<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-15T12:50:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ninthavur-regional-committee-meeting-decision-take-1784115039"></link>
            <id>https://tamilwin.com/article/ninthavur-regional-committee-meeting-decision-take-1784115039</id>
            <summary type="text">நிந்தவூர் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, கல்வி, வடிகால் வசதி மற்றும் பொது
மக்கள் நலன் சார்ந்த பல கோடி ரூபாய் பெறுமதியான முக்கிய அபிவிருத்தி
முன்மொழிவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிந்தவூர் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, கல்வி, வடிகால் வசதி மற்றும் பொது
மக்கள் நலன் சார்ந்த பல கோடி ரூபாய் பெறுமதியான முக்கிய அபிவிருத்தி
முன்மொழிவுகளுக்கான அங்கீகாரமும் தீர்மானங்களும் இன்று (15) நடைபெற்ற
நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளன.</p><p>

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
ஏ.ஆதம்பாவா தலைமையில், பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப்
ஒருங்கிணைப்பில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம்
நடைபெற்றுள்ளது.</p><h2>முக்கிய தீர்மானங்கள்</h2><p>
</p><p>
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.
தாஹிர் பிரதேசத்தின் நீண்டகாலத் தேவைகளை உள்ளடக்கிய விரிவான திட்ட வரைபைச்
சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
நிந்தவூர் மக்களின் நீண்டகால அபிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும்
இந்தத்திட்டங்கள் எந்தவித நிர்வாகத் தாமதமுமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அனைத்து அரச திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
என அவர் தனது உரையின் போது வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35278be-b84a-4dd9-b795-3d172607f039/26-6a5770310492c.webp' /></p><p>நிந்தவூர் 05ஆம் பிரிவில் 3ஆம் குறுக்குத் தெருவிலிருந்து கடற்கரை 2ஆம் வீதி
வரையிலான குடியிருப்புகளில் ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்கைத் தடுக்கும்
நோக்கில், கிட்டங்கி வீதியூடாகப் புதிய வடிகால் அமைக்கப்பட்டு, அது நயீம்
பள்ளிவாசல் வடிகாலுடன் இணைக்கப்படவுள்ளது.
</p><p>
அத்துடன், நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தைச் சுற்றி முறையான வடிகால்களை
அமைத்து, மண் நிரப்பி மைதானத்தை உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், வெட்டுவாய்க்கால் வீதியில் காரைதீவு – நிந்தவூர் உள் பாலத்திற்கு
கிழக்கே காணப்படும் வீதி தாழ்வை நிரந்தரமாகச் சீரமைத்து,
நிறுத்திவைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் பணிகளை முழுமையாகப் பூர்த்தி
செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>

பிரதேசத்தின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், அல்-மஸ்ஹர் பெண்கள்
உயர்தரப் பாடசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இருமொழிக் கல்வித்
திட்டத்திற்காக மூன்று மாடிகளைக் கொண்ட நவீன வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை
அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு மேலதிகமாக, நிந்தவூர் 09 ஆம் பிரிவில் புதிய முன்பள்ளி பாலர் பாடசாலை
ஒன்றினை அமைப்பதற்கும், மினா, ஜேர்மன் மற்றும் அல்-சஹிதா பாடசாலை மாணவர்களை
மையப்படுத்தி புதிய பொது நூலகம் ஒன்றை அமைப்பதற்கும் ஏகமனதாகத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/330e6a54-f677-442f-9180-e8a5195c53c9/26-6a577031c2d55.webp' /></p><p>இந்தக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் விரிவாக
ஆராயப்பட்டு, அவற்றை மிக விரைவாக நடைமுறைப்படுத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட
அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்குப் பரிந்துரைகளை
அனுப்பி, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று பணிகளை விரைவுபடுத்துவதற்கான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெவ்வை, நிந்தவூர்
பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், அரச திணைக்களங்களின்
தலைவர்கள், பாதுகாப்புப் படையினர், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும்
உயர் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T12:41:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/restaurant-closed-on-court-order-1784111697"></link>
            <id>https://tamilwin.com/article/restaurant-closed-on-court-order-1784111697</id>
            <summary type="text">களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்ததாக அடையாளம் காணப்பட்ட உணவகத்திற்கு எதிராக 
பொது சுகாதார பரிசோதகரால் இன்று(15.07.2026) களுவாஞ்சிகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்ததாக அடையாளம் காணப்பட்ட உணவகத்திற்கு எதிராக 
பொது சுகாதார பரிசோதகரால் இன்று(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதன்போது குறித்த உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>கடந்த திங்கட் கிழமை(13) இரவு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இந்த உணவகம் அடையாளம் காணப்பட்டது.</p><p> </p><p>

அதனடிப்படையில் இன்று புதன்கிழமை(15.07.2026) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ecd875d-beed-4f4d-88ed-edafe21069b2/26-6a5769c6b068f.webp' /></p><p>

இதனையடுத்தே உணவக உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தில் காணப்படும் சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதற்கிணங்க பொதுசுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவகம் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T12:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-shot-in-katunayake-1784117584"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-shot-in-katunayake-1784117584</id>
            <summary type="text">கட்டுநாயக்கவில் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் முயற்சித்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்கவில் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
</p><p>
இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, அதனைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.</p><p>இந்த நிலையில் தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கட்டுநாயக்கவில் உள்ள தாவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>குறி்த்த சம்பவம் சற்றுமுன் (15.07.2026) இடம்பெற்றுள்ளதாக&nbsp;தெரியவருகிறது.</p><p>பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>தப்பிச்சென்ற சந்தேகநபர்</h2><p>

