<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-07T02:35:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றநிலை..! சிக்கிய மர்மப்பொதி - பின்னணியில் வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-unrest-at-borella-magazine-prison-1786066494"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-unrest-at-borella-magazine-prison-1786066494</id>
            <summary type="text">பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து, சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து, சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட ஒரு சிறிய பொதியை சிறை அதிகாரி ஒருவர் கைப்பற்றிய பின்னர், கைதிகள் குழுவொன்று அமைதியின்மையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>வெளியான காரணம்</h2><p>

சிறைச்சாலையின் 'ஈ' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று, இரவு 10:20 மணியளவில் திடீரென அந்தப்பிரவில் இருந்து வெளியேறி, கலவரத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80acada-cac4-41c0-9327-f3faebb4f966/26-6a7543527fbd9.webp' /></p><p>
</p><p>
இதனைத்தொடர்ந்து, 40க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு சிறை அறையின் பூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

இதனையடுத்து சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி, அவர்களை மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சுமார் பத்து கைதிகளை ஏனைய சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலப்படுத்தப்பட்டுள்ள&nbsp;பாதுகாப்பு </h2><p>

இதற்கிடையில், சிறை வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படைகளின் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e1d56ac-1341-4129-a80a-6096e982b70a/26-6a754353317cb.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், சிறையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>










சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே இந்த மோதலுக்கும் பதற்ற நிலைமைக்கும் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T02:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் அச்சுறுத்தலாக மாறியுள்ள பட்டங்கள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-to-keep-kites-away-from-airports-1786067453"></link>
            <id>https://tamilwin.com/article/request-to-keep-kites-away-from-airports-1786067453</id>
            <summary type="text">இலங்கையில் விமான நிலையப் பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் விமான நிலையப் பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>விமானம் தரையிறங்கும் மற்றும் புறப்படும் போது இவ்வாறான செயற்பாடுகள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அது எச்சரித்துள்ளது. </p><p>விமான நிலையங்களின் அருகாமையில் பட்டம் பறக்கவிடுவது பயணிகள், விமானக் குழுவினர் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆபத்துக்குள்ளாக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> </p><h2><b>அச்சுறுத்தலாக மாறியுள்ள பட்டங்கள் </b></h2><p>அனைவருக்கும் வானத்தை பாதுகாப்பாக வைத்திருப்போம் எனக் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1caec97f-65f7-411b-b54e-f4311af6f6e7/26-6a753c00d0ac9.webp' /></p><p>விமான நிலையங்களிலிருந்து தொலைவில் உள்ள திறந்தவெளிகளில் மாத்திரம் பட்டம் பறக்கவிடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>பொதுமக்களின் சிறிய பொறுப்புள்ள செயல் உயிர்களைப் பாதுகாக்க உதவும் எனவும் வானில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>விமான நிலைய வலயங்களிலிருந்து விலகி, பாதுகாப்பான முறையில் பட்டங்களை பறக்கவிடுமாறு பொதுமக்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-08-07T01:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/laugfs-company-price-announcement-1786066793"></link>
            <id>https://tamilwin.com/article/laugfs-company-price-announcement-1786066793</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அதன்படி, வரும் மாதத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>அதன்படி, வரும் மாதத்திற்கும் தற்போதைய சந்தை விலைகளே செல்லுபடியாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>லிட்ரோ எரிவாயு&nbsp; விலை</h2><p>இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 6,245 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 2,500 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65428940-0dda-4e1c-b897-1e7ef63d6066/26-6a753a10c1797.webp' /></p><p>லிட்ரோ எரிவாயு நிறுவனமும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிவாயு விலைகளில் மாற்றமில்லையென அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T01:51:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த ஆட்சியில் நடந்த மற்றுமொரு மோசடி அம்பலம்! வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-vvip-s-son-s-land-fraud-exposed-1786066057"></link>
            <id>https://tamilwin.com/article/ex-vvip-s-son-s-land-fraud-exposed-1786066057</id>
            <summary type="text">கடந்த அரசாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் இரண்டு மகன்களால், வேறு நபர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த அரசாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் இரண்டு மகன்களால், வேறு நபர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

