<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-20T08:37:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/training-camp-issue-in-palai-anadha-wijepala-1787210675"></link>
            <id>https://tamilwin.com/article/training-camp-issue-in-palai-anadha-wijepala-1787210675</id>
            <summary type="text">அரச காணியில் தியாகராசா குலதீபன் என்பவரால் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் கட்டடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச காணியில் தியாகராசா குலதீபன் என்பவரால் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் பளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது எனவும் அவர் கூறியுள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (20.08.2026) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>போலியான தகவல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி - பளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது.

இந்த போலி செய்தியாளர் சந்திப்பை பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என்பவர் நடத்தியதாக விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
விசாரணைகளின் படி, சந்தேகநபரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் காணப்பட்டதுடன், அவர் 7 வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், நிதி மோசடி உள்ளிட்ட மூன்று குற்றவியல் வழக்குகளில் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/849a1c83-930d-46d2-8b0d-36d3cebb357f/26-6a86ba4f5705d.webp' /></p><p> </p><p>தம்மை மருத்துவராக அடையாளப்படுத்தி கொண்டு அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் முன்னர் சில அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். அந்த நியமனங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

குறித்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அங்கு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.</p><h2>திட்டமிட்ட செயல்</h2><p> </p><p>குறித்த இடம் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதி மாத்திரமே. இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் சந்தேகநபர் திட்டமிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளார். குறித்த பகுதியில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் பதிவாகவில்லை. இனவாதத்தைத் தூண்டும் அல்லது பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.
</p><p>
இதனிடையே, குறித்த பகுதி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம், முட்கொம்பன் பகுதியில் அமைந்துள்ள அரச காணி என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலம் 1919ஆம் ஆண்டு வனப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அரச காணி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
தியாகராசா குலதீபன் என்பவரால் குறித்த காணியில் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் மூன்று மாடிக் கட்டடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9949d90-2d21-4fdd-8d0e-c91ab1c84b53/26-6a86ba502756f.webp' /></p><p>
</p><p>
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் குறித்த காணியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, இந்த விவகாரம் அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பானதே அன்றி, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பானது அல்ல எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T08:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவிந்து கிடக்கும் 1,037 வேலைவாய்ப்புகள் - வேலை தேடுவோருக்கு சிறந்த வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/job-opportunity-applications-driver-conductor-1787210463"></link>
            <id>https://tamilwin.com/article/job-opportunity-applications-driver-conductor-1787210463</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்துச் சபையின் நாடளாவிய ரீதியிலான டிப்போக்களில் ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்துச் சபையின் நாடளாவிய ரீதியிலான டிப்போக்களில் ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
இதன்படி, 788 சாரதி வெற்றிடங்களும், 249 நடத்துநர் வெற்றிடங்களுக்கான&nbsp;விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p>

அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஆட்சேர்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.</p><h2>வேலைவாய்ப்பு</h2><p>சாரதி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.</p><p>க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ace10fa-4788-47cf-876e-ab86f6da0b28/26-6a86b5c9be733.webp' /></p><p> </p><p>

மேலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செல்லுபடியாகும் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பதுடன், குறிப்பிடப்பட்டுள்ள உடல் மற்றும் சுகாதாரத் தகைமைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
</p><p>
நடத்துநர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.</p><h2>விண்ணப்பம் கோரல்</h2><p>
</p><p>
 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உள்ளிட்ட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
தெரிவு செய்யப்படும் சாரதிகளுக்கு மாதாந்தம் 40,847 ரூபாய் அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவும், நடத்துநர்களுக்கு 40,008 ரூபாய் அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8ea48e6-2d30-4ac1-8a7e-2a6def1648af/26-6a86b5caae038.webp' /></p><p> </p><p>

இதற்கு மேலதிகமாக 17,800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
</p><p>

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) ஊழியர்கள் 8 சதவீத பங்களிப்பை வழங்குவதுடன், தொழில் வழங்குநர் 12 சதவீத பங்களிப்பை வழங்குவார். 

ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு (ETF) தொழில் வழங்குநரால் 3 சதவீத பங்களிப்பும் வழங்கப்படும்.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
நேர்முகப் பரீட்சை, நடைமுறைப் பரீட்சை மற்றும் தொடர்புடைய பயிற்சி நெறிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும். நியமனம் செய்யப்பட்ட பின்னர் பணியிட மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியிடத்திலிருந்து 30 கிலோமீற்றர் வரையான சுற்றளவில் பணிக்கு சென்று வருவதற்கான பயண அனுமதிப்பத்திரமும் வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20af7a04-877c-4285-a4d3-2d44e682e655/26-6a86b5cb600f1.webp' /></p><p>

குறிப்பிட்ட மாதிரி வடிவில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை, தலைமை நிர்வாக அதிகாரி, இலங்கை போக்குவரத்துச் சபை, இலக்கம் 200, கிருல வீதி, நாரஹேன்பிட்ட, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
</p><p>
விண்ணப்பங்கள் 2026 செப்டெம்பர் 7ஆம் திகதிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T08:13:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணப்பரிமாற்ற மோசடியில் சிக்கிய தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-bank-managers-us-dollars-fraud-court-order-1787210880"></link>
            <id>https://tamilwin.com/article/four-bank-managers-us-dollars-fraud-court-order-1787210880</id>
            <summary type="text">நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு&amp;nbsp;பணத்தை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு&nbsp;பணத்தை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களையும் மற்றுமொரு சந்தேகநபரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும், நான்கு வங்கி அதிகாரிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>வங்கி நிதி மோசடிகள்</h2><p>பொருட்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றியதுடன், குறித்த பணப்பரிமாற்றங்களுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாகவும் சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99eb0f77-f5a0-4e8b-b82a-5edda8b5c5ac/26-6a86b2c8a3e59.webp' /></p><p>வங்கி நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.&nbsp;&nbsp;</p><p>சந்தேகநபர் நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகக்கூறி சுமார் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றுக்கு வங்கிக்கணக்குகளை திறப்பதற்காக குறித்த 4 தனியார் வங்கிகளுக்கு சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் சந்தேகநபரை நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளை செய்து கொடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:54:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எல் நினோ நிலைமை: பாதிப்பை எதிர்கொள்ள வெளியிடப்பட்டது சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-drought-new-circular-for-drinking-water-1787209995"></link>
            <id>https://tamilwin.com/article/severe-drought-new-circular-for-drinking-water-1787209995</id>
            <summary type="text">நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.எல் நினோ நிலைமையின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.</p><p>எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்படுமாயின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று (20) அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>நீர் வசதி வழங்கல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சுற்றறிக்கை ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db14db6-c089-452b-925f-e95192623e7a/26-6a86b190e9c8e.webp' /></p><p>அத்துடன், வறட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு மிகவும் இலகுவான மற்றும் துரிதமான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் ஊடாக மாற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடை விவகாரத்தில் தாதியர்களுக்கு ஆதரவு: குரல் கொடுப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-for-nurses-on-clothing-issues-1787210909"></link>
            <id>https://tamilwin.com/article/support-for-nurses-on-clothing-issues-1787210909</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம்
மீது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம்
மீது சுமத்தப்படும் இனவாதக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப்
புறம்பானவை என கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

