<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-13T08:30:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாரவில கடல் பகுதியில் நேர்ந்த பெரும் சோகம் - 5 பேரை இழுத்துச்சென்ற இராட்சத அலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-in-the-marawila-sea-giant-waves-5-people-1789285636"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-in-the-marawila-sea-giant-waves-5-people-1789285636</id>
            <summary type="text">மாரவில கடல் பகுதியில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (12) பிற்பகல் அதே பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாரவில கடல் பகுதியில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
நேற்று (12) பிற்பகல் அதே பகுதியில் அலைகளால் 3 பெண்கள், 2 இளைஞர்கள் உட்பட 5 பேர் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
இவ்வாறு இழுத்துச்செல்லப்பட்ட 3 பெண்களை பிரதேசவாசிகள் உடனடியாக செயற்பட்டு மீட்டுள்ளனர்.</p><h2>இளைஞர் மாயம்&nbsp;</h2><p>
</p><p>
இதில் உயர்தர கணிதப் பிரிவில் பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற குளியாபிட்டிய, அனுக்கனையைச் சேர்ந்த வித்தானகே ஷாலித தனுர்தர மதுஷான் என்ற 21 வயது இளைஞர் காணாமல்போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/414b4560-f2fc-408b-9cda-d2e06b413763/26-6aa65c0b2921e.webp' /></p><p>
</p><p>
இவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் குளியாபிட்டியவிலிருந்து மாரவில கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
</p><p>
கடற்கரையில் பாறைகள் அமைக்கப்பட்ட பகுதியில் மணல் திட்டில் நின்றிருந்தபோது, சீறிப்பாய்ந்த இராட்சத அலை ஒன்றில் சிக்கி இவர்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.</p><h2>கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை</h2><p>

பிரதேசவாசிகள் இணைந்து இவரை காப்பாற்ற முயன்றபோதிலும், அவர் கடலில் மாயமாகியுள்ளார். இவரை காப்பாற்றச்சென்ற மற்றொரு இளைஞர் உயிர்தப்பியுள்ளார்.
</p><p>
காணாமல்போன இளைஞரை தேடி கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பகுதியில் கடலில் இறங்குவதையோ, நீராடுவதையோ தவிர்க்குமாறு மாரவில பொலிஸாரால் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T08:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுர பேரணி குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-issued-by-mahinda-1789277615"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-issued-by-mahinda-1789277615</id>
            <summary type="text">
பொதுஜன பெரமுன கட்சியின் நேற்றைய அநுராதபுர போராட்டத்திற்கு வலுச் சேர்த்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பொதுஜன பெரமுன கட்சியின் நேற்றைய அநுராதபுர போராட்டத்திற்கு வலுச் சேர்த்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்றைய(12.09.2026) அநுராதபுர மக்கள் பேரணி குறித்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து தனது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
குறித்த பதிவில், </p><p>

அநுராதபுர இராச்சியத்தில் நிகழ்ந்த கடந்த கால வரலாறு, தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.</p><h2>இலங்கையர்களுக்கு எனது நன்றி..&nbsp;</h2><p> 

படையெடுப்புக்கள், எதிர்ப்புக்கள், துரோகங்கள் மட்டுமின்றி வீழ்ச்சிகளுக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற ஒரு சரித்திரமாக அது இருந்தது. </p><p>

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் பிறந்த மண்ணின் மீது அன்பு இருக்க வேண்டும். நமது நாடு என்ற உணர்வு இருக்க வேண்டும். </p><p>

ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது எனது நம்பிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f068c60-35ac-46ff-8570-7f51a4884b20/26-6aa654cdcd9a9.webp' /></p><p>
</p><p> 
இலங்கை மக்கள் அனைவரது பலத்துடனும், நான் எமது தாய் நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்பினேன்.
</p><p>
எமது மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய ஒரு காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதே எமது நோக்கம். </p><p>

கடந்த காலத்தைப் போன்று, எமது கலாசாரம், அடையாளம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, அபிவிருத்தியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPresidentRajapaksa%2Fposts%2Fpfbid0ep7tV3PyYS3j3uxSmcmxFumTkSWN7o7Lm4G8zAZSPK19BgjKSNrc7xAWtBxgEAwDl&show_text=true&width=500" width="500" height="250" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p> </p><p>

அத்துடன், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த, என்னுடைய நீண்ட கால அரசியல் சகாக்கள், மகா சங்கத்தினர், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நன்றி.</p><p> 

எப்போதும் எமக்கு பலமாக இருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் எனது நன்றி என மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-13T08:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வாதிகாரியாக செயற்படுகிறாரா அநுர..! சுமந்திரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-levels-allegations-against-anura-1789286144"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-levels-allegations-against-anura-1789286144</id>
            <summary type="text">ஊழல் மற்றும் முறைகேடு விவகாரங்களில் கடந்த அரசுகளை விட மும்முரமாகச்
செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு
பிரச்சினையையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் மற்றும் முறைகேடு விவகாரங்களில் கடந்த அரசுகளை விட மும்முரமாகச்
செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு
பிரச்சினையையும் தீர்க்கத் துளியளவும் முன்வரவில்லை என இலங்கை தமிழரசுக்
கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்
கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>

