<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-18T01:38:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களின் அரசியல் வரலாற்றை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட முடியாது : எழுந்துள்ள விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksas-cannot-be-compared-nelson-mandela-1789694354"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksas-cannot-be-compared-nelson-mandela-1789694354</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாற்றைப் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்
இம்ரான் கான் மற்றும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன்
மண்டேலாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாற்றைப் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்
இம்ரான் கான் மற்றும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன்
மண்டேலாவின் அரசியல் போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது என்று இலங்கை தொழிலாளர்
மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க மக்களின் உரிமைகளுக்காகவும் இனவெறிக்கு
எதிராகவும் போராடியவர். </p><h2>நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு</h2><p>நாட்டைக் கொள்ளையடித்துப் பொருளாதாரத்தைச்
சீரழித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் சிறைக்குச்
செல்லவில்லை என்பதால், அவரது வரலாற்றை ராஜபக்ச குடும்பத்துடன் ஒப்பிடுவது
பொருத்தமற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5acc3ba4-e974-49c1-a802-a30cd4b5737f/26-6aac9473a469e.webp' /></p><p>இம்ரான் கான் பாகிஸ்தானின் அரசியல் சூழலில் ஊழலுக்கு எதிராகவும் அரசியல்
மாற்றத்துக்காகவும் போராடியவர் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அவருக்கு
எதிரான சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை ராஜபக்ச குடும்பத்துடன் ஒப்பிட
முடியாது.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை ஆட்சி செய்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் பல்வேறு
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் எனப் பல்வேறு
தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான சட்ட ரீதியான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p> யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை
நீதிமன்றங்களே தீர்மானிக்க வேண்டும்.

எனவே, தமது அரசியல் நிலைமையை நியாயப்படுத்துவதற்காக நெல்சன் மண்டேலா மற்றும்
இம்ரான் கான் ஆகியோரை முன்னுதாரணங்களாகக் கொண்டு ராஜபக்ச குடும்பத்துடன்
ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T01:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற ஊழியர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-employee-arrested-charges-a-bribe-1789692890"></link>
            <id>https://tamilwin.com/article/court-employee-arrested-charges-a-bribe-1789692890</id>
            <summary type="text">கொழும்பு கோட்டை நீதிமன்ற ஊழியரொருவர் ஐநூறு ரூபா இலஞ்சம் பெற்ற லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கோட்டை நீதிமன்ற ஊழியரொருவர் ஐநூறு ரூபா இலஞ்சம் பெற்ற லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு நகலை வழங்குவதற்காக 500 ரூபா இலஞ்சம் பெற முயன்றபோது, அந்நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு</h2><p>

கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு நிதித் தகராறு தொடர்பாகத் தாக்கல் செய்த வழக்கை சமரசம் செய்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு நகலை வழங்குவதற்கு ஈடாக, சந்தேக நபர் ஜூன் 30 ஆம் தேதி இலஞ்சமாக 500 ரூபா தொகையைக் கேட்டுப் பெற்றதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11e989ad-c01b-4a8c-877a-92ac110ee1d3/26-6aac8ec3c669b.webp' /></p><p>இது தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T01:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலே அடுத்த ஜனாதிபதி - மொட்டுக் கட்சி திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-ourselves-will-field-the-next-president-1789692029"></link>
            <id>https://tamilwin.com/article/we-ourselves-will-field-the-next-president-1789692029</id>
            <summary type="text">வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என்றும், அவரே
நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என்றும், அவரே
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர்
சாகர காரியவசம் தெரிவித்தார்.
</p><p>
கட்சித் தலைமையகத்தில் நேற்று(17.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
</p><h2>அரசின் தொலைநோக்கற்ற கொள்கைகள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும் அல்லது சிறையில்
அடைக்கப்பட்டாலும், தாய்நாட்டைப் பாதுகாக்கும் கட்சியின் வேலைத்திட்டங்கள்
தடையின்றித் தொடரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/043d6101-6193-495b-b287-e2f38371024c/26-6aac8aef47843.webp' /></p><p>தற்போதைய அரசு நாட்டின் திறைசேரியை நிரப்புவதற்கு புதிய முதலீடுகளையோ அல்லது
அபிவிருத்தித் திட்டங்களையோ முன்னெடுக்காமல், பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக
அதிக வரிகளைச் சுமத்துகின்றது.
</p><p>
இந்த அரசு வரிகளை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு வேடிக்கையான ஆட்சியாக
மாறியுள்ளது.

பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி அரசின் விவசாயிகள் மாநாட்டில்
விவசாய அமைச்சரும், அவரது பிரதி அமைச்சரும் கலந்துகொள்ளவில்லை. </p><p>அரசின்
தொலைநோக்கற்ற கொள்கைகள் காரணமாக சொந்த அமைச்சர்களே ஜனாதிபதியின் திட்டங்களைப்
புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது.&nbsp;</p><p>எமது கட்சியின் அனுராதபுரக் கூட்டத்தில் உரையாற்றிய அர்ஜுனா இராமநாதன்
எம்.பி., இனவாதத்தையோ அல்லது பிரிவினைவாதத்தையோ ஆதரித்துப் பேசவில்லை. இனிமேல்
பிரிவினைவாதத்துக்கு இடம் கொடுக்கப்போவதில்லை" என்றும குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T00:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நேரடி விமான சேவை கோரி கையெழுத்து வேட்டை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/petition-direct-flights-between-london-jaffna-1789692056"></link>
            <id>https://tamilwin.com/article/petition-direct-flights-between-london-jaffna-1789692056</id>
            <summary type="text">&amp;nbsp;லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரத்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் தோமஸ் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் புதிய மனு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். </p><p>
பிரித்தானிய வாழ் தமிழர்கள், வட இலங்கையில் உள்ள தங்கள் குடும்பத்தினர் மற்றும் கலாச்சார உறவுகளுடன் இலகுவாகத் தொடர்பைப் பேண இந்த சேவை உதவும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73c6f0a9-64b1-4619-9dcb-1894dee3548b/26-6aac88998a050.webp' /></p><p>
யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள் என்ற தலைப்பில் இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p> திருமணம், இறுதிச் சடங்குகள், ஆன்மீகத் திருவிழாக்கள் மற்றும் குடும்பச் சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானியத் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பயணச் சிரமங்களை இந்த மனு விரிவாக விளக்குகிறது.</p><p> 
ஹாரோ வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கரேத் தோமஸ், தற்சமயம் லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாத சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>லண்டனில் இருந்து வரும் பயணிகள் கொழும்பில் தரையிறங்கி, அங்கிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரம் மேலதிகமாகப் பயணிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்ல சாலை அல்லது ரயில் வழியில் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை பயணிக்க நேரிடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இந்த கூடுதல் பயணம் முதியவர்கள், சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள் மற்றும் அவசரக் குடும்பச் சடங்குகளுக்காகச் செல்வோர் மத்தியில் கடும் அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவை மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
லண்டன் - யாழ்ப்பாணம் இடையேயான நீண்ட நேரப் பயணம் வெகுவாகக் குறையும் எனவும், பிரித்தானியா மற்றும் வட இலங்கை இடையேயான குடும்ப, சமூக மற்றும் கலாச்சார பிணைப்புகள் வலுவடையும் எனவும் வட மாகாணத்தின் சுற்றுலாத் துறை, தொழில் முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரும் ஊக்கமளிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
லண்டன் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே வணிக ரீதியாகச் சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து செயல்படுத்த பிரத்தானிய அரசாங்கம், இலங்கை அதிகார அமைப்புகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கரேத் தோமஸ் வலியுறுத்தியுள்ளார்.</p><p> 
இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய பொதுமக்களும், புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் இந்த மனுவில் திரளாகக் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T00:41:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சுரேஷ் சலே! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிவரும் பயங்கர தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lankaeaster-suresh-sallay-1789691643"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lankaeaster-suresh-sallay-1789691643</id>
            <summary type="text">&amp;nbsp;உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் துள்ளியமாக தகவல் வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இந்தியாவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் துள்ளியமாக தகவல் வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு வந்தவர்.</p><p>இவரை கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சுரேஷ் சலே முயற்சித்துள்ளதாக மயிர்க் கூச்செறியும் தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p>இவர் தொடர்பில் முழுமையான செய்தியொன்று எமது தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவர் இந்திய 'Q' பொலிஸ் பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் இருந்த நெருங்கிய தொடர்பில் பல புலனாய்வுத் தகவல்களை இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு வழங்கியவர்.</p><p>குறிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இவர் வழங்கிய தகவல்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் நிச்சியமாக தாக்குதலை நிறுத்தியிருக்கலாம்.