 தொலொஸ்பாக பகுதியில் உள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் அரை ஏக்கர் காணியில் 1918 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் பங்களா ஒன்றும் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது. </p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">ஆணைக்குழுவில் முறைப்பாடு</b></p><p>இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி நேற்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;"></b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fe0e2a2-ebf3-4572-acd7-dd431656b2b0/26-6a75386538ea0.webp' />
</p><p>
தமது அமைப்புக்கு அநாமதேயமாக கிடைத்த தகவலுக்கமைய, இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும் இந்த காணிக்கான 1386 இலக்கப் பத்திரம் மற்றும் 876 இலக்கக் காணி வரைபடம், காணி உறுதிக் குறிப்பேடு என்பவற்றையும் மேலதிக விசாரணைகளுக்காக ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க முடியும் என முறைப்பாட்டைச் சமர்ப்பித்த குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி கமன்த துஷார தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-07T01:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விவரங்களை அறியும் உரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும்! நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/right-access-detail-elected-representatives-assets-1786065264"></link>
            <id>https://tamilwin.com/article/right-access-detail-elected-representatives-assets-1786065264</id>
            <summary type="text">பொதுமக்களின் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய
விவரங்களை அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும்
என்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களின் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய
விவரங்களை அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும்
என்றும், அந்த உரிமையைப் பாதிக்கும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும்
எடுக்கப்படாது என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
</p><p>
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நீதி
மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் கொழும்பு
பேராயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையை கொழும்பு
பேராயர் இல்லத்தில் நேற்று(6) சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.</p><p></p><h2>தனிப்பட்ட வாழ்க்கை</h2><p>

தற்போது நாட்டில் பரவலான கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள நீதி
மற்றும் சிறைச்சாலைத் துறையின் தற்போதைய நடவடிக்கைகள், எதிர்காலச்
சீர்திருத்தங்கள் மற்றும் இது தொடர்பாகச் சமூகத்தில் பரப்பப்பட்டு வரும் தவறான
தகவல்களுக்கான உண்மை நிலையை விளக்குவதுமே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc8e3c1f-3b75-4587-9dbe-bd3377bbeb23/26-6a7533206c934.webp' /></p><p>
</p><p>
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு
விவரங்களை மக்கள் எந்த நேரத்திலும் அறிந்துகொள்ள முடியும் என்றும், அதற்குரிய
உரிமைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.</p><p>

அதேவேளை, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டப்பூர்வ நிறுவன அதிகாரிகளின்
சொத்துக்களைப் பகிரங்கப்படுத்துவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குப்
பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்தத் துறைகளில் மட்டுமே சில
திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.</p><p>

