<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-22T07:22:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/job-vacancies-in-sri-lanka-400-000-1787365984"></link>
            <id>https://tamilwin.com/article/job-vacancies-in-sri-lanka-400-000-1787365984</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p>

இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ள போதிலும், நாட்டின் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை தொடர்கின்றன.</p><h2>ஆயிரக்கணக்கான பணி வெற்றிடங்கள்</h2><p>

தொழிற்துறைகளில் கடுமையான திறன் பற்றாக்குறை நிலவுவதோடு, ஆயிரக்கணக்கான பணி வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce3c9bd-5eef-4341-a8ef-bc2bda6d445f/26-6a894a3908c7d.webp' />&nbsp;</p><p> </p><p>இருப்பினும், தகுதியான தொழிலாளர்களை கண்டறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.
</p><p>
தற்போது வேலையற்ற நபர்களிடம் குறிப்பிட்ட தொழிற்தகைமைகளும் தொழில்நுட்ப நிபுணத்துவமும் இல்லை என்பதே யதார்த்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த சவாலை எதிர்கொள்ள வெளிநாட்டு ஊழியர்களை வரவழைப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதுடன்,வெளிநாடு செல்பவர்கள் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக தொழிற்பயிற்சித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதாகவும் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிர்வாகத்தின் மையம் மனிதநேயமே - AI உதவியாக இருக்க வேண்டும் – ஆளுநரின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ai-should-aid-not-replace-human-officials-governor-1787381494"></link>
            <id>https://tamilwin.com/article/ai-should-aid-not-replace-human-officials-governor-1787381494</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை
மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான
சேவைகளைத் துரிதப...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை
மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான
சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும்,
தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும் நிர்வாகத்தின் மையமாக மனிதநேயமே
தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார்.
</p><p>
வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது
தொடர்பான விசேட கலந்தாய்வுச் செயலமர்வு நேற்றையதினம் (21.08.2026) வெள்ளிக்கிழமை
வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.</p><h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>
</p><p>இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
</p><p>
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,</p><p>
"உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், அரச நிர்வாகமும்
அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் தகவல்களையும் சேவைகளையும்
உடனடியாகப் பெறவே விரும்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e3e67bb-9511-48a6-9e8a-ed41aa584b6b/26-6a8948568d044.webp' /></p><p> </p><p>இதற்காகப் பல அலுவலகங்களுக்குச் செல்வதையோ
அல்லது தேவையற்ற காலதாமதங்களையோ அவர்கள் விரும்புவதில்லை. ஒரு அதிகாரி
பெருமளவான ஆவணங்களை ஆராய்ந்து, தரவுகளை ஒப்பிட்டு முடிவெடுக்கும் நேரத்தைச்
செயற்கை நுண்ணறிவு கணிசமாகக் குறைக்கிறது.</p><p> மாகாண நிர்வாகத்தில் காணப்படும்
ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில், குறைந்த வளங்களைக் கொண்டு
அதிக சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் இது எமக்குத் தருகிறது.</p><p>

இன்று முன்வைக்கப்பட்டுள்ள 'ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டுக் கோபுர பூர்வீக
செயற்கை நுண்ணறிவு வடக்கு மாகாண நிர்வாகச் சூழலியல் தளம்' (Unified Control
Tower Native-AI Northern Province Governance Ecosystem Platform) என்ற
முன்மொழிவானது, மாகாண நிர்வாகத்தின் பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து டிஜிட்டல்
(Digital) மாற்றத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு விரிவான அணுகுமுறையாகும்.
எனினும், ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தின் வெற்றியானது அதன் தொழில்நுட்பத் திறனால்
மாத்திரம் அளக்கப்படக் கூடாது.</p><h2>&nbsp;தனிப்பட்ட தரவுகள்&nbsp;</h2><p>அது பொதுமக்களின் சிரமங்களை எவ்வளவுக்குக்
குறைத்து, அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.

