<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-12T23:29:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெரோயினுடன் சிக்கிய பல்கலைக்கழக மாணவன் - சுற்றிவளைத்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-student-caught-with-heroin-arrested-1783896721"></link>
            <id>https://tamilwin.com/article/university-student-caught-with-heroin-arrested-1783896721</id>
            <summary type="text">கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த
குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று (12.07.2026) பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த
குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று (12.07.2026) பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே, மேற்படி
மாணவன் பொலிஸாரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>25 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்</h2><p> </p><p>அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப்
பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய
நபராவார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/541123a2-1bf9-4925-9b93-01b1ae98f68a/26-6a541b2cb2a29.webp' /></p><p>இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது
முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T23:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல் எதிரொலி: கைதிகளின் வழக்கு இனி காணொளியில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-prisoners-case-now-on-video-1783895501"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-prisoners-case-now-on-video-1783895501</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, பல்வேறு
சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காணொளிக் காட்சி
தொழில்நுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, பல்வேறு
சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளைக் காணொளிக் காட்சி
தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கச் சிறைச்சாலைகள் திணைக்களம்
தீர்மானித்துள்ளது.</p><p>

இந்தப் புதிய நடைமுறை இன்று (13.07.2026) முதல் நடைமுறைக்கு வருகின்றது என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மற்றும் ஆணையாளர் ஏ.சி.
கஜநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து,
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒரு குழுவினர் நாட்டின் ஏனைய
சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளனர். </p><p>இவ்வாறு
மாற்றப்பட்ட கைதிகளை, அவர்களது வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் அந்தந்த
நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன என்று
திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345c5fbf-5773-4eb2-991f-c17b99877e56/26-6a54178062e79.webp' /></p><p>இதனைத் தவிர்க்கும் நோக்கிலும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடரும்
பொருட்டும், காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் கைதிகளை நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நவீன முறையானது, கைதிகளைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதில் ஏற்படும்
சிரமங்களையும், பாதுகாப்புக் கவலைகளையும் குறைப்பதற்கு உதவும் என்று
திணைக்களம் நம்புகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T23:03:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாந்தோட்டையில் பணத் தகராறால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-member-hacked-to-death-over-money-dispute-1783894837"></link>
            <id>https://tamilwin.com/article/family-member-hacked-to-death-over-money-dispute-1783894837</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (11.07.2026) இடம்பெற்ற
மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை
செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (11.07.2026) இடம்பெற்ற
மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இந்தச்
சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பணக் கொடுக்கல் - வாங்கல் விவகாரம்</h2><p>
</p><p>
பணக் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறே இந்தக்
கொலைக்குக் காரணமாக அமைந்தது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற போது, உயிரிழந்தவரும் கொலையைச் செய்தார் எனச்
சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய அயல்வீட்டு இளைஞரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/985fb57a-0aa1-4c89-a00f-7c9b77505168/26-6a54147214eab.webp' /></p><p>

இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கூரிய ஆயுதத்தால்
தாக்கியதில் மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.</p><p>

கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரான இளைஞர் அந்தப் பகுதியை விட்டுத்
தப்பியோடியுள்ளார்.</p><p>

இவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது அவசியம் - மொட்டுக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/necessary-to-bring-motion-against-president-1783893995"></link>
            <id>https://tamilwin.com/article/necessary-to-bring-motion-against-president-1783893995</id>
            <summary type="text">அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும்
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி,
நிறைவேற்றுத்துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும்
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி,
நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் 'இலஞ்சம்' அல்லது
'பரிசு' போன்றதே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>புதிய அரசமைப்பு</h2><p>அவர் மேலும் குறிப்பிடுகையில்,&nbsp;</p><p>அரசு புதிய அரசமைப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து இரண்டு ஆண்டுகள்
கடந்தும், அதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுகளைக்கூட முன்னெடுக்கவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fdc6d65-1800-44fc-84ec-1d99667339e4/26-6a5411656d3b0.webp' /></p><p>தங்களுக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காகவே நீதித்துறையினரின் பதவிக்காலத்தை
நீடிக்க அரசு முற்படுகின்றது.
</p><p>
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அது
புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் ஊடாகவே அமைய வேண்டும். மாறாக, தற்போது
பணியிலுள்ளவர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது முறையற்றது. </p><p>இந்த முயற்சிக்கு
எதிராக நீதிமன்ற சமூகம் மற்றும் நீதிபதிகள் சங்கங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு
வரவேற்கத்தக்கது.</p><p></p><h2>குற்றப்பிரேரணை</h2><p>
</p><p>
நீதித்துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியே
பொறுப்புக்கூற வேண்டும். </p><p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு
நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல் நீதித்துறையை
நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணை கொண்டு
வருவது அத்தியாவசியமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd6e34d-5de2-407b-ae6a-0f4bb479d4e5/26-6a5411661b082.webp' /></p><p> நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் தார்மீகப் பொறுப்பேற்பதாகக்
கூறும் நீதி அமைச்சர், தனது பதவியை பதவி விலகல் செய்து சுயாதீன விசாரணைகளுக்கு
ஒத்துழைக்க வேண்டும்.</p><p>அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை
முன்னெடுப்பது சிறந்தது என கூறியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவு போதைப்பொருள்களை கடத்த முயன்ற பெண் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-for-attempt-large-quantity-of-drugs-1783893251"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-for-attempt-large-quantity-of-drugs-1783893251</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெருமளவு போதைப்பொருள்களைக் கடத்த
முயன்ற 36 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம்(11.07.2026) கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெருமளவு போதைப்பொருள்களைக் கடத்த
முயன்ற 36 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம்(11.07.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு
அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே, இந்தச் சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>போதைப்பொருளுடன் கைதானப் பெண்</h2><p>
</p><p>
மேற்படி சந்தேகநபர் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரின்
விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e95a2992-c1bf-4c37-b3a0-22751335374c/26-6a540e286b958.webp' /></p><p>கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருள்,
538 கிராம் ஹெரோயின் என்பவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p> சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்
பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தளையில் காட்டு யானை தாக்தி பெண் ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-elephant-attack-a-lady-death-1783892736"></link>
            <id>https://tamilwin.com/article/wild-elephant-attack-a-lady-death-1783892736</id>
            <summary type="text">மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை
தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம்(11....</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை
தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று முன்தினம்(11.07.2026) இரவு மேற்படி பெண், தனது வீட்டின் அருகிலுள்ள மற்றுமொரு
வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான தாக்குதல்
சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்த பெண்</h2><p>

