<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-09T22:58:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: இணையத்தில் துப்பாக்கி கற்ற 14 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thailand-school-shooting-police-report-attacker-1786313183"></link>
            <id>https://tamilwin.com/article/thailand-school-shooting-police-report-attacker-1786313183</id>
            <summary type="text">​பேங்கொக் நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய 14
வயது சிறுவன், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப்
பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பேங்கொக் நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய 14
வயது சிறுவன், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப்
பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன் வன்முறை சார்ந்த உள்ளடக்கங்களை அதிகமாகப்
பார்த்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​</p><p>கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், குறித்த சிறுவன்
முதலில் வீட்டில் இருந்த தனது தாய் வழி தாத்தா, பாட்டியைச் சுட்டுக் கொன்ற
பின்னர், பாடசாலைக்குச் சென்று மேலும் அறுவரைக் சுட்டுக் கொன்றுவிட்டுத்
தவறான முடிவெடுத்துகொண்டான்.</p><p></p><h2>பொலிஸார் தகவல்</h2><p>

​சம்பவம் தொடர்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த
பிராந்திய பொலிஸ் துணை ஆணையாளர் அத்தாபோல் அனுசித், அந்த சிறுவன் கடந்த ஒரு
வருடத்திற்கும் மேலாகத் துப்பாக்கிகள் மீது ஆர்வம் காட்டி வந்துள்ளதை
உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>
மேலும், கடந்த வருடம் அந்த சிறுவன் பாடசாலைக்குக் கொண்டு வந்த ஏர்-கன் (BB
gun) ரகத் துப்பாக்கியை ஆசிரியர் ஒருவர் பறிமுதல் செய்திருந்ததாகவும் அவர்
குறிப்பிட்டார்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1709d6f8-06cc-4986-9246-4cc54483e8a0/26-6a78fe19df9cf.webp' /></p><p>இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களைத் தவிர 20க்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு தாய்லாந்தில் இடம்பெற்ற மிக மோசமான
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாக இது கருதப்படுகின்றது.

​</p><p>இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்தத்
தாய்லாந்து கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், மாணவர்களின் மனநலப் பரிசோதனை,
அவசர காலப் பயிற்சிகள் மற்றும் ஆபத்தான பொருட்களைப் பாடசாலைக்குக்
கொண்டுவருவதைத் தடுக்கும் சோதனைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள்
தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:54:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் படைகள் ஈரானில் கால்பதித்தால் கடும் பதிலடி – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-cut-them-off-iran-general-warns-us-ground-1786310871"></link>
            <id>https://tamilwin.com/article/will-cut-them-off-iran-general-warns-us-ground-1786310871</id>
            <summary type="text">ஈரான் இராணுவத்தின் தரைப்படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் இராணுவத்தின் தரைப்படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட எச்சரிக்கையில், </p><p>ஈரானுக்குள் எந்தவொரு வெளிநாட்டு தரைப்படை தலையீடும் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு உடனடியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>இராணுவத் தளபதி எச்சரிக்கை</h2><p>

“அமெரிக்க இராணுவ வீரர்கள் யாரேனும் ஈரானில் கால்பதித்தால், அவர்களைத் தடுத்து நிறுத்துவோம்” என ஜஹான்ஷாஹி கூறியதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
எதிரிகளின் எந்தவொரு நடவடிக்கைக்கும் உறுதியான மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அமையும் வகையில் பதிலளிக்க ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c355fa0b-c632-499b-98c2-6a50d8a333f7/26-6a78f3f775469.webp' /></p><p>
</p><p>
மேலும், நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஈரான் இராணுவ தரைப்படைகள் முழுமையான போர்த்தயார் நிலையில் இருப்பதாகவும், எதிரிகளின் நடமாட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டின் எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து வருவதாகவும் ஜஹான்ஷாஹி தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகள் நேரடியாக இடம்பெறாமல், இடைத்தரகர்கள் மூலம் தொடர்வதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p>[MORWWCE</p><h2>அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
“தற்போது அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இடைத்தரகர்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன” என அவர் அரச ஊடகமான IRIB-க்கு தெரிவித்துள்ளார்.</p><p>

