<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-14T20:29:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு - மகிந்த - கோட்டாபயவிற்கு கிடைக்குமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airstrike-on-the-sencholai-girls-home-complex-1786738447"></link>
            <id>https://tamilwin.com/article/airstrike-on-the-sencholai-girls-home-complex-1786738447</id>
            <summary type="text">2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
</p><p>
அந்தக் காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தனர்.
</p><p>
செஞ்சோலை தாக்குதல் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர்கள் வெளியிட்ட அறிக்கைகளில், இலங்கை வான்படையின் தாக்குதலில் சிறுவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
எனினும், செஞ்சோலை வளாகம் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் என இலங்கை அரசாங்கம் அப்போது விளக்கம் அளித்திருந்தது.

ஆனால், தாக்குதலுக்குப் பின்னர் வெளியான புகைப்படங்களில், சிறுவயதுடைய மாணவிகள் சீருடைகளுடன் காணப்பட்டமை தொடர்பிலும் பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
</p><p>
இந்நிலையில், சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதுபோன்ற சூழலில், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடந்தகால குற்றங்கள் மற்றும் அநீதிகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழ் சமூகத்திலும் நிலவி வருகிறது.</p><p>

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டு மக்களின் நலனுக்காகவும் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும் செயற்படுவதாகத் தெரிவித்து வருகிறார்.
</p><p>
இவ்வாறான அரசியல் மாற்றங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமா என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாகப் பேசுகிறது ‘செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6_lUEKeR67Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T20:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை GunSight முகாமில் 6 பெண்கள் கொலை! விசாரணையில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-women-killed-at-the-gunsight-camp-in-trinco-1786733536"></link>
            <id>https://tamilwin.com/article/6-women-killed-at-the-gunsight-camp-in-trinco-1786733536</id>
            <summary type="text">திருகோணமலை பகுதியில் அமைந்திருந்த GunSight முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு பெண்கள் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பகுதியில் அமைந்திருந்த GunSight முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு பெண்கள் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையிலே, குறித்த முகாமில் 6 பெண்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அத்தோடு, இந்த முகாமில் 600 இற்கும் மேற்பட்டோர் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>இது தொடர்பான விசாரணைகள் திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் சில கடற்படை அதிகாரிகளிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது.</p><p>குறித்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NyBr6WkHzr0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T19:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-faces-morale-crisis-amid-iran-war-hormuz-1786728764"></link>
            <id>https://tamilwin.com/article/us-faces-morale-crisis-amid-iran-war-hormuz-1786728764</id>
            <summary type="text">அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நிராகரித்துள்ளார்.
</p><p>
அவர், கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகள் “முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>மத்திய கிழக்கு</h2><p>
</p><p>
அமெரிக்காவின் USS George Washington விமானந்தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. </p><p>

இது, USS Abraham Lincoln கப்பலில் நீண்டகாலப் பணியமர்த்தலால் வீரர்களின் மனநலம் மற்றும் விநியோகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

USS George Washington கடந்த வாரம் வியட்நாமின் டா நாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67258ffb-817a-4853-bca8-9e534969983d/26-6a7f562edebf1.webp' /></p><p> </p><p>

அதனுடன் ஒரு க்ரூஸர் மற்றும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பலும் இணைந்துள்ளன. 

இந்தக் கப்பல்கள் சிங்கப்பூர் நீரிணையை கடந்து சென்றதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்க கடற்படையின் தகவலின்படி, Washington தற்போது மலாக்கா நீரிணையில் இருந்ததாகவும், இந்தியப் பெருங்கடலை நோக்கி பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

USS Abraham Lincoln-க்கு மாற்றாக George Washington மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படலாம் என முன்னதாக Wall Street Journal செய்தி வெளியிட்டிருந்தது.</p><h2>போர்ச் சூழ்நிலை</h2><p>
</p><p>

பொதுவாக அமெரிக்க கடற்படை வீரர்களின் பணியமர்த்தல் காலம் 6 முதல் 9 மாதங்கள் வரை இருக்கும். ஆனால் போர் சூழ்நிலைகளில் அது நீட்டிக்கப்படலாம்.
</p><p>
USS Abraham Lincoln இந்த வாரத்துடன் 260 நாட்களுக்கும் மேலாக கடலில் உள்ளது.

