<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-30T12:32:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில்லாமல் அவதிக்குள்ளாகும் வவுனியா வடக்கு பிரதேச மக்கள் - ரவிகரன் எம்.பி கொடுத்த வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-of-vavuniya-north-area-suffer-without-roads-1785413834"></link>
            <id>https://tamilwin.com/article/people-of-vavuniya-north-area-suffer-without-roads-1785413834</id>
            <summary type="text">வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாமடு கிராம அலுவலர்
பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், வினாசிகுளம்
பாலத்தையும் நிர்மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாமடு கிராம அலுவலர்
பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், வினாசிகுளம்
பாலத்தையும் நிர்மாணிக்குமாறு அப்பகுதி மக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார்.</p><p> 


இதன்போதே மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>


வீதியில்லாமல் அவதிக்குள்ளாகும் மக்கள்</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாண்டான்குளம் வீதி சீரின்றிக்
காணப்படுவதாலும், அந்த வீதியோடு இணைந்துள்ள வினாசிகுளம் பாலம் இதுவரை நிர்மாணிக்கப்படாமல் காணப்படுவதால் வினாசிகுளம் கிராம மக்கள் பாரிய போக்குவரத்து
இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38e5ba5-f890-45fd-9967-dbd2bedcea25/26-6a6b41474a3e5.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், குறித்த சாண்டான்குளம் வீதியும், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலமும்
சீரின்றிக்காணப்படுவதால் வினாசிகுளம் கிராமத்தில் வசிக்கின்ற 300இற்கும்
மேற்பட்ட குடும்பங்கள் வைத்தியசாலை, பாடசாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைளை
பெறுவதற்கு பாரிய போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக இதன்போது
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டது.</p><p>


அத்துடன், மழைக்காலங்களில் சாண்டான்குளம் வீதியூடான போக்குவரத்து
முற்றாகத் தடைப்படும் நிலையும் காணப்படுவதாகவும், சேனைப்புலவு கிராமத்தினூடாக 4 கிலோமீற்றர் தூரம் சுற்றி, பலத்த
இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து தமது அத்தியாவசிய தேவைகளை
நிறைவேற்றிவருவதாகவும் வினாசிகுளம் கிராமமக்கள் ரவிகரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 குறித்த வினாசிகுளம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்
பெரியகுளம், மாமடு, பழம்பாசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பலத்த
போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். </p><p>

குறிப்பாக விவசாயத்திற்குரிய
உள்ளீடுகளைக் கொண்டுவருவதிலும், அறுவடைகளை எடுத்துச் செல்வதிலும் பாரிய
போக்குவரத்து நெருக்கடிகள் காணப்படுவதாக எம்.பியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
</p><h2>


கோவிட் - 19 தொற்று காலப்பகுதி இடைநிறுத்தம்</h2><p>
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் தொடர்ச்சியாக
கோரிக்கை விடுத்துவந்த நிலையில், கடந்தகாலத்தில் அப்பாலத்தினை
நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், நாட்டில் ஏற்பட்ட
கோவிட் - 19 பெருந்தொற்றினைக் காரணங்காட்டி குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள்
இடைநிறுத்தப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a072d4-934e-4c67-b1b6-5ad41e5561cd/26-6a6b4148255f7.webp' /></p><p> 


எனவே சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்புச்செய்வதுடன், வினாசிகுளம்
பாலத்தினையும் நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>

இந்நிலையில் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், மக்களின் குறைபாடுகளையும்
கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வீதியைச்
சீரமைப்பது தொடர்பிலும், வினாசிகுளம் பாலத்தினை நிர்மானிப்பது தொடர்பிலும்
தம்மால் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். 



மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கள விஜயத்தின் போது, 
வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான செ.சுசீலன், த.தனுசன், இலங்கைத்
தமிழசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளைச் செயலாளர் அமலன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T12:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பு விதிகளை அப்பட்டமாக மீறி நீதித்துறையைச் சீரழிக்க அரசு முயற்சி! சந்திம வீரக்கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extension-of-retirement-age-for-judges-1785412621"></link>
            <id>https://tamilwin.com/article/extension-of-retirement-age-for-judges-1785412621</id>
            <summary type="text">நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும்
பாதிக்கும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று முன்னாள்
அமைச்சரும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும்
பாதிக்கும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று முன்னாள்
அமைச்சரும் சட்டத்தரணியுமான சந்திம வீரக்கொடி குற்றம் சாட்டினார்.</p><p>

கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை
அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர்
மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p> "இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே மக்கள் தற்போதைய அரசுக்கு
ஆணையளித்தனர். இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப்
பலத்தைப் பெற்றுக்கொண்டது.</p><p></p><h2>சரியான அணுகுமுறை</h2><p> </p><p>எனினும், மக்கள் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி,
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் அரசமைப்புத் திருத்தம்
ஒன்றைக் கொண்டுவர அரசு தீர்மானித்துள்ளது. </p><p>இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும்
பெறப்பட்டு, மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கு
அரசமைப்பில் இடமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407a2b84-4dd1-4ad7-a31b-528eed552a3e/26-6a6b3d1fb2b65.webp' /></p><p> </p><p>இவ்வாறான திருத்தங்களுக்குப் நாடாளுமன்றத்தில் மூன்றில்
இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் சூழலில்,
நீதிபதிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் அரசு ஏன் செயற்பட வேண்டும்?

முன்னாள் பிரதம நீதியரசர்கள் 10 பேர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்திலும்,
அரசமைப்புத் திருத்தங்களை கடந்த காலத்துக்குப் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்த முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அரசமைப்பின்படி ஓய்வுபெறும் வயது 65 என
இருக்கும்போது, 67 வயது வரை பதவியில் நீடிக்க அனுமதிப்பது பல சட்ட ரீதியான
கேள்விகளை எழுப்புகின்றது.</p><p>
வழக்குகளை விரைவுபடுத்துவதற்காகவே இந்தச் சேவைக்கால நீடிப்பு எனக்
கூறப்பட்டாலும், பெரும்பாலான வழக்குகள் நீதிவான் மற்றும் மாவட்ட
நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f650e38d-3452-428c-92a1-8acb880d4394/26-6a6b3d20691ee.webp' /></p><p> எனவே, அந்த நீதிமன்றங்களுக்குத் தேவையான
உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே சரியான அணுகுமுறையாகும்.
</p><p>
இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மட்டுமன்றி, சர்வதேச
சட்டத்தரணிகள் அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. </p><p>பொதுமக்கள், நீதிபதிகள்
அல்லது சட்டத்தரணிகள் யாரும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை.

எனவே, அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, அரசமைப்பு விதிகளை மதித்து,
நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதுகாக்க முன்வர
வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T12:02:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் தமிழ் அரசியல்வாதிகள் - தீர்வு தருவதாக கூறிய அநுர எங்கே..! பதில் கிடைக்காத தொடர் கேள்விகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-politicians-languishing-in-jail-1785412374"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-politicians-languishing-in-jail-1785412374</id>
            <summary type="text">தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என
சமூக நீதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என
சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய
அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவரால் இன்று(30.07.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2> 


தமிழர்கள் மீதான இனவாதம்</h2><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

"அரசியல் கைதிகளை என்று எவரும் இல்லை" என சிங்கள பௌத்த அரசியல் நிலைப்பாட்டில்
நின்று தற்போதைய அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அண்மையில் (22/7)
நாடாளுமன்றத்தில் கூறியதோடு அரசியல் கைதிகள் என்பதற்கான பொருள் கோடல்
சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் இல்லை என நியாயம் கற்பித்திருப்பது தமிழர்களின்
அரசியல் அபிலாசைகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் நிலைப்பாட்டினால்
தொடர்ந்தும் தண்டிக்கப்படும் குற்றம் என்பதை நிரூபிக்கவே அன்றி
வேறொன்றுமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fcb27be-a8d2-4ab0-bdb7-e6c8b558a46d/26-6a6b3bc178b6f.webp' /></p><p> </p><p>இந்நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் மதிக்காது 1972
மற்றும் 1978 அரசியல் யாப்புகள் கொண்டு வந்ததோடு தமிழ் தேச அரசியலை
அழிக்கவும், ஒட்டுமொத்த தமிழர்களையும் (சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு
கைகோர்த்தவர்கள் தவிர) அனைவரையும் பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள் என
அடையாளப்படுத்தப்பட கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தினை தொடர்ந்தும்
பாதுகாத்துக் கொண்டு சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் அரசியல் கைதிகள் தொடர்பாக
பொருள் கோடல் இல்லை என்பது அரசியல் கேளிக்கூத்தாகும்.
</p><p>
யுத்தத்தினை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என மார்தட்டும் மகிந்த
ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும், இறுதி யுத்த நாட்களில் நானே நாட்டின் தலைமை
பொறுப்பிலிருந்தேன் எனக் கூறும் மைத்திரியின் ஆட்சிக்காலத்திலும் அரசியல்
கைதிகள் சமூகமயமாக்கப்பட்டனர். </p><p>

