<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-04T11:38:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விபத்தில் பறிபோன முதியவரின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-in-jaffna-accident-1785841796"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-in-jaffna-accident-1785841796</id>
            <summary type="text">காரைநகரில் நேற்றிரவு(03.08.2026) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் - கருங்காலி பகுதியை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>காரைநகரில் நேற்றிரவு(03.08.2026) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>இதன்போது காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த
குமாரன் மகேந்திரலிங்கம் (வயது 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி</h2><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் நேற்றிரவு கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில்
சென்று கொண்டிருந்தபோது அவ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிளானது வேகக்
கட்டுப்பாட்டை மீறி முதியவர் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644a0561-f46c-4ba5-ae9c-6739463a9e3b/26-6a71ccaca1944.webp' /></p><p>இருப்பினும் முதியவரை உடனடியாக யாரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாத
நிலையில் அவர் அங்கேயே உயிரிழந்தார். </p><p>பின்னர் அவரது சடலமானது காரைநகர்
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
</p><p>
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இது குறித்து விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:28:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு தற்காலிக தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/temporary-stay-statues-for-kuttimani-thangathurai-1785841319"></link>
            <id>https://tamilwin.com/article/temporary-stay-statues-for-kuttimani-thangathurai-1785841319</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களான
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு நாளை(5.8.2026) வரை பரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களான
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை நிறுவுவதற்கு நாளை(5.8.2026) வரை பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.</p><p>

கடந்த 25/07/2026 அன்று தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது 43 வது
நினைவு நாளில் அவரது சகோதரனால் அவரது சொந்த காணியில் சிலை வைப்பதற்குரிய
ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><p>இந்தநிலையில் கடந்த 22/07/2026 அன்று முன்னாள்
வல்வெட்டிதுறை நகரசபை உப தவிசாளர் சதீஸை கைது செய்து நீதிமன்றில்
முற்படுத்தியிருந்த நிலையில் இன்றுவரை குட்டிமணி தங்கதுரை ஆகியோறுக்கு சிலை
வைக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு நீதிமன்றில் எடுத்துக்
கொள்ளப்பட்டது.</p><p></p><h2>தற்காலிக தடை</h2><p> </p><p>அரச சட்டத்தரணியால் புலனாய்வு அறிக்கை
சமர்ப்பிற்பதற்கு காலம் கோரப்பட்ட நிலையில் நாளைய தினம் வரை வழக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சிலை நிறுவுவதற்கும் நாளை வரை தற்காலிக தடை
விதிக்கபட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857c8cba-2020-469f-98df-59f9b52d2abb/26-6a71cc38b11a6.webp' /></p><p>
</p><p>மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட்ட ஐந்து
சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் குற்றம்
சாட்டப்பட்ட கந்தசாமி சதீஸ் சார்பில் மன்றில் முன்னிலை ஆகியிருந்தனர்.</p><p>

இதேவேளை&nbsp;சதீஷுடன் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்
ஞானேந்திரன், சமூக ஆர்வலர் S.கஜந்தன்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பொறுப்பாளர் ஈசன், கிளிநொச்சி
மாவட்ட செயலாளர் க.கணேசகுமாரன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் உணவு உண்ண முடியவில்லை - தாயுடன் பேச வேண்டும்! பிள்ளையானின் உருக்கமான கோரிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026"></link>
            <id>https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04)&nbsp;காணொளி&nbsp;மூலம் விசாரணை நடைபெற்றது.</p><p></p><h2>ஐந்து கொலைகள்</h2><p>இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f32ac1b-e2cc-430b-b0f2-4b2d22e2b8c5/26-6a71bd24dce80.webp' /></p><p>2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த 5 கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிற சந்தேக நபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குப் பதிவு செய்திருந்தது.
</p><p>


இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அவர் மீது, கல்லடி பகுதியில் நடந்த ஐந்து கொலைகள் மற்றும் நிலத்தகராறு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்
கொலை செய்யப்பட்ட சம்பவம், ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து
சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், வவுணதீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை
கடத்தி கொடூரமாகக் கொலை செய்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. </p><p>2025ஆம் ஏப்ரல், பயங்கரவாத
தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் 2025 நவம்பர் மாதம், காத்தான்குடியை சேர்ந்த
இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரையும் சிஜடியினர் கைது செய்தனர்.</p><h2>அதிகாரிகளின் சோதனை</h2><p>

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளில் தொடர்பு இருப்பதாக, பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு
பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி முகம் பாய்ஸ்,
உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜீன் 17ஆம் திகதி சிஜடியினர் வழக்கு தாக்கல் செய்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09de7a47-ed1d-4e97-973c-0834e9ed14da/26-6a71c926b9c9b.webp' /></p><p>இந்நிலையில் குறித்த வழக்கு இன்று&nbsp; (04) மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக
நபர்களான பிள்ளையான், இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான்,
முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (Zoom)
முன்னிலைபடுத்தப்பட்டனர்.</p><p>

இதன்போது பிள்ளையான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரராஜா முன்னிலையாகி பிள்ளையான்
தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு
சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம்
மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்பபடுவதால் அது சிதைவடைந்து
செல்வதால் அதனை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>எனவே, உணவை அவ்வாறு
பரிசோதனை செய்யாது தருமாறும்
73 வயதான அவரது தாயார் சுகயீனமடைந்துள்ளதாகவும் அவருடன் கையடக்க
தொலைபேசி ஊடாக 2 இல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தருமாறும் கோரினார்.&nbsp;</p><p>இதன்போது, நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அங்கு எவ்வாறான
நடமுறை உள்ளதோ அதை சரியாக பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-04T11:13:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் இலக்கைத் தாண்டிய சிறுபோக நெற்செய்கை - ஆளுநர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-cultivation-target-in-the-north-exceeded-1785838175"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-cultivation-target-in-the-north-exceeded-1785838175</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட
இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின்
வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட
இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின்
வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில்
மூன்றாம் போகச்செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். </p><p>சிறுபோகத்தில் இலக்கிடப்பட்ட பரப்பளவை விட
அதிகளவான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன்,
கிடைக்கப்பெற்றுள்ள நீர்வளத்தை அறிவியல் அடிப்படையில் முகாமைத்துவம் செய்து
மூன்றாம் போகச் செய்கைக்குத் தேவையான ஏற்பாடுகள் வெற்றிகரமாக
முன்னெடுக்கப்பட்டிருப்பது வடக்கு மாகாண விவசாயத் துறையின் குறிப்பிடத்தக்க
முன்னேற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>நவீன பயிரிடல் முறைகள்</h2><p>வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று
(04.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில்
நடைபெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de388c9a-8959-43a3-b52a-c954db2b2c93/26-6a71c10b5dc67.webp' /></p><p>இக்கூட்டத்தில் விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும்
திணைக்களங்களின் 2026ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள்,
நிதி மற்றும் பௌதிக முன்னேற்றங்கள் என்பன விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன்,
எதிர்கால செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.</p><p>

