<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-04T19:32:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-of-jaffna-palaly-airport-1785864847"></link>
            <id>https://tamilwin.com/article/development-of-jaffna-palaly-airport-1785864847</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலான கலந்துரையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த கலந்துரையாடலானது இன்று(04.07.2026) வலிகாமம் - வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில்
இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>காணி உரிமையாளர்கள்</h2><p>

வலிகாமம் - வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி மேற்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும் குரும்பசிட்டி ஆகிய நான்கு கிராம சேவகர்
பிரிவுகளில், 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக வர்த்தமானி
அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட 267 ஏக்கர் காணிகளின் 436 காணி
உரிமையாளர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
இதன்போது, வலி. வடக்கில் இன்னும் காணிகளை மீளப் பெறாத காணி உரிமையாளர்களும்
பிரதேச செயலகத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46eaf33e-8390-498f-9401-e13024450271/26-6a72252e68d60.webp' /></p><p> 

அவர்கள் கூட்ட மண்டபத்திற்குள்
அனுமதிக்கப்படாத நிலையில், மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை
நடத்தியதையடுத்து கூட்டம் முடிந்ததும் உங்களோடு கலந்துரையாடுவதாக அரசாங்க அதிபர்
தெரிவித்திருந்தார் ஆனால் அந்த சந்திப்பு இடம் பெறவில்லை.
</p><p>
1986ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்
அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தொடர்ந்து,
இழப்பீடு வழங்குவதற்கான சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுமாறு காணி
உரிமையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு காணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு விபரங்கள்
வழங்கப்படாத நிலையில் சத்தியக் கடதாசியில் கையொப்பமிட முடியாது என காணி
உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மீளக் குடியேற்ற நடவடிக்கை</h2><p>

மேலும், சத்தியக்கடதாசியின் உள்ளடக்கம்
தெளிவற்றதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதால் கூட்டத்தில்
பரபரப்பும் குழப்பநிலையும் ஏற்பட்டுள்ளது.
</p><p>
குழப்பநிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கூட்ட மண்டபத்திற்குள் பொலிஸார்
வரவழைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையே இடம்பெற்ற
கலந்துரையாடலை அடுத்து , காணி உரிமையாளர்கள் தரப்பில் ஏழு பேர் கொண்ட
குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ea1fdeb-7195-4ee6-adad-9fbac7d41718/26-6a72252f362e2.webp' /></p><p>அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சத்தியக்கடதாசியில்
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை காணி மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு
அனுப்பப்பட்டதையடுத்து மீண்டும் காணி உரிமையாளர்களை அழைப்பது என
தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், சில காணி உரிமையாளர்கள் இழப்பீடு பெறுவதில் இணக்கம் தெரிவிக்காமல்
கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.</p><p> 

அவர்கள், தங்களுக்கு இழப்பீடு மட்டும்
வழங்காமல், காணிகளை மீள வழங்கி மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், அதன் பின்னரே விமான நிலையத் தேவைக்காக காணிகளை வழங்குவது குறித்து
பரிசீலிக்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>

மேலும், சத்தியக்கடதாசியில் தெளிவின்மை காணப்பட்டமை மக்களிடையே
நம்பிக்கையின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக காணி உரிமையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T19:15:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் கடற்படையினரின் அதிரடி: ஆங்கிலக் கால்வாயில் தீப்பற்றி எரிந்த படகு- 157 அகதிகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/french-coast-guard-operation-157-refugees-rescued-1785868702"></link>
            <id>https://tamilwin.com/article/french-coast-guard-operation-157-refugees-rescued-1785868702</id>
            <summary type="text">பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக்
கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை
எதிர்பாராதவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக்
கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை
எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது.
</p><p>
தகவலறிந்து உடனடியாகச் செயல்பட்ட பிரான்ஸ் கடற்கரை காவல்படை, மூன்று மீட்புக்
கப்பல்களை அனுப்பி படகில் இருந்த 157 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள்</h2><p>
அண்மைக்காலமாக ஆபத்தான இந்த கடல் வழியைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள்
நுழைய முயலும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.</p><p>

சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள் தகுதியற்ற சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமான
மக்களை ஏற்றிச் செல்வதால் இத்தகைய கொடூர விபத்துகள் தொடர்ந்து நிகழ்கின்றன.
கடந்த வாரம் கூட இதேபோன்று சிறிய படகில் கால்வாயைக் கடக்க முயன்ற மூன்று பேர்
உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcbf63ab-34d3-48cd-879f-c35d62ce6124/26-6a723a0098831.webp' /></p><p>
இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு செய்தித்
தொடர்பாளர், "இந்த சம்பவம் சிறிய படகுகள் மூலம் கடல் கடப்பதில் உள்ள பயங்கர
ஆபத்தை உணர்த்துகிறது.

இத்தகைய ஆபத்தான பயணங்களைத் தடுக்க பிரான்ஸ் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன்
இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.</p><p>

2015-16 காலகட்டத்தில் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடிக்குப் பிறகு ஐரோப்பாவில்
குடியேற்றம் மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T19:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய 'பாயிஸ்'! வெளியான அதிர்ச்சி அறிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remand-ordered-3-individuals-including-pillayan-1785867710"></link>
            <id>https://tamilwin.com/article/remand-ordered-3-individuals-including-pillayan-1785867710</id>
            <summary type="text">பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) உட்பட மூவருக்கு எதிரான விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) உட்பட மூவருக்கு எதிரான விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>

காத்தான்குடியைச் சேர்ந்த 'பொலீஸ் பாயிஸ்' (முகமது பாயிஸ்) என்பவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச பிடியாணைக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

'பொலிஸ் பாயிஸ்' என்பவர் பல்வேறு கொலைகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே மோதல்களைத் தூண்டிய சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பலீல் உள்ளிட்டோரின் படுகொலைகளுடன் இவருக்குத் தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

'ஈமானிய நெஞ்சங்கள்' எனப்படும் தீவிரவாத அமைப்புடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வன்முறைகளை முன்னெடுத்ததாகச் சொல்லப்படுகிறது .


பலர் அரசு சாட்சிகளாக மாறியுள்ளது இந்த விசாரணைகளுக்குப் பெரும் வலு சேர்த்துள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wyDBgwtC3Hc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T18:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-death-rises-to-7-rescues-intensify-1785860616"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-death-rises-to-7-rescues-intensify-1785860616</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர்
காணாமல்போயுள்ளார் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர்
காணாமல்போயுள்ளார் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு
ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள்</h2><p>அனர்த்தத்தின் போது&nbsp; உயிரிழந்தவர்களுள் 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று
பெண்களும் 22 வயதுடைய இளைஞரும் உள்ளடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்குக் குறுக்கே உள்ள
பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் ஆற்றில் அடித்துச்
செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்</p><p>கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பொலிஸ் ஊடகப் பிரிவு&nbsp;</h2><p>
</p><p>
நாவலப்பிட்டி - பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில்
மற்றுமொரு 67 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளார் என அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தின் கண்டி மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர
உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f975e28e-567e-4f63-b3c4-4559a01dc327/26-6a721cebbe42f.webp' /></p><p>இதனிடையே, கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் நீரில்
அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது. </p><p>அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த அனர்த்தங்களால் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T18:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை - உதயநிதி ஸ்டாலினுக்கு பிணையில் செல்ல அனுமதி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-1785863090"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-1785863090</id>
            <summary type="text">தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.</p><p>

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு பொலிஸ் நிலைய பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரபரப்பான சூழல்</h2><p>

பொலிஸ் நிலைய வளாகத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான திமுகவினர் திரண்டிருந்ததால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7814d651-708e-4a1d-b2f8-243c77a57c95/26-6a721d60c92fe.webp' /></p><p>

 பாதுகாப்பு பணிக்காக கூடுதல் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரவு சுமார் 8.15 மணியளவில் உதயநிதி பொலிஸ் நிலையத்தில் இருந்து சென்றுள்ளார்.</p><p>

