<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-18T13:25:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rambukkana-siddhartha-thero-dies-1787057970"></link>
            <id>https://tamilwin.com/article/rambukkana-siddhartha-thero-dies-1787057970</id>
            <summary type="text">விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார். அவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார். </p><p>அவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே இயற்கை எய்தியுள்ளார்.</p><p>பௌத்த கலாச்சாரம் தொடர்பான பாடல்கள் உட்பட, பல்வேறு தலைப்புகளில் அவர் இயற்றிய பல பிரபலமான பாடல்கள், இந்த நாட்டிலுள்ள இசை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார அமைச்சின் நடவடிக்கை – வவுனியா வைத்தியசாலைக்கு நிபுணர்கள் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-surgeons-appointed-vavuniya-general-hospital-1787055656"></link>
            <id>https://tamilwin.com/article/new-surgeons-appointed-vavuniya-general-hospital-1787055656</id>
            <summary type="text">வட மாகாணத்தின் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலையான வவுனியா
மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவி வந்த தீவிர மயக்கவியல் மற்றும்
சத்திரசிகிச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலையான வவுனியா
மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவி வந்த தீவிர மயக்கவியல் மற்றும்
சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு
காணப்பட்டுள்ளது.
</p><p>
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் விடுத்த வேண்டுகோளையடுத்து,
சுகாதார அமைச்சினால் புதிய நிபுணத்துவ மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>கடந்த மூன்று மாதங்கள்</h2><p>

கடந்த மூன்று மாதங்களாக இந்த வைத்தியசாலையில் ஒரேயொரு மயக்கவியல் நிபுணர்
(Consultant Anaesthetist) மற்றும் ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணர்
(Consultant Surgeon) மட்டுமே பணியாற்றி வந்தனர். </p><p>ஒரே மருத்துவரை நம்பி அவசர
அறுவை கூடங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் இதய கதீட்டராக்கம்
(Primary PCI) உள்ளிட்ட பல துறைகள் இயங்கியதால், வைத்தியசாலை சேவைகள்
கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b2f5ebc-02d2-45ec-adc9-552e00a43044/26-6a84517607304.webp' /></p><p>
</p><p>புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், வேதனை தணிப்பு சிகிச்சைகள் மற்றும் தீவிர
காயங்களுக்கான அவசர அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.</p><p>

காது-மூக்கு-தொண்டை (ENT), வாய் மற்றும் முகச்சீரமைப்பு (OMF), மகப்பேறியல்,
எலும்பியல் மற்றும் சிறுநீரக சிகிச்சைகளுக்கான காத்திருப்புக்கான காலம் பல
மடங்கு அதிகரித்தது.
</p><p>
மேலும் அவசர சிகிச்சைகளுக்காக நோயாளர்களை யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம்
போதனா வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.</p><h2>நிரந்தர தீர்வு</h2><p>
</p><p>
பொதுமக்களும் சுகாதாரத் துறையினரும் இதுகுறித்து பெரும் கவலை வெளியிட்டிருந்த
நிலையில், இவ்விடயம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் கவனத்திற்கு
கொண்டு செல்லப்பட்டது.
</p><p>
உடனடியாகச் செயற்பட்ட அவர், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவை
நேரடியாகத் தொடர்புகொண்டு வவுனியா வைத்தியசாலையின் தற்போதைய அவலநிலை குறித்து
விளக்கி, நிரந்தர தீர்வை வழங்குமாறு வலியுறுத்தினார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிய தீவிர
மயக்கவியல் நிபுணர் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் ஆகியோர் உடனடியாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த நியமனங்கள் மூலம் ஸ்தம்பிதமடைந்திருந்த அறுவை சிகிச்சை சேவைகள்
மீண்டும் சீரடைந்து, வவுனியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் சிரமங்கள்
குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-18T12:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 75 வருடங்களின் பின்னர் ஏற்படவுள்ள ஆபத்தான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dangerous-el-nino-warning-1787029188"></link>
            <id>https://tamilwin.com/article/dangerous-el-nino-warning-1787029188</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் எல் நினோ நிலைமை மிகவும் தீவிரமாக மாறும் அபாயம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் எல் நினோ நிலைமை மிகவும் தீவிரமாக மாறும் அபாயம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவர் இதனை குறிப்பிட்டுள்ளார். </p><p>

கடந்த 75 வருடங்களுக்குள் ஏற்பட்ட எல் நினோ நிலைமைகளை விடவும் மிகவும் தீவிரமான நிலைமை இந்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h2><b>

எல் நினோ</b></h2><p>இந்த எல் நினோ நிலைமையானது படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80cd1add-abd5-4790-8c89-cd495dc37db1/26-6a844fb014bc9.webp' /></p><p>இந்த ஆண்டின் இறுதிக்குள் மிகவும் தீவிரமான எல் நினோவாக மாறுவதற்கான வாய்ப்புகள் 90 வீதத்திற்கும் அதிகமாகவுள்ளதாக உலகளாவிய தரவுகள் காட்டுகின்றன. </p><p>

இது கடந்த 75 வருடங்கள் இல்லாத ஆபத்து தற்போது ஏற்பட்டுள்ளது. </p><p>

1950ஆம் ஆண்டு முதல் இதுவரை ஏற்பட்ட எல் நினோ நிகழ்வுகளுடன் ஒப்பிடும் போது இந்த எல் நினோ நிலைமையானது ஏனைய அனைத்து எல் நினோ நிலைமைகளையும் விட மிகவும் தீவிரமானதாக மாறுவதற்கான சாத்தியக்கூறு தற்போது 70 சதவீதத்திற்கு அருகில் கணிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-18T12:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுங்கேணி மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணி விரைவில்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reconstruction-of-nedunkerni-central-bus-stand-1787055815"></link>
            <id>https://tamilwin.com/article/reconstruction-of-nedunkerni-central-bus-stand-1787055815</id>
            <summary type="text">நெடுங்கேணி மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளைச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாண வீதி பயணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெடுங்கேணி மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளைச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

