<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-18T17:41:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் மர்ம நபர்கள்! சிக்கிய CCTV காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-wickramaratne-house-cid-cctv-footage-1784392455"></link>
            <id>https://tamilwin.com/article/igp-wickramaratne-house-cid-cctv-footage-1784392455</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையிலே, சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்தநிலையிலே, சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது இல்லத்திற்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும் சிசிரிவி காணொளிகளை மீட்டு விசாரணைகளை மேற்கொள்வது என்று ஒரு கருத்து கூறப்படுகின்றது.அதில் எந்த அளவிற்கு உண்மை தன்மை இருக்கின்றது என்று தெரியவில்லை.</p><p>ஏனென்றால் அவர் நாளாந்த வாழ்க்கை செயற்பாடுகளை சாதாரணமாகத் தான் ஆரம்பித்து இருக்கின்றார்.ஏன் இந்தத் தவறான முடிவை அவர் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்தார் என்கின்ற சந்தேகம் எழுகின்றது.</p><p>வீட்டிலுள்ள சிசிரிவி காட்சிகளை மையப்படுத்தி பொலிஸார் விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>மேலும், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலரின் வாக்குமூலத்தில் சந்தேகங்கள் எழுவதாகக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/01_b2ALaeiI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T17:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணையின் போது ஏற்பட்ட திடீர் சுகயீனம்.. சிகிச்சையின் போதே விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னணி வர்த்தகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clothing-retailer-owner-remanded-customs-probe-1784390769"></link>
            <id>https://tamilwin.com/article/clothing-retailer-owner-remanded-customs-probe-1784390769</id>
            <summary type="text">இலங்கையில் உள்ள முன்னணி ஆடைகள் வர்த்தக நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உள்ள முன்னணி ஆடைகள் வர்த்தக நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணையின் போது இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p>
சுங்க அதிகாரிகளுடன் இருந்தபோது ஜயவர்தனவுக்கு இந்த மருத்துவ நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da25e7b8-008a-4760-b325-5f965946b6c1/26-6a5baa402d849.webp' /></p><p>
இந்நிலையில், கொழும்பு பிரதம நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று, சந்தேக நபரை பார்வையிட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T16:49:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் கடும் வெள்ளப்பெருக்கு: 4 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-flooding-in-vietnam-4-dead-1784391377"></link>
            <id>https://tamilwin.com/article/severe-flooding-in-vietnam-4-dead-1784391377</id>
            <summary type="text">ஹனோய் – வியட்நாமின் வடக்கு மாகாணமான லாய் சௌவில் ஏற்பட்ட திடீர்
வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்
நான்கு பேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹனோய் – வியட்நாமின் வடக்கு மாகாணமான லாய் சௌவில் ஏற்பட்ட திடீர்
வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்
நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும்
மழையினால், வெள்ளிக்கிழமை அதிகாலை முவோங் தான் கிராமத்தில் இந்த வெள்ள
அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த அனர்த்தத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மண்சரிவுகள்&nbsp;</h2><p>
</p><p>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த கிராமத்தில் செம்மண் மற்றும் வெள்ள நீர்
புகுந்துள்ளதையும், சேதமடைந்த வீதிகள் மற்றும் வீடுகளின் ஒரு மூலையில் கற்கள்
மற்றும் மரத்தடிகள் குவிந்துள்ளதையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b621fd85-ccc7-4385-88c8-1388fc68e147/26-6a5ba6d31df8f.webp' /></p><p>
</p><p>
கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள்
மற்றும் திடீர் வெள்ளத்தினால், அப்பகுதியில் வீதிகள், மின்சாரக் கட்டமைப்புகள்
மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
</p><p>
அத்துடன், சுமார் 238 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக
அரசாங்கத்தின் பேரிடர் முகாமைத்துவ ண நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் சனிக்கிழமை 250 மில்லிமீற்றர் வரை கடும் மழை
பெய்யக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளதால், மேலதிக வெள்ளப்பெருக்கு
மற்றும் மண்சரிவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a86bdfe-c7d0-487e-a096-7c28cae19215/26-6a5ba6d3c474b.webp' /></p><p>

ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியிலேயே வியட்நாமில் மழையுடன் கூடிய
காலநிலை உச்சத்தை அடைவதுடன், இக்காலகட்டத்தில் சூறாவளி மற்றும் வெள்ள
அனர்த்தங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாகும்.
</p><p>
கடந்த ஆண்டு இயற்கை அனர்த்தங்கள், முக்கியமாக வெள்ளப்பெருக்கினால் வியட்நாமில்
489 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T16:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்களின் அடையாளத்தை அழிக்க பார்க்கும் அமைச்சர் சந்திரசேகரன்: அன்னராசா குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandresekaran-try-destroy-ident-fishing-community-1784388863"></link>
            <id>https://tamilwin.com/article/chandresekaran-try-destroy-ident-fishing-community-1784388863</id>
            <summary type="text">கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ்.மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல்
அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ்.மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல்
அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து கடற்றொழிலாளர்களின் அடையாளங்களை அழிக்க முற்படுவதாக முன்னாள் கடற்தொழில் சமாசத்தின்
தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்&nbsp; இன்று(18) சனிக்கிழமை வடக்கு
 கடற்றொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெற்கைச் சேர்ந்த மக்கள்
போராட்ட முன்னணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>கடற்றொழிலாளர்களின் அடையாளம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>வடக்கு மாகாணத்துக்கு ஒவ்வாத சீனக் கடல் அட்டை
பண்ணைகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊக்குவிப்பது எமது கடற்தொழில்
மக்களை கருவறுக்கும் செயற்பாடாக பார்க்கிறோம்.
</p><p>
இந்த செயற்பாட்டுக்கு பிரதேச செயலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளும் உடந்தையாக
இருப்பது கவலையை உண்டு பண்ணுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c15935a4-c93b-48a0-b200-f072cedfd2aa/26-6a5ba07eea295.webp' /></p><p> ஒரு பிரதேசத்தின் அரச காணிகளுக்கு அந்தப் பிரதேசத்தின் உடைய பிரதேச செயலாளர்
பொறுப்பாக இருக்கின்ற நிலையில் எமது கடலையும் அரச காணி போல் கையாள
நினைக்கிறார்கள்.

