<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-14T03:42:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்தால் அரசு ஏற்பட்டுள்ள பாதிப்பு - பின்னணில் நடக்கும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/getting-lease-for-kingsbury-land-for-a-small-cost-1783999620"></link>
            <id>https://tamilwin.com/article/getting-lease-for-kingsbury-land-for-a-small-cost-1783999620</id>
            <summary type="text">
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்திற்காக, அரசாங்கத்திற்கு வருடாந்த குத்தகை பணமாக வெறும் 2.5 மில்லியன் ரூபா மட்டுமே இதுவரை செலுத்தப்பட்டு வருவதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்திற்காக, அரசாங்கத்திற்கு வருடாந்த குத்தகை பணமாக வெறும் 2.5 மில்லியன் ரூபா மட்டுமே இதுவரை செலுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
</p><p>
வர்த்தகர் தம்மிக பெரேராவிற்கு சொந்தமான கொழும்பு 01 இல் அமைந்துள்ள இந்த வளாகம் 5.5 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகும்.
</p><p>
அதற்கமைய, ஒரு ஏக்கருக்காக மாதத்திற்கு வெறும் 38,000 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகையே அறவிடப்படுகிறது.
</p><h2><b>
கிங்ஸ்பரி ஹோட்டல் நிர்வாகம் </b></h2><p>முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய, 2026 ஆம் ஆண்டிலிருந்து இந்த குத்தகைப்பணத்தை 5 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க கிங்ஸ்பரி ஹோட்டல் நிர்வாகம் இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/738de6f2-d7d2-4103-825b-6d90a0ce57f5/26-6a55af251d00b.webp' /></p><p>எனினும், அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் தரவுகளுக்கமைய, இந்த வளாகத்தின் உண்மையான வருடாந்த வாடகைக் பெறுமதி 325 மில்லியன் ரூபாயாகும்.
</p><p>
32 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அரசாங்கத்திற்கு நஷ்டப்படுத்தி, இந்த குத்தகையை மீண்டும் 5 மில்லியன் ரூபாவாகவே வைத்திருப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தில் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கிங்ஸ்பரி ஹோட்டலில் உள்ள ரகசிய நுழைவாயில்களைக் கொண்ட அதிவேக அறையொன்றில், அமைச்சர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இலஞ்சமாக சலுகைகளை வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும், அரசாங்கத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இந்த கொடுக்கல் வாங்கல் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T03:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA['நிஞ்ஜா' வேடமணிந்த கும்பல் மசாஜ் நிலையத்தில் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ninja-dressed-ganged-made-robbery-1784000046"></link>
            <id>https://tamilwin.com/article/ninja-dressed-ganged-made-robbery-1784000046</id>
            <summary type="text">கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்குள் &#039;நிஞ்ஜா&#039; வேடத்தில் முகமூடி அணிந்து புகுந்த கும்பலொன்று, அதன் உரிமையாளரை தாக்கி, அவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்குள் 'நிஞ்ஜா' வேடத்தில் முகமூடி அணிந்து புகுந்த கும்பலொன்று, அதன் உரிமையாளரை தாக்கி, அவரிடமும் வெளிநாட்டு பெண்ணொருவரிடமும் இருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
</p><p>பொலிஸ் தகவலின்படி, தாக்குதலின்போது மசாஜ் நிலைய உரிமையாளரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி, 116,500 ரூபாய் பணம், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் இருந்த 205,000 ரூபாய் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4961bf98-0354-46e4-bd0d-640ab451f1e9/26-6a55ae33b8f3e.webp' /></p><p> 
மேலும், மசாஜ் நிலையத்தில் இருந்த சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவரையும் இலங்கையைச் சேர்ந்த இரு பெண்களையும் பணியில் அமர்த்தி, பப்பிலியான – கொழும்பு வீதியில் குறித்த மசாஜ் நிலையத்தை நடத்தி வந்ததாக உரிமையாளர், முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
