<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-23T15:38:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டக்ளஸ் தேவானந்தா விமானத்தை கடத்த போட்ட திட்டம்! வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-devananda-s-welikada-prison-experience-1784817684"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-devananda-s-welikada-prison-experience-1784817684</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விமானத்தில் தன்னை அழைத்து சென்ற போது அந்த விமானத்தை கடத்துவது தனது நோக்கமாக இருந்ததாக&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விமானத்தில் தன்னை அழைத்து சென்ற போது அந்த விமானத்தை கடத்துவது தனது நோக்கமாக இருந்ததாக&nbsp;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, இந்த விடயத்தை அரசியலாக்கி மக்கள் நலன் சார்ந்து செயற்பட எத்தனித்ததாகவும் அவர் கூறினார்.</p><p>மேலும், சகல ஆயுதங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் தாம் பாலஸ்தீனத்திலே பயிற்சி பெற்றதாகவும் விமானத்தை கடத்துவதற்கான திறமை தனக்கு இருந்ததாகவும் டக்ளஸ் சுட்டிக்காட்டினார்.</p><p>தன்னோடு விமானத்தில் இருந்த கைதி இந்த விடயத்தை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>வெலிக்கடை சிறைச்சாலையில் தாம் 1983 ஆம் ஆண்டு சிங்கள காடையர்களாலும், 1998 மற்றும் 1999 ஆம் தமிழ் காடையர்களாலும் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.</p><p>அத்தோடு, இந்தத் தாக்குதல் சம்பவம் அரசியல் உந்துதலோடு இடம்பெற்றதாகவும் சில அமைச்சர்களின் பெயர்களும் இதன்போது குறிப்பிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை அவர் வழங்கிய நேர்காணலில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_u3PpAPiRaY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T15:14:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் இருந்து வந்த பொதி - முகநூல் நண்பரை நம்பி ரூ. 8 இலட்சம் இழந்த தமிழ் பெண்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-woman-loses-trusting-facebook-friend-1784814966"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-woman-loses-trusting-facebook-friend-1784814966</id>
            <summary type="text">மட்டக்களப்பில் முகநூலில் மூன்று நாட்கள் பழகிய நபர் வெளிநாட்டிலிருந்து பொதி அனுப்புவதாகக் கூறியதை நம்பிய பெண்ணொருவர் சுமார் 8 இலட்சம் ரூபாயை இழந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் முகநூலில் மூன்று நாட்கள் பழகிய நபர் வெளிநாட்டிலிருந்து பொதி அனுப்புவதாகக் கூறியதை நம்பிய பெண்ணொருவர் சுமார் 8 இலட்சம் ரூபாயை இழந்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,</p><p>

மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 13ஆம் திகதி முதல் முகநூல் ஊடாக லண்டனில் வசிப்பதாகத் தெரிவித்த டான் என்ற வைத்தியருடன் நண்பராக பழகி வந்துள்ளார்.</p><p></p><h2>3 நாட்களுக்கு பின் வந்த அழைப்பு</h2><p>
</p><p>
அதன் பின்னர், கடந்த 16ஆம் திகதி, குறித்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்புகொண்ட நபர் ஒருவர், தாம் கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் இயங்கும் வெளிநாடுகளில் இருந்து வரும் பொதிகளை விநியோகிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8285ef67-e627-452c-8ccc-cf76d91f9c8b/26-6a621e4642edc.webp' /></p><p>
</p><p>
அவர், லண்டனில் இருந்து வைத்தியர் டான் அனுப்பிய பொதி ஒன்று வந்துள்ளதாகவும், அதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், அந்த பொதியை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க 87 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கொன்றிற்கு செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை நம்பிய பெண், கடந்த 17ஆம் திகதி உடனடியாக 87 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.</p><h2>தொலைபேசி செயலிழப்பு</h2><p> </p><p>பின்னர், மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகக் கூறப்பட்டதையடுத்து, மொத்தமாக 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.

அதன் பின்னரும் மேலும் 1 இலட்சம் ரூபாய் செலுத்துமாறு மோசடி கும்பல் கோரிய நிலையில், சந்தேகமடைந்த பெண், "இனிமேல் பணம் வழங்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b55718e-d0e6-4e4d-9c67-81ef03284ca9/26-6a621e470eb19.webp' /></p><p>

இதையடுத்து, குறித்த நபர்களின் தொலைபேசி எண்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொதிகள் அனுப்புவதாகக் கூறி பணம் பறிக்கும் இணையவழி மோசடிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, தெரியாத நபர்களை நம்பி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும், இதுபோன்ற கோரிக்கைகள் விடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:59:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் வரலாறு காணாத வேகத்தில் பரவும் வைரஸ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-in-congo-death-toll-exceeds-1-000-1784814160"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-in-congo-death-toll-exceeds-1-000-1784814160</id>
            <summary type="text">ஜனநாயக கொங்கோ குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,030ஐ கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயக கொங்கோ குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,030ஐ கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உலகளவில் இதுவரை பதிவான எபோலா பரவல்களிலேயே இதுவே மிகவும் அதிவேகமாகப் பரவும்
தொற்றாக உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
</p><p>
கொங்கோ சுகாதார அமைச்சகம் மற்றும் ஆப்பிரிக்க நோய்க்கட்டுப்பாடு மையத்தின்
தரவுகளின்படி, மே மாதம் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை
2,470-க்கும் மேற்பட்டோருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>தாக்கம் தீவிரம்</h2><p>
</p><p>
2013-2016 காலக்கட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் 11,000-க்கும் மேற்பட்ட
உயிர்களைப் பறித்த மோசமான எபோலா அலையில், 1,000 மரணங்கள் பதிவாக சுமார் 8
மாதங்கள் வரை ஆனது.
</p><p>
ஆனால் தற்போதைய அலை, வெறும் 10 வாரங்களுக்கும் குறைவான காலத்தில் 1,000
மரணங்களைக் கடந்து அதிவேகமாகப் பரவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a14fdd-da33-4799-b91d-80505c84f298/26-6a621bb30231e.webp' /></p><p>
</p><p>
தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் 'பண்டிக்புக்யோ' எனப்படும் அரிதான வகையைச்
சேர்ந்ததாகும்.

