<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-14T08:25:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/girl-assaulted-left-on-street-mother-arrested-1786692716"></link>
            <id>https://tamilwin.com/article/girl-assaulted-left-on-street-mother-arrested-1786692716</id>
            <summary type="text">கண்டி - வத்தேகம நகரில்,&amp;nbsp;சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.&amp;nbsp;இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - வத்தேகம நகரில்,&nbsp;சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.&nbsp;</p><p>இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் அவரது தாய் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>சிசிடிவி காட்சி&nbsp;</h2><p> </p><p>

</p><p>நான்கு வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் அழைத்து செல்லப்பட்டு நடுவீதியில் விட்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4448a3a-c82a-4d2e-bbd2-bdccb231722e/26-6a7ec8b98a2a0.webp' /></p><p>
</p><p>குறித்த காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிறுமியின் தாயையும் அவரது காதலர் என அடையாளம் காணப்பட்ட நபரையும் இன்று (14.08.2026) கைது செய்துள்ளனர்.
</p><p>
ஹாலிஎல - கெடவல வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது ஹாலிஎல பொலிஸாரினால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் ஹாலிஎல பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T07:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவழியில் மாயமான 19 ஆயிரம் புத்தகங்கள் - அநுர ஆட்சியில் தொடரும் ஊழல் குற்றங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/have-eight-hundred-thousand-textbooks-missing-1786691657"></link>
            <id>https://tamilwin.com/article/have-eight-hundred-thousand-textbooks-missing-1786691657</id>
            <summary type="text">கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், விநியோக மையங்களுக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், விநியோக மையங்களுக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை என அரசாங்கத்தின் மீது புதிய குற்றச்சாட்டொன்று எழுந்துள்ளது. </p><p>இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரே முறைப்பாடு செய்துள்ளார் என்று தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2> 

மாயமான 19 ஆயிரம் புத்தகங்கள்</h2><p> 

 கல்வி அமைச்சின் கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 19,892 முதலாம் வகுப்பு தமிழ் செய்முறைப் பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், திட்டமிட்டபடி விநியோக மையங்களுக்கு ஒப்படைக்கப்படாத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9d0317d-1028-480c-8cfc-5deec9643601/26-6a7ec7d4d338d.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி தலங்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் கடந்த மே மாதம் 4ஆம் திகதி சம்பந்தப்பட்ட புத்தக இருப்பை ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்குக் கொண்டு செல்ல கல்வி வெளியீடுகள் திணைக்களம் அனுமதி பெற்றிருந்தபோதிலும், திட்டமிட்டபடி விநியோகிக்கப்பட வேண்டிய கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 மையங்களுக்கு அந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை என முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; </p><p>இதற்கமைய, சுமார் 8 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள, முதலாம் வகுப்பின் மூன்றாம் பருவத்திற்கான புத்தக இருப்பு, திட்டமிட்டபடி விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MIt-ufvXOUk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T07:47:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள் : முதல் 13 நாட்களில் 6000இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-reported-in-first-13-days-of-august-1786690978"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-reported-in-first-13-days-of-august-1786690978</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
</p><p>நேற்று வரை (13.08.2026) நாடு முழுவதும் மொத்தம் 91,346 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><h2>மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக</h2><p>
 

அதே காலகட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 68 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10df779d-4eec-4c1c-b52c-c2e3b51aa24c/26-6a7ec5dc22f6c.webp' /></p><p>
 

இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஜூலை மாதத்தில்தான் அதிகபட்சமாக 29,968 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. </p><p>அதே சமயம், நேற்று வரையிலான ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,004 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
</p><p>
 

இந்த ஆண்டு இதுவரை மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 48,383 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. </p><p>

 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட தரவுகளின்படி, தெற்கு மாகாணத்தில் 13,479 டெங்கு பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 8,160 டெங்கு பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T07:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய பக்கோ சமனின் தாயார் - பின்னணியில் வெளியாகியுள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-shooting-of-backo-samans-mother-1786688688"></link>
            <id>https://tamilwin.com/article/information-shooting-of-backo-samans-mother-1786688688</id>
            <summary type="text">பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிதியாவ பகுதியில் உள்ள வீட்டிற்கு வருகை தந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் (12) துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றனர்.</p><p>

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார், மித்தெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>&nbsp;</p><h2>கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தை</h2><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு, கொலைக்கு பிறகு பக்கோ சமனின் தாயார் தங்குமிடம் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15a56cfa-73ad-49b1-b2f5-2bd0a093b892/26-6a7ec52730275.webp' />&nbsp;</p><p>
நாட்டை விட்டு தப்பிச்செல்வதற்காக இஷாரா செவ்வந்திக்கு யாழ்ப்பாணத்திற்கு பயண வசதிகளை செய்து கொடுத்தவரும் பக்கோ சமன் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>

இதன் விளைவாக, கணேமுல்ல சஞ்சீவவுக்கு விசுவாசமான கரந்தெனிய சுத்தாவின் கும்பலால் அவரது தாயார் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்</p><p>
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பிறகு இஷாரா செவ்வந்தி மாத்தறை மற்றும் வவுனியாவில் தங்கியிருந்ததாகவும், பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதற்கிடையில், கொலைக்காக துப்பாக்கிதாரிகள் வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், நேற்று காலை (13) மாத்தறை பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் கொலை</h2><p>
</p><p>
அதன்படி, கைரேகை பதிவு செய்யும் அதிகாரிகளும், தங்கல்லை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து இவ்விடயம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e3a9bd-b18e-4f54-9de5-b1e0d7a0c539/26-6a7ec527dc959.webp' /></p><p>
</p><p>
இந்தோனேசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன், தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அருணா விதானகமகே என்ற மிதெனியே கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் கொலையிலும் பெக்கோ சமன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மித்தெனிய பகுதியில், முன்னதாக பெக்கோ சமன் மற்றும் பிறருடன் கைது செய்யப்பட்ட லஹிருவின் வீடு, கடந்த மாதம் 8ஆம் திகதி சிலரால் தீக்கிரையாக்கப்பட்டது.</p><p>

வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டபோது லஹிருவின் தாயார் அங்கிருந்ததாகவும், தீ விபத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T07:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF - ETFஐ ஒன்றிணைக்கும் முடிவு! வீதிக்கு இறங்க தயாராகுமாறு ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-to-epf-etf-merger-1786689456"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-to-epf-etf-merger-1786689456</id>
            <summary type="text">EPF மற்றும் ETF ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கும், ஊழியர் சேமநிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்குத் தனியார் ஊழியர் மையம் தனது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>EPF மற்றும் ETF ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கும், ஊழியர் சேமநிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்குத் தனியார் ஊழியர் மையம் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக ஊழியர் அமைச்சரிடம் ஒரு கோரிக்கை மனுவைச் சமர்ப்பிப்பதற்காக, மையத்தின் பிரதிநிதிகள் குழு நாரஹேன்பிட்டவில் உள்ள ஊழியர் அமைச்சகத்திற்கு சென்றுள்ளது.&nbsp;</p><h2>மாதாந்திர ஓய்வூதியம்</h2><p>இதன்போது&nbsp;தனியார் ஊழியர்&nbsp;மையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ கூறுகையில், ஊழியர்கள் 55 வயதை எட்டிய பிறகு பெறும் பெரும் தொகைக்குப் பதிலாக மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் விவாதித்து வருகிறது.</p><p>

இது உழைக்கும் மக்களின் உரிமைகளை மீறுவதாகும். கடந்த ஜூன் மாதம் முதல் அரசாங்கம், EPF மற்றும் ETF ஒரு முத்தரப்பு ஆளுகை கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்க முயன்று வருவதாகவும், இலங்கை கையொப்பமிட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளின் படி அத்தகைய ஒரு செயல்முறைக்கு அரசாங்கம் சட்டபூர்வமாக கட்டுப்பட்டதல்ல என்றும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5835d6e-4695-4a1d-a08a-f816e1c4b3ab/26-6a7ec4f13fd89.webp' /></p><h2>நிதிகளைக் கொள்ளையடிக்க முயற்சி</h2><p>

தற்போதைய அரசாங்கம் உழைக்கும் மக்களுக்குத் துரோகம் செய்து, இந்த நிதிகளைக் கொள்ளையடிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய நாகமுவ, ரணில் விக்ரமசிங்க முன்பு முன்வைத்த அதே கொள்கைகள் இன்று செயல்படுத்தப்படுவதாகக் கூறினார்.</p><p>

இந்த முடிவுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் தயாராக வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T07:34:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் தொடரும் குழப்பம்.. நாமலின் அபூர்வ சக்தியை கண்டு அஞ்சுகிறதா அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-final-war-namal-rajapaksa-speech-1786683849"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-final-war-namal-rajapaksa-speech-1786683849</id>
            <summary type="text">போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தி அரசாங்கத்தைப் பாதுகாத்திருந்தால், இன்று நான் உயிருடன் இருந்திருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தி அரசாங்கத்தைப் பாதுகாத்திருந்தால், இன்று நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அத்தனகல்ல பகுதியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இதன்போது அவர், "இந்த நாட்டின் இளைஞர்களை ஒரு சமூகப் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக, மக்களின் பக்கம் நின்று பின்வாங்குவது அவமானகரமானது என்று அரசாங்கமும் அதில் சம்பந்தப்பட்டவர்களும் கருதினால், அது அவர்களின் தவறு.</p><h2>அரசாங்கத்தின் எண்ணம்..&nbsp;</h2><p>சிறைச்சாலைகளில் நிலவும் அமைதியின்மை, எதிர்க்கட்சியினரின் அல்லது நாமலின் செயல் என்று சித்தரிக்கப்படுகின்றது. மேலும், தன்னைப் பார்க்கும்போது அரசாங்கம் ஒரு சக்திவாய்ந்த நபராகக் கருதுகிறதா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287690a7-ff98-4cfe-91e8-9752e8c857da/26-6a7eaad66c136.webp' /></p><p>அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் குரலை அடக்குவதற்கு எதிர்க்கட்சி அரசியல் சக்திகள், சிவில் சமூக அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மகா சங்கம் ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன.&nbsp;</p><p>மக்களுக்கு அளித்த வரம்பற்ற வாக்குறுதிகளை நாளுக்கு நாள் மீறுவதன் மூலமும், மக்கள் அளித்த வாக்குகளைக் குறைத்து மதிப்பிடுவதன் மூலமும் அரசாங்கம் நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்கிறது.&nbsp;</p><p></p><h2>மக்களின் நெருக்கடி நிலை&nbsp;</h2><p>
இந்த நாட்டு மக்கள் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளனர், அரசாங்கம் தனது வரிக் கொள்கையை நாளுக்கு நாள் மாற்றி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c33a3bc-70c2-4eb6-a4b8-5c163724f5c2/26-6a7eaad73e76a.webp' /></p><p> தனக்கு நட்பானவர்கள், தன்னுடன் இருப்பவர்கள் மற்றும் தனக்குச் சாதகமாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து, வரம்பற்ற வரிச் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.&nbsp;</p><p>இருப்பினும், நாட்டின் சாதாரண மக்கள், உழைக்கும் மக்கள், தினக்கூலி பெறுபவர்கள் மற்றும் மாதக் கூலிக்கு வேலை செய்பவர்கள் மீது அரசாங்கம் வரம்பற்ற வரிச்சுமையை சுமத்துகின்றது.&nbsp;</p><p>
அரச கணக்குகளில் டிரில்லியன் கணக்கான ரூபாய் இருப்பதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்து அறிவித்தபோதிலும், மில்லியன், பில்லியன் அல்லது டிரில்லியன் கணக்கான ரூபாய் சம்பாதிக்கக்கூடிய தொழில்முனைவோரையும் குடிமக்களையும் உருவாக்குவதும், தங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளைச் சமாளித்து மகிழ்ச்சியாக வாழக்கூடிய மக்களை உருவாக்குவதுமே அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-ShAh7Krt_A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T06:57:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் பெருந்தொகை எரிபொருள் மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-mp-boats-fueled-with-fuel-port-on-credit-1786672226"></link>
            <id>https://tamilwin.com/article/former-mp-boats-fueled-with-fuel-port-on-credit-1786672226</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஒருவரின் மீன்பிடிப்படகுகள் மற்றும் வாகனங்களுக்கு மீன்பிடித்துறைமுகமொன்றில் கடனுக்கு டீசல் வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இருப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஒருவரின் மீன்பிடிப்படகுகள் மற்றும் வாகனங்களுக்கு மீன்பிடித்துறைமுகமொன்றில் கடனுக்கு டீசல் வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், இதற்காக செலுத்த வேண்டிய பதினான்கு இலட்சம் ரூபாய் இன்னும் வசூலிக்கப்படவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>கசிவின் காரணமாக வீணான எரிபொருள்&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையில், ஹெந்தல திக்கோவிட்ட துறைமுகத்தின் வடக்கு முனையத்தில் நிலத்தடி எரிபொருள் குழாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட எரிபொருள் கசிவால் ஏற்பட்ட இழப்பு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து இன்னும் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a30c73-23b5-4dc7-b6e6-89d18cc49785/26-6a7ebae40136c.webp' /></p><p>
இந்த கசிவின் காரணமாக சுமார் 2700 லிட்டர் எரிபொருள் வீணானதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவிக்கின்றது.
</p><p>
இந்த நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் இந்த குழாயை அமைத்துள்ளது.</p><p>

இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:53:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்குக் கிழக்குப் பகுதிகளில் செஞ்சோலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20th-anniversary-commemoration-of-students-died-1786689220"></link>
            <id>https://tamilwin.com/article/20th-anniversary-commemoration-of-students-died-1786689220</id>
            <summary type="text">முல்லைத்தீவு - வல்லிபுனம் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி குண்டுவீச்சு
தாக்குதலில் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - வல்லிபுனம் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி குண்டுவீச்சு
தாக்குதலில் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 
உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ் இன்று(14.08.2026) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.</p><h2>நினைவேந்தல் நிகழ்வு&nbsp;</h2><p>வல்லிபுனம் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு
செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்ட குண்டுவீச்சு
தாக்குதலில் பல மாணவர்கள் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49aaeb12-bc79-4b2b-a360-64e45b1ec7e0/26-6a7eb77ee3e0e.webp' /></p><p>
</p><p>
தமிழ் தேசிய பேரவையின் ‘நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு’ ஏற்பாடு
செய்திருந்த இந்த நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதிநிதிகள்
பலர் கலந்துகொண்டுள்ளனர்.
</p><p>
இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் உருவப்படங்களுக்கு
சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b><i>மேலதிக தகவல் -&nbsp; தவசீலன்</i></b></p><p><b><i><br></i></b>செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின்
வள்ளிபுனம் பகுதியில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நினைவேந்தல் நிகழ்வானது இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அஞ்சலி நிகழ்வு&nbsp;</h2><p>

கடந்த 2006ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின்
வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது
இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 53
மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர்.
</p><p>
மேலும், 100ற்கும் அதிகமான மாணவிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் அவயவங்களை
இழந்தனர்.

இந்தப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தாயக
மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் வள்ளிபுனம்
பகுதியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4baa7caa-1fe4-470e-a62e-827ad12eb697/26-6a7ec353879a6.webp' /></p><p>

இந்த நிகழ்வில், பொதுச்சுடரை இந்த படுகொலை சம்பவத்தில்
உயிரிழந்த செல்வம் நிறோஜினியின் தாயார் செல்வம் மேரிபுஸ்பலதா ஏற்றி
வைத்துள்ளார். </p><p>

