<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-17T06:20:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-easter-attack-1784268227"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-easter-attack-1784268227</id>
            <summary type="text">&amp;nbsp;உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலைமையில் செயற்பட்ட பிரதான குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவும் இருந்துள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி அதிர்ச்சி தகவல்களை வெயிட்டுள்ளது. அதன் முழு விபரங்கள்...</p><p>
அன்றைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சுக் கட்டடத்தின் மேல் மாடியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், காலை ஒன்பது மணிக்கு குறித்த குழு கூடியுள்ளது. </p><p>அந்தக் குழுவில் சரத் வீரசேகர, ஜெனரல் ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன, சி.டி. விக்ரமரத்ன அன்று பொலிஸ் மா அதிபர் (IGP) ஆகியோரே முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலங்கையின் பொலிஸ் மா அதிபர் அன்று குற்றவாளிகளைப் பிடிக்கும் இடத்தில் இருக்கவில்லை. </p><h2>


</h2><p></p><h2>சாட்சியங்களை அழித்த விதம்</h2><p>சீருடையை அணிந்து கொண்டு சரத் வீரசேகர போன்றவர்களுடன் இணைந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பெருமளவிலான சாட்சியங்களை அழித்துள்ளார்.</p><p>அதில் முக்கியமானது உயிருள்ள சாட்சியாக இருந்த 'சாரா ஜஸ்மின்' இறந்துவிட்டார் என்று காட்டுவதற்காக, மூன்றாவது டி.என்.ஏ (DNA) பரிசோதனையைச் செய்வதற்கு முன்பு முதலாவது, இரண்டாவது என்று சிலவற்றை செய்துள்ளார்கள். </p><p>
இந்தக் கும்பல் நடத்தும் கூட்டத்திற்கு வேறு யாருமே செல்ல முடியாது. அன்றைய தினம் அந்தக் கட்டடத்திற்கு சுரேஷ் சலே வந்தவுடன், அனைத்துக் கதவுகளும் முழுமையாக மூடப்படும். இராணுவம் நிறுத்தப்படும். </p><p>இந்தக் கலந்துரையாடல் முடியும் வரை கமாண்டோக்கள் (Commandos) கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். அந்தக் கலந்துரையாடலில்தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. </p><p>சாரா ஜஸ்மின் இறந்துவிட்டார் என்பதை காட்ட வேண்டும் என்பதுதான் சுரேஷ் சலேயின் தீர்மானமாக இருந்தது. 
எந்த வழியில் இவர்கள் சூழ்ச்சி செய்தாலும், </p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துச் சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன்னும் மிக வலுவான, உறுதியான சான்றுகளாக இருக்கின்றன. இதனால் தான் சலேயின் மனைவி இப்போது காணாமல் போயுள்ளார்.</p><h2>
 ஜகத் அல்விசின் வெள்ளை வான் கடத்தல்</h2><p>மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். வெள்ளை வான் கடத்தல்களைச் செய்தவர் தான் இவர். ஜகத் அல்விஸ்தான் நேரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். </p><p>ஜகத் அல்விஸ்தான் கோட்டாபயவின் தேவைக்கேற்ப போத்தல ஜயந்த போன்றவர்களின் கை-கால்களை உடைக்க உத்தரவிட்டார். கோட்டாபயவின் மிக நெருங்கிய நண்பன், அத்தனை விசுவாசி.
</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எந்தெந்தச் சாட்சியங்களை அழிப்பது? எந்தச் சாட்சியங்களை நாம் புதிதாகக் கொண்டு வருவது என்று ஒவ்வொறு திங்கட்கிழமையும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e331bf-ad28-4213-b6c8-3c315a717561/26-6a59c5c54a462.webp' /></p><p>இப்படித்தான் நௌபர் மௌலவி போன்றவர்களை முழுமையாக கோர்த்து விட்டு, 33 ஆயிரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். அதற்குப் பொருத்தமாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தும் அவர்களுக்கு தேவையான ஆட்களை கண்டு பிடித்தார்கள். </p><p> சுரேஷ் சலே போன்றவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சென்று விரிவுரைகள்நடத்தினார்கள். விரிவுரைகள் நடத்திய ஆட்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வரவழைத்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். </p><p>இதை ஒரு மிக கட்சிதமான நாடகமாக உருவாக்கினார்கள். 
 குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுரேஷ் சலே, சி.டி. விக்ரமரத்ன, ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன ஆகியோர் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் திங்கட்கிழமை காலையில் நடத்திய அந்த இரகசியக் கலந்துரையாடல்கள் என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணித் தகராறால் இளம் குடும்பஸ்தர் கொலை! மனைவியின் சகோதரனால் பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-family-man-murdered-wife-s-brother-kills-him-1784267766"></link>
            <id>https://tamilwin.com/article/young-family-man-murdered-wife-s-brother-kills-him-1784267766</id>
            <summary type="text">அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம்
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம்
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று(16.07.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச்
சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய</h2><p>

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து
இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7915b19d-fe52-4055-81c7-5df34f825751/26-6a59c6c0e3de0.webp' /></p><p>
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி சந்தேகநபர், மோதலின் போது கூரிய
ஆயுதத்தால் தாக்கியதில் அவரின் மைத்துனர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் எம்.பி முன்வைத்த கோரிக்கைகள் - விரைவில் நடைமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/demands-made-by-imran-mp-1784267937"></link>
            <id>https://tamilwin.com/article/demands-made-by-imran-mp-1784267937</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கடலரிப்பு விவகாரம், இராணுவத்தின்
வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் விவசாயிகளின் வரிப் பிரச்சினை
உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கடலரிப்பு விவகாரம், இராணுவத்தின்
வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் விவசாயிகளின் வரிப் பிரச்சினை
உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருப்
கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

