<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-10T18:28:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனவாத விசமிக்கு மைத்திரிபால கொடுத்த பொதுமன்னிப்பு செல்லாது..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/general-amnesty-granted-maithripala-agitator-1789062957"></link>
            <id>https://tamilwin.com/article/general-amnesty-granted-maithripala-agitator-1789062957</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
</p><p>
காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.&nbsp;</p><p>கடந்த 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.</p><p>இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.&nbsp;</p><p>இந்நிலையில், குறித்த பொதுமன்னிப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் விதித்துள்ள அதிரடி தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qBdszQyKhuU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைத் தமிழரை செருப்பால் அடிக்க முற்பட்ட இராமேஸ்வரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆட்சியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-in-rameshwaram-been-disrespected-1789061152"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-in-rameshwaram-been-disrespected-1789061152</id>
            <summary type="text">இராமேஸ்வரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னனிடம் விடுப்பு கேட்டு வந்த இலங்கைத் தமிழரை தகாத
வார்த்தையில் பேசி செருப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராமேஸ்வரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னனிடம் விடுப்பு கேட்டு வந்த இலங்கைத் தமிழரை தகாத
வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க முற்பட்ட சம்பவம் இன்று (10) பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக
தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை தமிழக
அரசு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு
முகாமில் தங்க வைத்துள்ளனர்.
</p><p>
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1500க்கும் மேற்பட்ட இலங்கை
தமிழர்கள் வசித்து வருகின்றனர்.</p><h2>&nbsp;மருத்துவ சிகிச்சை</h2><p>
</p><p>
இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள உறவினர்களை
சந்திக்க செல்லவும், மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் போது மண்டபம் இலங்கை
தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் விடுப்பு பெற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c328e82b-66cb-4265-9f68-2a8d6834ba95/26-6aa2e97d7ac08.webp' /></p><p>

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரான ஜெகன் என்பவர் சென்னையில் மருத்துவ
சிகிச்சைக்கு செல்வதற்காக மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார்
ஆட்சியரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விண்ணப்பித்துள்ளார்.</p><p>
ஆனால் விடுப்பு அளிப்பதற்கு சார் ஆட்சியர் பணம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
பணம் அளிக்காததால் இலங்கைத் தமிழர் ஜெகனுக்கு விடுப்பு அளிக்காமல் இருந்து
வந்த நிலையில் இன்று மீண்டும் விடுப்பு விண்ணப்பம் குறித்து கேட்க சென்ற
ஜெகனை சார் ஆட்சியர் கலை மன்னன் தகாத வார்த்தையால் பேசி செருப்பால் அடிக்க
முயன்ற காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், இது தொடர்பில் பலரும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் வீதியில் நோயாளர் காவு வண்டி கோர விபத்து! சாரதி பரிதாப உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ambulance-accident-driver-tragically-killed-1789061136"></link>
            <id>https://tamilwin.com/article/ambulance-accident-driver-tragically-killed-1789061136</id>
            <summary type="text">குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருள்களை
ஏற்றிச் சென்ற&amp;nbsp; நோயாளர் காவு வண்டி ஒன்று, பாதெனிய - அனுராதபுரம் வீதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருள்களை
ஏற்றிச் சென்ற&nbsp; நோயாளர் காவு வண்டி ஒன்று, பாதெனிய - அனுராதபுரம் வீதியில் உள்ள
கத்தபஹுவ பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தானது இன்று(10.9.2026) பிற்பகல் 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் நோயாளர் காவு வண்டி&nbsp; சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நோயாளர் காவு வண்டியில் பயணித்த நால்வரும், லொறியில் இருந்த இருவரும்
படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு அம்பன்பொல மற்றும் கல்கமுவ
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b433d62e-80d2-4608-aa8f-2369a48d62e4/26-6aa2e8124592b.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சாரணர் இயக்கத்துக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-between-sri-lanka-scout-association-anura-1789058891"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-between-sri-lanka-scout-association-anura-1789058891</id>
            <summary type="text">இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
&amp;nbsp;குறித்த கலந்துயைாடலானது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
</p><p>&nbsp;குறித்த கலந்துயைாடலானது இன்று(10.9.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p>
2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர்
ஜம்போரி தொடர்பிலும், அதன் அமைப்பு முன்னெடுக்கும் பணிகளின் தற்போதைய நிலைமை
மற்றும் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.</p><h2>கருத்துப் பரிமாற்றங்கள்</h2><p>

