<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-15T06:30:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாம் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தைப் பெறவே இல்லை! பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-government-current-issues-1789453213"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-government-current-issues-1789453213</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்றுப்
பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்து ஆட்சி
அதிகாரத்தைக் கைப்பற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்றுப்
பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்து ஆட்சி
அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள போதிலும், இன்னும் முழுமையான 'அரச அதிகாரத்தை'
முழுமையாகப் பெறவில்லை என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.</p><p>

தேசிய மக்கள் சக்தி நேற்று ஏற்பாடு செய்திருந்த பேரணியொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.</p><h2>அரச அதிகாரம்&nbsp;</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> "நாங்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளோம், ஜனாதிபதியை
நியமித்துள்ளோம், உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவையும் பெற்றுள்ளோம். எனவே கட்சி
ஏன் தொடர்ந்து பொதுப் பேரணிகளை நடத்துகின்றது எனச் சிலர் கேள்வி
எழுப்பக்கூடும்.</p><p> </p><p>நாம் தற்போது பெற்றிருப்பது 'ஆட்சி அதிகாரத்தை' மட்டுமே.
ஆனால், 'அரச அதிகாரம்' என்று அழைக்கப்படும் மற்றொரு முக்கியமான பகுதி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4d90a59-821e-4ccb-93fa-9a2f812ba056/26-6aa8e3a021cd1.webp' /></p><p>
இந்த அதிகாரத்துக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. அரச அதிகாரம் என்பது
முழுமையான அரச நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாகவே கட்டியெழுப்பப்பட்டு முன்னேறிச்
செல்வதைக் குறிக்கின்றது.
</p><p>
அரசின் கொள்கைத் திட்டங்களும் அபிவிருத்தி முன்னெடுப்புகளும் இறுதியில் இந்த
அரச அதிகாரத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. </p><p>இந்த அரச அதிகாரத்தை ஒரே
நாளில் அல்லது குறுகிய காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாது. அதனை முழுமையாக
நிலைநிறுத்துவதற்குக் கால அவகாசம் தேவைப்படுகின்றது. இது நிர்வாகத்துக்கான
காலகட்டமாகும்'' என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இதன்போது, இந்த அரச அதிகாரத்தை ஜனநாயக முறையில் எவ்வாறு பெற்றுக்கொள்ள
முடியும் என்பது குறித்தும் அவர் மேலும் விளக்கமளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47405d52-16db-4557-941c-61bdbdc915cd/26-6aa8e39f67d8d.webp' /></p><p>
</p><p>
"கடந்த 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச அதிகாரமும் அரச
அதிகாரமும் வன்முறையின் மூலமே கைப்பற்றப்பட்டன. </p><p>ஆனால், தற்போதைய சூழலில் அரச
அதிகாரமும் அரச அதிகாரமும் முற்றிலும் ஜனநாயக முறைப்படி பெற்றுக்கொள்ளப்பட்டு,
அதே ஜனநாயக வழியில் நாட்டை அபிவிருத்தி செய்யும் முயற்சி உலக வரலாற்றில் இதுவே
முதல் முறையாகும்.</p><p> இதற்கு முன்னுதாரணமாகக் கற்றுக்கொள்வதற்கு வேறு எந்த
நாடுகளின் அனுபவமும் நம்மிடம் இல்லை" என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன
சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/39th-year-commemoration-thileepan-1789452768"></link>
            <id>https://tamilwin.com/article/39th-year-commemoration-thileepan-1789452768</id>
            <summary type="text">தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12
நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுடைய 39ஆவது
ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12
நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுடைய 39ஆவது
ஆண்டு நினைவேந்தல்&nbsp; உணர்வெழுச்சியுடன் ஆரப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது மக்கள்
தொடர்பகத்தில் இன்று(15) உணர்வெழுச்சியுடன் குறித்த நிகழ்வு&nbsp; ஆரம்பிக்கப்பட்டது.</p><h2>&nbsp;39ஆவது ஆண்டு நினைவேந்தல்</h2><p>
</p><p>
அந்தவகையில் அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தியாகதீபம் திலீபனின்
உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி
நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.</p><p>அதனைத்தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் உறுப்பினர் மகாதேவா
குணசிங்கராவினால் தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை
அணிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6386079f-8ff4-4aa7-b0ca-790a5a6e87e5/26-6aa8e326adf20.webp' /></p><p>
அதனையடுத்து குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களால் தியாக
தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p>

மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா
குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன்
நிறோஜன், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவிற்கு இலஞ்சம் வழங்கியதாக கூறப்படும் நிமல் பெரேராவை ஏன் கைது செய்யவில்லை! சாகர காரியவசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-arrest-completely-wrong-sagara-kariyawasam-1789445958"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-arrest-completely-wrong-sagara-kariyawasam-1789445958</id>
            <summary type="text">&quot;ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் முழுமையாக உறுதியாக உள்ளோம். அரச
நிதியை மோசடி செய்தவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட
வேண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>"ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் முழுமையாக உறுதியாக உள்ளோம். அரச
நிதியை மோசடி செய்தவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட
வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.</p><p> எனினும், 13
ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில்,
பிறிதொரு நாட்டில் இருந்துகொண்டு நிமல் பெரேரா என்ற நபர் வழங்கிய
சாட்சியத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச செய்யப்பட்டமை முற்றிலும் தவறான
செயலாகும்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்
தெரிவித்துள்ளார்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைச் செயலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,</p><h2>ஜனாதிபதியின் கருத்து&nbsp;</h2><p>

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொலன்னறுவையிலும் அனுராதபுரத்திலும் ஆற்றிய
இரு உரைகளையும் ஊடகச் செய்திகளில் நான் பார்த்தேன். அவர் நாட்டின் ஜனாதிபதி
என்ற பொறுப்புமிக்க பதவியில் இருந்துகொண்டு நாட்டின் தேசிய பிரச்சினைகளைப்
பற்றிப் பேசாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும் பற்றியே
தொடர்ந்து விமர்சித்துப் பேசுகின்றார். அதைப் பார்க்கும்போது எங்களுக்கு
ஆச்சரியமாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccec107-9d04-4626-b6b1-b177386b30ab/26-6aa8e1344c5e5.webp' /></p><p>
</p><p>
அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், நாடு முழுவதும்
கூட்டங்களை நடத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும்
மாத்திரம் விமர்சித்துச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றால்,
ஜனாதிபதி தன் தோல்வியை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார் என்றே நாம் கருத
வேண்டியுள்ளது.</p><p>

அரசின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக ஜனாதிபதி திரும்பத்
திரும்பக் கூறுகின்றார். அவ்வாறாயின், தமக்குத் மக்கள் மத்தியில் உண்மையான
ஆதரவு இருப்பதை நிரூபிக்க மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தலாம் தானே?
</p><p>தேர்தல் முறைமையைக் காரணம் காட்டி தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுவதன் உண்மையான
நோக்கம் என்ன?</p><h2>அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி&nbsp;</h2><p> மக்களின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு
காண்பதில் கவனம் செலுத்தாத அரசு, அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கு
அமையவே தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
</p><p>
ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாமும் உறுதியாக உள்ளோம். அரச நிதியைச்
சுருட்டியவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில்
நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03a4bc7-2398-48dd-923e-8570f90515cc/26-6aa8e1351cf0e.webp' /></p><p> </p><p>ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்னர்
இடம்பெற்ற எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், வெளிநாட்டில்
இருந்துகொண்டு நிமல் பெரேரா என்பவர் வழங்கிய சாட்சியத்தை மட்டும் வைத்துக்
கொண்டு நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் தவறான
நடவடிக்கையாகும்.
</p><p>
நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் அவர் கைது
செய்யப்பட்டுள்ளார் எனில், அவருக்கு அந்த இலஞ்சத்தை வழங்கியதாகக் கூறப்படும்
நபருக்கு எதிராக இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? எமது
கட்சியின் எதிர்கால வெற்றியைத் தடுக்கும் நோக்கத்துடனும், திட்டமிட்ட அரசியல்
பழிவாங்கும் செயற்பாடாகவுமே நாமல் ராஜபக்ச இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:07:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷானி அபேசேகர - ரவி செனவிரத்ன ஆகியோரின் அடிப்படை உரிமை மீறல்! இழப்பீடு செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-seneviratne-shani-s-fundamental-rights-1789451037"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-seneviratne-shani-s-fundamental-rights-1789451037</id>
            <summary type="text">பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன அளித்த புகாரின் பேரில், தேசபந்து தென்னக்கோனின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அப்போதைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா, ஷானி அபேசேகரா மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிராக விசாரணையொன்றை முன்னெடுத்திருந்தார்.</p><h2>அடிப்படை உரிமை மனு தாக்கல்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb26d890-443d-4d0e-9d95-792cf44c51d2/26-6aa8de4e41bca.webp' /></p><p>
</p><p>
குறித்த விசாரணைகளின் அப்படிடையில் தங்களை சட்டவிரோதமாகக் கைது செய்யும் நோக்கம் இருப்பதால் அதற்குத் தடை விதிக்கக் கோரி, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பின்னர் உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, இது தொடர்பான புகாரைத் தாக்கல் செய்த ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன, தலா 50,000 ரூபாவும், இது தொடர்பான விசாரணையை நடத்திய அப்போதைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா, தலா 10,000 ரூபாவும் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:57:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்! ஆற்று பகுதிகளை அண்மித்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-risk-kalu-ganga-and-attanagalu-oya-1789449493"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-risk-kalu-ganga-and-attanagalu-oya-1789449493</id>
            <summary type="text">நாட்டில் இன்று குறிப்பிடத்தக்க மழை பெய்தால், அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் கீழ் பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இன்று குறிப்பிடத்தக்க மழை பெய்தால், அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் கீழ் பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

