<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-18T12:13:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய மட்டக்குளி கோர விபத்து: கைதான சாரதி போதைப்பொருள் பயன்படுத்தவில்லை...! நீதிமன்றில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mattakkuliya-accident-driver-arrest-1789731145"></link>
            <id>https://tamilwin.com/article/mattakkuliya-accident-driver-arrest-1789731145</id>
            <summary type="text">மட்டக்குளி - கந்தஉட பகுதியில் பதிவான கோர விபத்து தொடர்பில் கைதான சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற போது கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை என அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளி - கந்தஉட பகுதியில் பதிவான கோர விபத்து தொடர்பில் கைதான சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற போது கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பான வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (17.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> 

இதன்போது நீதிமன்றில் முன்னிலையான விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபர் செலுத்திச் சென்ற மின்சாரத்தால் இயங்கும் கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக முன்னோக்கிப் பயணித்துள்ளது. தானாகவே வேகத்துடன் முன்னோக்கி சென்றமையால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><h2>கார் பரிசோதனை</h2><p>
ஆகையால் வாகனத்தின் இயந்திரம் அல்லது, தொழில்நுட்ப அமைப்பில் கோளாறு ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான நிபுணர் குழுவினரால், குறித்த கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. 

அத்தோடு வைத்திய குழுவின் மூலம் சந்தேகநபரின் மனநிலை தொடர்பான மதிப்பிட்டை பெறுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.</p><p> 

அதனை தொடர்ந்து சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது சேவைபெறுநர் மதுபானம் அல்லது சட்டவிரோத போதைப்பொருளையோ ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்காக ஆயுர்வேத மருந்துகளை எடுத்து வருபவர். போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்வதற்கான பொலிஸார் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் போது, போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்தமைக்கு அம்மருந்துகளே காரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b7306d-d208-4a9e-92c7-1f5f542e2a69/26-6aad2469b9abb.webp' /></p><p> </p><p>எனது சேவை பெறுநர் செலுத்திய காரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் என்றார். 

இந்நிலையில் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதால் பொதுமக்களிடையே அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளமையால், அவருக்கு பிணை வழங்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு</h2><p> </p><p>

இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான் எதிர்வரும் 30ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். </p><p>

மட்டக்குளி கந்தஉட பெர்குசன் வீதி சந்திக்கருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை (16) இரவு, வத்தளை பகுதியில் இருந்து அதிக வேகத்தில் வந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. </p><p>

இதன்போது விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் காயமடைந்த 13 நபர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், 03 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:57:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ஜப்பான் மத்திய வங்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/japan-s-central-bank-sharply-raised-interest-rates-1789731325"></link>
            <id>https://tamilwin.com/article/japan-s-central-bank-sharply-raised-interest-rates-1789731325</id>
            <summary type="text">ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான &#039;பேங்க் ஒஃப் ஜப்பான்&#039; நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும்
தனது கொள்கை வட்டி விகிதத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான 'பேங்க் ஒஃப் ஜப்பான்' நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும்
தனது கொள்கை வட்டி விகிதத்தை 1.25% ஆக உயர்த்தியுள்ளது.
</p><p>
இது கடந்த 31 ஆண்டுகளில் ஜப்பானில் பதிவான மிக உயர்ந்த வட்டி விகித அளவாகும்.
</p><p>
வங்கிக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், வட்டி
உயர்விற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும்
வாக்களித்தனர்.</p><h2>பொருளாதார வளர்ச்சி</h2><p>
</p><p>பிரதமர் சானே தகாய்ச்சி தனது அமைச்சரவையை மாற்றியமைத்து,
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய திட்டங்களைச்
செயல்படுத்தப் போவதாக அறிவித்த மறுநாளே மத்திய வங்கி இந்த அதிரடி முடிவை
எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87780030-b231-423b-87f6-4dc53c7bd7b7/26-6aad250197dbe.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், மத்திய வங்கியின் தலைவர் கசுவோ உயேடா செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.
</p><p>
இனிவரும் மாதங்களில் வட்டி விகிதங்கள் எந்த வேகத்தில் மீண்டும் உயர்த்தப்படும்
என்பது குறித்த முக்கியக் குறிப்புகள் இந்தச் சந்திப்பில் வெளியாகும் என உலக
நிதிச் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்துள்ளனர்.</p><h2>வட்டி விகிதம் அதிகரிப்பு</h2><p>
</p><p>
மேலும் இந்த வட்டி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் ஜப்பானிய
நாணயமான 'யென்' (Yen) மதிப்பு வலுவடையத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b24223ff-61d6-4660-ba5a-71c43ae2dc66/26-6aad25024ac7a.webp' /></p><p>&nbsp;ஜப்பானில் கடன் வாங்குவோருக்கான வட்டிச் சுமை சற்றே அதிகரிக்கும் என்றாலும்,
வங்கிகளில் பணம் சேமிப்போருக்குக் கூடுதல் வட்டி கிடைக்கும்.</p><p>

