<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-29T14:23:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில பேசுபொருளான கோட்டாபய ராஜபக்சவின் புதிய தொலைபேசி ஒலிப்பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-telephone-call-1785331643"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-telephone-call-1785331643</id>
            <summary type="text">&amp;nbsp;சமூக செயற்பாட்டாளரான ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்துள்ளது.குறித்த ஒலிப்பதிவு இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சமூக செயற்பாட்டாளரான ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்துள்ளது.குறித்த ஒலிப்பதிவு இன்று சமூக ஊடகங்களில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த உரையாடலில் கோட்டாபய ராஜபக்ச இரு ஓய்வூதியங்கள் பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது.மேலும் இராணுவத்தில் 20 வருடங்கள் சேவை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>குறித்த கலந்துரையாடலை சான் கனேகொட என்பவரே&nbsp; நடத்தியுள்ளார்.குறித்த தொலைபேசி உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்...</p><h2>



</h2><p></p><h2>தொலைபேசி உரையாடலிலுள்ள விடயங்கள்</h2><p>நபர்:ஹலோ ஹலோ கோட்டாபய சேரா? உங்களுடைய பென்ஷன் எந்தக் காலத்தில் இருந்து கிடைக்கிறது என்று நாட்டிற்குச் சொல்லுங்கள்.
</p><p>
கோட்டா: என்னுடைய பென்ஷன் எந்தக் காலத்தில் இருந்தா? 90-லிருந்து. </p><p>


நபர்: 91 ஆம் ஆண்டு நீங்கள் விலகிப் போனீர்கள் அல்லவா மெடிக்கல் லீவ் போட்டு?
</p><p>
கோட்டா: என்ன பைத்தியக்காரத்தனம் இது? நான் மெடிக்கல் எதுவும் போடவில்லை. நான் 20 ஆண்டுகள் வேலை செய்தே ஓய்வு பெற்றேன். இராணுவத்திலிருந்து மெடிக்கல் போனது தவறான தகவல்கள்....அப்படியென்றால் யார் மெடிக்கல் போட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்? நான் மெடிக்கல் போடவில்லை. வேண்டுமானால் போய் ஆர்மி ஹெட் குவாட்டஸில் இதை கேட்டுப் பாருங்கள். </p><p>

</p><p>நபர்: அப்படியென்றால் ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கான சம்பளத்தை நீங்கள் பெற்றுக்கொள்வதில்லையா?</p><p>
கோட்ட:ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கான சம்பளமும் தருகிறார்கள். அதுவல்ல விடயம். என்னுடைய பெரிய சம்பளம் இராணுவத்தில் தான் இருக்கிறது. </p><p>

நபர்: லெப்டினன்ட் கர்னல் தரத்தின் கீழான ஓய்வூதியம்.</p><p>

</p><p>கோட்டா:ஆமாம்.</p><p>நபர்: அப்படியென்றால் ஜனாதிபதி என்ற முறையிலும் பென்ஷன் எடுக்குறீர்கள் தானே? </p><p>

கோட்டா: ஆமாம்.நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்...
</p><p>
நபர்: அது சரி ,சரி. நாட்டின் மக்களின் வரிப்பணத்தில் தானே உங்களுடைய பென்ஷனும் வழங்கப்படுகிறது? ஜனாதிபதி பென்ஷனை எடுப்பதற்கு நீங்கள் தகுதியானவரா? நாட்டிற்கு நீங்கள் என்ன சேவை செய்தீர்கள்?
</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/314d27cd-2a85-4cb4-9957-4eb92db66982/26-6a69ffbe02cfa.webp' /></p><p>கோட்டா:அது எனக்குத் தெரியாது. அதை நீங்கள் தீர்மானியுங்கள்.
</p><p>
நபர்: நாட்டை வக்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றதற்காகவா பென்ஷன் கொடுக்கிறார்கள்?
</p><p>
கோட்டா: நான் வக்குரோத்து நிலைமைக்கு தள்ளவில்லை. அரகலய போராட்ட காரர்களே அவ்வாறு செய்தனர்..
</p><p>
நபர்: போராட்டக்காரர்கள் இல்லையே முழு நாடுமே வீதிக்கு இறங்கியது.
</p><p>
கோட்டா:சரி அது வேறொரு கதை. நீங்கள் இராணுவத்தில் வேலை செய்திருக்கிறீர்களா?
</p><p>
நபர்:நான் இராணுவத்தில் வேலை செய்யவில்லை.
</p><p>
கோட்டா: 20 ஆண்டுகள் இராணுவத்தில் வேலை செய்வது என்பது இலேசான காரியமா?
</p><p>
நபர்:எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை நீங்கள் இராணுவத்தில் இருந்தீர்கள்? 91லா?
</p><p>
கோட்டா: 20 ஆண்டுகள் 90களில் அல்ல 70 ஆம் ஆண்டிலிருந்து. அது உங்களுக்கு தெரியாதா?
</p><p>
நபர்: முதலில் ரைபிள் அணிக்கு சென்று அதற்குப் பிறகு சிங்க ரெஜிமென்ட்டிற்குச் சென்று அதற்குப் பின்னர் ஜீஆருக்கு வந்தீர்கள்.
</p><p>
கோட்டா:ஆமாம் அதை மட்டும் கேட்காதீர்கள் நான் என்ன செய்திருக்கிறேன் என்று போய் பாருங்கள். குறைந்தபட்சம் அதற்காவது ஒரு மரியாதை இல்லையா?
</p><p>
நபர்: மரியாதை இருக்கிறது.
</p><p>
கோட்டா:எனக்குத் தொந்தரவு செய்யாதீர்கள் என்றுதான் நான் கேட்கிறேன் தயவுசெய்து என்னிடம் பேசாதீர்கள்...
</p><p>
நபர்:இல்லை நீங்கள் பொதுமக்களின் வரிப்பணத்தில் தானே பென்ஷன் எடுக்கிறீர்கள்? நீங்கள் மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.
</p><p>
கோட்ட: அது என் வேலை இல்லை.நான் 20 வருடங்கள் இராணுவத்தில் கடுமையாக கஷ்டப்பட்டு எடுத்த பென்ஷன்.சும்மா நீங்கள் வரிகள் பற்றி கதைக்க வேண்டாம்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T14:17:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batti-religious-union-punishment-in-saudi-youth-1785333222"></link>
            <id>https://tamilwin.com/article/batti-religious-union-punishment-in-saudi-youth-1785333222</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை
விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த
கவலையுடன் அவதானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை
விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த
கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும்
அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக
ஏற்றுக்கொள்கின்றது.</p><p></p><h2>ஆதரவு</h2><p>அத்துடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம்,
சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு
வலியுறுத்துகிறோம்.
</p><p>
எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது
ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9517da91-f159-4e98-9c60-7126eaddfebc/26-6a6a06caeb272.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே
நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக
அறியமுடிகின்றது.
</p><p>
இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது
எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான
அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய
அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள
தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும்
வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன்
கேட்டுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21283100-531e-451a-a962-618843e1f475/26-6a6a06ca2fb5a.webp' /></p><p>

அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும்
நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத
உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை
மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும்
வலியுறுத்துகிறோம்.</p><p>

மேற்படி சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும்
மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும்
பிரார்த்தனையுமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T14:10:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Nillanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/puberty-ceremony-coordination-committee-meeting-1785331193"></link>
            <id>https://tamilwin.com/article/puberty-ceremony-coordination-committee-meeting-1785331193</id>
            <summary type="text">சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக,பகட்டாகக் கொண்டாடினார்.ஊருக்கும் விருந்து கொடுத்தார்.விழா நாயகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக,பகட்டாகக் கொண்டாடினார்.ஊருக்கும் விருந்து கொடுத்தார்.விழா நாயகியாகிய பெண்ணை குதிரை தேரில் அழைத்துக் கொண்டு வந்தார்கள்.</p><p> அந்த ஊர்வலத்தில் யானை வந்தது, மாட்டு வண்டி ஊர்வலம் வந்தது, இன்னியம் என்று அழைக்கப்படுகின்ற நடை பவனி அணி வந்தது. ஒரு யூடியூப்பரை வேலைக்கு அமர்த்தி அந்த நிகழ்வுக்கு டிஜிட்டல் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.
</p><p>
புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் தமது தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு யானையை,குதிரையை,ஹெலிகாப்டரை,பல்லக்கை வாடகைக்கு அமர்த்துவது புதியதல்ல.தேவையான காசு இருக்கிறது.சினிமாப் பாணியில்,சினிமாத் தனமாக நிகழ்வை ஒழுங்கமைத்து படம்பிடித்து படங்காட்டி மகிழ்கிறார்கள்.</p><p></p><h2>தமிழர்களின் நிதி&nbsp;</h2><p>
</p><p>
புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தனிப்பட்ட வைபவங்களில் மட்டுமல்ல பொது வைபவங்களில்,அரசியலில்,குறிப்பாக சமய நம்பிக்கைகளில் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.</p><p>2009க்குப் பின்னரான பெரும்பாலான ஆலயப் புனரமைப்பு வேலைகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி உண்டு. ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரையிலும் அந்த உதவி கிடைக்கிறது. </p><p>வடக்கு-கிழக்கு ஊடாகப் பயணம் செய்த ஓர் அமெரிக்கப் புலமையாளர் என்னிடம் கேட்டார் “வழியெல்லாம் காணப்படும் சிறிய மற்றும் பெரிய கோயில்களைப் புனமைக்கும் நிதி புலம்பெயர்ந்த தமிழர்களுடையதா என்று


