<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-08T16:52:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை அடிப்படையாக கொண்டு இன முறுகலை ஏற்படுத்தி சதி - களமிறக்கப்படும் கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/confusion-in-the-south-over-occupied-road-1786205072"></link>
            <id>https://tamilwin.com/article/confusion-in-the-south-over-occupied-road-1786205072</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில்
குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில்
குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதனையடுத்து பவானி வீதி விடுவிப்புக்கு தடைபோட முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக
அறிவித்துள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற&nbsp;தீர்ப்பு</h2><p> </p><p>

இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, வட்ஸ்அப்
குழுக்கள் உருவாக்கப்பட்டு பிழையான தகவல்களைக் கூறி தெற்கில் இனவாதம்
பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58672393-344c-4c73-bf0b-f2fd8fb64ef8/26-6a775651bdbe2.webp' /></p><p>இவ்வாறாக போலித் தகவல்களைப் பரப்பி ஆட்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில்,
போராட்டக்காரர்கள் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து
வரப்படுகின்றனர்.</p><p>

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளையும், வீதியையும்
விடுவித்தால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படும் என நீதிமன்றத்தை நாடும்
பொலிஸார், இத்தகைய அப்பட்டமான குழப்பச் செயல்கள் தொடர்பில் அமைதியாக உள்ளமை பல
தரப்பினரிடமும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-08T16:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய ஊடுருவல் தொடர்பில் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-fishermen-encroachment-rises-in-south-alam-1786204426"></link>
            <id>https://tamilwin.com/article/indian-fishermen-encroachment-rises-in-south-alam-1786204426</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தற்போது வட பகுதியை தாண்டி தென்
பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது இவர்களின் வருகையை கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தற்போது வட பகுதியை தாண்டி தென்
பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது இவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம்
தெரிவித்துள்ளார்.
</p><p>
மன்னாரில் இன்று(08.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இந்திய கடற்றொழிலாளர்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி கடற்றொழிலில் 
ஈடுபடுகின்ற விடயங்கள் இன்று வடபகுதியில் பூதாகரமான விடயமாக பார்க்கப்படுகிறது.
</p><p>
கடந்த காலங்களில் இவ்வாறு இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை தொடர்ந்தும் இடம்பெற்றிருந்த போது
 நாங்கள் அதனை கண்டித்து போராட்டங்களை நடத்தி அவர்களின் வருகையை கட்டுப்படுத்தி
இருந்தோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7af28595-0afb-406e-92e5-9bc6c86f4fb6/26-6a7752c33b1af.webp' /></p><p>ஆனால், இந்த தடைக்காலம் முடிந்து ஆறாம் மாதம் முதல் அவர்களின் வருகை மிக
மிஞ்சியதாக காணப்படுவதுடன் இலங்கை கடல் எல்லையாக இருக்கின்ற Sea of Sri Lanka கடல்
பகுதிக்குள் அவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது.
</p><p>
இது தொடர்பாக அண்மையிலே தீவக கடற்றொழிலாளர்கள் பெரிய அளவிலான கடல் வழிப்
போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்கள்.
</p><p>
இருந்த போதிலும் இந்த போராட்டம் எந்த அளவுக்கு அவர்களால் செவிமடுக்க
பட்டிருக்கின்றது என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T16:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் - கொழும்புக்கு இடையில் மேம்படுத்தப்பட்ட நேரடி விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/edelweiss-air-increases-colombo-flights-1786156141"></link>
            <id>https://tamilwin.com/article/edelweiss-air-increases-colombo-flights-1786156141</id>
            <summary type="text">சுவிட்ஸர்லாந்தின் லீஷர் விமான சேவையான எடல்வெய்ஸ், சூரிச் - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்ஸர்லாந்தின் லீஷர் விமான சேவையான எடல்வெய்ஸ், சூரிச் - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. </p><p>

