<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-12T15:18:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதிபதி நாமல்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-2029-sl-president-archchuna-1789224913"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-2029-sl-president-archchuna-1789224913</id>
            <summary type="text">எத்தகைய தடைகள் வந்தாலும் அல்லது சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச தான் நாட்டின் ஜனாதிபதியாவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எத்தகைய தடைகள் வந்தாலும் அல்லது சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச தான் நாட்டின் ஜனாதிபதியாவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.</p><p>அனுராதபுரத்தில் இன்று(12.9.2026) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p>அத்தோடு, வடக்கில் பிறந்த தாம், என்றும் சிங்கள மக்களுடன் இணைந்தே நிற்பதாகக் குறிப்பிட்டார். </p><p>தற்போதைய நிர்வாகம் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் ஏமாற்றமளிப்பதாகக் விமர்சித்த அவர், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனக் கூறினார்.</p><p>மேலும், தாம் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை என்றும், தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் வலியுறுத்தினார். </p><p>அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளால் தன் மீது பல வழக்குகள் தொடரப்பட்ட போதிலும், தனது கணிப்பின்படி 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவே நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பேற்பார் என அவர் உறுதியளித்துப் பேசினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JdO5NxKUdtg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T15:17:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வரலாறு படைக்க வரும் போராட்டம் திரைப்படம் - யாழில் இன்று இசை வெளியீட்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056"></link>
            <id>https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;“போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா&amp;nbsp;இன்று பிரமாண்டமாக&amp;nbsp; இடம்பெற்றது. இந்த நிகழ்வு, இன்று (12.09.2026) யாழ்ப்பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p><span style="color: inherit; font-size: 1.75rem;"><b>புதிய இணைப்பு&nbsp;</b></span></p><p>“போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா&nbsp;இன்று பிரமாண்டமாக&nbsp; இடம்பெற்றது.</p><p> இந்த நிகழ்வு, இன்று (12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></span></p><p>ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.&nbsp;&nbsp;</p><p> </p><p>

இந்த நிகழ்வு, இன்று(12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h3>இசை வெளியீட்டு விழா</h3><p>

இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் 070 341 4565 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவுச் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03754d7-ee3e-493a-85e7-43abd9f3eda2/26-6aa5128d83584.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், தாங்களும் கலந்து கொண்டு “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்க முடியும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதேவேளை, ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T14:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர விடுத்துள்ள கடும் மிரட்டல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-s-warning-for-criminals-1789221204"></link>
            <id>https://tamilwin.com/article/anura-s-warning-for-criminals-1789221204</id>
            <summary type="text">நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக அரசாங்கம் ஒதுபோதும் செயற்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். 

பாதாள உலகம் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக அரசாங்கம் ஒதுபோதும் செயற்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். </p><p>

பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். </p><p>

பொலநறுவையில் இன்று நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.</p><h2><b>குற்றக் கும்பல்கள்&nbsp;</b></h2><p>

நாட்டில் இயங்கி வரும் ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என அவர் சூளுரைத்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516526da-680e-47d8-a33e-699e2f119a5f/26-6aa55c9457cee.webp' /></p><p>அத்துடன் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் 70இற்கும் மேற்பட்டவர்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
</p><p>
இவ்வாறான நிலையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என சில தரப்பினர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.</p><p> 

