<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-10T00:46:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தில் நாமலே புலம்பிய இரகசியம்! இருவரை தீர்த்து கட்டிய மர்மம் - தப்பிய ஒருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-issue-in-sri-lanka-1788977933"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-issue-in-sri-lanka-1788977933</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர் தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன் மீதான வழக்குகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர் தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தன் மீதான வழக்குகள் சிக்கலானவை என்பதால், பிணை கிடைக்க குறைந்தது ஐந்து முதல் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம் என அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 சில சந்தர்ப்பங்களில் பிணை கிடைக்காமலும் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>


இந்தநிலையில், ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் முக்கிய சாட்சிகளாக கருதப்பட்ட கபில சந்திரசேன மற்றும் ஊடகவியலாளர் ரஜீவ் பிரகாஷ் ஜெயவீர ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நிமல் பெரேரா முக்கிய சாட்சியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நிமல் பெரேரா தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவர் இலங்கைக்கு திரும்பினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

நாமல் ராஜபக்ச எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>அவரது விடுதலை சட்ட நடவடிக்கைகளின் போக்கைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u2NuDGRtdR8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:37:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் - வெளிவரும் முக்கிய ஆவணங்கள்! ராஜபக்ச குடும்பத்திற்கு மீண்டும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-against-rohitha-yositha-rajapaksha-1789000004"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-against-rohitha-yositha-rajapaksha-1789000004</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, கண்டி தொலஸ்பகே பகுதியில் அமைந்துள்ள 135 ஏக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, கண்டி தொலஸ்பகே பகுதியில் அமைந்துள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் காமந்த துஷார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.</p><p>

குறித்த காணி தொடர்பான பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும் உறுதி ஆவண இலக்கம் மற்றும் வரைபட இலக்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக காமந்த துஷார தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், குறித்த காணியில் 1918ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பங்களா தொடர்பான தகவல்கள் மற்றும் ஏனைய ஆவணங்களும் தம்மிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்</p><p>.

இந்நிலையில், முறைப்பாட்டாளரான காமந்த துஷார தனது வாக்குமூலத்தை வழங்குவதற்காக பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த 135 ஏக்கர் காணி தொடர்பான விசாரணையை குற்றத்திலிருந்து உருவான சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (PCID) முன்னெடுத்து வருகிறது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது லங்காசிறியின் நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/shVEUuotw3g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்ச - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் முக்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/permission-granted-to-hear-contempt-court-charges-1788998061"></link>
            <id>https://tamilwin.com/article/permission-granted-to-hear-contempt-court-charges-1788998061</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த உத்தரவு நேற்றுமுன்தினம் 8ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>சுரேஷ் சலே&nbsp;கைது</h2><p>
</p><p>
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய 6 பேருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக கடந்த ஜூலை 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe04cc62-c608-43bf-ab20-fe0bfddbb27d/26-6aa1f32e34c13.webp' /></p><p>
</p><p>
இதன்போது குறித்த 6 பேரும் தெரிவித்த சில கருத்துகள் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த விடயம் தொடர்பான முறைப்பாடு முதலில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>

இந்நிலையில், வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு போதுமான காரணங்கள் உள்ளதா என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலிக்கும்.

போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் தீர்மானித்தால், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டு அதன் பின்னர் வழக்கு விசாரணை நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2db042f5-300b-4b66-9155-5815b47bd43b/26-6aa1f32f2ca40.webp' /></p><p>குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் தங்கள் தரப்பு சாட்சிகளை முன்வைத்து, தங்களது நிலைப்பாட்டை விளக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
</p><p>
இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இடம்பெற்றதா இல்லையா என்பது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-not-turn-back-1788998106"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-not-turn-back-1788998106</id>
            <summary type="text">நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் முற்றாக இல்லாதொழித்துள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் முற்றாக இல்லாதொழித்துள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
</p><p>சமூகச் சீரழிவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பாதுகாப்பற்ற நிலைமை முற்றாக ஒழிப்பதில் தற்போதைய அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக 
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய பாதகமான சூழ்நிலைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865f556a-384f-4932-a5f4-cfcabf3fd79f/26-6aa1f1db99587.webp' /></p><p>
</p><p>அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், அதனை தற்காலிகமாகவோ அல்லது நிறுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்தப் பயணம் முன்னோக்கியே செல்லும், ஒரு கணமேனும் தற்காலிகமாக நிறுத்தக்கூடிய ஒரு முற்றுப்புள்ளி, அல்லது ஒரு கால்புள்ளியை வைக்கக்கூடிய மட்டத்தில் நாடு இப்போது இல்லை என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
</p><p>நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்தி, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தற்போதுள்ள சாதகமான நிலையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் சரோஜா போல்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T23:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிக் கிரியைக்கு சென்ற தாயும் மகனும் விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-son-dies-in-an-accident-1788967752"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-son-dies-in-an-accident-1788967752</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தொன்றில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மரிதன்கடவல நகரில் நேற்று(9) காலை 10.35 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தொன்றில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

