<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-17T02:33:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! மகிந்த தரப்பு வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-singapore-visit-reson-1789609659"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-singapore-visit-reson-1789609659</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச&amp;nbsp;நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச&nbsp;நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்துள்ளது.</p><p>எதிர்வரும் 24 ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகும் செய்தி</span></p><p>ஷிரந்தி ராஜபக்‌ச நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc9e132-5f5c-4988-bd12-28d16a0a22d1/26-6aab4cc92ee89.webp' /></p><p>


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

மேலதிக சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளார்.</p><p> அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒருசில ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான அவசியம் ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு கிடையாது. நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னிலையாகுவார்.</p><h2>அதிகாரம் நிலையற்றது</h2><p>
</p><p>
அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். ஆகவே போலியான கருத்துக்களை சமூகமயப்படுத்தி உண்மையை மறைக்க முடியாது. சகல சவால்களையும் நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p>சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (16) அதிகாலை சுமார் 1:10 மணியளவில் அவர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19b3d41f-c471-4145-8115-83cc2d8c69d4/26-6aab4cc9d9a2d.webp' /></p><p>
</p><p>
அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இதேவேளை, ஷிரந்தி தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாகவும், நேற்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் FCID இன் கடிதத்தை திடீரென வழங்கியதாகவும் குடும்ப உறுப்பினர் விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T02:13:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் முற்றிய வாக்குவாதம்! விடுதியொன்றின் மேல் தளத்திலிருந்து தள்ளப்பட்ட நபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotel-employee-thrown-from-upper-floor-to-death-1789608641"></link>
            <id>https://tamilwin.com/article/hotel-employee-thrown-from-upper-floor-to-death-1789608641</id>
            <summary type="text">கம்பஹா&amp;nbsp; - சீதுவ நகருக்கு அருகிலுள்ள ஒரு விடுதியின் மேல் தளத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா&nbsp; - சீதுவ நகருக்கு அருகிலுள்ள ஒரு விடுதியின் மேல் தளத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விடுதியின் மேல் தளத்தில் தங்கியிருந்த 49 வயதுடைய ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>அவர் இரவு மது அருந்திக்கொண்டிருந்தபோது, ​​மற்றொரு ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து மேல் தளத்திலிருந்து தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என்று இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e50fb6-d291-4a7f-a543-eb898765451f/26-6aab496950366.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் குறித்து சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T01:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-rain-intermittently-after-1-pm-1789605985"></link>
            <id>https://tamilwin.com/article/will-rain-intermittently-after-1-pm-1789605985</id>
            <summary type="text">மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

வடமேற்கு மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல சுற்று மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0be33a-ce79-42a8-b0cd-1ea38cab2bbc/26-6aab3bd0d8500.webp' /></p><p>
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.</p><p>

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T01:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 IPL ஏலம் மீண்டும் இந்தியாவில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-again-1789603986"></link>
            <id>https://tamilwin.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-again-1789603986</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.</p><p> 

கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது. </p><h2>வீரர்கள் மாற்றம் இருக்காது</h2><p>

2023ஆம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ced56da0-af9c-459e-a5c8-909117f2e68a/26-6aab355542ac3.webp' /></p><p>

2024ஆம் ஆண்டு டுபாயிலும், 2025ஆம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026ஆம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது. 