சாவகச்சேரியில் நேற்று(12.09.2026) நடைபெற்ற அநுர அரசுக்கு எதிரான உணவு தவிர்ப்புப்
போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

சர்வாதிகாரியாக செயற்படுகிறாரா அநுர</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டை ஆட்சி செய்பவர்கள் அதிகாரங்கள் பகிரப்பட்டதாகக் கூறினாலும், மாகாண
சபைகள் அற்ப சொற்ப அதிகாரங்களோடு இயங்காமல் கிடக்கின்றன. </p><p>மத்திய அரசுக்கு
இல்லாத அதிகாரங்களையும் தன் முகவர்கள் மூலம் ஒன்பது மாகாணங்களிலும்
நிறைவேற்றும் முழுச் சர்வாதிகார நிறைவேற்று அதிகாரியாகவே தற்போதைய ஜனாதிபதி
செயற்படுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/552a85f1-aefe-427d-a6db-ab31c9569b95/26-6aa6574961eec.webp' /></p><p>
</p><p>
இந்த அரசு ஊழல், இலஞ்சம், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள்
வியாபாரிகளுக்கு எதிராகத் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதை நாங்கள்
வரவேற்கின்றோம்.</p><p> இதற்கு முன்னர் மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளைப் போலன்றி,
இரு தரப்புக்கும் எதிராக அவர்கள் எந்தவித சமரசமுமின்றி நடவடிக்கை எடுத்து
வருவது பாராட்டத்தக்கது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக அவ்வளவு மும்முரமாகச் செயற்படும் இந்த அரசு, தமிழ்
மக்களுக்குரிய எந்தவொரு விடயத்தையும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. </p><p>

எங்களது
வாழ்வாதாரத்துக்கு அத்திவாரமான நிலங்களை விடுவிப்பதாகக் கூறிவிட்டு, ஏற்கனவே
2024ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட 700 ஏக்கர் காணிகளையும், ஏற்கனவே திறக்கப்பட்ட
பலாலி வீதியையுமே மீளவும் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். வடக்கில் இதுவரை ஓர்
அங்குல நிலம் கூட புதிதாக விடுவிக்கப்படவில்லை.
</p><h2>

காணி விடுவிப்பு கோரிக்கை</h2><p>

எதிர்க்கட்சியில் இருந்தபோது எங்களுடன் இணைந்து தனியார் காணிகள் விடுவிக்கப்பட
வேண்டும் என்று வாய் கிழியக் கத்தியவர்கள், இப்போது ஜனாதிபதியாகிவிட்டு
இராணுவத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்று கூறுகின்றார்கள்.</p><p>

அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள முதலாவது வாக்குறுதியான புதிய அரசமைப்பு
உருவாக்கம் தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71cddb2c-d668-4b9f-aedd-a3fd78dd59ef/26-6aa6574a779e3.webp' /></p><p>
</p><p>
பௌத்த மதபீடங்களின் எதிர்ப்பையும் மீறி அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைக்
கொண்டுவரும் துணிவைக் காட்டும் அரசு, அதிகாரப் பகிர்வு குறித்துச்
சிந்திப்பதில்லை. </p><p>

எல்லாவற்றையும் தங்களுடைய கைக்குள்ளே கொண்டு வந்து ஒரு கட்சி
ஆட்சியாக மாற்றும் நடவடிக்கைகள்தான் நடக்கின்றன. எனவே, இவற்றை எதிர்த்துத்
தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:57:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் மஹாவலி கங்கை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-sand-mining-in-the-mahaweli-river-1789282574"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-sand-mining-in-the-mahaweli-river-1789282574</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

திருகோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (12.09.2026) இரவு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.</p><h2>தப்பிச் சென்ற வாகனச் சாரதிகள்</h2><p> </p><p>

இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி கங்கையில் இறங்கி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும், ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fafc77cd-2f09-4d2c-994f-705cb17c906e/26-6aa64fda8a906.webp' /></p><p> </p><p>

இதன்போது வாகனச் சாரதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c81a66-5162-4447-b830-d2706db2f9f8/26-6aa64fdb6ef5f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T07:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் புதிய சாகச சுற்றுலாத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/adventure-tourism-project-in-nuwara-eliya-district-1789281060"></link>
            <id>https://tamilwin.com/article/adventure-tourism-project-in-nuwara-eliya-district-1789281060</id>
            <summary type="text">உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தில்
சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், புதிய சாகச சுற்றுலா
நிகழ்ச்சித் திட்டமொன்று முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தில்
சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், புதிய சாகச சுற்றுலா
நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
இதன் ஒரு பகுதியாக, நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா, நல்லதண்ணி மற்றும்
மவுசாகலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு, நீர் மற்றும் சாகச சுற்றுலா நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
</p><p>
இந்த நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில்,
நுவரெலியா மாவட்டத்தின் பிரபலமான மோஹினி அருவியை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1fda8e-4a4e-403a-a4c0-3c6a1881611c/26-6aa64728c3371.webp' /></p><h2>பல்வேறு கலாசாரங்களின் இணைவு</h2><p>

