<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-01T07:27:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கடவுச்சீட்டு புகைப்படச் சேவை முடக்கம்! நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passport-photo-service-in-mullaitivu-suspended-1785567417"></link>
            <id>https://tamilwin.com/article/passport-photo-service-in-mullaitivu-suspended-1785567417</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையக
சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றாக செயலிழந்துள்ள நிலையில் அதனை சரியாக நடைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையக
சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றாக செயலிழந்துள்ள நிலையில் அதனை சரியாக நடைமுறைப்படுத்துமாறு வன்னி
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குடிவரவு மற்றும் குடியகல்வு
திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக நேற்றையதினம்(31) அனுப்பியுள்ள விரிவான கடிதத்தில், இலங்கை
முழுவதும் 1,420 அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையகங்கள்
இயங்கும் நிலையில், புவியியல் ரீதியாக பரந்த பரப்பைக் கொண்ட ஆறு பிரதேச
செயலகப் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே ஒரு
அங்கீகரிக்கப்பட்ட கலையகம் மட்டுமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், அந்த ஒரே அங்கீகரிக்கப்பட்ட கலையகமான "சதீஸ் ஸ்டூடியோ &amp; டிஜிட்டல்
கலர் லாப்" கூட கடந்த மூன்று ஆண்டுகளாக சேவையாற்ற முடியாத நிலைக்குத்
தள்ளப்பட்டிருப்பது, மாவட்ட மக்களை முற்றாக இச்சேவையிலிருந்து
விலக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>உரிய தீர்வு&nbsp;</h2><p>

குறித்த கலையகத்தின் உரிமையாளர் கடந்த மூன்று ஆண்டுகளாக திணைக்களத்திற்கு
பலமுறை மின்னஞ்சல் மூலம் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உதவிகளை கோரி
விண்ணப்பித்தும், இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தகவல்
கிடைத்துள்ளதாகவும், இதன் விளைவாக கலையகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவையை மீள
ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c150cc8d-e000-433a-ba37-0a2f334fb1c0/26-6a6d9bf1ddba3.webp' /></p><p>
</p><p>
கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு தேவையான இலத்திரனியல் புகைப்படம்
அங்கீகரிக்கப்பட்ட கலையகங்கள் ஊடாக மட்டுமே திணைக்களத்தின் கணினி முறைமைக்கு
அனுப்பப்பட வேண்டியிருப்பதால், முல்லைத்தீவு மக்கள் வவுனியா, கிளிநொச்சி,
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில்
உள்ளதாகவும், இதனால் கூடுதல் பயணச் செலவு, கால விரயம் மற்றும் பல்வேறு
அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் ரவிகரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T07:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examinations-department-important-announcement-1785566309"></link>
            <id>https://tamilwin.com/article/examinations-department-important-announcement-1785566309</id>
            <summary type="text">ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, கல்வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள்

 எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு&nbsp;செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>அனுமதி அட்டைகள்</h2><p>நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77db90db-c6d2-4f3c-aae2-589ec78a9706/26-6a6d9bbea63be.webp' />&nbsp;</p><p>இதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலையக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் தங்களது பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.</p><p>

அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T07:10:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை : என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - வருத்தத்தில் அலி சப்ரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785563698"></link>
            <id>https://tamilwin.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785563698</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளதை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p></p><h2>புலனாய்வு எச்சரிக்கைகள்</h2><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத்தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad9fad73-d1eb-4916-b704-ee4688be2096/26-6a6d919ec7dec.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னரே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமைத் தவறியமை, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி என மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இருப்பினும், குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsabryuvais%2Fposts%2Fpfbid0YSdx6FJmrUn7a6AjdHikb8Lsfak7WPb3YATouTpsxYcTYwLA7Ma78crzSiGzcw63l&show_text=true&width=500" width="500" height="329" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>&nbsp;</p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய கடற்றொழில் படகு : மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-air-force-rescues-fishing-boat-distress-1785563053"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-air-force-rescues-fishing-boat-distress-1785563053</id>
            <summary type="text">நீர்கொழும்பு அருகே கடற்பகுதியில் பல கடற்றொழில் படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அங்கு இருந்த கடற்றொழிலாளர்களை மீட்க, இலங்கை கடற்படையும் விமானப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு அருகே கடற்பகுதியில் பல கடற்றொழில் படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அங்கு இருந்த கடற்றொழிலாளர்களை மீட்க, இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.
</p><p>
இந்த விபத்தில் சிக்கிய கடற்றொழிலாளர்களை தேடுவதற்கு, விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>விபத்தில் சிக்கிய படகுகளில் ஒன்று</h2><p>
மற்றொரு கடற்றொழில் படகில் இருந்தவர்கள்&nbsp; அளித்த தகவலின் அடிப்படையில், நேற்று பிற்பகல் (31) கடற்றொழிலுக்குச் சென்ற ஒரு சிறு படகு விபத்தில் சிக்கியது முதலில் தெரியவந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15567338-84bf-4f0d-b098-db66fac66108/26-6a6d8db3dbdfa.webp' /></p><p>
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற மேலும் 3 கடற்றொழில் படகுகள் காணாமல் போனமை தெரியவந்துள்ளது.
</p><p>
தற்போது, ​​விபத்தில் சிக்கிய படகுகளில் ஒன்றில் இருந்த ஒரு கடற்றொழிலாளரின் சடலம் நீர்கொழும்பு கரைக்கு ஒதுங்கியுள்ளது,</p><p> அதே சமயம் அதே படகில் பயணித்த மேலும் இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, காணாமல்போன கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் தேடுவதற்காக, கடற்படைக்குச் சொந்தமான கப்பலும் சிறப்பு நீர்மூழ்கி குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் விமானப்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பூஜித் ஜயசுந்தரவின் குடும்ப நிலைமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785562785"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785562785</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று (31.07.2026)முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று (31.07.2026)முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p>குறித்த வழக்கில் பூஜித் ஜயசுந்தர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரோஷன் தெஹிவள மற்றும் பூஜித் ஜயசுந்தர தெரிவித்த கருத்துக்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>பூஜித் ஜயசுந்தர வாடகை வீட்டிலே மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.</p><p>35 வருடங்கள் பொலிஸ் சேவையில் பணியாற்றியதோடு இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. </p><h2>

</h2><p></p><h2>வறுமையில் வாடும் குடும்பம்</h2><p>290 வழக்குகளில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளுக்காக பல இலட்சம் ரூபாய்களை அவர் நஷ்ட ஈடாகச் செலுத்தியுள்ளார் என்று சட்டத்தரணி ரோஷன் தெஹிவள சுட்டிக்காட்டினார். </p><p>
பூஜித் ஜயசுந்தர சோகத்துடனும் விரக்தியுடனும் உரையாற்றிபோது,&nbsp;</p><p>“ நான் ஒருபோதும் எந்தவொரு மனிதனையும் கொன்றதில்லை. மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு எழுந்ததில்லை. </p><p>நான் நம்பும் மதத்தின் நம்பிக்கைகளின்படி இது எனது பூர்வ ஜென்ம கர்ம காரணமாகவே நிகழ்ந்தது. நான் பொலிஸ் சேவையில் இணைந்த நாள் முதல் பொதுமக்களுக்காகவும் பொலிஸ் திணைக்களத்திற்காகவுமே அர்ப்பணித்து சேவையாற்றினேன்.
</p><p>இந்தச் சம்பவத்துடன் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தேன். பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து என்னைச் சட்டப்பூர்வமாக நீக்கவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5688373-7aaa-47ce-bc52-81de16d0cabe/26-6a6d86a32a014.webp' /></p><p>அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் எடுத்ததாகவும் கூறினார். இறுதியில் சட்டத்தரணியின் ஆலோசனையின் பேரில் வழக்கை விலக்கிக் கொண்டதாக குறிப்பிட்டார்.
</p><p>இதனால் தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் FR (அடிப்படை உரிமை) வழக்குகளுக்கு அமைவாக நஷ்டஈடு செலுத்த வேண்டியிருந்தது. பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். </p><p>எக்காலத்திலும் எவருக்கும் எந்தவொரு தவறையும் செய்யாத தனக்கு, இவ்வாறு நேர்ந்துள்ளதாகவும் தனது வயதையும் தற்போதைய ஆதரவற்ற நிலையையும் கருத்தில் கொண்டு பொருத்தமான தீர்ப்பை வழங்குமாறும் அவர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த கரண்ணாகொட மற்றும் மகன் யோஷித ராஜபக்ச விவகாரம் - 25 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indictments-against-karannagoda-and-yoshitha-1785561388"></link>
            <id>https://tamilwin.com/article/indictments-against-karannagoda-and-yoshitha-1785561388</id>
            <summary type="text">முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p> 

