<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-22T21:41:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் போதைப்பொருள் கும்பல்.. இலங்கையில் பணச் சலவை - அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999"></link>
            <id>https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&amp;nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&amp;nbsp;இந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இவற்றில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LONAVRmADOc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T21:36:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உயர் கல்விக்காக அதிகளவு சர்வதேச மாணவர்கள் விண்ணப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-students-apply-higher-education-uk-1784755713"></link>
            <id>https://tamilwin.com/article/international-students-apply-higher-education-uk-1784755713</id>
            <summary type="text">பிரித்தானிய பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;
அண்மைய த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
அண்மைய தரவுகளின்படி, 1.48 இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவில் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.</p><p> இதில் பெரும்பான்மையாக சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்திய மாணவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>&nbsp;கல்வி தரம்..&nbsp;</h2><p>சீன மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்தாலும், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளங்கலை (Undergraduate) படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2252958a-a78e-4e95-9056-8fb1397b1789/26-6a61378e09d09.webp' /></p><p>இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் படிப்பதற்கான முக்கிய காரணங்கள்:
</p><p><b>உயர்தர கல்வி மற்றும் உலகளாவிய அங்கீகாரம்
</b></p><p><b>வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முன்னேற்றம்</b></p><p><b>
பிரித்தானிய அரசின் கல்வி உதவிகள் மற்றும் விசா சலுகைகள்</b></p><p>இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் படிப்பதன் மூலம் உலகளாவிய போட்டியில் முன்னேறி வருகின்றனர். இது இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்தும் ஒரு நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T21:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-us-strike-deal-kingdom-enrich-uranium-1784752731"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-us-strike-deal-kingdom-enrich-uranium-1784752731</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு உதவும் வகையில், அந்நாட்டிலேயே யுரேனியம் செறிவூட்டும் திறனை வழங்குவதற்கான 30 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு உதவும் வகையில், அந்நாட்டிலேயே யுரேனியம் செறிவூட்டும் திறனை வழங்குவதற்கான 30 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். </p><p> இவ்வொப்பந்தத்தை அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலுக்கு அனுப்ப ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.</p><p></p><h2>யுரேனியம் செறிவூட்டும் மையம்</h2><p>வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் மூலம் சவூதியில் அணு உலைகள் கட்டப்படவுள்ளதுடன், இருநாடுகளின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு அங்கு யுரேனியம் செறிவூட்டும் மையம் அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b34b54-4f01-4c27-ad27-edbefea531b6/26-6a612c086911f.webp' /></p><p> ஈரான் யுரேனியம் செறிவூட்டுவதைத் தடுக்கவே அமெரிக்கா போரில் ஈடுபட்டு வரும் நிலையில், சவூதிக்கு இத்தகைய அனுமதியை வழங்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> மேலும், சர்வதேச அணுசக்தி முகாமையின் தீவிர கண்காணிப்பு விதிகள் இதில் சேர்க்கப்படாததால், சவூதி அணு ஆயுதம் தயாரிக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T20:46:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பயங்கர தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-threatens-target-iran-bridges-power-plants-1784751304"></link>
            <id>https://tamilwin.com/article/trump-threatens-target-iran-bridges-power-plants-1784751304</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழிக்கும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். </p><p>தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களும் இலக்க வைக்கப்படும் எனத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.</p><p></p><h2>ட்ரோன் தாக்குதல்கள்&nbsp;</h2><p>
</p><p>
ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe5da706-6312-42b9-8a67-0d7ddfa1c8e1/26-6a6126918a476.webp' /></p><p> </p><p>இந்நிலையில், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் ஈரானின் ட்ரோன் தாக்குதல்களை இடைமறித்து அழித்துள்ளன.</p><p>

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்த மோதல் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பரப்பரப்பாக உயர்ந்து பீப்பாய் ஒன்று 94 டொலரை எட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T20:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷிதவிற்கு தொடரும் வழக்கு.. மகிந்தவின் சகா 3 இலட்சம் டொலருடன் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-colleague-absconds-300-000-case-yoshitha-1784748476"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-colleague-absconds-300-000-case-yoshitha-1784748476</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp; தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;வெளிநாட்டு தொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்தததாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.&nbsp;</p><p>இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதேநேரம், அவர்களின் தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா தொடர்பிலும் பாரிய நிதிக் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/niK56A5Pubw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T19:55:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதி இளஞ்செழியனின் 1998 - முடிவுகளால் 2026இல் மீண்டும் அதிரும் செம்மணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-judge-ilancheliyan-tamils-1784743346"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-judge-ilancheliyan-tamils-1784743346</id>
            <summary type="text">செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில்,&nbsp;&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட பல உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,&nbsp;செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் ஆய்வு நடவடிக்கைகளை பார்வையிட சென்றிருந்தனர்.&nbsp;</p><p>அதேநேரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுவையும் பெற்றுக்கொண்டனர்.</p><p>ஈழத்தமிழ் மக்கள், தாங்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் இந்த அவலத்திற்கு சர்வதேச நீதி கோரி நிற்கின்றனர். இவ்வாறிருக்கையில் இந்த உயர்மட்ட அதிகாரிகளின் வருகை நீதிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை இங்கு எழுப்புகின்றது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JyFA36TF8eY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T18:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி..! கைது செய்ய ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-s-arrest-in-new-york-suggested-1784730376"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-s-arrest-in-new-york-suggested-1784730376</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்ய வேண்டும் என நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்ய வேண்டும் என நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில்,</p><p>

 சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தின் (ICC) பிடியாணையைச் சுட்டிக்காட்டி நெதன்யாகுவை ஒரு போர்க்
குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a549f32-cd45-4dc4-a54a-dcbaced98317/26-6a60d3b3893e0.webp' /></p><p>

