<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-03T21:23:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தியும் தமது வன்முகத்தை காட்டி நிற்கின்றது - மா.சத்திவேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/m-satthivel-npp-showing-its-fierce-side-too-1785784410"></link>
            <id>https://tamilwin.com/article/m-satthivel-npp-showing-its-fierce-side-too-1785784410</id>
            <summary type="text">அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின்
காலத்திலும் தமது வன் முகத்தை காட்டி நிற்கின்றது என கிறிஸ்தவ ஒத்துழைப்பு
இயக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின்
காலத்திலும் தமது வன் முகத்தை காட்டி நிற்கின்றது என கிறிஸ்தவ ஒத்துழைப்பு
இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் இன்று(03.08.2026) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையிலே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முள்ளிவாய்க்கால்&nbsp;நினைவேந்தல்</h2><p>

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாற்றம் எனும் தொனியோடு ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி முள்ளிவாய்க்காலில்
நிகழ்த்திய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்காக தெற்கில் நினைவேந்தல்
நடத்துபவர்களையும் அந்த நினைவுகளில் வளவாளர்களாக கலந்து கொள்பவர்களையும்
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து வருகிறது.
</p><p>
இதனை கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் வன்மையாக
கண்டிப்பதோடு நினைவேந்தல் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாட்டினை
நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9641c75d-5aad-4ad9-a745-186b0d92ffcd/26-6a70eab19dec1.webp' /></p><p>கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும்
முள்ளிவாய்க்கால் நிறைவேந்தலை இனவாத கும்பல்களின் எதிர்ப்புக்கு மத்தியில்
தெற்கில் நடத்தி வருகின்றது. </p><p>

அந்த வகையில் கடந்த வருடம் (2025) நீர்கொழும்பில்
நினைவேந்தல் நடத்திய போது இனவாத கும்பல் எதிர்ப்பினை நிகழ்த்த திரண்டதோடு
நிகழ்வுக்குள் பொலிசாரும் நுழைந்து பதற்ற நிலையை ஏற்படுத்தினர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து நினைவேந்தலை ஒழுங்கு செய்த கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின்
அருட் சகோதரி ஒருவரும், அருட்தந்தை ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்
விசாரணைக்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>அரச பயங்கரவாதம்</h2><p> </p><p>

இது
எமது அமைப்புக்கு விடுக்கப்பட்ட இனவாத அடக்குமுறை அச்சுறுத்தலாகவே
கருதுகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில்
தற்போது அந்த நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட பன்னாட்டு குற்றங்கள் நூலின்
ஆசிரியர் சிரிஞானேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு
பிரிவினர்(CTID)அழைத்திருப்பது அச்சுறுத்தலின் அடுத்த கட்டம் எனலாம்.</p><p>

தெற்கில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராக 1971 மற்றும் 1988களில்
நிகழ்த்திய கிளர்ச்சியினை அடக்க அரச பயங்கரவாதம் திட்டமிட்ட வகையில்
சித்திரவதை முகாம்களுக்குள் பெருந்தொகையான இளைஞர்களை சித்திரவதைக்கு
உட்படுத்தி படுகொலைகளை செய்தது மட்டுமல்ல சமூக புதைகளுக்குள்ளும் தள்ளியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79e8993-ca4d-406c-8f28-a2ccc3ef09c3/26-6a70eab0e9a77.webp' /></p><p>இத்தகைய கிளர்ச்சி இனியும் நிகழாதிருக்க வடக்கு கிழக்கின் அரசியல் எழுச்சியை
பயங்கரவாதமாகவும், பிரிவின வாதமாகவும், தேசத்துரோகமாகவும் அடையாளப்படுத்தி
சிங்கள இளைஞர்களின் மூளையை சலவை செய்து அவர்கள் கைகளில் ஆயுதத்தை திணித்து இன
அழிப்பையும் இனப்படுகொலையையும் அரங்கேற்றி வெற்றி கொண்டாட்டம் நடத்துகின்றது.
</p><p>
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை தெற்கில் நடத்துவதன் மூலம் அரச பயங்கரத்தின்
முகம் வெளிப்பட்டு விடும். வடக்கின் மக்கள் நீதி குரல் எழுப்புவது போல தெற்கின்
மக்களும் நீதி குரல் எழுப்புவர் என தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும்
பயப்படுகின்றது.</p><p></p><h2>முதலாளித்துவ பேரினவாத கட்டமைப்பு&nbsp;</h2><p> </p><p>

