<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-09T19:19:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஈரான் வசம்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் - வெளியான பகீர் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-malfunctioned-iran-video-capture-submarine-1788980733"></link>
            <id>https://tamilwin.com/article/us-malfunctioned-iran-video-capture-submarine-1788980733</id>
            <summary type="text">ஈரான்

ஹோர்முஸ் நீரிணை நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கருவியை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான்

ஹோர்முஸ் நீரிணை நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கருவியை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், Dive-LD என அடையாளம் காணப்பட்ட இந்த ஆளில்லா நீருக்கடிக் கருவி, சிக்கலான உளவுத்துறை நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், உலகின் நவீன நீருக்கடித் தொழில்நுட்பங்களில் ஒன்றாக இந்தக் கருவி விளங்குவதாகவும் IRGC தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாக பறந்த MQ-9 Reaper ஆளில்லா விமானத்தையும் தங்களது வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது.</p><h2>

அமெரிக்காவின் பதில்
</h2><p>
ஈரானின் அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம், ஒரு ஆளில்லா நீருக்கடிக் கருவி அதற்கு முந்தைய நாளில் செயலிழந்ததாக தெரிவித்துள்ளது.</p><p> 

எனினும், ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் Dive-LD அதுதானா என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.

அந்தக் கருவி பிராந்திய கடற்பரப்பை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அது பழைய மொடல் என்பதுடன், முக்கியமான தகவல்களைச் சேகரிக்கவோ ரகசிய சோனர் அல்லது ரேடார் கருவிகளை எடுத்துச் செல்லவோ இல்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Footage released by Iranian media shows what the IRGC claims is an American Dive-LD unmanned submarine captured today. Iran says the vessel is now in its possession. <a href="https://t.co/POWlEHHnd5">pic.twitter.com/POWlEHHnd5</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2097390208249389519?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
Anduril நிறுவனத்தின் தகவல்படி, Dive-LD சுமார் 10 நாட்கள் வரை தொடர்ந்து செயல்படக்கூடியது. மேலும், சுமார் 6,000 மீட்டர் ஆழம் வரை செல்லும் திறன் கொண்டது. ஒரு கருவியின் விலை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, ஈரான் மீது அமெரிக்கா தனது அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது. </p><p>அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற 5 டேங்கர் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

மேலும், ஈரானின் மீதமுள்ள 27 விமான நிறுவனங்களை அமெரிக்க கருவூலத் துறை தடுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
</p><h2>
ஈரானின் நிலைப்பாடு</h2><p>

ஈரான் ஜனாதிதபி மசூத் பெசெஷ்கியான், போரை விரும்பவில்லை என்றாலும், தங்கள் நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.</p><p>
ஈரான் தனது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து எதிர்த்து நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9126a40-c51c-40bb-a9a7-c9681f7351c2/26-6aa1b044b9a31.webp' /></p><p>
</p><p>பெப்ரவரி 28ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது கூட்டு தாக்குதல்களை நடத்தின. </p><p>

இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.</p><p>

இதன் தொடர்ச்சியாக ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடும் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p> இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆளில்லா நீர்மூழ்கிக் கருவி தொடர்பான இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T19:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தில் நாமலே புலம்பிய இரகசியம்! இருவரை தீர்த்து கட்டிய மர்மம் - தப்பிய ஒருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-issue-in-sri-lanka-1788977933"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-issue-in-sri-lanka-1788977933</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர் தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன் மீதான வழக்குகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர் தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தன் மீதான வழக்குகள் சிக்கலானவை என்பதால், பிணை கிடைக்க குறைந்தது ஐந்து முதல் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம் என அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 சில சந்தர்ப்பங்களில் பிணை கிடைக்காமலும் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>


இந்தநிலையில், ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் முக்கிய சாட்சிகளாக கருதப்பட்ட கபில சந்திரசேன மற்றும் ஊடகவியலாளர் ரஜீவ் பிரகாஷ் ஜெயவீர ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நிமல் பெரேரா முக்கிய சாட்சியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நிமல் பெரேரா தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவர் இலங்கைக்கு திரும்பினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

