<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-13T06:35:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு காரில் சிக்கிய இளம் தம்பதியினர் - மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-couple-arrested-drugs-in-luxury-car-1783922866"></link>
            <id>https://tamilwin.com/article/young-couple-arrested-drugs-in-luxury-car-1783922866</id>
            <summary type="text">பொலன்னருவை பகுதியில், சொகுசு காரில் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளை கடத்தி வந்த இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னருவை பகுதியில், சொகுசு காரில் 'ஐஸ்' போதைப்பொருளை கடத்தி வந்த இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கந்தானை மற்றும் குளியாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞரும், ஒரு இளம் பெண்ணும் ஆவர்.</p><p></p><h2>இரகசிய தகவல்</h2><p>
</p><p>
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலன்னருவ ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c9c327-cfd3-4744-847e-ae255bf4110e/26-6a54856dd2088.webp' /></p><p>
</p><p>
சந்தேகத்திற்குரிய இளைஞரிடமிருந்து 27 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 6,310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இவர்கள் போதைப்பொருளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்கு ஆவணங்கள் பொலன்னருவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:28:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் - இலங்கையில் ஏற்படப்போகும் பேரனர்த்தங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disaster-management-center-warning-regard-weather-1783917705"></link>
            <id>https://tamilwin.com/article/disaster-management-center-warning-regard-weather-1783917705</id>
            <summary type="text">உலகளாவிய ரீதியில் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தித்வா புயல் தாக்கம் போன்றே...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தித்வா புயல் தாக்கம் போன்றே பேரனர்த்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொடுவேகொட தெரிவித்துள்ளார்.</p><p> 

எனினும் மத்திய நிலையங்களுக்கு சொந்தமான கருவிகளை பராமரிப்பதற்கு கூட கடந்த காலங்களில் போதுமான மானியம் ஒதுக்கப்படவில்லை, இவ்வாறான குறைபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.</p><p></p><p> </p><p>

நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தில் முன்னிலையாகி அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.</p><h2>பதவிக்கான வெற்றிடங்கள்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், தித்வா புயல் தாக்கம் ஏற்பட்ட போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 188 பதவிக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன. 

தித்வா போன்ற ஒரு யானையை சிரட்டை போன்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்கொண்டது என்றே குறிப்பிட வேண்டும்.</p><p></p><p> </p><p>

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 24 மணித்தியால சேவைக்கான அவசர தொலைபேசி கட்டமைப்பு காணப்படுகிறது. இந்த அவசர சேவையில் ஈடுபடுபவர்களுக்கு போதுமான வசதிகள் ஏதும் கிடையாது. 

அவர்கள் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தான் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுகிறார்கள். </p><p>மாவட்ட மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு ஒன்று உள்ளது.

அதில் எழுதுவினைஞர்கள் ஐந்து பேர், பிரதி பணிப்பாளர் ஒருவர், உதவியாளர் மற்றும் சாரதி ஒருவர் உள்ளார்கள்.இவர்கள் அனைவரும் மாலை 04.30 மணிக்கு பணியை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a87e0ae-5b12-45e6-9a29-e0bb757b34ee/26-6a5484e17b3d7.webp' /></p><h2>சவால்</h2><p>
</p><p>
குறித்த மாவட்டத்தில் 04.30 மணிக்கு பிறகு ஏதேனும் இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் பணிப்பாளரை அழைப்பதற்கு நீண்ட நேரம் செல்கிறது. 

மாவட்ட மட்டத்திலான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகுடன் தொடர்புக் கொள்வது சவால்மிக்கதாக காணப்படுகிறது. </p><p>அதேபோல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு போதுமான ஆளனி வளங்கள் கிடையாது.

காணப்படும் வெற்றிடங்களுக்கு உடன் நியமனங்களை வழங்க வேண்டும். மத்திய நிலையங்களுக்கு சொந்தமான கருவிகளை பராமரிப்பதற்கு கூட கடந்த காலங்களில் போதுமான மானியம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறான குறைபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வது என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:26:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் முதல்முறையாக நீதித்துறை அதளபாதாளத்தில் - திலித் ஜயவீர எம்.பி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-time-in-history-the-judiciary-is-deep-abyss-1783922696"></link>
            <id>https://tamilwin.com/article/first-time-in-history-the-judiciary-is-deep-abyss-1783922696</id>
            <summary type="text">இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு
பலவீனமடைந்து, சீர்குலைந்துள்ளது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும்
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு
பலவீனமடைந்து, சீர்குலைந்துள்ளது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வஜன அதிகாரம் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் உதார ஜயவீரவின் மாவட்ட
ஒருங்கிணைப்பு அலுவலகத்தை நேற்று(12.07.2026) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே இந்தக் கவலையை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>நிலவும் உண்மையான அரசியல் வெற்றிடம்</h2><p>"சர்வஜன அதிகாரம் கட்சியானது, நாட்டில் நிலவும் உண்மையான அரசியல் வெற்றிடத்தை
நிரப்பி, ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2b8858f-6baa-4ad5-8c06-4cd2aed2e1f1/26-6a548458137a5.webp' /></p><p>அநியாயமாக இழக்கப்பட்ட நாட்டின் ஆற்றல்களையும் வளங்களையும் மீண்டும்
கட்டியெழுப்பி, நாட்டு மக்களுக்கு ஒரு சரியான திசையைக் காட்டுவதே எமது
பயணத்தின் இலக்காகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>நாட்டின் பொருளாதாரம் மாத்திரமல்லாது, சமூக, கலாசாரக் கட்டமைப்புகளும்
வீழ்ச்சியடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய திலித் ஜயவீர, நீதித்துறையின்
தற்போதைய நிலை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2>பொலிஸ் துறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு</h2><p>நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சீர்குலைந்து போயுள்ளது. இது குறித்து
நீதித்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகளும், நேர்மையான நீதிபதிகளும்
கொண்டுள்ள கருத்து மிகவும் தெளிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d662a84-d95a-451c-a811-58cf3555bd82/26-6a548458dca55.webp' /></p><p> அதேபோல், சட்டம் ஒழுங்கு, பொலிஸ் துறை
மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும்
நம்பிக்கை மிக வேகமாகச் சீர்குலைந்து வருகின்ற ஒரு காலகட்டத்தையே நாம்
எதிர்கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க, நிலைமைகளைத் தெளிவாகப்
புரிந்துகொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்றும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:25:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலிடம் ரணில் பேசிய ரகசியம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-gota-ranil-meeting-discussion-1783910685"></link>
            <id>https://tamilwin.com/article/namal-gota-ranil-meeting-discussion-1783910685</id>
            <summary type="text">சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. </p><p>

இதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரணில், நாமலின் சந்திப்பு தொடர்பான காணொளி வெளியாகி இருந்தது. </p><p>

பொது நிகழ்வு ஒன்றின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நாமல் ராஜபக்சவும் மிகவும் நெருக்கமாக கலந்துரையாடல் காணொளி பேசுபொருளாகியது.</p><p> </p><h2><b>

திருமண நிகழ்வு</b></h2><p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரின் திருமண நிகழ்வு கடந்த புதன்கிழமை இரவு சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f68f346-fdaa-487b-924b-f11d90a962f4/26-6a54825ce9296.webp' /></p><p>இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
</p><p>
இதன்போது நாமல் ராஜபக்சவுடன் ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்சவும் உரையாடும் விதத்தை பலரும் அவதானித்தனர்.</p><p> 

ரணிலுடன் பேசப்பட்ட விடயம் தொடர்பில் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

அதற்கு நாமல் பதிலளிக்கையில், தற்போதைய அரசியல் செயற்பாடு குறித்து ரணில் கேள்வி எழுப்பியிருந்தார். </p><p>கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டத்துடன் நாடு முழுவதும் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். </p><p>

தனிப்பட்ட விடயங்களை குறித்து உரையாடியதுடன், விரைவில் நேரடியாக இணைந்து பணியாற்றுவோம் என ரணில் குறிப்பிட்டதாகவும் நாமல் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-13T06:15:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்தினால் மெல்கம் ரஞ்சித் மீது பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தும் சாமர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamara-accused-cardinal-1783922443"></link>
            <id>https://tamilwin.com/article/chamara-accused-cardinal-1783922443</id>
            <summary type="text">நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>இராணுவ தளபதி நியமன விவகாரம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள நடவடிக்கைகள் போன்றவற்றில் கர்தினால் முக்கிய தீர்மானங்களை எடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff60680-c31b-4e9a-92e6-0a439f399781/26-6a547f0d1b16d.webp' /></p><p>
</p><p>தற்போதைய இராணுவ தளபதியின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் பெர்னாண்டோ ஒருவர் பதவி ஏற்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதன் ஊடாக பௌத்தர் அல்லாத ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாக அவர் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இராணுவ தளபதியின் பதவிக்காலம் பூர்த்தி அடைந்தபோதிலும் மீண்டும் பதவி காலத்தை நீட்டித்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தற்பொழுது பதவி வகிக்கும் இராணுவ தளபதியின் பதவிக்காலம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் வரையில் நீடிக்கப்படும் சாத்தியங்கள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இராணுவத் தளபதி பதவியை வகிக்க காத்திருக்கும் அடுத்த பதவி நிலையில் இருக்கும் மேஜர் ஜெனரால் நிலந்த பிரேமரட்ன, மேஜர் ஜெனரல் உடுகம, மேஜர் ஜெனரல் ஜெனரல் நளின் பண்டாரநாயக்க போன்றவர்களை ராணுவ தளபதி பதவியை ஒரு நாளேனும் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>அவர்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ தளபதி பதவிக்கு கிறிஸ்தவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதா அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>அண்மையில் அருட்தந்தையர்கள் மட்டக்களப்பிற்கு சென்று ராணுவத்தினரின் ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும் இராணுவத்தினர் அவர்களுக்கு உணவு பானங்களை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>
மகாநாயக்க தேரர்களிடம் சென்று மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வணங்கி வந்தாலும் இராணுவ உயர் பதவி நியமனங்கள் மற்றும் புலனாய்வு பிரிவு நடவடிக்கைகள் என்பன கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு தேவையான வகையில் இயக்கப்படுவதாக சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T06:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-oldest-living-woman-passes-away-at-114-1783919679"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-oldest-living-woman-passes-away-at-114-1783919679</id>
            <summary type="text">இலங்கையின் வாழும் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவரும், அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவருமான பஞ்சகே கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வாழும் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவரும், அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவருமான பஞ்சகே கலுமெனிகே, தனது 114ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
</p><p>
1912ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிறந்த கலுமெனிகே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். </p><p></p><h2>அறுவை சிகிச்சையின் பின்&nbsp;</h2><p>

