<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-17T17:23:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துருகிரியவில் டுபாய் கசுனின் உறவினர் மீது துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-athurugiriya-one-person-injured-1786986810"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-athurugiriya-one-person-injured-1786986810</id>
            <summary type="text">அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.8.2026) இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>

காயமடைந்தவர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான டுபாய் கசுனின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T17:20:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-police-officers-arrested-for-accepting-a-bribe-1786986221"></link>
            <id>https://tamilwin.com/article/2-police-officers-arrested-for-accepting-a-bribe-1786986221</id>
            <summary type="text">சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(17) இலஞ்ச ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>குறித்த கைது நடவடிக்கையானது இன்று(17) இலஞ்ச ஊழல் விசாரணை
ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>அண்மையில் கைதான போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து
விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப்
பெற்றதாக கூறப்படுகின்றது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், சாய்ந்தமருது
பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின்
பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f5dfa52-ee35-4f89-95a8-b02809b7a60b/26-6a833eeeb42b8.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T17:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 - கலாசார, உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2026-cultural-food-festival-kandiah-baskaran-1786983113"></link>
            <id>https://tamilwin.com/article/2026-cultural-food-festival-kandiah-baskaran-1786983113</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p>

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.</p><p> 

கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்று (17.08.2026) வரை இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.&nbsp;</p><h2>தனித்துவ அடையாளம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்தநிலையில், இன்று (17.08.2026) இத்திருவிழா நிகழ்விற்கு றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) வருகை தந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0787ca3-d167-4743-b001-c955ea05e0f5/26-6a8339c6a1d37.webp' /></p><p>
</p><p>
நிகழ்வில் வடக்கின் பாரம்பரிய உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப் பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, பாரம்பரிய கலை மற்றும் உணவுக் கலாசாரத்தை உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லும் முயற்சியாக இத்திருவிழா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இ. ஜீன் கரோல் வழக்கு: டொனால்ட் ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை மீண்டும் நிராகரித்தது அமெரிக்க உயர் நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-supreme-court-rejects-donald-trump-1786983511"></link>
            <id>https://tamilwin.com/article/us-supreme-court-rejects-donald-trump-1786983511</id>
            <summary type="text">எழுத்தாளர் இ. ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க
டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எழுத்தாளர் இ. ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க
டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அமெரிக்க உயர்
நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.</p><p>

கடந்த 1990களில் நியூயோர்க்கில் உள்ள பேரங்காடி ஒன்றில் வைத்துத் தம்மை
பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் அது குறித்து தவறான
தகவல்களை வெளியிட்டு தமக்கு அவதூறு ஏற்படுத்தியதாகவும் கூறி இ. ஜீன் கரோல்
வழக்குத் தொடர்ந்திருந்தார்.
</p><p>
இவ்வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், ட்ரம்ப் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும்
அவதூறு வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 5 மில்லியன் டொலர் நஷ்டஈடு
வழங்குமாறு உத்தரவிட்டது.</p><h2>நஷ்டஈடு</h2><p>
</p><p>
கடந்த ஜூன் மாதம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் தாக்கல் செய்த மனுவை உயர்
நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அம்மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி
ட்ரம்ப்பின் சட்டத்தரணிகள் மீண்டும் விண்ணப்பித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5073dfbf-189d-4e58-80af-0e4af4282ce7/26-6a8335099a6de.webp' /></p><p>
</p><p>
இந்நிலையிலேயே, அந்த மறுபரிசீலனை மனுவையும் உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி
செய்துள்ளது.
</p><p>
அதேவேளை, ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கரோலின் குற்றச்சாட்டுகளை
மறுத்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், அவருக்கு 83.3
மில்லியன் டொலர் நஷ்டஈடு விதிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:21:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advanced-level-exam-student-passes-away-1786981013"></link>
            <id>https://tamilwin.com/article/advanced-level-exam-student-passes-away-1786981013</id>
            <summary type="text">யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர்&amp;nbsp; பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.8.2026) இடம்பெற்றுள்ளது.இதன்போது அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர்&nbsp; பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>சிகிச்சை</h2><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை
எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a721f3af-a9e3-4f6b-a13d-0b89a00aa7fd/26-6a832d8ada213.webp' /></p><p> </p><p>இதன்போது அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.பின் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.</p><p>அதன்பின்னர் மீண்டும் 12 ஆம் திகதி
உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெற்றார்.</p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
பின்னர் நேற்றிரவு (16) உணவு அருந்திவிட்டு இருந்தவேளை வலிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து
விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/967c780f-b90b-4cd4-9440-da0f2c9e3585/26-6a832d8b912ee.webp' /></p><p>
</p><p>
அவரது மரணம் சம்பந்தமான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா
மேற்கொண்டார்.
</p><p>
உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் குறித்த மரணத்துக்கான காரணம்
கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T15:49:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deshabandu-tennakoon-drugs-crime-1786925811"></link>
            <id>https://tamilwin.com/article/deshabandu-tennakoon-drugs-crime-1786925811</id>
            <summary type="text">பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் &#039;சோல் பீச்&#039; (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் 'சோல் பீச்' (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கியதில் மறைக்கப்பட்ட உண்மை கதையொன்றை புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க வெளியிட்டுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்களில்,</p><p>சவேந்திர சில்வாவின் கோரிக்கையின் அடிப்படையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்தார் என்று குறித்த ஹோட்டலின் முகாமையாளர் ரிபா காதர் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
</p><p></p><h2>பழிவாங்கிய சம்பவம்</h2><p>இருப்பினும், இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டாகும். அதாவது தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய போது ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கோட்டுள்ளார். அதை கொடுக்க மறுத்ததால் பழி தீர்க்கும் முகமாக தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gKFV72M95uY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின்னர், அவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊடக பிரசாரத்திற்கு தேவையான கூட்டங்கள் அனைத்தும் 'சோல் பீச்' ஹோட்டலிலேயே நடைபெற்றன.
</p><p>இந்த பிரசாரங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் 'சோல் பீச்' ஹோட்டலே வழங்கியது. அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதும், "இதை நிரந்தரமாக்கிக்கொள்ள எனக்கு இவ்வளவு தொகை பணம் வேண்டும்" என்று கேட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d3c367-cb7b-41c4-8e3d-2cdd12638cd7/26-6a8252f52914c.webp' /></p><p>அதற்கு ஷிரான் பாஷிக், "இந்த நேரத்தில் அவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேசபந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனை நிராகரித்த பின்னர் தனக்கு உதவிய நபரை பழிவாங்குவதற்காக இந்த ஹோட்டலை இடித்தார். தான் கேட்ட பணம் கிடைக்காததால் பழிவாங்கும் நோக்கில் இதைச்செய்தார்.</p><p>அக்காலத்தில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் (OIC) என பொலிஸில் உள்ள அனைவரும் வந்து சாப்பிட்டு, குடித்தது இந்த 'சோல் பீச்' ஹோட்டலில் தான். இது அனைவருக்கும் தெரிந்த விடயம். </p><p>ஆனால், அதற்கு அடுத்ததாக உள்ள 'பரகுடா' (Barracuda) உணவகத்தில் பொலிஸாரால் சும்மா ஒரு தேநீர் கூட குடிக்க முடியாது என்றும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T15:35:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் பிரதமரின் அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல்: ஈரானிய எல்லையிலிருந்து ஏவப்பட்டதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drone-attack-on-iraqi-prime-minister-s-office-1786980440"></link>
            <id>https://tamilwin.com/article/drone-attack-on-iraqi-prime-minister-s-office-1786980440</id>
            <summary type="text">பர்ஸானியின் அலுவலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரதானியின் இல்லத்தைக்
குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பர்ஸானியின் அலுவலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரதானியின் இல்லத்தைக்
குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தாக்குதல், இன்று(17.08.2026) ஈராக்கில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற இத் தாக்குதல்களில்
எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என குர்திஸ்தான்
பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
“ஹதீத்-110” ரகத்தைச் சேர்ந்த இரண்டு ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
நேரடி அச்சுறுத்தல்</h2><p>
இந்த தாக்குதலானது ஈரானிய எல்லைப் பகுதிக்குள் இருந்தே ஏவப்பட்டதாக குர்திஷ்
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், ட்ரோன்கள் இலக்குகளைச் சரியாகத் தாக்கியதா என்பது குறித்த தெளிவான
விவரங்கள் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1537e31a-d7aa-4eef-b909-111a6074d673/26-6a83296773130.webp' /></p><p>

இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரதமர் மஸ்ரூர் பர்ஸானி, இது
சட்டவிரோதமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான ஒரு நடவடிக்கை எனக்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும்
விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய குர்திஷ் எதிர்ப்பு
அமைப்புகளுக்கு ஈராக் பிராந்தியம் புகலிடம் அளிப்பதாக ஈரானும் அதன் ஆதரவு
ஆயுதக் குழுக்களும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றன.
</p><p>
எனினும், அண்டை நாடுகளுக்கு எதிராகத் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்த
அனுமதிக்கவில்லை என ஈராக்கிய குர்திஷ் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T15:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் இதுவரை இல்லாத மிக மோசமான பேரழிவு: எபோலா உயிரிழப்பு உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/worst-disaster-ever-in-congo-1786978905"></link>
            <id>https://tamilwin.com/article/worst-disaster-ever-in-congo-1786978905</id>
            <summary type="text">ஜனநாயகக் கொங்கோ குடியரசில் மிக வேக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்வடைந்துள்ளது. 

இதன் மூலம் அந்நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகக் கொங்கோ குடியரசில் மிக வேக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்வடைந்துள்ளது. 

இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றில் பதிவான மிக மோசமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பரவலாக இது மாறியுள்ளது.
</p><p>
கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஏற்பட்ட எபோலா பரவலின் போது 2,299 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போதைய அலையின் தாக்கத்தினால் பலி எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.</p><h2>

அதிகரிக்கும் எபோலா தொற்று</h2><p>
</p><p>
நாட்டின் தேசிய பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைக்கால
அறிக்கையின்படி, இதுவரை 4,945 பேருக்கு நோய் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 101 புதிய
நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3097e10-5270-41ad-b121-58b9d29a1678/26-6a8322cb71414.webp' /></p><p>
</p><p>
வைரஸின் தீவிர பரவல் குறித்து எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவித்
திட்ட அதிகாரி டொம் பிளெட்சர், எபோலா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி வெகுவேகமாக பரவி வருவதாகவும், இதனைத் தடுக்க சர்வதேச சமூகத்தின் உடனடி ஒத்துழைப்பும்
வேகமான நடவடிக்கைகளும் அவசியமெனவும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இந்த முறை பரவிவரும் 'புண்டிக்புஜோ' ரக எபோலா வைரஸுக்கு இதுவரை
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது உரிய சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
</p><h2>
உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு</h2><p>

அத்துடன் மோசமான சுகாதார கட்டமைப்பு, நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலவும்
ஆயுத மோதல்கள் மற்றும் போக்குவரத்து வசதியின்மை என்ப </p><p>ன நோய் தடுப்புப்
பணிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.

தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் மரணிப்போரின் விகிதம் ஆரம்பத்தில் 20
சதவீதமாக இருந்தபோதிலும், தற்போது அது 46 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b429ebcc-0ca8-469e-8c1e-fef2d92e8fce/26-6a8322cc3c6c0.webp' /></p><p>
</p><p>
அதாவது நோய்த்தொற்றுக்குள்ளாகும் இருவரில் ஒருவர் உயிரிழக்கும் அபாயகரமான
சூழல் நிலவுவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் நிபுணர்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.</p><p>

தற்போதைய பரவல் வேகம் தொடருமானால், உலகளவில் பேரழிவை ஏற்படுத்திய 2014-2016 மேற்கு ஆபிரிக்க எபோலா பரவலையும் இது விஞ்சிவிடும் என உலக சுகாதார நிறுவனம்
எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T15:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-the-indian-ocean-become-the-lankan-ocean-1786974961"></link>
            <id>https://tamilwin.com/article/will-the-indian-ocean-become-the-lankan-ocean-1786974961</id>
            <summary type="text">இலங்கைத்தீவு இந்து சமுத்திரத்தின் கிழக்கு-மேற்காகவும் வடக்கு- தெற்காகவும் பிரிக்கும் பிரிகோட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத்தீவு இந்து சமுத்திரத்தின் கிழக்கு-மேற்காகவும் வடக்கு- தெற்காகவும் பிரிக்கும் பிரிகோட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அது இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுகிறது.</p><p> 

ஆயினும் அதன் அமைவிடம் சார்ந்து அதனுடைய உலகளாவிய அரசியல் முக்கியத்துவமும், பிராந்திய முக்கியத்துவமும் பெருமதி வாய்ந்தது. </p><p>

இலங்கைத் தீவின் புவியியல் அமைவிடம்தான் அதுவும் குறிப்பாக இந்திய துணைக்கண்டத்துக்கு நெருக்கமாக அது அமைந்திருக்கிறது என்ற அடிப்படையிலேயேதான் அதனுடைய கேந்திர மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.</p><p></p><h2>சமூகத்தை உயர்த்த வரும் புலம்பெயர் தமிழர்கள்</h2><p>
</p><p>
அதையும் மீறி தமிழ்ச் சமூகத்தை அறிவியல் மயப்படுத்த முனையும் முற்போக்காளர்களை தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களினால் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிடுவர்.

 இத்தகைய சூழ்நிலையில் ஓடுகாலிகளே தலைமை தாங்க முன்வருவர். </p><p>அந்த ஓடுகாலிகளுக்கு புகழாரம் சூட்டி புகழ்ந்து பேசுவதற்கு ஆயிரம் முட்டாள்கள் ஒன்று சேர்வர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/423c4e35-0e55-4adb-8067-e33cec85e5ca/26-6a83179d68e6e.webp' /></p><p> 

அந்த முட்டாள் கூட்டம் அறிவியளாலர்கள் மீது கல்லெறிந்து சமூகத்திலிருந்து தூரத்தூரத்தி விடுவர்.</p><p> அத்தகைய ஈழத் தமிழர்களை தோல்வியடைந்த சமூகமாகவே என்னால் அடையாளப்படுத்த முடிகிறது.



தோல்விச் சமூகமான ஈழத்தமிழர் எதிர்கொள்ளும் சிங்கள அரசும், சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த மதபீடங்களும், மகாநாயக்க தேரர்களும், சிங்கள மக்களும், அறிவியலில் பெருவளர்ச்சியை அடைந்திருக்கின்றனர்.&nbsp;</p><h2>இலங்கை - தமிழ்நாடு இணைக்கும் முயற்சி</h2><p>
 அவ்வாறே சிங்களக் கிறிஸ்தவர்களும் அறிவியலில் பெருவளர்ச்சியடைந்துள்ளனர். என்பதனை சிங்கள கிறிஸ்தவ திருச்சபையிலிருந்து வெளிவரும் கருத்துக்களிலிருந்து அறிய முடியும்.</p><p>

“Bridge project poses danger to sovereignty and Independence of SriLanka”என்ற தலைப்பில் the island எனும் இணையவழி பத்திரிகைக்கு(E-paper) கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் 24-06-2024ல் வழங்கிய பேட்டியில் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முன்மொழியப்பட்ட தரைவழிப் பாலம் அமைக்கும் திட்டம் “இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்“ என்று எச்சரித்து, கத்தோலிக்கத் திருச்சபை எதிர்த்துள்ளது.</p><p>

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறிவிடும் என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22c731e1-2b6f-4172-98de-ec4949d64a63/26-6a83194def5d1.webp' /></p><p> </p><p>அத்தோடு “The Catholic Church has opposed the proposed India-Lanka land bridge connectivity project, warning that it will endanger Sri Lanka’s sovereignty and independence.Colombo Archbishop Cardinal Malcolm Ranjith, speaking to the media at Ruwanwella on Friday, said that if implemented, the project would make Sri Lanka part of Tamil Nadu.

தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் அவ்வப்போது இந்நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்த வரலாறுகள் நம்மிடம் உள்ளன.</p><p> 

ஒவ்வொரு முறையும், அவர்களை விரட்டியடித்து அப்பகுதிகளை மீட்க சிங்கள மன்னர்கள் படைகளைத் திரட்ட வேண்டியிருந்தது. 

இப்போது, தமிழ்நாட்டையும் இலங்கையையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.</p><p> இது நிச்சயமாக இந்நாட்டை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாற்றிவிடும் என்று கர்தினால் கூறியுள்ளார்.



இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தரைவழி இணைப்புக்கான ஆரம்பகட்ட சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாகவும், முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஜூன்16ல் அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே கர்தினாலின் இந்தக் விமர்சனம் வந்துள்ளது.
</p><p>


 கர்தினால் மேலும் கூறியதாவது,</p><p> “இந்த பாலம் யாருக்குத் தேவை? உள்ளூர் மக்களின் கோரிக்கையினால் அல்லாமல், வெளிநாட்டினரின் கோரிக்கையைத் தொடர்ந்தே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f55b0166-94e7-40aa-a662-ded7ee61d0f1/26-6a83194ea24b1.webp' /></p><p> </p><p>

வெளிநாட்டிலிருந்து வரும் கட்டளைகள் நமக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திக்காமல் அவற்றைச் செயல்படுத்துவதில் இந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது.

 நமக்கு நன்மை பயக்காதவற்றைச் செயல்படுத்தாமல் இருப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.</p><p> இல்லையெனில், நாம் ஏற்கனவே எதிர்கொண்டுள்ள நெருக்கடியை விட மோசமான நெருக்கடியில் சிக்கிக்கொள்வோம்.

