<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-27T23:37:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடிக்கடி பழுதடையும் அரச பேருந்து.. கடும் சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/students-delayed-getting-school-due-broken-bus-1785194363"></link>
            <id>https://tamilwin.com/article/students-delayed-getting-school-due-broken-bus-1785194363</id>
            <summary type="text">பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>குறித்த பேருந்து, பருத்திதுறையில் இருந்து மாலை 6 மணிக்கு சேவையை ஆரம்பித்து கட்டை காட்டில்
தரித்து காலையில் பருத்தித்துறையை நோக்கி சேவையில் ஈடுபடும்.
</p><p>
இந்த பேருந்தில் பாடசாலை மாணவர்கள், அரச
உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் என பலர் பயணம் செய்து
வருகின்றனர்.</p><p>இந்நிலையில், நேற்று (27.07.2026) காலை முதலாவது சேவையாக கட்டைக்காட்டிலிருந்து ஆரம்பித்து
பருத்தித்துறை நோக்கி செல்லும் வழியில் நாகர்கோயில் குடியிருப்பு பகுதியில்
பழுதடைந்ததால், அதில் பயணத்தினை மேற்கொண்ட மாணவர்கள் உட்பட பலரும் 45
நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதிக்கப்படும் பயணிகள்&nbsp;</h2><p> இதனால் பருத்தித்துறையில்
உள்ள பல உயர்தர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் வழமையாக கிளினிக்
சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் உட்பட அரச
உத்தியோகத்தர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dedb48c-7aa9-4a87-902d-3ef19adcaa4d/26-6a67eae52baa4.webp' /></p><p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 762 வழி சேவை மக்களின் நலன் கருதி
குடியிருப்புகள் ஊடாக தங்களுடைய சேவைகளை செய்து வருகின்ற போதும் இரவு தங்கல்
சேவைக்காக ஈடுபடும் குறித்த பேருந்து பழைய பேருந்தாக இருப்பதினால் அடிக்கடி காலை
நேரங்களில் பழுதடைந்து வருகின்றது.</p><p>

இதேவேளை பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்ற மாணவர்கள் கேவிலிலிருந்து
பருத்தித்துறை நோக்கி செல்கின்ற பேருந்து தாமதமாக செல்வதனால் பெரிதும்
பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
நேற்றைய தினம் நாகர்கோவில் பகுதியில் பேருந்து பழுதான நிலையில் பிறிதொரு
பேருந்து ஒரு மணித்தியாலம் தாமதித்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T23:34:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்திதுறை நகரசபை அமர்வில் வழங்கப்பட்ட முக்கிய அனுமதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-approvals-granted-municipal-council-1785193427"></link>
            <id>https://tamilwin.com/article/important-approvals-granted-municipal-council-1785193427</id>
            <summary type="text">பருத்திதுறை நகரசபை அமர்வு தவிசாளர் வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று(27.07.2026) பிற்பகல் 2 மணியளவில் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்திதுறை நகரசபை அமர்வு தவிசாளர் வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று(27.07.2026) பிற்பகல் 2 மணியளவில் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்றுள்ளது.</p><p>இதில் முதல் நிகழ்வாக கடந்த கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்
நிதி குழு கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களுக்கான சபை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><h2>வழங்கப்பட்ட அனுமதிகள்</h2><p>
மேலும் இலங்கை போக்குவரத்துச் சபையின் நேர கணிப்பாளருக்கான நவீன சந்தை
தொகுதியில் இடவசதி வழங்குவதற்கான சபை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் வெளிவாரியாக ஒப்பந்த
ஆட்களை பதிவு செய்வதற்கான சபை அனுமதி, பருத்தித்துறை மீன் சந்தையில் உள்ள
கூலர் கேள்வி கோரலுக்கான சபை அனுமதி மற்றும் சபை எல்லைக்குள் கழிவு நீர் வாய்க்காலுக்குள் கழிவுநீர் தவிர்ந்த ஏனைய
கழிவுகளை அகற்றுபவர்களுக்கு தண்டம் விதிப்பதற்கான அறிவித்தலுக்கான சபை
அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38ada52-a85a-4f7b-8ac8-d599c0c8009c/26-6a67e5b4cbdd8.webp' /></p><p>வீதியோரங்களில் வெட்டப்டுகின்ற மரங்கள் அகற்றப்படாமல் பிரதேச சபை அவற்றை
அகற்றுவதாகவும் அதற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை, இலங்கை தொலைத் தொடர்பு
நிறுவனம் ஆகியவற்றிடம் அறவீடு செய்வதற்கான சபை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.</p><p>அதுமட்டுமல்லாது வீதி விளக்குகளை
திருத்துவதற்கான நிதிக்கான அனுமதியும்,