மோட்டார் சைக்கிளில் குறித்த பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, அதே வாகனத்தில் தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bacce458-b12a-48ba-8d25-1758970cc061/26-6a577c67b6ef6.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T12:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விநியோகித்த தம்பதியினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-for-distributing-drugs-1784117049"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-for-distributing-drugs-1784117049</id>
            <summary type="text">அம்பாறை முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள
கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து
&#039;ஐஸ்&#039; மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள
கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து
'ஐஸ்' மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த தம்பதியினர்,
அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (15) கைது
செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
முவங்கல பகுதியிலுள்ள உக்சிரிபுர பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள்
விற்பனையில் ஈடுபட முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>போதைப்பொருள் விற்பனையின் மூலம்&nbsp;</h2><p>கைது செய்யப்பட்டவர்கள் முவங்கல கிராமம் 8 ஐச் சேர்ந்த
37 மற்றும் 34 வயதுடைய தம்பதியினர் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef30d6ec-6822-4804-9eeb-6a7119cb36dc/26-6a577a06b56ce.webp' /></p><p>
கைது செய்யப்பட்டபோது ஆண் சந்தேகநபரிடமிருந்து 5,120 மில்லிகிராம் ஹெரோயின்,
பெண் சந்தேகநபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், போதைப்பொருள் விற்பனையின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் 21,510 ரூபாய் பணமும், போதைப்பொருள் விநியோகத்திற்குப்
பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் எதிர்காலத் தலைமுறையினரான பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள்
அரக்கனிடமிருந்து பாதுகாக்க இத்தகைய கடுமையான சுற்றிவளைப்புகள் தொடரும் என
அம்பாறை பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-15T12:17:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காக்கைதீவு மக்களின் குரல்களுக்கு தீர்வு வழங்குவது அவசியம்! டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/necessary-provide-solution-people-kakkaithivu-1784116781"></link>
            <id>https://tamilwin.com/article/necessary-provide-solution-people-kakkaithivu-1784116781</id>
            <summary type="text">காக்கைதீவு திண்மக்கழிவு பிரச்சினை ஒரு நீண்டகால பிரச்சினையாக, தீராத
பிரச்சினையாக இருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>காக்கைதீவு திண்மக்கழிவு பிரச்சினை ஒரு நீண்டகால பிரச்சினையாக, தீராத
பிரச்சினையாக இருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,</p><p> 

குறித்த விடயம் தொடர்பாக இன்று அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து யாழ் மாநகர
சபைக்கு முன்னால் தங்களது பிரச்சினை தொடர்பில் அடையாள எதிர்பைக்
வெளிப்படுத்தியிருக்கின்றனர்.</p><p></p><h2>காக்கைதீவு மக்களின் குரல்கள்</h2><p>
</p><p>
அதன் தொடர்ச்சியாக எனக்கும் அது தொடர்பில் ஒரு மனு தந்துள்ளார்கள்.</p><p>

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் அரசியல், அபிவிருத்தி சார்
விடயங்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தவன் என்ற வரலாற்று அனுபவத்தினூடாக சில
விடயங்களை கூறுகின்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42917473-f571-4664-bfa4-dff1274ba2ee/26-6a577894e8d42.webp' /></p><p>
</p><p>
அதாவது இந்த விடயம் நீண்டகாலமாக தொடர் பிரச்சினையாக இருப்பதால் மாநகரசபை இது
தொடர்பாக வடமாகாண ஆளுநர், மாநகர சபை நிர்வாகம் ஆகியோருடன் கதைத்து, இதற்கு
விரைவில் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க முடியும்.
</p><p>
குறித்த பகுதி மக்கள் நீண்டகாலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என
வலியுறுத்தி வருகின்றார்கள்.

​</p><p>இதேவேளை நான் இப்பொழுது ஆட்சியில் இல்லை. இருந்தாலும் என்னுடைய அனுபவங்கள்
ஊடாக ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வை காண்பதுதான் சரியாக
இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T12:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு கட்சி கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - ஈ.பி.டி.பி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-people-reject-the-6-party-alliance-epdp-1784106397"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-people-reject-the-6-party-alliance-epdp-1784106397</id>
            <summary type="text">தமிழ் மக்களை ஏமாற்றி
அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய
முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களை ஏமாற்றி
அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு அரசியல் செய்ய
முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி செல்லவும் என
ஈ.பி.டி.பி மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார்
தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று(15.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தமிழருக்கு கரிநாள்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>தமிழரசு கட்சியின் இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். 

அதுமட்டுமல்ல கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது தமிழரசு கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த மறைந்த சம்பந்தன் இலங்கை தேசிய கொடியை அசைத்து தமிழர்களுக்கும் சுதந்திரம் கிடைத்ததாக சர்வதேசத்துக்குத் தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb045603-f09f-4a66-b4f5-c438ff01aa90/26-6a57552469588.webp' /></p><p>அதன் பின்னர் இன்று அந்த கட்சியினர் தமிழருக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் என்றும் கூறுகின்றனர்.</p><p> 

இவ்வாறு இவர்கள் காலத்திற்கு காலம் நேரத்துக்கு நேரம் கொள்கைகளை மாற்றி வருகின்றனர்.

