<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-07T01:15:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்தை தொடரும் விசாரணைகள்! மீண்டும் சிக்கலில் சிக்கிய ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pet-scan-fundraising-probe-into-siriliya-saviya-1788739755"></link>
            <id>https://tamilwin.com/article/pet-scan-fundraising-probe-into-siriliya-saviya-1788739755</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET Scan இயந்திரம் ஒன்றை வழங்குவதற்காக நிதி திரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சிரிலிய சவிய அமைப்பு, PET Scan இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தேசிய சேமிப்பு வங்கியும் குறித்த திட்டத்திற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>நிதி திரட்டு</h2><p>

இந்த விவகாரம் தொடர்பில், அப்போது தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் காரியவசத்திடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cea927d-8f5b-4c4c-aad9-681e6664965a/26-6a9e0311221a5.webp' /></p><p>
</p><p>
எனினும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட PET Scan இயந்திரம், சிரிலிய சவிய அமைப்பினால் கொள்வனவு செய்யப்படவில்லை என்றும், அது சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால், சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட PET Scan இயந்திரத்தை கொள்வனவு செய்வதாகக் கூறி நிதி திரட்டப்பட்டதன் மூலம் மோசடி ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T01:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-not-sling-mud-at-anybody-1788743048"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-not-sling-mud-at-anybody-1788743048</id>
            <summary type="text">அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக குரல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கத்திற்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக குரல் கொடுக்கும் குழுக்களைத் தடுக்கும் சக்தி தமக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p> இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8503ccc2-047e-4a7f-898d-0fec97ec10de/26-6a9e0d89d65a2.webp' /></p><p>
தேசிய மக்கள் சக்திக்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக முன்வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் எனவும், அரசாங்கம் எவரையும் அவ்வாறு செய்யுமாறு கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>தன்னார்வ அடிப்படையில் அரசாங்கத்தின் சார்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவேரை மதிப்பதாகவும் பாராட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இவர்கள் பணத்திற்காக எழுதுபவர்களோ, கூலிக்குச் சேறுபூசுபவர்களோ அல்லது பணத்திற்காகக் கருத்துகளைப் பதிவிடுபவர்களோ அல்லர். தமது இயக்கத்திற்காகத் தன்னார்வமாக முன்வரும் ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தன்னார்வமாக உழைக்கும் இத்தகைய படைகள் தானாகவே உருவாகின்றன எனவும் இவ்வாறான படைகளே முற்போக்கு மக்கள் இயக்கங்களைப் பாதுகாக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
பிற எந்தவொரு சக்தியையும் விட, முற்போக்கு மக்கள் இயக்கங்கள் மூலம் தானாகவே உருவாகும் பரந்த மக்கள் சக்தியே மிகவும் வலிமையானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அத்தகைய சக்தி உருவாகுவது நல்லதே தவிர, அதைத் தடுக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T01:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! விசா விதியில் அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-change-for-sri-lankans-traveling-to-thailand-1788742247"></link>
            <id>https://tamilwin.com/article/major-change-for-sri-lankans-traveling-to-thailand-1788742247</id>
            <summary type="text">இலங்கை கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்குத்
திட்டத்தில் தாய்லாந்து அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்குத்
திட்டத்தில் தாய்லாந்து அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.</p><p>

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15, 2026 முதல் இலங்கையர்கள் தாய்லாந்திற்கு
விசா இன்றி பயணம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இலங்கை பயணிகள்</h2><p>

மேலும் செப்டம்பர் 15 முதல் தாய்லாந்து செல்லும் அனைத்து இலங்கை பயணிகளும்
புறப்படுவதற்கு முன்பே உரிய விசாவைப் பெற வேண்டியது அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d795e6-5e5c-4d98-92dc-473aa47289bf/26-6a9e0b9b51252.webp' /></p><p>

அத்துடன் விசா விண்ணப்பங்களையும் அதற்கான கட்டணங்களையும் தாய்லாந்தின்
அதிகாரப்பூர்வ இணையவழி e-Visa முறைமை மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>

