<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-05T11:34:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுநலவாயப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tharanga-wins-gold-medal-at-commonwealth-games-1785928220"></link>
            <id>https://tamilwin.com/article/tharanga-wins-gold-medal-at-commonwealth-games-1785928220</id>
            <summary type="text">அண்மையில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின்
ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து சாதனை படைத்த இலங்கை விமானப்படையைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின்
ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து சாதனை படைத்த இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்கவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சாதனையால் அவருக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த நிகழ்வு, இன்று(05.08.2026) விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. </p><h3>



தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த அதிகாரி</h3><p>

தாய்நாட்டுக்குப் பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும் முந்தைய
சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து
எதிரிசிங்கவினால், அவர் கோப்ரல் பதவி நிலையிலிருந்து சார்ஜன்ட் பதவி நிலைக்கு
உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd7612da-53ce-4ffe-9364-180da5c7d8d2/26-6a731ab25a3f5.webp' /></p><p>
</p><p>
 அத்துடன், விமானப்படைத் தளபதியால் ரொமேஷ் தரங்கவுக்குச்
விசேட நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனைக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த அவரது பயிற்சியாளர் டோனி
பிரசன்னா மற்றும் உடற்பயிற்சி உதவியாளர் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின்
சேவைகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2ba3cb8-dd68-44bd-9fa6-dae24e057aac/26-6a731ab31b1ca.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/498ccd39-3fee-4726-b597-5d91570009eb/26-6a731ab3e7964.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e6236f-ded6-4af8-a877-b7068cfab3da/26-6a731ab4bdf2f.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/akila-viraj-in-the-bribery-corruption-commission-1785908875"></link>
            <id>https://tamilwin.com/article/akila-viraj-in-the-bribery-corruption-commission-1785908875</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (நிர்வாக சீர்திருத்தங்கள்) பணியாற்றிய காலத்தில் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.</p><p>

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியபோது, ​​அவர் தனது உத்தியோகப்பூர்வ பணியாளர்கள் என்று கூறி நான்கு ஊழியர்களைப் பணியமர்த்தினார் என இலஞ்ச ஆணைக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p><p>

ஒருவர் தனது சொந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிக்கு அனுப்பப்பட்டிருந்த வேளையில், மற்றொருவர் அலுவலகம் சாராத பணிகளில் ஈடுபட்டிருந்தார். </p><p>

அலுவல் ரீதியான பொறுப்புகள் வழங்கப்படாத போதிலும், அரச நிதியிலிருந்து மொத்தம் 2,768,836.14 ரூபாய் மதிப்பிலான சம்பளம் வழங்க அவரால் ஏற்பாடு செய்யப்பட்டதால், அரசிற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார்.</p><p>இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கானவே அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகிலவிராஜ் காரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1QGQREGh-68" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p><p>

</p>]]></content>
            <updated>2026-08-05T10:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை போக்குவரத்து சபை பெயர் பலகையை பயன்படுத்தி நடக்கும் மோசடி - பயணிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scam-using-sri-lanka-transport-board-nameplates-1785927228"></link>
            <id>https://tamilwin.com/article/scam-using-sri-lanka-transport-board-nameplates-1785927228</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) பெயர் பலகையைப் பயன்படுத்தி உணவகங்கள்
பலவற்றில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகப் பயணிகள் கவலை
தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) பெயர் பலகையைப் பயன்படுத்தி உணவகங்கள்
பலவற்றில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகப் பயணிகள் கவலை
தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

அனுராதபுரம், கோமரங்கடவள பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இலங்கை
போக்குவரத்து சபையின் உத்தியோகபூர்வ பெயர் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனை நம்பி உணவகத்திற்கு வரும் பயணிகளிடம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
மற்றும் பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வழக்கமான விலையை விட ரூ. 30 முதல்
ரூ. 40 வரை கூடுதலாக அறவிட்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பயணிகள்
குற்றம் சாட்டுகின்றனர்.
</p><h2>
பயணிகள் விசனம்</h2><p>
மேலும், குறித்த உணவகத்தில் அடிப்படை வசதியான கழிப்பறை வசதிகள் சுத்தமாகப்
பராமரிக்கப்படுவதில்லை என்றும், சுகாதாரமற்ற முறையில் காணப்படுகின்றது என்றும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/039c51eb-1dba-4943-bd32-65682541c916/26-6a7316d6b1ee5.webp' /></p><p>
</p><p>
இந்த உணவகத்திற்கு அனுராதபுரம், அக்கரைப்பற்று, கொழும்பு, கண்டி, குருநாகல்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகளில்
பயணிக்கும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். </p><p>

இலங்கை போக்குவரத்து
சபையின் பெயர் பலகையை பார்த்து பயணிகள் பலர், இவ்வாறான விலை
ஏற்றத்தாலும் சுகாதாரமற்ற சூழலாலும் பெரும் அசெளகரியங்களுக்கும் நிதிச்
சுரண்டலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.</p><p>

