<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-15T22:15:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்கின் தொலைபேசியில் ஈரான் தாக்குதல் காணொளிகள்..! கிடைக்கப்பெற்றுள்ள பகீர் வாக்குமூலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-kingpin-shiran-basik-brought-sri-lanka-1786829185"></link>
            <id>https://tamilwin.com/article/drug-kingpin-shiran-basik-brought-sri-lanka-1786829185</id>
            <summary type="text">நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு அழைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>

அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகள் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

ஷிரான் பாசிக் தனது ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தில், துபாயில் இருந்தபோது ஈரானுடன் தொடர்புடைய தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
துபாயில் உள்ள பிரபலமான, மிகப்பெரிய வர்த்தக வளாகம் ஒன்றில் இருந்தபோது, அந்நாட்டு பொலிஸார் தன்னை சோதனை செய்ததாக பாசிக் முதற்கட்ட விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில், ஈரானிலிருந்து துபாய், ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னணியில் தன்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், விசாரணை அதிகாரிகளிடம் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அவரது கையடக்கத் தொலைபேசியை துபாய் பொலிஸார் பரிசோதித்தபோது, ஈரானால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அதில் இருந்ததாகவும், அதன் பின்னரே தான் கைது செய்யப்பட்டதாகவும் பாசிக் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் பின்னர், இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரையிலும், துபாய் பொலிஸார் தன்னிடம் ஈரான் தொடர்புகள் குறித்து தினமும் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mB0MsAFzV9E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் வலையில் சிக்கிய ஸ்பைடர் வுமன்..! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spider-woman-caught-with-ice-drug-1786824855"></link>
            <id>https://tamilwin.com/article/spider-woman-caught-with-ice-drug-1786824855</id>
            <summary type="text">நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில்
ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் &#039;ஸ்பைடர் வுமன்&#039; (சிலந்தி பெண்) என
அழைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில்
ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் 'ஸ்பைடர் வுமன்' (சிலந்தி பெண்) என
அழைக்கப்படும் பெண், சாய்ந்தமருது பொலிஸாரினால் அதிரடியாகக் கைது
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய
வேளை, அவரை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>போதைப்பொருள் விநியோகம்</h2><p>

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு&nbsp; கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை (13) மாலை
சாய்ந்தமருது பொலிஸாரினால் விசேட சோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6ddb0cc-f90f-456a-ba7d-397e4b1a0238/26-6a80cc4b6664c.webp' /></p><p>
</p><p>இதன்போது, கல்முனை புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 2310
மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 40 வயதுடைய 1 பிள்ளையின் தாயான
இந்த சந்தேகநபர் பொலிஸாரின் சுருக்குப் பொறியில் சிக்கினார்.
</p><p>
கணவனை இழந்த இவர், தனது உறவினர்களின் ஒத்தாசையுடன் நீண்டகாலமாக போதைப்பொருள்
விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><h2>விளக்கமறியல்</h2><p> </p><p>பொலிஸார் சோதனையிட வரும்
சந்தர்ப்பங்களில், வீடுகளின் மாடிகளில் இருந்து ஏனைய மாடிகளுக்கு லாவகமாகப்
பாய்ந்து தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தமையினாலேயே இவருக்கு
மக்கள் 'ஸ்பைடர் வுமன்' எனப் பெயரிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d1feb10-bd22-4ba6-b317-d73c2719d8c7/26-6a80cc4c66f11.webp' /></p><p>
</p><p>
இம்முறை பெண் பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினர் மாறுவேடத்தில் சென்று,
நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே கால் உடைந்த நிலையிலிருந்த இவரைச் சுற்றி
வளைத்துக் கைது செய்துள்ளனர்.</p><p> இதற்கு முன்னரும் இரு வேறு சந்தர்ப்பங்களில்
கைதான இவர், கல்முனை தலைமையக பொலிஸாருக்குப் பெரும் சவாலாக விளங்கியதாக பொலிஸ்
உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின்
மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி
ஆராச்சியின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்தசோதனை நடத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T20:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி அறிவிப்பிற்கு ஈரானின் கடுமையான பதிலடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-trump-will-soon-declare-hormuz-us-territory-1786810125"></link>
            <id>https://tamilwin.com/article/iran-trump-will-soon-declare-hormuz-us-territory-1786810125</id>
            <summary type="text">ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது, அது ஈரானுக்குச் சொந்தமானதாகவே உள்ளது தொடர்ந்து ஈரானுக்கே சொந்தமானதாக இருக்கும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாதி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்த அவர், “ஒரு ட்வீட் மூலமாகவோ, விமானந்தாங்கிக் கப்பல் மூலமாகவோ, உத்தரவு பிறப்பிப்பதன் மூலமாகவோ அல்லது தேர்தல் பிரசார உரையின் மூலமாகவோ ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற முடியாது” என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், ஈரான் சந்தித்துள்ளதாக அமெரிக்கா கூறும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத வரை, ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை ஈரான் தொடர்ந்து அமல்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eca50a7-7690-426a-a44b-346781b58de7/26-6a8090721f46a.webp' /></p><p>
</p><p>

இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு “முழுமையான கட்டுப்பாடு” இருப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

“நாம் இதை தொடர்ந்து வைத்திருப்போம் என்று நினைக்கிறேன்.</p><p> எங்கள் கடற்படை முற்றுகை ‘இரும்புச் சுவர்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.

 இதை ஈரான் எதுவும் செய்ய முடியாது” என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஈரான் இராணுவம் ட்ரம்பின் கூற்றை “பொய் மற்றும் கட்டுக்கதைகள்” என்று மறுத்துள்ளது.</p><h2>ட்ரம்பிற்கு பதிலடி</h2><p>

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து ஈரான் இஸ்லாமிய குடியரசின் முழுமையான நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் ஆயுதப்படைகளின் அனுமதி மற்றும் கண்காணிப்பு இல்லாமல் எந்தவொரு வர்த்தகக் கப்பல் அல்லது எண்ணெய் கப்பலும் இந்த நீரிணை வழியாக பாதுகாப்பாக செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7315299c-b144-4f58-848a-a9b121f959b0/26-6a809072e693c.webp' /></p><p>
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்கா “மிகப்பெரிய தவறான கணக்கீட்டை” மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ட்ரம்பின் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான கருத்து நகைச்சுவையாக கூறப்பட்டது என்று பின்னர் விளக்கம் அளித்ததாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
தற்போதைய அமெரிக்கா–ஈரான் மோதலின் முக்கிய பதற்றப் பகுதியாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது. 

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T20:20:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் சர்ச்சையாகியுள்ள கல்முனை வைத்தியசாலை விவகாரம்..! களத்தில் குதித்த ஹிஸ்புல்லா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-nurse-dress-issue-1786821686"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-nurse-dress-issue-1786821686</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சார உடையான ஹிஜாப் தொடர்பான விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சார உடையான ஹிஜாப் தொடர்பான விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்றப்பட்டு, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான சீருடையையே அணிய வேண்டும் என்பதே விதி எனவும், இது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை எனவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளார்.
</p><p>
வைத்தியசாலை நிர்வாகத்தின் செயற்பாடு இனவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, அவர் கடுமையான கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
எனினும், இந்த விவகாரத்தை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல்வாதிகள் பெரிதுபடுத்துவதாகவும், இதனைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
</p><p>
இதனிடையே, வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர், ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லை எனவும், வெளியிலிருந்து சிலர் இந்த விவகாரத்தைத் தூண்டிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.</p><p>

இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/n-YQkEN0IDc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T19:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் 30 இல் சர்வதேச மாநாடு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-on-august-30-1786818028"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-on-august-30-1786818028</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக
வடக்கு-கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாக
வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்
தெரிவித்துள்ளனர்.</p><p>

வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு -
கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரும், வவுனியா
மாவட்டத் தலைவியுமான சிவானந்தன் ஜெனிற்றா இவ்வாறு தெரிவித்தார். </p><p>அவர் மேலும்
தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நாம் நீதிக்காக தொடர்ந்து போராடி
வருகின்றோம். உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச நீதியை
வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>ஐ.நா மனித உரிமைகள் பேரவை</h2><p> காணாமல்
ஆக்கப்பட்டோர் தினத்திலும் வடக்கு - கிழக்கு பகுதிகளில் நாம் பெரியளவிலான
போராட்டங்களை நடத்தி வந்திருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce052efa-cc3a-43ad-a945-2e834fa215a3/26-6a80b265c7025.webp' /></p><p> காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல
அறிக்கைகளையும், வெளியிட்டு உள்ளோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும்
சாட்சியங்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. நியாயமான நீதி
கிடைக்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தாய்-தந்தையர்
இதுவரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>கலந்துரையாடல்</h2><p>
</p><p>
இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும்
முன்னாள் போராளிகள், நலன்புரிச் சங்கத்தினர் பங்கேற்று முழு ஆதரவை
அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44a3efbf-3951-4cce-8ce9-786a3b2243fc/26-6a80b26502555.webp' /></p><p>
</p><p>
அது போல், மதகுருமார்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி
உரிமையாளர்கள், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்
இதனைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று ஓகஸ்ட் 30 அன்று திரளாகப் பங்கேற்குமாறு அவர்
கேட்டுக் கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T19:01:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துப்பாக்கிச் சூடு: படுகாயமடைந்தவர் சற்றுமுன்னர் பலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-in-mount-lavinia-1786817353"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-in-mount-lavinia-1786817353</id>
            <summary type="text">மவுண்ட் லெவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மவுண்ட் லெவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று (15) இரவு சுமார் 9.50 மணியளவில், ஹுலுதாகொட வீதியில் உள்ள வீடொன்றுக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce9513a-1bf2-4ebf-bf7a-41e46678ff3c/26-6a80ad5f9c637.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.[</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-15T18:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தாழ்த்தி பேசிய விடயம் கண்டிக்கத்தக்கது! பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/video-remarks-about-the-post-development-officers-1786815166"></link>
            <id>https://tamilwin.com/article/video-remarks-about-the-post-development-officers-1786815166</id>
            <summary type="text">வட மாகாண சபையிலே அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பதவி பற்றியும் அவர்களுடைய பணி
தொடர்பாகவும் தரம் தாழ்த்தி பேசிய விடயம் கண்டிக்கத்தக்கது என&amp;nbsp;அகில ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண சபையிலே அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பதவி பற்றியும் அவர்களுடைய பணி
தொடர்பாகவும் தரம் தாழ்த்தி பேசிய விடயம் கண்டிக்கத்தக்கது என&nbsp;அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர்
க.அனிரன் தெரிவித்துள்ளார்.</p><p>மட்டு.ஊடக அமையத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து
கொண்டபோது இதனை தெரிவித்தார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபையிலே உயர்மட்ட
அதிகாரிகள் கலந்துரையாடல் முடிவுற்றதன் பிற்பாடு, பொதுவாக இலங்கையிலே
இருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பதவி பற்றியும் அவர்களுடைய பணி
தொடர்பாகவும் தரம் தாழ்த்தி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களிலே பரவலாக பதிவேற்றம் செய்யப்பட்டு கொண்டு வருகின்றது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இது தொடர்பான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும், இதற்குரிய சட்ட நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd2d1692-47cb-4638-95b7-d107cca40e51/26-6a80a59497908.webp' /></p><p>அதன் அடிப்படையில், எங்களுடைய அகில இலங்கை பட்டதாரி
ஒன்றியம் என்கின்ற அடிப்படையிலே இது தொடர்பான விடயங்களை இந்த ஊடக வாயிலாக
வெளிப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கோடு இன்று இந்த மட்டக்களப்பு ஊடக
மையத்திலே இந்த ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.</p><p>அபிவிருத்தி சார்ந்தும் கதைக்கப்பட வேண்டிய அந்த சந்தர்ப்பங்களில் அரசினால்
ஒதுக்கப்பட்டிருக்கின்ற பணி நேரத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அந்த
நியமனதாரர்களை தரம் தாழ்த்தி பேசுவதோடு மாத்திரமல்லாமல், அவர்களுக்கு சம்பளம்
வழங்கப்படுவது ஒரு வீண், இவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டால் அரசுக்கு இலாபம்
என்கின்ற அந்த தேவையில்லாத கேவலமான அந்த விடயங்களை பேசி இருக்கின்றார்கள் இது
கண்டிக்கத்தக்க விடயம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T17:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் வளைகுடா நோக்கி செல்லும் USS George Washington கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uss-george-washington-replace-uss-abraham-lincoln-1786814072"></link>
            <id>https://tamilwin.com/article/uss-george-washington-replace-uss-abraham-lincoln-1786814072</id>
            <summary type="text">அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் மற்றும் கடற்படையினர் நீண்டகால ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் மற்றும் கடற்படையினர் நீண்டகால பணியமர்த்தலால் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
 இதையடுத்து, அவர்களுக்கு மாற்றாக யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வோஷிங்டன் USS George Washington விமானம் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்படுகிறது.</p><p></p><h2>

