<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-08T13:48:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பில் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slight-increase-official-foreign-reserves-in-july-1786194269"></link>
            <id>https://tamilwin.com/article/slight-increase-official-foreign-reserves-in-july-1786194269</id>
            <summary type="text">இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, ஜூலை மாதத்தில் வெளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, ஜூலை மாதத்தில் வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p> </p><p>அதற்கமைய இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 2.017% சிறிய உயர்வாகும்.</p><p></p><h2>வெளிநாட்டு கையிருப்பு</h2><p> </p><p>

கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6,458 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. </p><p>

அதன்படி, 133 மில்லியன் டொலர்கள் அதிகரிப்பைக் காட்டி, கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் மொத்தக் கையிருப்பாக 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/926a9883-6bb8-4b70-9ba2-65c1996b033d/26-6a772ef12146f.webp' /></p><p> </p><p>

இதனிடையே, கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் தங்கக் கையிருப்பும் 1 மில்லியன் டொலரால் அதிகரித்துள்ளது. </p><p>

ஜூன் மாதத்தில் தங்கக் கையிருப்பாக 191 மில்லியன் டொலர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அது 192 மில்லியன் டொலர்களாக 1 மில்லியனால் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T13:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை வன்முறைகள் குறித்து விசாரணைகள் தீவிரம்.. பிரதியமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-riots-deputy-minister-pradeep-speech-1786192910"></link>
            <id>https://tamilwin.com/article/prison-riots-deputy-minister-pradeep-speech-1786192910</id>
            <summary type="text">சிறைச்சாலை வன்முறை மற்றும் அரசாங்க நடவடிக்கை நாட்டில் அண்மையில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து
அரசாங்கம் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை வன்முறை மற்றும் அரசாங்க நடவடிக்கை நாட்டில் அண்மையில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து
அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என&nbsp;பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் அவர், "கடந்த காலங்களில் இலங்கை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு முக்கிய மத்தியஸ்த
நிலையமாக விளங்கியது. தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருளை
முழுமையாக ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள்
தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.</p><h2>உண்மைகள் வெளிச்சம்..&nbsp;</h2><p>போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இடையே நெருங்கிய
தொடர்பு இருப்பது தற்போதைய சம்பவங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31114ec9-779b-4b54-aead-125c52e42c5f/26-6a772ae24aaf8.webp' /></p><p>
</p><p>போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும்
கைதிகளைத் தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர்.</p><p>சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில்
உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்கார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்று அவசர கால நடவடிக்கைகள்
குறித்து ஆலோசித்தனர்.</p><p>சிறைச்சாலை அமைதியின்மைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டின்
அமைதியைக் குலைக்க முயலும் நபர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T13:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேங்கொக் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bangkok-shooting-death-toll-rises-1786193309"></link>
            <id>https://tamilwin.com/article/bangkok-shooting-death-toll-rises-1786193309</id>
            <summary type="text">தாய்லாந்தின்- பேங்கொக்கிற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றிலும் மற்றும்
வீடு ஒன்றிலும் மாணவன் ஒருவனால் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின்- பேங்கொக்கிற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றிலும் மற்றும்
வீடு ஒன்றிலும் மாணவன் ஒருவனால் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
பேங்கொக்கின் வடமேற்கே உள்ள நொந்தபுரி மாகாணத்தின் 'டெப்சிரின் நொந்தபுரி'
பாடசாலையில் வெள்ளிக்கிழமை காலை வேளையில் இந்தத் துப்பாக்கிச் சூடு
நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதலை நடத்திய 14 வயது மாணவன், பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் தனது
வீட்டில் வைத்து தனது தாத்தா மற்றும் பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக்
கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p>
பின்னர் பாடசாலைக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பாடசாலை
ஊழியர்கள் உயிரிழந்ததுடன், தாக்குதலை நடத்திய மாணவனும் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03c83e5-0084-4fce-9d8a-32893dce310e/26-6a77289326ac8.webp' /></p><p>
இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுமி
சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்ததை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 9
ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 16 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை
பெற்று வருவதுடன், அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>
</p><p>
இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அம்மாணவனின் தாத்தாவுக்கு
சொந்தமான சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஆயுதம் எனத் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7015e90d-2bf8-4a7f-aa7e-e28d28253d3e/26-6a772893cd64b.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவத்தையடுத்து தாய்லாந்தில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை
மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அனுடின் சர்ன்விராகுல்
உறுதியளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T13:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதியில் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/blockad-strait-of-hormuz-iraq-oil-exports-drop-1786192475"></link>
            <id>https://tamilwin.com/article/blockad-strait-of-hormuz-iraq-oil-exports-drop-1786192475</id>
            <summary type="text">அமெரிக்க - இஸ்ரேலிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ச் சூழல் காரணமாக
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஈராக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க - இஸ்ரேலிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ச் சூழல் காரணமாக
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஈராக்கின்
மசகு எண்ணெய் ஏற்றுமதி 75 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டின்
எண்ணெய் அமைச்சர் பாசிம் முகமது குதைர் தெரிவித்துள்ளார்.
</p><p>போர் தீவிரமடைவதற்கு முன்னர் ஈராக் நாளொன்றுக்கு சராசரியாக 3.4 மில்லியன்
பெரல் மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர்,
தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டின் எண்ணெய் உற்பத்தியும்
ஏற்றுமதியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தற்போது ஈராக் நாளொன்றுக்கு 2.7 மில்லியன் பெரல் எண்ணெய்யை மட்டுமே உற்பத்தி
செய்வதாகவும், அதில் 1.5 மில்லியன் முதல் 1.7 மில்லியன் பேரல் வரையே ஏற்றுமதி
செய்ய முடிவதாகவும் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் ஏற்றுமதிப் பாதைகளை
பல்வகைப்படுத்துவதற்கான மாற்று தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது அவசியமானது
என்றும் வலியுறுத்தினார்.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
அத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியே ஈராக்கிய எண்ணெய்யை பாதுகாப்பாக ஏற்றுமதி
செய்ய அனுமதிப்பது தொடர்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு
வந்த போதிலும், அவை இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவர்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe45b51-54f1-40f1-b14e-deb9e5d27c17/26-6a77225d3b035.webp' /></p><p>
</p><p>
மேலும், ஈராக்கில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்கள் மீதான எந்தவொரு
தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், அத்தகைய
தாக்குதல்களால் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு உரிய நஷ்டஈடு
வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T12:41:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று! கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strong-winds-at-70-km-warning-issued-to-fishermen-1786190261"></link>
            <id>https://tamilwin.com/article/strong-winds-at-70-km-warning-issued-to-fishermen-1786190261</id>
            <summary type="text">நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08.8.2026) அறிவித்துள்ளதுமாத்தறையிலிருந்து பொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08.8.2026) அறிவித்துள்ளது</p><p>மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p> 

