<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-11T14:29:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகள் தாக்குதல்: சவூதி அரேபியாவின் மசகு எண்ணெய் விநியோகம் வீழ்ச்சி - 30 ஆண்டுகளுக்கு பின் பெரும் நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-s-crude-oil-supply-drops-1789136509"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-s-crude-oil-supply-drops-1789136509</id>
            <summary type="text">யெமனின் ஹவுதி அமைப்பினர் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய
தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவூதி அராபியாவின் மசகு
எண்ணெய் விநிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யெமனின் ஹவுதி அமைப்பினர் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய
தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவூதி அராபியாவின் மசகு
எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு 6 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளதாக
சர்வதேச சக்தி முகமையகம்(IEA) தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில், இன்று(11.09.2026) அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. </p><h2>


மசகு எண்ணெய் விநியோகம் சரிவு</h2><p>

இது கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகக் குறைந்த
விநியோக அளவாகும்.

பாப் எல்-மண்டேப் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள், சவூதியின் ஜாஸான் எண்ணெய்
சுத்திகரிப்பு நிலையம், யான்பு பகுதிக்கு அருகிலுள்ள கப்பல் போக்குவரத்துப்
பாதைகள் மற்றும் ஈராக்கிய ஆதரவுக் குழுக்களால் அப்கைக் எண்ணெய் பதப்படுத்தும்
மையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களே இந்த விநியோக வீழ்ச்சிக்கு
முதன்மை காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55ce44c0-5302-4e12-90ba-d14a329e9dd1/26-6aa40ebf371e8.webp' /></p><p>

இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டிற்கான சவூதி அராபியாவின் சராசரி நாளாந்த மசகு
எண்ணெய் விநியோக முன்னறிவிப்பை சர்வதேச சக்தி முகமையகம் நாளொன்றுக்கு 7.6
மில்லியன் பீப்பாய்களாகக் குறைத்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உற்பத்தி மீண்டும் இயல்பு நிலைக்குத்
திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு முக்கிய காரணம் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தில் தாம் சந்தைக்கு வழங்கிய மற்றும் உற்பத்தி செய்த
எண்ணெயின் அளவு சர்வதேச சக்தி முகமையகத்தின் மதிப்பீட்டை விட அதிகமாக
இருந்ததாக சவூதி அரேபியா ஓபெக்(OPEC) அமைப்பிற்குத் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T14:22:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: ட்ரம்ப் விடுத்த கோரிக்கையால் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-midterm-elections-republican-party-s-trump-1789134070"></link>
            <id>https://tamilwin.com/article/us-midterm-elections-republican-party-s-trump-1789134070</id>
            <summary type="text">எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலைத் தனக்கான
ஒரு மக்கள் தீர்ப்பாகக் கருதி வாக்களிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலைத் தனக்கான
ஒரு மக்கள் தீர்ப்பாகக் கருதி வாக்களிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
விடுத்த வேண்டுகோள், குடியரசுக் கட்சியினரிடையே புதிய விவாதங்களை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
டெக்சாஸின் டலஸ் நகரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப்,
"நானே தேர்தலில் போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள்" என ஆதரவாளர்களைக்
கேட்டுக்கொண்டார்.
</p><p>
எனினும், ட்ரம்ப்பை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த தேர்தல் உத்தி
தொடர்பில் மாநாட்டில் கலந்துகொண்ட தீவிர ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள்
சிலர் தமது கவலையை வெளியிடுகின்றனர்.</p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஈரான் போரினால்
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், சுயாதீன வாக்காளர்களை
ஈர்ப்பதில் ட்ரம்ப் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
</p><p>
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி ஜனாதிபதி ட்ரம்பின் மக்கள் ஆதரவு விகிதம்
கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், தீவிரக் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டுவதற்கு
ட்ரம்ப் அவசியமானவர் என்ற போதிலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் இந்த
உத்தி எந்தளவுக்குப் பலனளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed62f99c-62dd-4c7a-876c-92d692a2dde9/26-6aa40895b7c2e.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, தேர்தல் வெற்றி பெற்றால் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டொலர்
"ட்ரம்ப் ஈவுத்தொகை" வழங்கப்படும் என அறிவித்த ட்ரம்ப், விலைவாசி உயர்வு
குறித்த வாக்காளர்களின் உடனடிக் கவலைகளுக்குத் தெளிவான தீர்வுகளை
முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கில் ஒதுக்கப்பட்ட மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் - மனுவில் முன்வைத்த குற்றச்சாட்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/displaced-people-of-myliddy-1789134439"></link>
            <id>https://tamilwin.com/article/displaced-people-of-myliddy-1789134439</id>
            <summary type="text">வலி. வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள்
அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு
அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள்
அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு
அழைக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. </p><p>



மயிலிட்டியில் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக போராடிவரும் ஒரு பகுதி
மக்கள் இன்றைய தினம்(11.09.2026) வெள்ளிக்கிழமை ஒன்று திரண்டு தெல்லிப்பழை பிரதேச
செயலகத்திற்கு சென்று குறித்த மனு கையளித்துள்ளனர்.
</p><h2>
நிராகரிக்கப்பட்ட மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள்</h2><p>
இதன்போது, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும்
வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில்
கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில்
இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள்
அழைக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2643851-22eb-41cf-8748-29636f23f476/26-6aa4070191198.webp' /></p><p>