அரச நிறுவனங்களிடம் பொதுமக்களின் அடையாள, சுகாதார, நிதி மற்றும் காணி தொடர்பான
மிக முக்கியமான தனிப்பட்ட தரவுகள் காணப்படுகின்றன. </p><p>எனவே, நிர்வாகத்தில்
இவ்வாறான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது தரவுப் பாதுகாப்பு,
தனியுரிமை, அணுகல் கட்டுப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில்
ஆரம்பம் முதலே அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p><p> தொழில்நுட்பம் பரிந்துரைகளை
வழங்கினாலும், இறுதி நிர்வாகத் தீர்மானம் ஒரு அரச அதிகாரியிடமே இருக்கும்
என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20badb8-e609-4eb8-b30a-b0ab7532738e/26-6a89485770635.webp' /></p><p> </p><p>அத்தோடு, எமது மாகாணத்தின் தனித்துவமான சமூக,
மொழி, பண்பாட்டு மற்றும் புவியியல் சூழலுக்கு ஏற்றவாறே இவ்வாறான
கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.</p><p>
இந்தச் செயலமர்வில், இந்தியாவின் 'வாசா' தகவல் தொழில்நுட்ப சேவைகள் (VASA
InfoTech Services Pvt, Ltd) நிறுவனத்தின் ஸ்தாபகரும், முதன்மைச் செயற்கை
நுண்ணறிவு வியூகவியலாளருமான செந்தில்குமரன் மற்றும் தனசேகர் ஆகியோர்
வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
</p><p>
இந்நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம
செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட மாகாண
அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T06:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு மீது கடும் அதிருப்தியில் மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427"></link>
            <id>https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. </p><p>இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2><b>
அதிருப்தியில் மகிந்த </b></h2><p>நாட்டில், 22ஆவது திருத்தத்தை கொண்டு வருவதை விட, அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல பணிகள் இருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27909829-c702-4572-9af6-6f5c0ccbffd7/26-6a894624c29b1.webp' /></p><p>அவற்றை செய்து முடித்த பின்னர் தேவையான எந்தவொரு சட்டப்பிரிவையும் கொண்டு வருவதில் பிரச்சினையில்லை என அவர் கூறியுள்ளார். </p><p>

அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு பதிலாக வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
 அதற்கு பதிலளித்த அவர், “அதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. தேவையற்ற விடயங்களே முன்னிலைக்கு கொண்டு வரப்படுகின்றன. </p><h3><b>

அரசியலமைப்பு திருத்தம்</b></h3><p>மேலும், நாட்டின் பொதுமக்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை விட முக்கியமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விட வேறு பல பிரச்சினைகள் உள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42bfb3e-b898-4141-a03a-deba8e47a424/26-6a894625754d6.webp' /></p><p>சிலர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுகின்றனர். 

அந்தப் பிரச்சினைகளை தீர்க்காமல் தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. </p><p>மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-22T06:48:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வச்சந்நிதி ஆலய சூழலில் விதிமீறல்: ஐவருக்கு ரூ.50,000 அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/50-000-chewing-betel-near-selvachannithi-temple-1787380363"></link>
            <id>https://tamilwin.com/article/50-000-chewing-betel-near-selvachannithi-temple-1787380363</id>
            <summary type="text">தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் ஆலயத்தின் சுற்றாடலினை
வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாக பேணி வருவதுடன் ஆலய சுற்றாடலானது
புகையிலை அற்ற மண்டலமாக சுகாதாரத்தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முற்றாக தடை&nbsp;</h2><p>
</p><p>
குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும்
பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc1f767-e70b-4965-a230-3b085e2a34aa/26-6a8944f00bbae.webp' /></p><p>

இந்தநிலையில் குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றாடலில்
காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக கடந்த 20/08/2026 வியாழக்கிழமை
வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால்
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது
சம்பந்தவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட அடிப்படையில் தலா 10,000 ரூபா வீதம்
50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தேடப்பட்டு வரும் சீனப்பிரஜைகள் - பொது மக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512"></link>
            <id>https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p>இவ்வாறு கொலை செய்யப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது&nbsp;&nbsp;</p><p>இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f167eac-85bf-4175-a965-3cd9ba1fba06/26-6a89048ab3c50.webp' /></p><h2>வான் அல்லது கடல் வழி ஊடாக நாட்டைவிட்டுத்தப்பியோடக்கூடும்</h2><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். </p><p>

இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்&nbsp;சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/725f6ad8-6e4e-4af9-82e9-12d4da94009d/26-6a89048b64725.webp' /></p><p>குறித்த மூன்று சீன நாட்டவர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதுடன், சுற்றுலா விசாவில் வருகை தந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

