<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-13T23:18:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் திருகோணமலையில் கடற்றொழிலாளர்களின் அபிவிருத்தி குழு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-development-committee-meeting-trinco-1786662262"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-development-committee-meeting-trinco-1786662262</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்றையதினம் (13) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
</p><p>குறித்த கூட்டம், மாவட்ட செயலாளர்
W. G. H. ஹேமந்தகுமாரவின் ஒருங்கிணைப்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்
வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.</p><h2>ஒருங்கிணைப்புக் குழு</h2><p>

இதில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார
மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா
மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர்
கலந்துகொண்டு, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் தேவைகள்
குறித்துத் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6edc8961-1c47-4d37-9cf5-1d9f3f6b2504/26-6a7e4e6ef3a2f.webp' /></p><p>
</p><p>
கூட்டத்தின் தொடக்கத்தில், இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் இதன் மூலம்
எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
விரிவாக விளக்கமளித்தார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, கடந்த மாவட்ட கடற்றொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.
</p><p>
குறிப்பாக, திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும்
சிக்கல்களுக்கு விரைவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப்
பெற்றுக்கொடுப்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
இந்தக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின்
செயலாளர், திருகோணமலை மாவட்ட மீன்பிடி கூட்டுத்தாபன அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள், மாவட்ட மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T23:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து எழுந்துள்ள விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/criticism-regarding-trump-administration-action-1786654641"></link>
            <id>https://tamilwin.com/article/criticism-regarding-trump-administration-action-1786654641</id>
            <summary type="text">பாலியல் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
அந்நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலியல் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
அந்நாட்டின் நீதித்துறை அதற்கான நடவடிக்கைகளைச் சரியாகச் செயல்படுத்தவில்லை
என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
நீதிமன்றப் பதிவுகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த அறிக்கையின்படி,
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் பாலியல் கடத்தல் தொடர்பான வழக்குகள் கணிசமாகக்
குறைந்துள்ளன.</p><p></p><h2>ட்ரம்ப் அரசின் நடவடிக்கை</h2><p>
பாலியல் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அனுபவமிக்க சட்டத்தரணிகள்
மற்றும் முகவர்கள் பலர் பணியை விட்டு விலகியதும், ட்ரம்பின் தீவிரக்
குடிவரவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் அதிகளவில் திருப்பி
விடப்பட்டதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
</p><p>
அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து வந்த தொண்டு நிறுவனங்களுக்கான
நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாலும் தாமதமானதாலும் வழக்குகள்
குறைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7af9c6-8047-456f-94dd-758826db9051/26-6a7e36dd42047.webp' /></p><p>

இதன் காரணமாகப் பல தீவிர விசாரணைகள் பாதியிலேயே முடங்கியுள்ளதாகவும்,
பாதிக்கப்பட்டவர்கள் அரசு நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைந்து
வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள்,
பாலியல் கடத்தலையும் சிறுவர் சுரண்டலையும் தடுப்பது தங்களின் முக்கிய
முன்னுரிமையாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T22:18:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/voting-elect-a-new-president-in-zambia-1786654730"></link>
            <id>https://tamilwin.com/article/voting-elect-a-new-president-in-zambia-1786654730</id>
            <summary type="text">சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்
வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்
வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
</p><p>
சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப்
பதிவெழுதியுள்ளனர்.</p><p>

மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளபோதிலும், தற்போதைய அதிபர் ஹக்காயிண்டே
ஹிசிலேமாவுக்கும், அவரது முக்கிய போட்டியாளரான பிரையன் முண்டுபிலேவுக்கும்
(Brian Mundubile) இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.</p><p></p><h2>பொருளாதார மீட்சி&nbsp;</h2><p>
</p><p>
பொருளாதார மீட்சி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை முன்வைத்து ஜனாதிபதி
ஹிசிலேமா மீண்டும் ஆதரவு திரட்டி வரும் நிலையில், அதிகரித்து வரும் வாழ்க்கைச்
செலவினங்கள் மற்றும் பணவீக்கத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக்
கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153c00a8-98f1-42a8-a663-746a8549cac4/26-6a7e3a754f4d6.webp' /></p><p>

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப்
பெறும் வேட்பாளரே நேரடியாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T21:43:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆடை விவகாரம்..! யாரும் அறியாத திடுக்கிடும் தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877"></link>
            <id>https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
 
இந்த நிலையில், அரசு ஊழிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p> 
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் கடமையின் போது அனுமதிக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும், இது குறித்து 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் (RDHS) இருப்பதன் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் வைத்தியசாலைப் பெயர்களில் உள்ள மாற்றங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.</p><p>

இந்த விவாதம் எந்த ஒரு மதத்திற்கும் அல்லது இனத்திற்கும் எதிரானது அல்ல என்றும், சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதே அவசியம் எனவும் சமூக மட்டங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அரச ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளை (Uniform) மட்டுமே பணி நேரத்தில் அணிய வேண்டும் என்று இலங்கையின் பொது நிர்வாக மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகள் வலியுறுத்துகின்றன.