விசேட செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் பிரதிநிதிகளான தா.பிரதீபன்,
மு.பிரகாஷ், நாகராஜா சனாதனன் மற்றும் சி.திலோஜன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த தெளிவூட்டலை வழங்கினர்.
</p><h2>

சுற்றுநிரூபத்தை மீறிய ஆடையுடன் வருகை</h2><p>
கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட 9
இஸ்லாமிய பெண் சுகாதார பணி உதவியாளர்கள் தமது கலாச்சார ஆடையுடன் கடமையேற்க வந்திருந்தனர். </p><p>

இதன்போது, அரச நிர்வகிப்பு மற்றும் சுகாதார அமைச்சின்
சுற்றுநிரூபங்களுக்கு அமைவான சீருடையையே அணிய வேண்டும் என வைத்தியசாலை
நிர்வாகம் சுட்டிக்காட்டியதுடன், ஆரம்பக் கட்டமாக அன்றைய தினம் அதே ஆடையுடன் கடமையாற்ற அனுமதித்தது.

சுற்றுநிரூபத்தின்படியான சீருடையை அணிந்து வருவதாகக் கூறி அவகாசம் பெற்றிருந்த
போதிலும், கடந்த 10 ஆம் திகதி 5 பேர் மீண்டும் சுற்றுநிரூபத்தை மீறிய ஆடையுடன்
வருகை தந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2433e18-5374-405d-9f3b-e9059106d3b8/26-6a86ad7635ea2.webp' /></p><p>

 இதனை அனுமதிக்க முடியாது என நிர்வாகம் தெரிவித்த நிலையிலேயே,
வெளியே உள்ள சிலர் இந்த சம்பவத்திற்கு இனவாத முத்திரை குத்தி போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ் இளைஞர் சேனை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் 2019.06.26 திகதிய 13/2019(1) மற்றும்
2022.09.27 திகதிய 05/2022 ஆகிய சுற்றறிக்கைகள் 2022.11.28 ஆம் திகதி
அரசாங்கத்தினால் முற்றாக இரத்துச் செய்யப்பட்டு விட்டன.

தற்போது 1989.02.01 ஆம் திகதிய 8/89 இலக்க அரச சுற்றுநிரூபம் மட்டுமே
நடைமுறையில் உள்ளது.
</p><p>
 அதன் அடிப்படையிலேயே வைத்தியசாலை நிர்வாகம்
சட்டப்பூர்வமாகச் செயற்பட்டுள்ளது.</p><h2>

தேவையற்ற இன முரண்பாடுகளைத் தவிர்க்க கோரிக்கை</h2><p>
பாதிக்கப்பட்டதாகக் கருதும் தரப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ள
நிலையில், இந்த சம்பவத்தை வைத்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் சில
அரசியல்வாதிகள் தேவையற்ற இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயல்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0a506c0-3326-4ed1-a9d3-d65a2c8b5cb9/26-6a86ad7720393.webp' /></p><p>
</p><p>பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு கலவரத்தைத் தூண்ட முற்படும் நபர்கள் மீது
குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பாதுகாப்புத் தரப்பினரும் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ் இளைஞர் சேனை, இனவாதக்
கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக விரைவில் பொலிஸ் நிலையங்களில்
உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வேகமாக பரவும் டெங்கு நோய் - அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-spreading-rapidly-in-sri-lanka-1787209563"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-spreading-rapidly-in-sri-lanka-1787209563</id>
            <summary type="text">நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,115 ஆக உயிர்ந்துள்ளது.</p><p> 

இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 19 நாட்களில் நாட்டில் 7,777 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2> 

