<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-09T00:39:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் எமது அரசாங்கம் தண்டனைகளை வழங்கி வருகிறது - சுந்தரலிங்கம் பிரதீப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeep-mp-govt-punishes-all-equally-under-law-1786231276"></link>
            <id>https://tamilwin.com/article/pradeep-mp-govt-punishes-all-equally-under-law-1786231276</id>
            <summary type="text">சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட&amp;nbsp; நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பெருந்தோட்ட மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட&nbsp; நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்
பிரதீப் தெரிவித்துள்ளார். </p><p>


நேற்றைய தினம்(08.08.2026) முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சட்ட திருத்தங்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பாரம்பரிய குடும்ப அரசியலுக்குப் பதிலாக, எளிய
பின்னணியில் இருந்து வந்தவர் ஜனாதிபதியாகத் தெரிவாகி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளார்.
</p><p>
ஆடம்பர வாகனப் பவனிகள், தேவையற்ற பாதுகாப்பு
மற்றும் வீண் செலவுகளைத் தவிர்த்து எளிமையான அரசாங்கத்தை எமது அரசாங்கம் நடத்தி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767fb8dc-e166-4064-af1a-837f22c9e4e1/26-6a77bb258849c.webp' /></p><p>சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும்
குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

அத்துடன் கண்டாவளை 
பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகுபாடின்றி வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்
மற்றும் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.</p><p>

அத்துடன் உரிய சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு மாகாணசபை
தேர்தல்கள் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T00:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களை காப்பாற்றவே கோட்டபாய தப்பி ஓடினார்! மகிந்தவிற்கு பதவி கொடுத்த மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-fled-to-save-the-people-1786226090"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-fled-to-save-the-people-1786226090</id>
            <summary type="text">அரகலய போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஒருபடி பின்வாங்கியது. உயிர்களை பலி கொடுத்தோ அல்லது பிள்ளைகளை கொன்றோ அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரகலய போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஒருபடி பின்வாங்கியது. உயிர்களை பலி கொடுத்தோ அல்லது பிள்ளைகளை கொன்றோ அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் நினைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும் அந்தக் காலப்பகுதியில் நாங்கள் அமைதியாக செயற்பட்டமையே எங்களுடைய பலவீனம் என்று நான் நினைக்கின்றேன் எனவும் அவர் ஊடக சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டிருந்தார். </p><p>

இவருடைய இந்தப் பதிவிற்கு எதிராக மக்கள் பதிலளிக்கையில், தற்பொழுது நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சிறைச்சாலை கலவரங்கள் கூட ராஜபக்சர்களின் சதித் திட்டமே.
</p><p>
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சேர்த்த ராஜபக்ச குடும்பத்திற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுதான் எல்லா மேற்கத்தேய நாடுகளினதும் நடைமுறை ஆகும்.</p><p>

ராஜபக்ச குடும்பத்தினர் இல்லாமல் இலங்கையில் எந்தத் தீங்கும் நடப்பதில்லை. ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் நேரடி தொடர்புடையவர்களும் அவர்களே என சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த பதவி&nbsp; தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FBCdcdFNviY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T00:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடி நடவடிக்கை! கொழும்பில் தமிழர்கள் உட்பட பலரின் சொத்துக்களை பறிக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-municipal-going-to-take-over-properties-1786196538"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-municipal-going-to-take-over-properties-1786196538</id>
            <summary type="text">கொழும்பில் தமிழர்கள் உட்பட பலருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கொழும்பு நகரில் சொத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் தமிழர்கள் உட்பட பலருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

கொழும்பு நகரில் சொத்து வரிச் செலுத்தப்படாமை காரணமாக பல சொத்துக்களை பறிமுதல் செய்ய மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>காணிகள் பறிமுதல்&nbsp;</h2><p> </p><p>

