<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-14T20:33:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவிற்கு எதிரான நீதிமன்றத்தின் இரகசிய அறிக்கை கோட்டாபயவிடம் - கலக்கத்தில் சிஐடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-gotabaya-rajapaksa-cid-inquiry-1784057391"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-gotabaya-rajapaksa-cid-inquiry-1784057391</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறை தலைவர் சுரேஷ் சலே தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் தீவிரமடைந்த நிலையில்&nbsp;உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பெரிதாக பேசப்படுவதில்லை.&nbsp;</p><p>தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மற்றும் பிற தரப்பினர் என பலரும்&nbsp;சிறைச்சாலை விகாரத்தை மாத்திரமே நோக்கி செயற்பட்டு வருவதாக தெரிகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;சுரேஷ் சலே குறித்த விசாரணைகள் மற்றும்&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பற்றி மறந்து விட்டதா என கேள்வி எழுப்ப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதேநேரம்,&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மறைக்க சிறைச்சாலை விவகாரம் திட்டமிட்டு செய்யப்பட்டதா எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.&nbsp;</p><p>இவற்றை விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/prVilbf_uUQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[70 வருட வரலாற்றில் அநுரவின் ஆட்சியில் நடந்த அதிசயம் - சிறைச் செல்லப்போகும் தமிழ்த் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-70-years-history-of-sri-lanka-1784053246"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-70-years-history-of-sri-lanka-1784053246</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை சர்வதேச மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திற்கு கூட்டாகக் கொண்டு செல்லும் நோக்கில் பிரதான 6 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.</p><p> புதிய அரசியலமைப்பு மாற்றம், மாகாண சபை தேர்தல் தாமதம் மற்றும் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் ஆகிய மூன்று முக்கிய புள்ளிகளை மையமாக வைத்தே இந்த கூட்டணி உருவாகியுள்ளது.&nbsp;</p><p>இது ஒரு இனவாதக் கூட்டணி அல்ல, மாறாக உரிமைகளுக்கான பொதுவான தளம் என இக்கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளன.</p><p>இந்நிலையில், இந்த கூட்டணி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>மேலும், இந்த புதிய தமிழ் கூட்டணியின் உருவாக்கம் குறித்து தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zosPXE6eNVQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:01:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலை ஒற்றைப்பனை அடியில் சம்பந்தனை முதன் முதலில் சந்தித்த விடுதலை புலிகளின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-sambanthan-tamil-eelam-1784051147"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-sambanthan-tamil-eelam-1784051147</id>
            <summary type="text">இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனிடன் நினைவேந்தல் நிகழ்வில் சுமந்திரன் முன்வைத்துள்ள கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனிடன் நினைவேந்தல் நிகழ்வில் சுமந்திரன் முன்வைத்துள்ள கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த 11ஆம் திகதி திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.&nbsp;</p><p>அதன்போது, அவர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த்தேசியம் சார்ந்த அரசியல் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eJR3fcBrnMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T18:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க – ஈரான் மோதல் குறித்து ஐ.நா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-human-rights-chief-warns-1784052255"></link>
            <id>https://tamilwin.com/article/un-human-rights-chief-warns-1784052255</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப் "பெரும் பின்னடைவு" என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் எச்சரித்துள்ளார். </p><p>
மீண்டும் தொடங்கியுள்ள இந்த நேரடி மோதலானது, இப்பிராந்தியத்தில் அமைதி முயற்சிகளைச் சீர்குலைப்பதுடன், நிலைத்தன்மையற்ற சூழலை மேலும் ஆழமாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் மனித உரிமைகளுக்குக் கடுமையான ஆபத்துகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6378bf9-d057-4ff2-b85a-684e614f37e6/26-6a567a21731d9.webp' /></p><p>
</p><p>பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணையிலும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் ராணுவ மோதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியாகும் செய்திகள் "மிகவும் கவலையளிக்கின்றன" என துர்க் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
இதன் தாக்கம் இப்பிராந்தியத்தையும் கடந்து உலகளவில் எதிரொலிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். </p><p>
இந்த முக்கிய நீர்வழிப் பாதை மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான இன்றியமையாத உயிர்நாடியாகும் எனவும் இதில் ஏற்படும் தடங்கல்கள் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>இது பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் மிகக் கடுமையான சமூக-பொருளாதார மற்றும் மனிதாபிமானப் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
</p><p>தற்போதைய இக்கட்டான சூழலில், இரு தரப்பும் உடனடியாக ராஜதந்திர பேச்சுவார்த்தை, பொறுமை மற்றும் பதற்றத்தைக் தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வலியுறுத்தியுள்ளார். </p><p>
மேலும், இரு நாடுகளும் உடனடியாகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T18:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயரும் கச்சா எண்ணெய் விலை: டிரம்பிற்கு ஏற்படக்கூடிய நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rising-oil-and-gas-prices-could-impact-us-1784051494"></link>
            <id>https://tamilwin.com/article/rising-oil-and-gas-prices-could-impact-us-1784051494</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணை பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணை பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>
