<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-02T04:32:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785643314"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785643314</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>மடுமாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்க செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/944c6d32-f82a-4633-a32b-df4e022e6973/26-6a6ec3481a7d2.webp' /></p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T04:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-misniter-explains-about-mahara-prison-1785643810"></link>
            <id>https://tamilwin.com/article/justice-misniter-explains-about-mahara-prison-1785643810</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப் பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப் பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையானது, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவம் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாகும். ஆனால், நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலாகும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/decfda42-e872-4c5e-afbc-a95e85df3a44/26-6a6ec323ed054.webp' /></p><p>
</p><p>சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதை முற்றாகக் கட்டுப்படுத்தியமையே நேற்றைய மோதலுக்கு பிரதான காரணமாகும். போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளே இந்த மோதலைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் சதிமுயற்சி நடவடிக்கைகள் சில இடம்பெற்றுள்ளன. நேற்று இரவு கைதிகள் சிலர் பல இடங்களில் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியோட முயற்சித்துள்ளனர். எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T04:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதல் வரிசையின் பின்னணி அடுத்து கோட்டாபய ராஜபக்ச! சிக்கவுள்ள பல சூத்திரதாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்&nbsp;</h2><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b471b052-5321-4125-b43d-b5872692edeb/26-6a6ec0bab42e6.webp' /></p><p>
</p><p>
நேற்றிரவு ஆரம்பமான தொடர் கைது நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் சிக்க இன்னும் பலர் வரிசையில் இருப்பதாகவும், இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகத் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

கடமை தவறியமை மற்றும் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் பிரதானிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொறுப்புக்கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, பிரதான புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே, தேசபந்து தென்னகோன் மற்றும் அசாத் மௌலானா உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் ஆட்சியைத் தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலேவை அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக்கி, அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17ddcbb-c6dd-45f8-bfa0-58241f14dc51/26-6a6ec0bb628bc.webp' /></p><p> </p><p>

இதன் மூலம் ஆதாரங்களை அழிப்பதற்கும், ஷானி அபேசேகர போன்ற நேர்மையான புலனாய்வு அதிகாரிகளைப் பழிவாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>கடந்த வாரம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், சதித்திட்டம் ஒன்றுக்கு துணையாகச் செயற்படும் எந்தவொரு அரச அதிகாரிக்கும் கிடைக்கும் அதிகபட்ச தண்டனை என்னவென்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் கௌரவிக்கின்றோம்.&nbsp;&nbsp;</p><p> </p><p>

இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்த இராணுவ மற்றும் அரசியல் சூத்திரதாரிகள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் சட்டத்தின் முன் தண்டனையைப் பெறுவது உறுதி. அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது என்றும், அநுர குமார தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.</p><p>புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி&nbsp;கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய விலங்கு நலச் சட்டம் அறிமுகம்: தண்டனைகள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-animal-welfare-law-1785642613"></link>
            <id>https://tamilwin.com/article/new-animal-welfare-law-1785642613</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் வழிகாட்டலின் கீழ், விலங்குகள் மீதான கருணை, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அவற்றின் நல்வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் இப்புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>
மத அல்லது கலாச்சார நிகழ்வுகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும், விலங்கின் கால்களில் முள் வளையங்கள் அணிவிப்பது, சங்கிலியால் கால்களை கட்டுவது மற்றும் கம்பிகளால் கட்டுவது போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><p>
விலங்குகளை மிதமிஞ்சி நடக்க வைப்பது, அதிக சுமை ஏற்றுவது, சித்திரவதை செய்வது, வேதனையை ஏற்படுத்தும் வகையில் கயிறு அல்லது சங்கிலியால் கட்டிப்போடுவது ஆகியவை குற்றமாகும்.
</p><p>விலங்குகளை கொண்டு செல்லுதல், அடைத்து வைத்தல், விற்பனை செய்தல், குட்டிகளைப் பெருக்குதல், அவற்றுக்கான உணவு மற்றும் பாதுகாப்பு அளித்தல் போன்ற விவகாரங்களில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
</p><p>விலங்குகளை கொடூரமாக நடத்துதல் அல்லது கொடூரமாகக் கொல்லுதல், கர்ப்பிணி விலங்குகளைக் கொல்லுதல், பொறிகளை வைத்து விலங்குகளைப் பிடித்தல், பறவைகளை சட்டவிரோதமாக கூண்டில் அடைத்து வைத்தல், நோயுற்ற விலங்குகளை பொது இடங்களில் இறக்க விடுதல், தகுதியற்ற நபர்கள் விலங்குகளுக்குச் சிகிச்சை அளித்தல், சட்டவிரோத வேட்டையாடுதல், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விலங்குகளை விற்பனை செய்தல் மற்றும் பொது இடங்களில் விலங்குகளை விற்பனை செய்தல் போன்றன சட்டவிரோதமான செயல்கள் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இப்புதிய சட்ட விதிகளை மீறுவோருக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>
மேலும், விலங்குகளின் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காக விலங்கு நல ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. 
இதில் உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் 11 பேருடன், அமைச்சரினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளும் இடம்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T03:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றநிலை! பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curfew-ragama-police-station-area-1785636269"></link>
            <id>https://tamilwin.com/article/curfew-ragama-police-station-area-1785636269</id>
            <summary type="text">புதிய இணைப்புமஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அமைதியை பேணுவதற்காக பொலிஸ் ஊர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அமைதியை பேணுவதற்காக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப்பொலிஸ் அத்தியாட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய, மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலை பதற்றநிலை காரணமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p>

மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ராகம பொலிஸ் பிரிவில் நேற்று இரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>மறு அறிவிப்பு வெளியாகும் வரை ஊரடங்கு உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
மறு அறிவிப்பு வெளியாகும் வரையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a62aecf3-f6bd-40a9-adca-9fc0d8455372/26-6a6eac1a4760d.webp' /></p><p>

இதன்படி, மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும் பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே அப்பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அவசர தேவைகள் இருப்பின் அருகிலிருக்கும் பொலிஸ் பிரிவை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>மஹர சிறையில் நிலவிய பதற்றமான சூழல் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், அனைத்து கைதிகளையும் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T03:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் பெயரில் பெரும் பணமோசடி - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scammers-deputy-minister-target-public-fake-calls-1785634276"></link>
            <id>https://tamilwin.com/article/scammers-deputy-minister-target-public-fake-calls-1785634276</id>
            <summary type="text">கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் விளிப்புடன் இருக்குமாறு பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தல்</h2><p>
இந்த அறிவிப்பின்படி, ஒரு தனிநபர் அல்லது குழு, பிரதி அமைச்சராக நடித்து தொலைபேசி அழைப்புகள் செய்து பணம் கோருவதோடு, பிற மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/852165c4-1c4f-4565-82e0-dba23e2d5d61/26-6a6eafb08a3c5.webp' /></p><p>

அத்தகைய நபர்களுக்கு எந்த பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும், ஆவணங்களையும் வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளை பெறுபவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T02:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல்! சிறையிலிருந்து தப்பிக்க கைதிகள் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-attempt-to-escape-from-mahara-jail-1785635556"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-attempt-to-escape-from-mahara-jail-1785635556</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

சிறைச்சாலைக்குள் கைதிகள் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொள்வதாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சுவரை உடைக்க கைதிகள் முயற்சிப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;</p><h2>சிறையிலிருந்து தப்பிக்க&nbsp;முயற்சி </h2><p>
</p><p>
இதற்கிடையில், கைதிகள் அடங்கிய மற்றொரு குழுவினர் 15 அடி உயரத்தகட்டை அகற்றிவிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cd280f4-5bb5-402f-ad82-f51fe915516c/26-6a6ea3bfd32a2.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் பதற்றகரமான நிலைமையால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> அத்துடன் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இவ்வாறான பின்னணியில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் சிறைச்சாலை முன்பாகவும், சிறைச்சாலையை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T01:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர கண்காணிப்பின் கீழ் மஹர சிறைச்சாலை.. தற்போதைய நிலவரம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-riot-defense-ministry-cid-stf-1785632982"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-riot-defense-ministry-cid-stf-1785632982</id>
            <summary type="text">மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மத்தியில் அமைதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்கள் மத்தியில் அமைதியைப் பேணுவதற்காக, ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.</p><p>

