<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-22T14:18:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சிறிதரன் எம்.பி வலியுறுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-mass-grave-issue-excavations-carried-1787407180"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-mass-grave-issue-excavations-carried-1787407180</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு இதயச்சுத்தியுடன்
வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு இதயச்சுத்தியுடன்
வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(21.8.2026) உரையாற்றும்போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,

"செம்மணி மனிதப் புதைகுழியின் மதிலைத் தாண்டிய பகுதிகளிலும் மனித
எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், நீதிமன்ற
உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்சவைச் செம்மணிக்கு அழைத்துச் சென்று அவர்
காண்பிக்கும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>அகழ்வுப் பணிகள்</h2><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியில் முதற்கட்டமாக 9 நாள்களும், இரண்டாம் கட்டமாக 45
நாள்களும், மூன்றாம் கட்டமாக 56 நாள்களும் என மொத்தம் 110 நாள்களாக அகழ்வுப்
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f868676-38a1-483b-990a-2ad977c5730d/26-6a89ae628def5.webp' /></p><p> </p><p>இதற்கமைய 584 மனித எலும்புக்கூடுகளும், 170
பிற சான்றுப்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணிப் பகுதிக்குப் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுக்கு அரசு
அனுமதியளித்த போதிலும், கனடா உயர்ஸ்தானிகருக்கும் அவரது குழுவினருக்கும்,
ஆஸ்திரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டமை பாரிய சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசிடம் நிதி இல்லையாயின், இந்தியா,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடி நிதி கோருவதோடு,
தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உண்மையை
வெளிக்கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் இறைமை அபகரிக்கப்பட்டுள்ளது! வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-in-trincomalee-urging-a-federal-solution-1787405837"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-in-trincomalee-urging-a-federal-solution-1787405837</id>
            <summary type="text">இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், வடக்கு - கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளதாக வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், வடக்கு - கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளதாக வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.</p><p> 

சமஷ்டி தீர்வு வேண்டும் என வலியுறுத்தி திருகோணமலையில் இன்றைய தினம் (22.08.2026) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
</p><p>
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன்போது மேலும், நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முறையின் நான்காவது வருட அணிதிரளல் இலங்கையின் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீள்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையை முன்மொழிந்து இவ்வருடத்துடன் 75 வருடங்கள் ஆகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265aff9a-c13d-4780-9ee2-6c453c454852/26-6a89ace1b5119.webp' /></p><h2>வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்</h2><p> 

1900களின் ஆரம்ப முதலே சிங்கள பொதுத்த அரசியல் தலைவர்களின் தமிழ் எதிர்ப்பு பரப்புரைகளும் எழுச்சிகளும், தமிழ் அரசியலில், சமூக நலனுக்காக காப்பாற்றும் தனித்துவமான அரசியல் அமைப்பொன்றின் அவசியத்தை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உணர்த்தியது. 

1921ம் ஆண்டு வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக சேர்.பொன்.அருணாசலம் தலைமையில் “தமிழர் மகாஜன சபை” உருவாக்கப்பட்டது. </p><p>சுதந்திரத்தின் பின் ஆட்சி பொறுப்பேற்ற சிங்கள தலைமைகள் மேற்கொண்ட திட்டமிட்ட அரசியல் ஓரங்கட்டல்கள், நில அபகரிப்புகள், வடக்கு கிழக்கில் அமைவிடத்தி எமது பெருமளவிலான குடியேற்றங்கள் ஆகியன தமிழ் மக்களின் இறைமையை அபகரித்தன. 

இந்த இறைமை மீடலை நிறைவேற்றுவதற்காக அன்றைய தமிழ் தலைமைகள் சமஷ்டிக் கொள்கையை 1951ம் ஆண்டு முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e36000-5443-4fab-ba8e-f800f77f9ee5/26-6a89ace2cdf41.webp' /></p><p> </p><p>ஒரு மக்கள் சமூகம் தனது வாழ்விடப் பிரதேசத்தில் தமக்கான அரசியல் வாழ்வை தாமே தீர்மானித்து, தம்மைத் தாமே நிர்வகித்து, கொள்கைமையாகவும் உரிமைகளுடனும் வாழ்வதற்கு இறைமை அவசியமாகும். 

ஒன்றாக ஆட்சி முறையில் இறைமை பகிர்ந்துகொள்ளப்படல் நடைபெறவில்லை. அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும். மத்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப்பெற முடியும்.</p><h2>13வது திருத்தத்தின் மூலம் ஏமாற்றம்</h2><p> 13வது திருத்தச்சட்டம் இத்தகையாதாகும். இதன் மூலம் வடக்கு கிழக்குக்கு இறைமை பகிரப்படவில்லை. 

