<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-15T09:20:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய மிக் விமான ஒப்பந்தம்! முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா FCIDயில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-air-force-commander-donald-perera-fcid-1789462925"></link>
            <id>https://tamilwin.com/article/former-air-force-commander-donald-perera-fcid-1789462925</id>
            <summary type="text">முன்னாள் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வரவழைக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வரவழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய மிக் விமான ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, அவர் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><h2>எஃப்.சி.ஐ.டி.யில் வாக்குமூலம்</h2><p>

அதன்படி, சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து அவரிடமிருந்து தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த விசாரணையில் மேலும் பல மூத்த தலைவர்களும் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a62b91d4-e78e-4df6-ab0e-977604c12779/26-6aa90c1b04f11.webp' /></p><p> </p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் ரொஷான் கூனதிலக்க ஆகியோர் சமீபத்தில் இதே விசாரணை தொடர்பாக எஃப்.சி.ஐ.டி-யின் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள நினைவுக்கல் அகற்றம்: மக்கள் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rda-workers-remove-mullivaikal-memorial-stone-1789462405"></link>
            <id>https://tamilwin.com/article/rda-workers-remove-mullivaikal-memorial-stone-1789462405</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு
செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு
A35 பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு
செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு
A35 பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லை வீதி அபிவிருத்தி
அதிகார சபையின் ஊழியர்கள் அகற்றியமையானது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை
ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழினப்படுகொலையின் அடையாளச் சின்னமாக முல்லைத்தீவு மாவட்டத்தின்
முள்ளிவாய்க்கால் பகுதியில் காணப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு
செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும்&nbsp; நினைவுக் கல் ஒன்று கடந்த மே மாதம் (18.05.2026) அன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.</p><p>&nbsp;இதன் பின்னணியில் அரச புலனாய்வாளர்களால் இது தொடர்பில் பல்வேறு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த நினைவுக் கல்லின் ஒரு பகுதியாக இருந்த
ஒரு மனிதரின் உருவம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து
அழிக்கப்பட்டிருந்தது.</p><h2>குற்றச்சாட்டு</h2><p> இதன் தொடர்ச்சியாக இந்த நினைவுக்கல்லினை அகற்றுவதற்கு
அரச புலனாய்வுப் பிரிவு கடுமையான முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.இதன் ஒரு அங்கமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் இந்த நினைவுக்
கல்லினை அகற்றியுள்ளனர்.இந்த சம்பவமானது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை
ஏற்ப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654f6b7a-6eca-4f5b-9612-d55c6b60bd5b/26-6aa9093b6bcb0.webp' /></p><p>&nbsp;இந்த விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையானது தமிழ் மக்களின் உணர்வுகளை
நினைவுகளை அழிக்க துணை போகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக
வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணியில் மக்கள் பாலத்தின் ஒரு பகுதியையாவது
அழிக்க வேண்டாம் என கோரிய போதும் பழைய பாலம் இருக்கக் கூடியவாறே பாலம்
அமைகக்கூடிய வழிவகைகள் இருந்தும் அதனை செய்யாது மாவட்ட அபிவிருத்திக் குழு
கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட போதும் அமைதியாக இருந்து மிக சூட்சுமமாக
குறித்த பாலத்தை முழுமையாக அழித்து புதிய பாலத்தை அமைத்து வருகிறது.</p><p>&nbsp;குறிப்பாக இந்த அரசும் தனது திணைக்களங்கள் ஊடாக திட்டமிட்டு இவ்வாறு தமிழ்
மக்களின் உணர்வுகளை மதிக்காது இவ்வாறு பழைய அரசுகளை போலவே செயற்ப்படுவதாக
மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் வேலையை தொடரும் நாமல்! பிள்ளையான் - கருணாவைத் தொடர்ந்து அர்ச்சுனா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450"></link>
            <id>https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450</id>
            <summary type="text">
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்ச மாற்றியுள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்றையதினம்(15.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தடை செய்யப்பட்ட அமைப்பை பிரசாரம் செய்வது அவருக்கே நல்லதல்ல.</p><h2>அர்ச்சுனாவின் உறுதி மொழி&nbsp;</h2><p> 

ஏனெனில், தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் சார்பாக அவர் நாடாளுமன்றத்தில் செயற்பட மாட்டேன் என்றும், அரசுக்கு எதிராக சதி செய்யமாட்டேன் என்றும்&nbsp; உறுதி செய்திருக்கின்றார்.</p><p>

அதையும் மீறி, தடை செய்யப்பட்ட அமைப்பொன்று தொடர்பில் அவர் பிரசாரம் செய்வாரெனில் அது அவருக்குத்தான் நல்லதல்ல.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, அந்த மேடையில் இருந்தவன் என்ற வகையில், அர்ச்சுனா இராமநாதனின் அன்றைய முழு உரையிலும் நான் கண்டுகொண்ட விடயம், வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு அவர் ஒரு முயற்சி செய்து வருகின்றார் என்பது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c4d5294-e75e-4f1b-b4db-6fc0395549d2/26-6aa9046a5b4fc.webp' /></p><p> 

தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சகோதரர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காக, அதற்குரிய ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதற்காக அர்ச்சுனா இராமநாதன் முயற்சி செய்து வருகின்றார்.</p><p>

இந்த நாட்டைப் பிரிக்க எண்ணுபவர்களுக்கு இந்த நடவடிக்கை கண்ணை குத்துகிறது போலும்.</p><p>

ஆனால், அர்ச்சுனாவின் கடந்த கால வரலாற்றையும், அவர் நாடாளுமன்றத்திற்கு வந்த விதத்தினையும் நோக்கும் போது, அவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழும்.
</p><p>
நிச்சயமாக அவருடைய இந்த மாற்றத்திற்கு ஒரே காரணம், நாமல் ராஜபக்ச தான். வேறு யாரும் இல்லை.
அவர்தான் அர்ச்சுனாவை மாற்றியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89794755-dd61-4190-989e-d18612429dbe/26-6aa9046b230e7.webp' /></p><p>

