<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-18T02:28:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து மக்களுக்கு விசேட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cert-warns-sl-people-1787018335"></link>
            <id>https://tamilwin.com/article/cert-warns-sl-people-1787018335</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளைப் போலப் போலி வேடமிட்டு பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளைப் போலப் போலி வேடமிட்டு பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
குறித்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகளைப் பயன்படுத்தி அதிநவீன முறையில் நிதி மோசடி செய்யப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
மோசடிக்காரர்கள் முதலில் தொலைபேசி அழைப்புகள் அல்லது சமூக ஊடகங்கள் வழியாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி விவரங்களைக் கண்டறிவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a922edaa-f1da-490a-9a04-5a8515673fd8/26-6a83bc612f222.webp' /></p><p>
பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளில் உள்ள பணம் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டது எனக் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதுகுறித்து நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>பொதுமக்களின் பயத்தை அதிகரிக்க, மத்திய வங்கியின் போலி கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் பொறிக்கப்பட்ட ஆவணங்களை மோசடிக்காரர்கள் அனுப்பி வைக்கின்றனர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
விசாரணைக்காகப் பணத்தைச் சரிபார்க்க வேண்டும் எனக் கூறி, ஒரு தனியார் வங்கிக் கணக்கிற்குத் தொகையை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.
</p><p>இந்தக் கணக்கு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரியுடையது எனக் கூறி, வைப்புத் தொகையில் பாதியை முதலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றனர்.</p><p>
பணம் வைப்பு செய்யப்பட்டதற்கான ரசீதை அனுப்பிய பின், பணத்தைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் பழைய கணக்கிற்கே மாற்றுமாறு கோரும் பொலிஸ் கடிதம் ஒன்றை வழங்குவதாகவும் கூறி நம்ப வைக்கின்றனர்.</p><p>
இந்த மோசடிக்காரர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி ரப்பர் முத்திரைகள் போன்றவை கைவசம் உள்ளதால், அவர்கள் மிகவும் திட்டமிட்டு இக்குற்றங்களைச் செய்து வருகின்றனர்.</p><p>
ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியவர்களே இந்த மோசடிகளுக்கு அதிகம் சிக்கக்கூடிய அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் இது குறித்து விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T01:58:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியில் இருந்து விலகினால் அநுரவுக்கு காத்திருக்கும் ஆபத்து! யாராலும் காப்பாற்ற முடியாமல் போகலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-president-anuradha-1786963310"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-president-anuradha-1786963310</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் மீது வழக்குத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் மீது வழக்குத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். </p><p>நேற்றையதினம்(17.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீதித்துறையை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.</p><h2>கடவுள் ஆசீர்வதிக்கட்டும்</h2><p> </p><p>

அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால், உடனடியாக அவருக்கு எதிராக நீதித்துறையை அவமதித்தமைக்காக வழக்குத் தொடர வாய்ப்புள்ளது. </p><p>

இதன்விளைவாக ஜனாதிபதி பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அவற்றிலிருந்து அவரை யாராலும் காப்பாற்ற முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dcd8b6f-cd96-4648-8af9-49ade7a1fb25/26-6a82e8705a1a7.webp' /></p><p> </p><p>

சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு, நாங்கள் மிகக் கவனமாக பேசிய போதும், நீதிமன்ற அவமதிப்புக்காக என் மீது தற்போதைய அரசாங்கம் நான்கு முறை விசாரணைகளை நடத்தியுள்ளது. </p><p>

எனவே, ஜனாபதிபதி பதவியில் இருந்து அநுர குமார விலகியதும் அவர் மீது வழக்குத் தொடரப்படும் சாத்தியக்கூறுகள் மிக அதிகம். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p><br><br><b><i>You may Like This..</i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9aWib39Foq4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><hr><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T01:53:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா பாணியில் தப்பிக்க முயற்சித்த சிரான் பாஷிக்: திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basiks-plan-folied-1787017199"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basiks-plan-folied-1787017199</id>
            <summary type="text">&amp;nbsp;துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான சிரான் பாஷிக், பொலிஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காகச் சினிமா பாணிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான சிரான் பாஷிக், பொலிஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காகச் சினிமா பாணியில் தீட்டிய மாபெரும் திட்டம் விமானம் மாறியதால் கைநழுவிப் போயுள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>சிரான் பாஷிக் தன்னை மாதிரியே உருவ அமைப்பைக் கொண்ட வேறு ஒரு நபரைத் தயார் செய்து, தான் பயணிக்கும் அதே விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரத் திட்டமிட்டிருந்தார்.
