<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-01T10:36:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரிக்கு நெருக்கமானவரால் ஏழு தடவை மறைக்கப்பட்ட இரகசிய உளவுத்துறை தகவல்..! ஹேமசிறியின் உருக்கமான வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-row-convict-hemasiri-s-confessions-1785576925"></link>
            <id>https://tamilwin.com/article/death-row-convict-hemasiri-s-confessions-1785576925</id>
            <summary type="text">2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p>இதன்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது வாக்குமூலத்தில் முன்வைத்ததாக கூறப்படும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதன்பின்னர் மரண தண்டனை விதிப்பதற்கு முன் பிரதிவாதிக்கு ஏதேனும் கூற உள்ளதா என நீதிமன்றம் வினவிய நிலையில், அதற்கு பதிலளித்த ஹேமசிறி பெர்னாண்டோ பல தகவல்களை&nbsp;வாக்குமூலமாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட கருத்துக்களாவது,&nbsp;</p><p>&nbsp;</p><p> </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வாக்குமூலத்தில் வெளியிட்ட தகவல்</span></p><p>"தலைமை நீதிபதி முன்வைத்த கருத்துக்களை நான் ஏற்கவில்லை. கனம்பொருந்திய நீதிபதி அவர்களே.. பாதுகாப்புச்செயலாளர் என்று ஒரு பதவி இல்லை. நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவே பணியாற்றினேன். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்பது மற்ற அமைச்சுகளின் செயலாளர்களைப் போன்றதே. சிறப்பு அதிகாரங்கள் எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107be1b3-7e3c-449a-9f4a-4183a4286a3c/26-6a6dc4fa2b8e5.webp' /></p><p> </p><p>அமைச்சரின் அறிவறுத்தலின் படியே நான் செயல்பட்டேன். அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றிருந்தார். பதில் அமைச்சராக எவரையும் அவர் நியமிக்கவில்லை. அமைச்சர் இல்லாத போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் செயல்பாடுகள் முடங்கிவிடும். </p><p>நிலந்த ஜயவர்தன ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயல்பட்டார். நான் நியமிக்கப்பட்டதும் புலனாய்வு தகவல்கள் குறித்து எவ்வாறு செயல்படுவது என்று ஜனாதிபதியிடம் கேட்டேன். அதற்கு ஜனாதிபதி, 'புலனாய்வு தகவல்களை நிலந்த எனக்குத் தெரிவிப்பார், நீங்கள் நிர்வாக வேலைகளைக் கவனியுங்கள்' என்றார்.</p><p> நான் அமைச்சின் நிர்வாகக் கடமைகளை மட்டுமே செய்தேன். நான்கு ஆண்டுகளில் புலனாய்வு தகவல்களை ஜனாதிபதியிடம் நிலந்தவே வழங்கி வந்தார். தாக்குதலுக்கு முந்தைய நாள் நிலந்தவிடமிருந்து எந்த ஆவணமும் எனக்கு வரவில்லை. இரண்டு வாட்ஸ்அப் செய்திகள் மட்டுமே வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11173bba-7b7e-4e6d-8d58-1733a4dc9568/26-6a6dc5b60cb51.webp' />&nbsp;</p><p> ஏப்ரல் 9 ஆம் திகதி நடந்த புலனாய்வு ஆய்வுக் கூட்டத்தில் நிலந்த இந்தத் தாக்குதல் பற்றி எதையும் கூறவில்லை. கூறியிருந்தால் அங்கிருந்த இராணுவ, கடற்படை புலனாய்வு பிரதானிகளுக்கும் தெரிந்திருக்கும்.எங்கள் குழுக்களில் ஒன்று கிழக்குப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தும் என்றும் அவர் எங்களுக்குத் தெரிவித்தார்.</p><h2>ஏழு தடவை மறைக்கப்பட்ட தகவல்</h2><p> இந்தத் தகவல் கிடைத்த ஏப்ரல் 1 முதல் 16 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி இலங்கையில் இருந்தார். ஆனால், நிலந்த ஜயவர்தன இந்தத் தகவலை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருக்கலாம். அவர் அதை வேண்டுமென்றே மறைத்தார். இந்தத் தகவலை அவர் ஏழு முறை மறைக்க முயன்றார்.</p><p> அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரே இப்படிச் செயல்பட்டால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலையில், நிலந்த ஜயவர்தன என்னை அழைத்து, நடத்தப்படவிருந்த தாக்குதல்கள் குறித்து எனக்கு தெரிவித்தார். இதை நம்ப முடியுமா என கேட்டேன். இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிப்போம் என்று அவர் கூறினார்.</p><p> நிலந்த ஜயவர்தனவின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1500 புலனாய்வு அதிகாரிகள் உள்ளனர். இதை விசாரித்து உறுதிப்படுத்தும்படி அவர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5625db01-c9b2-4f83-b781-38c2af2a37f6/26-6a6dc4face695.webp' />&nbsp;</p><p>இராணுவத்தை வரவழைக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் கூட எனக்கு இல்லை. தலைமை நீதிபதி அவர்களே, நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால், நீங்களும் அதையே செய்திருப்பீர்கள்.</p><p> 

