<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-29T12:49:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆரம்பக்கட்ட தாமதே ஈஸ்டர் தாக்குதலுக்கு மூலகாரணம்!வெளியிடப்படாத பல சர்ச்சைகள் அம்பலம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-attorney-general-department-1788007238"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-attorney-general-department-1788007238</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.பூஜித் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.</p><p>பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கடமை தவறியமை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக மரண தண்டனை விதிக்கப்படுமானால் சட்டமா அதிபர் திணைக்களத்தின்அலட்சிய போக்குக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவற்றை நாம் கேள்விக்குட்படுத்தக் கூடாதா? என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் மயிர்க் கூச்செறியும் தகவல் ஒன்றை அவர் வெளியி்ட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்ட தகவல்கள்..
</p><h2>
</h2><p></p><h2>சட்டமா அதிபரிடம் கோரப்பட்ட ஆலோசனை</h2><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக் கோரி அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் சரியான மேற்பார்வையும் ஆர்வமும் காட்டவில்லை என்பதை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஆராய்ந்தது அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு:
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு 2017 ஜூன் 07 திகதியிட்ட கடிதம் மூலம் C18/2017 எனும் கோப்பைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. </p><p>அதில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு சட்டமா அதிபரிடம் கேட்டுக் கொண்ட ஆலோசனையானது: "தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்ய முடியுமா மற்றும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா?" என்பதாகும்.
</p><p>அப்போது அந்தப் துறைக்கு பொறுப்பான மேற்பார்வை அதிகாரியாக இருந்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி அசாத் நவாமிக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b2fb36-e143-4932-a9d4-840ccc352878/26-6a92d348e1528.webp' /></p><p>ஆனால் 15 ஜூன் 2017 ஆகும் போதே இந்தக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற நிலையில் அசாத் நவாமி அதை அராய்ந்து பார்க்குமாறு அரச சட்டத்தரணி மலிக் அஸீசுக்கு குறிப்பொன்றை இட்டு பாரப்படுத்தியுள்ளார்.
</p><p>மீண்டும் (TID) 2018 ஜூன் 14 ஆம் திகதியிட்ட குறுந்தகடு (CD) மற்றும் மற்றொரு ஆவணத் தொகுப்பை அனுப்பும் வரை இந்தக் கோப்பு குறித்து எந்தவொரு கவனமும் செலுத்தப்பட்டதாக குறிப்பில்லை. </p><p>அப்படியானால், 15 ஜூன் 2017 அன்று கிடைத்த கோப்பு, 14 ஜூன் 2018 வரை எந்தவொரு கவனமும் செலுத்தப்படாமல் இருந்துள்ளது என்பது விசாரணை ஆணைக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>
மேலும் அரச சட்டத்தரணி மலிக் அஸீஸ் (TID)யால் அனுப்பப்பட்ட கோப்புக்கு முதலாவது குறிப்பு 12 மார்ச் 2019 அன்றே இடப்பட்டுள்ளது. </p><h2>தாமதத்திற்கான காரணங்கள்</h2><p>அதற்குள் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்குக் கிடைத்து ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. 
இந்த அத்தியாயத்தைப் படிக்க முடியாதவர்களுக்காகவே நான் இதனைக் கூறுகிறேன்: </p><p>இந்தக் கோப்பைக் கையாள்வதில் அரச சட்டத்தரணி அஸீஸ் தரப்பில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக விசாரணை ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களிலிருந்து தெரியவருகிறது.</p><p><span style="color: inherit;">அரச சட்டத்தரணி அஸீஸின் சாட்சியம் மற்றும் ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களைக் கருத்திற்கொண்டு,அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவிற்குப் (Public Service Commission) பரிந்துரைக்கப்பட்டுள்து.</span></p><p>அதேபோல், C18/2017 கோப்பை அஸீஸிடம் ஒப்படைத்த பிறகு அக்கோப்பு தனக்குக் கிடைக்கவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாமி கூறுகிறார். </p><p>ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இக்கோப்பு பற்றி அவர் அறிந்துள்ளாராம். 
சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆரம்பக்கட்ட தாமதத்தை நாம் ஈஸ்டர் விசாரணையில் எங்குமே காணவில்லை.
</p><p>தாக்குதல் நடப்பதற்கு முன்னரே நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தாக்குதல் நடப்பதற்கு முன்னரே அந்த நபர்களைக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஆலோசனை கேட்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T12:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மில்லியன் ரூபாய் ஊழல்..! ரணிலின் உறவினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&amp;nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த நபர் அந்த உரிமத்தை தனது நண்பர்கள் இருவருக்கு விற்பனை செய்து பல மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியதாக சிவில் புலனாய்வு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மகாவத்த குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>ரணிலின் சகோதரரின் மகன்</h2><p>
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஞ்சய மகாவத்த இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். </p><p>

நாட்டில் மதுபான உற்பத்தி உரிமங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளதாகவும், தற்போது 13 உரிமங்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07e1fc4-a333-4086-bbf3-a473d80cdf49/26-6a928b18192b7.webp' /></p><p> 