இது தொடர்பில் வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ. விமலேஸ்வரன் பணிப்புரை விடுத்துள்ளார்.</p><h2>

பேருந்து நிலையம் புனரமைப்பு</h2><p>
வவுனியா வடக்கு, நெடுங்கேணி மத்திய பேருந்து நிலையத்தில் இதுவரை காலமும் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை என பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் நேரில் சென்று பேருந்து நிலையத்தின் நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c492ed95-dc61-4a18-a1a7-772f6716041a/26-6a844f7b1a279.webp' /></p><p>
</p><p>
இதன்போது, பேருந்துகள் கட்டாயமாக பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், எதிர்வரும் 01.09.2026 முதல் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தக் கள விஜயத்தில் வவுனியா வடக்கு உதவித் தவிசாளர் வி. சஞ்சீவன் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-18T12:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவகற்றல் பணியில் ஈடுபட்ட ஷிரான் பாசிக் எவ்வாறு கோடீஸ்வரரானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787054724"></link>
            <id>https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787054724</id>
            <summary type="text">தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த ஷிரான் பாசிக் இளமை காலத்தில் மிக வறுமையில் வாடியவர்.1978 அக்டோபர் 24 ஆம் திகதி தெஹிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த ஷிரான் பாசிக் இளமை காலத்தில் மிக வறுமையில் வாடியவர்.</p><p>1978 அக்டோபர் 24 ஆம் திகதி தெஹிவளையில் பிறந்த இவர் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமையாளராக மாறியுள்ளார். </p><p>ஆரம்பத்தில் தெஹிவளைப் பகுதியில் இருந்த "கசிப்பு ஆனந்தா" என்பவருடன் இணைந்து சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளார். அப்பகுதியின் அரசியல்வாதியாக இருந்த தனசிறி அமரதுங்கவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>தனசிற தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் மேயராகவும் பணியாற்றினார். அவருடனும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
</p><h2>
</h2><p></p><h2>சட்டவிரோத மதுபான விற்பனை</h2><p>பின்னர் இந்தச் சட்டவிரோத மதுபான விற்பனையில் இருந்து போதைப்பொருள் வியாபாரத்திற்கு மாறியுள்ளார். அப்போது "பொட்ட நௌபர்" என்பவரிடமிருந்து மொத்தமாகப் போதைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
</p><p>அத்துடன் தெஹிவளை களுபோவில வைத்தியசாலை பகுதியில் ஏற்பட்ட பிரதேச ரீதியான அதிகாரப் போட்டியின் விளைவாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பித்து அவர் துபாய்க்குச் செல்கிறார். </p><p>சுமார் நான்கு ஆண்டுகள் துபாயில் தங்கியிருந்து பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்து தனது வலையமைப்பைப் பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>
தெஹிவளை - கல்கிஸ்ஸை நகர சபையில் பணியாற்றிய காலத்தில் அடையாளம் கண்டுகொண்ட நண்பர்களான நாஜின் மொஹமட் சித்தீக் ஆகியோரையும் இணைத்துக் கொண்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6121b2-26a8-467f-a40e-58a7e2026bc6/26-6a844a8723b9c.webp' /></p><p>நாஜின் என்பவரே ஷிரான் பாசிக்குக்கு மொஹமட் சித்தீக்கை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த அறிமுகத்தின் ஊடாக சித்தீக் பிரதான விநியோகஸ்தராகச் செயற்பட்டுள்ளார். பாசிக்கே இந்த போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இயக்கியுள்ளார்.
</p><p>போதை பொருளை கடத்துவதற்காக தெற்குக் கடலோர மீன்பிடிச் சமூகத்துடனும் சிலாபம் பிரதேச மீன்பிடிச் சமூகத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தெற்கில் இயங்கிய பிரதான போதைப்பொருள் மாபியாவான 'தெஹிபாலே' என்பவர் இவருக்கு எதிராக செயற்பட்டுள்ளார். </p><p>அவருடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் காரணமாக துபாய் நாட்டிற்குச் சென்று அங்கிருந்து நிரந்தரச் செயல்பாட்டு மையம் ஒன்றை அமைத்து இந்த போதை வலையமைப்பை இயக்கியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><h2>சர்வதேச போதைப்பொருள் கடத்தல்</h2><p>அதன் பின்னர் போதைப்பொருள் வலையமைப்பின் மற்றொரு பிரதான நபராகக் கருதப்படும் மொஹமட் சித்தீக்குடன் இணைந்து ஆப்கானிஸ்தான் விநியோகப் பாதைகள் ஊடாக ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற செயற்கைப் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கொண்டு வர இவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
</p><p>இவரின் உண்மையான பெயர் ஷீரான் பாசிக், இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளார். இதில் ஒரு கடவுச்சீட்டைப் பெற்ற விதம் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியது.
</p><p>தெஹிவளையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் வாழும் 68- 34 வத்த பகுதிகளில் நலன்புரித் திட்டங்களை இவர் முன்னெடுத்துள்ளார்.</p><p> இதற்குப் பயன்படுத்தப்பட்ட பணம் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>இவ்வாறு அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் பணம் செலவிட்டுள்ளார். இது தவிர தமக்கு வரக்கூடிய அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நட்புறவைப் பேணி பணப் பரிமாற்றம் மற்றும் உதவிகளைச் செய்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T12:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-kandaswamy-temple-pudukudiyiruppu-1787053757"></link>
            <id>https://tamilwin.com/article/sri-kandaswamy-temple-pudukudiyiruppu-1787053757</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(18.08.2026) செவ்வாய்க்கிழமை வெகு சிறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(18.08.2026) செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.</p><p>