</p><p>அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் மில்லகந்த மற்றும் எலகாவா பகுதிகளில் நீர்மட்டம் தற்போது உச்ச அளவில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையில், களனி ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயரவில்லை என்றாலும், படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், தற்போதைக்கு வெள்ள அபாயம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29226463-3b78-4844-b29b-222988384c14/26-6aa8dbc9d06a5.webp' /></p><p>
</p><p>
அதேபோல், நில்வலா ஆறு, ஜின், களனி, கலு, அத்தனகலு மற்றும் பெந்தாரா ஆகிய அனைத்து ஆறுகளின் கீழ் பகுதிகளிலும் நீர்மட்டம் தற்போது ஓரளவிற்கு உயர்ந்துள்ளது.</p><p>

இருப்பினும், வரவிருக்கும் வானிலை நிலவரங்களைப் பொறுத்து நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், குறித்த ஆறுகளின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மேடையில் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரியப் பேச்சு! விமலும் - கம்மன்பிலவும் வேடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-s-controversial-speech-on-mahinda-s-stage-1789449818"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-s-controversial-speech-on-mahinda-s-stage-1789449818</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் பேரணியானது நாட்டில்
நிலவும் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக அமையவில்லை. மாறாக,
தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் பேரணியானது நாட்டில்
நிலவும் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக அமையவில்லை. மாறாக,
தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து சட்டம் மற்றும்
நீதித்துறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு வெற்றுக்கூச்சலாகவே அமைந்தது&nbsp; என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இணை அழைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்தார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் கூறியதாவது,</p><p>ஊழலுக்கு எதிரான அரசு எதிர்ப்புப் பேரணி எனக் கூறி நடத்தப்பட்ட இந்த
நிகழ்வில், விவசாயிகள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள், நெல்லுக்கான
நியாயமான விலை, மீனவர்கள் மற்றும் வர்த்தகர்களின் அன்றாடச் சிரமங்கள்,
எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்ற எந்தவொரு அடிப்படை மக்கள்
நலன் குறித்தும் மேடையில் பேசிய பேச்சாளர்கள் எவருமே சிறிதும் பேசவில்லை.</p><h2>மௌனம் சாதித்தனர்</h2><p>

மாறாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸார் மற்றும்
நீதிமன்றங்கள் தங்களுக்கு எதிராக முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து
தப்பிப்பதையும், கைதுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையுமே முதன்மை
நோக்கமாகக் கொண்டே அவர்கள் உரையாற்றினர்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் 2011 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் எல்.ரி.ரி.ஈ. அமைப்பானது தடை செய்யப்பட்ட அமைப்பாக
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. </p><p>அந்தச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட
அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவது, அதன் உறுப்பினராக இருப்பது, அந்த
அமைப்பை ஊக்குவிப்பது அல்லது அதற்கான கூட்டங்களை நடத்துவது என்பன முற்றிலும்
சட்டவிரோதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79173e6-f748-4731-ac2d-a26c5393018b/26-6aa8d78ce2232.webp' /></p><p> </p><p>ஆனால், அதே மகிந்த ராஜபக்ச மேடையில் அமர்ந்திருக்கையில்,
அர்ச்சுனா என்பவர் மேடையேறித் தடை செய்யப்பட்ட அமைப்பைப்
பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றியுள்ளார். </p><p>அதனைப் பார்த்து ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன ஆதரவாளர்களும் தலைவர்களும் கைதட்டி வரவேற்பளித்துள்ளமை நாட்டின்
அரசமைப்பையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் மிக மோசமாக மீறும் செயலாகும்.</p><p>

இத்தனை காலம் தங்களைச் சிங்களத் தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்றும்,
இராணுவத்தினரைப் பாதுகாத்தவர்கள் என்றும் கூறி அரசியல் செய்து வந்த விமல்
வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திஸ்ஸ குட்டியாரச்சி போன்றவர்கள், மேடையில்
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக உரையாற்றப்பட்டபோது அதைத் தடுத்து
நிறுத்தாமல் மௌனம் சாதித்துள்ளனர். </p><p>கீழிருந்த ஆதரவாளர்களும் அதற்குத் தாளம்
போட்டு கைதட்டி வரவேற்பளித்துள்ளனர். இது அவர்களின் போலித் தேசியவாதத்தையும்,
வெற்று அரசியல் சுயநலத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eaa664d-b207-4f03-96c7-80d689266cde/26-6aa8d78dbf583.webp' /></p><p>
</p><p>
நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைச் சீர்குலைக்கும் வகையிலும், தடை
செய்யப்பட்ட அமைப்பை பகிரங்கமாக ஊக்குவிக்கும் வகையிலும் இந்தக் கூட்டத்தை
ஏற்பாடு செய்தமைக்காகக் குற்றப் புலனாய்வுத் துறையினர் மற்றும் பொலிஸ்மா
அதிபரிடம் உடனடியாக அவசரப் புகார் அளிக்கப்படவுள்ளது.</p><p>

