<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-27T05:19:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் மடக்கிப் பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/19-indians-arrested-to-smuggle-gold-into-india-1787805837"></link>
            <id>https://tamilwin.com/article/19-indians-arrested-to-smuggle-gold-into-india-1787805837</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற
இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான
போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற
இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான
போது இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சந்தேகநபர்கள்</h2><p>
</p><p>
காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவின் நாகப்பட்டினத்துக்குப்
புறப்படத் தயாராக இருந்த 19 பயணிகளையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில்
தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83715aec-e40e-4633-a8d0-28c37ddb8d9a/26-6a8fc86f634ff.webp' /></p><p>
விசாரணைகளின் அடிப்படையில், இவர்கள் தங்கத்தை நூதனமான முறையில் மறைத்து வைத்து
கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.</p><p> இதையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள 19
சந்தேகநபர்களையும் ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெயரை மாற்றிக் கொண்டு சிங்கப்பூரில் வாழும் அர்ஜுன மஹேந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-hurdle-to-extraditing-arjuna-mahendran-1787806168"></link>
            <id>https://tamilwin.com/article/legal-hurdle-to-extraditing-arjuna-mahendran-1787806168</id>
            <summary type="text">&amp;nbsp;அமைச்சர் வெளியிட்ட தகவல்
சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமைச்சர் வெளியிட்ட தகவல்
சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான சட்ட வழிகள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். </p><p>
சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் அர்ஜுன மஹேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6903a2d5-9764-4055-9e4c-9bde99259417/26-6a8fc1d93c549.webp' /></p><p>
</p><p>அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்டப் பூர்வமான தடைகள் உள்ளன. ஆனால், சாத்தியமான அனைத்து சட்டப்பூர்வ வழிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.</p><p>அதேவேளையில், மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p> 
இலங்கை அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கையானது, சிங்கப்பூரின் 'நாடுகடத்தல் சட்டத்தின்' கீழ் தேவையான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அர்ஜுன மஹேந்திரனை ஒப்படைக்கும் கோரிக்கையை சிங்கப்பூர் அரசு முன்னதாக நிராகரித்திருந்தது. </p><p>
மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்காக அர்ஜுன மஹேந்திரன் இலங்கையில் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார். 
அரசுக்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 2019 ஜூன் மாதம் 'மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தில்' இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>
இதற்கிடையில், பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களை இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக சர்வதேச பொலிஸாரிடமிருந்து மொத்தம் 236 சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார். </p><p>
இவற்றில் 110 சிவப்பு எச்சரிக்கைகள் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னரே பெறப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>
தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் 66 பேர் ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 97 பேரிடம் விசாரணைகள் தொடர்வதாகவும் அமைச்சர் கூறினார். </p><p>இதில் 39 பேரின் இருப்பிடங்களை அதிகாரிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.</p><p> 
அத்துடன், தேடப்பட்டு வரும் மேலும் ஒரு நபர் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T04:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் சோகம் - கோர விபத்தில் இளம் தாய், பிறந்த குழந்தை உட்பட மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-dies-in-an-accident-1787805343"></link>
            <id>https://tamilwin.com/article/3-dies-in-an-accident-1787805343</id>
            <summary type="text">அனுராதபுரம் கெபிதிகொல்லாவ - மெதவச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் கெபிதிகொல்லாவ - மெதவச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.</p><p>

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக்கொண்ட விபத்தில், இவ்வாறு 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் ஒரு பாட்டி, அவரது மகள் மற்றும் பிறந்து 10 நாட்களான குழந்தை ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2><b>

கோர விபத்து</b></h2><p>சிகிச்சைக்காக அனுராதபுர போதனா மருத்துவமனைக்கு குழந்தை சென்று கொண்டிருந்த போது, ​​இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3e82e14-0899-464d-b27b-dfcfae67c957/26-6a8fc11f79442.webp' /></p><p>உயிரிழந்தவர்கள் பதவிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>

விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T04:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-notice-to-sri-lankans-in-nepal-1787803305"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-notice-to-sri-lankans-in-nepal-1787803305</id>
            <summary type="text">நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.</p><p>குறிப்பாக, அபாயகரமான மாவட்டங்களில் அல்லது அதற்கு அருகில் வசிக்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><h2>வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமை</h2><p>

