<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-31T09:06:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-strait-of-hormuz-crude-oil-prices-1788166372"></link>
            <id>https://tamilwin.com/article/attack-strait-of-hormuz-crude-oil-prices-1788166372</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விலைகள் 2 வீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக சர்லதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹோர்முஸ் நீரிணையில உள்ள ஈரானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விலைகள் 2 வீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக சர்லதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஹோர்முஸ் நீரிணையில உள்ள ஈரானின் 'லராக்' தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை
ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்
அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதால் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு $ 2.21 (2.51%) உயர்ந்து $ 90.31
ஆகவும் அமெரிக்க WTI மசகு எண்ணெய் பீப்பாய்க்கு $1.83 (2.19%) உயர்ந்து $
85.23 ஆகவும் அதிகரித்துள்ளன.</p><h2>எண்ணெய் விநியோகம்</h2><p>

மேலும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் எதிர்வரும்
நாட்களில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6357fa47-6c4c-474f-9d29-562ea840f47d/26-6a9543c3b2141.webp' /></p><p>

கடந்த ஜூலைக்குப் பிறகு ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கா நடத்திய முதல் நேரடித்
தாக்குதல் இதுவாகும். </p><p>ஈரானும் இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளதால் இரு
நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் 6ஆவது மாதமாகத் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதவி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-archchuna-s-parliamentary-seat-to-supreme-court-1788165413"></link>
            <id>https://tamilwin.com/article/mp-archchuna-s-parliamentary-seat-to-supreme-court-1788165413</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31.08.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4056913c-1bb3-40c2-9700-2ea9b38d4b11/26-6a9542093b264.webp' /></p><p>

எவ்வாறாயினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:59:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளப் பேரழிவு: காணாமல் போனோர் எண்ணிக்கை 4247 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flash-flood-disaster-in-nepal-1788166437"></link>
            <id>https://tamilwin.com/article/flash-flood-disaster-in-nepal-1788166437</id>
            <summary type="text">நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4247 ஆக உயர்ந்துள்ளது. 

அத்துடன், இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4247 ஆக உயர்ந்துள்ளது. </p><p>

அத்துடன், இதுவரை குறைந்தது 903 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி
செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2502 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
இதில் காணாமல் போன 4247 பேரில் 3655 பேர் நேபாள குடிமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>

இதேவேளை, 592 வெளிநாட்டினரைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39869a7a-c0d0-4a6e-8b6a-8f6cce14c356/26-6a9541642cabe.webp' /></p><p> </p><p>

காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கானோர் நேபாளத்தின் நீர்மின் நிலையங்களில்
பணிபுரிந்த ஊழியர்கள் ஆவர்.</p><p> வெள்ளம் சூழ்ந்தபோது இவர்கள் சிலர் சுரங்கங்களுக்குள் பணிபுரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
</p><p>
இந்த நிலையில், இது குறித்த சீன அரசு ஊடகங்களின் தகவல்படி, திபெத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 546 பேர் காணாமல் போயுள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/change-in-three-wheeler-fares-1788164089"></link>
            <id>https://tamilwin.com/article/change-in-three-wheeler-fares-1788164089</id>
            <summary type="text">எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்&amp;nbsp;முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்&nbsp;முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எரிபொருள் விலை திருத்தம்&nbsp;</span></p><p>நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45ab675a-0050-4443-aaf5-516f2c40704f/26-6a953c15687f4.webp' /></p><p>இதற்கமைய, அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p>இதற்கமைய, முதலாவது கிலோ மீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 90 ரூபாயும் அடங்கிய பழைய கட்டணத்தையே தொடர்ந்தும் அறவிடப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாவால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், முச்சக்கர வண்டி கட்டணங்களைக் முறைப்படுத்துவது தொடர்பான அனைத்து விலை விபரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாரித்து அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதற்கமைய, சட்டபூர்வமான கட்டணத் திருத்தம் வரும் வரை,&nbsp; பழைய கட்டணத்தையே தொடர்ந்தும் அறவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T08:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தப்பியோடிய 24 வருட சிறைத்தண்டனைக் கைதி : தீவிர நடவடிக்கையில் பொலிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-to-24-years-in-prison-escapes-in-jaffna-1788164219"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-to-24-years-in-prison-escapes-in-jaffna-1788164219</id>
            <summary type="text">யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர
நடவடிக்கையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய
குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.
</p><h2>சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கை</h2><p>
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி
கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/291b2f04-a340-46d3-9518-37ba51e0187c/26-6a953b2e759d4.webp' /></p><p>
கைதி தப்பி சென்ற நிலையில் சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p>
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VgOna0Jso78" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-31T08:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் வீடொன்றை தாக்கிய கும்பல்: உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resignation-of-a-local-government-council-member-1788164554"></link>
            <id>https://tamilwin.com/article/resignation-of-a-local-government-council-member-1788164554</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட
குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச
சபை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட
குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச
சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர்
பதவியில் இருந்து விலகியுள்ளார். </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>


நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின்
மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது.</p><h2> 

பதவி விலகல்</h2><p>
இந்த தாக்குதல் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் உறுப்பினர் தலைமையிலான கும்பல் ஒன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f50df5c9-5f7a-4c7a-9a4a-b746974443c1/26-6a953b1467d3b.webp' /></p><p> </p><p>

இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக
அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கும்பலை மடக்கி
பிடித்துள்ளனர்.</p><p> 

இதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், குறித்த நபர் தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலகல் செய்வதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T08:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் நாய் இறைச்சி விற்பனை குறித்த தகவலுக்கு வெளியான விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dog-meat-sales-in-sainthamaruthu-1788161839"></link>
            <id>https://tamilwin.com/article/dog-meat-sales-in-sainthamaruthu-1788161839</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் &#039;நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக&#039; சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பிரதேசத்தில் 'நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக' சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்மைத்தன்மையும் இல்லை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
கடந்த 29 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ்
உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை
மேற்கொண்டனர்.</p><p>

இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.</p><h2>சுகாதார நடைமுறை</h2><p> </p><p>குறித்த
இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட
கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்ப்ட்டமை
கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7be27a7-bb7c-472c-bed8-21b6b8aa71a3/26-6a953a8d544d6.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக்
கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.
</p><p>
எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில்
நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல்
செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>போலியான தகவல்</h2><p>
</p><p>
இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்,
பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்
நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0baa15b-86cb-4c39-aea2-5fc66bc95eb6/26-6a953a8e07afa.webp' /></p><p>
</p><p>
எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக
வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும்
கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-front-of-mannar-district-secretariat-1788163973"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-front-of-mannar-district-secretariat-1788163973</id>
            <summary type="text">மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பை
உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பை
உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த போராட்டம் இன்று (31.08.2026) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றது.</p><p>

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி, காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட
செயலகத்திற்கு முன்பாக சுகயீன விடுமுறை போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e8dfa18-73d1-4ed0-84af-26e3b39161cc/26-6a9539c864134.webp' /></p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்</h2><p>
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தல், உரிமைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு
காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டது.
</p><p>
மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்
சேவை நிலை, பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக
நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட
வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
</p><p>
குறித்த போராட்டத்தில் மாவட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற பல
நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து
கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca487d8-e4b3-434d-b3ee-f7b90cd91b3e/26-6a9539c933a37.webp' /></p><h2>மகஜர் கையளிப்பு</h2><p>போராட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஐ சந்தித்து ஜனாதிபதிக்கு
கையளிக்க வேண்டிய மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச
திணைக்களங்களில்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் ஸ்தம்பிதம்
அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:22:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் விவசாய குளங்களை அழிப்பதை உடன் நிறுத்தி குடிநீருக்கு தனி நீர் திட்டம் அமைக்கவும் - விவசாயிகள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/separate-water-project-for-drinking-water-1788158587"></link>
            <id>https://tamilwin.com/article/separate-water-project-for-drinking-water-1788158587</id>
            <summary type="text">உன்னிச்சைக் குளத்தில் இருந்து &#039;குடிநீர்&#039; என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை உறிஞ்சுகின்றது என விவசாயிகள் சுட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உன்னிச்சைக் குளத்தில் இருந்து 'குடிநீர்' என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை உறிஞ்சுகின்றது என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இதனால் நீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதால், விவசாய குளங்களில் இருந்து குடிநீரை பெறுவதை நிறுத்தி குடிநீருக்கு ஒரு தனி நீர் திட்டம் அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
மாவட்ட விவசாயிகள் இன்றைய தினம் (31.08.2026) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.</p><h2>நீர் குறைவு</h2><p> </p><p>

குறித்த அறிக்கையில் மேலும்,

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலையினால் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளதுடன் விவசாய குளங்களில் இருந்து நீர் மட்டம் வரலாறு காணமுடியாதளவிற்கு நீர் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48fe82a2-0e89-43da-87a1-4fd3f4a7cc1e/26-6a95367379e47.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் மாவட்டத்தில் 65 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்ற போதிலும் 40 வீதமான விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கப்படுகின்றது. </p><p>

இந்த மாவட்டத்தில் பெரிய குளமான உன்னிச்சைக் குளத்தில் இருந்து விவசாயத்துக்கு நீர்பாசனம் வழங்கப்படுகின்றதுடன் இந்த குளத்தில் இருந்து மாவட்டத்திலுள்ள மக்களுக்கு குடிநீரை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை பெற்று வருகிறது.
</p><p>
இதனால் விவசாயத்திற்கான நீரை பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஒரு இலாப நோக்கு நிறுவனம். ஆனால் இலாபத்திற்காக ஒரு மாவட்டத்தின் உணவு உற்பத்தியும் எதிர்கால தலை முறையையும் பலி கொடுக்க முடியாது.</p><h2>விவசாயத்திற்கு தனி கொள்கை</h2><p> </p><p>

இரணைமடுவில் விவசாயிகள் ஒன்றுபட்டு எதிர்த்த பின்னர் விவசாய குளங்களில் கை வைக்காதீர்கள் என்ற பாடம் கிடைத்தது. அதை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு, வுனியாவில் தனி குடிநீர் நீர் தேக்கமும் அமைக்கப்பட்டு குடிநீருக்கு தனி கொள்கையும், விவசாயத்திற்கு தனி கொள்கையும் பின்பற்றப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b4dbd56-40f2-4a10-8b52-712b5e652b60/26-6a9536742f7d6.webp' /></p><p>
</p><p>
ஆனால் மட்டக்களப்பில் மட்டும் ஏன் இந்த இரட்டை நீதி? இங்கு 65 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். ஆனால் 40 வீதமான விவசாய நிலங்களுக்கு மட்டும் நீர்ப்பாசனம் வழங்கப்படுகின்றது.</p><p> இவ்வாறு இருக்கையில் உன்னிச்சைக் குளத்தில் இருந்து 'குடிநீர்' என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் சபை நீரை உறிஞ்சுகிறது. 