ஆபத்தில் கம்பஹா மாவட்டம்</h2><p>
அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகளைப் பதிவுசெய்யும் மாவட்டங்களில் கம்பஹா மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed76d49-9c12-4e24-ad8b-5b21ff84478b/26-6a86a87970734.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 19,825 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், கடந்த ஆண்டில் கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் முறையே 18,475 மற்றும் 6,725 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதால், மக்கள் சற்று அவதானது்துடன் செயற்படுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணிகளை சூறையாடி சொத்து குவித்துள்ள ஹிஸ்புல்லா..! ஈரோஸ் கட்சியின் தலைவர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eros-secretary-general-prabhakaran-statement-1787207276"></link>
            <id>https://tamilwin.com/article/eros-secretary-general-prabhakaran-statement-1787207276</id>
            <summary type="text">மட்டக்களப்பு, வாகரை, வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில்
ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர்
ஏ.எல்.எம்.ஹிஸ்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, வாகரை, வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில்
ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர்
ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடி சொத்து குவித்துள்ளார், எனவே சூறையாடிய காணிகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் என ஈரோஸ் கட்சி தலைவர்
இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பில் நேற்று முன் தினம் (18.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>வைத்தியசாலை சீருடை பிரச்சினை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பூராகவும் சுகாதார ஊழியர்கள் ஒரே சீருடையில் கடமையாற்றி வருகின்றனர். கல்முனை வைத்தியசாலை சீருடை பிரச்சினை நிர்வாக மட்டத்தில் சுமூகமாக முடிக்க
வேண்டிய பிரச்சினை. </p><p>ஆனால் இதனை ஒரு இனவாத போக்குள்ள முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் ஹரீஸ் பூதாகரமாகி கிழக்கை முஸ்லிம்களின் ஆதிக்கத்தை கொண்டு வந்து
அரபு இராச்சியமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார்.
</p><p>
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடாது இன்று வரை தடுத்து
இனவாத விஷத்தை காட்டி வருகின்ற இவர் கிழக்கை அரபு இராச்சியமாக கொண்டு வருவதற்கு
ஆரம்பிக்கப்பட்ட இந்த சீருடை அதன் பிரதிபலன் தான் கல்முனையில் இஸ்லாமாபாத்
நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த
விடாதற்கு காரணம்.</p><h2>அரசியல் இருப்பு தக்கவைப்பு</h2><p>
</p><p>
இவ்வாறு தமது அரசியல் இருப்புக்கள் தக்கவைப்பதற்கு இன துவேசத்தை கக்கி
வருகின்றார். இந்த பிரச்சினை சுகாதார மட்டத்தில் தீர்த்து கொள்வார்கள் விளங்கி
கொள்ள வேண்டும். தமிழ் - முஸ்லிம் உறவை பிரிக்க வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d44757e-44ed-4f70-9b17-7f0915af3cdd/26-6a86a65ef2e1f.webp' /></p><p>

</p><p>
நான் தமிழ், முஸ்லிம், சிங்களம் என பார்த்தது இல்லை, யார் பிழை செய்தாலும் பிழை
பிழைதான். எனவே கிழக்கு மாகாணம் ஒரு அரபு இராச்சியமாக மாற இடம் கொடுக்க
முடியாது.
</p><p>
அதேவேளை வாகரை காரை முனையில் தமிழர்களின் பூர்வீக இடங்களுக்கு ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் ரவூப் ஹக்கீம் கடந்த 3
தினங்களுக்கு சென்று அது முஸ்லிம்களின் பாரம்பரிய இடம் என அதற்கு போலி
ஆவணங்களை தயாரித்து அரச காடுகளை அழித்து ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றனர்.</p><p> இதற்கு வனபரிபாலன திணைக்களம் உடந்தையாக இருக்கின்றனர். இதனை ஒருபோதும்
ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம் மக்களுக்கு காணி தேவை என்றால் அரசாங்கத்துடன் பேசி அரச அதிபர், பிரதேச
செயலாளர்களுடன் பேசி மக்களுக்கு கொடுப்பது வேறு விடயம். </p><p>ஆனால் அதை விட்டு போலி
ஆவணங்களை தயாரித்து கொண்டு காடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரசாங்க
அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலம்வாய்ந்த அரசியல்வாதிகளுக்காக ஷிரான் பாசிக் செலவிட்ட கோடிக்கணக்கான கறுப்புப்பணம்! சிக்கலில் பலர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-crores-election-campaigns-politician-1787206646"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-crores-election-campaigns-politician-1787206646</id>
            <summary type="text">நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் எதிர்க்கட்சியில் உள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் இருவரின் தேர்தல் பிரச்சாரங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் எதிர்க்கட்சியில் உள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் இருவரின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இருப்பினும், இந்த தேர்தல் பிரசாரங்களுக்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பது இதுவரை சரிவர வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>

இதேவேளை, தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு அரசியல்வாதிக்கு 50 பேருந்துகள் வழங்கப்பட்டதாகவும், மற்றொருவருக்கு பெருந்தொகை பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது விசாரணையில் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">விரைவில் அரசியல்வாதிகளிடம் விசாரணை&nbsp;</span></p><p>

 இது தொடர்பில் விரைவில் அரசியல்வாதிகள் இருவரையும் முன்னிலைப்படுத்தி விசாரிக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baa5a566-be4a-4d21-92ac-b48e6887f630/26-6a86a61cc4c10.webp' />&nbsp;</p><p> </p><p>

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவர் களுத்துறை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதற்கிடையில், ஷிரான் பாசிக் சட்டவிரோதமாக ஈட்டிய கறுப்பு பணத்தை வீட்டுத்தொகுதிகள்,5 சொகுசு ஹோட்டல்கள்,வர்த்தக நிறுவனங்கள் போன்றவைக்கு முதலீடு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சியோல் பீச் ஹோட்டலும் தன்னுடையது என்றும் அதற்காக பெருந்தொகை பணத்தை செலவழித்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
</p><p>
அத்துடன், ஷிரான் பாசிக் பொரலஸ்கமுவ, தெஹிவளை, கல்கிஸ்ஸ, இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பிரதேசங்களில் பெருந்தொகை பணத்தை முதலீடு செய்து பல சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><h2>சட்டவிரோத சம்பாதித்த கருப்பு பணம்&nbsp;</h2><p>
</p><p>
போதைப்பொருள் வலையமைப்பின் ஊடாக இவர் சட்டவிரோத சம்பாதித்த கருப்பு பணத்தை சட்டப்பூர்வ பணமாக மாற்றுவதற்காக சில வர்த்தக நிறுவனங்களுக்கு செலவு செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3fe9746-bc01-4323-958a-0e23ea409d75/26-6a86a61d8a8d4.webp' /></p><p> </p><p>

இந்நிலையில், அவரால் கட்டப்பட்ட ஹோட்டல்கள் அப்பகுதியில் காணிகளை வைத்திருக்கும் ஏழை மக்களின் பெயரில் நடத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.</p><p> 

இதனிடையே, அரசு நிலங்களில் கூட ஹோட்டல், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.</p><p> 