Chopper மெஷின் கொள்வனவு செய்வதற்கான மேல் அதிக நிதிக்கான சபை அனுமதியும்,
தும்பளை - கிழக்கு பகுதியில் மலசலகூட அமைப்பில் பற்றாக்குறைக்கான நிதியை
வழங்குவதற்கான சபை அனுமதியும் சபையில் வழங்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் 195
மீட்டர் பொது பாதையாக பதிவு செய்யப்பட்டுள்ள பாதையானது தற்போது 121. 5
மீட்டர் காணப்படுவது தொடர்பாக மிக நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T23:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிட்ணன் செல்வராஜ் எம்.பி தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-meeting-held-under-mp-kitnan-selvaraj-1785192274"></link>
            <id>https://tamilwin.com/article/public-meeting-held-under-mp-kitnan-selvaraj-1785192274</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட்டார சபை அமைக்கும் மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.இதன் போது
கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட்டார சபை அமைக்கும் மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.</p><p>இதன் போது
கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,&nbsp;</p><p></p><h2>நம்பிக்கையில்லா பிரேரணை</h2><p> இன்று விசேஷமாக எதிர்க்கட்சிகள் ஆடிப்போயிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் தழம்பல்
நிலையில் இருக்கின்றன. </p><p>எதிர்க்கட்சிகள் ஒன்று சேர முடியாத நிலைமையிலும், ஒன்று
சேரும் நிலைமையிலும் இருக்கின்றன. இதற்கு இவர்கள் காலத்திற்கு காலம் ஒவ்வொரு
தலைப்புகளை தங்களுடைய கையிலே எடுக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82362964-52c3-4f20-9bf4-6aaff0ff1c54/26-6a67e12894063.webp' /></p><p> எடுக்கும் எந்தவொரு தலைப்பும்
எதிர்க்கட்சிக்கு பிரயோசனமாக போகப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும்.
</p><p>
இதில் நாங்கள் விசேஷமாக அண்மை நாட்களில் நீதி அமைச்சருக்கு எதிராக மகாணசபை
சிறைச்சாலை தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து,
அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம். அந்த
நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சிகள் சுக்குநூறாகின.</p><p></p><h2>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தெரிவு</h2><p> </p><p>60-க்கும்
குறையாத எதிர்க்கட்சி ஆசனங்களைக் கொண்ட எதிர்க்கட்சி, 36-க்கு வரையறுத்தது.
அதுமட்டுமல்ல எதிர்க்கட்சியிலே அமர்ந்திருந்த ஒரு நாடாளுமன்ற
உறுப்பினரும் சஜித் அணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95db1e01-c565-462e-8c85-3b715cecc688/26-6a67e1296b784.webp' /></p><p>அடுத்த கட்டமாக இவர்கள் தூக்கியிருப்பது உயர்நீதிமன்ற நீதியரசர்களின்
தெரிவு சம்பந்தமாகவும், அடுத்து அவர்களுடைய பதவிகாலம் நீடிப்பு சம்பந்தமான
கருத்தியலையுமாகும்.</p><p>ஆனால், இலங்கையின் 1978-ஆம் ஆண்டு
யாப்பின் பிரகாரம் ஒருசில நீதிமன்றங்களுக்கு மட்டுமே, அந்த 78-ஆம் ஆண்டு
யாப்பின் பிரகாரம் நீதியரசர்களை தேர்வு செய்யக்கூடிய கட்டளைகள் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T23:15:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நிறுவனத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! நான்காவது இடத்துக்கு முன்னேற்றம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-records-fourth-biggest-improvement-1785193804"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-records-fourth-biggest-improvement-1785193804</id>
            <summary type="text">சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. </p><p>
இலங்கை, முதலீட்டாளர் உறவுகள் (Investor Relations) மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) ஆகியவற்றில் விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளது.
</p><p>
சர்வதேச நிதி நிறுவனத்தால் (IIF) வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, இத்துறையில் மிக அதிக முன்னேற்றத்தை அடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>IIF இன் அறிக்கை</h2><p>IIF இன் “Investor Relations and Debt Transparency Report 2026: The Transparency Dividend” அறிக்கையின்படி, உலகின் வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகள் 57 இல் இலங்கையின் ஒட்டுமொத்த முதலீட்டாளர் உறவுகள் புள்ளி எண்ணிக்கை 2025 இல் 37.33 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2026 இல் 43.67 வரை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. </p><p>

