<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-11T08:39:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் - நெருக்கடியில் திணறும் இலங்கை பொருளாதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-problem-1783757828"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-problem-1783757828</id>
            <summary type="text">வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தற்போது நாட்டில் வாகனத் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் வரி வருமானம் குறையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு பின்னர், வாகன இறக்குமதிக் கொள்கையை நீட்டிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவெடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p> </p><h2>


கூடுதல் கட்டணங்கள் விதிக்க முடியாது..</h2><p>
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி, கூடுதல் கட்டணங்களை விதிக்க முடியாது என்றாலும், அரசாங்கம் இந்தக் கூடுதல் கட்டணங்களை நீக்கினால் சந்தையில் மற்றொரு அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>

கடந்த காலத்தில் இருந்த வலுவான வாகனத் தேவை தற்போது பெருமளவில் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாலும், இறக்குமதியாளர்களும் தேவையான எண்ணிக்கையிலான வாகனங்களை இறக்குமதி செய்துவிட்டதாலும், வாகனப் பதிவுகள் படிப்படியாகக் குறையும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebb2100-9adc-44ec-8dcb-f2ab3ab89094/26-6a51fe9e18597.webp' /></p><p> 

இதன் விளைவாக, வாகன இறக்குமதி வரி வருவாய் கடந்த ஆண்டின் அளவை எட்டாது. 

வாகனங்கள் மீது ஏற்கனவே 150% மற்றும் 200% போன்ற அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற வரிகளை மேலும் விதிப்பது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டிய 
தனநாத் பெர்னாண்டோ, ஒரே பிரிவினர் மீது தொடர்ந்து வரிகளை விதித்து அரசு செலவினங்களைச் சுரண்டாமல், அவற்றை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். </p><p>

மேலும், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் வரி வருவாயை ஓரளவிற்கு அதிகரிக்க முடியும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி வலுவான சமிஞ்சையை சந்தைக்கு வழங்கும் என்றும் பொருளாதார வல்லுநர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> 






</p>]]></content>
            <updated>2026-07-11T08:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் மஹாவலி கங்கையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-in-muttur-boy-drowns-mahaweli-river-1783756834"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-in-muttur-boy-drowns-mahaweli-river-1783756834</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில்
மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன்&amp;nbsp; பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில்
மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன்&nbsp; பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது&nbsp; இன்று(11.7.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த சிறுவன் இன்று காலை தனது குடும்பத்தினருடன் ஆற்றங்கரைப் பகுதிக்கு
சமையல் தேவைக்காகச் சென்றுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, ஆற்றில் குளிப்பதற்காக சிறுவன் இறங்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக
நீரில் மூழ்கி அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>

சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும்
அங்கிருந்தவர்களும் உடனடியாக அவரை மீட்கப் போராடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e8a0ad6-4c24-4cd5-8ac5-cc8a29b60f7c/26-6a51fc18b9127.webp' /></p><p> </p><p>எனினும், சிறுவனை
உயிருடன் மீட்க முடியாமல் போயுள்ளது.

நீண்ட தேடுதலின் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக
மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p> இந்தச் சம்பவம் குறித்து
மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T08:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இலங்கை குடும்பம் ஒன்றை கடத்த முயற்சித்த கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-family-caught-in-thai-airport-passport-1783747483"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-family-caught-in-thai-airport-passport-1783747483</id>
            <summary type="text">தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குடும்பம் ஒன்றை கஜகஸ்தானுக்கு கடத்த முயன்ற கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

மலேசிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குடும்பம் ஒன்றை கஜகஸ்தானுக்கு கடத்த முயன்ற கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி கடத்த முயற்சித்த சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
</p><p>
இந்த இலங்கை குடும்பத்தினர் ஆரம்பத்தில் தங்களது சொந்த கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்துக்குள் நுழைந்துள்ளனர்.</p><h2><b>

மலேசிய கடவுச்சீட்டு</b></h2><p>பின்னர் தரைமார்க்கமாக மலேசியாவுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தாய்லாந்து வந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04558575-5842-4b13-95db-e8f23e4d3dc2/26-6a51f8da8b069.webp' /></p><p>அவர்கள், 2 பிள்ளைகளுக்கு தான் தாய் என்று பொய்யாகக் கூறிக்கொண்ட மலேசியப் பெண் ஒருவருடன் கஜகஸ்தான் செல்ல முயற்சித்துள்ளனர்.</p><p>
எனினும் அவர்களது பயண ஆவணங்களில் முரண்பாடுகளைக் கண்டறிந்த விமான சேவை அதிகாரிகள், அவர்களை விமானத்தில் ஏற அனுமதிக்க மறுத்துள்ளனர்.</p><p> </p><h3><b>

தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் </b></h3><p>இதனால் தங்களது பயணத் திட்டத்தை மியான்மருக்கு மாற்றிய குறித்த குழுவினர், இது குறித்து குடிவரவு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c1c03b-80ec-4e2f-a04a-3f4aff5ce417/26-6a51f8db394d8.webp' /></p><p>மியான்மரிலிருந்து டொன் முவாங் சர்வதேச விமான நிலையம் வழியாக கஜகஸ்தான் செல்ல முயன்ற போது, தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் தலையிட்டு அவர்களைக் கைது செய்தனர்.</p><p>

இலங்கை பெண்ணும் மூத்த பிள்ளைகளும் மற்றவர்களுக்கு சொந்தமான மலேசிய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதும், இளைய பிள்ளை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. 
</p>]]></content>
            <updated>2026-07-11T08:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் - ஜனாதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-program-soon-those-displaced-during-the-war-1783756518"></link>
            <id>https://tamilwin.com/article/new-program-soon-those-displaced-during-the-war-1783756518</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை துரித கதியில் மீளக்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை துரித கதியில் மீளக்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலத்தில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
இதனடிப்படையில், மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பில் தற்போதைக்கு அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வடக்கில் இடம்பெயர்ந்து இன்னும் சொந்த இடங்களுக்குத் திரும்பாத ஆயிரம் பேரளவிலான தமிழ்க் குடும்பங்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்கள் அல்லது அண்மித்த பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
இஸ்லாமியர்களை மீள்குடியேற்ற திட்டம்</h2><p>
எனினும் வடக்கில் இருந்து இடம்பெயர்க்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியக் குடும்பங்கள் இன்று வரை புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை மீளக்குடியமர்த்துவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54eca472-0d38-46a0-8ffb-e4ca4f896e2f/26-6a51f6e826dd1.webp' /></p><p> 

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் அவ்வாறு இடம்பெயர்க்கப்பட்ட இஸ்லாமியர்களின் காணிகளில் கடந்த பல வருடங்களாக குடியிருக்கும் தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளனர். </p><p>

இதேவேளை, நிர்வாகப் பிரச்சினை மற்றும் அதிகாரிகளின் பாகுபாடு காரணமாக இடம்பெயர்க்கப்பட்ட இஸ்லாமியக் குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்கும் செயற்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
</p><p>
அதன் காரணமாக பத்தாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியக் குடும்பங்கள் தொடர்ந்தும் புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் தற்காலிக குடியிருப்புகளில் போதிய வருமானம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளின்றி தவித்து வருவதாக வடக்கு இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டு விபத்து: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-injured-after-a-pickup-truck-collided-bridge-1783755813"></link>
            <id>https://tamilwin.com/article/man-injured-after-a-pickup-truck-collided-bridge-1783755813</id>
            <summary type="text">முல்லைத்தீவு- வெளிகண்டல் பகுதியில் மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவமானது&amp;nbsp;இன்று(11.072026) அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு- வெளிகண்டல் பகுதியில் மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது&nbsp;இன்று(11.072026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.</p><p>யாழ்ப்பாணம் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த மகேந்திரா கப்ரக வாகனம் பரந்தன் வீதி ஊடாக முல்லைத்தீவு சென்று கொண்டிருந்தபோது
வெளிகண்டல் பகுதியில் அதி வேகட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன்
மோதுண்டு பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்தில் வாகன ஓட்டுனரின்
உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c84faa72-4062-45d4-99e0-c22ef670cbe9/26-6a51f6e50b81f.webp' /></p><p> குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T07:56:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸாரின் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-warning-traffic-police-to-vehicle-drivers-1783754228"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-warning-traffic-police-to-vehicle-drivers-1783754228</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (10) அதிகாலை முதல் நிலவிய சீரற்ற காலநிலை
காரணமாக பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன. இதன் காரணமாக
பார்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (10) அதிகாலை முதல் நிலவிய சீரற்ற காலநிலை
காரணமாக பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன. </p><p>இதன் காரணமாக
பார்வைத் தூரம் வெகுவாகக் குறைந்துள்ளதால், வாகன சாரதிகள் மிகுந்த
அவதானத்துடன் தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அவசர
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p>அதிகாலை முதல் நுவரெலியா நகரம், அம்பேவெல, பட்டிப்பொல, ஹக்கல,
தலவாக்கலை, லிந்துலை, கொட்டகலை, அக்கரப்பத்தனை மற்றும் ஹட்டன் கொழும்பு
மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளிரும் பல உயர்வான பிரதேசங்களில்
கடும் பனிமூட்டம் நிலவியது.</p><p></p><h2>பாதுகாப்பு விதி</h2><p> </p><p>சில இடங்களில் பார்வைத் தூரம் 20 முதல் 30 மீற்றர்
வரையிலேயே காணப்பட்டதால், பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள் மிகவும் குறைந்த
வேகத்தில் இயக்கப்பட்டன.</p><p>
நுவரெலியா – ஹட்டன் மற்றும் ஹட்டன் கொழும்பு ஆகிய பிரதான வீதியில் வாகனங்கள்
முன்விளக்குகளை ஒளிரச் செய்து மெதுவாக பயணிப்பதும், எதிரே வரும் வாகனங்களை
அடையாளம் காண்பதற்காக ஒளி சமிக்ஞைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வாகன
விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85167961-8771-4d13-9047-5b9da6df5c41/26-6a51f249b59e5.webp' /></p><p>
</p><p>எனவே வாகன சாரதிகள் தமக்கே உரித்தான பக்கத்தில் பனி மூட்டம் காணப்படும்
இடங்களில் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு மெதுவாக
பயணிக்குமாறும் பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>நுவரெலியா மாவட்டம் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
அதிகம் வருகை தரும் பகுதியாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பு
விதிகளைப் பின்பற்றி வாகனங்களை செலுத்துமாறும் அதிகாரிகள்
கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T07:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடமைப்பு அதிகார சபை மீதான பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்! கோப் குழு விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-threat-against-housing-authority-reveal-1783753409"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-threat-against-housing-authority-reveal-1783753409</id>
            <summary type="text">அரசியல் அழுத்தம், பாதாள உலக அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் அழுத்தம், பாதாள உலக அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கடந்த காலத்தில் பெரும் தொகையை இழந்துள்ளதாக பொது நிறுவனங்கள் மீதான நாடாளுமன்ற குழு (கோப்) கண்டறிந்துள்ளது.</p><p>