 2026 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான குளிர்கால அட்டவணையின் போது வாரத்திற்கு 3 விமான சேவைகளாக விரிவுபடுத்தவுள்ளது.</p><p> இது கடந்த குளிர்காலப் பருவத்தில் வழங்கப்பட்ட வாரத்திற்கு 2 முறை என்ற சேவையிலிருந்து அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><b> பருவகாலத்தின் முதல் விமானம்</b></h2><p>அதற்கமைய, மேம்படுத்தப்பட்ட அட்டவணையானது சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை இடையேயான பயணத்திற்கான அதிகரித்துவரும் தேவையை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c536398-8284-4314-bda9-407b3e70725f/26-6a76b2387061f.webp' /></p><p>பருவகாலத்தின் முதல் விமானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று சூரிச்சிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், இந்த சேவைகள் 2027ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சூரிச்சிலிருந்து கொழும்பிற்கு திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.</p><p> </p><h3><b>விமான சேவைகள்</b></h3><p>கொழும்பில் இருந்து சூரிச்சுக்கான விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994d18c5-0c91-46e2-bf3c-c4ea0d0362b6/26-6a76b23920486.webp' /></p><p>இந்த அதிகரிப்பு இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான வான்வழி இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அத்துடன், குளிர்காலப் பயணப் பருவத்தில் பயணிகளுக்குக் கூடுதல் பயணத் தெரிவுகளையும் இது வழங்கும். </p><p>மேலும், லுப்தான்சா குழுமத்தின் மூலம் ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல இடங்களுக்குச் செல்வதற்கான வசதியான இணைப்புகளையும் சூரிச் விமான நிலையம்&nbsp; வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-08-08T15:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-trying-supply-drugs-inmates-magazine-prison-1786197000"></link>
            <id>https://tamilwin.com/article/two-trying-supply-drugs-inmates-magazine-prison-1786197000</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே இன்று பிற்பகல் (08) நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்கள் அந்த இடத்தில் சிறைக்குள் 02 பொட்டலங்களை வீச முயன்றபோது, ​​பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்&nbsp;</h2><p>
</p><p>
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 02 பொட்டலங்களை சோதனையிட்ட போது, ​​22 கிராம் மற்றும் 250 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருள், 02 மில்லிகிராம் ஆஷ் என்ற போதைப்பொருள், 02 தொலைபேசி மின்னேற்றிகள், 02 ஜோடி காதணிகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய கைபேசிகள் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b38f9024-7b63-44cd-b14f-4ee71af95e98/26-6a77374253419.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 29 வயதுடையவர்கள் என்றும், கொம்பா 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை (09) மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர். மேலும், பொரளை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:26:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் காதலர்கள் போன்று இளம் தம்பதியின் அதிர்ச்சி செயல் - பெற்றோர்களே எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1786196085"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1786196085</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியில் ஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து குறுக்கு வழிகளில் பாழடைந்த இடங்களில் காதலர்கள் போன்று தங்கியிருந்து,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியில் ஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து குறுக்கு வழிகளில் பாழடைந்த இடங்களில் காதலர்கள் போன்று தங்கியிருந்து, நீண்ட காலமாக பாரியளவில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்கள் 90 போதை மாத்திரைகளுடன் ஹோமாகம கொட்டாவ போதை மாத்திரைகள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்கள் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய தம்பதியினராகும்.</p><p></p><p> </p><h2><b>

 போதை மாத்திரை விற்பனை&nbsp;&nbsp;</b></h2><p>பாழடைந்த இடங்களை தெரிவு செய்து காதலர்கள் போன்ற பாவனையில் போதை மாத்திரை விற்பனை செய்யும் வலையமைப்பு ஒன்று செயற்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81de2f82-7397-4ea5-9459-46979798e9a9/26-6a77354f3c661.webp' /></p><p>அதற்கமைய செயற்பட்ட அதிகாரிகள் குழுவினர், பாதுக்க மாவத்தகம பாடசாலை வீதியில் தந்திரோபாய நபர் ஒருவர் மூலம் 1000 ரூபா பணத்திற்கு 10 போதை மாத்திரைகள் அடங்கிய அட்டை ஒன்றை கொள்வனவு செய்துள்ளனர். </p><p>