இதனால், காணிகளை இழந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் உரிய அதிகாரிகளின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமது தரப்பு
தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனவே, எதிர்வரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு தமது
பிரதிநிதிகளுக்கும் மீண்டும் உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என
மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T13:50:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து! நான்கு பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-injured-in-stabbing-kilinochchi-fuel-station-1789131779"></link>
            <id>https://tamilwin.com/article/four-injured-in-stabbing-kilinochchi-fuel-station-1789131779</id>
            <summary type="text">கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.9.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.9.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்றிரவு எட்டு
மணியளவில் கனரக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் எரிபொருளை நிரப்பிய
பின்பு வாகனத்தை முன்னோக்கி விடுமாறு எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் கூறினார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>இதன்போது பணியாளருடன் முரண்பட்டு சென்ற கனரக வாகன சாரதி சிறிது
நேரத்தின் பின்பு ஐந்து பேருடன் வருகை தந்து எரிபொருள் நிரப்பு நிலைய
உரிமையாளர், முகாமையாளர், பணியாளர், வாடிக்கையாளர் மீது கத்தி குத்து மற்றும்
தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be7afe28-beb2-4f04-a04a-738d2256153b/26-6aa403147753a.webp' /></p><p>சம்பவத்தில் காயமடைந்த நான்கு
பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெறும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் முக்கிய மீளாய்வு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/road-development-projects-underway-in-kilinochchi-1789133214"></link>
            <id>https://tamilwin.com/article/road-development-projects-underway-in-kilinochchi-1789133214</id>
            <summary type="text">நடைமுறைப்படுத்திய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டமானது, இன்று(11....</summary>
            <content type="html"><![CDATA[<p>நடைமுறைப்படுத்திய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த கூட்டமானது, இன்று(11.09.2026) குறித்த மீளாய்வு கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன், தேசிய
வேலைத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் ஆகியோரின் தலைமையில்
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்டுள்ள பிரதேச செயலாளர்
பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்ற வீதி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, கரைச்சி, பூநகரி,
பச்சிலைப்பள்ளி, கண்டாவளை உள்ளிட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிற்கு
முன்மொழியப்பட்ட வீதி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.</p><h2> 

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதி</h2><p>

அரசாங்கத்தினால் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள நிலையில், சில வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படாத
நிலை தொடர்பாகவும், அத்துடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற
வீதிகளின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53519221-e9e4-4e40-b256-698c7cb6c555/26-6aa401ceaebe3.webp' /></p><p> </p><p>

வீதி அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துவதில் துறைசார்ந்த
திணைக்களங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் பல்வேறு அனுமதிகளைப்
பெற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள கிராமிய மற்றும் நகர வீதிகளின் நிலைமைகள் தொடர்பாக
அதிகாரிகளிடம் விளக்கம் பெறப்பட்டு,
வீதி அபிவிருத்திப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்கள் தொடர்பாகவும், அதேபோன்று
வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வது
தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

திருநகர் வீதி அபிவிருத்தி தொடர்பாக சமூக ஊடகங்களில் ஆலமரம் வெட்டுதல்
குறித்து பல்வேறு கருத்துகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருந்த நிலையில், அது
தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
</p><h2>
வீதி அபிவிருத்திப் பணிகள்</h2><p>

வீதி அபிவிருத்திப் பணிகளின் போது தொழில்நுட்ப ரீதியாக மரங்களை அகற்ற வேண்டிய
அவசியம் ஏற்படும் சூழ்நிலைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாட்ட நிலையில்,
அவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அனுமதிகளை
வழங்க முடியும் என மாவட்ட செயலாளர் கருத்து தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f7eb59-0f1f-432c-af48-bf1e05fcbeee/26-6aa401cf8ccfa.webp' /></p><p>
</p><p>
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து வீதி வேலைத்திட்டங்களையும்
திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்வதன்
அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன்,
2026 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீதி வேலைத்திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டும்.

அதற்கமைய, ஒவ்வொரு வீதி வேலைத்திட்டத்திற்கும் தேவையான நடவடிக்கைகளை 
முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

 அதே சமயம், வீதி அபிவிருத்திப் பணிகளில் ஏற்படுகின்ற சவால்களை
உடனடியாகத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் 
தெரிவிக்கப்பட்டதுடன், துறைசார்ந்த நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த
செயற்பாடு அவசியம் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T13:27:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகாமிலிருந்து தனித்து இலங்கை திரும்பிய சிறுவன் கடற்படையினரால் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-left-camp-alone-return-sri-lanka-rescued-navy-1789130920"></link>
            <id>https://tamilwin.com/article/boy-left-camp-alone-return-sri-lanka-rescued-navy-1789130920</id>
            <summary type="text">தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவம்&nbsp;இன்று(11.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக</h2><p>
</p><p>தமிழகத்திலிருந்து படகு மூலம் பயணித்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
இடைப்பட்ட கடற்பரப்பில் உள்ள மணல் திட்டுக்களில் இலங்கையின் கட்டுப்பாட்டு
எல்லைக்குள் நின்ற சமயமே மேற்படி சிறுவன் கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு
மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fcba5cf-763f-4557-afbd-cce7b5124cbe/26-6aa401ba22150.webp' /></p><p>மீட்கப்பட்ட சிறுவன் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுச் சேமிப்புகள் வீழ்ச்சியடையும்போது ஏற்படும் விளைவு - மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cbsl-governor-nandhalal-statement-about-economy-1789126225"></link>
            <id>https://tamilwin.com/article/cbsl-governor-nandhalal-statement-about-economy-1789126225</id>
            <summary type="text">போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பை பேணுவது ஒரு ஆடம்பரமல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பை பேணுவது ஒரு ஆடம்பரமல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். </p><p>