260 நாட்களுக்கும் மேலாக கடலில்
</h2><p>
USS Abraham Lincoln கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக கடலில் உள்ளது. சுமார் 200 நாட்களாக எந்த துறைமுகத்திலும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து பயணித்து வருகிறது.

இந்த கப்பல் சுமார் 260 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e19b98e3-aed4-4e56-aa98-b78b82e05774/26-6a80a11b9135c.webp' /></p><p> இது அமெரிக்க கடற்படையில் கவலையை ஏற்படுத்தியுள்ள நீண்டகால பணியமர்த்தலாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க செனட்டர் ரிச்சர்ட் புளூமென்தால், பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்திடம் கப்பலில் உள்ள நிலைமை குறித்து கடிதம் மூலம் கவலை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதில் அடிப்படை பொருட்களின் பற்றாக்குறை, குடிநீர் மாசுபாடு, கழிவறை மற்றும் குழாய் பிரச்சினைகள், மாலுமிகளின் மோசமடைந்து வரும் மனநலம், கப்பல் தள பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் தபால் சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><h2>
USS George Washington மத்திய கிழக்கு நோக்கி</h2><p>

இந்த நிலையில், USS George Washington கப்பல் ஏற்கனவே மத்திய கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
</p><p>
அது கடந்த வாரம் வியட்நாமின் Da Nang துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436de93e-824c-455f-a751-287b249663a3/26-6a80a11c88447.webp' /></p><p> </p><p>பின்னர் ஒரு க்ரூசர் மற்றும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பலுடன் Singapore Strait வழியாக பயணித்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர், அந்த விமானம் தாங்கிக் கப்பல் தற்போது Malacca Strait பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அங்கிருந்து அது இந்தியப் பெருங்கடல் வழியாக மத்திய கிழக்கு நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

The Wall Street Journal தகவலின்படி, மத்திய கிழக்கில் தற்போது பணியில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான USS Abraham Lincoln-க்கு பதிலாக USS George Washington களமிறக்கப்பட உள்ளது.
</p><h2>
மாலுமிகள் கடுமையான அழுத்தத்தில்</h2><p>

நீண்டகால பணியமர்த்தல் மற்றும் தொடர்ந்து நீட்டிக்கப்படும் பணிக்காலம் காரணமாக மாலுமிகளின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