பல நாடுகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாகவும், அமெரிக்கா முன்னர் செய்த ஒப்பந்த மீறல்களுக்கு தீர்வு காணும் வரை நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் திரும்பாது என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7e0511a-8446-4f8f-828a-c25b07c21ffb/26-6a78f3f61ec69.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்லும் பாதை மற்றும் அதற்கான சட்டரீதியான நடைமுறைகள் தொடர்பாக ஓமானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அராக்சி கூறியுள்ளார்.</p><p>

எனினும், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது அமெரிக்காவிடமிருந்து இழப்பீடு உள்ளிட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு உட்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னர் பயன்படுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து பிரிப்பு திட்டம் (TSS) இனி ஏற்றுக்கொள்ள முடியாது என ஈரான் தெரிவித்துள்ளதாகவும், புதிய பாதை ஒன்றை உருவாக்க வேண்டியிருப்பதாகவும் அராக்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இதற்கு பல்வேறு தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da3d7d3-b568-4466-8a94-5322b5cd8b65/26-6a78f3f6c436e.webp' /></p><p>

மறுபுறம், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உடன்பாடு விரைவில் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும், தடையின்றி வர்த்தகக் கப்பல்கள் மீண்டும் செல்லும் வகையில் உடன்பாடு அறிவிக்கப்பட்டவுடன், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து மடு அன்னை திருத்தலத்திற்கு பாத யாத்திரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pilgrimage-from-manalkadu-to-madhu-shrine-1786299433"></link>
            <id>https://tamilwin.com/article/pilgrimage-from-manalkadu-to-madhu-shrine-1786299433</id>
            <summary type="text">மன்னார் - மருதமடு அன்னையின் பெரும் திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி, கிழக்கு மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திதிலிருந்து மணல்காடு
பக்தர்கள் 100 க்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - மருதமடு அன்னையின் பெரும் திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி, கிழக்கு மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திதிலிருந்து மணல்காடு
பக்தர்கள் 100 க்கு மேற்பட்டோர் நேற்று(09.08.2026) பிற்பகல் 3:00 மணியளவில் பாத யாத்திரை
பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

மணல்காடு பங்கு தந்தையின் ஆசீர்வாத வாழிபாட்டுடன் ஆரம்பமான பாதயாத்திரை நேற்று
இரவு மணல்காடு சந்தி மருதங்கேணி புதுக்காடு ஊடக இயக்கச்சி தேவாலயத்தை
சென்றடைந்த அங்கிருந்து இன்று(10) காலை மீண்டும் பாத யாத்திரை
ஆரம்பமாகவுள்ளது.</p><h2>பெரும் திருவிழா</h2><p>இதேவேளை மணல்காடு கிராமத்திலிருந்து மருத மடு அன்னை தேவாலயம்
செல்லும் யாத்திரிகர்களுடன் பயண பாதையிலுள்ள கிறிஸ்தவ மக்கள் பலரும் இணைந்து
மடு அன்னை தேவாலயம் வரை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554fc718-1fae-4d70-bed2-8868d75cc08f/26-6a78cd53113cf.webp' /></p>]]></content>
            <updated>2026-08-09T22:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடைமழை, பலத்த காற்று: சாமிமலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-winds-affect-9-families-in-samimale-1786302039"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-winds-affect-9-families-in-samimale-1786302039</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம் - சாமிமலை, ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் அண்மையில் பெய்துவரும் அடைமழை மற்றும் பலத்த காற்றினால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம் - சாமிமலை, ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் அண்மையில் பெய்துவரும் அடைமழை மற்றும் பலத்த காற்றினால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>&nbsp;குறித்த லயன் குடியிருப்பில் உள்ள சில வீடுகளுக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பலத்த காற்றின் காரணமாக வீடுகளின் கூரைத் தகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.</p><p></p><h2>சேதமடைந்த கூரைகள்&nbsp;</h2><p> </p><p>

அத்துடன், இந்தக் குடியிருப்பில் வசிக்கும் 13 பாடசாலை மாணவர்களும், தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களும் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். </p><p>