எனினும் மரண தண்டனை குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-09-12T14:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையிலான பேரணிக்கு சிஐடி சென்றிருக்கலாம்.. பேரணியில் ஜனாதிபதி அதிரடி உரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-speech-in-polonnoruwa-meeting-1789215235"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-speech-in-polonnoruwa-meeting-1789215235</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;பொலன்னறுவையில்&amp;nbsp; நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குடும்ப உறவுகளுக்கு அப்பால் சட்டம் அன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>பொலன்னறுவையில்&nbsp; நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குடும்ப உறவுகளுக்கு அப்பால் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தினரையும், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "இப்போது அழுவதை விட, திருட வேண்டாம் என்று தந்தை முன்பே சொல்லியிருக்க வேண்டும்.&nbsp;</p><p>தாயாரோ அல்லது பாட்டியோ யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த எவர் மீதும் நமக்கு எந்த அனுதாபமும் இல்லை" என தெரிவித்தார்.
</p><p>
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியை இலக்கு வைத்துப் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும் என்றார்.&nbsp;</p><p>"குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் பிடித்துவிடலாம்" என்றும் குறிப்பிட்டதோடு, இந்தப் பேரணி மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>நமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிறது - நாட்டிற்கு நல்லது என்ற கருப்பொருளின் கீழ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களின் தொடரின் ஒரு பகுதியாக விவசாயிகள் பேரணியொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றதுஇ.&nbsp;</p><p>
பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் இடம்பெறும் இந்த பேரணியில் சற்றுமுன்னர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது உரையை ஆரம்பித்தார்.&nbsp;</p><p>இந்த பேரணியானது, இன்று மாலை 4.00 ஆரம்பமானது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G7JuBD-WIBY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T14:37:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அயர்லாந்திற்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/donald-trump-has-arrived-in-ireland-1789221540"></link>
            <id>https://tamilwin.com/article/donald-trump-has-arrived-in-ireland-1789221540</id>
            <summary type="text">ஈரான் போர் பதற்றங்கள் மற்றும் வரவிருக்கும் அமெரிக்க இடைத்தேர்தல்
பிரசாரங்களுக்கு மத்தியிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள்
விஜயமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போர் பதற்றங்கள் மற்றும் வரவிருக்கும் அமெரிக்க இடைத்தேர்தல்
பிரசாரங்களுக்கு மத்தியிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள்
விஜயமாக அயர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
</p><p>
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் தரையிறங்கிய ட்ரம்ப், அந்நாட்டின் தலைவர்களை
சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, டூன்பெக்கில் உள்ள தனது சொந்த ஓய்வு விடுதியில் நடைபெறவுள்ள
கோல்ஃப் தொடரிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
இந்த விஜயத்தின் போது, அயர்லாந்து பிரதமர் மீஹால் மார்ட்டின் மற்றும்
அந்நாட்டின் ஜனாதிபதி கேத்ரின் கொன்னோலி ஆகியோரை ட்ரம்ப் சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
</p><p>
வர்த்தக உறவுகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் ஈரான் போர் குறித்த
அயர்லாந்தின் கவலைகள் இச்சந்திப்பில் முக்கிய இடம்பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa34fbe-b5e5-41e7-af39-7a32d2202165/26-6aa56068508ec.webp' /></p><p>
</p><p>
முன்னதாக 2019-ஆம் ஆண்டு ட்ரம்ப் அயர்லாந்து வந்திருந்தபோது, அதற்கு எதிராக
அப்போதைய அரசியல்வாதியான கேத்ரின் கொன்னோலி போராட்டம் நடத்தியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
</p><p>
அதேநேரம், ட்ரம்பின் இந்த விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டப்ளின்
மற்றும் டூன்பெக் பகுதிகளில் அமைதி வழி போராட்டங்களுக்கு சர்வதேச அமைப்புகள்
அழைப்பு விடுத்துள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T14:23:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமிங்கலத்தின் ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ambergris-2-suspects-arrested-navy-1789218474"></link>
            <id>https://tamilwin.com/article/ambergris-2-suspects-arrested-navy-1789218474</id>
            <summary type="text">மன்னார்- சௌத் பார் கடற்கரைப் பகுதியில்&amp;nbsp; தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார்- சௌத் பார் கடற்கரைப் பகுதியில்&nbsp; தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(11.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p>&nbsp;67
கிலோ எடையுடைய திமிங்கலத்தின் ஆம்பர் கிரீஸ் பல இலட்சம் பெறுமதியானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச்
சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69d5eb68-f375-4d11-b1de-b8519abf00cb/26-6aa5545fd86c1.webp' /></p><p>சந்தேக நபர்கள் மற்றும் ஆம்பர்
கிரீஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள
அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T13:32:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் மீதான வழக்கு ஒத்தி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-formar-professor-raguram-case-1789213885"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-formar-professor-raguram-case-1789213885</id>
            <summary type="text">யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம்
ரகுராம் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கு, எழுத்துமூல
சமர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம்
ரகுராம் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கு, எழுத்துமூல
சமர்ப்பணத்துக்காக நவம்பர் மாதத்துக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியர் சிவசுப்பிரமணியம்
ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக
இருந்தனர் என குற்றம் சாட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 14
எதிர்மனுதாரர்களுக்கு எதிராக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
இதுதொடர்பான வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்..&nbsp;</h2><p>
</p><p>
அதன் போது, குறித்த வழக்கானது எவ்வித அடிப்படை முகாந்திரமும் அற்ற நிலையில்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது என 1ஆம், 6ஆம் எதிர்மனுதாரர்களின் சட்டத்தரணி
சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, பிரிவு 20இன் கீழ் ஒரு வழக்குத் தொடர வேண்டுமாயின் இரண்டு
நபர்களுக்கு இடையில் உறவொன்று இருந்திருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/524c3f98-8d77-4df5-9212-85237e7f7b11/26-6aa54fcb9a140.webp' /></p><p> அத்தகைய உறவு இருந்து
பின் அந்த உறவு இல்லாமல் போயிருந்து ஒருவருடைய தகவல்களை மற்றையவர் தவறாகப்
பயன்படுத்தினால் இத்தகைய வழக்கைத் தாக்கல்செய்ய முடியும்.
</p><p>
ஆனால், வழக்குத் தொடுநரான ரகுராம், தனக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில்
எவ்வித தனிப்பட்ட உறவும் இல்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். </p><p>இதையே
அந்தப் பெண்ணும் குறிப்பிட்டுள்ளார். எனவே, 20ஆம் பிரிவின் கீழ் இந்த வழக்கை
அணுக முடியாது - என்று சட்டத்தரணி சுவஸ்திகா வாதிட்டார்.