நாட்டின் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்தி, நுகர்வோர் சந்தையை நிலைநிறுத்த
இந்த நடவடிக்கை உதவும் எனக் கருதப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தபால் பெட்டிக்கு மாலை அணிவித்து பட்டதாரிகள் நூதன போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/graduates-protest-by-garlanding-a-postbox-jaffna-1789729550"></link>
            <id>https://tamilwin.com/article/graduates-protest-by-garlanding-a-postbox-jaffna-1789729550</id>
            <summary type="text">யாழில் வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய்
உடைத்து நூதன முறையில் போராட்டம் நடாத்தியுள்ளனர்.குறித்த போராட்டமானது&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய்
உடைத்து நூதன முறையில் போராட்டம் நடாத்தியுள்ளனர்.</p><p>குறித்த போராட்டமானது&nbsp;இன்று(18.9.2026) மதியம் 2 மணியளவில் யாழ்.தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.</p><p>இதன்போது, வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.</p><h2>கோரிக்கை</h2><p> </p><p>1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு, பட்டதாரிகள் 5
ஆயிரம் பேர் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளதை
கண்டித்து இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97efe4f4-b01f-4c1b-8f04-a737d947c40f/26-6aad1fff12a5b.webp' /></p><p>
</p><p>
தபால் நிலையத்தில் இருந்து மனு அனுப்பிய போது, தபால் பெட்டிக்கு மலர் மாலை
அணிவித்தும் மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைக்கும் போது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அத்துடன், தமது வேலை வாய்ப்பு
தொடர்பில் கடவுளும், எமது தாய் தந்தையர்களுமான பொது மக்கள் ஆதரை வழங்க
வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-kilinochchi-1789729275"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-kilinochchi-1789729275</id>
            <summary type="text">கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி
மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது.</p><h2>மகஜர் கையளிப்பு</h2><p>இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை போராட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32163783-3fec-40d9-92a1-b857cd47e514/26-6aad1c8756d6b.webp' /></p><p> கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் வாள்
வெட்டுக்குழுக்கள் வாள் வெட்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், கடந்த
வாரத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும்
வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரட்டைவேடம் போடும் அர்ச்சுனா எம்.பி..! குற்றஞ்சாட்டும் விமல் வீரவன்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimal-weerawansa-make-controversial-remark-archuna-1789724921"></link>
            <id>https://tamilwin.com/article/wimal-weerawansa-make-controversial-remark-archuna-1789724921</id>
            <summary type="text">உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான நிலைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.</p><h2>புலம்பெயர் தமிழர்கள்</h2><p>
</p><p>
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து, தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவரே இராமநாதன் அர்ச்சுனா என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
</p><p>
அப்போது அனைவருக்கும் நல்லவராகத் தெரிந்த அவர், தற்போது எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் வேறு விதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/znPLorqc7l0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>

அண்மையில் தெற்கில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய அர்ச்சுனா, தனது வாழ்நாளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியான தமிழீழம் உருவாக இடமளிக்கப் போவதில்லை என்றும், தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் மோதலில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
</p><p>
அர்ச்சுனாவின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>&nbsp;இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனுக்கு சிலை அமைக்கப்பட்டு, மக்கள் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதாகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p><h2>திலீபனின் சிலை</h2><p>
</p><p>
திலீபனின் பெயரைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதைத் தடுப்பது உள்ளிட்ட பிரிவினைவாதக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் இருந்தவர் என்றும், அவர் ஒரு பயங்கரவாதி என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/764e2daa-0acf-4bf8-aaf4-8f2a2c81dcc9/26-6aad0d44b7be5.webp' /></p><p>

இவ்வாறான நிலையில், திலீபனின் சிலையை நிறுவி அவருக்கு அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படும் தமிழ் தேசியவாதக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

மேலும், நாட்டின் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் தீவிரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பெறப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் முக்கிய பகுதியில் இருவாரத்திற்குள் அகற்றப்படவுள்ள ஹோட்டல்கள்! அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotels-to-be-removed-within-two-weeks-1789727413"></link>
            <id>https://tamilwin.com/article/hotels-to-be-removed-within-two-weeks-1789727413</id>
            <summary type="text">கொழும்பு - கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.</p><p> 

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>காணி உரித்து வழங்குவதற்கான நடவடிக்கை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், பொது மக்களுக்கு சட்டத்தின் பிரகாரம் காணி உரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கடந்த காலங்களில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஊடாகவே காணி முறைகேடுகள் இடம்பெற்றன. அரசியல் தலையீடுகளுடன் தான் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றன. </p><p>

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் அரசியல் அதிகாரத்துடன் அரச காணிகளை கைப்பற்றியுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e36da5f8-0eef-40a4-b10e-74f3e00d9eec/26-6aad199073805.webp' /></p><p> </p><p>

அவர்களுக்கு எதிராகவும் தற்போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பிரதான பேசுபொருளாக காணப்பட்ட மல்வானை சொகுசு இல்லம் மற்றும் காணி, கதிர்காம பகுதியில் சொகுசு இல்லம் மற்றும் அதனுடனான காணி அரசுடமையாக்கப்பட்டுள்ளது.</p><h2>காணி வழங்கல்</h2><p> </p><p>

மல்வானை இல்லத்தை பல்கலைக்கழக விடுதியாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 2 வருட காலத்தில் ஒரு அடி நிலத்தை கூட சட்டவிரோதமான முறையில் எவருக்கும் வழங்கவில்லை. 