எனவே மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழி ஊடாகச் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்பதால், அவர்களைக் கைது செய்யப் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.</p><p>அதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு - 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு&nbsp; பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,500 கோடி ரூபாய் பெறுமதியான தங்க சிலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863"></link>
            <id>https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863</id>
            <summary type="text">ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது.</p><p>

எனினும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அத்தகைய சிலை எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2><b>
 தங்க சிலை</b></h2><p>தங்கச் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதனை தொடர்ந்து ஜா எல மெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48f63bec-bbd6-42c1-81e1-59439ec0a5ae/26-6a87b6f330040.webp' /></p><p>இதன்போது, அங்கு ஏதேனும் அறியப்படாத பொருள் இருப்பதாக தெரியவந்திருந்தது.</p><p>

எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், குறித்த இடத்தில் எந்தவொரு பொருளும் புதைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/transfers-for-teachers-national-schools-8-years-1787375914"></link>
            <id>https://tamilwin.com/article/transfers-for-teachers-national-schools-8-years-1787375914</id>
            <summary type="text">தேசிய பாடசாலைகளில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களையும் அடுத்த ஆண்டு முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய பாடசாலைகளில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களையும் அடுத்த ஆண்டு முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. </p><p>

இந்த ஆண்டு, தேசிய பாடசாலைகளில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 மாகாண அளவில் இடமாற்ற சபைகளை கூட்டி இந்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.</p><h2>ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்</h2><p> </p><p>

அடுத்த ஆண்டு இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ள கல்வி அமைச்சு, அதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc2634fd-e051-4379-9994-caa7cdf6eec4/26-6a893698aa1de.webp' /></p><p>
</p><p>
 இதற்கிடையில், தங்களது இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு பொதுச்சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்த ஆசிரியர்களுக்கு இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.</p><p> 

எனவே, ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்கான இடமாற்றங்களுக்கும் விண்ணப்பிக்கவில்லை. இடமாற்ற சபையிடம் அவர்கள் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் பொதுச் சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர். </p><p>

இடமாற்ற சபையிடம் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பிறகு, அதே பாடசாலையில் தொடர்ந்து பணியாற்றும் நோக்கத்தில் அந்த ஆசிரியர்கள் பொதுச்சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார்.</p><p> 

இதேவேளை, மேல்முறையீடுகள் மீதான முடிவுகள் எவ்வளவு தாமதமாகின்றனவோ, அந்த ஆசிரியர்கள் தங்கள் இலக்குகளை அடைவது அவ்வளவு எளிதாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T05:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் 400 பேரின் கண்களுக்கு பாதிப்பு! வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-temple-eye-damage-issue-1787373493"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-temple-eye-damage-issue-1787373493</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற
திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்று மற்றும் வாணவேடிக்கை
காரணமாக கண் பாதிப்படைந்த 400 இற்கும் மேற்பட்டோர் யாழ். போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகள்</h2><p>
</p><p>
பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் நேற்று (20)
இரவு உற்சவத்தின் போது அதிக வாணவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு, இசை
நிகழ்வின் போது அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்று வகைகளும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. </p><p>இதன் காரணமாகவே பொதுமக்கள் பலரது கண்கள்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a26059-e108-4583-8ff8-40ab2de045f0/26-6a892c275b072.webp' />&nbsp;</p><p>

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான
பணிகள் குறைக்கப்பட்டு, இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், ஏனைய வைத்தியசாலைகளில் இருந்தும் வைத்தியர்களும் தாதியர்களும்
வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும்
மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.</p><h2>ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடு</h2><p>

இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்ட இந்த ஆலயத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடு
காரணமாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.</p><p>

