<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T07:19:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனிவாவில் இலங்கை பற்றிய அறிக்கை உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/report-sri-lanka-officially-presented-geneva-today-1788850203"></link>
            <id>https://tamilwin.com/article/report-sri-lanka-officially-presented-geneva-today-1788850203</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாகச்
சமர்ப்பிக்கப்படவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாகச்
சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><h2>உரிய தீர்மானம்..&nbsp;</h2><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று ஆரம்பமான இந்தக் கூட்டத் தொடரில்
மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், அது இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு, இன்று ஆணையாளர் வோல்கர்
துர்க்கினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13382cbb-b35f-4ab7-97d8-88871efb12da/26-6a9fb24d91e24.webp' /></p><p>

இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள
நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள்
தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று வோல்கர் துர்க் தனது அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், மனித உரிமைகள்
பேரவையின் உறுப்பு நாடுகள் இந்த அறிக்கையைப் பரிசீலித்து, உரிய தீர்மானத்தை
நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் எந்தவிதத்திலும் விசேடமான நபர் அல்ல! பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chaturanga-abeysinghe-s-comments-on-namal-s-arrest-1788847568"></link>
            <id>https://tamilwin.com/article/chaturanga-abeysinghe-s-comments-on-namal-s-arrest-1788847568</id>
            <summary type="text">நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை
வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனவும், சட்டத்தின்
முன்னிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை
வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனவும், சட்டத்தின்
முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
தெரிவித்துள்ளார்.</p><p>

மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே
அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>உரிய சட்ட நடவடிக்கை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாமல் ராஜபக்ச இந்த நாட்டின் ஒரு சாதாரண பிரஜையே தவிர, அவர் எந்தவிதத்திலும்
விசேடமான நபர் அல்லர். முன்பிருந்த ஊழல் மற்றும் மோசடிகளுடன் அவருக்குத்
தொடர்பு இருக்குமாயின், அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் இடம்பெறும் தருணத்தில் இந்தக் கைது
இடம்பெற்றதால், இது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனச் சுமத்தப்படும்
குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27afe84c-4793-4d9b-810d-2207224fad75/26-6a9fb153a9f40.webp' /></p><p>

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுயாதீன நிறுவனங்கள் தமது விசாரணைகளின்
முடிவுகளுக்கு அமைவாகவே நபர்களை அழைப்பதும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும்
வழக்கம்.</p><h2>சட்டபூர்வ கைது</h2><p> இத்தகைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் குறித்த சட்டபூர்வ கைதுக்கும்
இடையே எவ்வித தொடர்பும் இல்லை.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சட்ட அமுலாக்க நிறுவனங்களை பலப்படுத்துவதையே
செய்துள்ளோம். </p><p>மக்கள் ஆணையுடன் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி
உள்ளிட்ட அனைவரும், மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் மக்களைத்
தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து
வருகின்றனர் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T06:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இரகசிய தகவலில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/leaking-production-plant-in-batticaloa-under-siege-1788848293"></link>
            <id>https://tamilwin.com/article/leaking-production-plant-in-batticaloa-under-siege-1788848293</id>
            <summary type="text">மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு
உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.நேற்று திங்கட்கிழமை (7) கசிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு
உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>நேற்று திங்கட்கிழமை (7) கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்ட நிலையில், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 1500
மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு
உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்</h2><p>
காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவின்
பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராசா றஜிக்காந்தனுக்கு கிடைத்த இரகசிய தகவல்
ஒன்றையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று
திங்கட்கிழமை ஆரையம்பதி செவநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8629825-2c97-41e8-af54-a29102b9e536/26-6a9faff1bb1ba.webp' /></p><p>
</p><p>
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 54 வயதுடைய ஒரு வரை
கைது செய்ததுடன் 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா
மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளனர்.
</p><p>
இதில் கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8629825-2c97-41e8-af54-a29102b9e536/26-6a9faff1bb1ba.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d0b399-0fea-4d69-9142-b92e6196fe8e/26-6a9faff294ce2.webp' /></p>]]></content>
            <updated>2026-09-08T06:47:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் பொருளாதாரத்தின் பலம் : விஜித ஹேரத் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/contribution-overseas-sri-lankans-economy-1788845672"></link>
            <id>https://tamilwin.com/article/contribution-overseas-sri-lankans-economy-1788845672</id>
            <summary type="text">பொருளாதார ரீதியில் பாதகமான நிலையைச் சந்தித்திருந்த இலங்கையை மீண்டும்
சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதார ரீதியில் பாதகமான நிலையைச் சந்தித்திருந்த இலங்கையை மீண்டும்
சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன என்றும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு
வாழ் இலங்கையர்களின் பங்களிப்பே மிக முதன்மையானது என்றும் வெளிவிவகார,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்
தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று(07.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;"கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது.
</p><p>குறிப்பாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூலம் கடந்த ஆண்டில் மட்டும்
இலங்கைக்கு 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3c4545-de99-44ac-a64c-a43f3777626f/26-6a9fa60ea3a18.webp' /></p><p>
சுற்றுலாத் துறையைப் போன்றே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
அனுப்பும் அந்நியச் செலாவணியே நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி
முன்னோக்கி கொண்டு செல்ல பெரிதும் உதவுகின்றது.</p><p>

