<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-16T06:33:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்கு பிரதமர் ஹரிணி விடுத்துள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-harini-speech-in-international-day-democracy-1789539586"></link>
            <id>https://tamilwin.com/article/pm-harini-speech-in-international-day-democracy-1789539586</id>
            <summary type="text">95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று
தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும்
புதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று
தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும்
புதிய பாதையில் அடி எடுத்து வைத்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய
தெரிவித்தார்.
</p><p>
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு
செய்யப்பட்ட சிறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
இந்நிகழ்வில், தேர்தல் மின்னணு சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள்
நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையும் முதன்நாள் உறையும்
வெளியீடும் இடம்பெற்றன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் உரையாற்றுகையில்,

"ஜனநாயகத்தின் இதயமாகச் சட்டத்தின் ஆட்சியே திகழ்கின்றது.</p><p> சட்டத்தின் முன்
அனைவரும் சமம் என்பதுடன், எந்தவொரு தரப்பினரும் சட்டத்துக்கு மேலானவர்கள்
அல்ல. கடந்த காலத்தில் சீர்குலைந்திருந்த சட்டத்தின் மீதான மக்களின்
நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பத் தற்போதைய அரசு பல நடைமுறைச் சாத்தியமான
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><h2>சாத்தியமான நடவடிக்கைகள்&nbsp;</h2><p>

அரசியல் தலையீடுகள் இன்றிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப் பொலிஸ், குற்றப்
புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறைக்கு முழுச் சுதந்திரம்
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d1c4f8-6bcf-4c2f-8e84-abe4baa34bfe/26-6aaa366aa0059.webp' /></p><p> </p><p>அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் குற்றவாளிகள் மற்றும்
ஊழல்வாதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும், ஆனால் இதுவரை
வாக்களிக்கும் உரிமையற்றிருந்த வெளிநாடவாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை
வழங்குவதற்கான வழிமுறைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
அரச கொள்முதல் செயல்முறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் முழுமையாக டிஜிட்டல்
மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஊழலுக்கான வழிகள் அடைக்கப்பட்டு, அரச சேவையானது மக்களுக்குக் கௌரவமான முறையில்
வழங்கப்பட்டு வருகின்றது.
</p><p>
அரசின் 'எவரையும் கைவிடாத' கொள்கையின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக
நலன்புரித் துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, குடிமக்களின்
அடிப்படை உரிமைகளும் சம வாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
2024 ஆம் ஆண்டில் மக்கள் எடுத்த தீர்க்கமான முடிவு, இன்று வெளிப்படைத்தன்மை,
சட்டத்தின் ஆட்சி மற்றும் உண்மையான மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக மலர்ந்து
வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இனம், மதம், சாதி வேறுபாடின்றி
அனைவருக்குமான நியாயமான இலங்கையை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதே
அனைவரினதும் இலக்காக இருக்க வேண்டும்." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:27:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் புதிதாக உருவான நவீன அடுக்குமாடி குடியிருப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apartment-housing-complex-officially-handed-over-1789538927"></link>
            <id>https://tamilwin.com/article/apartment-housing-complex-officially-handed-over-1789538927</id>
            <summary type="text">கொழும்பு நகர்ப்புற மக்களுக்கு சிறந்த வீடமைப்பு வசதிகளை வழங்கி வைக்கும்
நோக்கில், கொழும்பு 14, கிராண்ட்பாஸ், ஸ்டேடியம்கம பகுதியில் புதிதாக
நிர்மாணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகர்ப்புற மக்களுக்கு சிறந்த வீடமைப்பு வசதிகளை வழங்கி வைக்கும்
நோக்கில், கொழும்பு 14, கிராண்ட்பாஸ், ஸ்டேடியம்கம பகுதியில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட 'Port View Residencies' அடுக்குமாடி வீடமைப்புத் தொகுதி
நேற்று மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.</p><p>

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் பிமல்
ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகர்ப்புற வளர்ச்சி பிரதி
அமைச்சர் இரங்க குணசேகர உள்ளிட்ட பல முக்கிய அழைப்பாளர்கள் கலந்து
சிறப்பித்தனர்.</p><h2>வீடமைப்புத் தொகுதி</h2><p>
</p><p>
இதன்போது தகுதிபெற்ற பயனாளிகளுக்கு உரிமப்பத்திரங்களும் வீடுகளுக்கான
சாாவிகளும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சின் வளர்ச்சித்
திட்டமிடலுக்கு அமைவாக, நகர்ப்புற வளர்ச்சி அதிகாரசபையின் வழிகாட்டலில்
கொழும்பு நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்திற்கு ஆதரவளிக்கும் திட்டத்தின் மூலம்
இந்த வீடமைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb6297f-a119-4a5a-a2bc-c19c9777a14c/26-6aaa341b0f20c.webp' /></p><p>
</p><p>
9,866 மில்லியன் ரூபா மொத்தச் செலவில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான
நிதிப் பங்களிப்பு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடன் உதவியின்
கீழ் பெறப்பட்டுள்ளது.

