<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-20T19:21:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரை மணி நேரம் அநுர மனோவுடன் கதைத்தது என்ன..! அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176"></link>
            <id>https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176</id>
            <summary type="text">அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
அநுர குமார திஸாநாயக்கவுடன் வழக்கமாக அரை மணி நேரம் உரையாடுவது வழக்கம். அனோஜனின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்துள்ளேன்.
</p><p>
விரைவில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அவரது தண்டனையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினேன்.</p><p>

ஊழல்வாதிகளை அநுர அரசாங்கம் தேடித் தேடி கைது செய்வது பாராட்டுக்குரியது. என்றாலும், அநுர அரசாங்கத்திலும் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BhMshQ0voX8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசி டயானா நினைவு தினம் நெருங்கும் நிலையில் மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான சர்ச்சை பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-post-regarding-king-charles-1789930243"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-post-regarding-king-charles-1789930243</id>
            <summary type="text">இளவரசி டயானாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடர்பில் சர்ச்சைக்குரிய செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளவரசி டயானாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடர்பில் சர்ச்சைக்குரிய செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
</p><p>
இந்த தகவலை, இளவரசி டயானாவின் தம்பியான சார்லஸ் ஸ்பென்சர் எழுதிய "ஸ்வான் சாங்: டயானா, மை சிஸ்டர்" என்ற புதிய புத்தகத்தில் உள்ள பல குறிப்புகளை அடிப்படையாக கொண்டு கண்டறியப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம்(19.09.2026) இங்கிலாந்து நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கமைய, இந்தப் புத்தகம் நாளைய தினம்(22.09.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


27 வயதில் வாரிசாக்கப்பட்ட ஸ்பென்சர்</h2><p>


ஏப்ரல் 1992ஆம் ஆண்டு நார்தாம்ப்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில், ஸ்பென்சர் மற்றும் இளவரசி டயானாவின் தந்தையின் இறுதிச் சடங்கின் போது, இந்த உணர்வற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p> 

அப்போது, 27 வயதான ஸ்பென்சர், தனது தந்தையின் உடல் தேவாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டபோது அழுது கொண்டிருந்தார். அந்த சமயத்தில், இளவரசர் சார்லஸ், "நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி" என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42008fce-a2c8-4509-863c-345534e2421b/26-6ab02b8ebb9d6.webp' /></p><p> </p><p>

ஸ்பென்சர் மீண்டும் அவரிடம் கேட்டபோது,“ ​​இவ்வளவு இளம் வயதில் பிரபு என்ற பட்டமும், அதனுடன் வரும் 13,000 ஏக்கர் (52.61 சதுர கிலோமீட்டர்) நிலமும் சொத்துக்களும் வழங்கப்பட்டது ஒரு பெரும் பாக்கியம்” என்று சார்லஸ் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p> 

இதன்போது, இளவரசர் சார்லஸ் ஒரு பிடிவாதமான குழந்தையைப் போன்று, தன்னுடைய கால்களைத் தரையில் தட்டி நடந்து சென்றதாகவும் ஸ்பென்சர் கூறுகிறார்.</p><h2>

 73 வயதில் அரியணை ஏறிய மன்னர் சார்லஸ்</h2><p>
அந்த காலத்தில், தனக்கு 43 வயதாகியும், தனக்குக் கீழ் 50 பேர் பணிபுரிந்தும் வந்தபோதிலும், தனது பெற்றோர் தன்னை ஒரு குழந்தையைப் போலவே நடத்துவதாக இளவரசர் சார்லஸ் முரண்பட்டதாகவும் கூறியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b7ba603-c8b3-4ac9-aead-0467991f907c/26-6ab02b8f71974.webp' /></p><p>
</p><p>
 இரண்டாம் எலிசபெத் மகாராணி 96 வயது வரை ஆட்சி செய்தார், மேலும் மன்னர் சார்லஸ் 2022 செப்டம்பரில் தனது 73 வயதில் பிரிட்டிஷ் அரியணை ஏறினார், இதன் மூலம் அரியணை ஏறிய மிக வயதான பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர் என்றும் அடையாளப்படுத்தபட்டார்.
</p><p>
1997ஆம் ஆண்டு, இளவரசி டயானாவின் மரணத்திற்கு பின்னர், நடந்த மற்றொரு சர்ச்சைக்குரிய சம்பவமும் முன்னர் வெளியிடப்பட்ட பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522"></link>
            <id>https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522</id>
            <summary type="text">கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்&nbsp;</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிரேன்ட்பாஸ், கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/297e803a-1910-4394-9a0a-3c5af0b52e15/26-6aafbcfa51686.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 39 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,&nbsp; குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T18:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஞானசார தேரரின் புதிய நூல் வெளியீடு - நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/launch-of-gnanasara-thero-s-new-book-1789928647"></link>
            <id>https://tamilwin.com/article/launch-of-gnanasara-thero-s-new-book-1789928647</id>
            <summary type="text">பல்தரப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் எழுதிய நூல் ஒன்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்தரப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் எழுதிய நூல் ஒன்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிகழ்வு நேற்று(20.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக இஸ்லாம் மதத்தின் மீது கடுமையான நிந்தனைகளை முன்வைத்து வரும் ஞானசார தேரருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தன.
</p><p>
இஸ்லாம் மதத்திற்கோ வேறு மதங்களுக்கோ எந்தவித நிந்தனையும் செய்யக்கூடாது என்பது குறித்த உத்தரவுகளின் சாராம்சமாகும்.

