<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-12T02:32:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-1783820555"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-1783820555</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட&amp;nbsp;தலா 05 இலட்சம் ரூபா நஷ்டஈடு&amp;nbsp; ஒரு ஆரம்பக்கட்ட தொகை மட்டுமே என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட&nbsp;தலா 05 இலட்சம் ரூபா நஷ்டஈடு&nbsp; ஒரு ஆரம்பக்கட்ட தொகை மட்டுமே என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து பலர் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான&nbsp;ஏ.சி. கஜநாயக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>இறுதிச்சடங்கு ஏற்பாடுகள்&nbsp;</h2><p>சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சத்திற்கு அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e830ae79-872b-4f48-9f5f-3a4e57adc085/26-6a52f929b14aa.webp' /></p><p>
அனைத்து இறுதிச் சடங்கு ஏற்பாடுகளும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
இதற்கிடையில், மோதலில் காயமடைந்த சிறை அதிகாரிகளுக்கு சில இழப்பீடுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
</p><p>மேலும், மோதலில் காயமடைந்த 7 சிறை அதிகாரிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இவர்களில் மூவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T02:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-s-warning-to-the-public-1783821306"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-s-warning-to-the-public-1783821306</id>
            <summary type="text">பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில்,</p><p>&nbsp;</p><h2>சட்டவிரோத&nbsp;நடவடிக்கை</h2><p>ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவரே பொறுப்பு என்று கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d64fbc-1100-45b6-8f03-a817fe525ce4/26-6a52f602b6c26.webp' />&nbsp;</p><p>

