<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-12T14:28:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கையில் புதிய மாற்றம்! வெளியான தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ஊடாக முன்னெடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி, நாளை (13) முதல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய சம்பந்தப்பட்ட கைதிகள் காணொளி தொழில்நுட்பம் வழியாகவே விசாரணைகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைக்கைதிகள்</h2><p>
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களால் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
</p><p>
இந்த நிலையில், மாற்றப்பட்ட கைதிகளை ஒவ்வொரு நீதிமன்ற அமர்விற்கும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதில் நடைமுறை மற்றும் போக்குவரத்து தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b50b18-0d64-4485-954a-36d7a46b99f9/26-6a53a10e3b8f7.webp' /></p><p>
</p><p>
இதனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
</p><p>
அந்த குழு சேதங்களின் தன்மை மற்றும் அவற்றுக்கான மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மைதானத்திற்கு ஒரு பெண்ணுடன் வந்த கருணா: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விவரித்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-amman-and-pillayan-priyantha-jayakody-1783862479"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-amman-and-pillayan-priyantha-jayakody-1783862479</id>
            <summary type="text">விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா&amp;nbsp; அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா&nbsp; அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த சம்பம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியந்த ஜயகொடி இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த செவ்வியில்,</p><p>
எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார். </p><h2>


</h2><p></p><h2>பொலிஸ் மைதானத்தில் நடந்த சம்பவம்</h2><p>அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார். </p><p>அவர் இருபுறமும் பாதுகாப்புப் பிரிவினரை வைத்துக்கொண்டு நடக்கும்போது, அந்த மைதானத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய ஒரு பொலிஸ் தடகள வீரரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போதேஜு 1990 ஆம் ஆண்டு&nbsp; தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் கைப்பற்றிக் கொண்ட பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரை சரணடையுமாறு கூறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce727709-c3d3-4db5-ad4e-03761416d0a1/26-6a5394d1bf566.webp' /></p><p>
</p><p>ஆனால் போதேஜு சரணடைய முடியாது என்று கூறியவர். அவர் சார்பாக நாம் இன்னும் பொலிஸ் விளையாட்டு விழாக்களில் சவால் கிண்ணம் ஒன்று வழங்கப்படுகிறது. </p><p>அவர் கண்டி புனித அந்தோனியார் கல்லூரி உருவாக்கிய ஒரு திறமையான தடகள வீரர்.விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் பொலிஸ் மைதானத்தில் குறித்த பெண்ணுடன் நடைபயிற்சி செய்யும் போது அங்கு இருந்த மற்றொரு அதிகாரி என் அருகில் வந்து இவ்வாறு கூறினார்.</p><h2>&nbsp;துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை</h2><p>கிழக்கில் நிராயுதபாணியாக இருந்து 674 பொலிஸாரை கொலை செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கி போதேஜு போன்ற திறமையான ஒரு வீரரைக் கொன்ற கொலையாளி, கருணா அம்மான் இன்று பொலிஸ் பாதுகாப்புடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திலேயே நடந்து திரியும்போது, எனக்குள் பாரியதொரு ஆக்ரோஷம் ஏற்படுகிறது.</p><p>இதனை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது?" என்று அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் கூறினார்.
எனக்குத் தெரிந்தவரை, இது தொடர்பாக எந்தவொரு விசாரணையும் நடக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55c68bf5-0c23-41e9-a690-c23e35a5c9b1/26-6a539e34752c7.webp' /></p><p> </p><p>அந்தப் படுகொலைகளுக்கு முழுமையான தலைமைத்துவத்தை வழங்கிய கருணா இந்நாட்டின் அமைச்சரானார். அத்தோடு பழமையான அரசியல் கட்சியொன்றின் உபதலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. </p><p>அதேபோல், இதில் இரண்டாவது இடத்தில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிரதிமைச்சரானார். அவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். </p><p>எனவே, இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையைத் தவிர, இன்றுவரை இந்த மனிதப் பேரவலக் கொலைகள் குறித்து விசாரணை எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp; </p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T14:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழந்த அதிகாரிகளுக்கு அரசு வெளியிட்ட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-negombo-prison-conflict-that-shook-the-country-1783864198"></link>
            <id>https://tamilwin.com/article/the-negombo-prison-conflict-that-shook-the-country-1783864198</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த
சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த
சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான
நட்டஈடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 


உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபா என்பது
ஆரம்பக்கட்ட நிவாரணக் கொடுப்பனவு மட்டுமே என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின்
ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார்.</p><p></p><p> 

உயிரிழந்த அதிகாரிகளின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள்
திணைக்களத்தின் முழுமையான செலவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ள என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான ஏனைய உதவிகளை
வழங்குவதற்கும் திணைக்களம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> </p><h2>

அதிகாரிகளின் தற்போதைய நிலைமை</h2><p>
இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகள்
தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேச்சாளர், 

"தற்போது 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1211b792-e686-403c-9f4c-fa45b1686609/26-6a539c0f33f31.webp' /></p><p> </p><p>அவர்களில் மூவர், கொழும்பு தேசிய
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இவர்களுக்கான நட்டஈடு மற்றும் இதர உதவிகள் குறித்தும் சிறைச்சாலைகள்
திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T13:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களை ஏமாற்றுகின்றதா அநுர அரசாங்கம்..! மனோ அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-deceiving-the-up-country-people-1783862727"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-deceiving-the-up-country-people-1783862727</id>
            <summary type="text">பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி
உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க
வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி
உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க
வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.
வலியுறுத்தினார்.
</p><p>
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,</p><p>
"எங்கள் மக்கள் 'தேவதூதர்கள் வந்துவிட்டார்கள்' என நம்பி இந்த அரசுக்கு
வாக்களித்தனர்.</p><p></p><h2>மலையக மக்கள்</h2><p> ஹட்டன் பிரகடனத்தில் காணி உரிமை குறித்துக் கூறி வாக்குகளைப்
பெற்ற அரசு, தற்போது அது குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்? இது
தொடர்பில் தமக்கான கொள்கையை வெளிப்படையாகவும், வார்த்தை ஜாலங்கள் இல்லாமலும்
அரசு அறிவிக்க வேண்டும்." - என்று அவர் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b692a955-7f94-40ec-8da0-5113cbab8333/26-6a5399e79dc29.webp' /></p><p>

