<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T19:17:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற துடிக்கும் ரணில்! நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்சர்களுடன் நடந்துள்ள டீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.

பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.

பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரைமறைவு அரசியல் நகரவுகளும் அம்பலமாகின்றன.
</p><p>
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் தற்போது கருத்துக்கள் வெளியாகின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு ஒரு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தநிலையில்,அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மக்கள் கூட்டத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>

நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை,
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய 22 மில்லியன் அமெரிக்க டொலர் ஹொங்காங் வங்கி கணக்கு விவகாரத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கஅம்பலப்டுத்தியுள்ளார்</p><p>.

 நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் இந்த ஹாங்காங் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தில் இருந்த சிலர் தலையிட்டு அந்த நடவடிக்கைகளைத் தடுத்ததாக ஆசு மாரசிங்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

 இந்தத் தகவல்கள் மூலம், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் 'டீலிங்' (Deal) குறித்த விடயங்களை ஆசு மாரசிங்க வெளிப்படுத்தியுள்ளார் .</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/twa6VY8TL_U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் தாக்குதல் வரப்போகிறது...ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னரே நெதன்யாகுவுக்கு நேரடியாக தகவல் வழங்கிய UAE ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-was-warned-about-hamas-2023-attack-1788887397"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-was-warned-about-hamas-2023-attack-1788887397</id>
            <summary type="text">2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வார் பாரிய தாக்குதலொன்றைத் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரடியாக எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இஸ்ரேலிய ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>மிகப்பெரிய தாக்குதல்&nbsp;</h2><p>
சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது, காசாவில் இருந்து “சில்சால்” எனப்படும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பின் சயீத் எச்சரித்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் இரத்தக்களரியையும் ஸ்திரமின்மையையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், இந்தத் தாக்குதல் ஆபிரகாம் ஒப்பந்தங்களையும் பாதிக்கக்கூடும் என பின் சயீத் கவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

எனினும், நெதன்யாகு இந்த எச்சரிக்கைக்கு ஒப்பீட்டளவில் அமைதியாக பதிலளித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/379db03b-6a88-4337-b651-92c606f05986/26-6aa0487fd4d4d.webp' /></p><p>
</p><p>
ஹமாஸ் மேற்கு கரையில் நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம் என தான் கருதுவதாக நெதன்யாகு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த இந்த முக்கியமான எச்சரிக்கை குறித்து ஷின் பெட், மொசாட் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நெதன்யாகு அறிவிக்கவில்லை என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்&nbsp;</h2><p>
</p><p>
பின் சயீத் பின்னர் இந்த உரையாடல் குறித்து சிஐஏ இயக்குநர் வில்லியம் ஜே. பேர்ன்ஸிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்ரேலின் ஷின் பெட் மற்றும் ஹமாஸ் இடையே இரகசிய நேரடி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு இரு தரப்பும் நெருங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆனால், அந்த ஒப்பந்தம் இஸ்ரேல் தரப்பில் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட காலமாக காத்திருந்த சின்வார், 2023 செப்டெம்பரில் இடைத்தரகர் ஊடாக தான் “சில்சால்” எனப்படும் தாக்குதலைத் தயாரித்து வருவதாக எச்சரித்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6df83d-79ff-4d52-a4cf-382914bf8dfb/26-6aa04880890d5.webp' /></p><p>

அந்தத் தாக்குதலை “மிகப்பெரிய ஆச்சரியம்” மற்றும் “பயங்கரமான நடவடிக்கை” என அவர் விவரித்ததாகவும் கூறப்படுகிறது.

செப்டெம்பர் 15ஆம் திகதி சின்வாரின் எச்சரிக்கை ஷின் பெட்டை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதனைத் தொடர்ந்து, அப்போதைய ஷின் பெட் தலைவர் ரோனென் பார், நெதன்யாகுவுக்கு அது குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், இஸ்ரேல் “மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது” என ரோனென் பார் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>&nbsp;கடும் எதிர்வினை</h2><p>
காசா மற்றும் மேற்கு கரையில் தாக்குதல் அல்லது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

எனினும், அந்தக் கூட்டத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இதன்பின்னர், எகிப்திய புலனாய்வுத் தலைவர் அப்பாஸ் கமெலும் ஹமாஸ் “வழக்கத்திற்கு மாறானதும் பயங்கரமானதுமான நடவடிக்கை” ஒன்றைத் திட்டமிடுவதாக நெதன்யாகுவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

காசா நிலைமையை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நெதன்யாகு அவரிடம் தெரிவித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8742e07e-7c74-4322-97f3-4d6dda4b2629/26-6aa048813a4be.webp' /></p><p>

இதனையடுத்து, 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி அதிகாலை 6.29 மணியளவில் ஹமாஸின் தாக்குதல் ஆரம்பமானது.

