<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-06T15:20:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை - உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிக முக்கிய ஆவணங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-dismissed-yoshida-request-1786013392"></link>
            <id>https://tamilwin.com/article/court-dismissed-yoshida-request-1786013392</id>
            <summary type="text">வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச விடுத்த கோரிக்கையை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.&nbsp;</p><p>முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகிய இருவரும்&nbsp;அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் ஊழல் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் இது தொடர்பில் உரிய அறிவிப்புகளைப் பெற்ற பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னதாக உத்தரவிட்டார்.&nbsp;</p><h2>அரசாங்கத்திற்கு இழப்பு&nbsp;</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாடு, நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இருவருக்கும் எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce5aea9-e9cb-47ce-83d0-e72134a16143/26-6a7473eb6b28d.webp' /></p><p> அதன்படி, உரிய அறிவிப்புகளைப் பெற்ற பின்னர் சந்தேக நபர்களான இருவரையும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கும்படி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கோரியது, மேலும் முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
</p><p>
2006 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2007 ஜூன் 8ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், யோஷித ராஜபக்ச முறையான கல்வித் தகுதிகள் இன்றி கடற்படையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு பிரித்தானிய அரச இராணுவப் பயிற்சியும் வழங்கப்பட்டதாகவும், அதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, அவருக்கு முறையற்ற ஆதாயத்தை வழங்கியதாகவும் இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.&nbsp;</p><p></p><h2>வெளிநாட்டுப் பயணம்..</h2><p>கடந்த 31ஆம் திகதியன்று, இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் எட்டு குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல் பிரதிவாதி வசந்த கரன்னாகொட மற்றும் இரண்டாவது பிரதிவாதி யோஷித கனிஷ்க ராஜபக்ச ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a04a75b-8675-4f64-bd2c-55f192773aa4/26-6a7473ec32bd1.webp' /></p><p> </p><p>இதன்போது, இவ்வழக்கு தொடர்பாக 25 சாட்சிகளின் பெயர்களும் 47 ஆவணச் சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், சந்தேக நபரான யோஷித ராஜபக்சவுக்காக முன்னிலையான சட்டத்தரணி ரவின் நுவரபக்ச, தனது கட்சிக்காரர் ஒரு வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதால், அவர் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சிறப்பு மனுவின் மூலம் கோரியிருந்ததாகத் தெரிவித்தார்.</p><p>இருப்பினும், உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க இயலாது எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T15:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த சினோபெக் நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sinopec-increased-russian-crude-oil-imports-1786028601"></link>
            <id>https://tamilwin.com/article/sinopec-increased-russian-crude-oil-imports-1786028601</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ள மசகு எண்ணெய்
விநியோகத்தை ஈடுசெய்யும் பொருட்டு,&amp;nbsp; சீன அரசுக்குச் சொந்தமான சினோபெக் ரஷ்யா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ள மசகு எண்ணெய்
விநியோகத்தை ஈடுசெய்யும் பொருட்டு,&nbsp; சீன அரசுக்குச் சொந்தமான சினோபெக் ரஷ்யாவின் தொலைகிழக்குப்
பகுதியிலிருந்து மசகு எண்ணெய் கொள்முதலைக் கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து பெறப்படும் மசகு
எண்ணெயை விட ரஷ்யாவின் எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதே இதற்கு முக்கிய
காரணமாகும்.</p><p>

இதன் மூலம் சீனாவில் உள்நாட்டு எரிபொருள் விநியோகம் சீராகப் பேணப்பட்டு
வருவதாக வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மசகு எண்ணெய்&nbsp; இறக்குமதி</h2><p>

அதற்கமைய, ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்கு ரஷ்யாவின் 'இஎஸ் பி
ஓ' (ESPO) ரக மசகு எண்ணெயின் 30 முதல் 40 வரையிலான கப்பல் சரக்குகளை சினோபெக்
நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12a13652-2300-403a-b550-788233721835/26-6a74a459903ed.webp' /></p><p>
</p><p>
இது அந்நிறுவனத்தின் மொத்தச் சுத்திகரிப்புத் திறனில் 5 முதல் 6 சதவீதமாகும்.

மத்திய கிழக்குப் போருக்கு முன்னர், சினோபெக் நிறுவனம் தனது மசகு எண்ணெய்
தேவையில் பாதியை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே, குறிப்பாகச் சவூதி
அரேபியாவிடமிருந்தே இறக்குமதி செய்து வந்தது.
</p><p>
எனினும், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சவூதியிடமிருந்து எவ்வித மசகு
எண்ணெயையும் கொள்முதல் செய்யாத இந்நிறுவனம், ஓகஸ்ட் மாதத்தில் மிகக் குறைந்த
அளவிலான எண்ணெயையே இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T15:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கத்துரை சிலை அமைப்பு விவகாரம்: ஏற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவு 5 மணிநேரம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuttimani-thangathurai-case-issus-1785999231"></link>
            <id>https://tamilwin.com/article/kuttimani-thangathurai-case-issus-1785999231</id>
            <summary type="text">புதிய இணைப்புவெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலை
நிறுவுதல் ஏற்பாட்டாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலை
நிறுவுதல் ஏற்பாட்டாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான
கந்தசாமி சதீசிடம் இன்றைய தினம்(06)&nbsp; கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினர்
5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
</p><p>
நேற்றைய தினம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற
பிரிவு அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று
காலை 10 மணிக்கு ஆரம்பமான விசாரணை பிற்பகல் 3 மணி வரை இடம்பெற்றுள்ளது.</p><h2>அழைப்பாணை</h2><p>இதேவேளை குறித்த கந்தசாமி சதீஷ் அவர்கள் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது
சிலைகளை கிளிநொச்சியில் உள்ள சிற்ப ஆச்சாரி ஒருவர் மூலம் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea6da74-0082-40f2-80f2-c5035454999e/26-6a74a1e73c9cd.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் குறித்த குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலைகளை 14 நாட்கள்
கிளிநொச்சி சிற்பக்கூடத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு கிளிநொச்சி
நீதவான் நீதிமன்றம் ஊடான தடை உத்தரவை வழங்கியுள்ளதுடன் நாளைய தினம் கந்தசாமி
சதீஸ் அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும்&nbsp;அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இவர் இன்று(6.8.2026) காலை முதல் தற்போது வரை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் நேற்றைய தினம்(5.8) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f280e72e-1e38-4a52-81c4-2fc6568f3eee/26-6a74379c1a7d8.webp' /></p><p>

இந்நிலையில் நேற்று பிற்பகல் வல்வெட்டித்துறை பொலிஸ் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக இன்று அழைப்பதற்கான அழைப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cNHc4rtOBGE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T15:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம் காரட்டிற்காக பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் - தாயார் கூறியது இதுதான்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/24-year-old-youth-dies-in-jaffna-1786026544"></link>
            <id>https://tamilwin.com/article/24-year-old-youth-dies-in-jaffna-1786026544</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் சிம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று(06.08.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் சிம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.</p><p>

இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><h2>
தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதம்</h2><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞர் தாயாரிடம் கோரிய நிலையில், வாக்குவாதமாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/021ddea8-4c3a-4861-9c54-aeb8defd17c0/26-6a749ab4987a6.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், குறித்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள்
பாய்ந்து உயிர்மாய்த்து கொண்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UU-j4Qh1S0U" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T14:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு றீச்சா புதிய வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cooking-and-vegetable-carving-workshop-1786025826"></link>
            <id>https://tamilwin.com/article/cooking-and-vegetable-carving-workshop-1786025826</id>
            <summary type="text">இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கும் நோக்கில், றீச்சாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

