<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-05T13:38:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகள் சுவீகரிப்பு தொடர்பில் மாகாண சபைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-acquisition-1785936476"></link>
            <id>https://tamilwin.com/article/school-acquisition-1785936476</id>
            <summary type="text">மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளை “தேசிய பாட சாலைகள்” என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளை “தேசிய பாட சாலைகள்” என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் படி, கல்வி என்பது மாகாண
சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும். எனினும், யுத்தகாலத்தில் மத்திய கல்வி
அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 350
பாடசாலைகளையும் (வடக்கில் 20 பாடசாலைகள்) நிர்வாக வழிகளினூடாகத் தேசிய
பாடசாலைகளாகத் தன் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.</p><p>

அன்றைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமா சுமாராக 650 பாடசாலைகளைச் சேர்த்து
1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தை அறிவித்தார். 

இந்த திட்டத்தை ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்த்தன ஆகியோரும் தீவிரமாக முன்னெடுத்தனர்.
</p><h2>
மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்</h2><p>
மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராகக்
க. சர்வேஸ்வரன் 2022 மே மாதத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில்
வழக்குத் தாக்கல் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e7b7d8a-5adf-4bd0-84f9-ace2fede15cd/26-6a733ac686342.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, வழக்கின் தொடர்ச்சியாக கடந்த 18.08.2023 மற்றும்
20.02.2024 திகதியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக
அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை அகற்றுமாறும், அதிபர்கள் தேசிய
பாடசாலை முத்திரையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சு
உத்தரவிட்டது.</p><h2>

தடுத்து நிறுத்தப்பட்ட 650 பாடசாலைகளிள் சுவீகரிப்பு</h2><p>
2025 மே 23 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலி சிட்டர் ஜெனரல், 

"குறிப்பிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தற்போது சட்டம் இல்லை” எனச் சட்டமா
அதிபர் தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13a15261-4e90-410d-870d-a2e03e02a68e/26-6a733ac754349.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர வேறு எதனையும் சுவீகரிக்கும்
உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்ற எழுத்து மூல உறுதிப்பாட்டையும் சட்டமா
அதிபர் நீதி மன்றத்துக்குச் சமர்ப்பித்தார். </p><p>

இதற்கமைய, வடக்கு மாகாண முன்னாள்
கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப்
போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்துள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில்
கையகப்படுத்தப்படவிருந்த 650 பாடசாலைகளும் (வடக்கில் 48 பாடசாலைகள்) மத்திய
அரசால் பறிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு.. மின்சக்தி அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continuous-power-cuts-mannar-letter-to-minister-1785935589"></link>
            <id>https://tamilwin.com/article/continuous-power-cuts-mannar-letter-to-minister-1785935589</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வரும்&amp;nbsp;மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாத்திலக்கவுக்கு மன்னார் மாவட்ட பொது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வரும்&nbsp;மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாத்திலக்கவுக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர்
வி.எஸ்.சிவகரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். </p><p>குறித்த கடிதத்தில், "மன்னார் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள்
பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.</p><p>பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பாதிக்கப்படுவதுடன் பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள்
செயலிழப்பதுடன் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
</p><p>
குறிப்பாக ஆண்டு ஐந்து மற்றும் கா.பொ.த உயர்தர பரீட்சைக்கு தயாராகும்
மாணவர்களும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் மின்வெட்டு சட்டவிரோத நடவடிக்கைக்கும்
சாதகமாக அமைந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் பல தடவைகள் மின் துண்டிப்பு
ஏற்படுகிறது.</p><h2>கடும் சிரமத்தில் மக்கள்..&nbsp;</h2><p>
</p><p>
அரசியல்வாதிகளும் மாவட்ட நிர்வாகமும் உறக்கத்தில் உள்ளனர். மக்கள் நிலை பற்றி
அவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. மன்னார் மக்களின் விருப்பமின்றி அதிகார
வர்க்கத்தின் அடக்குமுறையால் அமைக்கப்பட்ட 40 காற்றாலைகளில் தினமும் பல
மில்லியன் ரூபாவை வருமானமாக பெறுகிறீர்கள். ஆனால் மன்னார் மக்களை வேண்டுமென்றே
வஞ்சிக்கிறது மின்சார சபை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94958c61-381f-4e50-b272-f9402aa44edf/26-6a7339be0601a.webp' /></p><p>
</p><p>
தடையற்ற மின்சாரம் தருவோம் என உத்தரவாதம் அளித்த அரசாங்கம் மின் தடையை
ஏற்படுத்துகிறது. பல அமைச்சர்கள் மன்னாருக்கு வருகை தந்து மக்களுக்கு ஏமாற்று
கதைகள் கூறிவிட்டு போகிறார்களே தவிர இந்த மக்களுக்கு எந்தப் பலனும்
கிடைப்பதில்லை.
</p><p>
வட கிழக்கிற்கு வெளியே இவ்வாறு ஏமாற்று வேலையை மின்சார சபையால் செயல்படுத்த
முடியுமா? அரசியல் ரீதியிலும் சரி நிர்வாக ரீதியிலும் எமது மக்களை ஏமாற்றி
வஞ்சிக்கிறார்கள்.பல மாதங்களாக ஜனநாயக ரீதியாக போராடிய எமது மக்களின்
உணர்வுகளை மதிக்காத அரசும் மின்சார சபையும் இப்பொழுது மன்னார் மக்களை
தொடர்ந்து வஞ்சிப்பதாகவே நாம் உணர்கிறோம்.
</p><p>
எம்மிடமிருந்து வருமானம் பெறும் தாங்கள் எமது மக்களுக்கு போதிய மின்சார
கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும்
ஆகும்.அந்தப்
பொறுப்பில் இருந்து மின்சார சபை விலகுவது வேதனைக்குரிய விடயம்.</p><p>

