<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-29T01:41:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி.. அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-un-concerns-judges-retirement-age-1787964301"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-un-concerns-judges-retirement-age-1787964301</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் எழுப்பிய கவலைகளை இலங்கை அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் எழுப்பிய கவலைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.</p><p>ஒகஸ்ட் 21ஆம் திகதி அன்று அனுப்பிய பதில் கடிதத்தில் இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p> </p><p>22வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்த சட்டமூலம் ஆகியவை வழக்கின் தேக்கநிலையைக் குறைக்கவும் நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுமே கொண்டுவரப்படுகின்றன என்றும், குறிப்பிட்ட சில நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கம் இதில் இல்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>அரசாங்கத்தின் தீர்மானம்..&nbsp;&nbsp;</h2><p> இத்திட்டத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c672bb8-5665-4d6b-bea9-35304bca1998/26-6a922ebeaa11e.webp' /></p><p> தலைமை நீதிபதியின் பதவிக்காலம் 67 வயது வரை அல்லது நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் என வரையறுக்கப்படும். </p><p>மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் மாற்றப்படவுள்ளதுடன், மேன்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது. </p><p> தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளுக்கும் இதைப் பயன்படுத்துவது அரசியல் தலையீடாகாது என்றும், அனுபவமிக்க நீதிபதிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கே இது அவசியம் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. </p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல தரப்பினர் இந்த சட்டமூலங்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் முழுமையாக மதிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T01:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/united-nations-sri-lankan-people-1787961973"></link>
            <id>https://tamilwin.com/article/united-nations-sri-lankan-people-1787961973</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண்
அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7
சதவீதமானோர் கல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண்
அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7
சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய
துறைகளின் கீழ் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தினன தகுன
அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, </p><p>நாட்டில் வறுமை விகிதம் 25 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதுடன், மக்கள்
தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் உணவு மற்றும் மருந்துகள் போன்ற
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கடன் பெறவோ அல்லது பொருள்களை
அடகு வைக்கவோ தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
நாட்டின் வறுமை குறைந்துள்ளது என்றும், திறைசேரி நிரம்பி வழிகின்றது என்றும்
அரசு தொடர்ந்து கூறி வந்தாலும், மேற்சொன்ன அறிக்கைகள் இலங்கையின் உண்மையான கள
யதார்த்தத்தையே வெளிப்படுத்தியுள்ளன.
</p><p>
உத்தியோகபூர்வ நுண்பொருளாதார அறிவிப்புகளுக்கும் உழைக்கும் மக்கள்
எதிர்கொள்ளும் உண்மையான வாழ்க்கைத்தர வீழ்ச்சிக்கும் இடையே கவலைக்குரிய
இடைவெளி உள்ளது.</p><h2>உழைப்பு கொள்வனவு திறன்..&nbsp;</h2><p>
</p><p>
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், கொள்வனவுத் திறன் சமநிலை
முறைப்படி தயாரிக்கப்பட்ட புதிய உலகளாவிய குறைந்தபட்ச ஊதியச் சுட்டெண்ணில்,
உலகின் 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51f4fe65-7244-41ab-b6b4-029244e796d6/26-6a9225d379553.webp' /></p><p> இதன்படி
இலங்கையின் உண்மையான கொள்வனவு திறனின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம்
மாதத்துக்கு 200 டொலர்களாக மட்டுமே பதிவாகியுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் உண்மையான உழைப்பு கொள்வனவு திறனில் இலங்கை மிகக்
குறைந்த மட்டத்துக்கே வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>இதன்படி, குறைந்தபட்ச ஊதியமானது
பாகிஸ்தானில் 570 டொலர்களாகவும், நேபாளத்தில் 490 டொலர்களாகவும், பங்களாதேஷில்
379 டொலர்களாகவும், இந்தியாவில் 233 டொலர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை விரிவுபடுத்துதல், மறைமுக வரிகளை உயர்த்தல்
மற்றும் பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமே அரசு உபரி வருவாயை
எட்டியுள்ளது.</p><p> நிதிக்கட்டுப்பாடுகள் அவசியமானது என்றாலும், வீடுகளின் உண்மையான
வருமானத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி எட்டப்படும் இலக்குகளை உண்மையான பொருளாதார
வெற்றியாகக் கருத முடியாது என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