அதன் பின்னர் அவை போதை மாத்திரை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், வழங்கப்பட்ட சைகையின் அடிப்படையில் அருகில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஏனைய அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த தம்பதியை கைது செய்துள்ளனர்.</p><p>

சந்தேகநபர்களைச் பரிசோதனை செய்தபோது, போதை மாத்திரை விற்பனை மூலம் பெறப்பட்ட 1000 ரூபா பணத்திற்கு மேலதிகமாக, அவர்கள் வசமிருந்த மேலும் 80 போதை மாத்திரைகளும், வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><h3><b>

பெற்றோர்களே எச்சரிக்கை </b></h3><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்பும் போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் மீகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a993ba1-c958-4ba3-ad87-690e6899a851/26-6a7735cf5e0d8.webp' /></p><p>இந்தத் தம்பதியினர் தங்களது வாழ்வாதாரத்திற்கான நீண்ட காலமாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்கள் கூட இவர்களிடமிருந்து போதை மாத்திரைகளைக் கொள்வனவு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

சந்தேகம் வராத வகையில் பாழடைந்த இடங்களில் காதலர்கள் போன்று தங்கியிருந்து இவர்கள் இந்த வர்த்தகத்தை நடத்தி வந்துள்ளனர்.
</p><p>
இவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து பாடசாலை மாணவர்களை அவர்களின் பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-08T15:24:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி-கெடானியா விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது இடைநிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flights-to-italy-s-catania-airport-suspended-1786202479"></link>
            <id>https://tamilwin.com/article/flights-to-italy-s-catania-airport-suspended-1786202479</id>
            <summary type="text">உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான இத்தாலியின் எட்னா மீண்டும்
சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள
கெடானியா சர்வதேச விமான நிலையத்திற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான இத்தாலியின் எட்னா மீண்டும்
சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள
கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சுற்றுலாப் பயணிகளின் பிரதான மையமாக விளங்கும் சிசிலியின் கெடானியா பகுதி
வான்வெளியில் எரிமலைச் சாம்பல் படர்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி வான்வெளி
மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளது.</p><p>

இதன்காரணமாக கெடானியா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களின்
வருகையும் உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.00 மணி வரை இடைநிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே விமான நிலையத்தில் உள்ள விமானங்களின்
புறப்பாடுகள் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.</p><p></p><h2>புதிய கட்டுப்பாடுகள்</h2><p>

ஐரோப்பாவின் உயரமான மற்றும் செயலில் உள்ள எட்னா எரிமலை தொடர்ந்து சீற்றமடைந்து
வருவதால், கெடானியா பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56bbf871-e1a4-4f15-b3bb-dcefedebaf42/26-6a774971a72e2.webp' /></p><p>

எரிமலையின் லாவா குழம்பைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும்
வழிகாட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:21:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பில் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slight-increase-official-foreign-reserves-in-july-1786194269"></link>
            <id>https://tamilwin.com/article/slight-increase-official-foreign-reserves-in-july-1786194269</id>
            <summary type="text">இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, ஜூலை மாதத்தில் வெளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, ஜூலை மாதத்தில் வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p> </p><p>அதற்கமைய இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 2.017% சிறிய உயர்வாகும்.</p><p></p><h2>வெளிநாட்டு கையிருப்பு</h2><p> </p><p>

கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6,458 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. </p><p>

அதன்படி, 133 மில்லியன் டொலர்கள் அதிகரிப்பைக் காட்டி, கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் மொத்தக் கையிருப்பாக 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/926a9883-6bb8-4b70-9ba2-65c1996b033d/26-6a772ef12146f.webp' /></p><p> </p><p>

