<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-14T10:26:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வயோதிபப் பெண் கட்டையால் அடித்து படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-woman-death-with-a-piece-of-wood-1789380332"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-woman-death-with-a-piece-of-wood-1789380332</id>
            <summary type="text">அச்சுவேலி- புத்தூர் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் கதவுக்கு
வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அச்சுவேலி- புத்தூர் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் கதவுக்கு
வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் மேற்கு சிவன் கோவில் வீதியிலுள்ள 74 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
வயோதிப தாயும் அவரது மகனும் வாழ்ந்து வந்த நிலையில் மகனின் மகனால் குறித்த
கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9ade597-8f50-43a7-8feb-f0f91037e242/26-6aa7ca49881df.webp' /></p><p>

குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் ஒப்பந்த முறைகேடு - சந்தேக நபராக அறிவிக்கப்பட்டார் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-is-questionable-1789379651"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-is-questionable-1789379651</id>
            <summary type="text">ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் பணமோசடி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் பணமோசடி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, குறித்த சம்பவத்தில் இலஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதியிடம் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-11th-national-scout-jamboree-1789379189"></link>
            <id>https://tamilwin.com/article/anura-11th-national-scout-jamboree-1789379189</id>
            <summary type="text">இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான&amp;nbsp; அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான&nbsp; அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு கையளிக்கப்பட்டது.
</p><p>இந்நிகழ்வின் போது, உத்தியோகபூர்வ இலச்சினையைக் கொண்ட நினைவுச் சின்னம், தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ்
நாயக்கக்காரவால் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
</p><p>ஹோமாகம், தியகமவில் 2027ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டது.</p><h2>அழைப்பு&nbsp;</h2><p> </p><p>இந்த ஜம்போரியுடன் இணைந்து, இலங்கை சாரணர் இயக்கத்தின் 115ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இடம்பெறவுள்ளது.
</p><p>இந்த தேசிய ஜம்போரியில் சுமார் 10,000 உள்ளூர் சாரணர்களும், வெளிநாடுகளிலிருந்து சுமார் 3,000 சாரணர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86da8f9e-f3b6-4ca9-a6e4-377d37cfbff9/26-6aa7c455c19de.webp' /></p><p>
</p><p>இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனாதிபதியை இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
</p><p>இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொசான கமகே, இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதித் தலைமை ஆணையாளர் சட்டத்தரணி கபில கல்யாண பெரேரா, மன்றக் குழுவின் தலைவர் பொறியியலாளர் கமலநாத் ஜினதாச, ஜம்போரியின் இணை ஏற்பாட்டாளர் ஆணையாளர் பொறியியலாளர் அமில் அபிசுந்தர மற்றும் பல சிரேஷ்ட சாரணர் ஆணையாளர்களும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T09:54:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் 20 மாவட்டங்களுக்கு இரவு 11:30 மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/department-of-meteorology-issues-red-warning-1789378096"></link>
            <id>https://tamilwin.com/article/department-of-meteorology-issues-red-warning-1789378096</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 மாவட்டங்களுக்கு தீவிர மின்னல்
அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் 5 ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 மாவட்டங்களுக்கு தீவிர மின்னல்
அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் மேலும் 5 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலத்த காற்றும் வீசக்கூடும்&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36e9a336-5ce1-4eed-a990-b1bb5b3a23ac/26-6aa7c24dd7000.webp' /></p><p>
</p><p>
மேலும், வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென்
மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில்
இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில வேளைகளில் தற்காலிகமாக பலத்த
காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T09:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் - விசாரணையில் சிக்கிய இருவர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-hand-grenade-attack-1789378383"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-hand-grenade-attack-1789378383</id>
            <summary type="text">தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதல் விவகாரத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதல் விவகாரத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான விசாரணைகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று(14.09.2026) கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>

சந்தேக நபர்கள் இருவர் கைது</h2><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95b6c55d-cbbf-4cbd-be5c-97d118a8e5ed/26-6aa7bf8c3b5a0.webp' /></p><p> 

கடந்த 11ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபரால் நடத்தப்பட்ட இந்த கையெறி குண்டுத் தாக்குதலில், அந்த வீட்டில் வசித்து வந்த 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
</p><p>
படுகாயமடைந்த குழந்தைகளின் 55 வயது தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T09:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்..! அரசு மீது பொய்ப் பிரசாரங்கள் செய்பவர்களுக்கு அநுர பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-hits-back-at-criticisms-1789377782"></link>
            <id>https://tamilwin.com/article/president-hits-back-at-criticisms-1789377782</id>
            <summary type="text">தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் படிப்படியாக
நிறைவேற்றியே தீருவோம் என்றும், தம்மை நம்பி வாக்களித்த மக்களை ஒருபோதும்
கைவிடமாட்டோம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் படிப்படியாக
நிறைவேற்றியே தீருவோம் என்றும், தம்மை நம்பி வாக்களித்த மக்களை ஒருபோதும்
கைவிடமாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

அரசு மீது பொய்ப் பிரசாரங்களை முன்வைப்பதன் மூலம் மீண்டும் ஆட்சியைக்
கைப்பற்றிவிடலாம் என ஊழல்வாதிகளான எதிர்க்கட்சியினர் கனவு காண்கின்றனர்
என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் நேற்று(14.09.2026) நடைபெற்ற “நமது அரசு
ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி” மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு சிறப்பு
உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><h2>2027ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டம்</h2><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மெதுமெதுகொண்டு
மீண்டு வரும் நிலையில்தான் நாம் தற்போதைய அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச்
செல்கின்றோம். தற்போது நாம் பொருளாதார ரீதியில் ஓரளவு ஸ்திரமடைந்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dc76c7f-3151-4b6b-8f75-965150860456/26-6aa7bd443bb28.webp' /></p><p>
</p><p>இருப்பினும் முழுமையான பொருளாதார சுயாதீனத்தை இன்னும் நாம் அடையவில்லை.