எனவே, இந்த விடயம் தொடர்பில், உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு
சம்பந்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கும், நுகர்வோர் விவகார
அதிகாரசபை மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/132a98a3-ac03-4c34-9b76-37aa8b262299/26-6a7316d79a22a.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T10:56:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் வாகன இறக்குமதியால் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள பெருமளவு பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-imports-sri-lanka-1785924658"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-imports-sri-lanka-1785924658</id>
            <summary type="text">மோட்டார் வாகன இறக்குமதி மூலம் சுங்க வரிகளாக ரூ. 896.4 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வர்த்தக சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகன இறக்குமதி மூலம் சுங்க வரிகளாக ரூ. 896.4 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வர்த்தக சம்மேளனம் தனது முக்கிய வெளியீடான 'மோட்டார் வாகனத் துறை அறிக்கை 2025/26'ஐ வெளியிட்டுள்ளது.</p><p>இலங்கையின் வாகனத் துறை ஒரு புதிய கட்டத்திற்குள் பிரவேசிப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.</p><h2>முதல் 06 மாதங்களில்</h2><p>
15இற்கும் மேற்பட்ட உள்நாட்டு வாகன இணைப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருவதோடு, குறைந்தபட்சம் 20வீத உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் கொள்கை காரணமாக வேலைவாய்ப்புகளும் உள்நாட்டு மதிப்பும் அதிகரித்துள்ளன.</p><p>2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் மாத்திரம் 3,27,000க்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b407cb2-e8de-43cd-94a2-af819a143c5a/26-6a7316932b325.webp' /></p><p>
உலகளவில் விற்பனையாகும் புதிய சிற்றூந்துகளில் நான்கில் ஒன்று மின்சார வாகனமாகும்.

இதன் விற்பனை முதன்முறையாக 20 மில்லியனைக் கடந்துள்ளது.
</p><p>இலங்கைப் பொருளாதாரத்தில் வாகனத் துறையின் பங்கு, இறக்குமதி மற்றும் பதிவு தரவுகள், எரிபொருள் வகை சார்ந்த சந்தைப் போக்குகள் மற்றும் இத்துறையின் எதிர்கால வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MMIpc2_uSoE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-05T10:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-kanthalay-1785921626"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-kanthalay-1785921626</id>
            <summary type="text">கந்தளாய் - வென்றாசன்புர பகுதியில் பேருந்தும், மோட்டார்சைக்கிளும் இன்று (05.08.2026) காலை மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.&amp;nbsp;இந்த விபத்தில் ஒருவர் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் - வென்றாசன்புர பகுதியில் பேருந்தும், மோட்டார்சைக்கிளும் இன்று (05.08.2026) காலை மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.&nbsp;</p><p>இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்து கந்தளாய் தள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><h2>ஒருவர் காயம்</h2><p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று
சீகிரியாவுக்குச் சென்றுவிட்டு,&nbsp; திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, கந்தளாய் பிரதான வீதியின் 91ஆம் கட்டைப்
பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியைக் குறுக்கறுத்த மோட்டார்
சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8360e92e-212b-49f2-a730-98d4fb0780d4/26-6a73158b4ca98.webp' /></p><p>
</p><p>
இவ்விபத்தில் காயமடைந்தவர் வென்றாசன்புர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ்
உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/073d5ab1-3d34-4648-a5e1-7ba51016e0ea/26-6a73158c0cd50.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T10:53:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-sri-lanka-mahavali-river-flood-warning-1785924159"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-sri-lanka-mahavali-river-flood-warning-1785924159</id>
            <summary type="text">அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
மகாவலி ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வெள்ளப்பெருக்கு அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>வான் கதவுகள் திறப்பு&nbsp;</h2><p>
</p><p>
மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் எதிர்காலத்தில் அதிக மழை பொழிய கூடும் எனவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாலும், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24582ffd-8626-4503-a916-284aa3ad0848/26-6a7311be0ecbe.webp' /></p><p>இதன் கீழ், உடுநுவர, உடபலாத, யட்டிநுவர, தொளுவ, குளுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகள் அடங்கும்.&nbsp;</p><p>இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பேரிடர் மேலாண்மைத் துறைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>

இனிவரும் காலங்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T10:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி விவகாரம்! முக்கிய 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statements-91-officers-regarding-hacking-incident-1785925565"></link>
            <id>https://tamilwin.com/article/statements-91-officers-regarding-hacking-incident-1785925565</id>
            <summary type="text">2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான சம்பவம் தொடர்பில் முக்கிய 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமான சம்பவம் தொடர்பில் முக்கிய 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பாக பல தொழில்நுட்ப சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சம்பவம் நடந்த உடனேயே, நிதி அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>ஐந்து வெளிநாடுகளிடமிருந்து தகவல் கோரல்</h2><p>
இதற்கமைய, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், பொதுக்கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் 91 அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/858eaa55-aacc-4c97-ab94-cd6d88c9936a/26-6a73119b514f5.webp' /></p><p>
வங்கி கணக்கு தகவல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைப் பெறுவதற்காக ஐந்து வெளிநாடுகளிடமிருந்து தகவல் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