நேற்று (01) மதியம், கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக, மஹர சிறையில் கலவரம் வெடித்தது.</p><p></p><h2>பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு&nbsp;</h2><p>இதன்போது, அங்கு, 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஒரு கைதி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4365699-3212-46e3-b584-0302100f4f4c/26-6a6e9eda635b3.webp' /></p><p>தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த நேற்றிரவு சிறப்பு அதிரடிப் படை, இராணுவம் மற்றும் பொலிஸாரை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கலவரத்தைக் கண்காணிக்க விமானப்படையும் பெல் 412 விமானத்தையும் ஒரு ட்ரோனையும் ஈடுபடுத்தியது.</p><p>இந்நிலையில், நேற்று பகல், கைதிகள் தலைமைச் சிறை அதிகாரியின் அலுவலகத்திற்கு தீ வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>
</p><p>
மேலும் நேற்று மதியம், கைதிகளைப் பார்க்க உறவினர்கள் மஹர சிறைக்கு சென்ற நிலையில், ஆனால் அவர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.</p><p></p><h2>பதற்றநிலை&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, உறவினர்கள் மஹர சிறைக்கு முன்பாகக் கூடியதாகவும் அங்கு அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c213df6-61dd-4777-90eb-b36294f432c8/26-6a6e9edb2c6fc.webp' /></p><p>
சிறையிலிருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்ற சில ஒலிகளைக் கேட்ட பிறகு, கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் உள்ளூர் மக்களும் பொலிஸார் தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்றுள்ளனர். </p><p>பின்னர், பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும், கைதிகளைப் பார்க்க சென்ற சில உறவினர்களும் உள்ளூர் மக்களும் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதற்கிடையில், தற்போதைய சூழ்நிலையில், மஹர பகுதியில் உள்ள பல பொலிஸ் அதிகார வரம்புகளில் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸார் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>தீவிர கண்காணிப்பு&nbsp;</h2><p>

அமைதியைப் பேணுவதற்காகவே இந்த நடவடிக்கை என்று பொலிஸார் தெரிவித்ததோடு, அதன்படி, A, 246/கண்டலியத்த பாலுவ - மேற்கு, 246/C கண்டலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/G தம்புவ ஆகிய கிராமப்புற சேவைப் பகுதிகளில் இந்த ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd2b85a0-e9e2-4b82-b948-dbe592046d38/26-6a6e9edbd8b82.webp' /></p><p>

இதற்கிடையில், பதற்றமாக இருந்த மஹர சிறைச்சாலையின் நிலைமையைக் கண்காணிப்பதற்காக, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோரும் நேற்று இரவு சிறை வளாகத்தைப் பார்வையிட்டனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக, கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் கலந்தாலோசித்ததாகவும், சிறைச்சாலைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர், ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.</p><p>

சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T01:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது விவகாரம்.. சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ag-approves-constitutional-amendment-judges-1785630789"></link>
            <id>https://tamilwin.com/article/ag-approves-constitutional-amendment-judges-1785630789</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்குச் சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். </p><p>1983ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நீதித்துறைச் சட்டமும் திருத்தப்பட்டு, கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதும் உயர்த்தப்பட இந்த முன்மொழிவு வைக்கப்பட்டது.&nbsp;</p><p> இந்த புதிய திருத்தங்களின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு 65 ஆகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 63ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு 62ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டது.</p><p></p><h2>வெளியிடப்பட்ட வர்த்தமானி&nbsp;</h2><p> </p><p>சட்டமா அதிபரின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்தச் சட்டமூலங்கள் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதுடன், வர்த்தமானியில் வெளியாகி 14 நாட்களுக்குள் பொதுமக்கள் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527b47b1-5c8c-4192-ad22-f783ea2fc2ac/26-6a6e932cc4534.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றங்களில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையைப் பெற்று வழக்குகளை விரைவாக முடிப்பதே இதன் முக்கிய நோக்கம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். </p><p>வளர்ச்சியடைந்த நாடுகளில் 1 மில்லியன் மக்களுக்கு 40 முதல் 60 நீதிபதிகள் வரை உள்ள நிலையில், இலங்கையில் 20 நீதிபதிகளே உள்ளனர் என்றும், இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> எனினும், நீதிபதி பணியிடங்களை நிரப்பாமல் திடீரென ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது வெளிப்படைத்தன்மையற்றது என்றும், இதற்கு மக்கள் தீர்ப்பு தேவைப்படலாம் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய குற்றம் சாட்டியுள்ளார். </p><p>ஆனால், இதற்கு மக்கள் தீர்ப்பு தேவையில்லை என அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T00:53:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை நிலவரம்.. நீதி அமைச்சருக்கு அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appeal-cprp-situation-mahara-prison-1785626711"></link>
            <id>https://tamilwin.com/article/appeal-cprp-situation-mahara-prison-1785626711</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலைக் கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மஹர சிறைச்சாலைக்குள் உடனடியாக உட்பிரவேசிக்குமாறு மனித உரிமைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலைக் கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மஹர சிறைச்சாலைக்குள் உடனடியாக உட்பிரவேசிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; </p><p>கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPRP) இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
</p><p>குறித்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மஹர சிறையில் மிகவும் கடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பல கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><p></p><h2>உடனடி தலையீடு&nbsp;</h2><p>
</p><p>
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், காயமடைந்தவர்களுக்கு உதவ மற்ற கைதிகள் வருவதைத் தடுப்பதாலும், நிலைமை மிகவும் கடுமையானதாகவும் மனிதாபிமானமற்றதாகவும் உள்ளது என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9edb4de9-749b-4258-b36a-73ca97505e31/26-6a6e83b1e91c7.webp' /></p><p>
</p><p>
நிலைமையைக் கட்டுப்படுத்தவும் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும் வளாகத்திற்குள் நுழைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருப்பதால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒரு குழுவை எவ்வித தாமதமுமின்றி மஹர சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அக்குழு கோருகிறது.
</p><p>
கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு, இது தொடர்பாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
மேலும், சிறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுக்கிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T00:02:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணி நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதர பணி உதவியாளர்கள் முழு விபரங்களை கோரிய நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/389-healthcare-workers-appointments-were-cancelled-1785596274"></link>
            <id>https://tamilwin.com/article/389-healthcare-workers-appointments-were-cancelled-1785596274</id>
            <summary type="text">வடமாகாண சுகாதரபணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த
நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு
மேன்முறையீட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமாகாண சுகாதரபணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த
நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு
மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
இந்த உத்தரவானது நேற்றைய தினம்(31.07.2026) வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுகாதார பணி உதவியாளர்கள்</h2><p>
</p><p>
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை
தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 389 சுகாதார பணியாளர்களுக்கு வடமாகாணத்தால்
நடத்தப்பட்ட இரண்டு நேர்முகத் தேர்வுகளின் பின்னர் சுகாதார சேவை உதவிப்
பணியாளர்கள் என்ற அடிப்படையில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல்
நடைமுறைப்படுத்தப்படும் வகையில் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அன்றைய தினமே அவர்களை அவர்களது பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் பணிமனையில் அறிக்கையிட்டு குறித்து ஒதுக்கிய சேவை நிலையங்களில்
கடமைகளை ஆரம்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6ffaf83-6778-4094-8e83-d543152df50a/26-6a6e0e85ebcfc.webp' /></p><p>

நியமனத்தைப் பெற்ற 389 சுகாதார பணியாளர்கள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
25ஆம் திகதியன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு
அறிக்கையிடச் சென்றபோது அவர்கள் தற்போது பணியை ஆரம்பிக்க முடியாது என்றும்,
அந்த நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் வாய்மூலமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்பின்னர், குறித்த நியமனம் திறைசேரியின் சுற்றறிக்கையின் அடிப்படையில்
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் அந்த சுற்றறிக்கையானது மீளவும்
திறைசேரியின் செயலாளரால் 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதியன்று
வெளியிடப்பட்ட சுற்றறிக்கையால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p>

இதையடுத்து தமக்கு நீதிகோரி குறித்த சுகாதார பணியாளர்கள் வழக்குத்
தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 10ஆம் திகதியன்று மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது குறித்த மனுதாரர்களான சுகாதார பணி
உதவியாளர்கள் தங்களது நியமனத்துக்கான சட்டபூர்வமான உரித்துடையவர்கள் என்பதை
மன்று ஏற்றுக்கொண்டுள்ளது.</p><p> 

