<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-14T05:39:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய், தந்தையை கொடூரமாக படுகொலை செய்த மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-killed-mother-and-father-1784006787"></link>
            <id>https://tamilwin.com/article/son-killed-mother-and-father-1784006787</id>
            <summary type="text">எம்பிலிபிட்டிய, கிரவலவெல்கடுவ பகுதியில் மகனொருவர் தனது தாய் மற்றும் தந்தையை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குடும்பத்தினரிடையே ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிபிட்டிய, கிரவலவெல்கடுவ பகுதியில் மகனொருவர் தனது தாய் மற்றும் தந்தையை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது.</p><p> இந்த தகராறு முற்றிய நிலையிலேயே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

இந்தச் சம்பவத்தில் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.</p><p>
</p><h2><b>
மகனின் கொடூர செயல்</b></h2><p>கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த தம்பதியினரின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da8a63a-5f25-430c-bc87-9f90e56312a4/26-6a55c9d2d9b1c.webp' /></p><p>சம்பவம் குறித்து எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-14T05:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-s-death-body-recovered-in-wattala-1784002775"></link>
            <id>https://tamilwin.com/article/man-s-death-body-recovered-in-wattala-1784002775</id>
            <summary type="text">வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு
ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு
ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த சடலமானது நேற்று(13.07.2026) மாலை&nbsp;கிரிபத்கொட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>
அந்தப் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ
இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p>
சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால், இந்த மரணம் சுமார் மூன்று நாள்களுக்கு
முன்னரே நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d6ab3e8-0a42-42f0-847f-b857ec5a2f30/26-6a55bc493df48.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த நபர் தொடருந்தில் பயணிக்கும்போது தவறி விழுந்திருக்கலாம் அல்லது
விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளின்
அடிப்படையில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>சம்பவ இடத்துக்கு வருகை தந்த தடயவியல் சோதனை அதிகாரிகள் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர். </p><p>பின்னர், நீதிவான் விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் பிரேத
பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T04:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவை வாட்டி வதைத்த ஜூன் மாத வெப்ப அலை: பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/june-heatwave-hits-europe-1784003377"></link>
            <id>https://tamilwin.com/article/june-heatwave-hits-europe-1784003377</id>
            <summary type="text">மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய கடுமையான வெப்ப அலையின் காரணமாக, ஐரோப்பிய
நாடுகளில் 10,000க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ
புள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய கடுமையான வெப்ப அலையின் காரணமாக, ஐரோப்பிய
நாடுகளில் 10,000க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ
புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும்
கட்டுப்பாட்டு மையத்தின் ஆதரவுடன் செயல்படும் 'யூரோமோமோ' என்ற அமைப்பு
வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும்
10,650 உபரி மரணங்கள் பதிவாகியுள்ளன.</p><p></p><h2>தீவிரமான வெப்ப அலைகள்</h2><p>

இதில் உயிரிழந்தவர்களில் 9,000-க்கும் மேற்பட்டோர் 65 வயது மற்றும் அதற்கு
மேற்பட்ட முதியவர்கள் ஆவர்.
</p><p>
தீவிரமான வெப்ப அலைகள் மனிதர்களுக்கு வெப்ப பக்கவாதம், இதய நோய் மற்றும்
சுவாசப் பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தி மரணத்தை ஏற்படுத்துகின்றன.</p><p></p><p>
</p><p>
இந்த காலகட்டத்தில் கொவிட் - 19 போன்ற வேறு எந்த முக்கிய நோய் பாதிப்புகளும்
இல்லாததால், இந்த மரணங்களுக்குக் கடுமையான வெப்பமே முதன்மைக் காரணம் என
விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கடுமையான பாதிப்பு</span></h2><p>
</p><p>
ஐரோப்பாவின் 27 நாடுகளின் இறப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/618b3609-718d-46b0-9b1d-7424a78729da/26-6a55bf666956b.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>
இந்த ஜூன் மாத வெப்ப அலையானது பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா மற்றும்
பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன், மின்சார
விநியோகத் தடை, பாடசாலைகள் மூடல் போன்ற அசாதாரண சூழலையும் உருவாக்கியது.
</p><p>
குறிப்பாகப் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு நாடுகள் மட்டுமே ஜூன் இறுதி
வாரத்தில் மிக அதிகப்படியான மரணங்களைப் பதிவு செய்துள்ளன.

மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இத்தகைய தீவிர வெப்ப அலைகளுக்குக்
காரணம் என்றும், இது போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் வரும் காலங்களில் மேலும்
அதிகரிக்கக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T04:47:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண் - விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-lady-dead-boy-friend-arrested-1784001849"></link>
            <id>https://tamilwin.com/article/young-lady-dead-boy-friend-arrested-1784001849</id>
            <summary type="text">பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் நதுனி சஹஷ்ரி என்ற இளம்பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>உயிரிழந்த பெண் அந்த வீட்டில், திருமணம் செய்து கொள்ளாமல் 27 வயதுடைய இளைஞர் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
</p><p>
பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் உதவியாளராகப் பணியாற்றிய இளைஞன், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p><p>
</p><h2><b> 
இளம் பெண்&nbsp;படுகொலை </b></h2><p>சம்பவம் நடந்த இரவு, தான் பணிபுரிந்த இடத்திலிருந்து சுமார் நான்கரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3162d0a6-5ba6-4102-a2dc-e0d4034a7fe7/26-6a55bd477b9d2.webp' /></p><p>இரவு 11.15 மணியளவில் பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>இதன்போது தங்கை மற்றும் தாயாரையும் மிகவும் மோசமான முறையால் திட்டியதாலும் ஏற்பட்ட கடும் கோபத்தில், கத்தியால் அவர் நதுனியின் நெஞ்சில் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொலையின் பின்னர் தானும் உயிரை மாய்த்துக் முயன்று தோல்வியடைந்ததால், வீட்டில் இருந்த திரவத்தை அருந்தியுள்ளார்.</p><p> பின்னர் ஆடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மொரட்டுவ ரயில் நிலையத்திற்கு சென்ற சந்தேக நபர், கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ரயிலின் முன்னால் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
</p><p> 
இதில் அவரது வலது கால் மற்றும் விலா எலும்புகள் உடைந்து பலத்த காயமடைந்தார். பொதுமக்களால் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். </p><p>

2 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் தேசிய வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்தனர். மாளிகாகந்த நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரைப் பார்வையிட்டார். </p><p>அவர் தற்போது கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
</p><h3><b>
பணம் பறிக்கும் மோசடி</b></h3><p>இதேவேளை, நதுனியும் அவரது தாயாரும் நீண்டகாலமாக இளைஞர்களை காதலிப்பதாக நடித்து, பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9710f4b-316a-42c6-8070-d4b33a8678fc/26-6a55bd482f5d6.webp' /></p><p>இந்தச் சம்பவம் குறித்து அறிந்த வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர், இந்தத் தாயும் மகளும் சேர்ந்து தம்மிடம் 15 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளார். </p><p>நதுனி இதற்கு முன்னர் விமானி ஒருவருடனும் நிச்சயதார்த்தம் செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபருடன் வசிக்கும்போதே, நதுனி மற்றொரு சமையல் கலைஞருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.</p><p> அவரிடமிருந்தும் சுமார் 10 லட்சம் ரூபாவை தாய் மற்றும் மகள் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். நதுனியின் தாயார், மகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒரு பாசமான தாயாக நடித்து, இளைஞர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
</p><p>
தாயின் தவறான வழிகாட்டலால் உயிரிழந்த நதுனியின் சடலத்தை அவரது தாயாரே பொறுப்பேற்றுக்கொண்டார். சந்தேக நபரான இளைஞர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p>]]></content>
            <updated>2026-07-14T04:39:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு - பின்னணியில் நடக்கும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/getting-lease-for-kingsbury-land-for-a-small-cost-1783999620"></link>
            <id>https://tamilwin.com/article/getting-lease-for-kingsbury-land-for-a-small-cost-1783999620</id>
            <summary type="text">
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்திற்காக, அரசாங்கத்திற்கு வருடாந்த குத்தகை பணமாக வெறும் 2.5 மில்லியன் ரூபா மட்டுமே இதுவரை செலுத்தப்பட்டு வருவதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்திற்காக, அரசாங்கத்திற்கு வருடாந்த குத்தகை பணமாக வெறும் 2.5 மில்லியன் ரூபா மட்டுமே இதுவரை செலுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
</p><p>
வர்த்தகர் தம்மிக பெரேராவிற்கு சொந்தமான கொழும்பு 01 இல் அமைந்துள்ள இந்த வளாகம் 5.5 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகும்.
