<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-25T06:27:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை உயர்வு: எதிர்வரும் 8 மாதங்கள் மிக முக்கியமான காலகட்டமென எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-heat-wavw-in-srei-lanka-1787636489"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-heat-wavw-in-srei-lanka-1787636489</id>
            <summary type="text">எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் எல் - நினோ தாக்கத்தின் காரணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

அந்த வகையில் எல் - நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

பசுபிக் பெருங்கடலில் நிலவும் 3°C வெப்பநிலை உயர்வின் பின்னணியிலேயே இந்த மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><h2>மழை பெய்யும் வாய்ப்பில்லை</h2><p> </p><p>

இந்த நிலையில், எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் சில பகுதிகளில் செப்டெம்பர் இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5af5dbcd-6a8a-4c0c-8adf-eb0328a86222/26-6a8d311925a2e.webp' /></p><p> </p><p>

தற்போதைய நிலையில், நாட்டின் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.</p><h2>வறட்சியான வானிலை</h2><p> 

இதேவேளை அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தகவலின் படி, 7 மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 81,605 பேர் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. </p><p>

அதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04010ca6-4263-4033-85ed-8fea6c5b6560/26-6a8d3119d58ac.webp' /></p><p> 

நீடிக்கும் வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக 7 மாவட்டங்களில் நீரை ஆதாரமாகக் கொண்ட வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:07:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு, கம்பஹாவின் குடிநீரில் ஆபத்து - திடீரென விநியோகம் நிறுத்தப்பட்டமைக்கான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-water-supply-disruption-in-colombo-1787636135"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-water-supply-disruption-in-colombo-1787636135</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. </p><p>தனியார் தொழிற்சாலை ஒன்றினால் சுற்றாடலில் இரசாயனம் ஒன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. </p><p>நீர் விநியோகத்தில் எத்தகைய மாசுபடுத்தும் பொருட்களும் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</b></h2><p>அதுவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். </p><p>இச்சம்பவம் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், இச்சம்பவம் தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.</p><p> அத்துடன், உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-25T06:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/other-districts-attend-missing-persons-in-jaffna-1787632989"></link>
            <id>https://tamilwin.com/article/other-districts-attend-missing-persons-in-jaffna-1787632989</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்புகாணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும்
வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய&nbsp;இணைப்பு</h2><p>காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும்
வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன
நடந்தது எனக் கோரி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில்
மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர்
கூடத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
(ஓ.எம்.பி.) ஏற்பாட்டில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. </p><p>இதனைக் கண்டித்தே யாழ்.
மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் அதே நேரத்தில்
முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே இந்தப்
போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(25.08.2026) நடைபெறவுள்ள சர்வதேச காணாமல்
ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம்
சுமார் 400 பேர் அழைத்து வரப்படவுள்ளனர்.</p><p>

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இந்நிகழ்வு நீதி
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இடம்பெறவுள்ளது. </p><p>இதற்கான ஏற்பாடுகள்
அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><h2>450இற்கும் மேற்பட்டோர்</h2><p>
இதன்போது மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளிலிருந்து இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபா பெற்றவர்களிலிருந்து இந்த
400 பேரும் பேருந்துகள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3049ccc6-234b-4dd3-81a3-569494cc2413/26-6a8d1f67e7931.webp' /></p><p>இவர்களுடன் சேர்த்து இந்த
நிகழ்வில் 450 இற்கும் மேற்பட்டோர் பங்குகொள்வர் என மண்டப ஏற்பாட்டுத்
தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T05:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓ.எம்.பி அலுவலகத்திடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விடுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/relatives-of-the-disappeared-request-to-the-omp-1787634240"></link>
            <id>https://tamilwin.com/article/relatives-of-the-disappeared-request-to-the-omp-1787634240</id>
            <summary type="text">சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொறிமுறையை நடைமுறைப்படுத்தி விட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன
நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்றையதினம்(25) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள ' வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு குறித்து வடக்கில் உள்ள வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக
அமைப்புகள் இணைந்து நேற்று (24) மாலை ஊடக சந்திப்பு ஒன்றை
ஏற்பாடு செய்தனர்.</p><p>குறித்த ஊடக சந்திப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின்
தற்போதைய நிலை, எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் தங்களது
கருத்துக்களை வெளிப்படுத்தினர்.</p><h2>பிரச்சினையை முடிக்கப் பார்க்கிறீர்கள்</h2><p>இதன் போது கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து
தெரிவிக்கையில், ஒரு நாட்டில் சர்வதேச நெறிமுறைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்கிற ஒரு
அரசாங்கம், சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை ஏன் நடத்துகிறது? </p><p>இங்கே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. எல்லாம்
தீர்க்கப்பட்டு விட்டது என்பதை அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கொண்டாடுவதற்கு
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/847ed02b-371a-4759-afae-775bf2ad617a/26-6a8d25a425d97.webp' /></p><p>
</p><p>
இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தக்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஒவ்வொரு வருடத்திலாவது குறிப்பிட்ட தொகையில்
விடுவித்திருக்க வேண்டும்.</p><p>

