<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-26T02:42:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் தாயக கடற்பகுதியில் மறைந்து கிடக்கும் பொக்கிஷம் - பணக்கார நாடாக மாறப்போகும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-oil-and-gas-discovered-in-mannar-1787709157"></link>
            <id>https://tamilwin.com/article/massive-oil-and-gas-discovered-in-mannar-1787709157</id>
            <summary type="text">மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார். </p><p>

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் மூலம் இந்த இருப்பு உள்ளதென நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீல் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>எண்ணெய் மற்றும் எரிவாயு</b></h2><p> 

“இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அளவுகளின் அடிப்படையில் அதன் வணிக ரீதியான மதிப்பை கணிப்பிட முடியும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75fa4a8a-0b7c-4b1a-a5c0-eb18dbb8a172/26-6a8e4cf177029.webp' /></p><p>உண்மையில் இந்த மதிப்பீடு மாறக்கூடியது. அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு இதனைக் விடவும் அதிகமாக இருக்கக்கூடும். </p><p>

மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இயற்கை எரிவாயு மற்றும் திரவங்களை கண்டறிய முடிந்தது. </p><p>

இதன்மூலம் பெட்ரோலிய அமைப்பு காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. 

ஒப்பீட்டளவில் பெரிய பரப்பளவை உள்ளடக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், நவீன புவிசார் ஆய்வுத் தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளை சேகரிக்கவும், தரவுகளை விளக்குவதற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதேவேளை, இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் பெட்ரோலியம், இலங்கை முகங்கொடுத்துள்ள எரிபொருள் இறக்குமதி என்ற பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p> 

மேலதிக எரிபொருளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>

சட்டரீதியான சிக்கல்கள் </b></h3><p>இந்த முதலீட்டு அழைப்புக்காக மன்னார் படுகையில் ஒதுக்கப்பட்டுள்ள 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட 4 கடல்சார் கட்டங்கள் இதில் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19087cbc-54b6-4b79-8079-fe6b033b1d97/26-6a8e4d84261f6.webp' /></p><p>இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்ட பகுதிகள் இந்த 34,000 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் அடங்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதற்கமைய, இந்த ஆண்டு தோராயமாக 33,964 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதி 4 பகுதிகளாகப் பிரித்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-26T02:18:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-warning-for-sri-lanka-1787707770"></link>
            <id>https://tamilwin.com/article/flood-warning-for-sri-lanka-1787707770</id>
            <summary type="text">இலங்கையில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூமென வளிமண்டலவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>அந்த காலப்பகுதியில் வழமையான மழைவீழ்ச்சியை விட தீவிரமான மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார். </p><p>“எதிர்வரும் 6 மாத காலநிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2><b> எல் நினோ நிலைமை</b></h2><p>அத்துடன், எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் எல் நினோ நிலைமை கடுமையாக பாதிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/142e27d1-b085-45af-b59a-486717276a12/26-6a8e42ffca537.webp' /></p><p>இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும்.</p><p> நாட்டின் சில பிரதேசங்களுக்கு 75 மில்லிமீட்டர் அளவிலான மழை எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>இது தவிர, ஏனைய மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களிலும் வெப்பமாக காலநிலை தொடரும்"&nbsp; என அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-26T01:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rainfall-may-increase-in-sri-lanka-1787706480"></link>
            <id>https://tamilwin.com/article/rainfall-may-increase-in-sri-lanka-1787706480</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் இன்று(26.8.2026) 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, மேற்கு, சபரகமுவ மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் இன்று(26.8.2026) 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். </p><p>அனுராதபுரம்

, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>பலத்த காற்று</h2><p> அம்பாறை, 

மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.தீவின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446c3464-bb01-48d2-87a7-fd00314f542d/26-6a8e3c72e50b9.webp' /></p><p>
</p><p>மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T01:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியொன்றில் மர்மான உயிரிழந்த நபர் - 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199</id>
            <summary type="text">அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.</p><p>

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட விகாரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனியாகத் தங்கியிருந்த 67 வயதான ரோகன் அரியதிலகே என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர் பெந்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் சிற்றுண்டி தயாரிப்பாளராக பணிபுரிந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 சடலம் கண்டுபிடிப்பு</b></h2><p>இந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது மிகவும் சிதைந்து, வீங்கி, துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8e5257-b5b8-4ad2-b3dd-528328c76f1d/26-6a8da71160db6.webp' /></p><p>சுமார் 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். </p><p>

கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, உயிரிழந்த நபரின் அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த ஒருவர் சென்று பார்த்தபோது, ​​சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p>]]></content>
            <updated>2026-08-26T01:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-day-of-the-victims-missing-persons-1787704404"></link>
            <id>https://tamilwin.com/article/international-day-of-the-victims-missing-persons-1787704404</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பங்கேற்புடன்&nbsp; நடைபெற்றது.&nbsp;</p><p>குறித்த நிகழ்வானது நேற்றையதினம் (25.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.</p><p>நிகழ்வில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><h2>உரிய ஏற்பாடு</h2><p>இதன் போது உரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மாவட்டத்தில் சுமார் 2,300 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகப்
பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,940 பேருக்கான விசாரணைகள்
நிறைவடைந்துள்ளன. </p><p>ஒவ்வொரு காணாமலாக்கப்பட்டவரின் பின்னாலும் ஒரு மனித உயிரும்,
ஒரு குடும்பத்தின் சமூக, பொருளாதார மற்றும் உணர்வுபூர்வமான வாழ்வும்
உள்ளடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1b26d5-faee-48dc-b915-d24063a62b9b/26-6a8e380cc7af7.webp' /></p><p>வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீண்டகாலமாக சொல்லொணாத்
துயரங்களையும், மனவேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர்.</p><p>எனவே,
அவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து, சட்டத்துறை, நீதித்துறை
மற்றும் நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அவர்களுக்கான
உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T00:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட கண்ணிவெடிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mines-located-strait-of-hormuz-have-been-removed-1787701702"></link>
            <id>https://tamilwin.com/article/mines-located-strait-of-hormuz-have-been-removed-1787701702</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனைக் கூறியுள்ளார்.</p><h2>ஈரானுக்கு எச்சரிக்கை</h2><p>இந்நிலையில், புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலும் அல்லது படகும் உடனடியாகவும் துல்லியமாகவும் அழிக்கப்படும் என்று ஈரானுக்கு எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8816a73-a367-483f-87c8-141bedf99f3c/26-6a8e2c3d7054a.webp' /></p><p>மேலும், நீரிணையில் கண்ணிவெடிகள் வைப்பதற்கு எதிரான “பூஜ்ய சகிப்புத்தன்மை”கொள்கை முழு வீச்சில் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T00:06:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பலரையும் கதி கலங்க வைத்த கதறல்! யாரும் அறியாத பல தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-protest-tamils-missing-person-1787697648"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-protest-tamils-missing-person-1787697648</id>
            <summary type="text">காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடுமையான எதிர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடுமையான எதிர்ப்புக்களையும், தமது மனக்குமுறல்களையும் வெளிப்படுத்தி இருந்தனர்.</p><p>காணாமல் போனவர்கள் குறித்த 2007ஆம் ஆண்டு நினைவுகள் எப்போதும் மனதினை வதைத்த வண்ணம் உள்ளன. அத்தோடு, OMP அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்சியாக கூறி வருகின்றனர்.</p><p>அத்தோடு, இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கோரி வடக்கு கிழக்கிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர்.</p><p>காணாமல் போனோர் விடயமாக இருக்கலாம் அல்லது நாட்டை சீரழித்த விடயமாக இருக்கலாம் இவை அனைத்திற்குமே காரணகர்த்தாவாக ராஜபக்ச குடும்பத்தினரே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு,&nbsp; ராஜபக்ச குடும்பத்தினரே இந்த விவகாரங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.</p><p>இந்தப் பொறுப்பு இயற்கையாக கிடைக்குமா அல்லது&nbsp; கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா அல்லது கடந்த கால அரசாங்கம் போன்று தற்போதைய அரசாங்கமும் நடந்து கொள்ளுமா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலே எழுகின்றது.</p><p>காணாமல் போனவர்கள் குறித்த 2007 நினைவுகள் மற்றும் தற்போதைய சூழல் பற்றிய விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NT4jM-nb1qE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T23:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 30 வருடங்கள் வாழ்ந்த வெளிநாட்டவரை நாடு கடத்த உத்தரவு - தமிழர்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-took-mans-permanent-residency-1787673215"></link>
            <id>https://tamilwin.com/article/canada-took-mans-permanent-residency-1787673215</id>
            <summary type="text">கனடாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். 

