<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-14T10:40:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030இற்குள் சுற்றுலாப் பயணிகளுக்கான செலவினத்தை அதிகரிக்க முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/higher-tourist-spending-by-2030-1784020086"></link>
            <id>https://tamilwin.com/article/higher-tourist-spending-by-2030-1784020086</id>
            <summary type="text">பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தை கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தை கணிசமாக அதிகரிப்பதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
 

களுத்துறை மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் சுற்றுலாத் தொழிலை வலுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதி அமைச்சர் ரணசிங்க, நாட்டில் தங்கியிருக்கும் போது பார்வையாளர்கள் செலவிடும் தொகையை அதிகரிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகளின் செலவினங்கள்&nbsp;</h2><p>

 

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் 171 அமெரிக்க டொலராகப் பதிவான நிலையில், தற்போது ஒரு சராசரி சுற்றுலாப் பயணி சுமார் 148 அமெரிக்க டொலரைச் செலவிடுகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d0e3dfc-7953-4ad2-870d-9691a3bdb26a/26-6a560c2c6f5be.webp' /></p><p>கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் நடத்தை மற்றும் செலவின முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஓர் ஆய்வை நடத்தியதாக பிரதி அமைச்சர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
 

சுற்றுலாப் பயணிகளின் செலவினங்களை அதிகரிப்பதற்கு, ஒட்டுமொத்த வருகையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதே முக்கியமானது என்றும், அந்த இலக்கை அடைவதற்குத் திட்டமிட்ட மற்றும் முறையான அணுகுமுறை தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞருக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-high-court-man-wattala-to-life-imprisonment-1784019209"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-high-court-man-wattala-to-life-imprisonment-1784019209</id>
            <summary type="text">5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>இந்த வழக்கு கடந்த (01.07.2026) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த வழக்கின் அனைத்து பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருந்தார்.</p><p></p><h2>ஆயுள் தண்டனை</h2><p>
</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான
'ஐஸ்' போதைப் பொருளைத் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை
விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட நபர் வத்தளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb73e11-64b4-4493-8636-2e2257d15c02/26-6a55ff2ae9bdf.webp' /></p><p>
</p><p>
குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம் பெற்று வந்த நிலையில்,
குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்ட வாதிகளான தேவ
விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன்
சமர்ப்பித்திருந்தனர்.
</p><p>இதேவேளை,&nbsp; அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின்
மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான விசாரணை : ஜூலை 20இல் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabraal-bid-halt-greek-bond-corruption-case-fails-1784016655"></link>
            <id>https://tamilwin.com/article/cabraal-bid-halt-greek-bond-corruption-case-fails-1784016655</id>
            <summary type="text">மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதிவாதி தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம்</h2><p>
</p><p>
2012ஆம் ஆண்டில் கிரீஸ் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த போது, அந்த நாட்டுப் பிணைமுறிவுகளில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 184 கோடி ரூபாவுக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டிருந்தது. </p><p>இதற்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சட்ட வரம்புக்குட்பட்ட அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தரப்பினரால் இந்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a799fba7-84b0-4530-9c03-d6d9d78e53b7/26-6a55f0f6223a6.webp' /></p><p>நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய தலைமையில், உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக சி. ராகல ஆகியோர் அடங்கிய அமர்வே இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. </p><p>

தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த HCB 271/24 மற்றும் HCB 33/24 ஆகிய வழக்குகளில் உள்ள குற்றச்சாட்டுக்களும், இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளும் சமமானவை என பிரதிவாதி தரப்பு மன்றில் தெரிவித்ததுடன், அந்த வழக்கு நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கைத் தொடர்வது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

இதன்போது பதிலளித்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, அதன் பணிப்பாளர் நாயகத்தினால் 2018ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளுக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரினால் நிர்வாகக் கட்டமைப்புக்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்திருந்தனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்ப்பனங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு , இந்தச் சட்டத்தின் மூலம் தற்போதுள்ள மூலச் சட்டத்தின்கீழ் எந்தவித உரிமைகளும் பறிக்கப்படவில்லை என்றும், இது நடைமுறைச் சட்டமே எனவும் தெரிவித்திருந்தது.</p><p> 

மேலும், மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வினால் வழங்கப்படும் தீர்ப்பினால், பாதிக்கப்படும் தரப்பு அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் உரிமை சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7ebc1cf-caff-4132-b4aa-11553f494def/26-6a55f0f6c58ab.webp' /></p><p>


இதனடிப்படையில், பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளில் எந்தவித அடிப்படையும் இல்லை எனக் கூறி அதனை நிராகரித்த நீதிமன்றம், வழக்கின் முழுமையான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>
2011 மார்ச் 11 முதல் 2012 நவம்பர் 19 வரையான காலப்பகுதிக்குள், கிரீஸின் பிணைமுறிவுகளில் அரசாங்கப் பணத்தை முதலீடு செய்ததன் மூலம், அரசிற்கு 184 கோடிக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:50:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்க்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - காரணத்தை வெளிப்படுத்திய முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1784016248"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1784016248</id>
            <summary type="text">நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இவ்வளவு தூரம் சென்றதற்குக் காரணம், கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இவ்வளவு தூரம் சென்றதற்குக் காரணம், கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க கூறியுள்ளார்.&nbsp;</p><p>

நீர்க்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளக பிரச்சினை காரணமாக இரண்டு கைதிகள் இறந்தனர். அது அதிகாரிகள் வரை பரவவில்லை. மறுநாள் காலையில், எங்கள் அதிகாரிகள் குழு ஒன்று ஆயுதமின்றி அந்தச் சிறைக்குள் சென்றது.</p><h2>கைதிகள் மீதான நம்பிக்கை</h2><p>இங்குள்ள மிகப்பெரிய மற்றும் பிரதான பிரச்சினை, கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே. எனது சிறை வாழ்க்கை கிட்டத்தட்ட 38 ஆண்டுகள். நான் எந்த நேரத்திலும் ஒரு கைதியை நம்பியதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c73a7fda-7350-4c52-9025-35ec1cbb13d8/26-6a5604c92e530.webp' /></p><p>அதனால்தான் நான் நினைக்கிறேன்... நமது அதிகாரிகள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டார்கள். அவர்கள் கைதிகளை நம்பி சிறைக்குள் சென்றார்கள்.</p><p>43,000 அதிகாரிகள் இருக்கும் இடத்தில், சுமார் 5500 அதிகாரிகள் கொண்ட ஒரு குழு சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது என்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:44:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்புச் சிரமதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-dengue-eradication-shramadhana-1784011824"></link>
            <id>https://tamilwin.com/article/special-dengue-eradication-shramadhana-1784011824</id>
            <summary type="text">சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தை மையப்படுத்தி விசேட டெங்கு
ஒழிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தை மையப்படுத்தி விசேட டெங்கு
ஒழிப்புச் சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அண்மைக்காலமாக நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் டெங்கு பரவல் அச்சுறுத்தலைக்
கருத்திற் கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் இந்தச் சிரமதான நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>டெங்கு ஒழிப்புச் சிரமதானம்</h2><p> இதன்போது பாடசாலையின் உட்புற மற்றும் வெளிப்புறச்
சூழல்கள், நுளம்புகள் பெருக்கமடையாத வகையில் முழுமையாகத்
தூய்மைப்படுத்தப்பட்டு துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d62a806a-a108-4024-be08-f104241c2d38/26-6a55de74befe4.webp' /></p><p>இந்த விசேட சமூகப் பணியானது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி. பரமேஸ்வரனின்
நேரடி வழிகாட்டலில், பாடசாலை அதிபர் ரி.கே.எம். சிராஜ்&nbsp; தலைமையில்
நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன் போது வீரமுனை இராணுவ முகாம் வீரர்களின் ஒத்துழைப்புடன், பாடசாலை
ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து அர்ப்பணிப்புடன் இந்தப் பணியை
முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p>60 டெங்கு அதி அபாய வலயங்களை மையப்படுத்தி இரண்டாவது நாளாக இன்றும் விசேட
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் பேருந்து
நிலையம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>நாட்டிலுள்ள 60 டெங்கு அதி அபாய வலயங்களை மையப்படுத்தி தேசிய டெங்கு ஒழிப்புப்
பிரிவினால் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி&nbsp;</h2><p> இதன் தொடர்சியாக இன்று காலை கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் பேருந்து நிலையம்
ஆகியவற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த சிரமதானப் பணியில் கிளிநொச்சி மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை
இராணுவத்தினர், இலங்கை பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து
வைத்தியசாலை வளாகத்திலுள்ள டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை
சுத்தப்படுத்தி, நீர் தேங்கும் பொருட்களை அகற்றி, சுற்றுப்புறச் சூழலை
சுகாதாரமானதாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98438611-05f5-4c27-b1fb-e78f045ed08d/26-6a55e01c5ad95.webp' /></p><p>