இத்துறையில் 6.3 புள்ளிகள் என்ற பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இலங்கை, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக "வேகமாக முன்னேறும் நாடுகளின்" பட்டியலில் இணைந்துள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34d0447-a1e1-41d6-a82f-5bd73cc64657/26-6a67e54ebcafc.webp' /></p><p>கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) தரவுகள் மற்றும் கொள்கைகளை முறையாகப் பரப்புரை செய்தமையே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><h2>
கடன் வெளிப்படைத்தன்மை</h2><p>
2025 இல் 19 ஆம் இடத்தில் இருந்த இலங்கை, கடந்த ஆண்டில் பின்பற்றிய முறைசார்ந்த கடன் முகாமைத்துவ நடைமுறைகள் காரணமாக 2026 இல் 5 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.
</p><p>
இந்த முன்னேற்றத்திற்கு அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் ஏனைய அரசு நிறுவனங்கள் இணைந்து முதலீட்டாளர்களுடன் பேணிய முறைசார்ந்த உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடன் தகவல்களை வழங்கியமை பெரிதும் உதவியுள்ளது.
</p><p>
</p><p></p><p>இலங்கை அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் சர்வதேச மூலதனச் சந்தையில் நாட்டின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, முதலீட்டாளர் தளத்தை விரிவுபடுத்தவும், கடன் வாங்கும் செலவைக் குறைக்கவும் எதிர்காலத்தில் இது பெரும் பக்கபலமாக அமையும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T23:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approves-retirement-age-high-court-judges-1785192518"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approves-retirement-age-high-court-judges-1785192518</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
</p><p>
குறித்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை அதன்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>

அதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும்.</p><p></p><h2>14 நாட்கள் அவகாசம்..&nbsp;</h2><p> </p><p>வர்த்தமானி வெளியிடப்பட்டு குறைந்தபட்சம் 14 நாட்கள் கடந்த பிறகு, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9fa03a2-6459-4e8c-810a-dfa13b45c40b/26-6a67e141b4135.webp' /></p><p> </p><p>நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 7 நாட்களுக்குள், எந்தவொரு பிரஜைக்கும் தொடர்புடைய வரைவை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். </p><p>உயர் நீதிமன்றம் அந்த மனு மீதான தனது கருத்தை 14 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் வழங்க வேண்டும்.

அதன்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதிலிருந்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடரவும், அது குறித்த அறிவிப்பை வெளியிடவும் சுமார் 35 நாட்கள் ஆகும் என்று கருதப்படுகின்றது. </p><p>அதன் பிறகு, அது குறித்த நாடாளுமன்ற விவாதமும், தேவைப்பட்டால் பொதுமக்கள் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் - சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள நான்கு பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-four-named-as-suspects-1785190944"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-four-named-as-suspects-1785190944</id>
            <summary type="text">அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 10 சிறை அதிகாரிகளும் 22 கைதிகளும் கொல்லப்பட்டனர். மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p></p><h2>பொலிஸார் தகவல்&nbsp;&nbsp;</h2><p>

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (27) நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46ef2a6-3eab-471c-b504-4bcd5b73c27b/26-6a67dbba4beb9.webp' /></p><p>மேலும் அரசுத் தரப்பு சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்னிலையானது.&nbsp;</p><p>