பெருந்தோட்டக் காணிகள் அரசுக்குச் சொந்தமானவை என்றும், நிறுவனங்கள் வெறும்
குத்தகைதாரர்கள் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டிய அவர்,</p><p> தோட்டங்களில் மக்கள்
மேற்கொள்ளும் கட்டுமானங்களை 'அத்துமீறியவை' எனக் கூறித் தடுப்பதற்கும்,
உடைப்பதற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசு நிறுவனங்களே அனுமதி
வழங்குகின்றன எனவும் குற்றம் சாட்டினார்.
</p><p>
குறிப்பாக, பெருந்தோட்ட அமைச்சின் கீழ் உள்ள கண்காணிப்புப் பிரிவு மற்றும்
காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அவர்
விமர்சித்தார்.</p><p></p><h3>மனோ கணேசன் எம்.பி.</h3><p>
</p><p>
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை உடனடியாகப்
பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், அரசின் காணி உரிமை கொள்கை வரையறுக்கப்படும்
வரை, வீடில்லா மக்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களை 'அத்துமீறியவை' எனக் கூறி
வழக்குத் தொடர்வதையோ அல்லது அவற்றை உடைத்து அகற்றுவதையோ உடனடியாக இடைநிறுத்த
வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்&nbsp; வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a0dc5e5-d950-471e-8e95-3e818259d335/26-6a5399e6ecb0f.webp' /></p><p>
</p><p>
நல்லாட்சி அரசின் போது, தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சரவை மற்றும்
நாடாளுமன்ற ஒப்புதலுடன் 'ஏழு பேர்ச் காணி, தனி வீடு' என்ற உரிமையைச்
சட்டபூர்வமாக ஆரம்பித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். </p><p>200 ஆண்டுகாலப்
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கிய அந்தப் பயணத்தை, இந்த அரசு
முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை சுரண்டி சொத்து சேர்த்த 500 அரசியல் தலைவர்கள் - விசாரணையில் அம்பலமாகும் விவரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494"></link>
            <id>https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494</id>
            <summary type="text">அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>குவியும் முறைப்பாடுகள்</h2><p>
</p><p>இந்த 500க்கும் மேற்பட்ட நபர்களில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 60 அரசியல்வாதிகளும், கிட்டத்தட்ட 100 உயர் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb54b70-dbc8-4414-9695-3a40c03e0473/26-6a530457e255b.webp' /></p><p>
</p><p>ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் சொத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>சம்பந்தப்பட்ட நபர்களால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களின் உண்மைத்தன்மை குறித்து இந்த விசாரணையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><h2>சொத்து விபரங்களை சமர்ப்பிக்க&nbsp;காலக்கெடு </h2><p>
சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய உத்தியோகத்தர் பிரிவில் அண்மையில் ஊடகவியலாளர்களும் கப்பல்துறை ஆவணப்பணியாளர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc07406-c362-4d18-a864-4784a93862cc/26-6a530e6b92991.webp' /></p><p>
இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த போதிலும், இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அது ஜூலை 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
</p><p>2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின்படி, சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க அல்லது ஓராண்டிற்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலிடத்தில் இலங்கை: எதில் தெரியுமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-ranks-3rd-countries-heaviest-traffic-1783861278"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-ranks-3rd-countries-heaviest-traffic-1783861278</id>
            <summary type="text">உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக &#039;நம்பியோ&#039; (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ளது.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ளது.</p><p>

அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.</p><p></p><h2>இலங்கை முதலிடம்&nbsp;</h2><p>

உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தைக் கொண்ட 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான போக்குவரத்து குறியீட்டின் (Traffic Index) மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக நைஜீரியா முதலிடத்திலும், கோஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e0576b-6e1c-4226-a0e3-6e28a3692f9c/26-6a53932be58c1.webp' /></p><p> </p><p>ஒஸ்ட்ரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் குறைந்த நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன. </p><p>

பயணத்திற்காகச் செலவிடப்படும் நேரம், அதற்காகச் செலவாகும் எரிபொருள் அளவு, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மன உளைச்சல், கார்பன்-டை-ஒக்சைடு (CO2) வெளியேற்றம் மற்றும் போக்குவரத்து அமைப்பில் உள்ள திறமையின்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தரவுகள் தயாரிக்கப்படுகின்றன.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-12T13:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த இரண்டாவது யாத்திரிகரும் உயிரிழப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/second-pilgrim-kathirgamam-pilgrimage-passes-away-1783859905"></link>
            <id>https://tamilwin.com/article/second-pilgrim-kathirgamam-pilgrimage-passes-away-1783859905</id>
            <summary type="text">கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர்&amp;nbsp; திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(12) ஞாயிற்றுக்கிழமை காலை பாணமையில் இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர்&nbsp; திடீரென உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று(12) ஞாயிற்றுக்கிழமை காலை பாணமையில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>இரண்டாவது யாத்திரிகர்</h2><p>
</p><p>
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்பவரே இவ்வாறு மரணமான
யாத்திரிகர் ஆவார்.

இவரது சடலம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2b3e38f-7777-4de2-a404-ac381caadc31/26-6a538c8fd4dcd.webp' /></p><p>
</p><p>
சடலத்தை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.புனிதராஜன்
பார்வையிட்டார்.</p><p>

இதேவேளை பாதயாத்திரை முதல் யாத்திரிகர் கடந்த 8 ஆம் திகதி பொத்துவில் -
குண்டுமடு பகுதியில் உயிரிழந்தார். அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T12:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் சிலை வைக்க வேண்டாம்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/don-t-put-a-statue-of-ira-sampanthan-in-the-east-1783859650"></link>
            <id>https://tamilwin.com/article/don-t-put-a-statue-of-ira-sampanthan-in-the-east-1783859650</id>
            <summary type="text">இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர். அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர். அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்
அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும், பொது இடத்தில் அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி
கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்த விடயம் தொடர்பில், ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று(12.07.2026) ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>

சிறைச்சாலை மோதலுக்கு கண்டனம்</h2><p>
மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, </p><p> 

மட்டக்களப்பு கிரானில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கட்சி காரியாலயம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சுமாராக 6 மாதங்களாக கட்சி வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாதவொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59761588-f780-4324-bcaa-ed987154f397/26-6a538a2a84c5e.webp' /></p><p> </p><p>

இருந்த போதிலும் கட்சி தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தற்போதுள்ள எங்களுடைய நிகழ்ச்சி நிரலில், இலங்கை தமிழரசுக்கட்சியை கிழக்கு மண்ணில் இருந்து விரட்டியடிப்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. </p><p> சிலருக்கு இந்த விடயத்தை கேட்கும் பொழுது ஏளனமாக இருக்கும், ஆனால் இப்படியொரு சம்பவம் விரைவில் நடக்கும். 



கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் பல சட்டவிரோத
செயற்பாடுகளுக்கான காரணங்களை விரைவில் அநுர அரசாங்கம் கண்டறிய வேண்டும்.</p><p> 

அத்துடன், இதுபோன்ற குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். </p><h2> 

 

சிலை உடைக்கப்படும்..</h2><p>
இதேவேளை, இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இதன்போது வலியுறுத்திக் கொள்கின்றேன். </p><p>


மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சி தலைவரான இரா. சம்மந்தனுக்கு உருவ
சிலை அமைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f116607-db89-4e19-994e-e4f3753d5013/26-6a538a2b42685.webp' /></p><p> </p><p> அப்படியாயின், அந்த நினைவு தூபி அமைப்பது அவர்களது சொந்த இடங்களில் அமைக்க வேண்டும், ஆனால் பொது இடங்களில் நினைவு தூபி அமைக்கக் கூடாது.


இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதருக்கு கிழக்கில் சிலை வைப்பதற்கான அங்கீகாரத்தை வழங்க முடியாது. </p><p>அவ்வாறு பொது இடங்களில் சிலை அமைக்கும் பட்சத்தில், எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன், அதனை அகற்றுவதற்கான முழு முயற்சிகளும் எடுக்கப்படும். </p><p>


இந்த விடயத்தை வன்முறை, மிரட்டல், அச்சுறுத்தல் என கூறுவதற்கு முதலே இதனை அறிவித்துக் கொள்கின்றோம். இருந்தபோதும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த
சிலையை அமைக்க முயன்றால் அதனையும் அகற்றப்படும் என உறுதியாக கூறிக்
கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:36:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா 3ஆவது கட்டமாக தாக்குதல்: 140 இராணுவ நிலைகள் தரைமட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/usa-iran-war-attack-starts-1783859198"></link>
            <id>https://tamilwin.com/article/usa-iran-war-attack-starts-1783859198</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சைப்ரஸ் நாட்டு கொடியுடன் பயணித்த &#039;எம்.வி
ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி&#039; என்ற சரக்குக் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர
காவல்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சைப்ரஸ் நாட்டு கொடியுடன் பயணித்த 'எம்.வி
ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி' என்ற சரக்குக் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர
காவல்படை அண்மையில் தீவிர தாக்குதல் நடத்தியது.
</p><p>
இந்தத் தாக்குதலால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு அதன் என்ஜின் பகுதி
கடுமையாக சேதமடைந்ததுடன், கப்பல் ஊழியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
</p><p>
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க மத்திய
கட்டளைத் தலைமையகம் இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக ஈரான் மீது வான்வழி
மற்றும் கடல்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p></p><h2>தாக்கி அழிக்கப்பட்ட இலக்குகள்</h2><p>

அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த தீவிரத்
தாக்குதலில், ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகள் துல்லியமாகத் தாக்கி
அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>இதில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தளங்கள், கடற்படை
உள்கட்டமைப்புகள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடலோர கண்காணிப்பு மையங்கள்
ஆகியவை முக்கியமாக குறிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2fcac2-4a0b-43a6-8b68-7a125e5b1769/26-6a5388012e4a3.webp' /></p><p>
இந்த வாரத்தில் மட்டும் மொத்தம் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில்
ஈரானின் 300க்கும் மேற்பட்ட இராணுவ நிலைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக
அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
</p><p>
சர்வதேச கடல் வழித்தடங்களில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும்
மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஈரான் தவறிவிட்டதாகவும், அதற்கான தகுந்த
விலையை ஈரான் தற்போது செலுத்தி வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T12:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கற்பக பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பாவணைக்கு திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karpaga-pillayar-temple-road-in-jaffna-1783858505"></link>
            <id>https://tamilwin.com/article/karpaga-pillayar-temple-road-in-jaffna-1783858505</id>
            <summary type="text">புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோவில் வீதி மக்கள்
பாவனைக்காக இன்று(12.07.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோவில் வீதி மக்கள்
பாவனைக்காக இன்று(12.07.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளதுடன், வீதியை திறந்து வைத்துள்ளனர்.</p><p>கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த 1.5 கிலோமீற்றர்
நீளமான பாதை 74.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8daa95be-b2f6-41e0-aa0f-abcdbed0da94/26-6a5385ab7dc70.webp' /></p><p> </p><p>

அத்துடன், இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, நாடாளுமன்ற
உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
பொறியியலாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும்
பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a38f90-2dab-4044-934f-10f4e421fa16/26-6a5385ac72b87.webp' /></p><p></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:16:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்: வரலாற்றை நினைவுபடுத்தி ரணில் சுட்டிக்காட்டும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1783858475"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1783858475</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமான
முறையிலும், தார்மீகப் பொறுப்புக்கூறல்களுடனும் செயற்பட்டு வந்துள்ளது என்று
அக்கட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமான
முறையிலும், தார்மீகப் பொறுப்புக்கூறல்களுடனும் செயற்பட்டு வந்துள்ளது என்று
அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க
தெரிவித்தார்.
</p><p>
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர்
இதனைக் கூறினார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>நினைவுபடுத்தப்படும் விடயம்</h2><p></p><p>
</p><p>
1988ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது,
அப்போதைய நீதி அமைச்சர் நிஸ்சங்க விஜேரத்ன வெளிநாடு சென்றிருந்த போதிலும்,
சம்பவத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி துறந்தமையை அவர் நினைவுகூர்ந்தார். </p><p>அவரது பிரதி அமைச்சராக இருந்த ஷெல்டன்
ரணராஜாவும் அதே காரணத்துக்காகத் தனது பதவியைத் துறந்ததையும் ரணில்
சுட்டிக்காட்டினார்.</p><p>