மத்திய மாகாணத்தில் இயற்கை வளங்கள், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பல்வேறு
கலாசாரங்களின் இணைவு காணப்படுவதுடன், இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத பல
சுற்றுலா வளங்களும் காணப்படுகின்றன.</p><p>

இந்த வளங்களை பொறுப்புடனும் நிலையான முறையிலும் பயன்படுத்தி, பிரதேச மக்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், சுற்றுலாத்துறையின் ஊடாக புதிய பொருளாதார
வாய்ப்புகளை உருவாக்குவதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
</p><p>
குறிப்பாக, நொர்வூட் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மவுசாகலை நீர்த்தேக்கம்,
காமோர், மேரே மற்றும் மோஹினி போன்ற நீர்வீழ்ச்சிகள், அத்துடன் புனித
சிவனொளிபாதமலை ஆகியவற்றை மையப்படுத்தி எதிர்காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி
மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a74fa324-6296-470f-bb9d-dcafb2a840f2/26-6aa6472997a11.webp' /></p><h2>சாகச சுற்றுலா</h2><p>

இதனடிப்படையில், சாகச சுற்றுலாவை ஒரு புதிய சுற்றுலா உற்பத்தியாக
அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் இந்த நிகழ்வு
பயன்படுத்தப்படவுள்ளது.
</p><p>
இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக நல்லதண்ணி மற்றும் அதனைச்
சூழவுள்ள பகுதிகளின் சுற்றுலா கவர்ச்சியை மேலும் அதிகரிப்பது
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/528c0995-7a07-42e9-bf54-e1695b59b017/26-6aa6472a6f747.webp' /></p><p>

அத்துடன், பிரதேச மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை
உருவாக்குதல், அவர்களின் வருமான மட்டத்தை உயர்த்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு
புதிய அனுபவங்களையும் சுற்றுலா உற்பத்திகளையும் அறிமுகப்படுத்துதல் ஆகியவையும்
எதிர்பார்க்கப்படுகின்றன.
</p><p>
குறிப்பாக, நல்லதண்ணியை ஒரு முக்கிய சுற்றுலா இலக்காக மேலும் நிலைநிறுத்தி,
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பிரதேசத்தில்
தங்க வைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் திட்டத்தின் மற்றுமொரு
இலக்காகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/377bc3ce-3ace-461c-b29d-37632c783dbe/26-6aa6472b47ecf.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T06:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rally-in-jaffna-demanding-an-international-inquiry-1789281482"></link>
            <id>https://tamilwin.com/article/rally-in-jaffna-demanding-an-international-inquiry-1789281482</id>
            <summary type="text">செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என
கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என
கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(13.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 



 சர்வதேச கவனத்திற்கான பேரணி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் , சான்று
பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. 

அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ad8e520-3af3-4657-9bd0-cf10f93b2f7c/26-6aa6453bd8d7b.webp' /></p><p> </p><p>

இலங்கையில் நடைபெற்றது இன படுகொலை என்பதற்கான
சான்றாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது. அதனால் அது தொடர்பில் சர்வதேச
விசாரணை முன்னெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள , ஐ.நா
காரியாலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, கிட்டு பூங்கா பகுதியில்
நிறைவடைந்துள்ளது.</p><p> 

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சேர்ந்து கூட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31aaaa9a-b0b1-4953-b35e-5f659d1c4edb/26-6aa6453cc8abe.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9068d9de-c500-4c04-bcf8-05fe71f0a170/26-6aa6453da2376.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7c4e9cf-87ee-4b8a-bc99-2acc021eb25c/26-6aa6453e7bd46.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T06:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-drivers-arrested-for-using-kerosene-1789278841"></link>
            <id>https://tamilwin.com/article/bus-drivers-arrested-for-using-kerosene-1789278841</id>
            <summary type="text">திருகோணமலை - கந்தளாய் பொலிஸாரினால்&amp;nbsp;டீசலுக்கு பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கந்தளாய் பொலிஸாரினால்&nbsp;டீசலுக்கு பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p>நேற்று (12) மாலை

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது&nbsp;பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p>குறித்த பேருந்துகளின் இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டு பொலிஸ்
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><h2>சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிப்பு</h2><p>

கண்டியிலிருந்து உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை
நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்துகள், கந்தளாய்
போட்டான்காட்டு சந்தியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