ஏதேனும் இலங்கையருக்கு அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவைப்பட்டால், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேரமும் செயற்படும் +977 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது Slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176ebc4b-bb3e-4b6e-95da-4dc7bc59a530/26-6a8fbc5bcf56b.webp' /></p><p>

எவ்வாறாயினும், நேபாளத்தைப் பாதித்துள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமையினால் எந்தவொரு இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p style="margin-left: 25px;">
</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T04:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதி ஆலய தேர்த்திருவிழா - Live]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/selva-sannidhi-temple-charitable-festival-1787801178"></link>
            <id>https://tamilwin.com/article/selva-sannidhi-temple-charitable-festival-1787801178</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா இன்று(27.08.2026) நடைபெற்று வருகின்றது.
 இன்று (27...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா இன்று(27.08.2026) நடைபெற்று வருகின்றது.
</p><p> </p><p>இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்றது.</p><h2>நாளை தீர்த்தத் திருவிழா&nbsp;</h2><p>செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8hRJ7eieL2I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இன்று தேர்திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் நாளை (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வென்னப்புவவில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-tragically-dies-hit-train-in-wennappuwa-1787800121"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-tragically-dies-hit-train-in-wennappuwa-1787800121</id>
            <summary type="text">வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று(26.08.2026) மாலை இடம்பெற்ற
கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர்
ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று(26.08.2026) மாலை இடம்பெற்ற
கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர்
ஒருவர் தொடருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்து கடந்து
செல்வதற்காக, அந்த தொடருந்து கடவையின் பாதுகாப்பு கேட் முழுமையாக
மூடப்பட்டிருந்தது. </p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>எனினும், அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, தனது
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தை அவசரமாகக் கடக்க ஒருவர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/031af470-2c0e-417b-ad76-f02310131054/26-6a8faddbbe92f.webp' /></p><p>

கண் இமைக்கும் நேரத்தில் வந்த தொடருந்தில் அவர் நேரடியாக மோதியதில், பலத்த
காயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>

விபத்தில் உயிரிழந்தவர் குளியாப்பிட்டி பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த 55
வயதுடைய ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இவர் வைக்கால் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும்
வேலைகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த விபத்து தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் விடுதலைக்காக 500 கோடி! கசிந்துள்ள தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787791704"></link>
            <id>https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787791704</id>
            <summary type="text">இலங்கைக்கு போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக் அமைத்துள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலங்களின்படி, அவரது விடுதலையை உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக் அமைத்துள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலங்களின்படி, அவரது விடுதலையை உறுதி செய்வதற்கும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்கும் சுமார் 5000 மில்லியன் ரூபாய் (500 கோடி) நிதி தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
இந்த மூலங்களின் தகவல்படி, கொழும்பு தரப்பில் இந்த பணத்தை நிர்வகிப்பதாகவும், புலனாய்வாளர்களை அந்த வலையமைப்புடன் தொடர்புபடுத்தும் துபாயை தளமாகக் கொண்டியங்கும் முகமது சித்தீக்கிற்கு கீழ் செயற்படுவோரே நிதி கையாளுபவர்களாவர்.</p><h2>நிதி வழங்கப்படும் மூலங்கள்</h2><p>அடையாளம் கண்டு கொள்வதற்காக அந்த மூலங்கள் குறியீட்டப் பெயரான "சாண்ட்ரா" என்ற ஒரு பெண்ணைப் பற்றி தெரிவித்துள்ளனர். </p><p>அவர் பாசிக்கின் நீண்டகால தொடர்பாளராகவும், இலங்கைக்கு அடிக்கடி பயணம் செய்பவராகவும் விவரிக்கப்படுகிறார். ஆரம்பக்கட்ட மூல தகவல்களின்படி அவரது வயது சுமார் 42 என்றும், அவர் திருமணம் ஆகாதவர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இருப்பினும் அவரது உண்மையான அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 
பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது மற்றும் பாசிக்கின் பொது பிம்பத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது. </p><p>மேலும் மூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் எந்தவொரு கட்டணத்திற்கும் வழக்கை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24092ce1-7a92-4824-955a-68310798e613/26-6a8f895accc96.webp' /></p><p>இதில் "பிடிகல" என அடையாளம் காணப்பட்ட பொலிஸ் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது .தற்போதைய நிதி போதுமானதாக இல்லை என்றால், துபாயில் இருந்து கூடுதல் பணத்தை அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>மேற்கூறிய இலஞ்சக் குற்றச்சாட்டுகள் எதுவும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.இவை எதிர்தரப்பு மூலங்களுக்கு உட்படுத்தப்பட்டவை, மேலும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளாக அல்லாமல்,எதிர்வு கூறப்படும் குற்றச்சாட்டுகளாகவே 
முன்வைக்கப்படுகின்றன.
</p><h2>
பாசிக் ஏற்கனவே ஒப்புக்கொண்டது என்ன</h2><p>
அண்மையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் படி, பாசிக் பொரலஸ்கமுவ பகுதியில் இரண்டு வீடுகளின் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>அதேபோல், தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடலோரப் பகுதிகளில் உள்ள ஐந்து ஹோட்டல்களின் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் அவை அவரது சொந்த பெயரில் இல்லை நண்பர்களின் பெயர்கள் மூலமாகவே முதலீடு செய்ததாக அவர் கூறுகிறார்.
</p><p>கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகம் அவரது முழு சொத்து விவரங்களை தேடுவதை இன்னும் முடிக்கவில்லை. அவர் தற்போது புலனாய்வுக் குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார், மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் அரச புலனாய்வு சேவையும் ஆதரவையும் தகவல்களையும் வழங்கி வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் இருந்து செயற்படும் ஆபத்தான குழுக்கள் - விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/private-photos-of-women-online-urgent-warning-1787797194"></link>
            <id>https://tamilwin.com/article/private-photos-of-women-online-urgent-warning-1787797194</id>
            <summary type="text">பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்</h2><p>இந்த மோசடிக் குழுக்களை சோதனையிட்டதில், போலி கணக்குகள் ஊடாக தமது நெருங்கியவர்கள் மற்றும் குடும்பப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c897bf-9803-4fbd-bdcb-1486cb31b241/26-6a8fa3b9be9cf.webp' /></p><p>இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. 

தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். </p><p>

ஒருவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது இதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், உடனடியாக அவர்களை உளவியல் சமூக ஆலோசனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T02:43:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிற்பகல் 2மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-changes-after-2-pm-1787795529"></link>
            <id>https://tamilwin.com/article/weather-changes-after-2-pm-1787795529</id>
            <summary type="text">நாட்டில் சில இடங்களில்&amp;nbsp;இன்றும் (27.08.2026) 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சில இடங்களில்&nbsp;இன்றும் (27.08.2026) 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><h2>வறண்ட வானிலை நிலவும்</h2><p>

அம்பாறை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad679883-e05f-4dd4-b1e7-1bb92f87cb07/26-6a8f9acc2dc6d.webp' /></p><p>

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். </p><p>

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T02:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து திணைக்கள ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-officers-banned-social-media-duty-time-1787791533"></link>
            <id>https://tamilwin.com/article/railway-officers-banned-social-media-duty-time-1787791533</id>
            <summary type="text">இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரால் சுற்றுநிருபம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், தொடருந்து செயல்பாடுகள் தொடர்பான முக்கியத் தகவல்களைப் பகிர்வதையும் தடுக்கும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h3>பாதுகாப்பு நடவடிக்கை&nbsp;</h3><p>

தொடருந்து ஊழியர்களும் சில அதிகாரிகளும் கடமை நேரத்தில் மற்றும் தங்கள் கடமைகள் தொடர்பாக முக்கியத் தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவது குறித்த அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac033207-bd4c-4853-a1c9-317af6b460b1/26-6a8f89aaafbe2.webp' /></p><p>
</p><p>
சமூக ஊடகங்கள் மூலம் இத்தகைய தகவல்களைப் பகிரங்கப்படுத்துவது, தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவற்றைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று தொடருந்து திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
</p><p>
புதிய சுற்றறிக்கையின்படி, தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளித் தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

தொடருந்து பொது மேலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அந்த சுற்றறிக்கையில், உள்ள அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துச் செயல்படும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஒரு இலட்சத்தை அண்மித்த டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-dengue-patients-approached-one-lakh-1787791021"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-dengue-patients-approached-one-lakh-1787791021</id>
            <summary type="text">நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் வரையில் நாட்டில் பதிவான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த வாரம் வரையில் நாட்டில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்திருந்ததாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த ஆண்டு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 29,962 டெங்கு பாதிப்புகள் கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளன. ஜூன் மாதத்தில் 21,533 பாதிப்புகளும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>

ஜனவரியில் 7,866 டெங்கு பாதிப்புகளும், பெப்ரவரியில் 5,721 பாதிப்புகளும், மார்ச்சில் 6,013 பாதிப்புகளும், ஏப்ரலில் 5,651 பாதிப்புகளும், மே மாதத்தில் 8,590 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.</p><h2>டெங்கு பாதிப்புகள்&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையே நாட்டில் உள்ள மொத்த டெங்கு பாதிப்புகளில், 52.93 சதவீதம், அதாவது 49,771 பாதிப்புகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன.

