<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-12T10:18:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் களமிறங்கும் மகிந்த.. சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த பேரணியானது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் தந்தை தலைமை தாங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று குறித்த பேரணியில் கலந்து கொள்வார் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், மீ்ண்டும் அரசியல் களத்தில் இறங்கும் மகிந்த என்னும் பாணியில் தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/j9vVKx2Yx3I" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T10:17:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் கும்பல்களின் புதிய உத்தி! தெஹிவளை குற்றச்செயல்களின் சூத்திரதாரிகள் அடையாளம் - பொலிஸாரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sdig-sajeeva-medhawaththa-statment-1789205044"></link>
            <id>https://tamilwin.com/article/sdig-sajeeva-medhawaththa-statment-1789205044</id>
            <summary type="text">எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவ - கட்டுபெத்த பகுதியில் இன்றைய தினம் (12) நடைபெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>புதிய உத்தி</h2><p>
</p><p>
மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக் கும்பல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக கைக்குண்டுத் தாக்குதல்களை ஒரு புதிய உத்தியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a604a9-f1f3-4bfc-84e1-8e9162456b04/26-6aa523bc5ffd5.webp' /></p><p> </p><p>

அத்துடன், தெஹிவளை-மவுண்ட் லாவினியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையை உலுக்கிய வன்முறைகளின் பின்னணியில் யார்.....! மூளையாக செற்பட்ட நபர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099"></link>
            <id>https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

குற்ற செயல்களில் மூளையாகச் செயற்பட்டவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதிவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><h2><b>தெஹிவளை தாக்குதல்</b></h2><p> 

தற்போது வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825c92c3-b244-4e18-82d4-15bab348c8f8/26-6aa51f4f8e104.webp' /></p><p>நேற்று அதிகாலை தெஹிவளை - கௌடான, சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், இரு மாணவர்கள் குறித்த வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் தந்தையின் கால்கள் காயமடைந்தன.</p><p>காயமடைந்தவரின் சகோதரன், படோவிட்ட அஸங்க என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h3><b>
கைக்குண்டுத் தாக்குதல்</b></h3><p>அதற்கமைய, இந்த கைக்குண்டுத் தாக்குதலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்மள்ளி என்பவர் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1318c143-7470-43a0-82cf-97f65e7fc22a/26-6aa522f512073.webp' /></p><p>கடத்தலுடன் தொடர்புடைய குறித்த நபரின் வீடு மீதே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வீடு மாறியமையால் அதற்கு அருகில் இருந்த சகோதரரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபருக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-12T09:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1789204321"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1789204321</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (12.9.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று (12.9.2026) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (13) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும். </p><p>

குறித்த அறிவிப்பின்படி, அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

அதேபோல், சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69b2df4-f3bd-443a-bb48-b008b7732b7d/26-6aa51b186b124.webp' /></p><p> </p><p>

இதன் காரணமாக, பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கம்! முள்ளிப்பொத்தானையில் கடும் வறட்சி - முற்றாக வற்றிய கிணறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789202092"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789202092</id>
            <summary type="text">எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை
மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை
மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையில் காணப்படுவதா எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
</p><p>நீண்ட காலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாததன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல
கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.</p><p>இதன் காரணமாக சில கிணறுகள் முற்றாக வற்றிய
நிலையில் காணப்படுகின்றன.</p><h2>குழாய் நீர் விநியோகம்</h2><p>
</p><p>
அதேவேளை, குழாய் நீர் விநியோகமும் தொடர்ச்சியாக இடம்பெறாமல், குறிப்பிட்ட
நேரங்களில் மாத்திரமே விநியோகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b5a894-0318-4cb6-9017-a2870d96150b/26-6aa51bafb7c04.webp' /></p><p>இதன் காரணமாக மக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, குடிநீர் தேவைக்காக கிணறுகளை நம்பியுள்ள குடும்பங்கள் வறட்சியால்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களிலும் மழை பெய்யாத
பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-vacancies-chancellars-edu-ministry-1789204352"></link>
            <id>https://tamilwin.com/article/university-vacancies-chancellars-edu-ministry-1789204352</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>பல வெற்றிடங்கள்..&nbsp;</h2><p>
</p><p>உயர்கல்வி தொடர்பான ஆலோசனைக் குழுவின் முன், துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebf8c250-bbf8-428e-9d4f-788720598821/26-6aa519e0bc431.webp' /></p><p>
</p><p>அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>இருப்பினும், சில பல்கலைக்கழகங்களில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் உள்ளமை இதன்போது சுட்டிக்காட்டத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் விருந்து என்ற பெயரில் இளைஞர், யுவதிகளின் வெறியாட்டம் - பின்னணியில் ஆபத்தான மர்மநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627"></link>
            <id>https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627</id>
            <summary type="text">பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்குவதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>பொலிஸாரின் கவனம்</b></h2><p>