இதேவேளை கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் நேரில் சமர்ப்பிக்கப்படும் விசா
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளாது.</p><h2>&nbsp;விசா இரத்து</h2><p>
</p><p>
எனவே செப்டம்பர் 15-க்கு முன்னர் ஏற்கனவே உள்ள விசா விலக்கு முறையின் கீழ்
தாய்லாந்திற்குள் நுழையும் பயணிகள், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் வரை
தொடர்ந்து அங்கு தங்கியிருக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05c0b24-9742-4ffb-8adb-9a2f5e2d25f9/26-6a9e0b9c1e27f.webp' /></p><p>

இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு, சுற்றுலா, பொருளாதார நலன்கள் மற்றும் பரஸ்பர
ஒத்துழைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தாய்லாந்து அரச அமைச்சரவை இந்த முடிவை
எடுத்துள்ளது.
</p><p>
இது குறித்த "புதிய விசா நடவடிக்கைகள்" பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T01:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி!மெல்பேர்ன் நகரில் நடந்த அதிர்ச்சிக்கும் சம்பவங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா,இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா,இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.</p><p>தொழிலதிபர் நிமல் பெரேராவை நாமல் தொடர்பில் சாட்சியமளிக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவிலும் பாரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்தவர்</h2><p>

நாமல் ராஜபக்சவின் சகாக்களில் ஒருவரான இந்திக கருணாஜீவ, மெல்பேர்ன், விக்டோரியாவில் வசித்து வரும் வழக்கறிஞராவார். </p><p>ராஜபக்சவின் நீண்டகால நண்பரான இவர், அவுஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு நாமல் ராஜபக்சவிற்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் என கோருவதற்கு தீவிர முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. </p><p>கருணாஜீவ, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 இல் அமைந்துள்ள ISK Law இன் முதன்மை வழக்கறிஞராவார்.
</p><p>
ஆனால் கருணாஜீவவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமல் பெரேரா அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e69677-6fbf-4574-a2f3-3c5249c9250c/26-6a9e0b09be350.webp' /></p><p>இதன் காரணமாக கருணாஜீவவின் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இச்சம்பவம் நாமல் ராஜபக்சவை முற்றிலும் விரக்தியடையச் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவுஸ்திரேலியா சென்ற CID மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இது தெரியவந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நிமல் பெரேராவிடமிருந்து சத்தியக்கடதாசி (Affidavit) பெறுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். </p><p>அங்கு நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எவ்வாறு வழங்கினார் என்பதைக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசியை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
</p><h2>
அவுஸ்திரேலிய அரசு வழங்கிய வாக்குறுதி</h2><p>நிமல் பெரேராவிற்கு பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து 'Zoom' வழியாக சாட்சியமளிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விசாரணைக்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பர சட்ட உதவியை வழங்கியுள்ளதோடு, தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb41ded-a7b0-4a56-a30e-b9be7029fe66/26-6a9e0b0a80c15.webp' /></p><p>எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவது தொடர்பான உடன்பாடே இந்த வழக்கின் முக்கிய விடயமாகும். வழக்கு மிகவும் வலுவாக உள்ளதாகவும், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக மேலும் சான்றுகள் வெளிவரும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுப்பாரா என்பது இன்னும் வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் 10 கைதிகளுடன் நாமல்! அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 இந்த கைது நடவடிக்கை மட்டுமல்லாது, 2016-ல் தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் குரூப் (Krrish Group) தொடர்பான 70 மில்லியன் ரூபா வழக்கு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.
</p><p>
இந்த வழக்குகள் அனைத்தும் நல்லாட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதும் அதன் பணிகளைத் தொடர்கிறது.

தற்போதைய சூழலில், நாமல் ராஜபக்சவுக்கு உடனடியாக பிணை கிடைப்பது கடினம் போன்று காணப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் 10 கைதிகளுடன் தங்கியிருக்கிறார்.அவருக்கு சிறைச்சாலைக்குள் எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.</p><p>

மேலும், அவர் எந்தவிதமான நோய் பாதிப்புகளும் இன்றி நலமாக இருப்பதாக சிறைச்சாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>

 இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:56:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக போர்சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம், மக்கள் மீது திணிக்கவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-not-imposing-burden-on-people-1788742339"></link>
            <id>https://tamilwin.com/article/npp-not-imposing-burden-on-people-1788742339</id>
            <summary type="text">உலக போர்ச் சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம் மக்கள் மீது திணிக்கவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
 பேருவளையில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக போர்ச் சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம் மக்கள் மீது திணிக்கவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>
 பேருவளையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>70 ஆண்டுகளுக்கும் மேலாக சீரழிக்கப்பட்ட ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது நீண்டதும் சவாலானதுமான ஒரு பயணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/562fe399-63f6-42ab-9384-60300a8d7cd5/26-6a9e0ac940c7f.webp' /></p><p>
எனினும், உலகில் நிலவும் போர்ச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டின் மக்களுக்கு அதன் சுமை தெரியாத வகையில் செயற்பட தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்சார் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.
</p><p>இதனால் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்கம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்த அனுமதிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>வேறு அரசாங்கம் இருந்திருந்தால், இந்தப் போரைச் சாட்டாக வைத்து பெரிய சூதாட்டம் நடத்தி, எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை எனக் கூறி விலைகளை உயர்த்தியிருப்பார்கள். மக்கள் மீண்டும் வரிசைகளில் நின்றிருப்பார்கள். </p><p>ஆனால், நமது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்கப்படவில்லை. மாறாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை படிப்படியாகக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் போன்ற சவால்களின் போதும் அரசாங்கம் மிகவும் திறம்பட தலையிட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>உலகில் நிலவும் போரின் தாக்கம் கூட மக்களுக்குத் தெரியாத வகையில் நாட்டை ஆட்சி செய்ய முடிந்தது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய சாதனை என ரில்வின் சில்வா மேலும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T00:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/schools-to-reopen-from-tomorrow-1788741297"></link>
            <id>https://tamilwin.com/article/schools-to-reopen-from-tomorrow-1788741297</id>
            <summary type="text">அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று(7) முதல் ஆரம்பமாகவுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று(7) முதல் ஆரம்பமாகவுள்ளன.
</p><p>
இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளன.</p><h2>மீண்டும் திறப்பு</h2><p>
</p><p>
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5055e311-f52f-4397-bbe7-dcd195d7c573/26-6a9e07e5ee7fe.webp' /></p><p>

இதற்கான பரீட்சை நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரும்பப் பெறமாட்டோம்… நிறைவேற்றியே தீருவோம்! 22ஆவது திருத்தம் குறித்து அநுர அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-22nd-amendment-will-certainly-be-passed-anura-1788737974"></link>
            <id>https://tamilwin.com/article/the-22nd-amendment-will-certainly-be-passed-anura-1788737974</id>
            <summary type="text">&amp;nbsp;உத்தேச 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப்
பெறப்போவதில்லை என்றும், அது கட்டாயம் நிறைவேற்றப்பட்டே தீரும் என்றும்
ஜனாதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உத்தேச 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப்
பெறப்போவதில்லை என்றும், அது கட்டாயம் நிறைவேற்றப்பட்டே தீரும் என்றும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் அறிவித்துள்ளார்.
</p><p>
களுத்துறை - புளத்சிங்கள பகுதியில் நேற்று(6) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>22ஆவது அரசமைப்புத் திருத்தம்</h2><p>
</p><p>
இந்த அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என்று ஊடகச்
செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>இந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் அது நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மேற்படி கூட்டத்தில் உறுதிபடக் கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

"நாங்கள் சட்டத் திருத்தங்களை உருவாக்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c47a5aec-4e36-41f7-ad8f-bf9ca3327ceb/26-6a9dfbc60d263.webp' /></p><p> அதற்காகத் தேவையான
அரசமைப்புத் திருத்தங்களையும் செய்துள்ளோம். நாங்கள் பயமின்றி முன்னோக்கிச்
செல்வோம். அப்போது என்ன நடக்கும்? கறுப்புச் சட்டங்களின் பாதுகாப்பில்
இருந்தவர்கள் அச்சமடைவார்கள். தூதரகங்களை நோக்கி ஓடுவார்கள். உலக
அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவார்கள்.</p><p>

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் இந்தத் தீர்மானங்களை மக்களுக்காகவே
எடுக்கின்றோம். எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் திரும்பப்
பெறமாட்டோம்.
</p><p>
22ஆவது திருத்தம் குறித்த தீர்ப்பு விரைவில் கிடைக்கும். பத்திரிகைகளில் 18ஆம்
திகதி போன்ற ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். தீர்ப்பு
கிடைத்ததும் அதனை விரைவில் நிறைவேற்றுவோம்.

