<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-18T02:31:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-police-teams-investigate-c-d-wickramaratne-1784339937"></link>
            <id>https://tamilwin.com/article/two-police-teams-investigate-c-d-wickramaratne-1784339937</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து தனித்தனியாக விசாரணைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>நேற்று காலை (17) மாலபே, தலாஹேன, பராக்கிரம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவர் கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.</p><p></p><h2>35வது பொலிஸ் மா அதிபர்</h2><p>

தற்போதைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cee36f8-dcb7-4b96-b350-bfd4e150ee30/26-6a5ae052698ba.webp' /></p><p>மேலும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p>
சி.டி. விக்ரமரத்ன, 2020 நவம்பர் 27 முதல் 2023 நவம்பர் 23 வரை இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 35ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றினார்.
</p><p>
இந்நிலையில் நேற்று காலை தனது 63 வயது வயதில் துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T02:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபர் மரணம் - அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-about-the-suicide-of-the-former-igp-1784338831"></link>
            <id>https://tamilwin.com/article/information-about-the-suicide-of-the-former-igp-1784338831</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
</p><p>
உடற்பயிற்சி செய்வதற்காக தனது அறையை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
“<b><i>நேற்று காலை 7.00 மணியளவில், சர், உடற்பயிற்சி செய்யத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்து, எந்த துப்பாக்கியை பயன்படுத்துகிறாய் என என்னிடம் கேட்டார். நான் எனது கைத்துப்பாக்கியின் மேகசினை கழற்றிவிட்டு அவரிடம் கொடுத்தேன். அந்த மேகசினையும் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். அதன் பின்னர் ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வருமாறு என்னிடம் கூறினார். நான் அதை எடுக்க சமையலறைப் பகுதிக்குச் சென்றபோது, வெடிப்பு சத்தம் கேட்டது. நான் ஓடி வந்து பார்த்தபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்</i></b>” என முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p> </p><h2><b>

பாதுகாப்பு அதிகாரி வாக்குமூலம்</b></h2><p>முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்தின் போது அவர்களில் ஒருவர் கடமையில் இருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3152b12e-0349-4ff4-a713-e59bf4d18f3e/26-6a5addf9c46b6.webp' /></p><p>விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, பொலிஸ் திணைக்களத்தால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகும்.
</p><p>
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன, தனது உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டிலுள்ள அறையிலிருந்து நேற்று காலை 7 மணியளவில் வெளியே வந்துள்ளார்.
</p><p>
விக்ரமரத்ன வீட்டின் வரவேற்பறையில் இருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்றுள்ளார். </p><p>பின்னர், அந்தப் பாதுகாப்பு அதிகாரியைத் தண்ணீர் கொண்டு வருமாறு கூறி அந்த இடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, தான் பெற்றுக்கொண்ட கைத்துப்பாக்கியால் தனது மார்புப் பகுதியில் சுட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த பாதுகாப்பு அதிகாரி, விக்கிரமரத்ன கீழே விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளார். </p><p>சம்பவம் இடம்பெற்ற போது மனைவியும் இளைய மகனும் வீட்டிலிருந்தனர். அவர்கள் உடனடியாக அவரை முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
</p><p>
முன்னாள் பொலிஸ் மா அதிபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே உயிரிழந்துள்ளதாக&nbsp; வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து அறிந்தது உயர் அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கினர். சி. டி. விக்கிரமரத்ன உயிரை மாய்த்துக்கொள்ள பயன்படுத்திய கைத்துப்பாக்கி வீட்டின் வரவேற்பறையில் கிடந்த நிலையில் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><h3><b>
திருமண உறவில் விரிசல் </b></h3><p>விக்ரமரத்னவின் ஒரு மகனின் திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57a2865b-287f-432f-ad55-c5681ba9efd3/26-6a5addfa74cfd.webp' /></p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்பு அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது.

சி. டி. விக்ரமரத்ன ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் நேற்று மாலை வரை கண்டறியப்படவில்லை.
</p><p>
ஈஸ்டர் தாக்குதலில் சாரா ஜேஸ்மின் உயிரிழந்துவிட்டதாக டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துமாறு கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>
சாரா ஜேஸ்மின் சாய்ந்தமருது பகுதியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தது ஆரம்ப கட்ட விசாரணைகளில் உறுதியாகாத நிலையில், மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனையில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. </p><p>

குறித்த மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனை, சி. டி. விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபராக இருந்த காலப்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டது.

