<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-21T11:14:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-fishermen-requests-tamil-nadu-cm-vijay-1784629285"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-fishermen-requests-tamil-nadu-cm-vijay-1784629285</id>
            <summary type="text">தமிழக மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள்
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள்
வரும் தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை, புதிதாக தமிழகத்தை
பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என
யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (21.07.2026) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு
கூறிய அந்த அமைப்பின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா,

சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் குறிப்பாக
புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் எமது தொழிலாளர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர் என குறிப்பிட்டார்.</p><p></p><h2>தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்கு&nbsp;</h2><p>இதை இலங்கையின் கடற்படையினரும் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.</p><p>

இதைவிட கடற்றொழில் அமைச்சரும் கடற்றொழிலாளர் விடயத்தில் ஒரு நழுவல் போக்குடன்
செயற்படுகின்றார் என எண்ணத் தோன்றுகின்றது.

இலங்கை கடற்படையைக் கொண்டு இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றே நாம் அனுர அரசாங்கத்திடம் கோருகின்றோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61894ed3-4b60-4952-97a4-97946f63c4ae/26-6a5f4ced150f6.webp' /></p><p>ஆனால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசித்திரிகின்றாரே தவிர எதையும் இதுவரை செய்யவில்லை.
</p><p>
தேர்தல் காலத்தில் கடற்தொழிலாளர்களிடம் வாக்குக் கொடுத்ததை இந்த சந்திரசேகர் அமைச்சரும் அவர்சார் தரபினரும் மறந்துவிட்டனரென்றே தோன்றுகின்றது.
</p><p>
அப்பாவி கடற்றொழிலாளர்களாகிய நாம் ஏமாற்றத்துடன் எமது இருப்பையும்
இழந்து வருகின்றோம். இனிவரும் நாட்களில் இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையே
முரண்பாடுகள் முற்றி வன்முறையாக மாறுவதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது.</p><p>
எனவே அவ்வாறானதொரு நிலை வரும் முன்னர் எல்லை தாண்டி நெடுந்தீவுக்
கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துவரும் தமிழக கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளைத்
தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T10:54:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Nillanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/things-that-happen-at-the-coordination-meeting-1784630400"></link>
            <id>https://tamilwin.com/article/things-that-happen-at-the-coordination-meeting-1784630400</id>
            <summary type="text">சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக பகட்டாகக் கொண்டாடினார்.

ஊருக்கும் விருந்து கொடுத்தார்.விழா ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக பகட்டாகக் கொண்டாடினார்.

ஊருக்கும் விருந்து கொடுத்தார்.</p><p>விழா நாயகியாகிய பெண்ணை குதிரை தேரில் அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த ஊர்வலத்தில் யானை வந்தது, மாட்டு வண்டி ஊர்வலம் வந்தது&nbsp; “இன்னியம்” என அழைக்கப்படுகின்ற நடை பவனி அணி வந்தது.
</p><p>
 ஒரு யூடியூப்பரை வேலைக்கு அமர்த்தி அந்த நிகழ்வுக்கு டிஜிட்டல் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் தமது தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு யானையை ,குதிரையை, ஹெலிகாப்டரை, பல்லக்கை வாடகைக்கு அமர்த்துவது புதியதல்ல.

தேவையான காசு இருக்கிறது.</p><p></p><p>சினிமாப் பாணியில், சினிமாத் தனமாக நிகழ்வை ஒழுங்கமைத்து படம்பிடித்து படங்காட்டி மகிழ்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தனிப்பட்ட வைபவங்களில் மட்டுமல்ல பொது வைபவங்களில், அரசியலில், குறிப்பாக சமய நம்பிக்கைகளில் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.</p><h2>ஆலங்களை புனரமைக்கும்&nbsp; புலம்பெயர் தமிழர்கள்</h2><p>2009க்குப் பின்னரான பெரும்பாலான ஆலயப் புனரமைப்பு வேலைகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி உண்டு. 

ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரையிலும் அந்த உதவி கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65dcf098-47b2-4ecc-ad3b-1ffaf2f68803/26-6a5f4ed20d4be.webp' /></p><p> வடக்கு - கிழக்கு ஊடாகப் பயணம் செய்த ஓர் அமெரிக்கப் புலமையாளர் என்னிடம் கேட்டார் “வழியெல்லாம் காணப்படும் சிறிய மற்றும் பெரிய கோயில்களைப் புனமைக்கும் நிதி புலம்பெயர்ந்த தமிழர்களுடையதா ?” என்று

தாம் பிறந்து வளர்ந்த அல்லது திருமணம் புரிந்த கிராமங்களில்,திருவிழாக்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தாராளமாக செலவழிக்கப்படுகிறது.</p><p> ஊர்க் கோவில்களின் திருவிழாக் காலங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களோடு தொடர்புடைய உபயகாரர்கள் தமது திருவிழாவை நமது பண பலத்தைக் காட்டும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கிறார்கள். </p><p>

அதனால் இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.தென்னிந்தியாவை நோக்கி பலாலியில் இருந்து திறந்து விடப்பட்டிருக்கும் வான்வழியூடாக இந்திய சினிமாப் பண்பாடு வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே அது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பரவி விட்டது.

கோவில் திருவிழாக்களில் மயிலாட்டம் முதல் கொண்டு பெயர் தெரியாத பலவிதமான ஆட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. </p><p>அவற்றில் சில போருக்கு முந்திய தசாப்தங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சின்ன மேளக் கச்சேரிகளை நினைவூட்டுகின்றன


தமிழகத்திலிருந்து கலைஞர்களைக் கொண்டு வந்து தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் கொண்டாடுவது என்பது புலப்பெயர்ச்சிக்குப் பின்னரான புதிய போக்கு அல்ல.</p><p></p><p>அது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே இருந்தது, தமிழகத்திலிருந்து நடனக் கலைஞர்கள், சின்னமேளக் கச்சேரிகள், பிரபல சினிமாப் பாடகர்கள் இங்கு அழைத்து வரப்பட்டார்கள்.

எனவே அது புலம்பெயர்ச்சியின் விளைவு அல்ல. புலப்பெயர்ச்சியால் மேலும் தூண்டப்பட்ட ஒரு விளைவு.
</p><p>
அதேசமயம்,புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது தனிப்பட்ட வைபவங்களை சினிமாத்தனமாக ஒழுங்கமைப்பதிலும் சமயச் செயற்பாடுகளிலும் அரசியலிலும் மட்டும் தமது செல்வத்தை முதலீடு செய்கிறார்கள் என்பதல்ல. 

மேற்சொன்ன அனைத்தையும் விட முக்கியமாக, தமிழ்ப் பகுதிகளில் தேசத்தை நிர்மாணிக்கத்தக்க செயல் திட்டத்தின் பகுதிகள் என்று வருணிக்கத்தக்க விதத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது நிறுவனங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் தாராளமாகக் காசு கொடுக்கிறார்கள்.</p><p> 

தாயகத்தில் இயங்கும் கணிசமான தொகை தன்னார்வ நிறுவனங்களின் பின்பலமாக புலம்பெயர்ந்த தமிழ் வள்ளல்களை உண்டு.</p><h2>



நிதியுதவி</h2><p>
கடந்த மே மாதம் 20ஆம் திகதி நீர்வேலியில்,”கருவி” நிறுவனத்தின் தலைமைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. “கருவி” என்று அழைக்கப்படுவது விழிப்புலன் மற்றும் செவிப்புலன் இழந்தவர்களுக்கான ஒரு கட்டமைப்பு ஆகும்.