தனது காரில் இருந்தபடியே அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை நோக்கி கையசைத்தபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><h2>&nbsp;கைது</h2><p>
</p><p>
தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08f7435-62cf-4b66-a2a7-ff354dee1174/26-6a721d617c028.webp' /></p><p>
</p><p>
அதனால் அவர் இன்று(4) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-04T17:55:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் குற்றமற்றவர் என வழங்கப்பட்ட நீதிமன்ற தீா்ப்பு ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnstons-case-re-hearing-again-1785864591"></link>
            <id>https://tamilwin.com/article/johnstons-case-re-hearing-again-1785864591</id>
            <summary type="text">சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.</p><p>
இதன்படி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பதில் பணிப்பாளர் மொஹமட் சகீர் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரிக்குமாறு ஐந்து நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>
குறித்த வழக்குகளில், சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ பணிகளில் இருந்து விலக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்தியதுடன், அவர்களுக்கு அரசுப் பணத்தில் ஊதியம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22da8d0c-840c-4d8e-90f8-1a783ae27beb/26-6a72219174543.webp' /></p><p>
</p><p>இந்த வழக்குகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p><p>
எனினும், விசாரணையை ஆரம்பிப்பதற்கும் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையொப்பங்களும் இடம்பெறவில்லை என்ற பிரதிவாதி தரப்பின் ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று, கொழும்பு மேல் நீதிமன்றம் 2023 மே 19ஆம் திகதி பிரதிவாதிகளை விடுவித்திருந்தது.
</p><p>அந்தத் தீர்ப்புக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 1994ஆம் ஆண்டின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 2(8) பிரிவின்படி, ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்த மூன்று ஆணையாளர்களும் ஒரே நேரத்தில் இருப்பது கட்டாயமல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>
மேலும், ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தனித்தனியாக அமர்ந்தாலும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்றும், அத்தகைய நடவடிக்கை முழு ஆணைக்குழுவின் நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>அத்துடன், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாக்கத்தை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை; அவ்வாறான அதிகாரம் அதனை விடவும் அதிகாரம் கூடிய நீதிமன்றங்களுக்கே உரியது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p>
மேலும், ஒவ்வொரு விசாரணைக்கும் மற்றும் வழக்குத் தாக்கலுக்கும் மூன்று ஆணையாளர்களின் கையொப்பமும் கட்டாயம் என்ற நிலைப்பாடு நீதித்துறை செயல்முறையை தேவையற்ற வகையில் தாமதப்படுத்தும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:33:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-says-good-progress-made-in-talks-with-oman-1785863885"></link>
            <id>https://tamilwin.com/article/iran-says-good-progress-made-in-talks-with-oman-1785863885</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் மற்றும் ஓமன் இடையே உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>
ஓமனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28a27615-1a5b-4c6b-ae3a-c59fc9042e41/26-6a721ecf4390a.webp' /></p><p> </p><p>
சில கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்த போதிலும், பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் செல்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>
இடையூறு விளைவிக்கும் சில தரப்பினரின் நடவடிக்கைகளைத் தெஹ்ரானில் உள்ள ராஜதந்திர வட்டாரங்கள் விமர்சித்த போதிலும், ஒப்பந்தம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளதாகவும், நாளைய தினத்தின் இறுதிக்குள் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். </p><p>
இந்த ஒப்பந்தம் வெறும் உடன்படிக்கை என்பதை விட, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல்சார் வர்த்தக நடைமுறையை சீரமைப்பதையே முதன்மையாகக் கொண்டுள்ளது. </p><p>
ஈரான் - ஓமன் இடையிலான இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மேலும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.
</p><p>எனினும், மோதல்கள் மீண்டும் மீண்டும் தொடர்வதைத் தவிர்க்கவும், நிரந்தர தீர்வை எட்டவும் பின்வரும் சிக்கல்கள் ராஜதந்திர வழியில் தீர்க்கப்பட வேண்டும் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் பேக்கரி உரிமையாளரின் துணிகர செயல்: கொல்ல வந்தவரின் துப்பாக்கி பறிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-shooting-attemt-foiled-1785863156"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-shooting-attemt-foiled-1785863156</id>
            <summary type="text">தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>

இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>
இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், துப்பாக்கி செயல்படாததால், பேக்கரி உரிமையாளர் உடனடியாக எதிர்த்து தாக்குதலாளியுடன் போராடி, அவரது கையில் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ef7d9a-c469-45ef-9bb4-5717963b3fa5/26-6a721bf5af824.webp' /></p><p>
</p><p> இந்த மோதலின் போது பேக்கரி உரிமையாளருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இரு சந்தேகநபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், தாக்குதலுக்கு இலக்கான பேக்கரி உரிமையாளரின் மகன், "கொஸ் மல்லி" என அழைக்கப்படும் பாதாள உலகக்குழு குழு உறுப்பினரின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனவும், அவர் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், இந்த தாக்குதலை "சாண்டோ" தரப்பு அல்லது "படோவிட்ட அசங்க" தரப்பைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
எனினும், இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எவரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவில்லை.</p><p>
தப்பியோடிய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்வதற்காக தெஹிவளை பொலிஸார் இரண்டு விசேட விசாரணைக் குழுக்களை நியமித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண ஒப்பந்த விவகாரம்: ட்ரம்ப் உதவியை கோரியதாக எழுந்த முறைப்பாட்டுக்கு ஃபிஃபா மறுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-cup-contract-fifa-denies-allegations-trump-1785862044"></link>
            <id>https://tamilwin.com/article/world-cup-contract-fifa-denies-allegations-trump-1785862044</id>
            <summary type="text">&amp;nbsp;ஃபிஃபா (FIFA) அமைப்பின் உலகக் கிண்ண வணிக உரிமைகளைத் தனியார்
முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து,
அமெரிக்க ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஃபிஃபா (FIFA) அமைப்பின் உலகக் கிண்ண வணிக உரிமைகளைத் தனியார்
முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவை அதன் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ
கோரியதாக வெளியான செய்திகளை ஃபிஃபா நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.</p><p>
உலகக் கிண்ணத்தின் வணிகப் பங்குகளை விற்பனை செய்து சுமார் 4.2 பில்லியன் டொலர்
நிதியைத் திரட்ட ஃபிஃபா திட்டமிட்டிருந்தது.</p><p></p><h2>பிஃபா மறுப்பு</h2><p> இருப்பினும், பல்வேறு
தரப்பிலிருந்து எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக இந்த நடவடிக்கை
கைவிடப்பட்டது.</p><p>
இதன் தொடர்ச்சியாக, இன்ஃபான்டினோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொலைபேசியில்
தொடர்புகொள்ள முயன்றதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில்
செய்திகள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8b745bb-f1cc-4475-a55f-ee7b2e0bc7d4/26-6a7219c1bca5c.webp' /></p><p>

இந்த குற்றச்சாட்டுகளை "முற்றிலும் கற்பனையானவை" என்று வர்ணித்துள்ள ஃபிஃபா,
ஜியானி இன்ஃபான்டினோ சமீப நாட்களில் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அவரது
நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களையோ தொடர்புகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை
என்று தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

இருப்பினும், இந்த ஒப்பந்த விவகாரத்தால் ஃபிஃபா தலைவர் பதவியில் இன்ஃபான்டினோ
தொடர்வது குறித்து கால்பந்து அமைப்புகளிடையே தொடர்ந்து விவாதங்கள் வலுத்து
வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T16:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளமான நாடும் அழகான வாழ்க்கையும் வெறும் ஏமாற்றுத் தேர்தல் வாக்குறுதிகளே - அரசாங்கத்தை சாடிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-govt-s-promises-are-election-deception-1785856137"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-govt-s-promises-are-election-deception-1785856137</id>
            <summary type="text">அரசால் வளமான நாடும் அழகிய வாழ்க்கையும்
உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்
எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசால் வளமான நாடும் அழகிய வாழ்க்கையும்
உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்
எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று(04.08.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விவசாயிகளின் பிரச்சினை</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், "2024ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி நாட்டில் 39 இலட்சம்
முதியோர் சமூகம் காணப்படுகின்றனர். </p><p>இவர்களுக்குக் கடந்த காலத்தில் 15 இலட்சம்
சேமிப்புக் கணக்கிற்கு 15 சதவீத வட்டி கிடைத்த போதிலும், இன்று அந்த வட்டி 7
சதவீமாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79813c06-32d0-4bd8-b21f-707ebafa8d73/26-6a720397481d7.webp' /></p><p> அரசாங்கம் கூறும் ஸ்திரத்தன்மையும் வளமான நாடும்
இதுதானா?