அமெரிக்காவில் பணவீக்கம் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பீட்டை விடக் குறைந்துள்ளதாகவும், அங்கு வாகன எரிபொருட்களின் விலை சற்று சரிந்து நுகர்வோருக்கு நிதியுதவி ரீதியாகச் சிறிய நிம்மதியை அளித்துள்ளதாகவும் இன்று காலைதான் செய்திகள் வெளியாகின.
</p><p>ஆனால், இந்த நல்ல செய்திக்கு மத்தியில், ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அந்நாட்டுக் கப்பல்களை இலக்கு வைத்து, அமெரிக்கா மீண்டும் ஹார்முஸ் நீரிணையில் ராணுவ முற்றுகையை அமல்படுத்தத் திட்டமிட்டு வருவது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f13c303-080a-4a2e-8063-ea66ff99ea47/26-6a567727b5e48.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் இந்த ராணுவ முற்றுகை நடவடிக்கை, உலகளாவிய எரிசக்தி விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>இதன் எதிரொலியாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்குப் பல டாலர்கள் வரை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது.
இதனால் விரைவில் நுகர்வோருக்கான எரிபொருள் விலையும் கணிசமாக உயரும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவில் விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>பொதுவாக அமெரிக்க மக்கள் தங்களின் அன்றாடச் செலவுகள் மற்றும் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டே வாக்களிப்பார்கள். 
எரிபொருள் மற்றும் அன்றாடத் தேவைக்கான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால், அதற்கு ஆளும் அரசே பொறுப்பு எனக்கருதி, தற்போதைய அரசியல்வாதிகளைத் தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T17:52:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத செயல் குற்றச்சாட்டுக்காக 5.6 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்திய டிரம்ப்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-pays-writer-e-jean-carroll-5m-1784051074"></link>
            <id>https://tamilwin.com/article/trump-pays-writer-e-jean-carroll-5m-1784051074</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலுக்கு (E Jean Carroll) பாலியல் அத்துமீறல் மற்றும் அவதூறு வழக்கில் நீதிமன்றம் விதித்த 5.62 ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலுக்கு (E Jean Carroll) பாலியல் அத்துமீறல் மற்றும் அவதூறு வழக்கில் நீதிமன்றம் விதித்த 5.62 மில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளார்.
</p><p> இதனை ஜீன் கரோலின் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>முன்னாள் பத்திரிகை பத்தியாளரான 82 வயது ஜீன் கரோல், 1990-களின் மத்தியில் மன்ஹாட்டனில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் ஆடை மாற்றும் அறையில் டொனால்ட் டிரம்ப் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c385463-e472-4ef7-a3ea-e56e8db69fe9/26-6a56758487e36.webp' /></p><p> </p><p>
மேலும், 2022-ஆம் ஆண்டில் தனது 'ட்ரூத் சோஷியல்' இணையதளப் பதிவின் மூலம் டிரம்ப் இந்தத் குற்றச்சாட்டுகளை மறுத்து, தன் மீது அவதூறு பரப்பியதாகவும் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார்.
</p><p>இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்ற ஜூரிகள் குழு, 2023-இல் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, கரோலுக்கு 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
</p><p>இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ததால், இழப்பீட்டுத் தொகை நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ள கணக்கில் வைக்கப்பட்டிருந்தது.
டிரம்ப் இந்தத் தொகையை வழங்குவதைத் தாமதப்படுத்த முயன்று, உச்ச நீதிமன்றத்தை நாடினார்.</p><p> ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கரோலுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு டிரம்பிற்கு அதிரடி உத்தரவிட்டார்.
</p><p>இதனைத் தொடர்ந்து, அசல் இழப்பீட்டுத் தொகையான 5 மில்லியன் டாலர் மற்றும் மேல்முறையீட்டுக் காலத்தில் சேர்ந்த வட்டி ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் 5.62 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை ஜீன் கரோலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>பணம் தமக்குக் கிடைத்ததை உறுதி செய்த ஜீன் கரோல், தனது வலைப்பதிவில், "நாங்கள் வென்றுவிட்டோம்! இந்த வெற்றி உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்குமானது!" என கரோல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>டிரம்பின் வழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்பைக் கடுமையாகச் சாடியுள்ளனர். இந்த வழக்கு ஜனநாயகக் கட்சியினரால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஒரு "திட்டமிட்ட சதி" மற்றும் "பழிவாங்கும் நடவடிக்கை" என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>
மேலும், இந்த வழக்கின் நீதிபதி லூயிஸ் கப்லான் நடுவர் குழுவை டிரம்பிற்கு எதிராகத் திசைதிருப்பும் சாட்சியங்களை முறையற்று அனுமதித்தார் என டிரம்ப் தரப்பு வாதிட்டது. எனினும், மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் டிரம்பின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T17:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமந்திரன் பதவி விலக வேண்டும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ilankai-tamilarasu-party-sumanthiran-should-resign-1784048828"></link>
            <id>https://tamilwin.com/article/ilankai-tamilarasu-party-sumanthiran-should-resign-1784048828</id>
            <summary type="text">இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் பதவியில் இருந்து சி.வி.கே. சிவஞானத்தை விலகுமாறு அக்கட்சியின் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் பதவியில் இருந்து சி.வி.கே. சிவஞானத்தை விலகுமாறு அக்கட்சியின் காங்கேசன்தறை தொகுதிக் கிளை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு இது தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு&nbsp;</h2><p>குறித்த கடிதத்தில், பின்வரும் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b972bbae-94ce-4ae3-9edc-92c2252732fb/26-6a5672d6a2df3.webp' /></p><p>1. 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போது வலி. வடக்கு பிரதேச
சபைக்கு வேட்புமனு சமர்ப்பித்தலிலுள்ள முறைகேடுகள்.</p><p>

