<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T10:17:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unsanitary-conditions-front-mannar-medical-office-1788860098"></link>
            <id>https://tamilwin.com/article/unsanitary-conditions-front-mannar-medical-office-1788860098</id>
            <summary type="text">மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு முன்பு குப்பைகள் மற்றும்
பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு முன்பு குப்பைகள் மற்றும்
பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார
சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறிப்பாக, அப்பகுதியில் காணப்படும் கால்வாய்களில் பொலித்தீன் மற்றும் ஏனைய
கழிவுகள் தேங்கி உள்ளதால், மழை நீர் உள்ளிட்ட நீர் முறையாக ஓட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் நீர் தேங்கி, நுளம்புகள் பெருகுவதற்கான சூழல்
உருவாகியுள்ளது டன், டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக
சுட்டிக்காட்டப்படுகிறது.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
அதேவேளை, குறித்த பகுதியில் கடைகளை நடத்தி வரும் சில வியாபாரிகளால் அதிகளவான
பொலித்தீன் கழிவுகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாகவும், முறையான கழிவு
முகாமைத்துவம் இல்லாதமையே இந்நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக
இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67e13916-9c63-4796-a005-e95ff6c49be3/26-6a9fdbb936633.webp' /></p><p>
</p><p>
நேற்றைய தினம் தற்காலிகமாக குறித்த வடிகால்கள் துப்புரவு செய்யப்பட்ட போதிலும்
நிரந்தரமாக குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை

சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய இடத்திற்கு முன்பு இவ்வாறான சுகாதார சீர்கேடு
ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரணியை குழப்பும் நோக்கில் நாமலின் திடீர் கைது! களமிறங்கும் மகிந்த - ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unp-congratulations-rally-joint-mahinda-1788858990"></link>
            <id>https://tamilwin.com/article/unp-congratulations-rally-joint-mahinda-1788858990</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
</p><p>
 ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><h2>நாமல் ராஜபக்ச கைது விவகாரம்&nbsp;</h2><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3624758-0cf3-4fd9-bf15-4ba1f90be91d/26-6a9fd960c3311.webp' />&nbsp;</p><p>

எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில், நடைபெறவுள்ள பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை ஐ.தே.க. விமர்சிப்பது இரட்டை வேட அரசியல்! நிருக்ச குமார சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-the-rajapaksa-family-1788859808"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-the-rajapaksa-family-1788859808</id>
            <summary type="text">நல்லாட்சி அரச காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதையே ஐக்கிய
தேசியக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லாட்சி அரச காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதையே ஐக்கிய
தேசியக் கட்சி விமர்சித்து அறிக்கை வெளியிடுவது அவர்களின் இரட்டை வேடத்தையும்
வெட்கக்கேடான அரசியலையும் வெளிப்படுத்துவதாக 'ஒருமித்த எதிர்க்கட்சியின்' இணை
அழைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்தார்.</p><p>

