<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-15T02:39:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் கடிதத்துக்கு பதிலளிக்காத சஜித்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-sajith-1784081201"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-sajith-1784081201</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்தக் கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
கடந்த 7ஆம் திகதி நாமல் ராஜபக்சவினால் அனுப்பப்பட்ட அக்கடிதத்தில், “உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை தன்னிச்சையான முறையில் நீடிக்க முயற்சிப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதற்கு எதிராக, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம்” குறித்து சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. </p><p></p><h2>ஏன் பதிலளிக்கவில்லை</h2><p>இதற்கு உடனடியாக தலையிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அந்த கடிதத்தின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, நாடாளுமன்றத்தில் கூட இது குறித்து எந்தவொரு வலியுறுத்தலும் செய்யப்படவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
நாமல் ராஜபக்ச இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு நேரடியாகக் கடிதம் அனுப்புவதற்கு முன்னர், சிதறிப்போயுள்ள எதிர்க்கட்சியின் பல குழுக்கள் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டணி அமைக்க முயற்சித்தன. </p><p>அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையிலேயே, தலைமைத்துவ மட்டத்தில் நாமல் ராஜபக்சவினால் இவ்வாறானதொரு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f769b19c-1c01-44fe-aa3c-51af24795d2c/26-6a56eb333056c.webp' /></p><p>இந்த உத்தியோகபூர்வ கடிதத்திற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருப்பது, சஜித் பிரேமதாசவினால் நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட ஒரு ஏளனமான செயல் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
கடந்த அரசாங்கக் காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உயிரிழந்த கோடீஸ்வர பெண் - சடலத்திற்கு போட்டி போடும் தரப்பினால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-groups-wait-for-a-women-s-body-1784080082"></link>
            <id>https://tamilwin.com/article/4-groups-wait-for-a-women-s-body-1784080082</id>
            <summary type="text">தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
பல சொத்துகளுக்கு உரிமையாளரான 75 வயதுடைய பெண், உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை பெற்றுக்கொள்வதில் நான்கு தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.
</p><p>
உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகளை முன்னெடுப்பதற்காக முன்வந்த நான்கு தரப்பினராலும் தமக்கு சட்டபூர்வமான உரிமை உள்ளதை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது.</p><p>
</p><h2><b>
கோடீஸ்வர பெண் </b></h2><p>நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை உடலை எந்த தரப்பினருக்கும் கையளிக்கப் போவதில்லை என மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397260a9-5830-4238-b3bc-5230eb0f6db6/26-6a56eae5a888a.webp' /></p><p>குறித்த பெண்ணுக்கு சொந்தமான 2 மாடி வீட்டின் மேல் தளத்தில், சுமார் 16 வருடங்களாக தம்பதி ஒன்று தங்கள் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். 

அவர்கள் உயிரிழந்த பெண்ணை மிகவும் அன்புடன் கவனித்து வந்துள்ளனர். அத்துடன், 14 வருடங்களாக அவரிடம் வாடகைப்பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.</p><p>

உயிரிழந்த பெண் சுகவீனமுற்று பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றபோது, அவரது அனைத்து தேவைகளையும் அந்த குடும்பமே நிறைவேற்றியுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>

இந்தக் குடும்பத்தினர் உடலை பொறுப்பேற்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முன்வந்தபோது, உயிரிழந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் என கூறி மேலும் மூவர் முன்வந்துள்ளனர்.</p><h3><b> 

பிரேத பரிசோதனை</b></h3><p>அவர்களில் உயிரிழந்த பெண்ணின் சகோதரியின் மகன், மற்றொரு உறவினர் மற்றும் கணவர் என்று கூறிக்கொள்ளும் நபர் ஒருவரும் அடங்குவர்.

உயிரிழந்த பெண் திருமணம் செய்யாதவர் என்பது தெரியவந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae0bd03a-17ee-4154-b8ae-781ce94a7983/26-6a56eae657419.webp' /></p><p>இதனையடுத்து, கணவர் என்று கூறிக் கொள்ளும் நபர் சமர்ப்பித்த திருமணப் பதிவை ஆய்வு செய்ததில், அதில் குறிப்பிடப்பட்ட பெயர் உயிரிழந்த பெண்ணின் சகோதரியினுடையது என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
அதற்கமைய, உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கு ஒப்படைப்பது என்பதில் கடுமையான சிக்கல் நிலை எழுந்துள்ளது. 