இந்த குறிப்பிட்ட வகை வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது
நேரடி மருத்துவ சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்பது நிலைமையை மேலும்
சிக்கலாக்கியுள்ளது.</p><p>

கொங்கோவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு
தொண்டு நிறுவன ஊழியர்களுக்குத் தொற்று உறுதிப்பட்டு, அவர்கள் ஜெர்மனிக்கு
அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். பிரான்ஸிலும் ஒரு
தொற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T13:57:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர் குறித்து அமெரிக்க-ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-and-russian-foreign-ministers-hold-talks-1784813235"></link>
            <id>https://tamilwin.com/article/us-and-russian-foreign-ministers-hold-talks-1784813235</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின்
கூட்டமைப்பான &#039;ஆசியான்&#039; மாநாட்டின் இடையே, உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க
வெளியுறவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின்
கூட்டமைப்பான 'ஆசியான்' மாநாட்டின் இடையே, உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க
வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே
லாவ்ரோவ் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
</p><p>
சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில், போரை முடிவுக்குக்
கொண்டுவருவது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர்.
</p><p>
இச்சந்திப்பின் போது, உக்ரைன் மோதலுக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில்
தீர்வு காண ரஷ்யா தயாராக இருப்பதை அமைச்சர் லாவ்ரோவ் மீண்டும்
உறுதிப்படுத்தினார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
ஆகஸ்ட் 2025-இல் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட்
ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்வைத்த
முன்மொழிவுகளுக்கு ரஷ்யா இன்னமும் கட்டுப்பட்டு இருப்பதாக அவர்
தெளிவுபடுத்தினார்.
</p><p>
அதேவேளையில், உக்ரைனுக்கு மேலைநாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து
ஆயுதங்களை வழங்கி வருவதை ரஷ்யா ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ரஷ்யாவிற்கு
"மூலோபாயத் தோல்வியை" ஏற்படுத்த முனையும் ஐரோப்பிய நாடுகளின் கொள்கைகள்
பிராந்திய அமைதியை சீர்குலைப்பதாகவும் லாவ்ரோவ் சாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/068edb83-d19d-49c8-b235-2d1ac94d9151/26-6a6217e52814a.webp' /></p><p>
</p><p>
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு
அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு நேர்மையாகவும்
சுமுகமாகவும் அமைந்ததாகத் தெரிவித்தார்.
</p><p>
அர்த்தமற்ற இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா ஆக்கபூர்வமான
பங்களிப்பை வழங்க எப்போதும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாகக்
கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>எரிபொருள் கட்டமைப்பு</h2><p>
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளுக்கும் விருப்பம் இருந்தாலும், உக்ரைன்
மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அமைதித் தீர்வை
எட்டுவதே தற்போதைய மிகப்பெரிய சவாலாக உள்ளது என ரூபியோ சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a78367-5ae0-40d5-a096-00c01637e211/26-6a6217e5cccf4.webp' /></p><p>

மற்றொருபுறம், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, முடங்கிக்கிடக்கும்
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் அமெரிக்க
தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னருடன் கலந்தாலோசனை
நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அண்மைக்காலமாக உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் எரிபொருள்
கட்டமைப்புகளைப் பாதித்துள்ள நிலையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் மீண்டும்
நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது சர்வதேச அளவில்
உற்றுநோக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T13:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..! நியாயம் கேட்டு சென்ற பெற்றோர் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-assaulted-by-teacher-suffers-mental-health-1784812633"></link>
            <id>https://tamilwin.com/article/student-assaulted-by-teacher-suffers-mental-health-1784812633</id>
            <summary type="text">ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கொழும்பிலுள்ள தமிழ் மகளிர் பாடசாலையொன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் சில மாணவிகள், அவர்களின் வகுப்பாசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>

மாணவி வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

இதில் ஒரு மாணவி கடுமையான உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
</p><p>
ஆரம்ப சிகிச்சைகளால் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகளில் மாணவிக்கு நோய் பயம் மற்றும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b191e63c-4520-475f-98dc-9d0258f06132/26-6a62160715e28.webp' /></p><p>

பின்னர், மனநல வைத்திய நிபுணரின் பரிசோதனையிலும் அதே நிலைமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் பெற்றோர் அறிவித்ததுடன், மாணவிக்கான வகுப்பு மாற்றத்தையும் கோரியுள்ளனர்.</p><p> 

அதன் அடிப்படையில் மாணவி வேறு வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், மாணவி புதிய வகுப்பில் ஒரு நாள் மட்டுமே கல்வி கற்ற நிலையில், தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் வகுப்பாசிரியர் மற்றொரு ஆசிரியருடன் முரண்பாடு கொண்டதாகவும், அதன் பின்னர் மாணவி அந்த வகுப்பில் தொடர வேண்டாம், என மாற்று ஏற்பாடுகள் செய்யலாம் என அதிபர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
</p><h2>
பொலிஸாரிடம் முறைப்பாடு</h2><p>
இதற்கிடையில், மாணவியின் தாயாரிடம் பாடசாலையின் உப அதிபர், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும், மாணவியை திறமையற்றவர் மற்றும் ஒழுக்கமற்றவர் என்ற தொனியில் விமர்சித்ததாகவும், மாணவியின் தந்தையையும் குறிப்பிட்டு அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