 குறிப்பாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை (கடித இலக்கம்: 2/176/212), சுகாதாரப் பணி உதவியாளர்கள் மற்றும் கனிஷ்ட தர ஊழியர்கள் முழங்கால் வரை இருக்கும் ஆடைகளை (Cream colour gown) அணிய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது.</p><p>

 எந்தவொரு மத அல்லது இன ரீதியான அடையாளங்களையும் அல்லது உடைகளையும் பணி நேரத்தில் அணிய அனுமதி இல்லை என்றும், அரசியலமைப்பு மத சுதந்திரத்தை வழங்கினாலும், அரச கடமைகளில் சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுவது கட்டாயம் என்றும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 குறித்த சீருடைகளை அணியத் தவறும் ஊழியர்களுக்கு எதிராக அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இந்தச் சுற்றறிக்கையின் கட்டாய விதிமுறையாக உள்ளது.
</p><p>
இந்த விதிமுறைகள் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் பொதுவானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mqj0Hav3DsQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T21:38:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா–ஈரான் போர்: ட்ரம்ப் பதவிக்காலம் வரை நீடிக்க வாய்ப்பு..! ஈரானின் அதிரடி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mideast-war-to-continue-till-trump-s-term-ends-1786653639"></link>
            <id>https://tamilwin.com/article/mideast-war-to-continue-till-trump-s-term-ends-1786653639</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் தொடங்கிய மத்திய கிழக்கு போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் தொடங்கிய மத்திய கிழக்கு போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை நீடிக்கக்கூடும் என ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான IRGC-யின் தளபதியும், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் நெருங்கிய உதவியாளருமான முகமது ரெசா நக்தி, அமெரிக்க ஊடகமான PBS-க்கு வழங்கிய நேர்காணலில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின் பதவிக்காலம்&nbsp;</h2><p>

போர் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் ஈரானுக்கு போரில் அதிக அனுபவம் கிடைத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
“இந்தப் போர் நீடிக்கும் வரை நாங்கள் கற்றுக்கொள்வோம். அமெரிக்காவுடன் எவ்வாறு போரிடுவது என்பதை கடந்த ஐந்து மாதங்களில் கற்றுக்கொண்டுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்பதே ஈரானின் நோக்கமா என கேட்கப்பட்டபோது, ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த நினைப்பவர்கள் அதன் விளைவுகளையும் செலவையும் உணரும் வகையில் தடுப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என நக்தி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7896302-98ba-4029-a7d8-a9031d44253e/26-6a7e2ef4b53c9.webp' /></p><p>
</p><p>&nbsp;ட்ரம்பின் தற்போதைய பதவிக்காலம் 2029 ஜனவரி 20ஆம் திகதி முடிவடைய உள்ளது. அமெரிக்கா போரில் அணு குண்டை பயன்படுத்த வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்டபோது, அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய தவறாக முடியும் என நக்தி எச்சரித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கிறதா என கேட்கப்பட்டபோது, அதற்கான தேவை இல்லை என அவர் கூறியுள்ளார்.</p><p>&nbsp;ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை என நக்தி தெரிவித்துள்ளார்.

போர் பல ஆண்டுகள் நீடித்தாலும், இறுதி நாள் வரை ஈரானிடம் இருந்து ரொக்கெட்டுகள் ஏவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;ஈரான் எச்சரிக்கை</h2><p>
மேலும், ஈரான் தினமும் உற்பத்தி செய்யும் ஏவுகணைகளின் எண்ணிக்கை, அது ஏவுகின்ற ஏவுகணைகளின் எண்ணிக்கையை விட அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கிடையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9291c43-b323-4b9c-911c-46b0bd20c3f1/26-6a7e2ef569ac7.webp' /></p><p>
</p><p>
ஜூன் 17ஆம் திகதி ட்ரம்பும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 14 அம்ச உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.</p><p>

எனினும், ஜூலை 8ஆம் திகதி அந்த உடன்பாடு முடிவடைந்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். </p><p>இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது உறுதிமொழிகளை மீறியதாக குற்றம்சாட்டி ஈரானும் அந்த ஒப்பந்தத்தை நிறுத்தியது.

