<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-14T15:40:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களின் எழுச்சிக்கு உதவிய தமிழ்க் கூட்டணி - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-criticism-of-the-alliance-tamil-parties-1784038804"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-criticism-of-the-alliance-tamil-parties-1784038804</id>
            <summary type="text">சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அஷ்ரப் நானா ஆகியோரின்
சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய
எழுச்சிக்கு அடித்தளம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அஷ்ரப் நானா ஆகியோரின்
சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய
எழுச்சிக்கு அடித்தளம் என ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p><p> 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

கூட்டணியின் விளைவு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், தேர்தல் பின்னடைவுகளே கூட்டணி பற்றிய
சிந்தனைகளை எமது தலைவர்களுக்கு ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29427588-247d-4c8f-a877-86295f1acfcf/26-6a5645fc458c0.webp' /></p><p> </p><p>70 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலே பரந்தளவான தமிழர் கூட்டணி உருவாக
காரணமாக அமைந்தது.

ஆரம்பத்தில் அந்தக் கூட்டிணைவில் அப்போதைய மலையக மக்களின் தேசியத் தலைவரான சௌ.தொண்டமானும் முஸ்லிம் மக்களின் தேசியத் தலைவரான அஸ்ரப் இருவரும் 
இணைந்திருந்தனர்.</p><p> எனினும், அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனைகள் காரணமாக
பின்னாட்களில் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.


அவர்களின் தீர்மானம் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab25334e-fafa-48ee-b089-d8dbeac8dcd2/26-6a5645fd0d4a6.webp' /></p><p>

அதேபோன்று, பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்களும் சந்தர்ப்பவாத
தீர்மானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதை வரலாறு
நிரூபித்திருக்கின்றது.
</p><p>
எம்மை பொறுத்தவரையில், மக்களின் நலன்களும் அபிலாசைகளுமே முதன்மைக்குரிய
விடயங்களாகும். அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T15:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-police-warned-people-1784041233"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-police-warned-people-1784041233</id>
            <summary type="text">இலங்கையில் GovPay போன்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தளங்களைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் GovPay போன்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தளங்களைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.</p><p>

இவ்வாறான போலியான தளங்கள் மற்றும் செய்திகள் மூலம் பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அரசாங்க சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் GovPay தளத்தைப் போலவே போலியான இணையதளங்களை மோசடி கும்பல்கள் உருவாக்கியுள்ளன. </p><p>

இவ்வாறான தளங்கள் மூலம் வாகனப் போக்குவரத்து அபராதங்களை செலுத்துமாறு மக்களை ஏமாற்றியுள்ளனர்.
</p><h2><b>
போலி போக்குவரத்து அபராதங்கள் </b></h2><p>மேலும், இலங்கை பொலிஸாரின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி, வாகன உரிமையாளர்கள் ஏதோ ஒரு போக்குவரத்து குற்றத்தைச் செய்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6eed8a-3d1d-4126-b8e4-c76fc8661508/26-6a565021a779f.webp' /></p><p>அபராதத்தை உடனே செலுத்துமாறும் கூறி, போலியான இணைய இணைப்புகளை வழங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
போக்குவரத்து அபராதங்கள் பொதுவாக அந்த இடத்திலேயே வாகன ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கப்பட்டதன் பின்னரே வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கண்காணிப்பு கமராக்கள் மூலம் குற்றங்கள் கண்டறியப்பட்டாலும், பொலிஸார் ஒருபோதும் குறுஞ்செய்தி மூலம் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை.

அத்துடன் அதிகாரப்பூர்வமற்ற இணைய இணைப்புகள் மூலம் அபராதத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்துவதில் இல்லை எனவும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
</p><p>
எனவே, இது போன்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகள் அல்லது இணையதளங்கள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
எவ்வித பணப்பரிமாற்றத்தைச் செய்யும் முன்பும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-14T15:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில மாதங்களில்.. மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரச தரப்பு உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-confirms-provincial-council-elections-1784036689"></link>
            <id>https://tamilwin.com/article/government-confirms-provincial-council-elections-1784036689</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதிப் பிரச்சினை எதுவும் இல்லை என 
 அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதிப் பிரச்சினை எதுவும் இல்லை என 
 அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று(14.07.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


விருப்புரிமை வாக்குரிமை வாக்களிப்பு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

மாகாண சபைத் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நம்பிக்கை. நமக்கு மாகாண சபைகளும் தேவை, மாகாண சபைகளை உதாரணமாக எடுத்துக் கொண்டால், நான் பதவியேற்றபோது, ​​சுகாதார அமைச்சு உட்பட மத்திய அரசுக்குச் சொந்தமான 61 நிறுவனங்கள் இருந்தன.
</p><p>
 பல மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக நான் இதனை ஏற்கனவே கூறியுள்ளேன். மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acfadadb-cb9a-43da-936a-e3b3d38b3141/26-6a563df53340d.webp' /></p><p>
</p><p>
 ஆனால், தேர்தல்கள் என்பவை மக்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். அப்போது, ​​பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாட்டு மக்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதிக்கு வரும்படியான, விருப்புரிமை வாக்குரிமை இல்லாத ஒரு தேர்தல் முறையை எதிர்பார்த்திருந்தனர்.</p><p>

