<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-02T19:27:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி கட்டத்தில் தீர்மானம்.. ஈரான் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-oman-negotiations-final-stages-says-araghchi-1785697069"></link>
            <id>https://tamilwin.com/article/iran-oman-negotiations-final-stages-says-araghchi-1785697069</id>
            <summary type="text">ஈரான் - ஓமன் இடையேயான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அப்ராக்சி அறிவித்துள்ளார்.தொடர் பேச்சுவார்த்தை ஈரானுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - ஓமன் இடையேயான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அப்ராக்சி அறிவித்துள்ளார்.</p><h2>தொடர் பேச்சுவார்த்தை</h2><p> </p><p>ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் "முடிவடையப் போகும் பாதையில் உள்ளதாக" ஈரானிய அமைச்சரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a2380eb-c2dc-428f-8882-5ba313bacacd/26-6a6f98d006003.webp' /></p><p>ஹோர்முஸ் நீரிணையின் எதிர்கால மேலாண்மை மற்றும் போக்குவரத்து வழிமுறைகள் குறித்து ஈரானும் ஓமானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
</p><p>
இது தொடர்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அப்பாஸ் அப்ராக்சி, இந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T19:22:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட ஹெலிகொப்டர்கள்.. வெளிநாடொன்றில் பயங்கர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-die-helicopter-collision-greek-pm-says-1785695725"></link>
            <id>https://tamilwin.com/article/two-die-helicopter-collision-greek-pm-says-1785695725</id>
            <summary type="text">கிரீஸில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகொப்டர்கள் வான்வெளியில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகொப்டர்கள் வான்வெளியில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. </p><p>இதில் ஒரு ஹெலிகொப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். </p><p>கடுமையான வெப்ப அலை மற்றும் போதிய மழையின்மை காரணமாக இந்த கோடைகாலத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகள் காட்டுத் தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன், காலநிலை மாற்றமே இந்த நிலையை தீவிரப்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>பயங்கர காட்டுத்தீ&nbsp;</h2><p> ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள சதா (Psatha) பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்துக்கு பிறகு, நான்கு பணியாளர்கள் மீட்கப்பட்டதாக கிரீஸ் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e72a67a-4335-4e73-9f76-39319fb28bd4/26-6a6f920e37afc.webp' /></p><p>
</p><p>
விபத்துக்குள்ளான ஒரு ஹெலிகொப்டரில் இருந்த கிரீஸ் மற்றும் டேனிஷ் நாட்டவர் ஆகிய இரு பணியாளர்களும் உயிரிழந்த அதேவேளை, இரண்டாவது ஹெலிகொப்டரில் இருந்த பிரித்தானிய மற்றும் கிரீஸ் நாட்டவர் ஆகிய இரு பணியாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🔴 Two Bell 214ST firefighting helicopters collided mid-air while battling a major forest fire in the Psatha area, west of Athens, Greece, triggering a search and rescue operation.<br><br>✈️ Aircraft involved: One helicopter was Bell 214ST N511EV (serial 28105, built in 1982), while… <a href="https://t.co/Jwd3qpLAfj">pic.twitter.com/Jwd3qpLAfj</a></p>&mdash; FL360aero (@fl360aero) <a href="https://x.com/fl360aero/status/2083953298173030577?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஹெலிகொப்டரின் சுழலிறகுகள் (rotors) மோதியதைத் தொடர்ந்து, ஒரு ஹெலிகொப்டர் வெடித்துச் சிதறி தீப்பிடித்தவாறு தரையில் விழுந்த காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன், மோதலுக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை குறிப்பிட்டுள்ளது. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T18:53:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரத்தை திட்டமிட்ட கைதிகள்.. அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பாரிய நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clashes-mahara-prison-150-million-damage-1785689826"></link>
            <id>https://tamilwin.com/article/clashes-mahara-prison-150-million-damage-1785689826</id>
            <summary type="text">நேற்று (1) மஹர சிறையில் நடந்த மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூபா 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்திற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று (1) மஹர சிறையில் நடந்த மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூபா 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இச்சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறிய தொடங்கப்பட்டுள்ள விசாரணைகளின் போது இத்தகவல் மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