கிளிநொச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கும் நோக்கில், றீச்சாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
</p><p>
கிளிநொச்சி - இயகச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பு, கடந்த 05.08.2026 அன்று நிறைவடைந்துள்ளது.
</p><p>
சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு பல்வேறு நடைமுறை சார்ந்த திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.</p><h2>
இளைஞர்களின் திறனை வளர்க்கும் முயற்சி</h2><p>

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டு, அவர்களின் திறமைகள் மற்றும் முயற்சிகள் கௌரவிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0399d7d0-1291-479d-870c-2a566658665c/26-6a7497e378c3e.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கந்தையா பாஸ்கரன், பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கியதுடன், அவர்களின் உழைப்பு, விடாமுயற்சி மற்றும் திறமைகளைப் பாராட்டியுள்ளார்.</p><p>

இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய முயற்சிகள், அடுத்த தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.
</p><p>
இது போன்று, கந்தையா பாஸ்கரன் முன்னெடுத்து வரும் இவ்வாறான திட்டங்கள், “வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் உழைப்பே வழி” என்ற உண்மையை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:19:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவின் மாபெரும் உணவுத் திருவிழா - அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு ஆளாகும் வாய்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786024770"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786024770</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா நாளைய தினம்(07.08.2026) கோலாகலமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா நாளைய தினம்(07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இந்த மாபெரும் உணவுத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகி, 8 ,9 மற்றும் 10ஆம் திகதிகள் உட்பட நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் 10 வரை&nbsp; நடைபெறவுள்ளது.
</p><h2>
நீங்களும் இணைந்து கொள்ளலாம்... </h2><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், 
சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1596718951965279%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
அத்துடன், உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், றீச்சாவின் உணவுத் திருவிழாவிற்கு <b>QICK FOOD </b>அனுசரணை வழங்குவதுடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளன.</p><p>உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:01:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்பு ஏற்றுமதிக்கு தடை விதித்த கொங்கோ அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/democratic-republic-of-congo-bans-copper-exports-1786024066"></link>
            <id>https://tamilwin.com/article/democratic-republic-of-congo-bans-copper-exports-1786024066</id>
            <summary type="text">கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கனிமப் பொருட்களின் ஏற்றுமதியைக்
கட்டுப்படுத்தி, உள்நாட்டிலேயே அவற்றுக்கு மேலதிக மதிப்பைக் கூட்டும் முயற்சியை கொங்கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கனிமப் பொருட்களின் ஏற்றுமதியைக்
கட்டுப்படுத்தி, உள்நாட்டிலேயே அவற்றுக்கு மேலதிக மதிப்பைக் கூட்டும் முயற்சியை கொங்கோ ஜனநாயகக் குடியரசு முன்னெடுத்து வருகின்றது.</p><p>

அத்துடன், செப்பு (Copper) மற்றும் கொபால்ட் (Cobalt) தாதுக்களின்
ஏற்றுமதிக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு உடனடித் தடையும் விதித்துள்ளது.
</p><p>
அந்த நாட்டுச் சுரங்க அமைச்சு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சு மற்றும் பொருளாதார
அமைச்சு என்பன இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு உத்தரவொன்றிலேயே இந்தத் தடைப்
பிரகடனம் விடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>
லண்டனில் செப்பின் விலை உயர்வு</h2><p>
உள்நாட்டுச் சுத்திகரிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள
இந்நடவடிக்கையின் காரணமாக, லண்டன் உலோகம் பரிவர்த்தனைச் சந்தையில் (LME)
செப்பின் விலை மெட்ரிக் தொன் ஒன்றுக்கு 14,369 அமெரிக்க டொலர்கள் வரை கணிசமாக
உயர்வைப் பதிவுசெய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ba6ab94-75f8-4713-be73-6c51bd6f804a/26-6a749163eef95.webp' /></p><p>

எனினும், நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையாகக் கருதப்படும் சில முக்கிய
மூலோபாய சூழ்நிலைகளின் கீழ், இந்த ஏற்றுமதித் தடையிலிருந்து ஒரு வருட
காலத்திற்கு தற்காலிக விலக்கு அளிக்கப்படலாம் என்றும் அந்த உத்தரவில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

சுத்திகரிக்கப்படாத தாதுக்களாக ஏற்றுமதி செய்வதை விட, அதிக
மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களாகவே சர்வதேச சந்தைக்கு விற்பனை
செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
கொங்கோ ஏற்கனவே தனது நாட்டின் செப்பு உற்பத்தியில் பெரும்பாலானவற்றை
உள்நாட்டிலேயே சுத்திகரிப்பு செய்து ஏற்றுமதி செய்து வருகின்றமையால், இந்தத்
தடையால் பெரும்பாலான நிறுவனங்களுக்குப் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது என
பொருளாதார வல்லுநர்கள் கணிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:52:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-sri-lanka-weather-aleart-1786022426"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-sri-lanka-weather-aleart-1786022426</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் நாளை (07) 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல் மற்றும் சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் நாளை (07) 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. </p><p>

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. </p><p>

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p></p><h2>தேவையான நடவடிக்கை</h2><p> </p><p>

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f958918c-fee6-4f5c-a948-01042330df1d/26-6a748f4c6c757.webp' /></p><p> </p><p>

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T13:42:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழியில் சிறுவர் ஆடையின் சிதைவுகள் கண்டுபிடிப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-skeletons-excavated-today-at-chemmani-1786022943"></link>
            <id>https://tamilwin.com/article/8-skeletons-excavated-today-at-chemmani-1786022943</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளாக இன்று(06.08.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளாக இன்று(06.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன்போது, 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
</p><h3>
494 என்பு கூடுகள் அகழ்வு</h3><p>
அத்துடன் நாணய குற்றி ஒன்றும், சிறுவர்களுடைய ஆடைகளின் பொத்தான்களும் சான்று
பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p><p>

இதன்படி, செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 99 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,&nbsp; 499 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 494என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய வன்முறைச் சம்பவம்.. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-inquiry-report-anura-kumara-1786020444"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-inquiry-report-anura-kumara-1786020444</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறைச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறைச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (06.08.2026) நாடாளுமன்றத்தில் இத்தகவலை வெளியிட்டார்.</p><h2>புலனாய்வுத் தகவல்&nbsp;</h2><p>ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான வன்முறை மற்றும் மோதல்களில்&nbsp;7 சிறை அதிகாரிகள் உட்பட பல கைதிகளும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b5a8978-61a5-495b-a247-7bc5de918f27/26-6a7488bc91a58.webp' /></p><p> </p><p>அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p>நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், தொடர்பில் அரச தரப்பிலான குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், குறித்த&nbsp;விசாரணைகள் பற்றிய அறிக்கை தற்போது&nbsp;ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T13:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் ஆபத்திலிருந்த பெண்ணை காப்பாற்றிய இலங்கையருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-got-attacked-in-italy-1786022228"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-got-attacked-in-italy-1786022228</id>
            <summary type="text">இத்தாலியில் ஆபத்தில் இருந்த பெண்ணை காப்பாற்றிய இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிலான் நகரில் கட்டட பராமரிப்பாளராக பணியாற்றி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில் ஆபத்தில் இருந்த பெண்ணை காப்பாற்றிய இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>மிலான் நகரில் கட்டட பராமரிப்பாளராக பணியாற்றி வரும் 52 வயதான இலங்கையர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

