<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-28T21:48:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஆகக்கூடுதலான வருமானம் பெறும் அரச நிறுவனமாக சுங்கத்திணைக்களம் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-customs-sets-a-record-state-institution-1787949085"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-customs-sets-a-record-state-institution-1787949085</id>
            <summary type="text">இலங்கை சுங்கத் திணைக்களம் நாட்டின் மிகப்பெரிய வரி வருமானம் ஈட்டும் நிறுவனமாக சாதனை படைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் வாகன இறக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுங்கத் திணைக்களம் நாட்டின் மிகப்பெரிய வரி வருமானம் ஈட்டும் நிறுவனமாக சாதனை படைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
மோட்டார் வாகன இறக்குமதிகள் தொடர்பான வரி வசூலில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் காரணமாக, இலங்கை சுங்கத் திணைக்களம் நாட்டின் மிகப்பெரிய வரி வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.
</p><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதிக் கொள்கைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி-ஜூன் 2026 நிதியாண்டு மீளாய்வு அறிக்கையின்படி, ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த வரி வருமானம் 25.9% அதிகரித்து 2,710.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.</p><h2>வரி வருமானம்</h2><p> இது 4,910 பில்லியன் ரூபா என்ற ஆண்டு மதிப்பீட்டிலிருந்து 55.2% முன்னேற்றமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce51ff3-b50d-4828-bbf3-529a3e4aebc2/26-6a91f01f75e97.webp' /></p><p>

இதில், இலங்கை சுங்கத் திணைக்களம் 1,290 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது. இது மொத்த வரி வருமானத்தில் 48% பங்களிப்பாகும். அதே நேரத்தில், மோட்டார் வாகன இறக்குமதி வரி வருமானம் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 266.4 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
</p><p>
மேலும், சுங்கத் திணைக்களம் மூலம் வசூலிக்கப்பட்ட இறக்குமதி பெறுமதி சேர் வரியின் (VAT) அளவு 443.7 பில்லியன் ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T21:13:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தவர்களின் நிலை.. சஜித் தரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sjb-kandy-organizer-hemapriya-kavirathna-speech-1787947554"></link>
            <id>https://tamilwin.com/article/sjb-kandy-organizer-hemapriya-kavirathna-speech-1787947554</id>
            <summary type="text">அரகலய போராட்டத்திற்காக அன்று குரல் கொடுத்த போது சட்ட வல்லுநர்களாகப் பாராட்டுப் பெற்றவர்கள், இன்று கறுப்பு அங்கிப் பேர்வழிகளாக அரசாங்கத்தினால் சித்தரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரகலய போராட்டத்திற்காக அன்று குரல் கொடுத்த போது சட்ட வல்லுநர்களாகப் பாராட்டுப் பெற்றவர்கள், இன்று கறுப்பு அங்கிப் பேர்வழிகளாக அரசாங்கத்தினால் சித்தரிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கண்டி அமைப்பாளர் ஹேமப்ரிய கவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><h2>முன்வைக்கும் குற்றச்சாட்டு&nbsp;</h2><p>
</p><p>மேலும் அவர்,

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மிரிஹானாவில் கைது செய்யப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து ஜனநாயகத்திற்காக நின்ற இலங்கை சட்ட வல்லுநர்கள் சங்கம், இன்று இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர உதவியதற்காக வருந்தும் அளவிற்கு மாறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03d0bcf-4631-468d-9c91-2aee80b5d8fb/26-6a91ed63b83b0.webp' /></p><p>
</p><p>
அன்று மக்களுக்காகக் குரல் கொடுத்த அதே சட்ட வல்லுநர்கள் சங்கம், இன்று 'திருடர்களாகவும், மோசடிக்காரர்களாகவும், கறுப்பு அங்கி அணிந்தவர்களாகவும்' அரசாங்கத்தினால் விமர்சிக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.</p><p>

புனிதமான மஞ்சள் அங்கியை ஒருபுறமும், சட்ட வல்லுநர்களின் கறுப்பு அங்கியை மறுபுறமும் ஊழல்வாதிகளின் குவியலில் வீசி, விமர்சனங்களை அடக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T20:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான நீள் பயணம் மாநாட்டிற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-conference-1787946037"></link>
            <id>https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-conference-1787946037</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள &quot;நீதிக்கான நீள் பயணம்&quot; மாநாட்டிற்கு நாங்கள் முழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள "நீதிக்கான நீள் பயணம்" மாநாட்டிற்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்க இருக்கின்றோம் என
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் யோகராசா துஷாந்தன் தெரிவித்தார்.</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த
போது அவர் இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>

