<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-15T21:30:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட மூவர் அதிரடிப்படையினரால் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-arrested-in-trinco-swords-and-ice-1784148632"></link>
            <id>https://tamilwin.com/article/3-arrested-in-trinco-swords-and-ice-1784148632</id>
            <summary type="text">திருகோணமலை- உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் &#039;ஐஸ்&#039;
போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான &#039;கெம்பா&#039; உட்பட மூன்று
சந்தேக நபர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் 'ஐஸ்'
போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான 'கெம்பா' உட்பட மூன்று
சந்தேக நபர்களை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

உப்புவெளி மின்சார நிலைய வீதியில் நேற்றுமுன்தினம்(14.7.2026)மேற்கொள்ளப்பட்ட விசேட
சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஆபத்தான ஆயுதங்களும் கணிசமான அளவு
போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>இதன்போது, முக்கிய சந்தேக நபரிடமிருந்து 16 கிராம் 'ஐஸ்'
போதைப்பொருள் மற்றும் 2 கூர்மையான வாள்களும்
இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும்,
மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும்
கைப்பற்றப்பட்டன.</p><p>
கைது செய்யப்பட்ட குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத
செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e70dd99-df46-45d2-84dd-228c3a4e07b4/26-6a57f29abf23a.webp' /></p><p>
</p><p>
இந்தக் குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அத்துடன், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தமை மற்றும்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான்
நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட
வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T21:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகளின் கால பிக்குகள் குறித்து பலருக்கும் தெரியாத உண்மைகள் - அம்பிட்டிய தேரர் பற்றிய ஆதாரமும் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-final-war-monks-real-faces-1784147164"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-final-war-monks-real-faces-1784147164</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.&nbsp;</p><p>அவர் அண்மையில், "விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா?
</p><p>
இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியிருந்தார்.&nbsp;</p><p>

இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் ஈழத்தமிழர்கள் மத்தியில், கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>அதேநேரம்,&nbsp;மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் தமிழர்கள் தொடர்பில் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை முன்வைத்தவர் தான்.&nbsp;</p><p>தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் இவர் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இவை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qGn__FhhhGc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியன்மார் உள்நாட்டுப் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் சம்மதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/myanmar-civil-war-both-sides-agree-to-peace-talks-1784147186"></link>
            <id>https://tamilwin.com/article/myanmar-civil-war-both-sides-agree-to-peace-talks-1784147186</id>
            <summary type="text">மியன்மாரில் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்
கொண்டு வர, அங்குள்ள இராணுவத் தரப்பும் கிளர்ச்சியாளர் குழுக்களும்
பேச்சுவார்த்தை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியன்மாரில் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்
கொண்டு வர, அங்குள்ள இராணுவத் தரப்பும் கிளர்ச்சியாளர் குழுக்களும்
பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தாய்லாந்து வெளியுறவுத்
துறை அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த மோதலுக்கு இராணுவ ரீதியாக எந்தத் தீர்வும் காண முடியாது என்பதை இரு
தரப்பினருமே ஒப்புக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சிக்குப் பிறகு, அங்கு
ஏற்பட்டுள்ள வன்முறைகளில் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்
உயிரிழந்துள்ளனர், இலட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து
இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