</p><p>
அதற்கமைய, ஒரு ஏக்கருக்காக மாதத்திற்கு வெறும் 38,000 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகையே அறவிடப்படுகிறது.</p><p></p><p>
</p><h2><b>
கிங்ஸ்பரி ஹோட்டல் நிர்வாகம் </b></h2><p>முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய, 2026 ஆம் ஆண்டிலிருந்து இந்த குத்தகைப்பணத்தை 5 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க கிங்ஸ்பரி ஹோட்டல் நிர்வாகம் இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>எனினும், அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் தரவுகளுக்கமைய, இந்த வளாகத்தின் உண்மையான வருடாந்த வாடகைக் பெறுமதி 325 மில்லியன் ரூபாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/738de6f2-d7d2-4103-825b-6d90a0ce57f5/26-6a55af251d00b.webp' />&nbsp;&nbsp;</p><p>
32 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அரசாங்கத்திற்கு நஷ்டப்படுத்தி, இந்த குத்தகையை மீண்டும் 5 மில்லியன் ரூபாவாகவே வைத்திருப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தில் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கிங்ஸ்பரி ஹோட்டலில் உள்ள ரகசிய நுழைவாயில்களைக் கொண்ட அதிவேக அறையொன்றில், அமைச்சர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இலஞ்சமாக சலுகைகளை வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும், அரசாங்கத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இந்த கொடுக்கல் வாங்கல் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/R_x23yE9SEg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-14T04:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு தொற்றுக்குள்ளான 70 ஆயிரம் பேர்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-spread-warning-issued-1783999300"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-spread-warning-issued-1783999300</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 70ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய&amp;nbsp; டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.&amp;nbsp; நேற்று நள்ளிரவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 70ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய&nbsp; டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp; </p><p>நேற்று நள்ளிரவு நிலவரப்படி, நாட்டில் டெங்கு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை,&nbsp; 69951ஆக பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இவர்களுள் மேல் மாகாணத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் மாகாணத்தில் மொத்தம்&nbsp; &nbsp;36,795 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>மேல் மாகாணத்தில் அதிகளவான தொற்றாளர்கள்&nbsp;</h2><p>அத்துடன், தென் மாகாணத்தில், 10,955&nbsp; தொற்றாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 5,878 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.&nbsp;</p><p>இதேவேளை, இதுவரையான நாட்களில் கம்பஹா மற்றும் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிகமாக டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1ec0a3-f998-49c2-9459-3179b0900728/26-6a55b4bd13124.webp' /></p><p>இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 14,464 டெங்கு தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில், 14,004 டெங்கு தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p>இதேவேளை வருடத்தின் இதுவரையான நாட்களில் கடந்த ஜூன் மாதம் மிக அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர்.</p><p>21,538 டெங்கு தொற்றாளர்கள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதுடன்,&nbsp; ஜூலை மாதத்தின் இதுவரையான நாட்களில், 14,572 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T04:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக அரங்கில் இலங்கைக்குக் கிடைத்த மற்றுமொரு பெருமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-s-top-50-food-destinations-1784001252"></link>
            <id>https://tamilwin.com/article/world-s-top-50-food-destinations-1784001252</id>
            <summary type="text">உலகளாவிய உணவுச் சுற்றுலாத் துறையில் (Culinary Tourism) இலங்கை மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. 
பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “டிராவல் அண்ட் டூர் வேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய உணவுச் சுற்றுலாத் துறையில் (Culinary Tourism) இலங்கை மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. 
பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்” (Travel And Tour World - TTW) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான "உலகின் தலைசிறந்த 50 உணவு நாடுகள்" பட்டியலில் இலங்கை பெருமையுடன் இடம்பிடித்துள்ளது.