மரிதன்கடவல நகரில் நேற்று(9) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. </p><p>

தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியை நிகழ்விற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2><b>தாயும் மகனும் பலி</b></h2><p> 

இவ்வாறு உயிரிழந்தவர்கள், 47 வயதுடைய மதுஷானி குணசிங்க மற்றும் அவரது மகனான 24 வயதுடைய நிகேஷ் ருவந்த தில்ஷன் என்பவர்களாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82ebf32-8c1a-42c2-a69a-520e71e1e129/26-6aa187ff8745e.webp' /></p><p>உயிரிழந்த இளைஞன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது. </p><p>


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T23:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-meets-india-defence-minister-rajnath-singh-1788996743"></link>
            <id>https://tamilwin.com/article/harini-meets-india-defence-minister-rajnath-singh-1788996743</id>
            <summary type="text">இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(9) ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(9) நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>

இந்தச் சந்திப்பின்போது, நாடு கடினமான காலகட்டங்களை எதிர்கொண்ட தருணங்களில்
இந்திய அரசு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்குப் பிரதமர் தனது பாராட்டுக்களைத்
தெரிவித்தார்.</p><h2>இலங்கை - இந்தியா</h2><p>

குறிப்பாக, 'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இந்தியா வழங்கிய
உதவிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், அனர்த்த நிவாரண உதவிகளுக்காக இந்தியா
'சாகர் பந்து நடவடிக்கை'யை ஆரம்பிக்கப்பட்டதையும் வரவேற்றார்.
</p><p>
பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இராஜதந்திர மற்றும் பொருளாதார
ஒத்துழைப்புகளுக்கும் அப்பாலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5ebf43-aba5-448e-b0cb-1229fe4a3b4e/26-6aa1ee9f04abe.webp' /></p><p> </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால
நட்புறவின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கலாசார, வரலாற்று மற்றும் சமயத்
தொடர்புகள் விளங்குகின்றன. வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் கல்வி
உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா மிக முக்கிய பங்காளியாகத் திகழ்கின்றது.</p><p>

பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால ஒத்துழைப்பைத்
தொடர்ந்து பேணி, மேலும் வலுப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற மற்றும் அரச துறைகள் உள்ளிட்ட திறன் அபிவிருத்தித் துறைகளில் இரு
நாடுகளும் ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p> </p><p>இது நிறுவன ரீதியான ஆற்றல்களைப்
பலப்படுத்துவதற்கும் நல்லாட்சியை முன்னெடுப்பதற்கும் பங்களிப்புச்
செய்கின்றது என குறிப்பிட்டார்.</p><p>
சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன்
அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0d130b-fd8a-419c-b4fb-fe7f1ceeb659/26-6aa1ee9fb5448.webp' /></p><p> </p><p>அறிவுப் பரிமாற்றம்,
புத்தாக்கம் மற்றும் திறன் அபிவிருத்தியைப் பலப்படுத்துவதற்காக, இந்திய
தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற விசேட கல்வி நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள்
உட்பட இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கான
சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்தியப் பாதுகாப்பு
அமைச்சின் இணைச் செயலாளர் கலாநிதி அமித் தெலாங், இந்திய வெளியுறவு அமைச்சின்
இணைச் செயலாளர் பிரசன்னா ஸ்ரீவஸ்தவா, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,
பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டலுவல்கள்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T23:41:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் வாங்கியது லஞ்சமா நன்கொடையா! குழப்பத்தில் மகிந்த தரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/was-what-namal-received-a-bribe-or-a-donation-1788987416"></link>
            <id>https://tamilwin.com/article/was-what-namal-received-a-bribe-or-a-donation-1788987416</id>
            <summary type="text">நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் லஞ்சமா அல்லது நன்கொடையா என்பது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பில் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், லஞ்சம் பெறுவதும் வழங்குவதும் தவறு என சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், பணத்தை முதலில் வழங்கியதாக கூறப்படும் நிமால் பெரேராவையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கருதும் தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>
மறுபுறம், நாமல் ராஜபக்ச தரப்பினர், குறித்த பணம் லஞ்சமாக பெறப்படவில்லை என்று உதயகம்மன்பில குறிப்பிடுகின்றார்.
</p><p>
இவ்விவகாரத்தில் பணம் வழங்கியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இரு தரப்பினரிடமும் சமமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/25vMZicgGkI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T23:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone 18 Pro வந்துவிட்டது! Apple செய்த அதிரடி மாற்றங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apple-debuts-iphone-18-pro-and-iphone-18-pro-max-1788989510"></link>
            <id>https://tamilwin.com/article/apple-debuts-iphone-18-pro-and-iphone-18-pro-max-1788989510</id>
            <summary type="text">ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஐபோன்களில் கேமரா, செயல்திறன், பேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
புதிய ஐபோன்களில் கேமரா, செயல்திறன், பேட்டரி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் முக்கிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>புதிய அம்சங்கள்</h2><p> </p><p>2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட A20 Pro chip இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. </p><p>புதிய thermal system மூலம் நீண்ட நேரம் அதிக செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதன்முறையாக ஐபோனின் 48MP Fusion Main Camera-வில் variable aperture வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Meet iPhone 18 Pro and iPhone 18 Pro Max! We’ve made huge advancements to our camera (hello, variable aperture!), battery life, and performance, making this lineup our most powerful and intelligent yet. <a href="https://t.co/y1eeCB0O9O">pic.twitter.com/y1eeCB0O9O</a></p>&mdash; Greg Joswiak (@gregjoz) <a href="https://x.com/gregjoz/status/2097779754720178234?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதன் மூலம் வெளிச்சத்துக்கு ஏற்ப aperture தானாக மாறுவதுடன், பயனர்கள் கேமரா அமைப்புகளை கைமுறையாகவும் கட்டுப்படுத்த முடியும்.