இத்தகைய சட்டவிரோத செயல்களுக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20
ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும். </p><p>தங்களின் சுயநல
அரசியல் இலாபத்துக்காகவும் ஊழல் வழக்குகளிலிருந்து தப்புவதற்காகவுமே ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன கட்சியினர் நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பந்தயப் பொருளாக
ஆக்கியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்திற்கு வந்து தவழ்ந்த கூட்டம்! பணத்தை பெற்றுக்கொண்டு மனதிலிருந்து வந்த வார்த்தை - ஈரோஸ் கட்சி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajanathan-prabakaran-statement-about-mahinda-1789445750"></link>
            <id>https://tamilwin.com/article/rajanathan-prabakaran-statement-about-mahinda-1789445750</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க விரைவில் மருந்து கட்டுவேன் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை அநுர அரசாங்கம் 20 வருடம் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மட்டக்களப்பில் நேற்றைய தினம் (14.09.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசாங்கத்திற்கு எதிரான கூட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொலை, கொள்ளை, குடிகாரர்கள் தான் இருக்கின்றனர் என உலகத்துக்கே தெரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d397a0c-2acc-4071-b62d-647fe03df947/26-6aa8d668535e4.webp' /></p><p> இருந்தபோதும் அரசாங்கத்துக்கு எதிராக அநுராதபுரத்தில் பெரிய ஒரு கூட்டம் நடந்தது அந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் அனைவரும் வீதியில் தவழ்ந்ததை முகநூலில் பார்த்திருப்பீர்கள்.
</p><p>
பணத்தையும், மதுபானத்தையும் வாங்குவதற்கு அனுர ஹொரா என சொல்வது கடமை, ஏன் என்றால் பணத்தையும் மதுபானத்தையும் பெற்றுக் கொண்டதற்காக. </p><p>ஆனால் அடிமனதில் இருந்து நாமல் ஹொரா என சொல்லியிருந்தனர்.

இது தான் நிலைமை இலங்கையில் இவ்வளவு பேரும் தான் அனைத்து கட்சிக்கும் ஆதரவாளர்கள் என்பது ஊடகங்கள் மூலம் தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pP30fxl7UZ8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை - காலக்கெடுவுடன் கடுமையாகும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-to-those-in-government-service-action-1789441405"></link>
            <id>https://tamilwin.com/article/warning-to-those-in-government-service-action-1789441405</id>
            <summary type="text">அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்சாட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் நல அலுவல்கள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
</p><p>
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா பவுல்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

இதற்கான உரிய அமைச்சரவை ஆவணத்தை சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்</h2><p>

இந்த சான்றிதழை பொலிஸ் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் மூலம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a9c9b94-6143-4425-93a1-148633381344/26-6aa8cd2078dea.webp' />&nbsp; &nbsp;</p><p> தற்போது அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்களது பணிக்கால இடைவெளி மற்றும் சம்பள உயர்வுகளை பெறும்போது, ​​குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூறும் சான்றிதழை புதுப்பித்து வழங்குவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.</p><p>இந்த சான்றிதழின் அவசியத்தை அமைச்சரவை அறிக்கை மூலம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பொலிஸ் அல்லது தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து சான்றிதழைப்பெற நாங்கள் பரிசீலித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
 மேலும், அரச பணியில் சேரும்போது, ​​குழந்தைகளுடன் பழகும் வாய்ப்புள்ள பணிகளில் பணியாற்றுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது குற்றவாளிகள் என்றோ குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

எனவே, ஒரு நாடாக நாம் முன்னேறிச்செல்வதற்கு இது போன்ற வி்டயங்கள் அவசியமானவை என விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T04:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-corruption-free-sri-lankan-government-1789444192"></link>
            <id>https://tamilwin.com/article/a-corruption-free-sri-lankan-government-1789444192</id>
            <summary type="text">தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து
ஊழலற்ற ஆட்சியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து
ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
அத்துடன் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது எவரும் விரல்
சுட்டிக் குற்றம் சுமத்த முடியாத அளவுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன்
கூடிய புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி
அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
"தற்போதைய அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு அளித்த தேர்தல்
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை முழுமையாக
உறுதிசெய்து ஊழலற்ற தூய்மையான ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில்
நிலைநிறுத்தியுள்ளது.</p><h2>மக்கள் ஆட்சி&nbsp;</h2><p>
</p><p>
கடந்த கால ஆட்சி முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நாட்டின் சாதாரண
மக்களையும் நிர்வாகக் கட்டமைப்போடு நேரடியாக இணைக்கும் வகையில் மக்கள்
பங்கேற்புடனான ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
</p><p>
பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் குறைகளைக்
கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகளை வழங்குவதற்காக அரசியல் தலைமைத்துவம்
நேரடியாகவே மக்களிடம் செல்லும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29962b70-266d-4d93-a5f3-f3b78aa88dcc/26-6aa8c6499b001.webp' /></p><p> </p><p>இதன்
முதற்கட்டமாக, ஜனாதிபதி நேரடியாகப் புலத்சிங்கள, பேருவளை, பொலன்னறுவை மற்றும்
அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து மக்களின் நிலைமைகளைக்
கேட்டறிந்துள்ளார்.</p><p> </p><p>இதேபோன்று, ஜனாதிபதி மாவட்ட மட்டத்திலும், அமைச்சர்கள்
தொகுதி மட்டத்திலும், நகர சபைத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்,
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வரையிலும் நேரடியாகச் சென்று மக்களையும் அரச
அதிகாரிகளையும் சந்தித்துப் பணியாற்றி வருகின்றனர். </p><p>இது ஒரு சங்கிலித் தொடர்
போன்ற கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது.

