<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-27T12:18:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் சுட்டுக்கொலை : பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/this-year-15-persons-gun-shoot-death-1785153064"></link>
            <id>https://tamilwin.com/article/this-year-15-persons-gun-shoot-death-1785153064</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
பதிவாகியுள்ளதோடு, 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்
என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
பதிவாகியுள்ளதோடு, 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்
என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதில் இம்மாதம் 11ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையிலான
14 நாள்களுக்குள் மாத்திரம் 10 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன. </p><p>இந்த இரண்டு வாரக் காலப்பகுதியில் மாத்திரம் 3 பேர்
உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p></p><h2>திட்டமிடும் பிரதான குற்றவாளிகள்&nbsp;</h2><p>துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர்,
அனைத்துத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் திட்டமிடப்பட்ட பாதாள உலகக்
குற்றங்கள் மற்றும் சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை என்று
குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54b9c5de-bd40-4ba6-aff6-aec93b97e86a/26-6a6749cb75acd.webp' /></p><p>தாக்குதல்களைத் திட்டமிடும் பிரதான குற்றவாளிகள் பலர் வெளிநாடுகளில்
இருந்துகொண்டு, தங்கள் எதிரிக் கும்பலின் உறவினர்கள் அல்லது உதவியாளர்களை
இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர். </p><p>ஒப்பந்தக்
கொலைகளுக்குப் பணத்துக்குப் பதிலாகச் சிறிய அளவிலான போதைப்பொருள்களே கூலியாக
வழங்கப்படுவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைக்குக் கடுமையாக
அடிமையானவர்களே இத்தகைய கொலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர்.
</p><p>
கடந்த 25ஆம் திகதி அன்று கொழும்பு - பெல்லன்விலையில் நடந்த கொலைச்
சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளைச்
செலுத்தியவர் ஆகிய இரு சந்தேகநபர்களும் சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலத்தில்
கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>பொலிஸ்மா அதிபரின் நேரடி வழிகாட்டலின் கீழ்,
தொலைபேசி மற்றும் தகவல் தொடர்புப் பகுப்பாய்வுகள் உட்பட உளவுத்துறை
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொலை</h2><p>இம்மாதம் 11ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இடம்பெற்ற முக்கியத் துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவங்கள் வருமாறு:-
</p><p>
ஜூலை 11: மாத்துகம, நெபொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த
துப்பாக்கிதாரிகள் வீடொன்றை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எவருக்கும்
காயம் ஏற்படவில்லை.</p><p>
ஜூலை 15: கட்டுநாயக்கவில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகநபர்
ஒருவர் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரியின் சேவைத் துப்பாக்கியைப் பறித்து அவர்
மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அதிகாரி காயமடைந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df82459d-a441-4ffd-a8d2-4131032b2ece/26-6a6749cc4a186.webp' /></p><p>
ஜூலை 16: நவகமுவ, வண்டுரம்புமுல்ல பகுதியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர்
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
</p><p>
ஜூலை 19: தெஹிவளை – கல்கிஸ்ஸை பொது மயானத்தில் பணியாற்றிய 56 வயதுடைய
பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர்
காயமடைந்தார்.</p><p>&nbsp;ஜூலை 19: பிலியந்தலை, பொக்குந்தர பகுதியில் வாளால் தாக்க முயன்ற 24 வயதுச்
சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார்.
</p><p>
ஜூலை 21: தேவிநுவர பகுதியில் கடற்றொழிலாளி ஒருவரின் வீட்டை நோக்கி காரில் வந்த
ஆயுததாரிகள் பல தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயிர்ச்சேதம் எதுவும்
ஏற்படவில்லை.
</p><p>
ஜூலை 22: பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீடு மீது
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் எவ்வித
காயமுமின்றி உயிர்தப்பினர்.
</p><p>
ஜூலை 23: வத்தளை, பள்ளியாவத்தை பகுதியில் குழந்தையின் பிறந்தநாள் விழா
நடைபெற்ற மண்டபத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
</p><p>
ஜூலை 23: தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானம் அருகே இடம்பெற்ற
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.
</p><p>
ஜூலை 25: தெஹிவளை – பொரலஸ்கமுவ வீதியில் அமைந்துள்ள பெல்லன்வில நடைபாதை
நுழைவாயிலுக்கு அருகில் 55 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்
கொல்லப்பட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனப் பிரஜை கடத்திக் கொலை: 3 சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-chines-suspects-are-went-china-1785153246"></link>
            <id>https://tamilwin.com/article/3-chines-suspects-are-went-china-1785153246</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கொலை செய்யப்பட்ட சீனப் பிரஜை, கணினி மூலம் நிதி மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.
</p><p>கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை விளக்கும் வகையில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da256144-4d5e-4010-8cbe-15ad1ba6fcb5/26-6a6746e041470.webp' /></p><p>
</p><p>கடந்த ஜூலை 23ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் துறைமுக நகரப் பகுதியில் இரண்டு குழுக்களைச் சேர்ந்த சீனப் பிரஜைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
</p><p>கொல்லப்பட்ட சீனப் பிரஜையின் சடலம் எஹெலியகொட பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் நாட்டிலிருந்து தப்பியோட முயன்ற இரு முக்கிய சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>இச்சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
அவர்களில் 3 சீனப் பிரஜைகள் ஏற்கனவே இலங்கையை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரத் தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இக்கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு காற்றுத் துப்பாக்கிகள், கைத்தொலைபேசி ஒன்று, வாக்கி டாக்கி சாதனம் ஒன்று மற்றும் பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் மற்றும் சீன அரசாங்கத்துடன் இணைந்து முழுமையான ஒருங்கிணைப்புடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T11:58:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை ஆட்டிப் படைக்கும் மறைகரம்..! அநுரவை விட பலம்பொருந்திய மர்ம நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-is-powerful-than-anura-1785142809"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-is-powerful-than-anura-1785142809</id>