நேற்று(16.07.2026) வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா
தலைமையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே
நாடாளுமன்ற உறுப்பினரால் இப்பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>
முன்வைக்கப்பட்ட பிரேரணைகள்</h2><p>
இதன்போது, சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் விபரங்கள் வருமாறு, </p><p>


1. கிண்ணியா - உப்பாறு கரையோர கடலரிப்பை தடுக்க அவசர நடவடிக்கை
"கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கரையோரப் பகுதி மிக வேகமாக
கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.</p><p> 

தற்போது இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள
வீதியானது 3-வது வீதியாகும். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இரண்டு வீதிகள்
ஏற்கனவே கடலரிப்பினால் முற்றாகச் சேதமடைந்து கடலுக்குள் மூழ்கிவிட்டன.</p><p> </p><p>

எனவே,
தற்போதைய வீதியும் சேதமடைவதற்கு முன்னர், கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு
பாலம் வரையான பகுதியில் கடலரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தரத் தடுப்புச் சுவரினை
அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d086fdf6-2233-4bbd-b8a9-837f956aef35/26-6a59c586b62be.webp' /></p><p>
2. சூரங்கல் இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரிக்கை
"கிண்ணியா சூரங்கல் பிரதான வீதியில் இரண்டு தனிநபர்களுக்கும்,
பள்ளிவாயலொன்றுக்கும் சொந்தமான 4 ஏக்கர் காணியில் இராணுவ முகாம்
அமைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த காணிகளுக்கு முன்னர் வாடகை செலுத்தப்பட்ட போதிலும், கடந்த 2014 ஆம் ஆண்டு
குறித்த காணியை இராணுவத் தேவைக்காகச் சுவீகரிப்பதாக வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்டதன் பின்னர் வாடகை செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p> 

எனவே,
அந்த வர்த்தமானியினை இரத்துச் செய்து, காணியை அதன் உண்மையான உரிமையாளர்களிடம்
ஒப்படைக்க வேண்டும் அல்லது அதற்குப் பதிலாகப் பொருத்தமான மாற்றுக்காணிகளை
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."</p><p>

3. முத்துநகர் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு
"நீண்டகாலமாக முத்துநகர் கிராமத்தில் குடியிருந்து, பின்னர் அங்கிருந்து
வெளியேற்றப்பட்ட பல குடும்பங்கள் தற்பொழுது தங்குமிட வசதியின்றிப்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அந்தக் குடும்பங்கள்
மீண்டும் சுமுகமாக வாழ்வதற்கு ஏதுவாக, அவர்களுக்குக் குடியிருப்பதற்காக மாற்று
இடங்களில் காணிகளை வழங்குவதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a3bed78-d03d-4ffc-8040-e9b579b6c7c5/26-6a59c5876cdee.webp' /></p><p>4. ஜெயந்திபுர விவசாயிகளுக்கு வரி செலுத்த கால அவகாசம் வழங்குக!
"கந்தளாய் பிரதேச செயலக பிரிவின் ஜெயந்திபுர கிராம சேவகர் பிரிவில், காணி
சீர்திருத்த ஆணைக்குழுவினால் விவசாய நோக்கத்திற்காக 58 பேருக்குக் காணிகள்
வழங்கப்பட்டிருந்தன.</p><p> 

எனினும், கடந்த சில வருடங்களாக அவர்கள் வரி செலுத்தவில்லை
எனக் கூறி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வட்டி மற்றும் வரிப்பணத்தை இம்மாத
இறுதிக்குள் செலுத்துமாறு கந்தளாய் உதவி காணி ஆணையாளரினால் கடிதம் மூலம்
உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்தத் திடீர் உத்தரவு
விவசாயிகளைப் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.</p><p>எனவே, இந்த ஏழை விவசாயிகள் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால
எல்லையை நீடித்துக் கொடுப்பதோடு, நிலுவைகளைச் சலுகை மற்றும் சகாய அடிப்படையில்
தவணை முறையில் செலுத்துவதற்கும் ஆவணம் செய்ய வேண்டும்."
</p><p>
இந்த கலந்துரையாடலில் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துக் கொண்டுள்ளதுடன், 
நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருபினால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணைகள்
தொடர்பில் ஆராய்ந்து தகுந்த தீர்வுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T06:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய உயர் பொலிஸ் அதிகாரியின் மரணம் - பின்னணி குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-police-officers-death-1784266119"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-police-officers-death-1784266119</id>
            <summary type="text">இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன&amp;nbsp; உயிரிழந்துள்ளமை பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன&nbsp; உயிரிழந்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விக்ரமரத்ன தனது மெய்க்காப்பாளரின் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;&nbsp;</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">துப்பாக்கிச்சூடு&nbsp;</b></p><p>

இன்று காலை 7.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>உயிரிழந்த சி.டி. விக்ரமரத்னவின் உடல் முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dc66dbd-dfd6-4873-894c-fef15dcad288/26-6a59bfaaef62c.webp' />&nbsp;&nbsp;</p><p>

தனது புதல்வர் ஒருவரின் வழக்கு விவகாரம் தொடர்பான கவலை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாகவே சி.டி. விக்ரமரத்ன இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

எனினும் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் சி.டி. விக்ரமரத்னவுக்கும் தொடர்புகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. </p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஆதாரங்களை அழிப்பதற்காக, கோட்டாபாய தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாக சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p> </p><h3><b>