அவ்வாறான நிலையிலும், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அவர் இஸ்லாமியர் மற்றும் கத்தோலிக்கர்களை பிரதானமாக இலக்கு வைத்து கடுமையான மத நிந்தனைகளை மேற்கொண்டிருந்தார்.</p><h2>

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு</h2><p>
இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனை, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலையீட்டின் கீழ் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு மூலம் எட்டே மாதங்களில் நிறைவுற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01cb7001-849f-48e4-8d55-4203c8086338/26-6ab0252d6c26c.webp' /></p><p>

அதற்கு எதிராக சந்தியா எக்னெலிகொட தொடுத்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் காரணமாக ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், அவரது தண்டனையின் எஞ்சிய காலத்துக்கு சிறைவாசம் அனுபவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலும் ஞானசார தேர்ர் இன்றும் வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று(20) நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, சன்ன ஜயசுமண மற்றும் ஏராளமான தேரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cc91bf5-f567-438b-bbf3-87e821f7f7aa/26-6ab0252e4f598.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a9d380-4033-4882-a276-54cc4e88a684/26-6ab0252f26f9d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T18:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 இலட்சம் ரூபாய் வரை விற்பனையான போலிச் சான்றிதழ்..! 200 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-certificate-printing-press-operating-gampaha-1789924317"></link>
            <id>https://tamilwin.com/article/fake-certificate-printing-press-operating-gampaha-1789924317</id>
            <summary type="text">கம்பஹா - இம்புல்கொட, ராஜசிங்க பகுதியில் வாடகை வீட்டில் இயங்கி வந்த போலி பட்டச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரைகளைத் தயாரிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - இம்புல்கொட, ராஜசிங்க பகுதியில் வாடகை வீட்டில் இயங்கி வந்த போலி பட்டச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரைகளைத் தயாரிக்கும் ஒரு பெரிய அச்சகம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
27 வயது நபர் கைது</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது அம்பாந்தோட்டை - தங்கல்லை பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் முத்திரைகள்&nbsp;</h2><p>

இந்த கும்பல், மாதம் ரூ. 35,000க்கு வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளது. 

சுற்றிவளைப்பின் போது, 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட்போன்கள், ஒரு வண்ண அச்சுப்பொறி, 35 போலிச் சான்றிதழ்கள், நிறுவனத் தலைவர்களின் 51 அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் 3 புடைப்பு முத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e8975f-d803-4244-a797-783672988e4e/26-6ab01463abfe8.webp' /></p><p> 

பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களின் அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் கடிதத் தலைப்புகள் இந்த இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இவற்றில் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம், இலங்கைத் தேர்வுகள் திணைக்களம், ஒரு தனியார் வங்கி மற்றும் பேராதெனிய, ஸ்ரீ ஜெயவர்தனபுர, களனி, மொரட்டுவ, ருஹுனு, ராஜரட்ட, வயம்ப, ஊவ வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><h2>
4 இலட்சம் வரை விலைப்போன போலிச் சான்றிதழ்</h2><p>

இந்த மோசடி சுமார் ஒரு வருடமாக இடம்பெற்று வந்த நிலையில், சந்தேக நபர் சாதாரண சான்றிதழ்களை ரூ. 25,000 முதல் 50,000 வரையிலான விலையில் விற்பனை செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a97874a4-c17e-462c-879b-ea1397c37acc/26-6ab0146480218.webp' /></p><p> </p><p>