சிலர் சிறிய மாதாந்திர கட்டணத்திற்கு தங்களது வங்கிக்கணக்கை வாடகைக்கு விட முன்வருகின்றனர். அவ்வாறு வாடகைக்கு விடப்பட்ட கணக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
எனவே இவ்வாறான சூழல் ஏற்படுமாயின் மற்றவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீங்களும் சட்டப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் எச்சரித்துள்ளது.
</p><p>
இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T02:03:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குறற்ச்சாட்டின் கீழ் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-will-filce-case-against-prisoners-1783818479"></link>
            <id>https://tamilwin.com/article/cid-will-filce-case-against-prisoners-1783818479</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையில் இடம்பெற்ற கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடைய அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்து, அவர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் 8 சிறைச்சாலை அதிகாரிகளை சித்திரவதை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1400ec9-0ed2-4072-9846-7aca1acee964/26-6a52e8f6d1684.webp' /></p><p> </p><p>
இக்கொடூரக் கொலைகளுடன் தொடர்புடைய சுமார் 75 கைதிகள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களில் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
</p><p>அதிகாரிகளைக் கொலை செய்த அனைத்து கைதிகளையும் அடையாளம் காணும் விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மிக வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, தெரிவித்துள்ளார்.
</p><p>கொலையாளிகளை அடையாளம் காண்பதற்காக, இச்சம்பவம் நடந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகளிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>சிறைச்சாலையினுள் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கமராக்களின் காட்சிகள் அடங்கிய டிவிஆர் இயந்திரங்களைக் கண்டறிவதற்காக நீர்கொழும்பு சிறைச்சாலையை பொலிஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.</p><p>
கொல்லப்பட்ட 8 அதிகாரிகளும் அவசர உத்திகள் பிரிவைச் (சிறைச்சாலை பொலிஸ்) சேர்ந்தவர்களாவர். கைதிகளின் கொடூரமான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது மரண பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
</p><p>சில அதிகாரிகளின் தலைகளில் பெரிய கற்களைப் போட்டு தலை நசுக்கப்பட்டிருப்பதுடன், சில அதிகாரிகளின் வாய் மற்றும் மலக்குடல் வழியே துடைப்பக் கட்டைகளை உட்செலுத்தி மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக மரண பரிசோதனை அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.
</p><p>இந்தத் தாக்குதலை நடத்திய கைதிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தற்போது விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>
சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர், அவர்களைக் கைது செய்து கொலைக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T01:08:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலன் கொடுத்த பொதியால் வாழ்க்கையை தொலைத்த மருத்துவ பீட மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-virul-girl-back-story-1783814565"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-virul-girl-back-story-1783814565</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது.அந்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது.</p><p>அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளம் பெண் ஒருவரின் முகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், "இவ்வளவு அழகான ஒரு பெண் ஏன் சிறையில் இருக்கிறார்" என்ற கேள்வி பலரும் எழுப்பி வந்தனர்.&nbsp;</p><p>அந்தப் பெண்ணின் உருக்கமான உண்மைப் பின்னணியை புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>கல்வியில் சிறப்பு சித்தி..&nbsp;</h2><p>
</p><p>குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd2e7cfa-226c-4696-a93b-f758c449af4e/26-6a52e125de7f6.webp' /></p><p>நீர்கொழும்பில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கிப் படித்து வந்த அவர், கல்வியில் மட்டுமல்லாது வலைப்பந்து விளையாட்டிலும் தேசிய மட்டம் வரை பல விருதுகளைப் பெற்று, பாடசாலை மாணவர் தலைவியாகவும் (Prefect) மிளிர்ந்துள்ளார்.
</p><p>
அவரது உயர்தரப் படிப்பு காலத்தின் போது, தோழிகளுடன் ஏற்பட்ட வாட்ஸ்அப் (WhatsApp) குழுவொன்றின் ஊடாக ஒரு இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, அது பின்னர் தீவிர காதலாக மாறியுள்ளது. </p><p>அந்தக் காதலை அப்பெண் கண்மூடித்தனமாக நம்பிய நிலையில், காதலன் அவரிடம் நீர்கொழும்பில் உள்ள தனது நண்பரிடம் இருந்து சில பொதிகளை பெற்று வருமாறு கேட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>காதலன் கொடுத்த பொதி</h2><p> காதலன் மீதிருந்த அதீத நம்பிக்கையால், அந்தப் பொதிகளுக்குள் இருப்பது போதைப்பொருள் என்பதை அறியாமலேயே, அதனைப் பல இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும் கடத்தலில் அவர் பயன்படுத்தப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f1d2d31-e149-4a4d-bbd3-c01248ad257d/26-6a52e126c8646.webp' /></p><p>
</p><p>
இறுதியில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த பெண் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் நீர்கொழும்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p> அவர் சிறைக்குள் இருந்த போதே, அவரது உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவர் அதீத புள்ளிகளைப் பெற்று மருத்துவப் பீடத்திற்குத் (Medical Faculty) தெரிவாகியிருந்த தகவல் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>சிறைச்சாலை கூரையின் மீது ஏறி நின்று தனது உரிமைக்காகக் குரல் கொடுத்த அந்த மாணவியின் சோகக் கதை, தற்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் எடுத்துக் காட்டப்படுகின்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:37:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து - கோமகன் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lives-tamil-political-prisoners-danger-komagan-1783813929"></link>
            <id>https://tamilwin.com/article/lives-tamil-political-prisoners-danger-komagan-1783813929</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை
பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்
பாதுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை
பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்
பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’
அமைப்பின் தலைவர் கோமகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
யாழ் ஊடக அமையத்தில் நேற்று(11.07.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அச்சத்தை
வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை&nbsp;வன்முறை</h2><p>
</p><p>
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,</p><p>சிறைச்சாலைகளில் கைதிகளும் மனிதர்களே என்ற வாசகம்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்கு கைதிகள் மீது மிலேச்சத்தனமான
கொடுமைகளே அரங்கேற்றப்படுகின்றன.
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பலர்
கொல்லப்பட்டுள்ளனர்.

கைதிகள் யாராலவும் இருக்கலாம். ஆனால் அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்வது
அவசியம். அதே நேரம் இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c03ae88-a529-4bf7-b22e-901e2de785ea/26-6a52d849ccef7.webp' /></p><p>

தற்போது சிறைச்சாலைகளில் நிலவும் இவ்வாறான வன்முறைச் சூழலை நோக்கும்போது,
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்ட
தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம்.</p><p>
இவ்வாறான சூழலில் சிறைச்சாலைகளுக்குள் கைதிகளின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கையும், அங்கு
இடம்பெறும் மனித உரிமை மீறல்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன் என சாடியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:23:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி நாணய தாள்களை பதுக்கி வைத்திருந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-currency-man-gets-2-year-prison-sentence-1783811898"></link>
            <id>https://tamilwin.com/article/fake-currency-man-gets-2-year-prison-sentence-1783811898</id>
            <summary type="text">வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த
நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம்
தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த
நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம்
தீர்பளித்துள்ளது.
</p><p>
வவுனியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய்
போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல்
நீதிமன்றத்தினால் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது குற்றவாளிக்கு எதிரான வழக்கு
கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு இருந்தது.</p><p></p><h2>இரண்டு வருட கால சிறைத்தண்டனை</h2><p>