இதனால் ஆலய நிர்வாகம் நீதிமன்ற பொறுப்பில் உள்ள காரணத்தால் இம்முறை திருவிழா
நீதிமன்ற பதிவாளரின் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளது.</p><p>லேசர் ஒளிக்கீற்றுத் தாக்கம் காரணமாக கண்ணில் பாதிப்படைந்தவர்களில் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பொலிஸார்,&nbsp; உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிகள் உள்ளிட்ட பல மாணவர்கள், அரச அலுவலகர்கள்
மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.</p><p>பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தின்
உற்சவத்தின்போது ஆலயச்சூழலில் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்று வகைகள்
பயன்படுத்தப்பட்டமையே இந்த கண் பாதிப்புக்கு முக்கிய காரணமாகும்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:57:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடையும் மகிந்த ராஜபக்ச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-fcid-mahinda-rajapaksa-1787371032"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-fcid-mahinda-rajapaksa-1787371032</id>
            <summary type="text">&amp;nbsp;நான் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டது மற்றும் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் - நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நான் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டது மற்றும் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் - நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க காலத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு தந்தையால் தன் பிள்ளைக்குக் கொடுக்க முடியாததை&nbsp; நல்லாட்சி அரசாங்கமும் ஜே.வி.பி.யும் எனக்கு வழங்கியுள்ளதாக தந்தை மகிந்த&nbsp;மகிழ்ச்சியடைகிறார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க நேற்று (21.08.2026) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>
</h2><p></p><h2>தந்தை ஒருவர் எதிர்பார்க்கும் முதிர்ச்சி</h2><p>ஊடகவியலாளர்கள் ஒருவர் நாமலிடம் இந்த விசாரணைகள் தொடர்பில் தந்தை மகிந்த ராஜபக்ச என்ன சொல்லுகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது மேலும் தெரிவித்த கருத்துக்கள்... </p><p>
இதனால் மகன் நாளுக்கு நாள் முதிர்ச்சியடைகிறார் என்றும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வார் என்றும் அவர் நம்புகிறார். </p><p>
தங்கல்ல பகுதியில் ஒருவர் ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார், ஆனால் அவருக்கு அதை எவ்வாறு வாங்கினார் என்று சொல்ல முடியாத போது, அது நாமல் ராஜபக்சவுடையது என்று சொல்கிறார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0c05e8d-a622-43b2-a138-36a9687f1c7f/26-6a891e1a87757.webp' /></p><p>இந்த அரசாங்கம் முதல் நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேர்தல் மேடைகளில் நாட்டில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் என்னுடையது என்றனர். </p><p>டுபாய் மெரியட் (Dubai Marriott) என்னுடையது என்றனர்.அக்காலத்தில் ஊழல் ஒழிப்புக்குழுவில் இருந்தவர்கள் தான் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கிறார்கள். </p><p>எனவே, அவர்கள் அன்று சொன்ன பொய்களுக்கும், தங்களால் புனையப்பட்ட பொய்களை சட்டபூர்வமாக்க முயற்சிக்கிறார்கள். </p><p>எங்களை விசாரணைக்கு வருமாறு கூப்பிட்டதும் நாங்கள் வந்து விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.அன்று நடந்துள்ளதும் இவ்வாறு தான் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; </p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:48:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரின் வாக்குமூலம்! பாழடைந்த வீட்டில் சிக்கிய ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-recovered-based-on-information-samitpura-sadhu-1787371463"></link>
            <id>https://tamilwin.com/article/gun-recovered-based-on-information-samitpura-sadhu-1787371463</id>
            <summary type="text">சமிட்புர சது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமிட்புர சது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ள சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய&nbsp; நேற்று (21) வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><h2>கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவு தீவிர விசாரணை</h2><p>28 வயதுடைய சந்தேகநபர் இலங்கையிலிருந்து தப்பியோடி ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c4f9c8-1b05-482a-921e-5e0fa6d1890b/26-6a89234aee0ab.webp' /></p><p>இதன்பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>இதற்கமைய,&nbsp; வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p> 

இதற்கு முன்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றும் 12 ரவைகளும் மட்டக்குளி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.</p><p>இதற்கமைய, கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:22:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dies-after-being-trapped-in-plowing-machine-1787370963"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dies-after-being-trapped-in-plowing-machine-1787370963</id>
            <summary type="text">கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை (21-08-2026) சிறுவன் தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>நேற்று மாலை (21-08-2026) சிறுவன் தனது உறவினரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியில்&nbsp; நின்றுக்கொண்டிருந்த போது தவறுதலாக வாகனத்தை இயக்கி திருப்ப முயன்ற போது சிறுவன் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</p><h2>பொலிஸார் தீவிர&nbsp;விசாரணை</h2><p>இதனையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d47a381-6fe7-413c-bbdc-bccbe4c7a84a/26-6a891eaf7ebe0.webp' /></p><p>