இதனால், பிரேத பரிசோதனையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. </p><p>நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்து, உரிமை தொடர்பான சிக்கலை தீர்த்துக்கொண்டு வருமாறு பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T02:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மனைவிக்காக கணவன் செய்த மோசமான செயல் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1784077879"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1784077879</id>
            <summary type="text">
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது மனைவியான&nbsp; ஆசிரியை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த தம்பதி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் 25 வயதுடைய மனைவி மற்றும் அவரது கணவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2><b>
தம்பதி கைது</b></h2><p>சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 06 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஆசிரியையான மனைவியிடம் இருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>வான் ஒன்றின் முன்பக்கத்தில் வைத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மாதம்பிட்டி பகுதியில் விநியோகிப்பதாக மாதம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa4f3fc-c032-4724-b563-48521865f816/26-6a56e07d50f1f.webp' />&nbsp;&nbsp;</p><p>
அதற்கமைய சந்தேகநபரான தம்பதியினர் மாதம்பிட்டி பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறித்த வானில் இருந்த தம்பதியினரை சோதனையிட்டபோது அவர்களிடம் இந்த போதைப்பொருள் கண்டுகிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இவை வத்தளை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திறைசேரியின் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server) ஆபத்தான நிலையில்! கோப் (COPF) குழுவில் அம்பலமான இரகசியம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cope-committee-to-harsha-de-silva-1784079088"></link>
            <id>https://tamilwin.com/article/cope-committee-to-harsha-de-silva-1784079088</id>
            <summary type="text">திறைசேரியின் அனைத்து இரகசிய மற்றும் முக்கியமான அரச தகவல்கள் பரிமாறப்படும் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server), எந்தவொரு பராமரிப்பும் அல்லது பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>திறைசேரியின் அனைத்து இரகசிய மற்றும் முக்கியமான அரச தகவல்கள் பரிமாறப்படும் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server), எந்தவொரு பராமரிப்பும் அல்லது பாதுகாப்பு புதுப்பித்தலும் (Update) இன்றி 2019ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் பாதுகாப்பற்ற முறையில் பேணப்பட்டு வந்துள்ளமை அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
</p><p>

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதில் இடம்பெற்ற பெருமளவிலான நிதி மோசடி குறித்து விசாரணை செய்வதற்காகக் கூட்டப்பட்ட விசேட குழு அமர்வின் போது, </p><p>அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற நீண்ட விசாரணைக்கு மத்தியில், நாட்டின் சைபர் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி இவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது.
</p><h2>

</h2><p></p><h2>மிகவும் பழமையான அமைப்பு</h2><p>இங்கு குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த இலங்கை கணினி அவசர தயார்நிலை அமைப்பின் (CERT) அதிகாரிகள், திறைசேரியினால் தற்போது கூட பயன்படுத்தப்பட்டு வருவது 2016ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் (Server system) என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>
அதன் உத்தியோகபூர்வ சேவைக்காலம் 2019ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துள்ளதுடன், அன்றிலிருந்து இன்றுவரை அதற்காக எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வருடாந்த பாதுகாப்பு தணிக்கை (Annual Security Audit) எதுவும் செய்யப்படவில்லை என்றும் நிதிக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13ad4de8-a2ad-4261-bf3f-12333b0a1c87/26-6a56e2f23a625.webp' /></p><p>2019 ஆம் ஆண்டுடன் காலாவதியான இந்த அமைப்பை எந்தவொரு சேவைப் பராமரிப்போ (service) அல்லது இக்காலப்பகுதிக்குரிய புதுப்பித்தலோ (update) இல்லாத ஒரு சேவையகத்தின் (server) மூலமாகவே திறைசேரியின் இந்த அனைத்து இரகசிய ஆவணங்களும் அனுப்பப்பட்டன? யார் வேண்டுமானாலும் மிக எளிதாக ஊடுருவக்கூடியதாகவும் இருந்துள்ளது.
</p><p>
கொடுக்கல் வாங்கல்களில் பணச் சலவை (Money laundering) அபாயம் இருப்பதாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank), சிட்டி வங்கி (Citi Bank) என்பன இலங்கை மத்திய வங்கி ஊடாக திறைசேரிக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தமை இக்குழுவில் வெளிப்பட்டது. </p><p>எனினும், திறைசேரியின் கீழ்மட்ட அதிகாரிகளினால் அந்த பாரதூரமான எச்சரிக்கைகள் குறித்து உயர் நிர்வாகத்திற்கோ அல்லது நிதிச் செயலாளருக்கோ அறிக்கை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குழுவின் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>