கொழும்பில் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சேமிப்பு முகாமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதபோது என்ன நடக்கும் என்பதை, 2022ஆம் ஆண்டில் நாம் முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடி மிகத் தெளிவாகவும் நடைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளது.</p><h2>வெளிநாட்டுச் சேமிப்புகள்</h2><p> </p><p>வெளிநாட்டுச் சேமிப்புகள் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடையும்போது, அதன் விளைவுகள் மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் அல்லது சேமிப்பு முகாமைத்துவப் பொறுப்புகளையும் தாண்டிச் செல்கின்றன. </p><p>இறக்குமதி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிறது, நாணய மாற்று விகித அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. பணவீக்க அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். அத்துடன், பொருளாதாரமும் நாடும் மீதான நம்பிக்கையும் சீர்குலைந்து போகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee6fcec-7fb5-4234-b93a-2e34d284f264/26-6aa3f48aa9c06.webp' /></p><p> </p><p>2022 நெருக்கடி காலப்பகுதியில் இந்த விளைவுகளை நாம் மிகக் கடினமான அனுபவங்களாக எதிர்கொள்ள நேரிட்டது. முக்கியமானது என்னவென்றால், இருந்த கொள்கை ரீதியான வெளியும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டமையாகும்.</p><h2>பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை</h2><p> எனவே, அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தெளிவாக உள்ளது. போதுமான அளவு வெளிநாட்டுச் சேமிப்பைப் பேணுவது என்பது ஆடம்பரமான விடயமல்ல. அது பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையின் அவசியமான அங்கமாகும். </p><p>நடைமுறையில், சேமிப்புகளைத் திரட்டுவது சிக்கலான ஒரு விடயமாகும். ஏனெனில் நல்ல காலங்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை, கடினமான காலப்பகுதிகளும் ஏற்படக்கூடும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T12:43:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலிட்டியில் தொடரும் போராட்டம் - காணி உரிமையாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கஜேந்திரகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ongoing-protest-in-mayiliddy-1789129322"></link>
            <id>https://tamilwin.com/article/ongoing-protest-in-mayiliddy-1789129322</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(11.09.2026) மயிலிட்டியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
</p><p>

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
</p><h2>

காணி உரிமையாளர்களின் கோரிக்கை</h2><p>
இந்தநிலையில் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a53eb9-f5dd-4122-bace-cd9d56257f64/26-6aa3f2c0d7c03.webp' /></p><p>
</p><p>
தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருவதுடன் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.</p><p>

இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர், காணி உரிமையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82c95c7-3f94-48ed-b303-8aa1bc51f908/26-6aa3f2c1d21c6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1918ce4-798a-4596-9715-aacf3539badf/26-6aa3f2c2bf1a5.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T12:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரியில் நாளை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-hunger-strike-in-chavakachcheri-tomorrow-1789127794"></link>
            <id>https://tamilwin.com/article/massive-hunger-strike-in-chavakachcheri-tomorrow-1789127794</id>
            <summary type="text">அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் நாளை மாபெரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் நாளை மாபெரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,
தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை
என்று குற்றம் சாட்டியுள்ள சாவகச்சேரி நகர சபை முன்னாள் உப தவிசாளர்
ஞானப்பிரகாசம் கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்
கூட்டணியின் உறுப்பினர் மயூரன் ஆகியோர் நாளை(12.09.2026) சாவகச்சேரியில்
மாபெரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
</p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்</h2><p>
சமகால விவகாரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903ef8d3-4076-4e1a-8ba9-b29f1b2153e6/26-6aa3f3f98b1d0.webp' /></p><p>
</p><p>
நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சாவகச்சேரி பேருந்து நிலைய
வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் குறித்து அவர்கள் மேலும்
தெரிவித்ததாவது,&nbsp;"செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 500 இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள்
கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்குச் சர்வதேச விசாரணை கோருதல்,
காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்துதல் மற்றும்
நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய முக்கிய
கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளன.</p><p>உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்துக்குள் 'பிரஜா சக்தி' அமைப்பை உருவாக்கித்
தலையீடு செய்வதற்கு எதிராகவும், ஆளுநரால் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள்
மற்றும் தவிசாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும்
எதேச்சதிகார அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப்
போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. </p><h2>அரசின் தற்போதைய செயற்பாடுகள்</h2><p>அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக
நடத்துதல் மற்றும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை
விடுவித்தல் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66208e6-e94d-441d-b919-3590c175184e/26-6aa3f3fa5f97a.webp' /></p><p>இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ்த் தேசியம்
சார்ந்து இயங்கும் பொதுமக்கள், பொது அமைப்புகள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியம், சாவகச்சேரி, கொடிகாமம் மற்றும் கைதடி வணிகர் கழகங்கள்,
சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஓட்டோ சங்கங்கள் மற்றும் தென்மராட்சி
சிற்றூர்திச் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களது பாரிய ஒத்துழைப்பையும்
ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
</p><p>
எனவே, அரசின் தற்போதைய செயற்பாடுகளுக்கு எதிராகத் தமது உணர்வுபூர்வமான
எதிர்ப்பை வெளிப்படுத்தவும், உரிமைகளை வென்றெடுக்கவும் நாளை நடைபெறவுள்ள
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் அனைத்து மக்களையும் காலை 8 மணி முதல் மாலை 3
மணி வரை அணிதிரளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T12:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியுடன் திருகோணமலை சைவ அமைப்புகளின் இணைய சைவசமய குரு கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trinco-saiva-religious-high-council-meet-anura-1789127744"></link>
            <id>https://tamilwin.com/article/trinco-saiva-religious-high-council-meet-anura-1789127744</id>
            <summary type="text">சைவ சமய உயர் பீடத்தின் சார்பாக திருகோணமலை தென் கயிலை ஆதீன குரு மகாசந்நிதானம் தவத்திரு.அகத்தியர் அடிகளாரின் அருளாணையுடன் சைவசமயக்குரு அகோரசிவம் உமையரசு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைவ சமய உயர் பீடத்தின் சார்பாக திருகோணமலை தென் கயிலை ஆதீன குரு மகாசந்நிதானம் தவத்திரு.அகத்தியர் அடிகளாரின் அருளாணையுடன் சைவசமயக்குரு அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(9.9.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>வடகிழக்கை தலைமையமாகக்
கொண்ட சைவ சித்தாந்த மெய்யியலை போற்றும் உயர் கட்டமைப்பு சார்பாக சைவசமயி ஒருவர் அண்மைக்கால அரச உயர் சந்திப்பில் கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.</p><h2>கலந்துரையாடல்</h2><p>சைவ அமைப்புக்களின் வவுனியா சிவன் கோவில் தீர்மானம் ஜனாதிபதியிடம் இந்து கலாச்சார பணிப்பாளர் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcfafdbf-077d-4f57-a773-2f13c11d3bd5/26-6aa3efad6bfc5.webp' /></p><p>&nbsp;மகாநாயக்க பீடங்கள், ஆயர் இல்லங்கள் போன்று சைவ ஆதீனங்களே சைவசமயத்தின் முதன்மைத் தலைமைப்பீடங்கள் என சைவ அமைப்புகளின் இணைய சைவசமய குரு அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியரால் சுட்டிகாட்டப்பட்டது.</p><p>ஜனாதிபதியின் கூட்ட முக்கிய விடயதானமான போதை ஒழிப்பில் சைவசமய குருமாரின் பங்களிப்பு வலியுறுத்தப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-11T12:10:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு புதிய செயலாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/secretary-appointed-science-technology-ministry-1789125106"></link>
            <id>https://tamilwin.com/article/secretary-appointed-science-technology-ministry-1789125106</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிய செயலாளராக&amp;nbsp; ரோஷானி திசாநாயக்கவை நியமித்துள்ளார்.

