<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-30T10:38:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி விபத்து - பாடசாலை மாணவி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallathanni-accident-school-girl-death-1785405845"></link>
            <id>https://tamilwin.com/article/nallathanni-accident-school-girl-death-1785405845</id>
            <summary type="text">கடந்த 22 ஆம் திகதி நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 22 ஆம் திகதி நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இந்த விபத்தில் கீழ் நல்லத்தண்ணி முர்ரே தோட்டத்தினை சேர்ந்த மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியில் 8ஆம் வகுப்பில் கல்வி பயின்ற மாணவி செல்வம் திஷ்னா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மாணவியின் சடலம் மீதான மரண விசாரணை</h2><p>மாணவியின் சடலம் மீதான மரண விசாரணையின் பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3466a508-92c1-4d7d-bced-fa0484e10450/26-6a6b27200e46a.webp' /></p><p>நல்லத்தண்ணியிலிருந்து மாஸ்கெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர
வண்டி கடந்த 22ஆம் திகதி மோகினி எல்ல பகுதியில் பிரதான வீதியில் இருந்து
விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியிருந்தது.</p><p>இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பின் இருக்கையில் பயணித்த அவரது உறவினரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>நல்லத்தண்ணி பொலிஸார் விசாரணை&nbsp;</h2><p> 

 

முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவிகளும், ஒரு பாடசாலை மாணவனும் படுகாயமடைந்து, கண்டி போதனா வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
</p><p>இந்நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:29:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத பேருந்து நிலையம் - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrenovated-hatton-bus-stand-1785406685"></link>
            <id>https://tamilwin.com/article/unrenovated-hatton-bus-stand-1785406685</id>
            <summary type="text">மலையகத்தில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையப் பகுதியாக பார்க்கப்படும் ஹட்டன் பேருந்து நிலையம் எந்தவித புனரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையகத்தில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையப் பகுதியாக பார்க்கப்படும் ஹட்டன் பேருந்து நிலையம் எந்தவித புனரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காணப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். </p><p>

ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்கிறது.</p><p></p><p>

சர்வதேச புகழ்பெற்ற சிவனொளி பாதமலை (ஆதாம் சிகரம்), சென் கிளையார் மற்றும்
டெவோன் நீர்வீழ்ச்சிகள், எல்ல சமவெளி, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன்
ஆலயம், காயத்திரி பீடம் உள்ளிட்ட பல சுற்றுலா மற்றும் சமயத் தலங்களுக்கு
பயணிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரதான
இணைப்புத் தளமாகவும் இந்த பேருந்து நிலையம் பார்க்கப்படுகின்றது. </p><h2>


ஹட்டன் பேருந்து நிலையம்</h2><p>

கடந்த 1986ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட ஹட்டன் பேருந்து நிலையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தனியார் பேருந்து நிலையம் தனியாக அமைக்கப்பட்டு, தனியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. எனினும், இந்த இரு நிலையங்களும் பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89f1082-f795-4961-9187-eab0470db591/26-6a6b25c328b19.webp' /></p><p>
</p><p>

குறிப்பாக மழைக்காலங்களில் பேருந்து தரிப்பு நிலையம் முழுவதும் நீர் தேங்கி,
பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது என்றும், வளாகம் முழுவதும் குப்பைகள்
மற்றும் வெற்றிலை எச்சில்கள் சிதறிக்கிடப்பதுடன், மழைநீர் வடிகால்கள்
குப்பைகளால் அடைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகின்றது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். </p><p>


அத்துடன், போதுமான மற்றும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால்,
சிலர் பேருந்து தரிக்கும் பகுதிகளிலேயே சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,
தெரிவிக்கப்படுகிறது. </p><p>தற்போது உள்ள பொது கழிப்பறைகளும் போதிய சுகாதார
பராமரிப்பின்றி காணப்படுவதால், பயணிகளும் பொதுமக்களும் கடும் சிரமங்களை
எதிர்கொண்டு வருகின்றனர்.</p><h2>

பொதுமக்களின் கோரிக்கை</h2><p>
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்
பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தை முழுமையாக நவீனமயமாக்க வேண்டும் என பல
ஆண்டுகளாக பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்ந்து
கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82bb63bd-e6d0-4756-a29e-5a14e7b41a50/26-6a6b25c41f4e5.webp' /></p><p> 

இருப்பினும், 2016ஆம் ஆண்டில் சில தற்காலிக
மற்றும் மேலோட்டமான திருத்தப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், நிரந்தர
தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
இதனிடையே, புதிய அரசாங்கம் ஹட்டன் நகர அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவை
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருந்தாலும், பேருந்து தரிப்பு நிலையத்தை
புனரமைக்கும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என மக்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனவே, மலையகத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் ஹட்டன் பேருந்து தரிப்பு
நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய சுத்தமான, பாதுகாப்பான மற்றும் சுற்றுலாப்
பயணிகளுக்கு ஏற்ற வகையில் உடனடியாக புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/127fe8d3-0468-4ffc-86db-b58c87a0a8eb/26-6a6b25c4e9e0e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca93364b-844e-4fcc-92d5-dc4204045ce8/26-6a6b25c5bffc5.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/452a8a47-e052-40e9-871e-571eaaf16b86/26-6a6b25c691f6a.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனகராயன் குளத்தில் கப் ரக வாகனம் விபத்து: இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pickup-truck-accident-in-kanagarayankulam-2-dead-1785405762"></link>
            <id>https://tamilwin.com/article/pickup-truck-accident-in-kanagarayankulam-2-dead-1785405762</id>
            <summary type="text">கனகராயன் குளத்தில் கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனகராயன் குளத்தில் கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த விபத்தானது ஏ-9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இன்று (30.07) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றி சென்ற கப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p> குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக
மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7e6935c-0feb-473a-af5f-f52e3009fe29/26-6a6b24758ed2c.webp' /></p><p> </p><p>எனினும், தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:16:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவுக்கு யாழ்.ஊடக மன்றம் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-media-condoles-passing-senior-journalist-1785404032"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-media-condoles-passing-senior-journalist-1785404032</id>
            <summary type="text">மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத்
துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத்
துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு யாழ். ஊடக
மன்றம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளது.
</p><p>
</p><p>நீண்ட கால ஊடக அனுபவத்தை அவர் கொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல்
பயிற்சி மையத்தின் விரிவுரையாளராக கடமை புரிந்து பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய
பெருமையும் அவரை சாரும். </p><p>அத்துடன் தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் செய்தி
ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றி பல விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்துக்கு
பல நல்ல விடயங்களை புரிந்ததில் அவரது பங்கு அளப்பரியது.</p><p></p><h2>தமிழ் மக்களது உரிமைசார் போராட்டங்கள்</h2><p>தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின்
குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த
ஆளுமையுமாவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8301392-9681-4ea9-b411-d8f44db5ce35/26-6a6b22ec9937c.webp' /></p><p>அத்துடன் தமிழ் மக்களது உரிமைசார் போராட்டங்கள் தொடர்பான
செய்திகளை நடுநிலையாக பிரசுரித்து தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு
வலுச்சேர்த்ததில் அவரது பங்கு இன்றியமையாத ஒன்றாகும். </p><p>அவரது உயிரும் உடலும்
மறைந்தாலும் ஊடகத்துறையில் அவர் புரிந்த அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக
வரலாற்றில் என்றும் அழியாத தடமாக நிலைத்திருக்கும்.</p><p>

