<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-11T22:15:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின் அரசுக்கு அழுத்தமா - நெருக்கடியா.. பாய்ச்சலுக்கு தயாராகும் அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-sri-lanka-government-trouble-1789159322"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-sri-lanka-government-trouble-1789159322</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கைது மற்றும் அதனுடன் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள அரசியல் சூழலில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் தொடர்பில் வெவ்வேறு சட்டரீதியான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மிக்-27 போர் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானதும் இதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இந்தநிலையில், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை, ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த விவகாரம் நாட்டின் அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.</p><p>இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dsr0jV9T7Cw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் மகிந்த - கோட்டாபய வைத்தியசாலையில்! சுரேஸ் சலே உடைத்த பரம இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET ஸ்கேனர் கருவியை வழங்குவதாகக் கூறி, ‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக நிதி திரட்டப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த நிலையில், சிரந்தி ராஜபக்ச தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>
அவரது உடல்நிலை காரணமாக விசாரணைகளில் இருந்து விலகி இருக்கிறாரா அல்லது உண்மையான உடல்நலப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.</p><p>

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் அடுத்த கட்டமாக விசாரணைகள் தீவிரமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
எனவே அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் உண்மையான காரணங்கள் மற்றும் அதற்குப் பின்னால் செயற்பட்ட சக்திகள் தொடர்பிலும் சுரேஸ் சலே வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


இது தொடர்பான விரிவான தகவல்களை ஆராய்கிறது ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CP_Y7qU4Swk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:44:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குகளை வாங்கினார்கள்… வாக்குறுதிகளை மறந்தார்கள்! சஜித் சரமாரி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-hparliment-speech-1789156597"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-hparliment-speech-1789156597</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் நாட்டின் 9 மாகாணங்களிலும் பொய்ப் பிரசாரப் பயணத்தை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் நாட்டின் 9 மாகாணங்களிலும் பொய்ப் பிரசாரப் பயணத்தை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்புகளின்போது, அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>மக்களின் உரிமைகள்&nbsp;</h2><p>
</p><p>
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு பணியையும் செய்யவில்லை எனவும், இந்த இரண்டு ஆண்டுகளும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட காலமாகவே அமைந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

மருதமடு, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பாடசாலைகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்கூட இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa788ad4-58dd-41d6-8d18-6745c74014f3/26-6aa4611e2e629.webp' /></p><p>
</p><p>
ஒலுவில் துறைமுகம், திருக்கோவில் மற்றும் கதிரவெளி பகுதிகளில் கடல் அரிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அரசாங்கம் இதுவரை உரிய பதிலை வழங்கவில்லை எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
திருக்கோவில், பனங்காடு மற்றும் நாவிதன்வெளி வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வளப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சஜித் பிரேமதாஸ</h2><p>

கித்துல்உறுகாமம் நீர்த்தேக்கத் திட்டத்தின் ஊடாக 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாய நிலமாக மாற்ற முடியும் என்ற போதிலும், வெளிநாட்டு உதவிகள் கிடைக்கத் தயாராக இருந்தும் அந்தத் திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

வாழைச்சேனை காகித ஆலையில் முன்னர் சுமார் 4 ஆயிரம் பேர் பணியாற்றிய நிலையில், தற்போது 250 பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2f49772-8a59-4336-8489-bf1916b471ac/26-6aa4611ed8db9.webp' /></p><p>
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட அபிவிருத்தி வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத கனிம மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
மல்வத்து ஓயா திட்டத்தின் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வதுடன், நிலம், இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான முறையான பொறிமுறையையும் அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இதனிடையே, பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் தொடர்பான கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரும் பிரேரணைக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்களின் நலனை கருத்திற்கொண்டு இனியாவது அரசாங்கம் இவ்வாறான பிரேரணைகளை முன்வைத்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T20:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேலுக்கு அடிபணிய மாட்டோம்! – ஈரான் ஜனாதிபதி அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-israel-want-to-bully-us-but-we-won-t-kneel-1789155591"></link>
            <id>https://tamilwin.com/article/us-israel-want-to-bully-us-but-we-won-t-kneel-1789155591</id>
            <summary type="text">பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தைகள், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என ஈரான் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தைகள், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><p>

BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பெசெஷ்கியான், இந்திய மதத் தலைவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார்.</p><h2>&nbsp;புதிய வாய்ப்புகள்</h2><p> </p><p>அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே கலாசாரம், தொழில்நுட்பம், வர்த்தகம், அறிவியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a73c92-0a3a-46c9-b9c8-bc3c59e9b2cc/26-6aa45af422a59.webp' /></p><p>
</p><p>
இந்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் வழங்கிய சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தியாவுடனான உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஈரான் தயாராக இருப்பதாகக் கூறினார்.
</p><p>
இதனிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பெசெஷ்கியான், ஈரானை அச்சுறுத்தும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார். 

