<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-16T19:35:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சிஅபிவிருத்தி குழு கூட்டத்தில் வெளிவராத ரகளைகள்! சிங்கப்பூர் பறந்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-doc-meeting-namal-visit-singapore-1784227466"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-doc-meeting-namal-visit-singapore-1784227466</id>
            <summary type="text">அண்மைக்காலங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மாவட்ட அபிவிருத்தி கூட்த்திலும், பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் குழப்பங்களை விளைவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மைக்காலங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மாவட்ட அபிவிருத்தி கூட்த்திலும், பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் குழப்பங்களை விளைவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையிலே, கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றையதினம் தினம்(16) நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை இடை நடுவே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டு அவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.</p><p>தொடர்ந்து பொது அமைப்புகள் மற்றும் தவிசாளர்களை இடையே ஏற்பட்ட வாய்த்தக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் இடைநடுவே வெளிநடப்பு செய்ததை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து அரச திணைக்க அதிகாரிகளும் வெளியேறியதை அடுத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>அத்தோடு, அர்ச்சுனாவின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.</p><p>இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களை நாட்டுநடப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aX-q_6RixaU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T19:20:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பை சவப்பெட்டியில் சித்தரித்த ஈரான்! &quot;We Will Kill Trump&quot; என புதிய விளம்பர பலகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-kill-trump-iran-new-billboard-us-president-1784227395"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-kill-trump-iran-new-billboard-us-president-1784227395</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து, &quot;We Will Kill Trump&quot; (ட்ரம்பைக் கொல்வோம்) என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர பலகையொன்று ஈரான் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து, "We Will Kill Trump" (ட்ரம்பைக் கொல்வோம்) என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர பலகையொன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நிறுவப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விளம்பர பலகை தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><h2>ட்ரம்பைக் கொல்வோம்</h2><p>
</p><p>
டெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பர பலகையில், கருப்பு நிற சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப் படுத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. </p><p>

அவரது தலைமுடி சீர்குலைந்த நிலையிலும், கண்களும் வாயும் மூடிய நிலையிலும், சிவப்பு நிற டையின் மீது கைகளை வைத்தபடி சித்தரிக்கப்பட்டுள்ளார். 


சவப்பெட்டியின் மீது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் "We Will Kill Trump" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4147468-5a8f-4ea2-b2ca-b8f91c094409/26-6a5928b8ae682.webp' /></p><p>
</p><p>
இந்த விளம்பர பலகை, அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
 அதன் பின்னணியில் துக்கச் சுவர் போன்ற வடிவமைப்பும், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>பிரம்மாண்ட விளம்பர பலகை</h2><p>

ஈரான், அரசியல் மற்றும் புரட்சிகர கருத்துகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இதுபோன்ற பிரம்மாண்ட விளம்பர பலகைகளை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது.</p><p> </p><p>

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தலைநகர் டெஹ்ரானின் முக்கிய பகுதிகளில் இதுபோன்ற அரசியல் விளம்பரங்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🇮🇷🇺🇸 | <a href="https://x.com/hashtag/Tehran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tehran</a> Billboard Shows <a href="https://x.com/hashtag/Trump?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Trump</a> in Coffin<a href="https://x.com/hashtag/Iran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Iran</a> has installed a billboard in Tehran showing President Trump lying in a coffin. A nearby statue depicts the fist of late Supreme Leader Ali Khamenei, who was killed at the start of the US-Israeli war on Iran.<br><br>A separate… <a href="https://t.co/Hf3yhonHcy">pic.twitter.com/Hf3yhonHcy</a></p>&mdash; Mahalaxmi Ramanathan (@MahalaxmiRaman) <a href="https://x.com/MahalaxmiRaman/status/2077672243958849758?ref_src=twsrc%5Etfw">July 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இதற்கு முன்பும், டொனால்ட் ட்ரம்பை விமர்சிக்கும் வகையில் "The Breaking Point" என்ற வாசகத்துடன் அவரது வாய் தைக்கப்பட்டிருப்பது போன்ற விளம்பர பலகையை ஈரான் வெளியிட்டிருந்தது.</p><p>மேலும், அமெரிக்க விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் ஈரானின் வலையில் சிக்கியிருப்பது போன்ற காட்சிகளும் அந்நாட்டின் விளம்பர பிரச்சாரங்களில் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>சர்வதேச ரீதியில் பதற்றம்</h2><p>
</p><p>
அதேவேளை, ஈரானில் வெளியான ஒரு பழமைவாத நாளிதழ், அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததற்குப் பழிவாங்க வேண்டிய இலக்குகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b94b76-ac0f-4096-ac59-11d4b1606418/26-6a5928b96d747.webp' /></p><p> </p><p>

அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல வெளிநாட்டு தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இந்த புதிய விளம்பர பலகை, ஈரான்-அமெரிக்கா இடையிலான ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T18:53:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தளை மனிதப் புதைகுழி மர்மம்..! சித்திரவதை தடயங்களுடன் மீட்கப்பட்ட 155 எலும்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784222292"></link>
            <id>https://tamilwin.com/article/matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784222292</id>
            <summary type="text">2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி (Mass Grave) தொடர்பான விடயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

2012 நவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி (Mass Grave) தொடர்பான விடயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
</p><p>
2012 நவம்பரில் மருத்துவமனை கட்டுமானப் பணியின் போது, 1988-89 காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சுமார் 154-155 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
</p><p>
எலும்புக்கூடுகளில் கம்பி, ஆணி மற்றும் சங்கிலிகள் கட்டப்பட்டிருந்த அடையாளங்கள் இருந்தன, இவை கொடூரமான சித்திரவதைகளுக்குப் பின் கொல்லப்பட்டதற்கான சான்றுகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
</p><p>
அந்த காலகட்டத்தில் மாத்தளை பகுதியில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர்கள் குறித்தும், அரசு பயங்கரவாதம் குறித்தும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2013ல் அவருடைய கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நீதி கோரி நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.</p><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மூலம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்து எலும்புக்கூடுகளுக்கும் டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
</p><p>
இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தான் அன்று இராணுவ முகாம் இருந்துள்ளதாக நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச தான் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் Newsinsights நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NUF5sRazdJY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T18:17:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்ட புதிய குரங்கு இனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monkey-with-orange-lips-forests-of-the-congo-1784225357"></link>
            <id>https://tamilwin.com/article/monkey-with-orange-lips-forests-of-the-congo-1784225357</id>
            <summary type="text">மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசின் லோமாமி தேசிய பூங்காவில், செம்மஞ்சள் நிற உதடுகளையும் கருப்பு முகத்தையும் கொண்ட முற்றிலும் புதிய குரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசின் லோமாமி தேசிய பூங்காவில், செம்மஞ்சள் நிற உதடுகளையும் கருப்பு முகத்தையும் கொண்ட முற்றிலும் புதிய குரங்கு
இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
உள்ளூர் மக்களால் 'லிக்வேலி' என்று அழைக்கப்படும் இந்த இனம், அடர்ந்த
காடுகளில் மரங்களின் உச்சியில் வசிக்கும் ஒரு இரகசிய வகை உயிரினமாகும்.</p><p></p><h2>புதிய குரங்கு இனம்</h2><p>
</p><p>
ஆபிரிக்காவில் கடந்த 75 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட ஐந்தாவது புதிய குரங்கு
இனமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aaeff69-3d4d-4db3-907e-9cddc6ed6cdf/26-6a591e5017bdb.webp' /></p><p>
</p><p>
அத்துடன், இதன் தனித்துவமான குரல் மற்றும் மரபணு சோதனைகள் மூலம் இது புதிய
இனம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T18:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதல்..! சவூதி எல்லையில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-conflict-tension-pakistan-troop-saudi-1784223638"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-conflict-tension-pakistan-troop-saudi-1784223638</id>
            <summary type="text">யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது நடத்திய ஏவுகணைத்
தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சவூதி அரேப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது நடத்திய ஏவுகணைத்
தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>

சவூதி அரேபியாவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ள பாகிஸ்தான், அங்கு
ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.</p><h2>இராணுவத்தினருக்குப் பதற்றம்</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தால், அமெரிக்கா -
ஈரான் மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் இராணுவ ரீதியாகப்
போருக்குள் இழுக்கப்படலாம் என்ற அச்சம் இஸ்லாமாபாத்தில் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b816c2c-6a26-4257-a713-25c527fe64a7/26-6a591c87cea4c.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T18:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைத் தகவல்கள் குறித்து ட்ரம்ப் உரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-president-trump-election-security-intelligence-1784220761"></link>
            <id>https://tamilwin.com/article/us-president-trump-election-security-intelligence-1784220761</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய
உரையாற்றத் திட்டமிட்டுள்ளார்.

