<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-14T12:42:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில் நோய்த் தடுப்பு சிகிச்சை விடுதி திறந்துவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inauguration-hostel-at-tellippalai-hospital-jaffna-1784030749"></link>
            <id>https://tamilwin.com/article/inauguration-hostel-at-tellippalai-hospital-jaffna-1784030749</id>
            <summary type="text">யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில்
&quot;அரவணன்&quot;
நோய்த்தடுப்பு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதில் பிரதம விருந்தினராக
இலங்கைக்கான அவுஸ்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில்
"அரவணன்"
நோய்த்தடுப்பு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் பிரதம விருந்தினராக
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
மேத்யூ டக்வொர்த் கலந்து கொண்டு விடுதியினை திறந்து வைத்துள்ளார்.
</p><p></p><h2>முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதி</h2><p>கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்.மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா, அவுஸ்திரேலியா பாலம் அமைப்பின்
பணிபபாளர்களான பிரணவன், வைத்தியர்கள், ஊழியர்கள், பொது மக்கள்
கலந்து கொண்டனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c2bc26d-dcc3-4bbb-8281-8425f70ba0ee/26-6a5629682329b.webp' /></p><p>
அவுஸ்திரேலியாவின், மனிதநேயத்திற்கான பாலம் (bridge to humunity )எனும்
அமைப்பின் ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர் 150,000செலவில்( 03 கோடி )
முதற்கட்டமாக அமைக்கப்பட்ட இந்த விடுதி நோயாளர்கள் இறப்பிற்கு முன் தமது
இறுதிக்காலத்தினை மருத்துவ உதவியுடன் கழிப்பதற்காக இது&nbsp;ிறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், மருத்துவர்களின்
பரிந்துரையுடன் யாழ்.மாவட்டத்தின் எங்குள்ளவர்களும் இவ்வசதியை
பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T12:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலா வைரஸ் பரவல் அதிகரிப்பு - போராட்டத்தில் குதித்த சுகாதாரப் பணியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-virus-outbreak-increases-1784031843"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-virus-outbreak-increases-1784031843</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும்
நிலையில், அங்குள்ள எபோலா சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர்கள் சுகாதாரப் பணிப்பாளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும்
நிலையில், அங்குள்ள எபோலா சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர்கள் சுகாதாரப் பணிப்பாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
இதன்போது போராட்டக்காரர்கள், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல மாத சம்பள மிகுதியை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p> </p><h2> 

சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம்</h2><p>
அத்துடன், தங்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் அவர்கள் இந்த
வேலைநிறுத்தத்தைக் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18daa61b-91ad-4e88-a3bf-fbc70b2465f2/26-6a562a9f930ba.webp' /></p><p> 

இவர்களில் சிலர், தங்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளமே வழங்கப்படவில்லை என்றும் விசனம் தெரிவித்துள்ளனர். </p><p> 

எபோலா போன்ற கொடிய நோய் பரவி வரும் நிலையில், முன்நின்று
பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொங்கோவில் மேற்கொண்டுள்ள இந்த
வேலைநிறுத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண் - விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-lady-dead-boy-friend-arrested-1784001849"></link>
            <id>https://tamilwin.com/article/young-lady-dead-boy-friend-arrested-1784001849</id>
            <summary type="text">பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் நதுனி சஹஷ்ரி என்ற இளம்பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>உயிரிழந்த பெண் அந்த வீட்டில், திருமணம் செய்து கொள்ளாமல் 27 வயதுடைய இளைஞர் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் உதவியாளராகப் பணியாற்றிய இளைஞன், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p><p>
</p><h2><b> 
இளம் பெண்&nbsp;படுகொலை </b></h2><p>சம்பவம் நடந்த இரவு, தான் பணிபுரிந்த இடத்திலிருந்து சுமார் நான்கரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3162d0a6-5ba6-4102-a2dc-e0d4034a7fe7/26-6a55bd477b9d2.webp' /></p><p>இரவு 11.15 மணியளவில் பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>இதன்போது தங்கை மற்றும் தாயாரையும் மிகவும் மோசமான முறையால் திட்டியதாலும் ஏற்பட்ட கடும் கோபத்தில், கத்தியால் அவர் நதுனியின் நெஞ்சில் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொலையின் பின்னர் தானும் உயிரை மாய்த்துக் முயன்று தோல்வியடைந்ததால், வீட்டில் இருந்த திரவத்தை அருந்தியுள்ளார்.</p><p> பின்னர் ஆடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மொரட்டுவ ரயில் நிலையத்திற்கு சென்ற சந்தேக நபர், கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ரயிலின் முன்னால் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
</p><p> 
இதில் அவரது வலது கால் மற்றும் விலா எலும்புகள் உடைந்து பலத்த காயமடைந்தார். பொதுமக்களால் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். </p><p>

