<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-17T19:35:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூலிழையில் தப்பிய சுரேஷ் சலே - ஆபத்தில் சிக்கிய கோட்டாவின் நெருங்கிய சகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-narrowly-escapes-kota-close-aide-1784311460"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-narrowly-escapes-kota-close-aide-1784311460</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், நேற்று காலை&nbsp;மர்மமான முறையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன&nbsp;உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>இவ்விவகாரம், நாட்டில் பெரும் பரபரப்பையும் அதிகாரிகள் மத்தியில் கடுமையாக கேள்விகளையும் எழுப்பியுள்ளது.&nbsp;</p><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன, பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில்,&nbsp;சந்தன தீபால் விக்ரமரத்ன உண்மையில் தவறான முடிவெடுத்து தான் தனது உயிரை மாய்த்துக் கொண்டாரா என்னும் கேள்வி எழும்பியுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/L7gFZf-JpRo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T19:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-family-man-dies-suddenly-in-jaffna-1784313386"></link>
            <id>https://tamilwin.com/article/young-family-man-dies-suddenly-in-jaffna-1784313386</id>
            <summary type="text">யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது. இதன்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>இதன்போது கடற்கரை வீதி, பாசையூரை சேர்ந்த 25
வயதுடைய பே.கனிடஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை</h2><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றுமுன்தினம்(16.7.2026) 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மதுவருந்தியுள்ளார். பின்னர்
அவரது நண்பர்கள் சென்ற நிலையில் அவர் அந்த மாடியிலேயே உறங்கியுள்ளார்.
</p><p>
பின்னர் அந்த மாடி கட்டிட வேலைகளை செய்வதற்காக வந்த வேலைக்காரர்கள் குறித்த
குடும்பஸ்தர் அசைவற்று காணப்படுவதை அவதானித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b3dc53e-17a9-4b19-9599-9a3439c8c65a/26-6a5a762ce8bb6.webp' /></p><p> </p><p>அதன்பின்னர் பொலிஸார்
மற்றும் உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
தெரியவந்துள்ளது.</p><p> அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.</p><p>

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T18:36:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத்தின் மறுவடிவமே தமிழ் - முஸ்லிம் புதிய கூட்டணி: சட்டத்தரணி நுவன் பெல்லன்துடாவ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-tamil-muslim-alliance-is-a-new-terrorism-1784310778"></link>
            <id>https://tamilwin.com/article/new-tamil-muslim-alliance-is-a-new-terrorism-1784310778</id>
            <summary type="text">தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்க முயலும் புதிய
அரசியல் கூட்டணியானது, நாட்டின் வரலாறு, அடையாளம் மற்றும் சிங்கள பௌத்த
விழுமியங...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்க முயலும் புதிய
அரசியல் கூட்டணியானது, நாட்டின் வரலாறு, அடையாளம் மற்றும் சிங்கள பௌத்த
விழுமியங்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட ஒரு தேசவிரோத வேலைத்திட்டத்தின்
வெளிப்பாடாகும் என்று தேசப்பிரேமி ஜாதிக பெரமுன அமைப்பின் சட்டத்தரணி நுவன்
பெல்லன்துடாவ தெரிவித்தார்.</p><p>

இராசமாணிக்கம் சாணக்கியன், எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன்
உள்ளிட்டோர் இணைந்து உருவாக்க முனையும் இந்தக் கூட்டணி, போலி ஜனநாயக முகமூடி
அணிந்த இனவாதக் கூட்டணியாகும் என்றும் அவர் விமர்சித்தார்.</p><p>