எமது கடல் எமக்குச் சொந்தம் கடலை யாரும் பிரித்துக் கொடுக்க முடியாது.
</p><p>அவ்வாறாயின் கடலை பகிர்ந்து வழங்குவதற்கான அதிகாரத்தை யாரிடம் பெற்றார்கள் என
கேட்க விரும்புகிறோம்.</p><p>

ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகத்தின் பாரம்பரிய கடற்தொழிலை இல்லாமல் ஒழிப்பதற்கு
அமைச்சர் தலைமையில் மீளவும் அட்டை பண்ணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.</p><p></p><h2>கடற்றொழிலாளர் பிரச்சினை&nbsp;</h2><p>

ஏனெனில் ஆட்சி அதிகாரம் இல்லாத காலத்தில் கடல் அட்ட பண்ணைக்கு எதிராக எம்மோடு
குரல் கொடுத்த தற்போதைய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் தற்போது அட்டை
பண்ணைகளை வாரி வழங்க முற்படுவது ஏன்.
</p><p>
கடற்றொழில் சமூகத்தின் மீது கட்டமைத்து விடப்பட்டிருக்கிற பல பிரச்சனைகள் தொடர்பில்
நாம் தெற்கை சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியுடன் கலந்துரையாடி அவர்களும்
எமக்காக குரல் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.
</p><p>
குறிப்பாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற மீன்பிடி திருத்தச்
சட்டம் முற்றாக நீக்கப்படுவதோடு இந்தியா இழுவை மாடி கடற்றொழிலாளர்களின்
அட்டகாசங்களுக்கு இராஜதந்திர ரீதியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f8ff88-4f1d-4b84-9d5b-bf712a8735d6/26-6a5ba0800749d.webp' /></p><p>
</p><p>
மேலும் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார ரீதியில் பின்னோக்கி காணப்படுகின்ற நிலையில்
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானிய மண்ணெண்ணெய் விநியோகத்தை நிறுத்தி விலை
குறைப்பு செய்யப்பட்ட மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை
முன்வைத்து எமது கலந்துரையாடலை மேற்கொண்டோம்.</p><p>

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தேர்தல் காலங்களில்
சாதகமான கருத்துக்களை கூறி வந்தாலும் ஆட்சி அதிகாரங்களுக்கு வந்த பின்னர் அது
தொடர்பில் கவனம் செலுத்தாமை தொடர்பில் கடற்றொழில் சமூகம் போராட்டத்தின் மூலம்
அவர்களின் கவனத்தை செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடினோம்.</p><p>

ஆகவே எமது கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் அடையாளத்தை அழிப்பதற்கு
கடற்தொழில் அமைச்சர் முனைவாராயின் அதற்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம்
என அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T15:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்த் தேசியத்தைத் தாங்கும் வலிமையான பண்பாட்டு வேர்களில் ஒன்றே ஆடிப்பிறப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aadi-tradition-cultural-roots-tamil-nationalism-1784389870"></link>
            <id>https://tamilwin.com/article/aadi-tradition-cultural-roots-tamil-nationalism-1784389870</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் வாழ்வியல் முறைமையில் தொன்றுதொட்டு இடம்பிடித்து வரும்
பண்டிகைகளில் ஆடிப்பிறப்பும் ஒன்று. இது வெறுமனே கூழும் கொழுக்கட்டையும்
ஆக்கிப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் வாழ்வியல் முறைமையில் தொன்றுதொட்டு இடம்பிடித்து வரும்
பண்டிகைகளில் ஆடிப்பிறப்பும் ஒன்று. இது வெறுமனே கூழும் கொழுக்கட்டையும்
ஆக்கிப் பரிமாறும் பருவகாலச் சடங்கு அல்ல. இது தமிழ்த் தேசியத்தைத் தாங்கி
நிற்கின்ற வலிமையான பண்பாட்டு வேர்களில் ஒன்று என்று தமிழ்த் தேசியப் பசுமை
இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா நேற்று (17.07.2026) தாவடியில் நடைபெற்றது.</p><p> இவ்விழாவுக்குத் தலைமை வகித்து
உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேசியம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழுகின்ற மக்கள் தங்களின்
தனித்துவமான மொழி, பண்பாடு, வாழ்வியல் விழுமியங்களைப் பகிர்ந்துகொண்டு தங்களை
ஒரு தனிப்பெரும் சமூகமாக உணரும் கூட்டு ஆன்மா ஆகும். </p><p>இந்தக் கூட்டு அடையாளமே
அந்தச் சமூகத்துக்குத் தங்களது அரசியல், பொருளாதார, சமூக எதிர்காலத்தைத்
தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்குகின்றது. </p><p>ஆனால், எமது அரசியல்வாதிகள்
பலரும் தேசியம் என்பதன் முழுமையான பரிமாணங்களைப் புரிந்து கொள்ளாமல் அதனை
வெறும் அரசியல் கோசமாக மேடைகளில் முழங்கி வருகின்றார்கள்.&nbsp;</p><p>தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகள் பலரும் மொழி உரிமைக்கும் நில
மீட்புக்கும் கொடுக்கும் முதன்மைத்துவத்தைப் பண்பாட்டுப் பாதுகாப்புக்கு
வழங்குவதில்லை. ஒரு சமூகத்துக்குத் தேசிய இனம் என்ற தகுதியை வழங்குவதற்கு அது
பூர்வீகமாக வாழந்து வருகின்ற நிலமும், அது பேசுகின்ற மொழியும் எந்த அளவுக்கு
முக்கியத்துவம் பெறுகின்றதோ அந்த அளவுக்கு அதன் பண்பாடும் முக்கியத்துவம்
வாய்ந்ததாகும். </p><p>நிலமும், மொழியும் ஒரு உடலின் உறுப்புகளுக்கு ஒப்பானது என்றால்
பண்பாடு என்பது அந்த உடலைக் கண்ணுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டிருக்கின்ற
உயிருக்கு ஒப்பானது.