2. 21.10.2025 அன்று காங்கேசந்துறை தொகுதிக்கிளைக்கு எதிராக போட்டிக்கிளை
அமைக்கப்பட்டமை தொடர்பான முறைகேடுகள்.</p><p>

3. 31.05.2026 அன்று புதிய யாழ்ப்பாண மாவட்ட கிளை அமைக்கப்பட்டதிலுள்ள
முறைகேடுகள்.</p><p>இவற்றை சுட்டிக்காட்டி, இக்காரணங்களுக்காக பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து
உடனடியாக விலகுமாறு&nbsp; காங்கேசன்துறைத் தொகுதிக்கிளை கோரியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T17:33:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் போருக்கு அஞ்சியதில்லை! முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்ட சில கருத்துக்கள்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-inspector-general-priyantha-jayakody-1783997548"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-inspector-general-priyantha-jayakody-1783997548</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உண்மையில் யுத்தத்திற்குப் பயப்படவில்லை. அவர்களிடம் யுத்த பலம் இருந்தது, அதனால் அவர்களுக்குப் பாரிய நம்பிக்கை இருந்தது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உண்மையில் யுத்தத்திற்குப் பயப்படவில்லை. அவர்களிடம் யுத்த பலம் இருந்தது, அதனால் அவர்களுக்குப் பாரிய நம்பிக்கை இருந்தது. </p><p>அவர்கள் பயந்திருந்தது அமைதிக்கே. அதாவது, சமாதானத்தை அவர்கள் தங்களது பலவீனமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தினார்கள் என்று முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியந்த ஜயகொடி இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போது கூறியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள்</p><p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் எப்போதும் அவர்களின் ஒட்டுமொத்த செயல்முறையிலுமே மிகவும் தந்திரமான செயற்பாடுகளையே முன்னெடுத்தனர்.
</p><p></p><h2>அவரின் தனிப்பட்ட கருத்து</h2><p>எனது தனிப்பட்ட கருத்துப்படி,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குத் தவறிய இடங்கள் மிகக் குறைவே. பிரதானமான தவறு என்னவென்றால், 2005 இல் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடித்து, மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி தாமாகவே வம்பை விலைக்கு வாங்கியதாகும். </p><p>அதேபோன்று தான் ரஜீவ் காந்தியின் படுகொலையும். இப்படி சில பாரதூரமான தவறுகள் அவர்களினால் செய்யப்பட்டன.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதிக்கும் அவர்கள் தங்களது வழக்கமான ஏமாற்று வித்தையையே செய்தார்கள்.</p><p>இந்திய அமைதிப்படையை பிரேமதாச ஜனாதிபதி விரட்டினார். அவர்கள் அவருடன் சமாதான பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதாகக் கூறி வந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c8661ac-728a-47ed-a609-4d5efd61243e/26-6a55a46e451ee.webp' /></p><p>அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் பரிமாற்றப்பட்டதாக ஒரு கதை இருக்கிறது.
அவர்கள் பலவீனமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சமாதானத்தை முன்னிறுத்திச் செயற்பட்டே மீண்டும் பலமடைந்தார்கள். </p><p>
2009 இலும் அதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு நடக்கவில்லை. 
ரணில் விக்ரமசிங்கவையும் ஏமாற்றினார்கள். </p><p>அது சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ 'மை பெல்லி இஸ் வைட்' (My Belly is White ) என்று சற்றே பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தப் புத்தகத்தில் அனைத்து விபரங்களும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T17:12:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cwc-senthil-thondaman-indian-high-commissioner-1784044648"></link>
            <id>https://tamilwin.com/article/cwc-senthil-thondaman-indian-high-commissioner-1784044648</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.</p><p>
இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் OCI விசாவை வழங்குங்கவதற்கான நடைமுறை இலகுப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அரசியல் நிலவரங்கள்</h2><p>இருந்த போதிலும், OCI விசா பெறுவதற்கான கட்டணம் இலங்கை ரூபா மதிப்பில் 90 ஆயிரம் என்பதால், அதனை பெற்றுக் கொள்வதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e4039ca-1d05-4b64-a204-80242788c8cb/26-6a565fc469abe.webp' /></p><p> </p><p> எனவே OCI விசாவை பெறுவதற்கு விசேட சலுகை முறையில் குறைந்த கட்டணம் அறவிட வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>

தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்தமை குறித்தும், அவருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்தும் செந்தில் தொண்டமான் சந்தோஷ் ஜாவிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், இச்சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T16:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களின் எழுச்சிக்கு உதவிய தமிழ்க் கூட்டணி - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-criticism-of-the-alliance-tamil-parties-1784038804"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-criticism-of-the-alliance-tamil-parties-1784038804</id>
            <summary type="text">சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அஷ்ரப் நானா ஆகியோரின்
சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய
எழுச்சிக்கு அடித்தளம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அஷ்ரப் நானா ஆகியோரின்
சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய
எழுச்சிக்கு அடித்தளம் என ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p><p> 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

கூட்டணியின் விளைவு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், தேர்தல் பின்னடைவுகளே கூட்டணி பற்றிய
சிந்தனைகளை எமது தலைவர்களுக்கு ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29427588-247d-4c8f-a877-86295f1acfcf/26-6a5645fc458c0.webp' /></p><p> </p><p>70 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலே பரந்தளவான தமிழர் கூட்டணி உருவாக
காரணமாக அமைந்தது.

ஆரம்பத்தில் அந்தக் கூட்டிணைவில் அப்போதைய மலையக மக்களின் தேசியத் தலைவரான சௌ.தொண்டமானும் முஸ்லிம் மக்களின் தேசியத் தலைவரான அஸ்ரப் இருவரும் 
இணைந்திருந்தனர்.</p><p> எனினும், அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனைகள் காரணமாக
பின்னாட்களில் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.


