<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-18T23:28:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்காக சவூதி தூதுவரிடம் அவசர முறையீடு - தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முன்னெடுக்கும் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-appeal-to-saudi-ambassador-on-anojan-1789770673"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-appeal-to-saudi-ambassador-on-anojan-1789770673</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை
தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை
தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த
நாட்டுப்பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல்
அசீஸ் அல் சவுத்திடம் கோரிக்கை முன்வைக்கத் தமிழ் பேசும் மக்களின் அரசியல்
பேரவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

சவூதி அரேபியாவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடயத்தில்,
கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு
வழங்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு, இலங்கைக் குடியரசுக்கான
சவூதி அரேபியத் தூதுவரை நேரடியாகச் சந்தித்து அவர் ஊடாக ஒரு கூட்டு வேண்டுகோளை
முன்வைக்க வேண்டும் எனத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அங்கத்துவச்
சகோதரக் கட்சித் தலைவர்களிடம் கோரியுள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/902c4ee1-7e8a-4279-a11e-13088a2138aa/26-6aadbbea3d91c.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் நாம் பேரவைக்குள் அவசரமாக உரையாடுகின்றோம். மேலும், இந்த
விடயத்தை நமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஊடாகவும் முன்னெடுத்து,
இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இந்த விடயத்தைச் சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச்
செல்லுமாறும் கோருகின்றோம் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T22:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 24 இல் கதி கலங்கப்போகும் கொழும்பு : 159 எம்பிக்களையும் மிரட்டும் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-set-to-be-shaken-on-september-24-1789764037"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-set-to-be-shaken-on-september-24-1789764037</id>
            <summary type="text">செப்டெம்பர் 24 ஆம் திகதி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த பேரணியைப்பார்த்து 159 எம்பிக்களும் கதிகலங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் 24 ஆம் திகதி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த பேரணியைப்பார்த்து 159 எம்பிக்களும் கதிகலங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி ஆட்சியைக் கொண்டுவந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.</p><p>மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. </p><p>இதற்கு எதிராகப் பெரும் மக்கள் பலத்தைத் திரட்டுவோம் என்றும்&nbsp;சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயங்களுடன் மேலும் பல விடயங்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pKw5uBl22W0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T22:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை மீட்க தீவிர முயற்சி - விஜித ஹேரத்துடன் கந்தசாமி பிரபு அவசர சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kandasamy-prabhu-holds-an-urgent-meeting-1789769312"></link>
            <id>https://tamilwin.com/article/kandasamy-prabhu-holds-an-urgent-meeting-1789769312</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் அனோஜன் எனும் இளைஞரின் விடுதலை தொடர்பில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் உடன் அவசர சந்திப்பொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் அனோஜன் எனும் இளைஞரின் விடுதலை தொடர்பில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் உடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். </p><p>

மேற்படி பதிவில், </p><p>

இலங்கை இளைஞர் அனோஜனின் விடுதலை தொடர்பில் விஜித ஹேரத் உடன், மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் அவசர சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டேன்.
</p><p>
இதன்போது இலங்கையின் ஒட்டு மொத்த மக்கள் சார்பிலும் அனோஜன் விடுவிக்கப்பட வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கை தொடர்பிலும் அவரது குடும்பத்தால் விடுக்கப்படும் கருணை அடிப்படையிலான தனிப்பட்ட விடுவிப்பு கோரிக்கை தொடர்பிலும், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வெளி விவகார அமைச்சர் இவ்விவகாரத்தில் நேரடி தலையீட்டை மேற்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96358395-f099-44c5-8fb1-0eadd8e63981/26-6aadb6e4b0642.webp' /></p><h2>

 
அதிகாரபூர்வமான அறிவிப்பு கிடைக்கப்பெறவில்லை..
</h2><p>
இது தொடர்பில் அமைச்சர் 
அனோஜன் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்குத் தேவையான சட்ட முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் 
இலங்கை அரசாங்கத்தால் தூதரகம் ஊடாக சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டு, அனோஜன் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு ஏற்ப அவசியமான அனைத்துவிதமான உதவிகளையும் வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வரும்.
</p><p>
அதே வேளை, இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத போதிலும், வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f577661-62ba-4348-a5d1-10673b8be6ff/26-6aadb6e5c55e2.webp' /></p><p>
</p><p>

