<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-09T12:16:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானமாக இருக்கவும்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warns-to-be-cautious-about-hot-weather-1788955375"></link>
            <id>https://tamilwin.com/article/warns-to-be-cautious-about-hot-weather-1788955375</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. 

அதன்படி வட மத்திய, கிழக்கு மாகாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. </p><p>

அதன்படி வட மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவதானம் தேவைப்படும் நிலை</h2><p> </p><p>

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09.09.2026) வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் மேலும், பகல் வேளையில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண், அவதானம் தேவைப்படும் நிலையை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fc03c7d-bccb-42c4-a0da-030eef59c8b0/26-6aa14ca091b66.webp' /></p><p>
</p><p>
எனவே, இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:12:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[800 மில்லியன் ரூபா கொள்ளை: பிரதான சூத்திரதாரி கைது – திடுக்கிடும் பின்னணி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/800m-thalawathugoda-agency-robbery-arrested-1788955502"></link>
            <id>https://tamilwin.com/article/800m-thalawathugoda-agency-robbery-arrested-1788955502</id>
            <summary type="text">தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசேட சோதனையில் சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
</p><p>கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436750de-6c60-42ba-8548-791732847319/26-6aa14b7023c22.webp' /></p><p>
</p><p>கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி, முழங்காலிடச் செய்து தாக்குதல் நடத்தினர். </p><p>பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>
அவர் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கடன் சுமையில் இருந்துள்ளார்.</p><p>
அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண வீடொன்றில் தனக்கு ஏற்பட்ட பகிரங்க அவமானமும், கடன் சுமையுமே இந்தக் கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>
தனியாக இக்குற்றத்தைச் செய்ய முடியாததால், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். </p><p>அவர் மூலம் பொமிரியாவைச் சேர்ந்த மேலும் இருவர் இணைக்கப்பட்டனர்.
கொள்ளைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் கூடி திட்டமிட்டுள்ளனர்.
</p><p>ஹன்வெல்ல நிதி நிறுவனமொன்றில் பெறப்பட்ட வாடகை வாகனத்திற்குப் போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தி இக்குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர்.
</p><p>கொள்ளைக்குப் பிறகு கும்பல் மீண்டும் சித்தமுல்ல வீட்டிற்குச் சென்று கொள்ளைப் பொருள்களைப் பிரித்துக் கொண்டுள்ளது.</p><p> பிரதான சூத்திரதாரி: 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகள் என்பனவற்றையும் மற்ற இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>
பிரதான சூத்திரதாரி தனது பங்கிலிருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியாவிலுள்ள நண்பரிடம் பாதுகாப்பிற்காகக் கொடுத்துள்ளார். 1.3 மில்லியன் ரூபாயைக் கொண்டு அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்டுள்ளதுடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்ற கடன்களையும் அடைத்துள்ளார். </p><p>பொலிஸார் இவரின் பங்கில் 300,000 ரூபாவைத் தவிர மற்ற அனைத்துப் பணத்தையும் மீட்டுள்ளனர்.
ஏனைய சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T12:05:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றம் மீது ஜனாதிபதி அழுத்தம் கொடுக்கின்றாரா: முன்னாள் எம்.பி. ஜகத் குமார கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-exerting-pressure-on-the-judiciary-1788952354"></link>
            <id>https://tamilwin.com/article/president-exerting-pressure-on-the-judiciary-1788952354</id>
            <summary type="text">22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என ஜனாதிபதி அறிவித்திருப்பது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என ஜனாதிபதி அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்குச் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.</p><p>

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "ஒருபுறம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்துப்
பேசிக்கொண்டிருக்கும்போது, மறுபுறம் ஜனாதிபதி பல்வேறு கூட்டங்களில்
கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான வகையில் நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைக்கும்
எனக் கூறுகின்றார்.</p><h2>நீதித்துறை</h2><p>
</p><p>
நீதிமன்றம் என்ன கூறப் போகின்றது என்பதை மக்கள் எதிர்பார்க்கும் நிலையில்,
தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி முன்கூட்டியே கருத்து வெளியிடுவது நீதிமன்றத்
தீர்ப்பு ஜனாதிபதியின் கைகளில் இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை
ஏற்படுத்தும்.</p><p>

