<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-17T23:15:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனையில் இலக்கு வைக்கப்பட்ட வைத்தியர் சுகுணன் - ஆதாரத்துடன் சிக்கிய நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hopsital-nurses-appointment-issue-1786987078"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hopsital-nurses-appointment-issue-1786987078</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.&amp;nbsp;இவ்விடயத்தை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>இவ்விடயத்தை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக இனரீதியான பிரசாரம்&nbsp;முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களுக்கான சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து புதிய நியமனம் பெற்றதாக 9 பேர் கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>அரச சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடைகளை அணிந்து வந்து வரும் நிலையில் சுகாதார அமைச்சினால் சிலர் நியமனங்களைப் பெற்று வைத்தியசாலைக்கு சீரூடையின்றி வந்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிற ஊழியர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், இவ்விவகாரத்தில்&nbsp;வைத்தியர் சுகுணனுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இவற்றை விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uwsQ0IbG0x0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-17T21:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரைகளுக்குள் படுகொலை செய்து புதைக்கப்பட்ட தமிழ் மக்கள்: ரவிகரன் எம்.பி சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-people-massacred-and-buried-buddhist-1787001287"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-people-massacred-and-buried-buddhist-1787001287</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ
முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத் தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள
விகாரைகளுக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ
முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத் தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள
விகாரைகளுக்குள்ளும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு
புதைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் சந்தேகம்
வெளியிட்டுள்ளார்.
</p><p>
செம்மணியில் நேற்று
(17.08) நடைபெற்ற நீதியின் ஓலம் - 02' இறுதி நாள் மாபெரும்
ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட
படுகொலைகளுக்கு பன்னாட்டு நீதி தேவை என்பதை வலியுறுத்தியே சிறார்கள், பெண்கள்,
முதியவர்கள் என பெருந்திரளானவர்கள் ஆர்ப்பட்டப் பேரணியினை
முன்னெடுத்திருக்கின்றனர்.</p><h2>ஈழத் தமிழர்கள்</h2><p>

ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி
விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஈழத் தமிழர்களின் கோரிக்கையினை தற்போதைய
ஆட்சியாளர்களாவது ஏற்றுக்கொண்டு, குறித்த படுகொலைகளுக்குரிய சர்வதேச
நீதி விசாரணையை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே
இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26bb8346-96cb-44e4-b3a7-2622af3976e6/26-6a837c2f2c731.webp' /></p><p>
</p><p>
கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் செம்மணிப் புதைகுழி விவகாரம் மூடி
மறைக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன. அவ்வாறு செம்மணி புதைகுழி விவகாரத்தினை
மூடிமறைத்த இனவாத ஆட்சியாளர்களும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும்.</p><p>
இது தொடர்பில் ஏற்கனவே நான் நாடாளுமன்றிலும் வலியுறுத்தியுள்ளேன்.

அத்தோடு தற்போது வடகிழக்கில் மக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள
இராணுவ முகாம்களிலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
சந்தேகங்கள் எமக்கு எழுகின்றது எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T21:25:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் மீது குண்டுதாக்குதல்.. ட்ரம்ப் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bombing-oman-trump-issues-stern-warning-1786997407"></link>
            <id>https://tamilwin.com/article/bombing-oman-trump-issues-stern-warning-1786997407</id>
            <summary type="text">ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஓமான் தடையாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டுவீசப்படும் என அமெரிக்க ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஓமான் தடையாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டுவீசப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி முன்னேற்றம் அடைந்து வருகின்றன. </p><h2>

