<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-11T06:26:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! பதிவாகியுள்ள புதிய விலை நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1789106815"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1789106815</id>
            <summary type="text">கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.09.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.சந்தை நிலவரங்களின்படி, நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.09.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.</p><p>சந்தை நிலவரங்களின்படி, நேற்றுடன் (10) ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 4000 ரூபா குறைந்துள்ளது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>
</p><p>
இதன்படி, இன்று (11) காலை 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 343,200 ரூபாவாகக் குறைந்துள்ளது.
</p><p>இதேவேளை நேற்றைய தினம் இதன் விலை 347,000 ரூபாவாக இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3df7b03-5297-40aa-8677-bdcedba8b47b/26-6aa39db3e5e9f.webp' /></p><p> அதேவேளை, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று 377,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 373,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T06:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-people-power-mc-members-joint-request-1789105171"></link>
            <id>https://tamilwin.com/article/national-people-power-mc-members-joint-request-1789105171</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் கருவறை
தொடக்கம் கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் கருவறை
தொடக்கம் கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும்
செய்யவில்லை. எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் எங்களிடம்
ஒப்படைக்கவும் என தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

மாநகரசபையின் 17ஆவது சபை அமர்வு நேற்று(10.09.2026) மாநகரசபை முதல்வர்
சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.</p><p>இதன் பின்னர் மாநகரசபையின்
எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான முத்துலிங்கம்
துதீஸ்வரன், முனுசாமி உதயராஜ், பிரேம்குமார், ஜெம்ஸ், லதீப் ஆகியோர்
ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.</p><h2>எல்லைக்குள் இருக்கும் வீதிகள்</h2><p>

இன்று மாநகர சபையின் 17ஆவது சபை அமர்வு இடம்பெற்றுள்ளது. இந்த மாநகர சபை
ஆட்சியை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாக இந்த முதல்வருடன்
எதிர்கட்சி இல்லாமல் அனைத்து வேலைகளுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கி வந்தோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98dab5c-fc08-4b0c-ad50-7b7bbd7ab716/26-6aa398f04e862.webp' /></p><p>இருந்தபோதும்; கருவறை தொடங்கி கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகரசபையின்
செயற்பாடுகள் எவையுமே செயல்படுத்தப்படவில்லை. நீங்களும் சபையில்
இருக்கின்றீர்கள். பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என மக்கள் கடும் விசனங்கள்
தெரிவித்து வருகின்றனர்.</p><p>
மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் வீதிகள், கழிவகற்றல், வீதி மின்விளக்கு,
வடிகான் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.</p><p>வீதி மின்விளக்கு ஒளிராததால் இன்று வீதி விபத்துக்கள் மற்றும் பல
அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றது. கட்டாக்காலி மாடுகள் தொல்லை தொடர்பாக
எதுவும் நடைபெறவில்லை.

இந்த மாநகர சபை அமர்வில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது எதுவும் முற்றுப்
பெறவில்லை.</p><p>கடந்த வருடம் மாநகர சபை உட்பட்ட பிரதேசங்கள் பல மழை வெள்ளத்தில்
மூழ்கியது. காரணம் வடிகான்கள் துப்பரவு செய்யவில்லை. இது தொடர்பாக கடந்த
காலத்தில் முதல்வரிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை.</p><h2>பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை</h2><p>இந்த வருடம்;; மாநகரசபை பகுதிகளில் உள்ள பிரதேசம் பல மழை வெள்ளத்தில் மூழ்கப்
போகிறது. எனவே மழை வெள்ளத்தால் தாண்டால் அதற்கான முழு பொறுப்பும் முதல்வர்
எடுக்க வேண்டும்.</p><p>

மட்டு மாநகர சபைக்கு சொந்தமான மஞ்சம் தொடுவாய் பிரதேசம் அதனை காத்தான்குடி
நகரசபை அத்துமீறி அபகரித்து வருகிறது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக
தெரிவித்து இதுவரை ஒன்றும் செய்யவில்லை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb8e403-c381-47ff-99db-8477a53aca31/26-6aa398f17b71b.webp' /></p><p>அவ்வாறே பணம் படைத்தவர்கள் காணிகளை பிடித்து அடைத்துள்ளனர். ஏழைகள்
துன்பப்படுகின்றனர். குறுக்கு வீதிகள் 10 அடி அகலம் கொண்டதாக நில அளவீடு
செய்திருந்த போதும் பணம் உள்ளவர்கள் அதை அபகரித்துள்ளனர்.</p><p> இதனால் அந்த
வீதியில் உள்ள ஏனைய மக்கள் சடலத்தை கூட கொண்டு வர முடியாத அளவிற்கு
ஆக்கிரமித்துள்ளனர். மாநகரசபை சட்டத்தை ஏன் பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.</p><p>இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதை
வன்மையாக கண்டிக்கின்றோம்.&nbsp; எனவே இந்த மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் தேசிய மக்கள் சக்தியிடம்
ஒப்படைத்தால் 6 மாதத்துக்கு வீண் விரயங்களை நிறுத்தி நாட்டைக் கட்டியெழுப்பிய
மாதிரி இந்த மாநகரசபையையும் கட்டியொழுப்புவோம். </p><p>இது மக்கள் அரசாங்கம் மக்கள்
ஆணையின்படி மக்களுக்கு சிறந்த சேவையை செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T06:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ஆலயமொன்றில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போன மாம்பழம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mango-auctioned-five-hundred-thousand-in-vavuniya-1789105344"></link>
            <id>https://tamilwin.com/article/mango-auctioned-five-hundred-thousand-in-vavuniya-1789105344</id>
            <summary type="text">வவுனியா - வேப்பங்குளம், சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக
தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வேப்பங்குளம், சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக
தொகைக்கு ஏலம்போயுள்ளது.</p><p>