முறையான கல்வித்தகுதிகள் இன்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தல் மற்றும் அவருக்கு பிரிட்டிஷ் அரச இராணுவ கல்லுரியில் பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, யோஷித ராஜபக்சவிற்குப் பயனளித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><h2>25 சாட்சிகள் பெயரிடல்</h2><p>இந்த வழக்கில் வசந்த குமார ஜெயதேவ கரண்ணாகொட முதல் பிரதிவாதியாகவும், யோஷித கனிஷ்க ராஜபக்ச இரண்டாவது பிரதிவாதியாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2504369f-6648-47c6-8957-c9511531d2b7/26-6a6d861ba0949.webp' /></p><p>
இவ்வழக்கிற்காக 25 சாட்சிகளின் பெயர்களையும், 47 ஆதார ஆவணங்களின் பட்டியலையும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:37:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பொலிஸ் மா அதிபர்களுக்கு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் : பின்னணி என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysteries-behind-igp-s-of-sri-lanka-1785553806"></link>
            <id>https://tamilwin.com/article/mysteries-behind-igp-s-of-sri-lanka-1785553806</id>
            <summary type="text">இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. </p><p>

கடந்த ஆட்சியாளர்களின் கீழ் பணியாற்றிய மூன்று பொலிஸ் மா அதிபர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் நீதித்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. </p><p>

அதற்கமைய முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, சி.டி. விக்கிரமரத்ன, தேசபந்து தென்னகோன் ஆகியோர் அடுத்தடுத்து பொறிக்குள் சிக்கியுள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

மரண தண்டனை</b></h2><p>34ஆவது பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தரவிற்கு நேற்றையதினம் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbe544b-adbc-474a-9e18-e98ee25a80a3/26-6a6d68cc9068f.webp' /></p><p>2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றத்திற்காக பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

35 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த சி.டி. விக்கிரமரத்ன கடந்த வாரம் அவரின் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.</p><p> தனது மெய்பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>

கோட்டாபய ஆட்சிக்காலத்தில் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு ராஜபக்சர்களுக்கு விசுவசமாக செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர் ஆவார். </p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.</p><p></p><p> </p><h3><b>

கடும் அழுத்தம் </b></h3><p>அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், மூன்றாம் தரப்பினால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தம் காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0757b634-3fb3-4c5a-a2a5-0ead195a554e/26-6a6d68cd5db16.webp' /></p><p>36ஆவது பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு வலுகட்டாயமாக அவரின் பதறி பறிக்கப்பட்டது.</p><p>நாடாளுமன்றக் குழுவின் விசாரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

கடந்த ராஜபக்சக்களின் ஆட்சியின் போது போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இவர் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர அடிப்படையில் நல்ல மனிதர் என்ற போதிலும், ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக செயற்பட்டு இன்று சிறைக் கைதியாக மாறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p>பொம்மைகளாக செயற்பட்டவர்கள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளனர். எனினும் பொம்மைகளை ஆட்டுவித்த வித்தைக்காரர்கள் எப்போது தண்டிக்கப்படுவார்கள் என நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> 
 </p>]]></content>
            <updated>2026-08-01T05:31:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கி வீடு தீக்கிரை- வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lightning-strikes-house-sets-it-on-fire-1785561664"></link>
            <id>https://tamilwin.com/article/lightning-strikes-house-sets-it-on-fire-1785561664</id>
            <summary type="text">அம்பாறை - இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் பெய்த கடும் மழையின்போது மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பற்றி முற்றாக சேதமடைந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் பெய்த கடும் மழையின்போது மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பற்றி முற்றாக சேதமடைந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் நேற்று (31.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மின்னல் தாக்கிய வீட்டின் தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>
வீட்டில் உள்ள பொருட்கள் முற்றாக சேதம்</h2><p>
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இருக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மழை பெய்யத் தொடங்கியபோது, வீட்டில் இருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd1207d-ec0e-402b-90cc-05318c19cfae/26-6a6d829ea1538.webp' /></p><p>