அத்துடன் ​இதுவரை மரண தண்டனை அல்லது தீர்ப்பு சம்பந்தமான எந்தவொரு அதிகாரப்பூர்வ பிரதியும், அது தொடர்பான அறிக்கைகளும் வெளிவிவகார அமைச்சிற்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் தற்போதைய நிலவரப்படி, 
இலங்கை மக்களினதும் அரசினதும் சார்பில் சவுதி அரேபியா அரசிடம் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்த்து அதற்கேற்ற முறையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு தீவிரமாக முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

உண்மையில் தான் நேரடி கவனம் செலுத்தி வருவதாகவும் என்னிடம் உறுதி கூறினார்.</p><p>

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக அனோஜன் குடும்ப உறுப்பினர்களை அமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து பேசும் வேண்டுகோளையும் முன் வைத்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fphoto.php%3Ffbid%3D122221474328550927%26set%3Da.122111964638550927%26type%3D3&show_text=true&width=500" width="500" height="850" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T22:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்தது - கேமராவில் சிக்கிய காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-trip-bus-loses-wheel-on-expressway-1789768322"></link>
            <id>https://tamilwin.com/article/school-trip-bus-loses-wheel-on-expressway-1789768322</id>
            <summary type="text">பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று விழுந்த காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சம்பவம் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று விழுந்த காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற தனியார் பேருந்து ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது, குறித்த தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென கழன்று தனியாக விழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1755352d-e56b-4179-8e49-991d8cb00b17/26-6aadb2da7b58c.webp' /></p><p>

எனினும், பேருந்தில் பயணித்த மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>
இந்த சம்பவம், மற்றுமொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp; </p><p></p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T21:53:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் அனோஜனிற்கு இறுதி நிமிடங்களில் நடந்த மறைக்கப்பட்ட உண்மைகள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970"></link>
            <id>https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவுக்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றும், மாறாக 5 வருட சிறைத்தண்டனையும் 3,000 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
</p><p>
இவ்வாறு இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உண்மை என்ன என்பது தொடர்பில் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.</p><p>

இந்நிலையில், அனோஜன் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரி முகநூலில் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p>

அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன? அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களுடன், செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jPMCFUTKFaI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T21:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி நாடகங்களால் நாட்டு மக்களை பெலவத்தையின் சிறைக் கைதிகளாக்க அரசு முயற்சி - சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-allegations-against-the-anura-government-1789764224"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-allegations-against-the-anura-government-1789764224</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும்
பெலவத்தையின் சிறைக்கைதிகளாக மாற்ற அரசு முயற்சிக்கின்றது என்று
எதிர்க்கட்சித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும்
பெலவத்தையின் சிறைக்கைதிகளாக மாற்ற அரசு முயற்சிக்கின்றது என்று
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.</p><p>

ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் எதிர்க்கட்சித்
தலைவர் அலுவலகத்தில் நேற்று(18.09.2026) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><h2>

22 ஆவது திருத்தம்</h2><p>
நாட்டின் ஜனநாயக முறையானது சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய பிரதான
மூன்று தூண்களையும், சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றையும்
அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,
நடைமுறையில் காணப்படும் ஜனநாயக முறையையும் அதன் பிரதான தூண்களையும் அழிப்பதே
தற்போதைய அரசின் நோக்கம் என்றார்.
</p><p>
தடைகள் மற்றும் சமன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்தத் தூண்களின்
அதிகாரங்கள், 22 ஆவது திருத்தம் மூலம் நீக்கப்படுகின்றன என்றும்,
நீதித்துறையின் சுதந்திரம் இல்லாமல் செய்யப்பட்டு நிர்வாகத்துறையின்
கைபொம்மையாக அது மாற்றப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe8d910-979f-4a08-b0cb-b3d951218ac7/26-6aada2d4c5d74.webp' /></p><p>
</p><p>
 இதன் மூலம் தனிக் கட்சி ஆட்சியை ஏற்படுத்தி நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும்
பெலவத்தை கட்சித் தலைமையகத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றது என்றும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
22 ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தொடர்ந்தும் குரல் கொடுத்து
வருகின்றது என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, தூக்கத்திலிருந்த தரப்புகளை
விழித்தெழச் செய்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதற்கு எதிராகக்
குரல் எழுப்பியுள்ளதாகவும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து சர்வதேச
தரப்பினரையும் தூதுக்குழுக்களையும் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><h2>