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழ திருவிழா நேற்று இடம்பெற்றுள்ளது.</p><h2>கோவில் வளர்ச்சி நிதி</h2><p>
</p><p>இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக
ஏலத்தில் விடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e81b009-dd22-4ecf-920f-560524aa33ba/26-6aa399fd9bc9a.webp' /></p><p>
</p><p>அந்த மாம்பழம் 505000/=( ஐந்து இலட்சத்து ஐந்தாயிரம் ) ரூபாய்க்கு ஏலத்தில்
விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியாவை சேர்ந்த இ.மோகனதாஸ்
குடும்பத்தினர் குறித்த தொகையை வழங்கி மாம்பழத்தை பெற்றுக்கொண்டனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e81b009-dd22-4ecf-920f-560524aa33ba/26-6aa399fd9bc9a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eba441b4-b726-42fd-b9c0-c461dbd83b58/26-6aa399fe718ae.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T06:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-bomb-attack-information-released-police-1789093479"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-bomb-attack-information-released-police-1789093479</id>
            <summary type="text">புதிய இணைப்புதெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணமென&nbsp;பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><p>தவறான இலக்கு காரணமாகவே குறித்த இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>அவர்களின் தந்தை (55) களுபோவில போதனா வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>போதைப்பொருள் வலையமைப்பு</h2><p>காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5069f853-508f-4fdd-b139-207331bf889b/26-6aa3980e2132a.webp' /></p><p>மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>&nbsp;குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் செயல்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93ecd2e0-b149-4e89-b955-65a99900e3bc/26-6aa3980d6037d.webp' />&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தெஹிவளை - சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.</p><p>இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கைக்கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2>தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள்</h2><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed2e9d97-0e0b-4c8c-8a8f-6766da0c7b9e/26-6aa36a66f0f2b.webp' /></p><p>உயிரிழந்தவர்கள் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் என பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-11T05:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிநுட்ப ஆளணிப் பற்றாக்குறைக்கு வடக்கில் உடனடித் தீர்வு காண வேண்டும் - ஆளுநர் வேதநாயகன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-vedanayagam-s-request-1789104161"></link>
            <id>https://tamilwin.com/article/governor-vedanayagam-s-request-1789104161</id>
            <summary type="text">வட மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள
வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து,
ஒதுக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள
வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து,
ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் தரமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத்
தடையாக உள்ள தொழிநுட்ப ஆளணிப் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு காணப்பட
வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
</p><p>
வட மாகாணத்தில் பல்வேறு நிதி மூலங்களின் கீழ் ஒரே நேரத்தில்
முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழிநுட்ப
மற்றும் நடைமுறை சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் ஆளுநர்
செயலகத்தில் நேற்றைய தினம் (10.09.2026) நடைபெற்றது.</p><h2>பணிச்சுமை</h2><p>
</p><p>
வடக்கு மாகாணத்திற்கு 2026ஆம் ஆண்டில் கிடைக்கப்பெறும் அபிவிருத்தி நிதியும்
பணிச்சுமையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில்,
உள்ளூராட்சி தொழில்நுட்ப ஆளணியிடம் தற்போது 1034 வேலைத்திட்டங்களுக்கான
சுமார் 7 ஆயிரத்து 6 மில்லியன் ரூபா பெறுமதியிலான பணிச்சுமை காணப்படுவதாகவும்,
இவற்றில் பல்வேறு புதிய நிதித் திட்டங்களின் கீழான வேலைகளும்
உள்ளடங்குவதாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p>

எனினும், இவ்வளவு பெரிய பணிச்சுமைக்கு ஏற்றளவில் தொழில்நுட்ப ஆளணி இல்லாததால்
மதிப்பீடு தயாரித்தல், கேள்விகோரல் நடைமுறை, மேற்பார்வை, சான்றளித்தல் மற்றும்
பணிகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட பல கட்டங்களில் தாமதங்கள் ஏற்படுவதாகக்
குறிப்பிடப்பட்டது. </p><p>தற்போது அங்கீகரிக்கப்பட்ட 141 தொழில்நுட்பப் பதவிகளில்
129 பேர் மட்டுமே பணியில் இருப்பதுடன், மேலும் 194 தொழில்நுட்ப ஆளணி
தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வன்னிப் பகுதிகளில் சில தொழில்நுட்ப
உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து விலகியுள்ளமையும் நிலைமையை மேலும்
சிக்கலாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ffc3140-cd84-4c90-84b8-4725ff8501e6/26-6aa397d559df6.webp' /></p><p>
</p><p>
பல வேலைத்திட்டங்கள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதால் தொடர்ச்சியான தள
மேற்பார்வையை மேற்கொள்வதிலும் சிரமம் காணப்படுவதாகச்
சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதனால் எந்தவொரு திட்டத்தின் தரமும் பாதிக்கப்படாத
வகையில் தேவையான கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப மேற்பார்வை உறுதி செய்யப்பட
வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.</p><h2>மனித வளத்தை உறுதிப்படுத்தல்</h2><p>
</p><p>
இதனிடையே, பல்வேறு நிதி மூலங்களிலிருந்து கிடைக்கும் நிதியை மீளச்
செலுத்தாமல், அவற்றை முழுமையாக அபிவிருத்திப் பணிகளாக மாற்றுவதற்கான
மனிதவளத்தை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆளுநர்
வலியுறுத்தினார். </p><p>தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்களைப்
பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் தொடருமானால், கிடைக்கும் நிதியை உரிய
காலத்தில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது சவாலாகும் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.</p><p>

இந்த விடயத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகர், மத்திய மற்றும்
மாகாண நிறுவனங்கள் என்ற வேறுபாடுகளைக் கடந்து ஒருங்கிணைந்து செயற்பட்டு
தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை விரைவாகத் தேசிய
மட்டத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
இதனையடுத்து, தொழில்நுட்ப ஆளணியினரை தற்காலிகமாக அரச நிறுவனங்களுக்கு இடையே
பகிர்ந்து பயன்படுத்துதல் மற்றும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்
தற்போதைய தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு காலவரையறுக்கப்பட்ட சிறப்பு
ஊக்கத்தொகை வழங்குதல் ஆகிய இரு அவசரத் தீர்வுகளை முன்னெடுப்பது தொடர்பில்
கவனம் செலுத்தப்பட்டது.</p><h2>சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான முன்மொழிவு</h2><p>
</p><p>
தகுதியான பணியாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவில்
சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இனிவரும் பணிகளை மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச
செயலகங்களில் உள்ள தொழில்நுட்ப ஆளணியின் ஊடாக முன்னெடுப்பதற்கும்,
மாகாணத்துக்குச் சொந்தமான சில வீதிகளைத் தற்காலிகமாக உரிய நிறுவனங்களுக்கு
கையளித்து பணிகளை மேற்கொண்ட பின்னர் மீளப் பொறுப்பேற்பதற்கும் இணக்கம்
காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219dd915-1a3c-4f76-924a-c5fef6380b49/26-6aa397d643de0.webp' /></p><p>
</p><p>
ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் மேற்கொள்ள வேண்டிய
பணிகளைத் துரிதப்படுத்துவதுடன், தொழில்நுட்ப ஆளணியுடன் இயங்கும் மாகாண வீதி
அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களங்களின்
தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்துக்கு மேலும் அதிகளவு அபிவிருத்தி நிதி
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தகைய சவால்கள் மீண்டும்
ஏற்படாத வகையில் நிரந்தரமான தொழில்நுட்ப மனிதவளத் திட்டமொன்றை உருவாக்குவது
தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. </p><p>இதற்குத் தேவையான சிறப்பு தொழில்நுட்ப
ஊக்கத்திட்டம் மற்றும் தற்காலிக ஆளணி பகிர்வு முறை குறித்து தொடர்புடைய
அமைச்சுக்கள் மற்றும் திறைசேரியுடன் அவசரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க
வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதி மீளச் செல்லாமல், அது தரமான
பணிகளாகவும் பயனுள்ள உட்கட்டமைப்புகளாகவும் காலதாமதமின்றி மக்களைச் சென்றடைவதே
இம்முயற்சிகளின் பிரதான நோக்கமாகும் என்று ஆளுநர் வலியுறுத்தினார்.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,
மாவட்டச் செயலர்கள், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், உள்ளூராட்சி
அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாகாண நீர்ப்பாசனப்
பணிப்பாளர், மாகாண வீதி அபிவிருத்திப் பணிப்பாளர், உள்ளூராட்சித் திணைக்களப்
பொறியியலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T05:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு குறித்து மனம் திறந்த மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-dont-know-about-gnasara-thero-case-1789104336"></link>
            <id>https://tamilwin.com/article/i-dont-know-about-gnasara-thero-case-1789104336</id>
            <summary type="text">அரசியல் அமைப்பின் பிரகாரமே, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் அமைப்பின் பிரகாரமே, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
</p><p>கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக்காலத்தில், பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
</p><p>இந்த பொது மன்னிப்பானது உரிய விதிகளை பின்பற்றி வழங்கப்படவில்லை என தற்பொழுது நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>மைத்திரியின் பதில்</h2><p>
</p><p>இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரி&nbsp; இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எவ்வாறு எனினும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான தனது தீர்மானம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்&nbsp; என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e89875-0afc-439d-b672-8dc57eb93cd1/26-6aa39936d8f51.webp' /></p><h2>ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் நடைமுறை</h2><p>
</p><p>19ஆம் திருத்த சட்டத்தை சட்டத்தின் பிரகாரம் காணப்பட்ட அதிகாரங்களை குறைத்ததாகவும் பதவி காலத்தை குறைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தனக்கு பின்னர் வந்த அரசாங்கம் 19ஆம் திருத்தச் சட்டத்தில் தம்மால் அகற்றப்பட்ட அதிகாரங்களை மாற்றியமைதத்தாகவும், அதன் பின்னர் மீண்டும் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் தமக்கு எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PCwqMA0Awjs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் மற்றுமொரு ஆடம்பர வீடு - தந்தையிடம் CCIB வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789101993"></link>
            <id>https://tamilwin.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789101993</id>
            <summary type="text">டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப்புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கம்பாஹா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில், ஷிரான் பாசிக் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.</p><h2>குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலை&nbsp;</h2><p> </p><p>மேலும், அந்த வீடு அவரது தந்தையின் பெயரில் வாங்கப்பட்டதும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/660c0cbb-68da-4c4b-a9cd-1264a13c9e44/26-6aa392cbb05cf.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தை இன்று (11) மத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:26:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அநுராதபுரப் பேரணியில் பங்கேற்பது குறித்து விமலின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-peoples-rally-1789103812"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-peoples-rally-1789103812</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அநுராதபுரத்தில் நடத்தப்படவுள்ள கூட்டத்தில்
கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில், கட்சியின் அரசியல்
குழுவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அநுராதபுரத்தில் நடத்தப்படவுள்ள கூட்டத்தில்
கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில், கட்சியின் அரசியல்
குழுவுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்று தேசிய சுதந்திர
முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் தேசிய
சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையில் நேற்று
வியாழக்கிழமை தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் விசேட சந்திப்பு
நடைபெற்றது. </p><p>இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு&nbsp;</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில்
பங்கேற்குமாறு எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து
கட்சியின் அரசியல் குழு கூடி ஆராய்ந்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை காலை எமது
உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்போம்.
</p><p>
இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் அரசியல் ரீதியாக
ஒன்றிணைவதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக, அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும்,
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்குத்
தீர்வு காண்பது தொடர்பிலும் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில்
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்தே தற்போது
கலந்துரையாடப்படுகின்றது.
</p><p>
கடந்த கால நல்ல விடயங்களை முன்னெடுத்துச் செல்லும்போது, கடந்த காலத் தவறுகளை
மீண்டும் தொடரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bb2df9c-7909-4679-9b67-06b838be1980/26-6aa390d479665.webp' /></p><p> </p><p>அரசியல் கூட்டணி அமைப்பது
குறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை.