இதற்கமைய, சந்தேகநபர்களை அடையாளம் காண சர்வதேச பொலிஸ் மற்றும் தொடர்புடைய நாடுகளுடன் கூட்டாக பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T10:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்களுக்கு வெளியான அறிவிப்பு - விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishing-activities-allowed-to-resume-1785922270"></link>
            <id>https://tamilwin.com/article/fishing-activities-allowed-to-resume-1785922270</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவும் வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, புத்தளம் முதல் அம்பாந்தோட்டை வரையிலான கடற்றொழில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க கடற்றொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, புத்தளம் முதல் அம்பாந்தோட்டை வரையிலான கடற்றொழில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
இருப்பினும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிக்கு இன்னும் அதிக ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எதிர்கால வானிலை எச்சரிக்கைகள்&nbsp;</h2><p>
புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகளில் நிலவிய பலத்த காற்று தற்போது ஓரளவு தணிந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e264b3-7638-44dc-bfb5-d7e2fc8aa2bd/26-6a730aa2d4df8.webp' /></p><p>இருப்பினும், அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகள் கரையோர கடற்றொழில் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து உகந்ததாக இல்லாததால், மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக அப்பகுதிகளிலிருந்து செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

தென்மேற்குப் பருவக்காற்றின் தாக்கத்தால் நாட்டைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் எந்த நேரத்திலும் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அனைத்து கடற்றொழிலாளர்ககளும் உயிர் காப்புச் சட்டைகளை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்கால வானிலை எச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T10:05:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவரது மனைவியும்..! தொழிலதிபரின் திருமணத்தில் கசிந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithripala-sirisena-case-easter-attack-issue-1785914995"></link>
            <id>https://tamilwin.com/article/maithripala-sirisena-case-easter-attack-issue-1785914995</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினால் முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பிரபல தொழிலதிபரின் மகனின் திருமணத்திற்கு மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையான தோற்றத்தில் இருந்துள்ளமை பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது மைத்திரிபாலவை நன்கு அறிந்தவர்கள் திருமணத்தில் பாடலொன்றினை பாடுமாறு வற்புறுத்திய நிலையில், அவர் அங்கு தந்தை மகனை பற்றிய பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் மருமகளும்</h2><p>

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மைத்திரிபாலவின் பாடல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf444d5a-9f2f-4ade-acac-4f75659d87e1/26-6a72fbb614f80.webp' /></p><p>

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன் காரணமாக அவர் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><h2>பிரபல அரசியல்வாதியின் மகனும் தொடர்பு</h2><p>

இருப்பினும், இந்த மோசடியில் பிரபல அரசியல்வாதியின் மகனும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.</p><p>2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்த நிலையில்,முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு&nbsp; மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், மகன் தொடர்பில் பரவும் தகவல் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரம் போன்ற விடயங்களினால்&nbsp;மைத்திரிபால சிறிசேன பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T10:00:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் கைது - பொலிஸார் தீவிர சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-illegal-production-1785921774"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-illegal-production-1785921774</id>
            <summary type="text">மட்டக்களப்பு - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை துவரை ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் பொலிஸாரால் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை துவரை ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(04.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><h2>


1800 லீற்றர் கோடா பறிமுதல்</h2><p>
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6301515-c271-4a1e-a735-eefe69f89c76/26-6a73016a67e4d.webp' /></p><p> </p><p>

இதன்போது, சட்ட விரோதமான முறையில் கசிப்பு
உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், கசிப்பு உற்பத்திக்கு தயார் நிலையில் இருந்த 1800 லீற்றர் கோடா பறிமுதல் செய்யப்பட்டது. </p><p>

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் இன்று(05.08.2026) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தர்மபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eb14963-4736-49b6-9f2e-232142c32057/26-6a73016b499ba.webp' />&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50d48355-7335-49df-9703-1e6b92ca2255/26-6a73016c4d249.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதபுதைகுழி: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணுமாதிரிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1785918942"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1785918942</id>
            <summary type="text">செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டிய சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். </p><p>

நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.08.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.</p><h2>அகழ்வாய்வுப் பணிகள்</h2><p>
</p><p>
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆகஸ்ட் 04ஆம் திகதி நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

அவற்றில் 481 மனித எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1618de8-aa91-4a31-8a22-88278838cb09/26-6a72fdd3d42cb.webp' /></p><p> </p><p>எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒப்புதலுடன் அவர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். மனிதப்புதைகுழி விடயத்தில் அடையாளங்காணப்பட்ட எலும்புத்தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்தெடுப்பதென்பது முதற்கட்ட செயற்பாடாகும்.</p><h2>அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை&nbsp;</h2><p> </p><p>

