<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-11T11:29:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகளவானோர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/84-percent-of-people-in-donate-their-eyes-1783768009"></link>
            <id>https://tamilwin.com/article/84-percent-of-people-in-donate-their-eyes-1783768009</id>
            <summary type="text">இலங்கை மக்களில் 84 சதவீதம் பேர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தேசிய கண் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்களில் 84 சதவீதம் பேர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.</p><p>

தேசிய கண் வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில், நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 17,000 கண் வில்லைகளை 12,000 நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளமை குறித்தும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
வெளிநாடுகளின் கோரிக்கைகளையும் கணக்கில் கொண்டு, 4,000 முதல் 5,000 வரையிலான கண் வில்லைகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b68c1bcf-49fa-4ee7-9489-1d43899e3fe3/26-6a522532535d5.webp' /></p><p>
தேசிய கண் வங்கி ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகச் செயல்படுகிறது. மேலும், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிற ஆசிய மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து கண் மாற்று உறுப்புகளுக்கு அதிக கோரிக்கை உள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்தில் நடந்த முறைகேடு: பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irregularities-on-the-kilinochchi-vavuniya-route-1783768068"></link>
            <id>https://tamilwin.com/article/irregularities-on-the-kilinochchi-vavuniya-route-1783768068</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளான கிளிநொச்சி - வவுனியா
வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான
நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளான கிளிநொச்சி - வவுனியா
வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த பேருந்து சேவைகள் தொடர்பிலும், பயணிகளுடனான தகாத நடத்தைகள்
தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், அதிகார சபை இது குறித்து எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த பேருந்துக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>

சாரதி மீது சட்ட நடவடிக்கை</h2><p>

கடந்த 30.06.2026 அன்று குறித்த பேருந்தின் சேவையின்போது பயணிகளுக்கு ஏற்பட்ட
அசௌகரியங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசேட
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59c51d06-120c-4608-b3e7-54f82733cc2e/26-6a5224b6d498d.webp' /></p><p>
</p><p>
இதன்போது முன்வைக்கப்பட்ட குற்றங்கள், 

அனுமதிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு ஏற்பச் சேவையில் ஈடுபடாமை. அனுமதிக்கப்பட்ட
கட்டணத்தை விடப் பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டமை. வழித்தட அனுமதிப்
பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பாதையைத் தவிர்த்து வேறு பாதையில் சேவையில்
ஈடுபட்டமை. பேருந்தில் பயணித்த பயணிகளுடன் முரண்படும் வகையில் தகாத முறையில்
நடந்துகொண்டமை.</p><p> 

மேற்குறிப்பிட்ட குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து,
உரிய தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தினத்தில் பணியாற்றிய சாரதி
மற்றும் நடத்துனருக்கு 7 நாட்களுக்குப் பணித்தடையும் (வேலை நிறுத்தம்)
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில்
01.07.2026 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தப் பேருந்துக்கான
கடுமையான நிபந்தனைகளுடனான புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><h2>


விதிமுறைகள்</h2><p>

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் காலை 9.20 மணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்
தரித்து நின்று, ஓட்டுதல் குறிப்புத் தாளைப் பதிவுசெய்து காலை 9.50க்குப்
பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட வேண்டும்.</p><p>

இதேவேளை, காலை 9.55க்குக் கிளிநொச்சி
பொது மருத்துவமனையிலுள்ள நேரக்கணிப்பாளர் நிலையத்தைக் கடந்து, காலை 11.30க்கு
வவுனியா பேருந்து நிலையத்தைச் சென்றடைய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40fe0578-fbaa-4567-8edd-49655582fcb5/26-6a5224b7ad4c8.webp' /></p><p> </p><p>

வவுனியாவிலிருந்து
திரும்பும் பயணத்தின்போது, பிற்பகல் 4.15க்கு வவுனியா பேருந்து நிலையத்தில்
ஒதுக்கப்பட்ட இடத்தில் தரித்து நின்று ஓட்டுதல் தாளைப் பதிவுசெய்து,
4.45க்குப் புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு வெளித்தரிப்பிடத்திலிருந்து
கிளிநொச்சி நோக்கிப் பயணிக்க வேண்டும்.
</p><p>
 மேலும், பேருந்தில் பணியாற்றும்
சாரதி, நடத்துனர்களின் பெயர் விவரங்கள் வழித்தட அனுமதிப் பத்திரத்தில்
கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் தமது தொழில்
அடையாள அட்டையை அணிந்திருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><h2>


பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p>
பொதுப் போக்குவரத்தில் பணியாற்றும் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும்
வகையிலும், அதிகார சபையின் விதிகளுக்கு அமைவாகவும் சுய ஒழுக்கத்துடன் பணியாற்ற
வேண்டும் எனக் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81bbfc59-0b2f-4101-8867-d964cb25da16/26-6a5224b85c42c.webp' /></p><p>
</p><p>
பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப்
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ, அல்லது நடத்துநர்கள் மற்றும்
சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எவ்வித தயக்கமுமின்றி
முறைப்பாடு செய்ய முடியும். </p><p>

இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் தகுந்த
ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற
வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை எதிரொலி: 600 கைதிகள் மாற்றம் - விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-committee-appointed-to-assess-1783766289"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-committee-appointed-to-assess-1783766289</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலின்போது, சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலின்போது, சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மோதல் சம்பவம் தொடர்பில் தனியான விசாரணையை முன்னெடுப்பதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>சிறைச்சாலை மோதல்</h2><p>
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 600-க்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11fec91e-873f-4d1a-aab1-c9bdb5778525/26-6a522081444be.webp' /></p><p>

மேலும், இந்த மோதலில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உடனடியாக பதவி உயர்வும், அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடும் வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
</p><p>
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T10:52:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜுன் மாதத்தில் அந்நியச் செலாவணி வரத்து குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/decline-in-foreign-exchange-inflows-in-june-1783762737"></link>
            <id>https://tamilwin.com/article/decline-in-foreign-exchange-inflows-in-june-1783762737</id>
            <summary type="text">கடந்த ஜுன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கான அந்நியச் செலாவணி வரத்து பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஜுன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கான அந்நியச் செலாவணி வரத்து பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய மொத்த அந்நியச் செலாவணி 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று தெரியவந்துள்ளது.</p><p>மத்திய வங்கியின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 847 மில்லியன் டொலர் கிடைத்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது 152 மில்லியன் டொலர்களால் குறைந்துள்ளது.</p><p></p><h2>வீழ்ச்சி</h2><p>
</p><p>
2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த மொத்த வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 23.2 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31cf1266-195b-471e-b07f-bacd751a5f50/26-6a52104193a98.webp' /></p><p>

மேலும், 2026 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 151.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.</p><p>

2025 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானத்தை 169.5 மில்லியன் டொலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானத்திலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T10:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரகாலக் கடன் மோசடி - தனிப்பட்ட விவரங்களை திருடி மிரட்டும் கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-loan-scam-1783764550"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-loan-scam-1783764550</id>
            <summary type="text">அவசரகாலக் கடன்களைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளில் வழங்கப்படும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசரகாலக் கடன்களைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளில் வழங்கப்படும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் கணினி அவசரகால உதவி மன்றம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. </p><p>