Military Times வெளியிட்ட தகவலின்படி, சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதிக்க முயன்றதாகவும் அல்லது அதுபற்றி சிந்தித்ததாகவும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
</p><p>
ஒரு மாலுமியின் மனைவி Annabelle Loma, தனது கணவர் பலமுறை பணிக்காலம் நீட்டிக்கப்பட்ட பின்னர் கப்பலில் இருந்து குதிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cb0b310-f4b8-4d1b-aec2-62ea5938c67e/26-6a80a11d3a8ea.webp' /></p><p>
</p><p>
அவர் கடுமையாக சோர்வடைந்திருந்ததாகவும், இந்த சம்பவம் தனது 13 ஆண்டுகால இராணுவப் பணியை பாதித்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் அவர் கூறினார்.
</p><p>
மற்றொரு சம்பவத்தில், கப்பலில் இருந்த ஒருவர் கடலில் குதிக்க முயன்ற சக மாலுமியை பிடித்து இழுத்து மீட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இதற்கிடையில், ஈரானுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க கடற்படை தனது பணிகளைத் தொடர்வதற்காக கப்பல்களை மாறி மாறி அனுப்பும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T17:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா-நிலாவினி விவகாரம்: பெண் தளபதியின் இரகசிய வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/contraceptive-pill-karuna-female-commander-1786804279"></link>
            <id>https://tamilwin.com/article/contraceptive-pill-karuna-female-commander-1786804279</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா முரண்பட்டபோது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.அவற்றில் மிக முக்கியமாக அந்தக்கால கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா முரண்பட்டபோது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.</p><p>அவற்றில் மிக முக்கியமாக அந்தக்கால கட்டத்தில் மகளிர் அணித்தலைவியாக இருந்த நிலாவினி என்ற பெண்ணுடன் கருணாவிற்கு இருந்த முறைகேடான உறவும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டு இருந்தது.</p><p>கருணா-நிலாவினி விவகாரம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாத்திரம் அல்ல சிறிலங்கா தரப்பிற்கு கூட தெரிந்த ஒரு விடயம் தான்.</p><p>அத்தோடு,&nbsp;கருணா தன்னோடு தறவான உறவில் இருந்ததாகவும், பல தடவைகள் தனக்கு அவர் கர்ப்பத்தடை மாத்திரை தந்ததாகவும் நிலாமினி விசாரணையில் தெரிவித்துள்ளார்.</p><p>விடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்திய ‘கருணா பிளவு’ சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நிகழ்வுகள் பற்றிய விடயங்களை உண்மைகள் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wuWF75v1fAc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T17:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/impact-of-drought-intensifies-risk-ponds-drying-up-1786811460"></link>
            <id>https://tamilwin.com/article/impact-of-drought-intensifies-risk-ponds-drying-up-1786811460</id>
            <summary type="text">இலங்கையின் பல பிரதேசங்களில் வறட்சியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுத்தப்படுகின்றது.அத்தோடு, வறண்ட வானிலை காரணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல பிரதேசங்களில் வறட்சியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுத்தப்படுகின்றது.</p><p>அத்தோடு, வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.</p><p> இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><h2>கடுமையான வறட்சி</h2><p>

 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de136b7e-f73c-4e7e-8d17-d3c67b5a1443/26-6a809a269ff87.webp' /></p><p>

 

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>&nbsp;தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலையின் தாக்கம் சிறிய குளங்களையே பெரிதும் பாதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T16:57:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா - குறிசுட்டகுளம் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-man-dies-in-elephant-attack-in-vavuniya-1786811047"></link>
            <id>https://tamilwin.com/article/family-man-dies-in-elephant-attack-in-vavuniya-1786811047</id>
            <summary type="text">வவுனியா- குறிசுட்டகுளத்தில் யானை தாக்கியதில்
குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(15.8.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா- குறிசுட்டகுளத்தில் யானை தாக்கியதில்
குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த சம்பவமானது இன்று(15.8.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,

வவுனியா, குளவிசுட்டான் பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தில் தோட்ட வேலைக்கு
சென்ற போதே குறித்த குடும்பஸ்தர் மீது யானை தாக்கியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
இதில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நபரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db19c56-870c-4e19-b3a6-0f0259de225c/26-6a8092a9a540f.webp' /></p><p>இது தொடர்பில்
நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T16:28:31+00:00</updated>
        </entry>
    </feed>
