<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-06T06:34:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பல முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்ட இந்திய வெளியுறவுச் செயலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vikram-misri-meeting-several-political-figures-1785995896"></link>
            <id>https://tamilwin.com/article/vikram-misri-meeting-several-political-figures-1785995896</id>
            <summary type="text">கொழும்பில் பல முக்கிய சந்திப்புகள் மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுகளுடன் கூடிய
ஒரு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்த இந்தியாவின் வெளியுறவுச் செயலர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் பல முக்கிய சந்திப்புகள் மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுகளுடன் கூடிய
ஒரு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்த இந்தியாவின் வெளியுறவுச் செயலர்
விக்ரம் மிஸ்ரி, நேற்று மாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
இந்த வெளியுறவுச் செயலரின் விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு
உறவுகளின் முழுமையான பரிமாணங்களை மீளாய்வு செய்வதற்கும், பன்முகத் தன்மையைக்
கொண்ட இந்தியா - இலங்கை கூட்டுறவின் வலிமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு
சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் சஜித்</h2><p>இந்தியாவின் வெளியுறவுச் செயலர்
விக்ரம் மிஸ்ரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று(05) சந்தித்துப்
பேச்சு நடத்தினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed49de91-3549-45be-9013-202cf02f0c83/26-6a742604bd4f0.webp' /></p><p>
இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பிரதானமாகப்
பிராந்திய அபிவிருத்தி மற்றும் இலங்கை - இந்தியா இடையிலான நீண்டகால விசேட உறவை
மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
அத்துடன், இரு நாடுகளின் பரஸ்பர நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும்
பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான தொடர்புகளும்
நெருங்கிய ஒத்துழைப்பும் அவசியமானது என்பதை இரு தரப்பினரும் மீண்டும்
உறுதிப்படுத்தினர்.</p><h2>இந்திய வம்சாவளித் தமிழர்&nbsp;</h2><p>இதேவேளை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் இந்திய வம்சாவளித் தமிழ்
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பும் நேற்று&nbsp; நடைபெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b371b24e-1859-45ea-a0e4-8037c6ce752f/26-6a742605b09fc.webp' /></p><p>
இந்தச் சந்திப்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்
எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வேலுசாமி
இராதாகிருஷ்ணன் எம்.பி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>சந்திப்பின்போது, இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் அபிவிருத்தி தொடர்பான
விடயங்கள் மற்றும் இந்திய அரசின் பல்வேறு அபிவிருத்தி முன்முயற்சிகள் குறித்து
விரிவாக கலந்துரையாடப்பட்டது.</p><p>விக்ரம்
மிஸ்ரி, நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோரைச் சந்தித்துக்
கலந்துரையாடினார்.
</p><p>
இந்தச் சந்திப்பின்போது, இலங்கை மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா
முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கவனம்
செலுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T06:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த பிரபல பாடசாலை மாணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-student-arrested-for-kannaruva-1785994215"></link>
            <id>https://tamilwin.com/article/school-student-arrested-for-kannaruva-1785994215</id>
            <summary type="text">
கண்டி - கன்னொருவ பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் மாணவர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராதெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கண்டி - கன்னொருவ பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் மாணவர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பேராதெனிய, கன்னொருவ பகுதியில் கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p> 

இதன்போது மாணவரிடமிருந்து 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை பொலிஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265914d3-2c45-4805-9559-7b99bf694e9b/26-6a7424a4ece44.webp' /></p><p> </p><p>

