<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-16T23:33:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/writ-petition-filed-by-major-general-suresh-sallay-1784243807"></link>
            <id>https://tamilwin.com/article/writ-petition-filed-by-major-general-suresh-sallay-1784243807</id>
            <summary type="text">ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் இடையீட்டு தரப்பாக இணைவதற்கு அனுமதி வழங்குமாறு, பஸ்யோதுன்ரட்ட பௌத்த சம்மேளனத்தின் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் இடையீட்டு தரப்பாக இணைவதற்கு அனுமதி வழங்குமாறு, பஸ்யோதுன்ரட்ட பௌத்த சம்மேளனத்தின் தலைவர் தபனே ஸ்ரீ மகிந்த தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சுரேஷ் சலேவை கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், தாம் இடையீட்டு தரப்பாக இணைவது பொதுநலன் கருதியே என்றும், எந்தவொரு சட்டபூர்வ விசாரணையையும் தடுக்கவோ அல்லது பாதிக்கவோ அல்ல என்றும் தேரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்</h2><p>

மாறாக, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை மாற்றும் முயற்சிகள், அரசியலமைப்பு மற்றும் சமூக ரீதியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42dacdbc-9992-4609-b3a2-4428e04d010d/26-6a5968dd73791.webp' /></p><p>
</p><p>
மனுவில் மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பே நடத்தியதாகவும், கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என உச்ச நீதிமன்றமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்குதலைத் திட்டமிட்டார் அல்லது அதற்கு உதவினார் என எந்த நீதிமன்ற தீர்ப்பிலும் அல்லது உத்தியோகபூர்வ விசாரணையிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை.</p><p></p><h2>பரப்பப்படும் குற்றச்சாட்டுகள்</h2><p>

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து அவர் அதிகாரிகளை எச்சரித்திருந்ததாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db625b0-f4b5-4bfd-8206-9f7c06971a2d/26-6a5968de2536c.webp' /></p><p>

மேலும், நம்பகமான ஆதாரங்கள் இன்றி சிங்கள பௌத்த இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளை இலக்காகக் கொண்டு பரந்த சதித்திட்டம் ஒன்று இருப்பதாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் சமூக நல்லிணக்கத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் சுரேஷ் சலேவை தடுத்து வைத்திருப்பதன் சட்டபூர்வத்தன்மையை நீதிமன்றம் ஆராயும் வேளையில், இந்த வழக்குடன் தொடர்புடைய பரந்த அரசியலமைப்பு மற்றும் பொதுநல விடயங்கள் குறித்தும் சங்கத்தின் கருத்தை பரிசீலிக்குமாறு தேரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;We Will Kill Trump&quot; பரபரப்பை கிளப்பிய ஈரானின் புதிய விளம்பர பலகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-kill-trump-iran-new-billboard-us-president-1784227395"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-kill-trump-iran-new-billboard-us-president-1784227395</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து, &quot;We Will Kill Trump&quot; (ட்ரம்பைக் கொல்வோம்) என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர பலகையொன்று ஈரான் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து, "We Will Kill Trump" (ட்ரம்பைக் கொல்வோம்) என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர பலகையொன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நிறுவப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விளம்பர பலகை தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><h2>ட்ரம்பைக் கொல்வோம்</h2><p>
</p><p>
டெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பர பலகையில், கருப்பு நிற சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப் படுத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. </p><p>

அவரது தலைமுடி சீர்குலைந்த நிலையிலும், கண்களும் வாயும் மூடிய நிலையிலும், சிவப்பு நிற டையின் மீது கைகளை வைத்தபடி சித்தரிக்கப்பட்டுள்ளார். 