இதன்போது, தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னம் ஜனாதிபதியிடம்
கையளிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
</p><p>
இலங்கை சாரணர் இயக்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்
மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்கள்
மேற்கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04076adc-b7bb-4387-a392-e01f612cd812/26-6aa2e38875e3f.webp' /></p><p>
</p><p>
சாரணர் இயக்கத்தை அதிகளவிலான பாடசாலைகளுக்கு விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம்
குறித்தும், அரசு முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களுக்கு
சாரணர் இயக்கம் வழங்கக்கூடிய பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பிலும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
</p><p>
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர்
சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிரி
பெரேரா, இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிப் பிரதம ஆணையாளர் (பதில்) கபில
பெரேரா, செயற்குழுத் தலைவர் கமல்நாத் ஜினதாச, ஜம்போரி இணை அமைப்பாளர் ஆணையாளர்
பொறியியலாளர் அமில் அபேசுந்தர உள்ளிட்ட இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட
பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:07:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குறுதிகளை இப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள் - நாடாளுமன்றத்தில் அரசிடம் சஜித் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-request-government-in-parliament-1789057277"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-request-government-in-parliament-1789057277</id>
            <summary type="text">கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எதிர்க்கட்டத்தில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை இன்று ஆட்சியமைத்தவுடன்
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எதிர்க்கட்டத்தில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை இன்று ஆட்சியமைத்தவுடன்
மறந்துவிட்டனர் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,
அந்த விவகாரங்களை இப்போதாவது உடனே நிறைவேற்றுமாறும் நாடாளுமன்றத்தில் இன்று
வலியுறுத்தினார்.
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,

"2020.01.01 முதல் 2025.03.31 வரை ஓய்வுபெறத் தகுதி பெற்ற ஒரு இலட்சத்து 54
ஆயிரம் பேருக்கு 03 - 2016 இலக்க சுற்றறிக்கையின்படியே சம்பளம்
தயாரிக்கப்பட்டுள்ளதால் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.</p><p> எனவே, இவர்களது
ஓய்வூதியப் பணிக்கொடுப்பனவு முரண்பாடுகளைத் தீர்த்து, நிலுவைத் தொகையை
உடனடியாக வழங்குமாறு கோருகின்றேன். இல்லாவிட்டால் அது மனித மற்றும் அடிப்படை
உரிமைகளை மீறும் செயலாகும்.
</p><p>
'த பைனான்ஸ்' நிறுவனம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து
300 வைப்பாளர்கள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர். மத்திய வங்கியின்
நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது இந்த நிறுவனத்தில் பாரிய நட்டம்
ஏற்படுத்தப்பட்ட போதிலும், வைப்பாளர்கள் அனைவருக்கும் முழுத் தொகையையும் வழங்க
அரசு வெளிப்படைத்தன்மையுடன் சொத்துக்களை ஏலமிட வேண்டும்.</p><h2>&nbsp;இரண்டாம் கட்டப்பணிகள்</h2><p>
</p><p>
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்டப்
பணிகள் 2025 ஜனவரி 3ஆம் திகதிக்குள் நிறைவடைய வேண்டியிருந்த போதிலும், இன்னும்
முடிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809f7d88-9abf-4d79-b4f6-b22e4ff7faa2/26-6aa2db996c876.webp' /></p><p> </p><p>திட்டப் பணிப்பாளர் கூட இல்லாமல், அமைச்சரவை அல்லது
துறைமுக அதிகார சபையின் அங்கீகாரமின்றி சட்டவிரோதமாக இடம்பெறும் இந்தப் பணிகள்
குறித்து உள்ளக கணக்காய்வு மற்றும் நாடாளுமன்ற விசாரணையை நடத்த வேண்டும்.
</p><p>
தங்களை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காகப் பாடுபட்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்களுக்கும் இன்னும் முறையான சேவைப்பிரமாணக் குறிப்புகள்
வழங்கப்படவில்லை. </p><p>திறைசேரியில் பணம் நிரம்பியுள்ள நிலையில், 'அத்தம' திட்டம்
மூலம் மக்களிடம் பணம் சேகரிப்பதை விட்டுவிட்டு இவர்களது பிரச்சினைகளுக்குத்
தீர்வு வழங்குங்கள்.
</p><p>
இஸ்ரேல் நாட்டின் உட்கட்டமைப்புத் துறை வேலைவாய்ப்புகளுக்காகப் பதிவு செய்த
1,200 பேருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படாமல் லொட்டரி முறை இன்னும்
நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.</p><p></p><h2>22ஆவது திருத்தம்&nbsp;</h2><p> </p><p>இதனால் 560 பேர் காத்திருப்புப் பட்டியலில்
உள்ள நிலையில், அரசு ஊடாகச் செல்ல வேண்டிய வாய்ப்பு தாமதப்படுத்தப்படுவதால்
அப்பாவி இளைஞர்கள் தனியாரிடம் சென்று 35 இலட்சம் வரை செலவழித்துப்
பாதிக்கப்படுகின்றனர்.