இந்நிலையில், மின்னல் தாக்கியதில் வீட்டின் உள்ளே தீ பரவியுள்ளது. இதையடுத்து, பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், வீட்டிலிருந்த அனைத்து பொருட்கள் மற்றும் உபகரணங்களும் தீயில் எரிந்து முற்றாக நாசமடைந்துள்ளன.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5185891-d79f-4c98-9b8d-6038181ad58e/26-6a6d829f956d2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/214f7b58-5da4-4f36-9cc8-f69e0293c709/26-6a6d82a061349.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:22:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இருந்து மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-s-son-escaped-from-country-1785556185"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-s-son-escaped-from-country-1785556185</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த நாட்களில் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. </p><p>

அதற்கமைய, குறித்த முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><h2><b>
பல குற்றச்சாட்டுகள் </b></h2><p>குறித்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அவரது புதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88c6fb8-5e6e-47df-a4c6-9e2b93eea02c/26-6a6d6ed396756.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக சமகால அநுர அரசாங்கம் விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது. </p><p>

இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-01T05:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பையில் தனியார் பங்குகளை விற்கும் திட்டம் தொடர்பில் FIFA அதிரடி அறிவிப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-scraps-world-cup-investment-plan-1785555792"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-scraps-world-cup-investment-plan-1785555792</id>
            <summary type="text">உலகக் கோப்பைப் போட்டிகளில் தனியார் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை கைவிட்டதாக FIFA அமைப்பு அறிவித்துள்ளது. 

இது தொடர்பில், FIFA அமைப்பின் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கோப்பைப் போட்டிகளில் தனியார் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை கைவிட்டதாக FIFA அமைப்பு அறிவித்துள்ளது. </p><p>

இது தொடர்பில், FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p>

மேற்படி அறிக்கையில், 

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் கால்பந்து சங்கங்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><p></p><h2> 

FIFA அமைப்பின் முடிவு</h2><p>
உலகக் கோப்பை மற்றும் பிற முக்கியப் போட்டிகளை நடத்துவதற்காக 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு புதிய துணை நிறுவனத்தை அமைக்கப்போவதாகவும், தனது பங்குகளில் 20% வெளி முதலீட்டாளர்களுக்கு விற்கப்போவதாகவும் FIFA அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe10bdf6-efac-4bc4-bfb5-30f0aeb3413a/26-6a6d7b179b7d4.webp' /></p><p>
</p><p>

 வெளி முதலீட்டாளர்களை உள்ளடக்கிய ஒரு புதிய தனியார் பங்குத் திட்டத்தை FIFA செயல்படுத்தினால், வரவிருக்கும் உலகக் கோப்பையைப் புறக்கணிக்கப்போவதாக UEFA எச்சரித்துள்ளது. </p><p>

