<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-04T05:27:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை - விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-alert-for-sea-areas-1785818870"></link>
            <id>https://tamilwin.com/article/red-alert-for-sea-areas-1785818870</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக&amp;nbsp;கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக&nbsp;கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை</h2><p>அதன்படி, கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கும் மற்றும் இக்கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca3f77cf-f7ca-46be-a3fe-b21dce543af6/26-6a7177f506573.webp' /></p><p>
எனவே, மறு அறிவிப்பு வரும் வரை கடல் பகுதிகளுக்குள் பயணம் செய்ய வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>எனவே, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T05:26:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-records-decline-tourist-arrivals-in-july-1785817494"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-records-decline-tourist-arrivals-in-july-1785817494</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) அறிக்கையின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) அறிக்கையின்படி, 2026 ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஒரு சிறிய சரிவு பதிவாகியுள்ளது.
</p><p>
 

இந்த மாதத்தில் மொத்தம் 196,845 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். </p><p>இது, ஜூலை 2025 உடன் ஒப்பிடும்போது 1.7வீத சரிவைக் குறிக்கிறது.
</p><p></p><h2>மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை</h2><p>
 

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதத்தில் 44,547 வருகைகளுடன் இந்தியா உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881d5203-609e-47e3-a484-776adbd54965/26-6a7171de06370.webp' /></p><p>இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 26வீதம் ஆகும்.
</p><p>
 

ஐக்கிய இராச்சியம் 21,834 பார்வையாளர்களுடன் இரண்டாம் இடத்தையும், அதைத் தொடர்ந்து நெதர்லாந்து 12,493 பேருடனும், சீனா 12,336 பேருடனும், பிரான்ஸ் 10,102 பேருடனும் அந்த மாதத்தில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
</p><p>
 

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,343,418 ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T05:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலைய பெண்கள் கழிப்பறைக்குள் சிக்கிய மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-drugs-found-in-bia-toilet-1785816865"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-drugs-found-in-bia-toilet-1785816865</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி 18 லட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ஹஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>ஒரு கோடி 18 லட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. </p><p>இவை விமான நிலையத்தின் பெண்கள் மலசலகூடத்திலிருந்த இரண்டு குப்பைத் தொட்டிகளுக்குள் போடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. </p><h2><b>போதைப்பொருள் தொகை</b></h2><p>இந்த நிலையில் இந்தப் போதைப்பொருள் தொகையை நேற்று காலை விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50aec65a-4980-4ecd-883f-45e2542170b3/26-6a716ecc0cffa.webp' /></p><p>1 கிலோ 187 கிராம் எடைக் கொண்ட இந்த ஹஷிஸ் போதைப்பொருள் தொகை 7 பக்கெட்டுகளுக்குள் பொதியிடப்பட்டிருந்தது.</p><p> அத்துடன், அவற்றுடன் சில ஜோடிப் பெண்களின் காலணிகளும் சில பெண்களின் ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. </p><p>விமான நிலையத்திலிருந்து வெளியேறத் தயாராகும் போது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், விமானப் பயணி ஒருவர் போதைப்பொருள் தொகையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். </p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T04:47:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-egg-price-increase-1785816817"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-egg-price-increase-1785816817</id>
            <summary type="text">உற்பத்தி செலவு அதிகரிப்பால் எதிர்காலத்தில் ஒரு முட்டை விலை 50 ரூபாய் வரை உயரும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உற்பத்தி செலவு அதிகரிப்பால் எதிர்காலத்தில் ஒரு முட்டை விலை 50 ரூபாய் வரை உயரும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.</p><p>
இந்த நாட்களில் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் முட்டை ஒன்றின் சில்லறை விலை 47 முதல் 48 ரூபா வரை அதிகரித்துள்ளது.</p><p></p><h2>தீவனத்துக்கான சோளம் வழங்குவதில் நெருக்கடி&nbsp;</h2><p>
சோள இறக்குமதிக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்பட்டதன் காரணமாக கால்நடை தீவனத்துக்கான சோளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகர கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e64eca0c-bf88-4e1f-a7c1-382630438771/26-6a716dff07859.webp' />&nbsp;</p><p> </p><p>

கால்நடை தீவனத்தின் விலையும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நாட்டின் நாளாந்த முட்டையின் தேவை சுமார் 95 இலட்சமாக இருந்த போதிலும், நாளாந்த முட்டை உற்பத்தி 70 இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>

