<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-12T23:36:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து விவகாரத்தில் மகிந்தவை மாட்டிவிட்ட நாமல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-s-assets-and-properties-1786576870"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-s-assets-and-properties-1786576870</id>
            <summary type="text">நாடாளுமன்ற நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து வருவதாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
தனக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வந்தவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

 தான் ஒரு காலத்தில் 'கன்சல்டன்ட் ஃபார்ம்' (Consultant Firm) என்ற ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தியதாகவும், அதன் வருமானம் மற்றும் வரி கணக்குகள் அனைத்தையும் முறையாகப் பிரகடனப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

 இந்தநிலையில், நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலடியாக, அவரது குடும்பத்தின் சொத்துக்கள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. </p><p>

குறிப்பாக, கால்டன் (Carlton) இல்லம் கைமாறப்பட்டது தொடர்பான சர்ச்சைகள் மற்றும் அவர் தனது சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Jzvh1Ha0Qj8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடை விவகாரம்: உதவிப் பணிப்பாளரின் நடவடிக்கைக்கு கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/racist-attire-against-9-female-health-assistant-1786575559"></link>
            <id>https://tamilwin.com/article/racist-attire-against-9-female-health-assistant-1786575559</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்கள் புதிய
நியமனத்தின் போது ஆடை விடயத்தில் உதவி பணிப்பாளரின் தன்னிச்சையான இனவாத
நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்கள் புதிய
நியமனத்தின் போது ஆடை விடயத்தில் உதவி பணிப்பாளரின் தன்னிச்சையான இனவாத
நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி தெரிவித்துள்ளார்.</p><p>இது
தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;9 பெண் சுகாதார உதவியாளர்கள்</h2><p>குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>
இந்த சம்பவம் ஒரு அரச அதிகாரியால் எமது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள்
(சரத்து 12) , 12(1),12(2) பிரகாரம் மீறப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது.
</p><p>அத்துடன் இப்படியான விடயங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது . இதன் பின்னணி
, இவருக்கு இந்த அதிகாரம் யாரால் வழங்கபட்டது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff805cc3-eaca-4d9f-b160-c4f282607487/26-6a7cfcc74b91c.webp' /></p><p> </p><p>அப்படியாயின் இதற்காக பூரண
விசாரனை நடாத்தி இவ்வாறான இனமுறுகளுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளை இல்லாது
செய்து உரிய அதிகாரிக்கு சட்டநடவடிக்கை எடுத்து இன நல்லிணக்கத்தை உறுதிப்
படுத்த அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டும் என இக்கண்டன அறிக்கை மூலம்
கேட்டுக் கொள்கிறேன்.</p><p>

இவ்வாறான விடயங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.</p><p> கடந்த காலங்களிலும்
திருகோணமலை (2018.04.25)சண்முகா கல்லூரி சம்பவம், திருகோணமலை சாஹிரா
மாணவர்களின் உயர்தர பெறுபேறு வெளியிடுதல் கால தாமதம் இவ்வாறு தொடர்ந்து எமது
சமூகம் காலாகாலமாக போராடித்தான் சாதாரண உரிமைகளை கூட பெற வேண்டியுள்ளது. இந்த வரலாறுகள் மாற்றப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T23:07:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாரா..! போராட்டத்திற்கு தயாராகும் 20 லட்சம் பேர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-dead-prison-us-pakistan-journalist-1786567775"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-dead-prison-us-pakistan-journalist-1786567775</id>
            <summary type="text">பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராவல்பிண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆதரவாளர்கள் கவலை</h2><p>
</p><p>
இந்நிலையில், இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என 3 ராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

எனினும், இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a880889-9cde-44e1-9cbe-29480a9efb28/26-6a7cde049a13c.webp' /></p><p>
</p><p>
இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தினருக்கும், PTI கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

இதனால் அவரது ஆதரவாளர்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ஏதேனும் நடந்தால் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக அவரது PTI கட்சி எச்சரித்துள்ளது. </p><p>