இந்த கட்டமைப்பின் தலைமையகத்தை நிர்மாணிக்கத் தேவையான 60 விகிதமான நிதியை புலம்பெயர்ந்த தமிழர்களே வழங்கினார்கள்.
</p><p>
அதுபோன்றே இந்த மாதம் 14 ஆம் திகதி, தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில், “அரவணை” என்று பெயரிடப்பட்ட நோய்த் தடுப்புச் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6b2ec1-c39b-4501-a751-235e2a058ceb/26-6a5f4ed2b8d91.webp' /></p><p>
</p><p>
நோயாளிகள் தமது இறுதிக் காலத்தை கண்ணியமாகவும் அமைதியாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த வலியோடும் கழிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பு அதுவாகும்.

ஒஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளான “பாலம்”, “வன்னி ஹோப்” ஆகிய இரண்டு அமைப்புகளும் இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கியுள்ளன.
</p><p>
எனவே தொகுத்துப் பார்த்தால் தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழ் நிதியானது ஒருபுறம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிர்மாணப் பணிகளுக்கு உதவுகிறது. ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நிதிப் பலத்தையும் உளவியல் உறுதியையும் கட்டியெழுப்ப உதவுகிறது.</p><h2>யாழ்ப்பாண பாடசாலைகள் புனரமைப்பு</h2><p>
இன்னொருபுறம், தமது பண பலத்தைக் காட்ட விரும்பும் புலம்பெயர்ந்த தமிழர்கள் காசை அள்ளி வீசுகிறார்கள். தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் தங்களுடைய செல்வாக்கை காட்டும் குறிகாட்டிகளாக மாற்றுகிறார்கள்.</p><p></p><p>
</p><p>
ஆலய திருவிழாக்களில், பழைய மாணவர் சங்கங்களில், சன சமூக நிலையங்களில், சமூகத்தின் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்தும் நிதி அதிகாரமுடைய உபயகாரர்களாக காணப்படுகிறார்கள்.
</p><p>
சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறிய பாடசாலைக்கு புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர் ஒருவர் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு நிதி உதவி செய்தார். ஆனால் அந்தக் கண்காணிப்புக் கமராக்களை இயக்குவதற்கு தேவையான கடவுச் சொல் அவரிடம் தான் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c991f509-b087-45f8-96ec-4b31b0d02c06/26-6a5f4ed365b42.webp' /></p><p>
</p><p>
பாடசாலை அபிவிருத்திக் குழுக்களுக்குள்,பழைய மாணவர் சங்கங்களுக்குள், ஆலய அறக்கட்டளைகளுக்குள்,அரசியல் கட்சிகளுக்குள்,சிவில் சமூகங்களுக்குள்,தங்களால் ரிமோட் செய்யப்படக்கூடிய குழுக்களை, நபர்களை உருவாக்கி மேற்படி அமைப்புகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொலை இயக்கி உபயகாரர்களும் உண்டு.
</p><p>

தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் பிரதான விடயங்களில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி காணப்படுகிறது. </p><p>

ஆயுதப் போராட்டத்தின் காசு காய்க்கும் மரமாக அது இருந்தது. ஆனால் 2009க்கு முன்புவரை தாயகத்தை மையமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. தாயகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளும் ஏனைய உதவிகளும் ஒருங்கமைக்கப்பட்டன.
</p><h2>

புலம்பெயர் அமைப்புகளில் ஒற்றுமையின்மை</h2><p>

ஆனால் இப்பொழுது தாயகத்தில் அவ்வாறான ஒன்றிணைந்த மையம் எதுவும் கிடையாது.புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள்.</p><p>அங்கேயும் ஒன்றிணைந்த செயல்பாடுகள் இல்லை.

 வள்ளல்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.உபயகாரர்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca00dd4-ae6c-4d1d-bdaa-929befd83b4b/26-6a5f4ed4175ab.webp' /></p><p> 

இந்தப் பாரதூரமான வெற்றிடம் உள்ளவரை ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல் வாழ்வெனப்படுவது,சினிமாப் பண்பாட்டின் வீச்செல்லைக்கு வெளியே வராது உருப்படாது.
</p><p>
இந்த நிலை தொடரும்வரை,தமிழ் மக்கள் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் சட்ட லீலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது மயிலாட்டத்தை,சின்ன மேளக் கச்சேரிகளை,டிஜே கும்மிகளைப் பார்த்துப் ரசிக்கலாம் அல்லது,ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடக்கும் சண்டைக்கு காட்சிகளை அல்லது நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துச் சிரிக்கலாம் அல்லது குருதி அழுத்தத்தை உயர்த்திக் கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T10:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் டெங்குத் தொற்று! பெற்றோருக்கு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-warning-issued-to-parents-1784629872"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-warning-issued-to-parents-1784629872</id>
            <summary type="text">நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தொற்று குறித்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோரை எச்சரித்துள்ளது.தொடர்ந்து பரவி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தொற்று குறித்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோரை எச்சரித்துள்ளது.</p><p>தொடர்ந்து பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்&nbsp; சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் இயக்குனர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>ஆவணங்களை கொண்டு வாருங்கள்&nbsp;</h2><p>இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு உடனடி&nbsp; சிகிச்சையை வழங்குவதற்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>எனவே, சிகிச்சைக்காக தங்களுடைய பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர் வைத்தியசாலையால் கோரப்படும் ஆவணங்களை சரிவர கொண்டுவருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60847fc6-c758-46c1-af1c-3fad3ccb9bf9/26-6a5f4e83649ba.webp' />&nbsp;</p><p>இதன்படி, தனிநபர் சுகாதார எண், குழந்தையின் சுகாதார மேம்பாட்டுக் குறிப்பேடு(எடை குறிப்பேடு),&nbsp; உணவு ஒவ்வாமை அல்லது மருத்துவ பதிவுகள்,&nbsp; இதற்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை சரிவர எடுத்து வருமாறு பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>அத்துடன் மேலுதிக தகவல்களுக்கு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்&nbsp;<b> 011 2693711&nbsp;</b>என்று அலுவலக இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T10:49:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரணவாய் கிராமம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-eradication-campaign-across-karanawai-1784629873"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-eradication-campaign-across-karanawai-1784629873</id>
            <summary type="text">கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கரணவாய் கிராம சேவையாளர்
பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கரணவாய் கிராம சேவையாளர்
பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>நாடு முழுவதும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள
நிலையில் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு பகுதிகளில் டெங்கு நோயின் பரவல்
அதிகரித்துள்ளது.</p><h2>&nbsp;டெங்கு ஒழிப்பு</h2><p>
</p><p>
கடந்த இரண்டு மாதத்தில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சுமார் 60
வரையான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51d74d2-da70-4265-a992-a99ab5e93552/26-6a5f4b31ede07.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த டெங்கு நோய்
கட்டுப்படுத்தும் நடவடிக்கை காரணவாய் பகுதியில் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
</p><p>
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கரவெட்டி
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும்
உத்தியோகத்தர்கள், நெல்லியடி போலீசார், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் வீடு வீடாக சென்று டெங்கு நோயை
காட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன் வீட்டுக் காரர்களுக்கு
டெங்கு நோயிலிருந்து வருமுன் காத்தல் தொடர்பான சுகாதார விழிப்புணர்வு
அறிவுறுத்தல் வழங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/566840bc-f536-4504-ad1c-29f93f27bffd/26-6a5f4b32cadc8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f78d477-83d9-419e-a81d-b46cc0d8dcb0/26-6a5f4b33a0e2e.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T10:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவிற்கு மீண்டும் பிடியாணை உத்தரவு! பிணையாளர்களுக்கும் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-s-arrest-warrant-extended-1784625762"></link>
            <id>https://tamilwin.com/article/basil-s-arrest-warrant-extended-1784625762</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு இன்று (21) மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை எளியகந்த பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு இன்று (21) மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>

மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து மீண்டும் பிடியாணை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>

மேலும், முன்னாள் அமைச்சரின் நான்கு பிணையாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள தலைமை நீதவான், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50632bdf-aa7b-4853-908d-29ef56e574d1/26-6a5f3e72437e0.webp' /></p><p>

மாத்தறை பிரதான நீதிபதி சத்துர திசாநாயக்க முன்னிலையில் இன்று (21) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9CicqDIELO8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-factory-in-katuwana-1784611083"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-factory-in-katuwana-1784611083</id>
            <summary type="text">புதிய இணைப்புஹோமாகம, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஹோமாகம, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 குறித்த தொழிற்சாலையின் மூன்று மாடி கட்டடம் முழுவதும் தீ பரவிய நிலையில், நீண்ட நேர தேடுதல் நடவடிக்கைகளின் போது தீக்காயங்களுடன் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4VvL9Wbm4w8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>அடையாளம் காண முடியாத தீக்காயங்கள்</h2><p>
</p><p>
மேலும், அவர்களில் மூன்று பேர் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீக்காயங்களுக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0312b32a-d12a-4494-a5c6-c0a68c37d99f/26-6a5f412830ea4.webp' /></p><p>
</p><p>
தீ வேகமாக பரவியதால், மக்கள் சிக்கியிருந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்றடைவது கடினமாக இருந்ததாகவும் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்காக 6 தீயணைப்புத்துறைகள் வந்திருந்த நிலையில், தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், தீ விபத்தில் காயமடைந்த ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தீயை அணைப்பதற்காக, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.</p><p>

</p><p>இந்த நிலையில், தொழிற்சாலையிலிருந்து 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் இளம் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 </p><p>இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

</p><p>இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p> </p><p>இந்நிலையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 இற்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>தீ பரவிய நேரத்தில் ஒரு குழுவினர் காப்பாற்றப்பட்ட நிலையில், மேலும் சிலர் பின்புற வாயில் வழியாக வெளியேறியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.</p><p>தீ விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த பல மணி நேரமாக தீயணைப்பு பிரிவினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffe9e3a9-a01e-4441-ac2c-36a5e8873d81/26-6a5f1c6e26e5c.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> 

தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தீயணைப்பு பிரிவினர் அழைப்பு</h2><p>இந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0193f6a-d83e-44f0-b29f-e75eaf0aead2/26-6a5f02b47a61c.webp' /></p><p>தீ தொடர்ந்து பரவி வருவதாகவும், தீயை அணைக்க கோட்டை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T09:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுமி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-four-year-old-girl-dies-1784619877"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-four-year-old-girl-dies-1784619877</id>
            <summary type="text">டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.காலி தேசிய வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>காலி தேசிய வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியே நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் திக்வெல்ல, நில்வெல்ல, அதுலஸ்ஸவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பிரேதப்பரிசோதனையில் வெளியான தகவல்</h2><p>

கடுமையான காய்ச்சல் காரணமாக திக்வெல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் மாத்தறை பொது வைத்தியசாலைக்கும், பின்னர் அதே நாளில் மேலதிக சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db91d0b-9494-4df8-86e5-ba581f5ac9a0/26-6a5f2b856544e.webp' /></p><p>இதன்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><p>
டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சலால் ஏற்பட்ட சிக்கல்களே மரணத்திற்குக் காரணம் என, காலி தேசிய வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T09:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/whitefly-control-operation-begins-in-mullaitivu-1784624541"></link>
            <id>https://tamilwin.com/article/whitefly-control-operation-begins-in-mullaitivu-1784624541</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில்
தென்னம்பிள்ளைகளைத் தாக்கும் வெண் ஈக்களைக் கட்டுப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில்
தென்னம்பிள்ளைகளைத் தாக்கும் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருந்து
தெளிக்கும் நடவடிக்கை இன்று (21.07.2026) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
</p><p>
இந்நடவடிக்கையை வடக்கு மாகாண தென்னைப் பயிர்ச்செய்கையின் பிராந்திய
முகாமையாளரும், வடக்கு மாகாண தென்னை முக்கோண வலய திட்டமிடல் பணிப்பாளருமான
தேவராஜா வைகுந்தன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.</p><p></p><h2>வெண் ஈக்களினால் ஏற்படும் பாதிப்புகள்</h2><p>

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்காக
முன்னெடுக்கப்படும் முதலாவது ஆரம்ப நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd9579a-9715-4a40-b7ff-28f2fe5ddd36/26-6a5f395caca4e.webp' /></p><p>தென்னைப் பயிர்களைப் பாதுகாத்து, விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும்
நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
</p><p>
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், தென்னைப் பயிர்ச்செய்கை சபை பணியாளர்கள்,
கற்பக சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டனர்.
</p><p>
தென்னைப் பயிர்ச்செய்கையில் வெண் ஈக்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து,
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் இந்நடவடிக்கை
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T09:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயிப் நகர் – கோவிலடி பிரதான வீதியை புனரமைப்புப் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு கோரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-immediate-completion-reconstruction-work-1784625149"></link>
            <id>https://tamilwin.com/article/request-immediate-completion-reconstruction-work-1784625149</id>
            <summary type="text">தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட தாயிப் நகரிலிருந்து கோவிலடிக்குச் செல்லும்
பிரதான வீதியான வெட்டாத்துப்பாலம் வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூன்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட தாயிப் நகரிலிருந்து கோவிலடிக்குச் செல்லும்
பிரதான வீதியான வெட்டாத்துப்பாலம் வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூன்
13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.</p><p>

எனினும், இன்று வரை (21.07.2026) அப்பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படாமல்
காணப்படுகின்றன.</p><h2>&nbsp;கோரிக்கை</h2><p> </p><p>இதன் காரணமாக பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களையும்
அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/665c8a2e-2dcc-45c6-8ac1-1e7111801f48/26-6a5f38ccc8e7b.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக முள்ளிப்பொத்தானை, மீரா நகர், சிராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச்
சேர்ந்த பொதுமக்கள் கிண்ணியா நகருக்குச் செல்வதற்கு அதிகளவில் இந்த வீதியையே
பயன்படுத்தி வருகின்றனர்.</p><p> தற்போது வீதியின் மோசமான நிலை காரணமாக போக்குவரத்து
சிரமம், பயண நேர தாமதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அபாயங்கள் அதிகரித்துள்ளன.
</p><p>
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும்
பொறுப்புடைய தரப்பினரும் உடனடி நடவடிக்கை எடுத்து, வெட்டாத்துப்பாலம் வீதியின்
புனரமைப்புப் பணிகளை அவசரமாக நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு
ஒப்படைக்குமாறு பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T09:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் அணிக்கு கிடைத்த ரோயல் வரவேற்பு! மாட்ரிட்டில் குவிந்த 18 இலட்சம் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-s-world-cup-heroes-welcomed-millions-madrid-1784622446"></link>
            <id>https://tamilwin.com/article/spain-s-world-cup-heroes-welcomed-millions-madrid-1784622446</id>
            <summary type="text">நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 கால்பந்து உலகக் கோப்பையை வென்று
 தாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 கால்பந்து உலகக் கோப்பையை வென்று
 தாயகம் திரும்பிய ஸ்பெயின் தேசிய அணி,வீரர்களுக்கு மாட்ரிட்டில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><p>