கோட்டபாய தலைமையிலான அரசாங்கம்</b></h3><p>அதற்கமைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய அதிகாரிகள் குழு ஒன்று திங்கள்கிழமை தோறும் காலை 9 மணிக்கு ரகசியக் கூட்டங்களை நடத்தியதாக இலங்கையின் பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரியான அஜித தர்மபால குற்றம் சாட்டியிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51c7c4a5-80b1-4c34-8e3b-6a8e78446be2/26-6a59c2d832da2.webp' /></p><p>

இந்த கூட்டங்களில் சுரேஷ் சலே, சரத் வீரசேகர, ஜெகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன மற்றும் சி.டி. விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை நெருங்கியுள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p>

இவ்வாறான பின்னணியில் விக்ரமரத்ன இன்று காலை உயிரை மாய்த்துள்ளார். அண்மைக்காலமாக ராஜபக்சர்களுடன் நெருக்கிய தொடர்பில் இருந்த நிலையில் பல்வேறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் இவ்வாறான முறையில் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;&nbsp;</p><p> </p>]]></content>
            <updated>2026-07-17T05:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான வீழ்ச்சிப் பாதையில் தேயிலை தொழில்துறை - நெருக்கடியில் சிக்கிய தொழிலாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tea-industry-down-fall-1784264528"></link>
            <id>https://tamilwin.com/article/tea-industry-down-fall-1784264528</id>
            <summary type="text">இலங்கையில் தேயிலைத் தொழில் துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தேயிலைக் கொழுந்துத் தட்டுப்பாடு மற்றும் கடுமையான தொழிலாளர் பற்றா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தேயிலைத் தொழில் துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தேயிலைக் கொழுந்துத் தட்டுப்பாடு மற்றும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 250 தேயிலை தொழில் துறைச்சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக தேசிய தேயிலை பயிர்ச்செய்கையாளர்கள் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட தேயிலை ஆலோசகருமான சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.</p><h2>200 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி</h2><p> 
இதனால் இந்த ஆண்டுக்கான தேயிலை ஏற்றுமதி இலக்கை அடைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61504c61-8487-4493-9648-d22dd7c52548/26-6a59b75293d99.webp' /></p><p>
இலங்கை ஆண்டுதோறும் சுமார் 220 மில்லியன் கிலோ கிராம் பதப்படுத்தப்பட்ட தேயிலையை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்கிறது.</p><p>
இதன் மூலம் வருடத்திற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களும், மாதத்திற்கு 110 முதல் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வருமானமாகப் பெறப்படுகிறது.
தற்போது தொழிற்சாலைகள் மூடப்படுவதால் இந்த வருமானம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.</p><p>
நாள் ஒன்றுக்கு 30,000 கிலோ தேயிலைக் கொழுந்துகளை அரைத்து உற்பத்தி செய்யும் பல பெரிய தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.</p><p>
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
</p><p>இந்தச் சூழ்நிலையைப் சாதகமாக்கிக் கொள்ளும் சில பெரிய அளவிலான தொழிற்சாலை உரிமையாளர்கள், இலங்கை தேயிலைச் சபையின் விலை நிர்ணயங்களை மதிக்காமல், மிகக் குறைந்த விலைக்கு கொழுந்துகளைக் கொள்வனவு செய்து சிறு உற்பத்தியாளர்களைச் சுரண்டுவதாக சமன் கீகனகே கவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T05:42:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதாரம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-fishermen-s-livelihood-1784265615"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-fishermen-s-livelihood-1784265615</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும்,
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மற்றும் முறையற்ற மீன்பிடி
நடவடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும்,
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மற்றும் முறையற்ற மீன்பிடி
நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடற்றொழில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இந்த
முறைப்பாட்டினை நேற்றைய தினம்(16) கையளித்துள்ளனர்.
</p><p></p><h2>கடற்றொழிலாளர்களி்ன் வாழ்வாதார உரிமைகள்</h2><p>தாம் பல்வேறு திணைக்களங்களிடம் இது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்த
போதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25bcd89f-aa02-4a35-baea-cabf7631cd95/26-6a59bf0dad1a9.webp' /></p><p>இதன்காரணமாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதுடன் கடற்றொழிலாளர்களை
பாதுகாக்குமாறு கோரியே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
</p><p>
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமூக செயல்பாட்டாளர் ஜோபின்,
கடல் வளங்களையும் கடற்றொழிலாளர்களி்ன்&nbsp; வாழ்வாதார உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார்.</p><p>எமது முன்னோர்கள் இந்த இயற்கை வளங்களை முறையான வகையில் பயன்படுத்தி,
போஷாக்குள்ள உணவோடு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். எமது எதிர்கால சந்ததியினரும்,
எமது பிள்ளைகளும் இதே போன்றதொரு போஷாக்கான வாழ்வைப் பெற வேண்டுமாயின், எமது
கடல் வளங்களையும் நீர்நிலைகளையும் (வாவி வளங்களையும்) பாதுகாக்க வேண்டியது
எமது தார்மீக பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.
</p><p>
சட்டவிரோத மீன்பிடி மற்றும் வாழ்வாதார அச்சுறுத்தல்
மட்டக்களப்பு வாவி மற்றும் கடல் பரப்புகளில் அண்மைக்காலமாக சட்டவிரோத மீன்பிடி
முறைகளும், முறையற்ற செயல்பாடுகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக கடற்றொழிலாளர்கள்
கவலை வெளியிட்டுள்ளனர்.</p><h2>கையெழுத்துக்களுடன் கூடிய விரிவான மனு</h2><p>கடல் மற்றும் வாவி வளங்கள் வேகமாக அழிவடைந்து வருகின்றன.கடற்றொழிலாளர்களி்ன் அன்றாட
வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. </p><p>எதிர்காலத்தில் ஆரோக்கியமான
மற்றும் பாதுகாப்பான உணவு முறை இல்லாமல் போகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82bf2ff2-33d3-4047-8d1b-5cff2bdfe337/26-6a59bf0ea73aa.webp' /></p><p>
இது தொடர்பாக கடற்றொழிலாளர் குழுக்கள், சமூக மட்ட அமைப்புகள் மற்றும் அரச
அதிகாரிகளுடன் பல கட்டக் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை
எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை என செயல்பாட்டாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இதன் காரணமாகவே, தங்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்தக் கோரி, இறுதிக் கட்ட
நம்பிக்கையாக மனித உரிமை ஆணைக்குழுவை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>கடற்றொழிலாளர்களி்ன் கையெழுத்துக்களுடன் கூடிய விரிவான மனு மற்றும் முறையீட்டு
ஆவணங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணைக்குழு உரிய தலையீட்டை மேற்கொண்டு, சட்டவிரோத
மீன்பிடியைக் கட்டுப்படுத்தவும் தங்களது பாரம்பரிய வாழ்வாதார உரிமைகளை
நிலைநாட்டவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்ற பலத்த நம்பிக்கையை
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சமூகம் கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T05:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் மருத்துவமனைகளில் அதிரடிச் சோதனை! காலாவதியான மருத்துவப் பொருள்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raids-private-hospitals-expired-medical-supplies-1784262418"></link>
            <id>https://tamilwin.com/article/raids-private-hospitals-expired-medical-supplies-1784262418</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில்,
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில்,
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு
நடவடிக்கைகளின் போது, பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ
உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்,
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் கடந்த சில நாள்களாக
இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. </p><p>இதன்போது மொத்தம் 52
சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p></p><h2>மருத்துவ ஆய்வகப் பொருட்கள்</h2><p>இதில் நாட்டின் முன்னணி தனியார்
மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
</p><p>
சோதனையின் போது பல நிறுவனங்களில் கடுமையான குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0ab213-e133-46a0-bd8f-a2354ae95e8d/26-6a59b760d3a77.webp' /></p><p>குறிப்பாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள காலாவதியான மருத்துவப் பொருள்கள்
மற்றும் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
பயன்பாட்டிலுள்ள பொருள்களுடன் காலாவதியான பொருள்களைச் சேர்த்து
களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
</p><p>
மருத்துவப் பரிசோதனைக்குத் தகுதியற்ற தரக்குறைவான உபகரணங்கள்
பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
</p><h2>விசேட சுற்றிவளைப்புகள்</h2><p>இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் பெட்டிகள், டெங்கு நோயைக் கண்டறியும்
பரிசோதனைப் பெட்டிகள், இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜெல் வகைகள்,
பல்வேறு ஆய்வக இரசாயனங்கள், சாயக் கரைசல்கள் மற்றும் மருத்துவ ஆய்வகப்
பொருட்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் சிக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf687266-3442-4ab5-9500-c58566269f74/26-6a59b76185592.webp' /></p><p>மீட்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட
நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிகார
சபை அறிவித்துள்ளது.</p><p>