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னால் இருக்கின்ற
முதலாளித்துவ பேரினவாத கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்துவதை தடை
செய்வதன் ஓர் அங்கமாகவே தற்போது பல்வேறு மட்டங்களில் விசாரணைகளை முடுக்கி
விடுகின்றனர்.</p><p>இந்நிலையில் தெற்கின் முற்போக்கு சக்திகள் கடந்த கால அரச பயங்கரவாதத்தின்
செயல்பாடுகளுடன் தொடர்புடைய சித்திரவதை முகாம்கள், சமூக புதை குழிகள்
என்பவற்றுக்கான நீதியைத் தேடும் முகமாக மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை
ஆரம்பித்தால் மட்டுமே வடக்கில் அரச பயங்கரவாதத்தின் முகத்தினையும் அது
நிகழ்த்திய கொடூரத்தையும்தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b333a73a-b2c2-4a78-b387-4ac1080e39cf/26-6a70eab043452.webp' /></p><p>

அத்தோடு
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு எதிராகவும் குரல்
கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.</p><p>

இன்று கிறிஸ்தவ ஒத்துழைப்பு
இயக்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எடுக்கும் அடக்குமுறை
செயற்பாடுகள் தெற்கில் ஏனைய அமைப்புக்களுக்கு எதிராகவும் அது விரிவடையும்
என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றோம் என குறிப்பிட்ப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T21:23:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் PickMe கட்டண முறைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-wheeler-drivers-protest-against-pickme-1785782549"></link>
            <id>https://tamilwin.com/article/three-wheeler-drivers-protest-against-pickme-1785782549</id>
            <summary type="text">திருக்கோணமலை பகுதியில் சேவையாற்றும்
முச்சக்கர வண்டி சாரதிகள் பிக்மி(PickMe) செயலியின் கட்டண முரண்பாடுகள்
மற்றும் சேவை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருக்கோணமலை பகுதியில் சேவையாற்றும்
முச்சக்கர வண்டி சாரதிகள் பிக்மி(PickMe) செயலியின் கட்டண முரண்பாடுகள்
மற்றும் சேவை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

அலஸ்தோட்டம் சந்தியில் இருந்து பேரணியாக புறப்பட்ட சாரதிகள், மூன்றாம் கட்டை
வழியாக பிக்மி(PickMe) அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.</p><p></p><h2>வருமான இழப்பு</h2><p>
</p><p>
சாரதிகளின் குற்றச்சாட்டின்படி, திருக்கோணமலை சாரதிகளுக்கு குறைந்த கட்டணங்கள்
நிர்ணயிக்கப்படுவதால் வருமான இழப்பு ஏற்படுவதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>உதாரணமாக
திருக்கோணமலையில் இருந்து சிகிரியா செல்ல ரூ.9,000 கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிரியாவில் இருந்து திருக்கோணமலை வருவதற்கு ரூ.12,000 கட்டணம் அறவிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a210883-5fa3-4b6e-bcc5-c3ead97c6874/26-6a70e2cb1eeb4.webp' /></p><p>இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர்
வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் கலந்துகொண்டு பிக்மி(PickMe) நிறுவன பிரதிநிதிகளுடன்
கலந்துரையாடியுள்ளார். </p><p>இதனையடுத்து குறித்த நிறுவனம்14 நாட்களுக்குள் உரிய தீர்வை வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a805fd5b-0eae-4fd8-9ff5-44468c8cb385/26-6a70e2cbeec74.webp' /></p><p>அதேவேளை, வெளிப்பிரதேச வாகனங்கள் தொடர்பாக பிரதேச சபை முன்னர் நிறைவேற்றிய
தீர்மானம் குறித்து ஏற்பட்ட சர்ச்சை தொடர்பிலும் பொலிஸார் இன்று விசாரணை
மேற்கொண்டதுடன் அதற்கு தவிசாளரும் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T20:51:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[Deal Or Total Surrender..! ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deal-total-surrender-trump-slams-iran-duplicity-1785787435"></link>
            <id>https://tamilwin.com/article/deal-total-surrender-trump-slams-iran-duplicity-1785787435</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு &quot;ஒப்பந்தம் (Deal) அல்லது முழுமையான சரணடைவு (Total Surrender)&quot; என்ற இரண்டு வழிகளே உள்ளதாக கடுமையாக எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு "ஒப்பந்தம் (Deal) அல்லது முழுமையான சரணடைவு (Total Surrender)" என்ற இரண்டு வழிகளே உள்ளதாக கடுமையாக எச்சரித்துள்ளார்.</p><p>

தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், ஈரான் பேச்சுவார்த்தைக்காக மறைமுகமாக முயற்சி செய்தபோதும், பொதுவெளியில் அதை மறுப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
"ஈரான் ஒப்புக்கொண்டாலும் இல்லையென்றாலும், பல தசாப்தங்களாக அவர்கள் உருவாக்கிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/076e0ed4-3128-42b9-904a-e5b25aeb2a0c/26-6a70f77947261.webp' /></p><p>

மேலும், உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீது ஈரான் கட்டுப்பாடு செலுத்துவதாக கூறுவதை ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
</p><p>
"ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே அமெரிக்க கடற்படையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. 

அமெரிக்கா விரும்பினால் மட்டுமே ஈரானுக்குள் எதுவும் செல்லும்; ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைவு ஏற்படும் வரை அதுவே தொடரும்," என்று அவர் கூறினார்.</p><p></p><h2>&nbsp;பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>


இதற்கு முன், ஈரான் மீது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தேன் என்றும், ஆனால் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் வேண்டுகோளையும், ஈரான் தரப்பிலிருந்து வந்த அணுகுமுறையையும் தொடர்ந்து அந்தத் திட்டத்தை ஒத்திவைத்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca70d75-8aad-4a6f-8c4f-a089b3786467/26-6a70f779f408a.webp' /></p><p>

மேலும், திங்கட்கிழமை முதல் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>

அந்நாட்டு வெளியுறவு அமைச்சக பேச்சாளர் எஸ்மாயில் பகாயி, அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என்றும், ஓமனுடன் பாதுகாப்பான கடல் போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T20:26:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணைத் தடுப்புப் பாகங்கள் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா புதிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/america-s-new-deal-1785786784"></link>
            <id>https://tamilwin.com/article/america-s-new-deal-1785786784</id>
            <summary type="text">அமெரிக்க பாதுகாப்புத் துறை, ஏவுகணைத் தடுப்புப் பாகங்களின் உற்பத்தித் திறனை
விரிவாக்குவதற்காக &#039;லொக்ஹீட் மார்ட்டின்&#039; மற்றும் &#039;நோர்த்ரோப் க்ரம்மன்&#039; ஆகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க பாதுகாப்புத் துறை, ஏவுகணைத் தடுப்புப் பாகங்களின் உற்பத்தித் திறனை
விரிவாக்குவதற்காக 'லொக்ஹீட் மார்ட்டின்' மற்றும் 'நோர்த்ரோப் க்ரம்மன்' ஆகிய
முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ளது.</p><p>

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை அமெரிக்க அரசு
வெளியிடவில்லை.</p><p></p><h2>அமெரிக்க இராணுவம்</h2><p>
</p><p>
உக்ரைன் மற்றும் ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்க இராணுவத்தின்
ஆயுதக் கையிருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும்
செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b288b2e7-7a45-4fab-934b-e70581806965/26-6a70f34fa52d4.webp' /></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T20:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[யென் மதிப்பை உயர்த்த அமெரிக்காவுடன் கைகோர்த்த ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/japan-joins-hands-with-us-to-boost-yen-value-1785785624"></link>
            <id>https://tamilwin.com/article/japan-joins-hands-with-us-to-boost-yen-value-1785785624</id>
            <summary type="text">ஜப்பானிய நாணயமான &#039;யென்&#039; மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக்
சரிந்ததைத் தொடர்ந்து, அதன் மதிப்பை உயர்த்த ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து
கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானிய நாணயமான 'யென்' மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக்
சரிந்ததைத் தொடர்ந்து, அதன் மதிப்பை உயர்த்த ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து
கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
</p><p>
சந்தையில் யென் நாணயங்களை வாங்கும் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாக இரு
நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>யென் நாணய மதிப்பு&nbsp;</h2><p>

