b-8cc6-e62d279fe5e5/26-6a86464dd6692.webp' /></p><p>ஏனெனில் அவரது பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பும் பொலிஸாரையே சாரும். இதனால் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கும் இந்த நபரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
</p><p>ஏனெனில்,ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கொல்லப்பட்டால் அது மிகவும் தீவிரமான பிரச்சினையாகிவிடும். இவர் ஈடுபட்டுள்ள கடத்தல் சம்பவங்களுக்குப் பின்னால் பல தரப்பினர் தொடர்பில் உள்ளனர்.</p><p>இவருக்குப் பின்னால் அல்ல, இவர்களுக்கு மேலிருந்து இயங்குபவர்கள் 'வெள்ளைக் கொலர்' குற்றவாளிகள் என்றே சமூகத்தில் பார்க்கப்படுகிறார்கள். </p><p>அறக்கட்டளைகளை நடத்தும் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களில் உள்ள, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும், அரசியலுடன் தொடர்புடைய, கலைத் துறையுடன் தொடர்புடைய, ஊடகத் துறையுடன் தொடர்புடைய சமூகத்தில் நல்ல முகத்தைக் காட்டும் பலரே இத்தகைய கடத்தல்களில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி வருகின்றனர். </p><p>எனவே, அவர்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பு மிக விரைவில் அழிக்கப்படும் சூழல் உள்ளது.
</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து</span></h2><p>மாகந்துரே மதுஷ் உதாரணத்தை எடுத்துக்கொண்டால், அவர் அரசியல்வாதிகள் உட்பட பலரின் பெயர்களை வெளிப்படுத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது. </p><p>ஆனால் அந்தத் தகவல்களுக்கு என்ன நடந்தது என எவருக்கும் தெரியாது. 
இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் தனியாகச் செயற்பட முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa9c2b9a-12df-45d8-b918-2cdb0c9fad16/26-6a8672286e22c.webp' /></p><p> </p><p>இவர்கள் இந்த நாட்டில் செயற்பட வேண்டுமாயின் பொலிஸாரின் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. </p><p>அரசியல்வாதிகளின் பாதுகாப்பும் ஆசீர்வாதமும் தேவைப்படுகிறது.சில மதஸ்தானங்களின் பாதுகாப்பும் இவர்களுக்கு கிடைத்துள்ளது. </p><p>எனவே, மேல்மட்டத்தில் உள்ள இவர்கள் தம்மைப் பற்றிய தகவல்கள் வெளியாகிவிடும் என்ற பயத்தில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த நபர்களை அழித்துவிட உடனடியாகச் செயற்படுகிறார்கள்.
</p><p>தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பாசிக் தொடர்பிலும் இவ்வாறானதொரு ஆபத்தான நிலைமை காணப்படலாம். பொலிஸார் குறிப்பிடுவது போல் இவர் அனைவரையும் விட சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஆவார்.</p><p>இந்த விடயத்தை கருத்தில் கொண்டே நீதவான் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் இவரது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த பொறுப்புடன் செயற்படுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T03:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-reject-of-l-t-t-e-camp-bomb-factory-pallai-1787194187"></link>
            <id>https://tamilwin.com/article/police-reject-of-l-t-t-e-camp-bomb-factory-pallai-1787194187</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளை பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமும், வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையும் இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளை பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமும், வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையும் இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுக்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என இலங்கை பொலிஸ் நிராகரித்துள்ளது.
</p><p>
 

பளை பகுதியில் வனப்பகுதியை அழித்து மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு, அது விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாகவும், வெடிகுண்டுகள் தயாரிக்கும் மையமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒருவர் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றில் கூறியதை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.</p><p>
</p><h2>போர் பயிற்சி மையமாக இயக்கப்பட்டதற்கு</h2><p>
 

காணொளியில் காட்டப்பட்ட இடம், கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கீழ் வரும் அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குள், கண்ணகிபுரம் மேற்கு, முக்கம்பன் பகுதியில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டதாக பொலிஸாாார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9f3689c-2708-4e00-96f0-98e789be61fa/26-6a866eab28499.webp' /></p><p>

 

அதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளராலும், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவாலும் விசாரணைகள் தொடங்கப்பட்டன.
</p><p>
 

விசாரணையின் முடிவுகளின்படி, அந்த இடத்தில் வெடிபொருட்கள், சட்டவிரோதப் பொருட்கள் அல்லது குண்டுகள் தயாரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

