<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-05T10:29:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அதிகாரிகளில் பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. பதவியில் இருந்து விலகும் நிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-employees-resigned-due-no-privileges-1788601453"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-employees-resigned-due-no-privileges-1788601453</id>
            <summary type="text">இலங்கை நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சுமார் முப்பது பெண் அதிகாரிகள் அண்மையில் தமது பதவிகளில் இருந்து விலகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சுமார் முப்பது பெண் அதிகாரிகள் அண்மையில் தமது பதவிகளில் இருந்து விலகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நாடாளுமன்றத்தின் நிர்வாகம், விநியோகம், நிதி மற்றும் ஹன்சார்ட்&nbsp; உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் பணியாற்றிய அதிகாரிகள் குழுவொன்றே இவ்வாறு சேவையிலிருந்து விலகியுள்ளது.</p><p>

 பதவிகளில் இருந்து விலகுபவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் என்றும், கடந்த வாரமும் பல அதிகாரிகள் நாடாளுமன்றச் சேவையிலிருந்து விடைபெற்று ஏனைய துறைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.</p><h2>நிறுத்தப்பட்ட சலுகைகள்..&nbsp;</h2><p>
</p><p>
பதவி விலகிய அதிகாரிகளில் பெரும்பாலானோர் தனியார் துறையில் உயர் பதவிகளுக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6ed9eca-a25b-4303-9a51-7b67d22ed92b/26-6a9be9c2a5837.webp' /></p><p> </p><p>குறுகிய காலத்திற்குள் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் நாடாளுமன்றச் சேவையிலிருந்து விலகுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.</p><p>
</p><p>
பெண் நாடாளுமன்ற ஊழியர்கள் அனுபவித்து வந்த விடுமுறை கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் இரத்து செய்யப்பட்டமையே சேவையிலிருந்து விலகுவதற்கான முக்கிய காரணமாகும்.
</p><p>
அனுபவம் வாய்ந்த ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நிர்வாகம் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
</p><p>
இந்த நிலைமை குறித்து நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர், அரசாங்கம் எடுத்த பொதுக் கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவாக, உரிய விடுமுறைக் கொடுப்பனவை வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T10:09:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-director-of-fisheries-transferred-colombo-1788599293"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-director-of-fisheries-transferred-colombo-1788599293</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் நேற்றைய தினம்(4.9.2026) கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்
வழங்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் நேற்றைய தினம்(4.9.2026) கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்
வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
</p><p>
கடந்த யூலை மாதம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பல இலட்சம் ரூபாய்
பெறுமதியான கடல் அட்டைகளை முறையற்ற விதத்தில் ஏலமிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p><h2>இடமாற்றம்</h2><p>மற்றும் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்
பட்டமை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளருக்கு கட்டாய
இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f038b7-4624-473f-aca6-cae384a65377/26-6a9be5c6d1196.webp' /></p><p>
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் தள்ளிய வாக்குமூலம்! புலனாய்வாளர்களிடம் தொழிலதிபர் குறித்த ஆதாரம் - அம்பலப்படுத்தும் கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-comes-to-namal-s-defence-1788597234"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-comes-to-namal-s-defence-1788597234</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக நாமல் ராஜபக்ச 800,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றார் என்பதை நிலைநாட்ட போதுமான ஆதாரம் உள்ளதா எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக நாமல் ராஜபக்ச 800,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றார் என்பதை நிலைநாட்ட போதுமான ஆதாரம் உள்ளதா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, தொழிலதிபர் நிமல் பெரேரா கூறியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது.</p><h2>பணம் வழங்கல்</h2><p> </p><p>அந்த வாக்குமூலத்தில், அவர் நாமல் ராஜபக்சவிடம் 800,000 அமெரிக்க டொலர்களைக் கொடுத்ததாகக் கூறியிருந்தார். 

எயார்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக பிரியங்கா விஜேநாயக்க பெற்ற பணம் நிமல் பெரேராவுக்கு மாற்றப்பட்டதற்கான ஆதாரம் புலனாய்வாளர்களிடம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24dfd395-b3a4-4109-91df-c0fea182d1c6/26-6a9be1d725e33.webp' /></p><p> </p><p>ஆனால் பெரேரா பின்னர் அந்தப் பணத்தை ராஜபக்சவிடம் கொடுத்தார் என்பதை நிலைநாட்ட என்ன ஆதாரம் உள்ளது.

வேறு யாரும் இல்லாதபோது ராஜபக்சவின் மேசையில் 800,000 அமெரிக்க டொலர்களை வைத்ததாக பெரேரா கூறியிருந்தார்.</p><p> அந்தக் கூற்றைத் தவிர, 800,000 அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவுக்குக் கொடுக்கப்பட்டது என்பதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை. 

வழக்கின் மையமாக உள்ள இந்தக் கொடுப்பனவுகள், ஏர்பஸ் சம்பந்தப்பட்ட ஐக்கிய இராச்சிய நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னரே ஆராயப்பட்டுள்ளன.</p><h2>எழுப்பப்பட்டுள்ள கேள்வி</h2><p> </p><p>

அந்த நடவடிக்கைகள், விமானக் கொள்முதலில் முறையற்ற வகையில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட கொடுப்பனவுகளை முறையான தரகுத்தொகையாகக் கருதாமல், இலஞ்சமாகவே வகைப்படுத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a05d59d8-3e09-48a0-8c16-6464a2fb7dfc/26-6a9be1d7f0c9b.webp' /></p><p> </p><p>