உத்தியோகபூர்வ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிய செயலாளராக&nbsp; ரோஷானி திசாநாயக்கவை நியமித்துள்ளார்.</p><p>

உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் இன்று(11.09.2026) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி செயலாளர் நந்திகா சனத் குமாரநாயக்கவால் வழங்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39c2cc2a-1538-493a-a919-dd38b71cf587/26-6aa3e911ddecf.webp' /></p><p>
இலங்கை நிர்வாக சேவையின் (சிறப்புத் தரம்) சிரேஷ்ட அதிகாரியான ரோஷானி திசாநாயக்க, இதற்கு முன்னர் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T11:44:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் தந்தை கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-father-arrested-cid-1789125765"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-father-arrested-cid-1789125765</id>
            <summary type="text">டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் இன்று (11) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>கைது</h2><p> </p><p>

ஷிரான் பாசிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தைப் பயன்படுத்தி, கம்பஹா பகுதியில் அவரது தந்தையின் பெயரில் சொகுசு வீடு ஒன்றை விலைக்கு வாங்கியமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8da3fc1f-1fb1-4745-8b96-53d5e5a7da59/26-6aa3e96038f23.webp' /></p><p> 

இச்சம்பவம் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்கீழ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T11:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு தனது குடும்ப பராமரிப்புக்கு கூட பணமில்லையாம்..! சந்தேகத்தை ஏற்படுத்துகிறது மாமனாரின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lanka-sportreizen-founder-thilak-weerasinghe-1789085458"></link>
            <id>https://tamilwin.com/article/lanka-sportreizen-founder-thilak-weerasinghe-1789085458</id>
            <summary type="text">&amp;nbsp;நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுடன் கொழும்பு நெக்ரிஸ் வீதியில் அமைந்துள்ள எனது இரு மாடி வீட்டில் மேல்மாடியிலே வசித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுடன் கொழும்பு நெக்ரிஸ் வீதியில் அமைந்துள்ள எனது இரு மாடி வீட்டில் மேல்மாடியிலே வசித்து வருவதாக பிரபல தொழிலதிபரும், எல்.எஸ்.ஆர் (LSR) குழுமத்தின் தலைவரும்,லிமினியின் தந்தையுமான திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>நாமலின் குடும்பத்தின் அனைத்து பராமரிப்புச் செலவுகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து அன்றாடச் செலவுகளையும் தனது சொந்தப் பணத்திலிருந்தே செலவிடுவதாகவும் நாமலின் பணம் எதுவும் பெற்றுக் கொள்வதில்லை என்ற தொனியிலே குறிப்பிடுகிறார்.
</p><h2>
</h2><p></p><h2>ராஜபக்ச குடும்பத்துடனான உறவு</h2><p>வலையொளித்தளம் ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p>
வீட்டிற்குள் எந்தவொரு அரசியல் கலந்துரையாடலோ அல்லது பிரசார நடவடிக்கைகளோ நடைபெறுவதில்லை. </p><p>நாமல் ராஜபக்ச வீட்டிற்கு வந்ததும் மிகவும் எளிமையான குடும்ப வாழ்க்கையையே வாழ்கிறார் என்றும் தெரிவிக்கிறார்.</p><p> ராஜபக்ச குடும்பத்துடனான ஏற்படுத்திக் கொண்ட உறவின் காரணமாக தனக்கும் தனது தொழில்களுக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதிலும், 2015ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்தில் இல்லாத காலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணம் பிள்ளைகளின் விருப்பத்தின் பேரில் நடந்ததொன்று என்பதால், அது குறித்து தான் ஒருபோதும் வருந்தவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71709390-04bf-4a15-ba5c-5ad148ff3581/26-6aa34714dcfc4.webp' /></p><p>ராஜபக்சக்களை மக்கள் திருடர்கள் என்று சொல்கிறார்கள். லிமினியின் தந்தையும் ஒரு திருடன். அப்படியானால் லிமினிக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது என பல கதைகள் கூறப்பட்டாலும் நான் அவ்வாறான எந்த சம்பவத்திற்கு சம்பந்தமில்லை.</p><p>நான் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கியது தான் எனது வியாபாரமாகும். 
திருமணம் என்பதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. அதற்கு முடிவெடுக்க வேண்டும். இரண்டு குடும்பங்களும் இணைந்து எடுக்கும் முடிவு அது. </p><p>அங்கு அரசியல் ரீதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அது ஒரு குடும்ப முடிவு,</p><p>மேலும் நாமலை எனக்கு இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். அவர் அசைவம் சாப்பிடாத, மது அருந்தாத ஒரு நல்ல பிள்ளை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NCq10tR6-b8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-11T11:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789124268"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789124268</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி வட மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> 

