<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-26T06:36:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் நீதித்துறையைத் தாக்குவதை நிறுத்துங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliment-privilege-must-not-be-miss-used-1787726075"></link>
            <id>https://tamilwin.com/article/parliment-privilege-must-not-be-miss-used-1787726075</id>
            <summary type="text">&amp;nbsp;நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குள்மறைந்துகொண்டு நீதித்துறை மீது தாக்குதல் நடத்தும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என இடதுசாரி மையத்தின் அழைப்பாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குள்மறைந்துகொண்டு நீதித்துறை மீது தாக்குதல் நடத்தும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
</p><p>முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதற்கு தற்போதைய அரசியலமைப்பு ரீதியான வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
நீதிமன்ற நடவடிக்கைகளை நாடுங்கள், அல்லது நாடாளுமன்றத்தில் இதனைத் தோற்கடிக்க முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து தேவையின்றி இடையூறு செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2719b764-284f-4fe1-aca5-b65bf3a0896a/26-6a8e88fce830a.webp' /></p><p>
கடந்த காலத்தில் இந்நாட்டு மக்கள் பழைய அரசியல் வர்க்கத்தை நிராகரித்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாகவே செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிக்கு மக்கள் மிகக் குறைந்த சதவீத ஆதரவையே வழங்கியுள்ளனர் என்பதை நினைவுகூர்ந்துள்ளார்.</p><p>
மக்கள் தீர்ப்பை மதித்துச் செயற்படுமாறு எதிர்க்கட்சியினரைக் கேட்டுக்கொள்வதாக சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.ம. சக்தி -ஐ.தே.க இணைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்! முதல்நிலையை விடுத்து தீட்டப்படும் திட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/united-nations-party-samagi-jana-balawegaya-1787724480"></link>
            <id>https://tamilwin.com/article/united-nations-party-samagi-jana-balawegaya-1787724480</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதாக ஆங்காங்கே பல கதைகள் பேசப்பட்ட போதிலும் இணைப்பு சாத்தியமாகவில்லை.&amp;nbsp; தற்போதைய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதாக ஆங்காங்கே பல கதைகள் பேசப்பட்ட போதிலும் இணைப்பு சாத்தியமாகவில்லை.&nbsp; தற்போதைய அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாம் மூன்றாம் நிலை உறுப்பினர்கள் இணைந்து புதிய தலைவரைத் தேட திட்டமிடப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
ஐக்கிய மக்கள் சக்தி - ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றாக இணைந்து செயற்படப்போவதாக கடந்த வருடத்தில் இருந்தே பேசப்பட்டது.அதனை தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
</p><h2>
</h2><p></p><h2>இரண்டாம் நிலை உறுப்பினர்களின் இணைப்பு</h2><p>தலைவர்கள் சந்தித்ததாகக் கூறப்பட்டது இரண்டாம் நிலை உறுப்பினர்கள் சந்தித்ததாகக் கூறப்பட்டது.யார் யாரைச் சந்தித்தாலும் இறுதியில் கிடைத்த விடை எதுவும் இல்லை என்பதுதான் அரசியல் மேடையில் பேசப்பட்ட விடயமாகும்.
</p><p>இருப்பினும் இரு கட்சிகளும் இணைந்தால் யார் தலைவர் என்பது தொடர்பான பிரச்சினை ஒன்று இருப்பதாக ஒரு தரப்பும் கூறுகிறது. இந்த இரு தலைவர்களுக்கும் நெருக்கமாக இருக்கும் சிரேஷ்டர்கள் என கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் இந்த இணைப்பை சீர்குலைப்பதாக மற்றொரு தரப்பு கூறுகிறது.
</p><p>எனவே யார் தடை போட்டாலும் இப்போது இதைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன இந்த இரு கட்சிகளினதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் 'தலைவர்கள் விரும்புவதைச் செய்யட்டும் நாங்கள் இணைகிறோம்' என்று தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளன. </p><p>
அவர்கள் கூறுவது போல் 'நாம் இணையாவிட்டால் முன்னோக்கி செல்வதற்கு வேறு வழியில்லை என்பதோடு பலமான ஒரு அணியை உருவாக்க முடியாது. இது யாருக்கும் புரிவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9023abe-4eed-429a-83e8-951c234a5442/26-6a8e82c23e34c.webp' /></p><p>இந்தப் புரியாத விடயத்தைப் புரியவைக்க குறைந்தபட்சம் நாமாவது இணைந்து இந்த இணைப்பை உருவாக்க வேண்டும். இல்லையெனில் எம்மால் இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது' என்று இரண்டாம் - மூன்றாம் நிலை உறுப்பினர்கள் பேசியுள்ளனர்.