சிறிது காலத்திற்கு பின்னர், அவர் கீழே விழுந்து அறுவை சிகிச்சைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9401ac72-d42c-4dec-abbe-5b41e321eef4/26-6a5479c3145c1.webp' /></p><p>அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு மாதங்கள் உயிர் வாழ்ந்தபோதிலும், இறுதியில் அவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
கலுமெனிகே , 12 பிள்ளைகளையும் 325 கொள்ளுப்பேரக்குழந்தைகளைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T05:56:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் - ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916491"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916491</id>
            <summary type="text">புதிய இணைப்புகளுத்துறை மாவட்ட செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐந்து மாடி கட்டிடத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>களுத்துறை மாவட்ட செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஐந்து மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மின்சுற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக&nbsp;களுத்துறை மாநகர சபை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.</p><p>அலுவலக அதிகாரிகள் உட்பட அனைத்து அலுவலக ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இன்று காலை (13)&nbsp;சுமார் 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மின்சார அமைப்பு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மின்சாரம் துண்டிப்பு</h2><p>
</p><p>


தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03ef091-b633-45f2-b03e-bcf82d3cc9a9/26-6a546a2ba5165.webp' /></p><p>மின் கசிவு காரணமாக&nbsp;&nbsp;தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T05:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சர் பதவி விலகி நாட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்! அஜித் மான்னப்பெரும வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-should-apologize-ajith-manaperuma-1783919675"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-should-apologize-ajith-manaperuma-1783919675</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில்
ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க தவறியமைக்கு தார்மீக பொறுப்பேற்று, நீதி
அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில்
ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க தவறியமைக்கு தார்மீக பொறுப்பேற்று, நீதி
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாக பதவி விலகி நாட்டு
மக்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
கம்பஹாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்</h2><p>

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும்
21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளமை துரதிர்ஷ்டவசமானது என்று
குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9f6f47a-2d83-46ed-bb8b-d7ff63a65316/26-6a547a9f5bb98.webp' /></p><p>மோதல் இடம்பெற்ற முதல் நாளிலேயே இரண்டு கைதிகள் மட்டுமே
உயிரிழந்திருந்தனர். அன்று சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அங்கிருந்து
அகற்றியிருந்தால், நிலைமை இவ்வளவு தூரம் மோசமடைந்திருக்காது. எமது சிறைச்சாலை
அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
விடயத்துக்குப் பொறுப்பான நீதி அமைச்சர், இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில்
எந்தத் தகவலும் இன்றி இருந்தார் என்றும், சமூக வலைத்தளங்களைப் பார்த்து
தகவல்களை அறிந்துகொள்வது போன்றே ஊடகங்களுக்கு பதிலளித்தார் என்றும் அவர்
குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>சந்தேகநபர்களுக்கு&nbsp;நட்டஈடு </h2><p>

"பொறுப்புவாய்ந்த அமைச்சரிடமிருந்து இவ்வாறான பொறுப்பற்ற பதில்களை எவரும்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் சரியாகச் செயற்பட்டிருந்தால் இந்த துயரத்தைத் தடுத்திருக்கலாம்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cefdea5b-2220-4ee9-bd73-6d46e6c40cf9/26-6a547aa008eff.webp' /></p><p>

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசு
எடுத்த தீர்மானத்தை வரவேற்ற அஜித் மான்னப்பெரும, அதேநேரம் உயிரிழந்த கைதிகளின்
விடயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

சிறையில் இருந்த அனைவரும் குற்றவாளிகள் அல்லர், அவர்களில் சந்தேகநபர்களும்
அடங்குவர் என்பதால், அவர்களுக்காகவும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும்
அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T05:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் விடுதலைப் புலிகள் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் - அநுர அரசின் விசாரணையில் அம்பலமான உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-disappearance-network-is-revealed-1783905257"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-disappearance-network-is-revealed-1783905257</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன. </p><p>

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல்போன சம்பவம் தொடர்பான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p> 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.</p><p></p><p> </p><h2><b>

கடத்தல் மற்றும் காணாமல் போதல் </b></h2><p>விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயர் பயன்படுத்திய அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களே, இந்தக் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df0baa5-1626-4089-afa0-c5fbf85a63e9/26-6a543fbdd0eaa.webp' /></p><p>அரசினால் கைப்பற்றப்படும் வாகனங்களை அரசுடமையாக்குவதற்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். </p><p>எனினும், அவ்வாறு செய்யப்படாத சந்தர்ப்பங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
</p><p>
தற்போதைய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய, இந்த காணாமல் போன விடயங்கள், கப்பம் பெறல் மற்றும் காணி அபகரிப்புகளை நோக்கமாகக் கொண்டே இடம்பெற்றுள்ளன.</p><p> </p><h3><b>

காணிகள் மற்றும் வீடுகள் </b></h3><p>கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக வணிக பெறுமதியைக் கொண்ட காணிகள் மற்றும் வீடுகள் பாரிய அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0799868-97b6-436c-9558-3bb9ed0529a2/26-6a543fbe81ee1.webp' /></p><p>அதற்காகவே அவற்றின் உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். </p><p>

இந்தக் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா.. என்பது குறித்தும், அவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் தகவல்களைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T05:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனப்பதிவு எண்களை பெற்றுக்கொள்ளாத உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/printing-vehicle-registration-numbers-1783915742"></link>
            <id>https://tamilwin.com/article/printing-vehicle-registration-numbers-1783915742</id>
            <summary type="text">வாகனப்பதிவு எண்களை பெற்றுக்கொள்ளாத வாகன உரிமையாளர்கள் ஜூன் 30 ஆம் திகதிக்குள் அவற்றினை வந்து பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகனப்பதிவு எண்களை பெற்றுக்கொள்ளாத வாகன உரிமையாளர்கள் ஜூன் 30 ஆம் திகதிக்குள் அவற்றினை வந்து பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

