<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-23T01:47:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nimalka-fernando-missing-persons-1784769676"></link>
            <id>https://tamilwin.com/article/nimalka-fernando-missing-persons-1784769676</id>
            <summary type="text">தமிழீழத்திற்கான இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. இவ்வாறு காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கேட்பது &quot;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழத்திற்கான இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. இவ்வாறு காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கேட்பது "என் பிள்ளைக்கு என்ன நடந்தது?" என்றுதான். </p><p>500 பேரை நாங்கள் இராணுவத்தி்டமே ஒப்படைத்தோம். 
அப்படியென்றால் ஒரு நாடாக அந்தத் தாய்மார்களுக்கு நாம் அளிக்கும் பதில் என்ன? எனவே இந்த விடயங்கள் குறித்தும், பொறுப்புக்கூறல் குறித்தான பொறிமுறைகள் (Mechanisms), சட்டக் கட்டமைப்புகள் மற்றும் அரசியல் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல விடயங்களை தெரிவித்திருந்தார்.அது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள்,</p><h2>
 </h2><p></p><h2>இராணுவத்தால்&nbsp; பஸ்களில் ஏற்றப்பட்ட பிள்ளைகள்</h2><p>
இந்த விடயம் ஒட்டுமொத்தமாக சமாதானம் பற்றிய ஒரு விடயம். உதாரணமாக, இப்போது என் மகன் காணாமல் போயிருந்தால் எனக்கு இருக்கும் வேதனை சமாதானத்தைப் பாதிக்கும். </p><p>உங்களால் அதை சாதாரண விடயமெனக் கடந்துபோக முடியாது.
தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக நீதிமன்றத்திலும் கூறியிருக்கிறார்கள். வவுனியா நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று நடக்கிறது.</p><p>
சீ.டீ.பி பஸ்களில் இராணுவத்தினரின் உதவியுடன் ஏற்றினார்கள். நான் இராணுவத்திடம் கேட்கவில்லை. நீதிமன்றத்திலும் பெயர் பட்டியல் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.
</p><p>போர் ஒன்று இருந்ததை நாம் ஏற்றுக்கொண்டோம் தானே, அப்படியென்றால் போர்க் குற்றங்களும் நடந்திருக்கும்.
இப்போது சிலர் சொல்லலாம், இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், ஆனால் சரணடையவில்லை என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a105268-7bfe-4112-9ae2-9a586d3d51dc/26-6a616c8ec580a.webp' /></p><p>அப்போது கைது செய்யப்படும் போது ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை புரிந்து கொண்டுதான் மதகுரு ஒருவர் அனைவரிடமும் கலந்துரையாடி சரணடையுங்கள், கடவுள் பார்த்துக்கொள்வார் என்று பெயர் பட்டியல் ஒன்றையும் எடுத்துள்ளார். அந்த மதகுருவும் இன்றில்லை.
</p><p>எனவே, பயங்கரவாதத்தை அடக்கும் விடயத்திலும் ஒரு குற்றம் நடந்திருந்தால், அந்த குற்றம் குறித்து நாம் விசாரணை செய்ய வேண்டும். போர்க் குற்றம் என்பதற்கு வரும்போது அதில் சில வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. </p><p>போர் செய்வதற்கும் ஒரு சட்டக் கட்டமைப்புக்குள் பரஸ்பரம் இருக்க முடியும் என்ற ஒரு கதை இருக்கிறது. அது எல்.எல்.ஆர்.சி (LLRC) அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
இது குறித்து ஆராய்ந்து பார்த்து, இதன் தகவல்களை வெளிக்கொணர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதும், என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவதும் அவசியம்.
