<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-22T01:20:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-temple-issue-1787361148"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-temple-issue-1787361148</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில்
இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID)
வெளிப்பாட்டினால் ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில்
இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID)
வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய
நிபுணர் மலரவன் தெரிவித்துள்ளார்.</p><p>

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தனது மருத்துவ அறிக்கையில் இந்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


 தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><h2>அதிகரித்துள்ள எண்ணிக்கை</h2><p>
சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை இரவு 9.30
மணி நிலவரப்படி 400ஐ தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 400ஐ
கடந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T01:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைக் காப்பாற்ற யோஷிதவை பலிகடாவாக்கிய மகிந்த! புது புதுக் காரணம் கூறும் ராஜபக்ச தரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-reason-why-mahinda-joined-yoshitha-in-the-navy-1787358358"></link>
            <id>https://tamilwin.com/article/the-reason-why-mahinda-joined-yoshitha-in-the-navy-1787358358</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்தார் என்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்தார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். </p><p>

பொதுஜன பெரமுனவின் கட்சி அவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நாட்டைக் காப்பாற்ற களமிறக்கப்பட்ட யோஷித&nbsp;</h2><p> </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

கடந்த காலத்தில் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்ட வந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர்கள் மீதும், அதில் பங்கெடுத்த இராணுவ வீரர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b105c12-1348-4a02-930e-1f145b5e5727/26-6a88f39d4f63d.webp' /></p><p> </p><p> 

அன்று மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தார். </p><p>

அப்படிச் செய்யாவிட்டால், பிரபாகரன் இந்த நாட்டைத் தனது அரசாங்கமாக மாற்றியிருப்பார். 

வடக்கு சென்று இனறு குட்டிக் கரணம், அடிக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட எவராலும் அங்கு சென்றிருக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0e088bb-97a1-4da5-8b24-211445b47167/26-6a88f39e035cb.webp' /></p><p>ஆனால், நாட்டைக் காப்பாற்றிய யோஷித ராஜபக்ச மீது இன்று தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p> 

இதன்மூலம், தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீதான 300இற்கும் மேற்பட்ட கொள்கலன் கடத்தல், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயிக்கு பறந்த மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB)அதிகாரிகள் குழு!அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-central-crime-investigation-bureau-1787358493"></link>
            <id>https://tamilwin.com/article/the-central-crime-investigation-bureau-1787358493</id>
            <summary type="text">மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். 
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். 
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரபல குற்றவாளியும் போதைபொருள் கடத்தல் காரர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்த அவரை அவசரமாக இலங்கைக்கு கொண்டு வரமுடியாது.</p><h2>