அதேபோல், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் வழிகாட்டுதலின்படி, 1988 ஆம்
ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த போல் பெரேரா, எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாகப்
பதவி துறந்த நிகழ்வையும் அவர் கோடிட்டுக் காட்டினார். </p><p>இத்தகைய
முன்னுதாரணங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் ஒழுக்கத்தை
வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a6671d-fd4b-4746-9f27-1e512f775545/26-6a53852e5106f.webp' /></p><h2>கேள்வி</h2><p>
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த ரணில்
விக்ரமசிங்க, "நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்குப் போதிய கால
அவகாசம் இருந்தது. இருப்பினும் ஏன் இது குறித்து நீதி அமைச்சின் செயலாளருடன்
பேசவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.</p><p>

இந்தச் சம்பவத்துக்கு நீதி அமைச்சரைப் போலவே, நீதி அமைச்சின் செயலாளரும் சமமான
பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இன்றைய அரசியல் சூழலில்
இத்தகைய பொறுப்புக்கூறல் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T12:14:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்: 4 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-qatar-sheikh-hamad-bin-khalifa-al-thani-1783856469"></link>
            <id>https://tamilwin.com/article/former-qatar-sheikh-hamad-bin-khalifa-al-thani-1783856469</id>
            <summary type="text">நவீன கத்தாரின் சிற்பியாகக் கருதப்படும் அந்நாட்டின் முன்னாள் அமீரும், &#039;தந்தை
அமீர்&#039; என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி&amp;nbsp; 74&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவீன கத்தாரின் சிற்பியாகக் கருதப்படும் அந்நாட்டின் முன்னாள் அமீரும், 'தந்தை
அமீர்' என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி&nbsp; 74&nbsp;வயதில் இன்று(12) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
</p><p>
இத்தகவலை கத்தாரின் அரச நீதிமன்றமான அமிரி திவான் அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளது.</p><p></p><h2>&nbsp;அரசுமுறை துக்கம்&nbsp;</h2><p>

அவரது மறைவையொட்டி கத்தாரில் திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு அரசுமுறை
துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை
அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில்
பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
1995 முதல் 2013 வரை கத்தாரை ஆட்சி செய்த ஷேக் ஹமத், எரிபொருள் வளம் மிக்க
அந்த வளைகுடா நாட்டை உலக அரங்கில் ஒரு முக்கிய சக்தியாக மாற்றிய
பெருமைக்குரியவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf910b57-d055-47ab-86e3-08c3dc4496be/26-6a5380ca5a978.webp' /></p><p>

இவரது ஆட்சிக் காலத்தில் கத்தார் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும்
அசுர வளர்ச்சி கண்டது.</p><p>

உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி நாடாக கத்தாரை
உயர்த்தியதில் இவரது தொலைநோக்கு பார்வை முக்கியப் பங்கு வகித்தது.</p><p></p><h2>முன்னாள் அமீர்</h2><p>
</p><p>
மேலும், 1996-ல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'அல் ஜசீரா' செய்தி ஊடகத்தைத்
தொடங்கியதும் இவரது காலத்தில்தான்.

2004இல் கத்தாரின் முதல் நிரந்தர அரசியலமைப்பை இயற்றியதுடன், உள்ளாட்சித்
தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும், போட்டியிடவும் இவர் உரிமை வழங்கினார்.
</p><p>
கடந்த 2012-ல் கத்தாரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்கள் ஃபிஃபா
உலகக் கிண்ணம் 2012 கால்பந்து தொடரை வெற்றிகரமாக நடத்திய பெருமையும் இவரையே
சாரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6788bb3f-c2cf-4c5e-8e16-090ee415656b/26-6a5380cb09c00.webp' /></p><p>
</p><p>
2013-ஆம் ஆண்டு வளைகுடா நாடுகளின் பாரம்பரிய வழக்கங்களுக்கு மாறாக, தனது
அதிகாரத்தை தனது மகனான தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம்
இவர் தானாக முன்வந்து ஒப்படைத்தார்.
</p><p>
ஷேக் ஹமத்தின் மறைவுக்கு எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி,
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது
பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை சபையில் நிச்சயம் தோற்கடிக்கப்படும்! ஆளுங்கட்சி எம்.பி.நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motion-against-justice-minister-certainly-defeated-1783855241"></link>
            <id>https://tamilwin.com/article/motion-against-justice-minister-certainly-defeated-1783855241</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால்
கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் நிச்சயம்
தோற்கடிக்கப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால்
கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் நிச்சயம்
தோற்கடிக்கப்படும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர
தெரிவித்தார்.</p><p>

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,</p><p>

"நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்டு, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப்
பிரேரணையை முன்னெடுக்கின்றன. இது முற்றிலும் அர்த்தமற்ற ஒரு நடவடிக்கையாகும்.</p><p></p><h2>நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை</h2><p>
</p><p>இதற்கு முன்னரும் எதிர்க்கட்சிகள் இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வந்தபோதும்,
விவாதங்களின் போது அவர்களால் தர்க்க ரீதியான கருத்துகளை முன்வைக்க
முடியவில்லை. அந்த வரிசையில், இந்தப் பிரேரணையும் தோல்வியிலேயே முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/885103c4-ddc5-41fb-bfc5-d04b75e141cd/26-6a537a429d6e4.webp' /></p><p>

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின்னணி மற்றும் அது தொடர்பான காரணங்கள்
குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும்,
சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும்
சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:31:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறு அறிவிப்பு வரும் வரை அதிரடியாக மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-exchange-strikes-strait-of-hormuz-closed-1783852851"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-exchange-strikes-strait-of-hormuz-closed-1783852851</id>
            <summary type="text">&#039;ஹோர்முஸ் நீரிணையை&#039; மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.