இந்த நிலையில், தேக்கமடைந்துள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும்
தொடங்குவதற்குத் தேவையான உதவிகளையும், அதற்கான இடத்தையும் வழங்கத் தயாராக
இருப்பதாகத் தாய்லாந்து அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c92d53-a5ea-4a26-a6bb-acb1e31f28fb/26-6a57ecf4dbebf.webp' /></p><p>
</p><p>
இது மியன்மாரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆசியான் கூட்டமைப்பு
எடுத்து வரும் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக்
கருதப்படுகிறது.
</p><p>
ஆசியான் அமைப்பின் சிறப்புத் தூதரான பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் மரியா
தெரசா லாசரோ மற்றும் தாய்லாந்து அதிகாரிகள், மியன்மார் இராணுவ ஆதரவு பெற்ற
தேசிய ஒற்றுமை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன்&nbsp; பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தை நோக்கி அடுத்தடுத்து ஏவப்பட்ட 21 ட்ரோன்கள்.. இலக்கு வைக்கப்பட்ட அதிமுக்கிய தளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuwait-intercepted-4-missiles-21-drones-from-iran-1784147022"></link>
            <id>https://tamilwin.com/article/kuwait-intercepted-4-missiles-21-drones-from-iran-1784147022</id>
            <summary type="text">குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து&amp;nbsp;21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.&amp;nbsp;4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து&nbsp;21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.&nbsp;</p><p>4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை தங்களது ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தற்போது அறிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிமுக்கிய உள்கட்டமைப்புகள்..&nbsp;&nbsp;</h2><p>
இத்தாக்குதல்கள் தொடர்பாக அவர் மேலும், "ஈரானின் இந்த வான்வழித் தாக்குதல்கள் குவைத்தின் முக்கிய மற்றும் அதிமுக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194187b9-4156-4d92-8e3b-55987342736f/26-6a57ec50946fe.webp' /></p><p> இதனால் சில பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் முன்னதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா: ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-infections-surpass-2000-1784142692"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-infections-surpass-2000-1784142692</id>
            <summary type="text">மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ்
பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு பதிவான ஒட்டுமொத்த எபோலா
பாதிப்புகளின் எண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ்
பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு பதிவான ஒட்டுமொத்த எபோலா
பாதிப்புகளின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
அதே நேரத்தில், தங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படாததை எதிர்த்து அந்த நாட்டின்
சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு
தடுப்புப் பணிகள் பெரும் தேக்கத்தைச் சந்தித்துள்ளன.
</p><p>
கொங்கோவின் இத்துரி (Ituri) மாகாணத்தில் பரவி வரும் எபோலா தொற்றால் இதுவரை
2,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 754 ஆக அதிகரித்துள்ளது.</p><p></p><h2>உயிரிழப்புகள்</h2><p>
</p><p>
எனினும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எண்ணிக்கையை விட உண்மையான
உயிரிழப்புகள் 2 முதல் 4 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார
அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
</p><p>
வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவி வரும் மூன்றாவது பெரிய எபோலா அலை இதுவென
எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11282cfd-b43e-4ccc-802f-a00759697265/26-6a57db66270ca.webp' /></p><p>
</p><p>
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தங்களுக்குச் சேர வேண்டிய ஊதியம் பல மாதங்களாக
வழங்கப்படவில்லை எனக் கூறி இத்துரி மாகாணத்தின் புனியா (Bunia) மற்றும்
ரவாம்பரா (Rwampara) பொது மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p>

தொற்று பரவத் தொடங்கியது முதல் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், போதிய
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் உழைத்த தங்களுக்கு எவ்வித ஊதியமும்
வழங்கப்படவில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் சரமாரி தாக்குதல்கள்.. அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-launches-fresh-strikes-on-iran-1784146283"></link>
            <id>https://tamilwin.com/article/us-launches-fresh-strikes-on-iran-1784146283</id>
            <summary type="text">ஈரான் மீதான தனது இரண்டாவது அலை தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.ஹோர்முஸ் நீரிணை&amp;nbsp;  இதுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான தனது இரண்டாவது அலை தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p> </p><p> இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தனது அதிகாரப்பூர்வ X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At 3 p.m. ET, U.S. forces launched operations for a second wave of strikes today against Iran. The strikes are targeting Iranian military capabilities used to threaten vessels freely transiting through the Strait of Hormuz, an international waterway vital to global commerce. The…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2077471657456025781?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அதன்படி, "சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சுதந்திரமாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் பயன்படுத்தி வரும் இராணுவக் கட்டமைப்புகள் மற்றும் இலக்குகளைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T20:11:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ.. அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-fire-warning-for-7-districts-in-usa-1784145951"></link>
            <id>https://tamilwin.com/article/wild-fire-warning-for-7-districts-in-usa-1784145951</id>
            <summary type="text">அமெரிக்காவில் ஏழு மாகாணங்களில் காட்டுத்தீப் புகை அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&amp;nbsp;க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் ஏழு மாகாணங்களில் காட்டுத்தீப் புகை அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><h2>&nbsp;காற்றின் தர எச்சரிக்கைகள்</h2><p>
</p><p>
கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் காற்றின் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/472255dc-2991-4d26-9810-ab9605ad413d/26-6a57e8218feda.webp' /></p><p>
</p><p>

