<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-08T21:37:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை மோதல்களின் பின்னணியில் நிச்சயம் நான்தான்..! ஜனாதிபதியின் செய்தியை முன்கூட்டியே அறிவித்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-clash-sri-lanka-1786222067"></link>
            <id>https://tamilwin.com/article/prison-clash-sri-lanka-1786222067</id>
            <summary type="text">
சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் நிச்சயமாக நான் தான் இருப்பேன் என்ற உறுதியான மன நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என பொதுஜன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் நிச்சயமாக நான் தான் இருப்பேன் என்ற உறுதியான மன நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஏதேனும் குற்றச் செயல்கள் ஏற்பட்டால் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.</p><h2>சிறைக் கலவரங்கள்&nbsp;</h2><p>

எனினும், தற்போது அவர்களுடைய அரசாங்கத்தில் பல துரதிஷ்ட சம்பவங்கள் நிகழும் போது அதனை தடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் மீது இந்த அரசாங்கம் பழி சுமத்தி வருகின்றது. </p><p> 

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களுக்கு யார் பொறுப்புக் கூறுவது. 11 ஆயிரம் பேரைத் தடுத்து வைக்க வேண்டிய சிறைச்சாலையில் 45ஆயிரம் பேரைத் தடுத்து வைத்திருப்பதே மிகப் பெரிய பிரச்சினையாகும்.
</p><p>
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல், இப்போது வரை சிறைச்சாலைகளில் உள்ள மலசல கூடங்களையாவது சீரமைத்திருக்கின்றதா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0945a5bf-7902-4934-8c09-6e382ad1fb7c/26-6a7798081ccc7.webp' /></p><p>

ஆனால், பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள் மீதும் பழி சுமத்தி வருவதுடன், எதிர்க்கட்சிகளை நோக்கி விரல் நீட்டுவதும், ராஜபக்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதுமே இவர்களுடைய வேலையாக இருக்கின்றது. </p><p>

தற்போது சிறையில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்கும், எதிர்க்கட்சிகள் குறிப்பாக நாமல் ராஜபக்சதான் காரணமாக இருக்கும் என மக்களுக்கு இந்த அரசாங்கம் அறிவிக்கும்.</p><p> சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் நாமல் ராஜபக்சதான் உள்ளார் என இந்த அரசாங்கம் நம்பிக் கொண்டிருக்கும். இதனைத் தான் ஜனாதிபதி அநுரவும் மக்களுக்கு அறிவிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T20:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு சூடான் - மியான்மர் பிரஜைகளை நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றங்கள் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-court-extradite-south-sudanese-1786210439"></link>
            <id>https://tamilwin.com/article/us-court-extradite-south-sudanese-1786210439</id>
            <summary type="text">தெற்கு சூடான் மற்றும் மியான்மர் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை இரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இரு கூட்டாட்சி நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு சூடான் மற்றும் மியான்மர் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை இரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இரு கூட்டாட்சி நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன. </p><p>
அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு அந்தஸ்தை நீட்டிக்கக் கோரி குடியேற்றவாசிகளின் உரிமை அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை போஸ்டன் மற்றும் சிகாகோ நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.</p><p></p><h2>நீதிமன்ற அனுமதி&nbsp;</h2><p>
உள்நாட்டுப் போர், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு நிலவும்
நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிப்பதற்கும்,
அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்கும் இந்தத் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து
வழங்கப்பட்டு வந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ceb4a6-3db7-4041-bf39-26bde340095c/26-6a776cf953d4e.webp' /></p><p>இந்நிலையிலேயே, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக்காட்டி
நீதிமன்றங்கள் இந்த புதிய முடிவை அறிவித்துள்ளன.</p><p>

நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்பின் காரணமாக தெற்கு சூடானைச் சேர்ந்த சுமார்
232 பிரஜைகளும், மியான்மரைச் சேர்ந்த சுமார் 4,000 பிரஜைகளும் தங்களது சொந்த
நாடுகளுக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகக்
குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T20:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் எடுத்த விபரீத முடிவு! ஜெயிக்கப்போவது யார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-s-bizarre-decision-who-will-win-1786214251"></link>
            <id>https://tamilwin.com/article/trump-s-bizarre-decision-who-will-win-1786214251</id>
            <summary type="text">ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஓமானும் ஈரானும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன. எனினும்,&amp;nbsp; அமெரிக்கா அதனை ஓரமாக நின்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஓமானும் ஈரானும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன. எனினும்,&nbsp; அமெரிக்கா அதனை ஓரமாக நின்று வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது.
</p><p>

செங்கடல் மற்றும் ஈடன் வளைகுடா போன்ற இடங்களில் ஈரான் மற்றும் ஹவுதிகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சவுதி அரேபியாவினால் உருவாக்கப்பட்ட 14 நாடுகள் கொண்ட அணியிலும் அமெரிக்கா இல்லை.</p><p>

