<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-20T11:22:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவின் தாக்கத்தால் உருவாகும் ஆபத்தான சூழ்நிலை - இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chance-that-el-nino-will-continue-until-next-year-1787221099"></link>
            <id>https://tamilwin.com/article/chance-that-el-nino-will-continue-until-next-year-1787221099</id>
            <summary type="text">தற்போதைய எல் நினோ நிகழ்வு அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிப்பதற்கான நிகழ்தகவு 97 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய எல் நினோ நிகழ்வு அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிப்பதற்கான நிகழ்தகவு 97 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னகே தெரிவித்துள்ளார். </p><p>

அடுத்த மாதம் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் மழையற்ற வானிலை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p>

இன்றைய தினம் (20.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>வெப்பநிலை அதிகரிப்பு</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த எல் நினோ நிலை அடுத்த ஆண்டின் தொடக்கம் வரை தொடரும் என்பதற்கு 97% உலகளாவிய கணிப்பு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9f5bdc7-f9e0-46ec-b7de-140cf4965a4c/26-6a86e0e721f38.webp' /></p><p>
</p><p>
அடுத்த ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மழைப்பொழிவு கணிசமாக குறையும். 

வெப்பநிலை உயரும்.</p><p> மனித உடல் தாங்க முடியாத கடினமான ஆபத்தான சூழ்நிலைக்குச் செல்லக்கூடும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T11:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர் ஒரு தரப்பினரின் சம்பள விவகாரம் - நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/teacher-salary-issue-harini-amarasooriya-statement-1787222037"></link>
            <id>https://tamilwin.com/article/teacher-salary-issue-harini-amarasooriya-statement-1787222037</id>
            <summary type="text">ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஆசிரியர்களின் சம்பளம் முறையாகவும் சரியான நேரத்திலும் வழங்கப்படுவதாக பிரதமர் ஹரினி அமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஆசிரியர்களின் சம்பளம் முறையாகவும் சரியான நேரத்திலும் வழங்கப்படுவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (20) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறியதாவது,</p><h2>மாணவர்களின்&nbsp; நலன்புரித்திட்டங்கள்</h2><p>
</p><p>
ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை. இந்த மாதம் ஆசிரியர்களின் சம்பளம் வழங்கப்படாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று கூறியவை பொய்யான தகவல் என்றும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b12143-5333-4192-8ba1-395900c4d093/26-6a86de5eb2107.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதேவேளை, மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகள் தொடர்பான விரிவான விவரங்களைப் பிரதமர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
மேலும், நாட்டின் சிறுவர் பாதுகாப்பு, சட்டத் திருத்தங்கள், கல்வி மறுசீரமைப்பு மற்றும் மாணவர்களின் மனநலன் சார்ந்த நலன்புரித் திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T11:03:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இணக்க அரசியலா! இனப்படுகொலையை நிரூபிக்க இப்படித்தான் செயற்பட வேண்டும்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1787221798"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1787221798</id>
            <summary type="text">தற்போது தமிழர் பகுதியில் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

இதுவரையில் 500ற்கும் மேற்பட்ட மனித எலும்புகூடுகள் மீட்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது தமிழர் பகுதியில் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

இதுவரையில் 500ற்கும் மேற்பட்ட மனித எலும்புகூடுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

இந்தநிலையில், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை 'இனப்படுகொலை' (Genocide) மற்றும் 'மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்' என்று சர்வதேச அளவில் சட்டப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் செல்வின் தெரிவித்துள்ளார்.</p><p>

ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் குறிப்பிட்ட அவர்,
</p><p>
இதற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் 

அனைத்து மக்களுக்கும் உள்ள 'வாழும் உரிமை' (Inherent right to life) என்ற அடிப்படை கோட்பாட்டின் அடிப்படையில் நீதிக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
</p><p>
நீதிக்கான பயணத்தில் இணக்க அரசியல் எந்தளவு தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்து, உரிமைகளுக்காக உறுதியான மற்றும் சட்ட ரீதியான அழுத்தங்களை சர்வதேச அளவில் பிரயோகிக்க வேண்டும்.
</p><p>
இனப்படுகொலை என்பதை சர்வதேச சட்டத்தின் கீழ் (International Law) நிரூபிப்பதற்குத் தேவையான வலுவான ஆவணங்கள் மற்றும் 'கட்டளைச் சங்கிலி' (Line of command) தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதில் சிரமங்கள் உள்ளன.</p><p>


தமிழர்களின் விவகாரத்தில் கையாளப்படும் 'இணக்க அரசியல்' (Conciliatory politics) அல்லது சமரசப் போக்கானது, இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை சர்வதேச அரங்கில் முன்வைப்பதற்கும், நீதியைப் பெறுவதற்கும் ஒரு பெரிய தடையாக உள்ளது என குறிப்பிட்டார்.
</p><p>

முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pEoRB_Q45q8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T10:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் மாயமாகும் நாய்கள் : இரவில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dogs-disappearing-in-nallur-at-night-1787221326"></link>
            <id>https://tamilwin.com/article/dogs-disappearing-in-nallur-at-night-1787221326</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் தெரு நாய்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்பில் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

குறித்த இரவு நேரங்களில் தெரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் தெரு நாய்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்பில் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.</p><p>