பொதுமக்கள், பள்ளிகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் அவர் கண்டித்தார்.</p><h2>இருமுறை சந்திப்பு</h2><p>
</p><p>
மேலும், ஈரான் மக்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்றும், அனைத்து மனிதர்களுக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>

இதற்கிடையில், பிரதமர் மோடியும் மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலமாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce462c98-d719-4c36-ac62-92efe8dc95cd/26-6aa45af4cf0a5.webp' /></p><p>

பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
</p><p>
மேலும், கடல் வழிச் சுதந்திரம், வர்த்தகம் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

மோடி மற்றும் பெசெஷ்கியான் இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T19:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விரிவுரையாளரின் அநாகரிக பேச்சால் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trainee-teacher-attempts-wrong-lecturer-s-remarks-1789143031"></link>
            <id>https://tamilwin.com/article/trainee-teacher-attempts-wrong-lecturer-s-remarks-1789143031</id>
            <summary type="text">யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,</p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நிர்வாகம் நடவடிக்கை</span></p><p>குறித்த மாணவி கல்லூரி கழகம் ஒன்றின் செயற்பாட்டிற்காக சென்றிருந்த நிலையில் அந்த விடுதிக்கு பொறுப்பான பெண் விரிவுரையாளர் எங்கு சென்று வருகிறாய்? என மாணவியை கேட்டுள்ளார்.
</p><p>
 அதற்கு தனது கழக செயற்பாட்டுக்கு கழகத் தலைவர் அழைத்ததன் காரணமாக சென்று வருகிறேன் என தெரிவித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07f295d0-63d1-4df4-acb5-a06409b3e3bc/26-6aa42c836e316.webp' /></p><p> </p><p>


உடனே குறித்த விரிவுரையாளர் அநாகரிகமான முறையில் திட்டியுள்ளார்.

அதனைதொடர்ந்து மாணவி எழுத்து மூலம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியருக்கிறார். </p><p>

ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமை காரணமாக மனவிரக்தி அடைந்து தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் சக மாணவிகளால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் களமிறங்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேசிய அமைப்பாளர் டி.வி. சாணக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>
மேலும், அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதும் இந்தப் பேரணியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தப் பேரணி சனிக்கிழமை (12) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது! அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protests-will-not-yield-results-bimal-rathnayake-1789146853"></link>
            <id>https://tamilwin.com/article/protests-will-not-yield-results-bimal-rathnayake-1789146853</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித்தார்.
</p><p>
அனுராதபுரத்தில் இன்று(11.9.2026) அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p>

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது
அரசுக்கு உள்ளது. மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச்
சாய்ந்துள்ளது.</p><h2>போராட்டங்கள்</h2><p>
</p><p>
மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி
முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80506689-03c6-456d-b966-6cc5cbcba32e/26-6aa436e83461f.webp' /></p><p>
</p><p>
மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும்
தோல்வியிலேயே முடியும்.</p><p>

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க
முடியாது.</p><h2>முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
</p><p>
இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல், அரசியல்
காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1f7e81-29f3-43e9-abdc-740f3cb41f35/26-6aa436e8dcfd9.webp' /></p><p>

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள்
மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
</p><p>
நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து, நாட்டைப்
பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப்
பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம்: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-pressure-on-the-judiciary-sjb-1789145384"></link>
            <id>https://tamilwin.com/article/president-pressure-on-the-judiciary-sjb-1789145384</id>
            <summary type="text">அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத
நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத
நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் சட்ட செயலாளர் ரஜித லக்மால் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"22ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும்
சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் உள்ளது.</p><p>நாட்டினுடைய பிரதான நிறைவேற்று
அதிகாரியான ஜனாதிபதி மேடைகளில் ஏறி 'தீர்ப்பு வந்தவுடன் அதனை மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம்' எனக் கூறுவது நீதிமன்றத்தின் மீது
விடுக்கப்படும் நேரடி அழுத்தமாகும்.</p><h2>அத்தியாவசிய மருந்துகள்&nbsp;</h2><p>