காணி வழங்கல் நடவடிக்கைகள் சட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்படுகிறது. </p><p>கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும். சட்டத்தின் பிரகாரமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் நாமலுக்கு இந்திய அரிசிடமிருந்து அழைப்பு.. பிணைக்காக போராடும் மொட்டுதரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-airbus-case-bail-application-reasons-given-1789726135"></link>
            <id>https://tamilwin.com/article/namal-airbus-case-bail-application-reasons-given-1789726135</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று (18) கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டார்.</p><p>நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்த நிலையில், தற்போது விதிவிலக்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>முக்கிய நிகழ்வுகள்..&nbsp;</h2><p> இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடம் இருந்து ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அந்த விஜயத்தை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a284b1dc-f852-4c3a-882e-7b6c823e1bd4/26-6aad1844cca28.webp' /></p><p> </p><p>அதுமாத்திரமன்றி, வருடாந்த ஹிங்குராக்கொட எசல பெரஹரவின் போது இடம்பெறும் மதச்சடங்கில் கலந்துகொள்ளுமாறும் பிரதம பௌத்த மதகுரு ஒருவரால் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் பாதுகாப்புத் தரப்பின் கூற்றுப்படி, செப்டெம்பர் 26ஆம் திகதி அன்று இரவு 7:42 மணிக்கு விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க நாமல் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்றும், அதில் கலந்துகொள்ள முடியாமை அழைப்பு விடுத்த மதகுருவை அவமதிப்பதாக அமையும் என்றும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1efba68a-9014-4cdb-88e6-c9207a51ed19/26-6aad1845bb5a3.webp' /></p><p> மேலும், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்றும், தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியும் சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.</p><p> இந்தச் சமர்ப்பிப்புகளுக்குப் பதிலளித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்குரிய விதிவிலக்கான சூழ்நிலைகளாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0ZMklSZuEVo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-18T10:58:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனது மகனை மீட்டுத் தாருங்கள்: மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீருடன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-s-mother-s-heartfelt-plea-1789713484"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-s-mother-s-heartfelt-plea-1789713484</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச்
சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர
நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச்
சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர
நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும்
இலங்கை அரசாங்கத்திடம் அழுது புலம்பியவாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சமூக ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த இளைஞர் சவூதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.</p><h2>பகிரங்கமாக மன்னிப்பு</h2><p>
</p><p>
குறித்த பதிவை அவர் உடனடியாகவே சமூக ஊடகத்திலிருந்து நீக்கியதுடன், அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.</p><p>

மேன்முறையீட்டில் அதிகரித்த தண்டனை

இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28e7b630-3fb0-4e09-b293-92fb421af0a2/26-6aad17f5663c7.webp' /></p><p> </p><p>எனினும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு விசாரணைகளின் போது இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவரது தாயார்,</p><p> “எனது மகன் தெரியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம். அவனை மன்னித்து, உயிருடன் மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அழுது புலம்பியவாறு வேண்டுகோள் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2883528b-e08e-4955-87b4-ddbe64906b74/26-6aad17f644ee9.webp' /></p><p>
</p><p>
இளைஞர் அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் சவூதி அதிகாரிகளுடன் அவசரமாக உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் பிரதேச சமூக தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>&nbsp;இதேவேளை, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இளைஞர் அனோஜனைக் காப்பாற்றுவதற்காகச்
சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் அவசரமாக
மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறிப்பாக சவூதி அரசிடம் கருணை மனுக்கோருவது தொடர்பிலும் உயர்மட்டப்
பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல் கொள்வனவில் அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-move-regarding-paddy-procurement-1789727095"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-move-regarding-paddy-procurement-1789727095</id>
            <summary type="text">விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில்
குறித்த செயற்பாட்டின் ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில்
குறித்த செயற்பாட்டின் ஊடாக நெல் கொள்வனவு பணிகளை அரிசி ஆலை உரிமையாளர்கள்
இன்று (18.09.2026) மேற்கொண்டிருந்தனர்.&nbsp;</p><p>நெல் சந்தைப்படுத்தல் சபை தவிர்ந்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட செயலகம் மூலம் முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு&nbsp;விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையிலேயே இதற்கான நடவடிக்கை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a221276-8d2c-419b-8065-2f5c3b1ee957/26-6aad1646d3902.webp' /></p><h2>நெல் கொள்வனவு&nbsp;</h2><p>கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த நெல் கொள்வனவு
இடம்பெற்றது.</p><p>குறித்த நெல் கொள்வனவு தொடர்பாக நெல் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள்
கருத்து தெரிவிக்கையில், முன்பு எந்த அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்படாத நடவடிக்கையை
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/760db5cb-cde2-4793-8397-d7b14e6554be/26-6aad1647cb708.webp' /></p><p> </p><p>அந்த வகையில் கிளிநொச்சி
மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் களஞ்சியங்கள் பற்றாக்குறை காரணமாக
நெல் கொள்வனவினை நிறுத்தியதை அடுத்து தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு
எந்த அரசாங்கமும் வழங்காத 25 மில்லியன் ரூபாய் நிதியினை எந்த வட்டியும் இன்றி
வழங்கி விவசாயிகளிடம் நெல்லினை அரச விலைக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை
செய்துள்ளது. </p><p>இதேபோன்று இனி வரும் காலங்களில் குறித்த நடவடிக்கை தொடர்ச்சியாக
மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/000895f5-bf41-4921-96fd-533cd392e921/26-6aad16f6d2a75.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:48:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின் ஓயா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/workers-admitted-to-hospital-stung-by-wasps-1789727950"></link>
            <id>https://tamilwin.com/article/workers-admitted-to-hospital-stung-by-wasps-1789727950</id>
            <summary type="text">வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இன்று (18.9.2026) பிற்பகல் வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தோட்டத்தில்
தேயிலை பறிக்கும் போது, தேயிலைச் செடிகளுக்குள் இருந்த குளவி கூடு கலைந்ததைத்
தொடர்ந்து, அவர்கள் இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தனர்.</p><p>