 நமது இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் நாம் செய்யக்கூடாது." என வலியுறுத்தியுள்ளார்.</p><h2>ரணில் பரிந்துரைத்த திட்டத்தின் நோக்கம்</h2><p>

ஜூலை 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் விக்ரமசிங்க தான் இரு நாடுகளுக்கும் இடையே தரைவழிப் பால இணைப்புக்கான முன்மொழிவை அப்போது இராஜதந்திர விளையாட்டாகவே முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>

அப்போது 25 கி.மீ மட்டுமே அகலம் கொண்ட பாக்குநீரிணைப் பகுதியில் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற துறைமுகங்களை இந்தியா இலகுவாக அணுக வழிவகுக்கும் என இந்தியர்களுக்கு ரணில் ஆசை வார்த்தை காட்டி அன்றைய இலங்கைக்கான பொருளாதார நலனை பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d823cac-1ac6-4867-a234-fd135c467c83/26-6a83194f53954.webp' /></p><p> </p><p>

இத்தகைய ஆசை வார்த்தைகளை சிங்களத்தரப்பு காலத்திற்குக்காலம் இந்தியர்களுக்கு அவிழ்த்துவிட்டு தமது தேவைகளையும் நலன்களையும் பெற்றுவிடுவர்.</p><p> 

இப்படியான இராஜதந்திர ஏமாற்றுக்களை உண்மைபோல நம்பவைக்கவே மல்கம் ரஞ்சித் ஆண்டகை போன்றவர்களின் எதிர்ப்புத் தப்புத்தாளம் துணைபுரிகிறது.</p><h2>தமிழர்களை மையமாக கொண்டு நடத்தப்படும் நாடகம்</h2><p>
 சிங்கள அரசின் இராஜதந்திர சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே சிங்கள கிறிஸ்தவ திருச்சபை தொழிற்படுவதோடு அவர்களிடம் இந்திய எதிர்ப்புவாதம் புரையோடிப் போயுள்ளதை அதனது செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கிறது.</p><p>

இத்தகைய பின்னணியில் சிங்கள சமூகத்தில் இந்துசமுத்திரம் பற்றிய பார்வையை சிங்கள புத்திஜீவிகளதும், அறிஞர்களதும் கருத்தியல் இப்படித்தான் அமைகிறது. இலங்கை–இந்தியா எதிர்காலத்திற்கான ஒரு பாலமா... அல்லது ஆபத்தா? என அவர்கள் அறிவுபூர்வமாக தத்துவார்த்த ரீதியில் ஆராய முற்படுகிறார்கள்.</p><p>அவ்வாறு ஆராய்வதன் ஊடாக அவர்கள் பின்வரும் கருத்தை முன்வைக்கின்றனர்.

"இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் எதுவும் இருந்ததில்லை என்றும் அங்கு இருப்பது 'ஆடம்ஸ் பிரிட்ஜ்' (ராம சேது) எனப்படும் இயற்கையான ஆழமற்ற திட்டுக்கள் மட்டுமே.</p><p>இது மனிதர்களால் அல்லாமல் இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு தொன்மையான இணைப்பாகும். என்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e50a141-ecec-4e19-9b80-0378184f2b34/26-6a831b495d45f.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
மேலும் "இன்று,ஒரு நவீன தரைவழி பாலத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது இந்திய தரப்பிலிருந்து எழுகின்றன. 

அவை விரைவான வர்த்தகம், சுற்றுலா வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவை இதன் மூலம் கிடைக்கும் என்று வாக்குறுதிகளை தருகின்றனர் இவை இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பயனளிப்பதாக அமையும். 

ஆனால் அது அரசியல் ரீதியாக இலங்கைத் தீவை பாதிக்கும்" உறுதியாக நம்புகின்றனர்.</p><p>

ஒரு சிறிய தீவு நாடான இலங்கைக்கு பாலம் கட்டுவதனால் உண்மையான ஆபத்துகள் ஏதேனும் உள்ளனவா? நமது இறையாண்மை மற்றும் மூலோபாய சுதந்திரம் (strategic independence) பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா?</p><p> 

பாதுகாப்பு மற்றும் எல்லை நிர்வாகம் சார்ந்த சவால்கள் எழக்கூடுமா? உள்ளூர் தொழில்கள் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகள் மீது தாக்கம் ஏற்படுமா? மிகப் பெரிய அண்டை நாட்டின் பொருளாதார ஆதிக்கம் மேலோங்குமா? மக்கள் இடம்பெயர்வு மற்றும் மக்கள்தொகை சார்ந்த அழுத்தங்கள் உருவாகுமா? என தத்துவார்த்த ரீதியாக கேள்வியையும் சிங்கள தரப்பு எழுப்புகிறது.</p><h2>பாலம் அமைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்</h2><p>
"நிரந்தரமான மூலோபாய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, மாற்றியமைக்க முடியாத இத்தகைய திட்டத்தை ஒரு பொது வாக்கெடுப்புக்கு (referendum) உட்படுத்தலாமா? 

ஒரு பாலம் என்பது வெறும் கான்கிரீட் கட்டுமானம் மட்டுமல்ல அது நமது தேசத்தின் தன்மையையே மறுவரையறை செய்யக்கூடிய ஒரு முக்கிய முடிவாகும்" என்பதையும் அவர்கள் கவனத்திற்கு கொள்கின்றனர்.</p><p>"நாம் அண்டை நாட்டுடன் இணையத் துணிகிறோமா, அல்லது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது தீவு நாட்டைப் பாதுகாத்து வந்துள்ள கடலை நாம் போற்றிக் காக்க வேண்டுமா? என்ற கேள்வி சிங்கள மக்கள் மத்தியில் வலுவாக இருப்பதனாலேயே அவர்கள் இலங்கைக்கு இந்தியாவுக்குமான பாலத்தை எதிர்க்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62219fbb-e29b-44c2-8de6-1b9130f4a98d/26-6a831b4a3c451.webp' /></p><p> 