ஆலயத்தில் இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழாவில் பெருமளவான பக்த அடியவர்கள் கலந்து கொண்டு, எம்பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.
</p><h2>
கொடியேற்றத்துடன் ஆரம்பம்</h2><p>
</p><p>
கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா பதினொரு தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1facdd-fd62-4b68-88aa-142b290cf2f9/26-6a8447f8341bf.webp' /></p><p>
</p><p>

இதன்படி, 23.08.2026 அன்று மாம்பழத் திருவிழாவும், 24.08.2026 அன்று
வேட்டைத்திருவிழாவும், 25.08.2026 அன்று சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.</p><p>

இதனைத் தொடர்ந்து, 26.08.2026 அன்று மகா தேர்த்திருவிழாவும், 27.08.2026 அன்று
தீர்த்தத் திருவிழாவும், 28.08.2026 அன்று பூங்காவனத் திருவிழாவும்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1441e085-a07c-4540-bee2-03965269bfd3/26-6a8447f934d6d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db4e2be7-d5dc-427e-805d-e14543715d45/26-6a8447fa11941.webp' /></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/petition-against-the-22nd-amendment-1787053019"></link>
            <id>https://tamilwin.com/article/petition-against-the-22nd-amendment-1787053019</id>
            <summary type="text">அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (18) முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.</p><h2>சர்வஜன வாக்கெடுப்பு&nbsp;</h2><p>இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfdbac5-d45f-48fe-8ebc-e5d17cbdec8d/26-6a8446d021141.webp' /></p><p>

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கினால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.</p><p>இதேவேளை,&nbsp;22வது திருத்தச் சட்ட மூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரத்தினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:49:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் 36வது ஆண்டு நினைவு தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/36th-anniversary-death-of-reverend-john-hairbutt-1787052272"></link>
            <id>https://tamilwin.com/article/36th-anniversary-death-of-reverend-john-hairbutt-1787052272</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான
மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த நிலையில் கடத்தப்பட்டு காணால்போன
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான
மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த நிலையில் கடத்தப்பட்டு காணால்போன
அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் 36வது ஆண்டு நினைவு தினம் இன்று(18) அனுஸ்டிக்கப்பட்டது.
</p><p>இதன்போது அவருடன் காணாமல் ஆக்கப்பட்ட அவரின் உதவியாளரான பேட்ரம் பிரான்சிஸ்
நினைவுகூரப்பட்டார்.</p><h2>&nbsp;நினைவு தினம்</h2><p>
</p><p>
ஊரணி சந்தியில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள
அருட்தந்தையின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமான நடைபெற்றது.
</p><p>
1923ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவர், தனது 17 வயதில் இலங்கைக்கு வந்து
தான் சாகும் வரையில் கிழக்கு மண்ணில் வாழ்ந்து, திருகோணமலை நகரத்து
மண்ணிற்கும், மட்டக்களப்பு மண்ணிற்கும் கல்வித்துறை மற்றும் விளையாட்டு
துறைகளுக்கு அளப்பரிய சேவையாற்றிய, இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைக்காய்
குரல் கொடுத்தவர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da04083-c5fb-49ac-9559-85b9f3db0c41/26-6a844467e417d.webp' /></p><p>

அமெரிக்காவில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்ற
யேசு சபையில் இணைந்து அருட்தந்தை ஜோன் ஹேர்பட்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தொடர்ந்த அடிகளாரின் சேவை, அந்தக்
கல்லூரியை இலங்கையில் தேசியரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் "வெல்லப்பட முடியாத
அணி" என்னும் நிலலைக்கு உயர்த்தியது.</p><h2>தமிழ் மக்கள்&nbsp;</h2><p>

இதனைவிட இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வந்த போது
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான
மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த, அருட் தந்தை&nbsp; 1990ம் ஆண்டு
ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி ஏறாவூர் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்.</p><p>[RXF54Mஸ</p><p>
1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வாழைச்சேனை பகுதியில்
இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் முற்றுகையிடப்பட்டிருந்த
தமிழ் மக்கள், கிறிஸ்தவ குருவானவர்கள், அருட்சகோதரிகள் போன்றோரை பாதுகாப்பான
முறையில் வெளியேற்றிவிட்டு, தனது வாகன ஓட்டுனரான 'பேட்ரம் பிரான்சிஸ்' என்ற
தமிழ் இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு
நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, ஏறாவூர் பகுதியில் வைத்து
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
</p><p>அவரை நினைவுகூரும் வகையில் இன்று ஊறணியில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து
அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
</p><p>இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,பொது மக்கள் என
பலர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keheliya-corruption-eradication-commission-1787029367"></link>
            <id>https://tamilwin.com/article/keheliya-corruption-eradication-commission-1787029367</id>
            <summary type="text">புதிய இணைப்புஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்குமாறு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக ரம்புக்வெல்ல இன்று காலை இலஞ்ச ஆணையத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களை விட கூடுதலாக 6 ஊழியர்களை பணிக்கமர்த்தி அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் (18) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தற்போது இடம்பெற்று வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p>இதேவேளை, 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியதாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ARfG7K_BvuM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-18T11:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் படுகொலைச் செய்ய 53 மாணவர்கள் - 20 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/53-students-commit-murder-in-mullaitivu-1787051783"></link>
            <id>https://tamilwin.com/article/53-students-commit-murder-in-mullaitivu-1787051783</id>
            <summary type="text">முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த
செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த
செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய
மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த 58 பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலின் போது, பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும்
பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இவர்களின் 20ஆ ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம்
இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக
அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>