இதற்கமைய, மாகாணங்களுக்கான ஒரு தேர்தல் முறை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு முன்பு, உள்ளாட்சித் தேர்தல்களுக்காக, அவர்கள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதிக்கு வரும்படியான, விருப்புரிமை வாக்குரிமை இல்லாத ஒரு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

இந்த விதிமுறைக்களுக்கமைய தேர்தல் விரைவில் நடக்கும். </p><p>இப்போது, ​​2018 மற்றும் 2025-ல், இந்த நாட்டு மக்கள் உள்ளாட்சித் தேர்தல் முறையைப் புதுப்பித்துள்ளனர், இதன் மூலம் தங்கள் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பதை அவர்களால் காண முடிகிறது.
</p><p>
மேலும், முந்தைய தேர்தல்களில் இருந்த விருப்புரிமை வாக்குரிமைப் போட்டியும் நீக்கப்பட்டுவிட்டது.

இதேவேளை, மாகாண அளவில் அந்தப் பணச் செலவினமும் கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.</p><h2> 

விரைவில் மாகாண சபை தேர்தல்</h2><p>

பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு முறையின் நீட்சியாக, மாகாண சபைகளுக்கு ஒரு புதிய வாக்குப்பதிவு முறை முன்மொழியப்பட்டது.
</p><p>
 அது ஒவ்வொரு தொகுதிக்கும் விருப்புரிமையற்ற ஓர் உறுப்பினரை வழங்குவதோடு, பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75d5c378-1f33-4f36-9777-c8f2791820ca/26-6a563df611053.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், மக்களின் விருப்புரிமைகளால் அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டாலும், என்னால் அதை முற்றிலுமாக மறந்துவிட்டு ஒரு புதிய வாக்குப்பதிவு முறையை உருவாக்க முடியாது. </p><p>

அப்படியாயினும், நாங்கள் அந்த விஷயத்தை ஒரு நாடாளுமன்றக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம்,

அந்த நாடாளுமன்றக் குழு, விருப்புரிமை வாக்குரிமையின்றி தங்கள் தொகுதியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் ஒரு வாக்குப்பதிவு முறையை முன்வைக்கும்போது, ​​அதற்கேற்ப எல்லைகளை வரையறுத்து, மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த சமூகத்தைக் காட்டுக்கொடுக்கும் தலைவர்களே இவர்கள்..! கூட்டணிக்கு தொடர் கண்டனம்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/criticism-of-the-alliance-of-tamil-parties-1784037534"></link>
            <id>https://tamilwin.com/article/criticism-of-the-alliance-of-tamil-parties-1784037534</id>
            <summary type="text">முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம்
கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும்
முஸ்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம்
கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும்
முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக சமத்துவ மக்கள்
முன்னணி கட்சியின் தலைவர் வைத்தியர் வை.எல்.எம். யூசுப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று(14.07.2026)
இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

கொழும்பில் கடந்த திங்கட்கிழமை(13.07.2026) தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கென புதிய
கூட்டணி ஒன்றை அமைத்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தச்
சவாலையும் கண்டனத்தையும் முன்வைத்துள்ளார்.</p><p></p><p> </p><p>




அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், </p><p>


நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு
கூட்டமைப்பாகவே இந்த 6 கட்சிகளின் இணைவைப் பார்க்க முடிகிறது.

 மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக மாறியுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள்,
தங்களை மீண்டும் செல்லுபடியான காசுகளாக மாற்றிக் கொள்வதற்காகவே கொழும்பில்
ஒன்றுகூடி இவ்வாறானதொரு பொதுத் தளத்தை அமைத்துள்ளனர். </p><p>இவர்களால் நிச்சயமாக
எமது மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை.