 

விடுதலைப் புலிகள் அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அல்லது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் செயல்பாடுகளுக்கோ, அல்லது அந்த இடம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான போர் பயிற்சி மையமாக இயக்கப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>சரிபார்க்கப்படாத தகவல்&nbsp;</h2><p>

 

இருப்பினும், அந்த இடத்தில் சட்டவிரோதமாக காடுகளை அழித்தல் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதமாகக் கையகப்படுத்துதல் தொடர்பான தகவல்களை இந்த விசாரணை வெளிப்படுத்தியுள்ளது.</p><p> அந்த விவகாரங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21fe888f-8632-4cf6-ad34-cad25457232f/26-6a866eac2090e.webp' /></p><p>
 

இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பரப்பியதாகக் கூறப்படும் நபர், ஆகஸ்ட் 18 அன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
 

பொரலஸ்கமுவ, பெல்லன்விலவைச் சேர்ந்த 46 வயதான சந்தேக நபர், சரிபார்க்கப்படாத தகவலை ஒரு காணொளி மற்றும் ஊடக சந்திப்பின் மூலம் பரப்பியதாகக் கூறப்படுவதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
</p><p>
 

அவர் நேற்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.</p><p>

 

கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T03:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-warning-for-kids-1787193636"></link>
            <id>https://tamilwin.com/article/heat-warning-for-kids-1787193636</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக குழந்தைகளை சுற்றுலாப் பயணங்கள் மற்றும் யாத்திரைப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக குழந்தைகளை சுற்றுலாப் பயணங்கள் மற்றும் யாத்திரைப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>பொரளை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.</p><h2>நோய் நிலைமைகள்</h2><p>
</p><p>அவ்வாறு அழைத்துச் செல்வதன் மூலம் குழந்தைகள் வெப்ப அதிர்ச்சி, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற ஆபத்தான பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இந்நாட்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் விரைவாக நீரிழப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09b35acf-883f-4961-a183-892fab60cc30/26-6a866925b042e.webp' />&nbsp;&nbsp;</p><p> எனவே, பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் எடைக்கு ஏற்ப தேவையான அளவு நீரைக் குடிக்க வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லீட்டர் நீராவது பருக வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குறைந்தது 2 தண்ணீர் போத்தல்களையாவது உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், சிறுவர்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது தண்ணீரில் இறங்கி குளிப்பது அவர்களின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என அறிவுறுத்தியுள்ளார்.</p><p>செயற்கை சுவையூட்டிகள் மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த பானங்களை சிறுவர்களுக்கு வழங்குவதைத் தவிர்த்து, தோடம்பழம், எலுமிச்சை, இளநீர், கஞ்சி, சூப் மற்றும் தர்பூசணி சாறு போன்ற இயற்கை திரவ உணவுகளை வழங்க வேண்டும்.</p><p>நீண்டகாலமாகப் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக அதிகரிக்கும் என்று மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>பாடசாலை விடுமுறைக் காலத்தில் சிறுவர்களை மொபைல் போன்களைப் பயன்படுத்தி நேரத்தைக் கழிக்க விடாமல், அவர்களைப் பல்வேறு உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T02:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வர்த்தகர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/caa-warns-about-undocumented-goods-1787191767"></link>
            <id>https://tamilwin.com/article/caa-warns-about-undocumented-goods-1787191767</id>
            <summary type="text">விற்பனை செய்ய, சேமித்து வைக்க அல்லது விநியோகிக்க வைத்திருக்கும் பொருட்களின் உற்பத்தி மூலத்தை உறுதிப்படுத்தக்கூடிய சரியான ஆவணங்கள் அல்லது ரசீதுகளை வர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>விற்பனை செய்ய, சேமித்து வைக்க அல்லது விநியோகிக்க வைத்திருக்கும் பொருட்களின் உற்பத்தி மூலத்தை உறுதிப்படுத்தக்கூடிய சரியான ஆவணங்கள் அல்லது ரசீதுகளை வர்த்தகர்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.</p><p>
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட இலக்கம் 83 இன் கீழ் உத்தரவுப்படி, உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து வர்த்தகர்களுக்கும் 2022 ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை அமலில் உள்ளது.</p><h2>முக்கிய அறிவுறுத்தல்</h2><p>
</p><p>விநியோகஸ்தரின் பெயர் மற்றும் முகவரி, கொள்முதல் செய்யப்பட்ட திகதி மற்றும் கொள்முதல் விலை, பொருளின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் என்பனவற்றை தெரிந்து கொள்ளக் கூடிய ஆவணங்களை பேண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b6cd509-e47a-4cf6-99b6-872aedc6a2b6/26-6a8661d8ea256.webp' /></p><p>
