<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-23T02:29:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த போலி விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-fake-pilot-arrested-colombo-1787451325"></link>
            <id>https://tamilwin.com/article/the-fake-pilot-arrested-colombo-1787451325</id>
            <summary type="text">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தால் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இதனையடுத்து அவர் புதுக்கடை (Aluthkade) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>.அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>போலியான விமானப்படை சீருடை</h2><p>பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணை பணியகம் சந்தேகநபரை கைது செய்துள்ளது.</p><p>சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8169e54-3d4b-4a05-badd-0715b18b7524/26-6a8a59009a471.webp' /></p><p>தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் கூறி அவரிடம் பணமோச செய்துள்ளார்.</p><p>வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெண் மோசடி செய்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடையில் வந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>&nbsp;இதனையடுத்து, குருணாகல் பகுதியில் வைத்து சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி, உட்பட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T02:20:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றில் தண்டனைப் பெறப் போகும் முதலாவது முன்னாள் ஜனாதிபதி ரணிலாம்.. தப்பிப்பதற்கு பெரும் சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-conspiracy-to-escape-punishment-1787445108"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-conspiracy-to-escape-punishment-1787445108</id>
            <summary type="text">நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் என்று ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் என்று ஜனநாயக தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார்.</p><p> 


ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>ரணிலின் சதி&nbsp;</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> ரணில் விக்ரமசிங்க மீது நிதி முறைகேடு தொடர்பான பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20af5013-6860-4a5d-b5dc-6bf6ec24fe71/26-6a8a3f770fe3a.webp' /></p><p> </p><p>

நீதிமன்ற விசாரணைகளின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் இலங்கை வரலாற்றிலேயே தண்டனை பெற்ற முதல் முன்னாள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மாறுவார்.</p><p> 

அந்தத் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆகியோரை பகடைக் காயாக ரணில் பயன்படுத்தி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T00:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய தேசியக் கட்சி இன்று ராஜபக்சமயமாகிவிட்டது!சர்ச்சைக்குரிய பல தகவல்களை அம்பலப்படுத்திய ஆசு மாரசிங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ashu-marasinghe-ranilmahinda-rajapaksa-1787445627"></link>
            <id>https://tamilwin.com/article/ashu-marasinghe-ranilmahinda-rajapaksa-1787445627</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சி இன்று ராஜபக்ச மயமாகிவிட்டதோடு மொட்டுக் கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சி இன்று ராஜபக்ச மயமாகிவிட்டதோடு மொட்டுக் கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்த கருத்துகள். ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று நான் இல்லை.ஆனால் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் நான் ஈடுபடப்போவதில்லை.</p><p></p><h2>கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது, ஐக்கிய தேசியக் கட்சி இப்போது உடைந்து சிதறிப்போயிருப்பது போல் தெரிகிறது. எனவே, எனக்கு ஆரம்பத்திலிருந்தே இதில் விருப்பம் இல்லாத நபர் என்பதால் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.</p><p>அதனால் தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எங்களால் அரசியல் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. அந்த காரணத்தினால் தான் அமைதியாக இருக்கிறேன். </p><p>வேறு அரசியல் கட்சிக்குச் செல்லவும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ராஜபக்சக்கள் அன்று ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு இரண்டு காரணங்கள் வலுவடைந்திருந்தன.
</p><p>அது தொடர்பில் அண்மையில் ரணில் விக்ரமசிங்க ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
அனைவரிடமும் பேசி முடியாது என்று கூறிய பிறகு, இறுதியில் ரணில் விக்ரமசிங்கவிடம் வந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e6464a2-a421-48ed-856d-a18e36d32ba8/26-6a8a417d212f3.webp' /></p><p>அந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த சூழ்நிலையில், ராஜபக்ச குழுவினருக்கு அல்லது கோட்டாபய ராஜபக்ச ஓடிப்போன பிறகு ரணிலைத் தவிர வேறு புகலிடம் இருக்கவில்லை
அவருக்கு அதை பொறுப்பேற்க வேண்டியதாயிற்று. </p><p>அவர் அதை பொறுப்பேற்றார். அவர் அந்த சவாலை எதிர்கொண்டார். அவர் இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் இருந்த சூழ்நிலையை முற்றிலும் மாற்றினார். </p><p>வீழ்ச்சியை நோக்கி சென்ற பொருளாதாரத்தை 5.2 வீதமாக ஒரு வருடத்தில் மாற்றினார்.
அவருடன் தோளோடு தோள் நின்று நாங்கள் வேலை செய்தோம். </p><p>அதற்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகார ஆலோசகராக அந்த ஒன்றரை வருட காலத்தில் 104 சட்டமூலங்களை உருவாக்க நாங்கள் செயற்பட்டோம் என குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T00:41:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்புக்கு மட்டும் ஐந்து புதிய நீதிமன்றங்கள்! அரசாங்கத்தின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-new-courts-for-colombo-alone-1787441800"></link>
            <id>https://tamilwin.com/article/five-new-courts-for-colombo-alone-1787441800</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் பிரதிபலனை ஆறு மாதங்களின் பின்னர் காணக்கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் பிரதிபலனை ஆறு மாதங்களின் பின்னர் காணக்கூடியதாக இருக்கும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
</p><p>
</p><p>