ஆகவே உடனடியாக மின் கட்டமைப்புகள் சீர் செய்யப்பட்டு தடையற்ற மின்சாரம்
கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் தினமும்
பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.</p><p>இல்லையேல் இழப்பீடு
கோரி நீதிமன்றம் நாட வேண்டி வரும்.

தொடர்ந்து மன்னார் மக்களை வஞ்சிப்பது அரசு நிர்வாகத்தின் இயலாமை.

உடனடியாக மின் தடையை நிவர்த்தி செய்ய வழி ஏற்படுத்த வேண்டும் என
கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-america-war-1785935101"></link>
            <id>https://tamilwin.com/article/iran-america-war-1785935101</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை
முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும்
சாதக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை
முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும்
சாதகமாக அமைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த ஆலோசனைகளின் மூலம், சர்வதேச மசகு எண்ணெய் போக்குவரத்திற்கு மிக
முக்கியமான ஹோர்முஸ் நீரிணை விரைவில் கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும்
திறக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த நேர்காணலில், பேச்சுவார்த்தைகள்
நல்ல முறையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், ஒருவேளை ஈரான் ஒப்பந்தத்தில்
இருந்து மீண்டும் பின்வாங்கினால் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்
என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>அமைதிப் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த நேர்மறையான தகவல்களைத் தொடர்ந்து,
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளதோடு
பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன.
</p><p>
ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான
இடைக்கால ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்காவும் ஈரானும் இறுதி கட்டத்தை
நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832e8ba6-768b-41c0-aadf-d56afd52c4a5/26-6a73389009f55.webp' /></p><p>
</p><p>
எனினும், அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வரும் வரை ஒப்பந்தம்
இறுதியாவதில் தாமதம் ஏற்படும் என ஈரானிய அரசு ஊடகங்கள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதுகாப்பான கப்பல் பாதை</h2><p>
</p><p>
ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறுகையில்,
பாதுகாப்பான கப்பல் பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் நடத்தப்படும்
பேச்சுவார்த்தைகள் நேர்மறையாகத் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனிடையே, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் தொலைபேசியில்
உரையாடிய ஜனாதிபதி ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக்
குறைப்பது குறித்தும் பிராந்திய அமைதியை ஏற்படுத்துவது குறித்தும்
ஆலோசித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:24:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vikram-misri-meets-with-foreign-affairs-minister-1785934284"></link>
            <id>https://tamilwin.com/article/vikram-misri-meets-with-foreign-affairs-minister-1785934284</id>
            <summary type="text">ஒரு நாள் பயணமாக இன்று(05.08.2026) கொழும்பை வந்தடைந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நாள் பயணமாக இன்று(05.08.2026) கொழும்பை வந்தடைந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துப்
பேச்சு நடத்தியுள்ளார்.
</p><p>
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய மற்றும்
முன்னுரிமை பெற்ற துறைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு
ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்தாலோசித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc72c8e-2730-4fb6-a3eb-a40649a51c26/26-6a7335a625722.webp' /></p><p>முன்னதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலை வாய்ப்பு தேடி கனடா சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - பிரதான சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-in-search-of-employment-kidnapped-1785934214"></link>
            <id>https://tamilwin.com/article/canada-in-search-of-employment-kidnapped-1785934214</id>
            <summary type="text">கனடாவில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி 3 வடக்கு இளைஞர்களை
எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் சென்று கடத்த முற்பட்ட, ஆள்கடத்தல்
வலையமைப்புடன் தொடர்புடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி 3 வடக்கு இளைஞர்களை
எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் சென்று கடத்த முற்பட்ட, ஆள்கடத்தல்
வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆலோசனையின் பேரில், துபாய் ஊடாக
எத்தியோப்பியாவுக்கு மூவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். </p><p>

இவர்கள், சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்
கும்பல் ஒன்றினால் எத்தியோப்பியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்ததுடன், இது
தொடர்பில் முறைப்பாடு ஒன்று கடந்த மே 27ஆம் திகதி பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aac94175-758c-471f-a517-059a972cfd69/26-6a7332066d603.webp' /></p><p>
</p><p>
குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் 64 இலட்சம் ரூபா
பணத்தைப் பெற்றுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களை மீட்க வேண்டும் எனக் கூறி,
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இருந்தும் சுமார் 20 மில்லியன் ரூபா
பணத்தையும் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><h2>

