<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-13T12:33:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் அநுர அரசை ஆட்டம் காணச் செய்யும் ஒரு சதி! விரைவில் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783940848"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783940848</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் இருக்கலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர சந்தேகம் எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>நீர்கொழும்பு சிறைக் கலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>திட்டமிட்ட சதி&nbsp;</h2><p>தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தையும், உயிரிழப்புக்களையும் இந்த அரசாங்கம் பாதுகாக்க தவறியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு&nbsp; அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,&nbsp;</p><p>அரசாங்கத்தினால், பாதுகாப்பு வழங்க&nbsp; இயலாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.&nbsp; ஏற்கனவே இருந்த ஒரு மோதல் மீண்டும் தலைதூக்கியதற்கும்,&nbsp; &nbsp;பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பின்னால் பாரிய சதித்திட்டம் உள்ளது என நான் நினைக்கின்றேன்.&nbsp; இதன் உண்மைத் தன்மையை நாங்கள் கண்டறிய வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d0d6e37-99a3-433e-b4d7-e0aa9608c6fe/26-6a54cd9eb286e.webp' /></p><p>இந்த அரசை மாற்றி, எந்த வழியிலாவது அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பும் குழுக்கள் இதன் பின்னணியில் உள்ளன என நாங்கள் கருதுகின்றோம்.</p><p>குறித்த குழுவைச் சேர்ந்த பலர் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும். எனவே, தங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, அரசை மிக விரைவில் பதவியில் இருந்து நீக்கத் திட்டமிடும் ஒரு குழு உள்ளது.&nbsp;</p><p>ஆகையால், அரசாங்கத்திற்கு எதிராக சதி மேற்கொள்ளும் ஒரு குழு இருக்கும் போது, இவ்வாறான திட்டமிட்ட சம்பவங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RYIRTelCHXE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-13T11:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - 22 வயது இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcycle-collides-with-bus-in-jaffna-1783942608"></link>
            <id>https://tamilwin.com/article/motorcycle-collides-with-bus-in-jaffna-1783942608</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியின் பள்ளிக்குடா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று(12.07....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியின் பள்ளிக்குடா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் நேற்று(12.07.2026) இடம்பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார். </p><p>



மன்னார் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று பள்ளிக்குடா சந்தியில் வலது புறமாகத்
திரும்புவதற்கு முற்பட்டபோது, அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><p> </p><h2>

22 வயது இளைஞர் பலி</h2><p>
இதன்போது, மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயமடைந்துள்ளதுடன், பின்னால் பயணித்தவருடம் உடனடியாக மீட்கப்பட்டு, பூநகரி வைத்திசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeb70a46-0cf3-4dcb-91af-d2faf34b711e/26-6a54ce125c35a.webp' /></p><p> </p><p>

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்கைக்காக இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p> 


இதனைத் தொடர்ந்து, இன்று(13) தெலிகடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய
மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T11:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம் - தமிழர் தாயகம் எங்கும் தொடரவுள்ள போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-to-launched-in-the-north-and-east-1783940369"></link>
            <id>https://tamilwin.com/article/protest-to-launched-in-the-north-and-east-1783940369</id>
            <summary type="text">தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்
&quot;நீதியின் ஓலம் 2 &quot; எனும் கவனயீர்ப்பு போராட்டம்
ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்
"நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம்
ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக
தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று(13.07.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில்</h2><p>மேலும் கூறுகையில் -

