<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-11T05:31:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து வெடித்த கலவரம்! எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/psychiatrist-s-advice-to-reduce-inmates-violence-1786420346"></link>
            <id>https://tamilwin.com/article/psychiatrist-s-advice-to-reduce-inmates-violence-1786420346</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் மோசமான நடத்தையை குறைப்பதற்காக, மனநல மருத்துவர்களின் சேவைகளை அடிக்கடி பெறுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

கடந்த மாதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் மோசமான நடத்தையை குறைப்பதற்காக, மனநல மருத்துவர்களின் சேவைகளை அடிக்கடி பெறுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறை உட்பட ஐந்து சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இந்த கலவரங்கள் காரணமாக ரூ. 255 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>சிறைகளில் வெடித்த கலவரம்</h2><p>இதற்கமைய, சட்டத்துறையில் தாமதங்களை தவிர்ப்பதற்காக, 2007ஆம் ஆண்டின் புனர்வாழ்வுச் சட்டத் திருத்த மசோதா எண் 54-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் செயல்முறையை விரைவுபடுத்துமாறும், ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி அச்செயல்முறையை விரைவுபடுத்துமாறும் நீதித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf7e16e-0f6d-4ad8-b60a-37866eeb0ec7/26-6a7ab3448406a.webp' />&nbsp;</p><p>
நீர்கொழும்பு, மஹர, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை சிறைகளில் வெடித்த கலவரத்தில் பத்து சிறை அதிகாரிகளும் 25 கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

இதற்கமைய, மேலும் 100 க்கும் மேற்பட்ட கைதிகளும் சிறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிஸ்ஸங்க சேனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nissan-senadhipathi-bribery-commission-1786423335"></link>
            <id>https://tamilwin.com/article/nissan-senadhipathi-bribery-commission-1786423335</id>
            <summary type="text">அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய நிசங்க சேனாதிபதி, இன்று காலை (11) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.&amp;nbsp;

கிரிஷ் பரிவர்த்தனை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய நிசங்க சேனாதிபதி, இன்று காலை (11) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.&nbsp;</p><p>

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக இலஞ்ச ஆணையம் நடத்தி வரும் விசாரணை குறித்த அறிக்கையை வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>குறித்த பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என கூறப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e5a9e7-66c9-4b41-b432-dc179135b65f/26-6a7ab0d5b3b12.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:20:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் குளத்தில் திடீர் சோதனை: 4000 மீட்டர் தடைசெய்யப்பட்ட நைலோன் வலைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/checking-at-kanthalay-banned-nylon-nets-recovery-1786423634"></link>
            <id>https://tamilwin.com/article/checking-at-kanthalay-banned-nylon-nets-recovery-1786423634</id>
            <summary type="text">திருகோணமலை - கந்தளாய் குளத்தில் தடை செய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கந்தளாய் குளத்தில் தடை செய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்
அடிப்படையில், சுமார் 4000 மீட்டர் நீளமான நைலோன் மீன்பிடி வலைகளை கந்தளாய்
பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>இது தொடர்பான விசேட சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் (10.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை</h2><p> </p><p>நேற்று மாலை கந்தளாய் குளப் பகுதியில் தடை செய்யப்பட்ட நைலோன் வலைகளைப்
பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய்
பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8829e2b7-c9b3-45b0-bebf-4905e06a1161/26-6a7aae670b1ec.webp' /></p><p>

இதனையடுத்து, கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர்
லக்மால் விஜேரத்னவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், கந்தளாய் பொலிஸ்
நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் குழுவினர் கந்தளாய் குளப் பகுதியில் விசேட
சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><h2>மீட்கப்பட்ட வலைகள்</h2><p>
</p><p>
இதன்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த சுமார் 4000 மீற்றர் நீளமான
தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுக்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a39ffd-9901-49d6-a8ad-2a5cdee84176/26-6a7aae67cbf0c.webp' /></p><p>
</p><p>
கைப்பற்றப்பட்ட வலைகள் இன்றைய தினம் (11.08.2026) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e488fff-f2c5-4c2c-863b-30df190fe00c/26-6a7aae6897c95.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313dd6f6-cc73-4c42-bf00-459a11eb693e/26-6a7aae696adec.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T05:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/error-in-the-computer-in-department-of-immigration-1786417770"></link>
            <id>https://tamilwin.com/article/error-in-the-computer-in-department-of-immigration-1786417770</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு&amp;nbsp; சரிசெய்யப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு&nbsp; சரிசெய்யப்பட்டுள்ளது.</p><p>