20ஆவது வருட நினைவு தினம்</h2><p>

தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சமூக
செயற்பாட்டாளர் சாம்பசிவம் உதயன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்
உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/587d47fe-679a-48ff-b799-5dac13c9a489/26-6a843f8a7d105.webp' /></p><p>வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில்
அனுஷ்டிக்கப்படுவதுடன், தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்
நிகழ்வு இடம்பெறுவது வழக்கமாக உள்ளது.
</p><p>
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், அரசியல்
பிரமுகர்கள், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளின்
உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள்,
செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc20156-dd07-4503-8193-b17375ccb64c/26-6a843f8b9394a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6bbf696-7874-426b-8132-27d63df9909b/26-6a843f8c7484d.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T11:18:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பனைமரக்கூடலில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்பாட்டுக்குள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-palm-grove-in-mannar-under-control-1787049371"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-palm-grove-in-mannar-under-control-1787049371</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமம் வடக்கு பகுதியில் பனைமரக்கூடலில் ஏற்பட்ட
தீவிபத்து, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில்,
கிராம பொதுமக்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமம் வடக்கு பகுதியில் பனைமரக்கூடலில் ஏற்பட்ட
தீவிபத்து, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில்,
கிராம பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அணைக்கப்பட்டு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த தீ விபத்தானது இன்று(18.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>விபத்து தொடர்பான அவசர நடவடிக்கை</h2><p>
</p><p>இந்த விபத்து தொடர்பான அவசர நடவடிக்கைகளில் கிராம பொதுமக்கள் தீயணைப்பு
பணிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f6c97d0-f749-49c6-83ca-bc508bb65fe6/26-6a843bc3ce4a8.webp' /></p><p>கட்டுப்படுத்தல் நடவடிக்கை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்
பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53b5884f-1506-4e23-ab09-0c4b4d16000f/26-6a843bc4b290b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய பயங்கரவாதத் தடுப்பு சட்டம் - வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/replace-prevention-of-terrorism-act-1787043687"></link>
            <id>https://tamilwin.com/article/replace-prevention-of-terrorism-act-1787043687</id>
            <summary type="text">1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய சட்டமான “பயங்கரவாதத்திலிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய சட்டமான “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை” அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.</p><p>

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>

தற்போதுள்ள சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பூர்வாங்க வரைவைத் தயாரிப்பதற்காக ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
</p><h2>
அரசாங்க வர்த்தமானியில் வெளியிடத் திட்டம்</h2><p>
 மேலும், அந்த பூர்வாங்க வரைவின் அடிப்படையில் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு, 2026 ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79bac0ff-ffa3-4452-b411-00760f70def2/26-6a843ca62f7b8.webp' /></p><p>
</p><p>
சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட தொடர்புடைய வரைவு மசோதாவிற்கு தற்போது தலைமை சட்டத்தரணிகளின் ஒப்புதல் கிடைத்துள்ளது.</p><p> 

இந்த வரைவு மசோதா விரைவில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பின்னர் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல வங்கி முகாமையாளர்கள் கைது விவகாரம்! அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-managers-arrest-issue-goverment-statement-1787047618"></link>
            <id>https://tamilwin.com/article/bank-managers-arrest-issue-goverment-statement-1787047618</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக நாட்டிலிருந்து பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக நாட்டிலிருந்து பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

இன்று (18) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சட்டவிரோதமாக அனுப்பியுள்ள பணம்</h2><p>

ஜனவரி மாதம் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் நிதி குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (FCID) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f100f3-7da4-41e4-9145-5ff2c8b5efcf/26-6a843a05224b2.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் 89 கணக்குகள் ஊடாக 10,151 தடவைகளில் சட்டவிரோதமாக பணத்தை அனுப்பியுள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய கடந்த ஜூன் 19 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 4 வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம்! தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-rejects-claims-ltte-training-camp-kilinochchi-1787047982"></link>
            <id>https://tamilwin.com/article/govt-rejects-claims-ltte-training-camp-kilinochchi-1787047982</id>
            <summary type="text">கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ 
நிராகரித்துள்ளார்.</p><p>

தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">அனுமதியற்ற கட்டுமானம்</span></h2><p>

மேலும் தெரிவித்த அவர்,

 கேள்விக்குட்பட்ட அந்த இடம் கிளிநொச்சி மாவட்டம், முக்கன்பம் பகுதியிலுள்ள கண்ணகிபுரத்தில், 1919-ஆம் ஆண்டில் வனக் காப்பகமாக அரசிதழில் வெளியிடப்பட்ட நிலத்தில் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3215f607-2e78-45dc-abc3-da4d8e4da86a/26-6a84342e7545e.webp' /></p><p>
</p><p>
அரசு நிலத்தில் சட்டவிரோதமாக சாகுபடி மற்றும் கட்டுமானம் நடைபெற்றதாகக் கூறப்படுவது தொடர்பான இந்த விவகாரம், பலமுறை நீதிமன்றத் தலையீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அமைச்சரின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தில் காடுகளை அழிப்பது மற்றும் அனுமதியற்ற கட்டுமானம் தொடர்பான சம்பவங்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><h2>ஏழு வழக்குகள்</h2><p>
</p><p>
அந்த இடத்தில் நடந்த நடவடிக்கைகள் தொடர்பாக தியாகராச குலதீபன் என அடையாளம் காணப்பட்ட நபர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலம் சீர்செய்யப்பட்டு, பின்னர் கற்றாழை மற்றும் காய்கறிகள் பயிர்செய்கைக்காக 20 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5a25d0-c392-4c5a-852d-a51f8d8a051f/26-6a84342dba555.webp' /></p><p>
</p><p>
அந்த இடத்தில், கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஆடை உற்பத்தித் தொழில் இயங்கும் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது.</p><p>