</p><p>"பொருட்கள் உள்ளன, ஆனால் யாரிடம் வாங்கப்பட்டது என்று கூற முடியாது" என்ற நிலை வியாபாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்று அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
முக்கியமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய ரசீது இல்லாதபோது விநியோக முறையைக் கண்டறிவது கடினமாகிறது. சந்தைப் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளின் போது இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்படும். </p><p>சட்டத்தை மீறுபவர்களின் பொருட்கள் சான்றுகளாகப் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>சரியான ஆவணங்களைப் பேணி, பொறுப்புடன் வியாபாரம் செய்யும் நேர்மையான வர்த்தகர்களைப் பாதுகாப்பதே இந்த சட்டத்தைச் நடைமுறைப்படுத்துவதன் முதன்மை நோக்கமாகும் என அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T02:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37-petitions-againgts-22nd-ammendment-1787190383"></link>
            <id>https://tamilwin.com/article/37-petitions-againgts-22nd-ammendment-1787190383</id>
            <summary type="text">&amp;nbsp;உச்சநீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உட்பட பல்வேறு சரத்துக்களை உள்ளடக்கிய 22 ஆவது அரசியலமைப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உச்சநீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உட்பட பல்வேறு சரத்துக்களை உள்ளடக்கிய 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட 37 தரப்பினரால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
இச்சட்டமூலமானது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்துமாறு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் உதவிச் செயலாளர் லக்கித வாகிஸ்தஆரச்சி மற்றும் பொருளாளர் பசிந்து சில்வா, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன பலய கட்சிகள், முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, சுயாதீன சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சட்டத்தரணி அருண லக்ஸிறி, மிலிந்த ராஜபக்ஷ, கலாநிதி பாக்யசோதி சரவணமுத்து, மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன், ஊடகவியலாளர் சுனில் ஜயசேகர ஆகியோர் சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுக்களில் மனுதாரர்களாக இணைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7534fdc8-96ad-482c-8abf-33b0246ac8e7/26-6a865c7152c36.webp' /></p><p>உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்துவதற்கு இச்சட்டமூலத்தின் 2 ஆம் பந்தியில் முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்தவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை 25 ஆக அதிகரிக்கவும் சட்டமூலத்தில் சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
</p><p>இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கம் முழு நீதிமன்ற அமைப்பின் கட்டமைப்பையும் மாற்றுவதாகும் என்றும், இது சர்வதேச சட்டங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை மற்றும் ஐநா சாசனத்தின் விதிகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>
எனவே, அரசியலமைப்பிற்கு முரணான இச்சட்டமூலத்தை நிறைவேற்ற மக்களாணை அவசியம் என உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T01:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொகவந்தலாவ - கியூ தோட்டம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் ஜூபிலி பெருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bogawantalawa-kew-church-jubilee-festival-1787190359"></link>
            <id>https://tamilwin.com/article/bogawantalawa-kew-church-jubilee-festival-1787190359</id>
            <summary type="text">பொகவந்தலாவ - கியூ தோட்டம், புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா எதிர்வரும் 29ஆம் திகதி பக்திப்பூர்வமாக கொண்டாடப்படவுள்ளது.

கண்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவ - கியூ தோட்டம், புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா எதிர்வரும் 29ஆம் திகதி பக்திப்பூர்வமாக கொண்டாடப்படவுள்ளது.
</p><p>
கண்டி மறை மாவட்ட ஆயர், வணக்கத்திற்குரிய வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையின் தலைமையில் இந்த ஜூபிலி விழா கொண்டாடப்படவுள்ளது.</p><h2>ஜூபிலி&nbsp; பெருவிழா</h2><p> </p><p>


எதிர்வரும் 22ஆம் திகதி பொகவந்தலாவ பங்கின் பங்குத் தந்தை டொஸ்மின் ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் ஜூபிலி பெருவிழா ஆரம்பமாகும்.</p><p> 

தொடர்ந்து ஏழு நாட்கள் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று 29ஆம் திகதி மறைமாவட்ட ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையினால் ஜூபிலி விழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.</p><p></p><p>