தேர்தலொன்றுக்கான அறிகுறியே இல்லாத நிலையில் அரசியல் கூட்டங்கள்
நடத்தப்படுவதாக விமர்சிப்பவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமே கேள்வி
எழுப்ப வேண்டும். மக்கள் ஜனாதிபதியைத் தெரிவு செய்வது கூட்டங்களை
நடத்துவதற்காகவன்றி, நாட்டை முன்னேற்றுவதற்காகவே ஆகும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
நீதித்துறையின் சுயாதீனம் மிக முக்கியமானது எனவும், ஒரு நீதிபதி தனது
மனச்சுதந்திரத்துடன் சுயாதீனமாகத் தீர்ப்பளிக்கும் உரிமை பாதுகாக்கப்பட
வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p><p> இது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமன்றி அனைத்து
நாட்டு மக்களுக்கும் முக்கியமான பிரச்சினை என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T05:26:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[எண்ணெய் ஆய்வுக்காக மன்னார் தீவை சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடும் நடவடிக்கை! இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statement-catholic-bishops-conference-of-sri-lanka-1789101799"></link>
            <id>https://tamilwin.com/article/statement-catholic-bishops-conference-of-sri-lanka-1789101799</id>
            <summary type="text">இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து தனது கவனத்தை செலுத்தி உள்ளது.</p><p>எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடுவது பற்றிய தகவல்களும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கு கிடைத்துள்ளன, இவை பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நேர்மறையான முயற்சிகளாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
குறித்த விடயங்கள் குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் (10.09.2026) வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த அறிக்கையில் மேலும், இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம், 2026 ஆகஸ்ட் 18 முதல் 20 வரை நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது, நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து தனது கவனத்தைச் செலுத்தி உள்ளது.

சமூகத்தில் சமத்துவத்தையும் நீதியையும் ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் அண்மையில் எடுத்த சில நடவடிக்கைகளை ஆயர்கள் பாராட்டியுள்ளனர்.</p><h2>காற்று மின் நிலையங்கள் குறித்து சிறப்பு கவனம்</h2><p> </p><p>இத்தகைய முயற்சிகளில், மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்று மின் நிலையங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 14 காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் வாக்குறுதி அளித்தபடி, இதுபோன்ற மின் நிலையங்களை மேலும் விரிவாக்கம் செய்யக்கூடாது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக அரசாங்கத்திற்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82815b3a-08d6-47b9-9211-c64197553034/26-6aa38d16db7ad.webp' /></p><p>

இந்த கோரிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் இலங்கையின் மேன்மை தங்கிய அதிபர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. இது ஒரு நீண்ட கால தேவையாக இருந்ததுடன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பெரிதும் பங்கு வகிக்கும் சமூகத்தின் இந்தப் பிரிவுக்கான சம்பள உயர்வை இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் பாராட்டுகிறது.

அதேவேளை, யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள் குறித்த பிரச்சினை தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.</p><p> ஏற்கனவே நீண்டு கொண்டே செல்லும் செம்மணி அகழ்வாராய்ச்சிகள் நிறைவு செய்யப்பட வேண்டும். செம்மணியுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றங்களுக்கான உண்மையையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்த இந்த முயற்சி தேவைப்படுகிறது.

அதேபோல், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரின் போது நடந்த பயங்கரவாதம் மற்றும் பெருந்திரளான கொலைகள் தொடர்பான பிற சம்பவங்களும், இந்தக் காலகட்டத்திற்கு முந்தைய காலத்தில் அனுபவித்த பயங்கரவாதச் செயல்களும் உள்ளன.</p><p> மன்னார் தீவில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் பாரிய சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்துவது குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் கவலை கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் இந்த நடவடிக்கையால் மக்கள் நிம்மதி இழந்துள்ள நிலையில், எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடுவது பற்றிய தகவல்களும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கு கிடைத்துள்ளன. இவை பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நேர்மறையான முயற்சிகளாக இருக்கலாம்.</p><h2>முறையான கலந்தாய்வு</h2><p>
</p><p>
இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை வெளிப்படையான முறையில் நடத்துவதும், இதுபோன்ற திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் பொறுப்புள்ளவர்களின் கடமையாகும். இதுபோன்ற எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைக்கும் முன்னர் உள்ளூர் பொது மக்களின் கருத்தை கண்டறிவதற்கான முறையான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். மன்னார் தீவில் உள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரமும் நீர் வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளால் அவை பாதிக்கப்படக்கூடாது, இதன் மூலம் மக்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b0edc9a-8886-4fb4-a688-68334e4c2e08/26-6aa38d17a0eae.webp' /></p><p> </p><p>எக்ஸ்பிரஸ் பேர்ல் (Express Pearl) கப்பலினால் ஏற்பட்ட விரிவான சுற்றுச்சூழல் சேதம் குறித்தும், விதிக்கப்பட்ட இழப்பீட்டை கோருவதற்கு நீதிமன்றத்தின் தீர்மானத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் கவலை கொண்டுள்ளது.