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம்
முன்னெடுக்கப்படது.</p><p>இதன் தொடர்ச்சியாக, 14.08.2026 வெள்ளிக்கிழமை தொடங்கி 17.08.2026 வரை
தொடர்ந்து நான்கு நாட்கள் யாழ் நகரில் "நீதியின் ஓலம் 2" எனும் போராட்டத்தின்
வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம்
இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இறுதி நாள் (17.08.2026) மாபெரும்
பேரணியும் நடை பெறவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8133393b-ec3f-4519-933c-74f7adebd1dc/26-6a54c960e4a90.webp' /></p><p>
முன்பதாக தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின்
சாட்சியாக யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில்
இருந்து 412இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>செம்மணி மனிதப் புதைகுழி என்பது, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரச
பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் சிறு சாட்சியம் மட்டுமே.
</p><p>
குறிப்பாக, 1996ஆம் ஆண்டில் இலங்கை அரசுப் படையினரால் கூட்டுப் பாலியல்
வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, 16 வயதுடைய பாடசாலை
மாணவியின் வழக்கின் மூலமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.</p><p>இப்படுகொலைக்கு முன்னதாக 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு காலத்திலும்
அதன் பின்னரிலும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல
நூற்றுக்கணக்கானோர் மிகக் கொடூரமாக படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்பதனை
நிரூபிக்கும் வகையில், கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட
இலங்கை அரசுப் படைச் சிப்பாயின் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில், 1999ஆம் ஆண்டில் 15 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன.</p><p>நீதியின் ஓலம் போன்ற கவனயீர்ப்பு நிகழ்வு, அணையாவிளக்கு
போராட்டங்கள் ஆக எமது மக்களால்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>இறுதி நாள் மாபெரும் பேரணி&nbsp;</h2><p>
</p><p>
இதனடிப்படையில் "நீதியின் ஓலம் 2" போராட்டத்தின் கோரிக்கைகளாக -
</p><p>
1.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப்
புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும்.
</p><p>
2.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்
இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான
நிலைப்பாடு எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f951d75e-b85e-4250-a6c7-cfdd5ddf5450/26-6a54c961d5d5e.webp' /></p><p>3.தமிழர்கள்மீது இனப்படுகொலை செய்த படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா,
பிரித்தானியா, கனடா போல அனைத்து நாடுகளும் பயணத் தடையை நடைமுறைப்படுத்த
வேண்டும்.
</p><p>
4.தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்க
ஐக்கிய நாடுகள் சபை முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.&nbsp;</p><p>5.இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை
விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை
நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
</p><p>
6."பயங்கரவாதத் தடைச் சட்டம்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின
அடக்குமுறைகளை நிறுத்தவும், நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல்
கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச அழுத்தம் தேவை.
</p><p>
7.கடந்த 77ஆண்டுகளாக ஒற்றை ஆட்சியின் கீழ் கட்டமைக்கப்பட்ட தமிழின
சுத்திகரிப்பையும் தொடரும் தமிழர் இனவழிப்பையும் நினைவழிப்பையும் நிறுத்தி,
ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய
அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்."
</p><p>
8.வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும்,
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு,
வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்
இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
</p><p>
9.Unitary State / Ekiya Rajya அடிப்படையிலான போலி தீர்வு திட்டங்கள்
நிராகரிக்கப்பட வேண்டும்; தமிழர் தேச அதிகாரங்கள் மீளப்பெற முடியாத
சுயநிர்ணயத்தின் அடிப்படையிலும் சர்வதேச உத்தரவாதத்துடனும் உறுதி செய்யப்பட
வேண்டும்
</p><p>
10.பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பயங்கரவாதத்
தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான சட்டமூலம் (PTSA) முழுமையாக மீளப்பெறப்பட
வேண்டும்.</p><p>மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி, "நீதியின் ஓலம் 2" என்ற போராட்டம் 14.08.2026
வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு செம்மணியில் ஆரம்பித்து தமிழர் தாயகத்தின்
அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் திரண்டு வருகை தந்து (17.08.2026)
இறுதி நாள் மாபெரும் பேரணி யாழ் நகரில் இடம்பெறும்.</p><p>இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புகளும், குறிப்பாக
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள், மத
அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், போக்குவரத்து
கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச்சங்கங்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் உறவுகள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் பாராளுமன்ற
உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவும்
ஒத்துழைப்பும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T11:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இ.போ.சபையின் பேருந்துகள் சேவைகள் ஸ்தம்பிதம்: அரச ஊழியர்கள் - மாணவர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-ctb-bus-services-paralyzed-affected-1783941282"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-ctb-bus-services-paralyzed-affected-1783941282</id>
            <summary type="text">வவுனியாவில் இ.போ.சபை பேருந்துக்கள் இன்று(13) காலை முதல் பேருந்துச்
சேவைகளை முன்னெடுக்காமையால் அரச ஊழியர்கள், மாணவர்கள், பொது மக்கள்
பாதிப்படைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இ.போ.சபை பேருந்துக்கள் இன்று(13) காலை முதல் பேருந்துச்
சேவைகளை முன்னெடுக்காமையால் அரச ஊழியர்கள், மாணவர்கள், பொது மக்கள்
பாதிப்படைந்துள்ளனர்.
</p><p>நேற்று(12.07.2026) சாலையின் பொறியியல் பகுதியில் பணிபுரியும் ஊழியர்கள்
கடமைக்கு சமூகம் தராமையே பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை
ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.</p><p></p><h2>சேவைகள் ஸ்தம்பிதம்</h2><p>

மேலதிக நேரக்கொடுப்பனவு விடயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பொறியில்
பிரிவு ஊழியர்கள் சமூகம் தரவில்லை எனக் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d562f88-2cf6-4a86-b47e-bd07c324952b/26-6a54cb2c87d4a.webp' /></p><p>

இன்றையதினம் (13.07.2026) திங்கட்கிழமை என்பதால் பேருந்து சேவைகள் இன்மையால்
பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய நிலை
ஏற்பட்டிருந்தது. </p><p>குறிப்பாக பருவகால சீட்டு பெற்றிருந்தவர்கள் அசௌகரியங்களை
அதிகமாக எதிர் நோக்கி இருந்ததுடன், சில அரச ஊழியர்கள் தாமதமாகவே தமது வேலைத்
தளங்களுக்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T11:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் விசேட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/abank-will-soon-be-established-for-debt-farmers-1783938184"></link>
            <id>https://tamilwin.com/article/abank-will-soon-be-established-for-debt-farmers-1783938184</id>
            <summary type="text">






தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர் அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>






தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர் அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் ஊடகச்சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>விவசாயிகளுக்கு விசேட திட்டம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

அடுத்த இரண்டு அல்லது மூன்று பருவங்களில், நாங்கள் விவசாய சங்கங்களை அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான பணத்தை வழங்குவோம். 

நமது விவசாயிகள் மிகுந்த கடனில் உள்ளனர்.</p><p> அவர்கள் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடம் கடன்பட்டுள்ளனர், அதனால் அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது தங்கள் நெல்லை விற்கவோ முடியவில்லை. 

அவர்கள் வட்டிக்குக் கடன் வாங்குவதால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85a8eb3-3b56-49f8-8c19-c6f09b53179e/26-6a54c99c4cd59.webp' /></p><p> 

எனவே, நாங்கள் ஒரு வங்கியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் உற்பத்திச் செலவை வழங்குவோம்.

 நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒவ்வொரு விவசாய நிறுவனத்திலும் ஒரு வேளாண்மை உதவி மையத்தை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம்.</p><p> உலகின் மிகவும் மேம்பட்ட இயந்திரங்கள், பெரிய டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், ட்ரோன்கள், களை எடுக்கும் மற்றும் கட்டும் இயந்திரங்களை நாங்கள் கொண்டு வருவோம். </p><p>

அந்த நிறுவனங்கள் மூலம், விவசாயிகளின் தேவைகளை மலிவு விலையில் பூர்த்தி செய்ய ஏற்பாடுகளைச் செய்வோம். நாங்கள் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறோம். 