குறித்த இரவு நேரங்களில் தெரு நாய்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விலங்குகள் காப்பக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இரவு நேரங்களில் நாய்களுக்கு உணவளிக்கும் போது முதல் நாட்களில் காணப்பட்ட நாய்களின் எண்ணிக்கைக்கும் அடுத்த சில நாட்களில் காணப்பட்ட நாய்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும் இந்த சம்பவம் குறித்து சுற்றியுள்ள பிரதேசவாசிகளை விசாரித்தபோது மாநகர சபையிலுள்ள சிலர் வந்து நாய்களை பிடித்துச் சென்றதாகவும் குறிப்பிட்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.</p><p>இதேவேளை தற்போது ஆரம்பித்துள்ள நல்லூர் திருவிழா காலங்களில் பத்தர்களுக்கு இடையூறாக நாய்கள் காணப்படுவதால் அவை தொலைதூரங்களுக்கு கொண்டு விடப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>
</p><p>
இது தொடர்பில் மேலதிக விடயங்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்....&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/99b5RAXcPHk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T10:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொதி! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-package-found-in-the-magazine-prison-1787213001"></link>
            <id>https://tamilwin.com/article/the-package-found-in-the-magazine-prison-1787213001</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;இவ்வாறு வீசப்பட்ட பொதியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இவ்வாறு வீசப்பட்ட பொதியினுள் இருந்து 30 கைப்பேசி மின்கலங்கள் (பேட்டரிகள்), 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>சந்தேகநபர் ஒருவரும்&nbsp;கைது &nbsp;</h2><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாகஸ்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b68bc405-6d9b-4f5e-9f48-aa37ad60d72d/26-6a86d5f2989a9.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மெகசின் சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை வீச முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் சாகஸ்புர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:24:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் சர்ச்சை - இலங்கைகக்கு ஏற்பட்டுள்ள பேரதிஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-cargo-route-through-sri-lanka-1787219010"></link>
            <id>https://tamilwin.com/article/new-cargo-route-through-sri-lanka-1787219010</id>
            <summary type="text">இலங்கை ஊடாக புதிய சரக்கு போக்குவரத்து பாதையொன்று திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஊடாக புதிய சரக்கு போக்குவரத்து பாதையொன்று திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதற்கமைய, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன லெம்போர்கினி ரகத்தைச் சேர்ந்த 14 சொகுசு கார்கள், இலங்கை ஊடாக டுபாய் மற்றும் கட்டார் நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.</p><p> </p><h2><b>

ஹோர்முஸ் நீரிணையில் சர்ச்சை</b></h2><p>இத்தாலியில் இருந்து கடல் மார்க்கமாக அந்த வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f26d691b-7db7-42fc-8ddf-d72249e063bb/26-6a86d214f2cdf.webp' /></p><p>அங்கிருந்து 40 அடி நீளமுடைய 7 கொள்கலன்களில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. </p><p>

அதன் பின்னர், இந்த மோட்டார் வாகனங்கள் மிகப்பெரிய சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் மற்றும் கட்டாரின் தோஹா நகரங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த கார்கள் ஒவ்வொன்றின் குறைந்தபட்ச விலை இலங்கை நாணயத்தில் 50 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது. </p><p>ஸ்போர்ட்ஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு காரின் விலை சுமார் 100 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன் மூலம் புதிய சரக்கு போக்குவரத்து பாதை காரணமாக இலங்கைக்கும் பொருளாதார ரீதியாக நன்மை ஏற்படும் நிலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.</p><p> 

இந்த மோட்டார் வாகனங்களின் போக்குவரத்துப் பொறுப்பை டென்மார்க்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏற்றுள்ளது.</p><p> இந்த மோட்டார் வாகனங்கள் சில நாட்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.</p><p> 

 இந்த மோட்டார் வாகனங்களை ஏற்றிய விமானம் இன்று டுபாய் மற்றும் தோஹா நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T10:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/training-camp-issue-in-palai-anadha-wijepala-1787210675"></link>
            <id>https://tamilwin.com/article/training-camp-issue-in-palai-anadha-wijepala-1787210675</id>
            <summary type="text">அரச காணியில் தியாகராசா குலதீபன் என்பவரால் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் கட்டடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச காணியில் தியாகராசா குலதீபன் என்பவரால் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் பளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது எனவும் அவர் கூறியுள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (20.08.2026) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>போலியான தகவல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி - பளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது.

இந்த போலி செய்தியாளர் சந்திப்பை பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என்பவர் நடத்தியதாக விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
விசாரணைகளின் படி, சந்தேகநபரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் காணப்பட்டதுடன், அவர் 7 வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், நிதி மோசடி உள்ளிட்ட மூன்று குற்றவியல் வழக்குகளில் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/849a1c83-930d-46d2-8b0d-36d3cebb357f/26-6a86ba4f5705d.webp' /></p><p> </p><p>தம்மை மருத்துவராக அடையாளப்படுத்தி கொண்டு அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் முன்னர் சில அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். அந்த நியமனங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

குறித்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அங்கு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.</p><h2>திட்டமிட்ட செயல்</h2><p> </p><p>குறித்த இடம் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதி மாத்திரமே. இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் சந்தேகநபர் திட்டமிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளார். குறித்த பகுதியில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் பதிவாகவில்லை. இனவாதத்தைத் தூண்டும் அல்லது பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.
</p><p>
இதனிடையே, குறித்த பகுதி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம், முட்கொம்பன் பகுதியில் அமைந்துள்ள அரச காணி என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலம் 1919ஆம் ஆண்டு வனப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அரச காணி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
தியாகராசா குலதீபன் என்பவரால் குறித்த காணியில் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் மூன்று மாடிக் கட்டடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9949d90-2d21-4fdd-8d0e-c91ab1c84b53/26-6a86ba502756f.webp' /></p><p>
</p><p>
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் குறித்த காணியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, இந்த விவகாரம் அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பானதே அன்றி, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பானது அல்ல எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T10:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாத யாத்திரைக்காக சென்ற குழுவினருக்கு நேர்ந்த கதி - பள்ளத்தில் கிடந்த கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-accident-on-way-to-padayatra-1787219791"></link>
            <id>https://tamilwin.com/article/car-accident-on-way-to-padayatra-1787219791</id>
            <summary type="text">பாத யாத்திரைக்காக வந்திருந்த குழுவினர் பயணித்த கார் ஒன்று நல்லதண்ணி -
மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே
கவிழ்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாத யாத்திரைக்காக வந்திருந்த குழுவினர் பயணித்த கார் ஒன்று நல்லதண்ணி -
மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே
கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 5 பேர், கடந்த 19ஆம் திகதி
இரவு சுமார் 11.00 மணியளவில் ஸ்ரீபாத யாத்திரைக்காக நல்லதண்ணி பொலிஸ்
நிலையத்திற்கு வந்துள்ளனர்.
</p><p>
எனினும், நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இரவு நேரத்தில் ஸ்ரீபாத யாத்திரை
செல்வது பாதுகாப்பானதல்ல என பொலிஸார் அறிவுறுத்தியதுடன், மறுநாள் 20ஆம் திகதி
காலை வருமாறும் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
பள்ளத்தில் விழுந்த கார்</h2><p>
பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட குழுவினர் தங்குமிடமொன்றைத் தேடி காரில்
திரும்பிச் சென்றபோது, இரவு சுமார் 12 மணியளவில் மோகினி நீர்வீழ்ச்சிக்கு
அருகே வீதியில் இருந்து கார் விலகி கவிழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e2d8f8-2de2-4b54-bfa8-3a16ddc845f4/26-6a86cffc4f6ad.webp' /></p><p>