புகைப்படங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உதவும் Apple Reference Image தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக செய்தி புகைப்படக்காரர்கள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

புதிய மாதிரிகளில் iOS 27 மற்றும் புதிய Siri AI வசதியும் இடம்பெற்றுள்ளது.</p><h2>செப்டெம்பர்&nbsp; முதல்</h2><p> </p><p>குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களின் context-ஐ புரிந்துகொண்டு பயனர்களுக்கு உதவும் வகையில் Siri AI உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் beta பதிப்பாக வெளியாகிறது.</p><p>

iPhone 18 Pro-ன் eSIM-only பதிப்பு 36 மணி நேரம் வரையிலும், Pro Max 45 மணி நேரம் வரையிலும் video playback வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e2c595-96a0-470c-a246-2cde3739f55d/26-6aa1d48768f64.webp' /></p><p> </p><p>மேலும், சுமார் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

கருப்பு, வெள்ளி, Glacier மற்றும் புதிய Burgundy நிறங்களில் வெளியாகும் இந்த போன்களின் சேமிப்பு திறன் 256GB முதல் 2TB வரை உள்ளது.
</p><p>
அமெரிக்காவில் iPhone 18 Pro-ன் ஆரம்ப விலை 1,199 டொலர், Pro Max-ன் ஆரம்ப விலை 1,299 டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>செப்டெம்பர் 12 முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில், செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வருகின்றது என்று கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-09T22:09:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபையில் தனது கைது குறித்து பேச மறுத்த நாமல்.. வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728"></link>
            <id>https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&nbsp;</p><p>இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விடயம் குறித்து பேசுவது நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்பதால், நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது தனது அண்மைய கைது குறித்து பேசுவதைத் தவா்த்துக் கொண்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்தார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற நடைமுறை</h2><p>இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மதுகொட, நாடாளுமன்றத்தை குண்டுவைத்து தகர்க்கவும், வளாகத்திற்கு தீ வைக்கவும் முயன்ற வரலாற்றைக் கொண்ட சில அரசாங்க உறுப்பினர்களைப் போல் அல்லாமல், நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை நன்கு அறிந்தவர் என குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa60ecf8-dda5-43a4-b07f-b7addc54b7bd/26-6aa13de7f2b69.webp' /></p><p>

நாமல் ராஜபக்ச தனது கைது குறித்தும் நீதித்துறையின் நடத்தை குறித்தும் பேசுவார் என எதிர்பார்த்ததாக தெரிவித்த நீதித்துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.</p><p>

இவ்விடயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது இது குறித்து கருத்துத் தெரிவிக்காமல் தவிர்த்ததன் மூலம் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற நடைமுறைக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக மதுகொட மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6Kzmt4sOp9A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T21:17:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அணுசக்தி விவகாரம்… உலக அரங்கில் வெடித்த புதிய மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/effort-to-refer-iran-to-the-un-security-council-1788984478"></link>
            <id>https://tamilwin.com/article/effort-to-refer-iran-to-the-un-security-council-1788984478</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA)
மூலம் அந்நாட்டை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்க
அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA)
மூலம் அந்நாட்டை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்க
அமெரிக்கா மற்றும் மூன்று ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குச்
சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை ஊடாகக் கடும்
எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.</p><p>