இதனால் அமெரிக்கா மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>'ஹோர்முஸ் நீரிணையை' மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.</p><p>

இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத மாற்றுப் பாதையில் சென்ற சைப்ரஸ் நாட்டின் வணிகச் சரக்குக் கப்பல் ஒன்றை நோக்கி ஈரான் கடற்படை எச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியது.
</p><p>
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக முடியும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a42cb6-c6b0-400d-a949-fc5d0a3080e7/26-6a5372e39caca.webp' /></p><p> 

இதன் வழியே எந்தவொரு வணிகக் கப்பல்களும் செல்ல அனுமதி இல்லை என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
ஈரான் வணிகக் கப்பலைத் தாக்கியதற்கும், கடல் எல்லையை மூடியதற்கும் பதிலடியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.</p><p></p><h2>&nbsp;ஈரான் இராணுவம்</h2><p>
</p><p>
ஈரானின் பந்தர் அப்பாஸ், கியூஎஸ்எம் தீவு மற்றும் சிரிக் ஆகிய கடலோரப் பகுதிகளில் உள்ள ஈரானிய இராணுவத் தளங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்கா குண்டுகளை வீசி வருகிறது.
</p><p>
சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடுமையான விலையைக் கொடுக்க வைக்கும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3560438-5949-4336-a296-a2e83a37b7d4/26-6a5372e47e143.webp' /></p><p>
</p><p>
உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடத்தப்படுகிறது.</p><p>

இந்த எரிசக்திப் பாதை மூடப்பட்டுள்ளதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து உலகளாவிய பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம் - மற்றுமொரு பதிவுக்கட்டணமும் சடுதியாக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/union-companies-also-increase-registration-fees-1783850647"></link>
            <id>https://tamilwin.com/article/union-companies-also-increase-registration-fees-1783850647</id>
            <summary type="text">நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கான பதிவுக்கட்டணங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கான பதிவுக்கட்டணங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
</p><p>
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க , இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>நிறுவன பதிவு கட்டணம்</h2><p>

அதன்படி, முன்னர் ரூ. 4600 ஆக இருந்த ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 5200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da6f3f3-8702-4d23-b0b6-482137d2cee3/26-6a536c11146ec.webp' /></p><p>
</p><p>இதனபடி, முன்னர் ரூ. 23,000 ஆக இருந்த அரச வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 26,400 ஆகவும், முன்னர் ரூ. 17,250 ஆக இருந்த ஒரு வரம்பற்ற நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 19,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், நிறுவனத்தின் பெயரை அங்கீகரிப்பதற்கான கட்டணம் ரூ. 2600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, முன்னர் ரூ. 3450 ஆக இருந்த சங்கங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 19,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p> சங்கங்களின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான கட்டணம் ரூ. 1725 லிருந்து ரூ. 1900 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கட்டணம் ரூ. 3900 ஆக உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T10:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தயவு செய்து அவதானமாக இருக்கவும்! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/metrology-department-warning-1783849863"></link>
            <id>https://tamilwin.com/article/metrology-department-warning-1783849863</id>
            <summary type="text">மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் பலத்த காற்று தொடர்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தயவு செய்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று வீசக்கூடும்</h2><p> </p><p>

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T10:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 6 குடும்பங்கள் - அமைச்சர் வழங்கிய வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-families-evicted-in-nuwara-eliya-1783850376"></link>
            <id>https://tamilwin.com/article/6-families-evicted-in-nuwara-eliya-1783850376</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட ஹல்கரனோயா சென்லெனால்ட்ஸ் தோட்டத்தில் வசித்து வந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர், நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட ஹல்கரனோயா சென்லெனால்ட்ஸ் தோட்டத்தில் வசித்து வந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தாங்கள் வசித்து வந்த வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, பிஸ்கல் அதிகாரிகளின் முன்னிலையில் 40 குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனைத் தொடர்ந்து, நிரந்தர மாற்று இருப்பிடம் இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><h2>

நிர்கதியான 40 பேரின் நிலை</h2><p>
பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் ஒரே இடத்தில் தங்கியுள்ள நிலையில், இன்று (12.07.2026) பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி ஆகியோர் நேரில் சென்று அவர்களை சந்தித்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17e7477b-66b1-416a-8815-cf0c176b1adc/26-6a5366560d84f.webp' /></p><p>
</p><p>

இதன்போது, பாலர் பாடசாலையில் தங்கியுள்ள குடும்பங்களின் தற்போதைய நிலை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்துக் கொண்டுள்ளார்.</p><p>

நீண்டகாலமாக வாழ்ந்து வந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளுடன் செல்வதற்கு வேறு இடமின்றி தவித்து வருவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித் தருமாறும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளை கவனமாகக் கேட்டறிந்த பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், அவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் மற்றும் நிரந்தர குடியிருப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6968667b-05c1-4a0d-b926-ddd9674abd30/26-6a5366571503f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b96ddd-597e-419d-a375-69e5ed404eb5/26-6a536657d8366.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f53ee0-bd47-47e2-a0db-0380018735ea/26-6a536658a7577.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T10:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-rise-10000-patients-in-july-1783844286"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-rise-10000-patients-in-july-1783844286</id>
            <summary type="text">இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,000 ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,000 ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 என அப்பிரிவு கூறியுள்ளது.
</p><p>
மேலும், 47 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அதிகபட்சமாக பதிவான நோயாளிகள்</h2><p>
</p><p>
ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 21,538 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

ஜூலை மாதத்தின் கடந்த 11 நாட்களில் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/011027a7-683a-44bc-a3da-d54021b5077b/26-6a5365da694ff.webp' /></p><p>கடந்த 12 நாட்களில் 12,692 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதுவரை பதிவான நோயாளிகளில் அதிகபட்சமாக மேற்கு மாகாணத்தில் 35,823 பேர் பதிவாகியுள்ளனர்.
</p><p>
மேலும், தெற்கு மாகாணத்தில் 10,657 நோயாளிகளும், சபரகமுவ மாகாணத்தில் 5,756 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 5,560 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T10:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் விதிக்கப்படும் இறக்குமதி தடை: ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு..! வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imports-of-forced-labour-made-goods-1783844688"></link>
            <id>https://tamilwin.com/article/imports-of-forced-labour-made-goods-1783844688</id>
            <summary type="text">கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த வகையில், ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கட்டாய உழைப்பை பயன்படுத்தி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகழ்ந்தெடுக்கப்படும், உற்பத்தி செய்யப்படும் அல்லது முடிக்கப்படும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p></p><p> 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஒழுங்குவிதிகள் எந்தெந்தப் பொருட்கள் அல்லது நாடுகளுக்குப் பொருந்தும் என்பது அவ்வப்போது அறிவிக்கப்படும் என குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஆவணங்கள் சமர்ப்பிப்பு</h2><p> </p><p>

இதற்கமைய, ஒரு நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது, அவை கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p></p><p> </p><p>

கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் யோசனை முன்வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3abd558e-cc0d-4d9c-9cf3-f555f1ad21ee/26-6a535c0f771a3.webp' /></p><p> </p><p>

இதன்போது, இலங்கைக்கான பொருட்களுக்கு 12.5 சதவீத மேலதிக வரியை விதிக்க அமெரிக்க நிர்வாகம் பரிந்துரைத்திருந்தது.

