<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-10T23:40:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 27 மில்லியன் ரூபா செலவில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foundation-new-classroom-in-vavuniya-27-million-1783723925"></link>
            <id>https://tamilwin.com/article/foundation-new-classroom-in-vavuniya-27-million-1783723925</id>
            <summary type="text">வட மாகாண பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால்
நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா - ஓமந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால்
நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா - ஓமந்தை மத்திய கல்லுரியின் புதிய மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும்
விழா நேற்று(10.07.2026) நடைபெற்றுள்ளது.
</p><p>
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும்
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் ஆகியோரின் தலைமையில்
இந்த வேலைத்திட்டம் நடைபெற்றுள்ளது.</p><p></p><h2>திறைசேரி அபிவிருத்தி நிதியம்</h2><p>
</p><p>
மாகாண திறைசேரி அபிவிருத்தி நிதியத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் செலவில்
நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மாடிக் கட்டிடத்திற்காக முதற்கட்டமாக 27 மில்லியன்
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வருட காலப்பகுதிக்குள்
இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/520d9beb-3b88-4a61-9141-8997dbbbace7/26-6a517b40d7b12.webp' /></p><p>ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்தில் சுமார் 300 மாணவர்கள் கல்வி கற்று
வருவதுடன், அவர்களுக்காக ஆய்வு கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்
வகுப்பறைகள் இதில் நிர்மாணிக்கப்படவுள்ளன.</p><p>இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றப்
பிரதிநிதிகள், அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள்,
பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T23:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோரை அகற்றிய பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-remove-beggars-who-harass-tourists-jaffna-1783722694"></link>
            <id>https://tamilwin.com/article/police-remove-beggars-who-harass-tourists-jaffna-1783722694</id>
            <summary type="text">யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்
விதமாகவும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30
இற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்
விதமாகவும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30
இற்கும் அதிகமான யாசகர்கள் யாழ் பொலிசாரின் பங்களிப்புடன்
வெளியேற்றபட்டுள்ளதாக&nbsp; வட மாகாண சுற்றுலாத்துறை தலைவர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இந்த நடவடிக்கையானது நேற்றைய தினம்(10.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுச்சூழலை சீர்செய்தல்</h2><p>&nbsp;இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,</p><p> சுற்றுச்சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து
நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய
பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/981fba34-7807-48a3-af8e-0fe133243722/26-6a51768528fd4.webp' /></p><p>அத்துடன் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும்
உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற
போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம்
கோரிக்கை பல தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
</p><p>
இந்த நிலையில் குறித்த நடவடிக்கையை யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித
செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டு செல்லப்பட்டது.</p><p></p><h2>யாசகம் பெறுவோர்</h2><p>அத்துடன் யாழ் மாநகரின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம்.

அதனடிப்படையில் யாழ் மாநகரின் ஒத்துழைப்புடன் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
பாலித செனவிரத்னவின் வழிநடத்தலில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>
இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும்
வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தோர் பொலிசாரால் கைதுசெய்யப்படு யாழ்
பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின் குறித்த
நபர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4789d24-01d3-48d6-9828-2bd7380ad78c/26-6a51768477cdb.webp' /></p><p>

இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் வியாபார ரீதியில் குறித்த யாசகம்
பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.</p><p>
இதையடுத்து குறித்த சிறுவர்களின் பாதுகாவலர்களாக இருப்போர் எச்சரிக்கப்பட்டு
இனிவரும் நாட்களில் இவ்வாறு செயற்பட மாட்டோம் என்ற ஒப்புதலுடன்
விடுவிக்கப்பட்டுள்ளனர் என&nbsp;தெரிவித்திருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T23:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிராகப் பிரேரணை- கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-party-motion-against-justice-minister-1783721476"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-party-motion-against-justice-minister-1783721476</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும்
அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி
ஹர்ஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும்
அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி
ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர
எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.</p><p>இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகள் நேற்றைய தினம்(10.07.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>
</p><p>
சிறைச்சாலைக்குள் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தடுப்பதிலும்,
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும்
அமைச்சர் தனது தார்மீகப் பொறுப்பையும், அமைச்சுக்குரிய கடமைகளையும் சரிவர
நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டியே எதிர்க்கட்சி இந்தப்
பிரேரணையை முன்வைக்கவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896d100f-b876-4324-ae67-235709843286/26-6a516f86dbda7.webp' /></p><p> எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பலரும்&nbsp; இந்தப் பிரேரணையில் தங்களது கையொப்பங்களை இட்டுள்ளனர்.</p><p>

சிறைச்சாலை நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் பாதுகாப்புப் குறைபாடுகள் குறித்து
ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தங்களைக் கொடுத்து வரும்
நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் களத்தில் முக்கியத்துவம்
பெறுகின்றது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T23:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தின் ஜன்னல் உடைந்து வெளியே இழுக்கப்பட்ட பயணி: நடுக்காட்டில் நடந்த திகில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-pulled-out-of-plane-1783720468"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-pulled-out-of-plane-1783720468</id>
            <summary type="text">கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகருக்குப்
புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானத்தில்,
நடுவான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகருக்குப்
புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானத்தில்,
நடுவானில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்தின் போது ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த
60 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், காற்றின் கடுமையான அழுத்தத்தால் ஜன்னல்
வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>இன்ஜினிலிருந்து உடைந்த பாகங்கள்&nbsp;</h2><p>
</p><p>
அதிர்ஷ்டவசமாக அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், அவரது தலை மற்றும்
தோள்பட்டை வரை மட்டுமே ஜன்னலுக்கு வெளியே தொங்கியுள்ளது.</p><p>