</p><p>
பொருளாதார ஆரோக்கியம் என்பது வெறும் நிதி இலக்குகளை மட்டும் அடிப்படையாகக்
கொண்டிராமல், உண்மையான ஊதிய வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் மக்களின்
கொள்வனவுத் திறன் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்வதிலேயே
தங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T00:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் கைதுகளுக்கான கோப்புகள் தயார்! அதிரடியாக களமிறங்கும் புலனாய்வு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-cid-investigations-to-arrest-1787943637"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-cid-investigations-to-arrest-1787943637</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்பலப்படுத்துவோம் என்பதே.&nbsp;</p><p>அந்தவகையில், தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்களில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்தி பலரை கைது செய்து வருவதில் அதிரடியாக செயற்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக, ராஜபக்சக்களின் பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்களை புலனாய்வு அதிகாரிகள் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில், விரைவில் பல முக்கிய அரசியல் புள்ளிகளை கைது செய்வதற்கான பட்டியல்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l94xWZPoc0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T23:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சர்வதேசக் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-officers-to-visit-sri-lanka-next-month-1787949898"></link>
            <id>https://tamilwin.com/article/imf-officers-to-visit-sri-lanka-next-month-1787949898</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப்
பயணம் மேற்கொள்ளவுள்ளது.கடன் தவணை

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப்
பயணம் மேற்கொள்ளவுள்ளது.</p><h2>கடன் தவணை</h2><p>
</p><p>
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான
பயணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கொழும்பு வரவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5f36cd2-d2c6-4d49-912c-9e09ace9af82/26-6a91f34bc2ea2.webp' /></p><p>

இந்த வருகையின் போது, அந்தக் குழுவினர் ஏழாவது ஆய்வை நடத்துவதோடு, எட்டாவது
கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர்.
</p><p>
இந்த ஆய்வில் திருப்தியடைந்தால், இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க
டொலர் நிதியை சர்வதேச நாணய நிதியம் விடுவிக்கும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T23:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறையில் பாரியளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி மையம் முற்றுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-liquor-production-center-busted-kalutara-1787949620"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-liquor-production-center-busted-kalutara-1787949620</id>
            <summary type="text">களுத்துறை மாவட்டத்தின் மொரொந்துடுவைப் பிரதேசத்தில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த சட்டவிரோத மதுபானஉற்பத்தி மையமொன்றை பொலிசார் திடீர் முற்றுகையிட்டு, ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மாவட்டத்தின் மொரொந்துடுவைப் பிரதேசத்தில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த சட்டவிரோத மதுபானஉற்பத்தி மையமொன்றை பொலிசார் திடீர் முற்றுகையிட்டு, சோதனை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இதன்போது அங்கிருந்த 6,048 லிட்டர் கோடாவுடன் 5 செப்புச் சுருள்கள் மற்றும் 3 எரிவாயு அடுப்புகள் என்பனவும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
மொரொந்துடுவ பகுதியில் நடத்தப்பட்ட ஒரு விசேட சோதனையில், குறித்த சட்டவிரோத மதுபான மையம் கண்டறியப்பட்டு, திடீர் சுற்றிவளைப்பு மூலம் மேற்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd07ff51-dbc5-4b7f-b742-841148eece5c/26-6a91f23620ad7.webp' /></p><p>
</p><p>
களுத்துறை மாவட்டத்தில் இவ்வளவு பெரிய அளவிலான கோடா ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது, இதுவே முதல் தடவையாகும் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறிப்பிட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி மையத்தின் பின்னால் உள்ள முக்கிய வலையமைப்பையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காண விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-28T22:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை காட்டுக்குள் அழைத்து சென்று கொடூரமாகப் படுகொலை செய்த கணவன் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-takes-wife-forest-and-brutally-murders-her-1787952081"></link>
            <id>https://tamilwin.com/article/husband-takes-wife-forest-and-brutally-murders-her-1787952081</id>