மேலும், எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுவிட்டதாக நீங்கள் உணர்ந்தால், 101 என்ற எண்ணிற்கு அழைத்து, சம்பவம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அவசரகாலக் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறும் செய்திகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.</p><p></p><h2>

கடன் தருவதாக மோசடி</h2><p>
சில நிறுவனங்கள் ரூ. 5,000 முதல் ரூ. 1,50,000 வரையிலான அவசரகாலக் கடன்களை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அதிலும் சில நிறுவனங்கள் ரூ. 5,00,000 வரை கடன்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். </p><p>

"இந்தக் கடன்களைப் பெற எந்த ஆவணங்களும் தேவையில்லை. சாட்சியாளர் தேவையில்லை." என நிபந்தனைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

இது போன்ற மோசடி நிறுவனங்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளைத் திருட முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a5e84cb-c0e1-4886-a2f2-ad296b27ce76/26-6a5216d1d07d9.webp' /></p><p> 

கடன் பெற எந்த ஆவணங்களும் தேவையில்லை என்றபோதிலும், கடன் விண்ணப்பதாரரை அந்த நிறுவனங்கள் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்து தகவல்களை உள்ளிடுமாறு கேட்டு, அவர்கள் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
</p><p>
அவர்கள் அந்த இணைப்பைக் கிளிக் செய்தவுடன், மோசடிக்காரர்களின் இலக்காகி விடுகிறார்கள். அவர்கள் அந்த இணைப்பு வழியாக ஒரு ரிமோட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல் (RAT) என்ற கருவியை அனுப்புகிறார்கள்.
</p><p>
அந்த RAT மொபைல் ஃபோனுக்குள் நுழைந்தவுடன், அது ஃபோனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறது.
</p><h2>

தனிப்பட்ட விவரங்களை திருடும் கும்பல்</h2><p>
இந்த நிலையில், இதன் மூலம் அவர்களால் மொபைல் ஃபோனில் உள்ள புகைப்படங்கள், லேபிள்கள், நண்பர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் உட்பட அனைத்துத் தகவல்களையும் அணுக முடிகிறது.
</p><p>
சில சமயங்களில், ஒரு .apk செயலி நுழைந்தால், நிலைமை இன்னும் மோசமாகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27fb4432-6ff5-4335-ad63-4e49a95213df/26-6a5216d2ab5c0.webp' /></p><p>
</p><p>
கடன் வழங்கிய பிறகு, மோசடிக்காரர்கள் அவர்களை மேலும் கடன் வாங்க ஊக்குவிக்கிறார்கள், மேலும் கடன் தொகை திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு அதிகரிக்கும் போது, ​​அவர்கள் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கத் தொடங்குகிறார்கள்.</p><p>

செலுத்த வேண்டிய வட்டியும், பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளும் கடுமையாக உள்ளன, மேலும் இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத கடன் வாங்குபவர்கள் பல்வேறு முறைகேடுகளைச் சந்திக்க நேரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; </p><p>&nbsp; &nbsp;</p><p></p><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T10:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் ஆலோசகர்களின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்திய இம்ரான் மஹ்ரூப் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-mahroof-mp-statement-1783761602"></link>
            <id>https://tamilwin.com/article/imran-mahroof-mp-statement-1783761602</id>
            <summary type="text">ஆசிரியர் ஆலோசகர்கள்&amp;nbsp;பல்வேறு முறையற்ற நிர்வாகப் பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிரியர் ஆலோசகர்கள்&nbsp;பல்வேறு முறையற்ற நிர்வாகப் பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நாடாளுமன்ற அமர்வில் நேற்றுமுன்தினம்(09.07.2026) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p>மேலும் தெரிவிக்கையில்,</p><p>
இலங்கையின் கல்வித் துறையில் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும்,
ஆசிரியர்களுக்குப் புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் வழிகாட்டல்களை
வழங்குவதிலும் ஆசிரியர் ஆலோசகர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர்.</p><p></p><p> </p><p>எனினும்,
நீண்டகாலமாக இந்தச் சேவையில் உள்ளவர்கள் பல்வேறு முறையற்ற நிர்வாகப்
பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு
வருகின்றனர்.
</p><p>
1. 2182/36 (2020.07.01) ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி
உருவாக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையைச் (SLTAS) சேர்ந்த
உத்தியோகத்தர்களின் சேவை தொடர்பாக பின்வரும் தகவல் வெளிப்படுத்தப்படல்
தொடர்பாக வர்த்தமானி 2182/36 இன்படி மொத்த ஆளணியினரின் எண்ணிக்கை 4471 ஆகும்.
தற்போது இச்சேவையிலுள்ள மொத்த ஆளணியினரின் எண்ணிக்கை எத்தனை? கிழக்கு
மாகாணத்திற்கு சிங்களம் தமிழ் மொழி உட்பட 466 இதில்
தற்போதுசேவையிலுள்ளவர்களின் எண்ணிக்கை எத்தனை?</p><p>

2. ஏன் இதுவரை இச்சேவைக்கான போட்டிப்பரீட்சைகள் நடாத்தப்படவில்லை?
</p><p>
3. 10/2025 இன்படி பதவி நிலை உத்தியோகத்தர்கள் மட்டத்தலுள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்களுக்கான வரப்பிரசாதங்கள் என்ன ? இவர்களின் பதவிக்கான அடிப்படை
சம்பளம் மற்றும் சம்பள உயர்ச்சியின் முரண்பாடு தீர்க்கப்பட்டுள்ளதா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b45dce95-f065-459e-b2e4-4deb4219f2c6/26-6a5211e9e4fa5.webp' /></p><p>

4. முன்னோடி வேலைத்திட்டத்தின் படி பாடசாலை தரிசிப்பினை மேற்கொள்ளும்
இவர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு நாடுபூராக மாறுபட்டுக் காணப்படுகின்றமை
ஏன்?</p><p>