இருப்பினும், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குத் தேவையான கள்ளச் சான்றிதழ்கள் ரூ.400,000 விலைக்குத் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p>

இவ்வாறு தயாரிக்கப்பட்ட கள்ள ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 200பேர் வெளிநாடு சென்றுள்ளதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். யக்கல பொலிஸார், இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன், விசாரணைகள் நிறைவில், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NaZHCffaXtk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T18:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் அத்துமீறி கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் - உடனடி நடவடிக்கை கோரி மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-keerimalai-1789922276"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-keerimalai-1789922276</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழையிலும் அப்பகுதி மக்களால் போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழையிலும் அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(20.09.2026) கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.</p><p> 

 வலி. வடக்கின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச
சபையின் இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள்
உள்ளிட்ட சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.</p><p>

அவற்றினை மீள அள்ள வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள்
தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.
</p><h2>
மருத்துவ கழிவுகள்</h2><p>
இதேவேளை, தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொட்டப்பட்ட
கழிவுகள் மாத இறுதிக்குள் மீள அள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, அது
தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச.
சிறிபவானந்தராசா, வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e0fd4a-83b5-43c6-ba2d-fb84b3a14173/26-6ab00c52009f5.webp' /></p><p>
</p><p>
அத்துடன், உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சனும் கழிவுகளை மீள அள்ள வேண்டும் என
பணித்துள்ளார்.</p><p>

இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை புற்றுநோய்
வைத்தியசாலையின் மருந்தேற்றும் ஊசிகள், இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்ட
ஆபத்தான மருத்துவ கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.
</p><p>
இதுபோன்ற கழிவுகள் அப்பகுதி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், குப்கைகளை அகற்றும் நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21d4807-c140-42d9-9cb2-c7c369b2561a/26-6ab00c5302a9e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d8ab59b-a6e1-4b2b-b7f5-8a45001edd6e/26-6ab00c53d65f0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eacd8e0-93fd-4bea-a2cc-4eb94178f534/26-6ab00c54b6c8d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்கள் முகத்தை மூடத் தேவையில்லை..! இத்தாலி அரசாங்கம் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/italian-government-guidelines-on-student-attire-1789921635"></link>
            <id>https://tamilwin.com/article/italian-government-guidelines-on-student-attire-1789921635</id>
            <summary type="text">இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் புர்க்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும்
ஆடைகளைத் தடை செய்வதற்கும், ஒரு வகுப்பறையில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு
மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் புர்க்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும்
ஆடைகளைத் தடை செய்வதற்கும், ஒரு வகுப்பறையில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு
மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரையறை விதிப்பதற்கும் அந்நாட்டு அரசாங்கம் புதிய
சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p>

இத்தாலி பிரதமரின் “பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி” கட்சியின் இளைஞர் அணி ஆண்டுக்
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.</p><h2>

பாடசாலைகளில் புதிய நடைமுறை</h2><p>
இதன்படி, பாடசாலைகளில் முகத்தை மூடிக்கொண்டு கல்வி கற்க அனுமதி
அளிக்கப்படமாட்டாது என்றும், இத்தாலியில் கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்தின்
பெயரால் எந்தவொரு பெண் பிள்ளையும் தனது முகத்தை மறைத்து வாழ வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4317424a-8fd5-47b8-93fa-85e7735c6d4c/26-6ab0099c21a5b.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
அத்துடன், வெளிநாட்டு மாணவர்கள் பாடசாலை அமைப்பில் விரைவாக இணைந்து
கொள்வதற்காக ஒரு வகுப்பறையில் அவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத்
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>வகுப்பறையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு மொழி புரியாவிட்டால் அது சமூக
ஒருங்கிணைப்பாக அமையாது மாறாகப் புறக்கணிப்பாகவே அமையும் எனக் குறிப்பிட்ட
பிரதமர், தீவிர மொழிப் பிரச்சினை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களின்
பெற்றோர்களும் இத்தாலிய மொழியைக் கற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என்றும்
தெரிவித்துள்ளார்.</p><p>

புதிய முன்மொழிவு விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், 
இத்தாலிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 11.6 சதவீதமானோர்
வெளிநாட்டுப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-can-close-by-principals-1789915714"></link>
            <id>https://tamilwin.com/article/school-can-close-by-principals-1789915714</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் தொடர் சீரற்ற காலநிலைக் காரணமாக பாடசாலைகளின் விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் தொடர் சீரற்ற காலநிலைக் காரணமாக பாடசாலைகளின் விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவிப்பை வலயக் கல்வி பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். </p><p>

