<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-12T07:30:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியாபாரம் செய்ய கிளம்பிய முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/robbery-in-jaffna-1783841288"></link>
            <id>https://tamilwin.com/article/robbery-in-jaffna-1783841288</id>
            <summary type="text">காலையில் வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரிடம் இருந்த பணத்தை இருவர் பறித்துச் சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலையில் வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரிடம் இருந்த பணத்தை இருவர் பறித்துச் சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் நேற்று(11.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

முதியவர் ஒருவர் காலையில் ஒரு தொகை பணத்துடன் வியாபாரத்திற்காக சென்றுள்ளார்.</p><p></p><p> </p><h2>

முதியவர் மீது தாக்குதல்</h2><p>
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள், முதியவரிடம் பாசாங்கு செய்து, அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1758468e-8954-4f20-801c-b5bc90a848af/26-6a534269ca226.webp' /></p><p> </p><p>

அத்துடன், முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கக்கூடும் என முதியவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்வதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T07:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு கொடூரமாக தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-found-dead-under-mysterious-circumstances-1783834340"></link>
            <id>https://tamilwin.com/article/person-found-dead-under-mysterious-circumstances-1783834340</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை - தங்கல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொடவில், ஒரு வீட்டின் முன்பாக கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் மீட்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை - தங்கல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொடவில், ஒரு வீட்டின் முன்பாக கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்று இரவு (11) இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பெலியத்த, சியம்பலகொட, திகங்வல பகுதியில் வசஜத்துவந்த கங்கணம் அரச்சிங்கே தனபால என்ற 88 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஓய்வுபெற்ற கடற்படை வீரர்&nbsp;கைது</h2><p>
</p><p>
இவர் தனது மனைவியுடன் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97aced95-2cd9-4bde-96d5-c1e5ce1e2f85/26-6a532fa8b19c0.webp' /></p><p>
</p><p>
வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர்க்குழாய் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளன.</p><p>

இந்நிலையில், இவரை யாரோ கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவரின் இளைய மகனான 48 வயது நபரை தங்கல்லை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2>&nbsp;குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை</h2><p> </p><p>

இந்த நபர் ஓய்வுபெற்ற கடற்படை வீரர் என்றும், அவர் நேற்று (11) காலை சுமார் 11 மணியளவில் தனது தந்தை வீட்டிற்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது கடுமையாக போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
இந்நிலையில், தங்கல்லை தலைமையக பொலிஸாரின் குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T07:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலியில் காணி விடுவிப்பை வலியுறுத்தி போராட்டம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-protest-was-held-today-at-palaly-junction-1783839697"></link>
            <id>https://tamilwin.com/article/a-protest-was-held-today-at-palaly-junction-1783839697</id>
            <summary type="text">பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(12) நான்காவது
தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(12) நான்காவது
தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள்
இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை
முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>போராட்டம்</h2><p>

தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தான் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa99671-fee9-4008-bc15-aa70cb729956/26-6a533d8f4b629.webp' /></p><p>
</p><p>
இதன்போது கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போதும்
பொலலசார் தடுத்தனர்.</p><p>

மக்கள் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T07:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் - நீர் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-water-users-1783838389"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-water-users-1783838389</id>
            <summary type="text">எல்நினோ வானிலை முன்னறிவிப்பு காரணமாக, விவசாயிகள் மற்றும் அனைத்து நீர் பாவனையாளர்களும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ வானிலை முன்னறிவிப்பு காரணமாக, விவசாயிகள் மற்றும் அனைத்து நீர் பாவனையாளர்களும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
நாட்டின் 80 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது அவற்றின் மொத்த கொள்ளளவில் சுமார் 48% அளவில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

