<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-16T15:50:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காட்டுத்தீ: கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பாதிக்கலாம் என அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-burn-canada-football-world-cup-final-1784215116"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-burn-canada-football-world-cup-final-1784215116</id>
            <summary type="text">கனடாவில் தற்போது 800-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து
வருவதால், அதிலிருந்து வெளிவரும் அடர்ந்த புகை அமெரிக்காவின் வடக்கு
மாநிலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் தற்போது 800-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து
வருவதால், அதிலிருந்து வெளிவரும் அடர்ந்த புகை அமெரிக்காவின் வடக்கு
மாநிலங்கள் வரை பரவி கடுமையான காற்று மாசை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

அமெரிக்காவின் டெட்ராய்ட், மினியாபோலிஸ் போன்ற நகரங்களில் காற்றின் தரம்
மிகவும் மோசமடைந்து 'ஆபத்தான' நிலையை எட்டியுள்ளது.</p><p>

இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>உலகக் கிண்ண இறுதிப் போட்டி</h2><p>

காற்றின் திசை மாறாவிட்டால் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில்
நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் இந்தப் புகை பாதிப்பை
ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43460d21-e97e-485f-afb8-f4cf806b6ec7/26-6a58f64ec30e5.webp' /></p><p>கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் காற்றின் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T15:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் வலியுறுத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-against-archchuna-mp-chandrasekar-1784213528"></link>
            <id>https://tamilwin.com/article/action-against-archchuna-mp-chandrasekar-1784213528</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.</p><p>கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்று(16.7.2026) ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p> இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

"கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மிகவும் அமைதியான முறையிலேயே நடைபெற்று வந்தது.</p><p></p><h2>குழப்பம்&nbsp;</h2><p>

இந்நிலையில், சிவபூசையில் கரடி புகுந்தது போல, ஒரு கரடி புகுந்து பைத்தியக்காரத்தனமாக விளையாடி, குழப்பத்தை விளைவித்துக் கூட்டத்தை இடைநிறுத்தியது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக எல்லாக் கூட்டங்களுக்கும் சென்று குழப்பம் விளைவித்து வருகின்றார்; அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31d1a42c-b640-42e3-8679-866f92d301e3/26-6a58f40577d4c.webp' /></p><p>
</p><p>
அபிவிருத்திக் குழுக்கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், அந்த அதிகாரிகளால் சமூகத்தின் முன் செல்ல முடியாத நிலை ஏற்படும்.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>
</p><p>
அர்ச்சுனாவின் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு இன்றைய கூட்டமே சாட்சியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/634add9d-0386-4700-9f27-41ad3783c648/26-6a58f4062755b.webp' /></p><p>
</p><p>
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம். அடுத்து வரும் நாட்களில் மீண்டும் அபிவிருத்திக் குழு கூடும்; அப்போது உறுதியான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T15:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்: ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukraine-s-defence-minister-removed-from-office-1784211652"></link>
            <id>https://tamilwin.com/article/ukraine-s-defence-minister-removed-from-office-1784211652</id>
            <summary type="text">யுக்ரைனின் பிரபல பாதுகாப்பு அமைச்சரான மைக்கைலோ ஃபெடோரோவை ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி திடீரென பதவியிலிருந்து நீக்கியதை
எதிர்த்து யுக்ரைனின் பல்வேறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுக்ரைனின் பிரபல பாதுகாப்பு அமைச்சரான மைக்கைலோ ஃபெடோரோவை ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி திடீரென பதவியிலிருந்து நீக்கியதை
எதிர்த்து யுக்ரைனின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கிப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள்
மற்றும் பொதுமக்கள், *"ஃபெடோரோவ் மீது கை வைக்காதே, வெற்றியைத் தடுப்பதை
நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தி ஜனாதிபதிக்கு எதிராக
கோஷமிட்டனர்.
</p><p>
கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற 35 வயதான ஃபெடோரோவ்,
யுக்ரைன் ராணுவத்தில் இருந்த ஊழலை ஒழித்ததோடு, போர்க்களத்தில் நவீன
தொழில்நுட்பங்கள் மற்றும் ட்ரோன்களை (Drones) அறிமுகப்படுத்தி பெரும்
வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்.</p><p></p><h2>பதவி நீக்கம்</h2><p>
</p><p>
எனினும், அவருக்கும் யுக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர்
சிர்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த
நீக்கத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
</p><p>
செய்தியாளர்களிடம் பேசிய ஃபெடோரோவ், "இராணுவத் தளபதி சிர்ஸ்கி ரஷ்யாவை
வீழ்த்துவதற்கான புதிய உத்திகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, நமது நாட்டைப்
பிளவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்" என்று குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ecd90a7-2aca-4550-9650-6be168aee554/26-6a58eddaeb173.webp' /></p><p>

ஃபெடோரோவின் இந்த திடீர் நீக்கம் உக்ரைன் ராணுவ வீரர்கள் மத்தியிலும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> "யுக்ரைன் வரலாற்றிலேயே மிகச்சிறந்த
பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதி நீக்கியுள்ளார்.

இது ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் செய்த மிகப்பெரிய தவறு" என்று களத்தில்
இருக்கும் யுக்ரைன் இராணுவ வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

யுக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய உள்துறை அமைச்சர் இஹோர்
க்ளிமென்கோ நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T14:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அரசியல் ஆபத்தில் சிக்கிய அர்ஜென்டினா - FIFA அமைப்பு எடுக்கப்போகும் முடிவு என்ன..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/argentina-players-banner-after-fifa-world-cup-win-1784211960"></link>
            <id>https://tamilwin.com/article/argentina-players-banner-after-fifa-world-cup-win-1784211960</id>
            <summary type="text">உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்குப்
பின்னர், சர்ச்சைக்குரிய பதாகை ஒன்றை ஏந்தி ஆர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்குப்
பின்னர், சர்ச்சைக்குரிய பதாகை ஒன்றை ஏந்தி ஆர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியர் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. </p><p>


இதனால், ஆர்ஜென்டினா கால்பந்து அணி மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க சர்வதேச
கால்பந்து கூட்டமைப்பு (FIFA) ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அட்லாண்டாவில் இடம்பெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், தாமஸ்
டுச்சலின் தலைமையிலான இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி
ஆர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.</p><h2> 