            <summary type="text">இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை விட பாதாள உலகம் குழு தலைவர் கஞ்சி பானை இம்ரான் செல்வாக்கு மிக்கவர் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை விட பாதாள உலகம் குழு தலைவர் கஞ்சி பானை இம்ரான் செல்வாக்கு மிக்கவர் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த நாட்டு மக்கள் அநுரகுமார திசாநாயக்கவிற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வழங்கிய போதிலும் தற்பொழுது நாட்டை ஆள்பவர்கள் வேறும் மூன்று நபர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>அநுர போர்வையில் ஆட்சி செய்யும்&nbsp;கஞ்சிபானி இம்ரான்</h2><p>
</p><p> ஜேவிபி கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரான் ஆகியோரே நாட்டை ஆட்சி செய்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc1cef3-0131-46cf-bb79-2e8ee7483313/26-6a673d8bdd0ff.webp' /></p><p>
இலங்கையின் வரலாற்றில் போர்த்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலங்களிலும் பௌத்த பெரஹர நிகழ்வுகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதில் தலையீடு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எனினும் தற்பொழுது பெரஹரா ஒன்றில் எவ்வாறான அங்கங்களை உள்ளடக்க வேண்டும் என்பதனை பௌத்தர் அல்லாத ஒருவர் தீர்மானிக்கும் அளவிற்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.</p><h2>தலதா மாளிகை பெரஹரா நிகழ்வில் ஏற்படவுள்ள மாற்றம்</h2><p>
இரண்டு பௌர்ணமி தினங்களில் பாதாள உலகக் குழுக்களை இல்லாது ஒழிப்பதாக கூறிய நபர் ஒருவரது வார்த்தைகளை நம்பி மக்கள் வாக்களித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/547811f8-7215-447a-9932-9f5ba359aa66/26-6a673d8c8c26b.webp' /></p><p>
</p><p>எனினும் உண்மையில் தற்பொழுது நாட்டை ஆட்சி செய்பவர் அநுர குமார திஸாநாயக்க அல்ல வேறு மூவர் என்பது தற்பொழுது மக்களுக்கு புரிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பௌத்த பெரஹர நிகழ்வு ஒன்றில் காவடி நடனத்தை உள்ளடக்குவதா இல்லையா என்பதை கஞ்சிபானி இம்ரானே தீர்மானிக்கின்றார் என அவர் சுட்டிக்காட்டிவுள்ளார்.</p><p>
இலங்கை வரலாற்றில் இதுவரையில் பௌத்த பெரஹரா நிகழ்வு ஒன்றில் என்னென்ன அங்கங்கள் உள்ளடக்க வேண்டும் என பௌத்தர் அல்லாத ஒருவர் தீர்மானிக்கும் சந்தர்ப்பம் இதுவே ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
எதிர்வரும் காலங்களில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தால் தலதா மாளிகை பெரஹரா நிகழ்விலும் மாற்றங்களை செய்யக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக உதய கம்மன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T11:55:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனு நாளை மீண்டும் பரிசீலனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appeals-court-defers-consideration-of-sallay-s-1785152399"></link>
            <id>https://tamilwin.com/article/appeals-court-defers-consideration-of-sallay-s-1785152399</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மனு மீதான விசாரணை&nbsp;</h2><p>
</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான&nbsp; பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹார்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65522cf2-6f8a-437c-8d00-0549d53f4237/26-6a674391a0401.webp' /></p><p>
</p><p>இருதரப்புச் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, இந்த மனுவை நாளை மீண்டும் அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>மனு மீதான மேலதிக விசாரணைக்கான திகதி நாளை நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பௌத்தத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்! பின்னணியில் பாதாள உலக புள்ளிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-groups-that-decide-on-the-peraheras-1785150395"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-groups-that-decide-on-the-peraheras-1785150395</id>
            <summary type="text">நாட்டில் தற்போது பௌத்த மதத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலப்பனை ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;மகா சங்க மாநாட்டில் கலந்து கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது பௌத்த மதத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலப்பனை ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மகா சங்க மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>தற்போது விகாரைகளில் இடம்பெறும் பெரஹராக்களை,&nbsp; பிக்குகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுக்கள் அல்லாது, பாதாள உலகக் குழுக்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.</p><p></p><h2>அச்சுறுத்தல்..</h2><p>பௌத்த மதத்தின்&nbsp; பாரம்பரிய விழுமியங்களும், மத நிகழ்வுகளின் புனிதத் தன்மையும் படிப்படியாக சீர்குலைந்து வருகின்றது.</p><p>பெரஹரா உள்ளிட்ட மத நிகழ்வுகள், பிக்குகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புக்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற வேண்டிய நிலையில்,&nbsp; தற்போது அவற்றில் சட்டவிரோத பாதாள உலகக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்து காணப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/428e6025-8980-4977-b347-d991c7f11088/26-6a674285896e6.webp' /></p><p>இந்த நிலை நீடித்தால், பௌத்தத்தின் ஒழுக்கம், மரபு மற்றும் சமூக மரியாதைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.</p><p>பௌத்தத்தின் சுயாதீனத்தையும், புனிதத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி தாக்கல் செய்த வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-former-dean-arts-university-of-jaffna-1785150930"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-former-dean-arts-university-of-jaffna-1785150930</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக பிறப்பித்த இடைக்கால கட்டளையை நீடித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக பிறப்பித்த இடைக்கால கட்டளையை நீடித்து உத்தரவிட்ட பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், இரு தரப்புக்களின் எழுத்து மூலமான சமர்ப்பணத்திற்காக வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர்
என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p></p><h2>நேரில் முன்னிலையாகாத நிலையில்</h2><p>
குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8405399-a8a4-454e-b10a-fca60f8777b7/26-6a6741f577027.webp' /></p><p>
இரண்டு எதிர் மனுதாரர்கள் நேரில் நீதிமன்றத்தில் முன்னிலையானதுடன் ஏனையோர் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர். </p><p>