</p><h2>
</h2><p></p><h2>தகவல் வழங்கிய முன்னாள் போராளி</h2><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு விசாரணையில் இவர் தொடர்பில் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் பல தகவல்களை தெரிவித்திருந்தனர்.</p><p>அவ்வாறான நிலையில் கடற் புலிகளின் முன்னாள் போராளியான தம்பியன் என்ற பெயரை உடைய இவரும் வழக்கு விசாரணைகளில் சாட்சியமளித்துள்ளார்.
</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் கடந்த காலத்தில் முறைப்பாடு செய்தவர்களை தாக்கவும், அவர்களுக்கு சேறு பூசவும் முயன்றார்கள் என்பதை நாம் அறிவோம்.</p><p>உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள்- புலனாய்வாளர்களுக்கு சேறு பூச முயன்றார்கள். நீதிமன்றத்திற்கு வந்து முறைப்பாட்டை செய்தவர்களை பல்வேறு வழிகளில் நிறுத்த முயன்றார்கள். </p><p>
இதன் அடுத்த கட்டமாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றபோது சுரேஷ் சலே துள்ளியமாக தகவல்களை வழங்கிய தம்பியனை (முன்னாள் கடற்படை போராளி) பேச்சுவார்த்தை செய்ய வருமாறு அழைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da11eb50-30cf-4888-b808-ce2fd7f621f7/26-6aac86fce7c4d.webp' /></p><p>ஆனால் அவர் போகவில்லை. அன்று தம்பியன் போயிருந்தால் இன்று இந்த விசாரணைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தற்போது நடத்தி வரும் விசாரணைகள் மிகவும் முக்கியமானவை. </p><p>ஏனெனில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட பல குற்றங்கள் இதற்குப் பின்னால் உள்ளன. ஒரே கும்பலின் சதித்திட்டம் இதற்குப் பின்னால் உள்ளது. </p><p>
எனவே, ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட இந்தக் குற்றங்கள் இந்த நேரத்தில் வெளிவரவில்லை என்றால், இந்த நேரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், இனி ஒருபோதும் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும். </p><p> இந்த விசாரணைகளை மேலும் விரைவுபடுத்த தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்க வேண்டும். புலனாய்வாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T00:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜே.ஆர். ஜயவர்தனவின் 17 வருட காலப் புரட்சியை தொடர வேண்டும்..! ரணில் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/j-r-17-year-revolution-escaped-poverty-back-1789690496"></link>
            <id>https://tamilwin.com/article/j-r-17-year-revolution-escaped-poverty-back-1789690496</id>
            <summary type="text">ஜே.ஆர். ஜயவர்தனவின் 17 வருட காலப் புரட்சியே எமது நாடு அன்று வறுமையில்
இருந்து விடுபடக் காரணமாக இருந்தது எனவும், அந்தப் புரட்சியைத் தொடர்ந்து
முன்னெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜே.ஆர். ஜயவர்தனவின் 17 வருட காலப் புரட்சியே எமது நாடு அன்று வறுமையில்
இருந்து விடுபடக் காரணமாக இருந்தது எனவும், அந்தப் புரட்சியைத் தொடர்ந்து
முன்னெடுத்துச் செல்வதே எமது அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய
தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க
தெரிவித்தார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் 120ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு தேசிய
நூலக மற்றும் ஆவண சேவைகள் சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று(17.9.2026) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனைக்
குறிப்பிட்டார்.</p><h2>17 ஆண்டுகாலப் புரட்சி</h2><p>மேலும் தெரிவிக்கையில், "ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது வருட நிறைவு விழா செயற்பாடுகளில்
கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு
விடுக்கின்றேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d6b0c3-a09e-4924-94b6-858ed7fbbde2/26-6aac860d40b28.webp' /></p><p>
ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஒரு ஜனநாயகக் சோசலிசக் கட்சியாகும். சொத்துரிமை
இலட்சக்கணக்கான மக்களிடையே பரவலாக்கப்படும்போது, அந்தச் சொத்துரிமை மூலமாக
உருவெடுக்கும் அதிகாரமும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றது. </p><p>ஒவ்வொரு
நபருக்கும் ஒரு சுதந்திர மனிதனாக வாழ்வதற்கும், தனது குடும்பத்தைப்
பேணுவதற்கும், சட்டபூர்வமான உரிமைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் அவசியமான
சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதே கட்சியின் நோக்கமாகும்.</p><p>இதனை அடிப்படையாகக் கொண்டு ஜே.ஆர். ஜயவர்தன 17 ஆண்டுகாலப் புரட்சியொன்றை
ஆரம்பித்து, அவருக்குப் பின்னர் வந்த ரணசிங்க பிரேமதாசவுடன் இணைந்து நாட்டின்
பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றியமைத்தார்.</p><h2>நீதிமன்ற அதிகாரத்தைச் செயற்படுத்தும்&nbsp;உரிமைகள் </h2><p>

