<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-02T02:43:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவறைக்குள் பிறந்த குழந்தை - தப்பியோட முயன்ற இளம் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/baby-found-in-a-toilet-1788315544"></link>
            <id>https://tamilwin.com/article/baby-found-in-a-toilet-1788315544</id>
            <summary type="text">
கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில், குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில், குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் 30 வயதுடைய பெண் நேற்று நண்பகல் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த பெண்ணினால் அந்த குழந்தை நேற்றைய தினம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.</p><h2><b>கழிவறைக்குள் பிறந்த குழந்தை</b></h2><p>

பிரவித்த பச்சிளம் குழந்தையை கழிவறையிலிருந்த நீர் தொட்டிக்குள் வைத்துவிட்டு செல்ல அந்த பெண் முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eef86d06-4d73-4b7c-a549-785aa107dead/26-6a978c2aa3c5c.webp' /></p><p>சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து, பின்னர் அவரையும் குழந்தையும் கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குழந்தை நல்ல உடல் நலத்தில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p>]]></content>
            <updated>2026-09-02T02:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-vehicle-import-current-update-1788315269"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-vehicle-import-current-update-1788315269</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 241 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 241 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;தனிநபர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களை உள்ளடக்கிய இந்த இறக்குமதி செலவினம், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான 182 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது, ​​ஒரு மாதத்தில் சுமார் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><h2>வாகன இறக்குமதி&nbsp;செலவு </h2><p>

இதேவேளை, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒட்டுமொத்த செலவு 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c9a294e-9b5d-4fb2-bd50-6f158cdb650b/26-6a978a80a78fa.webp' />&nbsp;</p><p>
</p><p>
மேலும், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இறக்குமதி செலவு 19.6 சதவீதம் அதிகரித்து, 2,251 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
</p><p>
இந்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு முழுவதும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான மொத்த செலவு 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T02:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-rupee-fallen-against-dollar-1788313975"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-rupee-fallen-against-dollar-1788313975</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஒகஸ்ட் மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில், இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>

எனினும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பணவியல், நிதி மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளின் தாக்கத்தின் காரணமாக, கடந்த சில வாரங்களில் இலங்கை ரூபாயில் ஓரளவு மதிப்பு உயர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><h2><b>

இலங்கை ரூபாவின் பெறுமதி</b></h2><p>இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கொள்வனவுகள் காரணமாக, சீன மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு நாணய பரிமாற்ற வசதியும் உள்ளடங்கலாக, மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு தொகையானது 6.6 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e94c21b0-aa63-481d-b23a-7e7c5cec3cea/26-6a9784693c170.webp' /></p><p>கடந்த ஜுலை மாதம் முடிவடைந்த நிலவரத்திற்கமைய, இந்த தொகை பதிவாகியுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு நடப்புக் கணக்கானது 142 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
கடந்த ஜுலை மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டுத் துறைசார் செயற்பாடுகள் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
நடப்புக் கணக்கு தொடர்ச்சியாக இவ்வாறான பற்றாக்குறையைப் பதிவு செய்யும் நான்காவது மாதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-02T02:05:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110"></link>
            <id>https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110</id>
            <summary type="text">கொழும்பு&amp;nbsp; - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில்&amp;nbsp;சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு&nbsp; - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில்&nbsp;சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்தவர்களே இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>குறித்த&nbsp;முகவர் நிலையத்திற்கு 4 பேர் வந்திருந்த நிலையில் பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1721cacd-d25b-4765-b29f-9c9701cdfdd0/26-6a97817496446.webp' /></p><p>சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T02:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 அரசியல் நயவஞ்சகத்தினால் எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-afraid-of-22nd-amendmend-1788314363"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-afraid-of-22nd-amendmend-1788314363</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியல் நவஞ்சகம் காரணமாக எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
22 ஆவது அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியல் நவஞ்சகம் காரணமாக எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
</p><p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தையோ அல்லது நீதிமன்றத்தின் சுயாதீனத்தையோ பாதுகாப்பதற்காக அல்ல என முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> மாறாக எதிர்க்கட்சியின் சட்டத்தின் முன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என்ற அச்சத்தினாலேயே இந்த சட்ட மூலத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5441d28-04ee-4fbe-8f8a-74d8e3a33ac1/26-6a9782fcefc3a.webp' /></p><p>
</p><p>ஹட்டன் நகரில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அந்த முன்னணியின் இதனைத் தெரிவித்தனர்.</p><p>
ராஜபக்ச குடும்பத்தினர் நிரந்தரமாக ஆட்சியில் இருப்பதற்கு வழியமைத்த 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது மௌனம் காத்தவர்கள், (01) ஆம் திகதி 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் ‘சூப்பர்மேன்களாக’ தோற்றமளிக்க முயல்கின்றனர் எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>அன்று முழு நாடும் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட போது எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யாத ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினர், இன்று நீதிமன்றத்தை நாடுவது மக்களின் சுதந்திரத்திற்காக அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
ஜனநாயகம் அல்லது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தற்போதைய எதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்வரும் சில மாதங்களுக்குள் இடம்பெறக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறை தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே இத்தரப்பினர் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வாறு செயற்படுவதாக சமீர பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T02:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு வரி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-case-against-those-who-fail-to-pay-taxes-1788313377"></link>
            <id>https://tamilwin.com/article/court-case-against-those-who-fail-to-pay-taxes-1788313377</id>
            <summary type="text">அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த தவறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது. 