தற்போது 2027ஆம் ஆண்டு ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.&nbsp;</p><p>ஐபிஎல் 2027 ஏலம் மினி ஏலமாக நடைபெற உள்ளது. இதனால் மெகா ஏலத்தைப் போன்று அணிகளில் மிகப்பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இருக்காது என .தெரிவிக்கப்பட்டுளளது.</p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T00:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் 'மிக்' விமான கமிஷன் பணத்திற்கு நடந்தது என்ன! அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;மிக்&#039; விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'மிக்' விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பல மணிநேர வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.</p><p>இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் மறைந்துள்ள கமிஷன் பணம் யாருடைய கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது? எங்கே சென்றது?
'டி.எஸ். அலையன்ஸ்' (DS Alliance) நிறுவனம் ஒரு போலி நிறுவனமாக உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய 'பெலிமிசா' (Bellimissa) நிறுவனத்திற்கு இலங்கையின் விமானப்படை 15.66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அனுப்பியுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கொடுக்கல் வாங்கல் எப்படி நடந்தது</h2><p>அதில் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கலுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டுள்ளது 7.83 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
அப்படியானால் எஞ்சிய பணம் எங்கே சென்றது? யாருடைய கணக்கில் வைப்பிலிடப்பட்டது?
மேலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் விசாரணைகள் நிறுத்தப்பட்ட விதம் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கொள்முதல் கொடுக்கல் வாங்கலானது குளிர் அறைகளில் இருந்த சில நபர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி அவர்களின் சுகபோகத்திற்காகவே தீர்மானிக்கப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கலா? </p><p>
இந்தக் கொடுக்கல் வாங்கலானது உண்மையிலேயே இலங்கை விமானப்படையின் தாக்குதல் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்திலா செய்யப்பட்டது? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பைகளை நிரப்பும் நோக்கத்திலா செய்யப்பட்டது? எனும் கேள்வி எழுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d646032-44b9-4263-bd4a-e36548308477/26-6aaa830b491f4.webp' /></p><p>2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இந்த மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் விசாரணையை நிறுத்தினார். அவ்வாறு நிறுத்துவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சில முக்கிய தடயங்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
</p><p>இந்த 'டி.எஸ். அலையன்ஸ்' எனும் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தினரால் சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வங்கிப் கணக்கிலிருந்து குறைந்தபட்சம் 4,39,000 டொலர்கள் பணம் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் கம்பஹா கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
</p><p>கம்பஹா கிளையில் லெலும் துமிந்த மான்னப்பெரும எனும் கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் இவ்வளவு பாரிய தொகையா யார் இந்த லெலும் துமிந்த?.
</p><p> சிங்கப்பூர் 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனம் தங்களது கணக்கொன்றின் மூலமாகவே இலங்கையின் கம்பஹா கொமர்ஷல் வங்கி கிளைக்கு இந்தப் பணத்தை அனுப்புகிறது.&nbsp;</p><h2>டுபாயில் வாங்கப்பட்ட சொத்து</h2><p>இந்த லெலும் துமிந்த மான்னப்பெரும என்பவர் உதயங்க வீரதுங்கவின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். உறவுமுறையின் படிஇ இந்தப் பணம் வைப்பிலிடப்பட்ட நபர் உதயங்க வீரதுங்கவின் மைத்துனர் ஆவார்.
</p><p>இந்த மான்னப்பெரும என்பவரின் வங்கிப் கணக்கில் வீழ்ந்த பணத்திற்கும் மிக் கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்களால் முடியாமல் போகிறது.
</p><p>ஆனால் மிக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்கிலிருந்தே பணம் வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இந்த மான்னப்பெரும என்பவர் இந்தப் பணத்திலிருந்து 324,971.6 டொலர்களை
ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாய் நகரில் சொத்து விற்பனை செய்யும் 'டார்கெட் எஸ்டாப்ளிஷ்மென்ட்' (Target Establishment) எனும் நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார். </p><p>
ஐக்கிய அரபு இராஜியத்தின அஜ்மான் நகரில் உள்ள 'கோல்ட் கிரஸ்ட் வியூஸ் 2' (Goldcrest Views 2) எனும் சொகுசு வீட்டுத் தொகுதியின் 'பென்ட் ஹவுஸ்' (Penthouse) அடுக்குமாடி குடியிருப்பு இலக்கம் 3403 ஐக் கொள்முதல் செய்வதற்காகவே இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. </p><p>2018 ஆம் ஆண்டு இந்த வீட்டிலிருந்து டுபாய் பொலிஸாரால் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்படுகிறார்.இந்த பிரம்மாண்டமான கமிஷன் தொகையில் மிகச்சிறிய ஒரு பகுதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களாகவே இவை கிடைத்துள்ளதாக நம்புகின்றனர். </p><p>
இந்த கமிஷன் தொகையில் கணிசமான ஒரு பகுதி லத்வியாவில் (Latvia) உள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விடயமும், அதற்கு மேலதிகமாக நியூசிலாந்து, பனாமா, உக்ரைன், ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands) ஆகிய நாடுகளிலுள்ள பல வங்கிக் கணக்குகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T00:26:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரம் வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சைத் தொகுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/modern-cardiac-treatment-anuradhapura-hospital-1789600917"></link>
            <id>https://tamilwin.com/article/modern-cardiac-treatment-anuradhapura-hospital-1789600917</id>
            <summary type="text">நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில்,
இலவச சுகாதாரச் சேவையை மக்களுக்கு நெருக்கமாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில்,
இலவச சுகாதாரச் சேவையை மக்களுக்கு நெருக்கமாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுகாதாரத் துறை
வலுப்படுத்தப்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
தெரிவித்தார்.</p><p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதய நோய் மற்றும் இருதய மார்பு
அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும்
நிகழ்வு நேற்று(6.09.2026) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடை பெற்றபோதே இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.</p><h2>அவசர நிலைகளை எதிர்கொள்ள</h2><p>
மேலும் உரையாற்றுகையில்,

"கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி, தற்போது
நாடு ஸ்திரமான பொருளாதார நிலையை எட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c173da-2509-4d89-b67c-06cf8b593c47/26-6aab2b5f7700a.webp' /></p><p> சுகாதாரத் துறையின் மனித வளத்தை
மேம்படுத்தும் முகமாக, வரலாற்றில் முதன்முறையாக குறுகிய காலத்தில்
ஆயிரக்கணக்கான வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள்
இணைக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p>சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
உரையாற்றும்போது, நாட்டின் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களால்
ஏற்படுகின்றன என்றும், குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு
நோய்களால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அவசர நிலைகளை எதிர்கொள்ள இத்தகைய நவீன
சிகிச்சைத் தொகுதிகள் மிக அவசியமானவை என்றும் தெரிவித்தார்.&nbsp;</p><h2>உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க</h2><p>இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் உரையாற்றும்போது, இலங்கையின் நீண்டகால மற்றும்
நம்பிக்கைக்குரிய பங்காளியாகத் திகழ்வதில் ஜப்பான் பெருமை கொள்கின்றது
என்றும், இருதய நோய்களால் ஏற்படும் இறப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்காக
ஜப்பானின் அனுபவத்தையும் பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதில்
மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் தெரிவித்தார்.
</p><p>[DE8NZU</p><p>
இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த
ஜயதிஸ்ஸ, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல்
அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார
விமலசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, ஜப்பான் சர்வதேச
ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கை அலுவலகப் பிரதிநிதி மற்றும்
வைத்தியசாலைப் பணிக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T23:51:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் அறியப்படவே கூடாது! வடக்கு ஆளுநர் வேதநாயகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-work-begins-in-mullaitivu-1789599091"></link>
            <id>https://tamilwin.com/article/development-work-begins-in-mullaitivu-1789599091</id>
            <summary type="text">முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் மாத்திரம் அறியப்படக்
கூடாது, முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாக அறியப்பட
வேண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் மாத்திரம் அறியப்படக்
கூடாது, முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாக அறியப்பட
வேண்டும். </p><p>

அத்துடன், மக்கள் சிகிச்சைக்காக வேறு மாவட்டங்களை நோக்கி நீண்ட தூரம் செல்ல
வேண்டாத வகையில், தமது மாவட்டத்திலேயே தரமான சுகாதார சேவைகளைப்
பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதே எமது நோக்கம் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். </p><p>

இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட பொது
மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட புதிய மருத்துவ
விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று(16.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> 