பிரதான சந்தேக நபர் கைது</h2><p>

இதனைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், நெடுங்கேணிப் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், உரிய இராஜதந்திர அதிகாரிகளுடன் இணைந்து
மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள்
மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea89d865-71b9-46f0-848b-0c133754caed/26-6a7332072b62d.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, கடந்த ஜூன் 06 ஆம் திகதி எத்தியோப்பிய அதிகாரிகளால்
இந்த 3 இலங்கையர்களும் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பாகிஸ்தான் பிரஜைகளும், ஒரு எத்தியோப்பியப்
பிரஜையும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.</p><p>

 மேலும், யாழ்ப்பாணம், வவுனியா
மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 34 வயதுக்கு
இடைப்பட்ட இந்த 3 இலங்கை இளைஞர்களும் கடந்த முதலாம் திகதி மீள நாட்டிற்கு
அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:53:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசம் குற்றச்சாட்டிற்கு பதிலடிக் கொடுத்த அரச தரப்பு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-warns-againt-sara-kariyavasam-1785934246"></link>
            <id>https://tamilwin.com/article/npp-warns-againt-sara-kariyavasam-1785934246</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு ஆளும் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொலிஸ் மா அதிபருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு ஆளும் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இலங்கையின் தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளமை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

அச்சுறுத்தலுக்கான பிரதான காரணம் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><h2>மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஊழல் மோசடி விசாரணை</h2><p>நீண்டகாலமாக ஊழல், இலஞ்சம் மற்றும் மோசடிகளில் சிக்கியிருந்த இந்த நாட்டில், பல அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட மூடிமறைக்கப்பட்ட வழக்குகளும் விசாரணைகளும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b614096-bc6b-4e4b-a715-06de93bf81d9/26-6a7331a793f43.webp' />&nbsp; &nbsp;</p><p>
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அவர்களை நாட்டுக்கு அழைத்து வந்து சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கான முனைப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விசாரணைகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>“நடு வீதியில் வைத்து கொல்ல வேண்டும்" என்ற கொடூரமான வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிடுவது நீதிக்கும், சட்டவாட்சிக்கும் விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும் என அமைச்சர் சாடியுள்ளார்.
</p><p>போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மக்களின் சொத்துக்களை அபகரித்த நபர்களே இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><h2>படுகொலை சம்பவங்களுடன் தொடர்புட்ட அரசியல்வாதிகள்</h2><p>
</p><p>
சாகர காரியவசம் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியின் சில அரசியல்வாதிகள், உண்மையில் நாட்டின் பாரிய படுகொலைச் சம்பவங்கள் மற்றும் பாரிய கொள்ளைகளுக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab72ddc-8c40-4ea0-8a78-49de2dafacbd/26-6a73385d4db78.webp' /></p><p>
</p><p>
எந்தவொரு தரப்பினரின் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது அவற்றைக் குழப்பவோ எந்தவொரு அரசியல் கட்சிக்கும் உரிமை கிடையாது அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:51:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி - தங்கத்துரை ஆகியோரின் சிலை தொடர்பான தடை.. நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuttymani-thangadhurai-statue-ban-court-order-1785931605"></link>
            <id>https://tamilwin.com/article/kuttymani-thangadhurai-statue-ban-court-order-1785931605</id>
            <summary type="text">வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>வேலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸாரால் அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான
கந்தசாமி சதீஷுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.&nbsp;</p><h2>கால அவகாசம்&nbsp;</h2><p>இந்நிலையில், குறித்த வழக்கில் இன்று வரை
வழங்கப்பட்டிருந்த சிலை அமைப்பதற்கான தற்காலிக தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/766eb7ac-fb09-4838-be84-ab6fd01b3ac0/26-6a732e17b9b64.webp' /></p><p>
</p><p>
கடந்த 22.7.2026 அன்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p>வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு
நேற்றும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் மேலும்
ஆதாரங்களை சமர்ப்பிக்க 14 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டது. </p><p>எனினும், 106ஆம் இலக்க சட்ட
பிரிவின் கீழ் 14 நாட்களுக்கு மேல் தடை உத்தரவு வழங்க முடியாது என்ற
அடிப்படையில், பொலிஸார் எந்தவிதமான ஆதாரங்களையும் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை
உத்தரவு இல்லாதாக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T12:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்ற மத்திய மாகாண ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harsha-suranga-fernando-central-province-governor-1785932534"></link>
            <id>https://tamilwin.com/article/harsha-suranga-fernando-central-province-governor-1785932534</id>
            <summary type="text">மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற சமூக சுகாதார சிகிச்சை நிபுணரான ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ&amp;nbsp;பதவியேற்றுள்ளார் இன்று(05.08.2026) ஜனாதிபதி செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற சமூக சுகாதார சிகிச்சை நிபுணரான ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ&nbsp;பதவியேற்றுள்ளார்</p><p> இன்று(05.08.2026) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் புதிய ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23a820c4-0e4f-469c-a682-d4ff51d5aff4/26-6a732f52b8575.webp' /></p><p>இவர் உலக சுகாதார அமைப்பில் பல நாடுகளில் தடுப்பூசி நிபுணராகப் பணியாற்றியதோடு, கண்டி மாவட்டத்தின் சமூக மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T12:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவரது மனைவியும்..! தொழிலதிபரின் திருமணத்தில் கசிந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithripala-sirisena-case-easter-attack-issue-1785914995"></link>
            <id>https://tamilwin.com/article/maithripala-sirisena-case-easter-attack-issue-1785914995</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினால் முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பிரபல தொழிலதிபரின் மகனின் திருமணத்திற்கு மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையான தோற்றத்தில் இருந்துள்ளமை பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது மைத்திரிபாலவை நன்கு அறிந்தவர்கள் திருமணத்தில் பாடலொன்றினை பாடுமாறு வற்புறுத்திய நிலையில், அவர் அங்கு தந்தை மகனை பற்றிய பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் மருமகளும்</h2><p>