விவசாயிகள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிப்பதற்காகவே நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வந்தோம் என்றார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-13T11:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஎஸ்கே அணியிலிருந்து பதவி விலகிய முக்கிய நபர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/csk-head-coach-stephen-fleming-part-ways-17-years-1783939491"></link>
            <id>https://tamilwin.com/article/csk-head-coach-stephen-fleming-part-ways-17-years-1783939491</id>
            <summary type="text">ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
</p><p>
இந்த முடிவு, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் பிளெமிங் தரப்பு இடையே நடைபெற்ற கலந்தாலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>சென்னை சூப்பர் கிங்ஸ்</h2><p>
</p><p>
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ், இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">OFFICIAL ANNOUNCEMENT<br><br>The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.<br>Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you&#39;ve built will continue to inspire us.<br><br>With immense respect and… <a href="https://t.co/qjvb4oZUuU">pic.twitter.com/qjvb4oZUuU</a></p>&mdash; Chennai Super Kings (@ChennaiIPL) <a href="https://x.com/ChennaiIPL/status/2076550405560111496?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>மேலும், பல முறை பிளே-ஆஃப் சுற்றுக்கும், 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

கடைசியாக 2023ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே, அதன் பின்னர் தொடர்ந்து மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியுள்ளது. </p><p>இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார்.

53 வயதான ஸ்டீபன் பிளெமிங், 2008ஆம் ஆண்டு தொடக்க ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வீரராக விளையாடினார். </p><p>அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று, 2026 சீசன் வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார்.</p><p></p><h2>&nbsp;ஸ்டீபன் பிளெமிங் விலகல்</h2><p>

அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும், 12 முறை பிளே-ஆஃப் மற்றும் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அணியை வழிநடத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516c71e8-7a0b-45a9-9773-72a2d089e544/26-6a54c6a088113.webp' /></p><p>
சிஎஸ்கே நிர்வகித்து வரும் தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 தொடரில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பிளெமிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ளார்.</p><p>

பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டீபன் பிளெமிங், "18 ஆண்டுகள் என்பது என் விளையாட்டு வாழ்க்கையில் மறக்க முடியாத காலம்.</p><p> மிகுந்த நன்றியுடன் விடைபெறுகிறேன். பயிற்சியாளராக சிஎஸ்கேவுடன் இணைந்து பணியாற்றியது மிகச் சிறப்பான அனுபவம். நாங்கள் இணைந்து படைத்த சாதனைகள் குறித்து பெருமை கொள்கிறேன். அந்த நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.</p><p></p><p><b>You May Like This..<br><br></b><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1713613653119976%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-13T11:06:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முடக்கம் - உலக சந்தையில் எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-rises-4-as-hormuz-threatens-exports-1783938637"></link>
            <id>https://tamilwin.com/article/oil-rises-4-as-hormuz-threatens-exports-1783938637</id>
            <summary type="text">


அமெரிக்கா - ஈரான் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அமெரிக்கா - ஈரான் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, இன்று(13.07.2026) எண்ணெய் விலைகள் 4% க்கும் மேல் உயர்வடைந்துள்ளது. </p><p>

பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் 0325 GMT நிலவரப்படி, 3.10 டொலர் (4.08%) உயர்ந்து, 79.11 ஆக டொலராக காணப்பட்ட நிலையில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.95 டொலர் (4.11%) உயர்ந்து 74.36 டொலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>


அமெரிக்கப் படைகள் நேற்று(12) ஈரானுக்கு எதிரான மற்றொரு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. </p><p> 

இதன்படி, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் இன்று(13) அறிவித்துள்ளனர்.
</p><h2>



ட்ரம்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து ஈரான் அதிரடி&nbsp;</h2><p>

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c93827e-2072-4625-a153-000ebebe4543/26-6a54c59ef0451.webp' /></p><p> </p><p>


 இருப்பினும், அங்கீகரிக்கப்படாத பாதையில் பயணித்த ஒரு கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீரிணையை மூடிவிட்டதாக ஈரான் முன்னதாகவே அறிவித்திருந்தது. 

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்குவதற்கு முன்பு, உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது. </p><p>

இதன்படி, நேற்று ஆறு கப்பல்கள் இந்த ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தன என்று Kpler நிறுவனத்தின் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் காட்டியுள்ளன. இது கடந்த ஐந்து வாரங்களில் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.</p><h2> 


எரிபொருள் விலை அதிகரிப்பு</h2><p>
மேலும் 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நீரிணை மீண்டும் திறந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-ஈரானிய இடைக்கால ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து, அதிகரித்து வரும் இந்தத் தாக்குதல்கள் மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.</p><p> 

ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஒரு நாளைக்கு 4.1 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்தது, ஆனால் அது போருக்கு முந்தைய அளவை விட ஒரு நாளைக்கு 9.4 மில்லியன் பீப்பாய்கள் குறைவாகவே இருந்தது என்று சர்வதேச எரிசக்தி முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef22c40-ccd3-40a0-954b-1aa568458e19/26-6a54c59f9f1b1.webp' /></p><p> </p><p>

 வார இறுதியில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சமீபத்திய சிறு மோதல்களுக்கு ஒப்பீட்டளவில் விரைவான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் கேள்விக் குறியாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். 

எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட ஒப்பீட்டளவில் மிதமான உயர்வு, தற்போதைய மோதல்கள் ஒரு பலவீனமான போர்நிறுத்தத்திற்குள் ஏற்பட்ட ஒரு பதற்ற அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும், போர்நிறுத்தம் முழுமையாகச் சரிவடைவதற்கு வெகு தொலைவில் உள்ளது என்றும் சந்தை கருதுவதைக் காட்டுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p>




</p>]]></content>
            <updated>2026-07-13T11:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warn-public-fake-online-fine-messages-1783936235"></link>
            <id>https://tamilwin.com/article/police-warn-public-fake-online-fine-messages-1783936235</id>
            <summary type="text">சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து இலங்கை பொலிஸ் திணைக்களம் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளது.</p><p>

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து (DMT) வந்ததாகத் தோன்றும் அந்தச் செய்திகள், கூறப்படும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றன. </p><p>

