<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-13T04:13:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-hospital-colombo-1786582167"></link>
            <id>https://tamilwin.com/article/national-hospital-colombo-1786582167</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச் செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச் செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்படுகிறது. </p><p> 
வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் பகுதியான நொரிஸ் கெனல் வீதியில் கடைகளுக்கு மத்தியில் ஒரு பொதுக் கழிப்பறை அமைந்துள்ளது. </p><p>இரவு 7 மணி தாண்டியதும் அவ்விடம் போதைக்கு அடிமையானவர்களின் புகலிடமாக மாறுவிடுகின்றது. 
இக்கழிப்பறை கொழும்பு மாநகரசபையினால் நிர்வகிக்கப்பட்டாலும் இரவு வேளையில் எந்தவொரு வெளிச்சமும் இருப்பதில்லை. </p><h2>

</h2><p></p><h2>போதைக்கு அடிமையானவர்களின் ஆதிக்கம்</h2><p>இரவில் இந்த இருள் சூழ்ந்த பாதையால் பயணிக்கும் ஒரு அப்பாவி மனிதன் தன் ஆடை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e745a55-0786-447e-9129-e52e91ab42a4/26-6a7d1499a19d0.webp' /></p><p> கூர்மையான ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்துதல்
பணம் பறித்தல் தாக்குதல் நடத்துதல் ஆகியவை இவ்விடத்தில் தினமும் நடைபெறும் சம்பவங்களாகும். </p><p>கப்பம் பெறுகிறார்கள் கடைகளில் வேலை செய்ய விடுவதில்லை.
கடைகளுக்குச் வரும் மனிதர்கள் இதன் காரணமாகப் பயப்படுகிறார்கள். அடித்துப் பணம் பெறுகிறார்கள். 
வைத்தியசாலையில் வேலை செய்யும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த போதைக்கு அடிமையானவர்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். </p><p>அந்த பகுதிகளில் வியாபாரம் செய்யும் பெண்மணிகள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ரூ. 400 - 500 ஐப் பறிக்கிறார்கள். 'இந்தக் கடைப் பக்கத்தில் எங்கும் நிற்காதீர் உன்னை வெட்டிவிடுவேன்' என்று ரூ. 400 - 500 ஐப் பறிக்கிறார்கள்.
</p><p>இங்கிருக்கும் 'பாபா' என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி பொலிஸ் அதிகாரி போல் நடித்துக் கப்பம் பெறுவதும் கூர்மையான ஆயுதங்களால் தாக்குவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.</p><p>அதுமட்டுமன்றி தேசிய வைத்தியசாலையைச் சுற்றி நடக்கும் மாபெரும் மோசடி என்னவென்றால் தானத்திற்கு எனக் கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் சேகரிப்பதாகும். </p><p>இவ்வாறு சேகரிக்கப்படும் பணம் நேரடியாகவே போதைப்பொருள் வாங்குவதற்குச் செல்கிறது.
 நாளாந்த வருமானம் 10,000 ரூபாவையும் மிஞ்சுவதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>இவ்வாறு மோசடியாகப் பணம் சேகரித்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல வருடங்களாகத்தான் இதைச் செய்து வருகிறார்கள். </p><p>மேலும் முடிச்சுமாறிகளின் கைவரிசையும் அதிகரித்துள்ளது. எத்தனை பேரின் பொக்கட்டுகளை வெட்டிச் செல்கிறார்கள். வைத்திசாலையின் பொலிஸ் காவலரணில் அடையாள அட்டைகள் மற்றும் பணப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
</p><p>பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் தமது கடமையை முறறையாகச் செய்தபோதிலும் தேசிய வைத்தியசாலை சூழலின் பாதுகாப்புத் தொடர்பாகப் பெரும் கேள்விக்குறியான சூழ்நிலையே நிலவுகிறது. </p><p>இது குறித்து விரைவான தீர்வை வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேரடி கவனம் செலுத்த வேண்டும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T04:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படாத கோடிக்கணக்கான பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-prime-minister-mp-presidential-fund-issue-1786587624"></link>
            <id>https://tamilwin.com/article/former-prime-minister-mp-presidential-fund-issue-1786587624</id>
            <summary type="text">ஜனாதிபதி நிதியத்திலிருந்து மீள பெறப்படும் என்ற அடிப்படையில் ஒரு முன்னாள் பிரதமருக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் வழங்கப்பட்ட பெருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி நிதியத்திலிருந்து மீள பெறப்படும் என்ற அடிப்படையில் ஒரு முன்னாள் பிரதமருக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் இதுவரை மீட்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.</p><p>

