<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-20T11:22:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1789901243"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1789901243</id>
            <summary type="text">செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் நடைபெறலாம் என என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&amp;nbsp;உலக சந்தையில் எரிபொருள் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் நடைபெறலாம் என என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் திருத்தி அமைக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

காலி பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிபொருள் விலை இன்னும் அதிகமாக இருப்பதால், மேலும் விலை உயர்வை மக்களால் தாங்க முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் விவாதம் நடைபெற்று வருவதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:13:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522"></link>
            <id>https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522</id>
            <summary type="text">கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்&nbsp;</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிரேன்ட்பாஸ், கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/297e803a-1910-4394-9a0a-3c5af0b52e15/26-6aafbcfa51686.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 39 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,&nbsp; குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-for-fuel-subsidy-amid-rising-prices-1789900149"></link>
            <id>https://tamilwin.com/article/imf-for-fuel-subsidy-amid-rising-prices-1789900149</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத் திட்டமொன்றை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நாளிதழ் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நிலைமையை கருத்திற்கொண்டு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>எரிபொருள் விலைகள்</h2><p>
</p><p>
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் இராணுவ பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.</p><p>

இந்த நிலையில், அதிகரித்து வரும் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஐஎம்எப் உடனான கலந்துரையாடல்கள் அவசரமாக ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee47dea-e562-44b4-81f4-a22fa7bc4b7f/26-6aafb9f53c1c1.webp' /></p><p>
</p><p>
எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்தால், அது பொதுமக்கள் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதுடன், தொழிற்துறை நடவடிக்கைகள், மின்சார உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனவே, தற்போதைய நிலைமை சீராகும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குவது தொடர்பில் ஐஎம்எப் உடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
</p><p>
மேற்கு ஆசிய நெருக்கடியால் எரிசக்தித் துறை கடும் அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 100 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணத் திட்டத்தை அறிவித்திருந்தது.

அதன் கீழ், ஒரு லீற்றர் டீசலுக்கு அதிகபட்சமாக 100 ரூபாவும், பெட்ரோலுக்கு 20 ரூபாவும் மானியம் வழங்கப்பட்டது.</p><h2>&nbsp;எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை</h2><p> 

இதற்காக மூன்று மாத காலப்பகுதியில் திறைசேரிக்கு சுமார் 60 பில்லியன் ரூபா செலவாகியிருந்தது. இந்த நிவாரணத் திட்டம் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் நிறைவடைந்தது.
</p><p>
இதேவேளை, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் ஐஎம்எப் முக்கிய நிபந்தனையொன்றை விதித்துள்ளது.
</p><p>
 அதன்படி, எரிபொருள் விலைகள் உண்மையான செலவு மாற்றங்களை பிரதிபலிக்கும் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0cffb8a-2892-4af4-8020-10a46194b258/26-6aafb9f47cae0.webp' /></p><p>

எனினும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதுடன், கட்டுமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளும் உயர்ந்துள்ளதால், தற்போதைய விலை மட்டத்தில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிப்பது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.
</p><p>
குறிப்பாக, தற்போது ஒரு லீற்றர் டீசலுக்கு சுமார் 100 ரூபா நட்டத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள், டீசல் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:48:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/release-of-lands-in-valikamam-north-npp-1789898903"></link>
            <id>https://tamilwin.com/article/release-of-lands-in-valikamam-north-npp-1789898903</id>
            <summary type="text">மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட நாடகம் ஆடுவதாக பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து
கொண்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
</p><p>இன்றையதினம்(20.9.2026)பலாலி காணி விடுவிப்பு கோரி மக்கள் போராட்டம் 14ஆவது வாரமாக
இடம்பெற்ற நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்
இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
</p><p>
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து
17 வருடங்கள் கடக்கின்ற நிலையில் எமது நிலத்தை விட்டு சென்று 35 வருடங்கள்
கடக்கின்றது.</p><h2>வாக்குறுதி</h2><p>

இன்றும் நாம் அனாதைகளாக வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் எங்களின்
வளமான காணிகளுக்குள் இராணுவம் விவசாயம் செய்து மேலதிக வருமானத்தை உழைத்து
வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c858ab6b-8f82-4906-9896-2c2ce35eb3b6/26-6aafb9304f05a.webp' /></p><p>

தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி
தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள மக்களின்
காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.

கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இரண்டு வருடங்கள் கடந்து
விட்டது.&nbsp;</p><h2>கோரிக்கை</h2><p>கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ்
மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கிய நிலையில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை
உதாசீனம் செய்துவருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98f6f315-676c-4a7e-9ef6-c78cf3425299/26-6aafb9313327d.webp' /></p><p>
</p><p>
கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம் மிகக் குறைவான
காணிகளை விடுவித்துள்ள நிலையில் வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற
வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-sluice-gates-several-reservoirs-opened-1789900393"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-sluice-gates-several-reservoirs-opened-1789900393</id>
            <summary type="text">நுரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து
வருகிறது.&amp;nbsp;இந்நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து
வருகிறது.&nbsp;</p><p>இந்நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும்
கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.</p><h2>கடும் மழை..&nbsp;</h2><p>
குறித்த நீர்த்தேக்கத்தில் ஒரு செக்கனுக்கு சுமார் 80 கன அடி நீர்
வெளியேற்றப்படுவதாகவும் எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கு கீழ்
தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என
நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ebea32f-5c6f-43b9-b9ff-560d016d1d99/26-6aafb8df8fb85.webp' /></p><p>
</p><p>தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர, காசல்ரி, மவுசாகலை, கெனியோன்
லக்சபான, பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வேகமாக
உயர்ந்து வருவதாகவும் எனவே நீர்த்தேக்களுக்கு கீழ் பகுதியில் வாழும் மக்கள்
மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலைய
தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>இதேவேளை மழை தொடரச்சியாக பெய்து வருவதனால் டெவோன் சென்கிளையார் ஆகிய நீர்
வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்துள்ளது. எனவே இந்த நீர்
வீழ்ச்சிகளுக்கு அருகாமையில் செல்வதனை தவிர்த்து கொள்வதன் மூலம் விபத்துக்களை
தவிர்த்துக்கொள்ளலாம் என பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:44:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக முதல் மரணம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-death-due-to-heavy-rain-1789899285"></link>
            <id>https://tamilwin.com/article/first-death-due-to-heavy-rain-1789899285</id>
            <summary type="text">இன்று பெய்த கனமழையினால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததன் காரணமாக ரிட்டிகஹ ஓயாவில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அம்பகலவைச் சேர்ந்த 44 வயதுடைய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று பெய்த கனமழையினால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததன் காரணமாக ரிட்டிகஹ ஓயாவில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

அம்பகலவைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
 அவிசாவளை - புலத்கொஹுபிட்டிய வீதியின் அருகே ஓடும் ரிட்டிகஹ ஓயாவில் அவர் விழுந்ததையடுத்து, அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் 
அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e7fb013-30d9-4959-aa94-bef7eebcf2fa/26-6aafb714f30aa.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

மேலும், கரவனெல்ல மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:32:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நமது அரசாங்கம் 2 ஆண்டுகள்: ஜனாதிபதி அநுர பங்கேற்கும் பிரம்மாண்ட மக்கள் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-years-anura-government-grand-public-rally-1789898771"></link>
            <id>https://tamilwin.com/article/2-years-anura-government-grand-public-rally-1789898771</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் &quot;நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி&quot; என்ற தொனிப்பொருளின்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் "நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி" என்ற தொனிப்பொருளின்&nbsp;கீழ், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதன்படி, மாத்தறை - அக்குரஸ்ஸ பகுதியில் மாபெரும் மக்கள் பேரணி இன்று, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்று வருகின்றது. </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஊழலற்ற சுபிட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l-ip0cLvNk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி விசாக்களைத் தயாரித்ததற்காக முன்னாள் அரச அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-department-gov-employee-arrested-1789895758"></link>
            <id>https://tamilwin.com/article/ex-department-gov-employee-arrested-1789895758</id>
            <summary type="text">போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதிய கடவுச்சீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>புதிய கடவுச்சீட்டு</h2><p>

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளரான குறித்த சந்தேக நபரிடமிருந்து 48 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும், பாதுகாப்பு முத்திரைகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2e4c841-6c21-4edc-a7ae-0e415ddb0a66/26-6aafa6446fcde.webp' /></p><p>