நாட்டில் தேர்தல் எதுவும் நடைபெறாத நிலையில் ஜனாதிபதி மக்கள் கூட்டங்களை நடத்த
ஆரம்பித்துள்ளார். இவ்வாறான அவசர மக்கள் சந்திப்புகள் மூலம் நீதித்துறைக்கு
அழுத்தம் கொடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7df6bab7-a089-4274-807a-82300a946f4f/26-6aa14a2f4c500.webp' /></p><p>
</p><p>
அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு எதையும்
செய்யவில்லை. மாறாக, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்
செல்வந்தர்களாகியுள்ள நிலையில், மக்கள் இரண்டு வேளை உணவைக் கூடப்
பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.</p><p>22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக எதிர்க்கட்சியை முழுமையாக அரசின்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, எதிர்வரும் தேர்தல்களை நடத்தாமல்
இருப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நோக்கி பயணித்த காருடன் மோதிய மோட்டார்சைக்கிள்! ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-kilinochchi-1788953823"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-kilinochchi-1788953823</id>
            <summary type="text">கிளிநொச்சி - ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (09-09-2026) பிற்பகல் வேளையில் இடம்பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் இன்று (09-09-2026) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p>கிளிநொச்சி இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரும், உமையாள்புரம்
பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.&nbsp;</p><h2>வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4894a82-a636-4727-b516-b8638a687ab4/26-6aa148ec8f200.webp' /></p><p>இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் அவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p>மேலதிக செய்தி - தேவந்தன்</p>]]></content>
            <updated>2026-09-09T11:57:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள்.. கல்வி அமைச்சின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/16000-uni-students-hostel-project-pm-harini-1788954039"></link>
            <id>https://tamilwin.com/article/16000-uni-students-hostel-project-pm-harini-1788954039</id>
            <summary type="text">16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதற்காக புதிய விடுதி கட்டுமானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று நாடாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதற்காக புதிய விடுதி கட்டுமானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். </p><p>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் கல்வி அமைச்சு மூலம் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் விடுதி புனரமைப்பு மற்றும் புதிய கட்டுமானங்களுக்காகக் கடன்கள் ஏதுமின்றி உள்நாட்டு நிதியிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;55 புதிய விடுதிகள்</h2><p> அத்துடன், சவூதி அபிவிருத்தி நிதியுதவியின் கீழ் வயம்ப மற்றும் சபரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட விடுதிகளுக்காக வெளிநாட்டு கடனுதவிகளும் ஒதுக்கிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aac86558-716c-4cd1-91ac-677382f02c1e/26-6aa1482f37c00.webp' /></p><p>

வவுனியா, யாழ்ப்பாணம் (கிளிநொச்சி வளாகம்), தென்கிழக்கு, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் சபரகமுவ போன்ற தங்குமிடப் பற்றாக்குறை நிலவும்,&nbsp; நகர்ப்புறமல்லாத பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை அளித்து 55 புதிய விடுதிகள் கட்டப்படவுள்ளன. </p><p>மேலும், தனியார் விடுதிகளுக்கான கட்டணங்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய கொள்கை ஒன்றைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரைவு செய்து வருகிறது. </p><p>இக்கொள்கை சுகாதாரம், பாதுகாப்பு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்வதோடு, பொது - தனியார் பங்களிப்புடன் நிலங்களை வழங்கி கூடுதல் விடுதிகளைக் கட்டுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:51:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 30வரை விதிக்கப்பட்ட காலக்கெடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciaboc-calls-for-written-reasons-by-september-30-1788951743"></link>
            <id>https://tamilwin.com/article/ciaboc-calls-for-written-reasons-by-september-30-1788951743</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், ஜூன் 30, 2026 என்ற நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பிறகு மற்றும் ஆகஸ்ட் 31, 2026 அன்றோ அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், ஜூன் 30, 2026 என்ற நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பிறகு மற்றும் ஆகஸ்ட் 31, 2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பித்த நபர்கள் மீது பொருந்தக்கூடிய வகையில் நிர்வாகத் தண்டனைகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.</p><p>

ஒரு அறிக்கையை வெளியிட்ட ஆணையகம், 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 90ஆம் பிரிவின்படி, தாமத நாட்களின் எண்ணிக்கை தொடர்பான இந்த நிர்வாக அபராதம் சட்டபூர்வமாக விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.</p><h2>எழுத்துபூர்வமான சமர்ப்பிப்புகள்</h2><p>எழுத்துபூர்வமான சமர்ப்பிப்பில், சமர்ப்பிக்கும் நபரின் தேசிய அடையாள அட்டை (NIC) எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று ஆணையகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/621bcad4-1db1-43a4-b0be-cf68e93cc144/26-6aa144f6cada7.webp' /></p><p>

 

தாமதத்திற்கான காரணங்களையும், அதற்கான துணை ஆவண ஆதாரங்களையும் 2026 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கத் தவறினால், அது தாமதத்திற்கான நியாயமான காரணத்தைக் காட்டத் தவறியதாகக் கருதப்படும் என்று மேலும் கூறியுள்ளது.
</p><p>&nbsp;“தாமதத்திற்கான காரணங்கள்” மின்னஞ்சல் சமர்ப்பிப்பின் தலைப்பில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
 

தபால் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் உறையின் மேல் இடது மூலையில், “தாமதத்திற்கான காரணங்கள்” குறிப்பிடப்பட வேண்டும்.
</p><p>
 

எழுத்துபூர்வமான சமர்ப்பிப்புகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்:
</p><p>
 

இயக்குநர் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புப் பிரிவு)

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆணையம்

எண் 36, மலலசேகர மாவத்த

கொழும்பு 07
</p><p>
 

மின்னஞ்சல்: ald@ciaboc.gov.lk
</p><p>
தொலைபேசி/தொலைநகல்: 0112587287

வாட்ஸ்அப்: 0767011954
</p><p>
 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:50:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலைப் போல என்னையும் கைது செய்திருக்கலாம்! ஆவலாக கேட்கும் சாமர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamara-s-new-reason-for-namal-s-arrest-1788953794"></link>
            <id>https://tamilwin.com/article/chamara-s-new-reason-for-namal-s-arrest-1788953794</id>
            <summary type="text">&amp;nbsp;நாமல் ராஜபக்சவைக் கைது செய்ததன் மூலம், இந்த அரசாங்கம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நாமல் தரப்பு ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு உதவி செய்துள்ளது, அது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாமல் ராஜபக்சவைக் கைது செய்ததன் மூலம், இந்த அரசாங்கம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நாமல் தரப்பு ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு உதவி செய்துள்ளது, அதுபோல என்னையும் கைது செய்து சுதந்திரக் கட்சியின் பேரணிக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