15 மாடிகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் திட்டத்தில், தலா 500 சதுர அடி
பரப்பளவைக் கொண்ட 1,000 வீட்டு அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன.</p><h2>கட்டுமானப் பணிகள்</h2><p>

குடியிருப்பாளர்களின் அன்றாட மற்றும் பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்
வகையில் சுகாதார மையம், சமூகக் கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம், பொலிஸ்
சாவடி, கிராம நிலதாரி அலுவலகம், தீயணைப்புப் பிரிவு, சூப்பர் மார்க்கெட்,
சிறுவர் பூங்கா மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு
வசதிகளுடன் இது கட்டப்பட்டுள்ளது.</p><p>
மேலும், சுற்றியுள்ள வீதிப் பின்னல் மற்றும் கால்வாய் அமைப்புகளை அபிவிருத்தி
செய்தல், புதிய சமூகக் கூடத்தை அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதானத்தை
மேம்படுத்துதல் போன்ற விரிவான உள்கட்டமைப்புப் பணிகளும் இத்துடன் இணைந்து
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3daac9ec-7e59-4fa5-b5e4-4718a81430b1/26-6aaa341be1bee.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடந்த
2020 ஆம் ஆண்டு மே மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இத்திட்டம், நாட்டின்
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவில் தடைப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
</p><p>
இங்குள்ள 1,000 வீடுகளில் 250 வீடுகளுக்கு நேற்று குடியிருப்பாளர்கள் குடியேற
சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 750 வீடுகளிலும் அடுத்த 8
மாதங்களுக்குள் கட்டம்படமாக மக்கள் குடியேற்றப்படுவர் என்றும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T06:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்கள், அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnstons-slams-npp-govt-1789538122"></link>
            <id>https://tamilwin.com/article/johnstons-slams-npp-govt-1789538122</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு, நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு, நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>அரசாங்கம் காட்டுச் சட்டத்தை அமல்படுத்த முயற்சித்தால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்துடன் மக்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>அண்மையில் ஜனாதிபதி தலைமையில் பொலனறுவையில் நடைபெற்ற கூட்டம் தொடர்பில் அவர் தனது விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f828dac3-5660-40c2-86f2-ceeed2dd4174/26-6aaa2f4b65575.webp' /></p><p>
</p><p>பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேனவினால் நடத்தப்படும் தன்சல்களுக்கு இருக்கக்கூடிய மக்கள் கூட்டம் கூட அநுரவின் கூட்டத்தில் இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>எனினும் அனுராதபுரத்தில் தங்களது கட்சி ஏற்பாடு செய்த கூட்டத்தில் மாபெரும் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததனர் எனவும் மக்கள் தற்பொழுது தங்கள் பக்கம் திரும்பி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>தற்பொழுது அரசாங்கம் கூறிய பொய்கள் அம்பலமாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் ஒன்றையும் அனுராதபுரத்தில் வேறொன்றையும் ஜனாதிபதி கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கத்தின் காலம் முடிந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார் அரசாங்கம் சிறைச்சாலைகளை காண்பித்து தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியில் அரசாங்கம் எவ்வாறான ஓர் முடிவை எதிர்நோக்கும் என்பதை பாருங்கள் என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T06:05:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா - அலியாமருதமடுக் குளம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் தலைமையில் உயர்மட்டச் சந்திப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-aliyamarudhamadu-kulam-1789538456"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-aliyamarudhamadu-kulam-1789538456</id>
            <summary type="text">வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அலியாமருதமடுக்
குளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் பல்வேறு முறைப்பாடுகளை ஆராய்ந்து,
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அலியாமருதமடுக்
குளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் பல்வேறு முறைப்பாடுகளை ஆராய்ந்து,
அவற்றுக்கு ஒழுங்குமுறையானதும் நிரந்தரமானதுமான தீர்வை எட்டுவதற்கு உரிய
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில்
நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அலியாமருதமடுக் குளம் தொடர்பில் சிலரால் தொடர்ச்சியாக பல்வேறு அரச
திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில்,
பிரச்சினையின் உண்மை நிலையை நேரில் ஆராய்ந்து, அப்பகுதி மக்களுடன்
கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற
மீளாய்வுக் கூட்டத்தின் போது ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். அதற்கமைவாக,
நேற்று செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது, ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா
மாவட்ட செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மேலதிக மாவட்டச்
செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப்
பணிப்பாளர், வவுனியா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி பிரதி
ஆணையாளர், கிராம அலுவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் குளப்பகுதிக்கு
நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினர்.
</p><p>