26 வீரர்களும் பயிற்சியாளர் குழுவினரும் முதலில் ஸ்பெயின் அரச குடும்பத்தினரையும், பின்னர் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸையும் சந்தித்தனர்.</p><p></p><h2>ஸ்பெயினின் உலகக் கோப்பை நாயகர்கள்</h2><p>
</p><p>
உங்களின் ஆட்ட பாணி, அர்ப்பணிப்பு மற்றும் இந்த வெற்றிக்காக நன்றி. உங்கள் ஆட்டத்தை நாடு முழுவதும் பெருமையுடன் ரசித்தது, என்று பிரதமர் சாஞ்சஸ் பாராட்டினார்.</p><p>

அதனைத் தொடர்ந்து திறந்த மேல் தள பேருந்தில் ("Stars Shine Together" என்ற வாசகத்துடன்) வீரர்கள் மாட்ரிட் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Spain’s World Cup victory parade has started in Madrid. Just look at the number of fans who came out to welcome the champions of the world! 🔥🇪🇸 <a href="https://t.co/H0TCyVM9Fk">pic.twitter.com/H0TCyVM9Fk</a></p>&mdash; Cleverly 💐 (@Cleverlydey4u) <a href="https://x.com/Cleverlydey4u/status/2079289698711687608?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

 "Somos Campeones" (நாங்களே சாம்பியன்கள்) என்று எழுதப்பட்ட சீருடைகளை அணிந்திருந்த வீரர்கள் உலகக் கோப்பையுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.</p><p>

பயிற்சியாளர் லூயிஸ் டெ லா ஃபுவென்டே, இந்த அற்புதமான நாட்டையும், உணர்ச்சிமிக்க ரசிகர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியது பெருமையான அனுபவம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார்.
</p><p>
மாட்ரிட்டின் சிபிலெஸ் (Cibeles) சதுக்கத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் சுமார் 1.2 இலட்சம் ரசிகர்கள் நேரில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மொத்தமாக 18 இலட்சம் மக்கள் அணியை வரவேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;மீண்டும் உலகக் கோப்பை</h2><p>
</p><p>
வீரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி இசையுடன் மேடைக்கு அழைக்கப்பட்டனர். 25-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அலெக்ஸ் பயேனா உலகக் கோப்பையுடன் மேடையேறினார். </p><p>

பயிற்சியாளர் டெ லா ஃபுவென்டேவை வீரர்கள் தோளில் தூக்கி கொண்டாடினர். முன்னணி வீரர் போர்ஹா இக்லேசியஸ் டிஜேவாக மாறி இசையமைத்த நிலையில், சக வீரர்கள் மேடையில் நடனமாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa4bb3e0-f33e-46a9-8fa6-27b7f599f2d1/26-6a5f34f9e8a59.webp' /></p><p> </p><p>

இறுதியில், முழு அணியும் மீண்டும் உலகக் கோப்பையை உயர்த்தி ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடியது.

இறுதிப்போட்டியில் கூடுதல் நேரத்தில் பெர்ரான் டோரெஸ் அடித்த கோல் மூலம் ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையையும், 2010க்குப் பிறகு முதல் உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
</p><p>
இந்த வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
</p><p>
2023 மகளிர் உலகக் கோப்பையையும், 2026 ஆண்கள் உலகக் கோப்பையையும் வென்றுள்ளதால், இரு உலகக் கோப்பைகளையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கும் முதல் நாடாக ஸ்பெயின் வரலாறு படைத்துள்ளது.</p><p>

எனினும், கொண்டாட்டத்தின் போது வடமேற்கு ஸ்பெயினின் சலமாங்காவில் நீரூற்றின் மீது ஏறியிருந்த 13 வயது சிறுவன் ஒருவர் நீரூற்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1018416397707770%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-21T09:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் செல்லும் மாகாண சபை முதலமைச்சர்கள்..! டக்ளஸ் முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-opini-onprovincial-council-chief-ministers-1784623684"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-opini-onprovincial-council-chief-ministers-1784623684</id>
            <summary type="text">நாட்டின் அரசியலமைப்பை செம்மைப்படுத்தி, மாகாண சபை தேர்தல் மூலம் தெரிவுச் செய்யப்படும், முதலமைச்சர்களும் அமைச்சர்கள் போன்று நாடாளுமன்றத்திற்குச் செல்ல வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அரசியலமைப்பை செம்மைப்படுத்தி, மாகாண சபை தேர்தல் மூலம் தெரிவுச் செய்யப்படும், முதலமைச்சர்களும் அமைச்சர்கள் போன்று நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் உள்ளடக்கிய அரசா சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் தரப்புகளுக்கிடையில் பொது நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில், ஈ.பி.டி.பி. கட்சியுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நாடாளுமன்றத்தில் முதலமைச்சர்களுக்கு அங்கம்</span></p><p>

இதன்போது டக்ளஸ் கருத்து தெரிவிக்கையில், </p><p>

மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செழுமைப்படுத்துவதற்கும்,
இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கும்,
சீரான வளர்ச்சியை வேகமாக ஏற்படுத்துவதற்கும், மாகாணங்களின் முதலமைச்சர்கள்
நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும் ஏற்பாடு அர்த்தபூர்வமான
களத்தினை ஏற்படுத்தும்.
</p><p>
அதேபோன்று, யுத்தம் காரணமாக 18 வயதினை அடைந்த பின்னர் புலம்பெயர்ந்து
சென்றவர்களுக்கும், தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் தங்கி இருப்போருக்கும்
வாக்குரிமையை வழங்க வேண்டும்.
</p><p>
அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வே புதிய அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்க
வேண்டுமே தவிர, ஒற்றையாட்சி, சமஸ்டி என்ற பெயர் பலகையில் கவனத்தினை குவிப்பது,
பிடிவாதமாக இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bba011f-29d7-4afd-8924-1b2e521949d0/26-6a5f32d647442.webp' /></p><p>
கடந்த காலங்களில் மத்திய அரசினால் எடுக்கப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்களை
மீளக் கையளிப்பதுடன், பொலிஸ் மற்றும் காணி உட்பட்ட மாகாண சபை அதிகாரங்கள்
முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.</p><h2>


மாகாண சபை அதிகார பகிர்வு</h2><p>
அதேபோன்று, மாகாணங்களுக்கான அதிகார பகிர்வில் உள்ள இணைப்பு பட்டியல்
நீக்கப்பட்டு, அதில் இருக்கின்ற விடயங்களுள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
சிலவற்றை தவிர்த்த அனைத்தும், மாகாண பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.</p><p>

மாகாண சபைகளுக்கான அதிகார பகிர்வானது, வடக்கு - கிழக்கு மக்களுக்காக
உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில் குறித்த இரண்டு மாகாணங்களுக்கும் விசேட
அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af9e8840-039c-415e-9a70-4222a8c7e584/26-6a5f32d712e2c.webp' /></p><p>
</p><p>
அத்துடன், மாகாண சபை என்பது மாகாண அரசு என்று
அடையாளப்படுத்தப்பட வேண்டும். தேசிய நிதி ஆணைக்குழு என்பது நிதி ஒதுக்கீடுகளில் காத்திரமான தாக்கம்
செலுத்தும் நிலையில், ஒவ்வொரு மாகாணங்களினதும் எதிர்பார்ப்புக்களை
உணர்வுபூர்வமாக புரிந்து கொண்ட அதே மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் நிதி
ஆணைக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பதனையும்,&nbsp; அதேபோன்று, அந்தந்த மாகாணங்களை
பூர்வீகமாக கொண்டவர்களையே ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவதும்
அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.</p><p>

அதேபோன்று, தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு, ஜனாதிபதி
நாடாளுமன்றால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது போன்ற மேலும் பல விடயங்களை
உள்ளன.