கடந்த ஆட்சிக் காலங்களில் கொடிகட்டிப் பறந்த ஊழல், இலஞ்சம் மற்றும் நிர்வாக
முறைகேடுகளை முழுமையாக ஒழிக்கவே இந்த அரசை மக்கள் தோற்றுவித்ததன் முதன்மை
நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e30d0e-97db-4654-a6fe-8b1ea8a9643e/26-6aa8c648e2f0c.webp' /></p><p> </p><p>அந்த மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், தற்போதுள்ள 159
நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளோ எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும்
ஈடுபடவில்லை. </p><p>மக்கள் பிரதிநிதிகள் மீது எவரும் விரல் சுட்டிக் குற்றம் சுமத்த
முடியாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய அரசியல் கலாசாரம்
உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அரசியல்வாதிகள் எவரும் இனி ஊழல் சார்ந்த செயல்களுக்கு அரச
அதிகாரிகளையோ அல்லது பொதுமக்களையோ தூண்டப்போவதில்லை. </p><p>இதனால் அரச அதிகாரிகள்
எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் அஞ்சாமல், சுதந்திரமாகவும் தைரியமாகவும்
நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற முடியும். மக்கள் பிரதிநிதிகளும் அரச
அதிகாரிகளும் கைகோர்த்து நாட்டுக்காகப் பணியாற்றுவதற்கு இதுவொரு பொன்னான
வாய்ப்பாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T04:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு எதிராக உரிய தருணத்தில் ஒரே தளத்தில் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்! வெளியாகவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-parties-taking-field-against-government-1789443172"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-parties-taking-field-against-government-1789443172</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும்
சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான
பிளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும்
சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான
பிளவு அல்ல என்றும், உரிய தருணத்தில் அரசுக்கு எதிராக அனைத்து
எதிர்க்கட்சிகளும் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து களமிறங்கும் என்றும் ஐக்கிய
மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடனான உத்தியோகபூர்வ கூட்டணி குறித்த இறுதித்
தீர்மானம் அடுத்த தேசிய தேர்தலின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,</p><h2>&nbsp;அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட அனுராதபுரம் பேரணி</h2><p> "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட அனுராதபுரம்
பேரணியானது, தற்போதைய அரசின் தோல்விகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை
நாட்டு மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85f3ac0-3cc9-4994-a7f0-a9fb5f0dae10/26-6aa8c151a69fb.webp' /></p><p>
</p><p>உறங்கிக்கொண்டிருந்த மக்களை மீண்டும் விழிப்படையச் செய்து, அவர்களின்
போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய ஒரு முக்கியமான பேரணியாகவே அதனைப் பார்க்க
முடிகின்றது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்
அரசுக்கு எதிராகத் தனியாகப் பல போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக, இம்மாத இறுதியில் கொழும்பில் பிரம்மாண்டமான
முறையில் ஒன்றுகூடி, முக்கிய கலந்துரையாடல்களையும் பேரணிகளையும் நடத்த
ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
</p><p>
நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உள்ள பல்வேறு அரசியல் இயக்கங்கள்
இணைந்து தற்போது கூட்டு எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு வருகின்றன.</p><h2>பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் </h2><p>
</p><p>
எதிர்க்கட்சிகள் தனித்தனியாக மக்கள் சந்திப்புகளை நடத்துவதைப் பார்த்து அவை
பிளவுபட்டுள்ளதாகச் சிலர் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. ஒவ்வொரு
கட்சியும் தத்தமது பலத்துக்கு ஏற்ப மக்களைத் திரட்டுவது அரசியல் ரீதியாக
இயல்பான ஒரு விடயமாகும்.</p><p> எனினும், அரசுக்கு எதிராக இறுதிச் சந்தர்ப்பம்
வரும்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகவே கைகோர்த்து களமிறங்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது
குறித்து நீண்டகாலமாகப் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/149081de-d98c-4704-bbd1-c69a01c768f6/26-6aa8c1525bdf2.webp' /></p><p> இரு கட்சிகளின்
தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் முக்கிய குழுவினர் பலமுறை நேரில்
சந்தித்துப் பேசியுள்ளனர். </p><p>ஏற்கனவே உள்ளூராட்சி மன்ற அமைப்புகளின்
தேர்தல்களின்போது இரு கட்சிகளும் அடிமட்ட அளவில் இணைந்து செயற்பட்டது போல்,
தற்போதும் ஆதரவாளர்கள் மத்தியில் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி நல்லிணக்கம்
தொடர்கின்றது.