ஏனைய பகுதிகளிலிருந்து புறப்படும் படகுகள் இந்த ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ebfc62-3ec4-4073-a267-0b52e5d3d496/26-6a771c528dbd8.webp' /></p><p> 

இதன் காரணமாக அப்பகுதிகளின் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படக்கூடும் என்பதால், கரையோர கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு அப்பகுதிகள் மிகவும் ஆபத்தானவை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதேவேளை, வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து தீவிர அவதானம் செலுத்தி, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுமாறு அனைத்து கடற்றொழில் சமூகத்தினரிடமும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு கோரியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T12:19:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையிலிருந்து நிதி.. வெளியான அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-srilanka-1786182152"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-srilanka-1786182152</id>
            <summary type="text">நாட்டில் ஒரு அசாதாரண நிலைமையை தோற்றுவிப்பதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருவதாக புலனாய்வு வலையொளித் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் ஒரு அசாதாரண நிலைமையை தோற்றுவிப்பதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருவதாக புலனாய்வு வலையொளித் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையின் இராணுவத்தின் இரகசியக் கணக்கிலிருந்து (Military Secret Fund) தான் பணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளில் இருந்து கிடைக்கவில்லை என முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சூல கொடித்துவக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.
</p><p>இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "இப்போது இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் மட்டக்களப்பில் இருந்த இராணுவ வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், கைது செய்யப்படவிருக்கிறார்கள். </p><h2>

</h2><p>&nbsp;</p><h2>கைது செய்யப்படவிருக்கும் இராணுவத்தினர்</h2><p>அவர்களைக் கைது செய்வதை எப்படியாவது தடுப்பதற்காக நாட்டிற்குள் ஒரு கொந்தளிப்பை (unrest) உருவாக்கப் பார்க்கிறார்கள். </p><p>இந்த அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்று நான் சில மாதங்களுக்கு முன்பே கூறினேன் என்று இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.
</p><p>லண்டனில் இருந்து இயங்கும் தனது அமைப்புக்கு கிடைத்த இரகசிய தகவல்களை கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
</p><p>இப்போது சிறைச்சாலைகளைச் சுற்றிப் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இன்னும் இரு நாட்களுக்குள் இராணுவ வீரர்களை அரசு தாக்குவதான ஒரு போர்வையிலான எதிர்ப்புகள் கிளம்பவுள்ளன. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3db79620-f481-4bcd-835d-d14aa8e8bbb6/26-6a76fa0a412a8.webp' /></p><p>அரசாங்கம் இப்போது இதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். கொழும்பு, அநுராதபுரம், கண்டி, குருநாகல் போன்ற முக்கிய நகரங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் அல்லது கொந்தளிப்புகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள். </p><p>இந்த அசம்பாவிதங்களைச் செய்யப் போவது, இராணுவத்தில் கைது செய்யப்படவிருக்கும் நபர்களைக் கைது செய்யாமல் தடுப்பதற்காகவே ஆகும். </p><p>
இவர்கள் இராணுவச் சிப்பாய்கள் அல்ல. இவர்கள் இராணுவச் சீருடையைப் போட்டுக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை செய்த, பயங்கரவாதிகள். </p><p>குண்டு வெடிப்பதற்கு களத்தை அமைத்துக் கொடுத்த சுரேஷ் சலேவின் ஆட்களாவர்.
அத்தோடு பௌத்த பிக்குகளும் களத்தில் இறங்கி போராட தயாராகி வருகின்றனர்.
</p><p>ஒருவர் இராணுவ வீரராக இருக்கலாம். ஆனால் ஒரு கொலைகாரனால் இராணுவ வீரராக முடியாது. ஒரு இராணுவ வீரர் எந்த நேரத்திலும் ஒரு கொலைகாரனாக மாற முடியும், ஆனால் ஒரு கொலைகாரனால் ஒருபோதும் உண்மையான இராணுவ வீரராக முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பவானி வீதி குறித்து மற்றுமோர் வழக்கை கண்டிப்புடன் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-regarding-bhavani-road-law-and-order-1786186587"></link>
            <id>https://tamilwin.com/article/case-regarding-bhavani-road-law-and-order-1786186587</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை
விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி பொலிஸாரின் சார்பில் தெல்லிப்பழைப்
பொலிஸார் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை
விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி பொலிஸாரின் சார்பில் தெல்லிப்பழைப்
பொலிஸார் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.</p><p>