இதன்போது, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி
பேருந்துகள் இயக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவை பொலிஸ்
பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும்,
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T06:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையுடன் IMFஇன் 7ஆவது மீளாய்வு கலந்துரையாடல்கள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-s-7th-review-discussions-with-sri-lanka-begin-1789278839"></link>
            <id>https://tamilwin.com/article/imf-s-7th-review-discussions-with-sri-lanka-begin-1789278839</id>
            <summary type="text">இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள், நிதி அமைச்சு
மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள், நிதி அமைச்சு
மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
இலங்கையின் கடன் திட்டத்தின் 7ஆவது மீளாய்வு தொடர்பான கலந்தாலோசனைகளை
மேற்கொள்வதற்காகவே IMF குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><h2>மேற்கொள்ளப்படவுள்ள கலந்துரையாடல்</h2><p>
</p><p>
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), மின்சாரத் துறை ஒழுங்குமுறை
அமைப்புக்கள் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றின்
அதிகாரிகளுடனும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை
நடத்தவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fa2850-6662-465d-bc39-bab159e4ce49/26-6aa63e759e11a.webp' /></p><p>
</p><p>
இந்த பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T06:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்! அநுராதபுர பேரணி மேடையில் இருந்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-rajapaksa-will-also-face-imprisonment-1789274275"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-rajapaksa-will-also-face-imprisonment-1789274275</id>
            <summary type="text">
சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர், மகிந்தவுக்காகதான் செய்தோம், அவரிடம் தான் பணத்தைக் கொடுத்தோம் என பொய்யாக வாக்குமூலம் வழங்கினால், மகிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர், மகிந்தவுக்காகதான் செய்தோம், அவரிடம் தான் பணத்தைக் கொடுத்தோம் என பொய்யாக வாக்குமூலம் வழங்கினால், மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படுவார்&nbsp;என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p> இன்று இப்படித்தான் நியாயமற்ற முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>அநுராதபுரத்தில் நேற்றையதினம்(12.09.2026) இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>மகிந்தவும் கைது செய்யப்படுவார்..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> 

எந்தவொரு சாட்சியங்களும் இன்றி இந்த அரசாங்கம் நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளது. இதுதான் சட்டமா.</p><p>

தற்போது சிறையில் இருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மகிந்த ராஜபக்சவுக்காகதான் நாங்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டோம், அவரிடம் பெருந்தொகை பணத்தினைக் கொடுத்துள்ளோம் என சாட்சியளித்தால் என்ன நடக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa0595a-c76a-448e-8a78-db4346570b0b/26-6aa634825a506.webp' /></p><p>
</p><p>
அந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் அரசாங்கத்தின் சாட்சியாளர்களாக மாறுவார்கள். எமது தலைவர் மகிந்த சிறையில் அடைக்கப்படுவார். இது மிகவும் ஆபத்தான ஒரு விடயம்.
</p><p>
வாயில் பிட்டு வைத்திருப்பது போல அமைதியாக இருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நான் ஒன்றை கூற விரும்புகின்றேன்.
</p><p>
இந்த லொத்தர் சீட்டிழுப்பில் சிறைக்குச் செல்லப்போகும் அடுத்த அதிர்ஷ்டசாலி நீங்களாக இருக்கலாம். தவறு செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உள்ளே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f944d29c-00e5-487f-bcbb-74c614b8a5de/26-6aa634832ef2e.webp' />&nbsp;</p><p> </p><p>


ஹிட்லர் காலத்து கெஸ்டபோ பொலிஸாரும், அநுர குமார வசம் இருக்கும் பொலிஸாரும் ஒன்றுதான். சட்டம் சமமாக பிரயோகப்படுத்தப்படவில்லை. </p><p>

தற்போது இருக்கும் அநுர குமாரக்களும், விஜித ஹேரத்களும், லால் காந்தக்களும், வசந்த சமரசிங்கக்களும் இன்று கோடீஷ்வரர்களாக மாற கருப்புப் பணமே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T05:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை 243 பேருடன் திடீரென மாயமான கப்பலினால் பரபரப்பு - மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ship-with-243-people-missing-in-indonesia-1789276286"></link>
            <id>https://tamilwin.com/article/ship-with-243-people-missing-in-indonesia-1789276286</id>
            <summary type="text">புதிய இணைப்புகாணாமல்போன ‘Virgo Transport 8’ என்ற பயணிகள் கப்பலில் இருந்து இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>காணாமல்போன ‘Virgo Transport 8’ என்ற பயணிகள் கப்பலில் இருந்து இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