அவர்களை வெளிப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதற்காகப் போராடிக்
கொண்டிருக்கின்ற அம்மாமார்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை திரும்ப
கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எதையும் செய்யாமல், கண் துடைப்பிற்காக இந்த
நிகழ்வை நீங்கள் அனுஷ்டிக்கிறீர்கள்.</p><p>நீங்கள் வலிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஒரு அமைப்பைக் கொண்டு வந்து,
நஷ்டஈடு தருகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்குக் கொடுத்து
பிரச்சினையை நீங்கள் முடிக்கப் பார்க்கிறீர்கள்.
</p><p>
எங்களுடைய உறவுகள் கேட்பது அந்த நஷ்டஈடு அல்ல. எங்கள் பிள்ளைகளை. நீங்கள்
எங்களிடம் ஒப்படையுங்கள்! அல்லாவிட்டால் அவர்களை நாங்கள் கடத்தி காணாமல்
ஆக்கி, படுகொலை செய்து விட்டோம் என்பதை நீங்கள் சர்வதேசத்தில் ஒத்துக்
கொள்ளுங்கள்.&nbsp;</p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது</h2><p>இந்தத் தினங்களை அல்லது எங்களுடைய
அம்மாமார்களை கூப்பிட்டு வைத்து கண் துடைப்பிற்காக நீங்கள் செய்கின்ற
விடயங்களையோ நாங்கள் ஒருநாளும் சம்மதிக்க இயலாது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50c5d217-c5fe-4bde-aabb-7168ee32b362/26-6a8d25a547fbf.webp' /></p><p>
சர்வதேச நியமங்களை மதித்து அந்த நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம், உள்நாட்டு
மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நீங்கள் நடைமுறைப்படுத்தி விட்டு,
நீங்கள் வெளிப்படுத்துங்கள்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை
வெளிப்படுத்துங்கள். </p><p>நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள்.

அது தான் ஒரு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளுக்கு நீங்கள் செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் என்பதை நாங்கள்
உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T05:40:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பெரும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் - அதிரடியாக முடக்கப்படும் சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-lalit-police-investigation-1787633868"></link>
            <id>https://tamilwin.com/article/bus-lalit-police-investigation-1787633868</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவின் சட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p> 

டுபாயிலிருந்து இன்று (25) நாட்டிற்கு லலித் கண்ணங்கரா தொடர்பாக பொலிஸ் பிரிவினால் இன்று நடத்தப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>கடுமையான குற்றச்சாட்டுகள்</h2><p>
</p><p>
அக்டோபர் 25, 2025 அன்று பொலிஸ் தலைமை அதிகாரிக்கு (IGP) கிடைத்த ஒரு சிறப்பு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fb55b1f-710a-49af-a3a3-3dcc2b765710/26-6a8d29b983f9d.webp' />&nbsp;</p><p>
</p><p>
போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் கொலை முயற்சி, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்துதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் மத்திய குற்றப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சட்டவிரோத சொத்துக்கள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவும் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>

2024-ஆம் ஆண்டு முதல் இன்டர்போலால் ரெட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை பொலிஸாரால் திரும்ப அழைத்து வர முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிவப்பு அறிவித்தல்</span></p><p>
இதற்கிடையில், ரெட் நோட்டீஸ் பெற்ற மேலும் 109 சந்தேகநபர்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>