நாடளவில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்
முன்னெடுக்கப்படும் இந்த விசேட வேலைத்திட்டத்தின் மூலம், பொதுமக்களும் தங்களது
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள்
ஒதுக்கி டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றுமாறு சுகாதார அதிகாரிகள்
வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் பகுதிகளை
மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>மேலதிக தகவல் - சுடரோன்</i></b></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/municipal-worker-jailed-over-death-threats-1784010989"></link>
            <id>https://tamilwin.com/article/municipal-worker-jailed-over-death-threats-1784010989</id>
            <summary type="text">கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை&nbsp;சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லுமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித்
உத்தரவிட்டுள்ளார்.</p><p>குறித்த சந்தேகநபரை 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்ற வேலை நேரத்திற்குள் உரிய முறையில் பிணை
எடுக்கத் தவறியமையினாலேயே அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p></p><h2>உயிர் அச்சுறுத்தல்</h2><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்குள் வைத்து, அதன்
ஆணையாளர் என்.எம். நெளபீஸை அதே சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடமை
நேரத்தில் அச்சுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் தொடர்பாக ஆணையாளரினால் கல்முனை
தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b6fb37c-c173-4948-8c13-871f2fbd9f4a/26-6a55daa8110d7.webp' /></p><p>

இதனையடுத்து பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபரான ஊழியர்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கானது கடந்த திங்கட்கிழமை (13) கல்முனை நீதிமன்ற நீதிவான்
கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற&nbsp;உத்தரவு</h2><p> </p><p>இதன்போது
நீதிமன்றில் முன்னிலையான இருதரப்புச் சமர்ப்பணங்களையும் நீதிவான் விரிவாக
ஆராய்ந்துள்ளார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bf7f25-07ba-47a0-892a-bab96b2b8c17/26-6a55daa8b6c3e.webp' /></p><p> </p><p>எனினும், நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை சந்தேகநபர் சார்பில்
பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராத காரணத்தினால், அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி
வரை ஒத்திவைப்பதாகவும் கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:26:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-s-case-postponed-1784018724"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-s-case-postponed-1784018724</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தனது தடுப்புக் காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்து மனு மீதான விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தனது தடுப்புக் காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்து மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்படி, குறித்த மனு மீதான மேலதிக பரிசீலணையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஊடாக,&nbsp; பயங்கரவாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து சுரேஷ் சலே இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f749a17f-5cd9-466b-83f8-3fb66d074f1c/26-6a55fa2638688.webp' /></p><p>இந்தநிலையில், குறித்த மனு மீதான விசாரணை இன்று(14.07.2026) எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p>இதன்போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன&nbsp; தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து, மனு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T08:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-carrying-drone-service-sri-lanka-1784015397"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-carrying-drone-service-sri-lanka-1784015397</id>
            <summary type="text">இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஆளில்லா விமானச் சேவையைச் சோதனை செய்வதற்கான திட்டங்களை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஆளில்லா விமானச் சேவையைச் சோதனை செய்வதற்கான திட்டங்களை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது.</p><p>சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல, இந்த முன்னெடுப்பு ஒரு முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என்றும் இது விமானப் போக்குவரத்தை நவீனமயமாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
</p><p></p><h2>ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன்</h2><p>
ஒவ்வொரு ட்ரோன் விமானமும் ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcabdadb-b585-4093-b1e2-c24442a52123/26-6a55f882b6d5d.webp' /></p><p> சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இதுபோன்ற திட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T08:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வயதில் உயிருக்கு போராடும் மகன்..! நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரியின் கடைசி ஆசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tlast-wish-of-officer-who-died-in-negombo-clash-1784018697"></link>
            <id>https://tamilwin.com/article/tlast-wish-of-officer-who-died-in-negombo-clash-1784018697</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழிந்த அதிகாரியொருவரின் கடைசி ஆசை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழிந்த அதிகாரியொருவரின் கடைசி ஆசை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ஒட்டுமொத்த இலங்கையையும் பதைபதைக்க வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> 

இதற்கமைய, நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 21 கைதிகளும் 8 பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p> 

அத்துடன், சிறைச்சாலையில் இருந்து 40 ஆயிரம் கைதிகள் வேறு வேறு இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். </p><p>

இதனை தொடர்ந்து, அம்பலந்தோட்டாவின் பாலகஹகொடெல்லா பகுதியில் வசித்து வந்த 39 வயதான சிறைக்காவலர் சந்திக லஷன் குணவர்தன, சம்பவம் நடந்து ஒரு வாரக் காலப்போராட்டத்திற்கு பின்னர் நேற்று(13.07.2026) இரவு உயிரிழந்துள்ளார்.</p><h2> 

அதிகாரியின் கடைசி ஆசை</h2><p>

குறித்த அதிகாரிக்கு 7 வயதில் மகன் ஒருவர் இருப்பதாகவும், அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c447ac15-df8a-4602-919f-5f2fc5ec57db/26-6a55f7b8d8811.webp' /></p><p> </p><p>

அந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற பெரும் பணம் தேவை என்பதால் உயிரிழந்த அதிகாரி சந்திக மகனின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்து பணம் தேடிக் கொண்டிருந்ததாக சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சந்திக, தனது இறுதி மூச்சை விடும்போதும் சிறுவனின் நினைவுகளில் இருந்தார் என்றும், தனது கடமைக்காக உயிரைத் தியாகம் செய்த ஒரு மாவீரனின் கடைசி விருப்பம், அவரின் குழந்தையைக் காப்பாற்றுவதே என்றும் கூறப்படுகிறது.</p><p> 

அத்துடன், சிறைச்சாலை மோதல் சம்பவத்தில், 100க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகளும் கைதிகளும் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4Xl22URQsuU" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:49:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவன் - சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/search-continues-second-day-for-student-in-lindula-1784010941"></link>
            <id>https://tamilwin.com/article/search-continues-second-day-for-student-in-lindula-1784010941</id>
            <summary type="text">புதிய இணைப்புகொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவன் இன்று(14.07.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவன் இன்று(14.07.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>நண்பர்களுடன் குளிக்க சென்று காணாமல் போன மாணவனை இரண்டாவது நாளாக இன்றும்(14.07.2026) தேடும் பணி முன்னெடுக்கபட்டுள்ளது.</p><p>லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10
மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்
சென்றபோது காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p></p><h2>மாணவனைத் தேடும் பணி&nbsp;</h2><p>இதனை தொடர்ந்து
தீவிரமாகத் தேடியும் மாணவனின் உடலை நேற்று (13) கண்டறிய முடியவில்லை என்பதோடு, போதிய
வெளிச்சம் இல்லாததால் இரவு தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a949f9b7-3e7c-4653-acf5-7d399f8a26e5/26-6a55dc6386e04.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று திங்கட்கிழமை (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில்
நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி,
ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா
ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.</p><p>இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரே
மாணவன் மட்டும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில்
அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28947e8f-a283-4bcd-9df5-2fe644b6c190/26-6a55effb28eda.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு காணாமல் போன மாணவன்
லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மிளகுசேனை
தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த மாணவனைத் தேடும் பணிகளை லிந்துலை பொலிஸாரும், பிரதேச மக்களும்
இணைந்து இரண்டாவது நாளாக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b345786-0cdd-471d-8606-2b96c7419ac5/26-6a55dc64601c2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed3ce8c1-1d58-475a-8b16-cc2ad8b90a3e/26-6a55dc653c101.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290133af-000a-42e2-a0d4-14569c6db5b9/26-6a55fa927fb23.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27492843-2585-4ef0-aa91-80cb4474d240/26-6a55fa938cbbe.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T08:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் - தந்தையை கொடூரமாக படுகொலை செய்த மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-killed-mother-and-father-1784006787"></link>
            <id>https://tamilwin.com/article/son-killed-mother-and-father-1784006787</id>
            <summary type="text">எம்பிலிபிட்டிய, கிரவலவெல்கடுவ பகுதியில் மகனொருவர் தனது தாய் மற்றும் தந்தையை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குடும்பத்தினரிடையே ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிபிட்டிய, கிரவலவெல்கடுவ பகுதியில் மகனொருவர் தனது தாய் மற்றும் தந்தையை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது.</p><p> இந்த தகராறு முற்றிய நிலையிலேயே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><h2>மகனின் கொடூர செயல்&nbsp;</h2><p>