"அரசமைப்பைத் திருத்துவதாயின் அதற்குரிய கால அவகாசம் தேவைப்படுவதுடன்,
நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.</p><p></p><h2>மாகாண சபைத் தேர்தல்&nbsp;</h2><p>
</p><p>திருத்தங்களுக்கு முன்னதாக பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், ஜனநாயகத்தை
உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் போன்றவற்றுக்கே
முன்னுரிமை வழங்கப்படும்.
</p><p>
அனைத்துத் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
குறிப்பாக, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கும்
எதிர்பார்க்கப்படுகின்றது." - என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51ba7b3f-5ccc-4dae-9fac-cac78e291404/26-6a75332120c43.webp' /></p><p>
</p><p>
இச்சந்திப்பின் போது, நீதி மற்றும் சிறைச்சாலைத் துறையில் உள்ள சவால்களுக்குத்
தீர்வு காண்பது மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை
வலுப்படுத்துவது குறித்து நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன
நாணயக்காரவும் பேராயரிடம் விரிவாக விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T01:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வூட் அஸ்வசும மோசடி 1.62 கோடி ரூபாவிற்கும் அதிகம்: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aswasuma-froud-amount-more-than-1-6-core-1786064251"></link>
            <id>https://tamilwin.com/article/aswasuma-froud-amount-more-than-1-6-core-1786064251</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும பயனாளிகளின் நிதி மோசடித் தொகை 1 கோடியே 62 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுப் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும பயனாளிகளின் நிதி மோசடித் தொகை 1 கோடியே 62 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. </p><p>
இந்த மோசடியில் பிரதேச செயலகத்தின் மேலும் மூன்று அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மேலும் தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர கமலத், ஹற்றன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.</p><p></p><h2>அஸ்வசும கொடுப்பனவுகள்</h2><p>
இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலாளரால் ஏற்கனவே செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, அஸ்வசும பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இரு பெண்கள் ஹற்றன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d72c568-0cc1-4ac7-a919-a6a8f311d84c/26-6a752d7e05f76.webp' /></p><p>
தமக்குரிய அஸ்வசும கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறவில்லை எனப் பயனாளிகளால் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோனிடம் சமர்ப்பிக்கப்பட்ட அனாமேதய கடிதம் ஒன்றின் அடிப்படையிலேயே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. </p><p>
அதன்படி, சந்தேகநபர்களான இரு பெண் அதிகாரிகளும் வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், நுவரெலியா மாவட்டச் செயலகம் மற்றும் நிதி அமைச்சின் கணக்காய்வுப் பிரிவு அதிகாரிகளைக் கொண்ட 10 பேர் கொண்ட குழுவினால் 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு விசாரணையில் இம்மோசடி அம்பலமானது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>தற்போது கணக்காய்வு அதிகாரிகள் பிரதேச செயலகத்திலேயே தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அப்பகுதியின் கிராம உத்தியோகத்தர்கள், அஸ்வசும பிரிவு அதிகாரிகள் மற்றும் பயனாளிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
</p><p>அஸ்வசும பணம் கிடைக்காத பயனாளிகள் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தபோது, பணம் வந்திருந்தால் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருக்கும், மீண்டும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனக் கூறி சந்தேகநபர்கள் தம்மை மிரட்டியதாகப் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fd4b7a9-1fd5-4b20-8ada-a0f547de8823/26-6a7535145ec33.webp' /></p><p>
</p><p>சந்தேகநபர்கள் அஸ்வசும பணத்தை முதலில் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்துள்ளனர்.</p><p>
பின்னர் அப்பணத்தைத் தமது சொந்தப் பணத்திலிருந்து வழங்கும் வட்டி இல்லாக் கடனாக அவர்களுக்குக் கொடுத்து, ஒப்புக்கொள்ளப்பட்டபடி மாதத் தவணைகளில் வட்டி இன்றி அத்தொகையைத் தமக்கு மீண்டும் செலுத்துமாறு கூறி அப்பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><br><br><b><i>You may Like This..<br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2eh90AvrUac" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-07T00:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-madhu-shrine-festival-begins-1786063122"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-madhu-shrine-festival-begins-1786063122</id>
            <summary type="text">மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணி மாதத் திருவிழா&amp;nbsp; நேற்று 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது.
நேற்று (6) மாலை 5.3...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணி மாதத் திருவிழா&nbsp; நேற்று 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது.
</p><p>நேற்று (6) மாலை 5.30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை
ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கொடியேற்றப்பட்டது.</p><p></p><h2>கொடியேற்றத்துடன் ஆரம்பம்</h2><p>

இதன் போது மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் மற்றும்
மறைமாவட்ட குருக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
</p><p>
தொடர்ந்து நவநாள் திருப்பலி இடம் பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949b0bf7-de97-4cde-b90a-2409ab429857/26-6a752aabc78f9.webp' /></p><p>

