<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-13T19:23:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் ‘படுகொலை சதி’ எச்சரிக்கை: ட்ரம்பின் விமான மாற்றத்தின் அதிரவைக்கும் பின்னணி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-jet-switch-after-israel-s-iran-warning-1786643461"></link>
            <id>https://tamilwin.com/article/trump-jet-switch-after-israel-s-iran-warning-1786643461</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பியபோது, ஈரான் தரப்பிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பியபோது, ஈரான் தரப்பிலிருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து ரகசியமாக விமானம் மாற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இஸ்ரேல் வழங்கிய உளவுத்தகவலின்படி, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை நோக்கி ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>ட்ரம்பின் பாதுகாப்பு</h2><p>

இதையடுத்து, ட்ரம்பின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவு, அவரை பெரிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து சிறிய ராணுவ விமானத்திற்கு ரகசியமாக மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால், இந்த அச்சுறுத்தல் தொடர்பான இஸ்ரேலிய உளவுத்தகவல் குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d734b81d-7149-4481-8c42-9a82a8ee265c/26-6a7e1252a5f71.webp' /></p><p>

 CIA ஆய்வாளர்கள் இந்தத் தகவல் போதுமான ஆதாரங்களைக் கொண்டதாக இல்லை என மதிப்பிட்டதுடன், தங்களது சந்தேகத்தையும் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக Washington Post செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும், அச்சுறுத்தல் தொடர்பான தகவல் ஒரே ஒரு ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதும், உறுதிப்படுத்தப்படாததும், குறைந்த நம்பகத்தன்மை கொண்டதுமாக இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
துருக்கி பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியதாகவும், அங்காராவில் ட்ரம்பை படுகொலை செய்யும் குறிப்பிட்ட சதித்திட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கை</h2><p>
</p><p>

ட்ரம்பின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் முக்கிய அதிகாரியான ஸ்காட் பெசென்ட் ஆகியோர் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே பயணித்ததாகவும், ட்ரம்ப் மட்டும் வேறு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரூபியோ விமான மாற்றம் மற்றும் அதற்குப் பின்னிருந்த அச்சுறுத்தல் குறித்து அறிந்திருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

இஸ்ரேல் வழங்கிய இந்த எச்சரிக்கை, ட்ரம்பின் பாதுகாப்புக்காக மட்டுமே வழங்கப்பட்டதா அல்லது அமெரிக்காவின் பிராந்திய கொள்கை மற்றும் ட்ரம்பின் முடிவெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருந்ததா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d67e216-9616-405d-b512-85ca7fd6a93e/26-6a7e12535784e.webp' /></p><p>
</p><p>
சில அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், இந்த “படுகொலை சதி” எச்சரிக்கை உண்மையான அச்சுறுத்தலைத் தெரிவிப்பதைவிட, ட்ரம்பின் முடிவெடுப்பையும் மத்திய கிழக்கு தொடர்பான அமெரிக்க கொள்கையையும் பாதிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
துருக்கியில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ட்ரம்ப், புதிய கத்தார் பரிசாக வழங்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட விமானத்தை அங்கிருந்து முன்கூட்டியே அனுப்பிவிட்டு, பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஒரு பகுதி பயணத்தை மேற்கொள்வதாக கூறியிருந்தார்.</p><p>