சவப்பெட்டியின் மீது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் "We Will Kill Trump" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4147468-5a8f-4ea2-b2ca-b8f91c094409/26-6a5928b8ae682.webp' /></p><p>
</p><p>
இந்த விளம்பர பலகை, அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
 அதன் பின்னணியில் துக்கச் சுவர் போன்ற வடிவமைப்பும், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>பிரம்மாண்ட விளம்பர பலகை</h2><p>

ஈரான், அரசியல் மற்றும் புரட்சிகர கருத்துகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இதுபோன்ற பிரம்மாண்ட விளம்பர பலகைகளை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது.</p><p> </p><p>

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தலைநகர் டெஹ்ரானின் முக்கிய பகுதிகளில் இதுபோன்ற அரசியல் விளம்பரங்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🇮🇷🇺🇸 | <a href="https://x.com/hashtag/Tehran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tehran</a> Billboard Shows <a href="https://x.com/hashtag/Trump?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Trump</a> in Coffin<a href="https://x.com/hashtag/Iran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Iran</a> has installed a billboard in Tehran showing President Trump lying in a coffin. A nearby statue depicts the fist of late Supreme Leader Ali Khamenei, who was killed at the start of the US-Israeli war on Iran.<br><br>A separate… <a href="https://t.co/Hf3yhonHcy">pic.twitter.com/Hf3yhonHcy</a></p>&mdash; Mahalaxmi Ramanathan (@MahalaxmiRaman) <a href="https://x.com/MahalaxmiRaman/status/2077672243958849758?ref_src=twsrc%5Etfw">July 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இதற்கு முன்பும், டொனால்ட் ட்ரம்பை விமர்சிக்கும் வகையில் "The Breaking Point" என்ற வாசகத்துடன் அவரது வாய் தைக்கப்பட்டிருப்பது போன்ற விளம்பர பலகையை ஈரான் வெளியிட்டிருந்தது.</p><p>மேலும், அமெரிக்க விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் ஈரானின் வலையில் சிக்கியிருப்பது போன்ற காட்சிகளும் அந்நாட்டின் விளம்பர பிரச்சாரங்களில் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>சர்வதேச ரீதியில் பதற்றம்</h2><p>
</p><p>
அதேவேளை, ஈரானில் வெளியான ஒரு பழமைவாத நாளிதழ், அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததற்குப் பழிவாங்க வேண்டிய இலக்குகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b94b76-ac0f-4096-ac59-11d4b1606418/26-6a5928b96d747.webp' /></p><p> </p><p>

அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல வெளிநாட்டு தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இந்த புதிய விளம்பர பலகை, ஈரான்-அமெரிக்கா இடையிலான ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T22:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்..! இலக்கு வைக்கப்பட்ட முக்கிய இடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-strikes-hit-bridge-airport-railway-station-iran-1784240378"></link>
            <id>https://tamilwin.com/article/us-strikes-hit-bridge-airport-railway-station-iran-1784240378</id>
            <summary type="text">அமெரிக்கா நடத்திய நள்ளிரவு வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய விமான நிலையம், தொடருந்து சந்திப்பு நிலையம் மற்றும் இரண்டு பாலங்கள் இலக்காகத் தாக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா நடத்திய நள்ளிரவு வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய விமான நிலையம், தொடருந்து சந்திப்பு நிலையம் மற்றும் இரண்டு பாலங்கள் இலக்காகத் தாக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரான்ஷஹர் விமான நிலையம் அருகே மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் ஏவுகணை ஒன்று விமான நிலையத்தைத் தாக்கியதாகவும் அரச தொலைக்காட்சி IRIB தனது டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வான்வழித் தாக்குதல்</h2><p>

அதேபோல், துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) நகரின் முக்கிய தொடருந்து சந்திப்பு நிலையமும் அமெரிக்க தாக்குதலுக்கு இலக்கானதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் இரண்டு ஈரானியர்கள் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd44123b-1b27-44b2-ba9a-853bbeb2eab1/26-6a595d7b0b5d8.webp' /></p><p>

மேலும், ஹோர்முஸ்கான் மாகாணத்தில், உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள இரண்டு பாலங்கள் மீதும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

ஈரான் அரசின் செய்தி நிறுவனமான IRNA வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.</p><p>