நவநாள் ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள், பொகவந்தலாவ பங்கின் பங்குத் தந்தை அருட்பணி டொஸ்மின்ராஜ், அருட்தந்தைகளான, அந்தனி பெர்னாண்டோ, எட்வின் ரொட்றிகோ, டக்ளஸ், ஸ்டீபன், எண்டன் கவஸ்கர், இயேசுதாசன், சிவந்த ரொட்றிகோ ஆகியோரால் ஒப்புக்கொடுக்கப்படும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T01:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-2026-1787189330"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-2026-1787189330</id>
            <summary type="text">தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி, விடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.</p><h2>பரீட்சை பெறுபேறுகள்</h2><p>


இந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது. </p><p> 

இந்தநிலையில், பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9dc458-5f6d-49b9-9502-3dcfd8b54073/26-6a865853b7661.webp' /></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T01:42:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 கோடி ரூபா பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kudu-slindus-assistant-arrested-1787189425"></link>
            <id>https://tamilwin.com/article/kudu-slindus-assistant-arrested-1787189425</id>
            <summary type="text">பண்டாரகம - மஸ்வில பகுதியில் உள்ள வீடொன்றில் இயங்கிவந்த ரகசிய போதைப்பொருள் களஞ்சியசாலையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகச் சோதனையிட்டு, சுமார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரகம - மஸ்வில பகுதியில் உள்ள வீடொன்றில் இயங்கிவந்த ரகசிய போதைப்பொருள் களஞ்சியசாலையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகச் சோதனையிட்டு, சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
</p><p>பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமன் சில்வாவின் மேற்பார்வையில், தலைமையக புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் கொடிதுவக்கவின் வழிகாட்டலில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.</p><p>
கைது செய்யப்பட்ட 22 வயதுடைய நபர், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு சலிது'வின் போதைப்பொருள் வலைப்பின்னலின் முக்கிய உறுப்பினராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff18db2d-11c3-47e4-8ed9-9aa49e10287d/26-6a8658b368b05.webp' /></p><p> </p><p>இவர் கடந்த இரண்டு வருடங்களாக மலேசியாவில் வசித்துவிட்டு அண்மையிலேயே இலங்கை திரும்பியுள்ளார்.
'குடு சலிந்து'வின் பிரதான கூட்டாளியான 'ரவிஷ்க' என்பவருடன் நேரடியாகத் தொடர்பிலிருந்தே இவர் இந்த களஞ்சியசாலையை நிர்வகித்து வந்துள்ளார். </p><p>டுபாயில் இருக்கும் ரவிஷ்க கொடுக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட நபர்களுக்கு இவர் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளார்.
</p><p>கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகுதி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T01:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலுக்கு முன்னரே முதலமைச்சரானாரா அர்ச்சுனா எம்.பி! தனது இறுதி நாடாளுமன்ற வாரத்தில் முஸ்லிம் மக்களுக்காக எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-mp-become-the-cm-before-the-elections-1787184291"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-mp-become-the-cm-before-the-elections-1787184291</id>
            <summary type="text">நான் வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காக குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைக்தீவு போன்ற பகுதிகளை அபிவிருத்தி செய்வதே எனது ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காக குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைக்தீவு போன்ற பகுதிகளை அபிவிருத்தி செய்வதே எனது முதல் பணி என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p> 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை தொடர்பில் இங்கு பேசவேண்டியுள்ளது.</p><h2>கருணாவுடன் இருந்த சுகுணன்</h2><p> </p><p>

ஒரு இனத்தை இன்னொரு இனம் அடக்கினால், அந்த அடக்கும் இனத்தில் இருந்து ஒருவன் அதற்கு எதிராக கதைக்காது விட்டால் இந்த நாட்டில் இருந்து இனவாதத்தை ஒழிக்க முடியாது.</p><p>

அந்த வகையில் எனது இறுதி வார நாடாளுமன்ற அமர்வில் எனது சகோதர இனத்துக்காக நான் கதைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.</p><p>

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மிக மோசமான ஒரு இனவாதி. முதலில் கருணாவுடன் இருந்து பின்னர் ரணிலுடன் இருந்தவர். இப்போது வரை அவர் அரசியல் செய்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37955e02-b862-46ee-8fb2-8855c2db6446/26-6a864da48fcec.webp' /></p><p>
</p><p>