செயலிழந்த கணினி அமைப்பு இயல்பு நிலைக்கு சரிசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்</p><p>கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் வழங்குவதில் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன் காரணமாக கடவுச்சீட்டு மற்றும் ஏனைய பயண ஆவணங்களை விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த கோளாறு காரணமாக அவசரமாக பயண ஆவணங்கள் தேவைப்படும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.</p><h2><b>

ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் </b></h2><p>அத்துடன், ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை வழங்கும் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2bfdab-5d46-401f-9bec-02b92ce483da/26-6a7a9668770cc.webp' /></p><p>திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவு மூலம், ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் ஆகிய இரண்டின் கீழும் கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த பெப்ரவரி மாதமும் இதேபோன்று கணினி முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டு, பின்னர் அது வழமைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-11T04:52:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற சொகுசு கார் - இருவர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/luxury-car-crashes-two-pedestrians-hospitalized-1786422044"></link>
            <id>https://tamilwin.com/article/luxury-car-crashes-two-pedestrians-hospitalized-1786422044</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச்சென்ற சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச்சென்ற சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>
இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>சாரதி கைது</h2><p>வஸ்கடுவ-காலி வீதியில், கார் எதிர் திசைப் பாதைக்குள் விலகிச்சென்று, மூன்று பாதசாரிகள் மீது மோதி, இரண்டு சாலை எல்லை கம்பங்களை உடைத்துக்கொண்டு சாலையிலிருந்து விலகிச்சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25aa423b-94e4-4e61-813a-4ba121f70e3f/26-6a7aa6c2b00ea.webp' />&nbsp;</p><p>

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இதனையடுத்து சாரதி கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T04:36:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-threat-eliminated-1786419640"></link>
            <id>https://tamilwin.com/article/flood-threat-eliminated-1786419640</id>
            <summary type="text">தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்த மழைவீழ்ச்சி குறைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது எந்தப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாட்டில் பெய்த மழைவீழ்ச்சி குறைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அதிகபட்ச மழைவீழ்ச்சி</h2><p> 

இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார இன்று (11.08.2026) முற்பகல் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல்நிலைப் படுகை பகுதிகளிலேயே பதிவாகியுள்ளது.</p><p>

அங்கு பதிவான மழைவீழ்ச்சி சுமார் 20 மில்லிமீற்றர் அளவை எட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed76281d-f56c-49a1-8736-a7e0ea4934d2/26-6a7aa32d99ebe.webp' /></p><h2>ஆற்று நீர்மட்டம்</h2><p> </p><p>நேற்றைய தினம் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும் மழை பெய்த போதிலும், அப்பகுதிகளில் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. </p><p>

