<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-12T07:30:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது சட்டத்திருத்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு தொடர் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-letter-by-mahanayaka-theros-anura-1786518077"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-letter-by-mahanayaka-theros-anura-1786518077</id>
            <summary type="text">மகா நாயக்க தேரர்கள்,&amp;nbsp;அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகா நாயக்க தேரர்கள்,&nbsp;அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்த தமது கருத்துக்கள் தொடர்பாக மகா தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று (12) ஒரு செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>ஜனாதிபதியிடம் கோரிக்கை..&nbsp;</h2><p>
அந்தக் கடிதத்தின் மூலம், மூன்று பீடங்களை சேர்ந்த மகா நாயக்க தேரர்கள், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03f32b35-2429-45be-8f18-ed84e2c5281f/26-6a7c2025975ee.webp' /></p><p>இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், ”இந்தக் கடிதத்தை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எப்படியோ எனக்கு தற்போது கிடைத்துவிட்டது. இதில், நீதியரசர்கள், நாடு எந்தப் பாதையில் செல்கிறது என்பதை நேரடியாகப் புரிந்துகொண்டுள்ளனர்.</p><p> தற்போது, ​​அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது முறையே 63 மற்றும் 65 ஆண்டுகள் ஆகும்.
</p><p>
அந்த வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் இந்த வழியில் செயல்படுவது பொருத்தமானது அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஐடியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-to-cid-investigation-1786509266"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-to-cid-investigation-1786509266</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.இன்று (12) காலை சுமார் 10 ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.</p><p>இன்று (12) காலை சுமார் 10 மணியளவில் முன்னிலையான நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் மேலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>நடைமுறைக்கு மாறாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வாகனம் தொடர்பான விசாரணையில் யோஷித ராஜபக்சவிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, ​​குற்றப்புலனாய்வுத்துறை இதற்கு முன்னர் பல சந்தேகநபர்களைக் கைது செய்திருந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யோஷித ராஜபக்சவிடம் வாக்குமூலம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபரால் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மேலும் பல வாகனங்கள் குறித்தும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ச இன்றைய தினம் (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.</p><p>வாக்குமூலமொன்று வழங்குவதற்காக&nbsp;குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T06:56:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையும் நாளை மறுதினமும் காட்சிப்படுத்தப்படவுள்ள ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வுப் பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anaikottai-excavations-to-be-exhibited-tomorrow-1786513579"></link>
            <id>https://tamilwin.com/article/anaikottai-excavations-to-be-exhibited-tomorrow-1786513579</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல்
அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல்
அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் பொதுமக்களின்
பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.</p><p>இந்தக் காட்சிப்படுத்தல் நிகழ்வானது நாளை(13.08.2026) மற்றும் நாளை மறுதினம் (14.08.2026) ஆகிய இருதினங்கள் தொல்லியல் ஆய்வுத்தளத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தொல்லியல்&nbsp;கண்காட்சி</h2><p>இந்தக் கண்காட்சியில் நமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய
பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் இடம்பெறவுள்ளன.
</p><p>இதன்போது ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின்
தொன்மைச் சிறப்பையும் சான்றுகளுடன் மக்கள் நேரில் கண்டு உணர்ந்துகொள்ள
முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8b26ac-38de-4409-8021-818e32fe953a/26-6a7c0c0f99899.webp' /></p><p>பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தமது
வரலாற்று மற்றும் தொல்லியல் அறிவை மேம்படுத்திக்கொள்ள இதுவொரு
சிறந்தவாய்ப்பாகும்.
</p><p>
எனவே மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட இரு
தினங்களிலும் வருகை தந்து இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு நமது பண்டைய
வரலாற்று சிறப்புகளை அறிந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் .</p>]]></content>
            <updated>2026-08-12T06:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் 80 உத்தியோகத்தர்களை பணி நீக்கம் செய்ய சதி - உயர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conspiracy-to-dismiss-80-officers-in-north-1786511984"></link>
            <id>https://tamilwin.com/article/conspiracy-to-dismiss-80-officers-in-north-1786511984</id>
            <summary type="text">வட மாகாண சபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, 80ற்கும்
மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண சபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, 80ற்கும்
மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு
மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் தீவிரமாக முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.</p><p>வடமாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித்
திட்டங்களை நேரடியாகக் கண்காணிப்பதற்காக கடந்த 2006ஆம் ஆண்டு 82 அபிவிருத்தி
உத்தியோகத்தர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.</p><h2>அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்</h2><p>
</p><p>
கடந்த 2013ஆம் ஆண்டு வட மாகாணசபை இயங்க ஆரம்பித்த நிலையில், 2017ஆம் ஆண்டு
அப்போதைய பிரதம செயலாளர் நா.பத்திநாதனால் 82 பேருக்கு இந்த நியமனங்கள்
வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
போரால் பாதிக்கப்பட்ட இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்
செயற்பாடுகள் தவிர்க்க முடியாததாக அமைந்தது. எனினும், அதன் பின்னர் இந்த ஆளணியின்
எண்ணிக்கை 20ஆகக் குறைக்கப்பட்டதுடன், அவர்கள் எந்த நோக்கத்துக்காக நியமனம்
பெற்றனரோ அதற்கு முற்றிலும் பொருத்தமற்ற மத்திய நிர்வாக அலகுகளுடன்
இணைக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc108547-712f-430e-8c67-1dac690b5085/26-6a7c062e52554.webp' /></p><p>இந்த இணைப்புக்குப் பின்னர் மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரிகள் சிலர்
குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் மிகவும் தரக்குறைவாக விமர்சிப்பதுடன்,
பொருத்தமற்ற துறைகளுக்கும், திணைக்களங்களுக்கும் இடமாற்றம் வழங்கி
வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
போதிய ஆளணி உள்ள திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதால் அந்தத்
திணைக்களங்கள் அவர்களை ஏற்காத நிலையும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால்
மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடமாற்றங்களைச்
சந்திக்க நேர்ந்துள்ளது.</p><p>
வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களில் மிக வினைத்திறனாக செயற்பட்ட அபிவிருத்தி
உத்தியோகத்தர்களை தற்போதைய உயர் அதிகாரிகள் இவ்வாறு அலைக்கழிக்க வைப்பதும்,
அவர்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்குவதும் பல்வேறு தரப்பினர்களிடத்தில் கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:37:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைமாற்றப்பட்ட தங்காலை கால்டன் இல்லம்: மகிந்தவால் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786499235"></link>
            <id>https://tamilwin.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786499235</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி
இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,</p><p>
எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான்&nbsp; நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். </p><h2>