இதற்கமைய, நாளை தினம்(21.09.2026) பாடசாலை விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>பாடசாலை விடுமுறை</h2><p>
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf92da5e-162f-4c0a-9a3c-3a4c4406d342/26-6aafff3d0732e.webp' /></p><p>இதேவேளை சீரற்ற காலநிலை நிலவும் மாவட்டங்களில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. </p><p>இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலயங்களாக நாட்டின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் கல்வி அமைச்சு இந்த தீாமானத்தை எடுத்துள்ளது.</p><p>குறிப்பாக மத்திய மற்றும் சப்கரகமுவ மாகாணங்கள் கடும் மழையுடனான காலநிலையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த 24 மணித்தியாலங்களில&nbsp;்கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் 210 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல.. வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-province-governor-s-insistence-1789918386"></link>
            <id>https://tamilwin.com/article/northern-province-governor-s-insistence-1789918386</id>
            <summary type="text">பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி
செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம்
நேர்மையுடன்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி
செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம்
நேர்மையுடன், எந்தவித பாகுபாடும் இன்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் 
என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். </p><p>

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மற்றும் வலய
மட்டங்களில் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(20.09.2026) 
யாழ்ப்பாணம் செம்மணி வீதியிலுள்ள தொண்டைமானாறு தேசிய
வெளிக்கள நிலையத்தில், அதன் தலைவர் பேராசிரியர் கலாநிதி சிவசாந்தினி குகநாதன்
தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><p>

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

வெறும் படிப்பு மட்டுமே போதாது..</h2><p>
பதவியில் இருப்பது தனக்கான அதிகாரத்தை
வெளிப்படுத்துவதற்காக அல்ல எனக் குறிப்பிட்டதுடன், பதவியில் இருக்கும்போது
கர்வம் கொள்ளக்கூடாது, அந்தப் பதவியைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு எவ்வாறு
உதவ முடியும் என்பதையே சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
தமது தந்தையார் தம்மை வளர்க்கும்போது திருக்குறள் கருத்துகளை எடுத்துக்கூறி
வளர்த்ததாகவும், எதிரியாக இருந்தாலும் ஒருவர் உதவி நாடி வந்தால் அவரை மதித்து
உதவ வேண்டும் என்ற பண்பை அதன்மூலம் கற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66da2114-dda2-4c11-a6e3-f410f8b7daeb/26-6aaffd1a718d1.webp' /></p><p>

மாணவர்கள் புத்தகப் படிப்பில் மாத்திரம் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ளக்
கூடாது என்று குறிப்பிட்ட ஆளுநர், கல்வியால் மட்டும் உயர்ந்து பதவியைப்
பெற்றுக்கொள்வது போதாது, ஏனையோருக்கு உதவும் மனப்பான்மை, இரக்கம் மற்றும்
சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்
தெரிவித்தார்.
</p><p>
தனது அருகில் ஒருவர் விழுந்து கிடந்தாலும் அவரைக் கைகொடுத்து தூக்கிவிட
வேண்டும் என்ற எண்ணம் உருவாகாத வகையில் கல்வி அமைந்துவிடக்கூடாது என்று
குறிப்பிட்ட அவர், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு உதவ முன்வர
வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0872a38a-24b7-441c-bcce-26f850d5711c/26-6aaffd1b5c17b.webp' /></p><p> 

அவ்வாறு உதவும் மனப்பான்மையுடன்
வாழ்ந்தால், தேவையான நேரத்தில் உதவுவதற்கு பல கரங்கள் தம்மைச் சுற்றி
இருக்கும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
</p><p>
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடாமல் கல்வியில் மாத்திரம் முன்னேறுவதால்
முழுமையான ஆளுமையை உருவாக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், விளையாட்டு, கலை
உள்ளிட்ட இத்தகைய செயற்பாடுகளே மாணவர்களை ஆளுமையுள்ளவர்களாகவும் சிறந்த
தலைமைத்துவப் பண்புடையவர்களாகவும் வளர்க்கின்றன என்றும் தெரிவித்தார்.
</p><h2>
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஆர்வம்</h2><p>
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்கு மாணவர்கள் ஈடுபடுவதில் பெற்றோர்களே சில
சந்தர்ப்பங்களில் தடையாக இருப்பதாக முன்னர் உரையாற்றிய முன்னாள் வலயக் கல்விப்
பணிப்பாளர் தெய்வேந்திரராஜா குறிப்பிட்ட விடயத்தையும் ஆளுநர்
சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d89a09d8-304a-4bbf-819b-bd458ca6818a/26-6aaffd1c342a4.webp' /></p><p>