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மைத்திரிபாலவின் பாடல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf444d5a-9f2f-4ade-acac-4f75659d87e1/26-6a72fbb614f80.webp' /></p><p>

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன் காரணமாக அவர் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><h2>பிரபல அரசியல்வாதியின் மகனும் தொடர்பு</h2><p>

இருப்பினும், இந்த மோசடியில் பிரபல அரசியல்வாதியின் மகனும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.</p><p>2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்த நிலையில்,முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு&nbsp; மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், மகன் தொடர்பில் பரவும் தகவல் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரம் போன்ற விடயங்களினால்&nbsp;மைத்திரிபால சிறிசேன பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T12:35:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலநிலை சீற்றத்தால் மீண்டும் வாழ்வாதாரங்களை இழந்த மலையக மக்கள் - அரசிடம் அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continuous-inclement-weather-1785932155"></link>
            <id>https://tamilwin.com/article/continuous-inclement-weather-1785932155</id>
            <summary type="text">தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகள் மீண்டும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகள் மீண்டும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை
இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று(04.08.2026) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>



தொடர் சீரற்ற காலநிலை</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>



நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது இந்த நாடு பாரிய வங்குரோத்து நிலையில்
காணப்பட்டது. குறிப்பாக கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாதவாறு பல
நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். </p><p>

ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பின்னர்
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு நிவாரணங்களை
வழங்கினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff4cd655-e54a-4e56-92a5-5043b6112dd2/26-6a732a16580a1.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக, தற்பொழுது கடற்றொழில் மீண்டும் இயல்பு
நிலைக்குத் திரும்பியுள்ளது.

அதே போன்று, தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகள் மீண்டும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை
இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். </p><p>பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி
செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. மலையகத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து
நிவாரணங்களையும் உதவிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும்.</p><h2>


குற்றங்களற்ற சமூகம்</h2><p>


மேலும், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என்பதற்காகவே மக்கள் எமக்கு இந்த ஆணையை வழங்கினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aea3f7c-2464-4b6e-93ef-e92c358ea68d/26-6a732a172338c.webp' /></p><p> </p><p>மக்களின் அந்த
எதிர்பார்ப்பிற்கமைய, ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் சட்டப்பூர்வமான
வழியில் உறுதியாக முன்னெடுக்கப்படும்.
</p><p>


எமது ஆட்சியில் சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத நிலையை உருவாக்குவதே
எமது பிரதான இலக்காகும்.</p><p>

 நாமும் சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பதால், சிறையில்
இருப்பதன் வேதனையும் வலியும் எமக்கும் நன்றாகவே தெரியும். எனவே, நாட்டில்
குற்றச் செயல்கள் முற்றாக இல்லாத சூழலை உருவாக்குவோம் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் யாழில் கொள்ளைச் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/robbery-in-jaffna-during-power-outage-1785928351"></link>
            <id>https://tamilwin.com/article/robbery-in-jaffna-during-power-outage-1785928351</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச்
சம்பவம் ஒன்று நேற்றிரவு(05.08.2026) இடம்பெற்றுள்ளது.

இது குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச்
சம்பவம் ஒன்று நேற்றிரவு(05.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு
பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது
தாக்குதல் நடாத்தியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>பின்னர் அந்த வீட்டில் இருந்த 10 பவுண் தங்க
ஆபரணங்களை அந்த கும்பலானது கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e220358-fe99-418b-bdc8-6752c9e1ca5d/26-6a7324642bbc8.webp' /></p><p>
குறித்த கும்பலானது முகங்களை மூடிக் கட்டியவாறு வந்ததால் அடையாளம் காண
முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது.</p><p> வட்டுக்கோட்டை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T12:02:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் மீள் திறக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-reopen-1785929813"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-reopen-1785929813</id>
            <summary type="text">மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) முதல் வழக்கம் போல் செயல்படும் என ஹட்டன் கல்விப்பணிமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) முதல் வழக்கம் போல் செயல்படும் என ஹட்டன் கல்விப்பணிமனை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன.&nbsp;</p><p><span style="font-size: 14px;">இது தொடர்பில் நேற்று ஹட்டன் வலயக் கல்விப்பணிமனை உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.&nbsp;</span></p><p><span style="font-size: 14px;">இந்நிலையில், குறித்த பாடசாலைகள்&nbsp;</span>நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03d83bc-1991-4181-b289-2e109190fbe3/26-6a73223dded0c.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T11:47:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடனடியாக நடைமுறைக்கு வரும் தடை உத்தரவு ..! புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strict-tuition-ban-during-a-l-scholarship-exams-1785929017"></link>
            <id>https://tamilwin.com/article/strict-tuition-ban-during-a-l-scholarship-exams-1785929017</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில், மேலதிக வகுப்பு மற்றும் கல்வி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில், மேலதிக வகுப்பு மற்றும் கல்வி செயற்பாடுகளுக்கு எதிராக பரீட்சை ஆணையம் கடுமையான தடைகளை விதித்துள்ளது.</p><p> 