இவ்வாறான பெறுமதிமிக்க உரிமத்தைப் பெறுவதற்கு பொதுவாக பெருமளவு நிதி முதலீடு தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதியின் உறவினருக்கு இவ்வாறான உரிமம் வழங்கப்பட்டமை, இதன் பின்னணியில் பாரிய ஊழல் இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும் எனவும் மகாவத்த தெரிவித்தார்.</p><p>இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வாரத்தில் முறையான முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நெருங்கிய தொடர்பு</h2><p>
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிரஞ்சன் குமாரவும் கலந்துகொண்டார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை அவர் விமர்சித்ததுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரங்களையும் முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a66e42a-7f9c-4ac1-bd74-3782e1efea05/26-6a928b18eb92e.webp' /></p><p>
</p><p>
மேலும், மாஃபியா உறுப்பினர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்படும் மூன்று சட்டத்தரணிகள் தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.</p><p> 

அவர்கள் மீது இதுவரை சட்டத்தரணிகள் சங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் நிரஞ்சன் குமார கேள்வி எழுப்பினார்.
</p><p>
இந்த ஊழல் மற்றும் திறமையின்மை குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p><p></p><p><br><br><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0DVCSpZFM30" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-29T12:42:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் நடந்த பரபரப்பு - மர்ம கும்பலால் கடத்தப்பட்ட பெண் - பொலிஸார் துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-open-fire-on-van-with-abducted-young-woman-1788006346"></link>
            <id>https://tamilwin.com/article/police-open-fire-on-van-with-abducted-young-woman-1788006346</id>
            <summary type="text">கொழும்பில் வைத்து இன்று(29) இளம் பெண் ஒருவர் நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸாரினால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார். 

நாரஹேன்பிட்டி, நாவல வீதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் வைத்து இன்று(29) இளம் பெண் ஒருவர் நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸாரினால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> 

நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள பொலிஸ் வீதித் தடையை மீறி செல்ல முற்பட்ட வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இந்நிலையில் சம்பவ இடத்தில் வாகனத்தையும் பெண்ணையும் கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2><b>இளம் பெண் கடத்தல்</b></h2><p> 

கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20475d14-ca28-4f88-a6d8-f3b49559b8c4/26-6a92d25280264.webp' /></p><p>பொலிஸாருக்கு இன்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையக் குழுவினர் குறித்த வாகனத்தை வீதித் தடையில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.</p><p>

எனினும், வாகனம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றமையால், பொலிஸார் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், 26 வயதான குறித்த பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-29T12:41:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இறைச்சியாக்க தயார் நிலையில் இருந்த மாடுகள் மற்றும் மாட்டிறைச்சி என்பன மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cows-and-beef-are-the-salvation-1788006248"></link>
            <id>https://tamilwin.com/article/cows-and-beef-are-the-salvation-1788006248</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, பசுமாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 58 கிலோகிராம் மாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, பசுமாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 58 கிலோகிராம் மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை சட்டவிரோத கொல்களத்தினை நடத்தி வந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரையும் பொலிஸார்
கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் இன்றைய தினம் (29.08.2026) பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccba3b2-c9ff-469f-80a8-6078d3c6525b/26-6a92d15934b56.webp' /></p><h2>பொலிஸாரால் முற்றுகை</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>மூன்று பசுமாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக
கட்டப்பட்டிருந்த நிலையிலும், ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோகிராம் இறைச்சியையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3448de56-f8d7-4c5c-8c5b-95c2f7f730ce/26-6a92d15a2c9aa.webp' /></p><p>கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T12:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்பட தொடங்கியுள்ள எல் நினோ தாக்கத்திற்கான அறிகுறிகள்! தீவிர மாற்றங்கள் ஏற்படுமென எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787998758"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787998758</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதாக முன்னாள் சிரேஷ்ட பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதாக முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ்.அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார். </p><p>

ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும் தெரிவிக்கையில், பசிபிக் பெருங்கடலின் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, ஜப்பான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
</p><p>
சர்வதேச மற்றும் உள்நாட்டு வானிலை நிபுணர்களின் கருத்துகளின் படி, கடந்த ஜூன் மாதம் முதல் எல் நினோ தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.</p><h2>எல் நினோ தாக்கம் தீவிரம்</h2><p>
</p><p>
கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கமான அளவைவிட அதிகரித்து வருவது, எல் நினோ தாக்கம் தீவிரமடைவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. 

மே முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளிலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை ஓரளவு கிடைக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ffe4107-c9e4-4fbe-b870-91c076f75f79/26-6a92c6969607b.webp' /></p><p>

செப்டெம்பர் மாதத்துடன் அதன் தாக்கம் குறையக்கூடும். புவி வெப்பமயமாதல் மற்றும் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை எல் நினோ போன்ற காலநிலை நிகழ்வுகளின் தீவிரத்துக்கு பங்களிக்கக்கூடும்.
</p><p>
குறிப்பாக, படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை வளிமண்டல வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.</p><h2>வளிமண்டலத்தில் கலக்கும் தூசி</h2><p> </p><p>

அதேவேளை, உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் யுத்த நடவடிக்கைகளால் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களும் தூசுத் துகள்களும் அதிகளவில் வளிமண்டலத்தில் கலக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a8d6729-0ca1-4558-a861-9ab9a29a35ad/26-6a92c69780393.webp' /></p><p>
</p><p>
எண்ணெய்க் களஞ்சியங்கள் மற்றும் கப்பல்கள் சேதமடைதல், சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் அதிகளவில் புகை மற்றும் மாசுப்பொருட்கள் வளிமண்டலத்தில் கலப்பதும் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.</p><p> 