காரில் 3 ஆண்களும், 2 பெண்களும் பயணித்த நிலையில், விபத்தில் எவருக்கும் காயம்
ஏற்படவில்லை. எனினும், காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, இதே பகுதியில் கடந்த 22ஆம் திகதி காலை 8.15 மணியளவில்
நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று
விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த பாடசாலை மாணவி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த
சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த விபத்துகள் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:59:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணுவிலில் மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-removal-of-a-liquor-store-in-inuvil-1787217021"></link>
            <id>https://tamilwin.com/article/protest-removal-of-a-liquor-store-in-inuvil-1787217021</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக
அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப்
போரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக
அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப்
போராட்டம் இன்று (20.08.2026) காலை இடம்பெற்றது.
</p><p>இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக
நடைபெற்ற இந்த போராட்டத்தில், “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து
காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டது.</p><p>
போராட்டத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பிரதேசசபை
உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு, மதுபானசாலை தமது கிராமச் சூழலுக்கு
ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dac6e0b-1e68-4166-bce1-9572a4aaa81b/26-6a86cf06693bf.webp' /></p><h2>நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்</h2><p>
</p><p>குறிப்பாக, கிராமத்தில் மதுபான பாவனை அதிகரிப்பதை தடுப்பதுடன், இளைஞர்கள்
மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் குறித்த
மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
</p><p>மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் கிராமத்தின் சமூக சூழலை கருத்தில்
கொண்டு, மதுபானசாலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b541f8-fb2f-4594-bb60-066f9220fee6/26-6a86cf0744f78.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44aa21f1-a473-477a-a560-194216ca7b34/26-6a86cf0822b98.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெரோயினுடன் கைதான உபதவிசாளர் உள்ளிட்ட இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-arrested-with-drugs-deputy-speaker-1787217309"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-arrested-with-drugs-deputy-speaker-1787217309</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பொலிஸாரால் கடந்த 15.08.2026 அன்று
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன்
கைதுச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பொலிஸாரால் கடந்த 15.08.2026 அன்று
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன்
கைதுசெய்யப்பட்டு 16ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p>
இவர்களில் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் உப தவிசாளர் உள்ளிட்ட
இருவர் 19.08.2026மும் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தவிட்டது.
</p><h2>சம்பவம் தொடர்பிலான விசாரணை</h2><p>
இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணை கடந்த 19.08.2026 அன்று
நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களை 02.09.2026 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c289cfee-1836-4554-a1dd-067938e6fc87/26-6a86ce4d91d63.webp' /></p><p>அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக
விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:53:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் விவகாரத்தில் சிக்கிய ரணில்! வெளியாகவுள்ள முக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-embroiled-in-london-affair-basil-stunned-1787207747"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-embroiled-in-london-affair-basil-stunned-1787207747</id>
            <summary type="text">நாட்டின் முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணைகள் தொடர்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையிலேயே&nbsp;மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர் முன்பு வழங்கியிருந்த 30 இலட்சம் ரூபாய் பிணைத்தொகையை அரசுடைமையாக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அதே சமயம் அரச பணத்தில் 166 இலட்சத்தை தனது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தற்பொழுது நிரூபிக்கத்தக்க ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

நாட்டில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பல முக்கிய விடயங்களை விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZJYPtavC8zU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் பார்வையில் புறக்கணிக்கப்படும் இந்து மதம் - எங்களுக்கும் இடம் வேண்டும்...! எழுந்த குரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hinduism-ignored-by-the-government-1787218791"></link>
            <id>https://tamilwin.com/article/hinduism-ignored-by-the-government-1787218791</id>
            <summary type="text">இலங்கையில் வாழும் இந்து மக்களும் இந்நாட்டின் பிரஜைகளே. எனவே, அரசாங்கம் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது எங்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வாழும் இந்து மக்களும் இந்நாட்டின் பிரஜைகளே. எனவே, அரசாங்கம் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது எங்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான சுரேன் சந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
இலங்கையில் இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் மற்றும் இந்து மதம் ஆகிய நான்கு மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்கின்றனர். எனினும், அரசாங்கம் பல்வேறு முடிவுகள் மற்றும் தீர்மானங்களை எடுக்கும்போது இந்து மத மக்களுக்கும் அவர்களின் கலாசாரத்திற்கும் வழங்கப்படும் முக்கியத்துவத்தில் தளம்பல் நிலை காணப்படுகின்றது.</p><p>
எங்களுடன் கலந்தாலோசிப்பதற்கான அமைப்புகள் இருந்தபோதிலும், அரசாங்கம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்து மதத்திற்கு அரசாங்கம் ஏன் குறைந்த முக்கியத்துவம் வழங்குகின்றது? தமிழர்களுக்கான அடையாளம் எங்கு இல்லாமல் போகின்றது? என்பது தொடர்பான அவரது கருத்துக்களை முழுமையாக காணொளியில் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/T-0dTOdyAys" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:40:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் வாக்குமூலங்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/office-detained-initiates-recording-of-statements-1787215648"></link>
            <id>https://tamilwin.com/article/office-detained-initiates-recording-of-statements-1787215648</id>
            <summary type="text">கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால்
இன்று(20.08.2026) வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால்
இன்று(20.08.2026) வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சித்
திட்டத்தில், 4 விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.</p><h2>உறவினர்களிடம் விசாரணை</h2><p>

