<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-21T04:12:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் சிக்கிய ஆபத்தான நபர் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-man-arrested-in-dubai-1787277451"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-man-arrested-in-dubai-1787277451</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு இழுத்து வரப்படவுள்ள வனாத்தே சத்து என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் தொடர்பில் பல தகவல்கள் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு இழுத்து வரப்படவுள்ள வனாத்தே சத்து என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஊழல் தடுப்பு அதிரடிப்படை மற்றும் டுபாய் தேசிய பாதுகாப்பு பொலிஸ் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, சந்தேக நபர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பான முக்கிய நபராக செயற்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
கொலைகள், தாக்குதல்கள்</b></h2><p>கஞ்சிபானியின் உத்தரவின் பேரில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்பாடுகளும் வனாத்தே சத்துவின் வழிநடத்தலின் கீழ் இடம்பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84faeb30-b7a7-4bf1-bc34-3fef0ff8dbe0/26-6a87ccb21ba52.webp' /></p><p>பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட மற்றும் வலான ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர் ரோஹன் ஓலுகல ஆகியோரின் முழுமையான பங்களிப்புடன், டுபாய் தேசிய பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் உதவியோடு இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
டுபாயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அல் ராசிக் அல் கைமா எனப்படும் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள ஆடம்பரமான வீட்டில் அவர் மறைந்திருந்தபோது, டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன அல்லது வனாத்தே சத்து விசாரணைக்காக நேற்று மதியம் டுபாய் பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின்போது, உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், டுபாய் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், இந்த சந்தேக நபர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
வனாத்தே சத்து என்ற இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல கொலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பதுர்தீன் என்பவரை அவர் வெட்டிக் கொலை செய்தமை, மாளிகாவத்தையில் இளைஞரை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><h3><b> 

ஆடம்பரமான வாழ்க்கை</b></h3><p>அத்துடன், வனாத்தமுல்லையில் இளைஞர் ஒருவரை கொலை செய்தமை, கடுவெல கொரதொட்ட பகுதியில் மூன்று இளைஞர்களை கொலை செய்தமை, கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டமை, வனாத்தே பிம்சர என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இந்த நபருக்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbe98e2f-b3ed-4b58-94c0-baf3a05d2389/26-6a87ccb2c51aa.webp' /></p><p>இதற்கு மேலதிகமாக, வனாத்தே சத்து கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பிலும் முக்கிய நபராக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் டுபாயில் தங்கியிருந்து கஞ்சிபானி இம்ரான் வழங்கிய உத்தரவுகளை செயற்படுத்தியது.

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். </p><p>அவர் டுபாயில் தங்கியிருந்த ஆடம்பர வீடும், பயன்படுத்திய சொகுசு மோட்டார் வாகனமும் டுபாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-21T03:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மீட்பு : இருவர் தப்பி ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/llegal-fishing-equipment-recovered-from-kanthalai-1787282584"></link>
            <id>https://tamilwin.com/article/llegal-fishing-equipment-recovered-from-kanthalai-1787282584</id>
            <summary type="text">கந்தளாய் குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கம்பிக்கூடுகள் மற்றும் நைலோன் வலைகளை
கந்தளாய் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கம்பிக்கூடுகள் மற்றும் நைலோன் வலைகளை
கந்தளாய் பொலிஸார் நேற்று மாலை (20.08.2026) மீட்டுள்ளனர்.
</p><p>
கந்தளாய் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த
இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே
இவை கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>

கைப்பற்றப்பட்ட பொருட்கள்</h2><p>கம்பிக்கூடுகள் - 22,&nbsp; நைலோன் வலைகள் - 160 மீற்றர் என்பன பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb20850-650a-45a4-9d2b-a3129c8c083b/26-6a87cbeee9229.webp' /></p><p>பொலிஸாரின் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பின் போது, மீன்பிடியில் ஈடுபட்டிருந்த
இருவர் தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> தப்பியோடிய சந்தேகநபர்களைக்
கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.
</p><p>
கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சான்றுகளை இன்று கந்தளாய் நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d513eb-102d-4aed-bf3e-e18161e8981f/26-6a87cbefcca1a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T03:54:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-blood-purification-machines-donated-hospitals-1787280810"></link>
            <id>https://tamilwin.com/article/six-blood-purification-machines-donated-hospitals-1787280810</id>
            <summary type="text">சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு
இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான
ஒரு வாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு
இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான
ஒரு வாய்ப்பாகும்.</p><p> அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக
தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும்
வகையில் 83 ஆயிரத்து 544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு
இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p><h2>நோயாளியின் சிகிச்சை&nbsp;</h2><p>

இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும்,
மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான
வரித்தீர்வாக வடக்கு மாகாண சபையால் 3.5 மில்லியன் இலங்கை ரூபா
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c15aa7-d2ae-4c7a-8295-662ca9dabeaf/26-6a87c0b7cf2fe.webp' /></p><p>

செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண
மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு
நேற்று(20.08.2026) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ
சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.</p><p>கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண
சுகாதாரப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மருத்துவத்துறை
நிபுணர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.</p><p>நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுநீரக நோயாளிகள் சிகிச்சைக்காக வாரத்தில் பல
தடவைகள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதுடன், சில
குடும்பங்கள் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகக்
குறிப்பிட்டார். </p><p>ஒரு நோயாளியின் சிகிச்சை அவரின் தனிப்பட்ட பிரச்சினையாக
மட்டுப்படாமல், முழுக் குடும்பத்தின் வாழ்வியலையும் பாதிக்கின்றது என்றும்
அவர் தெரிவித்தார். </p><p>எனவே, குருதி சுத்திகரிப்பு வசதிகளை நோயாளிகளின்
வாழ்விடங்களுக்கு அருகில் கொண்டு செல்வது மருத்துவ சேவையை மேம்படுத்துவதுடன்,
அவர்களது வாழ்க்கைச் சுமையையும் குறைக்கும் மனிதநேயப் பணியாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீண்டகால மனிதநேயப் பணி</h2><p>சிறுநீரக நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கவனத்துக்குரிய சுகாதாரச்
சவாலாக மாறியுள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும்
வவுனியா மாவட்டங்களில் இது தொடர்பான ஆய்வுகளும் சுகாதாரத் தரவுகளின்
அடிப்படையிலான கவனமும் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ஆளுநர்
சுட்டிக்காட்டினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5f85e2-0410-4612-b80d-c83f4d880b2a/26-6a87c0b8b24e3.webp' /></p><p>
குடிநீரின் தரம், நீண்டகால நீர் பயன்பாடு, விவசாயத்தில் பயன்படுத்தப்படும்
இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து ஆய்வுகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இந்நோய்க்கு ஒரே ஒரு காரணியைச்
சுட்டிக்காட்டுவது அறிவியல் ரீதியாகப் பொருத்தமானதல்ல என்றும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
விவசாயம், சுற்றுச்சூழல், குடிநீர் மற்றும் மக்களின் சுகாதாரம் ஆகிய
அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
சிகிச்சை வழங்குவதோடு மட்டும் இந்தப் பிரச்சினையை அணுகாமல், சிறுநீரக நோய்
அதிகரிப்பதற்கான காரணிகளைப் புரிந்துகொண்டு தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம்
செலுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.&nbsp;</p><p>செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் நிறுவனர் செந்தில்குமரனின் நீண்டகால
மனிதநேயப் பணியையும் ஆளுநர் பாராட்டினார். தாம் 2007ஆம் ஆண்டு கிளிநொச்சி
மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் வீடமைப்புத் திட்டமொன்றுக்கான
அடிக்கல் நடும் நிகழ்வில் செந்தில்குமரனுடன் இணைந்து பங்கேற்றிருந்ததை
நினைவுகூர்ந்த ஆளுநர், அக்காலத்திலிருந்தே அவர் சேவை மனப்பாங்குடன் செயற்பட்டு
வருவதாகத் தெரிவித்தார்.</p><h2>தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவி</h2><p>வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளுக்கான இவ்வாறான பங்களிப்புகள் வடக்கு
மாகாணத்துக்குள் மட்டும் மட்டுப்படாத மனிதநேயத் தொடர்பின் வெளிப்பாடாக
அமைகின்றன என ஆளுநர் தெரிவித்தார்.</p><p> செந்தில்குமரன் கனடாவில் வாழ்ந்து
வருவதுடன், அங்கு மேற்கொள்ளும் தொழில் மற்றும் சமூகப் பங்களிப்புகளுடன்
இணைந்து தாயக மக்களுக்காகவும் தொடர்ச்சியாக உதவி செய்து வருவது
பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec9d9d51-50cd-4796-aaa8-a56e2d21e8e9/26-6a87c0b9678bf.webp' /></p><p>