காட்டுத்தீயினால் ஏற்படும் புகையில் 'PM2.5' என்று அழைக்கப்படும் மிக நுண்ணிய துகள்கள் (fine particulate matter) உள்ளன என்றும், நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மங்களின் மிகச்சிறிய துகள்களைக் கொண்ட இவை மனித திசுக்களுக்குள் ஊடுருவி சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p>


மேலும், சில பகுதிகளில் காற்றின் தரம், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆரோக்கியமற்றது என்பதிலிருந்து மிகவும் ஆரோக்கியமற்றது என்பது வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் எத்தனோல் கலந்த பெற்றோலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorists-unhappy-ethanol-blended-petrol-in-india-1784145620"></link>
            <id>https://tamilwin.com/article/motorists-unhappy-ethanol-blended-petrol-in-india-1784145620</id>
            <summary type="text">இந்தியாவில் பெற்றோலுடன் 20 சதவீத எத்தனோல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்
E20 பெற்றோல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மைலேஜ் குறைவதாகவும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் பெற்றோலுடன் 20 சதவீத எத்தனோல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்
E20 பெற்றோல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மைலேஜ் குறைவதாகவும்
வாகனங்களின் என்ஜின்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி வாகன சாரதிகள் பெரும்
அதிருப்தி அடைந்துள்ளனர்.
</p><p>
மத்திய அரசின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ், பெற்றோலில் 20 சதவீத
எத்தனோல் கலக்கும் இலக்கு 2030ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டிற்குள்
முன்கூட்டியே மாற்றப்பட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள்
நிலையங்களிலும் E20 பெட்ரோல் மட்டுமே தற்போது விநியோகிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஏற்பட்டுள்ள பிரச்சினை&nbsp;</h2><p>
</p><p>
ஆனால், இந்த விரைவான மாற்றம் வாகன சாரதிகளுக்குப் பெரும் சிரமத்தை
ஏற்படுத்தியுள்ளது.

E20 பெற்றோல் பயன்படுத்திய பிறகு தங்களது கார்களின் மைலேஜ் 10 சதவீதத்திற்கும்
மேல் குறைந்துள்ளதாக வாகன உரிமையாளர்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530c76a7-a976-4645-b59d-078afdc8d27e/26-6a57e6d705349.webp' /></p><p>

மேலும், வாகனத்தின் வேகம் குறைவதோடு, மேடான பகுதிகளில் பயணிக்கும் போதும் ஏசி
(AC) இயங்கும் போதும் காரின் இயக்கம் மந்தமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.</p><p>

எத்தனோல் சாதாரண பெற்றோலை விடக் குறைந்த ஆற்றலையே உருவாக்குகிறது என்பதால்
மைலேஜ் குறைவது தவிர்க்க முடியாதது என்பதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.</p><p>