மேலும் தெரிவிக்கையில், "பல ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல்,
உண்மையையும் நீதியையும் வேண்டி நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.</p><h2>&nbsp;முழுமையான ஆதரவு&nbsp;</h2><p>
</p><p>
அந்த நிலையில், தமது உறவுகளின் நீதிக்காக வீதியில் நின்று போராடி வருகின்ற
தாய்மாரினுடைய குடும்பங்களின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில், எங்களுடைய
அனைத்து மாணவர் சமூகமும், அத்துடன் இளைஞர்கள் இணைந்து அவர்களுக்கான முழுமையான
ஆதரவை வழங்க வேண்டியது அவசியமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/673118aa-1a06-4ea7-96e7-b93f9756daaf/26-6a91e5e9c1ffd.webp' /></p><p>
</p><p>
அந்த நிலையிலே, எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 9 மணிக்கு யாழ்ப்பாணம்
வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு
படுகொலை நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது
உறவினரின் நினைவுப்படுத்தலோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு,
பின்னர் தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற பெயரிலே
ஒரு நாள் சர்வதேச மாநாடு, நீதியின் வலியுறுத்தலை நிலைப்படுத்தி நினைவு
நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உண்மையும் நீதியும் கிடைக்கும்
வரை, அவர்களினுடைய குடும்பங்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு எமது
ஆதரவு தொடரும்.
</p><p>
அவர்களுடைய கோரிக்கைகள் உள்ளூர் மட்டத்தை கடந்து சர்வதேச சமூகத்தின்
கவனத்திற்கு சென்றடைய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே பேரன்புமிக்க தமிழ்
சமூகமே, 30ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விலே பல்கலைக்கழக
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள், மதத்
தலைவர்கள், சமூகம் அனைத்து தரப்பினரும் இணைந்து கலந்துகொண்டு, இந்த காணாமல்
ஆக்கப்பட்ட அம்மாக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பேரணிக்கும்
போராட்டத்திற்கும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதனை பல்கலைக்கழக மாணவர் சமூகமாக
நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்” என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mandur-kandaswamy-temple-batticaloa-1787945597"></link>
            <id>https://tamilwin.com/article/mandur-kandaswamy-temple-batticaloa-1787945597</id>
            <summary type="text">இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர்
கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் நேற்று பல்லாயிரக்கணக்கான
அடியார்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர்
கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் நேற்று பல்லாயிரக்கணக்கான
அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
</p><p>இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை ஒத்ததாக கருதப்படும் மண்டூர் கந்தசாமி
ஆலயத்தின் பூசைமுறைகள் கதிர்காமத்தினை ஒத்ததாக நடைபெற்றுவருகின்றது.
கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21தினங்கள் ஆலய
உற்சவம் நடைபெற்றுவந்தன.
</p><p>உலகிலேயே முருக வழிபாட்டில் தனித்துவமான முறையினையும் மிகவும் பழமையான
வழிபாட்டு முறையினையும் கொண்டதாக பூஜை முறைகளும் ஆலய நடைமுறைகளும் மண்டூர்
கந்தசுவாமி ஆலயத்தில் உள்ளது.</p><p>
நேற்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வேல்தாங்கிய பேழைக்கு சிறப்பு பூஜைகள்
நடைபெற்றன. இந்த பேழைக்கு ஆலயத்தினுள் சிறுமி ஒருவரும் தீபம் காட்டி
வழிபாடுகளை முன்னெடுத்த பின்னரே பேழையானது தீர்த்தக்கரை நோக்கி கொண்டு
செல்லப்பட்டது.
</p><p>பெருமளவான பக்தர்கள் அடியார்கள் புடைசூழ மட்டக்களப்பு வாவிக்கு அருகில் உள்ள
தீர்த்தக்கேணிக்கு முருகனின் வேல்தாங்கிய பேழை கொண்டுவரப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் தலைமையில் இந்த வழிபாடுகள்
முன்னெடுக்கப்பட்டதுடன் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
</p><p>தீர்த்தோற்சவம் நிறைவடைந்ததும் ஆலயத்திற்கு முருகப்பெருமானின் பேழை
கொண்டுவரப்படும்போது தெய்வானையம்மன் ஆலயத்திற்கு முன்பாக சிறுமிகள் தீப ஆராதனை
செய்யும் நிகழ்வு நடைபெறும்போது சிறுமிகள் மற்றும் வில்அம்பு தாங்கி வரும்
சிறுவன் மயங்கிவிழும் அற்புத நிகழ்வு காலம்காலமாக நடைபெற்றுவருகின்றது.
</p><p>மயங்கிய சிறுமிகள் வள்ளியம்மன் ஆலயத்திற்கு பிற்புறமாக கொண்டுசெல்லப்பட்டு
முருகப்பெருமானின் வேல் வள்ளியம்மன் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டது. இதன்போது
வள்ளியமனுக்கு தீர்த்தம் தெளிக்கும் சமயத்தில் மயங்கிய பிள்ளைகள் மயக்கம்
தெளிந்து எழும் அற்புத காட்சியும் இடம்பெற்றது.</p>]]></content>
            <updated>2026-08-28T19:34:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் கைதுகளுக்கான கோப்புகள் தயார்! அதிரடியாக களமிறங்கும் புலனாய்வு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-cid-investigations-to-arrest-1787943637"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-cid-investigations-to-arrest-1787943637</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்பலப்படுத்துவோம் என்பதே.&nbsp;</p><p>அந்தவகையில், தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்களில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்தி பலரை கைது செய்து வருவதில் அதிரடியாக செயற்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக, ராஜபக்சக்களின் பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்களை புலனாய்வு அதிகாரிகள் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில், விரைவில் பல முக்கிய அரசியல் புள்ளிகளை கைது செய்வதற்கான பட்டியல்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l94xWZPoc0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:28:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்தமாதம் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-representatives-to-visit-sri-lanka-next-month-1787943985"></link>
            <id>https://tamilwin.com/article/imf-representatives-to-visit-sri-lanka-next-month-1787943985</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சரிபார்க்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இறுதியில் நாட்டிற்கு வருகைதரவுள்ளது.
</p><p>
இலங்கை தொடர்பில் வகையில் மேற்கொள்ளவுள்ள ஏழாவது மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காகவே சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.</p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>