உயிர் பிரிந்த உடல் எவ்வாறு சிதைந்து போகுமோ அது போன்றே ஒரு தேசிய இனம் தன்
பண்பாட்டு வேர்களை இழந்து விட்டால் தன் அரசியல் உரிமைகளுக்காகப் போராடும்
வீரியத்தை இழந்துவிடும். </p><p>அதன் நிலமும், மொழியும் காலப்போக்கில் அந்நிய
ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி அழிந்து போய்விடும். உலக மயமாக்கலும், தென்
இலங்கையின் பண்பாட்டுத் திணிப்புகளும் வேகமாக நடக்கும் இக்காலத்தில்
ஆடிப்பிறப்புப் போன்ற பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதும், அதன்

முக்கியத்துவங்களை இளைய தலைமுறையினருக்குச் சேர்ப்பிப்பதும் ஓர் அரசியல்
போராட்டம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T15:52:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் காட்டுத் தீ புகையால் திணறும் அமெரிக்கா: ஒன்ராறியோ மக்களை வெளியேற்ற இராணுவம் தயார்நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-struggles-with-smoke-from-canadian-wildfires-1784388367"></link>
            <id>https://tamilwin.com/article/us-struggles-with-smoke-from-canadian-wildfires-1784388367</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் காட்டுத் தீ காரணமாக,
அங்கிருந்து வெளியேறும் கரும்புகை அண்டை நாடான அமெரிக்காவின் பெரும்
பகுதிகளைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் காட்டுத் தீ காரணமாக,
அங்கிருந்து வெளியேறும் கரும்புகை அண்டை நாடான அமெரிக்காவின் பெரும்
பகுதிகளைச் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
</p><p>
இந்நிலையில், காட்டுத் தீ அச்சுறுத்தல் உள்ள ஒன்ராறியோவின் தொலைதூரக் கிராமப்
பகுதியான போர்ட் ஹோப்பில் இருந்து சுமார் 600 மக்களை வான்வழியாக
வெளியேற்றுவதற்குக் கனடா இராணுவம் இன்று(18)&nbsp;ஆயத்தமாகி வருவதாக ரொய்ட்டர்ஸ்
செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
</p><p>
ஒன்ராறியோவின் வடமேற்குப் பகுதியில் பாதைகள் குறைவாகக் காணப்படும் நிலையில்,
விமானப் போக்குவரத்து மூலமாகவே மக்கள் தெற்குப் பகுதிகளுக்குப் பாதுகாப்பாக
அழைத்துச் செல்லப்படுகின்றனர்.</p><p></p><h2>தீ விபத்து</h2><p>

கனேடிய இயற்கை வள அமைச்சின் தகவல்களின்படி, ஒரே இரவில் மேலும் 69 புதிய
காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து, தற்போது எரியும் மொத்த
காட்டுத் தீயின் எண்ணிக்கை 955 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c320195-e6a3-4afc-9c78-9a83e1583f96/26-6a5b9b11b9155.webp' /></p><p>
</p><p>
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வறண்ட வானிலையே இந்தத் தொடர் தீ
விபத்துகளுக்குக் காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>எச்சரிக்கைகள்</h2><p>
</p><p>
இந்தக் காட்டுத் தீயின் புகை காற்றின் காரணமாக அமெரிக்க எல்லைக்குள்
பரவியுள்ளதால், அமெரிக்காவின் பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, வெர்ஜீனியா,
மேரிலாண்ட் மற்றும் வொஷிங்டன் டி.சி. உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும்
மக்களுக்குக் காற்றுத் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a214652-db9a-4980-bbab-1b8bba095ef8/26-6a5b9b1269c93.webp' /></p><p>
</p><p>
குறிப்பாகப் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் போன்ற பகுதிகளில் காற்றின் தரம்
மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.</p><p>

எவ்வாறாயினும், நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நாளை(19.7.2026) நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டிக்கு இந்தப் புகையினால்
பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T15:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட் 'விக்ரம்-1' வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-s-first-private-orbital-rocket-vikram-1784387540"></link>
            <id>https://tamilwin.com/article/india-s-first-private-orbital-rocket-vikram-1784387540</id>
            <summary type="text">&amp;nbsp;பெங்களூரு – இந்தியாவின் விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனமான &#039;ஸ்கைரூட்
ஏரோஸ்பேஸ்&#039;, நாட்டின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட்டான &#039;விக்ரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெங்களூரு – இந்தியாவின் விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனமான 'ஸ்கைரூட்
ஏரோஸ்பேஸ்', நாட்டின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட்டான 'விக்ரம்-1'
ஐ சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
</p><p>
இதன் மூலம் உலகளாவிய வணிக ரீதியிலான விண்வெளிச் சந்தையில் இந்தியா தனது
பங்களிப்பை வலுப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>விக்ரம்-1</h2><p>

