<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-29T20:30:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து கைதாகப் போவது யார்..! அநுரவின் அதிரடியால் திணறும் அரச அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-officers-anura-kumara-decision-1785348860"></link>
            <id>https://tamilwin.com/article/government-officers-anura-kumara-decision-1785348860</id>
            <summary type="text">தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், முந்தைய அரசாங்கங்களில் நடந்த பல்வேறு&nbsp;ஊழல் முறைக்கேடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டும் வருகின்றது.&nbsp;</p><p>இதற்கிடையில், அரசாங்க அதிகாரிகள் பலரின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>ஜனாதிபதி அநுர குமாரவுடனான கலந்துரையாடலின் போது சில முக்கிய அதிகாரிகளிடம் அவர் எழுப்பிய கேள்விகளின் மூலம் இவை அம்பலமாகியுள்ளன.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2iVdgos_NAE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T20:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரகீத் எக்னெலிகொட வழக்கில் திருப்பம் - விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சுரேஷ்குமாரின் அதிர்ச்சி சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eknaligoda-case-member-shocking-testimony-1785351370"></link>
            <id>https://tamilwin.com/article/eknaligoda-case-member-shocking-testimony-1785351370</id>
            <summary type="text">அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்பிலிருந்து பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த விவகாரம் குறித்து குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் பல முக்கிய விடயங்களை சாட்சிகளாக தெரிவித்திருக்கின்றார்.
</p><p>
அவர் தனது வாக்குமூலத்தில், ஜூலை 15ஆம் திகதி மதிய உணவு வேளையில் முகத்தை மூடிய சுமார் 15 பேர் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனை அடுத்து மறுநாள் காலை சிறை அதிகாரிகள் இல்லாமல் கைதிகளே உணவை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பின்பு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கைதிகள் தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.</p><p>இந்த நீர்கொழும்பு கலவரம் குறித்து இன்னும் சிலர் சாட்சியங்களாக மாறி தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான பல முக்கிய சாட்சியங்களின் பதிவுகளை கொண்டு வருகிறது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q56Hn1ODi7Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:59:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம் - ஐரோப்பிய தூதுக்குழுவின் சந்திப்பு தவறானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thenmarachchi-abuse-witness-alleges-eu-meeting-1785350817"></link>
            <id>https://tamilwin.com/article/thenmarachchi-abuse-witness-alleges-eu-meeting-1785350817</id>
            <summary type="text">வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் விஜயகுமார் தெரிவித்திருந்தார்.
</p><p>
ஐபிசி தொலைகாட்சின் களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், "இப்பொழுது காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமான ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களில் அன்றைய காலங்களில் இருந்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை.</p><p>
நாங்கள் நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து பல போரட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் பல்வேறுபட்ட தரப்பினரை நேரிலும் சந்தித்து அவர்களுக்கான நியாயங்களை கேட்டிருந்தோம்.</p><p> 

ஆனால் எங்களுக்கான நியாயம் இதுவரையிலும் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியினாலேயே தற்போதைய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களில் எங்களுடைய காலத்தில் இருந்தவர்கள் பங்கேற்பதில்லை" என தான் நினைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் அவர் வழங்கிய இன்னும் பல விடயங்கள் மற்றும் அவருடைய அனுபவங்களை தொகுத்து வழங்குகிறது களம் நிகழ்ச்சி..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HjyzbYWrhvI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான மோதலுக்கு மத்தியில் சீனாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பெறும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-air-defense-missiles-china-standoff-us-1785346534"></link>
            <id>https://tamilwin.com/article/iran-air-defense-missiles-china-standoff-us-1785346534</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு
அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும்
4...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு
அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும்
400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>

சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ்,
சீனாவின் QW-12 மற்றும் FN-16 வகை ஏவுகணைகள் அடங்கிய 300 முதல் 400 மேன்பேட்ஸ் அமைப்புகள் இன்னும் சில வாரங்களில் ஈரானுக்கு முதற்கட்டமாக
விநியோகிக்கப்படவுள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>
</p><p>
ஹொங்கொங்கைச் சேர்ந்த இடைத்தரகு நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த ஒப்பந்தம்
கையெழுத்தாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830b9d8e-ffa2-4975-b9e1-711127125054/26-6a6a56e4a638c.webp' /></p><p>
குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களைத்
தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், ஈரானின் இராணுவ மற்றும்
எரிசக்தி உள்கட்டமைப்பு மையங்களைப் பாதுகாக்கப் பயன்படும் என பாதுகாப்பு
வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

இருப்பினும், இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ள சீன வெளியுறவு
அமைச்சகம், "இந்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது. </p><p>பிராந்தியத்தில் அமைதியை
ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து முயன்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், பாகிஸ்தான் வழியே இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியான
தகவல்களையும் பாகிஸ்தான் இராணுவம் முற்றிலும் பொய் என மறுத்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:51:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தீவகப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் கறுப்புக்கொடியுடன் கடலில் இறங்கிப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurikattuvan-fishermen-hold-black-flag-sea-protest-1785341398"></link>
            <id>https://tamilwin.com/article/kurikattuvan-fishermen-hold-black-flag-sea-protest-1785341398</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல் கடற்றொழில்
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று(29.06.2026) கடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல் கடற்றொழில்
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று(29.06.2026) கடலில்
இறங்கி கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியில் கடலுக்குள் இறங்கிச் சென்ற
தீவக கடற்றொழிலாளர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை
வெளிப்படுத்தியுள்ளதுடன், ஜனாதிபதிக்கு அவசர நடவடிக்கை கோரி கோரிக்கை மனு ஒன்றையும்
விடுத்துள்ளனர்.</p><p></p><h2>கறுப்புக்கொடியுடன்&nbsp;போராட்டம்</h2><p>
</p><p>
இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கடற்றொழில்
உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfbeace2-b217-4f58-ad6e-0ee456fffd0a/26-6a6a542c3441e.webp' /></p><p>
</p><p>
நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைத்தீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை
மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மீனவ சமூகங்களாகிய
தாங்கள், தங்களது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபைப்
பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீடு வேண்டும்.
</p><p>
மேலும் பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள்
அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இது
வெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப்
பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப்
பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கிறது.</p><p></p><h2>உறுதியான தீர்வு&nbsp;</h2><p>மேலும், இந்த நடவடிக்கைகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு
மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக
அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a74b1d-60af-4164-8796-de9242b8e15a/26-6a6a542d4d782.webp' /></p><p>

காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை
மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில்
தீவகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் ஐந்து கோடி
ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளது.</p><p>

இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை
வழங்கத் தவறியுள்ளதால், வடக்கு கடற்றொழிலாளர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும்
அதிகரித்துள்ளதுடன், இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு
மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது
என வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T17:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு தீர்ப்பின் பின் சவூதியில் நடக்க போவது என்ன - கையை விரித்த அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-sri-lanka-government-1785344616"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-sri-lanka-government-1785344616</id>
            <summary type="text">சவூதி நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞன், தனது முகப்புத்தக பதிவால் அந்நாட்டில் அண்மையில் கடுமையான தண்டனைக்கு&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞன், தனது முகப்புத்தக பதிவால் அந்நாட்டில் அண்மையில் கடுமையான தண்டனைக்கு&nbsp; உள்ளாக்கப்பட்டார்.&nbsp;</p><p>முகம்மது நபிகள் தொடர்பில் அவர் ஒரு தவறான கருத்தை முகப்புத்தகத்தில் முன்வைத்த நிலையில், இத்தண்டனையை அந்நாடு அவருக்கு வழங்கியது.&nbsp;</p><p>இருப்பினும், குறித்த இளைஞன் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அதை உணர்ந்து நீக்கியிருந்தார்.&nbsp;</p><p>பின்னர், இது குறித்து அனைத்து இஸ்லாமியர்களும் தன்னை மன்னிக்குமாறும் அவர் கோரி ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார்.&nbsp;</p><p>ஆனால், அக்கருத்துப் பகிர்வை பகிர்ந்த பலர் அவருக்கு தண்டனை வழங்குமாறு தொடர்ந்து கோரி வந்த நிலையில்&nbsp;சவூதி அரசாங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p>இந்நிலையில், அவரை விடுதலை செய்ய உதவுமாறு தமிழ் மக்கள் பலரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FEmpzSo6sJU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T17:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கனடா கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-says-expansion-of-israeli-west-bank-1785345344"></link>
            <id>https://tamilwin.com/article/canada-says-expansion-of-israeli-west-bank-1785345344</id>
            <summary type="text">&amp;nbsp;இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரைப் பகுதியில் முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய குடியேற்ற விஸ்தரிப்புக்கு கனடா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மேற்குக்கரையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரைப் பகுதியில் முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய குடியேற்ற விஸ்தரிப்புக்கு கனடா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு கனடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>
சட்டவிரோதக் குடியிருப்புகளின் விரிவாக்கம் “உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de9b8d6-f95a-4aef-bd91-de755ab8501d/26-6a6a35442f6ba.webp' /></p><p>
சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த யூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை. மேலும், இவை பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகளை கடுமையாக சீர்குலைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்களும், சட்டவிரோதக் குடியிருப்புகளின் விரிவாக்கமும் முன்னெப்பாதும் இல்லாத அளவுக்கு மிக உச்சத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>
2023 அக்டோபர் முதல் மேற்குக்கரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1,100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும், அனைத்துக் குடிமக்களும் பாதுகாப்பான சூழலில் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>இந்த கருத்து தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் இதுவரையில் பதில் எதனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T17:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-sanctions-iranian-firms-1785344720"></link>
            <id>https://tamilwin.com/article/us-sanctions-iranian-firms-1785344720</id>
            <summary type="text">ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பாதையில் செல்லும் வணிகக் கப்பல்களிடம் கட்டாயக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>ஹோர்முஸ் நீரிணைப் பாதையில் செல்லும் வணிகக் கப்பல்களிடம் கட்டாயக் காப்பீடு என்ற பெயரில் சட்டவிரோதப் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இரு ஈரானிய நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>குறித்த இரண்டு நிறுவனங்கள் மீதும் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d4b075-6e9c-4260-baa7-cce374a6cde1/26-6a6a32d206f5b.webp' /></p><p> 
 ‘பெர்சியன் கல்ஃப் மேரின் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ‘ஹோர்முஸ் சேஃப் மேரின் சர்வீசஸ் அத்தாரிட்டி’ ஆகிய இரு நிறுவனங்களுக்கே இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
</p><p>ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் பின்னணியில் இயங்கும் இந்த நிறுவனங்கள், ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் வணிகக் கப்பல்கள் கட்டாயக் கடல்சார் ‘காப்பீட்டை’ வாங்குமாறு நிர்பந்தித்து பணத்தைப் பறிக்கும் சட்டவிரோதத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. </p><p>
கப்பல்களைக் கைப்பற்றுதல் போன்ற பெரும்பாலான அபாயங்களை ஈரானே செயற்கையாக உருவாக்கிவிட்டு, அந்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி வணிகக் கப்பல்களிடம் நிதியை திரட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>இத்திட்டம் மூலம் பெறப்படும் வருவாய், ஈரானிய ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் ஊழல் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