1974 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஊடாக உருவான 'தமிழீழம்' என்ற
பிரிவினைவாதக் கோட்பாட்டின் மறுவடிவமே இந்தப் புதிய கூட்டணி என்று
குறிப்பிட்ட அவர், இது 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட
பயங்கரவாதத்தின் தொடர்ச்சி என்றும் கூறினார்.</p><p></p><h2>முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு</h2><p>
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரான ஒரு தனி தாயகத்தை
உருவாக்க இந்தத் தரப்பினர் திரைமறைவில் முயல்கின்றனர் என்றும், இதற்கு
முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f88da5c6-d247-4a7c-a451-cdf1960dd448/26-6a5a7201c2203.webp' /></p><p>
</p><p>
முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான சில நடைமுறைகள் மற்றும் நிர்வாக வலயங்கள்
குறித்தும் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த நுவன் பெல்லன்துடாவ, இவை
நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் செயல்கள் எனத் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T18:19:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அடுத்த போர்: ஆபத்தில் இந்தியா மற்றும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-war-in-middle-east-and-sri-lanka-in-danger-1784303158"></link>
            <id>https://tamilwin.com/article/next-war-in-middle-east-and-sri-lanka-in-danger-1784303158</id>
            <summary type="text">மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் டோகா நகரில் இருக்கின்ற பல இடங்களிலே இன்று அதிகாலை (17.7.2026) வேளையில் பலத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் டோகா நகரில் இருக்கின்ற பல இடங்களிலே இன்று அதிகாலை (17.7.2026) வேளையில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>அமெரிக்கா- ஈரான் யுத்தம் என்பது மத்தியகிழக்கை பெருமளவு பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p>இந்த நிலையிலே, அமெரிக்கா தன்னுடைய பலத்தை&nbsp;மத்திய கிழக்கு நாடுகளில் வெளிப்படுத்துவது என்பது அசாதாரணமான விடயம் என சென்னையிலுள்ள அரசியல் ஆய்வாளர் சுஃப்யான் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, இனிவரும் நாட்களில் மத்தியகிழக்கு சமாதானமாக இருக்காது எனவும் அமெரிக்காவினுடைய நடவடிக்கை அந்நாட்டிலுள்ள எந்தவிதத்தில் தாக்கம் செலுத்தும் என்பது தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9l01E9ezTwE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T17:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாதம் இதை செய்ததன் பின்னணி என்ன தெரியுமா! இனவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-major-tamil-parties-new-political-alliance-1784306200"></link>
            <id>https://tamilwin.com/article/6-major-tamil-parties-new-political-alliance-1784306200</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் நோக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் நோக்கில், 6 பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் புதிய அரசியல் கூட்டணியை அறிவித்துள்ளன.</p><p>இந்தநிலையிலே, இந்த புதிய அரசியல் கூட்டணியின் ஒன்றிணைப்பானது வெறுமையாக இருப்பதாக அரசியல் செயற்பாட்டாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு,இது மக்கள் விரும்பிய கூட்டிணைவு அல்ல.இந்தக் கூட்டணியால் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மேலும், இந்த அரசியல் ஒரு புதிய தளத்திலே இனவாதத்தை மட்டும் தான் சேர்க்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்களின் உரிமைகள், தேசிய அரசியலில் இந்த கூட்டணியின் தாக்கம், எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் இந்த கூட்டணி இலங்கை அரசியலில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து நேருக்கு நேர் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0D-rRiohJ38" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T17:43:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவட்ட - பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்கள் அரசாங்கத்தின் கட்டளையை ஏற்பதில்லை - பிரதியமைச்சர் எரங்க குணசேகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/district-divisional-secretaries-grama-niladharis-1784306031"></link>
            <id>https://tamilwin.com/article/district-divisional-secretaries-grama-niladharis-1784306031</id>
            <summary type="text">மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மற்றும் கிராம அலுவலர்கள் ஆகியோர் அரசாங்கம் சொல்வது போல் செயல்படுவதில்லை. எனவே, தமது கட்சியின் இளைஞர்களை அப்பதவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மற்றும் கிராம அலுவலர்கள் ஆகியோர் அரசாங்கம் சொல்வது போல் செயல்படுவதில்லை. எனவே, தமது கட்சியின் இளைஞர்களை அப்பதவிகளில் அமர்த்த வேண்டும் என்று பிரதி அமைச்சர் எரங்கா குணசேகர வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இவ்வார ஆரம்பத்தில் மகரகமவில் நடைபெற்ற சோசலிச இளைஞர் சங்கத்தின் இளைஞர் மாநாட்டு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, ​​பிரதியமைச்சர் எரங்க குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்கத்தின் அதிகாரத்தை வேறு யாருக்கும் கொடுப்பதற்காக நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றவில்லை, அரசாங்கத்தை நாம் கைப்பற்றியுள்ளோம். ஆனால் அரச அதிகாரத்தை இன்னும் கைப்பற்றவில்லை.</p><p> சில இடங்களில் கிராம அலுவலர்கள் நாம் சொல்வது போல் செயல்படுகிறார்களா? பிரதேச செயலாளர்கள் நாம் சொல்வது போல் செயல்படுகிறார்களா? மாவட்ட அரசாங்க அதிபர்கள் நாம் சொல்வது போல் செயல்படுகிறார்களா? இல்லை என்றே கூற வேண்டும்.</p><p></p><h2>முந்தைய அரசாங்கங்கள்..&nbsp;</h2><p>