</p><p>இதன் மூலம் எப்படியாவது தலைவர்களுக்குச் செய்தியை அனுப்ப ஆயத்தமாகிறார்கள். 'தலைவர்கள் இணையாவிட்டாலும் சிரேஷ்ட தலைவர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்பவர்கள் தடைபோட்டாலும் நாமாவது இணைகிறோம்' என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள்.
</p><p>அப்படியென்றால் 'தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தால்இ அதை அந்த நேரத்தில் பார்த்துக்கொள்வோம். நமது இரண்டாம் நிலையிலிருந்தோ அல்லது மூன்றாம் நிலையிலிருந்தோ ஒரு தலைவரைக் கண்டபிடிக்க முடியாதா என்ன? </p><p>தலைவரைப் பின்னர் கண்டபிடித்துக் கொள்ளலாம் முதலில் இந்த இணைப்பை உருவாக்கி நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாகும்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:28:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனை பழி வாங்க இளம் மனைவி மீது அசிட் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-women-attacked-by-acid-attack-1787711052"></link>
            <id>https://tamilwin.com/article/young-women-attacked-by-acid-attack-1787711052</id>
            <summary type="text">ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். </p><p>படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><h2><b>இரு தரப்புக்கு இடையில் மோதல்</b></h2><p>எனினும், குறித்த தகராறு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண் எந்தவிதத்திலும் தலையிடவில்லை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8e4f13-ebdb-451e-b0d3-29e76a63fe17/26-6a8e872d794e2.webp' /></p><p>நபர்கள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஒருவருக்குத் தாக்கப்பட்டமையே இந்தச் சம்பவத்திற்கு காரணமாகும். </p><p>பின்னர், தாக்குதலுக்கு உள்ளான நபர், தன் மீது தாக்குதல் தாக்கிய நபரின் வீட்டிற்கு அசிட் போத்தலையும் எடுத்துச் சென்றுள்ளார்.</p><p> அந்தச் சந்தர்ப்பத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபர் வீட்டில் இல்லாத காரணத்தினால், குறித்த நபரின் மனைவியின் மீது இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. </p><p> அசிட் தாக்குதலை மேற்கொண்ட நபர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை ஹொரணை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 30, 28 மற்றும் 27 வயதுடைய மூவராகும்.</p><p> சந்தேகநபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-26T06:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியக் கொடியில் மாற்றம் செய்ய வேண்டுமென அமைச்சர் கூறினாரா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-statement-regarding-the-national-flag-1787723863"></link>
            <id>https://tamilwin.com/article/fake-statement-regarding-the-national-flag-1787723863</id>
            <summary type="text">தேசியக் கொடியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தான் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசியக் கொடியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தான் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த பிரசாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தேசியக் கொடி மாற்றம் குறித்துப் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் தொடர்பான இணையதள இணைப்புகள் ஊடகவியலாளர்களிடம் இருந்தால், அவற்றை தன்னிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14431723-67a9-40ec-8c72-badd59cc32dd/26-6a8e805957e6a.webp' /></p><p>
இதேவேளை, முச்சக்கரவண்டிகளை இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தும் யோசனை குறித்து அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தெளிவுபடுத்தினார்.</p><p>
பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியவர்கள் மற்றும் உயர்தரப் பரீட்சைக்குப் பிந்திய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் யோசனைகள் கிடைத்துள்ளதாகவும், எனினும் இது குறித்த இறுதித் தீர்மானத்தை அரசாங்கமே எடுக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட வார இறுதி விடுமுறை! அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-issued-to-travelers-on-expressways-1787723961"></link>
            <id>https://tamilwin.com/article/notice-issued-to-travelers-on-expressways-1787723961</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிகக்ப்படுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிகக்ப்படுகின்றது.</p><p> வீதி அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.</p><p>