இது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9d4d8a-fbe6-4315-9bf1-a1c33ff7a876/26-6aa519f58eb59.webp' /></p><p>இந்த வேலைத்திட்டத்தின் பலனாக தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எதிர்காலத்திலும் இது போன்ற இடங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுபோன்ற விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. </p><p>அவை வலையமைப்புக் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வணிகங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-12T09:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 மில்லியன் ரூபாய்க்கு சொகுசு பங்களா - ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-issued-to-shiran-basik-s-father-1789204698"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-issued-to-shiran-basik-s-father-1789204698</id>
            <summary type="text">ரூ. 30 மில்லியன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொகுசு வீடு வாங்கிய ஷிரான் பாசிக்கின் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மத்திய கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரூ. 30 மில்லியன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொகுசு வீடு வாங்கிய ஷிரான் பாசிக்கின் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பா வழக்கு இன்று(12.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2> 


விளக்கமறியல் உத்தரவு</h2><p>
ஷிரான் பாசிக்போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த , ரூ. 30 மில்லியன் பணத்தைக் கொண்டு, கம்பஹாவில் உள்ள பிரைம் ரெசிடென்சியில் தனது தந்தை அப்துல் ரசாக் ஹென்றி பாசிக் பெயரில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8de6a06-33ba-4bd8-b637-6befccb36d52/26-6aa5191b277c2.webp' /></p><p> </p><p>

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், பணச்சலவைச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) அப்துல் ரசாக் ஹென்றி பாசிக் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதனைத் தொடர்ந்து, இன்று(12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:19:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு: பெண்ணொருவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jewelry-stolen-in-nallur-woman-remande-1789203747"></link>
            <id>https://tamilwin.com/article/jewelry-stolen-in-nallur-woman-remande-1789203747</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி
அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு
முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து , துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய
சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி
அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.</p><h2>கைது</h2><p>&nbsp;கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
,பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd9ca202-dc0a-45aa-ad31-cec49db667c5/26-6aa51673ba807.webp' /></p><p>
</p><p>
அதனை அடுத்து குறித்த பெண்ணை யாழ்,நீதவான் நீதிமன்றில் பொலிஸார்
முற்படுத்திய நிலையில் ,அப்பெண்ணை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
</p><p>
அதேவேளை நல்லூர் ஆலய தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது, சுமார் 45
பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இந்தநிலையில் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள
நிலையில் , சில சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21323d9a-0990-49a2-93f7-9e26e74247fe/26-6aa5167470ec5.webp' /></p><p>அத்தோடு, அவர்களை கைது
செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்.. மூவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-in-jafnna-three-arrested-by-police-1789202908"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-in-jafnna-three-arrested-by-police-1789202908</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில்
சம்பவத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில்
சம்பவத்துடன் நொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வடமராட்சி - கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற
குறித்த சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p> </p><p>துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில், நபர் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர்
அடங்கிய குழு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c08c1965-06d3-4dea-b770-969ea59a0636/26-6aa5133f3f236.webp' /></p><p>


சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.</p><p>சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள
நிலையில், அவரை கைது செய்வதற்காக தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில்,
கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:56:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வரலாறு படைக்க வரும் போராட்டம் திரைப்படம் - யாழில் இன்று இசை வெளியீட்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056"></link>
            <id>https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. 