ஒவ்வொரு குழுவிலும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் வயது, காணாமல் போன காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு
தகவல்களைப் பதிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84bbf265-39aa-4d4a-a80b-2b172b256339/26-6a86c5c4733e0.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர்
வயது முதிர்ந்த பெற்றோர்களாகவும் உறவினர்களாகவும் காணப்பட்டுள்ளனர்.</p><p>பல வருடங்களாக
தமது பிள்ளைகள் மற்றும் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் அவர்கள், தமக்கு பணம்
அல்லது இழப்பீடு தேவையில்லை என்றும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத்
தேடிக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்பதே தங்களது ஒரே கோரிக்கை என்றும்
உருக்கமாக தெரிவித்துள்ளனர்.</p><h2>உண்மையும் நீதியும்</h2><p>பல வருடங்களாக வந்து பதிவு செய்கிறோம்; ஆனால் எங்களுக்கு இன்னும் எமது
பிள்ளைகள் பற்றிய பதில் கிடைக்கவில்லை என மனவேதனையுடன் தெரிவித்த சில
உறவினர்கள், தற்போது தாங்கள் வயது முதிர்ந்த நிலையில் இருப்பதாகவும்,
தங்களுக்குப் பின்னர் தமது பிள்ளைகளின் கதையை யார் பேசுவார்கள் என்ற கவலையும்
இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08c538a0-5f71-4937-8c01-73d7e6782fdd/26-6a86c5c542021.webp' /></p><p>

“இப்போது எஞ்சியிருப்பது நாங்கள் மட்டுமே. நாங்களும் இல்லாமல் போனால்,
எங்களுடைய பிள்ளைகளின் கதைகளும் முடிந்துவிடும்” என்ற அவர்களின் கண்ணீர் கலந்த
வார்த்தைகள், பல ஆண்டுகளாக நீடித்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின்
குடும்பங்களின் வலியையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளன.
</p><p>
காலம் கடந்து சென்றாலும் தமது உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் தேடும்
இந்த குடும்பங்கள், தங்களது பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா அல்லது அவர்களுக்கு
என்ன நடந்தது என்பதற்கான உறுதியான பதிலை வழங்க வேண்டும் என தொடர்ந்தும்
வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:31:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் வங்குரோத்து நிலையை எட்டும் இலங்கை! ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-worried-about-2028-shock-that-awaits-at-30-1787205177"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-worried-about-2028-shock-that-awaits-at-30-1787205177</id>
            <summary type="text">அரச பணத்தை தனது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பணத்தை தனது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்&nbsp; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான கருத்துக்கள் மீண்டும் வழுபெற ஆரம்பித்துள்ளன.</p><p>இந்த சந்தர்ப்பத்தில், மறுபுறம் இலங்கையின் நீதித்துறையில் ஏற்படப்போகும் மாற்றத்தை எதிர்த்து ரணில் சதித்திட்டம் தீட்டுவதாக சட்டத்தரணிகள் சிலர் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.</p><p>இந்த பின்னணியில் 2028 இல் இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையப்போகின்றது என ரணில் விக்ரமசிங்க ஆரூடம் தெரிவித்துள்ளார்.</p><p>ரணிலின் கருத்தை அரசாங்கம் கண்டுக்கொள்ளாத போக்கையே கொண்டுள்ள நிலையில் தற்போதைய ஆழும் கட்சியின் நகர்வுகள் உள்ளிட்ட அரசியல் விடயங்களை விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9PvCy1eLFWA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசிடம் சஜித் விடுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-s-request-to-the-anura-government-1787210301"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-s-request-to-the-anura-government-1787210301</id>
            <summary type="text">அரசுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு இப்போதாவது முறையான நீதியை வழங்குமாறு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை
விடுத்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு இப்போதாவது முறையான நீதியை வழங்குமாறு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை
விடுத்துள்ளார்.</p><p>

விவசாயிகளின் பிரச்சினைகள் ஏற்கனவே உக்கிரமடைந்துள்ள நிலையில், உற்பத்திச்
செலவுக்கு ஏற்ப இலாபத்துடன் நெல்லை விற்பனை செய்ய முடியாத பாரிய நெருக்கடி
ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>விவசாயிகளுக்காகக் கூறிய விடயங்கள்</h2><p>மேலும் தெரிவிக்கையில், "ஈர நெல் 80 முதல் 85 ரூபா வரையிலும், காய்ந்த நெல் 90 முதல் 100 ரூபா
வரையிலும் கொள்வனவு செய்யப்படுகின்றது.</p><p> ஆனால், அரசின் புள்ளிவிபரங்களின்படி
ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது.</p><p> இதனால்
விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78178515-fcfc-451d-ad25-b6f1c961c38d/26-6a86aed419cbc.webp' /></p><p>
தேர்தல் காலத்தில் அரசு விவசாயிகளுக்காகக் கூறிய விடயங்கள் எதுவும் இன்று
நடைமுறைப்படுத்தப்படவில்லை. விவசாயிகளை ஏழ்மைக்குள் தள்ளி, அவர்களின்
ஜீவனோபாயத்தை நசுக்காமல் முறையான விலையை உறுதிப்படுத்த வேண்டும்.</p><p>ஒரு ஹெக்டேயருக்குத் தேவையான 225 கிலோகிராம் யூரியா உரத்துக்கு அரசு வழங்கும்
30 ஆயிரம் ரூபா மானியம் போதுமானதாக இல்லை.
</p><h2>மொத்த உள்நாட்டு உற்பத்தி</h2><p>
விதை நெல், உரம், எரிபொருள் மற்றும் கிருமிநாசினிகளின் விலைகள் பலமடங்கு
உயர்ந்துள்ளதோடு, யானை - மனித மோதல் போன்ற பாரிய சவால்களுக்கும் விவசாயிகள்
முகங்கொடுத்து வருகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d037c92e-54dc-4dbe-bfc3-c1f2d7879920/26-6a86aed4df24f.webp' /></p><p>
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பைக்
கணக்கிடுவதில் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்
கணிப்பீடுகளில் பிழைகள் காணப்படுவதால், அவற்றை உடனடியாகத் திருத்திக் கொள்ள
வேண்டும்.
</p><p>
வேளாண்மை மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில்
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் கிராமிய சமூகம் பாரிய அவல நிலைக்குத் தள்ளப்படும்.
</p><p>
அரசுக்குத் தியாகங்களைச் செய்து வாக்களித்த விவசாயிகளின் நலனைக் காக்க
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 ஆண்டுகளாக மர்மம் நீடிக்கும் அல்லைப்பிட்டி அருட்தந்தை காணாமற்போன சம்பவம்: நினைவேந்தல் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pries-missing-in-the-middle-of-allaipitiya-1787215378"></link>
            <id>https://tamilwin.com/article/pries-missing-in-the-middle-of-allaipitiya-1787215378</id>
            <summary type="text">அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களுடன் அக்காலப்பகுதியில் காணாமல்
ஆக்கப்பட்ட 22 பேரின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வுகள், இன்று(20.08.2026) அல்லைப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
</p><h2>


20 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்</h2><p>நினைவேந்தலை முன்னிட்டு அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து அமைதிப் பேரணி
ஆரம்பமானது. 