ரெட் நோட்டீஸ் இல்லாத 38 சந்தேகநபர்கள் ஏற்கனவே நாட்டிற்கு திரும்ப அழைத்து வர முடிந்துள்ளது என்றும், வரும் நாட்களில் மேலும் பல சந்தேகநபர்களைத் திரும்ப அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a839f3-63ba-45ff-86e1-69785a8a1303/26-6a8d29ba32ab6.webp' /></p><p>
கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ள ரூ. 3,878 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.
</p><p>
2025-ஆம் ஆண்டில் மேலும் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைக் கையகப்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
 உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, இந்த சொத்துக்கள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டு, அரசாங்கத்தால் முழுமையாக கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/URucxM82z-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:39:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு இழுத்து வரப்பட்ட ஆபத்தான நபர் - பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-celebrates-the-bus-lalith-s-arrest-1787631988"></link>
            <id>https://tamilwin.com/article/people-celebrates-the-bus-lalith-s-arrest-1787631988</id>
            <summary type="text">ஆபத்தான நபரான லலித் கண்ணங்கர கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபத்தான நபரான லலித் கண்ணங்கர கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
டுபாயில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கண்ணங்கர என்ற பஸ் லலித் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளார்.
</p><p>
இதனை ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.</p><h2><b> 

பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சி</b></h2><p>மேலும், அப்பகுதிகளில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d03d77-9a29-4aed-aed6-0204c9f63f94/26-6a8d1be7d46c2.webp' /></p><p>யாசகர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் பஸ் லலித் லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த நபரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-08-25T04:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-arrivals-near-1-5-million-1787631649"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-arrivals-near-1-5-million-1787631649</id>
            <summary type="text">நடப்பு ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>
இதற்கமைய இவ்வருடம் ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி வரையான காலப்பகுதியில் 1,468,980 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக குறித்த புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.</p><h2>அரசாங்கத்தின் இலக்கு</h2><p>
</p><p>
இதேவேளை ஓகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 125,562 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47e6af1d-bc0e-48d8-b302-6c9da46bae2c/26-6a8d1abcded28.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 25 லட்சம் (2.5 மில்லியன்) சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் அரசாங்கத்தின் இலக்கு எதிர்பார்க்கப்பட்ட காலத்துக்கு முன்னரே பூர்த்தி செய்யப்படும் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T04:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இலங்கைப் படகு - இந்தியப் பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boat-that-behaved-suspiciously-1787630035"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boat-that-behaved-suspiciously-1787630035</id>
            <summary type="text">இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல்
(நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால்
அப்பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல்
(நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால்
அப்பகுதியில் நேற்று(24.08.2026) காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
</p><p>
கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நீண்ட
நேரம் நடமாடிய இலங்கைப் படகை மடக்க இந்தியப் பொலிஸார் முற்பட்டுள்ளனர்.
</p><h2>கடத்தல் நடவடிக்கை தொடர்பான படகு</h2><p>
பொலிஸார் படகில் சென்று இலங்கைப் படகைச் சுற்றி வளைக்க முயன்ற போதிலும்,
அந்தப் படகு அவர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e8f6562-77d6-49b6-acd9-2d00ad052ee4/26-6a8d15dbe6884.webp' /></p><p>
தப்பிச் சென்ற இலங்கைப் படகில் இருவர் காணப்பட்டனர் என்றும், அதில் பல மூடைகள்
இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது ஒரு கடத்தல் நடவடிக்கை தொடர்பான படகாக இருக்கலாம் என இந்தியப் பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T04:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலையில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-died-in-prison-is-back-to-family-turmoil-1787626701"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-died-in-prison-is-back-to-family-turmoil-1787626701</id>
            <summary type="text">வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உயிருடன் வீட்டிற்கு வந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
</p><p>
குருநாகல் – கல்கமுவ, கோகோபன்குளம் கிராமத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸாரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிக்கிரியைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம்</span></p><p>

இந்த நிலையில், இறந்ததாக கூறப்பட்டவர் தனது இறுதிக்கிரியைக்கு உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08494541-c85f-401c-8fd5-7079137dd622/26-6a8d107bcbf81.webp' />&nbsp;</p><p>
</p><p>
கோகோபன்குளம், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர் நேற்று (24) திடீரென தனது வீட்டிற்கு வந்துள்ளார். </p><p>

கிராமம் முழுவதும் இறுதிக்கிரியைக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, இறுதிச்சடங்கு மற்றும் தகனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில், கீர்த்திசேன உயிருடன் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளமை குழப்பத்தினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
சிறைச்சாலை மற்றும் அதிகாரிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T03:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு சுற்றுலா சென்ற சிறுமி பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-year-old-girl-dies-in-relative-s-house-1787628706"></link>
            <id>https://tamilwin.com/article/3-year-old-girl-dies-in-relative-s-house-1787628706</id>
            <summary type="text">கம்பளை, புப்புரெஸ்ஸ - டெல்டாவத்தை பகுதியில் உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற மூன்று வயது சிறுமி உயிரழந்துள்ளார்.