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் தலதா அதுகோரள
ஆகியோர் சட்டத்தையும் பொலிஸையும் தம்வசம் வைத்திருந்த நல்லாட்சி காலத்தில்,
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள்
மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.</p><h2>வீழ்ச்சியடைந்த ஐதேக</h2><p>ஆனால், தற்போது அந்தக்
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுகளும் சட்ட நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்படும் போது, ஐக்கிய தேசியக் கட்சி அதை விமர்சித்து அறிக்கை
வெளியிடுவது முற்றிலும் முரண்பாடானது.
</p><p>
முன்னர் நாட்டின் பிரதான சக்தியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது
தனது வாக்கு வங்கியை 2 சதவீதத்துக்கும் குறைவாக இழந்து பெரும்
வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3a39e51-1126-404e-804a-4441ef46e50e/26-6a9fd806ce0d4.webp' /></p><p> </p><p>இவ்வாறான கொள்கையற்ற இரட்டை வேட அரசியலாலேயே அந்தக்
கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளதுடன், தற்போது அக்கட்சியில்
இருக்கும் எஞ்சிய உறுப்பினர்கள் கூட வீதியில் இறங்கி நடமாட முடியாத சூழல்
உருவாகியுள்ளது.
</p><p>
மேலும், ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக மக்களும் ஐக்கிய தேசியக் கட்சியின்
ஆதரவாளர்களும் உயிரைப் பணயம் வைத்துப் போராடியே ஆட்சி மாற்றத்தைக்
கொண்டுவந்தனர். </p><p>அவ்வாறு போராடிய ஆதரவாளர்களுக்கு இன்று வரை நீதி
கிடைக்கவில்லை. நாட்டைக் சூறையாடிய ஊழல்வாதிகளுடன் கைகோர்த்துச் செயற்படும்
ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தகைய நடவடிக்கைகளை ஒருமித்த எதிர்க்கட்சி
தொடர்ந்து கண்டிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electric-pole-snapped-and-fell-onto-a-lorry-trinco-1788858610"></link>
            <id>https://tamilwin.com/article/electric-pole-snapped-and-fell-onto-a-lorry-trinco-1788858610</id>
            <summary type="text">கந்தளாய் போட்டங்காடு சந்தியில் இடம்பெற்ற விபத்தில், உயர்
அழுத்த மின் கம்பமொன்று முறிந்து லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது
விழுந்ததால் பரபரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் போட்டங்காடு சந்தியில் இடம்பெற்ற விபத்தில், உயர்
அழுத்த மின் கம்பமொன்று முறிந்து லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது
விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>&nbsp;குறித்த விபத்தானது இன்று (08.9.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>
திருகோணமலையிலிருந்து மாத்தளை நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி, முன்னால்
நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டர் எரிவாயு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் வாகனத்தின்
பின்னால் மோதியுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, விபத்தைத் தவிர்ப்பதற்காக சீமெந்து லொறியின் சாரதி மேற்கொண்ட
முயற்சியின்போது, லொறி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/146060a2-a494-46dd-84bd-9de3d26ba7c6/26-6a9fd4634c66b.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பாரிய உயர் அழுத்த மின் கம்பமொன்று முறிந்து, பின்னால் வந்த
மற்றுமொரு லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது விழுந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remand-for-ampitiya-thero-until-the-11th-1788857371"></link>
            <id>https://tamilwin.com/article/remand-for-ampitiya-thero-until-the-11th-1788857371</id>
            <summary type="text">மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும்
11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும்
11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
அண்மையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள்
பணியக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த உத்தியோகத்தர்களின்
கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால்
நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.</p><h2>நீதிமன்றில் முன்னிலை..&nbsp;</h2><p>இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுமனரத்ன தேரர்
இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7384fb8-c04b-4305-af5b-2a1855519309/26-6a9fcd503d1eb.webp' /></p><p>இந்நிலையில், நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் அ.தர்சினி முன்னிலையில் இவ்வழக்கு
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேரரை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G6qSX55IYH8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>அரச அலுவலகம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச அதிகாரிகளுக்கு
அச்சுறுத்தல் விடுத்தமை,அரச கடமையினை ஆற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்தியமை போன்ற
குற்றச்சாட்டுகள் தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><b><i>மேலதிக தகவல் - பவன்</i></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T08:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த - ரணிலை நெருங்கும் சிக்கல்.. முக்கிய சாட்சிகளின் மர்ம மரணங்கள் - ஐநா வெளியிடும் அதிரடி அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-mahinda-ciaboc-united-nation-today-summit-1788854711"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-mahinda-ciaboc-united-nation-today-summit-1788854711</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான சிறப்பு அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான சிறப்பு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.&nbsp;</p><p>குறித்த அறிக்கையில், 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இலங்கையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சட்டச் சீர்திருத்தங்கள், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் விசாரணைகள் ஆகியவை வேகமெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இருப்பினும், இவற்றின் அமலாக்கம் இன்னும் சீரற்ற நிலையிலேயே தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் அந்த அறிக்கையில், "இந்நிலைமையில், அரசாங்கம் தனது 2026 நல்லாட்சி செயல்திட்டத்தை (Governance Action Plan) வெளியிட்டுள்ளது.</p><h2>எயார்பஸ் விவகாரம்..&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இதில் பொதுப் பயன்பாட்டு உரிமையாளர் பதிவேட்டை நிறுவுதல், பொதுக் கொள்முதல் சட்டத்தை இயற்றுதல் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) செயற்பாடுகளை பிராந்திய அலுவலகங்கள் ஊடாக பரவலாக்குதல் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44f0b078-7f41-47f3-a1e5-c0193843ee86/26-6a9fc938b8f5b.webp' /></p><p>
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை உள்ளடக்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - எயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் CIABOC புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, பல்வேறு வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.
</p><p>
அத்துடன், நிலக்கரி கொள்முதல் தொடர்பான முறைகேடுகள் குறித்த விசாரணைகளும், அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
எவ்வாறாயினும், இந்த உயர்மட்ட ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ள சம்பவங்கள், குற்றவாளிகளைக் கண்டறிவதிலும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதிலும் பெரும் பின்னடைவையும் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7pnpSNVXoig" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு! நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாக நாடாளுமன்றில் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prices-of-essential-commodities-high-in-sathosa-1788853502"></link>
            <id>https://tamilwin.com/article/prices-of-essential-commodities-high-in-sathosa-1788853502</id>
            <summary type="text">சதொசவில் ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொசவில் ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்துள்ளார்.</p><p> 

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08.09.2026) அவர் மேலும் தெரிவிக்கையில்,

சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுகிறது.</p><h2>ஏமாற்றத்துடன் திரும்பும் நுகர்வோர்</h2><p>

சதொசவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளன.
</p><p>
தனியார் பல்பொருள் அங்காடிகளை விடவும் சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிமொழியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
</p><p>
இதற்குப் பதிலளித்துப் பேசிய வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் மூழ்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04914546-41da-464a-999e-681d68d0d10d/26-6a9fc744b37a3.webp' /></p><h2>பொருள் தட்டுப்பாடு</h2><p>
</p><p>
கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் தாமதங்களே பொருள் தட்டுப்பாடிற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.</p><p>