</h2><p></p><h2>அழைத்துவரவுள்ள ஆபத்தான மனிதர்</h2><p>அங்குள்ள சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து, அவரைக் பொறுப்பேற்பதற்கும் மற்றும் விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ளதாலேயே அவசரமாக டுபாய் புறப்பட்டு சென்றுள்ளனர்.</p><p>அவர் தான் 'லலித் கன்னங்கர' அல்லது 'பஸ் லலித்' என அழைக்கப்படுபவரையே அழைத்து வரச் சென்றுள்ளனர்.
இவர் அவிசாவளை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவராவார். </p><p>இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்திருப்பது இலங்கை பொலிஸாருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஏனெனில், அவரை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p>ஆனால் அவர் சட்டத்தரணிகள் ஊடாக தப்பிச் செல்வதற்கு பலமுறை முயன்றபோதிலும் அது பலனளிக்கவில்லை.டுபாயில் அவரது வழக்கு முடிவுக்கு வந்துள்ளதுடன், தற்போது அவரை அழைத்து வருவதே எஞ்சியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6306fb9-ffd6-432c-83b0-4fb70345b258/26-6a88ed1f87d86.webp' /></p><p>கடந்த காலத்தில் அவர் வந்து சென்றதாகவும் கதைகள் உலாவின. இவர் ஹோமாகம, அதுருகிரிய மற்றும் அவிசாவளை வரையிலான பகுதிகளில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவராவார்.</p><p>இந்தப் பகுதிகளில் இவரும் 'ஹந்தா' என்பவருமே செயற்பட்டு வந்தனர்.
</p><p>எவ்வாறாயினும் இன்று (22.08.2026) அல்லது 24 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். </p><p>பிரதான பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர். </p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவினர் வெளிநாடுகளில் உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக மிகவும் சுறுசுறுப்பாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். </p><p>அந்தச் செயற்பாடுகள் உரிய உத்திகளின் படியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். </p><p>அவ்வாறு முடிவுக்கு வந்தால், பலரது உயிர்களைக் காப்பாற்ற முடியும். எனவே, முன்னெடுத்துச் செல்லப்படும் நடவடிக்கைகளில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-full-financial-review-of-shiran-basik-1787316585"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-full-financial-review-of-shiran-basik-1787316585</id>
            <summary type="text">&amp;nbsp;ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட்சம் ரூபாய் வாடகை செலுத்தியுள்ளார். </p><p>தனது சொந்தத் தந்தைக்கு எவ்வாறு ஒரு நபர் வாடகை செலுத்த முடியும்? என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இது பணச்சலவை நடவடிக்கையாகவே இடம்பெற்றுள்ளது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவிப்பதுடன் அது தொடர்பிலும் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>
</h2><p></p><h2>'சோல் பீச்' ஹோட்டல் கட்டட காணி</h2><p>
'சோல் பீச்' ஹோட்டல் தொடர்பான சாட்சியங்களை வழங்கிய போது இதை உடைத்து அகற்றியது தொடர்பாக கடந்த காலத்தில் பெரும் பேச்சுகள் எழுந்தன. அந்தப் பேச்சுகளுக்கு அப்பால் இதன் உரிமையாளர் யார் என்பது குறித்து ஷிரான் பாசிக் தனக்கு முன்னுரிமை கொடுத்துக் கூறியுள்ளார்.
</p><p>ஹோட்டல் அமைந்துள்ள காணி தனது தந்தையிடமிருந்தே கிடைத்தது என்றும் தந்தைக்கு ஆனந்த என்பவரால் நன்கொடை உறுதிப்பத்திரம் மூலம் அது வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>அவ்வாறு கிடைத்த காணியிலேயே இந்த உணவகம் அமைக்கப்பட்டு ஒரு திட்டமாக செயற்படுத்தப்பட்டதாக அவர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளில் வெளிவந்த பிரதான விடயம் என்னவெனில்இ இந்த நன்கொடை உறுதிப்பத்திரம் என்பது முற்றிலும் பொய்யான ஒன்றாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14ae6d57-b84e-4ac9-bf65-f5c9425c9a5c/26-6a88496bdcbdf.webp' /></p><p>இது ஒரு போலி உறுதிப்பத்திரம் என தெரிவிக்கின்றன. மேலும்இ இந்தக் காணியின் உரிமை எந்தவொரு தனிநபருக்கும் உரியது அல்ல என்றும் இது பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரச காணியாகும.</p><p>
'சோல் பீச்' ஹோட்டல் அமைந்துள்ள அதே வளாகத்திலேயே இந்த ஓமhன் ஓல்டிங்ஸ் நிறுவனத்திற்குரிய கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. 
அரசுக்குச் சொந்தமான காணியை பலவந்தமாக ஆக்கிரமித்து இவ்வாறான கட்டடம் உயர்த்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இது தொடர்பாக போலி நன்கொடை உறுதிப்பத்திரத்தைத் தயாரித்தமைக்காக ஷிரானின் தந்தை மற்றும் இதற்கு உதவிய சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர புலனாய்வு அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
</p><h2>
