<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-24T12:53:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையர் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-nadu-police-arrest-two-sri-lankan-trespasser-1784895822"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-nadu-police-arrest-two-sri-lankan-trespasser-1784895822</id>
            <summary type="text">தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமான முறையில் ஊடுருவிய
இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன்
பொலிசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமான முறையில் ஊடுருவிய
இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன்
பொலிசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>

குறித்த கைது நடவடிக்கையானது இன்று(24.07.2026) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>இருவர் கைது</h2><p>
</p><p>
இராமேஸ்வரம் - மரைன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்று பார்த்த போது இலங்கையைச் சேர்ந்த இருவர் வந்திருந்தது
தெரிய வந்துள்ளது.
</p><p>
இதையடுத்து இருவரையும் கைது செய்த மரைன் பொலிசார் இராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d97b0a3a-11e0-4229-ab1c-96d73fd47954/26-6a635acb3c11c.webp' /></p><p>

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை - வட்டாலை பகுதியைச்
சேர்ந்த லூசிநந்த்(30) மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(31)
ஆகியோர் என மரைன் பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>

மேலும், இவர்கள் இருவரும் நேற்று(23) இரவு மன்னார் - பேசாலை கடற்கரையில்
இருந்து 3 இலட்ச ரூபா பணம் கொடுத்து படகு ஒன்றில் புறப்பட்டு இன்று(24)
அதிகாலை சுமார் 4 மணி அளவில் தனுஷ்கோடி - கம்பிப்பாடு கடற்கரையில் வந்து
இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தமிழக பொலிசார்</h2><p>

இந்த இருவர் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள
அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர்கள் இருவர் மீதும்
போதைப் பொருள் கடத்தல் வழக்கு
மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் பல நிலுவையில் உள்ளதுடன், இலங்கையின்
போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்தமையும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c04b1615-bd7f-4c99-af40-fb85972b79d8/26-6a635aca8a0a5.webp' /></p><p>

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து கடல் வழியாக
தமிழகத்திற்குள் ஊடுருவி தமிழகம் அல்லது கேரளா மாநிலங்களில் சட்ட விரோதமாக
மறைந்திருக்கலாம் என்பதற்காக வந்திருக்கலாம் என தெரிய வந்தன்
அடிப்படையில் தொடர்ந்து இவர்களிடம் மத்திய மாநில பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
சட்டவிரோதமாக தமிழகத்திற்கு நுழைந்ததன் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன் இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு வழக்குகள் இலங்கை
நிலுவையில் உள்ளதால் இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப உயர்
அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T12:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டு யானையுடன் வான் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-family-members-injured-in-wild-elephant-crash-1784893438"></link>
            <id>https://tamilwin.com/article/six-family-members-injured-in-wild-elephant-crash-1784893438</id>
            <summary type="text">அனுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர துருலிய சேவன அருகில்,
காட்டு யானையுடன் வான் ஒன்று மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர துருலிய சேவன அருகில்,
காட்டு யானையுடன் வான் ஒன்று மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6
பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் இன்று(24.07.2026) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மனித - யானை மோதல்</h2><p>
</p><p>

பாதுக்கப் பகுதியில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று அனுராதபுரம்
- குருநாகல் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென வீதியைக்
கடந்து சென்ற காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64cde805-d61e-4c3b-994e-334c9d4aebf7/26-6a6352da2edd2.webp' /></p><p>இந்த விபத்தில் வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இவர்களில் இருவரின்
உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்தப் பகுதியில் மனித - யானை மோதல் என்பது இன்று, நேற்று உருவான பிரச்சினை
அல்ல என்றும், கடந்த 18 வருடங்களாக இது தொடர்ந்தும் நீடித்து வருகின்றது
என்றும் கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p></p><h2>உடனடி தீர்வு</h2><p> </p><p>

எனினும், இதற்குரிய தீர்வுகளைப்
பெற்றுக்கொடுக்க வேண்டிய அதிகாரிகள் நீண்ட காலமாக அசமந்தப் போக்கில்
செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b1b9e03-9e2e-4377-99aa-6ed2367994d8/26-6a6352dad220d.webp' /></p><p>முன்பு விவசாயத்தை முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த இந்தப் பகுதி
மக்கள், தொடரும் யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது விவசாயக்
கைத்தொழிலைக் கூடக் கைவிடும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். </p><p>

எனவே,
உயிரிழப்புக்களைத் தவிர்க்கும் வகையில் மனித - யானை மோதலுக்கு உடனடியான
 தீர்வை வழங்குமாறு கிராம மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T12:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித ராஜபக்ச மீதான காணி அபகரிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-grabbing-case-against-yoshitha-1784893764"></link>
            <id>https://tamilwin.com/article/land-grabbing-case-against-yoshitha-1784893764</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்சவுக்கு எதிராகத்
தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்சவுக்கு எதிராகத்
தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை
ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில்
விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p></p><p>

இன்றைய நீதிமன்ற அமர்வின்போது பிரதிவாதியான யோசித ராஜபக்ச ஆஜராகியிருக்கவில்லை. அவர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி
சம்பத் மெண்டிஸ், யோசித ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு
காரணமாகவே அவரால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாமல் போயுள்ளது என்பதை குறிப்பிட்டார்.</p><h2>விசாரணையை&nbsp;ஒத்திவைக்குமாறு&nbsp;கோரிக்கை</h2><p> </p><p>அத்துடன், வழக்கு விசாரணையை வேறொரு தினத்துக்கு
ஒத்திவைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சட்டத்தரணியின் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட்
20ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</p><p></p><p> </p><p>மேலும், அன்றைய தினம் அந்த
வழக்கில் சாட்சியமளிக்க வேண்டிய கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துச்
சாட்சிகளையும் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நீதிபதி இதன்போது
அறிவுறுத்தினார்.
</p><p>
தெஹிவளை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் 100 கோடி ரூபாவுக்கும் அதிக
பெறுமதியைக் கொண்ட ஐந்து காணிகளைச் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியதாகக்
குற்றஞ்சாட்டப்பட்டு, சட்டமா அதிபரால் யோசித ராஜபக்சவுக்கு எதிராக இந்த
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T12:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் - யாழ் கடற்றொழில் சமாசத்தின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-on-border-crossing-indian-fishermen-jaffna-1784892086"></link>
            <id>https://tamilwin.com/article/fire-on-border-crossing-indian-fishermen-jaffna-1784892086</id>
            <summary type="text">எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய
கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய
கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்
சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
</p><p>
இன்று(24.07.2026) யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.</p><p></p><h2>இந்திய கடற்றொழிலாளர்கள்</h2><p>
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், </p><p>

இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள்
அத்துமீறி நுழைந்து எமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக
அழித்துவிட்டு செல்கின்றனர்.
</p><p>
இந்திய கடற்றொழிலாளர்களின் இத்தகைய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில்
இதனை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b56e8004-994e-404a-afe4-a69905a20af4/26-6a634c9a9c803.webp' /></p><p>
இந்திய தமிழக புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றதன் பின் அதிகளவிலான இந்திய
கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட
இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி
பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்தனர்.</p><p></p><h2>துப்பாக்கி பிரயோகம்&nbsp;</h2><p>
</p><p>

இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான வருகை எமது கடற்றொழிலாளர்களை வாழ்வாதார நீதியாக
பாதிப்பது மட்டுமல்லாது கடற்றொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு செல்லவும்
நிர்ப்பந்தித்துள்ளது.&nbsp;</p><p>
இலங்கை கடற்படையிடம் வினயமாக கேட்கிறோம்.&nbsp; எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களை
கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது அவர்களின்
வருகையை கட்டுப்படுத்துங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85629a08-c8b9-4037-82b4-0fa0288508f7/26-6a634c99caa31.webp' /></p><p>
</p><p>
எங்களால் இனியும் பொறுமை காக்க முடியாது நாட்டின் ஜனாதிபதியையும் துறைசார்
அமைச்சரையும் சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாக கூற இருக்கிறோம்.
</p><p>
சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை ஆகவே எமது கடற்பகுதியை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடம் உள்ள நிலையில் எல்லை
தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு
கட்டுப்படுத்துங்கள். நாங்கள் பக்க பலமாக இருப்போம் என 
குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T12:15:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழையும் மர்ம கும்பல் - அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/katunayake-airport-officers-to-be-transfer-1784871965"></link>
            <id>https://tamilwin.com/article/katunayake-airport-officers-to-be-transfer-1784871965</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க சுங்க அதிகாரிகள் குழுவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யத் தயாராகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க சுங்க அதிகாரிகள் குழுவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 போதைப்பொருட்கள், வெளிநாட்டு சிகரட்டுகள், சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை நாட்டுக்குள் கடத்த முயற்சித்ததை வெற்றிகரமாக முறியடித்து, அரச வருமானத்தை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிகாரிகளே இவ்வாறு மாற்றப்படவுள்ளனர். </p><p>அண்மையில் பதவியேற்ற சுங்கப் பணிப்பாளர், சில சுங்க தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் குறுகிய நோக்கங்களைக் கொண்ட சில நபர்களின் அழுத்தங்களே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.</p><p></p><h2>முக்கிய நோக்கம்&nbsp;</h2><p> </p><p>அத்துடன் திசை திருப்பல்கள் காரணமாக இந்த இடமாற்றங்களுக்கான பின்னணி தயாரிக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.</p><p> அண்மைக் காலமாக பெருமளவிலான கடத்தல்காரர்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைத்து மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர். </p><p>குறித்த அதிகாரிகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக இதற்கு முன்னர் பல்வேறு வணிக மற்றும் தனிப்பட்ட உறவுகளுடன் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சில அதிகாரிகளை மீண்டும் இந்த பதவிகளில் நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bb82d75-a8fe-4036-b8fe-af67d3d3a150/26-6a6351c99b008.webp' /></p><p> </p><p>கடந்த காலங்களில் விமான நிலையத்திற்குள் செயற்பட்ட ஊழல் முறைகள் மற்றும் சட்டவிரோத கடத்தல்களுக்கு மீண்டும் இடமளிப்பதே இந்த நடவடிக்கை பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாக இருக்குமா என்ற வலுவான சந்தேகமும் எழுந்துள்ளது.</p><p> அரச வருமானத்தை அதிகரித்தல், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் அரச நிறுவனங்களுக்குள் நிலவும் ஊழலை ஒழித்தல் என்பவற்றுக்கு தற்போதைய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. </p><p>இவ்வாறான பின்னணியில், இடம்பெறவுள்ள இவ்வாறான இடமாற்றங்களால் ஒட்டுமொத்த சுங்க அமைப்பின் நேர்மையான அதிகாரிகளின் சேவை ஊக்கம் வீழ்ச்சியடையக்கூடும் எனத் துறைசார் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கியவர்கள் மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்! அமைச்சர் சந்திரசேகரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-jaffna-public-library-talking-welfare-people-1784892909"></link>
            <id>https://tamilwin.com/article/fire-jaffna-public-library-talking-welfare-people-1784892909</id>
            <summary type="text">&quot;1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே
நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத்
தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>"1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே
நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத்
தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்" என்று
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்தார்.</p><p>

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்&nbsp; நடைபெற்ற சபை
ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு&nbsp;குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> கறுப்பு ஜூலை கலவரம்</h2><p>
</p><p>
அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,</p><p>
"1983 ஆம் ஆண்டில் நுவரெலியாவை எரித்துச் சாம்பலாக்கியது யார்? ஐக்கிய தேசிக்
கட்சியினரே எமது மக்களை நாசமாக்கினார்கள்.

பதுளையில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் ராணுவத்தினர் கோடு போட்டனர். அதன்
பின்னரே வந்த ஐதேக காடையர்கள் கடைகளை எரித்து நாசமாக்கினார்கள். பச்சிளம்
குழந்தைகளைக் கூட இந்தப் பாவிகள் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe5a587f-4cbb-4757-a99c-1a3e08d77a27/26-6a63510b83867.webp' /></p><p>
</p><p>
தோட்டத் தொழிலாளர்களைச் சீரழித்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான்.
அவர்கள் அவசரகாலச் சட்டத்தையும், கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும்
கொண்டுவந்தார்கள்.

1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் மோசடி செய்தனர்.</p><p></p><h2>யாழ். பொது நூலகம்</h2><p> எங்களின் இதயமாகக்
கருதப்பட்ட யாழ். பொது நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கியவர்களும் அவர்களே.

அக்காலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வடக்கு மக்களின்
விருப்பம் பிரதிபலிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1af7a4-3892-4533-ae41-958e21b1ff73/26-6a63510c3842b.webp' /></p><p> அதற்கு எதிராக எமது தலைவர் ரோஹண விஜேவீர வழக்கு
தாக்கல் செய்தார். அந்த வழக்கில் வெற்றி பெற்றிருந்தால், ஜனநாயக ரீதியில்
தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால், எமது கட்சியைத் தடை செய்தார்கள். </p><p>தேர்தல் நடத்தப்பட்டு எமது கட்சியைச்
சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தால், ஜே.ஆரின்
அடக்குமுறைகளை எதிர்த்திருப்பார்கள்; கறுப்பு ஜூலை போன்ற கொடூரச் சம்பவமும்
நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்ற அனுமதியுடன் எரிக்கப்பட்ட 600 கிலோ கேரளக் கஞ்சா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/600-kg-kerala-drugs-burned-court-permission-jaffna-1784889524"></link>
            <id>https://tamilwin.com/article/600-kg-kerala-drugs-burned-court-permission-jaffna-1784889524</id>
            <summary type="text">ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு
அண்மையில் இன்றையதினம்(24.07.2026) 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது
எரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு
அண்மையில் இன்றையதினம்(24.07.2026) 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது
எரித்தழிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு
திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில் அது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்
வழக்குகள் நடைபெற்று வந்தது.</p><p></p><h2>பல அதிகாரிகள் முன்னிலையில்</h2><p>அந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் குறித்த
கஞ்சாப் பொதிகள் இன்றையதினம் எரிக்கப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33f5089c-2d8f-48d2-b469-74668bcb1ddf/26-6a6343ca8462b.webp' /></p><p>
இதன்போது நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், போதைத்தடுப்பு பொலிஸார், கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார
பரிசோதகர்கள் முன்னிலையில் இந்த கஞ்சா பொதிகள் எரிக்கப்பட்டன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:40:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சங்கானை பிரதேச செயலகத்தின் கோரிக்கையை நிராகரித்த வலிகாமம் பிரதேச சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valigamam-west-ps-rejects-sanganai-ds-request-1784889465"></link>
            <id>https://tamilwin.com/article/valigamam-west-ps-rejects-sanganai-ds-request-1784889465</id>
            <summary type="text">சங்கானை பேருந்து நிலைய வளாகத்தின் வடக்கு பகுதி எல்லையோரமாக வாகன
தரிப்பிடம் மற்றும் வீதி ஆகியவை அமைப்பதற்காக சங்கானை பிரதேச செயலகம்
முன்வைத்த கோரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சங்கானை பேருந்து நிலைய வளாகத்தின் வடக்கு பகுதி எல்லையோரமாக வாகன
தரிப்பிடம் மற்றும் வீதி ஆகியவை அமைப்பதற்காக சங்கானை பிரதேச செயலகம்
முன்வைத்த கோரிக்கையை வலிகாமம் மேற்கு பிரதேச சபை நிராகரித்துள்ளது.</p><p>