தமக்கும் தமது மகளுக்கும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளதுடன், பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்த மாணவியின் தந்தை, இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/658429ce-ad25-4c0a-aa0b-9688e7ead523/26-6a621607b8922.webp' /></p><p>
</p><p>
மேலும், கல்வி அமைச்சர், சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் முறைப்பாட்டுக் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, பொலிஸார் விசாரணைக்காக அழைத்தபோது, அதிபரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது, பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது, மாணவியின் தாயாருக்கு எந்தவித அழுத்தமும் வழங்கப்படாது என உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.</p><p> இதனைத் தொடர்ந்து, பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><h2>
பெற்றோர் - மாணவிக்கு எதிராக விமர்சனம் பரவல்</h2><p>
இந்த விவகாரம் குறித்த பாடசாலையைத் தாண்டி ஏனைய பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும், பாடசாலைக்குள்ளும் வெளியிலும் மாணவியின் தாயாருக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d84f7afe-55bf-4372-8623-f0c0b75a62f9/26-6a621608680b3.webp' /></p><p> </p><p>மேலும், மாணவியின் தந்தை குறித்து "சண்டைக்காரர்", "பிரச்சினைக்குரியவர்" என்ற வகையிலான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைத்து, பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய செயல் என மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், மாணவி பாடசாலைக்குச் செல்லவே அச்சமடைந்துள்ளதாகவும், இத்தகைய சூழலில் அவர் எவ்வாறு கல்வியைத் தொடர முடியும்? அவரது பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவார்கள்? என்ற கேள்விகளையும் பெற்றோர் எழுப்பியுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய அரசாங்கத்தில் ஈழத் தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-uma-kumaran-in-british-parliament-1784808812"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-uma-kumaran-in-british-parliament-1784808812</id>
            <summary type="text">




பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>




பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த சில வாரங்களில் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஹன்டி பெர்கம் பதவியேற்றார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, அவரது புதிய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>பிரித்தானியாவில் கிடைத்த அங்கீகாரம்</h2><p>
இதன்படி, வெளிநாட்டு அமைச்சகத்தின் இராஜாங்க அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இலங்கை, இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழ் பெண் உறுப்பினர் என்ற பெருமையையும் உமா குமரன் பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1d645d-3e21-4d91-8c6a-c0c3774511aa/26-6a62061821d1d.webp' /></p><p>

இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி வந்ததாகவும் கூறப்படுகின்றது. </p><p>

அத்துடன், கடந்த 14ஆம் திகதி, உள்துறை அமைச்சர் யூஹெட் கூப்பருடன் செம்மணி விவகாரம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் இலங்கை மற்றும் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-of-foreign-ministers-of-sl-philippines-1784811043"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-of-foreign-ministers-of-sl-philippines-1784811043</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, இலங்கை, இந்திய, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, இலங்கை, இந்திய, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளனர்.</p><p>இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஆகியோரைச்&nbsp;சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><p>இந்த சந்திப்புத் தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள இந்திய
வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிராந்திய அளவிலான இந்த முக்கிய
மாநாட்டின்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களைச்
சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>விவகாரங்கள்&nbsp;</h2><p>ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும்
பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில், பிராந்திய பாதுகாப்பு, கூட்டுறவு
மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் தொடர்பில் தீவிரமாக
விவாதிக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5995bb-b369-42fc-8e24-cfe681db5ccd/26-6a6210d2718a6.webp' /></p><p>
</p><p>
இன்றும், நாளையும் நடைபெறவுள்ள 33 ஆவது ஆசிய பிராந்திய கூட்டமைப்பு மாநாடு
மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நட்பு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்தின் 50 ஆவது
ஆண்டு விழா ஆகிய இரண்டிலும் அமைச்சர் விஜித ஹேரத் உரை நிகழ்த்தவுள்ளார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

ஆசியான் அமைப்பின் பொதுச்செயலாளர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய
அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்படப் பல்வேறு நாடுகளின்
வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்து அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில்
ஈடுபடவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85d349b-0a4f-404d-bb98-18adf62941c0/26-6a621268b9bcb.webp' /></p><p>

பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரச் செயலாளர் மா. தெரேசா பி. லசாரோவைச் சந்தித்து
இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளது.</p><p>அத்துடன், இப்பயணத்தின் ஒரு
பகுதியாகப் பிலிப்பைன்ஸின் மண்டனாவோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின்
கௌரவத் தூதரக அலுவலகத்தையும் அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வமாகத் திறந்து
வைக்கவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T13:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் - சஜித் அணியுடன் திடீரன கொழும்பில் திரண்ட அரசியல் முக்கியஸ்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-sajith-team-meets-unexpectedly-1784810467"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-sajith-team-meets-unexpectedly-1784810467</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் விவாதிப்பதற்காக, பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுக் கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் விவாதிப்பதற்காக, பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுக் கூடியுள்ளனர். </p><p>

இந்த சந்திப்பு இன்று(23.07.2026) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p> 


நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் கவலைகள் காரணமாக எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்த முன்மொழிவு தொடர்பாக, ஒரு பொதுவான எதிர்க்கட்சி நிலைப்பாட்டை வகுப்பதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2> 

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு</h2><p>

இதில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bde851d0-a4d9-446e-9fcf-a863cb82f48c/26-6a620be5ad0ef.webp' /></p><p> </p><p> 

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு, சமீப நாட்களாக ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
</p><p>
இதன்போது, நீதித்துறையைப் பாதிக்கும் எந்தவொரு மாற்றமும் பரந்த கலந்தாலோசனைக்குப் பின்னரும் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டும் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வாதிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p> </p><p></p><p></p><p><b>&nbsp;YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yQ2uv7RXhCA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-23T12:45:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி! கூடுதல் தீர்வை வரி விதிப்பின் பின் பதிவான சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-in-sri-lanka-1784809982"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-in-sri-lanka-1784809982</id>
            <summary type="text">வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (23.07.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்ட நாணயக் கடன் கடிதங்களின் சராசரி மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.</p><p></p><h2>நாணயக் கடன் கடிதங்கள் திறப்பில் வீழ்ச்சி</h2><p>
</p><p>
எனினும், கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதன் பின்னர் இந்த நிலைமையில் பெருமளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>அதன்படி, கடந்த ஜூலை 20ஆம் திகதி 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், ஜூலை 21ஆம் திகதி 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மாத்திரமே நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b0ac7c6-5c7c-4f5a-bf14-c621dd14149e/26-6a620c115e61a.webp' /></p><p>
</p><p>
கூடுதல் தீர்வை வரி நடைமுறைக்கு வந்த மே மாதம் 15ஆம் திகதியன்று மாத்திரம் 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KEpX65e7mgQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-23T12:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 600இற்கும் மேற்பட்டோர் சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-by-the-office-of-missing-persons-1784808675"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-by-the-office-of-missing-persons-1784808675</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட
சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600இற்கும் மேற்பட்டவர்கள்
சாட்சியமளித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட
சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600இற்கும் மேற்பட்டவர்கள்
சாட்சியமளித்துள்ளதுடன் வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர்
அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்துள்ளார்.</p><p>காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து காணாமல்போனோர்
தொடர்பான விசாரணைகளை இரண்டாவது நாளாக இன்றும் (23.07.2026) மட்டக்களப்பு மண்முனைப்பற்று
ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் முன்னெடுத்திருந்தன.&nbsp;</p><p>காணாமல்போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால்
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் சாட்சியங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நடைபெற்று
வருகின்ற நிலையில் இன்று மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.</p><p></p><p>
</p><p>
இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின்
உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.</p><h2>சாட்சியம் மற்றும் வாக்குமூலம் பதிவு</h2><p>

