<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-13T10:23:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விசேட செயற்றிட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/equal-opportunity-for-children-with-special-needs-1783933691"></link>
            <id>https://tamilwin.com/article/equal-opportunity-for-children-with-special-needs-1783933691</id>
            <summary type="text">விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.</p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p></p><h2>பிள்ளைகளைக் கையாளும் விதம்</h2><p>

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், விசேட தேவையுடைய பிள்ளைகளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தனித்தனியாகக் கற்பிக்கும் பழைய முறையைக் கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b43e52b-5cce-4cde-ad77-7a4eaa9383bf/26-6a54b32531f85.webp' /></p><p>விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளுடன் கூடிய செயற்பாடு சார்ந்த கல்வி முறையும், நடத்தை ரீதியான பழக்கப்படுத்துதல்களும் அத்தியாவசியமானவை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அப்பிள்ளைகளைத் தனிமைப்படுத்தாமல் சாதாரண பிள்ளைகளுக்கு மத்தியிலேயே அவர்கள் வளர்வதற்குக் தகுந்த வாய்ப்பளிப்பது மிகவும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டினார். </p><p>

இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான முதற்படியாக, விசேட தேவையுடைய பிள்ளைகளைக் கையாளும் விதம் குறித்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மற்றும் பயிற்சி அளிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இலங்கையின் தேசியக் கல்வி முறைமைக்குள் ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியைப் பெறும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வாய்ப்புகள் தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T09:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillayan-s-remand-extended-further-1783933156"></link>
            <id>https://tamilwin.com/article/pillayan-s-remand-extended-further-1783933156</id>
            <summary type="text">&#039;பிள்ளையான்&#039; என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவருக்கு விளக்கமறியல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு</h2><p>இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>அதன்படி பிள்ளையான், எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6609a1-e474-406a-9296-8ba4fce60555/26-6a54ae7bb3969.webp' /></p><p>இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T09:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் நெல் கொள்வனவுக்கு விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farmers-kilinochchi-facilitate-procurement-paddy-1783932353"></link>
            <id>https://tamilwin.com/article/farmers-kilinochchi-facilitate-procurement-paddy-1783932353</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு
செய்யும் வகையில் அவர்களுக்கான படிவங்களை இன்று முதல் வழங்கப்படுவதாக நெல்
சந்தைப்படுத்தல் சபையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு
செய்யும் வகையில் அவர்களுக்கான படிவங்களை இன்று முதல் வழங்கப்படுவதாக நெல்
சந்தைப்படுத்தல் சபையினுடைய பிராந்திய( பதில்) முகாமையாளர் தவராசா கஜேந்திரன்
தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;இன்று (13.07.2026) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல்
கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நெல் கொள்வனவு</h2><p>

இதற்கமைவாக, தற்சமயம் அதிக நெல் அறுவடை இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து நெற்
களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98563784-1d41-40f3-a438-32ed3812cd2f/26-6a54a7f66310b.webp' /></p><p>

அதற்கமைய, வடக்கு மாகாணத்தில் , தற்போது அதிகளவில் நெல் அறுவடை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பிரதேசங்களில் நெல் கொள்வனவு
மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டு நெல் 120 ரூபாவிற்கும், ஒரு
கிலோ சம்பா நெல் 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும்
கொள்வனவு செய்யப்படவுள்ளன.
</p><p>
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தினுடைய நெல் கொள்வனவு தொடர்பில் கருத்து
தெரிவித்த அவர் மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிகளிடம் இருந்தும் தலா 2500 கிலோ
நெல்லை கொள்ளுதல் செய்யும் வகையில் இன்றைய தினம் முதல் அதற்கான படிவங்களை
வழங்கி வருவதாகவும் மாவட்டத்தில் இரண்டாயிரம் மெற்றிக் தொன் நெல்லை
கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T08:55:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக வைத்தியரை நாடவும்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sexually-transmitted-diseases-warning-people-1783929909"></link>
            <id>https://tamilwin.com/article/sexually-transmitted-diseases-warning-people-1783929909</id>
            <summary type="text">நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள் (STDs) பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய பாலியல் நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள் (STDs) பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய பாலியல் நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் (NSACP) தெரிவித்துள்ளது.</p><p>இந்த நோயாளிகள் கடந்த ஆண்டு முதல் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பதிவாகியுள்ள எய்ட்ஸ் நோயாளிகள்&nbsp;</h2><p>இந்த தரவு அறிக்கைகளின்படி, (2920) நோயாளிகள் ஹெர்பெஸ் நோயாலும், (2284) நோயாளிகள் பிறப்புறுப்பு மருக்களாலும், (1289) நோயாளிகள் சிபிலிஸ் நோயாலும்,&nbsp; (692) நோயாளிகள் கொனோரியா நோயாலும், மற்றும் (2847) நோயாளிகள் பிற பாலியல் நோய்த்தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9efcffc9-fe93-4c51-9085-6521bcdde863/26-6a54a5f6f33aa.webp' /></p><p>
மேலும், கடந்த ஆண்டு முதல் (874) எய்ட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
புண்கள், கொப்புளங்கள், பிறப்புறுப்புகளில் வலி, கட்டிகள் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.</p><h2>மருத்துவ பரிசோதனை</h2><p>
</p><p>இதேவேளை, தொடர்ந்து பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் நபர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இந்த நிலையை தடுக்க முடியும் என்று இலங்கை தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டம் கூறுகின்றது.
</p><p>
இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதற்கு தேவையான தகவல்களை KNOW4SURE.LK என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T08:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வியாபார நடவடிக்கைகளுக்காக 34 கடைகள் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/business-activity-in-kilinochchi-1783932283"></link>
            <id>https://tamilwin.com/article/business-activity-in-kilinochchi-1783932283</id>
            <summary type="text">கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட
பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள 34 கடைகள் மொத்த வியாபாரிகளின் வியாபார
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட
பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள 34 கடைகள் மொத்த வியாபாரிகளின் வியாபார
நடவடிக்கைக்கு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வினால்
கையளிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த நிகழ்வு இன்று(13.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் 40
கடைத் தொகுதிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07821ba-5294-47c6-a5ab-39558fdb7a59/26-6a54a5bb9e2dc.webp' /></p><p> </p><p>

