<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-29T05:38:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/moto-bike-accident-young-man-death-1785302047"></link>
            <id>https://tamilwin.com/article/moto-bike-accident-young-man-death-1785302047</id>
            <summary type="text">சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்
சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று(28.07.2026) இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்
சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று(28.07.2026) இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சிலாபம் – ஆனமடுவை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், திடீரெனக்
கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வடிகானுக்குள் தூக்கி
வீசப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும்</h2><p>

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை சம்பவ இடத்தில்
நின்றவர்கள் உடனடியாக மீட்டு சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e97a005-5964-43a2-b1da-96b64002a111/26-6a698e266bd78.webp' /></p><p>எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அந்த
இளைஞர் உயிரிழந்தார் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பள்ளம, பொத்துக்குளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய
மொஹொட்டி பத்திரன்னஹேலாகே கயான் புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T05:24:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது! சர்வஜன வாக்கெடுப்பு அவசியமே இல்லை - ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-referendum-is-not-necessary-minister-harshana-1785299344"></link>
            <id>https://tamilwin.com/article/a-referendum-is-not-necessary-minister-harshana-1785299344</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்துக்காகச் சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய
ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்துக்காகச் சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
</p><p>
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை
தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்
தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்காகச் சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை.</p><p></p><h2>சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவில்லை</h2><p>
</p><p>
அரசமைப்பின் 83ஆவது சரத்தில் எவற்றுக்கு மக்கள் தீர்ப்பு அவசியம் என்று
தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசு மேற்கொள்ளும் இந்த ஓய்வுபெறும் வயதெல்லை
நீடிப்பு மற்றும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்தங்கள் அந்த
எந்தவொரு சரத்திலும் உள்ளடங்கவில்லை.</p><p> கடந்த காலத்தில் 20ஆவது அரசமைப்புத்
திருத்தத்தின் மூலம் நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போதும் சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்லவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/520d20af-e647-41ba-8716-cb136721f61e/26-6a6981922ea97.webp' /></p><p>
</p><p>
இந்தத் திருத்தத்தை எவரேனும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தி,
அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால்
மட்டுமே அரசு அத்தகைய நடைமுறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். எனினும்,
தற்போதைய சட்டச் சூழலின்படி அவ்வாறு தீர்ப்பு வரும் என்று நான் நினைக்கவில்லை.
</p><p>
நீதிமன்றங்களில் வழக்குகள் மாதக்கணக்கில், வருடக் கணக்கில் தாமதமாவதால்
பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நீதித்துறை அமைப்பும் ஏனைய துறைகளைப்
போலவே திறமையாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.</p><p>

