<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-26T13:20:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியில் முதன்மையானது..! முன்னாள் பிரதம செயலாளர் இளங்கோவன் நெகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-prime-secretary-elangovan-lainchi-1787748040"></link>
            <id>https://tamilwin.com/article/former-prime-secretary-elangovan-lainchi-1787748040</id>
            <summary type="text">சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகணமே ஆரம்ப கல்வியை கட்டமைத்த
முதன்மை பெற்ற மாகாணமாக விளங்குகிறது என முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகணமே ஆரம்ப கல்வியை கட்டமைத்த
முதன்மை பெற்ற மாகாணமாக விளங்குகிறது என முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் தெரிவித்தார்.
</p><p>
இன்று(26.08.2026) புதன்கிழமை யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் முன்னாள்
வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தணிகாசலம் பிள்ளை எழுதிய இரு நூல்
வெளியீடு விழாவில் கலந்து கொண்டு தலையை உரையை ஆற்றும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
</p><h2>
ஆரம்ப பிரிவு கல்வியில் முன்னேற்றம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

நூலாசிரியர் தணிகாசலம் பிள்ளை எங்களுடைய ஆசான்
இந்தக் கல்லூரியின் மைந்தன் 15 நூல்களை எழுதி இருக்கிறார் இரு நூல்களை
வெளியிட்டு இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9de6bf0-af6d-42ee-9551-747003c47eec/26-6a8edef0cd9df.webp' /></p><p>

எமது வடக்கு கல்விப் புலமானது கல்வியால் உயர்ந்த ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்ப
வேண்டும் என்ற தூர நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருப்பதால் இவ்வாறான நூல்
வெளியீடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
</p><p>
குறிப்பாக ஆரம்ப பிரிவு கல்வியை கட்டமைத்த ஒரு மாகாணமாக வடமாகாணமே முதன்மை
வருகின்ற நிலையில் அதற்கு அமரர் டிவகலாவின் பங்கு காத்திரமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78fead35-5000-4fcc-ad00-128dda2ed9d3/26-6a8edef1b464f.webp' /></p><p>
</p><p>
நூல் ஆசிரியர் தணிகாசலம் பிள்ளை சிறந்த கல்விமான் தனது தள்ளாடும் வயதிலும்
கல்விக்கும் சமூகத்திற்கும் பல்வேறு சேவையை ஆற்றி வருகிறார்.
</p><p>
ஆகவே வடக்கு மாகாணம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இவ்வாறான பல நூல்கள்
வெளிவர வேண்டும் என்றார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T12:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் மூழ்கும் நேபாளம் - சீனா: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flooding-in-nepal-china-1787747463"></link>
            <id>https://tamilwin.com/article/flooding-in-nepal-china-1787747463</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட
கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக
ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட
கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக
ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் மின்
உற்பத்தி நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
</p><p>
இந்த சம்பவம் இன்று(26.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

​போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்தின் ரசுவா
மாவட்டத்தில் வீடுகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச்
செல்லப்பட்டுள்ளன.
</p><p>
ஆற்று நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்ட
ஹெலிகொப்டர்களால் தரையிறங்க முடியாத நிலை காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83af8cf3-ee31-4c02-a81e-d2a8cc505139/26-6a8edce5afdc7.webp' /></p><p> </p><p>பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>

மீட்பு பணியை தீவிரப்படுத்தும் சீன அரசு</h2><p>இதேவேளை, எல்லையோரப் பகுதியான கியிரோங் எல்லைக் கடவையில் ஏற்பட்ட நிலச்சரிவு
காரணமாகப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகள் முற்றாகத்
துண்டிக்கப்பட்டுள்ளதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc9f3a43-d6f7-42b5-b236-993cf246edb4/26-6a8edce675589.webp' /></p><p>

காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு சீன ஜனாதிபதி ஷீ
ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