தற்போது நிலவும் காலநிலைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி குறையும் என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T04:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-red-alerts-kandy-kegalle-nuwaraeliya-1785817106"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-red-alerts-kandy-kegalle-nuwaraeliya-1785817106</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;தற்போது நிலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>தற்போது நிலவும் மழைக்கால வானிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகளை மேலும் நீடித்துள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை நீடிப்பு</h2><p>
</p><p>
அதன்படி, கண்டி மாவட்டத்தின் கங்கா இஹல கோரல, உடுதும்பரா மற்றும் பஸ்பாகே கோரல பிரிவுகளுக்கு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டைக்கும் இவ்வாறு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நார்வட்டத்திற்கும் நிலை 3இன் கீழ் வெளியேற்ற அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff19c6f-09e7-4dc0-a87d-1a1056cfe04b/26-6a716c1a5607a.webp' /></p><p>இந்த நிலையில் குறித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதேநேரம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் மக்கள் பகல் நேரங்களிலேயே பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T04:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை நிலைகுலையச் செய்ய சதி! அதிரப் போகும் சிறைகள் - வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/planned-to-make-tense-in-5-prisons-1785814404"></link>
            <id>https://tamilwin.com/article/planned-to-make-tense-in-5-prisons-1785814404</id>
            <summary type="text">திட்டமிட்ட குழுவொன்றினால் மேலும் 5 சிறைச்சாலைகளில் மோதல்களை ஏற்படுத்தி பாரிய அழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிட்ட குழுவொன்றினால் மேலும் 5 சிறைச்சாலைகளில் மோதல்களை ஏற்படுத்தி பாரிய அழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும் ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பகரமான நிலைக்குள்ளாக்கும் திட்டம் குறித்துப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களுக்கு பின்னணியிலும் இந்தச் சதிக்குழு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2><b>குழப்பகரமான நிலை</b></h2><p>

தும்பர, களுத்துறை, காலி, கொழும்பு மெகசின் மற்றும் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைகளில் இந்த மோதல்களை ஏற்படுத்தும் திட்டங்கள் உள்ளதாக புலனாய்வுப் பிரிவினரின் எச்சரித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/471f3044-36db-4815-9034-f5694377ab46/26-6a7160885afe8.webp' /></p><p>சிறைச்சாலைகளில் இவ்வாறான மோதல்களை ஏற்படுத்தி நாட்டையே குழப்பகரமான நிலைக்குள்ளாக்கும் திட்டங்களுக்கு பின்னால் பல அரசியல்வாதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
பல உயர் சிறைச்சாலை அதிகாரிகளும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரும் உள்ளமைக்கான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
</p><p>
இது தொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><h3><b> 

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு</b></h3><p>இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கிருந்த சொத்துக்களுக்கு 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73b66b3d-34d5-47da-8cc5-fb7600b38498/26-6a7161509302d.webp' /></p><p>இந்த மோதலுக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. குறிப்பிட்ட காரணமின்றி இந்த மோதலானது சதிக்குழுவின் வழிகாட்டலின் பேரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இதேவேளை, தற்போது இலங்கையில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-04T03:49:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களின் உரிமைகள் குறித்து ஜனாதிபதியுடன் சந்திப்பு : ஜீவன் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-s-opinion-on-today-s-meeting-1785814032"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-s-opinion-on-today-s-meeting-1785814032</id>
            <summary type="text">நாடாளுமன்றத்துக்குள் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி
உருவாக்கப்பட்ட ஒன்றியத்தின் சார்பில் ஜனாதிபதியை
நேரில் சந்தித்து மலையக மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்துக்குள் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி
உருவாக்கப்பட்ட ஒன்றியத்தின் சார்பில் ஜனாதிபதியை
நேரில் சந்தித்து மலையக மக்களின் காணி உரிமை, வீடமைப்புத் திட்டங்கள் மற்றும்
மாகாண சபை தேர்தல் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்
தொண்டமான் தெரிவித்துள்ளார். </p><p>நேற்றைய தினம்(03.07.2026) கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஜனாதிபதியுடனான
பேச்சின் பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இயற்கை அசம்பாவிதங்களால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ள நிலையில், மலையகத்தில்
காணி மற்றும் வீடமைப்பு பிரச்சுனை இன்னமும் இழுபறியாகவே உள்ளதாக அவர்
சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி</h2><p>இது அரசின் மீதான விமர்சனம் அல்ல என்றும், மாறாக நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு
முறைமைச் சார்ந்த பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/071de2bd-5b39-49e9-9fb5-7964c4e02f19/26-6a715f6832a67.webp' /></p><p>
பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை முறைமை காரணமாக காணிகளை விடுவிப்பதில்
பெரும் சிக்கல்கள் நிலவுவதுடன், காணிகளை விடுவித்தாலும் தோட்டத்தில்
பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வீடமைப்பு முன்னுரிமை அளிக்கப்படும் என
நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கின்றன எனத் தெரிவித்த அவர், இத்தகைய நடைமுறைச்
சிக்கல்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்றும்
தெரிவித்தார்.</p><p>அத்துடன், மலையக வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபா
நிதி போதுமானது அல்ல என்பதால், எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் இந்த
நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும்
அவர் தெரிவித்தார்.
</p><p>
கடந்த முறை ஒதுக்கப்பட்ட 7 பில்லியன் நிதியில் 67 வீதம் இந்திய அரசிடன்
நிதியுதவி என்பதால், இலங்கை அரசின் நேரடி நிதி ஒதுக்கீடு மலையகப் பகுதிகளுக்கு
அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>காணி உரிமை கட்டாயம் வழங்க</h2><p>காணி வழங்குவது சுலபமான காரியம் அல்ல என்றும், வளங்கள் மற்றும் மலையக
சுற்றாடல் பாதுகாப்பு குறித்த சவால்கள் இருக்கின்றன என ஜனாதிபதி தரப்பில்
சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அக்கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும்,
மலையக மக்களுக்கு உறுதியான காணி உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதில்
தாம் உறுதியாக இருக்கின்றார் எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec37ade2-3e15-4d42-8d55-74eb6841f380/26-6a715f68e759a.webp' /></p><p>
மேலும், மாகாண சபை என்பது தமிழர்களுக்கு மட்டுமேயான ஒரு விடயம் அல்ல என்றும்,
அது இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் அவசியமான அதிகார
பரவலாக்கத்தின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>13 மாவட்டங்களில் சிறுபான்மையாக (10 வீதம் முதல் 15 வீதம் வரை) வாழும் மலையகத்
தமிழ் மக்களுக்கு, தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழேயே
பிரதிநிதித்துவத்தைப் பெற முடிகிறது எனக் கூறிய அவர், தேர்தல் முறைமை
மாற்றப்பட்டால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கும் அபாயம்
உள்ளதால், புதிய அரசமைப்பு வரும் வரை பழைய தேர்தல் முறைமையிலேயே மாகாண சபைத்
தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததார்கள் எனவும்
தெரிவித்தார்.
</p><p>
ஜனாதிபதியுடனான சந்திப்பு மற்றும் வரவேற்பு மிகவும் சுமுகமாக அமைந்த போதிலும்,
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான நடைமுறை முடிவுகளை இனிவரும்
காலங்களிலேயே பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற ஜீவன்
தொண்டமான் தனது பேட்டியில் நிறைவாகத் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T03:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை பெய்தால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் - கரையோர பகுதி மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-situation-irrigation-department-announcement-1785811296"></link>
            <id>https://tamilwin.com/article/flood-situation-irrigation-department-announcement-1785811296</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;இன்று (04) காலை ஊடகங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இன்று (04) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை&nbsp;</h2><p>கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் மழை பெய்தபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed99fbbd-ca4b-49af-a779-699a0bf37376/26-6a715f62d111c.webp' />&nbsp;</p><p>இதன்படி, மகாவலி கங்கையின் நாவலப்பிட்டி மற்றும் பேராதனைப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக அவர் கூறியுள்ளார். </p><p>