</p><p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து உண்மையான சிரான் பாஷிக்குக்குப் பதிலாக அந்த போலி நபர் பொலிஸாரிடம் சரணடைந்து கைதாவது போலவும், அந்த இடைவெளியில் உண்மையான சிரான் பாஷிக் தப்பிப்பது போலவும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
</p><p>போலி நபர் பிடிபடும் நேரத்தில், உண்மையான சிரான் பாஷிக் வேறு ஒரு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி விமான நிலையத்திலிருந்து வெளியேறி, ஐரோப்பிய நாடு ஒன்றுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார். </p><p>இதற்காக அவர் பெருந்தொகை பணத்தைச் செலவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய் காவல்துறை சிரான் பாஷிக்கை நாடு கடத்துவது குறித்து இலங்கை காவல்துறைக்கு அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வழங்கியிருக்கவில்லை.</p><p> 
எனினும், துபாயில் உள்ள ஒற்றர் ஒருவர் மூலம் இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
ஆனால், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த விமானத்திற்குப் பதிலாக வேறு ஒரு விமானத்தில் சிரான் பாஷிக் அழைத்து வரப்பட்டதால், அவர் தயார் செய்து வைத்திருந்த போலி நபரை அந்த விமானத்தில் அனுப்ப முடியாமல் போயுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 
இதனால் குறித்த ஆள்மாறாட்ட சதித்திட்டம் முற்றிலும் தோல்வியடைந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் தனியாக வந்து இறங்கிய சிரான் பாஷிக் பொலிஸாரிடம் நேரடியாகச் சிக்கிக் கொண்டார்.
</p><p>ஈரானுக்கு ஆதரவாக துபாயில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தும் காட்சிகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் துபாய் காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார். </p><p>
இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சிரான் பாஷிச்சை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T01:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளைப் பகுதியில் புலிகளின் முகாமா! பொலிஸ் மா அதிபர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-explains-about-pallai-camp-1787016355"></link>
            <id>https://tamilwin.com/article/igp-explains-about-pallai-camp-1787016355</id>
            <summary type="text">&amp;nbsp;கிளிநொச்சி - பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் மா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிளிநொச்சி - பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>
சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட வனப்பகுதியில் பயங்கரவாத முகாமோ அல்லது வெடிபொருள் உற்பத்தி நிலையமோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>பளைப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் விவசாயப் பண்ணை மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது என்பது கிளிநொச்சிக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a55d24e1-fd2b-4cfc-abda-b72a271bd63c/26-6a83b4a5308a3.webp' /></p><p> இதில் கற்றாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று மாடிகளைக் கொண்ட இந்த ஆடைத் தொழிற்சாலையில் தையல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவரால் நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>
இந்த விவசாயப் பண்ணை மற்றும் தொழிற்சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் பணியாற்றுகின்றனர்.
</p><p>காணியை முறையற்ற வகையில் பயன்படுத்தி அனுமதி பெறாமல் கட்டடங்களை நிர்மானம் செய்தமை தொடர்பில், அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p>
போலித் தகவல்களைப் பரப்பி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்வோர் மீது கடுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அனைத்து கண்டங்களுக்கான மனித உரிமை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜயசேகரவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஓர் இடத்தை பயங்கரவாத முகாம் என சர்ச்சையை கிளப்பும் தரப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T01:28:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் முடிவுக்கு வர உள்ள ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-cid-1786995183"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-cid-1786995183</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய விசாரணைகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தான் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.வழக்கின் முறைப்பாட்டு தரப்பு சாட்சி விசாரணை 547 நாட்கள் நடைபெற்று இருக்கின்றன.</p><p>அந்தக் காலப்பகுதியில் 309 பேரிடம் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பொருட்கள் தடவியல் அறிக்கைகளும் சாட்சியங்களாக இதுவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>மிக விரைவிலே இந்த வழக்கு முடிவுக்கு வர உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp;நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F1l_ko6A4l8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை.. மத்திய வங்கி ஆளுநர் முன்வைத்துள்ள முக்கிய யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inflation-crude-oil-prices-maintained-at-around-1787012060"></link>
            <id>https://tamilwin.com/article/inflation-crude-oil-prices-maintained-at-around-1787012060</id>
            <summary type="text">இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.
