<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-20T23:29:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்படப்போகும் மிக முக்கிய அரசியல் புள்ளிகள்! அரசாங்கத்தை திசை திருப்பும் களத்தில் ரணில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-biggest-politicians-could-be-arrested-1787267515"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-biggest-politicians-could-be-arrested-1787267515</id>
            <summary type="text">எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீதியை உருவாக்கி மீண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிக்க முயற்சிக்கின்றார் என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்த தெளிவான பார்வையும் திட்டமும் உள்ளது.
</p><p>
2028 ஆம் ஆண்டளவில் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் 15 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பு இலக்கை அடைந்து, நாட்டை மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கொண்டு செல்ல இந்த அரசாங்கத்தால் முடியும்.</p><h2>ஊழல்வாதிகளை பாதுகாத்த ரணில்</h2><p>
</p><p>
2028 ஆம் ஆண்டில் கடன் மீளச்செலுத்த தொடங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளின்படி நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என்றும், தற்போதைய இலங்கை மத்திய வங்கியின் கணிப்புகளின்படி இந்த ஆண்டின் இறுதியில் கையிருப்பு 8 பில்லியன் டொலர்களாக மட்டுமே இருக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.</p><p>

இதன் மூலம் 2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும், அதனால் அரசாங்கம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தாமல் அந்நிய செலாவணியை&nbsp; பெருக்குவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூற முற்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cfab7a4-7be6-4a54-a936-5128bf9c5c5a/26-6a8789bd0491d.webp' /></p><p>
</p><p>
ஆனால், ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பொருளாதார ஆலோசகராக மாற முயல்வதும், அவரே பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் என்று பரப்புவதும் ஒரு கட்டுக்கதையாகும்.
</p><p>
2015 நல்லாட்சி காலத்திலிருந்தே ரணில் விக்ரமசிங்க பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளே நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியையும் மக்கள் போராட்டத்தையும் உருவாக்க வழிவகுத்தன.</p><p>

மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்புக் கூற வேண்டிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரம் குறித்த சரியான புரிதல் எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f4f60e0-7f28-41fc-bc4d-eb8568a76ca6/26-6a8789bdb1552.webp' /></p><p> </p><p>அவர் எப்போதும் தீவிர நவதாராளவாத கொள்கைகளின் மூலம் மக்கள் மீது அதிக வரிகளைய சுமத்தி, பொதுச் சொத்துக்களைய தனியார்மயப்படுத்தி மக்களை துன்புறுத்தினார்.
</p><p>
மக்களின் அரகலய போராட்டத்துக்குப் பின்னரும் ரணில் விக்கிரமசிங்க செய்தது ராஜபக்சர்கள் உள்ளிட்ட ஊழல்வாதிகளை பாதுகாத்ததே தவிர, நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு சென்றதல்ல என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T23:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[படையினர் வசம் இருக்கும் தமிழ் மக்களின் காணிகள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-s-instructions-to-security-forces-1787250084"></link>
            <id>https://tamilwin.com/article/president-s-instructions-to-security-forces-1787250084</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக நேற்று(20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><h2>&nbsp;அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை&nbsp;</h2><p>
</p><p>
தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறும் அறிவுறுத்தினார்.</p><p>

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b6d389b-41da-496f-8ca0-f929e247b9a8/26-6a87820393dcf.webp' /></p><p>
</p><p>
அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.</p><p>