</p><p></p><h2>செய்திகள் முற்றிலும் போலியானவை</h2><p>இருப்பினும், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பிற்கு பொறுப்பாளரான டிஐஜி டபிள்யூ.பி.ஜே. செனடீரா, டிஎம்டி அத்தகைய எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்றும், அந்தச் செய்திகள் முற்றிலும் போலியானவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00e3fa88-e79b-4cb6-8e25-6c1b9cb7df01/26-6a54c2f08c9ee.webp' /></p><p>
</p><p>மேலும் அந்த குறுஞ்செய்தி இணைப்புகளைத் திறக்கவோ, தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை வழங்கவோ, அல்லது அந்தச் செய்திகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>பாதிக்கப்பட்ட எவரும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RYIRTelCHXE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-13T10:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் முகமூடி அணிந்த மர்ம நபர்: வெளியான உண்மை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/who-wore-a-mask-the-iranian-supreme-leader-funeral-1783937711"></link>
            <id>https://tamilwin.com/article/who-wore-a-mask-the-iranian-supreme-leader-funeral-1783937711</id>
            <summary type="text">ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கலந்து கொண்டது சமூக ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கலந்து கொண்டது சமூக ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
</p><p>
இறுதி அஞ்சலி நிகழ்வின் போது, கருப்பு நிற முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒருவர் முன்வரிசையில் அமர்ந்திருந்த காட்சி வெளியாகியதைத் தொடர்ந்து, அவர் கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி என பலரும் தங்களது யூகங்களை தெரிவித்திருந்தனர்.</p><p></p><h2>&nbsp;இறுதிச்சடங்கு</h2><p>அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, மொஜ்தபா கமேனி அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடும் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக முகமூடி அணிந்து வந்ததாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியானது.

எனினும், இந்த சர்ச்சைக்கு ஈரானிய ஊடகங்கள் விளக்கம் அளித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b169d9-7872-4585-ba1d-3bb616e6e8f1/26-6a54bfa9f26c9.webp' /></p><p>
</p><p>இதன்படி, முகமூடி அணிந்திருந்தவர் மொஜ்தபா கமேனியின் மகன் முகமது ஜாவத் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில், முகமது ஜாவத் முகத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சர்ச்சைக்கு விளக்கம்</h2><p> </p><p>

அதனால் சிகிச்சை பெற்று வரும் அவர், தனது காயங்களை மறைப்பதற்காகவே முகமூடி அணிந்திருந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/858a2949-b3e2-481c-9163-52bcb2ec28bd/26-6a54bfaaa3d7c.webp' /></p><p>

மேலும், அந்த தாக்குதல் நடைபெற்றபோது மொஜ்தபா கமேனி தனது தந்தையுடன் அதே வளாகத்தில் இருந்தாலும், வேறு அறையில் இருந்த காரணத்தால் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மொஜ்தபாவுக்கு முகம், கைகள், கால்கள் மற்றும் தோள்பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்தச் செய்திகள் குறிப்பிடுகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T10:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விசேட செயற்றிட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/equal-opportunity-for-children-with-special-needs-1783933691"></link>
            <id>https://tamilwin.com/article/equal-opportunity-for-children-with-special-needs-1783933691</id>
            <summary type="text">விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.</p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p></p><h2>பிள்ளைகளைக் கையாளும் விதம்</h2><p>

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், விசேட தேவையுடைய பிள்ளைகளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தனித்தனியாகக் கற்பிக்கும் பழைய முறையைக் கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b43e52b-5cce-4cde-ad77-7a4eaa9383bf/26-6a54b32531f85.webp' /></p><p>விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளுடன் கூடிய செயற்பாடு சார்ந்த கல்வி முறையும், நடத்தை ரீதியான பழக்கப்படுத்துதல்களும் அத்தியாவசியமானவை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அப்பிள்ளைகளைத் தனிமைப்படுத்தாமல் சாதாரண பிள்ளைகளுக்கு மத்தியிலேயே அவர்கள் வளர்வதற்குக் தகுந்த வாய்ப்பளிப்பது மிகவும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டினார். </p><p>

இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான முதற்படியாக, விசேட தேவையுடைய பிள்ளைகளைக் கையாளும் விதம் குறித்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மற்றும் பயிற்சி அளிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இலங்கையின் தேசியக் கல்வி முறைமைக்குள் ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியைப் பெறும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வாய்ப்புகள் தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T09:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillayan-s-remand-extended-further-1783933156"></link>
            <id>https://tamilwin.com/article/pillayan-s-remand-extended-further-1783933156</id>
            <summary type="text">மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது
செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது
செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர்
உட்பட 3 பேரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (13) காணொளி ஊடாக
உத்தரவு பிறப்பித்தது.ஷ</p><p>அத்துடன் மற்றைய சந்தேகநபரான இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை,
ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக்கொலை,
வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட
ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ
புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்புபட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு
பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ்,
உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த ஜுன் 17ஆம்
திகதி சிஐடியினர் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து அவர்களை ஜுன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் நீதிமன்றில் பிள்ளையான் உட்பட்ட 3
பேரையும் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5425d1f3-5cb0-41ec-a866-d3cd3db8ccc4/26-6a54d28c858a8.webp' /></p><p>
</p><p>

இதனையடுத்து 3 பேரும் தொடர் விளக்கமறியலில் இருந்து வருகின்ற நிலையில் இன்று (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கை விசாரணைக்காக நீதவான் எடுத்துக் கொண்டபோது சந்தேகநபரான இராணுவ புலனாய்வு
பிரிவின் தகவலாளியான முகமட் சிபானை மட்டும் முன்னிலைப்படுத்திய சிஐடியினர்
பிள்ளையான் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரையும் பாதுகாப்பு காரணமாக
நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாதது தொடர்பாக நீதிமன்றிற்கு தெரிவித்தனர்.</p><p>
இதனை ஆராய்ந்த நீதவான் பிள்ளையான் மற்றைய சந்தேகநபர் ஆகிய இருவரையும் தடுத்து
வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் (சூம்) இணைய வழி காணொளி ஊடாக பார்வையிட்டு
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ் பாய்ஸ்க்கு பிடியாணை பிறப்பித்து
கட்டளையிட்டு உத்தரவு பிறப்பித்தார்.</p><p>இதேவேளை கடந்த 30ஆம் திகதி பிள்ளையான்&nbsp;உட்பட 3 பேரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>மேலதிக தகவல் - பவன்</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவருக்கு விளக்கமறியல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு</h2><p>இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>அதன்படி பிள்ளையான், எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6609a1-e474-406a-9296-8ba4fce60555/26-6a54ae7bb3969.webp' /></p><p>இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-13T09:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் நெல் கொள்வனவுக்கு விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farmers-kilinochchi-facilitate-procurement-paddy-1783932353"></link>
            <id>https://tamilwin.com/article/farmers-kilinochchi-facilitate-procurement-paddy-1783932353</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு
செய்யும் வகையில் அவர்களுக்கான படிவங்களை இன்று முதல் வழங்கப்படுவதாக நெல்
சந்தைப்படுத்தல் சபையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு
செய்யும் வகையில் அவர்களுக்கான படிவங்களை இன்று முதல் வழங்கப்படுவதாக நெல்
சந்தைப்படுத்தல் சபையினுடைய பிராந்திய( பதில்) முகாமையாளர் தவராசா கஜேந்திரன்
தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;இன்று (13.07.2026) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல்
கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நெல் கொள்வனவு</h2><p>