மைதானத்தை அலங்கரித்த பதாகை</h2><p>

இந்த போட்டி முடிந்ததும், அர்ஜென்டினா வீரர்கள் "லாஸ் மால்வினாஸ் சன்
ஆர்ஜென்டினாஸ்" (மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை) என்ற
வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி மைதானத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ed88293-840b-42d3-8944-cc9250fb41cd/26-6a58ea51ad020.webp' /></p><p>

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபோக்லாந்து தீவுகளை ஆர்ஜென்டினா
தங்களுக்குச் சொந்தமானது எனக் கோரி வரும் நிலையில், இந்த தீவுகளை ஆர்ஜென்டினாவில் "மால்வினாஸ்" என்று அழைக்கின்றனர்.
</p><p>
இந்த விவகாரத்தில் FIFA உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று
பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
FIFA -க்கு அழுத்தம் கொடுக்கும் பிரித்தானிய

இது குறித்துப் பேசிய பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர், 

“ உலகக் கிண்ணம்
நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் ஃபோக்லாந்து தீவுகள் எப்போதும்
நமக்குத்தான் சொந்தம். இதில் எங்கள் அர்ப்பணிப்பு ஒருபோதும் குறையாது" என உறுதியளித்துள்ளார்.
</p><p>
கடந்த 2014ஆம் ஆண்டும் இதே போன்றதொரு பதாகையை ஏந்தியதற்காக ஆர்ஜென்டினா
கால்பந்து சங்கத்துக்கு FIFA அபராதம் விதித்திருந்தது.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து ஆர்ஜென்டினா நீக்கப்படாது என்றாலும்,
இந்த அரசியல் ரீதியான செயல்பாட்டிற்காக வீரர்கள் அல்லது கால்பந்து
சங்கத்துக்கு FIFA அபராதம் அல்லது தடை விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலாவெளியில் யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arrested-with-elephant-tusks-in-nilaveli-1784210167"></link>
            <id>https://tamilwin.com/article/person-arrested-with-elephant-tusks-in-nilaveli-1784210167</id>
            <summary type="text">திருகோணமலை- நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை
வீட்டில் வைத்திருந்த நபரொருவர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது
செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை
வீட்டில் வைத்திருந்த நபரொருவர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (15) நிலாவெளி, வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள
வீடு ஒன்றில் முன்னெடுக்கப்பட்டது.</p><p>

திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல்
ஒன்றின் பேரில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>விசாரணை</h2><p> </p><p>இதன்போது சந்தேக
நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்கள்
அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.</p><p>

விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டி. திலகரத்ன
மற்றும் அதிகாரி எச்.எம்.டி. மாலித் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தச் சோதனையை
வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24d5b4e4-b325-4f38-a235-49a7f52ce719/26-6a58e5bbdf828.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்களுடன் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்,
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:08:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 வருடங்களுக்கு பின் மகளுக்கு வந்த தீர்ப்பு - 47 வயது தந்தைக்கு நீதிமன்றம் 45 வருட சிறைத்தண்டனை உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/verdict-for-the-daughter-after-12-years-1784210624"></link>
            <id>https://tamilwin.com/article/verdict-for-the-daughter-after-12-years-1784210624</id>
            <summary type="text">கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக
பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு எதிராக நீதிமன்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக
பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>

குறித்த வழக்கானது இன்று(16.07.2026) வவுனியா மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, குறித்த தந்தைக்கு 45 வருட கடூழிய
சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு
மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல்
நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><h2>

மகளுக்கு நேர்ந்த கதி</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

14 வயது நிரம்பிய சிறுமியை அவருடைய தன்னை தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி வந்துள்ளார். </p><p> இந்த சம்பவம் வவுனியா - கனகராயன் குளம்
பகுதியில் 2013, 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியிகளில் இடம்பெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிஸாரால் செய்து செய்யப்பட்டு, பி அறிக்கையின் மூலம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்
முற்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab56da96-b12f-4a02-821c-2c98a1d2fbd5/26-6a58e52060916.webp' /></p><p> </p><p>

இதனை தொடர்ந்து குறித்த எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த
2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கம்
செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த தொடர்பான வழக்கு தொடர்ச்சியாக விளக்கத்திற்கு எடுத்து
கொள்ளப்பட்டு, குறித்த வழக்கானது வவுனியா மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக
இன்று(16.07) திகதியிடப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.
ஆனந்தராஜா குறித்த தந்தைக்கு 45 வருட கடூழிய
சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு
மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><h2>


45 வருட கடூழிய சிறைத் தண்டனை</h2><p>

இதன்போது, குறித்த 47 வயது நிரம்பிய எதிரிக்கு எதிராக 4 பாலியல் வன்புணர்வு
குற்றச்சாட்டுக்கள் அரச சட்டவாதியால் சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மன்று, இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 4
குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில், 45 வருட கடூழிய சிறைத் தண்டனை
வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c3963eb-9872-4ca3-90de-2d4856da98e9/26-6a58e5212b2a1.webp' /></p><p> 

இதேவேளை, நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு
குற்றச்சாட்டுக்கும் ரூபாய் 3 இலட்சம் வீதம் 12 இலட்சம் ரூபாய் சிறுமிக்கு
நஸ்ட ஈட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும்
25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் நீதிமன்றத்திற்கு அபாரம் செலுத்த
வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளத.</p><p>


இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்க வேண்டிய அவரின் இயற்கை
பாதுகாவலராகிய தந்தையே இவ்வாறு குற்றச்சாட்டினை புரிந்துள்ளமை காரணமாக, குறித்த எதிரிக்கு எதிராக எந்தவித 
கருணையும் காட்டாது அதிகபட்ச தண்டனை விதித்துள்ளதாக
நீதிபதி மன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2 லட்சம் பேர் கைது - விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-lakh-people-arrested-on-drug-charges-1784209289"></link>
            <id>https://tamilwin.com/article/2-lakh-people-arrested-on-drug-charges-1784209289</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “ஒன்றிணைந்த தேசிய
போதைப்பொருள் ஒழிப்பு” நடவடிக்கையின் கீழ், கடந்த எட்டு மாத காலப்பகுதியில்
போதைப்பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “ஒன்றிணைந்த தேசிய
போதைப்பொருள் ஒழிப்பு” நடவடிக்கையின் கீழ், கடந்த எட்டு மாத காலப்பகுதியில்
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 248 பேர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம்
தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பிலுள்ள திட்டத்தின் பிரதான காரியாலயத்தில் இன்று(16.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, பொலிஸ் போதைப்பொருள்
ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக தர்மசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>