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்ஹ, காணி ஆணையாளர் நாயகம், முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T22:39:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனி பற்றாகுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/staff-shortage-northern-coconut-development-1787260521"></link>
            <id>https://tamilwin.com/article/staff-shortage-northern-coconut-development-1787260521</id>
            <summary type="text">வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனிகள் நிரப்பப்படாமையால் நமது
பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெங்கு முக்கோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனிகள் நிரப்பப்படாமையால் நமது
பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெங்கு முக்கோண
வலய உதவி பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன்
தெரிவித்துள்ளார். </p><p>வடமராட்சி கிழக்கில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவது
தொடர்பாக இடம் பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவித்ததாவது, வட மாகாணத்தில் தெங்கு பயிர் செய்கை சபைக்கு ஒரே ஒரு தென்னை அபிவிருத்தி
உத்தியோகத்தர் மட்டும் பணியாற்றுகின்றார்.</p><h2>தேங்காய் விலை</h2><p>மேலும் 3 தென்னை அபிவிருத்தி
உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.எமக்கு பதவி உயர்வுகள்
வழங்கப்பட்ட போதும் இதுவரை ஆளனி நியமனங்கள் எதுவும்
நிரப்பப்படாமலுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d37eab70-e620-4d99-b76d-8e12195959de/26-6a877052c3349.webp' /></p><p>இலங்கையில் தற்போது தேங்காய் விலை அதிகரிப்பிற்கு காரணம்
தேங்காய் உற்பத்தி மிக குறைவாக உள்ளமையே. குறைவான தேங்காய்
உற்பத்தியிலிருந்த வடக்கு மாகாணம் தற்போது தேங்காய் உற்பத்தியில் அதிகரித்து
காணப்படுகின்றது.</p><p> இதற்கு வடக்கு தென்னை முக்கோண வலயம் உருவாக்கப்பட்டமையே
காரணம் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T21:23:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பிரதிவாதிகளினுடைய வாக்குமூலத்தில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/funeral-of-renowned-singer-nanda-malini-1787244957"></link>
            <id>https://tamilwin.com/article/funeral-of-renowned-singer-nanda-malini-1787244957</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இருக்கின்ற 23270 குற்றச்சாட்டுக்கள் இதுவரை விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இருக்கின்ற 23270 குற்றச்சாட்டுக்கள் இதுவரை விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.</p><p>நேற்றையதினம்(19) பிரதிவாதிகள் தற்காப்பு வாக்குமூலங்களை வழங்கினர்.இந்தநிலையிலே, நெளபர் மெளலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் இதுவரையில் சாட்சியல் அளித்துள்ளனர்.</p><p>குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தங்களை தாக்கி கட்டாய வாக்குமூலம் பெற முயன்றதாகவும், சஹ்ரானுடன் தொடர்பு இல்லை என்றும் சில பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>அத்துடன் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் முக்கிய சாட்சியான முரளியின் சாட்சியம் இன்று பதிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-Q7Q47e-ps0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T21:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்! தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-enter-kalmunai-base-hospital-health-ministry-1787249944"></link>
            <id>https://tamilwin.com/article/cid-enter-kalmunai-base-hospital-health-ministry-1787249944</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையின் முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரத்தில் சுற்றுநிருபத்தை பின்பற்றுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையின் முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரத்தில் சுற்றுநிருபத்தை பின்பற்றுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.</p><p> ஆடை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.</p><p>அத்தோடு,&nbsp; ஆடை விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலை ஊழியர்கள், ஏனைய பணியாளர்களையும் இலக்கு வைத்து பதிவுகள் வெளியாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.</p><p>இந்த விவகாரத்திலே தமிழரசுக்கட்சி பாராமுகமாக இருந்து விட்டார்களோ என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டபோது இதற்கு பதிலளிக்கும் முகமாக சிறிநேசன் அரச சுற்றுநிருபம் பின்பற்றப்பட்டு இருக்கின்றது. நாம் மக்களை குழப்ப கூடாது என்ற நோக்கத்துடன் கண்ணியமாக இருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RkNsFChSL3w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T21:10:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[175 நாள்களைத் தாண்டிய தடுப்புக்காவல் : சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/petition-seeking-justice-for-suresh-sallay-1787259946"></link>
            <id>https://tamilwin.com/article/petition-seeking-justice-for-suresh-sallay-1787259946</id>
            <summary type="text">அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே,
ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 175 நாள்களுக்கு
மேலாகச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே,
ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 175 நாள்களுக்கு
மேலாகச் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டி,
அவருக்கு நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒன்று கொழும்பிலுள்ள
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>

சலேவுக்கு ஆதரவளிக்கும் ஒரு குழுவினரால் இந்த கோரிக்கை மனு இன்று வியாழக்கிழமை ஐக்கிய
நாடுகள் சபையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதி வழங்குவதற்கான நடவடிக்கை</h2><p>
</p><p>
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின்
விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, அவருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை
உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc43126-bca5-4563-ae74-c0d3663110ca/26-6a876c2bed086.webp' /></p><p>