இதற்கிடையில், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பக் குறியீடு எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b8a1263-71b4-452d-b104-4b2ef4a68e79/26-6a533c67bc76b.webp' /></p><p>
</p><p>வானிலை ஆய்வுத்திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்ப எச்சரிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெப்பமான வானிலைக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T07:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-warning-for-6-districts-today-1783838743"></link>
            <id>https://tamilwin.com/article/heat-warning-for-6-districts-today-1783838743</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களின் சில பகுதிகளில், இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களின் சில பகுதிகளில், இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
</p><p>
அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையில், குறித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் இன்றையதினம் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>வழங்கப்பட்டுள்ள&nbsp;ஆலோசனை</h2><p>
</p><p>
அதற்கமைய, திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவு நீரைப் பருகுமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1751fdde-58fd-4792-88ef-ca2f0334e6e2/26-6a533ae4f1a31.webp' /></p><p>
</p><p>
அத்துடன், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
அதேநேரம், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், வெயிலில் அதிக சிரமத்தைக் கொடுக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T06:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில மாதங்களில் மாகாண சபை தேர்தல்..! அரச தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-election-update-1783837591"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-election-update-1783837591</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும் முறையாகவும் நடத்துவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அதற்கான முயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும் முறையாகவும் நடத்துவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அதற்கான முயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p> 

மாகாண சபை தேர்தல் தொடர்பாக, திருகோணமலையில் நேற்று(11.07.2026) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


குழு நியமனம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>


தேர்தல் தொடர்பான விசேட குழு
மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவில்
நானும் ஒரு அங்கத்தவராக இணைந்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e85f8d-bc61-499e-945b-98d9cc8edf7b/26-6a533aa64a38d.webp' /></p><p>
</p><p>
இந்த குழுவின் தலைவரான வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் மிகக் காத்திரமான பங்களிப்பினை நாங்கள்
வழங்கி வருகின்றோம்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண் உறுப்பினர்களுடன் இது
தொடர்பாக ஏற்கனவே இரு தடவைகள் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.
</p><p>
இதன் தொடர்ச்சியாக, கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் பெண்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்
ஆகியோரை வரவழைத்து, அவர்களின் முன்மொழிவுகள், ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்.</p><p>

தற்போதைய நிலையில் இந்த விடயம் இன்னும் கலந்துரையாடல் மட்டத்திலேயே இருந்து
வருகின்றது.
தேர்தல் முறையில் உள்ள சட்டச் சிக்கல்கள் கடந்த 2015 தொடக்கம் 2019 வரையான
காலப்பகுதியில் இருந்த அரசாங்கத்தினால் புதிய தேர்தல் முறை ஒன்று
முன்மொழியப்பட்டிருந்தது.</p><p> எனினும், அது தொடர்பாக சட்டச் சிக்கல்கள்
நீடித்ததோடு, எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளும் காணப்படுகின்றன.</p><h2>

புதிய சட்ட விதிமுறைகளுடன் மாகாண சபை தேர்தல்</h2><p>

இதன் காரணமாக, தற்போதைய சூழலில் விகிதாசார தேர்தல் முறையில் மாத்திரம்
இந்த தேர்தலை நடத்த நாம் முயற்சி செய்தாலும், அங்கேயும் பெண் பிரதிநிதித்துவம்
மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாக சில சிக்கல்கள் காணப்படுகின்றன.
</p><p>
விரைவில் புதிய தேர்தல் முறை
இவ்வாறான நிலைக்கு மத்தியில், அனைத்து தரப்பினருடனும் நாம் தொடர்ந்தும்
கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c95d084-409d-4474-987f-f52af8fde8d0/26-6a533aa705c04.webp' /></p><p>
</p><p>
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான புதிய தேர்தல் முறை ஒன்றின் ஊடாக
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான எல்லாவிதமான முன்னெடுப்புக்களையும் நாங்கள்
மேற்கொண்டு வருகின்றோம்.</p><p>