5. 10/2026 இன் படி இவர்களுக்கு மோட்டார் போக்குவரத்து கொடுப்பனவு தொடர்பாக
அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதா?
</p><p>
6. SLTAS-I இன் பின்னர் இச்சேவையைச்சேர்ந்தவர்கள் மூப்பு அடிப்படையில் கல்வி
நிருவாக சேவைப்பரீட்சைக்கு தோற்ற முடியுமா?
</p><p>
7. இவர்களுக்கான சம்பளம் தேசிய நிதி ஒதுக்கீட்டின்படி வழங்கப்படுகின்றதா
அல்லது மாகாண நிதியிலிருந்து வழங்கப்படுகின்றதா?
</p><p>
8. இவர்களுக்கான இடமாற்றம் வலயங்களுக்கிடையில் இடம்பெறுமா அல்லது வலயத்தின்
கோட்டங்களுக்கிடையில் இடம்பெறுமா?
</p><p>
9. ⁠SLTAS-II இல் 10 வருடங்களை பூர்த்தி செய்துள்ள உத்தியோகத்தர்களுக்கு
SLTAS-I கான பதவி உயர்வு இன்னும் ஏன் வழங்கப்படவில்லை?
</p><p>
10. இவர்களின் நிர்வாக செயற்பாடு மேற்கொள்ளப்படுவது மத்திய கல்வி அமைச்சா?
அல்லது மாகாண கல்வி அமைச்சா? ஆசிரியர் ஆலோசகர் சேவையிலுள்ள இந்தப் பிரச்சினைகள் காரணமாக ஒட்டுமொத்த
பாடசாலைக் கல்வி மேற்பார்வை மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள்
பாதிக்கப்படுகின்றன.</p><p> எனவே, கல்வி அமைச்சர் என்ற ரீதியில் தாங்கள் இதில்
உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பாக
சிறந்த தீர்வொன்றை வழங்குமாறு கல்வி அமைச்சரிடம் கேட்டுகொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T09:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இளைஞர் பலி - தாய் படுகாயம்.. தப்பியோடிய சாரதி வவுனியாவில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-boy-dies-in-accident-mother-injured-1783735516"></link>
            <id>https://tamilwin.com/article/young-boy-dies-in-accident-mother-injured-1783735516</id>
            <summary type="text">
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த வாகன விபத்தை ஏற்படுத்தி தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் ரக லொறியையும், அதில் சூட்சுமமாக மறைந்திருந்த சாரதியையும், விபத்து இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
82 பாதுகாப்பு கமெராக்களை ஆய்வு செய்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், மாரவில தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் வவுனியாவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.</p><p>
</p><h2><b>
நேருக்கு நேர் மோதி விபத்து</b></h2><p>கடந்த 07 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b027737d-21c1-4dbd-9f63-3c7b7d62f53c/26-6a51a75c1c0a2.webp' /></p><p>இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>அத்துடன், அவருடன் பின்னால் பயணித்த அவரது தாயார் பலத்த காயங்களுடன் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். </p><p>விபத்து இடம்பெற்றவுடன், டிப்பர் வாகனத்தை நிறுத்தாது அதன் சாரதி தப்பிச்சென்றுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், அந்த வாகனத்தை கைப்பற்ற விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
</p><h3><b>
சாரதி கைது</b></h3><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியில் வசித்து வந்த ரித்ம பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cd1af6-4118-4794-8f06-88fb40bb4bcc/26-6a51a75cbfc6f.webp' /></p><p>உயிரிழந்தவர் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை என தெரியவந்துள்ளதுடன், அவரது தந்தையும் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் இலக்கத் தகடுகளில் இலக்கங்கள் தெளிவாக இருக்கவில்லை. </p><p>82 பாதுகாப்பு கமெராக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, பல பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் பயணித்த பாதையை அவதானித்து, வவுனியாவில் மறைந்திருந்த சாரதியை கைது செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T09:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்கு மத்தியில் நீதிச் சேவை சங்கத் தலைவர் பசன் அமரசேன பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magistrate-pasan-amarasena-steps-down-1783760589"></link>
            <id>https://tamilwin.com/article/magistrate-pasan-amarasena-steps-down-1783760589</id>
            <summary type="text">நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இன்று(11.07.2026) நடைபெறவிருந்த நீதிச் சேவை சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டத்தை முன்னிட்டு ஏற்பட்ட சர்ச்சையே அவரது பதவி விலகலுக்குக் காரணம் என கூறப்படுகிறது.</p><p></p><h2>பதவி விலகல்</h2><p>

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான விடயத்தை கலந்துரையாடவும், உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறவும் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு, கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று(11) விசேட பொதுச் சபை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.</p><p>

இந்த நிலையில், தனது பதவி விலகல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து சங்க உறுப்பினர்களுக்கு தலைவர் பசன் அமரசேன அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f4508d-7607-4a6c-aaab-48c509ad8770/26-6a520aa387e12.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, சங்கத்தின் செயலாளர் நீதிபதி சுரங்க முனசிங்க அனுப்பியதாகக் கூறப்படும் மற்றுமொரு கடிதமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
இதற்கிடையில், திட்டமிட்டபடி நீதிச் சேவை சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஆரம்பமானதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T09:19:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/growth-opportunities-in-the-tourism-sector-batti-1783758753"></link>
            <id>https://tamilwin.com/article/growth-opportunities-in-the-tourism-sector-batti-1783758753</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையில் காணப்படும் வளர்ச்சி
வாய்ப்புகளை ஆராயும் வகையில் ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள்
மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையில் காணப்படும் வளர்ச்சி
வாய்ப்புகளை ஆராயும் வகையில் ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள்
மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர்.</p><p>
மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாட்டின்
இலங்கைக்கான தூதுவர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில்
நடைபெற்றது.
</p><p>இதன் போது, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்க உள்ள அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும்
தெளிவுபடுத்தியிருந்தனர்.</p><p></p><h2>அபிவிருத்தி திட்டங்கள்&nbsp;</h2><p>
மட்டக்களப்பு மாநகர சபை சார்பில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் உள்ள
சுற்றுலா தளங்கள் மற்றும் அவை தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி
திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1227445e-e82b-4a11-b17a-801290223e48/26-6a520a698ea34.webp' /></p><p>அத்துடன் மாநகர சபையின் செயல்பாடுகள்
குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறையினை கட்டியெழுப்பும்
வேலைத்திட்டங்களுக்கான உதவிகளை வழங்குமாறும் இதன்போது மாநகரசபை முதல்வரினால்
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p>&nbsp;ஒவ்வொரு நாட்டு தூதுவரிடமும் ஒவ்வொரு
அபிவிருத்தி திட்டத்திற்கான முன்மொழிவு அறிக்கையும் வழங்கி வைக்கப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T09:18:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் - எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-fishermen-continue-to-violate-1783758698"></link>
            <id>https://tamilwin.com/article/indian-fishermen-continue-to-violate-1783758698</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைகின்ற இந்திய கடற்தொழிலாளர்கள் எமது கடற்தொழிலாளர்களின் இறங்கு துறைகளுக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைகின்ற இந்திய கடற்தொழிலாளர்கள் எமது கடற்தொழிலாளர்களின் இறங்கு துறைகளுக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை
மேற்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக&nbsp;மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம்.மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.</p><p>இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய
நடவடிக்கையை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சரிடம் பல்வேறு தடவைகள்
கோரிக்கைகளை முன் வைத்துள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று (11.07.2026) மதியம்
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சட்டவிரோத மீன்பிடி</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகள், அதேபோன்று
அண்மையில் இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை எல்லையைக் கடந்து எமது இறங்குதுறை
வரைக்கும், அதாவது&nbsp;கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்கும் இடம் வரைக்கும் வந்த விடயங்களை
நான் இந்த ஊடக வாயிலாக உரிய தரப்புக்கு தெரிவிப்பதற்காக இந்த ஊடக சந்திப்பை
ஏற்பாடு செய்திருக்கின்றேன்.</p><p></p><p>

குறிப்பாக, இந்த சட்டவிரோத மீன்பிடி முறைகள். இது தொடர்பாக பல விடயங்கள்
மன்னார் மாவட்டத்திலும் வடக்கிலே காணப்பட்டாலும் மன்னார் மாவட்டத்திலே
தொடர்ச்சியாக இது காணப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாக காலப்பகுதிகளிலே இந்தத் தொழில்
முறைகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. </p><p>குறிப்பாக, இலங்கை கடற்தொழிலாளர்கள்
குறிப்பாக வட பகுதி கடற்தொழிலாளர்கள் குறிப்பிட்ட தூரம் கடலுக்குச் சென்று மீன்
பிடிக்கக் கூடிய அனுமதியை கடற்படையும் வழங்கியிருந்தது.