அதோடு, 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் E20 எரிபொருளுக்கு
ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாலும், அதற்கு முன்பு வாங்கிய
இலட்சக்கணக்கான பழைய வாகனங்களின் என்ஜின்களில் உள்ள இறப்பர் குழாய்கள்,
கேஸ்கெட்டுகள் மற்றும் சீல் ஆகியவற்றைப் பெற்றோலுடன் கலந்திருக்கும் எத்தனோல்
அரித்துச் சிதைத்துவிடும் என்ற அச்சமும் தற்போது நிலவுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனைவி - பிள்ளைகள் எங்கே! அரசியல்வாதிகள் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sursh-sallay-cid-investigation-crime-politicians-1784141399"></link>
            <id>https://tamilwin.com/article/sursh-sallay-cid-investigation-crime-politicians-1784141399</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவிடம் சிஐடி முன்னெடுக்கும் விசாரணைகள் தீவிரமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவிடம் சிஐடி முன்னெடுக்கும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.&nbsp;</p><p>அவர், சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது அண்மையில் அவரின் குடும்பத்தினர் அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.&nbsp;</p><p>&nbsp;சுரேஷ் சலே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நிலையில், அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகார்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் மனைவி ஊடக பரப்பில் கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்.&nbsp;</p><p>சலேவின் தாய் மற்றும் மகன் உட்பட அவரின் குடும்பத்தினர், ஊடகங்களுக்கு முன்னிலையில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்நதனர்.&nbsp;</p><p>இந்நிலையில், சமீப காலமாக அவர்களில் யாரும் பெரிதாக எவ்வித வெளிப்பாடுகளையும் முன்வைத்து வருவதில்லை. அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்னும் கேள்வி எழும் அளவுக்கு அமைதியாக உள்ளனர்.&nbsp;</p><p>இதற்கான காரணம் தான் என்ன? இது தொடர்பில் பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjdt-johuV8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T19:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஜனாதிபதி யார்! இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய புதிய கூட்டணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351"></link>
            <id>https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.</p><p>இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தேர்தல் 2029 இல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தலை முன்னெடுத்து வருகின்றன.</p><p>பல்வேறு தரப்புக்கள் தங்களது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உதாரணமாக நாமல் ராஜபக்ச மற்றும் திலித் ஜயவீர போன்றோர் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>எதிர்வரும்&nbsp;ஜனாதிபதித்தேர்தலிலே பொது வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர போன்றோர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை திர்மானிப்பதில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் ஆதரவு முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b746TCSqv10" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:34:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லித்துவேனியா மீதான தாக்குதல் திட்டம் வெறும் கதை: குற்றச்சாட்டுகளை மறுத்தது ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-denies-lithuania-attack-plan-just-story-1784138996"></link>
            <id>https://tamilwin.com/article/russia-denies-lithuania-attack-plan-just-story-1784138996</id>
            <summary type="text">தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா
திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி
மாளிகையான கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா
திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி
மாளிகையான கிரெம்ளின் முற்றிலுமாக மறுத்துள்ளது.
</p><p>
ரஷ்யாவிற்கு எதிராக தங்களை இராணுவமயமாக்கிக் கொள்வதற்காகவே லித்துவேனியா
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக ரஷ்யா சாடியுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
முன்னதாகப் பேட்டியளித்த லித்துவேனியா ஜனாதிபதி கிட்டானஸ் நௌசேடா, தங்கள்
நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத்
தங்களுக்கு உளவுத்துறைத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் ஆற்றல் மற்றும் போக்குவரத்து
மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33976a57-9197-4e84-92ed-6ebde8a6f212/26-6a57d0bad9229.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின்
செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "மக்களை மூளைச்சலவை செய்து, நாட்டை
மேலும் இராணுவமயமாக்குவதற்காகப் பரப்பப்படும் அச்சுறுத்தல் கதைகளின் சமீபத்திய
வடிவமே இதுவாகும்.</p><p>