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம்
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. </p><p>குறித்த செயல்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0df940fa-039c-492a-950d-791425150335/26-6a54a5bca59c4.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T08:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37th-anniversary-of-the-death-of-appapillai-1783931575"></link>
            <id>https://tamilwin.com/article/37th-anniversary-of-the-death-of-appapillai-1783931575</id>
            <summary type="text">தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வுகள் இன்று(13.07.2026) யாழ். பண்ணாகத்தில் உள்ள வலி. மேற்கு
பிரதேசசபைக்கு முன்பாகவுள்ள அவரின் உருவச் சிலை முன்னாள் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது, தமிழர்களின் மூத்த அரசியல் தலைவரும் நாடாளுமன்றத்தின் முதலாவது தமிழ்
எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 
அ.அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a427b99-7dd3-4f00-a69a-f29b358e88ee/26-6a54a32dae13b.webp' /></p><p> </p><p>


அத்துடன், அவரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது. </p><p> 

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம்
சித்தார்த்தன் மற்றும் பண்ணாகம் கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b64ae8b-8f2e-48c1-bb76-f4bb448d4e5a/26-6a54a32ed83ac.webp' /></p><p></p><p></p><p></p><h2>கிளிநொச்சி</h2><p>தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் முதலாவது தமிழ் எதிர்கட்சி
தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37வது நினைவு தின நிகழ்வு
இன்று,13.07.2026 கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு, தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி
அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/577bd792-c896-4206-9006-bf92cc9b6bd0/26-6a54bb53035aa.webp' /></p><p> </p><p>

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி
தலைமையில் நடைபெற்றுள்ளது. </p><p>

 இதன்போது, அமிர்தலிங்கத்தின் திருவுருவ படத்திற்கு ஈகச்சுடர்
ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T08:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலிடம் ரணில் பேசிய இரகசியம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-gota-ranil-meeting-discussion-1783910685"></link>
            <id>https://tamilwin.com/article/namal-gota-ranil-meeting-discussion-1783910685</id>
            <summary type="text">சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. </p><p>

இதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரணில், நாமலின் சந்திப்பு தொடர்பான காணொளி வெளியாகி இருந்தது. </p><p>

பொது நிகழ்வு ஒன்றின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நாமல் ராஜபக்சவும் மிகவும் நெருக்கமாக கலந்துரையாடல் காணொளி பேசுபொருளாகியது.</p><p></p><p> </p><h2><b>

திருமண நிகழ்வு</b></h2><p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரின் திருமண நிகழ்வு கடந்த புதன்கிழமை இரவு சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f68f346-fdaa-487b-924b-f11d90a962f4/26-6a54825ce9296.webp' /></p><p>இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
</p><p>
இதன்போது நாமல் ராஜபக்சவுடன் ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்சவும் உரையாடும் விதத்தை பலரும் அவதானித்தனர்.</p><h2>கிராம வேலைத்திட்டம்</h2><p> 

ரணிலுடன் பேசப்பட்ட விடயம் தொடர்பில் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

அதற்கு நாமல் பதிலளிக்கையில், தற்போதைய அரசியல் செயற்பாடு குறித்து ரணில் கேள்வி எழுப்பியிருந்தார். </p><p>கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டத்துடன் நாடு முழுவதும் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். </p><p>

தனிப்பட்ட விடயங்களை குறித்து உரையாடியதுடன், விரைவில் நேரடியாக இணைந்து பணியாற்றுவோம் என ரணில் குறிப்பிட்டதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DElKkkz9dlg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-07-13T08:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறை: கைதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-incident-news-updates-tamil-1783929539"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-incident-news-updates-tamil-1783929539</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் இரண்டு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலின் போது, கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த கழிவறைத் தொட்டிகளின் உடைந்த பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் இரண்டு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலின் போது, கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த கழிவறைத் தொட்டிகளின் உடைந்த பாகங்கள் மற்றும் சமையலறையில் இருந்த தேங்காய்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