மேலும், முத்துராஜவெல சதுப்பு நிலத்தை நிரப்புவதன் மூலம் தற்போதைய நில மீட்பு நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயங்கள் கவனிக்கப்பட வேண்டும். மேலும் அபாயகரமான அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராக முத்துராஜவெல சதுப்பு நிலத்தை பாதுகாப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த அறிக்கையில், இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் குருநாகல் ஆயர் கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேரா ஆண்டகை, இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் பொதுச் செயலாளர் யாழ்ப்பாண ஆயர் P. அந்தோனி ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு பேராயர் அதிமேதகு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, திருகோணமலை ஆயர் கலாநிதி நோயல் இமானுவேல் ஆண்டகை, கண்டி ஆயர் கலாநிதி வலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை, காலி ஆயர் கலாநிதி ரெய்மண்ட் விக்கிரமசிங்க ஆண்டகை, பதுளை ஆயர் கலாநிதி ஜூட் நிஷாந்த சில்வா ஆண்டகை, சிலாபம் ஆயர் கலாநிதி விமல் சிறி ஜெயசூரிய ஆண்டகை, இரத்தினபுரி ஆயர். கலாநிதி அந்தோனி வைமன் குரூஸ் ஆண்டகை, மன்னார் ஆயர் அதிவண. கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, அனுராதபுரம் ஆயர். கலாநிதி சகாய ஜெயமான்ன ஆண்டகை, கொழும்பு துணை ஆயர் கலாநிதி மெக்ஸ்வெல் G. சில்வா ஆண்டகை, கொழும்பு துணை ஆயர் கலாநிதி J. D. அந்தோனி ஜெயக்கொடி ஆண்டகை ஆகியோர் கையொப்படமிட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:18:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்துருக்கொண்டான் படுகொலை : இராணுவ முகாமில் அகழ்வாய்வு நடத்த மாநகரசபை தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-camp-linked-to-the-sathurukondan-massacre-1789102523"></link>
            <id>https://tamilwin.com/article/army-camp-linked-to-the-sathurukondan-massacre-1789102523</id>
            <summary type="text">சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் குறித்த பகுதியில் இருந்த இராணுவம்
முகாம் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில்
அதனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் குறித்த பகுதியில் இருந்த இராணுவம்
முகாம் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில்
அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்று(0.09.2026) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்
சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
</p><h2>முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு&nbsp;</h2><p>மட்டக்களப்பு மாநகரசபையின் வழமையான சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை
நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe2963e6-9bf7-4ef0-8588-074a6f01547b/26-6aa38ceeeda24.webp' /></p><p>இதன்போது சத்துருக்கொண்டான் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களுக்காக மாநகரசபை
உறுப்பினர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p>மாநகரசபை
உறுப்பினர் தயாளகௌரியினால் இந்த சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநகரசபை முதல்வரின் தலைமையுரையினை தொடர்ந்து மாநகரசபையின் கடந்த கூட்டறிக்கை
வாசிக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டது.</p><p>அதனை தொடர்ந்து மாநகரசபையின் முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு சபையின்
அனுமதி பெறப்பட்டதுடன் மாநகரசபையின் நிலையியல் கட்டளைக்குழுக்களின்
முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு வாதப்பிரதிவாதங்களுடன் அனுமதிகள் வழங்கப்பட்டன.&nbsp;</p><p> </p><h2>பிரேரணைக்கு ஆதரவு</h2><p>இதன்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்றதுடன் மாநகரசபையின் செயற்பாடுகள்
குறித்தும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7677f661-163d-4a56-ac3d-073d4ca5cb95/26-6aa38cefda770.webp' /></p><p>
இன்றைய அமர்வின்போது சத்துருக்கொண்டான் படுகொலையின் பிரதான பங்கினைக்கொண்ட
சத்துருக்கொண்டான் பொய்ஸ் கார்டன் படைமுகாமில் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்கவும்
குறித்த படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளான படை பொறுப்பதிகாரி உட்பட
இனங்காணப்பட்ட படையினர் மீது நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தும் விசேட
பிரேரணையொன்று மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் கொண்டுவரப்பட்டு
நிறைவேற்றப்பட்டது.</p><p>இதன்போது குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கிய நிலையில்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிரேரணை
கொண்டு வந்தவர் முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்ததாகவும் ஏன்
அக்காலப்பகுதியில் இந்த பிரேரணை கொண்டுவரப்படவில்லையென தெரிவித்தபோது அதற்கு
எதிரான பல்வேறு கருத்துகள் இதன்போது தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரேரணை
நிறைவேற்றப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T05:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண பீதியில் மகிந்தவின் மனைவி - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-has-undergone-heart-surgery-1789049033"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-has-undergone-heart-surgery-1789049033</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

அவர் தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
</p><p>
அவர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

அவரது உடல் நிலை சற்று அசௌகரியமான நிலையில் இருப்பதாகக் குடும்ப வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.</p><h2><b>
வைத்தியசாலையில் அனுமதி</b></h2><p>ஷிரந்தி ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக பல்வேறு செய்திகள் பரவியிருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3a4ef75-a76e-4511-a3af-ed9d27496d2d/26-6aa2c25592000.webp' /></p><p>எப்படியிருப்பினும், கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் எழுத்துமூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ இலஞ்ச ஆணைக்குழுவினால் ஷிரந்தி ராஜபக்சவிற்கு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

</p><p>
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FpKVZtB_q2M" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>
</p><p>
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த காணி விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-liberates-land-in-mullaitivu-1789101887"></link>
            <id>https://tamilwin.com/article/army-liberates-land-in-mullaitivu-1789101887</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை சந்திப் பகுதியில் இலங்கை
இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி,
பொதுமக்களின் தேவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை சந்திப் பகுதியில் இலங்கை
இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி,
பொதுமக்களின் தேவைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>

59 ஆவது படைப்பிரிவினரால் விடுவிக்கப்பட்ட குறித்த காணி, முல்லைத்தீவு மாவட்ட
அரசாங்க அதிபர் முன்னிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம்
உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.</p><h2>&nbsp;தனியார் காணியின் உரிமை தொடர்பான உறுதிப்படுத்தல் </h2><p>
</p><p>
மேலும் இராணுவப் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தனியார் காணியின்
உரிமை தொடர்பான உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், குறித்த
காணி அதன் சட்டபூர்வ உரிமையாளரிடம் முறையாகக் கையளிக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41fab59b-7b67-4ce9-981d-fcb010e0270b/26-6aa3882bf1358.webp' /></p><p>