அந்தப் பொருளாதார சுயாதீனத்தை விரைவில் அடைவதற்குரிய அனைத்து ஆக்கபூர்வமான
நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.</p><p>

இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத்துறையைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான
அத்தியாவசிய சேவை வழங்கலை மேலும் வினைத்திறனாக்குவதற்கும் எதிர்வரும்
ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>

குறிப்பாக, பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை
முற்றிலுமாக நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான
திட்டங்கள் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில்
முன்வைக்கப்படும் என்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b527678-ee3b-4cf2-aaaf-b211ea997616/26-6aa7bd4508f80.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T09:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் வயது அதிகரிப்பு குறித்த யோசனை! எதிராக வாக்களிக்கப்போவதாக தெரிவிக்கிறார் சிறீதரன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-for-the-kilinochchi-konavil-division-1789375191"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-for-the-kilinochchi-konavil-division-1789375191</id>
            <summary type="text">நீதிபதிகளின் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனை நாடாளுமன்றத்திற்கு வரும் போது அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர்&amp;nbsp;சிவஞானம் சிறீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனை நாடாளுமன்றத்திற்கு வரும் போது அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கிளிநொச்சி - கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (14.09.2026) பிற்பகல் நடைபெற்றது.
</p><p>
குறித்த கலந்துரையாடலில் வட்டாரபிரதேச சபை உறுப்பினர் ச.சிவயோகலக்சுமி
உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.</p><p>இதில் வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>நீதிபதிகளின் வயது அதிகரிப்பு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கிற நீதிபதிகளுடைய வயதை கூட்டுகிறார்கள். 62 வயதோடு இருக்கிற
நீதிபதியை 67 வயது வரைக்கும் கொண்டு வருகிறார்கள்.
</p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் - இரண்டு நீதிமன்றங்களுக்கும்
வருகின்ற நீதிபதிகளின் வயதை 62 வயதிலிருந்து 67 வயது வரைக்கும் கொண்டு வர
தீர்மானித்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f130b0de-d8dd-4f74-b2cb-bf6da8d690b2/26-6aa7bc1b8cb1a.webp' /></p><p>

இதற்கு பல எதிர்ப்புகள், பல இராஜதந்திரிகள் மத்தியிலும் இருக்கிறது. அதைவிட
வழக்கறிஞர்கள் சங்கமும் அதை கடுமையாக எதிர்க்கிறது.

எதிர்க்க எதிர்க்க நாடாளுமன்றத்திலே அது விவாதத்திற்கு வருகிறது. வருகின்ற 23
மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் அது விவாதத்திற்காக வருகிறது.</p><h2>வாக்களிப்பு</h2><p>
</p><p>
விவாதத்திற்கு வருகின்ற பொழுது, நாங்கள் அதனை எதிர்த்து வாக்களிப்பதாக
தீர்மானித்திருக்கிறோம். அந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை.

அப்படி என்றால், இலங்கையில் இருக்கிற அனைத்து ஊழியர்களுக்கும் 65 வயதாக
ஆக்குங்கள், பிரச்சினையில்லை. </p><p>ஆனால் அரசாங்கம் யாரை மட்டும் கொண்டு வர
முயற்சிக்கிறது என்றால் நீதிபதிகளை. தங்களுக்கு ஏற்ற நீதிபதிகளை நியமித்து,
தங்களுக்கு ஏற்ற தீர்ப்புகளை வழங்க முயற்சிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப் போவது நாங்கள்தான் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T09:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலரி மாளிகை வளாகத்தில் விழுந்து கிடந்த றக்பி வீரர் தாஜுதீன்! சிரந்தியால் மூடிமறைக்கப்பட்ட சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851"></link>
            <id>https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851</id>
            <summary type="text">அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த சம்பவத்தை விபத்தாக மாற்றுவதற்கு உதவி செய்தார் என்ற 
திடுக்கிடும் தகவலை புலனாய்வு ஆதரங்களை மேற்கோள் காட்டி இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் லண்டனில் அமைந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><h2>

</h2><p></p><h2>அநுர சேனாநாயக்க என்ன சொன்னார்</h2><p>2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க - மைத்திரிபால இருவருடைய நல்லாட்சியில் தாஜுதீனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு மேல் செல்வதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் இடம் கொடுக்கவில்லை.</p><p>

அண்மையில் இந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>

இதற்கமைய, மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அநுர சேனநாயக்க, தாஜுதீன் வழக்கில் வெலிக்கடை சிறைச்சாலையின் சிறப்புச் செல்லில் இருந்தபோது அவர் கூறியதே இந்த சம்பவமாகும்.
</p><p>
அநுர சேனநாயக்க அன்று காலை உடற்பயிற்சிக்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளை நிற காற்சட்டையும் காலணியும் அணிந்திருந்த வேளையில் “சிரந்தி மேடம்” அழைப்பதாக பொலிஸ் காவலர் ஒருவர் கூறினார்.
</p><p>
அநுர சேனநாயக்க தொலைபேசியை எடுத்தபோது “அநுர நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? விரைவில் வீட்டிற்கு வாருங்கள் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என சிரந்தி ராஜபக்ச கூறினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ecbb19f-52a9-4fb1-a4c3-7f8b02c1f5ab/26-6aa7a5cdaa625.webp' /></p><p>&nbsp;அநுர சேனநாயக்க அந்த ஆடையுடனேயே அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார். 

அங்கு சென்றபோது “ஒரு சம்பவம் நடந்துவிட்டது எமது பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்” என்று சிரந்தி கூறினார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது, ரக்பி வீரர் தாஜுதீன் படுகாயமடைந்து விழுந்து கிடந்தார். அநுர சேனநாயக்க தொட்டுப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.</p><p> 

“சிரந்தி மேடம் இந்த பையன் இறந்துவிட்டான்” என்று கூறியதும் “ஏதாவது செய்யுங்கள் அநுர” எனக் கூறினார். 