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய இந்த ஆவணம், அவரது
தடுப்புக்காவல் தொடர்பான கவலைகளைச் சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லும்
நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கோரிக்கை மனு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T21:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/peru-earthqake-today-1787254722"></link>
            <id>https://tamilwin.com/article/peru-earthqake-today-1787254722</id>
            <summary type="text">
பெரு நாட்டின் தெற்கு அண்டிஸ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  


 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பெரு நாட்டின் தெற்கு அண்டிஸ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. </p><p> 


 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சேத விபரங்கள் குறித்த தகவல் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.
</p><p>
உள்ளூர் நேரப்படி, மதியம் 1 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><h2>சேத விபரங்கள்..</h2><p> </p><p> 

பெருவின், அயகுச்சோ பிராந்தியத்தின் பரினகோச்சாஸ் மாகாணத்தில் உள்ள உபஹுவாச்சோ நகரத்திற்கு வடமேற்கே 38 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e82511d-52df-4924-835a-3a75a7f37407/26-6a875b83afdbe.webp' /></p><p> </p><p> 

இகா மற்றும் அரேகிபா உள்ளிட்ட தெற்கு பெருவின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.</p><p>

நாட்டின், குடிமைப் பாதுகாப்புத் தலைவர் லூயிஸ், உள்ளூர் வானொலி ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை எவ்வித சேதமும் பதிவாகவிலலை என்று தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T19:54:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபம் கடலில் படகு கவிழ்ந்து முதியவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-boat-capsizes-in-sea-off-chilaw-1787253473"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-boat-capsizes-in-sea-off-chilaw-1787253473</id>
            <summary type="text">சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகாமையில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற
சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர்
உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகாமையில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற
சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><p>இந்தச் சம்பவம் நேற்றையதினம் (20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சிலாபம் – சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 67 வயதான முதியவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கடலில் ஏற்பட்ட திடீர் சீற்றம் மற்றும் கடுமையான நீரோட்டத்தின் வேகத்தைக்
கட்டுப்படுத்த முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக்
காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த இருவரில் ஒருவர் துரிதமாகச் செயற்பட்டு
உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e2ce5f9-23f9-4535-ad37-417bd2537f53/26-6a87562a2f093.webp' /></p><p>
</p><p>
காப்பாற்றப்பட்ட மேற்படி கடற்றொழிலாளர் காயங்களுடன் உடனடியாகச் சிகிச்சைக்காக சிலாபம்
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள் அமைச்சர்களே காரணம் : மனோ எம்.பி. பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-that-the-anura-government-will-fall-1787253809"></link>
            <id>https://tamilwin.com/article/warning-that-the-anura-government-will-fall-1787253809</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள்
அமைச்சர்களே காரணம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள்
அமைச்சர்களே காரணம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>இந்த ஆட்சி தொடர வேண்டும்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"நண்பர் ஜனாதிபதி அநுரவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

பாதாள உலகக் செயல்களும் போதைப் பொருளும் ஒழியும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும்.