நாமல் ராஜபக்ச எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>அவரது விடுதலை சட்ட நடவடிக்கைகளின் போக்கைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u2NuDGRtdR8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T18:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கும் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/demands-presented-valvettithurai-patients-welfare-1788971403"></link>
            <id>https://tamilwin.com/article/demands-presented-valvettithurai-patients-welfare-1788971403</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன்
இயங்குவதாக வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க
செயலாளர் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன்
இயங்குவதாக வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க
செயலாளர் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்திலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவித்ததாவது.

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு தினமும் நூற்றுக்கணக்கான
வெளிநோயாளர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.</p><h2>குறைபாடு</h2><p> </p><p>பொறுப்பு வாய்ந்த அரசாங்க
அதிகாரிகளினால் கைவிடப்பட்டும், கவனிப்பாரற்றும் இருக்கும் வல்வெட்டித்துறை
பிரதேச வைத்தியசாலை உரிய வசதிகளுடன் மீள் இயங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என்றும், 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் ஏறத்தாழ 12000
மக்களுக்கு சேவையாற்றி வரும் ஒரு பிரதேச வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef68dbc2-50f4-49dc-8332-98f4def1c782/26-6aa1966a5e5ca.webp' /></p><p>
120 கட்டில்கள் போடக் கூடிய நிலையில் இருந்தும் 85 கட்டில்களே இப்போது உள்ளன.
2009 வரைக்கும் இங்கே பிரசவங்கள் இடம்பெற்று வந்தன. இப்போது பிரசவ அறைகள்
வசதியுடன் இருந்தும் மகப்பேற்று வைத்திய நிபுணர் - VOG ஒருவர் நிரந்தரமாக
இல்லாததால் அங்கே பிரசவங்கள் இடம் பெறுவதில்லை.</p><p>அவசர மின் துண்டிப்பு சமயங்களில் பயன்படுத்துவதற்கு
மின்பிறப்பாக்கி புதிதாக கொள்வனவு செய்யப்பட்டும் அதற்குரிய அறை சரியாக
ஒழுங்கு செய்யப்படாததால் கடந்த மூன்று மாதமாக மின் தடைப்பட்டாலும் கூட
நோயாளர்களுக்கு உரிய சேவைகளை வழங்க முடியாமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.</p><p>