இதேவேளை எதிர்மனுதாரர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் நேரில் முன்னிலையாகாத நிலையில் அடுத்த வழக்கு தவணையின் போது நேரில் முன்னிலையாக வேண்டும் என நீதிவானால் உத்தரவிடப்பட்டது.
</p><p>
மேலும் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் மற்றும் பதிவுகள் இதுவரை எதிர் மனுதாரர்களால் அகற்றப்படவில்லை என்ற விடயம் மனுதாரரின் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அது தொடர்பாக உடனடியாக கவனத்தில் எடுக்குமாறு நீதிவானால் எதிர் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.</p><h2>வழக்கை விசாரித்த நீதிவான்&nbsp;</h2><p>

இதன்போது எதிர் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன் தமது எழுத்து மூலமான சமர்ப்பணத்தை சமர்பிக்க கால அவகாசம் கோரினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b3007b7-ab54-4c34-97cb-06caa25c5681/26-6a6741f6332be.webp' /></p><p>
வழக்கை விசாரித்த நீதிவான் இரு தரப்புக்களின் எழுத்து மூலமான சமர்ப்பணத்திற்காக வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
</p><p>
மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா முன்னிலையாகி தனது வாதங்களை முன்வைத்தார். </p><p>

எதிர் மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T11:33:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிப்பு குறித்து மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sritharan-mp-discusses-land-release-with-people-1785143985"></link>
            <id>https://tamilwin.com/article/sritharan-mp-discusses-land-release-with-people-1785143985</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ்
அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான
கலந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ்
அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான
கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின்
பூர்வீகக் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக அண்மையில் அனுப்பப்பட்டுள்ள
எழுத்துமூல அறிவித்தல்கள் தொடர்பில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் தமது ஆழ்ந்த கவலையை
வெளிப்படுத்தினர்.</p><p></p><h2>தீர்வு காணப்படாத காணிப் பிரச்சினைகள்</h2><p> பல தலைமுறைகளாகத் தாம் வாழ்ந்து வந்த பூர்வீகக் காணிகளே
தங்களது வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் என்றும்,
அவற்றை எந்தவிதத்திலும் இழக்கத் தயாரில்லை எனவும், இதற்கு மாற்றாக வேறு
காணிகளையோ அல்லது நஷ்டஈட்டுத் தொகையையோ வழங்கும் எந்தத் திட்டத்தையும் தாங்கள்
ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6267cd4a-98c7-4df3-a8be-51a834800c48/26-6a672bf11cf84.webp' /></p><p>காணி சுவீகரிப்புக்கு எதிராக நீண்டகாலமாக ஜனநாயக மற்றும் சட்டரீதியான
போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், மீண்டும் காணிகளைப் பறிக்கும்
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவது பெரும் அநீதியாகும் எனக் குறிப்பிட்ட
அவர்கள், இவ்விடயத்தில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து, தங்களது
உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தினர்.
</p><p>
அத்துடன், மயிலிட்டி மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நீண்டகாலமாகத்
தீர்வு காணப்படாத காணிப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுடன் அவசர
சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.</p><p>

மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இக்
கலந்துரையாடலில் வலி. வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சோமசுந்தரம்
சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் செ. விஜயராஜ், வலி.
மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் சபேசன் மற்றும் காணி
விடுவிப்புச் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:22:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் களஞ்சிய சாலைக்கு அருகில் தீ பரவல் - விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-spreads-near-the-barn-road-in-jaffna-1785146718"></link>
            <id>https://tamilwin.com/article/fire-spreads-near-the-barn-road-in-jaffna-1785146718</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள
வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில், நீண்ட முயற்சிக்கு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள
வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில், நீண்ட முயற்சிக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் இன்று(27.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள
வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் கடற்படையினர், தீயணைப்பு படையினர் தீவிரமாக முயற்சி செய்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
பிரதேச சபை விடுத்துள்ள அறிவுறுத்தல்</h2><p>
எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிகள் பராமரிப்பின்றி காணப்படுவதுடன், அந்த காணிகளுக்குள் குப்பைகளும் கொட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2778efbf-e6e0-4d3e-a96c-4b78be47e02d/26-6a672e0fb74aa.webp' /></p><p> </p><p>

இது தொடர்பில் பெற்றோலிய அதிகாரிகளால் வலி.வடக்கு பிரதேச சபைக்கு பல்வேறு
தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும்&nbsp; அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இன்று(27) தீ பரவல் ஏற்பட்ட போதும், பிரதேச சபைக்கு அறிவித்த போதிலும்
பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என்ற எச்சரிக்கை
பதாகைகளை காட்சிப்படுத்துமாறு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப
அலுவலக பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde5509d-6d17-4157-b2ca-a2b6730e72d7/26-6a672e108deff.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c303929-8026-4255-a4d1-b9270f6c27cc/26-6a672e11550a5.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோர சம்பவம் - தூக்கி வீசப்பட்ட சிறுவன் பலி - தவிக்கும் பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-years-old-boy-killed-in-the-accident-1785126151"></link>
            <id>https://tamilwin.com/article/3-years-old-boy-killed-in-the-accident-1785126151</id>
            <summary type="text">கொழும்பு, இராஜகிரிய பகுதியில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

பெற்றோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, இராஜகிரிய பகுதியில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். </p><p>

பெற்றோருடன் சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த கார் ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

கடந்த 25ஆம் திகதி அதிகாலை சம்பவித்த விபத்தில் நிசித்து ஹுமெத் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><h2><b>