இந்தத் தாக்குதலின்போது சுமார் 251 பேர் கடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், ‘ஹாரெட்ஸ்’ வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நெதன்யாகுவின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.
</p><p>
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் நெதன்யாகு குறித்த காலப்பகுதியில் பேசவில்லை என்றும், அவரிடமிருந்து எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் இஸ்ரேலில் அரசியல் ரீதியாகவும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னெட், ஐக்கிய அரபு அமீரக மற்றும் எகிப்திய தரப்புகளிடமிருந்து எச்சரிக்கைகள் கிடைத்தபோதும் நெதன்யாகு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஒக்டோபர் 7 பேரழிவுக்கு நெதன்யாகு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T17:40:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால் ட்ரம்ப் வெளியிட்ட வரைபடப் பதிவால் சர்ச்சை: ஐஸ்லாந்து கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-over-map-post-by-donald-trump-1788886635"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-over-map-post-by-donald-trump-1788886635</id>
            <summary type="text">அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான
அமெரிக்கத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான
அமெரிக்கத் தூதுவரை அழைத்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தனது அதிருப்தியைத்
தெரிவித்துள்ளது.
</p><p>
டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட
வரைபடத்தில் அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய
அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் அனைத்தும் அமெரிக்கக் கொடியால்
மூடப்பட்டு 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என பெயரிடப்பட்டிருந்தது.
</p><p>
இந்த வரைபடப் பதிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐஸ்லாந்து
வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்து வரும்
கருத்துக்கள் ஏற்கனவே வாஷிங்டன் மற்றும் டென்மார்க் இடையே ராஜதந்திர
பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><h2>கண்டனம்</h2><p>
</p><p>
கிரீன்லாந்து மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக மாற விரும்பவில்லை என
டென்மார்க் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ffe90c-4b3c-4080-8f17-442eb62384fb/26-6aa0422149055.webp' /></p><p>

ஐரோப்பிய ஒன்றியம் கிரீன்லாந்தில் 200 மில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்த சில
மணிநேரங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p>