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் நேற்றைய(23.07.2026) மாதாந்த அமர்வில் குறித்த விடயம்
தொடர்பான கோரிக்கை ஒன்றை பிரதேச செயலகம் விடுத்துள்ளதாக தவிசாளர் ஜயந்தனால்
பிரஸ்தாபிக்கப்பட்டு அது தொடர்பாக சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் கோரப்பட்டிருந்தன.</p><p></p><h2>இடர்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு</h2><p>
</p><p>
இதன் போது சபை உறுப்பினர் செல்வக்குமார் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,</p><p>குறித்த பேருந்து நிலைய வளாகம் வலி.மேற்கு பிரதேச சபையின் உடைமையாக
இருப்பதனால் அந்த வளாகத்தினுள் அம்மாச்சி உணவகமும் இயங்கி
வருகின்றது.</p><p>

அத்துடன் மறுபுறம் முச்சக்கர வண்டி தரிப்பிடம் இருக்கும் நிலையில் பிரதேச செயலகம்
தமது சேவை பெறுநர் வருகைக்காக ஒரு வீதி அமைக்கவும் சிறு வாகனங்களை
தரித்து நிறுத்துவதற்கு கொட்டகை ஒன்றை அமைப்பதற்குமான அனுமதியை பிரதேச
சபையிடம் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eafa36c-4383-4812-a538-5650d05e6a17/26-6a6343752c5aa.webp' /></p><p>
</p><p>
ஆனால் குறித்த நிலப்பரப்பில் பிரதேச சபை மக்கள் நலன்சார்
பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஆலயத்தின்
முன் பகுதியாக குறித்த இடம் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அத்துடன் சபையின் ஆளுகை இந்த கையளிப்பூடாக எதிர்காலத்தில் இல்லாது
போகும் நிலை வருவதற்கான ஏதுநிலை இருக்கின்றது.</p><p>சபைக்குரிய உடைமையாக இருக்கும் ஒன்றை இன்னொரு அரச நிறுவனத்தின் வாகன தரிப்பிடத்திற்காக வழங்குவதையோ குறித்த நிறுவனத்துக்குச் செல்வதற்கான வீதியை அமைப்பதற்கான அனுமதி வழங்குவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>கோரிக்கை நிராகரிப்பு</h2><p>
மறுபுறம் குறித்த சபையின் முன்னாள் தவிசாளரும் இந்நாள் உறுப்பினருமான 
நாகரஞ்சினி ஐங்கரன், இரு நிறுவனங்களும் மக்களுக்கான சேவை வழங்கும் ஒன்றாக இருக்கும்
நிலையில் போக்குவரத்திற்காக வீதியை அமைக்க இணக்கப்பாடு செய்ய
முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9110df81-221a-4e57-a81d-13a4bba13c98/26-6a6343747c5a9.webp' /></p><p> </p><p>அதுவும் எழுத்து மூலமாக அல்லாமல் ஒரு சமரச இணக்கப்பாட்டுடன் மட்டுமே
முன்னெடுக்கலாம்.

ஆனால் ஏனைய பல சபையின் உறுப்பினர்கள் குறித்த நிலப்பரப்பை பிரதேச
செயலகத்துக்கு வழங்க முடியாது என்றும் தற்போது நடைமுறையில் எவ்வாறு
இருக்கின்றதோ அதன் பிரகாரம் தொடர்ந்தும் செயற்படுவதே சிறந்தது என்றும்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் சபையின் உறுப்பினர்கள் குறித்த விடயத்திற்கு அனுமதியளிக்க
விரும்பாமையால் தொடர்ந்தும் காணப்படுகின்ற நடைமுறையின் அடிப்படையில் குறித்த
செயற்பாடுகள் தொடரும் என சபையில் தீர்மானிக்கப்பட்டதுடன் பிரதேச செயலகத்தின்
கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:24:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லை தாண்டும் கடற்தொழிலாளர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுங்கள்! யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-on-indian-fishermen-who-cross-the-border-1784888050"></link>
            <id>https://tamilwin.com/article/fire-on-indian-fishermen-who-cross-the-border-1784888050</id>
            <summary type="text">எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய
மீன்பிடிப் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய
மீன்பிடிப் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்
சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
</p><p>யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இன்று (24.07.2026) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>இதன்போது மேலும், இந்திய கடற்தொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள்
அத்துமீறி நுழைந்து எமது கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக
அழித்துவிட்டு செல்கின்றனர்.

இந்திய கடற்தொழிலாளர்களின் இத்தகைய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில்
இதனை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டது.</p><h2>அத்துமீறி மீன்பிடி நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்திய தமிழக புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றதன் பின் அதிகளவிலான இந்திய
கடற்தொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட
இந்திய சட்டவிரோத கடற்தொழிலாளர்கள் எமது கடற்தொழிலாளர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி
பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்தனர்.</p><p></p><p>
</p><p>
இந்திய கடற்தொழிலாளர்களின் தொடர்ச்சியான வருகை எமது கடற்தொழிலாளர்களை வாழ்வாதார நீதியாக
பாதிப்பது மட்டுமல்லாது மீனவ தொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு செல்லவும்
நிர்ப்பந்தித்துள்ளது.</p><p>

இலங்கை கடற்படையிடம் வினயமாக கேட்கிறோம் எல்லை தாண்டும் இந்திய கடற்தொழிலாளர்களை
கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது அவர்களின்
வருகையை கட்டுப்படுத்துங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4689d1c-6be0-48f5-8854-3523ff206e36/26-6a634784d53b5.webp' /></p><p>

எங்களால் இனியும் பொறுமை காக்க முடியாது நாட்டின் ஜனாதிபதியையும் துறைசார்
அமைச்சரையும் சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாக கூற இருக்கிறோம்.

சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை. </p><p>ஆகவே இறையுள்ள எமது கடற்
பகுதியை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடம் உள்ள நிலையில் எல்லை
தாண்டும் இந்திய கடற்தொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு
கட்டுப்படுத்துங்கள் நாங்கள் பக்க பலமாக இருப்போம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்! உயிரைக் காக்க தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eelam-refugee-submits-request-chief-minister-vijay-1784888804"></link>
            <id>https://tamilwin.com/article/eelam-refugee-submits-request-chief-minister-vijay-1784888804</id>
            <summary type="text">சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிய அமைச்சர்கள் கே. தென்னரசு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிய அமைச்சர்கள் கே. தென்னரசு மற்றும் வன்னி அரசு ஆகியோரை முகாமுக்கு அனுப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>


ஈழத்தமிழர்களின் உயிரைக் காக்க முதலமைச்சர் விஜய்க்கு ஈழ அகதிகள் பாதுகாப்பு குழு கோரிக்கை வைத்துள்ளது.</p><p></p><h2>&nbsp;ஈழ அகதிகள்&nbsp;</h2><p>

ஈழ அகதிகள் பாதுகாப்புக்குழு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் பா. புகழேந்தி, நேற்று(23) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு ஒன்றை வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/399f43b6-162e-4e77-8c02-d6cf336c0717/26-6a6343ca0758c.webp' /></p><p>

அந்த மனுவில், "திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர் மீதான வழக்குகளை விரைந்து முடித்து, சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பக் கோரி 5 ஈழத்தமிழர்கள் 9 நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

அவர்களின் உயிரைக் காப்பாற்றி, கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1750908482590525%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சுகந்தினி, பரிஷ்டா, ஜனனி, ஜான்சன், மதுசன் ஆகியோர் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து, இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><h2>&nbsp;தமிழ்நாடு முதலமைச்சர்&nbsp;</h2><p>
</p><p>
சுகந்தினி மீது திருச்சி க்யூ பிரிவு பொலிஸார் பதிவு செய்துள்ள வழக்கில் (Cr.No.1/2023), இரண்டரை ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.</p><p> பரிஷ்டா தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 13 ஆம் திகதியிலேயே ரத்து செய்து, அவரை சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டுவிட்டது.

