<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-24T13:06:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-of-exam-dates-1787575403"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-of-exam-dates-1787575403</id>
            <summary type="text"> 




2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p> 




2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, தரம் 5- க்கான புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறும்.
</p><h2>
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்</h2><p>
 க.பொ.த உயர்தர பரீட்சை (A/L) 2027ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3 முதல் ஓகஸ்ட் 28 வரை நடைபெற உள்ளது. 

பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் திகதி நடத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b3829e9-5971-4dae-a9fa-91a70e26cd0c/26-6a8c404026d14.webp' /></p><p> இதற்கிடையில், க.பொ.த சாதாரண பரீட்சை (O/L) 2027 டிசம்பர் 7 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும்.</p><p> 

பரீட்சை திகதிகளைத் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்தார். </p><p>

அறிவிக்கப்பட்ட திகதிகளை குறித்துக்கொண்டு, பரீட்சைகளுக்குத் தேவையான தயாரிப்புகளைச் செய்யுமாறு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-government-1787575218"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-government-1787575218</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய
அவதிக்குள்ளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய
அவதிக்குள்ளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்களினால் இலட்சக்கணக்கான நாட்டு மக்கள்
ஏமாற்றப்பட்டுத் திசைதடுமாறியுள்ளனர் என்றும், நாளாந்தம் மூன்று வேளை
உணவைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பாரிய
பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அநுராதபுரம் - மதவெச்சிய, யகாவெவ பிரதேசத்தில் நேற்று (23.08.2026) மாலை நடைபெற்ற ஐக்கிய
மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட வேலைத்திட்டத்தின் கீழ்
முன்னெடுக்கப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே
எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை கூறியள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/976c34b5-bb6f-4b09-a60e-725c4fef9238/26-6a8c3df206cf2.webp' /></p><h2>நாட்டிலுள்ள ஒரேயொரு மாற்றுத்தரப்பு</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் காணப்படும் ஒரேயொரு மாற்றுத் தரப்பாக ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே
விளங்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87feeb7c-d18c-4cb1-94e4-318af5f27cbe/26-6a8c3df2e644d.webp' /></p><p> </p><p>விவசாய வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள மக்களின் விவசாயத்தை
மேம்படுத்தி, கைத்தொழில் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, உற்பத்தித் தொழில்களை
ஏற்படுத்தி விரைவான அபிவிருத்தியை ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்திரமே
சாதிக்க முடியும்.</p><p>

கிராமத்தைக் கட்டியெழுப்பி, நகரங்களை உருவாக்கி, நாட்டை முன்னேற்றும் இந்தப்
புதிய வேலைத்திட்டத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க
முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8455f626-b3eb-4bc7-9761-b8123b4c43c4/26-6a8c3df3bcbd6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3adeab5-0b23-460d-8072-2f05cc666deb/26-6a8c3df496d0c.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் நுணுக்கமான முறையில் திருடப்பட்ட பை - சிசிடிவியில் சிக்கிய சில நிமிடங்களில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-s-bag-at-the-pettha-bus-station-1787574299"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-s-bag-at-the-pettha-bus-station-1787574299</id>
            <summary type="text">கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணியின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு வலையமைப்பின் உதவியுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணியின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு வலையமைப்பின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று (23.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் கையில் தடியுடன் அங்கும் இங்கும் நடமாடியுள்ளார். பின்னர், அங்கிருந்த கதிரையொன்றில் அமர்ந்த குறித்த நபர், பயணி ஒருவரின் பையை எடுத்துக்கொண்டு மெதுவாக அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
</p><p>
குறித்த நபரின் நடவடிக்கைகள் அனைத்தும் பெட்டா பேருந்து நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள செயல்பாட்டு மையத்திலிருந்து இயக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் ஊடாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
</p><h2>
விரைந்து செயற்பட்ட அதிகாரிகள்</h2><p>
இதனையடுத்து, பையை எடுத்துக்கொண்டு நகர்ந்த சந்தேக நபரை, பணியில் இருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பின்தொடர்ந்து சென்று சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.
</p><p>
சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் உடனடியாக அவதானிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபர் விரைவாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a51bddc0-12fd-409c-a4c5-e819d6e0aa69/26-6a8c3bf252756.webp' /></p><p> </p><p>பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் மிகவும் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றான புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 'தூய்மையான இலங்கை' முன்முயற்சியின் கீழ் புதிதாக நவீனமயமாக்கப்பட்ட செயல்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக இந்த சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.</p><h2>

24 மணிநேரமும் இயங்கும் கமராக்கள்</h2><p>

இந்தக் கண்காணிப்பு வலையமைப்பு 24 மணி நேரமும் இயங்குவதுடன், பேருந்து நிலையத்திற்குள் இடம்பெறும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
திருட்டு மற்றும் பிக்பாக்கெட் போன்ற குற்றச் செயல்களைக் கண்டறிவது மட்டுமன்றி, பயணிகளுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவு, விபத்துகள் மற்றும் உடனடி உதவி தேவைப்படும் அவசரநிலைகளில் விரைவாக நடவடிக்கை எடுக்கவும் இந்தக் கண்காணிப்பு அமைப்பு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:41:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையை காணாது தேடிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-two-year-old-child-recovered-from-canal-1787573403"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-two-year-old-child-recovered-from-canal-1787573403</id>
            <summary type="text">அநுராதபுரம், கல்னேவ - கலேவெவ வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் தந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம், கல்னேவ - கலேவெவ வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.</p><p>குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் தந்தை நேற்றைய தினம் (23.08.2026) கல்னேவ பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.</p><p>இதனடிப்படையில், அப்பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்னர்.
</p><p>
இதன்போது, வீட்டின் அருகில் கால்வாயொன்றின் பாலத்தின் அடியில் குழந்தை சிக்குண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/647a814e-e3fb-4624-abb8-0d211b4bc7a5/26-6a8c39794e6c3.webp' /></p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>

பின்னர் உடனடியாக கல்னேவ மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட போதிலும், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
குழந்தையின் சடலம் உடற்கூறாய்வு பரிசோதனைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கல்னேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:31:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி - முற்றாக எரிந்து நாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-wheel-suddenly-caught-fire-1787571645"></link>
            <id>https://tamilwin.com/article/three-wheel-suddenly-caught-fire-1787571645</id>
            <summary type="text">மாற்றுத்திறனாளி ஒருவர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானதாக ஹோமகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(24.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றுத்திறனாளி ஒருவர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானதாக ஹோமகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இன்று(24.08.2026) நண்பகல் சுமார் இரண்டு மணியளவில் ஹோமகம, பிட்டிபான, பிரசன்னபுர பகுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><h2>தீ விபத்துக்கான காரணம்&nbsp;</h2><p>

தீப்பிடித்த உடனேயே, வாகனத்தை ஓட்டிச் சென்ற மாற்றுத்திறனாளி வாகனத்திலிருந்து குதித்துத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb5e4a67-4456-4f8d-a15a-a7ba2372b118/26-6a8c3363383ea.webp' /></p><p>
பிரதேசமக்கள் தீயை அணைக்க கடுமையாக முயன்றும் பலனளிக்கவில்லை, </p><p>தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.</p><p>ஹோமகம தலைமையக பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி மீதான தடை நீக்கத்தால் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/restrictions-on-vehicle-imports-eased-1787569030"></link>
            <id>https://tamilwin.com/article/restrictions-on-vehicle-imports-eased-1787569030</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
பல ஆண்டுகளுக்கு பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>அரச வருமானம்</h2><p> 

நிதி அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.
</p><p>
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce394a9-b953-4de3-bf0b-95694b0581b4/26-6a8c3267ca600.webp' /></p><p> </p><p>

இது 2026ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.</p><h2>நேரடி வருமானம்</h2><p> </p><p>

மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
</p><p>
2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது திருத்தம் - உயர் நீதிமன்றத்தில் குவிந்த 21 மனுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/21-petitions-against-the-22nd-amendment-1787571592"></link>
            <id>https://tamilwin.com/article/21-petitions-against-the-22nd-amendment-1787571592</id>
            <summary type="text">
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

வெளிப்படைத்தன்மை அறக்கட்டளையின் பொருளாளர் சுனில் ஜயசுந்தர, சட்டத்தரணி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க, இளம் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்டவர்களே இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 


மனுதாரர்களின் கோரிக்கை</h2><p>
அத்துடன், முன்னதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன மற்றும் பிறர் இந்த மசோதாவை எதிர்த்து மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c41ee107-33b1-4705-a134-2ed3450ab0c8/26-6a8c307d5cac5.webp' /></p><p> 

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த மசோதாவானது, மக்களின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கிறது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். </p><p>

எனவே, இந்த மசோதாவை நிறைவேற்றுவதாயின், அது ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/s80Zng68ZKk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-24T11:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 வருடங்களுக்கு முன் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் - காணிகளை விடுவிக்குமாறு கோரி தமிழர் பகுதியில் தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-protest-at-the-jaffna-vayavilan-junction-1787568883"></link>
            <id>https://tamilwin.com/article/people-protest-at-the-jaffna-vayavilan-junction-1787568883</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கத்தினுடைய இராணுவ இயந்திரத்தினால் இந்த இடத்தில் இருந்த மக்கள் மிக மோசமான முறையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கத்தினுடைய இராணுவ இயந்திரத்தினால் இந்த இடத்தில் இருந்த மக்கள் மிக மோசமான முறையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(23) யாழில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>துரத்தியடிக்கப்பட்ட மக்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>இங்கிருந்து மோசமான முறையில் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் 36 வருடங்களாக தமது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fde6da-d9c2-46e2-a290-d6808e17da8a/26-6a8c2814e5d9d.webp' /></p><p>இந்தப் போராட்டமானது மயிலிட்டி, வசாவிளான், பலாலி மற்றும் தெல்லிப்பளை போன்ற இடங்களிலும் நடைபெற்று வருகின்றது.&nbsp;</p><p>முந்தைய அரசாங்கங்கள் போன்று இவர்களும் நடந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவார்கள் என&nbsp; &nbsp;இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1071497925235485%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.330 மில்லியன் செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு நிர்மாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/construction-at-a-cost-of-rs-330-million-1787568750"></link>
            <id>https://tamilwin.com/article/construction-at-a-cost-of-rs-330-million-1787568750</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு
அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24.08.2026) காலை, பிரதேச
சபையின் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு
அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24.08.2026) காலை, பிரதேச
சபையின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
</p><p>பிரதேச சபையின் நிதியில் 330 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள
இந்த உள்ளக விளையாட்டு அரங்கு, வலிகாமம் தெற்கு பிரதேசத்தில்
விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில்
அமையவுள்ளது.
</p><h2>முக்கிய உட்கட்டமைப்பு திட்டம்</h2><p>வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற
அடிக்கல் நாட்டு நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.
சிவஞானம், பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்,
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு மாகாண சபையின் முன்னாள்
உறுப்பினர் எஸ். சுகிர்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள்
கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89f08a4-7bf6-4414-8013-471b4ab5c594/26-6a8c2acd38fc7.webp' /></p><p>அத்துடன், யாழ்ப்பாண மாநகர முதல்வர், வடக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேச
சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும்
பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
</p><p>வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்திலேயே இந்த பாரிய
விளையாட்டு உட்கட்டமைப்பு நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்திக்
கொடுப்பதுடன், பிரதேச மட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான
முக்கிய உட்கட்டமைப்பு திட்டமாகவும் இந்த உள்ளக விளையாட்டு அரங்கு
அமையவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T11:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பெண் அதிபர் கொடூரமாக கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/old-teacher-killed-shocking-reason-revealed-1787536896"></link>
            <id>https://tamilwin.com/article/old-teacher-killed-shocking-reason-revealed-1787536896</id>
            <summary type="text">இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 69 வயதான ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. 

நபர் ஒருவர் தனது பிள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 69 வயதான ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. </p><p>

நபர் ஒருவர் தனது பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வாங்குவதற்காகப் பணம் திரட்ட முயன்ற போது, வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் 22 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

கொடூரமாக கொலை</b></h2><p>வீடு வீடாக சென்று தேங்காய் பறிக்கும் நபர் ஒருவரும், 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுமே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f649e6dd-62ca-4d90-a410-6e6dbdd688e5/26-6a8bc57085de0.webp' /></p><p>இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹிட்டிய, பெலவத்தை பகுதியை சேர்ந்த விமலானி என்ற ஓய்வுபெற்ற பெண் அதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கடந்த 21ஆம் திகதி மாலை, தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உயிரிழந்த பெண்ணின் ஒரே மகன், இரவு 7.45 மணியளவில் வீடு வந்து தனது தாயை தேடியுள்ளார். </p><p>

இதன்போது தாயின் நிர்வாணமான சடலம் வீட்டின் அறை ஒன்றின் தரையில் கிடப்பதைக் கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து அயலவர்களுக்கு தெரிவித்து, தாயின் மர்ம மரணம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p> 

சம்பவம் நடந்த நாளின் பகல் வேளையில் கூலிக்குத் தேங்காய் பறிக்கும் நபர் ஒருவர் நடமாடியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>அன்று மாலை வேளையில் ஆசிரியை கொல்லப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் பிரதான சந்தேக நபர் நடமாடியுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. </p><p>

அடுத்த நாள் அதிகாலை மூன்று மணியளவில் சந்தேக நபரை கைது செய்து விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட ஆசிரியைக்கு சொந்தமான தங்க மோதிரம் ஒன்று சந்தேக நபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h3><b>

தங்க மோதிரம்</b></h3><p>பெண் அதிபரின் வீட்டின் காணிக்குள் சென்று மறைந்திருந்து வீட்டின் பின்பக்க கதவூடாக வீட்டிற்குள் நுழைந்து, குளிக்க தயாராக இருந்த அவரது தலையில் கட்டையால் பலமுறை தாக்கியதாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66367a69-b77a-48cc-8714-a81086f1f2d4/26-6a8bc57149717.webp' /></p><p>இதன்பின்னர் அவர் கீழே விழுந்ததும், அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியையும் தங்க மோதிரத்தையும் கழற்றிக்கொண்டு தப்பியோடியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>

இந்த செயலுக்கு உதவியாக முச்சக்கர வண்டி ஓட்டுநரான தனது நண்பரையும் ஈடுபடுத்திக்கொண்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். </p><p>தனது பிள்ளையின் பிறந்த நாளுக்கு கேக் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்குவதற்கு பணம் தேடுவதற்காகவே இதனை செய்ததாக சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார். </p><p>

திருடப்பட்ட தங்கச் சங்கிலியை கொடகெவல நகரில் உள்ள தனியார் அடகு மையமொன்றில் 90,000 ரூபாவிற்கு அடகு வைத்து பணம் பெற்றுக்கொண்டதாகவும், அன்றைய இரவில் நண்பர்களுடன் சேர்ந்து விருந்து வைத்து கொண்டாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதற்கமைய, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருடன் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் இருவரிடமும் சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VcH0r9Aub-A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தில் தவறவிட்ட ரூ.10 இலட்சம் தங்கச் சங்கிலி: சாரதி - நடத்துனரால் கிடைத்த நெகிழ்ச்சி தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-chain-missing-from-bus-1787568856"></link>
            <id>https://tamilwin.com/article/gold-chain-missing-from-bus-1787568856</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் 10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் இருவரும் மீட்டு, உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் 10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் இருவரும் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் நேற்று(23.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2> 

ஆசனத்தில் சிக்கிய தங்க சங்கிலி</h2><p>
குறித்த தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை
செல்லும் 767 வழித்தட (4241 இலக்க) இ.போ.ச பேருந்தின் மதிய சேவையின் போது பயணித்த பெண் வட்டுக்கோட்டையில் மரணச் சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு, இன்னொரு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/223e0f1f-abb6-4310-80ab-4770b3b4d1cb/26-6a8c245b3c5c7.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
 அங்கு சென்ற பின்னரே அவரது கழுத்தில் இருந்த இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி இல்லாததை உணர்ந்தார்.