கொழும்பின் மாளிகவத்தை பகுதியில் அமைந்துள்ள கடைகளின் குத்தகை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாதது மற்றும் வாகன நிறுத்துமிடங்களிலிருந்து வரி வசூலிப்பது குறித்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் கோப் குழுவின் முன் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது இந்தத் தகவல் வெளிப்பட்டது.</p><p></p><h2>கோப் குழு விசாரணை</h2><p>
</p><p>
அதன்போது, கோப் குழுவின் தலைவர் மருத்துவர் நிஷாந்த சமரவீர பல விடயங்களை கண்டறிந்துள்ளார்.
</p><p>
மாளிகவத்தை பகுதியில் அமைந்துள்ள 113 கடைகள், டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வாடகை மீதியைச் செலுத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57d43d25-1fdd-4ae5-92b1-08a2fc046212/26-6a51edad69992.webp' /></p><p>
</p><p>
மேலும், 2 கடைகள் 100 ரூபாவுக்கும் குறைவான வாடகைக்கும், மற்ற 37 கடைகள் 100 முதல் 1,000 ரூபா வரையிலான வாடகைக்கும் விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
மேலும் 38 கடைகள் 1,000 முதல் 5,000 ரூபா வரையிலான வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், 52 கடைகளின் குத்தகை ஒப்பந்தக் காலம் முடிந்து 1 முதல் 35 ஆண்டுகள் வரை நீண்ட காலம் ஆகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>இது ஒரு பெரும் குற்றம்</h2><p>

இதற்குப் பதிலளித்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பொது முகாமையாளர் அஜித் நந்தன குமார, குறித்த கடைகளின் வாடகைதாரர்கள் 1980-களில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாகத் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை உடனடியாகத் திருத்திப் புதுப்பிக்குமாறு தற்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

'வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வருடத்தின் 365 நாட்களும் நிலத்தை தானமாக வழங்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21d069fa-be4d-4122-8d6d-4d7dc8698865/26-6a51edae1ff3f.webp' /></p><p> </p><p>இது ஒரு பெரும் குற்றம்...' என்று கோப் குழு விசாரணையில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
குத்தகை ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கத் தவறியதற்கான காரணங்களை விளக்கிய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அனுராத கிரலவெல்ல, இதற்கான முழுப் பழியையும் அதிகாரிகள் மீது சுமத்த முடியாது என்று குறிப்பிட்டார்.</p><p></p><h2>பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்</h2><p>

இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். </p><p>அரசியல் அழுத்தங்கள், பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஆகியவையே அவை என அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15be06c5-4109-415c-b61c-36771a4daad6/26-6a51edaec0baf.webp' /></p><p>

இவ்வாறு மோசடியாகச் செயல்பட்ட சில ஊழல் அதிகாரிகளின் சேவைகளைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக அனுராத கிரலவெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T07:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயாளிகள் எண்ணிக்கையில் திடீர் உயர்வு - பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-47-1783752729"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-47-1783752729</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விவரங்களை இன்று(11.07.2026) தேசிய டெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான விவரங்களை இன்று(11.07.2026) தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது.</p><p> 

இதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 67,174 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> </p><h2>ஆயிரத்தைத் தாண்டும் நோயாளிகள்</h2><p>
அத்துடன், ஜூலை மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 10,685 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca15e10-0d24-4cd5-a542-581d53e2a397/26-6a51ea4d3339b.webp' /></p><p> 

