<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-13T10:24:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையை நடுவீதியில் விட்டு தப்பியோடிய தாய்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-abandons-daughter-in-wattegama-town-1786614177"></link>
            <id>https://tamilwin.com/article/mother-abandons-daughter-in-wattegama-town-1786614177</id>
            <summary type="text">கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.</p><p>

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><h2>பொலிஸார்&nbsp;&nbsp;விசாரணை</h2><p>

இன்று காலை (13) சுமார் 07.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த தாய் ஒருவர் குழந்தையை இறக்கிவிட்டு சென்றுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/971c2ec9-5da3-4a03-93b6-5c88cd90a7be/26-6a7d96655b9d5.webp' />&nbsp;</p><p>

தமிழ்மொழியில் பேசும் குழந்தைக்கு தான் வசிக்கும் கிராமம் மற்றும் மாகாணம் குறித்த எந்த தகவலும் தெரியாது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
</p><p>
இருப்பினும், குழந்தையை இறக்கிவிட்ட முச்சக்கர வண்டியின் எண் தெளிவாக தெரியாததால், நகரில் உள்ள ஏனைய கண்காணிப்பு கமரா அமைப்புகளை சரிபார்த்து தகவல்களை பெற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:09:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் 93 சந்தேக நபர்களை மீட்டுவர சிவப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-notices-issued-93-suspects-hiding-abroad-1786612939"></link>
            <id>https://tamilwin.com/article/red-notices-issued-93-suspects-hiding-abroad-1786612939</id>
            <summary type="text">இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். </p><p>இன்று (13.08.2026) நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் வெளியிட்டுள்ளார்.</p><h2>35 முக்கிய குற்றவாளிகள்</h2><p>

மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், 2024, 2025 மற்றும் இந்த ஆண்டில், இந்த சிவப்பு அறிவிப்புகள் மூலம் 38 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7604dc3b-a73e-49e4-b2d4-279379c86f3a/26-6a7d94b306d87.webp' /></p><p>கூடுதலாக, பொலிஸ் மா அதிபரின் (IGP) நேரடித் தலையீட்டின் மூலம் மேலும் 35 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் நிலங்கள் உள்ளிட்ட பெரும் அளவிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு சிறப்புத் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.</p><p>

அதன்படி, சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, 2024இல் ரூ.1,490 மில்லியனும், 2025இல் ரூ. 1,549 மில்லியனும் கோரப்பட்டுள்ளது.</p><p>

மேலும், ஜனவரி 1, 2026 முதல் இன்று வரை ரூ. 839 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடக ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்! அரசியலுக்குள் இருக்கும் படுகொலையாளிகள் அச்சத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288"></link>
            <id>https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288</id>
            <summary type="text">படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளார்கள்.</p><p> நீதித்துறை மற்றும் விசாரணை கட்டமைப்பு தொடர்பில் எவ்வழியிலாவது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தி அதனூடாக தம்மை பாதுகாத்துக்கொள்ளவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.</p><h3>எதிர்க்கட்சியினரின் விமர்சனம்&nbsp;</h3><p>முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தி சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கியவர்கள் இன்று நீதித்துறையின் சுயாதீனம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. </p><p>நீதித்துறைக்கு எதிராக செயற்பட்டால் அதன் பாதிப்பு எவ்வாறானதாக அமையும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே எதிர்க்கட்சியினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5669b0-40f0-4b8e-b2f4-25a925f77b50/26-6a7d92c5e01bc.webp' /></p><p>ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படப் போவதில்லை.</p><p>

படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது கலக்கமடைந்து விசாரணை அதிகாரிகள் மீதும், நீதித்துறை கட்டமைப்பின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு கட்டித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி : பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/housing-scam-worth-crores-through-facebook-1786610401"></link>
            <id>https://tamilwin.com/article/housing-scam-worth-crores-through-facebook-1786610401</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, குறிப்பாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>மேற்கொள்ளப்பட்ட விசாரணை</h2><p>
அந்த விளம்பரங்களை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ள நிலையில், வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e86fb7-abeb-4f17-896e-553f34984e42/26-6a7d87ef0e033.webp' /></p><p>
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிய ஜீவன் தொண்டமான் நேரடி விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-visits-maskeliya-district-hospital-1786609860"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-visits-maskeliya-district-hospital-1786609860</id>
            <summary type="text">மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று
பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற
உறுப்பினரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று
பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நோயாளர்களுக்கு தடையற்றதும் தரமானதுமான
சுகாதார சேவையை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை விரைவில் பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (12.08.2026) கண்காணிப்பு விஜயமொன்றை
மேற்கொண்ட ஜீவன் தொண்டமான், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, அங்கு
காணப்படும் அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் மற்றும் நோயாளர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
</p><p>
இதன்போது, வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர்
யு.சு.யு. ரிஷான் உள்ளிட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் அவர் விரிவான
கலந்துரையாடலில் ஈடுபட்டார்.</p><h2>மஸ்கெலியா வைத்தியசாலையின் செயற்பாடு</h2><p>
</p><p>
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் சீரான செயற்பாட்டிற்கு மொத்தமாக 27
ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 14 ஊழியர்கள் மாத்திரமே கடமையில்
இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனால் 13 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதுடன், இந்த நிலைமை
வைத்தியசாலையின் அன்றாட சேவைகளிலும் நோயாளர்களுக்கான சிகிச்சை
நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23323dd5-2508-4901-b94a-2bd9ea4a14e6/26-6a7d89544f914.webp' /></p><p>
</p><p>
நோயாளர்களுக்கு தடையின்றி மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு இந்த ஊழியர்
பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜீவன் தொண்டமான்
வலியுறுத்தினார்.
</p><p>
நான்கு மாடிகளைக் கொண்ட மஸ்கெலியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு
மின்தூக்கிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்காத நிலையில் இருப்பதும் இந்த
விஜயத்தின்போது தெரியவந்தது.
</p><p>
இதனால் வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும்
பொதுமக்களை ஒரு மாடியிலிருந்து மற்றொரு மாடிக்கு மாற்றுவதில் பாரிய சிரமங்கள்
ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
குறைந்த மின் அழுத்தமே மின்தூக்கிகள் இயங்காததற்கான முக்கிய காரணமாக
தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்சார இணைப்பை சீரமைத்து இரண்டு
மின்தூக்கிகளையும் விரைவில் இயங்கச் செய்வதற்கான நடைமுறைத் தீர்வை
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
</p><p>
70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் வைத்தியசாலையாக
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை காணப்படுகின்ற போதிலும், முறையான வைத்திய
ஆய்வுக்கூட வசதி இல்லாதிருப்பது பாரிய குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டது.
</p><p>
இரத்த மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாதிரிகளை
டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d0fa46-1227-4b9a-ba44-72614761ab9f/26-6a7d8955229a9.webp' /></p><h2>நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை</h2><p>
</p><p>
அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நோயாளர்கள் நீண்ட நேரம்
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், சிகிச்சை வழங்குவதிலும் தாமதம்
ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, மஸ்கெலியா வைத்தியசாலையிலேயே தேவையான அடிப்படை ஆய்வுக்கூட வசதிகளை
ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜீவன்
தொண்டமான் வலியுறுத்தினார்.</p><p>