2 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் தேசிய வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்தனர். மாளிகாகந்த நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரைப் பார்வையிட்டார். </p><p>அவர் தற்போது கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
</p><h3><b>
பணம் பறிக்கும் மோசடி</b></h3><p>இதேவேளை, நதுனியும் அவரது தாயாரும் நீண்டகாலமாக இளைஞர்களை காதலிப்பதாக நடித்து, பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9710f4b-316a-42c6-8070-d4b33a8678fc/26-6a55bd482f5d6.webp' /></p><p>இந்தச் சம்பவம் குறித்து அறிந்த வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர், இந்தத் தாயும் மகளும் சேர்ந்து தம்மிடம் 15 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளார். </p><p>நதுனி இதற்கு முன்னர் விமானி ஒருவருடனும் நிச்சயதார்த்தம் செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபருடன் வசிக்கும்போதே, நதுனி மற்றொரு சமையல் கலைஞருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.</p><p> அவரிடமிருந்தும் சுமார் 10 லட்சம் ரூபாவை தாய் மற்றும் மகள் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். நதுனியின் தாயார், மகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒரு பாசமான தாயாக நடித்து, இளைஞர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
</p><p>
தாயின் தவறான வழிகாட்டலால் உயிரிழந்த நதுனியின் சடலத்தை அவரது தாயாரே பொறுப்பேற்றுக்கொண்டார். சந்தேக நபரான இளைஞர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/GkR_mqT3TJA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:42:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு - அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-200-people-given-statements-1784026309"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-200-people-given-statements-1784026309</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கைதிகள், சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கைதிகள், சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய(14.07.2026) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>கொடூரமான தாக்குதல்களின் பின்னணி</h2><p>இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய விசேட விசாரணைக்குழுவும், 7 தனித்துவமான விசேட விசாரணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a92bd4-6c5e-474a-b90c-64b597358c52/26-6a561af0423d2.webp' /></p><p>
வன்முறையில் ஈடுபட்டவர்களால் சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்ட போதிலும், அவற்றின் DVR இயந்திரங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

சிறைசாலை அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட கைதிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் உள்ளக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கியவர்களை கண்டறிந்து மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T11:18:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசை கவிழ்க்க திட்டம் - எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-plan-to-overthrow-the-anura-government-1784026517"></link>
            <id>https://tamilwin.com/article/a-plan-to-overthrow-the-anura-government-1784026517</id>
            <summary type="text">எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை
அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.

யா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை
அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட
கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரிடம், தமிழ் முஸ்லீம் கட்சிகளின்
புதிய கூட்டு தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எதிர்க்கட்சிகளின் கூட்டணி</h2><p>
</p><p>


மேலும் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி என்பது, அது வெறும்
கூட்டு சாம்பாராக மாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இடமில்லை என்பது
மக்களுக்கு தெரிந்த விடயம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSlAKwRzAgY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இந்தக் கூட்டணி இந்த நாட்டில் இலஞ்சத்தை ஒழிப்பதற்காக, மோசடிகளை ஒழிப்பதற்காக திருடர்களைப் பிடிப்பதற்காக, இதுபோன்ற நல்ல வேலைகளைச் செய்வதற்கான கூட்டணியா? அல்லது
திருடர்களைப் பாதுகாப்பதற்கும், வஞ்சகர்களைப் பாதுகாப்பதற்கும், ஊழல்
மோசடிகளை செய்பவர்களை பாதுகாப்பதற்கான கூட்டணியா என்பது எல்லோருக்கும்
நன்றாகத் தெரியும்.</p><h2>அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு</h2><p>இந்தக் கூட்டணியில் இருக்கின்றவர்களைப் பார்க்கின்ற பொழுது கடந்த காலங்கள்
நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு இன்றைக்குப் பிணையில் இருக்கின்ற
நபர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1534933-54a0-46f5-9cba-90e34b1c7a54/26-6a5618966ee29.webp' /></p><p>

அவ்வாறு பிணையில் இருக்கிறவர்களுக்கு நாளைக்கு கம்பி எண்ணுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும், அதனால், சிறைக்குச் செல்வதற்கு முதல்எதையாவது செய்து இந்த அரசாங்கத்தை வீழ்த்தலாமா, அல்லது அரசாங்கத்தை மாற்றலாமா என்கிற முயற்சியில் ஈடுபடுகின்ற ஒரு போக்காகவே இதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p>
எந்த வகையிலும் இவ்வாறான கூட்டணி அல்ல, இதனுடைய அப்பனால் அமைக்கப்படுகின்ற
கூட்டணியாலும், தேசிய மக்கள் சக்தியை அசைக்க முடியாது.