அதன்பின்னர் அவர் வழிநெடுகிலும் சென்றுபார்த்தபோதும் சங்கிலியைக்
கண்டுபிடிக்கமுடியவில்லை.</p><p> “இனிச் சங்கிலி கிடைக்காது” என்ற கவலையோடு, மீண்டும் வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்தித்துறை நோக்கிச் செல்வதற்கான மீண்டும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். </p><h2>

பெண்ணிற்கு உதவிய சாரதி - நடத்துனர்</h2><p>
இதன்போது, கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை காணவில்லை என தெரியப்படுத்திய வேளையில், அவர்கள், “ நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் இந்தச் சங்கிலி இருந்தது” என ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/011113d3-1556-424f-8ae4-388cab8a72b4/26-6a8c245be51bd.webp' /></p><p>அதன் பின்னர் பருத்தித்துறை டிப்போவுக்கு சென்று பேருந்தை சுத்தம் செய்த பொழுது சங்கிலியின் எஸ் வடிவிலான இணைப்புப் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனைத் தொடர்ந்து, அதனையும் குறித்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு தாம் கண்டெடுத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான நகையினைக் கண்டெடுத்து
உரியவர்களிடம் சேர்த்த பருத்தித்துறை டிப்போவை சேர்ந்த சாரதி - மனோகரன் சயந்தன் மற்றும் நடந்துனர் - இராசநாயகம் பிறின்சிராஜா இருவருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T11:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாட்சியங்கள் அழியும் முன் சர்வதேச விசாரணை அவசியம்! கனகரத்தினம் சுகாஸ் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-probe-need-before-evidence-destroy-1787566713"></link>
            <id>https://tamilwin.com/article/international-probe-need-before-evidence-destroy-1787566713</id>
            <summary type="text">சர்வதேச பொறிமுறையிலான விசாரணை முன்னெடுக்கப்படாமல் செம்மணியின் முழுமையான உண்மைகளை வெளிக்கொணர முடியாது என&amp;nbsp;தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச பொறிமுறையிலான விசாரணை முன்னெடுக்கப்படாமல் செம்மணியின் முழுமையான உண்மைகளை வெளிக்கொணர முடியாது என&nbsp;தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் நடத்திய ஊடக சந்திப்பொன்றில் வைத்தே இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>சாட்சியங்கள் அழியும் அபாயம்</h2><p>சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த் தேசியப் பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.</p><p>
இந்த நிலையில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்டோருக்கான நீதிப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல
வேண்டிய அவசியம் எமக்குள்ளது.</p><p>காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான நேரடி சாட்சிகளாக இருந்த
தாய்மார்கள் மற்றும் வயோதிப பெற்றோர்கள் வயது முதிர்வு மற்றும் இயற்கை மரணம்
காரணமாக உயிரிழந்து வருகிறார்கள். காலம் மேலும் கடந்து செல்லும் நிலையில், முக்கியமான சாட்சியங்களும்
ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UQTZQbqOCRo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இதனால் எதிர்காலத்தில் சர்வதேச
விசாரணைக்கான வாய்ப்பு உருவானாலும் சாட்சியங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால்
நீதியைப் பெற்றுக்கொள்வது கடினமாகிவிடும்.

இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்காகவோ தனிப்பட்ட நலன்களுக்காகவோ
காணாமல் ஆக்கப்படவில்லை. </p><p>அவர்கள் தமிழ் மக்களின்
உரிமைகள் மற்றும் விடுதலைக்கான போராட்டத்தின் பின்னணியில் காணாமலாக்கப்பட்டவர்கள்.

எனவே, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை தனிப்பட்ட
குடும்பங்களின் பிரச்சினையாக மாத்திரம் கருதாமல், ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின்
நீதிக்கான போராட்டமாக அணுக வேண்டும்.</p><h2>செம்மணி அகழ்வில் முழு உண்மையும் வெளிவருமா?</h2><p>
</p><p>
தமிழ் மக்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள்
மற்றும் அரசியல் தரப்புகள் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து குரல்
கொடுக்க வேண்டும்.</p><p>
செம்மணியில் தற்போது இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகள் மூலமாக மட்டும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான உண்மைகள் வெளிவரும் என நம்ப முடியாது என
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b789965-da07-4a20-b49f-1ee329b753be/26-6a8c1ecb154cc.webp' /></p><p>சர்வதேச பொறிமுறையிலான விசாரணை முன்னெடுக்கப்படாமல் செம்மணியின் முழுமையான
உண்மைகளை வெளிக்கொணர முடியாது.
</p><p>
அதேவேளை, தீவகப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள கிணறுகள், இராணுவ முகாம்கள் மற்றும்
புதிதாக அமைக்கப்பட்டுவரும் விகாரைகள் அமைந்துள்ள பகுதிகளின் கீழ் புதைகுழிகள்
இருக்கக்கூடும் என்ற சந்தேகங்கள் மக்களிடையே காணப்படுவதால், அவை தொடர்பில்
விரிவான விசாரணைகளும் அகழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f287704b-d0a6-42ec-a20e-2dab6f266cb5/26-6a8c1ecbc6772.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:53:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ நிலைமை: இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powercut-in-sri-lanka-1787567225"></link>
            <id>https://tamilwin.com/article/powercut-in-sri-lanka-1787567225</id>
            <summary type="text">எல் நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே.பி.எல்.சந்திரலால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்துள்ளார். </p><p>

நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p><h2>மின்சார கொள்வனவு</h2><p>
</p><p>
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாக கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான விலைகள் வெளியிடப்படுவது தொடர்பில் இன்றைய தினம் (24.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9066e952-3657-485a-92ed-26eac2b8270f/26-6a8c20036b957.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விஷமிகளின் அட்டகாசம் - நீர் வடிகால் மூடிகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strangers-smashed-the-drain-covers-in-jaffna-1787560919"></link>
            <id>https://tamilwin.com/article/strangers-smashed-the-drain-covers-in-jaffna-1787560919</id>
            <summary type="text">பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் உள்ள வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் செய்யப்பட்ட&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் உள்ள வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் செய்யப்பட்ட&nbsp; மூடிகளை&nbsp; அடையாளம் தெரியாத சிலர் அடித்து நொறுக்கியுள்னர்.</p><p>குறித்த சீமெந்து மூடிகளின் இரும்பு கம்பிகளை திருடும் நோக்குடன் அவை அடித்து
நொறுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><h2>அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகள்</h2><p>
</p><p>
அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகளின் இடிபாடுகள் வாய்க்காலுக்குள்
காணப்படுவதனால், மழை காலத்தில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை
ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937e9b8a-4dee-4c86-8a81-a35248a90694/26-6a8c123060bed.webp' /></p><p>அதனால் அவற்றினை அகற்றுவதற்கும், ஏனைய மூடிகளை
உடைக்காது பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>இதேவேளை சம்பவம் தொடர்பில், வலி. வடக்கு பிரதேச சபையின் கீரிமலை வட்டார
உறுப்பினர் முரளிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று
பார்வையிட்ட உறுப்பினர், அது தொடர்பில் தவிசாளருக்கு அறிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:35:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 3 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mango-auctioned-for-3-lakh-rupees-in-vavuniya-1787567301"></link>
            <id>https://tamilwin.com/article/mango-auctioned-for-3-lakh-rupees-in-vavuniya-1787567301</id>
            <summary type="text">வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு
படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு
படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு நேற்று(23.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> 

வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ
திருவிழா இடம்பெற்று வருகிறது.
</p><p>
இதன் ஆறாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று(23) இடம்பெற்றது.
</p><p>
திருவிழாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி
நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
</p><h2>
மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்</h2><p>
மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னர் குறித்த மாம்பழம் ஆலய நிர்வாக
சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு, சில நொடிகளில்
1 இலட்சம் ரூபா வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில்
3 லட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலம் முடிவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12d86260-4af4-42c5-a597-02d2f8b12cb3/26-6a8c1d70c1116.webp' /></p><p>
</p><p>
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில்
வசிக்கும் திருமதி சிந்துஜா உபாரிஸ் ஜெதீஸ்வரன் என்பவர், மூன்று இலட்சம்
ரூபாய்க்கு குறித்த மாம்பழத்தை ஏலத்தில் கொள்வனவு செய்தார்.
</p><p>
குறித்த ஆலய திருவிழாவின் போது மூன்றாவது வருடமாகவும் தொடர்ச்சியாக அவரே
ஆலயத்தில் ஏலம் விடப்பட்ட மாம்பழத்தை கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l9OeDnCTN3k" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகவியலாளர்களுக்கான ஹோமகம வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/applications-open-homagama-housing-scheme-1787563903"></link>
            <id>https://tamilwin.com/article/applications-open-homagama-housing-scheme-1787563903</id>
            <summary type="text">சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, “ஹோமகம பத்திரிகையாளர் வீட்டுவசதித் திட்டத்திற்காக” பத்திரிகையாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

அச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, “ஹோமகம பத்திரிகையாளர் வீட்டுவசதித் திட்டத்திற்காக” பத்திரிகையாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
</p><p>
அச்சு, மின்னணு மற்றும் இணைய ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்காக வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
</p><h2>இலங்கையின் நிரந்தரக் குடியிருப்பாளர்கள்</h2><p>
அமைச்சகத்தின்படி, விண்ணப்பதாரர்கள் இலங்கையின் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும் மற்றும் வீடு அல்லது வீடு கட்டுவதற்கு ஏற்ற நிலம் வைத்திருக்கக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f1d268-26f4-4117-aa65-da03f0d8df59/26-6a8c1c549f819.webp' /></p><p> விண்ணப்பதாரர்கள் ஊடகத் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
</p><p>
இத்திட்டத்தின் கீழ், தலா சுமார் 500 சதுர அடி கொண்ட 27 வீட்டு அலகுகள் வழங்கப்படும், மேலும் விண்ணப்பதாரர்கள் 30 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
</p><p>
தொழில்முறை அனுபவம் மற்றும் பிற தொடர்புடைய தகுதிகள் உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தேர்வுகள் செய்யப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்</h2><p>

2026 ஆம் ஆண்டு திட்டத்திற்கான விண்ணப்பங்களை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.media.gov.lk இலிருந்து ஆகஸ்ட் 18 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fd75cb-ea5c-45b1-b714-f989df82c0b8/26-6a8c1c55559ec.webp' /></p><p>
</p><p>
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, எண் 163, “அசிதிசி மெதுரா”, கிருலபொனே மாவத்தை, பொலங்கொட, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.</p><p>

மேலதிக தகவல்களை அமைச்சகத்தின் வெகுஜன ஊடகப் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவும் அதிக வெப்பம்: ஏற்படவுள்ள அபாய நிலை - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-capacity-of-74-reservoirs-drops-1787562157"></link>
            <id>https://tamilwin.com/article/water-capacity-of-74-reservoirs-drops-1787562157</id>
            <summary type="text">உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p>

குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 30 சதவீதத்தை விடவும் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீர் கொள்ளளவு வீழ்ச்சி</h2><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த நீர் கொள்ளளவு 36 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் வறண்ட வானிலை நிலவியபோதிலும், இந்த ஆண்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b55b5a2-55d6-4dda-869b-60d8d746a420/26-6a8c144c579e9.webp' /></p><p>அத்துடன் நிலவும் அதிக வெப்பம் காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் வேகமாக ஆவியாகி வற்றிப்போதல் இடம்பெறுகிறது. 

இந்த நிலைமையின் கீழ் நீர் தேவை அதிகரிக்கும் அதேவேளையில், நீர்வளம் வேகமாகச் சுருங்கி வருகிறது. </p><p>

இதனால் கடும் வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் குடிநீர் தேவை மற்றும் சுற்றாடல் தேவைகளுக்காக நீரை ஒதுக்கீடு செய்ய நேரிடுவதால், விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விநியோகிப்பது கடினமாக அமையக்கூடும்.</p><h2>குடிநீர் விநியோகம்</h2><p> </p><p>குடிநீர் விநியோகம் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், சில பகுதிகளுக்கான விவசாயத்திற்காக விநியோகிக்கப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4ccd6a1-c493-4f1f-88c4-73e6b43039c1/26-6a8c144d0dc51.webp' /></p><p>இந்த சவாலான நிலைமையை எதிர்கொள்வதற்கான ஒரே மாற்று வழி, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் சுற்றாடலுக்கு இணக்கமாக வாழ்வதும் ஆகும். நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதுடன், அது மிக வேகமாகப் பரவும் அபாயமும் காணப்படுகிறது.</p><p> எனவே இது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அவர் பொது மக்களை எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:22:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் தினத்திற்கான மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-association-of-relatives-of-the-disappeared-1787565630"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-association-of-relatives-of-the-disappeared-1787565630</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்டம்
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

மன்னாரில் இன்று (24.08.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>போராட்டங்களுக்கான பலன்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோர்
தினம் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தன்று நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்கள்
துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் இந்த அரசாங்கத்துக்கும், எத்தனையோ
அரசாங்கங்கள் மாறி மாறி வந்த போதிலும் நாங்கள் தெரியப்படுத்திக் கொண்டு
இருக்கிறோம்.</p><p>

காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது? இந்த உறவுகள் இருக்கிறார்களா? அல்லது
அவர்கள் உயிருடன் இல்லையா? என்று சொல்லியே நாங்கள் கேட்டுக்
கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் நாங்கள் செய்து
பார்த்து எங்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கவில்லை.</p><p>அதனால் தான் இந்த சர்வதேச
வலிந்து காணாமலாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நாங்கள் சர்வதேச மாநாடு நடத்த
தீர்மானித்திருக்கிறோம்.

எதிர்வரும் 30ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணத்தில் தந்தை
செல்வா கலையரங்கத்தில் மாநாடு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

உறவுகளைத் தேடித் திரிந்த அம்மாக்கள், வலி சுமந்த இதயத்தோடு எல்லாம்
மரணித்துப் போனார்கள். அவர்களுடைய புத்தகம் நாங்கள் வெளியிடுவதற்கு
இருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0de07a-1b6b-482a-8259-5e025af59432/26-6a8c1b024efe8.webp' /></p><h2>புத்தகம் வெளியிட தீர்மானம்</h2><p> </p><p>காணாமல்போன சிறுவர்கள், தொடர்பாகவும் அவர்களுடைய புத்தகம்
வெளியிடுவதற்கு இருக்கிறோம்.

காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக 17 வருடம் நாங்கள் யார் யாருக்கு
மகஜர் கையளித்தோம், காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நாங்கள் யார்
யாரிடம் கதைத்தோம், எங்கெங்கே நின்று போராட்டம் செய்தோம், என்னென்ன நன்மைகள்
தீமைகள் எங்களுக்கு கிடைத்தது என்றதையும் முன்னிட்டு அதற்கும் ஒரு புத்தகம்
வெளியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
</p><p>
வருகிற 30ஆம் திகதி உங்கள் அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.
காணாமல் போன உறவுகள் உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உறவுகள். 17000 உறவுகள் 8 மாவட்டத்திலும் இந்த காணாமல்போய் உள்ளனர். அவர்களின் அம்மாக்களும்
மரணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த முறை இந்த மகாநாட்டுக்கு
அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம். </p><p>ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னெடுத்து
வருகின்றோம். இந்த முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னிட்டு தான் இந்த
மாநாட்டை செய்கிறோம்.