இந்தச் சம்பவத்தில் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da8a63a-5f25-430c-bc87-9f90e56312a4/26-6a55c9d2d9b1c.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த தம்பதியினரின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் குறித்து எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/R_x23yE9SEg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-14T08:06:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் தாய் - இலங்கையில் மகளுக்கு நேர்ந்த கொடுமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-girl-abused-by-grand-father-1784005778"></link>
            <id>https://tamilwin.com/article/school-girl-abused-by-grand-father-1784005778</id>
            <summary type="text">கம்பளையில் பாடசாலை மாணவி ஒருவர், உறவினரால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. 

12 வயது பாடசாலை மாணவி ஒருவரை வைத்தியர்கள் பரிசோதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளையில் பாடசாலை மாணவி ஒருவர், உறவினரால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. </p><p>

12 வயது பாடசாலை மாணவி ஒருவரை வைத்தியர்கள் பரிசோதித்த போது, சிறுமியின் தாத்தாவினால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

சிறுநீர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்கு சென்ற போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. </p><h2><b> 

தாத்தா கைது</b></h2><p>54 வயதான சந்தேக நபர் 5 பிள்ளைகளின் தந்தையாகும். பாதிக்கப்பட்ட சிறுமி, சந்தேக நபரின் வீட்டின் அருகில் வசிக்கும் அவரது மகன் ஒருவரின் மகள் என தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c2b1156-e199-475c-9111-96192fb2f6b7/26-6a55ed6c6875a.webp' /></p><p>வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பளை பொலிஸார், சந்தேக நபரான சிறுமியின் தாத்தாவை கைது செய்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர் கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 24 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><h3><b>

சிறுமி வாக்குமூலம்</b></h3><p>சிறுமியின் தாய் நான்கு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்காக சந்தேக நபரினால் தகாத செயற்பாட்டுக்கு சிறுமியை உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a50ee726-1af0-45de-bf39-3eba2695d753/26-6a55ed6d16c1d.webp' /></p><p>சில நாட்களுக்கு முன்னர் சிறுமிக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>

அங்கு வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி தகாத செயற்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p> 

மேலும் விசாரணை மேற்கொண்டதில், தனது தாத்தா நீண்ட காலமாக தன்னைத் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிறுமி நேற்று பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T08:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரையோரப் பகுதிகளில் கடல் சீற்றம் தீவிரம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-report-for-today-1784012310"></link>
            <id>https://tamilwin.com/article/weather-report-for-today-1784012310</id>
            <summary type="text">



மாத்தறை முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாகவும், சிலாவ் முதல் புத்தளம் வரையிலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>



மாத்தறை முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாகவும், சிலாவ் முதல் புத்தளம் வரையிலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் நிலவும் சீற்றம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவிப்பை இன்று(14.07.2026) வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> 

இதற்கமைய, மாத்தறை முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாகவும், சிலாவ் முதல் புத்தளம் வரையிலும், காங்கேசன்துறை வரை திருகோணமலை வழியாகவும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரித்து, அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/716f6d00-33f1-4853-bfc8-b76b9060fac4/26-6a55ec1d9678f.webp' /></p><p> </p><p>

எனவே, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும், இது சம்பந்தமாக வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எதிர்கால ஆலோசனைகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-14T07:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் நேரலையில் நிகழ்ந்த மரணம் - தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-live-death-of-man-police-investigation-1784013696"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-live-death-of-man-police-investigation-1784013696</id>
            <summary type="text">முகநூல் நேரலையின்போது உயிரிழந்த, கரன்தெனியவின் தல்கவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயது நபரின் மரணம் குறித்து கரன்தெனிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகநூல் நேரலையின்போது உயிரிழந்த, கரன்தெனியவின் தல்கவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயது நபரின் மரணம் குறித்து கரன்தெனிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
இறந்தவரான தினேஷ் விஜேவர்தன, பல ஆண்டுகளாக தென்கொரியாவில் பணியாற்றி, அண்மையில் இலங்கை திரும்பியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>119 என்ற அவசர உதவி எண் மூலம் </h2><p>

பொலிஸாரின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் ஜூலை 12 ஆம் திகதி இரவு நிகழ்ந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef0fcbe-cc0c-442e-9389-1971839f8fe6/26-6a55e8465ca0f.webp' /></p><p>நேரலை ஒளிபரப்பின் போது, ​​அவர் தவறான முடிவெடுப்பதற்கு முன்பு ஆரம்பத்தில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

119 என்ற அவசர உதவி எண் மூலம் முறைப்பாடு வந்ததையடுத்து விசாரணையைத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலதிக விசாரணைகளுக்காக சடலம் எல்பிட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T07:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேன வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-for-investigation-into-airbus-contract-1784013355"></link>
            <id>https://tamilwin.com/article/order-for-investigation-into-airbus-contract-1784013355</id>
            <summary type="text">

கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம, ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை வழக்கை அக்டோபர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம, ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை வழக்கை அக்டோபர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த வழக்கு இன்று(14.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையொன்றும் வரும் நாட்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2> 

சி.பி.ஏ. கபில சந்திரசேன இறப்பு</h2><p>

இந்த வழக்கில் சந்தேக நபராக இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.பி.ஏ. கபில சந்திரசேன தற்போது உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e9ac07-0d4d-454d-a4fc-82bd12b989b6/26-6a55e7e6026fb.webp' /></p><p> 

அத்துடன், வழக்கில் உள்ள உண்மைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்டத்தரணி உதர முகந்திரம்,</p><p> 

“ இந்த விழாவுடன் தொடர்புடைய நிமல் பெரேரா சார்பாக தாம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் தெரிவித்துள்ளார்.

அப்போதைய நீதிபதி, இலஞ்ச ஆணைக்குழுவால் அந்த நபர் இன்னும் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை என்றும் சம்பவத்தில் சந்தேக நபராகக் கருதப்படும் பிரியங்கா நயோமலி சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஹர்ஷனா மாதராச்சி, அவர் வெளிநாட்டில் வசிப்பதால், அவருக்கு எதிராக சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.”</p><p>


சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் ஏற்பட்டுள்ள மேலதிக முன்னேற்றம் குறித்து அக்டோபர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், வழக்கை திகதியிட்டு ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-14T07:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-about-fake-text-messages-1784011183"></link>
            <id>https://tamilwin.com/article/warning-about-fake-text-messages-1784011183</id>
            <summary type="text">பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்ற தோரணையில் &#039;அபராதப் பணத்தைச் செலுத்துமாறு&#039; கையடக்க தொலைபேசிக்கு ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால், அது க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்ற தோரணையில் 'அபராதப் பணத்தைச் செலுத்துமாறு' கையடக்க தொலைபேசிக்கு ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். </p><p>

பொலிஸாரால் ஒருபோதும் இவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.J.சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>போலி குறுஞ்செய்திகள்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நீங்கள் செய்த சில போக்குவரத்து விதிமீறல்களுக்காக, ஒரு வாரத்திற்குள் உடனடியாக வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பு ஊடாகச் சென்று உரிய அபராதப் பணத்தைச் செலுத்துமாறு, பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்று உங்களது தொலைபேசிக்கு வாட்ஸ்அப் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் போலி குறுஞ்செய்திகள் வந்திருக்கலாம்.</p><p>
ஆனால், போக்குவரத்து பிரிவினால் அத்தகைய குறுஞ்செய்திகள் எதுவும் அனுப்பப்படவில்லை. இவை முற்றிலும் போலியான செய்திகளாகும். இவ்வாறான இணையதள இணைப்புகளுக்குள் சென்று உங்களது தனிப்பட்ட விபரங்கள் அல்லது வங்கி விபரங்களை வழங்க வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf1e218b-4c7b-4826-af7c-a2c69c9671d1/26-6a55e5bbdf879.webp' /></p><p> </p><p>