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை தவிசாளர்
சுகிர்தன் நிலஅளவைத் திணைக்களத்தினரிடம் அண்மையில் அடையாளம்
காட்டியிருந்தார். </p><p>இதையடுத்து, அந்த வீதியை விடுவிக்க வலி வடக்குப் பிரதேசபை
தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p> </p><p>இதற்கு எதிராகப் பலாலிப் பொலிஸார்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தநிலையில், அந்தவழக்கை விசாரித்த
நீதிமன்றம், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து,
'வலி வடக்கு பிரதேசசபை மேற்கொள்ளும் வீதி விடுவிப்பு முயற்சிகளை பொது
அமைதிக்குப் பங்கமான செயற்பாடு என்று கருதித் தடைபோட முடியாது' என
நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce9c3d7-c340-4c51-9f42-2c603887c54e/26-6a770e9ab413d.webp' /></p><p>

இதனால் பிரதேசசபையால் எப்போது வேண்டுமானாலும் வீதியை விடுவிக்கும் நிலைமை
ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடை
விதிக்குமாறு அரசியலமைப்பின் 66ஆம் பிரிவின் கீழ் தெல்லிப்பழைப் பொலிஸார்
நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த
வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.</p><p>

பவானி வீதி தொடர்பில் இதற்கு மேல் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் மேல்
நீதிமன்றத்துக்குச் செல்லுமாறும் பொலிஸாரிடம் நீதிமன்றம் கண்டிப்புடன்
கூறியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[101ஆவது நாளாக தொடரும் அகழ்வு பணிகள்.. செம்மணியில் 515 என்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-515-skeletons-found-1786187758"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-515-skeletons-found-1786187758</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் (08.08.2026) 101ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன.நீதிமன்ற அனுமதி

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் (08.08.2026) 101ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன.</p><h2>நீதிமன்ற அனுமதி</h2><p>
</p><p>
இதுவரையிலான 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 515 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 506 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09c50ac2-9494-4987-84be-74e1869bb80f/26-6a7711c61ea83.webp' /></p><p>
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், 47ஆவது நாளான நேற்றைய தினம் 08 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

அதேவேளை, எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் இருந்து
மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கடல் வழியாக கடத்த இருந்த கஞ்சா பறிமுதல்: கடத்தல்காரர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cannabis-being-smuggled-to-sri-lanka-by-sea-seized-1786186289"></link>
            <id>https://tamilwin.com/article/cannabis-being-smuggled-to-sri-lanka-by-sea-seized-1786186289</id>
            <summary type="text">இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வானில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா இன்றைய தினம் (08.08.2026) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வானில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா இன்றைய தினம் (08.08.2026) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த
ஆண்டு இதுவரை 670 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தல்காரர்களின்
வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ்
தெரிவித்துள்ளார்.</p><p>
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உட்கோட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த
வான் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 297 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொட்டலங்கள் இருந்தது
தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4606070f-3eba-4f0a-99d3-8fb54563d0be/26-6a77112943b4e.webp' /></p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>
</p><p>
இதையடுத்து வானுடன் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த பொலிஸார் அங்கு நின்று
கொண்டிருந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த
தினேஷ் மற்றும் பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்த களஞ்சீஸ்வரன் ஆகிய இருவரையும்
கைது செய்து ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்து விசாரணை
மேற்கொண்டனர்.
</p><p>
பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும்
ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இவை பிரப்பன்வலசை கடற்கரையில்
இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3411430-de15-4d51-ab17-f288ec4d2c22/26-6a77112a51b71.webp' /></p><p>
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரை தேடும் பணி&nbsp; தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ் பார்வையிட்டார்.</p><h2>கஞ்சா பறிமுதல்</h2><p>