எனினும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையோ அல்லது தூதரகங்களோ
உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T17:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நாமல் ராஜபக்சவுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட பூஜை வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-prayers-namal-blessings-for-namal-1788883446"></link>
            <id>https://tamilwin.com/article/special-prayers-namal-blessings-for-namal-1788883446</id>
            <summary type="text">கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விசேட பூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது.</p><p>
இன்று (8.9.2026) புன்னைச்சோலை காளி கோயில் மாவட்ட அமைப்பாளர்
சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.</p><h2>விசேட ஆசீர்வாத பூஜை</h2><p>
</p><p>இது தொடர்பில் மாவட்ட அமைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மக்களின் அரசியலுக்காக வெகுவிரைவில் பயணிக்க
உள்ள அவருக்கு நல்லாசி வேண்டி மட்டக்களப்பு பூராகவும் அனைத்து மத
தலங்களுக்கும் சென்று ஆசீர்வாதத்தை பெறுவதற்காக திட்டமிட்டுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ef6e7f1-9ce9-4b4c-a34d-a0a4b41f2718/26-6aa038d8c2f24.webp' /></p><p> அதன்
பிரகாரம் இன்று மட்டு புன்னைச்சோலை காளி கோயில் இந்த விசேட ஆசீர்வாத பூஜையை
இன்று ஆரம்பித்துள்ளதாக மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன்
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் எயார்பஸ் ஊழலில் தொடர்புப்பட்ட இருவரின் மர்ம மரணங்கள்! நான்கு மரணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141</id>
            <summary type="text">எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரின் விபரங்கள் இன்றைய நிலையில் வெளிவந்துள்ளது.
</p><p>எயார்பஸ் ஊழல் தொடர்பில் முதன் முதலில் தகவலை வெளியிட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிராந்திய முகாமையாளரும் ஊடகவியலாளருமான ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் மரணம்.
</p><p>இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் ராஜபக்சர்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் தான் ரஜீவ பிரகாஷ் ஜயவீர. அவர் எவ்வாறு இறந்தார் என்ற பதிவுகள் இல்லை. </p><h2>
</h2><p></p><h2>முதன் முதலில் இதை வெளிப்படுத்தியவர்</h2><p>பின்னர் கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தில் 'நான் தற்கொலை செய்துகொள்கிறேன்' என்று எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது என வழக்கு முடிக்கப்பட்டது.மற்றையது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம். </p><p>இவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் அநேகர் அறிவர்.ஆனால் நாடே அறியாமல் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
அடுத்த நபர்இ இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மற்றும் ராஜபக்சர்களின் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக செயற்பட்ட சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1476e2e-2420-4e81-912a-ecbc47f9d61a/26-6aa03b84a5daa.webp' /></p><p> </p><p>இவர் சிரந்தி ராஜபக்சவிற்கு எதிரான 'சிரிலிய' வழக்கு 'சில் ரெதி' (தானம் வழங்கும் வெள்ளை புடவை) நிதி மோசடி வழக்குகளில் அரசு சார்பில் முன்னிலையானவர். இவர்தான். மேலும் லிட்ரோ எரிவாயு வழக்கு - மிக் விமான கொள்வனவு வழக்குகள் போன்றவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து 
வாதாடியவர்.
</p><p>2019 இல் ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இவரைச் சிறையில் அடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலிருந்தும் நெருக்கடிகளைக் கொடுத்தனர். அலரிமாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஊழல் எதிர்ப்புப் பிரிவிலிருந்து இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கொண்டே சம்பளம் பெற்றார் என்று பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. </p><h2>
அறிப்படாத இரு மரணங்கள்</h2><p>ஊடகங்களில் அதைப் பரப்பி இவரன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். மறுபுறம் ராஜபக்சர்களின் ஆதரவாளர்களுக்கு நடந்த அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு இவரை ஒரு பிரதிவாதியாக அனுப்பி முடக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் முடக்கினர்.
</p><p>அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டில் இவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். திடீரென உயிரிழப்பது நடக்கக்கூடிய ஒன்றுதான் ஆனால் இக்காலத்தில் திடீரென இறப்பது என்பது படுகொலை செய்யப்படுவதற்கான ஒரு விசேட அறிகுறியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f41c91-cf8f-4880-b5ec-8213f7a76535/26-6aa03b8644647.webp' /></p><p> </p><p>
கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா விஜயநாயக்கவின் நிறுவனத்திற்கு 2.5 பில்லியன் டொலர்கள் அனுப்பப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.அந்தக் கணக்கிலிருந்து மூன்று இடங்களுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>
சேபிள் விஷன் (Sable Vision) - அது நிமால் பெரேராவிற்குச் சொந்தமான சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனம். அடுத்து எஸ்.எல். எக்ரோ (SL Agro) - அதுவும் சிங்கப்பூரில் உள்ள ஒரு கணக்கு.</p><h2>உயிரிழப்பு</h2><p>மற்றொன்று நேரடியாகக் கபில சந்திரசேனவின் அவுஸ்திரேலிய கணக்குகளுக்குச் சென்றுள்ளது. இவ்வாறு மூன்று இடங்களுக்குப் பணம் சென்றுள்ளது.
எஸ்.எல். எக்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் யோஹன் விஜயநாயக்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a9987a4-97e0-4de3-8f69-d4af650aa248/26-6aa03b8592877.webp' /></p><p> </p><p>இந்த நபரை யாருக்கும் தெரியாது.ஆனால் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கி பழகியவர்.
இந்த நபரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். கொரோனா தொற்றினால் இறந்ததாக முத்திரைக் குத்தப்பட்டு பிரேதப் பரிசோதனை கூட நடத்தப்படவில்லை.
</p><p>இவர் 27 வயது இளைஞர். எனவே 27 வயது நபர் திடீரென உயிரிழப்பது சந்தேகத்திற்குரியது அங்கும் ஒரு மர்மம் உள்ளது.</p><p></p><p>&nbsp; &nbsp;</p><p> &nbsp; &nbsp;&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-09-08T16:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருள்காட்சி வழங்கிய வேல் பெருமான் – நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற சப்பரத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-today-1788884143"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-today-1788884143</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா
நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய தினம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா
நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய தினம்(8) செவ்வாய்க்கிழமை மாலை சப்பர திருவிழா நடைபெற்றது.
</p><p>
கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று
வருகின்றது.</p><h2>சப்பரத் திருவிழா</h2><p> இன்றைய தினம் மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று ,
தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் சப்பரத்தில் எழுந்தருளி ,
சப்பர திருவிழா இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b3f504-dd53-467b-8fe5-62ca1c0a5c6e/26-6aa036b8ed0bd.webp' /></p><p>
</p><p>
நாளைய தினம்(9) புதன்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி
,தொடர்ந்து ஆறுமுக சுவாமி காலை 07 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு
அருட்காட்சியளிப்பார்.
</p><p>
தேர் திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர்
தேசங்களிலும் இருந்தும் இலட்ச கணக்கான பக்தர்கள் ஆறுமுக சுவாமியின்
அருட்காட்சியினை கண்டு களிக்க ஒன்று கூடுவார்கள்.