பெறப்பட்ட சட்டவிரோத ஆவணங்கள்</h2><p>அத்துடன் இதில் பல்வேறு நபர்கள் தொடர்புபட்டுள்ளதுடன் அவர்களின் தகவல்களும் வெளிவந்துள்ளன. மேலும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இதற்காக எவ்வித முறையான அனுமதியும் பெறப்படவில்லை.
</p><p>குறிப்பாக இந்த ஹோட்டல் தொடருந்து பாதைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அப்படியிருக்க பிரதான வீதியிலிருந்து தொடருந்து பாதையைக் கடந்து உணவகத்திற்குச் செல்வதற்காக இவர்கள் தொடருந்து திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். </p><p>இது பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலிருந்து உள்ள ஒரு சட்டமாகும் என புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர். அந்தச் சட்டத்தின்படி அதனை ஒரு அனுமதியாகக் கொண்டு உணவகத்திற்கு மின்சாரம் மற்றும் நீர் வசதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>ஆனால் இவை அனைத்துமே போலி மற்றும் சட்டவிரோதமானவை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த உணவகத்திற்காகப் பெறப்பட்ட மதுபான உரிமங்கள் கூட முற்றிலும் சட்டவிரோதமானவை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>
ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான இந்த உணவகத்திற்கு வந்து சென்ற ஒரு முன்னாள் பிரதி அமைச்சர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்திலேயே இந்த உணவக வளாகத்திற்கு வந்து சென்றுள்ளார். </p><p>அவர் அங்கு வந்து சென்றமைக்கான புகைப்படங்கள் உணவகத்தில் இருந்து புலனாய்வு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் வதந்தியை பரப்பிய நபர் மகிந்த வீட்டின் செல்லப் பிள்ளையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rumor-of-an-ltte-training-camp-in-palai-1787348906"></link>
            <id>https://tamilwin.com/article/rumor-of-an-ltte-training-camp-in-palai-1787348906</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் புலிகள் பயிற்சி முகாம் இயங்கி வருவதாகவும் ,ஆறுமாடி கட்டடம் இருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.</p><p>ஒருவேளை, விடுதலைப்பிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் அவ்வாறான கட்டடங்கள் இருக்கின்றதோ தெரியாது என்று கூறப்பட்டது.</p><p>இந்த தகவலை வெளியிட்டவர் தென்னிலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சங்கீத் ஜயசேகர என்பவராவர்.</p><p>தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதிகள் அத்தியாவசியத் தேவையாக இருப்பது உடனடியாக வடக்கு, கிழக்கில் ஏதாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.</p><p>மேலும், பளைப்பகுதியிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமாக மாற்றப்போகின்றார்களா, அல்லது, வெடிகுண்டுகள் தயாரிக்கப்போகின்றார்களா என அங்கிருக்கும் அதிகாரிகள் தமக்கு தெரிவிப்பதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த வதந்தியை பரப்பிய பின்னணியில் இருப்பது யார், அவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் வீட்டோடு தொடர்புடையவரா என்பது தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mhuzVa404WY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் இன்று யாழ். விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-to-visit-jaffna-today-1787344290"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-to-visit-jaffna-today-1787344290</id>
            <summary type="text">பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
செய்யவுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
செய்யவுள்ளார்.
</p><p>
பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும்
நிகழ்வு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார்.
</p><p>
இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளன.
</p><p>
அதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம்
இடம்பெற்று வரும் நிலையில், பிரதமர் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடு செய்வார்
எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7d4c988-f847-485f-b05b-3f14336b2850/26-6a88def5cf669.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T23:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்! அரிசி இறக்குமதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/do-not-hit-farmers-where-it-hurts-rice-sajith-1787351795"></link>
            <id>https://tamilwin.com/article/do-not-hit-farmers-where-it-hurts-rice-sajith-1787351795</id>
            <summary type="text">விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.</p><p>