குறித்த மதிப்பீட்டு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர், அடுத்த தவணைக் கடன் வசதியாக மேலும் சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa17f37-82fd-452a-b992-4e6d0cbd5649/26-6a91dc3369399.webp' /></p><p>
சர்வதேச நாணய நிதியம் இதுவரை இலங்கைக்கு வழங்கியுள்ள நிதியுதவித் திட்டத்தின் கீழ், இலங்கை ஆறு மதிப்பீடுகளை நிறைவு செய்துள்ளதுடன், அதனடிப்படையில் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.</p><p>

நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு வருட காலப்பகுதிக்கு தவணை முறையில் கிடைக்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் மற்றும் கிழக்கு ஆளுநர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-meets-indian-official-1787943441"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-meets-indian-official-1787943441</id>
            <summary type="text">இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முதல் செயலாளர் (கல்வி)&amp;nbsp; சந்தீப் சௌத்ரிக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முதல் செயலாளர் (கல்வி)&nbsp; சந்தீப் சௌத்ரிக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.</p><p>குறித்த சந்திப்பானது நேற்று(28) திருகோணமலையில் உள்ள கிழக்கு
மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.</p><h2>உதவித்தொகை</h2><p>

கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய
அரசு தொடர்ந்து வழங்கிவரும் கல்வி உதவித்தொகைக்கு ஆளுநர் தனது நன்றியைத்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae111d78-cacd-45c7-bb12-f1a434d278d1/26-6a91da141478f.webp' /></p><p>