இவர்கள் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவை தேடித்தர வேண்டும் என்ற நோக்கம் இல்லை.</p><p>

தங்களுடைய அரசியல் இருப்புக்காகவும் தேவைகளுக்காகவும் கால காலமாக அரசியல் ஆசன இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அரசியல் செய்ய முடியாத கால கட்டங்களில் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கும்
தேர்தல் வரும்போது கூட்டுச் சேர்ந்துகொள்வார்கள், தேர்தல் முடிந்த பின்னர் ஆளுக்கு ஆள் பிரிந்து சென்று விடுவார்கள்.</p><p></p><h2>ஆறு கட்சிகளின் கூட்டுச் சேர்வு</h2><p>
</p><p>
இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் இருப்பு தான் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. எனவே இந்த ஆறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதனை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.
</p><p>
மக்கள் விரைவில் உங்களுக்கான பதிலை தருவார்கள். இந்த கூட்டுச் சேர்வு குறித்து வடக்கு மாகாணம் பாதிக்காவிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்களுடைய இருப்பினை நிச்சயமாக பாதிக்கும் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7dab7eb-52e4-41c0-a808-771d705dfd42/26-6a5755252529a.webp' /></p><p>

உங்களால் அரசியல் செய்ய முடியாவிட்டால் நீங்கள் தயவு செய்து உங்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஓரமாக ஒதுங்கி நில்லுங்கள்.
</p><p>
நாட்டிலே படித்த வேலையற்ற பட்டதாரிகள் புத்திஜீவிகள் இருக்கின்றனர். அவர்களிடம் தமிழரசு கட்சியை கொடுங்கள். அவர்கள் அதை வழிநடத்திச் செல்வார்கள்.
</p><p>காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்தி விடவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> 

</p>]]></content>
            <updated>2026-07-15T11:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimals-brother-arrested-in-gampaha-1784114686"></link>
            <id>https://tamilwin.com/article/wimals-brother-arrested-in-gampaha-1784114686</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் இன்றைய தினம் (15.07.2026) நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அவர் இன்றைய தினம் (15.07.2026) நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் கைதாகியுள்ளார்.</p><h2>முறைகேடு சம்பவம்</h2><p></p><p> </p><p>

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb9e075-48ea-4500-8938-97a600d6a9f4/26-6a57730856578.webp' /></p><p> 

சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவர் கம்பஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:52:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விசேட தொடருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-for-nallur-festival-special-train-services-1784112761"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-for-nallur-festival-special-train-services-1784112761</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான இரண்டு மதத் திருவிழாக்களான நல்லூர் மற்றும் மடு திருவிழாக் காலங்களில் சிறப்பு தொடருந்து மற்றும் பேருந்து ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான இரண்டு மதத் திருவிழாக்களான நல்லூர் மற்றும் மடு திருவிழாக் காலங்களில் சிறப்பு தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
</p><p>
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னர் பொதுமக்களிடையே உரையாற்றியபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>சிறப்பு போக்குவரத்து சேவை</h2><p>

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையேயான தினசரி விரைவு தொடருந்து சேவை நான்கு நாட்களுக்கு குறைக்கப்படும் என தொடருந்து திணைக்களம் சமீபத்தில் அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25078592-b65c-42e4-8edd-8c66abe1b489/26-6a576d768b6ce.webp' /></p><p>இதற்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வரக்காபொல பகுதியில் ஒரு தொடர்வண்டி சிக்கியிருப்பதும், மலைப்பாங்கான பகுதிகளில் தண்டவாளங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தொடர்வண்டிகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விளக்கினார்.
</p><p>
இந்த தற்காலிக சவால்கள் இருந்தபோதிலும், நல்லூர் திருவிழா மற்றும் மடு திருவிழா ஆகிய இரண்டிற்கும் அரசாங்கம் நிச்சயமாக சிறப்பு போக்குவரத்து சேவைகளை வழங்கும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
</p><p>
தற்போது, ​​மவுண்ட் லவினியா - காங்கேசன்துறை விரைவு தொடருந்து வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. இது காலை 5:15 மணிக்கு மவுண்ட் லவினியாவிலிருந்து புறப்பட்டு, மதியம் 12:13 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடைகிறது. </p><p>இதன் திரும்பும் பயணம் மதியம் 1:50 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து தொடங்கி, இரவு 9:40 மணிக்கு மவுண்ட் லவினியாவில் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:45:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண ஆளுநருக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-governor-eastern-and-defense-officials-1784105509"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-governor-eastern-and-defense-officials-1784105509</id>
            <summary type="text">கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் தேசிய பாதுகாப்பு
கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் தேசிய பாதுகாப்பு
கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சந்திப்பானது நேற்று(14) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.</p><h2>பாதுகாப்பு அதிகாரிகள்</h2><p>பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் கற்கைக் காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு
மேற்கொண்ட களப்பயணத்தின் போது ஆளுநருடன் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7d33bb-3b09-4081-b406-6dd382291d1c/26-6a574a9e79a82.webp' /></p><p>இதன்போது, கிழக்கு மாகாணத்தில் நிலவும் சமூக மற்றும் பாதுகாப்பு நிலைமைகள்
குறித்து ஆளுநர் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.</p><p>அத்துடன் மாகாணத்தில் நிலவும்
பிரச்சினைகள் மற்றும் குறித்த பிரச்சினைகளின் போது பாதுகாப்புத்துறையினர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலைக்குள் மர்ம நபர்கள் வீசிய பொதி! தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-parcel-was-thrown-at-prisoners-at-galle-prison-1784113842"></link>
            <id>https://tamilwin.com/article/a-parcel-was-thrown-at-prisoners-at-galle-prison-1784113842</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையின் பின்புறம் உள்ள தொடருந்து நிலையப் பகுதி அருகிலிருந்து சிறைக்குள் ஒரு பொதியை வீசி எறிந்து தப்பிக்க முயன்ற இரண்டு நபர்கள் குறித்து, ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையின் பின்புறம் உள்ள தொடருந்து நிலையப் பகுதி அருகிலிருந்து சிறைக்குள் ஒரு பொதியை வீசி எறிந்து தப்பிக்க முயன்ற இரண்டு நபர்கள் குறித்து, பொலிஸ் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி காலி தலைமையக பொலிசார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
அந்த இரண்டு நபர்களால் வீசப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி, பொலிஸ் அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அதில், 2,180 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருள், புகையிலை மற்றும் 49 லைட்டர்களைக் கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3f5c3cc-e8e6-4f37-9aa7-d68e387942d7/26-6a576f81619c9.webp' /></p><p>