இரு கட்சிகளும் எப்போது உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கப் போகின்றன என்பதை
இரு கட்சித் தலைவர்களுமே உரிய நேரத்தில் தீர்மானிப்பார்கள்.</p><p>

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்திலோ அல்லது அடுத்த தேசிய தேர்தல்
வரவிருக்கும் சந்தர்ப்பத்திலோ இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு
வெளிப்படுத்தப்படும்.
</p><p>
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவராக
இன்னமும் மஹிந்த ராஜபக்சவே தொடர்ந்தும் திகழ்கின்றார்.</p><p> இத்தகைய சிரமங்களுக்கு
மத்தியிலும் கூட அவரைப் பேரணிகளுக்கு அழைத்து வருகின்றமை, பொதுமக்களுக்கும்
அவருக்குமான பலமான பிணைப்பையே மீண்டும் காட்டுகின்றது என்பதை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T03:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அரச கடன் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-released-sri-lanka-government-debt-1789436012"></link>
            <id>https://tamilwin.com/article/information-released-sri-lanka-government-debt-1789436012</id>
            <summary type="text">
இந்த ஆண்டில் (2026) இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த அரச கடன் 744 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. பொதுக்கடன் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இந்த ஆண்டில் (2026) இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த அரச கடன் 744 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. </p><p>பொதுக்கடன் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h2>கடன் தொகை&nbsp;</h2><p> 

அதன்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் 32,233 பில்லியன்&nbsp;ரூபாயாக கடன் இருந்துள்ளது.</p><p>

இவை இரண்டாம் காலாண்டின் (ஜூன் மாத இறுதியில்) இறுதியில் 32,977 பில்லியனாக அதிகரித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T03:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணீர்ப்புகைக்குண்டுகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/expired-police-tear-gas-1789438833"></link>
            <id>https://tamilwin.com/article/expired-police-tear-gas-1789438833</id>
            <summary type="text">பொலிஸ் பிரிவின் வசம் உள்ள கண்ணீர்ப்புகை குண்டுகளின் கையிருப்பில் 70 சதவீதம் காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் தலைமையக வட்டார தகவல்களில் வெளியாகியுள்ளன.

இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் பிரிவின் வசம் உள்ள கண்ணீர்ப்புகை குண்டுகளின் கையிருப்பில் 70 சதவீதம் காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் தலைமையக வட்டார தகவல்களில் வெளியாகியுள்ளன.
</p><p>
இருப்பினும், நாட்டில் கலவரங்களை அடக்குவதற்குத் தேவையான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பொலிஸ் பிரிவிடம் உள்ளதாகவும் தலைமையகம் கூறுகின்றது.</p><h2>ஐந்து ஆண்டுகளுக்கு இறக்குமதி</h2><p>
</p><p>
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகள், மார்ச் 22 முதல் ஜூலை 2022 போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பின்னர் பயன்படுத்தப்படாமையினால் காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ee2bf91-cf2b-470a-a66c-0efbde39fc32/26-6aa8b161b2131.webp' /></p><p> </p><p>

அவசர கொள்முதல்களின் கீழ் வெளிநாடுகளிலிருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வாங்கப்படுவதாகவும், அந்த கண்ணீர்ப்புகைக்குண்டுகள் பொலிஸ் களப்படை தலைமையகத்தால் நாடு முழுவதும் உள்ள கலவரத் தடுப்புக் பொலிஸ் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் தலைமையகம் கூறுகின்றது. </p><p>

மேலும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கண்ணீர்ப்புகைக் குண்டின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் என்றும் கூறப்படுகின்றது.</p><h2>கண்ணீர்ப்புகை குண்டுகள் காலாவதி</h2><p>

இவை காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தெரிவிக்கின்றது. </p><p>

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் போராட்டங்களை அடக்குவதற்கு கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும், இதன் காரணமாக பொலிஸ் வசம் இருந்த சில கண்ணீர்ப்புகை குண்டுகள் காலாவதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T02:45:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/restrictions-on-fuel-supply-at-500-fuel-stations-1789436026"></link>
            <id>https://tamilwin.com/article/restrictions-on-fuel-supply-at-500-fuel-stations-1789436026</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. </p><p>

தனியார் எரிபொருள் நிறுவனங்களால் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான 250 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சினொபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 150 மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனத்திற்கு சொந்தமான 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என மொத்தம் 500 நிலையங்களுக்கு டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