இந்த நோக்கத்தை அடைவதற்காக, அவர்கள் மற்றொரு நாட்டை - இந்தச் சூழலில் எங்களது
நாட்டை - எதிரியாகக் காட்ட வேண்டியுள்ளது.
</p><p>
இந்த சாக்கைப் பயன்படுத்தி பால்டிக் நாடுகளில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ
உள்கட்டமைப்புகளை அவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றனர்” என்று
குற்றம் சாட்டினார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடான் உள்நாட்டுப் போர்: கம் அரபிக் பசை வர்த்தகம் மூலம் நிதியுதவி - ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudanese-civil-war-funde-gum-arabic-trade-1784137897"></link>
            <id>https://tamilwin.com/article/sudanese-civil-war-funde-gum-arabic-trade-1784137897</id>
            <summary type="text">சூடானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போருக்கு,
அங்கு உலகளவில் நடைபெறும் &#039;கம் அரபிக்&#039; எனப்படும் இயற்கைப் பசை வர்த்தகம் ஒரு
மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போருக்கு,
அங்கு உலகளவில் நடைபெறும் 'கம் அரபிக்' எனப்படும் இயற்கைப் பசை வர்த்தகம் ஒரு
முக்கிய நிதியாதாரமாக விளங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
</p><p>
உலகளாவிய சந்தையில் குளிர்பானங்கள், மருந்துப் பொருட்கள், சொக்லேட்டுகள்
மற்றும் அழகுசாதனப் பொருட்களில் நிலைநிறுத்தியாக மற்றும் அடர்த்தியாக்கியாக
இம்மூலப்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
உலகளவில் தேவைப்படும் இந்த கம் அரபிக் பசையின் ஒட்டுமொத்த உற்பத்தியில்
சுமார் 80 விழுக்காட்டை சூடான் நாடே பூர்த்தி செய்து வருகிறது.
</p><p>
சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவப் பிரிவான விரைவு ஆதரவுப் படைக்கும்
(RSF) இடையே தொடரும் இந்த மோதலில், இரு தரப்புமே இந்த வர்த்தகத்தைக்
கட்டுப்படுத்தி தங்களின் இராணுவச் செயல்பாடுகளுக்கான நிதியைப் பெற்று
வருகின்றன.</p><p></p><h2>சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி</h2><p>
</p><p>
குறிப்பாக, RSF அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து
பெருமளவிலான கம் அரபிக் அண்டை நாடுகளுக்குக் கடத்தப்பட்டு, பின்னர்
அங்கிருந்து அந்த நாடுகளின் உள்ளூர் தயாரிப்புகள் போல போலியாக சர்வதேச
சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5039149c-5a9a-4c03-9574-ee4db188a64b/26-6a57cbf25cc4f.webp' /></p><p>
</p><p>
இதனால் இந்த மூலப்பொருட்களின் அசல் உற்பத்தி நாட்டைத் துல்லியமாகக் கண்டறிவது
உலகளாவிய நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>

இந்தப் போர்ச் சூழலால், கம் அரபிக் உற்பத்தி மற்றும் சேகரிப்பில் ஈடுபடும்
உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையான பாதுகாப்பு
அச்சுறுத்தல்களையும், கொள்ளைச் சம்பவங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
இது குறித்துக் கவலை தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர்
துர்க், சர்வதேச நிறுவனங்கள் மோதலால் பாதிக்கப்பட்ட விநியோகச்
சங்கிலிகளிலிருந்து தங்களது மூலப்பொருட்களைப் பெறும்போது கூடுதல் பொறுப்புடன்
செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p>

நிறுவனங்கள் தங்களின் வர்த்தக நடைமுறைகள் மூலம் மறைமுகமாக இந்த வன்முறைக்கும்
மனித உரிமை மீறல்களுக்கும் நிதியுதவி அளிக்கவில்லை என்பதை உறுதி செய்ய முறையான
சரிபார்ப்புப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பேசும் கட்சிகளின் புதிய கூட்டணி ஒரு தரகு கூட்டு! இளங்குமரன் எம்.பி. விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-alliance-tamil-parties-ilangumaran-mp-1784132821"></link>
            <id>https://tamilwin.com/article/new-alliance-tamil-parties-ilangumaran-mp-1784132821</id>
            <summary type="text">தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட
முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறும் தரகு வேலைகளே என்று தேசிய மக்கள் சக்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட
முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறும் தரகு வேலைகளே என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் க.இளங்குமரன் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், "தமிழ் பேசும் கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிலர் கொழும்பில்
ஒன்றுகூடியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;மக்களின் தெளிவான சிந்தனை</h2><p> </p><p>இவர்கள் ஏன் தங்களின் சொந்தத்தாயகமான தமிழ்ப்
பிரதேசங்களில் கூட்டத்தை நடத்தவில்லை? இதற்கு முக்கிய காரணம், இவர்கள்
கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253ba125-4c9c-4e51-bbd4-d45f33e56a77/26-6a57bec809508.webp' /></p><p> </p><p>இவர்களின் பிள்ளைகள்
தென்பகுதியில் திருமணம் முடித்தவர்கள், கொழும்பிலேயே தங்கியிருப்பவர்கள்.