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் அடங்கிய அந்தப் பொதி, சிறைக் கைதிகளைக் குறிவைத்து சிறை சுவர்களைத் துளைத்து கடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

தலைமறைவான சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக, காலி தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:31:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டம் பறக்கவிடும் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-air-force-announcement-1784110933"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-air-force-announcement-1784110933</id>
            <summary type="text">விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுதளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்கவிடும் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  

தற்போது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுதளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்கவிடும் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. </p><p> 

தற்போது நிலவும் பட்டம் விடும் பருவகாலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுதளங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டம் விடுவது கணிசமாக அதிகரித்துள்ளது.</p><h2>கடுமையான அச்சுறுத்தல்</h2><p> 

இது விமானங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உலகளவில் இடம்பெறும் விமான விபத்துகளுக்கு, ஓடுதளங்களுக்கு அருகில் பட்டம் விடுவது ஒரு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது விமானப் பறப்பு நடவடிக்கைகளுக்கு நேரடி இடையூறாகவும் அமைகிறது.</p><p></p><p> </p><p>

இலங்கையின் கட்டுநாயக்க, இரத்மலானை, இங்குராக்கொட, சீனக்குடா, அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தல ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விமான ஓடுதளங்களைச் சூழவுள்ள வான்பரப்பில் இவ்வாறு அதிகளவில் பட்டம் விடப்படுவது தற்போது பெரும் அபாய நிலையைத் தோற்றுவித்துள்ளது.</p><p> 

இந்த அபாயகரமான சூழ்நிலையை உறுதிப்படுத்தும் வகையில், இன்றைய தினம் (2026.07.15) இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சி நடவடிக்கைகளுக்காக வானில் எழும்பிய Y-12 ரக விமானம் ஒன்று, பட்டத்தின் நூல்களால் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. </p><p>

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், வான்பரப்பில் ஏற்பட்ட அச்சுறுத்தலையடுத்து உடனடியாக அவசரமாக இரத்மலானை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cfce602-61cb-43db-8472-b316821d0b8d/26-6a576c99e6051.webp' /></p><h2>நேரடி ஆபத்து</h2><p> </p><p>

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனைகளின் போது, அந்த விமானத்தின் இடது பக்க சக்கரம், இடது பக்க எஞ்சின் பகுதி மற்றும் மேலும் சில பாகங்களில் பட்டத்தின் நூல்கள் பெருமளவில் சுற்றியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

விமானத்தின் எஞ்சினுக்குள்ளோ அல்லது அதன் முக்கிய செயல்பாட்டு அமைப்புகளுக்குள்ளோ பட்டத்தின் நூல்களோ அல்லது பட்டத்தின் பாகங்களோ சிக்கிக்கொண்டால், ஒட்டுமொத்த விமானமும் விபத்துக்குள்ளாகும் நேரடி ஆபத்து உள்ளது.</p><p></p><p> </p><p>

இதன்மூலம் பாரிய உயிர்ச்சேதங்களும் சொத்துச்சேதங்களும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும். </p><p>