ஜப்பானுக்கு உதவும் வகையிலும் உலகப் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க டொலருக்கு எதிரான யென் மதிப்பு 1.4
சதவீதம் வரை உயர்ந்து, 155.20 நிலையை எட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d1a2182-5d6a-42ad-a21d-85c8afd02bdf/26-6a70f03f8906b.webp' /></p><p>ஜப்பானில் அதிகரித்து வரும் இறக்குமதி விலைகள் மற்றும் பணவீக்கத்தைக்
கட்டுப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

தேவைப்பட்டால் மேலும் இதுபோன்ற கூட்டு தலையீடுகளை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம்
என்று ஜப்பான் நிதியமைச்சகம் மற்றும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கட்
பெசென்ட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, அமெரிக்காவும்
ஜப்பானும் இணைந்து இத்தகைய கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது இதுவே முதல்
முறையாகும். அதேநேரம், யென் மதிப்பு உயர்ந்ததால் ஜப்பானின் பங்குச்சந்தையான 'நிக்கெய்'
சரிவைச் சந்தித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T20:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக M. T. M. தாஹிஸ் தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dahis-elected-as-new-chairman-1785787472"></link>
            <id>https://tamilwin.com/article/dahis-elected-as-new-chairman-1785787472</id>
            <summary type="text">மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் M. T. M.
தாஹிஸ் நேற்று(03.08.2026) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் மூதூர் பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் M. T. M.
தாஹிஸ் நேற்று(03.08.2026) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதன் மூலம் மூதூர் பிரதேச சபையின் ஆட்சி பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்தி
வசமாகியுள்ளது.</p><h2>புதிய தவிசாளர்</h2><p>
புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு,
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் A. T. M. ராபி தலைமையில் நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/154b0371-9809-4a89-9ec2-a744a7c16721/26-6a70f7ae2d38f.webp' /></p><p>இந்தக் கூட்டத்தின் போது புதிய தவிசாளரின் பெயரை இலங்கை தமிழரசு கட்சியின்
உறுப்பினர்கள் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.
</p><p>
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கிடையே
எட்டப்பட்ட ஒரு வருட கால தவிசாளர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், பதவி வகித்த
முந்தைய தவிசாளர் கடந்த 10 ஆம் திகதி தனது பதவியை பதவி விலகல் செய்தார்.</p><h2>மூதூர் பிரதேச சபை</h2><p> அதனைத்
தொடர்ந்து, காலியான தவிசாளர் பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு
மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் முன்னெடுத்திருந்தார். மூதூர் பிரதேச சபையானது மொத்தம் 22 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a72b7e5e-257e-49a8-bae2-0e8a19e5ba47/26-6a70f7af0f340.webp' /></p><p>இலங்கை தமிழரசு கட்சி 05 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 04
உறுப்பினர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 03 உறுப்பினர்களையும் தேசிய
மக்கள் சக்தி 03 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்களையும்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 02 இரு உறுப்பினர்களையும், தேசிய காங்கிரஸ் 01
உறுப்பினரையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 01
உறுப்பினரை சுயேச்சைக் குழு 01 உறுப்பினரையும் கொண்டுள்ளது.</p><p>
தவிசாளர் தெரிவின் போது, புதிய தவசாளர் பதவிக்காக, வேறு எவரும் பிரதிக்கப்படாத
நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் M. T. M. தாஹிஸ் தெரிவு செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-03T20:20:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் - தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-found-in-iranamadu-police-investigating-1785781102"></link>
            <id>https://tamilwin.com/article/body-found-in-iranamadu-police-investigating-1785781102</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்திற்கு அருகில் எரிந்த
நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்று(03...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்திற்கு அருகில் எரிந்த
நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>குறித்த சடலமானது இன்று(03.08.2026) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்தவரின் சடலம்&nbsp;</h2><p>
இரணைமடு குளத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேட்கொண்டவர்களினால் வழங்கப்பட்ட
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி தடயவியல் ஆய்வு நிபுணர்கள் சான்றுகளை
சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d73bd5-48a3-4755-a5b5-19c1b38e914f/26-6a70de79c36e0.webp' /></p><p>