சிறைக்கைதிகள், சிறையில் உள்ள பல பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>மஹர சிறைக்குள் பல கட்டிடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், சிறை மறுவாழ்வுத் திட்டங்களில் தையலுக்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களைச் சிறைக்கைதிகள் அழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>திட்டமிட்ட கைதிகள்..&nbsp;</h2><p>
</p><p>நேற்று நள்ளிரவு வரை சிறை வளாகத்திற்கு வெளியே இருந்து சிறைக்கைதிகள் கற்களை வீசி வந்தனர். கல் தாக்குதல்களால் சிறையைச் சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b41fe369-720f-4db0-bb66-702f346d4536/26-6a6f88aed1d72.webp' /></p><p>
சாத்தான், அசார், பெட்டா மற்றும் மற்றொரு கைதியால் இந்தக் கலவரம் திட்டமிடப்பட்டது என்று பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கலவரத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கைதிகளை இன்று பிற்பகல் அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரை பூசா உட்பட 7 பிற சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
4,100க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்ட மஹர சிறையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கலவரம் வெடித்தது.</p><p> 13 மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை சுமார் 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.

இருப்பினும், இந்தக் கலவரத்தில் ஒரு கைதி உயிரிழந்தார் மற்றும் 9 கைதிகள் காயமடைந்தனர்.</p><p></p><h2>உயிரிழந்த கைதி..&nbsp;</h2><p> உயிரிழந்தவர், வத்தளை, ஹெண்டலாவைச் சேர்ந்த 33 வயது நபர் ஆவார். அவர் ஒரு மோட்டார் சைக்கிளைத் திருடியமை மற்றும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14262489-7ba2-402c-83db-0a303508f4e6/26-6a6f88afc3814.webp' /></p><p>

சிறையில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால், இப்போதெல்லாம் போதைப்பொருள் தட்டுப்பாடு நிலவுவதே இந்தக் கலவரத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
</p><p>
நேற்று காலை, நான்கு கைதிகள் ஒரு கூரையின் மீது ஏறி சிறை நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ​​ஒரு மூத்த சிறை அதிகாரி அங்கு சென்று இது குறித்து கைதிகளிடம் விசாரித்துள்ளார்.&nbsp;</p><p>

