<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-09T04:33:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு எச்சரிக்கையுடன் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786248333"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786248333</id>
            <summary type="text">காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகளை அவதானிப்பில் கொள்ளுமாறு கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகளை அவதானிப்பில் கொள்ளுமாறு கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கடற்பரப்புகளில் காற்றின் வேகம்</h2><p> </p><p>

அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89c22882-5492-459d-82b5-79ece6ed7f6f/26-6a7801ff7c287.webp' /></p><p> </p><p>

எனவே, மறுஅறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்படுகின்றது. </p><p>

மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p> 

எனவே, இந்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78bd4dad-e203-4977-a237-9a41b320673f/26-6a7802006d30b.webp' /></p><p> </p><p>

கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக் கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T04:29:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் - இரகசிய நடவடிக்கையில் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arrested-for-printing-counterfeit-notes-1786247364"></link>
            <id>https://tamilwin.com/article/person-arrested-for-printing-counterfeit-notes-1786247364</id>
            <summary type="text">போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டை வீதி பகுதியில் நேற்று (8) நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
</p><p>
கோட்டையை சேர்ந்த 53 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/704fca85-6411-40ff-9bcc-39071cb1eb55/26-6a78000c7bdba.webp' /></p><p>
</p><p>
இதன்போது சம்பவ இடத்திலிருந்து ஏழு போலி ரூ. 5,000 நாணயத்தாள்கள், ஆறு ரூ. 1,000 நாணயத்தாள்கள், ஒரு ரூ. 500 நாணயத்தாள், ஒரு கணினி, ஒரு ஸ்கேனர் மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் மீட்கப்பட்டன.
</p><p>
இதற்கமைய, இன்று (09) சந்தேகநபரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T04:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-and-government-officials-arrested-1786245444"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-and-government-officials-arrested-1786245444</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட ஏறக்குறைய ஐம்பது அரச உயர் அதிகாரிகள் இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்பட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட ஏறக்குறைய ஐம்பது அரச உயர் அதிகாரிகள் இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>நாடு இழந்த பெருந்தொகை பணம்</h2><p>
</p><p>
மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளால் நாடு இழந்த பணத்தின் தொகை 5000 கோடி ரூபாவிற்கும் அதிகம் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c5707c7-3ac1-41a5-a80b-dfaab169c390/26-6a77f80742123.webp' />&nbsp;</p><p>

கடந்த காலங்களில் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசியல்வாதிகள் பல்வேறு தண்டனைகளைப் பெற்று சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதேவேளை, அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு புலனாய்வுத்திணைக்களங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த நபர்களை கண்காணிக்க சிறப்பு உளவுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

​​</p><h2>மீண்டும் வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் திட்டம்</h2><p>நாட்டில் பொதுச்சொத்துக்களை வீணடித்த அரசியல்வாதிகள் மற்றும் ஏனையவர்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bdc4480-63ab-40af-bcaf-04b0290abb9e/26-6a77f807ea9e2.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதனிடையே, பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளை சுட்டிக்காட்டி சில வழக்குகளில் இருந்து தப்பிய பல அரசியல்வாதிகள் குறித்த தகவல் வெளியாகி, தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து மீண்டும் வழக்குப்பதிவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
எதிர்வரும் முக்கியமான தேர்தலுக்கு முன்னர் இந்த விசாரணைகளை முடிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T04:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-examination-1786246952"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-examination-1786246952</id>
            <summary type="text">நாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026)
இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 


நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026)
இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. </p><p>


நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள்
இந்த பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.</p><p> 

மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களின் வாழ்த்துகளுடன் பரீட்சைக்கு தயாராகி பரீட்சை நிலையங்களுக்கு
சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/336f4cde-3df7-4397-b9d0-43d8aadf09bf/26-6a77f7a2d6731.webp' /></p><p>


மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்
பரீட்சை சுமுகமாகவும் அமைதியான முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
</p><p>

பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல
பெறுபேறுகளைப் பெற வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்
சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><h2>நுவரெலியா&nbsp;</h2><p>நுவரெலியா மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் மழையையும் பொருட்படுத்தாது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை
நிலையங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சை இன்று(09.08.2026) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதல் மழை பெய்து வந்த
போதிலும், மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை
தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76c12fb2-f7d3-41ca-95d1-c46fec3aa8c6/26-6a77fbe33fe84.webp' /></p><h3> 


மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவை</h3><p>
மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு,
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களில்
அழைத்துச் சென்று பரீட்சை நிலையங்களில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக
அரசாங்கத்தினால் விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a677f04c-c6e7-43f6-8976-72fd357f7c01/26-6a77fbe4445e2.webp' /></p><p>
இதன் காரணமாக மாணவர்கள் பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்திருந்தனர். அத்துடன், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.</p><p>

சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாது, நுவரெலியா மாவட்டத்தின் பல
பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44f23a7-3f73-41f4-b20e-c7b3e77a59dc/26-6a77fbe5292ff.webp' /></p><p><b><i>மேலதிக தகவல் - மலைவாஞ்சன்</i></b></p>]]></content>
            <updated>2026-08-09T03:49:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வரி செலுத்தாதோர் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-regarding-tax-defaulters-in-srilanka-1786241398"></link>
            <id>https://tamilwin.com/article/information-regarding-tax-defaulters-in-srilanka-1786241398</id>
            <summary type="text">இலங்கை அரசால் வசூலிக்கப்படக்கூடிய 961.4 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தினை வசூலிக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஜூன் 30 நிலவரப்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசால் வசூலிக்கப்படக்கூடிய 961.4 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தினை வசூலிக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

2024 ஜூன் 30 நிலவரப்படி, இறைவரித்திணைக்களத்தினால் வசூலிக்க முடியாத வரி, அபராதம் மற்றும் வட்டியின் மொத்த தொகை ரூ. 961.4 பில்லியன் ரூபாய் என தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2>வரி நிலுவை</h2><p>

2024 ஜூன் 30 நிலவரப்படி, வருமான வரியில் அதிகபட்ச வரி நிலுவை உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e812adb-8695-4831-ba39-6fe999ce7d9d/26-6a77e4ee0c3eb.webp' /></p><p>

இதற்கமைய, அடுத்த அதிகபட்ச வரி நிலுவை மதிப்புக்கூட்டு வரியில் (VAT) உள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
 2023 ஜூன் 30 மற்றும் 2024 ஜூன் 30க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும், வரி நிலுவை, அபராதம் மற்றும் வட்டி ஆகியவை ரூ. 18 பில்லியனுக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T03:27:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி பணமோசடி - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-warning-issued-to-social-media-users-1786243674"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-warning-issued-to-social-media-users-1786243674</id>
            <summary type="text">இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும்&amp;nbsp;மோசடி குறித்து இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக்குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும்&nbsp;மோசடி குறித்து இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக்குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>இந்த சட்டவிரோத நடவடிக்கை இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>இந்த மோசடி நடவடிக்கை சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>மோசடி வலையில் சிக்கவைக்கும் நடவடிக்கை</h2><p>மோசடியாளர்கள் பாதிக்கப்படுபவர்களின் தகவல்களை முன்னதாகவே திரட்டி பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட இன்ஸ்டகிராம் கணக்குகள் மூலம் 'Hi' என குறுந்தகவல் (மெசேஜ்) அனுப்பி மோசடி வலையில் சிக்கவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47e34f86-d337-4b9e-a063-04c36426900b/26-6a77eec604b6b.webp' /></p><p>இதனையடுத்து சில நாட்கள் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அவர்களின் அந்தரங்கப் படங்கள் அல்லது காணொளி அழைப்புகளைப் பதிவுசெய்து, பணத்தைத் தராவிட்டால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர்.&nbsp;</p><p>எனவே, அறிமுகமில்லாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்கும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
&nbsp;</p><p>முகநூல் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் நிர்வாண புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிடுவதாக அச்சுறுத்தி, அவர்களை ஏமாற்றும் மோசடி மீண்டும் பரவி வருவதாகவும், இது தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T03:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் பெண்களுக்கு நடப்பது என்ன.. ஆடைகளற்ற சோதனை முதல் கடும் நெரிசல் வரை! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-happens-to-women-in-prison-1786219571"></link>
            <id>https://tamilwin.com/article/what-happens-to-women-in-prison-1786219571</id>
            <summary type="text">சிறைச்சாலைக்குள் பெண் கைதிகள் பிரிவில் கடுமையான நெரிசல் நிலவுவதாக முன்னாள்&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைக்குள் பெண் கைதிகள் பிரிவில் கடுமையான நெரிசல் நிலவுவதாக முன்னாள்&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறைச்சாலைக்குள் இருந்தபோது தான் கண்ட பல விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>திரும்பிப் படுப்பதற்குக்கூட இடவசதி இல்லாத ஒரு அறைக்குள் 6 பேர் தங்கவைக்கப்படுகின்றனர்.</p><p>


பெண்கள் பிரிவில் பத்திற்கு பத்து அளவிலான சிறிய அறைகளே காணப்படுகின்றன. ஒரு தடவை சிறைக்குள் பெண் கைதிகளின் எண்ணிக்கை 60ஆக காணப்பட்டபோது ஒரு அறைக்குள் 10 பேர் வீதம் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.</p><p>அந்த 60 பேருக்கும் 2 கழிப்பறைகளே காணப்பட்டன. 

