<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-18T09:28:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டியில்லா கடன் திட்டம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interest-free-student-loan-scheme-1787043583"></link>
            <id>https://tamilwin.com/article/interest-free-student-loan-scheme-1787043583</id>
            <summary type="text">வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

 

அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.</p><p>

 

அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி</h2><p>இதற்கான அடிப்படைத் தகுதிகளாக 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cf96e3-7bfc-4d49-92ae-54973ec7658c/26-6a8422e91685c.webp' /></p><p>மேலும் க.பொ.த உயர்தர அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
 

பொதுச் சாதாரண பரீட்சையில் (Common General Test) குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
 

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று (2026.09.27) வயது 25இற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
</p><p>
 

இத்திட்டத்தின் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயம் - கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 நிறுவனங்கள் ஊடாக 129இற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:16:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித் கொண்டு வந்த திட்டத்தில் நிதி மோசடி - போராட்டத்தில் குதித்த வடக்கு மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/housing-scheme-funding-fraud-allegations-1787042196"></link>
            <id>https://tamilwin.com/article/housing-scheme-funding-fraud-allegations-1787042196</id>
            <summary type="text">வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, இன்று(18.08.2026) அராலி மத்தி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(18.08.2026) அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு
காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது.
</p><h2>
சஜித்தால் கொண்டு வரப்பட்ட திட்டம்</h2><p>
குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று
கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db70d7d-62db-44b6-b388-a58c01115955/26-6a841b1f5d0c4.webp' /></p><p>

போராட்டமானது சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமாகி, சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக
நகர்ந்தது. </p><p>

இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.</p><h2>

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மனு</h2><p>
இதன்போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோஷமிட்டவாறு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித்
திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb0c0e5-031d-4d4d-9c28-8f741156c4ae/26-6a841b204df33.webp' /></p><p> </p><p>

அந்த மனுக்கள் பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
</p><p>
இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா
இங்கேஸ்வரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05f6e678-129f-41b1-b061-a5f319fffba7/26-6a841b2124f7f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc470480-646f-4b0c-b218-4c2df4f7870d/26-6a841b21efe15.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/digital-identity-card-in-the-next-few-months-1787041310"></link>
            <id>https://tamilwin.com/article/digital-identity-card-in-the-next-few-months-1787041310</id>
            <summary type="text">தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக அடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக அடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையின் கீழ், இந்த ஆண்டின் அடுத்த சில மாதங்களில் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>டிஜிட்டல் அடையாள அட்டை</h2><p>
இந்த ஆண்டிற்குள் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa37a049-3e94-4bd3-9ecc-bc05aca1abd8/26-6a841b33f2c76.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p> 

அதிலிருந்து, சுமார் 2 ஆண்டு காலத்திற்குள், நாட்டில் உள்ள 17 மில்லியன் மக்கனையும் பழைய அடையாள அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் முறைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Gu0zIuxhlA0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-18T08:46:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை - உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-supreme-court-order-imran-khan-transferre-1787041540"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-supreme-court-order-imran-khan-transferre-1787041540</id>
            <summary type="text">பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை காரணமாக, அவரை அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை காரணமாக, அவரை அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p>

பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அடுத்த விசாரணை முடியும் வரை அங்கேயே வைத்திருக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><h2>&nbsp;இம்ரான்கானின்&nbsp;உடல்நிலை</h2><p>

இம்ரான்கானின் முழுமையான மருத்துவப் பதிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வைத்தியசாலைக்கு வெளியே பாதுகாப்பை உறுதிசெய்து சட்டம் ஒழுங்கைப் பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.</p><p>

73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e91621e0-251c-47e1-84af-dfa8041da821/26-6a841a4701927.webp' /></p><p>

அடியாலா சிறை அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சிகிச்சைக்குப் பிறகு இம்ரான்கானின் கண் நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், அவரது பார்வை "ஏறக்குறைய இயல்பாக" இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.</p><p>

இருப்பினும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியானது, அவரது உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியும், அவரது தனிப்பட்ட வைத்தியர்களை அணுக அனுமதி கோரியும், அவரை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.</p><p>

2018 முதல் 2022-ல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் வரை பாகிஸ்தானின் பிரதமராகப் பணியாற்றிய இம்ரான்கான், 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டு, தொடர்ச்சியான சட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-18T08:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் காஞ்சன நிலக்கரி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-kanchana-presence-commission-inquiry-1787040762"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-kanchana-presence-commission-inquiry-1787040762</id>
            <summary type="text">முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
நிலக்கரி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>
</p><p>
அவர் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இலங்கையின் மின்சார உற்பத்திக்கான பிரதான எரிபொருட்களில் ஒன்றாக நிலக்கரி காணப்படுவதுடன், அதன் கொள்வனவு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e95eef-757f-4d6d-88d1-816d6102bea7/26-6a8415edeed9b.webp' /></p><p>