அத்துடன், ஒன்லைன் பயன்பாட்டை நெறிப்படுத்தும் நிகழ்நிலைக் காப்புச்
சட்டத்தின் கீழேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>தள்ளுபடி&nbsp;</h2><p>

வழக்கின் முதலாம் எதிர்மனு தாரருக்கு சமூக வலைத்தளங்கள் எவையும் இல்லை.
ஒன்லைன் தொடர்பான பயன்பாட்டில் இல்லாத அந்த நபருக்கு எதிராக எவ்வாறு
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியும்? எனவே இந்த
வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03bab1ad-c874-4b14-bf4c-08e0babb50e2/26-6aa54fcc57c41.webp' /></p><p>
</p><p>
அதுபோல், 6ஆம் எதிர்மனுதாரரின் சமூக வலைத்தளப் பதிவுக்காகவே அவருக்கு எதிராக
வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால் அவருடைய பதிவுகளில் பேராசிரியர் ரகுராம்
தொடர்பில் எந்தக் கருத்தும் இல்லை. </p><p>எனவே, பேராசிரியர் ரகுராம் தொடர்பில்
எவ்வித தகவலும் இல்லாத அந்தப் பதிவுகள் தொடர்பில் பேராசிரியர் ரகுராம்
வழக்குத் தொடர்ந்ததால், பேராசிரியர் ரகுராம் அவ்வாறு செயற்படுகின்றாரா? எனத்
தற்போது எமக்குச் சந்தேகங்கள் ஏற்படுகின்றன என்றும் சட்டத்தரணி மன்றுரைத்தார்.
</p><p>
அதனை அடுத்து இருதரப்பின் எழுத்துமூல சமர்பணத்திற்காக எதிர்வரும் நவம்பர்
மாதம் 20ஆம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T13:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! 17 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/34-shooting-incidents-17-people-dead-1789217390"></link>
            <id>https://tamilwin.com/article/34-shooting-incidents-17-people-dead-1789217390</id>
            <summary type="text">நாட்டின் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
குறித்த தகவல்கள் பொலிஸ் தலைமையகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>

கடந்த 4ஆம் திகதி பொரலஸ்கமுவயில் 74 வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து கொஸ்கொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு முயற்சியும் சமீபத்திய சம்பவங்களாக பதிவாகியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
கடந்த சில மாதங்களில் பதிவான பல துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளுடன் தொடர்புடையதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63635b26-d321-49b5-bfd4-5ba1a587533a/26-6aa54a704910c.webp' /></p><p>
</p><p>
இதன்படி, நாட்டில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறித்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவை தனிமையில் சந்தித்த ரிஷாட்! பதில் கூற மறுத்த முன்னாள் ஜனாதிபதி - காலம் கடந்து வெளிவரும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rizad-badhudeen-statement-about-namal-1789216974"></link>
            <id>https://tamilwin.com/article/rizad-badhudeen-statement-about-namal-1789216974</id>
            <summary type="text">எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் பல்வேறு கோணங்களில், பல்வேறு இடங்களில் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றில் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் பல்வேறு கோணங்களில், பல்வேறு இடங்களில் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றில் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
கிண்ணியாவில் நேற்று (11.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், என்னை கோவிட் உடையுடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தபோது அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அங்கு வந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85a00a8f-af52-4bd5-9944-5b52f019fc81/26-6aa548d0c3b1b.webp' /></p><h2>கோட்டாபயவுடன் சந்திப்பு</h2><p> அப்போது சபாநாயகர் என்னை அழைத்து, ‘ஜனாதிபதியை சந்தித்து ஏதாவது கூற வேண்டுமென்றால் கூறுங்கள்’ என்றார். 

