<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-23T11:51:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி இரண்டாவது நாளாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-school-protest-1784806052"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-school-protest-1784806052</id>
            <summary type="text">அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும்
பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இரண்டாவது
நாளாக போராட்டத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும்
பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இரண்டாவது
நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
முறையான தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என
பெற்றோர்கள் திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளனர்.
</p><p>
மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில்,
இன்றைய தினம் (23) பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது
புறக்கணித்துள்ளனர்.</p><h2>மாணவர்களின் எண்ணிக்கை&nbsp; குறைவு</h2><p>

அதிபர் விவகாரம் தொடர்பில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் சூழலில்,
இன்றைய தினம் (23) பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக்
குறைவாகும். </p><p>அதன்படி, குறித்த பாடசாலைக்கு வெறும் 10 மாணவர்களே வருகை
தந்திருந்தனர்.

தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் பிள்ளைகளை பாடசாலைக்கு
அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d092d8e8-5abf-4769-9060-0cd46cc504b9/26-6a61faa5e3822.webp' /></p><p>

இடம்பெற்றுவரும் இந்த விடயம் தொடர்பாக மன்னார் வலய கல்விப் பணிப்பாளரிடம்
வினவிய போது

குறித்த பாடசாலை அதிபர் விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாகப் போராட்டங்கள்
இடம்பெற்று வருவது எமது கவனத்திற்கு வந்துள்ளது.
</p><p>

இது குறித்துப் பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை
இணைத்து விரைவில் ஒரு கலந்துரையாடலை மேற் கொள்ளவுள்ளோம்.
</p><p>

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான முழுமையான அறிக்கை மாகாண கல்விப் பணிப்பாளர்
மற்றும் மத்திய கல்வி அமைச்சுக்கு விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை
எடுக்கப்படும்&nbsp; என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;இந்த நிலையில் தொடர்ந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர்
புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்
</p>]]></content>
            <updated>2026-07-23T11:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் 43ஆவது கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்த தமிழ் எம்.பிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/43rd-black-july-commemoration-in-parliament-1784805118"></link>
            <id>https://tamilwin.com/article/43rd-black-july-commemoration-in-parliament-1784805118</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு வன்முறையின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று(23.07.2026) நடைபெற்றது.

1983 ஜூலை வன்முறையின் 43ஆவது ஆண்டு நிறைவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு வன்முறையின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று(23.07.2026) நடைபெற்றது.
</p><p>
1983 ஜூலை வன்முறையின் 43ஆவது ஆண்டு நிறைவு இன்று (23) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நினைவுகூரப்பட்டது.
</p><p></p><h2>சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள்</h2><p>
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் நடந்து இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துவிட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f589976a-c106-40d7-9cd2-6f9e3a760955/26-6a61f9145536a.webp' /></p><p>

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன என தமிழ் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T11:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-gotabaya-rajapaksa-to-the-high-court-1784792622"></link>
            <id>https://tamilwin.com/article/president-gotabaya-rajapaksa-to-the-high-court-1784792622</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேல்முறையீட்டு நீ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சம்பந்தப்பட்ட மனு இன்று(23.07.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் 
முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா, தனது பதிலுரையை சமர்ப்பித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக மனுவை ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச&nbsp; முன்னிலையாகியுள்ளார். </p><p>


இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று(23.07.2026) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மனு விசாரணை</h2><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தும் விசாரணைகள் சம்பந்தமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4VW5UHVnOlE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இது தொடர்பான விசாரணைகளை இன்றைய தினத்திற்கு(23) மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது</p><p>
இந்த நிலையில், இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்ச அவருடைய ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், நாமல் ராஜபக்சவின்,&nbsp; வருகையை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/558f2c9d-08b8-4291-9ffd-6413b86a649f/26-6a61c903ec998.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T11:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு தாய்லாந்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது பயங்கரவாதத் தாக்குதல்: 5 இராணுவ வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-security-checkpoint-in-southern-thailand-1784804550"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-security-checkpoint-in-southern-thailand-1784804550</id>
            <summary type="text">தெற்கு தாய்லாந்தின் நராத்தி வாட் மாகாணத்தில் உள்ள புகேதா சாமி பாதுகாப்புப் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 5 தாய்லாந்து
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு தாய்லாந்தின் நராத்தி வாட் மாகாணத்தில் உள்ள புகேதா சாமி பாதுகாப்புப் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 5 தாய்லாந்து
இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> 

இந்த சம்பவம் நேற்று(22.07.2026) இடம்பெற்ற நிலையில், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


5 பேர் உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்</h2><p>


கருப்பு நிற உடையில், பிக்கப் டிரக் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த
சுமார் 10 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல், பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்த 45வது ரேஞ்சர் ரெஜிமென்ட் வீரர்கள் மீது பைக் குண்டுகளை
வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3e37cb-5377-4247-ab7c-ff85fc0e4bb9/26-6a61f5217c9b2.webp' /></p><p> </p><p>

இந்த தாக்குதலுக்கு பின்னர், அங்கிருந்த AK-47 ரக துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத
சட்டைகள் மற்றும் மொபைல் போன்களைப் பறித்துக்கொண்டு அந்த கூட்டத்தினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கு, தாய்லாந்து அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது
நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட தீவிரவாத அச்சுறுத்தல் என்றும்,
அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளைச் சீர்குலைக்கும் செயல் என்றும்
குறிப்பிட்டுள்ளது. </p><h2>


நராதிவாட் மாகாணத்தில் இடம்பெற்ற தாக்குதல்</h2><p>

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9027d57d-eac5-4abb-9156-b33ff7367648/26-6a61f5223e9a9.webp' /></p><p>
</p><p>
நராதிவாட் மாகாணத்தில் நிலப்பகுதியில் கார்க் குண்டு வெடிப்பு சம்பவம்
நிகழ்ந்த அடுத்த நாளே இந்தத் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.</p><p>

2004ஆம் ஆண்டு முதல் பிரிவினைவாத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு
தாய்லாந்து எல்லைப் பகுதிகளில், சமீப காலத்தில் நடந்த மிக மோசமான
தாக்குதல்களில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T11:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் ஆட்சியில் ஜனாதிபதி மாளிகைக்குள் நடந்தது என்ன...! அம்பலப்படுத்தும் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/35-crore-rs-spent-on-the-maintenance-1784781382"></link>
            <id>https://tamilwin.com/article/35-crore-rs-spent-on-the-maintenance-1784781382</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். </p><p>