அதிகாரிகளினால் இப்பிரச்சினை குறித்து உயர் மட்டத்திற்கு அறிக்கை செய்யப்படாமல், தங்களது மட்டத்திலேயே தீர்மானங்களை மேற்கொண்டு, மீண்டும் ஒருமுறை அந்த மோசடியான கணக்குகளுக்கே பணத்தை அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் குழுவின் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T01:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி குற்றச் செயல்களை தொடரும் பாதாள உலகக் குழுத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-hiding-and-making-troubles-1784078234"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-hiding-and-making-troubles-1784078234</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>கஞ்சிபானி இம்ரான் கொலைகள் மற்றும் கொடூரமான மனிதநேயமற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, இலங்கையின் பாதாள உலகக் குழுவின் மிகக் கொடூரமான மற்றும் ஆபத்தான குற்றவாளிகளில் ஓருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>சர்வதேச பொலிஸாரின் வலையிலிருந்தும் தப்பித்து, வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்து கொண்டு, இலங்கையில் அச்சுறுத்தலான பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை இயக்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cc94e88-b95e-4fde-b6f4-45eb3856f3e4/26-6a56df9c53820.webp' /></p><p>2019ஆம் ஆண்டு துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதன் பின்னர், அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சிபானி இம்ரான், 2021ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடினார்.</p><p> அன்றிலிருந்து போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளின் எல்லைகளைக் கடந்து நடமாடி வரும் கஞ்சிபானி இம்ரான், பல கொடூரமான கொலைகளின் பின்னணியில் இருக்கும் முக்கிய சூத்திரதாரியாக விளங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
'கஞ்சிபானி இம்ரான்' வெறும் உள்நாட்டு பாதாள உலக குழு செயற்பாடுகளை மட்டும் மேற்கொள்ளவில்லை எனவும், தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச பாரிய மாஃபியா கும்பல்களுடன் கைகோர்த்துள்ளதாக&nbsp; புலனாய்வுத்துறை தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.</p><p> 
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை சர்வதேச தொழில்நுட்பங்கள் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி இயக்கி வரும் கஞ்சிபானி இம்ரானினால் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சாதாரணமானதொன்றல்ல என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>
இந்தக் குற்றவாளியைக் கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார், சர்வதேச பொலிஸ் ஊடாக 2024 ஆகஸ்ட் 02 அன்று 'A-888' என்ற இலக்கத்தின் கீழ் 'சிவப்பு அறிவித்தல்' (Red Notice) ஒன்றைப் பிறப்பித்துள்ளனர். </p><p>
எனினும், தொடர்ச்சியாகத் தனது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டு, பாதுகாப்புப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவி தலைமறைவாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
இவ்வாறானதொரு கொடூரமான குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது தேசியப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும் எனவும் இந்த நபர் தொடர்பில் தகவல்கள் இருந்தால் குற்றப் புலனாய்வு பிரிவு அல்லது இன்டர்போலிற்கோ தகவல் வழங்க முடியும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T01:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-riot-cid-investigation-update-1784074376"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-riot-cid-investigation-update-1784074376</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த தகவல்களின்படி, ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையின் A1 வார்டில் இருந்த கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதி, உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் 30 நிமிடங்களை விட மேலதிக நேரம் கோரியுள்ளார்.</p><p> </p><p>இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிறைச்சாலை அதிகாரியை திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை, அவர் A2 வார்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>&nbsp;உடற்பயிற்சி நேரம்..&nbsp;</h2><p>இதுவே வன்முறை பரவக் காரணமாக அமைந்ததாகவும், நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை வழங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50bec7af-9127-4a2e-8ac4-dc2d158aad57/26-6a56d7d89f970.webp' /></p><p>மேலும், இதன் பின்னணியில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.</p><p> கொழும்பில் இருந்து சிறைச்சாலை அவசரக்கால அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், கைதிகள் கூரைகளின் மீது ஏறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
மறுநாள் காலை உணவை வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் கற்கள், மரத்தடிகள் மற்றும் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிச் சென்ற நிலையில், கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>&nbsp;CCTV பதிவுகள்</h2><p>கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியையும் நீட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் (STF) கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f51b65b-efd6-4e1e-8020-943c20c78cd8/26-6a56d85c0d432.webp' /></p><p> </p><p>அது பலனளிக்காததால் வான்நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், சிறைச்சாலையின் நுழைவாயில் பகுதி ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தி, உள்ளே சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டுள்ளனர். </p><p>சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு F-58 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன. அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த 60 துப்பாக்கிகள் தடயவியல் சோதனைக்காகப் பெறப்பட்டுள்ளன என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், சிறைச்சாலையின் CCTV பதிவுகள் மொரட்டுவை பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் 40 சிஐடி அதிகாரிகள் அடங்கிய 3 குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593fa4d8-08e7-4723-b072-d36c5999ef9b/26-6a56d85cc383d.webp' /></p><p>இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 STF அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. கொலைக்குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடமும் வாக்குமூலங்களைப் பெறுமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T00:44:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் வாக்குறுதிகள் வெறும் கற்பனையே! மொட்டுக் கட்சி கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/podujana-peramuna-criticized-anura-government-1784072205"></link>
            <id>https://tamilwin.com/article/podujana-peramuna-criticized-anura-government-1784072205</id>
            <summary type="text">எதிர்க்கட்சியில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய
தற்போதைய அரசு, நாட்டை ஒரு கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்றுள்ளது என்று
ஸ்ரீலங்கா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய
தற்போதைய அரசு, நாட்டை ஒரு கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்றுள்ளது என்று
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார
விமர்சித்துள்ளார்.
</p><p>
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவித்ததாவது, "அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது, மக்களின்
பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தார்.</p><p>வளமான நாடு -
அழகான வாழ்க்கை' என்ற கொள்கைப் பிரகடனத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு,
மக்களை வறுமையின் உச்சத்துக்கே தள்ளியுள்ளது.</p><p></p><h2>அரசின் வாக்குறுதிகள்..&nbsp;</h2><p>