இருந்தபோதிலும், அந்தப் பகுதிகளில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான
அனைத்து கடல் உணவுகளையும் அறுவடை செய்து, அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தைக்
கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை அன்றைய காலப்பகுதியிலே அவர்கள் செய்து வந்தார்கள்.</p><p>

2009க்கு பின்னர் யுத்தம் நிறைவுக்குப் பின்னர் படிப்படியாக அரசாங்கம்
வேண்டிய தூரம் சென்று கடலில் நீங்கள் மீன் பிடிக்கலாம் என்று அந்த சூனியப்
பிரதேசங்களை அகற்றிய பிறகு, இந்தத் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் எல்லை
தாண்டியதாக இருக்கிறது.

டைனமட், சுருக்குவலை, இழுவைப் படகுகள் அதேபோன்று தங்கூசி கொண்டு தொழில்
பிடிக்கும் முறைகள், அவ்வாறான 14 வகையான தடை செய்யப்பட்ட தொழில் முறைகளும்
இப்போது இந்த வடக்கு கடற்பரப்பிலும் அதேபோன்று மன்னார்
மாவட்டத்திலும் பெருவாரியாகப் பெருகியிருக்கிறது.
</p><p>
இதை நாங்கள் தடுப்பதற்கும் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், மன்னார் மாவட்டத்தில்
எங்களுக்குள்ளே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற பல மீன்பிடி கிராமங்கள், தோறும்
இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்களை தங்களது வாழ்வாதாரம் என்று கூறிக்கொண்டு
செய்து வருகிறார்கள்.

நாங்கள் கிராமங்களைக் குறிப்பிடப்பட்டாலும், குறிப்பிடாவிட்டாலும்
உண்மையிலேயே யார் யார் என்ன தொழில் செய்கிறார் என்று அந்தந்த கிராமங்களுக்கு
தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6a4636-101c-4246-a811-3fc4b7412737/26-6a520997054c1.webp' /></p><h2>எழுகின்ற கேள்வி</h2><p> </p><p>எனவே, இதில் நான் குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல்லவோ அல்லது
இந்த விடயத்தில் ஒருவரைக் குறிப்பிடவோ நான் இந்த ஊடக சந்திப்பை செய்யவில்லை.

இந்தத் தொழில்கள்... நாங்கள் தலைவர்கள் பல்வேறுபட்ட கூட்டங்களிலே பங்கு
பெற்றுகின்றோம், பல மாகாண கூட்டங்களிலும் நாங்கள் பங்கு பெற்றிருக்கிறோம்.

ஆனால் குறிப்பாக, மன்னார் மாவட்டம் தொடர்ந்து பேசும்போது எங்களுக்கு சில
விடயங்களை அங்கு பேசும்போது நாங்கள் தடுப்பதா அல்லது மௌனமாக இருப்பதா என்ற
கேள்வியும் எழுகின்றது.
</p><p>
இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு
கட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களாக இருக்கட்டும் அல்லது பல அரசியல்
தரப்புகளைச் சந்தித்து நாங்கள் மனுக்குடுத்த விடயங்கள் போன்ற பல விடயங்கள்,
பேசிய விடயங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றன.

ஆனால் அவை அனைத்துமே பலனற்று, இன்று வரை நாங்கள் 2009ல் எப்போது கலைக்கத்
துவங்கினோமோ இந்த விடயத்தை, அப்போதிலிருந்து இன்று வரைக்கும் அந்த விஷயத்தைத்
தான் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். </p><p>எனவே, ஒரு விடயமும் தீர்ந்ததாக இல்லை. பல
அரசுகள் வந்து போய்விட்டன.

தற்போது கூட புதிய கடற்றொழில் அமைச்சர் பல்வேறுபட்ட கருத்துக்களைக்
கூறுகின்றார். அவரை நாங்கள் பல தடவை சந்தித்து விட்டோம்.

கடந்த அரசாங்கங்களில் இருந்த கடற்றொழில் அமைச்சரை விட இப்போது இருக்கின்ற
அமைச்சரை அமைச்சர் பொறுப்பெடுத்து ஒன்றரை வருடங்களிலே அவரை 15 தடவைக்கு மேல்
நாங்கள் சந்தித்து எங்களது பிரச்சினைகளை வலியுறுத்தி, இந்த விடயங்களைத்
தீர்த்து தாருங்கள் என்று.</p><p></p><p>
</p><p>
ஒரு இணக்கமான செயல்பாட்டுடன் நாங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள
அமைச்சரிடம் அணுகினாலும், அமைச்சர் அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை
நிறுத்தலாம், இதை நிறுத்தலாம் , உங்களுடைய அபிப்பிராயம் என்ன, என்று
கேட்டுப் பெறுகிறாரே தவிர, எதுவுமே அவர் செய்வதாக இல்லை.

எனவே, இந்த விடயத்திலே கடந்த கால அரசாங்கம் செய்த தவறை தான் இப்போது
இருக்கின்ற அரசாங்கம் செய்து வருகிறது. எந்தச் சட்டவிரோத மீன் பிடியும் இங்கு
நின்றபாடில்லை.
</p><p>
குறிப்பாக, உள்ளூர் இழுவைப்படகு தொடர்பாக 2020-லே புத்தளத்தில் ஒரு வழக்கொன்று
தாக்கல் செய்யப்பட்டது, சமூக கடல் சூழல் சார்ந்த ஒரு அமைப்பினால் அங்கு
வழக்குத் தாக்கல் பட்டு 23 பேர் இந்த வழக்கு போனது.