"தாக்குதலுக்குப் பிறகு ஜனாதிபதி விஜித் மலல்கொட குழுவை நியமித்தார். அந்த குழு 14 அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியது. ஆனால் மற்றவர்களை விட்டுவிட்டு எனக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி கூறினார்.</p><p> ஏப்ரல் 22 இல் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் நானும் பொலிஸ் மா அதிபருமே பொறுப்பு என்றும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார். அந்த முடிவின் இறுதி விளைவே இந்தத் தீர்ப்பு.</p><p> இந்த தீர்ப்பைக் கேட்டு இருவர் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவர் நிலந்த ஜயவர்தன, மற்றையவர் மைத்திரிபால சிறிசேன. சட்டமா அதிபர் திணைக்களம் ஆரம்பத்திலிருந்தே நிலந்த ஜயவர்தனவைப் பாதுகாத்தது. சாதாரண அறிவு கூட இல்லாத ஒருவனால் மட்டுமே இதில் மகிழ்ச்சியடைய முடியும்.</p><p>"எனக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. காயம் இன்னும் ஆறவில்லை. எனக்கு 76 வயதாகிறது. சிறையிலடைத்தாலும் தேவையான சிகிச்சைகளை வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தூக்கிலிடப்படுவதற்காவது நான் உயிரோடு இருக்க வேண்டுமே. வரலாறு என்றாவது ஒரு நாள் என்னை விடுவிக்கும்" எனக் கூறி குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>&nbsp;</p><p><b>இதன்பின்னர் தீர்ப்பை அறிவித்த தலைமை நீதிபதி பிரியந்த லியனகே,</b></p><p>"குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உள்ளது. இந்த பிரதிவாதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆவார். எனவே அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T10:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளியங்குளம் சந்தியில் பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-motorcycle-collision-at-puliyankulam-1785579044"></link>
            <id>https://tamilwin.com/article/bus-motorcycle-collision-at-puliyankulam-1785579044</id>
            <summary type="text">வவுனியா- புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக&amp;nbsp; பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தானது நேற்று(31) மாலை இடம்பெற்றுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா- புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக&nbsp; பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த விபத்தானது நேற்று(31) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் நேற்று மாலை பயணித்த சொகுசு
பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார்
சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில்,
புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d149d710-35d3-4389-a2d2-45c68c2a0743/26-6a6dc626851a3.webp' /></p><p>
</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T10:11:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் பிரபல உணவகத்தில் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-restaurant-in-sainthamaruthu-1785576515"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-restaurant-in-sainthamaruthu-1785576515</id>
            <summary type="text">சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள்,
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் மற்றும்
பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் தீவிரமாக
ஈடுபட்டனர்.
</p><p>
இந்தத் தீ விபத்துக்கான பின்னணி மற்றும் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள்
இதுவரை வெளியாகவில்லை.</p><p>இதேவேளை, தீ விபத்து இடம்பெற்று அனைத்தும் எரிந்து சாம்பலான பின்னரே கல்முனை
மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக அப்பகுதி
மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p></p><h2>தீ விபத்து</h2><p> </p><p>கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப்
பிரிவினரின் இத்தகைய மந்தமான செயற்பாடு தொடர்கதையாகி வருவதாக மக்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89e63cd-54f3-42e5-b59a-75a45d45a81b/26-6a6dc275c4b28.webp' /></p><p>
</p><p>
பாரிய வர்த்தக நகரமாக விளங்கும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதி மக்களின்
பாதுகாப்பு கருதி, மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினை வினைத்திறன் மிக்கதாக
மாற்றியமைக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச
மக்களும் வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீகவாபியில் பயிர்ச்செய்கைகள் நாசம்: நெல் வயல்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crops-destroyed-in-deegavapi-wild-elephants-1785575707"></link>
            <id>https://tamilwin.com/article/crops-destroyed-in-deegavapi-wild-elephants-1785575707</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில்
காணப்பட்ட பல ஏக்கர் நெல் வயல்கள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாகச்
சேத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில்
காணப்பட்ட பல ஏக்கர் நெல் வயல்கள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாகச்
சேதமடைந்துள்ளன.</p><p>

இரவு வேளையில் காட்டுப் பகுதியிலிருந்து கிராமத்திற்குள் புகும் காட்டு யானைக்
கூட்டங்கள், அறுவடைக்குத் தயாராகவுள்ள பயிர்ச் செய்கைகளுக்குள் புகுந்து
நெற்பயிர்களை உட்கொண்டதுடன், அவற்றை மிதித்து நாசப்படுத்தியுள்ளதாகப்
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>உடனடியாக நடவடிக்கை</h2><p>
</p><p>
வங்கிக் கடன்களைப் பெற்றுப் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட
பயிர்ச்செய்கைகள், அறுவடைக்குச் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறு
நாசமாகியுள்ளமையினால் தம்மைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு
உள்ளாக்கியுள்ளதாக விவசாய சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d777246a-5677-4967-ae8a-d73ed8623f11/26-6a6dba91afe9b.webp' /></p><p>

இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக்
கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர
அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:21:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியர்கள் மூவர் கைது..! 292 கிலோகிராம் கஞ்சா மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-arrested-for-trying-to-illegally-kerala-1785575198"></link>
            <id>https://tamilwin.com/article/indian-arrested-for-trying-to-illegally-kerala-1785575198</id>
            <summary type="text">



இலங்கைக்கு சட்டவிரோதமாக கேரள கஞ்சாவை கொண்டு வர முயற்சித்த மூவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இந்தியாவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



இலங்கைக்கு சட்டவிரோதமாக கேரள கஞ்சாவை கொண்டு வர முயற்சித்த மூவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த கைது நடவடிக்கை இந்தியாவில் உள்ள இராமநாதபுரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

மூவர் கைது</h2><p>

இலங்கைக்கு, கடல் வழியாக கடத்த திட்டமிடப்பட்டிருந்த 292 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b711b5-1abf-43a4-b48b-812760856d60/26-6a6db9a542635.webp' /></p><p>
</p><p>
கடற்கரைக்கு கொண்டு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​ரகசியத் தகவலின் பேரில் இந்திய பொலிஸார் நடத்திய சோதனையில் கஞ்சா கடத்தல் இடம்பெறுவது தெரியவந்துள்ளது.</p><p> 

