<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-22T10:17:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென உயிரிழந்த இளம் யுவதி! சந்தேகம் இருப்பதாக தந்தை அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-woman-who-died-at-ratnapura-hospital-1784683555"></link>
            <id>https://tamilwin.com/article/young-woman-who-died-at-ratnapura-hospital-1784683555</id>
            <summary type="text">இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த&amp;nbsp; 21 வயதுடைய யுவதியின்&amp;nbsp;மரணத்தில் சந்தேகம் இருப்பதாக&amp;nbsp;தெரிவித்து&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த&nbsp; 21 வயதுடைய யுவதியின்&nbsp;மரணத்தில் சந்தேகம் இருப்பதாக&nbsp;தெரிவித்து&nbsp;தந்தை சுகாதார அமைச்சுக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.</p><p>மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து, இம்மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>மரணத்துக்கான காரணம்&nbsp;</h2><p>மருத்துவ தரப்பினரின் அலட்சியம் மகளின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c45c2d7d-b7fa-43ae-9ee8-886c3366d1ff/26-6a6097e672034.webp' /></p><p>நிமோனியாவால் பாதிக்கப்பட்ட தனது மகள், கடந்த 3ஆம் திகதி இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 13வது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நோய் நிலைமை குறித்து முறையாக பரிசோதிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>தனது மகளுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி, வாயிலிருந்து இரத்தம் வடிதல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, கடும் மூச்சுத்திணறல் போன்றவற்றுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று அவரது ஒட்சிசன் அளவு 85 சதவீதமாக குறைந்ததாகவும், அவசர சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமலும் இருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>உடற்கூறாய்வு பரிசோதனை</h2><p>இதனைத்தொடர்ந்து&nbsp;உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து&nbsp;மாரடைப்பு ஏற்பட்டதன் பின்னரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>மேலும், உடற்கூறாய்வு பரிசோதனை (Histopathological examination) மேற்கொள்ளபடவிருக்கும் நிலையில், நியூமோனியாவே தற்காலிக மரணத்துக்கான காரணம் என நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்ததாக தந்தை கூறியுள்ளார்.</p><p>

எனவே, யுவதியின் மரணம் தொடர்பில், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தந்தை, உரிய அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T10:14:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து சென்ற அருட்சகோதரிகளுக்கு நேர்ந்த கதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-nuns-from-colombo-involved-in-accident-1784711525"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-nuns-from-colombo-involved-in-accident-1784711525</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து இன்று(22.07.2026) பறைய நாளங்குளம் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> 

இந்த விபத்து இன்று(22.07.2026) பறைய நாளங்குளம் இரும்புப் பாலத்தில்இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>

நால்வர் படுகாயம்</h2><p>

இதன்போது வாகனத்தில் பயணித்த 4 அருட்சகோதரிகள் 
காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e991edaf-3073-406f-93b6-88be157b20d9/26-6a6097a854bd5.webp' /></p><p> </p><p> 

அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், மேலதிக
சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:13:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு! வெளியான விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/stop-the-destruction-of-tamil-history-immediately-1784713801"></link>
            <id>https://tamilwin.com/article/stop-the-destruction-of-tamil-history-immediately-1784713801</id>
            <summary type="text">கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் வரலாற்று, பண்பாட்டு
முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான
அடிக்கல் நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் வரலாற்று, பண்பாட்டு
முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள்
மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின்
திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை(22) கருத்து தெரிவிக்கும் போதே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>தமிழரின் வரலாறு </h2><p> </p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