இதையடுத்து ஆட்சேபனைக்காக சட்டமா
அதிபர் திணைக்களத்துக்கு கடந்த 22ஆம் திகதி திகதியிடப்பட்டதுடன் நேற்று
விவாதத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1f8400e-f02f-49a1-b3fa-8c75e00d0eef/26-6a6e0e869d333.webp' /></p><p>
</p><p>
நேற்று வழக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான
ரணித்தா ஞானராஜா, மரியதாஸ் யூட் டினேஸ் மற்றும் சட்டத்தரணி ஜோர்ஜ்
இம்மானுவேல், சட்டத்தரணி ஜெயபாலசிங்கம் நிஷாந்தன் ஆகியோர் சட்டத்தரணி
தியாகலிங்கம் டிலக்சனாவின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னிலையாகியுள்ளனர்.</p><p>பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயோமி கஹவிட
முன்னிலையாகியுள்ளார்.

அத்துடன் வடமாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்து மேலதிக செயலாளர்
சுரேந்திரனும் மன்றில் தோன்றியிருந்தார். </p><p>

இதன்போதே, வடமாகாண சுகாதர பணி
உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் இரத்துச்
செய்யப்பட்ட 389 பேரினதும் முழுமையான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு
நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் எதிர்வரும் 24ஆம்
திகதிக்கு வழக்குத் தவணையிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T23:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-holds-memorial-for-journalist-nilaksan-1785624792"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-holds-memorial-for-journalist-nilaksan-1785624792</id>
            <summary type="text">சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு
நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.இந்த நினைவஞ்சலி நிகழ்வானது நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு
நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>இந்த நினைவஞ்சலி நிகழ்வானது நேற்று(01.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h3>19ஆவது ஆண்டு நினைவேந்தல்</h3><p>
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர் நிலக்சனின்
உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சகாதேவன் நிலக்சனின் பெற்றோர், உறவினர்கள்,
நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து நிலக்சனை நினைவுகூர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f69858c-8ebe-42e2-949f-dfcf24503d4f/26-6a6e7b2c84ad8.webp' /></p><p>

யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடகக்கற்கை மாணவனும் சாரளம்
சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன்
நிலக்சன், 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p>

தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அதிகாலை 5 மணியளவில் ஆயுததாரிகள்
நிலக்சனை வீட்டிற்கு வெளியே அழைத்து, அவரது பெற்றோர் முன்னிலையில் துப்பாக்கிப்
பிரயோகம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T23:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் சீன இராணுவத்தின் கடற்படைப் போர் விமானங்கள் மூலம் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chinese-navy-holds-drills-in-scarborough-shoal-1785623650"></link>
            <id>https://tamilwin.com/article/chinese-navy-holds-drills-in-scarborough-shoal-1785623650</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் கடல் பகுதிக்கு அருகில், சீன இராணுவமும் சீனக்
கடலோரக் காவல்படையும் இணைந்து கூட்டு வான் மற்றும் கடற்படைப் போர் பயிற்சிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் கடல் பகுதிக்கு அருகில், சீன இராணுவமும் சீனக்
கடலோரக் காவல்படையும் இணைந்து கூட்டு வான் மற்றும் கடற்படைப் போர் பயிற்சிகளை
மேற்கொண்டுள்ளதாகச் சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

சீனா 'ஹுவாங்யான் தாவோ' என்றும், பிலிப்பைன்ஸ் 'பஜோ டி மசினோக்' என்றும்
அழைக்கும் இப்பகுதியில் இந்தப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>இராணுவப் பயிற்சிகள்</h2><p>

பிராந்திய அமைதியைக் குலைக்கும் 'சில நாடுகளின்' நடவடிக்கைகளுக்கு எதிரான
அவசியமான பதிலடி இதுவெனச் சீனா தெரிவித்துள்ளது.</p><p>

பிலிப்பைன்ஸ் தரப்பு நிர்ணயித்த பிராந்தியக் கடல் எல்லை அடிப்படைக் கோடுகள்
சட்டவிரோதமானவை எனச் சீனா குறிப்பிடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fed14a94-4bca-43ad-a293-b7c5a8cbe14a/26-6a6e74e5a3415.webp' /></p><p>

மேலும், 2025 செப்டெம்பரில் நிறுவப்பட்ட 'ஹுவாங்யான் தீவு தேசிய இயற்கை
காப்பக' நிர்வாகத்திற்கான புதிய கொள்கையைச் சீனா வெளியிட்டுள்ளது.</p><p>