அடுத்த ஆண்டு உயர்தர பரீட்சை எழுதவிருந்த 18 வயதான மாணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T06:07:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடி - தீவிர பாதுகாப்பில் நீதிபதிகள்- அடுத்துவரும் நாட்களில் அம்பலமாகவுள்ள ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eater-attack-tight-security-for-judges-1785988687"></link>
            <id>https://tamilwin.com/article/eater-attack-tight-security-for-judges-1785988687</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>அதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்</b></h2><p>கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கண்ணன் ஆகியோரைக் கொண்ட இந்த விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு நாளாந்தம் விசாரிக்கப்பட்டு வருகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b7cbf71-839f-4682-90a4-7c0cfe63c9b4/26-6a74206fc7c49.webp' /></p><p>சில சாட்சிகள் இரவு வேளைகளிலும் தொடர்ச்சியாக விசாரிக்கப்படுவதே இம்முறையீட்டு வழக்கின் சிறப்பம்சமாகும்.</p><p> இந்த வழக்கு விசாரணை, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பிலானதாகும். </p><p>முகமது இப்ராஹிம் முகமது நவ்பர் எனப்படும் நவ்பர் மௌலவி உட்பட 24 முறைப்பாட்டாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பல தீர்க்கமான தகவல்கள் வெளிவந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T05:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமாகும் வானிலை! ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-risk-on-hatton-colombo-main-road-1785992954"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-risk-on-hatton-colombo-main-road-1785992954</id>
            <summary type="text">வட்டவளை - ரொசெல்ல பகுதியிலிருந்து, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக நோர்வுட் நெடுஞ்சாலை அலுவலகத்தின் நிர்வாக பொறிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டவளை - ரொசெல்ல பகுதியிலிருந்து, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக நோர்வுட் நெடுஞ்சாலை அலுவலகத்தின் நிர்வாக பொறியாளர் ஏ.எம்.சாதிக் தெரிவித்தார்.
</p><p>
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
இதற்கிடையில், தற்போது நிலவும் கடுமையான வானிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, ஹட்டனிலிருந்து கித்துல்கல செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு நிர்வாகப் பொறியாளர் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p>இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மற்றும் மழை நிலைமை இன்று முதல் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><h2>மேகமூட்டமான வானம்</h2><p>
</p><p>
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b05b46b7-3995-491f-882d-35fe0210d4a4/26-6a741edba4dcc.webp' />&nbsp;&nbsp;</p><p> இந்த பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T05:43:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gs-strike-on-11-and-12-1785993648"></link>
            <id>https://tamilwin.com/article/gs-strike-on-11-and-12-1785993648</id>
            <summary type="text">&amp;nbsp;பல கோரிக்கைகளை முன்வைத்து வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் உடலநலக் குறைவு விடுமுறையைப் பதிவு செய்து, அனைத்துக் கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பல கோரிக்கைகளை முன்வைத்து வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் உடலநலக் குறைவு விடுமுறையைப் பதிவு செய்து, அனைத்துக் கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை கிராம உத்தியோகத்தர் தேசிய சங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>
இந்த இரண்டு நாள் தொழிற்சங்க நடவடிக்கையின் போது தமது தொழில்சார் கோரிக்கைகளுக்கு அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால், தொழிற்தொழில்சார் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டபிள்யூ. ஏ. பி. ஏ. விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f159dcae-102c-442f-9568-7be180b84702/26-6a7419b1e16ed.webp' /></p><p>
</p><p>கிராம உத்தியோகத்தர் சேவைக்கு பொருத்தமான மற்றும் சிக்களற்ற சேவைப் பிரமாணக் குறிப்பை பெற்றுக்கொள்ளுதல், எரிபொருள், அலுவலக வசதி, எழுதுபொருட்கள் மற்றும் நாளாந்தக் கொடுப்பனவு தொடர்பாக 'கம்மன்பில குழு' வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் (22.07.2026 அன்று துறைசார் பிரதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தின் படி) மற்றும் 2009/10 ஆம் ஆண்டு அணியினருக்கு நியமனக் காலம் முதல் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு அரசியல் அதிகாரிகளிடமும் நிர்வாகத் தலைவர்களிடமும் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்த போதிலும், இதுவரை எவ்விதத் தீர்வும் வழங்கப்படாததால், ஒருமனதாக இத்தீர்மானத்தை எட்டியதாக பொதுச்செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T05:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை : பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warning-issued-for-several-districts-1785991752"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warning-issued-for-several-districts-1785991752</id>
            <summary type="text">நாட்டின் பல மாவட்டங்களுக்கு தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை அறிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல மாவட்டங்களுக்கு தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை அறிவிப்பு, ஆகஸ்ட் 06, 2026 அன்று காலை 9:00 மணி முதல் ஆகஸ்ட் 07, 2026 அன்று காலை 9:00 மணி வரை 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>நிலை 2 எச்சரிக்கைகள்</h2><p>அந்தவகையில் பின்வரும் பகுதிகளுக்கு நிலை 2 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>கண்டி மாவட்டம் - உடபலத, டோலுவ, மெததும்பர, டெல்தொட்ட, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்கா இஹல கோரளை மற்றும் உடுதும்பர.
</p><p>
கேகாலை மாவட்டம் - அரநாயக்க, தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்டை.
</p><p>
நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் தலவாக்கலை.
</p><p>
இரத்தினபுரி மாவட்டம் - ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a71d7f2-aef9-4494-8a5a-53e84f2fa9e6/26-6a7419f8f154f.webp' /></p><p>
பின்வரும் பகுதிகளுக்கும் நிலை 1இன் கீழ் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>கேகாலை மாவட்டம் - கேகாலை.
</p><p>
இரத்தினபுர மாவட்டம் - நிவித்திகல மற்றும் குருவிட்ட</p><h2>அவசரகால சூழ்நிலை&nbsp;</h2><p>மேலும் தொடர் மழை பெய்யும் பகுதிகளில் மண்சரி, பாறைச்சரிவுகள் போன்ற அபாயகரமான சூழ்நிலைகளைக் குறிக்கக்கூடிய மண் மேடுகளில் ஏற்படும் விரிசல்கள் குறித்து கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fae3576f-9504-44f9-aa3e-caafe4da1fb7/26-6a7419f9d7d07.webp' /></p><p>அவசரகால சூழ்நிலை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்குமாறும் பொதுமக்களுக்கு&nbsp; அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T05:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களுக்கு தேர்வான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-for-students-selected-universities-1785992429"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-for-students-selected-universities-1785992429</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><h2>மேலதிக விபரங்களுக்கு</h2><p> 

இதற்கான மேன்முறையீடுகள் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78666a0e-12ca-48ff-8cd0-e56fe206c001/26-6a74176547627.webp' />&nbsp;</p><p>