இத்தகைய காரணிகளால் ஏற்படும் வளிமண்டல மாசுபாடு மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை உலகளாவிய காலநிலை மாற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T11:56:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் கொள்கைகள் மீது சஜித் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-policy-based-erroneous-data-opposition-leader-1788000183"></link>
            <id>https://tamilwin.com/article/govt-policy-based-erroneous-data-opposition-leader-1788000183</id>
            <summary type="text">தவறான தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் தனது கொள்கைகளை வகுக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை -&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறான தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் தனது கொள்கைகளை வகுக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
ஹம்பாந்தோட்டை -&nbsp; திஸ்ஸமஹாராமவில் இன்று(29.08.2026) நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு&nbsp; தெரிவித்துள்ளார்.</p><h2>அரசிடம் தெளிவான திட்டங்கள் இல்லை</h2><p>அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் மக்கள் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வருமானமும் ஊதியமும் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.</p><p>
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, ஒரு நபர் 30 நாட்களுக்கு வாழ்வதற்கு ரூ. 17,315 போதுமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்தத் தொகையில் ஒருவரால் உண்மையில் 30 நாட்களுக்கு வாழ முடியுமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/037b6d72-f6a4-4794-92df-f30ea1519531/26-6a92bcf3b247e.webp' /></p><p>மேலும், மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை புரிந்துகொள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது, நாட்டின் மக்கள் தொகையில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வறுமையில் வாழ்கின்றனர்.</p><p>இந்த வறிய சமூகத்தை மேம்படுத்துவதற்கு அரசிடம் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. 'அஸ்வெசும' நலத்திட்டத்தைக் கூட இந்த அரசாங்கம் தற்போது குறைத்து வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T11:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-announces-biggest-oil-deal-with-venezuela-1788000359"></link>
            <id>https://tamilwin.com/article/trump-announces-biggest-oil-deal-with-venezuela-1788000359</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா இடையே உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா இடையே உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப்,</p><h2>மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்</h2><p> இந்த ஒப்பந்தம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சத் மற்றும் வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸ் ஆகியோரின் பேச்சுவார்த்தைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
வெனிசுவேலா அரசாங்கத்தின் தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தின் கீழ் 17 எண்ணெய் வயல்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இவற்றில் சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117176514317841811/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

மேலும், வெனிசுவேலாவின் எண்ணெய்த் துறையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு ஈர்க்கப்படலாம் எனவும், இதன் மூலம் அந்நாட்டு அரசாங்கத்திற்கு 209 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த ஒப்பந்தத்தின் கீழ், வெனிசுவேலாவில் எண்ணெய் வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக அமெரிக்கா மற்றும் பெயர் குறிப்பிடப்படாத தனியார் நிறுவனமொன்று இணைந்து புதிய தனியார் நிறுவனத்தை உருவாக்கவுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><h2>பில்லியன் கணக்கான டொலர்</h2><p>
இந்த புதிய நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவுக்கு 55 சதவீதம் அளவிலான கட்டுப்பாடு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதற்கிடையில், அமெரிக்காவில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் உடனடியாக விலைக் குறைப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3de2b2d9-8417-466d-80f3-e70a7d76c753/26-6a92c0aad76ee.webp' /></p><p> </p><p>வெனிசுவேலாவின் சேதமடைந்த எண்ணெய் உற்பத்தி உட்கட்டமைப்பை சீரமைத்து உற்பத்தியை அதிகரிக்க பல ஆண்டுகளும் பில்லியன் கணக்கான டொலர்களும் தேவைப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடுகளில் வெனிசுவேலாவும் ஒன்றாகும். அந்நாட்டில் சுமார் 303 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வளம் இருப்பதாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.
</p><p>
எனினும், மோசமான உட்கட்டமைப்பு காரணமாக வெனிசுவேலா தற்போது உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் சுமார் 1 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T11:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படவுள்ள 1500 ஹெக்டேர் நிலம்! விரைவில் வர்த்தமானி வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1500-hectares-in-nuwara-eliya-gazetted-protected-1787998207"></link>
            <id>https://tamilwin.com/article/1500-hectares-in-nuwara-eliya-gazetted-protected-1787998207</id>
            <summary type="text">நுவரெலியாவில் உள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான, முக்கிய நீர் நிலைகள் மற்றும் மலை பகுதிகளை உள்ளடக்கிய 1,500 ஹெக்டேர் நிலத்தை பாதுகாக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் உள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான, முக்கிய நீர் நிலைகள் மற்றும் மலை பகுதிகளை உள்ளடக்கிய 1,500 ஹெக்டேர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வர்த்தமானியில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
</p><p> நேற்று (28.08.2026) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வர்த்தமானி வெளியீடு</h2><p>இது தொடர்பில் விரைவில் வர்த்தமானி வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
நுவரெலியா சுற்றுலா மண்டலத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு முறையான வழிமுறையின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமங்கள்(EPLs) வழங்குவதை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77bc8130-b6d2-4204-a9f3-f71cc9c9454e/26-6a92b5a88585a.webp' /></p><p>அத்துடன் கழிவுநீரை முறையாக அகற்றுவதை உறுதி செய்வதன் மூலம் நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்க தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தின் போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>

சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், அதன் மூலம் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளின் அபாயத்தைக் குறைக்கவும், நீர்நிலைப் பகுதிகளை பாதுகாப்பதன் மூலம் சட்டவிரோத காடழிப்பைத் தடுக்கவும் இந்தக் கூட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>இந்தக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அந்தோன் ஜயகோடி, கல்வி பிரதி அமைச்சர், நுவரெலியா மேயர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T10:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா – இலங்கை மன்றத்தின் 41ஆவது பணிப்பாளர் சபைக்கூட்டம்! புதிய திட்ட முன்மொழிவுகளுக்கும் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/41st-board-meeting-of-the-india-sri-lanka-forum-1787997178"></link>
            <id>https://tamilwin.com/article/41st-board-meeting-of-the-india-sri-lanka-forum-1787997178</id>
            <summary type="text">இந்தியா – இலங்கை மன்றத்தின் (India–Sri Lanka Foundation – ISLF) 41ஆவது
பணிப்பாளர் சபை கூட்டம் 2026 ஆகஸ்ட் 28 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்றுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா – இலங்கை மன்றத்தின் (India–Sri Lanka Foundation – ISLF) 41ஆவது
பணிப்பாளர் சபை கூட்டம் 2026 ஆகஸ்ட் 28 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த கூட்டத்திற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும்
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலோன்ன ஆகியோர் இணைத்தலைமை
வகித்துள்ளனர்.</p><h2>புதிய திட்ட முன்மொழிவுகள்</h2><p>
</p><p>
அறக்கட்டளையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான அம்பாசடர் மோகன் குமார்,
அம்பாசடர் பிரசாத் கரியவாசம் மற்றும் அசோக் மாலிக் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில்
கலந்துகொண்டுள்ளனர்.
</p><p>
தொடரும் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு

கூட்டத்தில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம்
குறித்து பணிப்பாளர் சபை மீளாய்வு செய்ததுடன், அறக்கட்டளையின் செயலகத்திற்கு
கிடைக்கப்பெற்ற பல்வேறு புதிய திட்ட முன்மொழிவுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc7b2b35-e09e-4f89-9ac9-88c63f8b1909/26-6a92ad84485ab.webp' /></p><p>வரலாறு மற்றும் கலாசாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம், பெண்கள்
தொடர்பான ஆய்வுகள் மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய
திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, இளம் ஊடகவியலாளர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், இளங்கலை
மாணவர்களுக்கான பரிமாற்றத் திட்டங்கள், தேயிலைத் துறையில் பெண்களின்
வலுவூட்டல் மற்றும் உயிரியல் ரீதியாக சிதைவடையக்கூடிய சுகாதாரத் துவாய்கள்
தயாரிப்பு தொடர்பான திட்டங்கள், நூல் மொழிபெயர்ப்பு மற்றும் வெளியீட்டுத்
திட்டங்கள், நடனப் பயிற்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4adef209-fb3d-4811-9781-802f10c1d0a9/26-6a92ad851cc5d.webp' /></p><p>
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவை
மேம்படுத்தும் திட்டங்கள், காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோய்
(CKDu) தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அறிவுப் பரிமாற்றத் திட்டங்கள்,
செயற்கை உறுப்புகள் மற்றும் உடல் இயக்க உதவி உபகரணங்கள் தயாரிப்பு தொடர்பான
அறிவுப் பரிமாற்றங்கள், கடல்சார் முகாமைத்துவம் மற்றும் உளவியல் நல்வாழ்வு
தொடர்பான கல்விசார் ஒத்துழைப்புத் திட்டங்களுக்கும் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T10:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! நெருங்கும் சர்வதேச பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-alert-issued-for-236-people-fled-the-country-1787992380"></link>
            <id>https://tamilwin.com/article/red-alert-issued-for-236-people-fled-the-country-1787992380</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 நபர்களுக்கு சர்வதேச பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 நபர்களுக்கு சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சர்வதேச பொலிஸாரின் உதவி</span></p><p>இதற்கிடையில், போதைப்பொருள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 37 நபர்கள் பெப்ரவரி 2025 முதல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9cadc23-012a-4ff2-a298-c180245879e2/26-6a92ae64e19d1.webp' /></p><p>

மேலும், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் 42 நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு கூறியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T10:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருதங்கேணி சவுக்குக்காட்டில் தொடரும் தீ – கட்டுப்படுத்த உலங்குவானூர்தி களத்தில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maruthankeni-sand-dunes-fire-continues-1787996748"></link>
            <id>https://tamilwin.com/article/maruthankeni-sand-dunes-fire-continues-1787996748</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று(28) ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று(28) ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான
சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும்
காணப்படுகின்றது.</p><p>

தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்நிலைமையின் தீவிரத்தைக்
கருத்திற்கொண்டு, தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம்
தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தீயணைக்கும் நடவடிக்கை</h2><p>