ஏனென்றால், இன்றும் அவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றோம். மக்களுடைய
செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5006117-89c7-46b6-afe2-29d8d5851fc5/26-6a561895bf862.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தொடர்பான கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-implementing-the-national-program-1784024649"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-implementing-the-national-program-1784024649</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்களைப் புனரமைப்புச் செய்யும் வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தேசிய வேலைத்திட்டத்தை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்களைப் புனரமைப்புச் செய்யும் வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
</p><p>
குறித்த கலந்துரையாடல் இன்று (14-07-2026) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்</h2><p> </p><p>

வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பத்துக் குளங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.</p><p>

இதில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
</p><p>
அத்துடன் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030இற்குள் சுற்றுலாப் பயணிகளுக்கான செலவினத்தை அதிகரிக்க முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/higher-tourist-spending-by-2030-1784020086"></link>
            <id>https://tamilwin.com/article/higher-tourist-spending-by-2030-1784020086</id>
            <summary type="text">பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தை கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தை கணிசமாக அதிகரிப்பதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
 

களுத்துறை மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் சுற்றுலாத் தொழிலை வலுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதி அமைச்சர் ரணசிங்க, நாட்டில் தங்கியிருக்கும் போது பார்வையாளர்கள் செலவிடும் தொகையை அதிகரிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகளின் செலவினங்கள்&nbsp;</h2><p>

 

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் 171 அமெரிக்க டொலராகப் பதிவான நிலையில், தற்போது ஒரு சராசரி சுற்றுலாப் பயணி சுமார் 148 அமெரிக்க டொலரைச் செலவிடுகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d0e3dfc-7953-4ad2-870d-9691a3bdb26a/26-6a560c2c6f5be.webp' /></p><p>கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் நடத்தை மற்றும் செலவின முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஓர் ஆய்வை நடத்தியதாக பிரதி அமைச்சர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
 

சுற்றுலாப் பயணிகளின் செலவினங்களை அதிகரிப்பதற்கு, ஒட்டுமொத்த வருகையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதே முக்கியமானது என்றும், அந்த இலக்கை அடைவதற்குத் திட்டமிட்ட மற்றும் முறையான அணுகுமுறை தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hYAaL4xyFvE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-14T10:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞருக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-high-court-man-wattala-to-life-imprisonment-1784019209"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-high-court-man-wattala-to-life-imprisonment-1784019209</id>
            <summary type="text">5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>இந்த வழக்கு கடந்த (01.07.2026) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த வழக்கின் அனைத்து பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருந்தார்.</p><p></p><h2>ஆயுள் தண்டனை</h2><p>
</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான
'ஐஸ்' போதைப் பொருளைத் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை
விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட நபர் வத்தளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb73e11-64b4-4493-8636-2e2257d15c02/26-6a55ff2ae9bdf.webp' /></p><p>
</p><p>
குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம் பெற்று வந்த நிலையில்,
குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்ட வாதிகளான தேவ
விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன்
சமர்ப்பித்திருந்தனர்.
</p><p>இதேவேளை,&nbsp; அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின்
மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான விசாரணை : ஜூலை 20இல் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabraal-bid-halt-greek-bond-corruption-case-fails-1784016655"></link>
            <id>https://tamilwin.com/article/cabraal-bid-halt-greek-bond-corruption-case-fails-1784016655</id>
            <summary type="text">மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதிவாதி தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம்</h2><p>
</p><p>
2012ஆம் ஆண்டில் கிரீஸ் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த போது, அந்த நாட்டுப் பிணைமுறிவுகளில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 184 கோடி ரூபாவுக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டிருந்தது. </p><p>இதற்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சட்ட வரம்புக்குட்பட்ட அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தரப்பினரால் இந்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a799fba7-84b0-4530-9c03-d6d9d78e53b7/26-6a55f0f6223a6.webp' /></p><p>நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய தலைமையில், உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக சி. ராகல ஆகியோர் அடங்கிய அமர்வே இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. </p><p>

தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த HCB 271/24 மற்றும் HCB 33/24 ஆகிய வழக்குகளில் உள்ள குற்றச்சாட்டுக்களும், இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளும் சமமானவை என பிரதிவாதி தரப்பு மன்றில் தெரிவித்ததுடன், அந்த வழக்கு நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கைத் தொடர்வது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

இதன்போது பதிலளித்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, அதன் பணிப்பாளர் நாயகத்தினால் 2018ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளுக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரினால் நிர்வாகக் கட்டமைப்புக்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்திருந்தனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்ப்பனங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு , இந்தச் சட்டத்தின் மூலம் தற்போதுள்ள மூலச் சட்டத்தின்கீழ் எந்தவித உரிமைகளும் பறிக்கப்படவில்லை என்றும், இது நடைமுறைச் சட்டமே எனவும் தெரிவித்திருந்தது.</p><p> 

மேலும், மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வினால் வழங்கப்படும் தீர்ப்பினால், பாதிக்கப்படும் தரப்பு அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் உரிமை சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7ebc1cf-caff-4132-b4aa-11553f494def/26-6a55f0f6c58ab.webp' /></p><p>


இதனடிப்படையில், பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளில் எந்தவித அடிப்படையும் இல்லை எனக் கூறி அதனை நிராகரித்த நீதிமன்றம், வழக்கின் முழுமையான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>
2011 மார்ச் 11 முதல் 2012 நவம்பர் 19 வரையான காலப்பகுதிக்குள், கிரீஸின் பிணைமுறிவுகளில் அரசாங்கப் பணத்தை முதலீடு செய்ததன் மூலம், அரசிற்கு 184 கோடிக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:50:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்க்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - காரணத்தை வெளிப்படுத்திய முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1784016248"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1784016248</id>
            <summary type="text">நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இவ்வளவு தூரம் சென்றதற்குக் காரணம், கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இவ்வளவு தூரம் சென்றதற்குக் காரணம், கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க கூறியுள்ளார்.&nbsp;</p><p>