மேலதிக விபரங்களுக்கு www.ugc.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T05:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-on-the-rise-1785989805"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-on-the-rise-1785989805</id>
            <summary type="text">நாட்டில் டெங்குத் தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;தேசிய டெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்குத் தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>அதிகரிக்கும் தொற்று</h2><p>இதன்படி, 88,088 டெங்கு தொற்றாளர்கள் இதுவரை பதிவாகியுள்ளதுடன், இந்த மாதத்தின் இதுவரையான நாட்களில் 2,733 டெங்கு தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர்.&nbsp;</p><p>மேலும், கடந்த ஜூலை மாதம் நாட்டில் 29,975 டெங்கு நோயாளர்கள் பதிவானதுடன், வருடத்தில் மிக&nbsp; அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதம் பதிவாகியுள்ளனர்.&nbsp; நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e32683f-6866-4eff-a843-25996d982e01/26-6a741553a42e1.webp' /></p><p>&nbsp;இதேவேளை, வருடத்தின் இதுவரையான நாட்களில் கம்பஹா மாவட்டத்தில் மிக அதிகளவிலான டெங்குத் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.&nbsp; அடுத்ததாக கொழும்பு மாவட்டம் பதிவாகியுள்ளது.</p><p>&nbsp;இதன்படி, கம்பஹாவில் 18,739 டெங்கு தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 17,490 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T05:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-announcement-regarding-security-forces-1785991278"></link>
            <id>https://tamilwin.com/article/president-announcement-regarding-security-forces-1785991278</id>
            <summary type="text">பாதுகாப்புப்படைகள் விஞ்ஞான மற்றும் தொழில்முறைத் திறன்களில் உயர் தரத்தை கொண்ட படைகளாக உலகளவில் செயற்படும் திறனைக் கொண்டுள்ளன என்றும், அதற்காக
அவர்களைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்புப்படைகள் விஞ்ஞான மற்றும் தொழில்முறைத் திறன்களில் உயர் தரத்தை கொண்ட படைகளாக உலகளவில் செயற்படும் திறனைக் கொண்டுள்ளன என்றும், அதற்காக
அவர்களைத் தயார்படுத்துவதும் தேவையான வசதிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது
என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

பாதுகாப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு
மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் நேற்று ஜனாதிபதி
அலுவலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>பாதுகாப்பு அமைச்சுக்கு&nbsp;530 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு</h2><p>

2026ஆம் ஆண்டிற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு மொத்தம் 530 பில்லியன் ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதில் 379 பில்லியன் ரூபாய் மீண்டுவரும்
செலவினங்களாகவும் , 151 பில்லியன் ரூபா மூலதனச் செலவினங்களாகவும்
ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/727138e0-8f86-4d9c-b42f-4edb8cb200ad/26-6a7412b21c222.webp' /></p><p> இதற்கமைய, ஸ்ரீலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை,
சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கெடட் அதிகாரிகளுக்காக
செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள
வளிமண்டலவியல் திணைக்களம், கரையோரப் பாதுகாப்பு திணைக்களம், அனர்த்த
முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின்
முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக்குத் தேவையான நிறுவன கட்டமைப்பை
நிர்மாணித்தல் மற்றும் நிர்மாணத்துறை உள்ளிட்ட தொழிற்துறைகளுக்காக பாதுகாப்பு
படையினரின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் அதற்காக விசேட கொடுப்பனவு
வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம்
செலுத்தப்பட்டது.
</p><p>
பாதுகாப்புப் படைகளுக்குள் உள்ள பொறியியல் சேவைகள், நிர்மாணம் மற்றும்
தொழில்நுட்பப் பணிகளுக்கு மேலதிகமாக, விசேட ஆலோசனை சேவைகளாக அவற்றை
விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. </p><p>அரச நிர்மாணப் பணிகளில்
ஏற்படும் தாமதங்கள் மற்றும் அதிகச் செலவுகளைக் குறைப்பதற்கு முப்படையினரின்
பொறியியல் படைகளின் திறமைகளை அதிகபட்சமாகப் பயன்படுத்துவது குறித்தும்
கலந்துரையாடப்பட்டது.</p><h2>சுகாதார சேவைகள் சார்ந்த பணிகளில் இராணுவ அதிகாரிகள்</h2><p>
</p><p>
சுகாதார சேவைகள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரிகள்
எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம்
செலுத்தப்பட்டது.
</p><p>
தற்போது இலங்கை இராணுவத்தின் கீழ் 17 பிரதான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு
வருவதுடன், அவற்றின் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
அதேபோல், கடற்படையின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு மின்னணு உதிரிபாகங்களை
இணைத்தல், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுதல், சூரிய சக்தி
கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கவனம்
செலுத்தப்பட்டதுடன், அத்திட்டங்களை மூலதனச் சொத்துக்களை கையகப்படுத்தும்
திட்டங்களாக மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
</p><p>
இலங்கை விமானப்படையின் கீழ் சுமார் 136 திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு
வருவதுடன், இயந்திரப் பழுதுபார்ப்பு, வளங்களில் காணப்படும் பிரச்சினைகளைத்
தீர்த்தல் மற்றும் தற்போதைய உலகளாவிய அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நவீன ட்ரோன்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை
மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தமையுடன், அதன்
முதற்கட்டப் பணிகளை இந்த ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்ய முடியும்
என்றும், தங்குமிட வசதிகளை ஒதுக்குவதற்கான இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில்
தொடங்கப்பட உள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.</p><h2>அனர்த்த முகாமைத்துவ சேவை திட்டங்கள்</h2><p>அதற்குத் தேவையான நிதி
வசதிகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா
மீண்டுவரும் செலவினங்கள் மற்றும் 103 பில்லியன் ரூபாய் மூலதனச் செலவினங்களின்
கீழ் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்,
அனர்த்த சேவை மையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வளிமண்டலவியல்
திணைக்களம் மற்றும் மண்சரிவு அபாயத்தைக் குறைக்கும் திட்டங்கள், நவீன டொப்ளர்
ரேடார் கட்டமைப்புகள் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும்
ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d41d01-3985-4bae-8725-acad23ce5ad9/26-6a7412b2c75fa.webp' /></p><p>

