<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-27T16:22:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதியுதவி குறைப்பால் காஸாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு - ஐ.நா. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-food-shortages-gaza-due-cuts-un-warns-1785167621"></link>
            <id>https://tamilwin.com/article/severe-food-shortages-gaza-due-cuts-un-warns-1785167621</id>
            <summary type="text">நிதியுதவி குறைந்து வருவதன் காரணமாக, வரும் ஆண்டின் இறுதிக்குள் காசா மக்கள்
தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் பசியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக
ஐக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிதியுதவி குறைந்து வருவதன் காரணமாக, வரும் ஆண்டின் இறுதிக்குள் காசா மக்கள்
தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் பசியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக
ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முற்றிலும் சர்வதேச மனிதநேய
உதவிகளையே நம்பி வாழ்கின்றன.</p><p></p><h2>நிதியுதவி</h2><p>
</p><p>
இருப்பினும், சர்வதேச உதவி நிறுவனங்களுக்கான நிதியுதவி வேகமாக வற்றி வருவதாக
அந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a261634-10e4-4869-bb37-0ed6ec8af59f/26-6a6782e46c4ff.webp' /></p><p>
</p><p>
அத்துடன், தொடர்ச்சியான இஸ்ரேலியத் தாக்குதல்களால் அங்குள்ள விவசாய நிலங்களும்
வணிக நிறுவனங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதனால் அப்பகுதி மக்கள் சொந்தமாக வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தைப் பேண முடியாத
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக குழுவினரை ஆட்டிப்படைப்பது ராஜபக்சர்களே..! காவடி ஊர்வலத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plan-to-launch-drone-attack-on-kavadi-procession-1785162464"></link>
            <id>https://tamilwin.com/article/plan-to-launch-drone-attack-on-kavadi-procession-1785162464</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுவினரை பயன்படுத்தி நாட்டை சீரழிப்பவர்கள் ராஜபக்சர்களே. அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியை மக்கள் வரவேற்று வருவதாக தேசிய மக்கள் சக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுவினரை பயன்படுத்தி நாட்டை சீரழிப்பவர்கள் ராஜபக்சர்களே. அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியை மக்கள் வரவேற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன்&nbsp; தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

பெரஹராவின் போது நடைபெறவுள்ள பாதாள உலகக் கும்பல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. </p><p>

மக்களிடையே அரகலய போராட்டத்தைப் போன்ற ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் யார் எப்படி செயற்படுகின்றனர் என்பதை புரிந்துகொள்ளும் அளவிற்கு மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள்.</p><p>
கலவரத்தை ஏற்படுத்தி நாட்டை கைப்பற்றலாம் என்ற எண்ணமே இத்தகைய குழப்பங்களுக்கு அடித்தளமாக இருக்கின்றது. கஞ்சிபாணி இம்ரானை ஆட்டிப்படைத்து வருபவர்கள் ராஜபக்சர்களே என்றார்.&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vAnKIoYja74" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T15:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்புடனான சந்திப்பில் ஈரான் விவகாரமே முதன்மையாக இருக்கும்: நெதன்யாகு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-issue-priority-in-meeting-trump-netanyahu-1785160993"></link>
            <id>https://tamilwin.com/article/iran-issue-priority-in-meeting-trump-netanyahu-1785160993</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ள நிலையில், இந்தச்
சந்திப்பில் ஈரான் விவகாரமே பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும்
என்று இஸ்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ள நிலையில், இந்தச்
சந்திப்பில் ஈரான் விவகாரமே பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும்
என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெதன்யாகு,
"எங்கள் சந்திப்பின் போது மேசையிலுள்ள அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும்
விவாதிப்போம். அதில் ஈரான் விவகாரமே முதன்மையாக இருக்கும்" என்று
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதும், நாட்டின் பலத்தைப் பெருக்குவதும்,
தங்களைச் சுற்றியுள்ள அமைதி வட்டத்தை விரிவுபடுத்துவதுமே தங்கள் தெளிவான
இலக்கு என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><h2>ட்ரம்புடன் அதிக தடவை சந்திப்பு</h2><p>