ஈரானை ஐநா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்கும் இத்தகைய நடவடிக்கை
சட்டபூர்வமான அடிப்படையற்றது என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும்
நோக்கம் கொண்டது என்றும் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>அரசியல் உள்நோக்கம்</h2><p>
அத்துடன், இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண்பதாகக் கூறும் நாடுகளின் கூற்றுக்கு
இது முரணாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஈரானின்
அணுசக்தி மையங்களை ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டதைக் சுட்டிக்காட்டி,
இவ்விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்குமாறு சர்வதேச அணுசக்தி
முகவரகத்தின் ஆளுநர் சபையைக் கேட்டுக்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e1e486e-867e-4c84-acef-f7f9e2f52757/26-6aa1bf26926b2.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் ஈரான் ஆய்வுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற
குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய
மூன்றும் சாடியுள்ளன.</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானிய அணுசக்தி மையங்கள் மீது
மேற்கொண்ட தாக்குதல்களே, ஈரான் சர்வதேச ஆய்வாளர்களுக்கு அனுமதி மறுத்தமைக்கு
முதன்மையான காரணம் என இந்நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
</p><p>
எனவே, பொறுப்புள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் இதன் விளைவுகளைக் கவனத்தில்
கொண்டு, குறித்த வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்க வேண்டும்
என்றும் அவை கேட்டுக்கொண்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T20:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை அதிர வைத்த ஈரான்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் - வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-malfunctioned-iran-video-capture-submarine-1788980733"></link>
            <id>https://tamilwin.com/article/us-malfunctioned-iran-video-capture-submarine-1788980733</id>
            <summary type="text">ஈரான்

ஹோர்முஸ் நீரிணை நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கருவியை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான்

ஹோர்முஸ் நீரிணை நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கருவியை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், Dive-LD என அடையாளம் காணப்பட்ட இந்த ஆளில்லா நீருக்கடிக் கருவி, சிக்கலான உளவுத்துறை நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், உலகின் நவீன நீருக்கடித் தொழில்நுட்பங்களில் ஒன்றாக இந்தக் கருவி விளங்குவதாகவும் IRGC தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாக பறந்த MQ-9 Reaper ஆளில்லா விமானத்தையும் தங்களது வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது.</p><h2>

அமெரிக்காவின் பதில்
</h2><p>
ஈரானின் அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம், ஒரு ஆளில்லா நீருக்கடிக் கருவி அதற்கு முந்தைய நாளில் செயலிழந்ததாக தெரிவித்துள்ளது.</p><p> 

எனினும், ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் Dive-LD அதுதானா என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.

அந்தக் கருவி பிராந்திய கடற்பரப்பை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அது பழைய மொடல் என்பதுடன், முக்கியமான தகவல்களைச் சேகரிக்கவோ ரகசிய சோனர் அல்லது ரேடார் கருவிகளை எடுத்துச் செல்லவோ இல்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Footage released by Iranian media shows what the IRGC claims is an American Dive-LD unmanned submarine captured today. Iran says the vessel is now in its possession. <a href="https://t.co/POWlEHHnd5">pic.twitter.com/POWlEHHnd5</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2097390208249389519?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
Anduril நிறுவனத்தின் தகவல்படி, Dive-LD சுமார் 10 நாட்கள் வரை தொடர்ந்து செயல்படக்கூடியது. மேலும், சுமார் 6,000 மீட்டர் ஆழம் வரை செல்லும் திறன் கொண்டது. ஒரு கருவியின் விலை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, ஈரான் மீது அமெரிக்கா தனது அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது. </p><p>அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற 5 டேங்கர் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

மேலும், ஈரானின் மீதமுள்ள 27 விமான நிறுவனங்களை அமெரிக்க கருவூலத் துறை தடுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
</p><h2>
ஈரானின் நிலைப்பாடு</h2><p>

ஈரான் ஜனாதிதபி மசூத் பெசெஷ்கியான், போரை விரும்பவில்லை என்றாலும், தங்கள் நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.</p><p>
ஈரான் தனது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து எதிர்த்து நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9126a40-c51c-40bb-a9a7-c9681f7351c2/26-6aa1b044b9a31.webp' /></p><p>
</p><p>பெப்ரவரி 28ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது கூட்டு தாக்குதல்களை நடத்தின. </p><p>

இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.</p><p>

இதன் தொடர்ச்சியாக ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடும் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p> இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆளில்லா நீர்மூழ்கிக் கருவி தொடர்பான இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T19:58:29+00:00</updated>
        </entry>
    </feed>