மேலும், களனி கங்கையின் மேல் பகுதிகளான கித்துல்கல மற்றும் நோர்வூட் ஆகியவற்றின் நீர்மட்டமும் குறைந்து வருவதுடன், கித்துல்கல பகுதியில் சிறியளவு அதிகரிப்பு பதிவாகியிருந்தாலும் அது ஆபத்தான நிலைமை அல்ல என தெரிவித்துள்ளார். </p><p>

அவிசாவளை, லென்கொஸ் மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட தாழ்நிலைப் பகுதிகளின் நீர்மட்டமும் குறைந்து வருவதால், களனி கங்கையைச் சுற்றியுள்ள வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என அவர் கூறினார்.</p><h2>மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும்&nbsp;</h2><p>களு கங்கையைச் சுற்றியுள்ள இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளில் நீர்மட்டமும் படிப்படியாகக் குறைந்து வருவதால், அந்த ஆற்றுப் படுகையிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என சூரியபண்டார தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8392a5f9-0e76-4803-b353-ded7c8c89d29/26-6a715f6380abd.webp' />&nbsp;</p><p>

நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு கிடைக்கவில்லை என்பதுடன், இன்றைய தினமும் 25 மில்லிமீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவே எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். </p><p>

இதன் காரணமாக அந்த ஆறுகளின் நீர்மட்டம் சிறிதளவு உயர்ந்தாலும் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் கூறினார். </p><p>

அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயாவின் நீர்மட்டங்களும் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதுடன், அந்த நீர்மட்டங்கள் அபாயக் கட்டத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>எதிர்வரும் நாட்களில் ஈர வலயத்தின் மேல் சரிவுப் பகுதிகளில் மழை பெய்தால், ஏற்கனவே உயர் நீர்மட்டத்தில் இருக்கும் களனி கங்கை, களு கங்கை மற்றும் மகாவலி கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கோரியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T03:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை - ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-province-schools-holiday-announcement-1785812087"></link>
            <id>https://tamilwin.com/article/central-province-schools-holiday-announcement-1785812087</id>
            <summary type="text">தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை
வழங்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடரும் சீரற்ற காலநிலையால் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு நாள் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது</p><p>பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்த தகவல்கள்,
நிலவும் வானிலை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று (4) மதியம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>தொடரும் சீரற்ற காலநிலை</h2><p>மலையகப் பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாகக் கண்டி மற்றும் நுவரெலியா
மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a3a188-04e4-4aaf-a9c9-98aba9a75616/26-6a715944eea49.webp' />&nbsp;</p><p>மண்சரிவு அனர்த்தங்களில்
சிக்கி நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும், கண்டி மாவட்டத்தில் ஒருவரும் என
மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>
நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று வீடொன்றின்
மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த நால்வரின் சடலங்களும் மீட்புப்
பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த அனர்த்தத்தில் காணாமல்போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட
மீட்பு நடவடிக்கைகளின் போது, முதலில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஆண் ஒருவரினதும் சடலங்கள்
மீட்கப்பட்டன.</p><h2>மண்சரிவில் சிக்கி 5 பேர் பலி</h2><p>
</p><p>
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழைவீழ்ச்சியா ல் ஏற்பட்ட இந்த மண்சரிவுச்
சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e394e94-5897-42d7-bf41-3f200b0390c7/26-6a715945d0d6c.webp' /></p><p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 581
குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
இதேவேளை, கண்டி மாவட்டம், நாவலப்பிட்டி - சோலங்கந்தை பகுதியில் நேற்று மண்மேடு
சரிந்து வீழ்ந்ததில் வர்த்தக நிலையமொன்று சேதமடைந்துள்ளதுடன், 65 வயதுடைய ஆண்
ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து
வீழ்ந்ததில் படுகாயமடைந்த மேற்படி நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T03:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக அபாயம் உள்ள பகுதிகள் அடையாளம் - உடன் வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/16-737-people-live-in-high-risk-areas-1785808368"></link>
            <id>https://tamilwin.com/article/16-737-people-live-in-high-risk-areas-1785808368</id>
            <summary type="text">நாட்டில் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் 16,737 குடும்பங்கள் வசித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக&amp;nbsp;இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் 16,737 குடும்பங்கள் வசித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக&nbsp;இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,</p><p>&nbsp;</p><h2>வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு</h2><p> கனமழை காரணமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள உடுதும்பர , கங்கை இஹல கோறளை மற்றும் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87796154-8b3a-4f71-ace5-aba79c65c075/26-6a714fe50862a.webp' />&nbsp;</p><p>&nbsp;அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டும் என்றும், பாறைச்சரிவுப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கால்வாய்கள் மற்றும் வீகளின் இருபுறமும் கடைகளைக் கட்டும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
டிட்வா புயலால் நிலச்சரிவுகள் தீவிரமடைந்த பகுதிகளில், இந்த மழையின் காரணமாக அவை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.</p><p>
மேலும், அபாயகரமான சூழ்நிலை காரணமாக, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் வர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T02:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் குழப்பநிலை! சொகுசு ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leaders-in-a-secret-conversation-1785807372"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leaders-in-a-secret-conversation-1785807372</id>
            <summary type="text">கொழும்பிலுள்ள பிரபல&amp;nbsp;சொகுசு ஹோட்டலில்&amp;nbsp;இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலுள்ள பிரபல&nbsp;சொகுசு ஹோட்டலில்&nbsp;இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>&nbsp;முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர்&nbsp;அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்</span></p><p>இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3785228f-764d-4666-b597-ed8cdc6677f2/26-6a714523257f0.webp' /><span style="color: inherit; font-size: 1.75rem;"></span></p><p>இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோர் உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இருப்பினும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T02:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமடையும் காலநிலை - பல பகுதிகளில் திடீர் மின்தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deteriorating-weather-power-outages-in-many-areas-1785809206"></link>
            <id>https://tamilwin.com/article/deteriorating-weather-power-outages-in-many-areas-1785809206</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மத்திய மாகாணத்தின் பல பகுதிகள், கொழும்பின் சில பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மத்திய மாகாணத்தின் பல பகுதிகள், கொழும்பின் சில பிரதேசங்கள் உட்பட ஏராளமான பிரதேசங்களில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>&nbsp;</p><h2>மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை</h2><p>அதிக மழை மற்றும் கடும் காற்று காரணமாக மின் கம்பி மீது மரங்கள் உடைந்து விழுந்த காரணத்தினால் பல பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29835bfe-38b7-43fa-b2da-4b23cd444b47/26-6a714bb5cc378.webp' />&nbsp;</p><p>குறித்த பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>இதேவேளை, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.&nbsp;</p><p>அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T02:19:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைகள் நடைபெறுமா..! நாளை அவசர கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-a-l-exams-amidst-adverse-weather-1785806162"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-a-l-exams-amidst-adverse-weather-1785806162</id>
            <summary type="text">நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக நாளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.</p><p></p><h2>மோசமான வானிலை</h2><p>