எனவே, நாட்டுக்குப் பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும் வெளிநாட்டுத்
தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் அவர்களின் தேவைகளைக்
கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
</p><p>
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறித்துப் பொதுமக்களிடையே
பொதுவாக நிலவி வரும் எதிர்மறையான கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும்,
அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளுக்கு
உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T06:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரான் பாசிக்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-to-colombo-high-court-1788846472"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-to-colombo-high-court-1788846472</id>
            <summary type="text">பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை&nbsp;</h2><p>இதன்போது, பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef507465-5f86-4c0b-be91-f1f33fec7004/26-6a9fa4c375bf8.webp' /></p><p>பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான, ஷிரான் பாசிக் துபாயில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.</p><p>தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான இவர், சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட குற்றவாளியாவார்.&nbsp;&nbsp;</p><p>வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர், அதன் மூலம் ஈட்டிய கறுப்புப் பணத்தை இலங்கையின் கடற்கரையோரங்களில் உள்ள ஏழை மக்களின் காணிகளைப் பயன்படுத்தி பாரிய ஹோட்டல்களை நிர்மாணிப்பதன் மூலம் சலவை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:58:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடாவில் அமெரிக்க சொத்துகள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-us-assets-in-the-gulf-iran-warns-1788845575"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-us-assets-in-the-gulf-iran-warns-1788845575</id>
            <summary type="text">தனது சொத்துகள் மீது அமெரிக்கா நடத்தும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும்
உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நேற்று எச்சரிக்கை
விடுத்துள்ளது.

இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சொத்துகள் மீது அமெரிக்கா நடத்தும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும்
உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நேற்று எச்சரிக்கை
விடுத்துள்ளது.
</p><p>
இந்தநிலையில், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நலன்கள் உட்பட வளைகுடா பகுதி
முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் அனைத்தும் தாக்குதலுக்கு
உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தாக்குதல்</h2><p>
</p><p>
அத்துடன், கடந்த வார இறுதியில் கப்பல்கள் மீது அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம்
நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் ஆறு வார கால
உச்சத்தை நெருங்கியுள்ளன.
</p><p>
இந்நிலவரம் குறித்து பேசிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர்
காலிபாஃப், "எங்கள் சொத்துகளை நீங்கள் தாக்கினால், நீங்களும் திரும்பத்
தாக்கப்படுவீர்கள்" என நேரடியாக எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51b57d9-cd49-4870-88e5-89e52aa44aef/26-6a9fa15a96a71.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அமெரிக்காவின் புதிய தாக்குதல்களுக்கு ஈரான் கடுமையான பதிலடி
கொடுக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

மேலும் கப்பல்கள் மீதான தாக்குதல்களால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்
விலைகள் கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.</p><h2>ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை</h2><p>

இதனால் தரவுகளின்படி, மே மாதத்திற்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாகப்
பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை தற்பொழுது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.</p><p>

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரை முடிவுக்குக்
கொண்டுவரவோ, வளைகுடாப் பகுதியில் இயல்பான எரிசக்திப் போக்குவரத்தை
மீட்டெடுக்கவோ முறையான இராஜதந்திர முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.</p><p>

இந்நிலையில் கடந்த வார இறுதியில் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில்
ஈடுபட்டிருப்பது, அப்பகுதியில் பதற்றத்தையும் பேராபத்தையும் மேலும்
அதிகரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கொலை அச்சுறுத்தல்! அநுர தரப்பு மீது சுமத்தப்படும் குற்றம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-receives-death-threat-1788845698"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-receives-death-threat-1788845698</id>
            <summary type="text">ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் அரச நிறுவனங்களை அரசியல் பழிவாங்கல்களுக்காகப்
பயன்படுத்தும் &#039;Institutional Weaponization&#039; என்ற தவறான அரசியல் உத்தியை
தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் அரச நிறுவனங்களை அரசியல் பழிவாங்கல்களுக்காகப்
பயன்படுத்தும் 'Institutional Weaponization' என்ற தவறான அரசியல் உத்தியை
தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தீவிரமாகப் பயன்படுத்தி
வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>மேலும், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>
</p><p>
கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தொடர்பான சமீபத்திய விவகாரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள்
குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>வாக்குறுதிகளை மீறிய ஜனாதிபதி&nbsp; அநுர&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"அரசியல் எதிராளிகளை முடக்குவதற்கும் அவர்களின் குரலை அடக்குவதற்கும் அரச
அதிகாரமும் விசாரணை நிறுவனங்களும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956075ef-272d-44be-a445-559136069ed5/26-6a9f9e84a82b6.webp' /></p><p>
</p><p>ஜனாதிபதி பயணம் செய்யும்போது பாதைகள் மூடப்படுவதில்லை என்ற அரசின்
வாக்குறுதிகள் தற்போது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
பேருவளை மற்றும் புலத்சிங்கள பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோது வீதிகள்
மட்டுமன்றி, பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் நுழைவது கூட தடை
செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
தேர்தல் காலத்தில் மீனவர்களுக்காக உறுதியளிக்கப்பட்ட புதிய செயலி குறித்த
வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>நாமலுக்கு கொலை அச்சுறுத்தல்&nbsp;</h2><p>

