<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-04T18:31:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி - சந்தேகநபர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-the-boralesgamuwa-area-1788545855"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-the-boralesgamuwa-area-1788545855</id>
            <summary type="text">பொரலஸ்கமுவ,மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இன்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரலஸ்கமுவ,மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இன்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

குறிப்பிட்ட நபர் தனது வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>

 

கொலை செய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f3e8ed-7a76-48ed-95c1-02fd021bb8fd/26-6a9b0c9285a29.webp' /></p><p>
 

துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T18:23:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் - கலக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜனநாயக முன்னணியின் (Eros) செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,</p><p>


நாமல் ராஜபக்சவின் கைது வரவேற்கத்தக்கது, இது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த அரசு நிரூபிப்பித்துள்ளது.
</p><p>
ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது பல ஊழல் முறைப்பாடுகள் உள்ளன.</p><p> 

ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் செய்த ஊழல், கொள்ளை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
</p><p>
தற்போதைய அரசு இத்தகைய ஊழல்களை விசாரிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D9IttxaXdMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T18:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதில் பொலிஸாரிடம் குழப்பம் விளைவித்த ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/supporters-create-chaos-police-namal-s-arrest-1788541284"></link>
            <id>https://tamilwin.com/article/supporters-create-chaos-police-namal-s-arrest-1788541284</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே குழப்பமான சூழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
நாமல் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டிருந்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

இதன்போது ஆதரவாளர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பின்னர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xHhKh4l_Rqw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T17:07:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரோகரா கோஷம் முழங்க தங்கமயில் வாகனத்தில் அருள்பாலித்த நல்லூர் கந்தன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalloor-kovil-fesrtival-2026-1788539815"></link>
            <id>https://tamilwin.com/article/nalloor-kovil-fesrtival-2026-1788539815</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்
மகோற்சவப் பெருவிழாவின் 19ஆம் திருவிழா இன்று (04) வெகு விமரிசையாக
இடம்பெற்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்
மகோற்சவப் பெருவிழாவின் 19ஆம் திருவிழா இன்று (04) வெகு விமரிசையாக
இடம்பெற்றது.</p><p>
இன்றைய திருவிழாவில் முருகப்பெருமான் தங்கமயில் சக தங்க அண்ண வாகனத்தில்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.</p><h2>&nbsp;திருவிழா</h2><p>
</p><p>ஆலயச் சூழல் முழுவதும் பக்தர்களால் நிரம்பியிருந்த நிலையில், பக்தர்கள்
“அரோகரா” கோஷம் முழங்க முருகப்பெருமானை வழிபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10f9afe1-abf5-443b-a72f-e661678cdb54/26-6a9af52ce40c7.webp' /></p><p> </p><p>வாகனத்தில் எழுந்தருளிய
கந்தனை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள்
நல்லூரை நோக்கி வருகை தந்திருந்தனர்.
</p><p>மங்கள வாத்தியங்கள் முழங்க, மேளதாளங்கள் அதிர, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்
எழுந்தருளிய நல்லூர் கந்தனின் திருக்காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T16:47:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்குப் பின்னர் நாமலின் முகநூலில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-after-fb-post-1788538032"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-after-fb-post-1788538032</id>
            <summary type="text"> இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் அவர் சார்பில் பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த பதிவில்,</p><h2>அரசியல் பழிவாங்கல்கள்</h2><p>

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். திருடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.</p><p>

என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNamalSL%2Fposts%2Fpfbid02TcCpAA2u9fPZLmmc47wNT1aFyxcJEh147PMkVazPVK7ft2rZa2GqrW49bfA9ed2Gl&show_text=true&width=500" width="500" height="310" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
</p><p>
இன்று, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை என்னை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

நாளை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. 