அனர்த்த முகாமைத்துவ சேவைகள் மற்றும் அனர்த்தங்களை மட்டுப்படுத்தும்
திட்டங்களுக்கு 2027ஆம் ஆண்டில் அதிக கவனம் செலுத்தவும், டித்வா அனர்த்த
நிலையின் கீழ் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளைப் புனரமைப்பதற்குத் தனியாக
நிதி ஒதுக்கீடு செய்யவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
</p><p>
இந்த சந்திப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர,
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதியின் பணிக்
குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்
கபில ஜனக்க பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத்
துய்யகொந்தா, முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள
நிறுவனங்களின் தலைவர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலரும்
பங்கேற்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T04:51:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமடைந்துள்ள பசில் ராஜபக்சவின் உடல்நிலை! நாடு திரும்புவதில் தொடரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-seek-usa-support-to-arrest-basil-1785975709"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-seek-usa-support-to-arrest-basil-1785975709</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
பொதுமக்கள் பாதுகாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நீதிமன்றத்தின் உதவி&nbsp;</span></p><p>
</p><p>மாத்தறை நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் பசில் ராஜபக்சவிற்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e469bfc-7f59-4ea7-966c-3674033740ea/26-6a73d6b07c36b.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>இதற்காக சர்வதேச பொலிஸின் (இண்டர்போல்) உதவியைப் பெற்று, அமெரிக்க நீதிமன்றத்தின் ஒத்துழைப்பைக் கோரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>இலங்கைக்குத் தேவையான சந்தேகநபர் ஒருவர் எந்தவொரு நாட்டில் இருந்தாலும், அவர் அந்நாட்டின் பிரஜையாக இருப்பினும், அவரை நாட்டிற்கு அழைத்து வர அந்த நாட்டின் நீதிமன்ற உதவியைப் பெற வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>பசில் ராஜபக்ச நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அதனால் அவரால் விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது எனவும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>எனினும் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vMa_0AhDtv4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-06T04:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆண்டுதோறும் திடீரென உயிரிழக்கும் 7,000 பேர்..! வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-000-people-srilanka-die-every-year-air-pollution-1785983780"></link>
            <id>https://tamilwin.com/article/7-000-people-srilanka-die-every-year-air-pollution-1785983780</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் வளி மாசடைவதன் காரணமாக வருடாந்தம் சுமார் 7,000 திடீர் மரணங்கள் பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் வளி மாசடைவதன் காரணமாக வருடாந்தம் சுமார் 7,000 திடீர் மரணங்கள் பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான தெரிவித்துள்ளார். </p><p>

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p> </p><h2>வளி மாசடைவு</h2><p>

இதேவேளை, உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 7 முதல் 8 மில்லியன் வரையான மக்கள் வளி மாசடைவதன் தாக்கங்களால் உயிரிழப்பதாகவும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37076172-9c14-48a9-86a8-9632066a2878/26-6a740b1b4cd55.webp' /></p><p> </p><p>

அதேபோன்று, இலங்கையிலும் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் வளி மாசடைவால் ஏற்படுவதாகவும், இதற்கு காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்கள் காரணங்களாகும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதன் காரணமாக ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய்கள் ஏற்படுவதாகவும், வளி மாசடைவால் மாரடைப்பு, இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.</p><h2>நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு</h2><p>மேலும், வீட்டுக்குள்ளான எரிப்பு செயற்பாடுகளில் விறகு எரியும் போது தீங்கு விளைவிக்கும் புகை வெளியேறுவதாகவும், வெளிப்புற சூழலை விட வீட்டுக்குள்ளான வளி மாசடைவானது ஐந்து மடங்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் காரணமாக தற்போது பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் கணிசமாக அதிகரித்து வருவதாகவும், மூடிய இடத்திற்குள் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T04:18:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் - விசேட அவசர கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/security-arrangements-in-prisons-1785988738"></link>
            <id>https://tamilwin.com/article/security-arrangements-in-prisons-1785988738</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கோரிக்கைக்கு இணங்க, வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் தற்போதைய
நிலைமைகள், பாதுகாப்பு ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கோரிக்கைக்கு இணங்க, வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் தற்போதைய
நிலைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில்
ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்
அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
ஆகியோரின் இணைத் தலைமையில், வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (05.08.2026) மாலை இடம்பெற்றது.</p><h2>சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிமொழி</h2><p>
</p><p>
கலந்துரையாடல் தொடர்பில் அமைச்சர் இ.சந்திரசேகர் குறிப்பிடுகையில்,
தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம்
மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும்
இயங்குவதாக சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிமொழி அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ec42f7b-1486-476d-bd4b-de456e7baa20/26-6a740a299f98f.webp' /></p><p>
இச்சிறைச்சாலைகளில் சிறிதளவு நெரிசலான நிலை காணப்பட்டாலும், அதனைத்
தவிர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், ஏனைய சிறைச்சாலைகளைப் போலல்லாது, இங்கு கைதிகளுக்குத் தொழிற்கல்வி,
கல்வித் தொடர்ச்சி, நூலக வசதிகள் மற்றும் கணினிப் பயிற்சி போன்ற பல்வேறு
ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இச்சிறைச்சாலைகள்
தற்போது ஒரு 'கலாசாலையாக' மாற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.</p><h2>விசேட பாதுகாப்புத் திட்டங்கள்</h2><p>
</p><p>
நாட்டில் தற்போது சிறைச்சாலைகளில் ஏற்படும் கலவரங்கள் குறித்து அதிக கவனம்
செலுத்தப்பட்டு வருவதால், எமது மாகாணத்திலும் எத்தகைய எதிர்பாராத
சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலும், கைதிகளின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையிலும் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு
முன்மொழியப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fe44065-d501-42ec-8ac4-6aedf6144a99/26-6a740a2a8fcc2.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலைகளில் நிலவும் ஆள்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகளை நிவர்த்தி
செய்யும் பொருட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் தயாரித்து வழங்கிய மேலதிக அறிக்கை
நீதி அமைச்சரிடம் அனுப்பி வைத்துத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.</p><p>