அதன் பிற்பாடு என்பு மாதிரிகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்வது இரண்டாவது நடவடிக்கையாகும். அதனைத்தொடர்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை தொடர்பில் தொல்லியல் திணைக்களம் அறிவியல் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிப்பார்கள். மூன்றாவது கட்டமானவே காணாமல்போன உறவுகள் தொடர்பான தேடுதல் விவகாரங்கள் ஆரம்பமாகும். </p><p>

யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது, கைதுசெய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடு வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு பாதிக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1df787e-c5bd-4f72-aa75-7f22f4094f43/26-6a72fdd48c771.webp' /></p><p> </p><p>

ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணுக்களைச் சேகரித்து அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதுவும் இதுவரை உருவாக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p> 

மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் பங்கேற்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான ரனித்தா ஞானராசா அவர்களும் அண்மையில் இதுதொடர்பில் வலியுறுத்தியிருக்கின்றார். எனவே இதுதொடர்பிலும் கவனஞ்செலுத்தப்பட வேண்டுமென இவ் உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T09:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு: இவரை கண்டால் அறிவிக்கவும்.. பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-seek-public-help-to-arrest-1785918387"></link>
            <id>https://tamilwin.com/article/police-seek-public-help-to-arrest-1785918387</id>
            <summary type="text">மீட்டியாகொடவில் உள்ள ஒரு உணவகத்தில் பெண் காசாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் ஹிக்கடுவவைச் சேர்ந்த 39 வயது நபரைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீட்டியாகொடவில் உள்ள ஒரு உணவகத்தில் பெண் காசாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் ஹிக்கடுவவைச் சேர்ந்த 39 வயது நபரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் கடந்த 2025 நவம்பர் 17 ஆம் திகதியன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


பொலிஸார் வெளியிட்ட தகவலின் படி, மீட்டியகோடா பொலிஸ் நிலையம் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. </p><h2>

பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்</h2><p>
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார், ஆனால் தற்போது தலைமறைவாக உள்ளார் என்பதை பொலிஸ் நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/768852d8-5be0-41e5-a6f9-babd6e8a7038/26-6a72f6be2a96e.webp' /></p><p>
</p><p>
கந்தரா மற்றும் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுகளில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாகவும் இந்த சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும், பாலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அவருக்கு எதிராகப் பல பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>சந்தேக நபர் தொடர்பில், தகவல் தெரிந்தவர்கள், 071-8591481 (பொறுப்பாளர்/மீட்டியகோடா) அல்லது 091-2260423 (மீட்டியகோடா பொலிஸ் நிலையம்) என்ற எண்களில் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:39:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தர - புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/al-examination-scholarship-examination-bad-weather-1785917107"></link>
            <id>https://tamilwin.com/article/al-examination-scholarship-examination-bad-weather-1785917107</id>
            <summary type="text">5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதிகளில்&amp;nbsp;மழை பெய்தால், பாதிப்புகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதிகளில்&nbsp;மழை பெய்தால், பாதிப்புகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.</p><p>தற்போது நிலவும் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளை (GCE A/L) நடத்துவது தொடர்பாக இன்று (05) ஒரு சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>வானிலை ஆய்வுத் திணைக்களம், பேரிடர் மேலாண்மை மையம் (DMC) மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p><h2>பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>இதன்போது, எதிர்வரும் நாட்களில் மோசமான வானிலை நிலவினாலும், பரீட்சைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617a5ad3-b26f-48ed-a5b2-f9c62d7126e6/26-6a72f2cb880dc.webp' /></p><p>அதற்கமைய, ஒகஸ்ட் 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மழை பெய்தால், பரீட்சை நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்காணித்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது செயல்பாட்டு அறையில் ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.
</p><p>
 

வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் உதவி வழங்குவதற்காக, படகுகளும் பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. </p><p>

 

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை, ஒகஸ்ட் 9ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெற உள்ளது.</p><p>

 

அதேநேரம், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை, ஒகஸ்ட் 10 முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை 2,532 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்: விவசாயிகள் பெரும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785912812"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785912812</id>
            <summary type="text">அம்பாறை - நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கனமழை காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரினுள்
மூழ்கியுள்ளதாக பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கனமழை காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரினுள்
மூழ்கியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

இயற்கை சீற்றத்தின் திடீர் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும்
சீரற்ற காலநிலை காரணமாக நிந்தவூர் விவசாயப் பிரிவுப் பகுதிகளில்
பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.</p><h2>நீர்மட்டம் உயர்வு</h2><p>

பால் பிடிக்கும் பருவத்திலும், வளர்ந்த நிலையிலும் காணப்பட்ட நெற்பயிர்கள்
பலத்த காற்றினால் தரைமட்டமாகச் சாய்ந்துள்ளதுடன், தொடர் மழையால் வயல்வெளிகளில்
நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது. </p><p>இதனால், பயிர்கள் அழுகும் நிலை
ஏற்பட்டுள்ளதோடு, நீரில் மூழ்கிய நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும்
விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6043b434-f9bf-4c4e-b612-1892a3fc57e1/26-6a72f2a63bca9.webp' /></p><p>