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>செலுத்தப்படாத கோடிக்கணக்கான பணம்</h2><p>
அதன்படி, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மருத்துவ சிகிச்சை வசதிகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து ஒரு முன்னாள் பிரதமருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்கப்பட்ட ( 24,657,015) சுமார் இரண்டரை கோடி ரூபாய் தொகையானது, மே 20, 2026 நிலவரப்படி வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef8ef9c-aa17-436c-bba7-d585fa9140b3/26-6a7d3a2e97859.webp' /></p><p>
</p><p>
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய தணிக்கைச் சட்டத்தின் பிரிவு 12 (j)-இன் படி மேற்கொள்ளப்பட்ட தணிக்கை ஆய்வுகளின் போது இந்த தகவல் வெளிப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட ரூ. 10,908,798 (ஏப்ரல் 04, 2012 அன்று) மற்றும் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட ரூ. 13,748,217 ஆகிய தொகைகள் மே 20, 2026 நிலவரப்படி வசூலிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.</p><p> 

ஜனாதிபதி நிதியத்தின் 2025 ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T03:29:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பதவியேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-us-ambassador-to-sri-lanka-eric-meyer-sworn-in-1786589840"></link>
            <id>https://tamilwin.com/article/new-us-ambassador-to-sri-lanka-eric-meyer-sworn-in-1786589840</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.&amp;nbsp;வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.&nbsp;</p><p>வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.</p><h2>கொழும்பிற்கு வரவேற்பு</h2><p>புதிய தூதுவரை கொழும்பிற்கு வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a115cb-841a-4ea0-8dae-e88a4e37b93d/26-6a7d339fe874d.webp' /></p><p>அதன்படி, எரிக் மேயர் இலங்கைக்கான அமெரிக்கத்தூதராக கடமைகளை தொடங்க உள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T03:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீட்டிழுப்பு இலக்கங்களை பயன்படுத்தி பணமோசடிகள்! பரவும் போலி தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-gambling-using-lottery-numbers-1786585040"></link>
            <id>https://tamilwin.com/article/massive-gambling-using-lottery-numbers-1786585040</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இவ்வாறான சட்டவிரோத சூதாட்டம் காரணமாக சமூகத்தில் பாரிய பேரழிவு உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.
</p><p>
கோப் (COPE) உபகுழு முன்னிலையில் இரு லொத்தர் சபைகளின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்த போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">லொத்தர் சீட்டின் கடைசி இரண்டு எண்களுக்காக பந்தயம்&nbsp;</span></p><p>

அதாவது, 0 முதல் 9 வரையிலான எண் அமைப்புகளிலிருந்து 2 எண்களைத் தேர்ந்தெடுத்து, அன்றைய தினம் வெளியாகும் லொத்தர் சீட்டின் கடைசி இரண்டு எண்களுக்காக இதில் பந்தயம் கட்டப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce84341-17a1-4d7c-9c6f-5354f3a03ab2/26-6a7d2e2f415ae.webp' /></p><p>

தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளால் இரவு 7.30 மணியளவிலேயே சீட்டிழுப்புகள் நடத்தப்படுகின்றன.
</p><p>
இந்நிலையில், ஒரு மாதத்திற்குத் தேவையான அனைத்துக் சீட்டிழுப்புகளும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு தினமும் வெளியிடப்படுவதாக போலி தகவல்களை மக்களிடையே பரப்பி, WhatsApp குழுக்கள் மூலம் ஒழுங்கமைப்பு ரீதியாக இந்த பண மோசடிகள் செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.</p><h2>முறைப்பாடுகள் பதிவு&nbsp;</h2><p>