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி
மையத்திலிருந்து "மிஷன் ஆகமன்" என்ற திட்டப் பெயரில் இந்த ரொக்கெட் விண்ணில்
ஏவப்பட்டது.
</p><p>
திட்டமிட்டபடி 15 நிமிடங்களில், புவிக்கு அருகேயுள்ள 450 கிலோமீற்றர்
சுற்றுப்பாதையில் வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்களை இந்த ரொக்கெட்
வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🇮🇳 India successfully launches first private orbital rocket Vikram-1 by Skyroot Aerospace, delivering payload to 450 km orbit. Major step for private space industry, competing with SpaceX. <a href="https://t.co/GvUZ3DFRpF">pic.twitter.com/GvUZ3DFRpF</a></p>&mdash; X News (@XNewsGlobalEn) <a href="https://x.com/XNewsGlobalEn/status/2078438540229394850?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதன் மூலம், தனியார் விண்வெளித் துறை மூலமாகச் சுற்றுப்பாதை ஏவுதல் திறனைப்
பெற்ற உலகின் மூன்றாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.</p><p>

விமானப் பயணத்தின் போது ரொக்கெட்டின் உந்துவிசை, வழிகாட்டுதல் மற்றும்
கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சோதிப்பதற்காக இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக
ஸ்கைரூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>விண்வெளித் துறை</h2><p>
</p><p>
22 மீற்றர் உயரமுள்ள 'விக்ரம்-1' ரொக்கெட், 350 கிலோ வரையான எடையைச் சுமந்து
செல்லும் திறன் கொண்டது.

3டி பிரிண்டிங் தொழில்நுட்ப எஞ்சின் உட்பட உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் இதில்
பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d455045-74ce-43bd-a237-3e863a02f1e1/26-6a5b9a8900b32.webp' /></p><p>
</p><p>
விண்வெளித் துறையை 2020ஆம் ஆண்டு தனியார் முதலீட்டிற்கு இந்திய அரசு
திறந்துவிட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1 பில்லியன் டொலர்
மதிப்பீட்டை எட்டிய முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஸ்கைரூட்
மாறியுள்ளது.</p><p>

தற்போது 8 பில்லியன் டொலராக இருக்கும் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை,
தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு 2033ஆம் ஆண்டளவில் 44 பில்லியன் டொலராக
உயர்த்த இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T15:24:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விக்டோரியா கல்லூரிக்கு முன் வெடித்த போராட்டம்..! பாடசாலையின் அதிபர் வெளியிட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/not-let-sumanthiran-attend-as-chief-guest-protest-1784369207"></link>
            <id>https://tamilwin.com/article/not-let-sumanthiran-attend-as-chief-guest-protest-1784369207</id>
            <summary type="text">புதிய இணைப்புசுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன்
விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன்
விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி
தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை
தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8WGFn2hKDgI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாடசாலையின் நடைபவனி நிகழ்வுக்கு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான சுமந்திரனை அழைத்திருந்தோம்.</p><p> ஆனால் அவர்
தான் இந்தியா செல்ல உள்ளவதாக தெரிவித்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது
என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p><b>சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம்! விக்டோரியா கல்லூரிக்கு முன் வெடித்த போராட்டம்</b></p><p>சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாளைய தினம் நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பழைய மாணவர்கள் 
போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
இந்தப் போராட்டமானது இன்றையதினம்(18.07.2026) சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">150வது ஆண்டு விழா&nbsp;</span></h2><p> 

போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் "எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக வரவேண்டும்" என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது பழைய மாணவர்கள் யாராவதே விருந்தினராக அழைக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdeb79a-2218-4135-9034-8ce8836c2efb/26-6a5b5c67b61b9.webp' /></p><p> </p><p>

பாடசாலைக்கு தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாது. 

சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் நேற்றையதினமே எங்களுக்கு தெரியும். </p><p>

இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோருடன் சுமூகமாக பேசி முடிப்பதற்கு நாங்கள் முயற்சித்தோம். </p><p>ஆனால் அது பலனளிக்கவில்லை. 

ஒரு கட்டத்துக்கு மேல் "பழைய மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம், நாங்கள் பாடசாலை சமூகத்துடனேயே நிகழ்வுகளை நடாத்துகிறோம்" என்று அதிபர் கூறினார். அதன் பின்னரே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது.</p><p></p><h2>ஜனநாயக ரீதியிலான&nbsp;போராட்டம்</h2><p> </p><p>

இந்த 150வது ஆண்டு விழாவுக்கு என ஒரு விழா ஒழுங்கமைப்பு குழு தெரிவு செய்யப்பட்டது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. 

ஆனால் அந்த விழா குழுவினரை உள்வாங்கி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை. </p><p>அந்த ஏற்பாட்டுக் குழுவினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. 

பழைய மாணவர் சங்கத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c526742c-6166-4cdf-a498-383801931680/26-6a5b5c68c45f6.webp' /></p><p> </p><p>

எமது பழைய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக காணப்படுகிறது. 

போராட்டம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியாகவே முன்னெடுக்கப்படுகிறது.</p><p> எமது போராட்டத்தால் யாருக்காவது மனவுளைச்சல் ஏற்பட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. 

எமது கருத்தினை கேட்காமல் இந்த விருந்தினர் தெரிவு இடம்பெற்றதே காரணம். </p><p>எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். 