இந்த நிகழ்வு, இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு, இன்று(12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>இசை வெளியீட்டு விழா</h2><p>

இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் 070 341 4565 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவுச் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03754d7-ee3e-493a-85e7-43abd9f3eda2/26-6aa5128d83584.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், தாங்களும் கலந்து கொண்டு “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்க முடியும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதேவேளை, ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T08:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வுபெற்ற சுங்க அதிகாரிக்கு அரச உயர் பதவி - சூடுபிடிக்கும் 323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/323-containers-released-without-inspection-1789200886"></link>
            <id>https://tamilwin.com/article/323-containers-released-without-inspection-1789200886</id>
            <summary type="text">கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர், ஓய்வுபெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர், ஓய்வுபெற்ற பின்னர் அரசாங்கத்தில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அரசாங்கம் நல்லாட்சி கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>
நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்</h2><p>
இதற்கிடையில், கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21c0a94f-9f71-4386-b7a8-0154c27e4312/26-6aa50eaf247fe.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா, “தாமதமாவது சிக்கலானது” எனத் தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நியமிக்கப்பட்டிருந்தார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தனது இறுதி அறிக்கையில் கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கொள்கலன்களை அரசாங்கம் விடுவித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:36:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்திலுள்ள மிகப்பெரும் பிரச்சினைக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-chandhana-abayarathna-statement-1789201098"></link>
            <id>https://tamilwin.com/article/minister-chandhana-abayarathna-statement-1789201098</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார். </p><p>

குறிப்பாக, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் உத்தியோகத்தர்களை குறுகிய காலத்துக்கு குறித்த மாவட்டங்களுக்கு இணைத்து சேவையாற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>விசேட கலந்துரையாடல்</h2><p> </p><p>

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (12.09.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc5cbf10-57d6-4f81-b732-071b6339bf04/26-6aa50d950f292.webp' /></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் அளவுக்கு ஏற்ப பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரின் பற்றாக்குறை காணப்படுவது எமக்குத் தெரியும்.</p><h2>ஆட்சேர்ப்பு நடவடிக்கை</h2><p>
</p><p>
இதனை நிவர்த்தி செய்வதற்காக ஆட்சேர்ப்புகளுக்கு தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டு வருவதுடன், அரசாங்கமும் தேவையான ஆட்சேர்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a33dd9-00aa-491e-8541-5be27c8d121f/26-6aa50d9619cc9.webp' /></p><p>
</p><p>
ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதற்காக வட மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதியை குறைக்க முடியாது.

கடந்த காலங்களில் 'வடக்கின் வசந்தம்' போன்ற திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகளவான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p> 

எதிர்வரும் காலங்களிலும் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-sri-lanka-today-1789200376"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-sri-lanka-today-1789200376</id>
            <summary type="text">நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, கொழும்பு செட்டித்தெரு தங்க ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p> இதற்கமைய, கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தையில் இன்று (12) காலை ஒரு பவுண்&nbsp;தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.</p><h2>சந்தை நிலவரம்..&nbsp;</h2><p>நேற்றைய தினம் இதன் விலை 343,200 ரூபாவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991ac672-0dc8-4e39-9d4b-1e188fc80650/26-6aa50af8145f5.webp' /></p><p> </p><p>மேலும், கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, 24 கரட் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 373,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 375,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. </p><p>இருப்பினும், இந்த விலைகள் அடிக்கடி மாறுபடக்கூடியவை என்பதால், கொள்முதல் செய்வதற்கு முன்னர் தற்போதைய சந்தை விலைகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகச் சந்தையில் திடீர் சரிவை கண்ட கச்சா எண்ணெய் விலை - ஈரானின் அதிரடி முடிவால் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-prices-following-iran-s-decision-1789199433"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-prices-following-iran-s-decision-1789199433</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகச் சந்தையில் தொடர் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய் விலை தற்போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகச் சந்தையில் தொடர் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய் விலை தற்போது சரிவை கண்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பானது, நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டு இன்று(12.09.2026) வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் விலைக் குறியீடான ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை, நேற்றைய நிலவரப்படி, 108 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியிருந்தது.</p><p>

இந்த நிலையில், தற்போது 104.61 அமெரிக்க டொலாராக குறைந்துள்ளது.