நுகர்வோரின் உயிர் மற்றும் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய
செயல்களுக்கு எந்தவொரு விட்டுக்கொடுப்பும் காட்டப்படமாட்டாது எனவும்,
எதிர்காலத்திலும் இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை
எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T05:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் திணைக்களத்துக்கு விரைவில் 100 பொலிஸ் அதிகாரிகள் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/100-police-officers-appointed-police-dept-soon-1784260732"></link>
            <id>https://tamilwin.com/article/100-police-officers-appointed-police-dept-soon-1784260732</id>
            <summary type="text">இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துக்கு மிக விரைவில் நூறு சப்இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துக்கு மிக விரைவில் நூறு சப்இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சப் இன்ஸ்பெக்டர்களைத் தெரிவு செய்வதற்கான ஆரம்ப நடைமுறையின்போது 19 பேருக்கு 19 பேருக்கு சட்டவிரோதமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p></p><h2>பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகள்</h2><p>
கடந்த 2024இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் 19 பேர் அவ்வாறு சட்டவிரோதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், மறு தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தற்போது பயிற்சியை நிறைவுசெய்யும் கட்டத்தில் உள்ளனர்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82f45b80-2cdb-45c5-bc2e-cb0acb92abfb/26-6a59aa0156282.webp' /></p><p>

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளில் அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T04:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த ஆறு மாதங்களில் இலக்கை விட அதிக வருமானத்தை ஈட்டியுள்ள சுங்கத்துறை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-revenue-received-by-the-customs-department-1784258163"></link>
            <id>https://tamilwin.com/article/tax-revenue-received-by-the-customs-department-1784258163</id>
            <summary type="text">இலங்கை சுங்கத்திணைக்களம், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாயை வரி வருமானமாக ஈட்டியுள்ளது.
முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுங்கத்திணைக்களம், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாயை வரி வருமானமாக ஈட்டியுள்ளது.</p><p>
முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை விட இது 22 சதவீதம் அதிகம் என்று அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.</p><p></p><h2>அதிகரித்த வருவாய்&nbsp;</h2><p>

இலங்கை சுங்கத் திணைக்களம் முன்னதாக நிர்ணயித்துள்ள இந்த ஆண்டுக்கான வரி இலக்கு 2,206.9 பில்லியன் ரூபாயாகும்.</p><p>

அதன்படி, முதல் ஆறு மாதங்களுக்குள் 1,060 பில்லியன் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90506653-9054-4458-9c29-5a5fcec4febe/26-6a59a2ae0aa89.webp' /></p><p>