மத்தியஸ்த சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இச் சபையின் செயற்பாடுகள் காரணமாக இரண்டு இலட்சம் வழக்குகள் நீதிமன்றம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய நீதிமன்றங்கள்..</h2><p> </p><p>நாடெங்கிலுமுள்ள நீதிமன்றங்களில் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வளர்ந்த நாடுகளில் பத்து இலட்சம் பேருக்கு 40 முதல் 60 நீதிபதிகள் கடமையில் இருக்கும் அதேசமயம் இலங்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு இருபது நீதிபதிகளே கடமையில் இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87680c79-ec89-4f54-a7db-333826d87855/26-6a8a37929a2a9.webp' /></p><p>நீதிமன்றத்தில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளின்

அடுத்த தவணை ஜூன் மற்றும் ஜூலை வரை தள்ளிவைக்கப்படுகிறது. </p><p>எனவே கொழும்புக்கு மட்டும் ஐந்து புதிய நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளோம். மேலும் கொழும்புக்கு வெளியே புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. புதிதாக 11 நீதிமன்றங்கள் உருவாக்கப்படவுள்ளன. </p><p>மத்தியஸ்தசபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் போது சில குற்றங்களின் கீழ் தண்டனை பெற்றவர்கள் தண்டனை காலத்தின் இறுதி ஆறுமாத காலத்தில் வெளியே வந்து மத்தியஸ்த சபையிடம் முறையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T23:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு மீது கடும் கோபத்தில் மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427"></link>
            <id>https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. </p><p>இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2><b>
அதிருப்தியில் மகிந்த </b></h2><p>நாட்டில், 22ஆவது திருத்தத்தை கொண்டு வருவதை விட, அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல பணிகள் இருக்கின்றன.</p><p>அவற்றை செய்து முடித்த பின்னர் தேவையான எந்தவொரு சட்டப்பிரிவையும் கொண்டு வருவதில் பிரச்சினையில்லை என அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Lw4oajXmncE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு பதிலாக வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
 அதற்கு பதிலளித்த அவர், “அதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. தேவையற்ற விடயங்களே முன்னிலைக்கு கொண்டு வரப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27909829-c702-4572-9af6-6f5c0ccbffd7/26-6a894624c29b1.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><h3><b>

அரசியலமைப்பு திருத்தம்</b></h3><p>மேலும், நாட்டின் பொதுமக்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை விட முக்கியமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விட வேறு பல பிரச்சினைகள் உள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42bfb3e-b898-4141-a03a-deba8e47a424/26-6a894625754d6.webp' /></p><p>சிலர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுகின்றனர். 