நான் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றபோது அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு இருந்தார். ‘எங்கே வந்தீர்கள்?’ என அவர் கேட்டார். சபாநாயகர் ஜனாதிபதியைச் சந்திக்கச் சொன்னதாகக் கூறினேன். </p><p>பின்னர் ஒருவரை அழைத்து, ‘இவருடன் சென்று ஜனாதிபதியை சந்தியுங்கள்’ என மகிந்த ராஜபக்ச கூறினார். 

ஜனாதிபதியைச் சந்தித்து, ‘சபாநாயகர் உங்களைச் சந்திக்கச் சொன்னார்’ எனக் கூறினேன். ‘என்ன விடயம்?’ என அவர் கேட்டார். ‘என்னை ஏன் பிடித்து உள்ளே போட்டீர்கள்? சஹ்ரானுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?’ என நேரடியாகக் கேட்டேன். அதற்கு அவர், ‘சொல்ல முடியாது; நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன’ என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ce3457-70ba-4ef0-9fdd-6b42564130a9/26-6aa548d17e796.webp' /></p><p> </p><p>

அப்போது, ‘நாடாளுமன்றத்திலும் உங்களுக்கு சவால் விட்டிருக்கிறேன். உங்களிடத்திலும் சவால் விடுகிறேன். எனக்கும் சஹ்ரானுக்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்துக் காட்டுங்கள்’ என்றேன். ஆனால், அவர் வேறு பக்கம் பார்த்துவிட்டு எந்தப் பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். 

அந்தக் காலத்தில் நான் நாடாளுமன்றத்துக்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்ப்பதற்காக எனது இரண்டு பிள்ளைகளும் காத்திருப்பார்கள்.</p><h2>காத்திருந்த பிள்ளைகள்</h2><p> </p><p>ஆனால், நேற்றைய தினம் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, அப்போது அதிகாரத்தில் இருந்த ஒருவரைப் பார்ப்பதற்காக அவரது பிள்ளைகள் அறையில் காத்திருந்ததை அவதானித்தேன். அவர் யார் என்பதை நான் கூறத் தேவையில்லை. உங்களுக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 

இதுதான் இறை நியதி. கண்ணுக்கு முன்னால் அனைத்தும் தெரிகிறது. இன்று சஹ்ரான் தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e5f7ea6-d845-43c2-b63c-a2dad4777a4a/26-6aa548d2390f5.webp' /></p><p> </p><p>அதேபோன்று, பேருந்தில் கைதிகளை அழைத்துச் சென்றதாகக் கூறி மூன்று மாதங்கள் என்னை சிறையில் அடைத்தார்கள். அந்தக் குற்றச்சாட்டிலிருந்தும் நீதிமன்றம் என்னை விடுவித்தது. 

நான் பல அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளேன். 50க்கும் மேற்பட்ட திணைக்களங்களை வழிநடத்தியுள்ளேன். எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் பல்வேறு கோணங்களில், பல்வேறு இடங்களில் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றில் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-deployed-in-at-vedukkunaari-malai-1789214874"></link>
            <id>https://tamilwin.com/article/police-deployed-in-at-vedukkunaari-malai-1789214874</id>
            <summary type="text">வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p>இன்று (12.09.2026) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட
பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.</p><p>

அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><h2>மறிக்கப்பட்ட வாகனங்கள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e14b99d8-51b2-4199-a046-5a8c752ea44b/26-6aa542abd7ecf.webp' /></p><p> அதேநேரம் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார்
சைக்கிள்கள் பொலிஸாரால் மறித்து, அவர்களை நீண்ட தூரத்திற்கு
நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.

</p><p>
இந்நிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர்
சட்டத்தரணி ந.காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன்
உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடிய நிலையில் அனுராதபுர பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வருகை தந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த பேரணியானது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் தந்தை தலைமை தாங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று குறித்த பேரணியில் கலந்து கொள்வார் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், மீ்ண்டும் அரசியல் களத்தில் இறங்கும் மகிந்த என்னும் பாணியில் தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/loEKA2X6YC0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T12:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-power-cuts-expected-in-coming-months-1789211312"></link>
            <id>https://tamilwin.com/article/no-power-cuts-expected-in-coming-months-1789211312</id>
            <summary type="text">எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