அங்கு ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார். </p><p>இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைப் புறக்கணிப்பது கடினமாக உள்ளது.</p><h2>&nbsp;மாபெரும் மக்கள் பேரணி</h2><p>
</p><p>
அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள எமது மாபெரும் மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
</p><p>
நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை.மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை. நான் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc59b3ac-aea8-4446-8b4a-d959be46307a/26-6a9aeeb8ed3d3.webp' /></p><p>

எனது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும். ஆனால் எனது குரலையோ, எனது நம்பிக்கைகளையோ அல்லது எனது அன்புக்குரிய தாய்நாட்டு மக்களுக்காக நான் செய்யும் அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது.

அரசியல் அதிகாரம் தற்காலிகமானது.</p><p>

உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.

இந்த அனைத்து சம்பவங்களும் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும்.
</p><p>
இவை அனைத்தையும் நான் அச்சமின்றி எதிர்கொள்வேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br><br><b><i>You may Like This video..</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Fz7Z7yW4ZNw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T16:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஐ.தே.க கண்டன அறிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unp-issues-statement-condemning-namal-s-arrest-1788533659"></link>
            <id>https://tamilwin.com/article/unp-issues-statement-condemning-namal-s-arrest-1788533659</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.</p><p>அத்தோடு, வரும் 12 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைப்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கண்டனம்</h2><p>


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கு நாடு முழுவதும் சென்று கூட்டங்களை நடத்துவதற்கு இருக்கும் ஜனநாயக உரிமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4551a9a-aa25-4d31-bcf6-ea6bf4003695/26-6a9adf8f5d063.webp' /></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T15:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[20ஆவது வாரமாக தொடரும் போராட்டம் - காணி உரிமையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-continues-for-the-20th-week-1788531585"></link>
            <id>https://tamilwin.com/article/protest-continues-for-the-20th-week-1788531585</id>
            <summary type="text">வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ &quot; பங்களா முன்பாக போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(04.09.2026) 20ஆவது வாரமாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது. </p><h2>


20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்</h2><p>
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த
மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில்
இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக
காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2198f1e0-b3bc-4f1d-a326-0b6932e9aa71/26-6a9ad3df85a15.webp' /></p><p> 

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள்
போராடி வரும் நிலையில், காணிகள் விடுவிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
</p><p>
இதனால் தமது காணிகளுக்கான தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் போராட்டத்தை தொடர்ந்து வரும் உரிமையாளர்கள், இன்றும் கூடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ee2b9f-98fa-452f-947b-eae4e4883b0e/26-6a9ad3e07bc0f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40473b3d-eb21-4072-840e-0dbfae5c23f6/26-6a9ad3e147983.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T14:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பற்ற குழியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு - கொந்தளிப்பில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-old-boy-dies-after-falling-into-unprotected-pit-1788530988"></link>
            <id>https://tamilwin.com/article/6-old-boy-dies-after-falling-into-unprotected-pit-1788530988</id>
            <summary type="text">மட்டக்களப்பு - நெடியமடு பகுதியில், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்காக தண்ணீர் எடுப்பதற்கு தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - நெடியமடு பகுதியில், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்காக தண்ணீர் எடுப்பதற்கு தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று (04.09.2026) இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>

பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட குழி</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6ஆம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்ப்புறமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்குச் செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான பணிகளை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/595fd3db-e750-4556-99b7-ff39aa833308/26-6a9ad1b1d16c3.webp' /></p><p>
</p><p>
இதன்போது, தண்ணீர் எடுப்பதற்காக வேலிக்கு அருகில் பாரிய குழியொன்று தோண்டப்பட்டிருந்ததுடன், அதனைச் சுற்றி எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகில் நடந்து சென்றபோது, அங்கு தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்துள்ளார்.
</p><h2>