இதற்கமைவாக, தற்சமயம் அதிக நெல் அறுவடை இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து நெற்
களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98563784-1d41-40f3-a438-32ed3812cd2f/26-6a54a7f66310b.webp' /></p><p>

அதற்கமைய, வடக்கு மாகாணத்தில் , தற்போது அதிகளவில் நெல் அறுவடை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பிரதேசங்களில் நெல் கொள்வனவு
மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டு நெல் 120 ரூபாவிற்கும், ஒரு
கிலோ சம்பா நெல் 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும்
கொள்வனவு செய்யப்படவுள்ளன.
</p><p>
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தினுடைய நெல் கொள்வனவு தொடர்பில் கருத்து
தெரிவித்த அவர் மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிகளிடம் இருந்தும் தலா 2500 கிலோ
நெல்லை கொள்ளுதல் செய்யும் வகையில் இன்றைய தினம் முதல் அதற்கான படிவங்களை
வழங்கி வருவதாகவும் மாவட்டத்தில் இரண்டாயிரம் மெற்றிக் தொன் நெல்லை
கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T08:55:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக வைத்தியரை நாடவும்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sexually-transmitted-diseases-warning-people-1783929909"></link>
            <id>https://tamilwin.com/article/sexually-transmitted-diseases-warning-people-1783929909</id>
            <summary type="text">நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள் (STDs) பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய பாலியல் நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள் (STDs) பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய பாலியல் நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் (NSACP) தெரிவித்துள்ளது.</p><p>இந்த நோயாளிகள் கடந்த ஆண்டு முதல் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பதிவாகியுள்ள எய்ட்ஸ் நோயாளிகள்&nbsp;</h2><p>இந்த தரவு அறிக்கைகளின்படி, (2920) நோயாளிகள் ஹெர்பெஸ் நோயாலும், (2284) நோயாளிகள் பிறப்புறுப்பு மருக்களாலும், (1289) நோயாளிகள் சிபிலிஸ் நோயாலும்,&nbsp; (692) நோயாளிகள் கொனோரியா நோயாலும், மற்றும் (2847) நோயாளிகள் பிற பாலியல் நோய்த்தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9efcffc9-fe93-4c51-9085-6521bcdde863/26-6a54a5f6f33aa.webp' /></p><p>
மேலும், கடந்த ஆண்டு முதல் (874) எய்ட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
புண்கள், கொப்புளங்கள், பிறப்புறுப்புகளில் வலி, கட்டிகள் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.</p><h2>மருத்துவ பரிசோதனை</h2><p>
</p><p>இதேவேளை, தொடர்ந்து பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் நபர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இந்த நிலையை தடுக்க முடியும் என்று இலங்கை தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டம் கூறுகின்றது.
</p><p>
இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதற்கு தேவையான தகவல்களை KNOW4SURE.LK என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T08:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வியாபார நடவடிக்கைகளுக்காக 34 கடைகள் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/business-activity-in-kilinochchi-1783932283"></link>
            <id>https://tamilwin.com/article/business-activity-in-kilinochchi-1783932283</id>
            <summary type="text">கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட
பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள 34 கடைகள் மொத்த வியாபாரிகளின் வியாபார
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட
பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள 34 கடைகள் மொத்த வியாபாரிகளின் வியாபார
நடவடிக்கைக்கு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வினால்
கையளிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த நிகழ்வு இன்று(13.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் 40
கடைத் தொகுதிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07821ba-5294-47c6-a5ab-39558fdb7a59/26-6a54a5bb9e2dc.webp' /></p><p> </p><p>

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம்
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. </p><p>குறித்த செயல்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0df940fa-039c-492a-950d-791425150335/26-6a54a5bca59c4.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T08:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37th-anniversary-of-the-death-of-appapillai-1783931575"></link>
            <id>https://tamilwin.com/article/37th-anniversary-of-the-death-of-appapillai-1783931575</id>
            <summary type="text">தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வுகள் இன்று(13.07.2026) யாழ். பண்ணாகத்தில் உள்ள வலி. மேற்கு
பிரதேசசபைக்கு முன்பாகவுள்ள அவரின் உருவச் சிலை முன்னாள் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது, தமிழர்களின் மூத்த அரசியல் தலைவரும் நாடாளுமன்றத்தின் முதலாவது தமிழ்
எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 
அ.அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a427b99-7dd3-4f00-a69a-f29b358e88ee/26-6a54a32dae13b.webp' /></p><p> </p><p>


அத்துடன், அவரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது. </p><p> 

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம்
சித்தார்த்தன் மற்றும் பண்ணாகம் கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b64ae8b-8f2e-48c1-bb76-f4bb448d4e5a/26-6a54a32ed83ac.webp' /></p><p></p><p></p><p></p><h2>கிளிநொச்சி</h2><p>தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் முதலாவது தமிழ் எதிர்கட்சி
தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37வது நினைவு தின நிகழ்வு
இன்று,13.07.2026 கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு, தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி
அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/577bd792-c896-4206-9006-bf92cc9b6bd0/26-6a54bb53035aa.webp' /></p><p> </p><p>

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி
தலைமையில் நடைபெற்றுள்ளது. </p><p>