காவடிகள் , பிரதட்டைகள் , கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது
நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:24:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பு கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-discussion-fighters-welfare-association-1788882814"></link>
            <id>https://tamilwin.com/article/special-discussion-fighters-welfare-association-1788882814</id>
            <summary type="text">போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “போராளிகளின் வாழ்வியலும் ஜனநாயக அரசியலும்” என்ற தொனிப்பொருளில் வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “போராளிகளின் வாழ்வியலும் ஜனநாயக அரசியலும்” என்ற தொனிப்பொருளில் வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கிடையிலான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>குறித்த கலந்துரையாடலானது (6.9.2026) இடம்பெற்றது.</p><p>
இந்நிகழ்வில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த போராளிகள் நலன்புரிச் சங்க நிர்வாகிகள் மற்றும் போராளிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.</p><h2>கருத்துப் பரிமாற்றங்கள்</h2><p>குறிப்பாக, எமது மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி மற்றும் ஜனநாயக அரசியல் தொடர்பான முக்கியமான விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4c07b2-095f-40ae-bc1b-44942feec3d2/26-6aa02f89db5f3.webp' /></p><p>
</p><p>முன்னாள் போராளிகளும் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, ஒற்றுமையுடனும் ஜனநாயக வழியிலும் எதிர்காலத்தில் செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
</p><p>போராளிகளின் நலனையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னிறுத்திய இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T15:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- புறநகர்ப் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-athurugiriya-area-1788880114"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-athurugiriya-area-1788880114</id>
            <summary type="text">கொழும்பு- அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்தோடு, காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்‌சக்கள் செய்தவற்றால் தான் நாடு இன்று இந்த நிலையில் சரி உள்ளது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-npp-government-1788879001"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-npp-government-1788879001</id>
            <summary type="text">நாட்டில் இடம்பெற்ற பல அரசாங்கத்தி்றகு எதிரான போராட்டங்களின் போது, அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகினர்.&amp;nbsp;குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இடம்பெற்ற பல அரசாங்கத்தி்றகு எதிரான போராட்டங்களின் போது, அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகினர்.&nbsp;</p><p>குறிப்பாக, அரகலய போராட்டத்தின் போது, பலரின் முகம் மக்கள் மனதில் அதிகம் பதிந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்திலும் சரி பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களிலும் சரி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான கூட்டங்களிலும் சரி ஒரே நபர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.&nbsp;</p><p>இது உண்மையில், சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்பதோடு இதன் பின்னணி குறித்து பல கேள்விகளும் எமக்கு எழுகின்றன.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், குறித்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தகவர்களில் ஒருவர், லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில், இன்று கலந்து கொண்டு&nbsp;ராஜபக்‌சக்கள் செய்தவற்றால் தான் நாடு இன்று இந்த நிலையில் சரி உள்ளது என குறிப்பிட்டார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-S-MtjcXCDU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:04:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் டித்வா வீட்டுத்திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-affected-during-ditwah-request-1788878400"></link>
            <id>https://tamilwin.com/article/people-affected-during-ditwah-request-1788878400</id>
            <summary type="text">&amp;nbsp;டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்த கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான
அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்த கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான
அவசரத் தேவை குறித்து தங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
</p><p>
டித்வா வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1,138 முழுமையாக
சேதமடைந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற சேதமடைந்த வீடுகளின்
கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு, அத்துடன் மீள்குடியேற்ற
வீட்டுத்திட்டங்களும் தற்போது மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றன.</p><p> இந்த திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்வதற்கு போதுமான
தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை.

