<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-07T16:31:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதி கோர விபத்து - வங்கி முகாமையாளர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-officer-dies-in-accident-1786115929"></link>
            <id>https://tamilwin.com/article/bank-officer-dies-in-accident-1786115929</id>
            <summary type="text">அனுராதபுரம் - பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். எப்பதொல பகுதியில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். </p><p>எப்பதொல பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p> உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ரொஹான் ஜயந்த பண்டார என்ற 43 வயதுடைய திருமணமாகாதவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>நேருக்கு நேர் மோதி விபத்து </b></h2><p>அனுராதபுரத்தில் இருந்து எப்பதொல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், அனுராதபுரம் நோக்கி சென்ற தனியார் பேருத்துடன் நேருக்கு நேர் மோதி&nbsp; விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e84822-d9ef-44b4-a56b-0f999c81516a/26-6a75ffd2569ca.webp' /></p><p>மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்வதற்காக வீதியின் வலது பக்கமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய வேளையில் எதிரே வந்த பேருத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>விபத்தில் காயமடைந்த வங்கி முகாமையாளர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். </p><p>விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-07T15:55:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து வெடித்த கலவரங்கள்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-mechanism-prison-security-inmate-welfare-1786113139"></link>
            <id>https://tamilwin.com/article/president-mechanism-prison-security-inmate-welfare-1786113139</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு பொறிமுறையை நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமையையும், கைதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் (7) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்..&nbsp;</h2><p>

முன்மொழியப்பட்ட இந்த பொறிமுறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்வதுடன், அவர்களின் நலனைக் கண்காணித்து, அவசர காலங்களில் பதிலளிப்புகளை ஒருங்கிணைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6d17be-e8d0-48f8-8347-a263f3fb07bf/26-6a75fb03bf397.webp' /></p><p>
இந்த பொறிமுறையானது அனைத்து 33 சிறைகளையும் உள்ளடக்கி, சிறைகள் திணைக்களம், இலங்கை பொலிஸார், சிறப்பு பணிப்படை (STF) மற்றும், தேவைப்பட்டால், ஆயுதப்படைகளின் அதிகாரிகளையும் கொண்டிருக்கும். இது அடுத்த வாரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பொறிமுறையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கைதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இக்கூட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மற்றும்&nbsp; சிறைச்சாலைகள் மற்றும் புலனாய்வு சேவைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T15:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஏமனில் மீண்டும் தீவிரமடையும் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-intensifies-again-in-eastern-yemen-1786115292"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-intensifies-again-in-eastern-yemen-1786115292</id>
            <summary type="text">ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு
வைத்து இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு
வைத்து இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவூதி ஆதரவு இராணுவப் படை அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.</p><p>

சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இத்தாக்குதல்
இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஏமன் தலைநகர் சனாவிற்கு (Sanaa) மேற்கே உள்ள பகுதியிலிருந்தே இந்த ஏவுகணைகள்
ஏவப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத்
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தாக்குதல்கள்&nbsp;</h2><p>
</p><p>
மாரேப் நகரின் பல பகுதிகளை இலக்கு வைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும்,
இதில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும்
அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d64ae4d1-6812-4fa4-b1d4-2bd0afcdbb43/26-6a75f733b279a.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, சவூதி அரேபியாவின் தென்மேற்கு எல்லைப் பகுதியான நஜ்ரான் (Najran)
பிராந்தியத்தின் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக
சவூதி தலைமையிலான கூட்டுப் படையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மேஜர் ஜெனரல்
துர்கி அல்-மால்கி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>

பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பெண்
மற்றும் குழந்தை உட்பட 11 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சவூதி
கூட்டுப் படை, ஹூதி அமைப்பினரின் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T15:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளை உடைத்து கொண்டு தப்பிக்க முயற்சிக்கும் கைதிகள்! அநுரவை வீழ்த்த நடக்கும் சதியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magazine-prison-colombo-issues-anura-1786108221"></link>
            <id>https://tamilwin.com/article/magazine-prison-colombo-issues-anura-1786108221</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலே அண்மைக் காலங்களாக இடம்பெறும் மோதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினால் திட்டமிட்ட விதத்திலே இடம்பெறுவதாக&amp;nbsp; சமூக செயற்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலே அண்மைக் காலங்களாக இடம்பெறும் மோதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினால் திட்டமிட்ட விதத்திலே இடம்பெறுவதாக&nbsp; சமூக செயற்பாட்டாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, ஊழல்வாதிகள், கடந்த கால அரசாங்கத்திலே குற்றச் செயல்களிலே ஈடுபட்டோர் தாங்கள் போய் சிறைச்சாலைகளில் இருப்பதற்கு சிறைச்சாலைகள் உகந்த நிலையில் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>சிறைச்சாலைக்கு செல்ல இருக்கக்கூடிய ஊழல்வாதிகளும் கடந்த காலத்தில் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளும் தங்களுக்கு சிறைச்சாலைகள் சரியான விதத்தில் இல்லை, அங்கு பாதுகாப்பு இல்லை என்ற விடயத்தை கூறி சிறைக்கு செல்வதை தடுக்க முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நிச்சயம் தண்டணை வழங்கும்.சிறைச்சாலைகள் இல்லாவிட்டாலும் புதிய சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டு ஊழல்வாதிகள் அடைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OdsoL-OTxHs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T14:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறைச்சாலையின் 28 கைதிகள் வெலிக்கடை மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pallansena-prison-riot-28-prisoners-in-hospital-1786108726"></link>
            <id>https://tamilwin.com/article/pallansena-prison-riot-28-prisoners-in-hospital-1786108726</id>
            <summary type="text">பல்லன்சேன சிறையில் நடந்த கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நிலைமை கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்லன்சேன சிறையில் நடந்த கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>நிலைமை கட்டுப்பாட்டில்..&nbsp;</h2><p>
</p><p>
இன்று காலை (07) குறித்த சிறையில் கலவரம் வெடித்ததை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை என்பன வரவழைக்கப்பட்டன.</p><p>
</p><p>இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.&nbsp;</p><p>அதன் பின்னர் பாதுகாப்புப் படைகள் சிறையின் கட்டுப்பாட்டை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் வசம் ஒப்படத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/GUAHSMeQWRE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T14:08:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வெடித்த கலவரங்கள்.. இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/27-indian-fishermen-sri-lankan-prisons-jaishankar-1786101718"></link>
            <id>https://tamilwin.com/article/27-indian-fishermen-sri-lankan-prisons-jaishankar-1786101718</id>
            <summary type="text">2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையின் காவலில் இருப்பார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையின் காவலில் இருப்பார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். </p><p>

மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>

தமிழக கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான 249 படகுகள் இலங்கை பாதுகாப்புப் படையினரின் காவலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>கைதிகளின் பாதுகாப்பு&nbsp;</h2><p> 

இதற்கிடையில், இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்குத் தனது அரசு முதன்மை முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a508719-d8d7-4a61-8f03-c71137a9f14e/26-6a75e35e21b5f.webp' /></p><p> </p><p>

கடற்றொழிலாளர்களையும் கடற்றொழில் படகுகளையும் உடனடியாக விடுவிப்பது மற்றும் திருப்பி அனுப்புவது உள்ளிட்ட இந்தப் பிரச்சினைகள் குறித்து, இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வழிமுறைகள், இராஜதந்திர வழிகள் மற்றும் பல்வேறு உத்தியோகப்பூர்வ மற்றும் உயர் மட்ட கலந்துரையாடல்கள் மூலம் தொடர்ந்து விவாதித்து வருவதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p><p> 

மேலும், 2021ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 1,554 ஆகும். 

இந்த கடற்றொழிலாளர்களில் சுமார் பத்து பேர் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T13:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி அகழ்வில் குறையாத என்புக்கூடுகள் - இன்றும் 7 புதிதாக அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bones-missing-from-chemmani-burial-site-excavation-1786110116"></link>
            <id>https://tamilwin.com/article/bones-missing-from-chemmani-burial-site-excavation-1786110116</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய இன்றைய தினம்(07.08.2026) 7 என்புக்கூடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><h2>56ஆவது நாளாக முன்னெடுப்பு</h2><p> </p><p>

இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சுமாராக 501 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c48a99c-0eaf-4533-b0c9-1538ebce84ab/26-6a75e13bb0a53.webp' /></p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 46ஆவது நாளாக இன்றைய தினம் பணிகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இதில், புதிதாக 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T13:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவீதியில் தடம்புரண்டன பட்டா ரக வாகனம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pickup-truck-derailed-in-the-middle-of-the-road-1786109363"></link>
            <id>https://tamilwin.com/article/pickup-truck-derailed-in-the-middle-of-the-road-1786109363</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்து இன்று(07.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது.</p><p>

இந்த விபத்து இன்று(07.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில்
வாகன விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><h2>