ஆனால், இறுதியில் அந்த 23 பேரும் "நாங்கள் அவ்வாறான தொழிலைச் செய்யவில்லை"
என்று சொன்னார்கள். திணைக்களமும் "நாங்கள் அவ்வாறான தொழிலுக்கு அனுமதி
வழங்கவில்லை" என்று சொன்னார்கள்.எனவே சட்டவிரோத மீன்பிடி தொழிலை நிறுத்த எந்த
தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T09:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடிக்கையாளர் போர்வையில் கடைக்குள் நுழைந்த பெண் - தமிழர் பகுதியில் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-jewelry-store-in-batticaloa-1783759788"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-jewelry-store-in-batticaloa-1783759788</id>
            <summary type="text">மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தங்க நகைக்கடையொன்றில் மிகவும் நுணுக்கமான முறையில் காப்பு ஒன்றை திருடிய பெண் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தங்க நகைக்கடையொன்றில் மிகவும் நுணுக்கமான முறையில் காப்பு ஒன்றை திருடிய பெண் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம்(10.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>


தங்க காப்புடன் கைது</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>

களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில் கடந்த 
2026.06.04 அன்று தங்க நகை கொள்வனவு செய்வதற்காக குறித்த பெண் கடைக்கு வந்துள்ளார். </p><p>

இதன்போது, ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்க காப்பு ஒன்றை நுணுக்கமான முறையில் திருடிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a84ec29-c06f-43ff-a92d-0136d4bee51e/26-6a5204423f992.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடையின் உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p> 

இதனைத் தொடர்ந்து, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நேற்று10) களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் முன்னாள் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2> 



45 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி</h2><p>

இதன்போது அவரிடம் இருந்த தங்க காப்பு மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரையும் தங்க நகையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4615da3-67b3-4d43-9656-1b79eee4eb51/26-6a520443265ac.webp' /></p><p> </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 45 வயதுடை அம்பாறை பிரதேசத்தை பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> 

இந்த நிலையில், வெளியிடங்களில் இருந்து வருகை தருபவர்களிடம் சற்று அவதானமாக இருக்குமாறு அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T08:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மதுபானம் கடத்திய 60 வயதுடைய ஒருவர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arreste-smuggling-150-liters-illicit-liquor-1783758794"></link>
            <id>https://tamilwin.com/article/person-arreste-smuggling-150-liters-illicit-liquor-1783758794</id>
            <summary type="text">கொக்கட்டிச்சோலையிலிருந்து ஆரையம்பதி பகுதிக்கு காஞ்சிரம்குடா வாவி வழியாக மீன்பிடி தோணியில் கசிப்பை கடத்திச் செல்ல முயன்ற 60 வயதுடைய ஒருவரை, 150 லீற்றர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொக்கட்டிச்சோலையிலிருந்து ஆரையம்பதி பகுதிக்கு காஞ்சிரம்குடா வாவி வழியாக மீன்பிடி தோணியில் கசிப்பை கடத்திச் செல்ல முயன்ற 60 வயதுடைய ஒருவரை, 150 லீற்றர்&nbsp; சட்டவிரோத மதுபானத்துடன் நேற்றையதினம் (10) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>ஒருவர் கைது</h2><p>
</p><p>
இந்த நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து அதிகாலை சுமார் 4.00 மணியளவில் காஞ்சிரம்குடா வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
</p><p>
அப்போது, மீன்பிடி தோணியில் கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட 150 லீற்றர் கசிப்பை பொலிஸார் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1731074b-7299-4e29-879b-8ef871dd8a7a/26-6a5201ce0b8b4.webp' /></p><p>

மேலும், ஆரையம்பதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன், கசிப்பு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி தோணியையும் மீட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T08:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் - நெருக்கடியில் திணறும் இலங்கை பொருளாதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-problem-1783757828"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-problem-1783757828</id>
            <summary type="text">வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தற்போது நாட்டில் வாகனத் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் வரி வருமானம் குறையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு பின்னர், வாகன இறக்குமதிக் கொள்கையை நீட்டிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவெடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p> </p><h2>


கூடுதல் கட்டணங்கள் விதிக்க முடியாது..</h2><p>
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி, கூடுதல் கட்டணங்களை விதிக்க முடியாது என்றாலும், அரசாங்கம் இந்தக் கூடுதல் கட்டணங்களை நீக்கினால் சந்தையில் மற்றொரு அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>

கடந்த காலத்தில் இருந்த வலுவான வாகனத் தேவை தற்போது பெருமளவில் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாலும், இறக்குமதியாளர்களும் தேவையான எண்ணிக்கையிலான வாகனங்களை இறக்குமதி செய்துவிட்டதாலும், வாகனப் பதிவுகள் படிப்படியாகக் குறையும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebb2100-9adc-44ec-8dcb-f2ab3ab89094/26-6a51fe9e18597.webp' /></p><p> 

இதன் விளைவாக, வாகன இறக்குமதி வரி வருவாய் கடந்த ஆண்டின் அளவை எட்டாது. 

வாகனங்கள் மீது ஏற்கனவே 150% மற்றும் 200% போன்ற அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற வரிகளை மேலும் விதிப்பது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டிய 
தனநாத் பெர்னாண்டோ, ஒரே பிரிவினர் மீது தொடர்ந்து வரிகளை விதித்து அரசு செலவினங்களைச் சுரண்டாமல், அவற்றை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். </p><p>

மேலும், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் வரி வருவாயை ஓரளவிற்கு அதிகரிக்க முடியும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி வலுவான சமிஞ்சையை சந்தைக்கு வழங்கும் என்றும் பொருளாதார வல்லுநர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> 






</p>]]></content>
            <updated>2026-07-11T08:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் மஹாவலி கங்கையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-in-muttur-boy-drowns-mahaweli-river-1783756834"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-in-muttur-boy-drowns-mahaweli-river-1783756834</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில்
மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன்&amp;nbsp; பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில்
மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன்&nbsp; பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது&nbsp; இன்று(11.7.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த சிறுவன் இன்று காலை தனது குடும்பத்தினருடன் ஆற்றங்கரைப் பகுதிக்கு
சமையல் தேவைக்காகச் சென்றுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, ஆற்றில் குளிப்பதற்காக சிறுவன் இறங்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக
நீரில் மூழ்கி அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>

சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும்
அங்கிருந்தவர்களும் உடனடியாக அவரை மீட்கப் போராடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e8a0ad6-4c24-4cd5-8ac5-cc8a29b60f7c/26-6a51fc18b9127.webp' /></p><p> </p><p>எனினும், சிறுவனை
உயிருடன் மீட்க முடியாமல் போயுள்ளது.