இதனைத் தொடர்ந்து உறவுகளால் தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களுக்கு
மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4bf1d56-8bec-4053-9fe3-123902076dbd/26-6a7ec35288ced.webp' /></p><p>
</p><p>
இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், புதுக்குடியிருப்பு
பிரதேச சபை தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல்
பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப்
பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T06:50:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூநகரி மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்படும் காற்றாலை விசேட திட்டம் - சிறீதரன் எம்.பி கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/poonagari-wind-farm-sridharan-mp-visits-1786686670"></link>
            <id>https://tamilwin.com/article/poonagari-wind-farm-sridharan-mp-visits-1786686670</id>
            <summary type="text">காற்றாலைத் திட்டத்திற்காக கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காற்றாலைத் திட்டத்திற்காக கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.</p><p>பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தை
அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><h2>மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிப்பு</h2><p>
</p><p>
இந்த நிலையில், இந்த திட்டத்தினால்
பயன் தரும் நிலையிலுள்ள 5000ற்கும் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்படுவதோடு,
அதனை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரமும் முற்று முழுதாக
பாதிக்கப்படும்.
</p><p>
கள விஜயத்தின் பின்னர், கிராஞ்சி ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகள் மற்றும்
பொதுமக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/946a00c5-5230-42bc-a2e6-c444be5c7d57/26-6a7eb0e02bb05.webp' /></p><p>
</p><p>
மேலும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும், தொடர்
நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன்,
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியம்
சுரேன், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் கண்ணதாசன், கட்சியின்
செயற்பாட்டாளர் குபேந்திரன் ஆகியோருடன் ஒருங்கிணைந்த சமூக மட்ட
அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:46:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையடக்க தொலைபேசிக்காக மாணவியின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mobile-phone-issue-school-student-dead-1786675044"></link>
            <id>https://tamilwin.com/article/mobile-phone-issue-school-student-dead-1786675044</id>
            <summary type="text">பதுளை, மஹியங்கனை வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகஹஎல பிரதேசத்திலிருந்து கையடக்கதொலைபேசியைக் கொடுக்கவில்லை என்ற மனவேதனை காரணமாக 16 வயது பாடசாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை, மஹியங்கனை வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகஹஎல பிரதேசத்திலிருந்து கையடக்கதொலைபேசியைக் கொடுக்கவில்லை என்ற மனவேதனை காரணமாக 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
</p><p>
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் தோற்றவிருந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். </p><p>மாணவியின் மரண விசாரணையை யட்டிநுவர திடீர் மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன மேற்கொண்டுள்ளார்.</p><h2><b>மாணவியின் விபரீத முடிவு</b></h2><p> 


பாடசாலை முடிந்து வீடு திரும்பியதும் மகள் எப்போதும் கையடக்கதொலைபேசியுடனேயே பொழுதை கழிப்பதாக சாட்சியமளித்த உயிரிழந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c866d3f-861d-465a-b2e5-a4fd202564de/26-6a7eb7603a02c.webp' /></p><p>கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதால் மாணவி அது தொடர்பில் அடிக்கடி புத்திமதி கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>சம்பவத்தன்று மகள் கையடக்கதொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த போது மாணவி அதனைப் பறித்த நிலையில் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்குச் சென்றுள்ளார்.</p><p>அந்தச் சந்தர்ப்பத்தில் மகள் அறையில் தூக்கிட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் சாட்சியமளித்துள்ளார்.</p><p>

உயிரிழந்த சிறுமி கல்வி நடவடிக்கைகளில் மிகவும் திறமையானவர் என்றும், அவர் பரீட்சைகளின் போது எப்போதும் வகுப்பில் முதலாம் அல்லது இரண்டாம் இடங்களை பெற்றுவந்துள்ளாரென்றும்&nbsp; விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T06:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-reported-in-weeraketiya-1786688253"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-reported-in-weeraketiya-1786688253</id>
            <summary type="text">வீரகெட்டியவின் அக்ரஹேர பகுதியில் இன்று(14.08.2026) காலை&amp;nbsp;துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதில் 20 வயதுடையு இளைஞர் ஒருவர் காயமடைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீரகெட்டியவின் அக்ரஹேர பகுதியில் இன்று(14.08.2026) காலை&nbsp;துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>இதில் 20 வயதுடையு இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த இளைஞர் முதலில் வீரகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><h2>மேலதிக விசாரணை</h2><p>பன்றியை நோக்கிச் சுடப்பட்ட இலக்கு இந்த இளைஞர் மீது பாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce7f10e-31ea-4c44-8fc8-3396f1d931df/26-6a7eb706b2cff.webp' /></p><p>
 

வீரகெட்டிய பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிப்பு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-mayilathamadu-madhavanai-1786685771"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-mayilathamadu-madhavanai-1786685771</id>
            <summary type="text">மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனைப் பகுதியிலுள்ள கால்நடைகளுக்கான
மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், பாரம்பரிய விவசாய
நிலங்களை மீட்டுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனைப் பகுதியிலுள்ள கால்நடைகளுக்கான
மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், பாரம்பரிய விவசாய
நிலங்களை மீட்டுத்தரக் கோரியும் அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடை
பண்ணையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
மன்னார் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற இப்போராட்டத்தில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும்
முதியவர்கள் கலந்து கொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><h2>

மேய்ச்சல்தரை ஆக்கிரமிப்பு மற்றும் கால்நடைகளின் இறப்பு</h2><p>
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், மயிலத்தமடு மற்றும்
பெரியமாதவனை மேய்ச்சல்தரைகளை ஆக்கிரமிக்க வேண்டாம் என்றும்,
ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca17569-1d27-4fa2-94fc-974027ac062d/26-6a7eb32e6a62a.webp' /></p><p>குறிப்பாக, மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக கால்நடைகள்
எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து ஆழமான கவலை தெரிவிக்கப்பட்டது. </p><p>துப்பாக்கிச்சூடு, வெடிபொருட்கள், மின்சார வேலிகள் மற்றும் வாள்வெட்டு போன்ற வன்முறைச்
செயல்களால் பல கால்நடைகள் கொல்லப்பட்டிருப்பது போராட்டக்காரர்களால்
சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>கொல்லப்பட்ட கால்நடைகளின் புகைப்படங்கள் அடங்கிய
பதாகையொன்று "மயிலத்தமடு, பெரியமாதவனை கால்நடைகளின் அவலநிலை" என்ற தலைப்பில்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.</p><p> 2023ஆம் ஆண்டின் பல்வேறு திகதிகளில் நடைபெற்ற
கால்நடை இறப்பு சம்பவங்கள் இதில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdcf8e29-1a57-4106-b782-c177eba884da/26-6a7eb32f6fc50.webp' /></p><p>
</p><h2>
பாரம்பரிய நிலங்களை மீட்க கோரிக்கை</h2><p>