இம்ரான் கான் நலமாக இருப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினரை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T21:36:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவாத்து கொடுக்க ஆறுகட்சிகள் கூட்டு திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-tamil-people-party-1786569437"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-tamil-people-party-1786569437</id>
            <summary type="text">தமிழ்
மக்களின் பூர்வீகமான கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான சதி
திட்டமே இந்த ஆறுகட்சிகள் கூட்டு என ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்
மக்களின் பூர்வீகமான கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான சதி
திட்டமே இந்த ஆறுகட்சிகள் கூட்டு என ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா
சரவணா தெரிவிதத்தார்.</p><p>நேற்றையதினம்(12.8.2026) ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் துறைநீலாவனை வரையும் உள்ள
பல சாய்ந்தமருது வீரமுனை, பொத்துவில், உட்பட பல கிராமங்களில் உள்ள
தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு கட்டிடங்களுக்கு தீவைத்து
விரட்டியடிக்கப்பட்டு ஆலயங்கள் இருந்த
இடங்களில் பள்ளிவாசல் மற்றும் மீன்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தமிழர்கள் மீது அடாவடி</h2><p>&nbsp;அவ்வாறே ஓட்டுமாவடியில் காளிகோவிலை உடைத்து அதில் மீன்சந்தை கட்டியதாகவும்
அதற்கு நீதவானை கூட தனது அதிகாரத்தை பயன்படுத்து இடமாற்றம் செய்துள்ளதாக
நா.உறுப்பினர் எ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில்
வெளிவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு தமிழர்கள் மீது ஊர்காவல்படை என்ற போர்வையில் தமிழர்கள் மீது
கட்டவிழ்துவிடப்பட்டு தமிழர்களை படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3e0041-c87c-459b-bc25-eecc4d07e55c/26-6a7ce60db6c49.webp' /></p><p> இந்த தமிழர்கள் மீது
இடம்பெற்ற இந்த அடாவடிக்கு எதிராக அன்றில் இருந்து இன்று வரை தமிழர்களின்
பிரதி நிதிகள், தலைவர்கள் என தெரிவித்து வருபவர்கள் எவரும் குரல் கொடுக்காது
மௌனிகளாக இருந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரசுகட்சி 11 ஆசனங்களை
பெற்று கொண்டு முஸ்லீம் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களுக்கு
முதலமைச்சு பதவியை தாரைவாத்து கொடுத்தது தமிழரசு கட்சி

அதேபோல கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கே இந்த 6 கட்சி
கூட்டு . </p><p>அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதேச செயலகமான கல்முனை
தமிழ் பிரதேசசெயலகத்தின் கணக்காளரை கூட வழங்க மறுக்கும் முஸ்லிம்
அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் நலனில் அல்லது உரிமைக்காக குரல்கொடுப்பார்களா
மக்களே சிந்தியுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T21:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-district-fisheries-development-meeting-1786567888"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-district-fisheries-development-meeting-1786567888</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.

​</p><p>குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில்
துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடியதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள
கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல விடயங்களை முன்வைத்திருந்தார்.

​</p><p>குறிப்பாக, தட்டுவன்கொட்டி பகுதியில் மக்களின் வாழ்வாதாரக் காணிகள்
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உரிய
தீர்வினை வழங்குமாறு வலியுறுத்திய நிலையில், அதற்கு ஒரு வார காலத்திற்குள்
உடனடித் தீர்வு எட்டப்படும் என அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.</p><p></p><h2>வாழ்வாதாரப் பிரச்சினைகள்&nbsp;</h2><p>

​அதேபோன்று இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள், சாந்தபுரம் பகுதி கடற்றொழிலாளர்கள், பள்ளிக்குடா கடற்றொழில் உறவுகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள்
குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்களினால் பதிலளிக்கப்பட்டதுடன்,
அவற்றுக்கான தீர்வுகள் விரைவாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e90e5023-6f08-4ff8-a14f-ea9e8a32abd9/26-6a7cde325096a.webp' /></p><p>

​கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் நடைபெற்ற
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி
பி.கே.கோலித கமல் ஜினதாச, மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன்
ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T20:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் முடிவு குறித்து ஐ.நா கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-on-the-decision-retirement-age-of-judges-1786560214"></link>
            <id>https://tamilwin.com/article/un-on-the-decision-retirement-age-of-judges-1786560214</id>
            <summary type="text">இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முடிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முடிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செட்டர்வைட் கவலை வெளியிட்டுள்ளார். </p><p>

ஜனாதிபதிக்கான நீண்ட கடிதம் ஒன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டால், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடையக்கூடும் என அந்த கடிதத்தின் மூலம் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>[MB6HOBB</p><h2>&nbsp;நீதிபதிகளின் பதவிக்காலம்</h2><p> </p><p>

தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றுவதன் மூலம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கத்துறை ஆகியவை நீதித்துறையில் தகாத செல்வாக்கைச் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்விகள் எழலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53ffc97d-32e5-4bd8-a99a-78c4574cfea4/26-6a7cdae93713d.webp' /></p><p> </p><p>