​</p><p>இந்த திடீர் வெள்ளப் பெருக்கினால் நேபாளத்தின் நீர்மின் உற்பத்தி கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் மொத்த நீர்மின் உற்பத்தியில் 12
சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி முடங்கியுள்ளது.
</p><p>
கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு
நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gpoTsnvUrPA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த தாய்க்கு நேர்ந்த கதி - தமிழர் பகுதியில் பெரும் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-who-died-in-thalaimannar-1787746911"></link>
            <id>https://tamilwin.com/article/mother-who-died-in-thalaimannar-1787746911</id>
            <summary type="text">தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று(26.08.2026) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
குடும்ப பிரச்சினையால் நேர்ந்த கதி</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கணவன் - மனைவி இருவரும் சில காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ஒன்றிணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d92d73e-f2ac-44b8-bed6-b8795250c854/26-6a8edad4e6560.webp' /></p><p> </p><p>

இதையடுத்து, தங்களது இரண்டு பிள்ளைகளுடன் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை கணவரால் கத்தியால் குத்தப்பட்டதில் இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து, படுகாயமடைந்த பெண் உடனடியாக தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><h2>
கணவர் கைது</h2><p>
உயிரிழந்தவர் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த கோகுலன் சோனியா (28 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய கணவர், தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdd61d6f-58fa-46cf-8a5d-0e863c9f732f/26-6a8edad5d5449.webp' /></p><p>

இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T12:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து புறப்பட்ட தொடருந்தில் மோதிய கார் - 17 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-collides-with-train-departing-from-colombo-1787745974"></link>
            <id>https://tamilwin.com/article/car-collides-with-train-departing-from-colombo-1787745974</id>
            <summary type="text">கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளம் வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று(26.08....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளம் வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த விபத்து இன்று(26.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>


கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தொடருந்து, தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட போது காரை மோதியுள்ளது. </p><h2>

17 வயது இளம்பெண் உயிரிழப்பு</h2><p>
இதன்போது, காரில் உள்ளே இருந்த 17 வயது இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30063af-374c-4f21-b842-f9d42845de55/26-6a8ed6f1d987d.webp' /></p><p> </p><p>

அத்துடன், இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prayers-for-the-disappeared-in-jaffna-1787745403"></link>
            <id>https://tamilwin.com/article/prayers-for-the-disappeared-in-jaffna-1787745403</id>
            <summary type="text">யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பதாகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது பிரார்த்தனைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பதாகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது பிரார்த்தனைகளை எழுதி ஒட்டியிருக்கிறார்கள்.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (25.08.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
</p><p>
இந்நிகழ்வில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் தங்களது பிரார்த்தனைகளை துண்டுச் சீட்டுகளில் எழுதி ஒட்டியிருப்பதை காணக் கூடியதாக இருந்தது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T11:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழி விவகாரம் - விசாரணை தீவிரப்படுத்துமாறு தமிழரசுக் கட்சி பிரமுகர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-must-be-in-chemmani-trincomalee-official-1787741768"></link>
            <id>https://tamilwin.com/article/justice-must-be-in-chemmani-trincomalee-official-1787741768</id>
            <summary type="text">பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் நிலை என்ன என்பதை
அறியாமல் வாழும் குடும்பங்களின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டிய பொறுப்பு அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் நிலை என்ன என்பதை
அறியாமல் வாழும் குடும்பங்களின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என இலங்கை தமிழரசுக்
கட்சியின் திருகோணமலை மாவட்ட பிரமுகர் குமார் ஜெயக்குமாரன்
தெரிவித்துள்ளார்.</p><p>இன்று(26.08.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள்</h2><p>அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, </p><p>இது ஒரு அரசியல் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படக்கூடாது. இது மனித
உயிர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்களின் உரிமைகள்
மற்றும் உண்மையை அறியும் உரிமை தொடர்பான மனிதாபிமானப் பிரச்சினையாகும்.
</p><p>
எனவே, இலங்கை அரசாங்கத்திடம் நான் வலியுறுத்திக் கேட்பது என்னவென்றால் செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முழுமையான, சுயாதீனமான மற்றும்
வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9418c36-a6a9-4057-85be-d12e7807bf6c/26-6a8ecb9f0a1c0.webp' /></p><p>அத்துடன் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் நவீன அறிவியல் முறைகள் மற்றும் DNA பரிசோதனைகள்
மூலம் அடையாளம் காணப்பட வேண்டும்.&nbsp;</p><p> காணாமல் போனவர்களின் குடும்பங்களிடமிருந்து பெறப்பட்ட DNA மாதிரிகளுடன் அவை
ஒப்பிடப்பட்டு, முடிவுகள் குடும்பங்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட
வேண்டும்.
</p><p>எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குற்றத்திற்கு பொறுப்பானவர்கள்
சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.&nbsp; விசாரணைகளில் அரசியல் அல்லது நிர்வாகத் தலையீடு இல்லாத வகையில் சுயாதீனமான
கண்காணிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.</p><h2>பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி</h2><p>பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணம்
வழங்கப்பட வேண்டும்.</p><p>

