<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-30T18:52:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெளிவான போர்த் திட்டங்களை சமர்ப்பிக்க உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukraine-defense-minister-vows-submit-war-plans-1788113832"></link>
            <id>https://tamilwin.com/article/ukraine-defense-minister-vows-submit-war-plans-1788113832</id>
            <summary type="text">உக்ரைனின் 27 பில்லியன் டொலர் இராணுவ பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கும்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிதியை முன்னதாகவே பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் 27 பில்லியன் டொலர் இராணுவ பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கும்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிதியை முன்னதாகவே பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக
சர்வதேச பங்காளிகளுக்கு தெளிவான போர் மூலோபாய திட்டங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக
உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ஏவ்ஹேனி க்மாரா தெரிவித்துள்ளார்.
</p><p>
ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டாக தொடரும் நிலையில், உக்ரைன் சர்வதேச
நிதியுதவிகளிலேயே பெருமளவில் தங்கியுள்ளது.</p><h2>உக்ரைனின் கோரிக்கை</h2><p>
</p><p>
அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியம் 2027ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கு 90
பில்லியன் யூரோ நிதியுதவியை வழங்க உறுதியளித்துள்ள போதிலும், அடுத்த
ஆண்டிற்காக திட்டமிடப்பட்டுள்ள 45 பில்லியன் யூரோ கடனின் ஒரு பகுதியை விரைவாக
விடுவிக்குமாறு உக்ரைன் கோரிக்கை விடுக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2378a0fb-08d8-471e-aa06-dc805cac2cea/26-6a94752fae018.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்புப் படைகள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவையான திட்டங்கள் மற்றும்
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய எதிர்பார்க்கும் இலக்குகள் தொடர்பான
தெளிவான பார்வையை பங்காளிகளுக்கு முன்வைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன் புதிய இராணுவ தலைமை தளபதி மைக்கைலோ டிராபதியுடன் இணைந்து உக்ரைனின்
பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் வீச்சுகளுக்கு
மத்தியில், மனிதவள பற்றாக்குறை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் தேவையை
நிவர்த்தி செய்வதுடன், உக்ரைனிய படைவீரர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான
சரியான தீர்மானங்களை எடுப்பதே தமது முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர்
வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T18:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் அதிநவீன ரோமன் தொலைநோக்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nasa-state-art-roman-telescope-launched-into-space-1788112203"></link>
            <id>https://tamilwin.com/article/nasa-state-art-roman-telescope-launched-into-space-1788112203</id>
            <summary type="text">நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான நான்சி கிரேஸ் ரோமன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி
மையத்திலிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான நான்சி கிரேஸ் ரோமன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி
மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம்
ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.</p><p>

சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன
தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இரகசியங்களான இருண்ட ஆற்றல், இருண்ட பருப்பொருள்
மற்றும் புதிய கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>சுற்றுவட்டப் பாதை</h2><p>
</p><p>
புவியிலிருந்து சுமார் 16 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச்
பொயின்ட் 2 எனும் சுற்றுவட்டப் பாதையை நோக்கி இது பயணிக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4278ce-f323-42a4-84c7-9d64f493c781/26-6a947118b6143.webp' /></p><p>

ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகளின் ஆற்றலை விடவும் அதிக பரந்த
பார்வைத்திறன் கொண்ட இந்தத் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் விரிவான முப்பரிமாண
வரைபடத்தை (3D Map) உருவாக்கவுள்ளது.
</p><p>
ஹப்பிள் தொலைநோக்கி நூறாண்டுகளில் செய்யக்கூடிய விண்மீன் மண்டல ஆய்வுகளை
ரோமன் தொலைநோக்கியால் ஒரே மாதத்தில் செய்து முடிக்க முடியும் என விண்வெளி
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த
விண்வெளி ஆராய்ச்சி மையம், திட்டமிட்ட நேரத்திற்கு ஒன்பது மாதங்களுக்கு
முன்னதாகவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T18:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-swiss-music-concert-woman-killed-1788111041"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-swiss-music-concert-woman-killed-1788111041</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை விருந்து நிகழ்ச்சியொன்றில்
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளம் பெண்
ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை விருந்து நிகழ்ச்சியொன்றில்
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளம் பெண்
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட டெக்னோ இசை நிகழ்ச்சி அதிகாலை வேளையில்
நிறைவடைந்த தருணத்திலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>