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த அவர், உடனடியாக லக்கல
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர்
உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a625725e-cb6e-4564-a4ed-dd76777323c7/26-6a540bc30c82f.webp' /></p><p>கிவுலவாடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களை அச்சுறுத்தக் கூடாது: அமெரிக்க தூதுவர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-ambassador-ships-not-threatened-in-hormuz-1783885997"></link>
            <id>https://tamilwin.com/article/us-ambassador-ships-not-threatened-in-hormuz-1783885997</id>
            <summary type="text">ஈரானுடனான அமெரிக்காவின் தற்காலிக ஒப்பந்தம் &quot;எப்போதும் செயல்பாட்டின்
அடிப்படையிலானது&quot; என நேட்டோவிற்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.மேலும் ஹோர்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான அமெரிக்காவின் தற்காலிக ஒப்பந்தம் "எப்போதும் செயல்பாட்டின்
அடிப்படையிலானது" என நேட்டோவிற்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்களைத் தெஹ்ரான்
"அச்சுறுத்தக் கூடாது" என்பது அதன் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரானுடனான அமெரிக்க ஒப்பந்தம்</h2><p>அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய மெத்தியூ விட்டேக்கர், </p><p>ஜனாதிபதி ட்ரம்ப் "ஈரானுடன்
ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறார்" என்று கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e43562d6-e834-4e75-9cdf-5567dda7426e/26-6a53f28fc2c00.webp' /></p><p>அதே வேளையில், சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களையும் அவர்
பாதுகாத்துப் பேசினார்.
</p><p>தற்போது, ஜனாதிபதி ட்ரம்ப் கூறியது போல் இந்த நாடு ஒரு சில விசித்திரமான
மனிதர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. </p><p>இறுதியில் அமெரிக்கா இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது என்பதை அவர்கள்
புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டேக்கர் கூறினார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு நோயின் வீரியம் அதிகரிப்பு; இனியும் வேடிக்கை பார்க்கப்போகிறீர்களா - சமல் சஞ்சீவ சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-surges-samal-sanjeeva-issues-warning-1783884292"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-surges-samal-sanjeeva-issues-warning-1783884292</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக்
கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக
முன்னெடுக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக்
கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக
முன்னெடுக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான
மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர்
சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமானது குதிரை ஓடிய பின்னர்
லாயத்தைப் பூட்டுகின்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>டெங்கு நோயாளர்கள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>கடந்த 30 வருடங்களாக
நம் நாட்டு சுகாதாரக் கட்டமைப்பானது வருடாந்தம் ஏற்படுகின்ற டெங்கு
நோயாளர்களின் உச்சக்கட்ட அதிகரிப்பை முறையாகக் கட்டுப்படுத்துவதற்குத்
தவறியுள்ளது.</p><p> உலக நாடுகள் பயன்படுத்தும் பொதுச் சுகாதார அறிவியல் மற்றும் நவீன
தொழில்நுட்பம் சார்ந்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை நாம் செயற்படுத்த
வேண்டும் என முன்கூட்டியே எச்சரித்திருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a09eec70-51b3-4630-95e3-c1abfb13a116/26-6a53eee96c8ad.webp' /></p><p> எனினும், தொழில்நுட்பங்கள்
தேவையில்லை என ஒரு வாரத்துக்கு முன் கூறிய சுகாதார அமைச்சர், தற்போது நவீன
தொழில்நுட்ப முறைகளை நாட்டுக்குள் கொண்டு வரப் போவதாகக் கூறி தனது
நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
</p><p>
இந்த அலட்சியத்தின் பயங்கரமான விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவித்து
வருகின்றது. மருத்துவமனைகளில் ஒரு கட்டிலில் 4 அல்லது 5 நோயாளர்கள் வரை இருக்க
வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன், பலர் தரையிலேயே தங்கியுள்ளனர்.</p><p>
</p><p>
சேலைன் போத்தல்களைத் தொங்கவிடுவதற்கு உரிய கம்பிகள் கூட இல்லாததால்,
சுவர்களில் ஆணிகளை அடித்து சேலைன் செலுத்துகின்ற நிலைமை காணப்படுகின்றது.</p><p></p><h2>மருந்துத் தட்டுப்பாடு மற்றும் ஊழியர் பற்றாக்குறை</h2><p> </p><p>சில
மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைகளைக்கூட செய்துகொள்ள முடியாமல் மக்கள்
வெளியிலுள்ள ஆய்வகங்களில் 1200 முதல் 2000 ரூபா வரை செலவழிக்க வேண்டியுள்ளது.
</p><p>மருந்துத் தட்டுப்பாடு மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாகப் பெருமளவான
சுகாதார ஊழியர்களும், பயிற்சி பெறும் செவிலியர்களும் மருத்துவ மாணவர்களும்கூட
டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4a6fccf-1768-4a37-a73c-de6697996674/26-6a53eeeac3e71.webp' /></p><p>