இதன்போது, தனிநபர் ஒருவரால் ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இடையூறுகள்
தொடர்பில் பொதுமக்களாலும் பொது அமைப்புக்களாலும் பல்வேறு முறைப்பாடுகள்
முன்வைக்கப்பட்டன. அரச திணைக்களங்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகச்
செயற்படாமல் தன்னிச்சையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் ஏனைய
விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T06:01:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaks-left-country-family-statement-1789535027"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaks-left-country-family-statement-1789535027</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும்&amp;nbsp;இன்று அதிகாலை (1...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும்&nbsp;இன்று அதிகாலை (16) நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக வெளியாகும் ஊடகச்செய்திகள் பொய்யானவை என ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.</p><p>எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வெளிநாடு சென்றதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை</h2><p>மேலும் அவருடன் ரோஹித ராஜபக்சவின் அத்தையும் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87b4c53d-34fd-41e6-a992-e3c14ecaef60/26-6aaa28b58fc4a.webp' /></p><p>கடந்த சில தினங்களாக உடல்நல குறைவாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p>இந்நிலையில், அவர் ஒரு தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாகவும்,&nbsp; இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் FCID இன் கடிதத்தை திடீரென வழங்கியதாகவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அதன்படி, அவர் நாட்டை விட்டு வெளியேறவிருந்த நேரத்திலேயே குறித்த அறிவிப்பு கடிதம் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இருப்பினும், அதற்கு முன்பு ஷிரந்தி ராஜபக்ச FCID-யால் அழைக்கப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே சம்பந்தப்பட்ட கடிதம் வழங்கப்பட்டதாகவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>FCID-யின் முன்னைய அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள செய்திகளை குடும்ப உறுப்பினர் மறுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T05:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி FCIDயில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-mp-tissakutty-arachchi-fcd-1789536654"></link>
            <id>https://tamilwin.com/article/former-mp-tissakutty-arachchi-fcd-1789536654</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.இன்று (16) காலை அவர்&amp;nbsp;முன்னிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.</p><p>இன்று (16) காலை அவர்&nbsp;முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பான வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>வெளியிட்ட தகவல்</h2><p>இதன்போது அங்கு வருகை தந்த அவர், பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dc57657-38aa-4889-8934-96d58217292d/26-6aaa2e9e03337.webp' /></p><p>"உள்ளே அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னரே செய்தியாளர்களிடம் பதிலளிக்க முடியும் என்றும், நான் எந்தவிதமான மோசடியிலோ அல்லது ஊழலிலோ ஈடுபடவில்லை," என்று அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T05:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் புதிய சட்டங்கள் தேவை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/social-media-use-have-to-be-controlled-1789537083"></link>
            <id>https://tamilwin.com/article/social-media-use-have-to-be-controlled-1789537083</id>
            <summary type="text">ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் மட்டுமன்றி, தனிநபர் சுதந்திரத்திலும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் காரணமாக முறையான சட்ட ஏற்பாடுகள் அவசியமாகவுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் மட்டுமன்றி, தனிநபர் சுதந்திரத்திலும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் காரணமாக முறையான சட்ட ஏற்பாடுகள் அவசியமாகவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;புதிய சட்டங்கள்&nbsp;</h2><p>இந்தக் கோரிக்கையானது ஒரு தரப்பிடம் இருந்து மட்டுமன்றி, மதத் தலைவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களிடமிருந்தும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728c9bea-eabc-44f4-a4fb-6ffc81108d40/26-6aaa2b3d56004.webp' /></p><p>
 இதற்கமைய, ஒருவரின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கும் இத்தகைய சட்டக் கட்டமைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் சில செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், எனவே அச்சட்டங்களை புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>அத்துடன், இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான வரைவுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளதாக தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
மேலும், எதிர்வரும் சில மாதங்களுக்குள் அப்பணிகளை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T05:38:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல்போன ஞானசாரர் மீண்டும் வந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-missing-gnanasara-has-returned-1789534937"></link>
            <id>https://tamilwin.com/article/the-missing-gnanasara-has-returned-1789534937</id>
            <summary type="text">