இருப்பினும், கடந்த சில நாட்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் பேசிய மேயர் மம்தானி, சட்டப் பிரிவுகளின்படி நெதன்யாகுவை
கைதுசெய்யும் அதிகாரம் நியூயோர்க் நகரத்திற்கு இல்லை என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p></p><p><b>You may like this..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LLojYHAHDjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T17:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-surrenders-police-killing-disabled-brother-1784737294"></link>
            <id>https://tamilwin.com/article/man-surrenders-police-killing-disabled-brother-1784737294</id>
            <summary type="text">தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளார்.</p><p> </p><p>நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் கையில் கத்தியுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த சந்தேகநபர், தனது சகோதரனைக் கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p></p><h2>பலத்த வெட்டுக்காயங்கள்&nbsp;</h2><p>

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வீட்டில் உள்ள கட்டிலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05919402-8018-4b7f-83cd-b9a293e0f504/26-6a60f27c765bd.webp' /></p><p>ராஜகடலுவ பகுதியைச் சேர்ந்த டுலேன் அசங்க என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p> </p><p>குறித்த சந்தேகநபரே பாதிக்கப்பட்ட நபரைப் பகல் நேரத்தில் பராமரித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிவான் பரிசீலனைகளின் பின்னர் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p> </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T16:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் செலவு 37.5 பில்லியன் டொலராக உயர்வு..! அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/war-related-costs-increase-for-america-1784727345"></link>
            <id>https://tamilwin.com/article/war-related-costs-increase-for-america-1784727345</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை 37.5
பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை 37.5
பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் நிதிக்கழு முன் முன்னிலையாகி சாட்சியமளித்த அவர், பாதுகாப்புத் துறைக்காகக் கோரப்பட்டுள்ள 1.5 டிரில்லியன் டொலர் பட்ஜெட்டில்,
ஈரான் போருக்காக மட்டும் கிட்டத்தட்ட 70 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாகக்
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

கடந்த மே மாதம் அமெரிக்க நிர்வாகம் அறிவித்த 29 பில்லியன் டொலரை விட தற்போதைய செலவு கணக்கீடு 8 பில்லியன் டொலர் அதிகமாகும்.
</p><p>
இதேவேளையில், ஆற்றல் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் அமெரிக்காவிற்கு
ஏற்படும் மறைமுக செலவு 150 பில்லியன் டொலர் வரை செல்லக்கூடும் என மூடிஸ்
அனலிடிக்ஸ் கணித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3bb5092-8972-45c9-a35f-86d626ce29c7/26-6a60c7bb7471b.webp' /></p><p>
போரினால் அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்புகளில் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதாகவும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு
அமைப்புகளின் உற்பத்தியை விரைவுப்படுத்த கூடுதல் நிதி தேவை என்றும் ஹெக்செத்
வலியுறுத்தியுள்ளார்.
</p><h2>
தொடர் தாக்குதலுக்கான இருப்பு பற்றாக்குறை</h2><p>

கடந்த வாரம் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான்
மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 

அமெரிக்க வீரர்கள் இருவர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்
மற்றும் அணுசக்தி தொடர்பான “பிகேக்ஸ் மவுண்டன்” பகுதி மீது கடும் தாக்குதல்
நடத்தப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0adce2bb-7bf4-4f20-b70f-2743a5b8d5d4/26-6a60c7bc3a42b.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இந்த பிரம்மாண்டமான நிதி
கோரிக்கை தெளிவற்றதாக இருப்பதாக ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் கேள்விகளை
எழுப்பியுள்ளனர்.</p><p>

ஈரானும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மீது தொடர்ந்து பதிலடித்
தாக்குதல்களை நடத்தி வருவதால் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T16:48:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் பிரான்சில் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-person-linked-to-epstein-dies-in-france-1784733681"></link>
            <id>https://tamilwin.com/article/another-person-linked-to-epstein-dies-in-france-1784733681</id>
            <summary type="text">மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான
டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான
டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக்
கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
</p><p>
திங்கட்கிழமை மாலை இவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பிற்கான
சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக
நன்டேர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எப்ஸ்டீனுடன் தொடர்பு</h2><p>
</p><p>
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டேனியல்
சியாட்டின் பெயர் சுமார் 2,000 முறை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b94f81c-51b6-4e25-80eb-ea4dd9b29973/26-6a60e489156e3.webp' /></p><p>
</p><p>
பிரெஞ்சு ஊடகங்களின்படி, சியாட் மீது குறைந்தது ஐந்து பெண்கள் பாலியல் துர்நடத்தை மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர்.

இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சியாட்
மறுத்திருந்தார்.
</p><p>
இது குறித்து சியாட்டின் வழக்கறிஞர் மெய்னா அரப்-டிக்ரைன் தெரிவிக்கையில்,
"டேனியல் சியாட் தனது நிரபராதித்தனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார், எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பிரான்சில் உயிரிழப்பு</h2><p>
</p><p>
மேலும், அவர் மீது இதுவரை எந்தவொரு முறையான நீதிமன்ற வழக்குகளும்
தொடரப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eb80e58-d984-48bb-aa73-9882d1b6051a/26-6a60e489e505e.webp' /></p><p>
</p><p>பிரான்சில் எப்ஸ்டீனுடன் தொடர்புடை நபர்களில் உயிரிழக்கும் இரண்டாவது நபர்
சியாட் ஆவார்.</p><p>

இதற்கு முன்னர், 2020இல் கைதுசெய்யப்பட்ட மோடலிங் முகவர் ஜீன்-லூக் புருனல்
என்பவர் 2022ஆம் ஆண்டு தனது சிறை அறையில் தூக்கிட்டுத் தவறான முடிவெடுத்து கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:42:50+00:00</updated>
        </entry>
    </feed>