சம்பவத்தில் காயமடைந்தவர்களும் உயிரிழந்த பெண்ணும் 20 முதல் 27 வயதிற்குட்பட்ட
சுவிட்சர்லாந்து வாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் நகரின்
பல பகுதிகளை முடக்கி தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c05dd1bf-bef1-464e-888d-e6436956c31b/26-6a946a0816222.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சம்பவம் தொடர்பிலான ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள் ஏதேனும்
இருப்பின் அதனை வழங்கி உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிப் பயன்பாட்டு உரிமங்கள் பரவலாக காணப்படுகின்ற
போதிலும், இவ்வாறான கொடூரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அரிதாகவே
இடம்பெறுகின்றன.
</p><p>
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T17:36:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜே.ஆரை விடவும் தற்போதைய அரசாங்கம் அதிக சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/current-govt-more-authoritarian-than-jr-1788107526"></link>
            <id>https://tamilwin.com/article/current-govt-more-authoritarian-than-jr-1788107526</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கூட பிரயோகிக்காத அளவிலான சர்வாதிகார ஆட்சியை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக &#039;சர்வஜன பலய&#039; கட்சியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கூட பிரயோகிக்காத அளவிலான சர்வாதிகார ஆட்சியை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக 'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>நாட்டின் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கூட செவிமடுக்க மறுக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>புத்தல பொது விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b04bc3-fec5-49bc-8414-33183d24ae7c/26-6a945b07bf7f5.webp' /></p><p>
மொணராகலை மாவட்டத்தில் 'சர்வஜன பலய' அமைப்பின் தொகுதி மட்ட தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. </p><p>
சர்வஜன பலய அமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளும் நிர்வாகப் போக்கும் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிப்பதையும், நாட்டின் ஸ்தாபன அமைப்புகள் மற்றும் ஆலோசனைகளைப் புறக்கணிப்பதையுமே தெளிவுபடுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.</p><p>
இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் அரசியல் அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எல்லை மீறிச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
நாட்டின் உயரிய மதத் தலைவர்களான மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களைக் கூட அரசாங்கம் ஏற்க மறுப்பது மிகவும் தீவிரமான ஒரு நிலைமையாகும் எனவும் இது தொடர்பில் பொதுமக்கள் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் எனவும் திலித் ஜயவீர வலியுறுத்தியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22-வது அரசியலமைப்பு திருத்தத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை – அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22-amendment-will-imposed-says-govt-1788106852"></link>
            <id>https://tamilwin.com/article/22-amendment-will-imposed-says-govt-1788106852</id>
            <summary type="text">&amp;nbsp;22-வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையிலிருந்து ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22-வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையிலிருந்து ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>பதுளையில் இன்று நடைபெற்ற 'ரட்ட ஹதன ஜன பலய' (நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் சக்தி) மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p><p>
ஆட்சியைப் பொறுப்பேற்ற போது, கடந்த 30-40 ஆண்டுகளாக சீர்குலைந்து கிடந்த ஒரு அமைப்பையே எதிர்கொண்டோம். ஊழல்வாதிகளையும் மோசடிக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எங்களின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8803e6c5-8ebd-4721-87d7-a0129e99e26a/26-6a9458658b2ad.webp' /></p><p>
</p><p>அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது சுமார் 11 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பது தெரியவந்துள்ளதாகவும், நீதிமன்ற அமைப்பை விரைவுபடுத்தவும் திறம்படச் செயல்படுத்தவும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
ஓய்வுபெறும் வயதை மட்டும் அதிகரிப்பது முழுமையான தீர்வாகாது என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஏனைய சீர்திருத்தங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது நீதிபதிகளின் அறிவும் அனுபவமும் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>குறிப்பிட்ட ஒரு நபரை இலக்கு வைத்தே இந்த திருத்தம் கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சியினர் போலியான அச்சத்தை உருவாக்கி வருகின்றனர் என அமைச்சர் சாடியுள்ளார்.
</p><p>நீதிமன்ற அமைப்பியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதும் 2 ஆண்டுகளால் அதிகரிக்கப்படுமே தவிர, தனிப்பட்ட ஒருவருக்காக இது செய்யப்படவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
</p><p>பிரதம நீதியரசர் சூரசேனவின் பதவிக் காலத்திற்குப் பின்னர் இத்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சியினர் கூறுவதன் மூலம், உண்மையில் ஒரு தனிநபரை இலக்கு வைப்பது அரசாங்கமா அல்லது எதிர்க்கட்சியா என்ற கேள்வி எழுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இப்போது கொண்டுவந்தால் தவறாகத் தெரிவது, டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் எவ்வாறு சரியாகும்?" என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p> இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்கள் இதற்கான நல்ல முடிவுகளைக் காண்பார்கள் எனவும், நீதியை நிலைநாட்டுவதில் அரசாங்கம் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது என உறுதியளிப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘போராட்டம்’ – Trailer வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.


இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>
</p><p>

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். 

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>

போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01dbd2e7-0591-45bf-88aa-2bb00e835aa3/26-6a93f9dcab12a.webp' /></p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p>

ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

‘போராட்டம்’ திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T16:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற இரு கொடூர கொலைகள்.. பல வருடங்களுக்கு பிறகு இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்டனை விதித்துள்ளார்.
</p><p>
திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை
மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்.</p><h2>குற்றச்சாட்டு நிரூபிப்பு&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
குறித்த 09 நபர்களையும் சந்தேகநபர்களாக பெயர் குறிக்கப்பட்டு, மேல் நீதிமன்றில்
சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள்
இடம்பெற்று வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ef98676-cc5a-4e82-9101-b326019060e9/26-6a94598800977.webp' /></p><p> </p><p>இந்நிலையில், குறித்த வழக்கு நேற்றைய வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்து
கொள்ளப்பட்ட வேளை, 09ஆம் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபிக்கப்பட்டமையால், அவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, ஏனைய 08
சந்தேகநபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், 08 பேரையும் மன்று விடுவித்தது.</p><p>

அதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை
கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இளைஞன்
மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால்,
இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து, மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T16:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளும் கட்சி அமைச்சர் மீது அர்ஜூன் மகேந்திரன் சுமத்தும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187"></link>
            <id>https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187</id>
            <summary type="text">&amp;nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தினை ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
தான் சட்டப்பூர்வமாக பெயரை மாற்றிக்கொண்டதாக அரசாங்க அமைச்சர் வெளியிட்ட கூற்றை "முற்றிலும் பொய்" என நிராகரித்து, அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f239d7-e8c4-4b65-b228-f2bad936715b/26-6a9455ccc92ab.webp' /></p><p>
</p><p>ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தன் மீதான இந்த குற்றச்சாட்டை உறுதியாக மறுத்துள்ள அவர், அந்த மறுப்பு அறிக்கையை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கில் தேடப்படும் அர்ஜுன் மகேந்திரன், 'ஹர்ஜன் அலெக்சாண்டர்' (Harjan Alexander) என தனது பெயரை மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
</p><p>நான் பெயரை மாற்றியுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பகிரங்கக் கூற்று வெளியிட்டுள்ளமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பதை உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் அறியத் தருகிறேன்" என மகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சிங்கப்பூர் முகவரியைக் குறிப்பிட்டுள்ள அவர், "லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன்" (Lakshman Arjuna Mahendran) என்ற தனது அதிகாரப்பூர்வ பெயரிலேயே இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என குறித்த ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பாக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான தடைகள் நிலவி வருகின்றன.
</p><p>இந்த நிலையில், அவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான மாற்று வழிகளை இலங்கை அதிகாரிகள் ஆராய்ந்து வரும் வேளையில், அவரது அடையாளத்தை மையப்படுத்தி அரசாங்கம் முன்வைத்த கூற்றை அர்ஜுன் மகேந்திரன் நேரடியாக மறுத்துள்ளார்.
</p><p>சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அமைச்சரின் கருத்தை நிராகரித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பின் நிலைப்பாடு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இந்த மறுப்பு அறிக்கையை அர்ஜூன் மகேந்திரன் வெளியிட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதனையும் குறித்த ஊடகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையைச் சூறையாடிய குடும்ப அரசியலின் கறுப்புப் பக்கம்! பதவிகளை விட்டு ஓடிய குடும்ப சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dark-side-the-family-politics-plundered-sri-lanka-1788101604"></link>
            <id>https://tamilwin.com/article/dark-side-the-family-politics-plundered-sri-lanka-1788101604</id>
            <summary type="text">சுதந்திரத்திற்குப் பிறகு சேனாநாயக்க மற்றும் பண்டாரநாயக்க குடும்பங்கள் மூலம் இலங்கையில் வாரிசு அரசியல் வேரூன்றியது எனலாம்.