மழை தொடர்ச்சியாக பெய்துவரும் நிலையில், சேதமடைந்த கூரைகள் ஊடாக மழைநீர் வீடுகளுக்குள் கசிவதால், தங்களது பிள்ளைகளுடன் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15be9848-4353-4403-8b47-3cb5f99a8d1e/26-6a78d7bd2130e.webp' /></p><p>
குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 

இந்த நிலையில், தங்களது வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும், இதுவரை தங்களுக்கு நிரந்தரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p></p><h2>தொழிலாளர்கள் இடையேயான பிரிவினை</h2><p> </p><p>

கூரைத் தகரங்கள் சேதமடைந்த குடும்பங்களுக்கு உடனடியாக புதிய கூரைத் தகரங்களை வழங்குவதுடன், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
</p><p>
இதேவேளை, கடந்த பல வருடங்களாக ஸ்டொக்ஹோம் தோட்ட நிர்வாகம் மற்றும் சில அதிகாரிகளினால் தொழிலாளர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa58d509-bfa1-4024-81d1-df3a71fc9a18/26-6a78d7bc3d047.webp' /></p><p>
</p><p>
 தோட்டத்தில் தொழில் புரிபவர்கள் மற்றும் தற்போது தொழில் வாய்ப்பு இல்லாதவர்கள் என பிரிக்கப்பட்டுவதுடன் நிர்வாகத்திற்கு சார்பானவர்கள் மற்றும் சார்பற்றவர்கள் என தொழிலாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
 இதன் காரணமாக சில தொழிலாளர்கள் தொழிலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், மேலும் சில தொழிலாளர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தோட்ட நிர்வாகத்தின் தரப்பிலான பதில் இதுவரை கிடைக்கவில்லை.</p><p></p><h2>அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள்</h2><p> </p><p>

அண்மைய சீரற்ற காலநிலையினால் வீடுகளின் கூரைத் தகரங்கள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கூரைத் தகரங்களை வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p> 

இதன்போது, தோட்டத்தில் தற்போது தொழில் புரியும் குடும்பங்களுக்கு தலா 8 பழைய கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டதாகவும் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற குடும்பங்களுக்கு கூரைத் தகரங்களை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ae7a9f-43ed-483f-9af4-a19f7869acd8/26-6a78d7bb34621.webp' /></p><p>
</p><p>
மேலும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, தோட்ட நலன்புரி மற்றும் வெளிக்கள அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டு தங்களுக்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். </p><p>இதனடிப்படையில் தோட்ட நிர்வாகத்தினரை உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடியிருப்புகள் மேலும் சேதமடைவதற்கு முன்னர், அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T22:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த - கோட்டாபய - பசிலுக்கு பெரும் அதிர்ச்சி..! நீதிமன்றத்தின் ஆபத்தான தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-brothers-trouble-dangerous-court-verdict-1786309718"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-brothers-trouble-dangerous-court-verdict-1786309718</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இவர்கள் தான் காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உயர்மட்ட அரசியல்வாதிகள் சட்ட ரீதியான சிக்கல்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
</p><p>
இவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக, 'வீட்டுக்காவலில்' வைப்பதற்கான சட்ட நடைமுறைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
</p><p>
 இது இத்தகைய உயர் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dhCViA6wjKI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T21:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாகசாகி அணு குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர வேண்டும்: ஐ.நா செயலாளர் நாயகம் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-secretary-general-urges-commemoration-nagasaki-1786304908"></link>
            <id>https://tamilwin.com/article/un-secretary-general-urges-commemoration-nagasaki-1786304908</id>
            <summary type="text">ஜப்பானின் நாகசாகி நகர் மீது நடத்தப்பட்ட அணு குண்டுவீச்சினால்
பாதிக்கப்பட்டவர்களையும், அதிலிருந்து உயிர் தப்பியவர்களையும் உலகம் என்றும்
நினைவில் வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் நாகசாகி நகர் மீது நடத்தப்பட்ட அணு குண்டுவீச்சினால்
பாதிக்கப்பட்டவர்களையும், அதிலிருந்து உயிர் தப்பியவர்களையும் உலகம் என்றும்
நினைவில் வைத்திருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்
அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டு 81 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும்
வகையில் வெளியிட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மனிதகுலத்தின் பேரழிவு</h2><p>