2026ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வடக்கு மாகாணத்தில் 37,961 ஹெக்டேயர்
பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில்,
38,405 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இலக்கு
விஞ்சப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் சுமார் 156,326 மெட்ரிக் தொன் நெல் உற்பத்தி
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>நெல் உற்பத்தித் திறனை மேலும் உயர்த்தும் நோக்கில் நாற்று மாற்று நெற்செய்கை
முறை, பராசூட் நாற்று நடவு முறை உள்ளிட்ட நவீன பயிரிடல் முறைகள்
விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், நெற்செய்கைத் திட்டங்களும்
பல மாவட்டங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>நீர்விநியோக முகாமைத்துவம்</h2><p>நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது,
நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீர் இருப்பு, நீர்விநியோக முகாமைத்துவம்
மற்றும் விவசாயிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த கலந்தாலோசனைகளின்
அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மூன்றாம் போகச் செய்கை வன்னேரிக்குளத்தில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78ff40c9-f740-45ab-94ba-e2d45e7669b9/26-6a71c10a7fbdb.webp' /></p><p>விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள சில செயற்றிட்டங்கள்
தற்போது முழுமையான இயங்குநிலையை எட்டாதிருப்பது தொடர்பிலும் விரிவாக
ஆராயப்பட்டது.</p><p>அவற்றை விரைவாக மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டு வருவதற்கான
சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான பரிந்துரைகளை மத்திய விவசாய
அமைச்சுக்கு சமர்ப்பித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர்
பணிப்புரை வழங்கினார்.&nbsp;</p><p>மேலும், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து அம்மாச்சி
உணவகங்களிலும் ஒரே தரமான நடைமுறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். </p><p>குறிப்பாக, பொலித்தீன் மற்றும்
பிளாஸ்ரிக் பயன்பாட்டை முற்றாகக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த
மாற்று பயன்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இதேவேளை, விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம்
மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களங்களின் 2026ஆம் ஆண்டுக்கான
பெரும்பாலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துக்குள் நிறைவடையும்
என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இக்கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய
அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, திட்டமிடல், பொறியியல்
மற்றும் நிர்வாகம்), நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதாரத்
திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், விவசாயத் திணைக்களத்தின் மேலதிக
மாகாணப் பணிப்பாளர், காணித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட மட்ட
பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பலர்
கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலையால் நுவரெலியாவில் பெரும் பாதிப்பு: 5 பேர் பலி - ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-weather-major-damage-nuwara-eliya-1785837313"></link>
            <id>https://tamilwin.com/article/severe-weather-major-damage-nuwara-eliya-1785837313</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று
(04) நண்பகல் வரையான காலப்பகுதியில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று
(04) நண்பகல் வரையான காலப்பகுதியில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன்
தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 5 பேர்
உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் மூவர் காயமடைந்து
சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
கினிகத்தேனை, மொரஹேன கிராமப் பகுதியில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் வீடொன்றின்
மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
</p><p>அதேபோன்று, அம்பகமுவ பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வெள்ள நீரில் மூழ்கி
காணாமல் போயுள்ளார்.</p><p></p><h2>கடுமையான பாதிப்புக்கள்..&nbsp;</h2><p>

பாதிக்கப்பட்ட மக்களிலிருந்து 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேர் உடனடி
பாதுகாப்பு நடவடிக்கையாக 20 இடைத்தங்கல் நலன்புரி மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3eb7786-839e-4e5f-b0c4-affb3501968e/26-6a71c247c75f3.webp' /></p><p> </p><p>இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய நிவாரண
உதவிகளை வழங்கும் பணிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
</p><p>
இந்த சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக மாவட்டத்தில் 2 வீடுகள்
முழுமையாகவும், 90 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன், அவிசாவளை
- ஹட்டன் - நுவரெலியா வீதியின் 66 ஆம் கிலோமீற்றர் பகுதி, லக்ஷபான -
பொல்பிட்டிய வீதி, டன்சினன் - பூண்டுலோயா வீதி மற்றும் டிக்கோயா பகுதியில்
உள்ள வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><p>

தற்போது இவ்வீதிகளைச் சீரமைத்து, போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக்
கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p> அதேவேளை, கொத்மலை -
பனம்ஹம்மன வீதியில் மண்சரிவு அபாயம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு நிமித்தம்
அவ்வீதி போக்குவரத்திற்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலகம்
மேலும் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் முயற்சி - நிபந்தனையுடன் முடிவுற்ற வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-law-to-incorporate-schools-national-schools-1785835012"></link>
            <id>https://tamilwin.com/article/no-law-to-incorporate-schools-national-schools-1785835012</id>
            <summary type="text">ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் (மாகாணத்திடமிருந்து
கபளீகரம் செய்யும்) மத்திய கல்வி அமைச்சின் முயற்சிக்கெதிராக மேன்முறையீட்டு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் (மாகாணத்திடமிருந்து
கபளீகரம் செய்யும்) மத்திய கல்வி அமைச்சின் முயற்சிக்கெதிராக மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் அதன் துணைச்
செயலாளராகிய கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட
வழக்கு வெற்றி பெற்றுள்ளது.
</p><p>
அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்வி மாகாணங்களுக்கு
ஒதுக்கப்பட்ட விடயமாகும். </p><p>எனினும் யுத்த காலங்களில் மத்திய கல்வி அமைச்சு
அரசியல் யாப்புக்கு முரணாக இலங்கை முழுவதிலும் ஏறத்தாழ 350 வரையிலான
பாடசாலைகளையும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் 20 பாடசாலைகளையும் அமைச்சரவைப்
பத்திரம் மற்றும் நிர்வாக வழிமுறைகள் மூலம் தேசிய பாடசாலை என்ற பெயரில் தனது
ஆளுமையின்கீழ் கொண்டு வந்திருந்தது.
</p><p>
மைத்திரிபால சிறிசேனவின் தலமையிலான ஆட்சியின்கீழ் மகிந்த ராஜபக்சவைப்
பிரதமராகக் கொண்டு நடைபெற்ற ஐம்பது நாள் ஆட்சியில் டலஸ் அழகப்பெருமா கல்வி,
அமைச்சராக இருந்தார்.</p><p></p><h2>தேசிய பாடசாலை</h2><p> </p><p>அவர் ஏற்கனவே தேசியப் பாடசாலை என்ற பெயரில் செயற்பட்டு
வந்த 350 வரையிலான பாடசாலைகளுக்கு மேலதிகமான 650 வரையிலான பாடசாலைகளை
உள்ளீர்த்து நாடு தழுவிய வகையில் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற
பெயரில் மாகாணங்களிடமிருந்து கபளீகரம் செய்து மத்திய கல்வி அமைச்சின்
கட்டுப்பாட்டில் செயற்படுத்தும் நோக்குடன் ஆயிரம் தேசிய பாடசாலைத் திட்டத்தை
அறிவித்தார். </p><p>அவரைத் தொடர்ந்து கல்வி அமைச்சர்களாகச் செயற்பட்ட ஜி.எல்.பீரிஸ்
மற்றும் தினேஷ் குணவர்த்தன போன்றவர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்
தீவிரமாகச் செயற்பட்டனர்.</p><p>
</p><p>
இந்தத் திட்டம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாணத்திற்கு வழங்கப்பட்ட
அதிகாரத்தை மீறும் செயல். எனவே இத்திட்டமானது அரசியல் யாப்புக்கு முரணானதும்
சட்டவிரோதமானதுமாகும். </p><p>எனவே இத்திட்டம் செயற்படுத்தப்படாமல் தடை
செய்யவேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் கல்வி அமைச்சரான
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் 2022ஆம் ஆண்டு வைகாசி (மே) மாதத்தில் வழக்குத்
தாக்கல் செய்திருந்தார். </p><p>நீதிமன்றம் இத்திட்டத்திற்கு தடையுத்தரவு வழங்க
மறுத்தது. ஆனால் வழக்கை ஏற்றுக் கொண்டது.