தற்போதைய மழை நிலைமையை முன்னிட்டு, பரீட்சைகளை சீராக நடத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1974964b-14d8-4f3d-8a56-a5bf0f7b524e/26-6a7141060bd46.webp' /></p><p>
</p><p>
“உயர்தரப் பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மையமும் இணைந்து 5ஆம் திகதி கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம். </p><p>அதில் இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து திட்டமிடப்படும். பொதுவாக ஓகஸ்ட் மாதம் குறைந்த மழைப்பொழிவு காணப்படும் காலமாகும்.</p><p></p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p> தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இது தற்காலிகமான நிலைமை. 6, 7, 8 ஆகிய தினங்களுக்குப் பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e84a88bb-152f-40b9-a666-7f5c7094a738/26-6a714106b1bc5.webp' /></p><p> </p><p>பரீட்சைகள் 10ஆம் திகதிக்குப் பிறகே ஆரம்பமாக இருப்பதால், அதற்குள் இந்த பாதிப்பு பெருமளவில் குறைந்திருக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், ஓகஸ்ட் 6ஆம் திகதிக்குப் பின்னர், பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள சூறாவளி அமைப்பின் தாக்கத்தால், இலங்கையில் மீண்டும் மழைப்பொழிவு ஓரளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T01:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் இயற்கையின் கோரத்தாண்டவம்..! இதுவரையில் 6 பேர் பலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-weather-condition-updates-1785805009"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-weather-condition-updates-1785805009</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கனமழை</h2><p>
</p><p>
நேற்று (03) பெய்த கனமழையால் பொல்பிட்டிய, மொரஹேனேகம பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c552ca87-8298-4bb4-bd85-8a8853b0b326/26-6a713b2181a29.webp' /></p><p>

நேற்று பெய்த கடும் மழையினால் அந்த வீட்டின் மீது மண்குன்று சரிந்து விழுந்ததாகவும், வீட்டுக்குள் இருந்த நால்வரும் அதில் சிக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இதற்கிடையில், நாவலப்பிட்டி, சோலங்கந்த பகுதியில் அமைந்திருந்த கடையொன்றின் மீது திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>6 பேர் பலி&nbsp;</h2><p>
இந்த விபத்துக்குப் பின்னர் நாவலப்பிட்டி – தொலஸ்பாகே (Dolosbage) வீதியின் 2ஆம் மைல் கல் அருகிலுள்ள பகுதி முழுமையாக போக்குவரத்துக்கு மூடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03aada1-f43a-4ed2-9fd9-d7fd87b66bde/26-6a713b227a8b0.webp' /></p><p>

அதேவேளை, நேற்று மாலை வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானானந்தகம பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தை கடந்து சென்ற 53 வயதுடைய நபர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
</p><p>

மேலும், நேற்று மதியம் கினிகத்தேன பொலிஸ் பிரிவின் அம்பகமுவ பகுதியில் கனமழையால் நீரில் மூழ்கியிருந்த வீதியைக் கடக்க முயன்ற 45 வயதுடைய நபர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T01:12:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் சட்டவிரோத குப்பைக் கொட்டல்: உடனடி நடவடிக்கை கோரி மனு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valikamam-north-pradeshiya-sabha-submitt-petition-1785804436"></link>
            <id>https://tamilwin.com/article/valikamam-north-pradeshiya-sabha-submitt-petition-1785804436</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மனு கையளித்துள்ளனர்.
</p><p>
வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு நேற்றைய தினம்(3)&nbsp; சென்ற வலி. வடக்கு
பிரதேச சபையின் உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நேரில் சந்தித்து,
மனுவை கையளித்துள்ளனர்

வலி. வடக்கு பிரதேச சபையில் 38 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் குறித்த
மனுவில் கையளித்துள்ளனர்.</p><p></p><h2>வலி வடக்கு பிரதேச சபை</h2><p>
</p><p>
வலி வடக்கு பிரதேச சபை அமர்வில் நடைபெற்ற மாதாந்த அமர்வில், கீரிமலை
சுடலைக்கும் கொங்கிறீற் அணைக்கும் இடைப்பட்ட கடலரிப்பு ஏற்பட்ட தாழ்வான
பிரதேசத்தில் உக்கிய மண்ணினை கொட்டுவதற்கு வலி தெற்கு பிரதேச சபைக்கு அனுமதி
வழங்குவதென தீன்மானம் எடுக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08b0919-5a81-4b0b-98d1-2050f3188644/26-6a713857c4129.webp' /></p><p>

மாறாக, தற்போது வலி தெற்கு பிரதேச சபையினரால் மேற்குறிப்பிட்ட பகுதி அல்லாது
வேறொரு பகுதியில் உக்காத பொருட்கள் இலத்திரனியல் பொருட்கள், கண்ணாடிப்
பொருட்கள், சிகை அலங்கரிப்பு நிலைய கழிவுகள், நீர் தேங்கும் தகர டப்பாக்கள்
என்பன அனுமதிக்குப் புறம்பான முறையற்ற விதத்தில் தொடர்ச்சியான முறையில்
கொட்டப்பட்டு வருகின்றது.</p><p>