அத்துடன் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T08:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து அழைத்த பெண் - இலங்கையில் பெண் உட்பட இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/old-lady-cheated-by-foreign-lady-1788841936"></link>
            <id>https://tamilwin.com/article/old-lady-cheated-by-foreign-lady-1788841936</id>
            <summary type="text">களுத்துறையில் பரிசு ஒன்றை அனுப்புவதாக கூறி, 65 வயது மூதாட்டி மற்றும் அவரது 16 வயது பேரன் ஏமாற்றப்பட்டுள்ளனர். இருவரையும் ஏமாற்றி 8 லட்சத்து 88 ஆயிரம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறையில் பரிசு ஒன்றை அனுப்புவதாக கூறி, 65 வயது மூதாட்டி மற்றும் அவரது 16 வயது பேரன் ஏமாற்றப்பட்டுள்ளனர்.</p><p> இருவரையும் ஏமாற்றி 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கணக்கில் வரவு வைத்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>தெற்கு களுத்துறை, மெனெரிதென்ன பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.</p><p> </p><h2><b> இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி</b></h2><p>தனது 16 வயது பேரனின் தொலைபேசிக்கு கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி வெளிநாட்டு பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10be2010-13f1-4a25-9b46-9d572f08bad5/26-6a9fc66cedd4c.webp' /></p><p>தான் வைத்தியர் எனவும், கணவர் இறந்ததன் பின்னர் சொத்துக்களை மாமனார் பலவந்தமாக பறித்துக்கொள்ள முயல்வதால் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>வழக்கினை வெல்வதற்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரியுள்ளார். </p><p>அத்துடன், பேரனுக்கு பரிசொன்றை அனுப்புவதாகவும் தெரிவித்ததாக வயோதிபெண் பொலிஸாரிடம் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>வழக்கில் வெற்றி பெற்றமைக்கான தகவலுடன் நீதிமன்றத்திற்கு அருகில் எடுத்த புகைப்படமொன்றையும் மோசடி செய்த பெண் அனுப்பியுள்ளார்.</p><p> </p><h3><b>பரிசுப் பெட்டி</b></h3><p>பெப்ரவரி 16 ஆம் திகதி கடிகாரம், உடைகள், கையடக்கத் தொலைபேசி, வாசனைத் திரவியம், பாதணிகள், மடிக்கணினி போன்ற பரிசுப் பொருட்களின் புகைப்படங்களையும் அனுப்பியு்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4f26849-d2b6-4876-a9ec-64418667bcfc/26-6a9fc66da20dc.webp' /></p><p>17 ஆம் திகதி பரிசுப் பெட்டி தபாலில் அனுப்பப்பட்டுள்ளதால் அதற்காக 98 ஆயிரம் ரூபா பணத்தை அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார். </p><p>பின்னர் இலங்கையர் ஒருவர் விமான நிலையத்திலிருந்து தொடர்புகொண்டு 98 ஆயிரம் ரூபாவை அனுப்புமாறு கூறி வங்கிக் கணக்கிலக்கத்தைக் கொடுத்துள்ளார். </p><p>இதன்போது நாங்கள் அப்பணத்தை அனுப்பினோம். பின்னர் பரிசுப் பெட்டியின் எடை அதிகமாக இருப்பதால் மேலும் 1.5 இலட்சம் ரூபாவை வைப்புச் செய்யுமாறு கூறியுள்ளனர். </p><p>இவ்வாறு பல தடவைகள் தொடர்பு கொண்டு 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாவை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.</p><p> தாங்கள் இந்தப் பணத்தை அயல் வீட்டு பெண்ணொருவரிடம் வீடொன்றினை விற்றுப் பெற்ற பணமாகும். </p><p>மீண்டும் கடந்த வாரம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு கூறியபோது, மேலதிகமாகப் பணம் இல்லை எனக் கூறியதாக பாதிக்கப்பட்ட வயோதிப பெண் குறிப்பிட்டுள்ளார். </p><p>களுத்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T08:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் இலங்கையில் கடுமையாக நடைமுறைக்கு வரும் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eat-belt-rule-on-expressways-from-september-19-1788851075"></link>
            <id>https://tamilwin.com/article/eat-belt-rule-on-expressways-from-september-19-1788851075</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் அரசாங்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் அரசாங்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08.09.2026) கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>வாகனங்களில் ஆசனப்பட்டி</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விதி ஓராண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் சில பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் ஆசனப்பட்டி பொருத்தப்படாததால், நடைமுறை காரணங்களால் அதன் அமலாக்கம் தாமதமானது.
</p><p>
ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், செப்டெம்பர் 19 முதல் இந்த விதியைக் கடுமையாக நடைமுறைப்படுத்த நாங்கள் இப்போது முடிவு செய்துள்ளோம்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பாடசாலை வான்களுக்கும் இந்தப் புதிய விதி பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acef53b3-b083-43fc-baee-281616e99356/26-6a9fbb4e646e8.webp' /></p><h2>சாலைத் தகுதிச் சோதனை</h2><p>
</p><p>
அத்துடன் பேருந்துகள் மற்றும் வான்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் போக்குவரத்து வாகனங்களும், இந்த ஆண்டின் இறுதி முதல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை அல்லது 5000 கிலோமீட்டர் பயணித்த பிறகு சாலைத் தகுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நல்ல ஓட்டும் நிலையில் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். 

பிரேக் மற்றும் டயர் பிரச்சினைகள் உட்பட வான்கள் மற்றும் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளால் சில பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதை நாங்கள் கவனித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dioTgMmnp-g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மனைவியின் ஜாதகத்தில் ராஜயோகம் - ராஜபக்சர்களை நிலைகுலைய வைத்துள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. </p><p>

அதில் முக்கியமானதாக நாமல் ராஜபக்சவின் மனைவி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக அதிகளவில் பேசப்பட்ட வந்த நிலையில், அதனை நாமலின் ஊடகப் பிரிவு முற்றாக மறுத்துள்ளது. </p><p>

நாமல் மற்றும் அவரது மனைவி தொடர்பிலான செய்திகள் பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p> </p><h2><b>

லிமினி ராஜபக்சவின் ஜாதகம் </b></h2><p>சமூக வலைத்தளங்களுக்கு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், நாமல் ராஜபக்ச சுகயீனமுற்றுள்ளதாகவும், அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9622954d-3bcf-4cdd-b4cd-634de6ecedc9/26-6a9ec2abbad22.webp' /></p><p>அத்துடன், மற்றுமொரு பேஸ்புக் பக்கம் ஊடாகப் பரவிய பதிவில், நாமல் ராஜபக்சவின் இடத்தை நிரப்புவதற்காக அவரது மனைவி லிமினி ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுரராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் மேடையில் ஏறவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>

மற்றுமொரு செய்தி இணையத்தளம், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவிகளான சிறிமா பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரைப் போல பலத்தன்மை வாய்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் அவரது வருகை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. 

இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டு பகிரப்படும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p> 

குறித்த தகவல்கள் முழுமையாக திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் பொய்யான பிரச்சாரங்கள் என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு மேலும் உறுதிப்படுத்துகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:35:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞரொருவர் கொடூரமாக அடித்து தீயிட்டு எரித்துக்கொலை! சவப்பெட்டியில் மறைக்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/friend-killed-and-burned-after-drinking-alcohol-1788850598"></link>
            <id>https://tamilwin.com/article/friend-killed-and-burned-after-drinking-alcohol-1788850598</id>
            <summary type="text">கண்டி - தலத்துவோயா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - தலத்துவோயா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று காலை (8) உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலத்துவோயா பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், பவ்லானா கிராமத்தை சேர்ந்த முதியன்செலகே சாந்த சஞ்சய பண்டார (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு&nbsp;</h2><p>
</p><p>
தனது அண்ணனை இரண்டு நாட்களாகக் காணவில்லை என்ற சந்தேகத்தின் பேரில், அவரது தம்பி தலத்துவோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a0ce4f-a837-447d-8dd5-20582a36810f/26-6a9fb9f44ac19.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து அவர் கடைசியாக சந்தித்த இரண்டு நண்பர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், இந்த கொலை குறித்த தகவலை பொலிஸ் கண்டறிந்துள்ளது.</p><p>

மது அருந்திவிட்டு தங்கள் நண்பரை கொலை செய்த பின்னர், உடலை எரித்து வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று, சவப்பெட்டியில் வைத்து வனப்பகுதியில் மறைத்து வைத்ததாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்று (8) நீதித்துறை விசாரணை நடைபெற உள்ளது. </p><p>

இச்சம்பவம் குறித்து தலத்துவோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்து கவலையடையும் பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/great-need-cultured-people-on-social-media-harini-1788850843"></link>
            <id>https://tamilwin.com/article/great-need-cultured-people-on-social-media-harini-1788850843</id>
            <summary type="text">சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது சிறுவர்கள், பெண்கள் மற்றும்
நிர்க்கதியானவர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக்களைப்
பார்க்கும்போது, ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது சிறுவர்கள், பெண்கள் மற்றும்
நிர்க்கதியானவர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக்களைப்
பார்க்கும்போது, ஒரு பண்பாடான மனிதனின் தேவை தெளிவாகப் புலப்படுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
கம்பஹா நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று(07.09.2026) நடைபெற்ற 'கம்பஹா இலக்கிய விழாவில்'
பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>மாற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்து</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"பண்பாடான மனிதர் என்பவர் புத்தகங்கள் மற்றும் நூல்களிலிருந்து அறிவை மட்டும்
பெற்றவரோ அல்லது மனப்பாடம் செய்தவற்றை முன்வைப்பவரோ அல்ல. மாறாக, இலக்கியப்
படைப்புகளின் ஊடாகத் தனது உள்ளார்ந்த மனநிலையில் மாற்றத்தை
ஏற்படுத்திக்கொண்டு, மனிதநேய உணர்வைச் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒருவரே
பண்பாடான மனிதராவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf1a24c-a318-4571-b533-3eda13a84b45/26-6a9fb9618a6d6.webp' /></p><p>அத்தகைய மாற்றத்தையும் உணர்வுபூர்வமான தன்மையையும் கொண்ட
மனிதரால் வேறு எந்தவொரு நபருக்கும் அவமதிப்போ, மனவேதனையோ அல்லது அவமரியாதையோ
ஏற்படாது.</p><p>'பண்பாடான பிரஜையொன்றைக் கண்டடைதல்' என்ற இக்கருப்பொருள் மிகவும்
காலத்துக்கேற்றதாகும். </p><p>நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பல்,
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல்
ஆகியவற்றுக்கு இணையாக, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பண்பாடான மனிதனை
உருவாக்குவதும் அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.
</p><p>
மாற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தத்
தருணத்தில், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும்
முக்கியமானவையாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனிவாவில் இலங்கை பற்றிய அறிக்கை உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/report-sri-lanka-officially-presented-geneva-today-1788850203"></link>
            <id>https://tamilwin.com/article/report-sri-lanka-officially-presented-geneva-today-1788850203</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாகச்
சமர்ப்பிக்கப்படவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாகச்
சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><h2>உரிய தீர்மானம்..&nbsp;</h2><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று ஆரம்பமான இந்தக் கூட்டத் தொடரில்
மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், அது இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு, இன்று ஆணையாளர் வோல்கர்
துர்க்கினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13382cbb-b35f-4ab7-97d8-88871efb12da/26-6a9fb24d91e24.webp' /></p><p>

இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள
நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள்
தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று வோல்கர் துர்க் தனது அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், மனித உரிமைகள்
பேரவையின் உறுப்பு நாடுகள் இந்த அறிக்கையைப் பரிசீலித்து, உரிய தீர்மானத்தை
நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் எந்தவிதத்திலும் விசேடமான நபர் அல்ல! பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chaturanga-abeysinghe-s-comments-on-namal-s-arrest-1788847568"></link>
            <id>https://tamilwin.com/article/chaturanga-abeysinghe-s-comments-on-namal-s-arrest-1788847568</id>
            <summary type="text">நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை
வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனவும், சட்டத்தின்
முன்னிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை
வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனவும், சட்டத்தின்
முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
தெரிவித்துள்ளார்.</p><p>

மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே
அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>உரிய சட்ட நடவடிக்கை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாமல் ராஜபக்ச இந்த நாட்டின் ஒரு சாதாரண பிரஜையே தவிர, அவர் எந்தவிதத்திலும்
விசேடமான நபர் அல்லர். முன்பிருந்த ஊழல் மற்றும் மோசடிகளுடன் அவருக்குத்
தொடர்பு இருக்குமாயின், அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் இடம்பெறும் தருணத்தில் இந்தக் கைது
இடம்பெற்றதால், இது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனச் சுமத்தப்படும்
குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27afe84c-4793-4d9b-810d-2207224fad75/26-6a9fb153a9f40.webp' /></p><p>

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுயாதீன நிறுவனங்கள் தமது விசாரணைகளின்
முடிவுகளுக்கு அமைவாகவே நபர்களை அழைப்பதும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும்
வழக்கம்.</p><h2>சட்டபூர்வ கைது</h2><p> இத்தகைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் குறித்த சட்டபூர்வ கைதுக்கும்
இடையே எவ்வித தொடர்பும் இல்லை.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சட்ட அமுலாக்க நிறுவனங்களை பலப்படுத்துவதையே
செய்துள்ளோம். </p><p>மக்கள் ஆணையுடன் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி
உள்ளிட்ட அனைவரும், மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் மக்களைத்
தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து
வருகின்றனர் என்றார்.</p><p></p><p></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/R4xDXYHF718" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இரகசிய தகவலில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/leaking-production-plant-in-batticaloa-under-siege-1788848293"></link>
            <id>https://tamilwin.com/article/leaking-production-plant-in-batticaloa-under-siege-1788848293</id>
            <summary type="text">மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு
உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.நேற்று திங்கட்கிழமை (7) கசிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு
உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>நேற்று திங்கட்கிழமை (7) கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்ட நிலையில், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 1500
மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு
உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்</h2><p>
காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவின்
பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராசா றஜிக்காந்தனுக்கு கிடைத்த இரகசிய தகவல்
ஒன்றையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று
திங்கட்கிழமை ஆரையம்பதி செவநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8629825-2c97-41e8-af54-a29102b9e536/26-6a9faff1bb1ba.webp' /></p><p>
</p><p>
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 54 வயதுடைய ஒரு வரை
கைது செய்ததுடன் 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா
மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளனர்.
</p><p>
இதில் கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8629825-2c97-41e8-af54-a29102b9e536/26-6a9faff1bb1ba.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d0b399-0fea-4d69-9142-b92e6196fe8e/26-6a9faff294ce2.webp' /></p>]]></content>
            <updated>2026-09-08T06:47:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் பொருளாதாரத்தின் பலம் : விஜித ஹேரத் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/contribution-overseas-sri-lankans-economy-1788845672"></link>
            <id>https://tamilwin.com/article/contribution-overseas-sri-lankans-economy-1788845672</id>
            <summary type="text">பொருளாதார ரீதியில் பாதகமான நிலையைச் சந்தித்திருந்த இலங்கையை மீண்டும்
சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதார ரீதியில் பாதகமான நிலையைச் சந்தித்திருந்த இலங்கையை மீண்டும்
சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன என்றும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு
வாழ் இலங்கையர்களின் பங்களிப்பே மிக முதன்மையானது என்றும் வெளிவிவகார,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்
தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று(07.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;"கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது.
</p><p>குறிப்பாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூலம் கடந்த ஆண்டில் மட்டும்
இலங்கைக்கு 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3c4545-de99-44ac-a64c-a43f3777626f/26-6a9fa60ea3a18.webp' /></p><p>
சுற்றுலாத் துறையைப் போன்றே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
அனுப்பும் அந்நியச் செலாவணியே நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி
முன்னோக்கி கொண்டு செல்ல பெரிதும் உதவுகின்றது.</p><p>

எனவே, நாட்டுக்குப் பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும் வெளிநாட்டுத்
தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் அவர்களின் தேவைகளைக்
கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
</p><p>
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறித்துப் பொதுமக்களிடையே
பொதுவாக நிலவி வரும் எதிர்மறையான கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும்,
அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளுக்கு
உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T06:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரான் பாசிக்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-to-colombo-high-court-1788846472"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-to-colombo-high-court-1788846472</id>
            <summary type="text">பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை&nbsp;</h2><p>இதன்போது, பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef507465-5f86-4c0b-be91-f1f33fec7004/26-6a9fa4c375bf8.webp' /></p><p>பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான, ஷிரான் பாசிக் துபாயில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.</p><p>தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான இவர், சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட குற்றவாளியாவார்.&nbsp;&nbsp;</p><p>வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர், அதன் மூலம் ஈட்டிய கறுப்புப் பணத்தை இலங்கையின் கடற்கரையோரங்களில் உள்ள ஏழை மக்களின் காணிகளைப் பயன்படுத்தி பாரிய ஹோட்டல்களை நிர்மாணிப்பதன் மூலம் சலவை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:58:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடாவில் அமெரிக்க சொத்துகள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-us-assets-in-the-gulf-iran-warns-1788845575"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-us-assets-in-the-gulf-iran-warns-1788845575</id>
            <summary type="text">தனது சொத்துகள் மீது அமெரிக்கா நடத்தும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும்
உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நேற்று எச்சரிக்கை
விடுத்துள்ளது.

இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சொத்துகள் மீது அமெரிக்கா நடத்தும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும்
உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நேற்று எச்சரிக்கை
விடுத்துள்ளது.
</p><p>
இந்தநிலையில், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நலன்கள் உட்பட வளைகுடா பகுதி
முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் அனைத்தும் தாக்குதலுக்கு
உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தாக்குதல்</h2><p>
</p><p>
அத்துடன், கடந்த வார இறுதியில் கப்பல்கள் மீது அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம்
நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் ஆறு வார கால
உச்சத்தை நெருங்கியுள்ளன.
</p><p>
இந்நிலவரம் குறித்து பேசிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர்
காலிபாஃப், "எங்கள் சொத்துகளை நீங்கள் தாக்கினால், நீங்களும் திரும்பத்
தாக்கப்படுவீர்கள்" என நேரடியாக எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51b57d9-cd49-4870-88e5-89e52aa44aef/26-6a9fa15a96a71.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அமெரிக்காவின் புதிய தாக்குதல்களுக்கு ஈரான் கடுமையான பதிலடி
கொடுக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

மேலும் கப்பல்கள் மீதான தாக்குதல்களால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்
விலைகள் கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.</p><h2>ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை</h2><p>

இதனால் தரவுகளின்படி, மே மாதத்திற்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாகப்
பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை தற்பொழுது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.</p><p>

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரை முடிவுக்குக்
கொண்டுவரவோ, வளைகுடாப் பகுதியில் இயல்பான எரிசக்திப் போக்குவரத்தை
மீட்டெடுக்கவோ முறையான இராஜதந்திர முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.</p><p>

இந்நிலையில் கடந்த வார இறுதியில் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில்
ஈடுபட்டிருப்பது, அப்பகுதியில் பதற்றத்தையும் பேராபத்தையும் மேலும்
அதிகரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கொலை அச்சுறுத்தல்! அநுர தரப்பு மீது சுமத்தப்படும் குற்றம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-receives-death-threat-1788845698"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-receives-death-threat-1788845698</id>
            <summary type="text">ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் அரச நிறுவனங்களை அரசியல் பழிவாங்கல்களுக்காகப்
பயன்படுத்தும் &#039;Institutional Weaponization&#039; என்ற தவறான அரசியல் உத்தியை
தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் அரச நிறுவனங்களை அரசியல் பழிவாங்கல்களுக்காகப்
பயன்படுத்தும் 'Institutional Weaponization' என்ற தவறான அரசியல் உத்தியை
தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தீவிரமாகப் பயன்படுத்தி
வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>மேலும், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>
</p><p>
கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தொடர்பான சமீபத்திய விவகாரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள்
குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>வாக்குறுதிகளை மீறிய ஜனாதிபதி&nbsp; அநுர&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"அரசியல் எதிராளிகளை முடக்குவதற்கும் அவர்களின் குரலை அடக்குவதற்கும் அரச
அதிகாரமும் விசாரணை நிறுவனங்களும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956075ef-272d-44be-a445-559136069ed5/26-6a9f9e84a82b6.webp' /></p><p>
</p><p>ஜனாதிபதி பயணம் செய்யும்போது பாதைகள் மூடப்படுவதில்லை என்ற அரசின்
வாக்குறுதிகள் தற்போது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
பேருவளை மற்றும் புலத்சிங்கள பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோது வீதிகள்
மட்டுமன்றி, பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் நுழைவது கூட தடை
செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
தேர்தல் காலத்தில் மீனவர்களுக்காக உறுதியளிக்கப்பட்ட புதிய செயலி குறித்த
வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>நாமலுக்கு கொலை அச்சுறுத்தல்&nbsp;</h2><p>

மேலும், சமூக ஊடகங்களில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விடுக்கப்படும் கொலை
அச்சுறுத்தல்கள் மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்து பலமுறை முறைப்பாடு
செய்யப்பட்டுள்ள போதிலும், விசாரணை நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை.</p><p>

அரசு தனக்குச் சாதகமான ஒருசில தரப்பினருக்கு மட்டுமே சட்டத்தை
நடைமுறைப்படுத்தி, ஏனையோரைப் புறக்கணிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca1b95e-908a-4e98-a120-2b5fa2e31286/26-6a9f9e8580df6.webp' /></p><p>

இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் கைதுகளுக்குப் பயந்து எமது கட்சியின்
அரசியல் பயணத்தை எக்காலத்திலும் நிறுத்தப் போவதில்லை.
</p><p>
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக அனுராதபுரம் நகர சபை விளையாட்டு
மைதானத்தில் பிரமாண்ட மக்கள் பேரணி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
பூர்த்தியாகியுள்ளன.
</p><p>
ஜனநாயக ரீதியான அரசியல் களத்தை ஒடுக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைப்
பொதுமக்கள் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-arrested-in-katunayake-airport-1788844457"></link>
            <id>https://tamilwin.com/article/two-arrested-in-katunayake-airport-1788844457</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>50 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2><b> இருவர் கைது</b></h2><p>பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24fabd96-fbb9-4050-81e2-8a076ad3c02b/26-6a9f9e4587a08.webp' /></p><p>சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T05:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுடன் விசேட பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/representative-srilanka-spea-president-panikulam-1788845204"></link>
            <id>https://tamilwin.com/article/representative-srilanka-spea-president-panikulam-1788845204</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க்
அன்ட்ரூ பிரெஞ்ச்சுக்கும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத்
சந்திரகீர்த்திக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க்
அன்ட்ரூ பிரெஞ்ச்சுக்கும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத்
சந்திரகீர்த்திக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி
செயலகத்தில் நடைபெற்றது.
</p><p>
டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம்
தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p><p>
எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை
எதிர்கொள்வதற்கான அரசின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.</p><h2>அரசின் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள்</h2><p>
</p><p>
அதற்கான அரசின் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97cf5349-a77c-407a-9a16-fb2ad7619660/26-6a9f9d9f16ef4.webp' /></p><p>
</p><p>
அந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள்
சபை அரசுக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் மார்க் அன்ட்ரூ
இதன்போது குறிப்பிட்டார்.
</p><p>
ஐக்கிய நாடுகள் சபையின் பங்குதாரர் மற்றும் அபிவிருத்தி நிதியியல் நிபுணர்
அஸாம் பாக்கீர் மாகர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதாபிமான
மற்றும் தாங்கும் திறன் தொடர்பான அதிகாரி வகீஷா பெரேரா ஆகியோரும் இந்தக்
கலந்துரையாடலில் பங்கேற்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வு: வெளிவிவகார அமைச்சர் - ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-minister-un-representative-meeting-1788844971"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-minister-un-representative-meeting-1788844971</id>
            <summary type="text">வரும் 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வை முன்னிட்டு, இலங்கையின்
முன்னுரிமைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரும் 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வை முன்னிட்டு, இலங்கையின்
முன்னுரிமைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான
நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச்சை நேற்று (07.09.2026) சந்தித்துக் கலந்துரையாடினார்.
</p><p>
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில்
நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எதிர்வரும் பொதுச் சபை அமர்வு தொடர்பான முக்கிய
விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.</p><h2>கவனம் செலுத்தப்பட்ட விடயம்</h2><p>
</p><p>
இதன்போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான 70 ஆண்டுகளுக்கும்
மேலான ஒத்துழைப்பு, 'ஐ.நா. 80' முன்முயற்சி, ஐ.நா. நிலையான அபிவிருத்தி
ஒத்துழைப்புக் கட்டமைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான
இலங்கையின் மூன்றாவது தன்னார்வ தேசிய மீளாய்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்
குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/783f00f2-1eb7-4b7b-8fd0-685eceb6c15f/26-6a9f9d08ac41f.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கும், பல்தரப்பு
ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தொடர்ந்தும்
உறுதியாகவுள்ளது என்று அமைச்சர் விஜித ஹேரத் இந்தச் சந்திப்பின்போது
தெரிவித்தார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுமாத்தளனில் அதிரடி சோதனை : 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/more-than-3-200-kg-of-fish-rescued-1788844873"></link>
            <id>https://tamilwin.com/article/more-than-3-200-kg-of-fish-rescued-1788844873</id>
            <summary type="text">முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படையினரும்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து நேற்று (07) மேற்கொண்ட கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படையினரும்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து நேற்று (07) மேற்கொண்ட கூட்டுச் சோதனையின் போது, வெடிபொருள் பயன்படுத்தி
பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>புதுமாத்தளன் பகுதியில் மீன்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த
சந்தேகத்திற்கிடமான இடமொன்றை சோதனையிட்டபோதே இந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p>

இதன்போது, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர்
சந்தேகத்தின் பேரில்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட மீன்களும் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள
அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-08T05:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எமது மக்கள் அறிவால் பலம் பெற வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-political-1788842845"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-political-1788842845</id>
            <summary type="text">நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எமது
மக்கள் அறிவால் பலம் பெற்றவர்களாக மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எமது
மக்கள் அறிவால் பலம் பெற்றவர்களாக மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

எதுல்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில்
ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தினருக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டில் ஏமாற்று அரசியலே தொடர்ந்தும் காணப்படுகின்றது. துறைமுகத்தில்
இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எண்ணெய் வழங்குவோம் என்று தேர்தல் காலத்தில்
பிரதாபித்தாலும், இன்று அந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70cdb139-1e93-47d6-b034-23b58a9f9e77/26-6a9f99aa9810c.webp' /></p><h2>மின் உற்பத்தி நிலைய மாபியா</h2><p>

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை குறையும் நிலையிலும், தொடர்ந்தும்
எரிபொருள்கள் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன. மின்சாரக் கட்டணத்தை 33
வீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு அதனை அதிகரித்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிவிட்டு, இன்று
அரசும் எரிபொருளில் தங்கியிருக்கும் மின் உற்பத்தி நிலைய மாபியாக்களுக்கு
அடிமையாகியுள்ளது.
</p><p>
அன்று விவசாயிகளுடன் இணைந்து நெற்கதிர்களை வாயில் கடித்துக்கொண்டு, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலை பெற்றுத் தருவதாகக் கூறினார்கள். எனினும்,
ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது என விடயத்துக்குப்
பொறுப்பான அமைச்சரே தெரிவித்த நிலையில், 120 ரூபாவை நிலையான விலையாக
அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை
ஏற்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be6bbb9-0471-42cc-95dd-7b4fb2a05b93/26-6a9f99ab792e9.webp' /></p><p> </p><p>பிரஜைகள் சமகாலத்தில் உரிய விழிப்புணர்வைப் பெறாமல்
இருப்பதே இவற்றுக்கெல்லாம் காரணமாகும். நாம் அறிவால் பலம்பெற்ற சமூகமாக மாற
வேண்டும்.