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான
பக்தர்கள் மடு திருத்தலத்தில் கூடி வருகின்றனர்.
</p><p>
இன்றைய தினம் வியாழக்கிழமை (6) கொடியேற்றத்தை தொடர்ந்து நவநாள் திருப்பலிகள்
தொடர்ந்து இடம்பெற்று நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை வேஸ்பர்
ஆராதனையும் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில்
ஏனைய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக
ஒப்புக் கொடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T00:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் போர்நிறுத்தத்திற்கு மத்தியிலும் தொடரும் சோகம்: நாளொன்றில் ஒரு சிறுவர் பலி என யுனிசெஃப் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-continues-in-gaza-despite-ceasefire-1786061374"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-continues-in-gaza-despite-ceasefire-1786061374</id>
            <summary type="text">காசாவில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு 300 நாட்கள் கடந்துள்ள போதிலும்,
அங்கு இதுவரை குறைந்தது 300 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு 300 நாட்கள் கடந்துள்ள போதிலும்,
அங்கு இதுவரை குறைந்தது 300 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின்
சிறுவர் நிதியமான யுனிசெஃப் (UNICEF) கவலை வெளியிட்டுள்ளது.
</p><p>
இதன்படி, போர்நிறுத்தக் காலத்தில் நாளொன்றிற்கு சராசரியாக ஒரு சிறுவன் வீதம்
உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ள யுனிசெஃப், நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கடுமையான
காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>யுனிசெஃப் கவலை</h2><p>
</p><p>
தற்போது காசாவின் மூன்றில் ஒரு பகுதிக்குள்ளேயே மக்கள் முடங்கியுள்ள நிலையில்,
போரினால் அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியிலேயே
தங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23558a0a-671b-48bd-944c-9fabfcfed4a7/26-6a75234a4a3a2.webp' /></p><p>
</p><p>
அத்துடன் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற
குடிநீர் போன்ற பல்வேறு இன்னல்களுக்குச் சிறுவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.</p><p>

2023 ஒக்டோபர் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த மோதல்களில் இதுவரை
73,300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 58,000க்கும்
அதிகமான சிறுவர்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T00:14:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பம் மீண்டும் சர்ச்சையில்..! லஞ்ச ஆணைக்குழுவில் புதிய முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-20-year-history-of-corruption-1786060711"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-20-year-history-of-corruption-1786060711</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களான யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் புதிய முறைப்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களான யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் புதிய முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. </p><p>

பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சிவில் செயற்பாட்டாளர் காமந்த துஷார இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
</p><p>
சுமார் 125 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் 1911-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழமையான பங்களா ஆகியவை சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>

இவை ஒசாட பிளான்டேஷன்ஸ் (Osada Plantations Private Limited) என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்தச் சொத்துக்கள் உண்மையில் ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடையவையா, இதற்கான பணத்தின் மூலம் என்ன, மற்றும் பொதுப்பணம் அல்லது சட்டவிரோத பணம் இதில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை தேவை என்று சிவில் அமைப்பு கோரியுள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Qc4y5c-IPu4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T00:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தப்பி ஓடிய கோட்டாபயவின் வீட்டில் கிடைத்த ஆடைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clothes-found-at-the-home-of-the-fled-gota-1786058434"></link>
            <id>https://tamilwin.com/article/clothes-found-at-the-home-of-the-fled-gota-1786058434</id>
            <summary type="text">&amp;nbsp;ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சொத்துக்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சொத்துக்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
</p><p>
 குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து பேசப்படுகின்றன.
</p><p>
இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பின்வாசல் வழியாக நாங்கள் செல்லவில்லை என்று ஒரு கருத்தை முன்வைத்தார்.</p><p>

அதனை தொடர்ந்து மக்கள் அரகல நாட்களில் நடந்த பல விடயங்களை காணொளிகள் மூலமாக சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிவருகின்றனர்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KAcoBE9mDUY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T23:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளை மெகசின் சிறையில் கைதிகள் குழுவால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-inside-magazine-prison-1786040522"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-inside-magazine-prison-1786040522</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு மெகசின் சிறைச்சாலையின் &#039;ஈ&#039; (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் 'ஈ' (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பொரளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி வன்முறையில் ஈடுபட்டதையடுத்து அங்கு அமைதியின்மை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்</h2><p> 

எவ்வாறாயினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095c926e-3376-4599-ba39-98f00e360b55/26-6a74d22c46b51.webp' /></p><p> </p><p>