 இது உயர் பதவிகள் ஒரு குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதந்திரத்திற்குப் பிறகு சேனாநாயக்க மற்றும் பண்டாரநாயக்க குடும்பங்கள் மூலம் இலங்கையில் வாரிசு அரசியல் வேரூன்றியது எனலாம்.

 இது உயர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வழிவகுத்தது.</p><p>

இல் ஜே.ஆர். ஜெயவர்தனாவால் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, அதிகாரங்கள் ஒருவரிடம் குவியவும், பிற்காலத்தில் சர்வாதிகாரப் போக்குக்கும் வழிவகுத்தது.
</p><p>
 2005 முதல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குடும்பத்தினர் நாட்டின் மிக முக்கியமான அமைச்சுகளைத் தங்கள் வசப்படுத்தினர்.</p><p> 

பல பிரம்மாண்ட கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் பெரும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
</p><p>
அறிவியல் பூர்வமற்ற தன்னிச்சையான பொருளாதார முடிவுகள் (வரி குறைப்பு மற்றும் உரத் தடை போன்றவை) 2022-இல் நாடு திவாலாவதற்குக் காரணமாயின.
</p><p>
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் (அரகலய), குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியது.</p><p>

முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PO3VtzCPTMY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T15:48:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தையின் மோசமான செயல் - 8 வருடங்களாக போராடிய மகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-sexually-abused-his-daughter-1788102709"></link>
            <id>https://tamilwin.com/article/father-sexually-abused-his-daughter-1788102709</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. </p><p>

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>

தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeac3f49-1434-44a3-952f-15194a375326/26-6a94492793d0f.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய்
இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T15:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட நெதன்யாகுவின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-son-urgently-evacuated-from-the-us-1788102510"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-son-urgently-evacuated-from-the-us-1788102510</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு
விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு
விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக
இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பான
ஷின் பெட் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுந்த கணிசமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை
மதிப்பீடு செய்த பின்னரே, அவரது பாதுகாப்புப் படையினருடன் அவரை உடனடியாக
தாயகம் திருப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவசரமாக வெளியேற்றம்</h2><p>
</p><p>
கடந்த டிசம்பர் மாதம் புளோரிடாவில் வசித்து வந்த யாயிர் நெதன்யாகுவைக் இலக்கு
வைத்து ஈரானிய சதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டதாக முன்னதாக அமெரிக்க ஊடகங்கள்
செய்தி வெளியிட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cba172-73a7-4d0b-8d2f-4b020c92aa4a/26-6a94487b39e52.webp' /></p><p>