தற்போது உத்தியோகபூர்வமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தையும்,
மரணங்கள் 50 ஐயும் நெருங்கியுள்ளன. எனினும், அறிக்கை செய்யப்படாத நோயாளர்களின்
எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்தால், இந்த ஒட்டுமொத்தப் பாதிப்பு அதிகாரபூர்வ
எண்ணிக்கையை விட மேலும் 1.5 மடங்கு அதிகமாக இருக்கும்.</p><p>

தற்போதைய சூழ்நிலையானது சாதாரண நிலையைத் தாண்டிச் சென்றுள்ளதால், அரசு
உடனடியாகத் தலையிட்டு இதனை மேலாண்மை செய்ய வேண்டும்.</p><p> </p><p>வெறும் சுற்றறிக்கைகளை
வெளியிட்டு, புத்தகத்திலுள்ள பழைய வழிமுறைகளின்படி இனி டெங்கு நோயைக்
கட்டுப்படுத்த முடியாது.

இந்த விடயம் குறித்து முழுமையான புரிதலைக் கொண்டுள்ள இலங்கை மருத்துவ சங்கம்
மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களுடன் சுகாதார அமைச்சு முறையான
கலந்துரையாடல்களை நடத்தவில்லை.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை</h2><p>
</p><p>
இன்று கொழும்பு, மகரகம, தெஹிவளை, கல்கிசை, காலி மற்றும் போபே பொத்தல உள்ளிட்ட
முக்கிய பல உள்ளூராட்சி எல்லைகளுக்குள், குறிப்பாகக் கராப்பிட்டிய மருத்துவமனை
உள்ளிட்ட மருத்துவ வளாகங்களைச் சுற்றியே பெருமளவில் குப்பைகள் குவிந்து
கிடக்கின்றன. </p><p>அத்துடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கட்டுமானப்
பகுதிகளிலும் கொசுக்கள் பெருகும் இடங்கள் தாராளமாகக் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deb4d6ab-0499-44e3-bac9-b97e20f9b188/26-6a53eeea1f071.webp' /></p><p>
இதன் காரணமாக, டெங்கு ஆபத்து அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள
வலயங்களிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி
நிறுவனங்களை ஆகக்குறைந்தது இரண்டு வார காலத்துக்காவது மூடிவிட்டு, இந்தத்
தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களை முறையாகச் செயற்படுத்த வேண்டும்.
</p><p>
ஓர் அப்பாவிப் பிள்ளையின் உயிரிழப்பு அந்தந்தக் குடும்பங்களை மாத்திரமன்றி,
நாட்டின் மனிதவளத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். </p><p>எனவே, இந்த
நிலைமையைத் தட்டையாக எடுத்துக்கொண்டு, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்ததைப்
போல ஏதோ ஒன்று நடக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றோம்
என்றால், நமக்குச் சுகாதார அமைச்சர் என்று ஒருவர் தேவையற்றதாகும்&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-12T22:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செனகல் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senegal-football-team-head-coach-sacked-1783882763"></link>
            <id>https://tamilwin.com/article/senegal-football-team-head-coach-sacked-1783882763</id>
            <summary type="text">&amp;nbsp;உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் செனகல் தேசிய அணி மிக மோசமாகச் செயல்பட்டு
நாக்-அவுட் சுற்றின் தொடக்கத்திலேயே வெளியேறியதைத் தொடர்ந்து, அணியின் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் செனகல் தேசிய அணி மிக மோசமாகச் செயல்பட்டு
நாக்-அவுட் சுற்றின் தொடக்கத்திலேயே வெளியேறியதைத் தொடர்ந்து, அணியின் தலைமைப்
பயிற்சியாளர் பாப் தியாவ் சனிக்கிழமை பதவியிலிருந்து அதிரடியாக
நீக்கப்பட்டுள்ளார்.
</p><p>