மேலும் அவர் தெரிவிக்கையில், </p><p>

“எமது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்து இந்த அரசாங்கம் தற்போது விளக்கமறியலில் வைத்திருக்கின்றது. ஆனால், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முறைமையே முழுமையாக தவறானது.&nbsp;</p><h2>என்னையும் கைது செய்திருக்கலாமே..</h2><p>முதலில், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கி நிமல் பெரேரா என்பவர், ஒரு திருடன். அவர் இந்த நாட்டில் கொள்ளையடித்து, சொத்துக்களைக் குவித்து, கோடீஷ்வரராக மாறிய பின்னர், தற்போது வெளிநாடொன்றில் சென்று வசிக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f785224-154a-4e69-b59a-a37bb53bd24c/26-6aa14618e0e1e.webp' />&nbsp; &nbsp;</p><p> 

அப்படி வெளிநாட்டில் சென்று வசிக்கும் ஒரு மோசடிக்காரர் வழங்கிய வாக்குமூலத்தின்படி இந்த அரசாங்கம் நாமலைக் கைது செய்துள்ளது.</p><p>முதலில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஒரு விடயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும், இலஞ்சம் கொடுப்பதும் தவறு, இலஞ்சம் பெறுவதும் தவறு.</p><p>

அப்படியாயின், இலஞ்சம் கொடுத்த நிமல் பெரேராவை முதலில் நாட்டுக்கு அழைத்து வந்து கைது செய்திருக்க வேண்டும். அதன் பின்னரே இலஞ்சம் பெற்றவரைக் கைது செய்திருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b8cba9d-f4fb-4917-8500-5a1db54ab73e/26-6aa1461995133.webp' /></p><p>

இந்த அரசாங்கம், நாமல் ராஜபக்சவைக் கைது செய்து, அவர் தலைமையில் 12ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டத்திற்கு சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. நாமல் ராஜபக்சவுக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கின்றது.</p><p> 

இதேபோல செப்டெம்பர் 2ஆம் திகதி எமது சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றும் இருந்தது.&nbsp; இந்த அரசாங்கம் அப்போது எமக்கு உதவி செய்திருக்கலாம். அந்தக் கூட்டத்தின்போது, என்னையும்&nbsp; கைது செய்திருந்தால், எங்களுடைய கட்சியின் கூட்டமும் வெற்றிபெற்றிருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/there-cant-be-two-laws-for-south-and-north-1788952617"></link>
            <id>https://tamilwin.com/article/there-cant-be-two-laws-for-south-and-north-1788952617</id>
            <summary type="text">முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>குறித்த விஹாரைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
எமது மக்கள் முல்லைத்தீவு விகாரைக்கு செல்ல ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b62ddd-bb33-44e9-b46a-a88096c402e2/26-6aa14420610e1.webp' /></p><p>
இதை செய்ய முடியாது எனவும் வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p> நாமல் ராஜபக்சவை கைது செய்யும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தரப்புக்கள் மகிழ்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும் தங்களால் அவ்வாறு மகிழ்ச்சி அடைய முடியாது என தெரிவித்துள்ளார்.</p><p>
ராணுவத்தைச் சேர்ந்த படை வீரர்கள் காதலிக்காது, திருமணம் செய்து கொள்ளாது 17 18 வயதிலேயே ராணுவத்தில் இணைந்து உயிர்த்தியாக்கம் செய்து இந்த நாட்டை பாதுகாத்தனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>சில ராணுவ படை வீரர்கள் முதல் முறை விடுமுறையை கூட பெற்றுக் கொண்டு வீடு திரும்ப முடியாது உயிரிழந்திருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>வடகிழ் சிங்கள மக்கள் செல்வதனால் வடக்கு மக்களே பயனடைகின்றார்கள் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
</p><p>ஒரே நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒவ்வொரு புலம்பெயர் அமைப்புகளுக்கு தேவையான வகையில் இந்த நாட்டை ஆட்சி செய்ய இடம் அளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>படைவீரர்கள் உயிர் தியாகம் செய்து இந்த நாட்டை பாதுகாத்தனர் எனவும் எனவே அவ்வாறான ஓர் பின்னணியில் நாட்டை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T11:33:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kandiah-bhaskaran-met-bishop-mannar-diocese-1788952586"></link>
            <id>https://tamilwin.com/article/kandiah-bhaskaran-met-bishop-mannar-diocese-1788952586</id>
            <summary type="text">மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு அன்ரனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை, தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.&amp;nbsp;குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு அன்ரனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை, தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.&nbsp;</p><p>குறித்த சந்திப்பானது, இன்று (09.09.2026) இடம்பெற்றது.&nbsp;</p><p>இதன்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை, தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.&nbsp;</p><p>மேலும்,&nbsp;மன்னார் மறைமாவட்ட ஆயருக்கு கந்தையா பாஸ்கரனால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da18f94-760c-48f8-a33f-74e5470873bc/26-6aa140ff94fae.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:18:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண் வர்த்தகர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-women-arrested-with-narcotics-worth-5-crore-1788950298"></link>
            <id>https://tamilwin.com/article/two-women-arrested-with-narcotics-worth-5-crore-1788950298</id>
            <summary type="text">இலங்கை பெண் வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெண் வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். </p><p>விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சந்தேகநபர்களை இன்று (09) காலை கைது செய்துள்ளனர்.</p><p>சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