அல்டோ தர்மா, படோவிட்ட அசங்க மற்றும் சாண்டோ ஆகிய முக்கிய பாதாள உலக உறுப்பினர்கள் தனது நெருங்கிய நண்பர்கள் என்றும் அவர்களும் தனது போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஷிரான் பாசிக் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - மீண்டும் உறுதிப்படுத்திய வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-visited-official-university-of-wolverhampton-1787207544"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-visited-official-university-of-wolverhampton-1787207544</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம், வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம், வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றது என அந்தப் பல்கலைக்கழகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதியின் இந்தப் பயணம், பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்றதல்ல என்றும், பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றதாகவும் வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><h2>உத்தியோகபூர்வப் பயணம்&nbsp;</h2><p>

இந்த விளக்கம், குறித்த பயணத்தின் இராஜதந்திர அந்தஸ்து தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.</p><p> 

பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ள விடயங்களின் அடிப்படையில், அரசுமுறைப் பயணம் (State Visit) மற்றும் உத்தியோகபூர்வப் பயணம் (Official Visit) ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடும் தெளிவாகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab6c76f-c6f5-4737-8937-4e9ad61e5a52/26-6a86a4e62394e.webp' /></p><p>
</p><p>
இராஜதந்திர நடைமுறைகளின்படி, அரசுமுறைப் பயணம் (State Visit) என்பது ஒரு நாட்டின் அரசுத் தலைவரிடமிருந்து மற்றொரு நாட்டின் அரசுத் தலைவருக்கு நேரடியாக வழங்கப்படும் மிக உயர்ந்த மட்டத்திலான உத்தியோகபூர்வ அழைப்பாகும்.</p><p>

இவ்வாறான பயணங்களின்போது, வருகை தரும் தலைவரின் வருகை முதல் புறப்படும் வரையிலான அனைத்து செலவுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உத்தியோகபூர்வ மரியாதைகள் உள்ளிட்டவற்றை விருந்தோம்பும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.</p><h2>அரசுமுறைப் பயணம்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், அரசுமுறைப் பயணம் என்பது ஒரு நாட்டின் அரசுத் தலைவரின் அழைப்பின் பேரில் மட்டுமே இடம்பெறும்.

பிரித்தானியா, இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்திற்கான அழைப்பை ஒருமுறை மட்டுமே வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81bd8d46-12a9-4403-aa40-036651bdd8fa/26-6a86a4e6dc4b5.webp' /></p><p> </p><p>

அது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் அரசுமுறைப் பயணத்திற்கான அழைப்பை வழங்கியிருந்தது.</p><p>

இதற்கு மாறாக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தெற்காசிய பிராந்தியத்தில் உயர்மட்ட அரசுமுறைப் பயணங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.</p><h2>ரணில் விக்ரமசிங்க</h2><p>

ரணில் விக்ரமசிங்கவின் பயணம், இரு அரசாங்கங்களுக்கு இடையிலான அரசுமுறைப் பயணம் அல்ல என்றும், கல்விசார் நிறுவனமான வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வப் பயணம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c873a780-0df5-4bce-ad63-48b21b7fda8e/26-6a86a4e78ccd6.webp' /></p><p>
</p><p>
சர்வதேச இராஜதந்திர நடைமுறைகளின்படி, பல்கலைக்கழகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னாள் அரசுத் தலைவர்களை தமது நிகழ்வுகளுக்காக அழைப்பது வழக்கமான நடைமுறையாகும்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தின்படி, இந்தப் பயணம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அதன் நோக்கங்களும் பல்கலைக்கழகத்தின் கல்விசார் அழைப்பின் வரம்பிற்குள் மட்டுமே அமைந்திருந்ததாக பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி டுபாயில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-imran-s-close-wanathe-chathu-arrested-1787208047"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-imran-s-close-wanathe-chathu-arrested-1787208047</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியாகக்&amp;nbsp; கருதப்படும் வனத்தே சது என அழைக்கப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியாகக்&nbsp; கருதப்படும் வனத்தே சது என அழைக்கப்படும் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த நபர் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>டுபாய் பாதுகாப்புப் படையினர்</h2><p>

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களான பாணந்துறை சலிந்து மற்றும் தருண் ஆகியோர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efda07af-54aa-4615-a34d-d51b4282c747/26-6a86a542bccfc.webp' /></p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T06:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவை பகிரங்கமாக அறிவித்தது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - சஜித்திற்கு அனுப்பப்பட்ட கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-bar-association-has-announced-1787208375"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-bar-association-has-announced-1787208375</id>
            <summary type="text">தனது உறுப்பினர்கள் இன்று(20.08.2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளமாட்டார்கள் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.


எதிர்க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது உறுப்பினர்கள் இன்று(20.08.2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளமாட்டார்கள் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஒத்திவைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

அரசியலமைப்பின் 22வது திருத்தம்</h2><p>
இன்று(20.08.2026) நாடாளுமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகளையும், அரசாங்கம் அறிவித்துள்ள நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்ளும்போது, ​​இது தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குவதில் அரசாங்கம் தற்போது ஆர்வம் காட்டவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/469a9713-6ff3-45bf-b35a-c545fcb88329/26-6a86a5405b698.webp' /></p><p> </p><p>

அரசியலமைப்பின் 22வது திருத்தம் குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிப்பதற்காக இன்று(20) நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கை சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்திருந்தார்.</p><p> 

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நேற்று(19.08.2026) நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோதிலும், அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-20T06:57:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-government-official-who-threatened-remanded-1787204763"></link>
            <id>https://tamilwin.com/article/female-government-official-who-threatened-remanded-1787204763</id>
            <summary type="text">நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்ட பெண் அரச உத்தியோகத்தரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்ட பெண் அரச உத்தியோகத்தரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25
ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை
(18) மாலை கைது செய்யப்பட்டார்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p> இதன்போது, கைது செய்யப்பட்ட வேளையில் ஏற்பட்ட
அதிர்ச்சியால் அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, பொலிஸ் பாதுகாப்புடன்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று
வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f5afb1-6b33-46f4-8676-072976b06a1b/26-6a869dfde27c9.webp' /></p><p>