இதனுடன், வைத்தியசாலையில் காணப்படும் நோயாளர் காவுவண்டி அடிக்கடி பழுதடைவதால்,
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக ஏனைய
வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
</p><p>
நோயாளர்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், நோயாளர்
காவுவண்டியை முறையாக பராமரிப்பதுடன், அவசர தேவைகளின் போது பயன்படுத்தக்கூடிய
மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர்
ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8370ab4b-4771-4de5-9701-27a8d02dbba3/26-6a7d8955eca41.webp' /></p><p>
</p><p>
வைத்தியசாலையில் நேரில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட
செயலாளருக்கு உடனடியாக தொலைபேசி ஊடாகத் தெரியப்படுத்தியுள்ளதாக ஜீவன்
தொண்டமான் தெரிவித்தார்.
</p><p>
மேலும், குறித்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும்
நோக்கில் மாவட்ட செயலாளரை இன்றைய தினம் (13.08.2026)&nbsp; நேரடியாக சந்தித்து
கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கவுள்ள அநுர! பதவி விலகவும் தயார் என பகிரங்கமாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ready-to-face-consequences-anura-1786604816"></link>
            <id>https://tamilwin.com/article/ready-to-face-consequences-anura-1786604816</id>
            <summary type="text">நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
“எனது நிர்வாக அதிகாரமோ அல்லது எங்களிடம் உள்ள எந்த அதிகாரமோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப்படாது.</p><h2><b>அரசியலமைப்பில் மாற்றம்</b></h2><p> அரசியலமைப்புத் திருத்தங்களின் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி பதவி விலக வேண்டியிருந்தது. 

நீங்களும் பதவி விலக வேண்டியிருக்கும்&nbsp;என சட்டத்தரணிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0a38cea-bae6-4cbb-b57e-0c667e69bf07/26-6a7d82698a140.webp' /></p><p>நான் பதவி விலகத் தயாராகவே உள்ளேன். மக்களின் ஆணையை மீறி ஆட்சியில் இருக்க ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆபத்தை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> ஆபத்துக்கள் இல்லாமல் மாற்றம் நிகழும் என்று நான் நினைக்கவில்லை. மாற்றம் எப்போதும் ஆபத்துக்களுடன் ஏற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது. </p><h3><b>

அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கை</b></h3><p>இதன்போது நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48bf7657-e35f-4b64-ab91-33c7a8eb2a45/26-6a7d826a43de6.webp' /></p><p>இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
</p><p>
நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மட்டுமே இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும்.</p><p>அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். </p><p>மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-13T08:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமன் தாயார் கொலை விவகாரம்! வெளிநாட்டில் தீட்டப்பட்ட திட்டம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/backhoe-saman-s-mother-murder-investigation-1786604890"></link>
            <id>https://tamilwin.com/article/backhoe-saman-s-mother-murder-investigation-1786604890</id>
            <summary type="text">பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

மேலும், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கரந்தெனிய சுத்தாவின் குடும்பத்தினர், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>&nbsp;</p><h2>பெக்கோ சமன், கெஹெல்பத்தர பத்மேவுடன் இந்தோனேசியாவில் கைது&nbsp;</h2><p>

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பெக்கோ சமன், கெஹெல்பத்தர பத்மேவுடன் சேர்ந்து கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cb948e7-4bfb-452f-8b97-737df959ca7a/26-6a7d79f6b8c37.webp' />&nbsp;</p><p>
</p><p>
மித்தெனிய கஜ்ஜா என்று அழைக்கப்படும் அருண பிரியந்த விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பெக்கோ சமன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் இன்று காலை (13) உருபோக்கா - மாத்தறை வீதியில் உள்ள தம்பஹல பொல்வத்த பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>கொலைக்கான காரணம்&nbsp;</h2><p>

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிதியாவ பகுதியில் உள்ள வீட்டிற்கு வருகை தந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று (12) துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c1b1bec-bbd9-490c-be16-172663006005/26-6a7d79f76eb7a.webp' /></p><p>

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார், மித்தெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>
இதன்போது 9 மி.மீ. ரக துப்பாக்கியை கொண்டு நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், பெண்ணின் மார்பை நோக்கி சுமார் 7 முறை சுட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>

இந்நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T08:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தடி நீர்வளத் திட்டங்களை பாதிக்கும் கருத்துக்களை ஏற்க முடியாது - ஆளுநர் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-regret-that-affect-groundwater-projects-1786607403"></link>
            <id>https://tamilwin.com/article/governor-regret-that-affect-groundwater-projects-1786607403</id>
            <summary type="text">நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில்
முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்களையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில்
முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்களையும், கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாதது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
</p><p>யாழ்ப்பாணத்தில்&nbsp;இன்று (13.08.2026) நடைபெற்ற நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் இறுதிச் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நிலத்தடி நீர்வளத் திட்டம்</h2><p>
</p><p>

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், யாழ்ப்பாண குடாநாட்டின் குடிநீர், விவசாயம்,
மக்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி ஆகிய அனைத்தும் நிலத்தடி
நீர்வளத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது.</p><p> எனவே நிலத்தடி நீரைப் பாதுகாப்பது ஒரு சுற்றுச்சூழல்
நடவடிக்கை மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் தேசிய
பொறுப்புமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5331b7-8be8-487c-bd3e-823d94e76f13/26-6a7d7a2bb30be.webp' /></p><p>
</p><p>
இந்தத் திட்டத்தின் ஊடாக நிலத்தடி நீர் கண்காணிப்பு நிலையங்கள்
நிறுவப்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீரின் அளவு மற்றும் தரம் தொடர்பான தகவல்களை
தொடர்ச்சியாக பதிவு செய்யும் நவீன கண்காணிப்பு முறைமை உருவாக்கப்பட்டுள்ளமை,
மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மீள்நிரப்பு நடவடிக்கைகள், பாடசாலை
மாணவர்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு
பெறுபேறுகள் உருவாக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது.</p><p>

பல மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ள தொண்டமனாறு நீரேரித் தடுப்பணைத் திட்டத்தின் பயன்கள் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ள நிலையில்,
குறுகியகால அழுத்தங்களின் அடிப்படையில் அவற்றின் நோக்கத்தை பாதிக்கும்
தீர்வுகளை முன்வைப்பது பொருத்தமற்றது.</p><h2>நீர்வளப் பாதுகாப்பு&nbsp;</h2><p> </p><p>

எதிர்கால தீர்மானங்கள்
அனைத்தும் அறிவியல் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட
வேண்டும்.