பின்னர் செய்தியாளிடம் பேசியவர், பிரப்பன்வலசை கடற்கரையில் 297 கிலோகிராம் கஞ்சா
பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில்
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8fa30a-ef0e-436f-8698-dcb382418cbf/26-6a77112b2b375.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டு இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 212 போதைப்பொருள் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டு 670 கிலோகிராம் கஞ்சா மற்றும் ஒரு கிலோகிராம் 800 கிராம் மெத்தப்பெட்டமன்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்கள்
முடக்கப்பட்டு வருவதுடன் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1fbf10e-31e0-4d2a-b8bd-9e53b755099d/26-6a77112bf36b4.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதாபிமானத்துடன் பின்வாங்கிய விடயங்களை கோழைத்தனம் என நினைக்காதீர்! நாமலின் அச்சுறுத்தும் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-aragalaya-in-sri-lanka-1786187244"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-aragalaya-in-sri-lanka-1786187244</id>
            <summary type="text">&amp;nbsp; நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். மக்களின் நலன் கருதியே சில விடயங்களில் நாம் ஓரடி பின்வாங்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். மக்களின் நலன் கருதியே சில விடயங்களில் நாம் ஓரடி பின்வாங்கினோம்.</p><p>அவை மனிதாபிமானத்துடன் எதிர்கொண்டவை கோழைத்தனமாகக் கருத வேண்டாம் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p><h2>
</h2><p></p><h2>பின்வாங்கிய சம்பவம்</h2><p>அரகலய போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போராட்டக்காரர்களுக்கு கை வைக்கவில்லை. </p><p>கடந்த நாட்களில் இந்தியாவில் எதிர்கொண்ட விதத்தை நாம் சமூக ஊடகங்களில் பார்த்தோம். பங்களாதேஷ் -நேபாளம் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்தோம்.
நாம் அரகலய போராட்டத்தில் ஓரடி பின்வாங்கினோம்.</p><p>உயிர்களைப் பறித்து, பிள்ளைகளைக் கொன்று, அந்தப் உடல்கள் மீது அரசாங்கத்தைப் பாதுகாக்க முனையவில்லை செய்யவும் மாட்டோம். </p><p>நாம் மனிதாபிமானத்தோடு பிரச்சினையை எதிர்கொண்டதை கோழைத்தனமாகப் பார்க்க வேண்டாம். கோழைத்தனமாகக் கருத வேண்டாம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f31e8f9-7ae5-4681-8905-22739ce7c4f9/26-6a770dee79aba.webp' /></p><p>நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். பயங்கரவாதத்திலிருந்து மீட்டோம்.</p><p>கோவிட்-19 தொற்றுநோயின் போது, குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் இந்த நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.
</p><p>அரகலய போராட்டத்தின் போது இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கானோரைக் படுகொலை செய்து அரசாங்கத்தைக் காப்பாற்ற முயற்சிக்கும் வாய்ப்பு இருந்தது. </p><p>நாம் அப்படிச் செய்திருந்தால் இன்று நாமல் ராஜபக்ச இங்கே நிற்கும் சூழ்நிலை இல்லாமல் போயிருக்கலாம். </p><p>
மக்களின் பக்கத்தில் நின்று, ஒரு சமூக பேரழிவிலிருந்து நாட்டின் இளைஞர்களை மீட்க நாம் ஓரடி பின்வாங்கியதை கோழைத்தனம் என்று அரசாங்கமும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களும் நினைத்தால், அவர்களுக்குத் தவறிவிட்டது என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:12:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இரவு நேரங்களில் மருத்துவர்களின் பரிதாப நிலை - கவலையில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctors-sleeping-the-vehicles-1786169153"></link>
            <id>https://tamilwin.com/article/doctors-sleeping-the-vehicles-1786169153</id>
            <summary type="text">இலங்கையில பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இரவு நேரங்களில் தமது வாகனங்களிலேயே உறங்குகின்றமை தொடர்பில் தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இரவு நேரங்களில் தமது வாகனங்களிலேயே உறங்குகின்றமை தொடர்பில் தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

தங்குமிடப் பிரச்சினைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சில மருத்துவர்கள் அவ்வாறு செயற்படுவது தொடர்பில் தனக்கும் தகவல்கள் கிடைத்துள்ளதாக&nbsp; சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>அரசாங்கம் முன்னுரிமை</b></h2><p> 

இதுவொரு கவலையான நிலைமை என அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவர்களுக்கான விடுதி மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac29f30c-8384-4b31-ac58-d264b5f25aba/26-6a770c31ba11f.webp' /></p><p>வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள சில யோசனைகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். </p><p>

அனைத்து மருத்துவர்களும் சேவையாற்றுவதற்கு பொருத்தமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.</p><p> </p><h3><b>

சுகாதார அமைச்சு</b></h3><p>இதேவேளை கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,791 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a057590a-c0c0-46f4-807a-4736da88983d/26-6a770c326c8e5.webp' /></p><p>இது தவிர, 1,491 மருத்துவர்கள் சம்பளமற்ற விடுப்பில் இருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-08T11:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கும் மர்ம மரணங்களின் பின்னணியில் அரசின் சதி.. எழுந்துள்ள புதிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deaths-incidents-prisons-ranjith-mathuma-bandara-1786180161"></link>
            <id>https://tamilwin.com/article/deaths-incidents-prisons-ranjith-mathuma-bandara-1786180161</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் மர்மமான மரணங்கள் மற்றும் அமைதியின்மைகள், நாடு முழுவதும் அவசரச்சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக அரசாங்கத்தால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் மர்மமான மரணங்கள் மற்றும் அமைதியின்மைகள், நாடு முழுவதும் அவசரச்சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக அரசாங்கத்தால் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் அறிகுறியாக இருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சந்தேகம் வெளியிட்டுள்ளார்.</p><p>