இந்த உரையின் போது, 2020 அமெரிக்கத் தேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய
உரையாற்றத் திட்டமிட்டுள்ளார்.
</p><p>
இந்த உரையின் போது, 2020 அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட முயன்றது தொடர்பான
உளவுத்துறைத் தகவல்களை வெளியிடலாமா என்பது குறித்து வெள்ளை மாளிகை தீவிரமாக
ஆலோசித்து வருகிறது.</p><p></p><h2>தேர்தல் முறைகள்</h2><p>

எதிர்வரும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறைகள்
மற்றும் வாக்குப்பதிவு பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு
கருத்துகளைப் பேசி வரும் சூழலில் இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cafbd8c5-a00d-4e0d-9932-5ab855fcafe5/26-6a590e53b3476.webp' /></p><p>&nbsp;இதேவேளை, அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இவ்வாறு போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T17:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protests-in-ukrainian-cities-against-zelensky-1784220599"></link>
            <id>https://tamilwin.com/article/protests-in-ukrainian-cities-against-zelensky-1784220599</id>
            <summary type="text">உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஜனாதிபதிக்கு வொலொடிமிர் செலென்ஸ்கிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடங்களை ஆரம்பித்துள்ளனர்.
உக்ரைனில் மிகவும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஜனாதிபதிக்கு வொலொடிமிர் செலென்ஸ்கிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடங்களை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>உக்ரைனில் மிகவும் செல்வாக்கு பெற்ற பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய மிகைலோ பெடோரோவை ஜனாதிபதி செலென்ஷஸ்கீ திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.</p><p></p><h2>மக்கள் போராட்டம்</h2><p>
</p><p>ரஷ்யாவுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஜனாதிபதி செலென்ஸ்கீ எடுத்துள்ள இந்த முடிவு உக்ரைன் இராணுவம், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/917f6458-73a6-4b70-af87-ced5515b6458/26-6a590bb99f7e0.webp' /></p><p>
</p><p>இன்று காலை முதலே தலைநகர் கீவ்வில் உள்ள இவான் பிராங்கோ சதுக்கத்தில் பெருமளவிலான இளைஞர்களும் பொதுமக்களும் திரண்டனர். 
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், "அவமானம்! அவமானம்!" என்று முழக்கமிட்டனர்.
</p><p>போராட்டக்காரர்கள் கைகளில் ஏந்தியிருந்த சுலோக அட்டைகளில் ஜனாதிபதியின் முடிவை விமர்சித்து பல கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன.
"பெடோரோவ் மீது கை வைக்காதே!", "வெற்றியை சீர்குலைப்பதை நிறுத்து!" மற்றும் "நீ என்ன செய்கிறாய், முட்டாளே?" போன் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.</p><p></p><h2>பெரும் அதிருப்தி</h2><p>
</p><p>ஜனாதிபதியின் இந்த முடிவு இராணுவ வீரர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e3278a-7f64-4205-af2a-db5b681aecda/26-6a5918c01128d.webp' /></p><p>
</p><p>இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கிக்கும், பாதுகாப்பு அமைச்சர் பெடோரோவுக்கும் இடையிலான அதிகார மோதலில், ஜனாதிபதி செலென்ஸ்கீ, தளபதி சிர்ஸ்கிக்கு ஆதரவாகச் செயல்பட்டு பெடோரோவை நீக்கியுள்ளார் என்பதே மக்கள் கோபத்திற்கு முக்கியக் காரணமாகும்.</p><p>
மக்கள் வீதிக்கு வந்து தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பது சரியானதுதான். உக்ரைன் சமூகம் என்ன சொல்கிறது என்பதை நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்" என ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் அதிரடி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-committing-war-crimes-1784219484"></link>
            <id>https://tamilwin.com/article/us-committing-war-crimes-1784219484</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார். 
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இவ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார். </p><p>
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இவ்வாறு போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களும், பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல்களும், "கொடிய குற்றங்களைச் செய்வதற்கான அமெரிக்க ஆளும் குழுவின் குற்றவியல் நோக்கத்தை" காட்டுவதாக அவர் குற்றம் சுதம்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/035132dd-923b-4ace-bbff-b420ab28510a/26-6a590762c4f38.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை அப்பட்டமாக மீறும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>1949-ஆம் ஆண்டின் நான்கு ஜெனிவா ஒப்பந்தங்கள் உட்பட, சர்வதேச குற்றவியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளின்படி இவை "பாரதூரமான சர்வதேச குற்றங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>
"இத்தகைய குற்றங்களைச் செய்பவர்களை விசாரித்து தண்டிக்க அனைத்து அரசாங்கங்களுக்கும் கடமை உள்ளது என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மேலும், அமெரிக்க அதிகாரிகளின் அர்த்தமற்ற பேச்சுக்கள் மற்றும் கொடூரமான மிரட்டல்களை அவர் சாடியுள்ளார்.</p><p>
ஈரானிய மக்கள் தங்களது சுதந்திரம், நியாயமான உரிமைகள் மற்றும் மனித கண்ணியத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருப்பதன் காரணமாகவே இந்த விரோதப் போக்கு காட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>இறுதியாக, இதற்கு காரணமானவர்கள் "தங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் செயல்பட்டதாகக் கூறி, சட்டரீதியான பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது" எனவும் அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T16:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுவலையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-in-kaduwela-a-short-while-ago-1784218416"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-in-kaduwela-a-short-while-ago-1784218416</id>
            <summary type="text">கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>