இந்தத் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T22:38:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனம் குறித்த தவறான தகவல்கள்..! இலஞ்ச ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/incorrect-information-asset-liability-declarations-1784239149"></link>
            <id>https://tamilwin.com/article/incorrect-information-asset-liability-declarations-1784239149</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு மூலம் சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு மூலம் சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பாக பல்வேறு வெளித் தரப்பினரால் வழங்கப்படும் தவறான தகவல்கள் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், அவற்றை அறிவிப்பதற்காக ஆணைக்குழுவால் நிறுவப்பட்ட மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது மற்றும் அந்த அமைப்பை அணுகுவது ஆகியவை குறித்து, ஆணைக்குழுவின் அதிகாரிகள் அல்லாத பிற நபர்களால் பல்வேறு தகவல்கள் வழங்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கிய அறிவிப்பு</h2><p>
</p><p>
இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களிலும், இந்த மின்னணு அமைப்பின் பயன்பாட்டிலும், சம்பந்தப்பட்ட நபர்களால் தவறான தகவல்களும் தவறான வழிமுறைகளும் தெரிவிக்கப்படுவதை ஆணைக்குழு இதுவரை அவதானித்துள்ளது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb55053-05ef-4351-8619-647999ebc8ef/26-6a59572f46f4d.webp' /></p><p>
</p><p>
எனவே, ஆணைக்குழுவால் அல்லது அதன் அதிகாரிகள் அல்லாத பிற வெளி நபர்களால் நடத்தப்படும் இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பொறுப்பேற்காது என்பதை குறித்த அறிவிப்பின் மூலம் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அது தொடர்பான அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது, </p><p>சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது தொடர்பான எந்தவொரு சிக்கல்களையும், ஆணைக்குழுவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புப் பிரிவின் 0767011954 மற்றும் 0112587284 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்; அதன்படி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்களை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T22:12:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைக்க நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/consultations-prisoner-overcrowding-in-jails-1784235776"></link>
            <id>https://tamilwin.com/article/consultations-prisoner-overcrowding-in-jails-1784235776</id>
            <summary type="text">சமீபத்தில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலியாக சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலியாக சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதன் பிரகாரம் இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைத்தல், நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து, 'ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு'வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நஜித் இந்திக தலைமையில், நாடாளுமன்றத்தில் கூடிய இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;நடவடிக்கைகள்</h2><p> </p><p>அதன்போது சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் கைதிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/913019fd-f152-4e5e-add2-c4deab5f6217/26-6a594702064c0.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவை தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு நடைமுறைகளைத் திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் குழுவின் உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.</p><p></p><h2>சிறைச்சாலைகள் திணைக்களம்&nbsp;</h2><p>
</p><p>
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதன் அவசியம் குறித்தும் குழு வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b37899fe-603f-4579-98e3-16f3ba14d944/26-6a594702acae7.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலை நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதிச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இக்குழு சுட்டிக்காட்டியது. </p><p>அத்துடன், நீதிமன்றம், இலங்கை பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T21:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் ஆமைகளுடன் நால்வர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-arrested-with-turtles-in-trinco-1784233249"></link>
            <id>https://tamilwin.com/article/four-arrested-with-turtles-in-trinco-1784233249</id>
            <summary type="text">ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து முற்சக்கர வண்டி மூலம் சட்டவிரோதமான முறையில்
ஆமைகளைக் கடத்திச் சென்ற நான்கு சந்தேக நபர்கள் மொரவெவ பொலிஸாரால் கைது
செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து முற்சக்கர வண்டி மூலம் சட்டவிரோதமான முறையில்
ஆமைகளைக் கடத்திச் சென்ற நான்கு சந்தேக நபர்கள் மொரவெவ பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இந்தச் சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஹொரவ்பொத்தானையிலிருந்து மஹதிவுல்வெவ பகுதி நோக்கி பயணித்த முற்சக்கர வண்டி
ஒன்றை, ரொட்டவெவ சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் மறித்து
சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன்போது, முச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 ஆமைகள்
மீட்கப்பட்டதை அடுத்து, அதில் பயணித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 40 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட நான்கு நபர்கள்
எனவும் திருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் தெரிய
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e879044-626e-4789-b249-82bd5b3c20fd/26-6a593d233f227.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட
முற்சக்கர வண்டி மற்றும் ஆமைகளையும் திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய மேலதிக சட்ட நடவடிக்கைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T20:51:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனோவா பாலம் விபத்து வழக்கு: நெடுஞ்சாலைத் துறை முன்னாள் அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/genoa-bridge-collapse-case-1784233025"></link>
            <id>https://tamilwin.com/article/genoa-bridge-collapse-case-1784233025</id>
            <summary type="text">இத்தாலியின் ஜெனோவா நகரில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மொராண்டி பாலம்
விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பான வழக்கில், இத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் ஜெனோவா நகரில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மொராண்டி பாலம்
விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>
இந்த விபத்து தொடர்பான வழக்கில், இத்தாலியின் நெடுஞ்சாலை நிறுவனத்தின்
முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜியோவானி காஸ்டலூச்சிக்கு நீதிமன்றம் 12
ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.</p><p></p><h2>12 ஆண்டுகள் சிறை</h2><p>
</p><p>
பாலத்தின் பராமரிப்புப் பணிகளைத் திட்டமிட்டு தாமதப்படுத்தியதே விபத்துக்குக்
காரணம் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/746b903c-1ced-476f-897e-679c6e629efb/26-6a594005ba1a8.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், அவருடன் சேர்த்து மேலும் பல நெடுஞ்சாலைத் துறை மற்றும்
பராமரிப்பு நிறுவன அதிகாரிகளுக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T20:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பை அகற்றும் வாகனத்தில் அன்னதானப் பொருட்கள்: மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஈ.பி.டி.பி கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/epdp-anthonysius-rajkumar-condemns-batticaloa-1784230301"></link>
            <id>https://tamilwin.com/article/epdp-anthonysius-rajkumar-condemns-batticaloa-1784230301</id>
            <summary type="text">கதிர்காமம் புனித பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கான அன்னதான உணவுப் பொருட்களை, மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கதிர்காமம் புனித பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கான அன்னதான உணவுப் பொருட்களை, மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் எடுத்துச் சென்று உணவு சமைத்து வழங்கிய சம்பவம், இந்து மக்களையும் அவர்களின் மத உணர்வுகளையும் அவமதிக்கும் மிக மோசமான செயல் என ஈ.பி.டி.பி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மாநகர சபையின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தார்.</p><p></p><h2>புனித யாத்திரை</h2><p>
</p><p>
கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள், வழக்கமாக குப்பை மற்றும் திண்மக் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/660058d6-c5fc-44ab-a0bc-72ab4a68bb68/26-6a59355422342.webp' /></p><p>