</p><p>இதுமட்டுமன்றி, தடைகளை மீறி ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ இரசாயன பொருட்களை சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்திச் சென்ற 'நிழற்படை' கப்பல்களை இயக்கிய நிறுவனங்கள் மீதும் அமெரிக்க அரசு தடைகளை விதித்துள்ளது.</p><p>
உலகின் மிக முக்கியமான கடல்வழி வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த ஈரான் முயன்று வரும் நிலையில், அங்கு சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் உறுதி செய்வது சர்வதேச அளவில் பெரும் சவாலாக நீடித்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T17:11:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெந்தோட்டையில் இடம்பெற்ற விபத்தில் பாலஸ்தீனப் பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palestinian-tourist-killed-1785343343"></link>
            <id>https://tamilwin.com/article/palestinian-tourist-killed-1785343343</id>
            <summary type="text">பெந்தோட்டை கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பராமோட்டோர் (விசைப் பாராசூட்) விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெந்தோட்டை கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பராமோட்டோர் (விசைப் பாராசூட்) விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>பெந்தோட்டை கடற்கரை வீதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பராமோட்டோர் சவாரியின் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் உயிரிழந்த நிலையில், பராமோட்டோரை இயக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த பைலட் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e39532-0cac-406c-9549-68be1e1007f3/26-6a6a2d716b6a6.webp' /></p><p>
</p><p>உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 
விபத்துக்கான காரணம் குறித்து பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணம் மற்றும் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-warning-for-eastern-province-1785342779"></link>
            <id>https://tamilwin.com/article/heat-warning-for-eastern-province-1785342779</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் வளிமண்டலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>
இதற்கமைய, பகல் வேளையில் மனித உடலினால் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’, குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 
வளிமண்டலத்தின் ஒப்பீட்டு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த ‘வெப்பச் சுட்டெண்’ கணக்கிடப்படுகிறது. </p><p>
வெயிலில் அதிக நேரம் வேலை செய்வது அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உடலுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். அத்துடன், தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. </p><p>
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கத் தேவையான அளவு நீரையும் திரவ உணவுகளையும் உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
கடுமையான வெயில் நிலவும் வேளைகளில், அதிக சிரமத்தை ஏற்படுத்தும் வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வொஷிங்டனில் நெதன்யாகு தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டுப் போராட்டக்காரர்கள் முழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protesters-besiege-netanyahu-hotel-in-washington-1785341359"></link>
            <id>https://tamilwin.com/article/protesters-besiege-netanyahu-hotel-in-washington-1785341359</id>
            <summary type="text">வொஷிங்டன் டி.சி.யில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரவு
உணவருந்திக் கொண்டிருந்த விடுதிக்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஆதரவுப்
போராட்டக்காரர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வொஷிங்டன் டி.சி.யில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரவு
உணவருந்திக் கொண்டிருந்த விடுதிக்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஆதரவுப்
போராட்டக்காரர்கள், அவருக்கு எதிராகத் தீவிர முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.</p><h2>ஏற்பட்ட பரபரப்பு&nbsp;</h2><p>இதன்போது, "பிபி, பிபி, உங்களால் மறைய முடியாது, நீங்கள் இனப்படுகொலை செய்கிறீர்கள்" என
முழக்கமிட்டவாறு விடுதியின் உணவகப் பகுதிக்குள் நுழைந்த ஆர்வலர்கள்,
நெதன்யாகுவிற்கு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a469d94c-7451-4469-b6c5-d1bb128b1e34/26-6a6a2838af7fe.webp' /></p><p>
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் காசா மீதான தாக்குதல்களுக்கு
எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ள நெதன்யாகுவின்
பயணத்தைக் கண்டிக்கும் வகையில் இந்த உடனடிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தலையிட்டுப் போராட்டக்காரர்களை வெளியேற்றிய
போதிலும், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T16:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை: பொருளாதாரத்தை விட இராணுவக் கட்டுப்பாட்டிற்கே ஈரான் முன்னுரிமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strait-of-hormuz-iran-prioritizes-military-1785336490"></link>
            <id>https://tamilwin.com/article/strait-of-hormuz-iran-prioritizes-military-1785336490</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை ஓமானுடன் இணைந்து கூட்டாக நிர்வகிப்பதற்காக முன்வைக்கப்பட்ட
முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளது.