இந்த வழக்கில் மத்திய கல்வி அமைச்சர் அவரது செயலாளர் உட்பட பதினாறு பேர்
பிரதிவாதிகளாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தனர். பிரதிவாதிகள் சார்பில்
முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி தனது தரப்பு வாதம் 6168 எதனையும்
முன்வைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55ba6130-870c-4666-b791-cf3546fd0fff/26-6a71c06f801e5.webp' /></p><p> </p><p>மாறாக இத்திட்டத்தினைச் செயற்படுத்துவார்களா இல்லையா என்பது
பற்றி அமைச்சரிடம் பேசிப் பதில் சொல்ல கால அவகாசம் வேண்டும் எனக் கோரி ஒவ்வொரு
அமர்விலும் கால இழுத்தடிப்பையே செய்து வந்தார்.
</p><p>
இந்நிலையில் 18.08.2023 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனைத்து மாகாண ஆளுநர்களின்
செயலாளர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கு மத்திய
கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டது. </p><p>இதில் ஆயிரம்
பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் பட்டியலிலுள்ள பாடசாலைகளில் ஏற்கனவே
சுவீகரிக்கப்பட்ட (கபளீகரம் செய்யப்பட்ட) பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய
பாடசாலைகளின் தேசிய பாடசாலை என்ற பெயர்ப் பலகைகளை அகற்றும்படியும்
அப்பாடசாலைகளின் அதிபர்கள் தேசிய பாடசாலை என்ற பதவி முத்திரையோ கடிதத் தலைப்போ
பயன்படுத்தக் கூடாது என்றும் இதனை
நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தி இருந்தது. </p><p>மேலும் சுற்றறிக்கையில்
இப்பாடசாலைகள் தொடர்ந்தும் மாகாணக் கல்வி நிர்வாகத்தின் கீழேயே இயங்கும்
எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் கணிசமான பாடசாலைகள் இவற்றைச்
செயற்படுத்தத் தவறியமையால் அவற்றை விரைந்து செயற்படுத்துமாறு 20.02.2024
திகதியிட்ட நினைவூட்டல் கடிதம் மத்திய கல்வி அமைச்சினால் அனைத்து மாகாண கல்வி
நிர்வாக தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p></p><p>
</p><p>
இச்சுற்றறிக்கை மூலம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதற்கு முன்னர் தேசிய
பாடசாலையாக உள்ளீர்க்கப்பட்ட பாடசாலைகள் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளும்
தொடர்ந்தும் மாகாண கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழேயே இயங்கும் என்பது
நிர்வாக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
</p><p>
ஆனால் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்படாமல் கால இழுத்தடிப்பே தொடர்ந்தும்
மேற்கொள்ளப்பட்டு வந்தது. வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏறத்தாழ 3 வருடங்கள்
களித்து 23.05.2025இல் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர்
ஜெனரல் நீதிமன்றத்தில்

“குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம்
இல்லை..." என சட்டமா அதிபர் அறிவுறுத்தி உள்ளார் என ஒப்புதலளித்தார். </p><p>ஆயிரம்
பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் திட்டம் அரசியல் யாப்பிற்கு
விரோதமானதும், FLL விரோதமானதுமாகும் என்பதே வழக்கின் அடிப்படையாகும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம் இல்லை என்பதைச் சட்டமா அதிபர்
ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இவ்வழக்கை கைவாங்குமாறு (வாபஸ் பெறுமாறு) இரண்டு
நீதிபதிகள் கொண்ட இம்மன்று வழக்காளியின் சட்டத்தரணியிடம் கோரியது.
</p><p>
எனினும் சட்டமா அதிபரின் சமர்ப்பணத்துக்கு முரணாக நாடாளுமன்றத்தில் கல்வி
அமைச்சர் "இவ்வாயிரம் பாடசாலைகளை மீண்டும் மாகாண சபைகளிடம் கையளிக்கும்
உத்தேசம் இல்லை” என கருத்து வெளியிட்டமை நீதிமன்றத்திற்குச்
சமர்ப்பிக்கப்பட்டது. சில மாதங்கள் களித்து மத்திய கல்வி அமைச்சு ஏற்கனவே
சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர எவற்றையும் சுவீகரிக்கும் உத்தேசம் இல்லை
என்ற எழுத்து மூல அறிவித்தலை சட்டமா அதிபரூடாக நீதிமன்றத்திற்கு
சமர்ப்பித்தது. </p><p>எனவே,</p><p>1. பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு தனது
நிர்வாகத்தின் கீழ் எடுப்பதற்கு சட்டம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதன்
அடிப்படையிலும்,</p><p>
2. வழக்குத் தாக்கல் செய்ய முன்னர் சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர ஏனையவை
சுவீகரிக்கப்படும் உத்தேசம் இல்லை என்ற மத்திய கல்வி அமைச்சு மேன்முறையீட்டு
நீதிமன்றத்திற்களித்த உறுதிப்பாட்டையும் கருத்திற் கொண்டு.
</p><p>
3. பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு எடுத்துக்
கொள்வதற்குச் சட்டம் இல்லை என்றால் வழக்குத் தொடுப்பதற்கு முன்னர்
சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகளும் சட்டவிரோதமானவேயே. </p><p>எனவே அவை மீண்டும் மாகாண
நிர்வாகத்திற்குரியதாக விடுவிக்கப்பட வேண்டும் என புதிய வழக்கைத் தொடுப்பதன்
மூலமே சாத்தியம் என்பதாலும் அல்லது அரசியல் ரீதியில் மீளப்பெறப்படலாம் என்ற
இரு வழிகளே உள்ள யதார்த்தத்தின் அடிப்படையிலும்