சில தினங்களுக்கு முன்னர் 22 வயதான பெண்ணை நபர் ஒருவர் தாக்குவதற்கு துரத்தியுள்ளார். </p><h2><b>இலங்கையர் மீது தாக்குதல்</b></h2><p>இந்நிலையில் பணியில் இருந்து இலங்கையரிடம் சென்ற பெண் தஞ்சம் அடைந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53479531-feec-4a4c-a5e7-4ca34b73de59/26-6a748b5353295.webp' /></p><p>இந்நிலையில் விரைந்த செயற்பட்ட இலங்கையர், தாக்க வந்த நபரை விரட்டியுள்ளார்.</p><p> 

இதனையடுத்து பாதிகப்பட்ட பெண்ணும் அங்கிருந்து சென்ற நிலையில், சிறிது நேரத்தில் கத்தியுடன் வந்த சந்தேக நபர் இலங்கை மீது சரமாரியாக தாக்குல் மேற்கொண்டுள்ளார்.</p><p>
</p><h3><b>
சந்தேக நபரை கைது</b></h3><p>இரத்த வெள்ளத்தில் கிடந்த இலங்கையரின் பணப் பையையும் களவாடிய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/611b2658-d6c9-401c-a85d-2ba5de7f8457/26-6a748b541d1ae.webp' /></p><p>தகவலறிந்த பொலிஸார் உடன் விரைந்து செயற்பட்டு கார்ப்போ புவெனோஸ் அய்ரெஸ் வீதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
</p><p>
பாதிக்கப்பட்ட இலங்கையர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T13:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனியாவது மக்களைக் காக்க நடவடிக்கை எடுங்கள்! அநுர அரசிடம் சஜித் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/at-least-take-action-to-protect-the-people-sajith-1786020401"></link>
            <id>https://tamilwin.com/article/at-least-take-action-to-protect-the-people-sajith-1786020401</id>
            <summary type="text">இனியாவது கருணையுடன் செயற்பட்டு மக்களைப் பாதுகாக்க
நடவடிக்கை எடுங்கள் என இந்த அரசைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனியாவது கருணையுடன் செயற்பட்டு மக்களைப் பாதுகாக்க
நடவடிக்கை எடுங்கள் என இந்த அரசைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

</p><p>நாடாளுமன்றத்தில் இன்று(06.08.2026) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அவசரகாலக் கொடுப்பனவுகள் இன்றி&nbsp;</h2><p>தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:-</p><p>"நுவரெலியா மாவட்டம், கொட்டகலை பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தை ஆபத்தான
நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன், கால்நடை மருத்துவத் துறையினர்
தொழிற்சங்கப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும், அவர்களிடம் பேசி
ரந்தென்பெல கால்நடை மருத்துவரை அனுப்பி அந்தச் சிறுத்தையைக் காப்பாற்ற
முடிந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c6b4642-8aa3-418a-9b75-cb2a174eb7d5/26-6a7486bd2c04b.webp' /></p><p>இதற்கு உதவிய கால்நடை மருத்துவர்களுக்கும் வனஜீவராசிகள்
அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
</p><p>
வனஜீவராசிகள் துறையில் 33 கால்நடை மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில்
தற்போது 17 பேரே உள்ளனர். குறைந்த வருமானம், அதிக வேலைப்பளு, உயிராபத்து
மற்றும் விடுமுறை, அவசரகாலக் கொடுப்பனவுகள் இன்றி அவதிப்படும் இவர்களுக்குப்
பதவி உயர்வுகள் கூட வழங்கப்படுவதில்லை.</p><p> இவர்களின் 24 மணி நேர அர்ப்பணிப்பு
சேவையை மதித்து முறையான நீதியையும் வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகளையும்
பெற்றுக்கொடுக்க வேண்டும்.</p><h2>தொடர்ச்சியான பேரிடர்களை எதிர்கொண்ட</h2><p>பொல்துவ சந்திப் பகுதியில் இஸ்ரேல் வேலைவாய்ப்பு விவகாரத்தால்
பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>அரச ஒப்பந்தத்தின்
பிரகாரம் 70வீதமானோரை அரசு ஊடாக அனுப்ப 4 இலட்சம் செலவாகும் நிலையில், 30வீதமானோரை தனியார் மூலம் அனுப்ப 45 இலட்சம் வரை செலவாகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a1f99b5-c64e-43ca-a187-05250ffbd7b7/26-6a748a750b0af.webp' /></p><p>
பெரும்பான்மையானவர்கள் தனியார் மூலம் அனுப்பப்படுவதால் தொழிலாளர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும்
பேசி, அரசு மட்டத்தில் அனுப்பும் தொகையை அதிகரிக்க வேண்டும்.</p><p>

விவசாயிகளின் அறுவடைக்கு ரூபா 120 உத்தரவாத விலை வழங்கப்படுவது போதுமானதல்ல.
விவசாய அமைச்சரே ஒரு கிலோவுக்கான உற்பத்திச் செலவு ரூபா 137 எனக்
கூறுகின்றார். தேர்தல் காலத்தில் ரூபா 150 உத்தரவாத விலை வழங்கப்படுமெனக்
கூறிய போதிலும், இன்று அது நடைமுறையில் இல்லை. </p><p>எனவே, விவசாயிகளுக்கு முறையான
உத்தரவாத விலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
</p><p>
தொடர்ச்சியான பேரிடர்களை எதிர்கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை
உரிமையாளர்கள் கடன் செலுத்தாதோர் கறுப்புப் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சொத்துகள் ஏலமிடப்படும் அபாயமும்
எழுந்துள்ளது. எனவே, அவர்களின் கடன்களை மறுசீரமைத்து நிவாரணங்களை
வழங்குங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T13:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க நீதி திணைக்களக் கண்காணிப்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் - தொடர் வீழ்ச்சியில் ட்ரம்ப் ஆட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-department-of-justice-surveillance-1786022407"></link>
            <id>https://tamilwin.com/article/us-department-of-justice-surveillance-1786022407</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், அந்நாட்டு நீதித்
திணைக்களத்தில் (DOJ) இடம்பெறும் தவறுகளைக் கண்காணிக்கும் இரு முக்கிய
உள்நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், அந்நாட்டு நீதித்
திணைக்களத்தில் (DOJ) இடம்பெறும் தவறுகளைக் கண்காணிக்கும் இரு முக்கிய
உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக
சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>

நீதிமன்றங்களின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள
அச்சம் காரணமாக, இந்த துறைகளில் பணியாற்றிய கணிசமான அதிகாரிகள் விலகியுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>