நான் சட்டத்திற்கு அஞ்சி எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மேல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நான் சட்டத்திற்கு அஞ்சி எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். </p><p>மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எதனையும் எதிர்கொள்ளத் தயார்&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சி காணாமல் போய்விட்டதாக இணையம் முழுவதும் செய்திகள் பரவுவதை நான் பார்த்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d80963f6-a9b5-43ba-8b80-e42af46ef2d9/26-6aaa2812494f0.webp' /></p><p>
</p><p>
ஆனால், பலவீனமானவர்களே ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள். நாட்டிற்காக உழைத்த நாங்கள் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.</p><p>

நாங்கள் எந்த நடவடிக்கைக்கும் அஞ்சப் போவதுமில்லை. ஓடி ஒளிந்து கொள்ளப் போவதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-16T05:24:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒரே மேடையில் ரணில் மற்றும் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-and-sajith-on-the-same-stage-again-meet-1789533940"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-and-sajith-on-the-same-stage-again-meet-1789533940</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நாளை (17) நடைபெறவுள்ள அரசியல் நிகழ்வொன்றில் ஒரே மேடையில் சந்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நாளை (17) நடைபெறவுள்ள அரசியல் நிகழ்வொன்றில் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி தனியாக பிளவுபட்டதன் பின்னர் , ரணிலும் சஜித்தும் பொதுவெளியில் எந்தவொரு நிகழ்விலும் ஒன்றாகக் கலந்துகொள்ளவில்லை.</p><h2>அதிதிகளாக ஒரே மேடையில்&nbsp;</h2><p>

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள அரசியல் ரீதியான ஒரு நிபுணத்துவ கலந்துரையாடல் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்தும் பிரதம அதிதிகளாக ஒரே மேடையில் கலந்து கொள்ளவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91daa459-7637-490a-af67-ab87a871c125/26-6aaa1fe325b14.webp' /></p><p>

மகாமான்ய டி. எஸ். சேனாநாயக்க அரசியல் பீடத்தின் பழைய மாணவர் சங்கம் (DSSPA Alumni Club) முதன்முறையாக ஏற்பாடு செய்யும் 'ஜே.ஆர். ஆளுகையும் நடுநிலையும்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
</p><p>
கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும் இந்த நிபுணத்துவ கலந்துரையாடல் நாளை பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அரசியல் தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பல முன்னணி சிரேஷ்ட தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தம் இந்த ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கே வழிவகுக்கும் : ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amentment-sri-lanka-1789533055"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amentment-sri-lanka-1789533055</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும் அரசின் தற்போதைய
நடவடிக்கையானது, இந்த ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கே உறுதியாக வழிவகுக்கும்
என்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும் அரசின் தற்போதைய
நடவடிக்கையானது, இந்த ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கே உறுதியாக வழிவகுக்கும்
என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.</p><p>

நீதித்துறையின் சுயாதீனத்தை முற்றிலுமாகச் சுருக்கி, நாட்டில் உள்ள அத்தனை
ஜனநாயக நிறுவனங்களையும் திட்டமிட்டு வலுவிழக்கச் செய்யும் சதி முயற்சியாகவே
இத்தகைய சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய வரலாற்றுத் தேவை</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும்,
பொதுமக்களும் எவ்வித பேதமுமின்றி ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய
வரலாற்றுத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af3b9f7-fe4d-47f9-a7a6-8bfec285121a/26-6aaa1df772ddc.webp' /></p><p>
</p><p>
இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலத்துக்கு எதிராக எதிர்வரும் 24 ஆம் திகதி
கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத்
தரப்பினரும் பெருமளவில் அணிதிரள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழலில், அரசு கொண்டுவரும்
இந்தச் சர்ச்சைக்குரிய அரசியல் சட்டத் திருத்தம் நாட்டின் அரசியல் களத்தில்
புதிய கொந்தளிப்புக்கும், ஆட்சியாளர்களுக்கு எதிரான பலத்த மக்கள்
எழுச்சிக்கும் வித்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T04:41:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bags-found-in-katunayake-airport-1789528325"></link>
            <id>https://tamilwin.com/article/bags-found-in-katunayake-airport-1789528325</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு அருகில் கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில் பை ஒன்று நேற்று பிற்பகலில் விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு அருகில் கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில் பை ஒன்று நேற்று பிற்பகலில் விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>

அந்த பையை சோதனையிட்ட அதிகாரிகள் ஒரு கோடி 68 லட்சத்து 3750 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையொன்றும், மனித தோலை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் கிறீம் வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