1977 இல் ஆட்சியைக் கைப்பற்றும் போது 4 பில்லியனாக இருந்த மொத்த உள்நாட்டு
உற்பத்தி, வெளியேறும் போது 5 ஆயிரம் பில்லியனாக உயர்ந்தது." என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36164b51-58e2-4d16-a20b-4fea1103394a/26-6aac860dee087.webp' /></p><p>

மேலும், மகாவலி திட்டத்தை உருவாக்கிய காமினி திஸாநாயக்க, மகாபொல புலமைப்பரிசிலை
அறிமுகப்படுத்திய லலித் அத்துலத்முதலி ஆகியோரின் முயற்சிகளையும் அவர்
நினைவுகூர்ந்தார்.
</p><p>
ஜே.ஆர். ஜயவர்தன கொண்டுவந்த 1978 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டம் மூலமாகவே
இறைமை, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பன மக்கள் இறைமைக்குள்
உள்ளடக்கப்பட்டன என்றும்,126 ஆவது உறுப்புரை மூலம் அடிப்படை உரிமைகளில்
நீதிமன்ற அதிகாரத்தைச் செயற்படுத்தும் புரட்சிகரமான உரிமைகள் வழங்கப்பட்டன
என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-18T00:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் மருத்துவமனை 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/incident-where-14-children-died-pakistani-hospital-1789682833"></link>
            <id>https://tamilwin.com/article/incident-where-14-children-died-pakistani-hospital-1789682833</id>
            <summary type="text">பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ,
பிறந்த 14 குழந்தைகள் பலியான தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ
விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ,
பிறந்த 14 குழந்தைகள் பலியான தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ
விசாரணையில், தீவிர சிகிச்சை பிரிவில் தீ எச்சரிக்கை அலாரங்களோ அல்லது
தானியங்கி நீர் தெளிப்பான்களோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், மீட்புப் பணிகளின் போது அவசரகால வெளியேற்ற கதவுகள் பூட்டப்பட்டோ
அல்லது தடுக்கப்பட்டோ இருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>மின்சாரக் கசிவு காரணமாக</h2><p>
பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் (PIMS) கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி
ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரச அதிகாரி தலைமையிலான
குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7811e558-138d-4ad0-acbe-eaea136611fe/26-6aac8010e1ef0.webp' /></p><p>அதில், மின்சாரக் கசிவு காரணமாகத் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி மிகப்பெரிய
பேரழிவாக மாறியதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் முறையான மற்றும் நிறுவன
ரீதியான தோல்வியே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குளிரூட்டல் பிரிவின் மின்சார கேபிள் அதிக வெப்பமடைந்ததால் ஏற்பட்ட மின்சாரக்
கசிவே தீ விபத்துக்கு மிக முக்கியக் காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.4</p><p> கட்டடத்தில் புகை கண்டறியும் கருவிகள், தீ எச்சரிக்கை அலாரங்கள் அல்லது நீர்
தீயணைப்பு அமைப்புகள் செயல்படவில்லை.</p><h2>அலட்சியத்திற்குப் பொறுப்பான எட்டு அதிகாரிகள்</h2><p>தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஊழியர்களுக்கு, பிறந்த குழந்தைகளைப்
பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தோ, அவசரகாலத்தில் ஒட்சிசன் விநியோகத்தை
எவ்வாறு துண்டிப்பது என்பது குறித்தோ எவ்வித பயிற்சியும் வழங்கப்படவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ae99c1e-fe83-4652-afd0-f7e4775938d3/26-6aac801198d5c.webp' /></p><p>
குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்கவே கதவுகள் பூட்டப்பட்டதாக மருத்துவமனை
நிர்வாகம் நியாயம் கற்பித்தாலும், அவசரகால வழிகளை அடைப்பது ஏற்றுக்கொள்ள
முடியாதது என அறிக்கை கண்டித்துள்ளது.</p><p>