செக் குடியரசை சேர்ந்த 58 வயதான ஸ்லெப்சிக் என்பவரே இவ்வாறு நாடு கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். </p><p>

செக் குடியரசை சேர்ந்த 58 வயதான ஸ்லெப்சிக் என்பவரே இவ்வாறு நாடு கடத்தல் உத்தரவை பெற்றுள்ளார். </p><p>

கனடாவில் புகலிடம் கோரிய நிலையில், தனது சொந்த நாட்டுக்கு அடிக்கடி சென்று வந்தமையே அவர் இந்த உத்தரவை பெற காரணமாக அமைந்துள்ளது.</p><p> </p><h2><b>

பாதுகாப்பு அச்சுறுத்தல்</b></h2><p>செக் குடியரசில் தனக்கு ஆபத்து உள்ளதாக புகலிடம் பெற்ற நிலையில், அந்த நாட்டு கடவுச்சீட்டில் நாட்டுக்கு சென்று வந்தமை கனடா எல்லை பாதுகாப்பு முகவர அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db49a5f-f0aa-49d2-b292-9c5789f17fe5/26-6a8dcd598b29c.webp' /></p><p>இதன்மூலம் அவரின் சொந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையெனுவும், கனடாவில் வாழ வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அவரது நிரந்தர குடியுரிமை அந்தஸ்து மற்றும் பாதுகாப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ளன. </p><p>

இந்தச் சட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட போதும், அதனை விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் ஸ்லெப்சிக்கை நாடு கடத்தும் நடவடிக்கையில் குடிவரவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்தத் தீர்ப்பின் மூலம் கனடாவில் புகலிடம் கோரிய நிலையில், இலங்கை உட்பட வெளிநாடுகளுக்கு சென்று வரும் தமிழர்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-25T22:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்க்கு 2 நாட்கள் கால அவகாசம் - உயர் நீதிமன்றம் விடுத்த இறுதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-nadu-chief-minister-vijay-gets-2-days-time-1787696702"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-nadu-chief-minister-vijay-gets-2-days-time-1787696702</id>
            <summary type="text">தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இது தொடர்பான வழக்கு நேற்று(25.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்குறிப்பிட்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

தேர்தல் வெற்றி</h2><p>
தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். </p><p>

இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bba779c2-df03-48e7-a673-54a1d681e25c/26-6a8e170bde777.webp' /></p><p>
</p><p>
இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று(25) நீதியரசர் தி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><h2>

தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>
அந்தத் தருணத்தில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என முதல்வர் விஜய் தரப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.</p><p>

இதனை ஏற்க மறுத்த நீதியரசர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 86ஆவது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ecc9c25-4b61-49d7-8492-9d7267acbddd/26-6a8e170b2f48c.webp' /></p><p> 

கடந்த முறை வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருந்தேன் என்றார்.


இதனைத் தொடர்ந்து இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதியரசர், எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை வரை அவகாசம் வழங்கினார். </p><p>அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T22:28:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை நீடிக்க அரசாங்கம் சதி! சம்பிக்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-conspiring-holding-elections-champika-1787691505"></link>
            <id>https://tamilwin.com/article/government-conspiring-holding-elections-champika-1787691505</id>
            <summary type="text">&amp;nbsp;தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில்
மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில்
மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்பட்டு
வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல், தங்களது ஆட்சிக்
காலத்தை நீடித்துக்கொள்வதற்காகவே அரசு 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக்
கையில் எடுத்துள்ளது.</p><p>

சில அமைச்சர்கள் தேர்தல்கள் வராது எனப் பிரகடனம் செய்த போதிலும், ஜனாதிபதியோ
அரசின் பேச்சாளரோ அதனை இதுவரை மறுக்கவில்லை.</p><h2>பொருளாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல்களின்படி, நாட்டின் அந்நியச் செலாவணி
கையிருப்பு 2026இல் 8.6 பில்லியன் டொலர்களாகவும், 2027இல் 12 பில்லியன்
டொலர்களாகவும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தவித உற்பத்தி வளர்ச்சியோ
புதிய முதலீடுகளோ இல்லாமல் வெறும் சமூக வலைத் விளம்பரங்களைக் கொண்டு நாட்டை
நடத்த முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a59ba4f-49d4-4064-a802-86f212ed089f/26-6a8e147a97762.webp' /></p><p>