சமூகத்தை பெலவத்தை மயமாக்க அரசு நடவடிக்கை</h2><p>

அரசுக்குத் தெளிவான மக்கள் ஆணை உள்ளது என்று கூறிக்கொண்டு, அந்த ஆணையைத்
தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு
வருகின்றது என்றும், இது குறித்து பொதுமக்களுக்குத் தாம் விழிப்புணர்வை
ஏற்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a47c00d-9da7-425a-b97e-69d4ee8d64f7/26-6aada2d599b05.webp' /></p><p>

இளைஞர் கழகத் தேர்தல்கள் நடைபெற்ற வேளை பெலவத்தையின் பட்டியலின் பெயரில்
நியமனங்கள் வழங்கப்பட்டதை ஐக்கிய மக்கள் சக்தியினரே எதிர்த்தது என்று
தெரிவித்த அவர், தற்சமயம் கிராமத்திலுள்ள சுயாதீனமாக இயங்கும் தொண்டு
நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் என்பவற்றைப் பெலவத்தை மயமாக்கி, தனிக் கட்சி
ஆட்சிக்குக் கொண்டு செல்ல அரசு முயற்சிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்,

மக்களைப் பணிய வைத்து முழு நாட்டையும் அடிபணியச் செய்யும் திருத்தமாகவே இந்த
22 ஆவது திருத்தம் காணப்படுகின்றது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
நாட்டில் தற்போதும் பொய்யும் புரட்டுமே காணப்படுகின்றது என்று தெரிவித்த
எதிர்க்கட்சித் தலைவர், கடந்த கால ஏமாற்று வேலைகளினாலேயே நாடு
வங்குரோத்தடைந்தது என்றும், இதனால் விவசாயிகள் உட்பட 220 இலட்சம் மக்களும்
அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், கடந்த கால அரசமைப்புத் திருத்தங்களுக்குக் கையை உயர்த்தியவர்கள்
தற்போதைய ஆளும் தரப்பிலேயே இருக்கின்றனர் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி
அத்தகைய காரியங்களைச் செய்யாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T20:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவயதிலேயே போதைப்பொருள் பாவனை - 11 வயது சிறுவனின் வீட்டிற்கே சென்ற பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-year-old-boy-went-viral-on-social-media-1789763455"></link>
            <id>https://tamilwin.com/article/11-year-old-boy-went-viral-on-social-media-1789763455</id>
            <summary type="text">11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸாரின் முகநூல் பக்கத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, பதிவொன்று பகிரப்பட்டுள்ளது.</p><p> </p><p>

மேற்படி பதிவில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
</p><p>
11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்தும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.</p><h2>பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை</h2><p> இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb33cb7c-d4d1-44f3-acd5-ed647687d5a4/26-6aada0366e84f.webp' /></p><p> 

பொலிஸ் பிரதித் தலைவர் தர்ஷிக குமாரியின் அறிவுறுத்தல்களின் பேரில், தலைமை ஆய்வாளர் நிமாலி பொன்சேகா மற்றும் ஆய்வாளர் கந்தீபன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று(18.09.2026) 
 கணேமுல்லாவில் உள்ள சுமேத மாவத்தையில் குறித்த சிறுவன் இருப்பதை கண்டறிந்துள்ளனர். </p><p>

மேலும், குறித்த சிறுவன், பாதுகாப்பற்ற சூழலில் வளர்வதை அவதானித்த பொலிஸார், பொலிஸ் பாதுகாப்புப் பொறுப்பில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதன் பின்னர், குறித்த சிறுவனும், அவனது தாயாரும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். </p><p>