அதன்போது, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சுபுன் மதுசங்க என்ற ஹீனட்டியன சுபுன், அஷான் பெர்னாண்டோ என்ற களு மல்லி, சமீர சம்பத் என்ற பபா மற்றும் ஷேன் திலன் சில்வா ஆகியோர் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களாக தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-27T22:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/icc-faces-challenge-in-choosing-new-prosecutor-1785187606"></link>
            <id>https://tamilwin.com/article/icc-faces-challenge-in-choosing-new-prosecutor-1785187606</id>
            <summary type="text">சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை அரசுத்தரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய கரீம் கான் கடுமையான நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை அரசுத்தரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய கரீம் கான் கடுமையான நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்
பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இதன் காரணமாக, புதிய அரசுத்தரப்பு சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதில் சர்வதேச
குற்றவியல் நீதிமன்றம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின்&nbsp;இராஜதந்திர அழுத்தம்</h2><p>
</p><p>
மேலும், அமெரிக்காவின் கடுமையான இராஜதந்திர அழுத்தம் மற்றும் உறுப்பு நாடுகள்
தொடர்ச்சியாக அமைப்பிலிருந்து வெளியேறி வருவது நீதிமன்றத்திற்கு மேலும்
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
வெனிசுலா, புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, சாட்
நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி வெளியேறுவதற்கான
நடவடிக்கைகளைத் தொடங்கிய ஐந்தாவது நாடாக மாறியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2790877b-c4d7-4a59-9514-70199b47b549/26-6a67cec6d0fb2.webp' /></p><p>இந்த நாடுகள் அனைத்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேல்லை நைஜீரிய அல்லாத
நாடுகளுக்கு எதிராக மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
</p><p>
அதேவேளையில், நீதிமன்றத்தின் 125 உறுப்பு நாடுகளில் 82 நாடுகள் வாக்களித்து
கரீம் கானைப் பதவியிலிருந்து நீக்கின.
</p><p>
புதிய சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் குறித்து இன்னும்
இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றபோதிலும், வரும் புத்தாண்டுக்கு முன்பாக
இதற்கான வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்</h2><p>
</p><p>
காசாவில் போர் குற்றங்கள் புரிந்ததாக இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராகப்
பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அமெரிக்கப்
படைகள் தொடர்பான விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்றும் வொஷிங்டன் தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறது.
</p><p>
மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து நாடுகள் வெளியேற அமெரிக்க
அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7036443f-ec18-4ec3-8c28-42885686f69a/26-6a67cec785006.webp' /></p><p>
</p><p>
புதிய சட்டத்தரணி தேர்ந்தெடுக்கப்படும் வரை, ஃபிஜி நாட்டைச் சேர்ந்த நஜாத்
ஷமீன் கான் மற்றும் செனகல் நாட்டைச் சேர்ந்த மாமே மண்டியாக் நியாங் ஆகிய
இரண்டு துணை அரசுத்தரப்பு சட்டத்தரணிகளும் இந்த அலுவலகத்தைத் தற்காலிகமாக
நிர்வாகம் செய்வார்கள்.
</p><p>
இத்தகைய பின்னடைவுகளுக்கு மத்தியிலும், "மனிதகுலத்தின் மனசாட்சியைப் உலுக்கும்
குற்றங்களுக்கு நீதியை வழங்கி, தவறு செய்தவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதில்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உறுதியுடன் தொடர்ந்து செயல்படும்" என்று
நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனக் கனிமங்களுக்கு அமெரிக்காத் தடை - ட்ரம்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-ban-on-chinese-minerals-pressure-on-trump-1785186522"></link>
            <id>https://tamilwin.com/article/us-ban-on-chinese-minerals-pressure-on-trump-1785186522</id>
            <summary type="text">சீனாவில் இருந்து அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அரிதான பூமி காந்தங்கள்
இறக்குமதி செய்வதை ஜனவரி 1, 2027-க்குள் முற்றிலும் நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி
டொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் இருந்து அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அரிதான பூமி காந்தங்கள்
இறக்குமதி செய்வதை ஜனவரி 1, 2027-க்குள் முற்றிலும் நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தித் திறன் தேவையானதை விட மிகக்
குறைவாக இருப்பதால், இந்த கெடுவைச் சந்திப்பதில் பெரும் சவால் எழுந்துள்ளது.</p><p></p><h2>உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை</h2><p>
சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள்
மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான கனிமங்களை வாங்குவதைத் தவிர்க்க
பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் எவ்வித விலக்கும்
அளிக்கப்படாது என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545c18ec-4dc5-4dff-b318-cafd19c354dd/26-6a67cb9a9168a.webp' /></p><p>
இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.

2025-ல் அமெரிக்காவின் அரிதான பூமி காந்தங்களின் தேவை சுமார் 48,000 மெட்ரிக் டொன்கள் ஆகும்.</p><p>ஆனால், அமெரிக்க உள்நாட்டு நிறுவனங்களால் 300 மெட்ரிக் டொன்கள் மட்டுமே விநியோகிக்க முடிந்தது. மேலும், அமெரிக்கா 2015-க்குப் பிறகு டங்ஸ்டனையும், 1959-க்குப் பிறகு டான்டலத்தையும் உற்பத்தி செய்யவில்லை.</p><p>