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அந்த நபரை நிலத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.</p><h2>தமிழ் அரசியல்வாதிகள்</h2><p>
</p><p>
இருப்பினும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றும், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அந்த இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/612a58b3-bc40-46fc-8845-3638e51eeb58/26-6a84342cefe3a.webp' /></p><p>
</p><p>
இந்த விவகாரம், விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் செயல்படுவது தொடர்பானது அல்ல என்றும், மாறாக அரசுச் சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் மணல் அகழ்வு ஆகியவை தொடர்பானது.
</p><p>
இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நளிந்த ஜெயதிஸ்ஸ, அரச நிலங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாகவும், அவற்றை இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், கூறப்படும் குற்றங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T10:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு: பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-wickremesinghe-united-kingdom-1787046301"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-wickremesinghe-united-kingdom-1787046301</id>
            <summary type="text">ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. </p><p> 
இவ்வாறான நிலையில் பிரித்தானியாவின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த இராஜதந்திரிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளதால் வழக்கில் பாரிய திருப்பங்களும், சர்ச்சைகளும் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2>
</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஓஷல ஹேரத்தின் தகவல் அறியும் கோரிக்கை</span></p><p>இந்த பின்னணியில் சிவில் சமூகச் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் இது குறித்து தகவல்களை கோரியிருந்தார்.
ஆனால் பிரித்தானியாவின் தகவல் ஆணைக்குழு ஆரம்பக்கட்டத்தில் சில எதிர்ப்புகளை தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca3ef8cc-dea3-4d29-a135-c25dd229e14a/26-6a84299fa9394.webp' />&nbsp;&nbsp;</p><p>இருப்பினும் கடந்த 14 ஆம் திகதி இது தொடர்பில் ஓஷல ஹேரத்திற்குப் பதிலளித்திருந்தது. அந்த பதிலளிப்புடன் பிரித்தானியாவுக்கு அரசாங்க அழைப்பின் பேரில் வருகை தரும் இராஜதந்திரிகளின் தகவல்களான ரணில் விக்ரமசிங்க சென்ற காலப்பகுதிக்குரிய 2023 செப்டெம்பர் 22- 23 காலாண்டுத் தகவல்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளன.</p><p>பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இது தொடர்பான முழுமையான விபரங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.</p><p>
ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்த 2023 செப்டெம்பர் 22- 23 திகதி காலப்பகுதியை உள்ளடக்கியதாக ஓஷல ஹேரத்தின் தகவல் அறிக்கையில் பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த இராஜதந்திரிகள் யார் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். </p><p>அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தால் அந்த அழைப்பை ஏற்று வந்தவர்கள் யார் மற்றும் அவர்களுக்காக அரசாங்கம் எவ்வளவு பணம் செலவிட்டது என்பது குறித்தும் கேட்டிருந்தார். 
இந்த தகவல் அறியும் விண்ணப்பத்தில் மற்றொரு முக்கியமான விடயமொன்று வெளிப்படுத்தப்படுகின்றது. </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வகையான விஜயங்கள்</span></p><p>பிரித்தானிய இராஜதந்திர மட்டத்தில் பிரித்தானிய அரசாங்கம் அல்லது அவர்களது கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வகையான விஜயங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ef0a39d-38b7-43ef-be50-de44546ef074/26-6a84339fd542d.webp' /></p><p> </p><p>
State Visit (அரசு விஜயம்): பிரித்தானிய மன்னர் அல்லது அரச குடும்பத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள்.
</p><p>Guest of Government Visit (அரச விருந்தினர் விஜயம்): பிரித்தானிய நாடாளுமன்றம் அல்லது அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள்.
</p><p>Working Visit (பணி விஜயம்): உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதி அல்லது அரசியல்வாதி ஒருவர் அந்நாட்டிலுள்ள இலங்கைக் குடிமக்களையோ மன்றங்களையோ சந்திப்பதற்காக அல்லது தமது வணிகக் விடயங்கள் மற்றும் தூதரகப் பணிகளுக்காகச் செல்லும் தனிப்பட்ட மட்டத்திலான விஜயங்கள்.
</p><p>Private Visit (தனிப்பட்ட விஜயம்): மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக அல்லது ஏதேனும் நிறுவனத்தின் விழாக்களுக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பை பெற்றுப் செல்லும் விஜயங்கள்.</p><p>
</p><p>அதனடிப்படையில் 2023 ஜூலை 9 ஆம் திகதி முதல் 2024 டிசம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரில் State Visit அல்லது Guest of Government Visit அரச அனுசரணையுடன் வருகை தந்த தலைவர்களின் பட்டியலும் அவர்களுக்காகப் பிரித்தானிய அரசு செலவிட்ட தொகையும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த பட்டியலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp;<br><br><b><i>You may like this..</i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8Ah7TWUNZ2o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறப்பு கல்வித் தேவையுள்ள மாணவர்களுக்கு ரூ.5000 உதவி - அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rs-5000-allowance-over-5000-special-needs-students-1787045603"></link>
            <id>https://tamilwin.com/article/rs-5000-allowance-over-5000-special-needs-students-1787045603</id>
            <summary type="text">குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சிறப்பு கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 உதவித்தொகை வழங்குவதற்கான முன்மொழிவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, சிறப்பு கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 5,000 உதவித்தொகை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>