தற்போது இந்த அமைதியற்ற நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OuQjIYXGhm4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-06T23:23:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/danger-sri-lankan-passport-holders-switzerland-1786037862"></link>
            <id>https://tamilwin.com/article/danger-sri-lankan-passport-holders-switzerland-1786037862</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது, சமூகப் பாதுகாப்புத் தொடர்பான &#039;ஆகாபா&#039; (AHV/IV) நிதியை, பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது, சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதாக சோசலிச ஜனநாயக கட்சியை சேர்ந்த கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் ஒருவர், சம்பளத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் தொகையில், ஓய்வுபெற்ற பின் 'ஓய்வூதியப் பணம்' (Pension) மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது.</p><p>

 ஆனால், சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளன.
</p><p>

சுவிஸ் குடியுரிமை உள்ளவர்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்கும், ஆனால் வெறும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உரிய ஒப்பந்தம் இல்லாததால், அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டு செல்ல முடியாமல் போகிறது.</p><p>

 இது சுமார் 10,000 முதல் 15,000 பேரைப் பாதிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் சுவிட்சர்லாந்தில் உள்ள சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புகள் முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளன.</p><p>

 பாதிக்கப்பட்டவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும், விபரங்களைப் பகிர்ந்து உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
 இது ஒட்டுமொத்தப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஒரு கூட்டு முயற்சியாக மாறினால் மட்டுமே அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து உரிமையைப் பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LBHRr5sSAt8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T23:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் முடிவுக்கு வரும் ஈரான் போர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-says-he-thinks-iran-war-to-end-pretty-soon-1786051631"></link>
            <id>https://tamilwin.com/article/trump-says-he-thinks-iran-war-to-end-pretty-soon-1786051631</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மற்றும் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
</p><p>
உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிசக்தி விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "இந்தப் போர் இன்னும் நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது விரைவில் முடிவுக்கு வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முடிவுக்கு வரும்</h2><p>

இதற்கிடையில், முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில், ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88602a34-b960-4d22-9276-cd348aef2c2d/26-6a74ff42d84e3.webp' /></p><p> </p><p>இரு தரப்புக்கும் ஏற்ற ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அதேவேளை, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபடவில்லை என்று ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T22:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: ஊதியம் கோரி சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-escalates-congo-health-workers-1786047460"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-escalates-congo-health-workers-1786047460</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை
உடனடியாக வழங்குமாறு வலியுறுத்திப் பெருந்திரளான சுகாதாரப் பணியாளர்கள்
பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இட்டுரி மாகாணத்தின் புனியா நகரில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனைக்கு முன்பாக
ஒன்றுதிரண்ட சுகாதாரப் பணியாளர்கள் வியாழக்கிழமை இந்த எதிர்ப்பைப்
பதிவுசெய்துள்ளனர்.</p><p></p><h2>சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்</h2><p>
</p><p>
கடந்த மே மாதம் நடுப்பகுதியில் எபோலா தொற்று பரவத் தொடங்கியது முதல் தமக்குரிய
கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
</p><p>
நாட்டில் பதிவாகும் மொத்த எபோலா தொற்றாளர்களில் சுமார் 90 சதவீதமானோர் இட்டுரி
மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61b5857f-f8b0-4ad9-a867-4fb5a9a69317/26-6a74f6bf16d79.webp' /></p><p>
</p><p>
அரசாங்கத்தின் அண்மைய தரவுகளின்படி, இதுவரை 3,973 பேருக்குத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன், 1,801 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 674 நோயாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு
வருகின்றனர்.</p><p>

கிளர்ச்சிக் குழுக்களின் மோதல்கள் மற்றும் தொலைதூர கிராமங்களுக்கான
போக்குவரத்து வசதியின்மை என்பன தொற்றுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப்
பெரும் சவாலாக அமைந்துள்ளன.
</p><p>
சுகாதாரப் பணியாளர்களின் இந்தப் பணிப்புறக்கணிப்பு நோயாளிகளுக்கான சிகிச்சைகள்
மற்றும் தொற்றாளர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளைப் கடுமையாகப் பாதிக்கும் எனக்
கவலை வெளியி்ட்டுள்ள சர்வதேச நிவாரண அமைப்புகள், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த
உடனடி நடவடிக்கைகள் அவசியமென வலியுறுத்தியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T21:44:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருளில் நடந்த ரகசிய சந்திப்பு..! சந்தித்தது மொஜ்தபா கமெனிதானா என ஈரான் ஜனாதிபதிக்கு சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-president-met-mojtaba-khamenei-in-darkness-1786046532"></link>
            <id>https://tamilwin.com/article/iran-president-met-mojtaba-khamenei-in-darkness-1786046532</id>
            <summary type="text">ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இருளில் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் சந்தித்ததாக Iran International வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.</p><p>

