<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-17T07:21:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பயணிகளுடன் மூடப்பட்ட தொடரூந்து நிலையங்கள் - சிக்கி தவித்த பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-station-closed-with-passengers-1789627512"></link>
            <id>https://tamilwin.com/article/railway-station-closed-with-passengers-1789627512</id>
            <summary type="text">தொடரூந்து தொழிற்சங்கங்களினால் இன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக நுகேகொட தொடரூந்து நிலையத்தின் வெளியேறும் வாசலுக்குப் பூட்டுப் போடப்பட்டு மூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடரூந்து தொழிற்சங்கங்களினால் இன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக நுகேகொட தொடரூந்து நிலையத்தின் வெளியேறும் வாசலுக்குப் பூட்டுப் போடப்பட்டு மூடப்பட்டுய்யது.</p><p>

இதனால், அவசவெல்லையில் இருந்து கோட்டை நோக்கிச் சென்ற தொடரூந்தில் ஏற நுகேகொட வந்த பயணிகள் தொடரூந்து நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
</p><p>
இதன் காரணமாக, தொடரூந்தில் வந்த பயணிகள் தொடரூந்து மேடையிலிருந்து பாதையில் இறங்கி, தண்டவாளங்களின் ஊடாக நடந்து சென்று நிலையத்திலிருந்து வெளியேறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. </p><h2><b> 

மிகவும் பரிதாபகரமான நிலை</b></h2><p>தொடரூந்தில் வந்த வயதான பெண்களினால் தொடரூந்து மேடையிலிருந்து தண்டவாளத்திற்கு இறங்க முடியாமல் போனமையால் அவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce1c270-48ab-4857-996b-cfe758f924fd/26-6aab91f53301b.webp' /></p><p>சில தொடரூந்து நிலையங்களில் ஊழியர்கள் இல்லாவிட்டாலும் நிலையங்கள் மூடப்பட்டிருக்கவில்லை. </p><p>எனினும் நுகேகொடை தொடரூந்து நிலையத்தில் மட்டும் வெளியேறும் வாசல் மூடப்பட்டிருப்பது மிகப்பெரிய தவறாகும் எனவும் பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T07:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/39th-anniversary-commemoration-thyaga-thileepan-1789626181"></link>
            <id>https://tamilwin.com/article/39th-anniversary-commemoration-thyaga-thileepan-1789626181</id>
            <summary type="text">
தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகங்களில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்று(17.09.2023) களுதாவளை, களுவாஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகங்களில் நடைபெற்று வருகின்றன.</p><p>

அந்த வகையில் இன்று(17.09.2023) களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு போன்ற பல பகுதிகளிலும் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p> 

செப்டம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரைக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் நடைபெறும். 

செப்டம்பர் 15 ஆம் திகதி யாழ் நல்லூரிலே அவர் உண்ணா நோன்பை ஆரம்பித்த தினம் என்பதால் வடக்கு கிழக்கில் மக்கள் திலீபனை நினைவு கூருதலை ஆரம்பித்திருந்தார்கள்.
</p><p>
 எமது இந்த ஊர்த்தி பவனியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவிலிலிருந்து ஆரம்பமாகி அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக மக்களின் அஞ்சலிக்காகச் சென்று பின்னர் முல்லைத்தீவு, மன்னார் கிளிநொச்சி ஊடாக நல்லூரைச் சென்றடைவது வழமை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b998db-88ba-458f-a921-7ad1241000c6/26-6aab8ab5aa394.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகிய ஊர்தி பவனி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ளது. </p><p>

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
</p><p>
26 ஆம் திகதி திலீபன் உயிர் தியாகம் செய்த நல்லூரிலே மிகப் பிரம்மாண்டமான இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் என இதன்போது கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T06:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renuka-perera-arrested-bribery-inquiry-comission-1789626591"></link>
            <id>https://tamilwin.com/article/renuka-perera-arrested-bribery-inquiry-comission-1789626591</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>56 அனுமதிப்பத்திரங்கள்&nbsp;&nbsp;</h2><p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/667a4d71-873e-443e-bc09-642c31994fdd/26-6aab8b48b898a.webp' /></p><p>

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட நடைமுறை தொடர்பானவையே இக்குற்றச்சாட்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>