கடந்த 2022 மார்ச் 7 அன்று இலங்கை வங்குரோத்தாகும் நிலை குறித்து சர்வதேச நாணய
நிதியம் இரகசியக் கடிதம் மூலம் எச்சரித்திருந்தும், அதற்குக் காரணமான எவர்
மீதும் தற்போதைய அரசு இதுவரை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.</p><p>

உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைத்து மக்களின் கவனத்தை வேறு
திசைக்குத் திருப்புவதற்காகவே அரசு இத்தகைய நாடகங்களை நடத்துகின்றது.
</p><p>
அரசின் இந்த ஏமாற்று வேலைகளுக்கு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. கூட்டு
எதிர்க்கட்சியாக நாடு முழுவதும் சென்று மக்களை விழிப்புணர்வூட்டவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T22:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதி - குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-completely-affected-by-el-nino-impact-1787692456"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-completely-affected-by-el-nino-impact-1787692456</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில்
மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு
மண்டபத்தில் நேற்று(25.08.2026) இடம்பெற்றது. </p><h2>

விசேட தீர்மானங்கள்</h2><p>

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த மே மாதம் மட்டக்களப்பு
மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக, நிகழ்நிலை
ஊடாகக் கலந்து கொண்ட அமைச்சரினால் விசேட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
</p><p>

இதன்போது விசேடமாக எல் நினோ தாக்கம் குறித்தும் அதற்காக
முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97f0b24-fc60-495c-bf89-3e28c8eeb9d1/26-6a8e06400da2b.webp' /></p><p>
</p><p>

மேலும் பிரஜா சக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு
வரும் அபிவிருத்தித் திட்டங்கள், புதிய வீடமைப்புத் திட்டங்கள், சிறு
குளங்களைப் புனரமைத்தல், மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கான திட்டங்கள், விவசாய நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
</p><h2>
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், 

மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப்
பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனத்
தெரிவித்தார்.
</p><p>
மேலும், மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல்
தரையை விடுவித்தல், முந்தானையாற்றை அபிவிருத்தி செய்தல், கிரான்
பொண்டுகள் - சேனைப் பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், மண்டூர் - குருமண்வெளி
மற்றும் பட்டிருப்பு பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம்,
அம்பிளாந்துறை - குருக்கள்மடம், திக்கிலிவெட்டை- சந்திவெளி மற்றும் நரிப்புல்
தோட்டம்- பங்குடாவெளி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய பாலங்களின்
நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4719aa24-8408-4546-8684-5913550ac714/26-6a8e0640b9a95.webp' /></p><p>
</p><p>

அத்துடன், மனித - காட்டு யானை மோதல்கள், நெல் கொள்வனவு, களப்பு வாவியைத்
தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது மீளாய்வு
மேற்கொள்ளப்பட்டது.
</p><p>

மேலும், எல் நினோ தாக்கத்தினால் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக்
குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு
இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மக்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்க
வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p>

இந்த நிகழ்வில் மாவட்ட திட்டமில் பணிப்பாளர் எஸ்.நவநீதன், பிரதேச செயலாளர்கள்,
மூப்படை உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து
கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192a2372-de19-4e51-9caa-ecd8d1335afa/26-6a8e0641704d0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a66d459-a031-4203-a3a5-24588abcddcf/26-6a8e06424e5ae.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T21:17:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027-ஐ நோக்கி தீவிரமடையும் விசாரணை - காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று(25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p> 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2> 

உறவுகளை இழந்தவர்களுக்கு கொடுக்கப்படும் நிதி</h2><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

பல ஆண்டுகளாகத் தங்களது உறவுகளைத்
தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை நாம் முழுமையாக உணர்கின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கிச் செயற்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd5398fa-6d70-4c33-8996-7d34c608ceeb/26-6a8e009b7fdda.webp' /></p><p> </p><p>

அதன் வெளிப்பாடாகவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு
வருகின்றன. </p><p>


ஒரு குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கலாம். எனவே, உண்மையைத் தேடும் விசாரணைக்கு இணையாக, அந்த குடும்பங்களின் பொருளாதார
மற்றும் சமூக வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.


இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.</p><p> அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன.</p><p> 

இவ்வாறான இடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக
ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச்
செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும். 