ஊழியர் பற்றாக்குறை</h2><p>

தொழில்முறைப் பொறுப்பு அலுவலகம் (OPR) மற்றும் தலைமைப் பரிசோதகர் அலுவலகம்
(OIG) ஆகிய இரு முக்கிய கண்காணிப்புப் பிரிவுகளிலேயே இந்த ஊழியர் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதில் தொழில்முறைப் பொறுப்பு அலுவலகத்தின் ஊழியர் எண்ணிக்கை 29 இலிருந்து 16
ஆகக் குறைந்துள்ளதுடன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் புதிய
விசாரணைகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efdd93d2-22f0-404a-9c33-116ed73cfb44/26-6a748a7526f88.webp' /></p><p>
</p><p>
அரசாங்க சட்டத்தரணிகளுக்கு எதிராகப் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை
2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளபோதிலும்,
முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, தலைமைப் பரிசோதகர் அலுவலகத்திலிருந்து 99 ஊழியர்கள் விலகியுள்ளதுடன்,
தற்போதைய நிர்வாகத்தின் கீழ் அரசியல் ரீதியாக உணர்வுபூர்வமான பல வழக்குகள்
தொடர்பான விசாரணைகள் தவிர்க்கப்படுவதாகவும் முன்னாள் அதிகாரிகள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நீதித் திணைக்களத்தின்
பேச்சாளர்கள், தமது கண்காணிப்புப் பிரிவுகள் சுயாதீனமாகவும் நேர்மையாகவும்
இயங்கி வருவதாகவும், சட்டத்தரணிகளின் தவறுகள் குறித்துத் தொடர்ந்தும் தீவிர
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T13:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் 10 நாட்களில்.. யாழில் சர்வதேச சைவ மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-vegetarian-conference-in-jaffna-1786021663"></link>
            <id>https://tamilwin.com/article/international-vegetarian-conference-in-jaffna-1786021663</id>
            <summary type="text">தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி
மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி
யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி
மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி
யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு
அறிவித்துள்ளது.</p><p>

யாழ். ஊடக அமையத்தில் இன்று(06.08.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><p> 

இந்த மாநாடு யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர்
மண்டபத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்பெறவுள்ளது.
</p><h2>
அதிகரிக்கும் சமூக சீர்கேடுகள்</h2><p>

நீண்டகால யுத்தம், கட்டாய இடப்பெயர்வு மற்றும் புலம்பெயர்வு காரணமாகச்
சமூகத்தின் சமய விழுமியங்களும் வாழ்வியல் பெறுமதிகளும் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்டெடுக்கும் நோக்குடனும், தற்போதைய
சமூகச் சூழலில் அதிகரித்து வரும் நம்பிக்கையின்மை, போதைப்பொருள் பாவனை, ஊழல்
மற்றும் பல்வேறு துஷ்பிரயோகங்களிலிருந்து மக்களை மீட்டெடுத்து ஆன்மிக
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும், பல கோயில்கள் கட்டப்பட்டு வந்தாலும்,
சைவத்தின் அடிப்படைத் தத்துவங்களும் பண்பாட்டு விழுமியங்களும் இளைய
தலைமுறையினரிடையே மங்கி வரும் நிலையைப் போக்கி, உண்மையான ஆன்மீக வாழ்வியலை
வலுப்படுத்தி சமூக மறுமலர்ச்சியை உருவாக்கும் நோக்குடனும் இந்தச் சர்வதேச சைவ
மாநாடு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/061e95f3-f2ea-47a2-a243-ba708f09d3f8/26-6a7487380d41c.webp' /></p><p> </p><p>

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம்
என்றும் அறிஞர்கள், சமயப் பெரியோர்கள்
மற்றும் பல்துறை நிபுணர்கள் தங்களது ஆலோசனைகளையும் ஆசிச் செய்திகளையும்
வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p>

இதேவேளை, மாநாட்டு ஏற்பாடுகளைச் சிறப்பாக முன்னெடுக்க உள்நாடு மற்றும்
வெளிநாடுகளில் வாழும் நல்லுள்ளங்கள் தாராளமாக நிதியுதவி வழங்கி இந்த
முயற்சியில் பங்கெடுக்குமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T13:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேட்டால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் போராட்டம்.. களத்தில் சஜித் பிரேமதாச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadasa-participated-youngsters-protest-1786020900"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadasa-participated-youngsters-protest-1786020900</id>
            <summary type="text">இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளால்
பாதிக்கப்பட்டு, கொழும்பு - பொல்துவ சந்தியில் அமைதி வழியில்
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளால்
பாதிக்கப்பட்டு, கொழும்பு - பொல்துவ சந்தியில் அமைதி வழியில்
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேரில் சந்தித்தார்.&nbsp;</p><p>இதன்போது, நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் வெளிநாட்டு ஊழியர்களின்
பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய அவர், இளைஞர்களின் கனவைச் சிதைக்கும் வகையில்
இடம்பெறும் இந்த முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பதாக
உறுதியளித்தார்.
</p><p>மேலும், "இலங்கை - இஸ்ரேல் அரசுகளுக்கிடையில் 2023ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட
ஒப்பந்தத்தின்படி, 70வீத தொழிலாளர்கள் அரசாங்க ஊடாகவும், 30வீத தொழிலாளர்கள்
தனியார் துறை ஊடாகவும் அனுப்பப்பட வேண்டும்.</p><h2>பாரிய மோசடி</h2><p> </p><p>ஆனால், தற்போது இந்த நிலை
முற்றிலும் மாற்றப்பட்டு, அரசு அனுப்ப வேண்டிய 70வீதமான பகுதி தனியார் துறைக்கு
வழங்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு பாரிய மோசடியாகும்” என எதிர்க்கட்சித் தலைவர்
குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f74ae4d5-c54d-466d-a922-37fa782aa29a/26-6a74855e21369.webp' /></p><p>
</p><p>அத்துடன், "அரசின் ஊடாகச் செல்லும் ஒரு தொழிலாளிக்கு 4 இலட்சம் ரூபா செலவாகும் நிலையில்,
தனியார் நிறுவனங்கள் மூலம் அனுப்பும்போது சுமார் 45 இலட்சம் ரூபா வரை
செலவாகின்றது. </p><p>இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் ஒரு நபரிடமிருந்து 5 ஆயிரம்
அமெரிக்க டொலர்களை இலாபமாக ஈட்டுவதுடன், இஸ்ரேல் செல்லக் காத்திருக்கும் 3
ஆயிரத்து 500 இளைஞர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இஸ்ரேலுடனான பேச்சுகளை மீண்டும் நடத்தி, ஆரம்பத்தில் ஒப்பந்தம்
செய்துகொண்டவாறு 70 வீத சதவிகிதத்தினரை அரசின் ஊடாக (குறைந்த செலவில் - 4 இலட்சம்
ரூபாவில்) அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று
சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
</p><p>
சாதாரண மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிய தற்போதைய அரசு, இஸ்ரேல்
வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் 3 ஆயிரத்து 500 பேரின் எதிர்காலத்தைப்
பாதுகாத்து அவர்களுக்குரிய நீதியை வழங்க வேண்டும்" என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-08-06T13:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று இரவு 7 மணி நேர நீர்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-hour-water-cut-in-wellawatte-tonight-1786018348"></link>
            <id>https://tamilwin.com/article/7-hour-water-cut-in-wellawatte-tonight-1786018348</id>
            <summary type="text">இன்று இரவு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக,&amp;nbsp; ஏழு மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று இரவு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக,&nbsp; ஏழு மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.</p><p>

 