விசாரணை மற்றும் அதனைத் தொடரும் சட்ட நடவடிக்கைகள் குறித்த மேலதிக விவரங்கள் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாகவும் பெரேரா மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T06:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் கருகிய அன்னாசிப் பயிர்கள்: நிர்க்கதியாகி நிற்கும் விவசாயி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pineapple-crops-withered-by-drought-1789626001"></link>
            <id>https://tamilwin.com/article/pineapple-crops-withered-by-drought-1789626001</id>
            <summary type="text">தீவிர வறட்சி காரணமாக பல இலட்சம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்ட பயிர்கள்
முற்றிலும் அழிந்துபோயுள்ள நிலையிலும், அதிகாரிகள் எவரும் தங்களைக்
கண்டுகொள்ளவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவிர வறட்சி காரணமாக பல இலட்சம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்ட பயிர்கள்
முற்றிலும் அழிந்துபோயுள்ள நிலையிலும், அதிகாரிகள் எவரும் தங்களைக்
கண்டுகொள்ளவில்லை என ஹிங்குராக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 31 சிங்ஹகம
பகுதியைச் சேர்ந்த விவசாயியான ஏ.ஜி. திலகரத்ன பண்டார கவலை தெரிவித்துள்ளார்.
</p><p>கூலி ஆட்களை
அமர்த்திச் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னாசி மற்றும் வாழைப்பழம்
ஆகியவற்றை இவர் பயிரிட்டுள்ளார்.</p><h2>கடுமையான வறட்சி</h2><p> </p><p>இதற்காகச் சுமார் 4 முதல் 5 லட்சம் ரூபாய்
வரை செலவு செய்துள்ளதாகக் கூறும் இவர், நிலவும் கடுமையான வறட்சி மற்றும்
கிணறுகளில் நீர் வற்றியதன் காரணமாகப் பயிர்கள் அனைத்தும் முற்றிலுமாக
அழிந்துபோயுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62435ca5-3842-4646-ac6e-d95fc49e4606/26-6aab88c036a3d.webp' /></p><p>
</p><p>
இது குறித்துப் பகுதி கிராம உத்தியோகத்தருக்குத் தகவல் தெரிவித்தும், அவர்
இதுவரை சேதமடைந்த பயிர்களை நேரில் வந்து பார்வையிடக்கூட இல்லை எனப்
பாதிக்கப்பட்ட விவசாயி குற்றம் சாட்டுகின்றார்.</p><h2>பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதில்லை</h2><p> அத்துடன்,
தகுதியற்றவர்களுக்கும் கைவிடப்பட்ட வீடுகளுக்கும் நிவாரண நிதி
வழங்கப்படுவதாகவும், உண்மையில் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு எந்தவித
உதவிகளும் கிடைப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/541744c5-5161-4c1b-9a8f-e7fdf7ae9e85/26-6aab88c10fac8.webp' /></p><p>
</p><p>
மேலும், தமது பிரதேச செயலகப் பிரிவு 70 கி.மீ தொலைவில் உள்ள ஹிங்குரக்கொடயில்
அமைந்துள்ளதால், சேவை தேவைகளுக்காக அங்கு சென்று வருவது மிகுந்த சிரமத்தை
ஏற்படுத்துவதாகவும், எனவே தங்களை அருகிலுள்ள கந்தளாய் (சுமார் 18 கி.மீ)
பிரிவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தகுதியான அதிகாரிகளை
நியமித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa1717d-b1fe-4a8c-ae79-09a2b461c892/26-6aab88c1e1960.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T06:32:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சந்தேகத்திற்கிடமான சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspicious-death-in-a-deserted-area-horona-1789619377"></link>
            <id>https://tamilwin.com/article/suspicious-death-in-a-deserted-area-horona-1789619377</id>
            <summary type="text">களுத்துறை - ஹொரன பொலிஸ் பிரிவில் உள்ள இலிம்பா சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆற்றின் மறுகரையில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை - ஹொரன பொலிஸ் பிரிவில் உள்ள இலிம்பா சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>
ஆற்றின் மறுகரையில் உள்ள வெற்றிடத்தில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, ஹொரன பொலிஸ் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

இவ்வாறு மீட்கப்பட்டவர் பொக்குனுவிட்டவை சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b168d70a-2595-450b-aebf-feefd2905959/26-6aab8828e0850.webp' /></p><p>
இந்த சடலம் மீதான நீதித்துறை விசாரணை இன்று (17) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் குறித்து ஹொரன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T06:26:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vaharai-divisional-coordinating-committee-meeting-1789625156"></link>
            <id>https://tamilwin.com/article/vaharai-divisional-coordinating-committee-meeting-1789625156</id>
            <summary type="text">கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம்
(16.09.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.



பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம்
(16.09.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
</p><p>


பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி
பிரபு தலைமையில், பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனின் ஏற்பாட்டில்
இந்த கூட்டம் நடைபெற்றது.</p><h2>&nbsp;ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்</h2><p>
</p><p>


இந்த கூட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும்
அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன்,
எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பரிந்துரைகளும்
முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16fc3d18-f52b-44a3-a8e5-6e47bd9060b5/26-6aab848937c5f.webp' /></p><p>
</p><p>


இதன்போது சின்னப் புணாணைப் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை,
நெல்கொள்வனவு நடவடிக்கைகள் மற்றும் பனிச்சையடிக் குளத்தின் விஸ்தரிப்பு,
காரமுனை கிராமத்தில் இடம்பெறும் காடழிப்பு மற்றும் காணி ஆக்கிரமிப்பு,
சட்டவிரோத மண்அகழ்வு, கதிரவெளி பிரதேசத்தில் கடல் அரிப்பைத் தடுக்கும்
செயற்றிட்டம், மதுரங்கேணி வீட்டுத்திட்ட அபிவிருத்தி, மேவாண்டகுளக் கிராம
மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்களின் காணி விடுவிப்பு, மீனவர் கூட்டுறவுச்
சமாசத்திற்குத் தேவையான காணி மற்றும் கட்டடத் தேவைகள், வாகரை 'மில்கோ' நிறுவன
அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.</p><h2>சிறிநாதின் கோரிக்கை</h2><p>



மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாதின் கோரிக்கைக்கு அமைவாக,
தோணிதாண்டமடு கிராமத்தின் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகார எல்லையை மட்டக்களப்பு
மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகார எல்லைக்குள் மாற்றுவதற்கான தீர்மானம்
கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab7b7dea-7a2f-4413-a04e-d51433eb240a/26-6aab848a1a056.webp' /></p><p>



கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர்
இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைத் தவிசாளர்,
பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள், விவசாய மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப்
பலர் கலந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T06:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு வைத்தியசாலை புதிய மருத்துவ விடுதி நிர்மாணப் பணிகள்.. ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/construction-work-medical-ward-mullaitivu-hospital-1789624574"></link>
            <id>https://tamilwin.com/article/construction-work-medical-ward-mullaitivu-hospital-1789624574</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் நோயாளர் நெரிசலைக்
குறைக்கும் நோக்கில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா
செலவில் நிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் நோயாளர் நெரிசலைக்
குறைக்கும் நோக்கில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா
செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி மருத்துவ விடுதித்
தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
</p><p>
மின் தூக்கிகள், குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள்,
தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோகக்
கட்டமைப்பு போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பகுதி அமைக்கப்படவுள்ளது.
</p><p>
தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு
மேற்பட்டோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும்
இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
</p><p>
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த
ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில்,

"முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையானது குறைந்த படுக்கை வசதிகளைக் கொண்ட
மருத்துவமனையாகக் காணப்படுவதால், படுக்கை கொள்ளளவை அதிகரிப்பதற்காக இந்தக்
கட்டடம் அமைக்கப்படுகின்றது.</p><h2>வரலாற்றுப் பிணைப்பு</h2><p>
</p><p>
வெளிநாட்டுப் பயிற்சி முடித்துத் திரும்பும் விசேட வைத்தியர்களை நியமிப்பதில்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக
நிதியுதவி வழங்கிய இந்திய அரசுக்கும் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் நன்றிகள்." என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca3e0e7b-82b5-4ce8-bc2b-3399a57e3973/26-6aab825cc1ac8.webp' /></p><p>
</p><p>
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில்,

"இந்தியா - இலங்கை இடையிலான நீண்ட கால நட்புறவின் சான்றாக இந்தத் திட்டம்
விளங்குகின்றது.</p><p>ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்தியா
தொடர்ந்து நம்பகமான பங்காளியாகத் திகழும்.