நாட்டில் தனிக் கட்சி அரசை ஸ்தாபிக்கும் நடவடிக்கையாகவே 22ஆவது திருத்தம்
கொண்டுவரப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ee9f63-de7d-4952-b527-872a0df188f4/26-6aa2db9a60b9b.webp' /></p><p> </p><p>இது நீதியின் சுதந்திரத்துக்கு விடப்படும் மரண
அடியாகும். இதன் மூலம் மக்களின் வறுமையோ வேலையின்மையோ தீர்க்கப்படப் போவதில்லை
என்பதால் இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
</p><p>
நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும் எனத்
வாக்குறுதியளித்துவிட்டு, இன்று 120 ரூபாவே வழங்கப்படுவதால் விவசாயிகள் கிலோ
ஒன்றுக்கு 17 ரூபா நட்டத்தைச் சந்தித்து நிர்க்கதியாகியுள்ளனர்.</p><p>
விவசாயிகளுக்குக் கொத்தமல்லி சூத்திரத்தின் கதியே ஏற்பட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரகாரம் நுவரெலியா
மாவட்டத்தில் ஒரு நபருக்கு 30 நாள்களுக்கு வாழ்வதற்கு 18 ஆயிரத்து 200 ரூபா
போதுமானது என்று கூறப்படுகின்றது. இந்தத் தொகையைக் கொண்டு யதார்த்தத்தில்
ஒருவரால் வாழ முடியுமா என அரசிடம் கேள்வி எழுப்புகின்றேன்." என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T16:34:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவின் மேடையில் அர்ச்சுனா எம்.பி..! நாமலின் மோசடி தொடர்பில் சபையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307"></link>
            <id>https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307</id>
            <summary type="text">


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நாமலுக்காக மேடை ஏறுவேன்..</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

சமூக வலைத்தளங்களில் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறுவது குறித்து பல பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p> </p><p>

அது, மகிந்த ராஜபக்ச அல்ல, நாளை ரணில் விக்ரமசிங்க அழைத்து அவருடயை மேடையில் ஏறச் சொன்னாலும் அந்த மேடைக்குச் செல்வேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eefc24be-d809-4d3e-b204-a7971f9dcf2d/26-6aa28e4f082cd.webp' /></p><p>
</p><p>
எமது அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச, அவர் அழைத்தாலும் அவருடைய மேடைக்கும் நான் செல்வேன். எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசியல்வாதிக்கும் எனது ஆதரவு இருக்கும். அதேபோலத்தான் நாமல் ராஜபக்சவும். </p><p>

நாமல் ராஜபக்ச மோசடியில் ஈடுபட்டிருந்தாலோ, அவர் மீதான தனிப்பட்டக் குற்றங்களையோ நான் ஆதரிக்கவில்லை. அது எனக்குத் தொடர்பற்றது. </p><p> எதிர்க்கட்சி உறுப்பினராக அவரை நான் ஆதரிக்கின்றேன்.