கைதானவர்கள் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது. </p><p>

இவர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று முற்பகல் 10.55 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97a02279-d176-4897-ac9d-aaa0d00c05d7/26-6aa13e77c0920.webp' /></p><p> 

சந்தேகநபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 5 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபையில் தனது கைது குறித்து பேச மறுத்த நாமல்.. வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728"></link>
            <id>https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&nbsp;</p><p>இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விடயம் குறித்து பேசுவது நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்பதால், நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது தனது அண்மைய கைது குறித்து பேசுவதைத் தவா்த்துக் கொண்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்தார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற நடைமுறை</h2><p>இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மதுகொட, நாடாளுமன்றத்தை குண்டுவைத்து தகர்க்கவும், வளாகத்திற்கு தீ வைக்கவும் முயன்ற வரலாற்றைக் கொண்ட சில அரசாங்க உறுப்பினர்களைப் போல் அல்லாமல், நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை நன்கு அறிந்தவர் என குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa60ecf8-dda5-43a4-b07f-b7addc54b7bd/26-6aa13de7f2b69.webp' /></p><p>

நாமல் ராஜபக்ச தனது கைது குறித்தும் நீதித்துறையின் நடத்தை குறித்தும் பேசுவார் என எதிர்பார்த்ததாக தெரிவித்த நீதித்துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.</p><p>

இவ்விடயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது இது குறித்து கருத்துத் தெரிவிக்காமல் தவிர்த்ததன் மூலம் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற நடைமுறைக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக மதுகொட மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6Kzmt4sOp9A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:08:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு - தும்பங்கேணி பகுதியில் யானையொன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788951051"></link>
            <id>https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788951051</id>
            <summary type="text">மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் இன்று (09.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது யானை வீடொன்றின் பாதுகாப்பு மதில் சுவரை உடைத்துக் கொண்டு வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளது.</p><h2>அலறியடித்துக் கொண்டு ஓடிய பெண்கள்</h2><p>
</p><p>
அக்காலப்பகுதியில் வீட்டில் ஆண்கள் எவரும் இல்லாத நிலையில், உள்ளே தனிமையில் இருந்த பெண்கள் யானையைக் கண்டு பீதியடைந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தவாறு தப்பியோடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec85fe87-e566-44bc-9228-4954f544d792/26-6aa13b6640148.webp' /></p><p> </p><p>

பெண்களைத் துரத்திவிட்டு வீட்டினுள் புகுந்த காட்டுயானை, அங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 10இற்கும் மேற்பட்ட நெல் மூடைகளை கிழித்து துவசம் செய்துள்ளது.</p><h2>யானைகளின் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
போரதீவுப்பற்று பகுதியில் அண்மைக்காலமாகவே காட்டுயானைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டும் கிராம மக்கள், இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக
வேதனை தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a08a04b-447b-403a-8cab-943756738545/26-6aa13b67310c5.webp' /></p><p>
</p><p>
எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈட்டினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a9affe-ba07-4e5e-b35a-61cb29651a3f/26-6aa13b68043c6.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce7e2aaf-d2b9-450f-b464-c7884e3bcff5/26-6aa13b68cb0b2.webp' />&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்படைக் கப்பல் கொழும்புக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/visit-of-indian-naval-ship-ins-udaygiri-to-colombo-1788948000"></link>
            <id>https://tamilwin.com/article/visit-of-indian-naval-ship-ins-udaygiri-to-colombo-1788948000</id>
            <summary type="text">இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த்
போர்க்கப்பலான &#039;INS Udaygiri&#039;, மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்வதற்காக நேற்று(08.09...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த்
போர்க்கப்பலான 'INS Udaygiri', மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்வதற்காக நேற்று(08.09.2026) கொழும்பை வந்தடைந்தது.
</p><p>இக்கப்பலின் விஜயம், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்துடன்
ஒருங்கிணைந்துள்ளது.</p><h2>விஜயத்தின் நோக்கம்</h2><p>இலங்கை கடற்படையுடன் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும்
Mobile Training Team மூலம் அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்வதன் ஊடாக இருதரப்பு
ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். </p><p>மேலும், இலங்கை கடற்படை மற்றும்
இலங்கை விமானப்படைக்குத் தேவையான அத்தியாவசிய இயந்திரங்கள்/உபகரணங்களுக்கான
உதிரிப் பாகங்களையும் இக்கப்பல் கொண்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feed754c-7169-4ff3-9107-b3c1cdd833ce/26-6aa136dc2d81f.webp' /></p><p>கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் விகாஸ் சூட், இலங்கை கடற்படையின் மேற்கு
கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை
உத்தியோகபூர்வமாகச் சந்திக்க உள்ளார். </p><p>இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சரின் விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கைப் பிரமுகர்களை வரவேற்கும் வகையில்
கப்பலில் வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:42:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/atm-machines-for-persons-with-disabilities-1788949702"></link>
            <id>https://tamilwin.com/article/atm-machines-for-persons-with-disabilities-1788949702</id>
            <summary type="text">இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாக&amp;nbsp;பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர அறிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாக&nbsp;பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர அறிவித்துள்ளார்.</p><p>அந்த வகையில், பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாட்டின் அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>மற்றவர்களின் உதவியின்றி சேவைகளை சுயமாக முன்னெடுத்தல்</h2><p>இது தொடர்பில் பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2fec3c1-034e-448f-ab95-f750ddcf7760/26-6aa137e1f248a.webp' /></p><p>அத்துடன், இந்த நவீன வசதிகள் மூலம் மாற்றுத்திறனாளி நபர்கள் மற்றவர்களின் உதவியின்றி தங்களது வங்கிச் சேவைகளைத் தாங்களே சுயமாகவும் எளிதாகவும் மேற்கொள்வதற்கு இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் 5 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-tsunami-warning-towers-mullaitivu-non-functional-1788948764"></link>
            <id>https://tamilwin.com/article/5-tsunami-warning-towers-mullaitivu-non-functional-1788948764</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அபாயம் ஏற்படும்
சந்தர்ப்பங்களில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்காக
அமைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அபாயம் ஏற்படும்
சந்தர்ப்பங்களில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்காக
அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் பெரும்பாலானவை தற்போது
செயலிழந்த நிலையில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>முல்லைத்தீவு மாவட்டம் 71 கிலோமீட்டர் கடற்கரை பிரதேசமாக காணப்படுகின்றது. கடற்கரையை அன்றி பல கடற்றொழில் குடும்பங்கள் பல விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வரும்
பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றன.</p><h2>மாற்று நடவடிக்கை</h2><p>மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் 5 கோபுரங்கள்
செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில்,