இது ஈரானின் நிதிச் சலுகைகளை விட, இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை ஓமானுடன் இணைந்து கூட்டாக நிர்வகிப்பதற்காக முன்வைக்கப்பட்ட
முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளது.</p><p>

இது ஈரானின் நிதிச் சலுகைகளை விட, இராணுவ மற்றும் மூலோபாயக் கட்டுப்பாட்டை
அடைவதையே தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகப்
பாதுகாப்பு ஆய்வாளர் சாஷா புரூக்மேன் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் (IISS) பாதுகாப்பு ஆராய்ச்சி
ஆய்வாளரான சாஷா புரூக்மேன் அல் ஜசீராவிடம் பேசுகையில், ஈரானின் கோரிக்கைகள்
காலப்போக்கில் மாறினாலும், அதன் இறுதி இலக்கில் எந்த மாற்றமும் இல்லை என்று
சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>சட்ட விதி</h2><p>
</p><p>
ஆரம்பத்தில் சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிராக நுழைவுக் கட்டணம் கோரிய ஈரான்,
பின்னர் சேவைக்கட்டணம் என்றும், தற்போது தன்னார்வக் கட்டணம் என்றும் தனது
நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.
</p><p>
இருப்பினும், இந்த நெரிசல்மிக்க கடல் வழியில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து
தக்கவைத்துக்கொள்வதே ஈரானின் முக்கிய நோக்கமாகும்.

ஓமானின் 50-50 கூட்டுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஈரான் நிராகரித்ததற்கு,
அத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஒரு கப்பல் போக்குவரத்துப் பாதை ஈரானின்
கண்காணிப்பிற்கு வெளியே சென்றுவிடும் என்பதே பிரதான காரணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40ff7d95-b5e4-4640-804c-9593d80bfbc8/26-6a6a14cf20308.webp' /></p><p>
</p><p>
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாப்பதை விட, இந்த முக்கியமான கடல்
பகுதியில் இராணுவ மற்றும் பாதுகாப்பு ரீதியிலான முழுமையான கட்டுப்பாட்டைச்
செலுத்துவதே ஈரானின் திட்டமாகும்.
</p><p>
வொஷிங்டனின் தலையீடு இன்றி வளைகுடா நாடுகளுடன் தனிப்பட்ட புரிதலை
ஏற்படுத்தவும், ஒவ்வொரு மோதல் மற்றும் நெருக்கடியைப் பயன்படுத்தித் தனது
பலத்தை படிப்படியாக உயர்த்தவும் ஈரான் முயற்சித்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T15:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி, மலையக தமிழ் மக்களை உதாசீனம் செய்கிறார் - திகாம்பரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/upcountry-tamil-people-ignored-by-npp-1785336473"></link>
            <id>https://tamilwin.com/article/upcountry-tamil-people-ignored-by-npp-1785336473</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மலையக மக்களை தமிழ் மக்களை உதாசீனம் செய்வதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் தமிழ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மலையக மக்களை தமிழ் மக்களை உதாசீனம் செய்வதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>அண்மையில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருவது நல்ல விடயம் எனவும் அது காலத்தின் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p></p><h2>மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள்</h2><p>
</p><p>எனினும் ஜனாதிபதியை சந்திக்க போவதாக அவர்கள் கூறியதாகவும் தாம் ஜனாதிபதியை சந்திக்க விரும்பவில்லை என அவர்களிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>இதுவரை ஜனாதிபதி அநுரவை மூன்று தடவைகள் தாம் சந்தித்ததாகவும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை கொடுத்து வீடுகளை நிர்மானித்து தருமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bb5c2fe-aa6d-46bd-82bd-d972a1155c34/26-6a6a129ad7d32.webp' /></p><p>
</p><p>பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு 50 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் மலையக தமிழ் மக்களுக்கு பணம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
மலையக தமிழ் மக்களுக்கு இந்தியா உதவும் என அரசாங்கம் எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
நட்டஈடு வழங்குவதை ஒருபுறம் வைத்தாலும் குறைந்தபட்சம் காணிகளேனும் மலையக தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்கி இருக்கலாம் என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>காணி வழங்குவதில் தயக்கம்</h2><p>
எனினும் அரசாங்கம் காணிகளை வழங்குவதற்கும் தயக்கம் காட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.</p><p>
வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63491235-371a-4318-a2cc-4c97c115235f/26-6a6a159fcbf66.webp' /></p><p>மலையக மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு மனது இருக்க வேண்டும் எனவும் அவரை தொடர்ந்தும் சந்திப்பதில் எவ்வித பயணம் கிடையாது என தான் கருதுவதாகவும் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
</p><p>இதனால் ஜனாதிபதியை மீண்டும் சந்திப்பதில் தமக்கு உடன்பாடு கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T14:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் பிரித்தானிய-பிரெஞ்சு எண்ணெய் நிறுவனத்தால் சுற்றுச்சூழல் மாசுபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/environmental-pollution-in-congo-uk-oil-company-1785334571"></link>
            <id>https://tamilwin.com/article/environmental-pollution-in-congo-uk-oil-company-1785334571</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இயங்கி வரும் பிரித்தானிய-பிரெஞ்சு எண்ணெய்
நிறுவனமான &#039;பெரென்கோ&#039;, அப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை
ஏற்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இயங்கி வரும் பிரித்தானிய-பிரெஞ்சு எண்ணெய்
நிறுவனமான 'பெரென்கோ', அப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை
ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனால் உள்ளூர் மக்களுக்குப் பல தீவிர ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்
என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டியுள்ள 'முவாண்டா' பகுதியில் பெரென்கோ நிறுவனம்
மேற்கொண்டு வரும் தரைவழி மற்றும் கடலோர எண்ணெய் அகழ்வுப் பணிகளால் இந்த
மாசுபாடு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>இயற்கை எரிவாயு</h2><p>
</p><p>
குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் இயற்கை எரிவாயுவை எரிப்பதால்
அப்பகுதியின் காற்று மற்றும் மண்ணின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது
தணிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