மாநகர சபைக்கு வரி செலுத்தாத கொழும்பு 07 பகுதியிலுள்ள 30 காணிகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8c02463-5069-485f-b461-0b2f9ebcdcc3/26-6a7744bc76b49.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>கொழும்பு 07 உள்ளிட்ட உயர் வணிக மதிப்புள்ள பிரதேசங்களில் உள்ள 30 காணிகள், கொழும்பு கோட்டைப் பகுதியில் 58 காணிகள் மற்றும் வெள்ளவத்தை பகுதியில் 67 காணிகள் பறிமுதல் செய்யும் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>நிலுவையில் உள்ள வரிப் பண அறவீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T23:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் பெண்களுக்கு நடப்பது என்ன.. ஆடைகளற்ற சோதனை முதல் கடும் நெரிசல் வரை! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-happens-to-women-in-prison-1786219571"></link>
            <id>https://tamilwin.com/article/what-happens-to-women-in-prison-1786219571</id>
            <summary type="text">சிறைச்சாலைக்குள் பெண் கைதிகள் பிரிவில் கடுமையான நெரிசல் நிலவுவதாக முன்னாள்&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைக்குள் பெண் கைதிகள் பிரிவில் கடுமையான நெரிசல் நிலவுவதாக முன்னாள்&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறைச்சாலைக்குள் இருந்தபோது தான் கண்ட பல விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>திரும்பிப் படுப்பதற்குக்கூட இடவசதி இல்லாத ஒரு அறைக்குள் 6 பேர் தங்கவைக்கப்படுகின்றனர்.</p><p>


பெண்கள் பிரிவில் பத்திற்கு பத்து அளவிலான சிறிய அறைகளே காணப்படுகின்றன. ஒரு தடவை சிறைக்குள் பெண் கைதிகளின் எண்ணிக்கை 60ஆக காணப்பட்டபோது ஒரு அறைக்குள் 10 பேர் வீதம் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.</p><p>அந்த 60 பேருக்கும் 2 கழிப்பறைகளே காணப்பட்டன. 

சிறைச்சாலைகளுக்குள் நிலவும் இவ்வாறான சூழல் பெண்களின் சுகாதாரத்தை கேள்விக் குறியாக்குகிறது.&nbsp;&nbsp;</p><p>இது தொடர்பான இன்னும் பல முக்கிய விடயங்களை விபரிக்கிறது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_r3QkxKAwf0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T23:09:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் அதிரடியில் சிக்கும் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள்! சதிகளின் பின்னணியில் ரணில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-behind-the-conspiracies-of-opposition-1786229422"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-behind-the-conspiracies-of-opposition-1786229422</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான செயற்பாடு, படுகொலைகள் குறித்த விசாரணைகைள் உள்ளிட்டவற்றிற்கு தடைகளை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான செயற்பாடு, படுகொலைகள் குறித்த விசாரணைகைள் உள்ளிட்டவற்றிற்கு தடைகளை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்று அரசியலமைப்பு நிபுணர் ஓய்வுநிலை பேராசிரியர் ஜயதேவ உயன்கொட தெரிவித்துள்ளார்.</p><p> 


பத்திரிகை ஒன்றுக்கு வழங்கி நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

தற்போதைய அரசாங்கம் தனது இரு ஆண்டுகால ஆட்சியில், வேறு எந்த அரசாங்கமும் செய்யாத சில பணிகளைத் தொடங்கியுள்ளது. முதலாவது, ஊழல்களைக் கண்டறிந்து வழக்குத் தொடர்வது. இரண்டாவது, அரசியல் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுப்பது. மூன்றாவது, போதைப்பொருள் ஒழிப்பு.</p><h2>எதிர்த்தரப்பினரின் அச்சம்&nbsp;</h2><p> </p><p>இந்த மூன்று விடயங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தற்போதைய கூட்டு எதிரணியில் அல்லது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளில் உள்ளவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f16ea99-e9b2-4ef4-9ec6-84f5fc049779/26-6a77b4ce68bf1.webp' /></p><p> </p><p>ஒரே குழுவினரே இவ்வாறு குற்றம் சாட்டப்படுகிறார்கள். எனவே, தான் தொடங்கிய இந்த மூன்று பணிகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத்துக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. </p><p>ஏனெனில், இதற்கு எதிராக எதிர்த்தரப்பினர் பாரிய பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாகும். அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதைத் தடுப்பதே அவர்களின் இலக்காகும்.</p><p> </p><p>அவர்கள் இந்த அரசாங்கத்துக்குத் தடை ஏற்படுத்தும் ஒரு வழியாக நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது எந்தவொரு சுயாதீனக் குடிமகனுக்கும் தெளிவாகத் தெரியும்.</p><p>