எனவே, அரசாங்கம் இந்த மாகாண சபை தேர்தலை மிக விரைவாக நடத்துவதற்கே முயற்சித்து
வருகின்றது என்பதுடன், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தற்பொழுது தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-12T06:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேர்ல்ட் விஷன் சாவக்ச்சேரி பிராந்தியத்தின் ENOUGH Campaign பரப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-vission-enough-campaign-programme-sri-lanka-1783837940"></link>
            <id>https://tamilwin.com/article/world-vission-enough-campaign-programme-sri-lanka-1783837940</id>
            <summary type="text">வேர்ல்ட் விஷன் சாவக்ச்சேரி பிராந்தியத்தின் ENOUGH Campaign பரப்புரையானது, நேற்று 11.07.2026 சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.தென்மராட்சி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேர்ல்ட் விஷன் சாவக்ச்சேரி பிராந்தியத்தின் ENOUGH Campaign பரப்புரையானது, நேற்று 11.07.2026 சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>தென்மராட்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் தலைமையில், சாவகச்சேரி வலயக்கல்வி பணிமனை, தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த பரப்புரை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>
சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு மாதத்தின் தொணிப்பொருளான "சிற்றுண்டிகளை பற்றி மீளச் சிந்திப்போம்; இயற்கையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தெரிவு செய்வோம்" என்பதற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.</p><h2>ENOUGH Campaign</h2><p>சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் போசாக்கு பிரிவுடன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்து வெளியிடப்பட்ட "ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளுக்கான கொள்கைகளை" குறித்த விழிப்புணர்வை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் உருவாக்கும் நோக்குடன் ENOUGH பரப்புரையானது நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்நிகழ்வில் ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச்சாலையின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டதோடு, இயற்கையான ஊட்டச்சத்துள்ள நமது சூழலில் கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகள் தயார்படுத்தப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.</p><p>செம்முகம் ஆற்றல் குழுவின் போசாக்கு குறித்த விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டு, போசாக்கு மாதத்தின் தொனிப்பொருளுக்கமைய விழிப்புணர்வு சொற்பொழிவானது தென்மராட்சி சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரியினால் நிகழ்த்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc5cec9-551b-46b4-a16c-b7d5ae618957/26-6a5334f5d96c9.webp' /></p><p>
இந்நிகழ்வின் பிரதான அம்சமாக, தென்மராட்சி பாடசாலை மாணவர்களினால், தங்களது ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக, பின்வரும் ஆறு முக்கிய கோரிக்கைகள அடங்கிய மனுவொன்றையும் கையளித்திருந்தனர்.&nbsp;</p><p>1. பிரதேசத்திலுள்ள உணவகங்களில் சுத்தம் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். </p><p>
2. பாடசாலை உணவகங்களில் ஆரோக்கியமான உணவுகள் கிடைப்பதனை உறுதிசெய்ய வேண்டும்.</p><p>
3. பாடசாலை மாணவிகளுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு, குருதிச்சோகை தடுப்பு திட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11c79dc8-3395-465d-9872-10ebb2c3a110/26-6a5334f6be118.webp' /></p><p>
</p><p>4. பிரதேசத்தில் கிடைக்கும் போசாக்கு நிறைந்த காய்கறி மற்றும் பழங்கள் குறித்து சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விழிப்புணர்வினையும் பயன்படுத்தும் முறைகளைப் பற்றிய அறிவு பகிரப்பட வேண்டும்.
</p><p>5. சிற்றுண்டி உரிமையாளர்கள் உள்ளூரில் கிடைக்கும் ஊட்டச்சத்து உணவுகளை அடிப்படையாகக் கொண்ட சமையல் முறைகளை பிரபலப்படுத்தி போசாக்கு மட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
</p><p>6. போசாக்கு மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி கருவிகள் மற்றும் சிறுவர் நட்பு கற்றல் கருவிகளை சிறுவர்கள் மத்தியில் பயன்படுத்த ஊக்குவித்தல் வேண்டும்.
</p><p>என்ற கோரிக்கைகளோடு, 5000 பிள்ளைகளுக்கும் அதிகமான பிள்ளைகள் கையொப்பமிட்ட&nbsp; மனுவினை அரச அதிகாரிகளிடம் கையளித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21f799b5-8b4b-474f-810a-b3f5fcf6b357/26-6a5334f7965a3.webp' /></p><p>
இவ் விழிப்புணர்வு நிகழ்விற்கு பெரும் பங்களிக்கும் விதமாக, வேர்ல்ட் விஷன் சாவகச்சேரி பிராந்திய நிகழ்ச்சி திட்டமானது, தென்மராட்சி வலயக்கல்வி பணிமனையுடன் இணைந்து தென்மராட்சியில் அமைந்துள்ள 10 பிரதான பாடசாலைகளில், செம்முகம் ஆற்றல் குழுவின் உதவியுடன், போசாக்கு மாதத்தின் தொனிப்பொருளிற்கமைய வீதி நாடகமொன்றின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.</p><p>இந்நிகழ்வில், வேர்ல்ட் விஷன் இலங்கை நிறுவனத்தின் தேசிய இயக்குனர் தனன் சேனாதிராஜா மற்றும் தென்மராட்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி செல்வநாயகம் அச்சுதன், தென்மராட்சி வலயக் கல்வி பணிமனையின் பணிப்பாளர் நாயகம் கிரிஸ்தோபர் கமலராஜன், வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் வடக்கு, வடமேற்கு வலய முகாமையாளர் ஜூட் நிஷாந்தன், தென்மராட்சி வலயக் கல்வி பணிமனையின் பிரதி பணிப்பாளர் பரணிதரன், தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T06:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து போட்டியில் இரு அணிகளுக்கிடையே வெடித்த மோதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/football-match-two-groups-fight-1783826701"></link>
            <id>https://tamilwin.com/article/football-match-two-groups-fight-1783826701</id>
            <summary type="text">ஹட்டன் - டன்பார் மைதானத்தில் இடம்பெற்ற கால்பந்துப்போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தின்போது, இரு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - டன்பார் மைதானத்தில் இடம்பெற்ற கால்பந்துப்போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தின்போது, இரு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவுயுள்ளது.
</p><p>
ஹட்டனில் உள்ள இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>போட்டி ஏற்பாட்டாளர்களின் முடிவு</h2><p>ஆட்டம் முடிய 7 நிமிடங்கள் இருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆட்டத்தைக்காண வந்திருந்த பார்வையாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்து கைகலப்பில் ஈடுபட்டதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/209b6d55-4645-4bf0-b3aa-49942a425ce6/26-6a533467bde4a.webp' /></p><p>

