<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-11T01:24:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மேடையேறும் பிரபலங்கள் யார்..! நடுக்கத்தில் பிக்குமார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-12th-meeting-in-anuradhapura-namal-in-prison-1789070223"></link>
            <id>https://tamilwin.com/article/namal-12th-meeting-in-anuradhapura-namal-in-prison-1789070223</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.&amp;nbsp;இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல் ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் இடம்பெறவிருந்த, பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் அவரை கைது செய்ததாக நாமலின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தினர்.&nbsp;</p><p>அதேநேரம், நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் குறித்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவாறு இடம்பெறும் என அக்கட்சி அறிவித்தது.&nbsp;</p><p>அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமலுக்கு பதிலாக அக்கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில் தென்னிலங்கை அரசியல் களத்தில் அரசின் அதிரடி நடவடிக்கையால் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iAgQBFo2_cc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:43:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-children-killed-in-hand-grenade-attack-1789086688"></link>
            <id>https://tamilwin.com/article/two-children-killed-in-hand-grenade-attack-1789086688</id>
            <summary type="text">&amp;nbsp;தெஹிவளையில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.10 மற்றும் 14 வயதான...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெஹிவளையில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p>10 மற்றும் 14 வயதான இரண்டு சிறுவர்கள் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.</p><p>10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், 14 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/840fcab6-4c2c-4897-a82a-6a595f8c435d/26-6aa3563d6d105.webp' /></p><p>
</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் 52 வயதான தந்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கைக்குண்டு தாக்குதலில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.</p><p>தெஹிவளை கஹவதன சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T00:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து கோட்டாவிடம் இன்று விசாரணை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gota-will-appear-fcid-today-1789086232"></link>
            <id>https://tamilwin.com/article/gota-will-appear-fcid-today-1789086232</id>
            <summary type="text">மிக் விமானக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த விசாரணைகளுக்காக நிதிக் குற்றவியல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிக் விமானக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.</p><p>
இந்த விசாரணைகளுக்காக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு கோட்டாபயவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதன்படி இன்றைய தினம் கோட்டாப ராஜபக்சவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளது.
கடந்த 2006 – 2007ம் ஆண்டு காலப் பகுதியில் நான்கு மிக்27 ரக தாக்குதல் விமானங்கள் கொள்வனவின் போது மோச இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e65a0681-7d2c-4910-bae2-b909f1f62ed1/26-6aa34a19f0c42.webp' /></p><p>
</p><p>இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடி, சட்டவிரோதமான முறையில் தரகு பெற்றுக் கொள்ளப்பட்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
</p><p>இந்த கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற காலத்தில் கோட்டாபய ராஜபக்ச நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T00:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு தனது குடும்ப பராமரிப்புக்கு கூட பணமில்லையாம்?சந்தேகத்தை ஏற்படுத்துகிறது மாமாவின் கருத்து...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lanka-sportreizen-founder-thilak-weerasinghe-1789085458"></link>
            <id>https://tamilwin.com/article/lanka-sportreizen-founder-thilak-weerasinghe-1789085458</id>
            <summary type="text">&amp;nbsp;நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுடன் கொழும்பு நெக்ரிஸ் வீதியில் அமைந்துள்ள எனது இரு மாடி வீட்டில் மேல்மாடியிலே வசித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுடன் கொழும்பு நெக்ரிஸ் வீதியில் அமைந்துள்ள எனது இரு மாடி வீட்டில் மேல்மாடியிலே வசித்து வருவதாக பிரபல தொழிலதிபரும், எல்.எஸ்.ஆர் (LSR) குழுமத்தின் தலைவரும்,லிமினியின் தந்தையுமான திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>நாமலின் குடும்பத்தின் அனைத்து பராமரிப்புச் செலவுகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து அன்றாடச் செலவுகளையும் தனது சொந்தப் பணத்திலிருந்தே செலவிடுவதாகவும் நாமலின் பணம் எதுவும் பெற்றுக் கொள்வதில்லை என்ற தொனியிலே குறிப்பிடுகிறார்.
</p><h2>
</h2><p></p><h2>ராஜபக்ச குடும்பத்துடனான உறவு</h2><p>வலையொளித்தளம் ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வீட்டிற்குள் எந்தவொரு அரசியல் கலந்துரையாடலோ அல்லது பிரசார நடவடிக்கைகளோ நடைபெறுவதில்லை. </p><p>நாமல் ராஜபக்ச வீட்டிற்கு வந்ததும் மிகவும் எளிமையான குடும்ப வாழ்க்கையையே வாழ்கிறார் என்றும் தெரிவிக்கிறார். ராஜபக்ச குடும்பத்துடனான ஏற்படுத்திக் கொண்ட உறவின் காரணமாக தனக்கும் தனது தொழில்களுக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதிலும், </p><p>2015ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்தில் இல்லாத காலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணம் பிள்ளைகளின் விருப்பத்தின் பேரில் நடந்ததொன்று என்பதால், அது குறித்து தான் ஒருபோதும் வருந்தவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71709390-04bf-4a15-ba5c-5ad148ff3581/26-6aa34714dcfc4.webp' /></p><p>ராஜபக்சக்களை மக்கள் திருடர்கள் என்று சொல்கிறார்கள். லிமினியின் தந்தையும் ஒரு திருடன். அப்படியானால் லிமினிக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது என பல கதைகள் கூறப்பட்டாலும் நான் அவ்வாறான எந்த சம்பவத்திற்கு சம்பந்தமில்லை.</p><p>நான் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கியது தான் எனது வியாபாரமாகும். 
திருமணம் என்பதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. அதற்கு முடிவெடுக்க வேண்டும். இரண்டு குடும்பங்களும் இணைந்து எடுக்கும் முடிவு அது. </p><p>அங்கு அரசியல் ரீதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அது ஒரு குடும்ப முடிவு. மேலும் நாமலை எனக்கு இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். அவர் அசைவம் சாப்பிடாத, மது அருந்தாத ஒரு நல்ல பிள்ளை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் நிலக்கரி இறக்குமதியில் 462 கோடி ரூபா பெறுமதியான நிலக்கரி மாயம்! சபையில் தெரிவித்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/120-000-metric-tonnes-coal-rs-4-62-billion-1789078576"></link>
            <id>https://tamilwin.com/article/120-000-metric-tonnes-coal-rs-4-62-billion-1789078576</id>
            <summary type="text">அரசின் பொய் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசின் பொய் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"அரசால் கொண்டுவரப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களில் சுமார் 1,20,000 மெட்ரிக்
தொன் நிலக்கரி காணாமல் போயுள்ளது. இதன் சந்தை மதிப்பு 462 கோடி ரூபாவாகும்.
</p><p>
இரண்டு நிலக்கரி கப்பல்களின் அளவுக்கு இணையான இந்த இழப்புக்கு யார் பொறுப்பு?
அரசு வாங்கிய பின்னரே நிலக்கரியைச் சாப்பிட்டுள்ளதா?</p><p>