அவசரகாலங்களில் மக்களை விரைவாக எச்சரிப்பதற்கான மாற்று நடவடிக்கைகள் மற்றும்
கோபுரங்களை மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என மக்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfa05c8c-55bb-4082-80a5-892b18ec9961/26-6aa1337dc8548.webp' /></p><p>
</p><p>இது தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட அனர்த்து முகாமை
பிரிவு அறிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:32:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலவசமாக கிடைத்த மென்பொருளுக்கு 88 இலட்சம் செலவிட்ட தேசிய குருதி வங்கி.. இடம்பெற்றுள்ள பாரிய நிதிமோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-blood-bank-88-lakh-massive-fraud-1788943812"></link>
            <id>https://tamilwin.com/article/national-blood-bank-88-lakh-massive-fraud-1788943812</id>
            <summary type="text">தேசிய குருதி வங்கியில் மென்பொருள் கொள்வனவு என்ற பேரில் சுமார் 88 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய குருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய குருதி வங்கியில் மென்பொருள் கொள்வனவு என்ற பேரில் சுமார் 88 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
தேசிய குருதிமாற்று மையத்திடம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நோயாளிகளுக்கு எவ்வளவு இரத்தம் வழங்கப்பட்டது என்பதை அறிய தரவுத்தளமொன்று இருக்கவில்லை.
</p><p>
இதன் காரணமாக, கொடையாளர்களிடமிருந்து எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சேகரிக்கப்பட்ட குருதி 45 நாட்களில் காலாவதியான பிறகு, அதிக அளவு குருதி வீணாக்கப்பட்டது.</p><p>அதன்போது இருவகையான கடுமையான குற்றங்கள் அதில் உள்ளடங்கியிருந்தன. முதலாவது, நன்னோக்குடன் கொடையாளர்களால் வழங்கப்பட்ட இரத்தம் காலாவதியாகிவிட்டது என்ற காரணத்திற்காக, அதை அறியாமலேயே வீணாக்கியது.</p><h2>புதிய கணினி மென்பொருள்&nbsp;</h2><p> இரண்டாவது, கொடையாளர்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, அதை நோயாளிக்குக் கொடுப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதற்காக பொட்டலமிட்டு, அதைப் பாதுகாப்பதற்காக பெரும் பணம் செலவழிக்கப்பட்டு, பின்னர் 45 நாட்களில் காலாவதியாகி விட்டது என்ற காரணத்திற்காக வீணாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a414db93-ecbb-47af-bee9-e3806d84ee1e/26-6aa133f1ce53f.webp' /></p><p>
</p><p>
மேற்கண்ட குற்றவியல் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட மருத்துவர் புஷ்பிக டி சில்வா என்ற இளம் மருத்துவர், பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து, மேற்கூறிய ஏறக்குறைய அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரு புதிய கணினி மென்பொருள் அமைப்பை உருவாக்கியிருந்தார்.
</p><p>
அந்த இளம் மருத்துவர், தனது புலமைசார் சொத்துரிமைகளைக் கூடப் பாதுகாக்காமல், அந்த மென்பொருள் அமைப்பை தேசிய குருதிமாற்று மையத்திற்கு இலவசமாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
</p><p>
மேற்கண்ட மென்பொருள் அமைப்பை உருவாக்குவதற்கு முன்பு, மருத்துவர்புஷ்பிக ஒரு டச்சு கடன் உதவித் திட்டத்தின் கீழ் அத்தகைய மென்பொருள் அமைப்பை உருவாக்க மற்றொரு நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியிருந்தார். </p><p>ஆனால் அந்த மென்பொருள் அமைப்பு உருவாக்கம் முடிக்கப்படாமலேயே கைவிடப்பட்டுள்ளது. அதற்காக யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பன குறித்து இதுவரை விசாரணைகள் நடத்தப்படவில்லை.</p><p></p><h2>தொடர்ச்சியான சேவை</h2><p>இதற்கிடையே மருத்துவர் புஷ்பிகவின் மென்பொருள் கண்டுபிடிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு உலக இரத்த தான தினத்தில் பிரதமர் ஊடாக மருத்துவர் புஷ்பிகவுக்கு ஒரு விருதும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65167364-bba9-4e78-a58b-246e93616681/26-6aa1343937388.webp' /></p><p> </p><p>அன்று முதல், மருத்துவர் புஷ்பிக டி சில்வாவால் உருவாக்கப்பட்ட மென்பொருள் அமைப்பு, இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள இரத்த மையங்களுடன் ஒருங்கிணைந்து, தேவைக்கேற்ப இரத்த தானங்களைப் பெற்று வருகிறது. அது பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியான சேவையை வழங்கி வருகிறது.
</p><p>
இவ்வாறான பின்னணியில் மருத்துவர் புஷ்பிகவால் உருவாக்கப்பட்டு, இன்றும் எந்தப் பிரச்சனையும் இன்றி இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருள் அமைப்பிற்கு ஏதேனும் மேம்படுத்தல் தேவைப்பட்டால், அதனை மருத்துவர் புஷ்பிகவே செய்து பராமரிப்பதற்குப் பதிலாக, தற்போதுள்ள மென்பொருள் அமைப்பை ஒரு தனியார் நிறுவனம் மூலம் மீண்டும் கொள்வனவு செய்வதற்கு தேசிய குருதிமாற்று மைய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><p>