அன்று தொட்டு இன்றுவரையிலும் வடக்கு - கிழக்கில் ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள அரசியல் தலைமைகள் இறைமையைப் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை. காலம் நீடிப்பதால் 13வது திருத்தத்தின் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்.</p><p> ஒரு நாட்டின் இறைமை என்பது அந்த நாட்டு மக்களுக்குள்ள உரிமைகள், மக்கள் தமக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அவர்களைக் கொண்டு தமக்கேற்ற அரசியல் சமூக பொருளாதார கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கி… தமக்கான முன்னேற்றத்தை எட்டுவதற்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/523d2ed3-6f71-47c4-9460-4105079c18b4/26-6a89ace39d55d.webp' /></p><p> 

சுருங்கக் கூறின் தமது அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு மக்களுக்குள்ள அதிகாரமாகும். இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் இறைமையை வெறுமனே நிலைத்துடன் குறுக்கிக்கொண்டுள்ளனர். இலங்கையின் நிலைத்தொடர்ச்சியை பாதுகாப்பது தான் நாட்டின் இறைமையை பாதுகாப்பது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளனர். </p><p>

இறைமை என்பது மக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். தமது நாட்டிலோ மாநிலத்திலோ தமக்கான அரசாங்கத்தை தெரிவுசெய்யவும், தமக்கான வாழ்வியலை தீர்மானிக்கவும், உரிமைகளை பிரயோகிக்கவும் மக்கள் கொண்டுள்ள அதிகார பலமே இறைமையாகும். மக்களைத் தவிர்த்துவிட்டு நிலத்தை மாத்திரம் பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd464216-cdf0-4005-b596-5a1ac4531cbc/26-6a89ace46b56f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளுக்கு தந்தையால் நேர்ந்த கதி: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-gets-15-year-jail-term-for-abusing-daughter-1787404390"></link>
            <id>https://tamilwin.com/article/father-gets-15-year-jail-term-for-abusing-daughter-1787404390</id>
            <summary type="text">தனது சொந்த மகளை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சொந்த மகளை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

வவுனியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் குற்றச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h2>&nbsp;அதிரடி தீர்ப்பு</h2><p> 

சம்பவம் இடம்பெற்றபோது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்த நிலையில், சிறுமி தனது தந்தையின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார்.
</p><p>
 சம்பவத்தன்று தந்தை மதுபோதையில் வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7889fb5-efe0-465a-82ef-5525396cbfbd/26-6a89aafc1f17d.webp' /></p><p>
</p><p>
இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகை கடந்த 2021ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><p>

வழக்கின் விசாரணைகளின் அடிப்படையில், எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தண்டனை வழங்கும்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, குற்றம் அவரது சொந்த தந்தையினால் மேற்கொள்ளப்பட்டமை, சிறுமிக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களைத் தடுக்கும் அவசியம் உள்ளிட்ட விடயங்களை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.</p><h2>அபராதத் தொகை</h2><p>

இதன்படி, குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலதிகமாக ஒரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36033d7a-0572-417f-9aad-b136ba31c89c/26-6a89aafcc5553.webp' /></p><p> </p><p>

அந்த நட்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலதிகமாக இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிறுமியின் நலனைப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் இவ்வாறான பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:58:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகமான போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/life-imprisonment-for-youth-found-in-heroin-1787403574"></link>
            <id>https://tamilwin.com/article/life-imprisonment-for-youth-found-in-heroin-1787403574</id>
            <summary type="text">அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை
ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள்
தண்டனை விதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை
ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள்
தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா
தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம்
பிரதேசத்தில் குறித்த இளைஞன் 2கிராமிற்கும் அதிகமான போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்துள்ளார்.</p><p>

இது தொடர்பான வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் 2021 ஆம் ஆண்டு வவுனியா மேல்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.</p><h2>ஆயுள் தண்டனை</h2><p>
</p><p>
எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு ஆயுள்தண்டனை தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a53a8f9d-2879-4ea0-85b5-741decbc6b75/26-6a89a9735a352.webp' /></p><p>
</p><p>
இலங்கை முழுதும் பெருகி வரும் போதைப்பொருள் பழக்கத்தினை கட்டுப்படுத்தும்
நோக்கில் குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
போதைப்பொருள் சார் குற்றச்செயல்களுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை
வழங்கும் என்ற எண்ணப்பாட்டை குறித்த தீர்ப்பும் தண்டனையும் மக்கள் மத்தியில்
உருவாக்கியுள்ளது.
</p><p>
குறித்த வழக்கின் சாட்சிகள் அரச சட்டவாதி ஸ்ரீசிவஸ்கந்த ஸ்ரீயால்
நெறிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் கடுமையான வறட்சி! நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irrigation-department-amid-drought-1787401265"></link>
            <id>https://tamilwin.com/article/irrigation-department-amid-drought-1787401265</id>
            <summary type="text">நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி.ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>நாடளாவிய ரீதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்தளவை எட்டியுள்ளது.</p><p>
 

தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், நிலவும் நீரின் அளவு அந்த பயிர்ச்செய்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0bbcbcd-9565-46f2-acaf-fd1f1876252b/26-6a89a0b18bef7.webp' /></p><h2>காலநிலை</h2><p>இருப்பினும், அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். </p><p>எனவே, அன்றாடத் தேவைகளுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஸ்பேவ பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்ட இளம் தம்பதியினர்! பெண்ணில் உடலில் போடப்பட்ட கரப்பான் பூச்சி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-lodges-complaint-with-hrcsl-against-police-1787385468"></link>
            <id>https://tamilwin.com/article/man-lodges-complaint-with-hrcsl-against-police-1787385468</id>
            <summary type="text">கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
</p><p>இவர்களை சட்டவிரோதமாகக் கைது செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம். 2023 ஆம் ஆண்டிலேயே நடந்துள்ளது.
சட்டத்தரணி தருஷ திஷாரா பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p>தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியுள்ளது. அது 46 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பாகும்.</p><p>குறித்த சம்பவத்தின் பின்னணி...</p><p></p><h2>கடைக்கு சென்ற போது நடந்த சம்பவம்</h2><p>களுபோவிலையில் வசிக்கும் குறித்த தம்பதியினர் கெஸ்பேவையில் உள்ள நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் அதிகாலை வேளையில் இவர்களுக்குப் பசி ஏற்பட்டதால், இரவு கடைக்கு உணவு வாங்குவதற்காக இளைஞர் மட்டும் ஒரு சிறிய ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.</p><p>செல்லும்போது ஒரு பொலிஸ் ஜீப் வண்டி நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கின்றார். அந்த உணவகத்திற்கு அருகில் ஜீப்பில் இருந்தவர்கள் இவரை நிறுத்துகின்றனர். </p><p> "எங்கே செல்கிறீர்கள், எதற்காகச் செல்கிறீர்கள்?" என்று கேட்கின்றனர்.முதலில் அடையாள அட்டையைக் கேட்கின்றனர், இவர் அடையாள அட்டையைக் காட்டுகிறார். </p><p>அடையாள அட்டையில் தெஹிவளை முகவரி உள்ளது.
"இங்கு என்ன செய்கிறாய்?" எனக் கேட்க, இவர் விவரங்களைக் கூறுகிறார். </p><p>கூறிய பிறகு ஜீப்பில் ஏறுமாறு கூறி இவரை இழுக்க முயற்சித்த போது உணவகத்தில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் இருப்பதால் இவர் கடைக்குள் செல்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a479cf1-9130-437c-ad25-cfd5da35cbe9/26-6a89567e89bfe.webp' /></p><p>அதற்குப் பிறகு பொலிஸார் இவரைத் தாக்குகின்றனர்.
கழுத்தைப் பிடித்துத் தள்ளுகின்றனர்,பின்னர் வழுகட்டாயமாக கைவிலங்கிடுகின்றனர். </p><p>மேலும் ஜீப் வண்டியில் வைத்தும் இவரைத் தாக்குகின்றனர். தாக்கிவிட்டு ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் தாக்குகின்றனர். </p><p>முகத்தில் அடிக்கின்றனர், மண்டியிட வைக்கின்றனர். மிகக் கொடூரமாக சித்திரவதை செய்கின்றனர். "நீ 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்துகிறாய் அல்லவா?" எனக் கூறிப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் சுமத்துகின்றனர்.
</p><h2>சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு</h2><p>அதன் பிறகு இவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் உள்ளவர்களையும் மிரட்டி, சுற்றிலும் கிடந்த டொபி தாள்கள் மற்றும் அங்கிருந்த அட்டைப் பெட்டித் துண்டுகளைச் சேகரித்து, அவற்றை புகைப்படங்கள் எடுத்து, போதைப்பொருள் இருந்தது எனப் பொய் வழக்குப் போட்டு இவர்களைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
</p><p>பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கின்றனர். பெண்ணை சிறையில் போடவில்லை.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு, இந்த இளைஞரின் சட்டையைக் கழற்றச் சொல்லித் தாக்கினர். </p><p>தாக்கிவிட்டு பொலிஸ் சிறையில் அடைத்தனர்.
மற்றவர்களை வெளியே உட்கார வைத்திருந்தனர். சிறிது நேரத்தின் பிறகு மனைவியின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.அதன் பிறகு இரு அதிகாரிகள் இருந்த அறைக்கு அந்தப் பெண்ணை தனியாக வருமாறு கூறினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bccc87c-9ed7-4d36-82ca-b2b2ccda1fd4/26-6a89567f3b080.webp' /></p><p>சிறிது நேரத்தில் அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட இளைஞர் கூண்டிற்குள்ளிருந்து, "பெண் பொலிஸ் அதிகாரிகள் யாரும் இல்லாமல், பொலிஸ் நிலையத்திற்குள் பெண்களை தனியறைக்கு அழைத்துச் சென்று என்ன செய்கிறீர்கள்?" என்று கத்திக் கேட்டுள்ளார். </p><p>ஏனெனில் அந்த நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் பெண் அதிகாரிகள் எவரும் இருக்கவில்லை.பின்னர் மனைவி அறையிலிருந்து வெளியே வந்ததும் "என்ன நடந்தது?" என்று கேட்டபோது, பொலிஸார் தன் உடலில் கரப்பான் பூச்சிகளை (Cockroach) போட்டதாக கூறினார்.</p><p>காலை வரை வைத்திருக்கிறார்கள், பிறகு 'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தி பிணை செல்ல அனுமதித்துள்ளனர்.</p><p>அதன் பின்னரே இவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:07:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆனவிந்தாவ சரணாலயத்தில் காட்டுத் தீ! கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfire-anavindha-sanctuary-intensive-bring-1787402959"></link>
            <id>https://tamilwin.com/article/wildfire-anavindha-sanctuary-intensive-bring-1787402959</id>
            <summary type="text">ஆனவிழுந்தாவ சரணாலயத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(21.8.2026) இடம்பெற்றுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆனவிழுந்தாவ சரணாலயத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(21.8.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>