</p><p>தாம் உறங்கிக் கொண்டிருந்தபோது பொருட்கள் சிதறும் சத்தம் கேட்டு விழித்ததாகவும், உடனே தாம் மற்றும் தாய்லாந்து பெண் உறங்கியிருந்த அறைக்குள் பொல்லுகள் மற்றும் கத்திகளுடன் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தாக்குதலாளர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>மேலும், 'மாதிவெலவத்தே பணுவா' என அழைக்கப்படும் நபர் ஒருவர் கடந்த மாதம் 21 ஆம் திகதி தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த மசாஜ் நிலையத்தை தொடர்ந்து நடத்த அனுமதிக்க மாட்டோம் என மிரட்டியிருந்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்த உரிமையாளர் 1990 சுவசெரிய அவசர மருத்துவ சேவையின் ஆம்புலன்ஸ் மூலம் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
இந்தக் கும்பல் மசாஜ் நிலையத்தின் கதவுகள், ஜன்னல்கள், பிரிப்பு சுவர்கள், அலமாரிகள், தொலைக்காட்சி, பிளெண்டர், ரைஸ் குக்கர் உள்ளிட்ட பல பொருட்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் டிவிஆர் பதிவுக் கருவியையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T03:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம்! உலக சந்தையில் சடுதியாக உயர்ந்த எரிபொருள் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-price-today-1783997643"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-price-today-1783997643</id>
            <summary type="text">மத்தியக் கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது.இதன்படி, சர்வதேச சந்தையில் கச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்தியக் கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது.</p><p>இதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை இன்றையதினம் மீண்டும் 9 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><h2>மீண்டும் அதிகரித்த விலை</h2><p>பிரென்ட்&nbsp; கச்சா எண்ணெய் ஒரு பரலின் விலை 7.29 டொலர்களால் அதிகரித்து&nbsp; 83.30 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>அத்துடன் WTI கச்சா எண்ணெய் ஒரு பரலின் விலை 6.73 டொலர்களால் அதிகரித்து 78.30 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30dc3640-1059-48b8-a7e1-b76dccfea351/26-6a55aaa68bc7f.webp' /></p><p>பிரென்ட்&nbsp; கச்சா எண்ணெய்யின்&nbsp; இன்றைய விலை உயர்வானது, கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிக்கு பிறகு பதிவான அதிகரித்த ஒரு நாள் விலையாகும்.&nbsp; &nbsp;</p><p>அத்துடன், ஜூன் மாதம் 12ஆம்&nbsp; திகதிககுப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையும் இதுவே ஆகும்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T03:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகார போதையால் சட்டத்தின் மேலாதிக்கத்தை பலவீனப்படுத்த வேண்டாம்:அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் அலி சப்ரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ali-sabry-npp-government-1783997121"></link>
            <id>https://tamilwin.com/article/ali-sabry-npp-government-1783997121</id>
            <summary type="text">அதிகாரம் கையில் இருக்கும்போது சுயாதீனமான நீதிமன்றம், சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில் அல்லது சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவம் சில நேரங்களில் நமக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரம் கையில் இருக்கும்போது சுயாதீனமான நீதிமன்றம், சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில் அல்லது சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவம் சில நேரங்களில் நமக்கு புலப்படாமல் போகலாம். </p><p>
எனினும், காலப்போக்கில் சூழ்நிலைகள் மாறும்போது, ஒரு ஜனநாயக ஆட்சியை பாதுகாக்கும் பிரதான நிறுவனங்கள் அவைதான் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
</p><p>நீதித்துறை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்து அவர் தெரிவித்த கருத்துக்கள்,</p><p>ஒரு சட்டத்தரணியின் பொறுப்பு, சட்டத்தின் முன்னால் ஒவ்வொரு நபருக்கும் அச்சமின்றி, சுதந்திரமாக மற்றும் நியாயமான முறையில் சட்ட பிரதிநிதித்துவத்தை வழங்குவதாகும். </p><p>மக்களின் விமர்சனத்திற்கு உள்ளான நபர்களுக்காக முன்னிலையாகும் சட்டத்தரணிகளைக் கண்டிக்க முற்படுவது, இறுதியில் நீதித்துறையின் அத்திபாரத்தை பலவீனப்படுத்துவதாகும்.
</p><h2>

</h2><p></p><h2>சட்டத்தின் ஆட்சி யாருக்கு தேவை</h2><p>அதிகாரம் நிரந்தரமானது அல்ல. பதவிகள் நிரந்தரமானவை அல்ல. இன்று அரசாங்கமாக இருப்பது நாளை எதிர்க்கட்சியாக மாறலாம். </p><p>இன்று குற்றம் சுமத்துபவர் நாளை குற்றம் சுமத்தப்படுபவராக மாறலாம். இன்று உங்களது எதிரியாக இருப்பவர், நாளை உங்களுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகும் சட்டத்தரணியாக மாறலாம்.