தென் மாகாணத்தில் 13,763 பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 8,519 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57a65782-7f39-48c5-aec6-18b863ff984a/26-6a8f87a663704.webp' /></p><p>
மாவட்ட அளவில் அதிகபட்சமாக 20,034 டெங்கு பாதிப்புகள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 18,652 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. </p><p>அவற்றில் 3,787 கொழும்பு மாநகர சபை பகுதியைச் சேர்ந்தவை.

கண்டி மாவட்டத்தில் 6,818, களுத்துறையிலிருந்து 6,093, காலியிலிருந்து 6,079, இரத்தினபுரியிலலிருந்து 5,160, மாத்தறையிலிருந்து 5,003, கேகாலையிலிருந்து 2,713, குருநாகலையிலிருந்து 2,651 மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து 2,510 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
இதற்கிடையே நாடு முழுவதும் 76 டெங்கு நோய் உயர் அபாய சுகாதார அலுவலர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை தவறாமல் சுத்தம் செய்து அழிக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சை பெறுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-1787790601"></link>
            <id>https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-1787790601</id>
            <summary type="text">நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு. நீதி
கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் என அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு. நீதி
கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் என அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி
திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><p>
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் நேற்று (26) நடைபெற்ற விசேட
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும்,"ஒரு சரியான தீர்வை நோக்கியே நாங்கள் தொடர்ச்சியாகப் போராடிக்
கொண்டிருக்கிறோம். நீதி என்பது கடையில் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல.</p><h2>பல போராட்டங்கள்</h2><p>
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் எமக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும்
நிதித் தேவைகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீதிக்கு
முன்னால் அந்த நிதி எமக்கு பெரிதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024647b0-a872-430d-8f5c-b65fafa4961c/26-6a8f855eb9f5d.webp' /></p><p> </p><p>இலங்கை அரசாங்கமானது எங்களை எவ்வாறாவது
தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் தள்ளி, வழக்கை முடிக்கப் பார்க்கிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.</p><p> சில நாடுகளுக்கு
30, 40 வருடங்களுக்குப் பிறகே தீர்வுகள் கிடைத்துள்ளன. நாங்களும் கடந்த 17
வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகின்றோம்.</p><p> எமது இலக்கை அடைய 15
முதல் 17 வருடங்கள் வரை ஆகலாம். ஆனால், எனது உறவுகளுக்கு நீதி கிடைக்கும்
என்றால் நான் செத்தாவது நீதியைப் பெற்றுத் தருவேன்” என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடை விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பார்த்தவர்களின் நிலை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-sri-lanka-political-condition-1787789112"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-sri-lanka-political-condition-1787789112</id>
            <summary type="text">கல்முனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான பிரச்சினையானது நாட்டில் அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.இந்நிலையில், தற்போதைய அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான பிரச்சினையானது நாட்டில் அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><p>இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் இப்பிரச்சினையை திட்டமிட்டு தூண்டி விட்டிருக்கலாம் என சிலர் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.&nbsp;</p><p>இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளிவாசல்களுக்கான புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.&nbsp;</p><p>இருப்பினும், இவ்விடயம் அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும்பான்மையினத்தவர்கள், பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அரசாங்கத்தில் ஏன் முஸ்லிம்களின்&nbsp;பள்ளிவாசல்களுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள் என சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றனர்.&nbsp;</p><p>இவ்விவகாரம் தொடர்பில் லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி ஆராய்கின்றது..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/s_GlV6JN6zs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திருவிழாவில் நடந்தது என்ன! ஆலயங்கள் மீது விரைவில் அரசின் அதிரடி சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873</id>
            <summary type="text">அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&amp;nbsp;தமிழ் கலாசாரத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கடும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இலங்கை தமிழ் மக்களின் மற்றும் இந்து மதத்தின் மகத்துவத்தை கெடுக்கும் வகையில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், இலங்கையில் உள்ள ஆலயங்களில் முக்கிய சட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக அரச தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jfUbfFv5RGU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T23:53:50+00:00</updated>
        </entry>
    </feed>