தாம் பிறந்து வளர்ந்த அல்லது திருமணம் புரிந்த கிராமங்களில்,திருவிழாக்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தாராளமாக செலவழிக்கப்படுகிறது.</p><p>ஊர்க் கோவில்களின் திருவிழாக் காலங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களோடு தொடர்புடைய உபயகாரர்கள் தமது திருவிழாவை நமது பண பலத்தைக் காட்டும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கிறார்கள்.அதனால் இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.</p><p>தென்னிந்தியாவை நோக்கி பலாலியில் இருந்து திறந்து விடப்பட்டிருக்கும் வான்வழியூடாக இந்திய சினிமாப் பண்பாடு வேகமாகப் பரவி வருகிறது.ஏற்கனவே அது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பரவி விட்டது.</p><p></p><h2>புலம்பெயர்ந்த தமிழர்கள்</h2><p>கோவில் திருவிழாக்களில் மயிலாட்டம் முதல் கொண்டு பெயர் தெரியாத பலவிதமான ஆட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.அவற்றில் சில போருக்கு முந்திய தசாப்தங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சின்ன மேளக் கச்சேரிகளை நினைவூட்டுகின்றன.</p><p>தமிழகத்திலிருந்து கலைஞர்களைக் கொண்டு வந்து தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் கொண்டாடுவது என்பது புலப்பெயர்ச்சிக்குப் பின்னரான புதிய போக்கு அல்ல.அது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே இருந்தது.தமிழகத்திலிருந்து நடனக் கலைஞர்கள், சின்னமேளக் கச்சேரிகள்,பிரபல சினிமாப் பாடகர்கள் இங்கு அழைத்து வரப்பட்டார்கள்.எனவே அது புலம்பெயர்ச்சியின் விளைவு அல்ல. புலப்பெயர்ச்சியால் மேலும் தூண்டப்பட்ட ஒரு விளைவு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c3aa08d-5288-4230-b5f1-0d83479dc0ff/26-6a6a023a84838.webp' /></p><p>அதேசமயம்,புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது தனிப்பட்ட வைபவங்களை சினிமாத்தனமாக ஒழுங்கமைப்பதிலும் சமயச் செயற்பாடுகளிலும் அரசியலிலும் மட்டும் தமது செல்வத்தை முதலீடு செய்கிறார்கள் என்பதல்ல. </p><p>மேற்சொன்ன அனைத்தையும் விட முக்கியமாக,தமிழ்ப் பகுதிகளில் தேசத்தை நிர்மாணிக்கத்தக்க செயல் திட்டத்தின் பகுதிகள் என்று வருணிக்கத்தக்க விதத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது நிறுவனங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் தாராளமாகக் காசு கொடுக்கிறார்கள்.தாயகத்தில் இயங்கும் கணிசமான தொகை தன்னார்வ நிறுவனங்களின் பின்பலமாக புலம்பெயர்ந்த தமிழ் வள்ளல்களை உண்டு.</p><p>கடந்த மே மாதம் 20ஆம் திகதி நீர்வேலியில்,”கருவி” நிறுவனத்தின் தலைமைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. “கருவி” என்று அழைக்கப்படுவது விழிப்புலன் மற்றும் செவிப்புலன் இழந்தவர்களுக்கான ஒரு கட்டமைப்பு ஆகும்.இக்கட்டமைப்பின் தலைமையகத்தை நிர்மாணிக்கத் தேவையான 60விகிதமான நிதியை புலம்பெயர்ந்த தமிழர்களே வழங்கினார்கள்.</p><p></p><h2>தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை</h2><p>அதுபோலவே இம்மாதம் 14 ஆம் திகதி,தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில், “அரவணை” என்று பெயரிடப்பட்ட நோய்த் தடுப்புச் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.நோயாளிகள் தமது இறுதிக் காலத்தை கண்ணியமாகவும் அமைதியாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த வலியோடும் கழிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பு அதுவாகும்.</p><p>அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளான “பாலம்”, “வன்னி ஹோப்” ஆகிய இரண்டு அமைப்புகளும் இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b022ece-a4ca-4b54-ae76-b7df97bf3387/26-6a6a023c00bf6.webp' /></p><p>எனவே தொகுத்துப் பார்த்தால் தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழ் நிதியானது ஒருபுறம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிர்மாணப் பணிகளுக்கு உதவுகிறது. ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நிதிப் பலத்தையும் உளவியல் உறுதியையும் கட்டியெழுப்ப உதவுகிறது.</p><p>இன்னொருபுறம், தமது பண பலத்தைக் காட்ட விரும்பும் புலம்பெயர்ந்த தமிழர்கள் காசை அள்ளி வீசுகிறார்கள்.தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் தங்களுடைய செல்வாக்கை காட்டும் குறிகாட்டிகளாக மாற்றுகிறார்கள்.ஆலய திருவிழாக்களில், பழைய மாணவர் சங்கங்களில், சன சமூக நிலையங்களில், சமூகத்தின் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்தும் நிதி அதிகாரமுடைய உபயகாரர்களாக காணப்படுகிறார்கள்.</p><p>சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறிய பாடசாலைக்கு புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர் ஒருவர் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு நிதி உதவி செய்தார்.ஆனால் அந்தக் கண்காணிப்புக் கமராக்களை இயக்குவதற்கு தேவையான கடவுச் சொல் அவரிடந்தான் இருந்தது.</p><p></p><h2>ஒருங்கிணைப்பு</h2><p>பாடசாலை அபிவிருத்திக் குழுக்களுக்குள்,பழைய மாணவர் சங்கங்களுக்குள், ஆலய அறக்கட்டளைகளுக்குள்,அரசியல் கட்சிகளுக்குள்,சிவில் சமூகங்களுக்குள்,தங்களால் ரிமோட் செய்யப்படக்கூடிய குழுக்களை,நபர்களை உருவாக்கி மேற்படி அமைப்புகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொலை இயக்கி உபயகாரர்களும் உண்டு.</p><p>தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் பிரதான விடயங்களில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f09170b6-9b1d-4734-91de-4c0472dddb06/26-6a6a023cb2458.webp' /></p><p>ஆயுதப் போராட்டத்தின் காசு காய்க்கும் மரமாக அது இருந்தது.ஆனால் 2009க்கு முன்புவரை தாயகத்தை மையமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.தாயகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளும் ஏனைய உதவிகளும் ஒருங்கமைக்கப்பட்டன.</p><p>ஆனால் இப்பொழுது தாயகத்தில் அவ்வாறான ஒன்றிணைந்த மையம் எதுவும் கிடையாது.புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள்.அங்கேயும் ஒன்றிணைந்த செயல்பாடுகள் இல்லை. வள்ளல்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.</p><p>உபயகாரர்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.இந்தப் பாரதூரமான வெற்றிடம் உள்ளவரை ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல் வாழ்வெனப்படுவது,சினிமாப் பண்பாட்டின் வீச்செல்லைக்கு வெளியே வராது, உருப்படாது.</p><p>இந்த நிலை தொடரும்வரை,தமிழ் மக்கள் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் சட்ட லீலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.அல்லது மயிலாட்டத்தை,சின்ன மேளக் கச்சேரிகளை,டிஜே கும்மிகளைப் பார்த்துப் ரசிக்கலாம்.அல்லது,ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடக்கும் சண்டைக்கு காட்சிகளை அல்லது நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துச் சிரிக்கலாம் அல்லது குருதி அழுத்தத்தை உயர்த்திக் கொள்ளலாம்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலைத் தொடர்ந்து சவூதி அரேபியாவுக்கான பயணத்தை ஒத்திவைத்த ஈராக் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iraqi-prime-minister-postpones-to-saudi-arabia-1785331531"></link>
            <id>https://tamilwin.com/article/iraqi-prime-minister-postpones-to-saudi-arabia-1785331531</id>
            <summary type="text">ஈராக்கில் நடத்தப்பட்ட கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் அலி
அல்-ஜைதியின் சவூதி அரேபியாவுக்கான அதிகார பூர்வ விஜயம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கில் நடத்தப்பட்ட கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் அலி
அல்-ஜைதியின் சவூதி அரேபியாவுக்கான அதிகார பூர்வ விஜயம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈராக் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, பிராந்திய வளர்ச்சி மற்றும் பல்வேறு துறைகள்
சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திடுவதற்காக பிரதமர்
அல்-ஜைதி வியாழக்கிழமையன்று சவூதி அரேபியாவுக்குச் செல்லத்
திட்டமிட்டிருந்தார்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7e806d-c575-4bc6-a183-d3f62d0a8526/26-6a6a01903ec60.webp' /></p><p>
இன்று(29) காலை அமெரிக்கா மற்றும் சவூதி படைகள் இணைந்து நடத்திய வான்வழித்
தாக்குதலில் குறைந்தது 20 ஈராக் போராளிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப்
பயணம் இடைநிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-at-a-commercial-center-in-matara-1785330486"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-at-a-commercial-center-in-matara-1785330486</id>
            <summary type="text">மாத்தறை - காலி பிரதான வீதியில், பெட்ரோல் நிலையத்திற்கு எதிரே உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் (2...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - காலி பிரதான வீதியில், பெட்ரோல் நிலையத்திற்கு எதிரே உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
இன்று பிற்பகல் (29.07.2026) ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றிலுமாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீ விபத்தில் உயிரிழப்பு</h2><p>