அதற்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த தவறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது. </p><p>

அதற்கமைய 57 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
</p><p>
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் 57 வழக்குகளையும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்குத் தனித்தனியாகக் அனுப்பி வைத்துள்ளார்.
</p><h2><b>
வழக்கு தாக்கல்</b></h2><p>கொழும்பில் உள்ள தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்களின் குழுவிற்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/640065d8-b40a-444c-90c4-45efff97df12/26-6a978059f0512.webp' /></p>]]></content>
            <updated>2026-09-02T01:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-singer-priyankara-perera-dies-at-64-1788312969"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-singer-priyankara-perera-dies-at-64-1788312969</id>
            <summary type="text">பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.</p><p>
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>திரைப்பட நடிகராகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af2b6d0-18eb-4f02-af3c-8becbe2f1361/26-6a977d8a8d840.webp' /></p><p>
'சுபுன் சதக்', 'சந்துன் கஸே சமன் வெலக்', 'சிகுருலியா', 'அகாத சாகரயே' போன்ற பல காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்தார்.
</p><p>திரைப்படங்கள், தொலைக்காட்சி நாகடகங்கள், பாடல்கள் என பல்துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள பிரியங்கர பெரேரா பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>அன்னாரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T01:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறைகேடாக செயற்பட்ட உயர் அதிகாரியை பணியிலிருந்து அதிரடியாக நீக்கிய அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/port-managing-director-removed-from-post-1788311394"></link>
            <id>https://tamilwin.com/article/port-managing-director-removed-from-post-1788311394</id>
            <summary type="text">இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><p>

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

சமகால அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், துறைமுகங்கள் அமைச்சராகப் பதவியேற்ற விஜித்த ஹேரத், துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளராக கணக ஹேமச்சந்திரவை நியமித்தார். </p><h2><b>பல குற்றச்சாட்டுகள்</b></h2><p>எனினும், திருகோணமலை துறைமுகத்திலிருந்த வழிகாட்டிப் படகை தவறாகப் பயன்படுத்தி 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் துறைமுக தொழிற்சங்கங்களால் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc508ba-0c9b-434f-819c-d23da84fd9ef/26-6a977a9c48085.webp' /></p><p>இந்நிலையில் கணக ஹேமசந்திர பதிவியில் இருந்து நீக்க எடுத்த முடிவுக்கு துறைமுக கூட்டுத் தொழிற்சங்க கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. </p><p>

இத்தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட்ட நல்லதொரு தீர்மானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-02T01:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை செல்வா தூபி உடைப்பை கண்டிக்கின்றது தமிழரசுக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/itak-condemns-the-demolition-of-father-selva-1788308964"></link>
            <id>https://tamilwin.com/article/itak-condemns-the-demolition-of-father-selva-1788308964</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம்
வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி்.வி.கே.சிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம்
வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>&nbsp;தமிழரசுக் கட்சி</h2><p>
</p><p>
"தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.</p><p>

தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை
விமர்சிப்பது கிடையாது.

அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக்
கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f665f3e-8438-46b4-9d32-d7f6ec3b2a66/26-6a97716084e6f.webp' /></p><p>
</p><p>
அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும்
ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள
முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே
அமைகின்றது. </p><p>எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.

இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி - சடலமாக கரையொதுங்கிய நால்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-family-members-death-in-gampaha-1788308367"></link>
            <id>https://tamilwin.com/article/4-family-members-death-in-gampaha-1788308367</id>
            <summary type="text">கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச்
சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின்
சடலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச்
சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சடலமானது நேற்றைய தினம்(01.09.2026) கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த&nbsp;&nbsp;4 பேர்</h2><p> இதன் மூலம் கடலில் அடித்துச்
செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் கடலில் நீராடச் சென்ற ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த தாயார் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் உட்பட 4 பேர்
பலத்த அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397db5f0-d22a-4a2a-8153-38609100a928/26-6a976de8baf0f.webp' /></p><p>நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலில் 35
வயதுடைய தாய் மற்றும் 4 வயது, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள்
மீட்கப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த 13 வயது சிறுவனின் சடலம் நேற்று
செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் நடந்ததிலிருந்து பொலிஸாரும், கடற்படையினரும், அந்தப் பகுதி கடலோர
மீட்புக் குழுவினரும் இணைந்து எபமுல்ல கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிர
தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டே அனைத்துச் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பகுதியில் கடலில் நீராடும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்
இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/democratic-tamil-national-alliance-calls-strike-1788306719"></link>
            <id>https://tamilwin.com/article/democratic-tamil-national-alliance-calls-strike-1788306719</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
</p><p>
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று(01) யாழ்ப்பாணம்
இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.</p><h2>வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாமை</h2><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; இந்த அரசாங்கம் பதவி ஏற்று 2 வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் மக்களுக்கு கொடுத்த
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.</p><p>பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் காணி
விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, மாகாண சபை தேர்தல், புதிய
அரசியலமைப்பு, போன்ற விடயங்களை நிறைவேற்றுவதாக தமிழ் மக்களுக்கு ஆணை கொடுத்து
வந்த அரசாங்கம் எந்த விடயங்களையும் நிறைவேற்றவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad3e96a-0ae1-484d-b5c4-541af1b4db64/26-6a97655372dd9.webp' /></p><p>அரசாங்கத்திற்கு உணரத்துவதற்கும், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை
மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை சாவகச்சேரி
பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளது.</p><p>

அத்துடன் இந்தப் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகளின் இணைந்த அழைப்பாக, பல்கலைக்கழக
மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.</p><h2>உண்ணாவிரத போராட்டம்</h2><p>ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் அரசாங்கம் தேர்தல் காலத்தில்
தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2
வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.</p><p>

குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளாக சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை
துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e2f0e9-3409-4fdd-9303-976689f3d292/26-6a976fc15378c.webp' /></p><p>

இந்தியா 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை
செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாணசபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை
தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.</p><p>

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்தவித கரிசனையும் காட்டாது
இருப்பதை கண்டித்தும், திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல்
துறை சார்ந்த விடயங்ளை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதிகாலை
7.30 மணியளவில் தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பியங்கர ஜயரத்ன வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: நீளும் குற்றப்பட்டியல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/priyankara-jayaratne-sentenced-7-years-in-prison-1788308124"></link>
            <id>https://tamilwin.com/article/priyankara-jayaratne-sentenced-7-years-in-prison-1788308124</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 


ஸ்ரீலங்கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p> 


ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 330,000 ரூபா அரச பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளன.</p><p>

சுமார் 3,000 விசா அட்டைகளை அச்சிடுவதற்கு அதிகார சபையின் நிதியிலிருந்து 1,285,200 ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை.</p><p>

அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து விஹெனாபாம் நிறுவனத்திற்கு 360,000 ரூபாவையும், சிலாவ் என்எஸ்பி (NSP) கணக்கிற்கு 494,000 ரூபாவையும் அரச நிதியிலிருந்து செலுத்தச் செய்தமை.</p><p>