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கிய பிறகு,
அவரைத் தான் சந்திக்கும் எட்டாவது சந்திப்பு இதுவென்றும், உலகத் தலைவர்களில்
வேறு எந்தவொரு தலைவரையும் விடத் தான் ட்ரம்பை அதிக முறை சந்தித்துள்ளதாகவும்
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>மேலும், தமது இந்த பயணத்தின் மற்றொரு நோக்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
</p><p>
இஸ்ரேலின் மிகச்சிறந்த நண்பராகவும், தமது நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்த
மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிராமுக்கு நேரில் இறுதி அஞ்சலி
செலுத்தவும் தான் அமெரிக்கா சென்றுள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="iw" dir="rtl">אני יוצא עכשיו לפגישה עם ידידנו הנשיא דונלד טראמפ - הפגישה השמינית שלנו מאז שנבחר לכהונתו השנייה, יותר מכל מנהיג בינלאומי אחר. זו זכות גדולה, וזו גם אחריות גדולה.<br><br>בפגישתנו נדון בכל הנושאים שעל הפרק, ובראשם איראן. המטרה שלנו ברורה: לשמור על ביטחונה של ישראל, לחזק את עוצמתה…</p>&mdash; Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) <a href="https://x.com/netanyahu/status/2081702825948553603?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T14:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-after-a-branch-of-a-tree-falls-1785159744"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-after-a-branch-of-a-tree-falls-1785159744</id>
            <summary type="text">கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பழங்கால விகாரை வளாகத்திலிருந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மரக்கிளை முறிந்து விழுந்ததில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பழங்கால விகாரை வளாகத்திலிருந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார்.</p><p></p><p> </p><h2><b>பெண் உயிரிழப்பு</b></h2><p>இவர் நேற்று குறித்த விகாரை வளாகத்திற்கு வந்த சந்தர்ப்பத்திலேயே மரத்திலிருந்து முறிந்து விழுந்த கிளைக்கு அடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c005b156-aee7-4c89-a12c-5ffc8bf70bdd/26-6a6765f809ac2.webp' /></p><p>இந்த கிளை முறிந்து விழுந்ததன் காரணமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p> 

 இச்சம்பவம் தொடர்பாக கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[p</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-27T14:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-the-vattapalai-kannagi-amman-temple-1785159806"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-the-vattapalai-kannagi-amman-temple-1785159806</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் கௌரி சங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் கௌரி சங்கரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த வழக்கு விசாரணை கடந்த 13ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணியின் வாதத்தையடுத்து வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாவன சபையின் நிரந்தர உறுப்பினராக இருந்த குலசேகரம் கிருஸ்ணபவன் சட்டரீதியற்ற முறையில் நீக்கியது தொடர்பிலும், சட்ட நீதியற்ற முறையில் செயற்படும் ஆலய பரிபாலன சபை தொடர்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியால் வற்றாளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவர், உபதலைவர், இணைச் செயலாளர்கள், பொருளாளர்களான 1, 2,3,4,5 எதிராளிகள் உட்பட பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><h2>

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு</h2><p>
இந்த வழக்கின் 1ஆம் 3ஆம் 5ஆம் எதிராளிகள் சார்பில் ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இன்று(27.07.2026) வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழங்கப்பட்ட கட்டாணைகளை நீக்க எதிர்த்தரப்பு சட்டத்தரணியால் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a30cdcd1-979f-4cbc-9181-7dc200ea340a/26-6a6760cb6ee74.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், வழக்கை தாக்கல் செய்தவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதத்தை மறுத்து வழங்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது. </p><p>

இந்த வழக்கினை தாக்கல் செய்த கௌரி சங்கரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா, சட்டத்தரணி அழகரட்ணம் ஜினோசன், சட்டத்தரணி ஜி. ஏ அருண்ராஜ் மற்றும் சட்டத்தரணி த. சிவானந்தராஜா ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T13:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டியுடன் பேருந்து மோதி விபத்து - சாரதி பலி! இரு பயணிகள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-colombo-kolonnawa-road-1785159515"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-colombo-kolonnawa-road-1785159515</id>
            <summary type="text">கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27.07.2026) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே
உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27.07.2026) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
</p><p>முச்சக்கரவண்டி எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>முச்சக்கரவண்டி சாரதி பலி</h2><p>

முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டியின் பின்புற ஆசனத்தில்
பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>முச்சக்கரவண்டி&nbsp;சாரதியின் அலட்சியமான செயற்பாடே இந்த விபத்துக்குக் காரணம் என
ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான அமெரிக்க மனித உரிமைகள் அதிகாரிகள் மன்னாரில் ஆய்வு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-human-rights-officials-in-sri-lanka-1785158429"></link>
            <id>https://tamilwin.com/article/us-human-rights-officials-in-sri-lanka-1785158429</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான வருகை தந்துள்ள 
ஐக்கிய அமெரிக்கா நாட்டின் இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித
உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் மன்னாருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான வருகை தந்துள்ள 
ஐக்கிய அமெரிக்கா நாட்டின் இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித
உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். </p><p>

இன்று(27.07.2026) காலை
மன்னாரிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், சமூக பொருளாதார
மேம்பாட்டிற்கான (மெசிடோ) நிறுவனத்தையும் பார்வையிட்டுள்ளனர். </p><h2>