மின்சாரக் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F874848755394494%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>

மாத்தறை தீயணைப்புப் படை, மாத்தறை பொலிஸ் மற்றும் உள்ளூர் மக்கள் தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இழுவைமடி படகுகளின் அத்துமீறல் : கடலில் போராட்டம் நடத்திய கடற்தொழிலாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisherman-protest-at-sea-1785328332"></link>
            <id>https://tamilwin.com/article/fisherman-protest-at-sea-1785328332</id>
            <summary type="text">இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்களால்&amp;nbsp;கடல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்களால்&nbsp;கடல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தைச் சேர்ந்த இழுவைமடி படகுகளின் தொடர்ச்சியான எல்லை மீறல், கடல் வளக்
கொள்ளை மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாரிய
பாதிப்புகளைக் கண்டித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில்
இன்று (29) கடற்தொழிலாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p></p><h2>கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டவாறு</h2><p>தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்,
கண்ணாடி இழை படகுகளில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டவாறு கடற்தொழிலாளர்கள்
கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39650d37-16cd-4896-9463-dc018805f0ba/26-6a69f901365f7.webp' /></p><p>தமிழகத்தைச் சேர்ந்த இழுவைமடி படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பிற்குள்
அத்துமீறி நுழைந்து, மனிதாபிமானமற்ற முறையில் கடல் வளங்களை சுரண்டுவதோடு,
வடக்கு மற்றும் தீவகத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய்
பெறுமதியான மீன்பிடி வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்களை சேதப்படுத்தி
வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
</p><p>இதனால் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாளாந்த வருமானமும் பெருமளவில் குறைந்துள்ளதாக
அவர்கள் தெரிவித்தனர்.</p><p>மேலும், இந்தப் பிரச்சினையில் கடற்றொழில் அமைச்சர் போதிய கவனம் செலுத்தவில்லை
என்றும், தொடர்ச்சியாக இடம்பெறும் எல்லை மீறல்கள் மற்றும் இழுவைமடி படகுகளின்
சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
</p><p>“கடலுக்காக நீதி வேண்டும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற
கோரிக்கையை முன்வைத்து, கடலில் வாழ்வாதாரம் மேற்கொள்ளும் கடற்தொழிலாளர்கள்
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T12:59:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலை குப்பை மேட்டில் தீ : தொடர் சிரமங்களுக்கு உள்ளாகி வரும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-keerimalai-garbage-dump-1785326776"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-keerimalai-garbage-dump-1785326776</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து
வருவதால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு
உள்ளாகியுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து
வருவதால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு
உள்ளாகியுள்ளனர்.
</p><p>
வலி.வடக்கு பிரதேசத்தில், மாவிட்டபுரம் - கீரிமலை வீதியில், 1990ஆம்
ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணக்கற்கள் அகழ்ந்த பகுதிகளில் பாரிய குழிகள்
காணப்படுகின்றன.
</p><p>
அவற்றுக்குள் குப்பைகளை கொட்டி , "சுகாதார நில நிரவுகை திட்டம்" என குழிகளை
மூடும் நடவடிக்கை 2019ஆம் ஆண்டு கால பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>குப்பைகளை மீள அள்ளுவதற்கு நடவடிக்கை</h2><p>அதற்கு
பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது கைவிடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அந்த குழிகளுக்குள் வலி.தெற்கு பிரதேச சபையினர் மற்றும்
கடற்படையினர் டிப்பர் வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73363b18-b592-44b0-9b00-ebcc274ceda3/26-6a69eeb6963be.webp' /></p><p>இது தொடர்பில் கடந்த 16ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்த
கூட்டத்தில் உறுப்பினர்கள் அது தொடர்பில் பிரஸ்தாபித்து, அந்த குழிகளுக்குள்
குப்பைகளை கொட்ட அனுமதிப்பதில்லை எனவும் கொட்டப்பட்ட குப்பைகளை மீள
அள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
</p><p>தமது சபை தீர்மானத்தையும் மீறி வலி.தெற்கில் இருந்து குப்பைகளை
கொண்டு வந்து கொட்டுவதாக வலி.வடக்கு பிரதேச சபையின் சுகாதார குழுவினருக்கு
தகவல் கிடைத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை அப்பகுதி சென்ற போது அங்கு
கடற்படையினர் டிப்பர் வாகனத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு வந்த வேளை திருப்பி
அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>இந்நிலையில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த பகுதிக்கு நேற்றைய தினம்
செவ்வாய்க்கிழமை காலை அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது.</p><p>
குறித்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வருவதனால் அப்பகுதி மக்கள்
சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T12:16:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்வானைச் சுற்றி கடல்சார் ரோந்தை தீவிரப்படுத்தும் சீனா: நிபுணர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-intensifies-maritime-patrols-around-taiwan-1785324208"></link>
            <id>https://tamilwin.com/article/china-intensifies-maritime-patrols-around-taiwan-1785324208</id>
            <summary type="text">தாய்வான் தீவின் கிழக்குக் கடல் பகுதிகளில் சீனா தனது கடலோரக் காவல் படை
மற்றும் சிவில் கப்பல்களின் ரோந்து நடவடிக்கைகளை கணிசமாக விரிவுபடுத்தி
வருகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்வான் தீவின் கிழக்குக் கடல் பகுதிகளில் சீனா தனது கடலோரக் காவல் படை
மற்றும் சிவில் கப்பல்களின் ரோந்து நடவடிக்கைகளை கணிசமாக விரிவுபடுத்தி
வருகிறது.
</p><p>
இதன் மூலம் தாய்வானை வெளி உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச உதவிகளில் இருந்து
துண்டிக்கும் 'முற்றுகை உத்தியை' சீனா பயிற்சி செய்து பார்ப்பதாக பாதுகாப்பு
வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சீனாவின் கடல்சார் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும்
கடலோரக் காவல் படை இணைந்து பல சிறப்பு கடல்சார் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
வழக்கமாக தாய்வானையும் சீன பிரதான நிலப்பரப்பையும் பிரிக்கும் தாய்வான்
நீரிணைப் பகுதியில் மட்டுமே ரோந்து செல்லும் சீனா, முதன்முறையாக தாய்வானின்
கிழக்கு கடல் பகுதியில் அடுத்தடுத்து தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு
வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4926df42-f9c2-4c6b-a6d8-37573a437e0f/26-6a69e63b3a0d5.webp' /></p><p>