இதற்கமைய, எதிர்வரும் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை 2,532 மையங்களில் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகள், பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை அச்சிடுவது அல்லது விநியோகிப்பது ஆகியவை நேற்று(04.08.2026) நள்ளிரவு முதல் தேர்வு முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளன. </p><p>

அதே போன்று, பரீட்சை மாதிரியான கேள்விகளை வழங்குவதாகக் கூறும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்டவைகளை ஊடகங்களை வெளியிடுவதும் அல்லது வைத்திருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2> 

கல்வி செயற்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை</h2><p>

இந்த நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 9 அன்று 2,723 மையங்களில் நடைபெறவுள்ள 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி செயற்பாடுகளுக்கு இன்று(05.08.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d13bb7c2-2ad3-4220-891f-18787c1291a2/26-6a7321e28ac3b.webp' /></p><p> 

 

இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது தரப்பினரும் 1968 ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுகள் சட்டம் எண் 25இன் கீழ் குற்றவாளியாக பார்க்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை ஆணையகத்திற்கு தெரியப்படுத்தலாம்.</p><p> 

இதன்படி, முறைப்பாடுகளை பொலிஸ் தலைமையகம்: 011‑2421111 பொலிஸ் அவசர எண்: 119 பரீட்சை ஆணையம் அவசர உதவி எண்: 1911 பள்ளித் தேர்வுகள் அமைப்பு மற்றும் முடிவுகள் பிரிவு: 011‑2784208 / 011‑2784537 ஆகிய எண்களுக்கு அழைப்பை மேற்கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.</p><p></p><p></p><p><br></p><p> 

 </p>]]></content>
            <updated>2026-08-05T11:43:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீயணைப்பு செயற்பாட்டில் டிரான் அலஸ் செய்த பாரியளவிலான மோசடி அம்பலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/express-pearl-ship-case-tiran-alas-1785920800"></link>
            <id>https://tamilwin.com/article/express-pearl-ship-case-tiran-alas-1785920800</id>
            <summary type="text">&amp;nbsp;எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இலங்கையில் பிரதான மட்டத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு நிறுவனமே ஈடுபட்டிருந்தது. அந்த நிறுவனத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இலங்கையில் பிரதான மட்டத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு நிறுவனமே ஈடுபட்டிருந்தது. அந்த நிறுவனத்திலுள்ள தீயணைப்பாளர்கள் சாதாரண பயிற்சி பெற்றவர்கள்.அத்தோடு தீயணைப்புக்கு தேவையான உபகரணங்கள் போதியளவு இருக்கவில்லை.
</p><p>குறித்த நிறுவனம் தீயை அணைப்பதற்கு பயன்படுத்திய இரசாயனங்கள் அனைத்தும் காலாவதியானதால் தீ பாரிய அளவில் பரவுவதற்கும் காரணமாக இருந்துள்ளது.அத்தோடு தீயணைப்பு நடவடிக்கைக்காக குறித்த நிறுவனம் பல மில்லியன் ரூபாக்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.</p><p>என்குஸ் பயர் நிறுவனமே குறித்த தீயணைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>டிரான் அலசின் கம்பனி செய்த மோசடி</h2><p>இந்த நிறுவனம் முன்னாள் அமைச்சர் டிரான் கிறிஸ்டோபர் பிரசன்ன அலசுக்கு சொந்தமானதாகும்.அவரின் நிறுவனமே காலாவதியான தீயணைப்பு பொருட்களை பாவித்து தீயை மேலும் பரவலடைய செய்ததோடு மோசடியாக பல மில்லியன் ரூபா தொகையை பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.</p><p>
டிரான் அலஸ் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தில் மேற்கொண்ட மோசடி தொடர்பில் அவருக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதரங்களை கொண்டே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அவர் மேலும் தெரிவித்த கருத்து
இந்த தீவிபத்தால் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அல்லது அதற்கும் அதிகமான சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டது. 
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் நைட்ரிக் அமிலம் உட்பட பல இரசாயனங்கள் இருந்ததால் தீயணைப்பு செயற்பாட்டுக்கு பயன்படுத்த பாவிக்கப்பட்ட கலாவதியான இரசாயனங்கள் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501aa33c-4f2d-4915-a206-ae937269fe03/26-6a72fd23726f1.webp' /></p><p>இந்தத் தீயை அணைக்கும் செயற்பாட்டுக்கு பெறப்பட்ட பல மில்லியன் கணக்கான டொலர்கள் எங்கே? அரசாங்கமும் இததற்குப் பணம் செலுத்தியதா? பணம் செலுத்தியிருந்தால் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது என்பது குறித்தும் தெரியவரவில்லை.
</p><p>தீ மேலும் பரவுவதற்கு இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து திரவங்களும் காலாவதியாகி குவித்து வைக்கப்பட்டிருந்தவையாகும். அவை அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இன்று என்குஸ் பயர் என்ற நிறுவனம் மூடப்பட்டுள்ளது.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பாரிய அளவில் பரவுவதற்கும் பாரிய சேதத்துக்கு காரணமான டிரான் அலசின் கம்பனிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>இச்சம்பவம் தொடர்பில் எவ்வித விசாரணையும் நடைபெற்றவில்லை.இன்றும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் டிரான் அலஸ் இருக்கிறார்.இது தொடர்பில் முறையாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp; </p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T11:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய அரசின் முக்கிய பிரதிநிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-indian-foreign-secretary-president-anura-1785929082"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-indian-foreign-secretary-president-anura-1785929082</id>
            <summary type="text">இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.&amp;nbsp;