</p><p>சர்வதேச அளவில் உலக நாடுகளின் சமையல் பாரம்பரியம், பிராந்திய உணவு வகைப்பாடு, வீதி உணவு கலாசாரம் , நளினமான உணவகங்கள், உள்நாட்டுப் பொருட்கள், நிலைத்தன்மை, பாரம்பரிய பானங்கள் மற்றும் கலாசார நம்பகத்தன்மை ஆகிய முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உலகின் தலைசிறந்த 50 உணவு நாடுகள்</h2><p>
</p><p>இலங்கை உணவுகளின் தனித்துவமான சுவை, நறுமணமிக்க வாசனைப் பொருட்கள், புத்தம் புதிய கடல் உணவுகள் மற்றும் வெப்பமண்டல உணவுப் பொருட்கள் உலகளாவிய உணவுப் பிரியர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளதாக இந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p>இலங்கை என்பது நறுமணமிக்க வாசனைப் பொருட்கள்மற்றும் பல நூற்றாண்டு கால கலாசார தாக்கங்கள் இணைந்து மறக்க முடியாத உணவு அனுபவங்களை வழங்கும் ஒரு துடிப்பான தேசமாகும். பரபரப்பான வீதி உணவுக் கடைகள் முதல் கடற்கரையோர நேர்த்தியான உணவகங்கள் வரை இங்கு பலதரப்பட்ட சுவைகளை அனுபவிக்க முடியும்" என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
</p><p>பாரம்பரிய சோறும் கறியும், ஆப்பம், கொத்து ரொட்டி, கடல் உணவு வகைகள் மற்றும் உள்நாட்டு இனிப்புப் பண்டங்கள் போன்றவை சர்வதேச அரங்கில் இலங்கையின் அடையாளத்தை மேலும் உயர்த்தியுள்ளன.
இலங்கையின் சமையல் கலையை முழுமையாக அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய 10 முக்கிய இடங்களையும் இந்த இதழ் பட்டியலிட்டுள்ளது:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/308e7c62-cea4-4671-b517-b3dc3a996a63/26-6a55b2e635da8.webp' /></p><p>
1.	கொழும்பு: சோறும் கறியும், கொத்து ரொட்டி, ஆப்பம் மற்றும் புதிய கடல் உணவுகள்.
</p><p>2.	காலி: பிரசித்தி பெற்ற கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் காலணித்துவ காலத்து உணவகங்கள்.</p><p>
3.	கண்டி: பாரம்பரிய சோறும் கறியும் மற்றும் உள்நாட்டு பாரம்பரிய இனிப்பு வகைகள்.
</p><p>4.	நீர்கொழும்பு: கடல் உணவு கறிகள், சுடச்சுட வறுத்த மீன்கள் மற்றும் காயல் (Lagoon) உணவுச் சிறப்புகள்.
</p><p>5.	எல்ல: இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மலையக உணவு அனுபவங்கள்.</p><p>
6.	யாழ்ப்பாணம்: உலகப் புகழ்பெற்ற நண்டுக்கறி, தோசை மற்றும் காரசாரமான தமிழ் பாரம்பரிய சுவைகள்.</p><p>
7.	மிரிஸ்ஸ: புத்தம் புதிய கடல் உணவுகள் மற்றும் கடற்கரையோர தளர்வான உணவு அனுபவம்.
</p><p>8.	நுவரெலியா: தேயிலை சார்ந்த உணவு வகைகள், பேஸ்ட்ரிகள் மற்றும் காலணித்துவ கால பாரம்பரிய உணவுகள்.</p><p>
9.	ஹிக்கடுவ: கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் துடிப்பான கடற்கரை உணவகங்கள்.
</p><p>10.	திருகோணமலை: புதிய கடல் உணவுகள் மற்றும் உண்மையான கடலோர உணவு கலாசாரம்.