நேற்றைய தினம்(10) சுமார் 1,110 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் இயக்குநர் டாக்டர் கபில கண்ணங்கரா தெரிவித்துள்ளார். </p><p>

பல முக்கிய மருத்துவமனைகளின் கொள்ளளவு அதன் உச்ச வரம்பை எட்டியுள்ளதால், மருத்துவமனைகளில் கடுமையான அழுத்தமும் நெரிசலும் நிலவுவதாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-11T07:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நடந்த மோசமான செயல்! பலரின் அந்தரங்கங்களை இரகசியமாக காணொளியாக பதிவு செய்த தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spa-raid-and-couple-arrested-1783737929"></link>
            <id>https://tamilwin.com/article/spa-raid-and-couple-arrested-1783737929</id>
            <summary type="text">பண்டாரவளை, எல்லதோட்ட பிரதேசத்தில் இயங்கி வந்த ஸ்பா நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

ஸ்பா நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரவளை, எல்லதோட்ட பிரதேசத்தில் இயங்கி வந்த ஸ்பா நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. </p><p>

ஸ்பா நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளை இரகசியமாக வீடியோ எடுத்து இணையம் ஊடாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் உட்பட ஒரு குழுவினரைக் கைது செய்துள்ளனர். </p><p>

வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரும், மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருமே இந்த மோசடியின் பிரதான சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

பாலியல் செயல்பாடு</b></h2><p>ஸ்பா நிலைய அறைகளுக்குள் மிகவும் நுணுக்கமாகப் பொருத்தப்பட்ட கமராக்களின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளை இந்த தம்பதி வீடியோ எடுத்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a719c6d3-0318-4489-8afa-5efca19b7d0b/26-6a51e6df5e429.webp' /></p><p>அந்தத் காட்சிகளைத் தமது கைபேசிகளில் சேமித்து வைத்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணத்திற்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணைப் பொறுத்து, 4,000 முதல் 8,000 ரூபாய் வரை கட்டணம் அறவிடப்படுகின்றது. </p><p>இந்த நடவடிக்கையும் வீடியோ மோசடியும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபரான தம்பதியினருடன் இருந்த ஜா-எல, மினுவாங்கொடை, மாத்தளை மற்றும் வெலிமடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மற்றொரு நபர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h3><b>

மருத்துவப் பரிசோதனை</b></h3><p>கைது செய்யப்பட்டவர்கள் பாலியல் நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகள் மேலதிக விசாரணைக்காக கணினி குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df999b9e-4ca6-46fe-bf2d-cd5072565c99/26-6a51e81a8a279.webp' /></p><p>பண்டாரவளை விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த குணதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். </p><p>

இதற்காக, பொலிஸார் அந்த ஸ்பா நிலையத்தில் சேவை பெறுபவர் போன்று வேடமிட்ட ஒரு உளவாளியின் உதவியைப் பெற்றுள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-11T06:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்! சந்தேகநபராக மீண்டும் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-minister-duminda-named-as-suspect-again-1783751633"></link>
            <id>https://tamilwin.com/article/former-minister-duminda-named-as-suspect-again-1783751633</id>
            <summary type="text">ஹெவ்லொக் டவுண் குடியிருப்புத் தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெவ்லொக் டவுண் குடியிருப்புத் தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 2025ஆம் வருடம் ஹெவ்லொக் டவுணில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட டி56 ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.</p><p>

அது தொடர்பான விசாரணைகளின் முடிவில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலின் பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்தார்.</p><p> அத்துடன் வழக்கின் நான்காவது சந்தேகநபராகவும் பெயரிடப்பட்டிருந்தார்.

எனினும் போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p></p><h2>சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள துமிந்த</h2><p>

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தற்போது மீண்டும் ஒரு சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார். </p><p>கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (10) பதில் நீதவான் ரவி மத்துகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், இந்த வழக்கில் நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த துமிந்த திசாநாயக்க, போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p> இருப்பினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட கூடுதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், நான்காவது சந்தேக நபரும் இந்தச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என்பதற்கு தற்போது போதுமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று புலனாய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b51096-d531-455f-a9c4-b73bf1a5426b/26-6a51e3d3f1a46.webp' /></p><h2>விரிவான விசாரணை</h2><p>
</p><p>
முன்னதாக வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள், குறித்த தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை அப்புறப்படுத்துவதில் நான்காவது சந்தேகநபர் ஈடுபட்டிருந்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்த போதிலும், பின்னர் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, ​​இரண்டாவது சந்தேக நபர் அதனைத் தன் வசம் வைத்திருக்க உதவியது தெரியவந்துள்ளது. </p><p>அதன்படி, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையைப் பரிசீலித்த பின்னர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை இந்த வழக்கில் மீண்டும் ஒரு சந்தேக நபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் தனது விசாரணைகளை தற்போது முடித்துவிட்டதாகவும், இது தொடர்பாக எதிர்காலத்தில் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
துமிந்த திசாநாயக்கவுக்காக முன்னிலையான வழக்கறிஞர், போதிய சாட்சியங்கள் இல்லாததால் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி தனது கட்சிக்காரரை விடுவிக்க நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்ததாகக் கூறினார். எனவே, விசாரணைப் பிரிவுகள் எடுத்த இந்த புதிய முடிவை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