தூக்கி வீசப்பட்ட சிறுவன்</b></h2><p>உறவினர் வீடொன்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே விபத்து சம்பவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b03516b7-15b9-49b1-8c12-f1050715405e/26-6a672b28bf8e9.webp' /></p><p>வீதியில் மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது வீட்டின் இடது பக்கமாகக் கவிழ்ந்துள்ளது.</p><p> இதன்போது சாரதியான தந்தையும் பின் ஆசனத்தில் இருந்த தாயும் வீட்டின் இடது பக்கத்தில் விழுந்துள்ளனர்.</p><p> 

இந்நிலையில், சாரதி ஆசனத்திற்கு முன்னால் பயணம் செய்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு, எதிரே வந்த காரின் முன்பக்க வலது சக்கரத்தடியில் சிக்கியுள்ளார்.</p><h3><b> சாரதி&nbsp;கைது </b></h3><p>விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சில நிமிடங்களுக்குள் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba026fe-da94-499f-919f-be5496b981ab/26-6a672b296e68f.webp' /></p><p>இந்த விபத்தின் காரணமாக சிறுவனின் பெற்றோருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய காரின் சாரதியான கொட்டிகாவத்தை, மகா புத்துமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-27T09:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதாக சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-giving-false-promises-says-sajith-1785144602"></link>
            <id>https://tamilwin.com/article/npp-giving-false-promises-says-sajith-1785144602</id>
            <summary type="text">&amp;nbsp;அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ராஜீவ் அமரசூரியவிற்கு முதலமைச்சர் வேட்பாளர் பதவி உள்ளிட்ட அரசியல் லஞ்சங்களைச் சனநாயக ஐக்கிய முன்னணி வழங்கியதாக தேசிய மக்கள் சக்தி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளார். </p><p>
ரத்தினபுரியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய பணிமனை திறப்பு விழாவில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, இக்குற்றச்சாட்டு தேசிய மக்கள் சக்தியின் பொய்யான பிரச்சாரங்களின் மற்றொரு அங்கம் எனவும், தமது கட்சி ஒருபோதும் அரசியல் லஞ்சங்களில் ஈடுபட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa3d367-9f50-4e1c-958c-0be64aab0b9f/26-6a67251b851ed.webp' /></p><p>
</p><p>உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழிவை எதிர்க்கும் முயற்சியாகவே முதலமைச்சர் பதவி வாக்குறுதி அளிக்கப்பட்டதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>
ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் யாருக்கும் அரசியல் லஞ்சம் கொடுத்ததில்லை எனவும் சுயாதீனமான நீதித்துறைக்காக&nbsp; எப்போதும் உறுதியுடன் நிற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
பெலவத்தையில் இருந்து கொண்டு நீதித்துறையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முற்படும் அதே வேளையில் காலியிடங்களை நிரப்பாமல் நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தேநீர், ரப்பர், கருவா மற்றும் இரத்தினக் கற்கள் போன்ற வளங்கள் இலங்கையில் இருந்தும், அவற்றை மேம்படுத்தத் தவறிய அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி அதிகாரத்தைத் தக்கவைக்கப் பார்ப்பதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>துறைமுக விலையிலேயே எரிபொருள் வழங்கப்படும், மின்சாரக் கட்டணம் 33% குறைக்கப்படும், நெல்லுக்கு 150 ரூபா குறைந்தபட்ச விலை உறுதி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை எனவும், மாறாக நெல் விவசாயிகளுக்கு 17 ரூபா இழப்பை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிள் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..! நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apple-s-new-smart-glasses-1785142163"></link>
            <id>https://tamilwin.com/article/apple-s-new-smart-glasses-1785142163</id>
            <summary type="text">


ஆப்பிள் நிறுவனம் 2027ஆம் ஆண்டில் ஒரு புதிய ஸ்மார்ட் கண்ணாடியை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

 தற்போது சந்தையில் உள்ள இதுபோன்ற சாதனங்களால் பயனர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>


ஆப்பிள் நிறுவனம் 2027ஆம் ஆண்டில் ஒரு புதிய ஸ்மார்ட் கண்ணாடியை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
</p><p>
 தற்போது சந்தையில் உள்ள இதுபோன்ற சாதனங்களால் பயனர்களின் தனியுரிமைக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படுவதால், ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச முன்னுரிமையளிக்க முடிவு செய்துள்ளது.</p><p> 


தற்போதுள்ள மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, மற்றவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கும் திறன், சமூகத்தில் பெரும் அச்சத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>
</p><p>
இன்னும் சிலர் இவற்றை மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சாதனங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>புதிய அம்சம் அறிமுகம்</h2><p>

ப்ளூம்பெர்க் அறிக்கைகளின்படி, இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க ஆப்பிள் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இதன்படி, 

உங்கள் தரவு கண்ணாடியை விட்டு வெளியேறாது, எனவே அவை 100% பாதுகாப்பானவை. 

மேலும், கண்ணாடியால் பெறப்பட்ட தரவு எந்தவொரு சேவையகத்திற்கும் அனுப்பப்படாமல், அந்தச் சாதனத்திலேயே செயலாக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25bb5782-9ac8-49a9-9222-b135a0ef2c69/26-6a671e89d48a2.webp' /></p><p>

பயனர்களின் தனிப்பட்ட பதிவுகள், ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை. </p><p>

அதில், புகைப்படங்களையோ வீடியோக்களையோ எடுக்க முடியாது, ஆனால் தங்களைச் சுற்றியுள்ள பொருட்களை அடையாளம் காண மட்டுமே உதவும் சிறப்பு சென்சார்கள் கொண்ட கேமரா அமைப்பு பொறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இதன் அடிப்படையில், இந்த புதிய சாதனம் 2027 ஜூன் மாதம் நடைபெறும் WWDC மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, ஆண்டின் பிற்பகுதியில் சந்தையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-27T09:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/constable-suspended-from-service-for-getting-bribe-1785133431"></link>
            <id>https://tamilwin.com/article/constable-suspended-from-service-for-getting-bribe-1785133431</id>
            <summary type="text">திருகோணமலை, மூதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாரதியிடம் 1,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, மூதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாரதியிடம் 1,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பாதுகாப்புக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை மற்றும் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