விவசாயிகளுக்குச் சிறந்த உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என
வாக்களித்துவிட்டு, வயல்வெளிகளுக்குள் இறங்கி நெற்கதிர்களைக் கடித்துக்கொண்டு
நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறிவிட்டு இன்னும்
அதனை நிறைவேற்றவில்லை. </p><p>உரிய நேரத்தில் விதை நெல் கிடைக்காததுடன், அவை தரம்
குறைந்தவையாகவும் உள்ளன. விவசாய இரசாயனப் பொருட்களின் விலையேற்றம், தரமின்மை,
உபகரணங்கள் மீதான வற் வரி மற்றும் மனித - யானை மோதல்களால் விவசாயிகள் பெரும்
இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p>சர்வதேச நாணய நிதியம் முதன்மை மீதியை 2.5 ஆக இருக்கச் சொன்ன போதிலும், அரசு
அதனை 5.4% வரை அதிகரித்து மக்கள் மீது எல்லையற்ற வரிச் சுமையைச்
சுமத்தியுள்ளது.</p><p></p><h2>அரசின் வருமான இலக்குகள்</h2><p>அரசின் வருமான இலக்குகளும் வரி மூலமே பெறப்படுகின்றன. இதனால்
மொத்த உள்நாட்டு உற்பத்திற்க்கு 52% பங்களிப்பு வழங்கும் நுண், சிறிய மற்றும்
நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்பட்டு
வருகின்றன.
</p><p>
மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்ற வாக்குறுதியும்
நிறைவேற்றப்படவில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு
எரிபொருளைப் பெற்றுத்தரவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f096be4a-f6df-49de-bc15-fb48199fbefd/26-6a720398681c3.webp' /></p><p>ஈரான் மோதல்கள் காரணமாக ஏனைய நாடுகள் வரிகளைக்
குறைத்த போதிலும், நம் நாட்டில் அது நடக்கவில்லை. 'டித்வா' சூறாவளியால்
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பில்லியன்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டதாகக்
கூறப்பட்டாலும், களத்தில் எந்த உதவியும் சென்றடையவில்லை.
</p><p>பொய் கூறாமல், மக்களை ஏமாற்றாமல், இப்போதாவது மக்களுக்கு வழங்கிய 'வளமான நாடு,
அழகான வாழ்க்கை' வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T16:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-malnutrition-among-children-in-afghanistan-1785856361"></link>
            <id>https://tamilwin.com/article/severe-malnutrition-among-children-in-afghanistan-1785856361</id>
            <summary type="text">ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான நிலையை
எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

ஆப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான நிலையை
எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.</p><p>

ஆப்கானிஸ்தானின் மூன்றில் ஒரு பங்கு மாகாணங்களில் 'சிறுவர் உடல் மெலிவு'
ஆபத்தான அளவை எட்டியுள்ளது. </p><p>மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்
குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>

இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இரண்டு வயதிற்குட்பட்ட
குழந்தைகளுக்கே ஏற்படுவதாகவும், பலர் மிகவும் தாமதமாகவே மருத்துவ மையங்களுக்கு
அழைத்து வரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அண்டை நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ஆப்கானியர்கள் கட்டாயமாகத் திருப்பி
அனுப்பப்படுவது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சர்வதேச நிதி
உதவியில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு ஆகியவையே இந்நிலைக்கு முதன்மை
காரணங்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b21cabc-974f-4a3c-8511-003119541dfc/26-6a7203a61cddc.webp' /></p><p>
</p><p>
நிதியுதவி தட்டுப்பாடு காரணமாக, கடுமையான பஞ்சத்தைத் தடுக்கும் நோக்கில்
செயல்படுத்தப்பட்டு வந்த உணவு விநியோகத் திட்டங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், இலட்சக்கணக்கான தாய்மார்கள்
மற்றும் சிறுவர்களின் உயிரைப் பாதுகாக்கவும் அடுத்த ஆறு மாதங்களுக்கு சுமார்
500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் கோரிக்கை
விடுத்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T15:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது தாக்குதல்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-ship-in-strait-of-hormuz-us-iran-talks-1785853985"></link>
            <id>https://tamilwin.com/article/attack-ship-in-strait-of-hormuz-us-iran-talks-1785853985</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதைத்
தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதன்
எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதைத்
தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. </p><p>இதன்
எதிரொலியாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையும் மீண்டும் கணிசமாக
உயர்ந்துள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள்
நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தம் செய்வதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு
என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