அந்தப் பிரச்சினைகளை தீர்க்காமல் தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. </p><p>மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-22T23:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை விளக்கமறியலில் வையுங்கள்! மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944</id>
            <summary type="text">குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அநுரகுமார திசாநாயக்கவிடம் அவசர எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p>அத்தோடு, தனது கணவரை&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பாமல் சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>விசாரணை என்ற பெயரில் சிஐடியினர்&nbsp;சுரேஷ் சலேவை கொடுமைப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும்&nbsp;மனோரி சலே சுட்டிக்காட்டினார்.</p><p>எனவே சுரேஷ் சலேவின் உடல்நிலைநிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்&nbsp;மனோரி குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp; நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Na6vJ8cRq8s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T23:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானை அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததற்கு எதிராக மனு: பாகிஸ்தான் அரசு மீது பி.டி.ஐ. வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787430738"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787430738</id>
            <summary type="text">பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டவாறு
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டவாறு
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றமைக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக அவரது பாகிஸ்தான்
தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல்
செய்துள்ளது.</p><p>

இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து தொடர்ச்சியாக கவலைகள்
வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அவரை இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் ஷிஃபா
சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மூன்று
நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>
</p><p>
எனினும், அதிகாரிகள் அவரை வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு
சொந்தமான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (PIMS) அழைத்துச் சென்று
குறுகிய நேரப் பரிசோதனையின் பின்னர் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.</p><p>அத்துடன், அவரது தனிப்பட்ட மருத்துவருக்கு அவரைச் சந்திக்க அனுமதி
மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b12a0968-1aa7-47e6-8235-2577439c649d/26-6a8a075462294.webp' />&nbsp;&nbsp;</p><p>

அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனக்
குறிப்பிட்டுள்ள பி.டி.ஐ. கட்சி, பிரதமர், சட்ட அமைச்சர் மற்றும் செய்தித்
துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு
கோரி இந்த அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
</p><p>
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனைக்கு பதிலாக
அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் செய்தித் துறை
அமைச்சர் அத்தாவுல்லா தாரார் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>&nbsp;எனினும், சிறையில் தனது சகோதரர் தொடர்ச்சியாக சித்திரவதைக்கு
உள்ளாக்கப்படுவதாக இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T23:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 நாடுகளுக்கான விசா தடை குறித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கை : இரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-policy-on-visa-ban-for-75-countries-1787430409"></link>
            <id>https://tamilwin.com/article/trump-policy-on-visa-ban-for-75-countries-1787430409</id>
            <summary type="text">அமெரிக்காவில் 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் குடியேற்ற
விசாக்களை வழங்குவதை இடைநிறுத்தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு
வந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் குடியேற்ற
விசாக்களை வழங்குவதை இடைநிறுத்தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு
வந்த கொள்கையை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.</p><p>