தாக்குதலில் ஈடுபட்ட கைதிகள், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டதுடன், மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற சிறை அதிகாரிகளையும் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>கொடூரமான தாக்குதல்</h2><p>
</p><p>
மேலும், சிறை சமையலறையில் இருந்த கத்திகள், மருத்துவப் பிரிவில் இருந்த கத்தரிக்கோல்கள் மற்றும் உடற்பயிற்சி மையத்தில் இருந்த பல்வேறு இரும்புக் கருவிகளும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஏழாவது நாளில் கைதிகளின் நிலைமையைப் பார்வையிடச் சென்ற சிறை அதிகாரிகள் மீது இந்த ஆயுதங்களைக் கொண்டு கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55fb43be-bb4b-48c3-b83c-64a8c5bcb853/26-6a549f34d2d50.webp' /></p><p>

தாக்குதல் நடத்திய கைதிகள், சிறை அதிகாரிகளின் தலைகளை குறிவைத்து தாக்கியதாகவும், அவர்களைக் கொல்வதே முதன்மை நோக்கமாக இருந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
சம்பவத்திற்குப் பிறகு, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் இரகசியக் பொலிஸ் பிரிவினர் சிறைக்குள் சிறப்பு சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்தச் சோதனைகளில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், தேங்காய்கள், கத்திகள், கத்தரிக்கோல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f00f1374-e89f-4b14-9613-91409815691e/26-6a549f3580dc2.webp' /></p><p>
</p><p>
இவை அனைத்தும் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக சமர்ப்பிக்கப்படுவதற்காக பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைக்குள் வெடித்த இந்த தொடர் வன்முறைச் சம்பவங்களில், ஒரு சிறை அதிகாரி மற்றும் எட்டு பொலிஸார் உட்பட மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p>
இந்த மோதல்களில், சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளமையும்&nbsp;இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T08:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு அச்சுறுத்தல் : முன்பள்ளி சிறுவர்கள் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-preschool-children-protect-clothing-1783927800"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-preschool-children-protect-clothing-1783927800</id>
            <summary type="text">தற்போது நிலவி வரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிகளுக்கு அனுப்பும் குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவி வரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிகளுக்கு அனுப்பும் குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அவர்கள் அணிவதை உறுதி செய்யுமாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
 

தேசிய குழந்தைப்பருவ வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
</p><p></p><h2>எதிர்வரும் இரண்டு வாரங்கள்</h2><p>
 

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்பள்ளி குழந்தைகள் தங்கள் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து முன்பள்ளிகளுக்கு வரலாம் என கல்வி அமைச்சகம் சமீபத்தில் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96179f11-55a6-426c-9c89-cc87c2a26a7c/26-6a5497668727e.webp' /></p><p>நுளம்புக் கடியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம், மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.</p><p>முன்பள்ளி குழந்தைகளுக்கும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தக்கூடிய நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். நுளம்பு கடியியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் நான் அனைத்து பெற்றோரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார். </p><p>இந்த நெருக்கடி பாடசாலைகளுக்குள்ளும் காணப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களும் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கடன் அட்டை பயன்படுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/credit-card-debt-has-increased-1783924172"></link>
            <id>https://tamilwin.com/article/credit-card-debt-has-increased-1783924172</id>
            <summary type="text">இலங்கையின் நிலுவையில் உள்ள கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ. 10313 மில்லியனால் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் (2026) தொடக்கத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நிலுவையில் உள்ள கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ. 10313 மில்லியனால் அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டின் (2026) தொடக்கத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாத இறுதி வரையிலான நான்கு மாதங்களில் இந்த தொகை அதிகரித்துள்ளது.</p><p></p><h2>மத்திய வங்கியின் தகவல்</h2><p>

அதன்படி, இந்த ஆண்டின் (2026) தொடக்கத்தில் ரூ. 189706 மில்லியனாக இருந்த நிலுவையின் கடன் பொறுப்பு தற்போது அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf85072-6a8e-45b2-8556-fa3158ea5722/26-6a5494efd8f82.webp' /></p><p>
</p><p>
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ரூ. 200019 மில்லியனால் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற அதிரடிப்படை வீரர் சடலமாக மீட்பு! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-stf-soldier-swept-away-in-river-recovered-1783927128"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-stf-soldier-swept-away-in-river-recovered-1783927128</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த கடத்தல்காரர்கள் குழுவொன்றை கைது செய்வதற்காக சென்ற விசேட அதிரடிப்படையின் (STF) சார்ஜன்ட் ஒருவர் நீரில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த கடத்தல்காரர்கள் குழுவொன்றை கைது செய்வதற்காக சென்ற விசேட அதிரடிப்படையின் (STF) சார்ஜன்ட் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p>சேருநுவர திட்டன்தெட்டி மணல் துறைப் பகுதியில் இன்று (13) பகல், அவரது சடலம் மீட்கப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர தேடுதல்&nbsp;</h2><p>
</p><p>இன்று (13) அதிகாலை, கிண்ணியா முடுக்குத்தெட்டி மணல் துறையூடாக மகாவலி ஆற்றைக் கடந்து, சட்டவிரோத மணல் கடத்தல் குழுவை சுற்றிவளைத்து கைது செய்வதற்காக சூரியபுர STF முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36cdb135-918c-43f3-af5e-a2f9a41d6bc0/26-6a5496615bdde.webp' /></p><p>
</p><p>
இதன்போது, மகாவலி ஆற்றைக் கடக்க முயன்ற வேளையில் ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக, பொலிஸ் சார்ஜன்ட் சாந்த கிஹான் ரணசிங்க (39) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