கடந்த 10-15 வருடங்களாக எதிர்காலத் தேவைகளைக் கணித்து நீதியரசர்களின்
எண்ணிக்கையை உயர்த்தாததாலேயே இன்று வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/520d20af-e647-41ba-8716-cb136721f61e/26-6a6981922ea97.webp' /></p><p>
</p><p>
இந்த ஓய்வுபெறும் வயது நீடிப்பானது மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்
நீதிமன்றத்துக்கு மட்டும் அல்லாமல், நீதித்துறை அமைப்புச் சட்டத்தைத் திருத்தி
மாவட்ட நீதிபதிகள், நீதிவான் நீதிபதிகள் உள்ளிட்ட அனைவருக்குமே ஓய்வுபெறும்
வயதை 2 ஆண்டுகள் நீடிக்கின்றோம். 1978ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஓய்வுபெறும்
வயது திருத்தப்படவில்லை. </p><p>பெரும்பான்மையான சர்வதேச நாடுகளில் ஓய்வுபெறும் வயது
70 ஆக உள்ளதால், அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் சேவையை மேலும் சில ஆண்டுகள்
பயன்படுத்திக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
</p><p>
நீதித்துறைச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதுடன், இரசாயன பகுப்பாய்வாளர்
திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழக்குகள் தாமதமாகும்
பிரச்சினைகளைத் தீர்க்கவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன"&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LNAbK0VBHs4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-29T04:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகாலையில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்! மற்றுமொரு பொலிஸ் அதிகாரி உயிர் மாய்ப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1785293966"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1785293966</id>
            <summary type="text">பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;பாணந்துறை, வலான ஊழல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>உயிர் மாய்ப்பு..</h2><p>இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a497ef73-2800-4b15-bb0c-ee8b307eae2f/26-6a6972136d997.webp' /></p><p>இதனையடுத்து,&nbsp; காயமடைந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பாணந்துரை தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>பேராதனைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், அருக்கு வழங்கப்பட்டிருந்த டி 56 ரக துப்பாக்கியை வைத்த அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb610af-5ba3-4f70-803d-8ee460c1893d/26-6a69721472690.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T03:19:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலகு தவணையில் வீடு கட்ட காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி! தனியார் நிறுவன பணிப்பாளர் ஒருவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-fraud-by-promising-to-build-house-1785292592"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-fraud-by-promising-to-build-house-1785292592</id>
            <summary type="text">இலகு தவணைக் கொடுப்பனவு முறையில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்து பல்வேறு நபர்களிடம் பெருந்தொகைப் பணம் மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலகு தவணைக் கொடுப்பனவு முறையில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்து பல்வேறு நபர்களிடம் பெருந்தொகைப் பணம் மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய, தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
குறித்த சந்தேக நபர், இலகு தவணைக்கொடுப்பனவு முறையில் வீடுகளையும் காணிகளையும் வழங்குவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் மூலம் வாக்குறுதியளித்து, பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பாரியளவிலான பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணைகள் </h2><p>முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களுடன் சந்தேக நபர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, ஆரம்பத்தில் வீடு மற்றும் காணியின் மொத்த மதிப்பில் 60 சதவீதத்தை முன்பணமாகப் பெற்றுள்ளார்.</p><p>

பணத்தைப் பெற்ற பிறகு, வாக்குறுதியளித்தபடி எந்த வீடும் கட்டப்படவில்லை. அதன் காரணமாக ஒரு கட்டத்தில் பணத்தைத் திரும்பக் கோரிய வாடிக்கையாளர்களுக்கு சந்தேக நபரால் வழங்கப்பட்ட காசோலைகளும் வங்கியில் போதிய பணமின்றி நிராகரிக்கப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9c8f54d-9772-40c0-a5bc-9a9417ece66a/26-6a696c40a68d7.webp' /></p><p>
</p><p>
மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 5 புகார்களைப் பெற்றுள்ளது. </p><p>மேலும், இந்த மோசடியில் சிக்கியுள்ள பாதிக்கப்பட்ட மற்ற நபர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் புகார்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மிரிஹானா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நேற்று (28) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T02:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நபர் ஒருவர் கொடூரமாக கொலை - சகோதரியின் மகனின் வெறிச்செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-brutally-1785291583"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-brutally-1785291583</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே நப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே நபர் ஒருவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் கம்பளை, கீரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><h2><b>