தென்பகுதியில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, அதன்மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றார்கள். </p><p>அதற்கு, தமிழ் மக்களின்
பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தரகு வேலைகளைப் பார்க்கின்றார்கள்.
மக்கள் இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்கின்றார்கள்.</p><p> எனவே, இது மக்களுக்கான
கூட்டம் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகக் கூடியவர்களின் கூட்டம்.
</p><p>
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு, வடக்கு மாகாணத்தில் ஒரு
கூட்டத்தைக் கூட நடத்தத் துணிவற்ற இவர்கள், கொழும்பில் உள்ள ஹோட்டல்களில்
சென்று கூடியிருப்பது வெட்கக்கேடான விடயமாகும்" என்று அவர் சாடினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:09:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது பகல் நேரத்திலும் அமெரிக்கா குண்டுமழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bombs-attack-on-iran-even-during-the-day-1784134030"></link>
            <id>https://tamilwin.com/article/us-bombs-attack-on-iran-even-during-the-day-1784134030</id>
            <summary type="text">தென் ஈரானில் உள்ள கடற்கரை இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு,
அமெரிக்கப் படைகள் பகல் நேரத்திலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் ஈரானில் உள்ள கடற்கரை இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு,
அமெரிக்கப் படைகள் பகல் நேரத்திலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அலுவலகம் அறிவித்துள்ளது.</p><p>90 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில்
அமைந்துள்ள மிக முக்கியமான கிரேட்டர் துன்ப் தீவில் உள்ள ஈரானின் ஏவுகணைத்
தளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா
தெரிவித்துள்ளது.</p><p>