ஆனால், அமெரிக்காவுடன் எந்தவித நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என
ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>

ஓமன் நாட்டினருடன் மட்டுமே கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு
வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தரப்பில் விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d755d6f-e9a0-4240-a404-a2aa90eba391/26-6a71fbf56f8b5.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையே, ஓமன் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த உலர் சரக்குக் கப்பல் மீது
அடையாளம் தெரியாத பொருள் தாக்கியதில், கப்பலிலிருந்த ஊழியர்கள்
வெளியேற்றப்பட்டனர்.இந்தத் தாக்குதலில் மாலுமி ஒருவர் மாயமாகியுள்ளார்.</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>

உலகளவில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20
சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் தற்போது கப்பல் போக்குவரத்து
பெருமளவில் முடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39288cd7-4c03-477c-8d79-ed42a662a352/26-6a71fbf6201a6.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், சர்வதேச சந்தையில்
பொருளாதார நெருக்கடியை உருவாக்கிப் போரைத் தொடரவே ஈரான் முயன்று வருவதாக
அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
</p><p>
அதேவேளையில், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் உள்ளிட்ட
நாடுகள் பின்னணியில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T14:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் திடீர் பேரிடரால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-death-toll-increased-1785853618"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-death-toll-increased-1785853618</id>
            <summary type="text">கடந்த சில நாட்களில் ஏற்பட்ட திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் (04) வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களில் ஏற்பட்ட திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று பிற்பகல் (04) வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடுமையான சேதம்..&nbsp;</h2><p>

மேலும், 9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ff70592-ac5a-4027-9cdd-71c64200c849/26-6a71f8a3d43e6.webp' /></p><p>
</p><p>அதேநேரம், 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்&nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
பேரிடரில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T14:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் உணவு உண்ண முடியவில்லை - தாயுடன் பேச வேண்டும்! பிள்ளையானின் உருக்கமான கோரிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026"></link>
            <id>https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04)&nbsp;காணொளி&nbsp;மூலம் விசாரணை நடைபெற்றது.</p><p></p><h2>ஐந்து கொலைகள்</h2><p>இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f32ac1b-e2cc-430b-b0f2-4b2d22e2b8c5/26-6a71bd24dce80.webp' /></p><p>2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த 5 கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிற சந்தேக நபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குப் பதிவு செய்திருந்தது.
</p><p>


இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அவர் மீது, கல்லடி பகுதியில் நடந்த ஐந்து கொலைகள் மற்றும் நிலத்தகராறு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்
கொலை செய்யப்பட்ட சம்பவம், ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து
சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், வவுணதீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை
கடத்தி கொடூரமாகக் கொலை செய்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. </p><p>2025ஆம் ஏப்ரல், பயங்கரவாத
தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் 2025 நவம்பர் மாதம், காத்தான்குடியை சேர்ந்த
இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரையும் சிஜடியினர் கைது செய்தனர்.</p><h2>அதிகாரிகளின் சோதனை</h2><p>

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளில் தொடர்பு இருப்பதாக, பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு
பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி முகம் பாய்ஸ்,
உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜீன் 17ஆம் திகதி சிஜடியினர் வழக்கு தாக்கல் செய்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09de7a47-ed1d-4e97-973c-0834e9ed14da/26-6a71c926b9c9b.webp' /></p><p>இந்நிலையில் குறித்த வழக்கு இன்று&nbsp; (04) மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக
நபர்களான பிள்ளையான், இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான்,
முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (Zoom)
முன்னிலைபடுத்தப்பட்டனர்.</p><p>