 இது நவீன காலத்தில் ஒரு விமானந்தாங்கிக் கப்பல் மேற்கொண்டுள்ள மிக நீண்ட பணியமர்த்தல்களில் ஒன்றாகும்.</p><p>

இந்தக் கப்பலில் பணியாற்றும் வீரர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும், சிலர் கப்பலில் இருந்து குதித்து தவறான முடிவெடுக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c289fdc-7bfe-4b92-8fc9-56650105dfdc/26-6a7f56300e8d6.webp' /></p><p>
</p><p>Lincoln கடந்த 2025 நவம்பர் 21ஆம் திகதி சான் டியாகோவிலிருந்து புறப்பட்டது. 

2026 ஜனவரியில் மத்திய கிழக்கை சென்றடைந்தது. பின்னர் பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானுக்கு எதிரான போர் தொடங்குவதற்கு முன்னதாகவே அங்கு நிலைநிறுத்தப்பட்டது.
</p><p>
போர்ச் சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய விநியோக மையங்கள் பாதிக்கப்பட்டதால், கப்பலில் உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் அஞ்சல் உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்டுள்ளது.</p><h2>பென்டகனிடம் பொறுப்புக்கூறல்</h2><p>
</p><p>
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், USS Lincoln கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகளை நிராகரித்துள்ளார்.</p><p>

நீண்டகாலப் பணியமர்த்தலிலும், குறைவான துறைமுகப் பயணங்களுடனும் கடலில் பணியாற்றும் வீரர்களின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4590c69a-de95-4a5e-b70c-eb2b9459866e/26-6a7f5630b5712.webp' /></p><p>
</p><p>
ஆனால் Navy Times மற்றும் Stars and Stripes உள்ளிட்ட இராணுவ செய்தி நிறுவனங்கள், கப்பலில் தற்கொலை முயற்சிகள் மற்றும் வீரர்களின் மனஉறுதி குறைந்து வருவது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த விவகாரம் தொடர்பாக பல ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பென்டகனிடம் பொறுப்புக்கூறலைக் கோரியுள்ளனர்.
</p><p>
கனெக்டிகட் மாநில செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால், USS Lincoln-ன் நீண்டகாலப் பணியமர்த்தல் குறித்து கடற்படை தலைமையிடம் பல கேள்விகளுக்கு பதில் கோரியுள்ளார்.
</p><p>
அரிசோனா செனட்டரும் முன்னாள் மரைன் வீரருமான ரூபன் கலேகோ, கப்பலில் வீரர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;டொனால்ட் ட்ரம்ப்</h2><p>
</p><p>

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9167c0b9-f39c-4fb8-811a-1450c61463bc/26-6a7f563168d27.webp' /></p><p>

ஈரானுடனான மோதல் சமீப வாரங்களில் ஓரளவு தணிந்திருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான முற்றுகையை அமெரிக்க கடற்படை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்தப் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தெளிவான திட்டத்தை வெளியிடவில்லை. 

அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், அமெரிக்கா இந்த முற்றுகையை “காலவரையின்றி” தொடர முடியும் எனக் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T18:50:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-against-muslim-female-health-worker-1786730359"></link>
            <id>https://tamilwin.com/article/action-against-muslim-female-health-worker-1786730359</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வைத்தியசாலை நிர்வாகம் தற்போது தயாராகியுள்ளது.</p><p> 

இது தொடர்பில் அறிவிக்கும் கடிதம், இன்று (14.08.2026) குறித்த முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு தனித் தனியாகப் பெயரிடப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. </p><p>

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் எனக் குறிப்பிட்டு கையொழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில் பிரதிப் பணிப்பாளரின் இறப்பர் முத்திரையே பொறிக்கப்பட்டுள்ளது.</p><h2>அறிவுறுத்தல்</h2><p> </p><p>சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் நிர்வாகப் பணிப்பாளர் ஆகியோருக்கு இந்தக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faeb2ff6-5ecd-4f55-a0a1-716994fba032/26-6a7f5d7a40d5e.webp' /></p><p> </p><p>