விமானத்திற்குள் இருந்த மற்ற பயணிகள் உடனடியாகச் செயல்பட்டு, சில நிமிட
போராட்டத்திற்குப் பிறகு அவரை பத்திரமாக உள்ளே இழுத்து மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fd44ef5-226f-4b20-9b4a-9336fa8ed602/26-6a516bace8ca8.webp' /></p><p>
</p><p>
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பலத்த சத்தத்துடன் ஜன்னல்
உடைந்ததாகவும், உடனடியாக விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் குறைந்து ஒக்சிஜன்
முகமூடிகள் மேலே இருந்து கீழே விழுந்ததாகவும் பயணிகள் விவரித்துள்ளனர்.
</p><p>
இன்ஜினில் இருந்து உடைந்த சில பாகங்கள் ஜன்னலில் மோதியதால் இந்த விபத்து
ஏற்பட்டிருக்கலாம் என பயணிகள் கருதினாலும், விமான நிறுவனம் இது குறித்து
அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p></p><h2>பத்திரமாகத் தரையிறங்கிய விமானம்</h2><p>
</p><p>
இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானம் உடனடியாகத் தெசலோனிகி விமான
நிலையத்திற்குத் திருப்பப்பட்டு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8faebb1-6fd8-4fa9-8168-2d175f687890/26-6a516bad95e5e.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்ட பயணிக்குத் தரையிறங்கியவுடன் முதலுதவி சிகிச்சைகள்
அளிக்கப்பட்டன.

இந்த 18 ஆண்டுகள் பழமையான விமானத்தை ரையான்ஏர் நிறுவனத்தின் துணை நிறுவனமான
மல்டா ஏர் இயக்கியுள்ளது.</p><p>

இந்த அபாயகரமான விபத்து குறித்து கிரீஸ் மற்றும் மல்டா நாட்டின் சிவில் விமான
போக்குவரத்துத் துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T23:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாவி புயல் எதிரொலி: பிலிப்பைன்சில் கோர நிலச்சரிவு - 15 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bavi-massive-landslide-in-the-philippines-15-dead-1783719284"></link>
            <id>https://tamilwin.com/article/bavi-massive-landslide-in-the-philippines-15-dead-1783719284</id>
            <summary type="text">தீவிரமடைந்து வரும் &#039;பாவி&#039; புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள
பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் &#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவிரமடைந்து வரும் 'பாவி' புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள
பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

பிலிப்பைன்ஸில் 'இண்டாய்' என்று அழைக்கப்படும் இந்த புயல், நாட்டின் மீது
நேரடியாகக் கரையை கடக்காது என்ற போதிலும், அதன் தாக்கத்தால் தென்மேற்கு
பருவமழை தீவிரமடைந்து நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.</p><p></p><h2>நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு</h2><p>
</p><p>
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியான மிண்டனாவோ தீவின் சரங்கனி மாகாணத்தில்
வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ec1e38-38b5-4e45-bb5f-a40468734b2c/26-6a51682422743.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p>மேலும் லானாவோ டெல் சூர் மாகாணத்தில் நிகழ்ந்த மற்றொரு நிலச்சரிவில் 5 பேர்
பலியாகியுள்ளனர்.

புயலின் தீவிரத்தன்மை காரணமாகத் தலைநகர் மணிலா உட்படப் பல பகுதிகளில் கடுமையான
வெள்ள அபாய எச்சரிக்கையை அந்நாட்டின் வானிலை ஆய்வு மையமான PAGASA
விடுத்துள்ளது.
</p><p>
முன்னதாக, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் மற்றும் வடக்கு மரியானா
தீவுகளைச் சூறையாடிய இந்த சூப்பர் புயல், தற்போது வடமேற்கு திசையை நோக்கி
நகர்ந்து வருகிறது.</p><p></p><h2>பலத்த மழை</h2><p>
</p><p>சனிக்கிழமையன்று தாய்வானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், ஜப்பானின்
கடலோரப் பகுதிகளிலும் பலத்த மழையைக் கொட்டவிருக்கும் இப்புயல், அதன்பின்
சீனாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd1ed8fd-c35c-4a03-b6e7-798996e558fa/26-6a51682370532.webp' /></p><p>இதனால் தாய்வானில் முன்னெச்சரிக்கையாகப் பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு
நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு
வருகின்றனர்.</p><p>

ஏற்கனவே கடந்த வாரம் 'மேசாக்' புயல் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கால் சீனாவில்
39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த புதிய புயல் ஆசியப் பிராந்தியத்திற்கு
மேலும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T23:17:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து.. 28 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chinese-shoe-factory-fire-1783717778"></link>
            <id>https://tamilwin.com/article/chinese-shoe-factory-fire-1783717778</id>
            <summary type="text">சீனாவின் புஜியான் மாகாணம் ஜின்ஜியாங் நகரில் உள்ள &#039;ஹுய்தெங்&#039; காலணி
தொழிற்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் பலியானோரின்
எண்ணிக்கை 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் புஜியான் மாகாணம் ஜின்ஜியாங் நகரில் உள்ள 'ஹுய்தெங்' காலணி
தொழிற்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் பலியானோரின்
எண்ணிக்கை 28 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு நடைபெற்று வந்த தீவிர
மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன.
</p><p>
இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து,
பாதுகாப்பு விதிமுறைகளை மிகக் கொடூரமாக மீறிய குற்றத்திற்காகத் தொழிற்சாலையின்
உரிமையாளர் மற்றும் முக்கிய முகாமையாளர்கள் பொலிஸார் அதிரடியாகக்
கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;தீ விபத்து</h2><p>

மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை முழுமையாக
உறுதி செய்யும் நோக்கில், அந்த நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும்
சீன அரசு உடனடியாக முடக்கியுள்ளது.
</p><p>
ஐந்து அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்தத் தொழிற்சாலையின் தரைத்தளத்தில் இருந்த
கிடங்கில் ஏற்பட்ட தீ, அங்கிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய இறப்பர் மற்றும்
பசை போன்ற காலணி தயாரிப்புப் பொருட்களால் மிக அதிவேகமாகப் பரவியமை வீடியோ
பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34e9be91-d9da-48f7-81c4-62e256fd0c3c/26-6a5161c37adfa.webp' /></p><p>

குறிப்பாக, தொழிற்சாலையின் படிக்கட்டுகள் மற்றும் அவசரக் கால வழித்தடங்களில்
காலணி தயாரிப்பதற்கான கழிவுகளும், சோல்களும் பெரிய அளவில் குவித்து
வைக்கப்பட்டிருந்ததே தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் போனதற்கும், தீயணைப்பு
வீரர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்ததற்கும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.</p><p>

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் விளையாட்டு காலணிகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்த
ஜின்ஜியாங் நகரில்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விபத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஷி
ஜின்பிங், விபத்துக்கான பின்னணியை முழுமையாக ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்கள்
மீது இரக்கமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T23:17:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tipper-motorcycle-accident-kandhalam-one-dead-1783724299"></link>
            <id>https://tamilwin.com/article/tipper-motorcycle-accident-kandhalam-one-dead-1783724299</id>
            <summary type="text">கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் போட்டங்காட்டு சந்தியில் களிமண்
ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் சம்பவ
இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் போட்டங்காட்டு சந்தியில் களிமண்
ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த விபத்து நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>

பொலிஸாரின் ஆரம்பகட்ட தகவலின்படி, ஜெயந்திபுர பகுதியில் இருந்து பேராறு
பகுதியை நோக்கி களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம், போட்டங்காட்டு சந்தியில்
கந்தளாயில் இருந்து வான்எல பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன்
மோதியுள்ளது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>இந்த விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf5c41ba-4f25-4b1b-9c06-2431a805cf7f/26-6a517cecdbd53.webp' /></p><p> </p><p>மேலும், மோட்டார் சைக்கிளின் மீது ஏறிச் சென்ற டிப்பர்
வாகனம், அருகிலிருந்த தென்னை மரத்தில் மோதிய பின்னரே நின்றதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p>

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T23:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷிதவுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த காதலியின் பகீர் வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-rajapaksa-ex-girlfriend-confession-1783713984"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-rajapaksa-ex-girlfriend-confession-1783713984</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மீதான வழக்கு விசாரணையில் அவரின் முன்னாள் காதலியான யசரா அபேயநாயக்க சாட்சியம் அளித்திருக்கின்றார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மீதான வழக்கு விசாரணையில் அவரின் முன்னாள் காதலியான யசரா அபேயநாயக்க சாட்சியம் அளித்திருக்கின்றார்.&nbsp;</p><p>73 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்டு ஐந்து காணிகளை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதன் மூலம், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தி யோஷித ராஜபக்ச மீது சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.&nbsp;</p><p>இவ்வழக்கு நேற்று (09.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, யோஷிதவின் முன்னாள் காதலி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.&nbsp;</p><p>இதன்போது பல முக்கிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RNwoLfuUIcI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T22:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த மண்ணை மீட்கக் கோரி வலி. வடக்கு மக்கள் 12ஆவது வாரமாக தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-12th-week-restoration-homeland-jaffna-1783722086"></link>
            <id>https://tamilwin.com/article/protest-12th-week-restoration-homeland-jaffna-1783722086</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து
வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து
வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று 12ஆவது வாரமாகவும் அமைதியான முறையில் போராட்டத்தை
முன்னெடுத்தனர்.</p><p>

பலாலி, மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இராணுவத்தின் கொமாண்டோ
பங்களாவுக்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை
மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>

கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில், அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட
மக்கள், யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் தங்களின் சொந்த
இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர்.</p><p></p><h2>முன்வைக்கப்படும் கோரிக்கை&nbsp;</h2><p> </p><p>குறித்த பகுதிகள் இன்றும் உயர்
பாதுகாப்பு வலயங்களாகவே தொடர்ந்து வருகின்றன.