பொதுவாக இரவு நேரங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, தற்போது
தனது தாக்குதல் வேகத்தை அதிகரித்து பகல் நேரத்திலும் குண்டுமழையைப் பொழிந்து
வருகிறது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
மறுபுறம், தென் ஈரானில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில்
30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 260-க்கும்
அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் முக்கியக்
குடிமைசார் உள்கட்டமைப்புகளை அடுத்த வாரத்தில் குறிவைக்கத் திட்டமிட்டுள்ளதாக
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a69497a-f362-49c1-8068-2c73869ebc78/26-6a57bd1863fd8.webp' /></p><p>
</p><p>
இது உலக அளவில் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்ற பெரும்
கவலையை உலக நாடுகளிடையே எழுப்பியுள்ளது.
</p><p>
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றிற்கு
இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை: ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-plans-for-talks-with-us-right-now-iran-1784134025"></link>
            <id>https://tamilwin.com/article/no-plans-for-talks-with-us-right-now-iran-1784134025</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவுடன் தற்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது நாட்டைப் பாதுகாப்பதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவுடன் தற்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>தங்களது நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமே தற்போதைய கவனம் முழுமையாக உள்ளது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார். </p><p>
அமெரிக்கா தனது சர்வதேச உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்றினால் மட்டுமே, ஈரானும் தனது சர்வதேச கடமைகளை மதித்து நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c2fee55-52ce-4834-b994-f70c63eda951/26-6a57b98e2fd8d.webp' /></p><p>வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி இது குறித்து மேலும் கூறியதாவது:
அமெரிக்கா தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை மட்டுமே எங்களது கடமைகளும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p> தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தங்களுக்குரிய பகுதியை நிறைவேற்ற அமெரிக்கா தவறியதை அடுத்து, அந்த ஒப்பந்தத்தின் கீழான கடமைகளை ஈரானும் கைவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அவர்கள் தங்களது கடமைகளை மீறிய பின்னர், அதற்கு ஈடாக நாங்கள் எந்தெந்தப் பகுதிகளில் எங்களது கடமைகளைத் தவிர்க்க வேண்டுமோ, அங்கெல்லாம் அவற்றைச் செயல்படுத்துவதை நிறுத்திக்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
</p><p>இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையை அமெரிக்கா தொடர்ந்து மீறி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>
தங்களது எண்ணெய் ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்தது மற்றும் புதிய தடைகளை விதித்தது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் மூலம் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T16:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் அரசியல் கைதிகளுக்கான மரணதண்டனை நிறைவேற்றத்தில் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-increase-in-executions-prisoners-in-iran-1784134631"></link>
            <id>https://tamilwin.com/article/massive-increase-in-executions-prisoners-in-iran-1784134631</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>நோர்வேயின் ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'ஈரான் மனித உரிமைகள்' என்ற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தரவுகளின்படி, ஈரான் அரசு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 47 அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f4a93c1-35d2-472e-8e72-b834d5d0c8d8/26-6a57bbe958215.webp' /></p><p> </p><p>
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 16 ஆக மட்டுமே இருந்த நிலையில், தற்போது இது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>கடந்த ஆண்டின் இறுதியில் ஈரான் முழுவதும் வெடித்த பரவலான போராட்டங்களின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்கள் மீது வன்முறையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டாம் என ஈரானியத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். </p><p>
அத்துடன், போராட்டக்காரர்களின் மீட்புக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.</p><p>எனினும், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கு நீடித்ததாலும், அதன் விளைவாக உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் மோசமடைந்ததாலும், வெள்ளை மாளிகையின் கடுமையான தொனி காலப்போக்கில் மென்மையடைந்தது. </p><p>
இதன் காரணமாக, ஈரான் அதிருப்தியாளர்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறையத் தொடங்கியது. இத்தகைய உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலேயே, ஈரானில் மரணதண்டனைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T16:57:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர சிறைக்குச் சென்றாலும் பெரும் ஆபத்து - யாரும் அறியாத திகில் நிமிடங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-new-updates-1784128010"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-new-updates-1784128010</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு &#039;தடைக்கல்லாக&#039; (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு 'தடைக்கல்லாக' (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாக பிரித்தானியாவைச் சேர்ந்த ராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். </p><p>

 பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து இவை இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வது பழைய அரசியல் சக்திகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என அவர் கூறினார்.</p><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்கு முதன்மையான காரணமாக, சிறைக்குள் தமது 'குட்டி ராஜ்ஜியத்தை' நடத்தி வந்த கும்பலுக்கும், அவர்களை கண்காணித்த உளவுப் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என்று குறிப்பிட்டார். </p><p>

சிறை வன்முறையைத் தொடர்ந்து நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>