</h2><p></p><h2>ராஜபக்சக்களின் பரம்பரை சொத்து</h2><p>அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே சமர்ப்பித்துள்ளேன்.எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.
</p><p>ஏனெனில் சிலர் ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள் என்கின்றனர்.நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை.
எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன. </p><p>அதேபோல் நான் ஒரு
காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். அதைத்
தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட
அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/117ff23c-0c4a-41cd-a780-d0f378af5dfc/26-6a7bd0a5159b5.webp' /></p><p>மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக
அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020
வரை. மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
</p><p>எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன்.
மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும்&nbsp; சுட்டிக்காட்டியுள்ளேன். அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.
</p><h2> கால்டன் இல்லம் கைமாற்றப்பட்ட விதம்</h2><p>மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து
அவருக்குக் கிடைத்தவை. மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல்
ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.</p><p>இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.ஏனென்றால் அப்பா
அதை எனக்குக் கொடுத்து விட்டார்.கடந்த வாரமே எழுதப்பட்டது.
</p><p></p><p>அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம்
அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். ஏனென்றால் ஆயுட்கால
உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும்
ஒருவன் நான். </p><p>ஆனால் அப்பா மறுபடியும் வலியுறுத்தி இது அரசியல் இல்லம்
என்பதாலும் தொடர்ந்து அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும்&nbsp; நிச்சயமாகத் உனக்கு தரப்பட வேண்டும் என்று கூறினார். அதனாலே தங்காலை கால்டன் இல்லம் எனக்கு வழங்கப்பட்டமைக்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் தீர்மானத்திற்கு எதிராக அதிரடியாக களமிறங்கிய எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-file-case-on-court-1786513574"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-file-case-on-court-1786513574</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை (12.08.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த அரசாங்கத்தின் முன்மொழிவு பற்றி பிரித்தானிய உயர் ஆணையருக்குத் தெரிவிக்க, கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><h2>நிலுவையிலுள்ள வழக்குகள்..&nbsp;</h2><p>
</p><p>இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் பேசிய ஜி.எல். பீரிஸ், "நாங்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்திற்குச் செல்வோம். இந்தப் பணியால் தேங்கியுள்ள வழக்குகளின் தேக்கத்தை இது தீர்க்காது என்பதை உயர் நீதிமன்றத்திற்கு எவ்வித சந்தேகமுமின்றிப் புரிய வைப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d8c71da-c914-44e1-80dc-fa2e71970246/26-6a7c11b291822.webp' /></p><p> </p><p>மொத்த வழக்குகளில் 1 சதவீதம் மட்டுமே உயர் நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் உள்ளன.