எனினும், மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> இதனால் மேலும் 140 பேரின் நிலை தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தோனேசியாவில் 243 பேரை ஏற்றிச்சென்ற ‘Virgo Transport 8’ என்ற பயணிகள் கப்பல் காணாமல்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> </p><p>தற்போது நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியில் ஜாவா கடல் பகுதியில் கப்பல் தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>துண்டிக்கப்பட்ட கப்பலுடனான தொடர்பு&nbsp;</h2><p>
</p><p>இந்த கப்பல் நேற்று (12) கிழக்கு ஜாவாவின் சுரபயா (Surabaya) நகரிலிருந்து தெற்கு கலிமந்தன் (Kalimantan) மாகாணத்தில் உள்ள பஞ்சார்மாசின் (Banjarmasin) நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த நிலையில், இன்று(13) அதிகாலை சுமார் 2 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42ea2f9-5e12-4796-b202-28bcb5fba597/26-6aa63430d881e.webp' />&nbsp;</p><p> கப்பலின் இறுதி நிலை (பஞ்சார்மாசின்) Banjarmasin பகுதியில் இருந்து சுமார் 80 கடல் மைல் தொலைவில் பதிவாகியிருந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கப்பலை தொடர்புகொள்ள முடியாத நிலையில், உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாக அந்நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>கப்பலின் இறுதி நிலை</h2><p>கப்பல் கடைசியாக தொடர்பை இழந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11241443-5838-4978-99c6-6757c1bf3aeb/26-6aa634318deea.webp' /></p><p>KN SAR Laksmana 241' என்ற மீட்புக் கப்பல் உள்ளிட்ட குழுக்கள் கப்பலின் இறுதியாக பதிவான நிலையை நோக்கி அனுப்பப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை 125 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>


கப்பல் மோசமான வானிலையை எதிர்கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T05:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று உயிர்களை காவுகொண்ட மோஹினி எல்ல பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/security-fence-in-the-mohini-ella-area-1789275172"></link>
            <id>https://tamilwin.com/article/security-fence-in-the-mohini-ella-area-1789275172</id>
            <summary type="text">நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி, மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மோஹினி எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. </p><p>

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe896d6d-626e-4fc7-a478-a0a1be267e68/26-6aa6324abdf6c.webp' /></p><h2>குறித்த பகுதியின் பாதுகாப்பு</h2><p> 

இந்த சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அதே பகுதியில் கார் ஒன்றும் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, குறித்த பகுதியின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடையே கவலை ஏற்பட்டிருந்தது. </p><p>

மோஹினி எல்ல அமைந்துள்ள பகுதி, வளைவுகள் மற்றும் ஆபத்தான நில அமைப்பைக் கொண்டுள்ளதால், வாகனங்கள் வீதியை விட்டு விலகும் சந்தர்ப்பங்களில் பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345aee59-dd8c-4b30-8eb0-1638646a92e0/26-6aa6324bc6851.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, ஆபத்தான இடத்தில் பாரிய பாதுகாப்புத் தடுப்புக் கம்பங்கள் நாட்டப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>வீதிப் பாதுகாப்புச் சமிக்ஞை</h2><p> </p><p>

அத்துடன், வாகன சாரதிகள் அவதானமாக பயணிப்பதற்காக தேவையான வீதிப் பாதுகாப்புச் சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84a392f1-fdc0-48eb-82a1-c5bd84c09da0/26-6aa6324ca1fec.webp' /></p><p> </p><p>

இதன்மூலம், வாகனங்கள் வீதியை விட்டு விலகி ஆபத்தான பகுதிக்குள் செல்வதைத் தடுப்பதுடன், குறித்த பகுதியில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

மூன்று உயிர்களை காவுகொண்ட மோஹினி எல்ல பகுதியில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக முறையாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde3024d-dffe-45bb-afb8-e922d56bf370/26-6aa6324d7e04b.webp' /></p><p>	
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06a50021-2721-4cfe-aad0-6757d054a707/26-6aa6324e5b28d.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22bd8044-9f5d-493c-aff5-81282a98f0c2/26-6aa6324f34cc9.webp' />&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T05:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையலுக்குள் சிக்கிய ராஜபக்ச குடும்பம் - அணைக்கட்டுக்குள் இருந்து வெளிவரும் பூதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/moneragala-tank-treasure-hunt-probe-intosasheendra-1789271664"></link>
            <id>https://tamilwin.com/article/moneragala-tank-treasure-hunt-probe-intosasheendra-1789271664</id>
            <summary type="text">மொனராகலை குளம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ராஜபக்சர்களின் புதையல் தேடும் நடவடிக்கை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து தீவிர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை குளம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ராஜபக்சர்களின் புதையல் தேடும் நடவடிக்கை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உரையாற்றும் போது பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

புதையல் தோண்டும் நடவடிக்கை</b></h2><p>மொனராகலை மாவட்டத்தின் மதகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்கமுவ கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பாலேகந்த குளத்தை புனரமைப்பதற்காக, அதன் அணைக்கட்டு 2020 மே மாதத்தில் உடைக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/106edf31-b623-4fa0-bbeb-5e36ebdc9f58/26-6aa6410daf427.webp' /></p><p>குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக ஆரம்பத்தில் 82.2 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும் பின்னர் அது 167.26 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. </p><p>அரசாங்கம் இதுவரை இத்திட்டத்திற்காக 70.5 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
அலவலக அறிக்கைகளின்படி, குளத்தின் புனரமைப்புப் பணிகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p> 