இந்த துப்பாக்கிச் சூடு இன்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ed436a9-fff3-4585-9311-6b26c4c75d9f/26-6a59061bb4a65.webp' /></p><p>

சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
</p><p>

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலா நோயிலிருந்து விடுபடும் உகாண்டா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uganda-is-recovering-ebola-patient-recovered-home-1784218789"></link>
            <id>https://tamilwin.com/article/uganda-is-recovering-ebola-patient-recovered-home-1784218789</id>
            <summary type="text">உகாண்டாவில் எபோலா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் இன்று
குணமடைந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதன் மூலம், உகாண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உகாண்டாவில் எபோலா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் இன்று
குணமடைந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
</p><p>
இதன் மூலம், உகாண்டா நாடு எபோலா வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக
அறிவிப்பதற்கான 42 நாட்கள் கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது
என்று அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
அண்டை நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா பாதிப்பு தீவிரமாக உள்ள
நிலையில், அங்கிருந்து உகாண்டாவுக்குப் பயணித்த 15 பேர் உட்பட மொத்தம் 20
பேருக்கு கடந்த மே மாதம் பாதியிலிருந்து இந்த அரிய வகை 'புந்திபூகியோ' எபோலா
தொற்று உறுதி செய்யப்பட்டது.</p><p></p><h2>புதிய பாதிப்புகள்</h2><p>
</p><p>
கொங்கோவில் தற்போதும் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில்,
உகாண்டாவில் கடந்த ஜூன் 22ஆம் திகதிக்குப் பிறகு புதிய பாதிப்புகள் எதுவும்
கண்டறியப்படவில்லை.
</p><p>
இதுகுறித்து உகாண்டா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில்,
"உகாண்டாவின் கடைசி எபோலா நோயாளியான காங்கோ நாட்டைச் சேர்ந்த நபர் முற்றிலும்
குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்" என்று
குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd0921f-8b9a-4403-ad55-23f75998b867/26-6a5904a7c8897.webp' /></p><p>
</p><p>
அவர் கம்பாலாவில் உள்ள முலகோ தேசிய மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட
பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலின்படி, எபோலா வைரஸின் அதிகபட்ச
தனிமைப்படுத்தல் காலம் (Incubation period) 21 நாட்களாகும்.</p><p>

இதனால், எவ்வித புதிய பாதிப்பும் இல்லாமல் அடுத்த 42 நாட்கள் கடந்தால் மட்டுமே
ஒரு நாடு எபோலா தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படும்.