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தாம் கட்டுப்படுத்தி விட்டதாக அரசாங்கம் கூறிக்கொள்வதில் முரண்பாடு&nbsp;உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சிறைக்கைதிகளைக் கூட திறம்பட நிர்வகிக்க முடியாத நிலையில் இந்த நிர்வாகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>வன்முறைச் சம்பவங்கள்..&nbsp;</h2><p>"சீர்திருத்த மையங்களுக்குள் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பது வெறும் தற்செயலானது அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6a525e2-c9f1-4612-8feb-a7a6d7cada43/26-6a77016fe5bef.webp' /></p><p> குறிப்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரின் கூற்றுகள் மூலம் அரசாங்கம் தனது தோல்விகளை ஒப்புக்கொண்டிருப்பது, இந்தச் சூழ்நிலையைக் கையாள்வதில் அவர்களுக்கு இருக்கும் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.</p><p>சிறைச்சாலைகள் என்பது மரண தண்டனைகளை நிறைவேற்றுவதற்கான இடங்கள் அல்ல. சிறிய போக்குவரத்து விதிமீறல்களுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் கூட அந்தச் சுவர்களுக்குள் உயிரிழந்துள்ளனர்.</p><p> தனது சிறைச்சாலைகளுக்குள் அமைதியைப் பேண முடியாத ஒரு அரசாங்கம், நாட்டின் ஆட்சியை எவ்வாறு வெற்றிகரமாக நடத்தும் என்று எதிர்பார்க்க முடியும்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Qo_sOIOhKis" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-08T10:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் கூட்டுறவு இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் - ஆளுநர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-governor-vedhanayagan-statement-1786181788"></link>
            <id>https://tamilwin.com/article/northern-governor-vedhanayagan-statement-1786181788</id>
            <summary type="text">ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கூட்டுறவுத்துறையைப்
பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதுடன்,
கூட்டுறவுச் சட்டங்களில் திருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கூட்டுறவுத்துறையைப்
பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதுடன்,
கூட்டுறவுச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக&nbsp;வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தச் சாதகமான சூழலை வடக்கு மாகாணம்
முழுமையாகப் பயன்படுத்தி, கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில்
கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் என&nbsp; வலியுறுத்தினார்.
</p><p>
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற உணவுப்
பாதுகாப்பு மாநாடு இன்று (08.08.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா
அரங்கில், வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தலைமையில் நடைபெற்றது.
</p><p>இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><h2>வட மாகாணத்தின் கூட்டுறவுத்துறை</h2><p>
</p><p>
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், 1970 மற்றும் 1980களில் வடக்கு மாகாணத்தின்
கூட்டுறவுத்துறை நாட்டிலேயே முன்னணி நிலையில் விளங்கியதாகவும், பின்னர்
ஏற்பட்ட போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது பெரும் பின்னடைவைச்
சந்தித்ததாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf4b567-f6e4-49e1-b04e-8c6fc7a4c7af/26-6a76fb9208a7f.webp' /></p><p> </p><p>தற்போது கூட்டுறவுத்துறையை தேசிய பொருளாதார
வளர்ச்சியின் முக்கியத் தூணாக மாற்ற அரசாங்கம் உறுதியான கொள்கையுடன்
செயல்பட்டு வருவதாகவும், இது வடக்கு மாகாணத்திற்குக் கிடைத்துள்ள அரிய
வாய்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
வடக்கு மாகாணத்தின் கூட்டுறவு இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு
அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்ட
ஆளுநர், கூட்டுறவு நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தி, உற்பத்தி,
சந்தைப்படுத்தல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் அதிக பங்காற்ற வேண்டிய
காலம் இதுவே என்றார்.
</p><p>
உணவுப் பாதுகாப்பு இன்று உலகளாவிய சவாலாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,
காலநிலை மாற்றம், போர்கள் மற்றும் உலக பொருளாதார மாற்றங்கள் போன்ற பல்வேறு
காரணிகள் உணவுப் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகச்
சுட்டிக்காட்டினார்.</p><p> இந்தச் சவால்களுக்கு கூட்டுறவுத்துறை ஊடாக நிலையான
தீர்வுகளை உருவாக்கும் நோக்கில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின்
ஒத்துழைப்புடன் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி கடந்த மூன்று
நாட்களாக முன்னெடுத்துள்ள களப்பயணங்களும், பயிற்சிகளும் கலந்துரையாடல்களும்
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddac51d2-04e6-40d8-9367-8a8f810a0b6b/26-6a76fb92edb2a.webp' /></p><p>
</p><p>
வடக்கு மாகாணத்தில் இம்முறை சிறுபோக நெல் விளைச்சல் நூறு சதவீத இலக்கைத்
தாண்டியுள்ளதாக மகிழ்ச்சி வெளியிட்ட ஆளுநர், நவீன விவசாய முறைகளைப்
பயன்படுத்தியமை இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
எனினும், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் இன்னமும் பல்வேறு
சவால்களை எதிர்கொள்வதாகவும், தனியார் வியாபாரிகள் குறைந்த விலையில் நெல்லைக்
கொள்வனவு செய்தாலும், அரிசியின் சில்லறை விலை குறையாத நிலை காணப்படுவதாகவும்
சுட்டிக்காட்டினார்.</p><h2>நியாயமான சந்தையை உருவாக்கும் வல்லமை</h2><p>
</p><p>
இதனால் விவசாயிகளும் நுகர்வோரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுகின்றனர் என்றும்,
இடைத்தரகர்களே அதிக இலாபம் பெறுகின்றனர் என்றும் குறிப்பிட்ட அவர், இந்த
நிலையை மாற்றி, உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் நியாயமான சந்தையை
உருவாக்கும் வல்லமை கூட்டுறவுத்துறைக்கு மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.
</p><p>ஆனால், கூட்டுறவு இயக்கம் தனது உண்மையான பொருளாதார ஆற்றலை இன்னும் முழுமையாக
உணராத நிலை காணப்படுவதாகவும், அந்த நிலையை மாற்றியமைப்பதற்காக பல்வேறு நடைமுறை
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாணவர் உணவுத் திட்டத்துடன்
கூட்டுறவுச் சங்கங்களை இணைக்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டு
வருவதாக ஆளுநர் தெரிவித்தார். </p><p>மேலும், கடந்த காலங்களில் நிறுவப்பட்டு தற்போது
செயலிழந்துள்ள தொழிற்சாலைகளை மீளச் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான
திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் நடைமுறைக்கு வரும்
என்றும் தெரிவித்தார்.

