<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-13T14:37:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை - மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-dumping-garbage-pradeshiya-sabha-premises-1783951033"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-dumping-garbage-pradeshiya-sabha-premises-1783951033</id>
            <summary type="text">அம்பாறை - நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர்
பிரதேச சபையைச் சுற்றியுள்ள வளாகங்களில் சிலரால் தொடர்ச்சியாக அநாமதேயமாக
குப்பைகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர்
பிரதேச சபையைச் சுற்றியுள்ள வளாகங்களில் சிலரால் தொடர்ச்சியாக அநாமதேயமாக
குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு வருவதாக நிந்தவூர் பிரதேச
சபை தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்விடங்களில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தப்பட்ட போதிலும்,
சில தனிநபர்களால் தொடர்ந்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>இதனால்
சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடுவதுடன், பொதுச் சுகாதாரத்திற்கும்,
பிரதேசத்தின் அழகுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சபை
சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><h2>கடுமையான சட்ட நடவடிக்கைகள்&nbsp;</h2><p>இதனைக் கருத்திற் கொண்டு, இத்தருணத்திலிருந்து மேற்படி பகுதிகளில் எந்தவிதமான
குப்பைகளையோ அல்லது கழிவுப்பொருட்களையோ கொட்டுவது முற்றிலும் தடை
செய்யப்படுவதாக பிரதேச சபை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e8cc7af-7e6b-4c7a-b403-9cfd3e55db40/26-6a54f148d3b0f.webp' /></p><p>பொதுமக்கள் தங்களது வீட்டு மற்றும்
சிறிய அளவிலான கழிவுப்பொருட்களை, பொது சந்தை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள
தினசரி கழிவகற்றல் பெட்டியில் மட்டும் கொட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டுபவர்களை உடனடியாக இனங்காணும் நோக்கில், குறித்த
பகுதிகளில் இரகசிய கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு, தொடர்ச்சியாக
தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இந்த உத்தரவையும்
மீறி, பொது இடங்களில் குப்பைகள் அல்லது கழிவுப்பொருட்களைக் கொட்டுபவர்கள்
அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என நிந்தவூர் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T14:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். வடமராட்சியில் சட்டவிரோத சுருக்குவலையுடன் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-purse-seine-net-in-vadamarachchi-1783952398"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-purse-seine-net-in-vadamarachchi-1783952398</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில்&amp;nbsp; உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோத சுருக்குவலையுடன் ஒருவர் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில்&nbsp; உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோத சுருக்குவலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் அதிகரித்துள்ளதால் அதனை
தடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மற்றும் மருதங்கேணி
பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p>இதன் ஒரு பகுதியாக நேற்று (12) இரவு கட்டைக்காட்டில் தொடர் சுற்றிவளைப்பு
மேற்கொள்ளப்பட்ட போது உழவு இயந்திரத்தில் கடற்கரை பகுதிக்கு
கொண்டுசெல்லப்பட்ட சுருக்குவலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86402bdf-8f60-4d78-9ada-6cecab78e31b/26-6a54f4109cdd9.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில்
முற்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T14:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களுடன் நீராடச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் - பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10th-grade-student-died-while-swimming-friends-1783952066"></link>
            <id>https://tamilwin.com/article/10th-grade-student-died-while-swimming-friends-1783952066</id>
            <summary type="text">நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் இன்று(13.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>



10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு</h2><p>

உயிரிழந்தவர் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10ஆம் வகுப்பு கல்வி பயிலும் மாணவன் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

பரீட்சை முடிந்தவுடன், நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்ற வேளையில், எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbce99d5-6971-4d23-afb4-fbb9b47a7c06/26-6a54f3056666f.webp' /></p><p>
</p><p>

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மாணவருடன் மொத்தம் பத்து மாணவர்கள் ஆற்றுப்
பகுதிக்கு சென்றிருந்ததாகவும், அவர்களில் குறித்த மாணவன் நீரில் அடித்துச்
செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

தேடுதல் பணி தீவிரம்</h2><p>
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் லிந்துலை பொலிஸார், பிரதேசவாசிகள்
மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல்
நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். </p><p> 

இதன்போது, சுழியோடிகளின் உதவியுடன் ஆற்றில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>&nbsp;சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T14:15:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளின் பாதுகாப்பு கவசத்திற்குள் புகுந்த பாம்பு..! பதறிப்போன உரிமையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/snake-enters-motorcycle-s-protective-shield-1783951216"></link>
            <id>https://tamilwin.com/article/snake-enters-motorcycle-s-protective-shield-1783951216</id>
            <summary type="text">ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ள நிலையில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவம் இன்று(13.07.2026) அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><h2>

பாதுகாப்பு கவசத்திற்குள் புகுந்த பாம்பு</h2><p>
இன்று(13) சுமாராக 3 மணியளவில், ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், தனது வாகனத்தை வீதியோரமாக நிறுத்திவிட்டு
சென்றுள்ளார்.
</p><p>
இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பாதுகாப்புக்
கவசத்திற்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது. 

இதனையடுத்து, அருகில் சென்ற ஒருவர் அந்தப் பாம்பு கவசத்திற்குள் இருந்து தலையை
வெளியே நீட்டி எட்டிப்பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கிருந்தவர்களுக்கு
தகவல் வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fafd67bf-fdc3-449f-a11e-431d66a2b22d/26-6a54f010cd5ca.webp' /></p><p> </p><p>

தகவல் அறிந்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள்
மற்றும் வர்த்தகர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்ததால், அப்பகுதியில் சிறிது
நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. </p><h2>

பாம்பு பாதுகாப்பாக மீட்பு</h2><p>

அதன் பின்னர், அங்கிருந்த சிலர் மிகவும் அவதானமாக செயல்பட்டு, மோட்டார் சைக்கிளின் கவசப் பகுதியில் இருந்த பாம்பை தடியின் ஊடாக பாம்பை பாதுகாப்பாக வெளியே எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d632aa4b-c974-4496-896d-739673bde60f/26-6a54f011c17d1.webp' /></p><p> 

பாம்பிற்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் ஹட்டன் தொடருந்து நிலையப்
பாதைக்கு அண்மையிலுள்ள புதர்ப்பகுதியில் விடப்பட்டுள்ளது. </p><p>

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை. இருப்பினும், நகர்ப்புறங்களிலும் வாகனங்களுக்குள் பாம்புகள் புகும் சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வருவதால், நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
வாகனங்களை இயக்குவதற்கு முன் அவற்றை நன்கு பரிசோதித்துக் கொள்வது அவசியம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p> <img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9859ba9-1b3d-45dd-8d4d-ef0d99693225/26-6a54f0136271e.webp' /></p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6a1ae25-53ae-469f-a080-e611913f2d63/26-6a54f012934f9.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T14:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி.வடக்கில் விவசாயத்தில் ஈடுபடும் இராணுவத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/military-personnel-engaged-in-farming-in-jaffna-1783949809"></link>
            <id>https://tamilwin.com/article/military-personnel-engaged-in-farming-in-jaffna-1783949809</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்
இராணுவத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்
இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் பிரதி
அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு
வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 1661 ஏக்கர் காணி
இராணுவத்தினருக்கு தேவை எனவும் அவற்றுக்கான இழப்பீட்டை காணி
உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டு&nbsp;</h2><p>

