<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-05T04:31:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூஆர் குறியீட்டு எரிபொருள் விநியோக முறைமை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-distribution-under-qr-code-system-to-continue-1788580721"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-distribution-under-qr-code-system-to-continue-1788580721</id>
            <summary type="text">கியூஆர் குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கில் நிலவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கியூஆர் குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. </p><p>

மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மயூர நெட்டிகுமார தெரிவித்துள்ளார்.</p><h2>விலை குறைப்பு</h2><p>
</p><p>
இதேவேளை இன்றைய தினம் (05.09.2026) முதல் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நாப்தாவின் (Naphtha) விலைகள் குறைக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, ஒரு லீட்டர் உலை எண்ணெயின் விலை 38 ரூபாவும், ஒரு லீட்டர் நாப்தாவின் விலை 35 ரூபாவும் குறைக்கப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரா குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0448df-c20f-4294-9401-50b6f6686683/26-6a9b97d0736bd.webp' /></p><p> </p><p>

அதன்படி, ஒரு லீட்டர் உலை எண்ணெயின் விலை 248 ரூபாவிலிருந்து, 210 ரூபாவாக குறைக்கப்படும்.</p><h2>மக்களுக்கு நிவாரணம்</h2><p> </p><p>

இதற்கிடையில், உலை எண்ணெய் மற்றும் நாப்தாவின் விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு அந்த நிவாரணத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், வரவிருக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் பொதுமக்களுக்கு அந்த நிவாரணத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T04:17:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை - அநுர அரசின் போலி முகம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/repression-of-tamil-journalists-1788581508"></link>
            <id>https://tamilwin.com/article/repression-of-tamil-journalists-1788581508</id>
            <summary type="text">தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும்
வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்
ச.சுகிர்தன் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும்
வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்
ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2>

வெளிச்சத்திற்கு வரும் அரசின் போலி முகங்கள்</h2><p>
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

ஆட்சி அதிகாரங்கள் இல்லாத காலகட்டத்தில் தங்களை ஜனநாயகவாதிகள் போலவும்
ஊடகங்களின் நண்பர்கள் போலவும் காட்டிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி, தற்போது
ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த கால அரசுகளை விட மிக மோசமாக ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் ஏவிவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a15191-80d9-4ce6-ab93-e39baf416dc4/26-6a9b9763e302f.webp' /></p><p>
</p><p>
தங்களின் இயலாமை, ஊழல்கள் மற்றும் செயற்திறனற்ற தன்மைகளை ஊடகவியலாளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், தங்கள் போலி முகங்கள் மக்களிடம்
அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சத்திலே இந்த அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
</p><p>அரச தரப்பு இந்த வன்முறைப் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்.

வடக்கில் நீண்டகாலமாகச் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன், கொள்கை ரீதியில் பிழைவிடும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராகக் கூட துணிந்து கருத்துக்களைப் பதிவு செய்தவர். </p><p>அத்தகைய ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசால் பழிவாங்கப்பட்டுள்ளார்.
</p><h2>

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை</h2><p>
கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகப் போலியாகக்
கண்ணீர் வடித்தவர்கள், இன்று அதிகாரம் கிடைத்தவுடன் ஊடகவியலாளர்களைக் காலால் எடையும் மிலேச்சத்தனமான சூழலை உருவாக்கியுள்ளனர்.
</p><p>
நாடளாவிய ரீதியில் இன்று மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை விடவும் மோசமான,
சர்வாதிகார மற்றும் மிலேச்சத்தனமான ஆட்சி முறைக்குள் இலங்கை மக்கள்
தள்ளப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6d1aa2-1179-4206-8c69-f2993c284d19/26-6a9b9764aeee8.webp' /></p><p> </p><p>