அனைத்து வாதங்களையும் பரிசீலித்த பதில் நீதவான் ரவி மத்துகம, துமிந்த திசாநாயக்கவை தலா ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் பேரில் விடுவிக்க உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின்படி நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக, இந்த வழக்கு டிசம்பர் 11 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T06:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 5 இலட்சம் இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-leaves-29-dead-1783751262"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-leaves-29-dead-1783751262</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலமாக முதற்கட்ட நிவாரணமாக குறித்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறை உத்தியோகத்தர்களின் வாரிசுகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு குறித்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
பதவி உயர்வுடன் இழப்பீடு தொகை</h2><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் மறைவுக்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான பதவி உயர்வின் அடிப்படையிலான ஓய்வூதியங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்குவதற்கும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f96578d5-7237-41d7-a4c1-4fa8c8cae6ac/26-6a51e3cbe5c32.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஜெயிலர் எஸ்.எச். சந்திரவன்ச, எஸ்.டி. அபேவர்தன, பி.என். தரங்க, ஏ.டி. தரங்க, டி.டபிள்யூ. புஷ்பகுமார, ஆர்.ஆர். சஞ்சீவ, டி.ஆர். திலகசிறி மற்றும் எம்.ஜி. உபாலி ஆகிய சிறைக்காவலர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். </p><p> 

பணியில் இருந்தபோது கொல்லப்பட்ட மேற்குறித்த ஏழு சிறைக்காவலர்களும் மரணத்தின் பின்னர் சிறைச்சாலை சார்ஜென்ட் தரத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
சிறைச்சாலை ஜெயிலர் எஸ்.எச். சந்திரவன்ச, இரண்டாம் வகுப்புப் பதவியிலிருந்து முதலாம் தர ஜெயிலர் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறந்த திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[246 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி - சற்றுமுன் கட்டுநாயக்கவில் விமானம் தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929"></link>
            <id>https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929</id>
            <summary type="text">புதிய இணைப்புகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று, பறவை மோதியதில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று, பறவை மோதியதில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இந்த விபத்தைச் சந்தித்ததுடன், பறவை மோதியதன் காரணமாகத் தனது பயணத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>

246 பயணிகளுடன் தரையிறக்கம்</h3><p>தரையிறங்குவதற்கு ஏற்ற அளவிற்கு எரிபொருள் இருப்பு குறையும் வரை, அந்த விமானம் நீர்கொழும்பு - காயல் அருகே உள்ள கடல் பகுதியில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் குறைந்த வேகத்தில் பயணித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f99886-e99c-4da1-a01d-bd426c7c1092/26-6a51dec3552a4.webp' /></p><p> 

தரையிறங்குவதற்கு ஏற்ற நிலையை அடைந்த பின்னர், அது காலை 10.21 மணிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விமானத்தில் 246 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்ததாகவும், ஏர்பஸ் A-330 ரக விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் உள்ளிட்ட ஒரு குழுவும் இந்த விமானத்தில் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uuFwUhMTHFw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>


விமானம் இன்று காலை 7.07 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல்லுக்கான 6 மணி நேரப் பயணத்திற்காகப் புறப்பட்டுள்ளதுடன், அதுவரை விமானத்தில் 80,000 லீற்றர் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.</p><h4>

எரிபொருள் குறையும் வரை பறந்த விமானம்</h4><p>
விமானம் புறப்பட்ட உடனேயே பறவை மோதியது, இதுகுறித்து விமானி கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்திருந்தார்.
</p><p>
விமானத்தில் எரிபொருள் இருப்புடன் மீண்டும் தரையிறங்குவது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் சமீபத்திய விதிகளுக்கு எதிரானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00298c61-25a5-4976-8074-f52ebaf40ec0/26-6a51defb38dc8.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, தரையிறங்குவதற்கு ஏற்ற நிலைக்கு எரிபொருள் அளவு குறையும் வரை, விமானம் நீர்கொழும்பு கடற்காயலுக்கு மேலே 7,000 அடி உயரத்தில் மணிக்கு 253 நாட்ஸ் வேகத்தில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் பறக்க வேண்டியிருந்தது.
</p><p>
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களை வரவழைத்து, அவசரகாலத் தரையிறக்கத்திற்காக விமான நிலையமும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