கன்னியா வெந்நீர் ஊற்று என்பது தமிழர்களுக்கும், குறிப்பாக இந்து
மக்களுக்கும், மிக நீண்டகால வரலாற்று மற்றும் ஆன்மீக தொடர்புடைய புனிதத்
தலமாகும். இப்பகுதியை புனித இடமாகவும் தமிழ் மக்கள் பல தலைமுறைகளாகக் கருதி
வந்துள்ளனர் வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/860a876e-cf9a-4400-a9ab-2a9093e225e8/26-6a6095928637e.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், புனித பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்ததாகக் கூறப்படும் பகுதியில்
புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள
தகவல்கள் மக்களிடையே பதற்றத்தையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும்
உருவாக்கியுள்ளது.
</p><p>
கன்னியா என்பது ஒரு மதத் தலம் மட்டுமல்ல அது திருகோணமலையின் வரலாறு தமிழர்
பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்களின் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு
முக்கிய தமிழர் மரபுரிமைச் சின்னமாகும்.</p><p></p><h2>உடனடியாக நிறுத்துங்கள்&nbsp;</h2><p> இதுபோன்ற வரலாற்று மற்றும் மத
உணர்வுகள் சம்பந்தப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும்
அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும்,
தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட
வேண்டும்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும் முன்வைக்கும்
கவலைகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய முறையில் கவனத்தில்
கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5b4a00d-b321-4e77-9465-54e55fb94454/26-6a609593698c8.webp' /></p><p> </p><p>அனைத்து இனங்களும் மதங்களும் பரஸ்பர மரியாதையுடனும்
நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.
</p><p>
மேலும், கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகள்
குறித்து வெளிப்படையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்
என்றும், எந்தவொரு அபிவிருத்தி அல்லது கட்டுமான நடவடிக்கைகளும் சட்ட
நடைமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அனைத்து சமூகங்களின் மத, பண்பாட்டு
உணர்வுகளை மதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
</p><p>
அதேவேளை 2020 ஆம் ஆண்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அந்த இடத்தில் எந்தச்
சமய கட்டடங்களும் கட்டாதிருப்பதை சட்டம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T10:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி போராட்ட களத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-create-chaos-at-the-semmani-protest-site-1784713363"></link>
            <id>https://tamilwin.com/article/police-create-chaos-at-the-semmani-protest-site-1784713363</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம்(22.07.2026) செம்மணி சித்துப்பாத்தி இந்து
மயானத்திற்கு வருகை தந்தனர். இதன்போது சித்துப்பாத்தி மனிதப் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம்(22.07.2026) செம்மணி சித்துப்பாத்தி இந்து
மயானத்திற்கு வருகை தந்தனர். </p><p>இதன்போது சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு
நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>இந்நிலையில்,&nbsp; அந்த படங்கள் தாங்கிய பதாகைகளை ஊடகவியலாளர்கள் காணொளி மற்றும் புகைப்படம் பதிவுசெய்யும்போது அதனை மறைக்கும் வகையில் பொலிஸார் குறுக்கே நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொலிஸாருக்கு கூறிய நிலையில்</h2><p>
</p><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7bf6357-d077-4e61-b638-aa313c15dec0/26-6a6093c17402d.webp' /></p><p>காணாமல் ஆக்கப்பட்ட சிறார்களது படங்களை தாங்கிய
பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதன்போது அவற்றை மறைக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு கூறிய
நிலையிலும் அவர்கள் அங்கிருந்து நகராமல் நின்றதால் போராட்டக்காரர்களுக்கும்
பொலிஸாருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.</p><p>
பின்னர் பொலிஸார் அங்கிருந்து நகர்ந்து சென்றதாக&nbsp; எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! தாமதமாகும் பிரேத பரிசோதனை அறிக்கை - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kapila-chandrasena-autopsy-report-issue-1784707579"></link>
            <id>https://tamilwin.com/article/kapila-chandrasena-autopsy-report-issue-1784707579</id>
            <summary type="text">மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரண விசாரணை தொடர்பான பிரேத பரிசோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரண விசாரணை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பான நினைவூட்டல் கடிதமொன்று அரச சட்ட வைத்திய அதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (22) மீண்டும் அனுப்பியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><h2>மீண்டும் நினைவூட்டல் கடிதங்கள்&nbsp;</h2><p>இந்த சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக வழங்குமாறு அரச சட்ட வைத்திய அதிகாரிக்கு இதற்கு முன்னர் அறிவிப்பொன்று அனுப்பப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e00fd62d-c16c-4fbf-a865-1b4bb3e91f9f/26-6a60931480a20.webp' /></p><p>இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​தடயவியல் அறிக்கை பெறப்படவில்லை என்று கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2><p><span style="font-size: 14px;">இதற்கமைய, பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு மீண்டும் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.</span></p></h2><p>இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் மாதம் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:53:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவில் அமைப்புக்கள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் முன்வைத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-withdraw-north-land-civil-society-1784707224"></link>
            <id>https://tamilwin.com/article/government-withdraw-north-land-civil-society-1784707224</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் 2013 ஆம் ஆண்டு 5ஆம் மாதம் சுவீகரிப்பு வர்த்தமானி மூலம்
வலி வடக்கு மக்களின் 6317 ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்
பெறுவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் 2013 ஆம் ஆண்டு 5ஆம் மாதம் சுவீகரிப்பு வர்த்தமானி மூலம்
வலி வடக்கு மக்களின் 6317 ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்
பெறுவதற்கான அழுத்தத்தை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றிய
பிரதிநிதிகளிடம் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.</p><p>
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான
உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று(21.07.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள
தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற போதே இந்தக் கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>காணி விடுவிப்பு</h2><p>குறித்த கோரிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 35 வருடங்கள் கடந்தும் பொது
மக்களுடைய காணிகள் பாதுகாப்பு படைகளினால் விடுவிக்கப்படாமல்
கையகப்படுத்தப்பட்டிருக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a863f024-62bb-406f-8833-4fc424883648/26-6a608dc700523.webp' /></p><p>வலி.வடக்கு மக்களின் சுமார் 6 ஏக்கருக்கு மேற்பட்ட காணி பாதுகாப்பு அமைச்சினால்
வர்த்தமானி மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வர்த்தமானி இதுவரை
மீளப் பெறப்படவில்லை.
</p><p>
பொதுமக்களுடைய காணிகளை பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து விடுவிப்பதற்கும்
சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு
அழுத்தத்தை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.</p><p></p><h2>கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்</h2><p>கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, மனித உரிமைகள், நல்லாட்சி,
சமூக நீதி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் நிலையான
அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கருத்துப்
பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74adcb91-c973-4196-ac63-d1e17479f79c/26-6a608dc7d7647.webp' /></p><p>

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை மக்களின் நீண்ட காலமாக
பாதித்து வரும் காணி உரிமைப் பிரச்சினைகள், காணி மீட்பில் நிலவும் தாமதங்கள்,
காணி அபகரிப்பு, மற்றும் சுவீகரிப்பு அவற்றின் காரணமாக மக்கள் எதிர்நோக்கும்
சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதார சவால்கள் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும்
முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த கலந்துரையாடலில்
கார்மென் மொரேனோ – ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி
பெலிக்ஸ் நியுமன் ஜெர்மனி தூதுவர் ரெமி லம்பேர்ட் – பிரான்ஸ் தூதுவர் டாமியானோ
பிராங்கோவிக் ,இத்தாலி தூதுவர்
விபே டி போயர் , மற்றும் தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் சாரா பொன்சேகா
சில்வா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் ஆட்சி காலத்தில் 715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/715-million-us-dollars-illegally-smuggled-ranil-1784709571"></link>
            <id>https://tamilwin.com/article/715-million-us-dollars-illegally-smuggled-ranil-1784709571</id>
            <summary type="text">2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர&nbsp; குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p> ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இதில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தரப்பு உட்பட பலரும் கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><h2>105 நிறுவனங்கள்</h2><p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 214.7 பில்லியன்) வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு (CoPF) அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இந்த தகவலை, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட குழுவில் வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01db3a16-9394-4ffc-b00c-45df3df4161c/26-6a60874c87536.webp' /></p><p>
</p><p>
அவரின் விளக்கத்தின்படி, 2025 ஜனவரி 20, பெப்ரவரி 23 மற்றும் மார்ச் 6 ஆகிய திகதிகளில், இலங்கை சுங்கத் திணைக்களம் மூன்று அறிக்கைகளை பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தது.
</p><p>
 வெளிநாடுகளுக்கு இறக்குமதிக்காக பணம் அனுப்பப்பட்ட போதிலும், அதற்கான பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்பதே அந்த அறிக்கைகளின் மையக் குற்றச்சாட்டாகும்.</p><p>

முதல் அறிக்கையில் 89 நிறுவனங்கள், இரண்டாவது அறிக்கையில் மேலும் 4 நிறுவனங்கள், மூன்றாவது அறிக்கையில் மேலும் 12 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன.</p><p> இதன்படி, மொத்தம் 105 நிறுவனங்கள் இந்த சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளில் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளன.