இதன்படி,, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களிலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு&nbsp;</h2><p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் இடத்தில் இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b28c61af-bd07-4975-8dd9-c8719bd85dbd/26-6a8e8339925c7.webp' /></p><p> </p><p>



அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவு இடம் மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் இடம் ஆகிய பகுதிகளுக்கு அருகிலும் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுகின்றது.
</p><p>


குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும் கவனமாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>இன்று தொடங்கும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் கூறியுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல்! புலனாய்வு அதிகாரிகளின் கையில் முடிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-regarding-suresh-sallay-1787718864"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-regarding-suresh-sallay-1787718864</id>
            <summary type="text">சுரேஷ் சலேவின் இதற்கு முன்னரான 90 நாட்கள் தடுப்புக் காலத்தில் அவர் சரியான ஒத்துழைப்பை வழங்கியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கணிசமான தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரேஷ் சலேவின் இதற்கு முன்னரான 90 நாட்கள் தடுப்புக் காலத்தில் அவர் சரியான ஒத்துழைப்பை வழங்கியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கணிசமான தகவல்களை கண்டறிந்திருக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாளன் பிரதானி சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் உத்தரவு விசாரணைகளின் அதிகாரிகளின் தேவைக்கேற்பவே எடுக்கப்படும்.</p><h2>தடுப்புக் காவல்&nbsp;</h2><p>
</p><p>
சுரேஷ் சலேவின் இதற்கு முன்னரான 90 நாட்கள் தடுப்புக் காவலில் சுமார் 82 நாட்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என நினைக்கின்றேன்.</p><p>

இதன் காரணமாக, புலனாய்வு அதிகாரிகளால் அவரிடம் தேவையான விசாரணைகளை முன்னெடுக்க முடியாமல் போனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e626c93-7fec-4025-877c-880b1d04e09e/26-6a8e75664be12.webp' /></p><p> </p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>எனவே விசாரணைகள் மேலும் தொடர வேண்டுமா, இல்லையா, எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்.
</p><p>
இது முற்றிலும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விடயம். எனவே புலனாய்வாளர்களின் தகவல்களின் அடிப்படையிலேயே தடுப்புக் காவல் காலம் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T05:11:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல், திலித், உதய உள்ளிட்ட சிலருக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-against-wimal-udaya-dilith-1787716668"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-against-wimal-udaya-dilith-1787716668</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மீது கோட்டை நீதவான் பசான் அமரசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார, ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் குறித்த நபர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை ஆரம்பக்கட்ட அவதானிப்பில் தெரியவந்துள்ளதாக கோட்டை நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/863a2f96-3365-4cd6-baae-d6f0287eae1c/26-6a8e643dca458.webp' />&nbsp; &nbsp;</p><p>
2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்றம், நியாயாதிக்க சபை அல்லது நிறுவனத்தை அவமதித்தல் சட்டத்தின் கீழ், குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.</p><p>இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் நீதவான் முன்னிலையில் உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.</p><p>நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், குறித்த கருத்துக்கள் அடங்கிய திருத்தப்படாத இறுவட்டுக்களும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T03:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் தாயக கடற்பகுதியில் மறைந்து கிடக்கும் பொக்கிஷம் - பணக்கார நாடாக மாறப்போகும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-oil-and-gas-discovered-in-mannar-1787709157"></link>
            <id>https://tamilwin.com/article/massive-oil-and-gas-discovered-in-mannar-1787709157</id>
            <summary type="text">மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார். </p><p>

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் மூலம் இந்த இருப்பு உள்ளதென நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீல் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>எண்ணெய் மற்றும் எரிவாயு</b></h2><p> 

“இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அளவுகளின் அடிப்படையில் அதன் வணிக ரீதியான மதிப்பை கணிப்பிட முடியும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75fa4a8a-0b7c-4b1a-a5c0-eb18dbb8a172/26-6a8e4cf177029.webp' /></p><p>உண்மையில் இந்த மதிப்பீடு மாறக்கூடியது. அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு இதனைக் விடவும் அதிகமாக இருக்கக்கூடும். </p><p>

மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இயற்கை எரிவாயு மற்றும் திரவங்களை கண்டறிய முடிந்தது. </p><p>

இதன்மூலம் பெட்ரோலிய அமைப்பு காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. 

ஒப்பீட்டளவில் பெரிய பரப்பளவை உள்ளடக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், நவீன புவிசார் ஆய்வுத் தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளை சேகரிக்கவும், தரவுகளை விளக்குவதற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதேவேளை, இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் பெட்ரோலியம், இலங்கை முகங்கொடுத்துள்ள எரிபொருள் இறக்குமதி என்ற பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p> 

மேலதிக எரிபொருளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>

சட்டரீதியான சிக்கல்கள் </b></h3><p>இந்த முதலீட்டு அழைப்புக்காக மன்னார் படுகையில் ஒதுக்கப்பட்டுள்ள 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட 4 கடல்சார் கட்டங்கள் இதில் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19087cbc-54b6-4b79-8079-fe6b033b1d97/26-6a8e4d84261f6.webp' /></p><p>இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்ட பகுதிகள் இந்த 34,000 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் அடங்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதற்கமைய, இந்த ஆண்டு தோராயமாக 33,964 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதி 4 பகுதிகளாகப் பிரித்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-26T03:43:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகத்திற்கான QR பயன்பாடு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/qr-fuel-quota-system-to-continue-1787713811"></link>
            <id>https://tamilwin.com/article/qr-fuel-quota-system-to-continue-1787713811</id>
            <summary type="text">மத்திய கிழக்கு மோதல் இன்னமும் முடிவுக்கு வராததால் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் என அமைச்சரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு மோதல் இன்னமும் முடிவுக்கு வராததால் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