விசேட நடவடிக்கை</h2><p>

முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகிய தரப்பினர்
ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்த விசேட நடவடிக்கைகள் மிகவும் திறம்பட
முன்னெடுக்கப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7071fd3-e0a5-4155-a8a6-f8f00078745d/26-6a58e02168ac5.webp' /></p><p> </p><p>

மேலும், கைது நடவடிக்கைகளின் போது எவ்விதமான நிரபராதிகளும் பாதிக்கப்படக்
கூடாது என்பதில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுகின்றது
என்றும், இது குறித்த தெளிவான அறிவுறுத்தல்கள் அனைத்து அதிகாரிகளுக்கும்
வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2> 

விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல்க்காரர்கள்</h2><p>

இதே ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப்
பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில்,</p><p> 

கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் தபால் நிலையங்கள் ஊடாக
நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 13 போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைச் சுங்க
அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/121505a0-1564-4766-af14-ddd6df2823ad/26-6a58e02235661.webp' /></p><p>
</p><p>
சிறிய அளவிலான போதைப்பொருள்கள் தபால் மூலம் கொண்டு வரப்பட்டாலும், அவை
சமூகத்தில் பாரிய சீரழிவை ஏற்படுத்தக்கூடும். </p><p>

எனவே, இவ்வாறான கடத்தல்களை
முறியடிக்கச் சுங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
நடவடிக்கைகள் தற்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இரவு விடுதிக்குள் சிக்கிய பெண் - ஐந்து கோடி ரூபா சிக்கிய மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-was-arrested-for-defrauding-money-1784175448"></link>
            <id>https://tamilwin.com/article/woman-was-arrested-for-defrauding-money-1784175448</id>
            <summary type="text">கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல இரவு விடுதியொன்றில், சூதாட்டத்தின் போது 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல இரவு விடுதியொன்றில், சூதாட்டத்தின் போது 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

சீட்டுக்கட்டுகளைக் கையாள்வதன் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
அந்த விடுதிக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பொன்றை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த மாபெரும் மோசடி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.</p><h2><b>மாபெரும் மோசடி</b></h2><p> 

கைது செய்யப்பட்ட 21 வயதுடைய பெண் அத்திடிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12374fa6-963f-40e4-bac2-15f76c47965e/26-6a58de5974cd7.webp' /></p><p>சூதாட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கலைக்கும்போது, அந்த பெண் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தெரியும்படி அதைக் கையாண்டு, அந்தத் தரவுகளைக் காணொளி எடுப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளார். </p><p>

இவ்வாறு பெறப்பட்ட காணொளி காட்சிகளை பயன்படுத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் பெரும் தொகையை வென்றுள்ளார்.</p><p> 

அத்துடன், அதில் 5 கோடி ரூபாவை சந்தேகநபரான அந்தப் பெண்ணுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><h3>

மேலதிக விசாரணை</h3><p>கடந்த இரண்டரை மாதங்களாக திட்டமிட்டு இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddd1d2ee-ac0e-4916-b471-11b476662b25/26-6a58de5a5cc39.webp' /></p><p>அந்த மேசையில் பணிபுரிந்த மேலும் ஐந்து ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T13:36:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அகழ்வு பணிகள்: இன்றும் எலும்புக்கூடுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-work-semmani-sindupathi-mass-grave-1784207954"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-work-semmani-sindupathi-mass-grave-1784207954</id>
            <summary type="text">செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம்(16.7.2026) 34 ஆவது நாளாக
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னில...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம்(16.7.2026) 34 ஆவது நாளாக
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்
நடைபெற்றது.
</p><p>
இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவற்றுள் 416
எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு
அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.</p><p>

இவற்றுள் 03 என்புத்தொகுதியானது சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளன.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p> அத்துடன் 01 குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.

130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c489de7b-19e4-4f3f-b83d-3d02c37a96d3/26-6a58dcb7bac21.webp' /></p><p>
</p><p>
அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட
வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,
சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T13:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் - தற்காலிக அதிகாரிகளால் எழுந்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-administration-is-paralyzed-suren-raghavan-1784206759"></link>
            <id>https://tamilwin.com/article/prison-administration-is-paralyzed-suren-raghavan-1784206759</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மிக உயரிய பதவிகளில் பெரும்பாலானவை
தற்காலிக அதிகாரிகளால் வகிக்கப்படுவதால் ஒட்டுமொத்த சிறை நிர்வாகமும்
பாரிய வீழ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மிக உயரிய பதவிகளில் பெரும்பாலானவை
தற்காலிக அதிகாரிகளால் வகிக்கப்படுவதால் ஒட்டுமொத்த சிறை நிர்வாகமும்
பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப
செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சுரேன் ராகவன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(16.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி</h2><p>
</p><p>
நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறைச்சாலைகள்
திணைக்களத்தின் உயரிய 6 பதவிகளில், 5 பதவிகள் (83 சதவீதம்) தற்காலிக
அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர், ஆணையாளர்
நாயகம் மற்றும் ஊடகப் பேச்சாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் தற்காலிக
அடிப்படையிலேயே கடமையாற்றுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அரச நிர்வாக விதிமுறைகளின்படி தற்காலிக அதிகாரிகளால் தீர்க்கமான முடிவுகளை
எடுக்க முடியாது என்பதால், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செயற்பாடுகள்
முடங்கியுள்ளன என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345462df-4a79-492b-ba12-3dc4c5d99de7/26-6a58d83a2fc93.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலைகளில் நிலவும் இட நெருக்கடி குறித்துப் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்த
அவர், தற்போதைய நிலைமைகளைப் பின்வருமாறு விவரித்துள்ளார்.
</p><p>
தண்டனை பெற்றவர்கள்: 10,662 பேர், சந்தேகநபர்கள்: 27,681 பேர்.
</p><p>
மொத்த சிறைக்கைதிகளில் 73 சதவீதத்தினர் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாத
சந்தேகநபர்களே என்பதுடன், தண்டனை பெற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகளவிலான
சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>கடுமையான பணிச்சுமை</h2><p>

நாட்டின் மொத்த சிறைக்கைதிகளில் 52 சதவீதத்தினர் மேல் மாகாண சிறைகளிலேயே
உள்ளனர்.