உடனடியாக அநுர சேனநாயக்க மேலும் சிலருடன் பேசி உடலை நாரஹேன்பிட்டியில் விபத்து நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு கொண்டு சென்று காரின் சாரதி ஆசனத்திற்குப் பக்கத்தில் (இடது பக்க ஆசனத்தில்) வைத்து சம்பவத்தைச் சித்தரித்துள்ளனர்.
</p><p>
நல்லாட்சியில் தாஜுதீன் கடுமையாக தாக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்றும், விபத்தில் நடந்த மரணம் இல்லை என்றும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>சி.ஐ.டி விசாரணை</h2><p>நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான ஐ.பி. சுமித்த சில்வாவை அழைத்து அநுர சேனநாயக்க இந்த சம்பவத்தை ஒரு வாகன விபத்தாக மாற்றி, கார் தீப்பற்றி எரிந்த காரணத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.</p><p> 



2015-2016 காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபயசேகர நடத்தப்பட்ட விசாரணையில் சுமித்த சில்வா கைது செய்யப்பட்டார்.
</p><p>
அப்போது அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் அநுர சேனநாயக்கவின் வழிகாட்டலிலேயே தான் இதைச் செய்ததாக நீதிவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். </p><p>ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், ஷானி அபயசேகரவும் அவரது குழுவினரும் தன்னைப் பயமுறுத்தியதாலேயே அவ்வாறு கூறியதாக சுமித்த சில்வா மாறுப்பட்ட கருத்தை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8663d16-78b4-4475-bc59-c3c9989329d4/26-6aa7a5ce5f7fc.webp' /></p><p>தற்போதைய நிலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும்போதும் சுமித்த சில்வா எவ்வாறு அவுஸ்திரேலியாவிற்குச் சென்றார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
</p><p>மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட மருத்துவ அதிகாரி ஜேம்ஸ் சமரகோன், அநுர சேனநாயக்க மற்றும் சம்பவ இடத்தை சுத்தம் செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். </p><p>இருப்பினும் தாஜுதீன் கொலைச் சம்பவத்தின் விசாரணைகள் இன்னும் முழுமை பெறவில்லை.</p><p>குறித்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டிருந்தவர்கள் மரணமடைந்துள்ள நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் தகவல்களின் படி மிகவும் பாரதூரமானதாக தோன்றுகிறது.</p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T09:13:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-revision-at-the-end-of-september-1789370189"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-revision-at-the-end-of-september-1789370189</id>
            <summary type="text">உலகச் சந்தையில் எரிபொருள் விலைகளின் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகச் சந்தையில் எரிபொருள் விலைகளின் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். </p><p>

எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில், இன்று(14.09.2026) பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>


அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் எரிபொருள் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.</p><p> 

இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்து செயல்படுவது ஒரு சவாலாக உள்ளது என பல தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.
</p><h2>
பெட்ரோலிய விலை திருத்தங்கள்</h2><p>
அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவு எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1ebd91-debb-4e94-867b-b9f1d1b2eaa3/26-6aa7b9f020dc0.webp' /></p><p> </p><p>

மேலும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கு பல தீர்வுகள் உள்ள நிலையில், 
கடந்த காலத்தைப் போலவே, தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது விலைகள் குறித்து ஒரு முடிவை எட்டுவது போன்ற பல்வேறு வழிமுறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. </p><p>

தனியார் நிறுவனங்கள் பல்வேறு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்தாலும், நுகர்வோரையும் கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும். </p><p>

 ஒவ்வொரு மாத இறுதியிலும் பெட்ரோலிய விலை திருத்தங்கள் செய்யப்படுவதால், தற்போதைய சூழ்நிலையையும் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு, இந்த மாத இறுதியிலும் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-14T09:10:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஷிரந்திக்கு அதிர்ச்சி - மற்றுமொரு மோசடி விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fcid-waiting-for-shiranthi-to-recover-1789353362"></link>
            <id>https://tamilwin.com/article/fcid-waiting-for-shiranthi-to-recover-1789353362</id>
            <summary type="text">தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அந்த நிதி முறைகேடு&amp;nbsp; தொடர்பிலான வழக்கு விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அந்த நிதி முறைகேடு&nbsp; தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய கணக்கிற்கு தலைமை தாங்குகின்றார்.</p><h2><b>

CT ஸ்கேன் இயந்திரம்</b></h2><p>கணக்கிற்கு வந்த நிதி, கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே வரவு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40a54e4f-31a2-4201-91e7-9ff8b73a9b6c/26-6aa76b8566580.webp' /></p><p>CT ஸ்கேனுக்காக நிதி திரட்டப்பட்ட போதிலும், ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது, சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைத்த ஸ்கேன் இயந்திரம் என்பது தெரியவந்துள்ளமையே இந்த விசாரணைக்கான அடிப்படை காரணமாகும். </p><p>

தேசிய சேமிப்பு வங்கியின் நிதி நன்கொடையாக சிரிலிய சவிய கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. </p><p>இது குறித்து வங்கி அதிகாரிகளிடமும், அப்போதைய பணிப்பாளர் சபையிடமும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. </p><p>

சிரிலிய சவிய அமைப்பினால் எழுத்துமூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய குறித்த நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.</p><h3><b> 

நிதி மோசடி விசாரணை</b></h3><p>சிரிலிய சவிய அமைப்பால் பேணப்பட்டு வரும் சிதுவெல்லவில் அமைந்துள்ள வங்கிக் கணக்கிற்கே குறித்த நிதி வரவு வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3a91214-05bc-436f-9631-79d0bad875a4/26-6aa76b84b06f8.webp' /></p><p>இதனிடையே, ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. </p><p>

அந்த நிதி குறித்த பணிக்காக பயன்படுத்தப்படாததால், அந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

தற்போது ஷிரந்தி ராஜபக்ச சுகயீனமுற்றுள்ள மருத்துவமனையில் இருப்பதால் இது தொடர்பான நிலைமைகள் குறித்த விசாரணைகள் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. </p><p>சிரிலிய சவிய கணக்கு தொடர்பில் பல கேள்விக்குரிய நிலைமைகள் காணப்படுகின்றது. அது குறித்தும் விசாரணைகள் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த கணக்கு தொடர்பாக கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவு அவரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T08:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-levels-in-many-reservoirs-have-dropped-1789371777"></link>
            <id>https://tamilwin.com/article/water-levels-in-many-reservoirs-have-dropped-1789371777</id>
            <summary type="text">நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு 45% நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள நீரின் அளவு 45% நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளரும், நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.பி.எச்.எஸ்.டி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 33% அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீரின் அளவு</h2><p> </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிலவும் நீரின் அளவு தற்போது 20 சதவீதத்தை நெருங்கியுள்ளது. </p><p>

இருப்பினும், தற்போது சிறுபோக பயிர்ச்செய்கைப் பருவம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விவசாய நடவடிக்கைகளுக்கு இது போதுமானதாக இருக்கும்.