இந்த அவசர கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வட மாகாண
சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512ஆவது கட்டளைத்
தளபதி, யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிரதேச
செயலர், சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் அதிகாரிகள், ஆளுநரின் உதவிச்
செயலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுத் தலைவரின் இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/042a1ea4-d13f-4b85-8a4f-69bf23653455/26-6a740a2b6d2c7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e9dd7f7-3b2b-40d5-a2b6-b52db494a0bd/26-6a740a2c494be.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T04:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-message-people-warned-1785987180"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-message-people-warned-1785987180</id>
            <summary type="text">இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி வலைப்பின்னல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி வலைப்பின்னல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இதில் குற்றவாளிகள் போலி வீடியோ அழைப்புத் தொழில்நுட்பத்தை பிரதானமாகப் பயன்படுத்தி, மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றனர்.
</p><p>
இந்த மோசடி செயல்முறையானது Hi போன்ற சாதாரண குறுஞ்செய்தி மூலம் ஆரம்பமாகிறது. 

அனுப்பும் நபர் யார் என்பதை சரியாக சரிபார்க்காமல் பலர் இதற்கு பதிலளிப்பதன் மூலம் பாரிய ஆபத்தில் சிக்குகின்றனர். </p><h2><b>

மோசடி நபர்கள்</b></h2><p>ஆரம்பத்தில் நீண்ட நேரம் உரையாடலைத் தொடராவிட்டாலும், சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் குறுஞ்செய்திகளை அனுப்பப்படுகின்றது. இதன் மூலம் இந்த மோசடி நபர்கள் தொடர்பாடலை புதுப்பிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc7d61c2-bec1-43c6-9f5d-943fee17eb55/26-6a74022f646b1.webp' /></p><p>காலப்போக்கில் படிப்படியாக நம்பிக்கையை கட்டியெழுப்பும் மர்ம நபர், பாதிக்கப்பட்டவர் தம்மீது உணர்வுபூர்வமாக ஈர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்ததும், புகைப்படங்களையும் தனிப்பட்ட செய்திகளையும் அனுப்பத் தொடங்குகின்றனர். </p><p>

மக்கள் அறியாமலேயே இந்த வலையில் சிக்குகின்றனர். அதன் பின்னர் உரையாடலை வட்ஸ்அப் வீடியோ அழைப்புகளுக்கு மாற்றுமாறு மோசடி நபர்கள் வற்புறுத்துகின்றனர்.
</p><p>
சம்பந்தப்பட்ட வீடியோ அழைப்புகளின் போது பொருத்தமற்ற மற்றும் ஆபாசமான முறையில் நடந்து கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்களைத் மோசடி நபர்கள் தூண்டுகின்றனர்.
</p><p>
பின்னர் அச்சுறுத்தும் நோக்கத்திற்காக அந்தச் சந்தர்ப்பங்களின் Screenshots மற்றும் வீடியோ காட்சிகளை இரகசியமாக பதிவு செய்து கொள்கின்றனர். </p><p>

சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நிர்வாணமாக இல்லாவிட்டாலும், அவர்கள் பரிமாறிக்கொண்ட செய்திகளின் Screenshots மற்றும் பரிந்துரைக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கங்கள் கூட அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.</p><h3><b>

சமூக வலைத்தளம்</b></h3><p>பிளாக்மெயில் செய்வதற்கு தேவையான பொருட்கள் கிடைத்தவுடன், அந்தப் பதிவுகள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் சமூக வலைத்தள நண்பர்களுக்கு அனுப்புவதாகக் குற்றவாளிகள் அச்சுறுத்துகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17b114ad-b122-45af-bab6-23a3cdef0c4c/26-6a7404ab34f41.webp' /></p><p>உறவினர்களுக்கு கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான செய்திகள் குறித்து அறியவரும் வரை அல்லது இந்த கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் வரை பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வலையில் சிக்கியுள்ளதை புரிந்து கொள்வதில்லை.
</p><p>
ஆரம்பத்தில் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை சிறிய தொகையை கோரும் மோசடி நபர்கள், அந்தப் பணத்தை செலுத்தியவுடன் தகவல்களை அழித்து விடுவதாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். </p><p>