வாகனப்பதிவு எண்கள் அச்சிடுதல் நிறுத்தப்படுவதற்கு முன்னர் அச்சிடப்பட்ட சுமார் 100,000 வாகனப்பதிவு எண்களின் இருப்பில், 20 மட்டுமே உரிமையாளர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>குவித்து வைக்கப்பட்டுள்ள&nbsp;வாகனப்பதிவு எண்கள்</h2><p>
</p><p>
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட சுமார் 100,000 வாகனப்பதிவு எண்களை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளாததால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c26a7c23-3bdc-4974-a1ce-95e761659734/26-6a547279c2f36.webp' /></p><p>

இந்த காலகட்டத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என்றாலும், இடமாற்றங்களின் போது மாகாணங்களை மாற்றிய வாகனங்களின் பதிவு எண்கள் இவ்வாறு குவித்து வைக்கப்பட்டிருந்ததாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனப் பதிவு எண்களை ஜூன் 30 ஆம் திகதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறும், இல்லையெனில் அவை பழைய இரும்பாக அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>எண்களை அகற்ற&nbsp;நடவடிக்கை </h2><p> </p><p>

இது தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் உரிமையாளர்களுக்குத் தெரிவித்திருந்தபோதிலும், அந்த காலகட்டத்தில் 20க்கும் குறைவான பதிவு எண்களே உரிமையாளர்களால் எடுத்துச்செல்லப்பட்டதாக அதிகாரி கூறியுள்ளார்.
</p><p>
தற்போது புதிய நிறுவனம் வாகனப்பதிவு எண்களை அச்சிட தொடங்கியுள்ளதால், உரிமையாளர்களால் எடுத்துச்செல்லப்படாத அனைத்து பதிவு எண்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T05:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசியமற்ற விளக்கமறியலே சிறை நெருக்கடிக்குக் காரணம் - திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unnecessary-detention-cause-of-prison-crisis-1783918350"></link>
            <id>https://tamilwin.com/article/unnecessary-detention-cause-of-prison-crisis-1783918350</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலைமைக்கு, ஒவ்வொரு
சந்தேகநபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாரும் சட்டமா அதிபர் பிரிவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலைமைக்கு, ஒவ்வொரு
சந்தேகநபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாரும் சட்டமா அதிபர் பிரிவும்
நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கும் நடைமுறையே பிரதான காரணமாக அமைகின்றது
என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளருமான திஸ்ஸ
அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
குற்றத்தின் தன்மையை ஆராயாமல், சந்தேகநபர் ஒருவருக்கு வழங்கப்படும் முதல்
தண்டனையாக விளக்கமறியலில் அடைப்பதையே தற்போதைய நடைமுறையாகக் கொண்டுள்ளது
என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்கும் நடைமுறை</h2><p>

சிறைப்படுத்தாமல் வெளியில் வைத்தே விசாரிக்கக்கூடிய வழக்குகளுக்கும் இந்த
நடைமுறை பின்பற்றப்படுவது கவலைக்குரியது என்றும் ஊடகங்களிடம் அவர்
குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58791f24-622b-4b1f-b301-3659b78c1342/26-6a54720893ae3.webp' /></p><p>கைதிகள் கொள்ளளவுக்கு அதிகமாகச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளமையால்,
அவர்களைப் பராமரிப்பதற்கான அரச செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
</p><p>
தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள்
ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள்.
</p><p>
இந்த நெருக்கடிக்குத் தீர்வாக, அவசியமற்ற முறையில் சந்தேகநபர்களை
விளக்கமறியலில் வைக்கும் நடைமுறையைத் தவிர்த்து, அவர்கள் மீதான
குற்றச்சாட்டுகளை நேரடியாக நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்வதை ஊக்குவிக்க
வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாகப் பல முன்மொழிவுகள் தற்போது நீதி அமைச்சில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T05:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் மீண்டும் வேகமாக அதிகரிக்கும் எண்ணெய் விலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-price-increase-world-market-1783915842"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-price-increase-world-market-1783915842</id>
            <summary type="text">சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனை தொடர்ந்து அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனை தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.</p><h2>எண்ணெய் விலை அதிகரிப்பு</h2><p></p><p>
</p><p>
தற்போது, ​​ஒரு பீப்பாய் பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 79 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகவும், ஒரு பீப்பாய் WTI ரக எண்ணெயின் விலை 74 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.</p><p> 

இந்த இரண்டு முக்கிய எண்ணெய் விலைகளும் கடந்த வெள்ளிக்கிழமை விலைகளுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bbe35ad-37f9-44c9-9d1f-0510f42a6c75/26-6a5468fd362cd.webp' /></p><p> </p><p>

கடந்த வெள்ளிக்கிழமை (10.07.2026), ஒரு பீப்பாய் பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 76 அமெரிக்க டொலராகவும், ஒரு பீப்பாய் WTI ரக எண்ணெயின் விலை 72 அமெரிக்க டொலராகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T04:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணையால் பயனில்லை - சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motion-against-justice-minister-is-useless-1783915440"></link>
            <id>https://tamilwin.com/article/motion-against-justice-minister-is-useless-1783915440</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும்
ஏற்படப்போவதில்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும்
ஏற்படப்போவதில்லை என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன
தேரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று(12.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகள்</h2><p>
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"நாடாளுமன்றத்தில் அரசுக்கு 160 உறுப்பினர்களின் பலம் உள்ளது. ஆளுங்கட்சியும்
எதிர்க்கட்சியும் தற்போதைய சூழலில் ஒரே கொள்கையுடையவர்களாகச் செயற்படுவதால்,
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு மிக எளிதாகத் தோற்கடித்துவிடும்.</p><p>எனவே,
இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ecde3ae-f5ed-4de7-a877-d66c8d6a6f27/26-6a54683671cbf.webp' /></p><p>நீதித்துறையைப் போன்ற பொறுப்பு வாய்ந்த பதவிகளைச் சரியாகக் கையாளுவதற்குப்
பக்குவமும், முதிர்ச்சியும் அவசியம் என்று சுட்டிக்காட்டிய சீலரத்ன தேரர்,
அமைச்சர் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே செயற்படுகின்றார் என்றும் சாடியுள்ளார்.</p><p>