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.&nbsp;</p><p>

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்கையில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்புத் திட்டங்களை மீளாய்வு செய்வதில் இந்த சந்திப்பின் போது&nbsp;கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><h2> 450 மில்லியன் டொலர் &nbsp;</h2><p>டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, இக்கூட்டத்தின் போது 350 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கடன் தள்ளுபடி ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன.</p><p>மேலும், புயலுக்குப் பிறகு ஏற்பட்ட புனரமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கொள்முதல் தேவைகளுக்கு ஆதரவளித்து வருவதாக இந்திய உயர் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d8eaf7c-6761-4464-930d-09fea841aecb/26-6a731eea92e1b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T11:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுநலவாயப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tharanga-wins-gold-medal-at-commonwealth-games-1785928220"></link>
            <id>https://tamilwin.com/article/tharanga-wins-gold-medal-at-commonwealth-games-1785928220</id>
            <summary type="text">அண்மையில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின்
ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து சாதனை படைத்த இலங்கை விமானப்படையைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின்
ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து சாதனை படைத்த இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்கவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சாதனையால் அவருக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த நிகழ்வு, இன்று(05.08.2026) விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. </p><h3>



தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த அதிகாரி</h3><p>

தாய்நாட்டுக்குப் பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும் முந்தைய
சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து
எதிரிசிங்கவினால், அவர் கோப்ரல் பதவி நிலையிலிருந்து சார்ஜன்ட் பதவி நிலைக்கு
உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd7612da-53ce-4ffe-9364-180da5c7d8d2/26-6a731ab25a3f5.webp' /></p><p>
</p><p>
 அத்துடன், விமானப்படைத் தளபதியால் ரொமேஷ் தரங்கவுக்குச்
விசேட நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனைக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த அவரது பயிற்சியாளர் டோனி
பிரசன்னா மற்றும் உடற்பயிற்சி உதவியாளர் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின்
சேவைகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2ba3cb8-dd68-44bd-9fa6-dae24e057aac/26-6a731ab31b1ca.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/498ccd39-3fee-4726-b597-5d91570009eb/26-6a731ab3e7964.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e6236f-ded6-4af8-a877-b7068cfab3da/26-6a731ab4bdf2f.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/akila-viraj-in-the-bribery-corruption-commission-1785908875"></link>
            <id>https://tamilwin.com/article/akila-viraj-in-the-bribery-corruption-commission-1785908875</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (நிர்வாக சீர்திருத்தங்கள்) பணியாற்றிய காலத்தில் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.</p><p>

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியபோது, ​​அவர் தனது உத்தியோகப்பூர்வ பணியாளர்கள் என்று கூறி நான்கு ஊழியர்களைப் பணியமர்த்தினார் என இலஞ்ச ஆணைக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p><p>

ஒருவர் தனது சொந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிக்கு அனுப்பப்பட்டிருந்த வேளையில், மற்றொருவர் அலுவலகம் சாராத பணிகளில் ஈடுபட்டிருந்தார். </p><p>

அலுவல் ரீதியான பொறுப்புகள் வழங்கப்படாத போதிலும், அரச நிதியிலிருந்து மொத்தம் 2,768,836.14 ரூபாய் மதிப்பிலான சம்பளம் வழங்க அவரால் ஏற்பாடு செய்யப்பட்டதால், அரசிற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார்.</p><p>இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கானவே அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகிலவிராஜ் காரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1QGQREGh-68" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p><p>

</p>]]></content>
            <updated>2026-08-05T10:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை போக்குவரத்து சபை பெயர் பலகையை பயன்படுத்தி நடக்கும் மோசடி - பயணிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scam-using-sri-lanka-transport-board-nameplates-1785927228"></link>
            <id>https://tamilwin.com/article/scam-using-sri-lanka-transport-board-nameplates-1785927228</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) பெயர் பலகையைப் பயன்படுத்தி உணவகங்கள்
பலவற்றில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகப் பயணிகள் கவலை
தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) பெயர் பலகையைப் பயன்படுத்தி உணவகங்கள்
பலவற்றில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகப் பயணிகள் கவலை
தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