கடந்த 19 மாதங்களாக இப்பதவியில் நீடித்து வந்த 45 வயதான பாப் தியாவ், உலகக்
கிண்ணத்தில் செனகல் அணியை வலுவான நிலைக்குக் கொண்டு செல்வார் என்று பெரிதும்
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.</p><p></p><h2>கால்பந்து இறுதிப்போட்டி</h2><p>
</p><p>

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான கால்பந்து

இறுதிப்போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி செனகல் சாம்பியன் பட்டம் வென்றதால்,
நடப்பு உலகக் கிண்ணத்தில் அந்த அணி ஒரு முக்கிய சவாலாக விளங்கும் என
எதிர்பார்க்கப்பட்டது.</p><p>ஆனால், லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் பிரான்ஸ் மற்றும் நோர்வே
அணிகளிடம் செனகல் அடுத்தடுத்து தோற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43953884-ee09-4bab-9881-9d39a11756b3/26-6a53e8e7c270b.webp' /></p><p>


அதைத்தொடர்ந்து நடைபெற்ற 32 அணிகளுக்கான நாக்-அவுட் சுற்றில், பெல்ஜியம்
அணிக்கு எதிராக ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள் வரை 2-0 என செனகல் முன்னிலையில்
இருந்தது.
</p><p>

எனினும், கடைசி நேரத்தில் சொதப்பியதால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்று,
இறுதியில் 3-2 என்ற கணக்கில் செனகல் பரிதாபமாகத் தோற்று தொடரை விட்டு
வெளியேறியது.</p><p></p><h2>நடுவர் பெனால்டி&nbsp;</h2><p>
</p><p>

இந்தத் தோல்விகளே பயிற்சியாளர் நீக்கத்திற்குக் முதன்மைக் காரணமாகக்
கூறப்படும் வேளையில், தியாவ் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்கான 5 போட்டிகள்
தடை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a197a4f0-233b-488c-a9dc-b115863a7eee/26-6a53e8e872516.webp' /></p><p>


கடந்த 2025 ஏஎஃப்சிஓஎன் இறுதிப்போட்டியின் போது மொராக்கோவுக்கு நடுவர்
பெனால்டி வழங்கியதை எதிர்த்து, இவர் தனது வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறச்
செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><p>


இதற்கிடையே, செனகலின் டாக்கார் நகரில் பிறந்து, பிரான்ஸ் நாட்டுக்காக உலகக்
கிண்ணம் வென்று தந்த புகழ்பெற்ற முன்னாள் வீரர் பேட்ரிக் வியேரா செனகல்
அணியின் அடுத்த புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக
பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T22:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கூரையில் கதறிய இளம்பெண்ணின் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-woman-screamed-roof-negombo-prison-1783881636"></link>
            <id>https://tamilwin.com/article/young-woman-screamed-roof-negombo-prison-1783881636</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.&amp;nbsp;போராட்டத்தின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.&nbsp;</p><p>போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இருந்த இளம் பெண் தொடர்பான பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.&nbsp;</p><p>குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p> சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார்.&nbsp;</p><p>இருப்பினும் அவர் சிறைக்கு சென்றதற்கான காரணம் தொடர்பில் பலர் சில பின்னணிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_F3wv6u1dlQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T21:19:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கே.பி.யைப் பாதுகாக்கும் அநுர அரசாங்கம் இராணுவ அதிகாரிகளைப் பழிவாங்குவது ஏன்..! சம்பிக்க ரணவக்க கடும் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-govet-takes-revenge-army-champika-ranawaka-1783889515"></link>
            <id>https://tamilwin.com/article/anura-govet-takes-revenge-army-champika-ranawaka-1783889515</id>
            <summary type="text">விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்து நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாத்த இராணுவ
உயர் அதிகாரிகள் இன்று அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்து நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாத்த இராணுவ
உயர் அதிகாரிகள் இன்று அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐக்கிய
குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க
குற்றம் சாட்டினார்.
</p><p>
குருநாகல் நகரில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிக்
கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை
விடுத்தார்.
</p><p>
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் எவையும் இதுவரை
நிறைவேற்றப்படவில்லை என்று சாடிய அவர், பொருளாதாரச் சுமைகள் அனைத்தும் நாட்டு
மக்கள் மீதே திணிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைத் தவிர, பொருளாதாரத்தை மீட்க இந்த அரசிடம்
வேறு எவ்விதத் திட்டங்களும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>அரசியல் கலாசாரம்&nbsp;</h2><p>