"நாடாளுமன்றத்துக்குள் மன்னிப்புக் கோருவது மட்டுமே தீர்வாகாது. நீதி
அமைச்சின் பொறுப்பு என்பது கண்ணீர் சிந்துவதோ அல்லது நாடகமாடுவதோ அல்ல. மாறாக சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான மருத்துவப்
புனர்வாழ்வு மற்றும் நிர்வாகத் தீர்வுகளைக் காண்பதே ஆகும்" என்றும் அவர்
வலியுறுத்தினார்.</p><p>

"நாட்டின் ஒட்டுமொத்த சிறைச்சாலைத் துறையும் இன்று சீர்குலைந்துள்ளமை அரசின்
நிர்வாகப் பலவீனத்தையே காட்டுகின்றது. கௌரவமான அரசியல் பின்னணி கொண்ட ஒருவரின்
மகனாக இருந்தும், அமைச்சர் செயற்படும் விதம் நீதி அமைச்சுக்கே அவப்பெயரைத்
தேடித் தருகின்றது" என்றும் சீலரத்ன தேரர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T04:23:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை வரலாற்றில் அதிகாரிகளின் மரணத்தால் தேசமே அதிர்ச்சி! தற்காப்பு பயத்தில் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-of-prison-officers-negombo-dilith-jayaweera-1783914282"></link>
            <id>https://tamilwin.com/article/death-of-prison-officers-negombo-dilith-jayaweera-1783914282</id>
            <summary type="text">இலங்கையின் 146 ஆண்டு கால சிறைச்சாலை வரலாற்றில், கைதிகளின் தாக்குதலுக்கு
உள்ளாகி சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் இதற்கு முன்னர் ஒருபோதும்
இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 146 ஆண்டு கால சிறைச்சாலை வரலாற்றில், கைதிகளின் தாக்குதலுக்கு
உள்ளாகி சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் இதற்கு முன்னர் ஒருபோதும்
இடம்பெற்றதில்லை என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
திலித் ஜயவீர தெரிவித்தார்.
</p><p>
காலியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர்
இந்தக் கவலையை வெளியிட்டார்.</p><p></p><h2>அரசாங்கத்தின் பிழையான அரசியல் அணுகுமுறைகள்&nbsp;</h2><p>
</p><p>
அரசாங்கத்தின் பிழையான அரசியல் அணுகுமுறைகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள்
காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த அரச கட்டமைப்புமே சீர்குலைந்து, நாடு ஒரு
'சட்டமற்ற நிலையை' நோக்கித் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்
சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3292ea30-a995-48ae-9e7f-b2be60cf51aa/26-6a5463f6f1822.webp' />&nbsp;</p><p>

"சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் என்ற முக்கிய பதவிக்கு ஓராண்டுக்கும் மேலாக
நிரந்தரமான ஒருவர் நியமிக்கப்படாமல் இருந்தது, முறையான தலைமைத்துவமின்மையை
வெளிப்படுத்துகின்றது. </p><p>இதன் விளைவாகவே அப்பாவி அதிகாரிகள் தங்கள் உயிர்களை
இழக்க நேரிட்டுள்ளது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
முன்னதாகப் பதவியில் இருந்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், செய்யாத தவறுக்காக
அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு அநியாயமாக விளக்கமறியலில்
வைக்கப்பட்டமையை அவர் விமர்சித்தார். அவர் நடத்தப்பட்ட விதம் மனிதநேயமற்றது என
மனித உரிமைகள் ஆணைக்குழுவே சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>அரச கட்டமைப்பின் வீழ்ச்சி உறுதி</h2><p> இவ்வாறான நிர்வாக நடவடிக்கைகள் அரச கட்டமைப்பின் வீழ்ச்சியை
உறுதிப்படுத்துகின்றன என்றார்.

அரசின் கடுமையான ஒடுக்குமுறைப் போக்குகளுக்கு அஞ்சி, எதிர்க்கட்சிகள்
தற்காப்புப் பயத்துடன் அரசியல் செய்து வருகின்றன என்றும் அவர் கவலை
வெளியிட்டார்.</p><p>

"சிறு போக்குவரத்து விதிமீறலுக்குக்கூட அரசு தங்களைப் பழிவாங்கிவிடுமோ என்று
அஞ்சும் அளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அரசியல் வீரியம்
குறைந்துவிட்டது. </p><p>தற்போதைய சூழலில் நாட்டின் ஜனநாயகப் பண்புகளையும், சமூக
அமைதியையும் பாதுகாப்பது அனைத்து அரசியல்வாதிகளின் முதன்மைக் கடமையாகும்"
என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.</p><p>

நாட்டின் கல்வி, நீதி, சுகாதாரத் துறைகள் என அனைத்து முதன்மைத் துறைகளும்
முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாட்டைச் சீராக இயக்குவதற்கான
குறைந்தபட்ச மாற்றங்களையாவது அரசு செய்திருக்க வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T04:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலையில் சிக்கி 19 வயதான இளைஞர் உயிரிழப்பு - தங்காலையில் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/19-year-old-youth-dies-1783912855"></link>
            <id>https://tamilwin.com/article/19-year-old-youth-dies-1783912855</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை, மாவெல்ல கடற்பரப்பில் காணாமல்போன இளைஞரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தங்காலை, கொடெல்லவெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை, மாவெல்ல கடற்பரப்பில் காணாமல்போன இளைஞரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தங்காலை, கொடெல்லவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>தீவிர தேடுதல் நடவடிக்கை</h2><p>