எனவே, வான்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயணிகளின் உயிர்களைப் பாதுகாக்கவும், விமான நிலையங்கள் மற்றும் ஓடுதளங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், இத்தகைய வான் பாதுகாப்பு வலயங்களுக்குள் பட்டம் விடுவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:18:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் பகுதியில் இரண்டு வாகன சாரதிகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-drivers-arrested-in-kandalai-area-1784100345"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-drivers-arrested-in-kandalai-area-1784100345</id>
            <summary type="text">கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட
சோதனை நடவடிக்கையின்போது மண்ணென்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின்
சாரதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட
சோதனை நடவடிக்கையின்போது மண்ணென்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின்
சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கந்தளாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத் பண்டார
தலைமையில் இன்று(15.07.2026) காலை பல்வேறு இடங்களில விசேட சுற்றிவளைப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசேட சோதனை நடவடிக்கை</h2><p> இந்த நிலையில் மணல் ஏற்றுவதற்கு வருகை தந்த 19 டிப்பர்
வாகனங்கள் பொலிஸாரினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f2e5615-9f8e-4f17-a660-848d6d7334f6/26-6a5746eec6496.webp' /></p><p>இதன்போது
மண்ணெண்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இருவரையும்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கந்தளாய் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர்..! விரைவில் கைது செய்யப்படவுள்ள பிள்ளையான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-issue-pillayan-nexr-arrest-1784109054"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-issue-pillayan-nexr-arrest-1784109054</id>
            <summary type="text">சிறைக் கைதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வெளியே கலவரத்தை ஏற்படுத்தி, ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவே நீர்கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைக் கைதிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வெளியே கலவரத்தை ஏற்படுத்தி, ஒரு குழப்பமான சூழலை உருவாக்கி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவே நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலேயே&nbsp; அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,</p><p>
கடந்த காலங்களில் இனக்கலவரங்கள் சிறைச்சாலை&nbsp; சம்பவங்களின் மூலமே தொடங்கப்பட்டது.</p><p>

இது போன்ற குழப்பங்கள் நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகச் சித்தரிக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வர பயன்படுத்தப்படலாம்.
</p><p>
விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களை&nbsp; காப்பாற்றிக் கொள்ள இவ்வாறான குழப்பங்களை&nbsp; செயற்கையாக உருவாக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.</p><p>

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்றும் குறிப்பிட்டார். 

அவருக்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக பிள்ளையான் கைது செய்யப்படுவார் எனவும் தாஹா ஐன்ஸ்டீன்&nbsp; குறிப்பிட்டார். </p><p>

கருணாவை பொறுத்தவரை, அத்தகைய நேரடி ஆதாரங்களோ அல்லது அண்மைய விசாரணைகளில் மையப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளோ அவர் மீது வலுவாக இல்லை என்றும் தாஹா ஐன்ஸ்டீன் இதன்போது சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>

இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க ....&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mYgm6Bv7xH4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T11:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/open-warrant-issue-against-kapila-chandrasena-wife-1784111071"></link>
            <id>https://tamilwin.com/article/open-warrant-issue-against-kapila-chandrasena-wife-1784111071</id>
            <summary type="text">ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மீது திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>ஏர்பஸ் விசாரணை</h2><p>இரண்டாவது சந்தேகநபருக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்கில மொழியில் திறந்த பிடியாணை உத்தரவை வழங்குமாறு சிஐடி கோரிய நிலையில் இதனை நீதவான் அங்கீகரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff5e520-6eb7-42b0-aa9f-a35abcba41cc/26-6a57680cbd397.webp' /></p><p>

அதேவேளை, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோர், பிரியங்கா நியோமாலிக்காக பிணையாட்களாக நின்றிருந்த நிலையில், வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் பிணையாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு அவர்களுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரினார்.</p><p>

மேலும், ரூ.10 மில்லியன் பிணைத் தொகை பறிமுதல் செய்யப்படலாம் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்குப் பதிவுகளை ஆராய்ந்த நீதவான், செலுத்தப்பட்டிருந்த பிணைத் தொகை ரூ.10 மில்லியன் அல்ல, ரூ.20 மில்லியன் என சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>&nbsp;மீண்டும் விசாரணை</h2><p> </p><p>