எழுதப்படாத ஒரு தீர்ப்பு குறித்து நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாகப் பேசுவது
ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இன்று நாட்டில் உள்ள பிரதான மருத்துவமனைகளில்
நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால்,
ஜனாதிபதியோ மக்கள் வினோதத்துக்காக மருத்துவமனைக்குச் செல்கின்றார்.</p><p>வீடுகளிலேயே கொத்தமல்லி குடித்துவிட்டு இருக்குமாறும் கூறுகின்றார்.

மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என்பதை மறைக்கவே ஜனாதிபதி இவ்வாறு
கூறுகின்றாரா. இதன் காரணமாகவே மக்கள் அவரை இன்று 'கொத்தமல்லி ஜனாதிபதி' என
விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9694d6c-bf9f-454d-b095-5a40ec5c6d3b/26-6aa432ca14b01.webp' /></p><p>
</p><p>
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், 2025 ஜனவரி மாதம் இடம்பெற்ற
கொள்கலன் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தம் வசமிருந்தும் அதனை
வெளிப்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர்.
</p><p>
போலி கலாநிதி பட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் சபாநாயகர்
மீதோ அல்லது நிலக்கரி கொள்முதல் ஊழல்கள் மீதோ இதுவரை எவ்வித முறையான
விசாரணைகளும் நடத்தப்படவில்லை.</p><h2>அரச போலிப் பேரணி</h2><p>ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசு
தவறியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை
இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தவர்கள், இன்று அப்பாவி மக்களுக்கு எதிராக
அதே சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffb89da7-330f-4f52-9bf1-a343971e57e7/26-6aa432cabd10d.webp' /></p><p>
</p><p>
மக்களின் அதிருப்தியையும் சரிந்துவரும் செல்வாக்கையும் மறைக்கவே பஸ்கள் மூலம்
ஆட்களைத் திரட்டி அரசு போலிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.</p><p>

இந்த அரசுக்கு இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குப் பிறகு
மக்களால் இவர்கள் முற்றாக நிராகரிக்கப்படுவார்கள். எதிர்க்கட்சியாக நின்று
மக்களுக்கான ஜனநாயகப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து
முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772"></link>
            <id>https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களினால் 06 கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் 3 தாக்குதல்கள் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே பதிவாகியுள்ளன. 
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்ட கைக்குண்டுகளே இவ்வாறான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><h2>குற்றவியல் பின்னணி</h2><p>
</p><p>இதன்காரணமாக, பாதாள உலகக் குற்றங்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் முப்படைகளின் உதவியைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11) அதிகாலை 3.00 மணியளவில், தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் கதவை அடையாளம் தெரியாத நபர் தட்டியுள்ளார். </p><p>வீட்டார் கதவைத் திறந்ததும் அந்நபர் கைக்குண்டை வீட்டிற்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 வயதுடைய கசுன் ரஷ்மிக மற்றும் அவரது 11 வயதுடைய சகோதரரான துமிந்த கீஹான் ஆகிய இரு சிறுவர்களும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165ea34e-213d-4db0-905c-cfee39a99058/26-6aa42ec60c3a0.webp' /></p><p>
</p><p>இச்சிறுவர்களின் தந்தையான 55 வயதுடைய நளின் துசாந்த பெரேரா என்பவரின் காலில் காயமேற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இவர் மீது எவ்வித குற்றவியல் பின்னணியோ குற்றச்சாட்டுகளோ இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் உறவினர்கள் சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "படவிட்ட அசாங்க" என்ற பாதாள உலகக் கும்பல் தலைவனின் நெருங்கிய சகாக்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><h2>விசாரணைகள்</h2><p> 
நேற்று முன்தினம் களுபோவில பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது படவிட்ட அசாங்கவின் சகாக்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், தாக்குதல் நடத்தியவர் இலக்கை மாற்றி, தவறுதலாக இச்சிறுவர்களின் வீட்டின் மீது குண்டை வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0203a34-7e85-4344-ba5d-cda7eee17aa3/26-6aa4348c25f6a.webp' /></p><p> </p><p>
இச்சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p> மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:39:58+00:00</updated>
        </entry>
    </feed>