அரச எந்திரத்தின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் கிராம அலுவலர்கள், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் உத்தரவுகளை ஏற்று செயல்படுவதில்லை.

அப்படியானால் என்ன நடக்க வேண்டும்? இங்குள்ள பெண்களும் சிறுவர்களும் அரச எந்திரத்திற்கு உள்வாங்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34e14c7b-bafe-4dc0-b37c-4da18a916e25/26-6a5a5ec916408.webp' /></p><p> சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் இளைஞர்கள் அரச எந்திரத்தில் உள்வாங்கப்பட வேண்டும். இலங்கையில் முதன்முறையாக, உச்சாணியில் கைவைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் கவலைப்படுகிறார்கள். </p><p>அவர்கள் இப்படி நடக்கும் என்று கனவிலும் கூட ஒருபோதும் நினைத்ததில்லை.

ரணிலும் அவரது கும்பலும் தோற்கடிக்கப்பட்டார்கள், ஆனால் அவர்கள் அழிக்கப்படவில்லை.</p><p> சஜித்தும் அவரது கும்பலும் தோற்கடிக்கப்பட்டார்கள், ஆனால் அவர்கள் அழிக்கப்படவில்லை. நாமலும் அவரது கும்பலும் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் அழிக்கப்படவில்லை. </p><p>அழிக்கப்படாதவர்கள் இப்போது எல்லா இடங்களிலும் நடனமாடத் தொடங்கியுள்ளனர். நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் அவர்களை அரசியல் ரீதியாக அழிக்க வேண்டும் என்றும் பிரதியமைச்சர் எரங்க குணசேகர அதன்போது தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T16:58:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியா எல்லைக்குள் ஈரான் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-launches-missile-strike-syrian-territory-1784302506"></link>
            <id>https://tamilwin.com/article/iran-launches-missile-strike-syrian-territory-1784302506</id>
            <summary type="text">இந்த ஆண்டு மத்திய கிழக்கில் புதிய போர் வெடித்த பிறகு, முதல் முறையாக சிரியா
எல்லைக்குள் ஈரான் நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

சிரியாவின் கிழக்குப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு மத்திய கிழக்கில் புதிய போர் வெடித்த பிறகு, முதல் முறையாக சிரியா
எல்லைக்குள் ஈரான் நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.
</p><p>
சிரியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள அல்-தன்பு (al-Tanf) பகுதியில்
ஈரான் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இருதரப்பு வட்டாரங்களும்
உறுதிப்படுத்தியுள்ளன.
</p><p>

ஈரானின் புரட்சிகர காவல் படை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>
ஈரான்ஷஹிர் பகுதியில் ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும்
நடவடிக்கையாக, அல்-தன்பு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க விசேட படைப் பிரிவின்
கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான்
கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66c9fdf2-4a93-4f5a-a0bb-081f5e1f0254/26-6a5a4caf3ad8b.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதல் தளம் மீது நேரடியாக விழவில்லை என்றும், தன்பு பகுதிக்கு
அருகில் விழுந்ததால் எவ்வித உயிர்ச்சேதமோ பொருள்சேதமோ ஏற்படவில்லை என்றும்
சிரிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
அமெரிக்கா இந்த தளத்திலிருந்து கடந்த பெப்ரவரியிலேயே தனது படைகளைத் திரும்பப்
பெற்றுவிட்டது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
பிராந்தியத்தில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் மோதலில் ஈடுபட்டு வரும் வேளையில்,
சிரியா இதில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்த்து வந்தது.