எனினும் முதல் கட்டப் பணப் பரிமாற்றத்திற்கு பின்னரும் கோரிக்கைகள் நிற்பதில்லை. மாறாக, அதன் பின்னர் அதிகமான பணத்தைக் கோரி சில பாதிக்கப்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் கப்பம் அறவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென கணினி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T03:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்க விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chavakachcheri-municipal-council-case-1785986148"></link>
            <id>https://tamilwin.com/article/chavakachcheri-municipal-council-case-1785986148</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரை பதவிலிருந்து நீக்கிய&amp;nbsp;வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரை பதவிலிருந்து நீக்கிய&nbsp;வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த மனு மீதான விசாரணைகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் (05) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பு&nbsp;</h2><p>இந்த நிலையில் நேற்று (05) வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது யாழ்.மேல் நீதிமன்றத்தினால் வழக்கிற்கான தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c721a987-712b-4dc4-aeb3-c943d739c311/26-6a7402bc4b5e4.webp' /></p><p>சாவகச்சேரி நகரசபையில் பிரதி தலைவராக பதவி வகித்து வந்த
ஞானப்பிரகாசம் கிஷோரை, வட மாகாண ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் பதவியில்
இருந்து நீக்கியிருந்தார்.</p><p>.இந்த பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது என குறிப்பிட்டும் அதனை இரத்து செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர்
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p>
குறித்த மனு தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண
அமர்வில் பல தடவைகள் இடம்பெற்றிருந்தன.</p><h2>பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ள&nbsp;&nbsp;தீர்ப்பு </h2><p>இதன்போது மனுதாரர் சார்பிலும், பதிலாளிகள்
சார்பிலும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, வழக்கின்
தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என நீதிமன்றத்தினால் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தன.</p><p>இந்நிலையில், யாழ்.மேல் நீதிமன்றத்தினால் வழக்கிற்கான தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த வழக்கின் தீர்ப்பு, சாவகச்சேரி
நகரசபை நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார
நடைமுறைகள் தொடர்பிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், அரசியல்
வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T03:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த இரண்டு வருடங்களில் டெங்குவை முற்றாக ஒழிக்க தேசிய திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-plan-to-completely-eliminate-dengue-1785984985"></link>
            <id>https://tamilwin.com/article/national-plan-to-completely-eliminate-dengue-1785984985</id>
            <summary type="text">அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் டெங்கு நோயை முழுமையாக ஒழிப்பதை
இலக்காகக் கொண்டு, திட்டமிடப்பட்ட தேசிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட
வேண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் டெங்கு நோயை முழுமையாக ஒழிப்பதை
இலக்காகக் கொண்டு, திட்டமிடப்பட்ட தேசிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட
வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தெரிவித்துள்ளார்.</p><p>

அதிக அவதானமிக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தற்போதைய டெங்கு
நிலைமையை மீளாய்வு செய்வதற்கும், நுளம்பு கட்டுப்பாட்டு திட்டங்களை
வலுப்படுத்துவதற்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற விசேட
கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை</h2><p>

முந்தைய டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளை அடையாளம்
காணுதல், அதிக அவதானமிக்க பகுதிகளைக் கண்டறிதல், கூட்டு நுளம்பு கட்டுப்பாட்டு
நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தொழில்நுட்ப ஆதரவை விரிவுபடுத்துதல், சிகிச்சை
சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு தொடர்பான மரணங்களைக் குறைத்தல் ஆகிய
விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a50654f2-24dc-4367-88dd-0be6808892d8/26-6a73f7dfc8260.webp' /></p><p>

அண்மை காலமாக டெங்கு மரணங்கள் குறைந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை எனக்
குறிப்பிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை
குறையும் காலங்களிலும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து
முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
</p><p>
மேலும், சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கிராம உத்தியோகத்தர் பிரிவு
மட்டம் வரை கட்டமைக்கப்பட்ட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும்
அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

இதனிடையே, டெங்கு அபாயம் தொடர்ந்தபோதிலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
காரணமாக தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,300 இலிருந்து 350
முதல் 400 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில்
பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T02:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்..! சிறைச்சாலையில் தற்போதைய நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-minister-akila-viraj-kariyawasam-remanded-1785981940"></link>
            <id>https://tamilwin.com/article/former-minister-akila-viraj-kariyawasam-remanded-1785981940</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள&nbsp; அகிலவிராஜ்</span></p><p>இதற்கமைய, தற்போது அகில விராஜ் கரியவசம் ஏனைய கைதிகள் குழுவுடன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c27a7f46-81a8-4bb0-9fd6-28de4dde95ec/26-6a73f1f299941.webp' />&nbsp;</p><p>
இருப்பினும், ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் மாத்திரமே அவருக்கும் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.</p><p>ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு 4 ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று (05) முற்பகல் முன்னலையான போது அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp;</p><h2>ஊழல் குற்றச்சாட்டு</h2><p>குறித்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 2,768,836.14 சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக வழங்கப்பட வழிவகுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, 'ஊழல்' குற்றத்தைச் புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு&nbsp;கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T02:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tm-app-a-pyramid-scheme-central-bank-1785980684"></link>
            <id>https://tamilwin.com/article/tm-app-a-pyramid-scheme-central-bank-1785980684</id>
            <summary type="text">இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;இலங்கையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டு, அதனை நடத்தி விளம்பரப்படுத்தியதாக ‘TM App’ என்ற செயலி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இந்த விசாரணை, 1988 ஆம் ஆண்டின் 30-ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்டபடி) 83C பிரிவின்படி நடத்தப்பட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை அறிவித்தல்</h2><p>