நிலத்தடி நீர்வளப் பாதுகாப்பு என்பது ஒரு தனி நிறுவனத்தின் பொறுப்பு அல்ல. </p><p>மாறாக திணைக்களங்கள், ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உள்ளூராட்சி
மன்றங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும்
ஒருங்கிணைந்து செயற்பட்டால்தான் நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21743dfb-a2d4-4b79-ad8c-57d387be45fe/26-6a7d7a2c8f4e4.webp' /></p><p>

வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்கள் நிறைவடைந்த பின்னரும்
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p>

இந்த நிகழ்வில் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கைக்கான
பிரதிநிதிகள், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி, வட மாகாண
விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்,
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், யாழ்ப்பாண
பல்கலைக்கழக கல்வியாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பலர்
கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T08:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மணல் அகழ்வினால் வயல் நிலங்கள் சேதமாக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farmers-complain-illegal-sand-mining-1786605218"></link>
            <id>https://tamilwin.com/article/farmers-complain-illegal-sand-mining-1786605218</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும்
வயல் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும்
வயல் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
மேலும் மணல் அகழ்விற்காக உழவு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சட்டவிரோத மணல் அகழ்வு</h2><p>

குறித்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள்
தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59f55b79-1ce0-43d6-80f1-3d32bb99b85a/26-6a7d6fa691c6e.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் கணவன் - இலங்கையில் இளம் மனைவியின் மோசமான செயலால் ஏற்பட்டுள்ள விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-threatening-1786596707"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-threatening-1786596707</id>
            <summary type="text">இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கம்பஹாவின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
திக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, இளம் மனைவி இணைய விளையாட்டுகள் ஊடாக அறிமுகமான சந்தேகநபருடன் முறையற்ற காதலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
இளம் மனைவியின் செயல்</b></h2><p>அத்துடன், அந்த இளைஞருடன் அவர் பயணங்கள் மேற்கொண்ட போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a287d2f-7a81-44a6-a467-086dc99c19d1/26-6a7d50496edd5.webp' /></p><p>வெளிநாட்டில் வசிக்கும் தனது கணவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்ற தகவலைத் தொடர்ந்து, குறித்த பெண் காதலை கைவிட்டுள்ளார். </p><p>

அதனால் கோபமடைந்த சந்தேகநபர் இவ்வாறு பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு புகைப்படங்களை சமூக வலைத்தளத்திற்கு அனுப்புவதற்கு முன்னர், தன்னுடன் மீண்டும் இணையாவிட்டால் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
</p><h3><b>
பழி வாங்கும் நடவடிக்கை</b></h3><p>அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை விடுத்ததுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவரை அழைத்துச்சென்றுள்ளார்.
</p><p>
இளைஞனின் அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் குறித்த பெண் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0a1c6a3-7325-45db-9cd0-432c40e34099/26-6a7d504a21607.webp' /></p><p>இதன் காரணமாக பழி வாங்கும் நோக்கில் சந்தேகநபர் பெண்ணின் புகைப்படத்துடன் “<b>காதலி காணாமல்போயுள்ளார் கண்டுபிடித்து தாருங்கள்</b>” என சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், கணவருக்கும் வட்ஸ்அப் குறுஞ்செய்திகள் ஊடாக மனைவியின் தகாத புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
தனது தகாத புகைப்படங்கள் சமூக வலைத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் திக்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்தார். </p><p>

அதற்கமைய பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், சந்தேகநபரை முன்தினம் கைது செய்துள்ளனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UOFfru3Sle8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-13T07:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு 10 இயந்திர படகுகள் வழங்கி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-boats-donated-to-trincomalee-fishermen-1786601451"></link>
            <id>https://tamilwin.com/article/10-boats-donated-to-trincomalee-fishermen-1786601451</id>
            <summary type="text">டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த,
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு 10 இயந்திர கடற்றொழில் படகுகள் வழங்கி
வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த,
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு 10 இயந்திர கடற்றொழில் படகுகள் வழங்கி
வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதற்கான நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளர் W.G.M
ஹேமந்தகுமார தலைமையில் இன்று(13)&nbsp; நடைபெற்றுள்ளது.</p><h2>10 இயந்திர படகுகள்</h2><p>
</p><p>
இதனை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், வெளி விவகார வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண்
ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர்
வழங்கி வைத்துள்ளனர்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58dabcce-3f42-4289-b264-5a378e04c645/26-6a7d61e7b2ba4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T07:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-notice-to-tax-payers-1786602417"></link>
            <id>https://tamilwin.com/article/special-notice-to-tax-payers-1786602417</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதற்கமைய, வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதமாக செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><h2>ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகள்</h2><p>காசோலைகள், வங்கி வரைவோலைகள் அல்லது கட்டளைப் பத்திரங்கள் மூலம் செய்யப்படும் கட்டணங்கள் உரிய திகதிக்குப் பின்னர் பெறப்பட்டால், அவை தாமதமானதாகவே கருதப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab465bd-2b60-40fa-ba9d-378370117fd3/26-6a7d6bc50873a.webp' /></p><p>மேலும், ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகள் ஆகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இணையவழியில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், முற்பண வரியை (Withholding Tax) ஓகஸ்ட் 15, 2026 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் வரி செலுத்துவோரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