அதனை கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி "இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பாலம் அமைப்பதற்கு தற்போது நாடு தயார் இல்லை" என்று மறுத்துவிட்டார் என்பதிலிருந்து அவர்கள் புவிசார் அரசியலை இலாவகமாக கையாள்கிறார்கள் என்பது தெளிவாகிறது.</p><p>

இலங்கைத் தீவின் இருப்பிடம் சார்ந்து ஈழத் தமிழர்கள் எடுக்கக்கூடிய மூலோபாய யூகம் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்</p><p>

தொடரும்...</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T14:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவு: ஜாரெட் குஷ்னர் நெதன்யாஹுவைச் சந்திக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/15-point-plan-gaza-jared-kushner-meet-netanyahu-1786975078"></link>
            <id>https://tamilwin.com/article/15-point-plan-gaza-jared-kushner-meet-netanyahu-1786975078</id>
            <summary type="text">அமெரிக்க தூதுவரான ஜாரெட் குஷ்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவைச்
சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க தூதுவரான ஜாரெட் குஷ்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவைச்
சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'அமைதி சபை' மூலம் முன்வைக்கப்பட்டுள்ள
காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவை நடைமுறைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
</p><p>காசா அமைதித் திட்டத்தில் ஹமாஸ் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் காரணியாக
உருவெடுத்துள்ளதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதையே இந்நகர்வு காட்டுவதாக
அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><h2>இஸ்ரேலுக்கு விஜயம்</h2><p>
</p><p>
அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த அமைதித் திட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை
நிறுத்துதல், ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலிய படைகளைத் திரும்பப்பெறுதல் மற்றும்
சர்வதேச அமைதிப் படையின் உதவியுடன் பாலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய
நிர்வாகத்தை அமைத்தல் ஆகிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33cacafc-ed77-4e77-8821-85ce92592412/26-6a831af708434.webp' /></p><p>
</p><p>
எனினும், ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை காசாவிலிருந்து
இஸ்ரேலியப் படைகள் விலகாது எனக் கூறி, இந்த 15 அம்ச திட்டவரைவை பிரதமர்
நெதன்யாஹு பகிரங்கமாக நிராகரித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அமெரிக்க நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், காலத்தை
கடத்துவதை விடுத்து திட்டத்தை இறுதி செய்யவே குஷ்னர் இஸ்ரேலுக்கு விஜயம்
மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T14:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-person-srilanka-disscussion-1786976630"></link>
            <id>https://tamilwin.com/article/missing-person-srilanka-disscussion-1786976630</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது
தொடர்பான முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது
தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (17) ஆளுநர் செயலகத்தில்
நடைபெற்றது.
</p><p>
காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் இவ்வாண்டு சர்வதேச வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில்
நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><h2>கலந்துரையாடல்</h2><p> </p><p>இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாண
மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பிலும், அதனுடன் இணைந்த ஏற்பாடுகள்
மற்றும் காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும்
நடவடிக்கைகள் தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5b1b64-b041-41ee-80e0-95047a30d86f/26-6a831a057c5c7.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச்
சேர்ந்தவர்களுக்கான நிகழ்வைச் சுமூகமாகவும் பயனுள்ள வகையிலும்
முன்னெடுப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய
முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p>

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், நீதி அமைச்சின் மேலதிக
செயலாளர், காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்,
நிறைவேற்றுச் சபை உறுப்பினர், பிராந்திய ஒருங்கிணைப்பாளர் மற்றும் விசாரணை
அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p>

மேலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவரின் இணைப்பாளர்கள், தூய்மை இலங்கை செயலணியின் மாவட்ட இணைப்பாளர்கள்,
ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்
ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T14:28:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் வழியில் குறுக்கிட்டால்..! ஓமானுக்கு ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-war-strait-of-hormuz-us-will-bomb-oman-1786969881"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-war-strait-of-hormuz-us-will-bomb-oman-1786969881</id>
            <summary type="text">ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமன் தலையிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமன் தலையிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>

Fox News-க்கு வழங்கிய நேர்காணலின்போது, “ஓமன் எங்கள் வழியில் குறுக்கிட்டால், அந்த நாட்டை கடுமையாக குண்டுவீசித் தாக்குவோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் அதிகாரிகளுக்கு இடையில் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27f91853-7ecb-4712-bc09-91489b86680e/26-6a830deaa85ff.webp' /></p><p> இதன் பின்னணியிலேயே ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
</p><p>
மேலும், ஈரான் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

“அவர்கள் சிறந்த போக்கர் வீரர்கள். ஆனால் அவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அமெரிக்காவின் இலக்கு</h2><p>
</p><p>
அதேவேளை, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தனக்கென எந்த காலக்கெடுவும் இல்லை என்றும், தான் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/244e7c38-bb0e-470d-82f6-54032b27b693/26-6a830de9f3382.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ளாதிருப்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான இலக்கு என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:34:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவில் முதன்முறையாக பெண் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-women-appointed-as-ntc-scheduler-officers-1786972432"></link>
            <id>https://tamilwin.com/article/two-women-appointed-as-ntc-scheduler-officers-1786972432</id>
            <summary type="text">வரலாற்றில் முதன்முறையாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அட்டவணையிடும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியிடங்களுக்காகப் புதித...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றில் முதன்முறையாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அட்டவணையிடும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>இப்பணியிடங்களுக்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட 18 அதிகாரிகளில் இவர்களும் அடங்குவர்.
</p><h2>போக்குவரத்து சேவைகளின் நிர்வாகம்</h2><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட திட்டமிடல் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்காக ஒரு நியமன விழா நடைபெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69d5922d-229a-4028-a964-5e1445813d96/26-6a830cb330bb2.webp' /></p><p>
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, பணிப்பாளர் நாயகம், சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிற அதிகாரிகள் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
</p><p>
இந்த நியமனங்கள் திட்டமிடல் செயல்பாடுகளை வலுப்படுத்தி, பொதுப் போக்குவரத்து சேவைகளின் திறமையான நிர்வாகத்திற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணத்திற்கு புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-deputy-inspector-general-of-police-appointed-1786972061"></link>
            <id>https://tamilwin.com/article/new-deputy-inspector-general-of-police-appointed-1786972061</id>
            <summary type="text">கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத்
குமார லியனகே இன்று (17) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி
பொலிஸ் மா அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத்
குமார லியனகே இன்று (17) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி
பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்
கொண்டார்.</p><p>