அதேபோல, கருணாவையும், பிள்ளையானையும் மாற்றி அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்து, அவர்களுடைய மக்களுக்கு அபிவிருத்தியைக் காட்டியது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான்.
</p><p>
ஆனால் ஒருபோதும் கருணாவோ, பிள்ளையானோ, ஆட்சி மாற்றத்தைக் கோரவோ, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்றோ கோரியதில்லை.
</p><p>
இப்போது அர்ச்சுனாவும் வடக்கை தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்று கேட்கப் போவதில்லை. அந்த நிலையை எற்படுத்தியது நிச்சயமாக நாமல் ராஜபக்சதான். இது ஒரு பாரிய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-15T08:50:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சேதமடைந்துள்ள ருமேஷ் தரங்கவின் 5 ஈட்டிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inquiry-sought-damage-rumesh-tharanga-s-javelins-1789461464"></link>
            <id>https://tamilwin.com/article/inquiry-sought-damage-rumesh-tharanga-s-javelins-1789461464</id>
            <summary type="text">இலங்கையைச் சேர்ந்த உலக சாம்பியன் ருமேஷ் தரங்க, இலங்கை திரும்பும் விமானப் பயணத்தின்போது அவரது விளையாட்டு உபகரணங்கள் சந்தேத்திற்கிடமான முறையில் சேதமடைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையைச் சேர்ந்த உலக சாம்பியன் ருமேஷ் தரங்க, இலங்கை திரும்பும் விமானப் பயணத்தின்போது அவரது விளையாட்டு உபகரணங்கள் சந்தேத்திற்கிடமான முறையில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்த ஈட்டி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் 92.07 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டி உட்பட அவர் பயன்படுத்திய 5 ஈட்டிகளுமே சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>உபகரணங்கள் சேதம்</h2><p> </p><p>

அல்டிமேட் மற்றும் டைமண்ட் லீக் ஆகிய இரண்டு செம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5:10 மணிக்கு துருக்கிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான TK-730 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d791f23e-ea28-472b-b7a9-f05bd6306e1a/26-6aa906836a4fd.webp' /></p><p>

 
இந்தநிலையில்,
அவருக்குப் புதிய ஈட்டிகளை (javelins) வழங்கவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

தரங்கவின் பயிற்சிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், அரசாங்கச் செலவில் சர்வதேசத் தரத்திலான புதிய ஈட்டிகளை விரைவாக வாங்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.</p><p>
எங்கள் தடகள நட்சத்திரத்திற்கும் அவரது ஒலிம்பிக் கனவுக்கும் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து உறுதுணையாக நிற்கும், என்று அமைச்சர் கூறினார்.</p><h2>ஒலிம்பிக் போட்டி இலக்கு</h2><p>
</p><p>
ஹங்கேரியின் புடாபெஸ்டிலிருந்து திரும்பும் பயணத்தின்போது தரங்கவுக்குச் சொந்தமான ஐந்து ஈட்டிகளும் சேதமடைந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சேதம் தொடர்பாக விமான நிறுவனத்திடம் இழப்பீடு கோருவது குறித்தும், அதேவேளையில் சாத்தியமான சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17babeb0-df41-4b91-8d67-854d92c5f100/26-6aa906841e422.webp' /></p><p>
</p><p>
வரவிருக்கும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராகும் அதேவேளையில், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியை இலக்காகக் கொண்டுள்ள தரங்கவுக்குத் தேவையான அரச ஆதரவையும் வசதிகளையும் தொடர்ந்து வழங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:49:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு- கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனைகள் அபிவிருத்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-of-hospitals-in-the-northern-eastern-1789458597"></link>
            <id>https://tamilwin.com/article/development-of-hospitals-in-the-northern-eastern-1789458597</id>
            <summary type="text">சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபா செலவில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனை அபிவிருத்திகளுக்கான செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபா செலவில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனை அபிவிருத்திகளுக்கான செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.</p><p>

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி, சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், 7,148 மில்லியன் ரூபாய் செலவிலான புதிய வைத்தியசாலைக் கட்டடங்களுக்கு நாளை (16) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.</p><p>&nbsp;ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவராண்மை (JICA) மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன் உதவிகளின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><h2>அங்குரார்ப்பணம்&nbsp;</h2><p>
</p><p>
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இதய நோய் சிகிச்சைக்காக 3,545 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. </p><p>இதில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், இதய பரிசோதனை ஆய்வகங்கள் (Catheter labs), நவீன பரிசோதனைக் கூடங்கள், எக்ஸ்-ரே மற்றும் ஈ.சி.ஜி (ECG) வசதிகள் உள்ளிட்ட பல நவீன கட்டமைப்புகள் இடம்பெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b67449-ca45-4dc4-9b4d-9b8a43c26806/26-6aa8fd83ac855.webp' /></p><p>
</p><p>
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் JICA நிதியுதவியின் கீழ் 2,403 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளைக் கொண்ட அதிநவீன இதய நோய் சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
</p><p>
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவு வளாகம் அமைக்கப்படவுள்ளது.</p><h2>அவசர சிகிச்சை</h2><p>

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைபயில் நோயாளர்களின் நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்திய நிதியுதவியின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளைக் கொண்ட புதிய விடுதிக் கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04352821-30f0-4cbd-b75d-1418fd4ed9d5/26-6aa8fd8460eb4.webp' /></p><p>

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.&nbsp;</p><p> இத்திட்டங்கள் நிறைவடையும் போது, கொழும்பு வரை செல்ல வேண்டிய அவசியமின்றி, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பொதுமக்கள் தங்கள் சொந்தப் பகுதிகளிலேயே நிபுணத்துவ இதய நோய் மற்றும் அவசர சிகிச்சைகளை விரைவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வங்கித்துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து! பெரும் அதிர்ச்சியில் வங்கி உயர் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-losing-their-bank-accounts-1789442535"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-losing-their-bank-accounts-1789442535</id>
            <summary type="text">இலங்கையின் வங்கித்துறையை இலக்கு வைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட டிஜிட்டல் மோசடி குழுக்கள் செயற்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வங்கித்துறையை இலக்கு வைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட டிஜிட்டல் மோசடி குழுக்கள் செயற்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இது நாட்டின் நிதிப் பாதுகாப்பு மற்றும் வங்கித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அதிகாரிகளும் முக்கிய வணிக வங்கித் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.</p><p> 

இலகுவான வருமானத்தை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் இந்த வலைப்பின்னல்கள் மூலம் வங்கித்துறையை சர்வதேச நிதிக் குற்றங்களுக்கான பாதையாக மாற்றி வருகின்றன.</p><p>
</p><h2><b>
மோசடி கும்பல்கள் </b></h2><p>இந்த மோசடியாளர்கள் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சட்டப்பூர்வமான வணிகங்கள் என மக்களை நம்பவைத்து ஏமாற்றுவதாக சில முன்னணி வங்கிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f2a0ae-b73f-401c-a480-ba5634b0cfd5/26-6aa8f5751ae09.webp' /></p><p>இதன்போது ஆரம்பக் கட்டத்தில் சிறிய தொகையை கணக்குகளுக்கு வரவு வைத்து வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குகின்றனர்.