இந்நிலையில், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற சம்மாந்துறை
நீதிவான், நிலைமைகளை நேரில் அவதானித்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்,
சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டுள்ளார். </p><p>மேலும் சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் தேவையான
பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான்
பணித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T06:26:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை ஒற்றுமையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் - ஆளுநர் நா.வேதநாயகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-provience-of-srilanka-1787204811"></link>
            <id>https://tamilwin.com/article/northern-provience-of-srilanka-1787204811</id>
            <summary type="text">வட மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து,
சுமூகமாகவும், சிறப்பாகவும், ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என
வட மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து,
சுமூகமாகவும், சிறப்பாகவும், ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என
வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த கோரிக்கைக்கு, மாகாணத்தின்
நிறைவேற்று அதிகாரிகளும் வட மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள்
சங்கத்தினரும் இணங்கியுள்ளனர்.&nbsp;</p><p>
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்
நேற்றைய தினம் (19.08.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.</p><h2>கலந்துரையாடலில் பரிமாறப்பட்ட விடயங்கள்</h2><p>
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்ட
போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கவலைகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில்
கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3bd601f-73bc-44b6-8e4b-9c3c69637836/26-6a869af605234.webp' /></p><p>

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில், அனைத்து
தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும் புரிந்துணர்வுடன் செயல்பட
வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.
</p><p>
அதேவேளை, அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரப்பினரின் கௌரவமும் தொழில்சார்
நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத் துவமும் கலந்துரையாடலில்
எடுத்துரைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b8013ab-dc5a-4db7-be0d-c0fb03049a65/26-6a869af6e0ff4.webp' /></p><h2>விரும்பத்தகாத சூழ்நிலைகள்</h2><p>

மேலும், அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத சூழ்நிலைகள் மீண்டும்
தோன்றாத வகையில், பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவற்றை
உரிய கலந்துரையாடல் ஊடாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளுநர்
கேட்டுக் கொண்டார்.

'இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாத வகையில்
இருதரப்பினரும் உறுதியுடன் செயல்பட வேண்டும்' என அவர் வலியுறுத்தியதுடன், இதை
கலந்துரையாடலில் பங்கேற்ற இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
</p><p>
மக்களின் நலனையும் மாகாணத்தின் அபிவிருத்தி முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி,
கருத்து வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் எனவும்,
இதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆளுநர்
கேட்டுக்கொண்டார். இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab80bd6a-80c3-4bbe-a60c-268f9a08abe1/26-6a869af7b5d4a.webp' /></p><p>
இக்கலந்துரையாடலில் வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண ஆளுநரின்
செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல், கல்வி, உள்ளூராட்சி மற்றும்
சுகாதார அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வட மாகாண அரசாங்க சேவை
பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஐந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T06:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநரை சவால் செய்யும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கிஷோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urban-council-member-kishore-challenges-governor-1787205293"></link>
            <id>https://tamilwin.com/article/urban-council-member-kishore-challenges-governor-1787205293</id>
            <summary type="text">குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி
மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும் ஆளுநர் தவறாக
வழிநடத்தப்படுகின்றார் என பதவி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி
மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும் ஆளுநர் தவறாக
வழிநடத்தப்படுகின்றார் என பதவி வறிதாக்கப்பட்ட சாவகச்சேரி நகரசபையின் உப
தவிசாளரும் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்துள்ளார்.</p><p>

சாவகச்சேரி நகரசபை தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில்
தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக மேன்முறையீடு
செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>பொதுமக்களின் பிரச்சினை</h2><p>
</p><p>
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து
தெரிவித்த அவர், </p><p>மக்கள் நேரடியாக அணுகக்கூடிய நிர்வாக அமைப்பாக உள்ளூராட்சி
மன்றங்களே காணப்படுகின்றன என்றும், வர்த்தகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின்
பிரச்சினைகளைத் தீர்ப்பது தமது பொறுப்பு என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69b9b3c2-da3d-4a6e-abff-83306d8878dd/26-6a8699ff5286d.webp' /></p><p>
</p><p>
குடிபுகு சான்றிதழ் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டால் உள்ளூராட்சி
மன்றங்களுக்கு கணிசமான வருமான இழப்பு ஏற்படும் எனவும், இந்த விடயத்தை வடமாகாண
ஆளுநர் புரிந்து கொள்ளாமல் தவறாக வழிநடத்தப்படுகின்றார் எனவும் கிஷோர்
குற்றஞ்சாட்டினார்.
</p><p>
அத்துடன், அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் அவசியம் என ஆளுநர்
கூறுகின்ற நிலையில், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர்
செயலகம் மற்றும் அங்குள்ள கட்டிடங்களுக்கு உரிய கட்டிட அனுமதிகளும் குடிபுகு
சான்றிதழ்களும் உள்ளனவா என அவர் கேள்வி எழுப்பினார்.
</p><p>ஆளுநர் செயலகத்திற்கான கட்டிட அனுமதிகளையும் குடிபுகு சான்றிதழையும் வடமாகாண
மக்களுக்கு பகிரங்கப்படுத்த தயாரா? என அவர் சவால் விடுத்தார்.</p><h2>வடமாகாணம்</h2><p>

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட நீண்டகாலத்திற்கு முன்னர்
அமைக்கப்பட்ட அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் உள்ளதா என கேள்வி
எழுப்பிய கிஷோர், 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரே வடமாகாணத்தில் குடிபுகு
சான்றிதழ் தொடர்பான நடைமுறை முக்கியத்துவம் பெற்றதாகத் தெரிவித்தார்.</p><p>

2010ஆம் ஆண்டுக்கு முன்னர் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் கட்டப்பட்ட பல பாரிய
கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதியோ குடிபுகு சான்றிதழோ இல்லாத நிலையில், அவை
கட்டப்பட்ட காலத்தில் இத்தகைய நடைமுறை நடைமுறையில் இருக்கவில்லை என்பதையும் அவர்
சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63093487-d1a4-4ad8-9f01-224725772b24/26-6a869a00042ec.webp' /></p><p>