தற்போது உகாண்டா அந்த இலக்கை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காட்டுத்தீ: கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பாதிக்கலாம் என அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-burn-canada-football-world-cup-final-1784215116"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-burn-canada-football-world-cup-final-1784215116</id>
            <summary type="text">கனடாவில் தற்போது 800-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து
வருவதால், அதிலிருந்து வெளிவரும் அடர்ந்த புகை அமெரிக்காவின் வடக்கு
மாநிலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் தற்போது 800-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து
வருவதால், அதிலிருந்து வெளிவரும் அடர்ந்த புகை அமெரிக்காவின் வடக்கு
மாநிலங்கள் வரை பரவி கடுமையான காற்று மாசை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

அமெரிக்காவின் டெட்ராய்ட், மினியாபோலிஸ் போன்ற நகரங்களில் காற்றின் தரம்
மிகவும் மோசமடைந்து 'ஆபத்தான' நிலையை எட்டியுள்ளது.</p><p>

இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>உலகக் கிண்ண இறுதிப் போட்டி</h2><p>

காற்றின் திசை மாறாவிட்டால் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில்
நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் இந்தப் புகை பாதிப்பை
ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43460d21-e97e-485f-afb8-f4cf806b6ec7/26-6a58f64ec30e5.webp' /></p><p>கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் காற்றின் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T15:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் வலியுறுத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-against-archchuna-mp-chandrasekar-1784213528"></link>
            <id>https://tamilwin.com/article/action-against-archchuna-mp-chandrasekar-1784213528</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.</p><p>கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்று(16.7.2026) ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p> இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

"கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மிகவும் அமைதியான முறையிலேயே நடைபெற்று வந்தது.</p><p></p><h2>குழப்பம்&nbsp;</h2><p>

இந்நிலையில், சிவபூசையில் கரடி புகுந்தது போல, ஒரு கரடி புகுந்து பைத்தியக்காரத்தனமாக விளையாடி, குழப்பத்தை விளைவித்துக் கூட்டத்தை இடைநிறுத்தியது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக எல்லாக் கூட்டங்களுக்கும் சென்று குழப்பம் விளைவித்து வருகின்றார்; அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31d1a42c-b640-42e3-8679-866f92d301e3/26-6a58f40577d4c.webp' /></p><p>
</p><p>
அபிவிருத்திக் குழுக்கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், அந்த அதிகாரிகளால் சமூகத்தின் முன் செல்ல முடியாத நிலை ஏற்படும்.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>
</p><p>
அர்ச்சுனாவின் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு இன்றைய கூட்டமே சாட்சியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/634add9d-0386-4700-9f27-41ad3783c648/26-6a58f4062755b.webp' /></p><p>
</p><p>
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம். அடுத்து வரும் நாட்களில் மீண்டும் அபிவிருத்திக் குழு கூடும்; அப்போது உறுதியான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T15:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்: ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukraine-s-defence-minister-removed-from-office-1784211652"></link>
            <id>https://tamilwin.com/article/ukraine-s-defence-minister-removed-from-office-1784211652</id>
            <summary type="text">யுக்ரைனின் பிரபல பாதுகாப்பு அமைச்சரான மைக்கைலோ ஃபெடோரோவை ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி திடீரென பதவியிலிருந்து நீக்கியதை
எதிர்த்து யுக்ரைனின் பல்வேறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுக்ரைனின் பிரபல பாதுகாப்பு அமைச்சரான மைக்கைலோ ஃபெடோரோவை ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி திடீரென பதவியிலிருந்து நீக்கியதை
எதிர்த்து யுக்ரைனின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கிப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள்
மற்றும் பொதுமக்கள், *"ஃபெடோரோவ் மீது கை வைக்காதே, வெற்றியைத் தடுப்பதை
நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தி ஜனாதிபதிக்கு எதிராக
கோஷமிட்டனர்.
</p><p>
கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற 35 வயதான ஃபெடோரோவ்,
யுக்ரைன் ராணுவத்தில் இருந்த ஊழலை ஒழித்ததோடு, போர்க்களத்தில் நவீன
தொழில்நுட்பங்கள் மற்றும் ட்ரோன்களை (Drones) அறிமுகப்படுத்தி பெரும்
வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்.</p><p></p><h2>பதவி நீக்கம்</h2><p>
</p><p>
எனினும், அவருக்கும் யுக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர்
சிர்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த
நீக்கத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
</p><p>
செய்தியாளர்களிடம் பேசிய ஃபெடோரோவ், "இராணுவத் தளபதி சிர்ஸ்கி ரஷ்யாவை
வீழ்த்துவதற்கான புதிய உத்திகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, நமது நாட்டைப்
பிளவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்" என்று குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ecd90a7-2aca-4550-9650-6be168aee554/26-6a58eddaeb173.webp' /></p><p>