அவசியமேற்படின் இவ்விடயம் தொடர்பில் மீண்டும் புதிதாக வழக்குத் தொடரப்படும்
என்ற நிபந்தனையுடன் வழக்கு முடிவுற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b4b7ca-8be8-480b-ab26-a774b79395be/26-6a71c0703b64d.webp' /></p><h2>போராட்டத்தின் முதல்படி</h2><p>
</p><p>
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் மத்திய அரசால் பறிக்கப்பட்ட
மாகாண அதிகாரங்களை மீளப்பெறும் போராட்டத்தின் முதற்படியான இச்சட்டப்
போராட்டத்தின் முடிவுகளின் முக்கியத்துவம் :
</p><p>
1. பாடசாலைகளை மத்திய அரசு உள்ளீர்ப்பதற்கு சட்டம் இல்லை. எனவே தேசிய பாடசாலை
என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு பாடசாலைகளை எடுத்தமை மற்றும் எடுக்க
முயற்சிப்பது சட்டவிரோதமானது என்பது நிரூபிக்கப்பட்டது.
</p><p>
2. மத்திய கல்வி அமைச்சு நாடு தழுவிய வகையில் கையகப்படுத்த முனைந்த ஏறத்தாழ
அறுநூற்றி ஐம்பது வரையான பாடசாலைகளும் குறிப்பாக வடக்கு மாகாணத்திலிருந்து
எடுக்க முனைந்த நாற்பத்தியெட்டு பாடசாலைகளும் மத்திய அரசால் பறிக்கப்படாமல்
தடுக்கப்பட்டிருக்கிறது.
</p><p>
3. வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்னர் கையகப்படுத்தப்பட்டு இன்று தேசிய
பாடசாலை 61601 மத்திய நிர்வாகத்தின்கீழ் இயங்கும் பாடசாலைகளும் சட்டவிரோதமாகவே
கையகப்படுத்தப்பட்டவை. சட்டப்படி அவையும் மாகாண நிர்வாகத்திடம் கையாளிக்கப்பட
வேண்டியவை என்பதற்கான சட்டரீதியான சான்று நிறுவப்பட்டுள்ளது.</p><p>

4. இது வரை காலம் மாகாணத்திற்கு உரித்தான ஆனால் மத்திய அமைச்சர்களால்
கையகப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை.</p><p></p><p> </p><p>அரசியல் யாப்பிற்கு
விரோதமானவை அவை சம்பந்தப் அமைச்சர்களால் மாகாண நிர்காகத்திற்கு மீண்டும்
கையளிக்கப்பட வேண்டும் என்பதற்கான கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது.</p><p>

இவ்வழக்கைத் தாக்கல் செய்வதில் உதவிய அனைவருக்கும் குறிப்பாக இவ்வழக்கில்
முன்னிலையாகி வாதாடியா சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரன் அவரது கனிஸ்ட
சட்டத்தரணி லக்ஸ்மணன் மற்றும் வழக்கைப் பதிவு செய்தலுட்பட்ட நிர்வாக ரீதியாக
விடயங்களை கையாண்ட சட்டத்தரணி ரட்ணவேல் மற்றும் அவரது சட்டக்கு
ழுவினர்க்கும் இந்த இடத்தில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-08-04T10:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் வெடித்த மோதல் - உறவினர்களுக்கு கைதிகளிடமிருந்து சென்ற அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clashes-mahara-prison-relative-protest-1785821883"></link>
            <id>https://tamilwin.com/article/clashes-mahara-prison-relative-protest-1785821883</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் கைதிகள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கைபேசிகள் மூலம் நிலைமை குறித்து தகவல் வழங்கியுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் கைதிகள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கைபேசிகள் மூலம் நிலைமை குறித்து தகவல் வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

சிறையின் முற்பகுதிக்கு உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து, அவர்களை பயன்படுத்தி போராட்டத்தை நடத்த கைதிகள் திட்டமிட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>சிறையின் நிர்வாக பணிகள் கட்டுப்பாட்டில்&nbsp;</h2><p>
</p><p>
மஹர சிறைச்சாலையில் கைபேசிகள் மிகவும் சாதாரணமாகிவிட்டதாகவும், பழைய கைதிகள் கைபேசிகளை புதிய கைதிகளுக்கு அதிக விலைக்கு அழைப்புகளை மேற்கொள்ள கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b72316-419e-410c-ad10-96871f279d7e/26-6a71be2375448.webp' /></p><p>
</p><p>
கைபேசிகளில் இருந்து அழைப்புகளை மேற்கொள்வதற்காக செலுத்தப்படும் பணம், பழைய கைதிகளால் வழங்கப்பட்ட கணக்குகளில் வரவு வைக்கப்படுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
மேலும், சிறை வட்டாரங்களின்படி, மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், சிறையின் பெரும்பாலான நிர்வாக பணிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p>