</p><p>எனவே, ஒரு சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில், சுயாதீனமான நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது என்பது சட்டத்தரணிகளுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ செய்யும் ஒரு சலுகை அல்ல. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347667d5-496f-4025-bcf1-f5c4f36b0cad/26-6a55a2c337d86.webp' /></p><p>அது ஒவ்வொரு குடிமகனினதும் சுதந்திரம், உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பாகும்.
</p><p>அந்த நிறுவனங்களை நாம் பாதுகாக்க வேண்டியது, இன்று அவற்றின் பாதுகாப்பு யாருக்குத் தேவைப்படுகிறது என்று பார்த்தல்ல. நாளை ஒரு நாளில் அவற்றின் பாதுகாப்பு நமக்கே தேவைப்படலாம் என்பதை நாம் அறிந்திருப்பதனாலாகும்.
</p><p>சட்டத்தின் ஆட்சி என்பது பலசாலிகளின் வரப்பிரசாதம் அல்ல. அது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்கும் இறுதி அரணாகும். அந்தப் பாதுகாப்பு உங்களுக்கு எப்போது தேவைப்படும் என்பதை யாரும் அறியார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T02:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் மீது சேறுபூசும் சதி! சி.ஐ.டிக்குச் சென்ற மொட்டு கட்சியின் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-has-connections-with-underworld-gangs-1783996485"></link>
            <id>https://tamilwin.com/article/namal-has-connections-with-underworld-gangs-1783996485</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்சவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்சவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு
இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் திட்டமிட்ட வகையில் அவதூறு
பரப்பப்படுவதாகச் சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்
செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்முறைப்பாடு
ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
நேற்று இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத்
தெரிவிக்கும்போது,</p><p>மகிந்த ராஜபக்ச&nbsp; மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன்
தொடர்புபடுத்தி, அரசுக்குச் சார்பான தரப்புகளும், பிரிவினைவாதக்
கருத்துக்களைப் பரப்பும் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்களும் திட்டமிட்ட
பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.</p><p></p><h2>அழிக்கப்பட்ட பாதாள உலகக் குழு</h2><p>
</p><p>
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வரலாற்றைக்
கொண்ட தரப்பினரே, இன்று ராஜபக்சக்களுக்கு சேறுபூச முயற்சிக்கின்றனர். </p><p>மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே பாதாள உலகக் குழுக்களும் விடுதலைப் புலிகள்
அமைப்பின் பயங்கரவாதமும் இந்நாட்டில் முழுமையாக அடக்கப்பட்டன என்பது மறுக்க
முடியாத உண்மை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7d7f45-99bd-409c-9c5e-f75bca4b6546/26-6a55a36293ac6.webp' /></p><p>

போதைப்பொருள் ஒழிப்புப் பற்றிப் பேசும் தற்போதைய அரசின் முக்கிய உறுப்பினர்கள்
மற்றும் அவர்களது குடும்பத்தினர் அண்மைக்காலமாக போதைப்பொருள் விவகாரங்களில்
சிக்கியுள்ளனர். </p><p>இது குறித்து அரசு பதில் கூற வேண்டும்.

முகநூல் போலிக் கணக்குகள் மூலமோ அல்லது நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப்
பின்னால் ஒளிந்துகொண்டோ கூச்சலிடாமல், தைரியமிருந்தால் இந்த ஆதாரமற்ற
குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T02:48:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச - சலேவை பாதுகாத்த நீதவான்! இரகசிய செயற்பாடுகளும் அம்பலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-suresh-sally-gotabaya-1783991108"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-suresh-sally-gotabaya-1783991108</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் சில முக்கிய தகவல்கள் கோட்டை நீதவான் நீதிமன்ற நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. </p><p>ஆனால் சில முக்கிய தகவல்கள் கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் சுரேஷ் சலே தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>அத்தோடு, இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலும் ஏழு பேர் மிகவும் இரகசியமான வாக்குமூலங்களை CID யிடம் வழங்கியுள்ளனர். </p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு சுரேஷ் சலே நேரடியாகவே தொடர்புடையவர் என்று அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
</p><h2>
</h2><p></p><h2>ஏழு பேரின் இரகசிய வாக்குமூலம்</h2><p>அதாவது சுரேஷ் சலேயைச் சுற்றி இருந்த அவரது தீவிர ஆதரவாளர்களான ஏழு பேர் தான் இந்தச் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். </p><p>அதற்கு மேலதிகமாக, இந்த ஏழு சாட்சிகளும் கொழும்பு கோட்டை நீதவானிடம் தனிப்பட்ட முறையில், இரகசியமாக வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.