இதனால் விவசாயிகளின் விவசாயம் யால, மகா போகங்கள் தண்ணீரின்றி அழிவு, வெள்ள காலத்தில் விவசாயிகள் மாத்திரமில்லாமல் கட்டுமானங்களும் அழிவடையும் நிலை, கடன் சுமையில் விவசாயிகளின் இளம் பிள்ளைகளின் கல்வியும் எதிர்காலமும் கேள்விக்குறி, மாவட்ட பொருளாதாரம் சீரழிவு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறதுடன் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T08:08:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவனகல சீனி தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/closed-sevanagala-sugar-manufacturing-factory-1788162182"></link>
            <id>https://tamilwin.com/article/closed-sevanagala-sugar-manufacturing-factory-1788162182</id>
            <summary type="text">அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட்ட செவனகல சீனி தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரும் வரை காலவரையறையின்றி மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட்ட செவனகல சீனி தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரும் வரை காலவரையறையின்றி மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.</p><p>

ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பைக் குறைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஊழியர்களுக்கு விடுமுறை&nbsp;</h2><p>
</p><p>
கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணி முதல் செவனகல பிரிவின் சில ஊழியர்கள் தமது கடமைகளிலிருந்து விலகி, உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43e2575-b915-41d8-aed6-726bae88342d/26-6a95362b0721c.webp' /></p><p> </p><p>இதன் காரணமாக ஏற்படும் நிதி இழப்பைத் தடுப்பதற்காக கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
</p><p>
அத்துடன், கடந் 28 ம் திகதி மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>

எவ்வாறாயினும், தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் ஊழியர்கள் வழக்கம் போல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததன் காரணமாகவே, இவ்வாறு தொழிற்சாலையைக் காலவரையறையின்றி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><h2>இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமை</h2><p>
</p><p>
கடந்த காலங்களில் இரண்டு பில்லியன் ரூபா லாபத்துடன் இயங்கிய செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலை, தற்போதைக்கு நட்டத்தில் இயங்குவதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1362b596-7378-407b-b12c-bfb5fe32dd92/26-6a95362bae7f8.webp' /></p><p>அத்துடன் கடந்த வருடத்துக்கான ஊக்குவிப்பு போனஸ் கொடுப்பனவும் இதுவரை வழங்கப்படாத நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.</p><p>
எனினும் மறு அறிவித்தல் காலவரையறையின்றி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதன் காரணமாக சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக தொழில்வாய்ப்புகளை இழக்க நேர்ந்துள்ளது.</p><p>அதற்கு மேலதிகமாக தொழிற்சாலையை நம்பி வாழ்ந்த சுமார் நான்காயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T08:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு நிதியுதவி வழங்க முன்வந்த அநுர: எச்சரிக்கை விடுத்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-making-false-promises-namal-1788159149"></link>
            <id>https://tamilwin.com/article/anura-making-false-promises-namal-1788159149</id>
            <summary type="text">அநுர அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேபாளத்திற்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்றும் இலங்கையில் மக்களை ஏமாற்றியது போன்று நேபாளத்தையும் இந்த அரசாங்கம் ஏமாற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>விவசாயிகளுக்கு கூறிய பொய்யை போன்று நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் வழங்குவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டுவிட வேண்டாம் என நாமல் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.</p><p>டித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் தகரம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் வீட்டிற்கு 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ae7eb8-8410-4348-8953-54bc8409d216/26-6a9524afea737.webp' />&nbsp;&nbsp;</p><p>
இதேபோன்று நேபாளத்திற்கும் இந்த அரசாங்கம் பொய் வாக்குறுதி அளித்து விட்டதோ தெரியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டு மக்களை ஏமாற்றக்கூடாது எனவும் நெல் கொள்வனவு செய்தால் அதற்கான உரிய விலையை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நாட்டு மக்களை ஏமாற்றும் அநுர அரசாங்கம்</h2><p>
</p><p>மேலும் எரிபொருள் விலைகளை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
அரசாங்கம் எரிபொருள் விலையை குறைப்பதாகவும் வரிகளை குறைப்பதாகவும் கூறிய ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட போதிலும் நாளுக்கு நாள் வரி அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc732d0c-d76d-4b4d-a49b-4f8602834d0b/26-6a953269537ba.webp' /></p><p>
</p><p>வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கம் வரிகளை குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சி பீடம் ஏறிய போதிலும் நாளுக்கு நாள் வரி அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
உள்நாட்டு விவசாயிகள் தொழில் முனைவோர் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T07:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டனில் குளவி கொட்டு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/17-people-stung-by-wasps-admitted-to-hospital-1788161337"></link>
            <id>https://tamilwin.com/article/17-people-stung-by-wasps-admitted-to-hospital-1788161337</id>
            <summary type="text">ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வனராஜ தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (31.8.2026) காலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வனராஜ தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இன்று (31.8.2026) காலையில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழு
மீது குளவிகள் தாக்கியதில் காயமடைந்த 16 பெண் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும்
ஒரு ஆண் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>குளவி கொட்டு&nbsp;</h2><p>