இக்காணி விடுவிப்பு நடவடிக்கையானது, பொதுமக்களின் காணி உரிமைகளை
உறுதிப்படுத்துவதற்கும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேலும்
வலுப்படுத்துவதற்குமான முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T04:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒப்பந்தங்களை இரகசியமாக மேற்கொள்ளவே கூடாது : சரத் வீரசேகர விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sarath-weerasekera-s-concern-the-government-1789101556"></link>
            <id>https://tamilwin.com/article/sarath-weerasekera-s-concern-the-government-1789101556</id>
            <summary type="text">இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய
பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு ஒப்பந்தத்தையும் இரகசியமாக மேற்கொள்ளாது,
அதன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய
பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு ஒப்பந்தத்தையும் இரகசியமாக மேற்கொள்ளாது,
அதன் முழுமையான விவரங்களை நாடாளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும்
வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும்
முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் 38 வருடங்களுக்குப் பின்னரான இலங்கை விஜயம்
தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஜனாதிபதியுடனான சந்திப்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வந்துள்ள
நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பில் மாணவர் பரிமாற்றம்
மற்றும் பாதுகாப்புத் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள்
கைச்சாத்திடப்பட்டுள்ளன.</p><p> எனினும், கடந்த 2025 ஏப்ரல் 5ஆம் திகதி இந்தியாவுடன்
கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை
சமர்ப்பிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530e2161-8b23-4482-8367-70cc63194a0a/26-6aa385f5f10c0.webp' /></p><p>
</p><p>
இது குறித்து வினவியபோது, இந்தியாவின் அனுமதியின்றி அதனை வெளிப்படுத்த
முடியாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது.
</p><p>இலங்கை மக்களுக்கு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த வெளிநாட்டின் அனுமதி ஏன்
தேவைப்படுகின்றது?

இந்தியா நட்பு நாடாக இருப்பினும், இலங்கையின் அரசமைப்பு விடயத்தில் 13ஆவது
அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் வடக்குக்கு அதிகாரங்களைப்
பகிரவும் வெளிநாட்டு அரசு அழுத்தம் கொடுப்பது நாட்டின்
இறையாண்மைக்குப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.</p><p>

கொழும்பு துறைமுகக் கப்பல் தளத்தின் 51 சதவீத பங்குகள் இந்திய அரசுக்குச்
சொந்தமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில்,
காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம், டிஜிட்டல் அடையாள அட்டை
மற்றும் இந்தியா - இலங்கை பாலம் தொடர்பான விடயங்கள் தேசிய பாதுகாப்பின்
அடிப்படையில் கவனமாக ஆராயப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3a1d477-ab09-41ab-b338-58d1d9fbcdcf/26-6aa385f6a5291.webp' /></p><p>
</p><p>
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும்
எதிர்கொள்ளும் வாழ்வாதார மற்றும் எல்லைப் பிரச்சினைகளும் இந்தியப் பாதுகாப்பு
அமைச்சருடனான சந்திப்பின்போது உரிய முறையில் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும்.</p><p>

நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய அனைத்து உடன்படிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன்
நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T04:39:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாரத்துக்கு ஒரு தற்காலிக பரபரப்பு கைது - அநுர அரசாங்கம் மீது பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-arrest-per-week-against-anura-government-1789099870"></link>
            <id>https://tamilwin.com/article/one-arrest-per-week-against-anura-government-1789099870</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசு தனது பொருளாதார மற்றும் நிர்வாகத் தோல்விகளை
மறைப்பதற்காக, வாரத்துக்கு ஓர் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து மக்கள்
மத்தியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசு தனது பொருளாதார மற்றும் நிர்வாகத் தோல்விகளை
மறைப்பதற்காக, வாரத்துக்கு ஓர் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து மக்கள்
மத்தியில் தற்காலிக பரபரப்பை உருவாக்கும் மலிவான கண்காட்சியாக இதனை நடத்தி
வருகின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,</p><h2>எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து கைது&nbsp;</h2><p>
</p><p>
"அரசு தனது அரசியல் தோல்விகளையும் நிர்வாகக் குறைபாடுகளையும் மறைக்கவே
எதிர்க்கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து கைது செய்து அரசியல் நாடகங்களை
அரங்கேற்றி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87247526-264c-425e-b652-b293c2e0125b/26-6aa385af00723.webp' /></p><p> குறிப்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்
ராஜபக்சவின் கைது நடவடிக்கையும் தற்காலிகப் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக
மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இன்னும் ஓரிரு வாரங்களில் அவர்
விடுவிக்கப்படுவார்.

தங்களது ஆதரவாளர்களுக்கு ஏதோ சாதனை செய்துவிட்டதாகக் காட்டுவதற்காகவே வாரம்
ஓர் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்து பின்னர் விடுவிக்கும் உத்தியை அரசு
கையாள்கின்றது.
</p><p>
தேர்தல் காலத்தில் மக்களுக்குப் பல போலி வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு
வந்தவர்கள், தற்போது தங்களின் கறைபடிந்த பிம்பத்தை மறைக்க மீண்டும் பழைய
தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.</p><h2>மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பு</h2><p> </p><p>மக்கள் தற்போது தெளிவடைந்துவிட்டதால்
இதுபோன்ற போலி நாடகங்களை நம்பமாட்டார்கள்.

அரசுக்கு மக்கள் மத்தியில் உண்மையான செல்வாக்கு இருக்குமானால், நீதிமன்ற
வழக்குகளைக் காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்காமல், தைரியமாகத்
தேர்தலைச் சந்தித்து மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d39abe25-f5cc-4148-a7e8-d65a00423e2a/26-6aa385afa941d.webp' />&nbsp;</p><p>
</p><p>
ராஜபக்சர்களின் ஊழல்களுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தைச்
சீரழித்தவர்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகச் சட்டப் போராட்டங்களை
முன்னெடுத்தது தங்களது தரப்பு தான். </p><p>தவறு செய்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம்
முறையாகத் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, அதை ஒரு மலிவான ஊடகக் காட்சியாக
மாற்றுவது சட்டத்தையும் நீதியையும் கேலிக்கூத்தாக்கும் செயாலாகும் என்றார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T04:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789099715"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789099715</id>
            <summary type="text">இலங்கையில் வெப்பத்துடன் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அந்த வகையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வெப்பத்துடன் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

அந்த வகையில் நாட்டில் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>கடுமையான வறட்சிக்கு முற்றுப்புள்ளி</h2><p> </p><p>

சுமார் நான்கு மாதங்களாக தொடர்ந்து நிலவிய கடுமையான வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மொனராகலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நேற்றைய தினம் (10.09.2026) பிற்பகல் மிதமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p> 

இந்த மழையின் காரணமாக அப்பகுதியில் நிலவிய வெப்பமான சூழல் தணிந்துள்ளதுடன், குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02e0cb37-c1e1-476f-b57d-a2df6300a1a8/26-6aa382086c840.webp' /></p><h2>வெப்பச் சுட்டெண்</h2><p> 

இதேவேளை வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. </p><p>

மேலும் நாட்டின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 135,037 பேர் குடிநீர் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T04:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சற்று முன்னர் FCID இல் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-appeared-before-the-fcid-1789098506"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-appeared-before-the-fcid-1789098506</id>
            <summary type="text">

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><h2>வாக்குமூலம்..</h2><p> 

மிக் ரக விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. </p><p>

இதேவேளை, மிக் ரக விமானக் கொள்வனவு தொடர்பான வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலகவும் நேற்று முன்தினம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b784fc7f-1bf6-40e7-a227-3746acc5f00e/26-6aa37ed3b37a2.webp' /></p><p></p><p></p><p> 