கூட்டுறவுச் சங்கங்கள் தமது உற்பத்திகளை உள்நாட்டு சந்தைக்கு
மட்டுப்படுத்தாமல், நேரடி ஏற்றுமதிக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய
அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்காலத்தில் அந்த இலக்கையும் எட்ட
முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0300e82-911d-4f3e-9c61-2d712e122415/26-6a76fb93c1a12.webp' /></p><p>

இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் அகிலன் கதிர்காமர், ஜனாதிபதி நாட்டின் பொருளாதார வளர்ச்சி
வீதத்தை ஏழு சதவீதமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p>
அதேவேளை, வடக்கு மாகாணத்தின் தேசிய உற்பத்திக்கான பங்களிப்பை தற்போதைய 4.5
சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை வடக்கு மாகாண ஆளுநர்
நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த இலக்கை அடைவதற்காக வடக்கு மாகாணத்தில் அதிக பங்களிப்பை வழங்கக்கூடிய ஏழு
முக்கிய பொருளாதாரத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும்
கூட்டுறவுத்துறையுடன் நேரடியாகத் தொடர்புடையவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>எனவே, கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதன் ஊடாக மாகாணத்தின் தேசிய
உற்பத்திக்கான பங்களிப்பை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க முடியும் என்ற
நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
</p><p>
இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கூட்டுறவுச்
சங்கங்களின் பிரதிநிதிகள், கூட்டுறவு நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும்
கூட்டுறவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07aedf81-121b-46fa-af27-8066b8a49432/26-6a76fb94961b7.webp' /></p>]]></content>
            <updated>2026-08-08T10:24:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்: மு.கோமகன் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ensure-the-safety-of-political-prisoners-komahan-1786181947"></link>
            <id>https://tamilwin.com/article/ensure-the-safety-of-political-prisoners-komahan-1786181947</id>
            <summary type="text">சிறையில் நீண்ட காலமாக இருக்கின்ற தமிழ் அரசியல்
கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதேவேளை அவர்களுடைய பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் நீண்ட காலமாக இருக்கின்ற தமிழ் அரசியல்
கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதேவேளை அவர்களுடைய பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும்&nbsp;குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின்
செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகன் தெரிவித்தார்.</p><p>இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல்
கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம்(8.8.2026) கொழும்பு
மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை
பார்வையிட்டனர்.இதன்போது கோமகனும்
உடனிருந்தார்.</p><p>

இது குறித்து முருகையா கோமகன் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையில்
அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஒரு மரணமும் சம்பவித்தது.அங்கே
தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர்.</p><h2>கைதிகளின் பாதுகாப்பு</h2><p> </p><p>அதேபோல வெலிக்கடை
சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த சிறைச்சாலைகளில் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர்
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அரசியல் கைதிகளின்
பாதுகாப்பு என்பது தொடர்ச்சியாக கேள்விக்குறியாகத்தான் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c49ab8-d6d2-48ad-a99e-0635325f7737/26-6a76fc7754189.webp' /></p><p> </p><p>கடந்த
காலங்களில் அரசியல் கைதிகளுக்கு சிறைகளில் இடம்பெற்ற சம்பவங்களை
நினைக்கும்போது அச்சம் கொள்ள தோன்றுகிறது. பெற்றோரும் அங்கு உள்ள கைதிகளும்
அச்சமான சூழ்நிலையில் உள்ளார்கள்.</p><p>ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது, அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதாக வாக்குறுதிகள் வழங்தப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட
இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.</p><p></p><h2>தமிழ் மக்களது வாக்கு</h2><p>
</p><p>
இந்த விடயத்தை எம்மிடம் நினைவுபடுத்திய அரசியல் கைதிகள், இது குறித்து
ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், தமது விடுதலையை
உறுதிப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60acf421-f25b-43cd-ab02-946401ed2b42/26-6a76fd3ae1b99.webp' /></p><p>
</p><p>
எனவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கமானது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய
வேண்டும். </p><p>அதேவேளை தமிழ் மக்களது வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர்கள்
வெறுமனே பார்வையாளர்களாக இருக்காமல் அவர்களது விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பிணை&nbsp;</h2><p>தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை
செய்யப்பட்டதான செய்தி ஒன்று அண்மையில் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இன்னமும்
சிறைக்குள் தான் இருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71c49d68-bef5-4dc7-8b83-6c60338b250f/26-6a771874909a9.webp' /></p><p>
</p><p>
அதில் இருவருக்கு பிணை வழங்குவதற்கான மேன்முறையீட்டு வழக்கில் பிணை
வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழக்கிற்கான பிணையே வழங்கப்பட்டது. அவர்களுக்கு
எதிராக வேறு நீதிமன்றங்களில், வேறு வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன.</p><p>

அந்தவகையில் அந்த வழக்குகளுக்கும் பிணை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள்
விடுதலை செய்யப்படுவார்கள். அந்த வழக்குகளுக்குரிய திகதிகள் எதிர்வரும் 10ஆம்
மாதமே உள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றாகள். எனவே அவர்கள்
இன்னமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T10:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1786179429"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1786179429</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக&amp;nbsp;தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் புதிய தரவு தெரிவித்துள்ளது.&amp;nbsp;அதன்படி டெங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக&nbsp;தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் புதிய தரவு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>அதன்படி டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளதாக தெரியவருகிறது.</p><p>இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>மொத்த நோயாளர்கள் பதிவு</h2><p>
</p><p>
 