இந்த முறையாவது இந்த சர்வதேச உலகம் கண்ணை திறந்து எங்களுக்கு வலிசுமந்த
அம்மாக்களுக்கு கண்ணீரோடு இருக்கிற எங்கள் உறவுகளுக்கு ஒரு பதில் தருவீர்கள்
என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் இந்த மகாநாட்டை செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் தொடரும் போலி வாக்குறுதிகள் - ஏமாந்து விட்டார்களா தமிழ் மக்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/false-promises-continue-under-anura-s-rule-1787565468"></link>
            <id>https://tamilwin.com/article/false-promises-continue-under-anura-s-rule-1787565468</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து
வருகின்றார்.
</p><p>
எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுடன் வரப்போகும்
ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு தொடர்பான பொதுசன வாக்கெடுப்புக்கு எதிராக
அனைத்து அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய
மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.
</p><p>
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு
துறைநீலாவணை பிரதேசத்தில் நேற்று(23.08.2026) மாலை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

போலி வாக்குறுதிகள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

“பட்டிருப்பு தொகுதி என்றால் அது ஒரு தமிழ் தொகுதி. இங்கு தேசிய கட்சிகளோ அல்லது மாற்றுக் கட்சிகளோ ஆசனங்களைப் பெற முடியாது. துறைநீலாவணை, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற பகுதிகளில் தமிழ் தேசிய உணர்வுடன், தமிழர்கள் என்ற ஒரு திமிருடன் இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87f0c0db-19f0-4bc7-bad4-3c61b5247f12/26-6a8c163eaa04f.webp' /></p><p>
</p><p>
அந்த உணர்வையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, எங்களுடைய வாக்குகளைச் சூறையாடி, தங்களுடைய சுயலாபங்களுக்காக அந்த வாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
தேர்தல் காலங்களில் இங்கு வந்து போராடினோம், மாவீரர்களை இழந்திருக்கிறோம் என்று கூறி எங்கள் மக்களை நம்ப வைத்து வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்றனர். </p><p>பின்னர் நாடாளுமன்றம் மற்றும் பிரதேச சபைகளில் பிரதிநிதித்துவத்தைப் பெற்று அதிகாரம் கைக்கு கிடைத்ததும், அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்கு யாரும் வருவதில்லை.</p><h2>

76 வருடங்களாக தொடரும் அடக்குமுறை</h2><p>
இதுதான் இன்று வடக்கு, கிழக்கில் காணப்படும் ஒரு துர்ப்பாக்கியமான நிலை. தமிழர்கள் நம்பி வாக்களித்த, தமிழர்களுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய இந்த மண்ணின் தரப்புகள், தமிழர்களுடைய விவகாரங்களைக் கையாளாமல், தங்களுடைய சொந்த நலனுக்காகவும் அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e227e1b0-84bf-431d-a81d-f99cb698d885/26-6a8c163f78f77.webp' /></p><p>

எமது மக்களின் தியாகங்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கும் கிழக்கில் எந்தவொரு தரப்பும் இல்லை.
</p><p>
இந்த மண்ணில் கடந்த 76 வருடங்களாக மிகப்பெரிய இன அடக்குமுறைக்குள் வாழ்ந்து வருகின்றோம். சிங்களப் பேரினவாதம் எங்களை அடக்கி ஒடுக்கி வருகின்றது” என்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் பரபரப்பை ஏற்படுத்திய கைக்குண்டு - சிசிடிவியில் சிக்கிய சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-suspects-in-borella-grenade-incident-1787564505"></link>
            <id>https://tamilwin.com/article/four-suspects-in-borella-grenade-incident-1787564505</id>
            <summary type="text">பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>டுபாயில் கைது செய்யப்பட்ட ‘வனாத்தே சத்து’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகா தட்சிண கப்புகே என்ற ராணாவிற்கு சொந்தமான வீட்டின் மீதே (23) நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>எனினும், வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மோட்டார் சைக்கிள்&nbsp;கண்டெடுப்பு</h2><p>சந்தேகநபர் மோட்டார் சைசைக்கிளில் பிரவேசித்து கைக்குண்டை வீசிச் செல்லும் காட்சி அருகிலிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e829b5-4d5e-45ac-a1e3-441f65b5e5d9/26-6a8c158f77f4f.webp' /></p><p>இதற்கமைய, குண்டுத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததற்காக பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை&nbsp;</h2><p>

குண்டுத் தாக்குதலை நடத்தப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொட்டிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cb2e7b3-1060-4033-b760-856051275432/26-6a8c15902af2d.webp' /></p><p>மோட்டார் சைக்கிளின் பதிவு எண் சிசிடிவி கமராவில் தெரியவந்ததையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>