இதற்கமைய, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p> 



</p>]]></content>
            <updated>2026-08-01T09:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் தாக்குதல்! ட்ரம்ப்பின் புதிய எச்சரிக்கையால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-to-bomb-iran-this-weekend-trump-gives-hit-1785574113"></link>
            <id>https://tamilwin.com/article/us-to-bomb-iran-this-weekend-trump-gives-hit-1785574113</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சில ஊடக அறிக்கைகளின்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p> 

சில ஊடக அறிக்கைகளின்படி, இந்த தாக்குதல் இந்த வார இறுதியிலேயே நடைபெறக்கூடும் என கூறப்படுகிறது.</p><p></p><h2>அமெரிக்க இராணுவம்</h2><p>
</p><p>
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலின்படி, ஈரானை சரணடைய வற்புறுத்தும் நோக்கில் புதிய தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்க இராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மெரிலாந்தில் உள்ள கேம்ப் டேவிட் ஜனாதிபதி ஓய்வு மையத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ட்ரம்ப்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bff930ad-9abc-4a6a-a8e6-328869255be7/26-6a6db7b4887ee.webp' /></p><p>நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம். ஒரு கட்டத்தில் அவர்கள் இனிமேல் இதைத் தாங்க முடியாது என்று கூறுவார்கள். எங்களின் நோக்கம் வெற்றி பெறுவதுதான் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், "ஈரான் தொடர்ந்து பொய் கூறி உண்மைகளைத் திரித்துக் கூறுவதால், அவர்கள் மீது நான் நம்பிக்கையை இழந்து வருகிறேன் என்றும் தெரிவித்தார்.</p><p></p><h2>நேரடி தாக்குதல்</h2><p>


CBS News வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இதுவரை இல்லாத அளவிலான கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதலை திட்டமிட்டு வருகின்றன.</p><p>
</p><p>
இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அமெரிக்கா–ஈரான் இடையிலான மென்மையான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் மீண்டும் நேரடி தாக்குதலில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74a7c302-747a-4456-9fdf-8f71471f7a37/26-6a6db7b537de6.webp' /></p><p>
</p><p>
உலகளாவிய மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படாத வகையில், திங்கட்கிழமை நிதிச் சந்தைகள் திறக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கைகளை நிறைவு செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், எனினும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>&nbsp;ஈரான் மீது நடத்திய தாக்குதல்</h2><p>


தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனினும், தாக்குதலை தொடங்குவதற்கான இறுதி அனுமதி (Go Order) யை ட்ரம்ப் இதுவரை வழங்கவில்லை.
</p><p>
இதற்கிடையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலைன் லெவிட், அமெரிக்கா வெற்றி பெறும்; ட்ரம்ப் பதவியில் இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாது" என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890bd9e6-8e8b-431b-8ec6-64369a555e2a/26-6a6db7b5dd39a.webp' /></p><p>
</p><p>
அதேபோல், பென்டகனின் தலைமை பேச்சாளர் ஷான் பார்னெல், அமெரிக்க பாதுகாப்புத் துறை முழுமையாகத் தயாராக உள்ளது என கூறினார்.
</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னரும் இரு தரப்பும் தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டதால் பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T09:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் நேற்றிரவு நடந்த இரகசிய கலந்துரையாடல்: நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என அச்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tiran-alas-secret-meeting-1785574423"></link>
            <id>https://tamilwin.com/article/tiran-alas-secret-meeting-1785574423</id>
            <summary type="text">கொழும்பு 07லில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் இரசிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இரவு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
டிரான் அலஸின் அலுவலகத்திலே இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 07லில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் இரசிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இரவு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
டிரான் அலஸின் அலுவலகத்திலே இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. </p><p>அதில் கம்மன்பில- விமல் வீரவன்ச- தயாசிறி ஜயசேகர மற்றும் மேலும் நான்கு அல்லது ஐந்து பேர் இருந்துள்ளனர். சிலர் வெளிச்சத்தில் தங்களின் முகம் தெரியாமல் இருக்க இருள் சூழ்ந்த பகுதியில் தங்களின் காரை நிறுத்தி இறங்கிச் சென்றுள்ளனர். அதனால் அவர்களைச் சரியாக அடையாளம் காண முடியாமலிருந்துள்ளது.</p><h2>

</h2><p></p><h2>சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்</h2><p>இவர்கள் எதற்காக இச்சந்திப்பை நடத்தினார்கள் என இன்னும் தெரியவரவில்லை. டிரான் அலஸ் என்பவர் எதற்கும் தயாரான பிரதான தரகர். அரசில் அல்லது எதிர்க்கட்சியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழும் ஒரு நபர். </p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வந்ததும் இவை அனைத்தும் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. </p><p>

குறிப்பாக டிரான் அலஸ் என்பவர் நாட்டிற்குப் பல மில்லியன் டொலர்களை நட்டப்படுத்திய ஒரு பாரிய மோசடிக்காரர். பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களான கொஸ்கொட சுஜீ- கரந்தெனிய சுதா போன்றவர்களுடன் நேரடியாகத் தொடர்பிலிருந்தவர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8bca9c-8be0-4c45-b886-ee7c6d7456dc/26-6a6db41927b6d.webp' /></p><p>டிரான் அலஸின் பத்திரிகை அலுவலகத்தில் மாலை 6:43 மணிக்கே இச்சந்திப்பு நடந்துள்ளது. 17 பேர் வரை அங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>டிரான் அலஸ் ஒரு நேரத்தில் ஜனாதிபதி அநுர திசாநாயக்கவுடன் இருக்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்சவுடன் இருக்கிறார். இது அரசியலை விட ஒரு மோசடி. ஏனெனில் அவருக்குத் தேவை இவர்கள் அனைவரையும் அருகில் வைத்துக் கொண்டு தனது காரியங்களைச் சாதிப்பதுதான்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு - எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-fuel-price-1785570287"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-fuel-price-1785570287</id>
            <summary type="text">ஒரு லிட்டர் டீசலுக்கு 70 முதல் 63 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்ட போதிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டாம் என கூட்டுத்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு லிட்டர் டீசலுக்கு 70 முதல் 63 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்ட போதிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டாம் என கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.</p><p>