இருப்பினும், அங்கிருந்த கைதிகள் சிறை அதிகாரிகள் மீது கற்களை வீசியுள்ளனர். இதனை தொடர்ந்து, ​​அதிகாரிகள் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.</p><p>சிறை மருத்துவமனையில் இருந்த மருந்துகள், சமையலறையில் இருந்த கூர்மையான ஆயுதங்கள், மற்றும் துப்பாக்கிக் கிடங்கில் இருந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை அந்த இடங்களிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.</p><p></p><h2>&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
இதற்கிடையில், சுமார் 1,500 பிற கைதிகள், சிறையின் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டு வரும் சுவரை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாகவும் அந்த முயற்சியை முறியடிப்பதற்காக சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5824defc-f9d0-41c5-9c4c-3009632289d7/26-6a6f88b082b81.webp' /></p><p>
இருப்பினும், அப்போது, ​​மற்றொரு குழுவினர் ஒரு சிறைக் கட்டிடத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதுகுறித்த அறிக்கைகள் மீதான முதற்கட்ட விசாரணையில், அவர்களில் ஒரு குழுவினர் பின்னர் போதைப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் புகுந்து, சிறைக் கைதிகளின் வசம் இருந்த போதைப்பொருட்களைப் பயன்படுத்தியமை தெரியவந்தது.
</p><p>
இத்தகைய சூழலில், மற்றொரு கைதிகள் குழு, அந்தக் குழுவினர் அடைக்கப்பட்டிருந்த வார்டுகளுக்குச் சென்று, பூட்டுகளை உடைத்து, அந்த அறைகளிலிருந்து வெளியேற வழிவகுத்துள்ளனர்.
</p><p>
அவர்களில் ஒரு குழுவினர் அறைகளிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​மற்றொரு கைதிகள் குழுவினர் அவ்வாறு செய்ய மறுத்து, தாங்கள் தங்கியிருந்த அறைகளிலேயே இருந்துள்ள நிலையில், ​​கலவரத்தை ஏற்படுத்தி வந்த கைதிகள் வந்து அவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-02T18:16:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hormuz-will-not-return-to-pre-war-situation-1785690309"></link>
            <id>https://tamilwin.com/article/hormuz-will-not-return-to-pre-war-situation-1785690309</id>
            <summary type="text">உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஈரானிய அரசாங்கம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
&#039;ஹோர்முஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஈரானிய அரசாங்கம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
</p><p>'ஹோர்முஸ் நீரிணை' கடல் வழிப்பாதை இனி ஒருபோதும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ஓமனுடன் ஈரான் நடத்தி வரும் பேச்சுவார்த்தைக்கும், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கும் அல்லது மூடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/205cf024-e1ab-459f-88f1-403f4aa6d896/26-6a6f78ca01110.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகள் மற்றும் ஈரான் மீதான கடற்படை முற்றுகை காரணமாகவே இந்த நீரிணை மூடப்பட்டது என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
ஓமனுடனான பேச்சுவார்த்தை இருதரப்பு சார்ந்தது. </p><p>ஈரானின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பான விவாதங்கள் புதியவை அல்ல; அவை நீண்டகாலமாகவே நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
</p><p>நாட்டின் நலன்கள் மற்றும் கரிசனைகளை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமியக் குடியரசான ஈரான் செயல்படுகிறது எனவும் மற்றவர்களின் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்குப் பயந்து ஈரான் தனது முடிவை மாற்றிக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளது.
</p><p>ஊடகங்களின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஈரான் தனது உறுதியான நிலைப்பாடுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்று இஸ்மாயில் பாகாயி சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T17:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வெடித்த மஹர சிறைச்சாலை வன்முறை.. நீதி அமைச்சு எழுப்பும் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rganized-element-may-be-behind-mahara-prison-1785688948"></link>