அதற்காக பொதுமக்களின் வரிப்பணம் சுமார் 88 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி குறித்து சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு பிணை கிடைக்க வாய்ப்பில்லையாம்..! புலம்பும் ராஜபக்ச தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-bail-for-namal-rajapaksa-1788946294"></link>
            <id>https://tamilwin.com/article/no-bail-for-namal-rajapaksa-1788946294</id>
            <summary type="text">

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினரை முடக்கும் செயற்பாட்டில் இந்த அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.</p><h2>நாமலுக்குப் பிணை இல்லையா..</h2><p> </p><p>

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்தச் சட்டத்தின் கீழ் 46 பேரைக் கைது செய்து வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f890b86-fcc9-47cf-87a8-99154173ea33/26-6aa131ca5f45e.webp' /></p><p>

இலங்கையில் நீதித்துறைச் சுயாதீனம் மீறப்படுவது மற்றும் மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் ஏற்கனவே கவலை வெளியிட்டுள்ளன.
</p><p>
அரசாங்கம் தனது ஜனநாயக விரோதப் போக்கினை மாற்றிக் கொள்ளாவிட்டால், சர்வதேச அளவில் இலங்கை கடுமையான எச்சரிக்கைகளையும் சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6Kzmt4sOp9A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-09T10:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவிய நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-driver-ishara-sewwandi-flee-to-india-remanded-1788947683"></link>
            <id>https://tamilwin.com/article/boat-driver-ishara-sewwandi-flee-to-india-remanded-1788947683</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல படகு வழங்கி உதவிய நபரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல படகு வழங்கி உதவிய நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, சந்தேகநபரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம நேற்று (08) உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் 47 ஆவது சந்தேகநபர் </h2><p>

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேகநபரான ஜேசுதாசன் செல்வசேத் எனப்படும் ‘பலசி’என்பவரை கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியபோது சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca02d80b-cfe6-43d2-8827-999a50fe6878/26-6aa133b7465d6.webp' /></p><p>

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகநபர் 47 ஆவது சந்தேகநபராக பெயரிடப்படுவார் என்று கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சந்தேகநபர் தெரிந்தே ஏற்பாடு செய்ததாகவும், செவ்வந்தி இந்தியா வந்தடைந்த பிறகு, படகில் ஆதாரமாக இருந்த ஜிபிஎஸ் கருவியை அவர் அழித்துவிட்டதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

இவ்வாறு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற சந்தேகநபர் உதவியுள்ளதாகவும், இந்தியாவுக்கு செல்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்ததாகவும் தெரியவந்ததாக குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது.</p><h2>தடுப்புக்காவல் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
இஷாரா செவ்வந்தி சுமார் 10 மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07b17432-2768-4735-ad13-0913e7feb74c/26-6aa133b7ec6e2.webp' /></p><p> 

கடந்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு - புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p> 

இதன்போது, கொலைக்காக பயன்படுத்திய துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவந்தவர் இஷாரா செவ்வந்தி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த கொலைக்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து அவர் நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T10:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-a-man-recovered-kotmale-reservoir-1788946933"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-a-man-recovered-kotmale-reservoir-1788946933</id>
            <summary type="text">தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலமே இன்றையதினம்(9)&nbsp; மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தலவாக்கலை சுமன பாடசாலைக்கு அருகாமையில் குறித்த நபருடைய கைப்பை ஒன்று
கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல்
வழங்கியுள்ளனர்.</p><h2>சடலம் மீட்பு</h2><p>