சிறைச்சாலைகளுக்குள் நிலவும் இவ்வாறான சூழல் பெண்களின் சுகாதாரத்தை கேள்விக் குறியாக்குகிறது.&nbsp;&nbsp;</p><p>இது தொடர்பான இன்னும் பல முக்கிய விடயங்களை விபரிக்கிறது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_r3QkxKAwf0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T02:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று - மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-today-1786240091"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-today-1786240091</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.</p><p>

நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளதுடன், புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்</h2><p>

எனவே மாணவர்கள், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee4e96cd-c2c0-41ae-af2f-8a48d19fc8d0/26-6a77df1d16e7e.webp' /></p><p> 

இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p> 

இதனையடுத்து முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.</p><h2>வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்கள்</h2><p> 

இதன்பின்னர் வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும். </p><p>

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே விடையளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

மேலும், கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதனையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T02:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்படுவாரா ஹிஸ்புல்லாஹ் : பிள்ளையானுக்கு நடக்கப் போவது என்ன..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-hizbullah-be-arrested-1786229424"></link>
            <id>https://tamilwin.com/article/will-hizbullah-be-arrested-1786229424</id>
            <summary type="text">ஓட்டமாவடி பிரதேசத்திலே உள்ள காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை ஒன்றை கட்டினேன் என நாடாளுமன்றம் உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா குறிப்பிட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓட்டமாவடி பிரதேசத்திலே உள்ள காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை ஒன்றை கட்டினேன் என நாடாளுமன்றம் உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தார்.</p><p>

இதுவரையில் தான் இவ்வாறு பேசியமைக்காக மன்னிப்போ அல்லது அவ்வாறு பேசியமைக்கான காரணத்தையோ அவர் தெளிவுபடுத்தவில்லை.
</p><p>
இதனைத்தொடர்ந்து இவர் அரசியலில் இருந்த காலங்களில் நீதிமன்ற அவமதிப்பு செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவருடைய இந்த சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? இல்லையா?
</p><p>
காலம் கடந்ததென்று கூறினாலும் அவர் இவ்வாறு பேசியமைக்கு ஆதாரமான காணொளிகள் காணப்படுகின்றன. நீதிபதிகளுக்கு எதிராக செயற்பட்டு வரும் இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும். </p><p>

இது தொடர்பான மேலதிக தவல்களை விபரிக்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUON8FZkl94" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T01:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் எமது அரசாங்கம் தண்டனைகளை வழங்கி வருகிறது - சுந்தரலிங்கம் பிரதீப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeep-mp-govt-punishes-all-equally-under-law-1786231276"></link>
            <id>https://tamilwin.com/article/pradeep-mp-govt-punishes-all-equally-under-law-1786231276</id>
            <summary type="text">சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட&amp;nbsp; நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பெருந்தோட்ட மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட&nbsp; நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்
பிரதீப் தெரிவித்துள்ளார். </p><p>


நேற்றைய தினம்(08.08.2026) முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சட்ட திருத்தங்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பாரம்பரிய குடும்ப அரசியலுக்குப் பதிலாக, எளிய
பின்னணியில் இருந்து வந்தவர் ஜனாதிபதியாகத் தெரிவாகி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளார்.
</p><p>
ஆடம்பர வாகனப் பவனிகள், தேவையற்ற பாதுகாப்பு
மற்றும் வீண் செலவுகளைத் தவிர்த்து எளிமையான அரசாங்கத்தை எமது அரசாங்கம் நடத்தி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767fb8dc-e166-4064-af1a-837f22c9e4e1/26-6a77bb258849c.webp' /></p><p>சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும்
குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

அத்துடன் கண்டாவளை 
பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகுபாடின்றி வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்
மற்றும் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.</p><p>