அது அவர்களின் அரசியல் தேவைக்காகவே அன்றி
தமிழர்களின் அரசியல் நலனுக்காக அல்ல என்பதையும் கூற விரும்புகின்றோம்.
</p><p>
இறுதியாக தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னர் தமிழர் தாயகத்தில் தனது
தேர்தல் வாக்கு வேட்டை மேடைகளில் நின்று "நாம் பதவிக்கு வந்தால் அரசியல்
கைதிகளை விடுதலை செய்வோம்" என வாக்குறுதி அளித்து தமிழர்களின் வாக்குகளை
கவர்ந்து பதவியில் அமர்ந்த பின்னர், நீதி அமைச்சர் ஊடாக தனது நிலைப்பாட்டினை
தெரிவிப்பதும் தனதும் தனது அரசாங்கத்தினாலும் நிலைப்பாட்டினை சிங்களவர்களுக்கு
வெளிப்படுத்தவே. இது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்.</p><h2>

சிறையில் வாடும் அரசியல் கைதிகள்</h2><p>




தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை
என்பது வரலாற்று உண்மை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef103ac8-06cf-488d-bee6-5f8bd1b055d2/26-6a6b3bc24c4bf.webp' /></p><p> </p><p>

அரசியல் கைதிகளாக தமிழர்களால் அடையாளப்படுத்தப்பட்டோரின் விடுதலைக்காக தமிழர் தாயகத்திலும், தாயகத்திற்கு வெளியில் கொழும்பு
நகரிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. </p><p>

நாடாளுமன்றத்திலும்
நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் விடுதலைக் குரல்கள் எழுப்பப்பட்டன. அரசியல்
கைதிகள் தமது விடுதலைக்காக சாகும் வரையான உண்ணாவிரத போராட்டங்கள் செய்தும்
எத்தகைய பலனும் கிட்டவில்லை.</p><h2>



ஜனாதிபதியிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை</h2><p>

இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்"ஜனாதிபதி
அநுரகுமாரவிடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கும்பிட்டு கேட்டு
விட்டோம். அதைவிட வேறு எவ்வாறு கேட்பது" என பகிரங்கமாக கூறிய விடயம்
தமிழர்களுக்கு வேதனை அளிக்கின்றது.</p><p>

ரவிகரன் மேற்கூறிய கூற்றினை கூறியதன் மூலம் எதனை எதிர்பார்த்தார்
என்பதைவிட இவ்விடயம் உண்மையாக இருக்குமாயின் அது தமிழர்களுக்கும், தமிழர்களின்
அரசியலுக்கும், அரசியல் கைதிகளுக்கும் பலத்த அவமானமாகும். நாங்கள் கும்பிட
வேண்டும் அவர்களின் காலடியில் விழ வேண்டும் என்பதே சிங்கள பேரினவாதத்தின்
விருப்பமாகும்.

மீண்டும் மீண்டும் கூறுகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a131896-34c0-441a-8b09-20c9b9905e0d/26-6a6b3bc2f1fbf.webp' /></p><p> தமிழர்களின் விடுதலை அரசியல் செயற்பாட்டில்
தம்மை முழுமையாக ஈடுபடுத்தி தற்போதும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதற்கான ஆக்கப்பூர்வமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கான
சட்ட திருத்தங்களை செய்யுங்கள். </p><p>அரசியல் ரீதியில் போராடி சிறைகளில் நீண்ட
காலம் வாடுவோரை பாதுகாக்கவும் அவர்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும்
பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்கின்றோம்.

உங்கள் அரசியல் தேவைக்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை
நீடிப்பதற்காக எடுக்கின்ற முயற்சிக்குள் சட்டத்துறை அதன் சுயாதீனம் சிக்கி
இருக்கின்ற அவல நிலையினை முழு நாடும் அறிந்ததே. </p><p>

இத்தகைய நிலையிலும் உங்கள்
நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக துடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தமிழ்
மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதன் முன்னோடியாக
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட திருத்தங்களை சடுதியாக மேற்கொள்வது
நாட்டிற்கும் நாட்டின் அரசியல் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல நாட்டின்
சுபீட்சத்திற்கும் வழி வகுக்கும் என்பதையும் கூற விரும்புகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளிகளுக்கு அரசு வெளியிட்ட விசேட அறிவிப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-allowance-be-distributed-to-banks-tomorrow-1785410608"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-allowance-be-distributed-to-banks-tomorrow-1785410608</id>
            <summary type="text">2026 ஜூலை மாதத்திற்கான, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும முதியோர் உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. 

இந்த நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூலை மாதத்திற்கான, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும முதியோர் உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை நாளை(31.07.2026) முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><h2> 

 அஸ்வெசும முதியோர் உதவித்தொகை</h2><p>
இதற்கமைய, அஸ்வெசும நல உதவித் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 621,638 பெரியவர்களுக்காக ரூ. 3,108,190,000 தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39820754-6f05-4b47-b7f5-c083228ae700/26-6a6b3625437b6.webp' /></p><p> </p><p>

அதே போன்று, அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 77,324 பெரியவர்களுக்காக ரூ. 386,620,000 தொகை வரவு வைக்கப்படவுள்ளது.</p><p>

இதன்படி, இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகை ரூ. 3,494,810,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213</id>
            <summary type="text">கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

இவ்வாறான நிகழ்வுகளின் போது போதை மாத்திரைகளை விநியோகிக்கும் இளம் கடத்தல்காரர் ஒருவர், 23,000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் தொகையுடன் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2><b>போதை மாத்திரை விநியோகம்</b></h2><p>கைதான இளைஞரிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய, இந்த போதை மாத்திரைகளும் ஹெரோயினும் நாளாந்தம் இளைஞர், யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக இரகசியமாக வரவழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>இசை நிகழ்ச்சிகளில் நடனமாடும் இளைஞர் யுவதிகளை இலக்காக கொண்டு இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6026ede3-5dd9-4a15-a76d-b04996354a8f/26-6a6acf0c9c639.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த போதை மாத்திரைகள் கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் பல மாகாணங்களுக்கும் விநியோகிப்பதற்காக கடத்தல்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>ஒரு போதை மாத்திரையின் மதிப்பு 100 ரூபாவாகும், எனினும் இக்கூட்டத்தினர் அந்தப் போதை மாத்திரைகளை 200 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்றுள்ளனர். </p><p>இந்த போதை மாத்திரைகளுக்கு மேலதிகமாக, சந்தேக நபரிடமிருந்த சுமார் 800 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-in-mullaitivu-prasanna-kumara-gunasena-1785409265"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-in-mullaitivu-prasanna-kumara-gunasena-1785409265</id>
            <summary type="text">போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனஇன்றைய தினம்(30) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு
விஜயம் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனஇன்றைய தினம்(30) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு
விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.</p><p>அத்துடன் நடைபெறும்
அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார்.
</p><p>
இதன் ஓர் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஒழுங்கமைப்பிலும் பிரதி அமைச்சரின் தலைமையிலும் விசேட கலந்துரையாடல்
மாவட்ட செயலக அரியாத்தை மண்டபத்தில் மு.ப 11.30 மணிக்கு நடைபெற்றது.</p><p></p><h2>கலந்துரையாடல்</h2><p>

மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள
மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5725831d-821b-442e-8e4f-38d1b5c2d739/26-6a6b349541415.webp' /></p><p>
</p><p>
குறித்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் வீதி அபிவிருத்திகள் தொடர்பிலும் பொதுப் போக்குவரத்து மற்றும்
நகரமயமாக்கல் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. </p><p>தொடர்ந்து
எதிர்காலத்தில் மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி தேவைகள்,போக்குவரத்து தேவைகள்
தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லாட்சி காலத்தில் நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிக்கப்படவில்லை - அஜித் பி. பெரேரா ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1785408922"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1785408922</id>
            <summary type="text">நல்லாட்சி அரச காலத்தில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லாட்சி அரச காலத்தில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையே
எடுக்கப்பட்டதே தவிர, அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க எந்தவொரு
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

கொழும்பில் நேற்று (29.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>தீர்மானம் எடுக்கப்படவில்லை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 2015, 2016, 2017 காலப்பகுதியில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக
எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.</p><p> மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும்
உயர்நீதிமன்ற நீதியரசர்கள், நீதிபதிகளின் எண்ணிக்கையே அப்போது
அதிகரிக்கப்பட்டது. நீதிமன்ற முறைமைச் சட்டத்தைத் திருத்தி மேல்நீதிமன்ற
நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தோம்.</p><p> இதற்கு எவரும் எதிர்ப்புத்
தெரிவிக்கவில்லை.