மேலும், சமூக ஊடகங்களில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விடுக்கப்படும் கொலை
அச்சுறுத்தல்கள் மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்து பலமுறை முறைப்பாடு
செய்யப்பட்டுள்ள போதிலும், விசாரணை நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை.</p><p>

அரசு தனக்குச் சாதகமான ஒருசில தரப்பினருக்கு மட்டுமே சட்டத்தை
நடைமுறைப்படுத்தி, ஏனையோரைப் புறக்கணிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca1b95e-908a-4e98-a120-2b5fa2e31286/26-6a9f9e8580df6.webp' /></p><p>

இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் கைதுகளுக்குப் பயந்து எமது கட்சியின்
அரசியல் பயணத்தை எக்காலத்திலும் நிறுத்தப் போவதில்லை.
</p><p>
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக அனுராதபுரம் நகர சபை விளையாட்டு
மைதானத்தில் பிரமாண்ட மக்கள் பேரணி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
பூர்த்தியாகியுள்ளன.
</p><p>
ஜனநாயக ரீதியான அரசியல் களத்தை ஒடுக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைப்
பொதுமக்கள் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-arrested-in-katunayake-airport-1788844457"></link>
            <id>https://tamilwin.com/article/two-arrested-in-katunayake-airport-1788844457</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>50 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2><b> இருவர் கைது</b></h2><p>பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24fabd96-fbb9-4050-81e2-8a076ad3c02b/26-6a9f9e4587a08.webp' /></p><p>சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T05:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுடன் விசேட பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/representative-srilanka-spea-president-panikulam-1788845204"></link>
            <id>https://tamilwin.com/article/representative-srilanka-spea-president-panikulam-1788845204</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க்
அன்ட்ரூ பிரெஞ்ச்சுக்கும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத்
சந்திரகீர்த்திக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க்
அன்ட்ரூ பிரெஞ்ச்சுக்கும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத்
சந்திரகீர்த்திக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி
செயலகத்தில் நடைபெற்றது.
</p><p>
டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம்
தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p><p>
எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை
எதிர்கொள்வதற்கான அரசின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.</p><h2>அரசின் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள்</h2><p>
</p><p>
அதற்கான அரசின் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97cf5349-a77c-407a-9a16-fb2ad7619660/26-6a9f9d9f16ef4.webp' /></p><p>
</p><p>
அந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள்
சபை அரசுக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் மார்க் அன்ட்ரூ
இதன்போது குறிப்பிட்டார்.
</p><p>
ஐக்கிய நாடுகள் சபையின் பங்குதாரர் மற்றும் அபிவிருத்தி நிதியியல் நிபுணர்
அஸாம் பாக்கீர் மாகர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதாபிமான
மற்றும் தாங்கும் திறன் தொடர்பான அதிகாரி வகீஷா பெரேரா ஆகியோரும் இந்தக்
கலந்துரையாடலில் பங்கேற்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வு: வெளிவிவகார அமைச்சர் - ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-minister-un-representative-meeting-1788844971"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-minister-un-representative-meeting-1788844971</id>
            <summary type="text">வரும் 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வை முன்னிட்டு, இலங்கையின்
முன்னுரிமைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரும் 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வை முன்னிட்டு, இலங்கையின்
முன்னுரிமைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான
நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச்சை நேற்று (07.09.2026) சந்தித்துக் கலந்துரையாடினார்.
</p><p>
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில்
நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எதிர்வரும் பொதுச் சபை அமர்வு தொடர்பான முக்கிய
விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.</p><h2>கவனம் செலுத்தப்பட்ட விடயம்</h2><p>
</p><p>
இதன்போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான 70 ஆண்டுகளுக்கும்
மேலான ஒத்துழைப்பு, 'ஐ.நா. 80' முன்முயற்சி, ஐ.நா. நிலையான அபிவிருத்தி
ஒத்துழைப்புக் கட்டமைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான
இலங்கையின் மூன்றாவது தன்னார்வ தேசிய மீளாய்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்
குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/783f00f2-1eb7-4b7b-8fd0-685eceb6c15f/26-6a9f9d08ac41f.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கும், பல்தரப்பு
ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தொடர்ந்தும்
உறுதியாகவுள்ளது என்று அமைச்சர் விஜித ஹேரத் இந்தச் சந்திப்பின்போது
தெரிவித்தார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுமாத்தளனில் அதிரடி சோதனை : 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/more-than-3-200-kg-of-fish-rescued-1788844873"></link>
            <id>https://tamilwin.com/article/more-than-3-200-kg-of-fish-rescued-1788844873</id>
            <summary type="text">முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படையினரும்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து நேற்று (07) மேற்கொண்ட கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படையினரும்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து நேற்று (07) மேற்கொண்ட கூட்டுச் சோதனையின் போது, வெடிபொருள் பயன்படுத்தி
பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>புதுமாத்தளன் பகுதியில் மீன்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த
சந்தேகத்திற்கிடமான இடமொன்றை சோதனையிட்டபோதே இந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p>