'சுகாதார பணி உதவியாளர் சீருடை தொடர்பானது' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp; “கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி சுகாதார பணி உதவியாளராக எமது வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தீர்கள். </p><p>

நீங்கள் கடமை பொறுப்பேற்ற அன்றைய தினத்திலேயே சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக சீருடை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.</p><h2>ஒழுக்காற்று நடவடிக்கை</h2><p> </p><p>

எனினும், சுற்றுநிரூபத்தினை பின்பற்றாமல் கடமைக்கு சமூகமளிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5cc10d-d609-4591-8558-2c3df6daaad8/26-6a7f5d7ae7888.webp' /></p><p> 

நீங்கள் அனைவரும் தகுதிகாண் காலப் பகுதிக்குள் உட்பட்ட ஊழியர்கள் என்பது நினைவூட்டப்படுகின்றது. </p><p>

உடன் செயற்படும் வண்ணம் சுகாதார பணி உதவியாளர்களுக்குரிய சீருடை தொடர்பான சுற்றறிக்கையின் வழிகாட்டல்களை பின்பற்றி கடமைக்கு சமூகளிக்குமாறு பணிக்கப்படுகின்றீர்கள். 

தவறும் பட்டசத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T18:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786731969"></link>
            <id>https://tamilwin.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786731969</id>
            <summary type="text">பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தீப்பற்றக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>காட்டுத்தீ</h2><p>
</p><p>
 டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c589e4c9-cae1-48f4-b84b-680a083cb6f2/26-6a7f5f6277908.webp' /></p><p>
</p><p>
சிறிய தீப்பொறி கூட வேகமாகப் பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி உயிர்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.
</p><p>
தீ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T18:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான ஓலம்: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cry-for-justice-tamil-groups-unite-to-demand-1786728740"></link>
            <id>https://tamilwin.com/article/cry-for-justice-tamil-groups-unite-to-demand-1786728740</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று(14.8.2026) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பமானது.&nbsp;</p><p>இதன்போது செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை
நினைவுகூரும் வகையில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றன. </p><p>கடந்த காலத்தில்
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கான நீதி இதுவரை முழுமையாக
கிடைக்கவில்லை என்ற வலியையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
வெளிப்படுத்தினர்.</p><h2>முக்கிய கோரிக்கை</h2><p>
</p><p>
இதேவேளை, இந்த நீதிக்கான போராட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக எதிர்வரும்
17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15268bcd-0340-4cf5-95c0-c065ea7e12c5/26-6a7f53a54194d.webp' /></p><p>தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால், சுயாதீனமான
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய
கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.&nbsp;</p><p>நீதிக்கான ஓலம்” என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூரும் நிகழ்வல்ல;
உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச்
செய்வதற்கான தொடர்ச்சியான குரல் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>அழைப்பு&nbsp;</h2><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் படுகொலைகளில்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தோளோடு தோள் நின்று, சர்வதேச விசாரணை, உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்தப் பயணத்தில் அனைத்து
தரப்பினரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5432024-9c15-4cc8-82b3-558023d7e51b/26-6a7f53a5e8c87.webp' /></p><p>செம்மணியில் எழுந்த நீதிக்கான குரல், எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம்
பொது நூலகத்திலிருந்து ஐ.நா. அலுவலகம் வரை செல்லும் பேரணியில் மேலும்
வலுப்பெறவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T17:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786716134"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786716134</id>
            <summary type="text">புதிய இணைப்புபிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான &quot;ஷிரான் பாசிக்&quot; என்பவர் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

அவருடன் மேலும் இரண்டு சந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான "ஷிரான் பாசிக்" என்பவர் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> 

அவருடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். </p><p>

இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d033e3f3-ffe7-499c-8101-90cd0e495b59/26-6a7f24b700506.webp' /></p><p>
</p><p>மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T17:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான்- அமெரிக்கா இடையே மோதல்கள்: பாரசீக வளைகுடாவில் பெரும் எண்ணெய்க் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786725631"></link>
            <id>https://tamilwin.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786725631</id>
            <summary type="text">பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>