மேலும், அந்தப் பிணைத் தொகையை பறிமுதல் செய்வதற்கு முன் அதற்கான காரணங்கள் எழுத்துமூலமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/792d76ea-2997-4041-bd87-3820159b7d29/26-6a57680d6b5aa.webp' /></p><p>
</p><p>
இதன்படி, இரு பிணையாளர்களையும் அவர்களது பொறுப்பிலிருந்து விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதுடன், பிணைத் தொகையை பறிமுதல் செய்வதற்கான காரணங்களை எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
</p><p>
இந்த வழக்கு ஜூலை 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
</p><p>
மேலும், இந்த வழக்கின் முதல் சந்தேகநபரான முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பதும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T10:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்த ஆளும் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-meets-secretary-communist-party-of-india-1784111825"></link>
            <id>https://tamilwin.com/article/npp-meets-secretary-communist-party-of-india-1784111825</id>
            <summary type="text">இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜாவை&amp;nbsp;தேசிய மக்கள் சக்தியின் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.குறித்த சந்திப்பானது&amp;nbsp;மக்கள் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜாவை&nbsp;தேசிய மக்கள் சக்தியின் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.</p><p>குறித்த சந்திப்பானது&nbsp;மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்தை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.</p><p></p><h2>பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராய்வு&nbsp;</h2><p>இதன்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் ஆணையுடன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளமை தொடர்பில் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் டி. ராஜா தெரிவித்ததுடன், இந்தியாவின் அரசியல் அனுபவங்களையும் முன்னேற்றப் பயணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Framalingam.chandrasegar.2025%2Fposts%2Fpfbid02a8onC3qnZHSJJVjRaYEe6SXmKpq2iNF4qNmh49RkbUZanJu4KBkRQqJeRThHNgHgl&show_text=true&width=500" width="500" height="850" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>நாட்டை நிர்வகிப்பதில் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்கள், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியம், நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் நல்லிணக்கத்தை மேலும் மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆழமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
</p><p>இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசியல் குழு உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மற்றும் மத்திய குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜனக அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T10:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி மன்னாரில் நினைவூட்டல் நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/136th-national-archaeological-day-in-mannar-1784109284"></link>
            <id>https://tamilwin.com/article/136th-national-archaeological-day-in-mannar-1784109284</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம்
தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றையதினம்(15.07.2026) காலை மன்னார்
மாவட்ட செயல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம்
தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றையதினம்(15.07.2026) காலை மன்னார்
மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட
அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்ரமசிங்க கலந்து
கொண்டுள்ளார்.</p><p></p><h2>தொல்லியல்&nbsp; பாதுகாப்பு</h2><p>இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
</p><p>அத்துடன் மரபுரிமைக்கு ஓர் உயிரோட்டம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7faeeb86-2149-4d3b-afa7-1420200b0e45/26-6a5759da110b4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24825d26-c7e2-4284-a212-18e7c67b6ac5/26-6a5759d90987e.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T10:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமத்தை சென்றடைந்த பாதயாத்திரை பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pilgrims-on-foot-reaching-kataragama-1784109468"></link>
            <id>https://tamilwin.com/article/pilgrims-on-foot-reaching-kataragama-1784109468</id>
            <summary type="text">நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான
புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று (15.07.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான
புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று (15.07.2026) அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்துள்ளனர்.
</p><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, கடந்த 10 ஆம்
திகதி உகந்தை மற்றும் குமண தேசிய பூங்காவிலிருந்து யாழ ஓடா ஊடாக கதிர்காமம்
வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் உத்தியோகபூர்வமாகத்
திறக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள</h2><p>முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய
இப்பாதயாத்திரைக் குழுவினர், அடர்ந்த கானகம், மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த
ஒற்றையடிப் பாதைகளையும், கிரவல் மண் பாதைகளையும் கடந்து தமது நேர்த்திக்கடனை
நிறைவு செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b799a81-3551-468c-b0cf-2f6b19b4eeab/26-6a575da55a48e.webp' /></p><p>வனமுறை வேடன் அருளிய பாரம்பரிய பூஜை முறைகளைப்
பின்பற்றி, கானகத்திலும் வழிபாடுகளை முன்னெடுத்து வந்த பக்தர்கள் இன்று
ஆலயத்தை வந்தடைந்ததும் பக்தி பரவசத்துடன் கூட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
</p><p>
இதனிடையே, ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா
பெரஹரா இன்று இரவு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.</p><p>

தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இத்திருவிழாவின் மிக முக்கிய
நிகழ்வான தீர்த்தோற்சவம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க
கங்கையில் நடைபெற்று, இவ்வாண்டிற்கான ஆடி வேல் விழா மங்களகரமாக
நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T10:15:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கை விமான நிலையம் படைத்த புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-airport-in-first-6-months-of-2026-1784105516"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-airport-in-first-6-months-of-2026-1784105516</id>
            <summary type="text">இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BI...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA), 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 4.75 மில்லியன் பயணிகள் போக்குவரத்தைக் கையாண்டதாக அறிவித்துள்ளது.
</p><p>
ஒரு அறிக்கையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஜனவரி முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தில் 47,48,481 பயணிகள் நடமாட்டங்கள், 30,659 விமான நடமாட்டங்கள் மற்றும் 4,24,856 இடைவழிப் பயணிகள் நடமாட்டங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>இலங்கைக்கு வருகை தந்த</h2><p>
ஆறு மாத காலப்பகுதியில் விமான நிலையம் வழியாக 1,146,573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாக விமான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70429ab8-e10f-4d5f-8176-c4730642a508/26-6a575213aa455.webp' /></p><p>
விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அளித்த தகவலின்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 10,214,391 பயணிகள் போக்குவரத்துகளையும், 95,629 விமானப் போக்குவரத்துகளையும் மற்றும் 946,811 இடைவழிப் பயணிகள் போக்குவரத்துகளையும் கையாண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இன்று முதல் நெல் கொள்வனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-procurement-begins-in-kilinochchi-today-1784099521"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-procurement-begins-in-kilinochchi-today-1784099521</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் இன்று(15.07.2026) முதல் ஆரம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் இன்று(15.07.2026) முதல் ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல் கொள்வனவு
முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த அறிவித்ததன் படி தற்சமயம்
அதிக நெல் அறுவடை இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து நெற் களஞ்சியசாலைகளைத்
திறந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>நெல் சந்தைப்படுத்தல் சபை</h2><p>அந்த வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டு நெல் 120
ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல் 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா
நெல் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a14d79-9b71-4b72-aee0-b778c2e7e668/26-6a573405ba7d8.webp' /></p><p>

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தினுடைய நெல் கொள்வனவு இன்று (15.07.2026) பகல் 10.30 மணிக்கு கிளிநொச்சி பன்னங்கண்டி களஞ்சிய சாலையில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனினால் ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது.</p><p>கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிகளிடம் இருந்தும் தலா 2500 கிலோ
நெல்லை கொள்ளுதல் செய்யும் வகையில் அதற்கான படிவங்களை வழங்கியுள்ளதுடன்
மாவட்டத்தில் இரண்டாயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a973e53-13f8-42ca-a660-31e3568453b0/26-6a573406a6772.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தனியார் காணிகளை மோசடியான முறையில் கையகப்படுத்தும் கும்பல் - முறைப்பாடு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-illegally-acquiring-private-lands-in-jaffna-1784098550"></link>
            <id>https://tamilwin.com/article/gang-illegally-acquiring-private-lands-in-jaffna-1784098550</id>
            <summary type="text">அண்மையில்&amp;nbsp; யாழ். திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி
ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில்&nbsp; யாழ். திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி
ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில்
கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.</p><p>