தற்போது உலங்குவானூர்தி மூலம் தீயணைக்கும் நடவடிக்கை தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1987b96-a557-4b16-8d51-cdf2fdffff1f/26-6a92ac1ac01e7.webp' /></p><p>
</p><p>
தீ ஏற்பட்டுள்ள பகுதியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தீ
மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுவின் தலைவருமான&nbsp; இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினதும், யாழ்ப்பாண
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்
தலைவருமான ஜெயானந்தமூர்த்தி ரஜீவனினதும் கவனத்திற்குக் கொண்டு
வந்துள்ளார்.
</p><p>
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை
முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி
வருகின்றனர்.</p><p></p><p><br><br><b><i>படங்கள்- எரிமலை</i></b></p>]]></content>
            <updated>2026-08-29T09:58:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிராபத்தை தடுக்க 21 தொழிலதிபர்கள்'பஸ் லலித்'துக்கு கொடுத்த கோடிக்கணக்கான பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lalith-kannangara-alias-bus-lalith-ccib-1787973892"></link>
            <id>https://tamilwin.com/article/lalith-kannangara-alias-bus-lalith-ccib-1787973892</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர என்றழைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் 'பஸ் லலித்' இலங்கையிலுள்ள 21 முன்னணி தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாயை கப்பமாகப் பெற்றுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. </p><p>
இருப்பினும் 'பஸ் லலித்' மீதான பயம் காரணமாக இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>தொலைபேசியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்</h2><p>தனது சகபாடிகளை பயன்படுத்தி பஸ் லலித் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட 5 துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>
அந்தத் துப்பாக்கிகளைக் கண்டறிவதற்காகப் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df2ba03-314e-4d5e-aaf3-8d1939416dc1/26-6a9251069862c.webp' /></p><p>வர்த்தகர்கள் கொழும்பு பகுதியில் அதிக மதிப்புள்ள காணிகளை வாங்கும்போது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்றுள்ளதாகவும் ஒரு நபர் அரசுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்திருந்த சந்தர்ப்பத்தில் 'பஸ் லலித்' என்பவர் தனது சகபாடிகளை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக அந்தக் காணியைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். </p><p>குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரன்மல் கொடிதுக்குவின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு ஆகியோரின் வழிகாட்டலில் அப்பிரிவின் பணிப்பாளர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T09:36:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடைந்துள்ள டெங்குவின் தாக்கம் – 2026ல் இதுவரை 72 மரணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-recorded-2026-has-risen-to-95-035-1787995020"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-recorded-2026-has-risen-to-95-035-1787995020</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,035 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,035 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 9,699 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>72 மரணங்கள்</h2><p>

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றினால் 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 50,287 ஆகும்.
தென் மாகாணத்தில் 13,843 பேரும், மத்திய மாகாணத்தில் 8,647 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,808 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f218ffa6-e3ef-4076-905b-06db60f9357e/26-6a92a6550348b.webp' /></p><p>

மேலும், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,248 ஆகும்.
</p><p>
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 18,842 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,931 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,125 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,122 பேரும் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளனர்.
</p><p>
மேலும், நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T09:29:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் வெள்ளத்தின் கோரத்தாண்டவம் - அழிவுக்கு மத்தியில் நடந்த அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-flash-floods-a-house-stands-amid-destruction-1787991009"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-flash-floods-a-house-stands-amid-destruction-1787991009</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

வெள்ளத்தில் வீடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p> 

வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் உயிரிழந்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p><h2>உயிர் தப்பிய சம்பவம்</h2><p>

இந்நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாரிய அழிவுக்கு மத்தியில் ஒரு குடும்பம் உயிர் தப்பிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>

வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரால் சூழப்பட்ட பச்சை நிற வீடொன்றின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">The House in Green which survived against all Odds.<br><br>Even the brutal wrath of Nature which destroyed everything in its path couldn&#39;t shake it&#39;s foundation.<a href="https://x.com/hashtag/Nepal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nepal</a> <a href="https://x.com/hashtag/NepalDisaster?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NepalDisaster</a> <a href="https://t.co/sgVRF57jsW">pic.twitter.com/sgVRF57jsW</a></p>&mdash; D (@Deb_livnletliv) <a href="https://x.com/Deb_livnletliv/status/2093366087236903044?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

அந்த வீட்டிற்குள் குடும்பமொன்று சிக்கியிருந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை வெளியிட்டனர்.

வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியபோது, வீட்டைச் சுற்றியிருந்த பல கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.</p><h2>&nbsp;பேரழிவின் காட்சிகள்</h2><p>
</p><p>
 எனினும், கடுமையான வெள்ளப்பெருக்கையும் தாக்குப்பிடித்து குறித்த வீடு மட்டும் நிலைத்து நின்றது.

இதனைத் தொடர்ந்து, அந்த வீட்டின் உறுதித்தன்மை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் ஆச்சரியப்பட்டனர்.</p><p> 

அருகிலிருந்த கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், இவ்வளவு சக்திவாய்ந்த வெள்ளத்தையும் அந்த வீடு எவ்வாறு தாக்குப்பிடித்தது என பலர் கேள்வி எழுப்பினர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Thank God that house survived the floods. <a href="https://t.co/Ph17xPcm6p">pic.twitter.com/Ph17xPcm6p</a></p>&mdash; Ngazekof (@Mghazake) <a href="https://x.com/Mghazake/status/2093236111665512746?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பின்னர் வெளியான மற்றொரு காணொளியில், வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினர் பாதுகாப்பாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p> 