கட்டாய உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கும், அந்தச் சட்டங்களைச் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கும் போதிய நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.</p><p>

எவ்வாறாயினும், அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ள புதிய ஒழுங்குவிதியின் பிரகாரம், இனிவரும் காலங்களில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் அல்லது முடிக்கப்படும் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/btQ_TYfWtiM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-12T09:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-election-warning-signal-tamils-1783846649"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-election-warning-signal-tamils-1783846649</id>
            <summary type="text">தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை முன் வைக்க ஜேவிபியினர் ஒருபோதும் தயார் இல்லை. இனியும் அவர்கள் ஒரு தீர்வு பற்றி பேசப் போவதும் இல்லை. ஆனால் தமிழ் மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை முன் வைக்க ஜேவிபியினர் ஒருபோதும் தயார் இல்லை. இனியும் அவர்கள் ஒரு தீர்வு பற்றி பேசப் போவதும் இல்லை.</p><p> ஆனால் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து மாகாண சபை பன்முண்டம் திருத்தச் சட்டம் பத்தி பேசுகின்ற போதெல்லாம் அதற்கு எதிராகவே ஜேவிபி குரல் கொடுத்திருக்கிறது..இனியும் அதேதான் அது செய்யும். </p><p>ஏனெனில் இந்த மாகாண சபை முறை இந்தியாவின் திணிப்பு என்றும் இலங்கையின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரான செயல் என்று ஆணித்தரமாக தமது கருத்தை வலியுறுத்துகின்றனர்.</p><p></p><h2>தமிழ் மக்கள்</h2><p> </p><p>சரி அவ்வாறு இந்தியாவின் திணிப்பு என்று கூறுபவர்கள் தமிழ் மக்கள் ஏற்கக்கக் கூடியதும் தாம் முன்வைக்க வேண்டியதுமான சரியான தீர்வை தமிழ் மக்களுக்கு அவர்கள் முன்வைத்திருக்க வேண்டும்.</p><p> தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இலங்கையின் சிங்கள மக்களுக்கும் மீட்சி இல்லை தேசிய பொருளாதாரத்திலும் மீட்சி இல்லை நாட்டின் தேசிய சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது.</p><p>

இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தையும் மாகாண சபை முறைமையையும் ஜேவிபி தொடக்கத்தில் இருந்தே இன்று வரை எதிர்த்து வருகின்றது.</p><p> இணைக்கப்பட்ட வடக்குக்-கிழக்கு மாகாண சபைகளை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இன்றைய ஜனாதிபதி, அநுரகுமார திசநாயக்க தலைமையில் ஜேவிபி நீதிமன்ற வழக்கொன்றை 14-07-2006 தாக்கல் செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0ec560-4408-49e8-bec9-d83c862548c4/26-6a535d4a53ba8.webp' /></p><p> </p><p>அதற்கு 16-10-2006 ல் இலங்கை உச்ச நீதிமன்றம் வடக்கு கிழக்கு இணைப்பில் இணைக்கப்பட்ட முறைமை தவறானஎன தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் 01-01-2007 சட்டரீதியாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. </p><p>ஜேவிபி எதை விரும்பியதோ அதில் முழுமையாக வெற்றி பெற்றது. தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களற்ற ஒரு அரைகுறை மாகாண சபையை கூட தொடர்ந்து நடத்த விடாமல் தடுப்பதில் சிங்கள ஆட்சியாளர்களும், சிங்கள கட்சிகளும் வெற்றி பெற்று வருகின்றனர்.</p><p>

சிங்கள இனவாத அரசியல் யாப்புக்கு உட்பட்ட தம்மாலேயே உருவாக்கப்பட்ட அந்த அரைகுறை அரசியல் யாப்பு ஏற்பாட்டை கூட கடந்த 9 ஆண்டுகளாய் தொடர்ந்து செயல்படுத்தாமல் இருப்பது கவனத்திற்குரியது.</p><p>சிங்கள இனவாதத்தின் அர்த்தத்தில் அவர்களின் யாப்பை அவர்களே கொலை செய்து வருவதை இது காட்டுகிறது. அவர்களின் உண்மையான நோக்கம் தமிழ் மக்களுக்கு எந்தவித அரசியல் உரிமைகளையும் வழங்காது தமிழ் இனத்தை அடையாளம் இன்றி இலங்கை தீவில் அழித்தொழிப்பதுதான்.</p><p>இது மகாநாமதேவரின் தம்ம தீபக் கோட்பாட்டை ஜேவிபினரும் தொடர்ந்து கைகொள்கிறார்கள் என்பதை வெளிப்படையாக சுட்டி நிற்கிறது.