மேலும், பெரேரா பின்னர் அந்தப் பணத்தில் ஒரு பகுதியை ராஜபக்சவுக்குக் கொடுத்தார் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அது மட்டுமே ராஜபக்ச இலஞ்சம் பெற்றார் என்பதை நிலைநாட்டுமா? என வினவியுள்ளார்.
</p><p>
அத்துடன் ராஜபக்சவின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், செப்டம்பர் 12 அன்று அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி திட்டமிட்டிருந்த பேரணியுடன் அது தொடர்புபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் அரச தரப்பிலுள்ள அமைச்சர் ஒருவரின் நண்பர்! டி.வி.சானக வெளிப்படுத்திய பரபரப்பான தகவல்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788600469"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788600469</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சமாக வழங்கியதாக சாட்சியமளித்த நிமல் பெரேரா அடிக்கடி தனது சாட்சியத்தை மாற்றிப் பேசும் ஊழல்மிக்க தொழிலத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சமாக வழங்கியதாக சாட்சியமளித்த நிமல் பெரேரா அடிக்கடி தனது சாட்சியத்தை மாற்றிப் பேசும் ஊழல்மிக்க தொழிலதிபர்.</p><p>அநுர குமார திசாநாயக்கவின் வலது கை போன்ற ஒரு பலமிக்க அமைச்சரின் வியாபார நண்பராவார் என மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மொட்டு கட்சியின் தலைமையகத்தில் இன்று (05.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவித்த கருத்து
</p><h2>

</h2><p></p><h2>அடிக்கடி சாட்சியங்களை மாற்றும் நிமல் பெரேரா</h2><p>2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு விசாரணை என்று நான் நினைக்கிறேன். இதிலுள்ள ஒரே சாட்சி நிமல் பெரேரா என்ற ஊழல்மிக்க தொழிலதிபர் மட்டுமே. </p><p>இவருக்கு ஒன்று மட்டுமல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த ஊழல் தொழிலதிபர் வாக்குமூலத்தை அடிக்கடி மாற்றிப் பேசுகின்றார்.
</p><p>இந்த தொழிலதிபருடன் இணைந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர் இந்த அரசாங்கத்தின் ஒரு அமைச்சராவார். அந்த அமைச்சரும் இந்த நிமல் பெரேராவும் இணைந்து மூன்று சந்தர்ப்பங்களில் மூன்று விதமான சாட்சியங்களை அளித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0cbc42a-804b-4a53-99da-42cb2f36bac2/26-6a9be0981dbc0.webp' /></p><p>முதல் தடவை, நாமல் ராஜபக்சவுக்கு 50 மில்லியன் கொடுத்ததாகக் கூறுகிறார். ஆனால் கொடுத்த இடம் இல்லை, கொடுத்த திகதி இல்லை, கொடுத்த விதம் எதுவுமில்லை. </p><p>அதற்குப் பிறகு இரண்டாவது தடவை, 'இல்லை, நான் ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை' என்கிறார்.
அதன்பிறகு மூன்றாவது தடவையாக இப்போது 100 மில்லியன் கொடுத்ததாகக் கூறுகிறார். </p><p>ஆனால் எப்போது கொடுத்தார் என்று கேட்டால் திகதி இல்லை. இலங்கைக்கு பணம் வந்த விதம் பற்றி கேட்டால் அதுவும் இல்லை. எந்தக் காலப்பகுதியில் என்று கேட்டால் அது குறித்தும் எதுவும் இல்லை.
</p><p>இந்த அரசாங்கத்தின் பலமிக்க அமைச்சரின் வியாபார நண்பரின் சாட்சியத்தைப் பயன்படுத்தி நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவரின் புதைகுழி அகழ்வு! விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ganemulla-sanjeewa-case-dead-body-inquiry-1788597659"></link>
            <id>https://tamilwin.com/article/ganemulla-sanjeewa-case-dead-body-inquiry-1788597659</id>
            <summary type="text">கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவரின் புதைகுழி தோண்டப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவரின் புதைகுழி தோண்டப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>

மெகசின் சிறையில் நடந்த மோதலில் உயிரிழந்த, பாதாள உலகக் கும்பலின் உறுப்பினர்களில் ஒருவரும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருமான முகமது அஸ்மான் செராஃப்தீன் என்பவரின் உடல் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டுள்ளது.</p><p>

அஸ்மான் செராப்தீன் உடல் புதைக்கப்பட்ட மயானத்தில், ஒரு கும்பல் குழி தோண்டியதாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து, மத்தேகொட பொலிசார் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

அஸ்மான் செராப்தீனின் உறவினர்கள் மத்தேகொட பொலிஸில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.

அஸ்மான் செராப்தீன் என்பவர் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகத்தில் ஒரு துப்பாக்கி சுடும் வீரராகக் கருதப்படுகிறார்.</p><h2>பதற்றமான சூழ்நிலை</h2><p> </p><p>மேலும் கணேமுல்லா சஞ்சீவ கொலைச் சம்பவத்திலும் அ வர் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த. ஒகஸ்ட் 6 ஆம் திகதி இரவு சுமார் 10.20 மணியளவில் மெகசின் சிறையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையின் போது நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa80659d-78b5-44ff-af95-fb3ba764c0f0/26-6a9bdcb20444c.webp' /></p><p>

இறந்தவரின் உடல் மத்தேகொடவில் உள்ள ஒரு உறவினரின் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் மத்தேகொட முஸ்லிம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும், உடல் புதைக்கப்பட்ட குழியின் அடிவாரத்திலிருந்து சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு யாரோ ஒருவர் குழி தோண்டியிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p> பொலிசாருக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரிவிக்காமல், மயான ஊழியர்கள் மீண்டும் குழியை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மத்தேகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:11:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலின் தற்போதைய நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-in-saftey-place-1788573307"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-in-saftey-place-1788573307</id>
            <summary type="text">
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாமலின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>
சிறைச்சாலை வட்டாரங்கள் </b></h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் மேலும் 10 கைதிகள் வரை குறித்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e9f94f8-dc29-46ac-a8de-7b29aedbb92a/26-6a9b7927e0c9f.webp' /></p><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து வழங்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