விசாரணைகளின் அடிப்படையில், 2023 ஜனவரி 1 முதல் 2026 மார்ச் வரை, இந்த 105 நிறுவனங்கள் டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் (Telegraphic Transfers - TT) மூலம் சுமார் ரூ.214.7 பில்லியன் (அமெரிக்க டொலர் 715 மில்லியன்) வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளன.</p><p></p><h2>227 வங்கிக் கணக்குகள்</h2><p> </p><p>ஆனால், அந்தப் பணத்திற்கு ஈடான எந்தப் பொருட்களும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>

சுங்கத் திணைக்களத்தின் அறிக்கைகளைத் தொடர்ந்து, CID-யின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) இந்த பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p>

விசாரணைகளின் போது, 105 நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், மொத்தம் 55 நபர்களே அந்த அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c98fcb-62d6-4726-9c64-0624a46611bd/26-6a60874d66768.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்தப் பரிவர்த்தனைகளுக்காக 227 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் சுமார் 24,300 டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 13 முக்கிய வங்கிகள், தற்போது விசாரணைக்குட்பட்டுள்ள இந்தப் பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளதாகவும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
</p><p>
விசாரணைகள் முன்னேறிய நிலையில், இந்த மோசடி வலையமைப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;முக்கிய போதைப்பொருள் கடத்தல்</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட நபர் 43 நிறுவனங்களின் உரிமையாளராக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் மட்டும் ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலரை டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
CID-யின் குற்றச்சாட்டுப்படி, குறித்த நபர் இலங்கையில் உள்ள தரகர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, அவர்கள் வழங்கிய போலியான ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949acb14-8fdc-4859-9c07-efd50248324a/26-6a60874e1ec81.webp' /></p><p> </p><p>தரகர்கள் பயன்படுத்திய அலுவலகங்களில் இருந்த கணினிகளிலேயே போலி விலைப்பட்டியல் (Invoices) தயாரிக்கப்பட்டு, அவை வங்கிகளுக்கு ஆதார ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும் விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
மேலும், இந்தப் பரிவர்த்தனைகளில் சில வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் விசாரணைகளில் எழுந்துள்ளதாக அசங்க கரவிட்ட தெரிவித்தார்.
</p><p>
விசாரணைகளின் போது, இந்த நிதி மோசடிக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான தகவல்களும் வெளியாகியுள்ளன. குறிப்பாக, துபாயில் இருந்து இயங்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் பணம், இதே முறையைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக CID தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;முக்கிய சந்தேகநபர்</h2><p>
</p><p>
துபாயை மையமாகக் கொண்டிருந்த மூன்று முக்கிய சந்தேகநபர்களில் இருவர், இன்டர்போல் (Interpol) உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், போதைப்பொருள் வியாபாரிகளின் பணம் துபாயில் உள்ள மற்றொரு நபர் மூலம் இயக்கப்பட்டதாகவும், இலங்கையில் தரகர்கள் வசூலித்த பணம் இறுதியில் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bda8f0f9-0118-4619-bd90-cbe7c36988b5/26-6a6089c2beaf0.webp' /></p><p>
</p><p>
இந்த நடவடிக்கையின் மையத்தில் இருந்ததாகக் கூறப்படும் நபர், வசூலிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை கமிஷனாக வைத்துக்கொண்டு, மீதியை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p> பணத்தின் மூலாதாரம் குறித்து அவருக்கு முழுமையான அறிவு இருந்ததா என்பது தொடர்பிலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
</p><p>
மேலும், அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஏராளமான போலி சுங்க ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக CID தெரிவித்துள்ளது.</p><h2>விரிவான விசாரணை</h2><p>
</p><p>
இதற்கிடையில், கெளனிய பொலிஸ் பிரிவில் சோதனையிடப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து ரூ.30 மில்லியன் பணம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் தனி விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>அந்தப் பணம், இதேபோன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மற்றொரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a82e458-11f3-4cfc-b5fe-f231a06a63ca/26-6a6089c204e30.webp' /></p><p>
</p><p>
அந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், அந்த நிறுவனம் மட்டும் ஒரு அரச வங்கி மற்றும் இரண்டு தனியார் வங்கிகள் ஊடாக சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலரை இதே முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