குடும்ப வன்முறை</b></h2><p>காயம் அடைந்த நபர் ஒருவர் கீழே விழுந்து கிடப்பதாகக் கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக செயற்பட்ட பொலிஸார், காயமடைந்தவரை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13829db9-86d6-435d-9658-c6dbc49399da/26-6a6964f7a3745.webp' /></p><p>இந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, சகோதரியின் மகனால் கத்தியால் தாக்கி இந்தச் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-29T02:34:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் முடிவால் தலைகீழாக போகும் இலங்கையின் தலையெழுத்து! சிறைக்கு செல்லப்போகும் பலர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-s-move-may-lead-to-major-prison-crackdown-1785283107"></link>
            <id>https://tamilwin.com/article/anura-s-move-may-lead-to-major-prison-crackdown-1785283107</id>
            <summary type="text">தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லை விவகாரத்தில் மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லை விவகாரத்தில் மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.</p><p>இதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p>அரசியலமைப்பின் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30(2) மற்றும் 62(2) ஆகிய பிரிவுகளுக்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என அவர் தெரிவித்தார்.
</p><p>
எனினும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அல்லது நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியலமைப்பின் எந்தப் பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>இதுஇவ்வாறிருக்க குறித்த விவகாரத்தை ஏன் இவ்வளவு அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p><p>இந்நிலையில், நாட்டில் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பல முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9BbR3RgpR6g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T02:12:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வழக்குகளைத் தாமதமின்றித் தீர்க்கவே நீதியரசர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு : நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-retirement-age-of-judges-1785289825"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-retirement-age-of-judges-1785289825</id>
            <summary type="text">தனிநபர் ஒருவரை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அரசமைப்பு மற்றும் நீதித்துறை
அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிக்கவில்லை
எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனிநபர் ஒருவரை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அரசமைப்பு மற்றும் நீதித்துறை
அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிக்கவில்லை
என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p></p><h2>அதிகரிக்க வேண்டிய தேவை&nbsp;</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதித்துறை அதிகாரத்தை மாகாண மட்டத்தில்
நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4dff80c-7020-4431-a7e9-4876f588edde/26-6a695c63331c5.webp' /></p><p>
</p><p>
குற்றவியல் தொடர்பில் முதல்நிலை நீதித்துறை அதிகாரம் கொண்ட மாகாண மேல்
நீதிமன்றங்கள் மற்றும் சிவில் மேன்முறையீட்டு அதிகாரம் கொண்ட சிவில்
மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அதிகளவிலான வழக்குகளைத்
தாமதமின்றித் தீர்ப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையையும்
அதிகரிக்க வேண்டியுள்ளது.
</p><p>
நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மாகாண மட்டத்தில்
மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற காரணங்களால்,
அந்நீதிமன்றங்களுக்கு அனுபவமிக்க மற்றும் புலமைமிக்க நீதியரசர்களின் சேவையைப்
பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நீதியரசர்களின் தற்போதைய சட்ட ரீதியான
ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமையவே
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது"&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T01:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வூதிய வயது தொடர்பில் அரசாங்கத்திற்கு பொன்சேகா கூறும் அறிவுரை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chief-justice-retirement-age-issue-1785283023"></link>
            <id>https://tamilwin.com/article/chief-justice-retirement-age-issue-1785283023</id>
            <summary type="text">ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்துவதன் மூலம் மக்களின்
மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள்
இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்துவதன் மூலம் மக்களின்
மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள்
இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஓய்வூதிய வயது</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"பிரதம நீதியரசரைத் தொடர்ந்து பதவியில் வைத்திருக்க வேண்டும் என்றும்,
சட்டத்தரணிகளின் சேவைக் காலத்தை நீடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறும்
கருத்துக்களுக்கு நான் முழுமையாக உடன்படுகின்றேன்.</p><p>

நாட்டின் சாதாரண இராணுவ வீரர்கள் 20 ஆண்டுகள் சேவைக் காலத்துக்குப் பின்னர்
(சுமார் 45 வயதில்) ஓய்வுபெற வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5d65dd6-91be-4c86-915c-926eafa19363/26-6a694393d21c6.webp' /></p><p> </p><p>அந்த வயதில்தான் அவர்களின்
பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருப்பதுடன், புதிதாக
வேறு ஒரு வேலையைப் பெற்றுக்கொள்வதும் அவர்களுக்குக் கடினமாகவுள்ளது. </p><p>அதேபோல,
இராணுவ அதிகாரிகள் 50 அல்லது 55 வயதிலும், அரச ஊழியர்கள் 60 வயதில்
ஓய்வுபெறும்போதும் அவர்களின் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்துகொண்டே
இருக்கின்றனர்.</p><p></p><h2>பழைய கலாசாரம்</h2><p>
</p><p>
உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல் ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள்
முன்னோக்கி நகர்த்தினால், மக்களின் மன அழுத்தம் குறையும். மனிதர்களால்
தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற முடியும்.</p><p> அமெரிக்கா போன்ற நாடுகளில் 70 வயது
வரை கூட இராணுவத் தளபதிகளாகப் பணியாற்றுகின்றனர். சில நாடுகளில் நீதிபதிகள் 70
வயதிலேயே ஓய்வூதியம் பெறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc9b9098-cfe7-4f82-b097-c5babb9779cc/26-6a69439482a11.webp' /></p><p> அப்படியிருக்கையில் நமது நாட்டு மக்களுக்கு
மட்டும் ஏன் இதில் தயக்கம் உள்ளது?

