<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-29T22:29:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடி பகுதியில் 28 வயதுடைய இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-28-year-old-youth-in-the-kattankudy-area-1785358859"></link>
            <id>https://tamilwin.com/article/death-28-year-old-youth-in-the-kattankudy-area-1785358859</id>
            <summary type="text">காத்தான்குடி - நூராணிய்யா மையவாடி
முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர்
ஒருவர் சம்பவ இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காத்தான்குடி - நூராணிய்யா மையவாடி
முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர்
ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று(29.07.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்த&nbsp;இளைஞர் </h2><p>
</p><p>
உயிரிழந்தவர் மட்டக்களப்பு - ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய
இளைஞர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe09e46b-3e02-4f40-a5d4-ab7c15921d40/26-6a6a6b6649ad0.webp' /></p><p>

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:44:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலையை நினைவு கூரும் முகமாக ஹட்டனில் நடைப்பெற்ற விசேட நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-event-promotes-black-july-reconciliation-1785357944"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-event-promotes-black-july-reconciliation-1785357944</id>
            <summary type="text">கறுப்பு ஜூலையின் போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக்
காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜூலையின் போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக்
காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை
ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நிகழ்வு, 'இனவாதம் வேண்டாம் – இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபடுவோம்' என்ற தொனிப்பொருளில் நேற்று(29.07.2026) ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றுள்ளது.</p><p></p><h2>கையெழுத்துப் பெறும் நடவடிக்கை&nbsp;</h2><p>

நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை
ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த கையெழுத்துப் பெறும்
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமதத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் கலைச்செல்வி மற்றும்
மஞ்சுல சுரவீர ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ccf5d9-a7a0-427b-8a3a-d6a8a41083a2/26-6a6a67a701bc4.webp' /></p><p>பின்னர், பிரதேச மக்கள் மற்றும்
இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து
கையெழுத்திட்டுள்ளனர்.
இதனுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும்
துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்
அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுல சுரவீர, ”கறுப்பு ஜூலையினால் நாட்டில்
ஏற்பட்ட வடுவை போக்கி, மக்கள் மத்தியில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும்
சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், பல தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளினால்
அப்பாவி மக்களின் உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டதாகவும், அந்தச்
சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தின சிறப்பு பூஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-pooja-at-neeraviyadi-pillayar-temple-1785356965"></link>
            <id>https://tamilwin.com/article/special-pooja-at-neeraviyadi-pillayar-temple-1785356965</id>
            <summary type="text">முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை
முன்னிட்டு&amp;nbsp; (29.07.2026) சிறப்பு பூஜைகள் மற்றும் விசேட வழிபாட்டு
நிகழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை
முன்னிட்டு&nbsp; (29.07.2026) சிறப்பு பூஜைகள் மற்றும் விசேட வழிபாட்டு
நிகழ்வுகள் பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி பூர்வமாக நடைபெற்றிருந்தது.</p><p>

இதனையடுத்து, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள
வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு, ஆலய வளாகத்தை சுத்தம் செய்து
ஒழுங்குபடுத்தும் பணிகள் ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின்
பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>ஆலயத்தின் வருடாந்த பெருவிழா</h2><p>

ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை சிறப்பாக நடத்தும் நோக்கில் வளாகத்
தூய்மைப்படுத்தல், சுற்றுப்புற பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு
நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p>