குளவி தாக்குதலில் காயமடைந்த ஒரு தோட்டத் தொழிலாளி ஊடகங்களிடம் கூறுகையில்,
ஹட்டன் காவல் பிரிவின் கீழ் உள்ள வனராஜ தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள 7ஆவது
தேயிலைத் தோட்டத்தில், ஒரு மரம் மற்றும் பாறையில் கட்டப்பட்டிருந்த குளவிக்
கூட்டிற்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் தாக்கப்பட்டதாக
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d6d022f-2f63-4047-9aa6-fd70e8695932/26-6a952d3f6db17.webp' /></p><p>
</p><p>
குளவியால் தாக்கப்பட்ட மற்றொரு தோட்டத் தொழிலாளி கூறுகையில், புகையை உருவாக்கி
குளவிகளால் தாக்கப்பட்ட குழுவை காப்பாற்ற முயன்றபோதிலும், புகையை உருவாக்கிய
குழுவையும் குளவிகள் தாக்கியதாக தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:29:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவி கருணாநாயக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த நிலையில், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு,&nbsp; அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்னர் அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு</h2><p>மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு முன்னிலையாகவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef81f79b-105d-4f60-b87d-d7e4b25fd357/26-6a94f5e55ec15.webp' /></p><p>இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p>தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.&nbsp;</p><p> </p><p>இதன் பின்னர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கோரி சபாநாயகருக்கு தயாசிறி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dayasiri-calls-for-clarification-on-allegations-1788161256"></link>
            <id>https://tamilwin.com/article/dayasiri-calls-for-clarification-on-allegations-1788161256</id>
            <summary type="text">&amp;nbsp;பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.</p><p> 
பிரதம நீதியரசரின் குடும்பச் சொத்துக்கள், தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நஷ்டஈடு வழக்கில் அவரது பங்களிப்பு உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகளைப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சபையில் முன்வைத்திருந்ததாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
பிரதம நீதியரசரின் மகனுடன் தொடர்புடைய 185 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் கொழும்பிலுள்ள ஆடம்பர வீடொன்றைப் பெற்றுக்கொண்டமை.</p><h2>நீதித்துறை நடவடிக்கை</h2><p> </p><p>
சொத்து பிரகடனங்கள் மற்றும் அவற்றின் வருமான மூலங்கள் குறித்த சந்தேகங்கள்.
பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள்.</p><p>
எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்டஈடு வழக்கு தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்த கரிசனைகள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18fcf161-ba07-417d-8b24-bf69b425d8e9/26-6a952ceaeaa6d.webp' /></p><p>
குடும்பச் சொத்துக்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் நடைமுறைகளுக்கும் இடையே முறையற்ற செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் என சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>
இக்குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்துத் தான் எந்தவொரு முடிவிற்கும் வரவில்லை என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>இவற்றை அலட்சியப்படுத்துவது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என எச்சரித்துள்ளார். </p><p>
இக்குற்றச்சாட்டுகள் உண்மை எனக் நிரூபிக்கப்பட்டால், அவை நீதித்துறையின் சுயாதீனம், ஒழுக்கநெறிகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது பாரிய கேள்விகளை எழுப்பும் என்பதால், தகுதியான சுயாதீன அதிகாரசபைகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881fea96-e4bc-418d-8ecc-64b97407e5d5/26-6a952cea3e7fb.webp' /></p><p>
</p><p> மாறாக, இவை பொய்யானவை என்றால், நாடாளுமன்றத்தில் இதுபோன்று பகிரங்கமாகப் பேசப்பட்டது பிரதம நீதியரசரின் நற்பெயருக்கும் நீதித்துறையின் கண்ணியத்திற்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உண்மையைத் தெளிவுபடுத்துவது மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>பிரதம நீதியரசரையோ அல்லது நீதித்துறையையோ அவமதிக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், பொய்யாக இருந்தால் நீதித்துறை கட்டமைப்பின் நாணயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் நிறைவாகக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரித் திணைக்களத்திற்கு எதிரான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-cricketers-win-tax-battle-1788159834"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-cricketers-win-tax-battle-1788159834</id>
            <summary type="text">இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாக வீரர்களைக் கருதி, முன்நிகழ் நிபந்தனையுடன் வரி விதிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. </p><p>
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயத்தால் இன்று நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><h2>உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முயற்சி</h2><p>2024 அக்டோபரில், தேசிய கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘ஊழியர்கள்’ என வகைப்படுத்தி, அவர்களுக்கு முன் கூட்டிய தனிநபர் வருமான வரியை விதிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முயன்றது.</p><p>
தங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாகக் கருதக் கூடாது என்றும், தாங்கள் பல ஆண்டுகளாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாகவே' அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a853aad-a0ba-4866-a3ae-8b50f63781a5/26-6a95275b4665f.webp' /></p><p> 
ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், பணிக்கொடை, வருடாந்த விடுமுறை மற்றும் மகப்பேறு விடுமுறை போன்ற எந்தவொரு ஊழியர் சலுகைகளும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை வீரர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். </p><p>
இந்த முந்தைய திகதியிட்ட வரியை நடைமுறைப்படுத்தியதால் தங்களின் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதாக 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வீரர்கள் சத்தியக் கடதாசிகள் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.</p><h2>வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கிறார்களா..</h2><p> </p><p>
வீரர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்க முயல்கிறார்கள் என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே நிலவியதாகக் ஆண் கிரிக்கெட் வீரர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன குறிப்பிட்டார்.</p><p> 
வீரர்கள் வரி கட்டுவதைத் தவிர்க்கவில்லை என்றும், ஊழியர்களாகத் தவறாக வகைப்படுத்தப்பட்டு வரி வசூலிப்பதை மட்டுமே எதிர்த்து வழக்கு பதிவு செய்தார்கள் என தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1efa1638-4aee-495e-8fc6-fa6f70a06d17/26-6a952be0a2c58.webp' /></p><p> </p><p>
அண்மையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 'விளையாட்டு வீரர்கள்' அதிகாரப்பூர்வமாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாக' வகைப்படுத்தப்பட்ட போதிலும், அந்தத் திருத்தம் மனுதாரர்களுக்குப் பொருந்தாது என இறைவரித் திணைக்களம் வாதிட்டது.</p><p> 
எனினும், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இறைவரித் திணைக்களத்தின் தீர்மானத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.</p><h2>ஆண் கிரிக்கெட் அணி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்</h2><p>ஆண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஷெனாலி டயஸ், சிதத் கஜநாயக்க ஆகியோருடன் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன முன்னிலையானார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34cf5c39-7c83-426b-a471-fd2d3bbb4815/26-6a952be15a2aa.webp' /></p><p> பெண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ கப்ராலுடன் விகும் ஜெயசிங்க, மணித் தசநாயக்க ஆகியோர் முன்னிலையாகினார்கள்.</p><p>
 அரசுத் தரப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜெயசிங்க முன்னிலையாகினார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா முன்னிலையாகினார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:23:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: தாய்மார்களின் கதறல்களுக்கு தீர்வு இல்லையே..! ஐ.நா. பிரதிநிதி கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-enforced-disappearances-1788159562"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-enforced-disappearances-1788159562</id>
            <summary type="text">வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவம் என
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்கான
பணிக் குழு பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் கவலை வெளியிட்டுள்ளார். </p><p>