</p>]]></content>
            <updated>2026-09-11T03:57:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு இழுத்து வரப்பட்ட ஆபத்தான நபரின் உடல் முழுவதும் தங்கம் - விசாரணையில் பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-s-life-style-1789012666"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-s-life-style-1789012666</id>
            <summary type="text">டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர் கொண்ட ரஞ்சி தான் அணிந்திருந்த தங்கம் சீனாவின் தயாரிப்பான போலியான தங்க ஆபரணங்கள் என வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர் கொண்ட ரஞ்சி தான் அணிந்திருந்த தங்கம் சீனாவின் தயாரிப்பான போலியான தங்க ஆபரணங்கள் என வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட ரஞ்சித் குமார என்ற கொண்ட ரஞ்சி நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார்.</p><p>
</p><h2><b>
பாதுகாப்பு பிரிவினரால் கைது</b></h2><p>அத்துடன், அங்கு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a830c3-b4e2-4371-b37c-76020047ba93/26-6aa23df00f5c5.webp' /></p><p>ரஞ்சித் குமார அல்லது கொண்ட ரஞ்சி கடந்த மார்ச் 29ஆம் திகதி இரவு 7 மணியளவில் ஈரான், டுபாய் மீது தொடுத்த வான்வழித் தாக்குதல்களைத் தனது கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். </p><p>அதனை நண்பர்கள் மூவருக்கு அனுப்பியமையால் டுபாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த காணொளிக் காட்சிகள் பரிமாறப்பட்டு 2 மணி நேரத்திற்குள் டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் அவரைக் கைது செய்திருந்தனர்.</p><p>

கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்த 17 பவுண் எடையுள்ள 2 தங்க மாலைகள், 18,000 திர்ஹம் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பாதுகாப்புப் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட ரஞ்சித் குமார என்ற கொண்ட ரஞ்சி நேற்று அதிகாலை சாதாரண பயணிகள் விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.</p><p>
</p><h3><b>
கோல்டன் விசா</b></h3><p>அத்துடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad23be0-d4d2-4079-89f8-85416bb2fef6/26-6aa23ef12929e.webp' /></p><p>ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது, முன்னொரு சந்தர்ப்பத்தில் டுபாயிலிருந்து இத்தாலிக்கு தப்பியோட முயன்ற போது சர்வதேச பொலிஸார் ஊடாக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவிப்பின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.</p><p>

அங்கு ஒரு வாரம் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்து, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தனது கடவுச்சீட்டையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனினும், அங்குப் பிணை கிடைத்ததைத் தொடர்ந்து அவர் தனது சகாக்கள் குழுவுடன் விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளார்.</p><p>

கொண்ட ரஞ்சி அங்கு தண்ணீர் போத்தல் விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதோடு, அதனால் அவர் கோல்டன் விசா ஒன்றையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 </p>]]></content>
            <updated>2026-09-11T03:55:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு: வெடுக்குநாறி மலையில் சைவ வழிபாட்டுக்கும் நீதிமன்றம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-allows-saiva-worship-on-vedukkunari-malai-1789097609"></link>
            <id>https://tamilwin.com/article/court-allows-saiva-worship-on-vedukkunari-malai-1789097609</id>
            <summary type="text">நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்து, வெடுக்குநாறி மலையில்
எதிர்வரும் சனிக்கிழமை சைவ வழிபாட்டை மேற்கொள்ள வவுனியா நீதிமன்றம் அனுமதி
வழங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்து, வெடுக்குநாறி மலையில்
எதிர்வரும் சனிக்கிழமை சைவ வழிபாட்டை மேற்கொள்ள வவுனியா நீதிமன்றம் அனுமதி
வழங்கியுள்ளது.</p><p>

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு மாகாண தலைமை
சங்க தேரர் சந்தபோதி தலைமையில் சம்புத்த பூஜை என்ற பெயரில் பௌத்த நிகழ்வு
ஒன்று ஏற்பாடாகியுள்ளது.</p><h2>&nbsp;இருதரப்பும் ஒரே நேரத்தில் வழிபாடு</h2><p>

இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி சைவ மக்களும் அங்கு விசேட பூஜை
வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d1c77a4-c22f-4281-a5f5-c335531ec784/26-6aa37b5a9dbe1.webp' /></p><p> </p><p>குறித்த தினத்தில் அந்த பகுதியில்
இரு தரப்பும் ஒரே நேரத்தில் வழிபாட்டிற்கு செல்வதால் சமாதான குலைவு ஏற்ப்படும்
என்று நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதிமன்றிற்கு அறிக்கை
சமர்ப்பித்திருந்தனர்.</p><p>

இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரும் பௌத்த தேரர் தரப்பும் நேற்று (10.09)
நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். </p><p>இந்நிலையில் தொல்பொருள் பகுதிகளுக்கு சேதத்தை
விளைவிக்காமல் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளாமல் பூஜை வழிபாட்டை
மேற்கொள்ளுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் இரு தரப்பிற்கும்
கட்டளையிட்டுள்ளது.</p><h2>&nbsp;உயர் நீதிமன்றம் தீர்ப்பு&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, சைவ மக்களின் பூஜைகளை அன்றைய தினம் மேற்கொள்வதால் சமாதான குலைவு
ஏற்படலாம். எனவே அன்றைய தினம் அதற்கு தடைவிதிக்குமாறு நெடுங்கேணி பொலிஸார்
மற்றும் தேரரின் தரப்பினால் மன்றில் இறுக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டது.</p><p>அதற்கு ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தனது எதிர்ப்பை
வெளியிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c23cbdd4-20bc-4300-ab49-d90d0f494bfb/26-6aa37b5b578a0.webp' /></p><p>

அத்துடன் வெடுக்குநாறிமலையில் வழிபடும் சுதந்திரத்திற்கு தடை ஏற்படுத்த
முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதை நீதவான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>எனவே, அன்றைய தினம் சைவ மக்களும் வழமையான பூஜை வழிபாடுகளில் ஈடுபட மன்று
அனுமதி வழங்கியுள்ளது. </p><p>இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி
தி. அருள் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T03:54:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலைக் கைது செய்தாலும் அடக்குமுறைகளால் மக்களின் எழுச்சியை முடக்கவே முடியாது : பொதுஜன பெரமுன எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-recent-update-1789098093"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-recent-update-1789098093</id>
            <summary type="text">தற்போதைய அரசின் அடக்குமுறைகளினாலும் பொய் வாக்குறுதிகளினாலும் பாதிக்கப்பட்ட
மக்கள் அனைவரும் ஒன்றிணையும் திருப்புமுனை நாளாக செப்டெம்பர் 12ஆம் திகதி
அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசின் அடக்குமுறைகளினாலும் பொய் வாக்குறுதிகளினாலும் பாதிக்கப்பட்ட
மக்கள் அனைவரும் ஒன்றிணையும் திருப்புமுனை நாளாக செப்டெம்பர் 12ஆம் திகதி
அமையும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சம்பத் அத்துகோரள தெரிவித்தார்.</p><p>

கொழும்பு, பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>சிறைபிடிக்கப்பட்ட நாமல்&nbsp;</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"அரசின் செயலற்ற தன்மையையும், எதிர்க்கட்சியினரை அடக்குமுறைகள் மூலம் சிறையில்
அடைக்கும் செயற்பாடுகளையும் கண்டித்து, ஆயிரக்கணக்கான மக்கள் செப்டெம்பர்
12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்றுதிரள உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84de1272-887f-4bae-a8c1-5bf5c26ea66a/26-6aa3786e78538.webp' /></p><p> </p><p>விவசாயிகளின்
உரிமைகளுக்காகவும், ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்காகவும்
குரல் கொடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சிறைப்
பிடிக்கப்பட்டதன் மூலமும், அநுராதபுரம் விளையாட்டு மைதானத்தை வழங்க மறுத்ததன்
மூலமும் இந்தக் கூட்டத்தை சீர்குலைக்க அரசு முயன்றது.</p><h2>அரசின் பொய் வாக்குறுதிகள்&nbsp;</h2><p> </p><p>இருப்பினும், இத்தகைய
அடக்குமுறைகளால் மக்களின் வருகை இருமடங்காக அதிகரிக்கும்.