ஆகஸ்ட் மாத எரிபொருள் விலை திருத்தம் குறித்து நேற்று (31 ஆம் திகதி) பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்துள்ள போர்&nbsp;</h2><p>
</p><p>
மத்திய கிழக்கில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில மாதங்களில் உலக சந்தையில் டீசல் விலை (110%) அதிகரித்ததாலும், நாட்டில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்றும் மேலும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95a1268-4dfa-4d25-a55d-4e8d83b6a295/26-6a6da84960642.webp' />&nbsp;</p><p>

போர் தற்காலிகமாக முடிவடைந்து, தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக உலகச்சந்தையில் டீசல் விலை 58.9 சதவீதம் அதிகரித்திருந்தாலும், உள்நாட்டு சந்தையில் விலை 35 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் பெட்ரோல் விலை 41.35 சதவீதம் அதிகரித்திருந்தாலும், உலகச் சந்தை மற்றும் உள்ளூர் சந்தையில் இம்மாத இறுதிக்குள் அதே அளவில் விலை பராமரிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>ஆகஸ்ட் மாத எரிபொருள் விலை மாற்றம்</h2><p>

அதன்படி, மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fed9127d-527b-4b8e-b14c-c0bfa356b4ff/26-6a6da84a14c1c.webp' /></p><p> ஒரு லிட்டர் 92 ஆக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 414.00 என்ற அதே விலையில் நீடிக்கின்றது.

அதேபோல், ஒரு லிட்டர் லங்கா வைட் டீசலின் விலை ரூ. 382.00 ஆகவும், ஒரு லிட்டர் 95 ஆக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 495.00 ஆகவும் நீடிக்கின்றது.
</p><p>
இதேவேளை, சூப்பர் டீசலின் விலை ரூ. 478.00 ஆகவும், மண்ணெண்ணெயின் விலை ரூ. 285.00 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FgX3UNJXixA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-01T08:25:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பூஜித் ஜயசுந்தரவின் குடும்ப நிலைமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785562785"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785562785</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று (31.07.2026)முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று (31.07.2026)முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p>குறித்த வழக்கில் பூஜித் ஜயசுந்தர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரோஷன் தெஹிவள மற்றும் பூஜித் ஜயசுந்தர தெரிவித்த கருத்துக்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>பூஜித் ஜயசுந்தர வாடகை வீட்டிலே மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.</p><p>35 வருடங்கள் பொலிஸ் சேவையில் பணியாற்றியதோடு இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. </p><h2>

</h2><p></p><h2>வறுமையில் வாடும் குடும்பம்</h2><p>290 வழக்குகளில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளுக்காக பல இலட்சம் ரூபாய்களை அவர் நஷ்ட ஈடாகச் செலுத்தியுள்ளார் என்று சட்டத்தரணி ரோஷன் தெஹிவள சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5688373-7aaa-47ce-bc52-81de16d0cabe/26-6a6d86a32a014.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>
பூஜித் ஜயசுந்தர சோகத்துடனும் விரக்தியுடனும் உரையாற்றிபோது,&nbsp;</p><p>“ நான் ஒருபோதும் எந்தவொரு மனிதனையும் கொன்றதில்லை. மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு எழுந்ததில்லை. </p><p>நான் நம்பும் மதத்தின் நம்பிக்கைகளின்படி இது எனது பூர்வ ஜென்ம கர்ம காரணமாகவே நிகழ்ந்தது. நான் பொலிஸ் சேவையில் இணைந்த நாள் முதல் பொதுமக்களுக்காகவும் பொலிஸ் திணைக்களத்திற்காகவுமே அர்ப்பணித்து சேவையாற்றினேன்.
</p><p>இந்தச் சம்பவத்துடன் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தேன். பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து என்னைச் சட்டப்பூர்வமாக நீக்கவில்லை. </p><p>அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் எடுத்ததாகவும் கூறினார். இறுதியில் சட்டத்தரணியின் ஆலோசனையின் பேரில் வழக்கை விலக்கிக் கொண்டதாக குறிப்பிட்டார்.</p><p>இதனால் தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் FR (அடிப்படை உரிமை) வழக்குகளுக்கு அமைவாக நஷ்டஈடு செலுத்த வேண்டியிருந்தது. பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். </p><p>எக்காலத்திலும் எவருக்கும் எந்தவொரு தவறையும் செய்யாத தனக்கு, இவ்வாறு நேர்ந்துள்ளதாகவும் தனது வயதையும் தற்போதைய ஆதரவற்ற நிலையையும் கருத்தில் கொண்டு பொருத்தமான தீர்ப்பை வழங்குமாறும் அவர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T08:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-stealing-money-russian-tourists-1785570446"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-stealing-money-russian-tourists-1785570446</id>
            <summary type="text">இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப்
பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி
நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப்
பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒரு மணி
நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.</p><p>நேற்றையதினம்(31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு
மகள்கள் அறுகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில்
தங்கியுள்ளனர். </p><p>குறித்த நபர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில்
குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள்
மற்றும் 1,620 யூரோக்கள் அடங்கிய பணப்பையைத் திருடிச் சென்றுள்ளார்.</p><p></p><h2>கைது</h2><p>
</p><p>
சந்தேகநபர் பணப்பையைத் திருடித் தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த
ஒருவர், உடனடியாக அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல்
வழங்கியுள்ளார்.</p><p>