சரணடைதல்.. </h2><p>
இந்நிலையில், ஓமான் குறுக்கிட்டால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ec1f9d-e9d6-47bb-887b-7b032175a4c1/26-6a83763d121a4.webp' /></p><p> ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கான இரண்டு மாத கால அவகாசம் எந்த திருப்புமுனையும் இன்றி முடிவடைந்த நிலையில், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் நீண்டகால பங்காளியாகவும் அமைதிப் பேச்சுவார்த்தை மத்தியஸ்தராகவும் திகழும் ஓமான் மீது ட்ரம்ப் விடுத்துள்ள இந்த மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T20:59:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் முடிவுக்கு வர உள்ள ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-cid-1786995183"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-cid-1786995183</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய விசாரணைகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தான் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.வழக்கின் முறைப்பாட்டு தரப்பு சாட்சி விசாரணை 547 நாட்கள் நடைபெற்று இருக்கின்றன.</p><p>அந்தக் காலப்பகுதியில் 309 பேரிடம் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பொருட்கள் தடவியல் அறிக்கைகளும் சாட்சியங்களாக இதுவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>மிக விரைவிலே இந்த வழக்கு முடிவுக்கு வர உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp;நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F1l_ko6A4l8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T20:01:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வந்த கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை பிரச்சினை விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uniform-issue-at-kalmunai-base-hospital-resolved-1786989848"></link>
            <id>https://tamilwin.com/article/uniform-issue-at-kalmunai-base-hospital-resolved-1786989848</id>
            <summary type="text">அம்பாறை- கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சினை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக&amp;nbsp;இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சினை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக&nbsp;இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 06 ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட 37 மூவின சுகாதார உதவியாளர்களுள் 09 பேர் இஸ்லாமிய பெண்களாவர்.</p><p>அவர்களது சீருடைப் பிரச்சினை தொடர்பாக இன்று சுகாதார அமைச்சு தீர்க்கமான முடிவை அனுப்பியுள்ளது.</p><h2>சீருடை பிரச்சினை</h2><p>
</p><p>அதாவது குறித்த ஒன்பது இஸ்லாமிய பெண் சுகாதார உதவியாளர்களையும் அருகிலுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு கிடைத்திருக்கின்றது. அவர்கள் நாளை விடுவிப்பு செய்யப்படவிருக்கின்றார்கள்.அத்தோடு இந்த பிரச்சினை முடிவுக்கு வருகிறது என்று கூறினார்.</p><p>[DIBNMPஸ</p><p>இதேவேளை, கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை குழுவின் தலைவர் பிரபல சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரம் ராஜனிடம் கேட்ட பொழுது, ஆம் அதற்கான இடமாற்றக் கடிதம் இன்று சுகாதார அமைச்சிலிருந்து கிடைக்கப் பெற்றிருக்கின்றது.</p><p> நாளை அவர்கள் 9 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள் .
இதற்காக ஒத்துழைத்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எமது குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T19:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவை மிரட்டும் நாமல்! மகிந்தவின் - மனைவி பிள்ளைகளை கடுமையாக சாடிய அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-kumara-resigning-mahinda-family-chandrasekar-1786990242"></link>
            <id>https://tamilwin.com/article/anura-kumara-resigning-mahinda-family-chandrasekar-1786990242</id>
            <summary type="text">நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான தீர்மானத்தை தொடர்ந்து, சுவாரஸ்யமடைந்தே உள்ளது எனலாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான தீர்மானத்தை தொடர்ந்து, சுவாரஸ்யமடைந்தே உள்ளது எனலாம்.&nbsp;</p><p>இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைக்கு சென்றாலும் கூட அவரை சிறையில் வைத்தே ஜனாதிபதி ஆக்குவோம் என அவர் தரப்பினர் அரசாங்கத்தை எச்சரித்து வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவி விலகினால் அவரை கைது செய்யும் நிலை ஏற்படலாம் என எதிர்தரப்புக்களில் பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதேநேரம், கடற்றொழில் அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்பில் முன்வைத்துள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன.&nbsp;</p><p>இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZXdAKNMU7LA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T18:50:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் இதுவரை இல்லாத மிக மோசமான பேரழிவு: எபோலா உயிரிழப்பு உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/worst-disaster-ever-in-congo-1786978905"></link>
            <id>https://tamilwin.com/article/worst-disaster-ever-in-congo-1786978905</id>
            <summary type="text">ஜனநாயகக் கொங்கோ குடியரசில் மிக வேக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்வடைந்துள்ளது. 

இதன் மூலம் அந்நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகக் கொங்கோ குடியரசில் மிக வேக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்வடைந்துள்ளது. 

இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றில் பதிவான மிக மோசமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பரவலாக இது மாறியுள்ளது.
</p><p>
கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஏற்பட்ட எபோலா பரவலின் போது 2,299 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போதைய அலையின் தாக்கத்தினால் பலி எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.</p><h2>

அதிகரிக்கும் எபோலா தொற்று</h2><p>
</p><p>
நாட்டின் தேசிய பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைக்கால
அறிக்கையின்படி, இதுவரை 4,945 பேருக்கு நோய் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 101 புதிய
நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3097e10-5270-41ad-b121-58b9d29a1678/26-6a8322cb71414.webp' /></p><p>
</p><p>
வைரஸின் தீவிர பரவல் குறித்து எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவித்
திட்ட அதிகாரி டொம் பிளெட்சர், எபோலா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி வெகுவேகமாக பரவி வருவதாகவும், இதனைத் தடுக்க சர்வதேச சமூகத்தின் உடனடி ஒத்துழைப்பும்
வேகமான நடவடிக்கைகளும் அவசியமெனவும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இந்த முறை பரவிவரும் 'புண்டிக்புஜோ' ரக எபோலா வைரஸுக்கு இதுவரை
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது உரிய சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
</p><h2>
உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு</h2><p>

அத்துடன் மோசமான சுகாதார கட்டமைப்பு, நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலவும்
ஆயுத மோதல்கள் மற்றும் போக்குவரத்து வசதியின்மை என்ப </p><p>ன நோய் தடுப்புப்
பணிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.

தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் மரணிப்போரின் விகிதம் ஆரம்பத்தில் 20
சதவீதமாக இருந்தபோதிலும், தற்போது அது 46 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b429ebcc-0ca8-469e-8c1e-fef2d92e8fce/26-6a8322cc3c6c0.webp' /></p><p>
</p><p>
அதாவது நோய்த்தொற்றுக்குள்ளாகும் இருவரில் ஒருவர் உயிரிழக்கும் அபாயகரமான
சூழல் நிலவுவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் நிபுணர்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.</p><p>

தற்போதைய பரவல் வேகம் தொடருமானால், உலகளவில் பேரழிவை ஏற்படுத்திய 2014-2016 மேற்கு ஆபிரிக்க எபோலா பரவலையும் இது விஞ்சிவிடும் என உலக சுகாதார நிறுவனம்
எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T18:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chairman-tourism-development-authority-resigns-1786987341"></link>
            <id>https://tamilwin.com/article/chairman-tourism-development-authority-resigns-1786987341</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, வெளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களினால் தான் பதவியிலிருந்து விலகுவதாகப் புத்திக புத்திக ஹேவாவசம் தனது&nbsp; கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T17:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துருகிரியவில் டுபாய் கசுனின் உறவினர் மீது துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-athurugiriya-one-person-injured-1786986810"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-athurugiriya-one-person-injured-1786986810</id>
            <summary type="text">அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.8.2026) இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>

காயமடைந்தவர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p> 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான டுபாய் கசுனின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d687ba7-f212-47bd-ada4-c13f0f91179c/26-6a834b0c68f5d.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T17:20:22+00:00</updated>
        </entry>
    </feed>