அனுராதபுரம், கோமரங்கடவள பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இலங்கை
போக்குவரத்து சபையின் உத்தியோகபூர்வ பெயர் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனை நம்பி உணவகத்திற்கு வரும் பயணிகளிடம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
மற்றும் பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வழக்கமான விலையை விட ரூ. 30 முதல்
ரூ. 40 வரை கூடுதலாக அறவிட்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பயணிகள்
குற்றம் சாட்டுகின்றனர்.
</p><h2>
பயணிகள் விசனம்</h2><p>
மேலும், குறித்த உணவகத்தில் அடிப்படை வசதியான கழிப்பறை வசதிகள் சுத்தமாகப்
பராமரிக்கப்படுவதில்லை என்றும், சுகாதாரமற்ற முறையில் காணப்படுகின்றது என்றும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/039c51eb-1dba-4943-bd32-65682541c916/26-6a7316d6b1ee5.webp' /></p><p>
</p><p>
இந்த உணவகத்திற்கு அனுராதபுரம், அக்கரைப்பற்று, கொழும்பு, கண்டி, குருநாகல்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகளில்
பயணிக்கும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். </p><p>

இலங்கை போக்குவரத்து
சபையின் பெயர் பலகையை பார்த்து பயணிகள் பலர், இவ்வாறான விலை
ஏற்றத்தாலும் சுகாதாரமற்ற சூழலாலும் பெரும் அசெளகரியங்களுக்கும் நிதிச்
சுரண்டலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.</p><p>

எனவே, இந்த விடயம் தொடர்பில், உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு
சம்பந்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கும், நுகர்வோர் விவகார
அதிகாரசபை மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/132a98a3-ac03-4c34-9b76-37aa8b262299/26-6a7316d79a22a.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T10:56:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் வாகன இறக்குமதியால் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள பெருமளவு பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-imports-sri-lanka-1785924658"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-imports-sri-lanka-1785924658</id>
            <summary type="text">மோட்டார் வாகன இறக்குமதி மூலம் சுங்க வரிகளாக ரூ. 896.4 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வர்த்தக சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகன இறக்குமதி மூலம் சுங்க வரிகளாக ரூ. 896.4 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வர்த்தக சம்மேளனம் தனது முக்கிய வெளியீடான 'மோட்டார் வாகனத் துறை அறிக்கை 2025/26'ஐ வெளியிட்டுள்ளது.</p><p>இலங்கையின் வாகனத் துறை ஒரு புதிய கட்டத்திற்குள் பிரவேசிப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.</p><h2>முதல் 06 மாதங்களில்</h2><p>
15இற்கும் மேற்பட்ட உள்நாட்டு வாகன இணைப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருவதோடு, குறைந்தபட்சம் 20வீத உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் கொள்கை காரணமாக வேலைவாய்ப்புகளும் உள்நாட்டு மதிப்பும் அதிகரித்துள்ளன.</p><p>2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் மாத்திரம் 3,27,000க்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b407cb2-e8de-43cd-94a2-af819a143c5a/26-6a7316932b325.webp' /></p><p>
உலகளவில் விற்பனையாகும் புதிய சிற்றூந்துகளில் நான்கில் ஒன்று மின்சார வாகனமாகும்.

இதன் விற்பனை முதன்முறையாக 20 மில்லியனைக் கடந்துள்ளது.
</p><p>இலங்கைப் பொருளாதாரத்தில் வாகனத் துறையின் பங்கு, இறக்குமதி மற்றும் பதிவு தரவுகள், எரிபொருள் வகை சார்ந்த சந்தைப் போக்குகள் மற்றும் இத்துறையின் எதிர்கால வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MMIpc2_uSoE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-05T10:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-kanthalay-1785921626"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-kanthalay-1785921626</id>
            <summary type="text">கந்தளாய் - வென்றாசன்புர பகுதியில் பேருந்தும், மோட்டார்சைக்கிளும் இன்று (05.08.2026) காலை மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.&amp;nbsp;இந்த விபத்தில் ஒருவர் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் - வென்றாசன்புர பகுதியில் பேருந்தும், மோட்டார்சைக்கிளும் இன்று (05.08.2026) காலை மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.&nbsp;</p><p>இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்து கந்தளாய் தள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><h2>ஒருவர் காயம்</h2><p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று
சீகிரியாவுக்குச் சென்றுவிட்டு,&nbsp; திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, கந்தளாய் பிரதான வீதியின் 91ஆம் கட்டைப்
பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியைக் குறுக்கறுத்த மோட்டார்
சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8360e92e-212b-49f2-a730-98d4fb0780d4/26-6a73158b4ca98.webp' /></p><p>
</p><p>
இவ்விபத்தில் காயமடைந்தவர் வென்றாசன்புர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ்
உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/073d5ab1-3d34-4648-a5e1-7ba51016e0ea/26-6a73158c0cd50.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T10:53:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-sri-lanka-mahavali-river-flood-warning-1785924159"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-sri-lanka-mahavali-river-flood-warning-1785924159</id>
            <summary type="text">அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
மகாவலி ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வெள்ளப்பெருக்கு அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>வான் கதவுகள் திறப்பு&nbsp;</h2><p>
</p><p>
மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் எதிர்காலத்தில் அதிக மழை பொழிய கூடும் எனவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாலும், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24582ffd-8626-4503-a916-284aa3ad0848/26-6a7311be0ecbe.webp' /></p><p>இதன் கீழ், உடுநுவர, உடபலாத, யட்டிநுவர, தொளுவ, குளுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகள் அடங்கும்.&nbsp;</p><p>இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பேரிடர் மேலாண்மைத் துறைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>