இதன்படி, அனுமதியற்ற கடற்றொழில், சுரங்கத் தொழில்கள், பவளம் அல்லது
மாபெரும் கிளிஞ்சல்களை அகற்றுதல் போன்ற அனைத்துச் செயல்பாடுகளும் தடை
செய்யப்பட்டுள்ளதுடன், மீறுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T23:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெர்லின் தாக்குதலுக்கு மத்தியில் ஆம்ஸ்டர்டாமில் கோலாகலமாக நடைபெற்ற ஊர்வலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/amsterdam-hosts-grand-march-amid-berlin-attacks-1785623073"></link>
            <id>https://tamilwin.com/article/amsterdam-hosts-grand-march-amid-berlin-attacks-1785623073</id>
            <summary type="text">நெதர்லாந்தின்
ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற உலகப் பெருமை நிகழ்வின் பிரதான
கால்வாய் ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள்
உரிமைகளுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்தின்
ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற உலகப் பெருமை நிகழ்வின் பிரதான
கால்வாய் ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள்
உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துள்ளனர்.</p><p>
</p><p>
வானவில் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான படகுகள் கால்வாய்களில்
வலம் வர, கரைபுரண்டோடிய மக்கள் உற்சாகமாக ஆரவாரித்தனர்.</p><p></p><h2>கால்வாய் ஊர்வலம்</h2><p>ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற Pride ஊர்வலத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலின் சோகம் விலகாத நிலையிலும் இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>
நெதர்லாந்தின் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை பிரதமரான ரொப் ஜெட்டன் (Rob
Jetten) இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b28cd0a4-1ac2-4683-95a2-e9d1f3284174/26-6a6e7287accaf.webp' /></p><p>பெர்லின் தாக்குதலைத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாமில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை
மற்றும் ரகசியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
</p><p>
பயமுறுத்துவதன் மூலம் மக்களை முடக்க நினைக்கும் பயங்கரவாதத்திற்குத் தலைவணங்க
மாட்டோம் என்றும், இந்தத் தாக்குதல்கள் பெருமை (Pride) விழாக்களின் அவசியத்தை
மேலும் உலகிற்கு உணர்த்துவதாகவும் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உறுதியளித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T23:08:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தாக்குதல்களால் மின்சாரமின்றித் தவிக்கும் கிரிமியா மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crimeans-suffer-outages-due-to-ukraine-attacks-1785622289"></link>
            <id>https://tamilwin.com/article/crimeans-suffer-outages-due-to-ukraine-attacks-1785622289</id>
            <summary type="text">உக்ரைன் நடத்திவரும் தொடர் தாக்குதல்களால் மின்சாரம்
துண்டிக்கப்பட்டு அவதிப்படும் கிரிமியா தீபகற்பத்தின் மஸ்ந்திரா நகரில்,
மக்கள் சூடான உணவைப் பெற்றுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் நடத்திவரும் தொடர் தாக்குதல்களால் மின்சாரம்
துண்டிக்கப்பட்டு அவதிப்படும் கிரிமியா தீபகற்பத்தின் மஸ்ந்திரா நகரில்,
மக்கள் சூடான உணவைப் பெற்றுக்கொள்வதற்காக வீதிகளில் நீண்ட வரிசையில்
காத்துநிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><p>