இதனால், போர் நீடிக்கும் காலம் மற்றும் அமெரிக்கா–ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T21:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய குரில் தீவுகளுக்கு விளாடிமிர் புடின் முதல்முறையாக விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/putin-visits-disputed-kuril-islands-for-first-time-1786651534"></link>
            <id>https://tamilwin.com/article/putin-visits-disputed-kuril-islands-for-first-time-1786651534</id>
            <summary type="text">ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைச்
சர்ச்சையில் இருக்கும் குரில் தீவுகளின் ஒரு பகுதியான &#039;இதுருப்&#039; (Iturup)
தீவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைச்
சர்ச்சையில் இருக்கும் குரில் தீவுகளின் ஒரு பகுதியான 'இதுருப்' (Iturup)
தீவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p>

ரஷ்ய ஜனாதிபதியின் இந்த விஜயத்திற்கு ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி தனது
கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.</p><p></p><h2>முதல்முறையாக விஜயம்</h2><p>
</p><p>
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feebcb8b-381a-4330-9665-8fb8b177d262/26-6a7e246207eb3.webp' /></p><p> </p><p>புடினின் இந்த நடவடிக்கை ஜப்பான் மக்களின்
உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளதாகவும், இதனைச் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது
என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தால் கைப்பற்றப்பட்ட இந்தத்
தீவுகள், வரலாற்று ரீதியாகத் தங்களுக்குச் சொந்தமானது என ஜப்பான் தொடர்ந்து
உரிமை கோரி வரும் நிலையில், இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக
உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T20:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் நாட்டின் சிரேஷ்ட தூதுவரின் தவறான நடத்தைகள் குறித்து தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/france-investigation-ambassador-tcentral-african-1786653615"></link>
            <id>https://tamilwin.com/article/france-investigation-ambassador-tcentral-african-1786653615</id>
            <summary type="text">மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பணியாற்றி வரும் பிரான்ஸ் நாட்டின் சிரேஷ்ட
தூதுவர் புருனோ ஃபுஷே மீது பிரான்ஸ் அரசு ஒழுக்காற்று நடவடிக்கைகளைத்
தொடங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பணியாற்றி வரும் பிரான்ஸ் நாட்டின் சிரேஷ்ட
தூதுவர் புருனோ ஃபுஷே மீது பிரான்ஸ் அரசு ஒழுக்காற்று நடவடிக்கைகளைத்
தொடங்கியுள்ளது.
</p><p>
பிரெஞ்சு வார இதழான 'லே கேனார்ட் என்ஷைன்' (Le Canard enchaîné) வெளியிட்ட
அறிக்கையின்படி, தலைநகர் பாங்கியிலுள்ள (Bangui) தமது உத்தியோகபூர்வ
இல்லத்திற்கு சுமார் 30 பெண்களை வரவழைத்து முறைகேடான நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
2024 ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில்
நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்கள், தூதரகப் பாதுகாப்பிற்கு பெரும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
இது தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு விசாரணையைத் தொடர்ந்து, அவருக்கு
எதிரான நிர்வாக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/369607ca-1f02-4aa2-9d17-6fb387e32948/26-6a7e2d57df388.webp' /></p><p>
</p><p>
65 வயதான புருனோ ஃபுஷே, கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் அங்குத் தூதுவராகப்
பணியாற்றி வருகிறார்.
</p><p>
பிரான்ஸ் மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு இடையிலான இருதரப்பு
உறவுகளைச் சீரமைக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில்,
இந்தத் தூதுவரின் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்பின் 'ட்ரூத் சோஷியல்' செயலி மீது தொடரப்பட்டுள்ள வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-truth-social-faces-lawsuit-over-100-000-news-1786649713"></link>
            <id>https://tamilwin.com/article/trump-truth-social-faces-lawsuit-over-100-000-news-1786649713</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் &#039;ட்ரூத் சோஷியல்&#039; சமூக வலைத்தளத்தில்,
அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் &#039;Truth API&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளத்தில்,
அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் 'Truth API'
எனும் புதிய சேவைக்கு எதிராக நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.</p><p>

'தி இன்டர்செப்ட்' (The Intercept) மற்றும் 'ஃபிரீடம் ஒஃப் தி பிரஸ்
ஃபவுண்டேஷன்' (Freedom of the Press Foundation) ஆகிய இரண்டு அமெரிக்க ஊடக
அமைப்புகள் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.</p><h2>&nbsp;ட்ரம்பின் 'ட்ரூத் சோஷியல்'</h2><p>