எனினும் சமகால அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் குமார தெரிவிக்கையில், அண்மையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்படி, இதுவரை செலவிடப்பட்டுள்ள 70.5 மில்லியன் ரூபாய்க்கு இணையான எந்தவொரு பணியும் அங்கு நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டார்.</p><p>
</p><h3><b>
 ஷஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம்</b></h3><p>முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்படும் இந்த புதையல் தேடும் மோசடியை மறைப்பதற்காகவே இந்த புனரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அது குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b12b633f-e030-4f6c-be93-92218e2f78dd/26-6aa6227befe84.webp' /></p><p>இத்திட்டம் சுமார் ஆறு வருடங்களாக முடங்கியுள்ளதால், தமது வாழ்வாதாரத்திற்காக இக்குளத்தை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-13T04:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/instruction-patients-national-eye-hospital-colombo-1789271006"></link>
            <id>https://tamilwin.com/article/instruction-patients-national-eye-hospital-colombo-1789271006</id>
            <summary type="text">கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலை நிர்வாகம் முக்கிய அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது.சிகிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலை நிர்வாகம் முக்கிய அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது.</p><p>சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கான அடுத்த சிகிச்சை திகதியை கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி (S.M.S.) மூலம் தெரிவிக்கும் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இந்த முறைமை நோயாளிகளுக்கு அடுத்த சிகிச்சை திகதியை எளிதாக கண்டறிய உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><h2>80000 நோயாளிகளுக்கு குறுஞ்செய்தி</h2><p>

இதன்படி, சிகிச்சை மையம் 80000 நோயாளிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3a83a4-faa9-4fa3-aebf-69a8be56eef4/26-6aa62d5f4b52d.webp' /></p><p>
</p><p>
தினமும் சுமார் 600 நோயாளிகள் சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு வருவதாகவும், தினமும் சுமார் 100 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

மேலும், 24 மணி நேரமும் செயல்படும் கண் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை சேவையும் செயல்பாட்டில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் நாளன்று நடைமுறைகள் முடிந்த பிறகு, வைத்தியசாலை பதிவேட்டை அறை எண் 10 ல் ஒப்படைக்க வேண்டும் என்றும், பின்னர் அதே நாளில் அடுத்த சிக்கிச்சை திகதியை குறிப்பிடும் குறுஞ்செய்தி நோயாளிகளின் கைபேசிகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இராணுவ தலைவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-military-leaders-warn-the-us-and-israel-1789272273"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-military-leaders-warn-the-us-and-israel-1789272273</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் இராணுவத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். </p><p>

ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி பேசுகையில், ஈரானிய இராணுவமும் ஈரானிய புரட்சிகர காவல்படையும் (IRGC) இணைந்து எத்தகைய எதிரி நடவடிக்கையையும் முறியடிக்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.</p><h2>இரும்புக் கேடயமாக செயற்படும் படைகளுக்கு இடையிலான ஒற்றுமை</h2><p> 

இரு படைகளுக்கும் இடையிலான ஒற்றுமை, நாட்டின் எதிரிகளின் சதித்திட்டங்களிலிருந்து பாதுகாக்கும் "இரும்புக் கேடயமாக" செயல்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0c9b77-db36-4653-a1e4-f6e1105deb47/26-6aa6237093946.webp' /></p><p> 

இதேவேளை, IRGC தளபதி மேஜர் ஜெனரல் அகமத் வஹீதி தெரிவிக்கையில், எதிரி நாடுகள் ஈரானின் இராணுவ திறனை குறைவாக மதிப்பிட்டு பின்னர் தங்கள் தவறை உணர்ந்து கொண்டதாகக் கூறினார்.</p><p> 

ஈரானிய இராணுவமும் IRGCயும் அமெரிக்க ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் பலத்த அடிகளைக் கொடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனமழை பெய்யக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1789272022"></link>
            <id>https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1789272022</id>
            <summary type="text">நாட்டில் இன்று பல இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 ​வடமத்திய, மத்திய, சபரகமுவ, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இன்று பல இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

</p><p> ​வடமத்திய, மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின்
சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை
பெய்யக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cf9eb9-70b0-48a9-9bb0-0f62a0436166/26-6aa61fd8eeca3.webp' /></p><p>மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை
மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்
திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

​இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களிலும் தற்காலிகமாக
வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய
ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மையப்புள்ளி! மிக் தொடர்பில் மறைக்கப்பட்ட பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-mig-deal-1789257886"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-mig-deal-1789257886</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமானக் கொள்னவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமானக் கொள்னவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் மிக் கொள்வனவு தொடர்பில் பல மறைக்கப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன.
</p><p>பாவித்த 4 மிக்-27 தாக்குதல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கும், அந்த நேரத்தில் இலங்கை விமானப்படையிடம் இருந்த 3 மிக்-27 போர் விமானங்கள் மற்றும் விமானிகளைப் பயிற்றுவிக்கும் 1 மிக்-23 விமானம் ஆகியவற்றை பழுதுபார்ப்பதற்கும் 2006 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி இலங்கை விமானப்படை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது .
</p><p></p><h2>இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம்</h2><p>இவை இரண்டு நாடுகளுக்கு இடையே நேரடியாக நடந்த ஒரு கொடுக்கல் வாங்கல் (G2G) போலக்காட்டப்பட்டுள்ளது. </p><p>உக்ரைன் அரசுக்கு சொந்தமான "உக்ரின்மாஷ்" (Ukrinmash) என்ற அரசு ஏற்றுமதி நிறுவனத்துடன் நேரடியாக நடைபெற்ற கொடுக்கல்வாங்கல் என்றே கூறப்பட்டது. </p><p>மேலும், இதை இரண்டு நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாகக் காட்டவே பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இருப்பினும், இந்த கொடுக்கல் வாங்கல் இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த ஒன்று அல்ல என்பது பின்னர் தெரியவந்திருந்தது. </p><p>கொடுப்பனவுகளும் உக்ரைன் அரசு நிறுவனமான "உக்ரின்மாஷ்" நிறுவனத்திற்குச் செய்யப்படவில்லை; மாறாக "பெல்லிமிஸா ஹோல்டிங்ஸ்" (Bellimissa Holdings) என்ற தனியார் நிறுவனத்திற்கே செலுத்தப்பட்டிருந்தது. </p><p>
 </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5b493f-8d3f-4522-bea5-388ce9f927ab/26-6aa5e8a14aabf.webp' /></p><p>கொள்முதல் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பாக நியாயமற்ற விலைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முழுமையான கொள்முதல் மற்றும் பழுதுபார்ப்பிற்காக இலங்கை செலுத்திய மொத்தத் தொகை 14.67 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.</p><p>விசாரணைகளில் இது 15.66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்தது. 


4 மிக் விமானங்கள், ஒரு விமானம் 2.462 மில்லியன் டொலர்கள் என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளன. </p><p>2006 இல் இந்த 4 விமானங்கள் வாங்கப்பட்ட அதே கையிருப்பிலிருந்தே (Stock), 2000 ஆம் ஆண்டு மே 25 மற்றும் அக்டோபர் 24 ஆகிய திகதிகளில் பயன்படுத்தப்பட்ட 6 மிக் விமானங்களும், மேலே குறிப்பிடப்பட்ட பயிற்சி விமானமும் வாங்கப்பட்டன. </p><p>2000 ஆம் ஆண்டில் இந்த விமானங்களை வாங்கும் போது அதன் விலை: மே 25 இல் வாங்கும் போது 1.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அக்டோபர் 24 இல் வாங்கும் போது 1.6 மில்லியன் டொலர்கள். மே 25 இல் 4 விமானங்களும், அக்டோபர் 24 இல் 2 விமானங்களும் வாங்கப்பட்டன.</p><h2>
விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்</h2><p>ஆனால், 2000 ஆம் ஆண்டில் விமானங்கள் வாங்கப்பட்ட போது இருந்த அதே கையிருப்பில் எஞ்சியிருந்த 4 விமானங்கள் தான் 2006 ஆம் ஆண்டில் வாங்கப்படுகின்றன. </p><p>அப்படியென்றால், 2000 ஆம் ஆண்டில் வாங்கப்படாமல் 6 ஆண்டுகள் பழமையான இந்த 4 மிக் போர் விமானங்களும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விமானம் 2.462 மில்லியன் டொலர்கள் என இரட்டிப்பு விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. </p><p>இது எப்படி நடந்தது?

2000 ஆம் ஆண்டில் 6 விமானங்களை வாங்கச் சென்ற போது, விமானங்களைத் தேர்வு செய்யும் தரப் பரிசோதனைகளில் இந்த 4 விமானங்களும் நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5abe18d-dc27-47b6-91bd-ec275aa26812/26-6aa5e8a1f3c8d.webp' /></p><p>அந்த 4 விமானங்கள் தான், 2006 ஆம் ஆண்டில் அதிக விலை கொடுத்து இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவும் தற்போது வெளிடைவாகியுள்ளது.
</p><p>
விமானிகளைப் பயிற்றுவிக்கும் மிக்-23 என்ற விமானம் 2000 ஆம் ஆண்டில் 900,000 அமெரிக்க டொலர்களுக்கு (9 லட்சம் டொலர்) வாங்கப்பட்டது. </p><p>ஆனால், புதிய ஒப்பந்தத்தின் பின்னர் இந்த விமானத்தைப் பழுதுபார்க்க செலவிடப்பட்ட தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள். விமானத்தை வாங்கியது 0.9 மில்லியன் டொலருக்கு, ஆனால் அதை பழுதுபார்க்க 1.1 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.</p><p>ஒரு புதிய விமானத்தை வாங்குவதை விட, பழைய விமானத்தைப் பழுதுபார்க்க அதிக பணம் செலவிடப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல தகவல்கள் இன்னும் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T03:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-colombo-residents-arrested-at-the-airport-1789268954"></link>
            <id>https://tamilwin.com/article/two-colombo-residents-arrested-at-the-airport-1789268954</id>
            <summary type="text">சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கொழும்பு பகுதியில் வசிக்கும் 42 வயதான வணிகர்கள் எனக்கூறப்படும் இரு சந்தேகநபர்களும் நேற்று இரவு (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>விமான நிலைய சுங்க அதிகாரிகளால்&nbsp;விசாரணை</h2><p>