காயமடைந்தவர்கள் அனைவரும் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></p><p>
</p><p>
தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து
தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb607651-bb87-4b10-8fca-c5d12baff0dc/26-6aad14d26ab5b.webp' /></p><p>வைத்தியசாலை வட்டாரங்களின் தகவலின்படி, இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் எவரும் கவலைக்கிடமான
நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:43:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனுக்கு நான்காவது நாள் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tribute-to-thileepan-the-martyr-s-lamp-in-pedro-1789726168"></link>
            <id>https://tamilwin.com/article/tribute-to-thileepan-the-martyr-s-lamp-in-pedro-1789726168</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.&amp;nbsp;குறித்த நிகழ்வு பருத்தித்துறை நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>குறித்த நிகழ்வு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் பருத்தித்துறை
நினைவுத் தூபியில் இன்று (18.09.2026) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><h2>அஞ்சலி நிகழ்வு</h2><p>

இதில் யாழ். மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் அமைப்பின்
தலைவி மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆம்பித்து வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f30289c3-b68d-4b50-81ee-223c2c1ebff5/26-6aad0f79ded4b.webp' /></p><p> பருத்தித்துறை நகர
பிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் மலரஞ்சலி செலுத்தி மலர அஞ்சலி நிகழ்வை
ஆரம்பித்து வைத்தார். </p><p>அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர்
இந்திரன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-worker-anojan-sentenced-death-saudi-1789717588"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-worker-anojan-sentenced-death-saudi-1789717588</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இலங்கை
இளைஞர் சிவராசா அனோஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இலங்கை
இளைஞர் சிவராசா அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அதனை
இரத்து செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ தேவையான சட்டரீதியான மற்றும்
இராஜதந்திர நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இலங்கையின் வெளிவிவகார,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்
அவர்களிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார்
ஜெயக்குமாரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>அனோஜனின் மரண தண்டனை</h2><p>இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று (18) காலை தொலைபேசி மூலம்
தொடர்புகொண்ட குமார் ஜெயக்குமாரன், அனோஜனின் நிலைமை தொடர்பில் அவசரமாக
தலையிட்டு, சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை
முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார்.</p><p>

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த
சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட பின்னர், ஆரம்பத்தில்
ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும்
விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57ef2c5a-ae58-4ab4-ae73-8ab5407537fe/26-6aaceedb267c1.webp' /></p><p>

 இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட
மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தொடர்பான மிக முக்கியமான
மனிதாபிமான விடயம் என்பதால், காலதாமதமின்றி அனைத்து சாத்தியமான சட்ட மற்றும்
இராஜதந்திர வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை</h2><p>

அனோஜனின் வழக்கின் முழுமையான சட்ட நிலைமை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின்
அடிப்படைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அவருக்கு தேவையான சட்ட உதவி, தூதரக உதவி
மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என குமார் ஜெயக்குமாரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

“ஒரு இலங்கை இளைஞரின் உயிர் தொடர்பான இந்த முக்கியமான விடயத்தில்,
கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளும்
முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>

அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb69c4a8-6472-4ae2-8ce0-71fc758ca92d/26-6aaceedbf060d.webp' /></p><p>
</p><p>
அனோஜனின் வழக்கில் இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதி
அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை
விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குமார் ஜெயக்குமாரன் கோரிக்கை
விடுத்துள்ளார்.</p><p>

இதேவேளை, 
அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும்,
அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும்
உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், யாழ்ப்பாண
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்
அமைச்சர் விஜித ஹேரத்திடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>மேலதிக தகவல்- பவன்</i></b></p>]]></content>
            <updated>2026-09-18T10:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி தொடர்பில் தகவல் வழங்க மறுத்த மகிந்தவின் ஊடகப்பிரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cannot-reveal-about-shiranthi-s-place-1789700661"></link>
            <id>https://tamilwin.com/article/cannot-reveal-about-shiranthi-s-place-1789700661</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது எங்கு இருக்கிறார் என கூற முடியாதென மகிந்தவின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது எங்கு இருக்கிறார் என கூற முடியாதென மகிந்தவின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.</p><p>

 ஷிரந்தி தொடர்பான தகவலை வெளியிட அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

எனினும் மகிந்த ராஜபக்சவை கவனித்துக் கொள்ளும் நோக்கில் விரைவில் அவர் நாடு திரும்புவார் என குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>