இதன்போது, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர்
சந்தேகத்தின் பேரில்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட மீன்களும் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள
அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-08T05:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எமது மக்கள் அறிவால் பலம் பெற வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-political-1788842845"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-political-1788842845</id>
            <summary type="text">நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எமது
மக்கள் அறிவால் பலம் பெற்றவர்களாக மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எமது
மக்கள் அறிவால் பலம் பெற்றவர்களாக மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

எதுல்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில்
ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தினருக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டில் ஏமாற்று அரசியலே தொடர்ந்தும் காணப்படுகின்றது. துறைமுகத்தில்
இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எண்ணெய் வழங்குவோம் என்று தேர்தல் காலத்தில்
பிரதாபித்தாலும், இன்று அந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70cdb139-1e93-47d6-b034-23b58a9f9e77/26-6a9f99aa9810c.webp' /></p><h2>மின் உற்பத்தி நிலைய மாபியா</h2><p>

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை குறையும் நிலையிலும், தொடர்ந்தும்
எரிபொருள்கள் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன. மின்சாரக் கட்டணத்தை 33
வீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு அதனை அதிகரித்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிவிட்டு, இன்று
அரசும் எரிபொருளில் தங்கியிருக்கும் மின் உற்பத்தி நிலைய மாபியாக்களுக்கு
அடிமையாகியுள்ளது.
</p><p>
அன்று விவசாயிகளுடன் இணைந்து நெற்கதிர்களை வாயில் கடித்துக்கொண்டு, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலை பெற்றுத் தருவதாகக் கூறினார்கள். எனினும்,
ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது என விடயத்துக்குப்
பொறுப்பான அமைச்சரே தெரிவித்த நிலையில், 120 ரூபாவை நிலையான விலையாக
அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை
ஏற்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be6bbb9-0471-42cc-95dd-7b4fb2a05b93/26-6a9f99ab792e9.webp' /></p><p> </p><p>பிரஜைகள் சமகாலத்தில் உரிய விழிப்புணர்வைப் பெறாமல்
இருப்பதே இவற்றுக்கெல்லாம் காரணமாகும். நாம் அறிவால் பலம்பெற்ற சமூகமாக மாற
வேண்டும்.

கல்வித் துறையில் பிரதானமாக 6 பிரிவினர்கள் காணப்படுவதுடன், அவற்றுள் பாரிய
குறைபாடுகளும் முரண்பாடுகளும் நிலவுகின்றன. நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம்
ஆசிரியர்களும், 15 ஆயிரம் அதிபர்களும், சுமார் 10 ஆயிரத்து 145 பாடசாலைகளும்
உள்ளன. சில பாடசாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.</p><h2>கவர்ச்சிகரமான வார்த்தை</h2><p> </p><p>ஐக்கிய மக்கள்
சக்தி எவருக்கும் பொய் வாக்குறுதிகளையோ கானல் நீர் கனவுகளையோ வழங்காது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு கொடுப்பனவை நாம்
பெற்றுக்கொடுப்போம். கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி ஆசிரியர்களை
நடுவீதியில் விடமாட்டோம்.

இலவசக் கல்வியிலும் பேதங்கள் காணப்படுகின்றன. தேசிய மற்றும் மாகாண
பாடசாலைகளுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளில் தெளிவான இடைவெளிகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689d7436-e0bf-4b50-8549-c8ba93f4a1b8/26-6a9f99ac4c832.webp' /></p><p>
</p><p>அரசாங்கங்கள் மாறும்போது பல திட்டங்கள் வந்தாலும், கல்வியைப் பாதுகாக்கும்
ஆசிரியர்களும் மாணவர்களுமே இறுதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பக்
கல்வியிலிருந்தே கல்வி நவீனமயமாக்கப்பட வேண்டும். மனப்பாட முறையில் இருந்து
விடுபட்டு சவால்களுக்கு முகம் கொடுத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்
கல்வி முறைக்கு நாம் செல்ல வேண்டும்.