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட
சர்வதேச சமூகமும் இந்த விசாரணையை நெருக்கமாகக் கண்காணித்து, தேவையான
தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஆதரவை வழங்க வேண்டும்.</p><p>பல தசாப்தங்களாக ஒரு தாய் தனது மகனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு
தந்தை தனது பிள்ளையின் நிலையை அறியாமல் இருக்கிறார். ஒரு குடும்பம் இன்னும்
ஒரு பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93a659d4-9658-4105-b55b-6d35eff5dec5/26-6a8ecb9e3a245.webp' /></p><p>அவர்களுக்கு அரசியல் பேச்சு தேவையில்லை. அவர்களுக்கு உண்மை வேண்டும்.
நீதி வேண்டும். தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு இறுதி மரியாதை
செலுத்துவதற்கான உரிமை வேண்டும்.
</p><p>
செம்மணி தொடர்பான உண்மை முழுமையாக வெளிக் கொண்டு வந்து, பொறுப்புக்கூறல் உறுதி
செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை இந்த
விவகாரம் மறக்கப்படக்கூடாது, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மறைமாவட்டத்தின் 12வது ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பதவியேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-12th-bishop-of-diocese-of-jaffna-1787743408"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-12th-bishop-of-diocese-of-jaffna-1787743408</id>
            <summary type="text">யாழ். மறை மாவட்டத்தின் 12வது ஆயராக திருத்தந்தையால் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று(26.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மறை மாவட்டத்தின் 12வது ஆயராக திருத்தந்தையால் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று(26.08.2026 புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.
</p><p>
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு,
பவனியாக அழைத்துவரப்பட்டார்.</p><h2>

12வது ஆயர் நியமனம்</h2><p>
இதனைத் தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இந்த திருப்பலியில் ஆயர், யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை
அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/715e1d2c-a0d9-45bd-b6ef-a99e2a17aaaa/26-6a8eccf3125d6.webp' /></p><p> 

குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறை மாவட்டங்களின் ஆயர்கள்,
அருட் தந்தைகள், அருட் சகோதரிகள், சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள்,
பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T11:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிற்கு திட்டமிட்டு கடத்தப்பட்ட இளம்பெண்! எட்டு ஆண்டுகளின் பின்னர் வெளியான இரட்டைக்கொலை திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/after-eight-years-double-murder-revealed-1787734564"></link>
            <id>https://tamilwin.com/article/after-eight-years-double-murder-revealed-1787734564</id>
            <summary type="text">இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ வீரரொருவர் கடத்தப்பட்டு கொலை செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ வீரரொருவர் கடத்தப்பட்டு கொலை செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப்பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>

குற்றப்புலனாய்வுத்துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, ஜூன் 8 ஆம் திகதி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்கள் அடங்கிய பொதியுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.</p><h2>வெளியான காரணம்</h2><p>
</p><p>
இதனையடுத்து சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குருவிட்ட பகுதியில் நிசங்க என்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4efdb072-50f9-46c5-aa4d-9c318929674a/26-6a8ebb644d8fd.webp' /></p><p>
</p><p>
குறித்த இராணுவ அதிகாரியின் மனைவியுடன் தனக்கு நெருங்கிய உறவு இருந்தமையே இதற்கு காரணம் என்றும் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், சம்பந்தப்பட்ட சடலம் அப்பகுதியில் உள்ள நிலத்தில் புதைக்கப்பட்டு, பின்னர் ஆற்றில் வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, சந்தேகநபர் நேற்று விசாரணை அதிகாரிகளிடம் சடலம் புதைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளதுடன்,சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><h2>&nbsp;25 வயது பெண்&nbsp;கொலை </h2><p>
</p><p>
இந்த கொலை தொடர்பில் அறிந்திருந்த 25 வயது பெண்ணை சந்தேகநபர் இந்தியாவிற்கு அழைத்துச்சென்று, அங்கு அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேகநபருக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் நெருங்கிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. </p><p>