வலதுசாரி செயற்பாட்டாளரும் பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடத்துனருமான யாயிர்
நெதன்யாகு, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் புளோரிடாவில் சொகுசு வாழ்க்கை
வாழ்ந்து வந்தமை இஸ்ரேலில் பலத்த விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.
</p><p>
குறிப்பாக காசா போர் தீவிரமடைந்த வேளையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய
இராணுவத்தினர் போருக்கு அழைக்கப்பட்ட நிலையில் இவர் வெளிநாட்டில்
தங்கியிருந்தமை அரசாங்க எதிர்ப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
</p><p>
இதேவேளை, தமது மகன்களில் ஒருவரைக் கொல்ல ஈரான் முயற்சிப்பதாக பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் தெரிவித்திருந்த கூற்றை உறுதிப்படுத்தும்
வகையில் இந்த அவசர வெளியேற்ற நடவடிக்கை அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T15:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இப்போ எங்கே அநுர..! நாட்டை மீண்டெழ முடியாத நிலைக்கு தள்ளியதாக அசாத் சாலி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/azad-sali-criticized-the-anura-government-1788102081"></link>
            <id>https://tamilwin.com/article/azad-sali-criticized-the-anura-government-1788102081</id>
            <summary type="text">அநுரவை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக பெண்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி வாக்கு கேட்டனர். ஆனால், அவர்களுக்காக அநுர என்ன செய்திருக்கிறார் என முன்னாள் மேல் மாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுரவை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக பெண்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி வாக்கு கேட்டனர். ஆனால், அவர்களுக்காக அநுர என்ன செய்திருக்கிறார் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் முகமது அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியபோது, நாட்டை மீட்பதற்காக சஜித்தோ அல்லது அநுரவோ முன்வரவில்லை. மாறாக, எமது நாட்டு மக்களுக்காக ரணில் விக்ரமசிங்கவே ஆட்சிக்கு வந்தார்.
</p><p>
ஆனால், தற்போது நாம் அவரை மறந்துவிட்டோம். வீதிகளில் இறங்கி அநுரவுக்காக வாக்கு கேட்ட பெண்களுக்காக இதுவரை அநுர ஒரு அமைச்சரவையைக்கூட சரியாக அமைக்கவில்லை.
</p><p>
அதேபோன்று, இனிவரும் காலங்களில் மாகாண சபைகள் இருக்காது என்பது போன்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.</p><p>

நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்தால், அநுரவையும் அவரது கட்சியையும் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றார்.&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p4KAtEJ4-UY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T15:03:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயதில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - 4 ஆண்டுகளுக்குப் பின் வந்த நீதிமன்றத் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sexual-abuse-of-a-14-year-old-girl-1788100850"></link>
            <id>https://tamilwin.com/article/sexual-abuse-of-a-14-year-old-girl-1788100850</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>
24 வருட சிறைத்தண்டனை</h2><p>
இந்த விடயம் தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தால், யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5a6b744-faa7-4214-9be5-e091a504f45a/26-6a944139cd26d.webp' /></p><p> </p><p>


சம்பவம் மீதான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T14:42:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்: உயிரிழப்பு 38 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-toll-russian-airstrike-kyiv-region-rises-38-1788099502"></link>
            <id>https://tamilwin.com/article/death-toll-russian-airstrike-kyiv-region-rises-38-1788099502</id>
            <summary type="text">உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக்
கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின்
எண்ணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக்
கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின்
எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி
தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் காணாமல் போயுள்ள நால்வரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>வான் தாக்குதல்</h2><p>
</p><p>
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கீவ் நகரை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் மேற்கொண்ட
இந்த தாக்குதலே, நடப்பாண்டில் அப்பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாக
பதிவாகியுள்ளது.
</p><p>
பீரங்கி குண்டுகள், மிதிவெடிகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளடங்கலாக பல்வேறு வெடி
பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் மீதே இந்த குண்டுவீச்சு
நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df077810-ec3e-4761-af3a-ad4265fb0584/26-6a943ff3719e0.webp' /></p><p>
</p><p>
தாக்குதலால் ஏற்பட்ட தீ பரவலை தீயணைப்புப் படையினர் பெருமளவில்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதிலும், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள
அழிவுகளும் பாதிப்புகளும் மிக அதிகமாக காணப்படுவதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி
குறிப்பிட்டுள்ளார்.</p><p> அத்துடன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும்
தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