கடந்த வியாழக்கிழமை மாவெல்ல - மஹகலாகாவ கடற்கரைப் பகுதியில் தூண்டில் போட்டு
மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எழுந்த கடல் அலையில்
சிக்கி அவர் இழுத்துச்செல்லப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af19fb5-a129-4952-9f3c-0cb01fcbba2e/26-6a545c3af2ece.webp' /></p><p>
</p><p>
காணாமல்போன இளைஞரைக் கண்டறிய பிரதேச மக்கள், பொலிஸ் உயிர்பாதுகாப்புப் பிரிவு
மற்றும் கடற்படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும்,
அவர் கிடைக்கவில்லை.
</p><p>
இந்நிலையில், நேற்று பிற்பகல் மாவெல்ல கடற்பரப்பில் சடலம் மிதப்பதைக் கண்ட
மீனவர்கள், அதனைப் படகு மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்த சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T03:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-preparing-to-change-retirement-age-1783910768"></link>
            <id>https://tamilwin.com/article/government-preparing-to-change-retirement-age-1783910768</id>
            <summary type="text">ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் இந்த கோரிக்கைகளை பரிசீலித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று (12) மீரிகம வைத்தியசாலையின் புதிய சிறுநீரகக்கல் அகற்றும் சிகிச்சை பிரிவின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர், அமைச்சர் ஊடகங்களிடம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>அரசாங்கத்திடம் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
 ஓய்வுபெறும் வயது தொடர்பாக பல்வேறு தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதன்படி இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab24c36e-0676-409d-a909-7dfca52f1a9f/26-6a5458cd87369.webp' /></p><p>
</p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும், சிறைத்துறையிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
</p><p>
ஏனைய தொழில் வல்லுநர்கள் தங்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக நீண்ட காலம் பணியாற்றலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. சிலர் இதை எதிர்க்கலாம். ஆனால், அரசாங்கம் என்ற முறையில், நாங்கள் அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T03:17:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783909522"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783909522</id>
            <summary type="text">ஆசியாவிலேயே மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியாவிலேயே மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p>உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையில் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளதுடன், நைஜீரியா 320.3 என்ற குறியீட்டுடன் முதலிடத்திலும், கொஸ்டாரிகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.</p><p></p><h2>குறைந்த போக்குவரத்து நெரிசல்</h2><p>
</p><p>இதேவேளை, பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24c3978-8a0f-484a-90e3-413422148338/26-6a5450ea7a9d1.webp' /></p><p>இதற்கிடையில், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் ஒப்பீட்டளவில் குறைந்த போக்குவரத்து நெரிசல் அளவுகளைப் பதிவு செய்துள்ளன.</p><p>பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் Numbeo நிறுவனம் இந்த குறியீட்டை தயாரித்துள்ளது.</p><h2>போக்குவரத்து நெரிசல் அளவிடல்</h2><p>பயண நேரம், நெரிசலால் வீணாகும் நேரம், எரிபொருள் திறனின்மை மற்றும் பயணத்துடன் தொடர்புடைய மதிப்பிடப்பட்ட CO₂ வெளியேற்றம் போன்ற காரணிகளின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் அளவிடப்படுகின்றது.</p><p>இந்த தரவுகள், இலங்கையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:44:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்த நாளில் மகனால் படுகொலை செய்யப்பட்ட தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-killed-father-on-his-birthday-1783907111"></link>
            <id>https://tamilwin.com/article/son-killed-father-on-his-birthday-1783907111</id>
            <summary type="text">மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் தந்தையின் பிறந்த நாளில், அவரது மகன அவரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
 

அக்குரஸ்ஸ, ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் தந்தையின் பிறந்த நாளில், அவரது மகன அவரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
</p><p> 

அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் வசித்து வந்த 81 வயதுடைய முதியவரே மகனின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். </p><p>

மதுப் பழக்கத்திற்கு அடிமையான குறித்த நபர் தனது தந்தையை கொலை செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

பிரேத பரிசோதனை</b></h2><p>வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0eeffa-89ca-4464-ba4f-b8808b6fc4bd/26-6a544f6c0fe15.webp' /></p><p>மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-13T02:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-all-suspects-identified-1783908184"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-all-suspects-identified-1783908184</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும்
சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது.</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல் விவகாரம்</h2><p>

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட
இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5314005c-7159-406a-bb4d-ec89b3a94a71/26-6a544be3d8f98.webp' /></p><p> துரதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை
விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மோதலுக்குப் பின்னர், சிறைச்சாலையில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில்
கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். </p><p>இதுவரை அங்கிருந்து
பெரும்பாலானோர் மாற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் 600 கைதிகளும்
விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>ஆரம்பக்கட்ட நட்டஈடு</h2><p> உயிரிழந்த
கைதிகளின் சடலங்கள் அனைத்தும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக
தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e13cf2a1-d1cb-49e4-b9bc-7b2120a49edf/26-6a544be4879da.webp' />&nbsp;</p><p> மேலதிகமாக, தலா 20 இலட்சம்
ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி
வருகின்றது என்று சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டார்.
</p><p>இந்த மோதல் சம்பவம் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல்
காரணமாக ஏற்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, முன்னாள் மனித உரிமைகள்
ஆணையாளர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-cracks-injured-prison-officer-1783905907"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-cracks-injured-prison-officer-1783905907</id>
            <summary type="text">கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் கூறிய முக்கிய தகவல்கள்,</p><p>5ஆம் திகதி நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில், அதாவது 6ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்த ஒரு நாளாகும். </p><p>அதேபோல் அன்று கைதிகளைப் பார்ப்பதற்கு வீடுகளில் இருந்து உறவினர்கள் வரும் நாளாகும். அதற்கு நாம் தயாராகவே இருந்தோம். </p><p>அந்த நேரத்தில் கைதிகள் மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டிருந்தனர். இதுதான் அங்கு நடந்த மிக பயங்கரமான சம்பவமாகும். </p><h2>