கைது செய்யப்பட்டவர்களில், மோட்டார் சைக்கிளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர், அதை அடகு வைத்ததாக கூறப்படும் அவரது சகோதரர், மற்றும் அடகு வாங்கியதாக கூறப்படும் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் அடங்குவதாக கூறப்படுகின்றது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/inhdnMV3aNw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-24T09:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருளுக்காக கோடிக்கணக்கில் செலவிட்ட முன்னாள் சபாநாயகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-of-sri-lanka-national-audit-office-1787564883"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-of-sri-lanka-national-audit-office-1787564883</id>
            <summary type="text">மகிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராகப் பதவி வகித்த 9ஆவது நாடாளுமன்றத்தின் 2023 மற்றும் 2024 ஆகிய இறுதி இரண்டு ஆண்டுகளில் வரம்பற்ற முறையில் எரிபொருளை பயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராகப் பதவி வகித்த 9ஆவது நாடாளுமன்றத்தின் 2023 மற்றும் 2024 ஆகிய இறுதி இரண்டு ஆண்டுகளில் வரம்பற்ற முறையில் எரிபொருளை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளில் சபாநாயகரால் சராசரியாக மாதந்தோறும் முறையே 3,994 லீட்டர் மற்றும் 6,122 லீட்டர் வரை எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p> இந்த எரிபொருள் பயன்பாட்டு அதிகரிப்பானது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 66 சதவீதம் மற்றும் 155 என்றளவில் பாரிய அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>2023-2024 காலப்பகுதியில் பாவிக்கப்பட்ட எரிபொருள்</h2><p>2023 ஆம் ஆண்டில் சபாநாயகரின் எரிபொருளுக்காக வருடத்திற்கு ரூ. 19,373,866 செலவிடப்பட்டுள்ளது.</p><p> 2024 ஆம் ஆண்டில் ரூ. 26,045,103 செலவிடப்பட்டுள்ளது. 
ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது கணிசமான அளவு அதிகரிப்பாகும.</p><p>இந்த கணக்காய்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 9-வது நாடாளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகருக்கு ஒதுக்கப்பட்ட 3 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான எரிபொருளுக்கு மேலதிகமாக அவரது தனிப்பட்ட சொகுசு காரிற்காக ரூ. 8,545,032 பெறுமதியான 21,299 லீட்டர் எரிபொருள் பெறப்பட்டுள்ளது. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f380d44-ccf0-4a31-9319-69a71b1f36d6/26-6a8c1355d44bd.webp' /></p><p>2024 ஆம் ஆண்டில் 2 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,515 லீட்டர் எரிபொருள் அதிகமாகப் பெறப்பட்டுள்ளது.</p><p> 
2022 மற்றும் 2024 இற்கு இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ரூ. 6,071,690 பெறுமதியான 15,063 லீட்டர் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார். </p><p>இதன் வருடாந்த சராசரி 5,021 லீட்டர்களாகும். தற்போது அரச சேவையில் அதிகபட்ச எரிபொருள் நுகர்வைக் கொண்ட அமைச்சின் செயலாளரின் பதவியைக் கருத்திற்கொள்ளும்போது இது சுமார் 2,300 லீட்டர் மேலதிகப் பயன்பாடாகும்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T09:57:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வான்வழி சரக்குப் போக்குவரத்து செயல்முறை! அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/digital-initiative-accelerate-air-cargo-transport-1787559688"></link>
            <id>https://tamilwin.com/article/digital-initiative-accelerate-air-cargo-transport-1787559688</id>
            <summary type="text">இலங்கையில் வான்வழி சரக்குப் போக்குவரத்து செயல்முறையை மேலும் திறமையானதாகவும், வேகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டு வான்வழி சரக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வான்வழி சரக்குப் போக்குவரத்து செயல்முறையை மேலும் திறமையானதாகவும், வேகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டு வான்வழி சரக்கு சமூக அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த முயற்சிக்கு, பலதரப்பு பங்குதாரர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>இதில் விமான நிலையங்கள் மற்றும் வான்வழி சேவைகள் நிறுவனம், இலங்கை சுங்கம், இலங்கை முதலீட்டு சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களும் பங்குதாரர்களும் அடங்குவர்.</p><h2>ஆரம்ப முயற்சி</h2><p>
</p><p>
2023ஆம் ஆண்டிலும் இந்த அமைப்பை அறிமுகப்படுத்த ஒரு ஆரம்ப முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையில் போதுமான ஒருங்கிணைப்பையும் உடன்பாட்டையும் ஏற்படுத்த இயலாததால், அதனை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2e5442d-f3b8-442b-85fe-8896cb9c239c/26-6a8c0c67f323b.webp' /></p><p>
</p><p>
புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்ட பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒரே தளத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் இந்த முயற்சி முறையாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
வான்வழி சரக்கு சமூக அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், தொழில்நுட்பத் தேவைகள் மற்றும் வணிகத் தேவைகளை மதிப்பிடுவதற்காக ஒரு சாத்தியக்கூறு ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.</p><h2>சிறப்பு ஆய்வுக் கூட்டம்</h2><p>
</p><p>
இதன் முன்னேற்றம் குறித்த ஒரு சிறப்பு ஆய்வுக் கூட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்குவின் தலைமையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd2b61e0-0754-4d93-a739-f752edf38076/26-6a8c0c68c4800.webp' /></p><p>
</p><p>
இந்த அமைப்பைச் செயல்படுத்துவது, நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை விரைவுபடுத்தி, விமான சரக்கு அனுமதி வழங்கும் செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களையும் தேவையற்ற ஆவணப் பணிகளையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இது இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்க உதவுவதோடு, விமான சரக்குத் துறையின் செயல்திறனை அதிகரித்து, நாட்டில் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கும் என்றும் அமைச்சு குறிப்பிடுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T09:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திம்பு பேச்சுவார்த்தையின் போது அழிக்கப்பட்ட தமிழ் பகுதி கி்ராமம் - திரைப்படப் பாணியில் இராணுத்தினர் நடத்திய வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/story-of-village-destroyed-by-military-in-ampara-1787562551"></link>
            <id>https://tamilwin.com/article/story-of-village-destroyed-by-military-in-ampara-1787562551</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால்
அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ
போராட்ட வரலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால்
அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ
போராட்ட வரலாற்றில் முதல் 1985 ஒகஸ்ட் 24ஆம் திகதி விடுதலை
இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இடையிலான சமாதான 
பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40
பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே அழிக்கப்பட்டு வெளி உலகிற்கு வெளிவராது போன வரிசையிலும், தமிழர் இன அழிப்பின் ஆரம்ப புள்ளி வயலூர் கிராமம். </p><p>என்பதுடன் இந்த இனஅழிப்பின் 41 வருட நினைவு தினம் 24.08.2006 திங்கட்கிழமை ஆகும்.

திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள சாகமத்திலிருந்து தெற்கு பக்கமாக 8
மையில் தொலைவில் வயலூர் கிராமம் 1972ஆம் ஆண்டு காணியற்ற வறிய மக்கள் 200
குடும்பங்களை குடியமர்த்தப்பட்ட ஒரு கொலனியாக இருந்தது.
</p><p>
அரசாங்கம் அக்கால பகுதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மரவள்ளிக்
கிழங்கும், குரக்கனும் சாப்பிடுமாறும், உணவு விடுதிகளில் சோறு சமைக்கக் கூடாது என கேட்டுக் கொண்ட காலப்பகுதியில் இக்கிராமம் உணவு மற்றும் ஏனைய பயிர்ச் செய்கை அபிவிருத்திக்காக அதிமுக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்டது.</p><h2>



உணவு பஞ்சம் வந்தும் இடம்பெயராத மக்கள்</h2><p>


இந்த கிராமத்தை அடைவதற்கு சாகமத்திலிருந்து காட்டு வழிபாதை மட்டும் உள்ளதுடன்
நான்கு சக்கர உழவு இந்திரங்கள் மாட்டுவண்டிகள் என்பவை விவசாயத்துக்கான
உள்ளீடு மற்றும் உற்பத்திகளை ஏற்றிச் செல்வதற்கு உபயோகிக்கப்பட்டன, அதேவேளை
ஏழைகள் வழமையாக இந்த தூரத்தை நடந்து சென்று வந்தனர்.</p><p>

இவர்கள் தடிகள், களிமண், ஓலை புல்லுகளினால் தமது இருப்பிடங்களை அமைத்து
குடியமர்தப்பட்ட இவர்களுக்கு சுத்தமான குடிநீர், கடைகள் என்பன இருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a16814b-45e2-4f93-88c3-d78bac448629/26-6a8c0c1a5204c.webp' /></p><p>
</p><p>

இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மலேரியா மற்றும் நீரிலான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டதுடன், தமது
வைத்திய சேவையை பூர்த்தி செய்ய 10 மையிலுக்கு அப்பால் அக்கரைப்பற்றுக்கு செல்ல வேண்டியிருந்தது.</p><p>

இருந்தபோதும் தமது விவசாயமான சோளம், குரக்கன், மரவள்ளி போன்ற பயிர்களை தொடர்ந்து பயிர் செய்துவந்ததுடன், அவர்களது ஆடுகள், கோழிகளை நரிகள், சிறுத்தைகள்,
திருடிச் சென்ற அதேவேளை, காட்டுப்பன்றிகள் பயிர்களையும் நாசம் செய்தன.</p><p>

 ஆயினும் அவர்கள் இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.
</p><h2>
அடிப்படை வசதிகளற்ற கிராமம்</h2><p>

இத்தகைய ஒரு சமூகம் தான் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டது, இந்த யுத்த
நிறுத்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜயவர்தனா தலைமையிலான
அரசாங்க குழுவும் (ரி.யு.எல்.எப்) தமிழர் விடுதலைக் கூட்டணியிலான விடுதலை இயக்கங்களான தமிழ்ழீழ விடுதலைப்புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ்.
ரெலோ ஆகிய 5 இயக்கங்களுக்கும் இடையிலான திம்புவில் பேச்சுவார்த்தை நடந்து
கொண்டிருந்த சமயம், இராணுவப் படைகள் வகை தொகையின்றி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5bf4a7-5b85-412c-80a1-890bfefd4b12/26-6a8c0c1b57472.webp' /></p><p>
</p><p>
1985ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை வேளை வயலூர் மக்கள் மீது தாக்குதல்
ஆரம்பிக்கப்பட்டது.

 இந்த தாக்குதலில் 40 பேர் படுகொலை செய்யப்பட்டன, இவ்வயலூரின்
தாக்குதலில் விதவையாக்கப்பட்ட பெயர் குறிப்பிடாத 5 பிள்ளைகளுக்கு தாயாரானவர், “ இராணுவத்தினரின் வெறியாட்டத்தில் எனது கணவர் கொல்லப்பட்டார்” என்றார்.</p><h2> 

இராணுவத்தினரின் அட்டூழியங்கள்</h2><p>
அவர் மேலும் கூறுகையில், </p><p>

“நாங்கள் வயலூரில் கிழங்கு, மாப்பொருட்கள், மரக்கறி வகைகள். பழமரங்கள் செய்கைபண்ணி வாழ்ந்துவந்தோம், ஆனால் எங்களுக்கு சுத்தமான குடிநீர்,கடைகள், பாடசாலை, வைத்தியசாலை இருக்கவில்லை.