ஆனால் பின்னர் வெளியான தகவலின்படி, ட்ரம்ப் அந்த பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கவில்லை. பத்திரிகையாளர்களும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப் அதே விமானத்தில் இருப்பதாக நம்ப வைக்கப்பட்ட நிலையில், அவர் ரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T19:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சட்டத்தரணி மணிவண்ணன் குறிப்பிட்ட விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-sudhumalai-amman-temple-dismissed-1786645361"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-sudhumalai-amman-temple-dismissed-1786645361</id>
            <summary type="text">சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காக
தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காக
தொடர்ந்து முன் நிற்பேன் என்று சட்டத்தரணியும் தமிழ் மக்கள் கூட்டணியினுடைய
துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். </p><p>வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;சுதுமலை அம்மன் கோவில் என்பது தமிழ் மக்கள் மத்தியிலே மிகவும் பிரபல்யமான
ஒருஆலயமாக இருக்கிறது.</p><p></p><h2>வேலைத்திட்டங்கள்</h2><p>தற்பொழுது அந்த ஆலயத்தினுடைய தர்ம கர்த்தார்கள் அந்த ஆலயத்தை முற்று முழுதாக
இடித்து அதனை அழித்துவிட்டு புதிதாக அதிலே கட்டடங்களை கட்டுவதற்கு
வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d71e040b-99f0-4171-a31b-3049f85a554d/26-6a7e0efbd55e6.webp' /></p><p>அதன் அடிப்படையிலேயே ஆலயத்தினுடைய பின்பகுதி முற்று முழுதாக இடித்து
அழிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்தக் கட்டுமானங்கள் பிரதேச சபையினுடைய எந்த விதமான அனுமதியும்
இல்லாமல் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.</p><p>குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் உடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
பொதுமக்கள் எல்லோரும் அமர்ந்திருந்து பார்த்த ஆலயத்தினுடைய முன் பகுதி
அதனுடைய கூரைகள் ஏறி இருந்து பார்த்தது எல்லாம் நீங்கள் பத்திரிகைகளில்
பார்த்திருப்பீர்கள்.</p><p></p><h2>வழக்கு தள்ளுபடி</h2><p> தேர் முட்டி போன்றவற்றையும் இடித்தழிக்க
முற்படுகிறார்கள். தீர்மானம் எடுத்திருக்கிறார்கள் என்ற வகையிலே தமிழ்
தேசியத்தை நேசிக்கின்ற தரப்புக்கள் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று
என்னோடு அணுகினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509a266a-4a06-4040-9f5d-7596017f3dc5/26-6a7e0efc9545f.webp' /></p><p>ஆகவே அதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை அம்மன் கோவில் உடைய
முன்பகுதியை காப்பாற்றுகின்ற நோக்கத்தோடும், மேலதிகமாக இடித்து அழிப்பதை
தடுத்து நிறுத்துகின்ற நோக்கத்தோடும் இந்த வழக்கை நாங்கள் தாக்கல்
செய்திருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு
இருக்கின்றார் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:07:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தூதுவரை வெளியேற்றக் கோரி கனடாவில் 70,000 பேர் கையெழுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-sign-petition-expulsion-of-us-ambassador-1786642349"></link>
            <id>https://tamilwin.com/article/canada-sign-petition-expulsion-of-us-ambassador-1786642349</id>
            <summary type="text">கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி
நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி 70,000-க்கும் மேற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி
நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி 70,000-க்கும் மேற்பட்ட
கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>கனடாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கூடுதல் வரி</h2><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கனடாவை அமெரிக்காவின் '51-வது
மாநிலமாக' இணைப்பது குறித்துப் பேசிய கருத்துகளைத் தூதுவர் ஹோக்ஸ்ட்ரா
நியாயப்படுத்திப் பேசியதே இந்த எதிர்ப்பிற்குக் முக்கியக் காரணம் எனக்
கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca377534-424e-4067-9052-6fb6b7bb30ab/26-6a7e020f17b6d.webp' /></p><p>

கனடாப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதால்
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த மனு
விரைவில் கனடா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நடைபெற்ற கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-coordination-committee-meeting-1786640449"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-coordination-committee-meeting-1786640449</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.</p><p>

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில், மாவட்ட பழைய செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (13.08.2026) இந்த கூட்டம் நடைபெற்றது.</p><h2>&nbsp;ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்</h2><p>
</p><p>
மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9432c1c-8e38-44c6-b2a3-3d226b24cba1/26-6a7dfd43b2633.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, சட்டவிரோத கடற்றொழில், காலநிலை மாற்றத்தால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல், மானிய முறையில் எரிபொருள் வழங்குதல் மற்றும் கடற்றொழில் வளங்களை ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
</p><p>
இதன்போது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T17:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைக்கு எதிரான முன்மொழிவை நிராகரிக்க வலியுறுத்திய சுவிஸ் அரசு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/swiss-government-urged-parliament-european-1786637701"></link>
            <id>https://tamilwin.com/article/swiss-government-urged-parliament-european-1786637701</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான புதிய
உடன்படிக்கையைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘கொம்பாஸ்’ முன்மொழிவை
நிராகரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான புதிய
உடன்படிக்கையைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘கொம்பாஸ்’ முன்மொழிவை
நிராகரிக்குமாறு சுவிஸ் அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.</p><p>