அந்த சந்திப்பு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், மொஜ்தபா கமெனியின் பாதுகாப்பு அதிகாரிகள் பெசெஷ்கியானுக்கு கை குலுக்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மொஜ்தபா கமெனி</h2><p> 

இருள் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத சூழல் இருந்ததால், பின்னர் "நான் பேசியவர் உண்மையில் மொஜ்தபா கமெனிதானா?" என்று ஜனாதிபதி தனது அலுவலகத்தில் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>
இந்த சந்திப்புக்காக பெசெஷ்கியான் பலமுறை கோரிக்கை வைத்ததுடன், பதவி விலகுவதாக எச்சரித்த பிறகே காமெனியின் அலுவலகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20174468-4839-43f8-b5e5-a87ebfa20c2a/26-6a74e9f81cec9.webp' /></p><p>
</p><p>
 ஆனால் வழக்கம்போல் உச்சத் தலைவரின் இல்லத்தில் அல்லாமல், ரகசிய இடத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், கடந்த மே மாதத்தில் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோது, மொஜ்தபா கமெனியுடன் இரண்டரை மணி நேரம் "நட்பான சூழலில்" பேச்சுவார்த்தை நடத்தியதாக பெசெஷ்கியான் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>இறுதி எச்சரிக்கை</h2><p>

இதற்கிடையில், மொஜ்தபா கமெனியுடன் தொடர்பு கொள்வது தற்போது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இருப்பினும் அவரது இருப்பு நாட்டுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது என்றும் பெசெஷ்கியான் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1970d21-19fc-44be-ae01-0da5c056e3b2/26-6a74e9f8c25c5.webp' /></p><p>
</p><p>
மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான முடிவுகளில் தனது அரசு புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, பெசெஷ்கியான் மே மாதத்தில் பதவி விலக முயன்றதாகவும், அதற்கு பதிலாக மொஜ்தபா கமெனி இறுதி எச்சரிக்கை விடுத்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக, தனது தந்தை அயத்துல்லா அலி கமெனி உயிரிழந்ததைத் தொடர்ந்து பதவியேற்ற மொஜ்தபா காமெனி கடந்த ஐந்து மாதங்களாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை என்றும், எழுத்து மூலமான அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T21:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலைப் போல் திறமைசாலி யாரும் இல்லை! நாமல் புகழாரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/there-is-no-one-as-talented-as-basil-namal-praise-1786049193"></link>
            <id>https://tamilwin.com/article/there-is-no-one-as-talented-as-basil-namal-praise-1786049193</id>
            <summary type="text">பசில் ராஜபக்ச மிகவும் திறமையான ஒரு தலைவர் என்றும், அவரைப் போன்ற ஆளுமைமிக்க ஒருவர் இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசில் ராஜபக்ச மிகவும் திறமையான ஒரு தலைவர் என்றும், அவரைப் போன்ற ஆளுமைமிக்க ஒருவர் இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கிய தலைவரான பசில் ராஜபக்சவின் அரசியல் மற்றும் நிர்வாகத் திறன்களைப் பாராட்டிப் பேசியுள்ளார்.</p><p>


நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்கும் ஆற்றல் பசில் ராஜபக்சவுக்கு மட்டுமே உண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பிலும் இலங்கை அரசியல் பரப்பில் நடந்த முக்கிய விடயங்கள் தொடர்பிலும் பேசுகின்றது லங்காசிறியின் Political Arena நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2eh90AvrUac" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>[A8HKFC8[</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T20:48:12+00:00</updated>
        </entry>
    </feed>