சிறைச்சாலை திணைக்களத்தில் நேரடிப் பாதுகாப்பில் ஈடுபடும் 4220
அதிகாரிகளே உள்ளனர். </p><p>சர்வதேச நியமங்களின்படி ஒரு அதிகாரிக்கு 8 கைதிகள் என்ற
அடிப்படையில் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

ஆனால், இலங்கையில் ஒரு அதிகாரி 30
கைதிகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளமையால் அவர்கள் கடுமையான
பணிச்சுமைக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகுகின்றனர் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f472570d-7cf8-4f0a-b6c1-3b9c12bcf78a/26-6a58d66a3ee80.webp' /></p><p>
</p><p>
இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக சுரேன் ராகவன் முன்வைத்த பரிந்துரைகளாக,
</p><p>
தண்டனை பெற்றவர்களையும், குற்றம் நிரூபிக்கப்படாத சந்தேகநபர்களையும் சர்வதேச
மனித உரிமை நெறிமுறைகளுக்கு அமைவாக வெவ்வேறான கட்டமைப்புகளில் தடுத்து வைக்க
வேண்டும்.
</p><p>
நாட்டின் 34 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில், நவீன 'டிஜிட்டல் சிறை
கண்காணிப்பு மையம்' ஒன்றை உடனடியாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை அமைகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T13:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகர்புற பாடசாலை மாணவர்களை குறி வைக்கும் போதைப்பொருள் வர்த்தகர்கள் - பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-addiction-on-the-rise-international-schools-1784206887"></link>
            <id>https://tamilwin.com/article/drug-addiction-on-the-rise-international-schools-1784206887</id>
            <summary type="text">நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் போதைப்பொருட்கள் பாவணை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் போதைப்பொருட்கள் பாவணை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இன்று(16.07.2026) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் காவல்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோகா தர்மசேன மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><h2>
பாடசாலை மாணவர்களின் தற்போதைய கெதி</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

மேல் மாகாணத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கைது நடவடிக்கையையும், போதைப்பொருள் பழக்கங்களும் சமீபக்காலமாக அதிகரித்து வருகின்றன.</p><p>

அனைத்து பாடசாலைகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான அவசியமான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக இலங்கை பொலிஸார் தற்போது சமூக பொலிஸ் அதிகாரிகளையும், சிவில் புலனாய்வு அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af780e71-a177-42df-9758-41a00beca25f/26-6a58dbaacf808.webp' /></p><p>
</p><p>
இதன்படி, "ரதம ஏக்தா" என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், 21 வயதுக்குட்பட்ட 8,459 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பாடசாலைச் செல்லும் அல்லது செல்லாத 21 வயதுக்குட்பட்ட 161 சிறுமிகளும் அடங்குவார்கள்.
</p><p>
இதேவேளை, சாதாரண தரப் பரீட்சையில் தோல்வியுற்ற மாணவர்கள், நகர்ப்புறங்களில் வாழும் ஏழ்மை குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் ஆகியவர்களே இவ்வாறு போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். </p><p>குறிப்பாக வெளிநாடுகளில் பெற்றோர்கள் இருக்கின்ற பிள்ளைகளும் இதில் அடங்குவார்கள்.
</p><p>
போதைக்கு அடிமையான இந்தக் குழந்தைகளை மறுவாழ்வு அளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.</p><p></p><p></p><p><br></p><p> 



</p>]]></content>
            <updated>2026-07-16T13:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-of-strong-winds-in-many-areas-1784206059"></link>
            <id>https://tamilwin.com/article/warning-of-strong-winds-in-many-areas-1784206059</id>
            <summary type="text">நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என&nbsp; குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p> 

மேலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ba00e4-855a-464c-b0c0-67c259a0ca13/26-6a58d57f16442.webp' /></p><p> </p><p>

அத்தோடு, குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் கடற்சார் சமூகத்திற்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T12:58:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பயன்பாட்டிற்கு திரும்பும் கிரேன் - தொடருந்து ஊழியர்களின் செயலுக்கு அரச தரப்பு பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crane-back-in-service-in-thalawakkala-1784204275"></link>
            <id>https://tamilwin.com/article/crane-back-in-service-in-thalawakkala-1784204275</id>
            <summary type="text">தலவாக்கலை புகையிரத நிலையத்தில் நீண்டகாலமாக பயன்பாடின்றி
காணப்பட்ட பாரம்பரிய தொடருந்து சரக்கு கிரேனை, அங்குள்ள தொடருந்து ஊழியர்கள் தங்களது தொழில்நுட்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை புகையிரத நிலையத்தில் நீண்டகாலமாக பயன்பாடின்றி
காணப்பட்ட பாரம்பரிய தொடருந்து சரக்கு கிரேனை, அங்குள்ள தொடருந்து ஊழியர்கள் தங்களது தொழில்நுட்ப திறமையை பயன்படுத்தி மீண்டும் இயங்கக்கூடிய
வகையில் சீரமைத்துள்ளனர்.</p><p>

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்படும் கொங்கிறீட்
கட்டைகள், தொடருந்து சிலிப்பர்கள் உள்ளிட்ட கனரக
பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் இந்த கிரேன் 
பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>கிரேன் பயன்பாடு</h2><p>
</p><p>
இதன் மூலம், பெக்கோ இயந்திரங்கள், நவீன ஹைட்ராலிக் கிரேன்கள் மற்றும் அவற்றை
இயக்குவதற்கான எரிபொருள், வாடகை, போக்குவரத்து மற்றும் தொழிலாளர்
செலவுகள் போன்றவற்றில் தொடருந்து திணைக்களத்திற்கு பல இலட்சம் ரூபா
சேமிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், அனைத்து தொடருந்து நிலையங்களுக்கும் பாரிய நவீன இயந்திரங்களை கொண்டு
செல்வது நடைமுறையில் சிரமமானதாக இருக்கும் நிலையில், அங்கு ஏற்கனவே உள்ள பழைய
வசதிகளை புதுப்பித்து பயன்படுத்துவது மிகவும் பயனுள்ள தீர்வாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26105062-6dfd-4bfe-8500-eac4537c0b96/26-6a58cf36a614f.webp' /></p><p>