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்த ஜனாதிபதி மாளிகைகள் அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><h2><b>ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு</b></h2><p>ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு, பூங்காப் பராமரிப்பு, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகபூர்வ தங்குமிடக் கட்டடப் பராமரிப்பு என்பவற்றுக்காகவே இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51aad649-c97b-4fe3-8394-466472d0e10c/26-6a61f3be3adcb.webp' /></p><p>ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் 15 மில்லியன் ரூபாவும், கட்டடத் திருத்தச் செலவுகளாக 110 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், 2019 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவாக 15 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 62 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.</p><p> கடந்த 2020 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 12 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 22.7 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது. </p><h3><b>உத்தியோகபூர்வ இல்லங்கள்</b></h3><p>கடந்த 2021 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 10 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 18.8 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05eb846e-f686-4a5d-91b6-a24bb0e198b4/26-6a619cc5b0659.webp' /></p><p>2022 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவாக 12 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 13 மில்லியன் ரூபாவும், செலவிடப்பட்டுள்ளது. </p><p>கடந்த 2023 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 26.04 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 11 மில்லியன் ரூபாவாகவும் இருந்ததாக பிரதமர் கூறினார். </p><p>கடந்த 2024 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 13.09 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 10.05 மில்லியன் ரூபாவாகவும், 2025 ஆம் ஆண்டில் பராமரிப்பு செலவு 7.05 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 3 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளன. </p><p>நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பராமரிப்புச் செலவாக 3 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 0.4 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
இதேவேளை சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மக்களின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oZ0MAUri6Tk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-23T10:55:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[1.15 டிரில்லியன் டொலர் இராணுவ மசோதா: அமெரிக்க பிரதிநிதிகள் ஆதரவுடன் நிறைவேறிய ட்ரம்ப்பின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1-15-trillion-military-bill-1784803489"></link>
            <id>https://tamilwin.com/article/1-15-trillion-military-bill-1784803489</id>
            <summary type="text">அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2027ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு
அதிகாரமளிப்புச் சட்ட மசோதா (NDAA) 216-212 என்ற குறுகிய வாக்கு
வித்தியாசத்தில் நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2027ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு
அதிகாரமளிப்புச் சட்ட மசோதா (NDAA) 216-212 என்ற குறுகிய வாக்கு
வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிய 1.5 டிரில்லியன் டொலர் இராணுவ வரவு செலவுத்
திட்டத்தின் ஒரு பகுதியாக, 1.15 டிரில்லியன் டொலர் மதிப்பிலான இந்த மசோதா
முதன்மையாக ஈரானுக்கு எதிரான போருக்கான நிதியுதவியையும், அமெரிக்க-இஸ்ரேல்
இராணுவத் தொழில்நுட்பக் கூட்டுறவை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்
கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>

போருக்கான அதிகப்படியான செலவு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி
குறைப்பு ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
</p><h2>
சர்ச்சைக்குரிய விதி</h2><p>
மேலும், இஸ்ரேலுடனான இராணுவ விநியோகச் சங்கிலி மற்றும் தொழில்நுட்பங்களை
இணைக்கும் பிரிவு 219 நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என குடியரசுக்
கட்சியின் தோமஸ் மாசி போன்ற சில பிரதிநிதிகளே விமர்சித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71f3083-480e-43db-b21b-1e462d81f6e2/26-6a61f1049c851.webp' /></p><p>


இதேவேளையில், வாக்களிப்பு முறைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் 'SAVE America Act' என்ற சர்ச்சைக்குரிய விதியும் இந்த மசோதாவில்
சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புக் காரணமாக இந்த மசோதா அடுத்து செனட் சபையில் ஒப்புதல் பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oZ0MAUri6Tk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-23T10:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் கடற்பரப்பில் கைதான கடற்றொழிலாளர்கள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishermen-arrested-in-thalaimannar-1784802479"></link>
            <id>https://tamilwin.com/article/fishermen-arrested-in-thalaimannar-1784802479</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில்
தலைமன்னார் கடற்படையினரால் நேற்று(23) மாலை கைது செய்யப்பட்ட 9
இந்திய கடற்றொழிலாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில்
தலைமன்னார் கடற்படையினரால் நேற்று(23) மாலை கைது செய்யப்பட்ட 9
இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 6 ஆம் திகதி (06.08.2026) வரை
விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>குறித்த உத்தரவானது இன்று வியாழக்கிழமை (23) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்க உத்தரவு</h2><p>இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை(22) காலை
மீன் பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற நிலையில்
நேற்று (22) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்த நிலையில்
கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2416f90f-5282-4118-a279-9e5bc4cf3132/26-6a61efbced6bd.webp' /></p><p>கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட
நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த கடற்றொழிலாளர்களை விசாரணைகளின் பின்னர்
இன்று (23) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை
இன்றையதினம் (23) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
</p><p>
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 6ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கின் பணக்கார நாடாக மாற முடியும்: அமெரிக்க வெளியுறவுச் செயலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-can-become-the-richest-country-us-secretary-1784801581"></link>
            <id>https://tamilwin.com/article/iran-can-become-the-richest-country-us-secretary-1784801581</id>
            <summary type="text">ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கிலேயே மிகவும் பணக்கார நாடாக உருவாக முடியும்
என&amp;nbsp;அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.&amp;nbsp;ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கிலேயே மிகவும் பணக்கார நாடாக உருவாக முடியும்
என&nbsp;அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ஆனால் அங்குள்ள ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தீவிரவாத மதகுருமார்கள்
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரான் தீவிரவாத மதகுருமார்களால் நடத்தப்படும்
ஒரு நாடு. நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு எந்தக்
கவலையும் இல்லை; அவர்கள் தங்கள் சொந்த நாட்டையே அழித்துக்
கொண்டிருக்கிறார்கள்.</p><h2>ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் பணம்</h2><p>
</p><p>
நாட்டின் பணத்தை மக்களுக்குப் பயன்படுத்தாமல் ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹூதிகள்
மற்றும் ஷியா ஆயுதக் குழுக்களுக்கு வாரி வழங்குகிறார்கள்.
</p><p>
உலகம் முழுவதிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே இந்தப் பணம்
பயன்படுத்தப்படுகிறது" என்று குற்றம்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b735b380-c67a-47f0-bc44-714ad799d46c/26-6a61f08632cd6.webp' /></p><p>
</p><p>
மேலும் பேசிய அவர், "ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே
அமெரிக்காவின் முதன்மை இலக்காகும்.
</p><p>
அணு ஆயுதம் ஏந்திய ஈரான் இந்த உலகத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறும்
என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபானத்தின் விலை அதிகரிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-the-price-of-liquor-1784801307"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-the-price-of-liquor-1784801307</id>
            <summary type="text">750 மில்லிலீற்றர் அதிவிசேட மதுபானத்தின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.&amp;nbsp;உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த விலை அதிகரிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>750 மில்லிலீற்றர் அதிவிசேட மதுபானத்தின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><h2>விலை அதிகரிப்பு</h2><p>அதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபானத்தின் புதிய விலை 3,700 ரூபாவாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e616077a-56f2-4e14-8ad4-3d7855d2582e/26-6a61eb1b6edcf.webp' /></p><p>மேலும், அதே வகையைச் சேர்ந்த 375 மில்லிலீற்றர் மதுபானப் போத்தலின் விலையும் 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை, 1,860 ரூபாவாகும்.</p><p>எனினும், 180 மில்லிலீற்றர் மதுபானத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-23T10:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/devendramunai-vihara-perahara-procession-safety-1784785661"></link>
            <id>https://tamilwin.com/article/devendramunai-vihara-perahara-procession-safety-1784785661</id>
            <summary type="text">புதிய இணைப்புமாத்தறை, தேவேந்திரமுனை விகாரையில் நடைபெறும் வருடாந்த பெரஹரவிற்காக 650 பொலிஸ் அதிகாரிகளும் 100 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பணி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையில் நடைபெறும் வருடாந்த பெரஹரவிற்காக 650 பொலிஸ் அதிகாரிகளும் 100 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கு கூடுதலாக, பாதுகாப்பு பணிகளுக்காக புலனாய்வு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
வருடாந்த எசல பெரஹராவின் முதல் நாள் இன்று (23) தொடங்கி, ஜூலை 29 அன்று மாபெரும் பெரஹரவுடன் நிறைவடையவுள்ளது.</p><p>