நாங்கள் இந்த நாட்டிற்கான பிரித்தாினிய உயர் ஆணையர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்தோம். </p><p>இலங்கை நீதித்துறைக்கும் பிரித்தாினிய பொதுநலவாயத்திற்கும் இடையே மிக நீண்ட மற்றும் ஆழமான உறவு இருந்து வருகிறது. இன்று எங்கள் நாட்டில் நடப்பவற்றை எங்களால் நம்ப முடியவில்லை என்று அவரிடம் கூறினோம்.&nbsp;</p><p>சட்டத்தீர்வையாளர் சங்கம் ஜனாதிபதியைச் சந்திப்பது பயனற்றது. எல்லாம் முடிந்த பின்னரே அவர்கள் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:31:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக ஆபத்துள்ள சுகாதார அதிகாரி பிரிவுகள் அடையாளம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-patients-in-the-country-increasing-1786514433"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-patients-in-the-country-increasing-1786514433</id>
            <summary type="text">நடப்பாண்டில் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.



ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பாண்டில் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும் பதிவான நிலையில், ஓகஸ்ட் 11 ஆம் திகதி நள்ளிரவு வரை மேலும் 5,348 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p>


நாட்டில் டெங்கு நோய்ப்பரவலின் மையமாக மேல் மாகாணம் தொடர்ந்து காணப்படுவதுடன், மொத்த நோயாளர்களில் 52.9 சதவீதம் இம்மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.</p><h2>அதிகளவு நோயாளர்கள் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>


கம்பஹா மாவட்டத்தில் 19,291 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 16,909 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இவ்விரு மாவட்டங்களிலும் பதிவான நோயாளர்கள் தேசிய மொத்த எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1581ae2-44be-4e77-bb99-dfece99157f5/26-6a7c10704fbca.webp' />&nbsp;</p><p>


அதேவேளை, கண்டியில் 6,466, மாத்தறையில் 5,990 மற்றும் களுத்துறையில் 5,416 நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.



தென் மாகாணத்தில் 12,206 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 7,475 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>சபரகமுவவில் 5,114, வடமேல் மாகாணத்தில் 4,050 மற்றும் ஊவா மாகாணத்தில் 4,137 நோயாளர்கள் பதிவாகியுள்ளன.
</p><p>


வடக்கு மாகாணத்தில் 1,287 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 2,799 நோயாளர்களும் பதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>அதிக ஆபத்துள்ள பிரிவுகள் அடையாளம்</h2><p>


இதேவேளை, இந்த ஆண்டு டெங்கு நோயினால் 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f89059-3808-494c-9aaf-517d92de55cd/26-6a7c107102966.webp' />&nbsp;</p><p>