இந்த முயற்சி, அரச சொத்துக்களை பாதுகாத்து அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக்
கொண்டுவரும் சிறந்த முன்னுதாரணமாக மட்டுமல்லாமல், இருப்பதை திறமையாக
பயன்படுத்தினால் புதிய முதலீடுகளை குறைக்க முடியும் என்ற செய்தியையும்
சமூகத்திற்கு எடுத்துக்காட்டுகிறது.
</p><p>
குறிப்பாக, எரிபொருள் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இலங்கை போன்ற
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு இவ்வாறான பழைய இயந்திரங்களை நவீன
தேவைகளுக்கு ஏற்ப மறுசீரமைத்து பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகவும்
சுற்றுச்சூழல் ரீதியாகவும் பெரும் நன்மைகளை வழங்கும் என நிபுணர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>தொடருந்து நிலைய ஊழியர்கள்</h2><p>
</p><p>
தலவாக்கலை தொடருந்து நிலைய ஊழியர்களின் இந்த முன்மாதிரியான செயல், வளங்களை
வீணாக்காமல் பாதுகாத்து பயன்படுத்தும் பண்பையும், குறைந்த செலவில் அதிக பயனைப்
பெறும் அரச நிர்வாகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் பார்க்கப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பில் தொடருந்து திணைக்களத்தின் அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
ஆரம்ப காலத்தில் குதிரைகள், பாரிய இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை இறக்குவதற்காக
பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96dc4d45-fa9d-4d83-a5ad-82a168d22c4d/26-6a58cf378b860.webp' /></p><p> </p><p>ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நவீன வசதிகள் காரணமாக
இவற்றின் பயன்பாடு கைவிடப்பட்டு காணப்பட்டன.

எனினும் தலவாக்கலை உள்ள இந்த கிரேன் இயந்திரத்தினை மீண்டும் செயற்படுத்த தொழிநுட்பவியலாளர் முயற்சி எடுத்திருப்பது மிகவும் பாராட்டக்கூடிய விடயமே.</p><p>

காரணம் ஒரு கொங்கிறீட் சிலிப்பர் கட்டையினை ஏற்றுவதற்கு சுமார் 8 பேர் தேவை. ஆனால் இன்று ஐந்து சிலிப்பர்கட்டைகளை
எந்தவித சிரமமுமின்றி மிகவும் இலவாக ஏற்றுவதற்கு வசதிகள் இதன் மூலம்
கிடைக்கின்றன.</p><p>

இதனூடாக ஐந்து டொன் எடை கொண்ட பாரமான பொருட்களை கூட இலகுவாக
ஏற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T12:55:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mubarak-appoint-new-secretary-ninthavor-p-s-1784200004"></link>
            <id>https://tamilwin.com/article/mubarak-appoint-new-secretary-ninthavor-p-s-1784200004</id>
            <summary type="text">நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ
சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி. முபாறக் நிந்தவூர் பிரதேச
சபையில் உத்தியோகபூர்வமாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ
சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி. முபாறக் நிந்தவூர் பிரதேச
சபையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.</p><p>

இந்த நிகழ்வு நேற்று(15.07.2026) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம்
முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.</p><h2>கடமை&nbsp;பொறுப்பேற்பு</h2><p> </p><p>இதன்போது புதிய செயலாளருக்கு பிரதேச சபையின்
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் வாழ்த்துகளும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
தன் கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, புதிய செயலாளர் பிரதேச சபையின்
உத்தியோகத்தர்களுடன் விசேட அறிமுக அமர்விலும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b7acc5-bd64-4ced-b6bd-b5d698a31694/26-6a58bce86249d.webp' /></p><p>
இதன்போது, சபையின் தற்போதைய நிர்வாகச் செயற்பாடுகள், பொதுமக்களுக்கு
வழங்கப்படும் சேவைகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித்
திட்டங்கள் மற்றும் எதிர்கால நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கருத்துப்
பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>இந்த கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட புதிய செயலாளர் ஏ.ஜி.
முபாறக், </p><p>பொதுமக்களுக்கு திறன் மிக்க, வெளிப்படையான மற்றும்
பொறுப்புணர்வுமிக்க சேவையினை தங்குதடையின்றி வழங்குவதற்காக அனைத்து
உத்தியோகத்தர்களும் தங்களுக்குள் ஒருங்கிணைந்து, அர்ப்பணிப்புடன் செயற்பட
வேண்டியதன் அவசியத்தை பலமாக வலியுறுத்தியுள்ளார்.</p><p>
இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாக அதிகாரிகள், திணைக்களத்
தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T12:49:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிலிருந்து புறப்பட்ட குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியில் நடந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-killed-in-bus-collision-in-batticaloa-1784189171"></link>
            <id>https://tamilwin.com/article/one-killed-in-bus-collision-in-batticaloa-1784189171</id>
            <summary type="text">மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (16.07.2026) இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்தச் சம்பவம் இன்று (16.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடமைக்காக பாண்டிருப்பில் அமைந்துள்ள தனது இல்லத்திலிருந்து களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</h2><p>

உயிரிழந்தவர், களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த மட்டக்களப்பு நாவற்குடா, இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed44743c-debe-4269-9c99-e8afdfc42425/26-6a58918acd161.webp' /></p><p> </p><p>திருமணத்தின் பின்னர் அவர் பாண்டிருப்பில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdaa39c9-98b9-4a0b-9ba1-7c689876d5b9/26-6a58918bb9949.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T12:45:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி! இடமாற்றம் தொடர்பான செய்திக்கு எதிர்ப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-tens-situation-1784195614"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-tens-situation-1784195614</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி&amp;nbsp; இடமாற்றப்பட்ட நிலையில், அவர் இடமாற்றப்பட்ட சிறைச்சால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி&nbsp; இடமாற்றப்பட்ட நிலையில், அவர் இடமாற்றப்பட்ட சிறைச்சாலையின் பெயரை வெளியிட்டமைக்கு சிறை அதிகாரிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p>கலவரத்தின் போது,&nbsp; சிறைச்சாலைக் கதவின் சிறிய இடைவெளியின் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி இடமாற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.&nbsp;</p><p></p><h2>பாதுகாப்பை அதிகரிக்கவும்..</h2><p>சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டதாக தெரிவித்து,&nbsp; குறித்த அதிகாரி இடமாற்றப்பட்ட சிறைச்சாலை தொடர்பான விபரங்கள் செய்திகளாக வெளியாகியிருந்தன.&nbsp;</p><p>இந்த நிலையில்,&nbsp; குறித்த தகவல்கள் வெளியானமைக்கு தாம் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக சிறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa11f1cb-f5bf-4226-a53e-2745707d97f8/26-6a58aecc6eb89.webp' /></p><p>நிகழவிருந்த ஒரு பேரழிவைத் தடுப்பதற்காக, தனது உயிரைப் பணயம் வைத்து நீர்கொழும்பு சிறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய, தமது சக பொலிஸ் அதிகாரிக்கு தற்போது மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக குறித்த அதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரியின் பாதுகாப்பை தற்போது இருப்பதை விடவும் அதிகரிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T12:32:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியன்மார் கடற்பரப்பில் கவிழ்ந்த இரு படகுகள் - 500-ற்கும் மேற்ப்பட்ட கைதிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/more-than-500-feared-dead-myanmar-1784204667"></link>
            <id>https://tamilwin.com/article/more-than-500-feared-dead-myanmar-1784204667</id>
            <summary type="text">வங்காள விரிகுடாவில் மியான்மர் கடற்கரைக்கு அருகில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்காள விரிகுடாவில் மியான்மர் கடற்கரைக்கு அருகில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) இன்று(16.07.2026) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தத் துயரச் சம்பவம் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>