நாமல் ராஜபக்ச அல்ல, எனது மக்களுக்காக யாருடைய மேடையிலும் ஏறத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FxHDUaTrx9Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-10T15:37:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு- கிழக்கு மற்றும் மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-holds-special-talks-mps-from-north-east-1789050727"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-holds-special-talks-mps-from-north-east-1789050727</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்&amp;nbsp; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்&nbsp; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது இன்று(10.9.2026) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
</p><p>
தற்போதைய பொருளாதார நிலைமையுடன் சேர்த்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக
மக்கள் முகங்கொடுத்து வரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள்
குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது இங்கு வருகை
தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்தார்.</p><h2>பணவீக்க நிலைமை&nbsp;</h2><p>
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களினது தற்போதைய வாழ்க்கைத்தரம், பொருளாதார
நிலை மற்றும் குடும்ப வருமான மட்டம் என்பற்றில் நாட்டின் தற்போதைய பணவீக்க
நிலைமை மற்றும் நாளாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன செலுத்தும்
தாக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0c33973-a248-4d24-bc2b-74836e4964dc/26-6aa2c822c4b0f.webp' /></p><p> </p><p>அவ்வாறே, குறித்த பிரதேசங்களில்
நிலவும் அடிப்படை பௌதீக வசதிகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்நோக்கும்
சிரமங்கள் குறித்து இங்கு பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள்,
தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள அணுகல், பாடசாலைக் கல்வி
மற்றும் பிள்ளைகளின் போஷாக்கு மட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள்
குறித்தும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டன.</p><h2>பொருளாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் சமூக,
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளைக் காணவும், அவர்களின்
வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடைமுறை ரீதியிலான
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் இங்கு பரிமாறிக்
கொள்ளப்பட்டன.
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள்
குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும்
வெளியேயும் அவற்றுக்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை
எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மத்தியில் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b855cca-828e-44ed-9454-470acce4bf9a/26-6aa2c823a1401.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து
பிரதேச மட்டத்தில் தகவல்களைத் திரட்டி அவற்றுக்குத் தீர்வுகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நெருக்கமான
ஒருங்கிணைப்பைப் பேணுவது தொடர்பிலும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>இந்தச் சந்திப்பில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற
உறுப்பினர்களான கதிரவேலு சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம்.தாஹிர், டாக்டர்
இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம்.எஸ். உதுமாலெப்பை, செல்வம்
அடைக்கலநாதன், டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான்,
கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T15:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் - பொலிஸார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/assets-worth-over-rs-10-crore-frozen-1789048786"></link>
            <id>https://tamilwin.com/article/assets-worth-over-rs-10-crore-frozen-1789048786</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 10 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களைச் செயலிழக்கச் செய்ய சட்டவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 10 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களைச் செயலிழக்கச் செய்ய சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

இதற்கமைய, 2020 மே 14 ஆம் திகதி ஒரு ஜீப்பில் ஹெரோயின் கடத்திச் சென்ற 7 சந்தேக நபர்களை பெலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2> 


7 சந்தேக நபர்கள் கைது</h2><p>

 மேலும், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த சந்தேக நபர்கள் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது. </p><p>

அந்த விசாரணைகளின் போது, ​​பெலியகொட பகுதியைச் சேர்ந்த ஒரு சந்தேக நபர், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அந்தச் சொத்தை வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளிப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69c812c6-1c53-4c31-b1e3-b4004241eec2/26-6aa2c24a90491.webp' /></p><p> </p><p>