காவடி பெரஹராஜூலை 28 அன்றும், ரந்தோலி பெரஹரா ஜூலை 29 அன்றும் நடைபெறும் என பொலிஸ் தெரிவிக்கின்றது.
</p><p>
குறித்த நாட்களில் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் கேட்டுக்கொள்கின்றது.
</p><p>
 நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையின் 769வது பெரஹர ஊர்வலம் இன்று (23) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகவுள்ளது. </p><p>

இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>தேவேந்திரமுனை துப்பாக்கிச்சூடு</h2><p> </p><p>

குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்றுமுன் தினம் (21) இரவு துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிசென்ற நிலையில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0b4969-12c3-4322-a52f-49e7a068783c/26-6a61af2babcc6.webp' /></p><p>
</p><p>
கடற்தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த துப்பாக்கிச்சூடானது 'தெஹிபாலே மல்லி' எனும் நபரின் தரப்பினரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
</p><p>
தெஹிபாலே மல்லி' மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய திட்டமிட்ட பாதாள உலகக்குழுக்கள் இம்மோதலுக்குப் பின்னணியில் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

தேவேந்திரமுனை விகாரை பெரஹரவில் கலந்துகொள்ளும் காவடி நடனக்குழுக்களை குறைப்பது தொடர்பாக கஞ்சிபானை இம்ரானால் பயன்படுத்தப்படும் 'KPI' என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவியிருந்தது.</p><h2>சந்தேகநபர் வந்த கார் மீட்பு</h2><p>
</p><p>
இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றிற்கு காரில் வந்து நபர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச்சென்றமை அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கமராவிலும் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e01d340-a89d-437d-8de3-00f6b42f4990/26-6a61af2c5947d.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து துப்பாக்கிதாரி தப்பிச்சென்ற கார் திக்வெல்ல பகுதியில் வைத்து நேற்று (22) இரவு கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள தேவேந்திரமுனை விகாரை பெரஹரவிற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இன்று (23) ஆரம்பமாகும் பெரஹர நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 05 திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shantha-bandara-s-son-and-4-others-remanded-1784800684"></link>
            <id>https://tamilwin.com/article/shantha-bandara-s-son-and-4-others-remanded-1784800684</id>
            <summary type="text">சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட 5 பேரையும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட 5 பேரையும் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அதன்படி, கோட்டை நீதிபதி பசன் அமரசேன, சீன நாட்டவர் உட்பட 5 சந்தேக நபர்களை இன்று (23) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
அனுத பண்டார, தொடர்புடைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக 21ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று (22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef666b9b-e1fc-4430-ac87-de549494e842/26-6a61e931644e9.webp' /></p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, விசாரணைக்காக அவரை 24 மணி நேரம் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் தீர்மானங்கள் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resolutions-passed-at-the-pedro-sabha-session-1784801168"></link>
            <id>https://tamilwin.com/article/resolutions-passed-at-the-pedro-sabha-session-1784801168</id>
            <summary type="text">பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
இந்த கூட்டமானது, தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில், பிரதேச சபை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
</p><p> 
இந்த கூட்டமானது, தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில், பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இதன்போது, யுத்தத்தில் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதன் பின்னர், கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4768f1ef-0557-4f48-9cae-5360aaa30a47/26-6a61e7d501d0c.webp' /></p><p>

 நிதி தொடர்பான அனுமதிகளும், நிதிக் குழு கூட்ட அறிக்கைகளும் ஆராயப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இதேவேளை, சாரதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உள்வாரியான சாரதிகளை தற்காலிகமாக பணிக்கு அமர்த்த இரண்டு தொழிலாளர்களை பணிக்கு சேர்க்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
சபை கூட்டங்களுக்கான போதிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-07-23T10:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784800248"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784800248</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (23.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (23.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.1,000 குறைந்து ரூ.377,000 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><h2>ஒரு கிராம் தங்கத்தின் விலை</h2><p>