அதன்படி, இதுவரை 26 நிறுவனங்கள் அல்லது செயலிகள் “TM App’ ”யுடன் இணைந்து தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை இயக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b403a577-1652-4565-96f4-69213b73596b/26-6a73ea8736018.webp' /></p><p>இதனையடுத்து, வங்கிச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட நிதித்திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலில் ‘TM App’ செயலியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறான தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில், இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>எனவே முதலீடுகளை செய்வதற்கு முன்னர் பொர்மக்கள் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T01:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் –இந்தியா வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-urges-sri-lanka-to-hold-provincial-elections-1785980626"></link>
            <id>https://tamilwin.com/article/india-urges-sri-lanka-to-hold-provincial-elections-1785980626</id>
            <summary type="text">&amp;nbsp;இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.</p><p>
மேலும் தமிழர் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளை முழுமையாக அமல்படுத்துமாறு மேலும் கோரியுள்ளார்.
</p><p>இந்த விடயங்களை இலங்கை அரசுத் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ff771c9-2531-4621-9293-e198c78cd115/26-6a73e6d3a3595.webp' /></p><p>
</p><p>விக்ரம் மிஸ்ரியின் இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கான இந்தியாவின் உதவி, எரிசக்தித் துறையில் இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.</p><p>
மேலும், இந்தியாவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டம், திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது, மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்து நவீனமயமாக்குவது போன்ற திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளும் இருதரப்பும் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதற்கிடையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு விவாதமும் இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
</p><p>அதேவேளை, போதைப்பொருள் கடத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை இலங்கை நாடியதாகவும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் சவால்களை சமாளிப்பதில் பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 முதல் 2019 காலப்பகுதிக்குள் முடிவடைந்த போதிலும், தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் தேர்தல்களை நடத்தாமல் ஒத்திவைத்து வந்துள்ளன.
 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T01:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியைச் சந்தித்த புதிய இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-army-chief-meets-the-president-1785978740"></link>
            <id>https://tamilwin.com/article/new-army-chief-meets-the-president-1785978740</id>
            <summary type="text">இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட்
ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(5) ஜனாதிபதி அநுரகுமார
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட்
ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(5) ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
</p><p>
புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த
பிரேமரத்ன ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம்
இதுவாகும்.</p><h2>இராணுவத் தளபதி</h2><p>
</p><p>
தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அரச தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாயப்
படி ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுடன் சம்பிரதாய ரீதியாக நினைவுச் சின்னங்களைப்
பரிமாறிக்கொண்டதுடன், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலந்த
பிரேமரத்னவுக்கு ஜனாதிபதி தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca1a7a8e-c2a4-43b5-84ec-e7199739916a/26-6a73e1afe59af.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T01:22:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் திருப்பம்: சாரா ஜஸ்மினின் உடல் தொடர்பில் நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-sunday-attacks-sara-jesmin-alive-1785951605"></link>
            <id>https://tamilwin.com/article/easter-sunday-attacks-sara-jesmin-alive-1785951605</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின் உடல் கிடைக்கப்பெறவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
</p><p>
மேலும், சாரா ஜஸ்மின் விசாரணையாளர்களைத் தவறாக வழிநடத்த முயன்றமை விமான நிலைய சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சாரா ஜஸ்மினின் உடல் சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்டதாகக் காட்டும் நோக்கில் மூன்றாவது முறையாக DNA பரிசோதனை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரி விரிவான சாட்சியங்களையும் வழங்கியுள்ளார்.

சாரா ஜஸ்மின் தற்போது எங்கு சென்றார் என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை இல்லை. </p><p>எனினும், அவர் சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சஹ்ரானின் குடும்பத்தினர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேனில் வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> ஆனால், வெடிப்புக்குப் பின்னர் தீக்கிரையான நிலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

இதனால், மற்றொரு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி சாரா ஜஸ்மின் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணையாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JWvv8rw3YDg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T01:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் டொலர் கடன் தவணை இழப்புக்கு சைபர் பாதுகாப்பு - நிர்வாகப் பலவீனமே காரணம் - சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cybersecurity-weaknesses-2-5-million-installment-1785976242"></link>
            <id>https://tamilwin.com/article/cybersecurity-weaknesses-2-5-million-installment-1785976242</id>
            <summary type="text">சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான பலவீனங்கள்
காரணமாகவே இலங்கை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை இழக்க நேரிட்டது
என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான பலவீனங்கள்
காரணமாகவே இலங்கை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை இழக்க நேரிட்டது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(5) உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை
முன்வைத்தார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p></p><h2>2.5 மில்லியன் டொலர்&nbsp;</h2><p>
</p><p>
"அரசு சுட்டிக்காட்டியுள்ள தொழில்சார் அறிக்கையின்படி, 2.5 மில்லியன் டொலர்
காணாமல் போனமையானது ஒரு சைபர் குற்றம் மாத்திரமன்றி, அது நிர்வாக மற்றும்
நிறுவனச் செயற்பாட்டு நடைமுறைப் பிரச்சினையுமாகும்.</p><p> இந்நாட்டின் வெளிநாட்டுக்
கடன் செலுத்தும் பொறிமுறையில் பலவீனமான நிர்வாகமே காணப்படுவதாகக் குறித்த
அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c8cf6d-2f69-40b2-8bdc-0e311984e1cf/26-6a73da724e17d.webp' /></p><p>
</p><p>
வங்குரோத்தான நமது நாட்டில் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி, வாழ்க்கைச் சுமை,
வறுமை மற்றும் வேலையின்மை என்பவற்றை அதிகரித்துத் தொழில்துறைகளை
வீழ்ச்சியடையச் செய்துள்ள நிலையில், 25 இலட்சம் டொலர்களைக் கூடச் செலுத்த
முடியாத அரசே ஆட்சியில் உள்ளது.</p><p>