இந்த ஊழல்வாதிகளுக்கு நாங்கள் தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T23:57:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கப்பலில் இந்தியா சென்ற 13 பேருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/13-sri-lankans-returning-india-through-kks-port-1788736610"></link>
            <id>https://tamilwin.com/article/13-sri-lankans-returning-india-through-kks-port-1788736610</id>
            <summary type="text">காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காங்கேசன...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் 13 பேர் மீது இந்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p><h2>காங்கேசன்துறை துறைமுகம்</h2><p>

இதனையடுத்து, குறித்த 13 பேரிடம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fee09373-4631-4bea-b924-466322a1698d/26-6a9df6760ddbf.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த 13 பேரும் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
</p><p>
காங்கேசன்துறை பொலிஸார், குறித்த 13 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T23:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் மர்மமாக செத்து கரையொதுங்கும் லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/washing-ashore-hundreds-thousands-dead-small-fish-1788730981"></link>
            <id>https://tamilwin.com/article/washing-ashore-hundreds-thousands-dead-small-fish-1788730981</id>
            <summary type="text">முல்லைத்தீவு – மாத்தளன் சிறுகடல் கரைப் பகுதியில் கடந்த சில நாட்களாக
லட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் செத்து கரையொதுங்கி வருகின்றமை அப்பகுதி
மக்களிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு – மாத்தளன் சிறுகடல் கரைப் பகுதியில் கடந்த சில நாட்களாக
லட்சக்கணக்கான சிறிய மீன்குஞ்சுகள் செத்து கரையொதுங்கி வருகின்றமை அப்பகுதி
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

தற்போது நிலவும் அதிக வெப்பநிலையின் காரணமாகவே இவ்வாறு மீன்கள் பெருமளவில்
உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><h2>லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள்&nbsp;</h2><p>
</p><p>
மாத்தளன் சிறுகடல் கடற்கரைப் பகுதியில் சிலாப்பி, நெத்தலி, மணலை, சூடை, காரல்
உள்ளிட்ட பல்வேறு வகையான சிறிய மீன்குஞ்சுகளே அதிகளவில் இறந்து
கரையொதுங்கியுள்ளன.
</p><p>
அத்துடன், கடற்கரைப் பகுதியில் உப்பு உறைந்து படிந்த நிலையில் காணப்படுவதும்
அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ff9414-e6ce-4726-bdf3-b08b51db4a7f/26-6a9ddf61cbec5.webp' /></p><p>
லட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் கரையோரத்தில் இறந்து கிடப்பதை பார்வையிடுவதற்காக
மக்கள் அப்பகுதிக்கு சென்று வருவதுடன் சிலர் கரையொதுங்கிய மீன்குஞ்சுகளை
அள்ளிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. </p><p>எனினும், மீன்களின் திடீர்
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T22:23:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல் மீது ஈரான் அதிரடி தாக்குதல்! முற்றிலும் பொய்யானது என மறுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/total-lie-us-military-after-iran-claims-attack-1788721312"></link>
            <id>https://tamilwin.com/article/total-lie-us-military-after-iran-claims-attack-1788721312</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் ஆளில்லா கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்தக் கூற்றை அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் ஆளில்லா கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> எனினும், இந்தக் கூற்றை அமெரிக்க இராணுவம் “முற்றிலும் பொய்யானது” என மறுத்துள்ளது.</p><h2>மோதல் தீவிரம்</h2><p>
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக மூன்று ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் ஆரம்பமானது. ஜூன் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் தொடர்ந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d32cdfc-2a94-496a-a402-dd6ed709c0eb/26-6a9dbace501f2.webp' /></p><p> </p><p>ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் கடந்த வாரம் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன.