இதனையடுத்து உலங்குவானுர்திகளை பயன்படுத்தி ஆனவிழுந்தாவ ராம்சார் ஈரநிலப் பறவைகள் சரணாலயத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தீ அவ்வப்போது மீண்டும் பற்றி எரிந்துகொண்டே இருந்தது.</p><h2>காட்டுத் தீ</h2><p>இதன் விளைவாக, மாலை வேளையிலிருந்து அப்பகுதி மக்கள், ஆராச்சிக்கட்டுவ பிரதேச
சபை, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அதிகாரிகள், வனவிலங்கு அதிகாரிகள்
மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து, நீர் தாங்கி வாகனங்களைப்
பயன்படுத்தி, இரவு நேரத்தில் தீ மய்யாவ கிராமப் பகுதி மற்றும் போகஹவெட்டிய
ஆகிய பகுதிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/667f994f-ffc8-424a-8a8f-535a73e0d41a/26-6a899bcb71d04.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T12:53:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானுடன் தொடர்பு - ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-faces-police-complaint-batticaloa-1787402432"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-faces-police-complaint-batticaloa-1787402432</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமை, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்</h2><p>

முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜநாதன் பிரபாகரன், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
</p><p>
மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் எழுத்துமூல ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17dd0a21-2d58-4314-a3fd-3a188b5defb6/26-6a899bc8b33d9.webp' /></p><p>
</p><p>
மட்டக்களப்பு நீதவான் ஒருவரை இடமாற்றம் செய்து தனக்கு சாதகமான நீதவானை நியமிக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டில் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை இடித்து, அந்த இடத்தில் மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.</p><h2>&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் ஹிஸ்புல்லா தொடர்பில் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாட்டில் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>

இந்த முறைப்பாடு தொடர்பில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்ததாகவும் இராஜநாதன் பிரபாகரன் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b331cf78-1700-40f4-802d-f78ecd2cbb8e/26-6a899bc996931.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, இந்த நடவடிக்கை முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல எனவும், குறிப்பிட்ட ஒரு தனிநபருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையே எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தனிநபர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:53:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meenuwangoda-shooting-killer-arrested-1787399962"></link>
            <id>https://tamilwin.com/article/meenuwangoda-shooting-killer-arrested-1787399962</id>
            <summary type="text">மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன்&amp;nbsp; பொலிஸார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன்&nbsp; பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
 

குறித்த கொலைச் சம்பவத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>சந்தேகநபர் கைது&nbsp;</h2><p>
</p><p>
 

கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 11 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/173f5f7b-f23b-4b02-b2d5-d2305937fee8/26-6a89932fb85b9.webp' /></p><p>
</p><p>
 

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 13ஆம் திகதி மீனுவாங்கொடை பகுதியில் 36 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகவே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T12:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[93 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்! 76 பிரிவுகள் அதிஅபாய வலயங்களாகப் பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-surpass-93-000-deaths-report-1787398697"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-surpass-93-000-deaths-report-1787398697</id>
            <summary type="text">இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு
நோயாளர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளதுடன்,
உயிரிழந்தவர்களின் எண்ணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு
நோயாளர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளதுடன்,
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆகப் பதிவாகியுள்ளது என்று சுகாதார அமைச்சின்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன் நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய
வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>டெங்கு நோயாளர்கள்</h2><p>

மொத்த டெங்கு நோயாளர்களில் பாதியளவிற்கும் அதிகமானோர், அதாவது 52.94
சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/232e00f8-bcca-4a27-9d0c-5b17f776a237/26-6a898def11024.webp' /></p><p> </p><p>தெற்கு மாகாணத்தில் 13
ஆயிரத்து 719 பேரும், மத்திய மாகாணத்தில் 8 ஆயிரத்து 476 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 19 ஆயிரத்து 945
நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><h2>அபாய வலயங்கள்</h2><p>
</p><p>
மேலும் கொழும்பு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 588 பேரும், கண்டியில் 6 ஆயிரத்து
786 பேரும், மாத்தறையில் 6 ஆயிரத்து 82 பேரும், களுத்துறையில் 6 ஆயிரத்து 59
பேரும், காலியில் 5 ஆயிரத்து 133 பேரும், இரத்தினபுரியில் 4 ஆயிரத்து 981
பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0efad99-af1e-4642-9355-e66216322d23/26-6a898defb9250.webp' /></p><p>