அழைப்பாணை </b></h2><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d38074d-e816-4939-a9dd-b6b03b9fa763/26-6aacd38d504f2.webp' /></p><p>அவர் நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். </p><p>நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக மனோஜ் கமகே தெரிவித்தார். </p><p>நேற்று முன்தினம் அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணையை அவர் பெற்றுக்கொண்டதாகவும் கமகே குறிப்பிட்டார்.
</p><p>
இதேவேளை சிங்கப்பூரில் நேற்றையதினம் ஆடம்பர ஆடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>You May Like This Video</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3-h8lpvum3c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-18T10:02:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் நாடு திரும்பும் ஷிராந்தி ராஜபக்ச! அறுவை சிகிச்சையிலும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-singapore-return-to-sri-lanka-1789723079"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-singapore-return-to-sri-lanka-1789723079</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் நாடு&amp;nbsp;திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் உடல்நலக்குறைவால...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் நாடு&nbsp;திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p>இருப்பினும், ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளாமல், இலங்கையிலேயே செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>நாட்டிலிருந்து தப்பியோட்டம்</h2><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (16) திகதி அதிகாலை சுமார் 1:10 மணியளவில் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2321a1f4-569c-4900-a48d-cfb51af38742/26-6aad0b6692e4b.webp' /></p><p>அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச்சென்றிருந்தார்.</p><p>இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்‌சவை நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இதனையடுத்து ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D0Hs4lADBiM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T09:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பெண்களுக்கு தாதியர் சேவையில் இணைவதற்கான ஆர்வம் குறைவு: வடக்கு ஆளுநர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-women-not-join-nursing-profession-north-1789724634"></link>
            <id>https://tamilwin.com/article/young-women-not-join-nursing-profession-north-1789724634</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய இளம் பெண்கள் தாதியர் சேவையில் இணைவதற்கான
ஆர்வம் சில ஆண்டுகளாகக் குறைந்து வருவதால், ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த
தாதியர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய இளம் பெண்கள் தாதியர் சேவையில் இணைவதற்கான
ஆர்வம் சில ஆண்டுகளாகக் குறைந்து வருவதால், ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த
தாதியர்கள் வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டிய சூழல்
உருவாகியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
</p><p>
வவுனியா மாவட்டப் பொது மருத்துவ மனையில் தாதியர் உத்தியோகத்தர்களுக்கான விடுதிக்கான அடிக்கல்
நடும் நிகழ்வு நேற்று (17.09) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தாதியர் உத்தியோகத்தர்களின் பணிச்சூழல் அவர்களின் சேவைத் தரத்திலும் நேரடியாக
தாக்கம் செலுத்தக் கூடியது.</p><h2>கோரிக்கை</h2><p> </p><p>வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய இளம் பெண்கள்
தாதியர் சேவையில் இணைவதற்கான ஆர்வம் சில ஆண்டுகளாகக் குறைந்து வருவதால், ஏனைய
மாகாணங்களைச் சேர்ந்த தாதியர்கள் வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் பணியாற்ற
வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.</p><p>

தமது சொந்த பிரதேசங்களிலிருந்து தொலைதூரம் வந்து சேவையாற்றும் அவர்களுக்கு
தேவையான தங்குமிட மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது
மாகாணத்தின் பொறுப்பு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/855d2f65-3576-45a4-9a03-fa0062e6f7c5/26-6aad0aebc4497.webp' /></p><p> </p><p>மேலும், புதிய தாதியர் நியமனங்களுடன் சிலர் இடமாற்றம்
பெற்று வெளியேறுவதால் மொத்த மனிதவளத்தில் எதிர்பார்க்கப்படும் அளவிலான
அதிகரிப்பு ஏற்படாத நிலையும் காணப்படுகிறது. </p><p>வடக்கு மாகாணத்தின் உண்மையான
தேவையை அடிப்படையாகக் கொண்டு தாதியர் நியமனங்களுக்கு கூடுதல் கவனம்
செலுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-18T09:57:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த மின்னல் குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-severe-lightning-sri-lanka-1789723088"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-severe-lightning-sri-lanka-1789723088</id>
            <summary type="text">பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், அத்துடன் முல்லைத்தீவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், அத்துடன் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.</p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று(18.9.2026) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e688c690-c30c-47b0-a95b-b428a423d059/26-6aad0612adb6d.webp' /></p><p>
</p><p>
இடியுடன் கூடிய மழையின் போது, ​​அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T09:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்சவின் பேரணிப் பேச்சு! பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magistrate-orders-probe-wimals-remarks-court-order-1789720044"></link>
            <id>https://tamilwin.com/article/magistrate-orders-probe-wimals-remarks-court-order-1789720044</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, செப்டெம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற பேரணியில் தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உட்படுகின்றனவா என்பது தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, செப்டெம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற பேரணியில் தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உட்படுகின்றனவா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் முந்தைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்து விமல் வீரவன்ச பேரணியில் தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பாக அமைகின்றனவா என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><h2>நீதிமன்றத்தின் உத்தரவு</h2><p>

விமல் வீரவன்ச குறித்த பேரணியில் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி பதிவுள்ள குறுந்தகட்டையும்(CD) அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.</p><p>

நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70e28e1-5721-4b09-b3b6-ccfb06392596/26-6aacfc6b23698.webp' /></p><p>
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.</p><p>