இதனால், உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மோதலின் முக்கிய மையமாகியுள்ளது. </p><p>தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் இந்த வார ஆரம்பத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p>

இதனிடையே, அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணை மீதான தாக்குதல்களுக்கு இராணுவ ரீதியாக பதிலளிப்பதுடன், ஈரானின் நிதிப் பரிவர்த்தனைகளைக் கையாளும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பல தசாப்தங்களாக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரான், தனது எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்காக ‘நிழல் கப்பற்படை’ உள்ளிட்ட வழிகளைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c382e105-b6ac-4d9a-95a3-b8931bc095ba/26-6a9dbacf0bef9.webp' /></p><p>
</p><p>
மேலும், போருக்கு முக்கிய காரணமான ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்தில் அமெரிக்கா–ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின்னர் முறிவடைந்தன.
</p><p>
ஈரான் அணு ஆயுதப் பரவல் தடுப்பு கடமைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஈரானை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க முயற்சித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவத்தை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதை ஈரான் தனது முக்கிய உத்தியாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T22:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைவசமயத் தலைமைக்கு அகத்தியர் அடிகளார்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saiva-leaders-back-agathiyar-adigalar-in-jaffna-1788716105"></link>
            <id>https://tamilwin.com/article/saiva-leaders-back-agathiyar-adigalar-in-jaffna-1788716105</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சைவ அமைப்புகளின் தலைமைப் பிரதானிகளின் முக்கிய கூட்டம் இன்று (06) வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சைவ அமைப்புகளின் தலைமைப் பிரதானிகளின் முக்கிய கூட்டம் இன்று (06) வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்றது.</p><p>

இதன்போது, தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவ சமயிகளின் தலைவராக ஏகமனதாக முன்மொழிந்து ஏற்றுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.</p><h2>அகத்தியர் அடிகளார்</h2><p>
</p><p>
அத்துடன், இந்த தீர்மானத்தை சைவ சமய மக்கள், இந்து கலாசாரத் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அரச உயர் மட்டத்தினருக்கு தெரியப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.</p><p>

தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அருளாட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகிலாண்டேசுவரர் ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா, திருக்கோணேசுவர ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன், நயினை நாகபூசணி ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2efa0bd1-d23f-44d6-9658-07afd8f7575e/26-6a9da694e8294.webp' /></p><p>
</p><p>
மேலும், சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன், இலண்டன் கனகதுர்க்கை ஆலய அறங்காவலர் மருத்துவர் பரமநாதன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார், அகில இலங்கை சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
</p><p>
கிளிநொச்சி திருநெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம், வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன், சிவ சகோதரர்கள், சிவதொண்டர்கள் மற்றும் சிவமங்கையர் மாவட்ட இணைப்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.</p><h2>முக்கிய தீர்மானம்</h2><p>

இதேவேளை, யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிவகுரு ஆதீனம், சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சங்கம், மலையகத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிவசகோதரர் அமைப்பு, கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம் உள்ளிட்ட நாடளாவிய சைவ அமைப்புகளும், பிராந்திய மற்றும் நாடளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவ சமயிகளின் தலைமையாக ஏற்றுக்கொள்வதற்கான தமது ஆதரவை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36510e65-e682-4dc6-93ad-f72ac9c1e170/26-6a9da695c236f.webp' /></p><p>

அதேபோன்று, கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றமும் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்றுக்கொள்வதற்கான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
</p><p>
இதனிடையே, வெற்றிடமாக உள்ள நல்லை குருமகா சந்நிதானத்தின் அருளாட்சியை ஏற்று வீற்றிருக்குமாறு பல சைவ சமய அமைப்புகளும் நல்லை ஆதீன நம்பிக்கைப் பொறுப்புச்சபையும் தவத்திரு அகத்தியர் அடிகளாரிடம் விண்ணப்பித்திருந்தன.
</p><p>
அந்த விண்ணப்பத்தை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதனை நல்லை ஆதீன நம்பிக்கைப் பொறுப்புச்சபை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சைவ அமைப்புகளின் இணையம் வலியுறுத்தியுள்ளது.</p><h2>&nbsp;சைவ சமய மக்கள்</h2><p>
</p><p>
மேலும், திருக்கோவில்களில் ஆபாசமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கும் அயல் பிரதேச மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதிக ஒலி, ஒளி நிகழ்வுகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
அத்துடன், அனைத்து ஆலயங்களும் சைவ சமய மக்களுக்கு அறப்பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. </p><p>இதற்கு நயினை நாகபூசணி, வவுனியா சிவன், இலண்டன் கனகதுர்க்கை மற்றும் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்கள் முன்னுதாரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6920b2-c8c2-40df-86e7-7c751efff783/26-6a9da69698d46.webp' /></p><p>