1985.08.24ஆம் திகதி அதிகாலை 6 மணியளவில், நான் அடுக்களையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தேன். </p><p>திடீரென ஒரு தொகை
மனிதர்கள் துப்பாகியுடன் எமது குடிசைகளை சுற்றி நின்று கொண்டிருப்பதை அவதானித்தேன் .

நான் பீதியடைந்து வந்தவர்களைக் கண்டு மிகப்பயத்தில் நடுங்கினேன், நான் பதற்றப்பட்டிருப்பதை கண்டுகொண்ட அவர்கள் என்னை நெருங்கி சிங்கள மொழியில் கேள்விக்கு
மேல் கேள்வி கேட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01882e0d-589e-4be7-8eda-c1ab41e7591f/26-6a8c0c1c0a98f.webp' /></p><p>
</p><p>
எனக்கு அவை விளங்கவில்லை, அப்பொழுது எனது கணவர் வந்ததால்
நட்புணர்வு சைகைகளை காட்டி நாங்கள் தண்ணீர் கொண்டுவரும் வாளியை எடுத்துக்
கொண்டு தங்களுடன் வருமாறு கேட்டனர்.</p><h2> 

காட்டு வழிப்பாதையில் சென்ற மக்கள்</h2><p>
எனது கணவரும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்.
</p><p>
குடிசைகளுக்குள் புகுந்து அங்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் யாவரையும்
வெளியில் கொண்டதுடன் வயோதிபர் நோயாளிகள் என்போரை அப்பால் செல்லுமாறு கூறினர்.
</p><p>
பின் உடல் ஆரோக்கியமான இளைஞர்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் சென்றனர் இதில் பெண்களும் அடங்குவர்.

அங்கிருந்து கிழக்கு திசையாகக் காட்டுப்பாதை வழியாக நாங்கள் நடந்தோம்.</p><p> இராணுவச் சிப்பாய் ஆண்களை அழைத்து தமது காலை ஆகாரத்திற்கு முகம் கழுவுவதற்கு
நீர் கொண்டுவருமாறு கேட்டனர்.

அப்பொழுது காலை 8 மணியிருக்கும் அவ்வாறே ஆண்கள்
தண்ணீர் கொண்டு வந்ததும் சிப்பாய்கள் தமது காலை ஆகாரத்தை சாப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/040eacf0-7c00-4513-905f-ca5c9990cf80/26-6a8c0c1cb2d61.webp' /></p><p>
</p><p>
 ஆனால் நாங்கள் பட்டினியாக இருந்தோம் ஒரு கோப்பை தேநீர் கூட கிடைக்கவில்லை, அவர்கள்
தமது காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டதும் எல்லோரையும் தம்மோடு வருமாறு கூறினர், ஆனால் எங்கே என்று கூறவில்லை.</p><p>
அவர்கள். கட்டளைக்கு இணங்கி நாங்கள் காட்டுவழிபாதை ஊடாக சென்றோம், அப்பொழுது
மற்றுமொரு இராணவ சிப்பாய்க் குழு ஒன்றை சந்தித்தோம்.

அந்த குழுவிற்கு
தலைமை தாங்கிய உத்தியோகத்தர் ஆண்களுடன் பெண்களை அழைத்து வந்ததை பிழையெனக்
கண்டுகொண்டார்.</p><p>

 இரண்டாது குழு தலைவர் பெண்களிடம் வந்து தமிழிலே பேசினார் அவர் கூறும்போது, “ நீங்கள் ஆண்களுடன் வரவேண்டியதில்லை இராணுவ வீர்கள் தமக்கு
அறிமுகமற்ற பகுதியில் இருக்கின்றனர். எங்களுக்கு ஆண்கள் தேவை அந்த மரத்தின் கீழ் சென்று மதியம் வரை காத்திருங்கள், ஆண்கள் திரும்பிவருவார்கள்” என்றார்.
</p><h2>
கிராமத்து ஆண்களுக்காக காத்திருந்த பெண்கள்</h2><p>
நாங்கள் அந்த மரத்தின் கீழ் காத்திருந்தோம் அவர்கள் குமரன் குளத் திசையில்
சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஆண்கள் திரும்பிவரவில்லை சூரியகதிர் தலையை
சுட்டெரிந்தன எமது ஆண்கள் திரும்பிவரும் அறிகுறி எதுவும் தென்படவில்லை.</p><p>
வீட்டில் இருக்கும் எமது குழந்தைகளுக்காகவும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எமது ஆண்களுக்காகவும் உணவு சமைக்க வேண்டியிருந்தது.
</p><p>
 எங்கள்
குடிசைகளுக்கு திரும்பி வந்து உணவு சமைப்பதில் ஈடுபட்டோம் அப்பொழுது கொலை செய்தி வந்தது

இந்த செய்தியை கொண்டுவந்தவர் உயிர் தப்பி வந்தவர் ஏனையவர்கள் குமரன்
குளப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டு கிடக்கின்றனர் என கூறினார்.</p><p>இவ்வாறு நடந்த செய்தியை கேட்டு நாங்கள் அனைவரும் பாதுகாப்புக்காக உடுத்த உடையுடன்
நடந்து சென்று திருக்கோவில், பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் உள்ள
உறவினர்களிடம் தஞ்சம் புகுந்தோம்.


அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்களை 
வயோதிபர்கள் அந்த இடத்துக்கு சென்று சடலங்களை பூர்விக கிராமத்துக்கு
கொண்டுவந்து உரிய மரணச்சடங்குடன் புதைக்கப்பட்டனர்.</p><p> 

வயலூரில் எங்களின் சொத்துக்கள் யாவற்றையும் இழந்தோம்.

கே. வேலுப்பிள்ளை என்பவர் தனது 2 மகன்களான குழந்தைவேல் ஜெயகாந்தன்,(22)
நாகலிங்கம்(22) மருமகன் சின்னவன் கந்தசாமி(30) தனது மூத்த சகோதரன் தம்பிப்பிள்ளை மாமா ஆன ஏரம்பு என்பவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
</p><h2>

உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்தவர்கள் சொன்ன செய்தி</h2><p>

படுகொலையின் போது உயிர் தப்பிய வர்த்தகரான வைரமுத்து கனகசபை பின்வருமாறு கூறினார்,
</p><p>
“அடிக்கடி வியாபார நிமித்தம் வயலூருக்குச் செல்லும் நான் 23ஆம் திகதி பிற்பகல் 2 மாடுகள் பூட்டிய மாட்டுவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு
திருக்கோவிலில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தைக்காக பொருட்களை கொண்டுவர
வயலூருக்கு போயிருந்தேன்.
</p><p>
அன்றிரவு மரவள்ளி கிழங்குகளை பிடுங்குவதற்காக அங்கு
தங்கிருந்தேன் 24ஆம் திகதி காலை அப்பகுதியை விட்டு புறப்படும் போது அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் இராணுவம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.

 நான் விவசாயிகளுடன் ஒரு குடிசையில் இருந்தேன். </p><p>நான் கைது செய்யப்பட்டாலும், பின்
விடுவிக்கப்பட்ட போது நான் எடுத்துச் சென்ற பணமும் சைக்கிளும் காணாமல் போயிருந்தது.