எரிபொருள் இறக்குமதி</b></h2><p>குறித்த நிறுவனங்கள் நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விலைக்கும், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யும் விலைக்கும் இடையில் காணப்படும் பாரிய இடைவெளியே இந்த நிலைக்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee50eb56-0873-4b1c-a1a4-115e18ff3a09/26-6aa8a3c55c954.webp' /></p><p>நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> “இதன் காரணமாகப் பொதுமக்களும், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.</p><p> தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. </p><h3><b>விலை சூத்திரம்</b></h3><p>தற்போதைய அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருளை விற்பனை செய்வதனால் தமக்கு பாரிய நட்டம் ஏற்படும் என குறித்த தனியார் நிறுவனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c55659-d546-4418-8ddf-be395f36e788/26-6aa8a3c6183d0.webp' /></p><p>இவ்வாறு ஏற்படும் நட்டத்தைக் குறைத்துக் கொள்வதற்காகவே குறித்த நிறுவனங்கள் சந்தைக்கான எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. </p><p>எனினும், இந்த நிறுவனங்கள் எமக்குத் தொடர்ந்தும் எரிபொருளை வழங்குவதாக உறுதியளித்திருந்தன” என குமார் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T02:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலட்சக்கணக்கானோருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1-20-000-people-recruited-goverment-job-this-year-1789436693"></link>
            <id>https://tamilwin.com/article/1-20-000-people-recruited-goverment-job-this-year-1789436693</id>
            <summary type="text">இந்த ஆண்டு பரீட்சைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தகுதியின் அடிப்படையில் 1,20,000 க்கும் மேற்பட்ட புதிய நபர்கள் அரச சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு பரீட்சைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தகுதியின் அடிப்படையில் 1,20,000 க்கும் மேற்பட்ட புதிய நபர்கள் அரச சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>இதன்படி, தனிப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் அரச சேவையில் சேர்க்கும் கலாச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>கேகாலை, ருவன்வெல்லாவில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>பொதுமக்களுக்கு&nbsp;&nbsp;வழங்கப்படும்&nbsp;சேவைகள் </h2><p>
உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூராட்சி திணைக்களங்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71ed0dc0-9ab3-4432-9db8-262204466860/26-6aa8a7c6e7a5b.webp' /></p><p>
</p><p>
பொது நிதிகளை சிக்கனமாகவும் வீணாக்காமலும் பயன்படுத்தி, 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் பிரதான நோக்கத்தை அடைவதற்கு பொதுச் சேவையும் உள்ளூராட்சி நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>பிறப்பு முதல் இறப்பு வரையிலும், இறப்பிற்கு பிறகும் கூட, பல தேவைகளில் இந்த உள்ளூராட்சி நிறுவனங்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. இது மக்களின் வாழ்க்கையுடன் மிகவும் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. </p><p>இருப்பினும், சில சமயங்களில், இந்த உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் சேவைகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததைக் காண்கிறோம். எனவே, இந்த உள்ளாட்சி வாரத்தை மீண்டும் செயல்படுத்த நினைத்தோம். இதை ஒரு வாரத்திற்குள் மட்டுப்படுத்தாமல், இந்தத் திட்டம் வழங்கும் அறிவு, புரிதல் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, வரும் ஆண்டு முழுவதும் இந்தச் சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.</p><h2>அரச சேவைக்காக ஆட்சேர்ப்பு</h2><p>
</p><p>
இன்று, நடமாடும் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. எதிர்காலத்தில், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்வேறு கல்வித் திட்டங்கள், கலை, கலாச்சார மற்றும் விளையாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட, மக்களைப் பாதிக்கும் அத்தியாவசிய சேவைகளை ஒரே வளாகத்தில் வழங்குவது மற்றும் அவற்றை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வது உட்பட, இந்த வாரம் ஏற்பாடு செய்யப்படும்.
</p><p>மத்திய அரசின் கீழ் இது தான் நிலை. மாகாண சபைகளின் கீழும் இதே நிலை தான். எனவே, ஒரு அரசாங்கமாக, இந்த ஆண்டு மட்டும் அரச சேவைக்காக 1,20,000-க்கும் மேற்பட்டோரை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.சில ஆட்சேர்ப்புகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.</p><p>செப்டம்பர் 01, 2019 நிலவரப்படி 180 நாட்களை நிறைவுசெய்த, தற்காலிக, பதவி, ஒப்பந்தம் போன்ற அடிப்படையில் இருந்த அனைவரையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T02:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18-years-old-boy-killed-brutally-1789434493"></link>
            <id>https://tamilwin.com/article/18-years-old-boy-killed-brutally-1789434493</id>
            <summary type="text">கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><h2><b>

 ஆரம்பகட்ட விசாரணை</b></h2><p>உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4f3026-8f5a-4b8f-9d24-5272bb4f78b1/26-6aa89c8eeeaa4.webp' /></p><p>தனிப்பட்ட தகராறு ஒன்று முற்றியதன் காரணமாக இருவரால் இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
 இந்த கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><h3><b>