இதனிடையே, கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் தங்கக் கையிருப்பும் 1 மில்லியன் டொலரால் அதிகரித்துள்ளது. </p><p>

ஜூன் மாதத்தில் தங்கக் கையிருப்பாக 191 மில்லியன் டொலர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அது 192 மில்லியன் டொலர்களாக 1 மில்லியனால் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T13:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை வன்முறைகள் குறித்து விசாரணைகள் தீவிரம்.. பிரதியமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-riots-deputy-minister-pradeep-speech-1786192910"></link>
            <id>https://tamilwin.com/article/prison-riots-deputy-minister-pradeep-speech-1786192910</id>
            <summary type="text">சிறைச்சாலை வன்முறை மற்றும் அரசாங்க நடவடிக்கை நாட்டில் அண்மையில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து
அரசாங்கம் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை வன்முறை மற்றும் அரசாங்க நடவடிக்கை நாட்டில் அண்மையில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து
அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என&nbsp;பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் அவர், "கடந்த காலங்களில் இலங்கை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு முக்கிய மத்தியஸ்த
நிலையமாக விளங்கியது. தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருளை
முழுமையாக ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள்
தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.</p><h2>உண்மைகள் வெளிச்சம்..&nbsp;</h2><p>போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இடையே நெருங்கிய
தொடர்பு இருப்பது தற்போதைய சம்பவங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31114ec9-779b-4b54-aead-125c52e42c5f/26-6a772ae24aaf8.webp' /></p><p>
</p><p>போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும்
கைதிகளைத் தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர்.</p><p>சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில்
உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்கார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்று அவசர கால நடவடிக்கைகள்
குறித்து ஆலோசித்தனர்.</p><p>சிறைச்சாலை அமைதியின்மைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டின்
அமைதியைக் குலைக்க முயலும் நபர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T13:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேங்கொக் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bangkok-shooting-death-toll-rises-1786193309"></link>
            <id>https://tamilwin.com/article/bangkok-shooting-death-toll-rises-1786193309</id>
            <summary type="text">தாய்லாந்தின்- பேங்கொக்கிற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றிலும் மற்றும்
வீடு ஒன்றிலும் மாணவன் ஒருவனால் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின்- பேங்கொக்கிற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றிலும் மற்றும்
வீடு ஒன்றிலும் மாணவன் ஒருவனால் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
பேங்கொக்கின் வடமேற்கே உள்ள நொந்தபுரி மாகாணத்தின் 'டெப்சிரின் நொந்தபுரி'
பாடசாலையில் வெள்ளிக்கிழமை காலை வேளையில் இந்தத் துப்பாக்கிச் சூடு
நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதலை நடத்திய 14 வயது மாணவன், பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் தனது
வீட்டில் வைத்து தனது தாத்தா மற்றும் பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக்
கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p>
பின்னர் பாடசாலைக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பாடசாலை
ஊழியர்கள் உயிரிழந்ததுடன், தாக்குதலை நடத்திய மாணவனும் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03c83e5-0084-4fce-9d8a-32893dce310e/26-6a77289326ac8.webp' /></p><p>
இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுமி
சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்ததை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 9
ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 16 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை
பெற்று வருவதுடன், அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>
</p><p>
இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அம்மாணவனின் தாத்தாவுக்கு
சொந்தமான சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஆயுதம் எனத் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7015e90d-2bf8-4a7f-aa7e-e28d28253d3e/26-6a772893cd64b.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவத்தையடுத்து தாய்லாந்தில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை
மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அனுடின் சர்ன்விராகுல்
உறுதியளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T13:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதியில் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/blockad-strait-of-hormuz-iraq-oil-exports-drop-1786192475"></link>
            <id>https://tamilwin.com/article/blockad-strait-of-hormuz-iraq-oil-exports-drop-1786192475</id>
            <summary type="text">அமெரிக்க - இஸ்ரேலிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ச் சூழல் காரணமாக
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஈராக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க - இஸ்ரேலிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ச் சூழல் காரணமாக
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஈராக்கின்
மசகு எண்ணெய் ஏற்றுமதி 75 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டின்
எண்ணெய் அமைச்சர் பாசிம் முகமது குதைர் தெரிவித்துள்ளார்.
</p><p>போர் தீவிரமடைவதற்கு முன்னர் ஈராக் நாளொன்றுக்கு சராசரியாக 3.4 மில்லியன்
பெரல் மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர்,
தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டின் எண்ணெய் உற்பத்தியும்
ஏற்றுமதியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தற்போது ஈராக் நாளொன்றுக்கு 2.7 மில்லியன் பெரல் எண்ணெய்யை மட்டுமே உற்பத்தி
செய்வதாகவும், அதில் 1.5 மில்லியன் முதல் 1.7 மில்லியன் பேரல் வரையே ஏற்றுமதி
செய்ய முடிவதாகவும் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் ஏற்றுமதிப் பாதைகளை
பல்வகைப்படுத்துவதற்கான மாற்று தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது அவசியமானது
என்றும் வலியுறுத்தினார்.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
அத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியே ஈராக்கிய எண்ணெய்யை பாதுகாப்பாக ஏற்றுமதி
செய்ய அனுமதிப்பது தொடர்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு
வந்த போதிலும், அவை இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவர்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe45b51-54f1-40f1-b14e-deb9e5d27c17/26-6a77225d3b035.webp' /></p><p>
</p><p>
மேலும், ஈராக்கில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்கள் மீதான எந்தவொரு
தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், அத்தகைய
தாக்குதல்களால் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு உரிய நஷ்டஈடு
வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T12:41:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று! கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strong-winds-at-70-km-warning-issued-to-fishermen-1786190261"></link>
            <id>https://tamilwin.com/article/strong-winds-at-70-km-warning-issued-to-fishermen-1786190261</id>
            <summary type="text">நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08.8.2026) அறிவித்துள்ளதுமாத்தறையிலிருந்து பொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08.8.2026) அறிவித்துள்ளது</p><p>மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p> 