பின்னர் அவர்களின் வங்கிக்குறிப்பு விவரங்கள், இரகசிய எண்கள் மற்றும் பிற முக்கியமான பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முற்படுகின்றனர்.
</p><p>
இவ்வாறு பெற்றுக்கொள்ளும் இரகசியத் தகவல்கள் மூலம் கணக்குகளின் கட்டுப்பாட்டை குற்றவாளிகள் கைப்பற்றுகின்றனர்.</p><h2>மில்லியன் கணக்கான பணம்&nbsp;</h2><p>

அதனை தொடர்ந்து கணக்கு உரிமையாளருக்குத் தெரியாமல் பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களுக்கு அக்கணக்குகளைப் பயன்படுத்துவதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6506a51a-6b16-434b-be93-7d745bc05e64/26-6aa8f575ccbae.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p><span style="font-size: 14px;">வாடகை அடிப்படையில் அல்லது விலைக்கு வாங்கப்பட்ட இத்தகைய கணக்குகள் ஊடாக ஏற்கனவே மில்லியன் கணக்கான பணம் புழக்கத்தில் விட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.</span></p><p>இந்த மோசடிகளின் தீவிரத்தன்மை அதன் சர்வதேச பரிமாணங்களினால் மேலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-15T08:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா ராமநாதன் எம்பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tid-probe-alleged-promotion-at-slpp-rally-1789458085"></link>
            <id>https://tamilwin.com/article/tid-probe-alleged-promotion-at-slpp-rally-1789458085</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த உத்தரவு, பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கிடைத்த முறைப்பாடு</h2><p>

முன்னதாக, சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32aee57f-0761-4f30-b632-821fceb40450/26-6aa8fa06ea4cf.webp' /></p><p>
</p><p>
செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றியிருந்தார்.</p><p>

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பான அரசியல் ஒப்பீட்டை முன்வைத்த அவர், தன்னை விடுதலைப் புலிகைளை சார்ந்தவர் எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பைகளை மீள அள்ள வலி.தெற்கு பிரதேச சபைக்கு கொடுத்த காலக்கெடு நிறைவு - குப்பைகளுக்கு தொடர்ந்தும் தீ வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continued-burning-of-garbage-1789454509"></link>
            <id>https://tamilwin.com/article/continued-burning-of-garbage-1789454509</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி. தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி. தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்
என வலி. வடக்கு பிரதேச சபை காலக்கெடு விதித்தும் குப்பைகள் மீள அள்ளப்படாமல் ,
தீயிட்டு கொளுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 20ஆம் திகதி தவிசாளர்
சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
அதன்போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be5c52b2-b2ca-4303-9e34-077254278926/26-6aa8f5a32b92c.webp' /></p><h2>ஏக மனதாக தீர்மானம்</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர்
செப்டெம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும் , அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்
என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
அந்நிலையில் 13ஆம் திகதியுடன் குப்பைகளை மீள
அள்ள கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், வலி. வடக்கு பிரதேச சபை
உறுப்பினர்கள் இன்றைய தினம் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு சென்ற வேளை
குப்பைகள் மீள அள்ளப்படாது, தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் குப்பை
மேட்டில் இருந்து புகை எழுந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ad515aa-e346-4eeb-9eab-72c2fedc5bcd/26-6aa8f5a408ff2.webp' /></p><p>

அது தொடர்பில் அயலில் வசிக்கும் மக்களிடம் உறுப்பினர்கள் வினாவிய போது,
தொடர்ந்து குப்பைகள் அப்பகுதிகளில் கொட்டப்படுவதாகவும், குப்பைகளுக்கு
தினமும் தீ வைப்பதனால் எழும் புகை மண்டலத்தால், வீடுகளில் மூச்சு விட
சிரமப்படும் நிலையிலே வாழ்கின்றோம்.</p><h2>கவலை</h2><p> </p><p>இதனை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும்
கோரிக்கை விடுத்த போதிலும் , தம்மை பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை என
கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>அதேவேளை அனுமதியின்றி கழிவுகளை கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிப்பதற்கு என
இன்றைய தினம் திங்கட்கிழமை சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும், அதன்
போது, வலி. தெற்கு பிரதேசசபையினர் கழிவுகளை மீள அள்ளாது விடின் அடுத்த கட்ட
நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கூட்டத்தில் தீர்மானிப்பதாக கடந்த 20ஆம் திகதி
நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb90e937-74b0-4e22-8b8a-a3d4ad5ffebf/26-6aa8f5a4d6124.webp' /></p><p>
</p><p>
அந்நிலையில் குறித்த கூட்டம் இன்றைய தினம் நடைபெறவில்லை. கூட்டம்
நிறுத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும்,
எதிர்வரும் வியாழக்கிழமை சபையின் வழமையான மாதாந்த கூட்டத்திற்கே கடிதம்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb535ab1-3108-4b66-96d9-6b4c157b42a9/26-6aa8f5a5b07dc.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:37:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை: பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-hacked-to-death-in-jaffna-suspect-arrested-1789456373"></link>
            <id>https://tamilwin.com/article/man-hacked-to-death-in-jaffna-suspect-arrested-1789456373</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(14.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09ஆம் திகதி இரவு
இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ,துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன்
ஜெனிதன் (வயது 33) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>&nbsp;சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த
நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த இரகசிய தகவலின் கடந்த 11ஆம் திகதி அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும்
கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a968ad9-d333-49cc-b0bd-dcdd02f6be0d/26-6aa8f45fd2c55.webp' /></p><p>&nbsp;இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து
தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் பொலிசாரிடம் சரணடைந்ததை அடுத்து
கைது செய்துள்ளனர்.</p><p>&nbsp;கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:31:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்: வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aswesuma-payment-to-be-credited-tomorrow-1789456693"></link>
            <id>https://tamilwin.com/article/aswesuma-payment-to-be-credited-tomorrow-1789456693</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவை நாளை (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவை நாளை (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.</p><p>

அதன்படி, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்கள் உள்ளன.</p><h2>முக்கிய அறிவிப்பு</h2><p>