நாமல் ராஜபக்ச கைது</b></h3><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9161d163-10dc-43ec-a023-590092d8f633/26-6a9b792895028.webp' /></p><p>பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது 8 லட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-05T09:04:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வந்தாறுமூலை- கிழக்கு பல்கலைக்கழக இனப்படுகொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vantharumulai-eastern-university-massacre-1788597268"></link>
            <id>https://tamilwin.com/article/vantharumulai-eastern-university-massacre-1788597268</id>
            <summary type="text">வந்தாறுமூலை- கிழக்குபல்கலைக்கழக இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன்&amp;nbsp; 36 ஆண்டுகள் ஆகின்றன.கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வந்தாறுமூலை- கிழக்குபல்கலைக்கழக இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன்&nbsp; 36 ஆண்டுகள் ஆகின்றன.</p><p>கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என்பது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ் மக்கள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டு அவர்களை வாகனங்களில் ஏற்றிச்சென்று பின்னர் படுகொலை செய்யப்பட்ட கொடுரம் ஜனாதிபதி ஆர் பிரமதாசா ஆட்சிக்காலம் நடந்தது.
</p><p>
அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>படுகொலைகள்</h2><p> இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தது. விசாரணை முடிவுகள் சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது. </p><p>அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனங்கண்டிருந்தது, ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d144f20-0788-4cd2-9941-7965f2d2059d/26-6a9bd9a49d0c4.webp' /></p><p> 1990, ல் நடந்த தமிழினப்படுகொலைகள் இலங்கை இராணுவத்துடன் முஷ்லிம் ஊர்காவல் படையினரும் சம்மந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
இன்று 05/09/2026, 36, ஆண்டுகள் இந்த இனப்படுகொலை நடந்தும் இதுவரை அந்த கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை.</p><p> அந்த 158, தமிழர்களும் எங்கு புதைக்கப்பட்டார்கள் என்பது கூட இதுவரை தெரியாத நிலையில் அந்த நினைவு நாள் மட்டும் நினைவு கூரப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T08:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[300ஆவது நாளை எட்டும் நாட்டு நடப்பு நிகழ்ச்சி.. நேரலையில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nattu-nadappu-lankasri-300-days-passed-1788595513"></link>
            <id>https://tamilwin.com/article/nattu-nadappu-lankasri-300-days-passed-1788595513</id>
            <summary type="text">லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி தனது 300ஆவது நாளில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.&amp;nbsp;இந்த மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, இன்று மாலை 06.00 மணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி தனது 300ஆவது நாளில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.&nbsp;</p><p>இந்த மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, இன்று மாலை 06.00 மணிக்கு சிறப்பு நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.&nbsp;</p><p>இந்நிகழ்ச்சியில், சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு மற்றும் ஊடகவியலாளர் டில்ஷானுடன் சிறப்பு விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் கலந்து கொள்ளவுள்ளார்.&nbsp;</p><p>நேரலையாக ஒளிபரப்பாகும் எமது நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள நீங்களும் அழைக்கலாம்.&nbsp;</p><p><b>076 - 8246255 </b>என்ற வட்ஸப் இலக்கத்திற்கு அழைத்து உங்களது கேள்விகளை கேட்கலாம். வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம்.&nbsp;</p><p>இன்று மாலை 6 மணிக்கு <b><a href="https://www.youtube.com/@Lankasrinews" target="_blank">Lankasri News </a></b>யூடியூப் தளத்தில் எதிர்பாருங்கள்!&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T08:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்திருந்த பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegally-stockpiled-liquor-seized-woman-arrested-1788596276"></link>
            <id>https://tamilwin.com/article/illegally-stockpiled-liquor-seized-woman-arrested-1788596276</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில்
சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான மதுபானங்களை
சூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில்
சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான மதுபானங்களை
சூரியபுர விசேட அதிரடிப்படையினர் நேற்று (4.9.2026) இரவு கைப்பற்றியுள்ளனர்.</p><p>

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கையின்போது, ஆலங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்டபோது இந்த
மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது, சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 50
வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

கைப்பற்றப்பட்ட பொருட்களில் 42 பியர் போத்தல்கள், 50 கால் போத்தல் சாராயம்
மற்றும் 15 அரை போத்தல் சாராயம் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட பெண்ணும் கைப்பற்றப்பட்ட மதுபானங்களும் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2e0af54-35b9-4444-9428-8e9da6be7541/26-6a9bd370f2542.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று (5) நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T08:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pilgrimage-holy-mother-perpetual-ayithiyamalai-1788594516"></link>
            <id>https://tamilwin.com/article/pilgrimage-holy-mother-perpetual-ayithiyamalai-1788594516</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய
அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை இன்று (05.09.2026) அதிகாலை
நடைபெற்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய
அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை இன்று (05.09.2026) அதிகாலை
நடைபெற்றது.</p><p>
புனித மடு பேராலயத்திற்கு அடுத்ததாக பாதயாத்திரை செல்லும் ஆலயம் என்ற
பெருமையினை ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் பாதயாத்திரை சிறப்புக் கொண்டது.</p><h2>பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு</h2><p>
</p><p>மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பாத
யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c244f412-2446-4422-acfa-3fd2bdce3565/26-6a9bcf58931a0.webp' /></p><p>
வருடா வருடம் இடம்பெறும் இப்பாதயாத்திரை இவ்வருடம் மட்டக்களப்பு புளியந்தீவு
புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமானது.
</p><p>மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் பாதயாத்திரையினை முன்னிட்டு விசேட
திருப்பலி பூஜை நடைபெற்றது. இந்த திருப்பலியில் பெருமளவான பக்தர்கள்
கலந்துகொண்டனர்.</p><h2>பாதயாத்திரை</h2><p>திருப்பலியினைத் தொடர்ந்து காலை பாதயாத்திரை ஆரம்பமாகி
வீச்சுக்கல்முனை சந்தனமாதா ஆலயம் ஊடாக சென்று வலையிறவுப் பாலம் ஊடாக
பாதயாத்திரை வவுணதீவினை அடைந்து அதன் ஊடாக ஆயித்தியமலை வரைசென்றது.
விசேட சொரூபமும் இதன்போது கொண்டு செல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b81d25dd-00a6-4eef-9b2a-d744ccb53399/26-6a9bcf597bd61.webp' /></p><p> </p><p>கடந்த 28ஆம் திகதி மாலை
கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை
6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறவுள்ள நிலையிலேயே இப் பாதயாத்திரை இன்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T08:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சர்வதேச மாணவர்களுக்கான பிரபல பட்டப் படிப்பு இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/degree-international-students-canceled-australia-1788594963"></link>
            <id>https://tamilwin.com/article/degree-international-students-canceled-australia-1788594963</id>
            <summary type="text">அவுஸ்திரேலிய சர்வதேசக் கல்வி அமைப்பின் நேர்மையைப் பாதுகாக்கும் வகையில்,
வெளிநாட்டு மாணவர்களுக்கான பிரபல &#039;மேலாண்மை (கற்றல்)&#039; பட்டப் படிப்பின் புதிய சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலிய சர்வதேசக் கல்வி அமைப்பின் நேர்மையைப் பாதுகாக்கும் வகையில்,
வெளிநாட்டு மாணவர்களுக்கான பிரபல 'மேலாண்மை (கற்றல்)' பட்டப் படிப்பின் புதிய சேர்க்கையை
அவுஸ்திரேலிய அரசு இரத்து செய்துள்ளது.