சுமார் 650 ஏக்கர் பரப்பளவிலான காணிகளை விடுவிக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள்
பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d0b1e34-cce2-4baa-9c0f-59333a633b8d/26-6a51716dd1840.webp' /></p><p> </p><p>காணிகள்
விடுவிக்கப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை
முன்னெடுக்கப்போவதாக அவர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
இன்றைய போராட்டத்தின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா மற்றும்
பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது ஆதரவைத்
தெரிவித்தனர்.</p><p>

தமது வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும் வாழிடங்களையும் மீட்டுத் தருமாறு கோரி,
உரிமையாளர்கள் தமது கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T22:25:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியமைச்சர் மட்டுமல்ல பொய் பேசும் அநுரவும் பதவி விலக வேண்டும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/not-minister-of-justice-but-anura-who-is-lying-1783711522"></link>
            <id>https://tamilwin.com/article/not-minister-of-justice-but-anura-who-is-lying-1783711522</id>
            <summary type="text">எங்களுடைய நாட்டின் தற்போதைய நிலவரங்களை பார்க்கின்ற பொழுது தற்போதைய ஆட்சியை கவிழ்ப்பதற்கான பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒன்றிணைந்து முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்களுடைய நாட்டின் தற்போதைய நிலவரங்களை பார்க்கின்ற பொழுது தற்போதைய ஆட்சியை கவிழ்ப்பதற்கான பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒன்றிணைந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இவ்வாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் நோக்கம் என்ன? எந்த வகையிலான திட்டங்களை இவர்கள் தன்னகத்தில் வைத்திருக்கிறார்கள்? என லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமூக செயற்பாட்டாளர் சிராஜ் யூனுஸின் கேள்வி எழுப்பினார்.</p><p>
தயாசிறி ஜயசேகரவின் நேர்காணல் ஒன்றின் கலந்துகொண்டு உரையாற்றியபோது, அங்கு அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆதாரவாளராக செயற்பட்டதாக என்மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், ”முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் இனவாதிகள்“ என நான் என்னுடைய முகநூல் பக்கத்தில் சுட்டிக்காட்டியதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். </p><p>ஆனால் நான் அவ்வாறு சொல்லவில்லை.

நான் ஒரு இனவாதி அல்ல. அன்று நான் மொட்டுக்கட்சியுடன் ஒன்றிணைந்தவனாக இருந்தேன். ஆனால் அவர்களுடைய ஊழல்கள் எனக்கு தெரியவந்ததன் பின்னர் அந்தக் கட்சியில் இருந்து நான் இடைவிலகினேன் என தெரிவித்திருந்தார். </p><p>அவர் வெளிப்படுத்தியிருந்த இன்னும் சில பரபரப்பான கருத்துக்களை நேருக்கு நேர் நிகழ்ச்சியின் ஊடாக பார்ப்போம்..&nbsp; </p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pKEIbLgxjXI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T21:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிரிக்க நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் உலக வங்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-world-bank-s-dominance-over-african-countries-1783716520"></link>
            <id>https://tamilwin.com/article/the-world-bank-s-dominance-over-african-countries-1783716520</id>
            <summary type="text">
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள் வழங்கும் சலுகைக் கடன்கள், ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டுக்
கொள்கை முட...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள் வழங்கும் சலுகைக் கடன்கள், ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டுக்
கொள்கை முடிவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.</p><p>

வணிகக் கடன்களை விடக் குறைந்த வட்டியில் இவை கிடைத்தாலும், இதனுடன்
விதிக்கப்படும் கடுமையான பொருளாதார சீர்திருத்த நிபந்தனைகள் ஆப்பிரிக்க
நாடுகளின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.</p><p></p><h2>உலக வங்கி நிதியுதவி</h2><p>

சமீபத்தில் கென்யா பெற்ற 750 மில்லியன் டொலர் உலக வங்கி நிதியுதவி, இந்த
விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c60f192-03c2-466f-9d7a-83bda745932f/26-6a515cd17926a.webp' /></p><p>
</p><p>
இது குறித்துப் பேசிய கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ, "வெளிநாட்டினரிடம்
கடன் வாங்கச் செல்லும்போது, அவர்கள் பணத்திற்குச் சம்மந்தமில்லாத பாலின
சட்டங்கள், புதிய வரிச் சட்டங்கள் எனப் பல்வேறு நிபந்தனைகளை விதித்து நம்மை
வற்புறுத்துகிறார்கள்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
இந்த நிறுவனங்களின் நிபந்தனைகளால் கென்யாவில் கொண்டுவரப்பட்ட கடுமையான வரி
விதிப்புகளுக்கு எதிராக 2024 இல் நடந்த போராட்டங்களில் 60-க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர்.</p><p></p><h2>நைஜீரியாவில் எரிபொருள் மானியம்</h2><p>
</p><p>
இதேபோல், நைஜீரியாவில் எரிபொருள் மானியம் ரத்து செய்யப்பட்டதும், கானாவில்
பொதுத்துறை வேலைவாய்ப்புகள் முடக்கப்பட்டதும் மக்களின் வாழ்வாதாரத்தைப்
பெரிதும் பாதித்துள்ளன.