81 வருடங்களுக்கு முன்னர் மனிதகுலத்தின் பேரழிவுத் திறனுக்கான அடையாளமாக
நாகசாகி மாறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இன்று நாகசாகி நகரம் ஒரு எச்சரிக்கையாகவும் சான்றாகவும் நிற்பதாகத் தெரிவித்த
அவர், அச்சத்தின் மூலம் அல்லாமல், பொதுவான இலக்குகளின் மூலமே அமைதியைப்
பாதுகாக்கும் உலகைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு
விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25c186aa-bd50-42ac-ae80-339a4ccf33b5/26-6a78dd3d1bb36.webp' /></p><p>

இரண்டாம் உலகப் போரின் போது, ஹிரோஷிமா மீதான தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று
நாட்களின் பின்னர், 1945 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 9 ஆம் திகதி அமெரிக்காவினால்
நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டது.</p><p>
இத்தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், சில நாட்களின்
பின்னர் ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு
வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:34:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்வானின் 2027ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவீனம் ட்ரில்லியனாக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/taiwan-s-2027-defense-budget-tops-1-trillion-1786292191"></link>
            <id>https://tamilwin.com/article/taiwan-s-2027-defense-budget-tops-1-trillion-1786292191</id>
            <summary type="text">தாய்வான் அரசாங்கம் தனது 2027ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனத்தை 16
சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது.அதற்காக முதன்முறையாக 1 ட்ரில்லியன் தாய்வான் டொலர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்வான் அரசாங்கம் தனது 2027ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனத்தை 16
சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது.</p><p>அதற்காக முதன்முறையாக 1 ட்ரில்லியன் தாய்வான் டொலர்களுக்கும்
அதிகமாக ஒதுக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>வரவு செலவுத் திட்டம்</h2><p>தாய்வானை தனது சொந்தப் பிராந்தியம் என உரிமை கோரி வரும் சீனா, கடந்த சில
வருடங்களாக இராணுவ மற்றும் அரசியல் அழுத்தங்களை அதிகரித்து வரும் நிலையிலேயே
தாய்வான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>
எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி அமைச்சரவையினால் முன்வைக்கப்படவுள்ள இந்த வரவு
செலவுத் திட்ட முன்மொழிவில் கடலோரப் பாதுகாப்புப் படை, படைவீரர்களுக்கான
நலன்புரி திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான நிதிகள்
உள்ளடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a38001e-4872-486f-af3e-59a0047928e8/26-6a78add5de845.webp' /></p><p>

அத்துடன் இந்த நிதியொதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3
சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
தற்போது தாய்வான் தனது வருடாந்த 'ஹான் குவாங்' இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு
வரும் நிலையில், இராணுவத்தை நவீனமயமாக்குவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்
நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதும் அரசாங்கத்தின் முதன்மை இலக்காக
மாறியுள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-war-strait-hormuz-trump-started-iran-war-1786297850"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-war-strait-hormuz-trump-started-iran-war-1786297850</id>
            <summary type="text">ஈரான் முற்றிலுமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறும் முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிடத் தயாரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் முற்றிலுமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறும் முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிடத் தயாராக இருக்கலாம் என The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
முழுமையான மற்றும் இறுதியான அணுசக்தி ஒப்பந்தத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, முக்கிய எண்ணெய் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதை அடிப்படையாகக் கொண்டு, பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், தற்போதுள்ள போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டிய The Wall Street Journal, ட்ரம்ப் கடந்த சில வாரங்களாக இதற்கான சூழலை உருவாக்கி வருவதாகவும், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றைப் பெற முடியாவிட்டாலும் அதிலிருந்து விலகிச் செல்லலாம் என அவர் தனது மூத்த ஆலோசகர்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p>

எனினும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a5fd276-8df1-4025-befb-8a2267fae56e/26-6a78c2c00945b.webp' /></p><p> 