இத்தகைய ஆபத்துக்களை மக்கள் மத்தியில்
கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாரிய பொறுப்பு
ஊடகவியலாளர்களுக்கே உள்ளது. </p><p>அதனை அவர்கள் சிறப்பாகச் செய்து வருவதை ஒடுக்கும் நோக்கிலேயே அரசு இந்த அடக்குமுறைகளைக் கையிலெடுத்துள்ளது.
</p><p>
எனவே, நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய வதைகள் தொடராதவாறு அரசு
தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன்
மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறையை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T04:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடி நடவடிக்கை - கொழும்பில் சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotels-to-be-removed-from-colombo-1788580151"></link>
            <id>https://tamilwin.com/article/hotels-to-be-removed-from-colombo-1788580151</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதியிலுள்ள கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களை அகற்ற சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதியிலுள்ள கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களை அகற்ற சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p> 

அதற்கமைய பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத கட்டுமானங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரசாங்க அதிகாரிகளின் தலையீட்டுடன் போலி ஆவணங்களை தயாரித்து இந்த ஹோட்டல்கள் தன்னிச்சையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
சட்டவிரோத ஹோட்டல்</b></h2><p>இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இடித்து அகற்றுவதற்கு கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617f8b19-d9b5-433c-a6cd-9e8565fd0a75/26-6a9b93072286c.webp' /></p><p>இந்த கடற்கரை பகுதிகளை மிகவும் உணர்திறன் வாய்ந்த மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் வகையில் மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-05T03:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 20ஆம் திருவிழா - பக்தி பரவசத்தில் பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20th-festival-of-nallur-kandaswamy-temple-1788578777"></link>
            <id>https://tamilwin.com/article/20th-festival-of-nallur-kandaswamy-temple-1788578777</id>
            <summary type="text">நல்லூர் ஆலயத்தின் 20ஆம் திருவிழா இன்று (05.09.2026) காலை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் ஆலயத்தின் 20ஆம் திருவிழா இன்று (05.09.2026) காலை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றுள்ளது.
</p><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் 20ஆம் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.</p><p>

இதன்போது சந்தன கோபாலர் உற்சவமும், பட்டித் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூரானை தரிசித்து வழிபட்டனர்.
</p><p>
வாத்திய இசை முழங்க, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற காலை உற்சவம் பக்தி உணர்வை மேலோங்கச் செய்தது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கோர விபத்து - 22 வயது இளைஞர் பரிதாப உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-kilinochchi-1788578183"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-kilinochchi-1788578183</id>
            <summary type="text">கிளிநொச்சி - உருத்திரபுரம் டி - 7 பகுதியில் மோட்டார் சைக்கிள் பனை மரத்தில்
மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - உருத்திரபுரம் டி - 7 பகுதியில் மோட்டார் சைக்கிள் பனை மரத்தில்
மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த சம்பவம் நேற்று(04.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார்
சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலிருந்த பனை
மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>

இளைஞர் உயிரிழப்பு</h2><p>
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22
வயதுடைய இளைஞர், உடனடியாகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b23c03-d2e4-4003-9a5a-22672840206b/26-6a9b89d0c69bd.webp' /></p><p>

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம்
ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தம்பதி மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் - பின்னணி குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-police-officers-son-shoots-couple-1788577058"></link>
            <id>https://tamilwin.com/article/former-police-officers-son-shoots-couple-1788577058</id>
            <summary type="text">கொழும்பு, கொள்ளுப்பிட்டி 6வது தெருவில் உள்ள பாம் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மகனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொள்ளுப்பிட்டி 6வது தெருவில் உள்ள பாம் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மகனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தம்பதி காயமடைந்துள்ளனர்.</p><p>

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதய குமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த தம்பதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>தம்பதி மீது துப்பாக்கி </b></h2><p>துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் 51 வயதுடைய திருமணமாகாத நபர், பயன்படுத்திய துப்பாக்கி, அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு வெற்று தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd494c72-9801-48e5-9b15-0f53dc5f9287/26-6a9b875b8ec10.webp' /></p><p>காயமடைந்த பெண் சந்தேகநபருடன் நீண்ட காலமாக நெருங்கிய உறவை பேணிவந்துள்ளார்.
</p><p>
நேற்று, முன்தினம் இரவில் வேறு ஒரு யுவதியையும் சந்தேகநபரின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
காயமடைந்த குறித்த தம்பதி கிருலப்பனை பகுதியை சேர்ந்தவர்களாகும். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T03:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக குறைந்த லிட்ரோ எரிவாயு விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/litro-gas-prices-down-1788576547"></link>
            <id>https://tamilwin.com/article/litro-gas-prices-down-1788576547</id>
            <summary type="text">இன்று(05.09.2026)&amp;nbsp; நள்ளிரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய வீட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று(05.09.2026)&nbsp; நள்ளிரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.</p><h2>விலை குறைப்பு</h2><p>
</p><p>
இதன்படி, அதன் புதிய விலை ரூ.4,365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.42 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1157c9c-7d8c-4fc3-b65d-581f2899b3a7/26-6a9b84ca2f719.webp' /></p><p>
</p><p>
மேலும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.20 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.815 ஆக குறைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T02:56:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை - சந்தேக நபரின் சடலமும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-killed-in-colombo-suspects-body-found-1788572187"></link>
            <id>https://tamilwin.com/article/women-killed-in-colombo-suspects-body-found-1788572187</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை - பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