அவர்களின் தீர்மானம் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab25334e-fafa-48ee-b089-d8dbeac8dcd2/26-6a5645fd0d4a6.webp' /></p><p>

அதேபோன்று, பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்களும் சந்தர்ப்பவாத
தீர்மானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதை வரலாறு
நிரூபித்திருக்கின்றது.
</p><p>
எம்மை பொறுத்தவரையில், மக்களின் நலன்களும் அபிலாசைகளுமே முதன்மைக்குரிய
விடயங்களாகும். அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T15:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-police-warned-people-1784041233"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-police-warned-people-1784041233</id>
            <summary type="text">இலங்கையில் GovPay போன்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தளங்களைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் GovPay போன்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தளங்களைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.</p><p>

இவ்வாறான போலியான தளங்கள் மற்றும் செய்திகள் மூலம் பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அரசாங்க சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் GovPay தளத்தைப் போலவே போலியான இணையதளங்களை மோசடி கும்பல்கள் உருவாக்கியுள்ளன. </p><p>

இவ்வாறான தளங்கள் மூலம் வாகனப் போக்குவரத்து அபராதங்களை செலுத்துமாறு மக்களை ஏமாற்றியுள்ளனர்.
</p><h2><b>
போலி போக்குவரத்து அபராதங்கள் </b></h2><p>மேலும், இலங்கை பொலிஸாரின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி, வாகன உரிமையாளர்கள் ஏதோ ஒரு போக்குவரத்து குற்றத்தைச் செய்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6eed8a-3d1d-4126-b8e4-c76fc8661508/26-6a565021a779f.webp' /></p><p>அபராதத்தை உடனே செலுத்துமாறும் கூறி, போலியான இணைய இணைப்புகளை வழங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
போக்குவரத்து அபராதங்கள் பொதுவாக அந்த இடத்திலேயே வாகன ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கப்பட்டதன் பின்னரே வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கண்காணிப்பு கமராக்கள் மூலம் குற்றங்கள் கண்டறியப்பட்டாலும், பொலிஸார் ஒருபோதும் குறுஞ்செய்தி மூலம் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை.

அத்துடன் அதிகாரப்பூர்வமற்ற இணைய இணைப்புகள் மூலம் அபராதத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்துவதில் இல்லை எனவும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
</p><p>
எனவே, இது போன்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகள் அல்லது இணையதளங்கள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
எவ்வித பணப்பரிமாற்றத்தைச் செய்யும் முன்பும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-14T15:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில மாதங்களில்.. மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரச தரப்பு உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-confirms-provincial-council-elections-1784036689"></link>
            <id>https://tamilwin.com/article/government-confirms-provincial-council-elections-1784036689</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதிப் பிரச்சினை எதுவும் இல்லை என 
 அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதிப் பிரச்சினை எதுவும் இல்லை என 
 அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று(14.07.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


விருப்புரிமை வாக்குரிமை வாக்களிப்பு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

மாகாண சபைத் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நம்பிக்கை. நமக்கு மாகாண சபைகளும் தேவை, மாகாண சபைகளை உதாரணமாக எடுத்துக் கொண்டால், நான் பதவியேற்றபோது, ​​சுகாதார அமைச்சு உட்பட மத்திய அரசுக்குச் சொந்தமான 61 நிறுவனங்கள் இருந்தன.
</p><p>
 பல மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக நான் இதனை ஏற்கனவே கூறியுள்ளேன். மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acfadadb-cb9a-43da-936a-e3b3d38b3141/26-6a563df53340d.webp' /></p><p>
</p><p>
 ஆனால், தேர்தல்கள் என்பவை மக்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். அப்போது, ​​பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாட்டு மக்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதிக்கு வரும்படியான, விருப்புரிமை வாக்குரிமை இல்லாத ஒரு தேர்தல் முறையை எதிர்பார்த்திருந்தனர்.</p><p>

இதற்கமைய, மாகாணங்களுக்கான ஒரு தேர்தல் முறை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு முன்பு, உள்ளாட்சித் தேர்தல்களுக்காக, அவர்கள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதிக்கு வரும்படியான, விருப்புரிமை வாக்குரிமை இல்லாத ஒரு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

இந்த விதிமுறைக்களுக்கமைய தேர்தல் விரைவில் நடக்கும். </p><p>இப்போது, ​​2018 மற்றும் 2025-ல், இந்த நாட்டு மக்கள் உள்ளாட்சித் தேர்தல் முறையைப் புதுப்பித்துள்ளனர், இதன் மூலம் தங்கள் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பதை அவர்களால் காண முடிகிறது.
</p><p>
மேலும், முந்தைய தேர்தல்களில் இருந்த விருப்புரிமை வாக்குரிமைப் போட்டியும் நீக்கப்பட்டுவிட்டது.