இதுவரை காலமும் இனவாதமும் மதவாதமும் பேசி, தற்போது மக்கள் செல்வாக்கை இழந்து
வருவதனாலேயே ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் மக்கள் எழுச்சி என்ற
போர்வையில் புதிய வடிவத்தில் வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf5facc-ed5e-40d3-b95a-7dca56080adc/26-6a56413bf21bc.webp' /></p><p> </p><p>

பழைய சோற்றைச் சூடாக்கி,
இப்போதுதான் சமைத்த சுடு சோறு என்று கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
இவர்களது பழைய கதைகள் எடுபடாத காரணத்தால், புதிய வடிவில் கட்டுக்கதைகளைக் கூறி
ஏமாற்ற முனைகிறார்கள். இக்கூட்டணியின் உருவாக்கம் எமக்கு பாரிய சந்தேகத்தை
எழுப்புகிறது.</p><h2> 


பகிரங்க விவாதத்திற்குத் தயாரா? தலைவர்களுக்குச் சவால்</h2><p>
முஸ்லிம் சமூகத்தின் நில, நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் தமிழ் கட்சிகளுடன்
இணைந்து செயற்படும் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை
வன்மையாகக் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். </p><p> 

அத்துடன், தமிழ் - முஸ்லிம்
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு வருமாறு
அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.</p><p> 

இதேவேளை, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எந்த
நேரத்திலும் பகிரங்க விவாதத்திற்கு வரத் தயாராக இருந்தால், அவர்களுக்கு
பிரச்சினைகள் குறித்து முழு விளக்கமளிக்கவும் தான் தயாராக இருக்கின்றேன் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் ஓய்வு வயது எல்லை வதந்திகளுக்கு நளிந்த ஜயதிஸ்ஸ பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/retirement-age-limit-for-judges-1784035392"></link>
            <id>https://tamilwin.com/article/retirement-age-limit-for-judges-1784035392</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்று(14.07.2026) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்
ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

நீதிபதிகள் ஓய்வு வயது</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பெருமளவிலான வழக்குகள், நீதி நிர்வாகத்தில்
ஏற்படும் தாமதங்கள், நீதித்துறை அதிகாரிகளின் பற்றாக்குறை, தொழில்
வல்லுநர்களின் இடப்பெயர்வு மற்றும் அதிகரித்து வரும் சராசரி ஆயுள் காலம்
உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது. </p><p>இருப்பினும்,
இந்த விடயத்தில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக, மேலதிக
அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சுக்குப் பணிப்புரை
விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58c22eec-2fb9-481c-b82c-01f67f8c734d/26-6a56387a3cca5.webp' /></p><p>
</p><p>
அரசு தனது இறுதி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை, இது தொடர்பான
ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
</p><h2>

33 நீதிபதிகள் தெரிவு</h2><p>

பல்வேறு தரப்பினரிடமிருந்து இந்த முன்மொழிவு குறித்து முரண்பாடான கருத்துகள்
முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக அவை
அனைத்தும் பரிசீலிக்கப்படும்.
</p><p>
நீதித்துறை அதிகாரிகளை ஆள்சேர்ப்பு செய்ய
முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் இன்மையால்
வெற்றிடங்கள் காணப்படுகின்றன. </p><p>

குறிப்பாக, திட்டமிடப்பட்ட 50 நீதிவான் பதவிகளுக்கு 33 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! பயணிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-katunayake-airport-1784026955"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-katunayake-airport-1784026955</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் பயணிகள் முனையத்தின் கொள்ளளவை விரிவுபடுத்தும் தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

M/s...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் பயணிகள் முனையத்தின் கொள்ளளவை விரிவுபடுத்தும் தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. </p><p>

M/s Maga Engineering (Pvt) Ltd நிறுவனத்திற்கு இந்த திட்டத்தினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p> 

துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2><b>

 உட்கட்டமைப்பு வசதி</b></h2><p>விமான நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பயணிகளின் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் வசதிகளை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p>இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட உள்ளது. அத்துடன், அதில் பயணிகளைப் பரிசோதிப்பதற்கான 36 புதிய கவுண்டர்களை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பயணிகள் முனையத்திலிருந்து நேரடியாக விமானங்களுக்கு செல்வதற்கான 06 புதிய நுழைவாயில்களும் இதன் கீழ் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b77160b9-305c-41c3-b29c-9e7efdca8387/26-6a563c5eb0c65.webp' /></p><p>

இந்த முழுத் திட்டத்தின் கொள்முதல் செயல்முறையை முன்னெடுப்பதற்கு, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆரம்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
இதற்கான பொருத்தமான ஒப்பந்ததாரரைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த கொள்முதல் முறைகளுக்கு அமைய ஏலங்கள் கோரப்பட்டிருந்தன.</p><p>

இதில் 03 ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அந்த ஏலங்களை முறைப்படி மதிப்பீடு செய்த பின்னர், உயர் மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மிகவும் பொருத்தமான குறைந்த ஏலதாரராக Maga Engineering நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, பெறுமதி சேர் வரி தவிர்த்து 7.26 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 3.77 பில்லியன் ரூபாய் செலவில் இந்த ஒப்பந்தத்தை குறித்த நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4qPb9-BX1_M" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-14T13:40:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ ஆக்கிரமிப்பில் பறிப்போன பூர்வீகக் காணிகள் - நிர்கதியாக்கப்பட்ட மக்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attention-grabbing-protest-in-mullaitivu-for-land-1784034158"></link>
            <id>https://tamilwin.com/article/attention-grabbing-protest-in-mullaitivu-for-land-1784034158</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை
விடுவிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை
விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்றைய தினம்(14.07.2026) 21ஆவது நாளாக இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2> 