2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கான உதவித்தொகையை முன்மொழிந்தது. </p><h2>குறைந்த வருமானம் கொண்ட மாணவர்கள்</h2><p>அதனைத் தொடர்ந்து, சிறப்பு கல்வித் தேவைகள் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களின் தகுதியை மதிப்பிடுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/209f71bd-02a6-496b-917a-92f3d129eacb/26-6a843004b6c3d.webp' /></p><p>
அதன்படி, 5,530 மாணவர்கள் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய, பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T10:25:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்திலுள்ள மக்களின் தேவைகள்! ஆளுநரின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-needs-of-the-people-of-the-northern-province-1787046963"></link>
            <id>https://tamilwin.com/article/the-needs-of-the-people-of-the-northern-province-1787046963</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு மாகாண
நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் செயற்பட
வேண்டும். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு மாகாண
நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் செயற்பட
வேண்டும். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், தன்முனைப்பு மற்றும் அதிகாரப்
போட்டிகளுக்கு இடமளிக்காமல், அனைவரும் மக்களுக்காக ஒரே அணியாகச் செயற்பட
வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
</p><p>
வடக்கு மாகாண சபையின் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட
நிர்வாகச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்று (18.08.2026)
செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தின் மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றது.</p><h2>&nbsp;நிர்வாகக் கலாசாரம்</h2><p> </p><p>இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட
ஆளுநர் நா.வேதநாயகன் உரையாற்றினார்.
</p><p>
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், மாகாண நிர்வாகத்தின் கட்டமைப்பு அபிவிருத்தி,
தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வரவு–செலவுத் திட்ட முகாமைத்துவம் போன்ற பல
விடயங்கள் முக்கியமானவையாக இருந்தாலும், அவற்றைச் சரியாக முன்னெடுப்பதற்கான
அடிப்படை சட்டத்தின் ஆட்சி எனக் குறிப்பிட்டார்.</p><p> சட்டத்தை மதித்து, உரிய
நடைமுறைகளைப் பின்பற்றி, பொறுப்புடன் தீர்மானங்களை மேற்கொள்ளும் நிர்வாகக்
கலாசாரமே ஒரு வலுவான நிர்வாகத்தின் அடித்தளம் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67db9af4-bc20-48d5-a1e4-33396a669873/26-6a842de724aaf.webp' /></p><p>

நிறைவேற்று அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தீர்மான அதிகாரங்கள் ஒருவரின்
வாழ்க்கையையும், நிறுவனங்களின் செயற்பாடுகளையும், சில சந்தர்ப்பங்களில் ஒரு
குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடியவை என்பதால், அதிகாரம் என்பது
உரிமை மட்டுமல்ல அது பொறுப்பும் ஆகும் என ஆளுநர் வலியுறுத்தினார்.</p><p> நியமனம்,
பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கை உள்ளிட்ட ஒவ்வொரு நிர்வாகத்
தீர்மானமும் சட்டரீதியாகவும் நியாயமாகவும் அமைய வேண்டும் என்றார்.</p><h2>தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள்</h2><p>
</p><p>
அண்மைக்கால சில செயற்பாடுகள் ஊடாக மாகாண நிர்வாக இயந்திரத்தின் சுமுகமான
இயக்கத்தை குழப்புவதற்கான சில முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற உணர்வு தமக்கு
ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், மாகாண நிர்வாகம் ஒரே ஒரு சில்லால்
இயங்குவதில்லை எனத் தெரிவித்தார். </p><p>நிறைவேற்று அதிகாரிகள் ஒரு சில்லாகவும்,
நிர்வாக அதிகாரிகள் மற்றொரு சில்லாகவும், ஒவ்வொரு உத்தியோகத்தரும் ஒவ்வொரு
நிறுவனமும் நிர்வாக இயந்திரத்தின் தனித்தனி சில்லுகளாக இருப்பதாக அவர்
விளக்கினார்.</p><p>

இந்தச் சில்லுகள் அனைத்தும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும்
இயங்கும்போதுதான் மாகாண நிர்வாக இயந்திரம் தடையின்றி இயங்கும் என்றும்,
அவற்றுக்கிடையில் உரசல்கள் ஏற்படும்போது நிர்வாகத்தின் வேகம் குறைவதுடன், சில
சந்தர்ப்பங்களில் முழு நிர்வாக இயந்திரமே பாதிக்கப்படும் என்றும் ஆளுநர்
குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6977a22-1678-4f66-bdf5-cedf11ded2dc/26-6a842de805375.webp' /></p><p> </p><p>எனவே, தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், தன்முனைப்புகள் மற்றும்
அதிகாரப் போட்டிகளுக்கு நிர்வாகக் கட்டமைப்புக்குள் இடமளிக்காமல்,
ஒருவருக்கொருவர் எதிராக அல்ல, மக்களுக்காக ஒன்றாகப் பணியாற்றும் ஒரே அணியாக
அனைத்து உத்தியோகத்தர்களும் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>
ஒரு நிர்வாகத் தீர்மானம் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலோ நீதிமன்றத்திலோ
சவாலுக்குள்ளாகக்கூடிய நிலையில், ஒவ்வொரு அதிகாரியும் ஒரு தீர்மானத்தை
மேற்கொள்ளும் முன் 'இது சட்டரீதியாக நிலைத்திருக்குமா? நாளை நீதிமன்றத்தின்
முன் இதனை விளக்க முடியுமா? இயற்கை நீதிக்கும் நியாயத்துக்கும் இது அமைவாக
உள்ளதா?' என்ற கேள்விகளைத் தம்மிடமே எழுப்பிக் கொள்ள வேண்டும் என ஆளுநர்
தெரிவித்தார்.</p><h2>சட்டபூர்வமான அடிப்படை நிபந்தனை</h2><p>
</p><p>
இதேவேளை, அண்மைக் காலங்களில் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள்
முழுமையாகப் பின்பற்றப்படாத சில நடவடிக்கைகள் காரணமாக அவற்றை இடைநிறுத்த
வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.</p><p>சட்டபூர்வமான
அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் எந்தவொரு நடவடிக்கையையும்
தொடர்வது சரியான நிர்வாகமாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அதேவேளை, சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய இடத்தில் தேவையற்ற அச்சத்தால்
தீர்மானங்களைத் தாமதப்படுத்துவதும், பொறுப்பை அடுத்த நிலை அதிகாரியிடம்
தள்ளிவிடுவதும் நல்ல நிர்வாகத்தின் அடையாளமல்ல எனவும் ஆளுநர்
சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcac86d2-bf85-4186-ab15-1c1161c118a6/26-6a842de8d1944.webp' /></p><p> </p><p>அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரத்தை சட்டத்தின்
வரம்புக்குள் துணிச்சலுடனும் நியாயத்துடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த
வேண்டும் என்றார்.

