<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-14T21:36:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் பெண்ணை கொடூரமாக தாக்கிய இலங்கை இளைஞனை துரத்தி பிடித்த பொலிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538</id>
            <summary type="text">இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்தச் சம்பவம்&nbsp; Vicolo Fossetto பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த இலங்கையர் அலுமாரிகளில் இருந்த பல மதுபானப் போத்தல்களை எடுத்து தனது பைக்குள் மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><h2><b>பெண் மீது தாக்குதல்</b></h2><p>பணம் செலுத்தாமல் காசாளர் பகுதியைக் கடந்து வெளியேறும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார். ஊழியர் ஒருவர் அவரை அணுகி திருடப்பட்ட பொருட்களைத் திருப்பி தருமாறு கோரியுள்ளார். எனினும் அவர் ஊழியரை உடல் ரீதியாக தாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a03fafc-08cd-4e3e-aa39-7d9d716c3277/26-6aa81c6181bf1.webp' /></p><p>ஊழியரை கீழே தள்ளியதோடு, திருடப்பட்ட பொருட்களுடன் இலங்கையர் தப்பியோடியுள்ளார். </p><p> கீழே விழுந்த பெண் எழுந்து, தனக்கு உதவ நின்ற வாடிக்கையாளர் ஒருவரின் காரில் இலங்கையரை துரத்தத் தொடங்கினார். </p><p>அங்கு வசிப்பவர் ஒருவர் சந்தேக நபரை அடையாளம் கண்டு, சந்தேக நபர் எங்கு பதுங்கியிருக்கின்றார் என்பதை அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h3><b>சட்டவிரோத குடியேற்றவாசி</b></h3><p>சோதனையின் போது, பையில் திருடப்பட்ட இரண்டு மதுபானப் போத்தல்களைக் கண்டெடுத்தனர். தப்பியோடும்போது கைவிடப்பட்ட மூன்றாவது மதுபான போத்தல் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef89cfd9-9a3d-4d28-976c-4469b8d7f026/26-6aa81c6272d81.webp' /></p><p>இந்நிலையில் விற்பனை செய்யக்கூடிய நிலையில் இருந்த அனைத்துப் பொருட்களும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. </p><p>விசாரணையை தொடர்ந்து பல குற்றப் பின்னணியை கொண்டவரும் சட்டவிரோதமான குடியேற்றவாசியுமான இலங்கையர் கைது செய்யப்பட்டார். </p>]]></content>
            <updated>2026-09-14T21:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் கூட்டத்தில் நடந்த அட்டகாசம் - அநுரவின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869"></link>
            <id>https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
</p><p>
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் குடிப்பது அவர்களது உரிமை அதை யாரும் தடுபக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
</p><p>மேலும் அநுரவுக்கு எதிரான பேரணியில் நாமலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.</p><p>.இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DM_VJcCmwvE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T21:09:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணுசக்தி மாநாட்டில் ஈரான் பங்கேற்பதற்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bans-iran-participating-in-nuclear-conference-1789414569"></link>
            <id>https://tamilwin.com/article/us-bans-iran-participating-in-nuclear-conference-1789414569</id>
            <summary type="text">வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) வருடாந்த
பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி பங்கேற்பதைத்
தடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) வருடாந்த
பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி பங்கேற்பதைத்
தடுக்கும் வகையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமைக்கு
ஈரான் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
</p><p>
ஈரான் மீது மீண்டும் விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பயணத்
தடைகளிலிருந்து மொஹமட் எஸ்லாமிக்கு விலக்கு அளிக்குமாறு மாநாட்டை நடத்தும்
ஆஸ்திரியா விடுத்த கோரிக்கையை, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத்
தடைக்குழுவில் அமெரிக்கா நிராகரித்துள்ளது.