அதற்கமைய குறித்த அதிகாரியை பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கு திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p></p><p>
</p><h2><b>
 வீடியோ பதிவு</b></h2><p>கடந்த 18 ஆம் திகதி இரவு நடமாடும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த கான்ஸ்டபிள் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.</p><p>இதன்போது கையடக்க தொலைபேசியினால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5aa734e-96a9-45f7-8005-45ce693e8a0f/26-6a671a5ace316.webp' />&nbsp;&nbsp;</p><p>

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
</p><p> 
மேலும் சந்தேக நபருக்கு எதிராக மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SEf5N8l25hM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-27T08:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை துப்பாக்கிச் சூடு: தப்பியோடிய சந்தேகநபர் கைது..! வெளிநாட்டு கும்பல் தொடர்பு அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-shooting-1785141616"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-shooting-1785141616</id>
            <summary type="text">தெஹிவளையில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தப்பிச் சென்ற சந்தேகநபர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளையில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தப்பிச் சென்ற சந்தேகநபர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வெளிநாட்டில் வசித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ஒருவரின் திட்டமிடலின் பேரிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p>
தெஹிவளையில் அமைந்துள்ள நிசால சேவன வளாகத்தில் மயானக் காவலாளியாக பணியாற்றி வந்த சுமித் ரூபசேனாவை குறிவைத்து, கடந்த ஜூலை 19ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd85be9c-4223-4722-99b0-691561c21bcc/26-6a671a16ac82c.webp' /></p><p>
</p><p>
9 மில்லிமீற்றர் துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், காவலாளியின் இடது கை மற்றும் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது.</p><p> இதையடுத்து அவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>

56 வயதான சுமித் ரூபசேனா, தெஹிவளை மீனவர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரது மகன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><h2>மோட்டார் வாகன சாரதி கைது</h2><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற காட்சிகள் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தன.
</p><p>
இதனையடுத்து, சம்பவம் இடம்பெற்று ஒரு வாரத்திற்குப் பின்னர், நேற்று (26) டெல்கந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சாரதி மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c870fd7-592a-4502-a8ca-f65c9d9a1d1a/26-6a671a178ffff.webp' /></p><p>
</p><p>
அட்டிடியா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 7 கிராம் 200 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், நிசால சேவன மயானக் காவலாளி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, வெளிநாட்டில் வசித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் ஒருவரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்தக் குற்றத்தைச் செய்வதற்காக சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட 255,000 ரூபாய் பணம் மற்றும் மூன்று கைப்பேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T08:43:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/encroachment-by-tamil-nadu-fishermen-1785140486"></link>
            <id>https://tamilwin.com/article/encroachment-by-tamil-nadu-fishermen-1785140486</id>
            <summary type="text">தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கண்ணாடி இழை படகுகளில் எதிர்வரும் 30.07.2026 வியாழக்கிழமை காலை 09 மணியளவில் போராட்டம் இடம்பெறவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்திய இழுவை மடி படகுகளில் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக, மனிதாபிமானமற்ற முறையில் எல்லை
தாண்டி கடல் வளக் கொள்ளையில் ஈடுபடுவதுடன், தீவக மற்றும் வடக்கு
கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும்
கடற்தொழில் உபகரணங்கள் சேதமாக்கியுள்ளனர். </p><h2>

போராட்டத்திற்கான அழைப்பு</h2><p>
இதனால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய இழுவை
படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d66dcd22-e0ad-4dcd-8b43-1094db167c04/26-6a6715615e9a1.webp' /></p><p> </p><p>

வடக்கு மீனவ சங்க பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் சாமாச பிரதிநிதிகள்,
கடற்றொழிலாளர்கள் இணையம் வடமாகாண பிரதிநிதிகள், ஏனைய கடற்றொழிலாளர் நலன்
சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட ரீதியில் மீனவர்களுக்கு குரல்
கொடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் எமது போராட்டத்துக்கு
வலுசேர்க்க வியாழக்கிழமை குறிகட்டுவான் பகுதியில் ஒன்று சேர வேண்டும் என 
நயினாதீவு கடற்றொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T08:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் - கண்டி பிரதான வீதியில் விசேட திடீர் வீதிச் சோதனை முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-surprise-road-check-on-kandy-main-road-1785139554"></link>
            <id>https://tamilwin.com/article/special-surprise-road-check-on-kandy-main-road-1785139554</id>
            <summary type="text">கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிப்போக்குவரத்து விதிகளை
மீறுவோரைக் கண்டறியும் வகையில், கந்தளாய் தலைமையகப் பொலிஸ் அதிகாரிகளால் விசேட
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிப்போக்குவரத்து விதிகளை
மீறுவோரைக் கண்டறியும் வகையில், கந்தளாய் தலைமையகப் பொலிஸ் அதிகாரிகளால் விசேட
திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையொன்று நேற்று இரவு (26) முன்னெடுக்கப்பட்டது.</p><p>

கந்தளாய் - கண்டி பிரதான வீதியின் வெலிங்கடன் சந்தியில் இடம்பெற்ற இச்சோதனை
நடவடிக்கை, சுமார் மூன்று மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>முறையான பரிசோதனை</h2><p>
</p><p>
இச்சோதனையின் போது,
செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களைச் செலுத்தியவர்கள்,

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள்,

எதிர்வரும் வாகனங்களுக்கும் ஏனைய வீதிப் பயனாளர்களுக்கும் இடையூறு
விளைவிக்கும் வகையில் அதிதீவிர வெளிச்சம் கொண்ட விளக்குகளை பொருத்தி வாகனங்களைச் செலுத்தியவர்கள்