மேலும், தீ விபத்து தொடங்கி சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகே அவசர உதவி
எண்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதமே அதே மருத்துவமனையின் தாதியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு
எச்சரிக்கப்பட்டும், நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத்
தவறிவிட்டது.
</p><p>
இதையடுத்து, இந்த அலட்சியத்திற்குப் பொறுப்பான எட்டு அதிகாரிகளைப் பணிநீக்கம்
செய்து பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கவும், அரச மற்றும்
தனியார் கட்டடங்களில் தீ பாதுகாப்பு கணக்காய்வு நடத்தவும்
உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T00:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் துறைமுகத்தால் வீழ்ந்த இலங்கை - சிக்கலில் அநுர..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற ஏற்கனவே இருந்த முக்கிய உட்கட்டமைப்புகள் முழுமையான திறனை எட்டுவதற்கு முன்னதாகவே அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்ற பாரிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>

அத்தகைய திட்டங்களுக்காக வர்த்தகக் கடன்களைப் பெற்றுக்கொண்டு முதலீடு செய்தமை நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்பார்த்த அளவில் வருமானத்தை ஈட்டாத நிலையில், அதனை 99 வருட குத்தகைக்கு வழங்கியமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

ஒரு திட்டத்தை அமைப்பதற்காக கடன் பெற்று, பின்னர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்தச் சொத்தையே குத்தகைக்கு வழங்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
குறிப்பாக, ஊழலை கட்டுப்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vV22r-uibKE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T23:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படத்தை காட்டி பணம் வசூலித்த இளைஞர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-arrested-for-fraud-in-mahiyangana-1789682540"></link>
            <id>https://tamilwin.com/article/youth-arrested-for-fraud-in-mahiyangana-1789682540</id>
            <summary type="text">மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படத்தை காட்டி, பொய்யாகப் பணம் வசூலித்த 23 வயது இளைஞர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படத்தை காட்டி, பொய்யாகப் பணம் வசூலித்த 23 வயது இளைஞர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

மஹியங்கனை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் ஏறி, சம்பந்தப்பட்ட குழந்தையின் புகைப்படத்தைக் காட்டிப் போலி டிக்கெட்டுகளை விற்று, சந்தேக நபர் பணம் வசூலித்து வந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. </p><p>

இதன் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதன்போது, 2300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><h2> 

மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படம்</h2><p>
இவ்வாறு பணத்தை வசூலிப்பதற்காக, கண்டி - திகனாவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் புகைப்படத்தை அவர் பயன்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸாரின் விசாரணையின் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9681936-42fc-4e08-bf5e-d08dcca15e67/26-6aac636e6f9f6.webp' /></p><p> 

மேலும், அந்த மாற்றுத்திறனாளி குழந்தை தற்போது குணமடைந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அத்துடன், குறித்த குழந்தையின் உறவினர்கள் மஹியங்கனைக்கு வந்த பொழுது அவர்களுக்கு உதவுவதாக கூறி, உறுதியளித்து குழந்தையின் புகைப்படத்தையும் டிக்கெட்டுகளையும் பெற்றிருப்பதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞர் தொட்டவத்தை பகுதியை சேர்ந்தவர் என்றும், அவருக்கு எதிராக நீதிமன்றங்களால் 10 பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T22:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆம் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கையில் கைச்சாத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leaders-sign-22nd-amendment-1789679459"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leaders-sign-22nd-amendment-1789679459</id>
            <summary type="text">அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள 22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
நீதிபதிகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள 22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் நோக்கில் அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் நேற்று குறித்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><h2>ஏறக்குறைய 80 ஆண்டுகளாக</h2><p>
இது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb91e738-6d77-4622-bd57-7ea00f115685/26-6aac6170e6d4e.webp' /></p><p>

தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தம், நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.</p><p>ஏறக்குறைய 80 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை ஒழிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும் ஒரு தெளிவான வெளியை இது உருவாக்கும் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
எனவே, அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தைத் தோற்கடிக்கவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் ஒருமித்த குழுவாக இந்த அறிக்கையில் கையெழுத்திடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சட்த்தரணி சாகர கரியவசம், துமிந்த திசநாயக்க, சஞ்சீவ எதிரிமான்னே, டிலான் பெரேரா, ரவி கருணநாயக்க, முஜிபுர் ரஹுமான், அஜித் பி பெரேரா, தயாசிரி ஜெயசேகர, எம்.ஏ. சுமந்திரன், ஜி.எல். பீரிஸ், ராஜித சேனரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, சமன் ரத்னப்பிரிய, மைத்ரி குணரத்ன, வஜிர அபேவர்தன மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T21:54:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனிலிருந்து புறப்பட்ட விமானத்தில் மோதல் - நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/altercation-on-a-flight-departing-from-london-1789681399"></link>
            <id>https://tamilwin.com/article/altercation-on-a-flight-departing-from-london-1789681399</id>
            <summary type="text">லண்டனிலிருந்து பங்களாதேஷ் நோக்கிச் சென்ற “பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ்” விமானத்தில் நடுவானில் பயணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனிலிருந்து பங்களாதேஷ் நோக்கிச் சென்ற “பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ்” விமானத்தில் நடுவானில் பயணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>