பழைய மாணவர்கள் என்ற வகையில் எமக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T14:56:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்: விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/100-homes-reduced-to-ashes-in-norway-fire-1784385097"></link>
            <id>https://tamilwin.com/article/100-homes-reduced-to-ashes-in-norway-fire-1784385097</id>
            <summary type="text">ஒஸ்லோ – நோர்வேயின் தென்பகுதியில் உள்ள டிரம்மென் நகருக்கு அருகில் நேற்று(17.7.2026) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள்
முற்றாக எர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒஸ்லோ – நோர்வேயின் தென்பகுதியில் உள்ள டிரம்மென் நகருக்கு அருகில் நேற்று(17.7.2026) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள்
முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தலைநகர் ஒஸ்லோவில் இருந்து மேற்கே சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள
அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
பலத்த காற்று வீசியதன் காரணமாக தீ மிக வேகமாகப் பரவியதால், அப்பகுதி
முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.</p><p></p><h2>தீ விபத்து</h2><p>

எனினும், இந்த அனர்த்தத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ
ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0c92c8b-b941-4dd6-91b2-95075da6bf1a/26-6a5b91770ca29.webp' /></p><p>
</p><p>
தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 60 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்
தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், வான்வழியாகத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க உலங்குவானுர்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
தீ தொடர்ந்து பரவி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கும் பரவியதால்,
நூற்றுக்கணக்கான பொதுமக்களைப் பொலிஸார் பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேற்றியுள்ளனர்.</p><p></p><h2>விசாரணைகள்</h2><p>
</p><p>
இந்தத் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் உடனடியாகக்
கண்டறியப்படவில்லை.

தீயணைப்புப் படையினரின் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தற்போது
குடியிருப்புப் பகுதிகளில் பரவிய தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8642485-4f72-486e-ac3c-0855c818fc3b/26-6a5b917652a74.webp' /></p><p>
</p><p>
குடியிருப்புப் பகுதியில் அணைக்கப்பட்ட போதிலும், பலத்த காற்றின் காரணமாக
அருகில் உள்ள காடுகளுக்குள் பரவிய தீயை அணைக்கும் பணிகள் தற்போதும் சவாலாகத்
தொடர்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T14:45:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவைச் சூழ்ந்த கனடா காட்டுத்தீ புகை: உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-wildfire-smoke-surrounding-the-us-1784385218"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-wildfire-smoke-surrounding-the-us-1784385218</id>
            <summary type="text">கனடாவில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக எழுந்துள்ள அடர்ந்த புகைக்
கூட்டங்கள், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான மிட்வெஸ்ட், வடகிழக்கு மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக எழுந்துள்ள அடர்ந்த புகைக்
கூட்டங்கள், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான மிட்வெஸ்ட், வடகிழக்கு மற்றும்
மிட்-அட்லாண்டிக் பகுதிகளுக்குள் பெருமளவில் நுழைந்துள்ளன.</p><p>

இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுபாடு, 100 மில்லியனுக்கும் அதிகமான
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதித்துள்ளதுடன் பெரும் கவலையையும்
ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>&nbsp;உலகக் கிண்ண இறுதிப் போட்டி</h2><p>
</p><p>
இந்தச் சூழ்நிலை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து
இறுதிப் போட்டி குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0137c2d-4ff5-4786-8cdf-c602a1790474/26-6a5b901bb9fa0.webp' /></p><p>
</p><p>
நியூயோர்க் நியூஜெர்சி (மெட்லைஃப்) திறந்தவெளி மைதானத்தில் ஸ்பெயின் மற்றும்
அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே இந்த இறுதிப் போட்டி நடைபெறத்
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

காற்றில் கலந்துள்ள நச்சுப் புகையானது வீரர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான
இரசிகர்களின் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பு அற்ற சூழலை ஏற்படுத்தக்கூடும்
என்பதால், நிலவரத்தை ஃபிஃபா அமைப்பும் அமெரிக்க அதிகாரிகளும் மிகத் தீவிரமாகக்
கண்காணித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T14:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: இறுதிச்சடங்கு தொடர்பில் வெளியான தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-former-igp-statements-record-from-10-people-1784383347"></link>
            <id>https://tamilwin.com/article/death-former-igp-statements-record-from-10-people-1784383347</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்புச் சம்பவம்
தொடர்பில் இதுவரை 10 பேருக்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பதிவு
செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்புச் சம்பவம்
தொடர்பில் இதுவரை 10 பேருக்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
64 வயதான சி.டி. விக்ரமரத்ன, நேற்று(17) காலை மாலம்பே, தலாஹேன
பகுதியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில்
உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>முதற்கட்ட விசாரணை</h2><p> </p><p>தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ்
உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாகக் கூறி, அதனைப்
பெற்றுக்கொண்டு அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என முதற்கட்ட
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a3ef402-c32f-486f-bfaf-96378ff52a3e/26-6a5b8a1a03de6.webp' /></p><p>
</p><p>
இந்த மரணம் தவறான முடிவெடுக்கப்பட்ட உயிர்மாய்ப்பு என கருதப்படுவதால், பொலிஸ் ஒழுக்கக் கோவைக்கு அமைவாக
அவருக்கு உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகள் வழங்கப்படமாட்டாது எனத்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p> சம்பவம் நடந்த வேளையில், இரு பாதுகாப்பு
உத்தியோகத்தர்கள், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மனைவி மற்றும் இளைய மகன்
ஆகியோர் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர்
சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>இறுதிச் சடங்குகள்</h2><p>
</p><p>இதற்கமைய, கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில்,
மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/274ca6e3-35b0-45de-a5bd-ea161217dfdf/26-6a5b8a1ab254f.webp' /></p><p> </p><p>அத்துடன், நுகேகொட கோட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில்,
மாலம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தனியான விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றார்.
</p><p>
இதற்கிடையில், சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் நாளை(19) ஞாயிற்றுக்கிழமை
பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
</p><p>
அவரது இறுதிச் சடங்குகள் நாளைமறுதினம்(20) திங்கட்கிழமை பிற்பகல் பொரளை பொது
மயானத்தில் நடைபெறவுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T14:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-revealed-about-kidney-disease-1784380770"></link>
            <id>https://tamilwin.com/article/information-revealed-about-kidney-disease-1784380770</id>
            <summary type="text">இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>