அந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சவுதி அரேபியாவும் துருக்கியும் பாகிஸ்தானும் இணைந்து அமெரிக்கா இல்லாத ஒரு இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.
</p><p>
இதுவரை காலமும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டு வந்த நேட்டோ, ஈரான் மீதான அமெரிக்காவின் தற்போதைய யுத்தத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
வளைகுடா களமுனையில் அமெரிக்கா ஏன் தனித்து நிற்கிறது? என்ன நடந்தது அமெரிக்காவிற்கு? இது தொடர்பில் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்ப்போம்..&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tMSf6adhW-4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T20:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய சட்டமா அதிபர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-us-attorney-general-appointed-1786209416"></link>
            <id>https://tamilwin.com/article/new-us-attorney-general-appointed-1786209416</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட சட்டத்தரணியான டாட்
பிளான்ச், நாட்டின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட சட்டத்தரணியான டாட்
பிளான்ச், நாட்டின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற கடும் விவாதங்களுக்கு மத்தியில், இன்று(08.08.2026) அதிகாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 50க்கு 49 என்ற குறுகிய வாக்குகள்
வித்தியாசத்தில் இவரது நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p></p><h2>புதிய சட்டமா அதிபர் நியமனம்</h2><p>
</p><p>
முன்னாள் சட்டமா அதிபர் பாம் பாண்டி கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து
நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொட் பிளான்ச் இடைக்காலச் சட்டமா அதிபராகப்
பணியாற்றி வந்துள்ளார்.</p><p>

தற்போது செனட் சபையின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அவர் அமெரிக்க நீதித்
திணைக்களத்தின் நிரந்தரத் தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f82b80b-03ff-4ed0-90fe-211baac54d11/26-6a77680c7b53f.webp' /></p><p>நீதித் திணைக்களம் வெள்ளை மாளிகையின் அரசியல் அழுத்தங்களின்றி சுயாதீனமாக
இயங்க வேண்டும் என்ற வரலாற்று ரீதியான வழக்கத்தை மீறி, ஜனாதிபதி ட்ரம்பிற்கு
மிகவும் நெருக்கமான ஒருவரை இந்தப் பதவியில் அமர்த்துவது குறித்து இரு
கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கவலை வெளியிட்டிருந்தனர்.
</p><p>
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்பிற்கான வரி விலக்கு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சில சர்ச்சைக்குரிய
விவகாரங்கள் தொடர்பில் ஆளும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே
அதிருப்தி நிலவியது.
</p><p>
இருப்பினும், எழுத்துப்பூர்வமான சில உடன்பாடுகளின் பின்னர் குடியரசுக் கட்சி
செனட்டர்களின் ஆதரவுடன் இந்த நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் 15 பேரிடம் விசாரணை நடத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/15-to-be-questioned-over-allaipitiya-incident-1786206318"></link>
            <id>https://tamilwin.com/article/15-to-be-questioned-over-allaipitiya-incident-1786206318</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப
விசாரணை நடத்த வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப
விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை
வழங்கியுள்ளது.
</p><p>
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(07.08.2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>நீதிமன்ற&nbsp;விசாரணை</h2><p>இதன்போது பாதிக்கப்பட்டவர்கள்
சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளையை பிறப்பித்துள்ளது. </p><p>அதன்படி பொதுமக்கள், ஊர்காவற்றுறை பொலிஸார், யாழ்.
குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை செப்ரெம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அழைத்து அவர்களிடம் ஆரம்ப கட்டவிசாரணை
நடத்த வேண்டும் என்றும், இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும்
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83edac9e-baaf-46b4-976f-639bbee0da12/26-6a7760f688f79.webp' /></p><p>வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி
அதிகாலை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார், 1.15 மணியளவில் அல்லைப்பிட்டி பகுதியில் ஹைஏஸ் வாகனம் ஒன்றை இடைமறித்துள்ளனர்.</p><p> எனினும், அந்த வாகனம் பொலிஸாரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தை செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T17:18:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயக்கச்சி றீச்ஷாவில் வரலாறு காணாத சனக்கூட்டம்: உணவுத்திருவிழா இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-s-food-festival-withhold-1786208662"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-s-food-festival-withhold-1786208662</id>
            <summary type="text">&quot;உணவே மருந்து – மருந்தே உணவு&quot; என்ற உன்னத நோக்கோடு, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் கிளிநொச்சி இயக்கச்சி றீச்ஷா (Reecha) வளாகத்தில் ஆரம்பமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>"உணவே மருந்து – மருந்தே உணவு" என்ற உன்னத நோக்கோடு, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் கிளிநொச்சி இயக்கச்சி றீச்ஷா (Reecha) வளாகத்தில் ஆரம்பமான ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ பாதுகாப்பு காரணங்களுக்காக அவசரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>தமிழர் உணவு மரபை உலகிற்குப் பறைசாற்றும் நோக்கில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விற்கு, எதிர்பாராத அளவில் கட்டுக்கடங்காத சனக்கூட்டம் அலைமோதியது.</p><p> இதனால் ஏற்பட்ட கடுமையான சனநெரிசலைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு நிகழ்வை உடனடியாக நிறுத்துவதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>கடுமையான சன நெரிசல் </h2><p> </p><p>