​</p><p>இந்தத்தகவலை சர்வதேசக் கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில்
அறிவித்துள்ளார்.</p><p>

போலி மாணவர்கள் சிலர் உள்நாட்டு விசா இடமாற்றங்களுக்காக இந்தப் படிப்பைத்
தவறாகப் பயன்படுத்துவதும், அதிகளவில் விசா நிராகரிப்புகள் பதிவாவதும்
இமுடிவுக்கு முக்கியக் காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இரத்து</h2><p>
</p><p>
அத்துடன் ​ ஓக்டோபர் 5, 2026 முதல் CRICOS பதிவுபெற்ற கல்வி நிறுவனங்கள்
இந்தப் படிப்பிற்கு புதிய சர்வதேச மாணவர்களைச் சேர்க்கத் தடை விதிக்கப்படுவதுடன், படிப்பைத் தொடங்காத மாணவர்களுக்கான சேர்க்கை உறுதிப்படுத்தல்கள் (CoE)
ஒக்டோபர் 5 தானாகவே இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

​</p><p>மேலும் ஏற்கனவே படிப்பைத் தொடங்கிப் படித்து வரும் 15,772 சர்வதேச மாணவர்கள்
பாதிப்பின்றித் தங்கள் படிப்பை முழுமையாக முடிக்க அனுமதிக்கப்படுவர்.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54ed25d9-290d-49f3-83b9-b9373eea2e96/26-6a9bcb156681f.webp' /></p><p>
இந்தநிலையில் இக்கட்டுப்பாடு உள்நாட்டு அவுஸ்திரேலிய மாணவர்களையோ அல்லது பிற
பட்டப் படிப்புகளையோ பாதிக்காது என ஜூலியன் ஹில் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை ​2025-இல் கொண்டுவரப்பட்ட கல்வி நேர்மை சீர்திருத்தச் சட்டத்தின்
கீழ், முறைகேடுகளைத் தடுக்க அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தின்
அடிப்படையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T08:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/report-on-sri-lanka-to-be-submitted-1788593935"></link>
            <id>https://tamilwin.com/article/report-on-sri-lanka-to-be-submitted-1788593935</id>
            <summary type="text">எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 63ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 63ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்க இருக்கின்றார்.
</p><p>
இந்நிலையில் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளிலேயே சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கையின் முன்னோட்ட விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன.</p><h2>வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>
</p><p>
அதில், போரின் போதும் அனைத்துத் தரப்பினரினாலும் இழைக்கப்பட்ட கடுமையான சர்வதேச மனிதநேய சட்டம் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நிலைநாட்டப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் விதத்தில் நடவடிக்கைகளை எடுத்து, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பன போன்ற பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/216a2b47-8e20-4c21-803c-99dd04ab72bc/26-6a9bc7c06919c.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 60/01 க்கு இணங்கச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிந்திய நிலைமை குறித்த எழுத்து மூலமான சமர்ப்பணமாக அமைகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றிப்போகும் கந்தளாய் பேரமடு குளம்: பல குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishing-affected-kantalai-peramadu-tank-dries-1788592930"></link>
            <id>https://tamilwin.com/article/fishing-affected-kantalai-peramadu-tank-dries-1788592930</id>
            <summary type="text">கந்தளாய் பேரமடு குளம் நீரின்றி முற்றாக வற்றியுள்ளதால், இந்தக் குளத்தை நம்பி
வாழ்ந்து வரும் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்
நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பேரமடு குளம் நீரின்றி முற்றாக வற்றியுள்ளதால், இந்தக் குளத்தை நம்பி
வாழ்ந்து வரும் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

குளத்தில் போதியளவு நீர் இல்லாததால் மீன்பிடித் தொழிலும்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், தினசரி வருமானத்தை நம்பி வாழும் மீனவ குடும்பங்கள்
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.</p><h2>அபாயம்</h2><p>

அதேவேளை, பேரமடு குளத்தை நம்பி 900 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில்
விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc34475b-4b5a-47e2-b763-d04c10d071c8/26-6a9bc72ea4641.webp' /></p><p>
</p><p>குளம் தொடர்ந்து வற்றிய நிலையில் காணப்படுவதால், எதிர்வரும் விவசாய
நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் அரசாங்கம் சிறைச்சாலைக்குள் தான் சாத்தியம்! அமைச்சர் வசந்த சமரசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/review-by-minister-vasantha-samarasinghe-1788589935"></link>
            <id>https://tamilwin.com/article/review-by-minister-vasantha-samarasinghe-1788589935</id>
            <summary type="text">ராஜபக்சர்களின் தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பது இனிவரும் காலங்களில் சிறைச்சாலைக்குள் மாத்திரமே சாத்தியப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க விமர்சித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சர்களின் தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பது இனிவரும் காலங்களில் சிறைச்சாலைக்குள் மாத்திரமே சாத்தியப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க விமர்சித்துள்ளார்.
</p><p>
அநுராதபுரம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த மொட்டுக் கட்சியின் எதிர்ப்புப் பேரணியை குழப்பும் வகையில் நாமல் ராஜபக்சவை அரசாங்கம் கைது செய்துள்ளதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
ஆனால் அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை நீதிமன்றம் தான் பிறப்பித்திருந்தது, அரசாங்கத்துக்கு அதில் எந்தவொரு தொடர்பும் இல்லை.</p><h2>பரவும் கருத்துகள் அடிப்படையற்றவை</h2><p>
</p><p>
அதே போன்று ராஜபக்சர்கள் குறித்து அரசாங்கம் அச்சம் கொண்டிருப்பதன் காரணமாக அவர்களின் கூட்டத்துக்கு அநுராதபுரத்தில் மைதானம் ஒதுக்கவில்லை என்று பரவும் கருத்தும் அடிப்படையற்றது.