முன்னர் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய தரப்பினருக்கான வரித்தீர்வை
நடவடிக்கைகளில் வடக்கு மாகாண சபை ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், இவ்வாறான
மனிதநேய நன்கொடைகளை ஊக்குவித்து வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளை
நிறைவேற்றுவதற்கான கூட்டாண்மைகளை மேலும் விரிவுபடுத்த மாகாண நிர்வாகம் தயாராக
இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
</p><p>
இன்று வழங்கப்படுவது ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் என்றாலும், அதன்
உண்மையான பெறுமதி அதைவிடப் பெரியது. இது சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை
வாய்ப்பையும், குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், வடக்கு மாகாண மக்களுக்கு
மனிதநேயப் பங்காளித்துவத்தின் மீது புதிய நம்பிக்கையையும் வழங்குகின்றது
என்றும் ஆளுநர் தெரிவித்தார். </p><p>கனடா மக்களின் மனிதநேயப் பங்களிப்புக்கும்
செந்தில்குமரனின் அர்ப்பணிப்புக்கும் வடக்கு மாகாண மக்களின் சார்பில் அவர்
நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
</p><p>
இந்நிகழ்வில் கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு
மாகாண சுகாதாரப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அணிகளின் உறுப்பினர்கள்,
செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இருதயச்
சத்திரசிகிச்சையால் பயன்பெற்ற சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T03:06:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-police-headquarters-request-1787279962"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-police-headquarters-request-1787279962</id>
            <summary type="text">பத்தரமுல்ல, இசுஹுருபாய கட்டடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதி அறிக்கை தரவு அமைப்பில் செயலிழப்பு ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பத்தரமுல்ல, இசுஹுருபாய கட்டடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதி அறிக்கை தரவு அமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p> 

இந்த அனுமதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், அறிக்கைகளை கோருதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகிய நடவடிக்கைகள் தரவு அமைப்பொன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
</p><p>
 குறித்த தரவு அமைப்பு நேற்று நண்பகல் முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

பொலிஸ் அனுமதி அறிக்கை</b></h2><p>இது தொடர்பாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db697fb-8c78-4382-bf97-423171cb95b0/26-6a87bbad8f50d.webp' /></p><p>அத்துடன், தரவு அமைப்பை மீளச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

எனவே, குறித்த தரவு அமைப்பு மீள செயல்படும் வரை பொலிஸ் அனுமதி அறிக்கைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

தரவு அமைப்பு மீளவும் இயங்கியவதுடன் பொலிஸ் அனுமதி அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-21T02:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,500 கோடி ரூபாய் பெறுமதியான தங்க சிலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863"></link>
            <id>https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863</id>
            <summary type="text">ஜா எல மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜா எல மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது.</p><p>

எனினும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அத்தகைய சிலை எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2><b>
 தங்க சிலை</b></h2><p>தங்கச் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதனை தொடர்ந்து ஜா எல மெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48f63bec-bbd6-42c1-81e1-59439ec0a5ae/26-6a87b6f330040.webp' /></p><p>இதன் போது, அங்கு ஏதேனும் அறியப்படாத பொருள் இருப்பதாக தெரியவந்திருந்தது.</p><p>

எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், குறித்த இடத்தில் எந்தவொரு பொருளும் புதைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T02:25:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடகி நந்தா மாலினியின் இறுதி விருப்பம்: குடும்பத்தினரின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nanda-malinis-last-will-1787276300"></link>
            <id>https://tamilwin.com/article/nanda-malinis-last-will-1787276300</id>
            <summary type="text">காலஞ்சென்ற புகழ்பெற்ற பாடகி கலாநிதி நந்தா மாலினியின் இறுதி விருப்பம் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இறுதி விருப்பம் குறித்த அறிவுறுத்தல்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலஞ்சென்ற புகழ்பெற்ற பாடகி கலாநிதி நந்தா மாலினியின் இறுதி விருப்பம் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>இறுதி விருப்பம் குறித்த அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவரது இறுதிக்கிரியைகளை மிகவும் எளிமையான முறையில் நடத்துவதற்கு குடும்பத்தினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.</p><h2>பொதுமக்கள் அஞ்சலி&nbsp;</h2><p>
</p><p>இன்றைய தினம் காலை 10:00 மணிக்கு நாவல வீதி, விஜயபா மாவத்தையில் உள்ள இலக்கம் 30 இல் அமைந்துள்ள "நந்தா மாலினீ சங்கீத ஆசிரமத்திற்கு" அன்னாரின் பூதவுடல் கொண்டுவரப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e0b9e3c-6265-46e6-b7ae-fe3a4d7713af/26-6a87ac0e08739.webp' /></p><p>
பொதுமக்கள் அஞ்சலிக்காக சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணி வரை அவரது உடல் அந்த இல்லத்திலேயே வைக்கப்பட்டிருக்கும்.
தனது உடலை வீட்டிலிருந்து வேறு எந்தவொரு பொது இடத்திற்கும் கொண்டு செல்ல வேண்டாம் என நந்தா மாலினி தனது இறுதி விருப்பப்பத்திரத்தில் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>மூன்று நாட்கள் தேசிய துக்க தின பிரகடனம்</h2><p>
</p><p>அத்துடன், இறுதிச்சடங்குகளை எந்தவொரு ஆடம்பரமுமின்றி மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>
இதற்கமைய, சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு அன்னாரின் உடல் வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பொரளை மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அன்று பிற்பகல் 5:00 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது.</p><p>
அவரது கோரிக்கைக்கு இணங்க, எந்தவொரு அனுதாபச் கூட்டமோ, புகழுரைகளோ அல்லது இரங்கல் உரை வாசிப்போ இடம்பெறமாட்டாது என்றும் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன மேலும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p>
இதனிடையே, பாடகி நந்தா மாலினியின் மறைவையிட்டு மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களை பிரகடனப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T01:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து! ஐவர் பலி - மூவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monaragala-breaking-news-1787274025"></link>
            <id>https://tamilwin.com/article/monaragala-breaking-news-1787274025</id>
            <summary type="text">மொனராகலை - கும்புக்கன பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.&amp;nbsp;இன்று அதிகாலை இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.&amp;nbsp;இதன்போது, மேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை - கும்புக்கன பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p>இன்று அதிகாலை இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.&nbsp;</p><p>இதன்போது, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>ஐவர் மரணம்&nbsp;</h2><p>உழவு இயந்திரமும், டிப்பர் லொறியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.&nbsp;</p><p>டிப்பர் லொறியில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f52adaf8-f2f6-4ecd-bac6-d172adccdc22/26-6a87a53968da3.webp' /></p><p>இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த, 21,26,31,55 மற்றும் 56 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p>விபத்திற்குள்ளான டிப்பர் லொறி சாரதி மற்றும் பயணிகளை ஏற்றி வந்த&nbsp; உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவம் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T01:09:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகல சிறைச்சாலையில் தப்பிச் செல்ல முயற்சி : மரண தண்டனை கைதிகள் இடமாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-death-penalty-prisoners-transfered-1787272917"></link>
            <id>https://tamilwin.com/article/6-death-penalty-prisoners-transfered-1787272917</id>
            <summary type="text">பல்லேகல தும்பர சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு மரண தண்டனை கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 சிறைச்சாலையின் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்லேகல தும்பர சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு மரண தண்டனை கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
 சிறைச்சாலையின் கழிப்பறையிலுள்ள கம்பிகளை அறுத்துத் தப்பிச் செல்ல முயன்றனர் என குறித்த கைதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 கைதிகள் வெலிக்கடை மற்றும் அங்குணுகொளபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>நால்வர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு</h2><p>
</p><p>மரண தண்டனை விதிக்கப்பட்டக் கைதிகள் தங்கியிருந்த அறைக்குட்பட்ட கழிப்பறையின் இரும்புக் கம்பிகள் சில அறுக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள், இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9631e55e-5826-440d-a87c-812691f9f670/26-6a879ed6dafec.webp' /></p><p> </p><p>
இந்த விசாரணைகளின் போதே குறித்த கம்பிகளை அறுத்த சம்பவத்துடன் இந்த 6 கைதிகளுக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.
</p><p>இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 6 கைதிகளில் நால்வர் வெலிக்கடை சிறைச்சாலைக்கும், ஏனைய இருவர் அங்குணுகொளபெலஸ்ஸ சிறைச்சாலைக்கும் உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T00:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-sri-lanka-1787272104"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-sri-lanka-1787272104</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம்(21) கடுமையான வெப்பம் நிலவக் கூடும்&amp;nbsp; என எச்சரிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம்(21) கடுமையான வெப்பம் நிலவக் கூடும்&nbsp; என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான வெப்பம் நிலவக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>அதிகரித்த வெப்பநிலை</h2><p>இதன்படி, மேற்குறிப்பிட்ட சில மாவட்டங்களில், பகல் நேரத்தில் மனித உடலால் உணரக் கூடிய வெப்பநிலை தீவிர மட்டத்தில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இதேவேளை, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலமுறை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0c0abfb-3e02-4ab4-b168-15a110643002/26-6a879d6f776ea.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T00:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்படப்போகும் மிக முக்கிய அரசியல் புள்ளிகள்! அரசாங்கத்தை திசை திருப்பும் களத்தில் ரணில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-biggest-politicians-could-be-arrested-1787267515"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-biggest-politicians-could-be-arrested-1787267515</id>
            <summary type="text">எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீதியை உருவாக்கி மீண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிக்க முயற்சிக்கின்றார் என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்த தெளிவான பார்வையும் திட்டமும் உள்ளது.
</p><p>
2028 ஆம் ஆண்டளவில் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் 15 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பு இலக்கை அடைந்து, நாட்டை மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கொண்டு செல்ல இந்த அரசாங்கத்தால் முடியும்.</p><h2>ஊழல்வாதிகளை பாதுகாத்த ரணில்</h2><p>
</p><p>
2028 ஆம் ஆண்டில் கடன் மீளச்செலுத்த தொடங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளின்படி நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என்றும், தற்போதைய இலங்கை மத்திய வங்கியின் கணிப்புகளின்படி இந்த ஆண்டின் இறுதியில் கையிருப்பு 8 பில்லியன் டொலர்களாக மட்டுமே இருக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.</p><p>