மேலும், இந்த விடயம் தமக்கு எதிரான தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதப்படக் கூடாது எனவும், ஒட்டுமொத்த நீதித்துறையின் அதிகாரம் தொடர்பான விடயமாகக் கருதப்பட வேண்டும் எனவும் பிரதம நீதவான் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T08:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகள் - முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-presidents-house-confession-sunil-wattagala-1789719077"></link>
            <id>https://tamilwin.com/article/former-presidents-house-confession-sunil-wattagala-1789719077</id>
            <summary type="text">முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் உட்பட மூத்த அரசியல்வாதிகளின் இல்லங்களுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யும் நடைமுறையை நிறுத்த அரசாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் உட்பட மூத்த அரசியல்வாதிகளின் இல்லங்களுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யும் நடைமுறையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>விசாரணை நோக்கங்களுக்காக, எந்தவொரு நிலையில் உள்ள நபரும் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க முகமைகளின் முன் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.&nbsp;</p><p>
அரசியல் அந்தஸ்து அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சட்டம் சமமாகப் பொருந்தும் கொள்கையை இந்த முடிவு வலுப்படுத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார்.</p><h2>இல்லத்தில் விசாரணை..&nbsp;</h2><p>
</p><p>மேலும் அவர், "குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை போன்ற அரச நிறுவனங்களை அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவிப்பதன் மூலம் விசாரணைகளில் வெற்றி காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8729b9a-928a-40b4-9c45-1f1d5af228f7/26-6aacf7300e648.webp' /></p><p> சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் அரச நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் தற்போதைய நிர்வாகம் வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இந்த நிறுவனங்கள் அரசியல் தலையீடின்றி தங்கள் கடமைகளைத் திறம்படச் செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கை அரசியலமைப்பின் 12(1)ஆவது பிரிவின்படி, ஒவ்வொரு தனிநபருக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு உரிமை உண்டு.</p><p>அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் ஊழல் நடவடிக்கைகளைக் கையாள்வதில் பாரபட்சத்திற்கு இடமில்லை, அரசியல் சார்புகள் அல்லது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் சட்டம் மாறுபட்ட விதத்தில் பயன்படுத்தப்பட்ட காலம் முடிவுக்கு வந்துள்ளது.</p><p></p><h2>விடுக்கப்படும் எச்சரிக்கை&nbsp;</h2><p> இதன் விளைவாக, எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், இனி எந்தவொரு முக்கியப் பிரமுகரும் (VIP) தங்கள் இல்லத்திலிருந்தே வாக்குமூலம் அளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6dc97d-712f-4ca3-bb0b-d03577b00abf/26-6aacf73103483.webp' /></p><p>
</p><p>
நீதித்துறை செயல்முறை அல்லது விசாரணைகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>நாட்டிற்குள் இருக்கும் சந்தேக நபர்களை அழைத்து வர பிரிவு 106இன் கீழ் சட்ட அறிவிப்புகள் விடுக்கப்படும் அதே வேளையில், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை நாடு கடத்தி வர இன்டர்போல் (Interpol) 'சிவப்பு அறிவிப்புகள்' (Red Notices) பயன்படுத்தப்படுகின்றன.</p><p> சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய 74 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T08:42:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை ஆவணத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/manage-the-jaffna-thiruvalluvar-cultural-forum-1789719136"></link>
            <id>https://tamilwin.com/article/manage-the-jaffna-thiruvalluvar-cultural-forum-1789719136</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக
உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள்
உத்தியோகபூர்வமாக நம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக
உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள்
உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.</p><p>நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம்
திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தில் காலை 11 மணியளவில் இடம்பெற்றபோதே கையொப்பமிடப்பட்டுள்ளது.</p><p>
நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையில் அங்கம் வகிக்கும் 9 உறுப்பினர்களும்
கலந்துகொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.</p><h2>கையொப்பம்</h2><p>

இலங்கை நாடாளுமன்ற அமைச்சரவையின் அனுமதியுடன் நம்பிக்கை நிதியப் பொறுப்பு
சபையிடம் கையளிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52de964a-362b-4518-a88b-e8b646a28bed/26-6aacf921f1fa5.webp' /></p><p>

மாகாண சபை ஆட்சி இல்லாத காரணத்தால், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்.
மாநகர சபை ஆணையாளர் ஏ.சி. அரவிந்தராஜ், கலாச்சார அமைச்சின் செயலாளர் வர்ணகுல
சூரிய பிறின்ஸ் சேனாதீர யாழ் மாநகர முதல்வர் வி. மதிவதனி
இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சிறிமான் சாய் முரளி, மாகாண சபை அவைத் தலைவர்
சீ.வி.கே.சிவஞானம்.ஆகியோர் கலந்து கொண்டு கைச்சாத்திட்டனர்.
</p><p>மேலும், சட்டவிரிவுரையாளர் கோசலை மதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
சிறி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p>2 வருட காலத்திற்கு நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் அனுமதியுடன்,
எதிர்காலத்தில் பராமரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பான விடயங்கள்
கையாளப்படவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T08:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்புத் துறைமுக பகுதியில் கடலில் விழுந்த மாலுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sailor-fell-into-the-sea-near-colombo-port-1789716869"></link>
            <id>https://tamilwin.com/article/sailor-fell-into-the-sea-near-colombo-port-1789716869</id>
            <summary type="text">கொழும்புத் துறைமுக பகுதியில்&amp;nbsp;கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.&amp;nbsp;குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.09.2026) இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புத் துறைமுக பகுதியில்&nbsp;கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.09.2026) இடம்பெற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கொழும்புத் துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பல் ஒன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முற்பட்ட கப்பல் மாலுமி ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து விபத்துக்குள்ளானார்.</p><h2>பாதுகாப்பாக மீட்கப்பட்ட மாலுமி</h2><p> </p><p>