லண்டனிலிருந்து பங்களாதேஷ் நோக்கி பயணித்த பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ் விமானத்தில், நடுவானில் பயணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.</p><h2>நடுவானில் ஏற்பட்ட பதற்றம்</h2><p> </p><p>

இதன்போது, இரண்டு ஆண் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மோதலாக உருவெடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c3d50b4-ed44-422f-ab56-5e54714e85eb/26-6aac5fcb6bc7f.webp' /></p><p> 

அதில் ஒருவொரு பயணியொருவரின் சட்டையும் கிழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


உடனே விமானப் பணிப்பெண்களும்(Cabin crew) மற்ற பயணிகளும் சேர்ந்து அந்த இருவரையும் விலக்கிச் சமாதானம் செய்துள்ளனர். </p><p>

இந்தச் சண்டை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Another &quot;Unruly Passenger&quot; 👊 This time on a Biman Bangladesh Boeing 777 flight!🤦‍♂️ https://t.co/vnpfe0t2pz</p>&mdash; BiTANKO BiSWAS (@Bitanko_Biswas) <a href="https://x.com/Bitanko_Biswas/status/1611670993222897666?ref_src=twsrc%5Etfw">January 7, 2023</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T21:46:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மோசமாக நடந்து கொண்ட கனேடிய பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பயணப் பையுடன் மருத்துவ மையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண் தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார். </p><p>அவர் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் அவசர உதவி எண் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. </p><h2><b>பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணை</b></h2><p>இந்த முறைப்பாட்டிற்கமைய, சுற்றுலாப் பிரிவுப் பொறுப்பதிகாரி மிலன் ராஜபதிரன தலைமையிலான குழுவினர் அந்த மருத்துவ ஆய்வகத்திற்கு சென்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99912ebe-e67a-47aa-a7d4-a88ed96e73f7/26-6aac11a3a15df.webp' /></p><p>கனேடிய பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் செல்லுபடியாகும் விசா அல்லது கடவுச்சீட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது. </p><p>சந்தேக நபர் பல ஆண்டுகளுக்கு முன்பு அஹங்கம பகுதியில் வசித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. </p><p>

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கனேடிய பெண், நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. </p><p>இந்தக் காலப்பகுதியில் அவரை வெலிசர பகுதியில் உள்ள வெளிநாட்டினருக்கான தடுப்பு முகாமிற்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-17T21:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கோர விபத்து - ஆசிரியர் உட்பட இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-jaffna-1789680322"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-jaffna-1789680322</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.</p><h2>இருவர் பலி</h2><p>

வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311c4dc8-0aae-4cfc-b851-fd997c4be977/26-6aac5aee9cc59.webp' /></p><p>
</p><p>
வேகன் ஆர் காரும், துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T21:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/observance-of-thileepan-s-39th-commemoration-event-1789677769"></link>
            <id>https://tamilwin.com/article/observance-of-thileepan-s-39th-commemoration-event-1789677769</id>
            <summary type="text">திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நேற்று (17.09.2026) சிவன் கோயில் மூன்றலில் மாலை 5 மணியளவில் இந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
</p><p>
நேற்று (17.09.2026) சிவன் கோயில் மூன்றலில் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அகரம் மக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>

இதன்போது, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், பொதுச்சுடரும் ஏற்றிவைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab888768-e940-4a39-b3b1-176c7c4738bf/26-6aac511bd621b.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நினைவஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adf4255-8f6e-4bd7-8b9a-450f354ac7bf/26-6aac511ccff37.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13cf49f-63c3-4670-a6cc-ff24f6b04eb1/26-6aac511da6205.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:44:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பில்லியன் டொலர் பணமோசடி வழக்கில் வங்கி அதிகாரிகளுக்குப் பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-officials-granted-bail-in-1-billion-money-1789677213"></link>
            <id>https://tamilwin.com/article/bank-officials-granted-bail-in-1-billion-money-1789677213</id>
            <summary type="text">பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான சட்டவிரோதப் பணமோசடிக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான சட்டவிரோதப் பணமோசடிக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு தனியார் வங்கி அதிகாரிகளைப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு நேற்று(17.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>

அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரும் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><h2>
பிணை உத்தரவு</h2><p>
அதேவேளை, பிணையாளிகள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தாங்கள் பணிபுரிந்த வங்கி கிளை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/433deeb0-c58d-4543-8fb2-2631e9d2f17e/26-6aac4f2b3e79e.webp' /></p><p>
</p><p>
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் முகமது ஜிஃப்ரியின் பிணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதவான் இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான தொழிலதிபரும் மற்றொரு சந்தேக நபரும் 1ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஸ்வீடன் பிரதமர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/swedish-prime-minister-resigns-election-defeat-1789676804"></link>
            <id>https://tamilwin.com/article/swedish-prime-minister-resigns-election-defeat-1789676804</id>
            <summary type="text">ஸ்வீடனில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததைத்
தொடர்ந்து, அந்த நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவி விலகலை அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்வீடனில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததைத்
தொடர்ந்து, அந்த நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
</p><p>
தேர்தல் திணைக்களத்தினால் இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தீர்மானத்தை எடுத்துள்ளார். </p><p>

மொத்தம் 349 இடங்களைக் கொண்ட ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில்,
எதிர்க்கட்சியான மைய இடதுசாரி கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றி
வெற்றியடைந்துள்ளது. </p><h2>தேர்தலின் பின்னர் பதவி விலகல்</h2><p>

பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தலைமையிலான ஆளும் வலதுசாரி
கூட்டணி 173 இடங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்துள்ளது.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்
பொருட்டு, தமக்கு பிரதமர் பதவியிலிருந்து விலக அனுமதி அளிக்குமாறு நாடாளுமன்ற
சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கேட்டுக்கொண்டுள்ளதாக உல்ஃப் கிறிஸ்டர்சன்
தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1530999a-6eb5-4a83-aef9-730718c54579/26-6aac4d339b7cf.webp' /></p><p>
</p><p>
இந்தத் தேர்தல் முடிவுகளையடுத்து, நான்கு வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்த
சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவியான மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் நாட்டின்
பிரதமராகப் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.</p><p>

எனினும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைய சிறிது
காலம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வருடங்களாக போராடும் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும்..! ஈரோஸ் கட்சியின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/criticism-by-the-eros-party-leader-1789676455"></link>
            <id>https://tamilwin.com/article/criticism-by-the-eros-party-leader-1789676455</id>
            <summary type="text">ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்டாரே அவ்வாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்டாரே அவ்வாறு
தமிழ் மக்களின் அரசியல் ரீதியான செயற்பாட்டுக்காக புனர்வாழ்வு அழிக்கப்பட்ட
விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா இணைந்து செயற்படவுள்ளதாக ஈரோஸ்
கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார். </p><p> 

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று(17.09.2026) தமிழீழ
விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.
பிரபாகரன் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


16 வருடங்களாக போராடும் மக்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

தேசிய தலைவர் பிரபாகரனால் ஒரு ஆயுத சக்தி மௌனிக்கப்பட வேண்டும், ஒரு அரசியல் சக்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் மாபெரும் சக்தி என்ற எண்ணப்பாட்டில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, சர்வதேச நாடுகளும் கூட அவதானித்துக் கொண்டிருந்தன.
</p><p>
இந்த நிலையில், அரசியல் தீர்வு தைப்பொங்கலுக்கு வரும், தீபாவளிக்கு வரும் என காலங்காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு, உச்சகட்ட விளிம்பில் இருந்து கொண்டிருக்கின்றனர்.
</p><p>
ஈரோஸ் பார்வையாளர்களாக இருந்தோம். ஏன் என்றால், தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdecd7e6-16ea-49fb-82c5-3a71d91bbc21/26-6aac4bc00f319.webp' /></p><p>
</p><p>
இன்று 16 வருடங்கள் கடந்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. மக்கள் வறுமையினால் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இனி மக்களின் துன்பங்களையும் கஷ்டங்களையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. </p><p>அதன் காரணமாக, ஈரோஸ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் களம் இறங்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.</p><p>