உயிர்தப்பிய சாரதி</h2><p>
வர்த்தக நிறுவனம் ஒன்றின் வாகனமானது, ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணம்
நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, வீதி ஓரத்தில் இருந்த
எல்லைக் கல்லுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c51f55b-d71f-4f7a-acfd-c70addf6750e/26-6a75ddeb15de1.webp' /></p><p> 


சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இருவரும்
சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T13:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/several-senior-police-officers-transferred-1786106829"></link>
            <id>https://tamilwin.com/article/several-senior-police-officers-transferred-1786106829</id>
            <summary type="text">சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக,&amp;nbsp; இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக,&nbsp; இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
 

இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார சிறப்புப் பிரிவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய கித்சிறி ஜயலத் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள்</h2><p>
 

மேலும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் வருண ஜயசுந்தர சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் உயர் பயிற்சிப் பதவியின் பதில் கடமையாற்றுவதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/044b9062-eb7e-46a9-bb69-5ea2ad37b831/26-6a75dc7c2146e.webp' /></p><p>அத்துடன், சிறப்புப் பாதுகாப்புப் பதவியில் இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் கே.பி. கருணாரத்ன அப்பதவியில் இருந்து வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். </p><p>

 

வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த புத்திக சிறிவர்தன தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இதைத் தவிர, 6 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

இதன்படி, காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா, பொலிஸ் களப் படைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T13:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senthil-thondaman-meets-indian-finance-minister-1786108863"></link>
            <id>https://tamilwin.com/article/senthil-thondaman-meets-indian-finance-minister-1786108863</id>
            <summary type="text">இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பில், கம்பம் ஜெயராஜ் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார்.</p><p> 

இந்த சந்திப்பில், கம்பம் ஜெயராஜ் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை முன் வைத்துள்ளார்.</p><p> 

இதன்போது, இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
</p><p>
மேலும், டித்வா புயல் அனர்த்தத்தின் போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவற்றை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவையும் செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.
</p><h2>
செந்தில் தொண்டமானின் கோரிக்கை</h2><p>
அத்துடன், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செந்தில் தொண்டமான் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதற்கமைய, OCI வீசாவை (Overseas Citizen of India) பெறுவதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால், பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த பலரால் அதனைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3db8e248-0816-4819-85d6-58f2b78df6a0/26-6a75dc15efa63.webp' /></p><p> எனவே, பெருந்தோட்ட மக்களுக்காக விசேட சலுகை வழங்கி, OCI அட்டையை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
</p><p>
மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை சேவைகளுக்காக அரச மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருப்பதால், நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.</p><p> 

எனவே, இந்திய மருத்துவக் காப்புறுதி திட்டமான "ஆயுஷ்மான் பாரத் - காப்புறுதி திட்டத்தின் பயனை லங்கா LIC ஊடாக வழங்கி, தேவையான போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் வாய்ப்பை ஏற்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p>

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, பயணிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்துமாறும் செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c46d699-b13e-451d-8543-671edd963965/26-6a75dc16d9a7e.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T13:22:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rain-in-kandy-nuwara-eliya-galle-bad-weather-1786104641"></link>
            <id>https://tamilwin.com/article/rain-in-kandy-nuwara-eliya-galle-bad-weather-1786104641</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அத்துடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

 

வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41de0464-d107-47f6-8bf8-e70b17ee81c9/26-6a75d0c37c426.webp' /></p><p>
</p><p>
 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MTiDS-iJNKw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-07T12:46:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-in-jaffna-commits-wrong-decision-1786104021"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-in-jaffna-commits-wrong-decision-1786104021</id>
            <summary type="text">யாழில் நேற்றையதினம்(06.08.2026) மன விரக்தியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். கைதடியைச் சேர்ந்த கனகசபை அருமைரட்ணம் (வயது
80...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் நேற்றையதினம்(06.08.2026) மன விரக்தியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.</p><p> கைதடியைச் சேர்ந்த கனகசபை அருமைரட்ணம் (வயது
80) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் கைதடி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நிலையில்
மனவிரக்தி காரணமாக தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e066533-3ebb-4533-bfaa-ac35853bc681/26-6a75cda712fde.webp' /></p><p>
இந்நிலையில் அவரது உறவினர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு
தகவல் வழங்கியுள்ளனர். </p><p>அதன்பின்னர் சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா
மேற்கொண்டார். </p><p>விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T12:35:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் தாத்தா - பாட்டி உட்பட 7 பேரின் உயிரை பறித்த 14 வயது சிறுவன்: சுவரேறிப் பாய்ந்து தப்பிய மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/14-year-old-boy-kills-7-people-in-thailand-1786105924"></link>
            <id>https://tamilwin.com/article/14-year-old-boy-kills-7-people-in-thailand-1786105924</id>
            <summary type="text">தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கிற்கு அருகில் அமைந்துள்ள நொந்தபுரி
பகுதியில் உள்ள டெப்சிரின் பாடசாலையில் 14 வயது மாணவன் ஒருவன் நடத்திய கொடூரத்
துப்பாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கிற்கு அருகில் அமைந்துள்ள நொந்தபுரி
பகுதியில் உள்ள டெப்சிரின் பாடசாலையில் 14 வயது மாணவன் ஒருவன் நடத்திய கொடூரத்
துப்பாக்கிப் பிரயோகத்தில், அவனது தாத்தா, பாட்டி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்
உட்பட குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
அத்துடன், இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
அவர்களில் 9 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த தாக்குதலை நடத்திய 14 வயது மாணவனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><h2>