மேலும், இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5aa7a84-2967-4fe2-b9c1-ee76b36e0da7/26-6aa7b19ba8e5b.webp' /></p><h2>விவசாய நடவடிக்கைகள்</h2><p> </p><p>அத்துடன், எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான திட்டமிடுதல்கள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இது தவிர, பெரும்போக ஏனைய நீர்ப்பாசனத் திட்டங்களின் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து, நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு மற்றும் மழைவீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்புகளுக்கு அமைய திட்டமிடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T08:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா பேச்சுக்கு எதிராக CIDயில் முறைப்பாடு - ராஜபக்சர்களுக்கு சவால்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaint-lodged-cid-against-arjuna-s-remarks-1789374774"></link>
            <id>https://tamilwin.com/article/complaint-lodged-cid-against-arjuna-s-remarks-1789374774</id>
            <summary type="text">இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பை பிரசன்னப்படுத்தும் வகையில் மேடையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசியது கண்டிக்கத்தக்கது என ஒருமித்த எதிர்க்கட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பை பிரசன்னப்படுத்தும் வகையில் மேடையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசியது கண்டிக்கத்தக்கது என ஒருமித்த எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்திலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அர்ச்சுனா இவ்வாறு மோசமாகப் பேசியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>“ இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் யாழ்ப்பாணத்தில் பிரசாரம் செய்தார். அநுர அரசாங்கம் 2029ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு வந்துவிடும். அதன்பின்னர் நாமல் ராஜபக்சதான் ஆட்சிப் பீடம் ஏறுவார்”&nbsp; &nbsp;என்றும் அர்ச்சுனா மேடையில் உரத்தக் குரலில் கூறியுள்ளார், இந்த கருத்திற்கும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pECcVfbtOm0" width="640" height="360" class="note-video-clip"></iframe> &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T08:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடிகுண்டு தயாரித்து ஜனாதிபதியை கொலை செய்யும் வயதானவரின் திட்டம்! கேலி செய்த அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-mocked-the-plot-to-assassinate-him-1789369024"></link>
            <id>https://tamilwin.com/article/president-mocked-the-plot-to-assassinate-him-1789369024</id>
            <summary type="text">

தன்னைக் கொலை செய்வதற்கு இரண்டு தீப்பெட்டிகளில் உள்ள தீக்குச்சிகளின் மருந்துகளைச் சுரண்டி எடுத்து, அதனைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்போவதாக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>

தன்னைக் கொலை செய்வதற்கு இரண்டு தீப்பெட்டிகளில் உள்ள தீக்குச்சிகளின் மருந்துகளைச் சுரண்டி எடுத்து, அதனைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்போவதாக நபரொருவர் கருத்து வெளியிட்டுள்ளார் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
நொச்சியாகம பகுதியில் நேற்றையதினம்(13.09.2026) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

தற்போதைய எமது அரசாங்கம், மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை என்றால் அதனை விமர்சிப்பதற்கும், அரசாங்கத்தைத் திட்டுவதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு.</p><h2>விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு</h2><p>
</p><p>
ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்பும் அரசியல் கலாசாரமொன்றை நாட்டில் உருவாக்க வேண்டும்.
</p><p>
நேற்று எனக்கு ஒரு தகவல் கிடைத்தது, ஒரு கூட்டத்தின்போது வயதான நபர் ஒருவர், <b>''தனக்கு இரண்டு தீப்பெட்டிகளில் உள்ள தீக்குச்சிகளின் மருந்தினை வைத்து வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்றும், அதைக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார மீது தாக்குதல் நடத்துவேன்''</b> என்றும் தெரிவித்திருக்கின்றார். </p><p>பாவம், அந்த நபர். சமூகத்தில் விமர்சிப்பதற்கு இன்று கிடைத்துள்ள சுதந்திரத்தை அவர் இப்படிப் பயன்படுத்திக் கொள்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8f6fd99-25af-4145-8fc2-ac0768ace761/26-6aa7a6e495e0f.webp' /></p><p>இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரண்டு வருட காலப் பகுதியில் எந்தவொரு மக்கள் போராட்டத்தின்போதும் நீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை.</p><p>
பயன்படுத்தப்படாமல் இருந்ததால், கண்ணீர்ப்புகைக் குண்டுகளில் ஒரு தொகுதி காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் மா அதிபர் அண்மையில் என்னிடம் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1db40a-60b7-4cf6-800d-407306d8c06b/26-6aa7a6e56e1bc.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளைக் கண்டு மக்கள் அச்சத்துடன் நடுங்கினர். கறுப்புப் பட்டி அணிந்த குண்டர் குழுக்களைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்திய காலம் இருந்தது. </p><p>

ஆனால், அவை அனைத்தையும் இன்று நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய உறவை நாம் உருவாக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T07:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவின் மேடையில் தவறுதலாக நாமல் ராஜபக்சவை திருடன் என கோசமிட்ட மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allegation-by-makkal-sakthi-amaippu-1789369073"></link>
            <id>https://tamilwin.com/article/allegation-by-makkal-sakthi-amaippu-1789369073</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட
வேண்டும், அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது
எதிர்த்தரப்பினருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட
வேண்டும், அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது
எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று கோஷமிட முயன்று, இறுதியில்
மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த உணர்வின் வெளிப்பாடு "நாமல் திருடன்"
என்று கோஷமிட்டனர் என மக்கள் சக்தி அமைப்பின் செயற்குழு உறுப்பினர்
விதர்ஷன கன்னங்கர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
கொழும்பில் நேற்று (13.09.2026) ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட
வேண்டும். நாட்டின் பொதுச் சொத்துக்கள் மற்றும் தேசிய வளங்களைச் சூறையாடி,
அத்தகைய குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அல்லது
பிணையில் வெளியே இருக்கும் நபர்களே இந்தப் பேரணியில் முன்னின்று
வழிநடத்தியுள்ளனர்.</p><h2>பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்ட மக்கள்</h2><p>
</p><p>
வறுமை, போதிய கல்வியறிவு மற்றும் பண்பாட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட அப்பாவி
மக்களை, மதுபானம் மற்றும் உணவுப் பொதிகளை வழங்கி பேருந்துகள் மூலம் அழைத்து வந்து,
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகப்
பயன்படுத்திக்கொள்ளும் பரிதாபகரமான நிலையையே இந்தப் பேரணி
வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