பழைய தகராறு </b></h3><p>இதேவேளை, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eef92656-57cb-41af-8789-135f041a1ab7/26-6aa89c8fa3950.webp' /></p><p>யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யக்கலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 பழைய தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மர்ம பொதி - தப்பியோடிய பயணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mystery-box-in-katunayake-airport-1789435229"></link>
            <id>https://tamilwin.com/article/mystery-box-in-katunayake-airport-1789435229</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6 ஆம் இலக்கப் பொதி பகுதியில் அருகில் மர்மமான முறையில் கைவிடப்பட்டிருந்த பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த பொதிக்குள் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6 ஆம் இலக்கப் பொதி பகுதியில் அருகில் மர்மமான முறையில் கைவிடப்பட்டிருந்த பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p> அந்த பொதிக்குள் பெருமளவு குஷ் ரக போதைப்பொருள் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p> இரண்டு பொதிகளுக்குள் காற்றுப்புகாதவாறு 60 பொட்டலங்களாக பொதியிடப்பட்டிருந்தது. </p><h2><b>தப்பியோடிய பயணி</b></h2><p>இந்தப் போதைப்பொருள், நேற்று தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-405 விமானத்தில் வந்த பயணி ஒருவரால் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/349ea38a-d730-44c7-abd5-e1cde87819d2/26-6aa89ffcd1764.webp' /></p><p>விமான நிலையத்திற்குள் வைத்து சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தின் காரணமாகவே குறித்த பயணி இந்தப் போதைப்பொருளைக் கைவிட்டுத் தப்பியோடியிருக்கலாம் எனப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். </p><p>குறித்த பொதிகளைக் கொண்டுவந்த விமானப் பயணி யார் என்பதைக் கண்டறிவதற்காக தற்போது விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் தொகுதி இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது. 
</p>]]></content>
            <updated>2026-09-15T01:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்களுக்குப் பைத்தியமில்லை – ஐக்கிய மக்கள் சக்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-chance-for-rajapakshes-any-more-1789435638"></link>
            <id>https://tamilwin.com/article/no-chance-for-rajapakshes-any-more-1789435638</id>
            <summary type="text">ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றுவதற்கு மக்களுக்கு பைத்தியம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றுவதற்கு மக்களுக்கு பைத்தியம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>2022 ஆம் ஆண்டு நாட்டை பொருளாதார ரீதியாக வங்ரோத்தடையச் செய்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் நாட்டின் ஜனாதிபதி பீடமேற்றுவதற்கு இந்த நாட்டு மக்களுக்குத் பைத்தியம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed46766-9178-4fbb-a4e7-7eec218cef40/26-6aa89ef7b8bf4.webp' /></p><p>
</p><p>தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகள் உண்மையென்றால், அவர் பத்து சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதைக் கூடத் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
</p><p>2029-இல் இவர்தான் நல்ல பையன் எனக் கூறி, அவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு யாராவது ஆதரவாகக் கையை உயர்த்தினால், அவர்கள் சோறு சாப்பிடும் மனிதர்களாக இருக்க முடியாது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
</p><p>தங்களைப் போல் அல்லாமல் ராஜபக்சக்களிடம் அதிகளவில் பணம் உள்ளது. அதனால், எந்நேரத்திலும் பேருந்துகளில் ஆட்களை ஏற்றிவந்து பிரம்மாண்டமான பேரணிகளை நடத்த அவர்களால் முடியும்.</p><p> ஆனால், அத்தகைய செயற்கையான கூட்டங்களைக் கண்டு அச்சப்படவோ அல்லது பெரிதாக யோசிக்கவோ தேவையில்லை ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T01:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்காகவே மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்..! ரோஹித அபேகுணவர்தன எம்.பி விடுத்த அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-have-united-again-for-the-sake-of-mahinda-1789430564"></link>
            <id>https://tamilwin.com/article/we-have-united-again-for-the-sake-of-mahinda-1789430564</id>
            <summary type="text">சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்சவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த
நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு
அனுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்சவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த
நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு
அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப் போவதில்லை என்று புதிய
ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது, "நாங்கள் மகிந்த வேண்டாம் என்று கூறிவிட்டு ரணில் விக்ரமசிங்கவின் பக்கம்
செல்லவில்லை.</p><h2>நெருக்கடியான சந்தர்ப்பத்தில்</h2><p>கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவித்த அந்த
இக்கட்டான காலகட்டத்தில்தான் நாட்டைப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, மிகக்
குறுகிய காலத்துக்குள் நாட்டை அந்தப் பேராபத்திலிருந்து வெற்றிகரமாகப்
பாதுகாத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72410334-94a2-4d26-a1e6-96972e9b0cfb/26-6aa892585138b.webp' /></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எங்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் சில
கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகள் காணப்பட்டமை உண்மையே.</p><p> அதற்காக இத்தகைய
ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாம் பிரிந்து நிற்க முடியாது. </p><p>மகிந்த
ராஜபக்சவுக்காகவே நாம் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.

தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் எழுந்துள்ள நெருக்கடியான
சந்தர்ப்பத்தில் சகல எதிர்க்கட்சிகளும் எந்தவித பேதமுமின்றி ஒன்றுபட வேண்டும்.</p><p>
அந்த ஒற்றுமையே எதிர்காலத்தில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பாக அமையும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T00:34:13+00:00</updated>
        </entry>
    </feed>