முறையாகப் பரிசோதிக்கப்பட்டனர்.</p><p></p><p>
</p><p>
போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்பட்ட பலருக்கு எதிராக வீதிப்போக்குவரத்துச்
சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்ட நடவடிக்கைகளும்
எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

பிரதேசத்தில் வீதி விபத்துகளைக் குறைக்கவும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின்
பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ந்து
முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T08:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் தளம்பல் நிலை! இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1785129633"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1785129633</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மீண்டும் எரிபொருளின் விலை கடந்த நாட்களில் அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்வது குறித்த இப்போது அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மீண்டும் எரிபொருளின் விலை கடந்த நாட்களில் அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்வது குறித்த இப்போது அறிவிக்க முடியாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த மாதம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று நாட்கள உள்ள நிலையில், இறுதி நாட்களில் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே இலங்கையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆகஸ்ட் மாத விலைத் திருத்தம்&nbsp;</h2><p> </p><p>

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்திற்கான விலைத் திருத்தம் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மத்தியக் கிழக்கில் தொடர்ந்து நிலவும் மோதல்கள் காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை ஏற்ற இறக்கங்களோடு பதிவாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd79918c-afa7-4575-bee1-da195400976f/26-6a66f35684755.webp' /></p><p> </p><p> 

இந்த நிச்சயமற்ற சூழல் காரணமாக, மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. </p><p>

இந்த மாதம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று தினங்கள் இருக்கின்ற நிலையல், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கின்றதா, குறைவடைகின்றதா என்பதைப் பொறுத்தே இலங்கையில் இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T08:08:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை : பெற்றோர்களால் போராட்டம் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parents-protest-as-teacher-absent-for-7-months-1785138220"></link>
            <id>https://tamilwin.com/article/parents-protest-as-teacher-absent-for-7-months-1785138220</id>
            <summary type="text">முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு
தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு
தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களாக
இல்லாத நிலையில் பெற்றோர்களால்&nbsp;கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.</p><p>குறித்த போராட்டமானது இன்று (27.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீண்டகாலமாக தொடரும் பிரச்சினை</h2><p>தரம் 3 வகுப்பில் பயிலும் 36 மாணவர்கள் கடந்த 7 மாதங்களாக வகுப்பாசிரியர்
இன்றி கல்வியில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1624682475717861%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் கல்வி
சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர் nதரிவித்துள்ளனர்.</p><p>மேலும் பாடசாலையின் ஆசிரியர் இல்லாத பிரச்சினை தொடர்பில் வலயக்கல்லி அலுவலகத்திற்கு
முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர .</p><p>
நீண்டகாலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு உரிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து,
விரைவான தீர்வினைப் பெற்று தரவேண்டும் என்பதுடன் இவ்வாறான நிலை தொடர்ந்தால்
மாணவர்களின் ஆரம்ப கல்வி பின்நோக்கி செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fda0cf8-0916-4df8-9110-6c050cdfcacd/26-6a6711759d13e.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T08:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல்வாதிகளை ஒதுக்கும் அநுர அரசு - அரச அதிகாரிகளுக்கும் கடும் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strict-instructions-to-government-officials-1785139198"></link>
            <id>https://tamilwin.com/article/strict-instructions-to-government-officials-1785139198</id>
            <summary type="text">அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள்
மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த
மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள்
மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த
மாற்றம் மக்களின் வாசற்படியை எட்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>


“சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை” எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண
நேர்மை வார (27 ஜூலை 2026 தொடக்கம் 31 ஜூலை 2026 வரை) அறிமுக நிகழ்வு, இன்று(27.07.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>

ஆட்சி மாற்றம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

நேர்மை என்பது பணம் வாங்காமை மட்டுமலல் ஊழல் செய்யாமையும் மட்டுமல்ல. எமக்காக
ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை, எமக்காக அல்லாமல் மக்களுக்காகப் பயன்படுத்துவதே
நேர்மையாகும்.</p><p> 

ஒரு ஏழை மனிதனின் கோப்பைக் காரணமின்றித் தாமதப்படுத்தாமல்
இருப்பதும், பொது வளங்களைத் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தாமல்
இருப்பதும், தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் ஒரே அளவுகோலால் நீதி
வழங்குவதுமே உண்மையான நேர்மையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82be25f9-ad20-407f-8f7f-9a557c6b452f/26-6a67106a295e3.webp' /></p><p> </p><p>

சட்டம் பார்க்காத இடத்திலும் மனச்சாட்சி பார்க்கிறது என்ற உணர்வோடு நாம் வாழ வேண்டும். 2022 ஆம் ஆண்டு இந்த நாடு அனுபவித்த “அரகலய” போராட்டத்தின் மையச் சொல் “முறைமை
மாற்றம்” என்பதாகும். </p><p>

அந்த இரண்டு சொற்களில் ஒரு தலைமுறையின் கனவும், கோபமும்,
எதிர்பார்ப்பும் அடங்கியிருந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டு புதிய
அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று நேர்மையான நிர்வாகத்துக்கான அரசியல்
விருப்பமும், அரசியல் தலைமைத்துவமும் உருவாகியுள்ளது. ஊழலுக்கு அரசியல்
பாதுகாப்பு கிடைக்கக்கூடாது என்ற தெளிவான நிலைப்பாடு வந்துள்ளது.
</p><p>
 ஆனால்,
அரசியல் நேர்மையாக இருந்தும் நிர்வாகம் நேர்மையற்றதாக இருந்தால், மக்கள்
எதிர்பார்த்த நல்லாட்சி மலராது. அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள் என்று மட்டும்
நாம் திருப்தியடைய முடியாது, அதிகாரிகளும் மாற வேண்டும் என்றார்.</p><p> 