தற்போதைய திருத்தத்தின் குறிப்பிட்ட திகதியைக் கவனிக்கும் போது, இது ஒரு
தனிநபரை இலக்கு வைத்தது என்பது தெளிவாகின்றது. </p><p>தனிநபரை இலக்கு வைத்த
அரசமைப்புத் திருத்தம் எனக் கடுமையான விமர்சனங்கள் எழும்போதே, உயர்நீதிமன்ற
நீதியரசர்கள் மாத்திரமின்றி அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லை
அதிகரிக்கப்படுகின்றது என அரசாங்கம் நியாயம் கூற முற்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c549615-3d84-46a1-8701-5d0049b7edc1/26-6a6b348fb7a56.webp' /></p><h2>தயாரிக்கப்பட்டுள்ள வரைவு</h2><p>
</p><p>
இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நீதி அமைச்சில் இதற்காக எப்போது ஒரு
குழு கூடியது? நாடாளுமன்றத்தின் நீதி விவகார ஆலோசனைக் குழு கூடிப்
பரிந்துரைகளைப் பெற்றதா? இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சந்திப்பதற்கு நேரம்
ஒதுக்குவதற்கு முன்னதாகவே, இந்த வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும்
பெறப்பட்டுள்ளது.</p><p> இந்த விவகாரத்தில் சட்டத்தரணிகள் சங்கம் புறக்கணிக்கப்பட்டமை
ஏன்?

அரசமைப்பின் 107 ஆவது பிரிவில் உள்ள அனைத்து விதிகளும் நீதித்துறையின்
சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட
நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான இந்த விதிகளில் கைவைக்கவில்லை. அவருக்குப்
பின்வந்த எந்தவொரு ஜனாதிபதியும் இதில் தலையிடவில்லை.
</p><p>
நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீரழிக்கும், ஒரு தனிநபரை இலக்கு வைக்கும்,
நீதித்துறை சுயாதீனத்தை இல்லாதொழிக்கும் இந்த அர்த்தமற்ற திருத்தத்தைக்
கொண்டுவரும் பாவச் செயலில் பங்கேற்க வேண்டாம் என நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கிலங்கையின் தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/theerthotsavam-thanthamalai-murugan-temple-1785407899"></link>
            <id>https://tamilwin.com/article/theerthotsavam-thanthamalai-murugan-temple-1785407899</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு
தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்த
உற்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு
தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்த
உற்சவம் இன்று(30.07.2026) ஆயிரக்கணக்கான முருக பக்தர்களின் அரோகரா
கோசத்திற்கு மத்தியில் இடம்பெற்றது.
</p><p>அதிகாலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதன் பின்பு
ஆலய முன்றலிலே அமைந்துள்ள தீர்த்தக் கேனியில் நாதஸ்வர மேளங்கள் தாளங்கள்
முழங்க தீர்த்தத் திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.</p><p></p><h2>இந்த வருடத்திற்கான திருவிழா நிறைவு</h2><p>


கதிர்காம கந்தன் ஆலயத்திற்கு செல்ல முடியாத முருக பக்தர்கள் சின்னக்
கதிர்காமம் என அழைக்கப்படும் இந்த தாந்தாமலை முருகன் ஆலயத்தில் தங்களது வேண்டுதலை
நிறைவேற்றுவது ஒரு பண்டைய மரபாக இருந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0995cb5f-2b86-47aa-9554-6db5e5c91039/26-6a6b2d2d4ad5e.webp' /></p><p>உற்சவகால பிரதம குரு சிவ ஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய
பிரதம குரு சிவ ஸ்ரீ பு.நவரூபன் குருக்கள் தலைமையில் தினமும் பகல் இரவு
பூஜைகளுடன் 21 நாள் திருவிழாக்கள் நடைபெற்றன.</p><p>



கடந்த 09ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ்ஆலய வருடாந்த திருவிழா
சுவாமி உள்வீதி வெளிவீதி வலம் வருதல் இடம்பெற்று வியாழக்கிழமை ஆலய வளாகத்தில்
அமைந்துள்ள தீர்த்தக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன்
இவ்வருடத்திற்கான திருவிழா நிறைவு பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T11:18:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பொலிஸ் சாவடி மீது ட்ரோன் தாக்குதல்: 11 பொலிஸ் அதிகாரிகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/serious-attack-on-police-station-in-pakistan-1785409553"></link>
            <id>https://tamilwin.com/article/serious-attack-on-police-station-in-pakistan-1785409553</id>
            <summary type="text">பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின்
ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பொலிஸ் சாவடி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின்
ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பொலிஸ் சாவடி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்
தாக்குதலில் குறைந்தது 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். </p><p>

அத்துடன், 28 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்று(29.07.2026) இரவு நிகழ்ந்த இந்த தாக்குதலின் போது, தாக்குதலாளர்கள்
முதலில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட “ட்ரோன்” விமானங்களைப் பயன்படுத்தி
பொலிஸ் சாவடியைத் தாக்கியுள்ளனர்.</p><p></p><p> </p><h2>


11 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு</h2><p>
இதனைத் தொடர்ந்து, சாவடியைச் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பல மணி நேரப் பதிலடித் தாக்குதலில், தாக்குதல்
நடத்தியவர்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகளுடன் விரைந்த உதவி பொலிஸ் அத்தியாட்சகர் தியார் கான் உட்பட 11 பொலிஸார் இந்த மோதலில் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c742dd7c-07cf-4532-a902-6f8da1d132e2/26-6a6b3071b4088.webp' /></p><p> </p><p>

தாக்குதலாளர்கள் மூன்று பொலிஸ் வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், மற்றொரு பொலிஸ்
வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளதாக மாவட்ட பொலிஸ் அதிகாரி முஜாஹித் ஹுசைன்
தெரிவித்துள்ளார். 

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப்
பொறுப்பேற்கவில்லை.</p><p> இருப்பினும், சமீபகாலமாக ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில்
பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பொலிஸாரைக் குறிவைத்துத் தாக்குதல்கள் கணிசமாக
அதிகரித்துள்ளன.
</p><p>
எல்லையோரப் பகுதிகளில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளே இதன் பின்னணியில்
இருப்பதாக பாகிஸ்தான் சந்தேகம் எழுந்துள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டா மனைவியிடம் 120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சரித் அபேசிங்க- மீண்டும் பிணை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sarith-abeysinghe-back-in-prison-1785408186"></link>
            <id>https://tamilwin.com/article/sarith-abeysinghe-back-in-prison-1785408186</id>
            <summary type="text">பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக இரண்டு நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி சரித் அபேசிங்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக இரண்டு நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி சரித் அபேசிங்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று(30.07.2026) அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>
ஹரக் கட்டா மனைவி கொடுத்த மோசடி வழக்கு</h2><p>

ஹரக் கட்டா என்ற சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல்காரரின் மனைவியிடமிருந்து ரூ. 120 மில்லியன் இலஞ்சம் பெற்றது தொடர்பான ஒரு சம்பவத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரகித் ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு, கடந்த 28ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f5c3f24-cd76-4793-b3e8-6a4ea95255fc/26-6a6b2e2983ba6.webp' /></p><p> </p><p>

இந்த உத்தரவு நேற்றுமுன்தினம்(28.07.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