அக்காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக பிரசாத் ரணசிங்க கடமையாற்றினார். </p><p>கடந்த 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், அன்றைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராகச் சந்தன விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.
</p><p>
2020 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று பொலிஸ் மா அதிபராக நிரந்தரமாக்கப்பட்ட அவர், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 25 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.
</p><p>
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு மூன்று முறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-18T02:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-job-scam-suspect-arrested-1784253725"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-job-scam-suspect-arrested-1784253725</id>
            <summary type="text">கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. </p><p>

பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 பொலிஸ் விசாரணை</b></h2><p>வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fcf0c4-3330-40ab-835f-e906abc8b115/26-6a5a3d87c1c88.webp' /></p><p>இந்த நிலையில், நேற்று அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p>சந்தேகநபரை தலா 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். </p>]]></content>
            <updated>2026-07-18T01:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர்.. மொட்டு கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-dig-death-mottu-party-anura-govt-1784334173"></link>
            <id>https://tamilwin.com/article/former-dig-death-mottu-party-anura-govt-1784334173</id>
            <summary type="text">இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெறும் உயிரிழப்புகள் தொடர்பில் முறையான
விசாரணைக்கு முன்னரே அவை உயிர்மாய்ப்பு எனத் திட்டமிட்டுச் சித்தரிக்கப்படும்
போக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெறும் உயிரிழப்புகள் தொடர்பில் முறையான
விசாரணைக்கு முன்னரே அவை உயிர்மாய்ப்பு எனத் திட்டமிட்டுச் சித்தரிக்கப்படும்
போக்குக் காணப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி மனோஜ்
கமகே தெரிவித்தார்.</p><p>

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
கூறினார்.
</p><p>
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மறைவு குறித்துத் தனது
இரங்கலைத் தெரிவித்த மனோஜ் கமகே, கபில சந்திரசேன மற்றும் திறைசேரி அதிகாரி
உள்ளிட்டோரின் மரணங்களின் போது, உடல்கள் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னரே
அவை உயிர்மாய்ப்பு எனச் செய்திகள் பரப்பப்பட்டது என்றார்.&nbsp;</p><p></p><h2>மரண பரிசோதனை</h2><p>

"ஒரு மரணம் இயற்கையானதா, உயிர்மாய்ப்பா அல்லது கொலையா என்பதை மரண பரிசோதனையே
தீர்மானிக்க வேண்டும். ஆனால், முறையான விசாரணைகளின்றி இவ்வாறான முடிவுகளை
ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடுவது பாரதூரமான நிலை" என்று அவர்
எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6cfe579-1e25-469e-b594-efd939e2d969/26-6a5ac940c8b0f.webp' /></p><p>
</p><p>மேலும், அரசை விமர்சிக்கும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாதத் தடைச்
சட்டத்தைப் பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால் என்றும், அதேபோல்,
நீதியரசர்களுக்கு அழுத்தம் கொடுத்து, நீதித்துறையையும் அரசு தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுகின்றது என்றும் அவர் சாடினார்.</p><p> "அரசமைப்பை மாற்ற மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று தங்கள்
தேவைக்காக அனைத்தையும் தலைகீழாக மாற்றத் துடிக்கின்றனர்.</p><p> பொலிஸ் மற்றும் ஊழல்
தடுப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை ஏற்கனவே சீர்குலைந்துவிட்டது.
இந்தநிலையில், நீதித்துறையின் கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க
வேண்டியது சட்டத்தரணிகள் மற்றும் நீதியரசர்களின் பொறுப்பாகும்.&nbsp;</p><p>
ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்
உடனடியாக வீதிக்கு இறங்கி தலைமைத்துவத்தை வழங்க வேண்டும், அனைத்து
எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T00:34:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் சிக்கப் போகும் பௌத்த தேரர்.. ரகித ராஜபக்ச - சரித் அபேசிங்க வழக்கில் அதிரடி திருப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harak-kata-bribery-probe-new-claims-involving-monk-1784332074"></link>
            <id>https://tamilwin.com/article/harak-kata-bribery-probe-new-claims-involving-monk-1784332074</id>
            <summary type="text">ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, பௌத்த தேரர் ஒருவர் ஊடாக சிரேஷ்ட பொலிஸ் அதிகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, பௌத்த தேரர் ஒருவர் ஊடாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குக் கைமாற்றப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது தொடர்பில் விசாரணையாளர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் அருண் வருஷஹென்னடிகே ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைமாற்றப்பட்ட பணம்..&nbsp;</h2><p>

இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பௌத்த தேரரை விசாரணையாளர்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு மேலதிக விபரங்களை அறிக்கை செய்வதற்கு முன்னர் அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c207d04-7613-4bdf-bd3d-470e00bd9f71/26-6a5ac2ed9ad98.webp' /></p><p>இலஞ்சப் பணத்தை வழங்கியதாகக் கூறப்படும் ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பதிவு செய்யப்பட்ட காணொளி வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன், இலஞ்சப் பணத்திற்கு ஈடாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதமை தொடர்பில் ஹரக் கட்டாவின் மனைவிக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள் அடங்கிய தொலைபேசி ஒன்றையும் விசாரணையாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இவ்வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே 1,300இற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளதை விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பெறப்பட்ட வாக்குமூலங்கள்..</h2><p>
</p><p>
மேலும், இந்த இலஞ்ச விவகாரம் குறித்து கலந்துரையாடுவதற்காக மூன்று சந்தேக நபர்களும் ஒன்றாக இந்தியாவுக்குச் சென்றதாக முன்னர் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4500538-8f2a-4502-83ac-b2c2265f2bda/26-6a5ac2ee9f575.webp' /></p><p> </p><p>குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பதிவுகளின்படி, சந்தேக நபர்கள் மூவரும் 2023 மார்ச் 3 ஆம் திகதி ஒரே விமானத்தில் இந்தியாவுக்குப் பயணித்து, மீண்டும் 2023 மார்ச் 7ஆம் திகதி ஒன்றாகவே இலங்கைக்குத் திரும்பியுள்ளனர். </p><p>இதே மூன்று சந்தேக நபர்களுடன் தொடர்புடைய மற்றுமொரு தனிப்பட்ட இலஞ்சச் சம்பவம் குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்னுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் புதிய விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T00:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன அழுத்தமா.. அரசியல் அழுத்தமா.. சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து எழும் சந்தேகங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-dig-cd-wickremarathna-death-cid-investigation-1784327359"></link>
            <id>https://tamilwin.com/article/ex-dig-cd-wickremarathna-death-cid-investigation-1784327359</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர்&amp;nbsp;சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.&amp;nbsp;அவரின் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர்&nbsp;சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அவரின் உயிரிழப்பு தொடர்பில் முதலில் சில தென்னிலங்கை ஊடகங்களில், அவர் உயிர் மாய்த்துக் கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகின.&nbsp;</p><p>இதனை தொடர்ந்து பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை அறிவிக்கப்பட்டதுடன் உயிர்மாய்ப்பாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில்,&nbsp; சி.டி. விக்ரமரத்ன நேற்று காலையில், உடற்பயிற்சிக்கு தயாராகி இருந்த நிலையில் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>எனவே, சாதாரணமாக தனது நாளை ஆரம்பித்த அவர், ஏன் உயிர்மாய்த்துக் கொள்ள வேண்டும் என இங்கு சந்தேகம் எழுகின்றது.</p><p>அதேநேரம், அவர், தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தருணம், தனது துப்பாக்கியை ஒப்படைத்துள்ளார். இருப்பினும் அவர் தனது மெய்காவலரிடம் இருந்து துப்பாக்கியை பெற்று சுட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aXDy5QAPX6A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T22:54:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை.. ஜனாதிபதி மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-dic-meeting-issue-president-anura-1784326226"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-dic-meeting-issue-president-anura-1784326226</id>
            <summary type="text">கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்
ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொலைபேசி
மூலம் விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்
ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொலைபேசி
மூலம் விசாரித்தார் என&nbsp;அமைச்சர்&nbsp;இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.&nbsp;</p><p> மேலும், அங்கு இடம்பெற்ற உண்மை நிலையைத் தான் அவருக்கு
விளக்கமளித்ததாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை
ஏற்படுத்திப் பேசினார்.</p><p></p><h2>ஏற்பட்ட சலசலப்பு&nbsp;</h2><p> </p><p>கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்
குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அந்தக் கூட்டம் பாதியிலேயே
இடைநிறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5239bfb6-5158-42d5-8e4b-7f9190deccae/26-6a5aa9be2b0ba.webp' /></p><p> </p><p>இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும்
பேசுபொருளாக மாறியது.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தாக்க முயன்றதாக வதந்திகள்
பரப்பப்பட்டன. </p><p>ஆனால், நான் அவ்வாறான ஒரு நபர் அல்லன். யாருடனும் சண்டை போடுவதோ
அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ எனது குணம் கிடையாது. </p><p>நேற்று நடைபெற்ற இந்தச்
சம்பவம் ஜனாதிபதிக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அங்கு நடந்த
உண்மையான நிலைமைகளைத் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்" என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T22:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-ramalingam-chandrasekar-1784324861"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-ramalingam-chandrasekar-1784324861</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப
முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப
முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும்
என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை
ஏற்படுத்திப் பேசினார். </p><p>கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மாவட்ட
அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அக்கூட்டம்
பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும்
பேசுபொருளாக மாறியது.
</p><p>


குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தாக்க முயன்றதாக வதந்திகள்
பரப்பப்பட்டன. ஆனால், நான் அவ்வாறான ஒரு நபர் அல்லன்.</p><p></p><h2>ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை&nbsp;&nbsp;</h2><p> </p><p>யாருடனும் சண்டை போடுவதோ
அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ எனது குணம் கிடையாது. நேற்று நடைபெற்ற இந்தச்
சம்பவம் ஜனாதிபதிக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35caf4a2-cf97-4b91-87c5-3da065fae7f4/26-6a5aa42447272.webp' /></p><p> எனினும், அங்கு நடந்த
உண்மையான நிலைமைகளைத் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்.
</p><p>


இதேவேளை, யாழ். மாவட்டத்தில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும்
வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான துல்லியமான தரவுகளைச் சேகரிக்குமாறு
ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டார்.</p><p>



ஏனெனில், எதிர்வரும் ஆண்டில் எமது அரசாங்கம் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கே
முன்னுரிமை வழங்கவுள்ளது. மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் இந்த சமூகப்
பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்களது பிரச்சினைகளைத் தெரிவிக்கலாம்.
</p><p>


என்னுடைய அமைச்சுப் பதவி என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சொந்தமானது
அல்ல. தேசிய மக்கள் சக்தியினருக்கு மட்டுமன்றி, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து
மக்களுக்கும் சேவை செய்வதே எமது பிரதான நோக்கமாகும். அனைவரையும்
அரவணைத்துக் கொண்டே எமது பயணம் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T21:52:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கென்யாவில் எபோலா தடுப்பு மையத்தில் 7 அமெரிக்கர்கள் தனிமைப்படுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-americans-quarantined-an-ebola-center-in-kenya-1784322299"></link>
            <id>https://tamilwin.com/article/7-americans-quarantined-an-ebola-center-in-kenya-1784322299</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றுக்கு
எதிராகப் பணியாற்றிய ஏழு அமெரிக்கத் தொண்டு ஊழியர்கள், கென்யாவில் புதிதாக
அமைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றுக்கு
எதிராகப் பணியாற்றிய ஏழு அமெரிக்கத் தொண்டு ஊழியர்கள், கென்யாவில் புதிதாக
அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தங்களைச் சுயவிருப்பத்தின் பேரில் 21
நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
</p><p>
கொங்கோவிலிருந்து அமெரிக்கா திரும்பும் குடிமக்கள் அனைவரும் தங்களது
தாய்நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக, ஒரு மூன்றாம் நாட்டில் மூன்று வாரங்கள்
தங்கியிருக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகளின்
காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

அமெரிக்காவால் கென்யாவின் விமானப் படைத் தளத்தில் கட்டப்பட்டு வரும் இந்த 50
படுக்கைகள் கொண்ட உயிரியல் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அந்த நாட்டு
மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p><p></p><h2>தனிமைப்படுத்தல்</h2><p>
</p><p>
எபோலா தொற்றால் ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்களை அமெரிக்கா தங்கள் நாட்டின்
மீது சுமத்துவதாகக் கென்யர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மையத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த
போதிலும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் செயற்கைக்கோள்
படங்கள் காட்டுகின்றன.
</p><p>
நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் கென்ய சுகாதார அமைச்சர் மீது நீதிமன்ற
அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dc3437e-9d14-4721-b324-ed51f49713aa/26-6a5a98fd3cd21.webp' /></p><p>

இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் எவ்வித எபோலா அறிகுறிகளும்
இன்றி அமெரிக்கப் பொதுச் சுகாதாரப் பிரிவின் மருத்துவக் கண்காணிப்பில்
உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.</p><p>

தற்போதைய எபோலா பரவல் கொங்கோவில் 828 பேரை பலிவாங்கியுள்ளதுடன், இதற்குத்
தடுப்பூசியோ முறையான சிகிச்சையோ இதுவரை கண்டறியப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T21:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூலிழையில் தப்பிய சுரேஷ் சலே - ஆபத்தில் சிக்கிய கோட்டாபயவின் நெருங்கிய சகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-narrowly-escapes-kota-close-aide-1784311460"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-narrowly-escapes-kota-close-aide-1784311460</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், நேற்று காலை&nbsp;மர்மமான முறையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன&nbsp;உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>இவ்விவகாரம், நாட்டில் பெரும் பரபரப்பையும் அதிகாரிகள் மத்தியில் கடுமையாக கேள்விகளையும் எழுப்பியுள்ளது.&nbsp;</p><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன, பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில்,&nbsp;சந்தன தீபால் விக்ரமரத்ன உண்மையில் தவறான முடிவெடுத்து தான் தனது உயிரை மாய்த்துக் கொண்டாரா என்னும் கேள்வி எழும்பியுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/L7gFZf-JpRo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-uniform-year-2027-donated-chinese-1784320935"></link>
            <id>https://tamilwin.com/article/school-uniform-year-2027-donated-chinese-1784320935</id>
            <summary type="text">அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.</p><p>

இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் பரிமாற்றம் கல்வி அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p> இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஷென்ஹொங், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவிடம் சான்றிதழைக் கையளித்திருந்தார்.</p><p></p><h2>நன்கொடை</h2><p>
</p><p>
இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டிற்காக இலங்கையில் உள்ள சுமார் 4.18 மில்லியன் பாடசாலை மாணவர்களின் முழுமையான சீருடைத் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c7ee968-7651-4a2d-acb9-25f4f4ef55a5/26-6a5a93aab6d45.webp' /></p><p> </p><p>இதற்காக 10.820 மில்லியன் மீட்டர் அளவிலான பாரிய சீருடை துணியை சீன அரசாங்கம் இலங்கைக்கு முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது.
</p><p>
கடந்த 2023ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட வேண்டுகோளின் பேரில் 88,60,990 மீட்டர் பாடசாலை சீருடை துணி சீன அரசாங்கத்தினால் முதற்தடவையாக இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:52:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் - அரசுடைமையாக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cigarettes-crores-rupees-abandoned-at-airport-1784320157"></link>
            <id>https://tamilwin.com/article/cigarettes-crores-rupees-abandoned-at-airport-1784320157</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் பயணப்பொதிகள் வந்தடையும் நகர்வு பொறி பகுதிக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த, 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் பயணப்பொதிகள் வந்தடையும் நகர்வு பொறி பகுதிக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த, 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.&nbsp;</p><p>நேற்று மதியம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த&nbsp;சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>அதிகாரிகளின் விசாரணை..&nbsp;</h2><p>
</p><p>
இந்த சிகரெட் தொகுதி நேற்று காலை 08:45 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 இலக்க விமானம் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43bb7fbb-4549-403b-8e61-77b38fd78169/26-6a5a9486c3230.webp' /></p><p>
இவை 4 பயணப் பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்தன. அந்தப் பயணப் பொதிகளுக்குள், வெளிநாட்டு தயாரிப்பான 75,200 சிகரெட்டுகள் அடங்கிய 376 சிகரெட் கார்ட்டன்கள் இருந்தன.
</p><p>
இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முறையான சுங்க விசாரணைகளை மேற்கொண்டு, கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T20:46:02+00:00</updated>
        </entry>
    </feed>