மாதாந்தப் பதிவுகளின்படி ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29 ஆயிரத்து 964
நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
ஜூன் மாதத்தில் 21 ஆயிரத்து 533 பேரும், ஒகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாள்களில்
8 ஆயிரத்து 297 நோயாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T11:54:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பரபரப்பை ஏற்படுத்திய ஆலய சம்பவம் - வீடு திரும்பிய பாதிக்கப்பட்டோர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/who-suffered-eye-injuries-returned-home-1787396212"></link>
            <id>https://tamilwin.com/article/who-suffered-eye-injuries-returned-home-1787396212</id>
            <summary type="text">பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவைத் தொடர்ந்து கண் பாதிப்புக்குள்ளான 375 பேர் நேற்று(21) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவைத் தொடர்ந்து கண் பாதிப்புக்குள்ளான 375 பேர் நேற்று(21) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்றனர்.</p><p>

கண் வலி, கண்களில் எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்டஅறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.</p><p></p><h2>கண் பாதிப்பு</h2><p>
</p><p>
சிகிச்சையின் பின்னர் கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் தற்போதுவீடு திரும்பியுள்ளனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d47127-5a55-4d8b-93ea-7d85619f2ecf/26-6a89826dd7fc6.webp' /></p><p>

வீடு திரும்பியுள்ளவர்கள், வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு அமைவாக தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாகவும் அர்ப்பணிப்புடனும் சிகிச்சை
வழங்கிய கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட
அனைத்து வைத்தியசாலை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62a01958-7c96-40f8-81cb-554697bb26a3/26-6a89826eae749.webp' /></p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-22T11:05:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74900 ஹெக்டெயரில் நெற்செய்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-cultivation-in-batticaloa-district-1787392730"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-cultivation-in-batticaloa-district-1787392730</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74900 ஹெக்டெயரில்
நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 15 இலட்சத்து 43 ஆயிரத்து 500 கிலோகிராம் உர த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74900 ஹெக்டெயரில்
நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 15 இலட்சத்து 43 ஆயிரத்து 500 கிலோகிராம் உர தேவையினை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முன்னெடுக்கப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை
தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட
விவசாய பணிப்பாளர் சிவனேசனின் ஒருங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர்
ஜே.எச்.அருள்ராஜா தலைமையில் நடைபெற்றது.
</p><p>இந்த கூட்டத்தில் மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஆர்.யோகராஜன், தேசிய உரச்
செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர்
கே.திலகநாதன் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாய
திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fbd5cde-963a-47a4-bc57-16b94b345e5f/26-6a897bd64f4b4.webp' /></p><p>
</p><h2>விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு</h2><p>குறிப்பாக, தற்போதைய எல் நினோ தாக்கம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய காலநிலை
மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக்
குறைப்பதற்கும், அவர்களை வலுப்படுத்தி சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்கும்
தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>அத்துடன், விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வங்கிகளினால்
முன்னெடுக்கப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள், விவசாயக் காப்புறுதி, குளங்களை
அபிவிருத்தி செய்தல், மண் அகழ்வு, விவசாய வீதி அபிவிருத்தி செய்தல், மற்றும்
வாய்க்கால் புனர்நிர்மாணம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக
ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a993917-4c9d-496a-991c-309a55b62677/26-6a897bd749543.webp' /></p><p>
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பாகவும்,
மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்
கலந்துரையாடப்பட்டது.
விதை நெல் வழங்கள், பயிர்ச்செய்கைக்கான உரம் வழங்குதல், யானை மனித மோதல்கள்,
நஷ்டஈடு வழங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான
கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான
பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.</p><h2>மாவட்டத்தில் நிலவும் வறட்சி</h2><p>
</p><p>மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக பல குளங்களின் நீர்மட்டம்
மிகவும் குறைவடைந்துள்ளமை தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன்,
எதிர்வரும் பெரும்போகச் செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நீர்
முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.குறிப்பாக எல் நினோ
காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சூழல்
மாற்றங்கள், நீரைப்பெற்றுக் கொள்வதற்கான நிலைகள் மற்றும் விவசாயிகள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d033a3c3-547b-446c-a24b-a7384a12976f/26-6a897bd823b85.webp' /></p><p>
</p><p>நீர்பாசன திணைக்களம் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் அவ்றறினால்
விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் குறித்தும் எதிர்காலத்தில் நீர்பாசன
திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பது குறித்தும் இதன்போது
ஆராயப்பட்டது.
குறிப்பாக முந்தனையாறு திட்டத்தினை முன்கொண்டு செல்வதற்கு உள்ள தடைகள்
குறித்தும் அதனை திட்டமிட்டு செய்வதற்கான நீர்பாசன திணைக்களத்தின் மந்தகதிய
செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விவசாயிகளினால் காரசாரமான கருத்துகள்
முன்வைக்கப்பட்டன.</p><p>
இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கான நெல் விதைப்பு காலத்தில் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் மற்றும் விதைப்பு காலத்தில் தடையின்றி உரத்தினைப் பெற்று கொள்ளுதல் போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்படதுடன் அவற்றிற்கான
தீர்வுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a6c8fd-be42-43eb-ae9d-0326cef44161/26-6a897d682fba8.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T10:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விழிப்புடன் இருக்கவும்! கடற்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அம்பர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/amber-alert-for-many-coastal-areas-of-the-country-1787393611"></link>
            <id>https://tamilwin.com/article/amber-alert-for-many-coastal-areas-of-the-country-1787393611</id>
            <summary type="text">இலங்கையின் பல கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>சனிக்கிழமை (22) காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10:30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p>எனவே கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கடல் கொந்தளிப்பு</h2><p>காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான கடல் பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6652b19-3dda-4d79-b2a5-29bbb952a5c2/26-6a8979d58f142.webp' /></p><p>குறித்த பகுதிகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>

மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, கடல் பகுதிகளில் பயணிக்கும் கடற்படையினரும், கடற்றொழில் சமூகத்தினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T10:28:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனப் பதிவிற்கான போலி ஆவணங்கள்! நாரஹேன்பிட்ட பகுதியில் வசமாக சிக்கிய மூவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-arrested-fake-vehicle-registration-documents-1787389766"></link>
            <id>https://tamilwin.com/article/three-arrested-fake-vehicle-registration-documents-1787389766</id>
            <summary type="text">நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைதாகியுள்ளனர்.&amp;nbsp;

மோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைதாகியுள்ளனர்.&nbsp;</p><p>

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகே வாகனப் பதிவிற்கான ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. </p><p>இதனை தொடர்ந்தே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். </p><p>கைது செய்யப்பட்டவர்கள் 39, 52 மற்றும் 56 வயதுடைய நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832c37c2-8d52-4c77-9914-140720ed385b/26-6a8974d542d04.webp' /></p><h2>கைப்பற்றப்பட்ட பொருட்கள்</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் லெட்டர்ஹெட்களைக் கொண்ட 2 வருமான உரிம விண்ணப்பப் படிவங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் அமைதி நீதியரசர் (JP) ஒருவரின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

மேலும், போலி சான்றிதழ்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையின் நிழற்படப் பிரதி , போலித் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் வாகனப் பதிவுச் சான்றிதழ் பிரதி, சட்டத்தரணி ஒருவரின் விவரங்களைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கடிதப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோப்புத் தாள்கள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T10:07:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA பரிசோதனையில் புதிய திருப்பம்! அறையில் கிடைக்கப்பெற்ற பொருட்களால் அதிர்ச்சி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dna-evidence-emerges-in-anuradhapura-monk-case-1787384597"></link>
            <id>https://tamilwin.com/article/dna-evidence-emerges-in-anuradhapura-monk-case-1787384597</id>
            <summary type="text">அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவரை துர்நடத்தைக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவரை துர்நடத்தைக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முக்கியமான விஞ்ஞான ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளதாக தனியார் வலையொளியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாயில் காணப்பட்ட உயிரியல் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவை பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA மாதிரியுடன் பொருந்துவதாகத் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சந்தேகநபரின் அறிக்கை</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமி தனது முன்னைய வாக்குமூலத்தில், கூறப்பட்ட சில விடயங்களை குறித்த DNA பரிசோதனை முடிவு&nbsp; விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb4a874-ddce-4722-b86b-a9f6c97dfff0/26-6a895d3005683.webp' /></p><p>
மேலும், சந்தேகநபரான தேரர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் இருந்து பெண்களுடையதாக சந்தேகிக்கப்படும் நீண்ட தலைமுடிகள் சிலவற்றையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.
</p><p>
எனினும், அந்த தலைமுடிகள் பாதிக்கப்பட்ட சிறுமியுடையவை அல்ல என்பது DNA பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், பாதிக்கப்பட்ட சிறுமியைத் தவிர வேறு பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறித்த மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;DNA அறிக்கை</h2><p>