நான் இராணுவப் பணியிலிருந்து விலகி 20 ஆண்டுகள் ஆனாலும், எனது மூளை மற்றும்
உடல் உறுப்புகள் இன்னமும் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன.</p><p> இப்போது மீண்டும்
இராணுவப் பொறுப்பை வழங்கினாலும் அதைத் திறம்பட வழிநடத்த முடியும்.
இருப்பினும், நான் அதனை மீண்டும் பெறப்போவதில்லை. பழைய கலாசாரத்தில் சுகபோகமாக
வாழ்ந்தவர்களே இவ்வாறான சரியான திட்டங்களை விரும்புவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T01:20:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த செம்மணி..!அதிர்ச்சியளிக்கும் நீதியமைச்சரின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-srilanka-harshana-nanayakara-1785277529"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-srilanka-harshana-nanayakara-1785277529</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார வெளியிட்ட தகவல்களின்படி, செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள்&amp;nbsp; கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார வெளியிட்ட தகவல்களின்படி, செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள்&nbsp; கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
செம்மணி பகுதி பல காலங்களாக பல்வேறு தரப்பினரின் (விடுதலைப் புலிகள், இந்திய அமைதிப்படை, துணை இராணுவக் குழுக்கள் மற்றும் இலங்கை இராணுவம்) கட்டுப்பாட்டில் இருந்ததால், குற்றவாளிகளைக் கண்டறிவது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>

மரணங்களுக்கான காரணங்களை உறுதிப்படுத்த தடயவியல் மற்றும் DNA பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
 மரணங்களுக்கான காரணங்களை (இயற்கை மரணமா அல்லது வன்முறையா) தடயவியல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தும் பணி நடைபெறுகின்றது.</p><p> 

குற்றவாளிகளை அடையாளம் காணும் நிலைக்கு விசாரணை இன்னும் செல்லவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது NewsInsightTamil&nbsp; நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LNAbK0VBHs4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தைச் சிறப்பித்த பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-graced-the-addi-vel-procession-in-colombo-1785284355"></link>
            <id>https://tamilwin.com/article/harini-graced-the-addi-vel-procession-in-colombo-1785284355</id>
            <summary type="text">கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்
கோயிலின் வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் நேற்று(28) செவ்வாய்க்கிழமை மாலையில் அலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்
கோயிலின் வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் நேற்று(28) செவ்வாய்க்கிழமை மாலையில் அலரி
மாளிகைக்கு முன்பாக வருகை தந்தது.</p><p> இதன்போது வேல் ஊர்வலத்துக்குப் பிரதமர்
அலுவலகத்தின் சார்பாகப் பூஜை வழிபாடுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட
இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