அந்த இணைப்புகளைத் திறக்கவும் வேண்டாம். இவ்வாறான போலி குறுஞ்செய்திகள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள். பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் இதுபோன்ற எந்தவொரு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T07:31:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dollar-rate-today-in-sri-lanka-1784010494"></link>
            <id>https://tamilwin.com/article/dollar-rate-today-in-sri-lanka-1784010494</id>
            <summary type="text">இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (14.07....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (14.07.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p> 

அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.92 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நேற்றைய நிலவரம்</h2><p> </p><p>

இதேவேளை நேற்றைய தினம் (13) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340.48 ரூபாவாக காணப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/936c766a-a5e5-4925-9e3f-c6e906ad58ab/26-6a55e15c3b694.webp' /></p><p> </p><p>

வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T07:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கைகளுக்கு மாத்தளை விமான நிலையம்- அரசாங்கம் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/matale-airport-in-hands-of-foreign-investors-1784012024"></link>
            <id>https://tamilwin.com/article/matale-airport-in-hands-of-foreign-investors-1784012024</id>
            <summary type="text">மாத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் வளங்களை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 19 முதலீட்டு முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் வளங்களை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 19 முதலீட்டு முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

மாத்தளை விமான நிலையத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட விருப்பம் தெரிவிக்கும் கோரிக்கை நடைமுறையின் கீழ், இந்த முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
</p><p>
இதன்படி, இவற்றில் மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 9ஆம் திகதி துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் முன்மொழிவுகள் திறக்கப்பட்டுள்ளன. </p><p>

விமான மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த EOI நடைமுறையின் மூலம், மாத்தளை விமான நிலையத்தில் சாத்தியமான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/426cfb4a-9a3c-4415-b840-d1d35e852f97/26-6a55dd73a6ac1.webp' /></p><p>

அமைச்சின் தகவலின்படி, கிடைக்கப்பெற்ற முதலீட்டு முன்மொழிவுகள் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.</p><h2>


அனுபவம் கொண்ட முதலீட்டாளர்கள் தேவை</h2><p>

விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் சிவில் விமான சேவைகள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

விமான நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தக மற்றும் சேவை நடவடிக்கைகள் இதில் உள்ளடங்கும்.</p><p>இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கான தகுதிகள், அனுபவம் மற்றும் திறன்களை முதலீட்டாளர்கள் நிரூபிக்க வேண்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0527f305-db74-424b-b182-5f8a34b6db8b/26-6a55dd3bce161.webp' />&nbsp; &nbsp;</p><p>
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட திட்டக் குழு, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, சாத்தியமான முதலீட்டாளர்களை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
</p><p>
தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்கள், அடுத்தக்கட்ட கொள்முதல் செயல்முறையான முன்மொழிவுகளுக்கான கோரிக்கை நடைமுறையில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.</p><p>

முழுமையான முன்மொழிவுகளைத் தயாரித்து சமர்ப்பிக்க முதலீட்டாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கும் வகையில், EOI விண்ணப்ப காலக்கெடு ஜூலை 9ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp; </p><p>&nbsp; &nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:55:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மற்றும் பிள்ளையானால் இலங்கைக்கு மீண்டும் ஆபத்து! சிக்கலாக மாறும் தொடர் தடுப்புக் காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salley-and-pillayan-new-fears-1784010210"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salley-and-pillayan-new-fears-1784010210</id>
            <summary type="text">அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது இலங்கைக்கு பொருளாதார ரீதியாக&nbsp; ஆபத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன&nbsp; தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>சிவனேசத்துரை சந்திரகாந்தன்&nbsp; மற்றும் சுரேஷ் சலே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் GSP+ வர்த்தக சலுகைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.</p><p></p><h2>இலங்கை தகுதியானதா&nbsp;</h2><p>இலங்கையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனி நபர்கள் தடுத்து வைக்கப்படும் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகின்றது.&nbsp;&nbsp;</p><p>இத்தகைய விவகாரங்களை மனித உரிமைகள் என்ற கண்ணோட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானிக்கின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a312533f-8993-4e0f-9327-a39834427959/26-6a55da0c17bdc.webp' /></p><p>இந்த நிலையில், பிள்ளையான் மற்றும் சலே ஆகியோரின் தொடர்ச்சியான தடுப்புக் காவலும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம்&nbsp; மற்றும் மரணங்களும், GSP+&nbsp; சலுகைக்கு இலங்கை தகுதியானதா என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்பீட்டை பாதிக்கக் கூடும்.&nbsp;</p><p>இந்த சலுகையை இழப்பது, ஐரோப்பிய சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் மீது, 5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் வரிகளை விதிக்க வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ueieiM6x-iQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T06:53:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகர சபையின் புதிய உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gazette-issued-elect-chavakacheri-deputy-chairman-1784009109"></link>
            <id>https://tamilwin.com/article/gazette-issued-elect-chavakacheri-deputy-chairman-1784009109</id>
            <summary type="text">சாவகச்சேரி நகர சபைக்குப் புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம்
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால்
வர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகர சபைக்குப் புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம்
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால்
வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தொடர்பில் வட மாகாண ஆளுநரால்
நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின்
பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளரின் உறுப்புரிமை ஆளுநரால்
வறிதாக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மனு&nbsp;தாக்கல் </h2><p>
</p><p>
அந்த வெற்றிடத்தை நிரப்பவே தற்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்
எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கூட்டத்தைக் கூட்டவுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2273f2d1-88a9-47a8-b33b-599bf78c3f4b/26-6a55d73d412bc.webp' /></p><p>இதேநேரம் முன்னாள் உப தவிசாளரை நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட
வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை கோரி தாக்கல் செய்த மனு நேற்று யாழ்ப்பாணம்
மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இதன்போது எதிர்மனுதாரர் தரப்பு
தமது ஆட்சேபனையை இணைக்கச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதுடன் வழக்கு 17 ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T06:50:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.சிறைச்சாலையின் மேலே ட்ரோன் பறக்க விட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-man-arrested-for-flying-drone-over-prison-1784008788"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-man-arrested-for-flying-drone-over-prison-1784008788</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலால் ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று(13.07.2026) 5 மணியளவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலால் ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று(13.07.2026) 5 மணியளவில் அடையாளம் காணப்படாத
'ட்ரோன்' ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டுள்ளது. </p><p>'ட்ரோனை' அவதானிப்பதற்குள் அது
அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.
</p><p></p><h2>பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக</h2><p>
இதேநேரம் இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை
நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு
செல்லப்பட்டதோடு சிறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/650baa72-17bb-4f87-8395-0a84be3276a6/26-6a55d2b29caeb.webp' /></p><p>இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால்
அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட 'ட்ரோன்'
அது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>எனினும், பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால்
இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T06:21:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலாவுக்கு எதிரான புதிய தடுப்பூசி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-vaccine-against-ebola-1784008411"></link>
            <id>https://tamilwin.com/article/new-vaccine-against-ebola-1784008411</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும்
எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதற்கு எதிரான புதிய
தடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும்
எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதற்கு எதிரான புதிய
தடுப்பூசியின் மனிதர்களுக்கான முதற்கட்ட சோதனையை ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நேற்று(13.07.2026) தொடங்கியுள்ளது.</p><p>

'பிடி-எபோவ்' (BD-EBOV) என்று அழைக்கப்படும் இந்த ஆரம்பகட்ட சோதனையில், 18
முதல் 55 வயதுக்குட்பட்ட 50 ஆரோக்கியமான பெரியவர்களுக்கு 'ChAdOx1 BDBV' என்ற
தடுப்பூசி செலுத்தப்பட்டு, அதன் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு&nbsp; திறன்
குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.</p><p></p><h2>எபோலா வைரஸ் தொற்று</h2><p>