பழைய கடவுச்சீட்டுகளிலிருந்து அகற்றப்பட்ட விசாக்களை புதிய கடவுச்சீட்டுகளில் பொருத்தி, தூதரகங்களில் சமர்ப்பித்து பல்வேறு நாடுகளுக்கு மோசடியாக வீசா பெற்றுக் கொள்ள அவர் உடந்தையாக இருந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T09:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமடையும் காலநிலை - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766</id>
            <summary type="text">இரண்டாம் இணைப்பு&amp;nbsp;&amp;nbsp;நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையை&amp;nbsp;தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இரண்டாம் இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையை&nbsp;தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

</p><p>இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கட்டம் 2&nbsp;மண்சரிவு&nbsp;எச்சரிக்கை</span></p><p>காலி மாவட்டம்: நாகொட, நெளுவ
</p><p>கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை
</p><p>கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல
</p><p>மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு
</p><p>இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட
</p><p>களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள</p><h2>கட்டம் 1 மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
</p><p>களுத்துறை மாவட்டம்: இங்கிரிய
</p><p>கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய
</p><p>மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ
</p><p>இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை
</p><p>காலி மாவட்டம்: தவலம</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு&nbsp;தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98a27f1-9ead-4a8d-8327-4584a5246bc2/26-6aaf4a777695b.webp' /></p><h2>பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை</h2><p>காலி மாவட்டத்தின் நாகொட</p><p>களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர</p><p>கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை</p><p>கேகாலை மாவட்டத்தின் தெரணியகல</p><p>இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789895492"></link>
            <id>https://tamilwin.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789895492</id>
            <summary type="text">குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

விசா இல்லாமல் சட்டவிரோதமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.</p><p>

விசா இல்லாமல் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தபோது குவைத் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்களே இன்று காலை (20) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர்.</p><p>
வீட்டுப் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக குவைத்திற்குச் சென்றிருந்த இவர்கள், தங்களது ஒப்பந்தப் பணியிடங்களிலிருந்து தப்பித்து, வேறு இடங்களில் சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p><h2>நாடு கடத்தல்</h2><p>
</p><p>
குவைத் நகரிலிருந்து இன்று காலை 03.10 மணிக்கு வந்தடைந்த ஜசீரா எயார்வேஸ் விமானம் JN-551 (J9-551)) மூலம் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39ea4d8-020e-4b32-a2d5-c48071ae3685/26-6aafa5c2dc8d4.webp' /></p><p>
</p><p>
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களைத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேவையான போக்குவரத்து மற்றும் நிதி ஆதாரங்களை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T09:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்து இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-was-cremated-is-alive-again-1789782914"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-was-cremated-is-alive-again-1789782914</id>
            <summary type="text">அனுராதபுரம் -&amp;nbsp;&amp;nbsp;கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் -&nbsp;&nbsp;கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொருவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவமொன்று குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>குறித்த நபர்&nbsp;இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், சுமார் 02 மாதங்களின் பின்னர் திடீரென உயிருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.</p><p>குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியே சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் வராததால் அவரது மனைவி கொக்காவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h2>மீட்கப்பட்டுள்ள சடலம்&nbsp;&nbsp;</h2><p>இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஹபனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காப்பகப்பகுதியில் நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f87b5f9-7e2e-4673-b71d-0adb69fcdaaf/26-6aaf56d48ec32.webp' /></p><p> புத்தாண்டிற்கு மகன் வாங்கிக்கொடுத்த ஆடைகளுடன் அச்சடலத்தின் ஆடைகள் ஒத்துப்போனமையினால், சடலம் தனது கணவருடையது என எண்ணி மனைவி மற்றும் உறவினர்கள் தவறாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, ஓகஸ்ட் 31 ஆம் திகதி பொலன்னறுவையில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் தான சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இவ்வாறான பின்னணியில், குறித்த நபர் திடீரென தனது சகோதரியின் வீட்டை சென்றடைந்துள்ளார்.</p><p>இதன்போது அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து கொக்காவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட சடலம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T09:02:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி தாழ்நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864</id>
            <summary type="text">புதிய இணைப்புநாவலப்பிட்டியின் அருகே பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாவலப்பிட்டியின் அருகே பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளது.
</p><p>
அதன் காரணமாக அதனை அண்டிய பிரதேசத்தில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
</p><p>
இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34d15d8d-1dcd-4a67-9ff4-057fdc6d69a7/26-6aafad6909c5a.webp' /></p><p>
</p><p>
நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகப் பதிவாகியுள்ளது</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சூழவுள்ள மேலும் பல பிரதேசங்களுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ளது.
</p><p>
 