கிழக்கு மாகாணத்தின் அரச ஊழியர்களுக்குத் தேவையான கல்விப் பயிற்சியை
வழங்குவதில் இந்திய அரசு ஆதரவளிக்க முடியும் என்று திரு. சந்தீப் சௌத்ரி இதன்
போது குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-28T18:57:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[469 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை.. நேபாளத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்ட மீட்பு பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dam-tibet-broken-threatening-another-major-flood-1787942588"></link>
            <id>https://tamilwin.com/article/dam-tibet-broken-threatening-another-major-flood-1787942588</id>
            <summary type="text">நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.&amp;nbsp;&amp;nbsp;சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர்.
</p><p>
உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ள நிலையில், நேபாள மற்றும் பொலிஸார், இராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன.&nbsp;</p><h2>தற்காலிக&nbsp;நிறுத்தம்&nbsp;</h2><p>
</p><p>இதற்கிடையில், திபெத் பக்கத்தில் உள்ள கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு மேலே உள்ள ஒரு நீர்த்தேக்க அணை ஒன்று உடைந்துள்ளதாக நேபாள பொலிஸார் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e27d08-669f-4f81-9839-4d661275704c/26-6a91d7d789c33.webp' /></p><p> </p><p>

மேலும், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இதே போல், சீனாவும் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

வெள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் மலை மீது விரைந்து ஏறி வருவதாக செ்யதிகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T18:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் - மனைவி - சகோதரியின் புகைப்படங்களுக்கே பாதுகாப்பில்லை! இலங்கையில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-security-in-sri-lanka-facebook-group-1787936451"></link>
            <id>https://tamilwin.com/article/women-security-in-sri-lanka-facebook-group-1787936451</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை கொண்டு வியாபாரம் செய்யும் வகையில் நடத்தப்பட்ட முகப்புத்தக குழு தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை கொண்டு வியாபாரம் செய்யும் வகையில் நடத்தப்பட்ட முகப்புத்தக குழு தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.&nbsp;</p><p>குறித்த முகப்புத்தக குழுவில் ஆயிரக்கணக்கான நபர்கள் இணைந்திருப்பமை தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், அக்குழுவில் உள்ள நபர்கள், தனது தாய், மனைவி, சகோதரி, குழந்தை என பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை விற்பனை செய்துள்ளனர்.&nbsp;</p><p>மிக மிலேச்சத்தனமான இந்த செயற்பாடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டு பின்னர், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்படி, இவ்வாறு புகைப்படங்களை கொண்டு முகப்புத்தக குழு ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>முகம் சுளிக்க வைக்கும் இச்செயல் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qWA9SgtNsTs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T18:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பருத்தித்துறையில் இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/removal-of-army-camps-protest-point-pedro-1787937718"></link>
            <id>https://tamilwin.com/article/removal-of-army-camps-protest-point-pedro-1787937718</id>
            <summary type="text">பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல்
பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>இன்று (28) ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும்
தெரிவிக்கையில், பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது
நகரத்தின் புராதன சின்னங்கள் / இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை
அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர்
11 ஆம் திகதி பருத்தித்துறையில் பாரிய போராட்டப் பேரணி
நடாத்தப்பட உள்ளது.</p><p></p><h2>கண்டனப் பேரணி</h2><p>

பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு
கண்டனப் பேரணி ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும்
இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும்,
வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட
பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக்
கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3f0f91-18ca-43ca-9c73-5ab0adaae875/26-6a91cba4133c1.webp' /></p><p>இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இந்தப் போராட்டத்திற்கு பருத்தித்துறை
நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள
உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி,
ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேட்சை(ஊசி) குழு
ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T18:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஈரான் கடும் கண்டனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-urges-other-nations-not-to-join-us-sanctions-1787938271"></link>
            <id>https://tamilwin.com/article/iran-urges-other-nations-not-to-join-us-sanctions-1787938271</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை அரச பயங்கரவாதம் என ஈரான் கண்டித்துள்ளது.
சர்வதேச சட்டப்படி பிற நாடுகள் இந்தத் தடைகளை அமல்படுத்தக் கூடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை அரச பயங்கரவாதம் என ஈரான் கண்டித்துள்ளது.</p><p>
சர்வதேச சட்டப்படி பிற நாடுகள் இந்தத் தடைகளை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.</p><p> 
அதேவேளையில், ஈரானைக் குறிவைத்து மேலும் பல பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது.</p><h2>வர்த்தக உறவு</h2><p> </p><p>
ஆறு மாதங்களுக்கு முன்பு போர் தொடங்குவதற்கு முன், உலகின் 20% கச்சா எண்ணெய் விநியோகத்தைக் கையாண்ட ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சி எடுத்து வரும் சூழலில் ஈரானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p> 
ஈரானுடன் வர்த்தக உறவுகளைத் துண்டிக்குமாறு பிற நாடுகளுக்குக் கெடு விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், தவறினால் கடுமையான தடைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2324782-5ad4-4d56-80df-779a54136678/26-6a91d202ca9a4.webp' /></p><p> </p><p>
இது குறித்து ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சட்டவிரோதக் கட்டுப்பாடுகளை மற்ற நாடுகள் ஏற்று நடப்பது, ஒரு நாட்டின் சட்டவிரோத விருப்பத்திற்குத் துணை போவதற்குச் சமம் என தெரிவித்துள்ளது.</p><p>
இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" ஆகும் என தெரிவித்துள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>சர்வதேச சட்டத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்த பிற நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் முன்வர வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கும் எகிப்தின் 'பேங்க் மிஸ்ர்' வங்கி, ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததால் அதன் அமெரிக்க நிதி அணுகலை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>கூடுதலாக, ஹாங்க்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மற்றும் ஈரானின் 'பேங்க் மெல்லி' வங்கியுடன் தொடர்புடைய ஒரு நபர் மீதும் அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7e04393-9292-49b9-9171-dc56eef85bd7/26-6a91c5e177a1d.webp' /></p><p> 
போரை முடிவுக்குக் கொண்டு வரக் கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
</p><p>கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி வியாழக்கிழமை டெஹ்ரானில் ஈரானிய தலைவர்களைச் சந்தித்து, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T17:33:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தினால் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/live-news-nepal-china-flood-1787937594"></link>
            <id>https://tamilwin.com/article/live-news-nepal-china-flood-1787937594</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை, சுரண்டல் மற்றும் தீவிர வறுமைக்கு ஆளாகும் அதிக ஆபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை, சுரண்டல் மற்றும் தீவிர வறுமைக்கு ஆளாகும் அதிக ஆபத்தில் உள்ளதாக ஐ.நா பெண்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p>
இத்தகைய பேரிடர்கள் ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையை மேலும் மோசமாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஐ.நா அமைப்பின் தரவுகளின்படி, நேபாளத்தின் ரசுவா மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 1,60,000 பெண்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>பாதிப்புகள்&nbsp;</h2><p>
</p><p>பேரிடரின் முழுமையான பாதிப்புகள் இன்னும் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், சூழ்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நேபாளத்திற்கான ஐ.நா பெண்கள் அமைப்பின் பிரதிநிதி பட்ரீஷியா பெர்னாண்டஸ்-பச்சேகோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/772d6988-07bf-4904-8718-38a4c2b0574e/26-6a91c33c7235c.webp' /></p><p>
</p><p>இயற்கைப் பேரழிவுகள் நிகழும்போது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரிக்கின்றன. பலர் சுரண்டலுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகின்றனர். </p><p>வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, பெண்களும் சிறுமிகளுமே உணவும் மருந்தும் இன்றி அதிகம் தவிக்கின்றனர். முந்தைய பேரிடர் அனுபவங்களின்படி, ஆண்களை விட பெண்களே அதிகளவில் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என தெரிவித்துள்ளார்.</p><h2>பொருளாதாரச் சீரழிவு</h2><p>
</p><p>பேரிடருக்குப் பிறகு, பெண்கள் வன்முறை மற்றும் பொருளாதாரச் சீரழிவை எதிர்கொள்வதுடன், வீட்டுப் பராமரிப்புப் பணிகள் மற்றும் குடிநீர் சேகரித்தல் போன்ற கூடுதல் சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e2f21e2-2d98-40c9-87e4-5991238555dc/26-6a91d044efcb7.webp' /></p><p>
</p><p>மேலும், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் பெண்களிடையே குறைந்த எழுத்தறிவு விகிதமே நிலவுவது, இந்நெருக்கடியான சூழலைச் சமாளிப்பதில் கூடுதல் சவாலாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ்: தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-virus-spreading-in-congo-vaccine-1787937410"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-virus-spreading-in-congo-vaccine-1787937410</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றினைக்
கட்டுப்படுத்தும் நோக்கில், முதன்மைச் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்
களப்பணியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றினைக்
கட்டுப்படுத்தும் நோக்கில், முதன்மைச் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்
களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
தற்போது பரவி வரும் 'புண்டிபுக்யோ' ரக எபோலா வைரஸுக்கு எதிராக இந்தத்
தடுப்பூசியின் செயல்திறன் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத
நிலையிலும், அவசர நடவடிக்கையாகக் கிசாங்கானி நகரில் இந்த தடுப்பூசி அளிப்புத்
திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த புதிய ரக வைரஸுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும்