UEFA உலகக் கால்பந்தில் மிகவும் சக்திவாய்ந்த சங்கமாக பார்க்கப்படுகின்றது. </p><p>

இதற்கமைய, தனியார் முதலீட்டுத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, 55 UEFA உறுப்பு சங்கங்கள் உலகக் கோப்பை மற்றும் FIFAவின் மற்ற அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T04:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்! பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-and-hemasiri-to-welikada-prison-1785548122"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-and-hemasiri-to-welikada-prison-1785548122</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை வெலிக்கடை சிறையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை வெலிக்கடை சிறையில் வைத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் நேற்று (31) மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><h2>கைதிகளாக பதிவு</h2><p>தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு இருவரும் வெலிக்கடை சிறையில் கைதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cd801a2-e1fd-47ab-8b44-0f859d3d68a5/26-6a6d7834244dd.webp' /></p><p>இதனையடுத்து கைதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடைகள் இருவருக்கும் வழங்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>2019 ஏப்ரல் 21 அன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விருந்தங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
</p><p>இது தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தங்களது அதிகாரப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமை, கடமை வீழ்ச்சி, கொலை மற்றும் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு இந்த தீர்ப்பு வழஙக்ப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை - பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-action-to-release-lands-1785555851"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-action-to-release-lands-1785555851</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள
காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான
சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச்
செயலகத்தில் நேற்று(31.07.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>காணிகளை விடுவிக்க நடவடிக்கை</h2><p>
</p><p>மேலும் தெரிவிக்கையில், தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும்
முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. </p><p>நாட்டில் ஏற்படும் அசாதாரண
மற்றும் இடர் நிலைமைகளின் போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர்
களப்பணியாற்றுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce12875-4d09-4914-b23c-38c4ed2b9c78/26-6a6d7254e1e9a.webp' /></p><p>
போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை
9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் ஆட்சிப்
பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள்
விடுவிக்கப்பட்டுள்ளன.</p><p> தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை
விடுவிக்க நடவடிக்கை எடுப்போம், எனத் தெரிவித்துள்ளார்.</p><p>திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக்குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள்
பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதியமைச்சர்
ஏற்றுக்கொண்டார். </p><p>மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை
விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ள நிலையில்,
கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர்
சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதியமைச்சர் இணக்கம்
தெரிவித்தார்.</p><p></p><h2>காணி உரிமையாளர்கள் சார்பில்</h2><p>கடந்த மே மாதம் பாதுகாப்பு பிரதியமைச்சரால் பார்வையிடப்பட்ட இயக்கச்சியிலுள்ள
காணியை இன்னும் 3 மாதங்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
இராணுவத்தினர் இதன்போது தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a9dd1be-10bd-4a1a-9716-3f853705512e/26-6a6d7255ebe35.webp' /></p><p>

வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில்
கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். </p><p>வட்டுவாகல் பகுதியில்
பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி
அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப்
பிரதியமைச்சர் உறுதி அளித்தார்.
</p><p>
கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள்
இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில்
மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து
தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னிப் பிராந்தியக்
கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ;ட
உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு
அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப்
பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-01T04:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணியில் 63 வயது பெண்ணின் சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-s-body-found-on-land-in-weeraketiya-1785555974"></link>
            <id>https://tamilwin.com/article/woman-s-body-found-on-land-in-weeraketiya-1785555974</id>
            <summary type="text">











அம்பாந்தோட்டை - வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>











அம்பாந்தோட்டை - வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

வீரகெட்டியவின் புஹுல்ஹேன பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நிலையில் கிடப்பதாக 
வீரகெட்டிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

63 வயது பெண்ணின் சடலம் மீட்பு</h2><p>
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feb17319-cfcd-46b3-b122-96772a27c8bf/26-6a6d73bf9c1c2.webp' /></p><p> </p><p>

சடலமாக மீட்கப்பட்ட பெண், விதரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளார்.</p><p> 

மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. </p><p>

மேலும், அவரது உடல் தங்கல்லே மருத்துவமனை பிரேச அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 ஆண்டுகளின் பின்னர் தமிழ் அரசியல் கைதியொருவருக்கு பிணை - நிபந்தனைகளால் மீண்டும் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-political-prisoner-bail-after-17-years-1785555151"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-political-prisoner-bail-after-17-years-1785555151</id>
            <summary type="text">கடந்த 17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த உளவுத்தகவல்களை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சமூக ஆர்வலர்களிடையே மீண்டும் பலத்த விவாதம்</h2><p>கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித இறுதித் தீர்ப்புமின்றி விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த செல்லையா பியூபாகரன் என்பவருக்கே நேற்று இவ்வாறு பிணை
அனுமதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c76b6951-4d9b-4d48-808f-897e45ed23ea/26-6a6d6cd0c0b06.webp' />&nbsp;</p><p>