கொழும்புத் துறைமுகக் கட்டுப்பாட்டு அறையினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர், கொழும்புத் துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த P-163 கரையோர ரோந்துப் படகினைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f078da5-54f8-4779-81ad-b8facb26e978/26-6aacf01fd74fa.webp' /></p><p> </p><p>

அதற்கமைய, குறித்த படகின் மூலம் கடலில் விழுந்த மாலுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T08:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cricketer-dhoni-ordered-madras-high-court-1789717670"></link>
            <id>https://tamilwin.com/article/cricketer-dhoni-ordered-madras-high-court-1789717670</id>
            <summary type="text">சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார்
தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்
மகே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார்
தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்
மகேந்திர சிங் தோனி அக்டோபர் 9 ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று
நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>

முன்னதாக, 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் தோனிக்கு தொடர்பு
இருப்பதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் தனியார்
தொலைக்காட்சி ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார்.</p><h2>100 கோடி ரூபாய் நஷ்டஈடு&nbsp;</h2><p>இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு தனது நற்பெயருக்குக் களங்கம்
விளைவிப்பதாகக் கூறி, சம்பத்குமாருக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி
தோனி 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39981e6-ff01-4c44-ae4b-9bcebda31daa/26-6aacefec99af3.webp' /></p><p>
</p><p>
இதன்போது, வழக்கின் ஆவணங்கள் மற்றும் சிடிகளை (CDs) மொழிபெயர்த்து
நகலெடுப்பதற்கான செலவாக 10 இலட்சம் ரூபாயை செலுத்துமாறு நீதிமன்றம் ஏற்கனவே
தோனிக்கு உத்தரவிட்டிருந்தது.
</p><p>
இதற்கிடையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சார்பில் 3 மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>&nbsp;தோனியின் வாக்குமூல&nbsp;பதிவு </h2><p>அவற்றில், தோனியின் வாக்குமூலத்தை (Deposition) பதிவு செய்யும்போது, அதை
முழுமையாக காணொளியாக பதிவு செய்ய வேண்டும்.


காணொளி பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் எடிட் செய்யப்படாத சான்றளிக்கப்பட்ட
நகலை தனக்கும், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் கண்காணிப்பு அதிகாரிக்கும்
வழங்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8567a142-8280-45d8-a373-b124435752eb/26-6aacefed4cc41.webp' /></p><p>


தோனி ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் என்பதால், அவரது வாக்குமூலப்பதிவை நட்சத்திர
ஹோட்டல்கள் அல்லது தனியார் இடங்களில் நடத்தாமல், நீதிமன்ற வளாகத்திலோ அல்லது
அரசு கட்டடத்திலோ மட்டுமே நடத்த வேண்டும். போன்ற கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டிருந்தன.</p><p>

குறித்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி, இது குறித்து தோனி ஒக்டோபர் 9 ஆம்
திகதிக்குள் பதிலளிக்குமாறு அறிவித்தல் அனுப்பி, வழக்கின் அடுத்த விசாரணையை
ஒத்திவைத்தார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T08:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த கால ஆட்சியாளர்களால் தான் நாடு வங்குரோத்து அடைந்தது! நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/newly-constructed-main-post-office-in-mullaitivu-1789717392"></link>
            <id>https://tamilwin.com/article/newly-constructed-main-post-office-in-mullaitivu-1789717392</id>
            <summary type="text">கடந்த கால ஆட்சியாளர்கள் அரச நிதிகளை தங்களது நிதி போன்று பயன்படுத்தினார்கள். அதனால் இந்த நாடு வங்குரோத்து அடைந்தது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த கால ஆட்சியாளர்கள் அரச நிதிகளை தங்களது நிதி போன்று பயன்படுத்தினார்கள். அதனால் இந்த நாடு வங்குரோத்து அடைந்தது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முல்லைதீவு பிரதான தபாலக கட்டடத்தினை திறந்து
வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,&nbsp;பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசாங்கம் உதவிகளை செய்திருக்கின்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.</p><h2>தபால் துறை</h2><p>தபால் துறையானது வருமானமற்ற துறையாக இருக்கின்ற போதும் அதற்கான சம்பள உயர்வுகள் மற்றும் ஏனைய இதர தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/591be6d5-a726-454c-ad0e-0f67097864ed/26-6aacedcc88e84.webp' /></p><p>மேலும், இந்தநிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பர்களான துரைராசா ரவிகரன்,
மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு
மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,
வடமாகாண அஞ்சல் அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்
என பலரும் பங்கேற்றிருந்தார்கள்.</p><p><b>மேலதிக தகவல்-சதீசன்</b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:58:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டகலை நகரில் மதுபானக் கடைகளில் இருந்த தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-liquor-shops-in-kotagala-town-lifted-1789717318"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-liquor-shops-in-kotagala-town-lifted-1789717318</id>
            <summary type="text">&amp;nbsp;கொட்டகலை நகரில் உள்ள மதுபான சாலைகளில் மதுபான போத்தல்களை திறந்து அங்கேயே
அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் இடம்பெற்று வந்த
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொட்டகலை நகரில் உள்ள மதுபான சாலைகளில் மதுபான போத்தல்களை திறந்து அங்கேயே
அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் இடம்பெற்று வந்த
பல்வேறு பிரச்சினைகள் தற்போது குறைந்துள்ளதாக கொட்டகலை வர்த்தக சங்கத்தின்
தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.</p><p>