இது தொடர்பாக பல தடவைகள் வலி வடக்கு பிரதேச பிரதேச சபைத் தவிசாளருக்கு
அறிவித்தும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p><h2>கீரிமலையில் குப்பைகள்</h2><p>

அத்துடன், தற்போது குப்பை கொட்டப்பட்டு வருகின்ற இடமானது குடியிருப்பை அண்டிய
இடமாகவும் அதே வேளை பல புனித இடங்கள், ஆலயங்களை அண்மித்ததாகவும் காணப்படுவதால்
இவற்றின் புனிதத் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4161c545-fcc3-48f2-b74d-51f4e2e4e3a7/26-6a7138589a5ee.webp' /></p><p>

எனவே இது தொடர்பாக தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருவதோடு இது தொடர்பாக
நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
அதேவேளை, கீரிமலையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க
கோரி, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், சுற்றாடல் அதிகார சபை ஆகியோரிடமும்
முறைப்பாடு செய்ய வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவில் நாமல் - ரோஹித ராஜபக்சவின் பெயர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harak-katta-audio-leak-namal-rohitha-rajapaksha-1785782930"></link>
            <id>https://tamilwin.com/article/harak-katta-audio-leak-namal-rohitha-rajapaksha-1785782930</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. 

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. </p><p>

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹித ராஜபக்ச, சாகல ரத்நாயக்க மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
ஹரக்கட்டாவைச் சிறையிலிருந்து விடுவிக்கவும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கவும் சுமார் ரூ. 20 கோடி லஞ்சம் கோரப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
இந்த டீலில் சரித் அபேசிங்க, முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
 ஹரக்கட்டாவை (நதுன் சிந்தக) சிறையிலிருந்து விடுவிப்பதற்கும் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் ரூ. 20 கோடி (2000 லட்சம் ரூபா) லஞ்சமாகப் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>

இதில் சுமார் ரூ. 12 கோடி (1200 லட்சம் ரூபா) ஏற்கனவே ஹவாலா (உண்டியல்) முறை மூலம் துபாயில் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUvKma_B1SM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த நல்லாட்சி காலத்தின் கொள்கைகளை இந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்துகிறது - சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-following-past-good-governance-policies-1785801231"></link>
            <id>https://tamilwin.com/article/govt-following-past-good-governance-policies-1785801231</id>
            <summary type="text">தன்னார்வு தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும்
ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையிலான&amp;nbsp; அரசின் செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னார்வு தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும்
ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையிலான&nbsp; அரசின் செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை தோற்றுவிப்பதாகவே தெரிகின்றதென சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று முன்தினம்(02.08.2026)&nbsp; மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கடந்த நல்லாட்சி அரசாங்கம்</h2><p> </p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல.
இதனை விளங்கிக்கொள்ள வேண்டும்.</p><p>

சமீபகாலமாக இதனை நாம் பார்க்கின்றபோது கடந்த
நல்லாட்சி அரசாங்கத்தில் 2018 ஆம் ஆண்டில் இது முதன் முதலாக பேசப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/264e56de-6fd2-4e35-bc0a-59c102a57b4c/26-6a712e7c85763.webp' /></p><p>அப்போது அந்த அரசாங்கத்தால் இது சம்பந்தமான வரைபு ஒன்று
வெளியிடப்பட்டிருந்தது. 

அந்த வரைபிலே இருந்த சில விடயங்கள் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள்
மீது அரசியல் தலையீடுகளை கொண்டுவரும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டிருந்தன.
</p><p>
அதற்காக ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு சார்பற்ற
நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை சார்ந்த நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் எல்லாம்
எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. இந்த நிலையில்தான் அந்த வரைபு
சட்டமாக்கப்படுகின்ற முயற்சி கைவிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ae57dba-3afb-4e7a-bc93-2682ca0efd96/26-6a712e7d64dda.webp' /></p><p>
பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நிலைமை
காரணமாக இந்தச் சட்டத்தை முன்னெடுப்பதில் உரிய காலம் அவர்களுக்கு இல்லாததன் காரணமாக அது கைவிடப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:19:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்தேசியத்தை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட சக்திகள் - 2009க்குப் பிறகு ஏற்பட்டுள்ள பக்க விளைவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/forces-against-tamil-nationalism-since-2009-1785797703"></link>
            <id>https://tamilwin.com/article/forces-against-tamil-nationalism-since-2009-1785797703</id>
            <summary type="text">2009 மே மாதம் போர் முடிவடைந்த பின்னரான நிலைமையிலிருந்து 2026 ஆம் ஆண்டு வரை, கடந்த 17 ஆண்டுகளாக இலங்கை தீவில் சிறை கைதிகள் மீதான தாக்குதல்களும் கொலைகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2009 மே மாதம் போர் முடிவடைந்த பின்னரான நிலைமையிலிருந்து 2026 ஆம் ஆண்டு வரை, கடந்த 17 ஆண்டுகளாக இலங்கை தீவில் சிறை கைதிகள் மீதான தாக்குதல்களும் கொலைகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.</p><p>