கடந்த தலைமுறையில் இரு தரப்பு பொருளாதார உறவுகளில் மேற்கொள்ளப்படும்
மிகப்பெரிய மாற்றமாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகின்றது.
</p><p>
சுவிட்சர்லாந்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரச உடன்படிக்கைகள்
மீதான கட்டாய சனநாயக வாக்கெடுப்புகளின் அளவுகோலை விரிவுபடுத்துவதை இந்த
முன்மொழிவு இலக்காகக் கொண்டுள்ளது.</p><p></p><h2>சர்வதேச உடன்படிக்கை</h2><p>
</p><p>
எனினும், இந்த முன்மொழிவானது சட்ட நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதுடன்,
சுவிட்சர்லாந்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என ஆளும் பெடரல்
பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c2a4e37-edf5-4cb2-b31d-2805b9b584c1/26-6a7def2ca447f.webp' /></p><p>
</p><p>
சர்வதேச உடன்படிக்கைகளுக்கு வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவு மட்டுமின்றி,
26 கன்டன் மாநிலங்களின் பெரும்பான்மை ஆதரவும் பெறப்பட வேண்டும் என்ற நிலையை
இந்த முன்மொழிவு கோருகிறது.
</p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த ஐரோப்பிய
ஒன்றிய-சுவிஸ் ஒப்பந்தம் தற்போது சுவிஸ் நாடாளுமன்றத்தில் விவாதத்தில்
உள்ளதுடன், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் இது மக்கள் வாக்கெடுப்புக்கு
விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T16:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அரிதான நிகழ்வு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-sentences-carried-3-people-us-a-single-day-1786638861"></link>
            <id>https://tamilwin.com/article/death-sentences-carried-3-people-us-a-single-day-1786638861</id>
            <summary type="text">அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, ஒரே நாளில் மூன்று
பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

வெவ்வேறு கொலை வழக்குகளில் குற்றவாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, ஒரே நாளில் மூன்று
பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
</p><p>
வெவ்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அந்தோணி டாரெல்
ஹைன்ஸ் (66), ஜெரமி வில்லியம்ஸ் (41) மற்றும் கார்லோஸ் குயஸ்டா-ரோட்ரிக்ஸ்
(71) ஆகிய மூவருக்கும் முறையே டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய
மாநிலங்களில் ஊசி மூலம் விஷம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.</p><h2>அரிதான நிகழ்வு</h2><p>
</p><p>
அமெரிக்காவில் சமீபகாலமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது கணிசமாக அதிகரித்து
வருவதையே இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக சமூக ஆர்வலர்களும் சட்ட
நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b7d6db0-399d-42ba-b30d-3da6b32fd43c/26-6a7df44908dee.webp' /></p><p>
</p><p>
கடந்த 2021ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.</p><p>

கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மொத்த மரண தண்டனைகளில் சுமார் 40 சதவீதம்
புளோரிடா மாநிலத்தில் மட்டுமே நடந்துள்ளது.</p><h2>அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகள்&nbsp;</h2><p>
</p><p>
அம்மாநில ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கொண்டுவந்த சட்டத் திருத்தங்களே இதற்குக்
காரணம் எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/513bf0bb-fb5f-43c9-885e-fedcf04cd3c7/26-6a7df449b037d.webp' /></p><p>