மறுபுறம், இந்த சீர்திருத்தங்கள் ஊழலைக் குறைக்கவும், நிதி ஒழுக்கத்தை
மேம்படுத்தவும் உதவும் என்று கடன் வழங்கும் அமைப்புகள் வாதிடுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edca437e-a61b-44f6-b32f-d4715198f1db/26-6a515cd0caf94.webp' /></p><p>இருப்பினும், 1980 மற்றும் 1990களில் கொண்டுவரப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்த
திட்டங்கள் (SAPs) ஆப்பிரிக்காவின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை
சீரழித்ததாகப் பொருளாதார வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
இறுதியில், சாதாரண குடிமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான மருத்துவம்
மற்றும் கல்விக்காகத் தங்கள் கைகளில் இருந்து பணம் செலவழிக்கும் அவலநிலையே
இந்த நிபந்தனைக் கடன்களால் ஏற்படுகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T21:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் டிசம்பரில் பங்களாதேஷ் திரும்ப முன்னாள் பிரதமர் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-return-bangladesh-despite-death-1783715295"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-return-bangladesh-despite-death-1783715295</id>
            <summary type="text">பங்களாதேஷில் கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மாணவர் புரட்சியைத் தொடர்ந்து இந்தியாவில் அகதியாக தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (78) தனக்கு மரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மாணவர் புரட்சியைத் தொடர்ந்து இந்தியாவில் அகதியாக தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (78) தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் வரும் டிசம்பர் மாதம் மீண்டும்
பங்களாதேஷ் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
தடை செய்யப்பட்டுள்ள தனது 'அவாமி லீக்' கட்சியின் சட்டப்பூர்வ உரிமைகளை
மீட்டெடுப்பதற்காக, கட்சியைச் சேர்ந்த பிற முக்கியத் தலைவர்களுடன் இணைந்து
தான் தாய்நாடு திரும்பவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த
நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி</h2><p>
</p><p>அவர்கள் என்னைக் கைது செய்யலாம் அல்லது கொல்லவும் செய்யலாம், ஆனால் மரணம்
என்று ஒன்று வந்தால் அது எனது சொந்த மண்ணில்தான் நிகழ வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd55777-0335-436a-b75b-4dc6ad6cdf91/26-6a5158ccb4a44.webp' /></p><p>நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி இந்த போலி சட்ட நடவடிக்கைகளை
எதிர்கொள்வோம் என்று புதுடில்லியிலிருந்து தொலைபேசி வழியாக ஷேக் ஹசீனா
பேசியுள்ளார்.
</p><p>
பங்களாதேஷில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதமராக இருந்து வறுமை ஒழிப்பு
மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், அவரது
இறுதிக்கால சர்வாதிகாரப் போக்கு மற்றும் போராட்டக்காரர்கள் மீதான கொடூரமான
ஒடுக்குமுறைகள் காரணமாக அவர் மக்கள் எதிர்ப்பைச் சந்தித்து நாட்டை விட்டு
ஓடினார்.</p><p></p><h2>இந்தியா-பங்களாதேஷ்&nbsp;</h2><p>
</p><p>
தற்போது பங்களாதேஷில் தாரிக் ரஹ்மான் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள
சூழலில், ஷேக் ஹசீனாவைத் தங்களுக்குக் கைமாற்றித் தருமாறு இந்தியாவிடம்
பங்களாதேஷ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29883db0-83db-4b1e-b957-4af109e4d600/26-6a5158cc0e4cc.webp' /></p><p>
</p><p>
இது இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியாக பெரும் தர்மசங்கடத்தை
ஏற்படுத்தியிருந்த வேளையில், ஹசீனாவின் இந்தச் சுயவிருப்பத்திலான மறுவருகை
முடிவு இந்தியா-பங்களாதேஷ் இடையிலான எல்லையோரப் பதற்றத்தைத் தணிக்க உதவலாம்
எனக் கருதப்படுகிறது.
</p><p>
இருப்பினும், "அவாமி லீக் கட்சி டில்லியோடு புதைக்கப்பட்டுவிட்டது, இந்தத்
திரள் கொலைகாரருக்கு இன்னும் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லை" என்று
பங்களாதேஷின் தற்போதைய உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது மிகக் கடுமையாக
விமர்சித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T21:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் கொடூர காட்டுத்தீ: 12 பேர் பலி - 19 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deadly-wildfires-in-spain-12-dead-19-missing-1783714279"></link>
            <id>https://tamilwin.com/article/deadly-wildfires-in-spain-12-dead-19-missing-1783714279</id>
            <summary type="text">தெற்கு ஸ்பெயினின் அந்தலூசியா பிராந்தியத்தில் உள்ள அல்மேரியா மாகாணத்தில்
திடீரெனப் பரவிய காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஸ்பெயினின் அந்தலூசியா பிராந்தியத்தில் உள்ள அல்மேரியா மாகாணத்தில்
திடீரெனப் பரவிய காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
அந்த பிராந்தியத்தின் சமீபத்திய வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் பேரழிவை
ஏற்படுத்திய காட்டுத்தீ இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>காட்டுத்தீ பரவல்</h2><p>

மேலும், இந்த விபத்தில் 19 பேரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை
மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b458973-3fb0-4e10-bb96-a6371525de10/26-6a5154751bbd4.webp' /></p><p>வியாழக்கிழமை மதியம் லாஸ் காஸார்டோஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகில்
தொடங்கிய இந்தக் காட்டுத்தீ, பலத்த காற்று மற்றும் ஐரோப்பா முழுவதும் நிலவி
வரும் கடும் வெப்ப அலை காரணமாக அடுத்தடுத்த பகுதிகளுக்கு அதிவேகமாகப் பரவியது.</p><p>

தீயில் சிக்கித் தப்பிக்க முயன்ற போது வாகனங்களுக்குள்ளேயே மாட்டிக்கொண்டு
பலர் உயிரிழந்துள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>இராணுவ அவசரக்காலப் பிரிவு</h2><p>
</p><p>
மேலும், இக்கோர விபத்தில் காயமடைந்த 6 பேருக்குத் தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஸ்பெயினின் இராணுவ அவசரக்காலப் பிரிவு (UME) உட்பட 300-க்கும்
மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0346a76a-4787-4486-bffa-23eb5e111baa/26-6a515475c004a.webp' /></p><p>

பலத்த புகைமூட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள இரு முக்கிய நெடுஞ்சாலைகள்
மூடப்பட்டுள்ளன.

மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்ததே இந்தத் தீ விபத்திற்குக் காரணம் என
முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது ஆழ்ந்த
இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T21:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[1000 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியா வந்தடைந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க பேயோக்ஸ் எம்பிராய்டரி துணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/embroidery-fabric-arrives-britain-after-1000-years-1783713305"></link>
            <id>https://tamilwin.com/article/embroidery-fabric-arrives-britain-after-1000-years-1783713305</id>
            <summary type="text">&amp;nbsp;பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் இரத்தம் தோய்ந்த இடைக்கால வரலாற்றைச் சித்தரிக்கும், விலைமதிப்பற்ற 70 மீட்டர் நீளமுள்ள &#039;பேயோக்ஸ் எம்பிராய்டரி துணி&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் இரத்தம் தோய்ந்த இடைக்கால வரலாற்றைச் சித்தரிக்கும், விலைமதிப்பற்ற 70 மீட்டர் நீளமுள்ள 'பேயோக்ஸ் எம்பிராய்டரி துணி' சுமார் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பிரித்தானியா கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p> பிரான்ஸிலிருந்து லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் இந்த வரலாற்று கலைப்படைப்பு இரகசியமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p></p><h2>பேயோக்ஸ் எம்பிராய்டரி துணி</h2><p> </p><p> லினன் துணியில் கம்பளி நூல்களால் நெய்யப்பட்ட இந்தத் துணி, 1066 ஆம் ஆண்டில்
நார்மண்டியின் பிரபு வில்லியம், இங்கிலாந்தின் மன்னர் ஹெரால்டை வீழ்த்தி
இங்கிலாந்தைக் கைப்பற்றிய புகழ்பெற்ற 'ஹேஸ்டிங்ஸ் போரின்' 58 காட்சிகளைத்
தத்ரூபமாக விவரிக்கிறது.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பிறகு, இரு நாடுகளுக்கும்
இடையேயான சுமுக உறவை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல்
மேக்ரோன் இந்த வரலாற்றுத் துணியை பிரித்தானியாவுக்குக் கடனாக வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa527730-d131-4c7c-a2da-e78a422c37be/26-6a515068cc92d.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலாக, இங்கிலாந்தின் மிக முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்பான
'சட்டன் ஹூ' ஆங்கிலோ-சாக்சன் கலைப்பொருட்களைப் பிரித்தானியா அருங்காட்சியகம்
பிரான்ஸிற்கு வழங்கவுள்ளது.</p><p>
வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட பிரத்தியேகப் பெட்டியில் வைக்கப்பட்டு, பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கடல்வழிச் சுரங்கப்பாதை வழியாகக் கொண்டுவரப்பட்டுள்ள
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்படைப்பு, 2027 ஜூலை வரை லண்டன்
அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T21:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் பிரேத பரிசோதனையின் யாருமறியா பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/untold-horror-of-autopsy-in-negombo-prison-riot-1783708248"></link>
            <id>https://tamilwin.com/article/untold-horror-of-autopsy-in-negombo-prison-riot-1783708248</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பயங்கரமான ஒரு சூழ்நிலை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள சில செய்திகள் உறுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பயங்கரமான ஒரு சூழ்நிலை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள சில செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
</p><p>
குறித்த சிறைச்சாலையில் ஐந்து பேருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 
காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>எனினும் மோதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இது தொடர்பில் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரும் சிறை அதிகாரிகளும் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். </p><p>

இந்த சிறைச்சாலை முரண்பாடுகளுக்கு தொடக்கப்புள்ளியாக இருப்பது நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த அந்த மோசமான மோதல் சம்பவமே ஆகும். </p><p>

இந்த அசம்பாவிதமான சம்பவங்களை எல்லாம் பார்க்கின்ற பொழுது ஆட்சிக் கவிழ்ப்புக்கான ஒரு பெரும் இனக்கலவரம் அல்லது வன்முறைக்கான சில ஆயத்தங்கள் சிறைச்சாலைக்குள் தயார்படுத்தப்படுகின்றன என்பதே தொடர்ச்சியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
</p><p>
ஆனால் இந்த சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது யார் என்ற கேள்வி இப்போது எழுகின்றது. இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9nxqgm6BfNY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T21:15:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பை கொல்ல சதி - ஈரானிடம் இரசாயன ஆயுதங்கள்: அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அனுப்பிய செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/to-kill-trump-iran-chemical-weapons-israel-us-1783716483"></link>
            <id>https://tamilwin.com/article/to-kill-trump-iran-chemical-weapons-israel-us-1783716483</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
</p><p>கடந்த 2020 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதில் இருந்தே அதற்குப் பழிவாங்க ட்ரம்பைக் கொல்லப் போவதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.
</p><p>இதில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஈரானியர்கள் ஏந்தியிருந்தனர்.
</p><p>இந்தத் தகவலைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்பும், "அவர்கள் என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்.
</p><p>அவர்களின் அனைத்துப் பட்டியலிலும் எனது பெயர் முதலிடத்தில் உள்ளது" என்று பாதுகாப்பு அச்சுறுத்தலையம் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_MFgBUULEYs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T21:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029ஆம் ஆண்டு நாமலின் ஆட்சி உறுதி - மக்கள் சந்திப்பில் முழக்கமிட்ட பொதுஜன பெரமுன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rule-assured-2029-podujana-peramuna-slogans-1783699949"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rule-assured-2029-podujana-peramuna-slogans-1783699949</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று (09.07.2026) ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட
கட்சியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று (09.07.2026) ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றுள்ளது. </p><p>இதில் கலந்துகொண்ட
கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை
விமர்சித்ததுடன், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் தலைமையில் புதிய அரசை
உருவாக்க ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><h2>புதிய தலைமுறை அரசியல்</h2><p>