இவற்றை மீண்டும் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் இன்னும் தொடக்கக் கட்டத்திலேயே உள்ளன. உலகளவில் கனிமங்களைச் சுத்திகரிக்கும் துறையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.</p><p></p><h2>கனிமச் சுத்திகரிப்பு</h2><p>
</p><p>
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை பில்லியன் கணக்கில் டொலர்களை முதலீடு
செய்திருந்தாலும், கனிமங்களைச் சுத்திகரித்து காந்தங்களாக மாற்றும்
தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்குவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என
நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p><p>
சீனா மானியங்கள் வழங்கி குறைந்த விலையில் கனிமங்களைச் சந்தையில் விற்பனை
செய்வதால், அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்கள் பொருளாதார ரீதியாகச் செயல்பட
கடினமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a86864-293f-45fa-83b4-7f5ae1edbaa2/26-6a67cb99e0da8.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா கனிமங்களைச் சேமித்து வைப்பதற்காக 12 பில்லியன் டொலர் மதிப்பிலான
'புரொஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தை ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம்
தொடங்கியுள்ளது.
</p><p>
ஆரம்பக் கட்டத்தில் சீனாவில் இருந்தும் கனிமங்களை வாங்க வேண்டியிருக்கும்
என்பதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p>

அமெரிக்க உற்பத்தி இயல்பு நிலைக்கு வரும் வரை தென்கொரியா, ஜப்பான் போன்ற நட்பு
நாடுகளுடன் இணைந்து கனிம விநியோகத்தைப் பூர்த்தி செய்ய நிபுணர்கள்
பரிந்துரைக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - மூவர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-america-three-people-tragically-died-1785185311"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-america-three-people-tragically-died-1785185311</id>
            <summary type="text">அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவின்
போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவின்
போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு வயது குழந்தை உட்பட 4 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சியாட்டில் நகரின் 'ஸ்பேஸ் நீடில்' பகுதியின் கீழ் நடைபெற்ற 'பைட் ஆஃப்
சியாட்டில்' உணவுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த போது
இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
இரண்டு சந்தேக நபர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கி மோதலே இதற்குக் காரணம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.</p><p>

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் பொலிசிடம் சரணடைந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றொரு நபர் சம்பவ
இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d7882c-2a40-412c-9221-b76338d206d6/26-6a67c63b391f1.webp' /></p><p>

தப்பியோடிய நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தில் 19 மற்றும் 44 வயதுடைய இரு ஆண்களும், 56 வயதுடைய பெண் ஒருவரும்
உயிரிழந்துள்ளனர்.
</p><p>
காயமடைந்த 2 வயது குழந்தை உட்பட 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பயங்கரமான வன்முறை</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சியாட்டில் நகரின் மேயர் கேட்டி வில்சன்
(Katie Wilson),</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a048c561-d5f7-4008-9ad7-5f9c35423072/26-6a67c63a8384a.webp' /></p><p> </p><p>"இது ஒரு பயங்கரமான வன்முறைச் சம்பவம். நமது நகரிலும்
நாட்டிலும் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவது
பெரும் கவலையளிக்கிறது," என தெரிவித்துள்ளார்.
</p><p>
உணவுத் திருவிழாவில் கடை அமைத்திருந்த ஒருவர் நேரலை செய்து கொண்டிருந்த போது
இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததால், மக்கள் அலறியடித்து ஓடும் பயங்கரக்
காட்சிகள் கெமராவில் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மாணவர்களின் போராட்டத்திற்கு லண்டனில் இருந்தும் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/london-supports-indian-students-protest-1785184292"></link>
            <id>https://tamilwin.com/article/london-supports-indian-students-protest-1785184292</id>
            <summary type="text">இந்தியாவில் &#039;காஃக்ரோச் ஜனதா கட்சி&#039; தலைமையிலான மாணவர் அமைப்பினர் நடத்திய
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் 'காஃக்ரோச் ஜனதா கட்சி' தலைமையிலான மாணவர் அமைப்பினர் நடத்திய
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா
துன்பெர்க் லண்டனில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
</p><p>
இந்தியாவில் கல்வி முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தியும் புதுடெல்லியில் மாணவர்கள் பல நாட்கள் தீவிரப்
போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக இந்தியாவின் கல்வி அமைச்சர் தனது பதவியிலிருந்து விலகினார்.</p><p></p><h2>இந்தியக் கல்வி அமைச்சரின் பதவி விலகல்</h2><p>
லண்டனின் டிராஃபால்கர் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் உரையாற்றிய
கிரெட்டா துன்பெர்க்,</p><p> "இந்திய மாணவர்களின் போராட்டம் நம் அனைவரையும்
பெருமையடையச் செய்துள்ளதுடன், புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/209faf3b-a785-4b67-9a12-c94d5e62505b/26-6a67c2619b190.webp' /></p><p>
</p><p>
மக்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்த்து நிற்கும் போது என்ன சாதிக்க முடியும்
என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். </p><p>மக்களின் உண்மையான அதிகாரத்தை அவர்கள்
உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்," என பாராட்டியுள்ளார்.
</p><p>
இந்திய மாணவர்களின் நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான இந்த போராட்டம்
ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமானது என்று குறிப்பிட்ட அவர், இந்திய இளைஞர்களுடன்
தாம் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T21:58:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி விவகாரம்.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி வெளியிட்டுள்ள பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-special-facebook-update-1785176501"></link>
            <id>https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-special-facebook-update-1785176501</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமை மற்றும் நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் 
கஜேந்திரகுமார் பொன்னம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமை மற்றும் நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், "இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும்.</p><p></p><h2>ஜனநாயக விரோதமான செயல்</h2><p>
</p><p>
எனவே,
நாளை நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபைக்கான புதிய உபதவிசாளர் தெரிவு தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பாக உள்ள ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டை ஆதரித்து, தமிழ்த் தேசிய பேரவை செயற்படும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba621c7-b7e2-46ac-93ea-7f152f2a1bf2/26-6a67c06cd257d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T21:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த குடும்பத்திற்கு பதற்றத்தை ஏற்படுத்தும் நீதிபதிகள் விவகாரம் - முடிவில் மாறாத அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-anura-government-cid-inquiry-1785177615"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-anura-government-cid-inquiry-1785177615</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.&amp;nbsp;
குறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>
</p><p>குறிப்பாக, இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதா தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு எட்ட முடியும் என அரசாங்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படியே, இந்த மசோதா முன்வைக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறான கண்டனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படலாம். அதனாலேயே இவ்வாறு அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qQPDt_r7lfI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T21:55:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் - 1405 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/congo-ebola-death-toll-reaches-1-405-1785182644"></link>
            <id>https://tamilwin.com/article/congo-ebola-death-toll-reaches-1-405-1785182644</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,200 ஆக அதிகரித்துள்ளதுடன்&amp;nbsp; 1,40...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,200 ஆக அதிகரித்துள்ளதுடன்&nbsp; 1,405 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள்
தெரிவிக்கின்றன.
</p><p>
அங்கு பரவி வரும் 17ஆவது எபோலா அலையைக் கட்டுப்படுத்த மருத்துவக் குழுவினர்
தீவிரமாகப் போராடி வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 1,000
பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>எபோலா வைரஸ்</h2><p>