இறுதியாக பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டுகளுக்கு
பதிலளித்தார், ஒவ்வொரு விடயமாக விளக்கமளித்த அவர், சில விடயங்கள் அரசின்
கொள்கை முடிவு ஆக இருப்பதாகத் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T17:25:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 ஆண்டுகள் கடந்தும் மறையாத சத்துருக்கொண்டான் நினைவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massacre-in-sathurukondan-batticaloa-1788972735"></link>
            <id>https://tamilwin.com/article/massacre-in-sathurukondan-batticaloa-1788972735</id>
            <summary type="text">மட்டக்களப்பு - சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம்
திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம் இன்று (09) மால...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம்
திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம் இன்று (09) மாலை
உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.</p><p>
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் உள்ள
உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.</p><h2>36ஆம் ஆண்டு நினைவேந்தல்</h2><p>
</p><p>1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி,
பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள்,
10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி இராணுவ
முகாமுக்கு அழைக்கப்பட்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fe7a8f9-6d73-4a5c-9f99-691c3e9a0c5c/26-6aa192b8c9fc7.webp' /></p><p>
இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவற்படையினராலும், ஒட்டுக்குழுவினராலும்
இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. </p><p>இந்தப் படுகொலையின் 36ஆம் ஆண்டு
நினைவேந்தல் இன்று சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.</p><h2>சத்துருக்கொண்டான் படுகொலை</h2><p>
</p><p>சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் குழந்தைவேல் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்
சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார்,மாநகரசபை உறுப்பினர்
ரகுநாதன்,சிவில் சமூக செயற்பாட்டாளர்களான அருட்தந்தை க.ஜெகதாஸ்,கண்டுமணி
லவகுகராசா,எஸ்.சிவயோநாதன்,மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட
சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி உட்பட பலர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/097c0303-1e1e-4b02-92fc-a8bfd6d79768/26-6aa192b9ab06e.webp' /></p><p>
</p><p>இதன்போது பிரதான ஈகச்சுடர் கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி,
சத்துருக்கொண்டான் கிராமங்களை சேர்ந்த உறவுகளை இழந்தவர்களினால் ஏற்றப்பட்டதை
தொடர்ந்து நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு
அகவணக்கம் செலுத்தப்பட்டது.</p><p>
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் நீதிகோரியும்
சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவமுகாம் பகுதியில் அகழ்வாய்வு
முன்னெடுக்குமாறு கோரியும் மனு ஒன்றும் இதன்போது வாசிக்கப்பட்டு
வழங்கப்பட்டது.</p><p>
இந்த நிகழ்வின்போது பெருமளவான பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும்
கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T17:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிரான சாட்சியங்கள் குறித்து சந்தேகம் வெளியிடும் மொட்டு கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/question-raised-about-namals-arrest-1788972656"></link>
            <id>https://tamilwin.com/article/question-raised-about-namals-arrest-1788972656</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவிற்கு எதிரான சாட்சியங்கள் குறித்து கட்சி சந்தேகம் ளெியிட்டுள்ளது.
நாமலை கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவிற்கு எதிரான சாட்சியங்கள் குறித்து கட்சி சந்தேகம் ளெியிட்டுள்ளது.
</p><p>நாமலை கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>
இன்று பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரசியல் பழிவாங்கல்</h2><p>
</p><p>தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் எதிராளிகளை அடக்குவதற்காகவே ஊழல் எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி வருவதாகச் சாகர காரியவசம் இதன்போது குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
நாமல் ராஜபக்‌சவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் போது முன்வைக்கப்படும் சாட்சியங்கள் மீது எவ்வித நம்பிக்கையும் வைக்க முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d592347-57a1-4216-a67c-7caf7fc5dd9d/26-6aa18e723329a.webp' /></p><p>
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அபேகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இதேவேளை, எந்தவிதமான அரசியல் பழிவாங்கல்களிலும் ஈடுபடவில்லை என சட்டத்தின் பிரகாரம் நாமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் மட்டும் இல்ல... அரபிக்கடலிலும் ஈரான்! ஹோர்முஸை தாண்டி விரியும் ஆதிக்கம் - வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-maritime-border-restrictions-iran-announces-1788969862"></link>
            <id>https://tamilwin.com/article/new-maritime-border-restrictions-iran-announces-1788969862</id>
            <summary type="text">ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ள புதிய கடல் எல்லைக்
கட்டுப்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, வழக்கமான ஹோர்முஸ் நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ள புதிய கடல் எல்லைக்
கட்டுப்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதன்படி, வழக்கமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியைத் தாண்டி, ஈரானின் தென்கிழக்குத்
துறைமுக நகரமான சாபஹார் (Chabahar) பகுதியிலிருந்து தொடங்கி ஓமன் வளைகுடா
மற்றும் அரபிக் கடலின் பரந்த பகுதிகள் வரை இந்த "தடைசெய்யப்பட்ட மண்டலம்
நீடிக்கப்படும்.</p><h2>எல்லைக் கட்டுப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
இதற்கான துல்லியமான புவியியல் எல்லை வரம்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்படும் என IRGC பேச்சாளர் உசேன் மொஹெபி (Hossein Mohebi)
தெரிவித்துள்ளார்.
</p><p>

இந்த தடை நீடிப்பின் பின்னர், ஈரானின் முறையான அனுமதி அல்லது முன்
ஒருங்கிணைப்பு இல்லாமல் எந்தவொரு வணிக அல்லது சரக்குக் கப்பல்களும் இந்த
எல்லைக்குள் நுழைய முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d12cbe4-4f80-4d1e-b8f1-699b1e3b62f4/26-6aa1854db76b2.webp' /></p><p>


முன் அனுமதியின்றி நுழையும் கப்பல்கள் மீது ஈரானிய சட்டங்களின்படி பொருளாதார
மற்றும் செயல்பாட்டுத் தடைகள் விதிக்கப்படும்.