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக் காலத்தில் மரண தண்டனைகளுக்கான தடைகளை
நீக்கி, கடுமையான தண்டனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததும் இதன் பின்னணியாகப்
பார்க்கப்படுகிறது.
</p><p>
அதேவேளையில், அமெரிக்க பொதுமக்களிடையே மரண தண்டனைக்கான ஆதரவு 52 சதவீதமாகக்
குறைந்துள்ளதாகவும், நீதிமன்ற நடுவர் மன்றங்கள் மரண தண்டனைத் தீர்ப்புகளை
வழங்குவது கணிசமாகக் குறைந்து வருவதாகவும் அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகள்
தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-13T16:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா - அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-rights-watch-urges-the-taliban-to-release-un-1786636083"></link>
            <id>https://tamilwin.com/article/human-rights-watch-urges-the-taliban-to-release-un-1786636083</id>
            <summary type="text">ஆப்கானிஸ்தானில் தலிபான் நிர்வாகத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள்
சபை மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்களை உடனடியாக
விடுவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்கானிஸ்தானில் தலிபான் நிர்வாகத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள்
சபை மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்களை உடனடியாக
விடுவிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>

பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளுக்காகச் செயற்படும் WCLRF அமைப்பின்
அலுவலகத்தை சோதனைக்குட்படுத்திய தலிபான் படையினர், அங்கிருந்த 6 ஆண் ஊழியர்களை
வலுக்கட்டாயமாகக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அத்துடன், ஹேராட் பகுதியில் ஐக்கிய நாடுகளின் உதவிப் பணிமனையின் இரு
ஆப்கான் ஊழியர்களும் தலிபான் உளவுத்துறையினரால் தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>கைதுகள்&nbsp;</h2><p>
</p><p>
இந்தக் கைதுகள் தொடர்பில் தமக்கு இதுவரை தெளிவான விளக்கங்கள் எதுவும்
வழங்கப்படவில்லை எனவும், கைது செய்யப்பட்டவர்களைச் சந்திப்பதற்கு
அனுமதிக்கப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவங்கள் மனிதநேய உதவிகளைப் பாதிக்கும் என மனித உரிமைகள்
கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b2272ef-e2d6-4d93-a3a3-e318b983e590/26-6a7de9b6ece55.webp' /></p><p>

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி 5 ஆண்டுகள்
பூர்த்தியடையவுள்ள நிலையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இருப்பினும், இந்தக் கைதுகள் குறித்து விரிவான தகவல்களைத் திரட்டி வருவதாக
தலிபான் அரசாங்கத்தின் தலைமைப் பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T16:01:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கடலில் மூழ்கி இலங்கை இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-dies-in-britain-1786636213"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-dies-in-britain-1786636213</id>
            <summary type="text">பிரித்தானியாவில் கடலில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பிரபல சுற்றுலாத் தலமான ஈஸ்ட் சசெக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சேண்ட்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் கடலில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

பிரபல சுற்றுலாத் தலமான ஈஸ்ட் சசெக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் நேற்று முன்தினம் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.</p><p> 

லண்டனில் இருந்து குழுவாக சுற்றுலா சென்ற நிலையில், மூன்று பேர் கடலில் மூழ்கிய நிலையில் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 மீட்பு குழுவினர் </b></h2><p>எனினும் 18 வயதான பதின்ம வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8062e490-1145-4139-ac91-09934e06ebf3/26-6a7dea1e9f6e4.webp' /></p><p>16 வயதுச் சிறுவன் மற்றும் 24 வயது நபர் ஆகிய இருவர் பாதுகாப்பாகக் கரை திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் இளைஞனை காப்பாற்ற போராடினர். </p><p>

நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் இளைஞன் மீட்கப்பட்ட போதும், சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். </p><p>
 