நேற்று(30.08.2026) யாழ்ப்பாணம் - தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளால் ஏற்பாடு செய்த சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை
முன்னிட்டு “சர்வதேச நீதியை நோக்கிய பயணம்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற
சர்வதேச மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் கதறல்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்களின் துயரங்களை நன்கு அறிவோம்.

தமது பிள்ளைக்கு என்ன நடந்தது என அறியாமலே அம்மாக்கள் இறக்கின்ற சம்பவங்கள்
அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில்
தளர்வு நிலை இருப்பதை மறுக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1880c833-93c4-4a1b-88f1-c172ad3e983f/26-6a9527410c507.webp' /></p><p>
</p><p>

இதனை அறிந்த நாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்புகளுடன் இணைந்து வேலை
செய்துவருகின்ற நிலையில், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள்
தொடர்பில் இறுதியான எண்ணிக்கையை பெற முடியவில்லை.</p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை</h2><p>
இலங்கையில் விடுதலைப் புலிகள் காலம் மற்றும் ஜேவிபியால் காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை நாம் சேகரித்து வைத்துள்ள நிலையில்,
வெள்ளை வான் காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் பணத்துக்காக என பல வடிவங்களில்
இலங்கையில் காணாமல் ஆக்கப்படுதல் இடம்பெற்றிருக்கின்றது.
</p><p>
வடக்கு - கிழக்கில் அரச படைகளால் காணி இழந்த மக்கள் போராடி வருகிறார்கள்,
அவர்களுடைய ஆதங்களையும் கேட்டு அளித்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93dccbda-9ae7-4f1c-a45f-e0bb21e663c6/26-6a952741bcda0.webp' /></p><p>
</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இந்த சர்வதேச மாநாடு ஆனது நாம்
அவர்களுடன் நெருக்கமாவதற்கும் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.


எமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் மனிதாபிமான ஆணை உள்ளது, வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக அங்கத்துவ
நாடுகளை இணைக்க முடியும்.</p><p>

இதுவரை 61 ஆயிரத்து 626 வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில்100 மேற்பட்ட
நாடுகளுக்கு அனுப்பியுள்ளதுடன், தொடர்ந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்
தொடர்கிறது.
</p><h2>
சாட்சியங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..</h2><p>

முழுமையான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இருந்தும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் தரவுகளை அரச அதிகாரிகள் மறைக்க முயற்சித்தமை மட்டுமல்லாது
மறைத்தும் இருக்கிறார்கள்.
</p><p>
அதன் பாதிப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் உற்பட அவர்களின்
குடும்பமும் அதன் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc632bd1-482e-470f-aefc-6f22405ef129/26-6a95274279f41.webp' /></p><p>
</p><p>
ஆகவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில்
தமது முழுமையான பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்பதை கூறிக் கொள்வதுடன், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில் அனைத்து தரப்பினர்களும் தமது
முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.
</p><p>

இந்த மாநாட்டில் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா தூதரகங்களைச் 
சேர்ந்த பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், ரவிகரன், 
ஸ்ரீநேசன் , வடக்க மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், தமிழ் மக்கள்
கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய
மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்னம் சுகாஸ், போராளிகள் கட்சியின்
தலைவர் வேந்தன், ஈ பி ஆர் எல் தலைவர் சுரேஷ் பிரேம சந்திரன், உட்பட
மாதகுருமார்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:04:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்தவர் பொலிஸில் ஒப்படைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-to-grassland-allaipiddy-man-arrested-1788159785"></link>
            <id>https://tamilwin.com/article/fire-to-grassland-allaipiddy-man-arrested-1788159785</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்
இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர்
இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்
இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர்
இன்று(31.8.2026) பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள் மற்றும் கால்நடைகளின்
மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் புற்றரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு
நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இதன் காரணமாக பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாகி வருவதுடன்,
புகை மற்றும் தீ பரவல் காரணமாக வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும்
போக்குவரத்துக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>புற்றரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை
அடையாளம் காணவோ அல்லது கைது செய்யவோ முடியாத நிலை காணப்பட்டதால், வேலணை பிரதேச
சபையும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>இந்நிலையில், இன்று குறித்த பகுதியில் ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்தபோது அவர்
கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13539f1-f51d-458d-b85c-a30af6a6a9cc/26-6a95272bc47ce.webp' /></p><p>
</p><p>எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த நபர் மனநலப்
பாதிப்புக்குள்ளானவர் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் பயணிக்க அரசாங்கம் உத்தேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-intends-to-continue-working-imf-1788158621"></link>
            <id>https://tamilwin.com/article/government-intends-to-continue-working-imf-1788158621</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் இணைந்து பயணிக்கும் வகையில் புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் இணைந்து பயணிக்கும் வகையில் புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாத தொடக்கத்தில் நாட்டிற்கு வருகை தர உள்ளது.</p><h2>புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட</h2><p>

விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஏழாவது மீளாய்விற்காக வரும் பிரதிநிதிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் காலாவதியாகும் தற்போதைய ஒப்பந்தத்திற்குப் பதிலாக, மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8fd8df5-dfc3-4454-8bd4-09a056bb8ddd/26-6a952399a9bf6.webp' /></p><p>
ஏழாவது மீளாய்வும், 300 மில்லியன் டொலர் கடன் தவணையை வழங்குவதற்கான தீர்மானமும் அதன்போது மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>மார்ச் 2027 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஒப்பந்தத்தையும் அவர்கள் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
</p><p>
அதன்படி, உள்நாட்டின் எதிர்ப்பு மற்றும் பொதுமக்களின் அதிருப்தியைப் பொருட்படுத்தாமல், மார்ச் 2027 முதல் நடைமுறைக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:02:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் முடிவுக்கு வரும் அநுரவின் ஆட்சி! உறுதியாகக் கூறும் முக்கியப் பிரமுகர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-s-reign-to-end-before-tamil-new-year-1788157876"></link>
            <id>https://tamilwin.com/article/anura-s-reign-to-end-before-tamil-new-year-1788157876</id>
            <summary type="text">எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தற்போதைய நாடாளுமன்றம் முடிவுக்கு வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தற்போதைய நாடாளுமன்றம் முடிவுக்கு வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.</p><p> 

காலியில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

தற்போதைய அரசாங்கம், அவர்களிடம் 159 பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறிக்கொண்டிருந்தாலும் இன்னும் சில காலத்திற்குள் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க, ஒன்று சேர்ந்துள்ள இந்த எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்கும் என்பதை கூறிக் கொள்கின்றேன்.</p><h2>அரசாங்கத்தை தோற்கடிப்போம்..</h2><p>

எதிர்க்கட்சிகளாக இருக்கும் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால், அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் இலக்கை அடைய முடியும்.
</p><p>
இந்த தேசத்திற்கு ஏதாவது சேவையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் அரசியலை தேர்ந்தெடுத்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5289544e-3d62-458a-b5e7-226087797c01/26-6a952283e1387.webp' /></p><p>

தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியம். </p><p>

நான் ஒரு விடயத்தை உறுதியாகச் சொல்ல முடியும். 159 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அரசாங்கம் நீண்ட காலத்திற்கு பயணிக்காது. விரைவில் முடிவுக்கு வரும். இதனை நினைவிற் கொள்ளுங்கள். </p><p>

தமிழ் - சிங்கள் புத்தாண்டிற்கு முன்னதாகவே இந்த ஆட்சி முறியடிக்கப்படும். நாடாளுமன்றம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:43:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலைகள் நிலத்திற்குள் வரும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788155836"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788155836</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில், மனித உடலால் உணரப்படும் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில், மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, பொதுமக்கள் முடிந்தவரை அதிக நீர் அருந்தவும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடல் அலைகள் உயர வாய்ப்பு</h2><p>

இதற்கிடையில், புத்தளம் முதல் கொழும்பு வரையிலும், காலி மற்றும் மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2 - 3 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7230900f-697d-4c14-825d-335185427d98/26-6a95217d9a799.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, சிலாபம் முதல் கொழும்பு வரையிலும், காலி முதல் மாத்தறை வரையிலும் உள்ள பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையவும் வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>குறித்த கடல் பகுதிகளில் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் தொடரும் தொடருந்து விபத்துகள் - புனரமைக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788157604"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788157604</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புனரமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புனரமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(31.08.2026) கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 


பாதுகாப்பு தொடருந்து கடவை புனரமைப்பு</h2><p>
இதன்போது, கிளிநொச்சி உமையாள் புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார்
35க்கும் மேற்பட்ட பாதுகாப்புபற்ற கடவைகள் காணப்படுகின்றன. இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு போராட்டக்காரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd377bf3-3fdf-414c-8ea1-fa282525a4de/26-6a951f479a0c4.webp' /></p><p> 

 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மத்த
தலைவர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள்,
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அண்மையில் தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.</p><p>


இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், போக்குவரத்து அமைச்சர், தொடருந்து திணைக்களம் ஆகியவற்றிற்கான மனுக்களும் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865ce238-d88d-43c2-96a4-7f750ce75c5d/26-6a951f48c199f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a78ef65-348c-481f-9608-08b9324fbd4b/26-6a951f499932b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89a01cf-4852-4eac-9717-d345191867cb/26-6a951f4a81368.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7504cb51-2bbe-4df8-ace4-626fa1878e10/26-6a951f4b5d99d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-supply-to-batticaloa-for-4-hours-daily-1788155905"></link>
            <id>https://tamilwin.com/article/water-supply-to-batticaloa-for-4-hours-daily-1788155905</id>
            <summary type="text">வறண்ட வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சைக் குளத்தில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், அங்கு தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறண்ட வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சைக் குளத்தில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், அங்கு தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
அதன் தலைவர் ஏ. எம். பி. சி. டி. பண்டாரா, உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக, தினமும் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

இருப்பினும், நாடு முழுவதும் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
</p><h2>நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த&nbsp;</h2><p>இலங்கை ஒரு நாளைக்குச் சுமார் 2.8 மில்லியன் கன மீட்டர் நீரை உற்பத்தி செய்கிறது என்றும், அதில் 23 முதல் 24 சதவீதம் பெரிய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படுகிறது என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f998aa40-90e6-4fe2-8c14-e566b0cba601/26-6a951ea922d95.webp' /></p><p>மேலும் 65 சதவீதம் ஆறுகள் மற்றும் ஓடைகள் தொடர்பான நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது என்றும், அதில் கிட்டத்தட்ட 600,000 கன மீட்டர் களனி ஆற்றில் இருந்து பெறப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>இதற்கிடையில், மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்கள் மட்டுமே வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
மொனராகலை மாவட்டத்தின் பிபில மற்றும் மெடகம பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் தலைவர் ஏ. எம். பி. சி. டி. பண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென இடிந்து வீழ்ந்த கொழும்பு நீதிமன்ற கட்டிடத்தின் பகுதி! வழக்கு விசாரணகள் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-district-court-announced-closed-today-1788154970"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-district-court-announced-closed-today-1788154970</id>
            <summary type="text">கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது.