 குறித்த பொருட்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

கண்டுபிடிக்கப்பட்ட பைகள்</b></h2><p>குறித்த சிகரெட்டுகள் மற்றும் கிரீம்கள் அனைத்தும் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c510c4a-0832-4acf-8b55-43a625654286/26-6aaa193802989.webp' /></p><p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகுதியில், 111,400 சிகரெட்டுகள் அடங்கிய பெட்டிகளும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் முறையான அனுமதியின்றி நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தோலை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் 125 கிறீம் போத்தல்களும் காணப்பட்டுள்ளன.</p><p> 

இது தொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொண்ட விமான நிலையச் சுங்க அதிகாரிகள், சிகரெட் மற்றும் கிறீம் தொகையை பறிமுதல் செய்து, அவற்றை எதிர்வரும் நாட்களில் அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 
</p>]]></content>
            <updated>2026-09-16T04:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் போலி காணி ஆவணங்களை தயாரித்து கோடிக்கணக்கில் பணமோசடி - சிஐடியிடம் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-for-millions-of-rupees-fake-deeds-1789529583"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-for-millions-of-rupees-fake-deeds-1789529583</id>
            <summary type="text">கொழும்பு 07, பார்ன்ஸ் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்கு போலி உறுதியைத் தயாரித்து நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் குற்றப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 07, பார்ன்ஸ் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்கு போலி உறுதியைத் தயாரித்து நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இன்று புதன்கிழமை (16) களுத்துறை நகரில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப்புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h3>நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு&nbsp;போலி ஆவணங்கள்</h3><p>களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffb4ff25-57cc-4415-8adf-9f7038546db4/26-6aaa191f89491.webp' /></p><p>
சந்தேகநபர் போலி ஆவணங்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளதுடன், சுமார் 01 கோடி ரூபா பெறுமதியான சொத்தினை விற்பனை செய்து பணத்தை மோசடி செய்துள்ளார்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T04:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிஷாத்துக்கும் சஹ்ரானுக்கும் நெருங்கிய தொடர்பு - நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-and-sahran-had-close-relationship-1789526024"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-and-sahran-had-close-relationship-1789526024</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினருக்கு உள்ள தொடர்புகள் குறித்து மேலும் 2 சிறப்புக் சாட்சியங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினருக்கு உள்ள தொடர்புகள் குறித்து மேலும் 2 சிறப்புக் சாட்சியங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p>
அவற்றில் ஒரு சாட்சியம், அப்போதைய இராணுவ உளவுத்துறையின் தகவல் வழங்குநர் ஒருவரால் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் பாதுகாப்பின் கீழ் பல சந்தர்ப்பங்களில் சஹ்ரான் ஹாசீம் மன்னார் கடல் வழியாக இந்தியா சென்றிருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.</p><p>
</p><h2><b>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்</b></h2><p>அரச சேவையில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவிற்கு வெளிநாட்டு பயணத் தடையையும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கோரியிருந்தார். அந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b7c756-4431-4a77-8d92-18c5967fbe32/26-6aaa16758523f.webp' /></p><p>
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்த வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
சந்தேகநபரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, விசாரணைகளின் முன்னேற்றம் எனக் கூறி சமர்ப்பிக்கப்படும் பி அறிக்கைகள் பொய்யான கூற்றுகள் என தெரிவித்தார்.
</p><p>
இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-09-16T04:09:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் நாமல்! பொலிஸார் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245"></link>
            <id>https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.</p><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p>நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவினால் கொழும்பு காவல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்ட உத்தரவின்படி முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.</p><h2>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்&nbsp;</h2><p>
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/054778a2-ae82-4d7a-afef-871a00c2411c/26-6aaa09826bcb0.webp' /></p><p>இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>நீதிமன்றத்திற்கு அறிக்கை </h2><p>

இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.</p><p>

இதற்கமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்! விலை திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-fuel-price-change-announcement-1789525963"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-fuel-price-change-announcement-1789525963</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை என&amp;nbsp;அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை என&nbsp;அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(15) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,&nbsp;</p><h2>எரிபொருள் விலை திருத்தம் </h2><p>இதுவரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d934443-bf28-4771-9435-87e135c57b18/26-6aaa018ca0b03.webp' /></p><p>எனவே எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம்.</p><p>இதற்கு முன்னர் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களே தற்போது நாட்டை வந்தடைகின்றன. எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தற்போதுள்ள விலையில் எரிபொருட்களை விநியோகிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளன.</p><h2>உலக சந்தை நிலவரம்</h2><p> கடந்த 3 மாதங்களாக எரிபொருள் விலையில் அரசாங்கம், நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கியிருக்கின்றது.