</p><p>அவுஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு ஊடக நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நிலைமையை கட்டுப்படுத்தலாம்..&nbsp;</span></p><p>
</p><p>இதன்போது அவர், "இந்த ஆண்டு இறுதி வரை எண்ணெய் விலை சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் நீடித்தால், நாம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும். இருப்பினும், ஏதேனும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டால், அது நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6407947f-7ecf-475b-aad2-9f15e8d5a192/26-6a83a7c24a3c1.webp' /></p><p>இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டிலும் இலங்கையின் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 வீத இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p>
மே மாதத்தில் மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை இந்த நிலைமை சாதகமாக மாறுவதற்குப் பங்களித்துள்ளன.
</p><p>
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்தாலும், இறுக்கமான நிதி நிலைமைகளும் அதிக விலைகளும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது" என்று மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:32:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள்.. வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-bars-to-be-closed-till-28th-1787010993"></link>
            <id>https://tamilwin.com/article/some-bars-to-be-closed-till-28th-1787010993</id>
            <summary type="text">இன்று முதல் 28ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.&amp;nbsp;எடுக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று முதல் 28ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.&nbsp;</p><h2>எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை&nbsp;</h2><p>இன்று (18) முதல் கண்டி எசல பெரஹேராவின் முதல் கும்பல் பெரஹேரா வீதிகளில் வலம் வரவுள்ள நிலையில் பெரஹேரா முடியும் நாள் (28) வரை மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16792a0d-0d58-4264-8997-133e82806eb4/26-6a83a1aa9e087.webp' /></p><p>
எனவே, கண்டி கடவத்த சதாரா மற்றும் கங்காவத்த கோரள பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

மேலும், குண்டசாலை பிரதேச செயலகத்தின் நத்தாரம்போத்த கிராம அலுவலர் கோட்டத்தில், பிரதான சாலையை ஒட்டியுள்ள எரிபொருள் நிலையம் வரையிலான அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வந்த கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை பிரச்சினை விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uniform-issue-at-kalmunai-base-hospital-resolved-1786989848"></link>
            <id>https://tamilwin.com/article/uniform-issue-at-kalmunai-base-hospital-resolved-1786989848</id>
            <summary type="text">அம்பாறை- கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சினை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக&amp;nbsp;இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சினை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக&nbsp;இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 06 ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட 37 மூவின சுகாதார உதவியாளர்களுள் 09 பேர் இஸ்லாமிய பெண்களாவர்.</p><p>அவர்களது சீருடைப் பிரச்சினை தொடர்பாக இன்று சுகாதார அமைச்சு தீர்க்கமான முடிவை அனுப்பியுள்ளது.</p><h2>சீருடை பிரச்சினை</h2><p>
</p><p>அதாவது குறித்த ஒன்பது இஸ்லாமிய பெண் சுகாதார உதவியாளர்களையும் அருகிலுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு கிடைத்திருக்கின்றது. அவர்கள் நாளை விடுவிப்பு செய்யப்படவிருக்கின்றார்கள்.அத்தோடு இந்த பிரச்சினை முடிவுக்கு வருகிறது என்று கூறினார்.</p><p>[DIBNMPஸ</p><p>இதேவேளை, கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை குழுவின் தலைவர் பிரபல சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரம் ராஜனிடம் கேட்ட பொழுது, ஆம் அதற்கான இடமாற்றக் கடிதம் இன்று சுகாதார அமைச்சிலிருந்து கிடைக்கப் பெற்றிருக்கின்றது.</p><p> நாளை அவர்கள் 9 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள் .