நீண்ட தேடுதலின் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக
மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p> இந்தச் சம்பவம் குறித்து
மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T08:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இலங்கை குடும்பம் ஒன்றை கடத்த முயற்சித்த கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-family-caught-in-thai-airport-passport-1783747483"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-family-caught-in-thai-airport-passport-1783747483</id>
            <summary type="text">தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குடும்பம் ஒன்றை கஜகஸ்தானுக்கு கடத்த முயன்ற கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

மலேசிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குடும்பம் ஒன்றை கஜகஸ்தானுக்கு கடத்த முயன்ற கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி கடத்த முயற்சித்த சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
</p><p>
இந்த இலங்கை குடும்பத்தினர் ஆரம்பத்தில் தங்களது சொந்த கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்துக்குள் நுழைந்துள்ளனர்.</p><h2><b>

மலேசிய கடவுச்சீட்டு</b></h2><p>பின்னர் தரைமார்க்கமாக மலேசியாவுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தாய்லாந்து வந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04558575-5842-4b13-95db-e8f23e4d3dc2/26-6a51f8da8b069.webp' /></p><p>அவர்கள், 2 பிள்ளைகளுக்கு தான் தாய் என்று பொய்யாகக் கூறிக்கொண்ட மலேசியப் பெண் ஒருவருடன் கஜகஸ்தான் செல்ல முயற்சித்துள்ளனர்.</p><p>
எனினும் அவர்களது பயண ஆவணங்களில் முரண்பாடுகளைக் கண்டறிந்த விமான சேவை அதிகாரிகள், அவர்களை விமானத்தில் ஏற அனுமதிக்க மறுத்துள்ளனர்.</p><p> </p><h3><b>

தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் </b></h3><p>இதனால் தங்களது பயணத் திட்டத்தை மியான்மருக்கு மாற்றிய குறித்த குழுவினர், இது குறித்து குடிவரவு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c1c03b-80ec-4e2f-a04a-3f4aff5ce417/26-6a51f8db394d8.webp' /></p><p>மியான்மரிலிருந்து டொன் முவாங் சர்வதேச விமான நிலையம் வழியாக கஜகஸ்தான் செல்ல முயன்ற போது, தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் தலையிட்டு அவர்களைக் கைது செய்தனர்.</p><p>

இலங்கை பெண்ணும் மூத்த பிள்ளைகளும் மற்றவர்களுக்கு சொந்தமான மலேசிய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதும், இளைய பிள்ளை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. 
<br><br><b><i>You may like This..</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pgGAnL_-b9g" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-07-11T08:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைவில் புதிய திட்டம் - ஜனாதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-program-soon-those-displaced-during-the-war-1783756518"></link>
            <id>https://tamilwin.com/article/new-program-soon-those-displaced-during-the-war-1783756518</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை துரித கதியில் மீளக்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை துரித கதியில் மீளக்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலத்தில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
இதனடிப்படையில், மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பில் தற்போதைக்கு அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வடக்கில் இடம்பெயர்ந்து இன்னும் சொந்த இடங்களுக்குத் திரும்பாத ஆயிரம் பேரளவிலான தமிழ்க் குடும்பங்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்கள் அல்லது அண்மித்த பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
இஸ்லாமியர்களை மீள்குடியேற்ற திட்டம்</h2><p>
எனினும் வடக்கில் இருந்து இடம்பெயர்க்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியக் குடும்பங்கள் இன்று வரை புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை மீளக்குடியமர்த்துவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54eca472-0d38-46a0-8ffb-e4ca4f896e2f/26-6a51f6e826dd1.webp' /></p><p> 

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் அவ்வாறு இடம்பெயர்க்கப்பட்ட இஸ்லாமியர்களின் காணிகளில் கடந்த பல வருடங்களாக குடியிருக்கும் தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளனர். </p><p>

இதேவேளை, நிர்வாகப் பிரச்சினை மற்றும் அதிகாரிகளின் பாகுபாடு காரணமாக இடம்பெயர்க்கப்பட்ட இஸ்லாமியக் குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்கும் செயற்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
</p><p>
அதன் காரணமாக பத்தாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியக் குடும்பங்கள் தொடர்ந்தும் புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் தற்காலிக குடியிருப்புகளில் போதிய வருமானம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளின்றி தவித்து வருவதாக வடக்கு இஸ்லாமியர்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டு விபத்து: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-injured-after-a-pickup-truck-collided-bridge-1783755813"></link>
            <id>https://tamilwin.com/article/man-injured-after-a-pickup-truck-collided-bridge-1783755813</id>
            <summary type="text">முல்லைத்தீவு- வெளிகண்டல் பகுதியில் மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவமானது&amp;nbsp;இன்று(11.072026) அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு- வெளிகண்டல் பகுதியில் மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது&nbsp;இன்று(11.072026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.</p><p>யாழ்ப்பாணம் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த மகேந்திரா கப்ரக வாகனம் பரந்தன் வீதி ஊடாக முல்லைத்தீவு சென்று கொண்டிருந்தபோது
வெளிகண்டல் பகுதியில் அதி வேகட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன்
மோதுண்டு பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்தில் வாகன ஓட்டுனரின்
உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c84faa72-4062-45d4-99e0-c22ef670cbe9/26-6a51f6e50b81f.webp' /></p><p> குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T07:56:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸாரின் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-warning-traffic-police-to-vehicle-drivers-1783754228"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-warning-traffic-police-to-vehicle-drivers-1783754228</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (10) அதிகாலை முதல் நிலவிய சீரற்ற காலநிலை
காரணமாக பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன. இதன் காரணமாக
பார்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (10) அதிகாலை முதல் நிலவிய சீரற்ற காலநிலை
காரணமாக பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன. </p><p>இதன் காரணமாக
பார்வைத் தூரம் வெகுவாகக் குறைந்துள்ளதால், வாகன சாரதிகள் மிகுந்த
அவதானத்துடன் தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அவசர
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p>அதிகாலை முதல் நுவரெலியா நகரம், அம்பேவெல, பட்டிப்பொல, ஹக்கல,
தலவாக்கலை, லிந்துலை, கொட்டகலை, அக்கரப்பத்தனை மற்றும் ஹட்டன் கொழும்பு
மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளிரும் பல உயர்வான பிரதேசங்களில்
கடும் பனிமூட்டம் நிலவியது.</p><p></p><h2>பாதுகாப்பு விதி</h2><p> </p><p>சில இடங்களில் பார்வைத் தூரம் 20 முதல் 30 மீற்றர்
வரையிலேயே காணப்பட்டதால், பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள் மிகவும் குறைந்த
வேகத்தில் இயக்கப்பட்டன.</p><p>
நுவரெலியா – ஹட்டன் மற்றும் ஹட்டன் கொழும்பு ஆகிய பிரதான வீதியில் வாகனங்கள்
முன்விளக்குகளை ஒளிரச் செய்து மெதுவாக பயணிப்பதும், எதிரே வரும் வாகனங்களை
அடையாளம் காண்பதற்காக ஒளி சமிக்ஞைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வாகன
விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85167961-8771-4d13-9047-5b9da6df5c41/26-6a51f249b59e5.webp' /></p><p>
</p><p>எனவே வாகன சாரதிகள் தமக்கே உரித்தான பக்கத்தில் பனி மூட்டம் காணப்படும்
இடங்களில் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு மெதுவாக
பயணிக்குமாறும் பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>நுவரெலியா மாவட்டம் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
அதிகம் வருகை தரும் பகுதியாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பு
விதிகளைப் பின்பற்றி வாகனங்களை செலுத்துமாறும் அதிகாரிகள்
கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T07:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடமைப்பு அதிகார சபை மீதான பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்! கோப் குழு விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-threat-against-housing-authority-reveal-1783753409"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-threat-against-housing-authority-reveal-1783753409</id>
            <summary type="text">அரசியல் அழுத்தம், பாதாள உலக அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் அழுத்தம், பாதாள உலக அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கடந்த காலத்தில் பெரும் தொகையை இழந்துள்ளதாக பொது நிறுவனங்கள் மீதான நாடாளுமன்ற குழு (கோப்) கண்டறிந்துள்ளது.</p><p>