 இதற்கமைய, பல பகுதிகளில் 30,000 ரூபாய் முதல் அதற்கு மேலதிகமாகவும் பந்தயம் கட்டப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>

இதன் காரணமாகப் பலரும் தங்களது நிலங்கள் மற்றும் சொத்துக்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த சட்டவிரோத சூதாட்டம் மேலும் பரவினால், லொத்தர் சபைகளின் வணிக நிலைத்தன்மை, சாதாரண மக்களின் வாழ்க்கையும் பாதிப்புக்கள்ளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T02:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் விடுதியொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-youth-dies-in-japan-1786585324"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-youth-dies-in-japan-1786585324</id>
            <summary type="text">ஜப்பானின் சிபா மாகாணத்தில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் சிபா மாகாணத்தில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:20 மணியளவில் நிகழ்ந்துள்ளது. </p><p>

ஜப்பானில் கல்வி பயின்று வந்த மாணவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>விசாரணையில் வெளியான தகவல்&nbsp;</h2><p>

இவருடன் விடுதியில் தங்கியிருந்த 18 வயதான இலங்கை மாணவர் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac58c89b-4a02-4165-b50b-fed91aae9c22/26-6a7d27da93848.webp' /></p><p>
</p><p>
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேகநபரான 18 வயதான இளைஞர், ஜப்பான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ​​தன்னையும் தனது தாயையும் அவமதித்ததால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T02:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்..! அரச தரப்பு சாட்சியாக மாறி உண்மைகளை அம்பலப்படுத்திய சஹ்ரான் குழு உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-sunday-terrorist-attack-investigations-1786564751"></link>
            <id>https://tamilwin.com/article/easter-sunday-terrorist-attack-investigations-1786564751</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில், முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சிய விசாரணை நிறைவடைந்துள்ளது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில், முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சிய விசாரணை நிறைவடைந்துள்ளது.
</p><p>
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான முக்கிய வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. </p><p>

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், சஹ்ரான் ஹாஷிமின் தற்கொலைத் தாக்குதல் குழுவில் இருந்த ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளார்.
</p><p>

இந்த விசாரணையில் சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியது வழக்கில் ஒரு பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.
</p><p>

சஹ்ரான் ஹாஷிமின் குழுவோடு இருந்த காலகட்டத்தில், அவர் அவதானித்த பல ரகசியமான உண்மைகளை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.</p><p>

 சஹ்ரான் ஹாஷிம் யாருடைய தேவைக்காகச் செயற்பட்டார் என்பது போன்ற பல மர்மமான விடயங்கள் குறித்து அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>

 சில பிரதிவாதிகள் வழங்கிய வாக்குமூலங்கள், அவர்களால் சுயமாக (தன்னார்வமாக) வழங்கப்பட்டவை என்பது உண்மைத்தன்மை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