</p><p>ஜூலை மாதத்திற்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை ஆகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் அத்துறை அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T07:01:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமன் தாயார் கொலை விவகாரம் : சிக்கிய மோட்டார் சைக்கிள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/backhoe-saman-s-mother-motorcycle-used-in-murder-1786601707"></link>
            <id>https://tamilwin.com/article/backhoe-saman-s-mother-motorcycle-used-in-murder-1786601707</id>
            <summary type="text">பாதாள உலக தலைவர் &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள், உருபோக்கா பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக தலைவர் 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள், உருபோக்கா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

உருபோக்கா - மாத்தறை வீதியில் உள்ள தம்பஹல பொல்வத்த பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில், ஒரு சிறு பாலத்திற்கு அருகே அந்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><h2>பொலிஸ் விசாரணைகள் முன்னெடுப்பு</h2><p>
 

கிடைத்த தகவலின் அடிப்படையில் உருபோக்கா பொலிஸாரினால் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebbc9684-c83d-4ed8-a177-4d89b19be369/26-6a7d69ae0b3e0.webp' /></p><p>

 

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிதியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று (12) துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.</p><p>

 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயாரான பாதிக்கப்பட்டவர், மித்தெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
</p><p>
 

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைத்துப்பாக்கி வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதேவேளையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rY6s6kUfodg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் நீர் இன்றி கருகிய 25 ஏக்கர் நெற்பயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/25-acres-of-rice-crops-wither-amid-water-shortage-1786600260"></link>
            <id>https://tamilwin.com/article/25-acres-of-rice-crops-wither-amid-water-shortage-1786600260</id>
            <summary type="text">அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய, ஹம்மிலாவ பகுதியில் நிலவும்
கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான வயல்
நிலங்கள் நீர் இன்றி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய, ஹம்மிலாவ பகுதியில் நிலவும்
கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான வயல்
நிலங்கள் நீர் இன்றி முற்றாகக் கருகி அழிந்துள்ளதாக விவசாயிகள் பெரும் கவலை
தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த
நெற்பயிர்களே இவ்வாறு அழிந்து போயுள்ளதாக
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.</p><h2>நீர் இன்றி கருகிய 25 ஏக்கர் நெற்பயிர்கள்</h2><p>

இது குறித்து விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில், "இம்முறை நெற்செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு சுமார் 100,000 ரூபாய் வரை செலவு
செய்து மிகவும் அர்ப்பணிப்புடன் பயிர்களைப் பராமரித்து வந்தோம். </p><p>

உரம், விதை
நெல், உழவுப் பணிகள் எனப் பெரும் தொகையை முதலீடு செய்திருந்தோம். இன்னும் ஒரு
மாதத்தில் அறுவடையை எதிர்பார்த்திருந்த வேளையிலேயே, இந்த நீர் பற்றாக்குறை
எங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.&nbsp;ஒட்டுமொத்தப் பயிர்களும் நீர் இன்றி இற்றுப் போய்விட்டன" என குறிப்பிட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d41d9fd7-484b-422f-a7fb-8b1d9458af57/26-6a7d5edc399dd.webp' /></p><p>விவசாயத்தை மட்டுமே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்ட இந்தப் பகுதி மக்கள்,
அறுவடைக்கு கைக்கெட்டிய பயிர் வாய்க்கெட்டாமல் போனதால் தங்களது
வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.</p><p>

எனவே, பாதிக்கப்பட்ட தமக்கு உரிய நட்டஈட்டைப் பெற்றுத்தர அதிகாரிகள் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தப் பகுதிக்கான விவசாய நீர் விநியோகத்தை
முறையாக மேலாண்மை செய்ய உரிய தரப்பினர் முன்வர வேண்டும் எனவும் ஹம்மிலாவ பகுதி
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T06:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செல்வோருக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraudulent-job-offer-in-israel-1786602274"></link>
            <id>https://tamilwin.com/article/fraudulent-job-offer-in-israel-1786602274</id>
            <summary type="text">வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர்&amp;nbsp;இன்று (13.08.2026) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர்&nbsp;இன்று (13.08.2026) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;</p><p>இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைதாகியிருந்தனர்.&nbsp;</p><h2>கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்</h2><p>
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 7 கடவுச்சீட்டுகள், இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e211cfe7-d773-42c4-a71d-8a3485938f78/26-6a7d6737be263.webp' /></p><p>
இஸ்ரேலில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வந்து, போலி ஒப்பந்தங்களை தயாரித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T06:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். ஆனைக்கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள் காட்சிப்படுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/display-of-archaeological-artifacts-anaikottai-1786603232"></link>
            <id>https://tamilwin.com/article/display-of-archaeological-artifacts-anaikottai-1786603232</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் அண்மையில் தொல்லியல்
அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள்
இன்றைய தினம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் அண்மையில் தொல்லியல்
அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள்
இன்றைய தினம் (13) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, நாளை தினமும் இந்த காட்சிப்படுத்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஈழத்தின் பண்டைய வரலாறு</h2><p>
இந்த கண்காட்சியில் எமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய
பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும்
காட்சிப்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46aeb4d3-7c90-4ba5-b345-967c0c2fd98b/26-6a7d66e2527a3.webp' /></p><p>
இக்கண்காட்சி ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின்
தொன்மை சிறப்பையும் நேரில் கண்டுகொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளது.</p><p>இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அதனை தொடர்ந்து மங்கல
விளக்கேற்றல், இறைவணக்கம் இணைத்தல் என்பன இடம்பெற்றிருந்தன. </p><p>இதன்பின்னர் தொல்லியல்
ஆய்வுத் தளமானது உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. அதனை
தொடர்ந்து விருந்தினர்களது உரைகள், பேராசிரியர்கள் - விரிவுரையாளர்களது உரைகள்
என்பன இடம்பெற்றன.</p><p>இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதகுருக்கள், வாழ்நாள்
பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா, தொல்லியல் பேராசிரியர் ராஜ்சேமதேவா, யாழ்.
பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அனித்தா சசிதரன், சண்டிலிப்பாய் பிரதேச
செயலர் பிரபாகரமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், களனி பல்கலைக்கழக
மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டு தொல்லியல்
சின்னங்களை பார்வையிட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46aeb4d3-7c90-4ba5-b345-967c0c2fd98b/26-6a7d66e2527a3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c29821b1-ffd6-4097-8bb9-db6ef041e8f4/26-6a7d66e30f665.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283302e5-2d74-4695-a65c-1afa47955309/26-6a7d66e3bd99f.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b7be2a6-1b75-495b-a066-df97d02317e5/26-6a7d66e47640c.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T06:40:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எச்சரிக்கை மட்டத்தில் எல் நினோவின் தாக்கம்..! இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/impact-of-el-nino-warning-sri-lanka-people-1786600354"></link>
            <id>https://tamilwin.com/article/impact-of-el-nino-warning-sri-lanka-people-1786600354</id>
            <summary type="text">தற்போதைய வறண்ட வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உடல் வெப்பநிலை உயர்ந்த மட்டத்தில் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய வறண்ட வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உடல் வெப்பநிலை உயர்ந்த மட்டத்தில் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 தற்போதைய வறண்ட வானிலை முடிவுக்கு வந்து,எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் மட்டுமே போதுமான மழைப்பொழிவை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்கள்தின் முன்னறிவிப்புப்பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>உடல் வெப்பநிலை கணிசமாக அதிகரிப்பு</h2><p>