 இதன்போது, அமிர்தலிங்கத்தின் திருவுருவ படத்திற்கு ஈகச்சுடர்
ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T08:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலிடம் ரணில் பேசிய இரகசியம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-gota-ranil-meeting-discussion-1783910685"></link>
            <id>https://tamilwin.com/article/namal-gota-ranil-meeting-discussion-1783910685</id>
            <summary type="text">சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. </p><p>

இதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரணில், நாமலின் சந்திப்பு தொடர்பான காணொளி வெளியாகி இருந்தது. </p><p>

பொது நிகழ்வு ஒன்றின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நாமல் ராஜபக்சவும் மிகவும் நெருக்கமாக கலந்துரையாடல் காணொளி பேசுபொருளாகியது.</p><p></p><p> </p><h2><b>

திருமண நிகழ்வு</b></h2><p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரின் திருமண நிகழ்வு கடந்த புதன்கிழமை இரவு சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f68f346-fdaa-487b-924b-f11d90a962f4/26-6a54825ce9296.webp' /></p><p>இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
</p><p>
இதன்போது நாமல் ராஜபக்சவுடன் ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்சவும் உரையாடும் விதத்தை பலரும் அவதானித்தனர்.</p><h2>கிராம வேலைத்திட்டம்</h2><p> 

ரணிலுடன் பேசப்பட்ட விடயம் தொடர்பில் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

அதற்கு நாமல் பதிலளிக்கையில், தற்போதைய அரசியல் செயற்பாடு குறித்து ரணில் கேள்வி எழுப்பியிருந்தார். </p><p>கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டத்துடன் நாடு முழுவதும் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். </p><p>

தனிப்பட்ட விடயங்களை குறித்து உரையாடியதுடன், விரைவில் நேரடியாக இணைந்து பணியாற்றுவோம் என ரணில் குறிப்பிட்டதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DElKkkz9dlg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-07-13T08:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறை: கைதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-incident-news-updates-tamil-1783929539"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-incident-news-updates-tamil-1783929539</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் இரண்டு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலின் போது, கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த கழிவறைத் தொட்டிகளின் உடைந்த பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் இரண்டு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலின் போது, கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த கழிவறைத் தொட்டிகளின் உடைந்த பாகங்கள் மற்றும் சமையலறையில் இருந்த தேங்காய்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

தாக்குதலில் ஈடுபட்ட கைதிகள், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டதுடன், மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற சிறை அதிகாரிகளையும் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>கொடூரமான தாக்குதல்</h2><p>
</p><p>
மேலும், சிறை சமையலறையில் இருந்த கத்திகள், மருத்துவப் பிரிவில் இருந்த கத்தரிக்கோல்கள் மற்றும் உடற்பயிற்சி மையத்தில் இருந்த பல்வேறு இரும்புக் கருவிகளும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஏழாவது நாளில் கைதிகளின் நிலைமையைப் பார்வையிடச் சென்ற சிறை அதிகாரிகள் மீது இந்த ஆயுதங்களைக் கொண்டு கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55fb43be-bb4b-48c3-b83c-64a8c5bcb853/26-6a549f34d2d50.webp' /></p><p>

தாக்குதல் நடத்திய கைதிகள், சிறை அதிகாரிகளின் தலைகளை குறிவைத்து தாக்கியதாகவும், அவர்களைக் கொல்வதே முதன்மை நோக்கமாக இருந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
சம்பவத்திற்குப் பிறகு, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் இரகசியக் பொலிஸ் பிரிவினர் சிறைக்குள் சிறப்பு சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்தச் சோதனைகளில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், தேங்காய்கள், கத்திகள், கத்தரிக்கோல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f00f1374-e89f-4b14-9613-91409815691e/26-6a549f3580dc2.webp' /></p><p>
</p><p>
இவை அனைத்தும் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக சமர்ப்பிக்கப்படுவதற்காக பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைக்குள் வெடித்த இந்த தொடர் வன்முறைச் சம்பவங்களில், ஒரு சிறை அதிகாரி மற்றும் எட்டு பொலிஸார் உட்பட மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p>
இந்த மோதல்களில், சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளமையும்&nbsp;இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T08:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு அச்சுறுத்தல் : முன்பள்ளி சிறுவர்கள் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-preschool-children-protect-clothing-1783927800"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-preschool-children-protect-clothing-1783927800</id>
            <summary type="text">தற்போது நிலவி வரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிகளுக்கு அனுப்பும் குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவி வரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிகளுக்கு அனுப்பும் குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அவர்கள் அணிவதை உறுதி செய்யுமாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
 

தேசிய குழந்தைப்பருவ வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
</p><p></p><h2>எதிர்வரும் இரண்டு வாரங்கள்</h2><p>
 

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்பள்ளி குழந்தைகள் தங்கள் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து முன்பள்ளிகளுக்கு வரலாம் என கல்வி அமைச்சகம் சமீபத்தில் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96179f11-55a6-426c-9c89-cc87c2a26a7c/26-6a5497668727e.webp' /></p><p>நுளம்புக் கடியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம், மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.</p><p>முன்பள்ளி குழந்தைகளுக்கும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தக்கூடிய நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். நுளம்பு கடியியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் நான் அனைத்து பெற்றோரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார். </p><p>இந்த நெருக்கடி பாடசாலைகளுக்குள்ளும் காணப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களும் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கடன் அட்டை பயன்படுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/credit-card-debt-has-increased-1783924172"></link>
            <id>https://tamilwin.com/article/credit-card-debt-has-increased-1783924172</id>
            <summary type="text">இலங்கையின் நிலுவையில் உள்ள கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ. 10313 மில்லியனால் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் (2026) தொடக்கத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நிலுவையில் உள்ள கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ. 10313 மில்லியனால் அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டின் (2026) தொடக்கத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாத இறுதி வரையிலான நான்கு மாதங்களில் இந்த தொகை அதிகரித்துள்ளது.</p><p></p><h2>மத்திய வங்கியின் தகவல்</h2><p>