நீர்க்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளக பிரச்சினை காரணமாக இரண்டு கைதிகள் இறந்தனர். அது அதிகாரிகள் வரை பரவவில்லை. மறுநாள் காலையில், எங்கள் அதிகாரிகள் குழு ஒன்று ஆயுதமின்றி அந்தச் சிறைக்குள் சென்றது.</p><h2>கைதிகள் மீதான நம்பிக்கை</h2><p>இங்குள்ள மிகப்பெரிய மற்றும் பிரதான பிரச்சினை, கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே. எனது சிறை வாழ்க்கை கிட்டத்தட்ட 38 ஆண்டுகள். நான் எந்த நேரத்திலும் ஒரு கைதியை நம்பியதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c73a7fda-7350-4c52-9025-35ec1cbb13d8/26-6a5604c92e530.webp' /></p><p>அதனால்தான் நான் நினைக்கிறேன்... நமது அதிகாரிகள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டார்கள். அவர்கள் கைதிகளை நம்பி சிறைக்குள் சென்றார்கள்.</p><p>43,000 அதிகாரிகள் இருக்கும் இடத்தில், சுமார் 5500 அதிகாரிகள் கொண்ட ஒரு குழு சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது என்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:44:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்புச் சிரமதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-dengue-eradication-shramadhana-1784011824"></link>
            <id>https://tamilwin.com/article/special-dengue-eradication-shramadhana-1784011824</id>
            <summary type="text">சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தை மையப்படுத்தி விசேட டெங்கு
ஒழிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தை மையப்படுத்தி விசேட டெங்கு
ஒழிப்புச் சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அண்மைக்காலமாக நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் டெங்கு பரவல் அச்சுறுத்தலைக்
கருத்திற் கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் இந்தச் சிரமதான நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>டெங்கு ஒழிப்புச் சிரமதானம்</h2><p> இதன்போது பாடசாலையின் உட்புற மற்றும் வெளிப்புறச்
சூழல்கள், நுளம்புகள் பெருக்கமடையாத வகையில் முழுமையாகத்
தூய்மைப்படுத்தப்பட்டு துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d62a806a-a108-4024-be08-f104241c2d38/26-6a55de74befe4.webp' /></p><p>இந்த விசேட சமூகப் பணியானது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி. பரமேஸ்வரனின்
நேரடி வழிகாட்டலில், பாடசாலை அதிபர் ரி.கே.எம். சிராஜ்&nbsp; தலைமையில்
நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன் போது வீரமுனை இராணுவ முகாம் வீரர்களின் ஒத்துழைப்புடன், பாடசாலை
ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து அர்ப்பணிப்புடன் இந்தப் பணியை
முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p>60 டெங்கு அதி அபாய வலயங்களை மையப்படுத்தி இரண்டாவது நாளாக இன்றும் விசேட
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் பேருந்து
நிலையம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>நாட்டிலுள்ள 60 டெங்கு அதி அபாய வலயங்களை மையப்படுத்தி தேசிய டெங்கு ஒழிப்புப்
பிரிவினால் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி&nbsp;</h2><p> இதன் தொடர்சியாக இன்று காலை கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் பேருந்து நிலையம்
ஆகியவற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த சிரமதானப் பணியில் கிளிநொச்சி மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை
இராணுவத்தினர், இலங்கை பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து
வைத்தியசாலை வளாகத்திலுள்ள டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை
சுத்தப்படுத்தி, நீர் தேங்கும் பொருட்களை அகற்றி, சுற்றுப்புறச் சூழலை
சுகாதாரமானதாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98438611-05f5-4c27-b1fb-e78f045ed08d/26-6a55e01c5ad95.webp' /></p><p>

நாடளவில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்
முன்னெடுக்கப்படும் இந்த விசேட வேலைத்திட்டத்தின் மூலம், பொதுமக்களும் தங்களது
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள்
ஒதுக்கி டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றுமாறு சுகாதார அதிகாரிகள்
வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் பகுதிகளை
மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>மேலதிக தகவல் - சுடரோன்</i></b></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/municipal-worker-jailed-over-death-threats-1784010989"></link>
            <id>https://tamilwin.com/article/municipal-worker-jailed-over-death-threats-1784010989</id>
            <summary type="text">கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை&nbsp;சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லுமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித்
உத்தரவிட்டுள்ளார்.</p><p>குறித்த சந்தேகநபரை 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்ற வேலை நேரத்திற்குள் உரிய முறையில் பிணை
எடுக்கத் தவறியமையினாலேயே அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p></p><h2>உயிர் அச்சுறுத்தல்</h2><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்குள் வைத்து, அதன்
ஆணையாளர் என்.எம். நெளபீஸை அதே சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடமை
நேரத்தில் அச்சுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் தொடர்பாக ஆணையாளரினால் கல்முனை
தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b6fb37c-c173-4948-8c13-871f2fbd9f4a/26-6a55daa8110d7.webp' /></p><p>