உண்மை, நீதி, நிவாரணம்,
கண்ணியம், மீள்நிகழாமை ஆகியன ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என்றார்.</p><h2> 


57 மில்லியன் செலவில் மனித புதைகுழி ஆய்வு</h2><p>

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய நீதி
அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, 


எமது அரசாங்கத்திலே முக்கியமான ஒரு கொள்கை இருக்கின்றது, சட்டம் அனைவருக்குமே
சமன். சட்டத்துக்கு மேலாக ஒருவரும் இல்லை. காணாமலாக்கப்பட்ட பிரச்சனைகள் போன்ற
சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் சட்டம் சரியான முறையிலே
நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c3964a2-c24e-4a63-9d18-a423ed76dd80/26-6a8e009c72e1d.webp' /></p><p> </p><p>

அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதே எமது
எதிர்பார்ப்பு, நாட்டு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியதும் இந்த
எதிர்பார்ப்பிலாகும். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளைப்
பலப்படுத்தும் நோக்கில் அலுவலகத்தின் ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி
செய்யப்பட்டுப் புதிதாக 69 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக
2025ஆம் ஆண்டில் சுமார் 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், செம்மணி சமூகப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞான
ரீதியாக முன்னெடுப்பதற்காக 57 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை
உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.</p><p> 

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய
தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
</p><h2>
2027 முழுமையாக நிறைவடையும் விசாரணைகள்</h2><p>

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்துத்
தெரிவிக்கையில், 

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற சுமார் 19,000
முறைப்பாடுகளில் 9,000க்கும் மேற்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவான 2,300 பேரில் 1,940 பேருக்கான
விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657ae54b-9430-421c-95e9-b83fe70d4a4f/26-6a8e009d599e3.webp' /></p><p>

இடைநிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
எஞ்சியுள்ள அனைத்து விசாரணைகளையும் 2027ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு
செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன்,
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள், வடக்கு மாகாணப் பிரதிப்
பிரதம செயலாளர் - நிர்வாகம், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின்
தலைவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும்
பங்கேற்றிருந்தனர்.
</p><p>
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ
முகாம் ஒன்றும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:53:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஸ்கோவில் அமெரிக்க இராணுவப் போக்குவரத்து விமானம் தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-military-transport-aircraft-lands-in-moscow-1787687540"></link>
            <id>https://tamilwin.com/article/us-military-transport-aircraft-lands-in-moscow-1787687540</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போக்குவரத்து விமானமொன்று மொஸ்கோவின்
நுக்கோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக ஃப்ளைட்ரேடார் 24 விமானக்
கண்காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போக்குவரத்து விமானமொன்று மொஸ்கோவின்
நுக்கோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக ஃப்ளைட்ரேடார் 24 விமானக்
கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
07-7181 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த போயிங் குளோப்மாஸ்டர் ரக இராணுவ
விமானம், லத்வியாவின் ரிகா நகரிலிருந்து நேரடியாகப் புறப்பட்டு மொஸ்கோவில்
தரையிறங்கியுள்ளது.
</p><p>
எனினும், இவ்விமானத்தில் பயணிகள் அல்லது பொருட்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதா
என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p><h2>அமைதிப் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
அத்துடன், இப் பயணம் தொடர்பில் தமக்கு இதுவரை எவ்விதத் தகவலும்
கிடைக்கப்பெறவில்லை என ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
</p><p>முன்னதாக, வொஷிங்டனில் உள்ள கெம்ப் ஸ்ப்ரிங்ஸ் விமானத் தளத்திலிருந்து
புறப்பட்ட இவ்விமானம் ரிகாவை வந்தடைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb24c20b-3ac3-4e9b-ac41-132ce4ec08cd/26-6a8dfff0c452f.webp' /></p><p>
</p><p>
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக விசேட பிரதிநிதிகள் வருகை தந்ததனைத்
தொடர்ந்து, ஐரோப்பாவிலிருந்து ரஷ்யாவிற்கு நேரடியாக அமெரிக்க விமானமொன்று
பயணித்துள்ளமை இதுவே முதன்முறையாகும்.
</p><p>
ஈரானில் இடம்பெற்று வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும்
ரஷ்யாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இப் திடீர்
பயணம் பிராந்திய அரசியல் களத்தில் அவதானத்தைப் பெற்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:49:58+00:00</updated>
        </entry>
    </feed>