அலரி மாளிகையிலிருந்து பாரம்பரிய மேளவாத்தியங்கள் முழங்கப் பிரதமர் வேல்
இரதத்தின் முன்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p></p><h2>&nbsp;ஆடி வேல் ஊர்வலம்</h2><p> </p><p>அங்கு வேல் இரதத்தில்
எழுந்தருளியிருந்த முருகப்பெருமானின் திருவுருவச் சிலைக்குப் பிரதமர்
பழத்தட்டைப் பூஜையாகச் சமர்ப்பித்து, சமய வழிபாடுகளில் ஈடுபட்டுத் தெய்வ
ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, வேல் ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் பிரதமரின் இந்தப்
பங்கேற்பைப் பாராட்டும் வகையில் அவருக்கு மாலை அணிவித்துப் பொன்னாடை
போர்த்தித் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3390afa1-b9ed-4dd2-9f09-df438d20466d/26-6a6948ed533f7.webp' /></p><p>
</p><p>
கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்
கோயிலினால் வருடாந்தம் நடத்தப்படும் 152 ஆவது வேல் ஊர்வலமே இம்முறை
நடைபெறுகின்றது.</p><p> இந்த வருடாந்த ஆடி வேல் மகோற்சவமும் இரதோற்சவ விழாவும் 1874
ஆம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை கலாச்சாரத் தொடர்புடையவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் - கந்திசாமி பிரபு எம்.பி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-prabhu-remove-those-linked-to-drug-culture-1785281646"></link>
            <id>https://tamilwin.com/article/mp-prabhu-remove-those-linked-to-drug-culture-1785281646</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும்
தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும்
தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
கந்திசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று(28.07.2026) மட்டக்களப்பு பழைய மாவட்ட
செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்ற சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி உதவி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக, வீடு அமைப்பதற்கென
நிதிகளை நாங்கள் பங்களித்துக் கொண்டு வருகின்றோம். </p><p>

அதேவேளை, வீதி வளர்ச்சி,
பொருளாதார வளர்ச்சிகளுக்கு ஏற்ற விதமான உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான
மேம்பாடுகள், விவசாயம் தொடர்பான திட்டங்கள் மற்றும் கிராமங்களின் ஊடாக
வளர்ச்சி செய்யக்கூடிய மக்கள் சக்தித் திட்டங்கள், கடற்றொழிலாளர்களுக்கான வளர்ச்சித்
திட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான விடயங்கள் என அனைத்து
விடயங்களுக்கும் தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிதிகளை வழங்கி
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de2378c3-d7d8-4313-99c3-475e938d21ad/26-6a693d1274fa6.webp' /></p><p>
</p><p>
இதன் ஊடாக நமது பகுதியில் இருக்கின்ற அனைத்துத் தரப்பினரும் தங்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள்
நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றோம். </p><p>

கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும்
தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
</p><p>
மக்கள்
அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக
எங்களுக்கு ஆணைதந்திருந்தார்கள்.</p><p> ஆனால், ஆணையினை நாங்கள் நிறைவேற்றும்போது,
இன்று மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக
முன்னெடுத்து வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:57:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் தேர்த் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-vadamaratchi-vinayakar-chariot-festival-1785280264"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-vadamaratchi-vinayakar-chariot-festival-1785280264</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் ஆலய வருடாந்தத் தேர்
திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.குறித்தத் திருவிழாவானது நேற்றைய தினம்(28.07.2026) வெரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் ஆலய வருடாந்தத் தேர்
திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.</p><p>குறித்தத் திருவிழாவானது நேற்றைய தினம்(28.07.2026) வெரு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.</p><p> </p><h2>தேர் திருவிழா</h2><p>அதிகாலை முதல் சிவாச்சாரியார்கள் ஓமம் வளர்த்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டதனை
தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைப்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f6b861d-21b6-4d05-904d-7f272561a097/26-6a6937d934492.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து மூத்த விநாயகர்
தேரில் வலம் வந்தார்.