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, "கிராமப்புறங்களில் மக்கள் பெரும் ஆதரவைத் தந்து வருகின்றனர். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருமே எமது மக்கள் தான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501bd7ec-351f-412d-87ed-1c73d6736276/26-6a512f4f5c73e.webp' /></p><p>தற்போதைய
அரசு பெரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தாலும், எதனையும் நிறைவேற்றவில்லை.
வேலைவாய்ப்பின்மை, வரியதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை
உயர்வால் மக்கள் அல்லல்படுகின்றனர்.</p><p>வெறுப்பு அரசியலை விடுத்து, அபிவிருத்தி
மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறை அரசியலை உருவாக்க
நாங்கள் தயாராகவுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிறைச்சாலை மோதல்</h2><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கருத்துத் குறிப்பிடுகையில்,
</p><p>
"அரசு ஆட்சிக்கு வந்து மூன்றில் ஒரு பங்கு காலம் கடந்தும், கோட்டே தொகுதியில்
எந்தவொரு உருப்படியான அபிவிருத்தியும் நடக்கவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7198c345-697d-4b68-8dd3-3712d9f0d6bd/26-6a512f4eaccb7.webp' /></p><p>சிறைச்சாலை மோதலில்
உயிரிழந்த அதிகாரிகளின் மரணத்துக்கு இந்த அரசே பொறுப்பேற்க வேண்டும்.
பொறுப்பான அமைச்சர் தனது கடமையை முறையாகச் செய்யவில்லை. </p><p>2029 இல் நாட்டின்
எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்க நாம் இன்று முதலே தயாராக
வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வரி செலுத்துதல்</h2><p>

இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தனது உரையில், "மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் உலகத்தரம் வாய்ந்த நகரமாக
மாற்றப்பட்ட கோட்டே, இன்று முறையற்ற நிர்வாகத்தாலும், டெங்கு அபாயத்தாலும்
சீரழிந்து போயுள்ளது.</p><p>மக்கள் வரி செலுத்துவது சுகாதாரமான சூழலைப்
பெறுவதற்காகவே தவிர, அபராதம் கட்டுவதற்காக அல்ல. அரசாங்கமும் உள்ளூராட்சி
மன்றங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்" என கவலை
வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9031dc4-d576-4d0b-ab09-225fca9c2ac5/26-6a512f500af3d.webp' /></p><p>

இறுதியாக உரையாற்றிய யூ.கே. சுமித் உடுகும்பர,

"நாட்டின் ஒவ்வொரு துறை சார்ந்து நாடாளுமன்றத்தில் தெளிவான புரிதலுடன் பேசும்
நாமல் ராஜபக்சவே நாட்டின் எதிர்காலத் தலைவர் என்பதை மக்கள்
ஏற்றுக்கொண்டுள்ளனர்.</p><p> 2029 இல் அவர் ஜனாதிபதியாவது உறுதி. கோட்டே தொகுதியில்
மிலிந்த ராஜபக்சவின் வலுவான தலைமைத்துவத்துடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப
நாம் ஒன்றிணைந்துள்ளோம்" என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்
சானக சம்பத் மதுகொட உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும்
பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-10T19:59:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனிய வாழ்வு இல்லம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்: ஊடகங்களுக்கு விளக்கமளித்த இடைக்கால நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allegations-regarding-happy-home-1783698785"></link>
            <id>https://tamilwin.com/article/allegations-regarding-happy-home-1783698785</id>
            <summary type="text">&amp;nbsp;முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம்
பகுதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான ஒரு பராமரிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம்
பகுதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான ஒரு பராமரிப்பு இல்லமாக இனிய வாழ்வு
இல்லம் இருந்து வருகின்றது.
</p><p>
கடந்த காலங்களில் இனியவாழ்வு இல்லத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இன்றையதினம்(10.06.2026)&nbsp; இனிய வாழ்வு
இல்லத்தின் இடைக்கால நிர்வாகத்தின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக
சமூக சேவைகள் உத்தியோகத்தருமான ச.சதாகரன்&nbsp; ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>இனியவாழ்வு இல்லம்</h2><p>அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,</p><p>

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்லம் 57 மாணவர்களை
கொண்டியங்குகின்ற இல்லமாக காணப்படுகின்றது.</p><p>அதில் பல்கலைகழகத்தில் 8
மாணவர்களும், வள்ளிபுனம் பாடசாலையில் 10 மாணவர்கள், கேட்கும்திறன்,
வாய்பேசமுடியாத 39 மாணவர்களுக்கு இல்லத்தில் கல்விகற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69f7570b-6852-4f14-b9b5-bad188797edc/26-6a51170e92c52.webp' /></p><p>