'அயல் நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் கீழ் இலங்கையுடனான உறவு வெறும்
அயல்நாடு என்ற நிலையைத் தாண்டிய வரலாற்றுப் பிணைப்புமிக்கது." - என்றார்.
</p><p>
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த
ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடன் சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.
</p><p>
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயர்
வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும்
இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T06:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்திற்குள் ஊடுறுவியுள்ள புதிய நோய்! கடும் மன அழுத்தத்தால் திக்கித் திணறும் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-new-ailment-emerging-within-the-rajapaksa-family-1789622436"></link>
            <id>https://tamilwin.com/article/a-new-ailment-emerging-within-the-rajapaksa-family-1789622436</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தில் இன்று பலர், உணவில் கவனம் செலுத்த முடியாமல், சரியாக உறங்க முடியாமல், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று பிரதி அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தில் இன்று பலர், உணவில் கவனம் செலுத்த முடியாமல், சரியாக உறங்க முடியாமல், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். </p><p>

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நமது நாட்டில் பணத்தைக் கொள்ளையடித்து, இலஞ்சம் பெற்றுக்கொண்டு தப்பித்தவர்கள், பாதாள உலகத்தினரிடம் இருந்தும் இலஞ்சம் பெற்றவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பலர் நாட்டை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.</p><h2>அதிகரித்துள்ள நோய்&nbsp;</h2><p> </p><p>

இதில் பாரதூரமான விடயங்கள் அனைத்தும் தற்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன. 

எனவே, இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை உரிய அலுவலகங்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
சட்டத்தில் இருந்து தப்புவதற்காக பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி, மறைந்திருந்த அனைவரும் தற்போது&nbsp; அடுத்தடுத்து சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9e31f5-4d94-4422-bc29-c2ea053da45f/26-6aab7b644ac80.webp' /></p><p>
</p><p>
அதனால், அது நாமல் ராஜபக்சவாக இருந்தாலும் சரி, வேறு எந்த ராஜபக்சவாக இருந்தாலும் சரி, விக்ரமசிங்கவாக இருந்தாலும் அது சட்டத்திற்கு முக்கியமல்ல. சட்டம் அனைவருக்குமே சமமானதுதான். </p><p>

ராஜபக்ச குடும்பத்தைப் பொறுத்தவரையில், ஒருவருக்கேனும் வழக்குகள் இல்லாமல் இல்லை. டேசி ஆச்சி முதல், ஷிரந்தி ராஜபக்சவின் மைத்துனன் மற்றும் ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் ஆகியோர் வரை வழக்குகள் உள்ளன.

இப்படி முழு குடும்பத்திற்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன. </p><p>இப்படியான நிலையில், அவர்கள் சிங்கப்பூர் அல்ல, அமெரிக்காவுக்கும் சென்று சிகிச்சைப் பெற வேண்டிய நிலை ஏற்படுமா என்று எமக்கு&nbsp; சொல்ல முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74294ca-1013-495e-b1f5-05b1a1a5fa5e/26-6aab7b6533b97.webp' /></p><p>

எது எப்படியிருப்பினும் இன்று, வழக்குகள் தொடரப்பட்டு, சந்தேகத்தின் பேரில் அல்லது&nbsp; பிணையில் வெளியில் இருக்கும் பலருக்கு தற்போது உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதை நாம் அறிவோம்.</p><p>

அவர்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு சரியான தூக்கம் இல்லை. அவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்.
</p><p>
அந்த மன அழுத்தத்தின் காரணமாக, அவர்கள் சில நேரங்களில் பொதுவெளிகளில் உளறுகின்றனர். அதனைத் தான் நாங்கள் இப்போது ஊடங்களில் காண்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓராண்டு ஆகியும் ஜனாதிபதியை சென்றடையாத முக்கிய அறிக்கை.. கல்வி அமைச்சுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/futa-says-talks-pm-harini-yield-no-solution-1789620981"></link>
            <id>https://tamilwin.com/article/futa-says-talks-pm-harini-yield-no-solution-1789620981</id>
            <summary type="text">பல்கலைக்கழக அமைப்பில் தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரியவுடன் நேற்று மாலை நடைபெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழக அமைப்பில் தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரியவுடன் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.</p><p>