பணவீக்கத்துக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்றும், 10
சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும்,
இன்று செவனகல தொழிற்சாலையின் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு, சம்பளம்
குறைக்கப்பட்டு, தொழிற்சாலையே மூடப்பட்டுள்ளது.</p><h2>30 ரூபா கூடுதல் வரி</h2><p>

குறைந்த காலத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என உறுதியளித்துவிட்டு, 6
ஆயிரம் ரூபாவாக இருந்த கட்டணத்தை தற்போது 8 ஆயிரம் ரூபாவாக உயர்த்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f22c7bf-8895-41a7-8785-07dbe8615508/26-6aa32d03ca2ce.webp' /></p><p>
</p><p>எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும் எனக் கூறிவிட்டு லீற்றருக்கு 30 ரூபா
கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள்
மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியும் நீக்கப்படவில்லை.
</p><p>
150 ரூபாவுக்கு நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறிய போதிலும் உரமும்
தண்ணீரும் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை. அரிசி இறக்குமதி செய்யப்பட
மாட்டாது எனக் கூறிவிட்டு தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது.</p><p>

பட்டதாரிகளுக்கு 35 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கூறி அவர்களை
அரசியல் ரீதியாகப் பயன்படுத்திவிட்டு அரசு கைவிட்டுவிட்டது.