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:14:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே..! காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/where-29-children-handed-military-relatives-ask-1787737645"></link>
            <id>https://tamilwin.com/article/where-29-children-handed-military-relatives-ask-1787737645</id>
            <summary type="text">இறுதி யுத்தத்தில் பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிரிடன்
கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுதி யுத்தத்தில் பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிரிடன்
கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் கேள்வி
எழுப்பியுள்ளனர்.
</p><p>
நேற்று(25.08.2026) யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாகவே அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><h2>சர்வதேச காணாமல் போனோர் தினம்</h2><p>
</p><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில், </p><p>இறுதி யுத்தம் இடம்பெற்று 15 வருடங்கள்
கடந்துள்ள நிலையில் 29 சிறுவர்கள் உட்பட 100 பேர் இலங்கை இராணுவத்திடம்
அவர்களின் உறவினர்களால் உயிருடன் கையளிக்கப்பட்டனர்.
</p><p>
ஆனால் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தேடி கண்டுபிடிக்க
முடியாத ஓ எம் பி சர்வதேச காணாமல் போனோர் தினத்தை யாழில் நடத்துவது இலங்கை
அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகவும் பாதிக்கப்பட்ட
தரப்பினர்களை மேலும் காயப்படுத்தும் ஒரு செயற்பாடாக பார்க்கிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4670927c-4f33-4495-bc36-1c72b303fe13/26-6a8ec49913336.webp' /></p><p>இலங்கையில் தமிழர்கள் காணாமலாக்கப்படுதல் என்பது மிகச் சாதாரண விடயமாக
மாறிவிட்டது. வயது, பால் வேறுபாடின்றி காலத்துக்கு காலம்
கடத்தப்பட்டிருக்கின்றனர். </p><p>அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் அதிகளவான ஆண்களும், அதற்கு அடுத்த நிலையில்
பெண்களும் இருக்கின்றனர். இதில் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படும் விவரமறியாத
பிள்ளைகளும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அதையும் தாண்டி குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காணாமல்
ஆக்கப்படுதல் என்பது இலங்கையை தவிர உலகில் எங்குமே நடைபெற்றிருக்காத விடயம் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம் பெற்றிருக்கிறது.</p><h2>இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள்</h2><p>
</p><p>
இதுவரை பல குழந்தைகள் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும் இலங்கை
இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இதற்கான நேரடி சாட்சிகள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்.


2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த வேளையில் அதிகளவான குழந்தைகள் தம்
பெற்றோருடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே காணாமலாக்கப்பட் டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/737a7b89-cc0d-41a0-a1cb-5587b90ac217/26-6a8ec4984bb90.webp' /></p><p>தமது பெற்றோருடன் அழைத்துச் செல்லப்பட்ட சிறார்கள் மீளத் திரும்பவில்லை.

இந்த விடயம் காணாமல் போனோர் அலுவலகத்தின் விசாரணை அமர்வுகளில் ஆதாரத்துடன்
முன்வைத்தும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இன்று வரை கூற முடியாத நிலையில்
இந்த அலுவலகம் செயற்பட்டு கொண்டிருக்கிறது.</p><p>