</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு ஆரம்பக் கட்டத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அப்போது கோட்டை நீதவானாகச் செயல்பட்டவர் தான் இசுரு நெத்திகுமார. </p><p>அப்போது அவர் முன்னிலையில்தான்,ஏழு பேரும் மிகவும் இரகசியமான வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர். பொதுவாக, ஒரு நீதவான் முன்னிலையில் இவ்வாறானதொரு வாக்குமூலம் மிகவும் இரகசியமாகவே வழங்கப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf1ddd3d-952b-4397-aefa-1c42cf508070/26-6a558b477a0d0.webp' /></p><p>அவ்வாறான வாக்குமூலங்கள் பகிரங்க நீதிமன்றத்தில் பெறப்படுவதில்லை. நீதவானின் உத்தியோகபூர்வ அறையினுள் (Chamber) மிகவும் இரகசியமாகவே பெறப்படும். </p><p>அப்பொழுது, அந்த இரகசிய வாக்குமூலத்தை வழங்கும்போது அங்கு நீதவான், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டச்சாளர் ஆகிய மூவர் மட்டும்தான் சம்பந்தப்படுவார்கள். </p><p>அதற்கு மேலதிகமாக, இரகசிய வாக்குமூலத்தை வழங்கும் நபர்கள் மட்டும்தான் சம்பந்தப்படுவார்கள். அந்த ஏழு நபர்களும் கூட தனித்தனியாகத்தான் அழைக்கப்படுவார்கள், ஒன்றாக அல்ல. </p><h2>&nbsp;பார்க்க முடியாக வாக்குமூலம்</h2><p>அவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பிறகு, அதனை எதிர்த்தரப்போ அல்லது வழக்காளித்தரப்போ எந்தவொரு தரப்பினரும் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. </p><p>அதன் பிறகு நீதவான் அந்த வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் அதை தனித்தனியாக முத்திரையிட்டு (Seal) அவற்றை நீதவானின் தனிப்பட்ட பாதுகாப்புப் பெட்டகத்தில் (Safe) வைப்பார். </p><p>அதை எந்தவொரு நபரும் பெற்றுக்கொள்ள முடியாது. அதனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏதேனும் ஒரு சட்டப் பிரச்சினை ஏற்படும்போது, அந்த வழக்குடன் தொடர்புடைய சட்டரீதியான ஒரு தீர்மானமிக்க கட்டத்தில்தான் கிடைக்கும். </p><p>அவ்வாறு இல்லாமல் நீதிமன்றத்தில் இருக்கும் அந்தப் பெட்டகத்தில் முத்திரையிடப்பட்டுள்ள வாக்குமூலங்களை எடுப்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ எந்தவொரு நபருக்கும் உரிமை இல்லை. நீதவானுக்குக் கூட உரிமை இல்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2bd3d16-5d11-437d-aed9-67420bdb0cb3/26-6a558b46c849c.webp' /></p><p>ஒருவேளை கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டால், அப்போது கோட்டை நீதவான் நீதிமன்றப் பெட்டகத்தில் உள்ள அந்த இரகசிய வாக்குமூலங்களை வழக்கை விசாரிக்கும் அடுத்த நீதிமன்ற நீதிபதியின் பெட்டகத்திற்கு மாற்ற முடியும். </p><p>அது தவிர வேறு எந்தவொரு தரப்பினருக்கும் இந்த இரகசிய வாக்குமூலங்களைக் கொடுப்பதற்கோ அல்லது எடுப்பதற்கோ முடியாது.
ஆனால் நீதவான் இசுரு நெத்திகுமார குறித்த இரகசிய வாக்குமூலங்கள் அனைத்தையும் சுரேஷ் சலேயின் சட்டத்தரணியான அசித சிறிவர்தனவிற்கு வழங்கியுள்ளார்.