இந்த உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். </p>]]></content>
            <updated>2026-08-13T16:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்: Mosab Yousef அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/usa-isreal-iran-mosab-yousef-1786631950"></link>
            <id>https://tamilwin.com/article/usa-isreal-iran-mosab-yousef-1786631950</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன.குறிப்பாக காஸா தொடர்பான ட்ரம்பின் 15 அம்ச சமாதான திட்டத்தை&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன.</p><p>குறிப்பாக காஸா தொடர்பான ட்ரம்பின் 15 அம்ச சமாதான திட்டத்தை&nbsp;இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பகிரங்கமாக நிராகரித்து விட்டதை தொடர்ந்து ட்ரம்பிற்கும்&nbsp; இஸ்ரேலிற்கும் இடையிலான உறவு மிகுந்த நெருக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது.</p><p>தாம் இல்லை எனறால் இஸ்ரேல் என்ற நாடு இருக்காது என்று ட்ரம்ப் கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் குறிப்பிட்டு இருந்தார்.</p><p>அத்தோடு, அமெரிக்காவின் உதவிகள் இல்லாமல் இஸ்ரேலினால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ட்ரம்ப் எச்சரித்து இருந்தார்.</p><p>இப்படிப்பட்ட பின்னணியில் தான் ஈரான் விடயத்திலும், உக்ரைன் சமாதான விடயத்திலும் ஒரு வெற்றியை அறிவிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்ற ட்ரம்ப் காசா விடயத்திலாவது ஒரு சமாதான வெற்றியை அறிவிக்க எதிர்பார்த்திருந்தார்.</p><p>இந்தநிலையிலே,&nbsp;காஸா தொடர்பான 15 அம்ச சமாதான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளதை அடுத்து&nbsp;நெதன்யாகுவிற்கும் ட்ரம்பிற்கும் தனிப்போர் ஆரம்பித்து விட்டது.</p><p>இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gJwLWLiY9mM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T15:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA தலைவருக்கான தேர்தலில் ஆபிரிக்க நாடுகளின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-election-african-votes-uncertain-infantino-1786627392"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-election-african-votes-uncertain-infantino-1786627392</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை நடத்தும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிற்கு ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை நடத்தும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிற்கு ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (CAF) ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், எதிர்வரும் தலைவர் தேர்தலில் ஆபிரிக்க நாடுகளின் அனைத்து வாக்குகளும் இன்ஃபான்டினோவிற்கு முழுமையாகக் கிடைப்பது உறுதியற்ற நிலையிலேயே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><h2>உலகக் கிண்ணப் போட்டி</h2><p>
</p><p>
எதிர்கால உலகக் கிண்ணப் போட்டிகளின் வர்த்தக உரிமைகளை விற்பனை செய்வது
தொடர்பான திட்டங்கள் தொடர்பில் இன்ஃபான்டினோவிற்கு எதிராக விமர்சனங்கள்
எழுந்துள்ளன.
</p><p>
இந்தச் சூழலில் ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு அவருக்கு தனது
உத்தியோகபூர்வ ஆதரவை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1341393a-528f-4841-ba12-e8c041184cc7/26-6a7dcc46c3b6b.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கடந்த கால வரலாறுகளை நோக்கும்போது, ஆபிரிக்க நாடுகள் தமது
பிராந்தியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக வாக்களிக்கும்
போக்கையே கொண்டுள்ளன.
</p><p>
கடந்த 1998 ஆம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவருக்கு CAF ஆதரவளித்த
போதிலும், பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் செப் பிளாட்டருக்கே வாக்களித்தன.
</p><p>
அதேபோன்று 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் CAF வேறு வேட்பாளரை
ஆதரித்த போதும், பல ஆபிரிக்க நாடுகளின் ஆதரவுடனேயே இன்ஃபான்டினோ வெற்றி
பெற்றிருந்தார்.</p><h2>வேட்புமனு தாக்கல்</h2><p>
</p><p>
மேலும், 2026 உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் உரிமையை மொராக்கோவிற்கு வழங்க
CAF தீர்மானித்திருந்த நிலையிலும், 11 ஆபிரிக்க நாடுகள் வட அமெரிக்க கூட்டுப்