கடைசியாக உள்ள காலத்தில், நீதவான் நீதிமன்றங்கள் முதற்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு சூழல் காணப்பட்டது. அதைக் கண்டு எதிர்த்தரப்பினர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.</p><h2>பின்னணியில் ரணிலா..</h2><p> </p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய கொள்கை சார்ந்த செயன்முறைகளான ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு, படுகொலைகள் குறித்த விசாரணைகள், போதைப்பொருள் எதிர்ப்பு ஆகிய மூன்றுக்கும் தடைகளை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சியின் புதிய தந்திரமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8489b23-e14f-4bfa-b532-2538150bfa9d/26-6a77b4cd9a562.webp' /></p><p> </p><p>அது வெற்றியடையுமா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் இப்போது புதிதாகத் திறந்துள்ள முன்னணிதான் நீதிமன்றமாகும். அரசாங்கத்துக்கு மக்களின் அங்கீகாரம் உள்ளது. எதிர்க்கட்சிக்கு அது இல்லை. அதைப் புரிந்து கொண்ட எதிர்க்கட்சி இப்போது நிறுவன ரீதியாகச் செயல்படுகிறது. அது ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையில் உருவான ஒரு தந்திரமாகவும் இருக்கலாம். </p><p>அதாவது, அரச அமைப்புக்குள் ஒரு நெருக்கடியை உருவாக்குவது. நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க சபையை ஒரு பக்கத்திலும், நீதிமன்றத்தை மறுபக்கத்திலும் நிறுத்தி ஒரு பிரச்சினையை உருவாக்குவதே இங்கு எதிர்க்கட்சியின் நோக்கமாகத் தெரிகிறது. அது குறித்து அரசாங்கம் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதே எனது உணர்வாகும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T23:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை மோதல்களின் பின்னணியில் நிச்சயம் நான்தான்..! ஜனாதிபதியின் செய்தியை முன்கூட்டியே அறிவித்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-clash-sri-lanka-1786222067"></link>
            <id>https://tamilwin.com/article/prison-clash-sri-lanka-1786222067</id>
            <summary type="text">
சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் நிச்சயமாக நான் தான் இருப்பேன் என்ற உறுதியான மன நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என பொதுஜன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் நிச்சயமாக நான் தான் இருப்பேன் என்ற உறுதியான மன நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஏதேனும் குற்றச் செயல்கள் ஏற்பட்டால் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.</p><h2>சிறைக் கலவரங்கள்&nbsp;</h2><p>

எனினும், தற்போது அவர்களுடைய அரசாங்கத்தில் பல துரதிஷ்ட சம்பவங்கள் நிகழும் போது அதனை தடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் மீது இந்த அரசாங்கம் பழி சுமத்தி வருகின்றது. </p><p> 

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களுக்கு யார் பொறுப்புக் கூறுவது. 11 ஆயிரம் பேரைத் தடுத்து வைக்க வேண்டிய சிறைச்சாலையில் 45ஆயிரம் பேரைத் தடுத்து வைத்திருப்பதே மிகப் பெரிய பிரச்சினையாகும்.
</p><p>
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல், இப்போது வரை சிறைச்சாலைகளில் உள்ள மலசல கூடங்களையாவது சீரமைத்திருக்கின்றதா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0945a5bf-7902-4934-8c09-6e382ad1fb7c/26-6a7798081ccc7.webp' /></p><p>

ஆனால், பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள் மீதும் பழி சுமத்தி வருவதுடன், எதிர்க்கட்சிகளை நோக்கி விரல் நீட்டுவதும், ராஜபக்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதுமே இவர்களுடைய வேலையாக இருக்கின்றது. </p><p>