மேலும்,
 கடந்த காலங்களில் மெதுவாக நடந்த விசாரணை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தினசரி அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதால், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் NewsInsightTamil நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gyrukzsZj6M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T00:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஏற்றவாறு நீதிமன்றங்களை வழிநடத்த அனுமதிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vasudeva-nanayakkara-bar-association-of-sri-lanka-1786579550"></link>
            <id>https://tamilwin.com/article/vasudeva-nanayakkara-bar-association-of-sri-lanka-1786579550</id>
            <summary type="text">சட்டத்தரணிகள் சங்கம் தங்களுக்கு ஏற்றவாறு நீதிமன்றங்களை கொண்டு செல்வதற்கே முயற்சிக்கின்றன என முன்னனாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டத்தரணிகள் சங்கம் தங்களுக்கு ஏற்றவாறு நீதிமன்றங்களை கொண்டு செல்வதற்கே முயற்சிக்கின்றன என முன்னனாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்து நடக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,</p><p>நீதிமன்றத்தை மக்களின் தேவைக்கேற்ப கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு எமது தரப்பில் இருந்து அழுத்தத்தைக் கொடுப்போம். </p><h2>
</h2><p></p><h2>மக்கள் நலன் சார்ந்த விடயங்கள்</h2><p>அரசாங்கம் கொண்டு வரும் இந்த யோசனை நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றத்திற்குச் சென்று தீர்ப்பு வரும். இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று தேவையா இல்லையா என்று நீதிமன்றம் கூறினால், அப்போது சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லலாம். </p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் விவகாரம் நாடாளுமன்றத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் இடையில் தீர்த்துக்கொள்ளப்படும். </p><p>நாடாளுமன்றத்தில் இப்போது அந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த யோசனையை யார் வேண்டுமானாலும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம். </p><p>அதற்குப் பிறகு ஒரு இறுதித் தீர்ப்பு வரும். எனவே, அந்த இறுதித் தீர்ப்பின்படி நாம் செல்லலாம். அதனால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d9f890-ebb6-4329-ab20-f6d07b052ad5/26-6a7d0a62520eb.webp' /></p><p>வாழ்க்கைச் செலவு கடினமாக உள்ளது. அதுதான் எமது இந்த எதிர்ப்பின் தொனிப்பொருளும் கூட வரிகளைக் குறையுங்கள்.நாங்கள் அரசாங்கத்திற்குச் சொல்வது என்னவென்றால், 'மக்கள் பாதையில், மக்கள் நலன் சார்ந்த பாதையில் செல்லுங்கள்' என்பதுதான். </p><p>இன்று அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று கூடியுள்ள வலதுசாரிகள் மற்றும் பல்வேறு சக்திகள் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கின்றன. </p><p>ஆனால் நாங்கள் முயற்சிப்பது அரசாங்கத்தை மக்கள் நலன் சார்ந்த பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்காகும். இந்த வேறுபாட்டை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T00:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.வடமராட்சி தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் கொடியேற்றம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flag-hoisting-selva-sannithi-murugan-temple-1786581728"></link>
            <id>https://tamilwin.com/article/flag-hoisting-selva-sannithi-murugan-temple-1786581728</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் பெருந்
திருவிழாவின் கொடியேற்றம் இன்று அதிகாலை 1:45 மணியளவில் நூற்றுக் கணக்கான
பக்தர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் பெருந்
திருவிழாவின் கொடியேற்றம் இன்று அதிகாலை 1:45 மணியளவில் நூற்றுக் கணக்கான
பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் இடம்பெற்றுள்ளது.</p><p>&nbsp;செல்வச் சன்நிதியான் கொடியேற்றத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.</p><h2>கொடியேற்றம்</h2><p>

திருவிழாவிற்கு வருகை தருகின்ற அடியவர்களின் நலன் கருதி சுகாதார, குடிநீர்
உட்பட்ட வசதிகளை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3182aa4-c2fa-411a-896b-fbbe4395643c/26-6a7d13854b466.webp' /></p><p>&nbsp;மேலும், விசேட
போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இந்த வருடத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 27 ம் திகதியும் 28/08/2026 தீத்த
திருவிழாவும் இடம்பெறவுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-13T00:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறையில் பூஜித் - ஹேமசிறி: சிறைக்குள் நடப்பது என்ன..! வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-jayasundara-hemasiri-fernando-in-prison-1786580482"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-jayasundara-hemasiri-fernando-in-prison-1786580482</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பலத்த பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இருவருக்கும் சிறையில் எவ்வித சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சிறைச்சாலைத் தகவல்கள்&nbsp;</h2><p>பூஜித் ஜயசுந்தர 33176 என்ற கைதி இலக்கத்திலும், ஹேமசிறி பெர்னாண்டோ 3317 என்ற கைதி இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p> சிறை நிர்வாக நடவடிக்கைகள் கைதி இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20891bc-a53f-4310-812a-e19a3075d481/26-6a7d10f33477c.webp' /></p><p>