“மேற்கு ஆசியாவில் தொடரும் நெருக்கடிகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிச்சயமற்ற தன்மை என்பன உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் விநியோகத்தில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.</p><p> </p><h2><b>

எரிபொருள் விலைகள்</b></h2><p>இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கு QR முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d5a41e-1d20-45a6-a273-1a5299afaff2/26-6a8e5f3cbfe1a.webp' /></p><p>QR முறைமை மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் நடைமுறையில் இருந்த போதிலும், எரிபொருள் நுகர்வானது சிறிய அளவிலேயே வீழ்ச்சியடைந்துள்ளது.

 அதற்கமைய, டீசல் பாவனை சுமார் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>பெற்றோல் பாவனை சுமார் 9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தியாவசிய துறைகளுக்கு தொடர்ந்தும் தடங்கலின்றி எரிபொருள் வழங்கப்படும்.</p><p> உலகளாவிய எரிபொருள் நிலைமை சீரடையும் வரை QR முறையானது இன்னும் சில காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p>]]></content>
            <updated>2026-08-26T03:40:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-warning-for-sri-lanka-1787707770"></link>
            <id>https://tamilwin.com/article/flood-warning-for-sri-lanka-1787707770</id>
            <summary type="text">இலங்கையில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூமென வளிமண்டலவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>அந்த காலப்பகுதியில் வழமையான மழைவீழ்ச்சியை விட தீவிரமான மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார். </p><p>“எதிர்வரும் 6 மாத காலநிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2><b> எல் நினோ நிலைமை</b></h2><p>அத்துடன், எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் எல் நினோ நிலைமை கடுமையாக பாதிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/142e27d1-b085-45af-b59a-486717276a12/26-6a8e42ffca537.webp' /></p><p>இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும்.</p><p> நாட்டின் சில பிரதேசங்களுக்கு 75 மில்லிமீட்டர் அளவிலான மழை எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>இது தவிர, ஏனைய மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களிலும் வெப்பமாக காலநிலை தொடரும்"&nbsp; என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><p> </p>]]></content>
            <updated>2026-08-26T03:15:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-question-gotabaya-over-sugeeswara-1787711434"></link>
            <id>https://tamilwin.com/article/police-question-gotabaya-over-sugeeswara-1787711434</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
</p><p>
ரணிலின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டார ஜனாதிபதியின் செலவினங்களின் கீழ் இரண்டு சம்பளங்களை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், கடந்த ஜூன் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.</p><p> 

சுஜீஸ்வர பண்டார மேற்கண்ட பதவிகளை வகித்த காலத்தில் அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன மற்றும் ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.</p><p>
</p><h2><b>
பண மோசடி</b></h2><p>சுஜீஸ்வர பண்டார ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் 1.93 மில்லியன் ரூபாவும், திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் 4.26 மில்லியன் ரூபாவும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab3969e-ef48-4d3e-96c0-ef2b5d93a7ec/26-6a8e57c3b9862.webp' /></p><p>இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பணி ஜனாதிபதி செயலக செயலாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவினால் பிணை நிராகரிக்கப்பட்டது. </p><p>

அத்துடன் அவரை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.&nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T03:04:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027-ஐ நோக்கி தீவிரமடையும் விசாரணை - காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று(25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p> 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2> 

உறவுகளை இழந்தவர்களுக்கு கொடுக்கப்படும் நிதி</h2><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

பல ஆண்டுகளாகத் தங்களது உறவுகளைத்
தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை நாம் முழுமையாக உணர்கின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கிச் செயற்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd5398fa-6d70-4c33-8996-7d34c608ceeb/26-6a8e009b7fdda.webp' /></p><p> </p><p>

அதன் வெளிப்பாடாகவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு
வருகின்றன. </p><p>


ஒரு குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கலாம். எனவே, உண்மையைத் தேடும் விசாரணைக்கு இணையாக, அந்த குடும்பங்களின் பொருளாதார
மற்றும் சமூக வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.


இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.</p><p> அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன.</p><p> 

இவ்வாறான இடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக
ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச்
செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும். 