அதன்படி, இந்த ஆண்டின் (2026) தொடக்கத்தில் ரூ. 189706 மில்லியனாக இருந்த நிலுவையின் கடன் பொறுப்பு தற்போது அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf85072-6a8e-45b2-8556-fa3158ea5722/26-6a5494efd8f82.webp' /></p><p>
</p><p>
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ரூ. 200019 மில்லியனால் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற அதிரடிப்படை வீரர் சடலமாக மீட்பு! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-stf-soldier-swept-away-in-river-recovered-1783927128"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-stf-soldier-swept-away-in-river-recovered-1783927128</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த கடத்தல்காரர்கள் குழுவொன்றை கைது செய்வதற்காக சென்ற விசேட அதிரடிப்படையின் (STF) சார்ஜன்ட் ஒருவர் நீரில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த கடத்தல்காரர்கள் குழுவொன்றை கைது செய்வதற்காக சென்ற விசேட அதிரடிப்படையின் (STF) சார்ஜன்ட் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p>சேருநுவர திட்டன்தெட்டி மணல் துறைப் பகுதியில் இன்று (13) பகல், அவரது சடலம் மீட்கப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர தேடுதல்&nbsp;</h2><p>
</p><p>இன்று (13) அதிகாலை, கிண்ணியா முடுக்குத்தெட்டி மணல் துறையூடாக மகாவலி ஆற்றைக் கடந்து, சட்டவிரோத மணல் கடத்தல் குழுவை சுற்றிவளைத்து கைது செய்வதற்காக சூரியபுர STF முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36cdb135-918c-43f3-af5e-a2f9a41d6bc0/26-6a5496615bdde.webp' /></p><p>
</p><p>
இதன்போது, மகாவலி ஆற்றைக் கடக்க முயன்ற வேளையில் ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக, பொலிஸ் சார்ஜன்ட் சாந்த கிஹான் ரணசிங்க (39) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

உயிரிழந்த சார்ஜன்ட், பத்தரமுல்ல ஜயவத்தனகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று காலை முதல் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.</p><p></p><h2>சடலம் மீட்பு</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து இன்று பகல் சேருநுவர திட்டன்தெட்டி மணல் துறைக்கு அருகிலுள்ள ஆற்றுப் பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91a1f04d-5f7f-417c-8963-c5c2686c541e/26-6a5496620fc96.webp' /></p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

கடமையில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரரின் மறைவு, பாதுகாப்புப் படையினரிடையிலும் அப்பகுதி மக்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நியமனத்தை மீளாய்வு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-infront-of-trincomalee-1783926848"></link>
            <id>https://tamilwin.com/article/protest-infront-of-trincomalee-1783926848</id>
            <summary type="text">சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (1...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (13.07.2026) திருகோணமலை மாகாண சுகாதார அமைச்சுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>கவனயீர்ப்பு நடவடிக்கை</h2><p></p><p>இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும், அநுர ஆட்சியில் அநீதியா? போன்ற வாசகங்களை
ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.</p><p>மேலும் மத்திய அரசாங்க சுகாதார அமைச்சினால் குறித்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள்
கோரப்பட்டிருந்தன எனவும், தங்களுக்கு நியாயமான நியமனங்களை அரசியல் தலையீடு இன்றி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணொருவரிடம் மோசமான முறையில் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/presidential-secretariat-1783926097"></link>
            <id>https://tamilwin.com/article/presidential-secretariat-1783926097</id>
            <summary type="text">பெண் ஒருவருக்கு நடந்த அசாதாரணத்தை தீர்த்து வைப்பதாக பாசாங்கு காட்டி அவளிடம் பணம் மற்றும் தவறான முறையில் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண் ஒருவருக்கு நடந்த அசாதாரணத்தை தீர்த்து வைப்பதாக பாசாங்கு காட்டி அவளிடம் பணம் மற்றும் தவறான முறையில் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என தொலைபேசியில் பேசியவர் தொடர்பில் குருநாகல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,&nbsp;</p><p> தனது தந்தைக்கு சொந்தமான, நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட காணியை, பிரதேச செயலகத்தினால் சட்டபூர்வமாக வழங்க மறுப்பதாகவும் குருநாகல் 54ஆம் பிரிவின் கிராம உத்தியோகத்தரும் தடுப்பதோடு எவ்வித கட்டுமானத்தையும் செய்ய விடுவதில்லை.
</p><h2>
</h2><p></p><h2>அரச நிறுவனங்கள் போடும் தடைகள்</h2><p>எங்களை அங்கிருந்து விலகுமாறும், சட்டவிரோத கட்டுமானங்களை செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்கள். எங்களை அங்கு குடியேறவோ, ஒரு வீடு கட்டவோ அனுமதிப்பதில்லை. </p><p>இந்த பிரச்சினை தொடர்பில்&nbsp; ஜனாதிபதி, பிரதமரிடம் நீதி கேட்கிறேன் என ஊடகங்கள் வாயிலாக குறித்த பெண் காணொளி ஒன்றை 
வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82a228fe-6962-4aca-83f0-886ea42f49c0/26-6a548d537c64b.webp' />&nbsp;&nbsp;</p><p>
அரச அதிகாரிகளிடமிருந்து தனக்கு நேர்ந்த அநீதிக்கு முறையான தீர்வு கிடைக்காததால், சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
</p><p>அந்தச் செய்தி ஒளிபரப்பாகி சில மணித்தியாலங்கள் செல்வதற்குள், தான் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
</p><p>பின்னர் அவளது பிரச்சினை குறித்து வினவியுள்ள அந்த நபர், அதற்குரிய அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>அதன் பின்னர், அந்தப் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் இந்த நபர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார்.
</p><h2>தொலைபேசி உரையாடல்</h2><p>தொலைபேசி உரையாடலின் போது குறித்த பெண்ணிடம் பல தகவல்களை அவர் கேட்டுள்ளார்.அதன் பின்னர் தான் எங்கு வரவேண்டும் என கோட்டுள்ளார்.</p><p>அப்போது "நீ பத்தரமுல்லைக்கு வர வேண்டும். தேவையில்லாமல் கண்ட கண்ட இடங்களுக்குச் சென்று, அலைந்து திரிந்து ஏமாறுவதை விட, எளிதான வழி&nbsp; இது தான்“ எனக் கூறியுள்ளார்.
</p><p>எவ்வாறாயினும், உரையாடலின் போது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பெண் மேலும் கேள்வி எழுப்பிய போது, தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் ஒரு போலிச் செயலாளர் என்பது அம்பலமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3dd869c-8b70-4913-9541-11b43544f5ca/26-6a5492caa1903.webp' /></p><p> </p><p>அதன் பின்னர் அவர் அவளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாகக் குறிப்பிடப்படுகிறது.
“நீ ஒரு கருங்கல்லில் போய் தலையை முட்டிக் கொண்டாய். இதோ பார், இன்னும் 24 மணித்தியாலத்திற்குள் உனக்கு என்ன அதிகாரம் இருந்தாலும், நான் உன்னைத் தேடி வருவேன். உனக்கு என்ன நடக்கும் என்பதை நீயே நன்றாகப் பார்த்துக்கொள்வாய்" என மிரட்டியுள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் தற்போது குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கமைய, குருநாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில்,</p><p>ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எனப் போலியாகத் தோன்றி அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர் யார் என்பதைக் கண்டறிய விசேட பொலிஸ் குழுவொன்று பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>அனைத்து அரசு அதிகாரிகளும் குறித்த நபர் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என ஏமாந்துவிட்டார்கள். இப்போது எனது பிள்ளையைக் கடத்துவதாகக் கூறுகிறார். </p><p>இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் பயப்படுகிறேன். இந்த நபர் யார் என்பதைச் சட்டத்தின் முன் நிறுத்தி, எனக்கு நியாயத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T07:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் சட்ட விரோதிகளே..! அநுர அரசில் தொடரும் குற்றச்சாட்டுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dayasiri-jayasekara-mp-criticism-anura-government-1783925842"></link>
            <id>https://tamilwin.com/article/dayasiri-jayasekara-mp-criticism-anura-government-1783925842</id>
            <summary type="text">இலங்கையில் அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது என்றும், இதனைத்
தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுதான் என்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது என்றும், இதனைத்
தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுதான் என்றும் 
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி
ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். </p><p>