இதனையடுத்து பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபரான ஊழியர்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கானது கடந்த திங்கட்கிழமை (13) கல்முனை நீதிமன்ற நீதிவான்
கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற&nbsp;உத்தரவு</h2><p> </p><p>இதன்போது
நீதிமன்றில் முன்னிலையான இருதரப்புச் சமர்ப்பணங்களையும் நீதிவான் விரிவாக
ஆராய்ந்துள்ளார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bf7f25-07ba-47a0-892a-bab96b2b8c17/26-6a55daa8b6c3e.webp' /></p><p> </p><p>எனினும், நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை சந்தேகநபர் சார்பில்
பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராத காரணத்தினால், அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி
வரை ஒத்திவைப்பதாகவும் கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:26:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-s-case-postponed-1784018724"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-s-case-postponed-1784018724</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தனது தடுப்புக் காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்து மனு மீதான விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தனது தடுப்புக் காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்து மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்படி, குறித்த மனு மீதான மேலதிக பரிசீலணையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஊடாக,&nbsp; பயங்கரவாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து சுரேஷ் சலே இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f749a17f-5cd9-466b-83f8-3fb66d074f1c/26-6a55fa2638688.webp' /></p><p>இந்தநிலையில், குறித்த மனு மீதான விசாரணை இன்று(14.07.2026) எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p>இதன்போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன&nbsp; தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து, மனு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T08:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-carrying-drone-service-sri-lanka-1784015397"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-carrying-drone-service-sri-lanka-1784015397</id>
            <summary type="text">இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஆளில்லா விமானச் சேவையைச் சோதனை செய்வதற்கான திட்டங்களை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஆளில்லா விமானச் சேவையைச் சோதனை செய்வதற்கான திட்டங்களை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது.</p><p>சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல, இந்த முன்னெடுப்பு ஒரு முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என்றும் இது விமானப் போக்குவரத்தை நவீனமயமாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
</p><p></p><h2>ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன்</h2><p>
ஒவ்வொரு ட்ரோன் விமானமும் ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcabdadb-b585-4093-b1e2-c24442a52123/26-6a55f882b6d5d.webp' /></p><p> சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இதுபோன்ற திட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T08:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வயதில் உயிருக்கு போராடும் மகன்..! நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரியின் கடைசி ஆசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tlast-wish-of-officer-who-died-in-negombo-clash-1784018697"></link>
            <id>https://tamilwin.com/article/tlast-wish-of-officer-who-died-in-negombo-clash-1784018697</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழிந்த அதிகாரியொருவரின் கடைசி ஆசை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழிந்த அதிகாரியொருவரின் கடைசி ஆசை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ஒட்டுமொத்த இலங்கையையும் பதைபதைக்க வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> 

இதற்கமைய, நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 21 கைதிகளும் 8 பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p> 

அத்துடன், சிறைச்சாலையில் இருந்து 40 ஆயிரம் கைதிகள் வேறு வேறு இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். </p><p>

இதனை தொடர்ந்து, அம்பலந்தோட்டாவின் பாலகஹகொடெல்லா பகுதியில் வசித்து வந்த 39 வயதான சிறைக்காவலர் சந்திக லஷன் குணவர்தன, சம்பவம் நடந்து ஒரு வாரக் காலப்போராட்டத்திற்கு பின்னர் நேற்று(13.07.2026) இரவு உயிரிழந்துள்ளார்.</p><h2> 

அதிகாரியின் கடைசி ஆசை</h2><p>

குறித்த அதிகாரிக்கு 7 வயதில் மகன் ஒருவர் இருப்பதாகவும், அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c447ac15-df8a-4602-919f-5f2fc5ec57db/26-6a55f7b8d8811.webp' /></p><p> </p><p>

அந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற பெரும் பணம் தேவை என்பதால் உயிரிழந்த அதிகாரி சந்திக மகனின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்து பணம் தேடிக் கொண்டிருந்ததாக சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சந்திக, தனது இறுதி மூச்சை விடும்போதும் சிறுவனின் நினைவுகளில் இருந்தார் என்றும், தனது கடமைக்காக உயிரைத் தியாகம் செய்த ஒரு மாவீரனின் கடைசி விருப்பம், அவரின் குழந்தையைக் காப்பாற்றுவதே என்றும் கூறப்படுகிறது.</p><p> 