அத்துடன் , வலி. வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமது சுய தேவைக்கு எனவும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56000aff-bdc8-4026-a363-59099645e1e0/26-6a54ed8c3b97e.webp' /></p><p>பிரதி அமைச்சரின் இக்கூற்றினை முற்றாக நிராகரித்த வலி.வடக்கு மக்கள், தாம்
தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டு 36 வருடங்கள் கடந்த நிலையிலும் எமது காணிகளை பாதுகாப்பு காரணம் என கூறி அடாத்தாக கையகப்படுத்தி, அவற்றில்
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
</p><p>
நாம் எமது காணிகளை இழந்து வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது,
எமது காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவத்தினர் விவசாய உற்பத்தி பொருட்களை
பெருமளவில் விற்று இலாபம் ஈட்டுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>மரக்கறி கொள்வனவு நிலையம்</h2><p>
</p><p>மேலும், இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடானது உள்ளூர்
விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35f0cd3e-6e16-4b0a-a346-da92e1ccdcf4/26-6a54ed8d0cb0a.webp' /></p><p>வலி.வடக்கில் இராணுவத்தினரின் விவசாய பண்ணைகளில் உற்பத்தியாகும் விவசாய
உற்பத்தி பொருட்களை பலாலி வீதியில் உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார்
பல்பொருள் அங்காடியின் மரக்கறி கொள்வனவு நிலையத்தில் இராணுவத்தினர் பெருமளவில்
விற்பனை செய்து வருகின்றனர்.</p><p>

இதற்கான ஆதாரமாக தம்மிடம் காணொளி பதிவுகள் உள்ளதாக கூறி அவற்றை ஊடகங்களுக்கு
அனுப்பியுள்ளனர்.</p><p>
மக்களின் காணி மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் கடந்த ஆட்சியாளர்கள்
போன்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றாது காணிகளை மக்களிடம் மீள கையளிக்க
வேண்டும் என கோரியுள்ளனர்.</p><p></p><p>]</p>]]></content>
            <updated>2026-07-13T13:52:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்ற வர்த்தகத்திற்கு தடை: ஐரோப்பிய ஒன்றியம் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-trade-with-israel-s-illegal-settlements-1783949485"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-trade-with-israel-s-illegal-settlements-1783949485</id>
            <summary type="text">இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றப் பகுதிகளுடனான வர்த்தகத்திற்குத் தடை அல்லது
பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வெளியுறவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றப் பகுதிகளுடனான வர்த்தகத்திற்குத் தடை அல்லது
பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வெளியுறவு
அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

இறக்குமதி உரிம முறை, அதிகப்படியான வரிகள் அல்லது முழுமையான தடை விதிப்பது
உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்கள் அடங்கிய வரைவு அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஆணையம்
இந்த கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது.
</p><p>
மேற்குக்கரையில் நிலவும் சூழல் மிகவும் சகித்துக்கொள்ள முடியாததாக
உள்ளதாகவும், இது இரு நாட்டுத் தீர்வுக்கான சாத்தியங்களை முடக்குவதாகவும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் காயா காலாஸ் கவலை
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வர்த்தகத் தடை</h2><p>
</p><p>
இந்த வர்த்தகத் தடையை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து 27 நாடுகளின்
ஒருமித்த ஆதரவு தேவையா அல்லது தகுதிவாய்ந்த பெரும்பான்மை போதுமா என்பதில்
உறுதியான முடிவு எட்டப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf2ae28e-5fdc-475d-9c91-7173ff502b64/26-6a54ed496d6bd.webp' /></p><p>

ஸ்பெயின், அயர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராகக் கடுமையான
பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கோரி வரும் நிலையில், ஜெர்மனி மற்றும் இத்தாலி
போன்ற நாடுகள் இன்னும் இது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் தயக்கம் காட்டி
வருகின்றன.
</p><p>
கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் மேற்குக்கரையை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், சர்வதேச
சட்டங்களின்படி அது சட்டவிரோதம் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ)
தீர்ப்பையும் மீறி அங்கு 5 இலட்சத்திற்கும் அதிகமான யூத குடியேற்றங்களை
அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T13:51:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தொடர்பில் வெளியான அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-regarding-agrahara-1783949591"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-regarding-agrahara-1783949591</id>
            <summary type="text">அனைத்து அரசு ஊழியர்களும் அரச ஊழியர்களுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் “அக்ரஹாரா” தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்து அரசு ஊழியர்களும் அரச ஊழியர்களுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் “அக்ரஹாரா” தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கொடைப் பண்பாட்டின் தலைவர் டாக்டர் விசாகா வனசிங்க, பயனாளிகள் தங்களது தகவல்களை கூடிய விரைவில் புதுப்பித்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p> 

அரச மற்றும் மாகாண அரசுப் பணியில் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள சுமார் 0.9 மில்லியன் மக்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் நேரடிப் பயனாளிகளாக இதுவரை காலமும் இருந்து வருகின்றனர்.</p><p></p><p> </p><p>

மேலும், சுமார் 3 மில்லியன் மக்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இதன் கீழ் பலன்களைப் பெற்றுக் கொள்வதாக டாக்டர் விசாகா வனசிங்க தெரிவித்துள்ளார். </p><h2>


ஓய்வுதிய பயனாளிகளுக்கான அறிவிப்பு</h2><p>
அக்ரஹாரா தரவுத்தளத்தைப் புதுப்பிக்கும் பணி ஏப்ரல் 2026-ல் தொடங்கியுள்ள நிலையில், இதன் கீழ் சுமார் 0.6 மில்லியன் அரசு ஊழியர்கள் தங்களது தகவல்களை புதுப்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64466a34-8b61-4755-b860-14bba08fcae1/26-6a54e9bd66032.webp' /></p><p> </p><p>

சுமார் 1900 அரசு நிறுவனங்கள் அக்ரஹாரா உறுப்பினர்களைப் பணியமர்த்தியுள்ளன என்றும், அந்நிறுவனங்களின் அக்ரஹாரா ஒருங்கிணைப்பு அதிகாரிகளைப் பரிந்துரைக்குமாறு அந்நிறுவனங்களுக்கு எழுத்துப்பூர்வமான அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றும், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் டாக்டர் விசாகா வனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

இதுவரை அத்தகைய அதிகாரிகளை நியமிக்காத நிறுவனங்களின் ஒத்துழைப்பைக் கோரிய தேசிய காப்பீட்டு அறக்கட்டளையின் தலைவர், அதிகாரிகளால் இந்தத் தரவுத்தளத்தில் சேர்க்கப்படும் தரவுகளின் துல்லியத்தை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அக்ரஹாரா அதிகாரியும், நிறுவனத்தின் தலைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் இந்தத் தரவுத்தளத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p> 