            <id>https://tamilwin.com/article/rganized-element-may-be-behind-mahara-prison-1785688948</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக நீதி அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் நிலவும் அதிகளவிலான இடநெருக்கடியும் ஒரு காரணியாக இருக்கலாம் என்ற போதிலும் சதித் திட்டம் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.</p><p> 
முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த மோதல் கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்திற்கும் இடையே மட்டுமே ஏற்பட்டுள்ளது எனவும் வன்முறையைத் தூண்டுவதற்கு வெளியில் உள்ள ஏதேனும் சக்திகள் பின்னணியில் இயங்கியுள்ளனவா என்பது குறித்தும் அரசாங்கம் விசாரித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>போதைப்பொருள் புழக்கம்</h2><p>
போதைப்பொருட்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை காரணமாக சிறைகளுக்குள் போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதுவே கைதிகளிடையே அதிருப்தியையும் இந்த வன்முறையையும் தூண்டியிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b69d3045-e8bb-4b89-ba04-9c0a9baf73d8/26-6a6f7375ce182.webp' /></p><p>
சிறைகளில் உள்ள நெரிசலை மட்டுமே இதற்குக் காரணமாகக் கூறிவிட முடியாது என்றாலும், அதனைச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>போதைப்பொருள் தொடர்பான சிறு குற்றங்களுக்குப் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துதல் மற்றும் அரச பகுப்பாய்வாளர் அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல் போன்ற சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போது சுமார் 23,000 கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட அமலாக்கத்தின் மூலம் மட்டுமே போதைப்பொருள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும், சமூக அளவில் போதைப்பொருளுக்கான தேவைக் குறைப்பைக் கொண்டுவர சமூகத்தின் கூட்டுப் பங்களிப்பு அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மஹர சிறை வன்முறையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 கைதிகள் உடனடியாக வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாக நடக்க வாய்ப்பில்லை என்பதால், வெளிச்சதிகளின் பங்களிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T17:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு ட்ரம்பை சவூதி அரேபியா தூண்டியிருக்கலாம் - அமெரிக்கப் பேராசிரியர் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-encouraged-trump-negotiate-iran-1785688192"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-encouraged-trump-negotiate-iran-1785688192</id>
            <summary type="text">அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரைக் கட்டுப்படுத்தும்
இராஜதந்திர முயற்சிகளில் கட்டார், பாகிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகளுடன் சவூதி
அரேபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரைக் கட்டுப்படுத்தும்
இராஜதந்திர முயற்சிகளில் கட்டார், பாகிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகளுடன் சவூதி
அரேபியாவும் நேரடியாகக் களம் இறங்கியிருப்பது ஒரு முக்கியமான
திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>முக்கியமான தேவை</h2><p>
</p><p>
சவூதி அரேபியா, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிடம் தனிப்பட்ட முறையில்
பேசியதன் காரணமாகவே, அவர் போருக்குப் பதிலாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கான
சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கியிருக்கலாம் என அமெரிக்காவின்
விஸ்கான்சின்-ஈக்ளேர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்லின் ஹார்டிங்கர்
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a87b075-215b-455f-be1d-5a749d0746ed/26-6a6f72c87c731.webp' /></p><p>
</p><p>
மத்திய கிழக்கின் மூத்த தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் முன்னின்று
பொறுப்பேற்பதற்கு சவூதி அரேபியாவின் இந்த முயற்சி வழிவகுத்துள்ளது.</p><p>