இன்று காலை கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது. </p><p>

இதன் காரணமாக, அந்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து வட்டமடித்துள்ளது. </p><h2><b>மீண்டும் தரையிறக்கம் </b></h2><p> அத்துடன் எரிபொருளை குறைத்து, பாதுகாப்பாக விமானம் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112a1042-c6e1-4a5d-8c84-dac19164099f/26-6a51c400d694e.webp' /></p><p> </p>]]></content>
            <updated>2026-07-11T06:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீயணைப்பு பிரிவின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-dept-emergency-hotline-temporarily-block-1783749572"></link>
            <id>https://tamilwin.com/article/fire-dept-emergency-hotline-temporarily-block-1783749572</id>
            <summary type="text">தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

எனவே, தீ விபத்துகள் தொடர்பில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

எனவே, தீ விபத்துகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4fba77-83b5-4ba4-b808-a6b4551fad88/26-6a51e1bb0ab61.webp' /></p><p></p><p></p><p style="margin-left: 25px;"><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து வெளியேறும் இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-people-seeking-employment-abroad-1783748583"></link>
            <id>https://tamilwin.com/article/young-people-seeking-employment-abroad-1783748583</id>
            <summary type="text">இலங்கையின் இளம் தலைமுறையினர் அண்மைக்காலமாக வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புகளை தேடிச் செல்வதில் அதிக ஆர்வத்தை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.

தற்போதைய நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இளம் தலைமுறையினர் அண்மைக்காலமாக வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புகளை தேடிச் செல்வதில் அதிக ஆர்வத்தை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
தற்போதைய நிலவரப்படி உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.</p><h2>அந்நியச் செலாவணி</h2><p></p><p>
</p><p>
மேலும், கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புலம்பயெர் தொழிலாளர்களிடம் இருந்தே ஆகக்கூடுதலான அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d89c585-9ca2-4b78-b347-894697f68d65/26-6a51dd0e787be.webp' /></p><p> அதேவேளை அண்மைக்காலமாக தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களிடம் இருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் அந்நியச் செலாவணி கிடைக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T06:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-dies-after-electrocuted-in-palai-area-1783747674"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-dies-after-electrocuted-in-palai-area-1783747674</id>
            <summary type="text">கிளிநொச்சி -&amp;nbsp;பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி
இயக்கச்சியை சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி -&nbsp;பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.</p><p>பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி
இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞனே மின்சாரம்
தாக்கி மரணமடைந்துள்ளார்.</p><p></p><h2>மின்சார இணைப்பு வேலை</h2><p>
</p><p>குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கு ம்போது மின்சாரம்
தாக்கிய நிலையில் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e5b6413-b291-43c0-a856-820f87028b90/26-6a51d75641d5c.webp' /></p><p>இந்நிலையில், குறித்த சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-orders-closure-all-govt-institutions-1783742153"></link>
            <id>https://tamilwin.com/article/president-orders-closure-all-govt-institutions-1783742153</id>
            <summary type="text">பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><p>
கடந்த காலங்களில் ஒரே அமைச்சின் கீழ் அல்லது வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே நோக்கத்திலான பல்வேறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. </p><p></p><h2>மூடுவதற்கான செயற்பாடுகள்</h2><p>இலங்கை உரக் கூட்டுத்தாபனம் செயற்பாட்டில் இருக்கத்தக்கதாக எப்பாவல பொஸ்பேட் நிறுவனம் உருவாக்கப்பட்டமை அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a4753f-7b46-4db0-bec6-16c0eace36f8/26-6a51c483974d1.webp' /></p><p>பல்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அவ்வாறான நிறுவனங்களைத் தொடர்ந்து பராமரிப்பதால், அரசாங்கம் கூடுதல் செலவுச் சுமையை ஏற்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடுவதற்கான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே செயற்பாட்டிற்கான பல நிறுவனங்கள் இருப்பதால், திட்டங்களைச் செயல்படுத்துவதில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/63j8NQNgYlg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T05:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு - வெலிக்கடை அதிகாரிகளுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-rights-commission-summons-welikada-officials-1783746772"></link>
            <id>https://tamilwin.com/article/human-rights-commission-summons-welikada-officials-1783746772</id>
            <summary type="text">பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் பின்னர் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் நலன்கள் மற்றும் அவர்கள் துன்புறுத்தல்களுக்குள்ளானமை தொடர்பில் ஆராயும் நடவடிக்கையொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன் ஒரு அங்கமாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த 07ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உட்பிரவேசிக்க முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.</p><h2>

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழைப்பாணை&nbsp;</h2><p>
ஜூலை 7ஆம் திகதி இரவு சுமார் 8.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பயணத்தின்போது, ​​தனது அதிகாரிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3bd8719-022b-40fe-a4fd-969519896a67/26-6a51d12cd318e.webp' /></p><p>
</p><p>
இது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தை மீறுவதாகும் என்றும், சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தனது அதிகாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>

மறுநாள் சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டபோதிலும், இந்தத் தாமதம் உரிய நேரத்தில் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பை பறித்துவிட்டதாக ஆணைக்குழு குறிப்பிடுகிறது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையொன்றுக்காக (பதில்)சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஆகியோர் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: வருகிறது கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783743975"></link>
            <id>https://tamilwin.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783743975</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக மிகவும் முறையான மற்றும் கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக மிகவும் முறையான மற்றும் கவர்ச்சிகரமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். </p><p>

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (10.07.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>ஓய்வூதிய முறை</h2><p></p><p> </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்கு தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம். 