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் குறித்து அவர்கள் எப்படியோ மோப்பம் பிடித்துள்ளனர். அதனை திசை திருப்பும் நோக்கில் திடீரென அநுராதபுர கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b74ccf35-9e9b-45ea-aa4e-dc7ce1c379b1/26-6a9bc327e9f1d.webp' /></p><p> அத்துடன் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு மைதானங்களை மாத்திரமே அவர்கள் தங்கள் கூட்டத்துக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளனர். அது முடியாத காரியம். ஏனெனில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மைதானங்களை அதே திகதிகளில் வேறொரு விடயத்துக்கு மீண்டும் ஒதுக்க முடியாது.

அவர்களுக்குத் தேவையென்றால் அநுராதபுரத்தில் மேலும் 12 பாரிய மைதாளங்கள் இருக்கின்றது.</p><h2>பொதுமக்களின் ஆதரவு</h2><p> </p><p>அவற்றில் ஒன்றை ஒதுக்கிக் கொள்ளட்டும்.

ஆனால் பெரிய மைதானங்களை நாங்கள் கேட்டும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்கள் சிறிய மைதானமொன்றில் தங்கள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.</p><p> ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காது என்பது அவர்களுக்கே தெரியும். இப்போதைக்கு பொதுமக்கள் அவர்களை ஆதரிக்கப் போவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89f0c0f9-219f-400d-ac23-a4c0da248971/26-6a9bc328ab7af.webp' /></p><p>
</p><p>
அதே போல ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி மீண்டும் இந்த நாட்டில் சாத்தியப்படாது. வேண்டும் என்றால் இந்த நாட்டின் சிறைச்சாலையொன்றில் அவ்வாறான ஆட்சியை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். </p><p>அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. மற்றும்படி பொதுமக்களின் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள அவர்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் திட்டத்தால் கொந்தளிக்கும் Gen-Z தலைமுறை - நாமலின் கைதில் சதி - எச்சரிக்கும் ரணில் தரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-unp-condemns-ranil-anura-kumara-1788588624"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-unp-condemns-ranil-anura-kumara-1788588624</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அவரது கைதுக்குக் கண்டனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அவரது கைதுக்குக் கண்டனம் தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. </p><p>நாமல் ராஜபக்சவின் தலைமையில் செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்கூட்டத்தின் வெற்றியைத் தடுப்பதே இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கம் என்பது தெளிவாகிறது என்று UNP தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p><h2>அரசாங்கத்திற்கு சிக்கல்..&nbsp;</h2><p>
'தேசிய மக்கள் சக்தி' (NPP) கட்சியின் தலைவரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு நாடு முழுவதும் பயணம் செய்து பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு உள்ள ஜனநாயக உரிமையை, நாமல் ராஜபக்சவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று UNP சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac050d71-6923-4e69-90bd-63eeb7a33f34/26-6a9bc1d8de8bb.webp' /></p><p> இத்தகைய நடவடிக்கைகளை நவீன நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்றும், குறிப்பாக 'Gen-Z' எனப்படும் இன்றைய இளம் தலைமுறையினர் இத்தகைய செயல்களை நிராகரிப்பார்கள் என்றும் UNP மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>இத்தகைய தரக்குறைவான செயல்கள் தற்போதைய அரசாங்கத்தின் மோசமான நிலையையே வெளிப்படுத்துவதோடு, மக்களிடையே அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைவதற்கே வழிவகுக்கும் என்று UNP கூறுகிறது. </p><p>மக்கள் தலைவர்களைக் கைது செய்வதன் மூலம் மட்டும் அவர்களின் செல்வாக்கைக் குறைத்துவிட முடியாது என்று அரசாங்கத்தை அக்கட்சி எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் புதிய சட்டத்தரணிகள் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-new-lawyers-to-the-attorney-general-1788591249"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-new-lawyers-to-the-attorney-general-1788591249</id>
            <summary type="text">சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கான புதிய சட்டத்தரணிகள் நியமனம் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கான புதிய சட்டத்தரணிகள் நியமனம் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.</p><p>

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி பதவிக்கான ஆட்சேர்ப்பு நியமனப் பட்டியலை பொதுச்சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
உத்தியோகபூர்வ பட்டியலின்படி 31 விண்ணப்பதாரர்கள் அரசாங்க சட்டத்தரணிகளாக நியமனம் பெறத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c777fdd-a7b4-4770-b529-6d6351619ec8/26-6a9bbde19803b.webp' /></p><p>

எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் அவர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.</p><p>இந்தப் பட்டியலில் நான்கு தமிழர்களும் ஒரு முஸ்லிமும் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாதாள உலக குழுவின் வெறியாட்டம் - தவறுதலாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-gangs-killed-a-father-1788589723"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-gangs-killed-a-father-1788589723</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியில் பாதாள உலகக் குழுவினரின் பழிவாங்கல் காரணமாக நேற்றிரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியில் பாதாள உலகக் குழுவினரின் பழிவாங்கல் காரணமாக நேற்றிரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கல மாவத்தையிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்றினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. </p><p>

இதில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயதான சுனில் பெர்னாண்டோ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.</p><h2><b>&nbsp;துப்பாக்கிச் சூடு</b></h2><p> 

கொஸ் மல்லி எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் காசாளரையே இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் தவறுதலாக அவரின் தந்தை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c12ae7-c8cf-4c54-af4d-921edf3500a1/26-6a9bb9089fb9b.webp' /></p><p>மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு தாக்குதல்தாரிகள், கைப்பாப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். </p><p> 