ரஷ்யா கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து இணைத்துக் கொண்ட கிரிமியா
நகரில், மின் நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்களால் எரிபொருள்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>உக்ரைனின் தொடர் தாக்குதல்</h2><p>
</p><p>
இதனால் மஸ்ந்திரா நகராட்சி நிர்வாகம் சார்பில் பெருமளவில் சமையல் வேலைகள்
செய்யப்பட்டு, தினசரி சுமார் 200 பேருக்கு இலவசமாகச் சூடான உணவுகள்
வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff96f46-b95f-42d7-8dc7-4edac61199e5/26-6a6e700a52b94.webp' /></p><p>பல நாட்களாக மின்சாரமின்றித் தவித்த தங்களுக்கு இந்தச் சமையல் மையங்கள்
பெரிதும் ஆறுதலாக உள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தனது நாட்டின் நகரங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ரஷ்யா மற்றும்
அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்குள்ளும் போரைக் கொண்டு செல்வதாக
உக்ரைன் தரப்புத் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T23:08:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருங்கடலில் ரஷ்யக் கப்பல் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukrainian-drone-attack-russian-ship-in-black-sea-1785621762"></link>
            <id>https://tamilwin.com/article/ukrainian-drone-attack-russian-ship-in-black-sea-1785621762</id>
            <summary type="text">&amp;nbsp;கருங்கடலில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ரஷ்ய
அரசுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான &#039;ரோசாட்டம்&#039; க்குச் சொந்தமான சரக்குக்
கப்பல் ஒன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கருங்கடலில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ரஷ்ய
அரசுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான 'ரோசாட்டம்' க்குச் சொந்தமான சரக்குக்
கப்பல் ஒன்று தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்தக்
கப்பல் மீதான தாக்குதலில், அதில் பயணம் செய்த 17 பணியாளர்களும் உயிர்
பிழைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ்
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ட்ரோன் தாக்குதல்</h2><p>
</p><p>
இத்த தாக்குதலை 'கடற்கொள்ளை மற்றும் கடல்சார் கொள்ளை' என அவர் கடுமையாகச்
சாடியுள்ளார்.
</p><p>
இதனிடையே, எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்
ஸெலென்எஸ்கி இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ரஷ்யக் கொடியின் கீழ்
இயங்கிய 'யானினா' என்ற 100,000 டன்களுக்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட
அனுமதிக்கப்பட்ட ரஷ்யக் கொள்கலன் கப்பலே இவ்வாறு அழிக்கப்பட்டதாகத்
தெரிவித்துள்ளார்.</p><p>
இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் போர் முயற்சிக்கு உதவுகின்றன எனக் கூறிவரும்
கப்பல்கள் மீது கடந்த சில வாரங்களாகத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T23:08:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் பனிச்சரிவில் மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-people-killed-in-pakistan-avalanche-1785621316"></link>
            <id>https://tamilwin.com/article/10-people-killed-in-pakistan-avalanche-1785621316</id>
            <summary type="text">பாகிஸ்தானில் அமைந்துள்ள &#039;ப்ரோட் பீக்&#039; மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி,
உலகப் புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற
வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானில் அமைந்துள்ள 'ப்ரோட் பீக்' மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி,
உலகப் புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற
வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தகவலை அவரது சுற்றுலா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>பனிச்சரிவில்&nbsp;உயிரிழந்துளந்தோர்</h2><p>
</p><p>கடந்த வியாழக்கிழமையன்று, உலகின் 12ஆவது உயரமான சிகரமான 8,051 மீற்றர்
உயரமுடைய ப்ரோட் பீக் மலையை ஏறும்போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb2ccfc-d3cc-4157-a5a0-9e05509a899f/26-6a6e6be0c009f.webp' /></p><p>விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்,
அமெரிக்கா, ஓமன், சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும்
அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
கடந்த 2019 ஆம் ஆண்டில் உலகின் மிக உயரமான 14 மலைச் சிகரங்களையும் வெறும் 6
மாதங்களுக்குள் ஏறி சாதனை படைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிர்மல்
புர்ஜா, நவீன மலையேற்ற வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக்
கருதப்படுகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T23:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 67 புலம்பெயர்ந்தோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/67-migrants-killed-trying-to-enter-spain-1785620811"></link>
            <id>https://tamilwin.com/article/67-migrants-killed-trying-to-enter-spain-1785620811</id>
            <summary type="text">மொராக்கோ எல்லையிலிருந்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் திடீரென
ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றதில் ஏற்பட்ட கொடூர நெரிசல் மற்றும் விபத்தில்
குறைந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோ எல்லையிலிருந்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் திடீரென
ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றதில் ஏற்பட்ட கொடூர நெரிசல் மற்றும் விபத்தில்
குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள
செயுட்டா நகரின் கடல் எல்லையில் 500 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் தடுப்புச்
சுவரை அமைக்கும் பணியை ஸ்பெயின் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;67 பேர் உயிரிழப்பு</h2><p>
</p><p>
வியாழக்கிழமை முதல் நிலம் மற்றும் கடல் வழியாக சுமார் 50,000 மக்கள்
செயுட்டாவிற்குள் நுழைய முயன்றதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இருப்பினும், அவர்களில் 48,000-க்கும் மேற்பட்டோர் 48 மணி நேரத்திற்குள்
மீண்டும் மொராக்கோவிற்கே திரும்ப அனுப்பப்பட்டனர்.