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53118144-a6be-4f84-b64d-69691411639f/26-6a61e65296686.webp' /></p><p>

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி கூறும் கோடிக்கணக்கான ரூபாய்..! நாமல் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/taxes-paid-by-people-namal-statement-1784800160"></link>
            <id>https://tamilwin.com/article/taxes-paid-by-people-namal-statement-1784800160</id>
            <summary type="text">கோடிக்கணக்கான ரூபாய் இருப்பதாக ஜனாதிபதி கூறிவரும் நிலையில் மக்கள் செலுத்தும் வரிகள் நியாயமானதாக இல்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோடிக்கணக்கான ரூபாய் இருப்பதாக ஜனாதிபதி கூறிவரும் நிலையில் மக்கள் செலுத்தும் வரிகள் நியாயமானதாக இல்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p> 

கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><p>&nbsp;</p><h2>மின்சார கட்டணங்கள் உயர்வு</h2><p>
</p><p>
ஜனாதிபதி 'எங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கிறது என்று பெருமையுடன் கூறுகின்றார். ஆனால், செலுத்தப்பட்ட வரிகள் நாட்டில் நியாயமான முறையில் முதலீடு செய்யப்படவில்லை. இது ஒரு கடினமான காலம். பெரும் பொருளாதார நெருக்கடி நிலவும் காலம். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af454467-33db-47f0-a12a-69bfb5120440/26-6a61e5ee56823.webp' /></p><p> </p><p>அரசாங்கம் தன் விருப்பப்படி வரிகளை உயர்த்துகிறது. 

அரசாங்கத்தில் ஏதேனும் திருட்டு நடந்தால், அந்த திருட்டின் இழப்பை ஈடுகட்ட மக்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. </p><p>

கடந்த காலத்தில், தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. அந்த இழப்பை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு படையினரின் பெயரை பயன்படுத்தி நூதனமாக பண மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-using-names-of-security-forces-1784797277"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-using-names-of-security-forces-1784797277</id>
            <summary type="text">மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் விசேட அதிரடிப்படையினர்
மற்றும் விமான படை உயர் அதிகாரி என போலியாக கையடக்க தொலைபேசி வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் விசேட அதிரடிப்படையினர்
மற்றும் விமான படை உயர் அதிகாரி என போலியாக கையடக்க தொலைபேசி வழியாக
தெரிவித்துஅவர்களிடம் இருந்து நூதனமான முறையில் பண மோசடியில் ஈடுபட்ட
நபரை கைது செய் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இது பற்றி தெரியவருவதாவது,&nbsp;மட்டக்களப்பில் உள்ள ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகம்
உட்பட 4 கடைகளிலும் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள 2 கடைகள் உட்பட 6 கடைகள்
தமது கடைகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் தொலைபேசி இலக்கத்துடன்
விளம்பரப்படுத்தியுள்ளனர்.
</p><p></p><h2>தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு&nbsp;</h2><p>
இந்த நிலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜூஸ் கடை ஒன்றின் தொலைபேசி இலக்கத்துடன்
தொடர்பு கொண்டு தான் விசேட அதிரடிப்படையின் வவுணதீவு முகாம் உயர் அதிகாரி என
போலியாக தெரிவித்து முகாமில் 60 பேருக்கு 5 நாள் பயிற்சி இடம் பெறுகின்றது.</p><p>அவர்களுக்கு குடிப்பதற்கு ஜூஸ் தேவை என ஓடர் செய்து அதனை முகாமிற்கு கொண்டு
வருமாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0668fc0e-39c3-48f3-ae3a-713ce1aa75b8/26-6a61e2d2494f3.webp' /></p><p>இதனை தொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் குறித்த ஜூஸ் கடையுடன் மீண்டும்
தொடர்பு கொண்டு கேக் இருக்கிறதா என வினவியபோது கடை உரிமையாளர் இல்லை
என்றுள்ளார் </p><p>மீண்டும் சிறிது நேரத்தின் பின்னர் தொடர்பு கொண்டு ஒரு
அம்மாவிடம் கேக் ஓடர் செய்துள்ளேன். அவரிடம் றிசீட் இல்லை (பில்) அந்த தொகையை
உங்கள் ஜூஸ் றிசீட்டுடன் சேர்த்து கொண்டு வரவும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
அதற்கு கடை உரிமையாளர் சம்மதம் தெரிவித்து விட்டு அவர் கேட்ட ஓடரை வழங்க
தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் போலி படை அதிகாரி
தொடர்பு கொண்டு அந்த கேக் ஓடர் செய்த அம்மாவிற்கு அதற்கான பணம் 9 ஆயிரத்து
800 ரூபா வழங்க வேண்டும். எனவே அந்த பணத்தை அனுப்பும் வங்கி
கணக்கிற்கு அனுப்பிவிட்டு வரவும் அந்த பணத்தை சேர்த்து தருகிறேன் என்றுள்ளார்.&nbsp;</p><h2>போலி நபர் அனுப்பிய வங்கி கணக்கு</h2><p>இதையடுத்து போலி நபர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு 9 ஆயிரத்து 800 ரூபாவை
அனுப்பிவிட்டு ஓடர் செய்த ஜூஸ் பானத்தை எடுத்து கொண்டு குறித்த நபர் தெரிவித்த
வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்று பார்த்தபோது அங்கு படை முகாம்
இல்லை என அறிந்துகொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b90c73-0ecd-4977-99a1-82a353cff73d/26-6a61e2d30199c.webp' /></p><p>இதன்போது குறித்த நபருடன் தொடர்பு கொண்டபோது தொலைபேசி
துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு நகரில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் 21 ஆயிரம் ரூபாவும் ஒரு கடை
உரிமையாளரிடம் இருந்து தலா 9 ஆயிரத்து 800 ரூபா வீதம் 3 கடைகளில் பணத்தை போலி
விசேட அதிரடிப்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் என தெரிவித்து நூதனமான
முறையில் பண மோசடி செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணத்தை
இழந்த கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T09:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்துள்ள பதற்றம்! அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-to-americans-around-the-world-1784794866"></link>
            <id>https://tamilwin.com/article/warning-to-americans-around-the-world-1784794866</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களும் &quot;மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு&quot;&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களும் "மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு"&nbsp;அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p></p><h2>விமான இரத்துகள் மற்றும் பயண இடையூறுகள்&nbsp;&nbsp;</h2><p><span style="font-size: 14px;">"மத்திய கிழக்கில் உள்ள சிக்கலான பாதுகாப்புச்சூழல் காரணமாக எதிர்பாராத விதமாக பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fea2138a-4854-4ff6-b461-4c2f341afb32/26-6a61d2ee45121.webp' /></p><p>
</p><p>
மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், முக்கிய இடங்களை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.</p><p><span style="font-size: 14px;">தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் விமான இரத்துகள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.</span></p><p> மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதி வழியாகப் பயணம் செய்வதையோ அல்லது பார்வையிடுவதையோ மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க அரசாங்கம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு - பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/250-000-sri-lankans-find-employment-abroad-1784794429"></link>
            <id>https://tamilwin.com/article/250-000-sri-lankans-find-employment-abroad-1784794429</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. 