இந்த நிலையில், சிறுவனின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்த பின்னர், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T20:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா நடைமுறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australian-migration-reforms-1789760940"></link>
            <id>https://tamilwin.com/article/australian-migration-reforms-1789760940</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு நபர்களின் பணி&amp;nbsp;பணி விடுமுறை விசா விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு நபர்களின் பணி&nbsp;பணி விடுமுறை விசா விதிகளை கடுமையாக்க உள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>அஸ்திரேலியாவில் பெரும்பாலான சர்வதேச மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தங்கி படித்தும் பகுதி நேரமாக வேலை செய்தும் வருகின்றனர்.
</p><h2>மாணவர் விசாக்களை புதுப்பிக்க</h2><p>
கடந்த 2023ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் உச்சபட்சமாக 5,18,000 வெளிநாட்டவர்கள் தங்கி வருவதாக அறிக்கை ஒன்று வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a146456-fd3c-4a97-a5a3-b8261a2288b0/26-6aad9bb450914.webp' /></p><p>இதையடுத்து அவுஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி கட்சியான ஒன் நேஷன் கட்சி, அந்நாட்டு மக்களிடையே தீவிரமாக எழுச்சி பெற்று&nbsp;வரும் நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிகமாக புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை&nbsp;7,50,000 ஆக குறைக்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்தது.</p><p>இதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், விசா காலம் முடிந்தும் இங்கு தங்கியிருப்பவர்கள்&nbsp;மீதான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் சர்வதேச மாணவர்கள் தகுதி அளவில் முன்னேறினால் மட்டுமே, தங்களது மாணவர் விசாக்களை புதுப்பிக்க&nbsp;அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>[BYVHUNC</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் உயிரை காப்பாற்ற போராடும் இலங்கை தாய் - சவூதி மன்னர்களிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-s-mother-s-request-1789761902"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-s-mother-s-request-1789761902</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு சென்று நிலைமை குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்.
</p><p>
இந்த விஜயம் நேற்று(18.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


இதன்போது, அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப
உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல்
தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன்
கலந்துரையாடுவதாகவும் நம்பிக்கையளித்துள்ளார்.
</p><p>
இதன்போது கருத்து வெளியிட்ட ரிஷாட் பதியுதீன்,
</p><p>
அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>

சவூதி அரேபியா மன்னர்களிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை.</h2><p>

மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும்
சவூதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bca5976e-1be5-49a7-8e1f-66a7bda0d99d/26-6aad9a1856c9c.webp' /></p><p> </p><p>

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை
தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை
எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளோம்.</p><p> 

இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில்
தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
</p><p>
இதேவேளை, அனோஜனின் மற்றும் பெற்றோர் குடும்பத்தினர் அனுஜனின் விடுதலை
தொடர்பில் கொண்டிருக்கின்ற அதே உணர்வுடன் தாங்களும் முஸ்லிம் சமூகமும் செயற்படுவோம் என்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfc610cb-f8f6-45b4-948b-80331e8bc287/26-6aad9a19695f1.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T20:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேர்த்திக்கடன் செலுத்த சென்ற தாய்க்கு நேர்ந்த கதி - நேரில் பார்த்த 16 வயது மகள் கொடுத்த வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-accident-in-anuradhapura-1789760907"></link>
            <id>https://tamilwin.com/article/train-accident-in-anuradhapura-1789760907</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரண்டு இரண்டு பெண் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் மரணத்திற்கான கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரண்டு இரண்டு பெண் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளதுடன், 16 வயது மகளிடம் இருந்து வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>


அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரு அதிகாரிகளும் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளனர்.</p><h2>

இறப்புக்கான காரணம்</h2><p>
இவர்களின் இறப்பிற்கு விபத்தின் பொழுது ஏற்பட்ட பலத்த காயங்களே காரணம் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுத்துறை - தோட்டமுன மரண விசாரணை அதிகாரி நிரோஷா நிலுக்ஷினி முன்னெடுத்துள்ளதுடன், களுத்துறை நாகோடா போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900d876d-f318-4151-aa0e-cb0014aaaf86/26-6aad964410218.webp' /></p><p> </p><p>