இந்நிலையில், நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இன்றைய தினம் இடம்பெறும் விசாரணைகளில் நிலக்கரி கொள்வனவு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-22nd-amendment-submitted-to-parliament-1787040214"></link>
            <id>https://tamilwin.com/article/the-22nd-amendment-submitted-to-parliament-1787040214</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.</p><p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய சபாநாயகரை நியமிக்குமாறு கோரிக்கை</h2><p>
</p><p>அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இந்த சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளது.
&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/886c7130-cdc4-4bec-90e0-60085f8991bf/26-6a84146958f97.webp' /></p><p>நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தம்&nbsp;சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர்.
</p><p>இதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகளில் உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு சபாநாயகர் செவி சாய்ப்பதில்லை என்றும், தற்போதைய சபாநாயகரை மாற்றி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நாணய மாற்று விகிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-1787040204"></link>
            <id>https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-1787040204</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18.08.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.இதன்படி,&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.48 ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18.08.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி,&nbsp; &nbsp;அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.48 ரூபாவாகவும் கொள்வனவு விலை 327.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.</p><p>அதேபோன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 442.04 ரூபா மற்றும் கொள்வனவு விலை 456. 86 ரூபாவாகும்

யூரோ ஒன்றின் விற்பனை விலை 377.57 ரூபா எனவும் கொள்வனவு விலை 390.95 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>இன்றைய பெறுமதி</h2><p>இதேவேளை,&nbsp; ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (18.08.2026) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:11:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-individuals-traveling-motorcycle-were-injured-1787039910"></link>
            <id>https://tamilwin.com/article/two-individuals-traveling-motorcycle-were-injured-1787039910</id>
            <summary type="text">நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இன்று(18) நண்பகல் 12 மணியளவில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின்
குடாகம பகுதியில், மயானத்திற்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக
ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
ஹட்டன் பகுதியிலிருந்து குடாகம பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று,
குடாகம பகுதிக்குள் திரும்புவதற்காக பிரதான வீதியின் குறுக்கே சென்றபோது,
எதிர்திசையில் ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன்
மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188b9817-a1c4-4bdd-a83c-7d159344c166/26-6a84124e1ede3.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும்
காயமடைந்துள்ளனர். </p><p>காயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு பிணையில் செல்ல அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bail-to-akila-viraj-kariyavasam-1787037765"></link>
            <id>https://tamilwin.com/article/bail-to-akila-viraj-kariyavasam-1787037765</id>
            <summary type="text">தனது எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோரை பிணையில் செல்லுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><h2>வெளிநாடு செல்ல தடை&nbsp;</h2><p>
</p><p>
இதன்படி, இரு சந்தேகநபர்களையும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07748d5b-4ed5-471b-b9bb-510c90532bd4/26-6a840d431d6ad.webp' /></p><p>

மேலும், சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-18T07:52:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இது.. அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த பிரபு எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prabhu-mp-responds-to-criticism-of-the-government-1787037948"></link>
            <id>https://tamilwin.com/article/prabhu-mp-responds-to-criticism-of-the-government-1787037948</id>
            <summary type="text">2015ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர் தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2015ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என முன்மொழிவை கொண்டு வந்த தரப்பினர் தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி இருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>


மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட
களுதாவளை பிரதேசத்தில் சுமார் 848 மீட்டர் நீளமான வீதிகளை கார்பட் வீதிகளாக
அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் நேற்று(17.08.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>


எமது அரசாங்கத்திற்கு பழி சுமத்துகின்ற அல்லது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப
வேண்டும் என்ற நோக்குடன் ஒரு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு வருவதை
காணமுடிகிறது. ஆனாலும் அவர்களது இந்த குழப்புகின்ற செயற்பாடுகள் மக்கள்
மத்தியில் எடுபடவில்லை.
</p><h2>

நீதிபதிகளின் வயது எல்லை அதிகரிப்பு</h2><p>

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிபதிகளின் வயது எல்லைகளை அதிகரிப்பது தொடர்பான
விடயங்களை வைத்துக்கொண்டு அதனையும் அரசுக்கு எதிரான பிரசாரங்களாக எடுத்துக்
கொண்டு சிலர் வருகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2038e0-ac87-4eea-81ba-ffa6599dd56c/26-6a840b841df0c.webp' /></p><p>
</p><p>


இந்த காலங்களிலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு இன்று அதனோடு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகள் வழங்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.</p><p>



அது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் சம்மந்தப்பட்டவர்களுக்கு
எதிராக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான
விசாரணைகளும் நீதிமன்றத்தில் ஊடாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><p>இதேவேளை, பாதாள உலக செயற்பாடுகளிலும், போதை விற்பனையில் ஈடுபட்டவர்களும்,
அதனோடு சம்பந்தப்பட்டவர்களும் வெளிநாடுகளில் இருந்தும்கூட அவர்கள் இங்கு
கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்றுக்
கொண்டிருக்கின்றன.
</p><p>