இதற்காக 57 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. </p><p>எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T02:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறிய மகிந்தவின் மனைவி ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaks-left-the-country-1789524390"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaks-left-the-country-1789524390</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இன்று அதிகாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p> 

இன்று அதிகாலை அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

கடந்த சில தினங்களாக உடல்நல குறைவாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். </p><p> </p><h2><b>

நிதிக் குற்றங்கள்</b></h2><p>இந்நிலையில் உறவினர் ஒருவருடன் ஷிரந்தி ராஜபக்ச சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddcfc96e-d28d-404a-ada0-c0c9c9056364/26-6aaa034862488.webp' /></p><p>குறித்த இருவரும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் SQ469 என்ற விமானத்தில், அதிகாலை சுமார் 1.10 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டனர்.</p><p>எதிர்வரும்&nbsp;நாட்களில்
 நிதிக்குற்றங்கள் தொடர்பான விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T02:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்ம நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சலே - கண்டுபிடிக்க முடியாமல் திணறும் வைத்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/salley-spent-a-hundred-days-in-the-hospital-1789523907"></link>
            <id>https://tamilwin.com/article/salley-spent-a-hundred-days-in-the-hospital-1789523907</id>
            <summary type="text">நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
</p><p>
அவரது உடல்நிலை தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைக்குமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடந்த 2 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உத்தரவிடப்பட்டிருந்தது.
</p><p>
எனினும், நேற்றும் பணிப்பாளர் நீதிமன்றத்தில் சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை.

மேலும் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளானாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வைத்திய குழு ஒன்றையும் நீதிமன்றம் நியமித்திருந்தது.</p><p>
</p><h2><b>
நோய் கண்டறிதல்&nbsp; அறிக்கை</b></h2><p>எனினும், இந்த வைத்திய குழுவிற்கு அறிக்கையை தயாரிப்பதற்கு தேவையான நோய் கண்டறிதல் உள்ளிட்ட அறிக்கைகளை வைத்தியசாலை பணிப்பாளர் அனுப்பி வைக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் தெரியவந்தது.
</p><p>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைக்குத் தொடர்புடைய வகையில் தடுத்து வைப்பு உத்தரவின் கீழ் இருக்கும் சந்தேகநபரான சுரேஷ் சலே, விசாரணைகளை முழுமையாக முடக்கிவிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஓய்வெடுத்து வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-09-16T02:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானத்துடன் செயற்படவும்..! வெள்ளப்பெருக்கு நிலைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-regarding-flood-situation-1789523233"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-regarding-flood-situation-1789523233</id>
            <summary type="text">நாட்டில் உள்ள பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகமாக இருந்தாலும், வெள்ளப்பெருக்கு நிலையை எட்டும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் உள்ள பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகமாக இருந்தாலும், வெள்ளப்பெருக்கு நிலையை எட்டும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய ஆற்றுப்படுகைகளில் குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><h2>கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய மழைவீழ்ச்சி</h2><p>

கீழ் ஜின் கங்கை பகுதியில், பத்தேகம அருகே பல இடங்களில் சுமார் 125 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேல் களு கங்கை படுகையில் உள்ள இரத்தினபுர பகுதியில் சுமார் 75 மில்லிமீட்டர் மழையும், கீழ் படுகையில் உள்ள கெஸ்பேவா அருகே உள்ள பகுதிகளில் சுமார் 100 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc863889-8fb7-427c-9a8f-e3886428d054/26-6aa9fd0445127.webp' /></p><p>