அன்னாரின் சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதோடு அவரை இழந்து வாடும்
உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:10:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலையில் விசேட போக்குவரத்து சோதனை! 24 ஓட்டுநர்களுக்கு தடை உத்தரவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-traffic-inspection-in-monaragala-drivers-1785401755"></link>
            <id>https://tamilwin.com/article/special-traffic-inspection-in-monaragala-drivers-1785401755</id>
            <summary type="text">மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய மற்றும் ஊவா குடா ஓயா பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையில், 24 ஓட்டுநர்களுக்கு தடை உத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய மற்றும் ஊவா குடா ஓயா பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையில், 24 ஓட்டுநர்களுக்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கதிர்காமம் மற்றும் தெவிநுவர தேவாலயங்களின் வழிபாட்டு நிகழ்வுகளை முன்னிட்டு தற்போதைய காலகட்டத்தில் மொனராகலை ஊடாக நாளாந்தம் ஏராளம் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.
</p><p>
அவ்வாறான வாகனங்களில் சட்டவிரோத உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளமை, கரும்புகை வெளியிடல் போன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக பாதசாரிகளும், வர்த்தகர்களும் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>போக்குவரத்து சோதனை</h2><p>

இதனையடுத்து வெல்லவாய மற்றும் ஊவா குடா ஓயா பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்களுடன் இணைந்து நடத்திய விசேட போக்குவரத்து சோதனையின் போது மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a3f12d-8489-4e5b-b4a4-9dcca1e0e269/26-6a6b183aefd4a.webp' /></p><p>

வீதிகளில் இயங்கும் பழுதடைந்த வாகனங்கள் மற்றும் பல்வேறு சட்டவிரோத பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்வது இந்த விசேட சோதனையின் முக்கிய நோக்கமாகும்.</p><p> இதன்போது வீதிப் போக்குவரத்துக்கு தகுதியற்ற, கடுமையான குறைபாடுகள் கொண்ட மற்றும் சட்டத்திற்கு முரணான பாகங்கள் பொருத்தப்பட்ட 24 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ஓட்டிய 24 சாரதிகளுக்கு உடனடி தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>விசேட நடவடிக்கை</h2><p>
</p><p>
இருப்பினும், சம்பந்தப்பட்ட சாரதிகள் தங்களது வாகனங்களில் உள்ள குறைபாடுகளையும் பிழைகளையும் சரிசெய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f12fd0c-2f76-41d3-b9fe-64495a3280c7/26-6a6b183ba6807.webp' /></p><p> </p><p>அந்த காலக்கெடுவுக்குள், வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தங்களது வாகனங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரத் தவறும் சாரதிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.</p><p>

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து விதிகளை மதிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற விசேட நடவடிக்கைகள் தொடர்ந்து கடுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T09:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillaiyan-s-petition-court-order-1785401680"></link>
            <id>https://tamilwin.com/article/pillaiyan-s-petition-court-order-1785401680</id>
            <summary type="text">தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p> 

அதற்கமைவாக, குறித்த மனுவை ஜனவரி மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce83b4ae-6ccb-44f2-838f-2c752c83aa4e/26-6a6b14270abae.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T09:07:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலுவடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bsl-rates-us-dollar-selling-rate-1785399754"></link>
            <id>https://tamilwin.com/article/bsl-rates-us-dollar-selling-rate-1785399754</id>
            <summary type="text">இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(30) அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக&amp;nbsp;இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(30) அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக&nbsp;இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.59 ஆகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441.22 ஆகவும் விற்பனைப் பெறுமதி 455.94ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.56ஆகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.54 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/333b3d74-262c-4400-9808-394b6618c935/26-6a6b0e5e92167.webp' /></p><p>அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228.31ஆகவும் விற்பனைப் பெறுமதி239.32 ஆகவும் பதிவாகியுள்ளது. </p><p> 

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255.37 ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.87ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-1983-and-unresolved-tamil-problem-1785398530"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-1983-and-unresolved-tamil-problem-1785398530</id>
            <summary type="text">கறுப்பு ஜூலை என்பது 1983 ஜூலை 24 தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்கள் 3000 பேர் வரை படுகொலை செய்ததும், தமிழர்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜூலை என்பது 1983 ஜூலை 24 தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்கள் 3000 பேர் வரை படுகொலை செய்ததும், தமிழர்களின் சொத்துகளை அழித்தும், கைப்பற்றியும், சூரையாடியும், கொள்ளைடித்தும், தமிழ்ப் பெண்களை கற்பழித்தும், தமிழர் வீடுகள் வியாபால நிறுவனங்களை தீவைத்து எரித்தும் சிங்கள இனவெறியர்கள் ஆடிய ஊழித்தாண்டவத்தை ஈழத்தமிழர்கள் அதனை ஒரு துன்பவியல் நிகழ்வாக கடந்துவிட முடியாது. </p><p>

அது ஈழத்தமிழர்களது இருப்போடும், வாழ்வோடும், வரலாற்றோடும் பிண்ணிப் பிணைந்த ஒன்றாகும். அந்த வலியும், வேதனையும் தலைமுறை தலைமுறையாக காவிக் கடத்தப்படவேண்டியதொன்று.</p><p></p><p>
</p><p>
1983 ஜூலையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு என்பது சடுதியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல. </p><p>அது நீண்ட திட்டமிடலோடும், இன விரோதத்தோடும், தமிழர்களின் பொருளாதாரத்தை கொழும்பில் இல்லாது ஒழிக்கவும், பொருளாதார இலக்குகளை சிங்களவர்கள் கைப்பற்றுவதற்குமான ஒரு நீண்டகால தொடர் இனவிரோத செயல்முறையின் ஒட்டுமொத்த திரட்சியின் வடிவம் தான் ஜூலை இனப்படுகொலை.</p><p>ஆனால் யாழ் திருநெல்வேலியில் ஜூலை 23ஆம் திகதி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள படையினர் கொல்லப்பட்டமை என்பது அந்த இனப்படுகொலையை ஆரம்பிப்பதற்கான உடனடி காரணமாக அமைந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d35756c-1464-429a-9910-06a742631602/26-6a6b057fe22a0.webp' /></p><h2>&nbsp;ஜூலை படுகொலை</h2><p>