எல் நினோவின் தாக்கம் ஏற்பட வாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>
எல் நினோவின் தாக்கம் ஏற்பட வாய்ப்பிருந்தாலும், நீர்த்தேக்கங்களில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு திட்டத்தை அரசாங்கம் விரைவுபடுத்தி வருவதாலும் இது தொடர்பில் உறுதியளிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், செப்டம்பர் 10ஆம் திகதி நிலவரப்படி, நீர்த்தேக்கங்களில் சுமார் 750 ஜிகாவாட்-மணிநேர (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு நீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58.7% ஆகும்.</p><h2>மழைப்பொழிவு தொடர்பான கணிப்பு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f6cc5e-3e41-4327-afda-3a742ee14a95/26-6aa53ecb65f51.webp' /></p><p> </p><p>

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் மூலம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் சுமார் 1000 ஜிகாவாட்-மணிநேர நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவையான நீர் இருப்பை அரசால் உருவாக்க முடியும்.</p><p> </p><p>

கணிப்புகளின்படி, ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் 1000 ஜிகாவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போதுமான நீர் இருப்பை வைத்திருப்பது அவசியமாகும்.
</p><p>
தற்போது சுமார் 3000 மெகாவாட்டாக (MW) உள்ள உச்சகட்ட மின்சாரத் தேவை, அதிக வெப்பநிலை காரணமாக ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுமார் 3,350 மெகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individual-arrested-by-special-task-force-ice-drug-1789213335"></link>
            <id>https://tamilwin.com/article/individual-arrested-by-special-task-force-ice-drug-1789213335</id>
            <summary type="text">அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் விசேட
அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் விசேட
அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்
அடிப்படையில், கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் மீது இந்தத் திடீர்
சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (11) மாலை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும்
அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சான்றுப்பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd45e841-5772-47cd-ac62-8e5b2982b442/26-6aa53e8d817c2.webp' /></p><p>
</p><p>சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் விருந்து என்ற பெயரில் இளைஞர், யுவதிகளின் வெறியாட்டம் - பின்னணியில் ஆபத்தான மர்மநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627"></link>
            <id>https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627</id>
            <summary type="text">பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்குவதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>பொலிஸாரின் கவனம்</b></h2><p>

இது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9d4d8a-fbe6-4315-9bf1-a1c33ff7a876/26-6aa519f58eb59.webp' /></p><p>இந்த வேலைத்திட்டத்தின் பலனாக தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எதிர்காலத்திலும் இது போன்ற இடங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுபோன்ற விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. </p><p>அவை வலையமைப்புக் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வணிகங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-12T11:38:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-commercial-establishment-in-akkaraipattu-1789211771"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-commercial-establishment-in-akkaraipattu-1789211771</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்
ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, அக்கரைப்பற்று மாநகர சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்
ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இதனையடுத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப்
பிரிவினரின் விரைவான நடவடிக்கையினால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டுள்ளது.
</p><p>
அக்கரைப்பற்று பிரதான வீதி, லங்கா ஸ்ரோருக்கு அருகாமையில் இயங்கி வரும் 'LU
LU' நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அதன் மேல்தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><h2>தீ விபத்து</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின்
தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல்
முழுமையாகக் கட்டுப்படுத்தினர். </p><p>இருப்பினும் இத்தீ விபத்தினால் குறித்த
கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a144a6ff-4565-4800-8be0-6cdad286af6b/26-6aa539514d20d.webp' /></p><p>
</p><p>
தீ விபத்தின் போது உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்த மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கும், அச்சேவையை
அக்கரைப்பற்றுக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய
மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கும் அங்கு கூடியிருந்த
வர்த்தகர்களும் பொதுமக்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:37:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து சிக்கலில் ராஜபக்ச குடும்பத்தினர்.. ஷிரந்தி தொடர்பில் புலனாய்வாளர்களிடம் முக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/siriliya-foundation-shirandhi-rajapaksa-cid-1789209243"></link>
            <id>https://tamilwin.com/article/siriliya-foundation-shirandhi-rajapaksa-cid-1789209243</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் பெறப்பட்ட நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் பெறப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக சீன அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட இயந்திரம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>
இந்த விசாரணையானது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட சிரிலிய அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தரப்பினரை மையமாகக் கொண்டுள்ளது.</p><p>