திறைசேரியில் பணம் இருப்பதாகக் கூறினாலும், மக்களுக்கு எந்தவித நிவாரணமும்
வழங்கப்படவில்லை. தூய்மையான இலங்கை என்று கூறும் அரசு, உள்ளூராட்சி
மன்றங்களின் நிர்வாகச் சீர்கேட்டால் நாடு முழுவதும் டெங்கு பரவும் சூழலை
உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2508e7b-1e90-4096-b6cf-811e41651fad/26-6a56c8b32f337.webp' /></p><p>
</p><p>
விவசாயிகள் குறித்துப் பேசியவர்கள், இன்று நெல் கொள்முதல் விலையை வழங்க
முடியாமல் தவிக்கின்றனர். அரிசி இறக்குமதியை நிறுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு
வந்தவர்கள், தற்போது பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்து உள்நாட்டு
விவசாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டனர்.</p><p>

இறுதியாக, இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசும் செய்யாத வகையில், நீதிமன்றக்
கட்டமைப்புக்குள் தலையீடு செய்ய இந்த அரசு முயற்சிக்கின்றது. உயர் நீதிமன்ற
மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதன்
மூலம், தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற அரசு திட்டமிடுகின்றது.
</p><p>இத்தகைய செயல்கள் நீதித்துறையின் சுதந்திரத்தையும், மக்கள் அதன் மீது
கொண்டுள்ள நம்பிக்கையையும் சீர்குலைக்கும். எனவே, நாட்டை இத்தகைய குழப்ப
நிலைக்குத் தள்ள வேண்டாம் என அரசை எச்சரிக்கின்றேன்" என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T23:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பயங்கரத் தீ விபத்து: பலர் உயிரிழப்பு; 6 பேரைத் தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-fire-brussels-construction-site-1784071160"></link>
            <id>https://tamilwin.com/article/massive-fire-brussels-construction-site-1784071160</id>
            <summary type="text">பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு பெரிய கட்டிட மறுசீரமைப்பு
கட்டுமானப் பணியிடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கரத் தீ விபத்து
ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு பெரிய கட்டிட மறுசீரமைப்பு
கட்டுமானப் பணியிடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கரத் தீ விபத்து
ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்தில் சிக்கிப் பலர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் இரண்டு மின்தூக்கிகளில் ஒன்றில், உயிரிழந்த
இரண்டு அல்லது மூன்று தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்
தொழிலாளர் ஆய்வுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ப்ரெக்ட் ஸ்பெய்ப்ரூக்
உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>விபத்துக்கான காரணம்</h2><p>

இந்த விபத்து நேரிட்டபோது கட்டுமானப் பணியிடத்தில் 200க்கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/349aed67-18ee-407f-9283-29e9d8001273/26-6a56c5a427ea2.webp' /></p><p>
</p><p>
தீ விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டு
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும், அங்கு பணிபுரிந்த 6 தொழிலாளர்களைக் காணவில்லை என்றும், அவர்களைத்
தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
</p><p>
கட்டிடத்தின் கீழ் தளங்களில் முதலில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து
கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
</p><p>
இருப்பினும், மின்தூக்கிப் பாதைகள் வழியாகப் பரவிய தீப்பிழம்புகள்
கட்டிடத்தின் நிலத்தடித் தளத்திலும் புதிய தீ விபத்தை ஏற்படுத்தியதால்
மீட்புப் பணியில் சவாலான சூழல் நிலவியதாக பெல்ஜிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T23:26:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பு பாடசாலையில் சக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்: மாணவர்கள் மூவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/students-been-attacked-in-mullaitivu-famous-school-1784069774"></link>
            <id>https://tamilwin.com/article/students-been-attacked-in-mullaitivu-famous-school-1784069774</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சக மாணவர்களை
இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று
பாடசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சக மாணவர்களை
இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று
பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>அவர்களை எதிர்வரும் 21.07.2026ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

கடந்த 13.07.2026ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்தில், உயர்தரத்தில் புதிதாக இணைந்திருந்த
மூன்று மாணவர்கள், பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த மற்றொரு வகுப்பறைக்குள்
இரும்புக் கம்பியுடன் நுழைந்து அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களை
தாக்கியதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.</p><p></p><h2>மேலதிக சிகிச்சை</h2><p> </p><p>அவர்கள்
புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக
சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து
சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f398361-965e-4efe-b670-b2e6e3852389/26-6a56c299ef3a5.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரும்
உறவினர்களும் பாடசாலை வளாகத்தில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை
வெளிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல்
வழங்கப்பட்டது.
</p><p>
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும்
புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்து, இன்று (14.07.2026) முல்லைத்தீவு
மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
</p><p>வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களை 21.07.2026 வரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிட்டது.
</p><p>
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும்
விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்
நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T23:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸுக்கு அடுத்து பாப் எல்-மண்டேப் நீரிணை; உலகை மிரட்டும் ஈரானின் அடுத்த வியூகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hormuz-bab-el-mandeb-strait-iran-next-strategy-1784069030"></link>
            <id>https://tamilwin.com/article/hormuz-bab-el-mandeb-strait-iran-next-strategy-1784069030</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான்,
தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

ஏமனில் உள்ள தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான்,
தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.</p><p>