இதற்காக ஒத்துழைத்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எமது குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T21:47:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனையில் இலக்கு வைக்கப்பட்ட வைத்தியர் சுகுணன் - ஆதாரத்துடன் சிக்கிய நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hopsital-nurses-appointment-issue-1786987078"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hopsital-nurses-appointment-issue-1786987078</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.&amp;nbsp;இவ்விடயத்தை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>இவ்விடயத்தை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக இனரீதியான பிரசாரம்&nbsp;முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களுக்கான சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து புதிய நியமனம் பெற்றதாக 9 பேர் கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>அரச சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடைகளை அணிந்து வந்து வரும் நிலையில் சுகாதார அமைச்சினால் சிலர் நியமனங்களைப் பெற்று வைத்தியசாலைக்கு சீரூடையின்றி வந்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிற ஊழியர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், இவ்விவகாரத்தில்&nbsp;வைத்தியர் சுகுணனுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இவற்றை விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uwsQ0IbG0x0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-17T21:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரைகளுக்குள் படுகொலை செய்து புதைக்கப்பட்ட தமிழ் மக்கள்: ரவிகரன் எம்.பி சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-people-massacred-and-buried-buddhist-1787001287"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-people-massacred-and-buried-buddhist-1787001287</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ
முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத் தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள
விகாரைகளுக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ
முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத் தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள
விகாரைகளுக்குள்ளும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு
புதைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் சந்தேகம்
வெளியிட்டுள்ளார்.
</p><p>
செம்மணியில் நேற்று
(17.08) நடைபெற்ற நீதியின் ஓலம் - 02' இறுதி நாள் மாபெரும்
ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட
படுகொலைகளுக்கு பன்னாட்டு நீதி தேவை என்பதை வலியுறுத்தியே சிறார்கள், பெண்கள்,
முதியவர்கள் என பெருந்திரளானவர்கள் ஆர்ப்பட்டப் பேரணியினை
முன்னெடுத்திருக்கின்றனர்.</p><h2>ஈழத் தமிழர்கள்</h2><p>

ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி
விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஈழத் தமிழர்களின் கோரிக்கையினை தற்போதைய
ஆட்சியாளர்களாவது ஏற்றுக்கொண்டு, குறித்த படுகொலைகளுக்குரிய சர்வதேச
நீதி விசாரணையை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே
இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26bb8346-96cb-44e4-b3a7-2622af3976e6/26-6a837c2f2c731.webp' /></p><p>
</p><p>
கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் செம்மணிப் புதைகுழி விவகாரம் மூடி
மறைக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன. அவ்வாறு செம்மணி புதைகுழி விவகாரத்தினை
மூடிமறைத்த இனவாத ஆட்சியாளர்களும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும்.</p><p>
இது தொடர்பில் ஏற்கனவே நான் நாடாளுமன்றிலும் வலியுறுத்தியுள்ளேன்.

அத்தோடு தற்போது வடகிழக்கில் மக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள
இராணுவ முகாம்களிலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
சந்தேகங்கள் எமக்கு எழுகின்றது எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T21:25:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் பிரதமரின் அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல்: ஈரானிய எல்லையிலிருந்து ஏவப்பட்டதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drone-attack-on-iraqi-prime-minister-s-office-1786980440"></link>
            <id>https://tamilwin.com/article/drone-attack-on-iraqi-prime-minister-s-office-1786980440</id>
            <summary type="text">பர்ஸானியின் அலுவலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரதானியின் இல்லத்தைக்
குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பர்ஸானியின் அலுவலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரதானியின் இல்லத்தைக்
குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தாக்குதல், இன்று(17.08.2026) ஈராக்கில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற இத் தாக்குதல்களில்
எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என குர்திஸ்தான்
பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
“ஹதீத்-110” ரகத்தைச் சேர்ந்த இரண்டு ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
நேரடி அச்சுறுத்தல்</h2><p>
இந்த தாக்குதலானது ஈரானிய எல்லைப் பகுதிக்குள் இருந்தே ஏவப்பட்டதாக குர்திஷ்
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், ட்ரோன்கள் இலக்குகளைச் சரியாகத் தாக்கியதா என்பது குறித்த தெளிவான
விவரங்கள் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1537e31a-d7aa-4eef-b909-111a6074d673/26-6a83296773130.webp' /></p><p>

இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரதமர் மஸ்ரூர் பர்ஸானி, இது
சட்டவிரோதமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான ஒரு நடவடிக்கை எனக்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும்
விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய குர்திஷ் எதிர்ப்பு
அமைப்புகளுக்கு ஈராக் பிராந்தியம் புகலிடம் அளிப்பதாக ஈரானும் அதன் ஆதரவு
ஆயுதக் குழுக்களும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றன.