சிறைக்குள் அவர்களுக்கு தென்னைநார் தலையணை, பாய், தகரத்தட்டு மற்றும் தகரக் கோப்பை உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>அவற்றைப் பெற்றுக்கொண்ட போது ஹேமசிறி பெர்னாண்டோ உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாகவும், பூஜித் ஜயசுந்தரவும் கண்களில் கண்ணீரை மறைத்தபடி அவற்றைப் பெற்றுக்கொண்டதாகவும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இருவரும் மரண தண்டனை கைதிகள் தடுத்து வைக்கப்படும் H1 சிறை அறையில், நிமல் என்ற மற்றொரு கைதியுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கடுமையான மன அதிர்ச்சி</h2><p>
</p><p>
ஆரம்பத்தில் சிறை வாழ்க்கை காரணமாக கடுமையான மன அதிர்ச்சிக்கு உள்ளான இருவரும், தற்போது நிமலுடன் இணைந்து தியானம் மற்றும் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனிடையே, ஹேமசிறி பெர்னாண்டோ தான் எந்தத் தவறும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி வருவதுடன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மேல்முறையீட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

வயது மற்றும் உடல்நிலை காரணமாக சிறை வாழ்க்கைக்கு பழகுவதில் அவருக்கு கூடுதல் சிரமங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740d966f-c3bc-4c89-a2be-49427f071276/26-6a7d10f3dfd8a.webp' /></p><p>
</p><p>

பூஜித் ஜயசுந்தரவை சிறைக்கு சென்ற முதல் நாளிலேயே அவரது மகனும், ஹேமசிறி பெர்னாண்டோவை அவரது மனைவியும் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>


ஏற்கனவே இவர்களை போலவே முன்னாள் அரசியல்வாதிகள் பலரும் சிறைச்சாலையில் இருக்கின்றார்கள். 

குறிப்பாக மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ,&nbsp; துமிந்த சில்வா, சமிந்த வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் சிறைக்குள் இருக்கின்றனர்.&nbsp; இவர்கள் யாரையுமே ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோர் சந்திக்கவில்லை என்று கூறப்படுகின்றது.</p><p>


சிறை விதிகளின்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை உறவினர்கள் பொதுவாக மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும். எனினும், கிறிஸ்மஸ், வெசாக் மற்றும் சிங்கள-தமிழ் புத்தாண்டு போன்ற விசேட நாட்களில் இதற்கு விதிவிலக்குகள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gyrukzsZj6M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T00:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் : சீருடை அனைவருக்கும் பொதுவானது - பா.அரியநேத்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muslim-girls-dress-issue-1786578298"></link>
            <id>https://tamilwin.com/article/muslim-girls-dress-issue-1786578298</id>
            <summary type="text">சீருடை என்பது பொதுவான ஒரு உடை அது ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவிதமாக மாற்றமுடியாது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீருடை என்பது பொதுவான ஒரு உடை அது ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவிதமாக மாற்றமுடியாது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்..</p><h2>சீருடை விவகாரம்</h2><p>
</p><p>
பாடசாலை, வைத்தியசாலை, அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுவாக ஒரு சீருடையை தயாரித்தால் அதனை அனுசரித்து ஏற்றுக்கொள்ளவேண்டியது அனைவரினதும் கடமை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70de06b3-37a6-4889-9e62-586c211edb61/26-6a7d05ea8dfa1.webp' /></p><p>

ஒவ்வொரு மதத்தவர்களும் அவர்கள் விரும்பியபடி ஆடை அணிதல் என்றால் சீருடை என்ற ஒன்று அவசியமில்லை.</p><p>

புதிய சுகாதார உதவியாளர்களுக்கு கொழும்பில் மூன்று நாட்கள் பயிற்சி வழங்கிய வேளை இந்த சீருடை தொடர்பாக தெளிவாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே இது வேண்டுமென்று கல்முனை ஆதார வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வெளியில் ஒரு குழுவினர் சதித்திட்டம் தீட்டி சமூக ஊடகங்களில் வன்மத்தை கொட்டி வருகின்றனர்.</p><p>