எனினும் அந்தக் காலகட்டத்தில் 1,373 பில்லியன் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட வருவாயை விட 22 சதவீதம் அதிகமாகும்.
</p><p>
இந்த ஆண்டு மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவ்வாறு நிகழவில்லை என்றும், வரி வருமானம் அதிகரித்துள்ளது என்றும் சுங்கத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T03:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் கைதிகள் அல்ல! வெளிவந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-violence-1784258790"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-violence-1784258790</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் &#039;தண்டனை பெற்ற கைதிகள்&#039; என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் 'தண்டனை பெற்ற கைதிகள்' என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர். </p><p>
ஆனால், உயிரிழந்த 21 பேரும் சந்தேக நபர்கள் ஆவர்.
அதாவது, உயிரிழந்த அதிகாரிகளைத் தவிர ஏனைய 21 பேரும் சந்தேக நபர்கள் என தென்னிலங்கை ஆங்கில பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமிந்தர பேர்டினென்டோ (Shamindra Ferdinando) கண்டுபிடித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>சிறைச்சாலைத் திணைக்களம் வழங்கிய&nbsp; தகவல்</h2><p>இவ்விடயம் தொடர்பில் அவர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் குறிப்பிட்ட விடயங்கள்.
</p><p>கைதிகளுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். ஆனாலும் கைதிகள் என்ற வரையறைக்குள் தடுத்து வைத்திருப்பவர்களும் அடங்குகின்றனர்.</p><p>ஆனால் அரசாங்கம் இவர்களை சந்தேக நபர்கள் என்று ஏன் சொல்லவில்லை. இவர்கள் சந்தேக நபர்களா அல்லது தண்டனை கைதிகளா என்பது தொடர்பில் சிறைச்சாலை ஆவணங்களில் குறிப்பெடுக்கப்படும்.ஆனால் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5521889e-affb-43ae-890a-0dc68d3e51a3/26-6a59a0e8859c9.webp' /></p><p>சிறைச்சாலைத் திணைக்களத்திலிருந்து கிடைத்த விசேட தகவல்கள் மூலம் நாம் இதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.
'சந்தேக நபர்' என்பவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் அல்ல. </p><p>நீதிமன்ற விசாரணை செயல்முறையின் மூலம் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை, அவர் குற்றம் செய்யாத ஒரு நிரபராதியாகவே கருதப்படுவார். அதேபோல காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சந்தேக நபர்கள் தான்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T03:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலில் குழி பறிக்கும் தந்திரம் - இளைஞர்களிடம் ரணில் விடுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-guidance-for-youths-1784250852"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-guidance-for-youths-1784250852</id>
            <summary type="text">
அரசியலில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அரசியலில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஜென்ஸி தலைமுறையினருடான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p> 

அரசியல் என்பது ஒரு கடினமான பயணம். சிலர் வீழ்ந்து விடுகிறார்கள். சிலர் விலகி விடுகிறார்கள்.</p><p>
</p><h2><b>

அரசியல் தந்திரோபாயங்கள்</b></h2><p>1977 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தில் எங்களுடன் இருந்த சிலர் அரசியலை விட்டு விலகி, வணிக மற்றும் சட்டத் துறைகளுக்குச் சென்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57d1cd74-e35e-4884-b61e-e1d90738f746/26-6a59841c15fd9.webp' /></p><p>அரசியலுக்கு அர்ப்பணிப்பு அவசியம். அர்ப்பணிப்பு இல்லையென்றால், எந்தவொரு அர்த்தசாஸ்திரத்தையும்,அரசியல் பொருளாதாரம் மற்றும் அரசியல் தந்திரோபாயங்கைளும் கற்றுப் பயனில்லை.
</p><p>
களத்தில் இறங்கி வேலை செய்பவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்போம். அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h3><b>
அரசியல் தந்திரம்</b></h3><p>அங்கு இளைஞர் ஒருவர், “நீங்கள் பின்பற்றுவது கௌடில்யரையா? சந்திரகுப்தரையா? அல்லது இருவரையுமா?” என கேட்ட கேள்விக்கு, “நான் ரணில் விக்ரமசிங்கவாகவே இருக்கிறேன்” என அவர் பதிலளித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b99a244-b14a-4d25-852e-7f5cf79152e3/26-6a59841cbafb3.webp' /></p><p>கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை படிப்பதும், சந்திரகுப்தர் மற்றும் மாக்கியவெல்லி போன்ற ஆளுமைகளின் தத்துவங்களை கற்றுக்கொள்வதும் அரசியலுக்கு முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p>]]></content>
            <updated>2026-07-17T03:15:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-kumara-s-statement-1784258057"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-kumara-s-statement-1784258057</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள
நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த
மீளாய்வு கூட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள
நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த
மீளாய்வு கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி
அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

இதன்போது துறைமுக மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளை நவீனமயமாக்கல் மற்றும்
நிதி முகாமைத்துவம் குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p></p><h2>&nbsp;நவீனமயமாக்கல் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன்
முன்னெடுக்கப்படும் இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள், காங்கேசன்துறை
துறைமுக மறுசீரமைப்பு, கொழும்பு துறைமுக லொஜிஸ்டிக் பார்க் மற்றும் மேற்கு
முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து ஆராயப்பட்டது. </p><p>துறைமுக சேவைகளை
டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது.

2055ஆம் ஆண்டளவில் வருடாந்த பயணிகள் கொள்ளளவை 24.2 மில்லியனாக உயர்த்தும்
நோக்கில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்தும் இரண்டாம்
கட்டப் பணிகள் 2027ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ae47c9-c023-4b14-bdf6-a198b437a9a7/26-6a599e10792cf.webp' /></p><p> </p><p>புதிய முனையங்களை
அமைத்தல் மற்றும் போக்குவரத்துச் சேவைகளை முறைப்படுத்துதல் குறித்து கவனம்
செலுத்தப்பட்டது.