 தண்ணீர் என நினைத்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை, புப்புரெஸ்ஸ - டெல்டாவத்தை பகுதியில் உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற மூன்று வயது சிறுமி உயிரழந்துள்ளார்.
</p><p>
 தண்ணீர் என நினைத்து வீட்டில் இருந்த பசுப்பால் பதப்படுத்தப் பயன்படும் இரசாயன திரவத்தை பருகியதால் சிறுமி உயிரிழந்துள்ளார். </p><p> 

கம்பளை, வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>சிறுமி பரிதாபமாக பலி</b></h2><p>வவுனியா, செட்டிக்குளம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட தினேஷ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e1345cf-06b7-4566-a621-7433b18cec3b/26-6a8d0f742c978.webp' /></p><p>சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட பலர் டெல்டாவத்தையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். </p><p>வவுனியாவிலிருந்து சென்ற&nbsp; குழுவினர் நேற்று பகல் குளித்துவிட்டு, மாலையில் வீட்டின் வெளிப்பகுதியில் நின்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்துள்ளனர்.
</p><p>
இதன் போதே இந்தச் சிறுமி வீட்டுக்குள் சென்று ஜன்னல் மீது வைக்கப்பட்டிருந்த குறித்த திரவத்தை குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-25T03:47:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆபத்தான நபர்..! பல மணிநேரம் வாக்குமூலமும் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-lalith-arrested-dubai-back-to-sri-lanka-1787621689"></link>
            <id>https://tamilwin.com/article/bus-lalith-arrested-dubai-back-to-sri-lanka-1787621689</id>
            <summary type="text">இரண்டாம் இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு&amp;nbsp; இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இரண்டாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு&nbsp; இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a308715-8608-40cc-9d1a-30e14ad34a72/26-6a8d0d80e07ee.webp' />&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கமைய, இன்று காலை சுமார் 5:20 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 226 மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><h2>சர்வதேச சிவப்பு எச்சரிக்கை</h2><p>
 

கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்'&nbsp; சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின்&nbsp; (Red Notice)&nbsp;கீழ் அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2d9aad6-3b14-4d61-9e24-fc79b8557ae1/26-6a8cf56936664.webp' /></p><p>தற்போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதன்பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளார்.</p><p>களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பிடியாணை உத்தரவு</span></p><p>
</p><p>
 

 சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) கீழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0721702-a7f6-4ea4-a304-7d6a2f978ef7/26-6a8cfd7e8f94c.webp' /></p><p>
</p><p>
 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கையும் பெறப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/URucxM82z-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T03:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/killed-prisoners-family-will-get-compensation-1787627733"></link>
            <id>https://tamilwin.com/article/killed-prisoners-family-will-get-compensation-1787627733</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>10 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்த இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சமர்ப்பிக்கப்பட்டுள்ள&nbsp;கோரிக்கை </h2><p>
உயிரிழந்த கைதிகளுக்கும் நஷ்டஈடு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும், இது தொடர்பான கோரிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84f14a6-2838-4fcf-850f-25c001544b21/26-6a8d08db6c920.webp' /></p><p>
இந்த சம்பவம் சிறைச்சாலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், நெரிசல், உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற சிறைச்சாலை அமைப்பில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. </p><p>
இதனைத் தொடர்ந்து மஹர, கொழும்பு நியூ மெகசின், குருவிற்ற மற்றும் பள்ளன்சேனை ஆகிய சிறைச்சாலைகளிலும் அசம்பாவிதங்கள் பதிவாகியிருந்தன.</p><h2>சிறைச்சாலைகளில் நெரிசல்</h2><p>
</p><p>சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெறுவதில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.</p><p>
மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலனை மேம்படுத்துதல், அவர்களின் தொழில்முறை பயிற்சி மற்றும் புலனாய்வுத் திறன்களை அதிகரித்தல் மற்றும் பொலிஸ் செயல்திறனை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியன தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T03:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் கடும் வெப்பநிலை! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mber-coloured-heat-weather-warning-for-country-1787627461"></link>
            <id>https://tamilwin.com/article/mber-coloured-heat-weather-warning-for-country-1787627461</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் (25) செம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
</p><p>
இதன்படி இன்றைய தினம் (25) செம்மஞ்சள் மட்டத்திலான அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><h2>எச்சரிக்கை மட்டத்தில் வெப்பம்</h2><p>இதற்கமைய, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0504e2b-8e29-4ab7-aa26-21735394c08b/26-6a8d07c7115f8.webp' /></p><p>இதேவேளை, பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில இடங்களில் எச்சரிக்கை மட்டம் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T03:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீரென நீர் விநியோகம் துண்டிப்பு - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-cut-in-colombo-and-gampaha-districts-1787622955"></link>
            <id>https://tamilwin.com/article/water-cut-in-colombo-and-gampaha-districts-1787622955</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம்&amp;nbsp;தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.களனி கங்கையிலிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம்&nbsp;தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><h2>அறிவிப்பு</h2><p>பாதுகாப்பு காரணங்களுக்க, அம்பத்தலை மற்றும் களனி தென்கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c465e5a-0d4d-4a34-bae6-fe050f22c0f4/26-6a8cfa74ba897.webp' /></p><p>
 