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்களிலும் உடல் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c33620fd-7114-4ce1-ba48-4f2a45fec63b/26-6a7d62f66a58e.webp' /></p><p><b>

வெளியில் செல்லும்போது இலேசான ஆடைகளை அணியுங்கள். </b></p><p><b>அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு, முடிந்தவரை அதிக தண்ணீர் குடியுங்கள்.
</b></p><p><b>
 நோயுற்றவர்கள் மற்றும் முதியவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள்.</b></p><p> தென்மேற்குப் பருவக்காற்று தற்போது நாடு முழுவதும் வீசி வருகிறது.

அதன்படி, இன்று (13) மேற்கு, சபரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல சுற்று மழை எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இருப்பினும், அடுத்த சில நாட்களில் மழையின் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
காற்றின் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும்.</p><h2>வறண்ட வானிலை தொடரும்..!</h2><p>
</p><p>
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டெம்பர் மாதம் வரை வறண்ட வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

மே முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இப்பகுதிகளில் மழை குறைவது இயல்பானது என்றாலும், 'எல் நினோ' நிலை காரணமாக அது மேலும் தீவிரமடையக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca3ea6aa-3c15-499b-9b75-e3b5d495dd1b/26-6a7d62f71ce58.webp' /></p><p> "இந்த ஆண்டு எல் நினோ நிலையின் உச்சகட்ட தாக்கத்தை நாம் இன்னும் காணவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் அதன் வளர்ச்சியை கவனிக்கலாம்.</p><p>

இருப்பினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த எல் நினோ நிலை வலுவான நிலையை அடைய 80% க்கும் அதிகமான நிகழ்தகவு உள்ளது. அதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை தொடரும்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், எல் நினோ நிலையின் தாக்கத்தால் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் மழைப்பொழிவு குறைய வாய்ப்புள்ளது என்று மேலும் எச்சரிக்கின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T06:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு மரணங்கள் 68ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-68-1786599977"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-68-1786599977</id>
            <summary type="text">நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>டெங்கு அதிஅபாய வலயங்கள்</h2><p> 

பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.98வீதமானோர், அதாவது 48,244 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a585fa-0d65-44d7-91d0-209e7e5f0512/26-6a7d5ffacab97.webp' /></p><p>

மாவட்ட ரீதியாக அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதோடு, அங்கு 19,406 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p> 

கொழும்பு மாவட்டத்தில் 18,101 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,491 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>அத்துடன், கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,971 ஆகும். </p><p>மேலும், 119 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து டெங்கு அதிஅபாய வலயங்களாகச் சுகாதாரப் பிரிவினரால் பெயரிடப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T06:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mamangeswara-temple-cultural-event-1786596865"></link>
            <id>https://tamilwin.com/article/mamangeswara-temple-cultural-event-1786596865</id>
            <summary type="text">மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (12.08.2026) மாலை கொடியிறக்கத்துடன் பக்திபூர்வமான நிகழ்வுகளுடன் நிறைவு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (12.08.2026) மாலை கொடியிறக்கத்துடன் பக்திபூர்வமான நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றது. </p><p>

தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. </p><p>

இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக் கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான புடைசூழ நேற்று நடைபெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0417d76-37da-41fa-9838-758a2b285844/26-6a7d571211310.webp' /></p><h2>விசேட பூஜைகளுடன் கொடியிறக்கம்</h2><p> </p><p>

அதனை தொடர்ந்து ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு வசந்த மண்டபத்தில் திருப்பொன்னூஞ்சல் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி ஊர்வலமாக கொடித்தம்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெற்றது. </p><p>

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சிவ சுகுமார குருக்கள் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கொடியிறக்க பூஜையும் சிறப்பாக நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bcc7389-ec91-4b00-8350-0f303411ac7f/26-6a7d5e0436f10.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a6119a-e79a-4b4e-a817-ec35a2c4dfae/26-6a7d5e051eb2a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/629e7d63-8f58-4127-bac0-421c7bada53d/26-6a7d5e060cabc.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe25b8d7-0025-4533-b359-a4bad27a4699/26-6a7d5e06dddfc.webp' /></p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-13T06:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை ஆரம்பிக்க ஆளுநரின் கருத்தையும் மீறி முட்டுக்கட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-advice-ignored-aquaculture-project-stall-1786598896"></link>
            <id>https://tamilwin.com/article/governor-advice-ignored-aquaculture-project-stall-1786598896</id>
            <summary type="text">மக்களுக்கு நன்மை பயக்கும் பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை சிலர் தமது
தனிப்பட்ட பிரச்சினையால் எதிர்ப்பதாகவும், அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால்
ஊர்காவற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்கு நன்மை பயக்கும் பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை சிலர் தமது
தனிப்பட்ட பிரச்சினையால் எதிர்ப்பதாகவும், அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால்
ஊர்காவற்துறை - பருத்தியடைப்பு கிராமமானது வளர்ச்சியுறும் என அந்த பகுதி
மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
</p><p>
அந்த திட்டம் தொடர்பான கூட்டமானது நேற்று(12.08.2026) ஊர்காவற்துறை பிரதேச செயலாளர்
தலைமையில், பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மீன்வளர்ப்பு திட்டம்</h2><p> </p><p>

இதில் ஊர்காவற்துறை பிரதேச
சபையின் தவிசாளர், நக்டா நிறுவனத்தினர், சுற்றுச்சூழல் அதிகாரசபையினர்,
நீரியல் வள திணைக்களத்தினர், ஊர்காவற்துறை பிரதேச செயலக உதவித் திட்டப்
பணிப்பாளர், பருத்தியடைப்பு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்
கலந்துகொண்டுள்ளனர்.
</p><p>
இருப்பினும் நேற்றைய கூட்டத்திலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது
தொடர்பான தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. 

இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40ae77ec-d3c1-434e-a694-0fe2cccb1118/26-6a7d5672b6c7f.webp' /></p><p> </p><p>பொதுநல மீன்வளர்ப்பு திட்டம் தொடர்பான பிரச்சினை இரண்டரை வருட காலமாக
இடம்பெறுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு இதுவரைக்கும்
எடுக்கப்படவில்லை. </p><p>இதுவரைக்கும் 15 கூட்டங்கள் இது குறித்து இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஆளுநரின் பங்கேற்புடனும் இது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது.
</p><p>இதன்போது ஆளுநர், இந்த திட்டம் தொடர்பான விளக்கத்தை சரியான விதத்தில்
மக்களிடம் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் திணைக்களங்களுக்கு உத்தரவிட்டார்.</p><h2>சுற்று நிருபம்</h2><p> </p><p>ஆனால்
இதுவரை எமது கிராமத்தில் இந்தத் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பது
தொடர்பான கூட்டம் இடம்பெறவில்லை.

2024 ஆம் ஆண்டு 6ஆம் மாதம் மீன்களை கடலிலேயே வளர்ப்பது தொடர்பான சுற்று நிருபம் எமக்கு
கிடைக்கப்பெற்றது.</p><p> 

தற்போது அதனை மாற்றி தரையில் மீன்களை வளர்க்க
திட்டமிடப்பட்டது. தற்போது பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,
எதிர்வரும் 27ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றினை எமது ஊரில் நடாத்துவதற்கு
திட்டமிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4429ff-7a7d-43c4-9d98-08820f060e86/26-6a7d5671ce27f.webp' /></p><p> </p><p>

இந்த கூட்டத்தினை ஒன்றரை வருடத்திற்கு முன்னரே நடத்தி
இந்த திட்டத்தினை ஆரம்பித்திருக்கலாம். இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம் என
நாங்கள் கருதுகின்றோம்.
</p><p>
இந்தத் திட்டத்தினை செய்வதால் எமது ஊரில் வீதி அமைக்கப்படும், மின்சார வசதி
கிடைக்கும். மேலும் கட்டட வசதிகளும் கிடைக்கின்றன.
</p><p>
 200 வருடங்களாக காடாக இருக்கின்ற
இடத்தையே நாங்கள் கேட்கின்றோம். தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாட்டினாலேயே
இந்த திட்டத்தினை தடுக்கின்றனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எனது
ஊரில் முன்னேற்றம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T05:42:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கும் சீனா : புதிய சீனத்தூதர் வழங்கியுள்ள உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-will-prioritize-sri-lanka-in-diplomacy-1786597547"></link>
            <id>https://tamilwin.com/article/china-will-prioritize-sri-lanka-in-diplomacy-1786597547</id>
            <summary type="text">சீனா எப்போதும் தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை
அளிக்கிறது என இலங்கைக்கான புதிய சீன தூதர் வெய்
ஹுவாக்சியாங் தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா எப்போதும் தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை
அளிக்கிறது என இலங்கைக்கான புதிய சீன தூதர் வெய்
ஹுவாக்சியாங் தெரிவித்துள்ளார்
</p><p>
இலங்கைக்கு நேற்று (12.08) வருகை தந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>இந்திய பெருங்கடலின் முத்து</h2><p>'இந்திய பெருங்கடலின் முத்து' என்று அழைக்கப்படும் ஜனநாயக சோசலிசக்
குடியரசான இலங்கைக்கு, மக்கள் குடியரசு சீனாவின் முழு அதிகாரமும் பொறுப்பும்
கொண்ட தூதுவராக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்களால் நியமிக்கப்பட்டிருப்பது
எனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமும் பாக்கியமும் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b8c99a7-c019-4073-8c75-9bca833cd7b3/26-6a7d566888f93.webp' />&nbsp;</p><p> நீண்ட பாரம்பரியமும்
புகழ்பெற்ற நாகரிகமும், கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகளும், கனிவான
மற்றும் விருந்தோம்பல் பண்பைக் கொண்ட மக்களையும் கொண்டுள்ள இந்த வளமான பூமி
என் உள்ளத்தில் மகிழ்வூட்டுவதுடன், வியப்பையும் ஏற்படுத்துகிறது.
</p><p>
சீனாவும் இலங்கையும் நீண்ட வரலாற்றைக் கொண்டு, காலப்போக்கில் மேலும்
வலுவடைந்து வரும் பாரம்பரிய நட்பைக் கொண்டுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே, பழங்கால 'பட்டுப்பாதை' வழியே கப்பல்கள் வந்து சென்றன. இது நமது இரு
நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் சிறப்பான அத்தியாயத்தைப் பிணைத்தது. </p><p>எழுபது
ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான இறப்பர்-அரிசி ஒப்பந்தம் பேரிடர் காலங்களில்
நாம் ஒருவருக்கொருவர் காட்டிய பரஸ்பர ஆதரவுக்கும் ஒற்றுமைக்கும் சான்றாக
விளங்கியது.</p><p>

தூதரகத் தொடர்புகள் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, நமது இரு நாடுகளும்
எக்காலத்திலும் இக்கட்டான சூழ்நிலைகளில் தோளோடு தோள் நின்று, கை கோர்த்து
முன்னேறி வந்துள்ளன. </p><p>'பட்டுப்பாதை மற்றும் சாலை' திட்டத்தின் கீழும், பல்வேறு
துறைகளிலும் ஒத்துழைப்பை நாங்கள் உறுதியுடன் வளர்த்து ஆழப்படுத்தியுள்ளோம்.
இதன் மூலம் சீனா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் பயன்
பெற்றுள்ளனர்.</p><h2>இரு நாடுகளுக்கான நீண்ட வரலாறு</h2><p>