தாம் கல்வி கற்ற காலத்தில் ஆசிரியர் ஒருவர் தண்டித்தால், அதற்கான காரணத்தை
அறிந்துகொண்டு வீட்டிலும் ஒழுக்கப்படுத்தும் நிலை இருந்ததாகக் குறிப்பிட்ட
அவர், இன்று நிலைமை மாறியுள்ளது என்றும் தெரிவித்தார். </p><p>ஆசிரியர் ஒருவர்
மாணவரைத் தண்டிப்பது தனிப்பட்ட பழிவாங்கலுக்காகவோ வன்மத்துக்காகவோ அல்ல, அந்த
மாணவரை ஒழுக்கமுள்ள நல்ல பிள்ளையாக வளர்த்தெடுப்பதற்காகவே என்றும் ஆளுநர்
குறிப்பிட்டார்.</p><p>

மேலும், தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலையத்தை ஏனைய மாகாணங்களைச்
சேர்ந்தவர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், வடக்கு மாகாணத்தைச்
சேர்ந்த பாடசாலைகளும் மாணவர்களும் அதனைப் பயன்படுத்தும் அளவு குறைவாக
இருக்கின்றது என்றும், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் ஆளுநர்
தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f482378-3c66-4be1-839b-68d310a6f3d3/26-6aaffd1d104db.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T15:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் மண்சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslides-on-main-roads-in-nuwara-eliya-1789917244"></link>
            <id>https://tamilwin.com/article/landslides-on-main-roads-in-nuwara-eliya-1789917244</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதான
வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் பொது போக்குவரத்துக்கு பாதிப்பு
ஏற்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதான
வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் பொது போக்குவரத்துக்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று(20.9.2026) மதியம் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் மஸ்கெலியா பிரதான சாலையில் வணராஜா
கெந்தகொல்லை கிறிஸ்தவ தேவாலயம் பகுதியில் பாரிய மண் சரிவு காரணமாகப்
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஹட்டன் - பொகவந்தலாவை, ஹட்டன் - சாமிமலை, ஹட்டன் - மஸ்கெலியா, ஹட்டன் -
நோர்வூட் பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டு
உள்ளது.</p><h2>மண்சரிவு&nbsp;</h2><p>
</p><p>
இதனை தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து
வீதியில் கொட்டி கிடந்த மண்ணை அகற்றியதனை தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு
திரும்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dee1a012-e8b2-425c-aee7-ecd8bb220136/26-6aaffb1fd8c88.webp' /></p><p>
</p><p>இதேவேளை கினிகத்தேனை மினுவன் தெனிய பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டதனால்
பொது போக்குவரத்து சில மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டது.</p><p>
வீதியில் சரிந்த மண்ணை அகற்றியதனை தொடர்ந்து குறித்த வீதியில் ஒரு வழி
போக்குவரத்து இடம்பெற்று வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T15:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் தீவில் மேக்ரோன் - கார்னி சந்திப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/macron-and-carney-meet-on-a-french-trump-1789915293"></link>
            <id>https://tamilwin.com/article/macron-and-carney-meet-on-a-french-trump-1789915293</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மறைமுகப் பதிலடி கொடுக்கும்
வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கனடிய பிரதமர்
மார்க் கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மறைமுகப் பதிலடி கொடுக்கும்
வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கனடிய பிரதமர்
மார்க் கார்னி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.</p><p>குறித்த கலந்துரையாடலானது பிரான்சின் கட்டுப்பாட்டிலுள்ள செயிண்ட் பியர் மற்றும்
மிக்வலோன் தீவில் நடைபெறவுள்ளது.</p><p>

அட்லாண்டிக் கடற்பகுதியில் கனடா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள குறித்த
தீவானது, வட அமெரிக்காவில் பிரான்சின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரேயொரு
பகுதியாகும்.</p><h2>அமெரிக்க ஐக்கிய நாடுகள்</h2><p>