14 வயது சிறுவனும் உயிரிழப்பு</h2><p>
தெளிவான இலக்குகளுடனும், திட்டமிடலுடனுமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ள தாய்லாந்து பிரதமர், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/798f5561-347b-4435-9638-99b21883f449/26-6a75d0ac9ba26.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற வேளையில் பாடசாலை மாணவர்கள் பலர் சுவரேறிப்
பாய்ந்தும், தப்பியோடியும் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.
</p><p>
தாய்லாந்தில் நாட்டில் துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வதில் கட்டுப்பாடுகள்
உள்ள போதிலும், சட்டவிரோதத் துப்பாக்கிகளின் புழக்கம் அதிகமாக உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், தாய்லாந்து பாடசாலையொன்றில் இந்த ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது
துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் இது என்றும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும திட்டத்தில் நடந்த கோடிக்கணக்கான மோசடி - விரைவில் கைது செய்யப்படவுள்ள அரச அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraud-of-crores-in-the-ashwesuma-project-1786104518"></link>
            <id>https://tamilwin.com/article/fraud-of-crores-in-the-ashwesuma-project-1786104518</id>
            <summary type="text">தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும
பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது
உறவினர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும
பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது
உறவினர் ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில், தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத்தால், 
இன்று(07.08.2026) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>

முறைப்பாடு</h2><p>
தங்களுக்கு உரிமையுள்ள நிவாரணம் தொடர்பான பணம் கிடைக்கவில்லை என பயனாளிகள்
பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் நடத்திய
முதற்கட்ட விசாரணையில், அந்தப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7839f422-1a25-4d46-b6e6-a9773193379e/26-6a75cb798f3de.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் அந்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p>

குறிப்பிட்ட கணக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அது குறித்த
அறிக்கை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தலவாக்கலை பிரதேச செயலாளர்
பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல்
தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><h2>
அஸ்வெசும பணத்தை மோசடி செய்த அதிகாரிகள்</h2><p>
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடித்
தொகை 1 கோடியே 62 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட
கணக்காய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45845d92-53d9-427c-9800-d710568e142e/26-6a75cb7a754b6.webp' /></p><p>
</p><p>
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின்
அடிப்படையில் இரண்டு சந்தேகநபர், காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>

மேலும் மூன்று அதிகாரிகள் ஹட்டன் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளதாக விசாரணை மேற்கொள்ளும்
தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae7239f7-a48d-4dc4-9d8a-daad52665128/26-6a75cb7b4a7cf.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1178096-5611-46e4-87c9-9af838898689/26-6a75cb7c1db2a.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:11:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கல்சியம் நீக்கியை குடித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-man-in-jaffna-dies-after-consuming-descaler-1786102865"></link>
            <id>https://tamilwin.com/article/family-man-in-jaffna-dies-after-consuming-descaler-1786102865</id>
            <summary type="text">யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(6.8.2026) இடம்பெற்றுள்ளது. இதன்போது அத்தியடி - ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(6.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>இதன்போது அத்தியடி - யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை</h2><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக
கல்சியம் நீக்கியை குடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b7b20b-1293-417d-9046-1db2a4d70925/26-6a75c790146f7.webp' /></p><p> </p><p>பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை
பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
</p><p>
இது குறித்து மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா
மேற்கொண்டார். யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:59:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயை பிரிந்து தந்தையுடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி - பொலிஸாருக்கு தகவல் கொடுத்த அயலவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-dies-in-jaffna-1786103747"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-dies-in-jaffna-1786103747</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில்
தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. 