            <summary type="text">அநுராதபுரம் - கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது மனைவியை கொலை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் - கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
</p><p>
நேற்று (28) முற்பகல் குறித்த நபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து அவர் மனைவியை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த கணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283fe285-64b3-4168-a701-45e6a8807660/26-6a91fe0919828.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர் உளுக்குலம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாவார்.</p><p>

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>

இச்சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T22:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களை ஏமாற்றிய பெண் செய்த மோசமான செயல் - விசாரணையில் அம்பலமான ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-arrested-for-cheating-her-friends-1787925607"></link>
            <id>https://tamilwin.com/article/women-arrested-for-cheating-her-friends-1787925607</id>
            <summary type="text">பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனமொன்றின் பெண் ஊழியர்களை ஏமாற்றி பெண் ஒருவர் பாரிய பண மோசடியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனமொன்றின் பெண் ஊழியர்களை ஏமாற்றி பெண் ஒருவர் பாரிய பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். </p><p>குறித்த நிறுவனத்தின் 25 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களை மோசடி செய்த 42 வயதுடைய பெண் ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>திருமண நிகழ்வொன்றில் பங்கேற்க வேண்டும் எனக் கூறி, குறித்த பெண் சக ஊழியர்களிடம் இந்தத் தங்க ஆபரணங்களை பெற்றுக்கொண்டுள்ளார். </p><h2><b>தங்க நகைகள்</b></h2><p>கைது செய்யப்பட்ட பெண் பியகம பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். சந்தேக நபராண பெண் பெற்ற தங்க சங்கிலிகள், மோதிரங்கள், வளையல்கள் உள்ளிட்ட ஆபரணங்களை கடுவலை மற்றும் பியகம - பண்டாரவத்தை பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் அடகு வைத்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70a3c290-e193-4213-82b5-044159cdec8c/26-6a9198b2df1ec.webp' /></p><p>இவ்வாறு மோசடியாக பெற்ற பணத்தை, தான் கட்டிவரும் வீட்டின் தேவைக்கான பல்வேறு பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக அவர் செலவிட்டுள்ளார். </p><p>இந்த மோசடி தொடர்பாக குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த 5 பெண் ஊழியர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். </p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். 
</p>]]></content>
            <updated>2026-08-28T21:14:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் உயிரிழப்பதற்கு ஏதுவாகும் பழக்கம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/80-100-people-die-daily-in-sri-lanka-1787936875"></link>
            <id>https://tamilwin.com/article/80-100-people-die-daily-in-sri-lanka-1787936875</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ரடம எகடட' போதைப்பொருள் தடுப்பு மற்றும் கல்விப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
</p><p>நாட்டில் தினமும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுக்குக் காரணமான வேறு எந்தவொரு ஒற்றைக் காரணியும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>இறப்பு</h2><p>
</p><p>போதைப்பொருள் சார்ந்த இறப்புகளில் புகைபிடிக்கும் பழக்கமே (புகையிலை) முதன்மையான காரணியாக உள்ளது எனவும் மதுபான நுகர்வினால் மட்டும் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96468196-9ade-47c7-bf85-d0631f677420/26-6a91ce066decc.webp' /></p><p>
</p><p>சட்டவிரோத போதைப்பொருட்களால் நேரடியாக ஏற்படும் இறப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் இன்னும் பூர்த்தியடையவில்லை என்றாலும், பிற சட்டவிரோத போதைப்பொருட்களால் தினமும் 10 முதல் 15 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாகத் தரவுகள் உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் ஆகிய அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, தினமும் 80 முதல் 100 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.</p><h2>தடுப்பு நடவடிக்கைகள்</h2><p>
சட்டவிரோத போதைப்பொருட்களின் பயன்பாடு நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ, புகையிலை மற்றும் மதுபானம் போன்ற சட்டப்பூர்வமான பொருட்களே ஒருவர் கடுமையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான முதன்மை நுழைவு வாயிலாக அமைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ca740b-f56e-40ba-8a6a-058336204ab6/26-6a91ce0723c28.webp' /></p><p>ஹெராயின் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், அதற்கு முன்பாகத் தீவிரமாகப் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
கஞ்சா பயன்படுத்துபவர்களில் பலர், ஆரம்பத்தில் மதுபானம் அல்லது சிகரெட் பயன்படுத்தியவர்களாவர்.