இதேவேளை, ஒரு பீப்பாய் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெயின் விலையும், நேற்றைய தினம் 103.34 அமெரிக்க டொலராகப் பதிவான நிலையில் இருந்து, இன்று(12) 100.05 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.</p><h2>

உலகச் சந்தையில் குறைந்த கச்சா எண்ணெய் விலை</h2><p>
 மேலும், ஒரு பீப்பாய் முர்பான் கச்சா எண்ணெயின் விலையும், நேற்று 122.48 அமெரிக்க டொலராக இருந்த நிலையில் இருந்து, இன்று 119.46 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee3431d5-a9a6-4598-b846-8c1d81094ffe/26-6aa507e1101c6.webp' /></p><p> </p><p>

கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்துவரும் இராணுவச் சூழல் தீவிரமடைந்து வந்தபோதிலும், ஹோர்முஸ் நீரிணை குறித்து விவாதிப்பதற்காக ஈரானிய அதிகாரிகள் குழு ஒன்று ஓமானுக்குப் புறப்படுவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>

 பல வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த முக்கிய விவாதங்களில் கலந்துகொள்ள உள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிதாக கொள்வனவு செய்த வாகனம் - மூன்று நாளில் பற்றி எரிந்தமையால் அதிர்ச்சியில் உரிமையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-van-got-fired-owner-injured-1789179768"></link>
            <id>https://tamilwin.com/article/new-van-got-fired-owner-injured-1789179768</id>
            <summary type="text">களுத்துறை பிரதேசத்தில் புதிய வாகனம் ஒன்று முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், சாரதி படுகாயமடைந்துள்ளார். சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை பிரதேசத்தில் புதிய வாகனம் ஒன்று முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், சாரதி படுகாயமடைந்துள்ளார். </p><p>சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் கலப்புகம பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவராவார். </p><p>மூன்று நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வேனை இயக்க முற்பட்டபோது இயங்காமல் போயுள்ளது.</p><p> </p><h2><b>தீப்பற்றி எரிந்த&nbsp;வாகனம் </b></h2><p>அதனைத் தள்ளிக்கொண்டிருந்த போது தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9d4a51-1c71-4778-9bac-9cd24c5c572e/26-6aa4beb3e828a.webp' /></p><p>பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் களுத்துறை மாநகரசபையின் தீயணைப்பு வாகனம் என்பன வந்து தீயைக் கட்டுப்படுத்திய போதிலும், அதற்குள் வேன் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. </p><p>சாரதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-12T08:02:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலால் மகிந்தவாக மாற முடியாது - நிரோஷன் பாதுக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/niroshan-statement-about-namal-and-mahinda-1789196019"></link>
            <id>https://tamilwin.com/article/niroshan-statement-about-namal-and-mahinda-1789196019</id>
            <summary type="text">நாமல், மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல், மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் நேற்றைய தினம் (11.09.2026) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமலால் மகிந்தவின் இடத்தை அடைய முடியாது</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச என்பவர் முற்றிலும் ஒரு தனித்துவமான அரசியல் ஆளுமையையும் அடையாளத்தையும் கொண்டவராவார். 

எனவே, வெறும் வாரிசு என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்சவின் அரசியல் ஆளுமையையோ அல்லது அவருக்குரிய இடத்தையோ நாமல் ராஜபக்சவினால் அடைந்துவிட முடியாது.
</p><p>
அத்துடன், நாமல் ராஜபக்சவும் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சீர்கேடான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இலங்கை நாடு முன்னெப்பொழுதுமில்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d3cab32-45b3-4a4a-81d2-af7340da7192/26-6aa4fde93d858.webp' /></p><h2>ஆட்சி அதிகாரம்</h2><p> </p><p>