கிறிஸ்தவ மதகுருக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பேரணி, புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை
சென்றடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7183c62-f321-4db5-82de-51d7206b07da/26-6a86be94621ff.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் நினைவஞ்சலி நிகழ்வும் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவாக அஞ்சலி உரைகளும்
நிகழ்த்தப்பட்டன.
</p><h2>
நடுவழியில் மாயமான இருவர்</h2><p>
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி, யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்கு
சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது அருட்தந்தை ஜிம் பிறவுண்
அடிகளாரும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸும் காணாமல் ஆக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/580165db-44cd-47e7-8669-270fae61ac51/26-6a86be955840b.webp' /></p><p>

அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார், ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப்போர்
தீவிரமடைந்த காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்களில்
ஒன்றாகக் குறிப்பிடப்படும் இந்த சம்பவத்தின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. </p><p>


யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் அல்லைப்பிட்டிக்கு சென்றதற்கான
பதிவும், பிற்பகல் 1.50 மணியளவில் அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும்
பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரிடம் இருந்ததாக
அக்காலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p> 

எனினும், அதன்பின்னர் இருவரின் நிலை
தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.</p><h2>


நினைவேந்தல் அனுஷ்டிப்பு</h2><p>
20 ஆண்டுகள் கடந்தும் அவர்களது நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்படாத
நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரையும் நினைவுகூரும் வகையில் இன்றைய
நிகழ்வு நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3866a1e0-297e-4911-b6db-8e8afbad9ad8/26-6a86be962dcda.webp' /></p><p>
</p><p>

இந்த நிகழ்வில், மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்பணி எஸ். றெக்ஸ்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் மா. இளப்பிறை, சட்டத்தரணி க. சுகாஸ்,
கொழும்பைச் சேர்ந்த அருட்தந்தை செராட் மற்றும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான
ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை அ. அகஸ்ரின் ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.
</p><p>

அஞ்சலி நிகழ்வு அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை லியோ தலைமையில்
இடம்பெற்றது.


இந்த நிலையில், நினைவேந்தல் அனுஷ்டிப்பில், கிறிஸ்தவ மதகுருக்கள், பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
நினைவாக அஞ்சலி செலுத்தினர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T08:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறைகேடுகளுக்கு எதிராக பேசிய உறுப்பினர்..! கட்சி உறுப்புரிமையை நீக்கிய மொட்டு கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asanga-sampath-peiris-has-alleged-slpp-1787214053"></link>
            <id>https://tamilwin.com/article/asanga-sampath-peiris-has-alleged-slpp-1787214053</id>
            <summary type="text">தலவாக்கலை – லிந்துலை நகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும்
முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை – லிந்துலை நகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும்
முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் தலவாக்கலை – லிந்துலை
நகரசபை உறுப்பினர் அசங்க சம்பத் பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
தனக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் முறையாக முன்வைக்கப்படாத நிலையில்,
கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தை
நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>மகிந்தவின் வழிகாட்டுதல்</h2><p>
தலவாக்கலையில் இன்று 20ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வழிகாட்டுதலின் கீழ், 24
வருடங்களுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், கட்சியின்
வளர்ச்சிக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f6d34e-7bae-49c0-961c-021dc9562bbf/26-6a86bc982eca3.webp' /></p><p>

தான் கட்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், தன் மீது எந்தவொரு
குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாமல் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அதேவேளை, தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் காணி முறைகேடுகள், முச்சக்கரவண்டி தரிப்பிட விவகாரம், தீபாவளி
மற்றும் பொங்கல் சந்தைகள், சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள், நிதி முறைகேடுகள்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை
விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அசங்க சம்பத்
பீரிஸ் தெரிவித்தார்.</p><h2>போலியான குற்றச்சாட்டு</h2><p>

இந்த முறைப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டதாகக் கருதும் சிலர், கட்சியின் உயர்
மட்டத்திற்கு தமக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அவர்
குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9c9b3b6-f892-4da5-b86f-848ae8b9b857/26-6a86bc992af55.webp' /></p><p>

எனினும், அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் எதுவும்
முன்னெடுக்கப்படாமல், தமது தரப்பை விளக்குவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படாமல்
உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
இதனால் பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி
ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><h2>கட்சியின் முக்கியஸ்தர்கள்</h2><p>

இந்த விடயம் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஸவிடம் தாம் நேரடியாக எடுத்துரைத்துள்ளதாகவும், எனினும் கட்சியின்
முக்கியஸ்தர்கள் அவரது கருத்துக்களைக் கூட கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அசங்க
சம்பத் பீரிஸ் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32252f8f-89ec-4eca-aec1-fe7cda6e0548/26-6a86bc99d46d4.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான நிலைமை தொடருமானால், பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்படுவதை
எவராலும் தடுக்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.</p><p>