</p><p>போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தனிநபர் ஆரோக்கியம், சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகள் மிகக் கடுமையானவை என்பதால், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T21:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஆகக்கூடுதலான வருமானம் பெறும் அரச நிறுவனமாக சுங்கத்திணைக்களம் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-customs-sets-a-record-state-institution-1787949085"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-customs-sets-a-record-state-institution-1787949085</id>
            <summary type="text">இலங்கை சுங்கத் திணைக்களம் நாட்டின் மிகப்பெரிய வரி வருமானம் ஈட்டும் நிறுவனமாக சாதனை படைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் வாகன இறக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுங்கத் திணைக்களம் நாட்டின் மிகப்பெரிய வரி வருமானம் ஈட்டும் நிறுவனமாக சாதனை படைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
மோட்டார் வாகன இறக்குமதிகள் தொடர்பான வரி வசூலில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் காரணமாக, இலங்கை சுங்கத் திணைக்களம் நாட்டின் மிகப்பெரிய வரி வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.
</p><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதிக் கொள்கைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி-ஜூன் 2026 நிதியாண்டு மீளாய்வு அறிக்கையின்படி, ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த வரி வருமானம் 25.9% அதிகரித்து 2,710.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.</p><h2>வரி வருமானம்</h2><p> இது 4,910 பில்லியன் ரூபா என்ற ஆண்டு மதிப்பீட்டிலிருந்து 55.2% முன்னேற்றமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce51ff3-b50d-4828-bbf3-529a3e4aebc2/26-6a91f01f75e97.webp' /></p><p>

இதில், இலங்கை சுங்கத் திணைக்களம் 1,290 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது. இது மொத்த வரி வருமானத்தில் 48% பங்களிப்பாகும். அதே நேரத்தில், மோட்டார் வாகன இறக்குமதி வரி வருமானம் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 266.4 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
</p><p>
மேலும், சுங்கத் திணைக்களம் மூலம் வசூலிக்கப்பட்ட இறக்குமதி பெறுமதி சேர் வரியின் (VAT) அளவு 443.7 பில்லியன் ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T21:13:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் பெண்ணிற்கு நடந்தது சூழ்ச்சியா! வைத்தியர் சுகுணனை விடாது துரத்தும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-drsugunan-kalmunai-hospital-1787930890"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-drsugunan-kalmunai-hospital-1787930890</id>
            <summary type="text">கல்முனை வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற பெண் என்பதற்காக அவரது மகனுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற பெண் என்பதற்காக அவரது மகனுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியானது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>அத்தோடு, கல்முனை&nbsp;வைத்தியசாலை விவகாரத்தை வைத்து பல உள்ளக ரீதியான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.</p><p>மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர் ஒருவரே இந்த வைத்தியசாலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் முக்கிய நபராக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.</p><p>மேலும் ,கல்முனை வைத்தியசாலை விவகாரத்திலே அரசாங்கம் தலையிட்டு ஒரு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.</p><p>கல்முனையில் வைத்தியர் Dr. சுகுணன் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படுகின்றமையும் ,வைத்தியசாலை ஊழியர்கள் குறித்து வெளியாகும் போலிச் செய்திகளும் வைத்தியசாலை சமூகத்தை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த சம்பவம் உண்மையில் சதியா, சூழ்ச்சியா அல்லது எதிர்பாராத விதமாக இடம்பெற்ற சம்பவமா, Dr. சுகுணனை விடாது துரத்தும் இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பான விரிவாக தகவல்களை செய்திகளை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oLNjIm3XdQA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T21:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தவர்களின் நிலை.. சஜித் தரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sjb-kandy-organizer-hemapriya-kavirathna-speech-1787947554"></link>
            <id>https://tamilwin.com/article/sjb-kandy-organizer-hemapriya-kavirathna-speech-1787947554</id>