இந்த விடயம் தொடர்பாக ஒவ்வொரு அரசு நிறுவனமும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்ட தலைவர், எதிர்காலத்தில் இந்தத் தரவுத்தளத்தின் மூலமாக மட்டுமே பலன்களை வழங்க முடியும் என நம்பிக்கை வெளிியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T13:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/buddhangala-sanctuary-one-arrested-with-gun-1783947070"></link>
            <id>https://tamilwin.com/article/buddhangala-sanctuary-one-arrested-with-gun-1783947070</id>
            <summary type="text">அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான
காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான
காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை
வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் குறித்த நபர் சட்டவிரோத துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த
இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதத்
துப்பாக்கியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகள் சந்தேக நபரை மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த
உள்ளதாக வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d4c0d66-b219-4577-9c16-fb245530fa07/26-6a54e6c101273.webp' /></p><p>
அம்பாறை வனவிலங்குத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ்
வனவிலங்கு கள பாதுகாவலர் ஜி.என். டி சில்வா, வனவிலங்குப் பாதுகாவலர்
ஜெயந்தன், இ வனவிலங்குப் பாதுகாவலர் கே.எம்.எச்.பி. சஞ்சீவ, அதிகாரிகளே
இந்தச் சந்தேக நபரைச் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள்
தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T13:27:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வெப்ப அலை: பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-heatwave-over-2-700-deaths-in-britain-1783948154"></link>
            <id>https://tamilwin.com/article/severe-heatwave-over-2-700-deaths-in-britain-1783948154</id>
            <summary type="text">பிரித்தானியா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில்
ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளினால் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில்
ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளினால் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இம்பீரியல் கொலேஜ் லண்டன் மற்றும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் ஆகியவை
இணைந்து நடத்திய இந்த ஆய்வின்படி, மே மாத இறுதியில் 550 பேரும், ஜூன் மாத
இறுதியில் சுமார் 2,200 பேரும் வெப்பம் சார்ந்த பாதிப்புகளால் இங்கிலாந்து
மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
பிரித்தானியாவில் மே மாதத்தில் 35.1 டிகிரி செல்சியஸாகவும், ஜூன் மாதத்தில்
37.7 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது.</p><p></p><h2>தீவிர வெப்ப அலை</h2><p>
</p><p>
புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றமே இந்த தீவிர வெப்ப அலைகளுக்கு
முக்கியக் காரணம் என்றும், இதனால் வழக்கமான வெப்பநிலையை விட 4 டிகிரி
செல்சியஸ் வரை கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b142deb-a00a-4c13-a2e4-9ca6bf42dda4/26-6a54e68127cf0.webp' /></p><p>
</p><p>
மேலும், ஜூன் மாத இறுதியில் நிலவிய இந்த கடும் வெப்பத்தின் காரணமாக
ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்றும்,
இதில் பலியானவர்களில் பெரும்பாலானோர் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்
என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரித்தானியாவில் உள்ள 92 சதவீத வீடுகள் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் இதே போன்ற
கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பொதுக் கட்டிடங்களில்
குளிரூட்டி வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம்
அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T13:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் மற்றுமொரு சொல்ல மறந்த சோகக் கதை: வைத்தியர் பிரியா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-untold-story-in-negombo-prison-dr-priya-1783947544"></link>
            <id>https://tamilwin.com/article/another-untold-story-in-negombo-prison-dr-priya-1783947544</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் பலர் கொலைச் செய்யப்பட்டு கடும் சோகத்தை ஏற்படுத்தினாலும் சிறைச்சாலை கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளில் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் பலர் கொலைச் செய்யப்பட்டு கடும் சோகத்தை ஏற்படுத்தினாலும் சிறைச்சாலை கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளில் அமைதியான அழகான பெண்ணான சந்துனி சமூக ஊடகங்களில் அனைவரின் அவதானத்தையும் ஈர்த்தெடுத்தார்.</p><p>அதனால் என்னவே அந்த கூட்டத்தில் இருந்த வைத்தியர் பிரியாவை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரின் வாழ்க்கையும் சந்துனியை போல சூழ்ச்சிகளில் சிக்கி சிறைக் கம்பிக்குள் அகப்பட்டுள்ளது. வைத்தியர் பிரியாவின் நெஞ்சை நெருடும் கதை:</p><h2>
</h2><p></p><h2>டாக்டர் பிரியாவின் ஏழ்மை குடும்பம்</h2><p>டாக்டர் பிரியாவின் கதை. பிரியா மருதானையில் வசித்து வந்தவர். அவர் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. தாயார் கொழும்பு மாநகரசபை துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்தார். </p><p>தந்தை மருதானையில் உள்ள வாகன இருக்கை உறை (Seat Cover) தைக்கும் கடைகளில் கூலி வேலை செய்து வந்தார். இவர்கள் மருதானையில் உள்ள ஒரு சிறிய வீட்டின் ஒரே ஒரு அறையில் தான் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உறங்கினர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4a8deaa-8b1b-46d4-b9d5-b3d7090e01d7/26-6a54e11b1e6b8.webp' /></p><p>அது ஒரு தனித்துவமான பிணைப்பைக் கொண்ட குடும்பம். பிரியாவின் அண்ணன் ஒரு மென்பொருள் பொறியாளர் (Software Engineer) ஆனார்.
</p><p>அண்ணன் குடும்பத்தை கவனிக்க, தங்கை பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறாள். பிரியாவின் முயற்சி, தன் தங்கையை ஒரு விமானப் பணிப்பெண் (Air Hostess) ஆக்க வேண்டும் என்பதாக இருந்தது. </p><p>பிரியா தனது வறுமையின் காரணமாகவே மிகவும் நன்றாகப் படித்தார். பொரளை பகுதியில் ஒரு வீட்டை வாங்கி, குடும்பத்தினருடன் அங்கு குடியேறினர். </p><p>அவரது அண்ணனும் பன்னிபிட்டிய பகுதியில் குடியேறினார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் பிரியாவின் பெற்றோர் அவருக்கு நல்ல கல்வியை வழங்கினர்.
</p><h2>
சமூகப் பற்று</h2><p>பிரியா எப்போதுமே சேரிப் பகுதியில் தனது சகோதர சகோதரிகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் வாழும் வாழ்க்கை குறித்து மிகுந்த விரக்தியில் இருந்தவர். </p><p>ஏனெனில் அங்கு பலர் 'குடு' மற்றும் 'ஐஸ்' (போதைப்பொருட்கள்) போன்றவற்றுக்கு அடிமையாகியிருந்தனர். வாழ்க்கையே அழிந்து போயிருந்தது. </p><p>குடும்பங்கள் சீரழிந்து போயிருந்தன. பிரியா பல்கலைக்கழகக் கல்வியை முடித்துவிட்டு, வைத்தியராக பணிபுரிந்து, பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றத்தைப் பெற்று வந்தார். </p><p>இதற்கிடையில் அவர் மருதானையில் ஒரு மருந்தகத்தைத் திறந்து, தனது பகுதி மக்களுக்கு இலவசமாக மருந்து வழங்கத் தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75b422c2-38c7-4425-b264-2c5aa16c4c24/26-6a54e11bc469f.webp' /></p><p>அப்போது அவர் டாக்டர் பிரியா என அழைக்கப்பட்டார்.
போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர், யுவதிகளுக்கு அவர் சிகிச்சை அளித்தார். </p><p>ஒரு முகநூல் பக்கத்தை உருவாக்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேபோல் டிக்டொக் (TikTok) தளத்திலும் அவர் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பத்தக்க ஒரு கதாபாத்திரமாக விளங்கினார். </p><p>இதற்கிடையில், அவர் போதைப்பொருள் வியாபாரம் குறித்து ரகசியமாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி வந்தார். அந்த தகவல்களால் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல் முற்றாக முடங்கியது. எப்படியோ, இந்த விடயம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தெரியவந்தது.</p><h2>
டாக்டர் பிரியாவுக்கு தீட்டப்பட்ட சதி</h2><p>
டாக்டர் பிரியாவின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க அவர்கள் தயங்கினர். ஏனெனில் சமூகத்தில் டாக்டர் பிரியாவுக்கு ஒரு பாரிய இடம் இருந்தது. எனவே, அவர்கள் ஒரு மாற்றுத் திட்டத்தைத் தீட்டினர். </p><p>ஊழல் அதிகாரிகளுடன் இணைந்தே இந்தச் சதியைச் செய்தனர். டாக்டர் பிரியா அன்றைய தினமும் வழக்கம் போல் மருந்தகத்தைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் செல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef9033b8-f7d7-44f3-b8b8-355c29fd7751/26-6a54e63f62595.webp' /></p><p> </p><p>வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு வெளியே வரும்போதே பொலிஸார் அங்கு வருகின்றனர். "மேடம், எங்களுக்கு ஒரு தகவல் வந்தது, நீங்கள் போதை மாத்திரை வியாபாரம் செய்வதாக. வாருங்கள் மேடம், உங்களது மருந்தகத்திற்குப் போவோம்" என்று கூறினர். </p><p>டாக்டர் பிரியாவுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அங்கு சென்று கதவைத் திறந்த பொலிஸார் டாக்டர் பிரியாவின் முன்னிலையிலேயே ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளைக் கண்டுபிடித்தனர். </p><p>பிரியா இதில் சிக்க வைக்கப்பட்டார். இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்படுகிறார்.
சிறையில் அடைக்கப்பட்டாலும், டாக்டர் பிரியாவின் அந்த அநீதிக்கு எதிரான குரல் அடங்கவிடவில்லை. </p><p></p><p>அவர் சிறைக்குள் இருந்து கொண்டே டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். 
சந்துனி மற்றும் டாக்டர் பிரியா ஆகிய இருவரின் கதைகளும் சமூகத்திற்குத் தரும் செய்தி மிகவும் தெளிவானது. </p><p>மதியை மறந்து எடுக்கும் ஒரே ஒரு தவறான முடிவால் முழு வாழ்க்கையுமே தலைகீழாக மாறிவிடலாம். சிறைச்சாலையின் இரும்புக்கதவுகள் மூடப்பட்ட பிறகு, மீண்டும் திரும்ப நினைக்கும் பாதைகள் மிகவும் கடினமானவை. </p><p>மருத்துவப் பீடத்திற்குச் செல்ல கனவு கண்ட சந்துனிக்கும், சமூகத்தை சீர்படுத்த நினைத்த டாக்டர் பிரியாவுக்கும் இன்று எஞ்சியிருப்பது கொடூரமான சிறைக்கம்பிகள் மட்டும்தான்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T13:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 வயதுக்குட்பட்டோரின் சமூக வலைத்தள பயன்பாட்டை கட்டுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/social-media-banned-for-those-under-13-1783947900"></link>
            <id>https://tamilwin.com/article/social-media-banned-for-those-under-13-1783947900</id>
            <summary type="text">குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவை அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவை அறிவித்துள்ளது. </p><p>