இதனைத் தொடர்ந்து, அலுவலக முன்றலில் தேசியக் கொடி மற்றும் மாகாணக் கொடி ஏற்றப்பட்டு,
தேசிய கீதம் மற்றும் மாகாணக் கீதம் என்பன இசைக்கப்பட்டன.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T08:01:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகளுக்கு 24 மணிநேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால்..! வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/children-have-a-fever-more-than-24-hours-1785133139"></link>
            <id>https://tamilwin.com/article/children-have-a-fever-more-than-24-hours-1785133139</id>
            <summary type="text">குழந்தைகளுக்கு 24 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் நீடித்தால், அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகளுக்கு 24 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் நீடித்தால், அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அவசர எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளனர்.&nbsp;</p><p>இது தொடர்பில்&nbsp;கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரதீப் ரத்னசேகர விடுத்துள்ள அறிவிப்பில்,&nbsp;</p><p>
பெற்றோர் தமது குழந்தைகளை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும்போது அவர்களின் மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தவறாமல் கொண்டு செல்ல வேண்டும்.</p><p></p><h2>சரியான மருத்துவ ஆலோசனை</h2><p>

வீட்டு வைத்தியம் செய்வதால் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான முக்கியமான நேரம் வீணாகிறது. உடனடியாக சரியான மருத்துவ ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a49a071-f63f-4f37-97c6-093f91469c86/26-6a670917a4367.webp' /></p><p>

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தீவிரமான நிலையில் உள்ளனர்.

இந்த நிலைமை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலையில் நெருக்கடி தீவிரமடைய சாத்தியமுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/a4GWyQTupnE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-27T07:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீவன் தொண்டமான் பதவி காலத்துக்கு பின் கைவிடப்பட்ட கட்டிடம் - ரூ.1 கோடி ரூபாய் செலவில் அரசு விசேட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/abandoned-building-after-jeevan-thondaman-s-rule-1785137190"></link>
            <id>https://tamilwin.com/article/abandoned-building-after-jeevan-thondaman-s-rule-1785137190</id>
            <summary type="text">தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும் புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும் புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கையானது, சுற்றுலா துறையின் முன்னேற்றத்தையும், பிரதேச மக்களின் பொருளாதார நலனையும்
மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>

குறித்த தேசிய உணவகம், 2022 ஆம் ஆண்டு தலவாக்கலை நகரசபைத் தலைவர்
பாரதி தாசனின் வேண்டுகோளுக்கமைய, முன்னாள் அமைச்சர் ஜீவன்
தொண்டமான் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 60 இலட்சம்
ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daa9699e-81e8-4e70-9e1a-5c53efb5e21f/26-6a670893f19d1.webp' /></p><p> 

எனினும், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து
ஏற்பட்ட நிர்வாக மற்றும் உரிமைச் சிக்கல்களால், இந்த கட்டிடம் கடந்த நான்கு
ஆண்டுகளாக பயன்பாடின்றி கைவிடப்பட்டிருந்தது.</p><h2>


1 கோடி ரூபாய் செலவில் மீண்டும் புனரமைப்பு</h2><p>
இது தொடர்பாக தற்போதைய லிந்துலை - தலவாக்கலை நகரசபைத் தலைவர் உபாலி லியனகே
விளக்கமளிக்கையில், 

குறித்த காணி நகர அபிவிருத்தி அதிகாரசபையின்
கட்டுப்பாட்டிலிருந்து, கொத்மலை மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் கீழ்
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமானதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால்,
ஆரம்பத்தில் திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27d678a-9ea4-4c4f-b85d-0f8f18d0cd86/26-6a670894d4f18.webp' /></p><p> 

எனினும், தற்போது கழிவுகளை முறையாக அகற்றுதல், கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு
எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடைமுறைகள்
வகுக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதைத் தொடர்ந்து உணவகத்தை
முழுமையாக புனரமைத்து, விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

ஹெல பொஜூன் தேசிய உணவகமாக மீண்டும்
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மேலும் 1 கோடி ரூபா தேவை என மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது என்றார். </p><h2>


சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்த திட்டம்</h2><p>

பொது மக்களின் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாறான அரச கட்டிடங்கள்
நீண்டகாலம் பயன்பாடின்றி கைவிடப்படுவது அரச வளங்களின் வீணடிப்பாகும் என சமூக
ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b13f783-6266-4957-bbdf-63af76ec81f4/26-6a670895a5a3c.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, இந்த திட்டம் மீண்டும்
செயற்பாட்டுக்கு வந்தால், உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கு
சந்தை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் தரமான பாரம்பரிய
உணவுகளை வழங்கும் மையமாக இது உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. </p><p>

எது எவ்வாறாயினும், மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள்
உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, மக்கள் நலனுக்காக முழுமையாக
பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முக்கிய
பொறுப்பாகும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T07:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் நீராடச் சென்ற சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-tourist-dies-at-nilaveli-beach-1785134500"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-tourist-dies-at-nilaveli-beach-1785134500</id>
            <summary type="text">திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச்
சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில்
மூழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச்
சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில்
மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவம் நேற்று(26.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும், குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து
இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>முதற்கட்ட விசாரணை</h2><p>
முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த நபர் நிலாவெளி பகுதியில் உள்ள சுற்றுலா
விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce4b1826-a2a0-4798-a5cc-8e0a0d0f277f/26-6a670468b1dc7.webp' /></p><p>