இந்த ஆட்சிக்கு வெளி நபர்களால் எந்த ஆபத்துமில்லை. உள்ளகத்திலேயே ஆபத்து
இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6afd531a-8159-49d1-83a5-815484d737e1/26-6a8754329dff1.webp' /></p><p>
</p><p>
நாங்கள் இன்று எதிர்க்கட்சி இல்லை, தாமே அரசு, அதிகாரம் தம்மிடம்தான் உள்ளது
என்பதை உணராத, ஆளத் தெரியாத முட்டாள் அமைச்சர்கள் காரணமாகச் சிங்கள மக்கள்
மத்தியில் அரசின் செல்வாக்கு சரிந்து வருகின்றது.
</p><p>
இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எம்மைக் குறை
கூறுவதைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத, செய்யாத மந்திரிகள் காரணமாக அரச
செல்வாக்கு குறைந்து வருகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T19:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: சுகாதார அமைச்சருடன் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-nurses-uniform-dispute-resolved-1787193825"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-nurses-uniform-dispute-resolved-1787193825</id>
            <summary type="text">சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். 
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். </p><p>
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>சுகாதார அமைச்சருடனான சந்திப்பு</h2><p>இந்த சந்திப்பின் போது வைத்தியசாலை தொடர்பாக சில விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p> அண்மையில் நடந்த சர்ச்சைக்குரிய சீருடை விவகாரத்தால் கல்முனை - வடக்கு வைத்தியசாலையில் இருந்து
புதிதாக நியமனம் பெற்ற இஸ்லாமிய உதவியாளர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகாரத்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவர்களின் இடத்திற்கு பதிலாக கல்முனை - வடக்கு வைத்தியசாலைக்கு ஆளணி நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92a306e2-2985-4895-acb0-e547aeedbfdb/26-6a877f71212f1.webp' /></p><p>இதனை அமைச்சர் விரைவில் சீர் செய்வது தருவதாக உறுதியளித்துள்ளார். அடுத்ததாக புதிதாக நியமனம் பெற்ற தமிழ் வைத்தியசாலை உதவியாளர்கள் ஒரு குறுகிய ஆரம்ப பயிற்சிக்காக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டிருந்தனர்.</p><p> அஸ்ரப் வைத்தியசாலை ஒரு இஸ்லாமிய ஆதிக்கம் கொண்ட வைத்தியசாலை. இப்போது தமிழ் பிள்ளைகள் அங்கு பயிற்சிக்கு செல்ல பயப்படுகிறார்கள். ஆதலால் தமிழ் பிள்ளைகளுக்கு வேறொரு இடத்தை தெரிவு செய்யுமாறு ஒரு கருத்து அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>சீருடை பற்றிய சர்ச்சைகள்</h2><p> </p><p>இதனையடுத்து அமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த இடத்தை தமிழ் பிள்ளைகளுக்கு மாற்றி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சீருடை விடயம் மதச்சார்பற்றதாகவும் மொழி சார்பற்றதாகவும் இனச்சார்பற்றதாகவும் இருக்க வேண்டும்.</p><p></p><p>இலங்கையிலுள்ள அரச உத்தியோகஸ்தர்கள் மதத்துக்கேற்றவாறு மொழிக்கு ஏற்றவாறு இனத்துக்கேற்றவாறு சீருடை அணிவதில்லை. சீருடை ஆராய்வதற்கும் வடிவமைப்பதற்கும் ஒரு சிரேஷ்ட குழு அமைச்சு மட்டத்தில் இயங்கி வருகிறது.</p><p> சீருடை பற்றிய சர்ச்சைகள் எழும்பும் போது அதன் இறுதித் தீர்மானமே முற்றாகவும், முடிவானதுமாக இருக்கும். இந்த நாட்டு மக்கள் இலங்கையர்கள் இதை பிரித்து பார்க்க முடியாது. பிரித்துப் பார்க்கவும் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5e2375-fd89-4e58-a616-604f97baa20f/26-6a866c6a095e4.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்த மூன்று நாட்களை துக்க தினமாக பிரகடனப்படுத்திய அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-days-of-mourning-in-sri-lanka-1787248436"></link>
            <id>https://tamilwin.com/article/three-days-of-mourning-in-sri-lanka-1787248436</id>
            <summary type="text">இலங்கையில் நாளை(21) மற்றும் 22, 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அரசாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நாளை(21) மற்றும் 22, 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><h2>துக்க தினம்&nbsp;</h2><p>பிரபல பாடகி நந்தா&nbsp; மாலினியின் மறைவையொட்டி&nbsp; குறித்த மூன்று தினங்களையும் துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான மேலதிக விபரங்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5658160-ac1e-46f0-aa6d-364d11b99937/26-6a8741598112b.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-people-arrested-in-kilinochchi-dig-for-treasure-1787248573"></link>
            <id>https://tamilwin.com/article/8-people-arrested-in-kilinochchi-dig-for-treasure-1787248573</id>
            <summary type="text">கிளிநொச்சி-இரணைமடு 55 ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட&amp;nbsp;8 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி-இரணைமடு 55 ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட&nbsp;8 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(19.8.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><p>கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற
இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார்
குறித்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைது</span></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு சிலாபம், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம்
பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/471099a6-f90e-43db-8e63-c32d4f0f65e7/26-6a8740cdbfce7.webp' /></p><p>குறித்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல்
தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும் சிறிய ரக வாகனம் ஒன்றும்
பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:00:54+00:00</updated>
        </entry>
    </feed>