அதாவது, ஓய்வுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதையோ அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாக பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.</p><p> 

சட்டபூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5daf1e-f542-4fa7-8044-be35b51949a7/26-6a51d0609d07b.webp' /></p><h3>வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு</h3><p> </p><p>

தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது. 

இருப்பினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். </p><p>இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும். 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய லொத்தர் சபை ஊழல்! ரவி கருணாநாயக்கவுக்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-lottery-board-corruption-ravi-1783740024"></link>
            <id>https://tamilwin.com/article/national-lottery-board-corruption-ravi-1783740024</id>
            <summary type="text">கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
ஆணைக்குழுவால் தற்போது நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதே இந்த அழைப்பாணையின் நோக்கமாகும்.
</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
அதன்பிரகாரம் ரவி கருணநாயக்க இம் மாதம் 17ஆம் திகதி ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு எழுத்து பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7055b8e-9296-462b-a044-31a8fe671427/26-6a51ba1200186.webp' /></p><p>தேசிய லொத்தர் சபையின் ஒரு விசேட செயற்திட்டத்தின் கீழ் ஊழியர்களை நியமிக்கும் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே ரவி கருணநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இதே சம்பவம் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேராவும் முன்னர் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T03:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட முடியாது..! அதிகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-speaks-on-authority-to-order-1783740810"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-speaks-on-authority-to-order-1783740810</id>
            <summary type="text">சிறைச்சாலை வளாகங்களில் ஏற்படும் கலவரங்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை வளாகங்களில் ஏற்படும் கலவரங்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்,சிறைச்சாலைகள் அவசரச் சட்டத்தின் கீழ், நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகளுக்கு மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>சிறை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு</h2><p>
இராணுவம் மற்றும் பொலிஸார் தொடர்பில் ஒரு 'கட்டளைத் தொடர்' மூலம் செயல்படுத்தப்படும் துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவுகள் சிறை அமைப்பில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தனக்கு இன்னும் ஆழமான புரிதல் இல்லை என்றும், அதுகுறித்து தனக்கு மேலதிக தெளிவு தேவைப்படுவதாகவும் அமைச்சர் ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a099db86-3211-4e89-b05f-ecef0187b51c/26-6a51b9d651008.webp' /></p><p>
</p><p>
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தாதது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சிறை வளாகத்திற்குள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த சிறை அதிகாரிகளுக்கு மட்டுமே சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது என்று விளக்கம் கொடுத்துள்ளார். </p><p>

சிறை வளாகத்திற்குள் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MJzsjqJnJvo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-11T03:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு - வர்த்தக பிரதிநிதி குழுவினர் இலங்கை விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/federation-of-indian-exporters-1783740211"></link>
            <id>https://tamilwin.com/article/federation-of-indian-exporters-1783740211</id>
            <summary type="text">இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பான இந்திய ஏற்றுமதி
நிறுவனங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Export Organisations - FIEO)
தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பான இந்திய ஏற்றுமதி
நிறுவனங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Export Organisations - FIEO)
தலைமையிலான 31 உறுப்பினர்களைக் கொண்ட வர்த்தக பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. </p><p>

இந்த விஜயம், 2026 ஜூலை 8 முதல் 10 வரை மேற்கொள்ளப்படும் என்றும், இந்தியா - இலங்கை இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிகக் கூட்டாண்மைகளை
மேம்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>


இதன்போது, பிரதிநிதிகள் குழுவில் மருந்துத் தயாரிப்பு, பொறியியல் உற்பத்திகள்,
ஆடை மற்றும் நெசவுத் துறை, உணவு மற்றும் விவசாயப் பொருட்கள், உட்கட்டமைப்பு
உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளளனர்.</p><h2>முக்கிய தீர்மானங்கள்</h2><p>
</p><p>

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 
பிரதிநிதிகள் குழு சந்தித்து கலந்துரையாடி, இலங்கையின் வளர்ந்து வரும்
பொருளாதாரம், இந்தியா - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பின் விரிவடைந்துவரும் நிலை
மற்றும் இருதரப்பு வர்த்தகம், முதலீட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கான பரந்த
வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குழுவிற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d05f20a3-997b-49b9-9486-cff94adcd0f9/26-6a51b786b8c50.webp' /></p><p>
</p><p>

மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் விவசாயத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள்,
இலங்கையின் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு
அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் துறைசார் விடயங்கள் மற்றும்
ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.</p><p>