இந்த ரோந்து நடவடிக்கைகளின் போது அப்பகுதியில் பயணிக்கும் வர்த்தகக்
கப்பல்களைத் தொடர்புகொண்டு, அவற்றின் புறப்பாடு மற்றும் செல்லுமிடம் குறித்த
விவரங்களைச் சீனப் படையினர் கோரி வருகின்றனர்.
</p><p>
தாய்வான் தனது ஆற்றல் மற்றும் எரிபொருள் தேவைகளுக்கு 100% இறக்குமதியையே
நம்பியிருக்கும் நிலையில், சீனாவின் இந்த 'சாம்பல் மண்டல' (Grey zone)
உத்திகள் எதிர்காலத்தில் முழுமையான கடல்சார் முற்றுகையாக மாறக்கூடும் என்று பல்கலைக்கழக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><h2>அத்துமீறல்</h2><p>

சீனாவின் இந்த அத்துமீறல்களுக்கு பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed1a1ddc-b867-49c3-b78f-efd2416d2224/26-6a69e63bdbf0f.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், அமெரிக்கா தற்போது மத்திய கிழக்கு விவகாரங்களில் தீவிர கவனம்
செலுத்தி வருவதால், இந்தச் சூழலைச் சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்
கொண்டு தாய்வான் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருவதாக சர்வதேச அரசியல்
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T12:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக பிரச்சினைகளை பாடல்களில் வெளிப்படுத்தியதால் அச்சுறுத்தல் : வெளிப்படுத்தப்பட்ட ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threatened-for-expressing-social-issues-in-songs-1785324535"></link>
            <id>https://tamilwin.com/article/threatened-for-expressing-social-issues-in-songs-1785324535</id>
            <summary type="text">சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் 
பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக யாழ்ப்பாணத்திலிருந்து பல பாடல்களை இசையமைக்கும் இசையமைப்பாளர் பூவன் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் 
பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக யாழ்ப்பாணத்திலிருந்து பல பாடல்களை இசையமைக்கும் இசையமைப்பாளர் பூவன் மதீசன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

குறிப்பாக 30 வருடகால யுத்தம் முடிவடைந்து மக்கள் தங்களது வாழ்க்கையை சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் இன்னமும் மக்களுக்கு ஒரு ஏமாற்றம் இருந்து கொண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இவ்வளவு காலமும் இருந்த தமிழ் அரசியல் கட்சிகளால் சாதிக்க முடியாதததை சமூக பிரச்சினைகளை பாடல்களின் வாயிலாக கூறும் இவர்களால் செய்யமுடியுமா என்ற ஏக்கம் காணப்படுகிறது.
</p><p>
ஆகவேதான் இதை அடுத்த தலைமுறைக்கு பாடல்கள் வாயிலாக தாம் கொண்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலதிக விடயங்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்......&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8JzQXt-3YxA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T12:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனுவில் மறைக்கப்பட்ட உண்மைகள் : நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-not-disclose-all-the-facts-in-court-1785311428"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-not-disclose-all-the-facts-in-court-1785311428</id>
            <summary type="text">முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைகள் எதனையும் மனுதாரரான சுரேஷ் சலே நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் மறைத்துள்ளார் என பிரதி சொலிசிட்டர் ஜெனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைகள் எதனையும் மனுதாரரான சுரேஷ் சலே நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் மறைத்துள்ளார் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>பேராணை மனுவொன்றின் மூலம் நிவாரணம் பெற வேண்டுமாயின் அனைத்து உண்மைகளையும் நீதிமன்றில் வெளிப்படுத்த வேண்டும். அவர் தூய்மையான கரங்களுடன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் ரிட் மனுவை சட்டத்தின் முன் எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்? என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.
</p><p></p><h2>சாரா ஜாஸ்மின்&nbsp;இந்தியாவுக்கு தப்பிச் செல்ல</h2><p>
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு மேல்முறையீட்டு நீதிமன்றில் நேற்று(28) மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5da76883-fcb6-4937-abc8-0a151c79686c/26-6a69b831eb8ce.webp' /></p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>

 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மனுதாரரான சுரேஷ் சலே எவ்வாறு இடையூறு விளைவித்தார் என்பது குறித்து, அன்றைய காலகட்டத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க வழங்கிய வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