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைச் சுட்டிக்காட்டிய அவர், நிர்வாகக்
கட்டமைப்பின் பலவீனமே இதற்குப் பொறுப்பு என்றும், தார்மீகப் பொறுப்பேற்று நீதி
அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ea58e39-cb78-4d18-8540-137b44d24ce9/26-6a54029a3930e.webp' /></p><p>
</p><p>
"நாகரிகமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்,
கடந்த காலத்தை விமர்சிப்பதில் நேரத்தை வீணடிக்காமல் சிறந்த உதாரணங்களாகச்
செயற்பட வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
</p><p>
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள்
பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று குறிப்பிட்ட பாட்டலி சம்பிக்க,
பிரபாகரனுக்குப் பக்கபலமாக இருந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனைப்
பாதுகாக்கும் அரசு, நாட்டைப் பாதுகாத்த இராணுவ அதிகாரிகளை இலக்கு வைப்பது
கண்டிக்கத்தக்கது என்றார்.</p><p>

தேசியத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படும் சகல தரப்பினரும், எதிர்கட்சிகளும்
ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

எதிர்காலச் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும்
இணைந்து வலுவாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் அழைப்பு விடுத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T21:14:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்க ஜெர்மனி நிதியுதவி: வெளியானது புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/germany-fund-50000-attack-drones-ukraine-1783887801"></link>
            <id>https://tamilwin.com/article/germany-fund-50000-attack-drones-ukraine-1783887801</id>
            <summary type="text">ரஷ்யாவுடனான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில்,
உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்குவதற்காக ஜெர்மனி நிதியுதவி
அளித்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவுடனான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில்,
உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்குவதற்காக ஜெர்மனி நிதியுதவி
அளித்து வருவதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
மேற்கத்திய நாடு ஒன்று உக்ரைனுக்காக மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன்
கொள்முதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 90 மில்லியன் யூரோக்கள் (103 மில்லியன்
டொலர்) ஆகும். </p><p>இதில் பயன்படுத்தப்படும் 'ஷ்ரைக்' (வகை 'ஃபர்ஸ்ட்-பர்சன்-வியூ'
(FPV) ட்ரோன்கள் உக்ரைனின் முன்னணி உற்பத்தியாளரான 'ஸ்கைஃபால்' நிறுவனத்தால்
தயாரிக்கப்படுகின்றன.</p><p></p><h2>பாதுகாப்பு காரணங்கள்</h2><p>
</p><p>
இந்த ட்ரோன்களில் அமெரிக்காவின் 'ஆட்டேரியன்' பாதுகாப்பு தொழில்நுட்ப
நிறுவனத்தின் மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b1116b-4ed0-4b7c-9626-d6e1d5874d68/26-6a53fa25ea0c7.webp' /></p><p>
</p><p>
இது பறக்கும் இறுதி கட்டத்தில், நகரும் இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக்
கண்காணித்துத் தாக்கும் திறன் கொண்டது.
</p><p>
ஆட்டேரியன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோரென்ஸ் மேயர் கூறுகையில்,"இந்த ஒப்பந்தத்தின்படி சில ட்ரோன்கள் ஏற்கனவே உக்ரைன் அரசாங்கத்திடம்
ஒப்படைக்கப்பட்டுவிட்டன. </p><p>மீதமுள்ளவை இந்த ஆண்டிற்குள் அனுப்பி வைக்கப்படும்."

இந்த ஒப்பந்தத்தில் ஜெர்மனியின் பங்களிப்பை ஸ்கைஃபால் நிறுவனம்
உறுதிப்படுத்திய போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் விவரங்களை
வெளியிட மறுத்துவிட்டது.
</p><p>
இதேபோல் ஜெர்மனி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகங்களும் இது குறித்து
கருத்து தெரிவிக்கவில்லை.

இதுமட்டுமின்றி, பல்வேறு மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியுடன் இந்த ஆண்டு
உக்ரைனுக்கு மொத்தம் 1,00,000 ட்ரோன்களை வழங்க ஆட்டேரியன் நிறுவனம்
திட்டமிட்டுள்ளது.
</p><p>
இதில் அமெரிக்க பென்டகனின் 50 மில்லியன் டொலர் ஒப்பந்தமும் அடங்கும்.