அதன் பின்னர், பிரதிநிதிகள் குழு இந்தோ - இலங்கை
வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை (ILCCI), Access Group நிறுவன பிரதிநிதிகள்
மற்றும் GOPIO ஒருங்கிணைத்த பல்வேறு சந்தைச் சங்கங்களின் உறுப்பினர்களுடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.</p><p>இதன் அடிப்படையில், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராய்ந்து, வணிகத் தொடர்புகளை
ஏற்படுத்தி, இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வழிகள் ஆகிய விடயங்களில் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db43231b-b4c5-4eb8-8a10-0e2aac4dc9f5/26-6a51b787a3ff7.webp' /></p><p>
</p><p>

இருதரப்பு வர்த்தகத்தையும், வணிக நிறுவனங்களுக்கு இடையிலான (B2B)
தொடர்புகளையும் மேம்படுத்தும் தனது தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக,
இந்திய உயர்ஸ்தானிகராலயம் 2026 ஜூலை 9ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா
ஹோட்டலில் "இந்தியா–இலங்கை வர்த்தக இணைப்பு: FIEO பிரதிநிதிகள் குழுவுடனான
கலந்துரையாடல்" என்ற நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> 


இந்த நிகழ்வில், இந்திய வர்த்தக பிரதிநிதிகள் குழுவினருடன், இலங்கையின்
முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கிய வணிக அமைப்புகளான Indian CEO Forum
(ICF), National Chamber of Exporters of Sri Lanka (NCE), Indo-Lanka
Chamber of Commerce and Industry (ILCCI) மற்றும் Ceylon Chamber of Young
Lankan Entrepreneurs (COYLE) ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55f93713-5e8b-4b9d-8a0b-9ff23a120656/26-6a51b78877984.webp' /></p><p> புதிய
வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும், இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தவும்
பயனுள்ள B2B கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.


இதன்போது உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில், 

உயர்ஸ்தானிகர் இந்தியா - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பின்
விரிவடைந்துவரும் நிலையை எடுத்துரைத்தார். </p><p>

இந்தியா தொடர்ந்து இலங்கையின்
முக்கிய வர்த்தகப் பங்காளி, மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு ஆதாரம் மற்றும்
இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடாக இருப்பதை அவர்
குறிப்பிட்டார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T03:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப் பயணியொருவரைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இளைஞர் குழு கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/group-of-youth-arrested-kidnap-tourist-1783737610"></link>
            <id>https://tamilwin.com/article/group-of-youth-arrested-kidnap-tourist-1783737610</id>
            <summary type="text">இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பிரேசில் நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயன்ற இளைஞர்கள் குழுவொன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பிரேசில் நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயன்ற இளைஞர்கள் குழுவொன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் காலி அருகே உணவட்டுன பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p></p><h2>சுற்றுலாப் பயணியைக் கைது செய்யாமல்</h2><p>
இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்திருந்த பிரேசில் பிரஜையொருவர், காலி, தல்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e56fe55-f3b0-43cb-aeb2-9163823f5175/26-6a51b145ee513.webp' /></p><p>
இந்நிலையில், அந்த இடத்திற்கு வந்த இருவர் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு குறித்த சுற்றுலாப் பயணியின் அறையை சோதனையிட்டுள்ளனர்.
</p><p>
அதன்போது சுற்றுலாப் பயணியின் பிரேசில் நாட்டு பாஸ்போர்ட், அமெரிக்க ஆவணங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற உபகரணங்களை வலுக்கட்டாயமாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
</p><p>
அத்துடன் அந்த இடத்திற்கு வந்த மற்றொரு நபரையும் இணைத்துக் கொண்டு, மூவருமாக குறித்த பிரேசில் பிரஜைக்கு கைவிலங்கு போட்டு அச்சுறுத்தியுள்ளனர்.</p><p>குறித்த சுற்றுலாப் பயணியைக் கைது செய்யாமல் இருக்க கொழும்பிலுள்ள முக்கிய பொலிஸ் அதிகாரியொருவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அந்த குழுவினர் கூறியுள்ளனர்.</p><h2>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்&nbsp;</h2><p>

தமக்கு 30 இலட்சம் ரூபா லஞ்சம் வேண்டும் எனவும், அத்தொகையை உடனடியாக வழங்குமாறும் பிரேசில் பிரஜையை அவர்கள் மிரட்டியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5fa0f28-3665-46a5-adf8-5b1e33d912a9/26-6a51b2a717a7d.webp' /></p><p>
இதற்கிடையே சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், உணவடுன சுற்றுலா பொலிஸ் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கையின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், சந்தேகநபர்கள் இந்தக் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய அல்டோ ரக காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்குப் பொருட்கள் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், உணவட்டுன சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T03:04:25+00:00</updated>
        </entry>
    </feed>