தனது தனிப்பட்ட செயலாளரை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையில் (Civil Aviation Authority) சட்டவிரோதமாக நியமித்து, அவருக்கு அரச நிதியிலிருந்து சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்கியமை.
</p><p>
 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமானக் கொள்முதல் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த டீலிங்கின் மூலம் கிடைத்த பணத்தில் 20 மில்லியன் ரூபா பியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அரச வாகனப் பயன்பாட்டில் விதிகளை மீறி, விசாரணை அறிக்கையின்படி 2,737,599 ரூபாவிற்கும் அதிகமான தொகையைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகச் செலவழித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளன.</p><p>

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில் நிகழ்ந்தவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்தவிடயங்கள் தொடர்பான முழுயைான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7PU8B3Mn1GA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும்.. நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-court-decide-on-22nd-amendment-jayatissa-1788307083"></link>
            <id>https://tamilwin.com/article/high-court-decide-on-22nd-amendment-jayatissa-1788307083</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுக்களைப் பரிசீலித்து, அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுக்களைப் பரிசீலித்து, அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(01.09.2026)நடைபெற்ற அமைச்சரவைத்
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>22ஆவது திருத்தச் சட்டமூலம்</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,&nbsp; இந்தத் தீர்ப்பை வழங்கி நாடாளுமன்றத்துக்கு அறிவிப்பதற்கு
உயர்நீதிமன்றத்துக்கு 3 வார கால அவகாசம் உள்ளது. </p><p>மனுக்களை விசாரிக்க எந்தெந்த
நீதியரசர்கள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்
அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உண்டு.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51f2d30b-ccff-4eb8-a99d-6d6d32330e7f/26-6a97687168c05.webp' /></p><p>வெளியாட்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப
நீதியரசர்களை நியமிக்குமாறு கோருவதற்குச் சட்டத்தில் இடமில்லை.

ஜனாதிபதி தலைமையில் தேசிய மக்கள் சக்தி நடத்தி வரும் மக்கள் பேரணிகளுக்கும்
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சர்வஜன வாக்கெடுப்பு விவகாரத்துக்கும்
எந்தவித தொடர்பும் இல்லை.
</p><p>
கடந்த டிசம்பர் மாதமே திட்டமிடப்பட்டுச் சீரற்ற காலநிலை காரணமாகத்
தள்ளிவைக்கப்பட்ட இக்கூட்டங்கள், கட்சியை அடித்தள மட்டத்தில் வலுப்படுத்தவே
நடத்தப்படுகின்றன. மேலும், இதற்கான செலவுகளைக் கட்சியே ஏற்கின்றது. பொதுப்பணம்
பயன்படுத்தப்படவில்லை.</p><p>

22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க உரிமையுள்ள போதிலும்,
அதனைச் சாட்டாக வைத்து வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் நாட்டின்
அப்பாவிப் பொதுமக்களும் நோயாளிகளுமே கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே,
நோயாளிகளை பிணையாக வைத்து இத்தகைய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை கிளப்பியுள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயல் - இணையத்தில் பரவும் காணொளி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216</id>
            <summary type="text">மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரித்திரவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரித்திரவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார்.</p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட அபிவிருத்தி குழுவின் முடிவிற்கமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

இந்த அனுமதிகளைக் கோரி அலுவலகத்திற்குச் சென்ற தேரர், பணியகத்தின் பணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிகாரியை மிரட்டிய காட்சி பதிவாகியுள்ளது.

இந்தச் செயலுக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.</p><p>

 சட்டத்தை நிலைநாட்ட முயலும் அதிகாரியை அச்சுறுத்துவதை அவர்கள் கண்டித்துள்ளனர்.</p><p>

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறான சர்ச்சைக்குரிய மற்றும் இனவாதப் போக்குடைய கருத்துகளை இதற்கு முன்னரும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_taHX-CZ18s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T23:58:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடல் எல்லைக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்ததா..! நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-official-information-yet-arrival-iranian-ships-1788300571"></link>
            <id>https://tamilwin.com/article/no-official-information-yet-arrival-iranian-ships-1788300571</id>
            <summary type="text">இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி ஈரானியக் கப்பல்கள் நுழைந்துள்ளன
என்று கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை அரசுக்கு உத்தியோகபூர்வ
அறிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி ஈரானியக் கப்பல்கள் நுழைந்துள்ளன
என்று கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை அரசுக்கு உத்தியோகபூர்வ
அறிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும்
அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(1) நடைபெற்ற அமைச்சரவைத்
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்&nbsp;</h2><p>