இதேபோன்று வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இன்றைய தினம்
சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு
மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட
சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600க்கும் மேற்பட்டவர்கள்
சாட்சியமளித்துள்ளதுடன், வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர்
அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்தார்.</p><p>

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், தங்களுடைய பூர்வாங்க விசாரணைகளினை
மட்டக்களப்பு மாவட்டத்திலே தொடர்ச்சியாக மூன்று தினங்கள் இந்த மாதத்திலே
நடத்தி வருகின்றார்கள். </p><p>அந்த வகையிலே இன்றைக்கு ஆரையம்பதி, செங்கலடி மற்றும்
வாவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் காணாமலாக்கப்பட்டதாக பதிந்து
ஏற்கனவே குடும்பங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றார்கள், விசாரணைக்கு பூர்வாங்க
விசாரணைக்கு வருகை தருமாறு.</p><p></p><p> அந்த வகையிலே வருகை தருமாறு அறிவித்தல்
விடுக்கப்பட்டவர்கள் வருகை தந்து இன்று தங்களுடைய சாட்சிகளுடன்,
விண்ணப்பதாரிகள் தங்களுடைய வாக்குமூலங்களினைப் பதிந்து வருகின்றார்கள்,
அதற்கென்று அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன்பதாக. </p><p>இதற்கமைவாக
அழைக்கப்பட்டவர்களில் முதலாவது நாள் – நேற்று முன்தினம் 233 பேரும், நேற்று
203 பேரும், இன்றைக்கு இதுவரைக்கும் 150 பேர், மூன்று பிரதேச செயலகப்
பிரிவிலுமாக மொத்தம் 600க்கும் மேற்பட்டவர்கள் இந்த முறைப்பாடுகளினைத்
தங்களுடைய சாட்சிகளினை, தங்களுடைய வாக்குமூலங்களினை இங்கே பதிவு
செய்திருக்கின்றார்கள்.</p><h2>பூர்வாங்க விசாரணைகள்</h2><p>
</p><p>
இது வந்து ஒரு நடைமுறை முறையின் ஒரு முதன்மையான அம்சம். இது வந்து
2000ஆண்டுக்கு முன்பதாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பூர்வாங்க விசாரணைகள்.
</p><p>உங்களுக்குத் தெரியும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன்படி ஏற்கனவே ஒரு சிறப்பு
நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அலுவலகப்
பணியகத்தால முன்னெடுக்கப்படுகின்ற ஒரு நிகழ்வுக்கு அமைவாக, நிகழ்ச்சித்
திட்டத்துக்கு அமைவாக இது முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
</p><p>
இதிலே வந்து வருகை தருபவர்கள், அநேகமானவர்கள் ஏற்கனவே தங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட அல்லது காணாமல் போனவர்கள் சம்பந்தமாகக் காணாமல் போனோர் பற்றிய
அலுவலகம் ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே இறப்பினை உறுதி செய்து இறப்பு அத்தாட்சிப்
பத்திரத்தினைப் பெற்றிருக்கின்றார்கள்.</p><p></p><p> </p><p>எனவே, எங்களுக்கு அதிலே இருக்கின்ற
சிக்கல் நிலை என்னவென்று சொல்லிச் சொன்னால், கூடுதலானவர்களுக்கு அந்த இறப்பு
சம்பந்தமான விபரங்களினையும் காணாமல் போனமைக்கான காரணங்களினையும் இறப்புச்
சம்பந்தமான காரணங்களினையும் நாங்கள் துல்லியமாக அறிய வேண்டிய தேவை
இருக்கின்றபடியால், எதிர்பார்த்ததை விடவும் சற்று கால நேரம் கூடுதலாகத்
தேவைப்படுகின்ற ஒரு தேவை இருக்கின்றதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக
இருக்கின்றது என்றார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T12:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி இரண்டாவது நாளாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-school-protest-1784806052"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-school-protest-1784806052</id>
            <summary type="text">அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும்
பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இரண்டாவது
நாளாக போராட்டத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும்
பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இரண்டாவது
நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
முறையான தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என
பெற்றோர்கள் திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளனர்.
</p><p>
மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில்,
இன்றைய தினம் (23) பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது
புறக்கணித்துள்ளனர்.</p><h2>மாணவர்களின் எண்ணிக்கை&nbsp; குறைவு</h2><p>

அதிபர் விவகாரம் தொடர்பில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் சூழலில்,
இன்றைய தினம் (23) பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக்
குறைவாகும். </p><p>அதன்படி, குறித்த பாடசாலைக்கு வெறும் 10 மாணவர்களே வருகை
தந்திருந்தனர்.

தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் பிள்ளைகளை பாடசாலைக்கு
அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d092d8e8-5abf-4769-9060-0cd46cc504b9/26-6a61faa5e3822.webp' /></p><p>

இடம்பெற்றுவரும் இந்த விடயம் தொடர்பாக மன்னார் வலய கல்விப் பணிப்பாளரிடம்
வினவிய போது

குறித்த பாடசாலை அதிபர் விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாகப் போராட்டங்கள்
இடம்பெற்று வருவது எமது கவனத்திற்கு வந்துள்ளது.
</p><p>

இது குறித்துப் பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை
இணைத்து விரைவில் ஒரு கலந்துரையாடலை மேற் கொள்ளவுள்ளோம்.
</p><p>

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான முழுமையான அறிக்கை மாகாண கல்விப் பணிப்பாளர்
மற்றும் மத்திய கல்வி அமைச்சுக்கு விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை
எடுக்கப்படும்&nbsp; என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;இந்த நிலையில் தொடர்ந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர்
புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்
</p>]]></content>
            <updated>2026-07-23T11:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் 43ஆவது கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்த தமிழ் எம்.பிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/43rd-black-july-commemoration-in-parliament-1784805118"></link>
            <id>https://tamilwin.com/article/43rd-black-july-commemoration-in-parliament-1784805118</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு வன்முறையின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று(23.07.2026) நடைபெற்றது.

1983 ஜூலை வன்முறையின் 43ஆவது ஆண்டு நிறைவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு வன்முறையின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று(23.07.2026) நடைபெற்றது.
</p><p>
1983 ஜூலை வன்முறையின் 43ஆவது ஆண்டு நிறைவு இன்று (23) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நினைவுகூரப்பட்டது.
</p><p></p><h2>சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள்</h2><p>
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் நடந்து இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துவிட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f589976a-c106-40d7-9cd2-6f9e3a760955/26-6a61f9145536a.webp' /></p><p>

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன என தமிழ் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.</p><p></p><p></p><h3>தமிழ் மக்கள் விரக்தியில்</h3><p>1983, ஜூலை 23 தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை இழைக்கப்பட்ட அநீதிகள் தமிழ் மக்கள் மீது நம்பிக்கையீனங்களையும் விரக்திகளையும் விதைத்திருக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.</p><p>குறித்த நினைவேந்தல் நிகழ்வு நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற சம நேரத்தில் நாடாளுமன்றத்தில் சிறிநாத் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F900040219335775%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d13ce9-4905-4923-af58-2c1d099a7fe6/26-6a6206d340efd.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-23T11:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-gotabaya-rajapaksa-to-the-high-court-1784792622"></link>
            <id>https://tamilwin.com/article/president-gotabaya-rajapaksa-to-the-high-court-1784792622</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேல்முறையீட்டு நீ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சம்பந்தப்பட்ட மனு இன்று(23.07.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் 
முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா, தனது பதிலுரையை சமர்ப்பித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக மனுவை ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச&nbsp; முன்னிலையாகியுள்ளார். </p><p>


இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று(23.07.2026) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மனு விசாரணை</h2><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தும் விசாரணைகள் சம்பந்தமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4VW5UHVnOlE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இது தொடர்பான விசாரணைகளை இன்றைய தினத்திற்கு(23) மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது</p><p>
இந்த நிலையில், இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்ச அவருடைய ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், நாமல் ராஜபக்சவின்,&nbsp; வருகையை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/558f2c9d-08b8-4291-9ffd-6413b86a649f/26-6a61c903ec998.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T11:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு தாய்லாந்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது பயங்கரவாதத் தாக்குதல்: 5 இராணுவ வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-security-checkpoint-in-southern-thailand-1784804550"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-security-checkpoint-in-southern-thailand-1784804550</id>
            <summary type="text">தெற்கு தாய்லாந்தின் நராத்தி வாட் மாகாணத்தில் உள்ள புகேதா சாமி பாதுகாப்புப் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 5 தாய்லாந்து
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு தாய்லாந்தின் நராத்தி வாட் மாகாணத்தில் உள்ள புகேதா சாமி பாதுகாப்புப் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 5 தாய்லாந்து
இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> 

இந்த சம்பவம் நேற்று(22.07.2026) இடம்பெற்ற நிலையில், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


5 பேர் உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்</h2><p>


கருப்பு நிற உடையில், பிக்கப் டிரக் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த
சுமார் 10 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல், பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்த 45வது ரேஞ்சர் ரெஜிமென்ட் வீரர்கள் மீது பைக் குண்டுகளை
வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3e37cb-5377-4247-ab7c-ff85fc0e4bb9/26-6a61f5217c9b2.webp' /></p><p> </p><p>

இந்த தாக்குதலுக்கு பின்னர், அங்கிருந்த AK-47 ரக துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத
சட்டைகள் மற்றும் மொபைல் போன்களைப் பறித்துக்கொண்டு அந்த கூட்டத்தினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கு, தாய்லாந்து அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது
நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட தீவிரவாத அச்சுறுத்தல் என்றும்,
அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளைச் சீர்குலைக்கும் செயல் என்றும்
குறிப்பிட்டுள்ளது. </p><h2>


நராதிவாட் மாகாணத்தில் இடம்பெற்ற தாக்குதல்</h2><p>

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9027d57d-eac5-4abb-9156-b33ff7367648/26-6a61f5223e9a9.webp' /></p><p>
</p><p>
நராதிவாட் மாகாணத்தில் நிலப்பகுதியில் கார்க் குண்டு வெடிப்பு சம்பவம்
நிகழ்ந்த அடுத்த நாளே இந்தத் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.</p><p>

2004ஆம் ஆண்டு முதல் பிரிவினைவாத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு
தாய்லாந்து எல்லைப் பகுதிகளில், சமீப காலத்தில் நடந்த மிக மோசமான
தாக்குதல்களில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T11:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் ஆட்சியில் ஜனாதிபதி மாளிகைக்குள் நடந்தது என்ன...! அம்பலப்படுத்தும் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/35-crore-rs-spent-on-the-maintenance-1784781382"></link>
            <id>https://tamilwin.com/article/35-crore-rs-spent-on-the-maintenance-1784781382</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். </p><p>