தமது பதவி பறிக்கப்பட்டமை தனிப்பட்ட விடயம் அல்ல என்றும், வடமாகாணத்தில் உள்ள
அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் குரலையும்
பாதுகாப்பதற்கான போராட்டம் எனவும் அவர் தெரிவித்தார். </p><p>பதவிகள் வரலாம், போகலாம். ஆனால் மக்களோடும் இந்த மண்ணோடும் நாங்கள்
தொடர்ந்து நிற்போம். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்கும் எந்த
நடவடிக்கைக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை எனவும் கிஷோர் குறிப்பிட்டார்.</p><p>

இதேவேளை, சாவகச்சேரி நகரசபை தொடர்பான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;<br><br></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T06:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியிலிருந்து சென்ற இரண்டு வெளிநாட்டவர்கள் சடலங்களாக மீட்பு! காரணம் தொடர்பில் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/matara-two-foreigners-found-dead-investigation-1787204463"></link>
            <id>https://tamilwin.com/article/matara-two-foreigners-found-dead-investigation-1787204463</id>
            <summary type="text">மாத்தறை, திஹகொட - பலொல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள விகாரை வளாகத்தில் உள்ள
வேப்ப மரத்தில் நேற்று (19) இரு வெளிநாட்டவர்கள் தவறான முடிவெடுத்து தொங்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, திஹகொட - பலொல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள விகாரை வளாகத்தில் உள்ள
வேப்ப மரத்தில் நேற்று (19) இரு வெளிநாட்டவர்கள் தவறான முடிவெடுத்து தொங்கிய நிலையில்
சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக திஹகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விகாரைக்கு வழிபாடுகளுக்காகச் சென்ற பிரதேச மக்கள் மரத்தில் சடலங்கள்
தொங்குவதைக் கண்டு உடனடியாக திஹகொட பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><h2>உயிரிழந்தவர்கள் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>
உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய பிரான்ஸ் நாட்டவர் மற்றும் 52 வயதுடைய
ஸ்காட்லாந்து நாட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/763b510f-101e-4c46-80cc-447825c70c26/26-6a869847dfd07.webp' /></p><p>
</p><p>
இவர்கள் இருவரும் வெலிகமை, மிதிகம - குருபெபில பகுதியில் உள்ள சுற்றுலா
விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளமையுடன், நேற்றுக் காலையில் அம்பாந்தோட்டைப்
பகுதிக்குச் செல்வதாகத் தெரிவித்தே விடுதியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருந்து இரு ஜோடி காலணிகள், ஒரு
மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் 'ஸ்கூட்டி' ரக மோட்டார் சைக்கிள் என்பன
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
மோட்டார் சைக்கிள் வெலிகமைப் பகுதியில் வாடகைக்குப் பெறப்பட்டது என்பது
இலக்கத் தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள்&nbsp;</h2><p>

இவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார்
சந்தேகிக்கின்றனர். </p><p>எனினும், இந்த சம்பவத்துக்கான உண்மையான காரணம் இதுவரை
கண்டறியப்படவில்லை.

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>அத்துடன், மாத்தறைப்
பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமாரவின்
வழிகாட்டலில் திஹகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T06:03:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787203198"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787203198</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்றைய தினத்திற்கான வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>

இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்</h2><p> </p><p>

அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். </p><p>

அதேவேளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னராக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a861c671-ca0c-44e1-83be-e9a342b22645/26-6a86923fe53a1.webp' /></p><h2>பலத்த காற்று வீசக்கூடும்</h2><p> </p><p>

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.<br><br><b><i>YOU MAY LIKE THIS..<br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/o8DaGU467xM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-20T05:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-visits-parliament-1787203434"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-visits-parliament-1787203434</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று நேரத்திற்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

 

நாடாளுமன்றம் காலை 9:30 மணிக்குக் கூடியதுடன், தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று நேரத்திற்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
</p><p>
 

நாடாளுமன்றம் காலை 9:30 மணிக்குக் கூடியதுடன், தற்போது வாய்மொழி பதில்களுக்கான வினா நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8b946a2-567b-4c77-9901-2b74d63b1142/26-6a8691523a5ed.webp' /></p><p>

 

பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வேலைவாய்ப்பு (திருத்த) மசோதாவின் இரண்டாம் வாசிப்பை, இன்று காலை 11:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை சபை எடுத்துக்கொள்ள உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T05:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி அபகரிப்பு மற்றும் கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்! எதிர்க்கட்சித்தலைவர் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-condemns-land-grab-kalmunai-hospital-issue-1787198919"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-condemns-land-grab-kalmunai-hospital-issue-1787198919</id>
            <summary type="text">தனியார் காணிகளை எடுத்து உப்பு உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதை விட அரச காணிகளை எடுத்து இதனை செய்யுங்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் காணிகளை எடுத்து உப்பு உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதை விட அரச காணிகளை எடுத்து இதனை செய்யுங்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். </p><p>நேற்று(20.08.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;அவர் மேலும் தெரிவிக்கையில், </p><h2>உப்பள அமைப்பும் காணிப் பிரச்சினைகளும்</h2><p>வடமாகாணத்தின் வன்னி மாவட்டத்திலும், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில்,
கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் 54 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம்
அமைக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f2c6afd-3efc-4d79-ad84-0c7f1850f49b/26-6a8687cf983df.webp' /></p><p>இது தொடர்பில் சம்மந்தப்பட்ட
அமைச்சர் ரவிகரனுடன் பேசி குறைபாடுகளை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை
எடுக்க வேண்டும். மேலும், வட மாகாணத்தில் பாரிய காணிப் பிரச்சினைகள் நிலவுகின்றன.</p><p> கடந்த காலங்களில் பொதுமக்களின் தனியார், விவசாய மற்றும் வதிவிடக் காணிகள்
அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உரிய நிவாரணத்தையும் தீர்வையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.</p><h2>கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்</h2><p>கல்முனை வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களைச்
சீருடை தொடர்பான விவகாரத்தில் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளமை
பொருத்தமற்ற நடவடிக்கையாகும். எமது
நாட்டில் அவரவர் மத மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றும் உரிமை அனைவருக்கும்
உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c179faa-7fee-4228-a2d3-d4e8e520ff4c/26-6a8687cebe7af.webp' /></p><p> இந்த அரசு தமது தேர்தல் மேடைகளில் இனம், மதம், குலம், வகுப்பு ரீதியான எந்தப்
பாரபட்சமும் பார்க்காமல் செயற்படுவதாகக் கூறிவிட்டு, தற்போது புதிதாக நியமனம்
பெற்ற 9 பேரை சீருடை விவகாரத்துக்காக இடமாற்றம் செய்வது கொள்கை
விளக்கங்களுக்கு முரணானது.</p><p>
எனவே, உடனடியாக மேற்படி 9 ஊழியர்களையும் மீண்டும் கல்முனை வைத்தியசலையிலேயே
பணியில் அமர்த்தி, அவர்களின் கலாச்சாரத்துக்கேற்ப சீருடை அணிய அனுமதிக்க
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T05:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட மீது குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/filed-against-yoshitha-rajapaksa-wasantha-1787202635"></link>
            <id>https://tamilwin.com/article/filed-against-yoshitha-rajapaksa-wasantha-1787202635</id>
            <summary type="text">இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச ஆகியோர் மீது ஊழல் குற்றச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>

குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிணையில் செல்ல அனுமதிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44318d9-360d-422e-a7ce-2d6c7d179759/26-6a868ea957dd1.webp' /></p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) இந்தக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T05:21:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொக்குத்தொடுவாய் காணி விவகாரம் : ஆளும் தரப்பு வெளிப்படுத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kokkuthoduvai-land-issue-1787200194"></link>
            <id>https://tamilwin.com/article/kokkuthoduvai-land-issue-1787200194</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய்
மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய்
மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின்
பூர்வீக வயல்நிலங்கள் ஆக்கிரபிக்கப்பட்டு தனியார் ஒருவரால் சட்டவிரோதமாக
அத்துமீறி உப்பளம் அமைக்கப்படுகின்ற விடயம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம்
சுட்டிக்காட்டியிருந்தார்.
</p><p>அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் இவ்வாறு
தமிழ் மக்களின் தனியார் வயல்காணிகளை அத்துமீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து
தனியார் ஒருவர் உப்பளம் அமைக்கின்றமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்
சுனில் ஹந்துன்னெத்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.</p><h2>அத்துமீறி அமைக்கப்படும் உப்பளம்</h2><p>இதன்போது வன்னிப் பகுதியிலோ வடமாகாணத்திலோ தனியார் காணிகளை ஆக்கிரமித்து
உப்பளங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி
தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95fe414a-98e3-456e-b194-73162f04be9e/26-6a868a2e02344.webp' /></p><p>அதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்டு, அந்தப் பிரச்சினை தொடர்பில்
ஆராயப்படுமென அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.</p><p>அதனைத்தொடர்ந்து உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விடயம்
தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் உள்ள
கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவில் அத்துமீறி அமைக்கப்படும்
உப்பளம் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக முல்லைத்தீவில் குரல் எழுப்பி
வருகின்றோம்.
</p><p>
இது தொடர்பில் மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால்
தடுத்து நிறுத்துவதற்குரிய கடிதங்கள் உரிய தரப்பினருக்கு அனுப்பப்பட்டன.
</p><p>
இவ்வாறான அடாத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவது மகாவலி அதிகார சபை தான். இது
தொடர்பாக கடந்த 03.12.2026 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் தலைமையில்
நடைபெற்ற விசேட கூட்டத்தில்&nbsp; அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும்
தெரியப்பட்டது.</p><h2>சான்றுகளை உரிய தரப்பினருக்கு வழங்க</h2><p>குறித்த பகுதி தனியார் காணியில் அமைக்கப்படவில்லை என மகாவலி அபிவிருத்தி
அதிகார சபையினரால் அன்றைய தினம் குறிப்பிடப்பட்டது.</p><p>

அமைச்சரால் இப்பிரச்சினையை மாவட்டச் செயலாளர் தலைமையில் ஆராயுமாறு
அன்றைய நாள் அமைச்சரால் பணிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e79aa9a2-a444-433a-baae-eb9ba4ea85d0/26-6a86881b2f871.webp' /></p><p>
பின்னர் எமது, கோரிக்கைக்கு அமைய , மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று
பிரதேச செயலாளர் ஆகியோரின் உத்தரவுக்கு அமைய குறித்த பகுதி தனியார் காணியே என
நில அளவை அத்தியேட்சகரால் உறுதிப்படுத்தப்பட்டது.
</p><p>
அதன் அடிப்படையில், தனியார் காணியில் அமைக்கப்படும் மேற்படி உப்பளம் அமைக்கும்
நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர்
நாயகத்துக்கு 28.07.2026 அன்று கடிதம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால்
கடிதம் அனுப்பப்பட்டது.
</p><p>
அதன் பின்னரும் இலங்கை மகாவலி அதிகார சபை அதற்கு இணங்காத வகையில் தன்னிச்சையாக
செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.
</p><p>
மகாவலி அதிகார சபை இங்குள்ள அரசாங்கத்துக்கும் கட்டுப்படாமல்
வடக்கு கிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் எண்ணத்தோடு தன்னிச்சையாக செயற்படும் ஓர்
அமைப்பாகவே செயற்படுகிறது.
</p><p>
கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் அடாத்தாக அமைக்கப்பட்ட
உப்பளமும் அதற்கு ஒரு சான்று என இப்பேரவையில் மீண்டும் பதிவுசெய்கிறேன்.
</p><p>தேவைப்பட்டால் இவற்றுக்கான சான்றுகளை உரிய தரப்பினர்க்கு வழங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T05:05:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-delegation-denied-permission-sri-lanka-1787201633"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-delegation-denied-permission-sri-lanka-1787201633</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான
கனேடியத்தூதரகத்தின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்த போதிலும், அரசிடமிருந்து
முறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான
கனேடியத்தூதரகத்தின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்த போதிலும், அரசிடமிருந்து
முறையான அனுமதி கிடைக்காத காரணத்தால் சித்துப்பாத்தி இந்து மயான வாயில் வரை
வந்து திரும்பிச்சென்றுள்ளனர்.
</p><p>
செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகளின் இறுதி நாளான 56
ஆம் நாள் அகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. </p><p>மதிய உணவு இடைவேளையின் போது
கனேடியத்தூதரக அதிகாரிகள் அங்கு வருகை தந்திருந்தனர்.</p><h2>அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான கோரிக்கை</h2><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காகக் கனேடியத் தூதரகம் தரப்பில்
உரிய அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb3f4ef6-1c3a-4806-8127-1c06d776777a/26-6a868a860e976.webp' /></p><p>
எனினும், இலங்கை அரசிடமிருந்து அதற்குரிய அனுமதி கிடைக்கவில்லை.