இதில் பல பில்லியன் டொலர் நிதி வழங்கல், அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருதல், பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுதல், பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகியவை அடங்குகின்றன.
</p><p>
இந்தக் கோரிக்கைகள் காரணமாக வாஷிங்டனின் இராஜதந்திரத் தெரிவுகள் குறைந்துள்ளதாகவும், விரைவான உடன்பாட்டை எட்டுவதற்குப் பதிலாக நீண்டகால மோதலுக்கு ஈரான் தயாராகி வருவதற்கான அறிகுறிகளாக இவை இருப்பதாகவும் The Wall Street Journal தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்க போர்க்கப்பல்கள்</h2><p>
</p><p>
ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள குறுகிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை, ஈரானின் முக்கியமான அழுத்தக் கருவிகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p><p>

 ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை ஈரான் பாதித்துள்ளதாகவும், இதனால் கப்பல் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்பட்டு உலக சந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74d432b0-19ec-48fe-bd37-2c8b08f6e1e6/26-6a78c2c0ba371.webp' /></p><p>

போர் தொடங்கிய பின்னர் பெப்ரவரி மாதத்தில் ஈரான் இந்த நீர்வழிப் பாதையை மூடியதாகவும், அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படக்கூடாது என ஈரான் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அதேவேளை, இந்த நீர்வழிப் பாதையைப் பயன்படுத்தும் வர்த்தகக் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும் ஈரான் முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><h2>&nbsp;பெட்ரோல் விலைகள்&nbsp;</h2><p>

எனினும், இந்தக் கட்டுப்பாடுகளையும் ஈரான் விதிக்க முயலும் கட்டண முறையையும் அமெரிக்கா நிராகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி The Wall Street Journal தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் சமீப காலங்களில் பலமுறை கூறியிருந்தாலும், அந்தக் கூற்றுகள் தொடர்ந்து முன்கூட்டியதாகவே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef4bf2c1-d446-4b03-9636-d7d612f9a91a/26-6a78c2c16fbdf.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், பெப்ரவரி இறுதியில் மோதல் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலையை விட அமெரிக்காவில் பெட்ரோல் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.</p><p>

மேலும், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இராணுவ நடவடிக்கை தனது இலக்குகளை அடைந்தது என்பதை அமெரிக்க வாக்காளர்களிடம் நிரூபிக்க வேண்டிய அரசியல் அழுத்தத்திலும் ட்ரம்ப் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T19:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியிலிருந்து வந்த 200 பயணிகளிடம் ஸ்பெயின் பொலிஸார் தீவிர சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spanish-police-searches-200-passengers-from-italy-1786289287"></link>
            <id>https://tamilwin.com/article/spanish-police-searches-200-passengers-from-italy-1786289287</id>
            <summary type="text">சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான முறுகல் நிலை தீவிரமடைந்துள்ள சூழலில்,
இத்தாலியிலிருந்து வருகை தந்த சுமார் 200 பயணிகளிடம் ஸ்பெயின் எல்லைக்
கட்டுப்பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான முறுகல் நிலை தீவிரமடைந்துள்ள சூழலில்,
இத்தாலியிலிருந்து வருகை தந்த சுமார் 200 பயணிகளிடம் ஸ்பெயின் எல்லைக்
கட்டுப்பாட்டுப் பிரிவினர் தீவிர ஆவண சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு
நடவடிக்கைகளின் முதற்கட்டமாகவே நாட்டின் ஆறு பிரதான விமான நிலையங்களில்
இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>பொலிஸார் தீவிர சோதனை</h2><p>
</p><p>
மெட்ரிட், பார்சிலோனா, செவில்லே உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு
இத்தாலியிலிருந்து வருகை தந்த 12 விமானங்களைச் சேர்ந்த 199 பயணிகளையே ஸ்பெயின்
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
</p><p>
ஸ்பெயினின் வட ஆபிரிக்க பிராந்தியமான செயுட்டாவிற்கு கடந்த ஜூலை இறுதியில்
சுமார் 72,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரவேசித்ததைத் தொடர்ந்து, இத்தாலி
ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் ஸ்பெயினுடனான ஷெங்கன் எல்லைப் பயண உடன்படிக்கையை
தற்காலிகமாக இடைநிறுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b4e6338-ec37-422a-b8c5-dc1de8b9f1a7/26-6a789e9ca0385.webp' /></p><p>