இதற்கமைய, கங்க இஹள கோரளை, உடபலாத்த, தொலுவ, உடநுவர, யடிநுவர, கங்கவட்ட கோரளை, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

எனவே, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனவே மகாவலி ஆற்று பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.&nbsp;</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1ae49f-8eaa-4bde-b72a-cfbc97e155f0/26-6aaf512bc1da2.webp' /></p><p>

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T08:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறியாமையில் செய்த தவறு..! மரணதண்டனை வழங்குவது மனித உரிமை மீறல் - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-capital-punishment-in-saudi-arabia-1789892271"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-capital-punishment-in-saudi-arabia-1789892271</id>
            <summary type="text">அறியாமையில் அல்லது தவறுதலாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமைக்காக மரணதண்டனை
வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள்
சக்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அறியாமையில் அல்லது தவறுதலாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமைக்காக மரணதண்டனை
வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.</p><p>

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கைப் பிரஜையான
சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே
அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p></p><h2>சவூதிச் சட்டம்</h2><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"சவூதிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடுகள் காணப்படலாம் என்றாலும், இந்தச்
சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை (இலங்கைப் பிரஜை)
என்பதால், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்தும்
சவூதி அரசு அவதானம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/987c7d9c-b4fd-46b6-9b9c-b7416562da52/26-6aaf9962d3f62.webp' /></p><p>

வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், அது
சர்வதேசத்தின் மத்தியில் தவறானதொரு முன்னுதாரணமாகிவிடும்.
</p><p>
மத நிந்தனை என்பது நியாயப்படுத்தக் கூடியதோ அல்லது அங்கீகரிக்கப்படக் கூடியதோ
அல்ல. எனினும், இந்த விவகாரம் முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட
வேண்டும்.

எனவே, இந்த விவகாரத்தில் இலங்கை அரசு நேரடியாக இராஜதந்திர ரீதியில் துரிதமாகத்
தலையிட வேண்டும்.</p><p>

ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் இந்த விடயம் அணுகப்பட
வேண்டும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T08:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-in-nuwara-eliya-normal-life-disrupted-1789891324"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-in-nuwara-eliya-normal-life-disrupted-1789891324</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் (19),நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற
காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து
வருகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் (19),நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற
காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து
வருகிறது.</p><p>இதன் விளைவாக இன்று (20) காலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக
உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும்
பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின்
பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையை எட்டியுள்ளது.</p><h2>கடும் பனிமூட்டம்</h2><p>
</p><p>
குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை,
தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான
வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா
பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால், சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக்
கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப்
பேணுமாறும், தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும்
பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7cf206b-a0de-41d2-925f-46a6f44fe6b8/26-6aaf95509d5a5.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள்
மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால், பல இடங்களில்
மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட சேவைகள்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும்
சிரமத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T08:26:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி மரண தண்டனை விவகாரம்: அனோஜனுக்காக அரசிடம் முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/capital-punishment-in-saudi-arabia-1789891037"></link>
            <id>https://tamilwin.com/article/capital-punishment-in-saudi-arabia-1789891037</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும்
இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசின் தலையீடுகள் மிகவும்
மந்த கதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும்
இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசின் தலையீடுகள் மிகவும்
மந்த கதியிலேயே உள்ளன என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இத்தகையதொரு விவகாரத்தில் பிரதி வெளிவிவகார
அமைச்சரை விட ஜனாதிபதி அல்லது பிரதமர் நேரடியாகத் தலையிடுவதே பொறுத்தமானது
என்றும் வலியுறுத்தினார்.</p><p>

சிவராசா அனோஜன் விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள்
சக்தியின் முன்னெடுப்புகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே
அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>சவூதி அரேபியா</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சவூதி அரேபியாவின் அரச தீர்மானத்துடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில் தற்போதைய
இலங்கை அரசின் தலையீடுகள் மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றன.</p><p>

பிரதி வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டால் எந்தவொரு பலனையும் எதிர்பார்க்க
முடியாது என்பதால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அல்லது பிரதமர் ஹரிணி
அமரசூரியவாவது இதில் நேரடியாகத் தலையிட வேண்டும்.</p><p>

சவூதி நாட்டின் சட்டங்கள் குறித்த அறிவின்றி மேற்படி இளைஞர் சமூக
வலைத்தளத்தில் பதிவிட்டமை தவறாக இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0213e02-53d0-447e-b1bd-f7276a71de5a/26-6aaf94ec39570.webp' /></p><p>எனினும், அவர் மனிதாபிமான
அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது பணிவான
கோரிக்கையாகும்.

பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவகாரத்தில்
முழுமையான கவனம் செலுத்தியுள்ளது. </p><p>தனிப்பட்ட ரீதியிலும் இதற்காக நான்
செயற்படவுள்ளேன்.அதற்கமைய, சிவராசா அனோஜனுக்கான பொதுமன்னிப்பைக் கோரி, கொழும்பிலுள்ள சவூதி
தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத்திடம்
எழுத்துமூலம் நான் நேரடியாகக் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.</p><p>

இந்த வாரத்துக்குள் அந்தக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளிக்கப்படும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T08:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முக்கிய நகர்வு - சஜித் உள்ளிட்ட 10 எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சிஐடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saleh-s-link-to-the-easter-attacks-sajith-cid-1789887805"></link>
            <id>https://tamilwin.com/article/saleh-s-link-to-the-easter-attacks-sajith-cid-1789887805</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.</p><p>

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாதுகாக்கப்படுவதால், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது அவர்களின் தன்னார்வ சம்மதம் மற்றும் முழுமையான ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல்</h2><p>
சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அவர்களிடம் நம்பகமான தகவல்கள் அல்லது ஆதாரங்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில், அந்தத் தகவல்கள் என்ன என்பதை ஆராய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
இதற்கமைய, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், நாடாளுமன்ற ஹன்சார்ட் அறிக்கைகளில் பதிவாகியுள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளின் பிரதிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1def562-8ea5-4505-8af5-39fa7c245f99/26-6aaf8e0437109.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>விசாரணைக்கு உதவும் வகையில் இந்தத் தகவல்கள் பெறப்படுவதாகவும், இது முழுமையாக தன்னார்வ அடிப்படையிலான செயல்முறை என்றும் விசாரணை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கவுள்ளனர்.</p><p>இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள 24 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.</p><h2>வழக்கு விசாரணை&nbsp;</h2><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>

நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் இந்தக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

வழக்கில் இருதரப்பினரும் தங்களது இறுதி எழுத்துமூல சமர்ப்பிப்புகளை கொழும்பு அலுத்கடே எம்.எம்.சி. கட்டிடத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சமர்ப்பித்து நிறைவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c82481d4-d495-44dc-ad5c-53950b3e63e0/26-6aaf8e04e2822.webp' /></p><p>



இதற்கிடையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, கடந்த 100 நாட்களுக்கு அண்மித்த காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது அவசியமா என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோரியிருந்தார்.
</p><p>
எனினும், அவ்வாறான அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறப்படும் நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் காட்டு யானை அட்டகாசம்: உயிர்தப்பிய வயோதிப குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-elephant-rampage-in-keppapulavu-1789889822"></link>
            <id>https://tamilwin.com/article/wild-elephant-rampage-in-keppapulavu-1789889822</id>
            <summary type="text">முல்லைத்தீவு- கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் நேற்று(19.9.2026) இரவு புகுந்த காட்டு யானை, வீட்டு யன்னல்களை உடைத்து அட்டகாசத்தில்
ஈடுபட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு- கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் நேற்று(19.9.2026) இரவு புகுந்த காட்டு யானை, வீட்டு யன்னல்களை உடைத்து அட்டகாசத்தில்
ஈடுபட்டுள்ளது.</p><p>