அத்தகைய கப்பல்களுக்கான கடல்சார் சேவைகள், கப்பல் காப்பீடு (Insurance)
மற்றும் தளவாட ஆதரவுகள் (Logistics services) அனைத்தும் ரத்து செய்யப்படும்.
</p><p>

எதிர்காலத்தில் அவை ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கவும் நிரந்தரத் தடை
விதிக்கப்படும்.


இந்த நிலையில்,அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும்
எண்ணெய் கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பிராந்தியக்
கடற்பகுதியில் ஈரானின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T16:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இலக்கத் தகடு விநியோகம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-number-plates-will-be-distributed-1788969557"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-number-plates-will-be-distributed-1788969557</id>
            <summary type="text">அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அனைத்து இலக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அனைத்து இலக்கத் தகடுகளும் விநியோகிக்கப்பட்ட பின்னர், வாகனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார். </p><p>

இன்று (09.09.2026) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><h2>வாகன இலக்கத் தகடுகள்</h2><p> </p><p>

இந்த வருடம் கடந்த மார்ச் 10 ஆம் திகதியே வாகன இலக்கத் தகடுகளை விநியோகிப்பதற்கான ஒப்பம் செய்யப்பட்டது. 

அன்றைய தினம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a4bf21c-c715-4a17-9e56-c9186eee3321/26-6aa18714d4c31.webp' /></p><p> </p><p>

2023 - 2024 காலப்பகுதிக்குரிய இலக்க தகடுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதேநேரம், குறித்த காலப்பகுதிக்குரிய 32 ஆயிரம் இலக்க தகடுகள் தற்போதும் உள்ளன. 

இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்குரிய இலக்கத் தகடுகளுக்காக மேலும் ஒரு ஒப்பந்தம் எதிர்வரும் வாரத்தில் செய்துக் கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் ஜனாதிபதி எவ்வாறு கருத்து வெளியிட முடியும்: சஜித் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-questions-presidents-remarks-on-22nd-1788969877"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-questions-presidents-remarks-on-22nd-1788969877</id>
            <summary type="text">உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எவ்வாறு கருத்துக்களை வெளியிட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எவ்வாறு கருத்துக்களை வெளியிட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி எவ்வாறு பகிரங்கமாகத் தெரிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, 20வது திருத்தச் சட்டத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என முன்னர் வாதிட்ட ஜனாதிபதி, தற்போது 22வது திருத்தத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை எனக் கூறுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>கடும் விமர்சனம்</h2><p>
</p><p>அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடித் தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன்பே, தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மை குறித்து ஜனாதிபதி எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்றும் அவர் வினவினார்.
</p><p>ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பிய கரிசனைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து சஜித் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a501586-b946-4d78-883c-fbe5b527ca8e/26-6aa190ea86eaf.webp' /></p><p>
முன்மொழியப்பட்டுள்ள திருத்தம், நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான 'லடிமர் ஹவுஸ் கோட்பாடுகளை' பலவீனப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சர்வதேச அமைப்பின் பங்களிப்பை அரசாங்கம் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>நாட்டின் பொருளாதாரம் </h2><p>
பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைச் சந்திக்க அதிகாரிகள் மறுத்ததாகக் குறிப்பிட்ட சஜித், இது தொடர்பாக நீதியமைச்சர் அச்சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
</p><p>அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் ஒருசேர பலவீனப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88d2cefd-80dc-4140-9b1d-d5b8ea345f75/26-6aa1839758334.webp' /></p><p>
அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்க முயன்றால் அதனை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஊடகங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்ட இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர்.. வெளியான பரபரப்பு காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiya-thero-remanded-video-released-1788965464"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiya-thero-remanded-video-released-1788965464</id>
            <summary type="text">மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;</p><p>
அண்மையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p>அதனை தொடர்ந்து, நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது&nbsp;11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர் செயற்பட்ட காணொளி தற்போது வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DRuexSLGZfo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T15:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-brutally-1788964795"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-brutally-1788964795</id>
            <summary type="text">இரத்தினபுரி, கெட்டலியன்பல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, கெட்டலியன்பல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் கெட்டலியன்பல்ல, கஹங்கம, இரத்தினபுரி முகவரியை சேர்ந்த 61 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;இக்கொலை இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b>கொடூரமான முறையில் கொலை</b></h2><p> </p><p>