உயிரிழந்த சார்ஜன்ட், பத்தரமுல்ல ஜயவத்தனகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று காலை முதல் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.</p><p></p><h2>சடலம் மீட்பு</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து இன்று பகல் சேருநுவர திட்டன்தெட்டி மணல் துறைக்கு அருகிலுள்ள ஆற்றுப் பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91a1f04d-5f7f-417c-8963-c5c2686c541e/26-6a5496620fc96.webp' /></p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

கடமையில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரரின் மறைவு, பாதுகாப்புப் படையினரிடையிலும் அப்பகுதி மக்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நியமனத்தை மீளாய்வு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-infront-of-trincomalee-1783926848"></link>
            <id>https://tamilwin.com/article/protest-infront-of-trincomalee-1783926848</id>
            <summary type="text">சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (1...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (13.07.2026) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>கவனயீர்ப்பு நடவடிக்கை</h2><p></p><p>இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும், அநுர ஆட்சியில் அநீதியா? போன்ற வாசகங்களை
ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.</p><p>மேலும் மத்திய அரசாங்க சுகாதார அமைச்சினால் குறித்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள்
கோரப்பட்டிருந்தன எனவும், தங்களுக்கு நியாயமான நியமனங்களை அரசியல் தலையீடு இன்றி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணொருவரிடம் மோசமான முறையில் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/presidential-secretariat-1783926097"></link>
            <id>https://tamilwin.com/article/presidential-secretariat-1783926097</id>
            <summary type="text">பெண் ஒருவருக்கு நடந்த அசாதாரணத்தை தீர்த்து வைப்பதாக பாசாங்கு காட்டி அவளிடம் பணம் மற்றும் தவறான முறையில் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண் ஒருவருக்கு நடந்த அசாதாரணத்தை தீர்த்து வைப்பதாக பாசாங்கு காட்டி அவளிடம் பணம் மற்றும் தவறான முறையில் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என தொலைபேசியில் பேசியவர் தொடர்பில் குருநாகல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,&nbsp;</p><p> தனது தந்தைக்கு சொந்தமான, நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட காணியை, பிரதேச செயலகத்தினால் சட்டபூர்வமாக வழங்க மறுப்பதாகவும் குருநாகல் 54ஆம் பிரிவின் கிராம உத்தியோகத்தரும் தடுப்பதோடு எவ்வித கட்டுமானத்தையும் செய்ய விடுவதில்லை.
</p><h2>
</h2><p></p><h2>அரச நிறுவனங்கள் போடும் தடைகள்</h2><p>எங்களை அங்கிருந்து விலகுமாறும், சட்டவிரோத கட்டுமானங்களை செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்கள். எங்களை அங்கு குடியேறவோ, ஒரு வீடு கட்டவோ அனுமதிப்பதில்லை. </p><p>இந்த பிரச்சினை தொடர்பில்&nbsp; ஜனாதிபதி, பிரதமரிடம் நீதி கேட்கிறேன் என ஊடகங்கள் வாயிலாக குறித்த பெண் காணொளி ஒன்றை 
வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82a228fe-6962-4aca-83f0-886ea42f49c0/26-6a548d537c64b.webp' />&nbsp;&nbsp;</p><p>
அரச அதிகாரிகளிடமிருந்து தனக்கு நேர்ந்த அநீதிக்கு முறையான தீர்வு கிடைக்காததால், சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
</p><p>அந்தச் செய்தி ஒளிபரப்பாகி சில மணித்தியாலங்கள் செல்வதற்குள், தான் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
</p><p>பின்னர் அவளது பிரச்சினை குறித்து வினவியுள்ள அந்த நபர், அதற்குரிய அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>அதன் பின்னர், அந்தப் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் இந்த நபர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார்.
</p><h2>தொலைபேசி உரையாடல்</h2><p>தொலைபேசி உரையாடலின் போது குறித்த பெண்ணிடம் பல தகவல்களை அவர் கேட்டுள்ளார்.அதன் பின்னர் தான் எங்கு வரவேண்டும் என கோட்டுள்ளார்.</p><p>அப்போது "நீ பத்தரமுல்லைக்கு வர வேண்டும். தேவையில்லாமல் கண்ட கண்ட இடங்களுக்குச் சென்று, அலைந்து திரிந்து ஏமாறுவதை விட, எளிதான வழி&nbsp; இது தான்“ எனக் கூறியுள்ளார்.
</p><p>எவ்வாறாயினும், உரையாடலின் போது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பெண் மேலும் கேள்வி எழுப்பிய போது, தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் ஒரு போலிச் செயலாளர் என்பது அம்பலமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3dd869c-8b70-4913-9541-11b43544f5ca/26-6a5492caa1903.webp' /></p><p> </p><p>அதன் பின்னர் அவர் அவளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாகக் குறிப்பிடப்படுகிறது.
“நீ ஒரு கருங்கல்லில் போய் தலையை முட்டிக் கொண்டாய். இதோ பார், இன்னும் 24 மணித்தியாலத்திற்குள் உனக்கு என்ன அதிகாரம் இருந்தாலும், நான் உன்னைத் தேடி வருவேன். உனக்கு என்ன நடக்கும் என்பதை நீயே நன்றாகப் பார்த்துக்கொள்வாய்" என மிரட்டியுள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் தற்போது குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கமைய, குருநாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில்,</p><p>ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எனப் போலியாகத் தோன்றி அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர் யார் என்பதைக் கண்டறிய விசேட பொலிஸ் குழுவொன்று பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>அனைத்து அரசு அதிகாரிகளும் குறித்த நபர் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என ஏமாந்துவிட்டார்கள். இப்போது எனது பிள்ளையைக் கடத்துவதாகக் கூறுகிறார். </p><p>இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் பயப்படுகிறேன். இந்த நபர் யார் என்பதைச் சட்டத்தின் முன் நிறுத்தி, எனக்கு நியாயத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T07:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் சட்ட விரோதிகளே..! அநுர அரசில் தொடரும் குற்றச்சாட்டுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dayasiri-jayasekara-mp-criticism-anura-government-1783925842"></link>
            <id>https://tamilwin.com/article/dayasiri-jayasekara-mp-criticism-anura-government-1783925842</id>
            <summary type="text">இலங்கையில் அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது என்றும், இதனைத்
தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுதான் என்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது என்றும், இதனைத்
தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுதான் என்றும் 
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி
ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். </p><p>