சட்டமா அதிபர் சார்பில் இவ்வழக்கை மேற்பார்வையிடும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலிப பீரிஸின் வழிகாட்டுதலின் கீழ், சிஐடியின் நிதி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h3>விரைவில் சிஐடி செல்லும்&nbsp;ஷிரந்தி</h3><p> </p><p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவியாக இருந்த ஷிரந்தி ராஜபக்ச, குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை நன்கொடையாக வழங்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு, தேசிய சேமிப்பு வங்கியிடம் கடிதம் மூலம் நிதி கோரியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14bebdda-efa5-4bc2-bdfc-65482c8364f4/26-6aa5358e17f2b.webp' /></p><p> </p><p>அந்தக் கடிதத்தின் அடிப்படையிலும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் வழங்கிய வாய்மொழி உத்தரவின் பேரிலும், 10 மில்லியன் ரூபாய் தொகை சிரிலிய அறக்கட்டளைக்கு விடுவிக்கப்பட்டது. </p><p>இருப்பினும், வங்கியிலிருந்து பெறப்பட்ட அந்த 10 மில்லியன் ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>அந்த நிதியைக் கொண்டு குறிப்பிட்ட இயந்திரத்தை வாங்குவதற்குப் பதிலாக, சீன அரசாங்கத்தால் கடன் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த CT ஸ்கேன் இயந்திரமே மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d0fb50-00ab-4143-bd1f-a5a3025d9825/26-6aa5358f09e04.webp' /></p><p>
</p><p>
மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் அறிவுறுத்தலின் பேரில், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உட்படப் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏற்கனவே இது தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். </p><p>இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவி ஷிரந்தி ராஜபக்ச, அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிற பொறுப்புள்ள அதிகாரிகள் ஆகியோரை நிதி விசாரணைப் பிரிவுக்கு வரவழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/incentive-payments-for-university-students-pm-1789211125"></link>
            <id>https://tamilwin.com/article/incentive-payments-for-university-students-pm-1789211125</id>
            <summary type="text">மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது பிரதமரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு இடம்பெற்றது.</p><p>குறித்த நிகழ்வானது பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (12 ) நடைபெற்றது.
</p><p>
ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) ராஜதுரை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் அவர்களால் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.</p><h2>பாராட்டு நிகழ்வு</h2><p>
</p><p>
இதன்போது 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 மாணவர்களின் கல்வி சாதனைகள் மற்றும் திறமைகளை ஊக்குவிப்பதுடன், சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35be4fb9-3f38-4906-8bcc-a360779eaa3f/26-6aa533d0b6fad.webp' /></p><p>
</p><p>
மேலும் ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்த பிரதேச செயலகங்களைப் பாராட்டும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
</p><p>
இந்நிகழ்வில் சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்தின, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோசான் கமகே, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் என உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:13:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mubarak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலமுனைப் பிரதான வீதியில் கோர விபத்து! குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-on-balamunai-main-road-family-man-dies-1789210615"></link>
            <id>https://tamilwin.com/article/accident-on-balamunai-main-road-family-man-dies-1789210615</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது இன்று(12.9.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>விபத்தில் பாலமுனையை பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை - 08 அக்கரையை
வசிப்பிடமாகவும் கொண்ட&nbsp; 4 பிள்ளைகளின் தந்தையே
சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3938e2e-cace-4eb5-ab26-5b6c57d30573/26-6aa5315ab9115.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் அக்கரைப்பற்று பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:03:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் சோதனை - வசமாக சிக்கிய மத்தள விமான நிலைய விமானப்படை அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/air-force-officers-arrested-at-mattala-airport-1789209103"></link>
            <id>https://tamilwin.com/article/air-force-officers-arrested-at-mattala-airport-1789209103</id>
            <summary type="text">

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலைய 5 விமானப்படை அதிகாரிகள் வசமாக சிக்கியுள்ளனர். 

வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று,...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலைய 5 விமானப்படை அதிகாரிகள் வசமாக சிக்கியுள்ளனர். </p><p>

வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று, அந்த இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பில் 5 விமானப்படை அதிகாரிகள் மற்றும் இரண்டு சிவில் பிரஜைகள் ஆகியோரை மத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2>விசேட சோதனை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c8673d8-8c8c-48f2-8177-d8f333148657/26-6aa52f94d9b3e.webp' />&nbsp; &nbsp;</p><p> </p><p>