மக்களின் பிரச்சினைகள்</h2><p>
இதனைத் தொடர்ந்து, நிறுவன அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த
சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b11fb79-bf8d-4455-be6e-f6a19977040a/26-6a675b62312f7.webp' /></p><p> 

இதன்போது, வடக்கு மற்றும் மன்னார் மாவட்டத்தின்
தற்போதைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள்
ஆழ்ந்த ஆர்வத்துடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.</p><p> 

மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார மீட்பு, நிலையான அபிவிருத்தி, சமூக
நீதி, மனித உரிமைகள், நல்லாட்சியை பலப்படுத்துதல் மற்றும் எதிர்கால
அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்</h2><p>
இதேவேளை, தற்போதைய சூழலில் வடக்கு மக்களும் சிவில் சமூக அமைப்புகளும்
எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், நில உரிமைகள், வாழ்வாதார பாதுகாப்பு,
இளைஞர்களின் பங்கேற்பு, பெண்களின் பங்கேற்பு, சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், மனித
உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பல்வேறு கருத்துக்கள்
சிவில் சமூக பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11517d85-4eff-4027-90ce-1c10d25e29f1/26-6a675b632443d.webp' /></p><p>
</p><p>
பங்கேற்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது துறைசார் அனுபவங்கள்,
களப் பணிகளில் இருந்து பெற்றுள்ள தகவல்கள் மற்றும் மக்களின் தேவைகளை நேரடியாக
பிரதிபலிக்கும் பரிந்துரைகளை பகிர்ந்துகொண்டனர்.</p><p>

அவற்றை அதிகாரிகள் கவனமாக கேட்டறிந்து, எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொடர்பு
மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
</p><p>
இவ்வாறான சந்திப்புகள், சர்வதேச சமூகத்திற்கும் உள்ளூர் சிவில்
சமூகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதோடு, மனித உரிமைகள்,
ஜனநாயக ஆட்சி, சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான
பயனுள்ள உரையாடல்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய வாய்ப்பாக அமைந்தது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe795e8e-73d7-4318-9e26-3eca94e7f805/26-6a675b6403203.webp' /></p>]]></content>
            <updated>2026-07-27T13:21:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துக! அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/samagi-jana-balawegaya-urges-the-government-1785158022"></link>
            <id>https://tamilwin.com/article/samagi-jana-balawegaya-urges-the-government-1785158022</id>
            <summary type="text">நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மாகாண சபைத் தேர்தலைப் பழைய
முறையில் உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள்
சக்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மாகாண சபைத் தேர்தலைப் பழைய
முறையில் உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.</p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பான தவறான கருத்துக்கள், நீதியரசர்களின்
ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் முயற்சி, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும்
தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசின் செயற்பாடுகளைக்
கடுமையாக விமர்சித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.
</p><p>
கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (27.07.2026) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>பொய்க்கூற்று கண்டிப்பு</h2><p> அவர் மேலும்
குறிப்பிடுகையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடிப்பது தொடர்பாக இலங்கை
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எதிர்ப்பு வெளியிட்டமை, ஐக்கிய மக்கள்
சக்தியிடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே என தேசிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன் தெரிவித்த பொய்க் கூற்றை வன்மையாகக்
கண்டிக்கின்றேன்.</p><p> எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சட்டத்தரணிகள்
சங்கத்துக்கும் இடையில் எவ்வித அரசியல் கொடுக்கல் வாங்கல்களும் இல்லை.

உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை
அதிகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தொடர்ந்து முயல்வது தவறானது.

நீதிமன்றங்களில் வழக்குத் தேக்கத்தைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு
ஒன்றை அமைக்கலாம்.</p><p></p><p> </p><p>தனிநபர்களை மையமாகக் கொண்ட அரசமைப்புத் திருத்தங்களுக்கு
மக்கள் தீர்ப்பு (சர்வசன வாக்கெடுப்பு) காணப்பட வேண்டும். மேலும்,
நீதியரசர்களின் 8 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் குறுக்கு
வழியில் செல்வது தவறான முன்னுதாரணம்.
</p><p>
நாட்டின் 7 ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படும் என்று
கூறப்பட்ட போதிலும், 2025ஆம் ஆண்டில் அவற்றின் பராமரிப்புக்காக 33 மில்லியன்
ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1423f90-61ef-4e9f-a8fb-83bdfcadeed3/26-6a67598957739.webp' /></p><h2>நிதி முறைகேடு&nbsp;</h2><p> </p><p>ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க அம்மாளிகைகளில் தங்கியிருக்காவிட்டாலும், 3 ஆயிரத்து 89
பேர் அம்மாளிகைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இது நிதி முறைகேடு ஆகும்.