இருப்பினும், இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுபோல ஈழத் தமிழர்கள் பலரின் வழக்குகள் முடிக்கப்படாமல் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43661116-6c02-4935-92a6-b3f4c7fff330/26-6a6345d1b924a.webp' /></p><p> </p><p>அவற்றை விரைந்து முடிக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, "சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிய அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோரை முகாமுக்கு அனுப்ப வேண்டும்.</p><p>

மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, சட்டரீதியான தடைகள் இல்லாதவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கோ அல்லது தேவையான இடங்களில் வழக்குகளை மீள பெறுவதற்கோ தமிழ்நாடு அரசு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஈழ அகதிகள் பாதுகாப்புக்குழு தமிழ்நாடு முதலமைச்சர் தனி பிரிவில் கோரிக்கை வைத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடியால் கதி கலங்கியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பணக்காரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unp-shocked-after-police-announcement-1784780191"></link>
            <id>https://tamilwin.com/article/unp-shocked-after-police-announcement-1784780191</id>
            <summary type="text">இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்தவர்கள் மற்றம் திடீர் பணக்காரரானவர்களுக்கு அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

திடீரெனப் பணக்காரர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்தவர்கள் மற்றம் திடீர் பணக்காரரானவர்களுக்கு அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p> 

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை பொலிஸார் அண்மையில் கோரியிருந்த நிலையில் இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>

இதன் காரணமாக அரசியல்வாதிகளின் மட்டுமன்றி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது மக்களுக்கும் சிக்கல் நிலை ஏற்பட்டுளளது.</p><p></p><h2><b>ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை</b></h2><p> 

இவ்வாறான நிலையில் பொலிஸார் விடுத்த அறிவித்தலை உடனடியாக மீளப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f33c262d-483d-4402-98d9-cdfc80af6563/26-6a62cd83ba74e.webp' /></p><p>முறையான வழிகாட்டல்கள் இன்றி குறித்த பொலிஸ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், ஐக்கிய இராச்சியத்தின் சுதந்திரமான பரிசோதனைச் சபை ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகளுக்கும் பொலிஸாரின் இத்தகைய அறிவித்தலுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p> 

எப்படியிருப்பினும், அண்மைக்காலங்களில் சொத்துக்களைச் கொண்டவர்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h3><b>கறுப்புப் பொருளாதாரம்</b></h3><p> </p><p>

கறுப்புப் பொருளாதாரம் குறிப்பாக, கடந்த 3 தசாப்தங்களாக இந்நாட்டில் கறுப்புப் பொருளாதாரம் பாரிய அளவில் பரவியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b33411e3-32d5-42e3-bf3e-a7d72edf34f7/26-6a62cd84a6dc5.webp' /></p><p>அதனை அடக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பொலிஸார் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HwapKBlbvNk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-24T10:54:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF - ETF நிதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-released-minister-regarding-epf-etf-1784885607"></link>
            <id>https://tamilwin.com/article/information-released-minister-regarding-epf-etf-1784885607</id>
            <summary type="text">ஊழியர் சேமநிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) என்பன நிறுவப்பட்ட பத்தாண்டுகளில், எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத ஆய்வை முதல் முறையாக நடத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழியர் சேமநிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) என்பன நிறுவப்பட்ட பத்தாண்டுகளில், எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத ஆய்வை முதல் முறையாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>புதிய நடவடிக்கைகள்</h2><p>

நிதிகளின் செயல்திறனையும் உறுப்பினர்களின் பலன்களையும் மேம்படுத்துவதற்காக தொழிலாளர் திணைக்களத்தின் மூலம் பல புதிய நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a603740-e2b5-4e03-870d-f0969b27bfd8/26-6a633baca060b.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அறிக்கைகளின் படி, ஊழியர் சேமநிதியில் பதிவு செய்யப்பட்டு பலன்களை பெறும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 22.9 மில்லியனாகும்.
</p><p>
இதில், நிதிகள் மாதந்தோறும் வரவு வைக்கப்படும் செயல்பாட்டில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை 3.1 மில்லியனாகும்.</p><p> 

ஊழியர் நம்பிக்கை நிதியில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று மில்லியன் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், 2025 ஆம் ஆண்டின் இறுதியில், ஊழியர் சேமநிதியின் சொத்துக்களின் மதிப்பு ரூ. 4.9 டிரில்லியனாகவும், ஊழியர் நம்பிக்கை நிதியின் சொத்துக்கள் ரூ. 637.5 பில்லியனாகவும் இருக்கும் என்று தொழிலாளர் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><h2>முதலாளிகளின் எண்ணிக்கை</h2><p>
</p><p>
இதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டில் உள்ள முதலாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரம் என்றும், அதில் பகுதி - அரச துறையை சேர்ந்த முதலாளிகளின் எண்ணிக்கை 376 என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d24b9e4-22d8-4ab3-bea9-eed866f1aa4e/26-6a633bad50543.webp' /></p><p>
</p><p>
கட்டணம் செலுத்தத்தவறிய தனியார் மற்றும் பகுதி- அரச துறை நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் செயல்முறையை தொழிலாளர் அமைச்சு தற்போது விரைவுபடுத்தியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், ஊழியர் பதிவு உட்பட பல EPF சேவைகளை ஊழியர்கள் ஆன்லைனில் செய்ய அனுமதிக்கும் "டிஜிட்டல் EPF" வசதி, கடந்த டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இந்த சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் மூலம், உறுப்பினர்கள் EPF மற்றும் ETF நிதிகள் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே சேவை மூலம் ஒரே இடத்திலிருந்து அணுக முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பண்பாட்டு ஊர்வலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colourful-cultural-procession-in-jaffna-1784886365"></link>
            <id>https://tamilwin.com/article/colourful-cultural-procession-in-jaffna-1784886365</id>
            <summary type="text">தமிழ்மொழித் தினத்தையும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினத்தையும் முன்னிட்டு ஏற்பாடு
செய்யப்பட்ட பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.குறித்த ஊர்வலமானது இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்மொழித் தினத்தையும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினத்தையும் முன்னிட்டு ஏற்பாடு
செய்யப்பட்ட பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த ஊர்வலமானது இன்றையதினம் (24.07.2026) காலை 9.00 மணிக்கு
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி முன்றலில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப
நிகழ்வுடன் ஆரம்பமானது.</p><p></p><h2>பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்</h2><p>அதனைத் தொடர்ந்து, வைத்தீஸ்வராக் கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம்
காங்கேசன்துறை வீதி, சத்திரச் சந்தி, வைத்தியசாலை வீதி, கார்கில்ஸ் சந்தி
மற்றும் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாகச் சென்று காலை 10.30 மணியளவில்
திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்தை வந்தடைந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607030e9-bb5a-4bdd-8966-b9636939cdae/26-6a633c664061d.webp' /></p><p>இந்த ஊர்வலத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலை நிகழ்வுகளுடன் புரவி
நடனம், பொய்க்கால் குதிரை, கும்மி, மயில் நடனம், கோலாட்டம், காவடி நடனம்,
செம்பு நடனம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், உடுக்கு, இன்னியம்,
தவில் - நாதஸ்வர இசை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
</p><p>
மேலும், தமிழ் மொழி மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அலங்கார
கலாசார ஊர்திப் பவனியும் ஊர்வலத்திற்கு தனிச்சிறப்பைச் சேர்த்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொன்மையும் உயிர்ப்பும் கொண்ட மொழி தமிழ் – வடக்கு ஆளுநர் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-are-proud-tamil-alive-among-ancient-languages-1784887582"></link>
            <id>https://tamilwin.com/article/we-are-proud-tamil-alive-among-ancient-languages-1784887582</id>
            <summary type="text">இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக
எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக
எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p><p>

தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் போற்றும் வகையிலான 'தமிழ்மொழித் தினமும்
சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் - 2026' நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர்
பண்பாட்டு மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24.07.2026) கோலாகலமாக நடைபெற்றது.</p><p></p><h2>தமிழ் மொழி</h2><p>
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.</p><p>

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

எங்களுக்குப் பெருமை சேர்ப்பது எமது தமிழ் மொழிதான். திருக்குறளை இந்த
உலகுக்குத் தந்ததும், செறிவான இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றைக்
கொண்டிருப்பதும் எமது மொழிதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3e7534-dcb5-4fbd-ac8d-04fa28c13c89/26-6a633c591c4c1.webp' /></p><p>

சுவாமி விபுலானந்தர் அவர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல
மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும், தனது தாய்மொழியான தமிழின் வளர்ச்சிக்காகவே
தனது பெரும்பாலான நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்தார். </p><p>அவர் தமிழ் மொழியை
நேசித்தது போலவே, பிற மொழிகளையும் மதித்தார். உலக அறிவைப் பெற்றுக்கொண்டு
அதைத் தமிழ் மொழியில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவரது சிந்தனை
இன்று கூடக் கல்வி உலகில் மிகப் பெரிய வழிகாட்டுதலாக உள்ளது.</p><p> அவர் செய்த
மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று 'யாழ்நூல்' ஆகும். பல நூற்றாண்டுகளாக மறைந்து
கிடந்த தகவல்களை ஆராய்ந்து அவர் வெளியிட்ட இந்த நூல், தமிழரின் கலை நாகரிகம்
மற்றும் இசை மரபின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் அரிய ஆய்வு நூலாகும்.</p><p></p><h2>ஆளுநர் நா.வேதநாயகன்</h2><p>
</p><p>
ஒரு மனிதன் தன்னலமின்றி அறிவுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்தால், அவர்
மறைந்த பிறகும் அவரது பெயர் என்றென்றும் வாழும் என்பதற்கு அவரே சிறந்த
உதாரணம். எனவே, அவர் காட்டிய அறிவுப் பாதையில் நாம் அனைவரும் பயணிப்போம்;
தமிழ் மொழியைப் பேணுவோம், நமது கலாசாரத்தைப் பாதுகாப்போம்,' என ஆளுநர் தனது
உரையில் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2f70d15-5749-4260-be91-a54e6aaa2a47/26-6a633c59cee2d.webp' /></p><p>

இந்நிகழ்வில், 'தமிழ் மொழிக்கு இலங்கையர்கள் ஆற்றிய பங்களிப்பு' என்ற விசேட
நூல் வடக்கு மாகாண ஆளுநரால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலின் முதல் பிரதியை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின்
கொன்சியூலர் ஜெனரல் ரீ சாய் முரளி&nbsp; ஆளுநரிடமிருந்து
பெற்றுக்கொண்டார்.</p><p>

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருந்த கடற்றொழில், நீரியல்
மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்&nbsp; இ.சந்திரசேகர் தவிர்க்க முடியாத
காரணங்களால் நேரில் கலந்துகொள்ளவில்லை. எனினும், நிகழ்வுக்கான அவரது
பிரத்தியேக உரை ஒலிவடிவில் சபையில் ஒலிக்கச் செய்யப்பட்டது.</p><p>

முன்னதாக, காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரி முன்றலில் இருந்து
ஆரம்பமான பிரம்மாண்டமான தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலம், காங்கேசன்துறை வீதி
மற்றும் வைத்தியசாலை வீதி ஊடாக யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை
வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுவாமி விபுலானந்தர், இயல், இசை மற்றும் நாடக
உருவகங்களைக் கொண்ட சிறப்பு ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன.</p><p></p><h2>அரசகரும மொழிகள்&nbsp;</h2><p> </p><p>அத்துடன், புரவி
நடனம், பொய்க்கால் குதிரை, வசந்தன் கும்மி, மயில் நடனம், கோலாட்டம், காவடி,
கரகாட்டம் உள்ளிட்ட பல பாரம்பரியக் கலை நிகழ்வுகளும் ஊர்வலத்துக்குச்
சிறப்பூட்டின.
</p><p>
அரசகரும மொழிகள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு
செய்திருந்த இந்நிகழ்வுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன்
தலைமை தாங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebc611b8-9361-485d-8531-445a26b5e261/26-6a633c5aa9047.webp' /></p><p> </p><p>யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர்
அருணாசலம் சண்முகதாஸ் வரவேற்புரையை நிகழ்த்தினார். அரசகரும மொழிகள்
திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன கெட்டியாராச்சி, பேராசிரியர்
பாரதி கெனடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.</p><p>சிவபூமி அறக்கட்டளையின் நிறுவுனர்
கலாநிதி ஆறுதிருமுருகன் சுவாமி விபுலானந்தர் நினைவஞ்சலி உரையை வழங்கினார்.</p><p>
நூல் வெளியீட்டு உரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளர்
சுவாமிநாதன் விமல் நிகழ்த்தினார். பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான பல்வேறு
கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T10:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை! மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது - காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/can-t-forget-can-t-forgive-bhaskaran-1784880533"></link>
            <id>https://tamilwin.com/article/can-t-forget-can-t-forgive-bhaskaran-1784880533</id>
            <summary type="text">&quot;1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலிசுமந்த ஈழத்தமிழர்களின்
இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்&quot; என காரைதீவு
பிரதேச சபையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>"1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலிசுமந்த ஈழத்தமிழர்களின்
இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்" என காரைதீவு
பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்று(23.07.2026) கல்முனையில் நடைபெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43ஆவது ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>

மறக்கவும் மன்னிக்கவும் முடியாத துயர நாள்</h2><p>அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

"1983 ஜூலை 23 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் பேரினவாத சக்திகளால் தமிழ்
மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறைகள் மறக்கவும் முடியாத,
மன்னிக்கவும் முடியாத துயர நாளாகும். </p><p>

43 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதன்
வடு இன்னமும் ஆறாமல் காணப்படுகின்றது.

அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட இனப்படுகொலையில் குறைந்தது
3,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0850526d-cc44-446d-9d52-0530c3bd5677/26-6a63219b5b828.webp' /></p><p>

குறிப்பாக கண்டி, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வாழும்
தமிழர்களின் உயிர்களும், உடமைகளும், சொத்துக்களும் முற்றிலும் சூரையாடப்பட்டுள்ளன.</p><p>

அன்றைய தினத்தில் வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக அப்பாவித் தமிழ் இளைஞர்கள்,
யுவதிகள் மற்றும் குழந்தைகள் எரியூட்டப்பட்டும், கொதிக்கும் தார்
பீப்பாய்களுக்குள் போடப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள்
பதிவாகியுள்ளன.</p><p></p><h2>தமிழர் அழிப்பு</h2><p> 

இலங்கையை ஒரு சிங்கள நாடாக அறிவித்து, தமிழினத்தை முழுமையாக
அழிக்கும் முனைப்புடன் அன்றைய சிங்கள ஆட்சியாளர்களின் ஆதரவுடனேயே இந்தக் கொடூரம்
அரங்கேற்றப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e667c52-bc81-4867-bdb1-677c539e2a0b/26-6a63219aacadb.webp' /></p><p>