எல்லையில் உள்ள பாறை மற்றும் வேலி மீது ஏற முயன்றபோதும், கடலில் மூழ்கியும்
குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31ba74d6-fbde-4b51-b3a1-a679327d6cb0/26-6a6e69d5c5dce.webp' /></p><p> பொருளாதார நெருக்கடியும், சமூக
வலைதளங்களில் பரவிய வதந்திகளுமே இந்த பெருந்திரளான ஊடுருவலுக்கு முக்கியக்
காரணம் எனக் கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ
கிராண்டே-மார்லாஸ்கா கூடுதல் இராணுவம் மற்றும் பொலிஸாரை எல்லைப் பகுதியில்
குவித்துள்ளார்.</p><p>
அதேவேளையில், மனிதக் கடத்தல் கும்பல்களே இந்தச் சம்பவத்திற்குக் காரணம்
என்றும், மொராக்கோ ஸ்பெயினின் நம்பகமான கூட்டு நாடுதான் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இந்த எல்லைப் பிரச்சினை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே பெரும் விவாதத்தைக்
கிளப்பியுள்ளது.

எல்லைப் பாதுகாப்பைக் பலப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரக் கூட்டத்தைக்
கூட்ட வேண்டும் என 22 ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்,
ஸ்பெயினுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை இத்தாலி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T23:07:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றை கதிகலங்க செய்த பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன - கதி கலங்கும் தென்னிலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cj-padman-surasena-sparks-south-lanka-debate-1785619810"></link>
            <id>https://tamilwin.com/article/cj-padman-surasena-sparks-south-lanka-debate-1785619810</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.</p><p>
இந்த தீர்ப்பு வழங்கப்பட்டமையை தொடர்ந்து முன்னாள் எரிச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில, </p><p>" பூஜித் மற்றும் ஹேமசிறி போன்று சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும். அவர்களை விட பெரிய தவறுகளை இவர்கள் செய்திருக்கிறார்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
நாட்டில் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் யார் யாருக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படவுள்ளன என்பது தொடர்பில் மக்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
இது தொடர்பிலான பல முக்கிய விடயங்களை நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் ஊடாக தெளிவாகவும் விரிவாகவும் பார்ப்போம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RlyNEpeWErY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T23:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற தீர்ப்பால் நடுக்கத்தில் மைத்திரி..! சிறையில் ஹேமசிறி - பூஜித்தவின் இறுதி காலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/night-crisis-meeting-maithri-shock-hemasiri-jailed-1785614502"></link>
            <id>https://tamilwin.com/article/night-crisis-meeting-maithri-shock-hemasiri-jailed-1785614502</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர மேல் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாகவும் தற்போது நாட்டினுடைய பேசு பொருளாகவும் இந்த விடயம் மாறியுள்ளது.
</p><p>
கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்கள், குற்றம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் குற்றம் செய்வதற்கு சிந்திப்பவர்கள் அந்த விடயங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு திருந்த வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டமைந்தனவாக காணப்படுகின்றன. அதனடிப்படையிலே இந்தத் தீர்ப்பானது இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த நீதிமன்றத்தினால் இறுதியாக தனது கருத்துக்களை தெரிவிப்பதற்காக பூஜித ஜயசுந்தரவிற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தின் போது, ”புலனாய்வு தகவல்கள் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன என்னிடம் கூறினார்” என தெரிவித்திருந்தார்.</p><p> 

அதேபோன்று ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்ட இறுதி சந்தர்ப்பத்தின் போது, ” நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பலவற்றுடன் நான் உடன்படவில்லை. </p><p>என்னால் அவற்றை ஏற்க முடியாது. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது ” என தனது தளம்பலான குரலில் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டமைக்கு பின்னால் இருக்கக்கூடிய பல முக்கிய தகவல்கள் தொடர்பாக செய்திகளுக்கு அப்பால் நிகழ்சியின் ஊடாக விரிவாக பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/if6633PPTII" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T22:57:58+00:00</updated>
        </entry>
    </feed>