எனினும், நாடு எவ்வாறு இவ்வாறான வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதற்கான உண்மையான காரணங்களையோ அல்லது அதிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான தீர்வுகளையோ பற்றிய எந்தவொரு புரிதலும் தெளிவும் இல்லாத ஒரு தரப்பிடமே நாட்டின் பொதுமக்கள் தற்போதைய ஆட்சி அதிகாரத்தைக் கையளித்துள்ளனர். </p><p>

அதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தமக்குரிய பொறுப்புகளையும் கடமைகளையும் தாங்கள் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறோம்.</p><p> 

எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்துக் குழுக்களும் தத்தமது அரசியல் இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டில் தற்போது உடனடியாகத் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படாத நிலையில், நாமல் ராஜபக்சவும் எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கத்துவம் வகித்து வருகிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T07:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையிலான பேரணியில் பங்கேற்க போவதில்லை.. சாமர தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamara-not-participating-anuradhapura-rally-1789196864"></link>
            <id>https://tamilwin.com/article/chamara-not-participating-anuradhapura-rally-1789196864</id>
            <summary type="text">இன்று அனுராதபுரத்தில் நடைபெறும் பொதுஜன பெரமுனவின் பேரணியில் தான் பங்கேற்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தஸ்ஸநாயக்க தெரிவித்தார்.குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று அனுராதபுரத்தில் நடைபெறும் பொதுஜன பெரமுனவின் பேரணியில் தான் பங்கேற்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தஸ்ஸநாயக்க தெரிவித்தார்.</p><p>குறித்த பேரணியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு தனக்கோ அல்லது இலங்கை சுதந்திரக் கட்சிக்கோ&nbsp; கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுராதபுரத்திலேயே இருந்தபோதிலும், அவருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படாததால், தன்னால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>அழைப்பு விடுக்கவில்லை..&nbsp;</h2><p>
</p><p>மேலும் அவர், "இன்றைய பேரணியில் ஏராளமான மக்கள் கலந்துகொள்கின்றனர். அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa39cbc-bd19-451a-93dd-e484d6275e71/26-6aa4fbc8dd0c7.webp' /></p><p> </p><p>அனுராதபுரப் பேரணியில் எங்கள் தரப்பினர் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்; இருப்பினும், இதுவரை இலங்கை சுதந்திரக் கட்சிக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.</p><p>விமல் வீரவன்ச மற்றும் பிறருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அனுராதபுரத்தில் இருக்கிறார்; அவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் என்னால் அங்கு செல்ல முடியாது. </p><p>இது எதிர்க்கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்டமான பேரணியாகும். வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான மக்கள் கூட்டத்தை, அதாவது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோரை ஈர்க்கவுள்ள இந்தப் பேரணி வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T07:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி கோயிலுக்குள் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சி - பட்டப்பகலில் மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crime-under-guise-of-archaeological-excavations-1789195233"></link>
            <id>https://tamilwin.com/article/crime-under-guise-of-archaeological-excavations-1789195233</id>
            <summary type="text">தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் கோயில் வளாகத்தில் உள்ள கல் ஒன்றிற்கு அருகே அகழ்வாராய்ச்சி செய்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் கோயில் வளாகத்தில் உள்ள கல் ஒன்றிற்கு அருகே அகழ்வாராய்ச்சி செய்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம், புலத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தலேகம, ஹிங்குரகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
அகழ்வாராய்ச்சி போர்வையில் மோசடியாளர்கள்</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>


ஹிங்குரகந்த பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் அகழ்வாராய்ச்சி இடம்பெறுவதாக புலத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad1f20d-dc66-481b-86bf-6d1a2e13f6e2/26-6aa4f725b7c4b.webp' /></p><p> 

இதன்போது, அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்திய உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புலத்சிங்கள மற்றும் ஹொரணை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு 35 முதல் 50 வயது இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள், மத்துகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 