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாணவர் சேர்க்கை, விரிவுரையாளர் பற்றாக்குறை மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நீண்ட காலம் செலவிட வேண்டிய நிலை உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய FUTA தலைவர் ருசிக பெர்னாண்டோ, மாணவர் சேர்க்கை கணிசமான காலத்திற்கு ஒத்திவைக்கப்பட வேண்டியிருக்கும் என்பதைத் தங்கள் சங்கம் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முக்கிய ஆவணங்கள்..&nbsp;</h2><p>

மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதியுடன் ஏற்கனவே எட்டப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் துணைவேந்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் இருந்தபோதிலும், அந்த முன்மொழிவுகள் இன்னும் ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடையவில்லை என்று பிரதமர் நேற்று தங்களுக்குத் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2604a8aa-2a83-4823-bf94-bd1f6bf33759/26-6aab79833ddcb.webp' /></p><p>

"நாங்கள் ஆச்சரியமடைந்தோம். சுமார் ஓராண்டாக நாங்கள் காத்திருக்கும் இவ்வளவு முக்கியமான ஒரு விடயம், இன்னும் உரிய இடத்தைச் சென்றடையவில்லை" என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.</p><p>அதேவேளை, நெருக்கடிக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதிலுமிருந்து விரிவுரையாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றதாகவும், அது இரவு 10 மணி வரை நீடித்ததாகவும் FUTA செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449ae3d9-7e5e-4832-bf86-f0c8f2814400/26-6aab798404aab.webp' /></p><p>
</p><p>மேலும் அவர், கல்வித் துறையில் அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டிய அவர், "இத்தகைய கலந்துரையாடல்கள் வைக்கோல் போரில் முள்ளைத்தேடுவதைப் போன்றவை. </p><p>அரசாங்கத்திற்கு அக்கறை இல்லாததால், அதனால் கல்வி குறித்துப் பேச முடியாது. எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நாங்கள் நிச்சயமாக முடிவெடுப்போம்" என்று கூறியுள்ளார்.
</p><p>
அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மாணவர் சேர்க்கையில் மேலும் தாமதம் ஏற்படும் என்றும், இது உயர்கல்வி அமைப்பின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் FUTA எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:27:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து: சாரதி தொடர்பில் வைத்திய பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி&amp;nbsp; விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி&nbsp; விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p>போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>விபத்து தொடர்பிலான விசாரணைகளின் போது, ​​சாரதியின் உடலில் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இருந்ததை தடயவியல் வைத்திய பரிசோதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2SYTyf9oUlE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்து குறித்த மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.</p><p>

நேற்றிரவு (16) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>இந்த விபத்து தொடர்பான பொலிஸாரின் கூற்றுப்படி, செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d3ee77c-9573-4a2b-bf46-f178827de425/26-6aab66b2ce044.webp' /></p><p>
இதனைத்தொடர்ந்து அந்த கார் இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.</p><h2>உயிரிழந்தவர்களின் விபரம்</h2><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளிவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் இருவர் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36267214-b0a9-4fd5-86e5-d238a7e8d490/26-6aab66b3814c0.webp' /></p><p> 

மூன்றாவது நபரின் வயது கண்டறியப்படாத நிலையில் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த விபத்து தொடர்பில் மட்டக்குளியை சேர்ந்த 52 வயதான கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> </p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T05:20:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பலியான நெருங்கிய தோழிகள் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalutara-train-accident-to-girls-death-1789611973"></link>
            <id>https://tamilwin.com/article/kalutara-train-accident-to-girls-death-1789611973</id>
            <summary type="text">களுத்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி உயிரிழந்த இரு பெண்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று அதிகாலை ( 16) அநுராதபுரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி உயிரிழந்த இரு பெண்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
நேற்று அதிகாலை ( 16) அநுராதபுரம் நோக்கி தொடருந்தில் பயணிப்பதற்காக, தாய், மகள் மற்றும் தாயின் தோழி ஆகியோர் களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடைக்கு வருவதற்காக தொடருந்து பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே இருவரும் தொடருந்தில் மோதி உயிரிழந்தனர்.</p><h2>உயிரிழந்த பெண்கள்&nbsp;</h2><p>

தொடருந்து தண்டவாள பழுதுபார்ப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏற்றிச்சென்ற தொடருந்தே அவர்கள் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/871d3bef-a417-4afb-bf58-74715fcc6ded/26-6aab60323abca.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் குருகே ஸ்ரீயானி, ரேணுகா தமயந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p><b>