இத்தாலியின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாகவே, இத்தாலியிலிருந்து வருகை தரும்
விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை வரும் செப்டெம்பர்
7 ஆம் திகதி வரை நீடிக்கும் வகையில் ஸ்பெயின் நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>

எனினும், நிலைமை சுமுகமடைந்ததும் எல்லைக் கட்டுப்பாடுகள் விரைவில்
தளர்த்தப்படும் என இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி நம்பிக்கை
வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் உடன்படிக்கையின் கீழ் உறுப்பு நாடுகளுக்கு
இடையே கடவுச்சீட்டு அற்ற சுதந்திரமான பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும்,
பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு காரணங்களுக்காகத் தற்காலிக எல்லைக்
கட்டுப்பாடுகளை விதிக்க உறுப்பு நாடுகளுக்கு உரிமை உண்டு என்பது
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T19:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு அழுத்தம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/depleted-weapons-stockpiles-due-war-involving-iran-1786301248"></link>
            <id>https://tamilwin.com/article/depleted-weapons-stockpiles-due-war-involving-iran-1786301248</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானுடனான போரின் காரணமாக ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் கையிருப்பு
பெருமளவில் குறைந்துள்ள நிலையில், ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துமாறு அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானுடனான போரின் காரணமாக ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் கையிருப்பு
பெருமளவில் குறைந்துள்ள நிலையில், ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துமாறு அமெரிக்க
பாதுகாப்பு அமைச்சான பென்டகன் அந்நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி
நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
</p><p>
ஈரானிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட
'பேட்ரியட்' மற்றும் 'தாட்' ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பு
பாதியளவிற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக சர்வதேச வியூக ஆய்வுகளுக்கான மையம்
(CSIS) சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>ஆயுதக் கையிருப்பு குறைவு</h2><p>
</p><p>
இந்நிலைமை தொடர்ந்தால் அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப்
பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆயுத உற்பத்தியை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கான திட்டங்களை 21 நாட்களுக்குள்
சமர்ப்பிக்குமாறு பென்டகனின் பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஸ்டீவ் ஃபீன்பெர்க்
பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கு அவசர அறிவித்தல் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c95017af-b718-4cba-a69f-af1ef8c2ffc0/26-6a78cc97eb255.webp' /></p><p>
</p><p>
வருடக் கணக்கில் நீடிக்கும் ஆயுத அபிவிருத்தி திட்டங்களை ஏற்க முடியாது
எனவும், உற்பத்தி திறனை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அவசர
நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பென்டகன் பேச்சாளர் சீன் பார்னெல்
உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>

அதேவேளை, போர்க் காலத்தில் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான
செய்திகளை நிராகரித்துள்ள அமெரிக்கக் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,
அமெரிக்காவிடம் போதியளவு ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், புதிய
உற்பத்திகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T18:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்களை மாற்றியமைக்க சிரியா - ரஷ்யா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/syria-russia-modify-russian-military-bases-syria-1786295465"></link>
            <id>https://tamilwin.com/article/syria-russia-modify-russian-military-bases-syria-1786295465</id>
            <summary type="text">சிரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் கிமேமிம் மற்றும் டார்ட்டஸ்
இராணுவ தளங்களின் செயற்பாடுகளை மாற்றியமைப்பது தொடர்பில் சிரியாவுக்கும்
ரஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் கிமேமிம் மற்றும் டார்ட்டஸ்
இராணுவ தளங்களின் செயற்பாடுகளை மாற்றியமைப்பது தொடர்பில் சிரியாவுக்கும்
ரஷ்யாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக சிரிய
வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.</p><p>