எனினும், நீதிமன்றம் விதித்த கடுமையான பிணை நிபந்தனைகளை பூர்த்தி
செய்வதற்கு போதிய பிணையாளர்களோ அல்லது வசதிகளோ இல்லாத காரணத்தால், பிணை
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் சிறைச்சாலையிலேயே
அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
நீண்ட காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்
மனித உரிமைகள் மற்றும் நீதித்துறை தாமதங்கள் குறித்து இந்த சம்பவம் சமூக
ஆர்வலர்களிடையே மீண்டும் பலத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:49:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - களனி கங்கையின் ஆற்றுப்படுகையை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-of-minor-flooding-along-the-kelani-river-1785552542"></link>
            <id>https://tamilwin.com/article/warning-of-minor-flooding-along-the-kelani-river-1785552542</id>
            <summary type="text">தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக&amp;nbsp;களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக&nbsp;களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்பு</h2><p>இதற்கமைய, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4358fc02-7063-4581-9124-356a43997a6d/26-6a6d65c250459.webp' /></p><p> </p><p>எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளதாக&nbsp;அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:19:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை - வெளிநாட்டு பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massage-centre-raid-in-colombo-1785549202"></link>
            <id>https://tamilwin.com/article/massage-centre-raid-in-colombo-1785549202</id>
            <summary type="text">கொழும்பு, குறுந்துவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத செயற்பாடுகளுக்காக நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, குறுந்துவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத செயற்பாடுகளுக்காக நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
</p><p>
இதன்போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 11 பெண்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்களான பெண்கள் 22 முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b> 

நுட்பமான நடவடிக்கை</b></h2><p>சுற்றிவளைப்பின் போது குறித்த இடத்தின் உரிமையாளர் அங்கிருந்த தப்பியோடியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a63657d1-414f-4a2e-8f78-59c033f21349/26-6a6d615f2d2e1.webp' /></p><p>குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த விசேட தகவலுக்கமைய நபர் ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நுட்பமான நடவடிக்கையின் பின்னரே இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. </p><p>

விசாரணைகளின் போது, ஒரு மாத கால விசா அனுமதியுடன் நாட்டுக்கு வந்துள்ள சந்தேக நபர்கள், குறித்த மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமான முறையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p><h3><b> 

சட்ட நடவடிக்கை</b></h3><p>இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாவை வருமானமாக பெற்றுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8b9dd57-de82-40a4-a5fd-4ab71b1a4f21/26-6a6d615fd007e.webp' /></p><p>ஒரு பெண்ணிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக 20,000 முதல் 30,000 ரூபா வரை கட்டணம் அறவிடப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

கைது செய்யப்பட்டுள்ள 11 தாய்லாந்து நாட்டுப் பெண்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். </p>]]></content>
            <updated>2026-08-01T03:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-for-7-districts-1785550927"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-for-7-districts-1785550927</id>
            <summary type="text">மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'மஞ்சள்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
 

இன்று (01.08.2026) வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல், நாளை (02) காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
</p><p></p><h2>கனமழை பெய்ய வாய்ப்பு</h2><p>
 

தீவிரமான தென்மேற்குப் பருவமழையின் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்று நிறைந்த சூழல் இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44512c15-2ec4-41aa-829c-78ea7350d39c/26-6a6d5ed416ce3.webp' /></p><p>

 

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
</p><p>
 

இதற்கிடையில், சில இடங்களில் 100 மி.மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T02:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவின் முன்னாள் பாதுகாப்புப்படை உறுப்பினரொருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrest-facebook-post-insulting-anura-1785551088"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrest-facebook-post-insulting-anura-1785551088</id>
            <summary type="text">ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p>&nbsp;</p><h2>மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப்படையில் உறுப்பினர்</h2><p>எம்பிலிப்பிட்டியவில் உள்ள உதவி சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில்&nbsp;சந்தேகநபர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa1418b1-7e1c-4edd-a0ba-bc2e70ec6e76/26-6a6d5ded1ebec.webp' />&nbsp;</p><p>