என்னுடைய இனத்திற்கு எந்தவொரு முஸ்லிம் நபராவது ஒருகாலத்தில் உதவி செய்திருந்தால் எனது நாடாளுமன்ற கடைசி கிழமைகளில் செஞ்சோற்றுக் கடனை செய்துவிட்டுபோகவே இந்த சில நிமிடங்களை பயன்படுத்துகின்றேன். </p><p>

1995 இல் தமிழ் பெண்கள் பொட்டுகள் போட்டுகொண்டு ரூபவாஹினியில் செய்திவாசிக்க முடியாது என சந்திரிகா அரசு சட்டம் கொண்டுவந்தது. அப்போது அமைச்சராக இருந்த அஷ்ரப் அதற்கு எதிராக போராடினார்.
</p><p>
என்னுடைய இனத்தில் இருந்து உங்களுடைய இனத்திற்கு கல்லெறியப்படுமாக இருந்தால் அந்தக்கற்களை எங்களுடைய இதயம் தாங்கிக்கொள்ளும்.
</p><p>

வடக்கில் பொம்மை வெளி,காக்கைதீவு பகுதிகள் தான் சுகாதாரத்தில் மிக மோசமாக சீரழிந்த நிலையில் இருக்கும் பகுதிகள். கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற இந்தப்பகுதிகளைத்தான் தெரிவு செய்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ddd6160-6326-4165-9e1b-d124e6793e64/26-6a864da3d84ab.webp' /></p><p> நான் வடக்கு மாகாண சபையை என்று பொறுப்பேற்கின்றேனோ ஒரு தமிழனாக சொல்கின்றேன் முதல் முதலில் அபிவிருத்தி செய்வது பொம்மை வெளி,காக்கைதீவு பகுதிகளைத்தான்.
என்னுடைய நகமும் சதையுமான முஸ்லிம் மக்களுக்காக ஒரு சிறப்புப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகின்றேன்.</p><p>

கிழக்கில் இருந்து ஈரோசை சேர்ந்த ஒருவர் என்னைப்பற்றி ஏதோ கூறியுள்ளார். அவர் பெயர்கூட எனக்குத்தெரியாது. கிழக்கில் விடுதலைப்புலிகளினால் கொலைகள் நடந்தது என்றால் ஈரோஸ் மாதிரியான இந்தக்கட்டமைப்புக்கள்தான் முஸ்லிம் மக்களை வெட்டிக்கொன்றது. அது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கையில்போய் விழுந்தது. </p><p>அதேபோன்று முஸ்லிம்களில் ஒரு சிலர் செய்த கொலைகள்தான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தமிழ் மக்களையும் இன்றுவரை பிரித்து வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>இதேவேளை, கடந்த பல நாடாளுமன்ற அமர்வுகளின் போது, தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகப் போவதாக தொடர்ச்சியாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி அறிவித்து வருவதுடன்,&nbsp; எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.&nbsp;</p><p> இந்தநிலையில், மாகாண சபைத்&nbsp; தேர்தல் தொடர்பான உறுதியான முடிவு எதும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே தன்னை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவே பாவித்து&nbsp; சமகால நாடாளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா எம்.பி உரையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T00:44:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணை: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-revels-more-informations-1787186414"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-revels-more-informations-1787186414</id>
            <summary type="text">அண்மையில் கைதான, நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஓருவராக கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் கைதான, நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஓருவராக கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
எதிர்க்கட்சியிலுள்ள இரு பலம்பொருந்திய அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகத் தான் பெருந்தொகை பணத்தை செலவிட்டதாக ஷிரான் பாசிக் ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>
ஒரு அரசியல்வாதியின் பிரசாரத்திற்காக 50 பேருந்துகளை வழங்கியதுடன், பெருமளவு பணத்தையும் கையளித்துள்ளார்.</p><h2>வாக்குமூலம்&nbsp;</h2><p>இவருடன் பணப்பரிமாற்றம் செய்த அரசியல்வாதிகள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதில் ஒருவர் களுத்துறை பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் எனத் தெரியவந்துள்ளது.</p><p>தெஹிவளை - கல்கிஸ்சை கடற்கரை யோரத்தில் அமைந்துள்ள 5 சொகுசு ஹோட்டல்கள் தனக்குச் சொந்தமானவை என பாசிக் வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய 'சோல் பீச்' ஹோட்டலும் இதில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f76efb11-17dc-41eb-af01-4e1c5083e2bc/26-6a864cefdc53e.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>பொரலஸ்கமுவ, தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் பல ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர் முதலீடு செய்துள்ளார்.</p><p>
போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தை சட்டப்பூர்வமான பணமாக மாற்றுவதற்காகவே இவர் இந்த வியாபாரங்களில் முதலீடு செய்துள்ளார்.
</p><p>கடற்கரையோர ஹோட்டல்களை பிற நபர்களின் பெயர்களிலேயே நடத்திவந்துள்ளார்.
கடற்கரையோரக் காணிகளின் ஏழை உரிமையாளர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, அங்கு ஹோட்டல்களைக் கட்டி நிர்வகித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2db209d3-b950-4477-94af-e856516084ac/26-6a8654a4e39ba.webp' /></p><p>
</p><p>அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளையும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தி, ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்களைக் கட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளது.</p><p>
கல்கிஸ்சை பகுதியைச் சேர்ந்த பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்களான அல்டோ தர்மே, படோவிட்ட அஸங்க மற்றும் சான்டோ ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் எனவும், அவர்கள் அனைவரும் தனது போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஷிரான் பாசிக் மேலும் வாக்குமூலம் அளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T00:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகள் தொடர்பில் போலி தகவல் பரப்பியவர் யார்....! பின்னணி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/details-about-the-person-who-spread-fake-news-1787155288"></link>
            <id>https://tamilwin.com/article/details-about-the-person-who-spread-fake-news-1787155288</id>
            <summary type="text">கிளிநொச்சியில் விடுதலை புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று செயற்பட்டு வருவதாக போலியான தகவல் பரப்பிய நபர் பல்வேறு பெயர்களில் தோன்றிய சங்கீத் டயசேகர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் விடுதலை புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று செயற்பட்டு வருவதாக போலியான தகவல் பரப்பிய நபர் பல்வேறு பெயர்களில் தோன்றிய சங்கீத் டயசேகர என தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> 