ஈரானின் கெஷ்ம் மற்றும் சிரி தீவுகளுக்கு அருகே செயற்கைக்கோள் படங்களின் மூலம்
இரு பெரிய எண்ணெய் படலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p>
லைபீரியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதே
கெஷ்ம் தீவு அருகே ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு முக்கியக் காரணம் எனக்
கூறப்படுகிறது.</p><p></p><h2>மீட்புப் பணி</h2><p>

மற்றொருபுறம் ஓமன் கடற்பகுதியில் ரஷ்ய கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற கப்பல்
தரைதட்டி சுமார் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு எண்ணெய் பரவியுள்ளதால்
அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d66a2a-1953-4a75-b367-48ac92d4ba7a/26-6a7f450188bd1.webp' /></p><p>
</p><p>
தற்போதைய போர்ப் பதற்றம் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும்
சிக்கல் நீடித்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T16:40:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 51 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி - 1.4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் கொள்ளை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-house-break-in-2-arrested-in-robbery-case-1786725286"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-house-break-in-2-arrested-in-robbery-case-1786725286</id>
            <summary type="text">வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (14) தெரிவித்துள்ளனர்.</p><p>

கடந்த 8ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வாகன சாரதி மீது வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><h2>பெறுமதியான பொருட்கள்</h2><p>

பின்னர், வீட்டின் உரிமையாளரான 51 வயது பெண்ணின் வாயை பிளாஸ்டரால் ஒட்டி, கைகளை பின்புறமாகக் கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்துள்ளனர்.</p><p>

 இதனைத் தொடர்ந்து, மூவர் இணைந்து குறித்த பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியுள்ளனர்.</p><p>
 வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
</p><p>
இதன்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c478ef0c-fd5a-4ffa-9562-cea1409b3afb/26-6a7f44fd2fa02.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
</p><p>
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலாவின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய உக்குவெல, மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 29 வயதுடைய களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பாதிக்கப்பட்ட பெண்</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது சொத்துக்கள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அவரது முதல் கணவரின் மகனே இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு திட்டமிட்டு மூல காரணமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நபர் தனது காரில் களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேகநபர்களை அழைத்து வந்து, வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a92e6ad9-f0cf-4610-b80b-d93d0169f2da/26-6a7f44fdeb087.webp' /></p><p>
</p><p>
மேலும், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள் மற்றும் 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T16:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பில் ஏமாற்றும் படைத்தரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/military-release-of-point-pedro-post-office-land-1786724501"></link>
            <id>https://tamilwin.com/article/military-release-of-point-pedro-post-office-land-1786724501</id>
            <summary type="text">பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் அம்பலப்படுத்தி உள்ளார்.</p><p>

பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலின் அழைப்பில் இன்று (14)
வெள்ளிக்கிழமை பருத்தித்துறைக்கு விஜயம் மேற்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பருத்தித்துறை அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக இயங்கும் இடத்திற்கு சென்று
அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலமைகளை கேட்டறிந்து கொண்டார்.</p><p>அத்துடன் இராணுவ
கட்டுப்பாட்டி உள்ள பழைய கட்டிடம் மற்றும் விடுவிக்கப்பட தீர்மானிக்கப்பட்ட
இடம் என்பவற்றை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.</p><p></p><h2>காணி விடுவிப்பு</h2><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக
அண்மையில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வெகுஜன ஊடக பிரதியமைச்சர்
கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட அஞ்சல் திணைக்கள தரப்பினரிடம்
உறுதியளித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9436ca-d891-40af-8010-58d05a687f5e/26-6a7f4302b684f.webp' /></p><p> </p><p>இது தொடர்பில் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வைத்து
நேரில் சந்தித்து கதைக்கும் போது குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்
விஜயத்தின் போது முன்வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்ததுடன் அதனை நிறைவேற்றுவது
தொடர்பில் சாதகமான நிலையினையும் வெளிப்படுத்தி இருந்தார்.</p><p>படைத்தரப்பின் இருப்பை காரணம் காட்டி பருத்தித்துறை தபால் நிலைய காணி
விடுவிக்கப்படாமையை ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது. அதற்கான
அழுத்தங்களை வழங்கி உரிய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.</p><p>காணி விடுவிப்பு இடம்பெற்று வரும் மேற்குறித்த நிலைவரங்கள் தொடர்பில்
அண்மையில் கனேடிய தூதர் மற்றும் இந்திய தூதருடனான சந்திப்பில்
தெளிவுபடுத்தியதுடன், காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தி உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T16:32:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொசாட்டுடன் இணைந்து கிழக்கில் இனங்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-ashraf-eastern-province-sl-politics-1786720082"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-ashraf-eastern-province-sl-politics-1786720082</id>
            <summary type="text">தமிழ் மக்களிற்கும், முஸ்லிம் மக்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்காக ரணசிங்க பிரேமதாச மொசாட்டின் தந்திரத்தை கையில் ஊர்காவல் படையை ஆரம்பித்ததாக மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களிற்கும், முஸ்லிம் மக்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்காக ரணசிங்க பிரேமதாச மொசாட்டின் தந்திரத்தை கையில் ஊர்காவல் படையை ஆரம்பித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, ரணசிங்க பிரேமதாச சிறுபாண்மைக்குள் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்காக 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வந்தவுடன் இனங்களிடையே பிரித்தாலும் தந்திரத்தை கையாண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திலே தமிழ் சகோதரர்களும், முஸ்லிம் சகோதரர்களும் ஆதரவு தெரிவித்ததை தட்டிகழிப்பதற்காக&nbsp; ரணசிங்க பிரேமதாச பல்வேறு சூழ்ச்சிகளை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு,&nbsp;ஊர்காவல் படையை பிரேமதாச ஆரம்பித்ததையடுத்து சிறிலங்கா இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டு இனப்படுகொலை இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.</p><p>மொசாட்டுடன் தொடர்புபடுத்தப்படும் கிழக்கின் சர்ச்சைக்குரிய சம்பவங்களின் பின்னணி என்ன என்பது தொடர்பான மேலதிக தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/J82m0U8-z3Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T16:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - தந்தை வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-dies-in-japan-revealed-details-1786715325"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-dies-in-japan-revealed-details-1786715325</id>
            <summary type="text">ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். </p><p>

மகனின் எதிர்பாராத மரணத்தால் குடும்பமே நிலைகுலைந்துள்ளதாக தந்தையான ஜே.ஏ. லயனல் சுசந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
</p><p>
வளமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் தனது மகன் ஜப்பான் சென்ற நிலையில், இப்படியான துயரம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

இலங்கை இளைஞன்&nbsp;கொலை</b></h2><p>கடந்த எட்டாம் திகதி ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள நகரேயாமா நகரில் இடம்பெற்ற மோதலில் 21 வயதுடைய பிரவீன் இசுரு கொலை செய்யப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacf8a83-3114-43cb-a824-61aead40c71c/26-6a7f2e4111491.webp' /></p><p>இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். </p><p>

வழமையாக தாய், தந்தையுடன் உரையாறும் பிரவீன் அன்றைய தினம் தொலைபேசி அழைப்பை எடுக்காத நிலையில் அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.</p><p> 

எனினும் மகனிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காமையினால், தாய் மிகவும் கவலையடைந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>

மற்றொரு இலங்கையர்&nbsp; கைது </b></h3><p>கடந்த 11 ஆம் திகதி பெருமளவில் எதிர்பார்த்திருந்தும் மகனிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. காலை 11:20 மணியளவில் பிரவீனின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து வந்த அழைப்பில் வேறு ஒருவரை உரையாடினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328b345c-5c83-45de-9145-cde65378e381/26-6a7f2e41dfa14.webp' /></p><p>வன்முறை சம்பவம் ஒன்றில் சிக்கிய பிரவீன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதனை நம்ப முடியவில்லை. ஒரு மணி நேரத்தின் பின்னர் அடுத்த அழைப்பில் பிரவீன் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். </p><p>அந்த கணம் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. அதிலிருந்து இன்னமும் மீளவில்லை என தந்தை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

ஜப்பானிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், சிபா மாகாணத்தின் நகரேயாமா நகரில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவத்தினாலேயே பிரவீன் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இந்த கொலை முயற்சி தொடர்பில் மற்றொரு இலங்கையர் ஜப்பானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T15:28:57+00:00</updated>
        </entry>
    </feed>