கடந்த அரசின் காலத்தில் நுவரெலியா தபால் நிலையத்தைச் சுற்றுலாத் துறைக்காக
மாற்ற முற்பட்டபோது எதிர்த்த தற்போதைய ஆட்சியாளர்கள், இன்று அதே தபால்
நிலையத்தைச் சுற்றுலா விடுதியாக மாற்றத் தயாராகி வருவது மக்களை ஏமாற்றும்
செயல் ஆகும்.
</p><p>
நாட்டின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது என்று அரசு பொய்ப் பிரசாரங்களை
மேற்கொள்கின்றது. கடந்த மாதத்தில் மட்டும் 35 ஆயிரத்து145 மில்லியன் ரூபா
பெறுமதியான தங்க நகைகள் மக்கள் வறுமை காரணமாக அடகு வைக்கப்பட்டுள்ளன. </p><p>மேலும்,
2026ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின்படி அன்றாடச் செலவுகளுக்காக மேலும் 7
டிரில்லியன் ரூபா கடன் பெற அரசு எதிர்பார்ப்பது ஏன்?

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், தேவிநுவர
பெரஹரா நிகழ்வில் பாதாள உலகக் குழுவினரின் அச்சுறுத்தல் காரணமாக நடன
நிகழ்வொன்று நிறுத்தப்பட்டமை பாதுகாப்பின் பலவீனத்தையே காட்டுகின்றது.

எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மாகாண சபைத் தேர்தலைப் பழைய
முறையில் உடனடியாக நடத்த வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-siththandi-temple-1785154722"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-siththandi-temple-1785154722</id>
            <summary type="text">அம்பாறை - சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும்
கும்பாபிஷேகம் இடம்பெறவில்லை, இந்த நிலையில் வருடாந்த திருவிழா வேண்டாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும்
கும்பாபிஷேகம் இடம்பெறவில்லை, இந்த நிலையில் வருடாந்த திருவிழா வேண்டாம்
கும்பாபிஷேகமே வேண்டும் என கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த போராட்டம் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று (27.07.2026) ஆலயத்தின் முன்பாக பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>போராட்டக்காரர்கள் ஒன்று
திரண்டு இறை சிந்தனையுடனான சமய சமூகப் பணியில் பயபக்தியுடன் செயல்படுங்கள், வெளிப்படை தன்மையை பேணி ஒற்றுமையாக செயல்படுங்கள், வேண்டாம் வேண்டாம் ஊரை
ஏமாற்றாதீர்கள், முருகனுக்கு கும்பாபிஷேகம் எப்போ? கடும் சொல் பேசாத பூட்டிய
அறைக்குள் கூட்டமா?, இன்னும் பொறுமை வேண்டாம் அத்திப்பட்டியாக்கி விடுவார்கள்
மக்களே விழித்தெழு என்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><h2>கும்பாபிஷேகம் இடம்பெற வேண்டும்</h2><p>
அதேவேளை போராட்டக்காரர்கள் கூறுகையில், சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 12 வருடங்களுக்கு ஒரு
முறை இந்து சமய ஆகம விதிப்படியும் கும்பாபிஷேகம் இடம்பெற வேண்டும். ஆனால்
தற்போது 14 வருடங்கள் கடந்தும் பாலஸ்தாபனம் செய்து கோவிலில் திருத்த பணிகள்
மேற்கொண்டு கும்பாபிஷேகம் இடம் பெறவில்லை.</p><p>

இந்நிலையில் 1965ஆம் ஆண்டு செய்யப்பட்ட பாவைகள் செயல்திறன் அற்ற நிலையில்
குரங்குகள் பாய்ந்தும், இயற்கை சீற்றத்தின் காரணமாகவும் சில சிலைகள் உடைந்தும்
தோற்றப்பாடுகளுடனும், மின்சார இணைப்புக்களும் பழையனவாகவே இருக்கின்றதுடன், ஆலயத்தில் உள்ள வர்ணப் பூச்சுக்களும் பழமை வாய்ந்ததாக காட்சியளிக்கின்றதுடன், ஆலய கூரையில் உள்ள ஓடுகள் உடைந்தும் பீலிகள் இறந்த நிலையிலும், மழைக்
காலங்களில் மழைநீர் ஒழுகி நீர் நிறைந்து பக்தர்கள் நின்று வணங்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில் திருவிழா முக்கியமா? என்பதை கடந்த வருடம் பொது மக்களாகிய
நாங்கள் சுட்டிக்காட்டிய போது காலம் நெருங்கி விட்டதாகவும் 2025ம் ஆண்டில்
திருவிழாவை நடத்தி விட்டு திருவிழா முடிந்ததும் கந்தசஷ்டி விரதம் (சூரன்
போர்) நடத்திவிட்டு பாலஸ்தாபனம் செய்து ஆலயத்தை புனருத்தாபனம் செய்து
கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர்.</p><p></p><h2>மகஜர் கையளிப்பு</h2><p>
</p><p>
பின்னர் சூரன் போர் முடிந்த பிற்பாடு மழைக் காலமாக இருப்பதால் 2026ம் ஆண்டு
தைப்பொங்கல் முடிந்த பிற்பாடு பாலஸ்த்தாபனம் செய்து கும்பாபிஷேகம் செய்வோம் என
நிர்வாக சபையினர் கூறினார்கள். ஆனால் இன்று வரை எந்த ஏற்பாடுகளும்
செய்யவில்லை. இது தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க ஆலய நிர்வாக
சபையினர் தவறியமையால் ஆலய நிர்வாக சபைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை
முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p>இதையடுத்து போராட்டகளத்துக்கு சென்ற மதம் மற்றும் கலாச்சார பிரதி அமைச்சரின்
இணைப்புச் செயலாளர் மற்றும் தேசிய செயலாளர் கலாச்சார உத்தியோகத்தர்களிடம்
கோரிக்கை அடங்கிய மகஜர் கையளித்தனர்.</p><p>