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்த ஜனாதிபதி மாளிகைகள் அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><h2><b>ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு</b></h2><p>ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு, பூங்காப் பராமரிப்பு, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகபூர்வ தங்குமிடக் கட்டடப் பராமரிப்பு என்பவற்றுக்காகவே இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51aad649-c97b-4fe3-8394-466472d0e10c/26-6a61f3be3adcb.webp' /></p><p>ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் 15 மில்லியன் ரூபாவும், கட்டடத் திருத்தச் செலவுகளாக 110 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், 2019 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவாக 15 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 62 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.</p><p> கடந்த 2020 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 12 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 22.7 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது. </p><h3><b>உத்தியோகபூர்வ இல்லங்கள்</b></h3><p>கடந்த 2021 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 10 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 18.8 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05eb846e-f686-4a5d-91b6-a24bb0e198b4/26-6a619cc5b0659.webp' /></p><p>2022 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவாக 12 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 13 மில்லியன் ரூபாவும், செலவிடப்பட்டுள்ளது. </p><p>கடந்த 2023 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 26.04 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 11 மில்லியன் ரூபாவாகவும் இருந்ததாக பிரதமர் கூறினார். </p><p>கடந்த 2024 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 13.09 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 10.05 மில்லியன் ரூபாவாகவும், 2025 ஆம் ஆண்டில் பராமரிப்பு செலவு 7.05 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 3 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளன. </p><p>நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பராமரிப்புச் செலவாக 3 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 0.4 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
இதேவேளை சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மக்களின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oZ0MAUri6Tk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-23T10:55:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[1.15 டிரில்லியன் டொலர் இராணுவ மசோதா: அமெரிக்க பிரதிநிதிகள் ஆதரவுடன் நிறைவேறிய ட்ரம்ப்பின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1-15-trillion-military-bill-1784803489"></link>
            <id>https://tamilwin.com/article/1-15-trillion-military-bill-1784803489</id>
            <summary type="text">அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2027ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு
அதிகாரமளிப்புச் சட்ட மசோதா (NDAA) 216-212 என்ற குறுகிய வாக்கு
வித்தியாசத்தில் நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2027ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு
அதிகாரமளிப்புச் சட்ட மசோதா (NDAA) 216-212 என்ற குறுகிய வாக்கு
வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிய 1.5 டிரில்லியன் டொலர் இராணுவ வரவு செலவுத்
திட்டத்தின் ஒரு பகுதியாக, 1.15 டிரில்லியன் டொலர் மதிப்பிலான இந்த மசோதா
முதன்மையாக ஈரானுக்கு எதிரான போருக்கான நிதியுதவியையும், அமெரிக்க-இஸ்ரேல்
இராணுவத் தொழில்நுட்பக் கூட்டுறவை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்
கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>

போருக்கான அதிகப்படியான செலவு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி
குறைப்பு ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
</p><h2>
சர்ச்சைக்குரிய விதி</h2><p>
மேலும், இஸ்ரேலுடனான இராணுவ விநியோகச் சங்கிலி மற்றும் தொழில்நுட்பங்களை
இணைக்கும் பிரிவு 219 நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என குடியரசுக்
கட்சியின் தோமஸ் மாசி போன்ற சில பிரதிநிதிகளே விமர்சித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71f3083-480e-43db-b21b-1e462d81f6e2/26-6a61f1049c851.webp' /></p><p>


இதேவேளையில், வாக்களிப்பு முறைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் 'SAVE America Act' என்ற சர்ச்சைக்குரிய விதியும் இந்த மசோதாவில்
சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புக் காரணமாக இந்த மசோதா அடுத்து செனட் சபையில் ஒப்புதல் பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oZ0MAUri6Tk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-23T10:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் கடற்பரப்பில் கைதான கடற்றொழிலாளர்கள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishermen-arrested-in-thalaimannar-1784802479"></link>
            <id>https://tamilwin.com/article/fishermen-arrested-in-thalaimannar-1784802479</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில்
தலைமன்னார் கடற்படையினரால் நேற்று(23) மாலை கைது செய்யப்பட்ட 9
இந்திய கடற்றொழிலாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில்
தலைமன்னார் கடற்படையினரால் நேற்று(23) மாலை கைது செய்யப்பட்ட 9
இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 6 ஆம் திகதி (06.08.2026) வரை
விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>குறித்த உத்தரவானது இன்று வியாழக்கிழமை (23) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்க உத்தரவு</h2><p>இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை(22) காலை
மீன் பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற நிலையில்
நேற்று (22) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்த நிலையில்
கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2416f90f-5282-4118-a279-9e5bc4cf3132/26-6a61efbced6bd.webp' /></p><p>கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட
நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த கடற்றொழிலாளர்களை விசாரணைகளின் பின்னர்
இன்று (23) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை
இன்றையதினம் (23) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
</p><p>
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 6ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கின் பணக்கார நாடாக மாற முடியும்: அமெரிக்க வெளியுறவுச் செயலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-can-become-the-richest-country-us-secretary-1784801581"></link>
            <id>https://tamilwin.com/article/iran-can-become-the-richest-country-us-secretary-1784801581</id>
            <summary type="text">ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கிலேயே மிகவும் பணக்கார நாடாக உருவாக முடியும்
என&amp;nbsp;அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.&amp;nbsp;ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கிலேயே மிகவும் பணக்கார நாடாக உருவாக முடியும்
என&nbsp;அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ஆனால் அங்குள்ள ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தீவிரவாத மதகுருமார்கள்
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரான் தீவிரவாத மதகுருமார்களால் நடத்தப்படும்
ஒரு நாடு. நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு எந்தக்
கவலையும் இல்லை; அவர்கள் தங்கள் சொந்த நாட்டையே அழித்துக்
கொண்டிருக்கிறார்கள்.</p><h2>ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் பணம்</h2><p>
</p><p>
நாட்டின் பணத்தை மக்களுக்குப் பயன்படுத்தாமல் ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹூதிகள்
மற்றும் ஷியா ஆயுதக் குழுக்களுக்கு வாரி வழங்குகிறார்கள்.
</p><p>
உலகம் முழுவதிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே இந்தப் பணம்
பயன்படுத்தப்படுகிறது" என்று குற்றம்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b735b380-c67a-47f0-bc44-714ad799d46c/26-6a61f08632cd6.webp' /></p><p>
</p><p>
மேலும் பேசிய அவர், "ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே
அமெரிக்காவின் முதன்மை இலக்காகும்.
</p><p>
அணு ஆயுதம் ஏந்திய ஈரான் இந்த உலகத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறும்
என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபானத்தின் விலை அதிகரிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-the-price-of-liquor-1784801307"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-the-price-of-liquor-1784801307</id>
            <summary type="text">750 மில்லிலீற்றர் அதிவிசேட மதுபானத்தின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.&amp;nbsp;உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த விலை அதிகரிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>750 மில்லிலீற்றர் அதிவிசேட மதுபானத்தின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><h2>விலை அதிகரிப்பு</h2><p>அதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபானத்தின் புதிய விலை 3,700 ரூபாவாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e616077a-56f2-4e14-8ad4-3d7855d2582e/26-6a61eb1b6edcf.webp' /></p><p>மேலும், அதே வகையைச் சேர்ந்த 375 மில்லிலீற்றர் மதுபானப் போத்தலின் விலையும் 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை, 1,860 ரூபாவாகும்.</p><p>எனினும், 180 மில்லிலீற்றர் மதுபானத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_fHKiF1aRV8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-23T10:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/devendramunai-vihara-perahara-procession-safety-1784785661"></link>
            <id>https://tamilwin.com/article/devendramunai-vihara-perahara-procession-safety-1784785661</id>
            <summary type="text">புதிய இணைப்புமாத்தறை, தேவேந்திரமுனை விகாரையில் நடைபெறும் வருடாந்த பெரஹரவிற்காக 650 பொலிஸ் அதிகாரிகளும் 100 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பணி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையில் நடைபெறும் வருடாந்த பெரஹரவிற்காக 650 பொலிஸ் அதிகாரிகளும் 100 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கு கூடுதலாக, பாதுகாப்பு பணிகளுக்காக புலனாய்வு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
வருடாந்த எசல பெரஹராவின் முதல் நாள் இன்று (23) தொடங்கி, ஜூலை 29 அன்று மாபெரும் பெரஹரவுடன் நிறைவடையவுள்ளது.</p><p>