ஒக்ஸ்போர்டு/அஸ்ட்ராசெனெகா கோவிட்-19 தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே
வைரஸ் வெக்டார் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒக்ஸ்போர்டு வேக்சின்
குரூப் மற்றும் பாண்டமிக் சயின்சஸ் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகளால் இந்த எபோலா
தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த திட்டத்தின் பங்காளியான இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட், வெறும் இரண்டு
வாரங்களுக்குள் சுமார் 6,20,000 தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்து சேமித்து
வைத்துள்ளதுடன், இந்த முதற்கட்ட சோதனைக்காக 4,000 டோஸ்களை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee8ae3ef-1b44-42c4-af75-239a78a495d9/26-6a55d051c09eb.webp' /></p><p>

தொற்றுநோய்களுக்கான தடுப்பு மருந்து கூட்டமைப்பு (CEPI) இந்த தடுப்பூசி
உருவாக்கத்திற்காக முதற்கட்டமாக 8.6 மில்லியன் டொலர் வரை முதலீடு
செய்யவுள்ளது.</p><p>

இந்த ஆரம்பகட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தால், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு
விரைவாகவும் மலிவு விலையிலும் தடுப்பூசிகளை விநியோகிக்க நடவடிக்கை
எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T06:15:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் பாரிய தீ விபத்து: தேங்காய் நார் தொழிற்சாலை தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-in-ampara-coconut-fiber-factory-gutted-1784009111"></link>
            <id>https://tamilwin.com/article/fire-in-ampara-coconut-fiber-factory-gutted-1784009111</id>
            <summary type="text">அம்பாறை மாநகரசபை எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள
தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்றில் நேற்று (13.) மாலை பாரிய தீ அனர்த்தம் பதிவாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாநகரசபை எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள
தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்றில் நேற்று (13.) மாலை பாரிய தீ அனர்த்தம் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>நவகம்புர தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தேங்காய் நார் தொழிற்சாலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
தொழிற்சாலையின் கதவொன்றை வெல்டிங் (பற்றவைப்பு) செய்யும் பணியில் ஊழியர்கள்
ஈடுபட்டிருந்தபோது, அதிலிருந்து தெறித்து விழுந்த தீப்பொறி அங்கிருந்த
தேங்காய் நார் மீது பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட
விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><h2>பெருமளவான பொருட்கள் நாசம்</h2><p>
தேங்காய் நார்கள் மற்றும் உமிகள் மிக வேகமாகத் தீப்பற்றக்கூடியவை என்பதால்,
தீப்பொறி விழுந்த சில நிமிடங்களிலேயே தீ தொழிற்சாலை முழுவதும் மிக வேகமாகப்
பரவியுள்ளது. இதனால் அங்கிருந்த பெருமளவிலான தேங்காய் நார்களும், உமிகளும்
முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.</p><p></p><p>

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், இலங்கை விமானப்படை முகாமின் தீயணைப்புப்
பிரிவினரும், அம்பாறை மாநகரசபையின் தீயணைப்புப் படையினரும் உடனடியாகச் சம்பவ
இடத்திற்கு விரைந்தனர். </p><p>இரு தரப்பினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வருவதற்கான கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். </p><p>நேற்று மாலை வரை தீயை
முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T06:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு போர் தீவிரம்: உலகளவில் உரம் முதல் உணவு வரை விலை உயர்வுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-prices-rise-due-to-middle-east-tensions-1784008980"></link>
            <id>https://tamilwin.com/article/oil-prices-rise-due-to-middle-east-tensions-1784008980</id>
            <summary type="text">Exness Terminal மூலம் இயக்கப்படும் பிளவு-காட்சி விளக்கப்படம்.Exness-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான இன்கி சோ
அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9446ff3c-81c3-43d7-8b88-d3c5560b3847/26-6a55d11628d1b.webp' /></p><p><i>Exness Terminal மூலம் இயக்கப்படும் பிளவு-காட்சி விளக்கப்படம்.</i></p><p><a href="https://www.exness.com/" target="_blank"><b>Exness</b></a>-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான இன்கி சோ
அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.</p><p>
மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலின் விளைவுகளைக்
கருத்தில்கொண்டு சந்தைகள் விலைகளை நிர்ணயித்த போது,
​​எண்ணெய் சார்ந்த விஷயங்கள் பற்றியே அதிக விவாதம் நடந்தது.
</p><p>இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை கச்சா எண்ணெயைவிட மேலும்
அதிகமானவற்றைக் கொண்டு செல்கிறது, மேலும் எரிசக்தி மீதான ஒரு
குறுகிய பார்வை, அந்தக் கட்டுப்பாட்டுப் பகுதியைச் சுற்றி உருவாகும்
பரந்த பேரியல் கண்ணோட்டத்தைக் கவனிக்கத் தவறுகிறது.
</p><p>நைதரசன் அடிப்படையிலான உரங்களுக்கும் அவற்றை உற்பத்தி
செய்வதற்கான மூலப்பொருளான இயற்கை எரிவாயுவுக்கும்
மிகப்பெரிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகவும் இந்த
நீரிணை திகழ்கிறது.</p><p> உரச் சரக்குகளிலிருந்து உணவுப்பொருள்
விலையேற்றத்திற்கும், உணவுப்பொருள் விலையேற்றத்திலிருந்து DXY-
க்கும் ஏற்படும் பரிமாற்றத்தில்தான், சில்லறை மற்றும் பேரியல்
கண்ணோட்டத்தை மையமாகக் கொண்ட வர்த்தகர்களுக்கான
உண்மையான பேரியல் கதை மறைந்திருக்கிறது.</p><h2>கச்சா எண்ணெய்க்கு அப்பாற்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதி</h2><p>
உலகளாவிய உர வர்த்தகத்தில் ஏறத்தாழ 20% முதல் 30% வரை
ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் போக்குவரத்தைச் செய்கிறது.</p><p>
இதில், உலகளாவிய யூரியா ஏற்றுமதிகளில் சுமார் 35%, நைதரசன்
அடிப்படையிலான உரங்களுக்கான முதன்மை மூலப்பொருளான கடல்
வழியாகச் செல்லும் LNG-இல் சுமார் 20% ஆகியவை அடங்கும்.
சந்தையின் கவனத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பெற்றாலும், அது&nbsp;யூரியாவையும் அமோனியாவையும் கச்சா எண்ணெய்க்கு இணையான
அபாயப் பிரிவில் வைக்கிறது.
</p><p>சவூதி அரேபியா, கத்தார், ஈரான், பஹ்ரைன், ஓமான் ஆகியவை இந்த
நீரிணை வழியாக ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடுகளாகும்.
இவற்றில், சவூதி அரேபியா மட்டும் உலகளாவிய அமோனியா
ஏற்றுமதியில் ஏறத்தாழ 16% பங்களிப்பை அளிக்கிறது.</p><p> ஹோர்முஸைச்
சார்ந்துள்ள ஐந்து வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து, உலகளாவிய உர
ஏற்றுமதியில் 8 முதல் 10 சதவீதம் வரை விநியோகம் செய்கின்றன.
</p><p>இது, இறக்குமதி செய்யும் 43 நாடுகள் வழியாக நடைபெறும் ஏறத்தாழ
13.5 பில்லியன் USD மதிப்பிலான வர்த்தகப் பரிமாற்றத்திற்குச்
சமமாகும்.</p><p>
ஃபெப்ரவரி மாத இறுதியில் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து, நீரிணை
வழியாகச் செல்லும் போக்குவரத்தானது நெருக்கடிக்கு முந்தைய
காலத்தில் இருந்த அளவுகளைக் காட்டிலும் 95%-க்கும் மேலாகக்
குறைந்துள்ளது, மேலும் பிராந்திய யூரியா உற்பத்தி 55%-இலிருந்து 60%-
ஆகச் சரிந்துள்ளது.</p><h2>உரச் சரக்குகளிலிருந்து உணவு விலையேற்றம் வரை</h2><p>
அதிக நைதரசன் தேவைப்படும் பயிர்களே முதலில் இந்த
நெருக்கடியால் முதலில் பாதிப்படைகின்றன. கோதுமை,
மக்காச்சோளம், அரிசி ஆகிய அனைத்தும் யூரியா மற்றும் அமோனியா
உள்ளீடுகளைப் பெருமளவில் சார்ந்துள்ளன, </p><p>மேலும் இவற்றில் ஏற்படும்
எந்தவொரு பற்றாக்குறையும் பாவனையைக் குறைக்கும்படியோ
அல்லது சிறிய பரப்பளவில் பயிரிடும்படியோ விவசாயிகளைத்
தூண்டுகிறது. </p><p>இதன் விளைவாக, அடுத்த அறுவடைச் சுழற்சியில்
விளைச்சலில் ஏற்படும் மாற்றம் தாமதமாகவே வெளிப்படுகிறது,</p><p> இது
நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பாகவே பண்டங்களின்
விலைகளில் எதிரொலிக்கிறது.