அந்த குடும்பங்களுக்கு 9 பில்லியன் 181 மில்லியன் 696 ஆயிரத்து 250 ரூபாய் நிதி வரவு வைக்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43e36d97-15ea-444f-b20e-cb5c57092b60/26-6aa8f31151942.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்கள் உள்ளன.
</p><p>
அவர்களுக்கான கொடுப்பனவு நாளை மறுதினம் (17) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:26:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுஜன பெரமுனவின் பேரணி தொடர்பில் திரிபுப்படுத்தப்பட்ட காணொளிகள் - மொட்டுக்கட்சி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alcohol-personal-rights-motu-party-explanation-1789455588"></link>
            <id>https://tamilwin.com/article/alcohol-personal-rights-motu-party-explanation-1789455588</id>
            <summary type="text">எமது கூட்டங்களுக்கு வருகை தருபவர்களை மதுபானம் அருந்தாமல் வருமாறு
கட்டளையிடும் அதிகாரம் எங்களிடம் கிடையாது. மது அருந்துவதும் அருந்தாமல்
இருப்பதும் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது கூட்டங்களுக்கு வருகை தருபவர்களை மதுபானம் அருந்தாமல் வருமாறு
கட்டளையிடும் அதிகாரம் எங்களிடம் கிடையாது. மது அருந்துவதும் அருந்தாமல்
இருப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகும். நாங்கள் யாருக்கும் மது
அருந்திவிட்டு வருமாறு குறிப்பிடவும் இல்லை, கட்சி கூட்டத்துக்காக மதுபானம்
வாங்கிக்கொடுக்கவும் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப்
பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,</p><h2>திரிபுப்படுத்தப்பட்ட காணொளிகள்</h2><p>அனுராதபுரத்தில் இடம்பெற்ற எமது கட்சியின் மக்கள் பேரணியில் நாட்டின் பல
பகுதிகளிலிருந்தும் ஏழை விவசாயிகளும், உழைக்கும் தொழிலாளர்களும் திரளாகக்
கலந்துகொண்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e8360a7-8398-46d1-9e3e-89eec40a403e/26-6aa8f1ee26c63.webp' /></p><p> </p><p>ஆனால், அக்கூட்டத்துக்கு வந்த மக்களை அவமதிக்கும் வகையில்
சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே திரிபுப்படுத்தப்பட்ட காணொளிகள்
பரப்பப்பட்டு வருகின்றன.
</p><p>
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பெருந்தொகையான மதுபானம் உற்பத்தி
செய்யப்படுகின்றது. அவற்றை இந்த நாட்டு மக்கள்தான் குடிக்கின்றார்கள்.
மதுபானம் அருந்துவதும், அதனைத் தவிர்ப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பமும்
உரிமையுமாகும்.</p><p> எமது கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வரவேண்டும் என்று
நாங்கள் எவருக்கும் நிபந்தனை விதிக்கவில்லை. அதேபோல், கூட்டத்தில்
கலந்துகொண்டவர்களுக்கு எமது தரப்பிலிருந்து எந்தவிதமான மதுபானமும் வாங்கிக்
கொடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T07:21:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-with-counterfeit-currency-notes-1789454637"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-with-counterfeit-currency-notes-1789454637</id>
            <summary type="text">போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக
நபர் ஒருவர் ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டார்.குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக
நபர் ஒருவர் ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டார்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(12.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான அந்த சந்தேக நபர் போலி
நாணயத்தாள்களை மாற்றுவதற்காக ஹட்டன் நகருக்கு வருவதாகக் கிடைத்த தகவலின்
பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கொழும்பை சேர்ந்த தனது மைத்துனர் இந்த வெளிநாட்டுப் பணத்தாள்களைத் தன்னிடம்
கொடுத்ததாகவும், அவை போலி நாணயத்தாள் என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்த
சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903ee372-e10b-4948-a1f5-579ab65da715/26-6aa8edca9b3ac.webp' /></p><p>


இந்த சோதனையின் போது, ​​சந்தேக நபரிடமிருந்து 9 போலி 200 யூரோ பணத்தாள்கள்
மற்றும் 7 போலி 100 யூரோ பணத்தாள்கள் உட்பட 16போலி வெளிநாட்டுப் பணத்தாள்கள்
பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>போலி பணத்தாள்கள் குறித்த மேலதிக விசாரணைக்காக இந்த வழக்கு குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்று ஹட்டன் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த மின்னல் தாக்கம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issued-a-warning-regarding-intense-lightning-1789453683"></link>
            <id>https://tamilwin.com/article/issued-a-warning-regarding-intense-lightning-1789453683</id>
            <summary type="text">பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இந்த அறிவித்தல் இன்று (15) முற்பகல் 10.00 மணிக்கு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த அறிவித்தல் இன்று (15) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், அது இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலத்த மின்னல்&nbsp;</h2><p>
</p><p>
குறித்த அறிவிப்பில்,

இதற்கமைய வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுடன் அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக அவதானம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c8d22b1-288a-4e99-94c2-b14e426dd90a/26-6aa8e779a1bb2.webp' /></p><p> </p><p>குறித்த பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை மேலும், அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் மோசமடையும் வானிலை - பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warning-issued-for-three-districts-1789453310"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warning-issued-for-three-districts-1789453310</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு&amp;nbsp;மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு&nbsp;மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்&nbsp;</h2><p>இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/246525bc-c899-4e0f-b7f6-72834083a207/26-6aa8e693d5cb3.webp' /></p><h2>முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை</h2><p>இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்</p><p>களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள்</p><p>கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என அறிவித்துள்ளது.

&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T06:36:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாம் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தைப் பெறவே இல்லை! பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-government-current-issues-1789453213"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-government-current-issues-1789453213</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்றுப்
பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்து ஆட்சி
அதிகாரத்தைக் கைப்பற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்றுப்
பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்து ஆட்சி
அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள போதிலும், இன்னும் முழுமையான 'அரச அதிகாரத்தை'
முழுமையாகப் பெறவில்லை என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.</p><p>

தேசிய மக்கள் சக்தி நேற்று ஏற்பாடு செய்திருந்த பேரணியொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.</p><h2>அரச அதிகாரம்&nbsp;</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> "நாங்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளோம், ஜனாதிபதியை
நியமித்துள்ளோம், உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவையும் பெற்றுள்ளோம். எனவே கட்சி
ஏன் தொடர்ந்து பொதுப் பேரணிகளை நடத்துகின்றது எனச் சிலர் கேள்வி
எழுப்பக்கூடும்.</p><p> </p><p>நாம் தற்போது பெற்றிருப்பது 'ஆட்சி அதிகாரத்தை' மட்டுமே.
ஆனால், 'அரச அதிகாரம்' என்று அழைக்கப்படும் மற்றொரு முக்கியமான பகுதி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4d90a59-821e-4ccb-93fa-9a2f812ba056/26-6aa8e3a021cd1.webp' /></p><p>
இந்த அதிகாரத்துக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. அரச அதிகாரம் என்பது
முழுமையான அரச நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாகவே கட்டியெழுப்பப்பட்டு முன்னேறிச்
செல்வதைக் குறிக்கின்றது.
</p><p>
அரசின் கொள்கைத் திட்டங்களும் அபிவிருத்தி முன்னெடுப்புகளும் இறுதியில் இந்த
அரச அதிகாரத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. </p><p>இந்த அரச அதிகாரத்தை ஒரே
நாளில் அல்லது குறுகிய காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாது. அதனை முழுமையாக
நிலைநிறுத்துவதற்குக் கால அவகாசம் தேவைப்படுகின்றது. இது நிர்வாகத்துக்கான
காலகட்டமாகும்'' என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இதன்போது, இந்த அரச அதிகாரத்தை ஜனநாயக முறையில் எவ்வாறு பெற்றுக்கொள்ள
முடியும் என்பது குறித்தும் அவர் மேலும் விளக்கமளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47405d52-16db-4557-941c-61bdbdc915cd/26-6aa8e39f67d8d.webp' /></p><p>
</p><p>
"கடந்த 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச அதிகாரமும் அரச
அதிகாரமும் வன்முறையின் மூலமே கைப்பற்றப்பட்டன. </p><p>ஆனால், தற்போதைய சூழலில் அரச
அதிகாரமும் அரச அதிகாரமும் முற்றிலும் ஜனநாயக முறைப்படி பெற்றுக்கொள்ளப்பட்டு,
அதே ஜனநாயக வழியில் நாட்டை அபிவிருத்தி செய்யும் முயற்சி உலக வரலாற்றில் இதுவே
முதல் முறையாகும்.</p><p> இதற்கு முன்னுதாரணமாகக் கற்றுக்கொள்வதற்கு வேறு எந்த
நாடுகளின் அனுபவமும் நம்மிடம் இல்லை" என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன
சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் தாயகங்களில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/39th-year-commemoration-thileepan-1789452768"></link>
            <id>https://tamilwin.com/article/39th-year-commemoration-thileepan-1789452768</id>
            <summary type="text">தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12
நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுடைய 39ஆவது
ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12
நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுடைய 39ஆவது
ஆண்டு நினைவேந்தல்&nbsp; உணர்வெழுச்சியுடன் ஆரப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது மக்கள்
தொடர்பகத்தில் இன்று(15) உணர்வெழுச்சியுடன் குறித்த நிகழ்வு&nbsp; ஆரம்பிக்கப்பட்டது.</p><h2>&nbsp;39ஆவது ஆண்டு நினைவேந்தல்</h2><p>
</p><p>
அந்தவகையில் அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தியாகதீபம் திலீபனின்
உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி
நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.</p><p>அதனைத்தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் உறுப்பினர் மகாதேவா
குணசிங்கராவினால் தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை
அணிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6386079f-8ff4-4aa7-b0ca-790a5a6e87e5/26-6aa8e326adf20.webp' /></p><p>
அதனையடுத்து குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களால் தியாக
தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p>

மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா
குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன்
நிறோஜன், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>கிளிநொச்சி</h2><p>கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் தியாகி
திலீபனின் 39ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகம் எங்கும் கடைப்பிடிக்கப்பட்டு
வரும் நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவகத்தில் குறித்த நிகழ்வு
நடைபெற்றுள்ளது.</p><p>&nbsp;இதில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் பொதுமக்கள்
என பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p><p></p><p></p><h2>யாழ்ப்பாணம்</h2><p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
தினம்(15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
</p><p>
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்
நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45
மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72c37586-df5e-46db-b4de-a42f6d076ef0/26-6aa8e9c20365c.webp' /></p><p>

மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை
தொடர்ந்து, நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி
அஞ்சலி செலுத்தினர்.</p><p>&nbsp;ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில், 12
நாட்களின் பின்னர் செப்டெம்பர் 26ஆம் திகதி காலை 10.48 மணிக்கு அவரது உயிர்
பிரிந்தது.</p><p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில்,யாழ் மாநகர் சபையின் மாதாந்த
அமர்வு ஆரம்பமாக முன்னர் தியாக தீபத்தின் உருவ படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p>தியாக தீபம் திலீபனின் நினைவு கூறல் ஆரம்ப நாளான இன்று (15) யாழ் மாநகரசபையின்
மாதாந்த அமர்வில் முதல்வர்.வி.மதிவதனியின் தலைமையில் சபா
மண்டபத்தில் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
</p><p>
முதல்வர் தனது நினைவு கூறல் அஞ்சலி உரையில் அஹிம்சையை உலகுக்கு உணர்த்திய
காந்திய வழியில் ஒரு துளி நீரையேனும் அருந்தாது 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து
தமிழ் இனத்தின் விடுதலைக்காக மன்னுயிறை ஈகம் செய்த லெப்டினன்கேணல் திலீபனின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக
போராட்டத்தின் சுவடுகளை என்றும் நெஞ்சில் சுமக்க உறுதி பூணுவதே பசியுடன் உயிர்
நீத்த மாவீரன் இராசையா பார்த்தீபனுக்கு நாம் செய்யும் உணர்வு பூர்வமான
அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.
</p><p>
முதலாவது சுடரை முதல்வர் ஏற்றி வைத்து மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து பிரதி
முதல்வர்,உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.</p><p><b><i>மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>தேராவில் துயிலுமில்ல வளாகம்</h2><p>தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் துயிலுமில்ல
வளாகத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.</p><p>1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ம் திகதி முதல் ஜந்து அம்ச கோரிக்கைகளை
முன்வைத்து அகிம்சை வழியில் பன்னிரெண்டு நாட்கள் உண்ணா நேன்பிருந்து உயிர்
நீத்த தியாக தீபம் திலீபன் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்
இன்று தமிழர்கள்வாழும் தேசமெங்கும் உணர்வெளிச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e9acfe3-733e-45b6-a16c-0a231a8b13c7/26-6aa8fd976b227.webp' /></p><p>தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கான சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை
அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p>தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள்
சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து
கொண்டனர்.</p><p><b><i>மேலதிக தகவல் - தவசீலன்</i></b></p><h2>திருகோணமலை</h2><p>தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) திருகோணமலை சிவன்
கோயிலடிக்கு முன்னால் இடம்பெற்றது.</p><p>

39 ஆவது நினைவு தினமாக இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்
மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஈகைச் சுடரும்
ஏற்றப்பட்டு அவரது நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.
</p><p>சம்பூர் ஆலங்குளம் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு ஏற்பாட்டில் இடம் பெற்ற
நிகழ்வில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலில் முன் உண்ணாவிரதம் இருந்து
வீரச்சாவடைந்தார்.</p><h2>நினைவேந்தல் நிகழ்வுகள்&nbsp;</h2><p>1987ல் செப்டெம்பர் 17ல் தமிழர்களுக்காக ஐந்து அம்சக்
கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த போதே வீரச்சாவடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe77bbe5-589d-4694-bd3b-27201a425335/26-6aa902c4729cf.webp' /></p><p>
</p><p>
நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், காணாமல் போன உறவுகளின் சங்கங்கள்,சமூக
செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திலீபனின்
தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.</p><p>

தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த திலீபனின் நினைவு நாளை
முன்னிட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><b><i></i></b></p><p><b><i></i></b></p>]]></content>
            <updated>2026-09-15T06:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவிற்கு இலஞ்சம் வழங்கியதாக கூறப்படும் நிமல் பெரேராவை ஏன் கைது செய்யவில்லை! சாகர காரியவசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-arrest-completely-wrong-sagara-kariyawasam-1789445958"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-arrest-completely-wrong-sagara-kariyawasam-1789445958</id>
            <summary type="text">&quot;ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் முழுமையாக உறுதியாக உள்ளோம். அரச
நிதியை மோசடி செய்தவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட
வேண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>"ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் முழுமையாக உறுதியாக உள்ளோம். அரச
நிதியை மோசடி செய்தவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட
வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.</p><p> எனினும், 13
ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில்,
பிறிதொரு நாட்டில் இருந்துகொண்டு நிமல் பெரேரா என்ற நபர் வழங்கிய
சாட்சியத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச செய்யப்பட்டமை முற்றிலும் தவறான
செயலாகும்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்
தெரிவித்துள்ளார்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைச் செயலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,</p><h2>ஜனாதிபதியின் கருத்து&nbsp;</h2><p>