அதற்கமையச் செயற்பட்ட அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி
தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி
நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை பிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37404e68-1ae9-4afe-b67a-0d21a435aa20/26-6a6da879c357c.webp' /></p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பணமும் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொத்துவில்
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T08:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோயில் விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudumalai-bhuvaneswari-amman-temple-issue-1785571259"></link>
            <id>https://tamilwin.com/article/sudumalai-bhuvaneswari-amman-temple-issue-1785571259</id>
            <summary type="text">சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோயிலையின் திருப்பணி வேலைகள் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதிகளின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டு ஐந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோயிலையின் திருப்பணி வேலைகள் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதிகளின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டு ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலக் கட்டளை தொடர்பான விசாரணை, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் நேற்று(31.07.2026) எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

மனுதாரர்கள் தமது மனுவில், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் உடனடியாக இடித்தழிக்கப்பட வேண்டுமென்றும், கோவில் திருப்பணிகள் தொடர்ந்து எதுவும் இடம்பெறக் கூடாது என்றும் இடைக்காலக் கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p> </p><h2> 


கட்டடங்களை இடித்தளிப்பு நடவடிக்கை</h2><p>
இந்த வழக்கில், மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையாகியிருந்தார். நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர்மனுதாரர்களான கோவில் அறங்காவலர் சபையின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca0f7fc-95b5-496e-a5b3-0442431952bb/26-6a6da86b55691.webp' /></p><p>
</p><p>
விசாரணையின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கு.குருபரன், 

கட்டுமான அனுமதி தொடர்பிலான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றம் வசமே உள்ளது என்றும், அதனை மேல் நீதிமன்றம் பிரயோகிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p> 

எது எவ்வாறாயினும், அனுமதியின்றிப் பெறப்பட்ட கட்டடங்கள் என்றாலும்கூட அவற்றை இடித்தளிக்குமாறு கட்டளையிடுவதற்கான அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார். </p><h2>

ஆலய நிர்வாகத்தினரின் கோரிக்கை</h2><p>
மேலும், எழுத்தாணை மனு வழக்கொன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது இல்லாதொழிப்பதற்கோ விண்ணப்பிக்க முடியும் என்றும், ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை பிரதேச சபையினால் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரரினால் செய்யப்பட்ட இந்த விண்ணப்பம் முன்முதிர்வானது என்றும் வாதிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca4dec4-c394-4362-9afa-26d2ba6f5dde/26-6a6da86c10433.webp' /></p><p>
</p><p>
எனவே, இடைக்காலக் கட்டளைகளை நிராகரிப்பது மட்டுமன்றி, எதிர்மனுதாரர்களுக்கு முறைசார் அறிவித்தல் அனுப்ப வேண்டிய அனுப்பப்பட வேண்டிய வழக்கொன்று மனுதாரர்களால் விண்ணப்பிக்கப்படவில்லை என்பதனையும் கருத்திற்கொண்டு, வழக்கினை நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சட்டத்தரணி கு.குருபரன் வலுவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.</p><p>

மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளைக்கான விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து கட்டளையிட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T08:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டதில் கடும் மழை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rains-in-nuwara-eliya-district-reservoir-1785569703"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rains-in-nuwara-eliya-district-reservoir-1785569703</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இதன் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.</p><p>

இதன் விளைவாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;வான் கதவுகள்</h2><p>
</p><p>
நேற்று இரவு (ஜூலை 31) பெய்த தொடர் கனமழையால், விமலசுரேந்திர மற்றும் கெனியோன் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து அவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. </p><p>அதேவேளை, லக்ஸபான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86cc0a5e-a086-40db-8ee1-753406839141/26-6a6da5e110fec.webp' /></p><p>
</p><p>
தொடர்ந்தும் மழை பெய்து வருவதால், எந்த நேரத்திலும் அந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இதன் காரணமாக, நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும், வெள்ள அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மையமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.</p><p></p><h2>இயல்பு வாழ்க்கை</h2><p>

இதற்கிடையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால், பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24e06179-9316-4207-8ebc-d1aa8fc4fa1d/26-6a6da5e2359e2.webp' /></p><p>
</p><p>
மறுபுறம், தொடர்ச்சியான மழை காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை பறிக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>

தொழிலாளர்கள் வழமையான முறையில் பணிகளை மேற்கொள்ள முடியாததால், தேயிலை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தோட்டத் தொழிலாளர்களின் வருமானமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையை எட்டியுள்ளது.</p><p></p><h2>&nbsp;வானிலை முன்னறிவிப்புகள்</h2><p>
</p><p>
குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனால், சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0785920e-8dc9-472f-bbd5-7c0ff8104f51/26-6a6da5e30aae2.webp' /></p><p>
</p><p>
மேலும், மலைச்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிப்பதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொண்டு, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்புடன் செயல்படுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T07:59:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு கடூழிய சிறைத் தாண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-year-prison-sentence-for-person-of-heroin-1785569283"></link>
            <id>https://tamilwin.com/article/4-year-prison-sentence-for-person-of-heroin-1785569283</id>
            <summary type="text">ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு&amp;nbsp; 4
ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு&nbsp; 4
ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் ரூபா 2
லட்சம் பிரகாரம் 4 லட்சம் ரூபாய் அபராதமும், அத் தொகையை செலுத்த தவறின்
தனித்தனியே ஒரு ஆண்டு கால சிறைத்தண்டணையும் வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற
நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.</p><p>