இந்தப் பேரணியின் போது எதிர்த்தரப்பினர் 'அநுர திருடன்' என்று கோஷமிட முயன்று,
இறுதியில் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த உணர்வின் வெளிப்பாடாக "நாமல்
திருடன்" என்று கோஷமிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6611fa07-e8be-41e2-9a3f-6830e936c02a/26-6aa7c813f1aec.webp' /></p><p>
</p><p>
2022ஆம் ஆண்டில் அரச குடும்ப ஆட்சியை எதிர்த்து நாட்டின் பெரும்பான்மையான
மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வெற்றி பெற்ற நிலையிலும், மீண்டும் இந்தப்
பேரணியில் ராஜபக்சக்களை மகாராஜாவாகப் போற்றி வழிபாட்டு மனநிலையுடன் அழைத்துச்
செல்லும் நிலையை அவதானிக்க முடிந்தது.</p><p>

ராஜபக்ச குடும்பமும் அவர்களைச் சார்ந்தவர்களும் தங்களது அரசியல்
மேலாதிக்கத்தையும், சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களது பாதுகாப்பையும்
தக்கவைத்துக்கொள்ள அமைத்துக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகவே இது இயங்குகின்றது.
</p><p>
கடந்த காலங்களில் ராஜபக்சக்களுடனும், நாமல் ராஜபக்சவுடனும் இனி ஒருபோதும்
இணையப்போவதில்லை என்று சபதம் செய்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற
சுயநல அரசியல்வாதிகள், தற்போது மீண்டும் அதே மேடையில் ஏறியுள்ளனர்.</p><h2>அரசியல்வாதிகளின் போலிப் பேச்சுகள்</h2><p>
</p><p>
தங்களின் சுயலாபத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப சில வினாடிகளில்
தர்க்கங்களையும் நிலைப்பாடுகளையும் மாற்றிக்கொள்ளும் இத்தகைய அரசியல்வாதிகளின்
போலிப் பேச்சுகளை மக்கள் மீண்டும் கேட்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல்
உருவாகியுள்ளது.</p><p>

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது உரைகளிலும் நடவடிக்கைகளிலும்
பிரபாகரனையும் தமிழ் ஆயுதப் போராட்டத்தையுமே தனது அடையாளமாகக் காட்ட முயல்பவர்
ஆவார். ஆனால், அவரும் தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் பேசும் விமல்
வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர ஆகியோருடன் ஒரே மேடையில்
அருகருகே அமர்ந்திருந்த காட்சி இவர்களின் போலி அரசியலை வெளிப்படுத்தியது.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தினர் சிங்கள பௌத்த தேசியவாதத்தைக் காட்டி ஆட்சி
அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும், தங்களுக்கு ஆதரவாகச் செயற்படும் பட்சத்தில்
எந்தவொரு நபரும் உடனடியாகத் தேசப்பற்றாளராக மாறிவிடுவர் என்ற ராஜபக்சக்களின்
சுயநல சூத்திரத்தையே இது மீண்டும் நிரூபித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c762de03-8beb-46d3-b1c9-3616addaa4fc/26-6aa7a415bacbf.webp' /></p><p>
</p><p>
நாட்டில் தற்போதைய அரசின் பயணத்தைக் விமர்சிக்கக் கூடிய ஒரு ஜனநாயக
எதிர்க்கட்சி அவசியமானது என்றாலும், அந்த எதிர்க்கட்சி எத்தகைய கொள்கையைக்
கொண்டுள்ளது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.</p><p>

2029 ஆம் ஆண்டை நோக்கிய எதிர்கால அரசியல் களமானது இனவாதத்துக்கு எதிரான,
மக்கள் நலன் மற்றும் ஜனநாயக அடிப்படையிலான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான
பிரிவு என்றும், பழைய கொள்கைகளையும், ஊழலையும், தீவிர இனவாதத்தையும்
காப்பாற்றி சட்டத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக ஒன்றிணைந்துள்ள பிற்போக்கு
அரசியல்வாதிகளின் பிரிவு என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரியப்போவது
உறுதியாகியுள்ளது.
</p><p>
எனவே, இலங்கை மக்கள் மீண்டும் பழைய ஊழல் முறைமைக்குத் திரும்புவதா அல்லது
ஜனநாயக வழியிலான புதிய அரசியல் மாற்ற எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதா என்பதை
நாட்டின் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T07:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதரவின்றி மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கிறதா அநுர அரசு..! அஜித் பி. பெரேரா பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-to-postpone-provincial-council-elections-1789369553"></link>
            <id>https://tamilwin.com/article/anura-to-postpone-provincial-council-elections-1789369553</id>
            <summary type="text">இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத்
திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது
தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத்
திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது
தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றச் செயற்குழுவைப்
புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன என ஐக்கிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

அத்துடன், அரசுக்கு 75 சதவீத
மக்களின் ஆதரவு இருக்குமானால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்திடிக்
காட்டுமாறும் சவால் விட்டுள்ளார். </p><p>

களுத்துறையில் நேற்று(13.09.2026) இடம்பெற்ற சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 


 மாகாண சபைத் தேர்தல்</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
ஒரு வருட காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசு மக்களுக்கு அளித்த
பிரதான வாக்குறுதியாகும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் மாகாண சபைத்
தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு எந்தவிதமான யோசனையும் இல்லை. 

இதனால் இன்று
மாகாண சபைகள் அனைத்தும் செயலிழந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/225c2f68-bf8b-4b15-9f1b-6b035f201a6b/26-6aa79d2ddb428.webp' /></p><p> </p><p>அவை ஆளுநரின் கீழ் நிர்வகிக்கப்பட்டு
வருவது எந்த வகையிலும் பொருத்தமானதும் அல்ல, ஜனநாயகமானதுமன்று.