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா, தங்கள் நாடு நேரடியாகத் தாக்கப்படாத வரை இந்த
பிராந்திய மோதல்களில் நடுநிலை வகிக்கும் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/196d6819-61f6-421a-be66-4d577e1c0cc6/26-6a5a4cafe163e.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதலுடன் ஈரான் மற்றொரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்,
அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை இந்த கடல் வழியாக எந்தவொரு எண்ணெய்
அல்லது எரிவாயு ஏற்றுமதியும் அனுமதிக்கப்படாது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T15:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.ஆழியவளையில் பெருமளவிலான கஞ்சா பொதிகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/14-5-kg-of-cannabis-seized-at-aazhiyavalai-1784299257"></link>
            <id>https://tamilwin.com/article/14-5-kg-of-cannabis-seized-at-aazhiyavalai-1784299257</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப்பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப்பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>&nbsp;குறித்த சம்பவம் நேற்று(16.7.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> சம்பவம்
தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஆழியவளைப்பகுதியில் பாழடைந்த கட்டிடம்
ஒன்றில் பொதிகை காணப்பட்டதை தொடர்ந்து மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி
படையினருக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>விசாரணை</h2><p>அதன் அடிப்படையில் அங்கு
சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர்14.5 கிலோ கிராம் கஞ்சா பொதிகளை கைப்பற்றி
மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4c39138-0f3f-49a3-acf0-afaf22a59f63/26-6a5a456cc8400.webp' /></p><p> </p><p>எனும் குறித்த கஞ்சா பழுதடைந்த
நிலையில் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான
விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T15:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வழக்குகளில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட சி.டி. விக்ரமரத்ன : வெளிவரும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/c-d-wickramaratne-named-as-defendant-several-cases-1784285448"></link>
            <id>https://tamilwin.com/article/c-d-wickramaratne-named-as-defendant-several-cases-1784285448</id>
            <summary type="text">மர்மமான முறையில் இன்று(17) காலை உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் இன்று(17) காலை உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 தனது உத்தியோகப்பூர்வ தகுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாகவோ அல்லது பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ அதிகாரத்தின் காரணமாகவோ பல்வேறு சட்ட நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனினும் தனது பதவிக்காலத்தில் அவர் எந்தவொரு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளும் இன்றிப் பணியாற்றியதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p></p><h2>சர்ச்சைக்குரிய பதவி உயர்வுகள்</h2><p>தேசபந்து தென்னக்கோன் போன்ற பிற்கால பொலிஸ் மா அதிபர்கள் மீது சுமத்தப்பட்டதைப் போன்ற பெரிய தனிப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் விக்ரமரத்ன மீது பதிவாகவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97f08915-7ab3-4e0b-ac95-fd08c8498840/26-6a5a0e859b212.webp' /></p><p>2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பு விசாரிக்கப்பட்ட வழக்கில், சி.டி. விக்ரமரத்ன ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார். </p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் விருப்பத்துக்கு இணங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் முன்னாள் ஷானி அபேசேகர, அவரது இடைநீக்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உட்பட பல அடிப்படை உரிமை மனுக்களில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்தார்.
</p><p>
பொலிஸ் மா அதிபர் என்ற முறையில், பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பல்வேறு நிர்வாக முடிவுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் பலமுறை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது. </p><p>2020ஆம் ஆண்டில் பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (SSPs) சர்ச்சைக்குரிய வகையில் முன்திகதியிட்டு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் காரணமாக, பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சி. டி. விக்ரமரத்ன மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p>தவறான நியாயப்படுத்தல்களையும், பிற அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் கருத்தில் கொண்டு, அந்தப் பதவி உயர்வு ஆணைகளை இடைநிறுத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.</p><p> இது ஆளும் தரப்பினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி சி.டி.விக்கிரமரத்ன மேற்கொண்ட மோசடி மற்றும் தவறான முன்னுதாரணங்களில் ஒன்றாகும்.</p><p></p><h2>ஊழல், மோசடி முறைகேடுகள்</h2><p>2022 மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகை அருகே போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது, வன்முறைக் ​​கும்பலின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் நடவடிக்கை மற்றும் ஆணைகள் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன, விசேட அதிரடிப்படை (STF)கட்டளைத் தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) வருண ஜயசுந்தர ஆகியோரிடம் குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) 2025-ஆம் ஆண்டில் விசாரணை நடத்தியது.</p><p> இருப்பினும், அந்த விரிவான விசாரணைகளுக்குப் பிறகு அரசியல் அழுத்தம் காரணமாக சி.டி. விக்ரமரத்ன மீது பகிரங்கமாக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b774524-5da8-41ef-9b80-743eecb1848c/26-6a5a0e86726b6.webp' /></p><p>
ஆனாலும் பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் அவரது அலுவலகத்தில் இருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில் அமைந்திருந்த காலிமுகத்திடலில் அப்பாவிப் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக் கும்பலின் வெறியாட்டம் பல மணிநேரம் நீடித்திருந்த நிலையிலும் அதனைக் கட்டுப்படுத்த தனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தவில்லை. </p><p>அதற்குப் பதிலாக வன்முறைக் கும்பலுக்கு மறைமுகமாக ஒத்தாசை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
</p><p>
விக்ரமரத்னவின் பதவிக்காலத்தில் ஓய்வு பெறும் வயதைத் தாண்டி அவர் பலமுறை பதவி நீட்டிப்பு பெற்றதும், அவரது மூன்றாவது பதவி நீட்டிப்பு அரசியலமைப்புச் சபையால் நிராகரிக்கப்பட்டதும் அரசியல் மற்றும் சட்டரீதியான விவாதங்களைத் தூண்டியுள்ளன. </p><p>அவர் சர்ச்சைகளுக்கு மத்தியில் பதவியில் பணியாற்றியுள்ளார் என்பதும் இதில் அடங்கும். ஊழல், மோசடி முறைகேடுகளுக்காக அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்றபோதும், அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் பலவற்றில் அவர் தொடர்புபட்டிருந்தார்.</p><h2>சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக</h2><p>இவருடைய பதவிக்காலத்தில் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு தடயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. </p><p>தெற்கு அதிவேகப் பாதையில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்ற சஹ்ரான் ஹாசிமின் கும்பலை பொலிஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்ய முயன்றபோது அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலையிட்டு அவர்களை விடுதலை செய்வித்திருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdfa877c-ac52-4628-9831-09d218409103/26-6a5a0e8730b2f.webp' /></p><p>அது தொடர்பில் பின்னர் வந்த பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் சி.டி. விக்ரமரத்ன எந்தவொரு விசாரணைக்கும் உத்தரவிடவில்லை.
</p><p>
அதற்குப் பதிலான தன்னுடைய பதவிக்காலத்தில் தேசபந்து தென்னகோனுக்கு முக்கிய பொறுப்புகள் பலவற்றை வழங்கியிருந்தார்.
</p><p>
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) என்பவர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக பல்வேறு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், சாரா ஜெஸ்மின் உயிரிழந்து விட்டதாக காட்டுவதற்கு கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் சி.டி.விக்ரமரத்ன முழு ஒத்துழைப்பும் வழங்கியிருந்தார்.</p><p>