18 வயதான குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை - பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
18 வயதான குறித்த யுவதி கழுத்து அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு நேற்று முன்தினம் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்த கனகசபை மீகா என தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
இளம் யுவதி கொலை</b></h2><p>இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் உடுபுஸ்ஸல்லாவை, சென்ட் வத்தையைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3a0324-d51b-44de-bc42-e3c9ecec0fa9/26-6a9b73f9dad6f.webp' /></p><p>குறித்த சந்தேகநபர் 2020ஆம் ஆண்டு கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவசகவெல்ல பிரதேசத்தில் நபரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவராகும்.</p><p>

தற்போது அது குறித்த வழக்கு விசாரணையில் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட யுவுதி சந்தேகநபருடன் காதல் உறவைப் பேணி வந்துள்ளார்.
</p><p>
சந்தேகநபர் அவரைத் தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து, வீட்டில் இருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தறுத்து, கண்களைத் தோண்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
யுவதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>

இவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T02:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்வெட்டு தொடர்பில் பரவும் வதந்திகள் - அரசத்தரப்பு வெளியிட்ட விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-power-cut-1788573726"></link>
            <id>https://tamilwin.com/article/no-power-cut-1788573726</id>
            <summary type="text">மின்வெட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை தட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்வெட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
</p><p>நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை தடையின்றி தொடர்ச்சியாக வழங்குவதற்கு எந்தவொரு தடையும் இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.</p><h2>அனுர கருணாதிலக்க விளக்கம்&nbsp;</h2><p>இந்த அறிவிப்பை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f83a51-b2c2-429c-bb56-25dbe49990fd/26-6a9b807bbb3a1.webp' /></p><p>
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்றும் அவர் இதன்போது ஊடகங்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T02:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை..! வெளியில் செல்வோர் அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-weather-report-1788575319"></link>
            <id>https://tamilwin.com/article/today-weather-report-1788575319</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றும்(05.09.2026) குறிப்பிட்ட சில மாகாணங்களில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றும்(05.09.2026) குறிப்பிட்ட சில மாகாணங்களில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

இதற்கமைய, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

அதிலும் குறிப்பாக சில இடங்களில், 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
</p><p>
 இதற்கு மேலதிகமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><h2>
மழைக்கு வாய்ப்பிலிருந்தாலும் உச்சம் கொடுக்கும் சூரியன்</h2><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d9b1f7-f7b5-4060-9c89-d7b9ff9ab25c/26-6a9b7eec51a55.webp' /></p><p>
</p><p>
சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
</p><p>
 
இதன்படி, இன்று(05) நண்பகல் 12.08 அளவில் மொரட்டுவ, கெஸ்பேவ, பொல்கஸ்ஓவிட்ட, ஹந்தபாங்கொட, ஸ்ரீ பலாபத்தல, பொகவந்தலாவ, இதல்கஸ்சின்ன, யுதகனாவ, கொட்டியாகல மற்றும் பாணம ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T02:31:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டின் மீன்களின் விலை தொடர்பில் விற்பனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maximum-retail-price-for-domestic-processed-fish-1788574666"></link>
            <id>https://tamilwin.com/article/maximum-retail-price-for-domestic-processed-fish-1788574666</id>
            <summary type="text">உள்நாட்டு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