 

இது தவிர, இந்நாட்டில் இதுவரை கண்டறியப்படாத மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத பெருமளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

 

சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணியாக நீரிழிவு நோய் காணப்படுவதாகக் குறிப்பிட்ட வைத்தியர், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டிலேயே அதிகளவிலான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் கூறினார்.</p><p></p><h2>நோயாளர்களின் எண்ணிக்கை</h2><p>
</p><p>
 

இது சதவீத அடிப்படையில் 25% ஆகும் எனச் சுட்டிக்காட்டிய வைத்தியர் அனுபமா டி சில்வா, நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறுவதால் மக்கள் சிறுநீரக நோய்க்கு ஆளாக நேரிடுகிறது என்பதை விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0edef348-06cd-4aad-a59b-0f67dd67b0cd/26-6a5b87ba7c1ec.webp' /></p><p>
</p><p>
 

மேலும், இதற்கு மேலதிகமாக உயர் குருதி அழுத்தம் , இதய நோய்கள் மற்றும் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுதல் போன்ற நிலமைகளும் இதற்குக் காரணமாக அமைகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 

இதன் காரணமாக, தற்போது பதிவாகியுள்ள 10% சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 25% வரை உயரக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அது 30% முதல் 40% வரை கூட அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T14:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழரசு - 'சங்கு' அணி யாழில் திடீர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamilarasu-meeting-jaffna-discussion-politics-1784379066"></link>
            <id>https://tamilwin.com/article/tamilarasu-meeting-jaffna-discussion-politics-1784379066</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்
தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்தக் கலந்துரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்
தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்தக் கலந்துரையாடலானது இன்று(19.07.2026) தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் நடைப்பெற்றுள்ளது.</p><p></p><h2>இலங்கை அரசியல் நிலவரங்கள்</h2><p>
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea549860-5ad4-4966-8a4b-d9f5fb413d47/26-6a5b797c1d74b.webp' /></p><p>ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் சார்பில்
தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார்,
சி.வேந்தன் மற்றும் நா.இரட்ணலிங்கம் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.</p><p>

இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும்
சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டு உள்ளிட்ட
பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது என சந்திப்பின்
பின்னர் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன்
ஆகியோர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T13:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்மமான முறையில் உயிரிழக்கும் முக்கிய சாட்சியாளர்கள்! எழுந்துள்ள பாரிய சந்தேகம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/key-witnesses-dying-under-mysterious-circumstances-1784375609"></link>
            <id>https://tamilwin.com/article/key-witnesses-dying-under-mysterious-circumstances-1784375609</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முக்கிய தகவல்களை
வெளிப்படுத்தியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முக்கிய தகவல்களை
வெளிப்படுத்தியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்
பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.</p><p>

குருநாகலில் இன்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து
வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அங்கு அவர் மேலும் கூறியதாவது,</p><p>

"இலங்கை வரலாற்றில் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார் என்று கூறப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.</p><p></p><h2>&nbsp;முக்கிய சாட்சியாளர்கள்</h2><p> </p><p>முன்னாள்
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இந்த மரணம் பெரும்
சந்தேகத்துக்குரியது. சர்ச்சைக்குரிய சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள்
தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழக்கின்றமை சமூகத்துக்கு விடுக்கப்படும்
அச்சுறுத்தலாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af5f446-aea6-4ab9-a5d1-dceb00915c13/26-6a5b6c234b1fd.webp' /></p><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சி.டி. விக்ரமரத்ன பல முக்கிய
விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு
அவருக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.
</p><p>இவ்வாறான பின்னணியில், இந்த மரணத்தைத் தற்கொலை என்று முத்திரை குத்த ஒரு
தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
</p><p>
தற்போது சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் கடும்
அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இது
மிகவும் முறையற்றதொரு செயற்பாடாகும். இந்த மரணம் குறித்து அரசு உரிய
விளக்கத்தை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T13:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களுக்கு பெருமை சேர்த்த நுவரெலியா கல்வி வலயத்தின் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwaraeliya-zone-73-percent-pass-in-g-c-e-ol-1784377455"></link>
            <id>https://tamilwin.com/article/nuwaraeliya-zone-73-percent-pass-in-g-c-e-ol-1784377455</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் நுவரெலியா கல்வி வலயம் 73 சதவீத
சித்தியைப் பதிவு செய்திருப்பது அரசியல் தரப்பினருக்கும் மலையக மக்களாகிய அன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் நுவரெலியா கல்வி வலயம் 73 சதவீத
சித்தியைப் பதிவு செய்திருப்பது அரசியல் தரப்பினருக்கும் மலையக மக்களாகிய அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகும் என
கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று
(19.07.2026) கொட்டகலையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த
பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மலையகத்தின் வெற்றி</h2><p>
</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

மலையகத்தில் ஒரு காலத்தில் ஆரம்பப் பாடசாலைகள் மட்டுமே காணப்பட்டன. ஆனால்
இன்று அவை மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. </p><p>அதன்
விளைவாக கல்வித்துறையில் மலையகம் கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்து
வருகிறது.