ஹிகுராக்கொட உள்ளிட்ட உள்நாட்டு விமான நிலையங்களைச் சீரமைக்க, விமானப்படையுடன்
இணைந்து கூட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி
பணிப்புரை வழங்கினார்.</p><p>

மத்தல விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் ரூபா நட்டத்தை
எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>இந்த நட்டத்தைத் தவிர்க்க, புதிய
முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரியுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டளவில் அதனை
நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9746e2a2-f968-4345-a795-0cc407900c2e/26-6a599e114e03c.webp' /></p><p>
யாழ்ப்பாண விமான நிலைய முனைய நவீனமயமாக்கல் பணிகள் தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

நிறுவனங்கள் தங்களின் சொந்த நிதி வலிமையைப் பயன்படுத்தி அபிவிருத்தித்
திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களின்
வரிப்பணத்திற்குச் சுமையாக அமையாத வகையில், திறைசேரிக்கு அதிகபட்ச பங்களிப்பை
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் தெளிவாக
அறிவுறுத்தினார்.</p><p>

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை துறைமுக அதிகார சபை, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்
உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள அனைத்து முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளும்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T03:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சந்தித்துள்ள மிகப்பெரிய நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8000-million-froud-in-coal-import-1784258049"></link>
            <id>https://tamilwin.com/article/8000-million-froud-in-coal-import-1784258049</id>
            <summary type="text">நிலக்கரி ஊழல்களினால் நாட்டுக்கு 8,400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலக்கரி ஊழல்களினால் நாட்டுக்கு 8,400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்த பாரிய ஊழல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
11 போலி அறிக்கைகள் மற்றும் தர மோசடி நிலக்கரி ஏற்றப்பட்ட வெளிநாட்டுத் துறைமுகங்களிலிருந்து வழங்கப்பட்ட தரப்பரிசோதனை அறிக்கைகளில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணைகள்</h2><p>நிலக்கரி தரம் வாய்ந்தது எனத் தெரிவித்துச் சமர்ப்பிக்கப்பட்ட 15 அறிக்கைகளில் 11 அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட துறைமுக அதிகாரிகள் தங்களுடையவை அல்ல என நிராகரித்துள்ளனர்.</p><p>
இதன் மூலம், தரம் குறைந்த நிலக்கரியைத் தரம் கூடியதாகக் காட்டி இலங்கைக்கு அனுப்புவதற்காக யாரோ ஒரு தரப்பினர் இந்த போலி அறிக்கைகளை தயாரித்துள்ளமை குறித்துப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
</p><p>
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் காரணமாக, முதல் 9 கப்பல்களில் மட்டும் இலங்கைக்குச் சுமார் 8,497 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07610d2a-8f54-482a-8441-db1adf2937cc/26-6a599e031bd0c.webp' />&nbsp; &nbsp;</p><p> 

3-வது கப்பலின் மூலம் 1,318 மில்லியன் ரூபாய் நட்டம், 6-வது கப்பலின் மூலம் 1,182 மில்லியன் ரூபாய் நட்டம் மற்றும் 9-வது கப்பலின் மூலம் 1,493 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறியியலாளர் சமீர அதிகாரிகே வழங்கிய அறிக்கையின் ஊடாக இந்த நிதியிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
மின்நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியமையால் லக்விஜய மின்நிலையத்தின் இயந்திரத் தொகுதிகளில் அளவுக்கு அதிகமான வெப்பம் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் சாட்சியமளித்துள்ளனர். </p><p>

இது மின்நிலையத்தின் நீண்டகாலப் பயன்பாட்டிற்கும் அதன் ஆயுட்காலத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c50aee9-43b3-47c5-984f-1121b8ccd252/26-6a59b0c898181.webp' /></p><p>மேலும், 2 மில்லிமீட்டருக்கும் குறைவான நிலக்கரித் துகள்கள் மின் உற்பத்திக்குப் பயன்படாமல் வெறும் சாம்பலாகவே மாறி விடுவதாகவும், இது தேவையற்ற செலவுகளை உருவாக்குவதாகவும் லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார் என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>
விசாரணைக் குழு உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல்நீதிமன்ற நீதிதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p> 

நிலக்கரி கொள்வனவு தொடர்பான ஒட்டுமொத்தப் பிரசம்பாத நடைமுறைகளிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T03:14:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்மமான முறையில் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-wickramaratne-commits-suicide-1784254971"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-wickramaratne-commits-suicide-1784254971</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p> 

அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p></p><h2>மர்மமான முறையில் மரணம்&nbsp;</h2><p> 

30 ஆண்டுகளுக்கும் மேலாக பொலிஸ் சேவையில் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபர் ஆவார்.</p><p> </p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களில் சி.டி. விக்ரமரத்னவும் ஒருவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97b56345-f2ef-4171-b59b-4566fb6e7b61/26-6a59938ec3546.webp' /></p><p>சமகால அரசாங்கத்தின் கீழ் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. </p><p>