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா பறையனாளங்குளம் பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூயநிறை 1.8 கிராம் ஹெரோயினை உடமையில்
வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்ய முற்பட்டமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>வழக்கு</h2><p>இதனையடுத்து, அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 2021 ஆண்டு
வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த வழக்கு தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை
(31.07) திகதியிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bfe4b98-001b-47ae-9d29-c89dab099038/26-6a6da3341800d.webp' /></p><p>இதன்போது குறித்த குற்றச் சாட்டுக்கள் அரச சட்டவாதியினால் எதிரிக்கு எதிராக
நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மேல்
நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.</p><p>,தூயநிறை 1.8 கிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை
மற்றும் வியாபாரம் செய்ய முற்பட்ட நபருக்கு தனித் தனியே 4 ஆண்டுகள் கடுழீய
சிறைத் தண்டணையும், ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் ரூபா 2 லட்சம் பிரகாரம், 4
லட்சம் ரூபாய் அபராதமும், அத் தொகையை செலுத்த தவறின் தனித்தனியே ஒரு ஆண்டு கால
சிறைத்தண்டணையும் வழங்கி தீர்ப்பளித்தார்.</p><p></p><h2>சிறைத் தண்டனை</h2><p> குறித்த வழக்கினை சட்டமா அதிபர்
திணைக்களம் சார்பில் அரசு சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ
நெறிப்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c900c943-f105-4f96-bf4c-c16fa94f6d35/26-6a6da334ba310.webp' /></p><p>
</p><p>
எதிரி குறித்த வழக்குடன் தொடர்புடையதாக எற்கனவே 2 ஆண்டுகளும், 3 மாதமும்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை போன்ற விடயங்களை மேல் நீதிமன்ற நீதிபதி
ஏ.ஏ.ஆனந்தராஜா குறித்த வழக்கின் தண்டணை தீர்ப்பின் போது
சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p>

சமூகத்தில் பெருகி வரும் போதைப் பொருள் பாவனையும் அதனால் ஏற்படும்
தாக்கங்களுக்கு இவ்வாறான தீர்ப்புக்கள் முன்மாதிரியானவை என்பதும்
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T07:42:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள் - கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/17-containers-fall-into-sea-from-a-merchant-ship-1785564318"></link>
            <id>https://tamilwin.com/article/17-containers-fall-into-sea-from-a-merchant-ship-1785564318</id>
            <summary type="text">கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில், ஒரு வர்த்தகக் கப்பலிலிருந்து 17 காலிக் கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து கொண்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில், ஒரு வர்த்தகக் கப்பலிலிருந்து 17 காலிக் கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இந்த விபத்து, 06° 54' வடக்கு அட்சரேகை மற்றும் 079° 32' கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>
மேலும் அந்த அறிக்கையில்,
</p><p>
தற்போது நிலவும் கடல் நீரோட்டங்கள் காரணமாக, பெருவளை முதல் புத்தளம் வரையிலான நீர்கொழும்பு வழியான கடல் பகுதியில் இந்தக் காலிக் கொள்கலன்கள் நிலத்தை நோக்கி மிதந்து வர அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2a5af3-209f-4c6d-941c-eda466009370/26-6a6da026a5425.webp' /></p><p>

எனவே, அப்பகுதிகளில் இயங்கும் மற்றும் பயணிக்கும் அனைத்து பலநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது தொடர்பாக மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
மிதந்து கொண்டிருக்கும் இந்தக் கொள்கலன்களைக் கண்டால், உடனடியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலிச் செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:28:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கடவுச்சீட்டு புகைப்படச் சேவை முடக்கம்! நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passport-photo-service-in-mullaitivu-suspended-1785567417"></link>
            <id>https://tamilwin.com/article/passport-photo-service-in-mullaitivu-suspended-1785567417</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையக
சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றாக செயலிழந்துள்ள நிலையில் அதனை சரியாக நடைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையக
சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றாக செயலிழந்துள்ள நிலையில் அதனை சரியாக நடைமுறைப்படுத்துமாறு வன்னி
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குடிவரவு மற்றும் குடியகல்வு
திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக நேற்றையதினம்(31) அனுப்பியுள்ள விரிவான கடிதத்தில், இலங்கை
முழுவதும் 1,420 அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையகங்கள்
இயங்கும் நிலையில், புவியியல் ரீதியாக பரந்த பரப்பைக் கொண்ட ஆறு பிரதேச
செயலகப் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே ஒரு
அங்கீகரிக்கப்பட்ட கலையகம் மட்டுமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், அந்த ஒரே அங்கீகரிக்கப்பட்ட கலையகமான "சதீஸ் ஸ்டூடியோ &amp; டிஜிட்டல்
கலர் லாப்" கூட கடந்த மூன்று ஆண்டுகளாக சேவையாற்ற முடியாத நிலைக்குத்
தள்ளப்பட்டிருப்பது, மாவட்ட மக்களை முற்றாக இச்சேவையிலிருந்து
விலக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>உரிய தீர்வு&nbsp;</h2><p>

குறித்த கலையகத்தின் உரிமையாளர் கடந்த மூன்று ஆண்டுகளாக திணைக்களத்திற்கு
பலமுறை மின்னஞ்சல் மூலம் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உதவிகளை கோரி
விண்ணப்பித்தும், இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தகவல்
கிடைத்துள்ளதாகவும், இதன் விளைவாக கலையகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவையை மீள
ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c150cc8d-e000-433a-ba37-0a2f334fb1c0/26-6a6d9bf1ddba3.webp' /></p><p>
</p><p>
கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு தேவையான இலத்திரனியல் புகைப்படம்
அங்கீகரிக்கப்பட்ட கலையகங்கள் ஊடாக மட்டுமே திணைக்களத்தின் கணினி முறைமைக்கு
அனுப்பப்பட வேண்டியிருப்பதால், முல்லைத்தீவு மக்கள் வவுனியா, கிளிநொச்சி,
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில்
உள்ளதாகவும், இதனால் கூடுதல் பயணச் செலவு, கால விரயம் மற்றும் பல்வேறு
அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் ரவிகரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T07:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examinations-department-important-announcement-1785566309"></link>
            <id>https://tamilwin.com/article/examinations-department-important-announcement-1785566309</id>
            <summary type="text">ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, கல்வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள்

 எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு&nbsp;செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>அனுமதி அட்டைகள்</h2><p>நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77db90db-c6d2-4f3c-aae2-589ec78a9706/26-6a6d9bbea63be.webp' />&nbsp;</p><p>இதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலையக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் தங்களது பதிவு செய்யப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.</p><p>

அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T07:10:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை : என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - வருத்தத்தில் அலி சப்ரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785563698"></link>
            <id>https://tamilwin.com/article/death-sentence-for-pujith-jayasundara-ali-sabry-1785563698</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளதை மேற்கோள் காட்டி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p></p><h2>புலனாய்வு எச்சரிக்கைகள்</h2><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத்தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad9fad73-d1eb-4916-b704-ee4688be2096/26-6a6d919ec7dec.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னரே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமைத் தவறியமை, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி என மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இருப்பினும், குற்றவியல் நோக்கம் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsabryuvais%2Fposts%2Fpfbid0YSdx6FJmrUn7a6AjdHikb8Lsfak7WPb3YATouTpsxYcTYwLA7Ma78crzSiGzcw63l&show_text=true&width=500" width="500" height="329" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>&nbsp;</p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த கரண்ணாகொட மற்றும் மகன் யோஷித ராஜபக்ச விவகாரம் - 25 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indictments-against-karannagoda-and-yoshitha-1785561388"></link>
            <id>https://tamilwin.com/article/indictments-against-karannagoda-and-yoshitha-1785561388</id>
            <summary type="text">முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p> 

முறையான கல்வித்தகுதிகள் இன்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தல் மற்றும் அவருக்கு பிரிட்டிஷ் அரச இராணுவ கல்லுரியில் பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, யோஷித ராஜபக்சவிற்குப் பயனளித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><h2>25 சாட்சிகள் பெயரிடல்</h2><p>இந்த வழக்கில் வசந்த குமார ஜெயதேவ கரண்ணாகொட முதல் பிரதிவாதியாகவும், யோஷித கனிஷ்க ராஜபக்ச இரண்டாவது பிரதிவாதியாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2504369f-6648-47c6-8957-c9511531d2b7/26-6a6d861ba0949.webp' /></p><p>
இவ்வழக்கிற்காக 25 சாட்சிகளின் பெயர்களையும், 47 ஆதார ஆவணங்களின் பட்டியலையும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய கடற்றொழில் படகு : மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-air-force-rescues-fishing-boat-distress-1785563053"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-air-force-rescues-fishing-boat-distress-1785563053</id>
            <summary type="text">நீர்கொழும்பு அருகே கடற்பகுதியில் பல கடற்றொழில் படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அங்கு இருந்த கடற்றொழிலாளர்களை மீட்க, இலங்கை கடற்படையும் விமானப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு அருகே கடற்பகுதியில் பல கடற்றொழில் படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அங்கு இருந்த கடற்றொழிலாளர்களை மீட்க, இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.
</p><p>
இந்த விபத்தில் சிக்கிய கடற்றொழிலாளர்களை தேடுவதற்கு, விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>விபத்தில் சிக்கிய படகுகளில் ஒன்று</h2><p>
மற்றொரு கடற்றொழில் படகில் இருந்தவர்கள்&nbsp; அளித்த தகவலின் அடிப்படையில், நேற்று பிற்பகல் (31) கடற்றொழிலுக்குச் சென்ற ஒரு சிறு படகு விபத்தில் சிக்கியது முதலில் தெரியவந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15567338-84bf-4f0d-b098-db66fac66108/26-6a6d8db3dbdfa.webp' /></p><p>
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற மேலும் 3 கடற்றொழில் படகுகள் காணாமல் போனமை தெரியவந்துள்ளது.
</p><p>
தற்போது, ​​விபத்தில் சிக்கிய படகுகளில் ஒன்றில் இருந்த ஒரு கடற்றொழிலாளரின் சடலம் நீர்கொழும்பு கரைக்கு ஒதுங்கியுள்ளது,</p><p> அதே சமயம் அதே படகில் பயணித்த மேலும் இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, காணாமல்போன கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் தேடுவதற்காக, கடற்படைக்குச் சொந்தமான கப்பலும் சிறப்பு நீர்மூழ்கி குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p> மேலும் விமானப்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பொலிஸ் மா அதிபர்களுக்கு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் : பின்னணி என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysteries-behind-igp-s-of-sri-lanka-1785553806"></link>
            <id>https://tamilwin.com/article/mysteries-behind-igp-s-of-sri-lanka-1785553806</id>
            <summary type="text">இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. </p><p>

கடந்த ஆட்சியாளர்களின் கீழ் பணியாற்றிய மூன்று பொலிஸ் மா அதிபர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் நீதித்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. </p><p>

அதற்கமைய முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, சி.டி. விக்கிரமரத்ன, தேசபந்து தென்னகோன் ஆகியோர் அடுத்தடுத்து பொறிக்குள் சிக்கியுள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

மரண தண்டனை</b></h2><p>34ஆவது பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தரவிற்கு நேற்றையதினம் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbe544b-adbc-474a-9e18-e98ee25a80a3/26-6a6d68cc9068f.webp' /></p><p>2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றத்திற்காக பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

35 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த சி.டி. விக்கிரமரத்ன கடந்த வாரம் அவரின் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.</p><p> தனது மெய்பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>

கோட்டாபய ஆட்சிக்காலத்தில் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு ராஜபக்சர்களுக்கு விசுவசமாக செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர் ஆவார். </p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.</p><p></p><p> </p><h3><b>