ஏனைய பகுதிகளிலிருந்து புறப்படும் படகுகள் இந்த ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ebfc62-3ec4-4073-a267-0b52e5d3d496/26-6a771c528dbd8.webp' /></p><p> 

இதன் காரணமாக அப்பகுதிகளின் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படக்கூடும் என்பதால், கரையோர கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு அப்பகுதிகள் மிகவும் ஆபத்தானவை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதேவேளை, வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து தீவிர அவதானம் செலுத்தி, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுமாறு அனைத்து கடற்றொழில் சமூகத்தினரிடமும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு கோரியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T12:19:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையிலிருந்து நிதி.. வெளியான அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-srilanka-1786182152"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-srilanka-1786182152</id>
            <summary type="text">நாட்டில் ஒரு அசாதாரண நிலைமையை தோற்றுவிப்பதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருவதாக புலனாய்வு வலையொளித் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் ஒரு அசாதாரண நிலைமையை தோற்றுவிப்பதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருவதாக புலனாய்வு வலையொளித் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையின் இராணுவத்தின் இரகசியக் கணக்கிலிருந்து (Military Secret Fund) தான் பணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளில் இருந்து கிடைக்கவில்லை என முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சூல கொடித்துவக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.
</p><p>இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "இப்போது இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் மட்டக்களப்பில் இருந்த இராணுவ வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், கைது செய்யப்படவிருக்கிறார்கள். </p><h2>