இதற்கமைய, சமூக வலைத்தளங்கள் தொடர்பிலான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p></p><h2>13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அறிவிப்பு</h2><p> </p><p>

13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழும், நேர வரம்புகளுக்குள்ளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f57fe5f-1bed-4f67-aef8-0222d6bc10db/26-6a54e28304401.webp' /></p><p> </p><p>

இது தொடர்பாக நிபுணர் ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BBg5zhdqVdo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T13:05:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையில் மாற்றம் - பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-northern-nagarjuna-express-train-1783946807"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-northern-nagarjuna-express-train-1783946807</id>
            <summary type="text">கல்கிஸை இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கிஸை இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் எழுப்பப்பட்ட அதிருப்திக் குரல்களையடுத்து, அந்த தொடருந்து சேவையை வாரத்தில் ஆறு நாட்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>


இதற்கமைய, வாரத்தில் புதன்கிழமை மாத்திரம் வடக்கு நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையில் இருக்காது என தொடருந்து திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


6 நாட்கள் மாத்திரம் தொடருந்து சேவை</h2><p>
பழுதடைந்திருக்கும் தொடருந்து இயந்திரம் ஒன்றை விரைந்து திருத்துவதன் மூலம் வரும்
20ஆம் திகதிக்குப் பின்னர் புதன்கிழமைகளிலும் வழமை போன்று இந்தச் சேவையை
நடத்துவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக தொடருந்து சேவை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f08d6fe-03a3-4a4e-9f0c-52a74c406b27/26-6a54df1ada8d5.webp' /></p><p>

தொடருந்து நிர்வாகத்தின் முன்னைய அறிவிப்பில் இந்த வாரம் முதல் செவ்வாய், புதன்,
வியாழன் ஆகிய மூன்று தினங்களில் தொடருந்து சேவையில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஆனால் அது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பலத்த எதிர்ப்புத்
தெரிவிக்கப்பட்டமையடுத்து, இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்திய
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சேவையை இயன்றளவு வழமை போன்று
நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்தச் சேவையை புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் உள்ள மற்ற ஆறு நாட்களும் சேவையில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><h2>

நல்லூர் உற்சவ காலம்</h2><p>

அடுத்த மாதம் நல்லூர் உற்சவகாலம் வருவதையொட்டி புதன்கிழமை சேவையையும்
வரும் 20ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு முழு அளவில் முயற்சி
எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b54de0-5096-4947-93da-4b230af05aab/26-6a54df1b9cf70.webp' /></p><p> </p><p>

காலையில் கல்கிஸை பகுதியில் இருந்து புறப்பட்டு, கொழும்பு கோட்டை வழியாக யாழ்ப்பாணம்
மற்றும் காங்கேசன்துறைக்குச் செல்லும் நாகராந்திர கடுகதி சேவை, மதியம்
காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு முன்னிரவில் கல்கிஸையைத் திரும்பிச்
சென்றடையவுள்ளது. </p><p>