மோதல் குறித்து முறைப்பாடு கிடைத்தவுடன், ஹட்டன் பொலிஸார் உடனடியாக மைதானத்திற்கு விரைந்து நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

அதன்படி, போட்டி குறித்து ஏற்பாட்டாளர்கள் எதிர்காலத்தில் முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T06:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி ஏன் பிரான்ஸ் செல்லவில்லை! வெளிவந்திருக்கும் காரணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-delays-french-visit-amid-domestic-crises-1783831612"></link>
            <id>https://tamilwin.com/article/president-delays-french-visit-amid-domestic-crises-1783831612</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கம் உள்ளிட்ட நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் பிரான்ஸிற்கு உத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கம் உள்ளிட்ட நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது விஜயத்தை இவ்வருட இறுதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வருடத்தின் பிற்பகுதியில் புதிய திகதியொன்றை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>விஜயத்திற்கான அழைப்பு மற்றும் பின்னணி
</h2><p>கடந்த பெப்ரவரி மாதம் புதுடில்லியில் நடைபெற்ற ‘செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தாக்கங்கள் குறித்த உச்சிமாநாட்டின்’ (AI Impact Summit) போது, </p><p>பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் சந்தித்த போதே இந்த பிரான்ஸ் விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ad1ff77-1e8a-490c-8138-08ea91bf3d02/26-6a531c3ec3e45.webp' /></p><p>GSP+ வரிச்சலுகை வசதியை நீடிப்பதற்காக பிரான்ஸின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலே திட்டமிடப்பட்டிருந்தது. தற்போதைய சலுகை டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைவதால், இலங்கை அடுத்த ஆண்டில் GSP+ வரிச்சலுகைகளுக்காக புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
</p><p>
GSP+ வசதியானது தகுதிபெறும் வளரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னுரிமை வழங்குகிறது. எனினும், அதன் தொடர்ச்சியானது மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 27 சர்வதேச உடன்படிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
</p><h2>
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</h2><p>ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு தொடர்பான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பிரான்ஸுடன் கையெழுத்திட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>

"விஜயத்திற்கு முன்னர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை இறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஜனாதிபதியுடன் செல்லும் தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நிதியமைச்சின் பிரதி அமைச்சர் ஆகியோர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T06:11:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/podujana-peramuna-sagara-kariyavasam-statement-1783833622"></link>
            <id>https://tamilwin.com/article/podujana-peramuna-sagara-kariyavasam-statement-1783833622</id>
            <summary type="text">நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு
அரசு எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும்
ஒன்றிணையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு
அரசு எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும்
ஒன்றிணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது.
</p><p>
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர்
சட்டத்தரணி சாகர காரியவசம், அரசின் இந்த முயற்சி ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட
பாரதூரமான அச்சுறுத்தல் என்று சாடியுள்ளார்.</p><p>