இதற்கமைய, ரகித் ராஜபக்ச உட்பட இரண்டு சந்தேக நபர்கள் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றியதால், சிறைக் காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது. </p><p>

இருப்பினும், சந்தேக நபரான சரித் அபேசிங்க பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் சிறைக் காவலில் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/k7GCeWHoONA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-30T10:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resolving-land-disputes-through-mobile-services-1785407128"></link>
            <id>https://tamilwin.com/article/resolving-land-disputes-through-mobile-services-1785407128</id>
            <summary type="text">கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலவி வந்த
காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி நடமாடும் சேவை இன்றைய தினம்
(30-07.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலவி வந்த
காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி நடமாடும் சேவை இன்றைய தினம்
(30-07.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>இதன்போது நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பல காணிப்பிணக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டன.</p><p></p><h2>நேரடி தீர்வு</h2><p>&nbsp;மக்களுக்கு தங்களது காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு துரிதமான மற்றும் நேரடி தீர்வுகளை வழங்குவதற்கான இத்தகைய சேவைகள் மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலர்பிரிவு ரீதியாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e46b378-524d-4588-8e5e-b4e248a8f55d/26-6a6b2da85fdf9.webp' /></p><p>

இந் நடமாடும் சேவையில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வடமாகாணக் காணி
ஆணையாளர் இ.குருபரன்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அஜிதா பிரதீபன் ,கண்டாவளை
பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன்,வடமாகாண உதவி காணி ஆணையாளர் விதுசா தினேஸ்
,மாகாணக் காணி ஆணையாளர் திணைக்கள அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள்
உள்ளிட்டோர். கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0dce936-d70d-49fe-9e04-897406d1121f/26-6a6b2da9387fa.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0dce936-d70d-49fe-9e04-897406d1121f/26-6a6b2da9387fa.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37c3d3bf-d727-434d-98a4-c2d9ac7c8474/26-6a6b2daa0ca1a.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:55:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலை தடயங்களை அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என விமர்சிப்பது அபத்தம் - பொ. ஐங்கரநேசன் காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/p-ingaranesan-statement-about-inapadugolai-1785405794"></link>
            <id>https://tamilwin.com/article/p-ingaranesan-statement-about-inapadugolai-1785405794</id>
            <summary type="text">&quot;இளைய தலைமுறை தமிழ்த் தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின்
வரலாறும், நாம் பட்ட வதைகளும் வலியும் தெரியாது&quot; என இளைய தலைமுறை மீது நாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>"இளைய தலைமுறை தமிழ்த் தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின்
வரலாறும், நாம் பட்ட வதைகளும் வலியும் தெரியாது" என இளைய தலைமுறை மீது நாம்
குற்றம் சுமத்தி வருகிறோம், அவர்களை வரலாறு தெரியாதவர்களாக ஆக்கியது யார்?
நாமல்லவா? தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக்
குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று
விமர்சிப்பது பெருத்த அபத்தம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்
பொ. ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று (29.07.2026) கொக்குவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. </p><p>இந்நிகழ்ச்சிக்குத்
தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஈழத்தமிழர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்த தென்னாசியாவின் மிகப்பெரும்
நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டி
அழிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும், வேறு எங்கும்
காணக்கிடைக்காத வரலாற்று ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன.</p><p></p><h2>வரலாற்றுப் பிழை</h2><p>
</p><p>இந்த நாசகாரியத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மேற்பார்வையில் அரச படைகளே
அரங்கேற்றியது. நமது வரலாற்றில் நாம் சந்தித்த மிகப்பெரும் பண்பாட்டுப்
படுகொலை இது. ஒரு வரலாற்றுக் கடத்தியாக எரியுண்ட நூலகத்தை அதே நிலையில் நாம்
பேணிப்பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வரலாற்றுத் தவறாக நூலகத்தைப்
புனரமைத்து நடந்தது எதுவுமே தெரியாதவாறு வெள்ளையடித்து பேரினவாத அரசைப்
பாதுகாக்கும் வரலாற்றுப் பிழையையே நாம் இழைத்தோம்.
</p><p>
இலங்கையில் தமிழினம் மீது 1956 இல் நிகழ்த்தப்பட்ட கல்லோயாப் படுகொலை தொடங்கி
2009 இல் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைவரை பல தடவைகள்
இனவழிப்புக்கு ஆளாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பாக, 1983இல்
நிகழ்த்தப்பட்ட 'கறுப்பு ஜீலை' தமிழினப்படுகொலையே அதிகூடிய எண்ணிக்கையான
உயிரிழப்புகளையும், பலகோடிப்பெறுமதியில் சொத்திழப்புகளையும் ஏற்ப்படுத்திய
முதலாவது இனப்படுகொலையாகும். இதுவே உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ் மக்களை
எதிலிகளாக இடம்பெயரவைத்த முதலாவது படுகொலையுமாகும்.</p><p></p><h2>செம்மணிப் புதைகுழி</h2><p> ஆனால்
இவற்றையெல்லாவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய
நினைவுச் சின்னங்களை இதுவரையில் நாம் அமைக்க முற்படாததும் பெரும் வரலாற்றுத்
தவறே. செம்மணிப் புதைகுழியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும்
எலும்புக்கூடுகளுக்கும் நாளை இதே நிலை ஏற்பட்டுவிக்கூடாது.

இனப்படுகொலைக்கு ஆளான ஒரு சமூகம் வரலாற்றை நினைவுகூரும் விதமாகச் சின்னங்களை,
நிறுவுவது இன்றியமையாதது.</p><p> இவை' வெறுமனே அழுது அரற்றி மனதை ஆற்றுவதற்கான
இடங்கள் அல்ல. அடுத்த தலைமுறைகளுக்குக் கடந்தகால உண்மைகளைக் கடத்துகின்ற
வரலாற்றுப் பாடசாலைகளாகவும் உள்ளன. நீதிக்கான தொடர் போராட்டங்களின்
எரிசக்தியாகவும் இவை விளங்குகின்றன. ஒரு பொது வெளியில் எழுப்பப்படும்
நினைவாலயம் குற்றவாளிகள் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதைத் தடுத்து அவர்கள்
மீதான பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.</p><p></p><p> </p><p>இந்த
முக்கியத்துவங்களைக் கருத்திற்கொண்டு இனவழிப்பின் தடயங்களை முக்கியத்து
நினைவுச்சின்னங்களாகவோ, நினைவு வளாகமாகவோ, ஓர் ஆவணக்காப்பகமாகவோ
பேணிப்பாதுகாக்க இனிமேலாவது முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-30T10:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி விபத்து - பாடசாலை மாணவி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallathanni-accident-school-girl-death-1785405845"></link>
            <id>https://tamilwin.com/article/nallathanni-accident-school-girl-death-1785405845</id>
            <summary type="text">கடந்த 22 ஆம் திகதி நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 22 ஆம் திகதி நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இந்த விபத்தில் கீழ் நல்லத்தண்ணி முர்ரே தோட்டத்தினை சேர்ந்த மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியில் 8ஆம் வகுப்பில் கல்வி பயின்ற மாணவி செல்வம் திஷ்னா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மாணவியின் சடலம் மீதான மரண விசாரணை</h2><p>மாணவியின் சடலம் மீதான மரண விசாரணையின் பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3466a508-92c1-4d7d-bced-fa0484e10450/26-6a6b27200e46a.webp' /></p><p>நல்லத்தண்ணியிலிருந்து மாஸ்கெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர
வண்டி கடந்த 22ஆம் திகதி மோகினி எல்ல பகுதியில் பிரதான வீதியில் இருந்து
விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியிருந்தது.</p><p>இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பின் இருக்கையில் பயணித்த அவரது உறவினரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>நல்லத்தண்ணி பொலிஸார் விசாரணை&nbsp;</h2><p> 

 

முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவிகளும், ஒரு பாடசாலை மாணவனும் படுகாயமடைந்து, கண்டி போதனா வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
</p><p>இந்நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:29:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத பேருந்து நிலையம் - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrenovated-hatton-bus-stand-1785406685"></link>
            <id>https://tamilwin.com/article/unrenovated-hatton-bus-stand-1785406685</id>
            <summary type="text">மலையகத்தில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையப் பகுதியாக பார்க்கப்படும் ஹட்டன் பேருந்து நிலையம் எந்தவித புனரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையகத்தில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையப் பகுதியாக பார்க்கப்படும் ஹட்டன் பேருந்து நிலையம் எந்தவித புனரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காணப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். </p><p>

ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்கிறது.</p><p></p><p>

சர்வதேச புகழ்பெற்ற சிவனொளி பாதமலை (ஆதாம் சிகரம்), சென் கிளையார் மற்றும்
டெவோன் நீர்வீழ்ச்சிகள், எல்ல சமவெளி, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன்
ஆலயம், காயத்திரி பீடம் உள்ளிட்ட பல சுற்றுலா மற்றும் சமயத் தலங்களுக்கு
பயணிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரதான
இணைப்புத் தளமாகவும் இந்த பேருந்து நிலையம் பார்க்கப்படுகின்றது. </p><h2>


ஹட்டன் பேருந்து நிலையம்</h2><p>

கடந்த 1986ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட ஹட்டன் பேருந்து நிலையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தனியார் பேருந்து நிலையம் தனியாக அமைக்கப்பட்டு, தனியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. எனினும், இந்த இரு நிலையங்களும் பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89f1082-f795-4961-9187-eab0470db591/26-6a6b25c328b19.webp' /></p><p>
</p><p>

குறிப்பாக மழைக்காலங்களில் பேருந்து தரிப்பு நிலையம் முழுவதும் நீர் தேங்கி,
பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது என்றும், வளாகம் முழுவதும் குப்பைகள்
மற்றும் வெற்றிலை எச்சில்கள் சிதறிக்கிடப்பதுடன், மழைநீர் வடிகால்கள்
குப்பைகளால் அடைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகின்றது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். </p><p>


அத்துடன், போதுமான மற்றும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால்,
சிலர் பேருந்து தரிக்கும் பகுதிகளிலேயே சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,
தெரிவிக்கப்படுகிறது. </p><p>தற்போது உள்ள பொது கழிப்பறைகளும் போதிய சுகாதார
பராமரிப்பின்றி காணப்படுவதால், பயணிகளும் பொதுமக்களும் கடும் சிரமங்களை
எதிர்கொண்டு வருகின்றனர்.</p><h2>

பொதுமக்களின் கோரிக்கை</h2><p>
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்
பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தை முழுமையாக நவீனமயமாக்க வேண்டும் என பல
ஆண்டுகளாக பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்ந்து
கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82bb63bd-e6d0-4756-a29e-5a14e7b41a50/26-6a6b25c41f4e5.webp' /></p><p> 

இருப்பினும், 2016ஆம் ஆண்டில் சில தற்காலிக
மற்றும் மேலோட்டமான திருத்தப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், நிரந்தர
தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
இதனிடையே, புதிய அரசாங்கம் ஹட்டன் நகர அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவை
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருந்தாலும், பேருந்து தரிப்பு நிலையத்தை
புனரமைக்கும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என மக்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனவே, மலையகத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் ஹட்டன் பேருந்து தரிப்பு
நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய சுத்தமான, பாதுகாப்பான மற்றும் சுற்றுலாப்
பயணிகளுக்கு ஏற்ற வகையில் உடனடியாக புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/127fe8d3-0468-4ffc-86db-b58c87a0a8eb/26-6a6b25c4e9e0e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca93364b-844e-4fcc-92d5-dc4204045ce8/26-6a6b25c5bffc5.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/452a8a47-e052-40e9-871e-571eaaf16b86/26-6a6b25c691f6a.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனகராயன் குளத்தில் கப் ரக வாகனம் விபத்து: இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pickup-truck-accident-in-kanagarayankulam-2-dead-1785405762"></link>
            <id>https://tamilwin.com/article/pickup-truck-accident-in-kanagarayankulam-2-dead-1785405762</id>
            <summary type="text">கனகராயன் குளத்தில் கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனகராயன் குளத்தில் கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த விபத்தானது ஏ-9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இன்று (30.07) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றி சென்ற கப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p> குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக
மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7e6935c-0feb-473a-af5f-f52e3009fe29/26-6a6b24758ed2c.webp' /></p><p> </p><p>எனினும், தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:16:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி - மக்களின் கொந்தளிப்பால் வன்முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-kills-2-youngsters-in-negombo-1785393511"></link>
            <id>https://tamilwin.com/article/accident-kills-2-youngsters-in-negombo-1785393511</id>
            <summary type="text">நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன், வாகனம் ஒன்று தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. </p><p>

கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சம்பவித்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>இரண்டு இளைஞர்கள் பலி</b></h2><p>போட்டிப் போட்டுக்கொண்டு அதிக வேகத்தில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வாகனம் ஒன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac2865b-d2cc-4791-ad01-eb9acd5f39d8/26-6a6b324ece4c8.webp' /></p><p>நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திச் சென்ற இரண்டு இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். </p><p>விபத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராமவாசிகள் வாகனத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதனையடுத்து கட்டான பொலிஸ் நிலைய அதிகாரிகளும் நீர்கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும்&nbsp;சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.</p><p>வாகனத்தின் தீயை கட்டுப்படுத்தியதுடன், வன்முறை கட்டுப்படுத்தவும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-30T10:15:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவுக்கு யாழ்.ஊடக மன்றம் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-media-condoles-passing-senior-journalist-1785404032"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-media-condoles-passing-senior-journalist-1785404032</id>
            <summary type="text">மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத்
துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத்
துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு யாழ். ஊடக
மன்றம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளது.
</p><p>
</p><p>நீண்ட கால ஊடக அனுபவத்தை அவர் கொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல்
பயிற்சி மையத்தின் விரிவுரையாளராக கடமை புரிந்து பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய
பெருமையும் அவரை சாரும். </p><p>அத்துடன் தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் செய்தி
ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றி பல விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்துக்கு
பல நல்ல விடயங்களை புரிந்ததில் அவரது பங்கு அளப்பரியது.</p><p></p><h2>தமிழ் மக்களது உரிமைசார் போராட்டங்கள்</h2><p>தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின்
குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த
ஆளுமையுமாவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8301392-9681-4ea9-b411-d8f44db5ce35/26-6a6b22ec9937c.webp' /></p><p>அத்துடன் தமிழ் மக்களது உரிமைசார் போராட்டங்கள் தொடர்பான
செய்திகளை நடுநிலையாக பிரசுரித்து தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு
வலுச்சேர்த்ததில் அவரது பங்கு இன்றியமையாத ஒன்றாகும். </p><p>அவரது உயிரும் உடலும்
மறைந்தாலும் ஊடகத்துறையில் அவர் புரிந்த அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக
வரலாற்றில் என்றும் அழியாத தடமாக நிலைத்திருக்கும்.</p><p>

அன்னாரின் சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதோடு அவரை இழந்து வாடும்
உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:10:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலையில் விசேட போக்குவரத்து சோதனை! 24 ஓட்டுநர்களுக்கு தடை உத்தரவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-traffic-inspection-in-monaragala-drivers-1785401755"></link>
            <id>https://tamilwin.com/article/special-traffic-inspection-in-monaragala-drivers-1785401755</id>
            <summary type="text">மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய மற்றும் ஊவா குடா ஓயா பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையில், 24 ஓட்டுநர்களுக்கு தடை உத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய மற்றும் ஊவா குடா ஓயா பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையில், 24 ஓட்டுநர்களுக்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கதிர்காமம் மற்றும் தெவிநுவர தேவாலயங்களின் வழிபாட்டு நிகழ்வுகளை முன்னிட்டு தற்போதைய காலகட்டத்தில் மொனராகலை ஊடாக நாளாந்தம் ஏராளம் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.
</p><p>
அவ்வாறான வாகனங்களில் சட்டவிரோத உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளமை, கரும்புகை வெளியிடல் போன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக பாதசாரிகளும், வர்த்தகர்களும் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>போக்குவரத்து சோதனை</h2><p>

இதனையடுத்து வெல்லவாய மற்றும் ஊவா குடா ஓயா பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்களுடன் இணைந்து நடத்திய விசேட போக்குவரத்து சோதனையின் போது மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a3f12d-8489-4e5b-b4a4-9dcca1e0e269/26-6a6b183aefd4a.webp' /></p><p>