காவடி பெரஹராஜூலை 28 அன்றும், ரந்தோலி பெரஹரா ஜூலை 29 அன்றும் நடைபெறும் என பொலிஸ் தெரிவிக்கின்றது.
</p><p>
குறித்த நாட்களில் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் கேட்டுக்கொள்கின்றது.
</p><p>
 நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையின் 769வது பெரஹர ஊர்வலம் இன்று (23) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகவுள்ளது. </p><p>

இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>தேவேந்திரமுனை துப்பாக்கிச்சூடு</h2><p> </p><p>

குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்றுமுன் தினம் (21) இரவு துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிசென்ற நிலையில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0b4969-12c3-4322-a52f-49e7a068783c/26-6a61af2babcc6.webp' /></p><p>
</p><p>
கடற்தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த துப்பாக்கிச்சூடானது 'தெஹிபாலே மல்லி' எனும் நபரின் தரப்பினரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
</p><p>
தெஹிபாலே மல்லி' மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய திட்டமிட்ட பாதாள உலகக்குழுக்கள் இம்மோதலுக்குப் பின்னணியில் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

தேவேந்திரமுனை விகாரை பெரஹரவில் கலந்துகொள்ளும் காவடி நடனக்குழுக்களை குறைப்பது தொடர்பாக கஞ்சிபானை இம்ரானால் பயன்படுத்தப்படும் 'KPI' என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவியிருந்தது.</p><h2>சந்தேகநபர் வந்த கார் மீட்பு</h2><p>
</p><p>
இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றிற்கு காரில் வந்து நபர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச்சென்றமை அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கமராவிலும் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e01d340-a89d-437d-8de3-00f6b42f4990/26-6a61af2c5947d.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து துப்பாக்கிதாரி தப்பிச்சென்ற கார் திக்வெல்ல பகுதியில் வைத்து நேற்று (22) இரவு கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள தேவேந்திரமுனை விகாரை பெரஹரவிற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இன்று (23) ஆரம்பமாகும் பெரஹர நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 05 திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shantha-bandara-s-son-and-4-others-remanded-1784800684"></link>
            <id>https://tamilwin.com/article/shantha-bandara-s-son-and-4-others-remanded-1784800684</id>
            <summary type="text">சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட 5 பேரையும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட 5 பேரையும் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அதன்படி, கோட்டை நீதிபதி பசன் அமரசேன, சீன நாட்டவர் உட்பட 5 சந்தேக நபர்களை இன்று (23) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
அனுத பண்டார, தொடர்புடைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக 21ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று (22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef666b9b-e1fc-4430-ac87-de549494e842/26-6a61e931644e9.webp' /></p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, விசாரணைக்காக அவரை 24 மணி நேரம் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் தீர்மானங்கள் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resolutions-passed-at-the-pedro-sabha-session-1784801168"></link>
            <id>https://tamilwin.com/article/resolutions-passed-at-the-pedro-sabha-session-1784801168</id>
            <summary type="text">பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
இந்த கூட்டமானது, தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில், பிரதேச சபை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
</p><p> 
இந்த கூட்டமானது, தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில், பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இதன்போது, யுத்தத்தில் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதன் பின்னர், கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4768f1ef-0557-4f48-9cae-5360aaa30a47/26-6a61e7d501d0c.webp' /></p><p>

 நிதி தொடர்பான அனுமதிகளும், நிதிக் குழு கூட்ட அறிக்கைகளும் ஆராயப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இதேவேளை, சாரதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உள்வாரியான சாரதிகளை தற்காலிகமாக பணிக்கு அமர்த்த இரண்டு தொழிலாளர்களை பணிக்கு சேர்க்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
சபை கூட்டங்களுக்கான போதிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-07-23T10:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784800248"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784800248</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (23.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (23.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.1,000 குறைந்து ரூ.377,000 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><h2>ஒரு கிராம் தங்கத்தின் விலை</h2><p>