காணாமல் போன 500 அகதிகள்</h2><p>
இந்தக் கடல்வழிப் பாதையில், சமீபகால வரலாற்றில் இதுவே மிக மோசமான மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய கடல்சார் பேரழிவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

கிடைத்த தகவல்களின்படி, அந்த இரண்டு படகுகளும் ஜூன் மாத இறுதியில் மியான்மரின் மேற்கு ராகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290fffed-b36f-452e-bd30-38dc00d9454f/26-6a58ce299d06f.webp' /></p><p>
</p><p>
இதன்போது, அந்த படகு சுமார் 250 பேரை ஏற்றிச் சென்ற முதல் படகு, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மற்ற படகுகளுடனான தொடர்பை இழந்துள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து சுமார் 280 பேரை ஏற்றிச் சென்ற இரண்டாவது படகு, ஜூலை 8 ஆம் திகதி அல்லது அதற்குச் சற்று முன்னதாக மியான்மரின் அயேயார்வாடி ஆற்றுக் கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
</p><p>
வழக்கமான படகுப் பயணக் காலத்திற்கு வெளியேயும், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கிற்கு மத்தியிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த அபாயகரமான பயணம், ஆபத்தை மேலும் அதிகரித்துள்ளது. </p><h2>

உயிரிழப்பை உறுதிப்படுத்திய ஜக்கிய நாடுகள் சபை</h2><p>
அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் உயிரிழப்பு மிக அதிகமாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
</p><p>
பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் மியான்மரில் குடியுரிமையற்ற முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியர்கள் ஆவர். அவர்களில் சிலர், வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள நெரிசல் மிகுந்த அகதிகள் முகாம்களில் இருந்து ரகைன் மாநிலத்திற்குத் திரும்பி, பின்னர் இந்த அபாயகரமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83672d95-7b0f-4701-9c87-a990687f09cc/26-6a58ce2a66d15.webp' /></p><p> </p><p>

மியான்மரின் ரகைன் மாநிலத்தில் உள்ள ரோஹிங்கிய மக்கள், பல தசாப்தங்களாக அரசின் ஆதரவுடன் கூடிய துன்புறுத்தலுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை அமெரிக்கா இனப்படுகொலை என்று வகைப்படுத்தியுள்ளது. 2017-ல் மியான்மர் இராணுவம் மேற்கொண்ட ஒடுக்குமுறைக்குப் பின்னர், பத்து லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியர்கள் வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

அதே நேரத்தில் மேலும் 630,000 பேர் ரகைன் மாநிலத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்கின்றனர். </p><p>வங்காளதேசத்தில் உள்ள முகாம்களில் நிலவும் குறைந்த வாய்ப்புகளும், காக்ஸ் பஜார் முகாம்களில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளதுடன், அகதிகளை இந்த அபாயகரமான பயணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. </p><h2>


விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கை</h2><p>

இந்த சமீபத்திய துயரச் சம்பவத்திற்கு முன்பு, 2026-ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். </p><p>

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையரின் கூற்றுப்படி,

 2025-ஆம் ஆண்டில் சுமார் 6,500 பேர் அந்தப் பாதையைக் கடக்க முயன்றுள்ளனர், அவர்களில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். 

இதுவே இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79b1b3c1-bc28-4396-83c1-0b7be1ff07b3/26-6a58ce2b16722.webp' /></p><p>
</p><p>
 தொடரும் மோதலும், பாதுகாப்பான மாற்று வழிகள் இல்லாததும், கடலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களின் உயிர்களைப் பறிக்க வழிவகுக்கிறது.</p><p>