பதிவான மொத்த நோயாளர்களில் 52.94% அதாவது 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் (21.25%) பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் (19.86%), கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் (7.07%) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5034ebc9-382b-4a12-850b-54be0525507b/26-6a76f7742aafa.webp' /></p><h2>டெங்கு அதி அபாய வலயங்கள்</h2><p>
</p><p>
 

தவிர, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3569 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>இதேவேளை 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து டெங்கு அதி அபாய வலயங்களாகப் பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T09:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/western-province-branch-fuel-1786178382"></link>
            <id>https://tamilwin.com/article/western-province-branch-fuel-1786178382</id>
            <summary type="text">எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை நாளை (09.08.2026) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

நாட்டின் அதிகளவிலான எரிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை நாளை (09.08.2026) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

 

நாட்டின் அதிகளவிலான எரிபொருள் விநியோகஸ்தர்கள் மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த கிளையை விரைவாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

 

தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இதுவரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து நியாயமான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இச்சங்கம் தொடங்கப்படுவதாகவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் கூறுகின்றது.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>

 

குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைத் தவிர, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே இச்சங்கத்தின் பிராந்தியக் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89352f9-f3fa-4761-8778-e0a55905beb1/26-6a76f08470dbe.webp' /></p><p>
</p><p>
 

இருப்பினும், எதிர்காலத்தில் அந்த இரு மாவட்டங்களையும் மையமாகக் கொண்டு கிளைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T09:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலியானது என சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு! முன்னாள் எம்.பிக்கு பிரித்தானியாவில் ஏற்பட்ட சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-passports-are-being-rejected-1786166774"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-passports-are-being-rejected-1786166774</id>
            <summary type="text">இலங்கையால் வழங்கப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் குறைந்த கடவுச்சீட்டுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியாவில் தடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையால் வழங்கப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் குறைந்த கடவுச்சீட்டுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>

கடவுச்சீட்டை சரிபார்க்கும் நடவடிக்கை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டை சரியாகப் படிக்க முடியாததால் அது போலியானது எனச் சந்தேகப்பட்டு, பிரித்தானிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

முன்னர் 64 பக்கங்களைக் கொண்டிருந்த கடவுச்சீட்டு தற்போது 48 பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d842a60-a529-4348-a021-eefb9fabdd39/26-6a76c9ddbf383.webp' /></p><p>ஆனால் அதற்காக வசூலிக்கப்படும் 6000 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய கடவுச்சீட்டுகளில் குறிப்புப் பக்கங்களோ அல்லது நீட்டிப்புப் பக்கங்களோ இல்லை. அச்சிடும் தரம் மிகவும் குறைவாக உள்ளது.</p><p>

குறிப்பாக குடிவரவு முத்திரையைப் பதிக்கும்போது, ​​மை மறுபக்கம் கசிவது போன்ற பிரச்சினைகள் காரணமாக சில நாடுகள் இந்த அனுமதிகளை நிராகரித்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
தரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை
</h2><p>இதற்கு பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளிக்கையில், அனுமதிகளின் தரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, உலகின் பிற நாடுகளால் பின்பற்றப்படும் ஒரு முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/521d996e-1f31-4039-9e1d-9a4b6791b6a0/26-6a76c9de834df.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான டெண்டர் தொடர்பாக ஒரு நீதிமன்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளது. மின்னணு கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vOj4NcDWjRo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-08T08:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்! பொதுமக்கள் விடுத்துள்ள வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-against-waste-dumped-on-the-roadside-1786173093"></link>
            <id>https://tamilwin.com/article/action-against-waste-dumped-on-the-roadside-1786173093</id>
            <summary type="text">தம்பலகாமம் - பத்தினிபுரம் பகுதியில் கழிவுகளை அகற்றுவதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சிலர் வீதியோரங்களில் வீட்டுக்கழிவுகள் மற்றும் வணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்பலகாமம் - பத்தினிபுரம் பகுதியில் கழிவுகளை அகற்றுவதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சிலர் வீதியோரங்களில் வீட்டுக்கழிவுகள் மற்றும் வணிகக்கழிவுகளை கொட்டி வருவதால் அசௌகரியங்களை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். </p><p>

வீதியோரங்களில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என அதிகாரிகளால் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை சிலர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கழிவுகளை வீசி செல்வதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h2>கழிவுகளால் ஏற்பட்டுள்ள நிலைமை</h2><p> </p><p>

இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில், முறையற்ற விதத்தில் கொட்டப்படும் பொலித்தீன் பைகள் மற்றும் பிற கழிவுகள் பலத்த காற்றினால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் குடிநீர் கிணறுகளுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. 

இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், குடிநீரும் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/745c9a8c-5ce5-47af-9695-2b2fc39ea6d3/26-6a76e66a500fc.webp' /></p><p> இறைச்சி மற்றும் கோழிக் கழிவுகள் வீதியோரங்களில் வீசப்படுவதால், உணவை தேடி ஏராளமான தெரு நாய்களும் காட்டு யானைகளும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருகின்றன.</p><p> 

வீதிகளில் யானைகள் மற்றும் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்து அபாயத்திற்கு உள்ளாவதோடு, அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>எவ்வித தீர்வும் எடுக்கப்படவில்லை</h2><p> </p><p>

இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்த போதிலும், இதுவரை எவ்வித முதற்கட்ட நடவடிக்கையோ அல்லது நிரந்தரத் தீர்வோ மேற்கொள்ளப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c98cdb75-77bc-43dc-b0d6-7d8e6584114b/26-6a76e66b30207.webp' /></p><p>

எனவே, பாரிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்கு முன் பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வீதியோரங்களில் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>