ஏமனில் உள்ள தனது ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி,
செங்கடலின் நுழைவாயிலான 'பாப் எல்-மண்டேப்' நீரிணையை மூடப்போவதாக ஈரான்
மறைமுகமாக எச்சரித்துள்ளது.
</p><p>வொஷிங்டனுக்கு எதிராக ஒரு புதிய போர்க்களத்தைத் திறப்பதன் மூலம், உலகின் மிக
முக்கியமான இரண்டு எரிசக்தி வழித்தடங்களையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தலுக்கு
உள்ளாக்க ஈரான் முயன்று வருகிறது.</p><p></p><h2>ஈரானின் இறுதி ஆயுதம்&nbsp;</h2><p>
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹூதி
அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமது அல்-ஃபராஹ் விடுத்துள்ள
எச்சரிக்கையில், "நிலைமை மேலும் மோசமடைந்தால், பாப் எல்-மண்டேப் நீரிணையும்
ஹோர்முஸ் நீரிணையும் கூட்டு கூட்டணியின் மூலம் மூடப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edce7641-577c-460d-8ca9-90d02eb3ce20/26-6a56bc4a0dcf1.webp' /></p><p>
</p><p>
இதனால் மசகு எண்ணெய் விலை பெரலுக்கு 200 டொலராக உயர்ந்து உலகப்
பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.</p><p>

சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உலகளாவிய கப்பல்
போக்குவரத்தில் பெரும்பகுதி இந்த பாப் எல்-மண்டேப் வழியாகவே நடைபெறுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

ஈரானின் இந்த நகர்வு, போரை இரு நாடுகளுக்கு இடையேயான மோதலாக மட்டும் வைக்காமல்
உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாற்றும் ஒரு தந்திரம் என்று அரசியல்
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p>

அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால், ஈரான் தனது இறுதி ஆயுதமாக
இதைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
</p><p>
அதே நேரத்தில், ஹூதிகள் இந்த எல்லையைத் தாண்டினால், அமெரிக்கா மற்றும் அதன்
நட்பு நாடுகள் அவர்கள் மீது இன்னும் கடுமையான கூட்டு இராணுவத் தாக்குதலை
நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T22:47:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசோவ் கடலில் உக்ரைன் தாக்குதல்: பயங்கரவாதம் என ரஷ்யா கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukraine-attack-the-sea-azov-russia-accuses-1784068124"></link>
            <id>https://tamilwin.com/article/ukraine-attack-the-sea-azov-russia-accuses-1784068124</id>
            <summary type="text">ரஷ்யாவின் தானிய ஏற்றுமதியில் கால் பகுதிக்கும் மேல் கையாளும் முக்கிய
வழித்தடமான அசோவ் கடலில், உக்ரைன் தொடர்ந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி
வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் தானிய ஏற்றுமதியில் கால் பகுதிக்கும் மேல் கையாளும் முக்கிய
வழித்தடமான அசோவ் கடலில், உக்ரைன் தொடர்ந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி
வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
உக்ரைனின் ட்ரோன் படைகள் ஒரே இரவில் 5 எண்ணெய் டாங்கர்கள் மற்றும் 5 சரக்குக்
கப்பல்கள் உட்பட 11 ரஷ்ய கப்பல்களைத் தாக்கியுள்ளதாக உக்ரைன் தரப்பு
தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் மூலம் கடந்த ஒன்பது நாட்களில் மட்டும் அசோவ் கடலில் உக்ரைனால்
தாக்கப்பட்ட ரஷ்ய கப்பல்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><h2>உக்ரைனின் நோக்கம்&nbsp;</h2><p>
</p><p>
இந்த தொடர் தாக்குதல்களால் அசோவ் கடலில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ள ரஷ்ய வெளியுறவு
அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இது கடற்கொள்ளையர்களை விடவும் மோசமான, தூய்மையான
பயங்கரவாதம் என்று சாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8321ec22-d906-4008-9e3f-7c0c3234eee9/26-6a56b81e12287.webp' /></p><p>