கடந்த மே 15 அன்று கண்டறியப்பட்ட இந்த எபோலா அலை, 'புண்டிபுக்யோ' என்ற வைரஸ்
வகையால் ஏற்படுகிறது.

இந்த குறிப்பிட்ட வகை எபோலா வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ
அல்லது சிகிச்சைகளோ இல்லை என்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e917dd-2430-4749-b889-25a5563f3f33/26-6a67bce2499f6.webp' /></p><p>பாதிக்கப்பட்ட வழக்குகளில் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தெற்கு
சூடான் மற்றும் உகாண்டா எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இடூரி மாகாணத்திலேயே
பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. </p><p>மேலும் இந்த
வைரஸ் இதுவரை 5 மாகாணங்களுக்குப் பரவியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் நிலவும் போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும்
மருத்துவ பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்கள்
நிலவுகின்றன.</p><p></p><h2>புதிய தடுப்பூசி</h2><p>அத்துடன், ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து சில மருத்துவமனை ஊழியர்கள்
மேற்கொண்டு வரும் போராட்டங்களும் தடுப்பு நடவடிக்கைகளைப் பாதித்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a73f020-0d42-4b28-b0de-c32314c641fe/26-6a67bce2ef8b4.webp' /></p><p>இந்த
எபோலா அலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எபோலா 'புண்டிபுக்யோ' வைரஸைக் கட்டுப்படுத்த ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட
பல்வேறு சர்வதேச ஆய்வுக் குழுக்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.</p><p>

ஆக்சுஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள சோதனை அளவிலான புதிய தடுப்பூசி
முதற்கட்டமாகச் தன்னார்வலர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T20:23:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக அச்சுறுத்தலுக்கு மத்தியில் அநுர அரசு எடுத்த அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-threat-anura-govt-takes-bold-step-1785181663"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-threat-anura-govt-takes-bold-step-1785181663</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கூட்டங்கள் மற்றும் சம்மேளனங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி சட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கூட்டங்கள் மற்றும் சம்மேளனங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஒரு அவசரமான ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.</p><p>