இந்நிலையில் சி.டி. விக்ரமரத்ன திடீரென உயிரை மாய்த்துக் கொண்டமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp;&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mN9-LRX0-C0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-17T02:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்க உள்ள நல்ல செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/usa-may-cut-donw-more-traiffs-for-lanka-1784251303"></link>
            <id>https://tamilwin.com/article/usa-may-cut-donw-more-traiffs-for-lanka-1784251303</id>
            <summary type="text">இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து நல்லதொரு செய்தி கிடைக்கவுள்ளதாக அமெரிக்காவிற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து நல்லதொரு செய்தி கிடைக்கவுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த வரிச்சலுகைகளை மேலும் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் அமெரிக்க ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பெரும் நிவாரணம் கிடைக்கும்&nbsp;</h2><p>இதன் மூலம் இலங்கை மக்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>
தான் தூதுவர் பதவியிலிருந்து விலகி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு நாட்டிற்குத் திரும்பினாலும் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c83b094-9626-48b2-8595-f9f70d9284a4/26-6a598d174a661.webp' />&nbsp; &nbsp;</p><p>
தாம் தாய்நாடு திரும்பிய பின்னரும் தாய்நாட்டிற்காகவே பணியாற்றுவதாகவும் அந்தச் சேவை ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்துகொள்ள எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போதைய அரசாங்கத்துடன் தான் மிகவும் சுமுகமாகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்ட மகிந்த சமரசிங்க, தூதுவர் பதவியில் மேலும் நீடிக்குமாறு அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்த போதிலும், தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகக் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன், தான் தூதுவர் பதவியை வகித்த காலப்பகுதியில் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், நாட்டுக்காக அதிகபட்ச சேவையை ஆற்ற முயற்சித்ததாகவும் மகிந்த&nbsp; சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T02:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோர விபத்து - 20 பேர் காயம் - நீண்ட போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்ட சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-accident-10-injured-1784251829"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-accident-10-injured-1784251829</id>
            <summary type="text">கொழும்பு, அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தைக்கு அருகில் பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தைக்கு அருகில் பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
</p><p>
இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
கொடகம - பொரளை பிரதான வீதியில், அத்துருகிரிய கோவிந்தன மாவத்தைக்கு அருகில், இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2><b>கோர விபத்து</b></h2><p>

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதியமையே&nbsp; விபத்திற்கு காரணமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc854fa-9ce3-4e27-96d7-7aac5b4ca5b6/26-6a5988136b63c.webp' /></p><p>பேருந்தின் சாரதி, சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிட நீண்ட போராட்டத்திற்கு பின்னரே மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த விபத்தினால் டிப்பர் வாகனமும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>விபத்தைத் தொடர்ந்து, அந்த வீதியுடனான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முடங்கியிருந்தது.
</p><p>
இந்த விபத்து குறித்து அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-17T01:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/writ-petition-filed-by-major-general-suresh-sallay-1784243807"></link>
            <id>https://tamilwin.com/article/writ-petition-filed-by-major-general-suresh-sallay-1784243807</id>
            <summary type="text">ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் இடையீட்டு தரப்பாக இணைவதற்கு அனுமதி வழங்குமாறு, பஸ்யோதுன்ரட்ட பௌத்த சம்மேளனத்தின் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் இடையீட்டு தரப்பாக இணைவதற்கு அனுமதி வழங்குமாறு, பஸ்யோதுன்ரட்ட பௌத்த சம்மேளனத்தின் தலைவர் தபனே ஸ்ரீ மகிந்த தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சுரேஷ் சலேவை கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், தாம் இடையீட்டு தரப்பாக இணைவது பொதுநலன் கருதியே என்றும், எந்தவொரு சட்டபூர்வ விசாரணையையும் தடுக்கவோ அல்லது பாதிக்கவோ அல்ல என்றும் தேரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்</h2><p>

மாறாக, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை மாற்றும் முயற்சிகள், அரசியலமைப்பு மற்றும் சமூக ரீதியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42dacdbc-9992-4609-b3a2-4428e04d010d/26-6a5968dd73791.webp' /></p><p>
</p><p>
மனுவில் மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பே நடத்தியதாகவும், கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என உச்ச நீதிமன்றமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்குதலைத் திட்டமிட்டார் அல்லது அதற்கு உதவினார் என எந்த நீதிமன்ற தீர்ப்பிலும் அல்லது உத்தியோகபூர்வ விசாரணையிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை.</p><p></p><h2>பரப்பப்படும் குற்றச்சாட்டுகள்</h2><p>

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து அவர் அதிகாரிகளை எச்சரித்திருந்ததாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db625b0-f4b5-4bfd-8206-9f7c06971a2d/26-6a5968de2536c.webp' /></p><p>

மேலும், நம்பகமான ஆதாரங்கள் இன்றி சிங்கள பௌத்த இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளை இலக்காகக் கொண்டு பரந்த சதித்திட்டம் ஒன்று இருப்பதாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் சமூக நல்லிணக்கத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் சுரேஷ் சலேவை தடுத்து வைத்திருப்பதன் சட்டபூர்வத்தன்மையை நீதிமன்றம் ஆராயும் வேளையில், இந்த வழக்குடன் தொடர்புடைய பரந்த அரசியலமைப்பு மற்றும் பொதுநல விடயங்கள் குறித்தும் சங்கத்தின் கருத்தை பரிசீலிக்குமாறு தேரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:08:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pension-scheme-foreign-workers-include-budget-1784249985"></link>
            <id>https://tamilwin.com/article/pension-scheme-foreign-workers-include-budget-1784249985</id>
            <summary type="text">வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தில் உள்ள சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு -
செலவுத் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தில் உள்ள சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு -
செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை
அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தும்,
2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு முந்தைய ஆலோசனைகளை
மேற்கொண்டும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(16) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே
அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p></p><h2>&nbsp;ஓய்வூதியத் திட்டம்</h2><p>
</p><p>
நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறையாக விளங்கும்
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக முறையான ஓய்வூதியத் திட்டமொன்றின் அவசியத்தை
வலியுறுத்திய ஜனாதிபதி, இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு பணித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b2e0135-fa97-4e94-afe3-d8eecb1674e6/26-6a597f8faae2b.webp' /></p><p>
</p><p>
சுற்றுலாத்துறை சார்ந்த திட்டங்களை மாவட்ட மட்டத்தில் செயற்திறனுடன்
முன்னெடுக்க, நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக மாவட்ட செயலாளர்களிடம் வழங்குமாறு
அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து
திட்டங்களை விரைவாகச் செயற்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