இந்த இரண்டு காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-29T08:42:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியின் அதிரடி நடவடிக்கை - இலங்கையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-s-action-changes-in-sri-lanka-1787992042"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-s-action-changes-in-sri-lanka-1787992042</id>
            <summary type="text">இலங்கையில் இருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக துறைசார்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக துறைசார்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>அரசாங்கத்தின் முயற்சிகளால் இன்று சிகரெட் பாவனை குறைந்திருப்பதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு குழு உறுப்பினரும், ரஜட்ட பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடாதிபதியுமான டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். </p><p>முழு நாடும் ஒன்றாக தேசிய திட்டத்தின் பிரதான அலுவலகத்திலும், ஊடக நிலையத்திலும் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.</p><h2><b>போதைப்பொருள் பாவனை&nbsp;</b></h2><p>கடந்த கால அரசாங்கங்கள் போதைப்பொருட்களின் பாவனையை சட்டபூர்வமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனால் சமகால அரசாங்கம் போதைப்பொருள் கலாசாரத்தை வேறொடு களைவதற்கு நடவடிக்கை எடுத்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57dbb9c4-ae8e-4698-b61d-1912596f4d5a/26-6a92990dcf206.webp' /></p><p>போதைப்பொருள் பழக்கத்தின் அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதை விடவும், போதைப்பொருட்களை இல்லாதொழிப்பதன் மூலம் இளம் சமுதாயத்தை பாதுகாக்க முடியும் என டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T08:41:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய புள்ளிகளை வைப்பதற்காக வெலிக்கடை சிறையில் சிறப்புப் பிரிவு! அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-jayatissa-about-special-prisons-1787990134"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-jayatissa-about-special-prisons-1787990134</id>
            <summary type="text">பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், பாதாள உலகத் தலைவர்களையும் தடுத்து வைப்பதற்காக வெலிக்கடை சிறையில் ஒரு சிறப்புப் பிரிவு நிறுவப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், பாதாள உலகத் தலைவர்களையும் தடுத்து வைப்பதற்காக வெலிக்கடை சிறையில் ஒரு சிறப்புப் பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பையும் பாதாள உலக நடவடிக்கைகளையும் ஒழிப்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><h2>சிறப்புச் சிறை வசதிகள்</h2><p>'ஐஸ்' போன்ற போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளைக் குறிவைப்பதற்காக இந்த சிறப்புச் சிறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/651262df-2f89-4045-8786-8cba46428b48/26-6a929474d42c5.webp' /></p><p>
</p><p>
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள் தற்போது கணிசமான அளவிற்கு ஒடுக்கப்பட்டுள்ளன. </p><p>எவ்வித அரசியல் செல்வாக்குமின்றி அனைவருக்கும் சமமாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T08:35:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயக்கச்சி றீச்சாவின் படைப்புக்களை கண்டு வியந்த பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-interesting-post-by-a-person-about-reecha-1787989223"></link>
            <id>https://tamilwin.com/article/an-interesting-post-by-a-person-about-reecha-1787989223</id>
            <summary type="text">1985ம் ஆண்டு, நெதர்லாந்தில் ஒலிபரப்புத்துறை பயிற்சிக்காக சென்றிருந்த போது நான் பார்த்த உலகப்புகழ் பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வடிவமைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>1985ம் ஆண்டு, நெதர்லாந்தில் ஒலிபரப்புத்துறை பயிற்சிக்காக சென்றிருந்த போது நான் பார்த்த உலகப்புகழ் பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதை றீச்சாவில் கண்டு வியந்ததாக பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும்&nbsp;தரிசு நிலமாய்க் கிடந்த நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும் எண்ணி வியந்தேன் எனவும் அவர்&nbsp; புகழுரைத்துள்ளார்.&nbsp;</p><h2>40 ஆண்டுகள்&nbsp;ஆசை நிறைவேறல்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், உலகச்சின்னங்களைக் காண ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம்செய்ய இயலாதவர்கள் அவற்றின் மாதிரிகளை ஒரே இடத்தில் கண்டு குதூகலிக்க ஒரு வாய்ப்பளிக்கும் இதுபோன்ற ஒரு அமைப்பினை இலங்கையிலும் உருவாக்க மாட்டார்களா! என்ற எனது ஆசை 40 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c06ff46f-fcb7-4f8b-b7c6-14a3bc348c0e/26-6a9293bcc4eb0.webp' /></p><p>நேற்று யாழ். மண்ணிலிருந்து திரும்பும் வழியில், என்மீது பேரன்பு வைத்துள்ள சகோதரர், கரனின் (தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா) அன்பு அழைப்பினை ஏற்று, இயக்கச்சியில், அவர் உருவாக்கியுள்ள புதிய பூமியாம் “ReeCha” இயற்கை வேளாண் பூங்காவிற்குப் போயிருந்தேன்.</p><p> 
தரிசு நிலமாய்க் கிடந்த ஒரு நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும், தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பற்றையும் எண்ணி வியந்தேன்.</p><h2>றீச்சாவின் தோற்றம்</h2><p> </p><p>
வெறுமனே ஒரு கேளிக்கைப் பூங்காவாக மட்டும் அன்றி, உலக அதிசயச் சின்னங்களைப் பற்றிய அறிவினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு பொது அறிவுத் தளமாகவும், வீட்டுத் தோட்ட முயற்சிகளில் ஆர்வமுள்ளோருக்கு வேளாண்துறை பற்றிய அறிவை ஊட்டும் ஒரு திறந்த பல்கலைக் கழகமாகவும் அந்த இடம் காட்சியளித்தது.</p><p>அத்துடன் தேச எல்லைகளை கடந்து வருவோருக்கு இந்த மண்ணின் வாழ்வியலை அறிமுகப்படுத்தும் ஒரு பண்பாட்டு மையமாகவும், 5 நட்சத்திர விடுதிகளில் தனித்தனி அறைகளில் அடைபட்டு கிடக்காமல் இயற்கை எழில் நிறைந்த பூமியில் சுத்தமான காற்றைச் சுவாசித்துக் கொண்டு தங்கியிருக்கக் கூடிய இல்லங்களைக் கொண்ட சுற்றுலாத் தலமாகவும் அந்த இடம்மாற்றப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b5d740f-4e1e-4b51-92d0-e841739f2cce/26-6a9293bd9b64a.webp' /></p><p>மேலும் குடும்பத்தோடு வந்து குதூகலிக்கக் கூடிய கேளிக்கை அம்சங்கள் பல நிறைந்த பொழுது போக்குப் பூங்காவாகவும் ‘ReeCha’ Organic Agricultural Theme Park திகழ்வதை, சில நிமிடத்துளிகள் அங்கு சுற்றி வந்ததில் அனுபவித்து அறிந்தேன். </p><p>
வெகு விரைவில் யாழ். மண்ணின் தனித்துவ அடையாளச் சின்னங்களில் ஒன்றாய் ReeCha மாறவேண்டுமென வாழ்த்தி விடைபெற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T08:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முக்கிய பொருளாதார வலயத்திற்கருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் - வெளியுறவு அமைச்சு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-ships-near-sri-lanka-ministry-explanation-1787988207"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-ships-near-sri-lanka-ministry-explanation-1787988207</id>
            <summary type="text">இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். </p><p> 

ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.</p><h2>இலங்கைக்கு எந்த பொறுப்பும் இல்லை</h2><p>
</p><p>
இந்நிலையில், குறித்த கப்பல்கள் இலங்கைக்கு சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், இலங்கைக்கு எந்த பொறுப்பும் இல்லை என்றும் அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு விளக்கமளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae8931fd-46ba-4f95-949d-ede71f1b4f77/26-6a9295aa8ad00.webp' />&nbsp; &nbsp;</p><p>

20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்கு செல்ல முடியாமல், தற்போது இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த பின்னணியில், ஈரானிய கொடியுடன் கூடிய சுமார் 13 எண்ணெய் கப்பல்களும், நிழற்படை கப்பல்களும் பாதுகாப்புக்காக இலங்கைக்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளது.</p><h2>அமெரிக்கா விதித்துள்ள கடற்படை தடை</h2><p>

இந்த ஈரானிய கப்பல்கள் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை தடை காரணமாகவே துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் உள்ளதாகவும், எனினும் கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்றும் இணையதளம் கூறுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2172c598-7862-4623-9073-dc7c136b3c27/26-6a9297406d01d.webp' /></p><p>கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு 19 கடல் மைல் தொலைவில் 'ஐரிஷ் டேனா' (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்திருந்தது.</p><p>

இந்த பின்னணியில், தற்போது இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.</p><p>

இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T08:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப பில்லியன் டொலர்கள் தேவை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-flood-repairs-could-cost-10-of-economy-1787986573"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-flood-repairs-could-cost-10-of-economy-1787986573</id>
            <summary type="text">வெள்ளத்திற்குப் பிறகு, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர் வரை தேவைப்படலாம் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளத்திற்குப் பிறகு, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர் வரை தேவைப்படலாம் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே இன்று(29.08.2026) தெரிவித்துள்ளார்.</p><p>இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்கு சமமான செலவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>4-5 பில்லியன் டொலர்கள் தேவை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; ஆரம்பகட்ட மதிப்பீடு 4-5 பில்லியன் டொலர்களுக்கு இடையில் உள்ளது. இது ஒரு மதிப்பீடு மட்டுமே. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது தேவைப்பட்டதை விட மிகக் குறைவான தொகையே நமக்குத் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>பனிப்பாறை சரிவினால், இமயமலை நதி அமைப்புகள் வழியாக பாறை, பனி, மண் மற்றும் சிதைவுகளின் ஒரு மாபெரும் வெள்ளம் பாய்ந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cbf6d0a-6900-44b6-b19f-e3405a9d797a/26-6a92882d0afab.webp' /></p><p>இதில் நேபாளம் மற்றும் சீனாவின் திபெத்தில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 2,000-க்கும் மேற்பட்டோர்&nbsp; காணாமல் போயுள்ளனர்.</p><p>
நேபாளத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான பேரழிவான, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு செலவிடப்பட்ட 9 பில்லியன் டொலரை விட, புனரமைப்புக்கான செலவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இது நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் 12 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மின் திட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[P8A12EU ]&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம்! செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் ஏற்படவுள்ள தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-weather-alert-in-sri-lanka-1787987254"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-weather-alert-in-sri-lanka-1787987254</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் எஸ்.அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கையில் வளிமண்டலத்தின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>மழைப்பொழிவு</h2><p> 

மேலும் தெரிவிக்கையில், 

தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/918a0d9e-2897-41dd-bff5-c05f7d873f99/26-6a928bf334ce9.webp' /></p><p> </p><p>

அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்த பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது.</p><h2>புவி வெப்பமடைதல்</h2><p> 

படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. </p><p>

புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. </p><p>இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது என்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T07:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-instructions-government-servants-1787969617"></link>
            <id>https://tamilwin.com/article/important-instructions-government-servants-1787969617</id>
            <summary type="text">அரச ஊழியர்கள் பாரம்பரிய மனப்பான்மையை உடனடியாக கைவிட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச ஊழியர்கள் பாரம்பரிய மனப்பான்மையை உடனடியாக கைவிட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
சில அரச அலுவலகங்கள், அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அதிகாரத்தையும் பதவியையும் வெளிக்காட்டும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்க நிலை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அரச அலுவலக அமைப்பில் மாற்றம்</h2><p>