இதன்போது அமைச்சரின் இணைப்புச் செயலாளர், இதனை ஒரு வாரத்துக்குள் தீர்த்து
வைப்பதாகவும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்
எனவும் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்வர்கள் அங்கிருந்து
கலைந்து சென்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:49:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் தீவிரமடையும் காட்டுத்தீ : அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய ஜனாதிபதி மேக்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-france-macron-emergency-meeting-1785154817"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-france-macron-emergency-meeting-1785154817</id>
            <summary type="text">பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும்,
வரலாற்றுச் சிறப்புமிக்க போர்டோ நகரை நோக்கி தீ பரவுவதைத் தடுக்கவும் பிரான்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும்,
வரலாற்றுச் சிறப்புமிக்க போர்டோ நகரை நோக்கி தீ பரவுவதைத் தடுக்கவும் பிரான்ஸ்
ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
</p><p>
சுமார் 8.5 இலட்சம் மக்கள் வாழும் போர்டோ பெருநகரப் பகுதியில் இருந்து வெறும்
15 கிலோமீட்டர் தொலைவில் தீ பரவி வரும் நிலையில், வரும் நாட்களில் மீண்டும்
வெப்ப அலை வீசக்கூடும் என்ற வானிலை முன்னறிவிப்பு அதிகாரிகளிடையே பெரும்
பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p></p><h2>தொடர் வெப்ப அலை</h2><p>
பிரபல திராட்சை மதுபான உற்பத்தி பிராந்தியமான ஜெரோண்டே பகுதியில் தற்சமயம்
நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இதுவரை
கண்டிராத அளவிலான காட்டுத்தீ பரவி வருவதாக உள்ளூர் மேயர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2e10b61-8616-4457-b017-dfb95f625780/26-6a674ea004eee.webp' /></p><p>ஐரோப்பாவில் தொடர்ந்து பதிவாகி வரும் வெப்ப அலை மற்றும்
வறட்சியால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் காட்டுத்தீ மிக வேகமாகப்
பரவி, இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற
வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
அண்டை நாடான ஸ்பெயினிலும் காட்டுத்தீ காரணமாக 75,000இற்கும் மேற்பட்ட மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்குப் மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
தலைநகர் மட்ரிட்டை நோக்கி நகர்ந்து வந்த தீயின் வேகம் தற்போது சற்று
குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்குள்ள மக்களை மீண்டும் தங்கள்
வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
</p><p>
ஐரோப்பா முழுவதையும் உலுக்கி வரும் இந்தத் தொடர் வெப்ப அலைகள் மற்றும் காலநிலை
மாற்ற விளைவுகள், அப்பகுதியில் கடுமையான இயற்கை அழிவை ஏற்படுத்தி வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற நடத்தப்படும் சங்க மாநாடு..! பௌத்த பிக்குகள் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sana-maha-saba-is-to-protect-mahinda-1785155747"></link>
            <id>https://tamilwin.com/article/sana-maha-saba-is-to-protect-mahinda-1785155747</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் மகா சங்க மாநாடு நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இடதுசாரி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் மகா சங்க மாநாடு நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
</p><p>ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறைக்குச் செல்வதனை தடுத்து அவர்களை பாதுகாக்கும் நோக்கில் சில பௌத்தப்பிக்குகள் இந்த சங்க மாநாட்டை நடத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p><h2>ராஜபக்சர்களின் நாடகம்&nbsp;</h2><p>ராஜபக்சர்களை காப்பாற்றும் இந்த நாடகத்திற்கு பௌத்தப் பிக்குகளினால் செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99791c30-80ac-475d-8a46-88d7173a5b44/26-6a6758a575da4.webp' /></p><p>இந்த மாநாடு பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கிலோ பௌத்த மதத்தை மேம்படுத்தும் நோக்கிலோ நடத்தப்படுவது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அத்துடன்,&nbsp; மாநாடு நாட்டு மக்களினது நாட்டினதோ நலனை கருத்திற் கொண்டு நடத்தவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>குற்றச் செயல்கள் கொலைகள் ஊழல்கள் போன்றவற்றை மேற்கொண்ட ராஜபக்ச தரப்பினர் சிறைக்குச் செல்வதை தடுக்கும் நோக்கில் இந்த சங்க மாநாடு நடத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
மோசமான ராஜபக்ச தரப்பினரை பாதுகாக்கும் நோக்கில் இந்த மகா சங்க மாநாடு நாடகம் நடத்தப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் சுட்டுக்கொலை : பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/this-year-15-persons-gun-shoot-death-1785153064"></link>
            <id>https://tamilwin.com/article/this-year-15-persons-gun-shoot-death-1785153064</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
பதிவாகியுள்ளதோடு, 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்
என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
பதிவாகியுள்ளதோடு, 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்
என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதில் இம்மாதம் 11ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையிலான
14 நாள்களுக்குள் மாத்திரம் 10 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன. </p><p>இந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் மாத்திரம் 3 பேர்
உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p></p><h2>திட்டமிடும் பிரதான குற்றவாளிகள்&nbsp;</h2><p>துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர்,
அனைத்துத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் திட்டமிடப்பட்ட பாதாள உலகக்
குற்றங்கள் மற்றும் சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை என்று
குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54b9c5de-bd40-4ba6-aff6-aec93b97e86a/26-6a6749cb75acd.webp' /></p><p>தாக்குதல்களைத் திட்டமிடும் பிரதான குற்றவாளிகள் பலர் வெளிநாடுகளில்