</p><p>இவ்வாறானதொரு சூழ்நிலையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்குக்குக் கூட தற்போது பாரதூரமான ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. </p><p>ஏனென்றால், இரகசிய வாக்குமூலங்களை எதிர்த்தரப்பிடம் ஒப்படைத்ததன் மூலம், இப்போது இந்த வழக்கில் இரகசிய வாக்குமூலங்களை வழங்கியது யார்? அந்த வாக்குமூலங்களில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது? அவை அனைத்தும் தற்போது கோட்டாபய ராஜபக்சவின் கைக்கு சென்றுள்ளது. </p><p>
இந்த விபரங்கள் அம்பலமான பின்னர், இசுரு நெத்திகுமார நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு (JSC) மாற்றப்பட்டார். இவ்வாறு மாற்றிய உடனே, ராஜபக்ச குழுவும், அதேபோன்று 'ப்ரீ லோயர்ஸ்' (Free Lawyers) என்று சொல்லப்படும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன உள்ளிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் ஊடகங்களில் அதற்கு எதிராக பாரிய குரல் எழுப்பினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T02:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் நடந்த பயங்கர மோதல்.. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-death-toll-31-1783988663"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-death-toll-31-1783988663</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
குறித்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
</p><p>குறித்த இரண்டு சிறை அதிகாரிகளில் நேற்று (13) ஒருவரும் இன்று காலை (14) ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைத்துறை அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைக்கலவரம்&nbsp;</h2><p>

அதன்படி, நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b692a96b-d58c-4caf-be49-522e87edae70/26-6a5586f5759d4.webp' /></p><p>
</p><p>
ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற சிறைக்கலவரங்களில் மேலும் 21 கைதிகள் உயிரிழந்ததாகவும், இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>
மோதலில் காயமடைந்த மற்ற சிறைக் கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் நீர்கொழும்பு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மலசலகூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chicken-meat-sold-bathroom-toilet-vavuniya-1783986217"></link>
            <id>https://tamilwin.com/article/chicken-meat-sold-bathroom-toilet-vavuniya-1783986217</id>
            <summary type="text">வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப்
பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப்
பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட
நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
</p><p>
வவுனியா, வைரவபுளியங்குளம், தொடருந்து வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும்
சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>அக்கடைக்குரிய கோழிகள்
மலசலகூடம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் வைக்கப்பட்டு, அப்பகுதியில் வைத்து உரிக்கப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் கடையில் இறைச்சியாக
நீண்டகாலமாக விற்பனை செய்யப்படடு வந்துள்ளது.</p><p></p><h2>பொதுமக்களின் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த காலங்களில் எந்தவித
நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவ்விற்பனை நிலையம் இயங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ace3063-89b3-4c13-8098-12e30a7bbe2c/26-6a557b41053e5.webp' /></p><p>இந்நிலையில், விசேட டெங்கு ஒழிப்பு
நடவடிக்கையின் போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுத்த போது சுகாதார சீர்கேட்டுடன்
குறித்த கோழி இறைச்சிக் கடை இயங்கி வைத்தமை தெரிய வந்துள்ளது.
</p><p>குறித்த இறைச்சிக்கடை தொடர்பில் சுகாதார
பரிசோதகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடடிக்கை
எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு - நீதிமன்று விடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-professor-raghuram-court-respondents-1783984545"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-professor-raghuram-court-respondents-1783984545</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர்
சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என
தொடரப்பட்ட வழக்கில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர்
சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என
தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும்
என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம்
ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக
மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய
பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தனர்.&nbsp;</p><p>அதை அடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள் </h2><p>
</p><p>இதற்கிடையில், முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த
முன்னாள் மாணவியுடன் உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள்
டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன. அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள்
பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c9d7f57-6029-47e3-bdd4-a0494d3f7946/26-6a55747ddc4dc.webp' /></p><p>
இந்நிலையிலையே, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு
சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி
சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி, தன் மீது குற்றச்சாட்டை
முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக
துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப், டிக்டொக்,
பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை
பிரசுரித்தமைக்கு எதிராக என 14 பேரை எதிர் மனு தரர்களாக குறிப்பிட்டு வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
போது, முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக
வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக, பதிவிட்ட
அவதூறான பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு
சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.