அரசியல் ரீதியாக பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிக்கின்றனர்.
</p><p>
ஜூலை மாதத்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான வழக்குகள் வரவுள்ள நிலையில், சிறைக் கலவரம் இச்செய்திகளை மழுங்கடிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
</p><p>
இந்த வன்முறையானது நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, முதலீடுகளைத் தடுத்து, தற்போதைய அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் நோக்கம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டார். </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/to1YQFyZKn8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T16:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கு மூதவைப் பிரதிநிதிகள் தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/election-senate-representatives-south-eastern-uni-1784131986"></link>
            <id>https://tamilwin.com/article/election-senate-representatives-south-eastern-uni-1784131986</id>
            <summary type="text">தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவை அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவை அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல் பேராசிரியரும் துறைத்
தலைவருமான பேராசிரியர் ஏ.எல்.எம். றியால் மற்றும் ஆங்கில மொழிக்
கற்பித்தல்&nbsp; துறையின் பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
பல்கலைக்கழகத்தின் உயரிய தீர்மானங்களை எடுக்கும் நிர்வாக அமைப்பான பேரவையில்
மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இவ்விரு சிரேஷ்ட
கல்வியாளர்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பது, அவர்களின் கல்விசார் ஆளுமை,
நிர்வாக அனுபவம் மற்றும் பல்கலைக்கழக சமூகத்திடம் பெற்றுள்ள உயர்ந்த
நம்பிக்கைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக கல்வி வட்டாரங்களில்
கருதப்படுகிறது.
</p><p>
பேராசிரியர் ஏ.எல்.எம். றியால் கல்வி, ஆராய்ச்சி, நிர்வாகம்
மற்றும் பல்கலைக்கழக ஆளுமைத்துவம் ஆகிய துறைகளில் நீண்டகால அனுபவம் பெற்ற
கல்வியாளராகத் திகழ்கிறார்.</p><h2>பிரதிநிதிகள் தெரிவு</h2><p> </p><p>சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல்
பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி வரும் அவர், கல்வி மற்றும்
நிர்வாகத் துறைகளில் பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்துள்ளார்.</p><p>அதேவேளை, பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் அவர்கள் ஆங்கில மொழிக்
கற்பித்தல் துறையில் நீண்டகால கல்வி, ஆய்வு மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட
கல்வியாளராகப் பரவலாக அறியப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a88daf0a-0044-4df2-9976-d9239959c97d/26-6a57b336ad57d.webp' /></p><p> </p><p>தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி
வளர்ச்சிக்கும், தரமான ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்துவதற்கும் அவர்
ஆற்றிவரும் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.</p><p>இவர்களின் கல்விசார் அனுபவமும் தொலைநோக்குப் பார்வையும், பல்கலைக்கழகத்தின்
எதிர்கால கல்வி, ஆராய்ச்சி, நிர்வாக மற்றும் கொள்கைத் தீர்மானங்களை மேலும்
வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என பல்கலைக்கழக சமூகத்தினர்
நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T16:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன..! பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-happened-in-negombo-prison-1784130764"></link>
            <id>https://tamilwin.com/article/what-happened-in-negombo-prison-1784130764</id>
            <summary type="text">1983 ஜூலை கலவரம் என்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, அது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை என்று மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஜூலை கலவரம் என்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, அது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை என்று மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் வரலாற்று ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். </p><p>

ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் 'களம்' நிகழ்ச்சியில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். </p><p>

வெலிக்கடை மற்றும் நீர்கொழும்பு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்ற தமிழ் அரசியல் கைதிகளின் கண்கள் தோண்டப்பட்டும் நாக்குகள் வெட்டப்பட்டு கொலை செய்யபட்டுள்ளனர்.
</p><p>
குட்டிமணியின் நாக்கை வெட்டிய ஒரு சகோதர இனத்தை சேர்த்த ஒரு நபர் அதிலுள்ள இரத்தத்தை குடித்து விட்டு நான் ஒரு விடுதலை புலிகளின் இரத்தைதை குடித்து விட்டேன் என்று கத்தியுள்ளார்.
</p><p>
அன்றைய அரசு இந்த சிறை படுகொலைக்கு அனுமதித்தது என்பதை அப்போதைய அமைச்சர் ஒருவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p> 

எனவே அதனை சமீபத்தில் நடந்த நீர்கொழும்பு சிறை கலவரத்துடன் ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
</p><p> 
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற தாக்குதல், கலவரத்தின் தொடக்கப் புள்ளியாக எவ்வாறு அமைந்தது என்பதையும் விளக்கினார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WnyVEz62VZo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T15:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/charge-sheet-filed-against-mervyn-silva-1784127386"></link>
            <id>https://tamilwin.com/article/charge-sheet-filed-against-mervyn-silva-1784127386</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்&nbsp;&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மோசடி</h2><p>கிரிபத்கொட பகுதியில் அரச நிலத்தை மோசடியாக விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோதமாக ரூ. 800 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளில் மேர்வின் சில்வா சமீபகாலமாகச் சிக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75d13a2-4165-4d1f-86c6-9f51a2e01c65/26-6a57a889975a7.webp' /></p><p> </p><p>இந்த வழக்குகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T15:35:13+00:00</updated>
        </entry>
    </feed>