இந்த நடவடிக்கை, புனித யாத்திரையில் ஈடுபடும் இந்து பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயலாக இருப்பதாகவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கும் உணவகங்களுக்கும் அறிவுறுத்தும் அதிகாரிகளே இவ்வாறு செயல்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>தமிழரசுக் கட்சி மாநகர சபை</h2><p>
</p><p>
இதனுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் தற்போதைய நிர்வாகம் தொடர்பாகவும் அவர் விமர்சனம் முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd8c413-a1ed-42d2-a735-8291b37045df/26-6a5935550ada1.webp' /></p><p> </p><p>தமிழரசுக் கட்சி மாநகர சபையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், நகரின் காந்தி பூங்கா, கந்தையா பூங்கா உள்ளிட்ட பல பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும், வடிகால்கள் மற்றும் வீதிகளில் திண்மக் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மாநகர சபை, நகரின் சுகாதார மற்றும் கழிவு முகாமைத்துவப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், நகரை திறம்பட நிர்வகிக்க இயலாத நிலை இருந்தால் பொறுப்பிலிருந்து விலகி திறமையானவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T19:47:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தளை மனிதப் புதைகுழி மர்மம்..! சித்திரவதை தடயங்களுடன் மீட்கப்பட்ட 155 எலும்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784222292"></link>
            <id>https://tamilwin.com/article/matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784222292</id>
            <summary type="text">2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி (Mass Grave) தொடர்பான விடயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