கொழும்பு அருகே உள்ள பகுதிகளிலும் சுமார் 100 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மகாவலி ஆற்றின் மேல் படுகைப் பகுதிகளைச் சேர்ந்த பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் 50 முதல் 75 மி.மீ வரையிலும், அம்பாறையில் உள்ள கல் ஓயா படுகைக்கு அருகிலுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 100 மி.மீ வரையிலும் மழை பதிவாகியுள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
</p><p>
மட்டிக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 75 மி.மீ மழையும், அனுராதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் கிட்டத்தட்ட 40 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இருப்பினும், தற்போது பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயரவில்லை என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் கூறியுள்ளார்.</p><p>இருப்பினும், குறித்த பகுதிகளில் மேலும் குறிப்பிடத்தக்க மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T02:20:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சான்றிதழ் இணையத்தள சேவை தற்காலிகமாக முடக்கம்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/olice-certificate-website-service-suspended-1789523832"></link>
            <id>https://tamilwin.com/article/olice-certificate-website-service-suspended-1789523832</id>
            <summary type="text">பொலிஸ் சான்றிதழ் (Police Clearance Certificate) வழங்கும் இணையத்தள முறைமை தற்செயலாகப் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் சான்றிதழ் (Police Clearance Certificate) வழங்கும் இணையத்தள முறைமை தற்செயலாகப் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, இணையத்தளம் மூலம் சான்றிதழ்களை பெறுவதில் தாமதம் நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>எனவே பொதுமக்கள் தமக்குரிய சான்றிதழ்களைத் தமது பிரதேச பொலிஸ் நிலையத்தில் (Police Station) நேரில் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கோர விபத்து - இரண்டு பெண்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-women-killed-after-being-struck-by-train-1789520893"></link>
            <id>https://tamilwin.com/article/2-women-killed-after-being-struck-by-train-1789520893</id>
            <summary type="text">களுத்துறை புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலையில் தொடருந்தில் மோதுண்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

அனுராதபுரத்திற்கு செல்லும் புகையிரதத்தில் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலையில் தொடருந்தில் மோதுண்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

அனுராதபுரத்திற்கு செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்காக சென்ற பெண்ணும் அவரது மருமகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதிகாலை 4.30 மணியளவில் தொடருந்துப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதியுள்ளனர்.</p><p>
</p><h2><b>
இரண்டு பெண்கள் பலி</b></h2><p>இவர்கள் தொடருந்து பாதையில் பாதுகாப்பற்ற முறையில் நடந்து சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e689ba6-8f24-412c-9b63-52838e4fe0c9/26-6aa9f02a35be6.webp' /></p><p>அவரது மகள் மற்றும் மற்றொரு பெண் உறவினர் ஆகிய மூவரும் அனுராதபுரத்தில் ஆன்மீக நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக&nbsp; தொடருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். </p><p>

இந்த கோர விபத்தில் பெண்ணும் அவரது மருமகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>



உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களும் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. </p><p>

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T01:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப் பொருள் குறித்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை வேகமாக வழங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/making-fast-action-for-drug-test-1789521641"></link>
            <id>https://tamilwin.com/article/making-fast-action-for-drug-test-1789521641</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் தொடர்பிலான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை 3 மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் தொடர்பிலான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை 3 மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
பத்தரமுல்லையில் உள்ள அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதுவரை போதைப்பொருளின் நிகர எடை 10 கிராமிற்கு மேல் இருந்தால் பிணை பெறுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87488bc8-2343-4652-ba66-4717d13f5562/26-6aa9eeeb3472d.webp' /></p><p>
</p><p>உத்தேச புதிய சட்டத் திருத்தத்தின்படி, கைது செய்யப்படும் போது போதைப்பொருளின் நிகர எடை 100 கிராமிற்கு குறைவாக இருந்தால் மேல் நீதிமன்றத்திலேயே பிணை பெற வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
திணைக்களத்தில் நிலவிய 118 இரசாயனப் பகுப்பாய்வாளர் வெற்றிடங்களில் சுமார் 70 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை தீவிரமாகப் பணியாற்றி அறிக்கைகளை விரைவுபடுத்துவதால், ஆய்வக அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் கணிசமாகக் குறையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
</p><p>இதேவேளை, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் டி.என்.ஏ பரிசோதனைகளின் தரத்தை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய ஆய்வக உபகரணங்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி அஸுசா குபோட்டாவினால் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் காமிணி பெரேராவிடம் கையளிக்கப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T01:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 24இல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் - வருண ராஜபக்ச அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-protest-to-besiege-parliament-september-24-1789519995"></link>
            <id>https://tamilwin.com/article/public-protest-to-besiege-parliament-september-24-1789519995</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம்
திகதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் மாபெரும் மக்கள் போராட்டம்
நடத்தப்படவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம்
திகதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் மாபெரும் மக்கள் போராட்டம்
நடத்தப்படவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதி அமைப்பாளர்
வருண ராஜபக்ச அறிவித்துள்ளார்.
</p><p>
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று(15.09.2026) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>மக்கள் திசைகாட்டியை நம்பியதற்கு</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் ஜனநாயகத்தை ஒழித்து, சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை
அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தத்துக்கு அரசாங்கத்த
உள்ளிருந்தே பல தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e4f982-2820-4ec1-8a06-f406574e4cba/26-6aa9edcb0f387.webp' /></p><p> ஜனாதிபதியை
ஆட்சிக்குக் கொண்டுவரப் பங்களிப்பு வழங்கிய லால் விஜேநாயக்க மற்றும் உபுல்
குமாரப்பெரும ஆகியோரும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.</p><p>பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து இதுவரை தனது நிலைப்பாட்டை
வெளிப்படுத்தாமல் மௌனம் காக்கின்றார்.</p><p> மக்கள் திசைகாட்டியை நம்பியதற்கு ஹரிணி
அமரசூரிய உள்ளிட்ட குழுவினரே காரணம் என்பதால், இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக
அவரால் வாக்களிக்க முடியாது. அவர் தனது தெளிவான நிலைப்பாட்டை நாட்டுக்கு
வெளிப்படுத்த வேண்டும்.</p><h2>மாற்றத்தைக் கோரியவர்களுக்கும் அழைப்பு</h2><p>
</p><p>
இந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்துக்குள் தோற்கடிக்கும் பொறுப்பும் வல்லமையும்
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் திசைகாட்டி குழுவினருக்கே உள்ளது. </p><p>அதனை
நாடாளுமன்றத்துக்கு வெளியே தோற்கடிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சிகள்
ஏற்றுக்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b11203-fd9c-473d-b9f3-ebb5d9af61e9/26-6aa9edcbba7eb.webp' /></p><p>

22ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும்
செப்டெம்பர் 24 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஜனநாயக மக்கள் போராட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளது. </p><p>அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு அருகில் திரண்டு
போராட்டத்தில் ஈடுபடுமாறு அனைத்து மக்களுக்கும், குறிப்பாக காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலம் முறைமை
மாற்றத்தைக் கோரியவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கோடி ரூபா கடத்தலை காட்டிக்கொடுத்த நபரை கொலை செய்ய முயற்சி - சிக்கிய முக்கிய புள்ளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226"></link>
            <id>https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226</id>
            <summary type="text">
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதானி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
செல்லக்கதிர்காமம் பகுதியில் வைத்து வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி 325 கிலோகிராம் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த நபரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்</b></h2><p>இதற்காக அங்கொடை பிரியங்கர மற்றும் ரூபன் ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் 1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9f5234-11e3-44de-85b7-b7265395a1ef/26-6aa950c131178.webp' /></p><p>கொலை ஒப்பந்தத்தின் பிரதான சந்தேகநபரான மதுக்க சாமர என்ற மதுவாவிடம் இருந்து 2 கத்திகள், 8 கிராம் ஹெரோயின் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் போலியான இலக்கத் தகட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பிரதான சந்தேகநபருடன் இங்கிரிய பிரதேசத்தில் வசித்து வந்த நலின் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேக நபர் கைது செய்யப்படும்போது தனது மகனுக்கு எழுதிய உயிரை மாய்ப்புக்கான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்தி தமது உயிரைப் பணயம் வைத்து இந்தக் கொலையை செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><h3><b>

பல கொலை குற்றச்சாட்டுக்கள்</b></h3><p>பிரதான சந்தேகநபரான மதுவாவின் மைத்துனரான சுசாந்த என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த நபருக்கும் மதுவாவுக்கும் எதிராக வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ce1d0-9da5-4f2f-9839-8d9747d7e295/26-6aa950c1e2283.webp' /></p><p>சந்தேகநபர்கள் ஜீப் வாகனத்தில் கிரிந்த பகுதியில் அமைந்துள்ள தகவல் வழங்கியவரின் வீட்டிற்கு சென்று, அவரை கடத்திச் சென்று கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்து வீதியில் வீசிவிட்டு, குறித்த ஜீப் வாகனத்திற்குத் தீயிட்டு அழிக்கவும் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலைத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குற்றச் செயலுக்காக பயன்படுத்தவிருந்த ஜீப் வாகனம் கடுவலை, ஹேவகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை சூழ்ந்துள்ள காற்றழுத்த தாழ்வு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/low-atmospheric-disturbance-continue-srilanka-1789518311"></link>
            <id>https://tamilwin.com/article/low-atmospheric-disturbance-continue-srilanka-1789518311</id>
            <summary type="text">இலங்கையின் சூழவுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால், இன்று சில பகுதிகளில் 75 மிமீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சூழவுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால், இன்று சில பகுதிகளில் 75 மிமீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>தற்போது நிலவும் வானிலையின்படி மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மேகமூட்டமான வானம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</h2><p>
 

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு, நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a348c475-36ae-42cd-8d20-e70d5fe8603e/26-6aa9e6d14ebe0.webp' /></p><p>
 

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலுக்கு எதிராக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T00:46:54+00:00</updated>
        </entry>
    </feed>