2019ஆம் ஆண்டு சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 'சாரா ஜாஸ்மின்' என்ற பெண் உயிரிழக்கவில்லை என்றும், அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. </p><h2>சுரேஷ் சலேவின் நிலைப்பாடு</h2><p>இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சரியாக விசாரணை நடத்தவில்லை என சுரேஷ் சாலே விசாரணை மீளாய்வுக் கூட்டங்களில் குற்றஞ்சாட்டிப் பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab92bf5-c4e7-42c7-b86e-95c27012877f/26-6a69b832bc5db.webp' /></p><p>சாரா ஜாஸ்மின் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், DNA பரிசோதனைகள் சரியாக நடத்தப்படவில்லை என்றும் சுரேஷ் சலே பல சந்தர்ப்பங்களில் குற்றஞ்சாட்டியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.</p><p> டி.என்.எ பரிசோதனையை மீண்டும் நடத்த வேண்டும் என்பதே சுரேஷ் சலேவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அன்றைய ஜனாதிபதி மூலம் அந்தப் பணியை அவர் நிறைவேற்றிக் கொண்டார் என்பதும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bvS71qDw2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-29T11:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் கொட்டப்படும் திண்மக்கழிவுகள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foul-odor-solid-waste-dumping-kattaiparichan-1785320971"></link>
            <id>https://tamilwin.com/article/foul-odor-solid-waste-dumping-kattaiparichan-1785320971</id>
            <summary type="text">கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியோரத்தில் குப்பைகள்
கொட்டப்படுவதனால் இந்த இடத்தினூடாகப் பிரயாணம் செய்யும் பொது மக்கள் சுகாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியோரத்தில் குப்பைகள்
கொட்டப்படுவதனால் இந்த இடத்தினூடாகப் பிரயாணம் செய்யும் பொது மக்கள் சுகாதார
ரீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை
காணப்படுகின்றது என பிரதேச சபை
தவிசாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> மூதூர் கிழக்கு ஒருங்கிணைந்த கிராம மட்ட அமைப்புக்கள்
மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் கடிதம் மூலம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
குறிப்பிட்ட கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, தங்களது பிரதேச
சபைக்கு உட்பட்ட அவ் விடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுகளும்
வீதியோரத்தில் சிதறிக்காணப்படுகின்றமை , கால் நடைகள் மற்றும் நாய்கள்
அக்கழிவுகளை உட்கொள்வதுடன் வீதி விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயகரமான
நிலைமையும் காணப்படுகின்றது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
எனவே பொருத்தமற்ற இடத்தில் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்தி வேறு பொருத்தமான
இடத்தில் இதனை மேற்கொள்ளுமாறும் பொது மக்கள் எதிர்நோக்கும் சுகாதாரப்
பிரச்சினைகளைத் தவிர்த்து அவர்கள் இடையூறற்ற வகையில் வீதியினால் போக்குவரத்தில்
ஈடுபட உதவி செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டு கொள்கின்றோம் என
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a25e1139-313a-4ffd-9be2-4abccf627b57/26-6a69e0cc5a33f.webp' /></p><p>
இந்தக் கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட பலருக்கும்
அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T11:15:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு : பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-mysteriously-mudur-police-investigation-1785321491"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-mysteriously-mudur-police-investigation-1785321491</id>
            <summary type="text">திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள
வீடொன்றில் 73 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மூதூர்
பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள
வீடொன்றில் 73 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மூதூர்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
</p><p>இந்நிலையில்,நேற்றிரவு (28.07.2026) வீட்டுக்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள் இருவர்
தங்களைத் தாக்கியதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் வாக்குமூலம்
அளித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> இந்தத் தாக்குதலிலேயே தனது மனைவி உயிரிழந்ததாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7918617b-aa2f-411b-be42-2fdd9ea64e5e/26-6a69da0485fb5.webp' /></p><p>சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளுக்காக, திருகோணமலை தடயவியல் பிரிவு
பொலிஸாரும் மூதூர் பொலிஸாரும் இன்று (29) காலை சம்பவ இடத்திற்குச் சென்று
தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர்
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். </p><p>உயிரிழந்த பெண்ணின் சடலம்
தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T10:47:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் நிரம்பும் கீரிமலை - புனித தன்மையை கெடுக்கும் செயலா என விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keerimalai-waste-is-it-destroy-sacred-nature-1785318143"></link>
            <id>https://tamilwin.com/article/keerimalai-waste-is-it-destroy-sacred-nature-1785318143</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை
கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும்
அபாயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை
கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும்
அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் குப்பைகள்
கொட்டப்பட்டு வருகின்றன.
</p><p>
மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியில் , கடந்த காலங்களில்
சுண்ணக்கற்கள் அகழப்பட்டு பாரிய குழிகள் காணப்படுகின்றன

அவை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய கால பகுதியில் அப்பகுதியில்
இருந்து சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டமையால் ஏற்பட்ட குழிகள் என
தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு&nbsp;</h2><p>குறித்த பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் 1990ஆம் ஆண்டு
கால பகுதியில் இடம்பெயர்ந்து சென்றனர். </p><p>அதனை தொடர்ந்து குறித்த பகுதிகள்
உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/082f57ba-b415-4903-b16e-959094804407/26-6a69d0e2e99e7.webp' /></p><p>
அந்நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் 2014ஆம் ஆண்டு கால
பகுதியில் கட்டம் கட்டமாக அப்பகுதிகள் விடுவிக்கப்பட்டு வந்தன.
</p><p>
அக்கால பகுதியில் வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து, யாழின் பல்வேறு
பகுதிகளிலும் தற்காலிக முகாம்களில் வசித்தவர்களை, காணிகள் அற்றவர்களை
"நல்லிணக்கபுரம் மாதிரி கிராமம்" எனும் பெயரில் வீடுகள் அமைத்துக்கொடுத்து,
பாரிய குழிகளை அண்டிய பகுதிகளில் குடியேற்றினார்கள்.</p><p>இந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு வருடங்களில் அப்பகுதிகள் முற்று
முழுதாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து விடுவிக்கப்பட்டதை பாரிய
குழிகளுக்குள் கழிவுகளை கொட்ட தொடங்கினர்.</p><p>

முதலில் உக்காதா கழிவுகளை, பிளாஸ்ரிக் கழிவுகளை கொட்டியவர்கள் பின்னர்
இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் என எவ்வித கண்காணிப்புக்களும் கட்டுப்பாடுகளும் இன்றி குழிகளுக்குள் கொட்டப்பட்டன.</p><p>

அதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு பகுதியில் அப்பகுதியில் இருக்கும் மக்கள்
கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு கட்ட தொடங்கினர்.