அதன் காரணமாக, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகள் என அனைவரையும் தொடர்புகொண்டு, இணைந்து செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T20:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் இணைந்து செயற்படுவது மிக முக்கியமானது - மார்க் கார்னி தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/european-union-and-canada-to-work-together-1789672262"></link>
            <id>https://tamilwin.com/article/european-union-and-canada-to-work-together-1789672262</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியமும் (EU) கனடாவும் இணைந்து செயற்படுவதன் மூலமே இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு மேலும்
வலுவடையும் என கனடாப் பிரதமர் மார்க் கார்னி தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியமும் (EU) கனடாவும் இணைந்து செயற்படுவதன் மூலமே இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு மேலும்
வலுவடையும் என கனடாப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராக கனடாவை இணைத்துக் கொள்வது தொடர்பான
முன்மொழிவை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இரு தரப்பினருக்கும் இடையிலான
உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
</p><h2>ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து</h2><p>
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்
உரையாற்றிய போதே கனடாப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8118a1-03ec-41ba-b2d5-e1585cf2a724/26-6aac42149d45f.webp' /></p><p>
"ஐரோப்பாவும் கனடாவும் தனித்தனியாகப் பலமானவை, ஆனால் இரண்டும் ஒன்றாக இணையும்
போது மேலும் பலமடைகின்றன" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>எனினும், கனடாவை இணை உறுப்பினராகச் சேர்ப்பதற்கான ஐரோப்பிய ஆணைக்குழுவின்
தலைவர் உர்சுலா வொன் டேர் லேயனின் இந்த முன்மொழிவை அமெரிக்கக் ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><h2>வர்த்தகங்களை நிறுத்த வேண்டி வரும்</h2><p>

இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு எதிரான பகையான செயலாகக் கருதப்பட்டால்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது மிகக் கடுமையான வரிகளை விதிக்க நேரிடும் அல்லது
சில வர்த்தகங்களை நிறுத்த வேண்டி வரும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ab3f1c-4e3b-47f7-b561-c01c7a182c7e/26-6aac421552ff0.webp' /></p><p>

ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலளித்துள்ள ஐரோப்பிய ஆணைக்குழு,
இந்த முன்மொழிவு எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும், இரு
தரப்பினரின் பொதுவான பலத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே முன்வைக்கப்பட்டது
என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

முக்கிய கனிமங்கள், பாதுகாப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு (AI), ஆற்றல்
பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஐரோப்பிய
ஒன்றியத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றக் கனடா எதிர்பார்ப்பதாகப்
பிரதமர் மார்க் கார்னி தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T20:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூர் பயணம் ஷிரந்திக்கு பாவமா..! சாபமா - நாமலின் ரகசிய MAIL அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/is-the-trip-to-singapore-a-pity-for-shiranthi-1789675640"></link>
            <id>https://tamilwin.com/article/is-the-trip-to-singapore-a-pity-for-shiranthi-1789675640</id>
            <summary type="text">நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மருத்துவ ரீதியிலான பிரச்சினை தொடர்பான பரிசோதனைக்காகவும், அறுவைச் சிகிச்சைக்காகவும் தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்புர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மருத்துவ ரீதியிலான பிரச்சினை தொடர்பான பரிசோதனைக்காகவும், அறுவைச் சிகிச்சைக்காகவும் தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்புரைக்கமைய ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் சென்ற நிலையில், வயதான காலத்தில் இவ்வளவு உடல்நலக் கோளாறுகளுடன் போராடுவதற்கு அவர் கடந்த காலங்களில் செய்த பாவங்கள்தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், பிரபாகரனின் தந்தை மற்றும் தாய் இருவரும் வயதான காலத்தில் இராணுவத்தினரால் சீரழிக்கப்பட்டனர். </p><p>

இவர்களின் பாவம்தான் மகிந்தவை எழுந்து நிற்க முடியாமலும், ஷிரந்தியை வயதான காலத்தில் சிங்கப்பூர் வரை கொண்டு சென்றுள்ளதோ என நினைக்க வைக்கின்றது.
</p><p>
வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள், குடும்பங்கள், குழந்தைகள் என முற்றிலும் இராணுவத்தினரால் சூறையாடப்பட்டபோது, நாட்டின் முதல் பெண்மணியாகப் போற்றப்படும் ஷிரந்தி மௌனம் காத்தார். ஆனால், தற்போது சிறைக்குச் சென்றுவிடுவோமோ என்ற பயத்தில் ஓடி ஒளிய வேண்டிய நிலை வந்துவிட்டது.
</p><p>
எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் கைதான நாமல் ராஜபக்சவின் மின்னஞ்சல் மூலம் மற்றுமொரு நபர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுபோன்று, மனிதாபிமானமற்ற வகையில் நடந்துகொண்ட ராஜபக்சர்களின் நிலை குறித்து உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகின்றது “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3-h8lpvum3c" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:08:54+00:00</updated>
        </entry>
    </feed>