பெரும்பான்மைக்கே ஆதரவாக வாக்களித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26496b34-65da-41f9-abbe-11532195aeae/26-6a7dcc47859f3.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் மார்ச் மாதம் மொராக்கோவில் நடைபெறவுள்ள ஃபிஃபா தலைவர் தேர்தலில்
போட்டியிட விரும்புவோர் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதிக்குள் தமது
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். மொத்தமுள்ள 211 உறுப்பு நாடுகளில்
106 வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுவார்.</p><p>
தற்போதைக்கு எகிப்து, மொராக்கோ, நைஜர் மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு
போன்ற சில நாடுகள் இன்ஃபான்டினோவிற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள போதிலும்,
பலமான எதிரணி வேட்பாளர் ஒருவர் களமிறங்கும் பட்சத்தில் ஆபிரிக்க நாடுகளின்
வாக்குகள் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T14:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம் - பல என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-excavation-enters-51st-day-of-phase-three-1786629979"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-excavation-enters-51st-day-of-phase-three-1786629979</id>
            <summary type="text">செம்மணியில் மூன்றாம் கட்டத்தின்&amp;nbsp; 51 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று(13.08.2026) முன்னெடுக்கப்பட்டது.இதன்போது புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் மூன்றாம் கட்டத்தின்&nbsp; 51 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று(13.08.2026) முன்னெடுக்கப்பட்டது.</p><p>இதன்போது புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் இன்று 10 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, நீதிமன்ற&nbsp; காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>51ஆவது நாள் அகழ்வுப் பணி</h2><p>செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம்
மற்றும் மூன்றாம் கட்டங்களாக 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு
பணிகளின் போது, 552 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அவற்றில் 540
என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ed19194-7af5-45ab-884a-93d774ef9029/26-6a7dd0851e62f.webp' /></p><p></p><p></p><p>you may like this video..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1HafcDPQn-M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T14:20:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்வானில் முடங்கிய வீதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இணையச் சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/streets-deserted-and-internet-service-taiwan-1786628834"></link>
            <id>https://tamilwin.com/article/streets-deserted-and-internet-service-taiwan-1786628834</id>
            <summary type="text">தாய்வானில்
முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு
பகுதியாகத் தலைநகர் தாய்பேயில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்வானில்
முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு
பகுதியாகத் தலைநகர் தாய்பேயில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள்
எழுப்பப்பட்டு, வீதிகள் அமைதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சீன படையெடுப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் 10 நாட்கள் நடத்தப்படும்
இந்தப் பயிற்சியின் போது, தாக்குதல் சூழலை செயற்கையாக உருவாக்கிப்
பரிசோதிப்பதற்காக மொபைல் இணையச் சேவையின் வேகம் அரசாங்கத்தினால் திட்டமிட்டபடி
கட்டுப்படுத்தப்பட்டது.
</p><p>
சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த இணைய வேகக் கட்டுப்பாட்டின் போது,
நிலையான இணைய இணைப்புகள் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் தடையின்றி இயங்கின.</p><p></p><h2>போலி வான்வழித் தாக்குதல்</h2><p>
</p><p>
போலி வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீதிகளில்
பயணித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன்,
வாகனங்களும் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.</p><p>