அம்பாறை புத்தங்கல பொதுமயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு மரபணு (DNA) பரிசோதனைகளிலும் சாரா ஜெஸ்மின் உடைய மரபணுவுடன் ஒத்துப் போகும் எந்தவொரு சான்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. </p><p>எனினும் சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக காட்டும் நோக்கில் கடந்த 2022 ஏப்ரல் 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்றாவது மரபணு பரிசோதனைக்கான உத்தரவுகளை சி.டி. விக்ரமரத்னவே பிறப்பித்திருந்தார். </p><p>குறித்த மரபணு பரிசோதனையில் ஆச்சரியப்படும் வகையில் சாரா ஜெஸ்மினின் மரபணு மாதிரியுடன் ஒத்துப்போகும் எலும்புத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T14:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்: இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-work-at-the-chemmani-mass-grave-1784297651"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-work-at-the-chemmani-mass-grave-1784297651</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(17.7.2026) நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(17.7.2026) நடைபெற்றது.</p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 35ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p>
</p><p>
அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம்
ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84c5a1c2-6926-454c-99d8-b67ce51649c2/26-6a5a3ba7498a0.webp' /></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 89 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
431 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 423 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T14:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் தமிழர்களின் காணி அபகரிப்பு - விரைவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-against-the-tamil-nationalist-party-soon-1784298769"></link>
            <id>https://tamilwin.com/article/protest-against-the-tamil-nationalist-party-soon-1784298769</id>
            <summary type="text">தமிழ் மக்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்த தமிழரசுக் கட்சி தற்போது கூட்டணி அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என ஈழத் தமிழர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்த தமிழரசுக் கட்சி தற்போது கூட்டணி அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என ஈழத் தமிழர் முன்னணி
கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> 

ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் நேற்று (16.07.2026) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>

கூட்டணி அமைத்த தமிழரசுக்கட்சி</h2><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பின் அடிப்படையில், முதலாவது விதியில்
தமிழர்களுக்கான சுயாட்சி அமைத்து கொடுக்க வேண்டும், அதேபோன்று முஸ்லிம்களுக்கு
சுயாட்சி அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம்.</p><p>
எனவே, இதனடிப்படையில் இந்த தமிழரசுக் கட்சியின் செயலாளர் மற்றும் தலைவர் செயற்படுகிறார்கள். ஆகவே இந்த யாப்பை தேசிய தலைவர் பார்க்கவில்லையா?
அல்லது அன்ரன் பாலசிங்கம் பார்க்கவில்லையா? என எனக்கு கேள்வி எழுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7be1bee2-de0a-4bce-b8f2-35476189abef/26-6a5a3d97c3e6a.webp' /></p><p>

இதேவேளை, தனித் தமிழ் ஈழம் என்ற இலக்கு எத்தனை ஆயிரம் மக்களை இழந்துள்ளோம்.
எத்தனை ஆயிரம் போராளிகளை வீர மரணமடைந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
</p><p>
அத்துடன், இவற்றிற்கு காரணமாக இருந்த தனித் தமிழ் ஈழத்துக்காக நாங்கள் போரடிக்
கொண்டிருக்கும் போது, இந்த தமிழரசுக் கட்சி இத்தனை வருடமாக முஸ்லிம்களுக்கு
சுயாட்சி வழங்க வேண்டும் என செயற்பட்டுள்ளனர்.</p><h2>

தமிழர்களின் காணிகள் அபகரிப்பு</h2><p>


எனவே இது தான் காரணமா? சுயாட்சியை முஸ்லிம்களுக்கு
கொடுக்க வேண்டும் என சொன்னால் முஸ்லிம்களுக்கு எப்படி வடக்கு
கிழக்கில் சுயாட்சியை கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது. 

கடந்த மைத்திரி ஆட்சியின் போது முஸ்லிம் ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சராக
கொண்டு வந்தார்கள். </p><p>எனவே எங்கள் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் அம்பாறை
மாவட்டத்தை தாரை வைப்பதற்கான உரிமையை யார் தந்தது? நீங்கள் யார்?

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 50 மேற்பட்ட தமிழ் கிராமங்களில் உள்ள
தமிழ் மக்களை அடித்து விரட்டப்பட்டு ஆக்கிரமித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3533d1d3-153a-481f-a3fe-d8fb37ea0a35/26-6a5a3d96629ef.webp' /></p><p> </p><p>இவ்வாறு
அம்பாறையில் தமிழ் மக்களின் கிராமங்கள் பறிபோனதை எதிர்த்து ஏன் தமிழரசுக் கட்சி
குரல் கொடுக்கவில்லை அதற்கு எதிராக ஏதாவது போராட்டம் செய்தார்களா? இல்லை.</p><p>
இவைகள் அனைத்தும் தெரிந்து தானே எல்லோரும் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். காலம்
காலமாக கிழக்கு மாகாண தமிழர்களை ஏன் ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். </p><h2>