அதன்படி, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு பொருத்தமான பாதுகாப்பு வழிமுறைகளுடன், வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய நீதி மறுசீரமைப்பு செயல்முறையின் மூலமே ஓய்வுபெறும் வயதில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அவர் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p>முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தமானது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) 14(1) பிரிவுக்கும், நீதித்துறை சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கும் முரணாக அமையும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T20:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்லாஹ்வுக்கே புகழ்..! ஹோர்முஸ் குறித்து ட்ரம்பின் பரபரப்பு பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praise-be-to-allah-i-think-well-keep-it-trump-says-1786555216"></link>
            <id>https://tamilwin.com/article/praise-be-to-allah-i-think-well-keep-it-trump-says-1786555216</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், </p><p>அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைப் பாராட்டிய ட்ரம்ப், அதனை “எஃகு சுவர்” என பலரும் அழைப்பதாகக் குறிப்பிட்டார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>மேலும், ஈரானால் இதற்கு எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கிலிருந்து உலக நாடுகளுக்கு எரிசக்தி உள்ளிட்ட பொருட்களின் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக, அமெரிக்கா கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p> எனினும், ஈரான் இந்தக் கூற்றை கடுமையாக நிராகரித்து வருகிறது.

ஈரானிடம் தற்போது கடற்படை மற்றும் விமானப்படை இல்லை என்றும், அந்நாட்டு வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறினார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117083017680231697/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பெருமளவில் சிதைக்கப்பட்டு பின்வாங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தனது பதிவின் இறுதியில், “ஈரான் இனி மத்திய கிழக்கின் கொடுமைப்படுத்துபவன் அல்ல” என்று கூறிய ட்ரம்ப், “அல்லாஹ்வுக்கே புகழ்!” என குறிப்பிட்டார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானின் நிபந்தனைகள்

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்பட வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.</p><h2>&nbsp;ட்ரம்ப் நிர்வாகம்</h2><p>
</p><p>
ஈரானின் புரட்சிகர காவல்படை, இந்த நிபந்தனைகள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை தனது முற்றுகை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானுடன் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a761fa3-315b-42a7-b701-a74250c99de6/26-6a7cad7eba04a.webp' /></p><p> </p><p>இது நவம்பர் இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்நிலையில், ஈரானுடன் “அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானில் பணவீக்கம் அதிகரித்து வருவதையும், அந்நாட்டிடம் பணம் இல்லை என்பதையும் அமெரிக்கா கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-08-12T20:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்..! அரச தரப்பு சாட்சியாக மாறி உண்மைகளை அம்பலப்படுத்திய சஹ்ரான் குழு உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-sunday-terrorist-attack-investigations-1786564751"></link>
            <id>https://tamilwin.com/article/easter-sunday-terrorist-attack-investigations-1786564751</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில், முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சிய விசாரணை நிறைவடைந்துள்ளது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில், முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சிய விசாரணை நிறைவடைந்துள்ளது.
</p><p>
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான முக்கிய வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. </p><p>

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், சஹ்ரான் ஹாஷிமின் தற்கொலைத் தாக்குதல் குழுவில் இருந்த ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளார்.
</p><p>

இந்த விசாரணையில் சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியது வழக்கில் ஒரு பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.
</p><p>

சஹ்ரான் ஹாஷிமின் குழுவோடு இருந்த காலகட்டத்தில், அவர் அவதானித்த பல ரகசியமான உண்மைகளை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.</p><p>

 சஹ்ரான் ஹாஷிம் யாருடைய தேவைக்காகச் செயற்பட்டார் என்பது போன்ற பல மர்மமான விடயங்கள் குறித்து அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>

 சில பிரதிவாதிகள் வழங்கிய வாக்குமூலங்கள், அவர்களால் சுயமாக (தன்னார்வமாக) வழங்கப்பட்டவை என்பது உண்மைத்தன்மை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

மேலும்,
 கடந்த காலங்களில் மெதுவாக நடந்த விசாரணை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தினசரி அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதால், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் NewsInsightTamil நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gyrukzsZj6M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-12T20:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு..! தாக்குதலாளியை மடக்கிய ‘கதாநாயகன்’ மீதான வழக்குகள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bondi-beach-shooting-dropped-against-self-defence-1786559000"></link>
            <id>https://tamilwin.com/article/bondi-beach-shooting-dropped-against-self-defence-1786559000</id>
            <summary type="text">சிட்னியின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது,
கொடூரத் தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து &#039;கதாநாயகனாக&#039; போற்றப்பட்ட
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிட்னியின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது,
கொடூரத் தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 'கதாநாயகனாக' போற்றப்பட்ட
அகமது அல் அகமது மீதான வழக்குகளை அவுஸ்திரேலிய பொலிஸார் திரும்பப்
பெற்றுள்ளனர்.</p><p>

கடந்த டிசம்பர் மாதம் சிட்னியில் நடந்த யூத சமூக நிகழ்வில் நடத்தப்பட்ட
தீவிரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
</p><h2>கொடூரத் தாக்குதல்&nbsp;</h2><p>
அப்போது, துப்பாக்கி ஏந்திய தாக்குதலாளியை உயிரைப் பணயம் வைத்து அகமது அல்
அகமது தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்தார்.