இந்த விபத்து தொடர்பில் உயிரிழந்த ஸ்ரீயானியின் மகள் சித்துமினி ஜெயநெத்தி சாட்சியமளிக்கையில்,
</b></p><p>
இந்த விபத்தில் உயிரிழந்தவர் என் தாயார், இரண்டாவது குருகே ஸ்ரீயானி. நாங்கள் ஒரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக அநுராதபுரம் செல்லவிருந்தோம். அந்த பயணத்தில் என் தாயார், நான், மற்றும் என் தாயாரின் தோழி ரேணுகா அத்தையும் சென்றோம்.</p><p>

16 ஆம் திகதி அதிகாலையில் களுத்துறையில் பேருந்திலிருந்து இறங்கினோம். பிறகு, வயல்வெளி வழியாக தொடருந்து தண்டவாளம் வரை நடந்தோம். அந்த நேரத்தில் தொடருந்து வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தொடருந்து தண்டவாளம் வழியாக தொடருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம். என் அம்மா தொடருந்து வருவதாக சொன்னபோது, ​​தொடருந்து அருகில் இருந்தது. நான் எனது இரண்டு பைகளையும் நடைமேடையில் வீசிவிட்டு, இரு கைகளாலும் அதன் மீது ஏறினேன்.</p><p> என் அம்மாவையும் ரேணுகா அத்தையும் தூக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை. அதற்கு நேரமில்லை. என் அம்மாவும் ரேணுகா அத்தையும் நடைமேடையைக் கட்டிப்பிடித்துக்கொண்டனர். அந்த நேரத்தில், அவர்கள் இருவரும் தொடருந்தில் மோதி வெகுதூரம் தூக்கி வீசப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில்,
தொடருந்து மோதலில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணங்களுக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட விவகாரம் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vasantha-karannagoda-and-yoshitha-case-heard-today-1789619922"></link>
            <id>https://tamilwin.com/article/vasantha-karannagoda-and-yoshitha-case-heard-today-1789619922</id>
            <summary type="text">இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>
</p><p>இந்த வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்ட நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e75811b5-ba8d-4074-85b6-b5780480786b/26-6aab74afdcf40.webp' /></p><p>முறையான தகுதிகளைப் பெற்றிருக்காத நிலையில், குற்றம்சாட்டப்பட்ட யோஷித ராஜபக்சவை பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம்சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>கடந்த 2006ம் ஆண்டு யோஷித ராஜபக்ச, கடற்படையில் (Sri Lanka Navy) சேருவதற்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பூர்த்தி செய்யாத நிலையில், கடற்படையின் விதிமுறைகளை தளர்த்தி இரண்டாம் லெப்டிணன்ட் பதவிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக யோஷித ராஜபக்ச ஜூன் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்நிலையில், யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொண்டமை மற்றும் அரசு செலவில் அவரை பிரித்தானியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பியமை போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணாமல் போன மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-missing-in-katunayake-airport-1789620426"></link>
            <id>https://tamilwin.com/article/women-missing-in-katunayake-airport-1789620426</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். பிங்கிரிய பகுதியின் வீரபோகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். </p><p>காணாமல் போன அப்பெண் தமரி செவ்வந்திகா விஜேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> முறைப்பாட்டிற்கமைய, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5.12 மணியளவில் அவர் தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.</p><p> </p><h2><b>பெண்ணின் உடைமைகள்</b></h2><p>வீடு திரும்பும்போது தங்கள் ஐந்து பிள்ளைகளுக்கும் சொக்லட் வாங்கி வருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5777e0a-d409-4d34-b288-217120fe2ccd/26-6aab74a31c8c7.webp' /></p><p>குறித்த பெண்ணின் உடைமைகள் காணாமல் போனமை குறித்தும் விமான நிலையப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். </p><p>ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக நாடு திரும்பியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>தனது மனைவியை கண்டுபிடிப்பதில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுத்து உதவுமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


</p>]]></content>
            <updated>2026-09-17T05:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நற்சான்றிதழ் பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-clearance-certificate-srilanka-1789619040"></link>
            <id>https://tamilwin.com/article/police-clearance-certificate-srilanka-1789619040</id>
            <summary type="text">பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி இதன்போது ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி இதன்போது ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>பிரச்சினைகளை தெரிவிக்க முடியும்</h2><p> 