இருந்துகொண்டு, தங்கள் எதிரிக் கும்பலின் உறவினர்கள் அல்லது உதவியாளர்களை
இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர். </p><p>ஒப்பந்தக்
கொலைகளுக்குப் பணத்துக்குப் பதிலாகச் சிறிய அளவிலான போதைப்பொருள்களே கூலியாக
வழங்கப்படுவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைக்குக் கடுமையாக
அடிமையானவர்களே இத்தகைய கொலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர்.
</p><p>
கடந்த 25ஆம் திகதி அன்று கொழும்பு - பெல்லன்விலையில் நடந்த கொலைச்
சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளைச்
செலுத்தியவர் ஆகிய இரு சந்தேகநபர்களும் சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலத்தில்
கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>பொலிஸ்மா அதிபரின் நேரடி வழிகாட்டலின் கீழ்,
தொலைபேசி மற்றும் தகவல் தொடர்புப் பகுப்பாய்வுகள் உட்பட உளவுத்துறை
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொலை</h2><p>இம்மாதம் 11ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இடம்பெற்ற முக்கியத் துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவங்கள் வருமாறு:-
</p><p>
ஜூலை 11: மாத்துகம, நெபொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த
துப்பாக்கிதாரிகள் வீடொன்றை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எவருக்கும்
காயம் ஏற்படவில்லை.</p><p>
ஜூலை 15: கட்டுநாயக்கவில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகநபர்
ஒருவர் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரியின் சேவைத் துப்பாக்கியைப் பறித்து அவர்
மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அதிகாரி காயமடைந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df82459d-a441-4ffd-a8d2-4131032b2ece/26-6a6749cc4a186.webp' /></p><p>
ஜூலை 16: நவகமுவ, வண்டுரம்புமுல்ல பகுதியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர்
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
</p><p>
ஜூலை 19: தெஹிவளை – கல்கிஸ்ஸை பொது மயானத்தில் பணியாற்றிய 56 வயதுடைய
பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர்
காயமடைந்தார்.</p><p>&nbsp;ஜூலை 19: பிலியந்தலை, பொக்குந்தர பகுதியில் வாளால் தாக்க முயன்ற 24 வயதுச்
சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார்.
</p><p>
ஜூலை 21: தேவிநுவர பகுதியில் கடற்றொழிலாளி ஒருவரின் வீட்டை நோக்கி காரில் வந்த
ஆயுததாரிகள் பல தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயிர்ச்சேதம் எதுவும்
ஏற்படவில்லை.
</p><p>
ஜூலை 22: பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீடு மீது
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் எவ்வித
காயமுமின்றி உயிர்தப்பினர்.
</p><p>
ஜூலை 23: வத்தளை, பள்ளியாவத்தை பகுதியில் குழந்தையின் பிறந்தநாள் விழா
நடைபெற்ற மண்டபத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
</p><p>
ஜூலை 23: தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானம் அருகே இடம்பெற்ற
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.
</p><p>
ஜூலை 25: தெஹிவளை – பொரலஸ்கமுவ வீதியில் அமைந்துள்ள பெல்லன்வில நடைபாதை
நுழைவாயிலுக்கு அருகில் 55 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்
கொல்லப்பட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனப் பிரஜை கடத்திக் கொலை: 3 சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-chines-suspects-are-went-china-1785153246"></link>
            <id>https://tamilwin.com/article/3-chines-suspects-are-went-china-1785153246</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கொலை செய்யப்பட்ட சீனப் பிரஜை, கணினி மூலம் நிதி மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.
</p><p>கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை விளக்கும் வகையில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da256144-4d5e-4010-8cbe-15ad1ba6fcb5/26-6a6746e041470.webp' /></p><p>
</p><p>கடந்த ஜூலை 23ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் துறைமுக நகரப் பகுதியில் இரண்டு குழுக்களைச் சேர்ந்த சீனப் பிரஜைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
</p><p>கொல்லப்பட்ட சீனப் பிரஜையின் சடலம் எஹெலியகொட பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் நாட்டிலிருந்து தப்பியோட முயன்ற இரு முக்கிய சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>இச்சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
அவர்களில் 3 சீனப் பிரஜைகள் ஏற்கனவே இலங்கையை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரத் தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இக்கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு காற்றுத் துப்பாக்கிகள், கைத்தொலைபேசி ஒன்று, வாக்கி டாக்கி சாதனம் ஒன்று மற்றும் பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் மற்றும் சீன அரசாங்கத்துடன் இணைந்து முழுமையான ஒருங்கிணைப்புடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T11:58:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை ஆட்டிப் படைக்கும் மறைகரம்..! அநுரவை விட பலம்பொருந்திய மர்ம நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-is-powerful-than-anura-1785142809"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-is-powerful-than-anura-1785142809</id>
            <summary type="text">இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை விட பாதாள உலகம் குழு தலைவர் கஞ்சி பானை இம்ரான் செல்வாக்கு மிக்கவர் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை விட பாதாள உலகம் குழு தலைவர் கஞ்சி பானை இம்ரான் செல்வாக்கு மிக்கவர் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த நாட்டு மக்கள் அநுரகுமார திசாநாயக்கவிற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வழங்கிய போதிலும் தற்பொழுது நாட்டை ஆள்பவர்கள் வேறும் மூன்று நபர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>அநுர போர்வையில் ஆட்சி செய்யும்&nbsp;கஞ்சிபானி இம்ரான்</h2><p>