6 வயது சிறுவன் உயிரிழப்பு</h2><p>
இதனையடுத்து, சிறுவனை மீட்டெடுத்து கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலம் அமைக்கும் பணிகளின்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்ததே இந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd3c0bf-1a1b-41b1-82d5-fe0b0ab030d9/26-6a9ad1b2d80ec.webp' /></p><p>
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை பார்வையிட்டு நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
மேலும், சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
பாலம் அமைக்கும் பணிகளின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T14:12:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-of-vadamarachchi-pushing-government-bus-1788527863"></link>
            <id>https://tamilwin.com/article/people-of-vadamarachchi-pushing-government-bus-1788527863</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நாளாந்தம் காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும்
அரச பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து தள்ளி
இயக்கும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><p>மக்கள் தள்ளி பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு இயக்குவது வழக்கம்.</p><h2>மக்கள் கோரிக்கை</h2><p>&nbsp;இன்று(4) காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு பொதுமக்கள்
குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை. </p><p>பின்பு
பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க
முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை.இதனால் இன்று காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலர் பாதிப்படைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4c6a222-caa9-469a-8ca8-d4c08f5e91c5/26-6a9acc1249fb1.webp' /></p><p>வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான, வடமராட்சி கிழக்கு பகுதிக்கு
சிறந்த தரமான பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனாலும் மக்களின்
கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை.</p><p>
இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல
தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட செய்யுமாறு வடமராட்ச்சி கிழக்கு மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் கை விலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்புகைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.&amp;nbsp;
இலஞ்சம் அல்லது ஊழல் குற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய இணைப்பு</span></h2><p>கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.&nbsp;</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (04) கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cUkg9d_I4NU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஆறாம் இணைப்பு&nbsp;</span></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c19b09-5d00-4729-a10f-765cc4f50a91/26-6a9acc3466afd.webp' /></p><p>எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்சவிடம் ஐந்து மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p>

இதனையடுத்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa77e911-60bc-4097-b2b5-3821f0bbe236/26-6a9acc354e116.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஐந்தாம் இணைப்பு&nbsp;</span></p><p>இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நான்காம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>

இதனையடுத்து பல மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lUtyjGkX0qA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSYHOvwD5kc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0103a55-c52f-43c9-bc3c-0cb3e650673b/26-6a9a99952ad37.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலுக்கு சென்ற தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195"></link>
            <id>https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கிரான்குளம் கடலில் விபத்துக்குள்ளான தோணியிலிருந்து பாரிய அலையில் சிக்கிய உயிரிழந்த&amp;nbsp;இருவரில் மற்றைய நபரின் சடலமும் மீட்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>கிரான்குளம் கடலில் விபத்துக்குள்ளான தோணியிலிருந்து பாரிய அலையில் சிக்கிய உயிரிழந்த&nbsp;இருவரில் மற்றைய நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு<span style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;</span></h2><p>மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்று(4.9.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கடற்றொழில் சங்க தலைவர் மற்றும் விஷ்ணு கோவில் வீதியைச்
சேர்ந்த 48 வயதுடைய நபர் இருவருமே உயிரிழந்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

குறித்த கடல் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 11.00 மணியளவில் மீன்
பிடிப்பதற்கு தோணி ஒன்றில் 3 பேர் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும்
நீரில் மூழ்கினர்.
</p><p>
இதில் ஒருவர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.</p><p>இந்நிலையில், நீரில் மூழ்கிய&nbsp;மற்றொருவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:26:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114"></link>
            <id>https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114</id>
            <summary type="text">புதிய இணைப்புஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் செல்ல அனுமதிக்குமாற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p>
இலஞ்ச ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு&nbsp;</h2><p>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
 