அத்துடன், சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி கே.எம்.டி.பி. குணதிலகா சமர்ப்பித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டது.</p><p>

 மாதுகம - மகா களுபஹானவைச் சேர்ந்த 58 வயதான விதான கமகே ரேணுகா தமயந்தி மற்றும் அகலவத்தை - உடவெலவைச் சேர்ந்த 53 வயதான தேவனி குருகே ஸ்ரீயானி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். </p><p>

 இருவரும் செருப்பிட்ட சிவில் பாதுகாப்புப் படை முகாமில் பணியாற்றிய அதிகாரிகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. </p><h2>

16 வயது மகள் பார்த்த சம்பவம்</h2><p>

சம்பவம் நடந்த தினத்தில், ஸ்ரீயானியின் 16 வயது மகள் சித்துமினி ஜெயநெத்தி, அதிகாலையில் தனது தாயார் மற்றும் தோழியுடன் அனுராதபுரம் செல்வதற்காக பேருந்தில் களுத்துறைக்கு வந்ததாக கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2971e0e8-b6b0-4187-a6fa-d43acb65aa03/26-6aad9644f0b1c.webp' /></p><p>

அதன் பின்னர் அவர் மைதானத்தின் பக்கத்திலிருந்து தொடருந்து தண்டவாளத்தில் நுழைந்து தொடருந்து நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​எதிர்பாராதவிதமாக ஒரு தொடருந்து வந்தது.

தொடருந்து வருவதைக் கண்டவுடன், தான் சுமந்து வந்த இரண்டு பைகளையும் தொடருந்து மேடையில், வீசிவிட்டு உடனடியாக மேடையில் இருந்து மேலே ஏறுவதற்கு முயற்சித்துள்ளனர்.</p><p>

மேலும், தனது தாயாரையும் மற்ற பெண்ணையும் தூக்க முயன்றதாகவும், ஆனால் அதற்குப் போதுமான நேரம் இல்லாத காரணத்தினால், அப்போது, ​​அவர்கள் இருவரும் தொடருந்து மேடையை பிடிக்க முயன்றபோது, ​​திடீரென வந்த தொடருந்து மோதி தூக்கி வீசப்பட்டதாக மகள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். </p><h2>

பயணத்தில் கலந்துக் கொள்ளாத கணவர்</h2><p>

இவர்களின் பிரேதப் பரிசோதனையின்போது சாட்சியமளித்த, உயிரிழந்த ஸ்ரீயானியின் கணவர் செனரத் ஜெயநெத்தி, “தனக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததால் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளவில்லை” என்றார். </p><p> 