குறித்த வீட்டில் வயோதிப குடும்பம் வசித்து வந்த நிலையில், காட்டு யானை
வீட்டிற்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியபோது உயிர்தப்பியுள்ளனர்.
</p><p>அத்துடன், வீட்டின் வளாகத்தில் இருந்த பயன்தரும் மரங்களையும் காட்டு யானை
சேதப்படுத்தியுள்ளது.</p><h2>கோரிக்கை</h2><p> </p><p>இதேவேளை, அப்பகுதியிலுள்ள ஏனைய வீடுகளின்
வளாகங்களுக்குள் புகுந்த யானை, தென்னை உள்ளிட்ட பயன்தரும் மரங்களையும்
சேதப்படுத்திச் சென்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் அறிந்துகொண்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.
யூட்சன் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து
நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bbf8bea-59c9-4dc8-9768-d0ba3e1d79a8/26-6aaf9028db96f.webp' /></p><p>
</p><p>குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் தொடர்ச்சியாக புகுந்து மக்களின்
வீடுகள், பயன்தரும் மரங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சேதப்படுத்தி வருவதாக
அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களின் உயிர்களையும்
உடமைகளையும் பாதுகாக்கும் வகையில், யானை வேலிகளை அமைத்து தமது பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதுடன், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித்
தருமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:50:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அவதானம் - கிங் கங்கை கரையோர மக்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-along-the-gin-river-1789889182"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-along-the-gin-river-1789889182</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக கிங் கங்கையை சூழவுள்ள பல தாழ்நில பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக கிங் கங்கையை சூழவுள்ள பல தாழ்நில பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> நீர்ப்பாசன திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>தற்போது வரை பதிவாகியுள்ள மழை வீழ்ச்சிக்கமைவாக, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>தாழ்நிலப்பகுதிகளில் வாழும்&nbsp;மக்களுக்கு&nbsp;எச்சரிக்கை </h2><p>
</p><p>
 

இதற்கமைய, கிங் கங்கையைச் சார்ந்த தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வலிவிட்டிய - திவிதுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட கிங் கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு&nbsp;எச்சரிக்கை&nbsp;விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db40352b-d48b-43e2-b084-eac2bc40013e/26-6aaf8dfcb27ad.webp' /></p><p>எனவே அப்பகுதி மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்களவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அநுர அரசு! விமல் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/freedom-of-remembrance-in-the-north-wimal-1789888620"></link>
            <id>https://tamilwin.com/article/freedom-of-remembrance-in-the-north-wimal-1789888620</id>
            <summary type="text">வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும்
சுதந்திரமாகச் செயற்பட்டு வரும் நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த
சிங்களவர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும்
சுதந்திரமாகச் செயற்பட்டு வரும் நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த
சிங்களவர்களையே தற்போதைய அரசு நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது என்றும் தேசிய
சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச
தெரிவித்தார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

"யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டின் தேசிய பாதுகாப்பை
உறுதிப்படுத்தி, இறையாண்மையைப் பாதுகாத்த முப்படையின் தளபதிகளும் அவர்களின்
குடும்பத்தாரும், அத்துடன் முன்னாள் அரச தலைவர்களின் குடும்பத்தாரும் இன்று
அரசால் திட்டமிட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.</p><h2>திலீபனின் நினைவேந்தல்</h2><p>

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும்
எவ்வித தடையுமின்றிச் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/408760cf-6d40-4279-a2b5-d3a1fa44a2af/26-6aaf8b46e2920.webp' /></p><p> </p><p>வடக்கில் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வும் அரச அனுசரணையுடனேயே முன்னெடுக்கப்படுகின்றது. </p><p>ஆனால்,
இந்தப் பகுதிகளில் சிங்களவர்களின் உரிமைகள் திட்டமிட்ட முறையில்
மறுக்கப்படுவதுடன், சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் இத்தகைய
செயற்பாடுகளுக்கு அரசு மறைமுகமாக ஆதரவு வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது எனத் தெரித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை! அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-split-within-npp-rumors-regarding-pm-1789887193"></link>
            <id>https://tamilwin.com/article/no-split-within-npp-rumors-regarding-pm-1789887193</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர்
சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும்
இல்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர்
சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும்
இல்லை எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.</p><p>