சுமார் 18 மாத கால தீவிர பேச்சுவார்த்தைகளின் பின்னர் எட்டப்பட்டுள்ள இந்த
உடன்படிக்கையின் கீழ், கிமேமிம் விமான நிலையம் மற்றும் டார்ட்டஸ்
துறைமுகத்தின் நான்காவது வர்த்தக முனையம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு
மையங்களின் நிர்வாகத்தை சிரியா பொறுப்பேற்கவுள்ளது.</p><p></p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>
</p><p>
இந்த மையங்கள் படிப்படியாக சிரியாவின் பொதுமக்கள் நிர்வாக கட்டமைப்பின்கீழ்
கொண்டுவரப்படவுள்ளன.
</p><p>
அத்துடன், குறித்த பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ தளங்கள் மற்றும் வசதிகள்
கூட்டுப் பயிற்சி மையங்களாக மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14a97ed-fc78-4ebb-aff8-c5644cc56cfe/26-6a78b68f95e8e.webp' /></p><p> இரு
நாடுகளின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்ற நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அதிகபட்சமாக மூன்று மாத கால
அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன்பின்னரே புதிய நடைமுறைகள் முழுமையாக நடைமுறைக்கு வரும்.
</p><p>
இந்த ஒப்பந்தமானது பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து எட்டப்பட்ட மிக
முக்கியமான நகர்வு எனவும், இது சிரியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவில் ஒரு
புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதாகவும் சிரிய வெளியுறவு அமைச்சு
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T17:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 அம்சத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஹமாஸ் கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hamas-calls-for-full-implementation-of-1786294954"></link>
            <id>https://tamilwin.com/article/hamas-calls-for-full-implementation-of-1786294954</id>
            <summary type="text">காசா அமைதி ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கான 15 அம்சத் திட்டத்திற்கு தொடர்ந்து கட்டுப்பட்டிருப்பதாகப் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தனது &#039;டெலிகிராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா அமைதி ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கான 15 அம்சத் திட்டத்திற்கு தொடர்ந்து கட்டுப்பட்டிருப்பதாகப் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தனது 'டெலிகிராம்' பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தங்களின் தற்போதைய முதன்மை நோக்கம் என்றும் ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><h2>காசாவின் எல்லை திறப்பு</h2><p>
</p><p>பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என கோரியுள்ளது.</p><p>
</p><p>காசா பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாகப் பின்வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90b4da0f-ae59-4c71-824c-763351dc5a01/26-6a78b2b10c4de.webp' /></p><p>
</p><p>காசாவிற்கான எல்லைகளைத் திறந்து, மக்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மீள்கட்டமைப்புப் பொருட்களை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளது.
</p><p>அமைதிச் செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையில் ஏற்படும் எந்தவொரு விதிமீறல்களையும் அல்லது குளறுபடிகளையும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு இடைத்தரகர்களுக்கும், உத்தரவாதம் அளித்த நாடுகளுக்கும் உள்ளது என ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
எங்கள் மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதை உறுதிசெய்யும் வகையில், இந்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்த நேர்மறையாகவும் பொறுப்புணர்வுடனும் தொடர்ந்து செயல்படுவோம் என்று ஹமாஸ் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T17:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்பாட்டு அரசியல் குறித்து மஹிந்த சமரசிங்கவின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-intention-to-enter-polictics-again-1786296331"></link>
            <id>https://tamilwin.com/article/no-intention-to-enter-polictics-again-1786296331</id>
            <summary type="text">மீண்டும் நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு சிறிதும் இல்லை என அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீண்டும் நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு சிறிதும் இல்லை என அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>சுமார் ஐந்து ஆண்டுகள் தூதுவராகப் பணியாற்றிய பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவியிலிருந்து விலகியதாகவும், பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்தவித அழுத்தமும் இருக்கவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>அமெரிக்க தூதுவர் பதவியிலிருந்து அண்மையில் விலகிய மஹிந்த சமரசிங்க, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றபோதே இக்கருத்துகளை ஊடகங்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af5b8b1-e4fd-433e-8a64-638893955931/26-6a78b80d16a53.webp' /></p><p>
அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.</p><p>
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுத்தர முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரிகளை 10% என்ற வரம்பிற்குள் தக்கவைக்க முடிந்ததுடன், அந்நாட்டிலிருந்து ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பல ஹெலிகாப்டர்களை இலங்கைக்குப் பெற்றுத்தர முடிந்தது என தெரிவித்துள்ளார்.
</p><p>27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றியுள்ள போதிலும், இனிவரும் காலங்களில் அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எனினும், சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் உதவி கோரினால், தனது பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
மேலும், தான் நேரடி அரசியலில் இருந்து விலகியிருப்பதால், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>ராஜதந்திர சேவையின் போது மஹிந்த சமரசிங்க ஆற்றிய மிகச்சிறந்த சேவையைப் பாராட்டி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T17:26:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது அரகலய போராட்டம் சிறைச்சாலைகளில் வெடிக்கும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2nd-aragaliya-may-start-from-prisons-1786295777"></link>
            <id>https://tamilwin.com/article/2nd-aragaliya-may-start-from-prisons-1786295777</id>
            <summary type="text">இலங்கையின் அடுத்தகட்ட அரகலய அல்லது மக்கள் போராட்டம் சிறைச்சாலை அமைப்பை மையமாகக் கொண்டு தொடங்குவதற்கான தீவிர அபாயம் நிலவுவதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அடுத்தகட்ட அரகலய அல்லது மக்கள் போராட்டம் சிறைச்சாலை அமைப்பை மையமாகக் கொண்டு தொடங்குவதற்கான தீவிர அபாயம் நிலவுவதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக கண்டிக்கு விஜயம் செய்திருந்தபோதே, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அரசியலமைப்பு திருத்தம்</h2><p>சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி மற்றும் அங்குள்ள சீர்கேடுகள் குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் தீர்வு காணத் தவறினால், நாட்டின் அடுத்தகட்ட மக்கள் போராட்டத்தின் (அரகலய) ஆரம்பப் புள்ளியாக அதுவே அமையும் என தெரிவித்துள்ளார்.</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்த மைத்திரி குணரத்ன, ஏனைய அரசு ஊழியர்களுக்கு இல்லாத ஒரு சிறப்புச் சலுகையை நீதிபதிகளுக்கு மட்டும் வழங்குவது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42870385-b039-498e-a5c6-87db8e93820e/26-6a78b5e331cd1.webp' /></p><p>
</p><p>இராணுவ அதிகாரிகள் 55 வயதிலும், ஏனைய சிவில் அரசு ஊழியர்கள் 60 வயதிலும் ஓய்வுபெறும்போது, நீதிபதிகளுக்கு மட்டும் சேவைக்காலத்தை நீடிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>ஒரு குறிப்பிட்ட நபரின் சேவைக்காலத்தை அரசாங்கம் நீட்டித்தால், அந்தத் தீர்மானத்தை எடுத்த தரப்பிற்கு அவர் நன்றியுடையவராகச் செயல்படக்கூடும். இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
இந்த அரசியலமைப்பு திருத்தம் 2028-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், தற்போதைய அரசியல் சூழலில் இத்தகைய அவசரத் தீர்மானங்களை எடுப்பதற்குப் பின்னால் மறைமுக நோக்கங்கள் இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T17:16:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் புற்றுநோய் மேலும் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-us-president-joe-biden-s-cancer-worsens-1786290757"></link>
            <id>https://tamilwin.com/article/former-us-president-joe-biden-s-cancer-worsens-1786290757</id>
            <summary type="text">முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள புரோஸ்டேட் புற்றுநோய்
அவரது எலும்புகளையும் தாண்டி மேலும் பரவியுள்ளதாகவும், அவர் கடுமையான வலியை
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள புரோஸ்டேட் புற்றுநோய்
அவரது எலும்புகளையும் தாண்டி மேலும் பரவியுள்ளதாகவும், அவர் கடுமையான வலியை
அனுபவித்து வருவதாகவும் அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.</p><p>

பிபிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>புற்றுநோய்&nbsp;தீவிரம்</h2><p>நோய் பரவியதன் காரணமாக அவர் பல்வேறு வகைகளில் மிகவும் பலவீனமடைந்துள்ளதாக ஹண்டர் பைடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p>
83 வயதான ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது
கண்டறியப்பட்டு, அது எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக கடந்த 2025 மே மாதம்
அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d486e5b-5b30-4931-8e0c-91937d604bf8/26-6a78a5624204f.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து அவருக்கு கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஹோர்மோன்
சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.
</p><p>
எனினும், ஹண்டர் பைடனின் இந்த நேர்காணல் குறித்து கருத்து தெரிவிக்க ஜோ
பைடனின் ஊடகப் பேச்சாளர் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T17:12:06+00:00</updated>
        </entry>
    </feed>