அவர் மேலும் கூறுகையில்,
</p><p>இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தை அண்மித்து ஈரானிய எண்ணெய்
தாங்கிக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகியிருந்த
போதிலும், இக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்துள்ளமை குறித்து
இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c876c99-2552-44ee-aae4-56686664ddd3/26-6a976214afe36.webp' /></p><p> </p><p>இது குறித்து வெளிவிவகார
அமைச்சிடம் விசாரித்து உண்மைத் தன்மை வெளியிடப்படும்.</p><p>

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடுமையான போர்ப் பதற்றங்கள் நிலவினாலும்,
இலங்கை எப்போதுமே தனது நடுநிலைமையான இராஜதந்திர நிலைப்பாட்டையே பேணி
வருகின்றது.</p><h2>இலங்கையின் இறையாண்மை</h2><p>உலக நாடுகள் பிளவுபட்டு நிற்கும் வேளையிலும் எந்தவொரு பக்கமும் சாராமல், மனிதநேய அடிப்படையில் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இலங்கை செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0c135ae-6fda-45e1-ad06-c1e371a02465/26-6a976215625f8.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்துக்கு அருகில்
நங்கூரமிட்டுள்ளன என்று கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசு தீவிரமாகக்
கண்காணித்து வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ
தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன், இந்தக் கப்பல்கள் இலங்கையின் இறையாண்மை எல்லைக்கு
வெளியே நிறுத்தப்பட்டுள்ளமையால் அவற்றுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும்,
அந்தக் கப்பல்களுக்கு எவ்வித வசதிகளோ சேவைகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர்
தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T23:39:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணத்திற்கான நெதர்லாந்து தூதுவரின் முதல் உத்தியோகபூர்வ விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-visit-of-dutch-ambassador-eastern-province-1788304773"></link>
            <id>https://tamilwin.com/article/first-visit-of-dutch-ambassador-eastern-province-1788304773</id>
            <summary type="text">நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) கிழக்கு மாகாணத்திற்கு
தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று (31) மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) கிழக்கு மாகாணத்திற்கு
தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று (31) மேற்கொண்டுள்ளார்.
</p><p>இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்த தூதுவர்,
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடி
புரிந்துகொண்டுள்ளார்.</p><h2>நெதர்லாந்து தூதுவரின் விஜயம்</h2><p>

இதனைத் தொடர்ந்து, தூதுவர் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஜி.
எம்.ஹேமந்த குமாரவையும் சந்தித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ee96d6a-61f4-4eb6-adcd-ee570288af30/26-6a975d882816b.webp' /></p><p>பின்னர், டச்சு காலனித்துவ பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச்
சிறப்புமிக்க திருகோணமலை கோட்டை பிரெட்ரிக் (Fort Frederick) பகுதிக்கும் அவர்
விஜயம் மேற்கொண்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T23:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்று முன்னாள் மேயர் அதாஉல்லாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/akkaraipattu-mayor-chakki-ataullah-remand-extend-1788282733"></link>
            <id>https://tamilwin.com/article/akkaraipattu-mayor-chakki-ataullah-remand-extend-1788282733</id>
            <summary type="text">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர்
அகம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர்
அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை
தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம்&nbsp; உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த உத்தரவானது நேற்று(01.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

கடந்த 19ஆம் திகதி சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை
செப்டம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையிலேயே, அவரின் விளக்கமறியல் காலம் மேலும்
நீடிக்கப்பட்டுள்ளது.
</p><p>தற்போது சந்தேகநபரான சக்கி அதாஉல்லா சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதனால், அவர் இன்று
நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc0d5c24-af1a-4ccc-bb32-6e1dadef2ad9/26-6a971276916ce.webp' /></p><p>இந்த நிலையிலேயே, சிறைச்சாலை
அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 09ஆம்
திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
</p><p>அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராகச் சக்கி அதாஉல்லா பதவி வகித்த
காலத்தில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச
உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரைப்
பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம்
சுமத்தப்பட்டிருந்தது.</p><h2>வழக்கு பதிவு</h2><p>குறித்த பெண் சமூக வலைத்தள (Facebook Live) நேரலையினூடாக இந்தக் குற்றச்சாட்டுகளை
வெளிப்படுத்தியதை அடுத்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ்
பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>இதனிடையே, வாக்குமூலம்
வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த வேளையில் சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e4c9212-a133-470f-b697-cca410ebe33c/26-6a971275de7a8.webp' /></p><p>
இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த
மாதம் 18 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. அதன்போது சந்தேகநபரை ஓகஸ்ட் 19 வரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>பின்னர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி மீண்டும் முன்னலைப்படுத்தப்பட்ட
போது, விளக்கமறியல் செப்டம்பர் 01 வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது
3ஆவது முறையாக செப்டம்பர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T23:22:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குச் செல்ல போகும் நாமல் உட்பட இன்னும் சில முக்கிய புள்ளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-other-including-namal-expecting-go-to-jail-1788292485"></link>
            <id>https://tamilwin.com/article/some-other-including-namal-expecting-go-to-jail-1788292485</id>
            <summary type="text">இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை நோக்கும்போது, முன்னாள் அரசியல்வாதிகள் பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை நோக்கும்போது, முன்னாள் அரசியல்வாதிகள் பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.</p><p>