இதன் மூலம் 2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும், அதனால் அரசாங்கம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தாமல் அந்நிய செலாவணியை&nbsp; பெருக்குவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூற முற்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cfab7a4-7be6-4a54-a936-5128bf9c5c5a/26-6a8789bd0491d.webp' /></p><p>
</p><p>
ஆனால், ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பொருளாதார ஆலோசகராக மாற முயல்வதும், அவரே பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் என்று பரப்புவதும் ஒரு கட்டுக்கதையாகும்.
</p><p>
2015 நல்லாட்சி காலத்திலிருந்தே ரணில் விக்ரமசிங்க பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளே நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியையும் மக்கள் போராட்டத்தையும் உருவாக்க வழிவகுத்தன.</p><p>

மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்புக் கூற வேண்டிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரம் குறித்த சரியான புரிதல் எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f4f60e0-7f28-41fc-bc4d-eb8568a76ca6/26-6a8789bdb1552.webp' /></p><p> </p><p>அவர் எப்போதும் தீவிர நவதாராளவாத கொள்கைகளின் மூலம் மக்கள் மீது அதிக வரிகளைய சுமத்தி, பொதுச் சொத்துக்களைய தனியார்மயப்படுத்தி மக்களை துன்புறுத்தினார்.
</p><p>
மக்களின் அரகலய போராட்டத்துக்குப் பின்னரும் ரணில் விக்கிரமசிங்க செய்தது ராஜபக்சர்கள் உள்ளிட்ட ஊழல்வாதிகளை பாதுகாத்ததே தவிர, நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு சென்றதல்ல என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T23:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[படையினர் வசம் இருக்கும் தமிழ் மக்களின் காணிகள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-s-instructions-to-security-forces-1787250084"></link>
            <id>https://tamilwin.com/article/president-s-instructions-to-security-forces-1787250084</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக நேற்று(20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><h2>&nbsp;அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை&nbsp;</h2><p>
</p><p>
தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறும் அறிவுறுத்தினார்.</p><p>

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b6d389b-41da-496f-8ca0-f929e247b9a8/26-6a87820393dcf.webp' /></p><p>
</p><p>
அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.</p><p>

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்ஹ, காணி ஆணையாளர் நாயகம், முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T22:39:17+00:00</updated>
        </entry>
    </feed>