இந்த இரண்டு வழக்குகளிலும், CID-யின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் குற்ற வருவாய் விசாரணைப் பிரிவு (Proceeds of Crime Investigation Division) இணைந்து விரிவான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-22T09:18:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத சொத்துகள் தொடர்பான பொலிஸாரின் அறிவிப்பு : உடனடியாக திரும்பப் பெற ஐ.தே.க வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-statement-regarding-illegal-assets-1784710065"></link>
            <id>https://tamilwin.com/article/police-statement-regarding-illegal-assets-1784710065</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் அல்லது ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை பொலிஸார் கடந்த ஜூலை 9ஆம் திகதி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் அல்லது ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை பொலிஸார் கடந்த ஜூலை 9ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
</p><p>
முறையான வழிகாட்டுதல்கள் இன்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தேவையற்ற துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர்</h2><p>
ஐக்கிய இராச்சியத்தின் சுயாதீன விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள Statement of Common Purpose அடிப்படையில், சட்டத்தையும் பொது அமைதியையும் பாதுகாப்பதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதும், சமூக அமைதியை பேணுவதும் பொலிஸாரின் பிரதான பொறுப்புகளாகும். </p><p>ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அந்த அடிப்படை கொள்கைக்கு முரணானதாக இருப்பதாக ஐ.தே.க. சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1628b371-e05c-4a3d-ac83-74adc07082bc/26-6a6087e1da4fd.webp' /></p><p>மேலும், தெளிவான சட்டபூர்வ வருமான ஆதாரம் இன்றி ஈட்டப்பட்ட சொத்துக்களை அடையாளம் காணும் நடைமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் இல்லாத சூழலில், இந்த அறிவிப்பு பொதுமக்களை துன்புறுத்தும் கருவியாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கையில் சொத்து வரி (Wealth Tax) நடைமுறையில் இல்லாத நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வமான வழிகளில் பலர் சொத்துக்களை ஈட்டுகின்றனர் என்றும், வரி முறைமை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சிலர் தங்களது சொத்துக்களை முறையாக வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடும் என்றும் ஐ.தே;.க. கட்சி குறிப்பிட்டுள்ளது.</p><p>
இவ்வாறான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து தெளிவான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
</p><p>
இதனால், தற்போதைய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தெளிவான சட்ட வழிகாட்டுதல்களுடன் புதிய அறிவிப்பொன்றை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:07:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலையாக சில ஊடகவியலாளர்களுக்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/journalists-summoned-to-privileges-committee-1784704430"></link>
            <id>https://tamilwin.com/article/journalists-summoned-to-privileges-committee-1784704430</id>
            <summary type="text">மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் நடத்திய கூட்டமொன்று தொடர்பான செய்தியொன்றை வெளியிட்ட&amp;nbsp; ஊடகவியலாளர்களுக்கு நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் நடத்திய கூட்டமொன்று தொடர்பான செய்தியொன்றை வெளியிட்ட&nbsp; ஊடகவியலாளர்களுக்கு நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.</p><p>இவர்கள்&nbsp;நாளை(23.07.2026) பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு&nbsp; அழைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம்</h2><p>
</p><p>
அநுராதபுரம் பகுதியில் சிறுமி ஒருவர் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விசாரிப்பதற்காக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் நடத்திய கூட்டம் பற்றி செய்தி வெளியிட்ட ஒரு சம்பவத்தின் அடிப்படையில், சிங்கள சேவை ஒன்றின் ஊடகவியலாளர்கள் நாளை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவில முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
அநுராதபுரம் பகுதியில் சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பதற்காக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் ஜூன் 5ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76f8c8d7-392a-4661-93a4-d15e083c4b9f/26-6a6076fedb4fb.webp' /></p><p> அது தொடர்பான செய்தி வெளியிட்டமை குறித்தே இந்த ஊடகவியலாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் ஒரு அதிகாரப்பூர்வ சட்டரீதியான குழு அல்லாத சூழலில், இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்களை சிறப்புரிமைகள் குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பது, மக்களின் தகவல் அறியும் உரிமையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என ஊடக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் மேசையில் இருந்த மது போத்தல் - காணொளியால் எழுந்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officers-caught-drinking-alcohol-duty-1784708910"></link>
            <id>https://tamilwin.com/article/police-officers-caught-drinking-alcohol-duty-1784708910</id>
            <summary type="text">முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.</p><p> 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்த மேசையில் மது போத்தல் இருந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருவது சந்தேகத்தை தூண்டியுள்ளது.</p><p></p><p> </p><h2>


பொலிஸ் அதிகாரியின் மேசையில் இருந்த மது போத்தல்</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,</p><p> 

 துணுக்காய் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் மல்லாவி பொலிஸ் நிலையக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
அந்த வேளையில், இரவு நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்த மேசையில் மது போத்தல் இருந்ததாகக் கூறி, அந்த சந்தேக நபர் தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2b0fb88-50cf-434e-b01c-1e9ae3a3e885/26-6a608006546ed.webp' /></p><p>
</p><p>
பின்னர், அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த காணொளியை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றியுள்ளார்.</p><h2>

வீட்டிற்கே சென்று மிரட்டிய பொலிஸ் அதிகாரிகள்</h2><p>

இதனைத் தொடர்ந்து, மல்லாவி பொலிஸார் குறித்த இளைஞரின் வீட்டிற்குச் சென்று அவரை எச்சரித்ததுடன், பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், பொலிஸ் நிலையத்திற்கு வராவிட்டால், போலி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்போம் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் காரணமாக, குறித்த இளைஞர் தற்போது பொலிஸ் நிலையத்திற்கு செல்லாமல் தலைமறைவாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தி, தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடமும், சிவில் பாதுகாப்பு அமைச்சிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T08:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்புகள் இயக்கம்: அமெரிக்க தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/air-defense-systems-in-tehran-no-us-strikes-yet-1784709682"></link>
            <id>https://tamilwin.com/article/air-defense-systems-in-tehran-no-us-strikes-yet-1784709682</id>
            <summary type="text">ஈரானின் தலைநகரான தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் வான் பாதுகாப்பு அமைப்புகள்
செயல்படும் சப்தம் கேட்டதாக அல் ஜசீரா நிருபர் ரசூல் செர்டார் அடாஸ்
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தலைநகரான தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் வான் பாதுகாப்பு அமைப்புகள்
செயல்படும் சப்தம் கேட்டதாக அல் ஜசீரா நிருபர் ரசூல் செர்டார் அடாஸ்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், நேற்றிரவு எந்தவிதத் தாக்குதல்களும் நடக்கவில்லை என்றும்,
வெடிசப்தங்கள் எதுவும் கேட்கவில்லை என்றும் அரச அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தான பிறகு, தலைநகரில் வான் பாதுகாப்பு
அமைப்புகள் இயக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் தெஹ்ரானுக்கு மிக அருகில் உள்ள பகுதியாக,
சுமார் இரண்டு மணி நேரப் பயணத் தொலைவிலுள்ள செம்னான் நகரம் இருந்ததுடன், கடந்த
வாரம் ஒரு சிவிலியன் விமான நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4ca9dd-6ce9-4f94-b7d5-0feef8e654d4/26-6a6085f1c7701.webp' /></p><p>
</p><p>
எனினும், தலைநகர் தெஹ்ரானை இலக்கு வைத்து இதுவரை எந்தவொரு நேரடித்
தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T08:58:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - தமிழ் யுவதி உட்பட உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/homagama-fire-accident-details-of-5-1784705795"></link>
            <id>https://tamilwin.com/article/homagama-fire-accident-details-of-5-1784705795</id>
            <summary type="text">ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று காலை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழ் யுவதி உட்படு ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