இந்த வேலைவாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. </p><p>

இந்த வேலைவாய்ப்புகள், இலங்கை அரசாங்கம் மற்றும் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><h2>


மத்திய கிழக்கில் அதிகரித்த போர் பதற்றம்</h2><p>
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவச் சூழல் காரணமாக, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் சற்றுக் குறைவு ஏற்பட்டிருந்தாலும், அதிக ஊதியம் தரும் வேலைகளுக்காகப் பாதுகாப்பான இடங்களுக்குத் தொழிலாளர்களை வழிநடத்த பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2497ab2-9eec-4734-b7d3-830406f40d14/26-6a61cfcd46b53.webp' /></p><p> 

இதற்கமைய, 2026ஆம் ஆண்டில் இதுவரை 143,087 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், இவர்களில் 92,590 பேர் ஆண் தொழிலாளர்கள் மற்றும் 50,497 பேர் பெண் தொழிலாளர்கள் உள்ளடங்குகின்றனர். </p><h2>


அந்நிய செலாவணி அதிகரிப்பு</h2><p>


இதற்கிடையில், இலங்கைத் தொழிலாளர்களின் விருப்பமான இடமான இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்ப பணியகம் திட்டமிட்டு, இதுவரை அவர்களில் 7,873 பேர் வேலைக்குச் சென்றுள்ளனர். </p><p>

அத்துடன், 8,000 தொழிலாளர்களை தென் கொரியாவிற்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p>இதுவரை 4,794 பேர் அங்கு பணிக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e32d12c6-fdbb-4e10-bdd3-7004216f0129/26-6a61cfcdecbde.webp' /></p><p>

 பணியகத் தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 73,623 தொழிலாளர்கள் திறன் சார்ந்த பணிகளுக்காகவும், 69,494 தொழிலாளர்கள் திறன்சாரா பணிகளுக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். </p><p>

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-accidents-in-the-factory-homagama-1784790683"></link>
            <id>https://tamilwin.com/article/fire-accidents-in-the-factory-homagama-1784790683</id>
            <summary type="text">ஹோமாகம, கட்டுவான பகுதியில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம, கட்டுவான பகுதியில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
நேற்று முன்தினம் (21) காலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவு தீயில் எரிந்திருந்தன.</p><p></p><h2>பரிசோதனை முடிவுகள்</h2><p>
</p><p>
இதனையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94463200-3018-4a30-8f64-9a7ac1bf3265/26-6a61c9dbbbdbe.webp' /></p><p>இந்த தீ விபத்தில் பன்னிப்பிட்டியவை சேர்ந்த 55 வயதுடைய மரியோ எட்வர்ட், தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார, அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19) , அட்டகலம்பன்ன பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான், ஹட்டன் - மஸ்கெலியாவை சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.</p><p>
இந்நிலையில், 26 வயதான வரதராஜன் தமயந்தியின் உடல் இன்று ( 23) ஆம் திகதி அதிகாலை 3:00 மணியளவில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
</p><p>
குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான வரதராஜன் தமயந்தியின் குடும்பத்தில், மூத்த சகோதரர் ஒருவர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள், பெற்றோர் உள்ளடங்களாக ஆறு பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>குடும்பத்தின் நிதி நெருக்கடி</h2><p>
அவரது தந்தை தோட்டத்தொழிலாளி என்றும், குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக, அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be58f707-6d7f-4f4b-8d93-9161aa6341b2/26-6a61c9db18c0f.webp' />&nbsp;&nbsp;</p><p>சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக இரண்டு நாட்கள் விடுப்பில் அவர் கடைசியாக வீட்டிற்கு சென்று மீண்டும் பணிக்கு திரும்பியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
இந்நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று ( 23) தோட்ட பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் - ஐங்கரநேசன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-p-ayngaranesan-statement-1784793164"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-p-ayngaranesan-statement-1784793164</id>
            <summary type="text">ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜூலை இனக்கலவரம்
அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன, இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில்
1...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜூலை இனக்கலவரம்
அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன, இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில்
1983 ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவாக ஒரு முறையான
நினைவுச்சின்னம் அமைக்கப்படாமல் இருப்பது பெரும் வரலாற்றுத் தவறு ஆகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். </p><p>இது
இறந்த காலத்தை நினைத்து அழுவதற்கானது அல்ல இது ஆக்கிரமிப்புக்கு எதிரான
எதிர்கால போராட்டத்தின் ஒரு வடிவமும் ஆகும். அந்த வகையில் 2027 ஜூலைக்கு
முன்னதாகவாவது 1983 இனக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ்
மக்களையும் நினைவுகூரும் வகையில் பொது நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்படல்
வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கோரிக்கையை
முன்வைத்துள்ளார்.</p><h2>திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை</h2><p> </p><p>ஊடக அறிக்கையில் மேலும்,

1983 ஜூலையில் நிகழ்ந்தது இரு சமூகங்களுக்கிடையே வெடித்த ஒரு சாதாரண கலவரம்
அல்ல. அது, அப்போதைய பேரினவாத அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதத்தோடும்,
அனுசரணையோடும் அரச இயந்திரங்களையும், வாக்காளர் பட்டியல்களையும் பயன்படுத்தித்
தமிழ் மக்களை இனங்கண்டு மிகத் துல்லியமாக நடாத்தப்பட்ட திட்டமிடப்பட்ட ஓர்
இனப்படுகொலை ஆகும்.</p><p> </p><p>கொழும்பில் ஆரம்பித்துத் தென் இலங்கையின்
பிறபகுதிகளுக்கும் மலையகத்துக்கும் பரவிய பேரினவாத வெறியாட்டத்தில்
வெலிக்கடைச் சிறையில் கைதிகளாக இருந்த 53 பேர் உட்பட 3000 தமிழர்கள் வரையில்
படுகொலை செய்யப்பட்டார்கள்.