குறித்த சம்பவத்தை மாவட்ட நீதிபதி பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று
பரிசோதனைக்காகவும், உயிரிழந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவும்
சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
</p><p>இது திட்டமிட்ட கொலையா அல்லது தவறான முயற்சியால் ஏற்பட்ட உயிர்மாய்ப்பா என்ற ரீதியில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T19:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் 4 மாதங்களுக்குப் பின்னர் பெய்த கனமழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rains-in-batticaloa-after-4-months-1785779393"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rains-in-batticaloa-after-4-months-1785779393</id>
            <summary type="text">கடந்த 4 மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில்
நேற்று(02.08.2026) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
நேற்றைய தினம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 4 மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில்
நேற்று(02.08.2026) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
</p><p>நேற்றைய தினம் 47.8
மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><h2>கடும் மழை</h2><p>

இதனையடுத்து மட்டக்களப்பில் 47.8 மில்லி மீற்றரும்,
உறுகாமத்தில் 71.0 மில்லி மீற்றரும், நவகிரி பிரதேசத்தில் 62.0 மில்லி மீற்றரும்,
உன்னிச்சையில் 50.8 மில்லி மீற்றருயும், தும்பங்கேணியில் 40.0 மில்லி மீற்றரும்,
பாசிக்குடாவில் 14.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
</p><p>
குறைந்த
மழைவீழ்ச்சியாக கட்டுமுறிவு பிரதேசத்தில் 3.0 மில்லி மீற்றர் மழை
வீழ்ச்சியும், வாகனேரியில் 7.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும்
பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b026809-586b-4259-993e-bddf2fc8d5ef/26-6a70d5b125bfc.webp' /></p><p>

இதேவேளை மழை பெய்யத் துவங்கிய அன்று மாலை 5 மணிவரை மட்டக்களப்பில் 37.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
</p><p>
சுமார் 2 மணித்தியாலங்கள் பெய்த மழையின் காரணமாக மட்டக்களப்பில் உணரப்பட்ட உஷ்ணம்
தணிந்துள்ளது.
அத்துடன் கிணறுகள், குளங்கள், ஆறுகள், வாவிகள் மற்றும் ஏனைய நீர்
நிலைகளிலும் ஓரளவுக்கு நீர் தேங்கியுள்ளது.</p><p></p><h2>வெப்பமான காலநிலை</h2><p>
</p><p>

இதுவரை நாட்களும் மட்டக்களப்பில் நிலவிய வெப்பமான காலநிலையால்
மக்களின் நடமாட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0a9f4d-60f6-468f-b035-a61e21e10cb3/26-6a70d5f1af152.webp' /></p><p>கட்டிட நிருமாணத்
தொழில் செய்வோர், திறந்த வெளிகளில் தொழில்களில் ஈடுபடுவோர், விவசாயிகள்,
கடற்றொழிலாளர்கள், மைதான விளையாட்டில் ஈடுபடுவோர் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

மேலும், பலமாக வீசிய வெப்பக் காற்று குப்பை மேடுகளைப் புரட்டிப்
போட்டதோடு விவசாயப் பயிர்கள், மரங்களின் இலைகள் மற்றும் கிளைகளையும் பெயர்த்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T19:09:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவில் நாமல் - ரோஹித ராஜபக்சவின் பெயர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harak-katta-audio-leak-namal-rohitha-rajapaksha-1785782930"></link>
            <id>https://tamilwin.com/article/harak-katta-audio-leak-namal-rohitha-rajapaksha-1785782930</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. 