மஹர சிறையில் கைதிகளிடையே கைபேசி பயன்பாடு குறித்து தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சில சிறை அதிகாரிகள் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு கைதிகளுக்குக் கைபேசிகளை வழங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மான் பூங்காவில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-tourists-flock-to-the-trinco-deer-park-1785837416"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-tourists-flock-to-the-trinco-deer-park-1785837416</id>
            <summary type="text">திருகோணமலை பிரதான கடற்கரை பகுதியை அண்டிய பிரதேசத்தில் காணப்படும் மான் பூங்காவிற்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பிரதான கடற்கரை பகுதியை அண்டிய பிரதேசத்தில் காணப்படும் மான் பூங்காவிற்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதனால் சுற்றுலாத் துறை விருத்தி செய்யப்படுவதை திருகோணமலை
மாவட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.</p><p>
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான்
பூங்காவும் சான்று பகிர்கின்றன. இதனால் மான் இனங்களை பாதுகாக்க வேண்டியது
ஒவ்வொருவரினதும் தலையாய கடப்பாடாகும்.</p><p></p><h2>சுற்றுலாத்துறை விருத்தி</h2><p>
</p><p>குறித்த மான் பூங்கா தொடக்கம் திருகோணமலை கோணேஸ்வரா கோயில் கோட்டை பகுதி,
திருகோணமலை பஸ் நிலையம் என பல இடங்களிலும் குறித்த மான் இனங்கள்
காணப்படுகிறது.</p><p> இதனை பாதுகாக்க பொலித்தீன் பை உள்ளிட்ட சூழலில் மான்கள் உண்ண
பொருத்தமற்ற உணவு பண்டங்களை உண்ணாமல் அதிலிருந்து பாதுகாக்க சூழலை சுத்தமாக
பேணப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da5e6725-7c12-4e00-85f5-22cb9e9bdb24/26-6a71ba23e5f67.webp' /></p><p>மொத்த மான் இனங்களின் தொகையினை ஒவ்வொரு வருடமும் உரிய அரச தரப்பு துறைசார்
நிறுவனங்கள் கணக்கெடுக்க வேண்டும் என்பதுடன் இது போன்ற விடயங்களை மக்கள்
மத்தியில் விழிப்பூட்ட வேண்டும்.</p><p> இதன் மூலம் மேலும் உள்நாட்டு வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என
எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாண பாடசாலைகள் மீண்டும் திறப்பு! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-province-schools-holiday-announcement-1785812087"></link>
            <id>https://tamilwin.com/article/central-province-schools-holiday-announcement-1785812087</id>
            <summary type="text">புதிய இணைப்புமோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (05) முதல்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமையாக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;<span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது</p><p>பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்த தகவல்கள்,
நிலவும் வானிலை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று (4) மதியம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>தொடரும் சீரற்ற காலநிலை</h2><p>மலையகப் பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாகக் கண்டி மற்றும் நுவரெலியா
மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a3a188-04e4-4aaf-a9c9-98aba9a75616/26-6a715944eea49.webp' />&nbsp;</p><p>மண்சரிவு அனர்த்தங்களில்
சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என
மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>
நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று வீடொன்றின்
மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புப்
பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த அனர்த்தத்தில் காணாமல்போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட
மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள்
மீட்கப்பட்டன.</p><h2>மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி</h2><p>
</p><p>
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழைவீழ்ச்சியா ல் ஏற்பட்ட இந்த மண்சரிவுச்
சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e394e94-5897-42d7-bf41-3f200b0390c7/26-6a715945d0d6c.webp' /></p><p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 581
குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
இதேவேளை, கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி - சோலங்கந்தை பகுதியில் நேற்று மண்மேடு
சரிந்து வீழ்ந்ததில் வர்த்தக நிலையமொன்று சேதமடைந்துள்ளதுடன், 65 வயதுடைய ஆண்
ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து
வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:11:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலின் கைதினால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு - களமிறங்கிய அதிரடிப்படையினர் - முதல்வர் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalins-arrest-dmk-protest-tamil-nadu-1785826627"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalins-arrest-dmk-protest-tamil-nadu-1785826627</id>
            <summary type="text">புதிய இணைப்புதமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைதினையடுத்து 
தமிழகம் முழுவதும் வெடித்துள்ள போராட்டததை கட்டுப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைதினையடுத்து 
தமிழகம் முழுவதும் வெடித்துள்ள போராட்டததை கட்டுப்படுத்த அனைத்து முக்கிய நகரங்களிலும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதற்கமைய, தலைமைச் செயலகம், அண்ணா அறிவாலயம், மெரினா கடற்கரை, நீலாங்கரை மற்றும் முக்கியத் தலைவர்களின் இல்லங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும், போராட்டக்காரர்களை கலைப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலவர தடுப்பு வாகனங்கள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசும் சிறப்பு வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்</h2><p>
</p><p>
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது த.வெ.க. மகளிரணியினர், தஞ்சாவூர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9704d7-f715-4329-854a-b42066832c20/26-6a71947f611db.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p><p>அத்துடன், சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக பதற்றத்தினை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>

இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் பெருமளவு ஆதரவாளர்கள் குவிந்துள்ளதுடன், பெரும் பரபரப்பு நிலவுகின்றது.&nbsp; &nbsp;</p><p> </p><p>இந்த நிலையில் உதயநிதியின் நீலாங்கரை வீட்டை சுற்றி காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், திமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dklXminqMT4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-04T09:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் மற்றும் ஹேமசிறியின் மரண தண்டனையால் ஆபத்தில் இருந்து தப்பித்த சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politician-who-escaped-pujitha-s-death-sentence-1785834024"></link>
            <id>https://tamilwin.com/article/politician-who-escaped-pujitha-s-death-sentence-1785834024</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை தப்பிக்க&nbsp; வைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என சிவில் செயற்பாட்டாளர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்&nbsp; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>உண்மையைக் கண்டறிக..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>போதியளவான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8807a0a8-3052-4e00-9ba8-d771b60b8cb3/26-6a71b54840c89.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக சூழ்ச்சி செய்தவர்கள், நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் ஆதரவாக செயல்பட்ட&nbsp; அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.&nbsp;</p><p>உண்மையைக் கண்டறிந்து தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/467a3ad1-2bd6-41c4-bc19-a5ba382b96c0/26-6a71b5490d19e.webp' /></p><p>எனினும், பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய இருவருக்கு மாத்திரம் தண்டனை வழங்கிவிட்டு தொடர்புடைய சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை இந்த அரசாங்கம் தப்பிக்க வைக்க முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.&nbsp;</p><p>ஏனெனில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னர் விசாரணை செய்து குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான சில உயர் அதிகாரிகளிடமே மீண்டும் தற்போதைய விசாரணைகளும் ஒப்படைக்கப்பட்டிருப்பது&nbsp; இந்த வழக்கின் நடுநிலைத்தன்மையைப் பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:55:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-people-gone-employment-increased-1785834555"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-people-gone-employment-increased-1785834555</id>
            <summary type="text">இந்த ஆண்டின்&amp;nbsp; ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின்&nbsp; ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. </p><p>

இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன், இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.</p><p>இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக அந்நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>வெளிநாட்டு வருவாய்&nbsp;</h2><p> </p><p>

இதற்கமைய, ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கு 2,521 பேரும், தென் கொரியாவுக்கு 1,618 பேரும், ஜப்பானுக்கு 79 பேரும் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe989bb-3fc5-415c-b09c-1d46549a219f/26-6a71af87db9bc.webp' /></p><p> 

அத்துடன், ஜப்பானில் உற்பத்தி, கட்டுமானம், செவிலியர் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற 14 இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (03) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து விமான பயணச்சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன. </p><p>

இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களால் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/house-arrest-proposed-alternative-to-ease-prison-1785834829"></link>
            <id>https://tamilwin.com/article/house-arrest-proposed-alternative-to-ease-prison-1785834829</id>
            <summary type="text">சிறைகளில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொருத்தமான வழக்குகளில், நீதிமன்றக் காவல் அல்லது சிறைத்தண்டனைக்கு மாற்றாக, சந்தேக நபர்களையும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைகளில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொருத்தமான வழக்குகளில், நீதிமன்றக் காவல் அல்லது சிறைத்தண்டனைக்கு மாற்றாக, சந்தேக நபர்களையும் தண்டனை பெற்றவர்களையும் வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
</p><p>
 

மாற்று நீதிமன்றக் காவலாக வீட்டுக் காவலுக்கான விதிகளை நிறுவுவதற்காக அமைச்சரவையால் கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட வரைவாளர் ஒரு மசோதாவைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
</p><p></p><h2>சிறை அமைப்பு மீதான அழுத்தம்</h2><p>
 

2025 ஜூன் 23 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவை மேலும் ஆய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd4ed22-781a-434a-b5d9-fcf9d1c4ca1b/26-6a71b1e4a166e.webp' /></p><p>

 

மறுஆய்வுச் செயல்பாட்டின் போது, ​​முன்மொழியப்பட்ட மசோதாவில் சேர்க்கப்பட வேண்டிய கூடுதல் விதிகள் அடையாளம் காணப்பட்டன. </p><p>அதன்படி, தேவையான விதிகளை இணைத்து வரைவை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்கான அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
 

முன்மொழியப்பட்ட இந்தச் சட்டமானது, பொருத்தமான வழக்குகளில் வீட்டுக் காவலைப் பயன்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பை வழங்குவதோடு, நீதித்துறை மேற்பார்வையை உறுதிசெய்து நாட்டின் சிறை அமைப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:35:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தானாக திறந்து கொண்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள்.. விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sluice-gate-of-the-upper-kotmale-reservoir-1785826076"></link>
            <id>https://tamilwin.com/article/sluice-gate-of-the-upper-kotmale-reservoir-1785826076</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்புமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் இன்று (03) தானாகத் திறந்துள்ளன. 