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
</p><p>
மழைவீழ்ச்சி இவ்வாறு குறைந்துள்ளதன் காரணமாக நாட்டில் உள்ள எந்தவொரு ஆற்றின் நீர்மட்டமும் விரைவாக உயரவில்லை என்பதுடன், வெள்ள அபாய நிலையும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T04:22:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தெய்வாதீனமாக தடுத்த காவலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-accident-avoided-by-gatekeeper-1786419268"></link>
            <id>https://tamilwin.com/article/train-accident-avoided-by-gatekeeper-1786419268</id>
            <summary type="text">அனுராதபுரம் - தஹியாயகம சந்திக்கு அருகில் தொடருந்து கடவை இயங்காமையினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தொடருந்து&amp;nbsp; கடவை காவலாளியின் சாதுரியமான செயலால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - தஹியாயகம சந்திக்கு அருகில் தொடருந்து கடவை இயங்காமையினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தொடருந்து&nbsp; கடவை காவலாளியின் சாதுரியமான செயலால் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.</p><p> கெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரஜரட்ட தொடருந்து நேற்று பிற்பகல் அனுராதபுரம் புதிய நகர் தொடருந்து நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த போதே இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. </p><p> இதன்போது தொடருந்து கடவை இயங்காததன் காரணமாக, மக்களும் வாகனங்களும் தொடருந்து பாதையைக் கடந்து இருபுறமும் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b> சாரதிக்கு எச்சரிக்கை</b></h2><p>எனினும், அந்தச் நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த தொடருந்து கடவை காவலாளி உடனடியாகச் செயற்பட்டு, தொடருந்து சாரதிக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், தொடருந்து பாதையைக் கடந்து கொண்டிருந்த வாகனங்களையும் பொதுமக்களையும் எச்சரித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7883a48-86c9-4c05-a24a-a17478f62982/26-6a7aa129780df.webp' /></p><p>அதற்கமைய, எந்தவித ஆபத்துமின்றி தொடருந்து பாதையைக் கடப்பதற்கு வாகனங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர், ரயிலில் பாதுகாப்பாக இயக்கப்பட்டுள்ளது. </p><p>தொடருந்து கடவைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தொடருந்து கடவை இயங்காமல் போனதாக தொடருந்து கடவை காவலாளி தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-11T04:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையால் தடுக்கப்பட்ட நியமனம்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-employees-complained-1786419123"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-employees-complained-1786419123</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக்
காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக்
காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>எனவே, வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார
உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் ஐந்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>

சட்டத்தரணி முபாறக் அஸ்ஸம் வழிகாட்டலில், குறித்த முறைப்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை
வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார
அதிகாரியையும் சட்டத்தரணி அஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி ருடானி சாஹிர் ஆகியோர்
நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.</p><h3>முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு&nbsp;</h3><p>
</p><p>
எனினும், குறித்த சந்திப்பின் போது, நியமனம் பெற்ற உதவி சுகாதார
உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான
சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d988ad4-e316-4bf4-8f05-601b50f7eae0/26-6a7a9d4789352.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட
ஆலோசனைகளின் அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக
மீறப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி அஸ்ஸம் ஊடகங்களிடம்
பேசுகையில்,

"நாளை அல்லது நாளை மறுதினம், குறித்த அடிப்படை உரிமை மீறலுக்குப் பொறுப்பான
வைத்திய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் அனுப்பப்படும் என
எதிர்பார்கிறோம். </p><p>அதனைத் தொடர்ந்து முறைப்படியான சட்டரீதியான நடவடிக்கைகளும்,
விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் நம்புகிறோம்" என்றார். இதன்போது சட்டத்தரணி முஅஸ்ஸமுடன் சட்டத்தரணி ருடானி சாஹிரும்
பிரசன்னமாகியிருந்தார்.
</p><p>
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில்,
இவ்விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல்
செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் தீவிரமாக
மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T03:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் அதிரடியால் சிக்கப்போகும் பலர்! உண்மையை அம்பலப்படுத்தினால் தப்பிக்க வழிமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630</id>
            <summary type="text">இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடராதிருப்பதற்கு அல்லது வழக்குகளை மீளப் பெறுவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. </p><p>

இந்த திருத்தமானது, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச்சட்டத்தை திருத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 விசாரணை ஆணைக்குழு</b></h2><p>திருத்தங்களுக்கமைய, இதுவரை மேல்நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக மட்டுமே காணப்பட்ட அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04921074-3974-4a86-a40e-d6d45f0e8a31/26-6a7938852d7b5.webp' /></p><p>அத்துடன், ஊழல் மூலம் பெறப்பட்ட அல்லது ஊழல் மூலம் வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பினை அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>