கடந்த காலங்களில் மலையகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிக்காக வெளி
மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வர வேண்டிய நிலை காணப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dd6b37c-e481-4cfa-b788-88e09d3e1762/26-6a5b73d4292cc.webp' /></p><p>ஆனால் இன்று மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஆசிரியர்கள்,
அதிபர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபைகள், நீதிமன்றங்கள்,
பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் பொறுப்பான பதவிகளை
வகிப்பது கல்வி வளர்ச்சியின் வெளிப்பாடாகும்.</p><p>


இந்த முன்னேற்றத்திற்கு மாணவர்களின் அர்ப்பணிப்பும், அதிபர்கள் மற்றும்
ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையுமே அடிப்படைக் காரணம்.</p><p></p><h2>மாணவர்களின் கல்வி முன்னேற்றம்</h2><p>

பல ஆசிரியர்கள் தங்களது சொந்த தேவைகளைக் கூட புறக்கணித்து மாணவர்களின்
எதிர்காலத்திற்காக உழைத்ததன் பயனாகவே இன்று இந்த நிலையை அடைந்துள்ளோம்.</p><p>

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேவையாற்றி வருவது அந்தப் பகுதி
மக்களுக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b09df700-4d64-4b08-84f2-8fb8e376ac02/26-6a5b73d24052e.webp' /></p><p>


சாதாரண தர வெற்றியுடன் நிறுத்திக்கொள்ளாமல் உயர்தரக் கல்வியையும் தொடர்ந்து
பல்கலைக்கழகம் வரை பயின்று, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள குடிமக்களாக
உருவாக வேண்டும்.</p><p>மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அரசியல்
வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும்
தொடர்ந்தும் வழங்குவோம் என உறுதியளித்துள்ளார்.</p><p></p><h2>723 மாணவர்கள் கௌரவிப்பு</h2><p>

இதன்போது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று
சாதனை படைத்த 723 மாணவர்களுக்கு 
பதக்கங்கள், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a180ca9a-8a06-42f5-8a5d-3d56be249037/26-6a5b73d3545ed.webp' /></p><p>

'கல்விக்கு கரம் கொடுப்போம்' என்ற தொனிப்பொருளில், கொட்டகலை பிரதேச சபைத்
தலைவர் ராஜமணி பிரசாந்த் தனது சொந்த நிதியுடனும், நலன்புரி விரும்பிகளின்
ஒத்துழைப்புடனும் இந்த கௌரவிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.</p><p>

இந்த நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பாடசாலை
அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவிலான
பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T13:36:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சவுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் மர்மமாக இறக்கிறார்களா..! மரணங்களில் தொடரும் மர்மம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-cd-wickramaratne-found-dead-apparent-1784380885"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-cd-wickramaratne-found-dead-apparent-1784380885</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின் மரணம் தவறான முடிவெடுத்து எடுக்கப்பட்ட உயிர்மாய்ப்பா அல்லது கொலையா என்ற சந்தேகம் எழும்பியுள்ளதாக எமது தலைமுறை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின் மரணம் தவறான முடிவெடுத்து எடுக்கப்பட்ட உயிர்மாய்ப்பா அல்லது கொலையா என்ற சந்தேகம் எழும்பியுள்ளதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.</p><p>

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>


உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பல முக்கிய வழக்குகளில் சாட்சியமளித்தவர் என்பதால், இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருக்கலாம்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சாட்சி சொல்பவர்கள் மர்மமான முறையில் இறப்பது சந்தேகமாக உள்ளது.

இது போன்ற நிகழ்வுகள் சாட்சிகளை அச்சமடையச் செய்யும்.
</p><p>
அரசாங்கம் இத்தகைய மரணங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, அது கொலையா அல்லது தவறான முடிவா என்பதை உறுதியாக நிரூபிக்க வேண்டும்

ஒரு அதிகாரியின் பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்போது அரச மரியாதை வழங்கப்பட வேண்டுமானால், அவர் கொலை செய்யப்பட்டார் என்பது கட்டாயம் நிரூபிக்கப்பட வேண்டும். 

தற்கொலை என்றால் அவருக்கு அரச மரியாதை வழங்கப்பட மாட்டாது.</p><p>

பூதவுடலை ஒப்படைப்பதற்கு முன்பாகவே, அரசாங்கம் வைத்திய அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/H_u1Q_sZaf0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T13:34:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவைக் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flag-hoisting-ceremony-for-maavaikandhan-tomorrow-1784375481"></link>
            <id>https://tamilwin.com/article/flag-hoisting-ceremony-for-maavaikandhan-tomorrow-1784375481</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத்
திருவிழா நாளை(19.07.2026) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத்
திருவிழா நாளை(19.07.2026) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
தொடர்ந்து இடம்பெறும் திருவிழாக் காலத்தில் அடுத்த மாதம் 10ஆம் திகதி
திங்கட்கிழமை சப்பறத் திருவிழாவும், 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
பஞ்சரதப்பவனியும், 12ஆம் திகதி புதன்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தத்
திருவிழாவும் இடம்பெறும்.</p><p></p><h2>வருடாந்தத் திருவிழா</h2><p>இதனையடுத்து 13ஆம் திகதி வியாழக்கிழமை மாம்பழத் திருவிழாவும், 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை
கப்பல் திருவிழாவும், 15ஆம் திகதி சனிக்கிழமை பூங்காவனத் திருவிழாவும்
இடம்பெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7887c6a-768a-4497-a788-aace5490412b/26-6a5b6974851a0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T13:21:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் வெளியிடும் தகவல்களுக்குக் கட்டணம் அறவிட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/charge-a-fee-for-information-released-by-trump-1784380002"></link>
            <id>https://tamilwin.com/article/charge-a-fee-for-information-released-by-trump-1784380002</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக நிறுவனமான &#039;ட்ரம்ப் மீடியா
அண்ட் டெக்னொலஜி குரூப்&#039;, தனது &#039;ட்ரூத் சோசியல்&#039; தளத்தில் ஜனாதிபதி வெளியிடும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக நிறுவனமான 'ட்ரம்ப் மீடியா
அண்ட் டெக்னொலஜி குரூப்', தனது 'ட்ரூத் சோசியல்' தளத்தில் ஜனாதிபதி வெளியிடும்
பதிவுகளை மற்றவர்களுக்கு முன்னதாகவே உடனுக்குடன் வழங்குவதற்காக மாதம் $100,000
நிதியைக் கட்டணமாக அறவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