நீண்ட வரலாற்று நெடுகிலும் திரும்பிப் பார்த்தால் பௌத்த நூல்களைத் தேடி
மேற்கு நோக்கிப் பயணம் செய்த துறவி பாஹியனின் தனிநேயப் பயணம் முதல், அலைகளைப்
பிளந்து சென்ற அட்மிரல் ஜெங் ஹேவின் மாபெரும் கடற்படை வரை சீனாவில் உள்ள
புஜியான் மாகாணத்தின் குவாங்சௌ நகரில் குடியேறி அந்நாட்டையே சொந்த நாடாக்கிக்
கொண்ட சிலோன் இளவரசன் முதல், சீனக் குழந்தைகளுக்கு மூன்று குட்டி யானைகளைப்
பரிசளித்த இலங்கை மக்களின் உண்மையான பாசம் வரை, மேலும் சீனாவின் இலங்கை கூட்டு
நீர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மாதிரி நிலையம் உயிரின் மூலத்தைப்
பாதுகாப்பது முதல், தீவு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்களுக்குப்
பயனளிக்கும் பாடசாலைச் சீருடைத் துணிகள் வரை— மலைகளையும் கடல்களையும் கடந்து,
காலத்தின் சோதனைகளைத் தாண்டி நிலைத்திருக்கும் சீனா - இலங்கை நட்பு எப்போதும்
மிக அரவணைப்பான மற்றும் இதயத்திற்கு நெருக்கமான ஒளியை வீசி வருகிறது.
</p><p>
இந்த நல்வேளையில், சீனா - இலங்கை நட்பைப் பேணிப் பாதுகாத்து ஆதரித்த இரு
நாடுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும்
மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e48bcb5b-0e9d-4568-b341-71dcbb6bbc72/26-6a7d56693911a.webp' /></p><p>

சீனா - இலங்கை நட்புறவின் எதிர்காலம் பரந்ததாகவும் நம்பிக்கைக்குரியதாகவும்
உள்ளது. 2025 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் இலங்கைக்குப் பயணம்
மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரணி அமரசூரிய ஆகியோரைத்
தனித்தனியாகச் சந்தித்து, முக்கியமான ஒருமித்த கருத்துகளையும் பலனளிக்கும்
ஒத்துழைப்பு விளைவுகளையும் எட்டினார்கள். </p><p>இந்த உயர்மட்டப் பரிமாற்றங்கள் நமது
இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய மூலோபாய வழிகாட்டலை வழங்கியுள்ளன.
சீனா-இலங்கை உறவுகள் இப்போது கடந்த கால வெற்றிகளின் மீது கட்டமைப்பதற்கும்
எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கும் ஒரு வரலாற்றுச் வாய்ப்பை
எதிர்கொண்டுள்ளன.
</p><p>
சீனா எப்போதும் தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை
அளிக்கிறது. நமது இரு நாடுகளும் வளர்ச்சி மற்றும் புத்துயிர் பெறும் பாதையில்
சக பயணிகளாகவும், வெற்றி - வெற்றி ஒத்துழைப்புக்கான நல்ல பங்காளிகளாகவும்
திகழ்கின்றன.</p><p> நாம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல சகோதரர்களாகவும்
நண்பர்களாகவும் இருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் மத்தியக் குழுவின் உறுதியான தலைமையின் கீழும், பொதுச் செயலாளர் ஷி
ஜின்பிங் அவர்களை மையமாகக் கொண்டும், சீன நவீனமயமாக்கல் மூலம் அனைத்துப்
பரிமாணங்களிலும் ஒரு மாபெரும் நாட்டை உருவாக்குவதற்கும் தேசிய புத்துணர்ச்சியை
மேம்படுத்துவதற்கும் சீன மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இலங்கையும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தி, 'செழிப்பான நாடு, அழகான வாழ்க்கை' என்ற தொலை நோக்குப் பார்வையை
அடைவதற்குப் பாடுபட்டு வருகிறது.

இலங்கையுடன் தோளோடு தோள் நின்று நடக்க சீனா தயாராக உள்ளது. </p><p>நமது வளர்ச்சி
உத்திகளை வலுப்படுத்தி, பரஸ்பர வெற்றி மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான பரந்த
வாய்ப்புகளைத் திறக்கவும், உண்மையான பரஸ்பர உதவியும் என்றென்றும் நீடிக்கும்
நட்பும் கொண்ட நமது மூலோபாய கூட்டுறவுக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும்,
பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சீனா - இலங்கை சமூகத்தை இணைந்து
கட்டமைக்கவும் சீனா தயாராக உள்ளது.</p><h2>சீனா, இலங்கை தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 70 ஆவது ஆண்டு</h2><p>அடுத்த ஆண்டு, சீனாவும் இலங்கையும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 70 வது ஆண்டு
நிறைவையும், இறப்பர்-அரிசி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 75 வது ஆண்டு
நிறைவையும் கொண்டாடவுள்ளன.</p><p> இந்த முக்கியமான திருப்பு முனையில், இலங்கைக்கான
தூதுவராகப் பணியாற்ற எனது தாய் நாட்டாலும் அதன் மக்களாலும் நான்
நியமிக்கப்பட்டுள்ளேன். இது எனக்கு வழங்கப்பட்டுள்ள புகழ்பெற்ற பணியும்
குறிப்பிடத்தக்க பொறுப்புமாகும் என்பதை நான் ஆழமாக உணர்கிறேன்.</p><p>

வரவிருக்கும் ஆண்டுகளில், எனது சகாக்களும் நானும் எங்களது கடமைகளை முழு
மனதுடன் அர்ப்பணித்து, உறுதியுடன் முன்னேறுவோம். எங்களது பாரம்பரிய நட்பை
முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை
விரிவுபடுத்தவும், சீன நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகள்
மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.</p><p>

இந்த முயற்சியில், சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு
துறைகளைச் சேர்ந்த நண்பர்களின் ஆதரவும் உதவியும் இல்லாமல் எனது பணியைச் செய்ய
முடியாது. </p><p>உங்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளவும், நெருக்கமான உரையாடல்களை
நடத்தவும், ஆழமான நட்பைப் பேணவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். </p><p>மேலும்
உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். சீனா-இலங்கை
உறவுகளுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் கை கோர்த்து
அயராது பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T05:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா - கித்துள்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-recovered-in-nuwara-eliya-1786597198"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-recovered-in-nuwara-eliya-1786597198</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(12.08.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்று(12.08.2026) கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
சந்தேகத்திற்கிடமான முறையில் கைகுண்டு ஒன்று காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல்
கிடைத்துள்ளது.
</p><p>
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கித்துள்கலை பொலிஸார், குறித்த கைகுண்டு
தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், அதிரடிப்படையினருக்கும்
தகவல் வழங்கியுள்ளனர்.</p><h2>கைகுண்டு மீட்கப்பட்ட பகுதி</h2><p>இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து சம்பவ இடத்தை
பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மீட்கப்பட்ட கைகுண்டை
உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e07da03-9b27-4fa3-b0ae-e8232b876e9c/26-6a7d55a1ba1e7.webp' /></p><p>