மேலும், ஊழல் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது பிற இலாபங்கள் என்பவற்றை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாக கருதுவதற்கும் இத்திருத்தங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது தவிர, மாகாண அரச சேவையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இத்திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T03:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு எச்சரிக்கையில் மலேசியாவில் சிக்கிய ரத்மலானை சைமா - பேராதெனிய பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rathmalana-saima-arrest-handed-over-police-1786416101"></link>
            <id>https://tamilwin.com/article/rathmalana-saima-arrest-handed-over-police-1786416101</id>
            <summary type="text">&amp;nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ரத்மலானை சைமா மேலதிக விசாரணைகளுக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர் நேற்றிரவு (10) பேராதெனிய பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>சிவப்பு எச்சரிக்கை விடுப்பு</h2><p>
</p><p>
மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, மலேசிய பொலிஸ் மற்றும் இன்டர்போலின் ஆதரவுடன் சமீபத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94537af-41f0-4f3c-ad48-82be6cd18503/26-6a7a9436ba18d.webp' /></p><p>

இதன்போது அவருடன் இருந்த ரத்மலானை பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டு, மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>சந்தேகநபர், ரத்மலானையை சேர்ந்த 41 வயதானவர் ஆவார். இவர், 2014-ஆம் ஆண்டில் பேராதெனிய பொலிஸ் பிரிவில் ஒருவரைத் துப்பாக்கி முனையில் கடத்தி காயப்படுத்தியமை மற்றும் 2016 ஆம் ஆண்டில் ஒருவரைச் சுட்டுக்கொன்ற ஆகிய இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு குற்றவாளி ஆவார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>அதன்படி, கேள்விக்குட்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
இதற்கிடையில், மலேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு சந்தேகநபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T03:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உச்சத்தை எட்டும்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-prices-to-increase-amid-fuel-shortages-1786417090"></link>
            <id>https://tamilwin.com/article/oil-prices-to-increase-amid-fuel-shortages-1786417090</id>
            <summary type="text">எரிபொருள் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயரக்கூடும் என பேங்க் ஒஃப் அமெரிக்கா (Bank of America - BoFA) எச்சரித்துள்ளது.அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயரக்கூடும் என பேங்க் ஒஃப் அமெரிக்கா (Bank of America - BoFA) எச்சரித்துள்ளது.</p><p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது குறித்த உடன்பாடு எட்டப்படாவிட்டால் இந்நிலைமை தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வராத சூழலிலும், உலகின் மிக முக்கியமான இந்த எண்ணெய் போக்குவரத்துப் பாதை போருக்கு முந்தைய நிலையை அடையாமல் இருக்கும் பின்னணியிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கடுமையான பற்றாக்குறை&nbsp;</h2><p>

போருக்கு முன்னர் தினமும் 140 கப்பல்கள் வரை ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த நிலையில், தற்போது தினமும் 5 முதல் 10 கப்பல்கள் மட்டுமே பயணிப்பதாக பேங்க் ஒஃப் அமெரிக்காவின் சரக்கு மற்றும் வழித்தோன்றல்கள் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் பிரான்சிஸ்கோ பிளான்ச் (Francisco Blanch) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f310af91-5e92-49d5-8ca3-0e003b057f74/26-6a7a93d63e78e.webp' /></p><p> தற்போது சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியே கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதால், உலகளாவிய எரிபொருள் சந்தையை ஸ்திரப்படுத்த தினமும் 80 முதல் 100 கப்பல்கள் வரை தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

தற்போது தேவையான அளவு கச்சா எண்ணெய் பயன்பாட்டில் உள்ளபோதிலும், டீசல், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு சந்தைகளில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்த பிரான்சிஸ்கோ பிளான்ச், எரிசக்தி சந்தையின் முடிவுப் பொருட்களில் (final products) தற்போது தீவிரமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T03:15:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-by-his-daughter-in-law-1786413452"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-by-his-daughter-in-law-1786413452</id>
            <summary type="text">மாத்தளை மாவட்டத்தில் லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரப்பிட்டிய சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். காயங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தளை மாவட்டத்தில் லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரப்பிட்டிய சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>காயங்களுடன் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக லக்கல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த கிடைத்துள்ளது.</p><p> உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.&nbsp;எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு</b></h2><p>உயிரிழந்தவர் மா ஓய, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b6b824-2d81-4db8-9433-3d721d8363de/26-6a7a88db426a6.webp' /></p><p>உயிரிழந்தவருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T02:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் - வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourists-flocking-to-sri-lanka-1786414899"></link>
            <id>https://tamilwin.com/article/tourists-flocking-to-sri-lanka-1786414899</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.