"எமது காணி, எமது குரல்" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற
இப்போராட்டத்தில், இலங்கை அரசாங்கம் தங்களது பாரம்பரிய நிலங்களை உடனடியாகத்
திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. </p><p>வலி வடக்கு (யாழ்ப்பாணம்),
கேப்பாப்பிலவு (முல்லைத்தீவு), மயிலத்தமடு மற்றும் மாதவனை (மட்டக்களப்பு) ஆகிய
பகுதிகளில் நீண்டகாலமாக நிலங்களை இழந்து தவிக்கும் மக்களின் போராட்டத்திற்கு
ஆதரவு கோரும் பதாகையொன்றும் ஏந்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72380898-6985-4596-afed-7bb8c9e01ab1/26-6a7eb3304670c.webp' /></p><p> </p><h2>அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி</h2><p>
இது ஒரு ஜனநாயக ரீதியிலான, கவனத்தை ஈர்க்கும் போராட்டம் என MSEDO நிறுவனம் தெரிவித்தது. போராட்டத்தில்
கலந்து கொண்டவர்கள், "மக்களின் பசி தீர்க்க மக்கள் காணிகளில் படைகள்
பயிரிடுவதா?" என்று கேள்வியெழுப்பும் பதாகையையும் ஏந்தியிருந்தனர்.
</p><p>
மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனை கால்நடை வளர்ப்போர் கமல அமைப்பு, MSEDO உடன்
இணைந்து இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d9f50d4-56cf-4a92-839c-1059bb2c22cf/26-6a7eb33122ad1.webp' /></p><p> </p><p>தங்களது வாழ்வாதாரமாக விளங்கும்
மேய்ச்சல்தரைகளையும், பூர்வீக நிலங்களையும் மீட்கும் வரை தங்களது போராட்டம்
தொடரும் என பண்ணையாளர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். </p><p>அரச அதிகாரிகள்
மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு
நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் பிரதான
கோரிக்கையாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தின் பின்னர் நடந்த விபரீதம் - மணமகளின் சகோதரனும் பாட்டியும் கோர விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veyangoda-accident-two-death-1786685404"></link>
            <id>https://tamilwin.com/article/veyangoda-accident-two-death-1786685404</id>
            <summary type="text">கம்பஹா - வெயங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்கம்பத்தில் வானொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துளள்னர்.

நேற்று மாலை 5.00 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - வெயங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்கம்பத்தில் வானொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துளள்னர்.
</p><p>
நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வானின் சாரதியான 21 வயதான நவோத் சதுரங்க, அவரது பாட்டியான 80 வயது மூதாட்டி டபிள்யூ.ஏ. விக்கிரமாராச்சி ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>7 பேர் காயமடைந்து&nbsp; மருத்துவமனையில் அனுமதி</h2><p>

இவர்கள் தனது மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று வெயங்கொடை ஹீந்தெனியா பகுதியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c8a219-06f4-4fd6-8e25-91386bbfa550/26-6a7eb36114e61.webp' /></p><p>
</p><p>
மணப்பெண்ணின் சகோதரர் வானை செலுத்திச்சென்ற நிலையில், மணப்பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் தந்தை உட்பட 9 பேர் அந்த வானில் பயணித்துள்ளனர்.</p><p>
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், வானில் பயணித்த ஏனைய 7 பேர் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சாரதி வாகனம் செலுத்தும்போது உறங்கிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T06:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் விசேட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisher-problems-trincomalee-district-meeting-1786686929"></link>
            <id>https://tamilwin.com/article/fisher-problems-trincomalee-district-meeting-1786686929</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கூட்டமானது,நேற்று(13.08.2026) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>

 மாவட்ட அரசாங்க அதிபர் 
டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமாரவின் ஒருங்கிணைப்பில், கடற்றொழில், நீரியல்
மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/564f67d5-76c5-4d2f-81a9-846a2108d2f7/26-6a7eb2990e0e5.webp' /></p><p>
</p><p>

இதில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார
மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா
மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர்
கலந்துகொண்டு, மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் தேவைகள்
குறித்துத் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
</p><p>
கூட்டத்தின் தொடக்கத்தில், இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் இதன் மூலம்
எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
விரிவாக விளக்கமளித்தார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கடந்த மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.
</p><p>
குறிப்பாக, திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும்
சிக்கல்களுக்கு விரைவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப்
பெற்றுக்கொடுப்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

இந்தக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின்
செயலாளர், திருகோணமலை மாவட்ட மீன்பிடி கூட்டுத்தாபன அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள், மாவட்ட மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T06:16:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் ரூ.52 இலட்சம் மதிப்புள்ள சிகரெட் பொதியுடன் சிக்கிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrest-imported-cigarette-katunayake-1786685954"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrest-imported-cigarette-katunayake-1786685954</id>
            <summary type="text">சட்டவிரோதமாக சிகரெட் பொதிகளைக் நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் இன்று (14.08.2026) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக சிகரெட் பொதிகளைக் நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் இன்று (14.08.2026) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த பின்னர், காலை சுமார் 6:15 மணியளவில், அறிவிக்க வேண்டிய விவரங்கள் ஏதுமில்லாத பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 'பசுமை வழித்தடம்'(Green Channel) வழியாகக் கடந்து செல்ல முயன்ற அப்பெண் கைது செய்யப்பட்டார்.</p><h2>நான்கு பயணப் பைகளில் மறைத்து</h2><p>கண்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதான, கைது செய்யப்பட்ட அந்தப் பெண், சவூதி அரேபியாவில் இரண்டு ஆண்டுகள் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிறகு இலங்கைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91b9fe79-89b7-4d69-8311-01f636cca057/26-6a7eb19a5f09a.webp' /></p><p>