இதனிடையே, பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து தமக்கு அழைப்புகள்
கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், கொள்கை ரீதியாக மகிந்த ராஜபக்ஸ அரசியலில்
இருக்கும் வரை வேறு எந்தக் கட்சியிலும் இணைவதற்கு தாம் தயாரில்லை எனவும்
தெரிவித்தார்.
</p><p>
தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து
முன்னெடுக்கவுள்ளதாகவும் முன்னாள் நகரசபை உறுப்பினர் அசங்க சம்பத் பீரிஸ்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WOL7FtNziVc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவிந்து கிடக்கும் 1,037 வேலைவாய்ப்புகள் - வேலை தேடுவோருக்கு சிறந்த வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/job-opportunity-applications-driver-conductor-1787210463"></link>
            <id>https://tamilwin.com/article/job-opportunity-applications-driver-conductor-1787210463</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்துச் சபையின் நாடளாவிய ரீதியிலான டிப்போக்களில் ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்துச் சபையின் நாடளாவிய ரீதியிலான டிப்போக்களில் ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
இதன்படி, 788 சாரதி வெற்றிடங்களும், 249 நடத்துநர் வெற்றிடங்களுக்கான&nbsp;விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p>

அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஆட்சேர்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.</p><h2>வேலைவாய்ப்பு</h2><p>சாரதி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.</p><p>க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ace10fa-4788-47cf-876e-ab86f6da0b28/26-6a86b5c9be733.webp' /></p><p> </p><p>

மேலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செல்லுபடியாகும் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பதுடன், குறிப்பிடப்பட்டுள்ள உடல் மற்றும் சுகாதாரத் தகைமைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
</p><p>
நடத்துநர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.</p><h2>விண்ணப்பம் கோரல்</h2><p>
</p><p>
 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உள்ளிட்ட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
தெரிவு செய்யப்படும் சாரதிகளுக்கு மாதாந்தம் 40,847 ரூபாய் அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவும், நடத்துநர்களுக்கு 40,008 ரூபாய் அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8ea48e6-2d30-4ac1-8a7e-2a6def1648af/26-6a86b5caae038.webp' /></p><p> </p><p>

இதற்கு மேலதிகமாக 17,800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
</p><p>

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) ஊழியர்கள் 8 சதவீத பங்களிப்பை வழங்குவதுடன், தொழில் வழங்குநர் 12 சதவீத பங்களிப்பை வழங்குவார். 

ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு (ETF) தொழில் வழங்குநரால் 3 சதவீத பங்களிப்பும் வழங்கப்படும்.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
நேர்முகப் பரீட்சை, நடைமுறைப் பரீட்சை மற்றும் தொடர்புடைய பயிற்சி நெறிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும். நியமனம் செய்யப்பட்ட பின்னர் பணியிட மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியிடத்திலிருந்து 30 கிலோமீற்றர் வரையான சுற்றளவில் பணிக்கு சென்று வருவதற்கான பயண அனுமதிப்பத்திரமும் வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20af7a04-877c-4285-a4d3-2d44e682e655/26-6a86b5cb600f1.webp' /></p><p>

குறிப்பிட்ட மாதிரி வடிவில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை, தலைமை நிர்வாக அதிகாரி, இலங்கை போக்குவரத்துச் சபை, இலக்கம் 200, கிருல வீதி, நாரஹேன்பிட்ட, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
</p><p>
விண்ணப்பங்கள் 2026 செப்டெம்பர் 7ஆம் திகதிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T08:13:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணப்பரிமாற்ற மோசடியில் சிக்கிய தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-bank-managers-us-dollars-fraud-court-order-1787210880"></link>
            <id>https://tamilwin.com/article/four-bank-managers-us-dollars-fraud-court-order-1787210880</id>
            <summary type="text">நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு&amp;nbsp;பணத்தை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு&nbsp;பணத்தை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களையும் மற்றுமொரு சந்தேகநபரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும், நான்கு வங்கி அதிகாரிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>வங்கி நிதி மோசடிகள்</h2><p>பொருட்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றியதுடன், குறித்த பணப்பரிமாற்றங்களுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாகவும் சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99eb0f77-f5a0-4e8b-b82a-5edda8b5c5ac/26-6a86b2c8a3e59.webp' /></p><p>வங்கி நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.&nbsp;&nbsp;</p><p>சந்தேகநபர் நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகக்கூறி சுமார் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றுக்கு வங்கிக்கணக்குகளை திறப்பதற்காக குறித்த 4 தனியார் வங்கிகளுக்கு சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் சந்தேகநபரை நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளை செய்து கொடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:54:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எல் நினோ நிலைமை: பாதிப்பை எதிர்கொள்ள வெளியான சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-drought-new-circular-for-drinking-water-1787209995"></link>
            <id>https://tamilwin.com/article/severe-drought-new-circular-for-drinking-water-1787209995</id>
            <summary type="text">நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.எல் நினோ நிலைமையின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.</p><p>எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்படுமாயின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று (20) அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>நீர் வசதி வழங்கல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சுற்றறிக்கை ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db14db6-c089-452b-925f-e95192623e7a/26-6a86b190e9c8e.webp' /></p><p>அத்துடன், வறட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு மிகவும் இலகுவான மற்றும் துரிதமான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் ஊடாக மாற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடை விவகாரத்தில் தாதியர்களுக்கு ஆதரவு: குரல் கொடுப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-for-nurses-on-clothing-issues-1787210909"></link>
            <id>https://tamilwin.com/article/support-for-nurses-on-clothing-issues-1787210909</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம்
மீது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம்
மீது சுமத்தப்படும் இனவாதக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப்
புறம்பானவை என கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

விசேட செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் பிரதிநிதிகளான தா.பிரதீபன்,
மு.பிரகாஷ், நாகராஜா சனாதனன் மற்றும் சி.திலோஜன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த தெளிவூட்டலை வழங்கினர்.
</p><h2>

சுற்றுநிரூபத்தை மீறிய ஆடையுடன் வருகை</h2><p>
கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட 9
இஸ்லாமிய பெண் சுகாதார பணி உதவியாளர்கள் தமது கலாச்சார ஆடையுடன் கடமையேற்க வந்திருந்தனர். </p><p>

இதன்போது, அரச நிர்வகிப்பு மற்றும் சுகாதார அமைச்சின்
சுற்றுநிரூபங்களுக்கு அமைவான சீருடையையே அணிய வேண்டும் என வைத்தியசாலை
நிர்வாகம் சுட்டிக்காட்டியதுடன், ஆரம்பக் கட்டமாக அன்றைய தினம் அதே ஆடையுடன் கடமையாற்ற அனுமதித்தது.