கடும் அழுத்தம் </b></h3><p>அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், மூன்றாம் தரப்பினால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தம் காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0757b634-3fb3-4c5a-a2a5-0ead195a554e/26-6a6d68cd5db16.webp' /></p><p>36ஆவது பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு வலுகட்டாயமாக அவரின் பதறி பறிக்கப்பட்டது.</p><p>நாடாளுமன்றக் குழுவின் விசாரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

கடந்த ராஜபக்சக்களின் ஆட்சியின் போது போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இவர் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர அடிப்படையில் நல்ல மனிதர் என்ற போதிலும், ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக செயற்பட்டு இன்று சிறைக் கைதியாக மாறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p>பொம்மைகளாக செயற்பட்டவர்கள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளனர். எனினும் பொம்மைகளை ஆட்டுவித்த வித்தைக்காரர்கள் எப்போது தண்டிக்கப்படுவார்கள் என நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> 
 </p>]]></content>
            <updated>2026-08-01T05:31:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கி வீடு தீக்கிரை- வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lightning-strikes-house-sets-it-on-fire-1785561664"></link>
            <id>https://tamilwin.com/article/lightning-strikes-house-sets-it-on-fire-1785561664</id>
            <summary type="text">அம்பாறை - இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் பெய்த கடும் மழையின்போது மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பற்றி முற்றாக சேதமடைந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் பெய்த கடும் மழையின்போது மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பற்றி முற்றாக சேதமடைந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் நேற்று (31.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மின்னல் தாக்கிய வீட்டின் தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>
வீட்டில் உள்ள பொருட்கள் முற்றாக சேதம்</h2><p>
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இருக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மழை பெய்யத் தொடங்கியபோது, வீட்டில் இருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd1207d-ec0e-402b-90cc-05318c19cfae/26-6a6d829ea1538.webp' /></p><p>

இந்நிலையில், மின்னல் தாக்கியதில் வீட்டின் உள்ளே தீ பரவியுள்ளது. இதையடுத்து, பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், வீட்டிலிருந்த அனைத்து பொருட்கள் மற்றும் உபகரணங்களும் தீயில் எரிந்து முற்றாக நாசமடைந்துள்ளன.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5185891-d79f-4c98-9b8d-6038181ad58e/26-6a6d829f956d2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/214f7b58-5da4-4f36-9cc8-f69e0293c709/26-6a6d82a061349.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:22:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இருந்து மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-s-son-escaped-from-country-1785556185"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-s-son-escaped-from-country-1785556185</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த நாட்களில் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. </p><p>

அதற்கமைய, குறித்த முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><h2><b>
பல குற்றச்சாட்டுகள் </b></h2><p>குறித்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அவரது புதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88c6fb8-5e6e-47df-a4c6-9e2b93eea02c/26-6a6d6ed396756.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக சமகால அநுர அரசாங்கம் விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது. </p><p>

இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Oj98y_7BTes" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-01T05:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பையில் தனியார் பங்குகளை விற்கும் திட்டம் தொடர்பில் FIFA அதிரடி அறிவிப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-scraps-world-cup-investment-plan-1785555792"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-scraps-world-cup-investment-plan-1785555792</id>
            <summary type="text">உலகக் கோப்பைப் போட்டிகளில் தனியார் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை கைவிட்டதாக FIFA அமைப்பு அறிவித்துள்ளது. 

இது தொடர்பில், FIFA அமைப்பின் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கோப்பைப் போட்டிகளில் தனியார் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை கைவிட்டதாக FIFA அமைப்பு அறிவித்துள்ளது. </p><p>

இது தொடர்பில், FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p>

மேற்படி அறிக்கையில், 

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் கால்பந்து சங்கங்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><p></p><h2> 

FIFA அமைப்பின் முடிவு</h2><p>
உலகக் கோப்பை மற்றும் பிற முக்கியப் போட்டிகளை நடத்துவதற்காக 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு புதிய துணை நிறுவனத்தை அமைக்கப்போவதாகவும், தனது பங்குகளில் 20% வெளி முதலீட்டாளர்களுக்கு விற்கப்போவதாகவும் FIFA அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe10bdf6-efac-4bc4-bfb5-30f0aeb3413a/26-6a6d7b179b7d4.webp' /></p><p>
</p><p>

 வெளி முதலீட்டாளர்களை உள்ளடக்கிய ஒரு புதிய தனியார் பங்குத் திட்டத்தை FIFA செயல்படுத்தினால், வரவிருக்கும் உலகக் கோப்பையைப் புறக்கணிக்கப்போவதாக UEFA எச்சரித்துள்ளது. </p><p>

UEFA உலகக் கால்பந்தில் மிகவும் சக்திவாய்ந்த சங்கமாக பார்க்கப்படுகின்றது. </p><p>

இதற்கமைய, தனியார் முதலீட்டுத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, 55 UEFA உறுப்பு சங்கங்கள் உலகக் கோப்பை மற்றும் FIFAவின் மற்ற அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T04:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்! பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-and-hemasiri-to-welikada-prison-1785548122"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-and-hemasiri-to-welikada-prison-1785548122</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை வெலிக்கடை சிறையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை வெலிக்கடை சிறையில் வைத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் நேற்று (31) மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><h2>கைதிகளாக பதிவு</h2><p>தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு இருவரும் வெலிக்கடை சிறையில் கைதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cd801a2-e1fd-47ab-8b44-0f859d3d68a5/26-6a6d7834244dd.webp' /></p><p>இதனையடுத்து கைதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடைகள் இருவருக்கும் வழங்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>2019 ஏப்ரல் 21 அன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விருந்தங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
</p><p>இது தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தங்களது அதிகாரப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமை, கடமை வீழ்ச்சி, கொலை மற்றும் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு இந்த தீர்ப்பு வழஙக்ப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:38:58+00:00</updated>
        </entry>
    </feed>