குருநாகலில் நேற்று(12.07.2026) இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிக்
கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் சட்ட விரோதிகளே</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சிவில் அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சி
உறுப்பினர்களை ஆட்சியாளர்கள் விரோதிகளாகவே கருதப்படுகிறார்கள்.</p><p> 

மேலும், அரச நிதி மோசடி சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமை சட்டம்,
பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி அரசியல்
எதிர்ப்பாளர்களை அரசு இலக்கு வைக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e15d38d-1b99-4213-b1cb-5acef884b0c5/26-6a548f9dbe805.webp' /></p><p>

ஆளும் தரப்பினர் மேற்கொள்ளும் ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படுவதில்லை, மாறாக நிலக்கரி மோசடி விவகாரத்தில்
முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.</p><h2> 

அநுர அரசிற்கு எதிராக கிளம்பும் எதிர்க்கட்சிகள்</h2><p>

இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு, ஆளும் தரப்பினரைப்
பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகவே செயற்படும் என மக்கள் விடுதலை முன்னணியின்
பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா முன்பே குறிப்பிட்டுள்ளமை, சுயாதீன
நீதித்துறையின் கௌரவத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4065f58e-b783-460f-8b3d-a32b0bbd7542/26-6a548f9e7d6a5.webp' /></p><p>
</p><p>
பேச்சு சுதந்திரத்தை முடக்கி, சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசு
முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. 

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தலையாய கடமையாகும். </p><p>

எனவே, அரசின் இந்த அடக்குமுறைப்
போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T07:11:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் - நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1783924486"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1783924486</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (13.07.2026) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளதாக&amp;nbsp;அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (13.07.2026) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளதாக&nbsp;அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>நேற்று முன்தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது.</p><p></p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d21613f5-ec62-4dda-a4ce-960783adcabd/26-6a548e9553449.webp' /></p><p>இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THiS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tMEljazUqeg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-13T07:09:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரணியின் அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த ஆளும் கட்சி எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ruling-party-mp-opposition-accusation-political-1783924735"></link>
            <id>https://tamilwin.com/article/ruling-party-mp-opposition-accusation-political-1783924735</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, அரசியல்
பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, அரசியல்
பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அடியோடு மறுத்துள்ளார்.</p><p>இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது:- "கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், சுயாதீன விசாரணை நிறுவனங்களின் ஊடாகவே சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமோ அல்லது பழிவாங்கும் நோக்கோ கிடையாது.</p><p></p><h2>நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள்</h2><p>நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுவது அரசியல் பழிவாங்கல்
அல்ல, மாறாக சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் பணிகளே என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016c3485-de3f-4829-9400-83ff604b46bd/26-6a548d727ee8e.webp' /></p><p>அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சட்டத்திலிருந்து தப்பிக்கும் காலம்
முடிவுக்கு வந்துவிட்டது. குற்றங்கள் புரிந்தவர்கள் எவராக இருந்தாலும்,
அவர்கள் சட்டத்தின் முன் பதில் கூற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
</p><p>
ஊழல், மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள், கடந்த காலங்களைப்
போலன்றி மிகவும் வெளிப்படையாகவும் சுயாதீனமாகவும் செயற்படுகின்றன. </p><p>இதில்
எந்தத் தரப்புக்கும் சார்பாகச் செயற்படும் தேவை அரசுக்கு இல்லை.