வடிகான் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் நீர்வரத்து
அதிகரிப்பு காரணமாக வயல்களிலிருந்து மழைநீர் வெளியேறுவதில் பெரும் தாமதம்
ஏற்பட்டுள்ளது.</p><h2>பொருளாதார பேரிடி</h2><p>
</p><p>
எரிபொருள் விலை உயர்வு, உரம் மற்றும் விதை நெல் செலவுகளுக்கு மத்தியில் கடன்
பட்டாவது சிறுபோக/பெரும்போகச் செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு இந்நிலைமை
பெரும் பொருளாதார பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c1e4ae8-d485-498a-8463-e185b9af9d1c/26-6a72f2a71bdca.webp' /></p><p>
</p><p>
எனவே, பாதிப்புக்குள்ளான வயல்நிலங்களை விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் கமநல
சேவை அலுவலர்களும் உடனடியாகப் பார்வையிட்டு, பயிர்ச்சேத மதிப்பீடுகளை விரைவாக
மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.</p><p>
</p><p>
அத்துடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க
அரசாங்கமும் விவசாயக் காப்பீட்டுச் சபையும் முன்வர வேண்டும் எனவும் அவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02498b63-e5c5-4a01-9888-2d44d2dfeceb/26-6a72f2a803215.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030இற்குள் விரிவாகும் அதிவேக நெடுஞ்சாலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-add-132-km-to-expressway-network-by-2030-1785914833"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-add-132-km-to-expressway-network-by-2030-1785914833</id>
            <summary type="text">2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் தேசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு&amp;nbsp; கூடுதலாக 132 கிலோமீட்டர் அளவுக்கு விரிவாக்கப்படும் என போக்குவரத்து அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் தேசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு&nbsp; கூடுதலாக 132 கிலோமீட்டர் அளவுக்கு விரிவாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விரிவாக்கத்திற்குப் பங்களிக்கும் நான்கு முன்னெடுப்புகளில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டு முக்கியப் பகுதிகளில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2>நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள்</h2><p>கடவத்தையிலிருந்து மிரிகம வரையிலான 37 கிலோமீட்டர் நீளமுள்ள முதல் கட்டப் பகுதியும், பொத்துஹேராவிலிருந்து கலகெதரா வரையிலான 33 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்றாம் கட்டப் பகுதியும் இதில் அடங்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fef77485-1ec1-434d-85be-f234a5979448/26-6a72ee95d4407.webp' /></p><p>நாட்டின் மத்திய வழித்தடம் முழுவதும் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இவ்விரு பிரிவுகளின் கட்டுமானப் பணிகளும் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
</p><p>
தற்போது நடைபெற்று வரும் பணிகளுக்குக் கூடுதலாக, குருநாகல் - தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமான குருநாகல் - கலேவெல வீதித் திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>38 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பிரிவின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 233 பில்லியன் ஆகும். இது, உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தும் வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ஒப்பந்தப்புள்ளி செயல்முறையின் மூலம் வழங்கப்படும் </p><p>மேலும், 24 கிலோமீட்டர் நீளமுள்ள ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளும் இந்த ஆண்டுக்குள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>முதன்முறையாக, இந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியிலிருந்து நிதியளிக்கப்படும். நிலையான தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, அரசாங்கத்தின் உத்திசார் அபிவிருத்திக் கொள்கைக் கட்டமைப்பை முழுமையாகப் பின்பற்றி இந்த முன்னெடுப்புகள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் அமைச்சர்&nbsp;பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. வெளியான சிசிடிவி காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cctv-footage-kaduwela-bus-arson-attack-today-1785915933"></link>
            <id>https://tamilwin.com/article/cctv-footage-kaduwela-bus-arson-attack-today-1785915933</id>
            <summary type="text">கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் சொகுசுப் பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை முகமூடி அணிந்த இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றமை அப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் சொகுசுப் பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை முகமூடி அணிந்த இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில்&nbsp;இச்சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.&nbsp;</p><p>இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.&nbsp;</p><p>இதனை கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர். இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>தனிப்பட்ட பகை..&nbsp;</h2><p>இதற்கிடையில், தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f0b5b0-44d1-43c7-a58c-2a6fa164ba1a/26-6a72ecc436422.webp' /></p><p>நெடுஞ்சாலை வழியாக கடுவெல - மாத்தறை இடையே இயக்கப்படும் சொகுசுப் பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், தீயினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>அதேநேரம், குறித்த பேருந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல - கொள்ளுப்பிட்டி சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் லேசான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>

தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளம் கடத்தல்காரர்கள்- தமிழர் பகுதியில் தொடர் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-smugglers-caught-with-ice-drugs-1785916761"></link>
            <id>https://tamilwin.com/article/young-smugglers-caught-with-ice-drugs-1785916761</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், நடத்தப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், நடத்தப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(04.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அம்பாகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயது முதல் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2> 