நாட்டின் நிதி அமைச்சிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஜனாதிபதி
கூறினாலும், கிராமங்களில் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் நடைபெறவில்லை.</p><p>

ஹேக்கர்கள் மூலம் 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல்போயுள்ளன. துறைமுகத்தில் 323
கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கொள்கலனைக்
கைப்பற்றிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவே விசாரணை நடத்தப்படுகின்றது.
</p><p>
அரசின் பொய்கள், ஊழல்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று கட்சி
பேதமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். நீதிமன்றம், சிறைச்சாலை
அல்லது அடக்குமுறைகளைக் காட்டி இந்த மக்கள் போராட்டத்தை அரசால் தடுத்து
நிறுத்த முடியாது." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் இலங்கை ஜனாதிபதி நேரில் வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-gives-assurance-indian-defence-minister-1789078420"></link>
            <id>https://tamilwin.com/article/anura-gives-assurance-indian-defence-minister-1789078420</id>
            <summary type="text">இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும்
தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும்
தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மேற்படி
இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாகக்
கலந்துரையாடப்பட்டுள்ளன என்றும், இதன்போதே இந்த உறுதிமொழியை இலங்கை ஜனாதிபதி
வழங்கியுள்ளார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>முக்கிய திட்டங்கள்..&nbsp;</h2><p>

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன ஆக்கிரமிப்பு மற்றும்
இலங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் பீஜிங்கின் விரிவடைந்து
வரும் ஆதிக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுள்ளது என்றும் இந்திய ஊடகங்கள்
குறிப்பிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d88942-a972-43d3-945e-48d26a2bb9ac/26-6aa32b95de34a.webp' /></p><p>
</p><p>
38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட
இந்தப் பயணத்தின் போது, இலங்கை விமானப்படைக்கான எல் - 70 ரக பீரங்கிகளை
மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாடுகளின் தேசிய மாணவர் படையணி மற்றும்
தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு இடையே ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது
குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
</p><p>
இந்திய அரசின் மானியத்தின் கீழ் இலங்கையின் வான் பாதுகாப்பு திறன்களை
வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

"பாரம்பரியமாக சுமுகமான உறவுகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையால்
வகைப்படுத்தப்படும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையின் முழு
அளவிலான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆழமான கலந்துரையாடல்களை
நடத்தினர்" என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையில்
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T22:50:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேசுபொருளாகும் 1980களின் ரெட்ரோ புகைப்படங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/80s-trending-chatgpt-edits-users-are-warned-1789066120"></link>
            <id>https://tamilwin.com/article/80s-trending-chatgpt-edits-users-are-warned-1789066120</id>
            <summary type="text">ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை பெறுவது அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நாம் பகிரும் புகைப்படங்கள் தனிப்பட்ட தரவுகளாகக் கருதப்படுவதோடு, அவை எடுக்கப்பட்ட இடம், நேரம் மற்றும் சாதனத்தின் பெயர் போன்ற நுட்பமான எக்சிஃப் (EXIF) தகவல்களையும் கொண்டிருக்கின்றன. </p><p>ChatGPTஇல் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றும்போது, அதன் நகல் OpenAI அமைப்புகளில் சேமிக்கப்பட்டு, பயனரின் கணக்கு வரலாற்றின் பகுதியாக மாறுகிறது.</p><h2>சேகரிக்கப்படும் தகவல்கள்..&nbsp;</h2><p> </p><p>பயனர் அந்த உரையாடலை நீக்கினாலும், சட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தரவுகள் சுமார் 30 நாட்கள் வரை OpenAI சேவையகங்களில் தக்கவைக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a92edf9e-ef75-4c50-a095-08924d0940de/26-6aa304747b32f.webp' /></p><p> </p><p>வணிகக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது, சாதாரணத் தனிநபர் கணக்குகளின் தரவுக் கொள்கைகள் மாறுபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