            <summary type="text">அரகலய போராட்டத்திற்காக அன்று குரல் கொடுத்த போது சட்ட வல்லுநர்களாகப் பாராட்டுப் பெற்றவர்கள், இன்று கறுப்பு அங்கிப் பேர்வழிகளாக அரசாங்கத்தினால் சித்தரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரகலய போராட்டத்திற்காக அன்று குரல் கொடுத்த போது சட்ட வல்லுநர்களாகப் பாராட்டுப் பெற்றவர்கள், இன்று கறுப்பு அங்கிப் பேர்வழிகளாக அரசாங்கத்தினால் சித்தரிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கண்டி அமைப்பாளர் ஹேமப்ரிய கவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><h2>முன்வைக்கும் குற்றச்சாட்டு&nbsp;</h2><p>
</p><p>மேலும் அவர்,

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மிரிஹானாவில் கைது செய்யப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து ஜனநாயகத்திற்காக நின்ற இலங்கை சட்ட வல்லுநர்கள் சங்கம், இன்று இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர உதவியதற்காக வருந்தும் அளவிற்கு மாறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03d0bcf-4631-468d-9c91-2aee80b5d8fb/26-6a91ed63b83b0.webp' /></p><p>
</p><p>
அன்று மக்களுக்காகக் குரல் கொடுத்த அதே சட்ட வல்லுநர்கள் சங்கம், இன்று 'திருடர்களாகவும், மோசடிக்காரர்களாகவும், கறுப்பு அங்கி அணிந்தவர்களாகவும்' அரசாங்கத்தினால் விமர்சிக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.</p><p>

புனிதமான மஞ்சள் அங்கியை ஒருபுறமும், சட்ட வல்லுநர்களின் கறுப்பு அங்கியை மறுபுறமும் ஊழல்வாதிகளின் குவியலில் வீசி, விமர்சனங்களை அடக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T20:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான நீள் பயணம் மாநாட்டிற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-conference-1787946037"></link>
            <id>https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-conference-1787946037</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள &quot;நீதிக்கான நீள் பயணம்&quot; மாநாட்டிற்கு நாங்கள் முழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள "நீதிக்கான நீள் பயணம்" மாநாட்டிற்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்க இருக்கின்றோம் என
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் யோகராசா துஷாந்தன் தெரிவித்தார்.</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த
போது அவர் இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>

மேலும் தெரிவிக்கையில், "பல ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல்,
உண்மையையும் நீதியையும் வேண்டி நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.</p><h2>&nbsp;முழுமையான ஆதரவு&nbsp;</h2><p>
</p><p>
அந்த நிலையில், தமது உறவுகளின் நீதிக்காக வீதியில் நின்று போராடி வருகின்ற
தாய்மாரினுடைய குடும்பங்களின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில், எங்களுடைய
அனைத்து மாணவர் சமூகமும், அத்துடன் இளைஞர்கள் இணைந்து அவர்களுக்கான முழுமையான
ஆதரவை வழங்க வேண்டியது அவசியமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/673118aa-1a06-4ea7-96e7-b93f9756daaf/26-6a91e5e9c1ffd.webp' /></p><p>
</p><p>
அந்த நிலையிலே, எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 9 மணிக்கு யாழ்ப்பாணம்
வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு
படுகொலை நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது
உறவினரின் நினைவுப்படுத்தலோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு,
பின்னர் தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற பெயரிலே
ஒரு நாள் சர்வதேச மாநாடு, நீதியின் வலியுறுத்தலை நிலைப்படுத்தி நினைவு
நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உண்மையும் நீதியும் கிடைக்கும்
வரை, அவர்களினுடைய குடும்பங்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு எமது
ஆதரவு தொடரும்.
</p><p>
அவர்களுடைய கோரிக்கைகள் உள்ளூர் மட்டத்தை கடந்து சர்வதேச சமூகத்தின்
கவனத்திற்கு சென்றடைய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே பேரன்புமிக்க தமிழ்
சமூகமே, 30ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விலே பல்கலைக்கழக
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள், மதத்
தலைவர்கள், சமூகம் அனைத்து தரப்பினரும் இணைந்து கலந்துகொண்டு, இந்த காணாமல்
ஆக்கப்பட்ட அம்மாக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பேரணிக்கும்
போராட்டத்திற்கும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதனை பல்கலைக்கழக மாணவர் சமூகமாக
நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்” என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:48:13+00:00</updated>
        </entry>
    </feed>