மாதத்திற்கு 100,000 டொலர் (சுமார் 74,000 பவுண்டுகள்) வரை கட்டணம்
வசூலிக்கும் இந்தச் சேவையின் மூலம், சந்தைப் பொருளாதாரத்தை பாதிக்கும்
ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்புகள் சிலருக்கு மட்டும் முன்கூட்டியே கிடைப்பதாக
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e76574fc-96ea-41e8-b950-6aa272671e6c/26-6a7e1e816b366.webp' /></p><p>

இது "மிகவும் ஊழல் நிறைந்தது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது"
என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ள 'ட்ரம்ப் மீடியா எண்ட் டெக்னாலஜி குரூப்' (TMTG),
ஜனாதிபதியை தணிக்கை செய்யும் நோக்கத்துடன் "இடதுசாரி செயற்பாட்டாளர்கள்"
நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

தற்போது வரை 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த அதிவேக சேவைக்கு சந்தா
செலுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை இதற்கான அதிகாரப்பூர்வ
விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-13T20:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் ‘படுகொலை சதி’ எச்சரிக்கை: ட்ரம்பின் விமான மாற்றத்தின் அதிரவைக்கும் பின்னணி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-jet-switch-after-israel-s-iran-warning-1786643461"></link>
            <id>https://tamilwin.com/article/trump-jet-switch-after-israel-s-iran-warning-1786643461</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பியபோது, ஈரான் தரப்பிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பியபோது, ஈரான் தரப்பிலிருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து ரகசியமாக விமானம் மாற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இஸ்ரேல் வழங்கிய உளவுத்தகவலின்படி, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை நோக்கி ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>ட்ரம்பின் பாதுகாப்பு</h2><p>

இதையடுத்து, ட்ரம்பின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவு, அவரை பெரிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து சிறிய ராணுவ விமானத்திற்கு ரகசியமாக மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால், இந்த அச்சுறுத்தல் தொடர்பான இஸ்ரேலிய உளவுத்தகவல் குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d734b81d-7149-4481-8c42-9a82a8ee265c/26-6a7e1252a5f71.webp' /></p><p>

 CIA ஆய்வாளர்கள் இந்தத் தகவல் போதுமான ஆதாரங்களைக் கொண்டதாக இல்லை என மதிப்பிட்டதுடன், தங்களது சந்தேகத்தையும் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக Washington Post செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும், அச்சுறுத்தல் தொடர்பான தகவல் ஒரே ஒரு ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதும், உறுதிப்படுத்தப்படாததும், குறைந்த நம்பகத்தன்மை கொண்டதுமாக இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
துருக்கி பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியதாகவும், அங்காராவில் ட்ரம்பை படுகொலை செய்யும் குறிப்பிட்ட சதித்திட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கை</h2><p>
</p><p>

ட்ரம்பின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் முக்கிய அதிகாரியான ஸ்காட் பெசென்ட் ஆகியோர் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே பயணித்ததாகவும், ட்ரம்ப் மட்டும் வேறு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரூபியோ விமான மாற்றம் மற்றும் அதற்குப் பின்னிருந்த அச்சுறுத்தல் குறித்து அறிந்திருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

இஸ்ரேல் வழங்கிய இந்த எச்சரிக்கை, ட்ரம்பின் பாதுகாப்புக்காக மட்டுமே வழங்கப்பட்டதா அல்லது அமெரிக்காவின் பிராந்திய கொள்கை மற்றும் ட்ரம்பின் முடிவெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருந்ததா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d67e216-9616-405d-b512-85ca7fd6a93e/26-6a7e12535784e.webp' /></p><p>
</p><p>
சில அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், இந்த “படுகொலை சதி” எச்சரிக்கை உண்மையான அச்சுறுத்தலைத் தெரிவிப்பதைவிட, ட்ரம்பின் முடிவெடுப்பையும் மத்திய கிழக்கு தொடர்பான அமெரிக்க கொள்கையையும் பாதிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
துருக்கியில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ட்ரம்ப், புதிய கத்தார் பரிசாக வழங்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட விமானத்தை அங்கிருந்து முன்கூட்டியே அனுப்பிவிட்டு, பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஒரு பகுதி பயணத்தை மேற்கொள்வதாக கூறியிருந்தார்.</p><p>