ஃபெடோரோவின் இந்த திடீர் நீக்கம் உக்ரைன் ராணுவ வீரர்கள் மத்தியிலும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> "யுக்ரைன் வரலாற்றிலேயே மிகச்சிறந்த
பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதி நீக்கியுள்ளார்.

இது ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் செய்த மிகப்பெரிய தவறு" என்று களத்தில்
இருக்கும் யுக்ரைன் இராணுவ வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

யுக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய உள்துறை அமைச்சர் இஹோர்
க்ளிமென்கோ நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T14:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அரசியல் ஆபத்தில் சிக்கிய ஆர்ஜென்டினா - FIFA அமைப்பு எடுக்கப்போகும் முடிவு என்ன..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/argentina-players-banner-after-fifa-world-cup-win-1784211960"></link>
            <id>https://tamilwin.com/article/argentina-players-banner-after-fifa-world-cup-win-1784211960</id>
            <summary type="text">உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்குப்
பின்னர், சர்ச்சைக்குரிய பதாகை ஒன்றை ஏந்தி ஆர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்குப்
பின்னர், சர்ச்சைக்குரிய பதாகை ஒன்றை ஏந்தி ஆர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியமையானது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. </p><p>


இதனால், ஆர்ஜென்டினா கால்பந்து அணி மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க சர்வதேச
கால்பந்து கூட்டமைப்பு (FIFA) ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அட்லாண்டாவில் இடம்பெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி
ஆர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.</p><h2> 

மைதானத்தை அலங்கரித்த பதாகை</h2><p>

இந்த போட்டி முடிந்ததும், அர்ஜென்டினா வீரர்கள் "லாஸ் மால்வினாஸ் சன்
ஆர்ஜென்டினாஸ்" (மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை) என்ற
வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி மைதானத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ed88293-840b-42d3-8944-cc9250fb41cd/26-6a58ea51ad020.webp' /></p><p>

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபோக்லாந்து தீவுகளை ஆர்ஜென்டினா
தங்களுக்குச் சொந்தமானது எனக் கோரி வரும் நிலையில், இந்த தீவுகளை ஆர்ஜென்டினாவில் "மால்வினாஸ்" என்று அழைக்கின்றனர்.
</p><p>
இந்த விவகாரத்தில் FIFA உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று
பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
FIFA -க்கு அழுத்தம் கொடுக்கும் பிரித்தானிய