இதன்படி, மஹாராவில் உள்ள கடவத்த பகுதியில் 19.90 பேர்ச்சஸ் நிலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு மற்றும் சின்ஹரமுல்லவில் உள்ள களனியா பகுதியில் 18 பேர்ச்சஸ் நிலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு ஆகியவை குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. </p><h2>

சொத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை</h2><p>
அந்த இரண்டு சொத்துக்களின் மொத்த மதிப்பு தலா ரூ. 50 இலட்சம் ஆகும், மேலும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 10 கோடிக்கும் அதிகமாகும்.</p><p> 

விசாரணைகளின்படி, இந்தச் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. </p><p>

பணமோசடி தடுப்புச் சட்டத்தின்படி, 2026 செப்டம்பர் 10 முதல் 14 நாட்களுக்கு அவற்றைச் செயலிழக்கச் செய்ய உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T14:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-for-applications-foro-l-answer-scripts-1789048895"></link>
            <id>https://tamilwin.com/article/call-for-applications-foro-l-answer-scripts-1789048895</id>
            <summary type="text"> 


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று(10.09.2026) முதல்&nbsp; ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>&nbsp;மதிப்பீடு</h2><p>

இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் செயல்முறை செப்டெம்பர் 23ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c73997c-e2a4-4de8-b52a-496ff578f8ba/26-6aa2bb3d5fdf2.webp' /></p><p>

மேலும், விண்ணப்பங்களை <a href="https://onlineexams.gov.lk/index.php/slogin" target="_blank"><b>onlineexams.gov.lk</b></a> என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T14:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம்: குற்றச்சாட்டுகளை நிராகரித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resolution-against-iran-in-the-un-security-council-1789047698"></link>
            <id>https://tamilwin.com/article/resolution-against-iran-in-the-un-security-council-1789047698</id>
            <summary type="text">ஈரான் தனது அணுசக்தி கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்
சுமத்தி, சர்வதேச அணுசக்தி முகமை அதன் ஆளுநர் சபையில் தீர்மானம் ஒன்றை
நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தனது அணுசக்தி கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்
சுமத்தி, சர்வதேச அணுசக்தி முகமை அதன் ஆளுநர் சபையில் தீர்மானம் ஒன்றை
நிறைவேற்றியுள்ளது.</p><p>அத்துடன், இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின்
கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.</p><p>
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.நா அணுசக்தி முகவரகத்தால் ஈரானுக்கு
எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா,
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆதரவளித்துள்ளன.</p><h2>&nbsp;உடனடி நடவடிக்கை</h2><p>

ஈரானின் 'Fordow', 'Natanz' மற்றும் 'Isfahan' ஆகிய முக்கிய அணுசக்தி மையங்களை
ஆய்வு செய்ய சர்வதேச அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில்
இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள ஈரான், அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
காரணமாகவே அணுசக்தி மையங்களை ஆய்வு செய்வதற்கான பாதுகாப்பான சூழல் இல்லையெனத்
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4453918-3af1-4923-963d-cdce7938edeb/26-6aa2b70a5b711.webp' /></p><p>

அத்துடன், அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே இத்தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

அதேவேளை, ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஈரானின் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும்
சீனா ஆகிய வல்லரசு நாடுகள் வீட்டோ (Veto) அதிகாரத்தைக் கொண்டுள்ளதால்,
ஈரானுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுப்பது கடினம் என சர்வதேச அரசியல்
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T14:08:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு விசேட சலுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/compensation-of-foreign-workers-die-1789045586"></link>
            <id>https://tamilwin.com/article/compensation-of-foreign-workers-die-1789045586</id>
            <summary type="text">வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் நிவாரணம் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>

வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழந்த 50 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ரூ. 70 மில்லியன் இழப்பீடு வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2> 


இழப்பீடு தொகை அதிகரிப்பு</h2><p>
முன்னதாக, வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் ஒருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரூ. 6 லட்சம் வழங்கி வந்தது.</p><p> 

இந்த தொகை, போதுமானதாக இல்லாத காரணத்தால் குறித்த தொகையை ரூ. 2 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

ஆண்டுதோறும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 250 பேர் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான காரணத்தால் அந்த நாட்டிலேயே உயிரிழக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8ef468-3418-46a3-b65d-b32caca65032/26-6aa2b516902b8.webp' /></p><p> 

இந்த நிலையைக் குறைக்கவும், குழுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்குப் பணமாக அனுப்புகின்றனர். 