அதேவேளை தேரர்களுடைய சங்க சம்மேளனம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த சங்க சம்மேளனமானது ஐக்கிய தேசிய கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அவ்வாறெனில் இந்த சங்க சம்மேளனத்தின் பின்னணியிலும் ஒரு அரசியல் தலையீடு காணப்படுவதுடன் தற்போதைய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த சம்மேளனம் செயற்படுவது புலனாகிறது. </p><p>

இது இவ்வாறு இருக்க தெவிநுவர - உற்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் 769 ஆவது எசல மகா பெரஹரவிற்கு பாதாள உலகத்தினரிடமிருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் காவடி நடனத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த அரசாங்கமானது ஒரு காவடி நடனத்தைக் கூட உரிய பாதுகாப்புடன் நடத்த முடியாது என்று கூறுவதிலிருந்து இது எப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கும் என்றொரு கேள்வி எழுவதாக நாமல் ராஜபக்ச தனது மேடைப் பேச்சொன்றில் தெரிவித்திருந்தார்.
</p><p>
இந்த விடயங்கள் குறித்து மேலதிக விபரங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாக பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/43yk7cEO69E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T20:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுஞ்சாலைகளை கட்டுக்குள் கொண்டுவந்த சூடான் இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudanese-army-takes-control-of-highways-1785174289"></link>
            <id>https://tamilwin.com/article/sudanese-army-takes-control-of-highways-1785174289</id>
            <summary type="text">சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமையும் முக்கிய நகரமான எல்-ஒபெயினையும்
இணைக்கும் முக்கிய அதிவேக நெடுஞ்சாலையைத் தங்கள் படை முழுமையாகக்
கைப்பற்றியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமையும் முக்கிய நகரமான எல்-ஒபெயினையும்
இணைக்கும் முக்கிய அதிவேக நெடுஞ்சாலையைத் தங்கள் படை முழுமையாகக்
கைப்பற்றியுள்ளதாகச் சூடான் இராணுவம் அறிவித்துள்ளது.
</p><p>
எதிரணித் துணை இராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளின் (RSF) முற்றுகையில்
இருந்த எல்-ஒபெயித் நகரைக் காப்பாற்றவும், RSF படைகளின் முன்னேற்றத்தைத்
தடுக்கவும் இந்த வெற்றி சூடான் இராணுவத்திற்குப் பெரிதும் உதவும்.</p><p></p><h2>நெடுஞ்சாலைகள் முடக்கம்</h2><p>

கடந்த இரண்டு நாட்களாக RSF படைகளுடன் நடைபெற்ற கடுமையான மோதல்களுக்குப் பிறகு,
இந்த நெடுஞ்சாலையில் உள்ள பல நகரங்களையும் கிராமங்களையும் மீட்டுள்ளதாகச்
சூடான் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/359320e1-29f6-4e87-8e18-2539ed6710b6/26-6a679b9e0831d.webp' /></p><p>குறிப்பாக உம் குர்ஃபா மற்றும் ஜாரிகாக் ஆகிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கையின்
போது எதிரணிக்கு பெரும் உயிர்ச்சேதமும் தளவாடச் சேதமும் ஏற்படுத்தப்பட்டதாக
இராணுவம் அறிவித்துள்ளது.
</p><p>
இந்த முக்கிய நெடுஞ்சாலையைக் கைப்பற்றியதன் மூலம் தலைநகருக்கும் கொர்தோஃபான்
பகுதிக்கும் இடையே பல மாதங்களுக்குப் பிறகு நேரடிப் போக்குவரத்துத் தொடர்பு
மீண்டும் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>ஐ.நா. தகவல்கள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன், இராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் எரிபொருள்களை விரைவாக
எல்-ஒபெயித் நகரத்திற்குக் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aad449c-f57b-4bf5-86b2-9da44e0d87e6/26-6a679b9d580cb.webp' /></p><p>
RSF படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியப் பாதை கை மாறியுள்ளதால்,
அந்த நகரில் உள்ள சுமார் 5 இலட்சம் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மனிதநேய
உதவிகள் இனி எளிதாகச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார்
40,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1.4 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள்
வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் உலக சுகாதார நிறுவனம்
மற்றும் ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-disappeared-persons-held-in-jaffna-1785168571"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-disappeared-persons-held-in-jaffna-1785168571</id>
            <summary type="text">எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்த
"வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்
சங்கம்" ஏற்பாடு செய்துள்ளது.</p><p>இந்த மாநாடு தொடர்பான ஆதரவு, பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.</p><p></p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்</h2><p>
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவதற்கோ அல்லது
நீதியைப் பெற்றுத் தருவதற்கோ எந்தவித நம்பிக்கைக்குரிய பொறிமுறைகளும் இல்லை
என்பதையும், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதையும் வலியுறுத்தும்
வகையில் இந்த மாநாடு அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f692d741-d52c-4a7c-b43f-1c344203cce6/26-6a6786e8b4233.webp' /></p><p>
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள்,
சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் , வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர்
தியாகராஜா நிரோஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91b113f7-5821-4412-bea4-28acd064f9d7/26-6a6786e9a3e59.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:26:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளக்கரையில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு - மேலதிக விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-elderly-man-body-recovered-from-pond-1785166111"></link>
            <id>https://tamilwin.com/article/an-elderly-man-body-recovered-from-pond-1785166111</id>
            <summary type="text">அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலலுவெவ குளக்கரைப்
பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலலுவெவ குளக்கரைப்
பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(26.07.2026) மாலை
பிரதேச மக்களின் உதவியுடன் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>
</p><p>
உயிரிழந்தவர் அனுராதபுரம் - நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 79
வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aecfc3ac-b791-45f7-be5a-2323d01f9730/26-6a6795c009126.webp' /></p><p>நீதிவான் விசாரணைகளுக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் கெக்கிராவ
வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: 100ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monsoon-floods-pakistan-death-toll-crosses-100-1785174781"></link>
            <id>https://tamilwin.com/article/monsoon-floods-pakistan-death-toll-crosses-100-1785174781</id>
            <summary type="text">பாகிஸ்தானில் ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை,
வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானில் ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை,
வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர்
முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>