சட்டரீதியாக வலுவான நிர்வாகத்தின் இறுதிப் பயனாளிகள் அதிகாரிகள் அல்ல,
பொதுமக்களே எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். </p><p>வெளிப்படையானதும் நியாயமானதுமான
நிர்வாகத் தீர்மானங்கள் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன்,
தேவையற்ற வழக்குகள், முறைப்பாடுகள் மற்றும் நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து,
நேரமும் பொது நிதியும் மீண்டும் மக்களின் அபிவிருத்தி மற்றும் நலனுக்காகப்
பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கும் என்றார்.
</p><p>
இந்தநிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், ஆளணியும்
மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் -
நிர்வாகம், மாகாண அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர் மற்றும் மாகாண
நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-18T10:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள மாபெரும் மாநாடு - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-conference-based-on-the-semmani-mass-grave-1787045755"></link>
            <id>https://tamilwin.com/article/major-conference-based-on-the-semmani-mass-grave-1787045755</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டமைப்பும், தமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை வழங்குவதோடு, அவர்களுடன்
தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை முன்னெடுக்க உள்ளதாக நாடாளுமன்ற 
உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(18.08.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோரிக்கை</span></p><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்திடம் கண் முன்னே ஒப்படைக்கப்பட்ட கணவன், குழந்தைகள்,உறவுகள், காணாமல்
போயுள்ள நிலையில், காணாமல் போயிருக்கும் உறவுகளைத் தேடி கொண்டிருக்கின்ற
காணாமல் போன உறவுகளின் தாய்மார்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்
மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார்கள்.</p><p></p><p>
</p><p>
உண்மையில் இந்த உறவுகளின் போராட்டங்கள் அவர்களுடைய தேடுதலுக்கான நடவடிக்கைகள்
தான் இன்றைக்கும் எங்களுடைய தேசத்திலே உலக நாடுகளில் பேசும் பொருளாக இருந்து
கொண்டிருக்கிறது.</p><p>

அது ஒன்று தான் எங்களுடைய தேசத்தின் மீது இன்றைக்கு உலக நாடுகள் தங்களுடைய
பார்வையை திருப்புகின்ற ஒரு செயல்பாடாக இருக்கிறது.

செம்மணி மனித புதைகுழி, எங்களுடைய இனத்தினுடைய படுகொலைகள், உயிரோடு புதைக்கபட்டவர்களைத் தோண்டுகின்ற ஒரு மாபெரும் இனத்தினுடைய இந்தப் படுகொலையை
நினைவூட்டுகின்ற செயல்பாடாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்ற சூழலிலே,
காணாமல் போனவர்களை, தேடுகின்ற உறவுகளுடைய அந்த உடல்களும் அங்கே இருக்கலாம் என்ற ஒரு
சந்தேகத்தோடு இன்றைக்கு எல்லோரும் இருந்து கொண்டிருக்கின்றோம்.
</p><h2>உறவுகளை இழந்த தாய்மார்களின் அழைப்பு</h2><p>அதைவிட பொதுமக்கள், ஏனைய இடங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அங்கே
புதைக்கப்பட்டிருப்பார்களா? தமிழினத்தை அழிக்க, ஒழிக்க நினைக்கிற இந்த
சக்திகள் எந்த அளவுக்கு படுபாதகமான ஒரு செயல்பாட்டை எங்கள் மீது
செய்திருக்கிறது என்பதை இன்றைக்கு வெளிப்படையாக தெரிவிக்கிற ஒரு உடைமை
என்னவென்றால், அது செம்மணி புதைகுழி என்பதை நான் இங்கே குறிப்பிட
விரும்புகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08cb1ac3-7fb1-4f9d-aeb0-41470118c95c/26-6a8429b58c0e1.webp' /></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் காணாமல் போனவர்களின் தாய்மார்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி 
ஏற்பாடு செய்துள்ள அவர்களுடைய மாநாட்டிற்கு ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் பூரண ஆதரவை நல்குகிறது.
</p><p>
பூரண ஆதரவுடன் அவர்களோடு தோளோடு தோள் நிற்கின்ற ஒரு செயல்பாட்டை நாங்கள்
நிச்சயமாக செய்ய இருக்கிறோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சொல்லிக் கொள்ள
விரும்புகிறேன் என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T09:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டியில்லா கடன் திட்டம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interest-free-student-loan-scheme-1787043583"></link>
            <id>https://tamilwin.com/article/interest-free-student-loan-scheme-1787043583</id>
            <summary type="text">வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

 

அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.</p><p>

 

அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி</h2><p>இதற்கான அடிப்படைத் தகுதிகளாக 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cf96e3-7bfc-4d49-92ae-54973ec7658c/26-6a8422e91685c.webp' /></p><p>மேலும் க.பொ.த உயர்தர அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
 

பொதுச் சாதாரண பரீட்சையில் (Common General Test) குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
 

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று (2026.09.27) வயது 25இற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
</p><p>
 