இச்சம்பவம் தொடர்பாக உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதியை கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>உயிரிழந்த குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T03:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல் - DNA மாதிரியில் அம்பலமாகவுள்ள உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sewwandi-s-forensic-report-ready-1787368721"></link>
            <id>https://tamilwin.com/article/sewwandi-s-forensic-report-ready-1787368721</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் கைதான இஷாரா செவ்வந்தியை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி DNA மற்றும் புகைப்பட பரிசோதனைகள் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் கைதான இஷாரா செவ்வந்தியை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி DNA மற்றும் புகைப்பட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
முக அடையாள பரிசோதனை</b></h2><p>நீதிமன்றில் தகவல்களை முன்வைத்த கொழும்பு குற்றப் பிரிவினர், கடந்த 17ஆம் திகதி இஷாரா செவ்வந்தி அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் முக அடையாள பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec22bd5a-1a55-4bc3-a48f-7bb817e66efd/26-6a89181f61bce.webp' /></p><p>இதன்போது DNA மாதிரிகள், புகைப்படப் பதிவுகள் மற்றும் காணொளி காட்சிகளும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
மேலும், இந்த சம்பவத்தின் 32ஆவது சந்தேகநபர்களான பட்டுவத்தையைச் சேர்ந்த சாமர மற்றும் கம்பஹா ஒஸ்மான் ஆகியோருக்கான தடுப்பு காவல் உத்தரவு 13ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BliXJ74NRc4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இதனால், அவர்களுக்கு மேலும் 90 நாட்களுக்கு தடுப்பு உத்தரவு பெற்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.</p><p>

இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணம் ஊடாக மன்னாருக்கு தப்பிச் செல்ல உதவியதாக கூறப்படும் 41 மற்றும் 42ஆவது சந்தேகநபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றப்பிரிவினர் தெரிவித்தனர்.
</p><p>
அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-22T03:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான ஐவர்..! விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monaragala-accident-death-update-1787361613"></link>
            <id>https://tamilwin.com/article/monaragala-accident-death-update-1787361613</id>
            <summary type="text">மொனராகலை - கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கும்புக்கன பகுதியில் உழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை - கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கும்புக்கன பகுதியில் உழவு இயந்திரமும், டிப்பர் லொறியொன்றும் மோதிக்கொண்டதில் ஐவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
டிப்பர் லொறியில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><h2>இருவர் கைது</h2><p>
</p><p>
இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இவர்கள் பூஜை வழிபாட்டிற்காக குடும்பமாக டிப்பர் லொறியில் சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c38517e-2dff-48e8-b1a0-c3bb95f790cf/26-6a8909e3b120d.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த,
ஆர்.டி.ஷெஹான் எரங்க (20), நிரோஷன் தேவேந்திர (55), ஏ.எம். திலகரத்ன பண்டார (56), பசிந்து தினேஷ் (வயது 21) மற்றும் தாரக மதுஷான் (31 வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஏ.எம். திலகரத்ன பண்டார (56) மற்றும் பசிந்து தினேஷ், தந்தை மற்றும் மகன் ஆவர்.
</p><p>
இதனையடுத்து விபத்திற்குள்ளான டிப்பர் லொறி சாரதி மற்றும் பயணிகளை ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T03:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமடைந்துள்ள சுரேஷ் சலேவின் உடல்நிலை! மனைவி விடுத்துள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sale-health-condition-request-president-1787367322"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sale-health-condition-request-president-1787367322</id>
            <summary type="text">அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்க வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் ஆகஸ்ட் 20 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்&nbsp;</h2><p>
</p><p>
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd3af394-d83d-4829-b6ff-8ec84372e5d2/26-6a8913cd4ea5d.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.</p><h2>அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
</p><p>
இருதய பிரச்சினைகள் காரணமாக அவருக்கு இதயக்கருவி பொருத்தப்பட்டதாகவும், தற்போது தேசிய வைத்தியசாலையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44bd53e-9173-4d22-b66c-51a0a24c74ce/26-6a8913ce1ff74.webp' /></p><p>
</p><p>
எனவே சலேவை நீதிமன்ற கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்கு தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
அத்துடன், சலே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யமாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.&nbsp; </p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T03:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோடிக்கணக்கான தங்கம் மற்றும் பணம் கொள்ளை - ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-robbery-at-a-house-in-mount-lavinia-1787365110"></link>
            <id>https://tamilwin.com/article/massive-robbery-at-a-house-in-mount-lavinia-1787365110</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பீரிஸ் வீதி பகுதியில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து, 2 கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 20ஆம் திகதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளின் ஒரு பகுதி மற்றும் 15,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்கிஸ்ஸ தர்மபால வீதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