அகழ்வுப் பணி நடைபெறும் பகுதிக்கு வருகை தருவதாக இருந்தால், முதலில் அரசின்
அனுமதியைப் பெற்று நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.</p><p> ஆனால், கனேடியத்
தூதுவராலயத்துக்கு அரசின் அனுமதி கிடைக்காததால், நீதிமன்றத்தில் முறையான
விண்ணப்பங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை.</p><p>

இதன் காரணமாக, செம்மணி வாயில் வரை வருகை தந்த கனேடியத் தூதுவராலயப்
பிரதிநிதிகள், அரசின் அனுமதி பெறப்படாத சூழ்நிலையில் புதைகுழிப் பகுதிக்குப்
செல்லாமல் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T05:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய நபரின் வாக்குமூலம்! கொழும்பு வீடொன்றில் சிக்கிய ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dangerous-object-found-in-a-house-in-colombo-1787199801"></link>
            <id>https://tamilwin.com/article/dangerous-object-found-in-a-house-in-colombo-1787199801</id>
            <summary type="text">வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட &#039;சமித்புர சத்து&#039; என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரிடம் முன்னெடுக்கப்பட்ட வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 'சமித்புர சத்து' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த திமுது சதுரங்க என்ற சமித்புர சது, ஓமானில் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.</p><p>குறித்த சந்தேகநபர், மட்டக்குளியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>சிவப்பு அறிவித்தல்&nbsp;</h2><p>கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்து இவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8d1f46f-77f2-4efc-a20d-b263a05042d7/26-6a86845742d7f.webp' /></p><p>இதற்கமைய, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வெளிநாடொன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>திமுத்து சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார். </p><p>

அவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேக நபர்களில் ஒருவராவார் என்பதுடன், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரான ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-to-check-shiran-basik-s-account-1787197561"></link>
            <id>https://tamilwin.com/article/order-to-check-shiran-basik-s-account-1787197561</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான ஷிரான் பாசிற்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

அதற்கமைய ஷிரான் பாசிக்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான ஷிரான் பாசிற்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.</p><p> 

அதற்கமைய ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான அனைத்து வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் பெருந்தொகை பணத்தை ஈட்டிய ஷிரான் கொழும்பு உட்பட பல இடங்களில் சொத்துக்களை வைத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

வங்கிக் கணக்குகள்</b></h2><p>இவ்வாறான நிலையில் ஷிரான் பெயரில் நேரடியாக உள்ள வங்கிக் கணக்குகள் மற்றும் பினாமி பெயரிலுள்ள சேமிப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf6634b-6313-41ac-b6ba-8b8dab49a98e/26-6a8680593645d.webp' /></p><p>இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களால் கூட்டாக நடத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட ஷிரான் பாசிக் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில் நாட்டுக்கு இழுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p> </p>]]></content>
            <updated>2026-08-20T04:19:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்திற்கு வரப்போகும் சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-with-all-mps-regarding-22nd-amendment-1787198504"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-with-all-mps-regarding-22nd-amendment-1787198504</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் வெற்றிடமாகவுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநித...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் வெற்றிடமாகவுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் (20.08.2026) நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர். </p><p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கைக்கு இணங்க, நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்கள் தெளிவுபடுத்தவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>உத்தியோகபூர்வ அறிவிப்பு</h2><p> </p><p>இது தொடர்பில் சபாநாயகருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் நேற்றைய தினம் (19.08.2026) நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார். </p><p>இதற்கமைய, திட்டமிடப்பட்டவாறு இன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சட்டத்தரணிகள் சங்கத்தினர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து கலந்துரையாடவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0346398b-dd84-455b-801a-488ede6e1be9/26-6a867f7638146.webp' /></p><h2>எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ள விடயம்</h2><p> </p><p>இந்தக் கலந்துரையாடலில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியைச் சந்தித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது போன்றே, இம்முறையும் சுமூகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக வருகை தரும் சட்டத்தரணிகளுடன் ஏனைய உறுப்பினர்களையும் இணைந்து கொள்ளச் செய்யுமாறு வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T04:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-people-including-a-girl-died-in-a-accident-1787196113"></link>
            <id>https://tamilwin.com/article/three-people-including-a-girl-died-in-a-accident-1787196113</id>
            <summary type="text">மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புது கண்டி வீதியின் தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில், 07 வயது சிறுமி உட்பட மூன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புது கண்டி வீதியின் தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில், 07 வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நேற்று (19.08.2026) பிற்பகல், பியகமவிலிருந்து தெல்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வாகனம் ஒன்று வீதியில் வலதுபுறம் திரும்பும்போது, ​​எதிர்திசையில் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><h2>ராகம வைத்தியசாலையில் அனுமதி</h2><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உடனடியாக உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,&nbsp;முச்சக்கர வண்டி சாரதி, ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a7343d-9cba-4233-8d9b-5174962a8c63/26-6a867a8b1fbd8.webp' /></p><p>உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டி சாரதி 69 வயதுடைய தெல்கொட சேர்ந்தவர் எனவும், 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 07 வயது மகள் சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.</p><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காரில் பயணித்த சிறுமி ராகம வை்ததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>சம்பவம் தொடர்பில் மீகஹாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T03:57:34+00:00</updated>
        </entry>
    </feed>