மேலும், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட எதிர்கால அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் சைவ சமய மக்களின் அபிலாஷைகளை சட்டரீதியாக அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

திருக்கோணேசுவர ஆலயத்தின் தலைவர் சட்டத்தரணி துசியந்தன் இந்தக் குழுவின் இணைப்பாளராக செயற்படவுள்ளார். </p><p>மூத்த சட்டத்தரணிகளான இரட்ணவேல், ஜெயரூபன், தயாபரன் மற்றும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சைவ சமய விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் உள்ளிட்டோர் குழுவில் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

இறுதியாக, வவுனியா சிவன் கோவிலில் இடம்பெற்ற மகேசுவர பூஜையைத் தொடர்ந்து, பயனுறுதியான கலந்துரையாடல்களுடன் கூட்டம் ஏகமனதான தீர்மானங்களையும் கொள்கைப் பிரகடனத்தையும் நிறைவேற்றி பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T21:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகப் பிரமாண்ட போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-protest-in-bangladesh-1788728109"></link>
            <id>https://tamilwin.com/article/massive-protest-in-bangladesh-1788728109</id>
            <summary type="text">பங்களாதேஷில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசியப்
பொருட்களின் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணக் கோரி, அந்நாட்டின் தலைநகர்
டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசியப்
பொருட்களின் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணக் கோரி, அந்நாட்டின் தலைநகர்
டாக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளிலிறங்கிப் பிரம்மாண்ட போராட்டமொன்றை
முன்னெடுத்துள்ளனர்.</p><p>

பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து இடைக்கால நிர்வாகத்தை
வழிநடத்தி வரும் பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசாங்கம்
எதிர்கொள்ளும் முதலாவது மிகப்பெரிய மக்கள் போராட்டம் இதுவெனச்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>அரசுக்கு நெருக்கடி</h2><p>
தலைநகர் டாக்காவில் திரண்ட போராட்டக்காரர்கள், நாட்டில் நிலவும் சமையல்
எரிவாயு, மின்சாரம் மற்றும் விவசாயத்திற்கான உரத் தட்டுப்பாடுகளை உடனடியாகத்
தீர்க்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து முழக்கங்களை எழுப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b1e58eb-7008-418b-befe-002e63a2202a/26-6a9dd7c479789.webp' /></p><p>
</p><p>
கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார
நெருக்கடிகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள
நிலையிலேயே இப் போராட்டம் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அத்தியாவசியப் பொருட்களின்
விநியோகத்தைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்
தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-06T21:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – இந்திய உறவில் முக்கிய நகர்வு! இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-is-set-to-visit-sri-lanka-1788726207"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-is-set-to-visit-sri-lanka-1788726207</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி
வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை
தரவுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி
வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை
தரவுள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விடயங்கள்
தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.</p><h2>&nbsp;பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>அத்துடன், கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய
புலம்பெயர் சமூகத்தினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட
அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்றுக்கும் ராஜ்நாத் சிங் தலைமை
தாங்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/057f46ce-7f8f-431a-a679-fc887cd4d680/26-6a9dd08db90d1.webp' /></p><p>
</p><p>
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக்
கொண்டுள்ளதுடன், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம்,
வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்துறை
ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.
</p><p>
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலகட்டத்தில் இந்தியா வழங்கிய
உதவிகளும், 2025ஆம் ஆண்டு இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளியின் பின்னர்
முதலாவது உதவிகளை வழங்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா செயற்பட்டமையும் இரு
நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கு மேலும் வலுசேர்த்தன.</p><h2>&nbsp;இலங்கை விஜயம்</h2><p>
</p><p>
இது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ (Neighbourhood First) என்ற
கொள்கை மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘மஹாசாகர்’ (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வை — பிராந்தியங்களுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும்
வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் — ஆகியவற்றின் மீதான
இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e27bac-fd7b-42a6-80e9-8254fcc0c16d/26-6a9dd08ecab96.webp' /></p><p>

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான
பாரம்பரியமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், பரஸ்பர நன்மை பயக்கும்
பல்வேறு துறைகளில், குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T20:47:47+00:00</updated>
        </entry>
    </feed>