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qJDzRCeyXXI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்தில் பசில் - யோஷித வரிசையில் நாமல்! வரலாற்றில் பதிவான 4ஆவது கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-4-times-in-sri-lankan-history-1788516687"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-4-times-in-sri-lankan-history-1788516687</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;இதற்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் (2016இல் இருமுறையும் 2017இல் ஒருமுறையும்) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, தற்போது மீண்டும் இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் திட்டவட்டமாக மறுப்பதுடன், இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p></p><h2>முதல் கைது..&nbsp;</h2><p>
</p><p>
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus A330 மற்றும் A350) விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604d05b3-6e4f-4f36-a4c8-3b78d150f6d8/26-6a9aa36c3625f.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தத்தின் போது ராஜபக்ச குடும்பத்தினர் 60 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐந்து மணி நேர விசாரணையின் பின்னரே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. </p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் முன்னரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்ததுடன், எந்தவொரு சுயாதீன விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.
</p><p>
நாமல் ராஜபக்ச முதன்முதலில் 2016 ஜூலை 11 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (FCID) கைது செய்யப்பட்டார். </p><p>கொழும்பு கோட்டையில் முன்மொழியப்பட்ட 650 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பரக் கட்டிடத் திட்டத்துடன் தொடர்புடையதாக, ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்காக இந்திய நிறுவனமான 'கிரிஷ்' நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாயை (அக்காலகட்டத்தில் சுமார் 480,000 அமெரிக்க டொலர்) தவறாகப் பயன்படுத்தி, அதைத் தன் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்..&nbsp;</h2><p> </p><p>பசில் மற்றும் யோஷித ராஜபக்சவுக்குப் பிறகு இக்குடும்பத்தின் மூன்றாவது கைதான இச்சம்பவத்திற்குப் பிறகு அவர் சுமார் ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9a7343-a31e-4f4c-838e-dc83659e3649/26-6a9aa36d0a978.webp' /></p><p> </p><p>மேலும், சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பின்னர், 2016 ஒகஸ்ட் 15 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார். </p><p>அங்கு, நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடைய 'கவர்ஸ் கோப்பரேஷன்' (Gowers Corporation) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி 125 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 'ஹெலோ கோப்' (Hellocorp) நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்து பணமோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் ஒகஸ்ட் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><p>இந்த வழக்கில் வங்கிப் கணக்குகளை முடக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், பின்னர் 2023 நவம்பரில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.</p><p></p><h2>வரலாற்றுச் சம்பவம்..&nbsp;</h2><p>
</p><p>
அவரது மூன்றாவது கைது நடவடிக்கை 2017 ஒக்டோபர் 10 அன்று ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90de9b21-127e-46f5-986b-b694c709170e/26-6a9aa36dbbfec.webp' /></p><p> </p><p>மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்திய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிராக ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, சட்டவிரோதமாகக் கூடுதல், கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இது நடந்தது. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருடன் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவர் ஒக்டோபர் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது ஆதரவாளர்கள் டயர்களை எரித்து சிறை வாகனத்தை மறிக்கவும் முயன்றனர்.
</p><p>
பின்னர், 2025 ஜூலையில், மாலைதீவில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றதால் 2017 போராட்ட வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. எனினும், மறுநாள் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து அந்த பிடியாணை திரும்பப் பெறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ece776bd-1b15-4649-8f75-a3a0f6a649ec/26-6a9aa36e7c460.webp' /></p><p> </p><p>இவ்வாறிருக்கையில், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணிகள் சேர்க்கையில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தி வருகிறது, மேலும் பல பணமோசடி புகார்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனான, 1986இல் பிறந்த நாமல் ராஜபக்சஈ முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் (2020 - 2022), 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மிக இளைய வேட்பாளரும் ஆவார்.</p><p> தற்போது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது அரசியல் தொகுதி ஹம்பாந்தோட்டை ஆகும். 2015 முதல், மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கங்களின் கீழ் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பல விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MKWUl_Wo_0w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-05T06:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே -ரணில் விக்ரமசிங்க வழக்குகளிலிருந்து திலீப பீரிஸ் நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-solicitor-general-dileepa-peiris-1788589851"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-solicitor-general-dileepa-peiris-1788589851</id>
            <summary type="text">மேலதிக செலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு (Dileepa Peiris) துபாயில் உள்ள பாதாள உலகக் குழுவினரிடமிருந்து உயிரச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவரது பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேலதிக செலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு (Dileepa Peiris) துபாயில் உள்ள பாதாள உலகக் குழுவினரிடமிருந்து உயிரச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அண்மையில் உத்தரவிடப்பட்டிருந்தது. </p><p>இவ்வாறான பின்னணியில், சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளிலிருந்து திலீப பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற சுரேஷ் சலேவின் வழக்கு விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஓஸ்வால் பெரேரா என்ற அரச சட்டத்தரணியே ஆஜரானார்.
</p><h2>
</h2><p></p><h2>சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்</h2><p>அவரை இவ்வழக்குகளில் ஆஜராக வேண்டாம் என உயர் மட்டத்திலிருந்து (சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்கவினால்) அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. </p><p>சட்டமா அதிபருக்குத் தனது அதிகாரிகளை நியமிக்கும் அல்லது மாற்றும் தன்னிச்சையான அதிகாரம் (Discretionary Power) இருந்தாலும், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இவ்வழக்கிலிருந்து அவர் திடீரென நீக்கப்பட்டமை பாதிக்கப்பட்ட தரப்பினர், புலனாய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சந்தேகத்தையும் உரையாடலையும் உருவாக்கியுள்ளது.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேற்றை தினம் இச்சம்பவம் குறித்து ஒரு குழுவினர் சந்தித்து தெரியப்படுத்தியுள்ளனர். அதன் பின்னரே ஜனாதிபதியும் இத்தகவலை அறிந்து கொண்டுள்ளார்.
</p><p>கடந்த 2 ஆம் திகதி சுரேஷ் சலேவின் வழக்கு விசாரணையின் போது கருணா அம்மான் அளித்த சிறப்பு வாக்குமூலம் மற்றும் ஏனைய முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் விரிவாக முன்வைக்கப்படுவதைத் தடுப்பதற்காக திலீப பீரிஸ் நீக்கப்பட்டாரா? </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/361c2256-0921-47eb-bc4f-f58f915d6fd3/26-6a9bb71dbf64a.webp' /></p><p>அல்லது ஓய்வுபெற்ற வான்படை அதிகாரியான சாந்த குமார ஜயதிலக்கவின் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதற்கான நியாயமான காரணத்தை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. </p><p>
சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்கவை இந்த பதவியில் நியமித்தது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலாகும். அந்த நியமனத்தின் போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளான அனிஷா ஜினசேன உட்பட இருவரை விடவும், பாலிந்த ரணசிங்க பெயரே பரிந்துரைக்கப்பட்டு அரசியலமைப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
</p><p>எனவே, அதற்கு நன்றிக்கடனாக ரணில் விக்ரமசிங்கவின் வழக்கில் அவர் பக்கம் சார்ந்து செயற்படுகிறாரா என்ற சந்தேகம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>இது ஒரு பாரிய விடயமாகும். ஏனெனில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்து, அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளதாக அறியமுடிகிறது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T06:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் வாழ்வாதாரத்திற்காக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த இருவருக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-killed-in-elephant-attack-1788586983"></link>
            <id>https://tamilwin.com/article/two-killed-in-elephant-attack-1788586983</id>
            <summary type="text">அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஸ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஸ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம் நேற்று (04.09.2026) மாலை இடம்பெற்றுள்ளது. </p><p>