சுற்றுநிரூபத்தின்படியான சீருடையை அணிந்து வருவதாகக் கூறி அவகாசம் பெற்றிருந்த
போதிலும், கடந்த 10 ஆம் திகதி 5 பேர் மீண்டும் சுற்றுநிரூபத்தை மீறிய ஆடையுடன்
வருகை தந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2433e18-5374-405d-9f3b-e9059106d3b8/26-6a86ad7635ea2.webp' /></p><p>

 இதனை அனுமதிக்க முடியாது என நிர்வாகம் தெரிவித்த நிலையிலேயே,
வெளியே உள்ள சிலர் இந்த சம்பவத்திற்கு இனவாத முத்திரை குத்தி போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ் இளைஞர் சேனை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் 2019.06.26 திகதிய 13/2019(1) மற்றும்
2022.09.27 திகதிய 05/2022 ஆகிய சுற்றறிக்கைகள் 2022.11.28 ஆம் திகதி
அரசாங்கத்தினால் முற்றாக இரத்துச் செய்யப்பட்டு விட்டன.

தற்போது 1989.02.01 ஆம் திகதிய 8/89 இலக்க அரச சுற்றுநிரூபம் மட்டுமே
நடைமுறையில் உள்ளது.
</p><p>
 அதன் அடிப்படையிலேயே வைத்தியசாலை நிர்வாகம்
சட்டப்பூர்வமாகச் செயற்பட்டுள்ளது.</p><h2>

தேவையற்ற இன முரண்பாடுகளைத் தவிர்க்க கோரிக்கை</h2><p>
பாதிக்கப்பட்டதாகக் கருதும் தரப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ள
நிலையில், இந்த சம்பவத்தை வைத்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் சில
அரசியல்வாதிகள் தேவையற்ற இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயல்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0a506c0-3326-4ed1-a9d3-d65a2c8b5cb9/26-6a86ad7720393.webp' /></p><p>
</p><p>பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு கலவரத்தைத் தூண்ட முற்படும் நபர்கள் மீது
குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பாதுகாப்புத் தரப்பினரும் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ் இளைஞர் சேனை, இனவாதக்
கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக விரைவில் பொலிஸ் நிலையங்களில்
உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வேகமாக பரவும் டெங்கு நோய் - அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-spreading-rapidly-in-sri-lanka-1787209563"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-spreading-rapidly-in-sri-lanka-1787209563</id>
            <summary type="text">நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,115 ஆக உயிர்ந்துள்ளது.</p><p> 

இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 19 நாட்களில் நாட்டில் 7,777 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2> 

ஆபத்தில் கம்பஹா மாவட்டம்</h2><p>
அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகளைப் பதிவுசெய்யும் மாவட்டங்களில் கம்பஹா மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed76d49-9c12-4e24-ad8b-5b21ff84478b/26-6a86a87970734.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 19,825 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், கடந்த ஆண்டில் கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் முறையே 18,475 மற்றும் 6,725 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதால், மக்கள் சற்று அவதானது்துடன் செயற்படுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணிகளை சூறையாடி சொத்து குவித்துள்ள ஹிஸ்புல்லா..! ஈரோஸ் கட்சியின் தலைவர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eros-secretary-general-prabhakaran-statement-1787207276"></link>
            <id>https://tamilwin.com/article/eros-secretary-general-prabhakaran-statement-1787207276</id>
            <summary type="text">மட்டக்களப்பு, வாகரை, வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில்
ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர்
ஏ.எல்.எம்.ஹிஸ்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, வாகரை, வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில்
ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர்
ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடி சொத்து குவித்துள்ளார், எனவே சூறையாடிய காணிகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் என ஈரோஸ் கட்சி தலைவர்
இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பில் நேற்று முன் தினம் (18.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>வைத்தியசாலை சீருடை பிரச்சினை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பூராகவும் சுகாதார ஊழியர்கள் ஒரே சீருடையில் கடமையாற்றி வருகின்றனர். கல்முனை வைத்தியசாலை சீருடை பிரச்சினை நிர்வாக மட்டத்தில் சுமூகமாக முடிக்க
வேண்டிய பிரச்சினை. </p><p>ஆனால் இதனை ஒரு இனவாத போக்குள்ள முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் ஹரீஸ் பூதாகரமாகி கிழக்கை முஸ்லிம்களின் ஆதிக்கத்தை கொண்டு வந்து
அரபு இராச்சியமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார்.
</p><p>
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடாது இன்று வரை தடுத்து
இனவாத விஷத்தை காட்டி வருகின்ற இவர் கிழக்கை அரபு இராச்சியமாக கொண்டு வருவதற்கு
ஆரம்பிக்கப்பட்ட இந்த சீருடை அதன் பிரதிபலன் தான் கல்முனையில் இஸ்லாமாபாத்
நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த
விடாதற்கு காரணம்.</p><h2>அரசியல் இருப்பு தக்கவைப்பு</h2><p>
</p><p>
இவ்வாறு தமது அரசியல் இருப்புக்கள் தக்கவைப்பதற்கு இன துவேசத்தை கக்கி
வருகின்றார். இந்த பிரச்சினை சுகாதார மட்டத்தில் தீர்த்து கொள்வார்கள் விளங்கி
கொள்ள வேண்டும். தமிழ் - முஸ்லிம் உறவை பிரிக்க வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d44757e-44ed-4f70-9b17-7f0915af3cdd/26-6a86a65ef2e1f.webp' /></p><p>