இதேவேளை, மாகாண அளவில் அந்தப் பணச் செலவினமும் கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.</p><h2> 

விரைவில் மாகாண சபை தேர்தல்</h2><p>

பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு முறையின் நீட்சியாக, மாகாண சபைகளுக்கு ஒரு புதிய வாக்குப்பதிவு முறை முன்மொழியப்பட்டது.
</p><p>
 அது ஒவ்வொரு தொகுதிக்கும் விருப்புரிமையற்ற ஓர் உறுப்பினரை வழங்குவதோடு, பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75d5c378-1f33-4f36-9777-c8f2791820ca/26-6a563df611053.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், மக்களின் விருப்புரிமைகளால் அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டாலும், என்னால் அதை முற்றிலுமாக மறந்துவிட்டு ஒரு புதிய வாக்குப்பதிவு முறையை உருவாக்க முடியாது. </p><p>

அப்படியாயினும், நாங்கள் அந்த விஷயத்தை ஒரு நாடாளுமன்றக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம்,

அந்த நாடாளுமன்றக் குழு, விருப்புரிமை வாக்குரிமையின்றி தங்கள் தொகுதியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் ஒரு வாக்குப்பதிவு முறையை முன்வைக்கும்போது, ​​அதற்கேற்ப எல்லைகளை வரையறுத்து, மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசை கவிழ்க்க திட்டம் - எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-plan-to-overthrow-the-anura-government-1784026517"></link>
            <id>https://tamilwin.com/article/a-plan-to-overthrow-the-anura-government-1784026517</id>
            <summary type="text">எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை
அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.

யா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை
அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட
கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரிடம், தமிழ் முஸ்லீம் கட்சிகளின்
புதிய கூட்டு தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எதிர்க்கட்சிகளின் கூட்டணி</h2><p>
</p><p>


மேலும் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி என்பது, அது வெறும்
கூட்டு சாம்பாராக மாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இடமில்லை என்பது
மக்களுக்கு தெரிந்த விடயம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSlAKwRzAgY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இந்தக் கூட்டணி இந்த நாட்டில் இலஞ்சத்தை ஒழிப்பதற்காக, மோசடிகளை ஒழிப்பதற்காக திருடர்களைப் பிடிப்பதற்காக, இதுபோன்ற நல்ல வேலைகளைச் செய்வதற்கான கூட்டணியா? அல்லது
திருடர்களைப் பாதுகாப்பதற்கும், வஞ்சகர்களைப் பாதுகாப்பதற்கும், ஊழல்
மோசடிகளை செய்பவர்களை பாதுகாப்பதற்கான கூட்டணியா என்பது எல்லோருக்கும்
நன்றாகத் தெரியும்.</p><h2>அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு</h2><p>இந்தக் கூட்டணியில் இருக்கின்றவர்களைப் பார்க்கின்ற பொழுது கடந்த காலங்கள்
நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு இன்றைக்குப் பிணையில் இருக்கின்ற
நபர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1534933-54a0-46f5-9cba-90e34b1c7a54/26-6a5618966ee29.webp' /></p><p>

அவ்வாறு பிணையில் இருக்கிறவர்களுக்கு நாளைக்கு கம்பி எண்ணுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும், அதனால், சிறைக்குச் செல்வதற்கு முதல்எதையாவது செய்து இந்த அரசாங்கத்தை வீழ்த்தலாமா, அல்லது அரசாங்கத்தை மாற்றலாமா என்கிற முயற்சியில் ஈடுபடுகின்ற ஒரு போக்காகவே இதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p>
எந்த வகையிலும் இவ்வாறான கூட்டணி அல்ல, இதனுடைய அப்பனால் அமைக்கப்படுகின்ற
கூட்டணியாலும், தேசிய மக்கள் சக்தியை அசைக்க முடியாது.

ஏனென்றால், இன்றும் அவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றோம். மக்களுடைய
செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5006117-89c7-46b6-afe2-29d8d5851fc5/26-6a561895bf862.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T14:38:04+00:00</updated>
        </entry>
    </feed>