எண்கள் ஏற்கனவே மாறத் தொடங்கிவிட்டன.</p><p> ஃபெப்ரவரி மற்றும் மார்ச்
2026-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யூரியாவின் விலை மாதந்தோறும்
சுமார் 46% உயர்ந்துள்ளது என்றும், சில அளவுகோல்கள் ஒரு மெற்றிக்
தொன்னுக்குச் சுமார் 700 USD-ஐ எட்டியது என்றும் உலக வங்கி
தெரிவித்துள்ளது.</p><p> பெஞ்ச்மார்க் எகிப்திய கிரானுலர் யூரியாவும் அதே
காலகட்டத்தில், ஒரு மெற்றிக் தொன்னுக்கு சுமார் 400 USD-இலிருந்து
490 USD-ஆக உயர்ந்தது. கோதுமை விலை 13 சதவீதம் உயர்ந்தது,
மேலும் உலகளாவிய தானிய விலைக் குறியீடு 7 சதவீதம்
அதிகரித்தது.</p><p>
உலகளவில் மிகப்பெரிய உர நிறுவனங்களில் ஒன்றான Yara, நெருக்கடி
தொடங்கியதிலிருந்து யூரியா விலை 60%-இலிருந்து 70% வரை
அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஆப்பிரிக்க இறக்குமதியாளர்கள்
அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> இந்த
அதிர்ச்சிகள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள்
முழுவதிலும் உள்ள முக்கிய உணவு இறக்குமதியாளர்களின் பயிரிடும்
கால அட்டவணைகளுடன் நேரடியாகப் பொருந்துகின்றன.</p><h2>உணவு அதிர்ச்சி கடுமையாகத் தாக்கும் இடம்</h2><p>
உலகளாவிய உர வர்த்தகத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு
பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள
முடியாத பிராந்தியங்களே இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளன.
</p><p>தெற்காசியா மிகவும் பாதிப்புக்குள்ளான தொகுதியாகத் திகழ்கிறது.
இதில் இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 20%-ஐ வளைகுடா
நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான் தனது நாட்டில் நைதரசனை
உற்பத்தி செய்யக் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் LNG-ஐ
ஏறக்குறைய முழுமையாகச் சார்ந்துள்ளது.
</p><p>சஹாராவை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கா மற்றும் வட ஆப்பிரிக்காவின்
சில பகுதிகளிலும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, மேலும்
இந்தச் சந்தைகளில் பலவற்றில் 90%-க்கும் அதிகமான உரம் இறக்குமதி
செய்யப்படுகிறது. </p><p>சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, குறைந்த

வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் குடும்பச் செலவினங்களில்
உணவுக்காக ஏறக்குறைய 36% செலவிடப்படுகிறது.</p><p> வளர்ந்த
பொருளாதாரங்களில் இது சுமார் 9%-ஆக உள்ளது. இதன்
காரணமாகவே, மிதமான உள்ளீட்டு அதிர்ச்சிகள் கூட மிகப் பெரிய
விலையேற்றப் பதிவுகளாக மாறுகின்றன.
இதன் பேரியல் விளைவு நமக்கு நன்கு பரிச்சயமான ஒன்றுதான்.</p><p>
உணவுப்பொருள் விலையேற்றம் அதிகரிக்கும்போது, ​​மத்திய
வங்கிகள் பலவீனமான வளர்ச்சிக்கு ஏற்ப இறுக்கமான
கொள்கைகளைக் கையாளும் இக்கட்டான நிலையை
எதிர்கொள்கின்றன,</p><p> இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பதால் நடப்புக்
கணக்குகள் மோசமடைகின்றன, மேலும், உள்ளூர் நாணயங்களின்
மீதான நம்பிக்கையும் சிதைகிறது. </p><p>அதிக உணவு இறக்குமதி
விகிதங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி இருப்புகளின் காரணமாக,
எகிப்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை ஆகியவை
மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளாகத் தனித்து நிற்கின்றன.</p><p>"சந்தை இதை ஒரு கச்சா எண்ணெய் சார்ந்த விவகாரமாகப் பார்க்கிறது,
ஆனால், இந்தத் தடையினால் ஏற்படும் பாதிப்புகளில் உர விநியோகம்
தொடர்பான அம்சம் தான், பல அறுவடைச் சுழற்சிகளிலும் தொடர்ந்து
தீவிரமடையக்கூடிய ஒன்றாக உள்ளது" என்கிறார்</p><p><a href="https://promotion.exness.com/en-as/brand_rdx/?agent=12045628&amp;app_type=trade&amp;partner_id=12045628&amp;utm_campaign=LK_EN_Brand-Acquisition_Acquisition_Q3L_SEM_Google_Performance_Exness_EM&amp;utm_source=google&amp;utm_medium=cpc&amp;utm_content=733975180734&amp;utm_term=exness.com&amp;adgroupid=130786932629&amp;c=LK_EN_Brand-Acquisition_Acquisition_Q3L_SEM_Google_Performance_Exness_EM&amp;af_c_id=15616414552&amp;gad_source=1&amp;gad_campaignid=15616414552&amp;gbraid=0AAAAADLOwXq5UVo8gnK8J9ok35UcpTKmz&amp;gclid=CjwKCAjwmdLSBhANEiwAkREMNxm3p_QeOiDdfoCKGPb5Rbgqrd5pYSjRhfINtULTRvIO_nhJTbvVEhoCllQQAvD_BwE" target="_blank">HYPERLINK"http://exness.com/<b>"Exness</b></a><b> </b>நிறுவனத்தின் நிதி உள்ளடக்கத் தலைவர்
மைக்கேல் ஸ்டார்க். "இரண்டாம் வரிசை விளைவுகள் வளர்ந்து வரும்
சந்தைத் தரவை அடையும் நேரத்தில், மறுவிலை நிர்ணயம் விரைவாக
நடக்கும் மற்றும் அது அந்த நாணயங்களுக்குச் சார்பாக இருக்காது."</p><h2>வயல்களிலிருந்து DXY-க்கு
</h2><p>இங்குதான் பகுப்பாய்வுச் சங்கிலியானது அந்நியச் செலாவணிச்
சந்தையுடன் மீண்டும் இணைகிறது. </p><p>இறக்குமதி செய்யப்படும் பிரதான
பொருட்களைச் சார்ந்திருக்கும் வளரும் சந்தைகளில் உணவுப்பொருள்
விலையேற்றம் துரிதமையும்போது, ​​டொலரின் மீது மூன்று விதமான
தாக்கங்கள் ஒன்றிணைகின்றன. </p><p>கொள்கை ரீதியான நடவடிக்கைகள்
விலை மாற்றத்திற்குப் பின்னரே செயல்படுவதால், மூலதனம் USD