இத்திட்டத்தின் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயம் - கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 நிறுவனங்கள் ஊடாக 129இற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may Like This..<br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0aHcSWUb2-M" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-18T09:16:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித் கொண்டு வந்த திட்டத்தில் நிதி மோசடி - போராட்டத்தில் குதித்த வடக்கு மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/housing-scheme-funding-fraud-allegations-1787042196"></link>
            <id>https://tamilwin.com/article/housing-scheme-funding-fraud-allegations-1787042196</id>
            <summary type="text">வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, இன்று(18.08.2026) அராலி மத்தி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(18.08.2026) அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு
காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது.
</p><h2>
சஜித்தால் கொண்டு வரப்பட்ட திட்டம்</h2><p>
குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று
கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db70d7d-62db-44b6-b388-a58c01115955/26-6a841b1f5d0c4.webp' /></p><p>

போராட்டமானது சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமாகி, சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக
நகர்ந்தது. </p><p>

இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.</p><h2>

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மனு</h2><p>
இதன்போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோஷமிட்டவாறு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித்
திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb0c0e5-031d-4d4d-9c28-8f741156c4ae/26-6a841b204df33.webp' /></p><p> </p><p>

அந்த மனுக்கள் பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
</p><p>
இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா
இங்கேஸ்வரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05f6e678-129f-41b1-b061-a5f319fffba7/26-6a841b2124f7f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc470480-646f-4b0c-b218-4c2df4f7870d/26-6a841b21efe15.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/digital-identity-card-in-the-next-few-months-1787041310"></link>
            <id>https://tamilwin.com/article/digital-identity-card-in-the-next-few-months-1787041310</id>
            <summary type="text">தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக அடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக அடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையின் கீழ், இந்த ஆண்டின் அடுத்த சில மாதங்களில் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>டிஜிட்டல் அடையாள அட்டை</h2><p>
இந்த ஆண்டிற்குள் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa37a049-3e94-4bd3-9ecc-bc05aca1abd8/26-6a841b33f2c76.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>நாட்டில் உள்ள 17 மில்லியன் மக்களையும் , அடுத்த 2 ஆண்டுக்குள் பழைய அடையாள அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் முறைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Gu0zIuxhlA0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-18T08:46:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை - உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-supreme-court-order-imran-khan-transferre-1787041540"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-supreme-court-order-imran-khan-transferre-1787041540</id>
            <summary type="text">பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை காரணமாக, அவரை அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை காரணமாக, அவரை அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p>

பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அடுத்த விசாரணை முடியும் வரை அங்கேயே வைத்திருக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><h2>&nbsp;இம்ரான்கானின்&nbsp;உடல்நிலை</h2><p>

இம்ரான்கானின் முழுமையான மருத்துவப் பதிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வைத்தியசாலைக்கு வெளியே பாதுகாப்பை உறுதிசெய்து சட்டம் ஒழுங்கைப் பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.</p><p>

73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e91621e0-251c-47e1-84af-dfa8041da821/26-6a841a4701927.webp' /></p><p>

அடியாலா சிறை அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சிகிச்சைக்குப் பிறகு இம்ரான்கானின் கண் நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், அவரது பார்வை "ஏறக்குறைய இயல்பாக" இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.</p><p>

இருப்பினும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியானது, அவரது உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியும், அவரது தனிப்பட்ட வைத்தியர்களை அணுக அனுமதி கோரியும், அவரை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.</p><p>

2018 முதல் 2022-ல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் வரை பாகிஸ்தானின் பிரதமராகப் பணியாற்றிய இம்ரான்கான், 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டு, தொடர்ச்சியான சட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-18T08:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் காஞ்சன நிலக்கரி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-kanchana-presence-commission-inquiry-1787040762"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-kanchana-presence-commission-inquiry-1787040762</id>
            <summary type="text">முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
நிலக்கரி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>
</p><p>
அவர் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இலங்கையின் மின்சார உற்பத்திக்கான பிரதான எரிபொருட்களில் ஒன்றாக நிலக்கரி காணப்படுவதுடன், அதன் கொள்வனவு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e95eef-757f-4d6d-88d1-816d6102bea7/26-6a8415edeed9b.webp' /></p><p>

இந்நிலையில், நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இன்றைய தினம் இடம்பெறும் விசாரணைகளில் நிலக்கரி கொள்வனவு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-22nd-amendment-submitted-to-parliament-1787040214"></link>
            <id>https://tamilwin.com/article/the-22nd-amendment-submitted-to-parliament-1787040214</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.</p><p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய சபாநாயகரை நியமிக்குமாறு கோரிக்கை</h2><p>
</p><p>அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இந்த சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளது.
&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/886c7130-cdc4-4bec-90e0-60085f8991bf/26-6a84146958f97.webp' /></p><p>நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தம்&nbsp;சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர்.
</p><p>இதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகளில் உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு சபாநாயகர் செவி சாய்ப்பதில்லை என்றும், தற்போதைய சபாநாயகரை மாற்றி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நாணய மாற்று விகிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-1787040204"></link>
            <id>https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-1787040204</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18.08.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.இதன்படி,&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.48 ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18.08.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி,&nbsp; &nbsp;அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.48 ரூபாவாகவும் கொள்வனவு விலை 327.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.</p><p>அதேபோன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 442.04 ரூபா மற்றும் கொள்வனவு விலை 456. 86 ரூபாவாகும்

யூரோ ஒன்றின் விற்பனை விலை 377.57 ரூபா எனவும் கொள்வனவு விலை 390.95 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>இன்றைய பெறுமதி</h2><p>இதேவேளை,&nbsp; ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (18.08.2026) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:11:09+00:00</updated>
        </entry>
    </feed>