</h2><p>&nbsp;</p><h2>கைது செய்யப்படவிருக்கும் இராணுவத்தினர்</h2><p>அவர்களைக் கைது செய்வதை எப்படியாவது தடுப்பதற்காக நாட்டிற்குள் ஒரு கொந்தளிப்பை (unrest) உருவாக்கப் பார்க்கிறார்கள். </p><p>இந்த அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்று நான் சில மாதங்களுக்கு முன்பே கூறினேன் என்று இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.
</p><p>லண்டனில் இருந்து இயங்கும் தனது அமைப்புக்கு கிடைத்த இரகசிய தகவல்களை கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
</p><p>இப்போது சிறைச்சாலைகளைச் சுற்றிப் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இன்னும் இரு நாட்களுக்குள் இராணுவ வீரர்களை அரசு தாக்குவதான ஒரு போர்வையிலான எதிர்ப்புகள் கிளம்பவுள்ளன. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3db79620-f481-4bcd-835d-d14aa8e8bbb6/26-6a76fa0a412a8.webp' /></p><p>அரசாங்கம் இப்போது இதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். கொழும்பு, அநுராதபுரம், கண்டி, குருநாகல் போன்ற முக்கிய நகரங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் அல்லது கொந்தளிப்புகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள். </p><p>இந்த அசம்பாவிதங்களைச் செய்யப் போவது, இராணுவத்தில் கைது செய்யப்படவிருக்கும் நபர்களைக் கைது செய்யாமல் தடுப்பதற்காகவே ஆகும். </p><p>
இவர்கள் இராணுவச் சிப்பாய்கள் அல்ல. இவர்கள் இராணுவச் சீருடையைப் போட்டுக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை செய்த, பயங்கரவாதிகள். </p><p>குண்டு வெடிப்பதற்கு களத்தை அமைத்துக் கொடுத்த சுரேஷ் சலேவின் ஆட்களாவர்.
அத்தோடு பௌத்த பிக்குகளும் களத்தில் இறங்கி போராட தயாராகி வருகின்றனர்.
</p><p>ஒருவர் இராணுவ வீரராக இருக்கலாம். ஆனால் ஒரு கொலைகாரனால் இராணுவ வீரராக முடியாது. ஒரு இராணுவ வீரர் எந்த நேரத்திலும் ஒரு கொலைகாரனாக மாற முடியும், ஆனால் ஒரு கொலைகாரனால் ஒருபோதும் உண்மையான இராணுவ வீரராக முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பவானி வீதி குறித்து மற்றுமோர் வழக்கை கண்டிப்புடன் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-regarding-bhavani-road-law-and-order-1786186587"></link>
            <id>https://tamilwin.com/article/case-regarding-bhavani-road-law-and-order-1786186587</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை
விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி பொலிஸாரின் சார்பில் தெல்லிப்பழைப்
பொலிஸார் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை
விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி பொலிஸாரின் சார்பில் தெல்லிப்பழைப்
பொலிஸார் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.</p><p>

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை தவிசாளர்
சுகிர்தன் நிலஅளவைத் திணைக்களத்தினரிடம் அண்மையில் அடையாளம்
காட்டியிருந்தார். </p><p>இதையடுத்து, அந்த வீதியை விடுவிக்க வலி வடக்குப் பிரதேசபை
தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p> </p><p>இதற்கு எதிராகப் பலாலிப் பொலிஸார்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தநிலையில், அந்தவழக்கை விசாரித்த
நீதிமன்றம், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து,
'வலி வடக்கு பிரதேசசபை மேற்கொள்ளும் வீதி விடுவிப்பு முயற்சிகளை பொது
அமைதிக்குப் பங்கமான செயற்பாடு என்று கருதித் தடைபோட முடியாது' என
நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce9c3d7-c340-4c51-9f42-2c603887c54e/26-6a770e9ab413d.webp' /></p><p>

இதனால் பிரதேசசபையால் எப்போது வேண்டுமானாலும் வீதியை விடுவிக்கும் நிலைமை
ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடை
விதிக்குமாறு அரசியலமைப்பின் 66ஆம் பிரிவின் கீழ் தெல்லிப்பழைப் பொலிஸார்
நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த
வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.</p><p>