இதன்போது, தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே மற்றும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட
வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அவசர மருத்துவ முகாமாக மாற்றப்பட்ட இடங்கள்
மற்றும் உணவுப் பொருட்கள் விநியோக மையங்களைப் பார்வையிட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bff562e-4c26-4390-93e0-adbd62ae3695/26-6a7dcec17161b.webp' /></p><p>இதேவேளை, சீனாவின் முற்றுகை முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில் தாய்வான்
கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து முதல்முறையாக கப்பல்களுக்குப்
பாதுகாப்பு அளிக்கும் கூட்டுப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளன.
</p><p>
பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு சர்வதேச
சமூகத்தின் ஆதரவுடன் தாய்வான் பதிலளித்து வருவதாக அதிபர் லாய் சிங்-தே
தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T14:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை பிறந்த நாள் கொண்டாட்டத்தில் படுகொலை - இந்தியாவில் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-suspects-of-wattala-murder-arrested-in-india-1786622918"></link>
            <id>https://tamilwin.com/article/two-suspects-of-wattala-murder-arrested-in-india-1786622918</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடரடபில் இரண்டு சந்தேகநபர்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடரடபில் இரண்டு சந்தேகநபர்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>

கதிரன பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றின் போது நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>
இருவர் கைது</b></h2><p>இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85a6ef59-1dea-4fb4-ad66-d5bcd05c1fba/26-6a7dc9bc6feb2.webp' /></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-13T13:42:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்! அரசியலுக்குள் இருக்கும் படுகொலையாளிகள் அச்சத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288"></link>
            <id>https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288</id>
            <summary type="text">படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளார்கள்.</p><p> நீதித்துறை மற்றும் விசாரணை கட்டமைப்பு தொடர்பில் எவ்வழியிலாவது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தி அதனூடாக தம்மை பாதுகாத்துக்கொள்ளவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.</p><h3>எதிர்க்கட்சியினரின் விமர்சனம்&nbsp;</h3><p>முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தி சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கியவர்கள் இன்று நீதித்துறையின் சுயாதீனம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. </p><p>நீதித்துறைக்கு எதிராக செயற்பட்டால் அதன் பாதிப்பு எவ்வாறானதாக அமையும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே எதிர்க்கட்சியினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5669b0-40f0-4b8e-b2f4-25a925f77b50/26-6a7d92c5e01bc.webp' /></p><p>ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படப் போவதில்லை.</p><p>

படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது கலக்கமடைந்து விசாரணை அதிகாரிகள் மீதும், நீதித்துறை கட்டமைப்பின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:40:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூளைச்சாவடைந்தவர்களின் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி யாழில் விழிப்புணர்வு நடை பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-walk-promotes-kidney-donation-1786626249"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-walk-promotes-kidney-donation-1786626249</id>
            <summary type="text">உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை
மற்றும் வட மாகாண உறுப்பு மாற்று சிகிச்சை சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை
மற்றும் வட மாகாண உறுப்பு மாற்று சிகிச்சை சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைப்பயணம் ஒன்று நடைபெற்றுள்ளது.
</p><p>
மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்புகளை தானமாக வழங்குவதன் முக்கியத்துவம்
தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைப்பயணம்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>மூளைச்சாவு</h2><p>

விபத்து ஒன்றின் காரணமாக ஏற்படும் கடுமையான தலைக்காயம் அல்லது மூளையில்
திடீரென ஏற்படும் இரத்தக்கசிவு, மூளைச் சிதைவு போன்ற காரணங்களால் சில
சந்தர்ப்பங்களில் மூளையின் அனைத்து முக்கிய செயல்பாடுகளும் நிரந்தரமாக செயலிழக்கக்கூடும்.
</p><p>
இவ்வாறு மூளையின் செயற்பாடுகள் முழுமையாகவும் நிரந்தரமாகவும்
நிறுத்தப்பட்டிருப்பது மருத்துவ ரீதியான உரிய பரிசோதனைகள் மூலம் உறுதி
செய்யப்பட்டால், அந்த நிலை மூளைச்சாவு (Brain Death) என அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/682fc2ce-8a10-4fc4-a4ed-8b6dd1cac6e9/26-6a7dc33d1f8db.webp' /></p><p>

மூளைச்சாவடைந்த ஒருவரின் இதயம் உள்ளிட்ட சில உறுப்புகள், செயற்கை சுவாசம்
மற்றும் தீவிர சிகிச்சை உதவிகளின் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
தொடர்ந்து இயங்கக்கூடும்.</p><p> 

இதனால் அவர் உயிருடன் இருப்பது போன்ற தோற்றம்
ஏற்படலாம். ஆனால் மூளைச்சாவு என்பது மீள முடியாத நிலையாகும். மூளை மீண்டும்
செயல்பட செய்வதற்கான சிகிச்சை இல்லை.</p><p>

எனவே, மூளைச்சாவு உறுதி செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து வழங்கப்படும் தீவிர
சிகிச்சையின் நோக்கம் மூளையை மீண்டும் செயல்பட செய்வது அல்ல.</p><h2>உறுப்பு தானம்&nbsp;</h2><p> 