மேலும், பிரித்தானியாவும் இந்த ஆண்டு உக்ரைனுக்கு 1,50,000 ட்ரோன்களை
வழங்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T20:33:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தாக்குதல்களை நிறுத்த சீனா - இந்தியா தலையிட வேண்டும்: பாதுகாப்பு ஆய்வாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-india-intervene-stop-iran-to-attacks-1783886533"></link>
            <id>https://tamilwin.com/article/china-india-intervene-stop-iran-to-attacks-1783886533</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் மூலம்,
அமெரிக்காவை விட ஈரான் தற்போதைக்கு வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு
ஆய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் மூலம்,
அமெரிக்காவை விட ஈரான் தற்போதைக்கு வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு
ஆய்வாளர் வொல்ஃப்காங் புஸ்ஸாய் தெரிவித்துள்ளார்.
</p><p>வெளிநாட்டு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "தங்களுக்குத்தான் தற்போது
சாதகமான சூழல் இருப்பதாக ஈரான் கருதுகிறது.
</p><p>
இராணுவ ரீதியாகப் பார்த்தால் தற்போதைய நிலையில் அவர்கள் சிறந்த தொழில்நுட்ப
நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை," என்று கூறினார்.</p><p></p><h2>அமைதிப் பேச்சுவார்த்தைகள்&nbsp;</h2><p>

"இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்காவிடம் பல
வழிகள் இருப்பதால், அதுவே வலுவான மூலோபாய நிலையில் இருக்கும்" என்றும் அவர்
குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85a7569b-4647-49e4-ae80-b2f1cdf4f7d9/26-6a53f47b0e573.webp' /></p><p>
</p><p>
மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச அளவில்
செல்வாக்குமிக்க நாடுகள் தலையிட வேண்டியது அவசியம் என்று புஸ்ஸாய் கூறினார்.</p><p>

"இது நிச்சயமாக மிகவும் கடினமான ஒரு காரியம். ஈரானை நல்வழிப்படுத்த வெளியில்
இருந்து ஒரு பரந்த அளவிலான அணுகுமுறை தேவைப்படுகிறது.
</p><p>
இதில் அரபு வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல், குறிப்பாக ஈரானின் மிகப்பெரிய
பொருளாதார வாடிக்கையாளர்களாக இருக்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள்
தலையிட வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T20:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவது சமூகத்துக்குப் பெரும் பாதிப்பு - மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dr-chamal-warns-hospital-to-prison-plan-1783882002"></link>
            <id>https://tamilwin.com/article/dr-chamal-warns-hospital-to-prison-plan-1783882002</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, காலி
மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்ற அதிகாரிகள் எடுத்துள்ள
தீர்மானத்தை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, காலி
மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்ற அதிகாரிகள் எடுத்துள்ள
தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான
மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் தலைவரும்
விசேட மருத்துவ நிபுணருமான மருத்துவர் சமல் சஞ்சீவ, இந்த வைத்தியசாலையைச்
சிறைச்சாலையாக மாற்றுவது சமூகத்துக்கும் சூழலுக்கும் ஏற்புடையதல்ல என்று
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>மஹமோதர வைத்தியசாலை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
</p><p>
மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவதற்குப் பதிலாக, அதனைச்
சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்தியேக வைத்தியசாலையாகவோ அல்லது டெங்கு உள்ளிட்ட
தொற்றுநோய்களுக்கான விசேட சிகிச்சை மையமாகவோ மாற்றுவதே தற்போதைய சூழலுக்குப்
பொருத்தமானது.</p><p>தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ள
நிலையில், தென் மாகாணத்திலுள்ள போதனா வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார
நிலையங்களில் நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பாரிய சிரமங்கள்
ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fea0be9-14b7-4c3d-8f9e-7c22f13341cd/26-6a53e2cae36c4.webp' /></p><p>இத்தகைய நெருக்கடியான நிலையில், ஒரு வைத்தியசாலையைச்
சிறைச்சாலையாக மாற்றுவது எதிர்காலத் தேவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.</p><p> மேலும், இந்த வைத்தியசாலை பிரதான வீதிக்கு அருகிலும், கடற்கரைக்கு மிக
அண்மையிலும் அமைந்துள்ளமையால், இதனைச் சிறைச்சாலையாக மாற்றாமல், கல்விப்
பயிற்சி மையமாகவோ அல்லது சுற்றுலாத்துறை சார்ந்த வைத்தியசாலையாகவோ மாற்றுவது
சுற்றுச்சூழலுக்கும் சமூகத்துக்கும் அதிக நன்மைகளைத் தரும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:53:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை உலுக்கிய பாவி சூறாவளி: 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-bavi-over-2-8m-evacuated-in-china-48-1783880844"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-bavi-over-2-8m-evacuated-in-china-48-1783880844</id>
            <summary type="text">இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த இயற்கைச் சீற்றமான &#039;பாவி&#039;
சூறாவளி, அந்த நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளைக் கடுமையாகச்
சூறையாடியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த இயற்கைச் சீற்றமான 'பாவி'
சூறாவளி, அந்த நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளைக் கடுமையாகச்
சூறையாடியுள்ளது.
</p><p>
சனிக்கிழமை நள்ளிரவில் ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் மற்றும் வென்சூ
நகரங்களுக்கு இடையே இந்த சூறாவளி கரையைக் கடந்தது.</p><p></p><h2>பாவி சூறாவளி</h2><p>