</p><p>
நான் தமிழ், முஸ்லிம், சிங்களம் என பார்த்தது இல்லை, யார் பிழை செய்தாலும் பிழை
பிழைதான். எனவே கிழக்கு மாகாணம் ஒரு அரபு இராச்சியமாக மாற இடம் கொடுக்க
முடியாது.
</p><p>
அதேவேளை வாகரை காரை முனையில் தமிழர்களின் பூர்வீக இடங்களுக்கு ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் ரவூப் ஹக்கீம் கடந்த 3
தினங்களுக்கு சென்று அது முஸ்லிம்களின் பாரம்பரிய இடம் என அதற்கு போலி
ஆவணங்களை தயாரித்து அரச காடுகளை அழித்து ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றனர்.</p><p> இதற்கு வனபரிபாலன திணைக்களம் உடந்தையாக இருக்கின்றனர். இதனை ஒருபோதும்
ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம் மக்களுக்கு காணி தேவை என்றால் அரசாங்கத்துடன் பேசி அரச அதிபர், பிரதேச
செயலாளர்களுடன் பேசி மக்களுக்கு கொடுப்பது வேறு விடயம். </p><p>ஆனால் அதை விட்டு போலி
ஆவணங்களை தயாரித்து கொண்டு காடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரசாங்க
அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியிலிருந்து சென்ற இரண்டு வெளிநாட்டவர்கள் சடலங்களாக மீட்பு! காரணம் தொடர்பில் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/matara-two-foreigners-found-dead-investigation-1787204463"></link>
            <id>https://tamilwin.com/article/matara-two-foreigners-found-dead-investigation-1787204463</id>
            <summary type="text">மாத்தறை, திஹகொட - பலொல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள விகாரை வளாகத்தில் உள்ள
வேப்ப மரத்தில் நேற்று (19) இரு வெளிநாட்டவர்கள் தவறான முடிவெடுத்து தொங்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, திஹகொட - பலொல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள விகாரை வளாகத்தில் உள்ள
வேப்ப மரத்தில் நேற்று (19) இரு வெளிநாட்டவர்கள் தவறான முடிவெடுத்து தொங்கிய நிலையில்
சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக திஹகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விகாரைக்கு வழிபாடுகளுக்காகச் சென்ற பிரதேச மக்கள் மரத்தில் சடலங்கள்
தொங்குவதைக் கண்டு உடனடியாக திஹகொட பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><h2>உயிரிழந்தவர்கள் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>
உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய பிரான்ஸ் நாட்டவர் மற்றும் 52 வயதுடைய
ஸ்காட்லாந்து நாட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/763b510f-101e-4c46-80cc-447825c70c26/26-6a869847dfd07.webp' /></p><p>
</p><p>
இவர்கள் இருவரும் வெலிகமை, மிதிகம - குருபெபில பகுதியில் உள்ள சுற்றுலா
விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளமையுடன், நேற்றுக் காலையில் அம்பாந்தோட்டைப்
பகுதிக்குச் செல்வதாகத் தெரிவித்தே விடுதியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருந்து இரு ஜோடி காலணிகள், ஒரு
மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் 'ஸ்கூட்டி' ரக மோட்டார் சைக்கிள் என்பன
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
மோட்டார் சைக்கிள் வெலிகமைப் பகுதியில் வாடகைக்குப் பெறப்பட்டது என்பது
இலக்கத் தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள்&nbsp;</h2><p>

இவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார்
சந்தேகிக்கின்றனர். </p><p>எனினும், இந்த சம்பவத்துக்கான உண்மையான காரணம் இதுவரை
கண்டறியப்படவில்லை.

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>அத்துடன், மாத்தறைப்
பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமாரவின்
வழிகாட்டலில் திஹகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:03:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலம்வாய்ந்த அரசியல்வாதிகளுக்காக ஷிரான் பாசிக் செலவிட்ட கோடிக்கணக்கான கறுப்புப்பணம்! சிக்கலில் பலர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-crores-election-campaigns-politician-1787206646"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-crores-election-campaigns-politician-1787206646</id>
            <summary type="text">நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் எதிர்க்கட்சியில் உள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் இருவரின் தேர்தல் பிரச்சாரங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் எதிர்க்கட்சியில் உள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் இருவரின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இருப்பினும், இந்த தேர்தல் பிரசாரங்களுக்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பது இதுவரை சரிவர வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>

இதேவேளை, தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு அரசியல்வாதிக்கு 50 பேருந்துகள் வழங்கப்பட்டதாகவும், மற்றொருவருக்கு பெருந்தொகை பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது விசாரணையில் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">விரைவில் அரசியல்வாதிகளிடம் விசாரணை&nbsp;</span></p><p>

 இது தொடர்பில் விரைவில் அரசியல்வாதிகள் இருவரையும் முன்னிலைப்படுத்தி விசாரிக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baa5a566-be4a-4d21-92ac-b48e6887f630/26-6a86a61cc4c10.webp' />&nbsp;</p><p> </p><p>

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவர் களுத்துறை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதற்கிடையில், ஷிரான் பாசிக் சட்டவிரோதமாக ஈட்டிய கறுப்பு பணத்தை வீட்டுத்தொகுதிகள்,5 சொகுசு ஹோட்டல்கள்,வர்த்தக நிறுவனங்கள் போன்றவைக்கு முதலீடு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சியோல் பீச் ஹோட்டலும் தன்னுடையது என்றும் அதற்காக பெருந்தொகை பணத்தை செலவழித்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
</p><p>
அத்துடன், ஷிரான் பாசிக் பொரலஸ்கமுவ, தெஹிவளை, கல்கிஸ்ஸ, இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பிரதேசங்களில் பெருந்தொகை பணத்தை முதலீடு செய்து பல சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><h2>சட்டவிரோத சம்பாதித்த கருப்பு பணம்&nbsp;</h2><p>
</p><p>
போதைப்பொருள் வலையமைப்பின் ஊடாக இவர் சட்டவிரோத சம்பாதித்த கருப்பு பணத்தை சட்டப்பூர்வ பணமாக மாற்றுவதற்காக சில வர்த்தக நிறுவனங்களுக்கு செலவு செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3fe9746-bc01-4323-958a-0e23ea409d75/26-6a86a61d8a8d4.webp' /></p><p> </p><p>

இந்நிலையில், அவரால் கட்டப்பட்ட ஹோட்டல்கள் அப்பகுதியில் காணிகளை வைத்திருக்கும் ஏழை மக்களின் பெயரில் நடத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.</p><p> 

இதனிடையே, அரசு நிலங்களில் கூட ஹோட்டல், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.</p><p> 

அல்டோ தர்மா, படோவிட்ட அசங்க மற்றும் சாண்டோ ஆகிய முக்கிய பாதாள உலக உறுப்பினர்கள் தனது நெருங்கிய நண்பர்கள் என்றும் அவர்களும் தனது போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஷிரான் பாசிக் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:00:59+00:00</updated>
        </entry>
    </feed>