பதற்றமான சூழல் நிலவியபோதிலும் இரு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான
வார்த்தைகளைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்துவதே தற்போதைய
இராஜதந்திரத்தின் மிக முக்கியமான தேவையாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T16:40:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் எதிர்க்கட்சி கிடையாது – லால்காந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-opposition-in-srilanka-now-1785687632"></link>
            <id>https://tamilwin.com/article/no-opposition-in-srilanka-now-1785687632</id>
            <summary type="text">நாட்டில் தற்பொழுது எதிர்க்கட்சியொன்று ஒன்று கிடையாது என விவசாய அமைச்சர் கே டி லால் காந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் பழைய அரசியல் மீண்டும் உருவாவதற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்பொழுது எதிர்க்கட்சியொன்று ஒன்று கிடையாது என விவசாய அமைச்சர் கே டி லால் காந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் பழைய அரசியல் மீண்டும் உருவாவதற்கு வாய்ப்புகள் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
நாட்டு மக்களுக்கு இது பெரும் அதிர்ஷ்டம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>எதிர்க்கட்சியினர் மீண்டும் பழைய அரசியலை உருவாக்க முயற்சிக்கின்றார்கள் எனவும் எனினும் அது நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99070fbe-a1bb-49dd-91bf-b25c83292d7a/26-6a6f6e5289fe2.webp' /></p><p>
நாட்டில் எதிர்க்கட்சிகள் இல்லாத காரணத்தினால் சில ஊடக நிறுவனங்கள் தங்களை எதிர்க்கட்சிகளாக மாற்றிக் கொள்ள முனைகின்றன என தெரிவித்துள்ளார்.</p><p>
அவ்வாறான சூழ்நிலையில் வங்குரோத்து அடைந்த அரசியல் கட்சிகளின் குணாதிசயங்கள் ஊடகங்களில் ஊடாக வெளிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்க்கட்சிகளின் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்த முனைந்து ஊடகங்கள் வங்குரோத்து அடைந்து விடும் என்பதனை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>
பழைய அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை சில ஊடக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>பழைய அரசியல் கலாச்சாரத்தின் கோரமுகம் அந்த துர்நாற்றம் சில ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>மக்களினால் தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஊடகங்களின் ஊடாக மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன ஆனால் அது அவ்வாறு நடக்காது எனவும் பொய்களை ஜோடனை செய்து வெளிப்படுத்த முடியுமே தவிர அரசியல் ரீதியாக வெற்றியடைய முடியாது என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T16:31:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/annual-festival-historic-sri-mamangeswarar-temple-1785685650"></link>
            <id>https://tamilwin.com/article/annual-festival-historic-sri-mamangeswarar-temple-1785685650</id>
            <summary type="text">கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை(3) கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை(3) கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று(2) மாலை கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு
நடைபெற்றது.
</p><p>மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட கிழக்கிலங்கையின்
வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்
வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார்
ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று பாரம்பரிய கலாசார கலைஞர்களின் பவனியுடன்
கொடிச்சீலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.</p><p></p><h2>தமிழர்களின் வரலாறு</h2><p>
</p><p>இலங்கையில் தமிழர்களின் வரலாற்றினை உலகுக்கு எடுக்காட்டும் மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தில் இராம பிரான் வழிபாடுகளை மேற்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/927b6bee-6516-4afe-8703-39cd7553141d/26-6a6f6994a3c9a.webp' /></p><p>
</p><p>இராமபிரானால் தண்டம் ஊன்றி உருவாக்கப்பட்ட தீர்த்தக்குளம் காணப்படுகின்றது.
அதில் உயிர்நீர்த்தவர்களுக்கு பிதிர்கடன்களை நிறைவேற்றும் ஆடிஅமாவாசை
தீர்த்தமாடும் தீர்த்தக்கரையாக மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளம் காணப்படுகின்றது.
</p><p>நாளை காலை விசேட பூஜைகள் நடைபெற்று நண்பகல் 12.00மணியளவில் கொடியேற்ற
நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p>
பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 11ஆம் திகதி தேர்
உற்சவம் நடைபெறவுள்ளதுடன் 12ஆம் திகதி ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்
நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T16:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு - சுமந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-must-take-responsibility-says-sumanthiran-1785685320"></link>
            <id>https://tamilwin.com/article/govt-must-take-responsibility-says-sumanthiran-1785685320</id>
            <summary type="text">&amp;nbsp;சிறைச்சாலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் இதனால் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறைச்சாலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் இதனால் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p> சிறைச்சாலைகளில் நெரிசல் காரணமாக பிரச்சினைகள் ஏற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஒரு கைதி தடுத்து வைக்கப்பட வேண்டிய இடத்தில் நான்கு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f76077-89fd-4423-bfe6-eae59e568db2/26-6a6f654a78a0b.webp' /></p><p>
மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த மோதல் சம்பவம் தொடர்பில் வருத்தத்தை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சிறைச்சாலைகளுக்குள் கைதிகளுக்கு இடையிலோ அல்லது வேறு விதமான மோதல்கள் வெடிப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T15:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நீடிக்கும் கடும் வறட்சி: விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-drought-persists-in-britain-1785682605"></link>
            <id>https://tamilwin.com/article/severe-drought-persists-in-britain-1785682605</id>
            <summary type="text">பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி சூழல் நீடித்தால்,
நாட்டில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்
என்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி சூழல் நீடித்தால்,
நாட்டில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்
என்று தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாம் பிராட்ஷா
எச்சரித்துள்ளார்.</p><p>

இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வேல்ஸ் முழுவதிலும் வறட்சி
நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்குக்
குடிநீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த ஆண்டு கோதுமை மற்றும் ஓட்ஸ் விளைச்சல் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புல் வளராததால் கால்நடை வளர்ப்போர்
குளிர்காலத்திற்கான தீவனங்களை இப்போதே பயன்படுத்தும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளதாகவும் பிராட்ஷா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நிதியுதவி</h2><p>
</p><p>
மேலும், காய்கறி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததால்,
உள்நாட்டு உணவு உற்பத்தி குறைந்து, விளைச்சல் செலவும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec006e8e-ff21-4b53-89ea-412b12ccdaae/26-6a6f5aaf3a3ad.webp' /></p><p>
</p><p>
நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு நீர் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால்,
மழைநீரைச் சேமிக்க புதிய நீர்த்தேக்கங்களைக் கட்ட அரசு நிதியுதவியும்
வரிவிலக்குகளும் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>தீவிர வெப்ப அலை</h2><p>

இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 8 சதவீத மழையே பெய்துள்ளது. இது
1911-ஆம் ஆண்டில் பதிவான குறைந்தபட்ச மழைப்பொழிவு சாதனையை விடவும் மிகக்
குறைவானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d33b088-43dd-4b95-8a7d-a3b7f66eb94e/26-6a6f5aafe4fc6.webp' /></p><p>
</p><p>
பிரித்தானியா மட்டுமன்றி இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் தீவிர
வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், உணவுப்
பொருட்கள் விநியோகமும் பெரும் சவாலாக மாறியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T15:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சுற்றுலா விமானம் விபத்து: 13 பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-plane-crash-in-peru-1785680742"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-plane-crash-in-peru-1785680742</id>
            <summary type="text">&amp;nbsp;பெரு நாட்டின் புகழ்பெற்ற தொல்பொருள் தளமான நாஸ்கா லைன்ஸ் பகுதியை
வான்வழியாகப் பார்வையிடச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று
விபத்துக்குள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெரு நாட்டின் புகழ்பெற்ற தொல்பொருள் தளமான நாஸ்கா லைன்ஸ் பகுதியை
வான்வழியாகப் பார்வையிடச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று
விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை தெற்கு பெருவின் சொகோஸ் பகுதியில் நடந்துள்ளதாக
அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>விமான விபத்து</h2><p>
</p><p>
'எரோடியானா' என்ற உள்ளூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான 'செஸ்னா கேரவன்
C-208' ரக சிறிய விமானம், பிஸ்கோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச்
சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a33046-449c-435f-834a-72a14799b11f/26-6a6f5cf2b02e7.webp' /></p><p>

இதில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.</p><p>

மதியம் 1:00 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர நிலை குறித்து
தகவல் தெரிவித்த சில நிமிடங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டு, விமானம்
தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.</p><p></p><h2>வறண்ட வானிலை</h2><p>
</p><p>
விபத்து நடந்தவுடன் தீயணைப்பு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு
விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அதில் இருந்தவர்களைக்
காப்பாற்ற முடியாமல் போனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa24f144-f42c-4b98-b291-2142ca03ea3a/26-6a6f5cf36e283.webp' /></p><p>
</p><p>
காற்று வீச்சு மற்றும் வறண்ட வானிலை காரணமாக இவ்விபத்து நிகழ்ந்ததா அல்லது
வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து பெரு நாட்டின்
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-02T15:06:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-dealer-arrested-1785682203"></link>
            <id>https://tamilwin.com/article/drug-dealer-arrested-1785682203</id>
            <summary type="text">சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை
சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை
சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த கைது நடவடிக்கை இன்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


போதைப்பொருள் வர்த்தகர் கைது</h2><p>
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்த சுற்றிவளைப்பு
நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dd4a982-ff39-4b36-9c81-a3732d6c2fbd/26-6a6f59711e6d8.webp' /></p><p> </p><p>

இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ்
போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி, நிறுத்தல் தராசு மற்றும்
பிளாஸ்டிக் குழாய்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு 3 பிடி விறாந்துகள் உள்ள நிலையில்
தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T14:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனத்தின் சுயத்தைத் தொலைத்த இன்றைய தலைமுறை குற்றவாளிகளே! – அனல் பறக்கும் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-hindu-college-colombo-hindu-college-debate-1785681236"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-hindu-college-colombo-hindu-college-debate-1785681236</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விவாத மன்றம் தற்போது நடைபெற்று வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விவாத மன்றம் தற்போது நடைபெற்று வருகிறது.</p><p>