தங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தற்காத்துக் கொள்ள எதிர்க்கட்சிகள் அரசின்
மீது 'அரசியல் பழிவாங்கல்' என்ற முத்திரையை குத்த முயற்சிக்கின்றன. </p><p>பேச்சு
சுதந்திரம் என்ற பெயரில் ஊழல்களை நியாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. அரசு
மக்களின் பணத்தைப் பாதுகாப்பதிலும், ஜனநாயக விழுமியங்களைக் காப்பதிலும்
உறுதியாக உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:04:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் ஓய்வுபெற்ற அதிபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/retired-president-arrested-with-ice-drugs-1783925395"></link>
            <id>https://tamilwin.com/article/retired-president-arrested-with-ice-drugs-1783925395</id>
            <summary type="text">கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்,
ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலப்பிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்,
ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த
போதே, மேற்படி நபர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>கைப்பற்றப்பட்டுள்ள&nbsp;போதைப்பொருள் </h2><p>இதன்போது அவரிடமிருந்து
175 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b58b08a-efbd-41fc-baf0-4b0b2399ccc0/26-6a548a955a45a.webp' />&nbsp;</p><p>
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற
அதிபர் ஆவார். </p><p>இவர் நீண்டகாலமாக கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
என்பதுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு காரில் சிக்கிய இளம் தம்பதியினர் - மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-couple-arrested-drugs-in-luxury-car-1783922866"></link>
            <id>https://tamilwin.com/article/young-couple-arrested-drugs-in-luxury-car-1783922866</id>
            <summary type="text">பொலன்னறுவை பகுதியில், சொகுசு காரில் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளை கடத்தி வந்த இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை பகுதியில், சொகுசு காரில் 'ஐஸ்' போதைப்பொருளை கடத்தி வந்த இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கந்தானை மற்றும் குளியாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞரும், ஒரு இளம் பெண்ணும் ஆவர்.</p><p></p><h2>இரகசிய தகவல்</h2><p>
</p><p>
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலன்னறுவை ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (12) நடத்திய சோதனையின்போது இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c9c327-cfd3-4744-847e-ae255bf4110e/26-6a54856dd2088.webp' /></p><p>
</p><p>
சந்தேகத்திற்குரிய இளைஞரிடமிருந்து 27 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 6,310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இவர்கள் போதைப்பொருளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்கு ஆவணங்கள் இன்று (13) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:28:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் - இலங்கையில் ஏற்படப்போகும் பேரனர்த்தங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disaster-management-center-warning-regard-weather-1783917705"></link>
            <id>https://tamilwin.com/article/disaster-management-center-warning-regard-weather-1783917705</id>
            <summary type="text">உலகளாவிய ரீதியில் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தித்வா புயல் தாக்கம் போன்றே...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தித்வா புயல் தாக்கம் போன்றே பேரனர்த்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொடுவேகொட தெரிவித்துள்ளார்.</p><p> 

எனினும் மத்திய நிலையங்களுக்கு சொந்தமான கருவிகளை பராமரிப்பதற்கு கூட கடந்த காலங்களில் போதுமான மானியம் ஒதுக்கப்படவில்லை, இவ்வாறான குறைபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.</p><p></p><p> </p><p>

நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தில் முன்னிலையாகி அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.</p><h2>பதவிக்கான வெற்றிடங்கள்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், தித்வா புயல் தாக்கம் ஏற்பட்ட போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 188 பதவிக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன. 

தித்வா போன்ற ஒரு யானையை சிரட்டை போன்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்கொண்டது என்றே குறிப்பிட வேண்டும்.</p><p></p><p> </p><p>

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 24 மணித்தியால சேவைக்கான அவசர தொலைபேசி கட்டமைப்பு காணப்படுகிறது. இந்த அவசர சேவையில் ஈடுபடுபவர்களுக்கு போதுமான வசதிகள் ஏதும் கிடையாது. 

அவர்கள் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தான் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுகிறார்கள். </p><p>மாவட்ட மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு ஒன்று உள்ளது.

அதில் எழுதுவினைஞர்கள் ஐந்து பேர், பிரதி பணிப்பாளர் ஒருவர், உதவியாளர் மற்றும் சாரதி ஒருவர் உள்ளார்கள்.இவர்கள் அனைவரும் மாலை 04.30 மணிக்கு பணியை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a87e0ae-5b12-45e6-9a29-e0bb757b34ee/26-6a5484e17b3d7.webp' /></p><h2>சவால்</h2><p>
</p><p>
குறித்த மாவட்டத்தில் 04.30 மணிக்கு பிறகு ஏதேனும் இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் பணிப்பாளரை அழைப்பதற்கு நீண்ட நேரம் செல்கிறது. 

மாவட்ட மட்டத்திலான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகுடன் தொடர்புக் கொள்வது சவால்மிக்கதாக காணப்படுகிறது. </p><p>அதேபோல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு போதுமான ஆளனி வளங்கள் கிடையாது.