சட்டரீதியான
நடைமுறைகளுக்கும் குடும்பத்தினரின் சம்மதத்திற்கும் அமைவாக, தானம்
செய்யக்கூடிய உறுப்புகளை பாதுகாத்து, அவற்றை உறுப்பு மாற்று சிகிச்சை
தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே முக்கிய
நோக்கமாக அமைகிறது.</p><p>
ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாத துயரமான தருணத்திலும், அவரது உறுப்புகள்
மூலம் பலருக்கு புதிய வாழ்வை வழங்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0681b62b-e93a-4036-8746-b0850621686f/26-6a7dc33ded15a.webp' /></p><p>

ஒருவரின் சிறுநீரகம் மற்றொருவருக்கு புதிய வாழ்க்கையை வழங்கலாம். இதயம்
ஒருவரின் வாழ்க்கையை மீண்டும் துடிக்கச் செய்யலாம். கல்லீரல், நுரையீரல்
உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு நம்பிக்கையாக
அமையலாம்.</p><p>

“நாம் மறைந்தாலும் நமது உறுப்புகள் மூலம் இன்னொருவர் வாழட்டும்” என்ற உயரிய
எண்ணத்துடன் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில்
ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.</p><p>
உறுப்பு தானம் என்பது வெறும் தானம் அல்ல, அது ஒரு மனிதன் மறைந்த பின்னரும்
மற்றொரு மனிதனின் வாழ்க்கையில் தொடர்ந்தும் வாழ்வதற்கான உன்னதமான மனிதநேயச்
செயல்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ரிஷாட் எம்.பி – ஜெகதீஸ்வரன் எம்.பி இடையே வாக்குவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-jagadeeswaran-argument-mannar-coordination-1786627085"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-jagadeeswaran-argument-mannar-coordination-1786627085</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(13)நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன்
மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(13)நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன்
மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் மக்கள்
எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது,
“மின்வெட்டை பற்றி நாங்கள் கதைக்கக் கூடாதா என ரிஷாட் பதியுதீன் கேள்வி
எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

இதன்போது பதிலளித்த ஜெகதீஸ்வரன், கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும்
அபிவிருத்திக் குழுத் தலைவர்களாகவும் இருந்தவர்கள், தற்போதைய நிலைமை தொடர்பாக
கேள்வி எழுப்புவது குறித்து கருத்து தெரிவித்தார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வாக்குவாதம்</span></p><p>

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம்
தீவிரமடைந்ததுடன், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61057bfb-594e-4e43-84be-d733a1da3658/26-6a7dc6a8b855c.webp' /></p><p>

நிலைமை மேலும் தீவிரமடையாத வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும்
சமரசப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்சாரத் தடைக்கு நிரந்தரத்
தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள நிலையில்,
இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும்
சூடுபிடித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சை மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட உயர்தர பரீட்சை வினாத்தாள் பொதிகள் தொடர்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-packets-tomorrow-s-al-question-paper-today-1786624615"></link>
            <id>https://tamilwin.com/article/6-packets-tomorrow-s-al-question-paper-today-1786624615</id>
            <summary type="text">அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு உயர்தர பரீட்சை மையத்தில், நாளை (14) நடைபெறவிருந்த முதல் இயற்பியல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு உயர்தர பரீட்சை மையத்தில், நாளை (14) நடைபெறவிருந்த முதல் இயற்பியல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>

இருப்பினும், வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
</p><h2>மற்றொரு பாடத்திற்கான 6 வினாத்தாள்</h2><p>
தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f37d02-27e5-432a-ba32-2c34b794179d/26-6a7dc73ddcef1.webp' /></p><p>
இந்நிலையில், அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு பாடசாலையில், இன்று நடைபெறும் பாடங்களைத் தவிர, நாளை நடைபெறவிருந்த மற்றொரு பாடத்திற்கான 6 வினாத்தாள் பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்டெடுக்கப்பட்டடுள்ளது.</p><p>நாளை நடைபெறவிருக்கும் இயற்பியல் பாடத்தின் முதல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள், இன்று நடைபெற்று வரும் இசை, நடனம் மற்றும் விவசாய விஞ்ஞான பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் இருந்த கொள்கலன்களில் கண்டெடுக்கப்பட்டன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:32:10+00:00</updated>
        </entry>
    </feed>