31ஆவது வாரத்தில் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 119 ஆக காணப்பட்டதுடன், நாளாந்தம் சராசரியாக 1,509 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகமாகக் காணப்படும் நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் சமூக மட்டத்திலான டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/avRYwlXb7_s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-12T06:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ்.இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-youth-in-international-karate-competition-1786513700"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-youth-in-international-karate-competition-1786513700</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில்
பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய
தேசிய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில்
பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய
தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகி. தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள, சர்வதேச
கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
</p><p>
யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ். இந்துக்
கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில்
பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார்.&nbsp;</p><h2>ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்</h2><p>அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல்
முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது அவுஸ்திரேலியாவில்
புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f86eef-e71d-42ad-9b95-9f52b4e15ef6/26-6a7c0d5c9ca35.webp' /></p><p>
கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், இலங்கையின் பல்வேறு
பகுதிகளில் இயங்கிவரும் கராத்தே பாடசாலைகளின் ஊடாக, ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeswara-bandara-to-court-gotabaya-rajapaksa-1786512409"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeswara-bandara-to-court-gotabaya-rajapaksa-1786512409</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.&amp;nbsp;அவர், சற்று முன்னர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.&nbsp;</p><p>அவர், சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p>இரு நிறுவனங்களில் இருந்து அரச சம்பளம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 18ஆம் திகதி முதல் இன்று (12.08.2026) வரை காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
</p><p>இந்நிலையில் இன்று இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:41:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவு! இரகசிய உளவுத்தகவலில் ஆபத்தான பொதிகளுடன் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-arrested-underworld-group-member-with-drugs-1786506625"></link>
            <id>https://tamilwin.com/article/one-arrested-underworld-group-member-with-drugs-1786506625</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான &#039;கங்கன&#039; என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கங்கன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் பிரதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஹோமாகமவின் கெண்டலந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​போதைப்பொருள் கையிருப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய உளவுத்தகவல்</h2><p>பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேஷ நடவடிக்கைப்பிரிவு III அதிகாரிகளுக்கு கிடைத்த உளவுத்தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a37f0df-7346-4d93-9f7d-bbe40436b769/26-6a7c06c0ee778.webp' /></p><p>இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் 59 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 800 'எக்ஸ்டஸி' வகை போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹோமகம பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள 'கங்கன' என்பவரின் நேரடி உத்தரவுகளின் கீழ், இவர் நாட்டில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இரகசியமாக இயக்கி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைக்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:38:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்காலையில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786511505"></link>
            <id>https://tamilwin.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786511505</id>
            <summary type="text">கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம்&nbsp;நேற்று(11.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37154665-dd24-4e94-8e34-d507d512a553/26-6a7c04ae335f1.webp' /></p><p>இந்நிலையில், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:29:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவி - எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-government-help-by-inclement-weather-1786509095"></link>
            <id>https://tamilwin.com/article/indian-government-help-by-inclement-weather-1786509095</id>
            <summary type="text">சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத்
தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.</p><p>கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (11) செவ்வாய்க்கிழமை
நடைபெற்றபோது இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி</h2><p>அண்மையில் மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் சீரற்ற
காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக
இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f6ad07-66e3-4b3b-867f-44f49a574cbb/26-6a7bffb39c41c.webp' />&nbsp;</p><p>இதற்கமைய, கடந்த வாரம் கண்டியிலுள்ள இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர்
சரண்யா அம்மையாரை, பிரதேச சபை செயலாளர் விஜயசுந்தரம் மற்றும் உறுப்பினர்
பாஸ்கரன் ஆகியோருடன் சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை
வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.</p><p>அத்துடன், கொட்டகலை பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப்
பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 700 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,
மடிக்கணினிகள் மற்றும் புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கும், இளைஞர்,
யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், விவசாய நடவடிக்கைகளை
ஊக்குவிப்பதற்கும் உதவிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இந்த உதவிகளை வழங்குவதற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை
எடுக்கப்படும் என இந்திய தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக
இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய உதவித் தூதரகத்திற்கும் நன்றி
தெரிவிப்பதாகவும் பிரதேச சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>கொட்டகலை பிரதேசத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 88 விசேட தேவையுடைய
மாணவர்களுக்காக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்
ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர்
உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து, அவற்றை மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச்
சென்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபைத் தலைவர்
தெரிவித்துள்ளார்.</p><h2>விரைவில் புதிய கட்டட நிர்மாண பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தின் பயன்பாடு தொடர்பிலும் புதிய
தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