அறிவிப்பின்றி அவர்கள் சிகரெட் பொதியை நாட்டிற்குள் கொண்டு வந்து வெளியேற முயன்றபோது, ​​சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64b85470-f8e4-4fa8-8d8b-b2dc6fd7123b/26-6aa6186055323.webp' /></p><p>
</p><p>
4 சூட்கேஸ்களில், 106,600 வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கொண்ட 533 அட்டைப் பெட்டிகள் இவ்வாறு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சிகரெட்டின் மதிப்பு சுமார் ரூ. 159,990,000 என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இரு சந்தேகநபர்களும் காவலில் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T03:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையை உலுக்கிய வன்முறைகளின் பின்னணியில் யார்.....! மூளையாக செற்பட்ட நபர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099"></link>
            <id>https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

குற்ற செயல்களில் மூளையாகச் செயற்பட்டவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதிவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><h2><b>தெஹிவளை தாக்குதல்</b></h2><p> 

தற்போது வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825c92c3-b244-4e18-82d4-15bab348c8f8/26-6aa51f4f8e104.webp' /></p><p>நேற்று அதிகாலை தெஹிவளை - கௌடான, சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், இரு மாணவர்கள் குறித்த வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் தந்தையின் கால்கள் காயமடைந்தன.</p><p>காயமடைந்தவரின் சகோதரன், படோவிட்ட அஸங்க என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h3><b>
கைக்குண்டுத் தாக்குதல்</b></h3><p>அதற்கமைய, இந்த கைக்குண்டுத் தாக்குதலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்மள்ளி என்பவர் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1318c143-7470-43a0-82cf-97f65e7fc22a/26-6aa522f512073.webp' /></p><p>கடத்தலுடன் தொடர்புடைய குறித்த நபரின் வீடு மீதே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வீடு மாறியமையால் அதற்கு அருகில் இருந்த சகோதரரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபருக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-13T03:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் புதிய மோசடி - சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-smart-key-thefts-at-hambantota-port-1789267408"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-smart-key-thefts-at-hambantota-port-1789267408</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை' (Smart keys) திருடி விற்பனை செய்த சட்டவிரோத குழுவைச் சேர்ந்த துறைமுக ஊழியர் ஒருவரும் தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>விசாரணையில்&nbsp;தொழிலதிபரும் கைது&nbsp;</h2><p>வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை திருடிய துறைமுக ஊழியரை துறைமுக பாதுகாப்புப் பிரிவினர் அடையாளம் கண்டு நடத்தப்பட்ட விசாரணையில் மற்றுமொரு தொழிலதிபரும் சிக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04dab22-8cd3-4e20-a2e2-08417f270be2/26-6aa6132667801.webp' /></p><p>அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த ஊழியர், குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு சாவியை 6000 ரூபாய் முதல் விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>
அத்துடன் பல மாதங்களாகச் சுமார் 45 ஸ்மார்ட் சாவிகளை விற்பனை செய்து அந்த ஊழியர் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து குருநாகல் பகுதியை சேர்ந்த தொழிலதிபரை பொலிஸார் கைது செய்து அவரிடமிருந்த ஸ்மார்ட் சாவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T03:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றினை திடீரென சுற்றிவளைத்த சிஐடியினர்..! சிக்கிய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-was-arrested-with-hand-gun-1789266104"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-was-arrested-with-hand-gun-1789266104</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன்&amp;nbsp;சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப்பிரிவு கைது செய்துள்ளது. இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன்&nbsp;சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப்பிரிவு கைது செய்துள்ளது. </p><p>இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கி, ஒரு வெடிக்காத கையெறி குண்டு மற்றும் 06 BMG ரக தோட்டாக்கள் ஆகியவற்றுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை</h2><p>குற்றப்புலனாய்வுப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின்படி, கந்தகெதரவில் உள்ள வலக்கும்புரமுல்ல பகுதியில் நேற்று (12) வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7a17742-9e5e-4d67-873c-2a3ef10ab90a/26-6aa60cd49544d.webp' />&nbsp;</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், வலக்கும்புரமுல்ல, குளியாபிட்டியவைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T02:39:24+00:00</updated>
        </entry>
    </feed>