ஜேவிபியின் ஆயுதப் போராட்டம் என்பது சிங்கள தேசத்தின் ஆட்சி அதிகாரக் கைப்பற்றுவதுதான்.</p><p></p><h2>முள்ளிவாய்க்கால்&nbsp;பேரழிவு</h2><p> </p><p>ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தமிழினத்தை சிங்கள பௌத்த இனவழிப்பிலிருந்து பாதுகாப்புக்கான போராட்டமாகும். ஜேவிபி யினர் தம்மை மார்க்சிச லெனினிச இடதுசாரிகள் என்று அழைத்துக் கொண்டாலும் லெனின் குறிப்பிடுகின்ற தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை இவர்கள் முழுமையாக எதிர்கின்றனர். </p><p>அந்த அடிப்படையில்த்தான் தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையை கேவிபினர் எதிர்க்கின்றனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி இனப்படுகொலையை ஆதரித்து முன் நின்று நடத்தியவர்கள்.</p><p> இன ஒடுக்கு முறையை மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பாளன் ஒடுக்கப்படுபவர் மீது மேற்கொள்ளுகின்ற வன்முறையையும், ஒடுக்கப்படுவோன் தன்னை தற்பாதுகாத்துக்கொள்வதற்காக ஒடுக்குமுறையாளன் மீது மேற்கொள்கின்ற வன்முறையையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/580a213a-e169-4450-b8ad-187cf2fb9b05/26-6a535d4b0b61c.webp' /></p><p> ஒடுக்குபவனின் ஒடுக்குமுறை வன்முறையையும் ஓடக்கப்பஐவோனின் தற்காப்பிற்கான வன்முறையையும் சமப்படுத்தவும் முடியாது. </p><p>இந்த அடிப்படையில் அழிவுக்கு உட்பட்டிருக்கும் தமிழர்கள் ஒடுக்குமுறையாளர் மீது தம்மை பாதுகாக்க மேற்கொள்கின்ற வன்முறையை பயங்கரவாதம் என்று கூறி சமப்படுத்தும் ஜேவிபியினரை எப்படி இடதுசாரிகள் என அழைக்க முடியும்??இவர்கள் தெளிவான அர்த்தத்தில் இனவாதிகளே.
</p><p>
முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்களைக் கொன்றொழித்து இனப்படுகொலை செய்ததன் வாயிலாக ஆயுதப் போராட்டத்தை முடக்கியுள்ளனர். </p><p>தமிழ் மக்களின் பாதுகாப்பு கவசமாக இருந்த ஆயுப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் அழித்தொழித்துள்ள பின்னணியில் பாதுகாப்புக்கான எந்தவித தடுப்புச் சுவரும் இல்லாது இரத்தம் சிந்தும் இனப்படுகொலையை அரங்கேற்றிய சூழலில், அதன் அடுத்த கட்டமாக 'சமாதானம்', ' தேசிய ஐக்கியம்', ' ஒருமைப்பாடு' என்று கூறிக்கொண்டு தமிழ் இனத்தை தோல் இருக்க சுளை பிடுங்கும் வகையில் சிங்கள இனமயமாக்கும் இன்னொரு கட்ட இனப்படுகொலையை ஜேவிபி அரங்கேற்றி வருகின்றது.</p><p>துப்பாக்கியால் இரத்தம் தோய்ந்த வகையில் செய்யப்படும் இனப்படுகொலையும் இனஅழிப்புத்தான். தமிழரை சிங்கள இனமாக இனமயமாக்கம் செய்வதும் இன அழிப்புத்தான்.</p><p>
 ஏன் ஜேவிபி யினர் கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றையும் முன்வைக்கவில்லை? அல்லது முன்மொழியவில்லை? அது பற்றி எதுவுமே பேசவுமில்லை என்பதனை மிக ஆழமாக ஆராய்வது அவசியமானது. </p><p>தமிழ் மக்களுக்கென வட-கிழக்கு மாகாணத்துக்கு உரிய அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் , அதற்கான அரசியல் அதிகார அலகை உருவாக்கி விட்டால், தமிழினம் தன்னை தற்காத்துக் கொண்டு விடும். </p><p>அது மாத்திரமன்றி அது தனது பலத்தில் வடகிழக்கை பலப்படுத்தியும் விடும் என்பதோடு சர்வதேச ஆதரவோடு கிழக்கு மாகாணத்தில் இனவழிப்பை தடுத்துவிடும் என்பதனால் தமிழ் மக்களுக்கு என்று ஒரு அரசியல் தீர்வு இருக்கக் கூடாது என்பதில் ஜேவிபி மனசார விரும்புகிறது, அதையே தமிழ் மக்கள் சார்ந்த தனது கொள்கையாகக் கொண்டுள்ளது,

இந்தப் பின்னணியில்தான் இப்போது நடைமுறைப்படாத அரைகுறை மாகாண சபை அரசியல் தீர்வை கூட இல்லாது ஒழித்து விட வேண்டும் என்று ஜேவிபி கங்கணம் கட்டி நிற்கிறது.</p><p></p><h2>இலங்கை இந்தியா ஒப்பந்தம்</h2><p> </p><p>இப்போது இலங்கை அரசியல் யாப்பில் 13ம் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக பெயரளவுக்காவது ஒரு எழுத்து வடிவில் காணப்படும் இந்த மாகாண சபையை நீக்கினால் தமது முழு இரும்புக்கரம் கொண்டு இராணுவ சூழலில் தமிழ் மக்களை முற்றும் முழுவதுமாக 'சமாதானம் ' , 'இனஐக்கியம்' என்ற போர்வையில் சிங்கள இனமயமாக்கம் செய்து கொள்வது சாத்தியம் என்று சிங்கள இனவாத சக்திகள் முழுமையாக நம்புகின்றன.</p><p>

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு தலைமைகள் இல்லை, எல்லாம் உதிரிகளாய் உடைந்து போய்கிடக்கின்றன. </p><p>தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு ஆகக் குறைந்தது தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் சிலவற்றையாது பெற்றுக் கொடுக்க கடந்த 17 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் தலைவர்களாலும் முடியாமல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a57a476e-9e90-4769-b745-98d80bb0531e/26-6a535d4bb3e60.webp' /></p><p> இந்நிலையை மேலும் வளர்த்தெடுத்து தமிழ் மக்கள் மத்தியில் முற்றாகத் தலைமை இல்லாத ஒரு சூழலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்தினால் தமிழ் மண்ணில் தமிழ் தலைமைகள் பதவிக்க வரமுடியாது என ஜேவிபி நினைக்கின்றது.
</p><p>
எந்தவித அதிகாரங்களும் அற்று இந்த 39 ஆண்டுகளாக அதிகாரங்கள் படிப்படியாக பிடுங்கப்பட்டு தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக எதனையும் செய்ய முடியாத ஒரு அரை குறை மாகாண சபையைக் கூட தமிழர்கள் நடத்தக்கூடாது என்பதில் விடாப்படியாக உள்ளார்கள்- ஆயினும் இந்த வருடம் மாகாண சபை நடத்த முடியாது அடுத்த வருடம் மாகாண சபை நடத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். </p><p>தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை இயங்க விடுவதும் அவர்களது திட்டமல்ல. அவ்வாறே , மாகாண சபை தேர்தல்களை வைப்பதும் அவர்களது நோக்கம் அல்ல. இந்த மாகாண சபை முறையை முற்றாகக் கலைத்து விடுவதே அவர்களது நோக்கம். </p><p>அதற்கான வியூகத்தையும் வாய்ப்பையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.</p><p>இலங்கை அரசு 1987 கால கட்டத்தில் பிராந்திய மற்றும் உலக அரசியல் நெருக்கடியில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக இலங்கை ஜனாதிபதி ஏ ஆர் ஜெயவர்த்தனா இந்திய அரசியலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பௌத்த சிங்கள அரசை பாதுகாப்பதற்கான ராஜதந்திர சேட் பாட்டில் ராஜதந்திர செயல்பாட்டில் வெற்றி பெற்றார் அதுதான் இந்தியா விரும்பிய அரசியல் தீர்வை சிங்கள தேசத்துக்கு சாதகமாக மாற்றும் பாக்கு நீரினை அரசியல் சக்கர வியூகமாக(Entanglement) இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை மாற்றிவிட்டார்.</p><p> இந்தியாவுடனான ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிற்தான் இந்த மாகாண சபையை உருவாக்கினார்கள். ஆதலால் இதனை நீக்குவதற்கு, குலைப்பதற்கு இந்தியாவுக்கு பதில் சொல்ல வேண்டும்.</p><p>அதே நேரத்தில் இந்தியாவும் இந்த மாகாண சபையை முறமையை நிராகரிக்கவும் முடியாது அதைவிட மேலும் செல்ல முடியாமலும் உள்ளது.</p><p> ஆகவே இந்த மாகாணம் சபை முறை என்பது இந்திய அரசும் ஈழத் தமிழர்களும் மாட்டியிருக்கும் ஒரு சக்கர வியூகம்தான் என்பதனை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் 