அதன்படி, இன்று (06.08.2026) இரவு 10.00 மணி முதல் நாளை (07) காலை 5.00 மணி வரை நீர் விநியோகத் தடை நடைமுறையில் இருக்கும்.
</p><h2>நீரைச் சேமித்து வைக்குமாறு</h2><p>கழிவுநீர் மேலாண்மை மேம்பாட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தின் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12dfe505-e6f5-40b6-94bd-4fcd6b6192a2/26-6a7480a106863.webp' /></p><p>
 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்கூட்டியே போதுமான நீரைச் சேமித்து வைக்குமாறும், மின் தடை ஏற்படும் நேரத்தில் கிடைக்கும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

தற்காலிக நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T12:41:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! கடும் பீதியில் ராஜபக்ச குடும்பம், அரசியல் நட்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-and-friends-in-risk-1785999576"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-and-friends-in-risk-1785999576</id>
            <summary type="text">கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய அரசியல் நண்பர்களுக்கு எதிராக மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நடவடிக்கையை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய அரசியல் நண்பர்களுக்கு எதிராக மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நடவடிக்கையை சமகால அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. </p><p>

இந்நிலையில், பாரிய மோசடிகளில் இருந்து தப்பித்துக் கொண்டவர்கள் மீண்டும் சட்ட ரீதியாக சிக்கி சிறைக்கு செல்லும் நிலையில் உள்ளதால், அவர்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக 2015 – 2016ஆம் ஆண்டுகளில் குறைந்தது 14 வழக்குகள் தொடரப்பட்டு, பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மீளப் பெறப்பட்டிருந்தன.</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">மகிந்த உட்பட ராஜபக்ச குடும்பத்தினர்</b></p><p>அத்துடன், அக்குடும்பத்தின் நெருங்கிய நட்பு வட்டார உறுப்பினர்கள் தொடர்பிலும் அதே காலகட்டத்தில் குறைந்தது 15&nbsp; வழக்குகள் தொடரப்பட்டு மீளப் பெறப்பட்டிருந்தன.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50d8dd45-5ea2-4040-84b9-7958ca58e564/26-6a743f85efd07.webp' /></p><p>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் தொடரப்பட்டிருந்த 5 வழக்குகளை மீண்டும் தொடுக்குமாறு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அவரது 5 வழக்குகளுக்கு மேலதிகமாக, கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக 3 வழக்குகளும், ரோஹித அபேகுணவர்தன, பிரியங்கர ஜயரத்ன, தம்மிக பெரேரா மற்றும் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகிய ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்குகளும் மீளப் பெறப்பட்டிருந்தன.</p><h3><b>சொத்துக் குவிப்பு வழக்கு</b></h3><p>மேலும், கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் சொத்துக் குவிப்பு வழக்கும், மகிந்த ராஜபக்ச மீது சொத்துக் குவிப்பு வழக்கும், பசில் ராஜபக்ச மீது 5 சொத்துக் குவிப்பு வழக்குகளும், பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் ஒரு வழக்கும் தொடரப்பட்டு மீளப் பெறப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c63b3e1c-e806-4299-ac31-c3d30251cd4b/26-6a7441381d46a.webp' /></p><p>நாமல் ராஜபக்ச மீது 4 சொத்துக் குவிப்பு வழக்குகளும், ரோகித ராஜபக்ச தொடர்பில் சொத்துக் குவிப்பு வழக்கும், கடற்படையில் சட்டவிரோதமாக இணைத்துக் கொள்ளப்பட்டு மக்கள் நிதி பயன்படுத்தப்பட்டது தொடர்பான மற்றுமொரு வழக்கும் மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறு மீளப் பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் தொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2eh90AvrUac" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-08-06T12:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனை குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/adjournment-further-consideration-petitions-salley-1786017571"></link>
            <id>https://tamilwin.com/article/adjournment-further-consideration-petitions-salley-1786017571</id>
            <summary type="text">சுரேஷ் சலேவின் மனுவிற்கு அமைவான இடையீட்டு மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரேஷ் சலேவின் மனுவிற்கு அமைவான இடையீட்டு மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைவான இடையீட்டு மனுக்கள் இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.&nbsp;</p><p></p><h2>மேலதிக பரிசீலனைகள்</h2><p>

இதன்போது, இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட இடையீட்டு மனுதாரர்களின் தரப்பு சட்டத்தரணிகள் சிலர் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5556b553-b36a-422e-bcca-a16f43354409/26-6a747decb35dd.webp' /></p><p> </p><p>அதற்கமைய, இடையீட்டு மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T12:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகரவின் சர்ச்சைக் கருத்து: நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-submitted-evidence-related-to-sagara-1786015999"></link>
            <id>https://tamilwin.com/article/police-submitted-evidence-related-to-sagara-1786015999</id>
            <summary type="text">பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்ப்பித்துள்ளது.</p><p> 

அதற்கமைய, குறித்த கருத்துத் தொடர்பாக செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான கருத்து குறித்து மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் 17661/2026 என்ற வழக்கு எண்ணின் கீழ் இன்று (06) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.</p><p></p><h2>விசாரணை</h2><p> 

இதன்போது, குறித்த விசாரணைகளுக்காக மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/548f9a98-5684-469b-981f-df3623793f3f/26-6a747423bdc91.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பொலிஸ் மா அதிபர் தொடர்பாக விடுத்த அச்சுறுத்தலான கருத்துத் தொடர்பான தொகுக்கப்படாத காணொளி காட்சிகளைப் பொலிஸாருக்கு வழங்குமாறு 6 ஊடக நிறுவனங்களுக்குக் கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டுள்ளார். </p><p>

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு இணங்க நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T11:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-for-attention-grabbing-protest-in-mannar-1786015618"></link>
            <id>https://tamilwin.com/article/call-for-attention-grabbing-protest-in-mannar-1786015618</id>
            <summary type="text">&#039;எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்&#039; என்ற கோரிக்கையை
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>'எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்' என்ற கோரிக்கையை
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும்
வெளிப்படுத்தியும், நாளை(07.08.2026) காலை 9.30 மணிக்கு மன்னார் நகர
சுற்றுவட்டத்துக்கு முன்பாக ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.</p><p>
</p><p>
காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில், மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><h2>மக்களின் நியாயமான கோரிக்கை</h2><p>
இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு
மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை
மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக இடையறாது போராடி வரும் மக்களின் நியாயமான
கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf7db936-f203-4bd4-8c69-e4cdea027fd3/26-6a74738f4b8ef.webp' /></p><p>மனித உரிமைகள், காணி உரிமைகள், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும்
அனைத்து சிவில் சமூக அமைப்புகள், மக்கள் அமைப்புகள், மனித உரிமை
செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் தங்களது மேலான பங்களிப்பை
வழங்குமாறு ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.
</p><p>
அத்துடன், மன்னாருக்கு வர இயலாத நண்பர்கள் மற்றும் அமைப்புகள் தங்களது
மாவட்டங்களில் குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய
பகுதிகளில் நடைபெற்று வரும் ஆதரவு கவனயீர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று, நில
உரிமைக்காகப் போராடும் மக்களின் நீதியான கோரிக்கைக்கு ஒற்றுமையையும் ஆதரவையும்
வெளிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T11:53:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-grave-1786016583"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-grave-1786016583</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர்.
ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில்,
எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர்.
ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில்,
எதிர்வரும் நாட்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது.
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய
பரிசோதனைகள் தொடர்பான நிர்வாக ரீதியான கலந்துரையாடல் மற்றும் திறந்த நீதிமன்ற
அமர்வு, நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் செம்மணி அகழ்வாய்வுத் தளத்தில்
நேற்று(05.08.2026) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.</p><p>