இதில் வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து
கொண்டு தமது நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளனர்.</p><h2>யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரி பூவற்கரை பிள்ளையார் தேர்</h2><p>

யாழ்ப்பாணம் - வடமராட்சி, வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய வருடாந்த பெருந்
திருவிழாவின் ஒன்பதாம் திருவிழாவாகிய தேர் திருவிழா நேற்று(28.07.2026) சிறப்பாக
இடம்பெற்றுள்ளது.</p><p>அதி காலை முதல் சிவ அமிர்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஓமம்
வளர்த்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள்
இடம்பெற்றுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dfbe9b2-fa33-4a3d-924a-e65cda1ad818/26-6a6937d8851ca.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து லட்சுமி, முருகப்பெருமான் முன்னே செல்ல
பூவக்கரை பிள்ளையார் பின்னாலே பெரும் தேரில் வலம் வந்தார்.</p><p>

இதில் வதிரி பிரதேசத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு
தமது நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T23:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampara-district-coordination-committee-meeting-1785268334"></link>
            <id>https://tamilwin.com/article/ampara-district-coordination-committee-meeting-1785268334</id>
            <summary type="text">அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.நேற்றைய தினம்(28) நடைப்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறானதொரு சலசலப்பான நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>நேற்றைய தினம்(28) நடைப்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறானதொரு சலசலப்பான நிலை தோன்றியுள்ளது.</p><p></p><h2>திடீரென உருவான வாக்குவாதம்</h2><p>

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயருமான
ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுக்கிடையில்
முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த
பியதிஸ்ஸவும் பங்கெடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c8be2c-aabc-4dbf-9602-42c166136bbd/26-6a690dae4550e.webp' /></p><p>கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், நாமல் ஓயா தலைவர் அனில்
சுசந்த திடீரென எழுந்து முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது குற்றச்சாட்டுகளை
முன்வைத்துள்ளார்.</p><p>

இதனை அதாவுல்லாவின் ஆதரவாளர்களும் தரப்பினரும் கடுமையாக எதிர்த்ததை அடுத்து,
கூட்டத்தில் பெரும் குழப்பமும் காரசாரமான தர்க்கமும் உருவாகியுள்ளது.</p><p></p><h2>ஆளுநரின் தலையீடு</h2><p>
</p><p>இதனை அடுத்து&nbsp;கோபமடைந்த கிழக்கு மாகாண
ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறி,&nbsp;</p><p> "இங்கே யாரும் வன்முறையில் ஈடுபட முயல வேண்டாம். நாம் அனைவரும் இதனை ஒரு கண்ணியமான கூட்டமாக நடத்துவதற்கே
ஒத்துழைக்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f33ef1e0-daef-4da7-8dc2-f51a807a9899/26-6a690e9958b4c.webp' /></p><p>ஆளுநரின் இந்தத் தீர்க்கமான தலையீட்டையும் எச்சரிக்கையையும் தொடர்ந்து,
மண்டபத்தில் நிலவிய சலசலப்பு அடங்கி அமைதி திரும்பியுள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் ஏனைய நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்ந்தும் நடைபெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய வரி பரிசோதகர் பிணையில் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magistrate-orders-tax-inspector-to-go-4-bail-1785270414"></link>
            <id>https://tamilwin.com/article/magistrate-orders-tax-inspector-to-go-4-bail-1785270414</id>
            <summary type="text">வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில்&amp;nbsp;வரி பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில்&nbsp;வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம்(28.07.2026) இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>இவர் கடந்த மாதம் சபை உறுப்பினர்கள் அமர்விற்காக சென்று மண்டபத்தில் அமர்ந்திருந்த
போது அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியேறுமாறு கூறி
உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில்
நடந்து கொண்டுள்ளார்.</p><p>இதனையடுத்து சபை உறுப்பினர்களால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இன்றைய தினம் பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c1f7507-0f80-487a-baf9-7c4bf54b39ac/26-6a692a72645a6.webp' /></p><p>

இந்த நிலையிலேயே நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா பெருமதியான 4 சரீர பிணையில்
செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.</p><p>
இதேவேளை அவரை பிணை எடுப்பதற்காக 4 வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபை
உத்தியோகாத்தர்களும் கடமையிலிருந்தாவாறே நீதிமன்றிற்கு சென்றுள்ளாதாகவும்,
இதனான் அவர்கள் தமது கடமைகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சபை உறுப்பினர்கள்
விசனம் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:41:43+00:00</updated>
        </entry>
    </feed>