தொடர் மழையால் 344-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான
வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வார இறுதியில் மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்
எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
</p><p>
தேசிய பேரிடர் முகாமைத்துவ அதிகார சபையின் தகவலின்படி, மழை தொடர்பான
சம்பவங்களால் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அதிகபட்சமாக 55 பேரும், பஞ்சாப்
மாகாணத்தில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>17 நிவாரண முகாம்கள்</h2><p>

உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீடுகள் மற்றும் கூரைகள் இடிந்து
விழுந்ததால் பலியாகியுள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரும், பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமுமான
லாகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைக்க குறைந்தது 17 நிவாரண
முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c287ebc-db67-4c1a-9e36-a3297b8d1802/26-6a679c8f951cc.webp' /></p><p>
</p><p>
லாகூர் மற்றும் குஜ்ரன்வாலா பிரிவுகளில் சுமார் 400 சதுர கிலோமீட்டர்
பரப்புக்கு நீரின் தாக்கம் பரவியுள்ளதால், நிலமை உள்நாட்டுக் கடல் போலக்
காட்சியளிப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப், வெள்ள நீரைக் வெளியேற்ற மீட்புக்
குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதன்கிழமை முதல் இஸ்லாமாபாத், மேல் பஞ்சாப், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளில்
புதிய மழைப் பொழிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
பருவமழைக்காலம் செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கும் என்பதால், தாழ்வான
பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள்
அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்காவின் உளவு விமானம் P-8A Poseidon]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-spy-plane-p8a-poseidon-sri-lanka-1785173865"></link>
            <id>https://tamilwin.com/article/us-spy-plane-p8a-poseidon-sri-lanka-1785173865</id>
            <summary type="text">இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான 6ஆவது காராட் (CARAT Sri Lanka 2026) கூட்டுப் பயிற்சி திருகோணமலை மற்றும் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான 6ஆவது காராட் (CARAT Sri Lanka 2026) கூட்டுப் பயிற்சி திருகோணமலை மற்றும் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. </p><p>இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, அவசர கால மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.</p><p> இதில் அமெரிக்க கடற்படையின் அதிநவீன P-8A போஸைடான் கடல்சார் ரோந்து விமானம் மற்றும் SLNS கஜபாகு கப்பல் ஆகியவை விசேட கண்காணிப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p> மேலும், இரு நாட்டுப் படைகளும் இணைந்து கடல்சார் கண்காணிப்பு, குண்டு வெடிப்புச் செயலிழப்பு மற்றும் சந்தேகத்திற்குரிய கப்பல்களைச் சோதனையிடும் (VBSS) பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.</p><p> 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுப் பயிற்சி, வாஷிங்டன் மற்றும் கொழும்பு இடையிலான நீண்டகால பாதுகாப்புப் பங்களிப்பையும் இருதரப்பு உறவையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Kktuo41eSFA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:49:24+00:00</updated>
        </entry>
    </feed>