இன்று பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான போதிய உபகரணங்கள் இல்லை. </p><p>அவற்றை
வாங்குவதற்காகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படுகின்றது. மாணவர்களில் 40
வீதமானோருக்குக் கூட ஸ்மார்ட் கருவிக்கான அணுகல் வசதி இல்லை. ஆங்கில மொழியிலான
கல்வியை ஊக்குவிப்பதுடன், பிற்போக்கான காலாவதியான கருத்துக்களிலிருந்து நாம்
வெளியேற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9275a6d-a5c2-4068-bdae-e0244f2cc40b/26-6a9f99ad24d45.webp' /></p><p> </p><p>பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் கல்வியை
மேம்படுத்தி, அத்தகைய வசதிகள் இல்லாத பிள்ளைகளுக்கான வசதிகளைத் தொடர்ந்து
பெற்றுக்கொடுப்போம். இலவசக் கல்வியை வலுப்படுத்தி, எமது பிள்ளைகள் உலகை
வெல்லக்கூடிய முறையான கல்வியை உருவாக்குவோம் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் அநுர அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்! மொட்டுக்கட்சி எம்.பி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pothujana-peramuna-party-mp-chanaka-warning-1788842470"></link>
            <id>https://tamilwin.com/article/pothujana-peramuna-party-mp-chanaka-warning-1788842470</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது தற்போதைய
அநுரகுமார திஸாநாயக்க அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமையும்
என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது தற்போதைய
அநுரகுமார திஸாநாயக்க அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமையும்
என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக
தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நேற்று திங்கட்கிழமை
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனம்</h2><p>
</p><p>
"இந்த அரசு தனது இயலாமையை மறைப்பதற்காகவே நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை
இல்லாமலாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42169bb-5870-4e96-ab9e-ef9f05f38938/26-6a9f95e7ae001.webp' /></p><p> </p><p>ஆரம்பத்தில் பொலிஸ்
திணைக்களத்தின் சுயாதீனத்தை இல்லாமலாக்கியவர்கள், தற்போது நீதித்துறைக்கு
அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.</p><p> ஏகாதிபத்திய நடவடிக்கை
ஒன்றுக்கே இவர்கள் தயாராகி வருகின்றார்கள் என்பதை மக்கள் தற்போது புரிந்து
கொண்டுள்ளனர்.</p><h2>அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்&nbsp;</h2><p>

நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைப்பது அரசுக்குப் பாரிய தாக்கத்தை
ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியவர்கள், சுயாதீன நிறுவனங்களை
அடக்கும் செயற்பாடுகளிலேயே குறியாக உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1e39b34-7b44-4eb9-816a-516be390327f/26-6a9f95e87ca5f.webp' /></p><p>
</p><p>
அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
விவசாயிகள் தங்களின் உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரிவரும் நிலையில்,
எதனையும் பொருட்படுத்தாமல் இந்த 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள
முயற்சிக்கின்றார்கள். </p><p>இதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்
போவதில்லை. அரசின் இத்தகைய திட்டங்களை நீதிமன்றத்திலும் வீதிகளிலும்
தோற்கடிக்க மக்களுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியுடன் சஜித் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-sajith-meets-sri-lankan-representative-1788843046"></link>
            <id>https://tamilwin.com/article/un-sajith-meets-sri-lankan-representative-1788843046</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும்
பொருட்டு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி புன்ட்சோ
வங...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும்
பொருட்டு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி புன்ட்சோ
வங்ஜெல்லுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட
சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், பெண்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல
முக்கிய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.</p><h2>பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த</h2><p>

குறிப்பாக, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம், பாலின
அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை ஒழித்தல், தொழிலாளர் படையில்
பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் பாலின சமத்துவத்துக்குப்
பதிலளிக்கும் வகையிலான கொள்கை வகுப்பை உறுதி செய்தல் தொடர்பாகவும்
கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/959b9132-fa64-4bf7-9b93-dfd056f1dc67/26-6a9f966a9dccc.webp' /></p><p>இலங்கையின் அரசமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குள் பெண்கள், சிறுமிகள் மற்றும்
சிறுவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதையும் பாதுகாப்பதையும் மேலும் வலுப்படுத்த
வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இங்கு
வலியுறுத்தினார்.</p><p> அத்துடன், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய
விழிப்புணர்வை நாடாளுமன்றத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் நாடு முழுவதும்
உள்ள சமூகங்களிடையே கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர்
சுட்டிக்காட்டினார்.
</p><p>
பெண்களின் சுகாதாரம், அதிகாரமளித்தல், பாலின சமத்துவம் மற்றும் வன்முறைகள்
குறித்த விழிப்புணர்வைச் சிவில் சமூகத்திற்கு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய
நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிபுணர்களுடன் இணைந்து தொடர்ச்சியான அறிவுசார்
தகவல் பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற யோசனையை எதிர்க்கட்சித்
தலைவர் இதன்போது முன்வைத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹங்வெல்ல மயானத்திலிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/guns-and-bullets-recovered-from-hangwella-cemetery-1788840620"></link>
            <id>https://tamilwin.com/article/guns-and-bullets-recovered-from-hangwella-cemetery-1788840620</id>
            <summary type="text">கொழும்புக்கு அருகே ஹங்வெல்ல மயானத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