 சர்வதேச இடம்பெயர்வு அமைப்பும், ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையரும் (UNHCR), தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், அகதிகளுக்குப் பாதுகாப்பும் கவனிப்பும் வழங்கவும், மனிதக் கடத்தல் வலையமைப்புகளை ஒடுக்கவும் பிராந்திய மற்றும் சர்வதேச சமூகத்திடம் அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T12:27:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/financial-aid-scheme-for-high-achieving-students-1784203761"></link>
            <id>https://tamilwin.com/article/financial-aid-scheme-for-high-achieving-students-1784203761</id>
            <summary type="text">2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான &#039;நிபுண சவிய&#039; நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கான காலஅவகாசம் எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான 'நிபுண சவிய' நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கான காலஅவகாசம் எதிர்வரும் அக்டோபர் 30ஆம் திகதி முடிவடைவதாக ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை அறிவித்துள்ளது.
</p><p>
குறித்த நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையவழியில் மாத்திரம் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விபரங்கள்</h2><p>
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் <a href="http://www.etfb.lk" target="_blank">www.etfb.lk</a> என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc35ce1-ecd6-4190-98ed-5f01799ebd4f/26-6a58cdd492c79.webp' /></p><p>
</p><p>
அதற்கமைய தொழில் மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட, தேசிய தொழில் தகைமை (NVQ) மட்டம் 3, 4 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 100 தெரிவுசெய்யப்பட்ட பாடநெறிகளில் ஒன்றைத் தொடர்வதற்கு, அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T12:26:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஐவரில் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-in-five-people-in-sri-lanka-suffer-from-hunger-1784201839"></link>
            <id>https://tamilwin.com/article/one-in-five-people-in-sri-lanka-suffer-from-hunger-1784201839</id>
            <summary type="text">இலங்கையில் தற்போதைய நிலையிலும் ஐவரில் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம் தொடர்பாக உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போதைய நிலையிலும் ஐவரில் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம் தொடர்பாக உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.
</p><p>
இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதியளவான ஊட்டச் சத்துள்ள உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஜியோர்கே சர்கீசியன் தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>பொருளாதார நெருக்கடிக்கு முன்</h2><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பொருளாதார ஸ்திரத்தன்மை, பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல் ஆகிய இரண்டு விடயங்களும் ஒன்றல்ல என்பதைப் பல இலங்கை மக்கள் அன்றாடம் உணர்ந்து வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abacaf5a-a812-4382-973b-b4743b5b831b/26-6a58c85dc408a.webp' /></p><p>தனிநபர் வருமானம் ஓரளவுக்கு ஸ்திரநிலைக்கு மீண்டு வந்தாலும், பலரின் ஊதியம் இன்னும் பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டவில்லை. </p><p>மேலும், தொழில் சந்தை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. குறிப்பாகப் பெண்கள் இதில் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.</p><h2>தொழில் வாய்ப்புகளை உருவாக்க</h2><p>இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருந்தாலும், பொருளாதாரத்தை முழுமையாக மீளக்கட்டியெழுப்புவதற்கான பயணம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. </p><p>'திறன்மிக்க பொருளாதார சீர்திருத்தங்கள்' தடையின்றித் தொடர வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/692ff088-9b0a-4c99-a0a5-f39c73745be7/26-6a58c85e901d2.webp' /></p><p> </p><p>டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி போன்றவை இலங்கையின் பொருளாதார மீட்புப் பயணத்தைச் சவாலானதாக மாற்றியுள்ளது. எனவே, பொருளாதார மீட்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது.
</p><p>
பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அதற்காக தனியார் துறையின் பங்களிப்புடன் கூடிய தொழில் வாய்ப்புகளைத் துரிதமாக உருவாக்க வேண்டுமென்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LlK-o8yTBo0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-16T12:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்தோம் - டக்ளஸ் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/freed-lands-fought-for-the-disappeared-1784198394"></link>
            <id>https://tamilwin.com/article/freed-lands-fought-for-the-disappeared-1784198394</id>
            <summary type="text">நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்
செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றையதினம்(16.07.2026) நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பல ஏக்கர் காணிகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு
வலயமாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நாம் அரசாங்கத்துடன் பேசி
விடுவித்திருந்தோம்.
</p><p>ரணில் விக்ரமசிங்க ஆட்சி காலத்திலும் பெருமளவான காணிகளை
விடுத்திருந்தோம். மேலும் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை
முன்னெடுத்த வேளை தேர்தல் அறிவிக்கப்பட்டமையால், அவற்றை விடுவிக்க முடியாமல்
போய்விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac86c95e-51d2-4b2a-9668-daa88a614b70/26-6a58b87b331ae.webp' /></p><p>
</p><p>
ரணிலின் ஆட்சி காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த
காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீளக் கையளிக்கவில்லை.
</p><p>
அதுபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை நாமே முதலில்
தீர்க்க முயற்சித்தோம்.
</p><p>
எனது தம்பி காணாமல் ஆக்கப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகள் எனக்கும்
தெரியும்.

யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் 1997ஆம் ஆண்டு கால
பகுதியில் நாமும் யாழ்ப்பாணம் வந்தோம்.</p><p></p><h2>காணாமல் ஆக்கப்பட்டோர்</h2><p> </p><p>அப்போது காணாமல்போனோர் தொடர்பான விபரங்களை சேர்த்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்து சங்கம் ஒன்றினை உருவாக்கி
போராட்டங்களை முன்னெடுத்தோம். </p><p>அக்காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சுமார்
600 பேரின் பெயர் விபரங்களை அப்போதைய சந்திரிக்கா அரசாங்கத்திடம் கையளித்தோம். மிருசுவில் படுகொலை , கிருஷாந்தி படுகொலை, சாரதாம்பாள் படுகொலை
தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f759716-eb55-478b-afad-dc8520c1313f/26-6a58b87bdab21.webp' /></p><p> சாட்சியங்களை பாதுகாப்பாக கொழும்பு
அழைத்து சென்று சாட்சியம் அளிக்க வைத்தோம்.

இவ்வாறான செயற்பாடுகளை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப்புலிகள்
பின்னாட்களில் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி யே காரணம் என மக்கள்
மத்தியில் பொய்களை பரப்ப தொடங்கினர்.</p><p>

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக ஈ.பி.டி.பி இருந்தால், அதற்கான சான்றுகள்
ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றங்களை நாடி நீதியினை பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஈ.பி.டி.பி முயற்சித்த
காலத்தில் கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போன்று சில தரப்புக்கள்
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளை தமது அரசியல் நோக்கத்திற்காக கையாண்டு
அதனை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சினையாக வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T12:17:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2022ஆம் ஆண்டு ஆட்சிக்கு வர இதுவே காரணம்..! ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-never-prepared-alone-take-nation-in-2022-ranil-1784203688"></link>
            <id>https://tamilwin.com/article/i-never-prepared-alone-take-nation-in-2022-ranil-1784203688</id>
            <summary type="text">2022ஆம் ஆண்டு நெருக்கடியின் போது நாட்டைத் தனியாகப் பொறுப்பேற்க ஒருபோதும் தயாராகவில்லை, ஆனால் அது எனது பொறுப்பு என்பதால் பொறுபேற்றேன் என முன்னாள் ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2022ஆம் ஆண்டு நெருக்கடியின் போது நாட்டைத் தனியாகப் பொறுப்பேற்க ஒருபோதும் தயாராகவில்லை, ஆனால் அது எனது பொறுப்பு என்பதால் பொறுபேற்றேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>

ஐக்கிய தேசியக் கட்சியின் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>

யாரும் முன்வரவில்லை..</h2><p>

கடந்த 2022ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ச ஆட்சி மக்களால் கவிழ்க்கப்பட்ட பொழுது அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்று பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbfc42c3-e409-4d49-a656-6aacc521b8a1/26-6a58c9fa6c6a5.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், </p><p> 

“அந்த காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்க நான் முதல் தேர்வாக இருக்கவில்லை.
 வேறு யாரும் அதைச் செய்ய முன்வராததால் நான் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. நான் நான்காவது தேர்வாக இருந்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T12:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[உரிமையாளர் கண்ணயர்ந்த நேரத்தில் நடந்த திருட்டு - பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mobile-phone-theft-in-thalawakkala-cctv-footage-1784201638"></link>
            <id>https://tamilwin.com/article/mobile-phone-theft-in-thalawakkala-cctv-footage-1784201638</id>
            <summary type="text">தலவாக்கலை பிரதான நகரில் கைபேசிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் கடையில் இல்லாத நேரத்தில் அவருடைய கைபேசி திருடப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பிரதான நகரில் கைபேசிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் கடையில் இல்லாத நேரத்தில் அவருடைய கைபேசி திருடப்பட்டுள்ளது.</p><p>