அத்துடன் உரிய சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு மாகாணசபை
தேர்தல்கள் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T00:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களை காப்பாற்றவே கோட்டபாய தப்பி ஓடினார்! மகிந்தவிற்கு பதவி கொடுத்த மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-fled-to-save-the-people-1786226090"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-fled-to-save-the-people-1786226090</id>
            <summary type="text">அரகலய போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஒருபடி பின்வாங்கியது. உயிர்களை பலி கொடுத்தோ அல்லது பிள்ளைகளை கொன்றோ அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரகலய போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஒருபடி பின்வாங்கியது. உயிர்களை பலி கொடுத்தோ அல்லது பிள்ளைகளை கொன்றோ அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் நினைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும் அந்தக் காலப்பகுதியில் நாங்கள் அமைதியாக செயற்பட்டமையே எங்களுடைய பலவீனம் என்று நான் நினைக்கின்றேன் எனவும் அவர் ஊடக சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டிருந்தார். </p><p>

இவருடைய இந்தப் பதிவிற்கு எதிராக மக்கள் பதிலளிக்கையில், தற்பொழுது நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சிறைச்சாலை கலவரங்கள் கூட ராஜபக்சர்களின் சதித் திட்டமே.
</p><p>
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சேர்த்த ராஜபக்ச குடும்பத்திற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுதான் எல்லா மேற்கத்தேய நாடுகளினதும் நடைமுறை ஆகும்.</p><p>

ராஜபக்ச குடும்பத்தினர் இல்லாமல் இலங்கையில் எந்தத் தீங்கும் நடப்பதில்லை. ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் நேரடி தொடர்புடையவர்களும் அவர்களே என சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த பதவி&nbsp; தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FBCdcdFNviY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T00:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடி நடவடிக்கை! கொழும்பில் தமிழர்கள் உட்பட பலரின் சொத்துக்களை பறிக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-municipal-going-to-take-over-properties-1786196538"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-municipal-going-to-take-over-properties-1786196538</id>
            <summary type="text">கொழும்பில் தமிழர்கள் உட்பட பலருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கொழும்பு நகரில் சொத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் தமிழர்கள் உட்பட பலருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

கொழும்பு நகரில் சொத்து வரிச் செலுத்தப்படாமை காரணமாக பல சொத்துக்களை பறிமுதல் செய்ய மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>காணிகள் பறிமுதல்&nbsp;</h2><p> </p><p>

மாநகர சபைக்கு வரி செலுத்தாத கொழும்பு 07 பகுதியிலுள்ள 30 காணிகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8c02463-5069-485f-b461-0b2f9ebcdcc3/26-6a7744bc76b49.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>கொழும்பு 07 உள்ளிட்ட உயர் வணிக மதிப்புள்ள பிரதேசங்களில் உள்ள 30 காணிகள், கொழும்பு கோட்டைப் பகுதியில் 58 காணிகள் மற்றும் வெள்ளவத்தை பகுதியில் 67 காணிகள் பறிமுதல் செய்யும் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>நிலுவையில் உள்ள வரிப் பண அறவீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T23:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் அதிரடியில் சிக்கும் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள்! சதிகளின் பின்னணியில் ரணில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-behind-the-conspiracies-of-opposition-1786229422"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-behind-the-conspiracies-of-opposition-1786229422</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான செயற்பாடு, படுகொலைகள் குறித்த விசாரணைகைள் உள்ளிட்டவற்றிற்கு தடைகளை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான செயற்பாடு, படுகொலைகள் குறித்த விசாரணைகைள் உள்ளிட்டவற்றிற்கு தடைகளை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்று அரசியலமைப்பு நிபுணர் ஓய்வுநிலை பேராசிரியர் ஜயதேவ உயன்கொட தெரிவித்துள்ளார்.</p><p> 


பத்திரிகை ஒன்றுக்கு வழங்கி நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

தற்போதைய அரசாங்கம் தனது இரு ஆண்டுகால ஆட்சியில், வேறு எந்த அரசாங்கமும் செய்யாத சில பணிகளைத் தொடங்கியுள்ளது. முதலாவது, ஊழல்களைக் கண்டறிந்து வழக்குத் தொடர்வது. இரண்டாவது, அரசியல் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுப்பது. மூன்றாவது, போதைப்பொருள் ஒழிப்பு.</p><h2>எதிர்த்தரப்பினரின் அச்சம்&nbsp;</h2><p> </p><p>இந்த மூன்று விடயங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தற்போதைய கூட்டு எதிரணியில் அல்லது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளில் உள்ளவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f16ea99-e9b2-4ef4-9ec6-84f5fc049779/26-6a77b4ce68bf1.webp' /></p><p> </p><p>ஒரே குழுவினரே இவ்வாறு குற்றம் சாட்டப்படுகிறார்கள். எனவே, தான் தொடங்கிய இந்த மூன்று பணிகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத்துக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. </p><p>ஏனெனில், இதற்கு எதிராக எதிர்த்தரப்பினர் பாரிய பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாகும். அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதைத் தடுப்பதே அவர்களின் இலக்காகும்.</p><p> </p><p>அவர்கள் இந்த அரசாங்கத்துக்குத் தடை ஏற்படுத்தும் ஒரு வழியாக நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பது எந்தவொரு சுயாதீனக் குடிமகனுக்கும் தெளிவாகத் தெரியும்.</p><p>