</p><p>இந்த சர்வதேசப் பட்டியலில்&nbsp;இந்த வரிசையில் முதல் இடத்தை மெக்ஸிக்கோவும், இரண்டாம் இடத்தை இத்தாலியும் மூன்றாம் இடத்தை ஸ்பெய்னும் வகிக்கின்றன. </p><p>ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற உலகளாவிய பிராந்தியங்களின் முன்னணி உணவு நாடுகளுடன் இணைந்து இலங்கை இப்பட்டியலில் 50 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.</p><p>சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத நிலையான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரிய சமையல் முறைகளைப் பாதுகாப்பதில் இலங்கை காட்டி வரும் அக்கறைக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T03:54:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA['நிஞ்ஜா' வேடமணிந்த கும்பல் மசாஜ் நிலையத்தில் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ninja-dressed-ganged-made-robbery-1784000046"></link>
            <id>https://tamilwin.com/article/ninja-dressed-ganged-made-robbery-1784000046</id>
            <summary type="text">கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்குள் &#039;நிஞ்ஜா&#039; வேடத்தில் முகமூடி அணிந்து புகுந்த கும்பலொன்று, அதன் உரிமையாளரை தாக்கி, அவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்குள் 'நிஞ்ஜா' வேடத்தில் முகமூடி அணிந்து புகுந்த கும்பலொன்று, அதன் உரிமையாளரை தாக்கி, அவரிடமும் வெளிநாட்டு பெண்ணொருவரிடமும் இருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
</p><p>பொலிஸ் தகவலின்படி, தாக்குதலின்போது மசாஜ் நிலைய உரிமையாளரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி, 116,500 ரூபாய் பணம், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் இருந்த 205,000 ரூபாய் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4961bf98-0354-46e4-bd0d-640ab451f1e9/26-6a55ae33b8f3e.webp' /></p><p> 
மேலும், மசாஜ் நிலையத்தில் இருந்த சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவரையும் இலங்கையைச் சேர்ந்த இரு பெண்களையும் பணியில் அமர்த்தி, பப்பிலியான – கொழும்பு வீதியில் குறித்த மசாஜ் நிலையத்தை நடத்தி வந்ததாக உரிமையாளர், முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
</p><p>தாம் உறங்கிக் கொண்டிருந்தபோது பொருட்கள் சிதறும் சத்தம் கேட்டு விழித்ததாகவும், உடனே தாம் மற்றும் தாய்லாந்து பெண் உறங்கியிருந்த அறைக்குள் பொல்லுகள் மற்றும் கத்திகளுடன் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தாக்குதலாளர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>மேலும், 'மாதிவெலவத்தே பணுவா' என அழைக்கப்படும் நபர் ஒருவர் கடந்த மாதம் 21 ஆம் திகதி தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த மசாஜ் நிலையத்தை தொடர்ந்து நடத்த அனுமதிக்க மாட்டோம் என மிரட்டியிருந்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்த உரிமையாளர் 1990 சுவசெரிய அவசர மருத்துவ சேவையின் ஆம்புலன்ஸ் மூலம் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
இந்தக் கும்பல் மசாஜ் நிலையத்தின் கதவுகள், ஜன்னல்கள், பிரிப்பு சுவர்கள், அலமாரிகள், தொலைக்காட்சி, பிளெண்டர், ரைஸ் குக்கர் உள்ளிட்ட பல பொருட்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் டிவிஆர் பதிவுக் கருவியையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T03:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம்! உலக சந்தையில் சடுதியாக உயர்ந்த எரிபொருள் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-price-today-1783997643"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-price-today-1783997643</id>
            <summary type="text">மத்தியக் கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது.இதன்படி, சர்வதேச சந்தையில் கச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்தியக் கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது.</p><p>இதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை இன்றையதினம் மீண்டும் 9 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><h2>மீண்டும் அதிகரித்த விலை</h2><p>பிரென்ட்&nbsp; கச்சா எண்ணெய் ஒரு பரலின் விலை 7.29 டொலர்களால் அதிகரித்து&nbsp; 83.30 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>அத்துடன் WTI கச்சா எண்ணெய் ஒரு பரலின் விலை 6.73 டொலர்களால் அதிகரித்து 78.30 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30dc3640-1059-48b8-a7e1-b76dccfea351/26-6a55aaa68bc7f.webp' /></p><p>பிரென்ட்&nbsp; கச்சா எண்ணெய்யின்&nbsp; இன்றைய விலை உயர்வானது, கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிக்கு பிறகு பதிவான அதிகரித்த ஒரு நாள் விலையாகும்.&nbsp; &nbsp;</p><p>அத்துடன், ஜூன் மாதம் 12ஆம்&nbsp; திகதிககுப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையும் இதுவே ஆகும்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T03:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகார போதையால் சட்டத்தின் மேலாதிக்கத்தை பலவீனப்படுத்த வேண்டாம்:அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் அலி சப்ரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ali-sabry-npp-government-1783997121"></link>
            <id>https://tamilwin.com/article/ali-sabry-npp-government-1783997121</id>
            <summary type="text">அதிகாரம் கையில் இருக்கும்போது சுயாதீனமான நீதிமன்றம், சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில் அல்லது சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவம் சில நேரங்களில் நமக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரம் கையில் இருக்கும்போது சுயாதீனமான நீதிமன்றம், சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில் அல்லது சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவம் சில நேரங்களில் நமக்கு புலப்படாமல் போகலாம். </p><p>
எனினும், காலப்போக்கில் சூழ்நிலைகள் மாறும்போது, ஒரு ஜனநாயக ஆட்சியை பாதுகாக்கும் பிரதான நிறுவனங்கள் அவைதான் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
</p><p>நீதித்துறை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்து அவர் தெரிவித்த கருத்துக்கள்,</p><p>ஒரு சட்டத்தரணியின் பொறுப்பு, சட்டத்தின் முன்னால் ஒவ்வொரு நபருக்கும் அச்சமின்றி, சுதந்திரமாக மற்றும் நியாயமான முறையில் சட்ட பிரதிநிதித்துவத்தை வழங்குவதாகும். </p><p>மக்களின் விமர்சனத்திற்கு உள்ளான நபர்களுக்காக முன்னிலையாகும் சட்டத்தரணிகளைக் கண்டிக்க முற்படுவது, இறுதியில் நீதித்துறையின் அத்திபாரத்தை பலவீனப்படுத்துவதாகும்.