தற்போது சிறையில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்கும், எதிர்க்கட்சிகள் குறிப்பாக நாமல் ராஜபக்சதான் காரணமாக இருக்கும் என மக்களுக்கு இந்த அரசாங்கம் அறிவிக்கும்.</p><p> சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் நாமல் ராஜபக்சதான் உள்ளார் என இந்த அரசாங்கம் நம்பிக் கொண்டிருக்கும். இதனைத் தான் ஜனாதிபதி அநுரவும் மக்களுக்கு அறிவிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T22:59:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஃபா தலைவரை பதவியிலிருந்து விலகுமாறு நோர்வே கால்பந்து சம்மேளனம் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/norwegian-football-fifa-president-resign-1786221041"></link>
            <id>https://tamilwin.com/article/norwegian-football-fifa-president-resign-1786221041</id>
            <summary type="text">நோர்வே கால்பந்து சம்மேளனம், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தியோகபூர்வமாக கோரியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே கால்பந்து சம்மேளனம், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தியோகபூர்வமாக கோரியுள்ளது.</p><p>மேலும், அமெரிக்க வீரர் பலோகனின் போட்டித் தடை நீக்கப்பட்டமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு FIFA சமாதானப் பரிசு வழங்கியமை உள்ளிட்ட மூன்று முக்கிய விவகாரங்கள் தொடர்பில் FIFA ஒழுக்கவியல் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.</p><p></p><h2>நோர்வே கால்பந்து சம்மேளனம்</h2><p>
பிஃபா அமைப்பின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் அண்மைய தீர்மானங்கள்
தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள நோர்வே கால்பந்து சம்மேளனம், அமைப்பின்
வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்குத் தலைமைத்துவ
மாற்றம் அவசியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0a690ac-969a-4a43-b3d5-d30a0821b977/26-6a77ae696916f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T22:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் காதலர்கள் போன்று இளம் தம்பதியின் அதிர்ச்சி செயல் - பெற்றோர்களே எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1786196085"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1786196085</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியில் ஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து குறுக்கு வழிகளில் பாழடைந்த இடங்களில் காதலர்கள் போன்று தங்கியிருந்து,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியில் ஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து குறுக்கு வழிகளில் பாழடைந்த இடங்களில் காதலர்கள் போன்று தங்கியிருந்து, நீண்ட காலமாக பாரியளவில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்கள் 90 போதை மாத்திரைகளுடன் ஹோமாகம கொட்டாவ போதை மாத்திரைகள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்கள் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய தம்பதியினராகும்.</p><p></p><p> </p><h2><b>

 போதை மாத்திரை விற்பனை&nbsp;&nbsp;</b></h2><p>பாழடைந்த இடங்களை தெரிவு செய்து காதலர்கள் போன்ற பாவனையில் போதை மாத்திரை விற்பனை செய்யும் வலையமைப்பு ஒன்று செயற்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81de2f82-7397-4ea5-9459-46979798e9a9/26-6a77354f3c661.webp' /></p><p>அதற்கமைய செயற்பட்ட அதிகாரிகள் குழுவினர், பாதுக்க மாவத்தகம பாடசாலை வீதியில் தந்திரோபாய நபர் ஒருவர் மூலம் 1000 ரூபா பணத்திற்கு 10 போதை மாத்திரைகள் அடங்கிய அட்டை ஒன்றை கொள்வனவு செய்துள்ளனர். </p><p>

அதன் பின்னர் அவை போதை மாத்திரை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், வழங்கப்பட்ட சைகையின் அடிப்படையில் அருகில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஏனைய அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த தம்பதியை கைது செய்துள்ளனர்.</p><p>

சந்தேகநபர்களைச் பரிசோதனை செய்தபோது, போதை மாத்திரை விற்பனை மூலம் பெறப்பட்ட 1000 ரூபா பணத்திற்கு மேலதிகமாக, அவர்கள் வசமிருந்த மேலும் 80 போதை மாத்திரைகளும், வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><h3><b>

பெற்றோர்களே எச்சரிக்கை </b></h3><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்பும் போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் மீகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a993ba1-c958-4ba3-ad87-690e6899a851/26-6a7735cf5e0d8.webp' /></p><p>இந்தத் தம்பதியினர் தங்களது வாழ்வாதாரத்திற்கான நீண்ட காலமாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்கள் கூட இவர்களிடமிருந்து போதை மாத்திரைகளைக் கொள்வனவு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