சிங்களவர்களால் 1983 ஜூலை இனவழிப்பின் ஆரம்பத்திற்கு முன்னரே மே மாதம் பெரதேனியா பல்கலைக்கழக பதிவாளராக(1976) இருந்த விமல் சுந்தரவின் ஆதரவு அணி மாணவர்களான துல்சி விக்ரமசிங்க மற்றும் டொக் கமகே ஆகியோரின் தலைமையிலான குழுவினால் பெரதேனியா பல்கலைக்கழக அருணாசலம் மண்டபத்தில் வைத்துத் இனத்துவேசம் பேசியவாறு தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டனர்.&nbsp;</p><p>இதனையடுத்து, 1983 ஜூலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கபினற் மினிஸ்டர்கள் சிலர் கிளாஸ்களை உடைத்து தமிழின விரேதம் பேசி சத்திமிட்டுவிட்டு கலகம் விளைவித்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79a6002d-de55-4b61-b8ab-35c345f577d9/26-6a6b08ad6363d.webp' /></p><p> </p><p>

அதன்பின்னர் அதாவது 83 கலவரம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பெஸ்ரஸ் பெரேரா தன்னுடைய தொண்டர்களுக்கு பிறவுன் கொட்டேல் கடற்கரையில் வைத்து “let them wait a few weeks , they will learn a good lesson‘‘ என்று சொன்னார்.

1983 ஜூலை 11 இல் ஜே.ஆர் ஜயவர்த்தனா ‘‘நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.</p><p>இப்போது அவர்களைப்பற்றி எம்மால் சிந்திக்க முடியாது. அவர்கள் உயிர்களைப்பற்றியோ, அவர்கள் எங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றியோ சிந்திக்க முடியாது “என்கிறார்,

இது தமிழர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற வக்கிரம் ஜனாதிபதி மனதில் குடிகொண்டிருப்பதை காட்டுகிறது.</p><p></p><p> </p><p>

இதேவேளை பின்நாளில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துளத்முதலியிடம் ஒக்பேட் பல்கலைக்கழக டேவிட் செல்போர் என்ற அவரது நண்பன் ‘‘இனப்பிரச்சனைக்கு எத்தகைள தீர்வை காணப்போகிறீர்கள்“ என்று கேட்டதற்கு, “ mash The Heads of the Tamils‘‘ என்று சொன்னார்.

 அது இனக்குரோதத்தின் உச்சத்தின் வெளிப்பாடு, திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினருடைய சடலங்களும் பொரளை மயாணத்தில் எரிக்கப்பட்டது.</p><h2>ஓகனேசன்ஸ் திட்டம்</h2><p>
</p><p>
 24 ஆம் திகதி மதியம் 2மணிக்கு கொழும்பு வீதிகள் எங்கும் படுகொலைகள் நடந்தன. சிங்களவர்கள் சிலர் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் போது அந்த அந்த பிரதேசத்தின் வாக்காளர் பட்டியலினை கையில் வைத்துக்கொண்டே ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தாக்கினர்.
</p><p>
தென்னிலங்கையில் தமிழர்கள் பெருமளவு கொல்லப்பட்டு பேரழிவை சந்தித்துக் கொண்டிருப்பதை ரசித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி, ஜூலை 27ஆம் திகதி வானொலி ஊடாக தனது உரையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு எந்தவிதமான அனுதாபமோ வருத்தமோ தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b330ef0e-0f9a-46f8-b3fe-ed5b193b6123/26-6a6b08ae35f40.webp' /></p><p> 

அதேநேரம் அமைச்சர் அனந்த திஸ்ஸ டி அல்விஸ் த காடியன் ஊடகங்களுக்கு 28ஆம் திகதி யூலை கொடுத்த பேட்டியில், சில ஓகனேசன்ஸ் திட்டம் செய்திருந்தாகவும், தாம் அது தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார். </p><p>

அத்துடன் இது ஒரு Hit and Run Operation என்றும் கூறினார். இங்கு படுகொலைகளின் பின் எந்தவோரு அரசியல் கட்சியோ, தொண்டு நிறுவனமோ, பத்திரிகைகளோ ஒரு வருத்தத்தை தானும் தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்டவர்களுடன் எப்படி தமிழர்கள் சமரசம் செய்து இணைந்து வாழ முடியும்?&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஊடகவியலாளர்களுக்கு சொன்ன தகவல்</span></p><p>
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நடந்த போது 28 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தனது வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவைக் கொழும்புக்கு அனுப்பி வைத்து எச்சரித்தார். </p><p>

ஆனாலும் ஜூலை 31ஆம் திகதி தான் இனவழிப்பு வெறியாட்டம் நிறுத்தப்பட்டது. சிங்களவர்கள் சிலர் வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை மறித்து, “ நீ சிங்களவனா?” எனக் கேட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d2bbca6-43a1-4089-b58b-5a58aab7881a/26-6a6b0c23bbb06.webp' /></p><p>
</p><p>
அப்போது அவர் ஆம் என்றால் அவர் சிங்களவன் என்பதற்கான அடையாளத்தை காட்டவேண்டும் இதுஒரு புறம் புத்தரினுடைய பாட்டினை பாடிக்காட்ட வேண்டும். அப்போது தான் விட்டார்களாம். இதன்போது ஐலண்ட் பத்திரிகை ஊடகவியலாளர் அமிர்த அபேசேகர அப்பகுதியால் செல்லும் போது அவரிடமும் கேட்கப்பட்டது. </p><p>

அவர் திருப்பி அந்த சிங்கள தலைவனைக் கேட்டாராம், “ நீ சொல்லு எண்டு அவரால் சொல்ல முடியவில்லை..” என்பதையும் ஐலண்ட் பத்திரிகையில் பதிவு செய்திருந்தார். 

கொழும்பில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ தலைமை தாங்கியிருந்தார். </p><p>அதற்காக ஜாதிக சேவக சங்கமய (JSS) என்கின்ற தொழிலாளர் சங்கத்திற்கு இனவாதத்தை தூண்டி அவர்களைக் கொண்டே வெள்ளவத்தை பகுதியில வீடுகளை தீக்கிரையாக்கப்பட்டது.

கொழும்புப் படுகொலைகளை சிறில் மத்தியூதான் தலைமை தாங்கினார் என India Today of 31st August 1983, தெரிவித்திருந்தது.&nbsp;</p><p></p><h2>442 கடைகள் அழிப்பு</h2><p>
அடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் தெகிவளை கல்கிசை மாநகராட்சி கவுன்சிலர் தலைமையிலான கும்பல் ஒன்று மவுண்லவேனியா, கல்கிசை, புறக்கோட்டைப் பகுதிகளில் 442 கடைகளை எரித்து அழித்திருந்தன. 