</p><h2>

</h2><p></p><h2>சட்டத்தின் ஆட்சி யாருக்கு தேவை</h2><p>அதிகாரம் நிரந்தரமானது அல்ல. பதவிகள் நிரந்தரமானவை அல்ல. இன்று அரசாங்கமாக இருப்பது நாளை எதிர்க்கட்சியாக மாறலாம். </p><p>இன்று குற்றம் சுமத்துபவர் நாளை குற்றம் சுமத்தப்படுபவராக மாறலாம். இன்று உங்களது எதிரியாக இருப்பவர், நாளை உங்களுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகும் சட்டத்தரணியாக மாறலாம்.
</p><p>எனவே, ஒரு சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில், சுயாதீனமான நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது என்பது சட்டத்தரணிகளுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ செய்யும் ஒரு சலுகை அல்ல. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347667d5-496f-4025-bcf1-f5c4f36b0cad/26-6a55a2c337d86.webp' /></p><p>அது ஒவ்வொரு குடிமகனினதும் சுதந்திரம், உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பாகும்.
</p><p>அந்த நிறுவனங்களை நாம் பாதுகாக்க வேண்டியது, இன்று அவற்றின் பாதுகாப்பு யாருக்குத் தேவைப்படுகிறது என்று பார்த்தல்ல. நாளை ஒரு நாளில் அவற்றின் பாதுகாப்பு நமக்கே தேவைப்படலாம் என்பதை நாம் அறிந்திருப்பதனாலாகும்.
</p><p>சட்டத்தின் ஆட்சி என்பது பலசாலிகளின் வரப்பிரசாதம் அல்ல. அது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்கும் இறுதி அரணாகும். அந்தப் பாதுகாப்பு உங்களுக்கு எப்போது தேவைப்படும் என்பதை யாரும் அறியார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T02:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் மீது சேறுபூசும் சதி! சி.ஐ.டிக்குச் சென்ற மொட்டு கட்சியின் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-has-connections-with-underworld-gangs-1783996485"></link>
            <id>https://tamilwin.com/article/namal-has-connections-with-underworld-gangs-1783996485</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்சவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்சவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு
இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் திட்டமிட்ட வகையில் அவதூறு
பரப்பப்படுவதாகச் சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்
செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்முறைப்பாடு
ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
நேற்று இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத்
தெரிவிக்கும்போது,</p><p>மகிந்த ராஜபக்ச&nbsp; மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன்
தொடர்புபடுத்தி, அரசுக்குச் சார்பான தரப்புகளும், பிரிவினைவாதக்
கருத்துக்களைப் பரப்பும் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்களும் திட்டமிட்ட
பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.</p><p></p><h2>அழிக்கப்பட்ட பாதாள உலகக் குழு</h2><p>
</p><p>
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வரலாற்றைக்
கொண்ட தரப்பினரே, இன்று ராஜபக்சக்களுக்கு சேறுபூச முயற்சிக்கின்றனர். </p><p>மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே பாதாள உலகக் குழுக்களும் விடுதலைப் புலிகள்
அமைப்பின் பயங்கரவாதமும் இந்நாட்டில் முழுமையாக அடக்கப்பட்டன என்பது மறுக்க
முடியாத உண்மை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7d7f45-99bd-409c-9c5e-f75bca4b6546/26-6a55a36293ac6.webp' /></p><p>

போதைப்பொருள் ஒழிப்புப் பற்றிப் பேசும் தற்போதைய அரசின் முக்கிய உறுப்பினர்கள்
மற்றும் அவர்களது குடும்பத்தினர் அண்மைக்காலமாக போதைப்பொருள் விவகாரங்களில்
சிக்கியுள்ளனர். </p><p>இது குறித்து அரசு பதில் கூற வேண்டும்.