சந்தேகம் வராத வகையில் பாழடைந்த இடங்களில் காதலர்கள் போன்று தங்கியிருந்து இவர்கள் இந்த வர்த்தகத்தை நடத்தி வந்துள்ளனர்.
</p><p>
இவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து பாடசாலை மாணவர்களை அவர்களின் பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-08T20:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு சூடான் - மியான்மர் பிரஜைகளை நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றங்கள் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-court-extradite-south-sudanese-1786210439"></link>
            <id>https://tamilwin.com/article/us-court-extradite-south-sudanese-1786210439</id>
            <summary type="text">தெற்கு சூடான் மற்றும் மியான்மர் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை இரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இரு கூட்டாட்சி நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு சூடான் மற்றும் மியான்மர் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை இரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இரு கூட்டாட்சி நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன. </p><p>
அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு அந்தஸ்தை நீட்டிக்கக் கோரி குடியேற்றவாசிகளின் உரிமை அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை போஸ்டன் மற்றும் சிகாகோ நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.</p><p></p><h2>நீதிமன்ற அனுமதி&nbsp;</h2><p>
உள்நாட்டுப் போர், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு நிலவும்
நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிப்பதற்கும்,
அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்கும் இந்தத் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து
வழங்கப்பட்டு வந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ceb4a6-3db7-4041-bf39-26bde340095c/26-6a776cf953d4e.webp' /></p><p>இந்நிலையிலேயே, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக்காட்டி
நீதிமன்றங்கள் இந்த புதிய முடிவை அறிவித்துள்ளன.</p><p>

நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்பின் காரணமாக தெற்கு சூடானைச் சேர்ந்த சுமார்
232 பிரஜைகளும், மியான்மரைச் சேர்ந்த சுமார் 4,000 பிரஜைகளும் தங்களது சொந்த
நாடுகளுக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகக்
குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T20:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் எடுத்த விபரீத முடிவு! ஜெயிக்கப்போவது யார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-s-bizarre-decision-who-will-win-1786214251"></link>
            <id>https://tamilwin.com/article/trump-s-bizarre-decision-who-will-win-1786214251</id>
            <summary type="text">ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஓமானும் ஈரானும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன. எனினும்,&amp;nbsp; அமெரிக்கா அதனை ஓரமாக நின்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஓமானும் ஈரானும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன. எனினும்,&nbsp; அமெரிக்கா அதனை ஓரமாக நின்று வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது.
</p><p>

செங்கடல் மற்றும் ஈடன் வளைகுடா போன்ற இடங்களில் ஈரான் மற்றும் ஹவுதிகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சவுதி அரேபியாவினால் உருவாக்கப்பட்ட 14 நாடுகள் கொண்ட அணியிலும் அமெரிக்கா இல்லை.</p><p>

அந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சவுதி அரேபியாவும் துருக்கியும் பாகிஸ்தானும் இணைந்து அமெரிக்கா இல்லாத ஒரு இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.
</p><p>
இதுவரை காலமும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டு வந்த நேட்டோ, ஈரான் மீதான அமெரிக்காவின் தற்போதைய யுத்தத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
வளைகுடா களமுனையில் அமெரிக்கா ஏன் தனித்து நிற்கிறது? என்ன நடந்தது அமெரிக்காவிற்கு? இது தொடர்பில் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்ப்போம்..&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tMSf6adhW-4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T20:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-trying-supply-drugs-inmates-magazine-prison-1786197000"></link>
            <id>https://tamilwin.com/article/two-trying-supply-drugs-inmates-magazine-prison-1786197000</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே இன்று பிற்பகல் (08) நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்கள் அந்த இடத்தில் சிறைக்குள் 02 பொட்டலங்களை வீச முயன்றபோது, ​​பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்&nbsp;</h2><p>
</p><p>
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 02 பொட்டலங்களை சோதனையிட்ட போது, ​​22 கிராம் மற்றும் 250 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருள், 02 மில்லிகிராம் ஆஷ் என்ற போதைப்பொருள், 02 தொலைபேசி மின்னேற்றிகள், 02 ஜோடி காதணிகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய கைபேசிகள் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b38f9024-7b63-44cd-b14f-4ee71af95e98/26-6a77374253419.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 29 வயதுடையவர்கள் என்றும், கொம்பா 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை (09) மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர். மேலும், பொரளை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T19:24:43+00:00</updated>
        </entry>
    </feed>