பௌர்ணமி தின சிறப்பு பூஜையின் போது கொக்குளாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி
உட்பட பொலிஸார் கலந்து கொண்டிருந்தனர்.</p><p> இதன்போது ஆலய பூசகர் ஆலய வளாகத்தினை
அண்டிய பகுதியில் மீன் ஏற்றும் கூலர்ரக வாகனங்கள் தரித்து நிற்பதனை அகற்றுமாறு
கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9e1135-ac1b-4e97-b836-0a113351d7b5/26-6a6a631d6e936.webp' /></p><p> அதன்போது ஆலய பொங்கல் நிகழ்வுக்கும், பூஜை
வழிபாடுகளுக்கும் எவ்வித இடையூறும் விளைவிக்காமால் ஆதரவு வழங்குவதாகவும்
பொலிஸார் இதன்போது தெரிவித்திருந்தனர்.
</p><p>
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகம் கடந்த காலங்களில்
அபகரிக்கப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டதாகவும்,
அதனைத் தொடர்ந்து ஆலய வழிபாடுகளுக்கு பல்வேறு தடைகள் மற்றும் நெருக்கடிகள்
ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இருப்பினும், ஆலய நிர்வாகத்தினரின்
வழிநடத்தலிலும் பக்தர்களின் ஒத்துழைப்புடனும் தற்போது ஆலயத்தில் வழமையான
வழிபாடுகளும் சமய நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது
குறிப்பிடத்தக்கதாகும்.</p>]]></content>
            <updated>2026-07-29T21:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்திற்கு சஜித் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-public-warning-to-anuradhapura-government-1785356352"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-public-warning-to-anuradhapura-government-1785356352</id>
            <summary type="text">&amp;nbsp;நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில்
அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில்
அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ&nbsp;தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
ஊடகங்களுக்கு நேற்று(29.07.2026) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களிடமிருந்து அரசுக்கு ஆணை கிடைத்தது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி
முறையை ஒழிப்பதற்காகவே தவிர,&nbsp; நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின்
கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15bb8fca-9520-4a71-be0b-983cce3bf098/26-6a6a61d5b603d.webp' /></p><p>அத்துடன் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தின் மீது
நிறைவேற்று அதிகாரம் செல்வாக்குச் செலுத்த முற்படுவது வெட்கக்கேடான செயலாகும்.
</p><p>
சட்டம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் மீதே
ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp; அதிகாரப்
பகிர்வு மற்றும் சமன்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கோ அல்லது நீதி அமைச்சருக்கோ
புரிதல் இல்லாவிட்டால், மொன்டெஸ்கிவின் நூலைப் படித்துப் பாருங்கள்.</p><p></p><h2>சர்வாதிகார செயற்பாடு</h2><p>
</p><p>
அரசின் இந்த ஒருதலைபட்சமான சர்வாதிகாரப் போக்குக்காக நாட்டு மக்கள்
கைகட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். இந்தியாவில் அண்மையில் வேலையற்ற இளம் சந்ததியினர் அவமதிக்கப்பட்ட
போது, இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.</p><p>

அதேபோன்று, நீதிமன்றத்தின் சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு
எதிராக இலங்கையின் இளைஞர்களும் சிவில் சமூகமும் ஒன்றுபட்டு மக்கள் பலத்தால்
அதனைத் தோற்கடிப்பார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67bdfeba-b119-4836-b744-cc021ed52eec/26-6a6a61d66a08d.webp' /></p><p>ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றோம் என்ற பெயரில் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை
முடக்கும் சர்வாதிகாரச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.</p><p>நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும், நீதிமன்றத்தைப் பாதுகாப்பதற்கும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள்
சக்தி எந்தவொரு தியாகத்துக்கும் முகம்கொடுக்கத் தயார்“ என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் மீது அமெரிக்கா - சவூதி நடத்திய பயங்கர கூட்டுத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/joint-us-saudi-attack-on-iraq-1785354470"></link>
            <id>https://tamilwin.com/article/joint-us-saudi-attack-on-iraq-1785354470</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு
மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு
மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>

ஃபொக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய அவர், "நாங்கள்
அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம் அவர்கள் பலத்த அடியை வாங்குவார்கள்"
என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கூட்டுத் தாக்குதல்</h2><p>
</p><p>
இதற்கிடையே, சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட
தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற
ஆயுதமேந்திய குழுக்கள் மீது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து இரவோடு
இரவாகக் கூட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93fa925a-45ae-44a6-a9d9-f1e8c6b3bb9e/26-6a6a5a93c03cd.webp' /></p><p>