நாட்டின் சுகாதாரத்துறை முற்றாகச் சீர்கேடு அடைந்துள்ளது. </p><p>புற்றுநோய் மற்றும்
சிறுநீரக நோயாளர்களுக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 'கீமோதெரபி'
சிகிச்சைகளுக்கான மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ecc38a8-1f43-4839-bb13-4222653f6fd9/26-6aa3786f32625.webp' /></p><p>
</p><p>
அரசின் தவறான கொள்கைகளால் தரம் குறைந்த மருந்துகளையே மக்கள் பயன்படுத்த
வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் பொய் வாக்குறுதிகளுக்கு இனி மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.</p><p> இந்த அரசுக்கு
எதிரான மக்களின் உண்மையான எதிர்ப்பு மற்றும் ஆத்திரம் செப்டெம்பர் 12 அன்று
அமையவுள்ள பேரணியில் தெளிவாக வெளிப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T03:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் உச்சம் தொட்ட எரிபொருள் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-prices-keep-climbing-as-iran-war-1789097557"></link>
            <id>https://tamilwin.com/article/oil-prices-keep-climbing-as-iran-war-1789097557</id>
            <summary type="text">உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உச்சம் தொட்டு வரும் நிலையை அவதானிக்க முடிகின்றது.
மத்திய கிழக்கின் முக்கிய கடல்சார் கப்பல் போக்குவரத்து பாதைகளில் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உச்சம் தொட்டு வரும் நிலையை அவதானிக்க முடிகின்றது.
</p><p>மத்திய கிழக்கின் முக்கிய கடல்சார் கப்பல் போக்குவரத்து பாதைகளில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் நீண்டகால தடங்கல்கள் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.</p><p>
இதன் விளைவாக வெள்ளிக்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மேலும் உயர்ந்துள்ளன.</p><p>
 சர்வதேச கச்சா எண்ணெய் அளவீடான பிரெண்ட் விலை பீப்பாய் ஒன்றுக்கு 110 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c12c0489-98bd-4d89-9c58-4684e28e5c65/26-6aa37656c1757.webp' /></p><p> </p><p>
வியாழக்கிழமை 6 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வைப் பதிவு செய்த பின்னர், வெள்ளிக்கிழமை ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் பீப்பாய்க்கு 109.97 டொலர் வரை உயர்ந்தது. இது கடந்த மே மாதத்திற்குப் பின்னர் விலை மிக அதிகளவில் உயர்ந்த சந்தர்ப்பமாகும்.
</p><p>அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய் ஒன்றுக்கு 100 டொலர் என்ற அளவுக்கு மேல் நீடித்து வருகிறது.
இவ்விரு கச்சா எண்ணெய் குறியீடுகளும் இந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 13% வரை உயர்ந்துள்ளன. </p><p>இது கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு பதிவான மிகச் செங்குத்தான வாராந்திர விலையேற்றமாகும். 
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் மற்றும் அப்பகுதியில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>
அத்துடன், ஏமனின் மொகா துறைமுகத்தை ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் கைப்பற்றியதை அடுத்து, செங்கடல் பகுதியிலும் அச்சம் பரவியுள்ளது. </p><p>எரிசக்தி ஏற்றுமதிக்கு பயன்படும் மற்றொரு முக்கிய கடல்சார் பாதையிலும் தடங்கல்கள் ஏற்படலாம் என்ற கவலை இதனால் அதிகரித்துள்ளது.</p><p> 
ஐந்து ஈரான் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> 
மேலும் தாக்குதல்கள் தொடர்ந்தால் தங்களது பதிலடி இன்னும் தீவிரமாக இருக்கும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.
</p><p>மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகத் தடங்கல்கள் குறுகிய காலத்தில் தணியாமல் நீடிக்கக்கூடும் என்று வர்த்தகர்கள் அஞ்சுவதால் சந்தையில் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>
கச்சா எண்ணெய் விலையின் இந்த அதிரடி உயர்வு உலகளாவிய பணவீக்கம் குறித்த கரிசனைகளையும் அதிகரித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T03:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூல் குழுக்கள் மீது தீவிர கண்காணிப்பு - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-groups-urgent-warning-to-parents-1789095947"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-groups-urgent-warning-to-parents-1789095947</id>
            <summary type="text">முகநூல் (Facebook) ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை
நடைபெறும் இடங்களை அடையாளம் கண்டு கண்காணிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின்
உத்தரவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகநூல் (Facebook) ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை
நடைபெறும் இடங்களை அடையாளம் கண்டு கண்காணிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின்
உத்தரவின் பேரில் சிறப்பு உளவுத்துறை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>

அண்மையில் தெல்தெனிய பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பகுதியில் முகநூல் மூலம்
ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்டு, அதில்
பங்கேற்ற 41 இளைஞர் மற்றும் யுவதிகளை கைது செய்துள்ளனர்.</p><h2>போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு</h2><p>

இவ்வாறான பல நிகழ்வுகள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளினாலும்,
பாதாள உலகக்குழுக்களினாலும் வணிக ரீதியிலான இலாப நோக்கத்திற்காகவே
நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவிக்காவல் அத்தியட்சகர் எஃப்.
யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be14b980-784e-4e90-b6ce-68d649db04f3/26-6aa3700d24726.webp' /></p><p>

இதன்படி இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்க பெற்றோர்
விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பிள்ளைகளின் நடத்தை மற்றும் பேச்சில்
திடீர் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதைக்கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும்
பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>

இலங்கையில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிக்காட்டிய
அவர், 2025 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான சிக்கல்களால் 175 பேர் தற்கொலை
செய்துகொண்டதாகவும் (172 ஆண்கள், 3 பெண்கள்) ஆவர்.</p><p>மேலும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை
போதைப்பொருள் பயன்பாட்டினால் 11 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T03:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல நபர் ஒருவரின் வீடொன்றிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3711-bullets-found-in-a-pit-at-old-vip-residence-1789094917"></link>
            <id>https://tamilwin.com/article/3711-bullets-found-in-a-pit-at-old-vip-residence-1789094917</id>
            <summary type="text">கண்டி, கஹபத்வல பிரதேசத்தில் உள்ள முன்னாள் பிரமுகரின் பங்களா ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, கஹபத்வல பிரதேசத்தில் உள்ள முன்னாள் பிரமுகரின் பங்களா ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p> 

பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் குழுவொன்று, பங்களாவில் கொங்கிறீட் போட்டு மூடப்பட்டிருந்த குழி ஒன்றை தோண்டியுள்ளனர்.</p><p> 

இதன்போது, அதற்குள் இருந்த துப்பாக்கிகள், பிஸ்டல்கள், தானியங்கித் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் உள்ளிட்ட பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><h2><b>