இதுவரையில் தினசரி நடைபெற்ற இந்தச் சேவை தற்போது புதிய ஒழுங்கின்படி
புதன்கிழமை மாத்திரம் நடைபெறாது என்றும் புதன்கிழமை சேவையும் விரைவில் மீள
நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றும் தொடருந்து திணைக்களம் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T12:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் : 29 வயது இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcycle-accidnet-29-year-old-youth-dies-1783943599"></link>
            <id>https://tamilwin.com/article/motorcycle-accidnet-29-year-old-youth-dies-1783943599</id>
            <summary type="text">களுத்துறை மாவட்டம், ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மில்லேவ
பகுதியில் நேற்று(12.07.2026) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மாவட்டம், ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மில்லேவ
பகுதியில் நேற்று(12.07.2026) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞர்
ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
ஹொரணை - மீபே வீதியில், மில்லேவ பகுதியில் வைத்து மீபே நோக்கிப் பயணித்துக்
கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை
விட்டு விலகி மின் கம்பமொன்றில் பலமாக மோதியுள்ளது.
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அவருடன் பின்னால்
பயணித்தவரும் உடனடியாக மீட்கப்பட்டு பாதுக்க வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba5ee4e-6040-4101-9875-989439e7d802/26-6a54daffb8d69.webp' /></p><p>அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மோட்டார்
சைக்கிள் ஓட்டுநரான மில்லேவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T12:41:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை: வியாபாரிக்கு அபராதம் - வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sale-of-mixed-chili-powder-1783945115"></link>
            <id>https://tamilwin.com/article/sale-of-mixed-chili-powder-1783945115</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட
மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை
தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட
மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை
தொடர்ந்து வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் வர்த்தகர்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை
சுகாதார பரிசோதகர்களால் சந்தேகத்தின் பேரில் மிளகாய்த்தூள் மாதிரிகள் எடுத்து
ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. </p><p>பரிசோதனை முடிவுகளில்
மிளகாய்த்தூளில் கலப்படம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பொருட்கள்
நீர்கொழும்பிலிருந்து மொத்த விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தமை
தெரியவந்தது. </p><p>மேலும் பொருட்களை விற்பனை செய்த மொத்த வியாபாரி உரிய
அனுமதியின்றி கலப்பட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை நடவடிக்கைகளில்
ஈடுபட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதியில் மொத்த விற்பனை
மேற்கொண்ட வியாபாரிக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பொது சுகாதார
பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் உள்ளிட்ட குழாமினர் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த வியாபாரிக்கு 15,000 ரூபா அபராதமும்
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f79ca51-eb1f-4670-ac07-24fc9a0054cc/26-6a54dba3f3cc5.webp' /></p><h2>கலப்பட உணவுப் பொருட்கள்</h2><p> </p><p>இதேவேளை, வெளி
மாவட்டங்களில் இருந்து கலப்பட உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு வர்த்தக
நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுகாதார
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக இவ்வாறான பரிசோதனைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து உணவுப் பொருட்களை
கொள்வனவு செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றின் தரத்தை
உறுதிப்படுத்துவதுடன், தேவையான ஆவணங்கள், உற்பத்தி நிலையத்திற்கு உள்ளூராட்சி
அமைப்பின் அனுமதி உள்ளிட்ட விடயங்களை சரிபார்த்து விழிப்புணர்வுடன்
செயற்படுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T12:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் அநுர அரசை ஆட்டம் காணச் செய்யும் ஒரு சதி! விரைவில் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783940848"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783940848</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் இருக்கலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர சந்தேகம் எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>நீர்கொழும்பு சிறைக் கலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>திட்டமிட்ட சதி&nbsp;</h2><p>தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தையும், உயிரிழப்புக்களையும் இந்த அரசாங்கம் பாதுகாக்க தவறியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு&nbsp; அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,&nbsp;</p><p>அரசாங்கத்தினால், பாதுகாப்பு வழங்க&nbsp; இயலாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.&nbsp; ஏற்கனவே இருந்த ஒரு மோதல் மீண்டும் தலைதூக்கியதற்கும்,&nbsp; &nbsp;பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பின்னால் பாரிய சதித்திட்டம் உள்ளது என நான் நினைக்கின்றேன்.&nbsp; இதன் உண்மைத் தன்மையை நாங்கள் கண்டறிய வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d0d6e37-99a3-433e-b4d7-e0aa9608c6fe/26-6a54cd9eb286e.webp' /></p><p>இந்த அரசை மாற்றி, எந்த வழியிலாவது அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பும் குழுக்கள் இதன் பின்னணியில் உள்ளன என நாங்கள் கருதுகின்றோம்.</p><p>குறித்த குழுவைச் சேர்ந்த பலர் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும். எனவே, தங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, அரசை மிக விரைவில் பதவியில் இருந்து நீக்கத் திட்டமிடும் ஒரு குழு உள்ளது.&nbsp;</p><p>ஆகையால், அரசாங்கத்திற்கு எதிராக சதி மேற்கொள்ளும் ஒரு குழு இருக்கும் போது, இவ்வாறான திட்டமிட்ட சம்பவங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RYIRTelCHXE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-13T11:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - 22 வயது இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcycle-collides-with-bus-in-jaffna-1783942608"></link>
            <id>https://tamilwin.com/article/motorcycle-collides-with-bus-in-jaffna-1783942608</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியின் பள்ளிக்குடா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று(12.07....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியின் பள்ளிக்குடா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் நேற்று(12.07.2026) இடம்பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார். </p><p>



மன்னார் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று பள்ளிக்குடா சந்தியில் வலது புறமாகத்
திரும்புவதற்கு முற்பட்டபோது, அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><p> </p><h2>

22 வயது இளைஞர் பலி</h2><p>
இதன்போது, மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயமடைந்துள்ளதுடன், பின்னால் பயணித்தவருடம் உடனடியாக மீட்கப்பட்டு, பூநகரி வைத்திசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeb70a46-0cf3-4dcb-91af-d2faf34b711e/26-6a54ce125c35a.webp' /></p><p> </p><p>

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்கைக்காக இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p> 


இதனைத் தொடர்ந்து, இன்று(13) தெலிகடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய
மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T11:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம் - தமிழர் தாயகம் எங்கும் தொடரவுள்ள போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-to-launched-in-the-north-and-east-1783940369"></link>
            <id>https://tamilwin.com/article/protest-to-launched-in-the-north-and-east-1783940369</id>
            <summary type="text">தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்
&quot;நீதியின் ஓலம் 2 &quot; எனும் கவனயீர்ப்பு போராட்டம்
ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும்
"நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம்
ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக
தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று(13.07.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில்</h2><p>மேலும் கூறுகையில் -