இந்தத் திடீர் தாக்குதல்களாலும், இரு நாட்டு அதிகாரிகளின் தீவிரமான
எச்சரிக்கைகளாலும் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இருப்பினும், வெள்ளை மாளிகையின் தற்போதைய நிலைப்பாட்டில் பெரிய மாற்றம்
எதுவுமில்லை என்றே தெரிகிறது.</p><p> இராணுவ ரீதியிலான அழுத்தத்தையும் பொருளாதாரத் தடைகளையும் தொடர்ந்து பராமரித்து
வரும் அதே வேளையில், ஈரானுடன் இராஜதந்திர ரீதியிலான அமைதி
பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் "மிக மிக அருகில்" இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப்
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:17:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மனியில் பெரும் பதற்றம் - மக்கள் வீதியில் இறங்கி தீவிர போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thousands-of-audi-employees-in-germany-protest-1785353587"></link>
            <id>https://tamilwin.com/article/thousands-of-audi-employees-in-germany-protest-1785353587</id>
            <summary type="text">ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான &#039;அவுடி&#039; (Audi), தனது
நெக்கார்சல்ம் நகரில் உள்ள தொழிற்சாலையை மூடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான 'அவுடி' (Audi), தனது
நெக்கார்சல்ம் நகரில் உள்ள தொழிற்சாலையை மூடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து,
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>நேற்று(29.07.2026) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 6,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><h2>நெக்கார்சல்ம் ஆலை</h2><p>

அவுடி நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'வோக்ஸ்வேகன்', தொழில்துறையில் நிலவும்
கடும் சவால்களைச் சமாளிக்க பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கவும்,
செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.</p><p>தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து வோக்ஸ்வேகன் நிர்வாகம்
உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3721e257-0cef-4b3b-bf60-da0671903880/26-6a6a56e8453e5.webp' /></p><p>மாற்று வழிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், 2030-க்குப் பிறகு ஜெர்மனியில்
மூடப்பட வாய்ப்புள்ள 4 தொழிற்சாலைகளில் நெக்கார்சல்ம் ஆலை ஒன்றாகும் என
வோக்ஸ்வேகன் தலைமைச் செயல் அதிகாரி ஆலிவர் புளூம் எச்சரித்துள்ளார்.
</p><p>
நெக்கார்சல்ம் ஆலையில் தற்போது சுமார் 15,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு அவுடி A5, A6, A8 மற்றும் மின்சார காரான e-tron GT ஆகியவை
தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>பொருளாதாரப் பேரழிவு</h2><p>

இந்த ஆலையை மூடினால் அப்பகுதியில் பெரும் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும்
என்றும், பிற வர்த்தகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதியின்
மேயர் ஸ்டீபன் ஹெர்ட்விக் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c9f346-4628-4a60-9e0d-96c22733a6e4/26-6a6a56e8efdb0.webp' /></p><p>உயர் உற்பத்திச் செலவு, சீன நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் அமெரிக்காவின்
வரி விதிப்புகள் போன்ற காரணங்களால் ஜெர்மனியின் கார் உற்பத்தித்துறை கடுமையான
நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
</p><p>
அவுடி நிறுவனம் மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ, போர்ஷே மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ்
ஆகிய முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது
தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து கைதாகப் போவது யார்..! அநுரவின் அதிரடியால் திணறும் அரச அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-officers-anura-kumara-decision-1785348860"></link>
            <id>https://tamilwin.com/article/government-officers-anura-kumara-decision-1785348860</id>
            <summary type="text">தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், முந்தைய அரசாங்கங்களில் நடந்த பல்வேறு&nbsp;ஊழல் முறைக்கேடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டும் வருகின்றது.&nbsp;</p><p>இதற்கிடையில், அரசாங்க அதிகாரிகள் பலரின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>ஜனாதிபதி அநுர குமாரவுடனான கலந்துரையாடலின் போது சில முக்கிய அதிகாரிகளிடம் அவர் எழுப்பிய கேள்விகளின் மூலம் இவை அம்பலமாகியுள்ளன.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2iVdgos_NAE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T20:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரகீத் எக்னெலிகொட வழக்கில் திருப்பம் - விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சுரேஷ்குமாரின் அதிர்ச்சி சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eknaligoda-case-member-shocking-testimony-1785351370"></link>
            <id>https://tamilwin.com/article/eknaligoda-case-member-shocking-testimony-1785351370</id>
            <summary type="text">அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்பிலிருந்து பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த விவகாரம் குறித்து குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் பல முக்கிய விடயங்களை சாட்சிகளாக தெரிவித்திருக்கின்றார்.
</p><p>
அவர் தனது வாக்குமூலத்தில், ஜூலை 15ஆம் திகதி மதிய உணவு வேளையில் முகத்தை மூடிய சுமார் 15 பேர் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனை அடுத்து மறுநாள் காலை சிறை அதிகாரிகள் இல்லாமல் கைதிகளே உணவை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பின்பு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கைதிகள் தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.</p><p>இந்த நீர்கொழும்பு கலவரம் குறித்து இன்னும் சிலர் சாட்சியங்களாக மாறி தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான பல முக்கிய சாட்சியங்களின் பதிவுகளை கொண்டு வருகிறது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q56Hn1ODi7Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:59:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம் - ஐரோப்பிய தூதுக்குழுவின் சந்திப்பு தவறானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thenmarachchi-abuse-witness-alleges-eu-meeting-1785350817"></link>
            <id>https://tamilwin.com/article/thenmarachchi-abuse-witness-alleges-eu-meeting-1785350817</id>
            <summary type="text">வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் விஜயகுமார் தெரிவித்திருந்தார்.
</p><p>
ஐபிசி தொலைகாட்சின் களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், "இப்பொழுது காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமான ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களில் அன்றைய காலங்களில் இருந்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை.</p><p>
நாங்கள் நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து பல போரட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் பல்வேறுபட்ட தரப்பினரை நேரிலும் சந்தித்து அவர்களுக்கான நியாயங்களை கேட்டிருந்தோம்.</p><p> 