உண்மை, நீதி, நிவாரணம்,
கண்ணியம், மீள்நிகழாமை ஆகியன ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என்றார்.</p><h2> 


57 மில்லியன் செலவில் மனித புதைகுழி ஆய்வு</h2><p>

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய நீதி
அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, 


எமது அரசாங்கத்திலே முக்கியமான ஒரு கொள்கை இருக்கின்றது, சட்டம் அனைவருக்குமே
சமன். சட்டத்துக்கு மேலாக ஒருவரும் இல்லை. காணாமலாக்கப்பட்ட பிரச்சனைகள் போன்ற
சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் சட்டம் சரியான முறையிலே
நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c3964a2-c24e-4a63-9d18-a423ed76dd80/26-6a8e009c72e1d.webp' /></p><p> </p><p>

அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதே எமது
எதிர்பார்ப்பு, நாட்டு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியதும் இந்த
எதிர்பார்ப்பிலாகும். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளைப்
பலப்படுத்தும் நோக்கில் அலுவலகத்தின் ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி
செய்யப்பட்டுப் புதிதாக 69 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக
2025ஆம் ஆண்டில் சுமார் 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், செம்மணி சமூகப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞான
ரீதியாக முன்னெடுப்பதற்காக 57 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை
உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.</p><p> 

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய
தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
</p><h2>
2027 முழுமையாக நிறைவடையும் விசாரணைகள்</h2><p>

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்துத்
தெரிவிக்கையில், 

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற சுமார் 19,000
முறைப்பாடுகளில் 9,000க்கும் மேற்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவான 2,300 பேரில் 1,940 பேருக்கான
விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657ae54b-9430-421c-95e9-b83fe70d4a4f/26-6a8e009d599e3.webp' /></p><p>

இடைநிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
எஞ்சியுள்ள அனைத்து விசாரணைகளையும் 2027ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு
செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன்,
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள், வடக்கு மாகாணப் பிரதிப்
பிரதம செயலாளர் - நிர்வாகம், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின்
தலைவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும்
பங்கேற்றிருந்தனர்.
</p><p>
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ
முகாம் ஒன்றும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T01:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rainfall-may-increase-in-sri-lanka-1787706480"></link>
            <id>https://tamilwin.com/article/rainfall-may-increase-in-sri-lanka-1787706480</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் இன்று(26.8.2026) 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, மேற்கு, சபரகமுவ மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் இன்று(26.8.2026) 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். </p><p>அனுராதபுரம்

, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>பலத்த காற்று</h2><p> அம்பாறை, 

மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.தீவின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446c3464-bb01-48d2-87a7-fd00314f542d/26-6a8e3c72e50b9.webp' /></p><p>
</p><p>மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T01:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியொன்றில் மர்மான உயிரிழந்த நபர் - 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199</id>
            <summary type="text">அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.</p><p>

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட விகாரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனியாகத் தங்கியிருந்த 67 வயதான ரோகன் அரியதிலகே என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர் பெந்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் சிற்றுண்டி தயாரிப்பாளராக பணிபுரிந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 சடலம் கண்டுபிடிப்பு</b></h2><p>இந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது மிகவும் சிதைந்து, வீங்கி, துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8e5257-b5b8-4ad2-b3dd-528328c76f1d/26-6a8da71160db6.webp' /></p><p>சுமார் 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். </p><p>

கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, உயிரிழந்த நபரின் அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த ஒருவர் சென்று பார்த்தபோது, ​​சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p>]]></content>
            <updated>2026-08-26T01:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-day-of-the-victims-missing-persons-1787704404"></link>
            <id>https://tamilwin.com/article/international-day-of-the-victims-missing-persons-1787704404</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பங்கேற்புடன்&nbsp; நடைபெற்றது.&nbsp;</p><p>குறித்த நிகழ்வானது நேற்றையதினம் (25.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.</p><p>நிகழ்வில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><h2>உரிய ஏற்பாடு</h2><p>இதன் போது உரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மாவட்டத்தில் சுமார் 2,300 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகப்
பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,940 பேருக்கான விசாரணைகள்
நிறைவடைந்துள்ளன. </p><p>ஒவ்வொரு காணாமலாக்கப்பட்டவரின் பின்னாலும் ஒரு மனித உயிரும்,
ஒரு குடும்பத்தின் சமூக, பொருளாதார மற்றும் உணர்வுபூர்வமான வாழ்வும்
உள்ளடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1b26d5-faee-48dc-b915-d24063a62b9b/26-6a8e380cc7af7.webp' /></p><p>வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீண்டகாலமாக சொல்லொணாத்
துயரங்களையும், மனவேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர்.</p><p>எனவே,
அவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து, சட்டத்துறை, நீதித்துறை
மற்றும் நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அவர்களுக்கான
உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T00:53:05+00:00</updated>
        </entry>
    </feed>