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று காலை முதல்
மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட நேர தேடுதலின் பின்னர், நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து குறித்த நபரின்
சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73bbae00-8256-4e22-a197-1324acc5fa55/26-6aa12e88e792d.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்ற பின்னர், பிரேதப்
பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><h2>விசாரணை</h2><p>

இதேவேளை, குறித்த நபர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு
ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/748956f9-f2f1-4e6b-af76-bc1914cc742e/26-6aa12e89ac98f.webp' /></p><p>பிரேதப் பரிசோதனை மற்றும் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம்
தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-chief-executive-officer-of-srilankan-airlines-1788944180"></link>
            <id>https://tamilwin.com/article/new-chief-executive-officer-of-srilankan-airlines-1788944180</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பொறியியல் தலைவராகப் பணியாற்றினார்.&nbsp;</p><p>இந்நிறுவனத்தில் பொறியியல் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பான மேலாளராகவும் (Accountable Manager) பணியாற்றி வந்த இவர், தற்போது இப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.</p><p>
2024ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த விபுல் மிஸ்ரா, விமானப் பொறியியல் மற்றும் சிரேஷ்ட விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் பரந்த அனுபவம் கொண்டவராவார்.</p><h2>முக்கிய பதவிகள்..&nbsp;</h2><p> </p><p>இதற்கு முன்னர், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஆகியவற்றில் சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0e94ef0-1019-453f-ad08-6dbda721871b/26-6aa129227fb9a.webp' /></p><p>
</p><p>
தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு முக்கிய மறுசீரமைப்பு கட்டத்திற்குள் நுழைய ஆயத்தமாகி வரும் முக்கியமானதொரு சூழலில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மிஸ்ரவின் இந்நியமனம் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:43:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினை : நிரந்தரத் தீர்வை முன்னெடுக்க தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-flooding-problem-in-the-sutumalai-area-1788945161"></link>
            <id>https://tamilwin.com/article/the-flooding-problem-in-the-sutumalai-area-1788945161</id>
            <summary type="text">சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை
ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தெற்கு
மேற்கு பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை
ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தெற்கு
மேற்கு பிரதேச சபையும் இணைந்து வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை
உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், குறித்த பகுதியில்
நீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதற்காக பொருத்தமான குளங்களையும்
உடனடியாகத் தூர்வாருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><h2>வெள்ளப்பாதிப்பைத் தடுப்பதற்கு</h2><p>
சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில்
காணப்படும் தடைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்
ஆளுநர் செயலகத்தில் நேற்று(08.09.2026) முன்னெடுக்கப்பட்ட
கலந்துரையாடலின் போது இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e72cecc-b2fa-4108-9165-31e7ad2b2846/26-6aa12579af60f.webp' /></p><p>
வெள்ளநீர் இயற்கையாகச் சென்று தேங்கக்கூடிய வகையில் நீர்வழிகளைச்
சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து
பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களைத்
தூர்வாருவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

சுதுமலைப் பகுதியில் வெள்ளப்பாதிப்பைத் தடுப்பதற்கான இந்நடவடிக்கைகள்
தாமதமின்றி ஆரம்பிக்கப்பட்டு, தேவையான மேலதிக நடவடிக்கைகளும் நிலைமைகளின்
அடிப்படையில் தொடர்ந்து அடுத்தகட்டமாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த இந்தியப் பிரஜையின் உடல் நல்லடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-indian-national-who-died-in-negombo-prison-1788945233"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-indian-national-who-died-in-negombo-prison-1788945233</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த இந்தியரான உம்னிதாத் சரத்சந்திரனின் உடல், அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த இந்தியரான உம்னிதாத் சரத்சந்திரனின் உடல், அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
</p><p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பான வழக்கு, நேற்று (08) நீர்கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பொலிசார் குறித்த அறிவித்தலை சமர்ப்பித்துள்ளனர்.
</p><p>
அதன் பிரகாரம் இந்த மாதம் 2ஆம் தேதி நீர்கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மாணிக்க ஹேன பொது மயானத்தில் இந்தியப் பிரஜையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையில்இ இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் 11 சந்தேக நபர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அவர்களை அடையாளம் காண்பதற்காக, மூடிய ஆடைகளுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு சிறை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1f1b1e-bc2b-40ab-8f32-6d5af78c3024/26-6aa127c01c196.webp' /></p><p>
</p><p>
மேலும், இதுவரை 81 சந்தேக நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏறத்தாழ 2200 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வழக்கு ஆதாரங்களாகக் பொலிசாரின் காவலில் எடுக்கப்பட்டு அரசாங்க ரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிவியல் பூர்வமான தரவுகளுடன் புதிய தேசிய இளைஞர் கொள்கை: அமைச்சர் சுனில் குமார் கமகே அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-national-youth-policy-based-on-scientific-data-1788944255"></link>
            <id>https://tamilwin.com/article/new-national-youth-policy-based-on-scientific-data-1788944255</id>
            <summary type="text">இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் நேரடித் தலையீட்டுடன், இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் நேரடித் தலையீட்டுடன், இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு
மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள்
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே தெரிவித்தார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(8.9.2026) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, நாட்டின் எந்தவொரு துறையிலும் உணர்திறன் மிக்க, அபிவிருத்தியடைந்த தேசியக்
கொள்கைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.</p><h2>சமூக அபிவிருத்தி</h2><p> எனவே, அரசு என்ற ரீதியில் இளைஞர்களின்
முன்னேற்றத்துக்காகப் பொறுப்புக்கூறக்கூடிய, அறிவியல் பூர்வமான கொள்கை ஒன்றை
உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும்.
</p><p>
அரசின் கொள்கைப் பிரகடனத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகவே, இளைஞர்
சமுதாயத்துக்கான புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் பணிகள் முறைப்படி
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf90e9c-fb00-4510-9050-2bdf27eb52a1/26-6aa122add149c.webp' /></p><p>
</p><p>
புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக, இளைஞர்கள்
எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் உள்ளடக்கும் வகையில் 9 முக்கிய
துறைகளின் கீழ் ஆராய்ச்சிப் பத்திரங்களைச் சமர்ப்பிப்பதற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெறுமனே கொள்கைகளை அறிவிக்காமல், பெறப்படும் இந்த ஆராய்ச்சிப் பத்திரங்களின்
முடிவுகள் மற்றும் அறிவியல் பூர்வமான தரவுகளின் அடிப்படையிலேயே புதிய இளைஞர்
கொள்கை தயாரிக்கப்படும்.
</p><p>
இளைஞர் சமுதாயத்தின் மறைந்திருக்கும் திறன்களை முறையாக அடையாளம் கண்டு,
நாட்டின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அவர்களைத் தீவிரப்
பங்காளிகளாக்குவதே இந்தத் தேசிய மாநாட்டின் முதன்மை நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்! கைபேசியில் உள்ள இரகசிய தரவுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834"></link>
            <id>https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834</id>
            <summary type="text">மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவு, ஆப்பிள் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