</h2><p></p><h2>டெங்கு காய்ச்சல் பாதிப்பு</h2><p>இது உணவருந்துவதற்கு முன்பே நடந்தது, எனக்கு நேரம் அவ்வளவாக நினைவில்லை. அன்று எப்படியும் கடமையில் ஈடுபட்டிருந்தது ஒரு சில அதிகாரிகள் மட்டும்தான். </p><p>அந்த நேரத்தில் பல அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு பத்து பேர் வரை பணிக்கு வரவில்லை. </p><p>இதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் சில அதிகாரிகள் நீர்கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். கைதிகளிலும் பெரும்பாலானோருக்கு டெங்கு தொற்றியிருந்தது. </p><p>டெங்கு அல்லாத உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் நிலைமை போன்ற ஒன்று எல்லோருக்குமே இருந்தது.
இதன் காரணமாக நாம் பெனடோல் கூட கொடுத்தோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38e4c9d-b1e7-43af-ab96-ef80785a0867/26-6a543e75eec5f.webp' /></p><p>கடந்த நாட்களில் டெங்கு காரணமாக மூன்று கைதிகளுக்கும் மேல் உயிரிழந்தும் இருந்தனர். நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததால், மூன்று நான்கு அதிகாரிகள் காலையில் உணவு கொடுப்பதற்காகச் சென்றிருந்தனர். </p><p>முதலில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மேலும் சில அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அனைவரும் பெட்டன் (Baton) தடிகளுடனேயே சென்றனர். </p><p>அங்கு அதிகாரிகளின் பெட்டன் தடிகளைப் பறித்து, அந்த அதிகாரிகளுக்கே அடிக்கும் ஒரு நிலைமைதான் காணப்பட்டது.
சிறைக் கூடங்களில் மூடியுள்ள இரண்டு பாதுகாப்பு ஜன்னல்கள் (security windows) உள்ளன. </p><p>அதில் ஒரு பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரிக்கு அடித்துத்தான், அந்த ஜன்னலில் இருந்த டி-56 (T-56) துப்பாக்கியை பறித்திருக்கிறார்கள். </p><p>மூன்றாவது குழுவில்தான் நான் உள்ளே செல்கிறேன். நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் அவர்களுடன்தான் நான் செல்கிறேன். அந்த நேரத்தில் சக அதிகாரிகளைத் தாக்கி, கைதிகள் அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.</p><h2>உடற்பயிற்சிப் பிரிவு உடைக்கப்பட்டது</h2><p>சிறைச்சாலைக்குள் கைதிகள் இருந்த உடற்பயிற்சிப் பிரிவின் உபகரணங்களில் இருந்த இரும்புத் தடிகளை உடைத்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியிருந்தனர். </p><p>உள்ளே சென்றவுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை முறையைத்தான் நாம் கண்டோம். கைதிகள் இப்படி நடந்துகொள்வதை நான் கனவிலும் பார்த்ததில்லை. அவர்கள் பேய்களைப் போல நடந்து கொண்டார்கள். </p><p>என்னையும் என்னுடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முதலில் எங்கள் மீது கற்களால் எறிந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59a98e2-0bdd-4629-be29-dcf3f1428761/26-6a543e769c726.webp' /></p><p>முதலில் சென்ற சிலரைக் காப்பாற்றவே இரண்டாவது குழு சென்றது. அந்த இரண்டாவது குழுவைக் காப்பாற்றத்தான் நாம் சென்றோம். சென்ற பிறகுதான் கண்டோம், இது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல என்று. </p><p>அங்கு நின்றவர்கள் தாக்கிய பிறகு நான் கீழே விழுந்தேன்.
"சேர் நீங்கள் வராதீர்கள், போய்விடுங்கள்! இவர்கள் பைத்தியக்காரர்களைப் போல இருக்கிறார்கள்" சிறைச்சாலை அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு குழுவினர் கத்தினர். </p><p> இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள்" என்ற விடயத்தைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். </p><h2>

அதிகாரிகளை பாதுகாத்த கைதிகள்</h2><p>அந்த நேரத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். "சேருக்கு அடிக்க வேண்டாம், சேருக்கு அடிக்க வேண்டாம்" என்று கூறி பழைய கைதிகள் நான்கு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். </p><p> எங்களைப் பாதுகாக்க வந்த கைதிகளையும், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட கைதிகள் தாக்கினார்கள். அதற்கு இடையில் ஒரு பெட்டன் தடி அடி எனது தலையில் விழுந்தது. </p><p>அதேநேரம் யாரோ ஒருவர் எனது கழுத்தில் காலையோ அல்லது பெட்டன் தடியையோ வைத்து அமுக்கினர். அப்படியே என்னை தரையோடு இழுத்துச் சென்று எங்கோ வீசினார்கள். </p><p>எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது. அடுத்ததாக எனது தலை சுவரில் மோதுவது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு யாரோ எனது மூக்கின் அருகில் விரலை வைத்து நான் மூச்சுவிடுகிறேனா என்று பார்ப்பது போல எனக்கு உணர்ந்தது. </p><p>அங்கிருந்து உயிருடன் வெளியே செல்ல முடியும் என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. பழைய கைதிகள் " ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினார்கள். </p><p></p><p>அவர்கள்தான் இரும்பு நுழைவாயிலை திறந்து வெளியே போக உதவினார்கள். எமது கைகளில் இருந்த தொலைபேசிகளைக் கைதிகள் பறித்துக் கொண்டனர். </p><p>எனது கழுத்தில் இருந்த சங்கிலி கூட மிஞ்சவில்லை.
இந்த அதிகாரி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உண்மையில் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது என்ற கதையைத்தான் அவர் கூறுகிறார்.&nbsp;</p><p></p><p><b><i>you may like this video&nbsp;&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MYsLAFnVaqE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியினர் சென்னையில் அதிரடியாக கைது - சிக்கிய போலி ஆவணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-couple-arrested-for-tamil-nadu-1783906757"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-couple-arrested-for-tamil-nadu-1783906757</id>
            <summary type="text">சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதியினர்&amp;nbsp; கைது செய்யப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதியினர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென்றபோது போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; &nbsp;</p><h2>போலியான முகவரி ஆதாரங்கள்</h2><p>இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57904980-7bff-41c6-9f7b-a2209cae76d7/26-6a5446acaee4a.webp' /></p><p>இவர்கள் தியாகராயநகர் பகுதியில் சிறிய நகைக்கடையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p>