 இதுதொடர்பான எழுத்து மூல ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:50:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் நகரில் தற்காலிக கடைகளை அகற்ற முயன்றபோது பதற்றநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tensions-rise-in-hatton-town-as-temporary-shops-1784617444"></link>
            <id>https://tamilwin.com/article/tensions-rise-in-hatton-town-as-temporary-shops-1784617444</id>
            <summary type="text">ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவின் பணிப்புரையின்
பேரில், ஹட்டன் - டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட சந்தை
வளாகத்தில் நிரந்தர வர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவின் பணிப்புரையின்
பேரில், ஹட்டன் - டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட சந்தை
வளாகத்தில் நிரந்தர வர்த்தக நிலையங்களின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த
அனுமதியற்ற தற்காலிக கடைகளை அகற்றுவதற்காக நகர சபை அதிகாரிகள்
நடவடிக்கை மேற்கொண்டபோது இன்று(21) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>நகர சபை ஊழியர்கள், வருவாய் பரிசோதகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இடையே
ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை</h2><p>
இந்த பதற்றநிலைக்கு முக்கிய காரணமாக, சந்தை வளாகத்தில் இதுபோன்ற அனுமதியற்ற
தற்காலிக கடைகள் பல இருந்தபோதிலும், அவற்றில் ஐந்து கடைகளை மட்டும் குறிவைத்து
அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடை உரிமையாளர்கள்
குற்றஞ்சாட்டியதே என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af8fab0f-8935-4460-b5f1-0b7bdfad6cd9/26-6a5f2ecc760e1.webp' /></p><p>இதன்போது, நகர சபை அதிகாரிகள் தனிநபர்களைத் தெரிவுசெய்தும் பக்கச்சார்பாகவும்
அரசியல் அல்லது தரப்புவாத அடிப்படையிலும் இந்த அகற்றும் நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருவதாக வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின்
உப தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை
பார்வையிட்டனர். </p><p>பின்னர் அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர்கள்,
எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து வர்த்தகர்களுக்கும் சமமாகவும் நியாயமான
முறையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
</p><p>இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்திருந்த ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் வருவாய்
பரிசோதகர் ஜி.ஜி.யூ.பி. கமகே உள்ளிட்ட அதிகாரிகள், இது தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்! சூடுபிடித்துள்ள போராட்டக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shambhu-farmers-march-delhi-stoped-haryana-border-1784620054"></link>
            <id>https://tamilwin.com/article/shambhu-farmers-march-delhi-stoped-haryana-border-1784620054</id>
            <summary type="text">இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று(21) விவசாயிகளின் &#039;மகாபஞ்சாயத்து&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று(21) விவசாயிகளின் 'மகாபஞ்சாயத்து' கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. </p><p>

இதற்காக பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் நோக்கிப் புறப்பட்டனர்.</p><p></p><h2>பெரும் போராட்டம்&nbsp;</h2><p>
</p><p>
தேஷ் பச்சாவ் மோட்சா அமைப்பின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தப் பேரணியைத் தடுக்க, பஞ்சாப் - அரியானா எல்லையான ஷம்பு பகுதியில்&nbsp;பொலிஸார் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தினர். 

இரும்பு தடுப்புகள், பேரிக்கேட்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, டெல்லிக்குள் செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
</p><p>
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஷம்பு எல்லையிலேயே அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர்.

 கடந்த ஆண்டு இதே எல்லைப் பகுதியில் நடைபெற்ற நீண்டகால விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றிருந்த நிலையில், மீண்டும் அதே இடம் போராட்டக் களமாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69ebff7d-bb1a-4fa1-b91b-5aa45d191d94/26-6a5f2bbda3e29.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், அரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கிப் பயணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
மறுபுறம், டெல்லியில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டமும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. </p><p>

நேற்று நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தி கலைத்தனர்.</p><p>

 இந்த மோதலில் 118 பொலிஸாரும், 70 போராட்டக்காரர்களும் காயமடைந்ததாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>அனுமதி மறுப்பு&nbsp;</h2><p>

இன்றும் பேரணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களால் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவது முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவசாயிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
 இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தையில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றும், இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டால் சோயாபீன், சோளம், பருத்தி, ஆப்பிள், பாதாம் மற்றும் பால் பொருட்கள் போன்றவை இந்திய சந்தையில் அதிகளவில் நுழையும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3870eb08-2f31-463f-a014-9743e1511486/26-6a5f2bbe534fb.webp' /></p><p>
</p><p>
அதன் விளைவாக, இந்தியச் சிறு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும், கிராமப்புற பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் இருப்பதாகவும் விவசாய அமைப்புகள் எச்சரிக்கின்றன.
</p><p>
மேலும், இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் மத்திய அரசு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும், விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தாமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்பதே தங்களது முக்கிய கோரிக்கை என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T08:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழாவில் குழப்பம் - மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/confusion-at-kathirgama-kandan-s-aadivel-festival-1784621756"></link>
            <id>https://tamilwin.com/article/confusion-at-kathirgama-kandan-s-aadivel-festival-1784621756</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஈபிடிபி அமைப்பாளரால், மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானச் செயற்பாடு தொடர்பில் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் வெளியிடப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு ஈபிடிபி அமைப்பாளரால், மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானச் செயற்பாடு தொடர்பில் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மாநகரசபைக்கும் அதன் முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>


 நேற்று(20.07.2026) மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


கதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழா</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

கதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு, பாத யாத்திரை செய்யும்
அடியார்களின் நலன்கருதி, மட்டக்களப்பு மாநகர சபை பாத யாத்திரீயர்களுக்கு
அன்னதானம் கொடுக்கும் பணியினை கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக செய்து
கொண்டு வருகிறோம்.
</p><p>

இந்த அன்னதான பணியினை ஒவ்வொருவருடைய அனுசரணையோடு, மாநகர சபையும் ஒரு
அனுசரணையையும் வழங்கி, ஒரு அன்னதான குழுவினரால் இந்த பணி செயல்படுத்தப்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae3acc3-23d6-4d7d-8cc1-6612986cf277/26-6a5f2adbda3b6.webp' /></p><p> 


கடந்த 2020ஆம் ஆண்டு எமது மாநகர சபையின் ஆட்சிக் காலத்திலேயே, அப்போது இருந்த
முதல்வர் தியாகராஜா சரவணபவன், ஆணையாளர் மதிவண்ணன் இருவரும் இணைந்து இந்தப் பணியை ஆரம்பித்தார்கள். </p><h2>