மக்களின் கோரிக்கை</h2><p>
இதன்போது, கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பு அணியினர்
நேரில் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/418fea48-cef8-4cd2-a481-f4ddfb36992d/26-6a56340063a8d.webp' /></p><p> </p><p>

தமது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்த
கேப்பாப்பிலவு மக்கள், பல ஆண்டுகளாக அமைதியான ஜனநாயக வழியில் பல்வேறு
போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
தங்களது சொந்த நிலங்களில் மீளக் குடியேறவும், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார
நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாத நிலை காரணமாக அவர்கள் தொடர்ந்தும்
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். </p><h2> 

21 ஆவது நாளாக தொடரும் போராட்டம்</h2><p>
கேப்பாப்புலவு பூர்வீகக் காணிகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு இதுவரை
நிரந்தரமான தீர்வு எட்டப்படாத நிலையில், தங்களது உரிமைகளை மீண்டும்
வலியுறுத்தும் நோக்கில் மக்கள் இரண்டாவது கட்ட போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d17c083a-af82-4cfc-bca9-56d6fb766cff/26-6a5634015cb6e.webp' /></p><p>
</p><p>
இந்த போராட்டம் இன்று(14) 21ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வரும் வேளையில், கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக்
காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை
உடனடியாக மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 


கேப்பாபிலவு மக்களினுடைய பூர்வீக காணிகள் விடுவிக்கப்படும் வரை அவர்களால்
முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வரை வடகிழக்கு மாகாணங்களில்
இருக்கும் சிவில் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்
வாதிகள் தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பு அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157a098f-1f60-44a4-a5bc-e1fc413d6935/26-6a5634023490f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c42b6b-3241-42d8-a89c-5fac122dc93e/26-6a5634030a2dc.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வயதில் உயிருக்கு போராடும் மகன்..! நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரியின் கடைசி ஆசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tlast-wish-of-officer-who-died-in-negombo-clash-1784018697"></link>
            <id>https://tamilwin.com/article/tlast-wish-of-officer-who-died-in-negombo-clash-1784018697</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழிந்த அதிகாரியொருவரின் கடைசி ஆசை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழிந்த அதிகாரியொருவரின் கடைசி ஆசை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ஒட்டுமொத்த இலங்கையையும் பதைபதைக்க வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> 

இதற்கமைய, நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 21 கைதிகளும் 8 பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p> 

அத்துடன், சிறைச்சாலையில் இருந்து 40 ஆயிரம் கைதிகள் வேறு வேறு இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். </p><p>

இதனை தொடர்ந்து, அம்பலந்தோட்டாவின் பாலகஹகொடெல்லா பகுதியில் வசித்து வந்த 39 வயதான சிறைக்காவலர் சந்திக லஷன் குணவர்தன, சம்பவம் நடந்து ஒரு வாரக் காலப்போராட்டத்திற்கு பின்னர் நேற்று(13.07.2026) இரவு உயிரிழந்துள்ளார்.</p><h2> 

அதிகாரியின் கடைசி ஆசை</h2><p>

குறித்த அதிகாரிக்கு 7 வயதில் மகன் ஒருவர் இருப்பதாகவும், அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c447ac15-df8a-4602-919f-5f2fc5ec57db/26-6a55f7b8d8811.webp' /></p><p> </p><p>

அந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற பெரும் பணம் தேவை என்பதால் உயிரிழந்த அதிகாரி சந்திக மகனின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்து பணம் தேடிக் கொண்டிருந்ததாக சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சந்திக, தனது இறுதி மூச்சை விடும்போதும் சிறுவனின் நினைவுகளில் இருந்தார் என்றும், தனது கடமைக்காக உயிரைத் தியாகம் செய்த ஒரு மாவீரனின் கடைசி விருப்பம், அவரின் குழந்தையைக் காப்பாற்றுவதே என்றும் கூறப்படுகிறது.</p><p> 

அத்துடன், சிறைச்சாலை மோதல் சம்பவத்தில், 100க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகளும் கைதிகளும் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4Xl22URQsuU" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழுக்களுக்கு பணம் வழங்கினாரா சஜித்..! குற்றச்சாட்டை மறுக்கும் முஜிபுர் ரஹ்மான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/criticism-of-government-negombo-prison-incident-1784033246"></link>
            <id>https://tamilwin.com/article/criticism-of-government-negombo-prison-incident-1784033246</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாதாள உலகக் குழுக்களிடம்
பணம் பெற்று வருகின்றார் என ஆளுங்கட்சி பிரதி அமைச்சர் ஒருவர் சுமத்தியுள்ள
குற்றச்சாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாதாள உலகக் குழுக்களிடம்
பணம் பெற்று வருகின்றார் என ஆளுங்கட்சி பிரதி அமைச்சர் ஒருவர் சுமத்தியுள்ள
குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.</p><p>


 எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இன்று(14.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>


31 பேர் உயிரிழப்புக்கு அரசே காரணம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகள், மாகாண சபைத் தேர்தல்கள்
நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மலையக மக்களின்
பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவே இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>

இதில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் மற்றும் பி. திகாம்பரம் ஆகியோரின்
கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்துள்ளனர். இது எதிர்க்கட்சிக்கோ அல்லது
ஐக்கிய மக்கள் கூட்டணிக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d809d112-a9c3-4c1b-b4ee-e90af74337b5/26-6a56308e19b52.webp' /></p><p>
</p><p>
 இந்த விடயம்
குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன்
கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அவர் எப்போதும் இம்மக்களின் பிரச்சினைகளில்
மிகுந்த அவதானத்துடன் இருந்து வருகின்றார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 
சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், அரசின் மெத்தனமே இதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.</p><p> 


முதல் நாளிலேயே மோதலில் ஈடுபட்டவர்களைத் தனிமைப்படுத்தியிருந்தால், இரண்டாம்
நாள் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். சிறைச்சாலை நெருக்கடியைக்
கையாளத் தவறிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சி
தீர்மானித்துள்ளது.</p><h2>

பாதாளக் குழுக்களிடன் சஜித்திற்கு தொடர்பு</h2><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசு எடுக்கும் முயற்சி
நீதித்துறைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும், பிற துறைசார்
பற்றாக்குறைகளைத் தீர்க்காமல் ஒரு துறைக்கு மட்டும் சலுகை வழங்குவது ஏனைய
துறையினரிடையே அதிருப்தியைத் தோற்றுவிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382aa196-8e17-4421-93fe-7a49e3f0b798/26-6a56308ebdf47.webp' /></p><p>
</p><p>
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாதாள உலகக் குழுக்களிடம்
பணம் பெற்று வருகின்றார் என்று ஆளுங்கட்சி பிரதி அமைச்சர் ஒருவர் சுமத்தியுள்ள
குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். </p><p>

இது ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டு. தைரியமிருந்தால் நாடாளுமன்றத்துக்கு
வெளியே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யட்டும்.
</p><p>
புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள்
சக்தி, பழைய அரசுகளின் அதே அரசியல் பாணியையே பின்பற்றுகின்றது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:50:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில் நோய்த் தடுப்பு சிகிச்சை விடுதி திறந்துவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inauguration-hostel-at-tellippalai-hospital-jaffna-1784030749"></link>
            <id>https://tamilwin.com/article/inauguration-hostel-at-tellippalai-hospital-jaffna-1784030749</id>
            <summary type="text">யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில்
&quot;அரவணன்&quot;
நோய்த்தடுப்பு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதில் பிரதம விருந்தினராக
இலங்கைக்கான அவுஸ்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில்
"அரவணன்"
நோய்த்தடுப்பு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் பிரதம விருந்தினராக
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
மேத்யூ டக்வொர்த் கலந்து கொண்டு விடுதியினை திறந்து வைத்துள்ளார்.
</p><p></p><h2>முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதி</h2><p>கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்.மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா, அவுஸ்திரேலியா பாலம் அமைப்பின்
பணிபபாளர்களான பிரணவன், வைத்தியர்கள், ஊழியர்கள், பொது மக்கள்
கலந்து கொண்டனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c2bc26d-dcc3-4bbb-8281-8425f70ba0ee/26-6a5629682329b.webp' /></p><p>
அவுஸ்திரேலியாவின், மனிதநேயத்திற்கான பாலம் (bridge to humunity )எனும்
அமைப்பின் ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர் 150,000செலவில்( 03 கோடி )
முதற்கட்டமாக அமைக்கப்பட்ட இந்த விடுதி நோயாளர்கள் இறப்பிற்கு முன் தமது
இறுதிக்காலத்தினை மருத்துவ உதவியுடன் கழிப்பதற்காக இது&nbsp;ிறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், மருத்துவர்களின்
பரிந்துரையுடன் யாழ்.மாவட்டத்தின் எங்குள்ளவர்களும் இவ்வசதியை
பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T12:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலா வைரஸ் பரவல் அதிகரிப்பு - போராட்டத்தில் குதித்த சுகாதாரப் பணியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-virus-outbreak-increases-1784031843"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-virus-outbreak-increases-1784031843</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும்
நிலையில், அங்குள்ள எபோலா சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர்கள் சுகாதாரப் பணிப்பாளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும்
நிலையில், அங்குள்ள எபோலா சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர்கள் சுகாதாரப் பணிப்பாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
இதன்போது போராட்டக்காரர்கள், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல மாத சம்பள மிகுதியை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p> </p><h2> 

சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம்</h2><p>
அத்துடன், தங்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் அவர்கள் இந்த
வேலைநிறுத்தத்தைக் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18daa61b-91ad-4e88-a3bf-fbc70b2465f2/26-6a562a9f930ba.webp' /></p><p> 

இவர்களில் சிலர், தங்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளமே வழங்கப்படவில்லை என்றும் விசனம் தெரிவித்துள்ளனர். </p><p> 

எபோலா போன்ற கொடிய நோய் பரவி வரும் நிலையில், முன்நின்று
பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொங்கோவில் மேற்கொண்டுள்ள இந்த
வேலைநிறுத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண் - விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-lady-dead-boy-friend-arrested-1784001849"></link>
            <id>https://tamilwin.com/article/young-lady-dead-boy-friend-arrested-1784001849</id>
            <summary type="text">பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் நதுனி சஹஷ்ரி என்ற இளம்பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>உயிரிழந்த பெண் அந்த வீட்டில், திருமணம் செய்து கொள்ளாமல் 27 வயதுடைய இளைஞர் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் உதவியாளராகப் பணியாற்றிய இளைஞன், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p><p>
</p><h2><b> 
இளம் பெண்&nbsp;படுகொலை </b></h2><p>சம்பவம் நடந்த இரவு, தான் பணிபுரிந்த இடத்திலிருந்து சுமார் நான்கரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3162d0a6-5ba6-4102-a2dc-e0d4034a7fe7/26-6a55bd477b9d2.webp' /></p><p>இரவு 11.15 மணியளவில் பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>இதன்போது தங்கை மற்றும் தாயாரையும் மிகவும் மோசமான முறையால் திட்டியதாலும் ஏற்பட்ட கடும் கோபத்தில், கத்தியால் அவர் நதுனியின் நெஞ்சில் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொலையின் பின்னர் தானும் உயிரை மாய்த்துக் முயன்று தோல்வியடைந்ததால், வீட்டில் இருந்த திரவத்தை அருந்தியுள்ளார்.</p><p> பின்னர் ஆடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மொரட்டுவ ரயில் நிலையத்திற்கு சென்ற சந்தேக நபர், கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ரயிலின் முன்னால் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
</p><p> 
இதில் அவரது வலது கால் மற்றும் விலா எலும்புகள் உடைந்து பலத்த காயமடைந்தார். பொதுமக்களால் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். </p><p>

2 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் தேசிய வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்தனர். மாளிகாகந்த நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரைப் பார்வையிட்டார். </p><p>அவர் தற்போது கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
</p><h3><b>
பணம் பறிக்கும் மோசடி</b></h3><p>இதேவேளை, நதுனியும் அவரது தாயாரும் நீண்டகாலமாக இளைஞர்களை காதலிப்பதாக நடித்து, பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9710f4b-316a-42c6-8070-d4b33a8678fc/26-6a55bd482f5d6.webp' /></p><p>இந்தச் சம்பவம் குறித்து அறிந்த வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர், இந்தத் தாயும் மகளும் சேர்ந்து தம்மிடம் 15 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளார். </p><p>நதுனி இதற்கு முன்னர் விமானி ஒருவருடனும் நிச்சயதார்த்தம் செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபருடன் வசிக்கும்போதே, நதுனி மற்றொரு சமையல் கலைஞருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.</p><p> அவரிடமிருந்தும் சுமார் 10 லட்சம் ரூபாவை தாய் மற்றும் மகள் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். நதுனியின் தாயார், மகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒரு பாசமான தாயாக நடித்து, இளைஞர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
</p><p>
தாயின் தவறான வழிகாட்டலால் உயிரிழந்த நதுனியின் சடலத்தை அவரது தாயாரே பொறுப்பேற்றுக்கொண்டார். சந்தேக நபரான இளைஞர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/GkR_mqT3TJA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:42:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு - அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-200-people-given-statements-1784026309"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-200-people-given-statements-1784026309</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கைதிகள், சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கைதிகள், சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய(14.07.2026) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>கொடூரமான தாக்குதல்களின் பின்னணி</h2><p>இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய விசேட விசாரணைக்குழுவும், 7 தனித்துவமான விசேட விசாரணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a92bd4-6c5e-474a-b90c-64b597358c52/26-6a561af0423d2.webp' /></p><p>
வன்முறையில் ஈடுபட்டவர்களால் சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்ட போதிலும், அவற்றின் DVR இயந்திரங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

சிறைசாலை அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட கைதிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் உள்ளக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கியவர்களை கண்டறிந்து மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T11:18:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசை கவிழ்க்க திட்டம் - எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-plan-to-overthrow-the-anura-government-1784026517"></link>
            <id>https://tamilwin.com/article/a-plan-to-overthrow-the-anura-government-1784026517</id>
            <summary type="text">எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை
அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.