இதுவரை இல்லாததால், தடுப்பூசிகளின் செயல்திறனைக் கண்டறியும் மருத்துவப்
பரிசோதனைகளும் இவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>வேலைநிறுத்தம்&nbsp;</h2><p>
</p><p>
உகாண்டா எல்லையை ஒட்டியுள்ள இத்துரி மாகாணத்திலேயே இந்த நோய் பரவல் அதிகளவில்
பதிவாகியுள்ளது. </p><p>இதுவரை 5,713 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,
2,744 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb499ae-da31-43af-8e2e-e6d293400f09/26-6a91c284cbdac.webp' /></p><p>
</p><p>
நாட்டின் பாதுகாப்பற்ற சூழல், மக்கள் இடம்பெயர்வு மற்றும் சுகாதாரப்
பணியாளர்களின் வேலைநிறுத்தம் என்பன நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெரும்
சவாலாக அமைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:17:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் உயிரிழப்பதற்கு ஏதுவாகும் பழக்கம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/80-100-people-die-daily-in-sri-lanka-1787936875"></link>
            <id>https://tamilwin.com/article/80-100-people-die-daily-in-sri-lanka-1787936875</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ரடம எகடட' போதைப்பொருள் தடுப்பு மற்றும் கல்விப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
</p><p>நாட்டில் தினமும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுக்குக் காரணமான வேறு எந்தவொரு ஒற்றைக் காரணியும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>இறப்பு</h2><p>
</p><p>போதைப்பொருள் சார்ந்த இறப்புகளில் புகைபிடிக்கும் பழக்கமே (புகையிலை) முதன்மையான காரணியாக உள்ளது எனவும் மதுபான நுகர்வினால் மட்டும் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96468196-9ade-47c7-bf85-d0631f677420/26-6a91ce066decc.webp' /></p><p>
</p><p>சட்டவிரோத போதைப்பொருட்களால் நேரடியாக ஏற்படும் இறப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் இன்னும் பூர்த்தியடையவில்லை என்றாலும், பிற சட்டவிரோத போதைப்பொருட்களால் தினமும் 10 முதல் 15 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாகத் தரவுகள் உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் ஆகிய அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, தினமும் 80 முதல் 100 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.</p><h2>தடுப்பு நடவடிக்கைகள்</h2><p>
சட்டவிரோத போதைப்பொருட்களின் பயன்பாடு நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ, புகையிலை மற்றும் மதுபானம் போன்ற சட்டப்பூர்வமான பொருட்களே ஒருவர் கடுமையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான முதன்மை நுழைவு வாயிலாக அமைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ca740b-f56e-40ba-8a6a-058336204ab6/26-6a91ce0723c28.webp' /></p><p>ஹெராயின் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், அதற்கு முன்பாகத் தீவிரமாகப் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
கஞ்சா பயன்படுத்துபவர்களில் பலர், ஆரம்பத்தில் மதுபானம் அல்லது சிகரெட் பயன்படுத்தியவர்களாவர்.
</p><p>போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தனிநபர் ஆரோக்கியம், சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகள் மிகக் கடுமையானவை என்பதால், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் பெண்ணிற்கு நடந்தது சூழ்ச்சியா! வைத்தியர் சுகுணனை விடாது துரத்தும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-drsugunan-kalmunai-hospital-1787930890"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-drsugunan-kalmunai-hospital-1787930890</id>
            <summary type="text">கல்முனை வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற பெண் என்பதற்காக அவரது மகனுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற பெண் என்பதற்காக அவரது மகனுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியானது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>அத்தோடு, கல்முனை&nbsp;வைத்தியசாலை விவகாரத்தை வைத்து பல உள்ளக ரீதியான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.</p><p>மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர் ஒருவரே இந்த வைத்தியசாலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் முக்கிய நபராக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.</p><p>மேலும் ,கல்முனை வைத்தியசாலை விவகாரத்திலே அரசாங்கம் தலையிட்டு ஒரு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.</p><p>கல்முனையில் வைத்தியர் Dr. சுகுணன் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படுகின்றமையும் ,வைத்தியசாலை ஊழியர்கள் குறித்து வெளியாகும் போலிச் செய்திகளும் வைத்தியசாலை சமூகத்தை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த சம்பவம் உண்மையில் சதியா, சூழ்ச்சியா அல்லது எதிர்பாராத விதமாக இடம்பெற்ற சம்பவமா, Dr. சுகுணனை விடாது துரத்தும் இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பான விரிவாக தகவல்களை செய்திகளை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oLNjIm3XdQA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-against-ex-minister-sm-chandrasena-1787934046"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-against-ex-minister-sm-chandrasena-1787934046</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து, மேல் நீதிமன்றத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், விசேஷ செயற்திட்டங்கள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில், அவர் மீது உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் முன்வைத்துள்ளது.</p><h2>அரசாங்கத்திற்கு இழப்பு&nbsp;</h2><p>
</p><p>
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கில், மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தன் செல்வாக்கிற்கு உட்படுத்தி அரசாங்கத்தால் 25 மில்லியன் ரூபா செலவில் இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோள விதைகளை 2014ஆம் ஆண்டில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக எஸ்.எம். சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01db6743-7c00-4432-83f7-04b0438c354b/26-6a91b80b1d9f2.webp' /></p><p>
</p><p>
குறித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கடந்த ஜூலை 4 ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறைவடைந்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சந்தேக நபர் மீது உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
</p><p>
முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான், சந்தேக நபரை நிர்ணயிக்கப்பட்ட தேதியில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபர் இன்று (28) திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T16:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கப் புதிய அதிகாரசபை - அநுர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-authority-to-protect-the-central-highlands-1787911915"></link>
            <id>https://tamilwin.com/article/new-authority-to-protect-the-central-highlands-1787911915</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அந்த சூழல் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அந்த சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>