</p>]]></content>
            <updated>2026-09-12T06:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக்கட்சியின் பேரணியில் லிமினி ராஜபக்சவின் பங்கேற்பு.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-anuradhapura-rally-mahinda-namal-wife-1789194681"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-anuradhapura-rally-mahinda-namal-wife-1789194681</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் இன்று (12) நடைபெறவுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் இன்று (12) நடைபெறவுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.</p><p>இந்தப் பேரணியானது தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ பதவியிலிருந்து அகற்றுவதற்காக நடத்தப்படுவதல்ல என்றும், மாறாக தற்போதைய நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எதிராகவே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><h2>அரசுக்கு எதிரானது அல்ல..&nbsp;</h2><p>
</p><p>
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு இருந்ததா என்பது குறித்து நாட்டில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக குட்டியாராச்சி குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a766e9-96cb-414f-b7cd-b1b6cce04cb2/26-6aa4f657eb7dc.webp' /></p><p> </p><p>நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பே இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் அரசியல் மேடைகளிலும் விவாதிக்கப்பட்டமை, பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேரணியில் பங்கேற்பதை கட்சி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள போதிலும், நாமல் ராஜபக்சவின் மனைவி பங்கேற்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>
கூடுதலாக, அரசாங்கத்தின் அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் இந்தப் பேரணியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் - ஐக்கிய மக்கள் சக்தி உட்பட - எவரும் இணையலாம் என்றும், விருந்தினர் பேச்சாளர்கள் குறித்த இறுதி முடிவை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D14Te1-LAPI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T06:51:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைகள்! நாடாளுமன்றத்தில் கடும் கருத்து மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-thondaman-statement-1789194069"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-thondaman-statement-1789194069</id>
            <summary type="text">மலையக மக்களின் சம்பளம், காணி, வீடு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பது தொடர்பில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி
உறுப்பினர்களுக்கு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையக மக்களின் சம்பளம், காணி, வீடு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பது தொடர்பில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி
உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடும் கருத்து மோதல்
இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி கூறுகையில், மலையக
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக கேள்வி
எழுப்பி வருகின்றனர். </p><p>கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களது
காலத்திலேயே இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருக்க
வேண்டும்.</p><h2>கடந்த கால அரசாங்கங்கள் குறித்து குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கடந்த
காலங்களில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் பிரதிநிதிகளாகவும்
அமைச்சர்களாகவும் செயற்பட்டவர்கள் என சுட்டிக்காட்டியதுடன், அவர்கள் தங்களது அரசாங்கங்களிடமும் நாடாளுமன்றத்திலும் முறையாக இந்தப்
பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளை பெற்றிருந்தால் இன்று மலையக மக்களின்
பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது
எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d241c1dd-3bce-4612-b215-29e4dd593a56/26-6aa4f4a4a8c89.webp' /></p><p>
</p><p>அத்துடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களே கடந்துள்ளதாகவும், இந்தக் காலப்பகுதியில் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை, வீடமைப்பு, காணி
மற்றும் அன்றாட வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிருஷ்ணன் கலைச்செல்வி
தெரிவித்தார்.
</p><p>மேலும் பெருந்தோட்டத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி மற்றும்
அரசாங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மலையக மக்களுக்கு
சிறந்த வாழ்க்கை நிலையை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அவர்
கூறியுள்ளார்.</p><h2>குற்றச்சாட்டிற்கு பதில்</h2><p>
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தாம் சுமார் ஒரு வருட காலமே அமைச்சராக
பதவி வகித்ததாகவும் அந்த காலப்பகுதியில் மலையக மக்களுக்காக பல்வேறு
வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.
</p><p>
தாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் தற்போதைய அமைச்சராக உள்ள
வைத்தியர் மதுர செனரத் உள்ளிட்டவர்கள் நன்கு அறிந்திருப்பதாகவும் ஜீவன்
தொண்டமான் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d6966f-8fb7-4abd-9b65-159c65298f04/26-6aa4f4a560cd1.webp' /></p><p>
</p><p>
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு நேரடியான பதிலை வழங்குவதற்குப் பதிலாக கடந்த கால அரசாங்கங்கள் என்ன செய்தன என்ற கேள்வியே எழுப்பப்படுவதாக அவர்
குற்றம் சுமத்தினார்.
</p><p>
மேலும் நுவரெலியா மாவட்டமே நாட்டில் அதிக வறுமை நிலை காணப்படும் மாவட்டம் என
தெரிவிக்கப்படுவதாகவும், ஆனால் கிடைக்கப்பெறும் தரவுகளின்படி முல்லைத்தீவு
மாவட்டமே முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T06:44:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நாளை சர்வதேச விசாரணை கோரி பேரணி முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rally-in-jaffna-demanding-an-international-inquiry-1789193334"></link>
            <id>https://tamilwin.com/article/rally-in-jaffna-demanding-an-international-inquiry-1789193334</id>
            <summary type="text">செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் நாளைய தினம்(13.09.2026) பேரணி
முன்னெடுக்கப்படவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் நாளைய தினம்(13.09.2026) பேரணி
முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்று
பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p> அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனித புதைகுழி
காணப்படுகிறது.</p><h2>துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்து</h2><p> அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என
கோரியே பேரணி நடைபெறவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d62e295-ac19-420e-be39-4717b569dab5/26-6aa4f0ef47b52.webp' /></p><p>
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா காரியாலயத்திற்கு அருகில் இருந்து
ஆரம்பமாகவுள்ள பேரணி, கிட்டுப்பூங்கா பகுதியில் நிறைவடையவுள்ளது.
</p><p>
இந்த பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால் நேற்றைய தினம்
சனிக்கிழமை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்து
கொண்டு வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்து
போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T06:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் நிறைவேறாத கனவு - துயரில் முழ்கிய நண்பர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dream-of-boy-who-tragically-died-in-dehiwela-1789193915"></link>
            <id>https://tamilwin.com/article/dream-of-boy-who-tragically-died-in-dehiwela-1789193915</id>
            <summary type="text">தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலின் போது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் தந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலின் போது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் தந்தை வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவம் நேற்று(11.09.2026) இடம்பெற்ற நிலையில், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p> 