 இதனைத் தொடர்ந்து, ரேணுகா தமயந்தியின் மகளான லக்ஷிகா மதுஷானி, தனது தாய் அதிகாலையில் அனுராதபுரம் செல்வதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டதாகவும், அவரை மத்துகம பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட பின்னரே இவ்வாறு விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:51:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனக் கப்பல் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chinese-ship-collided-with-a-philippine-ship-1789755913"></link>
            <id>https://tamilwin.com/article/chinese-ship-collided-with-a-philippine-ship-1789755913</id>
            <summary type="text">தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான கப்பலொன்றின் மீது
சீனக் கடலோரப் பாதுகாப்புக் குழுவின் கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான கப்பலொன்றின் மீது
சீனக் கடலோரப் பாதுகாப்புக் குழுவின் கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக
மணிலா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
பஜாவான் மாகாணக் கரைக்கு அப்பால் உள்ள சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் பயணித்த
‘பி.ஆர்.பி டட்டு மகத் சலமத்’ என்ற பிலிப்பைன்ஸ் மீன்பிடி மற்றும் நீர்வாழ்
வளங்கள் திணைக்களத்தின் கப்பல் மீது, சீனக் கப்பல் அபாயகரமான முறையில் இராணுவ
நடவடிக்கைகளை மேற்கொண்டு மோதியதாக பிலிப்பைன்ஸ் கடற்கரை பாதுகாப்புப் படை
தெரிவித்துள்ளது.</p><h2>தொடர்ச்சியான மோதல் சம்பவங்கள்</h2><p>உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கச் சென்ற வேளையிலேயே இச் சம்பவம்
இடம்பெற்றுள்ளதுடன், மோதலினால் பிலிப்பைன்ஸ் கப்பலின் ஒரு பகுதி பலத்த
சேதமடைந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d349b569-a299-46fc-8b61-cec5d300f912/26-6aad8dc5e1915.webp' /></p><p>
எனினும் இச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனக்
தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அதேவேளை, இக் குற்றச்சாட்டை சீனா முற்றாக மறுத்துள்ளது. பிலிப்பைன்ஸ் கப்பலே
எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, திடீரெனத் தனது பயணப் பாதையை மாற்றிச் சீனக்
கப்பலுக்கு முன்பாக அதிவேகமாக வந்தமையினாலேயே இச்சேதம் ஏற்பட்டதாகச் சீன
வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>தென் சீனக் கடல் பகுதி முழுவதற்கும் உரிமை கோரிவரும் சீனாவிற்கும், அப்
பகுதியைத் தனது எல்லைக்குட்பட்டதாகக் கருதும் பிலிப்பைன்ஸிற்கும் இடையே கடந்த
சில மாதங்களாக இவ்வாறான தொடர்ச்சியான மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:20:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்ப்புகளை மீறி கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவக் கழிவுகள் - நிர்வாகத்திற்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cancer-medical-waste-dumped-at-rimalai-1789758843"></link>
            <id>https://tamilwin.com/article/cancer-medical-waste-dumped-at-rimalai-1789758843</id>
            <summary type="text">பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள்
கொட்டப்பட்டு வரும் நிலையில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் பெருமளவான ஆபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள்
கொட்டப்பட்டு வரும் நிலையில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் பெருமளவான ஆபத்தான மருத்துவ கழிவுகளும் அங்கு கொட்டப்பட்டுள்ளதாக வலி.
வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் நேற்று(18.09.2026) அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2> 


கீரிமலை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்</h2><p>


இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றி , எவ்வித அனுமதிகளும் இன்றி சுமார் 300
டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு மாத காலத்திற்கு
மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509fe807-1704-446e-89aa-75876b866e18/26-6aad8e21458fd.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, ஒருங்கிணைப்பு குழு
தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா , வலி. வடக்கு பிரதேச சபை
தவிசாளருக்கு கொட்டப்பட்ட கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அள்ள நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பணித்திருந்தார்.</p><h2>

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்</h2><p>
அத்துடன் வலி. வடக்கு பிரதேச சபையினரும் அப்பகுதிகளில் கழிவுகளை கொட்டக்கூடாது
என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

அவ்வாறான நிலையில், கடந்த வியாழக்கிழமை சபையின் மாதாந்த
கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்து, கீரிமலையில்
கொட்டப்பட்ட குப்பைகள் மீள அள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459be478-0545-4530-a492-19c3af6703d9/26-6aad8e2235c2f.webp' /></p><p>அதேவேளை,&nbsp; உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை
அதிகாரிகள் , வலி.தெற்கு பிரதேச சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்டவர்கள், வலி.
வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுடன் இணைந்து குப்பைகள் கொட்டப்பட்ட
இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அவற்றை உடனடியாக வலி. தெற்கு பிரதேச
சபையினர் மீள அள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.</p><p>

இந்நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்தில்
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் ஆபத்தான வைத்திய கழிவுகள் பெருமளவில்
கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன.</p><p>இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள் அறிவித்ததை
அடுத்து, சம்பவ இடத்திற்கு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்ட போது பெருமளவான
மருத்துவ கழிவுகள் பொதி செய்யப்பட்ட நிலையில் அங்கு
கொட்டப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளனர்.
</p><h2>
மருத்துவ கழிவுகள் அடையாளம்</h2><p>
இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு புகைப்பட மற்றும் ஒளிப்பட ஆதாரங்களுடன்
முறையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22cfc59a-e23e-485b-b907-fd655815342f/26-6aad8e230ade4.webp' /></p><p>