குறித்த விமானப்படை அதிகாரிகளால் விமான நிலைய நிலப்பரப்பினுள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை, வளாகத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற வேளையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது சந்தேகநபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த கைதை தொடர்ந்து, வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:55:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் கொலைக்களமாகும் பாதசாரிகள் கடவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seetha-amman-temple-pedestrian-crossing-death-1789208093"></link>
            <id>https://tamilwin.com/article/seetha-amman-temple-pedestrian-crossing-death-1789208093</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் இராமாயணத்துடன் தொடர்புபட்ட வரலாற்று
சிறப்புமிக்க சீதாஎலிய பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ள நுவரெலியா -
பதுளை பிரதான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் இராமாயணத்துடன் தொடர்புபட்ட வரலாற்று
சிறப்புமிக்க சீதாஎலிய பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ள நுவரெலியா -
பதுளை பிரதான வீதியில்
வாகனங்களின் பாவனையும், போக்குவரத்து நெரிசலும் தொடர்ச்சியாக
அதிகரித்துக்கொண்டே செல்கிறது.</p><p> அதற்கு ஏற்றால்போல் ஆலயதிக்கு முன் காணப்படும்
பாதசாரிகள் கடவையில் விதிமுறைகளை மீறுதலும், வாகன விபத்துக்களின்
எண்ணிக்கையும் கூட அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த வீதியில்
பயணிக்கும் வாகனங்கள் மட்டும் விபத்துக்குள்ளாவதில்லை, மாறாக நடைபாதையை
பயன்படுத்தும் பாதசாரிகளும், பாதசாரி கடவையை முறையாக பயன்படுத்தும் அப்பாவி
மக்களும் கூட விபத்தில் சிக்குகிறார்கள்.சில சமயங்களில் உயிரிழக்கவும்
செய்கிறார்கள்.</p><h2>விபத்து</h2><p> தற்போதைய நிலையில், வீதிகளில் நாம் மட்டும் விதிகளை பின்பற்றி
பயணிப்பதால் மாத்திரம் விபத்துக்களை தடுத்துவிட முடியாது என்கிற நிலை
உருவாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a40399dc-0933-4b63-b4ac-64331670bc71/26-6aa52c524f6a7.webp' /></p><p>
</p><p>
இறுதியாக வெள்ளிக்கிழமை (11) மாலை வரலாற்று சிறப்புமிக்க சீதாஎலிய
பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக காணப்படும் பாதசாரிகள் கடவையை
கடக்க முயன்ற ஒருவர் மீது முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் பலத்த காயம்
அடைந்துள்ளார்.</p><p> எனினும் முச்சக்கர வண்டி சாரதி கண்டுகொள்ளாமல் சென்று விட்டதாக
பிரதேச மக்கள் தெரிவித்தனர்.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
குறித்த ஆலயத்திற்கு முன்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள்
அதிகம் வந்து செல்லும் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். அது போலவே வீதி
விபத்துகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33ca4192-492e-451c-9516-c526ba4bf294/26-6aa52c5177d1a.webp' /></p><p> எனவே நுவரெலியா வீதி
போக்குவரத்து பொலிசாரும், வீதிகள் தொடர்பான அமைச்சும் இது தொடர்பில் அதீத
கவனத்தை செலுத்தி இது தொடர்பிலான நடைமுறைக்கு பொருத்தமான திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்! கரைச்சி பிரதேசசபை தவிசாளர் பொதுமக்களுக்கு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-sand-distribution-operations-1789205712"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-sand-distribution-operations-1789205712</id>
            <summary type="text">கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் பொது மக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் பொது மக்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>மணல் விநியோகம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஒரு சீரான ஒழுங்குமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை வட்டக்கச்சி, திருவையாறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட மணல், வரும் திங்கட்கிழமை முதல் இரணைமடுக் குளத்தின் உட்பகுதியிலிருந்து விநியோகிக்கப்படவுள்ளது.</p><p> 

இதற்காக முதற்கட்டமாக சுமார் 3000 கியூப் மணல் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் தங்களது சொந்த வீடமைப்பு, மலசலக்கூடங்கள் மற்றும் கிணறுகள் போன்ற தேவைகளுக்கும், அரச கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் தங்களது திணைக்களங்கள் மூலமாகவும் மணலைப் பெற்றுக்கொள்ள முடியும். (வீட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே மணல் வழங்கப்படும் என்ற செய்தி தவறானது). </p><h2>

தேவையான ஆவணங்கள்</h2><p> மணல் முறைகேடாக வெளியில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மணல் குறிப்பிட்ட இடத்திற்கு தான் கொண்டு செல்லப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரின் ஒப்புதல் கடிதம் அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c48f92a1-425e-4821-b152-68e620383268/26-6aa528b23579d.webp' /></p><p> </p><h2>