இலங்கையில் காலத்துக்கு காலம் மாறி வரும் அரசாங்கங்கள் இந்த விவகாரம்
தொடர்பில் பேச மறுத்து வருகின்ற நிலையில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29
சிறுவர் தொடர்பான விடயங்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்
ஐ.நாவுக்கு பட்டியலிட்டு அனுப்பியுள்ளது என கவலை தெரிவித்திருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:13:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-stabbed-by-husband-in-tamil-area-1787736478"></link>
            <id>https://tamilwin.com/article/woman-stabbed-by-husband-in-tamil-area-1787736478</id>
            <summary type="text">தலைமன்னார் - ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு
இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் - ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு
இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவமானது இன்று (26.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><h2>கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண்</h2><p>
</p><p>
கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய அவரது மனைவி தலை மன்னார்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a348c5d7-29df-4210-9199-c9854c6189bc/26-6a8eb5577b0a5.webp' /></p><p>இந்த தாக்குதலை மேற்கொண்ட உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில்
வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T10:22:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-found-in-decomposed-state-in-jaffna-1787736417"></link>
            <id>https://tamilwin.com/article/body-found-in-decomposed-state-in-jaffna-1787736417</id>
            <summary type="text">யாழ். புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை (26) சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இந்த சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுவதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை (26) சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
</p><p>இந்த சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>கடற்றொழிலுக்கு இன்று காலை சென்றவர்கள் சடலத்தை கண்டு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1106239-d226-45fe-a1a6-d494f52d3b5a/26-6a8eb1638ff7d.webp' /></p><p>
</p><p>குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T09:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா - பலாலி வீதியில் நடந்துசெல்ல இராணுவம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-allows-people-to-walk-on-palali-road-1787735811"></link>
            <id>https://tamilwin.com/article/army-allows-people-to-walk-on-palali-road-1787735811</id>
            <summary type="text">செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா, தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். 



இராணுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா, தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். </p><p>



இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் பலாலி வீதியில், கடந்த வருடம் நடந்து செல்வதற்கோ , வாகனங்களில் தரித்து நிற்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு, நேர கட்டுப்பாட்டுடன் வீதி திறந்து விடப்பட்டது.</p><h2>&nbsp;இராணுவத்தினர் அனுமதி&nbsp;</h2><p>
</p><p>