கொழும்பின் மாளிகவத்தை பகுதியில் அமைந்துள்ள கடைகளின் குத்தகை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாதது மற்றும் வாகன நிறுத்துமிடங்களிலிருந்து வரி வசூலிப்பது குறித்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் கோப் குழுவின் முன் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது இந்தத் தகவல் வெளிப்பட்டது.</p><p></p><h2>கோப் குழு விசாரணை</h2><p>
</p><p>
அதன்போது, கோப் குழுவின் தலைவர் மருத்துவர் நிஷாந்த சமரவீர பல விடயங்களை கண்டறிந்துள்ளார்.
</p><p>
மாளிகவத்தை பகுதியில் அமைந்துள்ள 113 கடைகள், டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வாடகை மீதியைச் செலுத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57d43d25-1fdd-4ae5-92b1-08a2fc046212/26-6a51edad69992.webp' /></p><p>
</p><p>
மேலும், 2 கடைகள் 100 ரூபாவுக்கும் குறைவான வாடகைக்கும், மற்ற 37 கடைகள் 100 முதல் 1,000 ரூபா வரையிலான வாடகைக்கும் விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
மேலும் 38 கடைகள் 1,000 முதல் 5,000 ரூபா வரையிலான வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், 52 கடைகளின் குத்தகை ஒப்பந்தக் காலம் முடிந்து 1 முதல் 35 ஆண்டுகள் வரை நீண்ட காலம் ஆகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>இது ஒரு பெரும் குற்றம்</h2><p>

இதற்குப் பதிலளித்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பொது முகாமையாளர் அஜித் நந்தன குமார, குறித்த கடைகளின் வாடகைதாரர்கள் 1980-களில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாகத் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை உடனடியாகத் திருத்திப் புதுப்பிக்குமாறு தற்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

'வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வருடத்தின் 365 நாட்களும் நிலத்தை தானமாக வழங்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21d069fa-be4d-4122-8d6d-4d7dc8698865/26-6a51edae1ff3f.webp' /></p><p> </p><p>இது ஒரு பெரும் குற்றம்...' என்று கோப் குழு விசாரணையில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
குத்தகை ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கத் தவறியதற்கான காரணங்களை விளக்கிய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அனுராத கிரலவெல்ல, இதற்கான முழுப் பழியையும் அதிகாரிகள் மீது சுமத்த முடியாது என்று குறிப்பிட்டார்.</p><p></p><h2>பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்</h2><p>

இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். </p><p>அரசியல் அழுத்தங்கள், பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஆகியவையே அவை என அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15be06c5-4109-415c-b61c-36771a4daad6/26-6a51edaec0baf.webp' /></p><p>

இவ்வாறு மோசடியாகச் செயல்பட்ட சில ஊழல் அதிகாரிகளின் சேவைகளைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக அனுராத கிரலவெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T07:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயாளிகள் எண்ணிக்கையில் திடீர் உயர்வு - பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-47-1783752729"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-47-1783752729</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விவரங்களை இன்று(11.07.2026) தேசிய டெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான விவரங்களை இன்று(11.07.2026) தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது.</p><p> 

இதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 67,174 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> </p><h2>ஆயிரத்தைத் தாண்டும் நோயாளிகள்</h2><p>
அத்துடன், ஜூலை மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 10,685 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca15e10-0d24-4cd5-a542-581d53e2a397/26-6a51ea4d3339b.webp' /></p><p> 

நேற்றைய தினம்(10) சுமார் 1,110 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் இயக்குநர் டாக்டர் கபில கண்ணங்கரா தெரிவித்துள்ளார். </p><p>

பல முக்கிய மருத்துவமனைகளின் கொள்ளளவு அதன் உச்ச வரம்பை எட்டியுள்ளதால், மருத்துவமனைகளில் கடுமையான அழுத்தமும் நெரிசலும் நிலவுவதாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-11T07:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நடந்த மோசமான செயல்! பலரின் அந்தரங்கங்களை இரகசியமாக காணொளியாக பதிவு செய்த தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spa-raid-and-couple-arrested-1783737929"></link>
            <id>https://tamilwin.com/article/spa-raid-and-couple-arrested-1783737929</id>
            <summary type="text">பண்டாரவளை, எல்லதோட்ட பிரதேசத்தில் இயங்கி வந்த ஸ்பா நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

ஸ்பா நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரவளை, எல்லதோட்ட பிரதேசத்தில் இயங்கி வந்த ஸ்பா நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. </p><p>

ஸ்பா நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளை இரகசியமாக வீடியோ எடுத்து இணையம் ஊடாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் உட்பட ஒரு குழுவினரைக் கைது செய்துள்ளனர். </p><p>

வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரும், மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருமே இந்த மோசடியின் பிரதான சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

பாலியல் செயல்பாடு</b></h2><p>ஸ்பா நிலைய அறைகளுக்குள் மிகவும் நுணுக்கமாகப் பொருத்தப்பட்ட கமராக்களின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளை இந்த தம்பதி வீடியோ எடுத்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a719c6d3-0318-4489-8afa-5efca19b7d0b/26-6a51e6df5e429.webp' /></p><p>அந்தத் காட்சிகளைத் தமது கைபேசிகளில் சேமித்து வைத்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணத்திற்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணைப் பொறுத்து, 4,000 முதல் 8,000 ரூபாய் வரை கட்டணம் அறவிடப்படுகின்றது. </p><p>இந்த நடவடிக்கையும் வீடியோ மோசடியும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபரான தம்பதியினருடன் இருந்த ஜா-எல, மினுவாங்கொடை, மாத்தளை மற்றும் வெலிமடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மற்றொரு நபர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h3><b>

மருத்துவப் பரிசோதனை</b></h3><p>கைது செய்யப்பட்டவர்கள் பாலியல் நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகள் மேலதிக விசாரணைக்காக கணினி குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df999b9e-4ca6-46fe-bf2d-cd5072565c99/26-6a51e81a8a279.webp' /></p><p>பண்டாரவளை விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த குணதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். </p><p>

இதற்காக, பொலிஸார் அந்த ஸ்பா நிலையத்தில் சேவை பெறுபவர் போன்று வேடமிட்ட ஒரு உளவாளியின் உதவியைப் பெற்றுள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-11T06:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்! சந்தேகநபராக மீண்டும் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-minister-duminda-named-as-suspect-again-1783751633"></link>
            <id>https://tamilwin.com/article/former-minister-duminda-named-as-suspect-again-1783751633</id>
            <summary type="text">ஹெவ்லொக் டவுண் குடியிருப்புத் தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெவ்லொக் டவுண் குடியிருப்புத் தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 2025ஆம் வருடம் ஹெவ்லொக் டவுணில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட டி56 ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.</p><p>

அது தொடர்பான விசாரணைகளின் முடிவில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலின் பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்தார்.</p><p> அத்துடன் வழக்கின் நான்காவது சந்தேகநபராகவும் பெயரிடப்பட்டிருந்தார்.