விலை விவரம் </h2><p>குறைந்தபட்சம் 40,000 முதல் அதிகபட்சம் 45,000 வரையிலான விலையில் மணலைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. களஞ்சியத்திலிருந்து மணலை ஏற்றிவிடும் பொறுப்பு பிரதேச சபையைச் சார்ந்தது. அங்கிருந்து எடுத்துச் செல்லும் பொறுப்பு விண்ணப்பதாரரைச் சார்ந்தது.</p><p> பாரவூர்தி சங்கத்தினர் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுக்கும் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியாரும் வாகனங்களை ஒழுங்கு செய்ய முடியும்.
</p><p>
ஜனவரி மாதம் முதல் ‘மணல் யாட்’ (Sand Yard) அமைத்து, உழவியந்திரம் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்கள் எளிதாக மணல் பெற புதிய நடைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது.</p><p> 

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகங்கள் இருப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:26:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் கும்பல்களின் புதிய உத்தி! தெஹிவளை குற்றச்செயல்களின் சூத்திரதாரிகள் அடையாளம் - பொலிஸாரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sdig-sajeeva-medhawaththa-statment-1789205044"></link>
            <id>https://tamilwin.com/article/sdig-sajeeva-medhawaththa-statment-1789205044</id>
            <summary type="text">எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவ - கட்டுபெத்த பகுதியில் இன்றைய தினம் (12) நடைபெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>புதிய உத்தி</h2><p>
</p><p>
மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக் கும்பல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக கைக்குண்டுத் தாக்குதல்களை ஒரு புதிய உத்தியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a604a9-f1f3-4bfc-84e1-8e9162456b04/26-6aa523bc5ffd5.webp' /></p><p> </p><p>

அத்துடன், தெஹிவளை-மவுண்ட் லாவினியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையை உலுக்கிய வன்முறைகளின் பின்னணியில் யார்.....! மூளையாக செற்பட்ட நபர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099"></link>
            <id>https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

குற்ற செயல்களில் மூளையாகச் செயற்பட்டவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதிவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><h2><b>தெஹிவளை தாக்குதல்</b></h2><p> 

தற்போது வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825c92c3-b244-4e18-82d4-15bab348c8f8/26-6aa51f4f8e104.webp' /></p><p>நேற்று அதிகாலை தெஹிவளை - கௌடான, சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், இரு மாணவர்கள் குறித்த வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் தந்தையின் கால்கள் காயமடைந்தன.</p><p>காயமடைந்தவரின் சகோதரன், படோவிட்ட அஸங்க என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h3><b>
கைக்குண்டுத் தாக்குதல்</b></h3><p>அதற்கமைய, இந்த கைக்குண்டுத் தாக்குதலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்மள்ளி என்பவர் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1318c143-7470-43a0-82cf-97f65e7fc22a/26-6aa522f512073.webp' /></p><p>கடத்தலுடன் தொடர்புடைய குறித்த நபரின் வீடு மீதே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வீடு மாறியமையால் அதற்கு அருகில் இருந்த சகோதரரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபருக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-12T09:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1789204321"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1789204321</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (12.9.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று (12.9.2026) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (13) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும். </p><p>

குறித்த அறிவிப்பின்படி, அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

அதேபோல், சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69b2df4-f3bd-443a-bb48-b008b7732b7d/26-6aa51b186b124.webp' /></p><p> </p><p>

இதன் காரணமாக, பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கம்! முள்ளிப்பொத்தானையில் கடும் வறட்சி - முற்றாக வற்றிய கிணறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789202092"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789202092</id>
            <summary type="text">எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை
மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை
மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையில் காணப்படுவதா எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
</p><p>நீண்ட காலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாததன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல
கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.</p><p>இதன் காரணமாக சில கிணறுகள் முற்றாக வற்றிய
நிலையில் காணப்படுகின்றன.</p><h2>குழாய் நீர் விநியோகம்</h2><p>
</p><p>
அதேவேளை, குழாய் நீர் விநியோகமும் தொடர்ச்சியாக இடம்பெறாமல், குறிப்பிட்ட
நேரங்களில் மாத்திரமே விநியோகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b5a894-0318-4cb6-9017-a2870d96150b/26-6aa51bafb7c04.webp' /></p><p>இதன் காரணமாக மக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, குடிநீர் தேவைக்காக கிணறுகளை நம்பியுள்ள குடும்பங்கள் வறட்சியால்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களிலும் மழை பெய்யாத
பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:30:30+00:00</updated>
        </entry>
    </feed>