அத்துடன், சிறைச்சாலை மோதல் சம்பவத்தில், 100க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகளும் கைதிகளும் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4Xl22URQsuU" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T08:49:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவன் - சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/search-continues-second-day-for-student-in-lindula-1784010941"></link>
            <id>https://tamilwin.com/article/search-continues-second-day-for-student-in-lindula-1784010941</id>
            <summary type="text">புதிய இணைப்புகொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவன் இன்று(14.07.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவன் இன்று(14.07.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>நண்பர்களுடன் குளிக்க சென்று காணாமல் போன மாணவனை இரண்டாவது நாளாக இன்றும்(14.07.2026) தேடும் பணி முன்னெடுக்கபட்டுள்ளது.</p><p>லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10
மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச்
சென்றபோது காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p></p><h2>மாணவனைத் தேடும் பணி&nbsp;</h2><p>இதனை தொடர்ந்து
தீவிரமாகத் தேடியும் மாணவனின் உடலை நேற்று (13) கண்டறிய முடியவில்லை என்பதோடு, போதிய
வெளிச்சம் இல்லாததால் இரவு தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a949f9b7-3e7c-4653-acf5-7d399f8a26e5/26-6a55dc6386e04.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று திங்கட்கிழமை (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில்
நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி,
ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா
ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.</p><p>இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரே
மாணவன் மட்டும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில்
அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28947e8f-a283-4bcd-9df5-2fe644b6c190/26-6a55effb28eda.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு காணாமல் போன மாணவன்
லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மிளகுசேனை
தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த மாணவனைத் தேடும் பணிகளை லிந்துலை பொலிஸாரும், பிரதேச மக்களும்
இணைந்து இரண்டாவது நாளாக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b345786-0cdd-471d-8606-2b96c7419ac5/26-6a55dc64601c2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed3ce8c1-1d58-475a-8b16-cc2ad8b90a3e/26-6a55dc653c101.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290133af-000a-42e2-a0d4-14569c6db5b9/26-6a55fa927fb23.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27492843-2585-4ef0-aa91-80cb4474d240/26-6a55fa938cbbe.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T08:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் - தந்தையை கொடூரமாக படுகொலை செய்த மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-killed-mother-and-father-1784006787"></link>
            <id>https://tamilwin.com/article/son-killed-mother-and-father-1784006787</id>
            <summary type="text">எம்பிலிபிட்டிய, கிரவலவெல்கடுவ பகுதியில் மகனொருவர் தனது தாய் மற்றும் தந்தையை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குடும்பத்தினரிடையே ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிபிட்டிய, கிரவலவெல்கடுவ பகுதியில் மகனொருவர் தனது தாய் மற்றும் தந்தையை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது.</p><p> இந்த தகராறு முற்றிய நிலையிலேயே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><h2>மகனின் கொடூர செயல்&nbsp;</h2><p>

இந்தச் சம்பவத்தில் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da8a63a-5f25-430c-bc87-9f90e56312a4/26-6a55c9d2d9b1c.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த தம்பதியினரின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் குறித்து எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/R_x23yE9SEg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-14T08:06:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் தாய் - இலங்கையில் மகளுக்கு நேர்ந்த கொடுமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-girl-abused-by-grand-father-1784005778"></link>
            <id>https://tamilwin.com/article/school-girl-abused-by-grand-father-1784005778</id>
            <summary type="text">கம்பளையில் பாடசாலை மாணவி ஒருவர், உறவினரால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. 

12 வயது பாடசாலை மாணவி ஒருவரை வைத்தியர்கள் பரிசோதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளையில் பாடசாலை மாணவி ஒருவர், உறவினரால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. </p><p>

12 வயது பாடசாலை மாணவி ஒருவரை வைத்தியர்கள் பரிசோதித்த போது, சிறுமியின் தாத்தாவினால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

சிறுநீர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்கு சென்ற போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. </p><h2><b> 

தாத்தா கைது</b></h2><p>54 வயதான சந்தேக நபர் 5 பிள்ளைகளின் தந்தையாகும். பாதிக்கப்பட்ட சிறுமி, சந்தேக நபரின் வீட்டின் அருகில் வசிக்கும் அவரது மகன் ஒருவரின் மகள் என தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c2b1156-e199-475c-9111-96192fb2f6b7/26-6a55ed6c6875a.webp' /></p><p>வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பளை பொலிஸார், சந்தேக நபரான சிறுமியின் தாத்தாவை கைது செய்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர் கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 24 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><h3><b>

சிறுமி வாக்குமூலம்</b></h3><p>சிறுமியின் தாய் நான்கு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்காக சந்தேக நபரினால் தகாத செயற்பாட்டுக்கு சிறுமியை உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a50ee726-1af0-45de-bf39-3eba2695d753/26-6a55ed6d16c1d.webp' /></p><p>சில நாட்களுக்கு முன்னர் சிறுமிக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவர் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>

அங்கு வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி தகாத செயற்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p> 

மேலும் விசாரணை மேற்கொண்டதில், தனது தாத்தா நீண்ட காலமாக தன்னைத் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிறுமி நேற்று பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T08:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரையோரப் பகுதிகளில் கடல் சீற்றம் தீவிரம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-report-for-today-1784012310"></link>
            <id>https://tamilwin.com/article/weather-report-for-today-1784012310</id>
            <summary type="text">



மாத்தறை முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாகவும், சிலாவ் முதல் புத்தளம் வரையிலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>