 ஜூலை இனக்கலவரம் தமிழ் மக்களின் உயிர்களை மாத்திரம் பலியெடுக்கவில்லை.</p><p></p><p>
</p><p>அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் திட்டமிட்டுத்
தீக்கிரையாக்கப்பட்டன. ஈழத்தமிழர்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்து
விடக்கூடாது என்பதற்காகத் தமிழர்களின் பல தசாப்தகாலப் பொருளாதாரக்
கட்டமைப்புகள் ஒரே வாரத்துக்குள் முற்றாகச் சிதைக்கப்பட்டன. தமிழ் மக்கள்
வெறும் கையினர்களாக அங்கிருந்து கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு
அனுப்பிவைக்கப்பட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/120c21a0-fe31-42d3-ae79-2b3d9c55f282/26-6a61ce1fcfba5.webp' /></p><h2>வரலாற்றுப் பேரவலம்</h2><p> இந்த வரலாற்றுத் துயரங்களை மறப்போம் மன்னிப்போம்
என்று கூறிவிட்டு நாம் கடந்து செல்ல முடியாது.

எமது நெஞ்சில் ஆறாத வடுவாக இருக்கும் இந்த வரலாற்றுப் பேரவலத்தின்
பின்னணியையும், அதன் மூலம் தமிழ் இனம் கற்றுக்கொண்ட அரசியல் பாடங்களையும் எமது
அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவது முதன்மையான தேசியக் கடமையாகும். </p><p>இந்த
வரலாற்றுக் கடத்துகைக்கு நினைவேந்தல்களும், நினைவுச் சின்னங்களும் அவசியமானவை
ஆகும். எனவே, கறுப்பு ஜூலையில் எமது இனம் இழந்த உயிர்களின் சாட்சியாகவும்,
எமது தேசிய விடுதலைப் பயணத்தின் வழிகாட்டியாகவும் பொருத்தமானதொரு இடத்தில்
1983 கறுப்பு ஜூலை நினைவுச்சின்னம் நிறுவப்படல் வேண்டும் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-day-water-cut-1784792438"></link>
            <id>https://tamilwin.com/article/two-day-water-cut-1784792438</id>
            <summary type="text">தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பல பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தம் செய்வது குறித்து அறிவிப்பு ஒன்றை&amp;nbsp; வெளியிட்டுள்ளது.

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பல பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தம் செய்வது குறித்து அறிவிப்பு ஒன்றை&nbsp; வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த நீர் விநியோகத்&nbsp;தடை திகன மற்றும் மெனிகின்ன பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p></p><h2>அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள்&nbsp;</h2><p>
அந்த அறிவிப்பின்படி, இன்று (23ஆம் திகதி) காலை 8.30 மணி முதல் 25ஆம் திகதி வரை 48 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e34228-3f23-4280-a92b-36651d2c9a9c/26-6a61cc34015a1.webp' /></p><p>
இதற்கிடையில், அப்பகுதிகளில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நீர் விநியோகம் தடைப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:14:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழினத்தின் சாபக்கேடு அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-bimmal-slams-archchuna-1784789983"></link>
            <id>https://tamilwin.com/article/minister-bimmal-slams-archchuna-1784789983</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் அவசியமற்ற, கேவலமான மற்றும் வக்கிரமான முறையில் நடந்துகொள்ளும் உறுப்பினர்கள் ஒன்றிரண்டு பேர் உள்ளனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் அவசியமற்ற, கேவலமான மற்றும் வக்கிரமான முறையில் நடந்துகொள்ளும் உறுப்பினர்கள் ஒன்றிரண்டு பேர் உள்ளனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்கள் மனநோயாளி என்பதால் பொறுமையுடன் இருக்கிறேன் என நாடாளுமன்றத்தில் இன்று(23.07.2026) உரையாற்றும் போது அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஒழுங்கு தொடர்பான பிரச்சினை ஒன்றை எழுப்ப முயற்சித்த போதே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
</p><h2><b>
தமிழ் மக்களுக்கே அவமானம் </b></h2><p>அதற்கு பதிலளித்த அமைச்சர், 

“அர்ச்சுனா எம்.பி தமிழ் மக்களுக்கே அவமானம் சேர்க்கும் ஒரு நபர். எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது நடந்துகொண்ட விதத்தை அவதானித்தீர்களா? அவை மைக் மூலம் கேட்காமல் இருக்கலாம். காணொளிகளிலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த நாடாளுமன்றத்தின் நான்கு சுவர்கள் தான் சாட்சியாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f003da0-5dfb-4469-923f-d6b7c8d0512b/26-6a61c1b2cbf1b.webp' /></p><p>அவர் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, வெளியே செல்லும்போது நடந்துகொள்வதும் இப்படித்தான். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை இன்று நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>