இளம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது</h2><p>
இந்த நடவடிக்கையின் போது, 2,800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச்
சந்தேகிக்கப்படும் 14,700 ரூபாய் ரொக்கப் பணமும் பொலிஸாரால் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d5729f-7ed8-455a-bddb-be53454ad904/26-6a72edb3ac955.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p> 

இந்த நிலையில், சந்தேகநபர்களை விசாரணையின் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T08:01:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹர்ஷ டி சில்வாவின் தந்தை காலமானார் - இறுதி சடங்குகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/haris-de-silva-passes-away-1785915274"></link>
            <id>https://tamilwin.com/article/haris-de-silva-passes-away-1785915274</id>
            <summary type="text">தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், அமைச்சுச் செயலாளராகவும் பணியாற்றிய மூத்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஹாரிஸ் டி சில்வா தனது 9...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், அமைச்சுச் செயலாளராகவும் பணியாற்றிய மூத்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஹாரிஸ் டி சில்வா தனது 93ஆவது வயதில் காலமானார்.</p><p> 

இவர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தந்தையும் ஆவார். </p><p>

இலங்கையின் அரச பதிவேடுகள் மற்றும் ஆவணக் காப்பக அமைப்பைப் பாதுகாத்தல், பேணுதல் மற்றும் நவீனமயமாக்குவதில் நீண்டகாலத் தலைமைத்துவத்தை வழங்கிய ஹாரிஸ் டி சில்வா, பொது நிர்வாகத் துறையிலும் ஈடுபாடுடன் செயற்பட்டார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இறுதிச் சடங்குகள்</span></p><p>

இதனைத் தொடர்ந்து, நாட்டின் ஆவணக் காப்பக மற்றும் ஆவணக் காப்பகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய புகழ்பெற்ற அதிகாரியாகவும் அறியப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a7f2936-fdf0-4617-b17c-cf6fdf6a2bfd/26-6a72e78c3aab0.webp' /></p><p>

மறைந்த ஹாரிஸ் டி சில்வாவின் திருவுடல் இன்று(05.08.2026) காலை 9.00 மணி முதல் கிருலபொன், பூர்வராம வீதத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதன் பின்னர், இறுதிச் சடங்குகள் இன்று(05) பிற்பகல் கிருலபொன் பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p><p> 



</p>]]></content>
            <updated>2026-08-05T07:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் 2 நாட்களில்..! றீச்சா பண்ணையின் மாபெரும் உணவுத் திருவிழா - இன்றே பதிவு செய்யுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reechsha-farm-s-food-festival-1785912270"></link>
            <id>https://tamilwin.com/article/reechsha-farm-s-food-festival-1785912270</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்னும் சில தினங்களில் கோலாகலமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்னும் சில தினங்களில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இந்த மாபெரும் உணவுத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகி, 8 மற்றும் 9ஆம் திகதிகள் உட்பட மூன்று நாட்கள் மாலை 6 மணி முதல் 10 வரை&nbsp; நடைபெறவுள்ளது.
</p><h2>
நீங்களும் இணைந்து கொள்ளலாம்... </h2><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், 
சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d41bca07-6d93-41aa-8497-6866b9108153/26-6a72e9b816980.webp' /></p><p>
</p><p>
அத்துடன், உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், றீச்சாவின் உணவுத் திருவிழாவிற்கு <b>QICK FOOD </b>அனுசரணை வழங்குவதுடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளன.</p><p>உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T07:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-regarding-advanced-level-examination-1785912427"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-regarding-advanced-level-examination-1785912427</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட&amp;nbsp;அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட&nbsp;அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><p>உயர் நீதிமன்றம் இன்று (05) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு&nbsp;</span></p><p>க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதல் மற்றும் இரண்டாம் முறையாக தோற்றவுள்ள ஐந்து மாணவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d3826a4-5a1d-414a-9521-bf827a309c44/26-6a72eb28cd7aa.webp' /></p><p>இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.</p><p>
10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IeSYrculFA0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-05T07:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன் - ஆறு மில்லியன் ரூபா பண மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/job-scam-women-get-cheated-1785903286"></link>
            <id>https://tamilwin.com/article/job-scam-women-get-cheated-1785903286</id>
            <summary type="text">வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 6,365,000 ரூபாவை மோசடி செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 6,365,000 ரூபாவை மோசடி செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில், கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
புத்தளம், பங்கதெனிய சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரை இணையவழி வங்கிச் சேவைகள் ஊடாகப் பணத்தை மாற்றியனுப்புமாறு சந்தேக நபர் நம்ப வைத்துள்ளார்.</p><p>
</p><h2><b>
பெண்ணிடமிருந்து மோசடி</b></h2><p>இந்த சம்பவம் குறித்த முறைப்பாடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பெறப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175acfbf-bdcb-48e9-86a3-d8ce55d0889b/26-6a72d8b263d00.webp' /></p><p>அத்துடன், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் அம்பிளாந்துறையை சேர்ந்தவர் என அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