துபாயில் இருந்து நாடு கடத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புக்கு அருகே ஹங்வெல்ல மயானத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு தற்போதைக்கு தடுப்புக்காவலில் உள்ள 'பஸ் லலித்' என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>

அதனடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி56 துப்பாக்கிகள் மூன்றும் மற்றும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0050629-0d16-4244-b902-e9a3e1d59ad5/26-6a9f959408873.webp' /></p><p>
</p><p>
ஹங்வெல்லை பிரதேசத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு படுகொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு இந்தத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:57:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய சமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamal-rajapaksa-arrives-at-bribery-commission-1788841943"></link>
            <id>https://tamilwin.com/article/chamal-rajapaksa-arrives-at-bribery-commission-1788841943</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) சுமா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் வெளியேறியுள்ளார்.
</p><p>
 

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணை குறித்து அறிக்கை அளிப்பதற்காக, அவர் இன்று (08) காலை சுமார் 10.00 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.</p><h2>முதலாம்&nbsp;இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, சற்று நேரத்திற்கு முன்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p><p>You May Like This Video..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4cFwOIR-RHQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் சிறைச்சாலை வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-visit-parliament-from-prison-1788841306"></link>
            <id>https://tamilwin.com/article/namal-visit-parliament-from-prison-1788841306</id>
            <summary type="text">இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். </p><p>

இன்று (08) நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகவே 


சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hzIOuv44RZg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>பதிலளிக்க மறுப்பு</h2><p>இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாமல் பதிலளிக்க மறுத்துள்ளார்.</p><p> </p><p> 

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec47bad9-6875-4f6f-8c6f-e6adbe58cff2/26-6a9f8f50ae312.webp' /></p><p>அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த செல்வதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:28:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கடத்தி கொலை: சதித்திட்டம் தீட்டிய மனைவி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wife-arrested-kidnapping-and-murdering-soldier-1788837467"></link>
            <id>https://tamilwin.com/article/wife-arrested-kidnapping-and-murdering-soldier-1788837467</id>
            <summary type="text">கம்பஹா - கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவியை குற்றப் புலனாய்வுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.</p><p> 

நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த கொலை கடந்த 2018.09.09 அன்று இடம்பெற்றுள்ளது.
</p><h2>மனைவி கைது </h2><p>
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88e96284-0561-41b2-b10d-8b4239dbaff9/26-6a9f8dcaa5add.webp' /></p><p> 

இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபரான கொல்லப்பட்ட நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என்பதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் OICயை தேடும் EROS செயலாளர்நாயகம் : அநுர அரசில் யாரும் தப்ப முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eros-prabha-police-oic-no-one-can-escape-in-anura-1788840587"></link>
            <id>https://tamilwin.com/article/eros-prabha-police-oic-no-one-can-escape-in-anura-1788840587</id>
            <summary type="text">அநுர அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறி இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் மூன்று வருடங்களில் நியாயமான வேலைத்திட்டங்கள் நடந்து முடியும் என ஈரோஸ் கட்சியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறி இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் மூன்று வருடங்களில் நியாயமான வேலைத்திட்டங்கள் நடந்து முடியும் என ஈரோஸ் கட்சியின் செயலாளர்நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால் பல கொடூரங்கள் தனக்கு இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது சகோதரங்களை இவர்கள் என்ன செய்தார்கள் என தெரியாமல் இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பொத்துவில் பொலிஸ் OICயிடம் 1990 காலப்பகுதியில் இருந்த பொலிஸ் OIC யார் என கேட்டதாகவும் அது குறித்து பல தகவல்களை அறிந்து கொண்டதாகவும் கூடிய விரைவில் அது தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rEOD30qdNyg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மற்றும் ரணில் மீதான ஊழல் விசாரணைகள் குறித்து UNHRC அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136"></link>
            <id>https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136</id>
            <summary type="text">இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது வழக்கமான அமர்வில் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 ஊழல் விசாரணை ஆணைக்குழு</b></h2><p>இதேவேளை, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfd58f6-158c-4e64-823d-ac4ede5572a9/26-6a9f8af8dc64c.webp' /></p><p>மிகவும் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான பொதுப்பண முறைக்கேடு விசாரணைகள் குறித்தும் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
அத்துடன் நாட்டில் நிலவும் நிதி அழுத்தம் மற்றும் அரச வருமான பகிர்வு தொடர்பில் பிரதான விடயங்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன:</p><p>