...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
</p><p>


சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது மொத்தத்தில் 18% ஆகும்.</p><h2>சுற்றுலாப்பயணிகள் வருகை</h2><p>



மேலும், சீனாவில் இருந்து 3,031 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 4,922 பேரும், பிரான்சில் இருந்து 3,908 பேரும் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b4910a-9a9e-494f-836b-7c1aec0be543/26-6a7a890ea3bf1.webp' />&nbsp;</p><p>


மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் 06 வரை சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை 1,386,228 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>


அவர்களில், 346,057 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 135,323 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்துள்ளனர் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T02:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட முக்கிய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-maligawatte-police-investigation-1786413141"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-maligawatte-police-investigation-1786413141</id>
            <summary type="text">மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.&nbsp;</p><p>இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பயணித்த இருவரரால் நேற்று (11)&nbsp; மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>விசாரணையில் வெளியான காரணம்&nbsp;</h2><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத்தலைவன் கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் என தெரியவந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7d0b40-25ad-423c-88f5-2aa95c9aea63/26-6a7a85702488a.webp' /></p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 54 வயதானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.&nbsp;</p><p>மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.&nbsp;</p><h2>சிசிடிவி காட்சி வெளியீடு</h2><p>அண்மையில் இரத்மலானை பகுதியில் 'குடு அஞ்சு'வின் நெருங்கிய சகா ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p><p>&nbsp;அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கமராவிலும் இந்த துப்பாக்கிச்சூடு பதிவாகியுள்ளது.
</p><p>
கொழும்பு மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர்&nbsp; நிஷாந்த சொய்சாவின் தலைமையிலும், கொழும்பு மத்தியப் பிரிவுப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மகேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T02:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வெள்ள அபாய நிலை நீங்கியுள்ளது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-levels-decreasing-1786414138"></link>
            <id>https://tamilwin.com/article/flood-levels-decreasing-1786414138</id>
            <summary type="text">நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்சமயம் வெள்ள அபாயம் எதுவுமில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்சமயம் வெள்ள அபாயம் எதுவுமில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார இன்று காலை தெரிவித்துள்ளார்.</p><p>
அப்பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி 20 மில்லிமீட்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் நேற்று மழை பதிவாகியிருந்த போதிலும், அப்பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சி குறைந்த அளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீட்டருக்கும் குறைந்த அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>மழைவீழ்ச்சி குறைந்துள்ளமையினால் நாட்டின் ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்த்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைக்கு எவ்வித வெள்ள அபாயமும் உருவாகவில்லை என எல்.எஸ்.சூரியபண்டார மேலும் உறுதிப்படுத்தினார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T02:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rupees-value-has-been-increased-1786412608"></link>
            <id>https://tamilwin.com/article/rupees-value-has-been-increased-1786412608</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, சமீப காலத்தில் ரூபாய் வீழ்ச்சியடையு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p> 

அதற்கமைய, சமீப காலத்தில் ரூபாய் வீழ்ச்சியடையும் வேகம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>

சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனை மதிப்பு நேற்று 340 ரூபாய் என்ற குறியீட்டிற்கு கீழே சரிந்துள்ளது.</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">இலங்கை ரூபாவின் பெறுமதி</b></p><p>இது சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட பணவியல், நிதி முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளுக்கு பின்னர் மாற்றம் ஏற்பட்டுள்ளதென இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fc168dc-2a58-48e0-817f-aeff853e9985/26-6a7a80f4966db.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த வருடத்தின் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா் 7.8 சதவீதம் மதிப்பு இழந்துள்ளது.</p><p>மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமையினால் வெளித்துறையில் தொடரும் அழுத்தம் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.</p><p> 

இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாண மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் நேற்று முறையே 330.88 மற்றும் 339.94 ரூபாயாக காணப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த வெள்ளிக்கிழமை இதன் மதிப்புகள் 331.01 மற்றும் 340.15 ரூபாயாக பதிவு செய்யப்பட்டன.
</p><p>
இதனால், டொலரின் விற்பனை விலை நேற்று, ஜுலை 08ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக 340 ரூபாய் என்ற நிலைக்குக் கீழே சரிந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-11T01:55:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சித்தி எய்தாத தமக்கு பட்டம் ஏன் வழங்கப்பட்டது என கோரி பல்கலைக்கழக மாணவன் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-univercity-student-files-case-1786412588"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-univercity-student-files-case-1786412588</id>
            <summary type="text">&amp;nbsp;பரீட்சையில் சித்தி எய்தாத தமக்கு உயர் டிப்ளோமா பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பரீட்சையில் சித்தி எய்தாத தமக்கு உயர் டிப்ளோமா பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றில் நட்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட குழுவினரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றுத் தருமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்</h2><p>
</p><p>சஹான் குமார் அத்துகோரல என்ற மாணவன் நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dff056e6-c645-4654-b4e0-9b2ce1bd73d8/26-6a7a7e2dc2acb.webp' /></p><p>
</p><p>பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மற்றொரு மாணவர் மூலம் தன்னிடம் கோரிய 80,000 ரூபாய் பணத்தை வழங்க மறுத்ததால், பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தாம் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்டதாக அந்த மாணவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
திட்டமிட்ட அடிப்படையில் தாம் உள்ளிட்ட சில மாணவர்கள் பரீட்சையில் தோல்வியடையச் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>இவ்வாறான பின்னணியில் மீண்டும் எந்தவொரு பரீட்சையும் நடத்தப்படாமல், முதற்கட்டத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட தாம் உள்ளிட்ட மாணவர்கள் சிலர் சித்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.</p><h2>பரீட்சை முறைக்கேடு</h2><p>
மேலும் இறுதிப் பரீட்சையில் சித்தியெய்தவில்லை என அறிவிக்கப்பட்ட தாம் உள்ளிட்ட சில மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
</p><p>ஆரம்பத்தில் சித்தி எய்தவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், மீண்டும் எந்தவொரு பரீட்சையும் நடத்தப்படாமல் எவ்வாறு சித்தியடைந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகளிடம் வினவிய போதிலும், அதற்கு இதுவரை தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இதன் மூலம் ஏதோவொரு பரீட்சை முறைக்கேடு இடம்பெற்றுள்ளமை புலப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தினால் நடத்தப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேலாண்மை உயர் டிப்ளமோ பாடநெறியை (2022/2023) பயின்ற மனுதாரர் சார்பில், சட்டத்தரணி தனோஷா பெரேரா மூலம் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T01:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதில் பயனில்லை - சம்பிக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-need-to-extend-pension-age-of-judges-1786409627"></link>
            <id>https://tamilwin.com/article/no-need-to-extend-pension-age-of-judges-1786409627</id>
            <summary type="text">&amp;nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை எனவும் இது ஒரு பயனற்ற தீர்மானம் எனவும் முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை எனவும் இது ஒரு பயனற்ற தீர்மானம் எனவும் முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
</p><p>தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி காரணமாக, வரும் ஆண்டுகளில் சட்டம் மற்றும் மருத்துவம் உட்பட அனைத்துத் துறைகளும் பாரிய மாற்றங்களைச் சந்திக்கவுள்ள நிலையில் இந்த தீர்மானம் பயனற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தற்போதைய அரசியல் தலைமைத்துவம் பழைய கருத்தியல்களைக் கொண்ட ‘நியன்டர்தால்’ மனநிலையில் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e90c0e21-07af-4ff4-834c-3fff56338733/26-6a7a729d01dc1.webp' /></p><p>
எலோன் மாஸ்க் போன்ற உலகளாவிய முன்னணி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுவது போல், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் உலகின் அனைத்துச் செயல்பாடுகளும் தரவு மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கும் என தெரிவித்துள்ளார்.
</p><p>இத்தகையதொரு நவீன யுகத்தில், பழைய மூத்த தலைமுறையினரை முன்னோக்கி கொண்டு வருவதால் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தற்போதைய அரசியல்வாதிகள் 'ஹோமோ சேப்பியன்ஸ்' தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூட அல்லர் எனக் குறிப்பிட்ட அவர், பழைய ஸ்டாலினிச பாணியிலான ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதே அவர்களின் ஒரே இலக்காகும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்துக் கொள்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய இலக்காகும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p> அதற்கான முதல் படிநிலை ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அந்த நோக்கத்தை அடைவதற்காக, தமக்கு சவாலாக விளங்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்களைச் சிறையில் அடைத்து எதிர்க்கட்சியை முற்றிலுமாக அடக்குவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T00:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழாவில் நடந்தது என்ன...! அம்பலமாகும் சிசிரிவி காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-issue-baskaran-kandiah-speech-1786409122"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-issue-baskaran-kandiah-speech-1786409122</id>
            <summary type="text">நான்கு நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட அட்சய பாத்திரம்&#039; றீச்சாவின் உணவுத்திருவிழா, எதிர்பாராத விதமாக மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் தற்காலிகமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான்கு நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட அட்சய பாத்திரம்' றீச்சாவின் உணவுத்திருவிழா, எதிர்பாராத விதமாக மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
</p><p>
விழாவில் திருப்தியடையாத அல்லது உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத மக்கள், தங்களின் பற்றுச்சீட்டு அல்லது டோக்கன் சீட்டுகளை சமர்ப்பித்தால் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிகழ்வின் போது திட்டமிட்டே சிலர் குழப்பங்களை ஏற்படுத்தியதாகவும், ஊழியர்களைத் தாக்கியதாகவும் றீச்சா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
இதற்கான ஆதாரமாக சிசிடிவி (CCTV) காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

 பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோரும் அதே வேளையில், ஊழியர்களை அநாகரிகமாக நடத்துவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNAXdS6Fyq8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T00:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழா சர்ச்சை..! பேசுபொருளாகியுள்ள பெரியவரின் கருத்து...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-issue-1786408399"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-issue-1786408399</id>
            <summary type="text">றீச்சா உணவுத் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உணவுப் பற்றாக்குறை தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.


எதிர்பாராத மக்கள் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா உணவுத் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உணவுப் பற்றாக்குறை தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
</p><p>

எதிர்பாராத மக்கள் கூட்டம் காரணமாகவே நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டதாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இந்தச் சம்பவத்தை ஒரு தரப்பினர் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.</p><p>


குறிப்பாக றீச்சா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இதனைத் திட்டமிட்டு விமர்சிப்பதாகவும் கூறப்படுகின்றது.
</p><p>
எனினும், நிகழ்விற்குச் சென்ற பல பொதுமக்கள், நிர்வாகம் செய்த ஏற்பாடுகள் மற்றும் சூழலைப் புரிந்துகொண்டு பொறுமையுடன் செயல்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
</p><p>

இந்தநிலையில் றீச்சா உணவுத்திருவிழாவிற்கு வந்த பெரியவர் ஒருவர் தெரிவித்த கருத்தும் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த விடயங்கள் குறித்து பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gtcyFGqXIVY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T00:37:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிலங்கு இல்லாமல் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி! ஏன் இந்தச் சிறப்புச் சலுகை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/relative-kanjipani-imran-shot-dead-maligawatte-1786386488"></link>
            <id>https://tamilwin.com/article/relative-kanjipani-imran-shot-dead-maligawatte-1786386488</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது கைவிலங்கு இடப்படுவது வழக்கம்.</p><p>

ஆனால், இஷாரா செவ்வந்தி கைவிலங்கு இன்றி, ஆடம்பரமான தோற்றத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது சமூக வலைதளங்களில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இஷாரா செவ்வந்தி சி.ஐ.டி (CID) காவலில் இருந்தபோது அவருக்கு கேக் வெட்டியது மற்றும் பிஸ்கட் வழங்கியது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.</p><p> 