ஆதிக்கம் செலுத்தும் சொத்துகளை நோக்கிச் சுழல்கிறது, நடப்புக்
கணக்குப் பற்றாக்குறை விரிவடைகிறது, மற்றும் மத்திய வங்கியின்
நம்பகத்தன்மை அழுத்தத்திற்கு உள்ளாகிறது.</p><p>கடந்தகாலப் போக்கு சீராக உள்ளது. 2007-2008 ஆம் ஆண்டில் கச்சாப்
பொருட்களால் ஏற்பட்ட உணவுப்பொருள் விலை மாற்றத்தின்போது,
​​FAO உணவு விலைக் குறியீடு சுமார் 57% உயர்ந்தது, மேலும்
இறக்குமதியைச் சார்ந்த பொருளாதாரங்கள் அந்தப் பாதிப்புகளைத்
தாங்கிக்கொண்டதால், டொலர் அவ்வப்போது பாதுகாப்பான
வலிமையைக் கண்டது. </p><p>2010-2011 காலகட்டச் சுழற்சியும் இது போன்ற
ஒரு போக்கைப் பின்பற்றியது; உணவுப் பொருட்களின் விலையில்
ஏற்பட்ட 40% உயர்வு, MENA முழுவதும் அரசியல் ஸ்திரமற்ற
தன்மையை ஊக்குவித்ததுடன், பாதுகாப்பான முதலீடுகளை நாடி
மக்கள் மீண்டும் USD சொத்துகளுக்குள் செல்லவும் வழிவகுத்தது.
</p><p>தற்போதைய அமைப்பு அந்த வார்ப்புருவைப் பிரதிபலிக்கிறது. ஃபெடரல்
ரிசர்வ் மேலும் வட்டி குறைப்புகளைச் சந்தைகள் விலக்கியதால், ஏப்ரல்
2026-இல் US நுகர்வோர் விலைக் குறியீடு -CPI 3.8%-ஆக உயர்ந்தது
மற்றும் டொலர் குறியீடு 98 மற்றும் 99-க்கு இடையில் நிலைபெற்றது.
</p><p>FAO எச்சரித்துள்ளபடி, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில்
உணவுப்பொருள் விலையேற்றம் அதிகரித்தால், குறிப்பாக USDINR,&nbsp;USDEGP, USDPKR மற்றும் USDZAR போன்ற ஜோடிகள் வழியாக, DXY அந்த
அழுத்தத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைகிறது.
</p><p>ஸ்டார்க் குறிப்பிடுவது போல, “விநியோக மாற்றங்கள் தனித்தனியாக
இல்லாமல், அடுக்குகளாக இருக்கும் ஒரு சூழலில், டொலர் இருமடங்கு
பயனடைகிறது. </p><p>முதலில், வளர்ந்து வரும் சந்தைகள் உணவு மற்றும்
எரிசக்தியை இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் நிதி வழங்கும்
நாணயமாகவும், பின்னர் விலையேற்றப் பதிவுகள் உயரும்போது அதே
பொருளாதாரங்களிலிருந்து வெளியேறும் மூலதனத்தை உள்வாங்கும்
பாதுகாப்பான புகலிடமாகவும் இது செயல்படுகிறது.”</p><h2>வர்த்தகர்கள் கவனிக்க வேண்டியவை
</h2><p>இந்த இயங்கமைவை மையமாகக் கொண்டு வர்த்தகர்கள் தங்களை
நிலைநிறுத்திக் கொள்ளும்போது, ​​ஆரம்பகட்டச் சமிக்ஞைகள்
பண்டங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் மத்திய வங்கித் தரவுகளின்
குறுக்குச் சந்திப்பில் அமைகின்றன. </p><p>எண்ணெயின் மீது மட்டும் ஒரு
கண் வைத்திருப்பது, உணவு மற்றும் நாணயச் சந்தைகளில் மெதுவாக
நகரும் மறுவிலை நிர்ணயத்தை வர்த்தகர்கள் கடந்து செல்ல
வழிவகுக்கும், இது வரலாற்று ரீதியாகத் தாமதமாக வந்தாலும்
செறிவான தாக்கங்களாக வெளிப்படும். </p><p>கவனிக்க வேண்டியவற்றை
இங்கே காண்க,&nbsp;</p><ul><li>யூரியா, அமோனியா, DAP ஆகியவற்றின் ஒப்பீட்டு
விலைகளில், எகிப்திய கிரானுலர் யூரியா மிகவும்
கண்காணிக்கப்படும் நைதரசன் ஒப்பீட்டு அளவாக உள்ளது.</li><li>நீரிணை வழியாகப் போக்குவரத்தில் உள்ள எண்ணிக்கை
மற்றும் ஏற்றப்பட்ட கப்பல் சரக்கு உட்பட பாரசீக
வளைகுடாவிலிருந்து கப்பல் போக்குவரத்து மற்றும் கொள்கலன்
தரவுகள்.
</li><li>&nbsp;உலக வங்கி மற்றும் FAO உணவுப் பண்டக் குறியீடுகள்,
குறிப்பாகத் தானியங்கள் மற்றும் பயிர் வகைகளின் துணைக்
குறியீடுகள்.</li><li>இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளின்
மத்திய வங்கி அறிக்கைகள்; இவற்றில் உணவுப் பொருட்களைச்
சார்ந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் - CPI பதிவுகள்,
வழக்கத்திற்கு மாறான கொள்கை நகர்வுகளை மேற்கொள்ள
நிர்பந்திக்கக்கூடும்.
</li><li>EM CPI வெளியீடுகளுக்குப் பிறகு, வளர்ந்து வரும் சந்தை
நாணயங்களுக்கு எதிரான DXY-இன் நடத்தை, இதில் எதிர்வினைச்
செயல்பாடு பெரும்பாலும் அடுத்த கட்டத்திற்கான சமிக்ஞையை
அளிக்கிறது.</li></ul><p>அந்நியச் செலாவணிக்குள்ளேயே, இறக்குமதியை அதிகம்
சார்ந்திருக்கும் வளரும் சந்தை நாணயங்கள், தங்கம் மற்றும் பரந்த DXY
ஆகியவற்றுக்கு எதிரான டொலர் ஜோடிகளில் இந்தக் கோட்பாட்டின்
மிகத் தெளிவான வெளிப்பாடுகளைக் காணலாம். </p><p>கச்சா எண்ணெய்
தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது, ஆனால் பல
பாதைகளைக் கொண்ட ஒரு மாற்றத்தின் ஒரு பாதையை மட்டுமே
அது பதிவு செய்கிறது.</p><h2>செயலாக்கம் பல பாதைகளைக் கொண்ட ஒரு மாற்றத்தைச் சந்திக்கும்
இடத்தில்</h2><p>
குறுகிய கால விநியோகமானது உற்பத்தித் திறனைக் காட்டிலும்
அரசியல் மற்றும் ஏற்பாட்டியல் அணுகலால் வடிவமைக்கப்படும்போது, ​​பாரம்பரிய விநியோக - தேவை மாதிரிகளைச் சார்ந்திருக்கும்
வர்த்தகர்கள் எதிர்பாராத விதமாகச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்
அபாயத்தை எதிர்கொள்கின்றனர். </p><p>அணுகல் நிலைமைகள் விரைவாக
நிலை மாறக்கூடும், மேலும் எண்ணெய் மற்றும் உணவுடன்
தொடர்புடைய நாணய ஜோடிகள் குறுகிய, சீரற்ற ஏற்ற
இறக்கங்களுடன் மறுவிலை நிர்ணயத்தைச் செய்யலாம், இதனால் ஒரு
மாற்றத்தைக் கண்டறிவதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும்
இடையில் மிகக் குறைந்த இடைவெளியே இருக்கும்.</p><p>ஒரு மாற்றத்தை விளங்கிக்கொள்வது ஒரு விஷயம் எனில்,
உண்மையான சந்தை நிலவரங்களின்படி செயல்படுவது முற்றிலும்
வேறொரு விஷயம்.</p><p> புவிசார் அரசியல் சமிக்ஞைகள், கச்சா
எண்ணெய்க்கான அபாயக் கட்டுப்பாட்டில் செயல்பாட்டு
நிலைத்தன்மையை ஒரு முக்கிய அங்கமாக ஆக்குகின்றன, </p><p>மேலும்
இதே தர்க்கம், அதே தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றும் தங்கம்,
பண்டங்களுடன் இணைக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் வளர்ந்து வரும்
சந்தைக் குறுக்கு நாணய ஜோடிகளுக்கும் பொருந்தும்.</p><p>இங்குதான் <a href="https://www.exness.com/" target="_blank" style=""><b>Exness </b></a>இந்த விவாதத்திற்குள் நுழைகிறது. </p><p>பல பாதைகளைக்
கொண்ட மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, ​​CFD வர்த்தகர்கள் கச்சா
எண்ணெயை மட்டும் கண்காணிப்பதில்லை. இதே விநியோக நிலைமை
அனைத்துச் சொத்து வகைகளிலும் பரவி வருவதால், அவர்கள் தங்கம்,
DXY, பண்டங்களுடன் தொடர்புடைய நாணயங்கள் மற்றும் வளர்ந்து
வரும் சந்தை ஜோடிகளையும் கண்காணித்து வரலாம். </p><p>ஒரே நேரத்தில்
பல சந்தைகள் மறுவிலை நிர்ணயத்தைச் செய்யும்போது, ​​வர்த்தகச்
செயல்பாட்டின் நிலைத்தன்மையும் பரவல் ஸ்திரத்தன்மையும் ஒரு
வர்த்தகர் தனது அபாயத்தைக் கையாளும் முறையின் ஒரு
பகுதியாகின்றன. </p><p>வர்த்தகச் சூழல், நுழைவு அல்லது வெளியேறும்
புள்ளியில் தேவையற்ற தடைகளை ஏற்படுத்தினால், ஒரு துல்லியமான
பேரியல் கணிப்பு கூட அதன் மதிப்பை இழக்கக்கூடும்.</p><p><a href="https://promotion.exness.com/en-as/brand_rdx/?agent=12045628&amp;app_type=trade&amp;partner_id=12045628&amp;utm_campaign=LK_EN_Brand-Acquisition_Acquisition_Q3L_SEM_Google_Performance_Exness_EM&amp;utm_source=google&amp;utm_medium=cpc&amp;utm_content=733975180734&amp;utm_term=exness.com&amp;adgroupid=130786932629&amp;c=LK_EN_Brand-Acquisition_Acquisition_Q3L_SEM_Google_Performance_Exness_EM&amp;af_c_id=15616414552&amp;gad_source=1&amp;gad_campaignid=15616414552&amp;gbraid=0AAAAADLOwXq5UVo8gnK8J9ok35UcpTKmz&amp;gclid=CjwKCAjwmdLSBhANEiwAkREMNxm3p_QeOiDdfoCKGPb5Rbgqrd5pYSjRhfINtULTRvIO_nhJTbvVEhoCllQQAvD_BwE" target="_blank"><b>Exness Terminal </b></a>இந்தப் பணிப்பாய்வுக்குப் பங்களிக்கிறது.</p><p> எண்ணெய்
விலையேற்றத்திலிருந்து உணவு விலையேற்றத்திற்கும், பின்னர்
நாணய மதிப்புகளுக்கும் பரவும் ஒரு மாற்றத்தைப் பின்பற்றி வரும் CFD
வர்த்தகர்களுக்கு, தொடர்பில்லாத கருவிகளுக்கு இடையில் மாறாமல்,
தொடர்புடைய கருவிகளைக் கண்காணிக்கவும், விலை மாற்றங்களை
ஒப்பிடவும், வர்த்தகங்களை மேற்கொள்ளவும் மற்றும் திறந்த வணிக
வாய்ப்புகளை நிர்வகிக்கவும் ஒரு தெளிவான வழி தேவைப்படுகிறது.
</p><p>பதிவு செய்தல், வர்த்தகம் செய்தல், நிலை மேலாண்மை மற்றும்
கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகிய அனைத்தும் ஒரே இணைய மற்றும்