தளபதி அலோசியஸ் முதலி மகனுடன் ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் இருவரும் சேர்ந்து பொரளை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் சீருடைய அணியாத இராணுவம் பயன்படுத்தப்பட்டது. </p><p>

அத்தோடு, இலங்கை போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்து அமைச்சராக எச் முகம்மட் இருந்தார். நுவரேலியாவில காமினி திசநாயக்கா பற்றிக் சறம் அணிந்தவாறு சிங்களவர்கள் கூட்டத்தை வழிநடத்திப்போய் “தமிழனையும் அவன் கடைகளையும் எரியுங்கள்“ என்று கத்தியவாறு காடையர்களை வழிநடத்தினார். </p><p>

இதனை பியதாச தனது நுாலின் 81 -89 வரையான பக்கங்களில் குறிப்பிடுகிறார். (L.Piyadasa , Srilanka: The Holocaust and After , 1984) இந்த பியதாச தான் 1983 கலவரத்தைப்பற்றி விரிவாக எழுதினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d19da55a-8087-451a-a261-e7d0f33da0a7/26-6a6b0c24a806c.webp' /></p><p> </p><p>

இந்தப்புத்தகம் எழுதியதற்காக அவருடைய கண்டி வீடு அடித்துநொருக்கப்படுகிறது. இந்த கொலைகள் ஒருபுறம் இடம்பெற்றிருக்கும் போது இந்திராகாந்தி இராஜசபாவில் its genocide என்று கூறினார்.</p><p> 

அத்துடன் P.V.நரசிமராவை கொழும்புக்கு அவசரமாக அனுப்பினார். நரசிமராவ் ஜே.ஆர் இடம் நீங்கள் கட்டுபடுத்துகிறீர்களா அல்லது நாங்கள் படையை அனுப்பி கட்டுப்படுத்தவா என்று கேட்டதன் பின் ஜே.ஆர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். </p><p>

அதே போன்று, “எமெஜென்சி 58” என்னும் புத்தகத்தை எழுதிய ரார்சி விற்றாச்சி(Tarzie Vittachi)என்கின்ற தினமும் வெளியாகும் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். </p><p>இவர், தனது புத்தகப்பதிவில் 1958 இல் ஹிங்குராங்கொடவில் கரும்புத் தோட்ட அரசவிடுதியில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்து கொலை செய்தனர். </p><p>

இரத்தம் தோய்ந்த படி கிடக்க அதனைச் சுற்றி மேளமடித்து பாட்டுப்பாடி மகிழ்ந்தனர். இதனைப்பார்த்த பெண் தன் 2பிள்ளைக்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.</p><h3>பேருந்து நிலையத்தில் ஆடைகள் கலைக்கப்பட்ட தமிழர்</h3><p>

ஜேர்மனியில் ஹிட்லர் செய்த படுகொலைக்காக இதுவரை நாசிகளின் அரசியல் கட்சிகள் எதுவும் உரிமை கோரிவில்லை, மன்னிப்பு கேட்கவில்லை. அந்த நாளில் ஒஸ்ரிக் முகாமில் அதன் பொறுப்பதிகாரியாக இருந்த ஒஸ்கார் என்ற 94 வயது நிரம்பிய சிறைப்பொறுப்பதிகாரி, கடந்த 2015ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டு 4வருட சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருக்கிறது. 

ஜேர்மனிய அரசுக்கு இந்த தகவல்களை வழங்கியவர்கள் இஸ்ரேலியர்கள். </p><p>அந்தளவிற்கு யூதர்களிடம் தகவல் ஆய்வு மையம் இயங்கிக்கொண்டிக்கிறது. ஆனால் ஈழத்தமிழரிடம் அப்படி எதுவும் இல்லை. 

1983 ஜூலை கொழும்பில் நடைபெற்ற படுகொலையை புரட்சி கொம்னிஸ்ட் கழகம் சார்பில் சிங்களத்தில் கம்கறுமாவத்தை என்றும் தமிழில் தொழிலாளர் பாதை என்ற பத்திரிகையின் ஒளிப்படப்பிடிப்பாளராக இருந்த சந்திரகுப்த அமரசிங்க என்பவர் பொரளைப்பகுதியூடாக குடிபோதையில் வரும்போது பொரளை பேருந்து நிலையத்தில் தமிழர் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிவிட்டு மேளமடித்து நடனமாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110cc77b-5feb-491a-954e-963c29bf24a9/26-6a6b0c2558fa7.webp' /></p><p>
</p><p>

தமிழ் நபர் தலையிலை கை வைத்துக்கொண்டிருக்கும் போது தனது புகைப்படக்கருவியினால் மொத்தம் 14 புகைப்படங்களை எடுத்திருந்தார். </p><p>இவை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஊடாக கப்டன் பண்டிதருக்கு வழங்கப்பட்டது. 

அந்த புகைப்படங்கள் தான் பேபி சுப்பிரமணியம் என்பவரால் கடந்த 1984ல் தமிழகத்தில் ஒரு கண்காட்சிக்காக வெளியிடப்பட்டது. அவைதான் இன்றுவரையான யூலை ஆதாரமாகவுள்ளது.</p><p>

இனப்படுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கும், தமக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கும், அதனுடாக தாம் இழந்து போன இறைமையை மீட்டெடுப்பதற்குமான தொடர் போராட்டத்தில் தமது இழப்புக்களையும், தமக்கு ஏற்பட்ட அவலங்களையும் நினைவு கூர்வதும் அதன் மூலமாக ஒரு கூட்டு மனஉணர்வுடன் ஐக்கியப்படவும், ஒற்றுமைப்படுவதற்குமான இடமாக நினைவுச் சின்னங்களும், நினைவு மண்டபங்களும் பேருதவி புரியும். </p><p>

அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வலிகளை, மனக்காயங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஜூலை இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவு சின்னங்கள் வரலாற்று உணர்வோடு அமைக்கப்பட வேண்டியது அவசியமானது. 

அத்தகைய நினைவுச் சின்னங்கள்தான் எதிர்காலத்தில் எமது சந்ததிக்கு வழிகாட்டியாக அமையும்.&nbsp; </p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-bandara-produced-before-court-1785392358"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-bandara-produced-before-court-1785392358</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டார, இன்று காலை (30.07.2026) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>


இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சுகீஸ்வர பண்டார ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>நிதி முறைகேடு தொடர்பாக</h2><p>


இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் ஊழல் தடுப்புக் குழு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCIB) முறைப்பாடு அளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb885555-65d6-4fbb-828b-ea8e0b5f2125/26-6a6af23bc5bfb.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், சுகீஸ்வர பண்டார 2022இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் இயக்குனர் பதவியையும் வகித்ததும் தெரியவந்தது.
</p><p>

இதன் அடிப்படையில், அவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.


அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-maid-death-case-latest-info-revealed-1785388801"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-maid-death-case-latest-info-revealed-1785388801</id>
            <summary type="text">கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. </p><p>

கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் சுவசெரிய முதலுதவி அதிகாரி அஸலி உபேக்ஷா நேற்று சாட்சியமளித்தார்.</p><p> மேலதிக நீதவான் லிலான் வருசூவிதாரன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.</p><p></p><p>
</p><h2><b>
சிறுமியின் மர்ம மரணம்</b></h2><p>“கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறுமியைத் தேடி அந்த வீட்டின் கராஜ் பகுதியினூடாக நுழைந்தேன். அங்கே படிகளில் சிறுமி ஒருவர் இருத்தப்பட்டிருந்தார். அவர் மீது படுக்கை விரிப்பு ஒன்று போர்த்தப்பட்டிருந்தது.

அத்துடன், சிறுமியின் உடலில் ஆடைகள் இருக்கவில்லை. </p><p>அந்த நேரத்தில் எரியும் ஒரு வாசனை உணரப்பட்டது. அது, எரியும் போது தோலில் இருந்து வெளிவரும் வாசனையாகும். எனினும் அது எவ்வகையான வாசனை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd0871e6-1df7-4dbf-a4e5-c4bd00c5dbaf/26-6a6aec218e1b9.webp' />&nbsp;&nbsp;</p><p>

கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதை என்னால் அடையாளம் காண முடிந்தது. சிறுமி என்னிடம் தண்ணீர் கேட்டார். அதற்கு மேல் வேறு எதையும் அவர் என்னிடம் கூறவில்லை.</p><p> உடனடியாக சிறுமியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமி இறந்த பின்னரே பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்.
</p><h2><b>
பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் </b></h2><p>சுவசரிய அவசர சேவை தொலைபேசி இலக்கமான 119 க்கு இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆரம்ப அழைப்புக்குப் பதிலளிக்கும் போது தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை உடனடியாகக் குளிப்பாட்டுவது உள்ளிட்ட அடிப்படை முதலுதவிகள் குறித்து அறிவுறுத்தினோம். </p><p>இருந்த போதிலும், நாங்கள் அங்கே சென்றடையும் போது குறித்த தரப்பினரால் அவை பின்பற்றப்பட்டிருக்கவில்லை.
</p><p>
மேலும், இந்த வழக்கில் சாட்சியமளிப்பது தொடர்பில் பொலிஸார் எங்களுக்கு எந்தவிதமான முறையற்ற அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b996e3c-5ff3-48a9-9558-7a2f9ac1669b/26-6a6af4af733ba.webp' />&nbsp;&nbsp;</p><p>
சம்பவம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டில் எரிவாயு காரணமாக தீப்பற்றிய ஒருவர் வீட்டில் உள்ளதாக சுவசரிய சேவைக்கு ஆரம்ப அழைப்பின் மூலம் பெறப்பட்டதாக&nbsp; தெரிவித்து, அதே ஆண்டில் தான் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
</p><p>
சுவசரிய சேவைக்கு பொதுவாகக் கிடைக்கும் அனைத்து அழைப்பு விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், இச்சம்பவமும் அவ்வாறே அமைந்திருக்கும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். </p><p>

தீக்காயங்களை தவிர, எரிவாயு காரணமாக தீப்பற்றி காயமடைந்த நபர் ஒருவர் குறித்தும் இச்சம்பவம் தொடர்பான ஆரம்ப சுவசரிய அழைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என எதிர்த்தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eTQrhBtbBLM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-30T08:20:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை மன்னார் மாவட்டத்தில் நெல் கொள்வனவு மேற்கொள்ளவில்லை - விவசாயிகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-paddy-procurement-in-mannar-district-1785397929"></link>
            <id>https://tamilwin.com/article/no-paddy-procurement-in-mannar-district-1785397929</id>
            <summary type="text">வட மாகாணத்தில் நெற் கிண்ணம் என அழைக்கப்படும் மன்னார்
மாவட்டத்தில் இதுவரை நெல் சந்தைப்படுத்தல்சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை என
பாதிக்கப்பட்ட விவசாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தில் நெற் கிண்ணம் என அழைக்கப்படும் மன்னார்
மாவட்டத்தில் இதுவரை நெல் சந்தைப்படுத்தல்சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை என
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் நெல்
கொள்வனவில் ஈடுபடுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் இன்னும் நெல் கொள்வனவு
நடைபெறவில்லை.
</p><p>
ஏனைய மாவட்டங்களில் 15 தொடக்கம் 20 இடங்களில் நெல் கொள்வனவு
நடைபெறுகின்றன.</p><p></p><h2>நெல் கொள்வனவு&nbsp;</h2><p> மன்னார் மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் மூன்று இடங்களில்
மாத்திரமே நெல் கொள்வனவு நடைபெற்றது.

அதிகமான நெல் உற்பத்தி உள்ள மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை
இவ்வாறான அநீதியான செயலில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
குறிப்பாக மடு பிரதேச செயலாளர் பிரிவு இலுப்பைக் கடவை பிரதேசம் போன்ற
இடங்களில் நெல் கொள்வனவு நடைபெறுவதில்லை.

கடந்த கால போக நெல்லை விவசாயிகள் இன்னும் விற்பனை செய்யாமல்
வைத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ffe0e5-b712-4d19-8c88-a472ba7b4013/26-6a6b077d2a1d6.webp' /></p><p>
</p><p>
மாவட்டத்தில் சிறுபோக அறுவடையும் பல பகுதிகளில் நடை பெறுகின்ற போதும் நெல்
சந்தைப்படுத்தல் பிரிவு நெல்லை கொள்வனவு செய்யாததால் குறைந்த விலையில் தனியார்
வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை வழங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>

உரிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் இந்த விடயத்தில்
எது விதமான அக்கறையுமின்றி செயலாற்றுகின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள்
குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் நெல்
கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை முன் வரவேண்டும் என அவர்கள்
வேண்டுகோள் விடுகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:14:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் - சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-physiotherapist-murdered-1785397866"></link>
            <id>https://tamilwin.com/article/female-physiotherapist-murdered-1785397866</id>
            <summary type="text">நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள்&amp;nbsp; நால்வரின் விளக்கமறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள்&nbsp; நால்வரின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த&nbsp;பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும்
குற்றத்திற்கு துணை புரிந்ததாக கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின்
விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p>குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில்
சிறைச்சாலை அதிகாரிகளால்&nbsp;நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a3ad61d-fde8-41b9-8d4e-09646e59ffbe/26-6a6b05b4abe10.webp' /></p><p>நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய
ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர, அவரது மனைவியான 35 வயதுடைய
ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க, கொலைச் சம்பவத்திற்கு
உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க
ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின்
பொலிஸ் பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோர்&nbsp;விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இக்கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடாளுமன்ற வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/50-parliament-vehicles-without-government-logo-1785394925"></link>
            <id>https://tamilwin.com/article/50-parliament-vehicles-without-government-logo-1785394925</id>
            <summary type="text">&amp;nbsp;நாடாளுமன்ற வாகனங்களில் சுமார் 50 வாகனங்களில் அரச இலச்சினை இல்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாடாளுமன்ற வாகனங்களில் சுமார் 50 வாகனங்களில் அரச இலச்சினை இல்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனைத்து அரச வாகனங்களிலும் அரச இலச்சினை பதியப்பட வேண்டும் என்ற விதி இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தின் ஐம்பது சின்னம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் பரிசோதனை</h2><p>இதற்கிடையில், 41 நாடாளுமன்ற வாகனங்களின் எரிபொருள் எரிப்பு சோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aed1b94-8464-4440-8a65-78f2d080e6e8/26-6a6afe75c611e.webp' /></p><p>
2016 டிசம்பர் 29 திகதியிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி, 12 மாத காலத்திற்குள், 25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்த பின்னரோ அல்லது ஒரு பெரிய இயந்திரப்பழுதுபார்ப்புக்கு பின்னரோ எரிபொருள் பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அலுவலகம் குறிப்பிடுகின்றது.</p><p>

இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 28 அன்று, ஐந்து அதிகாரிகளைக்கொண்ட ஒரு குழு, நாடாளுமன்றத்திற்கு சொந்தமான 12 வாகனங்களை ஏலம் விட தீர்மானித்த நிலையில், அந்த பணி இன்று வரை முடிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சலுகை</h2><p>
</p><p>
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன உரிமங்கள் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை விதிகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முரணாக, சிரேஷ்ட நிர்வாகப் பதவியில் ஆறு ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யாத மூன்று நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சலுகை மோட்டார் வாகன உரிமங்கள் வழங்கியமை தொடர்பாக முறையான ஒப்புதல் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
</p><p>
இந்த தகவல், இலங்கை நாடாளுமன்றத்தின் 2025 ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T07:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் வயல் நிலங்களுக்கு தீ வைப்பதால் பேராபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-to-agricultural-fields-poses-a-grave-danger-1785395974"></link>
            <id>https://tamilwin.com/article/fire-to-agricultural-fields-poses-a-grave-danger-1785395974</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வயல்
நிலங்களில் எஞ்சியிருக்கும் வைக்கோலுக்குத் தீ வைக்கும் நடவடிக்கை அதிகரித்து
வருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வயல்
நிலங்களில் எஞ்சியிருக்கும் வைக்கோலுக்குத் தீ வைக்கும் நடவடிக்கை அதிகரித்து
வருகின்றது.</p><p> இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மண்ணிலுள்ள நன்மை செய்யும்
நுண்ணுயிரிகள் அழிந்து மண் வளம் முற்றாகச் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச்
சூழலியலாளர்களும் விவசாய நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

மேலும், புகையின் தாக்கம் மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக காடோரப்
பகுதிகளில் உள்ள யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் சூழல் உருவாகி, மனித-யானை
மோதல்களும் தீவிரமடைந்து வருகின்றன.</p><p></p><h2>பேராபத்து</h2><p>அறுவடைக்குப் பின் வைக்கோலை எரிப்பது தற்காலிகத் தீர்வாகத் தோன்றினாலும் நீண்டகால அடிப்படையில் அது விவசாய நிலத்தையே தரிசாக்கி விடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/805d51c0-d376-4058-9324-6808266e60c5/26-6a6afd4e9b97d.webp' /></p><p> இதற்கு
தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான மாற்று வழிகளை உடனடியாக அமல்படுத்துவது
அவசியமாகும்.' என சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T07:37:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபாணி இம்ரானைத் தேடி விசேட பொலிஸ் குழு இந்தோனேசிய பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-police-indonesia-search-kanchipani-imran-1785395115"></link>
            <id>https://tamilwin.com/article/special-police-indonesia-search-kanchipani-imran-1785395115</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்காக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வலான மோசடி ஒழிப்புப் பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவராகக் கருதப்படும் கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்காக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) ரொகான் ஒலுகல உள்ளிட்ட ஒரு குழு இந்தோனேசியாவிற்குப் புறப்பட்டுள்ளது.</p><p>

கஞ்சிபானி இம்ரான் மலேசியாவில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரைக் கைது செய்வதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொகான் ஒலுகல உள்ளிட்ட ஒரு குழு மலேசியாவிற்குச் சென்றதாகவும் ஆனால் கஞ்சிபானி இம்ரான் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்&nbsp;</h2><p>
இதற்கிடையில், கஞ்சிபானி இம்ரானின் முக்கிய அடியாட்களில் ஒருவராகக் கருதப்படும் 'ரத்மலானே சைமா' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூன்று பேரை மலேசியாவில் கைது செய்வதிலும் பொலிஸார் வெற்றி கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbdd8b3c-e16c-4b62-91c0-a13fd9f7b4fa/26-6a6afcc253186.webp' /></p><p>இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, கஞ்சிபானி இம்ரான் இந்தோனேசியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>அவரைக் கைது செய்வதற்காக, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொகான் ஒலுகல உள்ளிட்ட ஒரு குழு இந்தோனேசியாவுக்குப் புறப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸ் ஊடகப் பிரிவு, இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும், மலேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு அறிக்கையை அடுத்த சில நாட்களில் வெளியிட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T07:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[GovPay மூலம் பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-through-fake-govpay-websites-1785391505"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-through-fake-govpay-websites-1785391505</id>
            <summary type="text">உத்தியோகபூர்வ GovPay அமைப்பை ஒத்த போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றிப் பணமோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தியோகபூர்வ GovPay அமைப்பை ஒத்த போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றிப் பணமோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
சாரதிகள் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும்போது பொலிஸாரால் வழங்கப்படும் வீதி அபராதப் பத்திரங்களுக்கான தொகையை GovPay மூலம் செலுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, போலி இணையதள முகவரிகளை உருவாக்கி மோசடி கும்பல்கள் பணத்தைக் கொள்ளையடித்து வருவது பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h2>போலியான குறுஞ்செய்திகள்&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாகக் கடந்த சில நாட்களாக, 'இலங்கை பொலிஸ்' எனும் பெயரில் வேகக்கட்டுப்பாட்டை மீறியமை உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி, அபராதத்தைச் செலுத்துமாறு போலியான குறுஞ்செய்திகள் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பாக பொலிஸாரின் அறிவிப்பில், இலங்கை பொலிஸார் வீதிப் போக்குவரத்து விதிமீறல்களின் போது, சம்பந்தப்பட்ட நபருக்குச் சம்பவ இடத்திலேயே தவறைச் சுட்டிக்காட்டி அபராதப் பத்திரத்தை வழங்குவர் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வர். அதுவே தற்போதைய நடைமுறையாகும்.</p><p>அதேபோன்று, கண்காணிப்பு கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும் கூட, குறுஞ்செய்தி மூலம் வங்கி கணக்கு விபரங்களைக் கோரும் நடைமுறை பொலிஸாரிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இல்லை என்றும், எனவே பொதுமக்கள் இதுபோன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59f320d1-9a3d-4ce5-833f-8602bd43a13b/26-6a6afb652e887.webp' />&nbsp; &nbsp;</p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
இவ்வாறான போலி இணைப்புக்களைப் பயன்படுத்திப் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்துள்ள பொலிஸார், ஏற்கனவே இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