பணியகம் ஏற்கனவே அவர்களுக்காகப் பெரிய அளவிலான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.</p><h2> 

வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட திட்டம்</h2><p>

மேலும், நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் பணியாற்றி வருகிறோம். இந்தத் திட்டங்களில் ஒன்று, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபாயை வீட்டுக் கடனாக வழங்குவதாகும்.
</p><p>
 இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன என்றும், அந்த வட்டியின் ஒரு பகுதியை பணியகமும் செலுத்துகின்றது என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார். </p><p>

 இது தவிர, பணியகம் தற்போது தொழிலாளர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களையும் வழங்கி வருகின்றது என்பதையும் அமைச்சர் நினைவூட்டியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T13:48:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-s-independent-refineries-purchase-crude-oil-1789046497"></link>
            <id>https://tamilwin.com/article/china-s-independent-refineries-purchase-crude-oil-1789046497</id>
            <summary type="text">சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரானிய மற்றும் ரஷ்ய
விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா
மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரானிய மற்றும் ரஷ்ய
விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா
மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய
முற்பட்டு வருகின்றன.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.</p><p>இதனால்,
ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பிரெண்ட் ரக மசகு
எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத்
தாண்டியுள்ளது.</p><h2>எரிபொருள் தேவை</h2><p>
</p><p>
இந்நிலையிலேயே சீன நிறுவனங்கள் மாற்று வழிகளில் எண்ணெயைக் கொள்வனவு செய்ய
நடவடிக்கை எடுத்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87dc5f96-cd4a-4b77-85f0-b0d1a084d17f/26-6aa2b1c7574e4.webp' /></p><p>

இதன் காரணமாக, சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச ஆற்றல் மாநாட்டிற்கு சீன
நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் சென்றுள்ளதுடன், சந்தையில் மசகு
எண்ணெய்க்கான கூடுதல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
</p><p>
அதேவேளை, சீனாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், ஆண்டின்
இறுதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட இறக்குமதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி
முடிக்கவும் இத்தகைய அவசர கொள்வனவுகள் தீவிரமடைந்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T13:36:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senthil-thondaman-met-indian-defence-minister-1789047246"></link>
            <id>https://tamilwin.com/article/senthil-thondaman-met-indian-defence-minister-1789047246</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பு இன்று(10.09.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்துள்ளார்.</p><p> 

இந்த சந்திப்பு இன்று(10.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன்போது, கடந்த டிசம்பர் மாதம் முழு இலங்கையையும் புரட்டிப் போட்ட டித்வா புயலின் போது, இந்திய இராணுவம் இலங்கை மக்களை பாதுகாக்க விரைந்து செயற்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f34b5510-3abd-4db2-a69e-24eebe357895/26-6aa2b203c65a8.webp' /></p><p> </p><p>