காணப்படும் வெற்றிடங்களுக்கு உடன் நியமனங்களை வழங்க வேண்டும். மத்திய நிலையங்களுக்கு சொந்தமான கருவிகளை பராமரிப்பதற்கு கூட கடந்த காலங்களில் போதுமான மானியம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறான குறைபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வது என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:26:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் முதல்முறையாக நீதித்துறை அதளபாதாளத்தில் - திலித் ஜயவீர எம்.பி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-time-in-history-the-judiciary-is-deep-abyss-1783922696"></link>
            <id>https://tamilwin.com/article/first-time-in-history-the-judiciary-is-deep-abyss-1783922696</id>
            <summary type="text">இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு
பலவீனமடைந்து, சீர்குலைந்துள்ளது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும்
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு
பலவீனமடைந்து, சீர்குலைந்துள்ளது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வஜன அதிகாரம் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் உதார ஜயவீரவின் மாவட்ட
ஒருங்கிணைப்பு அலுவலகத்தை நேற்று(12.07.2026) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே இந்தக் கவலையை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>நிலவும் உண்மையான அரசியல் வெற்றிடம்</h2><p>"சர்வஜன அதிகாரம் கட்சியானது, நாட்டில் நிலவும் உண்மையான அரசியல் வெற்றிடத்தை
நிரப்பி, ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2b8858f-6baa-4ad5-8c06-4cd2aed2e1f1/26-6a548458137a5.webp' /></p><p>அநியாயமாக இழக்கப்பட்ட நாட்டின் ஆற்றல்களையும் வளங்களையும் மீண்டும்
கட்டியெழுப்பி, நாட்டு மக்களுக்கு ஒரு சரியான திசையைக் காட்டுவதே எமது
பயணத்தின் இலக்காகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>நாட்டின் பொருளாதாரம் மாத்திரமல்லாது, சமூக, கலாசாரக் கட்டமைப்புகளும்
வீழ்ச்சியடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய திலித் ஜயவீர, நீதித்துறையின்
தற்போதைய நிலை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2>பொலிஸ் துறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு</h2><p>நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சீர்குலைந்து போயுள்ளது. இது குறித்து
நீதித்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகளும், நேர்மையான நீதிபதிகளும்
கொண்டுள்ள கருத்து மிகவும் தெளிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d662a84-d95a-451c-a811-58cf3555bd82/26-6a548458dca55.webp' /></p><p> அதேபோல், சட்டம் ஒழுங்கு, பொலிஸ் துறை
மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும்
நம்பிக்கை மிக வேகமாகச் சீர்குலைந்து வருகின்ற ஒரு காலகட்டத்தையே நாம்
எதிர்கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க, நிலைமைகளைத் தெளிவாகப்
புரிந்துகொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்றும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:25:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்தினால் மெல்கம் ரஞ்சித் மீது பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தும் சாமர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamara-accused-cardinal-1783922443"></link>
            <id>https://tamilwin.com/article/chamara-accused-cardinal-1783922443</id>
            <summary type="text">நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>இராணுவ தளபதி நியமன விவகாரம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள நடவடிக்கைகள் போன்றவற்றில் கர்தினால் முக்கிய தீர்மானங்களை எடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff60680-c31b-4e9a-92e6-0a439f399781/26-6a547f0d1b16d.webp' /></p><p>
</p><p>தற்போதைய இராணுவ தளபதியின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் பெர்னாண்டோ ஒருவர் பதவி ஏற்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதன் ஊடாக பௌத்தர் அல்லாத ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாக அவர் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இராணுவ தளபதியின் பதவிக்காலம் பூர்த்தி அடைந்தபோதிலும் மீண்டும் பதவி காலத்தை நீட்டித்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தற்பொழுது பதவி வகிக்கும் இராணுவ தளபதியின் பதவிக்காலம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் வரையில் நீடிக்கப்படும் சாத்தியங்கள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இராணுவத் தளபதி பதவியை வகிக்க காத்திருக்கும் அடுத்த பதவி நிலையில் இருக்கும் மேஜர் ஜெனரால் நிலந்த பிரேமரட்ன, மேஜர் ஜெனரல் உடுகம, மேஜர் ஜெனரல் ஜெனரல் நளின் பண்டாரநாயக்க போன்றவர்களை ராணுவ தளபதி பதவியை ஒரு நாளேனும் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>அவர்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ தளபதி பதவிக்கு கிறிஸ்தவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதா அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>அண்மையில் அருட்தந்தையர்கள் மட்டக்களப்பிற்கு சென்று ராணுவத்தினரின் ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும் இராணுவத்தினர் அவர்களுக்கு உணவு பானங்களை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>
மகாநாயக்க தேரர்களிடம் சென்று மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வணங்கி வந்தாலும் இராணுவ உயர் பதவி நியமனங்கள் மற்றும் புலனாய்வு பிரிவு நடவடிக்கைகள் என்பன கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு தேவையான வகையில் இயக்கப்படுவதாக சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T06:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-oldest-living-woman-passes-away-at-114-1783919679"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-oldest-living-woman-passes-away-at-114-1783919679</id>
            <summary type="text">இலங்கையின் வாழும் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவரும், அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவருமான பஞ்சகே கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வாழும் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவரும், அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவருமான பஞ்சகே கலுமெனிகே, தனது 114ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
</p><p>
1912ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிறந்த கலுமெனிகே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். </p><p></p><h2>அறுவை சிகிச்சையின் பின்&nbsp;</h2><p>