 

சுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் தனது பணியை முடித்து இலங்கை திரும்புவதற்கு முன்பு ஷார்ஜாவில் சிகரெட் பொதிகளை வாங்கியுள்ளார்.
</p><p>
 

அந்தப் பெண் எடுத்துச் சென்ற நான்கு பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 35,200 சிகரெட்டுகள் அடங்கிய 176 அட்டைப் பெட்டிகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். </p><p>சிகரெட் பொதிகளின் மதிப்பு சுமார் ரூ.52.8 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

முறையான சுங்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து, அந்தச் சரக்கு பறிமுதல் செய்யப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு ரூ.100,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் அனுஷ்டிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவு நாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veeramunai-massacre-memorial-day-celebration-1786683618"></link>
            <id>https://tamilwin.com/article/veeramunai-massacre-memorial-day-celebration-1786683618</id>
            <summary type="text">அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை
கிராமத்தில் வீரமுனை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று(13.08.2026) வீரமுனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை
கிராமத்தில் வீரமுனை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று(13.08.2026) வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள
படுகொலை நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.</p><h2>வீரமுனை படுகொலை</h2><p>
</p><p>
12.08.1990ஆம் ஆண்டு வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயம், வீரமுனை இராம
கிருஸ்ண வித்தியாலயம் ஆகியவற்றில் தங்கியிருந்த மக்கள் மீது விசேட
அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரால் இந்த
மிலேச்சத்தனமாக படுகொலை நடத்தப்பட்டது.
</p><p>
வெட்டியும் சுட்டும் தாக்கியும் சுமார் 85க்கும் அதிகமானோர் இதன்போது
படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்து அம்பாறை வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a616b88f-817b-449d-ae29-8fb0e2450f32/26-6a7ea2bd437f4.webp' /></p><p>

அவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரையில் தெரியாத நிலையில், இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்று
36 வருடங்களை கடந்துள்ள போதிலும் இதுவரையில் எந்த
விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.
</p><p>
இந்த நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் வீரமுனை படுகொலை நினைவேந்தல்
நிகழ்வுகள் வீரமுனை மக்களால் நடாத்தப்பட்டுள்ளது.
</p><p>
இன்று காத்தான்குடி படுகொலை மற்றும் ஏறாவூர் படுகொலை தொடர்பில் பேசும் மனித
உரிமை செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் வீரமுனை படுகொலை தொடர்பில்
பேசுவதற்கு முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்குப் பகுதியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrest-a-young-man-in-eastern-1786684863"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrest-a-young-man-in-eastern-1786684863</id>
            <summary type="text">இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 3,920 மில்லிகிராம்
&#039;ஐஸ்&#039; போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 3,920 மில்லிகிராம்
'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டம பகுதியில் அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப்
பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்</h2><p>
</p><p>
தொட்டம கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

இவர் தொட்டம மற்றும் பன்னல்கம ஆகிய பகுதிகளில்
நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ்
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/046d06ff-6a07-49fe-a5c1-5fa538e1e175/26-6a7ea80f78bb9.webp' /></p><p>

அம்பாறை மாவட்டப் பிரிவின் பதில் அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
வீரசிங்க மற்றும் அம்பாறை மாவட்டப் பிரிவு அதிகாரி சம்பத் விக்ரமரத்ன
ஆகியோரின் மேற்பார்வையில், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின்
பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரா தலைமையிலான குழுவினரால்
இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தமன பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பொலிஸார் சந்தேக நபரை
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செஞ்சோலை படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tributes-paid-who-died-at-chencholai-complex-1786684378"></link>
            <id>https://tamilwin.com/article/tributes-paid-who-died-at-chencholai-complex-1786684378</id>
            <summary type="text">செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த
மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (14.08.2025) உணர்வு பூர்வமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த
மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (14.08.2025) உணர்வு பூர்வமாக
அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><p>

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை
வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை
நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள்
4 பேரினதும் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற
இடத்தில் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>மலர்தூவி அஞ்சலி</h2><p>
உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d9c86e-2d15-4965-a3b6-3da9d578230d/26-6a7ea76902ded.webp' /></p><p>
முப்புர வட்டார புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சி.குகனேசன்
தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள், கரைச்சி
பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, தாயக நினைவேந்தல் அமைப்பின்
தலைவர் முல்லை ஈசன், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என
பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T05:31:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரிடமிருந்து தப்பிக்க பல மாடிகளுக்கு பாயும் பெண் - இரகசியமாக சுற்றிவளைத்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-with-drugs-1786683832"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-with-drugs-1786683832</id>
            <summary type="text">போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு(76448)
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை(13) மாலை சாய்ந்தமருது
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கல்முனைக்குடி கிறீன்
பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வைத்து&nbsp;கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