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம்
முன்னெடுக்கப்படது.</p><p>இதன் தொடர்ச்சியாக, 14.08.2026 வெள்ளிக்கிழமை தொடங்கி 17.08.2026 வரை
தொடர்ந்து நான்கு நாட்கள் யாழ் நகரில் "நீதியின் ஓலம் 2" எனும் போராட்டத்தின்
வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம்
இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இறுதி நாள் (17.08.2026) மாபெரும்
பேரணியும் நடை பெறவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8133393b-ec3f-4519-933c-74f7adebd1dc/26-6a54c960e4a90.webp' /></p><p>
முன்பதாக தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின்
சாட்சியாக யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில்
இருந்து 412இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>செம்மணி மனிதப் புதைகுழி என்பது, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரச
பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் சிறு சாட்சியம் மட்டுமே.
</p><p>
குறிப்பாக, 1996ஆம் ஆண்டில் இலங்கை அரசுப் படையினரால் கூட்டுப் பாலியல்
வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, 16 வயதுடைய பாடசாலை
மாணவியின் வழக்கின் மூலமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.</p><p>இப்படுகொலைக்கு முன்னதாக 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு காலத்திலும்
அதன் பின்னரிலும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல
நூற்றுக்கணக்கானோர் மிகக் கொடூரமாக படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்பதனை
நிரூபிக்கும் வகையில், கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட
இலங்கை அரசுப் படைச் சிப்பாயின் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில், 1999ஆம் ஆண்டில் 15 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன.</p><p>நீதியின் ஓலம் போன்ற கவனயீர்ப்பு நிகழ்வு, அணையாவிளக்கு
போராட்டங்கள் ஆக எமது மக்களால்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>இறுதி நாள் மாபெரும் பேரணி&nbsp;</h2><p>
</p><p>
இதனடிப்படையில் "நீதியின் ஓலம் 2" போராட்டத்தின் கோரிக்கைகளாக -
</p><p>
1.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப்
புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும்.
</p><p>
2.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்
இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான
நிலைப்பாடு எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f951d75e-b85e-4250-a6c7-cfdd5ddf5450/26-6a54c961d5d5e.webp' /></p><p>3.தமிழர்கள்மீது இனப்படுகொலை செய்த படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா,
பிரித்தானியா, கனடா போல அனைத்து நாடுகளும் பயணத் தடையை நடைமுறைப்படுத்த
வேண்டும்.
</p><p>
4.தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்க
ஐக்கிய நாடுகள் சபை முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.&nbsp;</p><p>5.இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை
விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை
நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
</p><p>
6."பயங்கரவாதத் தடைச் சட்டம்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின
அடக்குமுறைகளை நிறுத்தவும், நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல்
கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச அழுத்தம் தேவை.
</p><p>
7.கடந்த 77ஆண்டுகளாக ஒற்றை ஆட்சியின் கீழ் கட்டமைக்கப்பட்ட தமிழின
சுத்திகரிப்பையும் தொடரும் தமிழர் இனவழிப்பையும் நினைவழிப்பையும் நிறுத்தி,
ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய
அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்."
</p><p>
8.வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும்,
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு,
வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்
இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
</p><p>
9.Unitary State / Ekiya Rajya அடிப்படையிலான போலி தீர்வு திட்டங்கள்
நிராகரிக்கப்பட வேண்டும்; தமிழர் தேச அதிகாரங்கள் மீளப்பெற முடியாத
சுயநிர்ணயத்தின் அடிப்படையிலும் சர்வதேச உத்தரவாதத்துடனும் உறுதி செய்யப்பட
வேண்டும்
</p><p>
10.பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பயங்கரவாதத்
தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான சட்டமூலம் (PTSA) முழுமையாக மீளப்பெறப்பட
வேண்டும்.</p><p>மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி, "நீதியின் ஓலம் 2" என்ற போராட்டம் 14.08.2026
வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு செம்மணியில் ஆரம்பித்து தமிழர் தாயகத்தின்
அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் திரண்டு வருகை தந்து (17.08.2026)
இறுதி நாள் மாபெரும் பேரணி யாழ் நகரில் இடம்பெறும்.</p><p>இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புகளும், குறிப்பாக
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள், மத
அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், போக்குவரத்து
கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச்சங்கங்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் உறவுகள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் பாராளுமன்ற
உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவும்
ஒத்துழைப்பும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T11:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இ.போ.சபையின் பேருந்துகள் சேவைகள் ஸ்தம்பிதம்: அரச ஊழியர்கள் - மாணவர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-ctb-bus-services-paralyzed-affected-1783941282"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-ctb-bus-services-paralyzed-affected-1783941282</id>
            <summary type="text">வவுனியாவில் இ.போ.சபை பேருந்துக்கள் இன்று(13) காலை முதல் பேருந்துச்
சேவைகளை முன்னெடுக்காமையால் அரச ஊழியர்கள், மாணவர்கள், பொது மக்கள்
பாதிப்படைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இ.போ.சபை பேருந்துக்கள் இன்று(13) காலை முதல் பேருந்துச்
சேவைகளை முன்னெடுக்காமையால் அரச ஊழியர்கள், மாணவர்கள், பொது மக்கள்
பாதிப்படைந்துள்ளனர்.
</p><p>நேற்று(12.07.2026) சாலையின் பொறியியல் பகுதியில் பணிபுரியும் ஊழியர்கள்
கடமைக்கு சமூகம் தராமையே பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை
ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.</p><p></p><h2>சேவைகள் ஸ்தம்பிதம்</h2><p>

மேலதிக நேரக்கொடுப்பனவு விடயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பொறியில்
பிரிவு ஊழியர்கள் சமூகம் தரவில்லை எனக் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d562f88-2cf6-4a86-b47e-bd07c324952b/26-6a54cb2c87d4a.webp' /></p><p>

இன்றையதினம் (13.07.2026) திங்கட்கிழமை என்பதால் பேருந்து சேவைகள் இன்மையால்
பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய நிலை
ஏற்பட்டிருந்தது. </p><p>குறிப்பாக பருவகால சீட்டு பெற்றிருந்தவர்கள் அசௌகரியங்களை
அதிகமாக எதிர் நோக்கி இருந்ததுடன், சில அரச ஊழியர்கள் தாமதமாகவே தமது வேலைத்
தளங்களுக்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T11:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் விசேட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/abank-will-soon-be-established-for-debt-farmers-1783938184"></link>
            <id>https://tamilwin.com/article/abank-will-soon-be-established-for-debt-farmers-1783938184</id>
            <summary type="text">






தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர் அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>






தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர் அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் ஊடகச்சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>விவசாயிகளுக்கு விசேட திட்டம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

அடுத்த இரண்டு அல்லது மூன்று பருவங்களில், நாங்கள் விவசாய சங்கங்களை அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான பணத்தை வழங்குவோம். 

நமது விவசாயிகள் மிகுந்த கடனில் உள்ளனர்.</p><p> அவர்கள் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடம் கடன்பட்டுள்ளனர், அதனால் அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது தங்கள் நெல்லை விற்கவோ முடியவில்லை. 

அவர்கள் வட்டிக்குக் கடன் வாங்குவதால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85a8eb3-3b56-49f8-8c19-c6f09b53179e/26-6a54c99c4cd59.webp' /></p><p> 

எனவே, நாங்கள் ஒரு வங்கியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் உற்பத்திச் செலவை வழங்குவோம்.

 நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒவ்வொரு விவசாய நிறுவனத்திலும் ஒரு வேளாண்மை உதவி மையத்தை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம்.</p><p> உலகின் மிகவும் மேம்பட்ட இயந்திரங்கள், பெரிய டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், ட்ரோன்கள், களை எடுக்கும் மற்றும் கட்டும் இயந்திரங்களை நாங்கள் கொண்டு வருவோம். </p><p>

அந்த நிறுவனங்கள் மூலம், விவசாயிகளின் தேவைகளை மலிவு விலையில் பூர்த்தி செய்ய ஏற்பாடுகளைச் செய்வோம். நாங்கள் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறோம். 