பொல்கொல்ல மகிந்த ராஜபக்ச மண்டபத்திற்காக நாற்காலிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்காக தகுதியான முறையில் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கி 79 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee9e768-9f18-44da-a4ef-df78de657801/26-6a9ab058e662c.webp' />&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></h2><h2> </h2><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (04) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:07:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்: இராணுவச் சாதனங்களில் விளம்பரக் கண்காணிப்பு கருவிகளை முடக்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-disabled-advertising-tracking-tools-on-military-1788525194"></link>
            <id>https://tamilwin.com/article/us-disabled-advertising-tracking-tools-on-military-1788525194</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் இராணுவப் பயன்பாட்டிலுள்ள
கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் காணப்பட்ட விளம்பரக் கண்காணிப்புக் கருவிகளை
அமெரிக்க இராணுவம் முடக்கியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் இராணுவப் பயன்பாட்டிலுள்ள
கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் காணப்பட்ட விளம்பரக் கண்காணிப்புக் கருவிகளை
அமெரிக்க இராணுவம் முடக்கியுள்ளது.
</p><p>&nbsp;மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் நடமாட்டங்களை விளம்பர நிறுவனங்கள் மூலம் திரட்டப்படும் இருப்பிடத் தரவுகள் வழியே எதிரிகள் கண்காணிப்பதாக எழுந்த தகவல்களை அடுத்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
குறித்த விளம்பர அடையாளக் குறியீடுகள் மூலம் திரட்டப்படும் தனிநபர் தரவுகள்
சந்தையில் விற்கப்படுவதால், போர் மண்டலங்களில் உள்ள படைவீரர்களின்
இருப்பிடத்தை எதிரிநாடுகள் மிக இலகுவாகக் கண்டறியும் ஆபத்து உருவாகியுள்ளதாகக்
கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
இதன் காரணமாகவே அமெரிக்க விமானப்படை, கடற்படை மற்றும் சிறப்புப் படைகள் தமது
சாதனங்களில் இத்தகைய கண்காணிப்பு அம்சங்களை அண்மைக் காலத்தில் முடக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e29ebe57-8faf-4d24-b692-73aa08828b34/26-6a9abe212182e.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் அச்சுறுத்தலை முழுமையாகத்
தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க நாடாளுமன்ற
உறுப்பினர்கள், படைவீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில்
பென்டகன் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kVF3yFtml18" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:03:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைபர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்! பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-takes-action-to-block-illegal-websites-1788523754"></link>
            <id>https://tamilwin.com/article/government-takes-action-to-block-illegal-websites-1788523754</id>
            <summary type="text">பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் சேவையின் திறனை அதிகரிப்பது தொடர்பில் பல விடயங்கள் குறித்து பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் சேவையின் திறனை அதிகரிப்பது தொடர்பில் பல விடயங்கள் குறித்து பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.</p><h2>விசேட கவனம்</h2><p>
</p><p>

சைபர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இக்குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் இதர சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையதளங்களை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>

சைபர் குற்றங்கள் தொடர்பில் நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.
</p><p>

குறித்த நாடுகளின் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து அந்த வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8472b6e4-be67-419b-b7ee-9f859b523769/26-6a9ac121d479c.webp' /></p><h2>ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை</h2><p>
</p><p>

சைபர் குற்றப் புலனாய்வுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அறிவைக் கொண்ட மனித வளத்தைப் பலப்படுத்துவதற்காக மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
</p><p>

மேலும், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு களப் பயிற்சி மற்றும் தேவையான வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
</p><p>

அத்துடன், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் திறம்பட செய்வதற்கு புதிய தொழில்நுட்ப அமைப்புகளை அறிமுகப்படுத்துவது மற்றும் காலத்திற்கு ஏற்ற வகையில் செயல்படக்கூடிய மத்திய அமைப்பு ஒன்றை நிறுவுவதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் பரபரப்புக்கு மத்தியில் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-went-to-the-court-to-see-namala-1788525561"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-went-to-the-court-to-see-namala-1788525561</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், கொழும்பு நீதிமன்றத்திற்கு பதற்றத்துடன், அர்ச்சுனா எம்.பி வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், கொழும்பு நீதிமன்றத்திற்கு பதற்றத்துடன், அர்ச்சுனா எம்.பி வருகை தந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (04.09.2026) காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்சவிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.</p><h2>நீதிமன்றம் வரை வந்த அர்ச்சுனா</h2><p>

இதனையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p>

இதன்போது, நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/213932a0-bf30-4f1e-9c3e-cfa48d3f053a/26-6a9abf1511e86.webp' /></p><p>
</p><p>

இந்த நிலையில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அவசர அவசரமாக சென்ற காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.</p><p></p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1605101454564871%2F&show_text=true&width=380&t=0" width="380" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-04T12:48:16+00:00</updated>
        </entry>
    </feed>