24 மணி நேரமும் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸ் தலைமையகத்தின் விசேட செயல்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p> 

மேலும், இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், 071 8595946, 071 8595947 மற்றும் 071 8595948 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad971356-9a54-47a5-a2c9-d599d0c5eaa5/26-6aab6e895b785.webp' /></p><h2>விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதேவேளை கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழியில் பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை, பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக நற்சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T04:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை மேடைக்கு அழைத்து வர திட்டமிடும் மொட்டுக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-continues-to-attend-public-meetings-1789616948"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-continues-to-attend-public-meetings-1789616948</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து வருவோம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

வலுவான தலைவர்களைக் காண வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் மக்களிடம் உண்டு. எனவே எதிர்காலத்திலும் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்னிலையில் கொண்டு வருவோம்.</p><h2>மிகச்சிறந்த தலைவர்&nbsp;</h2><p> </p><p>

சக்கர நாற்காலியில் வைத்தேனும் அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.
</p><p>
மகிந்த ராஜபக்சவின் தற்போதைய உடல்நிலையைக் கருத்திற் கொண்டு ஏன் அவரை தொடர்ந்து மேடைக்குக் கொண்டு வருகின்றீர்கள் என கேள்வி எழுப்பப்படுகின்றது. </p><p>

அவர் எங்கள் அரசியல் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர். ஆகவே, அவர் உயிருடன் இருக்கும் வரை அவரை மக்கள் முன்னிலைக்கு கொண்டு வருவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acd114bc-bc3f-403a-a1c7-6738072e87c0/26-6aab6ad6e3c73.webp' /></p><p>
</p><p>
மேலும், அநுராதபுர பேரணி குறித்து விமர்சனங்களை முன்வைக்கும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஆட்சியாளர்கள் தங்கள் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.
</p><p>
ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்களால் நாட்டிற்கு ஒரு பாரதூரமான மற்றும் ஆபத்தான நிலை உருவாகி வருகின்றது. </p><p> 

அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதிலும், தாங்கள் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தை அடையவில்லை என்று கூறும் இவர்கள், மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8ed4DHFgaf0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-17T04:21:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[துமிந்த வழியில் தப்பியோடிய ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-s-singapore-visit-and-current-situation-1789616371"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-s-singapore-visit-and-current-situation-1789616371</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
</p><p>தற்போது அங்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிகிச்சையின் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளவே இந்த வழிமுறையை பின்பன்றியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> </p><h2><b>

நிதி முறைகேடுகள் </b></h2><p>ஏனெனில் சிரிலிய சவிய அறக்கட்டளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab705890-ef7b-47ea-af6e-6a55ac316671/26-6aab64a56ba72.webp' /></p><p>கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய உடனேயே நேரடியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
</p><p>
ஆரம்பத்தில் அவருக்கான அறிவித்தல் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருந்தாலும், அவர் வெளிநாடு செல்லவிருப்பதை அறிந்த நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர். </p><h3><b>

அழைப்பாணை </b></h3><p>அவர் விமானத்தில் ஏறவிருந்த தருணத்தில் அந்த அழைப்பாணை அவரிடம் கையளிக்கப்பட்டது. அவருடன் சென்ற உறவினர் ஒருவர் அவருக்கு பதிலாக அந்த ஆவணத்தைப் பெற்றுக்கொண்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04a49a7f-5207-4280-a476-c78f690d2081/26-6aab64a624818.webp' /></p><p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரா படுகொலைக்கு தொடர்புடைய துமிந்த சில்வா, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் நீண்ட காலம் தங்கியிருந்தார். </p><p>