அதன்படி வட மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை நிலை</h2><p> 

இதன்படி, நாளை (12.09.2026) பகல் வேளையில் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில், மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை நிலைக்கு உயர்வடையக் கூடும். </p><p>

சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்டு இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்படுகிறது. இதுவே உங்கள் உடலில் உணரப்படும் வெப்பநிலையாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6e946ce-a90f-4d63-ba6f-8d90211c6536/26-6aa3e38e95b7d.webp' /></p><h2>பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்</h2><p> </p><p>

நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெப்பத் தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்துமாறும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T11:18:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-closure-of-mutur-hospital-canteen-1789124193"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-closure-of-mutur-hospital-canteen-1789124193</id>
            <summary type="text">திருகோணமலை – மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை&amp;nbsp;மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வைத்தியசாலையின் சுகாதார நிலை
தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை&nbsp;மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>வைத்தியசாலையின் சுகாதார நிலை
தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சுகாதாரத் தரம் குறைபாடுடையதாக
கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொதுசுகாதார பரிசோதகரால் மூதூர் நீதவான்
நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்
பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணையைத் தொடர்ந்து சிற்றுண்டிச்சாலையை
எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுமாறு மூதூர் நீதவான் U. வசீம் அஹமட்
உத்தரவிட்டுள்ளார்.</p><h2>சுகாதாரப் பாதுகாப்பு</h2><p>

மேலும், ஒரு வாரத்தின் பின்னர் குறித்த சிற்றுண்டிச்சாலையின் சுகாதார நிலை
தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொதுசுகாதார பரிசோதகருக்கு
நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5924356e-d140-436d-a881-89b3dfcb2f19/26-6aa3e2e9043b7.webp' /></p><p>

பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் அதிகாரிகளின் கண்காணிப்பு
தொடர்கிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T11:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மக்கள் பிரச்சினைகள் குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-batticaloa-people-issues-1789124944"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-batticaloa-people-issues-1789124944</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில் நிலவும் நிர்வாக எல்லைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில் நிலவும் நிர்வாக எல்லைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த கலந்துரையாடல், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று(11.09.2026)&nbsp; நடைபெற்றுள்ளது. 

​</p><p>இதன்போது, கடந்த 06.09.2026 அன்று பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த வன இலாகா அதிகாரிகளால் தோணிதாண்டமடு பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><h2>

வாழ்வாதார நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல்</h2><p>
மேலும், தோணிதாண்டமடுக் கிராமமானது பிரதேச செயலகம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக எல்லைக்குள் அமைந்திருந்த போதிலும், வன இலாகா திணைக்களத்தின் அதிகார எல்லை பொலன்னறுவை மாவட்டத்தின் கீழ் உள்ளதால் அப்பகுதி மக்கள் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு மற்றும் சில அதிகாரிகளினால் நெருக்கடிக்குள் உள்ளாவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் சுற்றாடல் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26b98882-463c-4d94-b67f-11bb6e64c4b4/26-6aa3e19a234b9.webp' /></p><p>இந்த பிரச்சினைகளை கேட்டறிந்த சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி, இது தொடர்பில் திணைக்கள மட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
</p><p>
தொடர்ந்து, வரவிருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இந்த பிரச்சினையை முதன்மைப்படுத்தி, குறித்த கிராமத்தின் வன இலாகா பரிபாலன அதிகாரத்தை மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.