இதன்போது சந்தேக நபருக்கு எதிரான முதலாம் குற்றசாட்டு சந்தேகத்துக்கு அப்பால்
வழக்கு தொடுனர் தரப்பினரால் எண்பிக்கட்டுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி
அமலவளன் ஆனந்தராஜா தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e18b6742-53c4-4b32-bdf7-944879e4af16/26-6a52d0072c17d.webp' /></p><p>

அதற்கு இணங்க குறித்த குற்றசாட்டிற்கு இரண்டு வருட கால சிறைத்தண்டனை மற்றும்
ஒரு லட்சம் ரூபா அபராதம், அபராத தொகையினை செலுத்த தவறின் ஒரு ஆண்டு கால
சிறைத்தண்டனை எனும் கட்டளை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.</p><p>

குறித்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ
சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:23:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு நாடே ஒன்றாக புலோலியில் கருத்தரங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/entire-country-comes-together-seminar-in-puloli-1783810064"></link>
            <id>https://tamilwin.com/article/entire-country-comes-together-seminar-in-puloli-1783810064</id>
            <summary type="text">ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்&amp;nbsp; “முழு நாடே ஒன்றாக செயற்திட்ட
அடிப்படையிலான போதை மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான
கருத்தரங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்&nbsp; “முழு நாடே ஒன்றாக செயற்திட்ட
அடிப்படையிலான போதை மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான
கருத்தரங்கு
புலோலி,&nbsp; கிழக்கு கிராமத்தில் பொலிஸ் பாதுகாப்புக் குழு (Police Security
Committee) தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று(11.07.2026) பிற்பகல் 4:30 மணியளவில்
இடம்பெற்றுள்ளது.</p><p>

இதில் பருத்தித்துறை போலிஸ் நிலைய குற்ற பிரிவு பொறுப்பதிகாரி MO
விஜயரத்தின, பொலிஸ் உத்தியோகத்தர் லங்கா ஆகியோர் கலந்துகொண்டு போதை
விழிப்புணர்வு, மற்றும் குற்ற செயல்கள் தடுப்பு தொடர்பான கருந்துரைகளை
வழங்கியுள்ளனர்.</p><p></p><h2>முழு நாடே ஒன்றாக செயற்றிட்டம்</h2><p> அங்கு கருத்து தெரிவித்த போலிஸ் அதிகாரிகள்,</p><p>ஒரு கிராமம், குடியிருப்புப் பகுதி அல்லது சமூகத்தில் சட்டம், ஒழுங்கு
மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பொலிஸாரும், மக்களும்
இணைந்து செயல்படும் ஒரு குழுவே இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afde2bb8-7d9d-4edb-9069-b73411f44d9b/26-6a52c9465d691.webp' /></p><p>
​மேலும், குற்றச் செயல்களைத் தடுப்பது, சமூகத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வை
ஏற்படுத்துவது, போதைப்பொருள், திருட்டு, வன்முறை போன்ற பிரச்சினைகளைக்
குறைப்பது போன்ற விடயங்களுக்காக ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிகழ்வில் 6ஆம் வட்டார பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், சமூக
மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:22:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது நீதம் இதழ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10th-issue-needham-published-by-jaffna-university-1783803024"></link>
            <id>https://tamilwin.com/article/10th-issue-needham-published-by-jaffna-university-1783803024</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர்
சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு நடைபெற்றுள்ளது.

யாழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர்
சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு நடைபெற்றுள்ளது.
</p><p>
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில்&nbsp;நேற்றையதினம்(11.07.2026) காலை குறித்த
நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.</p><h2>நீதம் இதழ் வெளியீடு</h2><p>
</p><p>
இந்த நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதியரசர் சம்பத் அபேயகோன் பிரதம
விருந்தினராகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன்
கௌரவ விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராக சட்ட மா அதிபர் திணைக்களத்தின்
பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத்தும்
பங்கேற்றிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d16a0578-49ba-477b-9020-118701d56268/26-6a52ade67c8e8.webp' /></p><p>யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நீதம் இதழ்
வெளியிடப்பட்டு வருவதுடன் இம்முறை பத்தாவது தடவையாகவும் குறித்த இதழ்
வெளியிடப்படமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T00:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு மாற்று வீடுகளை வழங்க வேண்டும் - மோகன்ராஜன் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alternative-house-provide-6-evicted-families-1783802070"></link>
            <id>https://tamilwin.com/article/alternative-house-provide-6-evicted-families-1783802070</id>
            <summary type="text">முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் வாழ்ந்து வந்த வீடுகளிலிருந்து
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட ஆறு குடும்பங்களுக்கு,
அரசாங்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் வாழ்ந்து வந்த வீடுகளிலிருந்து
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட ஆறு குடும்பங்களுக்கு,
அரசாங்கம் உடனடியாக மாற்று வீடுகள் அல்லது பொருத்தமான காணிகளை வழங்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என சட்டத்தரணி எஸ். மோகன்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
நுவரெலியா மாவட்டம், வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட ஹல்கரனோயா – சென்லெனால்ட்ஸ்
தோட்டத்தில் வசித்து வந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர், வலப்பனை
நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய பிஸ்கல் அதிகாரிகள் ஊடாக அவர்களது
வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது.</p><h2>காணி சீர்திருத்த ஆணைக்குழு</h2><p>
</p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கருத்து வெளியிட்ட சட்டத்தரணி எஸ். மோகன்ராஜன்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d66fbed-4483-41ab-9b82-d3650293b32d/26-6a52aa9bc6c9d.webp' /></p><p> </p><p>நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும்
அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் தனது
பொறுப்பிலிருந்து விலக முடியாது.</p><p>வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் அரச காணிகளின் உடமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும்
சட்ட ஏற்பாடுகளின் கீழ், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட
வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த வெளியேற்ற நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத் தீர்ப்பு&nbsp;</h2><p>நீதிமன்றத் தீர்ப்பை பிஸ்கல் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத் தீர்ப்பு என்ற அடிப்படையில் அதற்கு எதிராக நாம் செயற்பட முடியாது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8794eb1-6b11-4872-94eb-30611473ee14/26-6a52aa9c93df0.webp' /></p><p>நீதித்துறையின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு அனைவருக்கும்
உள்ளது.
குறித்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தமது தரப்பு
வாதங்களை முன்வைத்திருந்ததது.</p><p>தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நுவரெலியா
மேல் நீதிமன்றத்தில் மேலாய்வு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அந்த விண்ணப்பம் மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில்,
நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்
விளக்கமளித்துள்ளார்.'</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் - சஜித் இணைப்புக்கான பேச்சுகள் வெற்றிப்பாதையில்! முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-sajith-alliance-talks-mujibur-rahman-mp-1783812130"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-sajith-alliance-talks-mujibur-rahman-mp-1783812130</id>
            <summary type="text">ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ஓரணியில் இணைப்பதற்கான பேச்சுகள்
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ஓரணியில் இணைப்பதற்கான பேச்சுகள்
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின்
பிரதிப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பிலிருந்து இரு வேட்பாளர்கள்
போட்டியிட்டமை தான் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.</p><p></p><h2>தொடர் கலந்துரையாடல்கள்</h2><p> </p><p>எனவே, எதிர்கால அரசியல்
தேவைகளைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினரையும் ஒரே முகாமாக இணைக்க இணக்கம்
காணப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பேச்சுகள் சுமுகமாக இடம்பெற்று
வருகின்றன." என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77bb039c-db2c-4f42-b665-591a19d135e8/26-6a52d23c33359.webp' /></p><p>
</p><p>
மேலும், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான
நேரடிச் சந்திப்புகள் அண்மையில் இடம்பெற்றுள்ளன என்றும், கட்சியின்
செயலாளர்கள் மட்டத்திலும் தொடர் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>இரு தரப்பினரும் ஒன்றிணைய
வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்றும் அவர் நம்பிக்கை
வெளியிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T23:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு நீதிபதிகள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judges-oppose-extending-the-retirement-age-judges-1783809729"></link>
            <id>https://tamilwin.com/article/judges-oppose-extending-the-retirement-age-judges-1783809729</id>
            <summary type="text">பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருமனமாக எதிர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருமனமாக எதிர்ப்பதாக நீதிச்சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.
</p><p>
இலங்கையின் மாவட்ட மற்றும் மாஜிஸ்திரேட் நீதவான்களைக் கொண்ட நீதிச்சேவை சங்கத்தின் இன்றைய நிறைவேற்றுக்கு குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>குறித்த&nbsp;பொதுக் கூட்டம் நேற்று (11) இடம்பெற்றது.&nbsp;</p><p></p><h2>திருத்த முன்மொழிவு&nbsp;</h2><p>