அவருக்கு அருகில் இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார் பொன்னம்பலம், சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். </p><p>முன்னர் சபாநாயகர் கரு ஜெயசூரியவை இங்கிருந்த நாற்காலிகளால் தாக்கியுள்ளனர். ஆனாலும், இந்தளவுக்குக் கேவலமான முறையில் யாரும் பேசியதில்லை&nbsp;என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><h2><b>
நிலையியற் கட்டளை</b></h2><p>இதன்போது அர்ச்சுனா இராமநாதன் ஏதோ கூற முயற்சித்துள்ளார். மடையனைப் போன்று நடந்துகொள்ள வேண்டாம். நாடாளுமன்றத்தை நகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அர்ச்சுனா எம்.பி. என்னை குறித்து இதற்கு முன்பும் அவதூறான முறையில் பேசியுள்ளார் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c8c008-c40e-4a62-a252-c332b610ae46/26-6a61c1b37afab.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில், அங்கு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,&nbsp; உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியற்ற வகையில் பேசுவது பொருத்தமானதல்ல என&nbsp; &nbsp;தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>அத்துடன், “மடையனைப் போன்ற கதைகளைக் கூற வேண்டாம் எனக் கூறுவதைத் தவிர்க்கவும். நீங்கள் நிலையியற் கட்டளைகளைத் தெரிந்து கொண்டு வாருங்கள். </p><p>பிமல் ரத்நாயக்க, குமார் பொன்னம்பலம் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் பற்றிக் கூறினார். இங்கு அத்தகையதொரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. </p><p>இங்குள்ளவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, குமார் பொன்னம்பலத்தின் மகனாவார்”&nbsp; என சஜித் மேலும்&nbsp; குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனையடுத்து குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி, நான் சைக்கோவாக இருக்கலாம். ஆனால், ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என சபையில் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கோணேஸ்வரம் ஆலய அங்கத்துவப் பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல் - திருத்தம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thirukoneswaram-temple-registration-1784791662"></link>
            <id>https://tamilwin.com/article/thirukoneswaram-temple-registration-1784791662</id>
            <summary type="text">திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவப் பதிவு நடைமுறையால் பாதிக்கப்பட்ட பக்தர்கள், தற்போதைய நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவப் பதிவு நடைமுறையால் பாதிக்கப்பட்ட பக்தர்கள், தற்போதைய நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு எளிமையான, வெளிப்படையான மற்றும் மக்கள் நட்பு முறையை அறிமுகப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அவர்கள் விடுத்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவத் திட்டம் பாராட்டத்தக்க ஒன்றாக
இருந்தாலும், தற்போது நடைமுறையில் உள்ள விண்ணப்ப முறை பக்தர்களுக்கு தேவையற்ற
அலைச்சல், நேர விரயம் மற்றும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துவதாகும்.</p><p></p><p>

தற்போதைய நடைமுறையின்படி, விண்ணப்பப் படிவங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில்
மட்டுமே வழங்கப்படுவதுடன், விண்ணப்பதாரர் நேரில் வந்து மட்டுமே விண்ணப்பத்தைப்
பெற்றுக்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>

சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்</h2><p>
 பின்னர் மீண்டும்
நேரில் வந்து விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டியதுடன், கிராம அலுவலரின்
பரிந்துரையையும் பெற்றிருக்க வேண்டும். </p><p>அதன் பின்னர் உறுப்பினர் அடையாள
அட்டையைப் பெறவும் கட்டணத்தைச் செலுத்தவும் மீண்டும் ஆலயத்திற்கு அல்லது ஆலய
அலுவலகத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382d4760-8a40-4ac9-8de7-61fde86a5d3b/26-6a61c34e4746b.webp' /></p><p>
</p><p>
இதனால் ஒரு பக்தர் ஆயுள் அங்கத்துவத்தைப் பெறுவதற்காக குறைந்தபட்சம் மூன்று
தடவைகள் ஆலயத்திற்கு அல்லது ஆலய அலுவலகத்திற்கு வர வேண்டியுள்ளதாகவும், இது
குறிப்பாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும்
திருகோணமலைக்கு வெளியே வசிப்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஆலய யாப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர்
ஆயுள் அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என
குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது விண்ணப்பங்கள் ஜூலை 15 ஆம் திகதிக்குப்
பின்னர் பெறப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டால், ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர்
உறுப்பினர் பட்டியலை எவ்வாறு தயாரித்து காட்சிப்படுத்த முடியும் என்பது
தொடர்பாக பக்தர்கள் நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளனர்.
</p><p>
அத்துடன், ஆயுள் அங்கத்துவ விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே
வழங்குதல், விண்ணப்பதாரர் பல தடவைகள் நேரில் வர வேண்டும் எனக்
கட்டாயப்படுத்துதல், கிராம அலுவலரின் பரிந்துரையை கட்டாயமாக்குதல் போன்ற
நடைமுறைகளுக்கு ஆலய யாப்பில் எந்தவொரு ஏற்பாடும் இல்லை என்றும், அவ்வாறான
நடைமுறைகள் எந்த அடிப்படையில் அமுல்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில்
சம்பந்தப்பட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
</p><h2>

உடனடியாக நடைமுறைக்கு வரும் விதிமுறைகள்</h2><p>
எனவே, பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒரே தடவையில் விண்ணப்பத்தைப்
பெற்று, பூர்த்தி செய்து, கட்டணத்துடன் சமர்ப்பிக்கும் நடைமுறையை
அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், தேசிய அடையாள அட்டையை அடையாள ஆவணமாக
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கிராம அலுவலரின் பரிந்துரை பெறும் கட்டாயத்தை
நீக்க வேண்டும் என்றும், உறுப்பினர் அடையாள அட்டையை பின்னர் பதிவுத் தபால்
மூலம் அனுப்புதல் அல்லது தயாரானதும் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை
அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7082c2fa-bf01-429c-b454-e5b614932df0/26-6a61c34f1b680.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கையொப்பங்களுடன் கூடிய
முறைப்பாட்டு மனுக்கள் கிழக்கு மாகாண ஆளுநர், திருகோணமலை மாவட்ட அரசாங்க
அதிபர், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், இந்து சமய கலாசார அலுவல்கள்
திணைக்களப் பணிப்பாளர், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. சு. குகதாசன் ஆகியோருக்கும்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடி
தலையீடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும்
பாதிக்கப்பட்ட பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