​</p><p>இந்த விசேட கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T11:11:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 முதல் பாடசாலைகளில் வரவுள்ள நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-bag-weight-to-be-significantly-reduced-2027-1789121133"></link>
            <id>https://tamilwin.com/article/school-bag-weight-to-be-significantly-reduced-2027-1789121133</id>
            <summary type="text">இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலைச் சிறுவர்களின் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என்றும், 2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் வகுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலைச் சிறுவர்களின் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என்றும், 2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் வகுப்பிற்கு தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

பாடசாலைப் பைகளின் எடையைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த நாடாளுமன்றக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்பாடு சார்ந்த கற்றல் முறையானது, மாணவர்கள் வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று கூறியுள்ளார்.</p><h2>புத்தகங்களை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல</h2><p>

முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி, வகுப்பறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/376435b5-778b-45f2-a9a8-5273743bc608/26-6aa3ddbf71981.webp' /></p><p>இதனால், மாணவர்கள் அவற்றை ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
</p><p>தவணையின் இறுதியில் மாணவர்கள் தங்கள் பணிகளை முடித்த பிறகு, புத்தகங்களை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்றால் போதுமானது என்று அவர் கூறியுள்ளார்.</p><h2>பொருத்தமான பாடத்தொகுப்புகள்</h2><p>
</p><p>
2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் வகுப்புக்கு பாடத்தொகுதி அடிப்படையிலான கற்றல் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7372e8f-8acb-4a83-9864-7caf29e2445f/26-6aa3ddc02ed79.webp' /></p><p>
</p><p>
பெரிய பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட கல்வியாண்டுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் பொருத்தமான பாடத்தொகுப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
</p><p>
இந்த மாற்றங்களால் மாணவர்கள் எடுத்துச்செல்லும் பாடசாலைப் பைகளின் எடை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bemBdu422CA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p>[LOOASKP
]</p>]]></content>
            <updated>2026-09-11T10:54:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் நடந்த விபத்து - மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-that-occurred-this-morning-in-trincomalee-1789123788"></link>
            <id>https://tamilwin.com/article/accident-that-occurred-this-morning-in-trincomalee-1789123788</id>
            <summary type="text">திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(11.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் இன்று(11.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
சாரதி படுகாயம்</h2><p>
துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில், இலங்கை
போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில்
இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8a75c4-789e-4fd8-9d56-6271e555ce59/26-6aa3dce286d32.webp' /></p><p>
</p><p>
இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி திருகோணமலை பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T10:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலணியால் தாக்க முயன்ற அதிகாரி - கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்த தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-by-people-in-the-tamil-rehabilitation-camp-1789122900"></link>
            <id>https://tamilwin.com/article/protest-by-people-in-the-tamil-rehabilitation-camp-1789122900</id>
            <summary type="text">மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர்
தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால்
தாக்க முய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர்
தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால்
தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> 

அதிகாரியின் இந்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து, இலங்கை தமிழர்கள் தனித்துணை
ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக சுமாராக ஐந்து மணி நேரம் இலங்கை தமிழர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். </p><p>


இந்த போராட்டமானது நேற்று(10.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ
வழியின்றி இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்திறங்கிய இலங்கைத்
தமிழர்களை மீட்டு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு
முகாமில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து
வருகின்றனர்.</p><p> இவர்களை கண்காணிப்பதற்காக மண்டபத்தில் தனித்துணை
ஆட்சியர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.</p><h2>

போராட்டக்காரர்களின் கோரிக்கை</h2><p>

இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி உள்ள தங்கள்
உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கும், மருத்துவம் சிகிச்சை மற்றும் கல்வி
பயில வெளியூர் சென்றாலும் தனித்து தனித்துணை ஆட்சியரிடம் விடுப்பு பெற்று
செல்ல வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9430e89f-4eca-4f98-8dec-b0423385ff25/26-6aa3d9b623132.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் உள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் இருந்து அகதியாக தனுஷ்கோடி
வந்திறங்கி 2007 ஆம் ஆண்டு முதல் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்
வசித்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெகன் (50) என்பவர் மருத்துவ
சிகிச்சைக்காகவும், உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ உதவிக்காக தமிழ்நாடு
சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக சென்னை செல்ல
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியரிடம் மனு
அளித்திருந்தார்.</p><p>

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், விடுப்பு வழங்குவதற்கு தனித்துணை ஆட்சியர்
இலஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகின்றது.

ஜெகன் பணம் கொடுக்காததால் தொடர்ந்து அவருடைய விடுப்பு மனு நிராகரிக்கப்பட்டு
வந்த நிலையில், நேற்று(10.09.2026) இலங்கை தமிழர் ஜெகன் தனித்துறை
ஆட்சியரை சந்தித்து விடுப்பு விண்ணப்பம் தொடர்பாக கேட்க சென்றபோது தனி துணை
ஆட்சியர் கலை மன்னன் இலங்கைத் தமிழர் ஜெகனை காலணியை கழற்றி அடிக்க
முயன்றுள்ளார்.
</p><p>
இதனை வீடியோவாக பதிவு செய்த இலங்கை தமிழர் ஜெகன், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>

 இதனிடையே இலங்கை தமிழரை தனி துணை ஆட்சியர் காலணியால்
தாக்க முயன்றதை கண்டித்து தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தை இலங்கை தமிழர்கள்
சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><h2>
 இலங்கைத் தமிழரை காலணியால் தாக்க முயன்ற அதிகாரி</h2><p>

இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் வட்டாட்சியர் காளீஸ்வரர் ஜெகன் மற்றும்
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26d91475-ebe9-45a8-a407-13a96630bdea/26-6aa3d9b715b98.webp' /></p><p>
</p><p>
இதன்போது, தனித்துறை ஆட்சியர் கலை மன்னன், மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவரை
உடனடியாக பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் இலங்கை தமிழர்கள்
விடுப்பு எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
</p><p>
இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட இராமநாதபுரம் வட்டாட்சியர்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் தகவல் தெரிவிப்பதாகவும்
வரும் திங்கட்கிழமை தனித்துணை ஆட்சியர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட
ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு
முகாமுக்குள் சென்றனர்.</p><p>

மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை காலணியால் தாக்க முயன்ற தனித்துறை
ஆட்சியரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வந்த நிலையில் இது
குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c787ea7-095f-4e87-9d6a-491715be3a6d/26-6aa3d9b7e20ac.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கான தயார்ப்படுத்தல் - அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-chavakachcheri-1789120904"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-chavakachcheri-1789120904</id>
            <summary type="text">யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நாளைய தினம் (12.09.2026) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பருத்தித்துறை நகரசபை உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நாளைய தினம் (12.09.2026) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p> 

குறித்த போராட்டம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாளை காலை ஏழு மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதன்போது மாபெரும் கண்டன பேரணியும், உண்ணாவிரத போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><h2>பேரணியும், உண்ணாவிரதப் போராட்டமும்&nbsp;</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் குறித்த பேரணியும், உண்ணாவிரதப் போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff60e94-8c73-47aa-9e1a-1a29558efa4d/26-6aa3d7081fbc7.webp' /></p><p> </p><p>

அனைவரும் கட்சி பேதங்களின்றியும், காணாமலாக்கப்பட்ட உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

குறித்த போராட்டம் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் இடம்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T10:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான முன்னாள் ஜோதிடருக்கும் சிக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-rajapaksa-royal-astrologer-interrogation-1789091165"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-rajapaksa-royal-astrologer-interrogation-1789091165</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது பணியாற்றிய அவரது முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தனவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது பணியாற்றிய அவரது முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தனவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று விசாரணை மேற்கொண்டிருந்தது.
</p><p>
சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் நேற்று முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
மேலும், தொடர்புடைய விசாரணை சம்பந்தமான சுமனதாஸ அபேகுணவர்தனவிடமிருந்து பல மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><h2>மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு காரணம்</h2><p>

மகிந்தவின் ஆட்சி காலத்தில் இவர் தேசிய சேமிப்பு வங்கி (NSB) மற்றும் ஈ.டி.எப் (ETF) வாரிய இயக்குநராகவும் பதவி வகித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df56bd11-da41-44de-9ec9-982d59c90d78/26-6aa3d77db578d.webp' /></p><p>
</p><p>
2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து அவரது தோல்விக்கு காரணமானதாக இவர் மீது சர்ச்சைகள் எழுந்த நிலையில், சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றிருந்தார்.</p><p>
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டமை, தேர்தல் நாளை நிர்ணயித்தமை, மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தீர்மானித்துதமை, வாக்களிக்கச் செல்வதற்கான நேரத்தை தீர்மானித்தமை என இவரே கணித்திருந்த நிலையில் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் கைது உட்பட ராஜபக்சர்களுக்கு நெருக்கமான பலர் தொடர்ச்சியாக விசாரணைகளுக்காக முன்னிலையாகி வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில்,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் பிரதான ஜோதிடராகவும் ஆலோசகராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய சுமனதாஸ அபேகுணவர்தனவும் தற்போது விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xsF4WHQwQHk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-11T10:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issues-concerning-mannar-district-were-examined-1789121110"></link>
            <id>https://tamilwin.com/article/issues-concerning-mannar-district-were-examined-1789121110</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து
கலந்துரையாடப்பட்டது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் பொது நிர்வாகம், மாகாண சபைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து
கலந்துரையாடப்பட்டது.</p><p>மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன பங்கேற்புடன் இந்த விசேட
கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p> குறிப்பாக அரச நிர்வாகம் மற்றும் ஊழியர் பற்றாக்குறை
தொடர்பாகவும், பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டலின் கீழ், மாவட்டத்தில்
நிலவும் அதிகாரி மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கான உடனடி தீர்வுகள் வழங்குவது
குறித்து ஆராயப்பட்டது.</p><h2>வாழ்வாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
மேலும் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் மன்னார் பிரதேசத்தில் பாரிய
அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்தும், அதன் மூலம் பிராந்திய மக்களின்
சுகாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது
பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், எதிர்வரும் 16 ஆம்
திகதி முதல் மருத்துவமனை பணிகளை முறையாக ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட
நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/172f1634-8c14-46d1-9144-1bde98ad4524/26-6aa3d7a7d93e7.webp' /></p><p>பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளங்களை
அதிகபட்ச பயனுள்ள முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து
கலந்துரையாடப்பட்டது.
</p><p>
குறிப்பாக அரச அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், அவர்களுக்கு
தேவையான வாகன வசதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவையான இயந்திர
உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்
சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><h2>மணல் அகழ்வு</h2><p>இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் கனிம வளங்கள் மற்றும்
வனப்பகுதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இன்று (11) மதியம் மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்
இடம்பெற்றது.</p><p>