இதற்கமைய, உள்ளூர் விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளுக்கான மைதான வாடகையாக 10
ஆயிரம் ரூபாயும், வைப்புப் பணமாக மேலும் 10 ஆயிரம் ரூபாயும் அறவிடப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996ff3a9-273a-48f5-a5b4-cc16f9a5bfcd/26-6a7bffb470ce0.webp' />&nbsp;</p><p>
</p><p>
பிரதேசத்திற்கு வெளியேயுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளுக்கு 15 ஆயிரம்
ரூபாயும், 10 ஆயிரம் ரூபாய் வைப்புப் பணமும் அறவிடப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டது.</p><p>

எனினும், கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் நிகழ்வுகளுக்கு
மைதானத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மைதானத்தைப் பயன்படுத்துவோரின் வசதிக்காக மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகளும்
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab32374-8df7-486b-95ae-372cf7e8a200/26-6a7bffb545d59.webp' /></p><p>அத்துடன், கொட்டகலை பிரதேச சபைக்குச் சொந்தமான புதிய கட்டிடத்தின் நிர்மாணப்
பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்காக மத்திய மாகாண ஆளுநர், உள்ளூராட்சி
ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பைப்
பெற்றுக்கொள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் ராஜமணி பிரசாந்த்
கூறியுள்ளார்.</p><p>உறுப்பினர் சுதர்ஷன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, வட்டகொடை நகரில் யுவுஆ
இயந்திர சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிரபல வங்கிகளுடன் தொடர்பு கொண்டு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் அவரவர்
வட்டாரங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை விரைவாக நிறைவு
செய்து, அவற்றின் முழுமையான விபரங்களை நவம்பர் மாத இறுதிக்குள்
சமர்ப்பிக்குமாறும் பிரதேச சபைத் தலைவர் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் செல்லாத வகையில்,
அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய அனைத்து
உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், விசேட தேவையுடைய
பிள்ளைகளுக்கான கல்வி வசதிகள், விளையாட்டு மைதான அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு
விடயங்கள் தொடர்பில் கொட்டகலை பிரதேச சபையின் இன்றைய அமர்வில் கவனம்
செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T05:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்! அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employee-salary-sri-lanka-1786508674"></link>
            <id>https://tamilwin.com/article/government-employee-salary-sri-lanka-1786508674</id>
            <summary type="text">
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p> 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>சம்பளம் அதிகரிக்கப்படும்</h2><p> </p><p> 2027ஆம் ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச வருமானம் ஒப்பீட்டளவில் உயர்வடைந்து வருகின்றது. </p><p> இவற்றுள் கணிசமான பகுதி அரச அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருகின்றது. </p><p>

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர் மட்டத்தில் அரசாங்கம் அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2026இல் சம்பளம் அதிகரிக்கப்பட்டதோடு 2027இலும் அதிகரிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9eb5e55-5811-4cce-afbc-86dba2a24061/26-6a7bff97883a9.webp' /></p><p> 

மிகச் சிறந்த பொருளாதார நிலையில் இருந்து நாம் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை. பொருளாதார நிலை படிப்படியாக முன்னேறுகின்றது. அதற்கு ஏற்பவே அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலும் அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>

யாருக்கேனும் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்காணிப்பு கமராவை சேதப்படுத்தியவர்களிடம் தண்டப்பணம் அறவிட்ட நல்லூர் பிரதேசசபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-pradeshiya-sabha-fines-damaged-camera-1786508760"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-pradeshiya-sabha-fines-damaged-camera-1786508760</id>
            <summary type="text">நல்லூர் பிரதேசசபையினால் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் பிரதேசசபையினால் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

நல்லூர் பிரதேசசபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை</h2><p> 

இதன்மூலம் சட்டவிரோதமாக வீதிகளில் கழிவுகளை வீசி செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேசசபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d00b9c8c-3547-4fe3-9216-91dfe10c878e/26-6a7bfd235d861.webp' /></p><p> 