இந்த மோதலில் அகமது பலத்த காயமடைந்தார்.</p><p> இதனிடையே, கடந்த மார்ச் மாதம் தனது
தந்தையுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அவர் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/324aa324-297f-428a-a8d5-be85092a65f0/26-6a7cc1300b8df.webp' /></p><p>
</p><p>
புதன்கிழமை சிட்னி உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,
தந்தையுடன் 12 மாதங்களுக்குச் சில கட்டுப்பாடுகளுடன் சுமுகமாக நடப்பதாக
ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பொலிஸார் அவர் மீதான குற்றச்சாட்டுகளைத்
திரும்பப்பெற்றுள்ளனர்.
</p><p>
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அகமது, தான் இப்போது
சுதந்திரமான மனிதன் என்றும் அமைதியை மட்டுமே விரும்புவதாகவும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-12T18:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-uni-students-union-missing-relatives-1786558404"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-uni-students-union-missing-relatives-1786558404</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்
ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
சங்க பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்
ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
சங்க பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது இன்றையதினம்(12.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.</p><p></p><h2>மாநாடு</h2><p>

இதற்கான முழுமையான ஆதரவை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் திரட்டும் வகையில்
இன்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் மாணவர் ஒன்றிய
பிரதிநிதிகளுடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க
பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fe191d8-a323-44cb-9619-b94f51d4ade0/26-6a7cb7c674269.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:39:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீசனிங் பவுடரில் போதைப்பொருள்..! 2 நாடுகள் அதிரடி நடவடிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/poppy-seed-blend-seasoning-powder-banned-1786557882"></link>
            <id>https://tamilwin.com/article/poppy-seed-blend-seasoning-powder-banned-1786557882</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான டிரேடர் ஜோஸின் &quot;எவரிதிங் பட் தி
பாகல்&quot; என்ற சீசனிங் பவுடருக்கு சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் தடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான டிரேடர் ஜோஸின் "எவரிதிங் பட் தி
பாகல்" என்ற சீசனிங் பவுடருக்கு சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் தடை
விதித்துள்ளன.

இந்தச் சீசனிங் பவுடரில் சேர்க்கப்பட்டுள்ள பாப்பி விதைகளில் போதைப்பொருளான
மார்பின் மற்றும் கோடீன் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
பொப்பி விதைகள் இயற்கையிலேயே போதைத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், அறுவடைக்
காலங்களில் தாவரத்தின் பாலுடன் தொடர்பு ஏற்படுவதால் போதைப்பொருள்களின் வீரியம்
அதில் கலக்க வாய்ப்புள்ளது.</p><p></p><p>
</p><h2>&nbsp;தென் கொரியாவில் தடை</h2><p>
போதைப்பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இணையதளங்களில் விற்கப்பட்ட
20-க்கும் மேற்பட்ட சீசனிங் பவுடர் விளம்பரங்களை சிங்கப்பூர் போதைப்பொருள்
தடுப்புப் பிரிவு அகற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c3b87ca-4967-4037-82ff-31a939cd4de9/26-6a7cb6bbcf09a.webp' /></p><p>

மேலும், கைவசம் உள்ள பொருட்களை உடனடியாக அழிக்குமாறு பொதுமக்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் இதை வாங்கி வந்த
நிலையில், ஆய்வில் போதைப்பொருள் கலப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து
சியோல் நிர்வாகமும் இதற்கு முழுமையான தடை விதித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T18:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issues-faced-by-the-marine-fishers-of-mannar-1786554013"></link>
            <id>https://tamilwin.com/article/issues-faced-by-the-marine-fishers-of-mannar-1786554013</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கடற்றொழில், நீரியல்
மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்
இடம்பெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பேசப்பட்டது.</p><p>அத்தோடு, தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு இடை
நிறுத்தி வைக்கப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக அனுமதியை மீண்டும் வழங்குவது
குறித்தும் ஆராயப்பட்டது.</p><p></p><h2>கடற்றொழில் நடவடிக்கை</h2><p>
</p><p>கடற்றொழில் நடவடிக்கைகளின் போது சில தொழில்களுக்கான வழங்கப்படுகின்ற பாஸ்
நடைமுறை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு
அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் குறித்த தொழில்களுக்கு
அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை
விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/836dd8a2-1385-43e1-8836-ad075f405a15/26-6a7cb4d56571a.webp' /></p><p>
</p><p>
மேலும் மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள கண்டல் தாவரங்களை வெட்டி
கடற்றொழில் நடவடிக்கை களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் இதனால் எதிர் காலத்தில்
கடலரிப்பு ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் எனவே குறித்த கண்டல் தாவரங்களை
வெட்டுகின்ற கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என
கலந்து கொண்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:00:59+00:00</updated>
        </entry>
    </feed>