ஆனால் எங்களுக்கான நியாயம் இதுவரையிலும் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியினாலேயே தற்போதைய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களில் எங்களுடைய காலத்தில் இருந்தவர்கள் பங்கேற்பதில்லை" என தான் நினைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் அவர் வழங்கிய இன்னும் பல விடயங்கள் மற்றும் அவருடைய அனுபவங்களை தொகுத்து வழங்குகிறது களம் நிகழ்ச்சி..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HjyzbYWrhvI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான மோதலுக்கு மத்தியில் சீனாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பெறும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-air-defense-missiles-china-standoff-us-1785346534"></link>
            <id>https://tamilwin.com/article/iran-air-defense-missiles-china-standoff-us-1785346534</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு
அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும்
4...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு
அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும்
400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>

சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ்,
சீனாவின் QW-12 மற்றும் FN-16 வகை ஏவுகணைகள் அடங்கிய 300 முதல் 400 மேன்பேட்ஸ் அமைப்புகள் இன்னும் சில வாரங்களில் ஈரானுக்கு முதற்கட்டமாக
விநியோகிக்கப்படவுள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>
</p><p>
ஹொங்கொங்கைச் சேர்ந்த இடைத்தரகு நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த ஒப்பந்தம்
கையெழுத்தாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830b9d8e-ffa2-4975-b9e1-711127125054/26-6a6a56e4a638c.webp' /></p><p>
குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களைத்
தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், ஈரானின் இராணுவ மற்றும்
எரிசக்தி உள்கட்டமைப்பு மையங்களைப் பாதுகாக்கப் பயன்படும் என பாதுகாப்பு
வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