அத்துடன், ஒதுக்கப்பட்ட கழிவு சேகரிப்பு இடத்தில் கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7505a91-753f-4396-8058-e872dbb893b6/26-6a76e66c01cf6.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-commissioner-appointed-motor-traffic-1786176574"></link>
            <id>https://tamilwin.com/article/new-commissioner-appointed-motor-traffic-1786176574</id>
            <summary type="text">வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக
நி.தவலோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக
நி.தவலோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர்
சிவபாதசுந்தரம் சத்தியசீலன் நேற்று (07.08.2026)&nbsp; ஆளுநர்
செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.</p><p></p><h2>புதிய ஆணையாளர்</h2><p>
</p><p>
வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய
கு.காஞ்சனா மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/406f9d7b-5cc3-4eba-a17b-fde9d6134290/26-6a76e69af24d5.webp' /></p><p>இதனையடுத்து, ஏற்பட்ட
வெற்றிடத்துக்கு நி. தவலோஜினி&nbsp; நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஒன்பது சிறைச்சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள ஆயுதங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-in-sri-lanka-weapons-1786176170"></link>
            <id>https://tamilwin.com/article/prison-in-sri-lanka-weapons-1786176170</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத நிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>அங்குணுகொலபெலஸ்ஸ, பூஸ்ஸ, போகம்பரை, களுத்துறை, அநுராதபுரம், கொழும்பு மகசின், மொணராகலை, வட்டரக்க மற்றும் வாரியபொல ஆகிய சிறைச்சாலைகளில் இருந்த தோட்டாக்களே இவ்வாறு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகத் கணக்காய்வு அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>ஆபத்தான நிலையிலுள்ள ஆயுதங்கள்</h2><p>மேலும் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள 191 துப்பாக்கிகள் பழுதுபார்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
அதேபோல் 27 சிறைச்சாலைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி பாதுகாப்புக் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் 1038 பயன்படுத்த முடியாததோடு, அந்நிறுவனங்களில் அவற்றிற்கு கடும் பற்றாக்குறையும் காணப்படுகிறது.
</p><p>இவற்றில் 62 துப்பாக்கிகள், 50 மேகசின்கள் (Magazines) மற்றும் 1278 தோட்டாக்கள் விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டு 3 ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவை இதுவரை முறையாக பெற்றுக் கொள்ளப்படவில்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c43e3fc2-8a38-492a-9352-44a9f847f127/26-6a76e2ac33672.webp' /></p><p>இதனால் கலவர சூழ்நிலையின் போது அதிகாரிகளுக்கு அதை எதிர்கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>அதேபோல் நீதிமன்றக் கடமைகள், விசேட மருத்துவமனைக் கடமைகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளின் போதும் ஆயுதப் பற்றாக்குறை ஒரு தடையாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
</p><p>இந்தத் தகவல்கள் சிறைச்சாலைத் திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள மிக ஆபத்தான பொருட்கள்.. இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/award-winning-actress-rosamund-pike-sri-lanka-1786174796"></link>
            <id>https://tamilwin.com/article/award-winning-actress-rosamund-pike-sri-lanka-1786174796</id>
            <summary type="text">பிரித்தானிய நடிகையும் மைன்ஸ் அட்வைசரி குரூப் (MAG) அமைப்பின் தூதருமான ரொசமுண்ட் பைக், இலங்கையில் எஞ்சியுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் இறுதிவட்டப் பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய நடிகையும் மைன்ஸ் அட்வைசரி குரூப் (MAG) அமைப்பின் தூதருமான ரொசமுண்ட் பைக், இலங்கையில் எஞ்சியுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் இறுதிவட்டப் பணிகளைப் பார்வையிட வருகை தந்துள்ளார்.</p><p> நாட்டில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட நிலக்கண்ணிவெடி பகுதிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை அகற்றப்பட்டு, தற்போது 10 வீதத்திற்கும் குறைவான (சுமார் 20.8 சதுர கிலோமீட்டர்) நிலப்பரப்பே எஞ்சியுள்ளது. </p><p>இதில் பெரும்பாலான பகுதிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அமைந்துள்ளன.
</p><p>
இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான கண்ணிவெடிகளும் பிற வெடிபொருட்களும் அகற்றப்பட்டு, சுமார் ஒரு மில்லியன் மக்கள் அச்சமின்றி மீள்குடியேறியுள்ளனர்.</p><p></p><h2>252 பேர் பலி..&nbsp;</h2><p> </p><p>இதன் பயனாக, 2002இல் 252 ஆக இருந்த கண்ணிவெடி விபத்துகளின் எண்ணிக்கை 2024இல் இரண்டாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fab14b6-4e3d-4635-97af-cecbf8caeff8/26-6a76dedf68af1.webp' /></p><p> </p><p>சுமார் 2,000க்கும் மேற்பட்ட நபர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளதன் மூலம் தேசிய நல்லிணக்கமும் பொருளாதார மீட்சியும் சாத்தியமாகியுள்ளது.
</p><p>
முழுமையாக நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணையவுள்ள நிலையில், இது வடகிழக்கு மாகாணங்களின் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.</p><p> </p><p>தனது விஜயத்தின் போது மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் செல்லும் ரொசமுண்ட் பைக், அகற்றும் பணியாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். </p><p>2002 முதல் இலங்கையில் இயங்கிவரும் MAG அமைப்பு, இதுவரை சுமார் 103 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KdhX8CZAf80" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-08T07:55:25+00:00</updated>
        </entry>
    </feed>