இதன்போது பிள்ளையான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரராஜா முன்னிலையாகி பிள்ளையான்
தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு
சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம்
மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்பபடுவதால் அது சிதைவடைந்து
செல்வதால் அதனை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>எனவே, உணவை அவ்வாறு
பரிசோதனை செய்யாது தருமாறும்
73 வயதான அவரது தாயார் சுகயீனமடைந்துள்ளதாகவும் அவருடன் கையடக்க
தொலைபேசி ஊடாக 2 இல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தருமாறும் கோரினார்.&nbsp;</p><p>இதன்போது, நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அங்கு எவ்வாறான
நடமுறை உள்ளதோ அதை சரியாக பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wyDBgwtC3Hc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-04T14:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய சிறைச்சாலைகள் ஆணையாளர் பதவி.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-explains-prison-commissioner-appointed-1785842284"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-explains-prison-commissioner-appointed-1785842284</id>
            <summary type="text">முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதே அப்பதவிக்கு யாரையும் நியமிக்காததற்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதே அப்பதவிக்கு யாரையும் நியமிக்காததற்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

இன்று (04) அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேது அமைச்சர், இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>முன்னாள் சிறைச்சாலை ஆணையர் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஒரு நிரந்தர ஆணையரை நியமிப்பது சாத்தியமில்லை என்று கூறினார்.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்..&nbsp;</h2><p>

மாறாக, அந்தப் பணியைக் கவனித்துக்கொள்ள ஒருவரை நியமிக்கலாம் என்றும், அதன்படி அந்த நோக்கத்திற்காக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f156908-a4cc-4965-8f1c-27fd67b88aae/26-6a71d59666cad.webp' /></p><p>
</p><p>
முன்னாள் ஆணையாளர் தொடர்பான விசாரணைகள் முடிந்த பிறகு எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

அதன்படி, முன்னாள் ஆணையாளர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், ஒரு புதிய ஆணையாளiu நியமிக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட விசாரணைகளில் அவர் எப்படியாவது விடுவிக்கப்பட்டால், அவரை மீண்டும் பணியில் அமர்த்த வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T14:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு.. பெருமளவு நீர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sluice-gate-nuwara-eliya-gregory-reservoir-opened-1785846409"></link>
            <id>https://tamilwin.com/article/sluice-gate-nuwara-eliya-gregory-reservoir-opened-1785846409</id>
            <summary type="text">நுவரெலியா - கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக
பாதுகாப்பு கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக
பாதுகாப்பு கருதி அதன் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர்
தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக
பெய்துவரும் தொடர் மழையினால் நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கு நீர்வரத்து
திடீரென அதிகரித்தமை காரணமாக வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும்,
அணையின் பாதுகாப்பைக் கருதி, நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர்
நிரம்பியதால் குறித்த வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர்
வெளியேற்றப்படுகிறது.</p><p></p><h2>உரிய நடவடிக்கைகள்..&nbsp;</h2><p><span style="font-size: 14px;">ஞாயிற்றுக்கிழமை இரவு&nbsp;</span>(02)&nbsp;<span style="font-size: 14px;">நுவரெலியா சென்/அன்றுஸ் மற்றும்
ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் சிறு வெள்ளம் ஏற்பட்டு பல குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இரண்டு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி இரத்து செய்யப்பட்டது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5149069e-0b45-460b-9afb-22575c529c56/26-6a71ed766f17c.webp' /></p><p>
நுவரெலியாவில் தற்போதும் நிலவும் சிறிய மழை, காற்று மற்றும் அடர்ந்த பனி
மூட்டம் காரணமாக நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி
நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>எவ்வாறாயினும் நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில்
செல்ல வழக்கம்போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என பொறுப்பான
அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நுவரெலியாவில்
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14c0811-281e-483f-a7c1-13ce787bd197/26-6a71ed7775961.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0f4d7bf-cb21-4de7-b582-8d9803e4149d/26-6a71ed784a46e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-04T14:04:57+00:00</updated>
        </entry>
    </feed>