கழிவுகளை இப்பகுதியில் கொட்ட வேண்டாம் என கடந்த இரு மாதங்களாக தாம் குரல்
கொடுத்து வரும் நிலையிலும், பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் கழிவுகள் அள்ள பட
வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, உள்ளூராட்சி ஆணையாளர் கழிவுகளை அள்ள
உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில் , அவற்றையெல்லாம் மீறி வலி. வடக்கு பிரதேச சபையினர்
ஆபத்தான மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளமை படுமோசமான செயற்பாடு என வலி.
வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:16:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dead-in-a-foreign-country-after-7-years-1789754294"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dead-in-a-foreign-country-after-7-years-1789754294</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு பிரிட்டனில் காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தாயின் உடல் எச்சங்கள், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு பிரிட்டனில் காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தாயின் உடல் எச்சங்கள், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலைச் சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த 44 வயதான ஜோன் ஷீனின் உடல் எச்சங்கள், அவர் காணாமல் போன இடத்திலிருந்து 60 மைல்களுக்கும் அதிகமான தொலைவில் உள்ள தென்மேற்கு லண்டனின் ஃபெல்தாம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமான சவுத்தாம்ப்டனைச் சேர்ந்த 56 வயதான ஹாம்ப்ஷயர் என்பவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>


தீ விபத்தில் சிக்கிய உடல் எச்சங்கள்</h2><p>
குறித்த பெண், கடைசியாக டிசம்பர் 5, 2019 அன்று, ஃபேர்ஹாமிலிருந்து தனது சொந்த ஊரான சவுத்தாம்ப்டனுக்கு ஒரு தோழியுடன் சென்ற பொழுது காணாமல் போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebae6b93-1c9e-477e-9828-2163c68b9551/26-6aad7c33e071d.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

அதன் பின்னர், பல மாதங்களாக அவரிடமிருந்து எந்தத் தகவலும் வராததால், குடும்ப உறுப்பினர்கள் பெப்ரவரி 2020ஆம் ஆண்டு பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர்.</p><p>“லிட்டில் ஜோ” என்றும் அறியப்பட்ட, ஐந்து அடி உயரமுள்ள அந்தப் பெண் காணாமல் போனது குறித்து பொலிஸார் ஒரு விரிவான விசாரணையை ஆரம்பித்தனர்.</p><p>

இதன்போது, 4,000-க்கும் மேற்பட்ட தகவல்களும், 300-க்கும் மேற்பட்ட வாக்குமூலங்களும் பெறப்பட்டன. அவர் இருந்த பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முகவரிகளிலும், பல படகுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
</p><p>
பெட்பான்ட் லேக்ஸ் கண்ட்ரி பார்க் அருகே இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 12 அன்று அந்த வழியே சென்ற ஒருவர் அந்த எலும்புக்கூடு எச்சங்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனைத் தொடர்ந்து, டிஎன்ஏ மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம் அந்த உடல் ஷீனுடையது என்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். </p><h2>

20,000 டொலர்கள் வெகுமதி</h2><p>
அவருக்கு நிலையான முகவரி, வங்கிக் கணக்கு அல்லது கார் எதுவும் இல்லாததால், பொலிஸாரின் விசாரணை கடுமையாகத் தடைபட்டது. </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு, ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/557e3821-fe4d-4279-86de-01757290ac4d/26-6aad7c34ae13c.webp' /></p><p>
</p><p>
அவரது இரண்டு மகள்களான லெய்லா மற்றும் ஹெய்லி, தங்கள் தாயை மிகவும் இனிமையான மற்றும் நட்பான பெண் என்று விவரித்தனர்.

 இருப்பினும், அவர் ஒரு பாலியல் தொழிலாளியாகவும் பணியாற்றியதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். </p><p>

எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது விசாரணைக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளது என்று துப்பறியும் தலைமை ஆய்வாளர் டோபி எல்காக் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், இந்த விசாரணைக்கு உதவும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 20,000 டொலர்கள் வெகுமதி வழங்க கிரைம்ஸ்டாப்பர்ஸ் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:10:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து அகற்றப்பட்ட ஒலிபெருக்கி - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/loudspeaker-removed-from-thileepan-s-memorial-1789757743"></link>
            <id>https://tamilwin.com/article/loudspeaker-removed-from-thileepan-s-memorial-1789757743</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி
பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை
யாழ்ப்பாணம் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி
பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை
யாழ்ப்பாணம் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(18.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