இவர்கள் இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி, போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">4 பிரிவுகளில் வழக்குப்பதிவு&nbsp;</span></p><p>
</p><p>
விசாரணையின் முடிவில், இவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffca6b3c-7d3f-43fc-8243-d0c4313830c7/26-6a5446ad5ed0e.webp' />&nbsp;</p><p>
</p><p>
இந்த நிலையில், இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>தமிழக சட்டமன்றத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த பலர் முறைகேடாக வாக்களித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், நேற்றும் இருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T02:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக நாமலின் புதிய வியூகம் - சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-new-opposition-to-be-started-1783905716"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-new-opposition-to-be-started-1783905716</id>
            <summary type="text">புதிய அரசியல் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய அரசியல் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

“<b>புதிய அலை</b>” என்ற பெயரில் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
தென்னிலங்கை அரசியல்</b></h2><p>அத்துடன், டி.வி. சானக்க, சானக்க மாதுகொட, அனுராத ஜயரத்ன மற்றும் ரோகித அபேகுணவர்தன உள்ளிட்ட நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் இதில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a18a9b91-4bdb-42a0-bf87-509971d73cc7/26-6a54413ac9a45.webp' /></p><p>எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்களை ஒன்றிணைத்து பரந்ததொரு முன்னணியை உருவாக்குவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p>
அதற்கமைய, பிரதேச மட்டத்தில் உள்ள துடிப்பான இளம் தலைவர்களை முன்னிலைக்குக் கொண்டுவருவதுமே இதன் நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><h3><b>
கூட்டு எதிர்க்கட்சி</b></h3><p>கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டங்களில் முன்னிலை வகித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அனுராத ஜயரத்ன உள்ளிட்ட சிலர் அதன் செயற்பாடுகளிலிருந்து விலகவுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6d4ebb5-41a6-4ded-9f2f-ea2ddaac490c/26-6a54413b7c3d7.webp' /></p><p>அதில் இருந்து விலகி, இந்தப் புதிய குழுவுடன் இணையவுள்ளதாகவும், திலும் அமுனுகம உள்ளிட்ட சிலரும் எதிர்காலத்தில் இக்குழுவுடன் இணையவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-13T01:37:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகிறதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-govt-trying-to-middle-in-justice-system-1783905200"></link>
            <id>https://tamilwin.com/article/npp-govt-trying-to-middle-in-justice-system-1783905200</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடி்ருந்த போதிலும் அவர்கள் எவரும் தற்போதைய ஜனாதிபதியைப் போல் நீதியரசர் பதவி வெற்றிடங்களை பேணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் தலா 4 நீதியரசர் பதவிகள் வீதம் பற்றாக்குறை நிலவுகிறது. என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbc3da0-9353-4762-a09d-bd1fdf6d6af8/26-6a543bb22f77f.webp' /></p><p>
இதனால் கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்குரிய பதவி உயர்வுகளைப் பெற்றுச் செல்வதற்காகக் காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த நாட்களில் இன்னார்தான் சிறைக்குச் செல்வார், பால்சோறு சாப்பிடுவதற்குத் தயாராகுங்கள் என்று ஜனாதிபதி பகிரங்க மேடைகளில் கூறி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>கீழ் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு லஞ்சமாக வழங்குவதற்காகவே இந்த உயர் பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளனவா என்ற பலத்த சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நாட்டின் இத்தகைய நிலைமையைக் காணும்போது தனக்கு கடுமையான அருவருப்பு ஏற்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T01:13:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-notice-for-all-students-1783901845"></link>
            <id>https://tamilwin.com/article/important-notice-for-all-students-1783901845</id>
            <summary type="text">டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
</p><p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொருத்தமான ஆடைகள்&nbsp;</h2><p>
</p><p>அதன்படி, பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிவதற்கு பாடசாலைகள் அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4277108f-ef16-4ede-b830-77edadfd33b2/26-6a542e9748d4f.webp' /></p><p>
வழக்கமான பாடசாலை சீருடையுடன் சேர்த்து, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் வகையில் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய மாணவர்களை அனுமதிக்குமாறு பள்ளி அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>தர நிர்ணயங்களுக்குட்பட்ட நுளம்பு விரட்டிகளை பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>பாடசாலை மாணவர்களை டெங்கு நுளம்புக்கடியிலிருந்து பாதுகாப்பதே இந்த அவசர நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:51:56+00:00</updated>
        </entry>
    </feed>