2012 நவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி (Mass Grave) தொடர்பான விடயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
</p><p>
2012 நவம்பரில் மருத்துவமனை கட்டுமானப் பணியின் போது, 1988-89 காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சுமார் 154-155 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
</p><p>
எலும்புக்கூடுகளில் கம்பி, ஆணி மற்றும் சங்கிலிகள் கட்டப்பட்டிருந்த அடையாளங்கள் இருந்தன, இவை கொடூரமான சித்திரவதைகளுக்குப் பின் கொல்லப்பட்டதற்கான சான்றுகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
</p><p>
அந்த காலகட்டத்தில் மாத்தளை பகுதியில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர்கள் குறித்தும், அரசு பயங்கரவாதம் குறித்தும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2013ல் அவருடைய கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நீதி கோரி நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.</p><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மூலம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்து எலும்புக்கூடுகளுக்கும் டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
</p><p>
இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தான் அன்று இராணுவ முகாம் இருந்துள்ளதாக நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச தான் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் Newsinsights நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NUF5sRazdJY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T19:39:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சிஅபிவிருத்தி குழு கூட்டத்தில் வெளிவராத ரகளைகள்! சிங்கப்பூர் பறந்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-doc-meeting-namal-visit-singapore-1784227466"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-doc-meeting-namal-visit-singapore-1784227466</id>
            <summary type="text">அண்மைக்காலங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மாவட்ட அபிவிருத்தி கூட்த்திலும், பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் குழப்பங்களை விளைவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மைக்காலங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மாவட்ட அபிவிருத்தி கூட்த்திலும், பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் குழப்பங்களை விளைவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையிலே, கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றையதினம் தினம்(16) நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை இடை நடுவே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டு அவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.</p><p>தொடர்ந்து பொது அமைப்புகள் மற்றும் தவிசாளர்களை இடையே ஏற்பட்ட வாய்த்தக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் இடைநடுவே வெளிநடப்பு செய்ததை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து அரச திணைக்க அதிகாரிகளும் வெளியேறியதை அடுத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>அத்தோடு, அர்ச்சுனாவின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.</p><p>இந்த விடயங்கள் தொடர்பான விரிவான தகவல்களை நாட்டுநடப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aX-q_6RixaU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T19:20:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்ட புதிய குரங்கு இனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monkey-with-orange-lips-forests-of-the-congo-1784225357"></link>
            <id>https://tamilwin.com/article/monkey-with-orange-lips-forests-of-the-congo-1784225357</id>
            <summary type="text">மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசின் லோமாமி தேசிய பூங்காவில், செம்மஞ்சள் நிற உதடுகளையும் கருப்பு முகத்தையும் கொண்ட முற்றிலும் புதிய குரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசின் லோமாமி தேசிய பூங்காவில், செம்மஞ்சள் நிற உதடுகளையும் கருப்பு முகத்தையும் கொண்ட முற்றிலும் புதிய குரங்கு
இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
உள்ளூர் மக்களால் 'லிக்வேலி' என்று அழைக்கப்படும் இந்த இனம், அடர்ந்த
காடுகளில் மரங்களின் உச்சியில் வசிக்கும் ஒரு இரகசிய வகை உயிரினமாகும்.</p><p></p><h2>புதிய குரங்கு இனம்</h2><p>
</p><p>
ஆபிரிக்காவில் கடந்த 75 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட ஐந்தாவது புதிய குரங்கு
இனமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aaeff69-3d4d-4db3-907e-9cddc6ed6cdf/26-6a591e5017bdb.webp' /></p><p>
</p><p>
அத்துடன், இதன் தனித்துவமான குரல் மற்றும் மரபணு சோதனைகள் மூலம் இது புதிய
இனம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T18:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதல்..! சவூதி எல்லையில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-conflict-tension-pakistan-troop-saudi-1784223638"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-conflict-tension-pakistan-troop-saudi-1784223638</id>
            <summary type="text">யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது நடத்திய ஏவுகணைத்
தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சவூதி அரேப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது நடத்திய ஏவுகணைத்
தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>

சவூதி அரேபியாவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ள பாகிஸ்தான், அங்கு
ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.</p><h2>இராணுவத்தினருக்குப் பதற்றம்</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தால், அமெரிக்கா -
ஈரான் மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் இராணுவ ரீதியாகப்
போருக்குள் இழுக்கப்படலாம் என்ற அச்சம் இஸ்லாமாபாத்தில் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b816c2c-6a26-4257-a713-25c527fe64a7/26-6a591c87cea4c.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T18:01:47+00:00</updated>
        </entry>
    </feed>