இதன் காரணமாக வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. </p><p>

இந்நிலையில், நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ஒன்று அண்மையில் சிலரினால் அடித்து நாசமாக்கப்பட்டது.</p><h2>சந்தேகநபர்கள் அடையாளம்</h2><p> </p><p>

எனினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏனைய கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளை பயன்படுத்தி குறித்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d14c1cb6-f491-4ba2-a78d-de67aa664add/26-6a7bfd244d90f.webp' /></p><p> 

இதனையடுத்து, சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கமராவின் பெறுமதியுடன் தண்டப்பணத்தையும் சேர்த்து ரூபா 80,000 தொகையை குறித்த நபர்களிடமிருந்து நல்லூர் பிரதேச சபையினால் அறவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b3b6de-e62b-44d0-acc4-4ac2fef9c7a1/26-6a7bfd2522952.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - பிரதமரின் தலையீட்டால் உண்மை அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-dies-in-abu-dhabi-1786496464"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-dies-in-abu-dhabi-1786496464</id>
            <summary type="text">அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
</p><p>
கம்பளை - அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான் லியனகே என்ற இளைஞனின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றையதினம் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளன. </p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">உறவினர்கள் நடவடிக்கை</b></p><p>கடந்த 2 வருடங்கள் 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அபுதாபிக்குச் சென்ற இளைஞன் தாக்குதல் ஒன்றினால் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e7bf07d-9375-4c9c-96a4-8d534dd0eb7c/26-6a7bf0371d6fb.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p> </p><p> 

இதனையடுத்து, உயிரிழந்த இளைஞரின் மாமா, அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையத்திடம் தகவல்களைக் கோரியபோதிலும், ஒப்பந்தக் காலம் முடிவடைந்துவிட்டதாக கூறி அந்த நிறுவனம் பொறுப்பிலிருந்து நழுவ முயன்றுள்ளது.</p><p>இதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>சிங்கப்பூரிலிருந்து உடனடியாக நாடு திரும்பிய தாயாரும் உறவினர்களும் தேவையான சட்ட ஆவணங்களைத் தயாரித்து அபுதாபி நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.

எனினும் அது பலனளிக்கவில்லை.</p><h2>பிரதமர் தலையீடு&nbsp;</h2><p>இதற்கிடையில் நிர்க்கதிக்குள்ளான குடும்ப உறவினர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.</p><p>

இதன் காரணமாக பிரதமரின் பணிப்புரையின் பேரில் பிரதமர் செயலகம் தலையீடு செய்து, சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
</p><h3><span style="font-size: 14px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5498f0e5-289b-4909-b11b-9c51f125e237/26-6a7bf037d9652.webp' /></span></h3><p>பிரதமரின் மற்றும் அமைச்சின் முயற்சியால் கடந்த ஜுலை மாதம் 29 ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சடலம், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலை ஊடாகப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.&nbsp;</p><p>அங்கு இடம்பெற்ற மரணப் பரிசோதனை மற்றும் நீர்கொழும்பு நீதவான் உத்தரவிற்கமைய, தலையில் ஏற்பட்ட பலத்த தாக்கம் காரணமாக இரத்தம் உறைந்தமையும், உடலின் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களுமே இந்த மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் அபுதாபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T04:59:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரம்! உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuruwita-prison-clash-post-mortem-report-1786503881"></link>
            <id>https://tamilwin.com/article/kuruwita-prison-clash-post-mortem-report-1786503881</id>
            <summary type="text">&amp;nbsp;குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.</p><p>

நேற்று முன்தினம் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, இரண்டு கைதிகளும் பலத்த துப்பாக்கிச்சூட்டுக்காயங்களால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, ஒரு கைதி தலையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுக் காயத்தாலும், மற்றொருவர் மார்பில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டு காயத்தாலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் நிலை</h2><p>

கடந்த வெள்ளிக்கிழமை குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fee3ee9-e9cf-4aac-bde8-e631ab70ed77/26-6a7bf26b0bf07.webp' />&nbsp;</p><p>