அக்காலகட்டத்தில், வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிப்பதற்காக மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் அறிக்கைகளைப் பயன்படுத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T03:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பதிவாகும் 80 வீத மரணங்களுக்கான ஏது குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/non-communicable-decease-are-main-cause-of-death-1789614391"></link>
            <id>https://tamilwin.com/article/non-communicable-decease-are-main-cause-of-death-1789614391</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் பதிவாகும் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களினாலேயே ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் பதிவாகும் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களினாலேயே ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களே முதன்மை பெறுகின்றன என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சை வளாகத்தின் கட்டுமானப் பணிகளைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fb03bcb-c364-41a3-8b90-9e93ee7def9a/26-6aab5938bdaa0.webp' /></p><p> உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய இரண்டும் இணைந்து செயற்படும்போது உடலில் பல கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதன் மிக மோசமான மற்றும் முக்கிய விளைவாகவே மாரடைப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
நாட்டில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதமானவர்களே நோயைச் சரியாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.</p><p> அதேபோன்று, நீரிழிவு நோயாளிகளில் 25 சதவீதமான மிகக் குறைந்த அளவினரே நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.</p><p>
தொற்றா நோய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை புதிய தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T03:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பெருமளவிலான வழக்கு கோப்புகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-court-case-files-1789613539"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-court-case-files-1789613539</id>
            <summary type="text">கொழும்பு நகரில் பெய்த கனமழை காரணமாக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பெருமளவிலான வழக்குக் கோப்புகள் நீரில் நனைந்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகரில் பெய்த கனமழை காரணமாக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பெருமளவிலான வழக்குக் கோப்புகள் நீரில் நனைந்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>பழைமையான கொழும்பு மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்தின் ஒரு பகுதி அண்மையில் இடிந்து விழுந்தன.&nbsp;</p><h2>கொள்கலன்களில் சேமித்து&nbsp;வைக்கப்பட்டிருந்த&nbsp;கோப்புகள் </h2><p>இந்த வழக்குக் கோப்புகள் கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கனமழையில் சிக்கி நனைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a9c1592-6e47-4218-8318-fb881d0a0ed0/26-6aab55e4dfcb5.webp' /></p><p>
இவ்வாறு நீரினால் நனைந்த வழக்குக் கோப்புகளை வெயிலில் போட்டு உலர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிமன்ற வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.&nbsp; &nbsp;</p><p>நேற்று முன்தினம் பெய்த கன மழையின் போது இந்த வழக்கு கோப்புகள் இவ்வாறு நனைந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T02:52:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-singapore-visit-reson-1789609659"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-singapore-visit-reson-1789609659</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச&amp;nbsp;நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச&nbsp;நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்துள்ளது.</p><p>எதிர்வரும் 24 ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகும் செய்தி</span></p><p>ஷிரந்தி ராஜபக்‌ச நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce7bfad7-b73f-4e3c-bcb7-11c6ee6c24c2/26-6aab536a4fa8d.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

மேலதிக சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளார்.</p><p> அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒருசில ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான அவசியம் ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு கிடையாது. நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னிலையாகுவார்.</p><h2>அதிகாரம் நிலையற்றது</h2><p>
</p><p>
அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். ஆகவே போலியான கருத்துக்களை சமூகமயப்படுத்தி உண்மையை மறைக்க முடியாது. சகல சவால்களையும் நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p>சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (16) அதிகாலை சுமார் 1:10 மணியளவில் அவர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc9e132-5f5c-4988-bd12-28d16a0a22d1/26-6aab4cc92ee89.webp' /></p><p>அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இதேவேளை, ஷிரந்தி தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாகவும், நேற்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் FCID இன் கடிதத்தை திடீரென வழங்கியதாகவும் குடும்ப உறுப்பினர் விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T02:34:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் முற்றிய வாக்குவாதம்! விடுதியொன்றின் மேல் தளத்திலிருந்து தள்ளப்பட்ட நபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotel-employee-thrown-from-upper-floor-to-death-1789608641"></link>
            <id>https://tamilwin.com/article/hotel-employee-thrown-from-upper-floor-to-death-1789608641</id>
            <summary type="text">கம்பஹா&amp;nbsp; - சீதுவ நகருக்கு அருகிலுள்ள ஒரு விடுதியின் மேல் தளத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா&nbsp; - சீதுவ நகருக்கு அருகிலுள்ள ஒரு விடுதியின் மேல் தளத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விடுதியின் மேல் தளத்தில் தங்கியிருந்த 49 வயதுடைய ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>அவர் இரவு மது அருந்திக்கொண்டிருந்தபோது, ​​மற்றொரு ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து மேல் தளத்திலிருந்து தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என்று இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e50fb6-d291-4a7f-a543-eb898765451f/26-6aab496950366.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் குறித்து சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T01:59:13+00:00</updated>
        </entry>
    </feed>