மேலும், நிலத்தடி நீர் எந்த அளவுக்கு நஞ்சாகியுள்ளது என்பதைக் கண்டறிய நீரின்
மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/726ca9e3-60da-48c4-be57-30f168663bf0/26-6a6a0f0f8d2cf.webp' /></p><p>
</p><p>
சமீபத்தில் 'மனித உரிமை கண்காணிப்பு' அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பெரென்கோ
நிறுவனத்தின் செயல்பாடுகள் உள்ளூர் மக்களின் உடல்நலத்திற்குப் பெரும்
அச்சுறுத்தலாக இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தது.
</p><p>
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே கொங்கோ ஹைட்ரோகார்பன் அமைச்சகம் இந்தத்
தணிக்கை விவரங்களை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>குற்றச்சாட்டு</h2><p>

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பெரென்கோ நிறுவனம், காற்று, நீர் மற்றும்
மண் மாசுபாடு குறித்த முறைப்பாடுகளுக்குத் தகுந்த தொழில்நுட்பச் சான்றுகள்
எதுவும் இல்லை என்றும், கொங்கோ அரசின் இறுதித் தணிக்கை அறிக்கை இன்னும்
அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் இத்தகைய முடிவுகளுக்கு வருவது அவசரமானது
என்றும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64dfb0bc-076e-47f6-9378-dc9d6fe9f637/26-6a6a0f103fec9.webp' /></p><p>

2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தணிக்கை, சர்வதேச ஆலோசனைக் குழு மற்றும்
கொங்கோ அரசுப் பணிக்குழுவால் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.</p><p>

மாசுபாடு உறுதி செய்யப்படும் பட்சத்தில், கொங்கோ சட்டங்களின்படி உரிய
நஷ்டஈடு, சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகள் மற்றும் பெரென்கோ நிறுவனத்திற்கு
அபராதம் விதிக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T14:43:16+00:00</updated>
        </entry>
    </feed>