இந்த அமர்வில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ்
சோமதேவா, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, காணாமல்போனோர் குடும்பங்கள்
மற்றும் ஓ.எம்.பி. சார்பிலான சட்டத்தரணிகள் மற்றும் யாழ். மாவட்ட
சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
</p><h2>
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய சமர்ப்பணங்கள்</h2><p>

01. தொல்லியல் அறிக்கை: தற்போதைய அகழ்வுப் பணிகள் மற்றும் அடுத்த கட்ட
நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றுக்கு
சமர்ப்பித்ததுடன், அகழ்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான என்புத் தொகுதிகளில்
துப்பாக்கிச் சன்னம் துளைத்தது போன்ற அடையாளங்கள் இல்லை எனவும் நிபுணர்களால்
தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa1df06-bb24-42f6-b2f6-19d19dccefa1/26-6a74745d46d73.webp' /></p><p>
</p><p>
02. எல்லைகளைத் தாண்டிய ஆய்வு: செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட
சித்துப்பாத்தி இந்து மயானத்தின் தற்போதைய எல்லைச் சுவர்களுக்கு அப்பால்,
செய்மதிப் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு ஸ்கான் மற்றும் அகழ்வுப்
பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சட்டத்தரணி க.சுகாஷ் சமர்ப்பணம் செய்தார்.</p><p>

03. காலத்தை நிர்ணயிக்கும் பரிசோதனை: அகழ்ந்தெடுக்கப்படும் என்புத்
தொகுதிகளுக்குக் காபன் - 14 பரிசோதனை மாத்திரமின்றி, தடயவியல் பொருள்களையும்
அடிப்படையாகக் கொண்டு காலத்தை நிர்ணயிக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
எனக் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர் சட்டத்தரணி மீராக் ரஹீம்
மற்றும் சட்டத்தரணி குமரவடிவேல் குருபரன் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
</p><p>
04. நான்காம் கட்ட அகழ்வு: எழுந்தமானமாகக் குழிகளைத் தோண்டும்போது என்புத்
தொகுதிகள் ஏதேனும் அடையாளம் காணப்பட்டால், அடுத்த கட்டமாக 4 வாரங்கள் வரை
அகழ்வுப் பணிகளைத் தொடரத் தயாராக இருப்பதாக நிபுணர்கள் மன்றில் தெரிவித்தனர்.</p><h2>


நீதிமன்ற உத்தரவு</h2><p>
சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிவான், ஸ்கேன் செய்யப்பட்டு
முழுமையாக ஆய்வு செய்யப்படாத பகுதிகளில் எழுந்தமானமாகக் குழிகளைத் தோண்டி
ஆய்வு செய்யவும், தடயப் பொருள்கள் காணப்பட்டால் தொடர்ச்சியாக முழுமையான
ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b69e7791-2783-4f10-963e-f7f9ab1014f4/26-6a74745deafea.webp' /></p><p>
</p><p>
அத்துடன், யாழ். பல்கலைக்கழக ஆய்வு அறிக்கைகள் மற்றும் சமர்ப்பிக்கப்படாத ஏனைய
அறிக்கைகளையும் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு கட்டளையிடப்பட்டது.
</p><p>
ஜி.பி.ஆர். ஸ்கான் பரிசோதனை அறிக்கை மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான
அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு, கார்பன் - 14 பரிசோதனை குறித்த இறுதித்
தீர்மானத்தை எடுப்பதற்கான அடுத்த கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 14ஆம் திகதி
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபையின் துணைத் தலைவர் பதவி நீக்கம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chavakachcheri-municipal-council-deputy-chairman-1786015925"></link>
            <id>https://tamilwin.com/article/chavakachcheri-municipal-council-deputy-chairman-1786015925</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில்
இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மனு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில்
இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு திகதியிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான வழக்கு நேற்று(05.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

 இதற்கமைய, வழக்கு விசாரணையின் பின்னரான தீர்ப்பு எதிர்வரும் ஆக்ஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><h2> 

ஆளுநருக்கு எதிரான மனுதாக்கல்</h2><p>
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த
ஞானப்பிரகாசம் கிஷோரை வடமாகாண ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் பதவியிலிருந்து
நீக்கியிருந்தார்.</p><p>

இந்தப் பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அதனை
இரத்துச் செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d2f873c-7059-4a06-b509-bcdc8038fa44/26-6a7470e730624.webp' /></p><p>
</p><h2>
தீர்ப்பு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு</h2><p>
குறித்த மனு தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண
அமர்வில் பல தடவைகள் இடம்பெற்றிருந்தன. </p><p>மனுதாரர் சார்பிலும் பதிலாளிகள்
சார்பிலும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, வழக்கின்
தீர்ப்பு நேற்று(05) வழங்கப்படும் என நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.
</p><p>
இந்த நிலையில், நேற்றைய நீதிமன்ற அமர்வில் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட
போது, தீர்ப்பை வழங்காமல் அதனை எதிர்வரும் ஆக்ஸ்ட் 19 ஆம் திகதி வரை ஒத்தி
வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இதன் மூலம் ஞானப் பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கம் சட்டபூர்வமானதா? அல்லது
இல்லையா? என்பது தொடர்பான நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மேலும் இரண்டு
வாரங்களுக்கு பின்னர் வெளியாகவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிந்துலையில் மண்மேடு சரிந்து மூன்று வீடுகள் சேதம்: அச்சத்தில் வாழும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-houses-damaged-as-mound-of-earth-collapses-1786015048"></link>
            <id>https://tamilwin.com/article/three-houses-damaged-as-mound-of-earth-collapses-1786015048</id>
            <summary type="text">தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை நோனா
தோட்டத்தின் புதிய வீடமைப்பு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் மூன்று வீடுகள் கடுமையாக சேதமடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை நோனா
தோட்டத்தின் புதிய வீடமைப்பு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் மூன்று வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.</p><p>மேலும் இரண்டு
வீடுகள் எந்நேரமும் சரிந்து விழக்கூடிய அபாய நிலையில் காணப்படுவதால் அப்பகுதி
மக்கள் கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.</p><p>

சுமார் 40 அடி உயரத்தில் அமைந்திருந்த மண்மேடு, அதிகாலை சுமார் 3.00 மணியளவில்
திடீரென வீடுகளின் பின்புறமாக சரிந்து விழுந்ததாக பாதிக்கப்பட்டவர்கள்
தெரிவித்தனர்.</p><p></p><h2>பாரிய உயிரிழப்பு</h2><p> இந்த திடீர் மண்சரிவினால் வீடுகளின் பின்புற சுவர்கள் இடிந்து
சேதமடைந்ததுடன், சில வீடுகளின் கூரைகளும் பகுதியளவில் உடைந்து
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d4aeac6-25ea-4433-b87b-99463aa1bc77/26-6a746f751bbd6.webp' /></p><p>