எனினும் போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p></p><h2>சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள துமிந்த</h2><p>

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தற்போது மீண்டும் ஒரு சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார். </p><p>கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (10) பதில் நீதவான் ரவி மத்துகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், இந்த வழக்கில் நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த துமிந்த திசாநாயக்க, போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p> இருப்பினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட கூடுதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், நான்காவது சந்தேக நபரும் இந்தச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என்பதற்கு தற்போது போதுமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று புலனாய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b51096-d531-455f-a9c4-b73bf1a5426b/26-6a51e3d3f1a46.webp' /></p><h2>விரிவான விசாரணை</h2><p>
</p><p>
முன்னதாக வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள், குறித்த தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை அப்புறப்படுத்துவதில் நான்காவது சந்தேகநபர் ஈடுபட்டிருந்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்த போதிலும், பின்னர் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, ​​இரண்டாவது சந்தேக நபர் அதனைத் தன் வசம் வைத்திருக்க உதவியது தெரியவந்துள்ளது. </p><p>அதன்படி, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையைப் பரிசீலித்த பின்னர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை இந்த வழக்கில் மீண்டும் ஒரு சந்தேக நபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் தனது விசாரணைகளை தற்போது முடித்துவிட்டதாகவும், இது தொடர்பாக எதிர்காலத்தில் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
துமிந்த திசாநாயக்கவுக்காக முன்னிலையான வழக்கறிஞர், போதிய சாட்சியங்கள் இல்லாததால் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி தனது கட்சிக்காரரை விடுவிக்க நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்ததாகக் கூறினார். எனவே, விசாரணைப் பிரிவுகள் எடுத்த இந்த புதிய முடிவை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

அனைத்து வாதங்களையும் பரிசீலித்த பதில் நீதவான் ரவி மத்துகம, துமிந்த திசாநாயக்கவை தலா ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் பேரில் விடுவிக்க உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின்படி நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக, இந்த வழக்கு டிசம்பர் 11 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T06:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 5 இலட்சம் இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-leaves-29-dead-1783751262"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-leaves-29-dead-1783751262</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலமாக முதற்கட்ட நிவாரணமாக குறித்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறை உத்தியோகத்தர்களின் வாரிசுகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு குறித்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
பதவி உயர்வுடன் இழப்பீடு தொகை</h2><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் மறைவுக்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான பதவி உயர்வின் அடிப்படையிலான ஓய்வூதியங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்குவதற்கும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f96578d5-7237-41d7-a4c1-4fa8c8cae6ac/26-6a51e3cbe5c32.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஜெயிலர் எஸ்.எச். சந்திரவன்ச, எஸ்.டி. அபேவர்தன, பி.என். தரங்க, ஏ.டி. தரங்க, டி.டபிள்யூ. புஷ்பகுமார, ஆர்.ஆர். சஞ்சீவ, டி.ஆர். திலகசிறி மற்றும் எம்.ஜி. உபாலி ஆகிய சிறைக்காவலர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். </p><p> 

பணியில் இருந்தபோது கொல்லப்பட்ட மேற்குறித்த ஏழு சிறைக்காவலர்களும் மரணத்தின் பின்னர் சிறைச்சாலை சார்ஜென்ட் தரத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
சிறைச்சாலை ஜெயிலர் எஸ்.எச். சந்திரவன்ச, இரண்டாம் வகுப்புப் பதவியிலிருந்து முதலாம் தர ஜெயிலர் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறந்த திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[246 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி - சற்றுமுன் கட்டுநாயக்கவில் விமானம் தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929"></link>
            <id>https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929</id>
            <summary type="text">புதிய இணைப்புகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று, பறவை மோதியதில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று, பறவை மோதியதில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இந்த விபத்தைச் சந்தித்ததுடன், பறவை மோதியதன் காரணமாகத் தனது பயணத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>

246 பயணிகளுடன் தரையிறக்கம்</h3><p>தரையிறங்குவதற்கு ஏற்ற அளவிற்கு எரிபொருள் இருப்பு குறையும் வரை, அந்த விமானம் நீர்கொழும்பு - காயல் அருகே உள்ள கடல் பகுதியில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் குறைந்த வேகத்தில் பயணித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f99886-e99c-4da1-a01d-bd426c7c1092/26-6a51dec3552a4.webp' /></p><p> 

தரையிறங்குவதற்கு ஏற்ற நிலையை அடைந்த பின்னர், அது காலை 10.21 மணிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விமானத்தில் 246 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்ததாகவும், ஏர்பஸ் A-330 ரக விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் உள்ளிட்ட ஒரு குழுவும் இந்த விமானத்தில் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uuFwUhMTHFw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>


விமானம் இன்று காலை 7.07 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல்லுக்கான 6 மணி நேரப் பயணத்திற்காகப் புறப்பட்டுள்ளதுடன், அதுவரை விமானத்தில் 80,000 லீற்றர் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.</p><h4>

எரிபொருள் குறையும் வரை பறந்த விமானம்</h4><p>
விமானம் புறப்பட்ட உடனேயே பறவை மோதியது, இதுகுறித்து விமானி கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்திருந்தார்.
</p><p>
விமானத்தில் எரிபொருள் இருப்புடன் மீண்டும் தரையிறங்குவது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் சமீபத்திய விதிகளுக்கு எதிரானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00298c61-25a5-4976-8074-f52ebaf40ec0/26-6a51defb38dc8.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, தரையிறங்குவதற்கு ஏற்ற நிலைக்கு எரிபொருள் அளவு குறையும் வரை, விமானம் நீர்கொழும்பு கடற்காயலுக்கு மேலே 7,000 அடி உயரத்தில் மணிக்கு 253 நாட்ஸ் வேகத்தில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் பறக்க வேண்டியிருந்தது.
</p><p>
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களை வரவழைத்து, அவசரகாலத் தரையிறக்கத்திற்காக விமான நிலையமும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

இன்று காலை கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது. </p><p>

இதன் காரணமாக, அந்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து வட்டமடித்துள்ளது. </p><h2><b>மீண்டும் தரையிறக்கம் </b></h2><p> அத்துடன் எரிபொருளை குறைத்து, பாதுகாப்பாக விமானம் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112a1042-c6e1-4a5d-8c84-dac19164099f/26-6a51c400d694e.webp' /></p><p> </p>]]></content>
            <updated>2026-07-11T06:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீயணைப்பு பிரிவின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-dept-emergency-hotline-temporarily-block-1783749572"></link>
            <id>https://tamilwin.com/article/fire-dept-emergency-hotline-temporarily-block-1783749572</id>
            <summary type="text">தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

எனவே, தீ விபத்துகள் தொடர்பில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

எனவே, தீ விபத்துகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4fba77-83b5-4ba4-b808-a6b4551fad88/26-6a51e1bb0ab61.webp' /></p><p></p><p></p><p style="margin-left: 25px;"><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:25:29+00:00</updated>
        </entry>
    </feed>