</p><p> ஜேவிபி கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரான் ஆகியோரே நாட்டை ஆட்சி செய்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc1cef3-0131-46cf-bb79-2e8ee7483313/26-6a673d8bdd0ff.webp' /></p><p>
இலங்கையின் வரலாற்றில் போர்த்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலங்களிலும் பௌத்த பெரஹர நிகழ்வுகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதில் தலையீடு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எனினும் தற்பொழுது பெரஹரா ஒன்றில் எவ்வாறான அங்கங்களை உள்ளடக்க வேண்டும் என்பதனை பௌத்தர் அல்லாத ஒருவர் தீர்மானிக்கும் அளவிற்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.</p><h2>தலதா மாளிகை பெரஹரா நிகழ்வில் ஏற்படவுள்ள மாற்றம்</h2><p>
இரண்டு பௌர்ணமி தினங்களில் பாதாள உலகக் குழுக்களை இல்லாது ஒழிப்பதாக கூறிய நபர் ஒருவரது வார்த்தைகளை நம்பி மக்கள் வாக்களித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/547811f8-7215-447a-9932-9f5ba359aa66/26-6a673d8c8c26b.webp' /></p><p>
</p><p>எனினும் உண்மையில் தற்பொழுது நாட்டை ஆட்சி செய்பவர் அநுர குமார திஸாநாயக்க அல்ல வேறு மூவர் என்பது தற்பொழுது மக்களுக்கு புரிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பௌத்த பெரஹர நிகழ்வு ஒன்றில் காவடி நடனத்தை உள்ளடக்குவதா இல்லையா என்பதை கஞ்சிபானி இம்ரானே தீர்மானிக்கின்றார் என அவர் சுட்டிக்காட்டிவுள்ளார்.</p><p>
இலங்கை வரலாற்றில் இதுவரையில் பௌத்த பெரஹரா நிகழ்வு ஒன்றில் என்னென்ன அங்கங்கள் உள்ளடக்க வேண்டும் என பௌத்தர் அல்லாத ஒருவர் தீர்மானிக்கும் சந்தர்ப்பம் இதுவே ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
எதிர்வரும் காலங்களில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தால் தலதா மாளிகை பெரஹரா நிகழ்விலும் மாற்றங்களை செய்யக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக உதய கம்மன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QCppyO5_BLI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T11:55:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனு நாளை மீண்டும் பரிசீலனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appeals-court-defers-consideration-of-sallay-s-1785152399"></link>
            <id>https://tamilwin.com/article/appeals-court-defers-consideration-of-sallay-s-1785152399</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மனு மீதான விசாரணை&nbsp;</h2><p>
</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான&nbsp; பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹார்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65522cf2-6f8a-437c-8d00-0549d53f4237/26-6a674391a0401.webp' /></p><p>
</p><p>இருதரப்புச் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, இந்த மனுவை நாளை மீண்டும் அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>மனு மீதான மேலதிக விசாரணைக்கான திகதி நாளை நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பௌத்தத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்! பின்னணியில் பாதாள உலக புள்ளிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-groups-that-decide-on-the-peraheras-1785150395"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-groups-that-decide-on-the-peraheras-1785150395</id>
            <summary type="text">நாட்டில் தற்போது பௌத்த மதத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலப்பனை ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;மகா சங்க மாநாட்டில் கலந்து கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது பௌத்த மதத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலப்பனை ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மகா சங்க மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>தற்போது விகாரைகளில் இடம்பெறும் பெரஹராக்களை,&nbsp; பிக்குகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுக்கள் அல்லாது, பாதாள உலகக் குழுக்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.</p><p></p><h2>அச்சுறுத்தல்..</h2><p>பௌத்த மதத்தின்&nbsp; பாரம்பரிய விழுமியங்களும், மத நிகழ்வுகளின் புனிதத் தன்மையும் படிப்படியாக சீர்குலைந்து வருகின்றது.</p><p>பெரஹரா உள்ளிட்ட மத நிகழ்வுகள், பிக்குகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புக்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற வேண்டிய நிலையில்,&nbsp; தற்போது அவற்றில் சட்டவிரோத பாதாள உலகக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்து காணப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/428e6025-8980-4977-b347-d991c7f11088/26-6a674285896e6.webp' /></p><p>இந்த நிலை நீடித்தால், பௌத்தத்தின் ஒழுக்கம், மரபு மற்றும் சமூக மரியாதைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.</p><p>பௌத்தத்தின் சுயாதீனத்தையும், புனிதத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி தாக்கல் செய்த வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-former-dean-arts-university-of-jaffna-1785150930"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-former-dean-arts-university-of-jaffna-1785150930</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக பிறப்பித்த இடைக்கால கட்டளையை நீடித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக பிறப்பித்த இடைக்கால கட்டளையை நீடித்து உத்தரவிட்ட பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், இரு தரப்புக்களின் எழுத்து மூலமான சமர்ப்பணத்திற்காக வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர்
என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p></p><h2>நேரில் முன்னிலையாகாத நிலையில்</h2><p>
குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8405399-a8a4-454e-b10a-fca60f8777b7/26-6a6741f577027.webp' /></p><p>
இரண்டு எதிர் மனுதாரர்கள் நேரில் நீதிமன்றத்தில் முன்னிலையானதுடன் ஏனையோர் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர். </p><p>