அதே போன்று, அரசு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்திரோபாயமாகவே
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்தது. கடந்த 9 மாதங்களாகத்
தெரிவுக்குழு கூடியும் எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் வர முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.</p><p>

நாளுக்கு நாள் பல்வேறு தந்திரோபாயத் திட்டங்களை மேற்கொண்டு அரசு அந்தக்
கூட்டங்களைக் குழப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வந்தது. இதனால், இதன் பின்னர்
அந்தத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதில்லை எனவும், அதனை முற்றாகப்
புறக்கணிப்பதாகவும் அதில் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்துத் தீர்மானித்துள்ளோம்.
</p><h2>
 21 தடவைகள் திருத்தப்பட்ட அரசமைப்பை</h2><p>

அதேபோன்று, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் காலத்தை நீடிப்பதற்காக அரசு
கொண்டுவந்த பிரேரணைக்கும் எதிர்க்கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
தொடர்ந்தும் மாகாண சபைத் தேர்தலைப் பிற்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமையை மீறி
வருவதாலேயே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5af12c17-36cd-4685-aacf-91e5e1d14f2d/26-6aa79d2ebfe9e.webp' /></p><p>
</p><p>
இந்த அரசுக்கு 75 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாகப் பிரசாரம் செய்யும்
தரப்பினர், பழைய முறைமைக்காவது மாகாண சபைத் தேர்தலை நடத்திடிக் காட்ட
வேண்டும். அவ்வாறில்லையாயின், தேர்தல் ஆணைக்குழு முன்வைத்துள்ள உத்தேச
முறைமையிலாவது தேர்தலை நடத்தலாம். </p><p>ஆனால், எந்த முறைமையிலும் தேர்தலை நடத்தாது,
குறுகிய தந்திரங்களைக் கையாண்டு தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கே அரசு நடவடிக்கை
எடுத்து வருகின்றது.
</p><p>
மேலும், அரசு நாடு முழுதும் மக்கள் பேரணிகளை நடத்திச் செல்கின்ற போதிலும்,
இதுவரை இடம்பெற்ற எந்தவொரு பேரணியிலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில்
ஜனாதிபதி ஒரு வார்த்தைகூடத் தெரிவிக்கவில்லை.</p><p> 

அதேபோன்று, மக்களுக்கு
வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசமைப்பு தொடர்பிலும் ஜனாதிபதி வாய் திறக்காமல்
மௌனம் காக்கின்றார். அதனை விடுத்து, ஏற்கனவே 21 தடவைகள் திருத்தப்பட்டுத்
திரிபுப்படுத்தப்பட்டுள்ள அரசமைப்பை, 22 ஆவது தடவையாகவும் திருத்துவதற்கு
மட்டுமே அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T07:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகம் கடுமையாக குறைப்பு! எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரின் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-station-owners-reduced-fuel-distribution-1789364769"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-station-owners-reduced-fuel-distribution-1789364769</id>
            <summary type="text">வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளமையினால் பொதுமக்கள் மட்டுமன்றி, பல எரிபொருள் நிலையங்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளமையினால் பொதுமக்கள் மட்டுமன்றி, பல எரிபொருள் நிலையங்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (14.09.2026) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>குறிப்பிடத்தக்க இடைவெளி&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில் , இந்நிறுவனங்களின் எரிபொருள் இறக்குமதிச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக, பேச்சுவார்த்தைகளின் போது இந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p><p>

இந்த நஷ்டத்தைக் குறைக்கும் முயற்சியாகவே இந்நிறுவனங்கள் சந்தைக்கான எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளன.

இந்நிலைமை பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயல்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தற்போது ஒரு சவாலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42843605-48a5-4f3c-80ba-379613de96a0/26-6aa79a78cc072.webp' /></p><h2>எரிபொருள் விநியோகம்</h2><p>

எரிபொருளைக் கொள்முதல் செய்யத் தங்கள் சொந்த அந்நியச் செலாவணி கையிருப்பை பயன்படுத்துவதாகக் கூறி, அவர்கள் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்வதாக உறுதியளித்திருந்தனர். நிலையான விலையை நிர்ணயிக்காமல், போட்டித் தன்மை வாய்ந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதிப்பதாக அரசாங்கம் கூறியிருந்தது.</p><p> 

இருப்பினும், சந்தைக்குள் நுழைந்த பிறகு, அரசாங்கம் நிர்ணயித்த விலையிலேயே எரிபொருளை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்நிறுவனங்கள் தள்ளப்பட்டன. அந்த விலையில் விற்பனை செய்வது நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும், அதைத் தொடர்ந்து மேற்கொள்வது கடினம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