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அந்த இடத்திற்கு சென்று, தனது காணிக்கு
தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p></p><h2>முறைப்பாடு பதிவு</h2><p>
</p><p>
அதற்கு குறித்த கும்பல், காணி தம்முடையது எனவும் உன்னுடைய காணி என்றால்&nbsp; அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து என மிரட்டும் தொனியில்
கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9272c0-9d55-47ee-a763-dd16cc55e2a0/26-6a57315a14105.webp' /></p><p> உங்கள் காணி என்றால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என காணி
உரிமையாளர் கேட்ட போது அவற்றை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என
மிரட்டியுள்ளனர்.</p><p>

இதனையடுத்து பொலிஸில் முறையிடுவதாக கூறி காணி உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், குறித்த
கும்பல் காணியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>

அதேவேளை இந்த கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில்
வேறொரு வெற்றுக்காணிக்கு தூண்களை இடும் பணிகளில் ஈடுபட்ட வேளை காணி உரிமையாளர்
சென்று கேட்ட போதும் காணி உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0ad5479-ef9c-4cf9-99ba-f55ffbc074c3/26-6a575090c36cd.webp' /></p><p>பின்னர் அவர் பொலிஸாருக்கு
தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயன்ற வேளை காணியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
</p><p>
குறித்த கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ,
வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் மோசடி&nbsp; தொடர்பில் பொதுமக்கள்
விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T09:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவுக்கு என்ன ஆனது..!! பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த ஒரே ஒரு தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-absconds-1784105345"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-absconds-1784105345</id>
            <summary type="text">முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே அவர் தொடர்பில் எங்களிடம் தற்போது இருக்கும் ஒரே ஒரு தகவல் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே அவர் தொடர்பில் எங்களிடம் தற்போது இருக்கும் ஒரே ஒரு தகவல் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.</p><p>பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>இதன்போது,&nbsp; வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாவதற்காக நாட்டுக்குத் திரும்புவாரா என ஜகத் குமாரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலையாவார்..</h2><p>இந்த கேள்விக்கு பதிலளித்த ஜகத் குமார மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>பசில் ராஜபக்ச நாட்டுக்குத் திரும்புவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், உரிய நேரத்தில் இந்த விடயங்களில் தலையிடுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f872ca6e-4ca0-4110-bdf3-8e17d4138966/26-6a574f4190827.webp' /></p><p>யாரும் நீதிமன்றத்தை தவிர்க்கவும் இல்லை, நீதிமன்றத் நடவடிக்கைகளைத் தவிர்க்க முயற்சிக்கவும் இல்லை. பசில் ராஜபக்ச சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார்.</p><p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மாத்திரமே எமக்குத் தெரியும். ஆனால், அந்த நோயின் தன்மை குறித்து எனக்குத் தெரியாது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7466ecc1-d0ac-4c54-9574-51d332dfb077/26-6a574f424b8f5.webp' /></p><p>அதேபோல, பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மாத்திரமே கட்சிக்கும் தெரியும். அத்துடன் இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என நான் நம்புகின்றேன். நாங்கள் இருக்கும் இடத்திற்கும் அவர் இருக்கும் நாட்டிற்கும் இடையே கணிசமான தூரம் உள்ளது.&nbsp;</p><p>எனவே, அவர் எங்கே இருக்கிறார், என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து எமக்குத் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><b><i>YOU MAY LIKE THIS VIDEO</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D2RVtNbvQzE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-07-15T09:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kumara-jayakody-corruption-case-1784104810"></link>
            <id>https://tamilwin.com/article/kumara-jayakody-corruption-case-1784104810</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்பாக இன்றையதினம்(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><h2>ஊழல் வழக்கு</h2><p>
இன்றைய நடவடிக்கைகளின் போது, ​​அரசுத் தரப்பு சாட்சிகள் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.அதனைத் தொடர்ந்து, விசாரணையின் தொடர்ச்சியை செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3f3aae-434c-4c6a-ba57-c37fa447947b/26-6a574abcbe156.webp' /></p><p>

2014ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய காலத்தில் குமார ஜெயகொடி ஊழல் செயல்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.</p><p>