இவ்வாறான நிலையில், இம்மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் தான் கைது செய்யப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இதனையடுத்து, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இவ்வாறு நாட்டில் இடம்பெற்று வரும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் கைது மற்றும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான மேலும் பல முக்கிய தகவல்களை லங்காசிறியின் ‘நாட்டு நடப்பு’ நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uWbsC-8g2OU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T22:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-visits-mahara-prison-1788293875"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-visits-mahara-prison-1788293875</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மஹர சிறைச்சாலைக்கு
விஜயம் செய்து, அங்குள்ள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மஹர சிறைச்சாலைக்கு
விஜயம் செய்து, அங்குள்ள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
</p><p>குறித்த விஜயத்தினை அவர் நேற்றைய தினம்(01.09.2026) மேற்கொண்டிருந்தார்.</p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்</h2><p>
இதன்போது சிறைச்சாலைகளுக்குள் எதிர்பாராதவிதமாக மோதல்கள் அல்லது பதற்றமான சூழ்நிலைகள்
தோற்றுவிக்கப்படும் போது, அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு
நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e2854b7-d101-4da6-b9f9-6c77d304a701/26-6a97368152d72.webp' /></p><p>அத்துடன் சிறைச்சாலைகளுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு மற்றும் நிர்வாக
மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T22:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஈரானில் தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா : IRGC இலக்குகள் மீது அதிரடி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-says-striking-targets-in-iran-1788282041"></link>
            <id>https://tamilwin.com/article/us-says-striking-targets-in-iran-1788282041</id>
            <summary type="text">ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சென்ட்காம் (C...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளது.</p><h2>ஈரானில் உள்ள இலக்கு</h2><p> </p><p>இந்தத் தாக்குதல்கள் கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கியுள்ளன.&nbsp;</p><p>இன்று கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு, அமெரிக்கப் படைகள் ஈரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) இலக்குகள் மீது தாக்குதலைத் தொடங்கின.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Today at 12 p.m. ET, U.S. forces began striking Islamic Revolutionary Guard Corps (IRGC) targets in Iran. The strikes follow recent attempted attacks by the IRGC against commercial shipping in the Strait of Hormuz and against American service members deployed to the region.</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2094826294466810366?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மீதும் IRGC சமீபத்தில் நடத்திய தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என&nbsp; சென்ட்காம் பதிவிட்டுள்ளது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kUbf_ZpMm_Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-01T21:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை குறிவைத்த மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/damaged-the-memorial-obelisk-of-father-selva-1788297482"></link>
            <id>https://tamilwin.com/article/damaged-the-memorial-obelisk-of-father-selva-1788297482</id>
            <summary type="text">யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத்
திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத்
திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாளந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.</p><p>