கிழக்கில் வெடிக்கப்போகும் பாரிய போராட்டம்</h2><p>

இந்த மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நல்லாட்சி காலத்தில் தீர்வு காணப்பட வேண்டியது அதற்கான தீர்வுகளை தமிழரசு கட்சி ஏன் எட்டிக் கொள்ளவில்லை?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23a9a053-48ee-40cc-8e81-b043393e2897/26-6a5a3d9720811.webp' /></p><p>
</p><p>
எனவே தமிழர்களின் போராட்டத்தை கடந்த காலத்தில் எதிர்த்த முஸ்லிம்
அரசியல்வாதிகளுடன் இணைந்த இந்த 6 கட்சிகளை கொண்ட திருட்டு கூட்டணி வெற்றி
பெறாது என்பதுடன், கிழக்கு மாகாணத்தில் பாரிய ஒரு போராட்டத்தை நாங்கள்
நடத்துவதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம். </p><p>இவர்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை, அதனால் தான் திருட்டு
கூட்டணி அமைந்து தமிழ் மக்களை ஏமாற்றும் பெரிய ஒரு துரோகச் செயல்
ஈடுபட்டுள்ளனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T14:35:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-job-scam-suspect-arrested-1784253725"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-job-scam-suspect-arrested-1784253725</id>
            <summary type="text">கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. </p><p>

பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 பொலிஸ் விசாரணை</b></h2><p>வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fcf0c4-3330-40ab-835f-e906abc8b115/26-6a5a3d87c1c88.webp' /></p><p>இந்த நிலையில், நேற்று அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p>சந்தேகநபரை தலா 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். </p>]]></content>
            <updated>2026-07-17T14:35:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை போருக்குள் தள்ள இஸ்ரேல் சதி - ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-plot-to-push-america-into-war-1784297033"></link>
            <id>https://tamilwin.com/article/israel-plot-to-push-america-into-war-1784297033</id>
            <summary type="text">அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு அரசியலில் இஸ்ரேல் தீவிரமாக தலையிட்டு வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு அரசியலில் இஸ்ரேல் தீவிரமாக தலையிட்டு வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார மேலாளர் பிராட் பார்ஸ்கேல், “MAGA”ஆதரவாளர்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய செல்வாக்கு செலுத்தும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>

வரி பணத்தை செலவு செய்யும் அமெரிக்கா</h2><p>
அந்த பதிவை மேற்கோள் காட்டியுள்ள அப்பாஸ் அரக்சி,</p><p> 

அமெரிக்க நிர்வாகத்தை ஒருபோதும் வெல்ல முடியாத ஒரு போருக்குள் தள்ளுவதற்காக இஸ்ரேல் சதி செய்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், அமெரிக்காவை விமர்சிக்கும் குரல்களை ஒடுக்க இஸ்ரேல், அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்துவதாகவும், இது தொடர்பான உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6669ef-3d28-48f9-9f22-788c4ce4ad7e/26-6a5a370a57044.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T14:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-s-body-recovered-in-trinco-1784294728"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-s-body-recovered-in-trinco-1784294728</id>
            <summary type="text">திருகோணமலை- மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.7.2026) இடம்பெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.7.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை, நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
உயிரிழந்த நபர் கடந்த வியாழக்கிழமை (16) காலை 10.00 மணியளவில் தனது மோட்டார்
சைக்கிளில் மொரவெவ குளத்திற்கு மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.எனினும், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத்
தேடியுள்ளனர்.</p><p>இந்நிலையிலேயே, இன்று காலை அவர் குளக்கரைக்கு அருகில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4ac44ed-6450-4d2d-824e-f712d6ecd8de/26-6a5a30a7abd9f.webp' /></p><p>