மேலும், தற்போதைய நடைமுறைகள் ஆலய யாப்பிற்கு அமைவானவையா என்பது தொடர்பில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையான விசாரணை நடத்தி, தேவையான திருத்தங்களை
உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், பக்தர்களின் வசதிக்கும் ஆலய யாப்பின்
விதிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் நிர்வாக நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்
என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதை தடுக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் - காணி உரிமையாளர்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-problem-in-kilinochchi-1784789356"></link>
            <id>https://tamilwin.com/article/land-problem-in-kilinochchi-1784789356</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோயில் வயல்
பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதற்கு வன
ஜீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோயில் வயல்
பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதற்கு வன
ஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாகவும், அவற்றை சுவீகரிப்பதற்கான முயற்சிகளை
மேற்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோயில் வயல்
பகுதியில் அதாவது ஆனையிறவு வெற்றிலைக்கேணி பிரதான வீதியில் மேற்கு புறத்தில்
உள்ள குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தலைமுறை தலைமுறையாக பயிர்செய்கை
மேற்கொண்டும் வசித்தும் வந்துள்ளனர்.</p><p></p><h2>மக்கள் இடம்பெயர்வு</h2><p> இவ்வாறான தனியார் காணிகளுக்கு ஆவணங்கள் கடந்த 1911ஆம் ஆண்டுகளிலும்
வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு ஆனையிறவில் இடம்பெற்ற யுத்தம் மற்றும்
வெற்றிலைக்கேணியில் இருந்து ஆனையிறவை நோக்கி மேற்கொள்ளப்பட்ட இராணுவ
நடவடிக்கை காரணமாக இப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து தமது
வாழ்வாதாரங்களை கைவிட்டு சென்றனர்.</p><p>
கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைபெற்றதன் பின்னர் வெடி பொருள் ஆபத்தான
பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு 2020ஆம் ஆண்டு வரையும் வெடிப்பொருள்
அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தற்போது குறித்த காணிகளை துப்புரவு செய்து மக்கள் குடியேறுவதற்கு அல்லது
பயிர் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால்
தடை ஏற்பட்டு வருகின்றது.</p><p></p><h2>வழக்கு தாக்கல்</h2><p> குறிப்பாக கடந்த 1911ஆம் ஆண்டும் அதற்கு முன்னருமான காணி ஆவணங்கள் கொண்ட
பாதிரியார் தோட்டம், ஆலங்காட்டு பள்ளம், கருப்பங்காடு ஆகிய பெயர்களைக் கொண்ட
தனியாருக்கு சொந்தமான தென்னை பயிர்ச்செய்கை காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம்
கையகப்படுத்தும் நோக்கில் குறித்த காணி உரிமையாளர்களை அவர்களது காணிகளை
துப்புரவு செய்யவிடாது தடுத்து வருவதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
செய்தும் வருகின்றனர்.
</p><p>குறித்த காணிகளில் தொன்று தொட்டு ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்தமைக்கான
காணி ஆவணங்கள் தோட்டச் செய்கைகளுக்காக முண்ணைய காலங்களில் வெட்டப்பட்ட
கிணறுகள், வீடுகள், கட்டடங்கள் குடியிருந்தமைக்கான ஆதாரங்கள் மற்றும் போரில்
எஞ்சியுள்ள பனை தென்னை மா போன்ற பயன்தரும் மரங்கள் என்பன சாட்சியாக உள்ள
போதும் இவ்வாறு வனஜீராசிகள் திணைக்களம் தனது காணிகளை துப்புரவு செய்யவிடாது
தடைகளை ஏற்படுத்தி அவற்றை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருவதாகவும் தமது பூர்வீக காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும்
பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:29:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுர நீங்கள் தவறு செய்கிறீர்கள்... நாமலின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-you-are-making-a-mistake-namal-s-warning-1784789292"></link>
            <id>https://tamilwin.com/article/anura-you-are-making-a-mistake-namal-s-warning-1784789292</id>
            <summary type="text">எதிர்க்கட்சிகளை இலல்லாதொழித்துவிட்டு உங்களது அரசியல் நோக்கங்களை அடைய முடியும் என்று நினைத்தால், ஜனாதிபதி அநுர..,&amp;nbsp; நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சிகளை இலல்லாதொழித்துவிட்டு உங்களது அரசியல் நோக்கங்களை அடைய முடியும் என்று நினைத்தால், ஜனாதிபதி அநுர..,&nbsp; நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>அடக்குமுறை அரசாங்கம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p>எதிர்க்கட்சிகளை இல்லாதொழிக்க அரசாங்கம் நினைத்தால் அது தவறான எண்ணம்.&nbsp; தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதி எதிர்க்கட்சிகளை ஒழித்துவிட்டதாக கூறுகின்றார்.&nbsp; இது ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதியால் சொல்லப்படும் கதை.&nbsp;</p><p>இது ஒரு அடக்குமுறை. இந்த அடக்குமுறையின் தொடர்ச்சியாகவே,&nbsp; ஓய்வு பெறும் நீதிபதிகளின் வயதை நீடிக்கும் செயற்றிட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f30dcc-3322-415a-b699-85af5cc60b16/26-6a61c01abc660.webp' />&nbsp;&nbsp;</p><p>அரசாங்கம் தனது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக இந்த நாட்டின் நீதி அமைப்பை பயன்படுத்த முயல்வது தெளிவாகத் தெரிகின்றது.&nbsp; </p><p>அடக்குமுறை, சிறையில் அடைத்தல், ஒழித்துக்கட்டுதல்&nbsp; ஆகியவற்றின் மூலம் தனது அரசியல் நோக்கங்களை அடைய முடியும் என்று அரசாங்கம் நினைத்தால், ஜனாதிபதி அவர்களே நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரகலய வழக்கில் சிக்கிய தேசபந்து தென்னகோன் - உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-in-against-deshabandhu-tennakoon-1784790474"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-in-against-deshabandhu-tennakoon-1784790474</id>
            <summary type="text">மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வு அதிகாரி நளின் ஸ்ரீயந்தா ஆகிய இருவருக்கும் அடிப்படை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வு அதிகாரி நளின் ஸ்ரீயந்தா ஆகிய இருவருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p> 

இது தொடர்பான வழக்கு இன்று(23.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


நீதிமன்ற தீர்ப்பு</h2><p>
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், </p><p>

கடந்த 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது, ​​மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வு அதிகாரி நளின் ஸ்ரீயந்தா
 ஆகிய இருவரும் அனுருத்த பண்டார என்ற இளம் சமூக ஆர்வலரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9109d79a-636b-4ef0-9852-2f7a8fa9d78c/26-6a61bedf08580.webp' /></p><p> 

இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று (23) உயர் நீதிமன்றம் இவர்கள் செய்தது அடிப்படை உரிமைகளை மீறல் என தீர்ப்பளித்துள்ளது.</p><p> 

அனுருத்த பண்டார என்ற இளைஞர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர் உயர் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1Aj8iSMQzNw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:18:08+00:00</updated>
        </entry>
    </feed>