விவசாயிகள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிப்பதற்காகவே நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வந்தோம் என்றார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-13T11:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஎஸ்கே அணியிலிருந்து பதவி விலகிய முக்கிய நபர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/csk-head-coach-stephen-fleming-part-ways-17-years-1783939491"></link>
            <id>https://tamilwin.com/article/csk-head-coach-stephen-fleming-part-ways-17-years-1783939491</id>
            <summary type="text">ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
</p><p>
இந்த முடிவு, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் பிளெமிங் தரப்பு இடையே நடைபெற்ற கலந்தாலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>சென்னை சூப்பர் கிங்ஸ்</h2><p>
</p><p>
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ், இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">OFFICIAL ANNOUNCEMENT<br><br>The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.<br>Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you&#39;ve built will continue to inspire us.<br><br>With immense respect and… <a href="https://t.co/qjvb4oZUuU">pic.twitter.com/qjvb4oZUuU</a></p>&mdash; Chennai Super Kings (@ChennaiIPL) <a href="https://x.com/ChennaiIPL/status/2076550405560111496?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>மேலும், பல முறை பிளே-ஆஃப் சுற்றுக்கும், 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

கடைசியாக 2023ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே, அதன் பின்னர் தொடர்ந்து மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியுள்ளது. </p><p>இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார்.

53 வயதான ஸ்டீபன் பிளெமிங், 2008ஆம் ஆண்டு தொடக்க ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வீரராக விளையாடினார். </p><p>அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று, 2026 சீசன் வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார்.</p><p></p><h2>&nbsp;ஸ்டீபன் பிளெமிங் விலகல்</h2><p>

அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும், 12 முறை பிளே-ஆஃப் மற்றும் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அணியை வழிநடத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516c71e8-7a0b-45a9-9773-72a2d089e544/26-6a54c6a088113.webp' /></p><p>
சிஎஸ்கே நிர்வகித்து வரும் தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 தொடரில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பிளெமிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ளார்.</p><p>

பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டீபன் பிளெமிங், "18 ஆண்டுகள் என்பது என் விளையாட்டு வாழ்க்கையில் மறக்க முடியாத காலம்.</p><p> மிகுந்த நன்றியுடன் விடைபெறுகிறேன். பயிற்சியாளராக சிஎஸ்கேவுடன் இணைந்து பணியாற்றியது மிகச் சிறப்பான அனுபவம். நாங்கள் இணைந்து படைத்த சாதனைகள் குறித்து பெருமை கொள்கிறேன். அந்த நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.</p><p></p><p><b>You May Like This..<br><br></b><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1713613653119976%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-13T11:06:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முடக்கம் - உலக சந்தையில் எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-rises-4-as-hormuz-threatens-exports-1783938637"></link>
            <id>https://tamilwin.com/article/oil-rises-4-as-hormuz-threatens-exports-1783938637</id>
            <summary type="text">


அமெரிக்கா - ஈரான் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அமெரிக்கா - ஈரான் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, இன்று(13.07.2026) எண்ணெய் விலைகள் 4% க்கும் மேல் உயர்வடைந்துள்ளது. </p><p>

பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் 0325 GMT நிலவரப்படி, 3.10 டொலர் (4.08%) உயர்ந்து, 79.11 ஆக டொலராக காணப்பட்ட நிலையில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.95 டொலர் (4.11%) உயர்ந்து 74.36 டொலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>


அமெரிக்கப் படைகள் நேற்று(12) ஈரானுக்கு எதிரான மற்றொரு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. </p><p> 

இதன்படி, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் இன்று(13) அறிவித்துள்ளனர்.
</p><h2>



ட்ரம்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து ஈரான் அதிரடி&nbsp;</h2><p>

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c93827e-2072-4625-a153-000ebebe4543/26-6a54c59ef0451.webp' /></p><p> </p><p>


 இருப்பினும், அங்கீகரிக்கப்படாத பாதையில் பயணித்த ஒரு கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீரிணையை மூடிவிட்டதாக ஈரான் முன்னதாகவே அறிவித்திருந்தது. 

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்குவதற்கு முன்பு, உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது. </p><p>

இதன்படி, நேற்று ஆறு கப்பல்கள் இந்த ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தன என்று Kpler நிறுவனத்தின் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் காட்டியுள்ளன. இது கடந்த ஐந்து வாரங்களில் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.</p><h2> 


எரிபொருள் விலை அதிகரிப்பு</h2><p>
மேலும் 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நீரிணை மீண்டும் திறந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-ஈரானிய இடைக்கால ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து, அதிகரித்து வரும் இந்தத் தாக்குதல்கள் மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.</p><p> 

ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஒரு நாளைக்கு 4.1 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்தது, ஆனால் அது போருக்கு முந்தைய அளவை விட ஒரு நாளைக்கு 9.4 மில்லியன் பீப்பாய்கள் குறைவாகவே இருந்தது என்று சர்வதேச எரிசக்தி முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef22c40-ccd3-40a0-954b-1aa568458e19/26-6a54c59f9f1b1.webp' /></p><p> </p><p>

 வார இறுதியில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சமீபத்திய சிறு மோதல்களுக்கு ஒப்பீட்டளவில் விரைவான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் கேள்விக் குறியாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். 

எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட ஒப்பீட்டளவில் மிதமான உயர்வு, தற்போதைய மோதல்கள் ஒரு பலவீனமான போர்நிறுத்தத்திற்குள் ஏற்பட்ட ஒரு பதற்ற அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும், போர்நிறுத்தம் முழுமையாகச் சரிவடைவதற்கு வெகு தொலைவில் உள்ளது என்றும் சந்தை கருதுவதைக் காட்டுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p>




</p>]]></content>
            <updated>2026-07-13T11:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warn-public-fake-online-fine-messages-1783936235"></link>
            <id>https://tamilwin.com/article/police-warn-public-fake-online-fine-messages-1783936235</id>
            <summary type="text">சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து இலங்கை பொலிஸ் திணைக்களம் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளது.</p><p>

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து (DMT) வந்ததாகத் தோன்றும் அந்தச் செய்திகள், கூறப்படும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றன. </p><p>

</p><p></p><h2>செய்திகள் முற்றிலும் போலியானவை</h2><p>இருப்பினும், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பிற்கு பொறுப்பாளரான டிஐஜி டபிள்யூ.பி.ஜே. செனடீரா, டிஎம்டி அத்தகைய எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்றும், அந்தச் செய்திகள் முற்றிலும் போலியானவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00e3fa88-e79b-4cb6-8e25-6c1b9cb7df01/26-6a54c2f08c9ee.webp' /></p><p>
</p><p>மேலும் அந்த குறுஞ்செய்தி இணைப்புகளைத் திறக்கவோ, தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை வழங்கவோ, அல்லது அந்தச் செய்திகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>பாதிக்கப்பட்ட எவரும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RYIRTelCHXE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-13T10:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் முகமூடி அணிந்த மர்ம நபர்: வெளியான உண்மை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/who-wore-a-mask-the-iranian-supreme-leader-funeral-1783937711"></link>
            <id>https://tamilwin.com/article/who-wore-a-mask-the-iranian-supreme-leader-funeral-1783937711</id>
            <summary type="text">ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கலந்து கொண்டது சமூக ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கலந்து கொண்டது சமூக ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
</p><p>
இறுதி அஞ்சலி நிகழ்வின் போது, கருப்பு நிற முகக்கவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒருவர் முன்வரிசையில் அமர்ந்திருந்த காட்சி வெளியாகியதைத் தொடர்ந்து, அவர் கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி என பலரும் தங்களது யூகங்களை தெரிவித்திருந்தனர்.</p><p></p><h2>&nbsp;இறுதிச்சடங்கு</h2><p>அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, மொஜ்தபா கமேனி அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடும் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக முகமூடி அணிந்து வந்ததாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியானது.