சேதத்தை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்துவதே உக்ரைனின் நோக்கம் என்றும் அவர்
குறிப்பிட்டார்.
</p><p>
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள உக்ரைன் இராணுவம், தாங்கள் ரஷ்யாவின்
போர் திறனை வலுப்படுத்தும் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும்,
பொதுமக்கள் மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்தும்
தாக்குதல்களை திசைதிருப்பவே இத்தகைய குற்றச்சாட்டுகளை ரஷ்யா முன்வைப்பதாகவும்
தெரிவித்துள்ளது.</p><p>
இதற்கிடையில், இந்த மோதல் காரணமாக அசோவ் கடல் வழியாக மேற்கொள்ளப்படும் தானிய
ஏற்றுமதியை கருங்கடல் (Black Sea) அல்லது பால்டிக் கடல் (Baltic Sea)
துறைமுகங்கள் வழியாக மாற்று வழித்தடத்தில் கொண்டு செல்ல ரஷ்யாவின் விவசாய
அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>
தற்காலிக போக்குவரத்து சிக்கல்கள் இருந்தாலும், வெளிநாட்டு கூட்டாளிகளுக்கான
தானிய ஏற்றுமதி கடமைகளை ரஷ்யா முழுமையாக நிறைவேற்றும் என்று ரஷ்ய தானிய
ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T22:28:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஆப்பிரிக்கா - ஆசியாவில் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ள அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-ni-o-risk-catastrophic-floods-east-africa-asia-1784067408"></link>
            <id>https://tamilwin.com/article/el-ni-o-risk-catastrophic-floods-east-africa-asia-1784067408</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக வலுவடைந்து வரும் &#039;எல் நினோ&#039; காலநிலை மாற்றம்
காரணமாக, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் உள்ள ஏழை நாடுகளில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக வலுவடைந்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றம்
காரணமாக, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் உள்ள ஏழை நாடுகளில்
கடுமையான வெள்ளம், பஞ்சம் மற்றும் நோய்ப் பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதாக
சர்வதேச மீட்புக் குழு (IRC) எச்சரித்துள்ளது.</p><p>