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது
என்றும், பின்னர் தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையே முரண்பாடுகள்
உருவாகியுள்ளன என்றும் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டன.</p><h2>புதிய வதந்திகள்</h2><p> எனினும், அவ்வாறான
எந்தவொரு நிலைமையும் எங்குமே இடம்பெறவில்லை. தற்போது பிரதமர் தொடர்பாகப் புதிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a810966-2c6f-4496-8daa-7fb21724b7c4/26-6aaf848a292db.webp' /></p><p>
</p><p>பிரதமருக்கு எதிராக ஜே.வி.பி. சூழ்ச்சி செய்வதாகக் கூறப்படுகின்றது. இவை
அனைத்தும் முற்றிலுமாக உண்மைக்குப் புறம்பான தகவல்களாகும்.
</p><p>
பைத்தியங்கள் பலவற்றைப் பேசலாம், குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால்,
வைத்தியர்கள் எதற்கும் குழம்பமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்தவர்களின் பெயரில் அஸ்வெசும பணம்..! ரூ.30 மில்லியன் மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/norwood-probe-sri-lanka-s-largest-aswesuma-fraud-1789885741"></link>
            <id>https://tamilwin.com/article/norwood-probe-sri-lanka-s-largest-aswesuma-fraud-1789885741</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு சுமார் 30 மில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தொகை உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடிகளில் மிகப்பெரியதாக இது அமையக்கூடும் என ஆங்கில வாராந்த பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>பாரிய மோசடி</h2><p>
</p><p>
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக, உயிரிழந்த வயோதிபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c16c16-a123-4866-8ec8-afa0499c4cbb/26-6aaf81fabcf20.webp' /></p><p>
</p><p>
நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய இந்த மோசடி தொடர்பில் இதுவரை 20 அரச ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால் சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோர்வூட் பிரதேச செயலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடியில் சுமார் 30 மில்லியன் ரூபாவும், தலவாக்கலை பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய சம்பவத்தில் சுமார் 2 மில்லியன் ரூபாவும் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;10 பேர் பணி நீக்கம்</h2><p>
</p><p>
நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு, நோர்வூட் சம்பவம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. எனினும், இதுவரை இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
</p><p>
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, நோர்வூட் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 18 அரச ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44727423-f910-4e9e-a56e-cd7ec17cbe2c/26-6aaf81fb6f3ce.webp' /></p><p>
</p><p>
அவர்களில் 10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நான்கு ஊழியர்களும் ஆறு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.
</p><p>
மேலும், இரண்டு பெண் அரச ஊழியர்கள் அரச சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பத்திரிக்கை&nbsp; செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு சுகாதாரத்துறையின் சவால்கள் குறித்து அமைச்சர் நளிந்தவுடன் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-northern-health-sector-nalintha-mp-1789886348"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-northern-health-sector-nalintha-mp-1789886348</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை
அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை
அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தலைமையிலான மாகாண அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்று(19.9.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.</p><p>இதன்போது, இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை
நிர்வகித்து வருவதுடன், மாவட்டப் பொது மருத்துவமனைகளும் மாகாண சபையின்
நிர்வாகத்துக்குட்பட்டே இயங்கி வருகின்றமை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக
எடுத்துரைக்கப்பட்டது.</p><h2>நிதி ஒதுக்கீடுகள்&nbsp;</h2><p> இதனைக் கருத்திற்கொண்டு, ஏனைய மாகாணங்களுடன்
ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு அதிகளவான மூலதன மற்றும்
பராமரிப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
குறிப்பாக, நிதி ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக
இல்லாத நிலை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதிகளவான
மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க
வேண்டியிருப்பதால் மாகாண சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நிதிச் சுமையும்
சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37702179-2656-4ad7-a998-84f05d31dd6c/26-6aaf800c0d6a4.webp' /></p><p>
</p><p>
மேலும், மருத்துவமனைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமல்,
மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான ஒதுக்கீடாக ஒருங்கிணைந்த முறையில் நிதி
வழங்கப்படுவதால் நடைமுறையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பிலும்
அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
</p><p>வடக்கு மாகாண சுகாதார சேவையின் தற்போதைய தேவைகள் மற்றும் நடைமுறைச்
சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது தொடர்பிலும், குறிப்பாக மேலதிக
நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் நிதி ஆணைக்குழுவுடன்
கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மருத்துவர் நளிந்த
ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:41:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் என்னால் பொறுப்பேற்க முடியாது! ரணில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-cannot-take-responsibility-if-the-country-ranil-1789885734"></link>
            <id>https://tamilwin.com/article/i-cannot-take-responsibility-if-the-country-ranil-1789885734</id>
            <summary type="text">&quot;நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல்
போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>"நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல்
போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள்
பொறுப்பெடுப்பீர்களா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், என்னால் இனி
நாட்டை பொறுப்பேற்க முடியாது. ஏனெனில் நான் தற்போது நாடாளுமன்றத்தில்
இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களால்
எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>நாட்டுக்குள் கலவரங்கள்&nbsp;</h2><p>

"அரசியல் செய்யும்போது அதிகளவான பொறுமை இருக்க வேண்டும். அப்போது தான்
தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியுமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d173665-295f-4722-bbb9-bddafff24f93/26-6aaf7fa03a6e2.webp' /></p><p> </p><p>ஆட்சி அதிகாரம் என்பது எப்போதும் ஒரே
மாதிரி இருக்கப்போவதில்லை.