</p><h2>அரசியல் நோக்கம் கொண்டது என</h2><p>
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவினால் அவருக்கு வழங்கப்பட்ட விசா இரத்து
செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c41e2bcf-1116-407f-81d7-f71e11978af7/26-6aa853d01a708.webp' /></p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது எனவும்,
சர்வதேச அமைப்பினைத் தனது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாகவும் ஈரான்
குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>இருப்பினும், ஈரானிய பிரதிநிதி மாநாட்டைத் தனது பிரச்சார மேடையாகப்
பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த விலக்கு கோரிக்கை
நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T20:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய கப்பல் விபத்தில் 129 பேரைக் காணவில்லை - தேடுதல் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/129-missing-in-indonesian-ship-accident-1789410705"></link>
            <id>https://tamilwin.com/article/129-missing-in-indonesian-ship-accident-1789410705</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த கப்பலொன்று சீரற்ற
வானிலை காரணமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 129 பேர் காணாமல்போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த கப்பலொன்று சீரற்ற
வானிலை காரணமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 129 பேர் காணாமல்போயுள்ளதாக
அந்நாட்டு தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
</p><p>
சுராபாயா நகரிலிருந்து போர்னியோ தீவின் பஞ்சார்மாசின் துறைமுக நகரை நோக்கிப்
பயணித்த 'வர்ஜோ ட்ரான்ஸ்போர்ட் 8' (Virgo Transport 8) என்ற கப்பலே இவ்வாறு
விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><h2>மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில்</h2><p>
இதுவரை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கைகளின் போது 108 பேர் பத்திரமாக
மீட்கப்பட்டுள்ளதுடன், ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/090071a2-2da1-4492-aa05-104594ab84bb/26-6aa847bd08a04.webp' /></p><p>
காணாமல்போனவர்களைத் தேடும் பணிகளில் 600இற்கும் மேற்பட்ட மீட்புப்
பணியாளர்களும் 12 கப்பல்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>

இருப்பினும், அப்பகுதியில் நிலவும் பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் அலைகள்
மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும்
சவால்கள் நிலவுவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க கனடா பிரதமர் மார்க் கார்னி தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mark-carney-effort-to-attract-global-investors-1789408257"></link>
            <id>https://tamilwin.com/article/mark-carney-effort-to-attract-global-investors-1789408257</id>
            <summary type="text">நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க்
கார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க்
கார்னி டொரான்டோவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
</p><p>
சுமார் 160 க்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்களுக்காக 1 டிரில்லியன் கனடிய
டொலர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் திரட்டுவதை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதில் பிளக்ரொக் தலைமை நிர்வாகி லாரி ஃபிங்க் மற்றும் பிளக்ஸ்டோன் தலைவர் ஜோன்
கிரே உள்ளிட்ட உலகின் முன்னணி நிதி நிறுவனங்களின் தலைவர்கள் பலர்
கலந்து கொண்டுள்ளனர்.</p><h2>வர்த்தக உறவு</h2><p>
</p><p>
சுரங்கம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய
துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதையே கனடா முதன்மையாக நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அல்பர்ட்டா மற்றும் நியூ பிரன்சுவிக் பகுதிகளில் தரவு மையங்கள்,
ஆல்பர்ட்டாவின் ஹைட்ரஜன் திட்டங்கள் மற்றும் கல்கரிக்கும் எட்மண்டனுக்கும்
இடையிலான அதிவேக போக்குவரத்துத் திட்டம் போன்றவை இம்மாநாட்டில் சர்வதேச
முதலீட்டாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1349d293-b5dc-4a33-9b52-d055079278b3/26-6aa8383fd6a6c.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை
ஈடுசெய்யவும், உலகளாவிய முதலீடுகளை அதிகரிக்கவும் மத்திய கிழக்கு, ஆசியா
மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்த கனடிய அரசாங்கம்
நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>
எனினும், இம்மாநாட்டின் மூலம் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும்,
மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் வரை
ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் கைது தாமதம் ஏன்..! 80 இலட்சம் ஊழல் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381"></link>
            <id>https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381</id>
            <summary type="text">தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள் விவகாரத்திலே பிள்ளையானை மட்டும் ஏன் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இவர்கள் ஏன் பிள்ளையானின் தலைவனான கருணாவை கைது செய்யவில்லை. அதாவது தற்பேோது எடுபிடிகளையும் அடியாட்களையும் தான் கைது செய்கின்றார்கள்.</p><p>

யாழ்ப்பாணத்தில் பல கடத்தல்களையும் கொலையையும் செய்த டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zJao2wvCNU4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி ராஜபக்ச பொய் சொல்லி பெற்ற 1 கோடி! நாமலுக்கு ஏற்படவுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-admit-hospital-cid-namal-1789406625"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-admit-hospital-cid-namal-1789406625</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வைத்தியசாலைக்கு சென்றாரா என்கின்ற கேள்வி எழுகின்றது.</p><p>கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>இந்த விசாரணை&nbsp;ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தரப்பினரை மையப்படுத்தியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p>மேலும்,&nbsp;CT ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக&nbsp;தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து பெறப்பட்ட ஒருகோடி ரூபாய் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9Poe2i6CulQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T17:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaint-lodged-against-chairman-police-station-1789401167"></link>