</p><p>
அத்துடன் எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப கட்டளையிட்ட மன்று, எதிர்
மனுதரர்களின் காரணங்காட்டுதலுக்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ஆம்
திகதிக்கு மன்று
திகதியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஓரணியில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-parties-united-for-tamil-people-1783983315"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-parties-united-for-tamil-people-1783983315</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு
கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில்
அணிதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு
கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில்
அணிதிரண்டுள்ளன. </p><p>இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆறு கட்சிகளினதும்
தலைவர்கள் நேற்று மதியம் கொழும்பு - பம்பலப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரே மேசையிலிருந்து வெளியிட்டனர்.</p><p>
</p><p>
இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., அமீர் அலி,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அதன் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி., இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின்
தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்
தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மற்றும் அதன் உபதலைவர்
சுரேந்திரன் குருசாமி ஆகியோர் ஒரே மேடையில் இருந்து இந்த அறிவிப்பை நேற்று விடுத்தனர்.</p><p></p><h2>பொதுவான பிரச்சினைகள்&nbsp;</h2><p>

இதனையொட்டி ஆறு கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்
பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட பொது தளத்தை உருவாக்க இணக்கம் என்ற
தலைப்பில் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை
வருமாறு, "இன்று சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது
சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும்,
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான
தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fab9f02-8dad-419c-b04e-f17a9c27696c/26-6a556dc4eef4b.webp' /></p><p>
</p><p>
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை
தனித்தனியாக பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட
பிரதிநிதிகள், பொதுவான நலன்கள் காணப்படும் விடயங்களை அடையாளம் கண்டு,
சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு
பொறிமுறையாக இந்த தளம் அமையும் எனத் தெரிவித்தனர். இதன்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.&nbsp;</p><p>அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதாக
வழங்கிய உறுதிமொழியை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
அந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசிடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்கத்
தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசமைப்பு நீதியும், சமத்துவமும், அர்த்தமுள்ள
அதிகாரப் பகிர்வும் உறுதி செய்யப்படும் வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை
உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><h2>மாகாண சபைத் தேர்தல்கள்&nbsp;</h2><p>மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு வருட காலத்துக்குள் நடத்தப்படும் என அரசு
தெரிவித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக இடம்பெறும் தாமதங்கள் குறித்து
பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c4861b-3a6f-4e86-a038-f19371fc2db4/26-6a556dc5a57a1.webp' /></p><p>
</p><p>
மேலும், ஜனநாயகப் பங்கேற்பையும் பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் உறுதி
செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு ஒருமித்த
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p>நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கும் தீவிரமான காணி தொடர்பான
பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகப் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.</p><p>

இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் அர்த்தமுள்ள
கலந்துரையாடல்களை முன்னெடுத்து, நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க
வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
இந்த பொதுத் தளத்தின் ஊடாக தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான
உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் மீண்டும் தெரிவித்தமையுடன், இந்த விடயங்களில்
பொதுவான அணுகுமுறையொன்றை உருவாக்குவது நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும்
அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என நம்பிக்கை
வெளியிட்டனர்" என்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீராடச் சென்ற பாடசாலை மாணவன் மாயம்! தொடரும் தேடுதல் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-10-student-missing-after-drowning-in-river-1783975722"></link>
            <id>https://tamilwin.com/article/grade-10-student-missing-after-drowning-in-river-1783975722</id>
            <summary type="text">நுவரெலியா- லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்ட ஆற்றுப் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர்
ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா- லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்ட ஆற்றுப் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர்
ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.</p><p>குறித்த சம்பவம் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>மாயமான மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10-ஆம்
ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p>
தற்போது பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணைப் பரீட்சைக்குத்
தோற்றியிருந்த குறித்த மாணவன், இன்று பரீட்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது
நண்பர்கள் சிலருடன் இணைந்து வோல்ட்றீம் தோட்டத்திலுள்ள ஆற்றுப் பகுதிக்குச்
சென்று விளையாடியதாகவும், பின்னர் நீராடச் சென்றபோது எதிர்பாராத விதமாக
ஆற்றில் மூழ்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மாணவருடன் மொத்தம் பத்து மாணவர்கள் ஆற்றுப்
பகுதிக்கு சென்றிருந்ததாகவும், அவர்களில் குறித்த மாணவன் நீரில் அடித்துச்
செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e636b440-ace8-432d-9fd6-854ea504f274/26-6a554f2ca1205.webp' /></p><p>
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் லிந்துலை பொலிஸார், பிரதேசவாசிகள்
மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல்
நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.</p><p> தொடர்ந்து சுழியோடிகளின் உதவியுடன் ஆற்றில் தீவிர
தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! காலம் கடந்த உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-sri-lanka-thero-1783971567"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-sri-lanka-thero-1783971567</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.&amp;nbsp;&quot;விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>"விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா? </p><p>இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியுள்ளார்.&nbsp;</p><p>இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில்,&nbsp;விடுதலை புலிகளின் தலைவரை குறித்த இந்த கருத்து தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/h7yCxCoAiUU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T22:38:11+00:00</updated>
        </entry>
    </feed>