இனிவரும் காலங்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T10:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி விவகாரம்! முக்கிய 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statements-91-officers-regarding-hacking-incident-1785925565"></link>
            <id>https://tamilwin.com/article/statements-91-officers-regarding-hacking-incident-1785925565</id>
            <summary type="text">2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான சம்பவம் தொடர்பில் முக்கிய 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான சம்பவம் தொடர்பில் முக்கிய 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பாக பல தொழில்நுட்ப சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சம்பவம் நடந்த உடனேயே, நிதி அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>ஐந்து வெளிநாடுகளிடமிருந்து தகவல் கோரல்</h2><p>
இதற்கமைய, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், பொதுக்கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/858eaa55-aacc-4c97-ab94-cd6d88c9936a/26-6a73119b514f5.webp' /></p><p>
வங்கி கணக்கு தகவல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைப் பெறுவதற்காக ஐந்து வெளிநாடுகளிடமிருந்து தகவல் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

இதற்கமைய, சந்தேகநபர்களை அடையாளம் காண சர்வதேச பொலிஸ் மற்றும் தொடர்புடைய நாடுகளுடன் கூட்டாக பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T10:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்களுக்கு வெளியான அறிவிப்பு - விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishing-activities-allowed-to-resume-1785922270"></link>
            <id>https://tamilwin.com/article/fishing-activities-allowed-to-resume-1785922270</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவும் வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, புத்தளம் முதல் அம்பாந்தோட்டை வரையிலான கடற்றொழில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க கடற்றொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, புத்தளம் முதல் அம்பாந்தோட்டை வரையிலான கடற்றொழில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
இருப்பினும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிக்கு இன்னும் அதிக ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எதிர்கால வானிலை எச்சரிக்கைகள்&nbsp;</h2><p>
புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகளில் நிலவிய பலத்த காற்று தற்போது ஓரளவு தணிந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e264b3-7638-44dc-bfb5-d7e2fc8aa2bd/26-6a730aa2d4df8.webp' /></p><p>இருப்பினும், அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகள் கரையோர கடற்றொழில் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து உகந்ததாக இல்லாததால், மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக அப்பகுதிகளிலிருந்து செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

தென்மேற்குப் பருவக்காற்றின் தாக்கத்தால் நாட்டைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் எந்த நேரத்திலும் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அனைத்து கடற்றொழிலாளர்ககளும் உயிர் காப்புச் சட்டைகளை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்கால வானிலை எச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T10:05:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் கைது - பொலிஸார் தீவிர சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-illegal-production-1785921774"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-illegal-production-1785921774</id>
            <summary type="text">மட்டக்களப்பு - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை துவரை ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் பொலிஸாரால் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை துவரை ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(04.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><h2>


1800 லீற்றர் கோடா பறிமுதல்</h2><p>
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6301515-c271-4a1e-a735-eefe69f89c76/26-6a73016a67e4d.webp' /></p><p> </p><p>

இதன்போது, சட்ட விரோதமான முறையில் கசிப்பு
உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், கசிப்பு உற்பத்திக்கு தயார் நிலையில் இருந்த 1800 லீற்றர் கோடா பறிமுதல் செய்யப்பட்டது. </p><p>

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் இன்று(05.08.2026) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தர்மபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eb14963-4736-49b6-9f2e-232142c32057/26-6a73016b499ba.webp' />&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50d48355-7335-49df-9703-1e6b92ca2255/26-6a73016c4d249.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதபுதைகுழி: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணுமாதிரிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1785918942"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1785918942</id>
            <summary type="text">செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டிய சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். </p><p>

நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.08.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.</p><h2>அகழ்வாய்வுப் பணிகள்</h2><p>
</p><p>
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆகஸ்ட் 04ஆம் திகதி நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

அவற்றில் 481 மனித எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1618de8-aa91-4a31-8a22-88278838cb09/26-6a72fdd3d42cb.webp' /></p><p> </p><p>எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒப்புதலுடன் அவர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். மனிதப்புதைகுழி விடயத்தில் அடையாளங்காணப்பட்ட எலும்புத்தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்தெடுப்பதென்பது முதற்கட்ட செயற்பாடாகும்.</p><h2>அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை&nbsp;</h2><p> </p><p>

அதன் பிற்பாடு என்பு மாதிரிகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்வது இரண்டாவது நடவடிக்கையாகும். அதனைத்தொடர்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை தொடர்பில் தொல்லியல் திணைக்களம் அறிவியல் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிப்பார்கள். மூன்றாவது கட்டமானவே காணாமல்போன உறவுகள் தொடர்பான தேடுதல் விவகாரங்கள் ஆரம்பமாகும். </p><p>

யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது, கைதுசெய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடு வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு பாதிக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1df787e-c5bd-4f72-aa75-7f22f4094f43/26-6a72fdd48c771.webp' /></p><p> </p><p>

ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணுக்களைச் சேகரித்து அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதுவும் இதுவரை உருவாக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p> 

மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் பங்கேற்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான ரனித்தா ஞானராசா அவர்களும் அண்மையில் இதுதொடர்பில் வலியுறுத்தியிருக்கின்றார். எனவே இதுதொடர்பிலும் கவனஞ்செலுத்தப்பட வேண்டுமென இவ் உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T09:12:07+00:00</updated>
        </entry>
    </feed>