தற்போதைய அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது.
</p><p>
தற்போதைய அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று(31) கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம தெரிவித்துள்ளார்.</p><h2>நீதிமன்ற நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
மேலும், இன்று(31) நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d99f9319-ec39-4004-ad1c-465bb263b7aa/26-6a951849be295.webp' /></p><p>
</p><p>
கட்டடத்தின் கட்டமைப்பில் மேலும் உறுதியற்ற தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதால், யாரும் கட்டிடத்திற்குள் நுழையக்கூடாது என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
அத்துடன் இன்று விசாரணைக்காக பட்டியடலிடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளின் விசாரணைகளும் 2026 செப்டம்பர் 30 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதற்கிடையில், இடைக்காலத் தடை உத்தரவுகளை நீடிப்பதற்கான கோரிக்கைகள் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதற்கேற்ப மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HW94IK6MNBY" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-31T05:59:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எங்கள் ஆட்சியில் கட்டாயம் நீதி கிடைக்கும்! நீதி அமைச்சர் உறுதிமொழி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harshana-nanayakkara-statement-1788155452"></link>
            <id>https://tamilwin.com/article/harshana-nanayakkara-statement-1788155452</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு - கிழக்கு
உறவுகள் நடத்திய போராட்டத்தையும், மாநாட்டையும் தாம் முழுமையாக மதிப்பதாக நீதி
மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு - கிழக்கு
உறவுகள் நடத்திய போராட்டத்தையும், மாநாட்டையும் தாம் முழுமையாக மதிப்பதாக நீதி
மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகால வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில் தமது அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><h2>நீதி கட்டாயம்</h2><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எமது ஆட்சியில் கட்டாயம் நீதியைப்
பெற்றுக் கொடுப்போம். </p><p>இத்தகைய கொடூரச் செயல்களுடன் தொடர்புடைய உண்மையான
குற்றவாளிகள் உரிய முறையில் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தகுந்த தண்டனை
சட்டத்தின் மூலம் வழங்கியே தீருவோம் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca5d40a0-5635-4e32-a153-a5713850084d/26-6a95163f9aff6.webp' /></p><p>
</p><p>
வடக்கு - கிழக்கு இணைந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் "நீதிக்கான நீள் பயணம்" எனும் மாபெரும் சர்வதேச
மாநாடு நேற்று மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. </p><p>தந்தை செல்வா கலையரங்கில்
நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய
இயக்குநர் ஸ்மிருதி சிங் மற்றும் ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ்
உள்ளிட்ட சர்வதேசப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.</p><h2>அஞ்சலி நிகழ்வு</h2><p>
</p><p>
மாநாட்டுக்கு முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்
தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணியாகத் தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த
பின்னரே மாநாடு ஆரம்பமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062659ef-c198-416c-87a9-7df1f845ad71/26-6a95163ee1b2b.webp' /></p><p>

குறிப்பாக, மாநாட்டு மண்டபத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுப்
பொருள்கள் மற்றும் அவர்கள் விரும்பிச் சேகரித்த நினைவுப் பொருள்கள்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
</p><p>
இத்தகைய சர்வதேச அளவிலான கவனயீர்ப்புகளும் போராட்டங்களும் தொடரும் சூழலில்,
அரசாங்கம் மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-batticaloa-have-been-suffering-for-20-years-1788152655"></link>
            <id>https://tamilwin.com/article/people-batticaloa-have-been-suffering-for-20-years-1788152655</id>
            <summary type="text">மட்டக்களப்பு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரையை அண்டிய
பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம்
எனும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரையை அண்டிய
பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம்
எனும் பெயர் சூட்டப்பட்டு உருவாக்கி குடியேற்றப்பட்டு மக்களிடம்
கையளிக்கப்பட்டது. </p><p>இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி
அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்டதை அடுத்து ஒரு சிலருக்கு
மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.
</p><p>
அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மீனவர் கிராமத்தில் ஒரு சிலர்
குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர்.</p><h2>அடிப்படை வசதிகள் இன்றி&nbsp;</h2><p>இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. மலசலகூடம், குடிநீர்,
மின்சாரம் இன்றி ஒரு நகர் பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்
வாழ்ந்து வருகின்ற முன்னாள் போராளியும் 2 பிள்ளைகளின் தந்தையும் கடற்றொழிலாளியுமான
அமர்தலிங்கம் நவராஜ் தெரிவிக்கையில்.
</p><p>
நான் பாலமீன்மடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டு பிறந்த நான் விடுதலைப் புலிகள்
அமைப்பில் இருந்து செயற்பட்டு புனர்வாழ்வு பெற்று வந்த பின்னர் திருமணம்
முடித்து நான் இருப்பதற்கு சொந்தமாக காணி, வீடு, மலசலகூடம் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef11231-6680-4412-b82f-463f11e80ee1/26-6a951257b4415.webp' /></p><p> பரல் வைத்து
கிணறு அமைத்து தண்ணீர் பெற்று வருகின்றோம். அத்துடன் எனது பிள்ளைகள் மனைவி தொழு
நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்வாறு அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் சில அரச சார்பற்ற
நிறுவனங்கள் மலசல கூடம் அமைத்து தருவதாக முன்வந்த போதிலும் பிரதேச செயலாளர்,
கிராம உத்தியோகத்தர் இது அரச காணி, கடல் பாதுகாப்பு வலையம் என தெரிவித்து
அனுமதிதர மறுத்து வருகின்றனர்.</p><p>