இந்த நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, நீதிச் சேவைகள் சங்கத்தின் (JSA) ஒரு விசேட பொதுக் கூட்டம் நேற்று (11) கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809a2514-db11-454f-9c06-5af1f0ad4aec/26-6a52c8dccaf9f.webp' /></p><p>

இந்தக் கூட்டம் ஆரம்பத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அனுமதி கிடைக்காத காரணத்தினால் கடுவெலவுக்கு மாற்றப்பட்டிருந்தது. </p><p>இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நீதிபதிகளும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவை கடுமையாக எதிர்த்துள்ளனர். </p><p>இதனை அவர்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
இன்றைய நீதிச்சேவைகள் சங்க நிறைவேற்றுக் குழுவின் கூட்டத்துக்கு அதன் மூன்றில் ஒரு பங்கு அளவான 65 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்த காரணத்தினால் அவர்களின் தீர்மானம் செல்லுபடியற்றது என்றும் இன்னொரு தரப்பு நீதிபதிகள் குழுவொன்று விமர்சித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T22:55:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shots-were-fired-at-house-mathugama-1783806769"></link>
            <id>https://tamilwin.com/article/shots-were-fired-at-house-mathugama-1783806769</id>
            <summary type="text">மதுகமவின் நெபோடா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.பொலிஸாரின் விசாரணை

நேற்று பிற்பகல் (11) ஒரு குழுவினரால் இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுகமவின் நெபோடா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸாரின் விசாரணை</h2><p>
</p><p>
நேற்று பிற்பகல் (11) ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b676b94-faf4-4cf6-b81e-a47b503ac556/26-6a52bd01d92ad.webp' /></p><p>
</p><p>
டி 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>
இருப்பினும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, மேலும் இச்சம்பவம் குறித்த பொலிஸாரின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T22:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரியந்தியை தேடிய ஜனாதிபதி அநுர..! நாமலின் அரசின் அமைச்சரவையின் பெயர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/names-cabinet-anura-namal-govt-searched-priyanthi-1783792757"></link>
            <id>https://tamilwin.com/article/names-cabinet-anura-namal-govt-searched-priyanthi-1783792757</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.&amp;nbsp;நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் குறித்த வன்முறைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எளிமையான பண்புகள் தொடர்பில் பலரும் கருத்துக்கள் முன்வைத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், தனது பாடசாலை நண்பர்களை சந்தித்த&nbsp;ஜனாதிபதி, அவர்களுடம் மிக எளிமையாக உரையாடியிருந்தார்.&nbsp;</p><p>அதன்போது, தனது பாடசாலை நண்பர்களில் பிரியந்தி என்ற ஒருவரை&nbsp;ஜனாதிபதி குறிப்பாக விசாரித்திருந்தார், இது பலர் மத்தியில் பேசுபொருளாகியிருந்தது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IoIwSxx4WZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:28:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 44 பேர் பலி - 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் தவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/floods-in-bangladesh-44-people-died-1783796108"></link>
            <id>https://tamilwin.com/article/floods-in-bangladesh-44-people-died-1783796108</id>
            <summary type="text">பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக
ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 44
பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக
ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 44
பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>சட்டோகிராம், காக்ஸ் பஜார், பண்டர்பன் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2.6 இலட்சம் குடும்பங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.</p><p></p><h2>தீவிர இயற்கை பேரிடர்கள்</h2><p>

போக்குவரத்து துண்டிப்பு, மின்சாரமின்மை போன்ற காரணங்களால் மீட்புப் பணிகள்
சவாலாக மாறியுள்ள சூழலில், இராணுவம் மற்றும் கடற்படையினர் படகுகள் மூலம்
மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab634078-2046-4b30-8ecb-8881f5377680/26-6a5292a5d1d6b.webp' /></p><p>

காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் ஏற்பட்ட
நிலச்சரிவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காலநிலை மாற்றத்தால்
இதுபோன்ற தீவிர இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வல்லுநர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: பொறுப்பான அமைச்சே காரணம் - மரிக்கார் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-incident-government-blame-marikar-1783795574"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-incident-government-blame-marikar-1783795574</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப்
பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப்
பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத்
தவறியதே காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.
மரிக்கார் கடுமையாகச் சாடியுள்ளார்.
</p><p>இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம்
சாட்டியுள்ளார்.</p><p></p><h2>அமைச்சரின் பொறுப்பற்ற தன்மை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
</p><p>முதல் நாள் அசம்பாவிதம் இடம்பெற்றபோதே, அமைச்சர் தனது அதிகாரத்தைப்
பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு
செய்திருந்தால், இரண்டாம் நாள் ஏற்பட்ட பாரதூரமான வன்முறைச் சம்பவங்களைத்
தடுத்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab22dc6-1b08-4d71-a795-1820347c98d8/26-6a52900348972.webp' /></p><p> அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே இத்தனை உயிர்கள் பலியாகக்
காரணமானது. இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை போன்றது.</p><p>நீதி அமைச்சரின் செயல்பாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க
பாராட்டி இருந்தார். அரசின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும்
நோக்கோடே அவர் அவ்வாறு பேசுகின்றார்.</p><p></p><h2>அரசுக்குச் சார்பாகச் செயல்</h2><p> </p><p>தனக்கு வழங்கப்பட்ட அரைவாசி பொது மன்னிப்பை
முழுமையாக மாற்றிக்கொள்ளும் சுயநல நோக்கிலேயே அவர் அரசுக்குச் சார்பாகச்
செயற்படுகின்றார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc062cd-7097-4406-9ba3-15c5df703d83/26-6a5290ac43a1b.webp' /></p><p>மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்திருந்தால் அசம்பாவிதத்தைத்
தடுத்திருக்கலாம் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றமை,
அதிகாரிகளின் மெத்தனத்தைக் காட்டுகின்றது.</p><p> 2 ஆயிரத்து 400 கைதிகளை ஒரே
இடத்தில் வைத்திருக்கின்றமை பெரும் தவறு. வன்முறையில் ஈடுபட்ட 100 அல்லது 200
கைதிகளை அன்றைய தினமே வேறொரு சிறைக்கு மாற்றியிருந்தால், நிலைமை இவ்வளவு
மோசமடைந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தின் தெளிவற்ற ஒப்பந்தங்களே மோதலுக்குக் காரணம் – முன்னாள் பிரித்தானிய தூதுவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-deal-cause-of-conflict-british-ambassador-1783794427"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-deal-cause-of-conflict-british-ambassador-1783794427</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் (MoU) உள்ள தெளிவற்ற ஒப்பந்தங்கள், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் (MoU) உள்ள தெளிவற்ற ஒப்பந்தங்கள், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக இரு
நாடுகளும் தங்களுக்குச் சாதகமாக வெவ்வேறு விளக்கங்களை அளிக்க வழிவகுத்துள்ளதாக
கட்டார் மற்றும் ஈரானுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் நிக்கோலஸ் ஹொப்டன்
தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த தெளிவற்ற தன்மையே சமீபத்திய பரஸ்பர வான்வழித் தாக்குதல்களுக்கு முக்கியக்
காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் இத்தகைய பல ஆவணங்கள் பொதுவாகவே
தெளிவற்றதாகவும், மாறுபட்ட விளக்கங்களுக்கு இடம் கொடுப்பதாகவும்
அமைந்திருப்பது வழக்கம் என்றும், இந்த 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும்
அதுவே நடந்துள்ளது என்றும் அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர்
கூறியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்து குறித்த
ஒப்பந்தத்தின் 5-வது பிரிவு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான
கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/169a47ba-dc37-45eb-ba16-149f9acf328f/26-6a528c314d42a.webp' /></p><p>அந்த நீரிணையின் மீது தங்களுக்கு இன்னும் ஓரளவிற்கு கட்டுப்பாடு உள்ளதாகவும்,
அதைக் கடந்து செல்லும் கப்பல்கள் தங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
என்றும் ஈரான் பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது.
</p><p>
இதனால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து இந்த வாரம் தாக்குதல்கள்
நடத்தப்பட்டாலும், நிலைமை மீண்டும் ஒரு முழு அளவிலான போராக மாறவில்லை என்பது
ஒரு நல்ல செய்தி என்று ஹாப்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்த ஒரு பெரிய
சாதனையாகவே இந்த அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நாம் கருத வேண்டும்
என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T21:19:22+00:00</updated>
        </entry>
    </feed>