இவை அனைத்தும் சுயாதீனமாக நீதித்துறை கட்டமைப்புகளின் ஊடாக விடயங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இதனை ஓர் அரசியலாக உருவாக்கிக் கொண்டு அதற்கு
எதிராக ஒரு சில கூட்டணிகளை அமைத்துக் கொண்டும் சிலர் எதிர்த்துக்
கொண்டிருக்கின்றார்கள்.</p><h2>

</h2><h2>10 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட திட்டம்</h2><p>
2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை
கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி
இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d94dddc5-3183-4ca1-86b4-85d182fd42c1/26-6a840b84ce06c.webp' /></p><p>



வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதியரசர் சி.வி
விக்னேஸ்வரன் கூட நீதிபதிகளின் வயதிலேயே 70 வயதுகளாக நிர்ணயித்தால் கூட
சிறப்பாக இருக்கும் என அண்மையில் தெரிவித்து இருக்கின்றார் என்றார்.
</p><p>


இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்
அ.லிங்கேஸ்வரன், திட்டப் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றிஸ்கான், தொழில்நுட்ப
உத்தியோகத்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள்
மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:36:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுடனான டெஸ்டில் தினேஷ் சந்திமாலுக்கு உபாதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandimal-taken-to-hospital-for-precautionary-1787036464"></link>
            <id>https://tamilwin.com/article/chandimal-taken-to-hospital-for-precautionary-1787036464</id>
            <summary type="text">இந்தியாவிற்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று (18), களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவிற்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று (18), களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.</p><p> 

எல்லைக் கோட்டிற்கு அருகில் பந்தை தடுக்க முயன்ற போது, அவரது வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>உபாதையின் நிலைமை</h2><p>

சம்பவம் நடந்த உடனடியாக மைதானத்திலேயே அணியின் உடலியக்க நிபுணர் அவரைப் பரிசோதித்ததுடன், அதனைத் தொடர்ந்து மேலதிக பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3c5e78f-923d-4ffd-b099-0bc07fa0370b/26-6a8407df23bfa.webp' /></p><p>

ஸ்கேன் அறிக்கைகள் கிடைத்த பின்னரே அவரது உபாதையின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் வெளிப்படுத்தப்படும் என கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:32:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keheliya-corruption-eradication-commission-1787029367"></link>
            <id>https://tamilwin.com/article/keheliya-corruption-eradication-commission-1787029367</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தினால் கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக ரம்புக்வெல்ல இன்று காலை இலஞ்ச ஆணையத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களை விட கூடுதலாக 6 ஊழியர்களை பணிக்கமர்த்தி அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் (18) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தற்போது இடம்பெற்று வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p>இதேவேளை, 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியதாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ARfG7K_BvuM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-18T07:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-expected-visit-sri-lanka-1787035928"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-expected-visit-sri-lanka-1787035928</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

முன்மொழியப்பட்ட இந்த விஜயம் தொடர்பான கலந்துரையாடல்கள், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>உத்தியோகபூர்வ விஜயம்</h2><p>
</p><p>
குறித்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இந்தப் பயணத்தின்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993a0b3e-3222-413a-a04a-f986cc582ed6/26-6a84073864835.webp' /></p><p>
</p><p>
இந்தப் பேச்சுவார்த்தைகளில் கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இதற்கிடையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகள் மோசடிகளால் குவித்துள்ள சொத்துக்கள் - நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-looted-the-cooperative-property-1787033025"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-looted-the-cooperative-property-1787033025</id>
            <summary type="text">கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் கூட்டுறவு சங்கங்களின் சொத்துக்களை சூறையாடியுள்ளதாக வர்த்தகம்,வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் கூட்டுறவு சங்கங்களின் சொத்துக்களை சூறையாடியுள்ளதாக வர்த்தகம்,வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (18) நாடாளுமன்றத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;கூட்டுறவுச்சட்டம் திருத்தம்</h2><p>
</p><p>
இதன் காரணமாக பலவீனப்படுத்தப்பட்ட கூட்டுறவுச்சட்டம் திருத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9457c21-bdc0-439d-80ce-d22d3beb8f56/26-6a8404989ee52.webp' />&nbsp;</p><p>

மேலும், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தை வரைவு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கமைய, சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கு விருது வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும், அழிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மீண்டும் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:07:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட முன்னணி தனியார் வங்கிகளின் அதிகாரிகள் - புலனாய்வாளர்கள் வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-1-bn-alleged-illegal-money-transfer-new-details-1787033688"></link>
            <id>https://tamilwin.com/article/us-1-bn-alleged-illegal-money-transfer-new-details-1787033688</id>
            <summary type="text">இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் திட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் திட்டம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p> 

பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காகத் தனியார் வங்கி அதிகாரிகள் தொடர்ச்சியான கொடுப்பனவுகளைப் பெற்றதாகப் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><h2>முதல் கைது</h2><p>
</p><p>
நான்கு முன்னணி தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) அவர்களுடைய பணியிடங்களில் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
</p><p>
 அவர்கள் ஒகஸ்ட் 20 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இவ்வகையான ஒரு விசாரணையில், இதுவே இத்தகைய முதல் கைது நடவடிக்கை என்று நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e804e25-2b4a-497a-ab24-a6061f1415b2/26-6a83fd5d375d7.webp' /></p><p>நிதிப் பரிவர்த்தனை தொடர்பாக முன்னதாகக் கைது செய்யப்பட்ட ஜெஃப்ரி முகமதுவை மையமாகக் கொண்டு இந்த விசாரணை நடைபெறுகிறது.
</p><p>
இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, முகமது சுமார் 36 நிறுவனங்களை நிறுவியதாகவும், அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கணக்குகளைத் திறப்பதற்காக நான்கு தனியார் வங்கிகளை அணுகியதாகவும் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும், இறக்குமதிக்கான கொடுப்பனவுகளாக அந்தக் கணக்குகள் மூலம் பெருமளவிலான வெளிநாட்டு நாணயம் வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், அதற்குரிய பொருட்கள் ஒருபோதும் இலங்கைக்குள் கொண்டுவரப்படவில்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள்&nbsp;</h2><p>

கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் முகமதுவை நேரில் சந்தித்து, அவருக்கு வங்கிப் பரிவர்த்தனைகளில் உதவியதாகவும், இந்தச் சந்திப்புகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்றதாகவும் சிஐடி குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, அந்த அதிகாரிகள் வெவ்வேறு காலகட்டங்களில் வாரத்திற்கு ரூ. 30,000 முதல் ரூ. 100,000 வரை பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஒரு அதிகாரி ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் ரூ. 10 லட்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வங்கிக் கணக்குகளைத் திறக்க வசதி செய்து கொடுத்தபோது, ​​அதிகாரிகள் தேவையான சோதனைகளை நடத்தத் தவறிவிட்டனர் என்றும் புலனாய்வாளர்கள் மேலும் குற்றம் சாட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1da4ec27-fd1a-4b56-af00-ade8916dfffe/26-6a83fd5e0b6a2.webp' /></p><p>பெருநிறுவனக் கணக்குகளைத் திறக்கும்போது, ​​வங்கி அதிகாரிகள் தொடர்புடைய நிறுவனப் பதிவு விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும், சந்தேக நபர்கள் உரிய சோதனைகளை மேற்கொள்ளாமல் அந்தச் செயல்முறைக்கு உதவியதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p>
சந்தேகிக்கப்படும் சட்டவிரோத வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் குறித்த விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் அமைந்துள்ளன.</p><p>

பொருட்களை இறக்குமதி செய்வதற்காக என்ற குற்றச்சாட்டில், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 89 நிறுவனங்கள் 190 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அமெரிக்க டொலர்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக, முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடுகின்றன.</p><h2>போதைப்பொருள் கடத்தல்&nbsp;</h2><p>

புலனாய்வாளர்கள் அந்த நிறுவனங்களில் 36 மீது கவனம் செலுத்தி, அவற்றுடன் தொடர்புடைய 10,151 பரிவர்த்தனைகள் மூலம் இலங்கைக்குள் அதற்கு இணையான இறக்குமதிகள் ஏதுமின்றி சுமார் ரூ. 75 பில்லியன் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டினர்.</p><p>

இந்த நிதி நடவடிக்கைக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் இடையே உள்ள சாத்தியமான தொடர்புகளையும் இந்த விசாரணை ஆராய்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615fc38d-8d40-4f4c-a4c6-fb8d7262545b/26-6a83fd5eba398.webp' /></p><p>
</p><p>
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணம் அதே வலையமைப்பு வழியாக அனுப்பப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகளுக்காக முன்னிலையான வழக்கறிஞர்கள், குற்றச்சாட்டுகளை நிராகரித்ததோடு, சந்தேக நபர்களில் சிலர் வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவது மற்றும் வங்கி நடைமுறைகளைக் கையாள்வது போன்ற வரையறுக்கப்பட்ட பொறுப்புகளைக் கொண்ட கீழ்நிலை ஊழியர்கள் என்றும் வாதிட்டனர்.</p><h2>தொடரும் விசாரணை</h2><p>

நிறுவனங்கள் உண்மையில் பொருட்களை இறக்குமதி செய்துள்ளனவா என்பதையும், அவற்றின் செயல்பாடுகள் தொடர்புடைய தேவைகளுக்கு இணங்குகின்றனவா என்பதையும் தீர்மானிப்பது மூத்த அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று பாதுகாப்புத் தரப்பு வாதிட்டது.</p><p>

பில்லியன் கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நடவடிக்கையின் பொறுப்பை இளநிலை வங்கி ஊழியர்கள் மீது சுமத்த முடியாது, ஏனெனில் இதுபோன்ற விஷயங்கள் அவர்களின் கடமை வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்று அவர்கள் மேலும் வாதிட்டு, பிணை கோரினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f410f6-ddb8-4770-bb80-2d3972696fb9/26-6a83fd5f7cbef.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், பிணை மனுக்களை நிராகரித்து, நான்கு சந்தேக நபர்களையும் ஒகஸ்ட் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.</p><p>

வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள், இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள், பரிவர்த்தனைகளுக்கு உதவிய நபர்களின் பங்கு, மற்றும் பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுடனான சாத்தியமான தொடர்புகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T06:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! வாக்குமூலத்தில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrests-four-bank-managers-us-dollars-fraud-1787023512"></link>
            <id>https://tamilwin.com/article/arrests-four-bank-managers-us-dollars-fraud-1787023512</id>
            <summary type="text">நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 'உண்டியல்' முறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையில்&nbsp; நால்வரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>வாக்குமூலத்தில் வெளியான தகவல்&nbsp;</h2><p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef9ae36c-13c8-4546-ac97-273b5fd134de/26-6a83fdcad8107.webp' /></p><p>வங்கி நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>கைது செய்யப்பட்டவர்களில் இரண்டாம் சந்தேகநபர் வணிக வங்கியின் முகாமையாளராகவும், மூன்றாம் சந்தேகநபர் வணிக வங்கியின் இளநிலை நிறைவேற்று அதிகாரியாகவும், நான்காம் மற்றும் ஐந்தாம் சந்தேகநபர்கள் வணிக வங்கியின் இளநிலை அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றமையும் தெரியவந்துள்ளது.</p><p>இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>சந்தேகநபர் நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகக்கூறி சுமார் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றுக்கு வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக குறித்த 4 தனியார் வங்கிகளுக்கு சென்றுள்ளதாகவும் அதிகாரி நீதிமன்றத்தில் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறு பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி நாட்டிலிருந்து பணம் வெளியேறிய போதிலும், நாட்டிற்கு அத்தகைய பொருட்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.</p><h2>சட்டத்தரணிகள் விடுத்துள்ள கோரிக்கை&nbsp;</h2><p>மேலும், கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் சந்தேகநபரை நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளை செய்து கொடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6539bd95-be42-4add-a2f7-fa52ab08ad5e/26-6a83fdcb86fbf.webp' />&nbsp;</p><p>இவ்வாறான பில்லியன் கணக்கிலான ரூபா மோசடி செய்வது இவ்வாறான இளநிலை அதிகாரிகளின் கடமை வரம்பிற்கு அப்பாற்பட்ட என்றும் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p> 

சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இதற்கமைய, சந்தேகநபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T06:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சகோதரர் மஹீல் சேனரத்ன கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-chairman-maheel-senaratne-arrest-1787033847"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-chairman-maheel-senaratne-arrest-1787033847</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவின் சகோதரரும், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான (2010 - 2012) மஹீல் சேனரத்ன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவின் சகோதரரும், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான (2010 - 2012) மஹீல் சேனரத்ன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கை&nbsp;இன்று (18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2727ec34-362b-4404-9667-e9e9cf760a10/26-6a83fb14a72a3.webp' /></p><p>
</p><p>
நாடு முழுவதும் மீன் சந்தைப்படுத்தல் மையங்களை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T06:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-issued-to-pillayan-1787032918"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-issued-to-pillayan-1787032918</id>
            <summary type="text">கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) விளக்கமறியலை நீடித்து மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் இன்று(18.08.2026...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) விளக்கமறியலை நீடித்து மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் இன்று(18.08.2026)&nbsp; உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p>இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி வரை&nbsp; பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் மதுஜலா கேதீஸ்வரன் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><h2>வழக்கு விசாரணை இன்று</h2><p>கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் ஐவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களுக்கு&nbsp; எதிரான&nbsp; வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a495e99-e8fc-497d-8172-48b8f206c346/26-6a83f89305cb2.webp' /></p><p>இதன்போது,&nbsp; ஸ்கைப் தொழிநுட்பத்தின் ஊடாக பிள்ளையான் வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாகியிருந்தார்.&nbsp;</p><p>2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து
கொலைச் சம்பவங்கள் தொடர்பில், பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத்
திணைக்களம்&nbsp; கடந்த ஜூன் 15ஆம் திகதி&nbsp; வழக்குத் தாக்கல் செய்திருந்தது.&nbsp;&nbsp;</p><p>
இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக&nbsp; பிள்ளையான் பெயரிடப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd75489-e2b1-48a0-bea2-4c2a47df7a4c/26-6a83fb7c8e899.webp' /></p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு டி56 ரக
துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள்
தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>2008ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி கல்லடி
முருகன் கோவில் அருகே முன்னாள் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இருவர்
சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அதேவருடம் மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில்
இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதே வருடத்தில் ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுணதீவு
கொத்தியாபுல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஆகிய வழக்குகளுடன்
தொடர்புபடுத்தி சந்திரகாந்தன் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டு இந்த வழக்கு
முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.&nbsp;&nbsp;</p><p><b><i>மேலதிக தகவல்&nbsp; - குமார்&nbsp;</i></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T06:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி காணி விடுவிப்பு போராட்டம் : போராட்டகாரருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palali-land-liberation-struggle-1787031659"></link>
            <id>https://tamilwin.com/article/palali-land-liberation-struggle-1787031659</id>
            <summary type="text">பலாலியில் இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் இடையூறு விளைவித்ததாக
கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தன், ஜனநாயக கட்சியின்
தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலியில் இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் இடையூறு விளைவித்ததாக
கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தன், ஜனநாயக கட்சியின்
தலைவர் வேந்தன் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்களுக்கு
பலாலி பொலிஸாரும், உதவி பொலிஸ் அத்தியட்சகரும் இணைந்து மல்லாகம்
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
குறித்த வழக்கில், 16.08.2026 அன்று பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T
சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் என்பவரின்
ஏற்பாட்டில், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை
விடுவிக்குமாறு கோரி, காலை 09.30 மணி முதல் 1மணி வரை ஆர்ப்பாட்டமொன்று
இடம்பெற்றது.&nbsp;</p><h2>நீதிமன்றில் முன்னிலையாகுமாறு</h2><p>இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பலாலி பிரதான வீதி T சந்தியில் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டவர்களினால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை
தொடர்பாக குறிப்பிட்டே, 2026.08.17 அன்று பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதவான்
நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/503bb3e0-fcb4-4646-a13c-8b18bd49d81a/26-6a83f6e8345ca.webp' /></p><p>
அதன்படி, மல்லாகம் நீதவான் நீதிமன்ற வழக்கிலக்கம் MA/MC/PC/07381/26-B இன்
கீழ் குறித்த சந்தேக நபர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதுடன்,
2026.10.22 அன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அன்றையதினம் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
(ASP) ஆகியோரும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தினால்
கட்டளையிடப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன்,
ஜனநாயகப் போராளிகள் கட்சி தலைவர் கணேசபிள்ளை வேந்தன்,
பாக்கியம், M. குணசேகரம் மற்றும் பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர்
அன்டன் சுதாகர் ஆகியோர் மீதே பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில்
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்புடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T06:12:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்த சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-entering-houses-jaffna-midnight-1787032955"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-entering-houses-jaffna-midnight-1787032955</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தின் பிறவுன் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள்
இரகசியமாக நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் பிறவுன் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள்
இரகசியமாக நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
</p><p>
கடந்த 15ஆம் திகதி பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்த
முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பகுதியில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு
நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.</p><h2>சந்தேகநபர் கைது</h2><p>

இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் கைது
செய்துள்ளனர்.</p><p> 

விசாரணைகளின்போது, முறைப்பாடு செய்த பெண்ணின் வீட்டு
வளாகத்திற்குள் தான் நுழைந்ததாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸ்
தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5c3f95-ce48-4e41-aae2-cc5af2d65241/26-6a83f6d123c90.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள வேறு வீடுகளின்
வளாகங்களுக்குள் நுழைந்துள்ளாரா என்பது தொடர்பிலும் யாழ்ப்பாணம் பொலிஸார்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T06:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட சொகுசு பேருந்துகள் கைப்பற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/buses-operating-route-permits-seized-in-vavuniya-1787030660"></link>
            <id>https://tamilwin.com/article/buses-operating-route-permits-seized-in-vavuniya-1787030660</id>
            <summary type="text">வவுனியா மாவட்டத்தில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாவட்டத்தில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>வடக்கு
மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (16.08.2026) வவுனியா
மாவட்டத்தில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது,
அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>பேருந்துகள் அடையாளம்&nbsp;</h2><p>வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர்
சூ.விமலேஸ்வரனின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், தேசிய
போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர், தேசிய
போக்குவரத்து ஆணைக்குழுவின் பறக்கும் படை, வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகாரசபையின் பறக்கும் படை மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து
செயற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20df77e-b5b7-47b7-9fa5-6567647f74d4/26-6a83f07bc280b.webp' /></p><p>பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி ஈடுபடும்
பேருந்துகளை அடையாளம் கண்டு, அவற்றின் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய
சட்டபூர்வ ஆவணங்களை பரிசோதித்து, சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதே
இந்நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.</p><p>இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள்
கண்டறியப்பட்டதையடுத்து, அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு
அழைத்து செல்லப்பட்டுள்ளன.</p><p>இதனால் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை
குறைக்கும் வகையில் மாற்று பேருந்துகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>