தொடர் விமர்சனம்</h2><p>
அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் நாங்கள் இந்தப் பணிக்கான சேவைகளை கடந்த
8ஆம் திகதி ஆரம்பித்திருந்தோம். அன்று இந்தப் பணிக்காக எமது மாநகர சபை
வளாகத்திலிருந்து அண்மையிலே மாநகர சபைக்கு கொள்வனவு செய்யப்பட்ட, சுமாராக 
இரண்டே முக்கால் கோடி ரூபாய் செலவிலே நான்கு உழவு இயந்திரங்கள் புதிதாக
கொள்வனவு செய்திருந்தோம். </p><p>


அந்த உழவு இயந்திரத்திலே புதிய உழவு இயந்திரங்கள்
இரண்டையும், ஏனைய வேலைப் பகுதிக்குரிய உழவு இயந்திரங்களும், அதற்குரிய அந்த
பெட்டியையும் சேர்த்து மொத்தமாக நான்கு உழவு இயந்திரங்களும், அன்னதான பணிக்கனா சமையல் செய்யும் பொருட்களும் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சமூக வலைத்தளங்களிலே மட்டக்களப்பு மாவட்ட ஈ.பி.டி.பி யின் அமைப்பாளர் ராஜ்குமார், உழவு இயந்திரம் மற்றும் சமையல் பொருட்கள் தொடர்பில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
</p><p>

இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்த குற்றச்சாட்டுக்காக அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விவகாரம் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T08:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்து முக்கிய சாட்சியாளராக மாறிய சந்தன விக்ரமரத்ன! வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/c-d-wickramaratne-deshabandu-1784594978"></link>
            <id>https://tamilwin.com/article/c-d-wickramaratne-deshabandu-1784594978</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உயிரத்த ஞாயிறு தாக்குதலை விட பாரிய அரசியல் சம்பவத்திற்கு முக்கிய சாட்சியாளராக வாக்குமூலம் அளித்துள்ளார்.அத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உயிரத்த ஞாயிறு தாக்குதலை விட பாரிய அரசியல் சம்பவத்திற்கு முக்கிய சாட்சியாளராக வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>அத்தோடு சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு சார்பாகவும் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல முக்கிய சம்பவங்களுக்கு முக்கிய சாட்சியாளர் என்பதால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். </p><p>ஆனால், அவர் பிரதான சாட்சியாளராக இருப்பது மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் பலமான சாட்சியாளராக சந்தன விக்ரமரத்ன விளங்குகின்றார்.
</p><h2>

</h2><p></p><h2>தேசபந்துவுக்கு எதிரான சாட்சி</h2><p>தேசபந்து தென்னகோன் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறுவதற்கான பலமான சாட்சியத்தை சந்தன விக்ரமரத்னவே குறிப்பிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0cd9bae-aad4-46d7-b4bd-70a0a433edc4/26-6a5ec225a6ba2.webp' />&nbsp;&nbsp;</p><p>அவர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளித்துள்ளார்.

அதேபோன்று ஷானி அபேசேகர ஆட்சி மாறிய உடனேயே, 2019 நவம்பர் 20 ஆம் திகதி, பதிவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரியவர் சந்தன விக்ரமரத்னவே. </p><p>அவர் அவ்வாறு நீக்குமாறு கோரும் அளவுக்கு, அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் யாரின் பேச்சைக் கேட்டு இவ்வாறு மாற்றினார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் சரியான தீர்மானத்தை எடுக்கவில்லை. </p><p>அவர் தனது அதிகாரிகளின் பக்கம் நிற்கவில்லை. 
ஷானி போன்றவர்களை மாற்றினாலும், இறுதியில் ஷானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கு முக்கிய பங்காற்றினார்.</p><p>
இறுதியில் ஷானியின் பதவி உயர்வுக்கு பரிந்துரைத்தவர்களில் சந்தன விக்ரமரத்னவும் ஒருவர். ஆனால் இன்னமும் ஷானிக்குப் பதவியுயர்வு கிடைக்கவில்லை.
</p><p>
அதேபோன்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்து ஓய்வுபெற்ற ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்ட சம்பவம். அச்சம்பவம் நடந்த போது சந்தன விக்ரமரத்னவே பொலிஸ் மா அதிபராக இருந்தார். </p><p>ரவி செனவிரத்னவை பொலிஸார் கைது செய்துவிட்டனர் என்பதை அறிந்து, அது தொடர்பாக அவர் பொலிஸாரிடம் விசாரணை நடத்துகின்றார். </p><p>ஒரு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதாலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும், வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை எனவும், பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
</p><h2>
சானி- ரவிக்கு செய்த உதவி</h2><p>இதன்பின்னர் பொலிஸ் மா அதிபர் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெறுகின்றார். இது பிணையில் செல்லக்கூடிய குற்றம் என்று சட்டப் பிரிவு கூறுகிறது. </p><p>அதற்கமைய, இது பிணையில் செல்லக்கூடிய குற்றமாக இருந்தபோதிலும், தேஷபந்து உள்ளிட்ட குழுவினர் வேறு ஒரு சக்தியினால் அவரைச் சிறையிலடைக்கவே முயற்சிக்கின்றனர் என்பதைப் பொலிஸ் மா அதிபர் சந்தன புரிந்துகொள்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b8ed6e-17cd-4346-8fe7-9d456c4e0d94/26-6a5ec22502c6e.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>
பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு உடனடியாக அறிவுறுத்துகின்றார். ஆனால், பொலிஸ் மா அதிபர் கூறியதைக் கூட கேட்காமல், பொலிஸ் பிணை வழங்காமல், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக ரவி செனவிரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர்.
</p><p>
</p><p>இது தொடர்பாகப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறிப்புகளைக் கூட எழுதியிருந்தார். இவ்வாறாக அவர் பல்வேறு விடயங்களில் பல வழிகளில் தலையிட்டிருந்தார்.</p><p>அது நன்மை தீமை இரு பக்கங்களையும் கொண்டுள்ளது. 
அவர் மரணமடைந்த சந்தர்ப்பத்தில், அவருடைய அனைத்துத் தவறுகளையும் பேசுவதை விட, அவர் பொலிஸில் ஆற்றிய பங்களிப்பைப் பேசுவது மிகவும் முக்கியமானதாகும்.
</p><p>
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் தேஷபந்துவின் சம்பவத்தில் அவர் ஒரு பலமான சாட்சியாளராக இருக்கின்றார். இவ்வாறானதொரு பலமான சாட்சியாளரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். </p><p>அவருடைய மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T07:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் பொலிஸ் பிரிவில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/orders-issued-officers-in-charge-hatton-police-1784617951"></link>
            <id>https://tamilwin.com/article/orders-issued-officers-in-charge-hatton-police-1784617951</id>
            <summary type="text">ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலையப்
பொறுப்பாளர்களுக்கும், பொலிஸ் நிலையங்களையும் அதன் வளாகங்களையும் டெங்கு
கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலையப்
பொறுப்பாளர்களுக்கும், பொலிஸ் நிலையங்களையும் அதன் வளாகங்களையும் டெங்கு
காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஏடிஎஸ் (Aedes) வகை நுளம்புகள் பெருகுவதைத்
தடுத்து, அவை கடிப்பதில் இருந்து பாதுகாத்து கொசுக்கள் அற்ற முறையில்
பராமரிக்குமாறு ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர
அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும் பொலிஸ் நிலையங்களைச் சுற்றியுள்ள தேவையற்ற பொருட்கள், உடைந்த
பாத்திரங்கள், சிரட்டைகள் மற்றும் பழைய டயர்களில் மழைநீர் தேங்காமல்
பார்த்துக் கொள்ளவும் , டெங்கு பரவலைக் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பொறுப்பாளர்களுக்கு உத்தரவு</h2><p>
</p><p>
இன்று செவ்வாய்க்கிழமை (21) ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் சார்பாக
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற அரையாண்டு பொலிஸ் பரிசோதனையின்
போது பொலிஸ் நிலையத்தை முழுமையாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
ஆய்வு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b517c588-2af9-4bf9-9f0e-0fcab5064d86/26-6a5f1e4194a88.webp' /></p><p> அத்துடன் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை முறையான
சுற்றுச்சூழல் பரிசோதனைகள் மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து அவ்விடங்களை
சுத்தப்படுத்துதல் மற்றும் அழிக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும்
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாளரான பிரதம ஆய்வாளர் கபில
விஜேரத்னவுக்கு உத்தரவிடப்பட்டது.
</p><p>
இந்த அரையாண்டு ஆய்வின்போது நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலைய அதிகாரிகள், ஹட்டன்
சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருக்கு மரியாதை செலுத்தினர்.மேலும் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் பொலிஸ் அதிகாரிகளை பரிசோதனை நடத்தினார்.</p><p>