ஆனால் பின்னர் வெளியான தகவலின்படி, ட்ரம்ப் அந்த பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கவில்லை. பத்திரிகையாளர்களும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப் அதே விமானத்தில் இருப்பதாக நம்ப வைக்கப்பட்ட நிலையில், அவர் ரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T19:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சட்டத்தரணி மணிவண்ணன் குறிப்பிட்ட விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-sudhumalai-amman-temple-dismissed-1786645361"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-sudhumalai-amman-temple-dismissed-1786645361</id>
            <summary type="text">சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காக
தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காக
தொடர்ந்து முன் நிற்பேன் என்று சட்டத்தரணியும் தமிழ் மக்கள் கூட்டணியினுடைய
துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். </p><p>வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;சுதுமலை அம்மன் கோவில் என்பது தமிழ் மக்கள் மத்தியிலே மிகவும் பிரபல்யமான
ஒருஆலயமாக இருக்கிறது.</p><p></p><h2>வேலைத்திட்டங்கள்</h2><p>தற்பொழுது அந்த ஆலயத்தினுடைய தர்ம கர்த்தார்கள் அந்த ஆலயத்தை முற்று முழுதாக
இடித்து அதனை அழித்துவிட்டு புதிதாக அதிலே கட்டடங்களை கட்டுவதற்கு
வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d71e040b-99f0-4171-a31b-3049f85a554d/26-6a7e0efbd55e6.webp' /></p><p>அதன் அடிப்படையிலேயே ஆலயத்தினுடைய பின்பகுதி முற்று முழுதாக இடித்து
அழிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்தக் கட்டுமானங்கள் பிரதேச சபையினுடைய எந்த விதமான அனுமதியும்
இல்லாமல் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.</p><p>குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் உடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
பொதுமக்கள் எல்லோரும் அமர்ந்திருந்து பார்த்த ஆலயத்தினுடைய முன் பகுதி
அதனுடைய கூரைகள் ஏறி இருந்து பார்த்தது எல்லாம் நீங்கள் பத்திரிகைகளில்
பார்த்திருப்பீர்கள்.</p><p></p><h2>வழக்கு தள்ளுபடி</h2><p> தேர் முட்டி போன்றவற்றையும் இடித்தழிக்க
முற்படுகிறார்கள். தீர்மானம் எடுத்திருக்கிறார்கள் என்ற வகையிலே தமிழ்
தேசியத்தை நேசிக்கின்ற தரப்புக்கள் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று
என்னோடு அணுகினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509a266a-4a06-4040-9f5d-7596017f3dc5/26-6a7e0efc9545f.webp' /></p><p>ஆகவே அதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை அம்மன் கோவில் உடைய
முன்பகுதியை காப்பாற்றுகின்ற நோக்கத்தோடும், மேலதிகமாக இடித்து அழிப்பதை
தடுத்து நிறுத்துகின்ற நோக்கத்தோடும் இந்த வழக்கை நாங்கள் தாக்கல்
செய்திருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு
இருக்கின்றார் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:07:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தூதுவரை வெளியேற்றக் கோரி கனடாவில் 70,000 பேர் கையெழுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-sign-petition-expulsion-of-us-ambassador-1786642349"></link>
            <id>https://tamilwin.com/article/canada-sign-petition-expulsion-of-us-ambassador-1786642349</id>
            <summary type="text">கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி
நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி 70,000-க்கும் மேற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி
நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி 70,000-க்கும் மேற்பட்ட
கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>கனடாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கூடுதல் வரி</h2><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கனடாவை அமெரிக்காவின் '51-வது
மாநிலமாக' இணைப்பது குறித்துப் பேசிய கருத்துகளைத் தூதுவர் ஹோக்ஸ்ட்ரா
நியாயப்படுத்திப் பேசியதே இந்த எதிர்ப்பிற்குக் முக்கியக் காரணம் எனக்
கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca377534-424e-4067-9052-6fb6b7bb30ab/26-6a7e020f17b6d.webp' /></p><p>

கனடாப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதால்
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த மனு
விரைவில் கனடா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நடைபெற்ற கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-coordination-committee-meeting-1786640449"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-coordination-committee-meeting-1786640449</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.</p><p>

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில், மாவட்ட பழைய செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (13.08.2026) இந்த கூட்டம் நடைபெற்றது.</p><h2>&nbsp;ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்</h2><p>
</p><p>
மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9432c1c-8e38-44c6-b2a3-3d226b24cba1/26-6a7dfd43b2633.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, சட்டவிரோத கடற்றொழில், காலநிலை மாற்றத்தால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல், மானிய முறையில் எரிபொருள் வழங்குதல் மற்றும் கடற்றொழில் வளங்களை ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
</p><p>
இதன்போது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T17:22:24+00:00</updated>
        </entry>
    </feed>