2023ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயா புரம்’ வீட்டுத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர்</h2><p>மத்திய மலைநாட்டை பழைய நிலைக்குக் கொண்டுவர பல தசாப்தங்கள் ஆகலாம் என்றபோதிலும், இடம்பெற்று வரும் அழிவுகளைத் தடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/an0IaNuHhBE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

மத்திய மலைநாடு இலங்கையின் இதயம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது கண்முன்னே அழிந்து வருவதாகவும்; மலை சரிவுகள், நீரூற்றுகள் வற்றுதல், ஆறுகள் மற்றும் ஓடைகள் தூர்ந்துபோதல் என்பவற்றை நாம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p>அதற்கமைய, இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபைக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.
</p><p>நமது நாட்டின் எதிர்காலத்தின் முக்கிய பகுதி மத்திய மலைநாட்டிலேயே தங்கியுள்ளது. நமது எதிர்காலத்திற்காக மத்திய சூழலைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.
</p><p>

இந்த வேலைத்திட்டத்தின் போது வீடுகளை இழக்க நேரிடலாம். சாகுபடி நிலங்கள் காடுகளாக மாறக்கூடும். ஆனால் அதைச் செய்தாக வேண்டும். இல்லையெனில் நாம் பெரும் பேரழிவை எதிர்கொள்ள வேண்டி வரும்.


நிறுவனங்களின் அதிகாரங்கள் பிரியலாம், பதவிகள் மாறலாம். யாரும் கலங்க வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.</p><h2>இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக</h2><p>மலையக மக்கள் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,


"தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு அனைத்து மக்கள் குழுக்களுக்கும் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாகும். அதற்காக பல வீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e296b5-0cc4-40e6-935d-bce80b38b9d7/26-6a916a13c6a02.webp' /></p><p>வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் வீடமைப்புக்கு முன்னுரிமை அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது.


அம்மக்களுக்கு நல்ல வருமான வழி தேவை. அதை பூர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. </p><p>அதேபோல் ஆரோக்கியமான வாழ்விற்காக நல்ல சுகாதார வசதிகள் வழங்கப்படும். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் இந்த மலையக மக்களிலேயே அதிகமாக உள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எங்கிருக்கிறார்கள், ஆயுட்காலம் குறைந்த சமூகம் எங்குள்ளது.</p><p>இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒதுக்கி வைக்கப்பட்ட, ஏறெடுத்தும் பார்க்காத ஆட்சிகளால் இந்த மக்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்" என்றும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T16:20:27+00:00</updated>
        </entry>
    </feed>