இதில் அணிநடை வகுப்பு மரியாதை,, அணிநடை கண்காட்சி மற்றும் பரிசோதனைகள் என்பன
இடம்பெற்றன.</p>]]></content>
            <updated>2026-07-21T07:24:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-confidence-motion-against-justice-minister-1784615645"></link>
            <id>https://tamilwin.com/article/no-confidence-motion-against-justice-minister-1784615645</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சி அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக இதை உறுதிப்படுத்தினார்.&nbsp; &nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/577914a3-2cad-4891-bb94-e826bbaf4fbb/26-6a5f193d42d26.webp' /></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/717X4VtpPYg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-21T07:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடகை வீட்டில் சிக்கிய இளைஞர்கள் - நிலத்தில் புதைத்துவைத்து மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-suspects-arrested-with-firearms-and-drugs-1784614940"></link>
            <id>https://tamilwin.com/article/three-suspects-arrested-with-firearms-and-drugs-1784614940</id>
            <summary type="text">காலி - கொஸ்கொட, கணேகொடெல்ல பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை ( 20...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி - கொஸ்கொட, கணேகொடெல்ல பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று மாலை ( 20) இவர்கள் கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வாடகை வீடொன்றில் சிக்கிய இளைஞர்கள்&nbsp;&nbsp;</h2><p><span style="font-size: 14px;">இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, டி.56 ரக துப்பாக்கியொன்றும், 8 தோட்டாக்கள், ஒரு 12 போர் ரக தோட்டா, ஒரு கையெறி குண்டு, 20 கிராம் ஐஸ் போதைப்பொருள், 320 மில்லிகிராம் போதைப்பொருள், போதைப்பொருளை அளவிடும் மின்னணு தராசு மற்றும் ரூ. 8,19,000 பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ee63b1-388b-43d2-8a44-d2a5b6f79147/26-6a5f18e0ee27e.webp' /><span style="font-size: 14px;"></span></p><p><span style="font-size: 14px;">இதேவேளை, துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் சகோதரர்கள் என்றும், அவர்கள் கொஸ்கொட, நேப்பே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.</span></p><p>

கடந்த ஏழு மாதங்களாக கணேகொடெல்ல பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த வீட்டில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதேவேளை, மற்றொரு சந்தேகநபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​போதைப்பொருளும் பணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T07:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1784615945"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1784615945</id>
            <summary type="text">டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது
வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் இன்று (21.07.2026) வெற்றிகரமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது
வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் இன்று (21.07.2026) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.</p><p>

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில்
கல்முனை மாநகர சபையின் பூரண ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.</p><h2>வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p></p><p>
</p><p>
இதன்போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேவையற்ற பாத்திரங்கள், பழைய
டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், தேங்காய் ஓடுகள், மழைநீர் தேங்கக்கூடிய ஏனைய
பொருட்கள் ஆகியன தீவிரமாகச் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன.</p><p>வாரத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்கி, தங்கள்
வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், நீர்
தேங்கும் இடங்களை உடனுக்குடன் அகற்றி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு
முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T06:44:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/revised-pension-for-government-employees-1784613058"></link>
            <id>https://tamilwin.com/article/revised-pension-for-government-employees-1784613058</id>
            <summary type="text">2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன் ஓய்வுபெற்ற 192,641 அரச அதிகாரிகளுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதிய பலன்கள் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன் ஓய்வுபெற்ற 192,641 அரச அதிகாரிகளுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதிய பலன்கள் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த திட்டத்தின் கீழ், 2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன் ஓய்வுபெற்ற அனைத்து அரச ஊழியர்களின் ஓய்வூதியங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கை 2026 ஜூலை 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>

அதன் முக்கிய கட்டமாக, 2026 ஜூலை 10ஆம் திகதியன்று இடம்பெற்ற ஓய்வூதியக் கொடுப்பனவு நாளுக்குள், தகுதி பெற்ற 192,641 ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகைகளை வெற்றிகரமாக வழங்கி முடித்துள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>ஓய்வூதியதாரர்களுக்கான நடவடிக்கை</h2><p> </p><p>

இன்னும் திருத்தப்பட்ட பலன்களைப் பெற வேண்டியுள்ள ஏனைய தகுதியுடைய ஓய்வூதியதாரர்களுக்கான நடவடிக்கைகளும் தற்போது விரைவாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d426a38-c882-477f-bcc5-28f4f2213d6d/26-6a5f0f59d2d7c.webp' /></p><p> </p><p>

ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் திறமையான, ஒழுங்குமுறைப்பட்ட மற்றும் தரமான சேவையை வழங்கும் நோக்கில் திணைக்களத்தின் முழு பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க ஓய்வூதியதாரர்கள் வெளிப்படுத்தும் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை திணைக்களம் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T06:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் மர்ம மரணங்கள்! கோட்டாபயவிடம் ஆலோசனை பெற வேண்டிய நிலையில் அநுர..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-death-of-prominent-figures-in-sri-lanka-1784609447"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-death-of-prominent-figures-in-sri-lanka-1784609447</id>
            <summary type="text">டெங்கு நோய்த் தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஆலோசனைப் பெற வேண்டும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு நோய்த் தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஆலோசனைப் பெற வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மேலும், தற்போது நாட்டில் அடுத்தடுத்து நிகழும் முக்கியஸ்தர்களின் மர்ம மரணங்கள் தொடர்பான உண்மையை இந்த அரசாங்கம் இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் சாகர காரிவசம் குற்றம் சுமத்தினார்.&nbsp;</p><p>ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>கோட்டாபயவிடம் ஆலோசனை&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>நாட்டில் டெங்கு தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,&nbsp; இந்த வருடத்தில் இதுவரையான நாட்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,&nbsp; 53 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4503edf8-5acd-4520-aee7-de1165773fb1/26-6a5f02a287d89.webp' /></p><p>கொழும்பு நகரம் இன்று கழிவகற்றல் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. வீதிகள் எங்கும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.&nbsp; உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தின் தோல்வியே இவற்றிற்கு காரணம்.&nbsp;</p><p>முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் டெங்கு நோய்த் தொற்று மற்றும் கோவிட் பெருந்தொற்று என்பன சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டன.&nbsp;</p><p>எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க&nbsp; நோய்க்கட்டுப்படுத்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஆலோசனைப் பெற வேண்டும்.&nbsp;</p><h2>மர்ம மரணங்கள்&nbsp;</h2><p> </p><p>இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பலர் இன்று மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63212926-1006-4ad5-9ad9-ace7dd0a9957/26-6a5f02a33819f.webp' /></p><p>கபில சந்திரசேன மற்றும் திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதான சாட்சியாளராக இருந்த ரங்க ராஜபக்ச உள்ளிட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இவ்வாறான நிலையில், தற்போது முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்திருக்கின்றார்.&nbsp;</p><p>இது தொடர்பான சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைக் காரணம் நாட்டுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/olCv1zeEMpY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-21T06:25:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகத்தில் கைவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள வாகனங்கள்! சிக்கலில் இறக்குமதியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicles-worth-crores-abandoned-at-the-port-1784600524"></link>
            <id>https://tamilwin.com/article/vehicles-worth-crores-abandoned-at-the-port-1784600524</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணங்கள் காரணமாக இறக்குமதியாளர்கள் இறக்குமதி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணங்கள் காரணமாக இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1000 சொகுசு கார்களை விடுவிக்காமல் இருப்பதாக இலங்கை சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>மறு ஏற்றுமதிக்கான வாகனங்கள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இவை மறு ஏற்றுமதி மற்றும் போர் காரணமாக துபாய் போன்ற நாடுகளுக்கு அனுப்ப முடியாததால் இந்த வாகனங்களில் பெரும்பாலானவை இறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112903cf-0a1d-4eda-b514-48e716e65a83/26-6a5f006573a28.webp' /></p><p><span style="font-size: 14px;">இதேவேளை, மறுஏற்றுமதிக்காக&nbsp;</span>அம்பாந்தோட்டை<span style="font-size: 14px;">க்கு வரும் வாகனங்களும் தடுத்துவைப்பு கட்டண சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</span></p><p>
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்து அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தியிருந்த, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை விடுவிக்க முயன்றபோது, ​​இலங்கை இறக்குமதியாளர் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.</p><h2>சீன நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட&nbsp;நிர்வாகம் </h2><p>
</p><p>
இந்த தடுத்துவைப்பு கட்டணத்துடன், வாகனத்தின் விலை தற்போது 7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும்,
வாகனத்தின் விலை அதன் உண்மையான விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரி கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/117bb654-9fd1-4fbb-977e-a84bae7b047c/26-6a5f0066495a8.webp' /></p><p>
</p><p>
அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணம் காரணமாக வாகனத்தை விடுவிக்கும் முயற்சியை இறக்குமதியாளர் பலர் கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகம் ஒரு சீன நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் சுங்கத்துறை அதிகாரி கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T06:15:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடி சோதனையில் சிக்கிய மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட பேருந்துகள்! கடுமையாகும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kerosene-powered-buses-tested-in-nuwara-eliya-1784612846"></link>
            <id>https://tamilwin.com/article/kerosene-powered-buses-tested-in-nuwara-eliya-1784612846</id>
            <summary type="text">நுவரெலியாவில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாக சந்தேகிக்கப்படும் 03 பயணிகள் பேருந்துகளை நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்துப்பிரிவினர் கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாக சந்தேகிக்கப்படும் 03 பயணிகள் பேருந்துகளை நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்துப்பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.</p><p>

நுவரெலியா நகரை மையமாக கொண்டு நேற்று (20) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்
போதே நானுஓயா , மாகஸ்தோட்ட, பொரலாந்த போன்ற பகுதிகளுக்கு இயங்கும்
பேருந்துக்கள் சோதனை செய்யப்பட்டன.</p><p>இதில் மூன்று பேருந்துக்கள் மண்ணெண்ணெய்
பயன்படுத்தி இயக்கப்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>பகுப்பாய்விற்காக&nbsp;அனுப்பப்பட்டுள்ள&nbsp;எரிபொருள் மாதிரிகள் </h2><p>

இவ்வாறு பேருந்துகளில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள்
பகுப்பாய்விற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC)
அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்வது உள்ளிட்ட தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5f75a7d-c12f-464f-ae79-e12becd3710e/26-6a5f0c392a8d8.webp' /></p><p>

டீசல் விலை அதிகம் காரணமாகவே டீசலுக்கு மாற்றாகவும், டீசலுடன் கலந்தும்
பேருந்துகள் மற்றும் டிப்பர்களில் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p>


இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் அதிக நச்சுப்புகை மற்றும் அடர்ந்த
கரும்புகை வெளியிடுகின்றன. இது மனித உடலுக்கும், காற்றும் மாசுபடுவதோடு விரைவில்
இயந்திரத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டு பழுதடைகின்றது.</p><h2>பேருந்துகள் தீப்பற்றும் அபாயம்&nbsp;</h2><p>அத்துடன் எரிபொருள்
உட்செலுத்திகள் பழுதுபடல், பிஸ்டன் தேய்மானம் என்பன வாகனத்தில் ஏற்படுவதாகவும் வாகன உற்பத்தியாளர்களினால் பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் தவிர்ந்த,
வேறு எரிபொருட்களைப் பயன்படுத்துவதோ அல்லது அவற்றை எரிகலவையாக்கி வாகனங்களை
இயக்குவதோ முற்றிலும் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba877b3d-73f2-4e45-8a70-bf8a3f3255d1/26-6a5f0c3a0c4b7.webp' /></p><p>
</p><p>
அத்துடன், இவ்வாறான பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் போது உடனடியாக தீப்பற்றும் அபாயம் காணப்படுவதுடன், விபத்துக்கள் ஏதும் நேராத
சந்தர்ப்பங்களிலும் கூட திடீரென தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக
உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
இதன் காரணமாக டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய்யில் இயங்கும் பேருந்துக்களை
கண்டறியும் நோக்கில் தொடர்ந்தும் நுவரெலியாவில் அடிக்கடி சோதனை நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T06:12:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-left-the-road-and-crashed-into-a-tree-1784611408"></link>
            <id>https://tamilwin.com/article/car-left-the-road-and-crashed-into-a-tree-1784611408</id>
            <summary type="text">அம்பாறை, இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று
கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி பாரிய
விபத்துக்குள்ளாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை, இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று
கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி பாரிய
விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>விபத்தானது நேற்று(20.07.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு</h2><p>இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில்
சென்று கொண்டிருந்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை
விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19f38cc9-a8c9-4bbb-a5f4-025a85019ea3/26-6a5f0b27c1e07.webp' /></p><p>
சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த இறக்காமம் பொலிஸார் விபத்துக்கான
காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/587df795-1409-4fdb-82bc-72f2577663f7/26-6a5f0b289493a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T06:01:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/application-period-for-gce-ol-examination-1784607462"></link>
            <id>https://tamilwin.com/article/application-period-for-gce-ol-examination-1784607462</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.அதன்படி பரீட்சைக்கு விண...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.</p><p>அதன்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>தேசிய அடையாள அட்டை</h2><p>
</p><p>
தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக இருக்காது என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
விண்ணப்பதாரர்கள் பரீட்சை அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a69c7b1-c950-4a6b-82e9-d74bb2e49218/26-6a5ef9ca96663.webp' /></p><h2>இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது&nbsp;</h2><p>
</p><p>
எந்த காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அல்லது சந்தேகங்களுக்கு 1911 என்ற துரித சேவை இலக்கம் மற்றும் 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 0112784422 என்ற தொலைநகல் இலக்கம் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T05:47:49+00:00</updated>
        </entry>
    </feed>