சந்தேக நபர் கடந்த 3 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டார்.
</p><p>
பொலிஸாரின் தகவலுக்கமைய, இச்சம்பவத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து மோசடியாகப் பெறப்பட்ட மொத்தத் தொகை 6,644,000 ரூபாவாகும்.
</p><p>
சந்தேக நபர் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T07:31:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹர்ஷா டி சில்வாவின் தந்தை காலமானார் - இறுதி சடங்குகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-administrator-haris-de-silva-passes-away-1785913999"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-administrator-haris-de-silva-passes-away-1785913999</id>
            <summary type="text">தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், அமைச்சுச் செயலாளராகவும் பணியாற்றிய மூத்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஹாரிஸ் டி சில்வா தனது 9...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், அமைச்சுச் செயலாளராகவும் பணியாற்றிய மூத்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஹாரிஸ் டி சில்வா தனது 93ஆவது வயதில் காலமானார்.</p><p> 

இவர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வாவின் தந்தையும் ஆவார். </p><p>

இலங்கையின் அரச பதிவேடுகள் மற்றும் ஆவணக் காப்பக அமைப்பைப் பாதுகாத்தல், பேணுதல் மற்றும் நவீனமயமாக்குவதில் நீண்டகாலத் தலைமைத்துவத்தை வழங்கிய ஹாரிஸ் டி சில்வா, பொது நிர்வாகத் துறையிலும் ஈடுபாடுடன் செயற்பட்டார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இறுதிச் சடங்குகள்</span></p><p>

இதனைத் தொடர்ந்து, நாட்டின் ஆவணக் காப்பக மற்றும் ஆவணக் காப்பகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய புகழ்பெற்ற அதிகாரியாகவும் அறியப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/840e3492-24a7-4a4d-81b6-0309ded52d28/26-6a72e4de44356.webp' /></p><p>

மறைந்த ஹாரிஸ் டி சில்வாவின் திருவுடல் இன்று(05.08.2026) காலை 9.00 மணி முதல் கிருலபொன், பூர்வராம வீதத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதன் பின்னர், இறுதிச் சடங்குகள் இன்று(05) பிற்பகல் கிருலபொன் பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p><p> 



</p>]]></content>
            <updated>2026-08-05T07:25:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் முக்கிய இரு அதிகாரிகளுக்கு இடையே உச்சக்கட்ட மோதல்.. ஏற்பட்டுள்ள நிர்வாக நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clash-between-minister-and-deputy-1785909018"></link>
            <id>https://tamilwin.com/article/clash-between-minister-and-deputy-1785909018</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும், பிரதி அமைச்சர் ஜனித கொடிதுவக்குவிற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும், பிரதி அமைச்சர் ஜனித கொடிதுவக்குவிற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 
இதனால் அரசாங்கத்திற்குள் பாரிய நிர்வாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
நட்டத்தில் இயங்கும் சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பது தொடர்பான சர்ச்சை வலுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அரசிற்கு நெருக்கடி..&nbsp;</h2><p>
</p><p>பணிநீக்கம் செய்யப்பட்ட விமான நிறுவன ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பில் பிரதி அமைச்சரால் கூட்டப்பட்ட முறையான விசாரணை ஒன்றில் அமைச்சர் நேரடியாகத் தலையிட்டபோது, கடந்த திங்கட்கிழமை இந்நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac4a476d-97f8-4e4f-a7f5-51bf76fdc48f/26-6a72cf1c8ac1c.webp' /></p><p>
</p><p>காலையில் தொடங்கவிருந்த விசாரணையை மாலை வரை தாமதப்படுத்தி, பின்னர் கூட்டத்தை முன்கூட்டியே முடித்து வைத்ததன் மூலம் அமைச்சர், பிரதி அமைச்சரின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. </p><p>
சிவில் விமானப் போக்குவரத்துப் பிரதி அமைச்சரின் அதிகார வரம்பிற்குள் வருகின்ற போதிலும், அமைச்சரின் இத்தகைய தலையீடு தேசிய விமான நிறுவனத்தின் கடுமையான நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து முடக்கி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>
விமான நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் தலைமைத்துவ வெற்றிடம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள பின்னணியிலேயே இந்த அதிகாரப் போட்டி வெடித்துள்ளது. நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் அண்மைய விசாரணையின் போது, அதன் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார், கடந்த 16 மாதங்களாக ஒரு தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கத் தவறியமை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.</p><h2>சோகமான நிலைமை</h2><p> </p><p>இரண்டு கட்ட நேர்காணல்கள் நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், ஒரு வருடம் மற்றும் நான்கு மாதங்களுக்கும் மேலாகப் பொருத்தமான ஒருவரை உள்ளூரிலோ அல்லது வெளியிலிருந்தோ கண்டுபிடிக்க முடியாமல் போனது ஒரு சோகமான நிலைமை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d09e314-c352-4f8f-96b4-00b4e1d25ea0/26-6a72e4e327657.webp' /></p><p>
இந்த வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில், சிறீலங்கன் எயார்லைன்ஸ் தவிசாளர், நிறுவனத்தின் உள்ளக அதிகாரிகளில் ஒருவரை இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தார். இதற்கமைய, மூன்று வாரங்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் தலைவர் மற்றும் வர்த்தகத் தலைவர் ஆகிய இரு உள்ளக நிர்வாகிகள் சுருக்கப்பட்டியலிடப்பட்டனர். </p><p>இதில் பிரதி அமைச்சருடன் கலந்தாலோசிக்காமல், தகவல் தொழில்நுட்பத் தலைவரைத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அமைச்சர் கருணாதிலக்க தனிச்சையாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 
இருப்பினும், சிறீலங்கன் எயர்லைன்ஸின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இடம்பெற்ற கடுமையான ஊழல் நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத் தலைவரைப் பதவியேற்க வைக்கும் நடவடிக்கை திடீரென முடங்கியது.</p><h2>அதிகாரபூர்வமான தகவல்கள்</h2><p> </p><p>
தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சாமர பெரேராவின் நிர்வாகத்தின் கீழ் அப்பிரிவில் பாரதூரமான தவறான நிர்வாகம் இடம்பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aea38ab-f3d5-40d9-a435-b24691f73c3c/26-6a72e4e3dfe33.webp' /></p><p> </p><p>அவர் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கும் தொழில்முறை அம்சத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>
பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வ நியமனத்தை அமைச்சர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள போதிலும், அவரை இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்த்துவதில் அமைச்சர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p> 
அதேவேளை, திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையில் ஜே.வி.பி சார்ந்த தொழிற்சங்கம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மண்டபத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.</p><p> தகவல் தொழில்நுட்பத் தலைவர் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, அவரது ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளதால், சிறீலங்கன் எயர்லைன்ஸைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் செயல்பாட்டு மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.&nbsp;</p><p>எனினும் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத் தரப்பில் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T07:23:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை சிறைச்சாலையில் தீவிர பாதுகாப்பு - ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tight-security-for-south-prisons-1785893586"></link>
            <id>https://tamilwin.com/article/tight-security-for-south-prisons-1785893586</id>
            <summary type="text">நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