எனினும், இந்த சர்ச்சைக்கு ஈரானிய ஊடகங்கள் விளக்கம் அளித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b169d9-7872-4585-ba1d-3bb616e6e8f1/26-6a54bfa9f26c9.webp' /></p><p>
</p><p>இதன்படி, முகமூடி அணிந்திருந்தவர் மொஜ்தபா கமேனியின் மகன் முகமது ஜாவத் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலில், முகமது ஜாவத் முகத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சர்ச்சைக்கு விளக்கம்</h2><p> </p><p>

அதனால் சிகிச்சை பெற்று வரும் அவர், தனது காயங்களை மறைப்பதற்காகவே முகமூடி அணிந்திருந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/858a2949-b3e2-481c-9163-52bcb2ec28bd/26-6a54bfaaa3d7c.webp' /></p><p>

மேலும், அந்த தாக்குதல் நடைபெற்றபோது மொஜ்தபா கமேனி தனது தந்தையுடன் அதே வளாகத்தில் இருந்தாலும், வேறு அறையில் இருந்த காரணத்தால் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மொஜ்தபாவுக்கு முகம், கைகள், கால்கள் மற்றும் தோள்பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்தச் செய்திகள் குறிப்பிடுகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T10:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விசேட செயற்றிட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/equal-opportunity-for-children-with-special-needs-1783933691"></link>
            <id>https://tamilwin.com/article/equal-opportunity-for-children-with-special-needs-1783933691</id>
            <summary type="text">விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.</p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p></p><h2>பிள்ளைகளைக் கையாளும் விதம்</h2><p>

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், விசேட தேவையுடைய பிள்ளைகளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்குத் தனித்தனியாகக் கற்பிக்கும் பழைய முறையைக் கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b43e52b-5cce-4cde-ad77-7a4eaa9383bf/26-6a54b32531f85.webp' /></p><p>விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளுடன் கூடிய செயற்பாடு சார்ந்த கல்வி முறையும், நடத்தை ரீதியான பழக்கப்படுத்துதல்களும் அத்தியாவசியமானவை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அப்பிள்ளைகளைத் தனிமைப்படுத்தாமல் சாதாரண பிள்ளைகளுக்கு மத்தியிலேயே அவர்கள் வளர்வதற்குக் தகுந்த வாய்ப்பளிப்பது மிகவும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டினார். </p><p>

இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான முதற்படியாக, விசேட தேவையுடைய பிள்ளைகளைக் கையாளும் விதம் குறித்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மற்றும் பயிற்சி அளிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இலங்கையின் தேசியக் கல்வி முறைமைக்குள் ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியைப் பெறும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வாய்ப்புகள் தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T09:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணொருவரிடம் மோசமான முறையில் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/presidential-secretariat-1783926097"></link>
            <id>https://tamilwin.com/article/presidential-secretariat-1783926097</id>
            <summary type="text">பெண் ஒருவருக்கு நடந்த அசாதாரணத்தை தீர்த்து வைப்பதாக பாசாங்கு காட்டி அவளிடம் பணம் மற்றும் தவறான முறையில் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண் ஒருவருக்கு நடந்த அசாதாரணத்தை தீர்த்து வைப்பதாக பாசாங்கு காட்டி அவளிடம் பணம் மற்றும் தவறான முறையில் இலஞ்சம் கோரிய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என தொலைபேசியில் பேசியவர் தொடர்பில் குருநாகல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,&nbsp;</p><p> தனது தந்தைக்கு சொந்தமான, நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட காணியை, பிரதேச செயலகத்தினால் சட்டபூர்வமாக வழங்க மறுப்பதாகவும் குருநாகல் 54ஆம் பிரிவின் கிராம உத்தியோகத்தரும் தடுப்பதோடு எவ்வித கட்டுமானத்தையும் செய்ய விடுவதில்லை.
</p><h2>
</h2><p></p><h2>அரச நிறுவனங்கள் போடும் தடைகள்</h2><p>எங்களை அங்கிருந்து விலகுமாறும், சட்டவிரோத கட்டுமானங்களை செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்கள். எங்களை அங்கு குடியேறவோ, ஒரு வீடு கட்டவோ அனுமதிப்பதில்லை. </p><p>இந்த பிரச்சினை தொடர்பில்&nbsp; ஜனாதிபதி, பிரதமரிடம் நீதி கேட்கிறேன் என ஊடகங்கள் வாயிலாக குறித்த பெண் காணொளி ஒன்றை 
வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82a228fe-6962-4aca-83f0-886ea42f49c0/26-6a548d537c64b.webp' />&nbsp;&nbsp;</p><p>
அரச அதிகாரிகளிடமிருந்து தனக்கு நேர்ந்த அநீதிக்கு முறையான தீர்வு கிடைக்காததால், சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
</p><p>அந்தச் செய்தி ஒளிபரப்பாகி சில மணித்தியாலங்கள் செல்வதற்குள், தான் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
</p><p>பின்னர் அவளது பிரச்சினை குறித்து வினவியுள்ள அந்த நபர், அதற்குரிய அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>அதன் பின்னர், அந்தப் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் இந்த நபர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார்.
</p><h2>தொலைபேசி உரையாடல்</h2><p>தொலைபேசி உரையாடலின் போது குறித்த பெண்ணிடம் பல தகவல்களை அவர் கேட்டுள்ளார்.அதன் பின்னர் தான் எங்கு வரவேண்டும் என கோட்டுள்ளார்.</p><p>அப்போது "நீ பத்தரமுல்லைக்கு வர வேண்டும். தேவையில்லாமல் கண்ட கண்ட இடங்களுக்குச் சென்று, அலைந்து திரிந்து ஏமாறுவதை விட, எளிதான வழி&nbsp; இது தான்“ எனக் கூறியுள்ளார்.
</p><p>எவ்வாறாயினும், உரையாடலின் போது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பெண் மேலும் கேள்வி எழுப்பிய போது, தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் ஒரு போலிச் செயலாளர் என்பது அம்பலமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3dd869c-8b70-4913-9541-11b43544f5ca/26-6a5492caa1903.webp' /></p><p> </p><p>அதன் பின்னர் அவர் அவளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாகக் குறிப்பிடப்படுகிறது.
“நீ ஒரு கருங்கல்லில் போய் தலையை முட்டிக் கொண்டாய். இதோ பார், இன்னும் 24 மணித்தியாலத்திற்குள் உனக்கு என்ன அதிகாரம் இருந்தாலும், நான் உன்னைத் தேடி வருவேன். உனக்கு என்ன நடக்கும் என்பதை நீயே நன்றாகப் பார்த்துக்கொள்வாய்" என மிரட்டியுள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் தற்போது குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கமைய, குருநாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில்,</p><p>ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எனப் போலியாகத் தோன்றி அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர் யார் என்பதைக் கண்டறிய விசேட பொலிஸ் குழுவொன்று பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>அனைத்து அரசு அதிகாரிகளும் குறித்த நபர் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் என ஏமாந்துவிட்டார்கள். இப்போது எனது பிள்ளையைக் கடத்துவதாகக் கூறுகிறார். </p><p>இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் பயப்படுகிறேன். இந்த நபர் யார் என்பதைச் சட்டத்தின் முன் நிறுத்தி, எனக்கு நியாயத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T09:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