இராணுவத்தினர் என்னை செல்லுமாறு சொன்னதால் நான் சென்றேன் ஆனால் குமரன் குளப்பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடத்தில் மறைந்திருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27445167-eb72-4f95-9994-6909c9fa8517/26-6a8c0c1d64498.webp' /></p><p>

 சிறிது நேரத்தில் துப்பாகி வேட்டுக்கள் கேட்டன பின் இராணுவத்தினர் தமது வாகனத்தில்
சென்ற பின்பு நான் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபொழுது அவர்கள் சுடப்பட்டு இறந்து கிடந்தார்கள்.</p><p>

 ஆயினும் இரு விவசாயிகள் காயத்துடன் கிடந்தனர், ஒருவருக்கு
வாய்க்குள் துப்பாகி வைத்து வெடிவைக்ப்பட்டுள்ளது. இவர் இறக்கவில்லை மற்றவரின்
பெயர் நடராஜா நான் இந்த செய்தியை வயலூருக்கு சென்று கூறினேன்” என்றார்.</p><h2> 


40க்கும் மேற்ப்பட்டோர் படுகொலை</h2><p>

இந்த சம்பவத்தின் போது, 40 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக கனகசபை உறுதிப்படுத்தினார்.

வயலூர் கிராம விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டு 23 வருடங்களின் பின்பு 2008ஆம்
ஆண்டு தான் முதல் முதலாக இப்படுகொலை பற்றி வெளியுலகிக்கு கொண்டு வர முடிந்தது.</p><p>


இருந்தபோதும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரசுடன் முதல் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தமிழ் மக்களை சிங்கள
பேரினவாத அரசின் படையினரால் பௌத்த கோட்பாடு அடிப்படையில் வயலூர் கிராமம்
தமிழ் இன அழிப்பின் ஆரம்ப மையப்புள்ளி என்பதுடன், இது ஒரு கிராமத்தையே அழித்த
கறைபடியாத படுகொலையாகும். 

இந்த கிராமம் காடுகளாகி விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c7b68aa-025f-432c-ae9a-a6806b476eba/26-6a8c0c1e1692c.webp' /></p><p> </p><p>தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமாதான பேச்சுவார்த்தையின் போது
முதல் முதல் நிகழ்ந்த ஒரு படுகொலை என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான
படுகொலைகள் மூலம் பேரினவாத அரசு தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் பொத்துவில்
தொடக்கம் நீலாவணை வரை தங்கவேலாயுதபுரம், பெத்துவில், குண்டுமடு, அக்கரைப்பற்று,
திராய்க்கேணி, வீரமுனை, சென்றல்காம், மல்வத்தை, அம்பாறை நகர், காரைதீவு,
கல்முனை, நிந்தவூர் போன்ற தமிழ் கிராமங்கள் இராணுவத்தினராவும்
ஊர்காவல்படையினராலும் சுற்றிவளைத்து சிறுவர், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள்
என நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை
செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்களது வாழ்விடங்கள் தீ வைத்து எரித்து உடைத்து அழித்தனர்.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன.
</p><h2>
மனித உரிமைக்காக உயிரை கொடுத்தவர்கள்</h2><p>

இருந்தபோதும் அந்த அழிக்கப்பட்ட வரலாறுகள் வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை
இதனால் தற்போதைய சமூதாயத்துக்கு தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை
மீறல்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
 எனவே தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள்
மனித உரிமை மீறல்கள் அந்தந்த காலத்தில் அதற்கான நினைவேந்தல்களை செய்யவேண்டும்
என்பது தமிழ்களின் கடமையாகும்.</p><p>

இருந்த போதும். தமிழ் இன அழிப்பின் ஆரம்ப புள்ளியாக இந்த மாவட்டத்தில்
ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்புக்களை பறைசாற்றி
நிற்கின்றது. என்பதை அனைவரும் உணர்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும்.</p>]]></content>
            <updated>2026-08-24T09:18:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூகலிப்டஸ் மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-died-after-falling-from-a-tree-1787561002"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-died-after-falling-from-a-tree-1787561002</id>
            <summary type="text">யூகலிப்டஸ் மரத்தில் ஏறி அதனைத் துண்டுகளாக வெட்ட
முயன்றபோது மரத்திலிருந்து கீழே ​​தவறி விழுந்து
பலத்த காயமடைந்த ஒருவர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யூகலிப்டஸ் மரத்தில் ஏறி அதனைத் துண்டுகளாக வெட்ட
முயன்றபோது மரத்திலிருந்து கீழே ​​தவறி விழுந்து
பலத்த காயமடைந்த ஒருவர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார் என பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையின்
மாவட்ட மருத்துவ அதிகாரி திரு. ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
</p><p>
மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர், ஹகுரங்கெத்த, ஹெவஹெட்டவைச் சேர்ந்த 52
வயதான சரத் வீரசேகர ஆவார்.
</p><h2>சம்பவம் குறித்து விசாரணை</h2><p>
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் ஹெல்பாட தோட்டதில் கீழ் பகுதியில்
யூகலிப்டஸ் மரங்களை வெட்டுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தக்காரரின் கீழ்
உயிரிழந்தவர் பணிபுரிந்து வந்து உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08f400c7-20e9-4d49-a271-5a9fe9efc23c/26-6a8c0b4818715.webp' /></p><p>சுமார் 35 அடி உயரமுள்ள யூகலிப்டஸ்
மரத்தில் ஏறி, கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது தவறி அவர் கீழே விழுந்து பலத்த
காயமடைந்தவரை மீட்டு பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
</p><p>
நோர்வூட் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T09:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவுகளில் முறைகேடு - பிரதேச செயலகத்திற்கு முன்பு கூடிய பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irregularities-ashwesuma-payment-public-complaint-1787559367"></link>
            <id>https://tamilwin.com/article/irregularities-ashwesuma-payment-public-complaint-1787559367</id>
            <summary type="text">நோர்வூட் பகுதியில் அஸ்வெசும கொடுப்பனவுகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும்,&amp;nbsp; அஸ்வெசும தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பகுதியில் அஸ்வெசும கொடுப்பனவுகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும்,&nbsp; அஸ்வெசும தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் பெருமளவான
மக்கள் இன்று(24 )பிரதேச செயலகத்திற்கு முன்பு கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த பலருக்கு இதுவரை நிதி கிடைக்காமை தொடர்பில் விசாரிப்பதற்காக பிரதேச
செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.</p><h2>அஸ்வெசும நிதி</h2><p>
</p><p>
இதன் காரணமாக, காலை முதல் நோர்வூட் பிரதேச செயலக வளாகத்தில் நீண்ட வரிசையில்
மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்ததுதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தங்களது பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சிலர், அஸ்வெசும நிதியை
பெற்றுக்கொள்வதற்காக தாங்கள் பல தடவைகள் பிரதேச செயலகத்திற்கு வருகை தர
வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b195f51-56f7-4890-92c5-a008c062e79e/26-6a8c02084fafc.webp' /></p><p>

மேலும், அதிகாரிகள் தங்களது வீடுகளுக்கு நேரடியாக வந்து நிலைமைகளை
பார்வையிடவுள்ளதாகவும், அந்த ஆய்வின் பின்னரே அஸ்வெசும நிதி வழங்குவது
தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்
மக்கள் கூறுகின்றனர்.</p><p>

சிலர் தங்களது விண்ணப்பங்கள் தொடர்பில் தெளிவான தகவல்களை பெற்றுக்கொள்ள
முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனால் பல தடவைகள் பிரதேச செயலகத்திற்கு வர
வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.</p><h2>மக்களின் முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
அஸ்வெசும நிதி என்பது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு
வழங்கப்படும் நலன்புரி உதவியாகும். எனவே, தகுதியுடையவர்களுக்கு உரிய
முறையில் நிதி கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf499264-930b-44a2-824a-bddc0b0e6f1e/26-6a8c0207823d2.webp' /></p><p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றதாக
கூறப்படும் நிலையில், தற்போது பெருமளவான மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு
தீர்வு கோரி பிரதேச செயலகத்தை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு,
தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் அஸ்வெசும நிதி வெளிப்படையான முறையில்
வழங்கப்பட வேண்டும் என்பதே தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய
கோரிக்கையாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T08:57:42+00:00</updated>
        </entry>
    </feed>