முகநூல் போலிக் கணக்குகள் மூலமோ அல்லது நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப்
பின்னால் ஒளிந்துகொண்டோ கூச்சலிடாமல், தைரியமிருந்தால் இந்த ஆதாரமற்ற
குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T02:48:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச - சலேவை பாதுகாத்த நீதவான்! இரகசிய செயற்பாடுகளும் அம்பலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-suresh-sally-gotabaya-1783991108"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-suresh-sally-gotabaya-1783991108</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் சில முக்கிய தகவல்கள் கோட்டை நீதவான் நீதிமன்ற நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. </p><p>ஆனால் சில முக்கிய தகவல்கள் கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் சுரேஷ் சலே தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>அத்தோடு, இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலும் ஏழு பேர் மிகவும் இரகசியமான வாக்குமூலங்களை CID யிடம் வழங்கியுள்ளனர். </p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு சுரேஷ் சலே நேரடியாகவே தொடர்புடையவர் என்று அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
</p><h2>
</h2><p></p><h2>ஏழு பேரின் இரகசிய வாக்குமூலம்</h2><p>அதாவது சுரேஷ் சலேயைச் சுற்றி இருந்த அவரது தீவிர ஆதரவாளர்களான ஏழு பேர் தான் இந்தச் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். </p><p>அதற்கு மேலதிகமாக, இந்த ஏழு சாட்சிகளும் கொழும்பு கோட்டை நீதவானிடம் தனிப்பட்ட முறையில், இரகசியமாக வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.
</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு ஆரம்பக் கட்டத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அப்போது கோட்டை நீதவானாகச் செயல்பட்டவர் தான் இசுரு நெத்திகுமார. </p><p>அப்போது அவர் முன்னிலையில்தான்,ஏழு பேரும் மிகவும் இரகசியமான வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர். பொதுவாக, ஒரு நீதவான் முன்னிலையில் இவ்வாறானதொரு வாக்குமூலம் மிகவும் இரகசியமாகவே வழங்கப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf1ddd3d-952b-4397-aefa-1c42cf508070/26-6a558b477a0d0.webp' /></p><p>அவ்வாறான வாக்குமூலங்கள் பகிரங்க நீதிமன்றத்தில் பெறப்படுவதில்லை. நீதவானின் உத்தியோகபூர்வ அறையினுள் (Chamber) மிகவும் இரகசியமாகவே பெறப்படும். </p><p>அப்பொழுது, அந்த இரகசிய வாக்குமூலத்தை வழங்கும்போது அங்கு நீதவான், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டச்சாளர் ஆகிய மூவர் மட்டும்தான் சம்பந்தப்படுவார்கள். </p><p>அதற்கு மேலதிகமாக, இரகசிய வாக்குமூலத்தை வழங்கும் நபர்கள் மட்டும்தான் சம்பந்தப்படுவார்கள். அந்த ஏழு நபர்களும் கூட தனித்தனியாகத்தான் அழைக்கப்படுவார்கள், ஒன்றாக அல்ல. </p><h2>&nbsp;பார்க்க முடியாக வாக்குமூலம்</h2><p>அவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பிறகு, அதனை எதிர்த்தரப்போ அல்லது வழக்காளித்தரப்போ எந்தவொரு தரப்பினரும் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. </p><p>அதன் பிறகு நீதவான் அந்த வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் அதை தனித்தனியாக முத்திரையிட்டு (Seal) அவற்றை நீதவானின் தனிப்பட்ட பாதுகாப்புப் பெட்டகத்தில் (Safe) வைப்பார். </p><p>அதை எந்தவொரு நபரும் பெற்றுக்கொள்ள முடியாது. அதனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏதேனும் ஒரு சட்டப் பிரச்சினை ஏற்படும்போது, அந்த வழக்குடன் தொடர்புடைய சட்டரீதியான ஒரு தீர்மானமிக்க கட்டத்தில்தான் கிடைக்கும். </p><p>அவ்வாறு இல்லாமல் நீதிமன்றத்தில் இருக்கும் அந்தப் பெட்டகத்தில் முத்திரையிடப்பட்டுள்ள வாக்குமூலங்களை எடுப்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ எந்தவொரு நபருக்கும் உரிமை இல்லை. நீதவானுக்குக் கூட உரிமை இல்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2bd3d16-5d11-437d-aed9-67420bdb0cb3/26-6a558b46c849c.webp' /></p><p>ஒருவேளை கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டால், அப்போது கோட்டை நீதவான் நீதிமன்றப் பெட்டகத்தில் உள்ள அந்த இரகசிய வாக்குமூலங்களை வழக்கை விசாரிக்கும் அடுத்த நீதிமன்ற நீதிபதியின் பெட்டகத்திற்கு மாற்ற முடியும். </p><p>அது தவிர வேறு எந்தவொரு தரப்பினருக்கும் இந்த இரகசிய வாக்குமூலங்களைக் கொடுப்பதற்கோ அல்லது எடுப்பதற்கோ முடியாது.