சிறிது காலத்திற்கு பின்னர், அவர் கீழே விழுந்து அறுவை சிகிச்சைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9401ac72-d42c-4dec-abbe-5b41e321eef4/26-6a5479c3145c1.webp' /></p><p>அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு மாதங்கள் உயிர் வாழ்ந்தபோதிலும், இறுதியில் அவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
கலுமெனிகே , 12 பிள்ளைகளையும் 325 கொள்ளுப்பேரக்குழந்தைகளைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DElKkkz9dlg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-13T05:56:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் - ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916491"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916491</id>
            <summary type="text">புதிய இணைப்புகளுத்துறை மாவட்ட செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐந்து மாடி கட்டிடத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>களுத்துறை மாவட்ட செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஐந்து மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மின்சுற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக&nbsp;களுத்துறை மாநகர சபை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.</p><p>அலுவலக அதிகாரிகள் உட்பட அனைத்து அலுவலக ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இன்று காலை (13)&nbsp;சுமார் 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மின்சார அமைப்பு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மின்சாரம் துண்டிப்பு</h2><p>
</p><p>


தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03ef091-b633-45f2-b03e-bcf82d3cc9a9/26-6a546a2ba5165.webp' /></p><p>மின் கசிவு காரணமாக&nbsp;&nbsp;தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4LDpgm6Ao5g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-13T05:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சர் பதவி விலகி நாட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்! அஜித் மான்னப்பெரும வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-should-apologize-ajith-manaperuma-1783919675"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-should-apologize-ajith-manaperuma-1783919675</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில்
ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க தவறியமைக்கு தார்மீக பொறுப்பேற்று, நீதி
அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில்
ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க தவறியமைக்கு தார்மீக பொறுப்பேற்று, நீதி
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாக பதவி விலகி நாட்டு
மக்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
கம்பஹாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்</h2><p>

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும்
21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளமை துரதிர்ஷ்டவசமானது என்று
குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9f6f47a-2d83-46ed-bb8b-d7ff63a65316/26-6a547a9f5bb98.webp' /></p><p>மோதல் இடம்பெற்ற முதல் நாளிலேயே இரண்டு கைதிகள் மட்டுமே
உயிரிழந்திருந்தனர். அன்று சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அங்கிருந்து
அகற்றியிருந்தால், நிலைமை இவ்வளவு தூரம் மோசமடைந்திருக்காது. எமது சிறைச்சாலை
அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
விடயத்துக்குப் பொறுப்பான நீதி அமைச்சர், இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில்
எந்தத் தகவலும் இன்றி இருந்தார் என்றும், சமூக வலைத்தளங்களைப் பார்த்து
தகவல்களை அறிந்துகொள்வது போன்றே ஊடகங்களுக்கு பதிலளித்தார் என்றும் அவர்
குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>சந்தேகநபர்களுக்கு&nbsp;நட்டஈடு </h2><p>

"பொறுப்புவாய்ந்த அமைச்சரிடமிருந்து இவ்வாறான பொறுப்பற்ற பதில்களை எவரும்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் சரியாகச் செயற்பட்டிருந்தால் இந்த துயரத்தைத் தடுத்திருக்கலாம்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cefdea5b-2220-4ee9-bd73-6d46e6c40cf9/26-6a547aa008eff.webp' /></p><p>

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசு
எடுத்த தீர்மானத்தை வரவேற்ற அஜித் மான்னப்பெரும, அதேநேரம் உயிரிழந்த கைதிகளின்
விடயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

சிறையில் இருந்த அனைவரும் குற்றவாளிகள் அல்லர், அவர்களில் சந்தேகநபர்களும்
அடங்குவர் என்பதால், அவர்களுக்காகவும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும்
அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T05:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் விடுதலைப் புலிகள் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் - அநுர அரசின் விசாரணையில் அம்பலமான உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-disappearance-network-is-revealed-1783905257"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-disappearance-network-is-revealed-1783905257</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன. </p><p>

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல்போன சம்பவம் தொடர்பான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p> 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.</p><p></p><p> </p><h2><b>

கடத்தல் மற்றும் காணாமல் போதல் </b></h2><p>விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயர் பயன்படுத்திய அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களே, இந்தக் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df0baa5-1626-4089-afa0-c5fbf85a63e9/26-6a543fbdd0eaa.webp' /></p><p>அரசினால் கைப்பற்றப்படும் வாகனங்களை அரசுடமையாக்குவதற்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். </p><p>எனினும், அவ்வாறு செய்யப்படாத சந்தர்ப்பங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
</p><p>
தற்போதைய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய, இந்த காணாமல் போன விடயங்கள், கப்பம் பெறல் மற்றும் காணி அபகரிப்புகளை நோக்கமாகக் கொண்டே இடம்பெற்றுள்ளன.</p><p> </p><h3><b>

காணிகள் மற்றும் வீடுகள் </b></h3><p>கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக வணிக பெறுமதியைக் கொண்ட காணிகள் மற்றும் வீடுகள் பாரிய அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0799868-97b6-436c-9558-3bb9ed0529a2/26-6a543fbe81ee1.webp' /></p><p>அதற்காகவே அவற்றின் உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். </p><p>

இந்தக் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா.. என்பது குறித்தும், அவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் தகவல்களைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;</p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4LDpgm6Ao5g" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T05:27:39+00:00</updated>
        </entry>
    </feed>