கொட்டகலை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
கொட்டகலை நகரிலுள்ள சில மதுபான சாலைகளில் மதுபான போத்தல்களை திறந்து
சட்டவிரோதமான முறையில் சில்லறையாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாகவும்,
இதனால் நகரின் ஏனைய வர்த்தகர்களும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு
முகங்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர் மற்றும் நாமல் ஒரே சிறையில்..! வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renuka-perera-also-goes-to-namal-s-crp-ward-1789696458"></link>
            <id>https://tamilwin.com/article/renuka-perera-also-goes-to-namal-s-crp-ward-1789696458</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா தற்போது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
</p><p>
இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>'N' வார்டில் 10 கைதிகளுடன்</h2><p>

தற்போது அவர் சிறைச்சாலையின் 'N' வார்டில், மேலும் சுமார் 10 கைதிகளுடன் அவர் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52a1a0ef-8ac5-46d6-810a-ef755b2100fc/26-6aace7be6676a.webp' /></p><p>
</p><p>
அதே வார்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களும் அந்த வார்டில் வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர்.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ரேணுகா பெரேரா, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><h2>சட்டவிரோதமாக சாலை அனுமதிகள்&nbsp;</h2><p>
</p><p>
பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக சாலை அனுமதிகள் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
1991-ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணையச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு சட்ட முறைக்குப் புறம்பாக 56 பயணிகள் சேவை அனுமதிகளை வழங்கியதாகவும், ஆண்டு சுங்கத்தை ஒரே முறையில் வசூலிக்கவில்லை என்றும் ரேணுகா பெரேரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:33:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 புதிய அமெரிக்க சமாதானப் படை தொண்டர்கள் வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-english-education-in-sri-lanka-1789714784"></link>
            <id>https://tamilwin.com/article/support-english-education-in-sri-lanka-1789714784</id>
            <summary type="text">இலங்கையில் இரண்டு ஆண்டுகள் சேவை செய்வதற்கு முன்னதான பயிற்சிகளை
மேற்கொள்வதற்காக, 34 புதிய அமெரிக்க சமாதானப் படை பயிற்சித் தொண்டர்கள்
இலங்கையை வந்தடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இரண்டு ஆண்டுகள் சேவை செய்வதற்கு முன்னதான பயிற்சிகளை
மேற்கொள்வதற்காக, 34 புதிய அமெரிக்க சமாதானப் படை பயிற்சித் தொண்டர்கள்
இலங்கையை வந்தடைந்துள்ளனர்.</p><p>
எதிர்வரும் நவம்பர் மாதம் சேவை உறுதிமொழி ஏற்பதற்கு முன்பாக, இவர்கள் சிங்களம்
அல்லது தமிழ் மொழி, இலங்கைக் கலாச்சாரம் மற்றும் அமெரிக்க ஆங்கிலக் கற்பித்தல்
முறைகள் தொடர்பாகத் தீவிரப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.</p><h2>ஆங்கில கல்வி விரிவுப்படுத்தல்</h2><p>
</p><p>
சத்தியப்பிரமாண நிகழ்வுக்குப் பிறகு, இவர்கள் வட மாகாணம் மற்றும் வடமத்திய
மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன்
இணைந்து ஆங்கிலக் கல்வியை விரிவுபடுத்தப் பணியாற்றுவர்.
</p><p>
இதன் பிரகாரம் இவர்கள் உள்ளூர் குடும்பங்களுடன் இணைந்து வசிக்கவுள்ளதுடன்,
அவர்கள் சேவை செய்யும் சமூகத்தின் ஒரு அங்கமாகவும் மாறுவார்கள் என
கருத்தப்படுகிறது.
</p><p>
கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில், இலங்கைக்கான
அமெரிக்க தூதுவர் எரிக் மயர் இத்தொண்டர்களை வரவேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dfbc53a-81b0-40a0-b383-8b975a680c56/26-6aace68655622.webp' /></p><h2>இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு</h2><p> </p><p>"இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பு மக்கள் சார்ந்த தொடர்புகளாலேயே
கட்டியெழுப்பப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

அமெரிக்கர்களை அந்தப் பணியின் மையத்தில் நிறுத்துகிறது," எனவும் அவர்
குறிப்பிட்டார்.
</p><p>
இலங்கையில் Peace Corps சேவை 1962 ஆம் ஆண்டு தொடங்​கியது. இதுவரை 500-க்கும்
மேற்பட்ட அமெரிக்கத் தொண்டர்கள் கல்வி, சுகாதாரம், விவசாயம், சமூக மேம்பாடு
மற்றும் சுனாமி மறுவாழ்வுப் பணிகளில் இங்கு பணியாற்றியுள்ளனர்.
</p><p>
முன்னதாக 2018 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கத்துடன்
இத்திட்டம் மீண்டும் முறையாக ஆரம்பிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:23:29+00:00</updated>
        </entry>
    </feed>