அதேபோல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விதிக்கப்பட்ட மரண தண்டனை, போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பாதாள உலகக் குழுக்கள் செய்யும் கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.</p><p></p><h2>இனவாத பிரச்சினை</h2><p>
</p><p>
ஆகவே, இலங்கையில் 80 ஆண்டுகால இனவாத பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் இழுத்துச் செல்லப்படுவதன் பக்கவிளைவுகளே, அரசியலமைப்புச் சட்டங்களைக் கேள்விக்குட்படுத்துகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை சிங்கள அரசியல் தலைவர்கள் உணராமல் இல்லை. </p><p>இந்தத் தவறான வரலாற்றுப் போக்கை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

குறிப்பாக, 1980களில் போர் தீவிரமடைந்தபோது, ​​வடகிழக்கு, கொழும்பு மற்றும் மலையாளத்தில் வசித்து வந்த தமிழர்களின் வீடுகள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657ad611-d09f-43ad-a7c3-1ffb12a59c44/26-6a712e094670f.webp' /></p><p>

இந்தச் சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதோடு, சிறைகளுக்குள் கொலை செய்தல், தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களும் அரங்கேற்றப்பட்டன.</p><p>
இதற்கிடையில், தமிழ்-முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சில ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்பட்டன

தமிழ்ப் பகுதிகளில் சட்டவிரோதக் கொலைகள், துர்நடத்தைகள் மற்றும் கொள்ளை போன்ற செயல்கள் இந்தக் குழுக்கள் மூலம் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதால், பிராந்திய வேறுபாடுகளும் கடுமையாகத் தூண்டிவிடப்பட்டன.
</p><p>

வடகிழக்கில் நடைபெறும் பறிப்பு மீறல்கள், பௌத்த நோய்களை உருவாக்குதல் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை பௌத்த பாரம்பரியமாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன.</p><h2>ஊழல் மற்றும் மோசடிகள்</h2><p>

இந்தச் செயலுக்காக, 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்திற்கும் பௌத்தப் பிக்குகளுக்கும் வழங்கப்பட்ட வரம்பற்ற அதிகாரமே, இன்று கொழும்பின் தென்பகுதியில் நிகழும் அச்சுறுத்தல் கொலைகளுக்குக் காரணமாகும்.
</p><p>
2005 முதல் 2014 வரை ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்தபோது அரங்கேறிய ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார துர்செயல்களுக்கு இதுவே காரணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90545c92-671b-440d-8575-578be87e07dc/26-6a71239f96a6a.webp' /></p><p>
இந்தக் கசப்பான உண்மையை அனைத்து சிங்களத் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள்.

சட்டப்பூர்வமான கொலைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களின் பின்னணிகளையும் நேர்மையாக விசாரித்தால், 2009-க்கு முந்தைய போரின் போது ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.</p><p>


இந்த மூல காரணம் வெளிவந்தால், 'தேசிய மக்கள் சக்தி' என்ற பெயரில் தற்போது ஆட்சி அமைத்துள்ள ஜேவிபி-யும் குற்றவாளி கூண்டில் அடைக்கப்படும்.
ஏனெனில், 2009-ல் போரைத் தூண்டியவர் மகிந்த தான் என்பதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.</p><p>

ஆகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மூலமாகவும், ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடிகளை மட்டும் விசாரிக்கும் நகர்வுகள் மூலமாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, ஈழத் தமிழர்களின் விவகாரங்களை அதன் உள் இயக்கத்திற்குள்ளேயே முடக்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது.</p><p></p><h2>சிங்கள அரசியல் தலைவர்கள்</h2><p>
</p><p>
மகிந்த, ரணில் மற்றும் சந்திரிகா போன்ற சிங்கள அரசியல் தலைவர்களுக்கு கட்சி அரசியலைத் தாண்டி ஆதரவளிக்க வேறு மாற்று இல்லை.
இருப்பினும், அநுர, தந்திரமான ஒரு நகர்வின் மூலம் மகிந்த, ரணில், சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவும், சிங்கள மக்களின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார்.</p><p>
</p><p>
மகிந்த, ரணில் மற்றும் சஜித்துக்கு அநுரவின் இந்த தந்திரம் புரியவில்லை.
இப்போது இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86963a9f-5fcb-4c51-9a19-79dbdf83c9d7/26-6a7123a102c13.webp' /></p><p>
</p><p>
1948 ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பில், தமிழர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிறுபான்மையினர் காப்பீட்டுப் பிரிவை (பிரிவு 29) நடைமுறைப்படுத்த மறுத்த பௌத்த அரசியல் சிந்தனை, இன்றைய அநுர அரசாங்கம் வரை தொடர்கிறது.</p><p>