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ
அதிகாரத்தை மீறி இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதாக மான்ஹாட்டன் கூட்டாட்சி
நீதிமன்ற நீதிபதி ஜெனெட் வர்காஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>குடியேற்றச் சட்டத்திற்கு முரணானது</h2><p>
</p><p>
தேசிய இனத்தின் அடிப்படையில் விசா வழங்குவதை ஒட்டுமொத்தமாகத் தடுப்பது
கூட்டாட்சி குடியேற்றச் சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f8bf07e-100c-431c-86b8-5530e42e65c8/26-6a8a060b21118.webp' /></p><p>
</p><p>
நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வந்த இந்த விசா இடைநிறுத்த உத்தரவால்
பாகிஸ்தான், பங்களாதேஷ், பிரேசில், கொலம்பியா உட்பட இலத்தீன் அமெரிக்கா,
பால்கன் பகுதிகள், தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச்
சேர்ந்த பல விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பொது நிதி ஆதாரங்கள்
தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள்
அவசியம் என ட்ரம்ப் நிர்வாகம் வாதிட்ட போதிலும், அதற்கு எதிராகத் தாக்கல்&nbsp;செய்யப்பட்ட வழக்கில் தற்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T22:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலாவில் நீர் இருப்பைக் கண்டறிய சீனாவின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-s-new-chang-e-7-moon-mission-aims-1787433639"></link>
            <id>https://tamilwin.com/article/china-s-new-chang-e-7-moon-mission-aims-1787433639</id>
            <summary type="text">நிலவின் தென் துருவத்தில் உள்ள நிழல் படிந்த பள்ளங்களில் உறைந்துள்ள நீர்
பனிக்கட்டியைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக, &#039;சாங்கே-7&#039; என்ற விண்கலத்தை
விண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவின் தென் துருவத்தில் உள்ள நிழல் படிந்த பள்ளங்களில் உறைந்துள்ள நீர்
பனிக்கட்டியைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக, 'சாங்கே-7' என்ற விண்கலத்தை
விண்ணில் செலுத்த சீனா தயாராகி வருகின்றது.
</p><p>
இந்த விண்கலம் வரும் ஓகஸ்ட் 24 முதல் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில்
விண்ணில் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
சுற்றுப்பாதை விண்கலம், தரையிறங்கி, ஊர்தி மற்றும் குதிக்கும் ரோபோ சாதனம்
ஆகிய நான்கு முக்கிய பகுதிகளைக் கொண்டு இந்த ஆய்வுப் பயணம்
திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>நீர் தொடர்பிலான தரவு</h2><p>
நிலவின் தென் துருவத்தில் உள்ள 21 கிலோமீட்டர் அகலமுடைய 'ஷேக்கிள்டன்'
பள்ளத்தின் அருகே தரையிறங்கி, அங்குள்ள நீர் பனிக்கட்டியின் அளவு, தன்மை
மற்றும் பயன்பாடு குறித்து இந்த மிஷன் ஆய்வு செய்யவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a7f5ca-55c4-452a-9395-407bb946a65b/26-6a8a12a9d0585.webp' /></p><p>
</p><p>
நிலவில் மனிதர்கள் தங்குவதற்கும், குடிநீராகப் பயன்படுத்துவதற்கும், ஐதரசன்
மூலம் ஏவுகணை எரிபொருள் தயாரிப்பதற்கும் இந்நீர் மிக அவசியமான ஒன்றாகப்
பார்க்கப்படுகின்றது.
</p><p>
இதற்கு முன்னர் இந்தியாவின் 'சந்திரயான்-3' நிலவின் தென் துருவத்தில்
வெற்றிகரமாகத் தரையிறங்கி நீர் தொடர்பிலான தரவுகளைச் சேகரித்திருந்த நிலையில்,
ரஷ்யாவின் 'லூனா-25' விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து மோதிச் சிதைந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T21:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-fifa-president-avoid-children-s-football-1787431395"></link>
            <id>https://tamilwin.com/article/request-fifa-president-avoid-children-s-football-1787431395</id>
            <summary type="text">சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர்
கால்பந்து தொடரில் பங்கேற்பதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர்
கால்பந்து தொடரில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு வட, மத்திய அமெரிக்க மற்றும்
கரீபியன் கால்பந்து கூட்டமைப்பான 'கொன்ககாஃப்'&nbsp; தலைவர் விக்டர்
மொன்டாக்லியானி கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் பங்குகளை விற்பனை செய்ய இன்ஃபான்டினோ மேற்கொண்ட
முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் யுவேஃபா, ஆசியாவின்
ஏ.எஃப்.சி மற்றும் கொன்ககாஃப் ஆகிய மூன்று முக்கிய கூட்டமைப்புகளும்
அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன.
</p><p>
இந்நிலையில், டொமினிகன் குடியரசில் நடைபெறும் கரீபியன் கால்பந்து ஒன்றியத்தின்
(CFU) 14 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் இன்ஃபான்டினோ பங்கேற்க
திட்டமிட்டிருந்தார்.</p><h2>நிர்வாக நெருக்கடி</h2><p>
</p><p>
எனினும், பிஃபாவைச் சூழ்ந்துள்ள தற்போதைய நிர்வாக நெருக்கடி காரணமாக அவரது
வருகை ஊடகங்களின் கவனத்தை திசைதிருப்பி, சிறுவர் விளையாட்டுப் போட்டியின்
தொழில்நுட்ப நோக்கம் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு, கொன்ககாஃப் தலைவர்
அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f20226fc-515b-4bd1-9434-3f99d5b94baa/26-6a8a0b79e80de.webp' /></p><p>
</p><p>
பிஃபா தலைவராக 2031 ஆம் ஆண்டு வரை நான்காவது முறையும் நீடிக்க இன்ஃபான்டினோ
முயற்சித்துவரும் போதிலும், பல சர்வதேச கால்பந்து சங்கங்களும் முக்கிய
அதிகாரிகளும் அவருக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T20:58:43+00:00</updated>
        </entry>
    </feed>