இந்த சம்பவம் இன்று(07.08.2026)இடம்பெற்றுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில்
தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. </p><p>

இந்த சம்பவம் இன்று(07.08.2026)இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன்போது நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><h2> 

தந்தை வீட்டில் நடந்த சோகம்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர்.
சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும்
நிலையில், அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.</p><p>

வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து
செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1afb858a-f198-4ba9-a3ac-34ab154c619d/26-6a75c80ddd53b.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் நபர் ஒருவர் இன்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில்,
குறித்த இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியமை அவதானிக்கப்பட்டது. </p><p>அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.</p><p>

இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:57:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[46 வருடங்களாக புனரமைக்கப்படாத பாலம் : உடைந்து விழும் நிலையில் மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bridge-that-hasn-t-been-renovated-for-46-years-1786101759"></link>
            <id>https://tamilwin.com/article/bridge-that-hasn-t-been-renovated-for-46-years-1786101759</id>
            <summary type="text">கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரும்பு பாலம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் குறித்த பாலத்தை திருத்தி
தரும்படி&nbsp;இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>குறித்த போராட்டமானது இன்று (07.08.2026) பாலத்தினுள் இடம்பெற்றுள்ளது.</p><h2>பாலத்தின் அடித்தளங்கள்</h2><p>

1980 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பாலம் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
சேதமடைந்து விடுதலைப் புலிகளால் தற்காலிக பாலமாக அமைத்து நீண்ட காலமாக
பாவனையில் இருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இராணுவத்தினரின்
ஆளுமைக்குள் இருந்து குறித்த இடத்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல
போராட்டங்களை முன்னெடுத்த பின்னர் பகுதி பகுதியாக குறித்த பிரதேசத்தை 2018 ஆம்
ஆண்டு மீட்டேடுத்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9b53b74-fcb3-4fc7-ac62-e1f07c942199/26-6a75c2bdb081e.webp' /></p><p>அதன் பின்னர் மாவட்டத்துக்கு பல அபிவிருத்திகள்
வந்தபோதும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பரவிப்பாஞ்சான் கிரமத்தின்
வீதிகளை புறம் தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டே காணப்பட்டுள்ளது.</p><p>தற்போது பாலத்தின்
அடித்தளங்கள் பலவீனமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில்
உள்ளது.</p><p> இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கைகள்
இடம்பெறாத நிலையில் குறித்த பாலத்தை திருத்தி தரும்படி போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்
பயத்துடனேயே கடக்க வேண்டிய சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேனாநாயக்க சமுத்திரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக சந்திரசேகர் நேரில் ஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishing-harbour-at-senanayake-samudraya-1786098976"></link>
            <id>https://tamilwin.com/article/fishing-harbour-at-senanayake-samudraya-1786098976</id>
            <summary type="text">சேனாநாயக்க
சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேனாநாயக்க
சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் கள
ஆய்வில் ஈடுபட்டு, கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடலை
மேற்கொண்டார்.</p><p>இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் கடற்றொழிலாளர்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வரும் நியாயமான பிரச்சினை என்பதை அரசாங்கம் நன்கு
உணர்ந்துள்ளது.இது ஒரு சாதாரண நிர்வாகப் பிரச்சினையல்ல.விஞ்ஞான ரீதியாக அணுகப்பட வேண்டிய விடயமாகும்.</p><p>குறித்த இடத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது அல்லது கடற்றொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>எனவே கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்வளப் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் தீர்வையே அரசாங்கம் முன்னெடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51f82b38-a02b-423d-afb9-db796d885f79/26-6a75c25532218.webp' /></p><p>மீன் குஞ்சுகள் மற்றும் இனப்பெருக்கப் பகுதிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. அதேவேளை வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்</p><p>சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களின் பரிந்துரைகளையும் கருத்தில்
கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீன்வள வளங்களின் நிலைத்தன்மை மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் வகையில் நடைமுறைச்
சாத்தியமுள்ள தீர்மானமொன்றை விரைவில் எடுக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்
என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:33:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சிறைச்சாலையில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/security-tightened-in-jaffna-prison-1786099098"></link>
            <id>https://tamilwin.com/article/security-tightened-in-jaffna-prison-1786099098</id>
            <summary type="text">நாடு முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் அமைதியின்மை நிலவுவதாக வந்த தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணச் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் அமைதியின்மை நிலவுவதாக வந்த தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணச் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p>அதன்படி, யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி, மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, சிறைச்சாலையில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.&nbsp;</p><h2>தீவிர பாதுகாப்பு&nbsp;</h2><p>மேலும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக இராணுவ வீரர்கள் குழுவும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64694044-6d39-4c35-80e6-cd8d26b7c86f/26-6a75be91883da.webp' /></p><p>இதற்கிடையில், யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பாண்மை அதிகாரிகள் ஆகியோரும் சிறைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைக்குள் தற்போது ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதற்கிடையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறையிலிருந்து கன உலோகப் பொருட்கள் மற்றும் தளபாடங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:18:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம்.. வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-gazettes-22nd-amendment-constitution-1786099840"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-gazettes-22nd-amendment-constitution-1786099840</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும், அரசியலமைப்பின் 22ஆவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கான சட்டமூலத்தை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.</p><p>இன்று (7) வெளியான இந்த விசேட வர்த்தமானியின்படி, </p><p>உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 67 ஆண்டுகளாகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 65 ஆண்டுகளாகவும் உயர்த்தப்படும்.</p><h2>வர்த்தமானி</h2><p> </p><p>மேலும், பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை எட்டும் போதோ அல்லது ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகோ, இவ்விரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அதன்படி ஓய்வு பெறுவார் என்றும் இந்த சட்டமூலம் குறிப்பிடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94caf3a6-dc95-4fc1-b0f3-65802c1b6280/26-6a75bb331b006.webp' /></p><p>