இந்த வழக்கு தொடர்பான முன்னைய அறிக்கைகளில், சிறுமியின் ஆடைகளில் எந்தவிதமான உயிரியல் மாதிரிகளும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் இந்த DNA அறிக்கை வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக அமையக்கூடும் என சட்டத்துறை நிபுணர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d18fe0b-6832-4e61-a939-854198b9587e/26-6a895d30eccbc.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் தற்போது விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், வழக்கு எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சந்தேகநபரான தேரர் நீதிமன்றத்திற்கு வரும் சந்தர்ப்பங்களில் கறுப்பு நிற கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இரகசியமாக வருவது தொடர்பிலும் விசாரணை அறிக்கையொன்றை கோருமாறு அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br><br><b><i>You may Like tHIS..<br><br><br></i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m0kjgt1GWv8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-22T09:59:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/financial-assistancepresident-fund-special-needs-1787390915"></link>
            <id>https://tamilwin.com/article/financial-assistancepresident-fund-special-needs-1787390915</id>
            <summary type="text">பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22.08.2026) பிற்பகல், ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22.08.2026) பிற்பகல், ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
</p><p>இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டது.</p><h2>நிதியத்திலிருந்து நிதியுதவி</h2><p>
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கி, அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac077dcd-9d1d-4bc3-9604-2441b7ffb4be/26-6a896e5f6b324.webp' /></p><p>
</p><p>விசேட தேவையுடைய மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு தேவையான ஆதரவை வழங்குவதும், அவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் சமூக நலக் கொள்கைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.
</p><p>நிகழ்வில் அரச அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T09:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பளிப்பார்! முன்னாள் சபாநாயகரிடம் நெகிழ்ந்து பேசிய ‘பிரீ லோயர்ஸ்’ அமைப்பு....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/free-lawyers-karu-jayasuriya-1787390194"></link>
            <id>https://tamilwin.com/article/free-lawyers-karu-jayasuriya-1787390194</id>
            <summary type="text">&amp;nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை பரிசீலிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை பரிசீலிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்குமாறு பிரீ லோயர்ஸ் (Free Lawyers) அமைப்பு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கலந்துரையாடப்பட்ட விடயங்கள்</span></p><p>‘பிரீ லாயர்ஸ்’ (Free Lawyers) அமைப்பு உட்பட சுதந்திர இயக்க மையத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று கரு ஜயசூரியவை சந்தித்த போதே இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
</p><p>கரு ஜயசூரியவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட மேலதிக தகவல்கள்..
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார் என்பதை நாம் அறிவோம். </p><p>உங்களால் ஒரு கோரிக்கையை முன்வைக்க முடியும். அவர் இதில் ஓரடி பின்வாங்குவதால் அவருக்கு எந்த அவமானமும் ஏற்படப்போவதில்லை. </p><p>ஜனாதிபதிக்கும் தவறுகள் நேரலாம். எனவே, அவர் ஓரடி பின்வாங்குவது ஒரு பிரச்சினையாகாது.
எமக்கு இப்போது இந்த நடவடிக்கைகளைப் பற்றி பேச வேண்டியுள்ள ஒரே இடம் நீதிமன்றமே ஆகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e122df2a-80a3-4f27-a18f-6d614b11d9d1/26-6a8968f4c99e5.webp' /></p><p>எனவே, இப்போது நீதிமன்றத்தையும் முழுமையாகத் தமக்குக் கீழ் கொண்டுவரவா இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டார்.
</p><p>கரு ஜயசூரிய தெரிவித்த கருத்து...
ஆரம்பத்திலிருந்தே நாமும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வேண்டாம் என்றே கூறினோம்.</p><p>சட்டத்தரணிகள் சங்கமும் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனமாகும். நாமும் அதற்காகவே ஆதரவு தெரிவித்தோம்.எனவே, இங்கு அதுவே அவசியமாகிறது. இதனால், இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என நாம் நம்புகிறோம் என குறிப்பிட்டார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T09:20:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugishwara-bandara-admitted-prison-hospital-illnes-1787387680"></link>
            <id>https://tamilwin.com/article/sugishwara-bandara-admitted-prison-hospital-illnes-1787387680</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அரசாங்கத்துக்குச் சொந்தமான 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>மருத்துவ சிகிச்சை</h2><p>

நவ மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுகீஸ்வர பண்டாரவின் காலில் காணப்பட்ட ‘வெரிகோஸ்’ (Varicose veins) நிலைமை தீவிரமடைந்து, நரம்பு ஒன்று வெடித்ததன் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவருக்குத் தேவையான முறையான மருத்துவ சிகிச்சை உடனடியாக வழங்கப்படாவிட்டால், கடுமையான பெக்டீரியா தொற்று ஏற்படக்கூடும் என அவருக்காக முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdd504ab-34fc-4d53-91e9-2eeda5cb5328/26-6a8965915d1f0.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, அவரது காலை அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படக்கூடும் என சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இந்த உடல்நிலையை கருத்திற்கொண்டு, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடக் கோரி, சட்டத்தரணிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.</p><h2>சிறைச்சாலை வைத்தியசாலை</h2><p>
</p><p>
எனினும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியின் உள்நிர்வாகம் அல்லது சுகாதார வசதிகள் தொடர்பில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தகைய அதிகாரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கே உரியது என சுட்டிக்காட்டிய நீதவான், குறித்த கோரிக்கையை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் நேரடியாக முன்வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9204fe3-4e66-4676-b945-a709e73b0830/26-6a896592536fd.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, ஏற்பட்டுள்ள உடல்நிலையை கருத்திற்கொண்டு, சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று (21) பிற்பகல் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
சுகீஸ்வர பண்டார, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில் விசேட திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T09:04:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் முழு இலங்கைக்கும் ஏற்படவுள்ள தாக்கம்! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-by-president-impact-of-el-nino-1787386446"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-by-president-impact-of-el-nino-1787386446</id>
            <summary type="text">எல் - நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகளின் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் - நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகளின் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது. </p><p>