தந்தை - ஹெட்டியாராச்சிங்கே நலின் துசந்தா, 17 வயதான கசுன் ரஸ்மகா மற்றும் அவரது 11 வயதான தம்பி அஜித் கிஹான் ஆகியோரே இந்த தாக்கதலின் போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><h2>
நள்ளிரவில் நடந்த கொடூரம்</h2><p>
சம்பவம் தொடர்பான விசாணையில்,</p><p> 

முச்சக்கர வண்டி சாரதியான நலின் அவருடைய மனைவியை பிரிந்து மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். </p><p>அவருடைய மூத்தமகன் கசுன் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்தார், அதே சமயம் அவரது தம்பி எட்டாம் வகுப்பில் படித்து வந்தார். </p><p>

சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு, நலினும் அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டின் தரையில் ஒரு பாயில் உறங்கச் சென்றிருந்தனர்.

சுமார் 3.15 மணியளவில், வீட்டின் முன் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு நலின் கதவைத் திறக்கச் சென்றபோது, ​​கதவருகே இருந்த ஒருவர் வீட்டிற்குள் ஒரு கையெறி குண்டை வீசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cad78c7e-424e-4df8-8ff0-7448ab6c2f11/26-6aa4f04280931.webp' /></p><p> </p><p>அதன் பின்னர் அந்த நபர் உடனடியாக கதவை மூடிவிட்டு, தனது மற்றொரு கூட்டாளியுடன் வெளியே ஒரு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>
வீட்டிற்குள் கையெறி குண்டு வெடித்ததில் நலினும் அவரது இரண்டு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். மூவரையும் அக்கம்பக்கத்தினர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். 

எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், தந்தை நலின் இரு கால்களிலும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>
சிறுவர்களின் கடைசி ஆசை</h2><p>
மேலும், சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்த கசுன் ரஸ்மகா, வீட்டில் நிலவிய கடுமையான வறுமையின் காரணமாக தனது உயர்நிலை படிப்பைத் தொடர பாடசாலைக்குச் செல்லவில்லை. அடுத்த திங்கட்கிழமை முதல் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலைக்குச் சேரத் தயாராகி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36721db3-4a5b-4e45-a9a2-b4d0d06ee9f9/26-6aa4f0435855c.webp' /></p><p> </p><p>