இது தொடர்பான அறிவிப்பு இன்று(05.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்நாட்டு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p>


இது தொடர்பான அறிவிப்பு இன்று(05.09.2026) வெளியாகியுள்ளது. </p><h2>


டின் மீன்களின் விலை அதிகரிப்பு</h2><p>

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 20 (5) ஆம் பிரிவின் கீழ் செயற்பட்டு, எந்தவொரு உள்நாட்டு உற்பத்தியாளரோ, பொதியிடுபவரோ, விநியோகஸ்தரோ அல்லது வர்த்தகரோ கீழே குறிப்பிடப்பட்டுள்ள டின் மீன் வகைகளை குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதோ, விற்பனைக்காக முன்வைப்பதோ அல்லது விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவதோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> </p><p>

 

 இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f57325-dcb9-41e4-a176-e14028cb546e/26-6a9b7bffba556.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T02:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் பலத்த பாதுகாப்புடன் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-in-saftey-place-1788573307"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-in-saftey-place-1788573307</id>
            <summary type="text">
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாமலின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>
சிறைச்சாலை வட்டாரங்கள் </b></h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் மேலும் 10 கைதிகள் வரை குறித்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e9f94f8-dc29-46ac-a8de-7b29aedbb92a/26-6a9b7927e0c9f.webp' /></p><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து வழங்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

நாமல் ராஜபக்ச கைது</b></h3><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9161d163-10dc-43ec-a023-590092d8f633/26-6a9b792895028.webp' /></p><p>பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது 8 லட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-05T02:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-representatives-visisting-srilanka-1788573259"></link>
            <id>https://tamilwin.com/article/imf-representatives-visisting-srilanka-1788573259</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இலங்கையின் ஏழாவது மதிப்பாய்வுக்காக இந்தப் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம் செய்ய உள்ளது.
</p><p>சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் எவன் பாபஜோர்ஜியோ தலைமையிலான இந்த பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தக் குழு, எதிர்வரும் 10 முதல் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து, உள்ளூர் அதிகாரிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.</p><p>
இதன்போது அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள், சீர்திருத்தக் கொள்கை சட்டகங்கள் மற்றும் நீண்டகால மூலோபாய சவால்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T01:54:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் களத்தில் இறங்கப் போகும் நாமலின் மனைவி லிமினி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-wife-limini-to-enter-politics-1788569495"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-wife-limini-to-enter-politics-1788569495</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுண கட்சியின் மக்கள் போராட்டப் பேரணி நடைபெற ஏற்பாடாகி உள்ளது.</p><h2>நாமலின் மனைவி லிமினி</h2><p>
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும் அவர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56b11e84-cc7b-4d30-ad9d-657108eb69c6/26-6a9b6a17b5f44.webp' /></p><p>
இந்நிலையில் இந்தப் பேரணியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக, அவரது மனைவி லிமினி ராஜபக்ச பிரதான மேடைக்கு வந்து மக்களிடம் உரையாற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அத்துடன் எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவும், ஊடகச் சந்திப்பொன்றை நடத்தவும் அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T01:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் - கலக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜனநாயக முன்னணியின் (Eros) செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,</p><p>


நாமல் ராஜபக்சவின் கைது வரவேற்கத்தக்கது, இது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த அரசு நிரூபிப்பித்துள்ளது.
</p><p>
ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது பல ஊழல் முறைப்பாடுகள் உள்ளன.</p><p> 

ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் செய்த ஊழல், கொள்ளை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
</p><p>
தற்போதைய அரசு இத்தகைய ஊழல்களை விசாரிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D9IttxaXdMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது.. மீண்டும் களமிறங்கும் மகிந்த - ராஜபக்ச அரசியலில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீ லங...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச தரப்பு அரசியல்வாதிகள் பலர் அ ண்மைக்காலமாக வழக்குகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், விளக்கமறியல் உத்தரவுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.</p><h2>மீண்டும் மகிந்த</h2><p>
</p><p>
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அரசியல் செயற்பாடுகளில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அதன் காரணமாக சிறிது காலமாக அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் என்ற ரீதியில் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a99636b-abd5-4d8a-b471-8c284e0853ab/26-6a9b63cd198bb.webp' /></p><p>
அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சியின் முதலாவது மக்கள் போராட்ட பேரணிக்கு அவர் தலைமை தாங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>