பழைய சுவர்களாலும் சிறைச்சாலைகள் போன்று சூழப்பட்ட இருண்ட அலுவலக அமைப்பிலிருந்து அரசத்துறை உடனடியாக வெளியே வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa0cde7a-b1ef-469f-b7ed-e642016d75b5/26-6a92885782d39.webp' />&nbsp;</p><p>

தற்போது தாம் பயன்படுத்தும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அலுவலகம் கூட ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவுக்கு பெரியதாக உள்ளது என்றும், இதுபோன்ற விசாலமான அலுவலக அறைகளின் கட்டுமானம் எதிர்காலத்தில் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
அலுவலக இடம் என்பது பதவியின் அதிகாரத்தை வெளிக்காட்டும் இடமல்ல என்றும், உண்மையான தகுதி வாய்ந்த அதிகாரிகளுக்கு தங்கள் ஆளுமையை வெளிப்படுத்த பெரிய அலுவலக அறைகளோ விலையுயர்ந்த தளபாடங்களோ தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
</p><p>
எனவே, அரச அலுவலக அமைப்பானது, அவர்கள் ஒரு குழுவாக எளிதாக இணைந்து பணியாற்றக்கூடிய 'பணிநிலைய' (workstation) மாதிரிக்கு மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும், ஒரே அமைச்சகத்தை சேர்ந்த நிறுவனங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடப்பதால் ஆளுகையும் அரச சேவையும் கடினமாகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><p> &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwara-eliya-lippella-gs-office-renovation-1787985208"></link>
            <id>https://tamilwin.com/article/nuwara-eliya-lippella-gs-office-renovation-1787985208</id>
            <summary type="text">பொதுமக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில், நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைக்கப்பட்டு,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில், நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைக்கப்பட்டு, புதிய புகைப்பட பிரதி இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் ஊடாக, குறித்த கிராம சேவகர் பிரிவை சேர்ந்த பொதுமக்கள் மாத்திரமன்றி, பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனாளர்களும் புகைப்பட பிரதி சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மக்களின் அடிப்படை தேவைகள்</h2><p>


குறித்த பகுதியிலுள்ள மக்கள் மற்றும் அரச ஊழியர்கள் ஆவணங்களின் புகைப்பட
பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக, கிராம சேவகர் அலுவலகங்களில் இருந்து சுமார்
இரண்டு முதல் மூன்று கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க வேண்டிய நிலை
காணப்படுகிறது.
</p><p>

இதன்மூலம் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய ஆவணங்களை பிரதியெடுப்பதற்காக
நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதுடன், கிராம சேவகர்
அலுவலகத்தின் ஊடான மக்கள் சேவையும் மேலும் துரிதப்படுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5bb5e8c-e4aa-49fc-8e7a-f9455b24c9ac/26-6a927fae67aee.webp' /></p><p>இதேவேளை, என்போல்ட் பகுதியில் சுமார் 60 வருட காலமாக மின்சார வசதியின்றி
இருளில் வாழ்ந்து வந்த ஏழைக் குடும்பம் ஒன்றிற்கும் இந்த நிகழ்வின் போது
இலவசமாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களின் வாழ்க்கை
தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e470e54-7165-43d7-b453-9907001dfb0d/26-6a927faf63d41.webp' /></p><p>இந்த நிகழ்வில் வெளிச்சம் அமைப்பின் தலைவர் அகஸ்டின் இரவீந்திரன், செயலாளர்
பத்மநாதன் கிருபாகரன், மலையக இணைப்பாளர் ஜெ. பத்மநாதன் கிருபாகரன், வாழ்வியல்
அமைப்பின் உறுப்பினர் இராயப்பு அந்தோனிப்பிள்ளை, ரா. ரூபரத்தனகுமார் லிந்துலை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பரில் போராட்டம் - நகரபிதா பகிரங்க அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-september-call-for-public-1787982827"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-september-call-for-public-1787982827</id>
            <summary type="text">யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகரசபை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகரசபையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.</p><p>
இந்தப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ்
போல்&nbsp;நேற்றைய தினம் (28.08.2026) பருத்தித்துறை நகரசபையின் 15ஆவது அமர்வின் போது&nbsp;பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>கவனவீர்ப்புப் போராட்டம்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை துறைமுக சந்தியிலிருந்து செப்டெம்பர் 1ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பேரணி, பருத்தித்துறை
பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடையும்.</p><p>
பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்குத் தடையாகவும், நகரத்தின் புராதன
சின்னங்கள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக
அகற்றக் கோரி இந்த இரண்டாவது கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675ac03c-6686-4d92-bb75-b6fca139aabc/26-6a92760a24536.webp' /></p><p>

அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து அரசியல் தரப்பினர்,
வர்த்தகர்கள், கடற்றொழில் சங்கங்கள்
மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு
வழங்குமாறு&nbsp; கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
இந்தப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய
மக்கள் சக்தி உறுப்பினர்களை தவிர, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்
கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும்
சுயேச்சைக் குழு (ஊசி) ஆகியவை முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T07:10:26+00:00</updated>
        </entry>
    </feed>