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொலன்னறுவையிலும் அனுராதபுரத்திலும் ஆற்றிய
இரு உரைகளையும் ஊடகச் செய்திகளில் நான் பார்த்தேன். அவர் நாட்டின் ஜனாதிபதி
என்ற பொறுப்புமிக்க பதவியில் இருந்துகொண்டு நாட்டின் தேசிய பிரச்சினைகளைப்
பற்றிப் பேசாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும் பற்றியே
தொடர்ந்து விமர்சித்துப் பேசுகின்றார். அதைப் பார்க்கும்போது எங்களுக்கு
ஆச்சரியமாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccec107-9d04-4626-b6b1-b177386b30ab/26-6aa8e1344c5e5.webp' /></p><p>
</p><p>
அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், நாடு முழுவதும்
கூட்டங்களை நடத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும்
மாத்திரம் விமர்சித்துச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றால்,
ஜனாதிபதி தன் தோல்வியை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார் என்றே நாம் கருத
வேண்டியுள்ளது.</p><p>

அரசின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக ஜனாதிபதி திரும்பத்
திரும்பக் கூறுகின்றார். அவ்வாறாயின், தமக்குத் மக்கள் மத்தியில் உண்மையான
ஆதரவு இருப்பதை நிரூபிக்க மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தலாம் தானே?
</p><p>தேர்தல் முறைமையைக் காரணம் காட்டி தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுவதன் உண்மையான
நோக்கம் என்ன?</p><h2>அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி&nbsp;</h2><p> மக்களின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு
காண்பதில் கவனம் செலுத்தாத அரசு, அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கு
அமையவே தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
</p><p>
ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாமும் உறுதியாக உள்ளோம். அரச நிதியைச்
சுருட்டியவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில்
நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03a4bc7-2398-48dd-923e-8570f90515cc/26-6aa8e1351cf0e.webp' /></p><p> </p><p>ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்னர்
இடம்பெற்ற எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், வெளிநாட்டில்
இருந்துகொண்டு நிமல் பெரேரா என்பவர் வழங்கிய சாட்சியத்தை மட்டும் வைத்துக்
கொண்டு நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் தவறான
நடவடிக்கையாகும்.
</p><p>
நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் அவர் கைது
செய்யப்பட்டுள்ளார் எனில், அவருக்கு அந்த இலஞ்சத்தை வழங்கியதாகக் கூறப்படும்
நபருக்கு எதிராக இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? எமது
கட்சியின் எதிர்கால வெற்றியைத் தடுக்கும் நோக்கத்துடனும், திட்டமிட்ட அரசியல்
பழிவாங்கும் செயற்பாடாகவுமே நாமல் ராஜபக்ச இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:07:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷானி அபேசேகர - ரவி செனவிரத்ன ஆகியோரின் அடிப்படை உரிமை மீறல்! இழப்பீடு செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-seneviratne-shani-s-fundamental-rights-1789451037"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-seneviratne-shani-s-fundamental-rights-1789451037</id>
            <summary type="text">பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன அளித்த புகாரின் பேரில், தேசபந்து தென்னக்கோனின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அப்போதைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா, ஷானி அபேசேகரா மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிராக விசாரணையொன்றை முன்னெடுத்திருந்தார்.</p><h2>அடிப்படை உரிமை மனு தாக்கல்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb26d890-443d-4d0e-9d95-792cf44c51d2/26-6aa8de4e41bca.webp' /></p><p>
</p><p>
குறித்த விசாரணைகளின் அப்படிடையில் தங்களை சட்டவிரோதமாகக் கைது செய்யும் நோக்கம் இருப்பதால் அதற்குத் தடை விதிக்கக் கோரி, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பின்னர் உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, இது தொடர்பான புகாரைத் தாக்கல் செய்த ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன, தலா 50,000 ரூபாவும், இது தொடர்பான விசாரணையை நடத்திய அப்போதைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா, தலா 10,000 ரூபாவும் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:57:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்! ஆற்று பகுதிகளை அண்மித்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-risk-kalu-ganga-and-attanagalu-oya-1789449493"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-risk-kalu-ganga-and-attanagalu-oya-1789449493</id>
            <summary type="text">நாட்டில் இன்று குறிப்பிடத்தக்க மழை பெய்தால், அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் கீழ் பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இன்று குறிப்பிடத்தக்க மழை பெய்தால், அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் கீழ் பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

</p><p>அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் மில்லகந்த மற்றும் எலகாவா பகுதிகளில் நீர்மட்டம் தற்போது உச்ச அளவில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையில், களனி ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயரவில்லை என்றாலும், படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், தற்போதைக்கு வெள்ள அபாயம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29226463-3b78-4844-b29b-222988384c14/26-6aa8dbc9d06a5.webp' /></p><p>
</p><p>
அதேபோல், நில்வலா ஆறு, ஜின், களனி, கலு, அத்தனகலு மற்றும் பெந்தாரா ஆகிய அனைத்து ஆறுகளின் கீழ் பகுதிகளிலும் நீர்மட்டம் தற்போது ஓரளவிற்கு உயர்ந்துள்ளது.</p><p>

இருப்பினும், வரவிருக்கும் வானிலை நிலவரங்களைப் பொறுத்து நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், குறித்த ஆறுகளின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மேடையில் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரியப் பேச்சு! விமலும் - கம்மன்பிலவும் வேடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-s-controversial-speech-on-mahinda-s-stage-1789449818"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-s-controversial-speech-on-mahinda-s-stage-1789449818</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் பேரணியானது நாட்டில்
நிலவும் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக அமையவில்லை. மாறாக,
தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் பேரணியானது நாட்டில்
நிலவும் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக அமையவில்லை. மாறாக,
தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து சட்டம் மற்றும்
நீதித்துறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு வெற்றுக்கூச்சலாகவே அமைந்தது&nbsp; என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இணை அழைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்தார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் கூறியதாவது,</p><p>ஊழலுக்கு எதிரான அரசு எதிர்ப்புப் பேரணி எனக் கூறி நடத்தப்பட்ட இந்த
நிகழ்வில், விவசாயிகள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள், நெல்லுக்கான
நியாயமான விலை, மீனவர்கள் மற்றும் வர்த்தகர்களின் அன்றாடச் சிரமங்கள்,
எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்ற எந்தவொரு அடிப்படை மக்கள்
நலன் குறித்தும் மேடையில் பேசிய பேச்சாளர்கள் எவருமே சிறிதும் பேசவில்லை.</p><h2>மௌனம் சாதித்தனர்</h2><p>

மாறாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸார் மற்றும்
நீதிமன்றங்கள் தங்களுக்கு எதிராக முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து
தப்பிப்பதையும், கைதுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையுமே முதன்மை
நோக்கமாகக் கொண்டே அவர்கள் உரையாற்றினர்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் 2011 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் எல்.ரி.ரி.ஈ. அமைப்பானது தடை செய்யப்பட்ட அமைப்பாக
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. </p><p>அந்தச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட
அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவது, அதன் உறுப்பினராக இருப்பது, அந்த
அமைப்பை ஊக்குவிப்பது அல்லது அதற்கான கூட்டங்களை நடத்துவது என்பன முற்றிலும்
சட்டவிரோதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79173e6-f748-4731-ac2d-a26c5393018b/26-6aa8d78ce2232.webp' /></p><p> </p><p>ஆனால், அதே மகிந்த ராஜபக்ச மேடையில் அமர்ந்திருக்கையில்,
அர்ச்சுனா என்பவர் மேடையேறித் தடை செய்யப்பட்ட அமைப்பைப்
பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றியுள்ளார். </p><p>அதனைப் பார்த்து ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன ஆதரவாளர்களும் தலைவர்களும் கைதட்டி வரவேற்பளித்துள்ளமை நாட்டின்
அரசமைப்பையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் மிக மோசமாக மீறும் செயலாகும்.</p><p>

இத்தனை காலம் தங்களைச் சிங்களத் தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்றும்,
இராணுவத்தினரைப் பாதுகாத்தவர்கள் என்றும் கூறி அரசியல் செய்து வந்த விமல்
வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திஸ்ஸ குட்டியாரச்சி போன்றவர்கள், மேடையில்
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக உரையாற்றப்பட்டபோது அதைத் தடுத்து
நிறுத்தாமல் மௌனம் சாதித்துள்ளனர். </p><p>கீழிருந்த ஆதரவாளர்களும் அதற்குத் தாளம்
போட்டு கைதட்டி வரவேற்பளித்துள்ளனர். இது அவர்களின் போலித் தேசியவாதத்தையும்,
வெற்று அரசியல் சுயநலத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eaa664d-b207-4f03-96c7-80d689266cde/26-6aa8d78dbf583.webp' /></p><p>
</p><p>
நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைச் சீர்குலைக்கும் வகையிலும், தடை
செய்யப்பட்ட அமைப்பை பகிரங்கமாக ஊக்குவிக்கும் வகையிலும் இந்தக் கூட்டத்தை
ஏற்பாடு செய்தமைக்காகக் குற்றப் புலனாய்வுத் துறையினர் மற்றும் பொலிஸ்மா
அதிபரிடம் உடனடியாக அவசரப் புகார் அளிக்கப்படவுள்ளது.</p><p>

இத்தகைய சட்டவிரோத செயல்களுக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20
ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும். </p><p>தங்களின் சுயநல
அரசியல் இலாபத்துக்காகவும் ஊழல் வழக்குகளிலிருந்து தப்புவதற்காகவுமே ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன கட்சியினர் நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பந்தயப் பொருளாக
ஆக்கியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்திற்கு வந்து தவழ்ந்த கூட்டம்! பணத்தை பெற்றுக்கொண்டு மனதிலிருந்து வந்த வார்த்தை - ஈரோஸ் கட்சி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajanathan-prabakaran-statement-about-mahinda-1789445750"></link>
            <id>https://tamilwin.com/article/rajanathan-prabakaran-statement-about-mahinda-1789445750</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க விரைவில் மருந்து கட்டுவேன் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை அநுர அரசாங்கம் 20 வருடம் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மட்டக்களப்பில் நேற்றைய தினம் (14.09.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசாங்கத்திற்கு எதிரான கூட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொலை, கொள்ளை, குடிகாரர்கள் தான் இருக்கின்றனர் என உலகத்துக்கே தெரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d397a0c-2acc-4071-b62d-647fe03df947/26-6aa8d668535e4.webp' /></p><p> இருந்தபோதும் அரசாங்கத்துக்கு எதிராக அநுராதபுரத்தில் பெரிய ஒரு கூட்டம் நடந்தது அந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் அனைவரும் வீதியில் தவழ்ந்ததை முகநூலில் பார்த்திருப்பீர்கள்.
</p><p>
பணத்தையும், மதுபானத்தையும் வாங்குவதற்கு அனுர ஹொரா என சொல்வது கடமை, ஏன் என்றால் பணத்தையும் மதுபானத்தையும் பெற்றுக் கொண்டதற்காக. </p><p>ஆனால் அடிமனதில் இருந்து நாமல் ஹொரா என சொல்லியிருந்தனர்.

இது தான் நிலைமை இலங்கையில் இவ்வளவு பேரும் தான் அனைத்து கட்சிக்கும் ஆதரவாளர்கள் என்பது ஊடகங்கள் மூலம் தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pP30fxl7UZ8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை - காலக்கெடுவுடன் கடுமையாகும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-to-those-in-government-service-action-1789441405"></link>
            <id>https://tamilwin.com/article/warning-to-those-in-government-service-action-1789441405</id>
            <summary type="text">அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்சாட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் நல அலுவல்கள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
</p><p>
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா பவுல்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

இதற்கான உரிய அமைச்சரவை ஆவணத்தை சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்</h2><p>

இந்த சான்றிதழை பொலிஸ் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் மூலம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a9c9b94-6143-4425-93a1-148633381344/26-6aa8cd2078dea.webp' />&nbsp; &nbsp;</p><p> தற்போது அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்களது பணிக்கால இடைவெளி மற்றும் சம்பள உயர்வுகளை பெறும்போது, ​​குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூறும் சான்றிதழை புதுப்பித்து வழங்குவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.</p><p>இந்த சான்றிதழின் அவசியத்தை அமைச்சரவை அறிக்கை மூலம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பொலிஸ் அல்லது தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து சான்றிதழைப்பெற நாங்கள் பரிசீலித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
 மேலும், அரச பணியில் சேரும்போது, ​​குழந்தைகளுடன் பழகும் வாய்ப்புள்ள பணிகளில் பணியாற்றுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது குற்றவாளிகள் என்றோ குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