2026 ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கமைய நாட்டின் அரச வருமானத்தில் 49.38 சதவீதம் பெறப்பட்ட கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டியுள்ளதெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h3><b>மேலதிக அழுத்தம்</b></h3><p>அரச வருமானத்தில் பெரும்பகுதி கடன் சேவைக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம், கல்வி, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1.9 முதல் 2.4 சதவீதம் என்ற சிறிய தொகையே ஒதுக்க முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0a2a5b-4255-4bb7-b1ca-8e82989806c3/26-6a9f8c13865f4.webp' /></p><p>வரையறுக்கப்பட்ட அரச நிதி வெளிப்பாட்டின் மத்தியில் சக்திவள, உணவு மற்றும் உர விலையேற்றம் காரணமாக மக்கள் மீது மேலதிக அழுத்தம் ஏற்படக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து இலங்கைக்குள் சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், நிறுவனங்களை வலுப்படுத்துதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் ஊடாக ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தச் சீர்திருத்தங்களை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T04:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 100 புதிய ஊழியர்களுக்கு நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/employees-appointed-at-foreign-employment-bureau-1788839818"></link>
            <id>https://tamilwin.com/article/employees-appointed-at-foreign-employment-bureau-1788839818</id>
            <summary type="text">இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பவும், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கான சேவைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பவும், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கான சேவைகளை வலுப்படுத்தவும் 100 புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நேற்றைய தினம் (07.09.2026) நடைபெற்றது.</p><h2>வழங்கப்பட்டுள்ள நியமனம்</h2><p> </p><p>மேலாண்மை உதவியாளர்கள், தகவல் தொழிநுட்ப அதிகாரிகள், ஓட்டுநர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் போன்ற பதவிகளுக்கு நியமனம் அளிக்கப்பட்டது.</p><p> தேவையான கல்வி மற்றும் தொழில்முறைத் தகுதிகளின் அடிப்படையில் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39227af6-8024-4a31-8794-a527ecd85293/26-6a9f8c2cb5e87.webp' /></p><h2>பணியமர்த்தல்</h2><p> புதிய ஊழியர்கள் அவர்களின் தேவைக்கேற்ப பணியகத்தின் தலைமை அலுவலகம், மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள். </p><p>இதேவேளை புலம்பெயர் தொழிலாளர்கள், வருங்கால வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மிகவும் திறமையான, தடையற்ற சேவையை வழங்குவதையே இந்த நியமனங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய சம்பவங்களுக்கு வழக்குத் தொடரக் கூடாதாம்! நாமல் கைது தொடர்பில் ரணில் தரப்பின் வியாக்கியானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788840364"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788840364</id>
            <summary type="text">ஏழு, எட்டு ஆண்டுகள் பழைய சம்பவங்களைக் கிளறி வழக்குகளைத் தொடுப்பது தவறான முன்னுதாரணம் என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஐக்கயி தேசியக் கட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏழு, எட்டு ஆண்டுகள் பழைய சம்பவங்களைக் கிளறி வழக்குகளைத் தொடுப்பது தவறான முன்னுதாரணம் என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஐக்கயி தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்த்தன விமர்சித்துள்ளார்.
</p><p>
எயார்பஸ் விமானக் கொள்வனவு சம்பவத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவைப் பார்வையிடுவதற்காக&nbsp; &nbsp;வஜிர அபேவர்த்தன நேற்று திங்கட்கிழமை (07) மாலை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.</p><h2>ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p>
</p><p>
அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது,
</p><p>
இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பாலும் விசாரணைகள் நிறைவடைய முன்னரே சந்தேக நபர்களைக் கைது செய்யும் வழக்கமொன்று காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd6444c-4591-4b66-93bf-776f0573ec00/26-6a9f89ad717b1.webp' /></p><p>
</p><p>
அதன் காரணமாக இலங்கையில் நூறுபேர் கைது செய்யப்பட்டால் அதில் 98 பேர் நிரபராதிகளாக வெளியே வந்து விடுகின்றனர்.</p><p>

ஆனால் ஜப்பானில் 100 பேர் கைது செய்யப்பட்டால் 98 பேர் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 100 பேர் கைது செய்யப்பட்டால் 57 பேர் குற்றவாளிகளாக தண்டிக்கப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeefb0e5-3667-42f0-ab5c-a8d55f4ad4ce/26-6a9f89ae2e68e.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான பின்னணியில் ஏழு அல்லது எட்டு வருடங்கள் பழைமையான சம்பவமொன்றின் அடிப்படையில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், கைது செய்யப்படுவது தவறானது. அது ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
</p><p>
அவ்வாறான சம்பவங்கள் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும். அதன் காரணமாகத் தான் நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய ஊழல் மோசடியில் சிக்கப்போகும் பிரபல பெண் அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rossy-senanayake-in-investigation-1788755776"></link>
            <id>https://tamilwin.com/article/rossy-senanayake-in-investigation-1788755776</id>
            <summary type="text">கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>