மாத்தறை முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாகவும், சிலாவ் முதல் புத்தளம் வரையிலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் நிலவும் சீற்றம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவிப்பை இன்று(14.07.2026) வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> 

இதற்கமைய, மாத்தறை முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாகவும், சிலாவ் முதல் புத்தளம் வரையிலும், காங்கேசன்துறை வரை திருகோணமலை வழியாகவும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரித்து, அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/716f6d00-33f1-4853-bfc8-b76b9060fac4/26-6a55ec1d9678f.webp' /></p><p> </p><p>

எனவே, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும், இது சம்பந்தமாக வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எதிர்கால ஆலோசனைகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-14T07:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் நேரலையில் நிகழ்ந்த மரணம் - தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-live-death-of-man-police-investigation-1784013696"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-live-death-of-man-police-investigation-1784013696</id>
            <summary type="text">முகநூல் நேரலையின்போது உயிரிழந்த, கரன்தெனியவின் தல்கவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயது நபரின் மரணம் குறித்து கரன்தெனிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகநூல் நேரலையின்போது உயிரிழந்த, கரன்தெனியவின் தல்கவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயது நபரின் மரணம் குறித்து கரன்தெனிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
இறந்தவரான தினேஷ் விஜேவர்தன, பல ஆண்டுகளாக தென்கொரியாவில் பணியாற்றி, அண்மையில் இலங்கை திரும்பியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>119 என்ற அவசர உதவி எண் மூலம் </h2><p>

பொலிஸாரின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் ஜூலை 12 ஆம் திகதி இரவு நிகழ்ந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef0fcbe-cc0c-442e-9389-1971839f8fe6/26-6a55e8465ca0f.webp' /></p><p>நேரலை ஒளிபரப்பின் போது, ​​அவர் தவறான முடிவெடுப்பதற்கு முன்பு ஆரம்பத்தில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

119 என்ற அவசர உதவி எண் மூலம் முறைப்பாடு வந்ததையடுத்து விசாரணையைத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலதிக விசாரணைகளுக்காக சடலம் எல்பிட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/e6Q7mW9yqRA" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T07:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேன வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-for-investigation-into-airbus-contract-1784013355"></link>
            <id>https://tamilwin.com/article/order-for-investigation-into-airbus-contract-1784013355</id>
            <summary type="text">

கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம, ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை வழக்கை அக்டோபர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம, ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை வழக்கை அக்டோபர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த வழக்கு இன்று(14.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையொன்றும் வரும் நாட்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2> 

சி.பி.ஏ. கபில சந்திரசேன இறப்பு</h2><p>

இந்த வழக்கில் சந்தேக நபராக இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.பி.ஏ. கபில சந்திரசேன தற்போது உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e9ac07-0d4d-454d-a4fc-82bd12b989b6/26-6a55e7e6026fb.webp' /></p><p> 

அத்துடன், வழக்கில் உள்ள உண்மைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்டத்தரணி உதர முகந்திரம்,</p><p> 

“ இந்த விழாவுடன் தொடர்புடைய நிமல் பெரேரா சார்பாக தாம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் தெரிவித்துள்ளார்.

அப்போதைய நீதிபதி, இலஞ்ச ஆணைக்குழுவால் அந்த நபர் இன்னும் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை என்றும் சம்பவத்தில் சந்தேக நபராகக் கருதப்படும் பிரியங்கா நயோமலி சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஹர்ஷனா மாதராச்சி, அவர் வெளிநாட்டில் வசிப்பதால், அவருக்கு எதிராக சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.”</p><p>


சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் ஏற்பட்டுள்ள மேலதிக முன்னேற்றம் குறித்து அக்டோபர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், வழக்கை திகதியிட்டு ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-14T07:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-about-fake-text-messages-1784011183"></link>
            <id>https://tamilwin.com/article/warning-about-fake-text-messages-1784011183</id>
            <summary type="text">பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்ற தோரணையில் &#039;அபராதப் பணத்தைச் செலுத்துமாறு&#039; கையடக்க தொலைபேசிக்கு ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால், அது க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்ற தோரணையில் 'அபராதப் பணத்தைச் செலுத்துமாறு' கையடக்க தொலைபேசிக்கு ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். </p><p>

பொலிஸாரால் ஒருபோதும் இவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.J.சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>போலி குறுஞ்செய்திகள்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நீங்கள் செய்த சில போக்குவரத்து விதிமீறல்களுக்காக, ஒரு வாரத்திற்குள் உடனடியாக வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பு ஊடாகச் சென்று உரிய அபராதப் பணத்தைச் செலுத்துமாறு, பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்று உங்களது தொலைபேசிக்கு வாட்ஸ்அப் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் போலி குறுஞ்செய்திகள் வந்திருக்கலாம்.</p><p>
ஆனால், போக்குவரத்து பிரிவினால் அத்தகைய குறுஞ்செய்திகள் எதுவும் அனுப்பப்படவில்லை. இவை முற்றிலும் போலியான செய்திகளாகும். இவ்வாறான இணையதள இணைப்புகளுக்குள் சென்று உங்களது தனிப்பட்ட விபரங்கள் அல்லது வங்கி விபரங்களை வழங்க வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf1e218b-4c7b-4826-af7c-a2c69c9671d1/26-6a55e5bbdf879.webp' /></p><p> </p><p>