</p><p>
எனினும், அண்டை நாடுகளுக்கு எதிராகத் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்த
அனுமதிக்கவில்லை என ஈராக்கிய குர்திஷ் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T20:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advanced-level-exam-student-passes-away-1786981013"></link>
            <id>https://tamilwin.com/article/advanced-level-exam-student-passes-away-1786981013</id>
            <summary type="text">யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர்&amp;nbsp; பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.8.2026) இடம்பெற்றுள்ளது.இதன்போது அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர்&nbsp; பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>சிகிச்சை</h2><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை
எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a721f3af-a9e3-4f6b-a13d-0b89a00aa7fd/26-6a832d8ada213.webp' /></p><p> </p><p>இதன்போது அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.பின் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.</p><p>அதன்பின்னர் மீண்டும் 12 ஆம் திகதி
உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெற்றார்.</p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
பின்னர் நேற்றிரவு (16) உணவு அருந்திவிட்டு இருந்தவேளை வலிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து
விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/967c780f-b90b-4cd4-9440-da0f2c9e3585/26-6a832d8b912ee.webp' /></p><p>
</p><p>
அவரது மரணம் சம்பந்தமான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா
மேற்கொண்டார்.
</p><p>
உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் குறித்த மரணத்துக்கான காரணம்
கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T20:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deshabandu-tennakoon-drugs-crime-1786925811"></link>
            <id>https://tamilwin.com/article/deshabandu-tennakoon-drugs-crime-1786925811</id>
            <summary type="text">பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் &#039;சோல் பீச்&#039; (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் 'சோல் பீச்' (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கியதில் மறைக்கப்பட்ட உண்மை கதையொன்றை புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க வெளியிட்டுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்களில்,</p><p>சவேந்திர சில்வாவின் கோரிக்கையின் அடிப்படையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்தார் என்று குறித்த ஹோட்டலின் முகாமையாளர் ரிபா காதர் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
</p><p></p><h2>பழிவாங்கிய சம்பவம்</h2><p>இருப்பினும், இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டாகும். அதாவது தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய போது ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கோட்டுள்ளார். அதை கொடுக்க மறுத்ததால் பழி தீர்க்கும் முகமாக தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gKFV72M95uY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின்னர், அவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊடக பிரசாரத்திற்கு தேவையான கூட்டங்கள் அனைத்தும் 'சோல் பீச்' ஹோட்டலிலேயே நடைபெற்றன.
</p><p>இந்த பிரசாரங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் 'சோல் பீச்' ஹோட்டலே வழங்கியது. அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதும், "இதை நிரந்தரமாக்கிக்கொள்ள எனக்கு இவ்வளவு தொகை பணம் வேண்டும்" என்று கேட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d3c367-cb7b-41c4-8e3d-2cdd12638cd7/26-6a8252f52914c.webp' /></p><p>அதற்கு ஷிரான் பாஷிக், "இந்த நேரத்தில் அவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேசபந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனை நிராகரித்த பின்னர் தனக்கு உதவிய நபரை பழிவாங்குவதற்காக இந்த ஹோட்டலை இடித்தார். தான் கேட்ட பணம் கிடைக்காததால் பழிவாங்கும் நோக்கில் இதைச்செய்தார்.</p><p>அக்காலத்தில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் (OIC) என பொலிஸில் உள்ள அனைவரும் வந்து சாப்பிட்டு, குடித்தது இந்த 'சோல் பீச்' ஹோட்டலில் தான். இது அனைவருக்கும் தெரிந்த விடயம். </p><p>ஆனால், அதற்கு அடுத்ததாக உள்ள 'பரகுடா' (Barracuda) உணவகத்தில் பொலிஸாரால் சும்மா ஒரு தேநீர் கூட குடிக்க முடியாது என்றும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T20:52:07+00:00</updated>
        </entry>
    </feed>