இந்நிலையில், செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா நாளைய தினமும் (27) தீர்த்த திருவிழா நாளை மறுதினமும் (28) நடைபெறவுள்ள நிலையில்&nbsp; வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43146ab5-5d26-4cd1-8ccc-61c2ace7ec36/26-6a8eaf0556884.webp' />&nbsp;</p><p>ஆலயத்திற்கு செல்லும் காவடிகள், பாத யாத்திரைகளுக்காக குறித்த வீதியூடாக காலை 06 மணி முதல் இரவு 09 மணி வரையில் நடந்து செல்லவும், வீதியில் தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T09:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி வடக்கு காணி விடுவிப்பு போராடத்தை அரசியல்மயப்படுத்தும் சுமந்திரன்! அமைச்சர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-chandrasekaran-accuses-sumanthiran-1787730455"></link>
            <id>https://tamilwin.com/article/minister-chandrasekaran-accuses-sumanthiran-1787730455</id>
            <summary type="text">வலி. வடக்கு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில்,
சுமந்திரன் கொழும்பில் போராட மக்களை அழைப்பது கபடத்தனமான அரசியல் என அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில்,
சுமந்திரன் கொழும்பில் போராட மக்களை அழைப்பது கபடத்தனமான அரசியல் என அமைச்சர் சந்திரசேகரன் குற்றச்சாட்டியுள்ளார்.</p><p>
நேற்று(25) யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோர்
அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற காணாமல் போனோர் சர்வதேச மாநாட்டில் கலந்து
கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துளள்ளார்.</p><h2>அரசியல் ரீதியான செயற்பாடு&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் அரசாங்கம் மக்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கத்தை குழப்புவதற்கு மக்களை தவறான திசையில் திருப்பி தமது அரசியல்
நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கு சிலர் முனைகின்றார்கள்.
</p><p>
அண்மையில் வலி. வடக்கு மக்களுடைய போராட்டத்தில் தமிழரசு கட்சியின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்&nbsp; கலந்து கொண்டு சில
கருத்துக்களை முன்வைத்ததாக அறிந்தேன்.
</p><p>
அதாவது வலி வடக்கில் நிலத்துக்காக போராடும் மக்களை கொழும்பு
ஜனாதிபதி செயலகம் முன் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காகன அழைப்பை
விடுத்துள்ளார்.'</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd2aba43-73af-4fba-8d8c-f0200f2bc518/26-6a8ea188e3040.webp' /></p><p>
</p><p>
ஜனாதிபதி கடந்த வாரம் வலி வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட
தரப்பினர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய நிலையில் அதை அறிந்த சுமந்திரன்
கொழும்பில் மக்களை போராட அழைத்திருக்கிறார்.
</p><p>
இந்த விடயம் தமது சுயலாப அரசியலுக்காக மேற்கொள்ளும் ஒரு விடயமாக பார்க்கின்ற
நிலையில் தமது போராட்டம் மூலமே ஜனாதிபதி காணியை விடுவித்தார் என்ற வங்குரோத்து அரசியலை மேற்கொள்வதே இவர்களுடைய நிலைப்பாடு.
</p><p>
யார் போராடினாலும் போராடாமல் விட்டாலும் ஜனாதிபதி மற்றும் எமது அரசாங்கம்
மக்களுடைய காணிகளை விடுவிக்கும் என&nbsp; குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T09:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dm-party-backs-disappeared-family-conference-1787728395"></link>
            <id>https://tamilwin.com/article/dm-party-backs-disappeared-family-conference-1787728395</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு
ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன்
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு
ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன்
தெரிவித்துள்ளார். </p><p>அவர் இன்று(25.08.2026) வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடாக
சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மாபெரும் போராட்டம்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆகப்பட்டோர் உறவுகள் சங்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை
செல்வாநாயகம் அரங்கில் மாபெரும் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்குரிய
ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><p> வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு நடாத்துகின்ற அந்தப் போராட்டத்திற்கு ஜனநாயக
போராளிகள் கட்சி பூரண ஆதரவை வழங்குவதாக தீர்மானித்திருக்கிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce2d6c1-3195-4473-b2fb-4ca455459475/26-6a8e9752f335d.webp' /></p><p>யுத்தம் முடிந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் பல நூற்றுக்கணக்கான
இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். </p><p>அதேபோல்
பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
பல பெண்கள் தங்களுடைய கணவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.</p><h2>பூரண ஆதரவு&nbsp;</h2><p> இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு
நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த உறவுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக
பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
</p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஒரு
வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ee9a3ce-537f-44cc-9ea7-f7f2a7eec8ef/26-6a8e975230628.webp' /></p><p>அந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று சர்வதேசம் வரை கொண்டு
செல்லப்பட்டிருக்கின்றது. </p><p>அவர்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக
எல்லோரும் வரவேண்டும். அதே போன்று ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய நாங்களும்
அவர்களுக்கு பூரண ஆதரவு வழங்க இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T08:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்மமான முறையில் உயிரிழந்த மயக்கவியல் வைத்திய நிபுணர்! பிரேதப்பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/badulla-hospital-anesthesiologist-dies-1787731533"></link>
            <id>https://tamilwin.com/article/badulla-hospital-anesthesiologist-dies-1787731533</id>
            <summary type="text">காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் கண்டறிய மேலதிக பரிசோதனைக்காக உடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் கண்டறிய மேலதிக பரிசோதனைக்காக உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு நீதித்துறை வைத்தியஅதிகாரி ஜே.எஸ்.டி. பீரிஸ் பிரேதப் பரிசோதனையை நடத்தியதாகவும், பின்னர் மரணம் குறித்து திறந்த தீர்ப்பை வழங்கி, மேலதிக பரிசோதனைக்காக உடல் பாகங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>வைத்திய அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு</h2><p>
</p><p>
சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே (24) சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62fa39a7-c0d8-4f10-aa02-33848ae560fb/26-6a8ea79fdcc5c.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து மஹியங்கனை வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி மூலம் இறந்தவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தி, வைத்திய அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

மேலும் அவரது மரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைக்காக உடல் பாகங்களை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>மயானத்தில் நல்லடக்கம்&nbsp;</h2><p>
</p><p>
கினிகத்தேனை பகுதியை சேர்ந்த மயக்கவியல் நிபுணர், மாத்தளையில் வசித்து வந்துள்ளதுடன், பணியில் இருந்த போது , தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6b76e92-2409-4fb1-a0e3-1a9f4a26bfcf/26-6a8ea7a090d80.webp' /></p><p> 