காலி, பூஸ்ஸ, மாத்தறை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் வீரவில சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தப்படவுள்ளது. </p><p>

இது தொடர்பில், தென் மாகாண ஆளுநர் சுசிறிபால மானவடுவின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.</p><p>&nbsp;</p><p>
</p><h2><b>
அவசர பாதுகாப்புக் குழு</b></h2><p>நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவான அமைதியின்மை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தென்னிலங்கையில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்வதே இந்த அவசர பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b4604bb-afe3-4db4-a0e2-6d8548e9ea9a/26-6a72b333efab8.webp' /></p><p>மக்களின் பாதுகாப்பு, உயிர், உடைமைகள் மற்றும் அமைதியான சூழ்நிலையை தொடர்ந்தும் பேணிச் செல்வது தொடர்பில் எவ்வித தளர்வான கொள்கையும் கடைப்பிடிக்கப்பட மாட்டாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p>

நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, அனைத்துப் பாதுகாப்பு பிரிவுகளும் இணைந்து எத்தகைய அவசர நிலையையும் உடனடியாக எதிர்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-05T07:13:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த இலக்கு மைத்திரி! அரசாங்கத்தை உசுப்பேற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-gets-caught-in-easter-attack-case-1785907068"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-gets-caught-in-easter-attack-case-1785907068</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><h2>வழக்குத் தொடர பரிந்துரை</h2><p>2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விஜித மலல்கொட அறிக்கைக்கு அமைவாகவே இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனினும், அந்த அறிக்கையில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. </p><p>

மேலும், 2019ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று, 2022இல் நிறைவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd226b0d-82ef-44a8-bdb1-9ccb1e69b84b/26-6a72db6349d17.webp' /></p><p> </p><p> அந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர். </p><p>

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றப் போது, பூஜித் மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கு நட்டஈடு செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. </p><p>

ஆனால் அப்போது உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் இணைக்கவில்லை.</p><p> 

இதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது. தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010a33fa-478c-4295-9cfa-57f818b09e22/26-6a72db64037a2.webp' /></p><p> </p><p>அவ்வாறு எப்படி நடக்க முடியும்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் நிலந்த ஜயவர்தன மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. </p><p>

தாக்குதல் சம்பவம் நடக்கும் போது பாதுகாப்பு அமைச்சு, முப்படைகளும் மைத்திரிபால சிறிசேனவிடமே இருந்தது. அவர் எப்படி பொறுப்பில் இருந்து விலக முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும்.</p><p> அந்த விசாரணைகள் நடக்கும் போதே 2022இல் தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் எப்படி விடுவிக்கப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் தெளிவாக தனது கடமைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T06:42:51+00:00</updated>
        </entry>
    </feed>