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற
இந்த நிகழ்வில், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு
எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும்
வகையிலும் கருத்துரைகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இந்த நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்,
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ. தர்மதாச (தொண்டமான்), தமிழரசுக்
கட்சியின் கல்முனை தொகுதிக்கான இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான அ.
நிதான்சன் ,ஈபிஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட
அமைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணியநாதன்( கரன்) உட்பட பிரதேச மக்கள் பலரும்
கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-crackdown-to-curb-illegal-liquor-production-1784875765"></link>
            <id>https://tamilwin.com/article/police-crackdown-to-curb-illegal-liquor-production-1784875765</id>
            <summary type="text">மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை பிரதேச சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர். </p><p>

இதன்போது சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச்சென்றதுடன் அங்கிருந்த பெருமளவான சட்டவிரோத மதுபான போத்தல்களையும் மதுபான உற்பத்திக்கான கோடாவினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>மதுபான உற்பத்தியை தடுத்தல்</h2><p>
</p><p>
முழுநாடும் ஒன்றாக எனும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பகுதியில் அதிகரித்துச் செல்லும் சட்டவிரோத மதுபான உற்பத்தியை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19985373-e097-4302-9b98-8a846a5c76fb/26-6a6311201e6c7.webp' />&nbsp;&nbsp;</p><p> 


இது தொடர்பில் வவுணதீவு பிரதேசபையின் பிரதி தவிசாளர் த.டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இணைந்து கரையாக்கன்தீவு பகுதியில் உள்ள வாவிக்கரையோரம் முற்றுகையிட்டனர்.</p><p>இவ்வாறு கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபான பொருட்கள் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-24T10:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/students-protest-neet-exam-in-india-and-taminadu-1784884473"></link>
            <id>https://tamilwin.com/article/students-protest-neet-exam-in-india-and-taminadu-1784884473</id>
            <summary type="text">நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் அதனை தடுக்க தவறிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் அதனை தடுக்க தவறிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 5-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>

அவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.</p><p></p><h2>தமிழகத்தில் போராட்டங்கள்</h2><p>
</p><p>

நீட் தேர்வில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேட்டை கண்டித்தும், அதனை தடுக்கத் தவறியதாக குற்றஞ்சாட்டப்படும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இன்று(24) பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db7408bc-e46e-4370-9724-6421ab16adef/26-6a6332af99ed3.webp' /></p><p>
</p><p>
டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
</p><p>
சென்னையில் இந்திய மாணவர்கள் சங்கம் மற்றும் இளைஞர் சங்கம் சார்பில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. </p><p>

மேலும், பச்சையப்பன் கல்லூரி முன்பு அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.</p><p></p><h2>&nbsp;நீட் தேர்வு</h2><p>
</p><p>
மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், லயோலா கல்லூரி மற்றும் மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக பொலிஸார் குவிக்கப்பட்டனர்.</p><p>

இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் எதிரே மாவட்டச் செயலாளர் செல்வா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a23af23-6223-4315-a3c2-36ccb0865446/26-6a6332aea720c.webp' /></p><p>
</p><p>
சேலம் அரசு கலைக் கல்லூரியிலும் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கியதாக கூறப்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
பின்னர் பொலிஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p><p>

இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாணவர் அமைப்புகள் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்தன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T09:37:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் குற்றங்கள் தொடர்பில் முக்கிய கருத்துக்களை வெளியிட்டிருக்கும் கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nimalka-fernando-sri-lankan-civil-war-1784882134"></link>
            <id>https://tamilwin.com/article/nimalka-fernando-sri-lankan-civil-war-1784882134</id>
            <summary type="text">ஈழப் போரின் இறுதி தறுவாயில் போர் குற்றங்கள் நடைபெற்றதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் ஆனால் இவை அச்சந்தர்ப்பங்களில் அழிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி நிமல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழப் போரின் இறுதி தறுவாயில் போர் குற்றங்கள் நடைபெற்றதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் ஆனால் இவை அச்சந்தர்ப்பங்களில் அழிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
நல்லாட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கு முன்னிலையில் செயற்பட்டவர்.</p><p>மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஜே. ஆர். ஜெயவர்தன அரசாங்கக் காலத்தில் இருந்து குரல் கொடுத்தவர்.
</p><h2>
யுத்தப் பிரகடனம்</h2><p>ஒரு யுத்தம் (War) நிலவுவதாக பிரகடனம் செய்யப்பட்டது. எனவே, பயங்கரவாதத்தை அடக்கும் விவகாரத்தில் குற்றம் நடந்திருந்தால், அந்த குற்றம் குறித்து நாம் விசாரணை நடத்த வேண்டும். 'அவர் பயங்கரவாதி என்பதால் தான் கொன்றேன்' என்று கூற முடியாது.</p><p>அவர் ஒரு பயங்கரவாத அமைப்பில் இருந்திருக்கலாம்.
நேரடி மோதலின் போது (Direct conflict) ஒருவரையொருவர் கொல்வதற்கும், அதற்குப் பின்னரான நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. </p><p>போர்க் குற்றம் என்பதற்கு சில வரைவிலக்கணங்கள் உள்ளன. ஒரு போரை நடத்துவதற்குக் கூட ஒரு சட்டக் கட்டமைப்பு இருக்க வேண்டும், அதில் பரஸ்பர தன்மை இருக்கலாம் என்று எல்.ஆர். (LR) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6979d5b3-15d4-486f-9274-431774c8e649/26-6a6323d8213bc.webp' /></p><p>ஆயுதமற்ற பொதுமக்கள் மீது குண்டுவீசி அவர்களைக் கொல்வது போன்ற சம்பவங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால், அவை குற்றங்களாகும். </p><p>அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் வழக்கு தொடரும் உரிமை உள்ளது.
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை. அவையும் போர் குற்றங்களே.நிராயுத பாணிகளாகவே அவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><h2>
போருக்கு பின்னரான குற்றங்கள்</h2><p>அதேபோல், நமது தரப்பால் ஆயுதமற்ற நபர்களைக் காணாமல் போகச் செய்தல், ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தல் மற்றும் உயிரிழந்த போர்க் கைதிகளின் உடல்களைப் புதைத்த பின்னர் அவர்களின் கல்லறைகளை உடைத்துச் சேதப்படுத்துதல் போன்றவை போர்க் குற்றங்களாகும். </p><p>போர்க் குற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நடப்பது மட்டுமல்ல, போருடன் தொடர்புடைய அனைத்து வன்முறைகளும் அதில் அடங்குகின்றன.
</p><p>மனிதநேய நடவடிக்கையாக இருந்தாலும், அந்த மனிதநேய நடவடிக்கையின் போது குற்றங்கள் நடந்திருக்கலாம். அது இரு தரப்பிலிருந்தும் நடந்திருக்கலாம். </p><p></p><p>ஒரு மோதலின் போது யாருக்கும் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
உலகில் உள்ள அனைத்து மோதல்களையும் பார்த்தால், ஒரு அரசால் பயங்கரவாதத்தை அடக்குவது தொடர்பான சட்டங்கள் இருக்கும்.</p><p> அதே வேளையில், மனித உரிமைகள் சார்ந்த ஒரு கட்டமைப்பும் (Framework) உள்ளது. பயங்கரவாதிக்கும் மனித உரிமை உண்டு.
தற்காப்பு உரிமை என்பது எனக்கு மட்டுமல்ல, </p><p>எனக்கு அருகில் இருப்பவர் ஒருவரின் உயிரைப் பறிக்க ஒருவர் வருகிறான் என்றால், அந்த நபரைத் தற்காப்புக்காகக் கொலை செய்வதற்குக்கூட சட்டப் பாதுகாப்பு குறிப்பிட்ட அளவுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:54:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான செய்தி! இன்று பதிவாகியுள்ள பெறுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784881209"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784881209</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 24 கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று (24) அதன் விலை 3000 ரூபா குறைந்து 374 ,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>ஆபரண தங்கத்தின் பெறுமதி</h2><p>
</p><p>
இதேவேளை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2800&nbsp;ரூபா குறைந்து 344,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8efdc614-79b4-4342-bf14-0cc785fe88d7/26-6a6325bede985.webp' /></p><p>
</p><p>அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.46,750 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,000 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:44:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். </p><p>
இந்த வாக்குமூலத்தில் அடங்கியுள்ள தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரியவந்துள்ளது.
</p><p>கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார். </p><p>அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>கோட்டாபயவின் இரு வாக்குமூலங்கள்</h2><p>இந்தச் சம்பவம் தொடர்பிலும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடமும் வாக்குமூலம் பெற்றிருந்தது. </p><p>தற்போது சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
இது தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடம் இரண்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. </p><p>முதல் வாக்குமூலத்தில், சுகீஸ்வர பண்டாரவிற்குத் தனிப்பட்ட செயலாளர் என்ற முறையில் இந்தச் சம்பளம் வழங்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். </p><p>ஆனால், இரண்டாவது வாக்குமூலத்தில், அந்தச் சம்பளம் சுகீஸ்வரவிற்கு வழங்கப்படவில்லை என்றும், தவறுதலாக வேறு ஒரு செயலாளருக்கு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df624e24-2ddf-4df3-9a16-2bd553354c65/26-6a62e26654f56.webp' /></p><p>அவர் குறிப்பிட்ட அந்த செயலாளர் நந்தசேன மற்றும் மஹிந்த ஆகியோரின் இளைய சகோதரியான பிரீதி ராஜபக்சவின் மூத்த மகன், முன்னாள் கடற்படை அதிகாரியான மாலக சந்திரதாச. அவருடைய தந்தை வைத்தியர் லலித் பிரியலால் சந்திரதாச.</p><p> மாலக சந்திரதாச, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது செயலாளராகப் பணியாற்றியதாகவும், அந்தச் சம்பளம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது என்றும் இரண்டாவது வாக்குமூலத்தில் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
</p><p>முதலில் சுகீஸ்வர பண்டாரவிற்கு சம்பளம் கொடுத்ததாகச் சொல்கிறார், இரண்டாவது வாக்குமூலத்தில் "இல்லை, அவருக்குக் கொடுக்கவில்லை, தவறுதலாக எனது செயலாளராக இருந்த மாலக சந்திரதாசவிற்குத்தான் கொடுத்தேன்" என்கிறார்.
</p><h2>மாலக சந்திரதாச வழங்கிய வாக்குமூலம்</h2><p>இதனைத் தொடர்ந்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாலக சந்திரதாசவை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது. </p><p>ஆனால் மாலக சந்திரதாச வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"நான் ஒரு சதம் கூட வாங்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்!" என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
</p><p>"நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. வேறு எந்தவொரு பதவியிலோ பணியாற்றவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a7f3e78-60ea-45e3-b5a6-3c55e9c862e3/26-6a62e26704bfc.webp' /></p><p>எந்தவொரு சம்பளமோ, பணமோ, கொடுப்பனவோ, வாகனமோ அல்லது வேறு எதுவும் நான் பெறவில்லை. அப்படி ஏதேனும் சொல்லியிருந்தால், கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்" என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.</p><p>அதனால் இது குறித்துத் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தான் இந்த விசாரணைகள் நடைபெறுகின்றன. </p><p>இதன் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டது போலவே கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்ய வாய்ப்புள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T08:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சொல்லை மறந்தாலும் கூகுள் கணக்கை மீட்டெடுக்கலாம் : அறிமுகமான புதிய வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/google-new-selfie-video-sign-in-feature-1784879478"></link>
            <id>https://tamilwin.com/article/google-new-selfie-video-sign-in-feature-1784879478</id>
            <summary type="text">கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய அல்லது மறந்த கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p> 

இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய அல்லது மறந்த கடவுச்சொற்கள் அல்லது தங்களுக்கு விருப்பமான சாதனங்களை அணுக முடியாமல் கணக்கு முடக்கப்பட்டால், அவற்றை மீட்டெடுக்க மற்றொரு வழியை வழங்குகிறது.</p><p>

ஆல்ஃபபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனம், பயனர்கள் பல கோணங்களைப் படம்பிடிக்கும் வகையில், வழிகாட்டப்பட்ட தலை அசைவுகளைச் செய்யும் ஒரு சிறிய வீடியோவைப் பதிவு செய்வதன் மூலம் சரிபார்ப்பை அமைக்க அனுமதிக்கும். </p><p></p><h2>தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சமயங்களில்</h2><p>கூகுள் அந்தப் பதிவைச் சேமித்து, பயனர்கள் பின்னர் உள்நுழைய முயற்சிக்கும்போது பதிவேற்றும் நேரடி வீடியோக்களை அங்கீகரிக்க அதைப் பயன்படுத்தும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228eefc7-a7e1-4aeb-8814-2cc82a9beb4a/26-6a631d511b358.webp' /></p><p>
இந்த புதிய அம்சம், குறிப்பாக சாதனங்கள் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சமயங்களில், மோசடிக்கு எதிராக வலுவான பாதுகாப்பையும், பயனர்களுக்கு சிறந்த கணக்கு மீட்பு விருப்பங்களையும் வழங்கக்கூடும் என்றாலும், இது தனியுரிமை மற்றும் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு குறித்து சில கவலைகளையும் எழுப்பியுள்ளது.</p><p>இருப்பினும், இந்தச் செல்ஃபி வீடியோ பயனரின் சம்மதத்துடன் மட்டுமே சேமிக்கப்படுவதாகவும், பயனர்கள் தங்களின் கூகுள் கணக்கிலிருந்து இதை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக்கொள்ளலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், பயனர் பிற தேவைகளுக்காகப் பகிர விருப்பம் தெரிவித்தால் தவிர, இந்த வீடியோ உள்நுழைவு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
</p><h2>தரவுப் பாதுகாப்பு</h2><p>
புதிய பதிவை சேமிக்கப்பட்ட வீடியோவுடன் ஒப்பிடுவதுடன், வீடியோ நேரலையானதுதானா என்பதை உறுதிப்படுத்த பயனர்களைச் சில அசைவுகளைச் செய்யக் கோருவதன் மூலம், ‘டீப்ஃபேக்’ (Deepfakes) உட்பட ஆள்மாறாட்ட முயற்சிகளைக் கண்டறிய பல பாதுகாப்புச் சோதனைகளைப் பயன்படுத்துவதாகக் கூகுள் மேலும் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad0b0ea-9c61-4cae-94c6-00ff62ce58ae/26-6a631d51d5465.webp' /></p><p>

தகுதியுள்ள கூகுள் கணக்குப் பயனர்களுக்கு இந்த வசதி ஜூலை 23 முதல் கிடைக்கிறது.