குளத்திற்குச் சென்ற இடத்தில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே
அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T13:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு பின் சூழ்ச்சி - மா.சத்திவேல் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-unity-issues-deeper-meaning-sakthivel-1784292534"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-unity-issues-deeper-meaning-sakthivel-1784292534</id>
            <summary type="text">தமிழர்களின் பிரச்சனைக்காக கூட்டுணைக்கிறோம் என தமிழ் கட்சிகளில் ஒன்றிணைந்ததில் ஏதோவொரு சூழ்ச்சி இருப்பதாக தோன்றுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் பிரச்சனைக்காக கூட்டுணைக்கிறோம் என தமிழ் கட்சிகளில் ஒன்றிணைந்ததில் ஏதோவொரு சூழ்ச்சி இருப்பதாக தோன்றுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று (17.07.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தமிழ் மக்களுக்கான புதிய கூட்டணி</h2><p>
</p><p>
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
</p><p>
அண்மையில் வடக்குக் கிழக்கு மற்றும் மலையகம் சார்ந்த ஆறு கட்சிகளின் கூட்டு
உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும்
பிரச்சனைகளுக்கு கூட்டாக குரல் கொடுத்து செயல்படுவதே என கூட்டுக் கட்சிகளின்
தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். </p><p>

தமிழர்கள் முகம் கொடுக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நீங்கள் எந்தெந்த
பேரினவாத கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்தீர்களோ, அவர்களே காரணம் என்பது உங்களுக்கு நன்றாக
தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/948f0444-79a3-42fc-be5b-81f68bb1f2f9/26-6a5a2cbf31184.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் தமிழ் மக்களுக்காக புதிய கூட்டு அமைப்பது என்பது கேலிக்கூத்து என்பதே
மக்கள் அபிப்பிராயம்.


தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் ஒற்றை ஆட்சி
அரசியல் யாப்பும் சிங்கள பௌத்த பேரினவாதமே என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
</p><p>
அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பதற்காக தமிழ்
சட்டத்தரணிகளும் சிவில் சமூக அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சியும் கூட்டாக சேர்ந்து கலந்துரையாடல்களை
நடத்திக் கொண்டிருக்கையில் அவர்களோடு இணைய வேண்டிய நீங்கள் 
புதிதாக கூட்டமைப்பது நரித்தந்திர அரசியலாகவே காணப்படுகின்றது.</p><p>


கறுப்பு ஜூலையை நினைவு கூறும் மாதத்தில் உங்கள் கூட்டை ஆரம்பித்துள்ளீர்கள்.
 1983ஆம் ஆண்டின் தமிழர் இன அழிப்பானது சிங்கள பௌத்தத்தின் கோர
முகத்தினை உலகிற்கு காட்டியது.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைகுழி&nbsp;</h2><p>
</p><p>
இனப்படுகொலை யுத்தம் நடந்த போது நீங்கள்
யாரோடு நின்றீர்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தற்போது செம்மணி மனித
புதைகுழி நடவடிக்கைகளிலும் கூட உங்கள் முகங்களை நாங்கள் காணவில்லை.</p><p>

இராணுவப் படையினரும் தொல்லியல் திணக்களமும் கடந்த காலங்களில் மட்டுமல்ல
நிகழ்காலத்திலும் மக்களின் காணிகளை கைப்பற்றுவதற்காக எடுக்கின்ற முயற்சிகளின்
போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்றே தெரியாமல் உள்ளது. இதனைப் பார்க்கும் போது இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே
தோன்றுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf4df4e1-fecb-4fa3-8a0b-036e11562578/26-6a5a2cbe7ec7c.webp' /></p><p>
</p><p>
வடக்குக் கிழக்கு தமிழர்களின் தாயகம் சார்ந்த அரசியல் பிரச்சனை, மலையக
தமிழர்களின் பிரச்சினை மற்றும் முஸ்லிம்கள் முகம் கொடுக்கும்
பிரச்சனைகள் இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. </p><p>அதற்கான அரசியல் கொள்கை விளக்கம் மற்றும்
நடைமுறை சார்ந்த செயற்பாடுகளை புதிய கூட்டமைப்பு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அது தொடர்பான இணக்கப்பாட்டிலேயே கூட்டு உருவாக்கப்பட வேண்டும். </p><p>அதுவும்
வாக்களித்த மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிகழ்ந்தலே சாலச் சிறந்தது. ஆனால்
மக்களுக்கு தூரமாக நட்சத்திர ஹோட்டல்களில் நிகழ்வது மக்களுக்கான கூட்டாக இருக்க
முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T13:40:32+00:00</updated>
        </entry>
    </feed>