2026ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசுக்குத் தேவையான
7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகச்
சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் நேற்று(21) பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p>

76 ஆண்டு கால விவசாயிகளின் சோகத்தைச் சுபீட்சமான நிலைக்கு மாற்றித் தருவோம்
எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளின் வாழ்க்கை மற்றும்
ஜீவனோபாயத்தைப் பொருளாதாரப் படுகொலையாக மாற்றியுள்ளனர் என்று அவர் குற்றம்
சாட்டினார்.</p><h2>அரிசி இறக்குமதி</h2><p>
</p><p>
அரசின் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி, சிவப்பு நாடு மற்றும்
வெள்ளை நாடு போன்றவற்றுக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது,
விவசாயிகளுக்குக் கிடைக்கும் குறைந்த இலாபத்தைக் கொண்டு எவ்வாறு வாழ முடியும்
என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07371cad-ebd8-4e07-8358-73611577f5f6/26-6a88d9281333f.webp' /></p><p>

கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்கு உரிய கட்டுப்பாட்டு விலைகள்
பிறப்பிக்கப்படாததற்குக் காரணம், அத்துறையுடன் தனவந்தர்கள்
சம்பந்தப்பட்டிருப்பதே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>நாட்டின் உண்மையான அரிசித் தேவை 2.5 மில்லியன் மெற்றிக் தொன்னாக இருக்க, 3.2
மில்லியன் மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்படுகின்றது.</p><p>5 இலட்சம்
மெற்றிக் தொன் மேலதிக கையிருப்பு உள்ள நிலையிலும் 3 இலட்சத்து 40 ஆயிரம்
மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை விவசாயிகளின் வயிற்றில்
அடிப்பது போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படவில்லை: நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் மீறியதாகக் குடும்பத்தினர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787344002"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787344002</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாகிஸ்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாகிஸ்தான் அரசு பின்பற்றத் தவறிவிட்டதாக அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட
மருத்துவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 73 வயதான இம்ரான்
கானுக்கு, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக சிறப்பு மருத்துவ
சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவக் குழு பரிந்துரைத்திருந்தது.</p><h2>&nbsp;மீண்டும் சிறைக்கு</h2><p>

இதன் அடிப்படையில், அவரை 'அடியாலா' சிறையிலிருந்து 'ஷிஃபா சர்வதேச
மருத்துவமனைக்கு' உடனடியாக மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.
</p><p>
எனினும், இம்ரான் கான் ஷிஃபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல்,
அரசினால் நிர்வகிக்கப்படும் 'பிம்ஸ்' மருத்துவமனைக்கு நள்ளிரவில் அழைத்துச்
செல்லப்பட்டு சில மணிநேர பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கே
கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d483971-2cf0-4d68-90d6-fd2411a9f1d8/26-6a88b4840fa4a.webp' /></p><p>
</p><p>
வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட
இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் மற்றும் அவரது தனிப்பட்ட மருத்துவர் பைசல்
சுல்தான் ஆகியோர், அரசாங்கம் நீதிமன்ற உத்தரவை முழுமையாக மீறியுள்ளதாகக்
குறிப்பிட்டனர்.
</p><p>
ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டதால்
ஏற்பட்ட பாதுகாப்புச் சூழல் காரணமாகவே அவர் பிம்ஸ் மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டதாக பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார்
விளக்கமளித்துள்ளார்.
</p><p>
அத்துடன், அவர் தகுதிவாய்ந்த மருத்துவக் குழுவினால் பரிசோதிக்கப்பட்டு
ஆரோக்கியமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரே மீண்டும் சிறைக்கு
அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
</p><p>
இருப்பினும், அரசின் இந்த நடவடிக்கையானது நீதிமன்ற அவமதிப்பு எனத்
தெரிவித்துள்ள இம்ரான் கானின் 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' கட்சி, இதற்கு
எதிராக உச்ச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T21:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பியின் இறுதி நாடாளுமன்ற உரை..! பகிரங்க மன்னிப்பும் கோரினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-mp-s-final-parliamentary-speech-1787343796"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-mp-s-final-parliamentary-speech-1787343796</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப்
பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அவைக்கு வராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப்
பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அவைக்கு வராமல் தட்டிக் கழிக்கின்றனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத்
தவறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

நேற்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.</p><h2>பகிரங்க மன்னிப்பு&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,
</p><p>
"நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களின்
போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்குச் சமூகமளிக்காமல் தட்டிக்
கழிக்கின்றனர்.
</p><p>
கடந்த 2021ஆம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில்
தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டுக்குச் சட்டபூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான
அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள்
காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d112ead-d9f8-47d1-a037-02bd311965e7/26-6a88b3b60250b.webp' /></p><p>
இதுவே நாடாளுமன்றத்தில் தான் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக்
குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தனது பேச்சினால் யாருடைய
மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்துக்கு ஏதேனும் பங்கம்
ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும்
மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்தார்.</p><p>

கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான
குரலாகத் தான் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட
மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்தினார்.
</p><p>
நாட்டின் பொருளாதாரச் சீரழிவு மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்குப்
பொறுப்பானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-08-21T20:23:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு VIP நுழைவாயில்! நீதிமன்றத்தில் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180"></link>
            <id>https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180</id>
            <summary type="text">முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் சென்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p>பல்லேகம ஹேமரத்தன தேரர் தனது சட்டத்தரணியின் காரில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்தநிலையிலே,&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரர் மாத்திரம் எப்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>அத்தோடு, நீதிபதியின் நுழைவாயில் ஊடாக செல்வதற்கு சந்தேகநபரான&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு யார் சிறப்புரிமை வழங்கியது என்பது தொடர்பில் விசாரிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DbqlkAYMDWI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T20:05:28+00:00</updated>
        </entry>
    </feed>