வடக்கு-கிழக்கின் பாரம்பரிய சுவைகளான ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் போன்ற உணவுகளைச் சுவைப்பதற்காக இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவிலான புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரண்டிருந்தனர்.
</p><p>
சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை-தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
</p><p>
இந்நிலையில், விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டது. </p><p>

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உணவுத் திருவிழா இன்று இடைநடுவே நிறுத்தப்படுவதாக றீச்ஷா நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
</p><h2>திருப்பி வழங்கப்படுவுள்ள&nbsp;பணம்</h2><p>
நாளை மற்றும் திங்கட்கிழமை நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு (Booking) செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் அனைத்தும் வங்கிக் கணக்குகள் (Banks) ஊடாக முறையாகத் திருப்பி வழங்கப்படும் என்றும் றீச்ஷா நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MXSJK0Pn3B0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-08T17:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை அடிப்படையாக கொண்டு இன முறுகலை ஏற்படுத்தி சதி - களமிறக்கப்படும் கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/confusion-in-the-south-over-occupied-road-1786205072"></link>
            <id>https://tamilwin.com/article/confusion-in-the-south-over-occupied-road-1786205072</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில்
குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில்
குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதனையடுத்து பவானி வீதி விடுவிப்புக்கு தடைபோட முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக
அறிவித்துள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற&nbsp;தீர்ப்பு</h2><p> </p><p>

இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, வட்ஸ்அப்
குழுக்கள் உருவாக்கப்பட்டு பிழையான தகவல்களைக் கூறி தெற்கில் இனவாதம்
பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58672393-344c-4c73-bf0b-f2fd8fb64ef8/26-6a775651bdbe2.webp' /></p><p>இவ்வாறாக போலித் தகவல்களைப் பரப்பி ஆட்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில்,
போராட்டக்காரர்கள் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து
வரப்படுகின்றனர்.</p><p>

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளையும், வீதியையும்
விடுவித்தால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படும் என நீதிமன்றத்தை நாடும்
பொலிஸார், இத்தகைய அப்பட்டமான குழப்பச் செயல்கள் தொடர்பில் அமைதியாக உள்ளமை பல
தரப்பினரிடமும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-08T16:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய ஊடுருவல் தொடர்பில் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-fishermen-encroachment-rises-in-south-alam-1786204426"></link>
            <id>https://tamilwin.com/article/indian-fishermen-encroachment-rises-in-south-alam-1786204426</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தற்போது வட பகுதியை தாண்டி தென்
பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது இவர்களின் வருகையை கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தற்போது வட பகுதியை தாண்டி தென்
பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது இவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம்
தெரிவித்துள்ளார்.
</p><p>
மன்னாரில் இன்று(08.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இந்திய கடற்றொழிலாளர்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி கடற்றொழிலில் 
ஈடுபடுகின்ற விடயங்கள் இன்று வடபகுதியில் பூதாகரமான விடயமாக பார்க்கப்படுகிறது.
</p><p>
கடந்த காலங்களில் இவ்வாறு இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை தொடர்ந்தும் இடம்பெற்றிருந்த போது
 நாங்கள் அதனை கண்டித்து போராட்டங்களை நடத்தி அவர்களின் வருகையை கட்டுப்படுத்தி
இருந்தோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7af28595-0afb-406e-92e5-9bc6c86f4fb6/26-6a7752c33b1af.webp' /></p><p>ஆனால், இந்த தடைக்காலம் முடிந்து ஆறாம் மாதம் முதல் அவர்களின் வருகை மிக
மிஞ்சியதாக காணப்படுவதுடன் இலங்கை கடல் எல்லையாக இருக்கின்ற Sea of Sri Lanka கடல்
பகுதிக்குள் அவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது.
</p><p>
இது தொடர்பாக அண்மையிலே தீவக கடற்றொழிலாளர்கள் பெரிய அளவிலான கடல் வழிப்
போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்கள்.
</p><p>
இருந்த போதிலும் இந்த போராட்டம் எந்த அளவுக்கு அவர்களால் செவிமடுக்க
பட்டிருக்கின்றது என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T16:07:48+00:00</updated>
        </entry>
    </feed>