ஈழத் தமிழர்களால் கோரப்பட்ட போர்க்குற்ற விசாரணை அல்லது இனவாத விசாரணை போன்ற எந்தவொரு சர்வதேச விசாரணை முறைகளையும் ஏற்கக்கூடாது என்பதே இலங்கை ஒற்றை அரசாங்க கட்டமைப்பின் திட்டமிடல் நிலைப்பாடாகும்.
</p><p>2009-க்குப் பிந்தைய இந்த நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு முக்கிய அரணாக இலங்கை நீதித்துறை விளங்குகிறது. இதற்கிடையில், சந்திரிகா, மகிந்த, ரணில் மற்றும் கோட்டாபய ஆகியோர் தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள நீதித்துறையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.</p><h2>நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை</h2><p> </p><p>தற்போதும் நீதித்துறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் முடிவானது, நீதித்துறை சேவை ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் பொது ஆய்வுகள் எதுவுமின்றி, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவுக்கு, 2026 ஜூலை 27 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01a2f871-a2e8-488e-9c7e-d102ae6e619a/26-6a712e0a19d33.webp' /></p><p>

எனவே, தமிழ் தேசியக் கட்சிகள் இந்த வரலாற்றுச் சான்றுகளை உலக அரங்கில் வெளிக்கொணர்வதிலும், தமிழர்களுக்கு எதிரான அநீதியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலும், தமது அரசியல் நீதியை நிலைநாட்டுவதிலும் தோல்வியடைந்தன.
</p><p>
ஒளி சக்திகளின் நுட்பமான தாவர முறைகளுக்குப் பணிந்து, சிங்கள அரசியல் தலைவர்களின் நலன்களுக்கு ஏற்ப, தமிழ் கட்சிகள் இலங்கைக்குள்ளேயே ஒரு உள் பொறியியல் தீர்வை நோக்கிப் பயணிக்கின்றன.</p><p>

அந்த உள் பொறியியல் மூலம் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகவே, ஈழத் தமிழர்களிடையே உள்ள குடிமைச் சமூகப் பொது அமைப்புகளும் கல்வியாளர்களும் சிந்திப்பதற்கான தருணம் இதுவே.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்த்தரப்பை நடுநடுங்க வைக்கும் அநுர அரசு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-anura-government-makes-the-opposition-tremble-1785801748"></link>
            <id>https://tamilwin.com/article/the-anura-government-makes-the-opposition-tremble-1785801748</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 நீதிபதிகளின் ஓய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

 நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது பொருத்தமற்றது என சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> 


 இந்தநிலையில் நீதி அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இந்த கால நீடிப்பு குறித்த விளக்கங்களை அளித்து ஆசி பெற்றுள்ளனர். 

இது அரசாங்கம் இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p><p>

இந்த ஓய்வு வயது நீடிப்பு என்பது அரசாங்கத்திற்குச் சாதகமான ஒரு நகர்வு என்றும், இது தொடர்பான விவாதங்கள் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த செயல்பாட்டின் விளைவாக உருவெடுத்துள்ளதாகவும் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
</p><p>
சுருக்கமாகச் சொன்னால், சட்டத்துறை சார்ந்து அரசியலமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்த அச்சமே இந்த சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1maNlg0ypc8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மூடிமறைப்பதற்காகவே சிறை கலவரங்கள்..! எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-claim-equal-punishment-for-maithri-ranil-1785792067"></link>
            <id>https://tamilwin.com/article/prison-claim-equal-punishment-for-maithri-ranil-1785792067</id>
            <summary type="text">தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெற்று வருகின்ற சிறைச்சாலை மோதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? அல்லது இதில் வேறு&amp;nbsp;ஏதும் சதிகள் காணப்படுகிறதா? என&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெற்று வருகின்ற சிறைச்சாலை மோதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? அல்லது இதில் வேறு&nbsp;ஏதும் சதிகள் காணப்படுகிறதா? என&nbsp; சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.</p><p>லங்கா சிறியின் நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

மஹர சிறைச்சாலையில் மோதல் இடம்பெற்று சில மணி நேரத்திற்குள் அங்கு வருகைத்தந்திருந்த மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பில் விசாரித்தால் இது திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விடும்.
</p><p>
அன்று வருகைத்தந்திருந்தவர்களுள் ஒருசிலர் நாமல் ராஜபக்சவினுடைய கட்சியினரா? என்ற விமர்சனங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன. நாமல் ராஜபக்சவுடன் இணைந்திருந்தவர்களுடைய சில புகைப்படங்களும் அன்றைய காணொளிகளில் வெளியாகி இருந்தன.
</p><p>&nbsp;உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் ராஜபக்சர்கள் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பது தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் தற்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்திலே அவற்றை மூடிமறைப்பதற்காக இவ்வாறான கலவரங்களை இவர்கள் தோற்றுவிக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்த சம்பவம் தொடர்பிலான இன்னும் பல முக்கிய விடயங்களை இந்த நிகழ்ச்சியின் ஊடாக விரிவாக பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OV5mhqGqwJI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T23:38:57+00:00</updated>
        </entry>
    </feed>