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. </p><p>

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹித ராஜபக்ச, சாகல ரத்நாயக்க மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
ஹரக்கட்டாவைச் சிறையிலிருந்து விடுவிக்கவும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கவும் சுமார் ரூ. 20 கோடி லஞ்சம் கோரப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
இந்த டீலில் சரித் அபேசிங்க, முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
 ஹரக்கட்டாவை (நதுன் சிந்தக) சிறையிலிருந்து விடுவிப்பதற்கும் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் ரூ. 20 கோடி (2000 லட்சம் ரூபா) லஞ்சமாகப் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>

இதில் சுமார் ரூ. 12 கோடி (1200 லட்சம் ரூபா) ஏற்கனவே ஹவாலா (உண்டியல்) முறை மூலம் துபாயில் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUvKma_B1SM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T19:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிட்னியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-people-injured-in-sydney-building-collapse-1785771570"></link>
            <id>https://tamilwin.com/article/2-people-injured-in-sydney-building-collapse-1785771570</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த சம்பவமானது இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முதலுதவி சிகிச்சை</h2><p>
</p><p>
சிட்னியின் மத்திய வணிகப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள அல்டிமோ என்ற பகுதியில் காலை 11 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புப் படையினர், அங்கிருந்த 7
பேருக்கு முதலுதவி சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b006bc4e-7944-4b5f-afc3-fcca882c38c3/26-6a70b792ebc95.webp' /></p><p>
</p><p>
அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக்
கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>அத்துடன் கட்டுமானப் பணி நடப்பெற்று வந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தின்
சுவர்ப் பகுதி இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீஃபா தலைவருக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/english-football-association-withdraw-support-1785779402"></link>
            <id>https://tamilwin.com/article/english-football-association-withdraw-support-1785779402</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து
கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து
கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ மீண்டும் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஆதரவைத் திரும்பப் பெற&nbsp; இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு செய்துள்ளது.
</p><p>
உலகக் கிண்ணப் போட்டிகள் உள்ளிட்ட தொடர்களை நிர்வகிக்கும் புதிய அமைப்பில் 20
சதவீத பங்குகளை விற்று 4.2 பில்லியன் டொலர் நிதி திரட்ட ஃபீஃபா
திட்டமிட்டிருந்தது.</p><p></p><h2>பீஃபா தலைவர்</h2><p>

ஆனால், பல்வேறு கால்பந்து அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் இத்திட்டம்
அண்மையில் கைவிடப்பட்டது.</p><p>

முன்னதாக, இன்பான்டினோவிற்கு அளித்து வந்த ஆதரவை முறைப்படி திரும்பப் பெறுவதாக
வேல்ஸ் நாட்டின் கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3487379d-310c-468f-a6bf-b2b1299b49b7/26-6a70d6a100212.webp' /></p><p>
</p><p>
சிறந்த நிர்வாகமின்மை, தவறான தலைமைத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை
ஆகிய காரணங்களால் இன்பான்டினோ மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக வேல்ஸ்
கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
2016-ஆம் ஆண்டு முதல் ஃபீஃபா தலைவராக இருக்கும் இன்பான்டினோ, 2027 முதல் 2031
வரையிலான அடுத்த தவணைக்கும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.</p><p>

எனினும், ஐரோப்பிய கால்பந்து அமைப்பான UEFA உள்ளிட்ட முக்கிய அமைப்புகள்
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மீண்டும் தலைவராவதில் அவருக்கு
பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் கனமழை..! மண் சரிந்து விழுந்ததில் பலியான 4 உயிர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodies-4-people-trapped-buried-in-the-landslide-1785776127"></link>
            <id>https://tamilwin.com/article/bodies-4-people-trapped-buried-in-the-landslide-1785776127</id>
            <summary type="text">ஹட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.</p><p></p><h2>சீரற்ற காலநிலை</h2><p> </p><p>

அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b402435-31a9-4eb6-9b37-41ed5ae708fe/26-6a70cae9de4d2.webp' /></p><p> </p><p>