உயிரிழந்தவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம்
காணப்பட்டுள்ளார். </p><p>சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இதேவேளை சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,
திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் (TDHA) தலைவர் குமார் ஜெயக்குமாரன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,&nbsp;கிடைத்துள்ள தகவலின்படி, குறித்த சுற்றுலாப் பயணி நிலாவெளி பகுதியில்
அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நிலையில் கடலில் நீராடச்
சென்றபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
</p><h2>உயிரிழப்புகள் ஏற்படாத வகையில்</h2><p>உயிர்காக்கும் (Lifeguard) சேவைகள், எச்சரிக்கை கொடிகள், பல்மொழி பாதுகாப்பு
அறிவிப்புப் பலகைகள், அவசர மீட்பு உபகரணங்கள், அபாயப் பகுதிகளைத் தெளிவாகக்
குறியிடுதல் மற்றும் ஒருங்கிணைந்த கடற்கரை பாதுகாப்பு முகாமைத்துவம் போன்ற
பல்வேறு பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலவச ஆலோசனையாக
வழங்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3015b1d8-f871-4599-8e48-3b3feba8eb76/26-6a67074c43329.webp' /></p><p>

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையின் பிரதான பங்குதாரர்களில் ஒருவராக,
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், உலகத் தரத்திலான சுற்றுலா
இலக்காக திருகோணமலையை உருவாக்கவும், அரச நிறுவனங்கள், பாதுகாப்பு தரப்புகள்
மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு எமது சங்கம்
என்றும் தயாராக உள்ளது.
</p><p>
இந்த துயரமான சம்பவம், கடற்கரை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும்
வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. </p><p>இனி இதுபோன்ற
உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் உடனடி மற்றும் நடைமுறைசார் நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T07:23:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 கோடி ரூபா மோசடி வழக்கு- முன்னாள் அமைச்சர் சாந்த பண்டார மகனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-s-son-granted-bail-1785134666"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-s-son-granted-bail-1785134666</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனாதித் சமரகோன் பண்டார&amp;nbsp; உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனாதித் சமரகோன் பண்டார&nbsp; உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(27.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

பிணையில் செல்ல அனுமதி</h2><p>பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள், இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04de9f05-2141-44c2-b070-6cb66c05cdd7/26-6a66fffa6c5f0.webp' /></p><p> </p><p> 

நீதிபதி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 500,000 ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதோடு, வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதிக்கப்பட்டுள்ளது. </p><p> 

சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பண்டார உட்பட இந்தக் குழுவினர் கடந்த ஜூலை 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-07-27T06:51:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாந்தோட்டை துறைமுகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள்- இறக்குமதியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-notice-to-importers-1785133995"></link>
            <id>https://tamilwin.com/article/important-notice-to-importers-1785133995</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1,025 இற்கும் மேற்பட்ட
வாகனங்கள், இறக்குமதியாளர்களால் இதுவரை விடுவித்துக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1,025 இற்கும் மேற்பட்ட
வாகனங்கள், இறக்குமதியாளர்களால் இதுவரை விடுவித்துக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிடப்பதாக இலங்கை சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

துறைமுகத்தில் தேங்கியுள்ள இந்த வாகனங்களில் சுமார் 625 வாகனங்கள் நாட்டுக்கு
இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகியுள்ளதுடன், மொத்தமாக உள்ள
1,025 வாகனங்களும் 3 மாதங்களுக்கும் மேலாகத் துறைமுகத்திலேயே முடங்கிக்
கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 

இறக்கமதியாளர்களின் சொந்த காரணங்கள்</h2><p>

இருப்பினும், இந்த வாகனங்கள் மீது சுங்க விதிகளின்படி, எந்தவித சுங்கக் குற்றப்
பதிவுகளும் இல்லை என்றும், சுங்கத் திணைக்களத்தால் இவை தடுப்பில்
வைக்கப்படவில்லை என்றும் இலங்கைச் சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன
புஞ்சிஹேவா தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896d509c-febf-46c3-bda5-425562d09a8d/26-6a66fd8ce1de7.webp' /></p><p>

"சந்தைத் தேவைக் குறைவு மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட இறக்குமதியாளர்களின்
சொந்தக் காரணங்களினாலேயே இவை விடுவிக்கப்படாமல் உள்ளன.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி நிலவும்
இந்த காலகட்டத்தில், பெரும் தொகையைச் செலவிட்டு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்
விடுவிக்கப்படாமல் துறைமுக இடத்தை அடைத்துக்கொண்டிருப்பது நாட்டின்
பொருளாதாரத்திற்கும் துறைமுக வருவாய்க்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
</p><h2>

ஏல விற்பனை செய்ய நடவடிக்கை</h2><p>
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ், துறைமுகத்துக்கு வந்து
ஒரு மாத காலத்துக்குள் உரிய வரிகளைச் செலுத்தி விடுவிக்கப்படாத பொருள்களை ஏலம்
மூலமாகவோ அல்லது டெண்டர் கோரியோ விற்பனை செய்யச் சுங்கத்துக்கு முழு அதிகாரம்
உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2aeec40-d84a-4bbc-9e7d-bf1e0aefc1b9/26-6a66fd8d9dff3.webp' /></p><p> 

அதன் அடிப்படையில், இந்த வாகனங்களை எதிர்காலத்தில் ஏலத்தில் விற்பனை செய்து,
அரசுக்குச் சேர வேண்டிய வரிகள் மற்றும் துறைமுகக் களஞ்சியக் கட்டணங்களை
அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>
 அவ்வாறு விற்பனை செய்த பின்னர் எஞ்சியத் தொகை ஏதேனும் இருப்பின், அது சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கப்படும்.
</p><p>
இருப்பினும், தகுந்த மற்றும் நியாயமான காரணங்களால் வாகனங்களை உடனடியாக
விடுவிக்க முடியாமல் போனதாக இறக்குமதியாளர்கள் சுங்கத்திடம் கோரிக்கை
முன்வைத்தால், அது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்குச் சலுகை
அளிக்கப்படும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:42:11+00:00</updated>
        </entry>
    </feed>