முன்னதாக குறித்த பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்த நிலைமையில், இலஞ்ச வழக்கொன்றில் தற்போதைக்கு நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
அவ்வாறான பின்னணியில் அநுராதபுர பேரணி தொடக்கம் எதிர்வரும் 2029ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வரையான கட்சியின் செயற்பாடுகளை தலைமையேற்று முன்கொண்டு செல்ல மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kLhfyZi69CA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-05T00:35:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைதான நாமல் - பொதுஜன பெரமுண முக்கியஸ்தர்களின் அவசர ஒன்று கூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-meeting-of-podujana-peramuna-key-figures-1788567108"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-meeting-of-podujana-peramuna-key-figures-1788567108</id>
            <summary type="text">ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசர ஒன்றுகூடல் ஒன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுண கட்சியின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசர ஒன்றுகூடல் ஒன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.</p><h2>அவசர ஒன்று கூடல்</h2><p>
</p><p>
இதற்கிடையே மொட்டுக் கட்சியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரம் நகரில் மக்கள் போராட்டம் (ஜன சடன) என்ற பெயரில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் பேரணியொன்று நடைபெற ஏற்பாடாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7956ad61-7dca-4132-ab78-004c6311a581/26-6a9b5ff82aaae.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான நிலையில் நாமல் ராஜபக்சவின் கைது விவகாரத்தை எதிர்கொள்வது மற்றும் அநுராதபுர பேரணியை வெற்றிகரமாக நடத்துவது உள்ளிட்ட முக்கிய விடயங்களை கலந்துரையாடுவதற்காக பொதுஜன பெரமுண கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
</p><p>
பத்தரமுல்லை , நெளும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமையகத்தில் இன்று(5) முற்பகல் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்களின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:19:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகியும் கைவிலங்குடன் சிரித்தபடி சிறை சென்ற நாமல்! கைதாவதை முன்கூட்டியே அறிந்தது எப்படி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788566415"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788566415</id>
            <summary type="text">தான் கைது செய்யப்படலாம் என்று நாமல் ராஜபக்ச முன்பே கூறியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தான் கைது செய்யப்படலாம் என்று நாமல் ராஜபக்ச முன்பே கூறியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்முதல் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய விடயத்திலே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இதில் சுமார் 1.4 மில்லியன் யூரோக்களுக்கு மேலான இலஞ்சப் பணம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்ஸ் நாட்டு ஏர்பஸ் (Airbus) நிறுவன அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.</p><p> 

கடந்த காலங்களில் கபில சந்திரசேன சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>

இந்தநிலையில் அதற்கு முன்னதாகவும் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அப்போதைய நிலை தற்போது மாற்றமடைந்துள்ளதை காண முடிகின்றது.
</p><p>
அதே சமயம் நாமல் ராஜபக்ச காலையிலிருந்து அமைதியான மற்றும் புன்னகைத்த முகபாவனையுடனேயே காணப்பட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தற்போது இலங்கை அரசியலில் பேசுபோருளாகியுள்ள நிலையில், விரிவான விளக்கங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cqqPn-TnFso" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகம் சீரழிகிறது..! அரசுக்கு எதிராக சஜித் போர்க்கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/country-and-democracy-being-destroyed-government-1788562996"></link>
            <id>https://tamilwin.com/article/country-and-democracy-being-destroyed-government-1788562996</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள்
ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும்
சீரழிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள்
ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும்
சீரழிந்து வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்தார்.
</p><p>
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம கொங்வெலான பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை
ஆராயும் மக்கள் சந்திப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>22ஆவது திருத்தம்</h2><p>
</p><p>
இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

"அரசு 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை,
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளின் மீது பெரும் அடியைக்
கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2b7a26f-28c8-43f6-ae72-2b2a4b274635/26-6a9b4fb0bf875.webp' /></p><p> </p><p>நீதித்துறையின் சுதந்திரத்தில் கைவைத்து அரசு ஜனநாயகத்தை
சீரழித்து வருகின்றது.