எனவே, ஒரு நாடாக நாம் முன்னேறிச்செல்வதற்கு இது போன்ற வி்டயங்கள் அவசியமானவை என விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T04:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-corruption-free-sri-lankan-government-1789444192"></link>
            <id>https://tamilwin.com/article/a-corruption-free-sri-lankan-government-1789444192</id>
            <summary type="text">தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து
ஊழலற்ற ஆட்சியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து
ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
அத்துடன் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது எவரும் விரல்
சுட்டிக் குற்றம் சுமத்த முடியாத அளவுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன்
கூடிய புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி
அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
"தற்போதைய அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு அளித்த தேர்தல்
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை முழுமையாக
உறுதிசெய்து ஊழலற்ற தூய்மையான ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில்
நிலைநிறுத்தியுள்ளது.</p><h2>மக்கள் ஆட்சி&nbsp;</h2><p>
</p><p>
கடந்த கால ஆட்சி முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நாட்டின் சாதாரண
மக்களையும் நிர்வாகக் கட்டமைப்போடு நேரடியாக இணைக்கும் வகையில் மக்கள்
பங்கேற்புடனான ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
</p><p>
பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் குறைகளைக்
கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகளை வழங்குவதற்காக அரசியல் தலைமைத்துவம்
நேரடியாகவே மக்களிடம் செல்லும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29962b70-266d-4d93-a5f3-f3b78aa88dcc/26-6aa8c6499b001.webp' /></p><p> </p><p>இதன்
முதற்கட்டமாக, ஜனாதிபதி நேரடியாகப் புலத்சிங்கள, பேருவளை, பொலன்னறுவை மற்றும்
அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து மக்களின் நிலைமைகளைக்
கேட்டறிந்துள்ளார்.</p><p> </p><p>இதேபோன்று, ஜனாதிபதி மாவட்ட மட்டத்திலும், அமைச்சர்கள்
தொகுதி மட்டத்திலும், நகர சபைத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்,
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வரையிலும் நேரடியாகச் சென்று மக்களையும் அரச
அதிகாரிகளையும் சந்தித்துப் பணியாற்றி வருகின்றனர். </p><p>இது ஒரு சங்கிலித் தொடர்
போன்ற கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது.

கடந்த ஆட்சிக் காலங்களில் கொடிகட்டிப் பறந்த ஊழல், இலஞ்சம் மற்றும் நிர்வாக
முறைகேடுகளை முழுமையாக ஒழிக்கவே இந்த அரசை மக்கள் தோற்றுவித்ததன் முதன்மை
நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e30d0e-97db-4654-a6fe-8b1ea8a9643e/26-6aa8c648e2f0c.webp' /></p><p> </p><p>அந்த மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், தற்போதுள்ள 159
நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளோ எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும்
ஈடுபடவில்லை. </p><p>மக்கள் பிரதிநிதிகள் மீது எவரும் விரல் சுட்டிக் குற்றம் சுமத்த
முடியாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய அரசியல் கலாசாரம்
உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அரசியல்வாதிகள் எவரும் இனி ஊழல் சார்ந்த செயல்களுக்கு அரச
அதிகாரிகளையோ அல்லது பொதுமக்களையோ தூண்டப்போவதில்லை. </p><p>இதனால் அரச அதிகாரிகள்
எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் அஞ்சாமல், சுதந்திரமாகவும் தைரியமாகவும்
நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற முடியும். மக்கள் பிரதிநிதிகளும் அரச
அதிகாரிகளும் கைகோர்த்து நாட்டுக்காகப் பணியாற்றுவதற்கு இதுவொரு பொன்னான
வாய்ப்பாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T04:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு எதிராக உரிய தருணத்தில் ஒரே தளத்தில் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்! வெளியாகவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-parties-taking-field-against-government-1789443172"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-parties-taking-field-against-government-1789443172</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும்
சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான
பிளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும்
சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான
பிளவு அல்ல என்றும், உரிய தருணத்தில் அரசுக்கு எதிராக அனைத்து
எதிர்க்கட்சிகளும் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து களமிறங்கும் என்றும் ஐக்கிய
மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடனான உத்தியோகபூர்வ கூட்டணி குறித்த இறுதித்
தீர்மானம் அடுத்த தேசிய தேர்தலின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,</p><h2>&nbsp;அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட அனுராதபுரம் பேரணி</h2><p> "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட அனுராதபுரம்
பேரணியானது, தற்போதைய அரசின் தோல்விகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை
நாட்டு மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85f3ac0-3cc9-4994-a7f0-a9fb5f0dae10/26-6aa8c151a69fb.webp' /></p><p>
</p><p>உறங்கிக்கொண்டிருந்த மக்களை மீண்டும் விழிப்படையச் செய்து, அவர்களின்
போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய ஒரு முக்கியமான பேரணியாகவே அதனைப் பார்க்க
முடிகின்றது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்
அரசுக்கு எதிராகத் தனியாகப் பல போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக, இம்மாத இறுதியில் கொழும்பில் பிரம்மாண்டமான
முறையில் ஒன்றுகூடி, முக்கிய கலந்துரையாடல்களையும் பேரணிகளையும் நடத்த
ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
</p><p>
நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உள்ள பல்வேறு அரசியல் இயக்கங்கள்
இணைந்து தற்போது கூட்டு எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு வருகின்றன.</p><h2>பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் </h2><p>
</p><p>
எதிர்க்கட்சிகள் தனித்தனியாக மக்கள் சந்திப்புகளை நடத்துவதைப் பார்த்து அவை
பிளவுபட்டுள்ளதாகச் சிலர் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. ஒவ்வொரு
கட்சியும் தத்தமது பலத்துக்கு ஏற்ப மக்களைத் திரட்டுவது அரசியல் ரீதியாக
இயல்பான ஒரு விடயமாகும்.</p><p> எனினும், அரசுக்கு எதிராக இறுதிச் சந்தர்ப்பம்
வரும்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகவே கைகோர்த்து களமிறங்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது
குறித்து நீண்டகாலமாகப் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/149081de-d98c-4704-bbd1-c69a01c768f6/26-6aa8c1525bdf2.webp' /></p><p> இரு கட்சிகளின்
தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் முக்கிய குழுவினர் பலமுறை நேரில்
சந்தித்துப் பேசியுள்ளனர். </p><p>ஏற்கனவே உள்ளூராட்சி மன்ற அமைப்புகளின்
தேர்தல்களின்போது இரு கட்சிகளும் அடிமட்ட அளவில் இணைந்து செயற்பட்டது போல்,
தற்போதும் ஆதரவாளர்கள் மத்தியில் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி நல்லிணக்கம்
தொடர்கின்றது.

இரு கட்சிகளும் எப்போது உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கப் போகின்றன என்பதை
இரு கட்சித் தலைவர்களுமே உரிய நேரத்தில் தீர்மானிப்பார்கள்.</p><p>

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்திலோ அல்லது அடுத்த தேசிய தேர்தல்
வரவிருக்கும் சந்தர்ப்பத்திலோ இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு
வெளிப்படுத்தப்படும்.
</p><p>
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவராக
இன்னமும் மஹிந்த ராஜபக்சவே தொடர்ந்தும் திகழ்கின்றார்.</p><p> இத்தகைய சிரமங்களுக்கு
மத்தியிலும் கூட அவரைப் பேரணிகளுக்கு அழைத்து வருகின்றமை, பொதுமக்களுக்கும்
அவருக்குமான பலமான பிணைப்பையே மீண்டும் காட்டுகின்றது என்பதை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T03:54:00+00:00</updated>
        </entry>
    </feed>