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த சட்டத்தரணி வருண
ஜெயசுந்தர கொழும்பிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்துக்கு இடமாற்றம்
செய்யப்பட்டார்.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
இதனையடுத்து உதவி பொலிஸ் மா அதிபரான சம்பத் குமார லியனகே விசேட புலனாய்வு
பிரிவு பணிப்பாளராக கடமையாற்றி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7f3a4ef-3262-4d18-81db-a6366ef947b1/26-6a830b81b4c00.webp' /></p><p>இந்தநிலையில் இவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா
அதிபராக பதவி உயர்வு பெற்றதையடுத்து இவரை கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை : அபாய வலயமாக இனங்காணப்பட்டுள்ள மாவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-severe-threat-in-gampaha-1786970471"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-severe-threat-in-gampaha-1786970471</id>
            <summary type="text">இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக உயர்வடைந்துள்ளதாக&amp;nbsp;தேசிய டெங்கு கட்டுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக உயர்வடைந்துள்ளதாக&nbsp;தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>கடந்த 16 நாட்களில் 6,914 டெங்கு நோயாளர்கள் பதிவானதை அடுத்தே இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
</p><p>
ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களில் அதிகபட்சமாக 21.32 சதவீதமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><h2>டெங்கு அபாயம்</h2><p> இதேவேளை, டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.</p><p>தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f7b1dc8-6fb3-4f62-be06-e1e1cf7cce05/26-6a8305664685c.webp' /></p><p>
</p><p>
 

மொத்த டெங்கு நோயாளர்களில் 52.96% அதாவது 48,725 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக இது மாறியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழித்துத் தங்கள் சூழலைத் தூய்மையாக வைக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் தகுதியுள்ள வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[108 நாட்கள் அகழ்வில் 500ஐ கடந்த எலும்புக்கூடுகள் - இன்றும் புதிதாக 9 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/over-500-skeletons-found-in-108-days-of-excavation-1786970573"></link>
            <id>https://tamilwin.com/article/over-500-skeletons-found-in-108-days-of-excavation-1786970573</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 54ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 54ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை 10 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகளில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 108 நாட்கள் அகழ்வு
பணிகளின் போது, 572 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>

இதேவேளை, இதுவரையில் அடையாளம் காணப்பட்ட 565 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c2b2d75-708c-49fe-b203-fa60131eb97c/26-6a83038672995.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a590f796-c3bc-4c75-be37-5a9cb06b8aa1/26-6a8303877d7be.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9112486-e174-446a-8393-e5b33f6d057e/26-6a8303885294b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-17T12:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sending-money-to-sri-lanka-need-not-fear-taxes-1786968003"></link>
            <id>https://tamilwin.com/article/sending-money-to-sri-lanka-need-not-fear-taxes-1786968003</id>
            <summary type="text">வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக வெளிநாட்டில் ஈட்டிய வருமானத்தை வங்கி முறை மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது, ​​வரி குறித்து அஞ்சத் தேவைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக வெளிநாட்டில் ஈட்டிய வருமானத்தை வங்கி முறை மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது, ​​வரி குறித்து அஞ்சத் தேவையில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையர் ஹிரான் மெனெரிபிட்டிய தெரிவித்துள்ளார்.
</p><h2>வெளிநாட்டில் ஈட்டும் வருமானம்</h2><p>
இலங்கையில் வரி நோக்கங்களுக்காக ஒருவர் வசிப்பவராகக் கருதப்பட்டால், வெளிநாட்டில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் இலங்கைக்குள் ஈட்டப்பட்ட வருமானம் ஆகிய இரண்டுமே வரிக்கு உட்பட்டவை என்று கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d8f18f-d0ee-4a43-b2e5-ee70c478d9c9/26-6a82fe4cb046a.webp' /></p><p>
இருப்பினும், சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி நோக்கங்களுக்காக ஒருவர் இலங்கையின் வசிப்பவராக இல்லாவிட்டால், அவர் இலங்கைக்கு வெளியே ஈட்டும் வருமானத்திற்கு இலங்கையில் வரி விதிக்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>அதன்படி, வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை வங்கி முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது, ​​வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் வரிகள் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளக்கூடாது என்று ஹிரான் மெனெரிபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படும்போது, ​​வங்கி அமைப்பு மூலம் அந்தத் தொகைக்குத் தனியாக வரி விதிக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக ஈட்டிய வருமானத்தை வங்கி அமைப்பு மூலம் நாட்டிற்குத் திருப்பி அனுப்பவும், அந்தப் பணத்தைச் சட்டப்பூர்வமாக முதலீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p><br><br><b><i>YOU MAY LIKE THIS..<br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F2fztRf3IXA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-17T12:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஒரு சிறைக்கைதியாம்.. மகிந்தவும் கோட்டாபயவும் வரிசையில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-who-will-become-president-from-prison-1786957538"></link>
            <id>https://tamilwin.com/article/namal-who-will-become-president-from-prison-1786957538</id>
            <summary type="text">இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிறைக்குள் இருந்து தெரிவாகலாம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். 

பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிறைக்குள் இருந்து தெரிவாகலாம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். </p><p>

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும் அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமலே&nbsp; ஜனாதிபதி&nbsp;</h2><p> </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவை மக்கள் தெரிவு செய்வார்கள். அவரை ஜனாதிபதியாக்குவதற்கு பொதுஜன பெரமுன தீவிரமாக செயற்படும். </p><p>


அநுர அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரையும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிறையில் அடைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. எமக்கு அது பிரச்சினையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd1e957-3c5b-4d42-a413-d1e54da8d4fb/26-6a82d9c4e0cda.webp' /></p><p>நீதித்துறையின் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. எம்மிடம் எஞ்சியிருப்பது நீதித்துறை மீதான நம்பிக்கை மாத்திரமே.
</p><p>
எனவே, நாமல் ராஜபக்சவையும் சிறையில் அடைத்தாலும் கூட சிறையில் இருந்தே அவரை ஜனாதிபதியாக்குவதற்கு நாங்கள் அயராது பாடுபடுவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47446bba-8b68-4724-bd64-1e61a563da8a/26-6a82d9c593637.webp' /></p><p>
</p><p>
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் பிரசாரத்தின் முதல்படியாக, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். </p><p> 

யாரும் எதிர்பாராத அளவில் பெருமளவிலான மக்கள் கூட்டத்தை அந்தப் பேரணியில் காண முடியும். இதனூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், நாமல் ராஜபக்சவுக்கு அவர்கள் தமது ஆதரவினை வெளிப்படுத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T12:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் - பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-washed-up-on-pasikuda-beach-1786968973"></link>
            <id>https://tamilwin.com/article/body-washed-up-on-pasikuda-beach-1786968973</id>
            <summary type="text">மட்டக்களப்பு - பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (17.08.2026) இடம்பெற்றதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் இன்று (17.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>

கரையொதுங்கிய சடலம்</h2><p>
</p><p>
குறித்த நபர் கடற்றொழிலுக்குச் சென்றிருந்த வேளையில் கடலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

சடலம் கரையொதுங்கியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29bc3c0-a25c-4c1a-8cbd-858b4f04c408/26-6a82fd60c53af.webp' /></p><h2>

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை</h2><p>
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பாசிக்குடா பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

எனினும், உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாசிக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T12:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றுடன் முடிவுக்கு வரும் அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்: மீண்டும் போர் வெடிக்குமா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-ceasefire-pact-expires-today-1786955188"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-ceasefire-pact-expires-today-1786955188</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நீடித்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU)...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நீடித்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்றுடன் (17) முடிவுக்கு வருகின்றது.</p><p>

ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து இரு தரப்பிலிருந்தும் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த ஒப்பந்தத்தின் கீழ், 60 நாட்களுக்குள் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>

ஆனால், கடந்த சில வாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால், பேச்சுவார்த்தைகள் தொடருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து ஈரான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39c58c1-b78a-4efc-87c9-f58679b1dac7/26-6a82fbc22d34c.webp' /></p><p>
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தர்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தாலும், அதை பேச்சுவார்த்தை எனக் கருத முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், அமெரிக்கா MoU-வை மீறியதாகவும், அதன் காரணமாகவே மீண்டும் மோதல்கள் ஏற்பட்டதாகவும் அராக்சி குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் பேச்சுவார்த்தை இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான புதிய பாதையை உருவாக்க ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தற்காலிக பாதை ஒன்றை உருவாக்கி வருவதாகவும், பின்னர் அது நிரந்தர பாதையாக மாற்றப்படும் என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><h2>இறுதி ஒப்பந்தம்</h2><p>
</p><p>

ஆனால், நீரிணை மீண்டும் முழுமையாக திறக்கப்படுவது அமெரிக்கா சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதைப் பொறுத்தே இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
</p><p>
மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியை அமெரிக்கா விரைவில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என தெரிவித்துள்ளார்.</p><p>

MoU-வில் என்ன இருந்தது? ஜூன் 17ஆம் திகதி ட்ரம்பும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/624e395c-a940-4ee2-aea3-4583dcccf6ce/26-6a82fbc2d6296.webp' /></p><p>
</p><p>
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், வளைகுடா பகுதியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தும், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
</p><p>
ஒப்பந்தத்தின் கீழ், இரு தரப்பும் அனைத்து முனைகளிலும், குறிப்பாக லெபனானிலும், இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>
இறுதி ஒப்பந்தம் அதிகபட்சம் 60 நாட்களுக்குள் எட்டப்பட வேண்டும் என்றும், இரு தரப்பும் சம்மதித்தால் அந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
</p><p>
 அமெரிக்காவுக்கான நிபந்தனைகள் இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்ட 30 நாட்களுக்குள் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
மேலும், ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்காக குறைந்தது 300 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குதல் மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியை மீண்டும் அணுகுவதற்கு வழிவகுத்தல் ஆகியவையும் அமெரிக்காவின் பொறுப்புகளாக குறிப்பிடப்பட்டிருந்தன.</p><p>

ஈரானுக்கான நிபந்தனைகள் ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும்.

மேலும், 60 நாட்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி கப்பல்கள் அந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்க வேண்டும். </p><p>

அத்துடன், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ மாட்டாது என்றும், தற்போதைய நிலையைத் தொடரும் என்றும் உறுதியளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b70412ad-e2f2-40e0-9143-2fa400cd3dd0/26-6a82fbc1795cd.webp' /></p><p>
</p><p>
ஒப்பந்தம் ஏன் தோல்வியடைந்தது? ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளிலேயே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
</p><p>
குறிப்பாக, இது வெறும் போர் நிறுத்த ஒப்பந்தமா அல்லது நீண்டகால அமைதிக்கான ஒப்பந்தமா என்பதில் இரு தரப்புக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தன.

ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டு வாரங்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மீண்டும் மோதல்கள் ஏற்பட்டன.
</p><p>
 இரு தரப்பும் ஒருவரை ஒருவர் ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம்சாட்டின. 

ஜூலை 7ஆம் திகதி, அமெரிக்கா தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், இந்த ஒப்பந்தம் “முடிவடைந்துவிட்டது” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.</p><h2>அமெரிக்கா புதிய தாக்குதல்</h2><p>
</p><p>
இதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளை மீறியதுடன் அவற்றை நிறுத்திவிட்டதாகவும், அதற்கு பதிலாக ஈரானும் தனது பொறுப்புகளை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தது.
</p><p>
ஜூலை இறுதி முதல் ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள் நடத்தியதாக வெளிப்படையாகத் தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், போர் முடிவுக்கு வந்ததற்கான உறுதியான அறிகுறிகள் இல்லை.
</p><p>
 அடுத்து என்ன நடக்கும்? MoU இன்று முடிவடையும் நிலையில், மீண்டும் முழுமையான போர் தொடங்குமா என்பது தெளிவாக இல்லை. இரு தரப்பும் தாங்களே போரில் வெற்றி பெற்றதாகக் கூறுகின்றன.