நீர் விநியோகத்தை சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T02:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்! வெளியாகவுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-visits-lanka-1787622490"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-visits-lanka-1787622490</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த விஜயம் தொடர்பான அதிகாரபூர்வ திகதிகள் அறிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
</p><p>இந்த விஜயம் தொடர்பான அதிகாரபூர்வ திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இந்த விஜயம் அமையவுள்ளது.</p><h2>விஜயத்தின் முதன்மை நோக்கம்</h2><p>
</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/238864c0-40d5-4035-a0ac-bf13e45f30ae/26-6a8cf46361e55.webp' /></p><p>
இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.</p><p>
கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்தான இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாக ஆய்வுக் செய்யப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp; </p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T01:48:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் டொலர் பொருளாதார இலக்கு!- பிரதி அமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-2026-1787619475"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-2026-1787619475</id>
            <summary type="text">அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான
பொருளாதாரமாக உயர்த்தும் லட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது
என...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான
பொருளாதாரமாக உயர்த்தும் லட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது
எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க
அபேசிங்க தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> "பாரம்பரிய கல்வி முறைமைகள் மனிதர்களின் கற்பனைத்திறனையும் சுய சிந்தனையையும்
முடக்கியுள்ள நிலையில், தற்போதைய நவீன உலகம் சிக்கல்களுக்குத் தீர்வு காணும்
புதிய கல்வி மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ளது.</p><h2>பொருளாதார மறுமலர்ச்சி&nbsp;</h2><p>
</p><p>
முறையான கல்வி இல்லாத கால கட்டங்களிலேயே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
மாபெரும் கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன.

எனவே, தற்போதைய கல்வி முறைமையானது குழந்தைகள் புதிய விஷயங்களை ஆராயவும், இரக்க
உணர்வுடன் சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் வழிவகுக்கும் வகையில்
மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது" என குறிப்பிட்டார்.&nbsp;</p><p>

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் பணிச்சுமையைக்
குறைக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், 19ஆம்
நூற்றாண்டில் போராடிப் பெற்ற 8 மணிநேர வேலைத் திட்டம், இத்தனை தொழில்நுட்ப
வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்வது நியாயமற்றது என தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574089a4-085b-4ef4-a200-746630a2bd65/26-6a8ceb969c961.webp' /></p><p>

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உற்பத்தித்திறனை அதிகரித்து வேலை நேரத்தைக்
குறைப்பதன் மூலம் மனிதர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட
முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி குறித்துக் குறிப்பிட்ட அவர், இலங்கை
இனிவரும் காலங்களில் பிராந்தியத்தின் மாபெரும் உருமாற்றக் கதையாக
உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.</p><p>

உள்நாட்டுத் தொழில்முனைவோர்கள் உள்ளூர் சந்தையை மட்டும் இலக்காகக் கொள்ளாமல்,
சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலகளாவிய சிக்கல்களுக்குத் தீர்வு தரும்
வணிக உத்திகளை உருவாக்க வேண்டும் எனவும், இலங்கை இளைஞர்களுக்குத் தேவையான
அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் பிரதி அமைச்சர்
சதுரங்க அபேசிங்க மேலும் உறுதியளித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T01:10:57+00:00</updated>
        </entry>
    </feed>