தீ விபத்தில் நச்சு புகையை சுவாசித்த பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2><b>
உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்</b></h2><p>அதற்கமைய, தெனியாய, கொலவெங்கமவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார, அட்டகலம்பன்ன, கௌடாவவவை சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான், மஸ்கெலியாவை சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி, பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியோ எட்வர்ட்
தெனியாய, கொலவெங்கமவை சேர்ந்த திலீத் மதுஷங்க ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d927b38-8c33-45e0-83d8-23e45279ac89/26-6a607547e4207.webp' /></p><p>இதேவேளை, ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் உட்பட பல அவசியமான அனுமதிகளைப் புதுப்பிக்கவில்லை என்ற விடயம் தற்போது வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IW-0kuGgCko" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-22T08:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் மோடி பதவி விலகக் கோரி போராட்டம்! கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rahul-gandhi-released-after-protest-detention-1784705930"></link>
            <id>https://tamilwin.com/article/rahul-gandhi-released-after-protest-detention-1784705930</id>
            <summary type="text">பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி &#039;லோக் கல்யாண் மார்க்&#039; பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி 'லோக் கல்யாண் மார்க்' பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, ​​டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சத்ராசல் மைதானத்தில் இருந்து ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.</p><p></p><h2>பிரியங்கா காந்தி&nbsp;</h2><p> 

பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி சென்றார்.


காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால் மற்றும் பவன் கேரா ஆகியோர் லோக் கல்யாண் மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3feeb385-edfb-4958-85b7-bd0b5280c0e6/26-6a60795ea0eaf.webp' /></p><p>

கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
</p><p>
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (NDA) இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவியிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவும் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்றார்.</p><p></p><h2>&nbsp;ராகுல் காந்தி</h2><p>
</p><p>


நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்ப தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர்கள், 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்திய 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகே போராட்டம் நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a81d331-92b2-4ac5-a1ee-39c38603230b/26-6a60795f5845e.webp' /></p><p>