அண்மையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், கனடா,
கிரீன்லாந்து மற்றும் பிரான்ஸ் தீவுகள் உட்பட வட அமெரிக்கக் கண்டத்தின் பல
பகுதிகளை அமெரிக்கக் கொடியால் மூடி, 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' எனச்
சித்தரிக்கும் புகைப்படமொன்றைப் பகிர்ந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf3cc91b-9486-4bdd-b8ef-3274387b9d11/26-6aaff2be3fb04.webp' /></p><p>
</p><p>
இதற்கு பிரான்ஸ் தரப்பில் நேரடியாக எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கப்படாத
நிலையில், தற்போது ஜனாதிபதி மேக்ரோன் அத்தீவுக்கு விஜயம் மேற்கொள்வதுடன்,
அங்கு கனடிய பிரதமரையும் சந்திக்கவுள்ளமை இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம்
வாய்ந்த நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.</p><h2>எரிசக்தி நெருக்கடி&nbsp;</h2><p>
</p><p>
2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் அத்தீவிற்கு விஜயம்
செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில்
பங்கேற்பதற்காகச் செல்லும் வழியிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி இவ்விஜயத்தை
மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f634af82-c0b1-4c8b-87f7-a5a1b9b1c4b2/26-6aaff2bee75d0.webp' /></p><p>
</p><p>
இச்சந்திப்பின் போது இரு தலைவர்களும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும்
கனடா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான நெருங்கிய பொருளாதார உறவுகள்
குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T15:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை..! ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-sri-lanka-anura-speech-today-1789908441"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-sri-lanka-anura-speech-today-1789908441</id>
            <summary type="text">ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அக்குரஸ்ஸையில் இன்று (20) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>எரிபொருளின் விலை&nbsp;</h2><p>
</p><p>
சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் அடிப்படையில், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் விலை மற்றும் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் செலவைக் கணக்கிடும்போது, ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711d9c7c-59dd-405e-8bef-d6e23191c2e9/26-6aafd801b5316.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்த விலை உயர்வினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்கள் மீது பெரும் சுமை ஏற்படும்போது, அந்தச் சுமையை முழுமையாக அவர்களிடமே சுமத்த முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் சில உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><br><b><i>You may like this..<br></i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zo6oa5L9e30" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-20T14:41:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு: சம்பவ இடத்திற்கு சென்ற நீதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-found-thonikkal-vavuniya-bearing-stab-wounds-1789908011"></link>
            <id>https://tamilwin.com/article/body-found-thonikkal-vavuniya-bearing-stab-wounds-1789908011</id>
            <summary type="text">வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்
காணப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்
காணப்பட்ட நிலையில் பதில் நீதவான் த. ஆர்த்தி&nbsp; சம்பவ இடத்திற்கு சென்று
பார்வையிட்டார்.
</p><p>
குறித்த சடலங்கள் நேற்று (19.09) மாலை மீட்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பாக
மேலும் தெரியவருவதாவது,&nbsp;</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் இருந்துள்ளனர்.&nbsp; இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த
காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/367d2106-a1f5-4822-a8cc-98149b92ffec/26-6aafee0f5077a.webp' /></p><p> எனினும் அவர் முன்னரே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில்
சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.</p><h2>உடற்கூற்று பரிசோதனை</h2><p> சம்பவ இடத்திற்கு
சென்ற குற்றத் தடுப்பு பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று (20.09) பதில் நீதவான் த.
ஆர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டு, சடலங்களை உடற்கூற்று
பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ae750a-f2aa-4c56-b42a-1e1e35ff4aca/26-6aafee105b291.webp' /></p><p>
</p><p>
இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி சுரேந்திர சேகர் மற்றும் வவுனியா தலைமை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே. எஸ்.ரத்னமலலா ஆகியோரும் பிரசன்னமாகி
விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய அலஸ்கிறின் என்ற
பெண்ணும் அவரது மகனான 35வயதுடைய அயந்தன்&nbsp; &nbsp;என்ற இளைஞருமே சடலமாக
மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-20T14:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-light-lamps-and-pray-for-anojan-s-release-1789910009"></link>
            <id>https://tamilwin.com/article/people-light-lamps-and-pray-for-anojan-s-release-1789910009</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை
செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை
செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித்
தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.</p><p>

வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று(19) இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச்
சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக்
காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப்
பிரார்த்தனை செய்தனர்.</p><h2>பிரார்த்தனை</h2><p>

அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி
தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மனுவிலும்
மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eba0a6d-ac11-4164-ad1a-396559f03775/26-6aafde6047312.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு மீட்டு வர வேண்டும் என
வலியுறுத்தி கல்முனை, நற்பிட்டிமுனை உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும்
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள்
ஒன்றிணைந்து பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T13:33:00+00:00</updated>
        </entry>
    </feed>