ஏற்கனவே வறட்சி, உள்நாட்டுப் போர்கள் மற்றும் நிதி நெருக்கடியால் தவித்து
வரும் நாடுகளை இந்த இயற்கைச் சீற்றம் மேலும் நிலைகுலையச் செய்யும் என்று
அஞ்சப்படுகிறது.</p><p></p><h2>கடுமையான ஆபத்து&nbsp;</h2><p>
</p><p>
சர்வதேச மீட்புக் குழுவின் மூத்த அதிகாரி பாப் கிட்சன் இதுகுறித்துக்
கூறுகையில், ஒரே நேரத்தில் பல அவசர நிலைகள் ஒன்றிணைவதை நாம் காண்கிறோம்
என்றும், இதில் மற்றொரு அதிர்ச்சியைத் தாங்கும் திறன் மிகக் குறைவாக உள்ள
நாடுகளே எல் நினோவின் நேரடி இலக்காக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8239675e-1646-40f6-a5a3-807bfb4dc7d2/26-6a56b6cf2277f.webp' /></p><p>
</p><p>
கிழக்கு ஆப்பிரிக்காவில் சோமாலியா, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளும், ஆசியாவில்
பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இதனால் மிகக் கடுமையான
ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.
</p><p>
அமெரிக்க காலநிலை கணிப்பு மையத்தின் அறிக்கையின்படி, இந்த எல் நினோ 1950ஆம்
ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகச் சக்திவாய்ந்த இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாக
மாறுவதற்கு 81 சதவீத வாய்ப்புகள் உள்ளன.
</p><p>
இது இந்த ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் தனது
உச்சக்கட்ட தீவிரத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பசிபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் நீரின் வெப்பநிலை முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக காலநிலை ஆய்வாளர் டேனியல் ஸ்வெய்ன்
எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T22:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[70 வருட வரலாற்றில் அநுரவின் ஆட்சியில் நடந்த அதிசயம் - சிறைச் செல்லப்போகும் தமிழ்த் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-70-years-history-of-sri-lanka-1784053246"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-70-years-history-of-sri-lanka-1784053246</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை சர்வதேச மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திற்கு கூட்டாகக் கொண்டு செல்லும் நோக்கில் பிரதான 6 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.</p><p> புதிய அரசியலமைப்பு மாற்றம், மாகாண சபை தேர்தல் தாமதம் மற்றும் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் ஆகிய மூன்று முக்கிய புள்ளிகளை மையமாக வைத்தே இந்த கூட்டணி உருவாகியுள்ளது.&nbsp;</p><p>இது ஒரு இனவாதக் கூட்டணி அல்ல, மாறாக உரிமைகளுக்கான பொதுவான தளம் என இக்கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளன.</p><p>இந்நிலையில், இந்த கூட்டணி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>மேலும், இந்த புதிய தமிழ் கூட்டணியின் உருவாக்கம் குறித்து தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zosPXE6eNVQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T21:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் போருக்கு அஞ்சியதில்லை! முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்ட சில கருத்துக்கள்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-inspector-general-priyantha-jayakody-1783997548"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-inspector-general-priyantha-jayakody-1783997548</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உண்மையில் யுத்தத்திற்குப் பயப்படவில்லை. அவர்களிடம் யுத்த பலம் இருந்தது, அதனால் அவர்களுக்குப் பாரிய நம்பிக்கை இருந்தது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உண்மையில் யுத்தத்திற்குப் பயப்படவில்லை. அவர்களிடம் யுத்த