குற்றப் புலனாய்வுத்திணைக்களம் இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.</p><h2>நீதவான் விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (09) மீண்டும் தொடங்கப்பட்டபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த உண்மைகளை கூடுதல் அறிக்கையுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c615cb3-09cb-417c-af69-20b988f18787/26-6aa1062f762c6.webp' /></p><p>

சம்பந்தப்பட்ட கைபேசியின் தரவுகள் தொடர்பாக முந்தைய நாள் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவு, ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p>

இச்சம்பவத்தில் காலஞ்சென்ற சந்தேகநபரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>பிரேத பரிசோதனை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை</h2><p>
அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரேதப் பரிசோதகருக்கும் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை வழங்கியுள்ளது.</p><p>இந்த வழக்கை அக்டோபர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-6UFFQLSCYg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-09T09:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தின் பின்னடைவு - நாடாளுமன்றில் மஞ்சுள சுரவீர சரமாரியாக கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lagging-behind-of-nuwara-eliya-manjula-suraveera-1788941807"></link>
            <id>https://tamilwin.com/article/lagging-behind-of-nuwara-eliya-manjula-suraveera-1788941807</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம் எதிர்கொண்டுள்ள நீண்டகால அபிவிருத்தி மற்றும் சமூகப்
பிரச்சினைகள் தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம் எதிர்கொண்டுள்ள நீண்டகால அபிவிருத்தி மற்றும் சமூகப்
பிரச்சினைகள் தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான
மஞ்சுள சுரவீர, நாடாளுமன்றத்தில் நேற்று (08.09.2026) பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற ரீதியில்,
மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் சில கேள்விகளை முன்வைக்க
விரும்புவதாகத் தெரிவித்த அவர்,

குறைந்த கல்வியறிவு காணப்படும் மாவட்டம் எது?

குறைந்த அளவில் வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்ட மாவட்டம் எது?

மந்தபோசணம் அதிகமாக காணப்படும் மாவட்டம் எது?

அரச சேவையாளர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சேவையாற்ற வேண்டிய நிலை
காணப்படும் மாவட்டம் எது?

என்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.</p><h2>சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள்</h2><p>
</p><p>
அத்துடன், சுத்தமான குடிநீரை குறைந்த அளவில் பயன்படுத்தும் பகுதிகள் மற்றும்
மக்கள் தொடர்பான பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809bdf8d-8975-4851-aca9-8f67c3eb59e5/26-6aa11b7d323ce.webp' /></p><p>

நுவரெலியா மாவட்டம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இவ்வாறான அடிப்படைப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும்
அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'எந்நாளும் 88, 89 பற்றி எழுதிக்கொண்டு வந்து அதனை மாத்திரம்
பேசிக்கொண்டிருப்பது போதாது' எனக் குறிப்பிட்ட மஞ்சுள சுரவீர, நாட்டின்
தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் விழிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><h2>அணிதிரளும் மக்கள்</h2><p>
</p><p>
மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும்,
அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கு மக்கள் அணிதிரண்டு வருவதாகவும் அவர்
நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர் மற்றும் அரச
சேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பில் நீண்டகால தீர்வுகள் அவசியம் என
வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள்
எதிர்காலத்தில் எந்தளவுக்கு முன்னெடுக்கப்படுகின்றன என்பதே தற்போது கவனத்தை
ஈர்த்துள்ள விடயமாக உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:40:32+00:00</updated>
        </entry>
    </feed>