சந்தேகநபர் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப்படையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் என்பது தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த நிலையில், தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T02:46:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advanced-level-exam-results-z-marks-released-1785549247"></link>
            <id>https://tamilwin.com/article/advanced-level-exam-results-z-marks-released-1785549247</id>
            <summary type="text">2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்கான மாவட்ட ரீதியாக வெட்டுப்புள்ளிகள் (&#039;Z ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்கான மாவட்ட ரீதியாக வெட்டுப்புள்ளிகள் ('Z -' மதிப்பெண்கள்) வெளியிடப்பட்டுள்ளன.</p><p>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><h2>மறு கணக்கெடுப்பு</h2><p>இது தொடர்பில் பல்கலைக்கழக ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், மறு கணக்கெடுப்பிற்குப் பிறகு இந்த மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12cbf481-9de4-4fd6-96dc-ac86b69770c5/26-6a6d5633a6486.webp' />&nbsp;</p><p>

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சேர்வதற்குத் தேவையான குறைந்தபட்ச 'Z' மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T02:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vegetable-shortage-in-sri-lanka-1785548131"></link>
            <id>https://tamilwin.com/article/vegetable-shortage-in-sri-lanka-1785548131</id>
            <summary type="text">இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடும் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 நிலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடும் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
 நிலவும் கடுமையான வரட்சியான காலநிலை மற்றும் நிலவும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.ஏ. சிரிவர்தன ஊடகங்களுக்கு இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2><b>
மரக்கறித் தொகை</b></h2><p>அதற்கமைய, அண்மைய நாட்களில் மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் நாளாந்த மரக்கறி சுமார் 200,000 கிலோகிராம்களால் குறைந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8fd65e-6fd7-46ae-963f-696f2270eff5/26-6a6d53fe056fb.webp' /></p><p>முன்னர் நாளாந்தம் கிடைக்கப்பெற்ற 600,000 கிலோகிராம் மரக்கறித் தொகை தற்போது 400,000 கிலோகிராம்களாக குறைந்துள்ளது.
</p><p>
இந்த நிலைமையால் சந்தையில் ஒரு கிலோ கறி மிளகாய் 500 முதல் 550 ரூபாய் வரையான விலையிலும், ஒரு கிலோ கரட் 230 முதல் 250 ரூபாய் வரையான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. </p><p>

அத்துடன், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபாவுக்கும், ஒரு கிலோ முருங்கை 150 முதல் 200 ரூபாய் வரையான விலையிலும், ஒரு கிலோ பூசணிக்காய் 115 ரூபாய்க்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தீவிரமாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் மரக்கறி பயிரிடுவதற்குத் தயக்கம் காட்டுவதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><h3><b>மக்களிடம் பணம் புழங்கும் திறன்</b></h3><p>எனினும், மக்களிடம் பணம் புழங்கும் திறன் குறைந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கேனும் பணம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0fc240c-0425-4ad3-a8a0-226772612551/26-6a6d53feaaf0a.webp' /></p><p>இந்த நிலைமையை கருத்திற்கொண்டு மரக்கறி விலைகள் உடனடியாக மேலும் அதிகரிக்க முடியாமல் போனது.
</p><p>
எனினும் மரக்கறிகளுக்கான மேலதிக கையிருப்புகளைப் பேண முடியாத நிலை காணப்படுவதால், எதிர்காலத்தில் இந்நிலை கடுமையான மரக்கறி நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T02:04:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகுந்த மகிழ்ச்சியில் மைத்திரி..! நீதிமன்றில் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்த சர்ச்சைக்குரிய கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-be-happy-this-verdict-hemasri-fernando-1785547261"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-be-happy-this-verdict-hemasri-fernando-1785547261</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட&amp;nbsp;முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்ததாக கூறப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட&nbsp;முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்ததாக கூறப்படும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p></p><h2>மகிழ்ச்சியில் இருவர்..&nbsp;</h2><p>இத்தண்டனை தொடர்பில்&nbsp;இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b7dff74-14ef-4567-ac1e-87744837ceac/26-6a6d4bfae45ca.webp' /></p><p>அதன்படி, நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியைப் பார்த்து ஹேமசிறி பெர்னாண்டோ,</p><p> </p><p>"நீதிபதி ஐயா, இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும்.</p><p> இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன" என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>நேற்றைய தினம்,&nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில்&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T02:00:09+00:00</updated>
        </entry>
    </feed>