அத்துடன், டித்வா புயலினால் சேதமடைந்த பாலங்களை நிர்மாணித்தல், பாதைகளை சீர்செய்தல் போன்ற நடவடிக்கைகளை இந்திய இராணுவம் விரைந்து செய்து கொடுத்தமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ceb6c05-fe64-43b9-878e-0075be7e957f/26-6aa2b2216f71d.webp' /></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8Ad2INaUfJ4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் பின்னர் ஈரான் போர் நிறைவுக்கு வரும் : ட்ரம்ப் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-conflict-end-after-us-midterm-elections-trump-1789045119"></link>
            <id>https://tamilwin.com/article/iran-conflict-end-after-us-midterm-elections-trump-1789045119</id>
            <summary type="text">அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின்
பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி
டொனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின்
பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஈரானிய தரப்பு பாதிக்க முற்படுவதாகக் குற்றம்
சுமத்தியுள்ள அவர், போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில்
ஈரானிய தரப்பு தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>செங்கடலின் முக்கிய கடல் வழி</h2><p>
இருப்பினும், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான 'பிக்எக்ஸ் மவுண்டன்' பகுதியை
இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அவர்
எச்சரித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31c0e7a5-6e55-42b3-bca5-b65b79a1d13d/26-6aa2abf99e596.webp' /></p><p>
அத்துடன், செங்கடலின் முக்கிய கடல் வழியான பாப் அல்-மந்தேப் நீரிணைப்
பகுதியில் ஹூதி அமைப்பினரின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதியில்
பதற்றமான சூழல் நிலவுகின்றது.
</p><p>
மறுபுறம், சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலையானது பீப்பாய்
ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T13:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் 8 ஆண்டுகளாக மாயம் - உறவினர் விடுக்கும் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-who-went-to-work-in-kilinochchi-is-a-fake-1789046114"></link>
            <id>https://tamilwin.com/article/person-who-went-to-work-in-kilinochchi-is-a-fake-1789046114</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக குடும்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குடத்தனை கிழக்கு, மளிகைத்திடலை வதிவிடமாகக் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
</p><p>
இவர், கிளிநொச்சி பகுதிக்கு வேலைக்குச் செல்வதாக தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
ஒரு வாரம் வேலைச் செய்த தொலைபேசி</h2><p>
குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பில் 10.03.2018 அன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0df8099-f4af-4286-88c3-27c94fe9540e/26-6aa2ad9a11a8e.webp' /></p><p>
</p><p>
மேலும், அவர் காணாமல்போன தினத்திலிருந்து சுமார் ஒரு வார காலம் வரை அவரது தொலைபேசி இயங்கியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டபோது, அவர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

காணாமல் போனமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>

காணாமல் போன செல்வராசா அருந்தவச்செல்வன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0774323487 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெண்கள் கடுமையாகப் புறக்கணிப்பு: குகதாசன் எம்.பி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-in-sri-lanka-neglect-mp-kugathasan-1789044655"></link>
            <id>https://tamilwin.com/article/women-in-sri-lanka-neglect-mp-kugathasan-1789044655</id>
            <summary type="text">உலக அளவில் நாடாளுமன்றப் பெண்
பிரதிநிதித்துவ வரிசையில் 193 நாடுகளில் இலங்கை 135 ஆவது இடத்தில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக அளவில் நாடாளுமன்றப் பெண்
பிரதிநிதித்துவ வரிசையில் 193 நாடுகளில் இலங்கை 135 ஆவது இடத்தில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் இன்று (10.09.2026)இடம்பெற்ற அமர்வின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;இலங்கையின் குடித் தொகையில் 52 சதவீதமும் வாக்காளர் தொகையில் 56 சதவீதமும்
பெண்கள் ஆவர். எனினும் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 22 பெண்
பிரதிநிதிகளே உள்ளனர். இது 9.8 வீதம் ஆகும்.</p><h2>பெண் பிரதிநிதித்துவம்&nbsp;</h2><p>ரூவாண்டா நாட்டின் நாடாளுமன்றம் 61 வீதத்துக்கும் அதிகமான பெண்
பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளமையை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக
இருக்கும் என நம்புகின்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01fae99d-a39c-47e1-8e56-5b36fe90d442/26-6aa2ad76656a8.webp' /></p><p> </p><p>நமது அயலில் உள்ள இந்திய மாநிலமான
தமிழ் நாட்டில் இது 50 சதவீதமாக உள்ளமை குறிப்பிடத் தக்கது.
நாட்டில் உள்ள அமைச்சரவை அமைச்சர்கள் 25 பேரில் இருவர் மட்டுமே பெண்களாவர்.இது
எட்டு சதவீதமாகும்.</p><p>கனடா நாட்டு அமைச்சரவையில் 50 சதவீதமானோர் பெண்கள் ஆவர்.
இந்தநிலை 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நிலவி வருகின்றது என்பதனை
இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.</p><h2>பொருளாதார மீட்சி</h2><p>
நாட்டில் உள்ள 25 அமைச்சுச் செயலாளர்களில் நால்வர் மாத்திரமே பெண்களாவர்.இது
16 சதவீதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01f7b7eb-6876-4c6e-90bd-84f0e034dfec/26-6aa2ad771a2f6.webp' /></p><p>குடும்பப் பொறுப்புகள் காரணமாக பெண்கள் வேலைகளைக் கைவிடுவதைத்
தடுக்க; குறைந்த செலவிலான குழந்தை காப்பகங்கள், முன்பள்ளிகள், நெகிழ்வுத்தன்மை
கொண்ட பணி நேரங்கள் மற்றும் மகப்பேறு விடுப்பு வசதிகளைச் சட்ட
அடிப்படையிலானதாக்க வேண்டும்.
</p><p>இலங்கையில் மகளிர் வலுவூட்டல் என்பது ஏதோ ஒரு சாராரருக்கு வழங்கப்படும் சலுகை
அல்ல. மாறாக அது நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் சனநாயக முதிர்ச்சிக்கும்
இன்றியமையாத ஒரு முதலீடாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-10T13:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் அறிமுகமாகும் இலங்கை பொலிஸ் செயலி - பொதுமக்கள் பயன்படுத்துவது எப்படி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/app-to-provide-police-of-emergency-1789043091"></link>
            <id>https://tamilwin.com/article/app-to-provide-police-of-emergency-1789043091</id>
            <summary type="text">


அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் தெரிவிப்பதற்காக இலங்கை பொலிஸார் ஒரு புதிய தொலைபேசி செயலியை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் தெரிவிப்பதற்காக இலங்கை பொலிஸார் ஒரு புதிய தொலைபேசி செயலியை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

 தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் எந்தவொரு இலங்கை பிரஜையும், Sri Lanka Police App-ஜ பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப். யூ. உட்லர் தெரிவித்துள்ளார். </p><h2>


SOS பொத்தான்</h2><p>
மேலும், அவசர காலங்களில் இந்தச் செயலியில் உள்ள SOS பொத்தானை 10 விநாடிகளுக்கு அழுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடம் குறித்த தகவலை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுவரை காலமும், 119 என்ற அவசர எண் மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. மாறாக, தற்போது நடைமுறைக்கு வரும் இந்த புதிய செயலி மூலம், உங்களுடைய பிரச்சினைகளை விரைவாக பொலிஸாருக்கு தெரியப்படுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01a77550-b5d6-400c-812e-0b0882e7e741/26-6aa2a7b5e9ee8.webp' /></p><p> </p><p>

அதே போன்று, ஒரு குழந்தைக்கு ஏதேனும் விபத்து அல்லது சிக்கல் ஏற்பட்டால் கூட, இந்தச் செயலி மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்றும் இது தொடர்பாக பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2> 


செயலியை பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள்</h2><ul><li>
 இலங்கை பொலிஸ் செயலியை பொலிஸ் ஸ்டோர் மூலமாக அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
</li><li>
தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் குழந்தைகளுக்கும் இதில் பதிவு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</li><li> 

இந்த பொலிஸ் செயலியைத் தவறாகப் பயன்படுத்துவது சாத்தியமற்றது. </li></ul><p>

 2025-ஆம் ஆண்டில் 119 என்ற அவசர எண்ணைத் தவறாகப் பயன்படுத்திய 91 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து! இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-lorry-carrying-coconuts-overturns-1789042314"></link>
            <id>https://tamilwin.com/article/accident-lorry-carrying-coconuts-overturns-1789042314</id>
            <summary type="text">குருநாகல் - கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப்
பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் கவிழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப்
பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தானது இன்று(10.09.2026) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த லொறியானது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்த விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில்
உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7499da5-698e-41c0-a9e6-72cc4298cd5a/26-6aa2a44ac9d2e.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கலகெதரப் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T12:36:32+00:00</updated>
        </entry>
    </feed>