புகைப்படங்கள் மட்டுமன்றி பயனரின் IP முகவரி, சாதன விவரங்கள், இருப்பிடம் மற்றும் உரையாடல் பழக்கவழக்கங்கள் போன்ற பிற தகவல்களும் சேகரிக்கப்படுவதால், AI மூலம் ஒரு நபரின் முழுமையான சுயவிவரத்தை ஊகிக்க முடியும்.</p><p> </p><p>எனவே, மற்றவர்களின் அனுமதி இன்றி அவர்களின் படங்களையோ அல்லது குழந்தைகளின் புகைப்படங்களையோ பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p> மேலும், தனிப்பட்ட ஆவணங்கள் உள்ள படங்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதுடன், AI மாடல் பயிற்சிக்காக உங்கள் தரவுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அமைப்புகளில் (Settings) 'Data Controls' விருப்பத்தை முடக்குவது பாதுகாப்பானது.</p><p>இந்த ட்ரெண்டுகள் சில நாட்களில் மறைந்துவிட்டாலும், நாம் வழங்கும் தரவுகள் இணைய அமைப்புகளில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T22:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய மெல்கம் ரஞ்சித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cardinal-met-president-on-easter-attack-talk-1789076353"></link>
            <id>https://tamilwin.com/article/cardinal-met-president-on-easter-attack-talk-1789076353</id>
            <summary type="text">கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க
மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான
சந்திப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க
மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான
சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையே சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை
மேலும் வலுப்படுத்துவதற்கும், எந்தவிதமான இனவாத அல்லது மத ரீதியான
வெறுப்புணர்வையும் அனுமதிக்காமல் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்கும் அரசு
முன்னெடுக்கும் திட்டம் குறித்து இந்தச் சந்திப்பின் போது விசேட கவனம்
செலுத்தப்பட்டது.</p><h2>முக்கிய விடயங்கள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம்
குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a381c0f0-d969-4f9c-a16d-c0a4d1f57630/26-6aa3259392f7c.webp' /></p><p>
</p><p>
மக்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல்
பாதிப்புக்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய அழிவுகளை தடுப்பதற்கு
எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
</p><p>
அனைத்து சமூகங்களுக்கிடையேயும் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக அரசு
எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கத்தோலிக்க மதத் தலைவர்கள் பாராட்டியமையுடன்,
இந்த முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.</p><p>

மேலும், கத்தோலிக்கச் சமூகத்தினர் வசித்து வருகின்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு
வசதிகளை அபிவிருத்திச் செய்வது உட்பட அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்
மற்றும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p>

அருட்தந்தை சிறில் காமினி, அருட்தந்தை ஜூலியன் பெற்றிக் மற்றும்
அருட்தந்தைமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட
பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T21:56:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் அறிவில்லாதவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தமிழ் மக்கள் தவறு செய்துவிட்டார்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-parliament-sri-lanka-sritharan-1789075143"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-parliament-sri-lanka-sritharan-1789075143</id>
            <summary type="text">இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் மீதான அதிருப்தி அதிகம் வெளியிடப்பட்டு வருகின்றது.குறிப்பாக, வடக்கு - கிழக்கை சேர்ந்த மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் மீதான அதிருப்தி அதிகம் வெளியிடப்பட்டு வருகின்றது.</p><p>குறிப்பாக, வடக்கு - கிழக்கை சேர்ந்த மக்கள், தமிழ் தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக விமர்சிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்,&nbsp;அரசியல் அறிவில்லாதவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தமிழ் மக்கள் தவறு செய்துவிட்டார்கள் என தெரிவித்தார்.&nbsp;</p><p>லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>இதன்போத அவர் மேலும் குறிப்பிடுகையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EBE0Xi0Z0xY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T21:33:47+00:00</updated>
        </entry>
    </feed>