அந்தச் சம்பவங்களின் போது சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

 இவருக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன, இவருக்குப் பின்னால் இருப்பவர் யார் என்பது போன்ற கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். </p><p>இதற்கான முறையான விளக்கத்தை பொலிஸ் தரப்பு வழங்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் #NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9zirngiDydA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T00:33:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா இலக்கு வைக்கப்பட்டதன் பின்னணி! தமிழர் பகுதிகளில் புலம்பெயர் தொழிலதிபர்களை குறிவைப்பது யார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-targeting-diaspora-businessmen-tamil-areas-1786393191"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-targeting-diaspora-businessmen-tamil-areas-1786393191</id>
            <summary type="text">வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

இந்தநிலையில்,&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்தநிலையில்,'இந்திரன்' மற்றும் கந்தையா பாஸ்கரன் போன்றோர் முன்னெடுத்த நிகழ்வுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் வன்மமான விமர்சனங்கள், தமிழர் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
வட மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இலங்கையில் மிகக் குறைவாகவே உள்ளது.

 பொருளாதார ரீதியாக வடக்கும் கிழக்கும் வளர்ச்சி அடைவதைத் தடுப்பதற்கான திரைமறைவுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.</p><p>

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்குத் தேவையான அரசியல் உறுதித்தன்மை (Political Stability) அங்கு இல்லாததே முதலீடுகள் தவிர்க்கப்படுவதற்குக் காரணம் .

ஊழல் மற்றும் தவறான குழுக்களின் அச்சுறுத்தல்களை அரசு கண்டுகொள்ளாமல் விடுவது, முதலீட்டாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துகிறது.
</p><p>
13-வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால், பொலிஸார் மற்றும் காணி அதிகாரங்கள் அடங்கிய உண்மையான அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
</p><p>
 தமிழகம் மற்றும் தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் போல, வடக்கிலும் கிழக்கிலும் ஊழலற்ற அரசியல் கலாச்சாரம் மற்றும் புதிய தலைமைத்துவ மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YEoM2J-B56w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T00:16:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையை சேதப்படுத்திய கைதிகளே சீரமைத்துள்ளனர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-repair-roofs-they-damaged-on-aug-8-1786404269"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-repair-roofs-they-damaged-on-aug-8-1786404269</id>
            <summary type="text">குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலின்போது, சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலின்போது, சிறைச்சாலையின் மூன்று கட்டிடங்களின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
மோதலின்போது கைதிகள் கட்டிடங்களின் கூரைத் தகடுகளை அகற்றி, அவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>சேதமடைந்த சிறைச்சாலை</h2><p>

கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை கட்டுப்படுத்தி, அவர்களை மீண்டும் சிறை அறைகளுக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

எனினும், கூரைகள் சேதமடைந்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் பெய்த கடும் மழையால் கைதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிறை அறைகளுக்குள்ளேயே மழையில் நனைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3236b846-63cc-4460-b210-5199c4b0f036/26-6a7a5e1b190bb.webp' /></p><p>
இதையடுத்து, பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் தலையீட்டில், கூரைகளை சீரமைப்பதற்குத் தேவையான கூரைத் தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
பின்னர், கூரைகளை சேதப்படுத்திய கைதிகளே முன்வந்து, கடந்த 8ஆம் திகதி சேதமடைந்த கூரைகளை மீண்டும் அமைத்து சீரமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T23:45:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-held-in-kandawala-divisional-secretariat-1786403495"></link>
            <id>https://tamilwin.com/article/protest-held-in-kandawala-divisional-secretariat-1786403495</id>
            <summary type="text">கிளிநொச்சி மாட்டத்தில் 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கு உரிய பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலகம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாட்டத்தில் 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கு உரிய பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலகம்
முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கவனயீர்ப்பு போராட்டம்</h2><p>
</p><p>
உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த மக்களே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p>இதன்போது தமது கோரிக்கை அடங்கிய மனுவும் கண்டாவளை பிரதேச செயலாளர்
தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69fbe05c-e09f-43cc-9f2b-7d961a45ec6e/26-6a7a5ca284881.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T23:36:58+00:00</updated>
        </entry>
    </feed>