</p><p>அப்படியென்றால் ஒரு நாடாக அந்தத் தாய்மாருக்கு அளிக்கும் பதில் என்ன? எனவே இந்த விடயங்கள் குறித்தும், பொறுப்புக்கூறல் குறித்தான பொறிமுறைகள் (Mechanisms), சட்டக் கட்டமைப்புகள் மற்றும் அரசியல் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T01:31:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா - இலங்கைக்கு இடையில் விமான பயணங்களில் ஈடுபடும் பயணிகளுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-australia-sri-lanka-flights-to-be-suspend-1784734702"></link>
            <id>https://tamilwin.com/article/will-australia-sri-lanka-flights-to-be-suspend-1784734702</id>
            <summary type="text">அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையே பயணம் செய்யும் விமானப் பயணிகளின் சுற்றுலாத் திட்டங்களில் திடீர் தாக்கங்கள் ஏற்படக்கூமென அவுஸ்திரேலிய அரசாங்கம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையே பயணம் செய்யும் விமானப் பயணிகளின் சுற்றுலாத் திட்டங்களில் திடீர் தாக்கங்கள் ஏற்படக்கூமென அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது. </p><p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. </p><p>மத்திய கிழக்கு போர் காரணமாக சில நாடுகளின் வான்பரப்பு குறுகிய அறிவித்தலில் மூடப்படலாம். சில நேரம் விமான நிறுவனங்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்தல், வேறு பாதைகளைப் பயன்படுத்த அல்லது விமானச் சேவைகளை ரத்து செய்ய நேரிடலாமென்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் Smartraveller இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> </p><h2><b>பயணிகளுக்கு எச்சரிக்கை </b></h2><p> இந்த நிலைமையானது குறிப்பாக டுபாய், டோஹா, அபுதாபி உள்ளிட்ட மத்திய கிழக்கு விமான நிலையங்கள் ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கும் இடையில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமானதாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d125075-7976-4410-a55d-0156c456a192/26-6a60fd95a417b.webp' /></p><p>வான்பரப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் விமானங்கள் தாமதமடைதல், பயண வழிகள் நீளுதல் மற்றும் இணைப்பு விமானங்களைத் தவறவிடும் அபாயம் காணப்படுகின்றது. </p><p>எனினும், அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் தற்போது முற்றிலுமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. </p><h3><b> விமானச் சேவை</b></h3><p>கட்டார் எயார்வேஸ் நிறுவனம் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி வரை புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவனையை பராமரித்து வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3ba28b-6ff5-49ce-8c58-beab13eefa2b/26-6a60fd9654fb3.webp' /></p><p>பாதுகாப்பு நிலைமை காரணமாக குவைத்திற்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானச் சேவைகளும் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. </p><p>அதற்கமைய, இலங்கைக்குப் பயணம் செய்ய அல்லது இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வரவுள்ள பயணிகள், விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் தமது விமானப் பயணத்தின் நிலைமையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-07-23T01:19:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவுக்கு அறுவை சிகிச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salay-under-went-an-surgery-1784765908"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salay-under-went-an-surgery-1784765908</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொ்ளளப்பட்டுள்ளது.
தேசிய வைத்தியசாலையின் இதயவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொ்ளளப்பட்டுள்ளது.
</p><p>தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>கடந்த ஜூன் 7ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சலே, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக இதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e588f091-463f-4ef5-90a5-36c7d2c76525/26-6a615dd64bd0f.webp' /></p><p>
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் சலே நீண்ட நாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.</p><p>
இந்த நிலையில் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புக்களின் அடிப்படையில் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T01:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி.விக்ரமரத்னவின் மரணத்தில் தொடரும் மர்மம்:துப்பாக்கியில் கைரேகைகள் தெளிவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-finger-print-in-cd-wickramatnas-pistol-1784765412"></link>
            <id>https://tamilwin.com/article/no-finger-print-in-cd-wickramatnas-pistol-1784765412</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கியில் இருந்து எந்தவொரு தெளிவான கைரேகையையும் கண்டற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கியில் இருந்து எந்தவொரு தெளிவான கைரேகையையும் கண்டறிவது கடினமாக உள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கினற்ன.</p><p>பெயர் குறிப்பிட விரும்பாத மேல் மாகாண தெற்கு சிறப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.</p><p>துப்பாக்கியில் சுடும்போது ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக, அதில் பதிந்துள்ள விரல் அடையாளங்கள் அழிந்துபோகும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், இந்தத் துப்பாக்கியிலும் கைரேகைகள் அழிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>ஒரு குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், தோட்டாக்கள் மற்றும் காலம் குறித்து கண்டறிய முடிந்தாலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்று மங்கலாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a2ef0c-5910-4c64-89f3-bda37f25d481/26-6a615bea25ecd.webp' /></p><p>
சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் வெளியாட்கள் எவரும் சட்டவிரோதமாக நுழைந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.</p><p>
இந்தச் சம்பவம் தவறதலாக நடந்த துப்பாக்கிச் சூடா அல்லது தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் தற்சமயம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>
சம்பவத்திற்கு முன்னதாக வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வீட்டின் உட்புற சீ.சீ.ரீ.வி. காட்சிகளை பொலிஸார் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 மி.மீ. பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் வழக்கு தொடர்பான ஏனைய பொருட்களை எதிர்வரும் 28ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, மேல் மாகாண தெற்கு சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T00:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதுளையில் தாக்கப்பட்ட தோட்டத் தொழிலாளியின் மகன்.. முகாமையாளருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/badulla-strike-removal-of-manager-unugalle-estate-1784765045"></link>
            <id>https://tamilwin.com/article/badulla-strike-removal-of-manager-unugalle-estate-1784765045</id>
            <summary type="text">பதுளை - உனுகல்ல தோட்ட
முகாமையாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கக் கோரி, அத்தோட்டத்தைச் சேர்ந்த
தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாகத் தொடர் வேலைநிறுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை - உனுகல்ல தோட்ட
முகாமையாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கக் கோரி, அத்தோட்டத்தைச் சேர்ந்த
தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மல்வத்தவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான உனுகல்ல தோட்டத்தின்
உனுகல்ல பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியின் மகனான கோகுலநாத் மனோஜ்காந்த் என்பவர்,
தனது வீட்டுக்கு அருகில் கோழிக்கூண்டு அமைப்பதற்கான அனுமதி கோரி கடந்த ஏப்ரல்
மாதம் தோட்ட முகாமையாளரிடம் கடிதம் வழங்கியுள்ளார்.&nbsp;</p><p>

மூன்று மாதங்கள் கடந்தும் பதில் கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் திகதி
அது குறித்து வினவுவதற்காகச் சென்ற இடத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத்
தொடர்ந்து, தோட்ட முகாமையாளர் சாணக்க தன்னைத் தாக்கியதாக மனோஜ்காந்த் ஹாலிஎல
பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p> அத்துடன், தாக்குதலுக்குள்ளான இளைஞர்
அன்றைய தினமே ஹாலிஎல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac4707f6-7cba-42d6-8674-fd2f78c86777/26-6a615bbd9546a.webp' /></p><p>

இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், முகாமையாளர் சாணக்கவை உடனடியாக
அப்பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும், உனுகல்ல தோட்டத்தின் 4 பிரிவுகளைச்
சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூலை 18ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப்
போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். </p><p>அத்துடன், தோட்டக் காரியாலயத்தில் உள்ள அதிகாரிகள்
மக்களுக்குச் சரியான சேவைகளை வழங்குவதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம்
சுமத்துகின்றனர்.</p><p>

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூலை 20ஆம் திகதி தோட்டத்தின்
உயர்மட்ட முகாமையாளரான சமிந்த பெரேரா சம்பவ இடத்திற்கு வருகை தந்து
தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
</p><p>
இந்நிலையில், தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, நிலவும் பிரச்சினை
குறித்து ஆராய்வதற்காகப் பதுளை மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில்,
உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று
இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T00:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் 9 ஈடுபட்ட ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9-fishermen-arrested-in-thalaimannar-1784763904"></link>
            <id>https://tamilwin.com/article/9-fishermen-arrested-in-thalaimannar-1784763904</id>
            <summary type="text">தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை
மீறிச் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழில் படகு ஒன்றும்,
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை
மீறிச் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழில் படகு ஒன்றும்,
அதில் இருந்த 9 இந்திய கடற்றொழிலாளர்களும் இலங்கைக்
கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>கடற்படையினரின் நடவடிக்கை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இந்த நடவடிக்கையின்போது இரணைதீவுக்குத் தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள்
சட்டவிரோதமாக நுழைந்த 50 இற்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழில் படகுகள்
கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7142532b-15f0-4a25-a722-f5b8b4ca6262/26-6a615735de36c.webp' /></p><p> </p><p>அதனைத் தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஒரு இந்திய கடற்றொழில் படகு
கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களும் கைப்பற்றப்பட்ட கடற்றொழில் படகும் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T23:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவன் மாயம்.. தேடுதல் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/15-year-old-boy-missing-swimming-in-mahaweli-river-1784764421"></link>
            <id>https://tamilwin.com/article/15-year-old-boy-missing-swimming-in-mahaweli-river-1784764421</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவன் ஒருவர்
தண்ணீரில் மூழ்கிக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவன் ஒருவர்
தண்ணீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
</p><p>
நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம்
இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>&nbsp;பொலிஸார் விசாரணை</h2><p>இதன்போது, ஏனைய மூன்று சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றிப்
பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c5e390a-aa43-4898-8ea4-25973cedb6d2/26-6a6158d22f9ff.webp' /></p><p>எனினும், காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் பிரதேச மக்களும், கம்பளைப் பொலிஸாரும்
இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்துக் கம்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T23:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து நடத்துனர்.. யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாரதியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-driver-carrying-60-passengers-dies-in-jaffna-1784760242"></link>
            <id>https://tamilwin.com/article/bus-driver-carrying-60-passengers-dies-in-jaffna-1784760242</id>
            <summary type="text">யாழில் தனியார் பேருந்தை செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம், புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் தனியார் பேருந்தை செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>நேற்றையதினம், புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதான முருகேசு
ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த தனியார் பேருந்து, புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம்
நோக்கி பயணித்துள்ளது. அதன்போது அந்த பேருந்தில் 60 பயணிகள் இருந்துள்ளனர்.</p><p></p><h2>திடீர்&nbsp;மாரடைப்பு </h2><p>

பேருந்தானது வேலணை - அராலி சந்தியால் பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதி
ஆசனத்தில் சாய்ந்தபடியே மயக்கமுற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a98d0d4a-e1db-4c31-a727-34535d30ddf2/26-6a6154a977598.webp' /></p><p> </p><p>இதன்போது பேருந்து அவ்வாறே சுமார்
ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பேருந்து மெதுவாக வீதியை விட்டு ஓரமாக செல்வதை நடத்துனர் அவதானித்து
விட்டு சாரதியை பார்த்தவேளை அவர் மயக்கமுற்ற விடயம் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p>இந்நிலையில், சாதுரியமாக செயற்பட்ட நடத்துனர் பேருந்தை நிறுத்திவிட்டு சாரதியை
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக
உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T23:41:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-surrenders-police-killing-disabled-brother-1784737294"></link>
            <id>https://tamilwin.com/article/man-surrenders-police-killing-disabled-brother-1784737294</id>
            <summary type="text">தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளார்.</p><p> </p><p>நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் கையில் கத்தியுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த சந்தேகநபர், தனது சகோதரனைக் கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p></p><h2>பலத்த வெட்டுக்காயங்கள்&nbsp;</h2><p>

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வீட்டில் உள்ள கட்டிலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05919402-8018-4b7f-83cd-b9a293e0f504/26-6a60f27c765bd.webp' /></p><p>ராஜகடலுவ பகுதியைச் சேர்ந்த டுலேன் அசங்க என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p> </p><p>குறித்த சந்தேகநபரே பாதிக்கப்பட்ட நபரைப் பகல் நேரத்தில் பராமரித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிவான் பரிசீலனைகளின் பின்னர் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p> </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T21:57:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் போதைப்பொருள் கும்பல்.. இலங்கையில் பணச் சலவை - அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999"></link>
            <id>https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&amp;nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&amp;nbsp;இந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இவற்றில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LONAVRmADOc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T21:36:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உயர் கல்விக்காக அதிகளவு சர்வதேச மாணவர்கள் விண்ணப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-students-apply-higher-education-uk-1784755713"></link>