இதனால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எவ்வாறாயினும், குறித்த கைகுண்டு எவ்வாறு அப்பகுதிக்கு வந்தது, அது எவ்வளவு
காலமாக அங்கு இருந்தது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள்
வெளியாகவில்லை.
</p><p>
சம்பவம் தொடர்பாக கித்துள்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p>

கைகுண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும்
ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது
தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T05:29:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில் செயற்படுத்தப்படுகின்றன! பிரதேசசபை தவிசாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praise-for-government-and-the-president-1786594703"></link>
            <id>https://tamilwin.com/article/praise-for-government-and-the-president-1786594703</id>
            <summary type="text">இந்த நாட்டின் கொள்கைகள் சரியான சட்ட திட்டங்களுக்கு அமைய ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில்
செயற்படுத்தப்படுகின்றன என&amp;nbsp;மண்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த நாட்டின் கொள்கைகள் சரியான சட்ட திட்டங்களுக்கு அமைய ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில்
செயற்படுத்தப்படுகின்றன என&nbsp;மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பில் நேற்றைய தினம் (12.08.2026) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும்
தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 600 மில்லியன் ரூபா வரவு
செலவுத் திட்டத்தை எனது பிரதேசசபையில் நாங்கள் கொண்டு வந்திருந்தோம். அதில்
சுமார் நூறு மில்லியன் ரூபா நிதியை நாம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு
செய்திருக்கின்றோம்.</p><h2>ஆயுர்வேத மருத்துவ சேவை</h2><p>
</p><p>


பெரியகல்லாரிலும், இதே போன்று ஓர் ஆயுர்வேத வைத்தியசாலை அமைந்துள்ளது.
இப்பிரதேசத்தில் இருக்கின்ற இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு எமது பிரதேச
சபையால் வருடத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபாய்க்கு பெறுமதியான
மருந்துகளை நாங்கள் வழங்குகின்றோம். </p><p>இந்த சேவையை நாம் நேரடியாகவே கிழக்கு மாகாண
ஆளுநர் ஊடாக இந்த ஓந்தாச்சிமடம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நாம்
ஒப்படைக்கின்றோம்.



ஏனெனில் சிறந்த ஒரு ஆயுர்வேத மருத்துவ சேவையினை ஓந்தாச்சிமடம் வைத்தியசாலை
வழங்குவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53b9f1ab-7a75-40b2-b7f5-6037219ceb3b/26-6a7d4c7b4f971.webp' /></p><p> இலங்கையில் முதன் முதலாக
இலத்திரனியல் ஆயுள்வேத வைத்தியசாலையாக இந்த ஆயுள்வேத வைத்தியசாலை
செயற்படுகின்றது. சாதாரணமாக 10 மில்லியன் ரூபாய் நிதி ஒரு பிரதேச சபையினால்
வழங்கப்படுகின்ற பணம் சிதைந்து போகின்றது. அதனை சரியான முறையில் நோயாளிகளுக்கு
பயன்படுத்தப்பட வேண்டும். அதனை நாம் இந்த கிழக்கு மாநகர ஆளுநர் ஊடாக
வழங்குவதற்குள்ளோம்.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>





இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது அவர்
கூறியவிடயம் சுகாதாரத்துறை அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டவர்களின் வருகை
தொடர்பிலும் தெரிவித்திருந்தார். அது நல்ல விடயம் அதற்காக வேண்டி
ஓந்தாச்சிமடம் கடற்கரையை அழகுபடுத்தி நவீனமயப்படுத்தி தருவதற்கு கிழக்கு மாகாண
சபை எனக்கு 12 மில்லியன் ரூபாய்க்களை ஒதுக்கீடு செய்திருக்கின்றது.</p><p> அதற்காக
நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.





கிழக்கு மாகாணத்திலேயே முதலாவது கடற்கரை பிரதேசமாக இந்த ஓந்தாச்சிமடம்
கடற்கரையை மாற்றி அமைக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அதற்கு அனைவரது
ஒத்துழைப்பையும் வேண்டி இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T04:48:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களின் உணர்ச்சிப்பூர்வ முகநூல் பதிவு! புகைப்படம் ஒன்று தொடர்பில் பொலிஸாரின் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-police-emergency-alert-1786594189"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-police-emergency-alert-1786594189</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&amp;nbsp;ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p>மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு இளைஞன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக புகைப்படம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது.&nbsp;&nbsp;</p><p>கொஹூவல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இவ்வாறு பணி முடிந்து,&nbsp; நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் உறங்கிய நிலையில்,&nbsp; தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்து இந்த பதிவு அதிகமாக பகிரப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>பகிராதீர்கள்....</h2><p>இந்தநிலையில், குறித்த புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களுக்கு பொலிஸார் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p>குறித்த எச்சரிக்கை பதிவில்,&nbsp;</p><p>சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான செய்திகள், போலியான தகவல்கள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான தகவல்களை (Fake News) பரப்புவது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd87bc4-29ff-4eba-9151-66898c1863e3/26-6a7d4bd55c328.webp' /></p><p>
</p><p>இவ்வாறான தகவல்கள் சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் அதிகமாகும். எனவே, எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு&nbsp; செய்வதற்கு முன்னர் சரிபார்க்கவும்.</p><p>பகிரப்படும் தகவலின் மூலம் உண்மையானதா,&nbsp; நம்பகமான உத்தியோகபூர்வ செய்தி மூலங்களால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக என்பதை சரிபார்க்கவும்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsrilankapoliceofficial%2Fposts%2Fpfbid0CJyCfrGyKUhUQgThBbTCxUqJFZdy3sLKo6ojbCjmRi2q5dqpoXbYErdpRveUnnnHl&show_text=true&width=500" width="500" height="699" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>உண்மையான தகவல் என உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே இவ்வாறான தகவல்களைப் பகிரவும்.&nbsp; &nbsp;வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி, பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக, தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினிக் குற்றச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் எதையும்&nbsp; பகிராதீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T04:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ஹிஸ்புல்லாஹ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-appears-before-bribery-commission-1786595395"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-appears-before-bribery-commission-1786595395</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (13) முன்னிலையாகியுள்ளார்.சொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (13) முன்னிலையாகியுள்ளார்.</p><p>சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><b><i>you may like this video&nbsp;&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mNZTnKC1ucM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-13T04:37:06+00:00</updated>
        </entry>
    </feed>