குறித்த கூட்டம் நேற்றைய தினம் (21.08.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.</p><h2>ஜனாதிபதி கேள்வி</h2><p> </p><p>

இதுவரை பாதிக்கப்பட்டுள்ள எல் - நினோ நிலைமையால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும், மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய நீர்தேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வினவினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/561ca39b-3e28-47f7-b58e-7c3fcfc0a27a/26-6a89641407db4.webp' /></p><p> </p><p>

கடந்த யால பருவத்தில் முன்னெச்சரிக்கையுடன் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பயிர்ச் சேதங்கள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக விவசாய அமைச்சு அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய நீர்தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.</p><h2>முழு நாட்டிற்கும் கடுமையான வறண்ட காலநிலை</h2><p> 

அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்களின்படி எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் முழு நாட்டிற்கும் கடுமையான வறண்ட காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், அந்த தாக்கத்தினால் விவசாயம், பெருந்தோட்டத் தொழில், நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும் நீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அந்த நிலையை எதிர்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வினவினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deb0efe0-bb1c-42ed-a114-f13bd4d3eff2/26-6a896415a0274.webp' /></p><p> </p><p>

பாதிக்கப்படக்கூடிய காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றிப் பேணுவதுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்களின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து அந்த நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ba7c16-22ca-4a44-b0a5-8f7e9fa2fc50/26-6a8964172279e.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T08:59:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இசைக்குயில் நந்தா மாலினியின் மறைவு - பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-rites-of-the-late-nanda-malini-1787387783"></link>
            <id>https://tamilwin.com/article/final-rites-of-the-late-nanda-malini-1787387783</id>
            <summary type="text">இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய, மூத்த பாடகியான நந்தா மாலினி நந்தா மாலினியின் இறுதிக்கிரியைகள் பொரளைப் பொது மயானத்தில் இன்று (22) இடம்பெறவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய, மூத்த பாடகியான நந்தா மாலினி நந்தா மாலினியின் இறுதிக்கிரியைகள் பொரளைப் பொது மயானத்தில் இன்று (22) இடம்பெறவுள்ளன. </p><p>

அன்னாரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்போது நாவல, விஜயபாகு மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி சங்கீத ஆச்சிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.</p><h2>இறுதிச் சடங்கு</h2><p>
</p><p>

மதச் சடங்குகளைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணி வரை உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.</p><p>

பின்னர், உடலை ஏற்றிச் செல்லும் இறுதி ஊர்வலம், இறுதிச் சடங்குகளுக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இறுதிச் சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9Lwh5uUgsJ0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
மூத்த பாடகியான நந்தா மாலினி தனது 82ஆவது வயதில் கடந்த 20ஆம் திகதி காலமானார்.

அவருக்கு அரசியல்வாதிகள் , பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.</p><p>

இந்தநிலையில் நந்தா மாலனி அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.</p><p>

நுகேகொட, நாவல வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-22T08:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலையே அரசாங்கத்துக்கும்..! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-in-same-situation-as-gotabaya-1787383846"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-in-same-situation-as-gotabaya-1787383846</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற தவறினால் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என முன்னாள் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற தவறினால் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>&nbsp;நம்பிக்கையை ஏற்படுத்திய ஆட்சி</h2><p>
</p><p>
கடந்த காலங்களில் ஆட்சி அமைத்த ஒவ்வொரு தலைவரும் மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நம்பிக்கையை ஏற்படுத்தியே ஆட்சியை முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/125c08e1-1297-47d8-924c-25bb1c941e9c/26-6a8962ab65907.webp' /></p><p> 

ஆனால், தற்போதைய அரசாங்கத்திடம் மக்கள் ஆதரவை பெறக்கூடிய எந்தவொரு திட்டமும் இல்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் இதனை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். </p><p>

பொருளாதாரத்தைச் சீரமைக்க முடியாததால், குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் பொலிஸ் துறையைப் பயன்படுத்தி, முறையான சாட்சியங்கள் இல்லாமல் எதிர்கட்சியினரை கைது செய்து சிறையில் அடைத்து அரசாங்கம் தனது இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.</p><p>

தற்போது அரசாங்கம் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது. </p><h2>அரசியலமைப்பு திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு</h2><p>

 இந்த அரசியலமைப்பு திருத்தத்துக்கு நாட்டின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சர்வதேச சமூகமும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d8d087b-4230-4ffb-82c0-b887d5a93b19/26-6a8962ac16d77.webp' /></p><p>

அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக்கொள்வதால், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகள் தடைப்பட்டு நாடு தனிமைப்படுத்தப்படும்.</p><p>

எனவே, அரசாங்கம் ஜனநாயக விரோத அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற தவறினால், இந்த சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விட்டாலும், அதில் வென்றாலும் அல்லது தோற்றாலும் அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்படும். இறுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T08:49:52+00:00</updated>
        </entry>
    </feed>