            <id>https://tamilwin.com/article/international-students-apply-higher-education-uk-1784755713</id>
            <summary type="text">பிரித்தானிய பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;
அண்மைய த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
அண்மைய தரவுகளின்படி, 1.48 இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவில் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.</p><p> இதில் பெரும்பான்மையாக சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்திய மாணவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>&nbsp;கல்வி தரம்..&nbsp;</h2><p>சீன மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்தாலும், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளங்கலை (Undergraduate) படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2252958a-a78e-4e95-9056-8fb1397b1789/26-6a61378e09d09.webp' /></p><p>இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் படிப்பதற்கான முக்கிய காரணங்கள்:
</p><p><b>உயர்தர கல்வி மற்றும் உலகளாவிய அங்கீகாரம்
</b></p><p><b>வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முன்னேற்றம்</b></p><p><b>
பிரித்தானிய அரசின் கல்வி உதவிகள் மற்றும் விசா சலுகைகள்</b></p><p>இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் படிப்பதன் மூலம் உலகளாவிய போட்டியில் முன்னேறி வருகின்றனர். இது இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்தும் ஒரு நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T21:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-us-strike-deal-kingdom-enrich-uranium-1784752731"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-us-strike-deal-kingdom-enrich-uranium-1784752731</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு உதவும் வகையில், அந்நாட்டிலேயே யுரேனியம் செறிவூட்டும் திறனை வழங்குவதற்கான 30 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு உதவும் வகையில், அந்நாட்டிலேயே யுரேனியம் செறிவூட்டும் திறனை வழங்குவதற்கான 30 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். </p><p> இவ்வொப்பந்தத்தை அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலுக்கு அனுப்ப ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.</p><p></p><h2>யுரேனியம் செறிவூட்டும் மையம்</h2><p>வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் மூலம் சவூதியில் அணு உலைகள் கட்டப்படவுள்ளதுடன், இருநாடுகளின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு அங்கு யுரேனியம் செறிவூட்டும் மையம் அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b34b54-4f01-4c27-ad27-edbefea531b6/26-6a612c086911f.webp' /></p><p> ஈரான் யுரேனியம் செறிவூட்டுவதைத் தடுக்கவே அமெரிக்கா போரில் ஈடுபட்டு வரும் நிலையில், சவூதிக்கு இத்தகைய அனுமதியை வழங்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> மேலும், சர்வதேச அணுசக்தி முகாமையின் தீவிர கண்காணிப்பு விதிகள் இதில் சேர்க்கப்படாததால், சவூதி அணு ஆயுதம் தயாரிக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T20:46:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பயங்கர தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-threatens-target-iran-bridges-power-plants-1784751304"></link>
            <id>https://tamilwin.com/article/trump-threatens-target-iran-bridges-power-plants-1784751304</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழிக்கும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். </p><p>தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களும் இலக்கு வைக்கப்படும் எனத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.</p><p></p><h2>ட்ரோன் தாக்குதல்கள்&nbsp;</h2><p>
</p><p>
ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe5da706-6312-42b9-8a67-0d7ddfa1c8e1/26-6a6126918a476.webp' /></p><p> </p><p>இந்நிலையில், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் ஈரானின் ட்ரோன் தாக்குதல்களை இடைமறித்து அழித்துள்ளன.</p><p>

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்த மோதல் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பரப்பரப்பாக உயர்ந்து பீப்பாய் ஒன்று 94 டொலரை எட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T20:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷிதவிற்கு தொடரும் வழக்கு.. மகிந்தவின் சகா 3 இலட்சம் டொலருடன் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-colleague-absconds-300-000-case-yoshitha-1784748476"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-colleague-absconds-300-000-case-yoshitha-1784748476</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp; தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;வெளிநாட்டு தொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்தததாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.&nbsp;</p><p>இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதேநேரம், அவர்களின் தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா தொடர்பிலும் பாரிய நிதிக் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/niK56A5Pubw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T19:55:12+00:00</updated>
        </entry>
    </feed>