40 வயது மதிக்கத்தக்க 1 பிள்ளையின் தாயான சந்தேகநபர் கணவனை இழந்த நிலையில், தனது உறவினர்களின் உதவியுடன் நீண்ட காலமாக பல்வேறு போதைப்பொருட்களை
விநியோகித்து வந்துள்ளார்.</p><h2>பல மாடிகளுக்கு பாய்ந்து தப்பியோட்டம்</h2><p>குறித்த பெண் பொலிஸாரின் வருகையை அறிந்து கொண்டால் வீட்டுத்திட்ட 3 ஆம் மாடியிலிருந்து பல மாடிகளுக்கு பாய்ந்து சென்று தப்பிச்செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ed7b9c9-4e33-4b56-aadb-019b12d33ea2/26-6a7ea62f2e991.webp' /></p><p>இதன் காரணமாக சந்தேகநபரான பெண் ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) என அழைக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.</p><p>கைது செய்யபடும் போது அவரிடமிருந்து 2310 மில்லி
கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>இருவேறு சந்தர்ப்பங்களில் கைதான சந்தேகநபர் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு சவாலாக இருந்துள்ளதாக
பொலிஸ் உயரதிகாரி குறிப்பிட்டார்.</p><p>போதைப்பொருட்கள் விநியோகிப்பதாக கிடைத்த தகவலிற்கமைய பெண் பொலிஸாரின் உதவியுடன் மாறுவேடத்தில் பொலிஸார் இவ்விசேட சோதனையினை
மேற்கொண்டதுடன், நீண்ட போராட்டத்தின் பின்னர் சந்தேகநபரை கைது
செய்துள்ளனர்.</p><h2>&nbsp;நீண்டகால போதைப்பொருள் விற்பனை</h2><p>இந்த கைது நடவடிக்கையின் போது பங்கேற்ற பொலிஸாரை பொதுமக்கள்
வாழ்த்தியதுடன் நீண்ட கால போதைப்பொருள் விற்பனை கட்டுப்பாட்டிற்கு கொண்டு
வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a737cae4-9fcc-4d74-b8c6-322305c4909f/26-6a7ea63002532.webp' /></p><p>

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின்
மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி
அவர்களின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
எம்.கே. இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய
பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வி.பிரகலாதன் தலைமையிலான
குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வி.ஜீவரத்தினம், பொலிஸ் உத்தியோகத்தர்களான அதுவார் (91775) நிவேதன்(94680) , பெண் பொலிஸ்
உத்தியோகத்தர் சாமிலி(10669) உள்ளிட்ட குழுவினர் இந்த விசேட அதிரடி சோதனையை
மேற்கொண்டனர்.</p><p>சந்தேகநபர் உட்பட சான்றுப்பொருட்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான மேலதிக
விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T05:23:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள்! மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஆராய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-district-coordination-committee-meeting-1786682476"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-district-coordination-committee-meeting-1786682476</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித்துறை எதிர்கொள்ளும் சவால்கள், கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் கடற்தொழில் அபிவிருத்தி குறித்த ஒருங்கிணைப்புக் குழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித்துறை எதிர்கொள்ளும் சவால்கள், கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் கடற்தொழில் அபிவிருத்தி குறித்த ஒருங்கிணைப்புக் குழு
கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத்
துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையிலான மாவட்ட
மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுவின் 2வது அமர்வு இன்றைய தினம் (14.08.2026) மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.</p><p>
கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி
பிரபுவின் பங்கேற்புடன் நடைபெற்றது.</p><h2>தொழிலாளர்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள்&nbsp;</h2><p>
</p><p>இதன்போது கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத்துறை சார்ந்த
தொழிலாளர்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன்
கடந்த 16.07.2025 அன்று நடைபெற்ற முதலாவது அமர்வில் எடுக்கப்பட்ட
தீர்மானங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57e7f5d3-2e60-4a5d-9155-1bbd69de3f57/26-6a7ea2a834323.webp' /></p><p>
</p><p>அத்துடன் சுருக்கு வலை பயன்பாடு உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளால்
பாரம்பரிய மற்றும் சிறு அளவிலான கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனைத் தடுப்பதற்காக கடற்படை, பொலிஸார், கடலோரப் பாதுகாப்புப் படையினர்
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த கூட்டுக் பொறிமுறை
குறித்து கலந்துரையாடப்பட்டது.</p><p>

கரைவலை தொழில் என்பது ஒரு பாரம்பரியத் தொழில் என்பதால் அதனை முற்றிலும் தடை
செய்யாமல், தகுந்த கட்டுப்பாடுகளுடன் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த
காலத்தில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து, தேசிய நீர்வள
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்திடம் இது குறித்த ஆய்வு
ஒப்படைக்கப்பட்டது. </p><p>மேலும் விரிவான ஆய்வுகளுக்காக ஒரு வருட கால அவகாசம்
அளிக்கப்பட்டுள்ளது குறித்து ஆராயப்பட்டது.

ஆள் பற்றாக்குறை காரணமாக கரைவலைக்கு பதிலாக டிராக்டர்கள் மற்றும்
வின்ச்இயந்திரங்களைப் பயன்படுத்தி, கரை எல்லைக்கு அப்பால் (சுமார் 6 - 7
நௌட்டிக்கல் மைல் வரை) சென்று அதிகளவில் மீன்களை அள்ளிச் செல்வதால், சிறு
கடற்தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5611af62-fd32-4c15-8de2-17ea5a5d58d2/26-6a7ea2a907b91.webp' /></p><h2>தொடர் பேச்சுவார்த்தைகள்</h2><p> எனவே, 1.5
நௌட்டிக்கல் மைலுக்கு அப்பால் கரைவலை பயன்பாட்டிற்கு இயந்திரங்களைப்
பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன் இது
தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுதாகவும் இதன்போது
அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
கடலில் மீன்பிடிப்பதை மட்டும் நம்பியிருக்காமல், கடல் மற்றும் குளங்களில்
'கூண்டு மீன் வளர்ப்பு' முறையை ஊக்குவிக்கவும், கிழக்கு மாகாணத்தில் உள்ள
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பயன்படுத்தி இராள் பண்ணைகளை அமைப்பது
குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
</p><p>
கிழக்கு மாகாணத்தின் ஜிடிபி பங்களிப்பு வட மாகாணத்தை விட அதிகமாக
இருந்தபோதிலும், வறுமை நிலவும் மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3340c6c8-c57d-4892-bede-c2832ac0dd3c/26-6a7ea2a9d3de4.webp' /></p><p> </p><p>எனவே, இரால் பண்ணை திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை
வழங்க முடியும். காணி ஒதுக்கீட்டின் போது, வெளி முதலீட்டாளர்களுக்கு முன்
உள்ளூர் மக்களுக்கு தலா 1 ஏக்கர் வீதம் காணி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த
முன்னுரிமை அளிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு
பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/570c8f63-5463-4b9d-bf89-104d5ad963ea/26-6a7ea2aab1bb8.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e513271-6c69-48dc-9c7b-32a1a6e925db/26-6a7ea2ab8917c.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T05:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் புகைப்படங்களை தவறாக பதிவிட்ட நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-posting-videos-on-social-media-1786682225"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-posting-videos-on-social-media-1786682225</id>
            <summary type="text">வாட்ஸ்அப்பில் பெண் ஒருவரின் தவறான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாட்ஸ்அப்பில் பெண் ஒருவரின் தவறான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த கைது நடவடிக்கை&nbsp;நேற்று (13) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சம்பவம் குறித்து விசாரணை</h2><p>

பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்டையில் வாரியபொல கணினி குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83c5919a-bbb4-4866-ae1b-4be2d8f0ca11/26-6a7ea10d389ab.webp' /></p><p>34 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T05:01:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மக்கள் மத்தியில் அதிகரிக்கும் ஆபத்து - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786678877"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786678877</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் தற்போது வெப்பமான வானிலை பதிவாகி வரும் நிலையில் மனநோய்க்கு இலக்காகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக காலி தேசிய மருத்துவமனையின் மனநல மர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் தற்போது வெப்பமான வானிலை பதிவாகி வரும் நிலையில் மனநோய்க்கு இலக்காகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக காலி தேசிய மருத்துவமனையின் மனநல மருத்துவரான ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். </p><p>

வெப்பநிலை உயர்வால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற நோய்களும் பதிவாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.</p><h2>மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை</h2><p> </p><p>

</p><p></p><p>இதேவேளை நாட்டின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் (14.08.2026) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fee5ac9b-6a32-4640-8307-23d94881addf/26-6a7e92c6299c6.webp' />&nbsp; &nbsp;</p><h2>வெப்பநிலையின் அளவு</h2><p>
</p><p>
இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
</p><p>
அதன்படி, கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/c1i9lcOot5U" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-14T05:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவிகரிப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-land-acquisition-for-palaly-airport-1786681888"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-land-acquisition-for-palaly-airport-1786681888</id>
            <summary type="text">பலாலி விமான நிலையத்திற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பது
பற்றிய கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி விமான நிலையத்திற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பது
பற்றிய கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.</p><p>

மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் தொகுதியில் காணி
உரிமையாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
</p><p>
இதன்போது கடந்த 04 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நஷ்ட ஈடு
வழங்கும் கூட்டத்தில் தமக்கு தமது காணிகள் வேண்டும் என்றும் தேவையான காணிகளை
பெறுவதை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
</p><p>
பலாலி விமான நிலையத்துக்கு என மூன்று கட்ட ஓடுதளங்களுக்கும் தேவையான 444
ஏக்கர் காலணிகள் ஏற்கனவே பொதுமக்களின் காணிகள் 1985 ஆம் ஆண்டு காலப்
பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த காணிகள் விமான நிலையத்தினை விஸ்தரிப்பதற்கு போதுமானதாக
காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T04:31:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்வெட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-minister-power-cut-announcement-1786596041"></link>
            <id>https://tamilwin.com/article/information-minister-power-cut-announcement-1786596041</id>
            <summary type="text">அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என்றும் எரிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>


செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.</p><h2>மின் உற்பத்தி பற்றாக்குறை&nbsp;</h2><p>எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் கூறும் இதுபோன்ற அறிக்கைகளால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் பீதியடைய வேண்டாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91966d74-49bf-4849-bfea-71d8535ca520/26-6a7e8b40692b2.webp' /></p><p>மேலும், அடுத்த ஆண்டு காற்றாலைகள் மூலம் 400 கிலோவாட் மின் உற்பத்தித்திறன் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
</p><p>தற்போது நாட்டின் மின்சார தேவையில் 48% புனல்மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும், மின் உற்பத்திப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது என்றும் அமைச்சர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திருத்த சட்டமூலம்! 18ஆம் திகதி நாடாளுமன்றில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-ammendment-will-be-submitted-on-18th-1786679769"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-ammendment-will-be-submitted-on-18th-1786679769</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>நீதித் துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதன் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஒரு நேர்மறையான நடவடிக்கையாகவே இந்தச் சட்டமூலம் அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>கடுமையான எதிர்ப்பு</h2><p>
</p><p>எனினும், இந்தச் சட்டமூலத்திற்கு நீதிச்சேவை சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சியின் பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் மகாநாயக்க தேரர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/262cf505-39da-4936-ab36-c37b1ede2b9b/26-6a7e99fb2f549.webp' /></p><p>
</p><p>இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65ஆகவும் உயர்த்தப்படும்.</p><h2>நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்</h2><p>
இலங்கை அரசியலமைப்பின் 121ஆவது பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒரு சட்டமூலத்தை (முதல் வாசிப்பு) உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.</p><p> அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dbd1a13-7f99-401a-8495-8466ae4d9f4c/26-6a7e99fbda92d.webp' /></p><p>
இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அதிகளவிலான மனுக்களைத் தாக்கல் செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் பல்வேறு சிவில் அமைப்புகளும் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T03:56:43+00:00</updated>
        </entry>
    </feed>