அமெரிக்கா ஈரானுக்கு பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்துவதை தனது முக்கிய உத்தியாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58714c75-7c46-446a-9469-4598c6647a7b/26-6a82fbc0bfec8.webp' /></p><p>

மறுபுறம், ஈரான் தாங்கள் போரில் வெற்றி பெற்றதாக தொடர்ந்து தெரிவித்து வருகிறது. </p><p>

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான மொஹம்மத் பாகர் காலிபாஃப், அமெரிக்காவும் இஸ்ரேலும் போரின் தொடக்கத்தில் நிர்ணயித்த இலக்குகளை அடையத் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் ஆரம்ப இலக்குகளில் ஈரானின் முழுமையான சரணடைவு, ஆட்சி மாற்றம், ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பது மற்றும் ஹெஸ்பொல்லா உள்ளிட்ட பிராந்திய குழுக்களுக்கான ஈரானின் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை அடங்கியிருந்தன.</p><p>

இதனால், ஒப்பந்தம் காலாவதியாகும் நிலையில் புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்குமா அல்லது அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடையுமா என்பதே தற்போது சர்வதேச அளவில் முக்கிய கேள்வியாக உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T12:18:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் உற்பத்திக்கு வரப்போகும் சவால் - அமைச்சர் விடுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-ni-o-may-affect-power-1786964478"></link>
            <id>https://tamilwin.com/article/el-ni-o-may-affect-power-1786964478</id>
            <summary type="text">தற்போது நிலவும் எல் நினோ வானிலையானது, அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும்&amp;nbsp; ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் இலங்கையின் மின்சார உற்பத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் எல் நினோ வானிலையானது, அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும்&nbsp; ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் இலங்கையின் மின்சார உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>
 

மின்கல சேமிப்பு அமைப்புகளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், மின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தயாரித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தேசிய மின்சார அமைப்பு</h2><p>

 

அமைச்சர் கருணாதிலகவின் கூற்றுப்படி, மின்கல சேமிப்புத் திட்டத்தின் முதல் கட்டம், இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேசிய மின்சார அமைப்புக்கு 160 மெகாவாட் (MW) மின்சாரத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6e07b32-99b7-4f71-bb6e-7550bb009aef/26-6a82f2ce60e49.webp' /></p><p>

 

கூடுதல் சேமிப்புத் திறன், மின்சார அமைப்பை வலுப்படுத்த உதவுவதோடு, தற்போது நிலவும் எல் நினோ சூழ்நிலைகளால் மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடிய காலங்களில் ஒரு மாற்று ஏற்பாட்டையும் வழங்கும் என்றும் கூறியுள்ளார்.</p><p>

 

அடுத்த ஆண்டு மின்சார உற்பத்தியில் மாறிவரும் வானிலையின் தாக்கத்திற்கு இலங்கை தயாராகி வருவதால், அதிகாரிகளும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T11:57:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களின் விலை உயர்வு பின்னணியில் மாஃபியா கும்பல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increasing-vehicle-prices-are-a-mafia-group-1786941234"></link>
            <id>https://tamilwin.com/article/increasing-vehicle-prices-are-a-mafia-group-1786941234</id>
            <summary type="text">இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் தன்னிச்சையாக உயர்த்தப்படுவதற்கு பின்னால் மாஃபியா கும்பல் செயற்படுவதாக பரவும் கருத்தை மறுக்க முடியாது என்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் தன்னிச்சையாக உயர்த்தப்படுவதற்கு பின்னால் மாஃபியா கும்பல் செயற்படுவதாக பரவும் கருத்தை மறுக்க முடியாது என்று வயம்ப பல்கலைக்கழகப் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% சுங்கக்கூடுதல் வரியால் வாகனங்களின் விலைகள் மீண்டும் உயரக்கூடும் என்ற தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே பேராசிரியர் இவ்வாறு கூறியுள்ளார்.</p><h2>வாகன இறக்குமதி&nbsp;</h2><p>
</p><p>
இந்த 50% சுங்கக்கூடுதல் வரியால், வாகனங்களின் விலைகள் ஐந்து இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரை உயரக்கூடும் என்று வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81064374-a0ce-4ee7-95fa-004f583caba5/26-6a82f6c772cf3.webp' /></p><p>
</p><p>
பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டிற்குள் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டிருந்த போதிலும், கடந்த ஆண்டு மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.</p><p>

இருப்பினும், மே 15 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு வாகன இறக்குமதி மீது 50% சுங்கக் கூடுதல் வரி விதிக்கப்பட்ட நிலையில், வரியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T11:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி எசல பெரஹரா..! 11 நாட்களுக்கு மூடப்படும் மதுபானசாலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/liquor-stores-in-kandy-to-close-for-11-days-1786964081"></link>
            <id>https://tamilwin.com/article/liquor-stores-in-kandy-to-close-for-11-days-1786964081</id>
            <summary type="text">கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு, நாளை முதல் (18)&amp;nbsp;கண்டியில் உள்ள சில மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாளை (18) முதல் ஆகஸ்ட் 28 ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு, நாளை முதல் (18)&nbsp;கண்டியில் உள்ள சில மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>நாளை (18) முதல் ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">11 நாட்களுக்கு மூட நடவடிக்கை</span></p><p>அதன்படி, கண்டி மற்றும் கங்காவத்தை கோறளை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் சில பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a75203d-3abb-4aad-8799-6ea511e6530f/26-6a82ed6e69348.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T11:32:39+00:00</updated>
        </entry>
    </feed>