இந்த நிகழ்வில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர். </p><p>

இதேவேளை, வட மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்</h2><p>
போரினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நீண்ட காலமாக அபிவிருத்தியில்
பின்தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு வெறுமனே
அபிவிருத்திக்கான எதிர்பார்ப்பு அல்ல, நாட்டின் ஏனைய மக்களைப் போலவே சமமான
வாய்ப்புகளுடன் வாழ வேண்டும் என்பதற்கான எதிர்பார்ப்பு என்று இந்த நிகழ்வில்
உரையாற்றும்போது குறிப்பிட்ட ஆளுநர், அந்த எதிர்பார்ப்புக்கு படிப்படியாகப்
பதில் கிடைத்து வருகின்றது என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7dc5332-6311-4a04-9d6a-1ebb0751f3d0/26-6aab1da97204f.webp' /></p><p> </p><p>

முல்லைத்தீவு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறையில் தற்போது
மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆண்டு
வட்டுவாகல் பாலத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டதுடன், அதன் பணிகள்
தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அந்தப் பாலம்
போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் அன்றாட மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும்
முக்கிய உட்கட்டமைப்பாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

இந்நிலையில், இந்திய மக்களின் நிதியுதவியுடன் தற்போது மற்றுமொரு முக்கியமான
சுகாதார உட்கட்டமைப்புத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் கிடைத்துள்ளது
என்று குறிப்பிட்ட ஆளுநர், மருத்துவமனைக்கு கட்டடம் மட்டுமன்றி,
மருத்துவர்களுக்கான வசதிகள், நோயாளிகளுக்கான தரமான சிகிச்சை மற்றும் தேவையான
மருத்துவ மனிதவளம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் வலுவான சுகாதாரக்
கட்டமைப்பை உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T22:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்ரோ பேருந்து சேவை குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/metro-bus-services-set-for-expansion-1789596562"></link>
            <id>https://tamilwin.com/article/metro-bus-services-set-for-expansion-1789596562</id>
            <summary type="text">கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை செப்டம்பர் மாத இறுதியில் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு, கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை செப்டம்பர் மாத இறுதியில் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு, கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிடப்பட்ட பேருந்து வலையமைப்பை விவரிக்கும் வரைபடங்களை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிர்ந்துள்ளார்.
</p><p>
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்தச் சேவை பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என்றும், செப்டெம்பர் மாத இறுதியில் கூடுதல் செயல்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
</p><h2>சேவைகள் விரிவுபடுத்தப்படும்</h2><p>
லங்கா மெட்ரோ டிரான்சிட் என்ற பெயரில் வெளியிடப்பட்ட வழித்தட வரைபடங்கள், கொழும்பை பல முக்கிய புறநகர்ப் பகுதிகளுடனும் போக்குவரத்து மையங்களுடனும் இணைக்கும் ஏழு சேவைகளை விவரிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a3fdcc-e4c0-46c2-90b1-11e0b117359e/26-6aab1a0f68c3d.webp' /></p><p>

இந்த வலையமைப்பு மஹரகம, நுகேகொட, பத்தரமுல்ல, மாலபே, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் ஜா-எல உட்பட பல முக்கிய பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது.</p><p>செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து சேவைகள் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தாலும், ஒவ்வொரு வழித்தடத்திற்குமான சரியான தொடக்கத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் பதற்றத்தை ஏற்படுத்திய கார் விபத்து: பலி 3ஆக உயர்வு - 8 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-area-1789595017"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-area-1789595017</id>
            <summary type="text">கொழும்பு மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு(16.09.2026) நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு(16.09.2026) நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.</p><p>

விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் ஆவார்.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர்கள், கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் வத்தளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>

8 பேர் படுகாயம்</h2><p>
அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, சாலையில் வரிசையாக 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dc622ba-3464-428d-a97e-6da1d11ed8a6/26-6aab0dfac10f2.webp' /></p><p> </p><p> 