தங்கம், பணம் கொள்ளை</b></h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, ஓபன் பகுதியில் வசிக்கும் 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2038685-6c18-4206-8504-74bcf123333c/26-6a890e72b315d.webp' />&nbsp;&nbsp;</p><p>சந்தேகநபர் திருடிய பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாவை செலவிட்டு, 18 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றையும், அப்பிள் ரக 3 கையடக்கத் தொலைபேசிகளையும், மற்றுமொரு கையடக்கத் தொலைபேசியையும் கொள்வனவு செய்துள்ளார்.</p><p>

மேலும், எஞ்சிய பணத்தில் ஒரு பகுதியை இரவு நேர கேளிக்கை விடுதிகளில் செலவிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>கடந்த 18 ஆம் திகதி வீட்டில் வசிப்பவர்கள் தமது உறவினர் ஒருவரின் நெதிமால பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குச்சென்றுள்ளனர்.</p><h3><b> பொலிஸில் முறைப்பாடு</b></h3><p>மறுநாள், 19ஆம் திகதி பீரிஸ் வீதியில் உள்ள தமது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் கலைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc7cc24b-6b42-46fc-bda3-4e1c948388a8/26-6a890e736b093.webp' /></p><p>இதனையடுத்து வீட்டை சோதனையிட்டபோது, மேல் மாடியில் அமைந்திருந்த ஜன்னல் ஒன்றை உடைத்து வீட்டுக்குள் திருடன் நுழைந்துள்ளார். ஒரு கோடி ரூபா பணத்தையும், ஒரு கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அனைத்து தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p> திருட்டில் ஈடுபட்ட நபர் அதே ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக கல்கிஸ்ஸ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். </p><p>இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பிச்சென்ற சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T02:50:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரமாக டுபாயிக்கு பறந்த CCIB அதிகாரிகள் குழு! இலங்கைக்கு அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-central-crime-investigation-bureau-1787358493"></link>
            <id>https://tamilwin.com/article/the-central-crime-investigation-bureau-1787358493</id>
            <summary type="text">மத்திய குற்றப்புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளனர். 
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்டமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய குற்றப்புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளனர். </p><p>
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p></p><h2>அழைத்துவரவுள்ள ஆபத்தான நபர்</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை அவசரமாக இலங்கைக்கு கொண்டு வரமுடியாது என்றும், அங்குள்ள சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலேயே அவரைக் பொறுப்பேற்க விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ள நிலையில் அதிகாரிகள் அவசரமாக டுபாய் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>'லலித் கன்னங்கர' அல்லது 'பஸ் லலித்' என்று அழைக்கப்படுபவரையே இவ்வாறு அழைத்து வரச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6306fb9-ffd6-432c-83b0-4fb70345b258/26-6a88ed1f87d86.webp' />&nbsp;&nbsp;</p><p>இவர் அவிசாவளை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவராவார். </p><p>இந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்திருப்பது இலங்கை பொலிஸாருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஏனெனில், அவரை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p>இவர் சட்டத்தரணிகள் ஊடாக தப்பிச் செல்வதற்கு பலமுறை முயன்றபோதிலும் அது பலனளிக்கவில்லை என்றும், டுபாயில் அவரது வழக்கு முடிவுக்கு வந்துள்ளதுடன், தற்போது அவரை அழைத்து வருவதே எஞ்சியுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><h2>பாதாள உலகக்குழுவை சேர்ந்த பல முக்கிய நபர்கள் கைது</h2><p>கடந்த காலத்தில் அவர் வந்து சென்றதாகவும் தகவல்கள் பரவின. இவர் ஹோமாகம, அதுருகிரிய மற்றும் அவிசாவளை வரையிலான பகுதிகளில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவராவார். குறித்த பகுதிகளில் இவரும் 'ஹந்தா' என்பவருமே செயற்பட்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1fac2f-cdf1-4ddd-93d0-3675c5bd2530/26-6a88fffc44de7.webp' /></p><p>எவ்வாறாயினும் இன்று (22.08.2026) அல்லது 24 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>பிரதான பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர். </p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவினர் வெளிநாடுகளில் உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக மிகவும் சுறுசுறுப்பாகவும் அர்ப்பணிப்புடனும் உரிய உத்திகளின் படி செயற்பட்டு வருகின்றனர்.</p><p>எனவே, இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுவதுடன், பலரது உயிர்களைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T01:48:58+00:00</updated>
        </entry>
    </feed>