இதன் காரணமாகப் பலத்த காற்றும், பெருமழையும் கொட்டித் தீர்த்ததால்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா முழுவதும் 28 இலட்சத்திற்கும் அதிகமான
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
இதில் தொழில்நுட்ப மையமாகத் திகழும் ஜெஜியாங் மாகாணத்தில் இருந்து மட்டும் 22
இலட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abf68831-ef34-4462-95a2-9aa5e92f9960/26-6a53de61cfda5.webp' /></p><p>
</p><p>
சூறாவளி கரையைக் கடந்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை அது ஓரளவுக்கு
வலுவிழந்த போதிலும், பிரான்ஸ் நாட்டின் பரப்பளவைக் கொண்ட இந்த மாபெரும் புயல்
சின்னம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் வடக்கு சீனாவில்
மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
</p><p>
புயலின் தாக்கத்தால் வென்சூ நகரின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு
சாய்ந்துள்ளன, மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்புப்
பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.</p><p></p><h2>சீனாவின் போக்குவரத்து</h2><p>
</p><p>
அதிர்ஷ்டவசமாக சீனாவில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும்,
அண்டை தீவான தாய்வானைக் கடந்தபோது அங்கு பலத்த காற்றினால் 134 பேர்
காயமடைந்துள்ளனர்.</p><p>

இந்த இயற்கைச் சீற்றத்தால் சீனாவின் போக்குவரத்து நெட்வொர்க் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.

ஷங்காய் மற்றும் ஹாங்சோ நகரங்களில் 2,300க்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகளும்,
சுமார் 1,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும்
இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aadd37f-49b2-41d7-8c2a-c508d2255f13/26-6a53de612bf8c.webp' /></p><p>
</p><p>
எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு சீனா அதிகளவிலான தீவிர வானிலைச்
சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
தற்போது அன்ஹுய் மாகாணத்தை நோக்கி நகர்ந்துள்ள புயல் காரணமாக, ஏற்கனவே
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜிலின், லியோனிங், ஹெபெய் மற்றும் ஷான்டாங்
மாகாணங்களுக்குப் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பிரதமரை மாற்ற ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zelensky-decides-to-replace-ukraine-pm-1783879670"></link>
            <id>https://tamilwin.com/article/zelensky-decides-to-replace-ukraine-pm-1783879670</id>
            <summary type="text">உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முடிவு செய்துள்ளார்.</p><p>

நாட்டின் "புதுப்பிக்கப்பட்ட அரசியல் உத்தியை" செயல்படுத்துவதற்காக இந்த அமைச்சரவை மாற்றம் அவசியம் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்காவுடனான உறவு
</h2><p>
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, "உக்ரைன் குழுவில் பிரதமராக யூலியா ஆற்றிய தெளிவான, நிலையான மற்றும் பயனுள்ள பணிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2db35e-f8df-404e-ac2c-90a12bf18a8b/26-6a53da13bda92.webp' /></p><p>உக்ரைனின் மிக முக்கிய கூட்டாளி நாடான அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் ஒரு புதிய மற்றும் முக்கியமான பொறுப்பை அவருக்கு வழங்க முன்வந்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
2025 ஜூலை மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற ஸ்விரிடென்கோ, அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>

உக்ரைன் பிரதமர் பதவி விலகல்</h2><p>

உக்ரைன் சட்டப்படி பிரதமர் பதவி விலகினால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட வேண்டும் என்பதால், உக்ரைன் அரசில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd4da504-f755-4f1d-bdb4-b9fed750fbd8/26-6a53da146f564.webp' /></p><p>புதிய பிரதமருக்கான பந்தயத்தில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ், எரிசக்தி அமைச்சர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் 'நாஃப்டோகாஸ்' (Naftogaz) எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் செர்ஹி கொரெட்ஸ்கி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
பிரதமருடன் சேர்த்து உக்ரைனின் சட்ட நடைமுறையாக்க முகமைகளின் தலைவர்களும் மாற்றப்பட உள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்: நிதி அமைச்சு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-in-parliament-on-november-ministry-of-finance-1783872595"></link>
            <id>https://tamilwin.com/article/2027-in-parliament-on-november-ministry-of-finance-1783872595</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம்
திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு
அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம்
திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு
அறிவித்துள்ளது. இது தொடர்பான கால அட்டவணையை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.</p><p> அதன் பிரகாரம்,
ஒவ்வொரு அமைச்சுக்குமான முன்மொழியப்பட்ட செலவின ஒதுக்கீடுகளைக் கொண்ட
சட்டமூலத்தின் வரைவு, எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி அமைச்சரவையின்
அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><h2>முக்கிய திகதிகள்&nbsp;&nbsp;</h2><p>செப்டெம்பர் 18: ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும், ஒக்டோபர் 7: நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பு இடம்பெறும், நவம்பர் 12: நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு சமர்ப்பிக்கப்படும்,&nbsp; நவம்பர் 13 முதல் 20 வரை: வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு
விவாதம் நடைபெறும்,&nbsp; நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை: குழு நிலை விவாதங்கள் இடம்பெறும்.</p><p> நாட்டின் எதிர்வரும் ஆண்டுக்கான நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதாரக்
கொள்கைகளை உள்ளடக்கிய இந்த வரவு - செலவுத் திட்டத்தின் மீது அரசியல் மற்றும்
பொதுத் தளத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3379a624-e06e-4be6-82d4-5d3d80e37fa3/26-6a53bcfac2dba.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரின் முன்னாள் அமீரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-sent-message-condolences-passing-qatar-1783879954"></link>
            <id>https://tamilwin.com/article/president-sent-message-condolences-passing-qatar-1783879954</id>
            <summary type="text">கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இரங்கல் செய்தி&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><h2>இரங்கல் செய்தி&nbsp;&nbsp;</h2><p>