கடந்த மூன்று மாத காலமாக செயற்பட்டுவரும் இடைக்கால நிர்வாகத்தில் நாம்
பொறுப்பேற்றதற்கான காரணம் கடந்த (21.03.2026) ஆம் ஆண்டு புதிய நிர்வாகம் தெரிவு
செய்யப்பட இருந்த வேளை யாப்பிற்கு முரணாக தொடர்ச்சியாக முக்கிய பதவிகளை
வகிப்பதற்காக தெரிவு செய்யப்பட இருந்த போது பொதுச்சபையில் முரண்பாடுகள்
ஏற்பட்டிருந்தது.
</p><p>
அக்காலப்பகுதியில் யாப்பு சீர்திருத்த குழு அமைக்கப்பட்டு யாப்பினை
சீர்திருத்தி மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கருத்துக்களையும் பெறப்பட்டு
யாப்பு சரியான முறையில் சீர்திருத்தப்பட்டது.</p><p>இதனையடுத்து மீளவும் பொதுச்சபையினை கூட்டி புதிய
நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கான காலக்கெடுவாக மூன்று மாத காலம் வழங்கப்பட்டது.</p><p></p><h2>முறைப்பாடுகள் பதிவு</h2><p> அக்காலப்பகுதியில் மூன்று பேர் கொண்ட மூன்று மாத காலத்திற்கு இடைக்கால
நிர்வாகத்தினால் பிரதேச செயலாளர் இ.விஜயகுமாரின் நேரடி கண்காணிப்பில்
செயற்படுத்தி வருகின்றோம்.</p><p>இல்ல விடுதியில் ஆரம்பத்தில் போடப்பட்ட மெத்தைகள் மாணவர்கள் பயன்படுத்த
முடியாத நிலையில் காணப்பட்டதால் புதிய மெத்தைகள் போடப்பட்டுள்ளது.</p><p>இயங்காத
நிலையில் இருந்த மின் விசிறிகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளதுடன் பழுதடைந்த
கணணிகள் திருத்தப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு
பயன்படுத்தப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1102baff-64db-4054-a3bb-e6763227644b/26-6a51170da756a.webp' /></p><p>இல்லத்தில் இருந்து சாப்பாடு பொதி செய்யப்பட்டு வெளியில் கொண்டு செல்வது
குறித்த குற்றசாட்டுகள் இருந்தமையால் சாப்பாடு பொதி வெளியில் கொண்டு
செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.</p><p>உள்ளக முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் பிரதேச செயலாளரை இங்கு அழைத்து முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் மாணவர்களின் பெற்றோர்களை
சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு மாணவர்கள் தங்கியிருந்த
விடுதிகளை நேரடியாக காட்டி விளங்கப்படுத்தி ஆசிரியர்களுடன் உரையாடவிட்டு
தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.</p><p>

இவ்வாறிருக்கையில் கடந்த (30.06.2026) ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T19:54:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு முதலமைச்சர் கண் கலங்கினார்.. பின்னணியில் நடந்தது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cm-vijay-visits-to-karur-cried-speech-in-karur-1783708934"></link>
            <id>https://tamilwin.com/article/cm-vijay-visits-to-karur-cried-speech-in-karur-1783708934</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு நேற்றைய தினம் சென்றிருந்தார்.&amp;nbsp;கடந்த 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தமிழக வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு நேற்றைய தினம் சென்றிருந்தார்.&nbsp;</p><p>கடந்த 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது கூட்டநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.&nbsp;&nbsp;</p><p>குறித்த சம்பவத்திற்கு பின்னர் முதன்முறையாக ஜோசப் விஜய் நேற்று தான் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.&nbsp;</p><p>
இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் கரூர் மாவட்ட பொதுக்கூட்டம் மற்றும் நன்றி அறிவிப்பு விழாவில், பாதுகாப்பு காரணங்களுக்காக மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p>இவ்விடயம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது பின்வரும் காணொளி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vF7uPQQfhic" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T19:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிக்குப்பழி நடவடிக்கை: வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் சீனாவின் புதிய சட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/retaliatory-measures-china-new-laws-put-pressure-1783706816"></link>
            <id>https://tamilwin.com/article/retaliatory-measures-china-new-laws-put-pressure-1783706816</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மற்றும்
ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சீனா தனது எதிர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மற்றும்
ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சீனா தனது எதிர்ப்புத் தடை சட்டங்களை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது.
</p><p>
நடப்பு ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சீனா கொண்டுவந்துள்ள இரு
புதிய சட்டங்கள் மூலமாக, தங்களின் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பிற்கு
அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை
எடுக்க பெய்ஜிங் அரசுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சீனாவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வெளிநாட்டு
அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கும் மூன்றாவது
சட்ட வரைவும் தற்போது தயாராகி வருகிறது.</p><p></p><h2>விசா இரத்து&nbsp;</h2><p>
</p><p>
சீனாவின் இந்த அதிரடி மாற்றங்களால் அங்கு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள்
பெரும் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313dede8-65ce-47ec-8120-46d6371bbfa2/26-6a513840c3e7b.webp' /></p><p>
</p><p>
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட
முயன்றால், அது சீனாவின் புதிய விதிகளின்படி "சீனாவிற்கு எதிரான பாகுபாடு"
எனக் கருதப்பட்டு அபராதம், சொத்து முடக்கம், முதலீட்டுக் கட்டுப்பாடுகள்
மற்றும் விசா இரத்து போன்ற கடுமையான தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என சட்ட
வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்பத்
துறை மற்றும் மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் மீது தடைகளை விதித்துள்ள
நிலையில், சீனா தற்போது மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாகப் பழிக்குப்பழி
வாங்கும் உத்தியைக் கையில் எடுத்துள்ளது.
</p><p>
இதனால், சர்வதேச நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தகப்
போரில் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:24:47+00:00</updated>
        </entry>
    </feed>