இங்கு அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு அருகிலுள்ள முழு அரச காணிகளையும் பெரிய
பணக்காரர்களுக்கு வழங்குகின்றன.</p><p> நாங்கள் ஏழைகள் காணி இல்லாமல் வீடு இல்லாமல்
வாழுகின்ற எங்களுக்கு ஒரு 10 பேச் காணி தருமாறு அரசாங்கத்திடம்
கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்ட 55 வயதுடைய பெண் கூறுகையில், நான் அடிப்படை
வசதி எதுவும் இன்றி பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் நானும் கணவரும் வாழ்ந்து
வருகின்றேன்.</p><p>இங்கு முதல் பிரச்சினை 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். இங்கு
இளம் யுவதிகள், வயது முதிர்ந்தோர் இருக்கின்றனர். அவர்களுக்கு மலசலகூடம்,
கிணறு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். </p><h2>அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்</h2><p>தேர்தல் காலத்தில்
மட்டும் அரசியல்வாதிகள் வருவார்கள் எங்களுக்கு வாக்கு போடுங்க அதை
செய்கின்றோம். இதை செய்கின்றோம் என்று தெரிவிப்பார்கள் இதுவரை எந்த அரசியல்
வாதிகளும் எதுவும் செய்ததும் இல்லை வந்ததும் இல்லை. </p><p>எனவே எங்களின் அடிப்படை
உரிமையான மலசலம், குடிநீர், மின்சாரத்தை செய்து தருமாறு ஜனாதிபதியிடம்
கேட்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad0119b-c27e-46ca-bd3e-83f6090af824/26-6a95125893d56.webp' /></p><p>எங்களுக்கு பக்கத்தில் அரச காணி அதிகமாக இருக்கின்றது. அதை பணம் படைத்தவர்கள்
பிடித்து வேலிநாட்டி ஒரு வியாபாரமாக விற்பனை செய்து பிழைக்கின்றனர்.</p><p>கேட்டால்
அவர்களுக்கு உரிய காணி என பொய் சொல்கின்றனர். எனவே நீண்ட காலமாக குடியிருக்கும் 30 குடும்பங்களுக்கு காணி
அனுமதிப்பத்திரங்கள் வழங்குங்கள் அல்லது மாற்றுக் காணிகளை வழங்குங்கள். இதில்
இருந்து யாரும் எழும்ப போவதில்லை என்றார்.</p><p>கடற்றொழிலாளியான 65 வயதுடைய வைரமுத்து அமிர்தலிங்கம் தெரிவிக்கையில், இந்த
கிராமத்துக்கு வந்து 10 வருடம் குடிப்பதற்கு குடி நீரை பெறுவதற்கு பணம் இல்லாத
காரணத்தால் நில மட்டத்தில் பரல் அமைத்து குடிநீர் பெற்று வருகின்றேன்.</p><p>இந்த
நிலையில் கிராம உத்தியோகத்தர் வந்து உங்களுக்கு காணிக்கு உறுதி இல்லை வேறு
இடத்தில் தருகிறேன் என தெரிவித்து ஒன்றும் தரவில்லை.</p><p>நாங்கள் இந்த ஓலை
குடிசையில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.&nbsp; குடிநீர், மலசல கூடம் இல்லை இவ்வாறு அரசாங்கம் எங்களுக்கு செய்கிறது.</p><p>நான் தோணியில் சென்று கஷ்டத்தின் மத்தியில் மீன் பிடித்து வருகின்றேன். இன்று
எனது வாழ்கையை பாருங்கள் கியுபார் பணமும் இல்லாது தத்தளிக்கிறேன்.&nbsp;</p><p> எனவே ஏதாவது நன்மையை செய்து உதவுங்கள். அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்.</p><h2>எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல்</h2><p>கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாயார் தெரிவிக்கையில், ஓலைக்குடிசையில் கடந்த 12
வருடமாக நானும் எனது மகனும் வாழ்ந்து வருகின்றோம்.</p><p>நான் வீட்டு வேலைக்கு
சென்று வேலை செய்து வருகின்ற வருமானத்தில் வாழ்ந்து வருவதுடன் மலசல கூடம்
குடிநீர். மின்சாரம் இன்றி குப்பி விளக்கில் எனது மகன் கல்வி கற்று
க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர் தரத்திற்கு சென்றுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34877ec8-5cae-4850-82b9-fb5013c04ad2/26-6a9512596e745.webp' /></p><p>இதுவரை எங்களுக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு ஆவணம் கூட
இதுவரை தரவில்லை.</p><p> உடைந்த ஓலைக்குடிசை கூட திருத்த முடியாது துன்பப்பட்டு
வாழ்ந்து வருகிறோம். எனவே அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவும் என்றார்.
</p><p>
இவ்வாறு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் நகர்ப்புறத்தில் இருக்கும்
இந்த மீனவர் எழுச்சி கிராம மக்களுக்கு அடிப்படை மனித உரிமை மீறல்
இடம்பெற்றுள்ளது </p><p>எனவே இந்த மக்களின் அடிப்படையான குடிநீர். மலசல கூடம்,
மின்சாரம் போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டியது அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கடப்பாடு ஆகும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள்
கருத்தில் கொண்டு இந்த ஏழை மக்களின் சொல்லோன துன்பங்களுக்கான தீர்வை
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d39f03-5208-465f-a483-ae315bf6c257/26-6a95142d71595.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f411c6b-231c-47a1-b02c-f442380df14d/26-6a95142e4821a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:43:19+00:00</updated>
        </entry>
    </feed>