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
8 பேர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 மட்டக்குளிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dccca7e-1e26-47d2-8c4f-954b30a99f5a/26-6aab0dfbb0c2c.webp' /></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:45:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர தலைமையில் செழிப்பான நாடாக முன்னேறும் இலங்கை! இந்திய உயர்ஸ்தானிகர் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-sri-lanka-is-progressing-prosperous-country-1789591942"></link>
            <id>https://tamilwin.com/article/anura-sri-lanka-is-progressing-prosperous-country-1789591942</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை ஒரு செழிப்பான நாடாகவும், சிறந்த வாழ்க்கையை நோக்கியதாகவும் ஒரு மாற்றத்திற்கான பாதையில் பயணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை ஒரு செழிப்பான நாடாகவும், சிறந்த வாழ்க்கையை நோக்கியதாகவும் ஒரு மாற்றத்திற்கான பாதையில் பயணித்து வருவதாக என்று இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா பாராட்டியுள்ளார்.
</p><p>
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசரகாலப் பிரிவு கட்டுமானம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று காலை (16.09.20026) திறந்து வைக்கப்பட்டது. </p><p>இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இந்திய உயர் ஆணையர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வட மாகாணத்தின் அபிவிருத்தி</h2><p>மேலும், இலங்கையின் அனைத்து மாகாணங்கள் மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி காட்டும் அக்கறையை இந்தியா பாராட்டுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a389772a-c2cf-418c-9ea3-9723dc3a313a/26-6aab07ff9383f.webp' /></p><p>
மன்னார் அவசரகாலப் பிரிவுக்கான ஒப்பந்தம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கையெழுத்திடப்பட்டது என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இத்திட்டத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>]</p>]]></content>
            <updated>2026-09-16T21:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலநிலை தாக்கம்: தொடர் வறட்சிக்குப் பின் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-following-a-prolonged-drought-1789594305"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-following-a-prolonged-drought-1789594305</id>
            <summary type="text">நீண்டகாலமாக நிலவிய எல் நினோ கால நிலையின் தாக்கம் காரணமாக கடும் வரட்சிக்கு
பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று(16) கனமழை பெய்துள்ளதால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாக நிலவிய எல் நினோ கால நிலையின் தாக்கம் காரணமாக கடும் வரட்சிக்கு
பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று(16) கனமழை பெய்துள்ளதால் 
பொதுமக்கள் பெரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.</p><p>

முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம் உள்ளிட்ட பல இடங்களிலும் சுமார் இரு
மணித்தியாலங்கள் வரை மழை பெய்துள்ளது.</p><p>

கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் வெப்பம் மற்றும் மழையின்மையால், குடிநீர்
பற்றாக்குறை, கிணறுகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் குறைதல், விவசாயப்
பயிர்கள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.</p><p>

குறிப்பாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் நீரின்றி பெரும்
சிரமங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், தற்போது பெய்துள்ள கனமழை அவர்களுக்கு
ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>
மகிழ்ச்சியில் விவசாயிகள்</h2><p>

மழையினால் வறண்ட நிலையில் காணப்பட்ட குளங்கள், நீர்நிலைகள் மற்றும் வயல்
நிலங்களில் நீர் தேங்கத் தொடங்கியுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும்
அதிகரிக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f79838e3-429a-4113-bb84-ad8b1b97e852/26-6aab0b38ccd39.webp' /></p><p>

நீண்டகால வரட்சியின் பின்னர் கிடைத்துள்ள இந்த மழை தொடர்ச்சியாக கிடைத்தால்
விவசாய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவும், குடிநீர் மற்றும்
கால்நடைகளுக்கான நீர் பிரச்சினையை ஓரளவு சமாளிக்கவும் முடியும் என விவசாயிகள்
தெரிவிக்கின்றனர்.</p><p>

இதனால் நீண்டகால வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் மழையை
மகிழ்ச்சியுடன் வரவேற்று, தொடர்ந்தும் போதிய மழை பெய்ய வேண்டும் என
எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63fb6b54-b8ba-4839-b5d1-ca930f07ff87/26-6aab0b39d85b7.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு 12.50க்கு ஷிரந்தியை கதிகலங்க வைத்த செய்தி! திணறும் நாமல் மற்றும் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-visited-singapore-1789581399"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-visited-singapore-1789581399</id>
            <summary type="text">இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது ராஜபக்சர்கள் மீது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது ராஜபக்சர்கள் மீது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>

இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் எத்தனை முறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டாலும், பிணை கிடைக்காத ஒரு நிலையை குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் உருவாக்கியிருக்கின்றனர்.
</p><p>
நாமலைத் தொடர்ந்து அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவர் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
</p><p>
இவ்வாறு அவசர அவசரமாக ஷிரந்தி விமான நிலையத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, FCID அதிகாரிகளால் 24ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த சம்பவம் ராஜபக்சர்கள் மத்தியிலும், அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இனி வரும் காலங்களில் ராஜபக்சர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் இன்னும் தீவிரமாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ki-Hg_wWbdk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரித்தபடி நீதிமன்றத்திற்கு வந்த நாமலிற்கு காத்திருந்த அதிர்ச்சி - அர்ச்சுனாவின் முடிவை பகிரங்கப்படுத்திய உதய கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udaya-gammanpila-made-arjuna-s-decision-public-1789592707"></link>
            <id>https://tamilwin.com/article/udaya-gammanpila-made-arjuna-s-decision-public-1789592707</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது அர்ச்சுனா நடந்துகொள்வது போன்றுதான் அன்று சுமந்திரன் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோன்று, சிகிச்சைக்காக ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது, அவருக்கு 24ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்றைய தினம்(16.09.2026) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல், சிரித்த முகத்துடன் சிறைக்குச் சென்றுள்ளார். </p><p>அவருக்கு ஆதரவாக பேசியவர்கள் இன்று, அனுர செய்வது சரி என்பது போன்று பேசி சென்றுள்ளனர்.</p><p>

இந்த விடயம் தொடர்பில் பல்தரப்பட்ட விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gonNxxDYl88" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரண்டாவது நாளாக அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemoration-day-of-thileepan-1789591392"></link>
            <id>https://tamilwin.com/article/commemoration-day-of-thileepan-1789591392</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் 
39 வது ஆண்டின் நினைவு தினம் இரண்டாம் நாளாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் 
39 வது ஆண்டின் நினைவு தினம் இரண்டாம் நாளாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு நேற்று(16.09.2026) காலை 9 மணியளவில் நடைபெற்றுள்ளது. </p><h2>


மலர் அஞ்சலி</h2><p>
பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு
தூவியில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு, அக வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f18e84e-85cb-42a1-8814-996d11116d70/26-6aaaffa8f0002.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, பருத்தித்துறை நகர சபை
உறுப்பினர் நிரஞ்சன் ஈகைச் சுடரினை ஏற்றிவைக்க, பருத்தித்துறை நகர பிதா
வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.</p><p>

மேலும், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை
உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளதுடன், மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/802cfc6b-b6f2-4993-b6bd-9e1e10680cff/26-6aaaffaa12397.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6375a44-d585-437f-b50c-d33784b9cd0a/26-6aaaffaadedd7.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T20:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pregnant-woman-dies-in-batticaloa-1789590774"></link>
            <id>https://tamilwin.com/article/pregnant-woman-dies-in-batticaloa-1789590774</id>
            <summary type="text">மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை
பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை
பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் நேற்று(16.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், சிலர் படுகாயமடைந்துள்ளனர். </p><h2>

சிலர் படுகாயம்</h2><p>

35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இத்துயரச்
சம்பவத்தில் சிக்கியுள்ளனர். </p><p>

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச்
சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு
திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4404d68d-cfda-44f7-aa7d-a61f2da93307/26-6aaafd83558da.webp' /></p><p> </p><h2>

மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய பெண்</h2><p>

கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக்
கொண்டிருந்தபோது, பாலையடி வட்டை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கனரக டிப்பர்
வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
</p><p>
இந்த விபத்தில் கடுமையாகக் காயமடைந்த பெண், உடனடியாகக் களுவாஞ்சிகுடி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f241acd-e9f5-437c-bc47-aa6e8b20c43e/26-6aaafd8441dee.webp' /></p><p>
</p><p>
அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதுடன்,
முச்சக்கர வண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
</p><p>
விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T20:35:25+00:00</updated>
        </entry>
    </feed>