கைதிகளுள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலை தீவிரமடைந்ததாகவும், இதனைக் கட்டுப்படுத்துதவற்காக துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை குண்டுகளும் நடத்தப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கூறியிருந்தார்.
</p><p>
இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, கலவரக் கட்டுப்பாட்டுப்பிரிவு மற்றும் இராணுவமும் வரவழைக்கப்பட்டன.</p><p>

இதற்கு முன்னர் நீர்கொழும்பு, மஹர, மெகசின் மற்றும் பல்லன்சேன சிறைகளிலும் கலவரம் வெடித்தது.</p><p>இதில், நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 சிறை அதிகாரிகளும் 17 கைதிகளும் உயிரிழந்தனர்.</p><p> 

மஹர மற்றும் மெகசின் சிறைகளில் வெடித்த கலவரத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T04:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786505387"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786505387</id>
            <summary type="text">இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&amp;nbsp;நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p>நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (12.08.02026) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>அதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p> வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும், ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae2eac2-2e68-4528-a957-540fef7bcb3d/26-6a7beec53ed89.webp' /></p><p> </p><p>சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். </p><p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.</p><h2>கொந்தளிப்பான கடற்பரப்பு</h2><p> இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோடிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86cc484a-08bd-448d-a8c0-e720dfde1db2/26-6a7beec5e9af4.webp' /></p><p> </p><p>மேலும், கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 முதல் 3 மீற்றர் உயரம் வரை எழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T03:59:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து: இளைஞர் பலி - மற்றுமொருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-main-road-young-man-died-1786504125"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-main-road-young-man-died-1786504125</id>
            <summary type="text">கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை (12) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.</p><p>இன்று அதிகாலை (12) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு
பாரஊர்திகள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>பாரஊர்தியை வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்டவேளை பின்னால் வந்த பாரஊர்தி
மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eba1cd10-8331-40b8-a6b4-ca9dce9bbbb8/26-6a7be9e461ef7.webp' />&nbsp;</p><p>இந்த விபத்தில் பாரஊர்தியின் உதவியாளரான 21வயதான
சத்தியராசா சஞ்சயன் என்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.</p><p>மேலும், 28 வயதான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>சம்பவம் தொடர்பாக
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T03:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-dispute-heads-toward-settlement-1786501558"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-dispute-heads-toward-settlement-1786501558</id>
            <summary type="text">கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டு இறுதி சுங்கத்தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டு இறுதி சுங்கத்தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு தீர்வொன்றைப் பரிந்துரைப்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்கள்</h2><p> 

குறிப்பிட்ட வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு பொருத்தமான இணக்கப்பாட்டை எட்டுவதற்குத் தேவையான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணி என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3eb62aa-77fd-44be-8170-611c2df0f79b/26-6a7be0e87d72f.webp' />&nbsp;</p><p>இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவிக்கவில்லை என இலங்கை சுங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p><p>இருப்பினும், நியாயமான காரணங்களால் சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் அறிவித்தால், அவை தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்றும் இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்தொன்றில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக்கோளாறு - பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-on-coastal-line-suffers-a-technical-fault-1786500493"></link>
            <id>https://tamilwin.com/article/train-on-coastal-line-suffers-a-technical-fault-1786500493</id>
            <summary type="text">ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தொன்றில் இன்று காலை (12) தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
பெருவளை தொடருந்து நிலையம் மற்றும் மக்கோண த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தொன்றில் இன்று காலை (12) தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.</p><p>
பெருவளை தொடருந்து நிலையம் மற்றும் மக்கோண தொடருந்து நிலையத்திற்கிடையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக, ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:19:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-of-policy-interest-rates-1786498601"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-of-policy-interest-rates-1786498601</id>
            <summary type="text">இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> </p><p>2.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் பொருளாதாரம் மீண்டு வருகின்றது.</p><h2>நாணயக்கொள்கை பராமரிப்பு</h2><p> மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இல்லாத வகையில் நாணயக் கொள்கையைப் பராமரிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba0fa5cf-f574-41ed-819a-43b5e29fd6f5/26-6a7bd4f148a59.webp' />&nbsp;</p><p>பணவீக்கம் தற்போதைய மட்டங்களிலேயே உச்சத்தை எட்டி, அடுத்த ஆண்டில் 5 சதவீத இலக்கை நோக்கி மீண்டும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஈரான் போரினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தனது முதல் அதிகரிப்பாக கடந்த மே மாதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி உயர்வைக் கொண்டுவந்து மத்திய வங்கி சந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இடம்பெறும் மீட்சியில் அதன் அறிவுறுத்தலில் தெரிவு செய்யப்பட்ட ஆபத்தான வழிமுறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