இன்னிலையில் தமிழருக்கான தலைமைகள் எனப்படுவோர் பெரிதும் சீரழிந்து சீர்கெட்டு ஓடுகாளிகளாக இருக்கக்கூடிய இன்றைய சூழலில், வட மாகாணத்தை தாம் தேர்தல் மூலம் நிச்சயமாக கைப்பற்ற முடியும் என நம்பும் ஒரு சூழல் உருவாகின்ற போது மாகாண சபைகளுக்கான தேர்தல்களை வைக்கலாம் என்று ஜேவிபினர் திட்டமிட்டுள்ளனர்.</p><h2>மாகாண சபை&nbsp;</h2><p> </p><p>ஆதலால் தான் இப்போது தமக்கு சாதகமான சூழல் இல்லை என்பதனால் இவ்வருடம் தேர்தல் நடத்த நிதி இல்லை என்று சொல்லி மாகாண சபைகளுக்கான தேர்தல் இனி அடுத்த வருடம்தான் என்று கதை அளக்கிறார்கள். அவர்களின் கபடத்தனமான திட்டம் பின்வருமாறு அமைய வாய்ப்புண்டு என்பதை தமிழ் மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p>

அதாவது வட மாகாண சபையை ஜேவிபி இனர் கைப்பற்றி விட்டால் மாகாண சபை முறைமை வேண்டாம் என்று மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதியையும் நாடாளுமன்றத்தையும் நோக்கி நிறைவேற்றிவிட்டு மாகாண சபை முறையை கலைப்பதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். </p><p>அதற்குப் பின்னர் தமிழர்களே மாகாண சபையை எதிர்க்கிறார்கள் என்பதன் ஊடாக இந்திய அரசு எந்த வகையிலும் தலையிட முடியாமல் போய்விடும்.

அத்தோடு ஜேவிபிக்கு நாடாளுமன்றத்தில் 3/2 பெரும்பான்மை இருப்பது மட்டுமல்ல சிங்கள இனவாதிகள் எக்கச்சிகளை சேர்ந்தவர்கள் ஆயினும் ஆதரிப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b665e413-14b9-44d4-ac35-f533eddb5e18/26-6a535d4c63ec0.webp' /></p><p> </p><p>அதன்படி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியல் யாப்பில் இருந்து மாகாண சபை முறையை நீக்கி விடலாம். இதற்கு பொதுவாக்கெடுப்பில் ஆதரவை பெற வேண்டி ஏற்படும் நிலையில் அதற்கு பிரச்சினை இருக்காது.</p><p> ஏனெனில் தமிழருக்கு எதிரான முழுநாடு தழுவிய தேர்தலில் சிங்கள மக்கள் தமிழருக்கு எதிரான தமது இனவாதத்தின் பக்கமே வாக்களிப்பர்.</p><p> இதனை முன்கூட்டியே தமிழ் தலைமைகள் உணர்ந்து தமது புத்திகளை சற்று கூர்மையாக்கி கொண்டு மாகாண சபை தேர்தல் என்கின்ற விடயத்தில் ஜேவிபியினை வெற்றி பெறவிடாது செய்வதற்கான அரசியலை அவர்கள் முன்ஜோசனையுடன் முன்னெடுக்க வேண்டும்.

இங்கு இத்தகைய கட்டத்தில், இத்தகைய பின்னணியில் மாகாண சபை வேண்டுமா? வேண்டாமா? என்பதல்ல தமிழ் மக்கள் பக்கம் உள்ள கேள்வி. </p><p>ஜேவிபி வட மாகாணத்தில் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் தமிழ் மக்கள் தமக்கான சுயாட்சி அதிகாரங்களையும் விரும்பவில்லை, கேட்கவில்லை என்கின்ற ஒரு பிரகடனமே உள்நாட்டிலும் வெளிநாடுகள் முழுவதும் சிங்கள இனவாதிகளால் முன் வைக்கப்படும்.</p><p> இத்தகைய சிங்கள இனப்படுகொலை அரசியல்வாதிகள் மிகவும் புத்தி கூர்மையாக கடந்த காலம் முழுவதும் செயல்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு தமிழ் தரப்பினர் இவ்விடயத்தை முன் முன்கூட்டிய அறிவுடன் கருத்தில் கொள்ளவேண்டும்.</p>]]></content>
            <updated>2026-07-12T09:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் - நீர் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-water-users-1783838389"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-water-users-1783838389</id>
            <summary type="text">எல்நினோ வானிலை முன்னறிவிப்பு காரணமாக, விவசாயிகள் மற்றும் அனைத்து நீர் பாவனையாளர்களும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ வானிலை முன்னறிவிப்பு காரணமாக, விவசாயிகள் மற்றும் அனைத்து நீர் பாவனையாளர்களும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
நாட்டின் 80 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது அவற்றின் மொத்த கொள்ளளவில் சுமார் 48% அளவில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

இதற்கிடையில், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பக் குறியீடு எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b8a1263-71b4-452d-b104-4b2ef4a68e79/26-6a533c67bc76b.webp' /></p><p>
</p><p>வானிலை ஆய்வுத்திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்ப எச்சரிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெப்பமான வானிலைக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T08:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