இருப்பினும், தற்போதைய தொழில்நுட்ப பணியாளர் நிலைமை மிகவும் போதாததாக உள்ளது.
</p><p>தற்போது, மாவட்டத்தில் ஒரு (01) தொழில்நுட்ப அலுவலர் மற்றும் நான்கு (04)
தொழில்நுட்ப உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். </p><p>அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்
தொகுதிக்கு எதிராக, தொழில்நுட்ப அலுவலர்களுக்கு ஏழு (07) வெற்றிடங்களும்,
தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு நான்கு (04) வெற்றிடங்களும் உள்ளன.</p><p>

இந்த நிலைமை வீட்டுத்திட்டத்தின் முன்னேற்றத்தை நேரடியாக பாதித்து,
திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் மாவட்ட வீட்டு இலக்குகளை அடைவதை பாதகமாக
பாதிக்கலாம்.</p><p>

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் டித்வா வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்வதன்
அவசரத்தை கருத்தில் கொண்டு, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு போதுமான தொழில்நுட்ப
அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களை உடனடியாக நியமிக்க / நிலைநிறுத்த
தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு தங்கள் தலையீட்டை அன்புடன் கோருகிறேன்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T14:40:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படத்தின் மற்றுமொரு பாடல் வெளியானது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-new-song-released-deva-sang-1788875267"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-new-song-released-deva-sang-1788875267</id>
            <summary type="text">ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்றைய தினம் (08.09.2026) வெளியாகியுள்ளது.

இதனை தற்போது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்றைய தினம் (08.09.2026) வெளியாகியுள்ளது.
</p><p>
இதனை தற்போது இரசிகர்கள் கண்டு மகிழலாம்.</p><p>குறித்த பாடலானது, தேனிசை தென்றல் தேவாவினால் பாடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “போராட்டம்” திரைப்படத்திற்கு உள்நாட்டின் முன்னனி பாடகர்களும் தமது படைப்புக்களை வழங்கியுள்ளனர்.</p><p>
போராட்டம் திரைப்படத்தின், "சோறு தான் முக்கியம்” என்ற இந்தப் பாடல் பலரை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tFxiDagMXuo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T14:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-meeting-president-anura-1788873028"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-meeting-president-anura-1788873028</id>
            <summary type="text">இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை(8) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை(8) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.</p><p>இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்தும் நோக்கில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று
நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கொழும்பை வந்தடைந்தார்.
</p><p>
விசேட விமானத்தில் இன்று(8.9.2026) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண
ஜயசேகர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.</p><h2>ஜனாதிபதியுடன் சந்திப்பு</h2><p>

எதிர்வரும் 10 திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தக் காலகட்டத்தில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள்
மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கையின் மூத்த
அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c215f8d8-61d3-40f9-8af0-8812d2486138/26-6aa012fedc177.webp' /></p><p>&nbsp;பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் அவர்
சந்திக்கவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மற்றும் ரணில் மீதான ஊழல் விசாரணைகள் குறித்து UNHRC அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136"></link>
            <id>https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136</id>
            <summary type="text">இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது வழக்கமான அமர்வில் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 ஊழல் விசாரணை ஆணைக்குழு</b></h2><p>இதேவேளை, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfd58f6-158c-4e64-823d-ac4ede5572a9/26-6a9f8af8dc64c.webp' /></p><p>மிகவும் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான பொதுப்பண முறைக்கேடு விசாரணைகள் குறித்தும் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
அத்துடன் நாட்டில் நிலவும் நிதி அழுத்தம் மற்றும் அரச வருமான பகிர்வு தொடர்பில் பிரதான விடயங்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன:</p><p>

2026 ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கமைய நாட்டின் அரச வருமானத்தில் 49.38 சதவீதம் பெறப்பட்ட கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டியுள்ளதெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h3><b>மேலதிக அழுத்தம்</b></h3><p>அரச வருமானத்தில் பெரும்பகுதி கடன் சேவைக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம், கல்வி, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1.9 முதல் 2.4 சதவீதம் என்ற சிறிய தொகையே ஒதுக்க முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0a2a5b-4255-4bb7-b1ca-8e82989806c3/26-6a9f8c13865f4.webp' /></p><p>வரையறுக்கப்பட்ட அரச நிதி வெளிப்பாட்டின் மத்தியில் சக்திவள, உணவு மற்றும் உர விலையேற்றம் காரணமாக மக்கள் மீது மேலதிக அழுத்தம் ஏற்படக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து இலங்கைக்குள் சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், நிறுவனங்களை வலுப்படுத்துதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் ஊடாக ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தச் சீர்திருத்தங்களை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:35:00+00:00</updated>
        </entry>
    </feed>