மொபைல் சூழலில் இருப்பதால், சந்தை நிலவரங்கள் வேகமாக
மாறும்போது, ​​பகுப்பாய்விலிருந்து செயலுக்குச் செல்வதற்கான
மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பாதையை <a href="https://promotion.exness.com/en-as/brand_rdx/?agent=12045628&amp;app_type=trade&amp;partner_id=12045628&amp;utm_campaign=LK_EN_Brand-Acquisition_Acquisition_Q3L_SEM_Google_Performance_Exness_EM&amp;utm_source=google&amp;utm_medium=cpc&amp;utm_content=733975180734&amp;utm_term=exness.com&amp;adgroupid=130786932629&amp;c=LK_EN_Brand-Acquisition_Acquisition_Q3L_SEM_Google_Performance_Exness_EM&amp;af_c_id=15616414552&amp;gad_source=1&amp;gad_campaignid=15616414552&amp;gbraid=0AAAAADLOwXq5UVo8gnK8J9ok35UcpTKmz&amp;gclid=CjwKCAjwmdLSBhANEiwAkREMNxm3p_QeOiDdfoCKGPb5Rbgqrd5pYSjRhfINtULTRvIO_nhJTbvVEhoCllQQAvD_BwE" target="_blank"><b>Exness Terminal </b></a>ஆதரிக்கிறது.
</p><p>பரந்த நோக்கில் கூறப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால், விநியோக
மாற்றங்கள் ஒரே ஒரு சந்தைக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை.
</p><p>அவை பண்டங்கள், விளையேற்ற எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிக்
கொள்கை, FX ஆகியவற்றின் ஊடாகப் பயணிக்கின்றன. CFD
வர்த்தகர்களைப் பொறுத்தமட்டில், அந்தத் தொடர் சங்கிலியை
முன்கூட்டியே கண்டறிவது மட்டும் சவாலாக இல்லை.</p><p> அந்த வர்த்தகச்
சங்கிலி நகரத் தொடங்கும்போது, ​​அவர்கள் ஒழுக்கத்துடன் செயல்பட
உதவும் ஒரு வர்த்தகச் சூழலை உருவாக்குவதே அந்தச் சவாலாகும்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களை ஒடுக்கும் எல் போர்ட் அரசாங்கம் - சஜித் கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-criticizes-government-1784006601"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-criticizes-government-1784006601</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார
இணக்கப்பாடுகளையும் தாண்டி, தீவிர வலதுசாரி நவதாராளவாத வேலைத்திட்டத்தை
நோக்கிச் செல்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார
இணக்கப்பாடுகளையும் தாண்டி, தீவிர வலதுசாரி நவதாராளவாத வேலைத்திட்டத்தை
நோக்கிச் செல்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்
சாட்டியுள்ளார்.</p><p>

குருநாகல், பன்னலயில் நேற்று (13.07.2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>அதிக வரி விதிப்பு</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதை விடவும் அதிக
வரிகளை இந்த அரசு விதித்து வருகின்றது. முதன்மைக் கணக்கு 2.3% ஆக இருக்க
வேண்டிய நிலையில், அதை 5.4% ஆக உயர்த்தி, ஐ.எம்.எவ்வின் செல்லப் பிள்ளையாக மாற
அரசாங்கம் முயற்சிக்கின்றது.</p><p></p><p> </p><p>மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலையின்றி, அரச
வருமானத்தை 15.4% ஆக உயர்த்த வரி மற்றும் செலவினக் குறைப்புகளை இந்த அரசு
மேற்கொள்கின்றது.

அரசு, எதிர்க்கட்சியின் வாயை மூடுவதுடன், சுயாதீன நீதித்துறைக்கு முறையற்ற
செல்வாக்கைச் செலுத்துகின்றது. </p><p>நீதித்துறையைத் தனது கைப்பாவையாக மாற்ற
முயற்சிக்கின்றது. நீதியரசர்களின் நியமனங்கள் மற்றும் ஓய்வுபெறும் வயது
தொடர்பான விவகாரங்களில் அரசு மேற்கொள்ளும் அழுத்தங்கள் ஜனநாயகத்துக்கு
விடுக்கப்பட்ட சவாலாகும்.</p><h2>விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாங்கம்</h2><p></p><p>
</p><p>
நெற்செய்கை விவசாயிக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை இந்த அரசாங்கம்
ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் 150 ரூபா உத்தரவாத விலை வழங்குவதாகக்
கூறிவிட்டு, இன்று 120 ரூபாவையே வழங்குகின்றது. உற்பத்திச் செலவு 137 ரூபாவாக
இருக்கும் நிலையில், விவசாயிகளை அரசாங்கம் வஞ்சிக்கின்றது.

கல்வி முறையை மாற்றப்போவதாகக் கூறி, வரலாற்றுப் பாடத்தின் முக்கியத்துவத்தை
இல்லாமல் ஆக்கியுள்ளனர். </p><p>மேலும், முறையான முதலீடுகள் இன்றி தொழிற்சாலைகள்
நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. அனைத்தையும் குழப்பிக் கொண்டுள்ள இதுவொரு
'எல் போர்ட் அரசு' ஆகும்.

எந்தவொரு விடயத்தைப் பற்றியும் அரசுக்குச் சரியான புரிதல் இல்லை. பொய் மற்றும்
ஏமாற்றுகள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க இந்த அரசு முயற்சிக்கின்றது என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T05:53:25+00:00</updated>
        </entry>
    </feed>