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீடுகளில் குடும்பத்தினர் உறங்கிக்
கொண்டிருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட பெரும் சத்தத்தைத் தொடர்ந்து
வெளியேறியதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.</p><p> சில நொடிகள் கூட
தாமதமாகியிருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என அவர்கள்
வேதனையுடன் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>அபாயம்&nbsp;</h2><p>வீடுகள் கடுமையாக சேதமடைந்திருந்த போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
இதுவரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவில்லை என்பது கவலைக்கிடமான
விடயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/814460b6-1798-4116-8ca9-4040ab084f4e/26-6a746f743beb2.webp' /></p><p> </p><p>பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அதே வீடுகளிலேயே சிறுவர்கள்,
முதியவர்கள் மற்றும் நோயாளர்களுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக
அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்மேடு மேலும் சரிந்து
விழக்கூடிய அபாயம் நீடித்து வருவதாகவும், ஒவ்வொரு மழை பெய்யும் தருணத்திலும்
உயிரை பணயம் வைத்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T11:27:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனமழை தாக்கம் : ஹட்டன் போக்குவரத்து சபை தினசரி வருமானம் பாரியளவு வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-sltb-has-dropped-to-1-million-bad-weather-1786012369"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-sltb-has-dropped-to-1-million-bad-weather-1786012369</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையின் தினசரி வருமானம் 3.3 மில்லியனிலிருந்து 1 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் குறித்த போக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையின் தினசரி வருமானம் 3.3 மில்லியனிலிருந்து 1 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் குறித்த போக்குவரத்து சபையின் மேலாளர் பாலித வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p> 

ஊடகங்களுக்கு ஒரு சிறப்பு அறிக்கை அளித்த அவர், சாதாரண நாட்களில் ஹட்டன் பணிமனை 75 நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பேருந்துகளை இயக்குவதாகக் கூறியுள்ளார்.</p><h2>மூன்று நாட்களில்</h2><p>
அந்தக் காலங்களில் தனது பணிமனைப் பேருந்துகளில் சுமார் 18,000-26,000 பயணிகள் பயணம் செய்து வந்தபோதிலும், கனமழை காரணமாக 03,04,05 ஆகிய மூன்று நாட்களில் ஒரு நாளைக்கு 9,218 முதல் 10,000 பயணிகள் மட்டுமே பயணம் செய்ததால் வருவாய் குறைந்துள்ளதாக பணிமனை மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17202c39-c598-429f-b3ed-097f74c026c0/26-6a746e9f1dd90.webp' /></p><p>
பாடசாலை விடுமுறைகள் மற்றும் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பயணிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாததாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.</p><p>

மேலும், தனது பணிமனையில் 328 ஊழியர்கள் பணிபுரிவதாகவும், இந்த மாதம் அவர்களது சம்பளத்தை வழங்குவதற்காக அவர்கள் சுமார் ரூ. 1.38 மில்லியன் சம்பாதித்துள்ளதாகவும் மேலாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T11:23:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இழப்பீட்டு தொகை குறிப்பிடாமல் கடிதத்தில் கையொப்பம் வாங்க முயற்சி - தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/confusion-at-the-tellipalla-divisional-secretariat-1786014031"></link>
            <id>https://tamilwin.com/article/confusion-at-the-tellipalla-divisional-secretariat-1786014031</id>
            <summary type="text">&amp;nbsp;&quot;மக்களின் காணி மக்களுக்கே.. &quot; எனக் கூறி ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இன்னொரு பக்கம், மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில் கையகப்படுத்த தீவிரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;"மக்களின் காணி மக்களுக்கே.. " எனக் கூறி ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இன்னொரு பக்கம், மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில் கையகப்படுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக வலி. வடக்கு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p> 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக தனியார் காணிகளை
சுவீகரித்துக்கொண்டு அதற்கான நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் காணி
உரிமையாளர்களுக்கும் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர்களுக்கு
இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம்(04.08.2026) தெல்லிப்பழை பிரதேச
செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படாது பலாலி விமான
நிலையமாக இருந்த காலப்பகுதியில் 436 காணி உரிமையாளர்களின் 267 ஏக்கர் காணிகளை அரசாங்கம் சுவீகரித்துள்ளது. </p><h2>


உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனம்</h2><p>
ஆனால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டமையால் , அக்கால பகுதியில்,
விமான நிலைய அபிவிருத்திகள் தடைப்பட்டு, காணி சுவீகரிப்பு நடவடிக்கையும்
தடைப்பட்டது.

பின்னரான 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்நாட்டு யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள்
இடம்பெயர்ந்தனர்.</p><p>

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கட்டம் கட்டமாக விமான நிலையத்திற்கு
அண்மித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட
போதிலும், விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணம் என அப்பகுதி
மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17bf69f2-1a82-4c80-9ad9-aa2b64ef25d8/26-6a746a8a2e4e1.webp' /></p><p>
</p><p>
விமான நிலையத்திற்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
காணிகளுக்கு மேலதிகமாகவும் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு
வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
</p><h2>

508 ஏக்கர் காணி சுவீகரிப்பு</h2><p>
இந்த நிலையில், விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்ட பலாலி மேற்கு , மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும்
குரும்பசிட்டி ஆகிய 4 நான்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 267 ஏக்கர்
காணி தவிர தற்போது மேலதிகமாகவும் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு கடந்த மே மாதம் 26ஆம் திகதி
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் , இலங்கை
இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட விசேட குழுவினர்கள் வருகை தந்து நேரில் ஆராய்ந்து
சேர்ந்த பின்னர் கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றும் போது
774.98 ஏக்கர் காணி விமான நிலையத்திற்கு தேவை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09b7012b-717c-4200-91bd-2d1ed8913fab/26-6a746a8b22c46.webp' /></p><p> </p><p>

1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையமாக காணப்பட்ட போது, 267 ஏக்கர் காணியே விமான
நிலைய விஸ்தரிப்புக்கு தேவை என சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச
விமான நிலையமாக தரமுயர்ந்துள்ள நிலையில்,&nbsp; சர்வதேச விமான
நிலையத்திற்காக மேலதிகமாக சுமார் 508 ஏக்கர் காணி சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படவுள்ளன.
</p><h2>


காணிக்குள் உள்ள சொத்துகளுக்கு மதிப்பீடு</h2><p>


இந்நிலையிலேயே, முதல் கட்டமாக, 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்ட காணி உரிமையாளர்களை அழைத்து , அவர்களின் காணிகளுக்கு இழப்பீடு
வழங்குவது தொடர்பில் முதல் கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது

1986ஆம் ஆண்டு காணிகளை சுவீகரித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
போது, காணிக்குள் இருந்த சொத்துக்களுக்கும் மதிப்பீடு காணப்பட்டது.
</p><p>
இதன்படி, அவற்றுக்கும் பெறுமதி இருந்தது.

தற்போது வெறும் காணிகளுக்கு மட்டுமே மதிப்பீடு நடைபெறவுள்ளது. ஒரு காணியில்
வீடும், வணிக கட்டடமும் இருந்து இருந்தால், அந்த காணியில் இருந்த
கட்டங்களுக்கான பெறுமதியினை தற்போது மதிப்பீடு செய்ய முடியாது.