கடன் மீளச் செலுத்தும் நடவடிக்கை முன்னர் மத்திய வங்கியின் மையமாக இருந்த
போதிலும், புதிய சட்டத்தின் ஊடாக அது கடன் செலுத்தும் அலுவலகத்துக்குப்
பாரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>எனினும், இந்தக் காலகட்டத்தில் தேவையான இடைக்கால
ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அரசுக்கு இயலாமல் போயுள்ளது.

இது வெறும் சைபர் தாக்குதல் மட்டுமல்ல. இந்தப் பிரச்சினை தொடர்பில்
திறைசேரியும் மத்திய வங்கியின் ஆளுநரும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை.</p><p></p><h2>பொருளாதாரத்தின் நிலை</h2><p>இவ்விரு
முக்கிய நிறுவனங்களும் ஒரே நேர்கோட்டில் நின்று செயற்படத் தவறினால் நாட்டின்
பொருளாதாரத்தின் நிலை என்னவாகும்?

பலவீனமான கடவுச்சொல் பயன்பாடு, பொறுப்புகள் தெளிவுபடுத்தப்படாமை ஆகியவற்றின்
காரணமாகவே சைபர் பாதுகாப்பு ஆபத்து உருவாகியுள்ளது.</p><p> போலி மின்னஞ்சல்
டொமைன்களின் பயன்பாடு இதற்கு மூலக் காரணமாக இருந்தபோதிலும், அதிலிருந்து
விடுபடுவதற்கான பரிந்துரைகள் கூட சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடன்
ஒப்பந்தங்களைப் பரிசோதித்தல், தொடர்பு வழிகளை உறுதிப்படுத்தல் மற்றும் வங்கிக்
கணக்குத் தகவல்களைச் சரிபார்த்தல் என்பன முறையாக இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/274d30fb-027e-4ab1-b61b-ed4c7881185d/26-6a73da73019c0.webp' /></p><p>
</p><p>
கடந்த 2026 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எக்சிம் வங்கியுடன் தொடர்புடைய
செலுத்துகையின் போதும் இவ்வாறான சந்தேகத்துக்கிடமான பிரச்சினை உருவான போது,
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்தச் சம்பவங்கள் நாட்டின் கடன் செலுத்தும் செயற்பாடுகள் குறித்த
நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்துகின்றன.</p><p>பங்களாதேஷ், ஈக்வடார், வியட்நாம்,
இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் இவ்வாறான சம்பவங்களிலிருந்து பாடங்களைக்
கற்றுக்கொண்டுள்ளதைப் போன்று இலங்கையும் இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள
வேண்டும்.</p><p></p><h2>&nbsp;எல்லையற்ற வரிச்சுமை</h2><p>

நாட்டின் தற்போதைய மிகப்பெரிய பொறி சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த
இலக்குகளையும் தாண்டி அதிகளவில் வரி விதிப்பதாகும். முதன்மை மீதியை 2.3
சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் வரை உயர்த்தி சர்வதேச நாணய நிதியத்தின்
கையாள்களாக அரசு மாறியுள்ளது. </p><p>எதிர்க்கட்சியில் இருந்தபோது பாட்டாளி வர்க்கம்
பற்றிப் பேசியவர்கள், தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பொம்மைகளாக
மாறியுள்ளதால் நாட்டின் வாழ்க்கைச் சுமையோ பணவீக்கமோ குறையவில்லை.

மாதமொன்றுக்கு 17 ஆயிரம் ரூபாவைக் கொண்டு வாழ முடியும் எனத் தொகைமதிப்பு
மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுவது தவறான தரவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ae4f7d3-e8c2-408d-ab6c-149539ca75bc/26-6a73da73a78ee.webp' /></p><p> </p><p>இவ்வாறான பொய்த்
தரவுகளின் அடிப்படையில் செயற்படும் அரசிடம் வறுமையை ஒழிப்பதற்கான எவ்வித
வேலைத்திட்டமும் இல்லை. நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை
நாசமாக்குவதுடன், எரிபொருள் மாபியாவைப் பாதுகாப்பதற்காகச் சூரிய சக்தி மின்
உற்பத்தியையும் அரசு பலவீனப்படுத்தி வருகின்றது.
</p><p>
இவ்வாறான எல்லையற்ற வரிச்சுமையால் பிறக்காத குழந்தை முதல் கர்ப்பிணித்
தாய்மார் வரை அனைத்துப் பிரஜைகளும் கடும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். </p><p>அரசு
வாக்குறுதியளித்த 'வளமான நாடு, அழகான வாழ்க்கை' என்ற நோக்கத்தை மறந்து,
சர்வதேச நாணய நிதியத்தின் வரி இலக்குகளைத் தாண்டி மேலதிக வரிச்சுமையை மக்கள்
மீது சுமத்தி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-06T00:51:04+00:00</updated>
        </entry>
    </feed>