அதிகாரம் கிடைக்கும்போது அதனை நாட்டுக்காக முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ள
வேண்டும். அதேநேரம், எப்போது வேண்டுமானாலும் எதிர்கட்சியில் இருப்பதற்கும்
தயாராக இருக்க வேண்டும்.</p><p> அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியைக்
கைப்பற்றுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

நாட்டுக்குள் கலவரங்கள் ஏற்பட்டு, நாடு முற்றாக வீழ்ச்சியடையும் போது ஆட்சியைப்
பொறுப்பேற்க யாருமே முன்வராத இக்கட்டான நிலையில் தான் நான் முன்வந்தேன். யாரும்
முன்வராவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் ஒன்று இருக்கப்போவதில்லை என்பதாலேயே
நாட்டை பொறுப்பேற்றேன்.</p><h2>இக்கட்டான நிலைமைகளில் அரசாங்கம்</h2><p>

இவ்வாறான இக்கட்டான நிலைமைகளில் அச்சப்பட்டுக்கொண்டு இருக்க முடியாது.
எவ்வாறாவது நாட்டை நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணத்துடனேயே
பொறுப்பேற்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9762fbc-478c-4d5b-9524-5bf9838cef0e/26-6aaf7fa0e34fa.webp' /></p><p>
</p><p>
ஜே.ஆர். ஜயவர்த்தன நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதுடன், நாட்டை
முன்னேற்றுவதற்காக அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை
எடுத்தார்.

அன்று ஜே.ஆர். பாதுகாத்து வந்த ஜனநாயகத்தை யாராவது இல்லாமலாக்க
முற்படுவார்களாகின், அதற்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். </p><p>அன்று
ஏகாதிபத்தியவாதத்துக்கு எதிராக ஜே.ஆர். நாடு பூராகவும் மக்களை ஒன்றிணைத்துச்
சத்தியாக்கிரகப் போராட்டங்களை மேற்கொண்டதைப் போன்று, தற்போதும் அவ்வாறானதொரு
நிலை ஏற்படுமாகின் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:39:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலைக்காக கொட்டும் மழையிலும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-seeks-release-of-anojan-1789884769"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-seeks-release-of-anojan-1789884769</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையை குறைத்து கருணை வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>

“மனிதாபிமான வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><h2>கொட்டும் மழை</h2><p>
</p><p>
கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62cc88b-cbc6-4a21-99cf-b930b9f6d953/26-6aaf7bcfc49db.webp' /></p><p>
</p><p>
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அவருக்கு கருணை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடம்பர வீடுகளை கட்டித்தருவதாக பெருந்தொகை பணமோசடி - சிஐடியிடம் சிக்கிய பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-by-promising-to-build-houses-1789870247"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-by-promising-to-build-houses-1789870247</id>
            <summary type="text">இலகுவான கட்டண முறையில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி ஒரு தனியார் நிறுவனமொன்று பெருந்தொகை பணமோசடியை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலகுவான கட்டண முறையில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி ஒரு தனியார் நிறுவனமொன்று பெருந்தொகை பணமோசடியை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மிரிஹான சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

பணம் பெற்ற பின்னரும் வீடுகளை கட்டித்தராதது குறித்து அப்பிரிவினருக்கு வந்த 245 முறைப்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>நிதி மோசடிக்கு உடந்தை</h2><p>

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2929dfa1-6389-437a-bc5f-563a7f89984f/26-6aaf75f99ffc2.webp' /></p><p>

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்த 4 கார்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
30 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்களும் முறையே கஹவத்த மற்றும் கடுவெல பகுதியை சேர்ந்தவர்களாவர்.
</p><p>
இதற்கமைய, சந்தேகநபர்கள் நேற்று (19) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் 29ஆம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:58:23+00:00</updated>
        </entry>
    </feed>