குருநாகலில் நேற்று(12.07.2026) இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிக்
கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் சட்ட விரோதிகளே</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சிவில் அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சி
உறுப்பினர்களை ஆட்சியாளர்கள் விரோதிகளாகவே கருதப்படுகிறார்கள்.</p><p> 

மேலும், அரச நிதி மோசடி சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமை சட்டம்,
பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி அரசியல்
எதிர்ப்பாளர்களை அரசு இலக்கு வைக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e15d38d-1b99-4213-b1cb-5acef884b0c5/26-6a548f9dbe805.webp' /></p><p>

ஆளும் தரப்பினர் மேற்கொள்ளும் ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படுவதில்லை, மாறாக நிலக்கரி மோசடி விவகாரத்தில்
முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.</p><h2> 

அநுர அரசிற்கு எதிராக கிளம்பும் எதிர்க்கட்சிகள்</h2><p>

இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு, ஆளும் தரப்பினரைப்
பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகவே செயற்படும் என மக்கள் விடுதலை முன்னணியின்
பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா முன்பே குறிப்பிட்டுள்ளமை, சுயாதீன
நீதித்துறையின் கௌரவத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4065f58e-b783-460f-8b3d-a32b0bbd7542/26-6a548f9e7d6a5.webp' /></p><p>
</p><p>
பேச்சு சுதந்திரத்தை முடக்கி, சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசு
முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. 

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தலையாய கடமையாகும். </p><p>

எனவே, அரசின் இந்த அடக்குமுறைப்
போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T07:11:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் - நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1783924486"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1783924486</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (13.07.2026) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளதாக&amp;nbsp;அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (13.07.2026) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளதாக&nbsp;அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>நேற்று முன்தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது.</p><p></p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d21613f5-ec62-4dda-a4ce-960783adcabd/26-6a548e9553449.webp' /></p><p>இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THiS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tMEljazUqeg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-13T07:09:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரணியின் அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த ஆளும் கட்சி எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ruling-party-mp-opposition-accusation-political-1783924735"></link>
            <id>https://tamilwin.com/article/ruling-party-mp-opposition-accusation-political-1783924735</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, அரசியல்
பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, அரசியல்
பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அடியோடு மறுத்துள்ளார்.</p><p>இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது:- "கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், சுயாதீன விசாரணை நிறுவனங்களின் ஊடாகவே சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமோ அல்லது பழிவாங்கும் நோக்கோ கிடையாது.</p><p></p><h2>நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள்</h2><p>நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுவது அரசியல் பழிவாங்கல்
அல்ல, மாறாக சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் பணிகளே என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016c3485-de3f-4829-9400-83ff604b46bd/26-6a548d727ee8e.webp' /></p><p>அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சட்டத்திலிருந்து தப்பிக்கும் காலம்
முடிவுக்கு வந்துவிட்டது. குற்றங்கள் புரிந்தவர்கள் எவராக இருந்தாலும்,
அவர்கள் சட்டத்தின் முன் பதில் கூற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
</p><p>
ஊழல், மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள், கடந்த காலங்களைப்
போலன்றி மிகவும் வெளிப்படையாகவும் சுயாதீனமாகவும் செயற்படுகின்றன. </p><p>இதில்
எந்தத் தரப்புக்கும் சார்பாகச் செயற்படும் தேவை அரசுக்கு இல்லை.

தங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தற்காத்துக் கொள்ள எதிர்க்கட்சிகள் அரசின்
மீது 'அரசியல் பழிவாங்கல்' என்ற முத்திரையை குத்த முயற்சிக்கின்றன. </p><p>பேச்சு
சுதந்திரம் என்ற பெயரில் ஊழல்களை நியாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. அரசு
மக்களின் பணத்தைப் பாதுகாப்பதிலும், ஜனநாயக விழுமியங்களைக் காப்பதிலும்
உறுதியாக உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:04:04+00:00</updated>
        </entry>
    </feed>