"இனத்தின் சுயத்தைத் தொலைத்த இன்றைய தலைமுறை குற்றவாளிகளே!" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விவாதத்தில், இரு கல்லூரிகளின் பழைய மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வாதிட்டு வருகின்றனர்.
</p><p>
விரிவுரையாளர் சிவகுருநாதன் கேசவன் நடுவராக இந்த விவாதத்தை வழிநடத்தி வருகிறார்.
</p><p>
இன்றைய தலைமுறையின் இன அடையாளம், மொழி, பண்பாடு மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான பல்வேறு கருத்துகள் இந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. </p><p>பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று, நிகழ்வை நேரலையில் பார்வையிட்டு வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1H-rlmymT6I" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T14:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் பதவி காலத்தில் அநுரவால் நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-recomended-pujith-1785658691"></link>
            <id>https://tamilwin.com/article/anura-recomended-pujith-1785658691</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் அநுரகுமார உள்ளிட்ட தரப்பினர் ஊழல் ஒழிப்பு தொடர்பான ஏதோ ஒரு அமைப்பில் அங்கம் வகித்தனர் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊழலை ஒழிக்க பதவிக்கு வந்த பூஜித்</h2><p>ஊழல்களை ஒழிப்பதற்கு எங்களுக்கு இந்த பொலிஸ்மா அதிபர் தான் தேவை என்று பூஜித் ஜயசுதந்தரவை, அநுரகுமாரா தரப்பினரே பரிந்துரை செய்தனர் என தெரிவித்துள்ளார்.</p><p>ரணில் விக்ரமசிங்கவை வீதியில் கண்டால் இதனை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என விமல் வீரவன்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62bf550e-4abf-4df3-b0b7-74765578b098/26-6a6efd44e7907.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கோரிக்கைக்கு இணங்கவே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>தமக்கு பூஜித் ஜயசுந்தரவடன் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்றும், பூஜித் பொாலிஸ் மா அதிபராக கடமை ஆற்றிய காலப்பகுதியில் போலி கடவுச்சீட்டு விவகாரம் ஒன்றில் தம்மை சிக்கவைத்தனர்.</p><p>இருப்பினும், அந்த குற்றச்சாட்டுகளில் நான் குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்திருந்ததாகவும், அதனால் அவருக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T13:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றிலேயே இல்லாத உச்சக்கட்ட வெப்பம்: தென்கொரியாவில் 42.5 பாகை செல்சியஸ் பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/south-korea-records-42-5-degrees-celsius-1785677538"></link>
            <id>https://tamilwin.com/article/south-korea-records-42-5-degrees-celsius-1785677538</id>
            <summary type="text">தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி
வருகிறது. அந்நாட்டின் வானிலை பதிவு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக,
தென்கிழக்கு நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி
வருகிறது. </p><p>அந்நாட்டின் வானிலை பதிவு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக,
தென்கிழக்கு நகரமான யாங்சானில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 42.5 பாகை செல்சியஸ்
வெப்பம் பதிவாகி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>

கொரியா வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, யாங்சான் நகரில் தொடர்ச்சியாக
ஐந்தாவது நாளாக வெப்பம் 40 பாகை செல்சியஸைக் கடந்துள்ளது.</p><p></p><h2>வெப்ப அலை எச்சரிக்கை</h2><p>

இதன் காரணமாக நாட்டின் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் அவசரகால வெப்ப அலை
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2765d76-c222-4bc9-91c3-290ff5c88686/26-6a6f4ba9493ba.webp' /></p><p> </p><p>கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்கொரியாவில் வெப்ப
அலை நாட்களின் சராசரி எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 19
நாட்களாக உயர்ந்துள்ளது.
</p><p>
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இந்த தீவிர வெப்பத்திற்கு
முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த தீவிர வெப்பநிலை தென்கொரியாவுடன் மட்டும் நிற்காமல் உலகம் முழுவதும்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p></p><h2>கடும் வறட்சி</h2><p> </p><p>அண்டை நாடான ஜப்பானின் 30 மாகாணங்களில்
'வெப்ப' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2213289-f475-4b01-b076-1d1f61ebc6ef/26-6a6f4ba9f0f2c.webp' /></p><p>
</p><p>
அதேபோல், ஐரோப்பிய நாடுகளான கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய
நாடுகளில் கடுமையான வெப்பம் மற்றும் பலத்த காற்றினால் காட்டுத்தீ வேகமாகப்
பரவி வருகிறது.
</p><p>
வட ஆபிரிக்க நாடுகளான துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் அமெரிக்காவின்
மேற்குப் பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்ப அலை காரணமாக மக்கள்
பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:52:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676091"></link>
            <id>https://tamilwin.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676091</id>
            <summary type="text">அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>வறட்சியான வானிலை</h2><p> 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e698f07c-10dc-42bd-8399-9fdd008eb70f/26-6a6f4515a73aa.webp' /></p><p> </p><p>

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p> 

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcfe3a6c-db8f-4bba-be08-d212fbf637e9/26-6a6f451690c3b.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:30:19+00:00</updated>
        </entry>
    </feed>