அலவங்கினால் தலையில் தாக்கி, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283eb66d-990e-48bc-9140-a515a95b950c/26-6aa172ab2b533.webp' /></p><p>இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், கொலை செய்யப்பட்ட நபர் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. </p><p>&nbsp;கொலை சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளரின் சகோதரன் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் வீட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டவர்&nbsp; என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T14:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-moratuwa-a-short-1788964856"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-moratuwa-a-short-1788964856</id>
            <summary type="text">மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது&amp;nbsp;இன்று (9) மாலை இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவமானது&nbsp;இன்று (9) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p> </p><p>

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/255be5ac-216d-441c-8c8e-ad15474429b1/26-6aa171b1e2297.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:48:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-hacked-with-a-sword-court-jaffna-1788964149"></link>
            <id>https://tamilwin.com/article/person-hacked-with-a-sword-court-jaffna-1788964149</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவமானது&nbsp; வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த
பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக
பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக்
கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய
தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை
மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன்
தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து
வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4ec124a-e608-483e-a976-8f78154bacf4/26-6aa16f37f3e86.webp' /></p><p>
</p><p>
தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்,
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவுக்கு சபையில் கடுமையான எச்சரிக்கை விடுத்த பிரதி சபாநாயகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ramanadhan-archuna-warned-parliament-live-today-1788955379"></link>
            <id>https://tamilwin.com/article/ramanadhan-archuna-warned-parliament-live-today-1788955379</id>
            <summary type="text">இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது,&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிரதி சபாநாயகர்&amp;nbsp;ஹேமாலி வீரசேகர கடுமையாக எச்சரித்தார்.&amp;nbsp;சபை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது,&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிரதி சபாநாயகர்&nbsp;ஹேமாலி வீரசேகர கடுமையாக எச்சரித்தார்.&nbsp;</p><p>சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய தண்டனை வழங்க நேரிடும் என அவர் வலியுறுத்தினார்.</p><p>
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது,&nbsp; அர்ச்சுனா இராமநாதன் அடிக்கடி ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்பட்ட நிலையிலேயே சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதி சபாநாயகர், அவரை இவ்வாறு எச்சரித்தார்.</p><h2>தண்டனை வழங்க நேரிடும்..&nbsp;</h2><p>
</p><p>விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அடிக்கடி எழுந்து ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் நிலையியல் கட்டளை இலக்கங்களை குறிப்பிட்டு அர்ச்சுனா இராமநாதன் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be29657e-7dc7-414b-8d6d-513bd262d376/26-6aa1631adf409.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விவாதத்தில் உரையாற்றும் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருடன் தர்க்கங்களில் ஈடுபட்டனர். </p><p>இதன்போதும் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போது, அவரை எச்சரித்த பிரதி சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறான வகையில் நடந்து கொண்டால் நிலையியல் கட்டளை77, 78 மற்றும் 79 இன் கீழ் தண்டனை வழங்க நேரிடும் என்று தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகரசபை முதல்வர் விவகாரம்: ஆளுநரின் வர்த்தமானி மீதான தடை நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-municipal-council-mayor-issue-1788960601"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-municipal-council-mayor-issue-1788960601</id>