இது குறித்துப் பேசிய பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர், 

“ உலகக் கிண்ணம்
நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் ஃபோக்லாந்து தீவுகள் எப்போதும்
நமக்குத்தான் சொந்தம். இதில் எங்கள் அர்ப்பணிப்பு ஒருபோதும் குறையாது" என உறுதியளித்துள்ளார்.
</p><p>
கடந்த 2014ஆம் ஆண்டும் இதே போன்றதொரு பதாகையை ஏந்தியதற்காக ஆர்ஜென்டினா
கால்பந்து சங்கத்துக்கு FIFA அபராதம் விதித்திருந்தது.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து ஆர்ஜென்டினா நீக்கப்படாது என்றாலும்,
இந்த அரசியல் ரீதியான செயல்பாட்டிற்காக வீரர்கள் அல்லது கால்பந்து
சங்கத்துக்கு FIFA அபராதம் அல்லது தடை விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலாவெளியில் யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arrested-with-elephant-tusks-in-nilaveli-1784210167"></link>
            <id>https://tamilwin.com/article/person-arrested-with-elephant-tusks-in-nilaveli-1784210167</id>
            <summary type="text">திருகோணமலை- நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை
வீட்டில் வைத்திருந்த நபரொருவர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது
செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை
வீட்டில் வைத்திருந்த நபரொருவர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (15) நிலாவெளி, வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள
வீடு ஒன்றில் முன்னெடுக்கப்பட்டது.</p><p>

திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல்
ஒன்றின் பேரில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>விசாரணை</h2><p> </p><p>இதன்போது சந்தேக
நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்கள்
அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.</p><p>

விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டி. திலகரத்ன
மற்றும் அதிகாரி எச்.எம்.டி. மாலித் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தச் சோதனையை
வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24d5b4e4-b325-4f38-a235-49a7f52ce719/26-6a58e5bbdf828.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்களுடன் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்,
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:08:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 வருடங்களுக்கு பின் மகளுக்கு வந்த தீர்ப்பு - 47 வயது தந்தைக்கு நீதிமன்றம் 45 வருட சிறைத்தண்டனை உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/verdict-for-the-daughter-after-12-years-1784210624"></link>
            <id>https://tamilwin.com/article/verdict-for-the-daughter-after-12-years-1784210624</id>
            <summary type="text">கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக
பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு எதிராக நீதிமன்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக
பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>

குறித்த வழக்கானது இன்று(16.07.2026) வவுனியா மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, குறித்த தந்தைக்கு 45 வருட கடூழிய
சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு
மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல்
நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><h2>

மகளுக்கு நேர்ந்த கதி</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

14 வயது நிரம்பிய சிறுமியை அவருடைய தன்னை தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி வந்துள்ளார். </p><p> இந்த சம்பவம் வவுனியா - கனகராயன் குளம்
பகுதியில் 2013, 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியிகளில் இடம்பெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிஸாரால் செய்து செய்யப்பட்டு, பி அறிக்கையின் மூலம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்
முற்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab56da96-b12f-4a02-821c-2c98a1d2fbd5/26-6a58e52060916.webp' /></p><p> </p><p>

இதனை தொடர்ந்து குறித்த எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த
2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கம்
செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த தொடர்பான வழக்கு தொடர்ச்சியாக விளக்கத்திற்கு எடுத்து
கொள்ளப்பட்டு, குறித்த வழக்கானது வவுனியா மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக
இன்று(16.07) திகதியிடப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.
ஆனந்தராஜா குறித்த தந்தைக்கு 45 வருட கடூழிய
சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு
மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><h2>


45 வருட கடூழிய சிறைத் தண்டனை</h2><p>

இதன்போது, குறித்த 47 வயது நிரம்பிய எதிரிக்கு எதிராக 4 பாலியல் வன்புணர்வு
குற்றச்சாட்டுக்கள் அரச சட்டவாதியால் சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மன்று, இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 4
குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில், 45 வருட கடூழிய சிறைத் தண்டனை
வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c3963eb-9872-4ca3-90de-2d4856da98e9/26-6a58e5212b2a1.webp' /></p><p> 

இதேவேளை, நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு
குற்றச்சாட்டுக்கும் ரூபாய் 3 இலட்சம் வீதம் 12 இலட்சம் ரூபாய் சிறுமிக்கு
நஸ்ட ஈட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும்
25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் நீதிமன்றத்திற்கு அபாரம் செலுத்த
வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளத.</p><p>


இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்க வேண்டிய அவரின் இயற்கை
பாதுகாவலராகிய தந்தையே இவ்வாறு குற்றச்சாட்டினை புரிந்துள்ளமை காரணமாக, குறித்த எதிரிக்கு எதிராக எந்தவித 
கருணையும் காட்டாது அதிகபட்ச தண்டனை விதித்துள்ளதாக
நீதிபதி மன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2 லட்சம் பேர் கைது - விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-lakh-people-arrested-on-drug-charges-1784209289"></link>
            <id>https://tamilwin.com/article/2-lakh-people-arrested-on-drug-charges-1784209289</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “ஒன்றிணைந்த தேசிய
போதைப்பொருள் ஒழிப்பு” நடவடிக்கையின் கீழ், கடந்த எட்டு மாத காலப்பகுதியில்
போதைப்பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “ஒன்றிணைந்த தேசிய
போதைப்பொருள் ஒழிப்பு” நடவடிக்கையின் கீழ், கடந்த எட்டு மாத காலப்பகுதியில்
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 248 பேர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம்
தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பிலுள்ள திட்டத்தின் பிரதான காரியாலயத்தில் இன்று(16.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, பொலிஸ் போதைப்பொருள்
ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக தர்மசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>



விசேட நடவடிக்கை</h2><p>

முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகிய தரப்பினர்
ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்த விசேட நடவடிக்கைகள் மிகவும் திறம்பட
முன்னெடுக்கப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7071fd3-e0a5-4155-a8a6-f8f00078745d/26-6a58e02168ac5.webp' /></p><p> </p><p>

மேலும், கைது நடவடிக்கைகளின் போது எவ்விதமான நிரபராதிகளும் பாதிக்கப்படக்
கூடாது என்பதில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுகின்றது
என்றும், இது குறித்த தெளிவான அறிவுறுத்தல்கள் அனைத்து அதிகாரிகளுக்கும்
வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2> 

விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல்க்காரர்கள்</h2><p>

இதே ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப்
பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில்,</p><p> 

கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் தபால் நிலையங்கள் ஊடாக
நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 13 போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைச் சுங்க
அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/121505a0-1564-4766-af14-ddd6df2823ad/26-6a58e02235661.webp' /></p><p>
</p><p>
சிறிய அளவிலான போதைப்பொருள்கள் தபால் மூலம் கொண்டு வரப்பட்டாலும், அவை
சமூகத்தில் பாரிய சீரழிவை ஏற்படுத்தக்கூடும். </p><p>

எனவே, இவ்வாறான கடத்தல்களை
முறியடிக்கச் சுங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
நடவடிக்கைகள் தற்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இரவு விடுதிக்குள் சிக்கிய பெண் - ஐந்து கோடி ரூபா சிக்கிய மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-was-arrested-for-defrauding-money-1784175448"></link>
            <id>https://tamilwin.com/article/woman-was-arrested-for-defrauding-money-1784175448</id>
            <summary type="text">கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல இரவு விடுதியொன்றில், சூதாட்டத்தின் போது 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல இரவு விடுதியொன்றில், சூதாட்டத்தின் போது 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

சீட்டுக்கட்டுகளைக் கையாள்வதன் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
அந்த விடுதிக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பொன்றை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த மாபெரும் மோசடி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.</p><h2><b>மாபெரும் மோசடி</b></h2><p> 

கைது செய்யப்பட்ட 21 வயதுடைய பெண் அத்திடிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12374fa6-963f-40e4-bac2-15f76c47965e/26-6a58de5974cd7.webp' /></p><p>சூதாட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கலைக்கும்போது, அந்த பெண் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தெரியும்படி அதைக் கையாண்டு, அந்தத் தரவுகளைக் காணொளி எடுப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளார். </p><p>

இவ்வாறு பெறப்பட்ட காணொளி காட்சிகளை பயன்படுத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் பெரும் தொகையை வென்றுள்ளார்.</p><p> 

அத்துடன், அதில் 5 கோடி ரூபாவை சந்தேகநபரான அந்தப் பெண்ணுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><h3>

மேலதிக விசாரணை</h3><p>கடந்த இரண்டரை மாதங்களாக திட்டமிட்டு இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddd1d2ee-ac0e-4916-b471-11b476662b25/26-6a58de5a5cc39.webp' /></p><p>அந்த மேசையில் பணிபுரிந்த மேலும் ஐந்து ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T13:36:34+00:00</updated>
        </entry>
    </feed>