வீதிகளில் இயங்கும் பழுதடைந்த வாகனங்கள் மற்றும் பல்வேறு சட்டவிரோத பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்வது இந்த விசேட சோதனையின் முக்கிய நோக்கமாகும்.</p><p> இதன்போது வீதிப் போக்குவரத்துக்கு தகுதியற்ற, கடுமையான குறைபாடுகள் கொண்ட மற்றும் சட்டத்திற்கு முரணான பாகங்கள் பொருத்தப்பட்ட 24 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ஓட்டிய 24 சாரதிகளுக்கு உடனடி தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>விசேட நடவடிக்கை</h2><p>
</p><p>
இருப்பினும், சம்பந்தப்பட்ட சாரதிகள் தங்களது வாகனங்களில் உள்ள குறைபாடுகளையும் பிழைகளையும் சரிசெய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f12fd0c-2f76-41d3-b9fe-64495a3280c7/26-6a6b183ba6807.webp' /></p><p> </p><p>அந்த காலக்கெடுவுக்குள், வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தங்களது வாகனங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரத் தவறும் சாரதிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.</p><p>

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து விதிகளை மதிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற விசேட நடவடிக்கைகள் தொடர்ந்து கடுமையாக செயல்படுத்தப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T09:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillaiyan-s-petition-court-order-1785401680"></link>
            <id>https://tamilwin.com/article/pillaiyan-s-petition-court-order-1785401680</id>
            <summary type="text">தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p> 

அதற்கமைவாக, குறித்த மனுவை ஜனவரி மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce83b4ae-6ccb-44f2-838f-2c752c83aa4e/26-6a6b14270abae.webp' /></p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/94V288yqzBo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-30T09:07:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலுவடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bsl-rates-us-dollar-selling-rate-1785399754"></link>
            <id>https://tamilwin.com/article/bsl-rates-us-dollar-selling-rate-1785399754</id>
            <summary type="text">இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(30) அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக&amp;nbsp;இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(30) அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக&nbsp;இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.59 ஆகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441.22 ஆகவும் விற்பனைப் பெறுமதி 455.94ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.56ஆகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.54 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/333b3d74-262c-4400-9808-394b6618c935/26-6a6b0e5e92167.webp' /></p><p>அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228.31ஆகவும் விற்பனைப் பெறுமதி239.32 ஆகவும் பதிவாகியுள்ளது. </p><p> 

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255.37 ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.87ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-1983-and-unresolved-tamil-problem-1785398530"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-1983-and-unresolved-tamil-problem-1785398530</id>
            <summary type="text">கறுப்பு ஜூலை என்பது 1983 ஜூலை 24 தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்கள் 3000 பேர் வரை படுகொலை செய்ததும், தமிழர்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜூலை என்பது 1983 ஜூலை 24 தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்கள் 3000 பேர் வரை படுகொலை செய்ததும், தமிழர்களின் சொத்துகளை அழித்தும், கைப்பற்றியும், சூரையாடியும், கொள்ளைடித்தும், தமிழ்ப் பெண்களை கற்பழித்தும், தமிழர் வீடுகள் வியாபால நிறுவனங்களை தீவைத்து எரித்தும் சிங்கள இனவெறியர்கள் ஆடிய ஊழித்தாண்டவத்தை ஈழத்தமிழர்கள் அதனை ஒரு துன்பவியல் நிகழ்வாக கடந்துவிட முடியாது. </p><p>

அது ஈழத்தமிழர்களது இருப்போடும், வாழ்வோடும், வரலாற்றோடும் பிண்ணிப் பிணைந்த ஒன்றாகும். அந்த வலியும், வேதனையும் தலைமுறை தலைமுறையாக காவிக் கடத்தப்படவேண்டியதொன்று.</p><p></p><p>
</p><p>
1983 ஜூலையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு என்பது சடுதியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல. </p><p>அது நீண்ட திட்டமிடலோடும், இன விரோதத்தோடும், தமிழர்களின் பொருளாதாரத்தை கொழும்பில் இல்லாது ஒழிக்கவும், பொருளாதார இலக்குகளை சிங்களவர்கள் கைப்பற்றுவதற்குமான ஒரு நீண்டகால தொடர் இனவிரோத செயல்முறையின் ஒட்டுமொத்த திரட்சியின் வடிவம் தான் ஜூலை இனப்படுகொலை.</p><p>ஆனால் யாழ் திருநெல்வேலியில் ஜூலை 23ஆம் திகதி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள படையினர் கொல்லப்பட்டமை என்பது அந்த இனப்படுகொலையை ஆரம்பிப்பதற்கான உடனடி காரணமாக அமைந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d35756c-1464-429a-9910-06a742631602/26-6a6b057fe22a0.webp' /></p><h2>&nbsp;ஜூலை படுகொலை</h2><p>

சிங்களவர்களால் 1983 ஜூலை இனவழிப்பின் ஆரம்பத்திற்கு முன்னரே மே மாதம் பெரதேனியா பல்கலைக்கழக பதிவாளராக(1976) இருந்த விமல் சுந்தரவின் ஆதரவு அணி மாணவர்களான துல்சி விக்ரமசிங்க மற்றும் டொக் கமகே ஆகியோரின் தலைமையிலான குழுவினால் பெரதேனியா பல்கலைக்கழக அருணாசலம் மண்டபத்தில் வைத்துத் இனத்துவேசம் பேசியவாறு தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டனர்.&nbsp;</p><p>இதனையடுத்து, 1983 ஜூலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கபினற் மினிஸ்டர்கள் சிலர் கிளாஸ்களை உடைத்து தமிழின விரேதம் பேசி சத்திமிட்டுவிட்டு கலகம் விளைவித்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79a6002d-de55-4b61-b8ab-35c345f577d9/26-6a6b08ad6363d.webp' /></p><p> </p><p>

அதன்பின்னர் அதாவது 83 கலவரம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பெஸ்ரஸ் பெரேரா தன்னுடைய தொண்டர்களுக்கு பிறவுன் கொட்டேல் கடற்கரையில் வைத்து “let them wait a few weeks , they will learn a good lesson‘‘ என்று சொன்னார்.

1983 ஜூலை 11 இல் ஜே.ஆர் ஜயவர்த்தனா ‘‘நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.</p><p>இப்போது அவர்களைப்பற்றி எம்மால் சிந்திக்க முடியாது. அவர்கள் உயிர்களைப்பற்றியோ, அவர்கள் எங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றியோ சிந்திக்க முடியாது “என்கிறார்,

இது தமிழர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற வக்கிரம் ஜனாதிபதி மனதில் குடிகொண்டிருப்பதை காட்டுகிறது.</p><p></p><p> </p><p>

இதேவேளை பின்நாளில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துளத்முதலியிடம் ஒக்பேட் பல்கலைக்கழக டேவிட் செல்போர் என்ற அவரது நண்பன் ‘‘இனப்பிரச்சனைக்கு எத்தகைள தீர்வை காணப்போகிறீர்கள்“ என்று கேட்டதற்கு, “ mash The Heads of the Tamils‘‘ என்று சொன்னார்.

 அது இனக்குரோதத்தின் உச்சத்தின் வெளிப்பாடு, திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினருடைய சடலங்களும் பொரளை மயாணத்தில் எரிக்கப்பட்டது.</p><h2>ஓகனேசன்ஸ் திட்டம்</h2><p>
</p><p>
 24 ஆம் திகதி மதியம் 2மணிக்கு கொழும்பு வீதிகள் எங்கும் படுகொலைகள் நடந்தன. சிங்களவர்கள் சிலர் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் போது அந்த அந்த பிரதேசத்தின் வாக்காளர் பட்டியலினை கையில் வைத்துக்கொண்டே ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தாக்கினர்.
</p><p>
தென்னிலங்கையில் தமிழர்கள் பெருமளவு கொல்லப்பட்டு பேரழிவை சந்தித்துக் கொண்டிருப்பதை ரசித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி, ஜூலை 27ஆம் திகதி வானொலி ஊடாக தனது உரையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு எந்தவிதமான அனுதாபமோ வருத்தமோ தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b330ef0e-0f9a-46f8-b3fe-ed5b193b6123/26-6a6b08ae35f40.webp' /></p><p> 

அதேநேரம் அமைச்சர் அனந்த திஸ்ஸ டி அல்விஸ் த காடியன் ஊடகங்களுக்கு 28ஆம் திகதி யூலை கொடுத்த பேட்டியில், சில ஓகனேசன்ஸ் திட்டம் செய்திருந்தாகவும், தாம் அது தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார். </p><p>