எனினும், பேருந்து சேவை இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக சிறுவர்கள், முதியவர்கள்
உள்ளிட்ட பயணிகள் குறிப்பிடத்தக்க அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.</p><p> இதேவேளை,
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த சுமார் ஐந்து பேருந்துகள்
மதவாச்சி பகுதியில் இருப்பதாகவும், அவற்றிடம் உரிய வழித்தட
அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தால் வவுனியாவுக்குள் நுழைவதை தவிர்த்து
அப்பகுதியில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>
</p><p>
அனுமதியின்றி இயங்கும் இவ்வாறான பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டால், நீதிமன்றத்தில்
முற்படுத்தப்படும் வரை அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை
ஏற்படும்.</p><p> தற்போதைய நிலையில் பயணிகளின் தேவையை ஈடுசெய்ய போதுமான மாற்றுப்
பேருந்துகள் இல்லாததையும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும்
கருத்திற்கொண்டு, முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டது.
</p><p>
எவ்வாறாயினும், அனுமதிப்பத்திரமின்றி இயங்கும் பேருந்துகளுக்கு எதிரான சட்ட
நடைமுறைப்படுத்தல் நடவடிக்கை கைவிடப்படவில்லை என்பதுடன், மேலும் ஒரு விசேட
நடவடிக்கை மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>

இந்நிலையில், தற்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு
வரும் அனைத்து பேருந்து உரிமையாளர்களும் இயக்குநர்களும் உடனடியாக அவ்வாறான
சேவைகளை நிறுத்தி, தேவையான வழித்தட அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள
நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
</p><p>
அனைத்து பேருந்து உரிமையாளர்களும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும்
விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களுடன்
மட்டுமே சேவைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும்
தடையற்றதுமான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும்
எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p>

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின்
ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T05:41:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/many-details-about-easter-attack-case-coming-soon-1786932690"></link>
            <id>https://tamilwin.com/article/many-details-about-easter-attack-case-coming-soon-1786932690</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 25 சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின், தற்காப்புத் தரப்பு சாட்சிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 25 சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின், தற்காப்புத் தரப்பு சாட்சிகளை விசாரிக்கும் நடவடிக்கை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது. </p><p>

அரசாங்கத் தரப்பு சாட்சிகளை விசாரிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. </p><p>

அரசாங்கத் தரப்பு வலுவான வழக்கினை சமர்ப்பித்துள்ளதாக தீர்மானித்த நீதிபதிகள் குழாம், தற்காப்புத் தரப்பு தமது நிலையை முன்வைக்குமாறு உத்தரவிட்டது. </p><p>

மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமே இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 200 பிரிவின் கீழ் தற்காப்புத் தரப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

குறுக்கு விசாரணை</b></h2><p>இந்த சந்தர்ப்பத்தில், பிரதிவாதிகள் சாட்சிக் கூண்டில் ஏறி குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சாட்சியமளிக்க, பிரதிவாதி கூண்டில் இருந்தவாறு அறிக்கை ஒன்றை வெளியிட, சாட்சிகளை அழைக்க அல்லது மௌனமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c625affb-1e30-4d55-8015-f15bf718734b/26-6a83dac2d60b3.webp' /></p><p>அதற்கமைய, தற்போது இவவழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள 24 பேரில், சட்டத்தரணி பிரதிநிதித்துவம் அற்ற சந்தேகநபரான 6 ஆம் இலக்க பிரதிவாதியான ரிஸ்கான் மௌனமாக இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

ஏனைய 23 பிரதிவாதிகளும் பிரதிவாதி கூண்டில் இருந்தவாறு அறிக்கை வெளியிடவுள்ளனர். </p><h3><b>

தற்காப்புத் தரப்பு வழக்கு</b></h3><p>பிரதிவாதிகள் சாட்சிக் கூண்டில் இருந்து சாட்சியமளிக்காத சந்தர்ப்பத்தில், அவர்களது கூற்றுகள் தொடர்பில் அரசாங்கத் தரப்பு குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b668581-20c6-4fba-83fc-fa1f2e7da566/26-6a83dac38a6f5.webp' /></p><p>எனினும், சாட்சியச் சட்டத்தின் 165 ஆம் பிரிவின் கீழ் நீதிமன்றம் சில தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் குற்றவாளிகளிடம் கேள்விகளை எழுப்பும் அதிகாரம் உள்ளது. அத்துடன், சில பிரதிவாதிகள் தமக்கு சாதகமாக சாட்சிகளை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.</p><p>

தற்காப்புத் தரப்பு வழக்கு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சாட்சிகளை முன்வைக்கும் குற்றவாளிகள் தமது சாட்சிகளின் பட்டியலை நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T05:37:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுகொலை - பின்னணியில் சிக்கியப் பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-among-5-arrested-over-shooting-1787029856"></link>
            <id>https://tamilwin.com/article/woman-among-5-arrested-over-shooting-1787029856</id>
            <summary type="text">பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரானின் உறவினரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்திற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரானின் உறவினரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த குற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்தக் கைது நடவடிக்கைகள்,&nbsp; &nbsp;மாளிகாவத்தை சங்கராஜ மாவத்தையில் கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்ற&nbsp; கொலை சம்பவத்துடன் தொடர்புடையவையாகும்.</p><p>
</p><h2><b>
பின்னணியில் சிக்கிய பெண் </b></h2><p> கொழும்பு 15 ஐச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரையும் 23 வயதுடைய யுவதி ஒருவரும் இந்த சம்பவத்திற்கு உதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று கொழும்பு வடக்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த இருவரும் ஐஸ் போதைபொருள் 25 கிராம் 840 மில்லிகிராம் போதைப்பொருளை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d15283d3-327f-4380-ab15-9139671cc559/26-6a83ec72d6039.webp' />&nbsp;&nbsp;</p><p>