யா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை
அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட
கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரிடம், தமிழ் முஸ்லீம் கட்சிகளின்
புதிய கூட்டு தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எதிர்க்கட்சிகளின் கூட்டணி</h2><p>
</p><p>


மேலும் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி என்பது, அது வெறும்
கூட்டு சாம்பாராக மாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இடமில்லை என்பது
மக்களுக்கு தெரிந்த விடயம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSlAKwRzAgY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இந்தக் கூட்டணி இந்த நாட்டில் இலஞ்சத்தை ஒழிப்பதற்காக, மோசடிகளை ஒழிப்பதற்காக திருடர்களைப் பிடிப்பதற்காக, இதுபோன்ற நல்ல வேலைகளைச் செய்வதற்கான கூட்டணியா? அல்லது
திருடர்களைப் பாதுகாப்பதற்கும், வஞ்சகர்களைப் பாதுகாப்பதற்கும், ஊழல்
மோசடிகளை செய்பவர்களை பாதுகாப்பதற்கான கூட்டணியா என்பது எல்லோருக்கும்
நன்றாகத் தெரியும்.</p><h2>அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு</h2><p>இந்தக் கூட்டணியில் இருக்கின்றவர்களைப் பார்க்கின்ற பொழுது கடந்த காலங்கள்
நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு இன்றைக்குப் பிணையில் இருக்கின்ற
நபர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1534933-54a0-46f5-9cba-90e34b1c7a54/26-6a5618966ee29.webp' /></p><p>

அவ்வாறு பிணையில் இருக்கிறவர்களுக்கு நாளைக்கு கம்பி எண்ணுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும், அதனால், சிறைக்குச் செல்வதற்கு முதல்எதையாவது செய்து இந்த அரசாங்கத்தை வீழ்த்தலாமா, அல்லது அரசாங்கத்தை மாற்றலாமா என்கிற முயற்சியில் ஈடுபடுகின்ற ஒரு போக்காகவே இதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p>
எந்த வகையிலும் இவ்வாறான கூட்டணி அல்ல, இதனுடைய அப்பனால் அமைக்கப்படுகின்ற
கூட்டணியாலும், தேசிய மக்கள் சக்தியை அசைக்க முடியாது.

ஏனென்றால், இன்றும் அவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றோம். மக்களுடைய
செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5006117-89c7-46b6-afe2-29d8d5851fc5/26-6a561895bf862.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தொடர்பான கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-implementing-the-national-program-1784024649"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-implementing-the-national-program-1784024649</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்களைப் புனரமைப்புச் செய்யும் வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தேசிய வேலைத்திட்டத்தை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்களைப் புனரமைப்புச் செய்யும் வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
</p><p>
குறித்த கலந்துரையாடல் இன்று (14-07-2026) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்</h2><p> </p><p>

வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பத்துக் குளங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.</p><p>

இதில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
</p><p>
அத்துடன் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030இற்குள் சுற்றுலாப் பயணிகளுக்கான செலவினத்தை அதிகரிக்க முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/higher-tourist-spending-by-2030-1784020086"></link>
            <id>https://tamilwin.com/article/higher-tourist-spending-by-2030-1784020086</id>
            <summary type="text">பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தை கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தை கணிசமாக அதிகரிப்பதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
 

களுத்துறை மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் சுற்றுலாத் தொழிலை வலுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதி அமைச்சர் ரணசிங்க, நாட்டில் தங்கியிருக்கும் போது பார்வையாளர்கள் செலவிடும் தொகையை அதிகரிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகளின் செலவினங்கள்&nbsp;</h2><p>

 

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் 171 அமெரிக்க டொலராகப் பதிவான நிலையில், தற்போது ஒரு சராசரி சுற்றுலாப் பயணி சுமார் 148 அமெரிக்க டொலரைச் செலவிடுகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d0e3dfc-7953-4ad2-870d-9691a3bdb26a/26-6a560c2c6f5be.webp' /></p><p>கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் நடத்தை மற்றும் செலவின முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஓர் ஆய்வை நடத்தியதாக பிரதி அமைச்சர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
 