கெப்பித்திகொல்லாவ - பகலஉஸ்கொள்ளாவ பகுதியைச் சேர்ந்த செனவிரத்னகே ஸ்ரீ பால (70) மற்றும் சமரக்கோன் அப்புஹாமிலாகே சுகத் சுமனரத்ன (51) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.</p><h2>பயிர்ச்செய்கை முன்னெடுப்பு</h2><p> </p><p>

உயிரிழந்த இருவரும் தமது வாழ்வாதாரத்திற்காக சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இந்த நிலையில், சிறிய காட்டுப் பகுதியொன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு அருகில் வந்த யானையொன்று இருவரையும் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8cb0cd-3931-47bc-8c5e-c3ef2ddc9640/26-6a9bb0016857a.webp' /></p><p> 

யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p> </p><p>

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த கெப்பித்திகொல்லாவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். காதர், இரு சடலங்களையும் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். </p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T06:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள்: விடுதலைப் புலிகள் வழங்கிய துல்லியமான தகவல்கள்! அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.</p><h2>
</h2><p></p><h2>தகவல் சேகரிக்கும் புலனாய்வு அதிகாரி</h2><p>இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். </p><p>இந்தியாவின் சிறப்புப் பொலிஸ் பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் "பிரதீப்" எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும். </p><p>இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார். 
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார். </p><p>அவரை நாம் "சார்லஸ்" எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.
</p><p>சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக பொலிஸின் சிறப்புப் பிரிவான 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. </p><p>
சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.
</p><h2>இந்தியாவில் இருந்து வந்து முதல் தகவல்</h2><p>2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.
</p><p>சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள், </p><p>குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.
</p><p>இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய 'Q' பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b2b0ab-d818-42dc-a5e5-70a05eb47d73/26-6a9a0dc927dbc.webp' /></p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார். </p><p>அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. 
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது, </p><p>மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், </p><p>அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "பலமிக்க அரசியல்வாதி ஒருவர்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).
</p><h2>வவுணதீவு சம்பவத்தின் உண்மைத் தன்மை</h2><p>2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார். </p><p>"நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?" என வினவுகிறார். அதற்கு, "தமிழக 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்; </p><p>இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்" எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO - Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.</p><p>அதற்கு சி.ஓ., "இது குறித்து மேலும் ஆராயுங்கள்" எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29894d6f-036d-4834-9f36-2639d5a65830/26-6a9a0dc9e0815.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில் 
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி, </p><p>"இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. 
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார். </p><p>கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், "இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் பொலிஸாரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள். </p><p>இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.
</p><h2>குண்டு வெடிப்பின் பின்னர்</h2><p>குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் "உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்" எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது. </p><p>ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T05:53:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plain-tea-milk-tea-price-sri-lanka-1788585700"></link>
            <id>https://tamilwin.com/article/plain-tea-milk-tea-price-sri-lanka-1788585700</id>
            <summary type="text">பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;

எரிவாயு விலை குறைப்பு காரணமாக, ஒரு கோப்பை பால் தேநீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.&nbsp;&nbsp;</p><p>

எரிவாயு விலை குறைப்பு காரணமாக, ஒரு கோப்பை பால் தேநீர் மற்றும் ஒரு கோப்பை சாதாரண தேநீரின் விலையை, 5 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>சிற்றுண்டிகளின் விலை</h2><p>அகில இலங்கை உணவக மற்றும் மதுபான விடுதி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி,&nbsp;இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca2a153-fe0b-4538-ae68-304d41fb4de6/26-6a9ba87e3c3c6.webp' /></p><p>இருப்பினும், சிற்றுண்டிகளின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T05:35:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வேலையை விட்டு சென்ற உயர் பொலிஸ் அதிகாரி - தகவல் புத்தகத்தில் சிக்கிய முக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-traffic-oic-reportedly-leaves-post-1788585079"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-traffic-oic-reportedly-leaves-post-1788585079</id>
            <summary type="text">கடுமையான வேலைப்பளு காரணமாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பணியை விட்டுச் சென்றுள்ளார்.
அதிகரித்த வேலைப்பளு மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுமையான வேலைப்பளு காரணமாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பணியை விட்டுச் சென்றுள்ளார்.
</p><p>அதிகரித்த வேலைப்பளு மற்றும் பணி தொடர்பான அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகின்றது.&nbsp;</p><h3>பணி அழுத்தம்&nbsp;</h3><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,&nbsp;</p><p>தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்தவர், தனது பணியை விட்டு விலகி வீட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பணி அழுத்தத்தை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு, பொலிஸ் தகவல் புத்தகத்தில் குறிப்பொன்றைப் பதிவு செய்த பின்னரே குறித்த பொலிஸ் பரிசோதகர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d64dae-158c-423a-9373-503e5a3d9657/26-6a9ba792bc2dc.webp' /></p><p>
</p><p>இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்கிஸை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக குணசேகரவின் உத்தரவின் பேரில், கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><h2>பொலிஸ் தகவல் புத்தகத்தில் இருந்த குறிப்பு</h2><p>
</p><p>குறித்த அதிகாரியின் இந்தச் செயல், ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக் கூடும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கரிசனையை வெளியிட்டுள்ளார்.</p><p>
பொலிஸ் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெற்றதைத் தொடர்ந்து, தெஹிவளை போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் குறித்த பகுதிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:24:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கள பௌத்தர்களுக்கு பாரபட்சம் காட்டும் அநுர அரசு - தயாசிறி பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-against-sinhala-buddhists-1788585345"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-against-sinhala-buddhists-1788585345</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கூறுவதாக வாயளவில் வாதிட்டாலும், நடைமுறையில் சிங்கள- பௌத்த மக்களுக்குத் தொடர்ச்சியாக அநீதிகளையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கூறுவதாக வாயளவில் வாதிட்டாலும், நடைமுறையில் சிங்கள- பௌத்த மக்களுக்குத் தொடர்ச்சியாக அநீதிகளையும் பாரபட்சங்களையும் இழைத்து வருகின்றது என 
எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் நேற்று(04.09.2026) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 