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, "அரசு எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை அதேவேளையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவும் விரும்பவில்லை. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.</p>]]></content>
            <updated>2026-07-22T08:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மண்டையோடுகளின்றி மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shocking-excavation-of-semmani-manhole-1784706783"></link>
            <id>https://tamilwin.com/article/shocking-excavation-of-semmani-manhole-1784706783</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் சில மனித என்புத்தொகுதிகள் மண்டையோட்டு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் சில மனித என்புத்தொகுதிகள் மண்டையோட்டு தொகுதியின்றி காணப்பட்டுள்ளன.
</p><p>
இதேவேளை, நேற்றைய அகழ்வின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் 3 என்புத்தொகுதிகள் உட்பட மொத்தமாக 4 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>467 மனித என்புத்தொகுதிகள் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 467 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 444 என்புத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5033652-a980-4650-a9a0-7d92d1cefea8/26-6a6076e143da1.webp' /></p><p>
</p><p>
நேற்றைய அகழ்வின் போது சில மனித என்புத்தொகுதிகள் மண்டையோட்டுத்தொகுதி இன்றி காணப்பட்ட அதேவேளை, மேலும், சில இடங்களில் மண்டையோட்டு தொகுதிகள் குவியல்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புகள் மற்றும் மண்டையோட்டுத்தொகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது குறித்த மேலதிக தகவல்கள், சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவின் ஆய்வுகளுக்கு பின்னரே உறுதியாக தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784703616"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784703616</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22.07.2026) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 24 கரட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22.07.2026) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று அதன் விலை 3000 ரூபாவால் அதிகரித்து 380,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>ஆபரண தங்கத்தின் விலை</h2><p>
</p><p>
இதேவேளை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600&nbsp;ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4769e71-e7e1-48a5-bbd1-7849065be47f/26-6a607227cc745.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,500 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,700 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டையோடுகளின்றி மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1784704455"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1784704455</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் சில மனித என்புத்தொகுதிகள்
மண்டையோட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் சில மனித என்புத்தொகுதிகள்
மண்டையோட்டு தொகுதியின்றி காணப்பட்டுள்ளன.
</p><p>
இதேவேளை, நேற்றைய அகழ்வின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் 3
என்புத்தொகுதிகள் உட்பட மொத்தமாக 4 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>467 மனித என்புத்தொகுதிகள் அடையாளம்</h2><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 467 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 444 என்புத்தொகுதிகள்
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49f4fd36-5327-436c-bd8b-a96f09add6b7/26-6a607440ef8fc.webp' />&nbsp;</p><p>
</p><p>
நேற்றைய அகழ்வின் போது சில மனித என்புத்தொகுதிகள் மண்டையோட்டுத்தொகுதி
இன்றி காணப்பட்ட அதேவேளை, மேலும், சில இடங்களில் மண்டையோட்டு தொகுதிகள்
குவியல்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புகள் மற்றும் மண்டையோட்டுத்தொகுதிகள்
ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது குறித்த மேலதிக தகவல்கள், சட்ட வைத்திய
அதிகாரி பிரணவன் செல்லையாவின் ஆய்வுகளுக்கு பின்னரே உறுதியாக தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:35:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை அதிபரை மாற்றக்கோரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-demand-transfer-national-school-principal-1784704631"></link>
            <id>https://tamilwin.com/article/protest-demand-transfer-national-school-principal-1784704631</id>
            <summary type="text">மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும்
பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து
குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும்
பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து
குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை
நியமிக்குமாறு கோரி இன்றைய தினம் புதன்கிழமை (22) காலை பாடசாலைக்கு முன்பாக
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
மாணவர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள்
இணைந்து கவனஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p></p><h2>எழுதப்பட்ட பதாகை</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட
மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான
முறையில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/731b0d69-1b86-46ef-84fb-5b60f9962761/26-6a60716767b16.webp' /></p><p>
</p><p>
குறித்த அதிபர் தொடர்பாகவும் அவரை உடனடியாக மாற்றக் கோரி ஏற்கனவே போராட்டம்
முன்னெடுக்கப்பட்ட போதிலும் வருகை தந்த மன்னார் வலயக்கல்வி திணைக்கள
அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக கூறிய போதும் இதுவரை எவ்வித
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,பல மாதங்கள் கடந்தும் அதிகாரிகள்
குறித்த பாடசாலை விடையத்தில் அசமந்த போக்குடன் செயல்படுவதாக போராட்டத்தில்
ஈடுபட்ட பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனவே துரித கதியில் குறித்த பாடசாலையில் உள்ள தற்போதைய அதிபரை மாற்றி
நிர்வாகத்திறன் உள்ள ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதோடு தற்போது
பல மாணவர்கள் குறித்த பாடசாலையில் இருந்து இடை விலகி பிரிதொரு பாடசாலைக்குச்
சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;கோரிக்கை</h2><p>குறித்த அதிபரை உடன் மாற்றி புதிய அதிபரை நியமிக்க மன்னார் வலயக்கல்வி
திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்காது விட்டால் மாணவர்களை பாடசாலைக்கு
அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2194536a-ee5f-4ece-8e57-344c22a8b650/26-6a6071683b6a5.webp' /></p><p>
இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் வலயக்கல்வி திணைக்களத்திற்கு
ஊர்வலமாக சென்று தமது கோரிக்கையை அதிகாரிகளிடம் முன் வைத்தனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் புகைப்படம் பகிர்ந்த விவகாரம் : பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-inspector-suspended-1784702603"></link>
            <id>https://tamilwin.com/article/police-inspector-suspended-1784702603</id>
            <summary type="text">கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவர், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவர், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
லொக்கு பெட்டி என்ற பாதாள உலகக்கும்பல் தலைவரின் துப்பாக்கிதாரியாக ஊடகங்களில் அடையாளம் காணப்பட்ட விராஜ் ரஷ்மிக டி சில்வா என்ற அல்மேதா, காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறி, அந்தத் தகவலை சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டதே அவரது பணியிடை நீக்கத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
</p><p></p><h2>வெளிநாடுகளில் வசிக்கும் யூடியூபர்கள்</h2><p>
சம்பந்தப்பட்ட அந்தக் குறிப்பை கரந்தெனிய பொலிஸ் நிலைய குறிப்பேட்டில் பணியிடை நீக்கத்துக்கத்துக்குள்ளான குறித்த இன்ஸ்பெக்டர் பதிவிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e2c09f-08d3-41c3-b1f7-a546dc8c2ce4/26-6a606aa2408d6.webp' /></p><p>விராஜ் ரஷ்மிகவின் கொலை சம்பவம் பொலிஸ் குழுவொன்றினால் நடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் 'பொய்த் தகவலை' வெளியிட்டதற்காக, சம்பந்தப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஊடகச் செய்தியொன்று தெரிவிக்கிறது.
</p><p>
வெளிநாடுகளில் வசிக்கும் யூடியூபர்கள் மற்றும் இன்னும் சிலர், 'பொலிசார் மீது பழி சுமத்தி, விராஜ் ரஷ்மிகவின் கொலைச் செய்தியைப் பரப்பியுள்ளனர்' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து தெற்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டது.</p><h2>கொலைச் சம்பவம் தொடர்பில்</h2><p>
</p><p>
காலி மாவட்ட குற்றப்பிரிவு வளாகத்தில் உடைந்த தூண், உணவறையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த மூடி போன்றவற்றின் புகைப்படத்தை ஒரு சமூக ஊடகப் பக்கம் பதிவிட்டிருந்ததுடன், இந்தப் புகைப்படங்களை இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் எடுத்ததாகக் கூறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af02e07e-1eb0-44fb-849e-ac2aa6aae024/26-6a606fab56736.webp' /></p><p>காலி மாவட்ட குற்றப்பிரிவில் உள்ள ஒரு சமையல்காரர், சம்பந்தப்பட்ட புகைப்படத்தை சம்பந்தப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர்தான் எடுத்தார் என்று கூறியுள்ளார்.
</p><p>
பொலிஸாரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் புகைப்படங்களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகவும், ஒரு கொலைசம் சம்பவத்தில் பொலிசாரைச் சிக்க வைக்க முயன்றதாகவும் இடைநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
விராஜ் ரஷ்மிகவின் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரித்து வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாருடைய ஆட்சிக்காலத்தில் நடந்தது..! ஐரோப்பியத் தூதுவர்களிடம் தமிழரசுக் கட்சி வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-national-party-to-european-ambassadors-1784704594"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-national-party-to-european-ambassadors-1784704594</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி,
எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி,
எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன்
மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என ஐரோப்பிய ஒன்றியத்
தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் 
சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.</p><p> 

யாழ்ப்பாணம் ஜெட்விங் விடுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும்
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களுடான சந்திப்பு நேற்று(21.07.2026) சந்திப்பு இடம்பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

யாருடைய ஆட்சிக்காலத்தில் புகைப்பட்டது?</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தளத்தை ஐரோப்பியத்
தூதுவர்கள் நேரில் பார்வையிட்டுள்ள நிலையில், இது குறித்துத் தனியான ஆய்வு
நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b84be6b-d355-4962-8e7e-dcb9899e9e52/26-6a606ee3d3f88.webp' /></p><p>

பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் காலத்தில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப்
பார்ப்பதன் மூலம், அந்தக் காலப் பகுதியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் யார்
என்பதை இனம் கண்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்
என்று சுட்டிக்காட்டினோம்.</p><h3>