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கிடங்கு வளாகத்தில் தரைவிரிப்பு (கார்பெட்) அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியபோது, தனியார் நிறுவனமொன்றுக்கு சாதகமாக அவர் செயல்பட்டதாக ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T08:54:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/program-to-control-dengue-mosquitoes-in-mannar-1784103061"></link>
            <id>https://tamilwin.com/article/program-to-control-dengue-mosquitoes-in-mannar-1784103061</id>
            <summary type="text">மன்னார் நகரசபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும்
வகையில் மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் நகரசபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும்
வகையில் மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படையுடன் இணைந்து விசேட
வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.&nbsp;</p><p>குறித்த வேலைத்திட்டம் இன்றைய தினம் காலை வேளையில் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>டெங்கு பரிசோதனை வேலைத்திட்டம்</h2><p>இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு குறித்த
டெங்கு பரிசோதனை விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
</p><p>அதன்படி இன்றைய தினம் அரச அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிலையங்களில் டெங்கு
பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p></p><p>இதன்போது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு
காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த ஆலோசனைகள்
வழங்கப்படும். அறிவித்தல்களை மீறி டெங்கு நுளம்பின் பெருக்கத்திற்கு உடந்தையாக
உள்ள உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T08:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதற்றத்தினால் மூடப்பட்ட வான் பரப்பு : கட்டுநாயக்கவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-srilankan-airlines-flights-returned-1784095873"></link>
            <id>https://tamilwin.com/article/two-srilankan-airlines-flights-returned-1784095873</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நேற்று(14) இரவு பதற்றம் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்ட நிலையில், குவைத் நகரம் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நேற்று(14) இரவு பதற்றம் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்ட நிலையில், குவைத் நகரம் மற்றும் தம்மாம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு&nbsp; பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL229 நேற்று(14) மாலை 5:10 மணிக்கு பஹாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டது, </p><p>அதே நேரத்தில் விமானம் UL253 மாலை 6:36 மணிக்கு தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.</p><p></p><h2>குவைத் சவூதி அரேபியா வான்வெளி மூடல்</h2><p> இவ்விரு விமானங்களும் ஏர்பஸ் A321neo ரக விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்பட்டன.
</p><p>
 

விமானங்கள் மத்திய கிழக்கை நெருங்கியபோது, ​​ஈரான் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, குவைத்தும் சவூதி அரேபியாவும் தத்தமது வான்வெளிகளைத் தற்காலிகமாக மூடின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f03e40b-707b-49cf-9fec-9aa3865c6153/26-6a572ed9e493e.webp' /></p><p>இந்நிலையில் தத்தமது இலக்குகளுக்கு உடனடியாகச் செல்ல இயலாததால், அந்த இரண்டு விமானங்களும் பாதிக்கப்பட்ட வான்வெளிக்கு அருகே சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
 

தற்காலிக வான்வெளி மூடல்கள் காரணமாக, வேறு பல சர்வதேச விமானங்களும் வானில் வட்டமிட்டுக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p>
 

இரு விமானங்களும் இன்று காலை (15) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பி வந்தடைந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T08:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/transfer-to-the-officer-who-shot-through-negombo-1784102579"></link>
            <id>https://tamilwin.com/article/transfer-to-the-officer-who-shot-through-negombo-1784102579</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் வெடித்த வன்முறை மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, உடனடியாகப் பல்லேகல சிறைக்குத் தற்காலிகமாக மாற்றப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் வெடித்த வன்முறை மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, உடனடியாகப் பல்லேகல சிறைக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார் என்று&nbsp; சிறைச்சாலைகள் ஆணையர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், கேள்விக்குட்படுத்தப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிமுறைகளுக்கு இணங்க நடத்தப்பட்டதா அல்லது அதிகார மீறலா என்பதைத் தீர்மானிப்பதற்காக ஒரு சிறப்பு விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;துப்பாக்கிச்சூடு</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், கைதிகள் குழு ஒன்று அங்கு இருந்த அதிகாரிகளைக் கொடூரமாகத் தாக்கி, சிறையின் கடைசி மரக்கதவை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1836953b-b8b2-4507-b83f-05da273f7da7/26-6a57433550dee.webp' /></p><p>
</p><p>
பத்து சிறை அதிகாரிகள் உட்பட 33 பேர் உயிரிழந்த இந்த வன்முறை மோதலின் போது, ​​கலவரத்தில் ஈடுபட்ட பல கைதிகளைப் பணயக்கைதிகளாகப் பிடித்திருந்த சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரி தனது துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
</p><p>
சிறையின் பிரதான வாயிலை மறித்துக்கொண்டு தப்பிக்க முயன்ற கைதிகள் மீது, அதிகாரி பிரதான வாயில் வழியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

இதனால் கைதிகள் பீதியடைந்து தப்பி ஓடினர்.</p><p></p><h2>&nbsp;பொலிஸ்அதிரடிப் படை</h2><p> </p><p>பின்னர், சிறை அதிகாரிகளும் சிறப்பு பொலிஸ்அதிரடிப் படையினரும் (STF) வாயில்களைத் திறந்து, பணயக்கைதிகளையும் காயமடைந்த கைதிகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddc5f5fb-15aa-40d7-9f92-0c79665a5608/26-6a574336001b9.webp' /></p><p>
</p><p>
சிறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தன் உயிரைப் பணயம் வைத்த இந்த அதிகாரி, துபாய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் பாதாள உலகக் கும்பல்களிடமிருந்து தற்போது தொடர்ச்சியான மரண அச்சுறுத்தல்களைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 கொலை செய்யப்பட்ட சக அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வெலிக்கடை சிறைக்கு வந்த நீதி மற்றும் சிறைகள் விவகாரங்கள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைச் சூழ்ந்துகொண்ட சிறை அதிகாரிகள், பாதாள உலகத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த அதிகாரியின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒருமனதாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p><b><i>You May Like This..</i></b></p><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bjQygnbYMMw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p>



</p>]]></content>
            <updated>2026-07-15T08:22:18+00:00</updated>
        </entry>
    </feed>