இந்த வைத்தியருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்றும், அவர்களில் ஒருவர் வைத்தியர் என்றும், மற்றொருவர் பிரதேச செயலகத்தில் பணிபுரிவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்நிலையில், மயக்கவியல் நிபுணரின் உடல் நேற்று (25) பதுளை தனியார் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T08:49:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக வீதி தொடருந்து கடவையில் கோர விபத்து! 17 வயது சிறுமி பலி - இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-jaffna-university-road-17-old-girl-dies-1787731027"></link>
            <id>https://tamilwin.com/article/accident-jaffna-university-road-17-old-girl-dies-1787731027</id>
            <summary type="text">கிளிநொச்சி - யாழ் பல்கலைக்கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்ற
விபத்தில் 17 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - யாழ் பல்கலைக்கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்ற
விபத்தில் 17 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த விபத்து இன்று (26) முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>கொழும்பிலிருந்து
யாழ் நோக்கி பயணித்த தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட காரை
மோதித்தள்ளியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc2bb266-8b58-46e4-9bf1-1ef4f942ebe8/26-6a8e9c56ae6a8.webp' /></p><p>
</p><p>இதன்போது விபத்துக்குள்ளான காரில் பயணித்த 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RAwLrilc_5Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-26T07:57:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆபத்தான நபர்..! ஐரோப்பாவில் பல கோடி ரூபா சொத்துக்கள் - விசாரணையில் பகீர் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-s-property-details-revealed-1787714996"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-s-property-details-revealed-1787714996</id>
            <summary type="text">தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிகிற்கு வெளிநாடுகளில் பல சொத்துக்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிகிற்கு வெளிநாடுகளில் பல சொத்துக்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஹோட்டல்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. </p><h2><b>

வணிக நடவடிக்கை</b></h2><p>ஷிரான் பாசிக் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டு அந்த வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afbdab38-3b6e-4442-984f-e41540a8c4e2/26-6a8e9b9f5adcd.webp' /></p><p>இது தவிர, சந்தேகநபருக்கு டுபாயில் 1.5 கோடி ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள ஜீப் வாகனம் ஒன்றும் உள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.</p><p> 

சந்தேகநபருக்கு இலங்கையிலும் பல கோடி ரூபா சொத்துக்கள் உள்ளமை குறித்தும் கடந்த நாட்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. </p><p>அவற்றுள் கொழும்பு கடற்பாதை வீதியில் அமைந்துள்ள சில ஹோட்டல்களும், பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையங்களும் மற்றும் பல சொத்துக்களும் அடங்குகின்றன.</p><p>&nbsp;</p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/553EO_clYzI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-26T07:54:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களை ஏமாற்றி தங்க நகைகளை மோசடி செய்த நபர் - விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-cheated-women-and-stole-gold-jewelry-1787729327"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-cheated-women-and-stole-gold-jewelry-1787729327</id>
            <summary type="text">கம்பஹா - பியகம பகுதியில் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், திருமணங்களுக்கு செல்வதாகக்கூறி பெண் ஊழியர்களிடமிருந்து தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - பியகம பகுதியில் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், திருமணங்களுக்கு செல்வதாகக்கூறி பெண் ஊழியர்களிடமிருந்து தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபர் நேற்று (25) பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
தன்னோடு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் இருந்து திருமணங்களுக்கு செல்வதாகக்கூறி 25 இலட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள தங்க நகைகளை சந்தேகநபர் பெற்றுள்ளார்.</p><h2>ஐந்து பெண் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள்</h2><p>இது தொடர்பாக இதுவரை ஐந்து பெண் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d21c03b2-01b2-407a-bab2-7c21791ffcde/26-6a8e974344a2e.webp' /></p><p>

இவர்களிடமிருந்து பெறப்பட்ட தங்க நகைகள், கடுவெல மற்றும் பியகம - பண்டாரவத்தையில் உள்ள தங்க நகை அடகுக்கடைகளில் அடகு வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
தங்க நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தை, சந்தேகநபர் தான் கட்டிவரும் வீட்டிற்கு தேவையான மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை வாங்குவதற்காக செலவழித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பியகமவை சேர்ந்த 42 வயதுடையவர் என்றும், அவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T07:35:35+00:00</updated>
        </entry>
    </feed>