இதேவேளை எதிர்மனுதாரர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் நேரில் முன்னிலையாகாத நிலையில் அடுத்த வழக்கு தவணையின் போது நேரில் முன்னிலையாக வேண்டும் என நீதிவானால் உத்தரவிடப்பட்டது.
</p><p>
மேலும் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் மற்றும் பதிவுகள் இதுவரை எதிர் மனுதாரர்களால் அகற்றப்படவில்லை என்ற விடயம் மனுதாரரின் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அது தொடர்பாக உடனடியாக கவனத்தில் எடுக்குமாறு நீதிவானால் எதிர் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.</p><h2>வழக்கை விசாரித்த நீதிவான்&nbsp;</h2><p>

இதன்போது எதிர் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன் தமது எழுத்து மூலமான சமர்ப்பணத்தை சமர்பிக்க கால அவகாசம் கோரினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b3007b7-ab54-4c34-97cb-06caa25c5681/26-6a6741f6332be.webp' /></p><p>
வழக்கை விசாரித்த நீதிவான் இரு தரப்புக்களின் எழுத்து மூலமான சமர்ப்பணத்திற்காக வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
</p><p>
மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா முன்னிலையாகி தனது வாதங்களை முன்வைத்தார். </p><p>

எதிர் மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:33:27+00:00</updated>
        </entry>
    </feed>