போட்டித்தன்மை வாய்ந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதிக்கப்பட்டால், இப்பிரச்சினை தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T06:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anthonis-rajkumar-makes-a-request-to-the-president-1789364314"></link>
            <id>https://tamilwin.com/article/anthonis-rajkumar-makes-a-request-to-the-president-1789364314</id>
            <summary type="text">வடக்கு - கிழக்கில் வறட்சி என்றாலும் மழைவெள்ளம் என்றாலும் கடற்தொழிலாளர்களும், விவசாயிகளும் தான் பாதிக்கப்படுகின்றனர், இதற்கு பிரதான காரணம் இங்குள்ள
கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு - கிழக்கில் வறட்சி என்றாலும் மழைவெள்ளம் என்றாலும் கடற்தொழிலாளர்களும், விவசாயிகளும் தான் பாதிக்கப்படுகின்றனர், இதற்கு பிரதான காரணம் இங்குள்ள
குளங்கள் புனரமைக்கப்படாமையே என&nbsp;ஈ.பி.டி.பி கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>எனவே முதலில் வடக்கு - கிழக்கில் உள்ள குளங்களை
புனரமைக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு ஈ.பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (13.09.2026)
பாலமீன்மடு விலுள்ள காரியாலயத்தில் இடம்பெற்றது.</p><p>இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>பாதிப்பு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக குளங்கள் புனரமைக்கபடாதனால் வறட்சி என்றாலும்
மழைவெள்ளம் என்றாலும் கடற்தொழிலாளர்களும், விவசாயிகளும் தான் பாதிக்கப்படுகின்றனர். </p><p>எனவே இந்த குளங்களை தூர்வாரி அகலப்படுத்தி, ஆழப்படுத்தி சரியான நீர்
முகாமைத்துவம் செய்தால் வறட்சி என்றாலும் மழை வெள்ளம் என்றாலும் விவசாயிகள்
பாதிக்கப்படமாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c611ae0-01df-402f-b021-ce86e8a1538b/26-6aa79265391a6.webp' /></p><p>
</p><p>
அவ்வாறே கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களுடைய சொத்துக்களும்
பாதுகாக்கப்படும். எனவே நாட்டு ஜனாதிபதியிடம் விசேட வேண்டுகோள்
விடுக்கின்றோம் அத்தியாவசிய தேவைகள் உள்ள இடங்களில் மட்டும் அபிவிருத்தியை
பணிகளை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் இந்த பணத்தை மீதப்படுத்தி வடக்கு கிழக்கில்
உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.</p><h2>குளங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கை</h2><p>மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்
அதன் உறுப்பினர்கள் இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த குளங்களை
புனரமைக்க வெகு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில்
தொடர்ச்சியாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும் என தெளிவாக சுட்டிக்காட்ட
விரும்புகின்றோம்.
</p><p>
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி என்று சொன்னால் மக்கள்
நடமாட்டமற்ற பகுதிகளில் கட்டடங்களை அமைப்பது விளையாட்டு மைதானங்களை
புனரமைப்பது கோயில்களுக்கு நிதி ஒதுக்குவது இதை தவிர வேறு ஒன்றும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T06:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியாது! சட்டச் சிக்கலுக்குத் தீர்வு கண்டதும் தேர்தல் என தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-jayasinghe-provincial-council-election-1789361311"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-jayasinghe-provincial-council-election-1789361311</id>
            <summary type="text">2017ஆம் ஆண்டில் பழைய தேர்தல் முறைமை குறித்துக் குற்றச்சாட்டுக்களை
முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத்
தேர்தலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2017ஆம் ஆண்டில் பழைய தேர்தல் முறைமை குறித்துக் குற்றச்சாட்டுக்களை
முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத்
தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோருவது முரண்பாடானது என தொழில்
பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும்
சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
கம்பஹா பகுதியில் நேற்று (13.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில்
கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு கூறியுள்ளார்.</p><h2>மாகாணசபைத் தேர்தல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர்
கோருகின்றார்கள்.</p><p> ஆனால், 2017ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
அமைச்சுப் பதவி வகித்த நல்லாட்சி அரசுதான் மாகாணசபைத் தேர்தலை
நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a1040c9-3c6e-4f72-94fa-444aa4c7abc8/26-6aa786bd86ab1.webp' /></p><p> </p><p>அன்றைக்கு அந்தப் பழைய
தேர்தல் முறைமை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த
எதிர்க்கட்சியினர், இன்று அதே முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும்
என்கின்றார்கள்.</p><h2>முறையற்றதொரு அரச நிர்வாகம்</h2><p>
</p><p>
முறையற்ற மற்றும் மோசடியான பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை
நடத்தினால், அது முறையற்றதொரு அரச நிர்வாகமே தோற்றம் பெற வழிவகுக்கும். </p><p>எனவே,
தேர்தல் முறைமையில் உள்ள சட்டச் சிக்கல்களுக்கு முரண்பாடற்ற வகையில் முறையான
தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T05:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொன்சேகாவை இராணுவத்தினர் கைது செய்த போது அதே ஹோட்டலில் தங்கியிருந்த அநுர! மேடையில் சம்பவத்தை விபரித்த ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-who-was-present-when-fonseka-was-arrested-1789359287"></link>
            <id>https://tamilwin.com/article/anura-who-was-present-when-fonseka-was-arrested-1789359287</id>
            <summary type="text">
2010 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரே ஹோட்டலில் இருந்து தேர்தல் முடிவுகளை நானும் சரத் பொன்சேகாவும் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த ஹோட்டலை இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2010 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரே ஹோட்டலில் இருந்து தேர்தல் முடிவுகளை நானும் சரத் பொன்சேகாவும் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்து, சரத் பொன்சேகாவை கைது செய்தனர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். </p><p>

நொச்சியாகம பகுதியில் நேற்றையதினம்(13) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

ஊழல்வாதிகளை கைது செய்யும் போது நான் அரசியல் பழிவாங்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். யாரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது..</p><h2>அரசியல் பழிவாங்கல்&nbsp;</h2><p>

2010இல் நானும், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவும் ஒரே ஹோட்டலில் இருந்தவாறு தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.
</p><p>
முடிவுகள் வெளியாகி முடிந்தவுடன் அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். சரத் பொன்சேகாவும் அப்போதே கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be9a3f70-b772-4b47-ac73-7d6be55fdb44/26-6aa7820d4ca79.webp' /></p><p> </p><p>


அப்போதைய அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதற்காக ஊடக நிறுவனம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p> அரச அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றனர். இதுதான் அரசியல் பழிவாங்கல் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-14T05:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடதும்பர பகுதியில் 11 வயது பௌத்த பிக்கு உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-year-old-buddhist-monk-dies-in-udadumbara-area-1789361835"></link>
            <id>https://tamilwin.com/article/11-year-old-buddhist-monk-dies-in-udadumbara-area-1789361835</id>
            <summary type="text">உடதும்பர - கைக்காவலப் பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடதும்பர - கைக்காவலப் பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (13.09.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த பிக்கு மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு விகாரையில் தங்கியிருந்து வந்துள்ளார்.</p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>

இந்த நிலையில் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக உடதும்பர பகுதிக்கு சென்றிருந்த அவர், பின்னர் வேறு சில பௌத்த பிக்குகளுடன் இணைந்து ஹீன் கங்கையில் குளிக்கச் சென்றிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f5c53b-d6e1-42b8-a9c1-89f434126b88/26-6aa7835e7cf6d.webp' /></p><p> </p><p>

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த பிக்கு நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இச்சம்பவம் குறித்து உடதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T05:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1789359213"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1789359213</id>
            <summary type="text">தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது இனப்படுகொலைக்கான மிகச்சிறந்த
ஆதாரங்களை நாமே இழப்பதற்குச் சமமாகிவிடும் என்று தமிழ்த் தேசியப்
பேரவையின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.</p><p>