மேல் கொத்மலை நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து பெய...</summary>
            <content type="html"><![CDATA[<h2><b>புதிய&nbsp;<span style="color: inherit; font-size: 1.75rem;">இணைப்பு</span></b></h2><p>மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் இன்று (03) தானாகத் திறந்துள்ளன.</p><p> 

மேல் கொத்மலை நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடுமையான மழை காரணமாக குறித்த கதவுகள் தானாக திறந்துள்ளன. </p><p>

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்ததைத் தொடர்ந்து, அதன் பாதுகாப்பு கருதி 3 வான் கதவுகள் தானியங்கி முறையில் (Automatically) திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. </p><p>



மழை தொடரும் பட்சத்தில் எஞ்சிய வான் கதவுகளும் தானாகத் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், கொத்மலை ஓயாவின் இருமருங்கிலும் மற்றும் தாழ்நிலப்பகுதிகளிலும் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

கனமழை காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள சென் கிளேயார் மற்றும் டெவோன் ஆகிய நீர்வீழ்ச்சிகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துக் காணப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></span></p><p>நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேல் கொத்மலை ஒரு வான் கதவு இன்று (04.08.2026) அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இன்றைய தினம் அதிகாலையிலும் நீர்மட்டம் அதிகரித்ததால் வான் கதவு திறந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடருமானால், ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கும் அபாயம் உள்ளது.</p><p>இதனால், அணைக்கட்டிற்கு கீழ் உள்ள கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வாழும் மக்கள் தொடர்ந்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4963b751-bb62-42e9-abca-6c8c72f982fc/26-6a718e17e6913.webp' /></p><p>

அப்பகுதியில் நிலவும் தொடர் மழை காரணமாக, செயின்ட் கிளேயர் மற்றும் டெவோன் ஆகிய அருவிகளில் வழக்கத்திற்கு மாறாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் - உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-dies-in-house-slide-1785833859"></link>
            <id>https://tamilwin.com/article/4-dies-in-house-slide-1785833859</id>
            <summary type="text">இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. 

ஹற்றன், கினிகத்தென -...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. </p><p>

ஹற்றன், கினிகத்தென - பொல்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் அதில் புதையுண்டு நான்கு பேர் உயிரிழந்தனர். </p><p>

உயிரிழந்தவர்களில் இருவர் மாத்தளையில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் என்றும், ஏனைய இருவரும் வீட்டில் வசித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>


ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி</b></h2><p>உயிரிழந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02c9ff94-b58b-49ed-9295-47c881cc7121/26-6a71addc748d4.webp' /></p><p>தாய் குசும் ரத்நாயக்க, மூத்த சகோதரி ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, இளைய சகோதரி மனேல் குமுதுனி ரத்நாயக்க, மகன் மஹின்ச தினேத் ரத்நாயக்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.</p><p> 

மலையகத்தில் ஏற்பட்ட திடீர் மழை காரணமாக பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>

அனர்த்தம் காரணமாக சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்காலிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 
</p>]]></content>
            <updated>2026-08-04T09:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-to-mobilize-secure-right-self-determination-1785833105"></link>
            <id>https://tamilwin.com/article/call-to-mobilize-secure-right-self-determination-1785833105</id>
            <summary type="text">கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஜனநாயக வழியில்
மக்கள் கட்சியுடன் அணிதிரளுமாறு முன்னாள் போராளியான ஈழத் தமிழர் முன்னணி
கட்சி தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஜனநாயக வழியில்
மக்கள் கட்சியுடன் அணிதிரளுமாறு முன்னாள் போராளியான ஈழத் தமிழர் முன்னணி
கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு கிரானை தலைமையமாக கொண்டு இயங்கிவரும் ஈழத் மிழர் முன்னணி கட்சி
நேற்று (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து மக்களது உரிமைகளையும்
வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து ஜனநாயக வழியில் அரசியல் உரிமைகளை
வென்றெடுப்பதற்காக 'ஈழத் தமிழர் முன்னணி' என்ற இயக்கம் முறைப்படி
உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும்
அறியதருகின்றோம்.</p><p></p><h2>போராட்டம்&nbsp;</h2><p>
எமது அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் மற்றும் தளபதிகள், கடந்த காலத்தில்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயல்பட்ட முன்னால்
போராளிகளாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb723d8-ee6c-49ed-827d-247513df1ea6/26-6a71aad3dfa93.webp' /></p><p>
</p><p>
'போராட்டம் என்னும் பெயரால் இழைக்கப்பட்ட தவறுகளும் ஏற்படுத்தப்பட்ட வலிகளும்
எமது இதயங்களில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும்.</p><p>கடந்த காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பல மனித
உரிமை மீறல்களும் சகோதரப் படுகொலைகள் முதல் ஏனைய சகோதர இன மக்களுக்கு எதிரான
வன்முறைகள் வரை நடைபெற்ற கொடூரங்களை எமது உறுப்பினர்களை எண்ணி பார்த்து ஆழமாக
வருந்துகின்றனர். இந்த வலி எமது வாழ்நாள் இறுதி வரை தொடரும்.&nbsp;</p><p></p><h2>மக்களின் உரிமை</h2><p>அந்த வகையில் போராட்ட காலத்தில் ஆயுத கலாச்சாரம் தலைதூக்கி இருந்த நேரத்தில்
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடமும், இலங்கை வாழ் அனைத்து மக்களிடமும் ஈழத்
தமிழர் முன்னணி சிரம் தாழ்த்தி இதயசுத்தியுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca959c76-a7b7-4c1e-a7e1-a2967083cac7/26-6a71aad498404.webp' /></p><p>
</p><p>
வன்முறை மற்றும் ஆயுத வழிகளை முற்றாக கைவிட்டு இனிவரும் எமது அரசியல் பயணம்
முழுக்க முழுக்க ஜனநாயக வழியில் மட்டுமே இருக்கும் என்பதை உறுதிபட
தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>அதேவேளை மக்களின் உரிமைக்கான ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தார்மீக
ஆதரவு வழங்கவும் தயங்கமாட்டோம் என்பதுடன் கல்வி பொருளாதாரம் மற்றும் சமூக
கட்டுமானங்களைப் பலப்படுத்தி கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த
ஜனநாயக வழியில் மக்களை அணிதிரளுமாறு அந்த அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T09:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வழக்கு ஆவணங்கள் வந்தவுடன் விசாரணை : உதயநிதி கைது விவகாரத்தில் நீதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-tamil-nadu-1785823705"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-tamil-nadu-1785823705</id>
            <summary type="text">புதிய இணைப்புதமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வழக்கை மதிய உணவு இடைவெளிக்கு பின் விசாரிப்பதாக நீதிபதி இளந்திரையன் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வழக்கை மதிய உணவு இடைவெளிக்கு பின் விசாரிப்பதாக நீதிபதி இளந்திரையன் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தஞ்சாவூரில் நேற்று(03.08.2026) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்யப்பட்டார்.</p><p> இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் பிணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தததாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>முறைப்பாட்டின் அடிப்படையில்</h2><p>மேகதாது அணை விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்தும் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் தஞ்சாவூரில் பனகல் கட்டிடம் முன்பு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று(03.08.2026) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b797baf8-f9ba-4c13-943b-4c8dea03cd4e/26-6a7186b958a1d.webp' /></p><p> 

இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.</p><p>மேலும், இது தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உதயநிதி மீது பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். </p><p>


அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நீலாங்கரை இல்லத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T08:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலக்கு வைக்கப்படும் சிறைச்சாலைகள்.. சபையில் நீதியமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisons-targetted-harshana-nanayakara-1785832597"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisons-targetted-harshana-nanayakara-1785832597</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>

மஹர சிறைச்சாலையில் நடந்த கலவரச் சம்பவம் தொடர்பாக இன்று (04) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை&nbsp;நீதியமைச்சர் வெளியிட்டார்.&nbsp;</p><p>அதில், இதுபோன்ற சம்பவங்கள் ஒரு அலையாக மற்ற சிறைச்சாலைகளுக்கும் பரவும் சாத்தியக்கூறு குறித்தும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>புலனாய்வுத் தகவல்..&nbsp;</h2><p>

பதற்றத்தை ஏற்படுத்தும் எந்தவொரு சூழ்நிலையையும் கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் உயிரிழப்புகளைக் குறைக்கவும் தேவையான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88800f36-2f5e-481a-887c-584a00b359a1/26-6a71a799ba715.webp' /></p><p>

அத்துடன், வேறு இரண்டு அல்லது மூன்று சிறைச்சாலைகளில் இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டமை குறித்த தகவல், சிறைத் துறைகளின் அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவம் கைதிகளுக்கு இடையேயான போதைப்பொருள் தொடர்பான தகராறு என்றாலும், மஹர சிறைச்சாலையில் நடந்த சம்பவம் ஆட்சிக்கு எதிராக கைதிகளால் நடத்தப்பட்டது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

சுமார் ஆயிரம் கைதிகள் ஒரே நேரத்தில் நடத்திய முன்னெப்போதும் இல்லாத இந்தத் தீ வைப்புத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட சதி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும், அத்தகைய செயல் நடந்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
தீ வைப்பு மற்றும் அழிவு ஆகியவை பொதுமக்களின் வரிப்பணம் என்பதை கைதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பணத்தைக் கொண்டே அவை மீண்டும் கட்டப்பட வேண்டும் என்றும் அமைச்சர்&nbsp;சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T08:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமந்திரனின் ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை நிறைவேற்ற திட்டம்..! எழுந்துள்ள கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dharmalingam-suresh-speech-tamils-1785830766"></link>
            <id>https://tamilwin.com/article/dharmalingam-suresh-speech-tamils-1785830766</id>
            <summary type="text">
நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்றவே இந்த 6 கட்சிகள்
கொண்ட கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்றவே இந்த 6 கட்சிகள்
கொண்ட கூட்டமைப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்
தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.</p><p>