அத்துடன் இது ஒரு Hit and Run Operation என்றும் கூறினார். இங்கு படுகொலைகளின் பின் எந்தவோரு அரசியல் கட்சியோ, தொண்டு நிறுவனமோ, பத்திரிகைகளோ ஒரு வருத்தத்தை தானும் தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்டவர்களுடன் எப்படி தமிழர்கள் சமரசம் செய்து இணைந்து வாழ முடியும்?&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஊடகவியலாளர்களுக்கு சொன்ன தகவல்</span></p><p>
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நடந்த போது 28 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தனது வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவைக் கொழும்புக்கு அனுப்பி வைத்து எச்சரித்தார். </p><p>

ஆனாலும் ஜூலை 31ஆம் திகதி தான் இனவழிப்பு வெறியாட்டம் நிறுத்தப்பட்டது. சிங்களவர்கள் சிலர் வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை மறித்து, “ நீ சிங்களவனா?” எனக் கேட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d2bbca6-43a1-4089-b58b-5a58aab7881a/26-6a6b0c23bbb06.webp' /></p><p>
</p><p>
அப்போது அவர் ஆம் என்றால் அவர் சிங்களவன் என்பதற்கான அடையாளத்தை காட்டவேண்டும் இதுஒரு புறம் புத்தரினுடைய பாட்டினை பாடிக்காட்ட வேண்டும். அப்போது தான் விட்டார்களாம். இதன்போது ஐலண்ட் பத்திரிகை ஊடகவியலாளர் அமிர்த அபேசேகர அப்பகுதியால் செல்லும் போது அவரிடமும் கேட்கப்பட்டது. </p><p>

அவர் திருப்பி அந்த சிங்கள தலைவனைக் கேட்டாராம், “ நீ சொல்லு எண்டு அவரால் சொல்ல முடியவில்லை..” என்பதையும் ஐலண்ட் பத்திரிகையில் பதிவு செய்திருந்தார். 

கொழும்பில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ தலைமை தாங்கியிருந்தார். </p><p>அதற்காக ஜாதிக சேவக சங்கமய (JSS) என்கின்ற தொழிலாளர் சங்கத்திற்கு இனவாதத்தை தூண்டி அவர்களைக் கொண்டே வெள்ளவத்தை பகுதியில வீடுகளை தீக்கிரையாக்கப்பட்டது.

கொழும்புப் படுகொலைகளை சிறில் மத்தியூதான் தலைமை தாங்கினார் என India Today of 31st August 1983, தெரிவித்திருந்தது.&nbsp;</p><p></p><h2>442 கடைகள் அழிப்பு</h2><p>
அடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் தெகிவளை கல்கிசை மாநகராட்சி கவுன்சிலர் தலைமையிலான கும்பல் ஒன்று மவுண்லவேனியா, கல்கிசை, புறக்கோட்டைப் பகுதிகளில் 442 கடைகளை எரித்து அழித்திருந்தன. 

தளபதி அலோசியஸ் முதலி மகனுடன் ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் இருவரும் சேர்ந்து பொரளை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் சீருடைய அணியாத இராணுவம் பயன்படுத்தப்பட்டது. </p><p>

அத்தோடு, இலங்கை போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்து அமைச்சராக எச் முகம்மட் இருந்தார். நுவரேலியாவில காமினி திசநாயக்கா பற்றிக் சறம் அணிந்தவாறு சிங்களவர்கள் கூட்டத்தை வழிநடத்திப்போய் “தமிழனையும் அவன் கடைகளையும் எரியுங்கள்“ என்று கத்தியவாறு காடையர்களை வழிநடத்தினார். </p><p>

இதனை பியதாச தனது நுாலின் 81 -89 வரையான பக்கங்களில் குறிப்பிடுகிறார். (L.Piyadasa , Srilanka: The Holocaust and After , 1984) இந்த பியதாச தான் 1983 கலவரத்தைப்பற்றி விரிவாக எழுதினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d19da55a-8087-451a-a261-e7d0f33da0a7/26-6a6b0c24a806c.webp' /></p><p> </p><p>

இந்தப்புத்தகம் எழுதியதற்காக அவருடைய கண்டி வீடு அடித்துநொருக்கப்படுகிறது. இந்த கொலைகள் ஒருபுறம் இடம்பெற்றிருக்கும் போது இந்திராகாந்தி இராஜசபாவில் its genocide என்று கூறினார்.</p><p> 

அத்துடன் P.V.நரசிமராவை கொழும்புக்கு அவசரமாக அனுப்பினார். நரசிமராவ் ஜே.ஆர் இடம் நீங்கள் கட்டுபடுத்துகிறீர்களா அல்லது நாங்கள் படையை அனுப்பி கட்டுப்படுத்தவா என்று கேட்டதன் பின் ஜே.ஆர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். </p><p>

அதே போன்று, “எமெஜென்சி 58” என்னும் புத்தகத்தை எழுதிய ரார்சி விற்றாச்சி(Tarzie Vittachi)என்கின்ற தினமும் வெளியாகும் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். </p><p>இவர், தனது புத்தகப்பதிவில் 1958 இல் ஹிங்குராங்கொடவில் கரும்புத் தோட்ட அரசவிடுதியில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்து கொலை செய்தனர். </p><p>

இரத்தம் தோய்ந்த படி கிடக்க அதனைச் சுற்றி மேளமடித்து பாட்டுப்பாடி மகிழ்ந்தனர். இதனைப்பார்த்த பெண் தன் 2பிள்ளைக்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.</p><h3>பேருந்து நிலையத்தில் ஆடைகள் கலைக்கப்பட்ட தமிழர்</h3><p>

ஜேர்மனியில் ஹிட்லர் செய்த படுகொலைக்காக இதுவரை நாசிகளின் அரசியல் கட்சிகள் எதுவும் உரிமை கோரிவில்லை, மன்னிப்பு கேட்கவில்லை. அந்த நாளில் ஒஸ்ரிக் முகாமில் அதன் பொறுப்பதிகாரியாக இருந்த ஒஸ்கார் என்ற 94 வயது நிரம்பிய சிறைப்பொறுப்பதிகாரி, கடந்த 2015ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டு 4வருட சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருக்கிறது. 

ஜேர்மனிய அரசுக்கு இந்த தகவல்களை வழங்கியவர்கள் இஸ்ரேலியர்கள். </p><p>அந்தளவிற்கு யூதர்களிடம் தகவல் ஆய்வு மையம் இயங்கிக்கொண்டிக்கிறது. ஆனால் ஈழத்தமிழரிடம் அப்படி எதுவும் இல்லை. 

1983 ஜூலை கொழும்பில் நடைபெற்ற படுகொலையை புரட்சி கொம்னிஸ்ட் கழகம் சார்பில் சிங்களத்தில் கம்கறுமாவத்தை என்றும் தமிழில் தொழிலாளர் பாதை என்ற பத்திரிகையின் ஒளிப்படப்பிடிப்பாளராக இருந்த சந்திரகுப்த அமரசிங்க என்பவர் பொரளைப்பகுதியூடாக குடிபோதையில் வரும்போது பொரளை பேருந்து நிலையத்தில் தமிழர் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிவிட்டு மேளமடித்து நடனமாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110cc77b-5feb-491a-954e-963c29bf24a9/26-6a6b0c2558fa7.webp' /></p><p>
</p><p>

தமிழ் நபர் தலையிலை கை வைத்துக்கொண்டிருக்கும் போது தனது புகைப்படக்கருவியினால் மொத்தம் 14 புகைப்படங்களை எடுத்திருந்தார். </p><p>இவை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஊடாக கப்டன் பண்டிதருக்கு வழங்கப்பட்டது. 