ஆனால் நீதவான் இசுரு நெத்திகுமார குறித்த இரகசிய வாக்குமூலங்கள் அனைத்தையும் சுரேஷ் சலேயின் சட்டத்தரணியான அசித சிறிவர்தனவிற்கு வழங்கியுள்ளார்.
</p><p>இவ்வாறானதொரு சூழ்நிலையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்குக்குக் கூட தற்போது பாரதூரமான ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. </p><p>ஏனென்றால், இரகசிய வாக்குமூலங்களை எதிர்த்தரப்பிடம் ஒப்படைத்ததன் மூலம், இப்போது இந்த வழக்கில் இரகசிய வாக்குமூலங்களை வழங்கியது யார்? அந்த வாக்குமூலங்களில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது? அவை அனைத்தும் தற்போது கோட்டாபய ராஜபக்சவின் கைக்கு சென்றுள்ளது. </p><p>
இந்த விபரங்கள் அம்பலமான பின்னர், இசுரு நெத்திகுமார நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு (JSC) மாற்றப்பட்டார். இவ்வாறு மாற்றிய உடனே, ராஜபக்ச குழுவும், அதேபோன்று 'ப்ரீ லோயர்ஸ்' (Free Lawyers) என்று சொல்லப்படும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன உள்ளிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் ஊடகங்களில் அதற்கு எதிராக பாரிய குரல் எழுப்பினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T02:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் நடந்த பயங்கர மோதல்.. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-death-toll-31-1783988663"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-death-toll-31-1783988663</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
குறித்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
</p><p>குறித்த இரண்டு சிறை அதிகாரிகளில் நேற்று (13) ஒருவரும் இன்று காலை (14) ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைத்துறை அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைக்கலவரம்&nbsp;</h2><p>

அதன்படி, நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b692a96b-d58c-4caf-be49-522e87edae70/26-6a5586f5759d4.webp' /></p><p>
</p><p>
ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற சிறைக்கலவரங்களில் மேலும் 21 கைதிகள் உயிரிழந்ததாகவும், இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>
மோதலில் காயமடைந்த மற்ற சிறைக் கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் நீர்கொழும்பு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மலசலகூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chicken-meat-sold-bathroom-toilet-vavuniya-1783986217"></link>
            <id>https://tamilwin.com/article/chicken-meat-sold-bathroom-toilet-vavuniya-1783986217</id>
            <summary type="text">வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப்
பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப்
பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட
நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
</p><p>
வவுனியா, வைரவபுளியங்குளம், தொடருந்து வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும்
சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>அக்கடைக்குரிய கோழிகள்
மலசலகூடம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் வைக்கப்பட்டு, அப்பகுதியில் வைத்து உரிக்கப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் கடையில் இறைச்சியாக
நீண்டகாலமாக விற்பனை செய்யப்படடு வந்துள்ளது.</p><p></p><h2>பொதுமக்களின் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த காலங்களில் எந்தவித
நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவ்விற்பனை நிலையம் இயங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ace3063-89b3-4c13-8098-12e30a7bbe2c/26-6a557b41053e5.webp' /></p><p>இந்நிலையில், விசேட டெங்கு ஒழிப்பு
நடவடிக்கையின் போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுத்த போது சுகாதார சீர்கேட்டுடன்
குறித்த கோழி இறைச்சிக் கடை இயங்கி வைத்தமை தெரிய வந்துள்ளது.
</p><p>குறித்த இறைச்சிக்கடை தொடர்பில் சுகாதார
பரிசோதகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடடிக்கை
எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:56:52+00:00</updated>
        </entry>
    </feed>