பொருளாதாரத்தின் மீது அரசு தொடுத்த தாக்குதலால் வாழ்க்கைச் சுமை மற்றும்
செலவுகள் அதிகரித்து காணப்படுகின்றன.</p><p> மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும்
உலகளாவிய விலைக்கு எரிபொருள் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதிகள் எவையும்
நிறைவேற்றப்படவில்லை.</p><h2>சஜித் பிரேமதாஸ</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் அஸ்வெசும தொகை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும்,
தற்போது அஸ்வெசும தொகையும் பயனாளர்களின் எண்ணிக்கையும் அரசாங்கத்தினால்
குறைக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d3bc845-e58e-4d6e-87b7-24f11702ba34/26-6a9b4fb1b5662.webp' /></p><p> </p><p>வறுமையை ஒழிப்பதற்கான காத்திரமான திட்டங்கள்
எதுவும் இவர்களிடம் இல்லை.

விவசாயிகள் விதை மற்றும் உர விலை உயர்வுடன், யானை - மனித மோதல்களுக்கு
மத்தியிலும் உற்பத்தியை மேற்கொண்டாலும் நிலையான விலை கிடைக்கவில்லை. </p><p>150 ரூபா
வாக்குறுதி மீறப்பட்டு, விவசாயிக்கு நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்
மீதான வரித் தாக்குதல்கள் மற்றும் பராட்டே சட்டம் காரணமாக இவர்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T23:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்கு முன் நாமலுக்கு தெரிந்த இரகசியம் - 12ஆம் திகதியின் சூழ்ச்சிகள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-by-bribery-commission-1788554374"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-by-bribery-commission-1788554374</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

 2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 'ஏர்பஸ்' (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான ஊழல் மற்றும் 8 லட்சம் டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

செப்டம்பர் 12-ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த பெரிய பேரணிக்கு முன்னதாகவே இந்தக் கைது நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இது போராட்டத்தை முடக்கும் முயற்சியாக ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது.
</p><p>
ஆனால் ராஜபக்ச தரப்பு போராட்டத்தை ஒரு திசைதிருப்பல் யுக்தியாகவே பயன்படுத்தியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
</p><p>
சிறைச்சாலைக்கு வெளியே திரண்டிருந்த ஆதரவாளர்கள், ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாப்பாளர்களாகச் சித்தரித்து உணர்ச்சிகரமாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.</p><p>

ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gYu0CmEyp28" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T23:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்குப் பின்னர் நாமலின் முகநூலில் வெளியான முக்கிய பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-after-fb-post-1788538032"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-after-fb-post-1788538032</id>
            <summary type="text"> இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் அவர் சார்பில் பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த பதிவில்,</p><h2>அரசியல் பழிவாங்கல்கள்</h2><p>

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். திருடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.</p><p>

என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNamalSL%2Fposts%2Fpfbid02TcCpAA2u9fPZLmmc47wNT1aFyxcJEh147PMkVazPVK7ft2rZa2GqrW49bfA9ed2Gl&show_text=true&width=500" width="500" height="310" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
</p><p>
இன்று, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை என்னை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

நாளை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. 

அங்கு ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார். </p><p>இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைப் புறக்கணிப்பது கடினமாக உள்ளது.</p><h2>&nbsp;மாபெரும் மக்கள் பேரணி</h2><p>
</p><p>
அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள எமது மாபெரும் மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
</p><p>
நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை.மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை. நான் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc59b3ac-aea8-4446-8b4a-d959be46307a/26-6a9aeeb8ed3d3.webp' /></p><p>

எனது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும். ஆனால் எனது குரலையோ, எனது நம்பிக்கைகளையோ அல்லது எனது அன்புக்குரிய தாய்நாட்டு மக்களுக்காக நான் செய்யும் அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது.

அரசியல் அதிகாரம் தற்காலிகமானது.</p><p>

உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.

இந்த அனைத்து சம்பவங்களும் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும்.
</p><p>
இவை அனைத்தையும் நான் அச்சமின்றி எதிர்கொள்வேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>You may Like This video..</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gYu0CmEyp28" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p><br></p><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T22:45:22+00:00</updated>
        </entry>
    </feed>