பிரதிநிதிகளிடம் மீளாய்வு செய்ய கோரிக்கை</h3><p>
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே இலகுவாக நடத்த இலங்கை அரசுக்கு
அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளோம். மாகாண சபையில் தற்போது,
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால் அரச அதிகாரிகளே நிர்வாகத்தைக்
கவனித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b52becf2-e1b3-4d60-becc-41175cf9ba7f/26-6a606ee4ae303.webp' /></p><p>
</p><p>
புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலமும்,
விவசாய மற்றும் மீன்பிடித்துறைகளை மேம்படுத்துவதன் மூலமும் பிராந்திய
பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க முடியும் என்பதால், ஐரோப்பிய நாடுகள்
இதற்கான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கோரினோம்.
</p><p>
வட பகுதியில் நிலவும் திண்மக் கழிவு மற்றும் வடிகாலமைப்பு போன்ற பாரிய
பிரச்சினைகளை நவீன முறையில் கையாள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும்
ஐரோப்பியத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்டினோம் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T07:22:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-arrested-in-vavuniya-1784701502"></link>
            <id>https://tamilwin.com/article/three-arrested-in-vavuniya-1784701502</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(21.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>திருட்டு சம்பவம்</h2><p>
</p><p>
கடந்த மூன்று நாட்களுக்கு முன் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக&nbsp; நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. </p><p>

அத்துடன் இறம்பைக்குளம் பகுதியில் உள்ள கருமாரி அம்மன் கோயில் மற்றும் அதே பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் கோயில், குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோயில், வவுனியா நகர் இலுப்பையடி பகுதியில் உள்ள உணவகம் என பல இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c5f26ea-1d59-44fc-b73e-317032821fb3/26-6a6069617e809.webp' /></p><p> 

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், உணவக உரிமையாளர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர்,&nbsp; வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். </p><p>

குறித்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை&nbsp; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள்&nbsp; விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>பொலிஸ்&nbsp;விசாரணை</h2><p> 

இதன்போது தேக்கவத்தை பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய நபர் ஒருவர் மற்றும் சகோதரர்களான கள்ளிக்குளம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய தம்பி மற்றும் மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அண்ணா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60acb585-5ad4-450d-b511-27d8173ef78f/26-6a606960c9597.webp' /></p><p>

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சபாரி மோட்டார் சைக்கிள் உட்பட ஏனையப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-22T07:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – யாழ். அரசாங்க அதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-unite-to-create-drug-free-jaffna-government-1784698652"></link>
            <id>https://tamilwin.com/article/all-unite-to-create-drug-free-jaffna-government-1784698652</id>
            <summary type="text">போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
</p><p>
புனர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(21.07.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>புனர்வாழ்வு பணியகம்</h2><p>
</p><p>
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
</p><p>
புனர்வாழ்வு பணியகத்தின் செயற்பாடுகள் தலைமையகத்தின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டாலும், மாவட்ட மட்டத்தில் அவை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>
குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் புனர்வாழ்வு பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதற்கு புனர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ்.அமித்துக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c922792-6c93-4883-bd0f-5b3e32ced1d5/26-6a606176b7342.webp' /></p><p> </p><p>

மேலும், இந்தச் செயலமர்வு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீள்சமூகமயப்படுத்துதல், அவர்களை சரியான முறையில் வழிநடத்துதல் மற்றும் சமுதாயத்தை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பு குறித்து இந்தச் செயலமர்வில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.</p><p>

புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதிக்கப்படுபவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலில் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றப்படுவதாகவும், புனர்வாழ்வில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.</p><p></p><h2>போதைப்பொருளற்ற சமூகம்</h2><p>

யாழ். மாவட்டத்தை போதைப்பொருளற்ற சமூகமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் "அழகான வாழ்க்கை – போதைப்பொருளற்ற தேசம்" தேசிய வேலைத்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க இரண்டு முக்கிய அம்சங்கள் அவசியம்.
 முதலாவதாக இளைய தலைமுறையினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுக்கும் வகையில் தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c98f466d-4d45-4084-a8bf-e7f135f44440/26-6a60617611b3f.webp' /></p><p> இரண்டாவதாக புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து சமூகத்திற்குத் திரும்பியவர்களை உரிய முறையில் ஆற்றுப்படுத்தி மீள்சமூகமயப்படுத்த வேண்டும்.
</p><p>

பாடசாலை மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு உள்ளது.

பிரதேச செயலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் தடுப்புடன் மட்டுமல்லாது, உளவள ஆலோசனை, ஆற்றுப்படுத்தல் மற்றும் புனர்வாழ்வு பெற்றவர்களை சமூகத்துடன் மீண்டும் இணைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
மேலும், புனர்வாழ்வு பெற்றவர்களை குறைந்தது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டிய அவசியம். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உத்தியோகத்தர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியவர்கள்.</p><p></p><h2>போதைப்பொருள் பாவனை விகிதம்</h2><p>
</p><p>
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயற்பட்டால் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளும் இன்னும் காணப்படுகிறது.
</p><p>
கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மேம்பாட்டு குழுக்கள் உள்ளிட்ட சமூக மட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் போதைப்பொருள் பாவனையை மேலும் கட்டுப்படுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bc83f73-2e0f-4928-82f9-2486efd5f6a9/26-6a60617544de3.webp' /></p><p> 

தற்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதுடன், அந்த நிலையை மேலும் மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
</p><p>
இறுதியாக, புனர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம். எஸ். அமித் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து இந்தச் செயலமர்வை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி.
</p><p>
போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும்.