மற்றொரு தனித்தனி நடவடிக்கையில், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மட்டக்குளி, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 28 வயதுடைய மேலும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
</p><p>
மூன்று சந்தேகநபர்களிடமிருந்தும் 12 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p><hr><p><b><i>YOU MAY LIKE THIS..</i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u7XXp3PcaEE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-18T05:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மற்றுமொரு தரப்பினருக்கு விதிக்கப்படும் வரி - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-collection-from-income-online-1787027769"></link>
            <id>https://tamilwin.com/article/tax-collection-from-income-online-1787027769</id>
            <summary type="text">2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

எவ்வாறாயினும், அந்த வருமானத்திற்கு சாதாரண வருமான வரி வீதங்களான 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களின் கீழ் வரி விதிக்கப்படாது என்றும், 15% வரி மட்டுமே விதிக்கப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய தெரிவித்துள்ளார்.</p><h2>தனிநபர்களுக்கான கட்டாய கடமை</h2><p>

எனவே டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் சேவை ஏற்றுமதியிலிருந்து வருமானம் ஈட்டும் தனிநபர்கள், தங்களின் சுய மதிப்பீட்டு வரி அறிக்கையை முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a54aee6-a07f-4d5d-8dd2-f57e0fe1d710/26-6a83e342342f3.webp' />&nbsp;</p><p>

இந்த புதிய வரி விதிப்பு முறையானது, சாதாரண வரி விகிதங்களை விடக் குறைவான வரித் தொகையைக் கொண்டுள்ளது.</p><p>
இந்த முறைமையில் வருமானம் ஈட்டும் அனைத்து தனிநபர்களுக்கும் இது கட்டாய கடமையாக செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T04:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வாகனங்களை இறக்குமதி செய்த உரிமையாளர்களுக்கு மற்றுமொரு சிக்கல்! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-lakh-vehicle-registration-plates-still-missing-1787025807"></link>
            <id>https://tamilwin.com/article/5-lakh-vehicle-registration-plates-still-missing-1787025807</id>
            <summary type="text">கடந்த ஆண்டு (2025) மே 16 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட சுமார் 5 இலட்சம் வாகனங்களுக்கு இதுவரை வாகன பதிவு எண்கள் அச்சிடப்படாமையினால் உரிமையாளர்கள் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஆண்டு (2025) மே 16 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட சுமார் 5 இலட்சம் வாகனங்களுக்கு இதுவரை வாகன பதிவு எண்கள் அச்சிடப்படாமையினால் உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மோட்டார் வாகனப்பதிவு எண்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ​​தற்போதைய அரசாங்கம் புதிய விநியோகஸ்தரின் கீழ் ஜூன் 8 ஆம் திகதி முதல் வாகனப்பதிவு எண்களை அச்சிட தொடங்கியுள்ளது.</p><h2>நிலுவையில் இலட்சக்கணக்கான பதிவு எண்கள்</h2><p>இந்த சூழ்நிலையில், 2025 மே 16 ஆம் திகதி வாகனத்தை பதிவு செய்த வாகன உரிமையாளர், ஒரு வருடம் மூன்று மாதங்கள் கடந்தும், அதற்காக குறைந்தபட்சம் ரூ. 2,000-க்கு மேல் செலுத்தியிருந்தும் பதிவு எண்கள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00702686-ba72-47db-81ca-988a4f773fb3/26-6a83df1b957c2.webp' /></p><p>

மோட்டார் போக்குவரத்துத்துறை இந்த 5 இலட்சம் உரிமத்தகடுகளுக்காக வாகன உரிமையாளர்களிடமிருந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது.</p><p>

 இந்நிலையில், நிலுவையில் உள்ள இலட்சக்கணக்கான பதிவு எண்கள் விரைவில் அச்சிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p> 

இருப்பினும், போக்குவரத்து அமைச்சகமும் மோட்டார் போக்குவரத்துத்திணைக்களமும், வாகன உரிமத் தகடுகளை அச்சிடுவதற்காக மார்ச் 10 ஆம் திகதி தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p> இந்நிலையில், அந்த திகதிக்கு முன்பு தேங்கியிருந்த உரிமத்தகடுகளை அச்சிடுவது அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தரமற்ற உரிமத்தகடுகளை பயன்படுத்தியதற்காக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் அபராதம் விதித்து வருகின்றமை பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T04:29:02+00:00</updated>
        </entry>
    </feed>