இந்த முன்மொழியப்பட்ட திருத்தம், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 19இலிருந்து 24ஆக உயர்த்தவும் கோருகிறது.</p><p>

அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தம் எனப் பெயரிடப்பட்ட இந்த சட்டமூலத்தை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வெளியிடுமாறு உத்தரவிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[புழுக்களுடன் விற்பனை செய்யப்பட்ட பிஸ்கட்டுக்கள் - உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/biscuits-sold-with-worms-1786100509"></link>
            <id>https://tamilwin.com/article/biscuits-sold-with-worms-1786100509</id>
            <summary type="text">மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட
பலசரக்கு கடையொன்றில் புழுக்களுடனும், பூஞ்சணம் பிடித்த நிலையிலும் விற்பனை
செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட
பலசரக்கு கடையொன்றில் புழுக்களுடனும், பூஞ்சணம் பிடித்த நிலையிலும் விற்பனை
செய்யப்பட்ட ஒருவகை பிஸ்கட்டுகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நடவடிக்கை இன்று(07.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>


உரிமையாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>
களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனினால் இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையில், புழுக்களுடனும், பூஞ்சணம் பிடித்த நிலையிலும் விற்பனை
செய்யப்பட்ட ஒருவகை பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d630b-a8e4-4f63-b022-2c16ad0336f1/26-6a75bb6e3292f.webp' /></p><p> </p><p>


இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் பிஸ்கட்டை உற்பத்தி செய்தவர், விநியோகம்
செய்தவர், விற்பனை செய்தவர், ஆகியோருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான்
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதில் உற்பத்தியாளருக்கு பகிரங்க
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>


இந்த வழக்கிற்கு 46,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், இந்த தொகுதி இலக்கத்தையுடைய அனைத்து பிஸ்கட் பைக்கற்றுக்களையும் விநியோகம் செய்த அனைத்து கடைகளிலிருந்தும் உடன் மீளப்பெற்று அழிக்குமாறும் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lakshman-yapa-abeywardena-granted-bail-1786098631"></link>
            <id>https://tamilwin.com/article/lakshman-yapa-abeywardena-granted-bail-1786098631</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இலஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகையை வழங்கிய பின்னர், கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணையில் செல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இலஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகையை வழங்கிய பின்னர், கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணையில் செல்ல&nbsp; அனுமதித்துள்ளது.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.</p><h2>உயர் நீதிமன்றத்தில் வழக்கு</h2><p>
ஜூலை மாதத்தில், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டி, அபேவர்தன மீது&nbsp; கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112ffd01-ff29-4fd0-ba96-c99e398ae136/26-6a75b8610e651.webp' /></p><p>

இலங்கை முதலீட்டு சபை தொடர்பான ஒரு பணியை நிறைவேற்றுவதற்காக ஒரு தொழிலதிபரிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக இந்த வழக்கில் பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uBdLsK4FJC8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-07T11:01:02+00:00</updated>
        </entry>
    </feed>