பவானி வீதி தொடர்பில் இதற்கு மேல் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் மேல்
நீதிமன்றத்துக்குச் செல்லுமாறும் பொலிஸாரிடம் நீதிமன்றம் கண்டிப்புடன்
கூறியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[101ஆவது நாளாக தொடரும் அகழ்வு பணிகள்.. செம்மணியில் 515 என்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-515-skeletons-found-1786187758"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-515-skeletons-found-1786187758</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் (08.08.2026) 101ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன.நீதிமன்ற அனுமதி

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் (08.08.2026) 101ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன.</p><h2>நீதிமன்ற அனுமதி</h2><p>
</p><p>
இதுவரையிலான 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 515 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 506 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09c50ac2-9494-4987-84be-74e1869bb80f/26-6a7711c61ea83.webp' /></p><p>
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், 47ஆவது நாளான நேற்றைய தினம் 08 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

அதேவேளை, எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் இருந்து
மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கடல் வழியாக கடத்த இருந்த கஞ்சா பறிமுதல்: கடத்தல்காரர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cannabis-being-smuggled-to-sri-lanka-by-sea-seized-1786186289"></link>
            <id>https://tamilwin.com/article/cannabis-being-smuggled-to-sri-lanka-by-sea-seized-1786186289</id>
            <summary type="text">இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வானில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா இன்றைய தினம் (08.08.2026) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வானில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா இன்றைய தினம் (08.08.2026) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த
ஆண்டு இதுவரை 670 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தல்காரர்களின்
வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ்
தெரிவித்துள்ளார்.</p><p>
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உட்கோட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த
வான் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 297 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொட்டலங்கள் இருந்தது
தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4606070f-3eba-4f0a-99d3-8fb54563d0be/26-6a77112943b4e.webp' /></p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>
</p><p>
இதையடுத்து வானுடன் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த பொலிஸார் அங்கு நின்று
கொண்டிருந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த
தினேஷ் மற்றும் பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்த களஞ்சீஸ்வரன் ஆகிய இருவரையும்
கைது செய்து ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்து விசாரணை
மேற்கொண்டனர்.
</p><p>
பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும்
ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இவை பிரப்பன்வலசை கடற்கரையில்
இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3411430-de15-4d51-ab17-f288ec4d2c22/26-6a77112a51b71.webp' /></p><p>
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரை தேடும் பணி&nbsp; தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ் பார்வையிட்டார்.</p><h2>கஞ்சா பறிமுதல்</h2><p>