தந்தை செல்வா குடும்பத்தவரது பரம்பரை இடுகாட்டில் இருந்த தூபியின் மேல்
பகுதியே சூறையாடப்பட்டுள்ளது.</p><h2>தந்தை செல்வா</h2><p>
</p><p>
போரின் பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டபோது அங்கு போரின்
முன்னர் இருந்த தூபியை ஒத்த தூபி ஒன்று 2012 ஆம் ஆண்டு மீண்டும்
புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb2ceac6-a80e-4068-9ced-9d9a3caf67db/26-6a97424093a3d.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் தூபியே
நேற்றுமுன்தினம் மாலை இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் அயலவர்களால் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கவனத்துக்குக்
கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
தூபியின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க அலங்கார வடிவப்
பொருள்களை அபகரிக்கும் நோக்கில் இந்தச் சூறையாடல் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T21:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலையில் அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு – பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-uni-office-assistant-appointments-alleged-1788287449"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-uni-office-assistant-appointments-alleged-1788287449</id>
            <summary type="text">யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர
நியமனத்திற்குள் உள்வாங்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர
நியமனத்திற்குள் உள்வாங்கப்படவில்லை எனவும் புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர்
குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் யாழ். ஊடக அமையத்தில் இன்று(01.09.2026) இடம்பெற்ற ஊடக
சந்திப்பிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.</p><h2>அலுவலக உதவியாளர் பதவி</h2><p>
யாழ் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக அங்கு
தற்காலிகமாக பணியாற்றிவந்த தாம் உள்ளிட்ட 400ற்கும் மேற்பட்டோர் போட்டிப்
பரீட்சை உள்ளிட்ட தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த நிலையில், 71 பேருக்கு
மாத்திரம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a216fa14-f5c6-486c-b65a-08e9915c3699/26-6a971f29e6e6e.webp' /></p><p>எனினும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் அலுவலக
உதவியாளர்களாக பணியாற்றி வந்த தங்களை நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில்
உரிய முறையில் கருத்திற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>

பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
என்ற எதிர்பார்ப்பில் இருந்த போதிலும், தற்போது புதிதாக பலர்
நியமிக்கப்பட்டுள்ளமை தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும்
ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சாதகமான பதில் கிடைக்காமை</h2><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தமது நிலைமை
குறித்து எடுத்துரைத்தபோதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என
பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a4efb2a-b961-4d35-bf30-5a33342cffc5/26-6a971f2aae750.webp' /></p><p>தமது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலம் ஆகியவற்றையும் தமது வாழ்வாதார பொருளாதார ஈட்டலையும் கருத்திற் கொண்டு, நியாயமான தீர்வொன்றை
வழங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>

அத்துடன், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன்
விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T21:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-reject-petition-against-22nd-amendment-1788276373"></link>
            <id>https://tamilwin.com/article/court-reject-petition-against-22nd-amendment-1788276373</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல்
செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களை கொண்ட
முமையான ஆயத்தின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல்
செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களை கொண்ட
முமையான ஆயத்தின் முன்னிலையில் விசாரணை செய்ய வேண்டும் என முன்வைக்கப்பட்ட
கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>இந்த உத்தரவானது இன்று(01.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>மனுக்கள் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட
அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன
ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள்
முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3925e4fb-a8fa-4168-90fa-b54063027a51/26-6a97035583ad8.webp' /></p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன், உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களையும் கொண்ட முழுமையான
ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p> அவருடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி
சப்ரி, ஜெப்ரி அழகரத்னம், எராஜ் டி சில்வா, ஸ்ரீநாத் பெரேரா, அநுர மெத்தேகொட
மற்றும் மைத்ரி குணரத்ன ஆகியோரும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p><h2>22ஆவது அரசமைப்பு திருத்தம்</h2><p>
</p><p>
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசமைப்பின்
132 (3) உறுப்புரையின்படி, உயர்நீதிமன்ற அமர்வின் நீதியரசர்களின் எண்ணிக்கை
மற்றும் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் பிரதம நீதியரசருக்கே
உரித்தானது என வாதிட்டுள்ளார்.
</p><p>
அனைத்துத் தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலிப்பதற்காக 15 நிமிடங்கள்
விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், பின்னர் மனுதாரர்களின் கோரிக்கையை
நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/909ca085-5310-4072-b674-8c0f9d1f398d/26-6a9703fe1e12c.webp' /></p><p>
</p><p>
அதனையடுத்து, தற்போதைய ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்விலேயே மனுக்கள் மீதான
விசாரணைகள் தொடரும் என்று பிரதம நீதியரசர் அறிவித்துள்ளார்.</p><p>

22 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 67 மனுக்களும்,
நீதித்துறைச் சட்டமூலத்துக்கு எதிராக 5 மனுக்களும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T20:46:11+00:00</updated>
        </entry>
    </feed>