ஆயுதங்கள் மீட்பு </b></h2><p>அவற்றில் 409 டி-56 ரவைகளும், 2310 பிஸ்டல் ரவைகளும், 384 ரிவோல்வர் ரவைகளும், பொலிஸ் விசேட அதிரடிப்படையால் பயன்படுத்தப்படும் MPMG ரக 167 ரவைகளும், எம்16 ரக 411 ரவைகளும், 22 - 28 பொயிண்ட் போரில் 12 துப்பாக்கித் ரவைகள் இரண்டு உட்பட மேலும் பல ரவைகளும் 4 தகரப் பெட்டிகளும் இந்த பொருட்களில் அடங்கியிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a837a0-f6d4-41d4-8fe9-d3ce148a1b91/26-6aa36f84d91ea.webp' /></p><p>குறித்த வெடிபொருட்கள் மற்றும் ரவைகள் தொகுதி குறித்து பங்களாவின் உரிமையாளரான வர்த்தகரால் கலகெதர பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். </p><p>

இதனை அடுத்து, பொலிஸ் அதிகாரிகள் அந்தத் துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் உள்ளிட்ட ஆயுதப் பெட்டிகளைப் பரிசோதித்து அவற்றை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர். </p><p>

இந்த வெடிபொருட்கள் இருந்த வீடு, கண்டியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் 2022 ஆம் ஆண்டு, பிரபலமான ஒருவரின் உறவினரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்து மேலதிக விசாரணைகளை கலகெதர பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T03:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர தரப்பு எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் இந்திய பாதுகாப்பு அமைச்சரை எதிர்த்திருக்கும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seelarathane-thero-slams-npp-1789095443"></link>
            <id>https://tamilwin.com/article/seelarathane-thero-slams-npp-1789095443</id>
            <summary type="text">&amp;nbsp;ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை விமான நிலையத்தை விட்டு வெளியேறக்கூட அனுமதித்திருக்க மாட்டார்கள் என ஜனசெத்த பெரமுனவின் தலைவரான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.</p><p>
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் மற்றும் அது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து தற்போதைய ஆட்சியாளர்கள் முரண்பாடான கொள்கைகளையே பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85571621-bfb8-4a82-b38b-50b72e13cb16/26-6aa36e147bc88.webp' /></p><p>
தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இவ்வாறான ஒப்பந்தங்களுக்கு எதிராகச் சுவரொட்டிகள், பேனர்களைக் காட்சிப்படுத்தியும், பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் இறக்கியும் பாரிய போராட்டங்களை நடத்தியதை அவர் நினைவூட்டினார்.
</p><p>இன்று அதே தரப்பினர் அமைதி காப்பது வியப்பளிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>நாட்டின் வளங்களையோ அல்லது பகுதிகளையோ இந்தியாவிடம் ஒட்டுமொத்தமாக ஒப்படைக்கத் தயாராகிறார்களா என்ற நியாயமான அச்சமும் சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
புலம்பெயர் சமூகமும் இந்தியாவும் இணைந்து நாட்டை ஆக்கிரமிக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இது குறித்துச் சரியான புரிதல் இல்லை என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மேலும், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் ஒரு கருத்தையும், அதிகாரத்தைப் பெற்ற பின்னர் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சீர்குலைக்கும் வகையிலும் செயல்படும் இத்தகைய அரசியல் போக்கினால் நாட்டின் ஆட்சிமுறை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக சீலரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T02:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கல்வி முறையில் மாற்றம்! பாடசாலை நேரம் மற்றும் பரீட்சைகளில் அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dramatic-change-in-the-education-system-1789092650"></link>
            <id>https://tamilwin.com/article/dramatic-change-in-the-education-system-1789092650</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, சாதாரண தரப்பரீட்சையை 7 பாடங்களாக மட்டுப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, சாதாரண தரப்பரீட்சையை 7 பாடங்களாக மட்டுப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான&nbsp; கூட்டத்திலேயே இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
</p><p>
 குறித்த கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.</p><h2>பாடசாலை நேரம்</h2><p>

அதற்கமைய, புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஒரு பாடவேளை 40 நிமிடங்களாகவும், பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22889417-b6c5-41dd-a247-32936e41a8f3/26-6aa365c9b6065.webp' /></p><p>சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களை உள்ளடக்கியதாக அமையும் எனவும், வரலாறு மற்றும் அழகியல் பாடங்களும் இதில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தாய்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் சமயம் உள்ளிட்ட கட்டாயப் பாடங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தொகுப்பு மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p>

மேலும், 10 மற்றும் 11ஆம் தரங்களில் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்தவும், 12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான பாடத் தொகுதிகளை உள்ளடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T02:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் கோரமான பக்கத்தை அம்பலப்படுத்திய பாதிக்கப்பட்ட பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yositha-cheated-a-old-lady-1789089858"></link>
            <id>https://tamilwin.com/article/yositha-cheated-a-old-lady-1789089858</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச வலுக்கட்டாயமாக தன்னிடம் குறைந்த விலைக்கு காணிகளை பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச வலுக்கட்டாயமாக தன்னிடம் குறைந்த விலைக்கு காணிகளை பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p> 

தங்களது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த, தெஹிவளை காலி வீதி, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள 163/02 இலக்கமுடைய தமக்கு சொந்தமான வீடு மற்றும் காணிப் பகுதியை யோஷிதவுக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

14 - 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிவாதியான யோசித ராஜபக்சவிற்கு 33 லட்சத்து 80 ரூபாய் போன்ற மிகக் குறைந்த விலைக்கு விற்க நேரிட்டதாகவும், அக்காணி அதைக் காட்டிலும் அதிக பெறுமதியைக் கொண்டாகும்.</p><p> </p><h2><b>

பெண் சாட்சியம்</b></h2><p>குறிப்பிட்ட தொகையை விட மேலதிக தொகையைக் கேட்ட போதிலும் அத்தகைய கூடுதல் தொகை தனக்குக் கிடைக்கவில்லை என 79 வயதுடைய கின்தொட்ட விதானகே ஐரின் சில்வா நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013967e1-98f3-4c9e-92f9-c1f5e5ff934f/26-6aa360e028400.webp' /></p><p>காணியை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தத்திலும் காணி கையளிப்புப் பத்திரத்திலும் டெய்சி பொரெஸ்ட் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனினும், பத்திரம் எழுதும்போதோ அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதோ டெய்சி பொரெஸ்ட் அங்கு இருக்கவில்லை. </p><p>தன்னை வாகனமொன்றில் ஏற்றி விஹாரம மாவத்தை அல்லது அவ்வாறான பெயர் கொண்ட ஏதேனும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு குறித்த பத்திரத்திலும் ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர்.</p><p> </p><h3><b>சொத்து மோசடி</b></h3><p>குறிப்பிட்ட தொகையும் எனக்கு இரு தடவைகளாகவே கிடைத்தது என சாட்சியமளித்த குறித்த பெண் தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21f6d87c-4414-48de-8305-ea0b3f7b5e4c/26-6aa360e0d24f2.webp' /></p><p>வழக்கின் 53ஆவது சாட்சியாக அழைக்கப்பட்டு சாட்சி கூண்டில் நின்ற பெண் கடும் சிரமத்திற்கு மத்தியில் சுமார் 20 நிமிடங்கள் சாட்சியமளித்துள்ளார்.</p><p>700 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்து காணிகள் மற்றும் சொத்துக்களைக் கொள்வனவு செய்யச் சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசிதவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-11T02:01:23+00:00</updated>
        </entry>
    </feed>