            <id>https://tamilwin.com/article/complaint-lodged-against-chairman-police-station-1789401167</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மீது பிரதேச சபை
உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்,
புதுக்குடியிருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மீது பிரதேச சபை
உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்,
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சருடன் இணைந்து பிரதேச சபையின்
உறுப்பினர்கள் இருவர் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவத்தை, பிரதேச சபை
தவிசாளர் வெளியில் கூறி செல்வதாக தெரிவித்து NPP பிரதேச சபை உறுப்பினர்
ஒருவரால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><h2>அதற்கான போதுமான ஆதாரங்கள்</h2><p>
இதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நேற்றையதினம் (13.09.2026)
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d312cdb3-4fb9-46e3-9dda-11180068e4ed/26-6aa81b541433d.webp' /></p><p>
இதன்போது, தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்து கொண்டதனை வெளியே கூறி செல்வதான
குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு
பொலிஸார் முறைப்பாட்டாளர் தரப்பினரிடம் கோரியுள்ளனர். </p><p>எனினும், அதற்கான
போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதனையடுத்து, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பினருக்கு பொலிஸாரால்
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்
இடம்பெறாத வகையில் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டு அவர்கள்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
</p><h2>சட்டரீதியான நடவடிக்கை</h2><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் வே.கரிகாலன், தாம் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட தவிசாளராக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அமைவாக
பிரதேச சபையின் அபிவிருத்திப் பணிகளையும் மக்கள் சேவையையும் முன்னெடுத்து
வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe863e7-b09b-4c00-93ab-09c112770b72/26-6aa81b552d0a4.webp' />]</p><p>ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தமது கௌரவத்தையும் நற்பெயரையும்
பாதிப்பதுடன் பிரதேச சபையின் மக்கள் சேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்
எனவும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் சட்டரீதியான
நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்.
</p><p>நாங்கள் அரசியலுக்காக அல்ல, மக்களுக்காகவே பணியாற்றுகின்றோம். மக்களின்
தேவைகளும் பிரதேசத்தின் அபிவிருத்தியுமே எமது முதன்மையான நோக்கங்கள் என
தவிசாளர் வே.கரிகாலன் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T16:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுர தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gove-accepted-their-loss-1789401651"></link>
            <id>https://tamilwin.com/article/gove-accepted-their-loss-1789401651</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆட்சி பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விமர்சிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியையும் அதன் தலைவர்களையும் ஜனாதிபதி விமர்சனம் செய்வது குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41c91748-caa6-4512-a337-4168e2e6f89e/26-6aa81a34d9d9e.webp' /></p><p>
நாடு முழுவதும் பிரசார கூட்டங்களை நடத்தி பொதுஜன முன்னணியை விமர்சனம் செய்வதன் ஊடாக ஜனாதிபதி தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>இந்த விடயம் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அநுரவின் கூட்டங்களில் பங்கேற்ற மக்கள் அவரது உரை தொடர்பில் எவ்வித துலங்களையும் மேற்கொளள்வில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்து செல்வதன் வெளிப்பாடேயாகும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T16:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-department-officials-bribe-1789398247"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-department-officials-bribe-1789398247</id>
            <summary type="text">மட்டக்களப்பில் கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல்
வள திணைக்கள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் மோசடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல்
வள திணைக்கள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடக
பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.</p><p>மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான
அனுமதி பத்திரம் வழங்குவதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 35 ஆயிரம் ரூபா
வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக
கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் வாங்கியுள்ளனர். </p><p>எனவே கடற்றொழில் அமைச்சர் உடன் விசாரணை செய்து அந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்குமாறு&nbsp; அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழிலாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் தமது
வாழ்வாதாரத்துக்காக எரிபொருள் விலை ஏற்றத்தின் மத்தியில் கடற்தொழிலை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77939ad8-9a04-43ee-8a67-8bc8368562a1/26-6aa817fa485f6.webp' /></p><p> இவ்வாறான நிலையில் அனுமதி பத்திரம் வழங்க பெரும் தொகை
இலஞ்சமாக பணம் வாங்கிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
</p><p>கடற்றொழிலாளர்களின் நலன் கருதி அவர்களிடம் இலஞ்சப்
பணம் வாங்கிய உத்தியோகத்தர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கடற்றொழிலாளர்களின் பணத்தை மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும்.</p><p> அத்துடன் பணம் இல்லாது அனுமதி பத்திரம் பெறமுடியாது உள்ள ஒரு சில கடற்றொழிலாளர்களுக்கும் இந்த அனுமதி பத்திரத்தை வழங்க வேண்டும் என்பதுடன் 70 ஆயிரம்
கொடுத்து இதுவரை அனுமதி பத்திரம் வழங்காத அவருக்கு அனுமதி பத்திரத்தை வழங்கி
அந்த பணத்தை மீள பெற்றுக் கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக்
கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T15:51:36+00:00</updated>
        </entry>
    </feed>