இதேவேளை, என் அம்மா வீட்டை விட்டுச் சென்ற நாள் முதல், எனக்கும் என் தம்பிக்கும் உணவும் நீரும் வழங்கவும், பாடசாலைக்கு எங்களை அனுப்பவும் அப்பா கடுமையாகப் போராடி வருகிறார். அதனால், என்னால் உயர்நிலை படிப்புக்குச் செல்ல வழியில்லை. வகுப்புகளுக்குச் செல்ல என்னிடம் பணமும் இல்லை. </p><p>

எனவே, நான் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல மாட்டேன். நான் என் வேலையைச் செய்வேன், என் தம்பிக்கு நன்றாகக் கற்பித்து அவனை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு வருவேன் என அவருடைய நண்பர்களிடம் கசுன் கூறியதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D14Te1-LAPI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T06:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கை சுங்கத்தின் புதிய நடைமுறை! சர்வதேச நாணய நிதியம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-supports-sl-customs-paperless-system-1789192947"></link>
            <id>https://tamilwin.com/article/imf-supports-sl-customs-paperless-system-1789192947</id>
            <summary type="text">இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் 2026 அக்டோபர் 01 ஆம் திகதி முதல்
நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள காகிதமற்ற சுங்க அறிவிப்புத் திட்ட
செயலாக்க முற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் 2026 அக்டோபர் 01 ஆம் திகதி முதல்
நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள காகிதமற்ற சுங்க அறிவிப்புத் திட்ட
செயலாக்க முறைமை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குத்
தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கலந்துரையாடல்
ஜனாதிபதிச் செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க
தலைமையில் நடைபெற்றது.</p><h2>பிரதிநிதிகளுக்கு விளக்கம்</h2><p>

இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான நிர்வாகம், சீர்திருத்தம் மற்றும்
நவீனமயமாக்கல் பிரிவின் அதிகாரிகள், புதிய முறைமை, விழிப்புணர்வு திட்டங்கள்
மற்றும் சுங்கத் திணைக்களத்தின் தொழில்நுட்ப தயார்நிலை குறித்து சர்வதேச நாணய
நிதியப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.</p><p>

இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை சுங்கம் மற்றும் ஜனாதிபதிச்
செயலகத்தின் வருமான நிர்வாகச் சீர்திருத்தப் பிரிவு மேற்கொண்ட பங்களிப்பை
சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20f271f3-37dd-49fa-b8ca-6f1e5dc0fb26/26-6aa4ee5b7346e.webp' /></p><h2>தேவையான ஆதரவு</h2><p>
மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை
வழங்கவும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வருமான நிர்வாகம், சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் சிரேஷ்ட
மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட, இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல்
லியனகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும்
தினா பிரிகார்தினி மற்றும் கிளாகோவ் அகபனிட்சாவோர்ன் ஆகியோர் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T06:17:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படும் கைதிகள் - அதிகாரிகள் பற்றாக்குறையால் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-transferred-to-the-old-bogambara-prison-1789189984"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-transferred-to-the-old-bogambara-prison-1789189984</id>
            <summary type="text">கைதிகள் அடுத்த வாரம் பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படுவார்கள் என இலங்கைச் சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் அடுத்த வாரம் பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படுவார்கள் என இலங்கைச் சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து வருவதாக சிறைத்துறை ஆணையாளர் எஸ்.கே. பள்ளேதென்ன தெரிவித்துள்ளார். </p><h2>


நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்க நடவடிக்கை</h2><p>
இதற்கமைய, கைதிகள் உடனடியாக சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்றும், இவ்வாறு மாற்றப்படும் கைதிகளில் பெரும்பாலோர் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3831c7b4-256c-4292-a35f-8073a928fdc2/26-6aa4dfe6e43b0.webp' /></p><p> 


இதற்கிடையில், பழைய போகம்பர சிறையில் பணிகளை மேற்கொள்வதற்கு சிறை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதற்குத் தீர்வாக ஓய்வுபெற்ற சிறை அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்தத் திட்டங்கள் உள்ளதாகவும் எஸ்.கே. பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:17:10+00:00</updated>
        </entry>
    </feed>