அந்த புகைப்படங்கள் தான் பேபி சுப்பிரமணியம் என்பவரால் கடந்த 1984ல் தமிழகத்தில் ஒரு கண்காட்சிக்காக வெளியிடப்பட்டது. அவைதான் இன்றுவரையான யூலை ஆதாரமாகவுள்ளது.</p><p>

இனப்படுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கும், தமக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கும், அதனுடாக தாம் இழந்து போன இறைமையை மீட்டெடுப்பதற்குமான தொடர் போராட்டத்தில் தமது இழப்புக்களையும், தமக்கு ஏற்பட்ட அவலங்களையும் நினைவு கூர்வதும் அதன் மூலமாக ஒரு கூட்டு மனஉணர்வுடன் ஐக்கியப்படவும், ஒற்றுமைப்படுவதற்குமான இடமாக நினைவுச் சின்னங்களும், நினைவு மண்டபங்களும் பேருதவி புரியும். </p><p>

அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வலிகளை, மனக்காயங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஜூலை இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவு சின்னங்கள் வரலாற்று உணர்வோடு அமைக்கப்பட வேண்டியது அவசியமானது. 

அத்தகைய நினைவுச் சின்னங்கள்தான் எதிர்காலத்தில் எமது சந்ததிக்கு வழிகாட்டியாக அமையும்.&nbsp; </p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-bandara-produced-before-court-1785392358"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-bandara-produced-before-court-1785392358</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டார, இன்று காலை (30.07.2026) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>


இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சுகீஸ்வர பண்டார ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>நிதி முறைகேடு தொடர்பாக</h2><p>


இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் ஊழல் தடுப்புக் குழு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCIB) முறைப்பாடு அளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb885555-65d6-4fbb-828b-ea8e0b5f2125/26-6a6af23bc5bfb.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், சுகீஸ்வர பண்டார 2022இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் இயக்குனர் பதவியையும் வகித்ததும் தெரியவந்தது.
</p><p>

இதன் அடிப்படையில், அவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.


அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-maid-death-case-latest-info-revealed-1785388801"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-maid-death-case-latest-info-revealed-1785388801</id>
            <summary type="text">கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. </p><p>

கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் சுவசெரிய முதலுதவி அதிகாரி அஸலி உபேக்ஷா நேற்று சாட்சியமளித்தார்.</p><p> மேலதிக நீதவான் லிலான் வருசூவிதாரன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.</p><p></p><p>
</p><h2><b>
சிறுமியின் மர்ம மரணம்</b></h2><p>“கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறுமியைத் தேடி அந்த வீட்டின் கராஜ் பகுதியினூடாக நுழைந்தேன். அங்கே படிகளில் சிறுமி ஒருவர் இருத்தப்பட்டிருந்தார். அவர் மீது படுக்கை விரிப்பு ஒன்று போர்த்தப்பட்டிருந்தது.

அத்துடன், சிறுமியின் உடலில் ஆடைகள் இருக்கவில்லை. </p><p>அந்த நேரத்தில் எரியும் ஒரு வாசனை உணரப்பட்டது. அது, எரியும் போது தோலில் இருந்து வெளிவரும் வாசனையாகும். எனினும் அது எவ்வகையான வாசனை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd0871e6-1df7-4dbf-a4e5-c4bd00c5dbaf/26-6a6aec218e1b9.webp' />&nbsp;&nbsp;</p><p>

கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதை என்னால் அடையாளம் காண முடிந்தது. சிறுமி என்னிடம் தண்ணீர் கேட்டார். அதற்கு மேல் வேறு எதையும் அவர் என்னிடம் கூறவில்லை.</p><p> உடனடியாக சிறுமியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமி இறந்த பின்னரே பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்.
</p><h2><b>
பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் </b></h2><p>சுவசரிய அவசர சேவை தொலைபேசி இலக்கமான 119 க்கு இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆரம்ப அழைப்புக்குப் பதிலளிக்கும் போது தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை உடனடியாகக் குளிப்பாட்டுவது உள்ளிட்ட அடிப்படை முதலுதவிகள் குறித்து அறிவுறுத்தினோம். </p><p>இருந்த போதிலும், நாங்கள் அங்கே சென்றடையும் போது குறித்த தரப்பினரால் அவை பின்பற்றப்பட்டிருக்கவில்லை.
</p><p>
மேலும், இந்த வழக்கில் சாட்சியமளிப்பது தொடர்பில் பொலிஸார் எங்களுக்கு எந்தவிதமான முறையற்ற அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b996e3c-5ff3-48a9-9558-7a2f9ac1669b/26-6a6af4af733ba.webp' />&nbsp;&nbsp;</p><p>
சம்பவம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டில் எரிவாயு காரணமாக தீப்பற்றிய ஒருவர் வீட்டில் உள்ளதாக சுவசரிய சேவைக்கு ஆரம்ப அழைப்பின் மூலம் பெறப்பட்டதாக&nbsp; தெரிவித்து, அதே ஆண்டில் தான் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
</p><p>
சுவசரிய சேவைக்கு பொதுவாகக் கிடைக்கும் அனைத்து அழைப்பு விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், இச்சம்பவமும் அவ்வாறே அமைந்திருக்கும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். </p><p>

தீக்காயங்களை தவிர, எரிவாயு காரணமாக தீப்பற்றி காயமடைந்த நபர் ஒருவர் குறித்தும் இச்சம்பவம் தொடர்பான ஆரம்ப சுவசரிய அழைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என எதிர்த்தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eTQrhBtbBLM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-30T08:20:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை மன்னார் மாவட்டத்தில் நெல் கொள்வனவு மேற்கொள்ளவில்லை - விவசாயிகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-paddy-procurement-in-mannar-district-1785397929"></link>
            <id>https://tamilwin.com/article/no-paddy-procurement-in-mannar-district-1785397929</id>
            <summary type="text">வட மாகாணத்தில் நெற் கிண்ணம் என அழைக்கப்படும் மன்னார்
மாவட்டத்தில் இதுவரை நெல் சந்தைப்படுத்தல்சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை என
பாதிக்கப்பட்ட விவசாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தில் நெற் கிண்ணம் என அழைக்கப்படும் மன்னார்
மாவட்டத்தில் இதுவரை நெல் சந்தைப்படுத்தல்சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை என
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் நெல்
கொள்வனவில் ஈடுபடுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் இன்னும் நெல் கொள்வனவு
நடைபெறவில்லை.
</p><p>
ஏனைய மாவட்டங்களில் 15 தொடக்கம் 20 இடங்களில் நெல் கொள்வனவு
நடைபெறுகின்றன.</p><p></p><h2>நெல் கொள்வனவு&nbsp;</h2><p> மன்னார் மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் மூன்று இடங்களில்
மாத்திரமே நெல் கொள்வனவு நடைபெற்றது.

அதிகமான நெல் உற்பத்தி உள்ள மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை
இவ்வாறான அநீதியான செயலில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
குறிப்பாக மடு பிரதேச செயலாளர் பிரிவு இலுப்பைக் கடவை பிரதேசம் போன்ற
இடங்களில் நெல் கொள்வனவு நடைபெறுவதில்லை.

கடந்த கால போக நெல்லை விவசாயிகள் இன்னும் விற்பனை செய்யாமல்
வைத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ffe0e5-b712-4d19-8c88-a472ba7b4013/26-6a6b077d2a1d6.webp' /></p><p>
</p><p>
மாவட்டத்தில் சிறுபோக அறுவடையும் பல பகுதிகளில் நடை பெறுகின்ற போதும் நெல்
சந்தைப்படுத்தல் பிரிவு நெல்லை கொள்வனவு செய்யாததால் குறைந்த விலையில் தனியார்
வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை வழங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>

உரிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் இந்த விடயத்தில்
எது விதமான அக்கறையுமின்றி செயலாற்றுகின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள்
குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் நெல்
கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை முன் வரவேண்டும் என அவர்கள்
வேண்டுகோள் விடுகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:14:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் - சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-physiotherapist-murdered-1785397866"></link>
            <id>https://tamilwin.com/article/female-physiotherapist-murdered-1785397866</id>
            <summary type="text">நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள்&amp;nbsp; நால்வரின் விளக்கமறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள்&nbsp; நால்வரின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த&nbsp;பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும்
குற்றத்திற்கு துணை புரிந்ததாக கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின்
விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p>குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில்
சிறைச்சாலை அதிகாரிகளால்&nbsp;நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a3ad61d-fde8-41b9-8d4e-09646e59ffbe/26-6a6b05b4abe10.webp' /></p><p>நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய
ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர, அவரது மனைவியான 35 வயதுடைய
ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க, கொலைச் சம்பவத்திற்கு
உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க
ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின்
பொலிஸ் பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோர்&nbsp;விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இக்கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:06:34+00:00</updated>
        </entry>
    </feed>