இந்த சம்பவம் இன்று(16.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


பொதுமக்களிடம் கோரல்</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 


தலவாக்கலை பிரதான நகரில் கைபேசிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடையில் உரிமையாளர் மேசையில் இருந்த தொலைபேசியை கைகக்கு வாடிக்கையாளர் போன்று வந்த ஒருவர் திருடிச் செல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13396c36-3d45-4516-aa18-02a55e51ac17/26-6a58c46eb7b03.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கடைக்கு வந்தவர் கடையில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு அந்த நபர் ஒருமுறை கடையை விட்டு வெளியேறி, இரண்டாவது முறையாக கைபேசியைத் திருடியதை பாதுகாப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது. </p><p>

சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு கடையின் உரிமையாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-16T11:46:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் இலங்கையரின் நிறுவனத்தில் நடந்த மோசடி - பெருந்தொகை டொலர் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-fined-in-new-zealand-1784180349"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-fined-in-new-zealand-1784180349</id>
            <summary type="text">நியூசிலாந்தில் வாகனத்தின் ஓடோமீட்டர் (Odometer) அளவை மாற்றியமைத்து மோசடியாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், இலங்கையருக்கு சொந்தமான கார் விற்பனை நிறுவனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தில் வாகனத்தின் ஓடோமீட்டர் (Odometer) அளவை மாற்றியமைத்து மோசடியாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், இலங்கையருக்கு சொந்தமான கார் விற்பனை நிறுவனம் ஒன்று தண்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நியூசிலாந்து அதிகாரிகளின் தகவலுக்கமைய, Sachis Holdings Ltd நிறுவனத்தினால் நடத்தப்படும் கார்போரியம் வாகன விற்பனை நிலையம், 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டொயோட்டா RAV4 ரக வாகனம் ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.</p><p></p><p>
</p><p>
ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த குறித்த வாகனம், வழமையான சேவைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதன் ஓடோமீட்டர் பதிவிற்கும் சேவைப் பதிவேடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது.
</p><h2><b>
வாகனம்&nbsp;கொள்வனவு </b></h2><p>விசாரணையில், குறித்த வாகனம் ஒக்லாந்து வாகன ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டபோது 150,031 கிலோமீற்றராக அதன் பயணத் தூரம் காணப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8dc6ddf-ce74-4bd7-b6e8-a418eac82326/26-6a5878cb87adc.webp' /></p><p>வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட்டபோது 119,244 கிலோமீற்றராகக் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. </p><p>

சுமார் 30,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் போலியாகக் குறைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
நியூசிலாந்தின் வணிக, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு, நடத்திய விசாரணையை தொடர்ந்து, மோட்டார் வாகன விற்பனைச் சட்டத்தின் கீழ் ஓடோமீட்டர் மோசடி மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்டது.
</p><h3><b>
அபராதம்&nbsp;விதிப்பு</b></h3><p>தண்டனை வழங்குவதற்கு முன்னதாக, குறித்த வாகனத்தை ஆரம்பத்தில் விற்பனை செய்த அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு மீண்டும் கொள்வனவு செய்ய கார்போரியம் நிறுவனம் ஒப்புக்கொண்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41735a5e-0e30-4b1e-ae72-e91e7b7f0860/26-6a5878cc53d82.webp' /></p><p>அத்துடன், குறித்த நிறுவனத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 1,000 நியூசிலாந்து டொலர்களை இழப்பீடாக வழங்குமாறும் நிறுவனத்தின் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HdfGufOQeyI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-16T11:08:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பம் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/application-for-annual-transfer-for-teachers-1784198944"></link>
            <id>https://tamilwin.com/article/application-for-annual-transfer-for-teachers-1784198944</id>
            <summary type="text">இந்த ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
</p><p>
இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் இன்று (16) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையதளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
</p><p></p><h2>நேரடியாக அமைச்சிற்கு கையளிக்கும் விண்ணப்பங்கள்</h2><p>
இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று, ஆசிரியர்கள் தமது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed399a90-c1da-421c-8d2d-369c0ac48888/26-6a58baf849d48.webp' /></p><p>

ஆசிரியர்கள் நேரடியாக அமைச்சிற்கு வந்து கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T11:06:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anawilundawa-railway-after-temporary-closure-1784190532"></link>
            <id>https://tamilwin.com/article/anawilundawa-railway-after-temporary-closure-1784190532</id>
            <summary type="text">மூடப்பட்டிருந்த அனவிலுண்டாவ தொடருந்து துணை நிலையம், மாற்று நிலைய அதிகாரி நியமனத்துடன் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என தொடருந்து நிலைய அதிகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூடப்பட்டிருந்த அனவிலுண்டாவ தொடருந்து துணை நிலையம், மாற்று நிலைய அதிகாரி நியமனத்துடன் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என தொடருந்து நிலைய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

அனவிலுண்டாவ பகுதியில் பணியாற்றி வந்த துணை நிலைய அதிகாரியின் பதவி விலகலை தொடர்ந்து, அந்நிலையத்தை தற்காலிகமாக மூட தொடருந்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. </p><p>

இருப்பினும், அந்நிலையத்திற்கு ஒரு மாற்று நிலைய அதிகாரியை நியமித்து, பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்க திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><h2>

தொடருந்து சேவை ஆரம்பம்</h2><p>

இதற்கிடையில், பல மாதங்களாக மூடப்பட்டிருந்த அக்குரலா மற்றும் அந்தடோலா தொடருந்து துணை நிலையங்களில் சேவைகளை மீட்டெடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/306f5447-c312-498a-b5cf-d47bb4b8dfbd/26-6a58ba6629850.webp' /></p><p> </p><p>

பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்காக, மாற்று நிலைய அதிகாரிகள் இன்று(16) அல்லது நாளை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

25 துணை நிலையங்களுக்குப் புதிய துணை நிலைய அதிகாரிகளை நியமிப்பதற்காக, 2025 ஆகஸ்ட் 15 அன்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், ஆனால் அந்த நியமனப் பணி இன்னும் நிறைவடையவில்லை என்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
உயர் நிர்வாகத்தின் திறமையின்மையால், தற்போது பணியில் உள்ள தொடருந்து நிலையப் பொறுப்பாளர்களை அதிக செலவில் காலி இடங்களை நிரப்பப் பணியமர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-16T11:03:20+00:00</updated>
        </entry>
    </feed>