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச
நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று (13.09.2026) முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியின்
இறுதியில், நல்லூர் கிட்டு பூங்காவில் 'தமிழ் மக்களின் நீதிக்கான குரல்' எனும்
தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், சர்வதேச
விசாரணையை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரகடனக்
கூட்டம் நடைபெற்றது. </p><p>அதில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளல்</h2><p>அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், போர் முடிந்து 17 வருடங்களுக்குப் பிற்பாடும் கூட, சர்வதேச சமூகம்
தமிழினத்துக்கு நடைபெற்றுள்ள இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்குத்
தயங்குகின்றது. கனடா, பிரித்தானியா போன்ற ஒரு சில நாடுகளின் தலைவர்களைத் தவிர,
ஏனையோர் உத்தியோகபூர்வமாக இந்த இனப்படுகொலை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதைத்
தவிர்த்து வருகின்றனர்.
</p><p>
இத்தகையதொரு சூழலில்தான் செம்மணி படுகொலை சார்ந்த ஆதாரங்களும் சாட்சியங்களும்
வெளிவர ஆரம்பித்துள்ளன. 1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை
வழக்கில், இராணுவச் சிப்பாய்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட
நிலையில்தான், செம்மணியில் கிட்டத்தட்ட 600 இற்கும் அதிகமான உடல்கள்
புதைக்கப்பட்ட உண்மையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.</p><p> ஆனால், அப்போதும் கூட
அந்த உண்மைகளை மூடிமறைப்பதற்கே அரசு முயன்றது.

செம்மணியில் புது மண் கொட்டப்பட்டு, அந்தப் பிரதேசம் பல மாதங்களுக்குச் செல்ல
முடியாதவாறு இரவிரவாகச் சுத்தப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில உடல்கள்
மீட்கப்பட்ட பின்னர் அந்த விசாரணை முடக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் மக்கள் நீதியைக் கோரியும் எவரும் செம்மணி
குறித்துப் பேசத் தயாராக இருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b1cc20b-96e6-4534-b51d-17fb96f36e7a/26-6aa77ad624f62.webp' /></p><p> </p><p>இந்நிலையில், 2009 மே 18 இற்குப் பிறகு
அழிக்கப்பட்ட ஆத்மாக்களின் அநியாயம் மூடிமறைக்கப்பட்டுவிடக் கூடாது
என்பதற்காக, தற்செயலாகச் செம்மணிச் சுடலையில் கட்டுமான வேலைகள் நடைபெற்றபோது
எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இது காலம் காலமாக அரசுகள் மாறி மாறித்
தமிழினத்தைக் குறிவைத்துள்ளன என்பதை நிரூபிக்கும் மிகப்பெரிய சாட்சியமாகும்.</p><h2>செம்மணி விவகாரம்</h2><p>

ஆனால், இந்தச் சூழலில்தான் போர் முடிவதற்குச் சற்றும் நிபந்தனையற்ற ஆதரவைக்
கொடுத்து, 'எந்தவொரு இராணுவச் சிப்பாயும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட
மாட்டார்கள்' என்று பகிரங்கமாகக் கூறிய ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார
திஸாநாயக்கவின் அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. </p><p>அத்தகையதொரு சூழலில்தான்
செம்மணி விவகாரம் வெளிப்பட்டுள்ளது.

சிங்கள மக்களுக்கே நீதித்துறையை அரசியல் மயப்படுத்துவதாக இந்த அரசின் மீது
குற்றச்சாட்டு உள்ள நிலையில், உள்ளக விசாரணை எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நீதியை வழங்காது என 2014 ஆம் ஆண்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள்
ஆணையாளரும் தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
ஆகவே, செம்மணி மனிதப் படுகொலை போன்ற எந்தவொரு குற்றத்துக்கும் எவரையும்
நீதிமன்றத்தின் முன் நிறுத்த மாட்டோம் என்று பகிரங்கமாகச் சொல்லும் அரசின்ன்
கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகளை விட்டால், சாட்சியங்கள் அனைத்தும்
அழிக்கப்படுவதற்கே வழிவகுக்கும்.

நாளை ஜெனிவாவில் ஐ.நா. அமர்வுகள் நடைபெறும் சூழலில், தாய்மண்ணில் வாழும்
பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் உள்ளக விசாரணைகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.</p><p>

தமிழினப் படுகொலை என்பது இலங்கை அரசால்தான் செய்யப்பட்டது என்பதை உலகுக்கு
உணர்த்தி, எமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எங்களை நாமே ஆளக்கூடிய சூழலை
ஏற்படுத்துவதன் மூலமே பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அதற்கான ஒரே தீர்வு
நம்பகத்தன்மையான சர்வதேச குற்றவியல் விசாரணை மட்டுமே என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T04:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் வயிற்றுக்குள் சிக்கிய பல கோடி ரூபா மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uganda-man-arrested-at-katunayake-with-cocaine-1789357941"></link>
            <id>https://tamilwin.com/article/uganda-man-arrested-at-katunayake-with-cocaine-1789357941</id>
            <summary type="text">இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 கோடிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
5 கோடிக்கும் அதிகமான பெறுமதியான 90க்கும் மேற்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கிவிட்டு நாட்டுக்கு வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

குறித்த நபர் 43 வயதுடைய உகண்டா நாட்டைச் சேர்ந்த விவசாயி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>வயிற்றுக்குள் சிக்கிய பல கோடி ரூபா</b></h2><p>சந்தேக நபர் உகண்டாவின் என்டபே நகரிலிருந்து இந்த கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிவிட்ட கட்டாரின் தோஹா நகருக்கு வந்துள்ளார்.
</p><p>கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-664 விமானம் மூலம் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபர் மதியம் வரை விமான நிலையத்தின் முதலாவது மாடியில் தங்கியிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20aba6c7-310a-4c35-9137-45ec07ed15b4/26-6aa779a7478b9.webp' />&nbsp;&nbsp;</p><p>

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், விமான நிலையத்தின் உள்ளே சந்தேக நபர் தான் விழுங்கியிருந்த 13 கொக்கெய்ன் உருண்டைகளை வெளியில் வெளியேற்றியுள்ளார். </p><p>

இந்த நபர் விழுங்கியுள்ள மீதமுள்ள கொக்கெய்ன் உருண்டைகளை வெளியில் எடுப்பதற்காக அவரை நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம்&nbsp; அவரை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T04:36:24+00:00</updated>
        </entry>
    </feed>