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை: ஈரான் அதிரடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-says-no-talks-are-under-way-1785777226"></link>
            <id>https://tamilwin.com/article/iran-says-no-talks-are-under-way-1785777226</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான்&amp;nbsp; அதிரடியாக அறிவித்துள்ளது.
அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான்&nbsp; அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>தாக்குதல்களைத் ஒத்தி வைப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறிவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கூற்றுக்கு முற்றிலும் மாறாக ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>மிகப்பெரிய தாக்குதல்</h2><p>
</p><p>கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து வரும் போக்கைப் போலவே, ஈரானின் மீது "மிகப்பெரிய தாக்குதல்களை" நடத்தத் திட்டமிடுவதாக அறிவிப்பதும், பின்னர் கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்வதும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் வாடிக்கையாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fde1b28-ef8a-44ed-95cf-7a0889a25bd3/26-6a70cc4c51289.webp' /></p><p>
நான் மக்களைக் கொல்வதை விரும்பவில்லை; மாறாக ஒப்பந்தம் செய்வதையே விரும்புகிறேன். தற்போது நாங்கள இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.</p><p> திங்கள்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும்" என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த அறிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சு பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக நிராகரித்தார்.
</p><p>அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தச் சந்திப்புகளும் அட்டவணைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கவோ அல்லது தூதுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவோ ஈரானுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை.
ஈரானியப் பிரதிநிதிகள் அனைவரும் நாட்டிற்குள்ளேயே உள்ளனர்; </p><p>வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மட்டும் ஈராக்கிற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில், ஹோர்முஸ் நீரிணை மேலாண்மை குறித்து 'ஓமன்' நாட்டுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பாகேய் தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d75ae0a2-613a-4864-90c3-d9e7a257977b/26-6a70d8abe467e.webp' /></p><p>
</p><p>ஈரானின் மறுப்பைத் தொடர்ந்து, தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஈரானியத் தலைமையை "நம்பமுடியாத வஞ்சகம் நிறைந்தது" என்று கடுமையாகச் சாடினார். 
ஈரான் தரப்பிலிருந்து தான் சந்திப்பு கேட்கப்பட்டதாகவும், மிக விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.</p><p>
மேலும், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கக் கடற்படை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ட்ரம்ப் கூறினார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-woman-died-in-the-kilinochchi-area-1785770016"></link>
            <id>https://tamilwin.com/article/a-woman-died-in-the-kilinochchi-area-1785770016</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று(03.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விபத்தில்&nbsp;உயிரிழந்தவர்</h2><p>
</p><p>

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி - பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/284edddd-e1b8-4a5c-8917-f5145ae0d432/26-6a70b147297ad.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:14:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வொஷிங்டன் காட்டுத்தீ: 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/washington-wildfires-600-buildings-damaged-1785775530"></link>
            <id>https://tamilwin.com/article/washington-wildfires-600-buildings-damaged-1785775530</id>
            <summary type="text">அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக
இதுவரை 60...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது.</p><p> இதன்காரணமாக
இதுவரை 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>வொஷிங்டன் காட்டுத்தீ</h2><p>
</p><p>
மேலும் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட
கட்டிடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9cc0b05-9d2c-4b1e-964a-58c68140752c/26-6a70c77132d74.webp' /></p><p>

வொஷிங்டன் மாநிலம் முழுவதும் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தீ
பரவியுள்ள நிலையில், ஸ்போக்கேன் பகுதியில் மட்டுமே 21 சதுர கிலோமீட்டர் பரப்பு
பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நிறுவனங்கள்
தீவிரமாகப் போராடி வருகின்றன.</p><p></p><h2>&nbsp;600 கட்டிடங்கள் சேதம்</h2><p> </p><p>இருப்பினும் சில இடங்களில் தீ இன்னும்
கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

இதுவரை உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். </p><p>எனினும், வரும் நாட்களில் வறண்ட காலநிலை நீடிக்கும் என
எதிர்பார்க்கப்படுவதால் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று செனட்டர் மரியா
கேன்ட்வெல் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d9207cb-6975-4666-b8ce-7a39c3023797/26-6a70c771d83a6.webp' /></p><p>
</p><p>
காட்டுத்தீ ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
</p><p>
இதேபோல், இடாஹோ, ஓரிகான் மற்றும் உடா ஆகிய பிற மாநிலங்களிலும் காட்டுத்தீ
வேகமாகப் பரவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:53:09+00:00</updated>
        </entry>
    </feed>