கல்வித் துறையில் பிரதானமாக 6 பிரிவினர்கள் காணப்படுவதுடன், அவற்றுள் பாரிய
குறைபாடுகளும் முரண்பாடுகளும் நிலவுகின்றன. நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம்
ஆசிரியர்களும், 15 ஆயிரம் அதிபர்களும், சுமார் 10 ஆயிரத்து 145 பாடசாலைகளும்
உள்ளன. சில பாடசாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.</p><h2>கவர்ச்சிகரமான வார்த்தை</h2><p> </p><p>ஐக்கிய மக்கள்
சக்தி எவருக்கும் பொய் வாக்குறுதிகளையோ கானல் நீர் கனவுகளையோ வழங்காது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு கொடுப்பனவை நாம்
பெற்றுக்கொடுப்போம். கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி ஆசிரியர்களை
நடுவீதியில் விடமாட்டோம்.

இலவசக் கல்வியிலும் பேதங்கள் காணப்படுகின்றன. தேசிய மற்றும் மாகாண
பாடசாலைகளுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளில் தெளிவான இடைவெளிகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689d7436-e0bf-4b50-8549-c8ba93f4a1b8/26-6a9f99ac4c832.webp' /></p><p>
</p><p>அரசாங்கங்கள் மாறும்போது பல திட்டங்கள் வந்தாலும், கல்வியைப் பாதுகாக்கும்
ஆசிரியர்களும் மாணவர்களுமே இறுதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பக்
கல்வியிலிருந்தே கல்வி நவீனமயமாக்கப்பட வேண்டும். மனப்பாட முறையில் இருந்து
விடுபட்டு சவால்களுக்கு முகம் கொடுத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்
கல்வி முறைக்கு நாம் செல்ல வேண்டும்.

இன்று பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான போதிய உபகரணங்கள் இல்லை. </p><p>அவற்றை
வாங்குவதற்காகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படுகின்றது. மாணவர்களில் 40
வீதமானோருக்குக் கூட ஸ்மார்ட் கருவிக்கான அணுகல் வசதி இல்லை. ஆங்கில மொழியிலான
கல்வியை ஊக்குவிப்பதுடன், பிற்போக்கான காலாவதியான கருத்துக்களிலிருந்து நாம்
வெளியேற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9275a6d-a5c2-4068-bdae-e0244f2cc40b/26-6a9f99ad24d45.webp' /></p><p> </p><p>பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் கல்வியை
மேம்படுத்தி, அத்தகைய வசதிகள் இல்லாத பிள்ளைகளுக்கான வசதிகளைத் தொடர்ந்து
பெற்றுக்கொடுப்போம். இலவசக் கல்வியை வலுப்படுத்தி, எமது பிள்ளைகள் உலகை
வெல்லக்கூடிய முறையான கல்வியை உருவாக்குவோம் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் அநுர அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்! மொட்டுக்கட்சி எம்.பி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pothujana-peramuna-party-mp-chanaka-warning-1788842470"></link>
            <id>https://tamilwin.com/article/pothujana-peramuna-party-mp-chanaka-warning-1788842470</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது தற்போதைய
அநுரகுமார திஸாநாயக்க அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமையும்
என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது தற்போதைய
அநுரகுமார திஸாநாயக்க அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமையும்
என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக
தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நேற்று திங்கட்கிழமை
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனம்</h2><p>
</p><p>
"இந்த அரசு தனது இயலாமையை மறைப்பதற்காகவே நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை
இல்லாமலாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42169bb-5870-4e96-ab9e-ef9f05f38938/26-6a9f95e7ae001.webp' /></p><p> </p><p>ஆரம்பத்தில் பொலிஸ்
திணைக்களத்தின் சுயாதீனத்தை இல்லாமலாக்கியவர்கள், தற்போது நீதித்துறைக்கு
அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.</p><p> ஏகாதிபத்திய நடவடிக்கை
ஒன்றுக்கே இவர்கள் தயாராகி வருகின்றார்கள் என்பதை மக்கள் தற்போது புரிந்து
கொண்டுள்ளனர்.</p><h2>அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்&nbsp;</h2><p>

நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைப்பது அரசுக்குப் பாரிய தாக்கத்தை
ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியவர்கள், சுயாதீன நிறுவனங்களை
அடக்கும் செயற்பாடுகளிலேயே குறியாக உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1e39b34-7b44-4eb9-816a-516be390327f/26-6a9f95e87ca5f.webp' /></p><p>
</p><p>
அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
விவசாயிகள் தங்களின் உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரிவரும் நிலையில்,
எதனையும் பொருட்படுத்தாமல் இந்த 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள
முயற்சிக்கின்றார்கள். </p><p>இதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்
போவதில்லை. அரசின் இத்தகைய திட்டங்களை நீதிமன்றத்திலும் வீதிகளிலும்
தோற்கடிக்க மக்களுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:03:46+00:00</updated>
        </entry>
    </feed>