கடைசியாக உள்ள காலத்தில், நீதவான் நீதிமன்றங்கள் முதற்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு சூழல் காணப்பட்டது. அதைக் கண்டு எதிர்த்தரப்பினர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.</p><h2>பின்னணியில் ரணிலா..</h2><p> </p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய கொள்கை சார்ந்த செயன்முறைகளான ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு, படுகொலைகள் குறித்த விசாரணைகள், போதைப்பொருள் எதிர்ப்பு ஆகிய மூன்றுக்கும் தடைகளை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சியின் புதிய தந்திரமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8489b23-e14f-4bfa-b532-2538150bfa9d/26-6a77b4cd9a562.webp' /></p><p> </p><p>அது வெற்றியடையுமா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் இப்போது புதிதாகத் திறந்துள்ள முன்னணிதான் நீதிமன்றமாகும். அரசாங்கத்துக்கு மக்களின் அங்கீகாரம் உள்ளது. எதிர்க்கட்சிக்கு அது இல்லை. அதைப் புரிந்து கொண்ட எதிர்க்கட்சி இப்போது நிறுவன ரீதியாகச் செயல்படுகிறது. அது ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையில் உருவான ஒரு தந்திரமாகவும் இருக்கலாம். </p><p>அதாவது, அரச அமைப்புக்குள் ஒரு நெருக்கடியை உருவாக்குவது. நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க சபையை ஒரு பக்கத்திலும், நீதிமன்றத்தை மறுபக்கத்திலும் நிறுத்தி ஒரு பிரச்சினையை உருவாக்குவதே இங்கு எதிர்க்கட்சியின் நோக்கமாகத் தெரிகிறது. அது குறித்து அரசாங்கம் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதே எனது உணர்வாகும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T23:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை மோதல்களின் பின்னணியில் நிச்சயம் நான்தான்..! ஜனாதிபதியின் செய்தியை முன்கூட்டியே அறிவித்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-clash-sri-lanka-1786222067"></link>
            <id>https://tamilwin.com/article/prison-clash-sri-lanka-1786222067</id>
            <summary type="text">
சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் நிச்சயமாக நான் தான் இருப்பேன் என்ற உறுதியான மன நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என பொதுஜன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் நிச்சயமாக நான் தான் இருப்பேன் என்ற உறுதியான மன நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஏதேனும் குற்றச் செயல்கள் ஏற்பட்டால் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.</p><h2>சிறைக் கலவரங்கள்&nbsp;</h2><p>

எனினும், தற்போது அவர்களுடைய அரசாங்கத்தில் பல துரதிஷ்ட சம்பவங்கள் நிகழும் போது அதனை தடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் மீது இந்த அரசாங்கம் பழி சுமத்தி வருகின்றது. </p><p> 

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களுக்கு யார் பொறுப்புக் கூறுவது. 11 ஆயிரம் பேரைத் தடுத்து வைக்க வேண்டிய சிறைச்சாலையில் 45ஆயிரம் பேரைத் தடுத்து வைத்திருப்பதே மிகப் பெரிய பிரச்சினையாகும்.
</p><p>
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல், இப்போது வரை சிறைச்சாலைகளில் உள்ள மலசல கூடங்களையாவது சீரமைத்திருக்கின்றதா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0945a5bf-7902-4934-8c09-6e382ad1fb7c/26-6a7798081ccc7.webp' /></p><p>

ஆனால், பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள் மீதும் பழி சுமத்தி வருவதுடன், எதிர்க்கட்சிகளை நோக்கி விரல் நீட்டுவதும், ராஜபக்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதுமே இவர்களுடைய வேலையாக இருக்கின்றது. </p><p>

தற்போது சிறையில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்கும், எதிர்க்கட்சிகள் குறிப்பாக நாமல் ராஜபக்சதான் காரணமாக இருக்கும் என மக்களுக்கு இந்த அரசாங்கம் அறிவிக்கும்.</p><p> சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் நாமல் ராஜபக்சதான் உள்ளார் என இந்த அரசாங்கம் நம்பிக் கொண்டிருக்கும். இதனைத் தான் ஜனாதிபதி அநுரவும் மக்களுக்கு அறிவிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T22:59:51+00:00</updated>
        </entry>
    </feed>