இனவாதத்திற்குள் சிக்கியுள்ள சிங்கள மக்கள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>


தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சகோதர சமுதாயமாகவே கருதுகின்றோம். எனினும்,
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குச் சென்று இனவாதம் பேச அனுமதிக்க மாட்டோம் எனக்
கூறுவதும், அனுராதபுரத்திற்கு வடக்கே விகாரைகளுக்குச் செல்வோரை இனவாதிகளாகச்
சித்தரிப்பதும் முரணானது.</p><p> 

மேலும், வரலாற்றில் முதன்முறையாகப் புத்தர் சிலை
பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டமை மற்றும் அனுபவமிக்க சிங்கள பௌத்த
நீதிபதிகளான தம்மிக கனேபொல மற்றும் குருசிங்க ஆகியோரின் நியமனங்கள் தடுத்து
நிறுத்தப்பட்டமை போன்ற செயற்பாடுகள் அரசாங்கத்தின் பாரபட்சப் போக்கைக்
காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/651480c5-685a-416e-8b8c-833f58328167/26-6a9ba5ecd76bc.webp' /></p><p>

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா
பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச போன்ற தலைவர்களால்
கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் நாட்டின் முன்னணி
வலுவான அரசியல் கட்சியாக மாற்றும் வரை தங்களது அரசியல் பயணம் ஓயாது.
</p><p>
கட்சியின் மூத்த உறுப்பினரான நிமல் சிரிபால டி சில்வா தனது தனிப்பட்ட அரசியல்
வியாபாரத்தையும் சுயநல நிகழ்ச்சி நிரலையும் உடனடியாக நிறுத்திக்கொள்ள
வேண்டும்.
</p><p>
 அமைச்சுப் பதவிகளுக்காக நாட்டையும் கட்சியையும் காட்டிக்கொடுக்கும்
இழிவான செயல்களில் ஈடுபடாமல், சாதாரண மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு அதிகாரிகள் குறித்து புதிய நடவடிக்கை.. ஜனாதிபதி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-speech-police-event-1788584583"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-speech-police-event-1788584583</id>
            <summary type="text">இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காகச் சரியான பதவி
உயர்வு முறைமை தயாரிக்கப்படுவதுடன், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய
சீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காகச் சரியான பதவி
உயர்வு முறைமை தயாரிக்கப்படுவதுடன், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய
சீருடை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
தெரிவித்தார்.
</p><p>
திம்பிரிகஸ்யாய களப்படை தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற 160ஆவது
பொலிஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் இடர் கொடுப்பனவை வழங்குவதற்கும், அவசியமான
உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஆட்சேர்ப்புகளுக்குத் தேவையான நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
</p><p>
கடந்த 160 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகப் பொலிஸார் ஆற்றிய மகத்தான
பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.</p><h2>அறிமுகப்படுத்தப்பட்ட செயலி&nbsp;&nbsp;</h2><p> </p><p>மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும்
பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் தேசிய பொறுப்பு தற்போது பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதனைச் சமூகப் பொறுப்பாகக்
கருதிச் செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc552925-986c-4800-bd3e-5011cfbb5f3b/26-6a9ba53ddcd58.webp' /></p><p>

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவான போதைப்பொருள் சோதனைகள்
மேற்கொள்ளப்பட்டதையும், வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 74 ஆயுதமேந்திய
குற்றவாளிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதையும் அவர் பாராட்டினார். </p><p>நாட்டை
குற்றங்களின் ராஜ்யத்திலிருந்து அமைதியான நாடாக மாற்றத் தேவையான சட்டங்களை
இயற்றுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களுக்குச் சேவைகளை விரைவாக வழங்குவதற்காக 'SRI LANKA POLICE MOBILE
APP' செயலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நவீனமயமாக்கப்பட்ட <a href="http://www.police.lk&nbsp;" target="_blank">www.police.lk&nbsp;</a>&nbsp;<http: www.police.lk="">இணையதளமும் திறந்து வைக்கப்பட்டது.</http:></p><p><http: www.police.lk=""> மேலும், 160ஆவது
பொலிஸ் தின நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

2026 ஜனவரி 1 முதல் அமுலாகும் வகையில், பிரதான பொலிஸ் பரிசோதகர்
தரத்திற்குட்பட்ட 1,489 பொலிஸ் அதிகாரிகளுக்கும், விசேட அதிரடிப்படையைச்
சேர்ந்த 153 அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட பதவி உயர்வுகளுக்கான கடிதங்கள்
ஜனாதிபதியால் அடையாளமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால்
ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.</http:></p><p><http: www.police.lk=""></http:></p><p><http: www.police.lk=""></http:></p>]]></content>
            <updated>2026-09-05T05:15:30+00:00</updated>
        </entry>
    </feed>