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் பேராளிகளின்
வகிபாகம் எனும் தலைப்பில் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வின் போது உரையாற்றிய அவர்,&nbsp;</p><p>"இன்றைய கால கட்டத்திலே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் என்ன? இந்த மண்ணிலே
மக்களுக்காக நடந்தேறியுள்ள தியாகங்கள் என்ன? இந்த தியாகங்கள் எதற்காக நடந்தது
என்ற விடயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.</p><p></p><h2>அரசியல் அமைப்பு</h2><p>இந்த இலங்கை நாட்டில் தமிழர்கள் கடந்த 78 வருடங்களாக அடிமைகளாக வழிநடத்தப்பட்டு
கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் இந்த நாட்டிலே சட்டத்தை இயற்றுகின்ற
நடாளுமன்றம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9baf04a5-2395-4914-a230-566a1117741e/26-6a719f5fb0d78.webp' /></p><p> இந்த அரசியல்
அமைப்புக்காலம் காலமாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின்
விருப்பத்துக்கு மாறாகவும் நேர்மையாக இருந்த சில சிங்கள மக்களின்
விருப்பத்துக்கு மாறாகவும் அந்த அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.</p><p>1972ஆம் அண்டு 78 ஆண்டு அரசியல் அமைப்புக்கள் எங்கள் விருப்பத்துக்கு மாறாக
நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றும் அந்த அடிமைசாசனமான ஒற்றையாட்சி அரசியல்
அமைப்பு தான் இந்த மண்ணிலே இவ்வளவு அழிவுகளும் தியாகங்களும் நடந்தேறுவதற்கு
காரணமாக இருந்தது.</p><p> 1987 யூலை 2ஆ ம் திகதி முன்னாள் மறைந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனவும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின்
அரசியல் ஆசைக்கு மாறாக தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒப்பந்தத்தை
நிறைவேற்றியதால் இன்று இவ்வளவு இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது" என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T08:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக வீதிகளில் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-renewed-traffic-disruptions-on-roads-1785828681"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-renewed-traffic-disruptions-on-roads-1785828681</id>
            <summary type="text">நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில்
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன்- கொழும்பு மற்றும் ஹட்டன்- நுவரெலியா ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில்
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன்- கொழும்பு மற்றும் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதிகளில் மீண்டும் போக்குவரத்து தடைப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>நேற்று முதல் இடைவிடாது பெய்து வரும் மழையால், ஹட்டன் – கொழும்பு மற்றும்
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள்
ஏற்பட்டுள்ளதுடன், மண் மற்றும் கற்கள் வீதியில் சரிந்து விழுந்துள்ளன. </p><p>இதன்
காரணமாக பல இடங்களில் ஒரு வழிப் போக்குவரத்து மட்டுமே முன்னெடுக்கப்பட்டு
வருவதால், வாகன நெரிசலும் பயண தாமதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p></p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>
</p><p>குறிப்பாக, இன்று அதிகாலை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வூட்லன் மற்றும்
குயில்வத்தை பகுதிகளில் பாரியளவில் மண் சரிந்து வீதியை மறைத்ததால்,
ஹட்டனிலிருந்து கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களின்
போக்குவரத்தும் பல மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/000608d7-5699-4ca1-b9c3-ad22fe81316a/26-6a719b807db9c.webp' /></p><p>
</p><p>இதனையடுத்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயந்திரங்கள் சம்பவ இடங்களுக்கு
விரைந்து சென்று, வீதியில் குவிந்திருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகளை
முன்னெடுத்தன. </p><p>அதனைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு
வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p><h2>அறிவுறுத்தல்</h2><p>
எனினும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மலைச்சரிவுகள் மேலும்
தளர்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f180df67-6700-4989-a65c-1879209fc75e/26-6a719b8154626.webp' /></p><p> </p><p>இதனால் எந்நேரமும் புதிய மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம்
காணப்படுவதாகவும், இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் பொதுமக்களும்
மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>&nbsp;தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில்,
மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களும், பிரதான வீதிகளைப் பயன்படுத்தும்
வாகன சாரதிகளும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்புடன்
செயல்படுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:58:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் காவலில் உதயநிதி ஸ்டாலின்..பரபரப்புக்கு மத்தியில் அவசரமாக புறப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrested-mk-stalin-tvk-office-1785828059"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrested-mk-stalin-tvk-office-1785828059</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;இந்நிலையில், திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும்&nbsp;உதயநிதி ஸ்டாலினின் தந்தையான மு.க ஸ்டாலின் அவசரமாக புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>பரபரப்பான சூழ்நிலை</h2><p> உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தததாக முறைப்பாடளிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5cce0a6-7254-4215-af0b-48d54ec32561/26-6a719725db42b.webp' /></p><p>இதற்கு அமைய அவர் இன்று தமிழ்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஸ்டாலினின் கைதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றது.&nbsp;</p><p>இதற்கு மத்தியில், முன்னாள் முதலமைச்சர்&nbsp;ஸ்டாலின்&nbsp;திமுக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தனது மகனின் கைது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர் இதுவரை எவ்வித தகவலையும் வெளியிடவில்லை என இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக வங்கி பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-world-bank-representatives-1785827163"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-world-bank-representatives-1785827163</id>
            <summary type="text">கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், உலக
வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (03) திருகோணமலையில் உள்ள
ஆளுநர் செயலகத்தில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், உலக
வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (03) திருகோணமலையில் உள்ள
ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. </p><p>இதில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி
வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
</p><p></p><h2>ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பின்</h2><p>குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான்
அக்மீமன, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் உட்பட மாகாண
அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் உயரதிகாரிகள் என பலரும் கலந்து
கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c1f452d-87bc-4a5b-9811-22523a84e190/26-6a7193bcf2df7.webp' /></p><p>உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளுக்காக 100 மில்லியன்
அமெரிக்க டொலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது</p><p>மேலும், தேவையான
ஒப்புதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பிறகு, இத்திட்டம் 2027ஆம்
ஆண்டில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலைக்கலவரம்.. புலனாய்வில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-riot-police-investigation-cid-1785825963"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-riot-police-investigation-cid-1785825963</id>
            <summary type="text">மஹர சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட அமைதியின்மை, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான ஒரு தகராறால் தூண்டப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட அமைதியின்மை, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான ஒரு தகராறால் தூண்டப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>
இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் புலனாய்வுக் குழுக்கள், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பட்டா மற்றும் சாத்தான் என அடையாளம் காணப்பட்ட இரண்டு கைதிகள், இந்தக் கலவரத்தைத் தூண்டுவதில் ஈடுபட்டிருக்கலாம் என்பது குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
</p><p>

மேலும், இந்தச் சம்பவத்தில் கூடுதலாக இரண்டு கைதிகளின் ஈடுபாட்டைக் காட்டும் ஆதாரங்களையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>வாக்குமூலங்கள் பதிவு</h2><p>
</p><p>

சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த கைதிகள் உட்பட, சுமார் 25 நபர்களிடமிருந்து இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de9d914-93a0-4320-a86e-ff482cf873f8/26-6a718ff247ff0.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைத் தீர்மானிக்கவும், இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் காணவும் பல புலனாய்வுக் குழுக்கள் தற்போது மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன.
</p><p>


இதற்கிடையில், மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க சிறைச்சாலைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
</p><p>

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சிறை வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பைப் பேணுவதற்காக பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையும் (STF) தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிறைக் கூரை மீது&nbsp;ஏறியவர்கள்..&nbsp;</h2><p>

அதே நேரத்தில், மஹர சிறையில் நடந்த கலவரம் குறித்த தொடர் விசாரணைகளில் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e9da26-a7cd-47ef-9186-2d3a6132e0a6/26-6a7190f76ce1d.webp' /></p><p>அங்கு, கைதிகள் குழு ஒன்று வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சிறைச் சொத்துக்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.</p><p>
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, கடந்த சனிக்கிழமை மாலையில் சுமார் நான்கு கைதிகள் எந்தவித காரணமும் இன்றி சிறைக் கூரை மீது ஏறியுள்ளனர்.
</p><p>
தங்களால் இனி சிறையில் இருக்க முடியாது என்று கைதிகள் கூரையிலிருந்து கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>
மேலும் விசாரணையில், சிறை அதிகாரிகள் கைதிகளைப் பாதுகாப்பாகக் கீழே இறக்க முயன்றபோது, ​​மற்றொரு கைதிகள் குழு ஆத்திரமடைந்து ஆக்ரோசமாகச் செயல்படத் தொடங்கியதும் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-in-sainthamaruthu-narcotic-pills-1785826917"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-in-sainthamaruthu-narcotic-pills-1785826917</id>
            <summary type="text">சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை
மாத்திரைகளுடன் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை
மாத்திரைகளுடன் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது
பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகலாதன் தலைமையில்
அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினர் நேற்று(03) மாலை குறித்த
இளைஞரின் வீட்டைச் சோதனையிட்டனர்.
</p><p>
இதன்போதே, மருத்துவப் பரிந்துரைகள் ஏதுமின்றி சட்டவிரோதமாகப் பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்த சுமார் 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரும் அதே இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>
</p><p>
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதுடைய சந்தேகநபரிடம் சாய்ந்தமருது
பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bcdacd1-6fe4-488f-b04c-41725bf08c24/26-6a71906c5f963.webp' /></p><p>
</p><p>
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரைச் சான்றுகளுடன் கல்முனை நீதவான்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-for-yositha-and-wasantha-1785823745"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-for-yositha-and-wasantha-1785823745</id>
            <summary type="text">அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்று இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><p>
</p><h2><b>
கோரிக்கைகளை பரிசீலித்த நீதவான்</b></h2><p>இதன்போது சந்தேகநபர்களான யோசித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னகொட ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fbf2ad4-e6eb-4048-b2b9-7ee645dc08ea/26-6a718c45403cf.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-04T06:53:01+00:00</updated>
        </entry>
    </feed>