சுற்றுலாப் பயணிகளின் செலவினங்களை அதிகரிப்பதற்கு, ஒட்டுமொத்த வருகையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதே முக்கியமானது என்றும், அந்த இலக்கை அடைவதற்குத் திட்டமிட்ட மற்றும் முறையான அணுகுமுறை தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hYAaL4xyFvE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-14T10:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞருக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-high-court-man-wattala-to-life-imprisonment-1784019209"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-high-court-man-wattala-to-life-imprisonment-1784019209</id>
            <summary type="text">5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>இந்த வழக்கு கடந்த (01.07.2026) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த வழக்கின் அனைத்து பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருந்தார்.</p><p></p><h2>ஆயுள் தண்டனை</h2><p>
</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான
'ஐஸ்' போதைப் பொருளைத் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை
விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட நபர் வத்தளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb73e11-64b4-4493-8636-2e2257d15c02/26-6a55ff2ae9bdf.webp' /></p><p>
</p><p>
குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம் பெற்று வந்த நிலையில்,
குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்ட வாதிகளான தேவ
விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன்
சமர்ப்பித்திருந்தனர்.
</p><p>இதேவேளை,&nbsp; அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின்
மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான விசாரணை : ஜூலை 20இல் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabraal-bid-halt-greek-bond-corruption-case-fails-1784016655"></link>
            <id>https://tamilwin.com/article/cabraal-bid-halt-greek-bond-corruption-case-fails-1784016655</id>
            <summary type="text">மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதிவாதி தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம்</h2><p>
</p><p>
2012ஆம் ஆண்டில் கிரீஸ் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த போது, அந்த நாட்டுப் பிணைமுறிவுகளில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 184 கோடி ரூபாவுக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டிருந்தது. </p><p>இதற்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சட்ட வரம்புக்குட்பட்ட அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தரப்பினரால் இந்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a799fba7-84b0-4530-9c03-d6d9d78e53b7/26-6a55f0f6223a6.webp' /></p><p>நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய தலைமையில், உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக சி. ராகல ஆகியோர் அடங்கிய அமர்வே இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. </p><p>

தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த HCB 271/24 மற்றும் HCB 33/24 ஆகிய வழக்குகளில் உள்ள குற்றச்சாட்டுக்களும், இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளும் சமமானவை என பிரதிவாதி தரப்பு மன்றில் தெரிவித்ததுடன், அந்த வழக்கு நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கைத் தொடர்வது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

இதன்போது பதிலளித்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, அதன் பணிப்பாளர் நாயகத்தினால் 2018ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளுக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரினால் நிர்வாகக் கட்டமைப்புக்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்திருந்தனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்ப்பனங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு , இந்தச் சட்டத்தின் மூலம் தற்போதுள்ள மூலச் சட்டத்தின்கீழ் எந்தவித உரிமைகளும் பறிக்கப்படவில்லை என்றும், இது நடைமுறைச் சட்டமே எனவும் தெரிவித்திருந்தது.</p><p> 

மேலும், மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வினால் வழங்கப்படும் தீர்ப்பினால், பாதிக்கப்படும் தரப்பு அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் உரிமை சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7ebc1cf-caff-4132-b4aa-11553f494def/26-6a55f0f6c58ab.webp' /></p><p>


இதனடிப்படையில், பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளில் எந்தவித அடிப்படையும் இல்லை எனக் கூறி அதனை நிராகரித்த நீதிமன்றம், வழக்கின் முழுமையான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>
2011 மார்ச் 11 முதல் 2012 நவம்பர் 19 வரையான காலப்பகுதிக்குள், கிரீஸின் பிணைமுறிவுகளில் அரசாங்கப் பணத்தை முதலீடு செய்ததன் மூலம், அரசிற்கு 184 கோடிக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:50:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்க்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - காரணத்தை வெளிப்படுத்திய முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1784016248"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1784016248</id>
            <summary type="text">நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இவ்வளவு தூரம் சென்றதற்குக் காரணம், கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இவ்வளவு தூரம் சென்றதற்குக் காரணம், கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க கூறியுள்ளார்.&nbsp;</p><p>

நீர்க்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளக பிரச்சினை காரணமாக இரண்டு கைதிகள் இறந்தனர். அது அதிகாரிகள் வரை பரவவில்லை. மறுநாள் காலையில், எங்கள் அதிகாரிகள் குழு ஒன்று ஆயுதமின்றி அந்தச் சிறைக்குள் சென்றது.</p><h2>கைதிகள் மீதான நம்பிக்கை</h2><p>இங்குள்ள மிகப்பெரிய மற்றும் பிரதான பிரச்சினை, கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே. எனது சிறை வாழ்க்கை கிட்டத்தட்ட 38 ஆண்டுகள். நான் எந்த நேரத்திலும் ஒரு கைதியை நம்பியதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c73a7fda-7350-4c52-9025-35ec1cbb13d8/26-6a5604c92e530.webp' /></p><p>அதனால்தான் நான் நினைக்கிறேன்... நமது அதிகாரிகள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டார்கள். அவர்கள் கைதிகளை நம்பி சிறைக்குள் சென்றார்கள்.</p><p>43,000 அதிகாரிகள் இருக்கும் இடத்தில், சுமார் 5500 அதிகாரிகள் கொண்ட ஒரு குழு சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது என்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:44:57+00:00</updated>
        </entry>
    </feed>