இந்தச் செயலமர்வில் பகிரப்பட்ட கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T07:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இருவர் பலி - ஆபத்தான நிலையில் மூன்று மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-killed-in-an-accident-2-injured-1784691164"></link>
            <id>https://tamilwin.com/article/2-killed-in-an-accident-2-injured-1784691164</id>
            <summary type="text">புதிய இணைப்புநல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப்பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சிக்கு அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப்பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சிக்கு அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நாவலப்பிட்டி/டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>விபத்து நடந்த போது முச்சக்கர வண்டியில்&nbsp; 5 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த முதியவர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.</p><p>அதிவேகமாக சென்ற முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நல்லதன்னி பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நல்லத்தண்ணியில் இருந்து மஸ்கெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோகினி எல்லயிலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

முச்சக்கர வாகனம் வீதியிலிருந்து விலகிச் சென்று பள்ளத்தில் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் சிறுவர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2><b>
பொலிஸார் விசாரணை</b></h2><p>காயமடைந்த இரண்டு சிறுவர்களும் தற்போது கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e45f68-087f-4905-b7ce-1b13f68712b2/26-6a6040e92161e.webp' /></p><p>விபத்து குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T07:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்திக்கு சர்வதேச ஏலம் கோர தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-bidding-trincomalee-oil-development-1784700496"></link>
            <id>https://tamilwin.com/article/international-bidding-trincomalee-oil-development-1784700496</id>
            <summary type="text">திருகோணமலை எண்ணெய் தாங்கிவளாகத்தில் உள்ள 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக, டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) அடுத்த மாதத்திற்குள் சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை எண்ணெய் தாங்கிவளாகத்தில் உள்ள 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக, டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) அடுத்த மாதத்திற்குள் சர்வதேச ஏலம் கோர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><p>

வணிக ரீதியான பயன்பாட்டை நோக்கிய ஒரு படியாக, இந்தத் திட்டத்திற்கான முதலீட்டாளர்களுக்கான அழைப்பிற்கு அமைச்சரவை கலந்துரையாடல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.</p><p></p><h2>61 தாங்கிகளில் ஒரு பகுதி அபிவிருத்தி&nbsp;</h2><p>
</p><p>
TPTL சொந்தமான 61 தாங்கிகளில் ஒரு பகுதி இந்த முறையில் அபிவிருத்தி செய்யப்படும். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட ஏலங்கள் மதிப்பீட்டிற்குப் பிறகு இறுதி முடிவிற்காக அமைச்சரவை குழுவிற்குத் திருப்பி அனுப்பப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f83c473-dd39-4203-942a-a12fd9b4f38b/26-6a606a2ce1df2.webp' /></p><p>
</p><p>
2021-ல் நிறுவப்பட்ட TPTL-ன் 51% பங்குகள் இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கும், 49% பங்குகள் லங்கா IOC-நிறுவனத்துக்கும் சொந்தமாகும்.
</p><p>
1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் தொடங்கிய இந்த ஒத்துழைப்பு, பின்னர் தொடர்ந்தும் வலுப்பெற்றுள்ளது.</p><h2>மத்திய கிழக்கில் அமைதியின்மை</h2><p> </p><p>கடந்த ஆண்டு, இரு தரப்பிற்கும் எரிசக்தியை வழங்கக்கூடிய ஒரு பல்நோக்கு குழாய் அமைப்பை உருவாக்குவதற்காக இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒரு முத்தரப்பு ஒப்பந்தமும் எட்டப்பட்டது.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவிவரும் அமைதியின்மையின் பின்னணியில், பிராந்திய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த பெட்ரோலிய மையத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதில் இலங்கையும் இந்தியாவும் விசேட கவனம் செலுத்தியுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் - போராட்டக்காரர்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protesters-gather-in-chemmani-jaffna-1784701721"></link>
            <id>https://tamilwin.com/article/protesters-gather-in-chemmani-jaffna-1784701721</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், யாழ்ப்பாணம் - செம்மணி,
சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றிய விசேட தூது குழுவினர், யாழ்ப்பாணம் - செம்மணி,
சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளனர். </p><p>

இந்த நடவடிக்கை இன்று(22.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 



போராட்டக்காரர்களின் போராட்டம்</h2><p>மயானத்துக்கு வெளியே, ஏ-9 வீதியில் போராட்டம் ஒன்று அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், 

எமக்கு உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான 
அலுவலகம் என்பது வெறும் கண்துடைப்பாகவே காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7023caf8-da02-4eda-867e-28ce6e49ddfc/26-6a60656830038.webp' /></p><p>எனவே எமது
பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.

தினம் தினம் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து வெவ்வேறு விதத்திலான
கொடூரங்களை எடுத்துக்காட்டும் மனித என்புத் தொகுதிகள் வெளிப்படுகின்றன.</p><p>

கடந்த கால சிங்கள படைகளாலும் அரசாங்கத்தினாலும் இந்த கொடூரம்
அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே இதற்கு சர்வதேச தீர்வு வேண்டும் என்றார்கள்.</p><h2>



 
போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பிரதிநிதிகள்</h2><p>

போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக
மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbcdad19-52d7-4158-94b1-cb50c926648d/26-6a6065690ee6e.webp' /></p><p> </p><p>

இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில்
பொலிஸார் செயற்பட்டதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>


சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட
தூதுக்குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பிரதிநிதிகள் இருவருடன்
கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
ஊடகவியலாளர்கள் அந்த குழுவினரிடம் கேள்வியெழுப்ப
முயற்சித்தவேளை அதற்கு இடமளிக்காது அவர்கள் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b6c164-3e2f-411f-92fe-25a985181df8/26-6a606569db474.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/512b0795-3a40-492e-b86c-4e5433dce05e/26-6a60656aac80f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4d1c39-1201-4471-8dc1-75a2939f392f/26-6a60656b7d88a.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T06:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-delegation-meets-with-tamil-parties-1784701945"></link>
            <id>https://tamilwin.com/article/eu-delegation-meets-with-tamil-parties-1784701945</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள்,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள்,
தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.</p><p>

இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் (21.07.2026) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் நடைபெற்றது.</p><p></p><h2>கலந்து கொண்ட பிரதிநிதிகள்</h2><p>

இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,
யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மதிவதனி மற்றும் பல கட்சிகளின் யாழ். மாநகர சபை
உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் மற்றும்
ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் கலாநிதி க.சர்வேஸ்வரன் உள்ளிட்ட பல பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.
</p><p>
சமகால அரசியல் நிலவரம், செம்மணியில் அகழப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான
விசாரணைகளில் சர்வதேச நாடுகளின் பங்கு மற்றும் பங்களிப்பு குறித்து இதன்போது
விசேடமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T06:36:33+00:00</updated>
        </entry>
    </feed>