குறித்த நபர், கடந்த காலங்களில் ஷிராந்தி ராஜபக்சவின் தனிப்பட்ட மருத்துவராகவும் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p> 

விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பாக கருத்துக்கள் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக குறித்த நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.</p><p> </p><h2><b>

போலி தகவல் பரப்பியவர் யார்</b></h2><p>இந்த நிலையில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்வியின்போது, ​​பளை பகுதியில் அனுமதியற்ற முறையில் பயிர்செய்கை நிலம் ஒன்று பேணப்பட்டு வருவது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b67a012-5210-43d8-ae82-de920a6ad439/26-6a85d73a478da.webp' /></p><p>உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் பிரசாரகர்களே விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பான இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்ததில் முன்னணியில் இருந்தனர்.
</p><p>
 தற்போது அந்தப் பிரசாரங்களை வேறு வடிவில் கண்டங்களுக்கிடையேயான மனித உரிமைகள் ஆணையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எனக் கூறிக்கொள்ளும் சங்கீத் டயசேகர போன்ற நபர்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த நபர் ஷிராந்தி ராஜபக்சவின் மருத்துவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட காலத்தில், ராஜபக்ச குடும்பத்தினருடன் இணைந்து மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்தும் புலனாய்வாளர்களின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-20T00:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகம் இந்த ஆண்டின் இறுதியில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/digital-identy-card-system-1787183338"></link>
            <id>https://tamilwin.com/article/digital-identy-card-system-1787183338</id>
            <summary type="text">அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக அறிவுறுத்தல் வழங்கினார்.
</p><p>
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(19) நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><h2>முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை</h2><p>
</p><p>


2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.</p><p>

அதன்படி, ஆட்பதிவுத் திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு, தரவு பாதுகாப்பு அதிகாரசபை, GovTec நிறுவனம், இலங்கை டெலிகொம் - மொபிடெல் நிறுவனம், கொழும்பு தாமரைக் கோபுரம் நிர்வாக நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5dad78a-000a-404d-a0dd-332520cf4e8f/26-6a8640ef18052.webp' /></p><p>இந்த ஆண்டின் இறுதியில் டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவது தொடர்பான செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி வினவியதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p>

பொதுமக்கள் அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் மிகவும் செயற்திறனாகவும் எளிதாகவும் மாற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள GovPay வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T23:49:13+00:00</updated>
        </entry>
    </feed>