            <summary type="text">வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான
இடைக்கால தடைக் கட்டளையினை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல்
நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான
இடைக்கால தடைக் கட்டளையினை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல்
நீதிமன்றம் இன்று (09.09) உத்தரவிட்டது.
</p><p>
எதிர் மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்து மூல சமர்ப்பணங்களை வழங்க
அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் கால அவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><h2>தாக்கல்</h2><p>
</p><p>குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா
அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம்
இடம்பெற்றிருந்தது.
</p><p>
அந்த வகையில், இருதரப்பு விவாதங்களையும் எழுத்து மூல சமர்ப்பணமாக வழங்குமாறும்
அதனை கடந்த 28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய
வேண்டும் என்றும் கடந்த தவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0006461-6d1a-452b-bcc1-85837ecce998/26-6aa16232c554b.webp' /></p><p>
</p><p>
அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு
சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்து
மூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் கால அவகாசம்
மன்றால் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத்
தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ.தயாபரன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[800 மில்லியன் ரூபா கொள்ளை: பிரதான சூத்திரதாரி கைது - திடுக்கிடும் பின்னணி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/800m-thalawathugoda-agency-robbery-arrested-1788955502"></link>
            <id>https://tamilwin.com/article/800m-thalawathugoda-agency-robbery-arrested-1788955502</id>
            <summary type="text">தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசேட சோதனையில் சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
</p><p>கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><h2>அதிர்ச்சி தகவல்கள்&nbsp;</h2><p>
</p><p>கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி, முழங்காலிடச் செய்து தாக்குதல் நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436750de-6c60-42ba-8548-791732847319/26-6aa14b7023c22.webp' /></p><p> </p><p>பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>
அவர் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கடன் சுமையில் இருந்துள்ளார்.</p><p>
அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண வீடொன்றில் தனக்கு ஏற்பட்ட பகிரங்க அவமானமும், கடன் சுமையுமே இந்தக் கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>
தனியாக இக்குற்றத்தைச் செய்ய முடியாததால், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். </p><p>அவர் மூலம் பொமிரியாவைச் சேர்ந்த மேலும் இருவர் இணைக்கப்பட்டனர்.
கொள்ளைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் கூடி திட்டமிட்டுள்ளனர்.</p><h2>&nbsp;போலி இலக்கத் தகடுகள்&nbsp;</h2><p>
</p><p>ஹன்வெல்ல நிதி நிறுவனமொன்றில் பெறப்பட்ட வாடகை வாகனத்திற்குப் போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தி இக்குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ef4c39-dd6a-4af1-9246-4eca3a84e85d/26-6aa158e3e5d2a.webp' /></p><p>
</p><p>கொள்ளைக்குப் பிறகு கும்பல் மீண்டும் சித்தமுல்ல வீட்டிற்குச் சென்று கொள்ளைப் பொருள்களைப் பிரித்துக் கொண்டுள்ளது.</p><p> பிரதான சூத்திரதாரி: 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகள் என்பனவற்றையும் மற்ற இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>
பிரதான சூத்திரதாரி தனது பங்கிலிருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியாவிலுள்ள நண்பரிடம் பாதுகாப்பிற்காகக் கொடுத்துள்ளார். 1.3 மில்லியன் ரூபாயைக் கொண்டு அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்டுள்ளதுடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்ற கடன்களையும் அடைத்துள்ளார். </p><p>பொலிஸார் இவரின் பங்கில் 300,000 ரூபாவைத் தவிர மற்ற அனைத்துப் பணத்தையும் மீட்டுள்ளனர்.
ஏனைய சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:32:13+00:00</updated>
        </entry>
    </feed>