அதன் போது குறித்த பகுதியில் உள்ள குழிகளை தாம் தென் கொரிய நாட்டின் நிதி
உதவியுடன் " சுகாதார நில நிரவுகை திட்டம்" ஊடாக குழிகளை
நிரவுவதாக தெரிவித்தனர்.</p><p>அவ்வாறு அந்த குழிகள் நிரவ 25 தொடக்கம் 30 வருட காலம் எடுக்கும். இந்த
காலப்பகுதிக்குள் அந்த குப்பைகளை நாடி வரும் பறவைகள், விலங்குகளால்
ஏற்படப்போகும் சுகாதார சீர்கோடுகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பினை
ஏற்படுத்தும் என பலரும் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.</p><p></p><h2>சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்</h2><p>அதனை அடுத்து சில வருடங்கள் அக்குழிகளுக்குள் பாரிய அளவில் கழிவுகள்
கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் , மீண்டும் அப்பகுதியில் உள்ள
குழிகளுக்குள், வலி. வடக்கின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் வலி. தெற்கு
பிரதேச சபை மற்றும் கடற்படையினர் கழிவுகளை கொட்ட தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0812798a-9b6c-422b-bc9c-ab988d5fe5d3/26-6a69d0e3ef096.webp' /></p><p>
கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மாவிட்டபுரம் கந்தசுவாமி
கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ,போன்ற ஐந்து இந்து ஆலயங்களும் ,
சித்தர்களின் சமாதி கோவில்களும் குறித்த பகுதியை அண்மித்த பகுதியில்
தேவாலயமும் காணப்படுவதால் அப்பகுதி புண்ணிய புனித தன்மையான பூமி எனவும்
அப்பகுதியில் கழிவுகள் கொட்டுவதனால் , அதன் புனித தன்மைகள் அற்றுப்போகும்
எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.</p><p>அது மாத்திரமன்றி , காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியில் முதலீட்டு
வலயம் உருவாக உள்ள நிலையிலும் கீரிமலையில் மகிந்த ராஜபக்ச காலத்தில்
கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை முதலீட்டாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடுகள்
நடைபெறும் நிலையில் அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதானல் அதன்
அபிவிருத்தி திட்டங்களுக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்படும் அபாயங்கள்
காணப்படுகின்றன.
</p><p>
அவை மாத்திரமின்றி குப்பை கொட்டப்படும் பகுதிக்கு மிக அருகில் கடல் உள்ளது.
மழை காலத்தில் கடல் நீர் உட்புகுமாயின் அது பெரும் சுகாதார
சீர்கேட்டினை ஏற்படும் அபாயம் உள்ளது.</p><p>இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள்
அறிவித்ததை அடுத்து, உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்று கழிவுகள்
கொட்டப்படுவதனை நேரில் பார்த்துள்ளனர்.
</p><p>
அது தொடர்பில் , கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற வலி. வடக்கின் பிரதேச சபையின்
மாதாந்த அமர்வில் உறுப்பினர்கள் பிரஸ்தாபித்து அப்பகுதியில் கழிவுகளை
கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரினர்.</p><p>அந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வலி. வடக்கு பிரதேச சபையின்
சுகாதார குழு உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்ற போது டிப்பர் வாகனத்தில்
கடற்படையினர் கழிவுகளை கொட்டுவதற்கு எடுத்து வந்த நிலையில் அதனை
அங்கு கொட்டாது தடுத்து நிறுத்தினர்.
</p><p>
அதேபோன்று வலி. தெற்கு பிரதேச சபையினரும் கழிவுகளை கொட்டுவதற்கு வந்த வேளை
அத்தனையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p></p><h2>குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதி</h2><p>அதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு
உறுப்பினர்கள் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்திய நிலையில், சம்பவ
இடத்திற்கு வந்த தவிசாளர், அங்கு அனுமதியின்றி யாரும் கழிவுகளை கொட்ட
முடியாது என கூறி கழிவு ஏற்றி வந்த வாகனங்களை திருப்பி அனுப்பிய பின்னர்,
குறித்த குழிகளுக்கு செல்லும் பாதை ஒன்றில் காணப்பட்ட "கேற்றினை" பூட்டு
போட்டு பூட்டி சென்றுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a0462ae-1c52-4846-b2b3-3f11ebdd8644/26-6a69d0e4c79ea.webp' /></p><p>
அதன் போது தவிசாளர் பூட்டி சென்ற "கேற்றுக்கு" அருகினால் , மற்றுமொரு பாதை
காணப்படும் நிலையில் , அதனூடாக கழிவுகளை எடுத்து வரும் வாகனங்கள் உள்ளே செல்ல
முடியும். </p><p>அதனால் அப்பகுதிக்குள் எவரும் அனுமதியின்றி நுழைய முடியாதவாறு ,
நிரந்தர வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை
உறுப்பினர்கள் தவிசாளரிடம் கோரியுள்ளனர்.</p><p>குறித்த பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டால் , "நல்லிணக்க
புர" மக்கள் மாத்திரமின்றி , முதலீட்டு திட்டங்கள் , பாரிய அபிவிருத்தி
திட்டங்கள் என்பவற்றுடன் , சுற்றுலாத்துறைக்கும் பாரிய
பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

நீண்ட கால திட்டமிடல்கள் இன்றி , கழிவுகளை கொட்ட அனுமதிப்பது பாரிய
சிக்கல்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட
துறை சார்ந்தோர் விரைந்து காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
எதிர்பார்ப்பாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T10:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுவாஞ்சிகுடியில் மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcycle-stolen-in-kaluvanchikudy-recovered-1785318143"></link>
            <id>https://tamilwin.com/article/motorcycle-stolen-in-kaluvanchikudy-recovered-1785318143</id>
            <summary type="text">களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில்
வைத்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில்
வைத்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,&nbsp; மட்டக்களப்பு-&nbsp; களுவாஞ்சிகுடி
கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் வைக்கிள் கடந்த (2026.07.22) அன்று
களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது.</p><p> இது தொடர்பில் குறித்த நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப்
பதிவு செய்திருந்தார்.</p><p></p><h2>கைது</h2><p>
</p><p>இதனையடுத்து, நேற்று(28.07.2026) குறித்த மோட்டார் சைக்கிளையும் அதனைக் களவாடிச்
சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67bf1936-d9fc-4a7e-b830-6af553721786/26-6a69ce8b6061c.webp' /></p><p>&nbsp;இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 25 வயது மதிக்கத்தக்கவர் எனவும்,
மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் எட்டு இலட்சத்தது தொண்ணூராயிரத்துக்கு மேல்
எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த நபர்
மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று
இலக்கத் தகட்டையும் மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த
நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:59:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதைக்கு அடிமையான இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785317066"></link>
            <id>https://tamilwin.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785317066</id>
            <summary type="text">யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது.</p><p>
யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 3 வருடங்களாக போதைவஸ்துக்கு அடிமையாக இருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது. </p><p>இந்நிலையில் நேற்றுமுன்தினம்(27.7.2026) காலை மலசலகூடம் சென்று
அங்கே மயக்கமுற்றுள்ளார்.

பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a193f6-2b20-4356-81a6-c7002d388cfe/26-6a69c9aab2cb6.webp' /></p><p>
</p><p>இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
</p><p>
அதிகளவான போதைவஸ்து பாவனை காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறை- ரீகல் சந்தியில் விபத்து: பெண் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-ampara-regal-junction-woman-injured-1785314097"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-ampara-regal-junction-woman-injured-1785314097</id>
            <summary type="text">அம்பாறை- ரீகல் சந்தியில்&amp;nbsp; இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்
ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- ரீகல் சந்தியில்&nbsp; இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்
ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த விபத்தானது&nbsp;நேற்று(28) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>நேற்று மாலை ரீகல் தெரு சந்திப்புப் பகுதியில் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று
திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிள் மற்றும் கார் மீது பலமாக மோதியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இதன்போது, அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் வாகனம்
மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.</p><p> அத்துடன்,
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வான் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் இந்த
மோதலில் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1764585b-3f9e-4593-a1d1-1275a3d170fb/26-6a69bdf6b3e13.webp' /></p><p>

காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாறை பொது மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.</p><p>இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து இடம்பெற்ற கோர விபத்துகள்! இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் பரிதாபப் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-accidents-six-people-lose-1785312154"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-accidents-six-people-lose-1785312154</id>
            <summary type="text">இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம்(27) இடம்பெற்ற வாகன
விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார்
தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம்(27) இடம்பெற்ற வாகன
விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் 21 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களும் அடங்குகின்றனர் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

நேற்றுமுன்தினம் காலை திருக்கோவில் - பொத்துவில் வீதியின் விநாயகபுரம் 01
பகுதியில், பொத்துவில் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து
வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் 49 வயதுடைய
பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, பின் இருக்கையில் பயணித்த இரு பெண்கள்
மற்றும் இரு சிறுவர்கள் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே
இந்த பெண் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p>
ஏனைய பெண்ணும் இரு சிறுவர்களும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63678e2c-8165-45c6-9c6a-ffd71b4c5697/26-6a69b9d50cb25.webp' /></p><p>

இதற்கிடையில், நேற்றுமுன்தினம் காலை புறக்கோட்டை - கொதட்டுவ வீதியில் கொதட்டுவ
நகருக்கு அருகில் புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்துடன் எதிர்த்திசையில் வந்த பேருந்து மோதியதில் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
</p><p>
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த ஒரு ஆண்
மற்றும் பெண் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சாரதி ஏற்கனவே
உயிரிழந்திருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T08:29:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவை தாக்க பாதாள குழுக்கள் மறைமுக திட்டம்! நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த சதிவலை....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-npp-1785309651"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-npp-1785309651</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச பயணிக்கும் வாகனம் மீதோ அல்லது அவர் பங்கேற்கும் கூட்டம் மீதோ தாக்குதல் நடத்தப்படலாம் என சர்வதேச புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி IODPP ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச பயணிக்கும் வாகனம் மீதோ அல்லது அவர் பங்கேற்கும் கூட்டம் மீதோ தாக்குதல் நடத்தப்படலாம் என சர்வதேச புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி IODPP Police&nbsp; (இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பு) என்ற புலனாய்வு வலையொளித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள மேலதிக தகவல்கள்:&nbsp; இது குறித்து தீவிர அவதானம் செலுத்தப்பட வேண்டும். நாமல் ராஜபக்ச எந்த அரசியல் கட்சியில் இயங்குகிறார்
என்பது முக்கியமில்லை. </p><p>அவருக்கு இலங்கையின் அரசியல் களத்தில் இயங்குவதற்குக் உரிமை உண்டு. அதற்கு இடமளிக்க வேண்டும். எதிர்க்கட்சியில் உள்ள அனைவருக்கும் அந்த உரிமை உண்டு. </p><p>அந்த உரிமையை அரசியல் ரீதியாகவோ அல்லது பாதாள உலகக் குழுக்கள் மூலமாகவோ தடுக்க முயன்றால் அதற்கு இடமளிக்கக் கூடாது.
</p><h2>
</h2><p></p><h2>அம்பலமான சதித்திட்டம்</h2><p>அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் இந்தத் தாக்குதல் நடந்தால் பழியை அரசாங்கத்தின் மீது போடுவார்கள். ஜே.வி.பி.யினர் தான் கொலை செய்கிறார்கள் என்று கூறுவார்கள். </p><p>இவ்வாறான சம்பவங்களில் பழி அரசாங்கத்தின் மீதே விழுகிறது. இது ஒரு பாரதூரமான நிலைமை.
நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். அரசிற்கும் ஆதரவாளர்கள் உள்ளனர். </p><p>இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு நாடு குழப்ப நிலையை அடையும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி நடந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள், கைதுகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் அப்படியே நின்றுவிடும். </p><p>எனவே இது மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.
இலங்கையின் முன்னணி துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள் இரகசியக் கொலையாளிகள் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85f5275e-f466-44d8-bb87-188af476c60f/26-6a69a9d51d427.webp' /></p><p>இந்தியாவின் புலனாய்வு அமைப்பின் தகவலின்படி அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கைக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>இவ்வாறான சம்பவங்கள் அரசுக்கு பாரிய அச்சுறுத்தலாகும்
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை முற்றிலும் அடக்கி ஒழிக்க வேண்டும். அவர்கள் யார் என்பது முக்கியமில்லை உள்நாடா வெளிநாடா என்பதும் முக்கியமில்லை. </p><p>
ஏனெனில் ஒரு சம்பவம் நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை. அந்த முறையை மாற்ற வேண்டும். அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பே அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.சம்பவம் நடந்த பின்னர் விசாரணைக் குழுக்களை அமைப்பதில் அர்த்தமில்லை.
</p><p>எனவே பொலிஸ் அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்று பாதாள உலக மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு விசேட அதிரடிப்படையை ஈடுபடுத்த வேண்டும். இதில் காலத்தைக் கடத்தக் கூடாது. நிலைமை தொடர்ந்தால் நாடு பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்கலாம்.</p><p>&nbsp;</p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pLSW0994iEQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:22:43+00:00</updated>
        </entry>
    </feed>