தற்போது நிறுவனங்கள் கணக்கு மீட்பு நடைமுறைகளுக்கு நம்பகமான சாதனங்கள், பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்கள், மீட்புத் தொடர்புகள் மற்றும் இருபடிச் சரிபார்ப்பு (Two-factor authentication) ஆகியவற்றையே நம்பியுள்ளன. </p><p>உயிரியல் அளவீடு மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பங்கள் (Facial Recognition) நீண்டகாலமாகவே தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்குரிய தலைப்பாக இருந்து வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:17:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shocking-green-chilli-prices-1784869654"></link>
            <id>https://tamilwin.com/article/shocking-green-chilli-prices-1784869654</id>
            <summary type="text">சந்தையில் பச்சை&amp;nbsp; மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 1,200 ரூபாவிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;வறண்ட வானிலை மற்றும் பல்வேறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தையில் பச்சை&nbsp; மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 1,200 ரூபாவிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>வறண்ட வானிலை மற்றும் பல்வேறு பூச்சித் தொற்றுக்கள் காரணமாக&nbsp; பச்சை மிளகாயின் சந்தை வரத்து குறைவடைந்துள்ளதால்&nbsp; அதன் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என்று தம்புத்தேகம பொருளாதார மைய வர்த்தக சங்கத்தின் தலைவர் எல்.எஸ்.கே.லியனகே தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>அதிகரித்த விலை&nbsp;</h2><p>அதிகரித்துள்ள விலையேற்றத்தின்படி,&nbsp; பச்சை மிளகாய் ஒன்றின் விலை 15 ரூபாயை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும், “தற்போதைய வறட்சியான காலநிலை, அநுராதபுரம்,&nbsp; நொச்சியாகம,&nbsp; கஹடகஸ்திலிய போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மிளகாய் செய்கையை கடுமையாகப் பாதித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d851582-282d-4ee1-b1b8-f575a2ababdc/26-6a62fcb18f8a7.webp' /></p><p>அத்துடன், கல்நேவ, மீகலேவ, எப்பாவல போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மிளகாய் செய்கையிலும் விளைச்சல் அதி குறைவாகவே உள்ளதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார்.&nbsp;&nbsp;</p><p>இதேவேளை, அதிகமான விவசாயிகள் மிளகாய் செய்கையில் இருந்து படிப்படியாக விலகிச் செல்வதும் மிளகாயின் சந்தை வரத்து குறைவதற்கு&nbsp; காரணமாக இருப்பதாகவும், இதனாலும் மிளகாயின் விலை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:10:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - சிசிடிவி கமராக்களில் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727</id>
            <summary type="text">புதிய இணைப்புவத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸார் தற்போது பல விபரங்களை வெளியிட்டுள்ளனர்.நேற்று இரவு ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸார் தற்போது பல விபரங்களை வெளியிட்டுள்ளனர்.</p><p>நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டை, மட்டக்குளியாவை சேர்ந்த மனோஜ் என்ற நபர் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் குடு ரோஷன் என்ற நபரை குறிவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ள காட்சி</h2><p>கொலை நடந்த இடத்திற்கு வந்த துப்பாக்கித்தாரி நடனமாடியபடியே வந்து பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளமை&nbsp;மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf20b4f3-95e3-4185-99ff-6c62e141ffd9/26-6a63194e2ed44.webp' /></p><p>இருப்பினும், குடு ரொஷன் அணிந்திருந்ததை போன்ற உடையை அணிந்திருந்தமையினால் உயிரிழந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது</p><p>இதன்போது பொரள்ளை, வானத்தமுல்லை பகுதியை சேர்ந்த வானத்தே சுமேத என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், தாக்குதலுக்கு பிறகு துப்பாக்கிதாரி தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.</p><p>இச்சம்பவம் குறித்து&nbsp;5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கருப்பு நிற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜா-எல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இரண்டு குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முரண்பாடே இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு&nbsp;சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். </p><p>குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>விசாரணையில் வெளியான தகவல்</h2><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 'மட்டக்குளிய குடு ரொஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e836449-438e-4cdb-9f75-1fce1e8c67c6/26-6a62d844db0e8.webp' /></p><p>

ரொஷனின் சகோதரர்களில் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவின்போதே ​​நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் தலையில் முக்காடு அணிந்த ஒருவர் காரில் வந்து மண்டபத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இருப்பினும், குறி தவறியதால் ரொஷனுக்கு அருகில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்</h2><p>இதன்போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொரள்ளையை சேர்ந்த 39 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ff3d35-e313-4f6c-85f3-a9e154de2e22/26-6a62d9a86af72.webp' /></p><p>கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியை கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p>இச்சம்பவம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கி வரும் எல்நினோ தாக்கம்..! விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/use-water-sparingly-intensity-the-el-nino-impact-1784878399"></link>
            <id>https://tamilwin.com/article/use-water-sparingly-intensity-the-el-nino-impact-1784878399</id>
            <summary type="text">இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா&nbsp;கேட்டுக்கொண்டார்.</p><p>பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை
மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(24) காலை 10.00 மணியளவில்
நடைபெற்றது.</p><p>




இந்த செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய&nbsp;போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><h2>எல்நினோ தாக்கம்</h2><p>
</p><p>



செய<b>லமர்வில் பேராசிரியர் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள் ஒன்றான வெப்பத்
தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக அவர் கூறுகையில் ம</b>த்திய பசுபிக் பிராந்தியக்
கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள
எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை
ஏற்படுத்தும்.</p><p>


மற்றும் வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை
விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afcb3efa-5da1-437b-9a75-a014c20ed2f7/26-6a63184845784.webp' /></p><p> </p><p>இதனால் இந்து
சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக
வேகமாகப் பரவி வருகிறது.


அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப
ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது.</p><p>
இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார்
மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது
உருவாக்கும்.
</p><h2>பிரதீபராஜா கோரிக்கை</h2><p>

மற்றும் வறட்சியும் மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான
காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, ஒக்டோபர் மற்றும்
நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2679771f-0f41-488b-8d51-72649595d570/26-6a631848ed7e1.webp' /></p><p>ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான
சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.</p><p>


"எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர்
முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய
நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என
பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலந்து கொண்டோரை கேட்டுக்கொண்டார்.</p><p>இந்தநிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின்
முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும்
இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-24T07:46:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை - சபையில் ஏற்பட்ட குழப்பநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-court-1784875780"></link>
            <id>https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-court-1784875780</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,&amp;nbsp; இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,&nbsp; இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.&nbsp;&nbsp;</p><p>இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி&nbsp; கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.&nbsp;</p><p>



இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சபை அமர்வின்போது அர்ச்சுனா இராமநாதன்&nbsp;கூறியுள்ளார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ReoRet7REMg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>சபையில் பதற்றமான சூழல்</h2><p>இந்த நிலையில்,&nbsp;அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் இருந்தபோது, ​​அவரை கைது செய்ய நீதிமன்றம் எவ்வாறு பிடியாணை பிறப்பித்தது என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9411092a-4657-42a4-a8c8-2c0744b3ca1d/26-6a630f5c9587e.webp' /></p><p>
</p><p>ஹர்ஷவின் கேள்வியை அடுத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபையில் கடும் கூச்சலிட்டதன் காரணமாக, சபையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. </p><p>இதன்போது, சபையில் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,&nbsp;</p><p>“இந்த சபையில் பங்கேற்பது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு ஒரு சிறப்புரிமையாகும். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.

அவர் தனது கடமைகளைச் செய்வதிலிருந்து எந்தவொரு நிறுவனமும் அவரை தடுக்க முடியாது. உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறி நீங்கள் ஒரு தீர்ப்பை வழங்கக்கூடாது” என்று சுட்டிக்காட்டினார்.&nbsp;&nbsp;</p><h2>பிரதி சபாநாயகர் வழங்கியுள்ள உறுதி</h2><p>இதனையடுத்து,&nbsp; குறுக்கிட்ட பிரதியமைச்சர் சுனில் வட்டகல,&nbsp;&nbsp;</p><p>“நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் விசேட தேவைகள் இருந்தால் அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எனினும், ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேசிங்க, “இது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பொதுவான பிரச்சினையென்றும்,&nbsp; இது குறித்து பொதுவான தீர்மானமொன்றை நாடாளுமன்றம் எடுக்க வேண்டுமென்றும்” கோரிக்கை விடுத்தார்.</p><p>எவ்வாறாயினும்,&nbsp; அந்த சமயம் சபைக்குத் தலைமைத் தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, “இந்த நேரத்தில் தன்னால் ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும்,&nbsp; விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய கவனத்தை செலுத்துமென” உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xWDAmdLlq94" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:23:56+00:00</updated>
        </entry>
    </feed>