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில்,பிரதி
அமைச்சரும் மன்னார் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில்
நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வனவளத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3915a3-1f7f-4b29-be2a-d725cc17a213/26-6aa40490c0b78.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 48 மணல் அகழ்வு அனுமதி
பத்திரங்கள், மல்வத்து ஓயா சார்ந்த பகுதிகளில் இடம்பெற்ற மணல் அகழ்வு, பிரதேச
செயலகங்களுக்கும் வனப் பாதுகாப்புத் திணைக் களத்திற்கும் இடையிலான அதிகார
வரம்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
</p><p>
மேலும், மணல், மற்றும் கல் அகழ்வுக்கு அனுமதிகளை முறையானதும்
விஞ்ஞானபூர்வமான துமான நடைமுறையின் கீழ் வழங்குவது தொடர்பாக
கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T10:28:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது அம்பலம் : பொதுஜன பெரமுன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-lack-of-public-support-for-the-government-1789120261"></link>
            <id>https://tamilwin.com/article/the-lack-of-public-support-for-the-government-1789120261</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம்,
தற்போதைய அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற உண்மையை அரசே நாட்டுக்கு
வெளிப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம்,
தற்போதைய அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற உண்மையை அரசே நாட்டுக்கு
வெளிப்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்
சாகர காரியவசம் தெரிவித்தார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,
</p><p>
"தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கின்றது எனக்
கூறப்படுகின்றது. அந்தக் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்குப்
பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வதையும் பார்க்க முடிகின்றது.</p><h2>மக்கள் ஆணை</h2><p> </p><p>ஆனால், ஒரு
கூட்டத்துக்குத் திரளும் மக்களின் எண்ணிக்கையை மாத்திரம் வைத்துக்கொண்டு, நாடு
முழுவதும் அந்தக் கட்சிக்கு அதிகளவான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கூற முடியாது.</p><p>

ஜே.வி.பி. மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற காலங்களிலும் பெரிய கூட்டங்களை
நடத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அவர்களின் உறுதியான உறுப்பினர்களே அத்தகைய
கூட்டங்களுக்குச் செல்வர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d71db15f-6024-481e-8b31-e105f62f0c29/26-6aa3d6c776244.webp' /></p><p>
</p><p>
அரசுக்கு மக்கள் மத்தியில் உண்மையான ஆதரவு இருக்குமானால், தேர்தலை நடத்தி அதனை
நிரூபிக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து காலதாமதம் செய்வதன்
மூலம் மக்களின் ஜனநாயக உரிமை மட்டுப்படுத்தப்படுகின்றது. </p><p>தேர்தலை நடத்தாமல்
காலம் கடத்துவதைப் பார்க்கும் போது, அரசுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு
குறித்து அரசுக்கே அச்சம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

எந்தவொரு அரசும் மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்.
</p><p>மக்கள் தமது வாக்குரிமை மூலம் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான அளவுகோல்
தேர்தலாகும். எனவே, பொய்ப் பிரசாரங்களை விடுத்து, மாகாண சபைத் தேர்தலை
உடனடியாக நடத்தி மக்களின் உண்மையான தீர்ப்பை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T10:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள்கள் மோதி இருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continuing-road-accidents-kantalai-peraaru-area-1789113834"></link>
            <id>https://tamilwin.com/article/continuing-road-accidents-kantalai-peraaru-area-1789113834</id>
            <summary type="text">கந்தளாய் – பேராறு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்
விபத்தில் இருவர் காயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் – பேராறு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்
விபத்தில் இருவர் காயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விபத்தானது நேற்று(10.09.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

வெலிங்டன் சந்தியிலிருந்து பேராறு நோக்கி இரு மோட்டார் சைக்கிள்கள் பயணித்துக்
கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும், மற்றைய மோட்டார்
சைக்கிளில் ஒருவருமாகப் பயணித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9436baa-22ce-4f74-8090-f85b25c6a265/26-6aa3cf8cf29a5.webp' /></p><p>முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள்
திடீரென வலதுபுறமாகத் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்
கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. </p><p>இந்த
விபத்து CCTV காட்சிகளிலும் பதிவாகியுள்ளது.
</p><p>
மோதலின் காரணமாக இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூவரும் வீதியில்
தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய்
பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T09:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றை மீளத் திறக்கக் கோரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parents-protest-demanding-the-reopening-school-1789119009"></link>
            <id>https://tamilwin.com/article/parents-protest-demanding-the-reopening-school-1789119009</id>
            <summary type="text">கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் விடுமுறை நிறைவடைந்த பின்னரும் திறக்கப்படாத நிலையில், அதனை உடனடியாக
மீளத் திறக்கக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் விடுமுறை நிறைவடைந்த பின்னரும் திறக்கப்படாத நிலையில், அதனை உடனடியாக
மீளத் திறக்கக் கோரி பெற்றோர்களும், மாணவர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கத்தின்போது, பாடசாலை அமைந்துள்ள
டன்சினன் கீழ்ப்பிரிவு பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
</p><p>
இதன் காரணமாக குறித்த பாடசாலையிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத
நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும், பின்னர் மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு மீளத் திரும்பியதைத்
தொடர்ந்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><h2>பிரதான கோரிக்கை</h2><p>
</p><p>
இந்த நிலையில், ஓகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை நிறைவடைந்த பின்னரும் குறிஞ்சி
தமிழ் வித்தியாலயம் மீளத் திறக்கப்படவில்லை என பெற்றோர்களும் மாணவர்களும்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/352e079d-50dd-41d5-9cf7-fc5c812e6e85/26-6aa3cecb58c4b.webp' /></p><p>

தற்போது பாடசாலை அமைந்துள்ள பகுதியிலோ அல்லது கிராமத்திலோ குறிப்பிடத்தக்க
பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், பாடசாலை தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பது
மாணவர்களின் கல்வியை பாதிப்பதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>

பல கல்வியாளர்களையும் சமூகத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து
விளங்கியவர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலையை மீண்டும் திறந்து,
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T09:50:41+00:00</updated>
        </entry>
    </feed>