அந்த இணைப்புகளைத் திறக்கவும் வேண்டாம். இவ்வாறான போலி குறுஞ்செய்திகள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள். பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் இதுபோன்ற எந்தவொரு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T07:31:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dollar-rate-today-in-sri-lanka-1784010494"></link>
            <id>https://tamilwin.com/article/dollar-rate-today-in-sri-lanka-1784010494</id>
            <summary type="text">இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (14.07....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (14.07.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p> 

அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.92 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நேற்றைய நிலவரம்</h2><p> </p><p>

இதேவேளை நேற்றைய தினம் (13) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340.48 ரூபாவாக காணப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/936c766a-a5e5-4925-9e3f-c6e906ad58ab/26-6a55e15c3b694.webp' /></p><p> </p><p>

வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T07:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கைகளுக்கு மாத்தளை விமான நிலையம்- அரசாங்கம் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/matale-airport-in-hands-of-foreign-investors-1784012024"></link>
            <id>https://tamilwin.com/article/matale-airport-in-hands-of-foreign-investors-1784012024</id>
            <summary type="text">மாத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் வளங்களை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 19 முதலீட்டு முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் வளங்களை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 19 முதலீட்டு முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

மாத்தளை விமான நிலையத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட விருப்பம் தெரிவிக்கும் கோரிக்கை நடைமுறையின் கீழ், இந்த முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
</p><p>
இதன்படி, இவற்றில் மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 9ஆம் திகதி துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் முன்மொழிவுகள் திறக்கப்பட்டுள்ளன. </p><p>

விமான மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த EOI நடைமுறையின் மூலம், மாத்தளை விமான நிலையத்தில் சாத்தியமான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/426cfb4a-9a3c-4415-b840-d1d35e852f97/26-6a55dd73a6ac1.webp' /></p><p>

அமைச்சின் தகவலின்படி, கிடைக்கப்பெற்ற முதலீட்டு முன்மொழிவுகள் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.</p><h2>


அனுபவம் கொண்ட முதலீட்டாளர்கள் தேவை</h2><p>

விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் சிவில் விமான சேவைகள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

விமான நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தக மற்றும் சேவை நடவடிக்கைகள் இதில் உள்ளடங்கும்.</p><p>இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கான தகுதிகள், அனுபவம் மற்றும் திறன்களை முதலீட்டாளர்கள் நிரூபிக்க வேண்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0527f305-db74-424b-b182-5f8a34b6db8b/26-6a55dd3bce161.webp' />&nbsp; &nbsp;</p><p>
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட திட்டக் குழு, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, சாத்தியமான முதலீட்டாளர்களை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
</p><p>
தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்கள், அடுத்தக்கட்ட கொள்முதல் செயல்முறையான முன்மொழிவுகளுக்கான கோரிக்கை நடைமுறையில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.</p><p>

முழுமையான முன்மொழிவுகளைத் தயாரித்து சமர்ப்பிக்க முதலீட்டாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கும் வகையில், EOI விண்ணப்ப காலக்கெடு ஜூலை 9ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp; </p><p>&nbsp; &nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T06:55:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மற்றும் பிள்ளையானால் இலங்கைக்கு மீண்டும் ஆபத்து! சிக்கலாக மாறும் தொடர் தடுப்புக் காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salley-and-pillayan-new-fears-1784010210"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salley-and-pillayan-new-fears-1784010210</id>
            <summary type="text">அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது இலங்கைக்கு பொருளாதார ரீதியாக&nbsp; ஆபத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன&nbsp; தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>சிவனேசத்துரை சந்திரகாந்தன்&nbsp; மற்றும் சுரேஷ் சலே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் GSP+ வர்த்தக சலுகைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.</p><p></p><h2>இலங்கை தகுதியானதா&nbsp;</h2><p>இலங்கையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனி நபர்கள் தடுத்து வைக்கப்படும் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகின்றது.&nbsp;&nbsp;</p><p>இத்தகைய விவகாரங்களை மனித உரிமைகள் என்ற கண்ணோட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானிக்கின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a312533f-8993-4e0f-9327-a39834427959/26-6a55da0c17bdc.webp' /></p><p>இந்த நிலையில், பிள்ளையான் மற்றும் சலே ஆகியோரின் தொடர்ச்சியான தடுப்புக் காவலும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம்&nbsp; மற்றும் மரணங்களும், GSP+&nbsp; சலுகைக்கு இலங்கை தகுதியானதா என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்பீட்டை பாதிக்கக் கூடும்.&nbsp;</p><p>இந்த சலுகையை இழப்பது, ஐரோப்பிய சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் மீது, 5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் வரிகளை விதிக்க வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ueieiM6x-iQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T06:53:49+00:00</updated>
        </entry>
    </feed>