இதனை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளன.</p><p>

குறித்த விசாரணைகளுகளுக்கமைய, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேருக்கு மேற்பட்டோரிடம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.</p><p>
</p><h2><b>
மோசடிகள், முறைகேடுகள்</b></h2><p>விசாரணைகளில் சிக்கியவர்களில் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க முக்கியமானவராக உள்ளவராக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e354273-fbc7-44e6-8086-2f639eb5db6a/26-6a9e4d4eef9bc.webp' /></p><p>அத்துடன், அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.
</p><p>
கொழும்பு மாநகரசபைக்குள் இடம்பெற்ற பல மோசடிச் செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 3,500 வீதம் பணம் வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p> 

எனினும், அங்கு உண்மையான குறைந்த வருமானம் பெறுவோருக்குப் பதிலாக முன்னாள் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட பட்டியலுக்கே வழங்கப்பட்டுள்ளது. </p><h3><b>நிதி மோசடி</b></h3><p>முன்னாள் உறுப்பினர்களின் அரசியல் ஆதரவாளர்களின் பட்டியல்களுக்குரிய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கான சாட்சிகள் வெளிவந்துள்ளன.
 
உறுப்பினர்கள் பலரும் தமது உத்தியோகபூர்வ அலுவலகங்களை நடத்திச் செல்வதாகக் கூறியும் ஏமாற்றியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea52bc21-b4d4-4fdb-a21f-eafb7aa2460d/26-6a9e4d4fc344b.webp' /></p><p>கொழும்பு பிரதான நகரங்களை அண்மித்த வர்த்தக மதிப்புமிக்க இடங்களில் வாகனத் தரிப்பிடத்திற்காகக் காணிகளை ஒதுக்கியுள்ளனர்.
</p><p>
பின்னர் அந்த இடங்களை பெருமளவு பணத்திற்குத் தனியார் வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்து நிதித் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் மற்றும் முறைகேடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படும் முன்னாள் உறுப்பினர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்க சாட்சி விசாரணை ஒன்றை நடத்துவதற்கும் ஆணைக்குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-08T04:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vajira-says-arrests-are-not-perfect-1788839780"></link>
            <id>https://tamilwin.com/article/vajira-says-arrests-are-not-perfect-1788839780</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் 98 வீதமானவர்கள் குற்றமற்றவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் 98 வீதமானவர்கள் குற்றமற்றவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேகுணவர்தன ஊடகங்களிடம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p>
இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் 98 வீதமானவர்கள் குற்றமற்றவர்கள் என பின்னர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a1c2356-7fdc-48e3-ac2a-61ee8a6eb2d5/26-6a9f8766047b5.webp' /></p><p>
இலங்கையில் கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவது ஓர் பாரதூரமான விடயம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.</p><p>
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் இலங்கையின் சட்ட சமூகமும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>உதாரணமாக ஜப்பானில் 100 பேர் கைது செய்யப்படுபவர்களில் 98 பேர் குற்றவாளிகளாகின்றனர் எனவும் இந்தியாவில் 100 பேர் கைது செய்யப்படுபட்டால் 57 பேர் குற்றவாளிகள் ஆகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இலங்கையில் விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாது கைதுகள் மேற்கொள்ளப்படுவதாக வஜிர அபேகுணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் பார்வையிட்டு திரும்பிய பின்னர் ஊடகங்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T03:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் நிகழ்வுக்குப் பதில் ஆன்மீக நிகழ்வு! நாமலின் மனைவி லிமினியின் புதிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/limini-rajapaksa-s-new-resolution-1788839726"></link>
            <id>https://tamilwin.com/article/limini-rajapaksa-s-new-resolution-1788839726</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச, எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச, எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் போராட்டப் பேரணி நடைபெறவுள்ளது.</p><p>

இதற்கிடையே குறித்த நிகழ்வில் தலைமை வகிக்கவிருந்த நாமல் ராஜபக்ச தற்போதைக்கு கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கும் காரணத்தினால் அவரது மனைவி லிமினி ராஜபக்ச, தன் கணவருக்குப் பதிலாக அரசியல் மேடையேற இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.</p><h2>சமய வழிபாடுகள்&nbsp;</h2><p>

இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் இருந்து எதிர்கொள்ள நேர்ந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதி லிமினி அரசியல் மேடையில் ஏறமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நாமல் மற்றும் லிமினியின் திருமண ஆண்டு விழாவும் செப்டம்பர் 12ஆம் திகதியே இடம்பெறுவதால், அன்றைய தினம் அவர் அநுராதபுரத்தில் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed8700c-ac50-4cd4-8a26-1dc0fdb14547/26-6a9f87302547b.webp' /></p><p>நாமல் ராஜபக்சவுக்குப்பதிலாக அநுராதபுர பேரணியின் மேடையில் லிமினி உரையாற்றுவார் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p> எனினும், தற்போதைய புதிய தகவல்களின்படி, அவர் அந்த மேடைக்கு வருகை தந்து உரையாற்றவோ, பொதுமக்களைச் சந்திக்கவோ மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-09-08T03:55:47+00:00</updated>
        </entry>
    </feed>