</p><p>கிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்ட
அபிவிருத்தித் திட்டங்களை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அமைச்சு
மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து ஒரு பொதுவான திட்டத்தின் கீழ்
செயற்படுத்துவதன் மூலம் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த முடியும்
என்றார்.</p><p></p><h2>ஜனாதிபதி பணிப்பு</h2><p>
</p><p>
திட்டங்களைச் செயல்படுத்துவதில் கொள்முதல் நடைமுறைகளால் ஏற்படும் தாமதங்களைத்
தவிர்க்க, ஜனவரி முதல் வாரத்திலேயே கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு நிதி
அமைச்சின் புதிய திட்டத்தைப் பின்பற்றுமாறு பணித்தார். அத்துடன், சுற்றுலா
அமைச்சின் நிர்மாணத்துறை போன்ற விசேட கொள்முதல் தேவைகளை விரைவுபடுத்த இணக்கம்
தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b5069e0-115b-4751-8475-f2a52b98e879/26-6a597f9062bc0.webp' /></p><p>
</p><p>
2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறைக்குத் தேவைப்படும் 8 இலட்சம் மனித வளத்
தேவையைப் பூர்த்தி செய்ய, ஹோட்டல் பாடசாலைகளின் பயிற்சிப் பாடநெறிகளை
விரிவுபடுத்தவும், அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் குறித்த
முறையான அறிக்கையைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி
உத்தரவிட்டார்.</p><p>

தூதரக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆசிய ஒளிபரப்பாளர்களின் மாநாடு
உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக்
கலந்துரையாடப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 தமிழ்த் தரப்புகளின் ஐக்கியத்தால் சாதகம்..! வரவேற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advantage-unity-6-tamil-factions-vigneswaran-welco-1784248617"></link>
            <id>https://tamilwin.com/article/advantage-unity-6-tamil-factions-vigneswaran-welco-1784248617</id>
            <summary type="text">தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான
அறிகுறியாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள்
கூட்டணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான
அறிகுறியாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள்
கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>

நேற்று(16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஆறு அரசியல் தரப்புகள்</h2><p>
</p><p>
சிங்கள மொழி பேசும் கட்சிகளிடமிருந்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்
மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கிடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் இந்த
முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f882bca8-273a-4314-a18e-ad910506f6f8/26-6a597cfcb32e3.webp' /></p><p>
</p><p>
இந்நாட்டிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எதிர்காலம் குறித்து அவதானம்
செலுத்தியே அந்தந்தக் கட்சிகளின் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை
மேற்கொண்டுள்ளனர். </p><p>தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்து வடக்கு, கிழக்கு
மக்கள் திருப்தியடையவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.</p><p></p><h2>&nbsp;நீதியரசர் விக்னேஸ்வரன்</h2><p>

அதற்கான காரணமாக, அந்த மக்களின் தனியார் நிலங்களை இராணுவத்தினர் தொடர்ந்து
தம்வசம் வைத்துள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83928d5-77e5-4541-96f3-021f75137885/26-6a597cfd66a91.webp' /></p><p>

சில நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றின் மூலம் கிடைக்கும்
வருமானத்தை இராணுவத்தினர் பெற்றுக்கொள்கின்றனர் என்றும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் அங்கு வெளிப்படுத்தினார்.
</p><p>
இவ்வாறான காரணங்களால், தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு
நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார் அவர், தற்போதைய அரசும் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளைப் போலவே நடத்துகின்றது
என்றும், அவர்களுக்குச் சம உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை
என்றும் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T00:53:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் மணற்சேனை படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல்: கண்ணீர் மல்க அஞ்சலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/40th-anniversary-mutur-manarchenai-massacre-1784247524"></link>
            <id>https://tamilwin.com/article/40th-anniversary-mutur-manarchenai-massacre-1784247524</id>
            <summary type="text">கடந்த 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி மூதூர், மணற்சேனை கிராமத்தில்
இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 44 அப்பாவி பொதுமக்களின்
40...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி மூதூர், மணற்சேனை கிராமத்தில்
இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 44 அப்பாவி பொதுமக்களின்
40ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக
அனுஷ்டிக்கப்பட்டது.</p><p>

மணற்சேனை இந்து மயான முன்றலில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வை,
உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து
ஏற்பாடு செய்திருந்தனர்.</p><h2>&nbsp;40ஆம் ஆண்டு நினைவேந்தல்</h2><p>
</p><p>
நிகழ்வின் ஆரம்பத்தில், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிட மௌன
அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4740698c-0aa2-46de-b635-bc8fa161ee40/26-6a5976e363c97.webp' /></p><p> அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தங்களின் உறவுகளை
நினைவுகூர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p>

இதில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலிகளைச் செலுத்தினர்.
</p><p>
கடந்த 1986 ஜூலை 16 அன்று மணற்சேனை கிராமத்திற்குள் புகுந்து நடத்தப்பட்ட
கொடூரத் தாக்குதலில், ஒரே நாளில் 44 பொதுமக்கள் கொடூரமாகப் படுகொலை
செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-17T00:29:04+00:00</updated>
        </entry>
    </feed>