சட்டம் நீதி தன் கடமையை செய்யும். யாரும் அஞ்ச வேண்டியதில்லை. உண்மை வெவ்லும் என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T23:46:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாரா..! போராட்டத்திற்கு தயாராகும் 20 இலட்சம் பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-dead-prison-us-pakistan-journalist-1786567775"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-dead-prison-us-pakistan-journalist-1786567775</id>
            <summary type="text">பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள்&amp;nbsp; தலைவருமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்&amp;nbsp; தண்டனைப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள்&nbsp; தலைவருமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்&nbsp; தண்டனைப் பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆதரவாளர்கள் கவலை</h2><p>
</p><p>
இந்நிலையில், இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என 3 இராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

எனினும், இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a880889-9cde-44e1-9cbe-29480a9efb28/26-6a7cde049a13c.webp' /></p><p>
</p><p>
இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தினருக்கும், PTI கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

இதனால் அவரது ஆதரவாளர்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ஏதேனும் நடந்தால் 20 இலட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக அவரது PTI கட்சி எச்சரித்துள்ளது. </p><p>

இம்ரான் கான் நலமாக இருப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினரை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:38:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து விவகாரத்தில் மகிந்தவை மாட்டிவிட்ட நாமல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-s-assets-and-properties-1786576870"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-s-assets-and-properties-1786576870</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
தனக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வந்தவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

 தான் ஒரு காலத்தில் 'கன்சல்டன்ட் ஃபார்ம்' (Consultant Firm) என்ற ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தியதாகவும், அதன் வருமானம் மற்றும் வரி கணக்குகள் அனைத்தையும் முறையாகப் பிரகடனப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

 இந்தநிலையில், நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலடியாக, அவரது குடும்பத்தின் சொத்துக்கள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. </p><p>

குறிப்பாக, கால்டன் (Carlton) இல்லம் கைமாறப்பட்டது தொடர்பான சர்ச்சைகள் மற்றும் அவர் தனது சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Jzvh1Ha0Qj8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடை விவகாரம்: உதவிப் பணிப்பாளரின் நடவடிக்கைக்கு கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/racist-attire-against-9-female-health-assistant-1786575559"></link>
            <id>https://tamilwin.com/article/racist-attire-against-9-female-health-assistant-1786575559</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்கள் புதிய
நியமனத்தின் போது ஆடை விடயத்தில் உதவி பணிப்பாளரின் தன்னிச்சையான இனவாத
நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்கள் புதிய
நியமனத்தின் போது ஆடை விடயத்தில் உதவி பணிப்பாளரின் தன்னிச்சையான இனவாத
நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி தெரிவித்துள்ளார்.</p><p>இது
தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;9 பெண் சுகாதார உதவியாளர்கள்</h2><p>குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>
இந்த சம்பவம் ஒரு அரச அதிகாரியால் எமது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள்
(சரத்து 12) , 12(1),12(2) பிரகாரம் மீறப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது.
</p><p>அத்துடன் இப்படியான விடயங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது . இதன் பின்னணி
, இவருக்கு இந்த அதிகாரம் யாரால் வழங்கபட்டது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff805cc3-eaca-4d9f-b160-c4f282607487/26-6a7cfcc74b91c.webp' /></p><p> </p><p>அப்படியாயின் இதற்காக பூரண
விசாரனை நடாத்தி இவ்வாறான இனமுறுகளுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளை இல்லாது
செய்து உரிய அதிகாரிக்கு சட்டநடவடிக்கை எடுத்து இன நல்லிணக்கத்தை உறுதிப்
படுத்த அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டும் என இக்கண்டன அறிக்கை மூலம்
கேட்டுக் கொள்கிறேன்.</p><p>

இவ்வாறான விடயங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.</p><p> கடந்த காலங்களிலும்
திருகோணமலை (2018.04.25)சண்முகா கல்லூரி சம்பவம், திருகோணமலை சாஹிரா
மாணவர்களின் உயர்தர பெறுபேறு வெளியிடுதல் கால தாமதம் இவ்வாறு தொடர்ந்து எமது
சமூகம் காலாகாலமாக போராடித்தான் சாதாரண உரிமைகளை கூட பெற வேண்டியுள்ளது. இந்த வரலாறுகள் மாற்றப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T23:07:57+00:00</updated>
        </entry>
    </feed>