இருப்பினும், இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ள சீன வெளியுறவு
அமைச்சகம், "இந்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது. </p><p>பிராந்தியத்தில் அமைதியை
ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து முயன்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், பாகிஸ்தான் வழியே இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியான
தகவல்களையும் பாகிஸ்தான் இராணுவம் முற்றிலும் பொய் என மறுத்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:51:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தீவகப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் கறுப்புக்கொடியுடன் கடலில் இறங்கிப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurikattuvan-fishermen-hold-black-flag-sea-protest-1785341398"></link>
            <id>https://tamilwin.com/article/kurikattuvan-fishermen-hold-black-flag-sea-protest-1785341398</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல் கடற்றொழில்
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று(29.06.2026) கடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல் கடற்றொழில்
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று(29.06.2026) கடலில்
இறங்கி கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியில் கடலுக்குள் இறங்கிச் சென்ற
தீவக கடற்றொழிலாளர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை
வெளிப்படுத்தியுள்ளதுடன், ஜனாதிபதிக்கு அவசர நடவடிக்கை கோரி கோரிக்கை மனு ஒன்றையும்
விடுத்துள்ளனர்.</p><p></p><h2>கறுப்புக்கொடியுடன்&nbsp;போராட்டம்</h2><p>
</p><p>
இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கடற்றொழில்
உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfbeace2-b217-4f58-ad6e-0ee456fffd0a/26-6a6a542c3441e.webp' /></p><p>
</p><p>
நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைத்தீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை
மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மீனவ சமூகங்களாகிய
தாங்கள், தங்களது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபைப்
பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீடு வேண்டும்.
</p><p>
மேலும் பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள்
அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இது
வெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப்
பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப்
பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கிறது.</p><p></p><h2>உறுதியான தீர்வு&nbsp;</h2><p>மேலும், இந்த நடவடிக்கைகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு
மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக
அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a74b1d-60af-4164-8796-de9242b8e15a/26-6a6a542d4d782.webp' /></p><p>

காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை
மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில்
தீவகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் ஐந்து கோடி
ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளது.</p><p>

இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை
வழங்கத் தவறியுள்ளதால், வடக்கு கடற்றொழிலாளர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும்
அதிகரித்துள்ளதுடன், இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு
மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது
என வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T17:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு தீர்ப்பின் பின் சவூதியில் நடக்க போவது என்ன - கையை விரித்த அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-sri-lanka-government-1785344616"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-sri-lanka-government-1785344616</id>
            <summary type="text">சவூதி நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞன், தனது முகப்புத்தக பதிவால் அந்நாட்டில் அண்மையில் கடுமையான தண்டனைக்கு&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞன், தனது முகப்புத்தக பதிவால் அந்நாட்டில் அண்மையில் கடுமையான தண்டனைக்கு&nbsp; உள்ளாக்கப்பட்டார்.&nbsp;</p><p>முகம்மது நபிகள் தொடர்பில் அவர் ஒரு தவறான கருத்தை முகப்புத்தகத்தில் முன்வைத்த நிலையில், இத்தண்டனையை அந்நாடு அவருக்கு வழங்கியது.&nbsp;</p><p>இருப்பினும், குறித்த இளைஞன் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அதை உணர்ந்து நீக்கியிருந்தார்.&nbsp;</p><p>பின்னர், இது குறித்து அனைத்து இஸ்லாமியர்களும் தன்னை மன்னிக்குமாறும் அவர் கோரி ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார்.&nbsp;</p><p>ஆனால், அக்கருத்துப் பகிர்வை பகிர்ந்த பலர் அவருக்கு தண்டனை வழங்குமாறு தொடர்ந்து கோரி வந்த நிலையில்&nbsp;சவூதி அரசாங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p>இந்நிலையில், அவரை விடுதலை செய்ய உதவுமாறு தமிழ் மக்கள் பலரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FEmpzSo6sJU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T17:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கனடா கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-says-expansion-of-israeli-west-bank-1785345344"></link>
            <id>https://tamilwin.com/article/canada-says-expansion-of-israeli-west-bank-1785345344</id>
            <summary type="text">&amp;nbsp;இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரைப் பகுதியில் முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய குடியேற்ற விஸ்தரிப்புக்கு கனடா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மேற்குக்கரையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரைப் பகுதியில் முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய குடியேற்ற விஸ்தரிப்புக்கு கனடா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு கனடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>
சட்டவிரோதக் குடியிருப்புகளின் விரிவாக்கம் “உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de9b8d6-f95a-4aef-bd91-de755ab8501d/26-6a6a35442f6ba.webp' /></p><p>
சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த யூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை. மேலும், இவை பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகளை கடுமையாக சீர்குலைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்களும், சட்டவிரோதக் குடியிருப்புகளின் விரிவாக்கமும் முன்னெப்பாதும் இல்லாத அளவுக்கு மிக உச்சத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>
2023 அக்டோபர் முதல் மேற்குக்கரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1,100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும், அனைத்துக் குடிமக்களும் பாதுகாப்பான சூழலில் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>இந்த கருத்து தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் இதுவரையில் பதில் எதனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T17:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-sanctions-iranian-firms-1785344720"></link>
            <id>https://tamilwin.com/article/us-sanctions-iranian-firms-1785344720</id>
            <summary type="text">ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பாதையில் செல்லும் வணிகக் கப்பல்களிடம் கட்டாயக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>ஹோர்முஸ் நீரிணைப் பாதையில் செல்லும் வணிகக் கப்பல்களிடம் கட்டாயக் காப்பீடு என்ற பெயரில் சட்டவிரோதப் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இரு ஈரானிய நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>குறித்த இரண்டு நிறுவனங்கள் மீதும் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d4b075-6e9c-4260-baa7-cce374a6cde1/26-6a6a32d206f5b.webp' /></p><p> 
 ‘பெர்சியன் கல்ஃப் மேரின் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ‘ஹோர்முஸ் சேஃப் மேரின் சர்வீசஸ் அத்தாரிட்டி’ ஆகிய இரு நிறுவனங்களுக்கே இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
</p><p>ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் பின்னணியில் இயங்கும் இந்த நிறுவனங்கள், ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் வணிகக் கப்பல்கள் கட்டாயக் கடல்சார் ‘காப்பீட்டை’ வாங்குமாறு நிர்பந்தித்து பணத்தைப் பறிக்கும் சட்டவிரோதத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. </p><p>
கப்பல்களைக் கைப்பற்றுதல் போன்ற பெரும்பாலான அபாயங்களை ஈரானே செயற்கையாக உருவாக்கிவிட்டு, அந்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி வணிகக் கப்பல்களிடம் நிதியை திரட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>இத்திட்டம் மூலம் பெறப்படும் வருவாய், ஈரானிய ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் ஊழல் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
</p><p>இதுமட்டுமன்றி, தடைகளை மீறி ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ இரசாயன பொருட்களை சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்திச் சென்ற 'நிழற்படை' கப்பல்களை இயக்கிய நிறுவனங்கள் மீதும் அமெரிக்க அரசு தடைகளை விதித்துள்ளது.</p><p>
உலகின் மிக முக்கியமான கடல்வழி வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த ஈரான் முயன்று வரும் நிலையில், அங்கு சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் உறுதி செய்வது சர்வதேச அளவில் பெரும் சவாலாக நீடித்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T17:11:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெந்தோட்டையில் இடம்பெற்ற விபத்தில் பாலஸ்தீனப் பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palestinian-tourist-killed-1785343343"></link>
            <id>https://tamilwin.com/article/palestinian-tourist-killed-1785343343</id>
            <summary type="text">பெந்தோட்டை கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பராமோட்டோர் (விசைப் பாராசூட்) விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெந்தோட்டை கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பராமோட்டோர் (விசைப் பாராசூட்) விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>பெந்தோட்டை கடற்கரை வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பராமோட்டோர் சவாரியின் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் உயிரிழந்த நிலையில், பராமோட்டோரை இயக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த பைலட் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e39532-0cac-406c-9549-68be1e1007f3/26-6a6a2d716b6a6.webp' /></p><p>
</p><p>உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 
விபத்துக்கான காரணம் குறித்து பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணம் மற்றும் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-warning-for-eastern-province-1785342779"></link>
            <id>https://tamilwin.com/article/heat-warning-for-eastern-province-1785342779</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் வளிமண்டலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>
இதற்கமைய, பகல் வேளையில் மனித உடலினால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’, குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 
வளிமண்டலத்தின் ஒப்பீட்டு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த ‘வெப்பச் சுட்டெண்’ கணக்கிடப்படுகிறது. </p><p>
வெயிலில் அதிக நேரம் வேலை செய்வது அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உடலுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். அத்துடன், தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. </p><p>
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கத் தேவையான அளவு நீரையும் திரவ உணவுகளையும் உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
கடுமையான வெயில் நிலவும் வேளைகளில், அதிக சிரமத்தை ஏற்படுத்தும் வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:35:38+00:00</updated>
        </entry>
    </feed>