தனது 'X' தளம் மூலம் வெளியிட்ட ஒரு செய்தியில், மறைந்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, கட்டாரிற்கு ஆற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையையும் சேவையையும் மரியாதையுடன் நினைவு கூர்வதாக அவர் கூறினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened by the passing of His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani, Father Emir of Qatar.<br><br>His visionary leadership and service to Qatar will be remembered.<br><br>On behalf of the Government and people of Sri Lanka, I extend heartfelt condolences to HH Sheikh Tamim bin…</p>&mdash; Anura Kumara Dissanayake (@anuradisanayake) <a href="https://x.com/anuradisanayake/status/2076331689014710763?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இலங்கை அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் சார்பாக, ஜனாதிபதி, கட்டாரின் தற்போதைய அமீர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
கட்டாரில் மாற்றத்தை ஏற்படுத்திய ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று (12) காலமானார்.
</p><p>
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கத்தார் நாட்டின் மிக உயர்ந்த அரச நிறுவனமான எமிரி திவான், நாட்டில் நான்கு நாட்கள் தேசிய துக்க காலத்தை அறிவித்துள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T18:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கையில் புதிய மாற்றம்! வெளியான தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ஊடாக முன்னெடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி, நாளை (13) முதல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய சம்பந்தப்பட்ட கைதிகள் காணொளி தொழில்நுட்பம் வழியாகவே விசாரணைகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைக்கைதிகள்</h2><p>
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களால் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
</p><p>
இந்த நிலையில், மாற்றப்பட்ட கைதிகளை ஒவ்வொரு நீதிமன்ற அமர்விற்கும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதில் நடைமுறை மற்றும் போக்குவரத்து தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b50b18-0d64-4485-954a-36d7a46b99f9/26-6a53a10e3b8f7.webp' /></p><p>
</p><p>
இதனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
</p><p>
அந்த குழு சேதங்களின் தன்மை மற்றும் அவற்றுக்கான மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T18:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கியமாகச் செயற்பட தமிழ்பேசும் மக்களின் ஆறு கட்சிகள் இணக்கம் - நாளை கொழும்பில் கூட்டாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-tamil-agree-work-together-colombo-tomorrow-1783877780"></link>
            <id>https://tamilwin.com/article/six-tamil-agree-work-together-colombo-tomorrow-1783877780</id>
            <summary type="text">இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள்
எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது சம்பந்தமான
இணக்கப்பாட்டுக்கு வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள்
எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது சம்பந்தமான
இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. </p><p>அந்த இணக்கப்பாடு குறித்து அவை ஆறும்
சேர்ந்து கூட்டாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாளை பிற்பகல்
1 மணிக்கு கொழும்பு - கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெறுகின்றது.</p><p>

இதில் அந்த ஆறு கட்சிகளினதும் தலைவர்களும் ஒரே மேசையிலிருந்து தங்கள் கூட்டுச்
செயற்பாட்டுக்கான இணக்கப்பாட்டையும் அது தொடர்பான திட்டங்களையும் நாளை
அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>கட்சிகளின் ஐக்கியம்&nbsp;&nbsp;</h2><p>
வடக்கு, கிழக்கு தமிழர்கள் தரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும்
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி, மலையகத் தமிழர்கள் தரப்பில் தமிழ்
முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம்கள்
தரப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஆகியனவே ஒன்றுபட்டுச் செயற்பட இணங்கியிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d9a019-a90e-45c3-b350-5a96790d595a/26-6a53d552a68ee.webp' /></p><p>
</p><p>
பிரதான எதிரணிக் கூட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தமிழ்பேசும் மக்களின்
கட்சிகளின் ஐக்கிய செயற்பாட்டுக்கு இணங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்தக் கூட்டு அமைப்புக்கு பெயர் ஏதும் உண்டா என்று கேட்ட போது ''இப்போதைய நிலையில் இது ஒரு கூட்டு அமைப்பல்ல. ஒன்றுபட்டு விடயங்களை
எதிர்கொள்வதற்கான இணக்கப்பாடு மட்டுமே.</p><p> அதனால் அதற்கு விசேடமான பெயர்
ஒன்றுமில்லை'' என்று இந்த ஏற்பாட்டுக்குப் பின்னணியில் செயற்படும் கட்சித்
தலைவர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T17:56:40+00:00</updated>
        </entry>
    </feed>