நல்லூரில் அமைந்துள்ள பிரதான நினைவுத் தூபிப் பகுதியில் திலீபனின் நினைவேந்தல்
வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், நினைவேந்தல் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட
போதே பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><h2>
ஒலிபெருக்கிகள் பறிமுதல்</h2><p>

தமக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமையவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகத்
தெரிவித்த பொலிஸார், அங்கு பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்களைப் பறிமுதல்
செய்து பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1c08f24-3f55-4a45-a1b4-b309503fd1fb/26-6aad898106ef0.webp' /></p><p>

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதற்குச் சான்று பகிர்வது போலப்
பொலிஸாரின் இந்தச் செயற்பாடு அமைந்திருக்கின்றது என்று அந்த இடத்தில் இருந்தவர்கள் விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d91a2df2-cf25-4039-b2a8-d24b4dd76752/26-6aad89821484e.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T18:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு வந்த அழைப்பு - பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-received-by-namal-who-is-in-prison-1789757186"></link>
            <id>https://tamilwin.com/article/call-received-by-namal-who-is-in-prison-1789757186</id>
            <summary type="text">எதிர்க்கட்சி தலைவர் நாமல் ராஜபக்சவை தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பிணை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சி தலைவர் நாமல் ராஜபக்சவை தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், பிணை பெறுவதற்காக நாமல் ராஜபக்ச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
</p><p>
சிறையில் இருக்கும் நாமல் ராஜபக்சவிற்கு எசல பெரஹெரவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் சமூகமளிக்காவிட்டால் அது அழைப்பை அவமதிப்பதாக அமையும் என அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதனை ஒரு காரணமாக முன்வைத்து நாமல் ராஜபக்சவிற்கு பிணை கோரப்பட்டுள்ள போதிலும், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அத்துடன், நிமல் பெரேரா அளித்த வாக்குமூலம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, நிமல் பெரேராவின் வங்கிக் கணக்கிற்கு மேலும் பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாமல் ராஜபக்ச வழக்கின் பின்னணியில் இடம்பெறும் பரபரப்பான விடயங்கள் என்ன? பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் பின்னணி என்ன? உள்ளிட்ட பல தகவல்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது “நியூஸ் இன்சைட்” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0e_uB3G-kPs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T18:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறீதரனை சந்தித்த ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/met-with-itak-member-of-parliament-shritharan-1789753078"></link>
            <id>https://tamilwin.com/article/met-with-itak-member-of-parliament-shritharan-1789753078</id>
            <summary type="text">இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானத்தை சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>குறித்த சந்திப்பானது இன்று(18.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmarc.andre.franche%2Fposts%2Fpfbid0CkyvfNcAa58cM9Ca5eEv65LDiJD7hnVVzz3F3XMzSLG2yPTeszEzcUC1rPyu5zfSl&show_text=true&width=500" width="500" height="250" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p> </p><p>இந்த சந்திப்பின் போது நல்லிணக்க முயற்சிகளில் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான கூட்டணிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, வடக்கில் காணிகளை விடுவித்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:58:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் அடுத்தடுத்து வாள் வெட்டு சம்பவங்கள் - போராட்டத்தில் குதித்த வர்த்தகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1789752266"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1789752266</id>
            <summary type="text">கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>

இந்த போராட்டமானது, இன்று(18.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>


கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த
கவனயீர்ப்பு பேரணி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று மாவட்ட மேலதிக
அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ்விடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்த்தகரங்களால் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dacad13-1970-45e5-9037-29e903d75804/26-6aad744d55968.webp' /></p><p> </p><p>

கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும்
வகையில் வாள் வெட்டுக்குழுக்கள் வாள் வெட்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த வாரங்களில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b07e5b-3f7a-43c4-b76e-3cce230607e2/26-6aad744e54de5.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a61c2b0c-3a6c-44e2-8d24-daab569952c1/26-6aad744f29fb8.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T17:27:41+00:00</updated>
        </entry>
    </feed>