பணவீக்கம் 7 சதவீதமாக உயரும் என மத்திய வங்கி எதிர்பார்த்ததால், மே மாத வட்டி உயர்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும், தற்போதைய பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலேயே உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார். </p><p>இதேவேளை, மே மாத வட்டி அதிகரிப்பின் முழுமையான தாக்கம் பொருளாதாரத்தில் வெளிப்பட 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும், அடுத்த ஆண்டின் முதலரை பகுதியில் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கிற்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.</p><p>இதற்கமைய, மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி திஸ்ஸ விகாரை பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான பரப்புரைகள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786497326"></link>
            <id>https://tamilwin.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786497326</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
பொப்பிலியான சுனேத்ரா த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
</p><p>பொப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய உரிமைகளை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் தலைவரான கலகம குசலதம்ம தேரர் திரிபுபடுத்தப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>பவானி வீதி விடுவிப்பு</h2><p>
தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பரப்புரைகள் முன்வைக்கப்படுகின்றன.</p><p>குறித்த ஊடக சந்திப்பில் தேரர் தெரிவித்த கருத்து
திஸ்ஸ விகாரையின் நடுவே வீதியொன்றை அமைக்க வேண்டும் என ஒருவித அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.</p><p>பலாலி பொலிஸாரினால் பெறப்பட்டிருந்த தடை உத்தரவை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் முற்றாக இரத்து செய்துள்ளது. இதன்படி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வீதி அமைக்கும் பணியை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc6e656-6a35-44ce-be95-0af911b326f6/26-6a7bc9304bcdb.webp' /></p><p>சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தேரர் 'இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வீதி அமைக்கப்பட மாட்டாது, யாரும் பதற்றமடைய வேண்டாம்' என அறிக்கை விட்டிருந்தார். </p><p>இருப்பினும், விகாராதிபதி தேரரின் அறிக்கையை விட வலிவடக்கு பிரதேச செயலாளரின் கூற்றே பலமானதாக மாறியுள்ளது. அரசாங்கம் இதுவரை செய்த விடயங்கள், </p><p>கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளை பார்க்கும்போது, அவர்களின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகமும் பயமும் எங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T01:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடரும் அநுரவின் வேட்டை! அடுத்தடுத்து சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள் - பலரை காட்டிக்கொடுத்த சைமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-people-had-phone-connection-with-saima-1786497593"></link>
            <id>https://tamilwin.com/article/10-people-had-phone-connection-with-saima-1786497593</id>
            <summary type="text">அநுர அரசாங்கத்தில் போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக மேலும் பல அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிக்கவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கத்தில் போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக மேலும் பல அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. </p><p>

சில தினங்களுக்கு முன்னர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இரத்மலானையைச் சேர்ந்த சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலகச் சந்தேகநபர்கள் பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளனர். </p><p>

அவர்கள் வெளிப்படுத்தும் தகவல்களுக்கமைய, அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலரும் சிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><h2><b>
கைது செய்ய நடவடிக்கை</b></h2><p>அவர்களுடன் தொலைபேசித் தொடர்புகளைப் பேணிய 10 நபர்கள் குறித்த தகவல்கள் வெளிவரவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7fc919a-1bb9-4fc5-be17-94d896fd3123/26-6a7bcdc0e6447.webp' /></p><p>மேலும் அவர்களுக்குக் குற்றச் செயல்களைச் செய்வதற்கு ஒப்பந்தம் வழங்கிய நபர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன் இந்த குழுவினருக்கு ஆயுதங்களை வழங்கியவர்களையும் எதிர்வரும் காலத்தில் கண்டறிய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-12T01:37:51+00:00</updated>
        </entry>
    </feed>