</p><p>GovPay என்பது உங்களது அதிகாரப்பூர்வ வங்கி செயலிகள் அல்லது நிதித் தொழில்நுட்ப செயலிகள் மூலமாக மட்டுமே இயங்கும் ஒரு கட்டணச் சேவையாகும்.

குறுஞ்செய்தி அல்லது பிற உத்தியோகபூர்வமற்ற வழிகளில் வரும் எந்தவொரு கட்டண இணைப்புகளையும் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T07:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டும்..! அமைதி வழிப் போராட்டத்தில் குதித்த அருட்தந்தையர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-jaffna-demanding-justice-in-chemmani-1785395354"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-jaffna-demanding-justice-in-chemmani-1785395354</id>
            <summary type="text">செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி,
யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி,
யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப்
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(30.07.2026) செம்மணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><p> </p><p>

ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதாததேயு திருச்சுரூபம் முன்பாக ஆரம்பமான
பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது.

பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் திரு. டெர்க்
அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் அறிக்கையை அருட்தந்தை
அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் வாசித்துள்ளார்.</p><p> 

இதன்போது “மனித மாண்பை மதிப்போம் உண்மையை நிலை நாட்டுவோம்” “செம்மணிக்கு சர்வதேச நீதி வேண்டும்”, “உலகமே செம்மணியை மறந்து விடாதே!” உள்ளிட்ட கோஷங்களை அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு அமைதி வழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df5a3f71-3b28-4e04-b390-50fbd205b884/26-6a6af98597918.webp' />&nbsp;&nbsp;</p><p>

அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச நீதியை வலியுறுத்த வேண்டும் என்றும் யாழ் மறை மாவட்டத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><h2> 

 454 மனித என்புத்தொகுதிகள் மீட்பு</h2><p>
மேற்படி அறிக்கையில், 2026ஆம் ஆண்டு ஆடி மாதம் 21ஆம் திகதி வரையில் சிறுவர்கள் மற்றும்
சிசுக்களின் எச்சங்கள் உட்பட 454 மனித என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள
நிலையில், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சுயாதீன சர்வதேச
விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e845866-4cde-4149-afec-8b5fd90194b6/26-6a6af9869cdb2.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>
மேலும், மனித எச்சங்களை அகழ்ந்தெடுத்தல், அடையாளம் காணல் மற்றும் பாதுகாத்தல்
ஆகியவை மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக
மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சுயாதீன டி.என்.ஏ. பரிசோதனை, குடும்பங்களின்
பங்கேற்பு மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்
என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், செம்மணி அகழ்வுப் பணிகளை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தொடர்ந்து
கண்காணித்து, சான்றுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
சாட்சியாளர்களின் பாதுகாப்பிற்காக யாழ்ப்பாணத்தில் ஐ.நா. மனித உரிமைப்
பொறிமுறையின் பிரசன்னம் அவசியம் என்றும் கோரப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டத்தில் யாழ்ப்பாண மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்,
யாழ்ப்பாண மாகாண அமல மரித்தியாகிகள் சபையின் முதல்வர் அருட்தந்தை போல்
ஜெயந்தன் பச்சேக், அருட்தந்தையர்கள், துறவிகள் மற்றும் அருட்சகோதரிகள் என
100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/533bc88b-ca69-4b25-8d38-f55457a0087d/26-6a6af987ab5aa.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7988fc9a-52eb-4e67-b505-7e68466722df/26-6a6af9888675e.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T07:18:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-attempts-suicide-anuradhapura-1785395099"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-attempts-suicide-anuradhapura-1785395099</id>
            <summary type="text">ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழிப்பறையில் தவறான மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழிப்பறையில் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முயன்றுள்ளார்.</p><p>திறப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், கவலைக்கிடமான நிலையில் தற்போதைக்கு அநுராதபுர பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>இந்தநிலையில், அவர் சிறைச்சாலைக் கழிப்பறையில் துணித் துண்டுகளால் செய்யப்பட்ட கயிற்றின் உதவியுடன் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
</p><p>
அப்போது அங்கிருந்த மற்ற கைதிகள், இந்தச் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a61325f3-3f43-4b8c-852d-143460619c89/26-6a6af9f640ee7.webp' /></p><p> உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், பின்னர் அந்த கைதியை மீட்டு சிகிச்சைக்காக அநுராதபுர பொது மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர்.</p><p>
அவர் தவறான முடிவெடுக்க முயன்றதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அநுராதபுர பொலிசார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9YDSyLTfKW0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-30T07:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி - மக்களின் கொந்தளிப்பால் வன்முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-kills-2-youngsters-in-negombo-1785393511"></link>
            <id>https://tamilwin.com/article/accident-kills-2-youngsters-in-negombo-1785393511</id>
            <summary type="text">நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன், வாகனம் ஒன்று தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. </p><p>

கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சம்பவித்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>இரண்டு இளைஞர்கள் பலி</b></h2><p>போட்டிப் போட்டுக்கொண்டு அதிக வேகத்தில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வாகனம் ஒன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c66c1a27-0969-45d0-a549-b8514713d31b/26-6a6af4fe37779.webp' /></p><p>நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திச் சென்ற இரண்டு இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். </p><p>விபத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராமவாசிகள் வாகனத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதனையடுத்து கட்டான பொலிஸ் நிலைய அதிகாரிகளும் நீர்கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும்&nbsp;சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.</p><p>வாகனத்தின் தீயை கட்டுப்படுத்தியதுடன், வன்முறை கட்டுப்படுத்தவும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-30T06:53:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களில் பொருத்தப்பட்ட ஆபத்தான பாகங்கள்..! பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-traffic-operation-orders-issued-drivers-1785383991"></link>
            <id>https://tamilwin.com/article/special-traffic-operation-orders-issued-drivers-1785383991</id>
            <summary type="text">வீதிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் பழுதுபட்ட நிலையிலிருந்த வாகனங்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீதிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் பழுதுபட்ட நிலையிலிருந்த வாகனங்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p>வெல்லவாய மற்றும் ஊவா குடாஓயா பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்கள் இணைந்து விசேட வாகனத்தணிக்கை நடவடிக்கையினை&nbsp;முன்னெடுத்துள்ளது.</p><p></p><h2>24 வாகனங்களுக்கு தடை உத்தரவு</h2><p>இதன்போது வீதி போக்குவரத்திற்குப் பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 24 வாகனங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/918821a2-2af7-4d86-8e33-26ef2a3cd421/26-6a6af14f38cb0.webp' /></p><p>குறைபாடுகளுடன் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் சட்டவிரோத பாகங்களை பொருத்தியிருந்த 24 வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராகவே இவ்வாறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>குறித்த சாரதிகளுக்கு வாகனங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p> குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் குறைபாடுகளைச் சரிசெய்ய தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:38:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுத்தர வருமானம் பெறும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/house-scheme-for-low-income-families-1785390112"></link>
            <id>https://tamilwin.com/article/house-scheme-for-low-income-families-1785390112</id>
            <summary type="text">நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபேயில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் 85 சதவீதத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபேயில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;கடுவலை - மாலபே பகுதியில் அமைந்துள்ள இந்த திட்டம், 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கொண்டுள்ளது.</p><p></p><p>

இதில் 920 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும், 700 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும் அடங்கலாக மொத்தம் 256 வீடுகள் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><h2>இடைநிறுத்தப்பட்ட திட்டம்</h2><p>
</p><p>
இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae6798e6-bae2-4499-9a03-cc9b629b15bf/26-6a6af006a517d.webp' /></p><p>

பின்னர், உரிய ஒப்பந்தக்காரர்களுடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதையடுத்து, 2025 ஆம் ஆண்டில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
</p><p>
4,375 மில்லியன் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் உருவான வீடுகளை, இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aAZV3aBtP0s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T06:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்கம்பத்தில் ஏறிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! மின்சார சபைக்கான நட்டத் தொகையை செலுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-climbs-electric-pole-over-family-dispute-1785391315"></link>
            <id>https://tamilwin.com/article/man-climbs-electric-pole-over-family-dispute-1785391315</id>
            <summary type="text">குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நபருக்கு இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நபருக்கு இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாத்தறை , கம்புறுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கே மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

​</p><p>கடந்த 21 ஆம் திகதி பிற்பகல் தனது குடும்பத் தகராறு ஒன்றைத் தீர்த்துக் கொள்வதற்காக குறித்த நபர் உயர் அழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p></p><h2>நட்டத் தொகை</h2><p>
</p><p>
இதனால் திஹகொட, கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெஹியந்தறை, மாவரல, தெனியான உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.</p><p>

​மின்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களைப் பொலிஸார் வரவழைத்து சமரச முயற்சிகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து அவர் கீழே இறங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa67ef81-cf37-4bea-a3c4-209b791d418d/26-6a6aed3ab6acf.webp' /></p><p>
</p><p>
பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டம் 201,059.90 ரூபா எனப் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;அதனையடுத்து குறித்த அபராதத் தொகையை மின்சார சபைக்குச் செலுத்துமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 ஆண்டுகள் கடந்தும் மூதூர் படுகொலைக்கு நீதி இல்லை : மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-justice-for-mudur-massacre-even-after-20-years-1785389452"></link>
            <id>https://tamilwin.com/article/no-justice-for-mudur-massacre-even-after-20-years-1785389452</id>
            <summary type="text">சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட
மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப்
பொறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட
மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப்
பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை
என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, மூதூர் படுகொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஒரு
சுயாதீன சட்டவாதியை நியமிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசு தனது
தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
</p><p></p><h2>தப்பிச் செல்ல முயன்ற</h2><p>
இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு
இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp;</p><p>போரின் தீவிரத்துக்கு உள்ளாகியிருந்த திருகோணமலைக்கு அருகில் அமைந்துள்ள
மூதூர் நகரில், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி பாரிஸ் நகரைத் தளமாகக் கொண்டு
இயங்கிய 'அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்' அமைப்பைச் சேர்ந்த 17 இலங்கைத் தன்னார்வ
உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79000486-30ef-46ba-8493-4bf860bf1f63/26-6a6ae8f505d6a.webp' /></p><p>அலுவலக வளாகத்துக்குள் 15 பணியாளர்களின் உடல்கள் தலையிலும் கழுத்திலும் மிக
அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காயங்களுடன் கண்டறியப்பட்டன.
</p><p>தப்பிச் செல்ல முயன்ற மேலும் இருவரின் உடல்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த
வாகனத்திலிருந்து மீட்கப்பட்டன.</p><p></p><h2>பாதிக்கப்பட்ட சகலருக்குமான நீதி</h2><p>இது தொடர்பாக அடுத்தடுத்து ஆட்சிப்பீடமேறிய அரசுகள் விசாரணைகளை முன்னெடுப்பதாக
உறுதியளித்த போதிலும், தன்முனைப்புடன் செயற்படாத முக்கிய 12 மனித உரிமை
வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb710d8-ba92-49ae-ae26-824491e44eb1/26-6a6ae8f5bd310.webp' /></p><p> </p><p>கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும்,
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் பல்லாண்டுகளாக நீதிக்காகக்
காத்திருக்கின்றனர்.
</p><p>
யுத்த கால வன்முறைகள் மற்றும் அதன் பின்னரான மீறல்களால் பாதிக்கப்பட்ட
சகலருக்குமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு சர்வதேச
நாடுகள் இலங்கை மீது தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று அந்த
அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர சிவப்பு எச்சரிக்கை! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-weather-warning-1785390008"></link>
            <id>https://tamilwin.com/article/red-weather-warning-1785390008</id>
            <summary type="text">கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (30) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் </h2><p>இந்த எச்சரிக்கை, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9f2696-4af8-4118-93fa-7a81d006caf3/26-6a6ae8ec99b05.webp' /></p><p>
இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 - 70 கி.மீ. வரை அதிகரிக்கும், மேலும் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மன்னார் முதல் கொழும்பு வரையிலும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரப்பகுதிகளில் 2.0 - 2.5 மீட்டர் வரை கடல் அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>

எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து மீன்பிடி மற்றும் கடற்படைத்தரப்பினர் விழிப்புடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-30T06:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-case-adjourned-1785388747"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-case-adjourned-1785388747</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை</h2><p>
</p><p>


குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6987005-81d0-4e2e-8730-e7e044806518/26-6a6ae24e7d3e3.webp' /></p><p>



இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:34:19+00:00</updated>
        </entry>
    </feed>