ஏனெனில் பெரும்பாலான காணிகளுக்குள் கட்டடங்கள் இல்லை. காணிகளுக்குள் கட்டங்கள்
இருந்தாலும், அந்த கட்டடங்கள் 40 வருடங்களுக்கு முந்தியவை என்பதால்
அவற்றுக்கும் பெறுமதியில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/359e8472-cf81-4589-b001-a966f5b96a8c/26-6a746a8be9af0.webp' /></p><p>
</p><p>
காணி 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டலும், 2022ஆம்
ஆண்டே சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தல்
விடுக்கப்பட்டமையால், 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியை காணி
மதிப்பீட்டு திணைக்களத்தினர் நிர்ணயித்து, அதற்கான விலையே காணி விலையாக
நிர்ணயித்து அந்த பணம் இழப்பீடாக வழங்கப்படவுள்ளது. </p><p>

அத்துடன், கடந்த 2022ஆம் ஆண்டு விலை
நிர்ணயிக்கப்பட்டாலும் , 2026ஆம் ஆண்டே இழப்பீட்டு தொகை கிடைக்குமாயின் , அந்த
நான்கு வருடங்களுக்கான வட்டியும் சேர்த்தே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

காணிகளுக்குள் இருந்த சொத்துக்களுக்கு இழப்பீடு இல்லை என்ற கவலை இருந்தாலும், 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியில் இழப்பீடு வழங்கப்படும்
என்ற அதிகாரிகளின் உறுதி மொழியை நம்பி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணிகளை
வழங்கி , இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள பெருமளவானோர் சம்மதித்தனர்.

இந்த நிலையிலேயே தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கும் காணி
உரிமையாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.</p><h2> 


குழப்பத்தை ஏற்படுத்திய கடிதம்</h2><p>

கூட்டத்தில் காணி உரிமையாளர்களுக்கு வழங்கிய சத்திய
கடதாசியில் காணப்பட்ட விடயங்களே காணி உரிமையாளர்கள் மத்தியில்
குழப்பத்தை ஏற்படுத்தியது. 




குறித்த சத்திய கடதாசியில், 04 ஆகஸ்ட் 2026 என திகதியிடப்பட்டு, 

"பிரிக்கப்படாத ஒரே காணி அலகாகக் கொண்டு, தனிப்பட்ட அமைவிடத்தைக்
கருத்திற் கொள்ளாமல்
ஒவ்வொரு ஆளுக்கும் சொந்தமான காணியின் அளவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நான்
இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்கின்றேன் " என்ற கூற்று காணி
உரிமையாளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்பட்டது.
</p><p>
குறித்த பகுதியில் உள்ள காணிகள் அனைத்தையும் "LOT - 1 " ஆக அடையாளப்படுத்தி,
அதனை ஒரு காணியாக விலையை மதிப்பீடு செய்து,&nbsp; அந்த காணியின் பெறுமதியை , காணி
உரிமையாளர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்வதா எனக் குழப்பமடைந்தனர்.

ஒவ்வொருவருடைய காணியும் ஒவ்வொரு பெறுமதியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24599f7f-bbc6-4d4b-adfc-34718efc6234/26-6a746a8cbce1c.webp' /></p><p> பிரதான வீதியோரத்தை அண்டிய
காணியும், பிரதான வீதியில் இருந்து 15ஆவது காணியாக உள்ள காணியும் ஒரே பெறுமதி
அல்ல. காணிகள் அவற்றின் அமைவிடத்திற்கு ஏற்ப பெறுமதி மாறுபடும். 

அதனால் காணிகளை தனித்தனியாக அடையாளப்படுத்தி, இந்த காணிக்கு எவ்வளவு என தனித்தனியாக
இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்தனர்.

சத்திய கடதாசியில் காணப்பட்ட அடுத்த கூற்றான " காணியின் உரிமையினை உறுதி
செய்வதற்கு காணி உறுதி இல்லாத போது செல்லுபடியான சட்டரீதியான ஆவணங்களை
அடிப்படையாகக் பெற்றுக்கொள்ள நான் சம்மதம் தெரிவிக்கின்றேன். அதனை கொண்டு
தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டினை பெற்றுக்கொள்கிறேன்" என காணப்பட்ட கூற்று.
</p><p>
எங்குமே காணிக்கு இவ்வளவு இழப்பீடு என குறிப்பிடப்படவில்லை. பல இலட்ச ரூபாய்
பெறுமதியான காணிகளுக்கு சில ஆயிரம் ரூபாய் தான் விலை என விலை மதிப்பீடு செய்து
, அதனை இழப்பீடாக தந்தால் அதொரு நியாமான விடயமாக அமையாது.
</p><p>
எனவே எமது காணிக்கு எவ்வளவு இழப்பீட்டு தொகை என நாம் அறிந்து கொண்டாலே ,
அதற்க்கான சம்மதத்தை தெரிவிக்க முடியும் என தெரிவித்தனர்.

அத்துடன் சத்திய கடதாசியில் நான்காவது கூற்றாக , " காணிக்கான இழப்பீட்டுக்
கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து கொண்டதன் பின்னர் ஒப்பமிட நான்
உடன்படுகின்றேன்" என காணப்பட்ட கூற்று , காணிக்கு எவ்வளவு இழப்பீடு என
எமக்கு தெரிவிக்காது </p><p> காணிகளுக்கான விலை மதிப்பீட்டை இனி தான் மேற்கொள்ள
போவதாக கூறிக்கொண்டு " இழப்பீட்டுக் கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து
கொண்டதன் பின்னர் " என சத்திய கடதாசியில் குறிப்பிட்டு எம்மை கையொப்பம் இட
கேட்பது எவ்வாறு நியாயம் என கேட்டு , காணி உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட
தொடங்கினர்.
</p><h2>
காணி உரிமையாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்</h2><p>
இதனையடுத்து, கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு பெருமளவான பொலிஸார்
வரவழைக்கப்பட்டனர். அது காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும்
குழப்பத்தை ஏற்படுத்தியதையடுத்து, அதனால் பெருமளவான காணி உரிமையாளர்கள்,
மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளனர். </p><p>

தொடர்ந்து காணி உரிமையாளர்கள் தரப்பில் 07 பேர் கொண்டு குழு ஒன்று அமைப்பது
என்றும், அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக சத்திய கடதாசியில் திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என
தீர்மானித்து கூட்டம் முடிவடைந்தது

பெரும்பாலான மக்கள் இழப்பீடோ அல்லது வேறு இடங்களில் வழங்கப்படும் மாற்று
காணிகளையோ ஏற்க மறுத்து, "எங்கள் பூர்வீக நிலமே எங்களுக்கு வேண்டும்" என
உறுதியாக நின்று போராடி வருகின்றனர்</p><h2>40 வருடங்கள் நடக்கும் போராட்டம்</h2><p>
அவ்வாறான நிலையில் 40 வருட காலமாக தாம் போராடி களைத்து விட்டோம் , அரசாங்கம்
தரும் நியாயமான இழப்பீட்டை பெற்றுக்கொள்வோம் என முன் வந்த போதிலும், காணி
உரிமையாளர்களுக்கு சத்திய கடதாசி அவ நம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன், வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும்
யாழ்ப்பாண சர்வதேச விமான விமான நிலைய விஸ்தரிப்பு அவசியம்.
</p><p>
பொருளாதார வளர்ச்சிக்காக, தலைமுறைகள் தாண்டியும் தமது பூர்வீக நிலங்களுக்கு
செல்ல வேண்டும் என போராடி வரும் மக்களின் மனப்பூர்வ ஒப்புதலின்றி அவர்களின்
காணிகளைச் சுவீகரிப்பது அநீதியாகும்.</p><p>
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வினை வழங்கியே
அபிவிருத்தி விடயங்களை முன்னெடுக்க வேண்டும் அதுவே சமூக நீதியுமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-06T11:06:14+00:00</updated>
        </entry>
    </feed>