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53118144-a6be-4f84-b64d-69691411639f/26-6a61e65296686.webp' /></p><p>

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி கூறும் கோடிக்கணக்கான ரூபாய்..! நாமல் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/taxes-paid-by-people-namal-statement-1784800160"></link>
            <id>https://tamilwin.com/article/taxes-paid-by-people-namal-statement-1784800160</id>
            <summary type="text">கோடிக்கணக்கான ரூபாய் இருப்பதாக ஜனாதிபதி கூறிவரும் நிலையில் மக்கள் செலுத்தும் வரிகள் நியாயமானதாக இல்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோடிக்கணக்கான ரூபாய் இருப்பதாக ஜனாதிபதி கூறிவரும் நிலையில் மக்கள் செலுத்தும் வரிகள் நியாயமானதாக இல்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p> 

கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><p>&nbsp;</p><h2>மின்சார கட்டணங்கள் உயர்வு</h2><p>
</p><p>
ஜனாதிபதி 'எங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கிறது என்று பெருமையுடன் கூறுகின்றார். ஆனால், செலுத்தப்பட்ட வரிகள் நாட்டில் நியாயமான முறையில் முதலீடு செய்யப்படவில்லை. இது ஒரு கடினமான காலம். பெரும் பொருளாதார நெருக்கடி நிலவும் காலம். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af454467-33db-47f0-a12a-69bfb5120440/26-6a61e5ee56823.webp' /></p><p> </p><p>அரசாங்கம் தன் விருப்பப்படி வரிகளை உயர்த்துகிறது. 

அரசாங்கத்தில் ஏதேனும் திருட்டு நடந்தால், அந்த திருட்டின் இழப்பை ஈடுகட்ட மக்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. </p><p>

கடந்த காலத்தில், தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. அந்த இழப்பை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு படையினரின் பெயரை பயன்படுத்தி நூதனமாக பண மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-using-names-of-security-forces-1784797277"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-using-names-of-security-forces-1784797277</id>
            <summary type="text">மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் விசேட அதிரடிப்படையினர்
மற்றும் விமான படை உயர் அதிகாரி என போலியாக கையடக்க தொலைபேசி வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் விசேட அதிரடிப்படையினர்
மற்றும் விமான படை உயர் அதிகாரி என போலியாக கையடக்க தொலைபேசி வழியாக
தெரிவித்துஅவர்களிடம் இருந்து நூதனமான முறையில் பண மோசடியில் ஈடுபட்ட
நபரை கைது செய் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இது பற்றி தெரியவருவதாவது,&nbsp;மட்டக்களப்பில் உள்ள ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகம்
உட்பட 4 கடைகளிலும் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள 2 கடைகள் உட்பட 6 கடைகள்
தமது கடைகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் தொலைபேசி இலக்கத்துடன்
விளம்பரப்படுத்தியுள்ளனர்.
</p><p></p><h2>தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு&nbsp;</h2><p>
இந்த நிலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜூஸ் கடை ஒன்றின் தொலைபேசி இலக்கத்துடன்
தொடர்பு கொண்டு தான் விசேட அதிரடிப்படையின் வவுணதீவு முகாம் உயர் அதிகாரி என
போலியாக தெரிவித்து முகாமில் 60 பேருக்கு 5 நாள் பயிற்சி இடம் பெறுகின்றது.</p><p>அவர்களுக்கு குடிப்பதற்கு ஜூஸ் தேவை என ஓடர் செய்து அதனை முகாமிற்கு கொண்டு
வருமாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0668fc0e-39c3-48f3-ae3a-713ce1aa75b8/26-6a61e2d2494f3.webp' /></p><p>இதனை தொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் குறித்த ஜூஸ் கடையுடன் மீண்டும்
தொடர்பு கொண்டு கேக் இருக்கிறதா என வினவியபோது கடை உரிமையாளர் இல்லை
என்றுள்ளார் </p><p>மீண்டும் சிறிது நேரத்தின் பின்னர் தொடர்பு கொண்டு ஒரு
அம்மாவிடம் கேக் ஓடர் செய்துள்ளேன். அவரிடம் றிசீட் இல்லை (பில்) அந்த தொகையை
உங்கள் ஜூஸ் றிசீட்டுடன் சேர்த்து கொண்டு வரவும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
அதற்கு கடை உரிமையாளர் சம்மதம் தெரிவித்து விட்டு அவர் கேட்ட ஓடரை வழங்க
தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் போலி படை அதிகாரி
தொடர்பு கொண்டு அந்த கேக் ஓடர் செய்த அம்மாவிற்கு அதற்கான பணம் 9 ஆயிரத்து
800 ரூபா வழங்க வேண்டும். எனவே அந்த பணத்தை அனுப்பும் வங்கி
கணக்கிற்கு அனுப்பிவிட்டு வரவும் அந்த பணத்தை சேர்த்து தருகிறேன் என்றுள்ளார்.&nbsp;</p><h2>போலி நபர் அனுப்பிய வங்கி கணக்கு</h2><p>இதையடுத்து போலி நபர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு 9 ஆயிரத்து 800 ரூபாவை
அனுப்பிவிட்டு ஓடர் செய்த ஜூஸ் பானத்தை எடுத்து கொண்டு குறித்த நபர் தெரிவித்த
வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்று பார்த்தபோது அங்கு படை முகாம்
இல்லை என அறிந்துகொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b90c73-0ecd-4977-99a1-82a353cff73d/26-6a61e2d30199c.webp' /></p><p>இதன்போது குறித்த நபருடன் தொடர்பு கொண்டபோது தொலைபேசி
துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு நகரில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் 21 ஆயிரம் ரூபாவும் ஒரு கடை
உரிமையாளரிடம் இருந்து தலா 9 ஆயிரத்து 800 ரூபா வீதம் 3 கடைகளில் பணத்தை போலி
விசேட அதிரடிப்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் என தெரிவித்து நூதனமான
முறையில் பண மோசடி செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணத்தை
இழந்த கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:48:19+00:00</updated>
        </entry>
    </feed>