கடந்த வாரம் முழுவதும் ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 2,000 ட்ரோன்கள், 1,600
வான்வழி குண்டுகள் மற்றும் 31 ஏவுகணைகளை ஏவி கடுமையான தாக்குதல்களை
நடத்தியுள்ளது.
</p><p>
ரஷ்யாவின் இத்தகைய ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் உரிய பதிலடி
நிச்சயம் வழங்கப்படும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T14:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் பேரழிவில் சிக்கிய நேபாளம் - 750 பேர் பலி: உதவிக்கரம் நீட்டும் நட்பு நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-is-caught-in-a-major-disaster-1788100169"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-is-caught-in-a-major-disaster-1788100169</id>
            <summary type="text">நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறை சரிவு
காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளில் சிக்கி
உயிரிழந்தவர்களின் எண்ணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறை சரிவு
காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளில் சிக்கி
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750ஆக அதிகரித்துள்ளதுடன், 3 000
மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இமாலயப் பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த கோர விபத்தினால்
சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம்
மதிப்பிட்டுள்ளது.
</p><p>
நேபாளப் பகுதியில் 734 பேரும், சீனப் பகுதியில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும்
பல்லாயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளனர்.</p><h2>

நேபாளத்தில் உயர்வடையும் ஆற்று நீர்மட்டம்</h2><p>
தொடர்ச்சியான மோசமான வானிலை மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால்
மீட்புப் பணிகளில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9db217c-d5f1-430c-823e-e1c19b719652/26-6a943e9caeca4.webp' /></p><p>
</p><p>
வெள்ளத்தால் சேதமடைந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளில்
நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை மீட்கும்
பணிகளுக்கு சர்வதேச உதவிகள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
இதனிடையே, மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பான்மையானவை அடையாளம் காண முடியாத
அளவிற்கு சிதைவடைந்துள்ளதால், அவற்றின் டி.என்.ஏ மாதிரிகள் மற்றும்
புகைப்படங்களை சேகரித்த பின்னர் நேபாளத்தில் உடல்களை நல்லடக்கம் செய்யும்
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
உலக வெப்பமயமாதல் காரணமாகவே இமயமலையில் பனிப்பாறை உறுதியிழந்து இந்த பேரழிவு
ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9859dfae-2932-4d1f-b63d-a145a166a184/26-6a943e9d7f5f9.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் - தகப்பன் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியை அதிர வைத்த நீதிமன்ற தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-sexually-assaulted-5-year-old-boy-1788098200"></link>
            <id>https://tamilwin.com/article/youth-sexually-assaulted-5-year-old-boy-1788098200</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

பெற்றோர் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனை, இளைஞர் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><h2>
19 வருட சிறைத்தண்டனை</h2><p>
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8264e4-b3b5-4afc-acf8-9e94989ced88/26-6a9437f95db38.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த சிறுவனை தவறாக வழி நடத்திய குற்றத்திற்காக 7 வருட சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குறித்த சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 12 வருட சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட
சிறுவனுக்கு 05 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும், தவறும் பட்சத்தில் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கின் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் - பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீள்நிர்மாணப் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/industrial-renaissance-of-the-north-1788097032"></link>
            <id>https://tamilwin.com/article/industrial-renaissance-of-the-north-1788097032</id>
            <summary type="text">பல தசாப்தங்களாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நவீன தொழிற்துறை மையமாக உருவாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தசாப்தங்களாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நவீன தொழிற்துறை மையமாக உருவாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது வடக்கின் தொழில்துறை மறுமலர்ச்சிக்கான முக்கிய ஆரம்பமாக அமையும் எனவும் கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு நேற்று நேரில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்கு இடம்பெற்று வரும் முதற்கட்ட கட்டுமான மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.</p><h2>பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை</h2><p> 

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் தலைவர் சதானந்தன் நேசராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

“பல ஆண்டுகளாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை இன்று மீண்டும் உயிர்பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d50d233-3291-417f-9266-bab1bee2072b/26-6a94355bf2cab.webp' /></p><p> </p><p>இது ஒரு தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் மாத்திரமல்ல. வடக்கின் தொழில்துறை வளங்களை மீண்டும் மக்களின் பொருளாதாரத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்.”

“இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் கடந்த ஜனவரி 21ஆம் திகதி நாட்டப்பட்டது. </p><p>தற்போது சுமார் ரூ.263 மில்லியன் பெறுமதியான முதற்கட்ட உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முழுமையான திட்டத்தை விரைவில் நிறைவு செய்து உற்பத்தியை ஆரம்பிப்பதே எமது நோக்கமாகும்.</p><p>

“நாட்டுக்குத் தேவையான பல அத்தியாவசிய இரசாயனப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.</p><h2>நேரடி வேலைவாய்ப்புகள்</h2><p>

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் முழுமையான உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, காஸ்டிக் சோடா, திரவ குளோரின் உள்ளிட்ட முக்கிய இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். </p><p>இதன் மூலம் இறக்குமதி சார்பைக் குறைத்து நாட்டின் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும்.

“குறிப்பாக குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கிலும் முக்கியமானதாகும்.
</p><p>
“இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான நோக்கம் வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும். தொழிற்சாலை நிர்மாணப் பணிகளிலும், எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகளிலும் பல்வேறு துறைகளில் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92557f7e-0f0a-4ae8-975a-234abcc04aad/26-6a94355d1869f.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக கிளிநொச்சி மற்றும் வடக்கு மாகாண இளைஞர்கள் தமது பிரதேசத்திலேயே தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.</p><p>

“வடக்கின் வளங்கள் வடக்கின் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட தொழிற்துறை வளங்களை மீண்டும் உயிர்ப்பித்து, உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
</p><p>
“பரந்தன் மீண்டும் இயங்கும் போது, அது ஒரு தொழிற்சாலையின் வெற்றி மாத்திரமாக இருக்காது.
</p><p>
கிளிநொச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கும், வடக்கின் தொழில்துறை முன்னேற்றத்திற்கும், நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கும் அது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

மக்களின் வளத்தைக் கொண்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே எமது இலக்கு” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae6e9ea2-b1f3-42e5-8b75-275590032593/26-6a94355dec551.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b557c2f4-8f42-4339-ae28-088298257d66/26-6a94355ece997.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T13:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருந்தூர் ரஜமகா விகாரை விவகாரம் - விசேட பொலிஸ் பாதுகாப்பு கோரும் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurundi-rajamaha-viharaya-affair-1788097282"></link>
            <id>https://tamilwin.com/article/kurundi-rajamaha-viharaya-affair-1788097282</id>
            <summary type="text">முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரையிலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த நடவடிக்கை எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரையிலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சு கலந்துரையாடி முடிவை அறிவித்துள்ளது.</p><h2> 


பொலிஸ் பாதுகாப்பு</h2><p>

கோயிலிலிருந்து அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்தக் கோரி, அதன் தலைமைப் பொறுப்பாளர் கல்கமுவே சந்தபோதி தேரர் அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de9da111-9113-4ae8-b400-c4c8e3adb86d/26-6a9433418c243.webp' /></p><p>

இதன் அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், இந்த துறைக்குப் பொறுப்பான அமைச்சர் டாக்டர் ஹினிடும சுனில் செனவி, கோயிலுக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைமைப் பொறுப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:43:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட சைப்ரஸ் கடற்பகுதியில் 270 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-carrying-270-people-capsizes-off-northern-1788095712"></link>
            <id>https://tamilwin.com/article/boat-carrying-270-people-capsizes-off-northern-1788095712</id>
            <summary type="text">வட சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

வட சைப்ரஸின் கிரினியா துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுசு துறைமுகம்
நோக்கி பயணித்த தனியார் சொகுசு படகு ஒன்றே, துறைமுகத்திலிருந்து புறப்பட்ட
சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.</p><h2>


படகு கவிழ்ந்து விபத்து</h2><p>
குறிப்பிட்ட படகில் 259 பயணிகளும் 8 பணியாளர்களும் அடங்கலாக மொத்தம் 267 பேர்
பயணித்துள்ளதாக வட சைப்ரஸ் போக்குவரத்து அமைச்சர் எர்ஹான் அரிக்லி
தெரிவித்துள்ளார்.</p><p>

கடலில் கவிழ்ந்த படகின் மீது சிவப்பு நிற உயிர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்தவாறு பயணிகள் அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf75a91b-1505-43ed-a2b9-a98c869ee7ed/26-6a942d376d095.webp' /></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரப் காவல்படையினரும் மீட்புக் குழுவினரும்
படகிலிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக கிரினியா துறைமுகத்திற்கு கொண்டு
செல்லப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>

விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மீட்புப்
பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்.. 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palaly-people-s-protest-enters-11th-week-1788094353"></link>
            <id>https://tamilwin.com/article/palaly-people-s-protest-enters-11th-week-1788094353</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு பலாலி காணி இழந்த மக்கள் இன்று(30) 11ஆவது வாரமாகவும் தமது தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாலி பகுதியில் இராணுவப் பயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு பலாலி காணி இழந்த மக்கள் இன்று(30) 11ஆவது வாரமாகவும் தமது தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>
பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப்பெற்று, தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, காணி உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>பலாலி மக்களின் போராட்டம்</h2><p>

பலாலி சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது பூர்வீக நிலங்களை நீண்டகாலமாக இழந்து, சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4211ac-03b5-4499-956d-4344e3931ee6/26-6a942a5c2e562.webp' /></p><p>

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே; அதை எப்படி உங்களுடையதாக மாற்ற முடியும்?”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படை”, “மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே?”, “வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
</p><p>
மேலும், தேர்தல் காலங்களில் மக்களின் காணிகள் மீள வழங்கப்படும் எனக் கூறி ஆதரவைப் பெற்ற அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்த பின்னர் காணி இழந்த மக்களின் பிரச்சினையை மறந்து செயற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.</p><h2>தொடர் போராட்டம்</h2><p>
</p><p>
பல தசாப்தங்களாக தமது காணிகளை இழந்து வாழ்ந்து வரும் நிலையில், பல்வேறு அரசாங்கங்கள் மாறினாலும் தமது அடிப்படைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
தமது பூர்வீக நிலங்களை விடுவிப்பது வெறுமனே காணி உரிமை தொடர்பான பிரச்சினை அல்ல என்றும், அது தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததிகளின் உரிமையுடன் தொடர்புடையது என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/199976ff-7026-4b75-a71d-0187834cd340/26-6a942a5d095ae.webp' /></p><p>

அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய செயற்றிட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும், இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் விரைவாகக் கையளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் காணி இழந்த பலாலி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்நிலையில், 11ஆவது வாரமாகவும் இடம்பெற்றுள்ள இந்த தொடர் போராட்டம், பலாலி மக்களின் காணி உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T13:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பேருந்து சாரதிகளுக்கு புதிய எச்சரிக்கை - மீறினால் நடவடிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-warning-to-jaffna-bus-drivers-1788094360"></link>
            <id>https://tamilwin.com/article/new-warning-to-jaffna-bus-drivers-1788094360</id>
            <summary type="text">&amp;nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும்
பேருந்துகள் அனைத்தும் “சிசுசெரிய”சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும்
பேருந்துகள் அனைத்தும் “சிசுசெரிய”சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிய
அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், பதிவு
செய்யப்படாமலும் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலும் இவ்வாறான சேவையில்
ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை
கடுமையாக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><h2>

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான
போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகாரசபையில் முறையாகப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். </p><p>

எனினும், உரிய அனுமதியோ அல்லது பதிவோ இன்றி, “சிசுசெரிய” சேவையின் கீழ் இடம்பெறாமல் சில
பேருந்துகள் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவது
கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59b0c19-a1fd-46b1-a349-6031f76df633/26-6a9427fea36cf.webp' /></p><p>
</p><p>

இத்தகைய பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து
மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும்
வழங்கப்பட்டுள்ளன. </p><h2>


தகுதிகளை பெற செய்ய வேண்டியவை..</h2><p>

இருந்தபோதிலும், இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத மற்றும்
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத தரப்பினர் தொடர்ந்து பாடசாலை
சேவையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக அதிகாரசபையால் உடனடியாக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

எனவே, பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்லும் பேருந்து
சேவைகளை நடத்தும் அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு
அமைவாக தங்களைப் பதிவு செய்து, தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகளைப்
பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் கேட்டுக்கொண்டார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:54:55+00:00</updated>
        </entry>
    </feed>