பின்னர் செய்தியாளிடம் பேசியவர், பிரப்பன்வலசை கடற்கரையில் 297 கிலோகிராம் கஞ்சா
பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில்
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8fa30a-ef0e-436f-8698-dcb382418cbf/26-6a77112b2b375.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டு இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 212 போதைப்பொருள் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டு 670 கிலோகிராம் கஞ்சா மற்றும் ஒரு கிலோகிராம் 800 கிராம் மெத்தப்பெட்டமன்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்கள்
முடக்கப்பட்டு வருவதுடன் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1fbf10e-31e0-4d2a-b8bd-9e53b755099d/26-6a77112bf36b4.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதாபிமானத்துடன் பின்வாங்கிய விடயங்களை கோழைத்தனம் என நினைக்காதீர்! நாமலின் அச்சுறுத்தும் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-aragalaya-in-sri-lanka-1786187244"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-aragalaya-in-sri-lanka-1786187244</id>
            <summary type="text">&amp;nbsp; நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். மக்களின் நலன் கருதியே சில விடயங்களில் நாம் ஓரடி பின்வாங்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். மக்களின் நலன் கருதியே சில விடயங்களில் நாம் ஓரடி பின்வாங்கினோம்.</p><p>அவை மனிதாபிமானத்துடன் எதிர்கொண்டவை கோழைத்தனமாகக் கருத வேண்டாம் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p><h2>
</h2><p></p><h2>பின்வாங்கிய சம்பவம்</h2><p>அரகலய போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போராட்டக்காரர்களுக்கு கை வைக்கவில்லை. </p><p>கடந்த நாட்களில் இந்தியாவில் எதிர்கொண்ட விதத்தை நாம் சமூக ஊடகங்களில் பார்த்தோம். பங்களாதேஷ் -நேபாளம் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்தோம்.
நாம் அரகலய போராட்டத்தில் ஓரடி பின்வாங்கினோம்.</p><p>உயிர்களைப் பறித்து, பிள்ளைகளைக் கொன்று, அந்தப் உடல்கள் மீது அரசாங்கத்தைப் பாதுகாக்க முனையவில்லை செய்யவும் மாட்டோம். </p><p>நாம் மனிதாபிமானத்தோடு பிரச்சினையை எதிர்கொண்டதை கோழைத்தனமாகப் பார்க்க வேண்டாம். கோழைத்தனமாகக் கருத வேண்டாம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f31e8f9-7ae5-4681-8905-22739ce7c4f9/26-6a770dee79aba.webp' /></p><p>நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். பயங்கரவாதத்திலிருந்து மீட்டோம்.</p><p>கோவிட்-19 தொற்றுநோயின் போது, குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் இந்த நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.
</p><p>அரகலய போராட்டத்தின் போது இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கானோரைக் படுகொலை செய்து அரசாங்கத்தைக் காப்பாற்ற முயற்சிக்கும் வாய்ப்பு இருந்தது. </p><p>நாம் அப்படிச் செய்திருந்தால் இன்று நாமல் ராஜபக்ச இங்கே நிற்கும் சூழ்நிலை இல்லாமல் போயிருக்கலாம். </p><p>
மக்களின் பக்கத்தில் நின்று, ஒரு சமூக பேரழிவிலிருந்து நாட்டின் இளைஞர்களை மீட்க நாம் ஓரடி பின்வாங்கியதை கோழைத்தனம் என்று அரசாங்கமும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களும் நினைத்தால், அவர்களுக்குத் தவறிவிட்டது என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:12:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இரவு நேரங்களில் மருத்துவர்களின் பரிதாப நிலை - கவலையில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctors-sleeping-the-vehicles-1786169153"></link>
            <id>https://tamilwin.com/article/doctors-sleeping-the-vehicles-1786169153</id>
            <summary type="text">இலங்கையில பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இரவு நேரங்களில் தமது வாகனங்களிலேயே உறங்குகின்றமை தொடர்பில் தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இரவு நேரங்களில் தமது வாகனங்களிலேயே உறங்குகின்றமை தொடர்பில் தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

தங்குமிடப் பிரச்சினைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சில மருத்துவர்கள் அவ்வாறு செயற்படுவது தொடர்பில் தனக்கும் தகவல்கள் கிடைத்துள்ளதாக&nbsp; சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>அரசாங்கம் முன்னுரிமை</b></h2><p> 

இதுவொரு கவலையான நிலைமை என அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவர்களுக்கான விடுதி மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac29f30c-8384-4b31-ac58-d264b5f25aba/26-6a770c31ba11f.webp' /></p><p>வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள சில யோசனைகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். </p><p>

அனைத்து மருத்துவர்களும் சேவையாற்றுவதற்கு பொருத்தமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.</p><p> </p><h3><b>

சுகாதார அமைச்சு</b></h3><p>இதேவேளை கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,791 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a057590a-c0c0-46f4-807a-4736da88983d/26-6a770c326c8e5.webp' /></p><p>இது தவிர, 1,491 மருத்துவர்கள் சம்பளமற்ற விடுப்பில் இருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-08T11:00:59+00:00</updated>
        </entry>
    </feed>