பலம் இருந்தது, அதனால் அவர்களுக்குப் பாரிய நம்பிக்கை இருந்தது. </p><p>அவர்கள் பயந்திருந்தது அமைதிக்கே. அதாவது, சமாதானத்தை அவர்கள் தங்களது பலவீனமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தினார்கள் என்று முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியந்த ஜயகொடி இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போது கூறியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள்</p><p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் எப்போதும் அவர்களின் ஒட்டுமொத்த செயல்முறையிலுமே மிகவும் தந்திரமான செயற்பாடுகளையே முன்னெடுத்தனர்.
</p><p></p><h2>அவரின் தனிப்பட்ட கருத்து</h2><p>எனது தனிப்பட்ட கருத்துப்படி,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குத் தவறிய இடங்கள் மிகக் குறைவே. பிரதானமான தவறு என்னவென்றால், 2005 இல் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடித்து, மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி தாமாகவே வம்பை விலைக்கு வாங்கியதாகும். </p><p>அதேபோன்று தான் ரஜீவ் காந்தியின் படுகொலையும். இப்படி சில பாரதூரமான தவறுகள் அவர்களினால் செய்யப்பட்டன.
ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதிக்கும் அவர்கள் தங்களது வழக்கமான ஏமாற்று வித்தையையே செய்தார்கள்.</p><p>இந்திய அமைதிப்படையை பிரேமதாச ஜனாதிபதி விரட்டினார். அவர்கள் அவருடன் சமாதான பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதாகக் கூறி வந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c8661ac-728a-47ed-a609-4d5efd61243e/26-6a55a46e451ee.webp' /></p><p>அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் பரிமாற்றப்பட்டதாக ஒரு கதை இருக்கிறது.
அவர்கள் பலவீனமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சமாதானத்தை முன்னிறுத்திச் செயற்பட்டே மீண்டும் பலமடைந்தார்கள். </p><p>
2009 இலும் அதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு நடக்கவில்லை. 
ரணில் விக்ரமசிங்கவையும் ஏமாற்றினார்கள். </p><p>அது சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ 'மை பெல்லி இஸ் வைட்' (My Belly is White ) என்று சற்றே பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தப் புத்தகத்தில் அனைத்து விபரங்களும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T21:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cwc-senthil-thondaman-indian-high-commissioner-1784044648"></link>
            <id>https://tamilwin.com/article/cwc-senthil-thondaman-indian-high-commissioner-1784044648</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.</p><p>
இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் OCI விசாவை வழங்குங்கவதற்கான நடைமுறை இலகுப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அரசியல் நிலவரங்கள்</h2><p>இருந்த போதிலும், OCI விசா பெறுவதற்கான கட்டணம் இலங்கை ரூபா மதிப்பில் 90 ஆயிரம் என்பதால், அதனை பெற்றுக் கொள்வதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e4039ca-1d05-4b64-a204-80242788c8cb/26-6a565fc469abe.webp' /></p><p> </p><p> எனவே OCI விசாவை பெறுவதற்கு விசேட சலுகை முறையில் குறைந்த கட்டணம் அறவிட வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>

தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்தமை குறித்தும், அவருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்தும் செந்தில் தொண்டமான் சந்தோஷ் ஜாவிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், இச்சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T20:53:26+00:00</updated>
        </entry>
    </feed>