ஜனாதிபதி ஒருவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் உலகப் பொருளாதாரச் சந்தையில்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், நிதி வர்த்தக நிறுவனங்கள்
மற்றும் வங்கிகளைக் குறிவைத்து இந்தத் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p>

மேலும், மூன்று ஆண்டுத் திட்டமாகப் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு மாதக்
கட்டணமாக $60,000 வசூலிப்பது குறித்தும் பேசப்பட்டு வருகிறது.</p><p></p><h2>வணிகத் திட்டம்</h2><p>
</p><p>
ட்ரம்பின் இந்த வணிகத் திட்டம் அமெரிக்காவில் பெரும் தார்மீக மற்றும் சட்ட
ரீதியான விவாதங்களை எழுப்பியுள்ளது.</p><p>

ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தி ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் இலாபம் ஈட்ட
முயல்வதாவும், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மைக்கு இது முட்டுக்கட்டையாக
அமையும் என்றும் அரசியல் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடுமையாகக் குற்றம்
சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/612e5226-93ed-4410-825a-ffb11a6c9d66/26-6a5b7c3a1b901.webp' /></p><p>
</p><p>
இது ஒரு அப்பட்டமான ஊழல் நடவடிக்கை என்றும், ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வத்
தகவல்களைப் பணத்திற்காக முன்கூட்டியே விற்பது அமெரிக்க ஜனநாயகத்திற்கு
அச்சுறுத்தல் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><h2>ஈரான் மீதான தாக்குதல்&nbsp;</h2><p>

கடந்த காலங்களில் ஈரான் மீதான தாக்குதல் அறிவிப்புகள் மற்றும் வர்த்தகக்
கொள்கை மாற்றங்கள் போன்ற முக்கிய விவகாரங்களை ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல்
தளத்தின் மூலமே அறிவித்திருந்தார். இதனால் உலக எரிசக்தி மற்றும் நிதிச்
சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ce6ef11-2a3b-4868-bd48-5effb0c54984/26-6a5b7c3ac0870.webp' /></p><p>
</p><p>
தற்போது கொண்டுவரப்படவுள்ள இந்த புதிய கட்டண சேவை, தங்களுக்குப் பிடித்தமான
பணக்கார வர்த்தகர்களை மேலும் பணக்காரர்களாக்கவும், ஜனாதிபதி ட்ரம்ப்
குடும்பத்தினர் கல்லா கட்டவுமே உதவும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி
எம்பிக்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T13:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள மண்டை ஒடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/third-phase-of-the-chemmani-mass-grave-excavation-1784377828"></link>
            <id>https://tamilwin.com/article/third-phase-of-the-chemmani-mass-grave-excavation-1784377828</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(18) சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(18) சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 36ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக
ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவரின் என்புக் கூடு உள்ளடங்கலாக 06
என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>செம்மணி மனித புதைகுழி</h2><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 05 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018a4b55-c33b-4c64-9e8b-261f9e4980da/26-6a5b75addec51.webp' /></p><p>
</p><p>
வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்று
பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தம்
செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில்
,437 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 428 என்பு கூடுகள்
முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T12:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதா அரசு..! முஜிபுர் ரஹ்மான் எம்.பி கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-blownup-election-promise-mujibur-rahman-1784373766"></link>
            <id>https://tamilwin.com/article/government-blownup-election-promise-mujibur-rahman-1784373766</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசு, தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டுச் செயற்படுகின்றது என ஐக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசு, தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டுச் செயற்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> 

அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>புதிய அரசமைப்பை உருவாக்குதல்</h2><p>அந்த அறிக்கையில்,
</p><p>
 எதிர்க்கட்சியாக இருந்தபோது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் புதிய அரசமைப்பை உருவாக்குதல் ஆகியவையே தேசிய மக்கள் சக்தியின் பிரதான நிலைப்பாடுகளாக இருந்தன. இது குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் அந்தக் கட்சியினர் முன்வைத்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f363e938-447c-49af-bcfb-58dcb62d462d/26-6a5b671f99dcb.webp' /></p><p> </p><p>

இருப்பினும், இன்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் அல்லது புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து அரசு எந்தவிதக் கருத்துகளையும் முன்வைப்பதில்லை. இது தொடர்பான கலந்துரையாடல்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. </p><p>

அன்று நடைமுறையிலிருந்த அரசமைப்பைக் கடுமையாக விமர்சித்த தேசிய மக்கள் சக்தியினர், இன்று அதே அரசமைப்பையே பின்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர். </p><p>

அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான அரசியல் மறுசீரமைப்பை முற்றிலும் கைவிட்டுள்ளதுடன், அதன் செயற்பாடுகளில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T12:28:49+00:00</updated>
        </entry>
    </feed>