"அரசின் இத்தகைய முயற்சி ஒரு வெட்கக்கேடான செயலாகும். அரசியல் நோக்கங்களை
நிறைவேற்றிக்கொள்ளவே அரசு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.
ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதன் மூலம் உயர் நீதிமன்ற நீதியரசர்களின்
சுதந்திரமான செயற்பாடுகள் பாதிக்கப்படும் என்பதுடன், அது நீதித்துறையின்
சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு</h2><p>

இந்த முன்மொழிவுக்கு எதிராகப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு
எழுந்துள்ளது என்றும், சட்டத்தரணிகள் சங்கமும் இதற்குத் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69bc5baa-544a-46fa-add1-2e4ae30c49f9/26-6a5329e1a9048.webp' /></p><p>
</p><p>
கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல்
ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இது குறித்துப் பேச்சு
நடத்தியதைக் குறிப்பிட்ட சாகர காரியவசம், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும்
ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>
</p><p>
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாகக் கவனம் செலுத்துவார் என்று
தான் நம்புகின்றார் என்றும், ஜனநாயகத்துக்கு எதிராக வரும் எந்தவொரு
அச்சுறுத்தலையும் எதிர்க்கத் தனது கட்சி உறுதியுடன் செயற்படும் என்றும் சாகர
காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T05:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்! ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gl-peris-statement-about-sri-lanka-economy-1783832031"></link>
            <id>https://tamilwin.com/article/gl-peris-statement-about-sri-lanka-economy-1783832031</id>
            <summary type="text">இலங்கையை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமானால்,
அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமானால்,
அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.</p><p>

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து
கலந்துரையாடி வரும் நிலையில், இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>நல்லிணக்கம்&nbsp;</h2><p>
</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மிக
அவசியமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e11a344-cce7-447e-bb67-501c51cb40e2/26-6a5320318ca0e.webp' />&nbsp; &nbsp;</p><p> நல்லிணக்கம் இல்லாத சூழலில் நாடு ஒருபோதும் முன்னேற்றத்தை
அடையாது.</p><p>எமக்கு இடையே நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் கலந்துரையாடல்கள்
மூலம் தீர்த்துக்கொண்டு, ஒற்றுமையாகச் செயற்பட முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T05:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மைகளை எதிர்கொள்ளத்தயார்! எதிர்க்கட்சிக்கு நீதி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tice-minister-warns-opposition-1783830789"></link>
            <id>https://tamilwin.com/article/tice-minister-warns-opposition-1783830789</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தனக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால், அதனைத்
தவிடுபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தனக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால், அதனைத்
தவிடுபொடியாக்கத் தயார் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும்
அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி
ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர
எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.</p><p></p><h2>கைதிகள் குழுக்களுக்கிடையே மோதல்</h2><p>

சிறைச்சாலைக்குள் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தடுப்பதிலும்,
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும்
நீதி அமைச்சர் தனது தார்மீகப் பொறுப்பையும், அமைச்சுக்குரிய கடமைகளையும் சரிவர
நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டியே எதிர்க்கட்சி இந்தப்
பிரேரணையை முன்வைக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65529af-4689-4cb9-b2eb-422825c18adf/26-6a531ba9b953b.webp' />&nbsp;</p><p>
</p><p>
எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பதிலளிக்கும் போதே நீதி
அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-</p><p>

"அரசைப் பலவீனப்படுத்தவும், அரசியல் ஆதாயம் தேடவும் சில தரப்பினர் இவ்வாறான
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைக்கின்றனர்.</p><h2>நம்பிக்கையில்லா பிரேரணை</h2><p> எனக்கு எதிராகக்
கொண்டுவரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாடாளுமன்றத்தில்
தவிடுபொடியாகும். இவ்வாறான தந்திரங்கள் மூலம் அரசின் செயற்பாடுகளை ஒருபோதும்
முடக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e67fcd-0d0a-4213-86cc-84e7177ac5ed/26-6a531baa67b05.webp' /></p><p>

சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு
உண்டு. அந்தப் பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிச் செல்லவில்லை. இவ்வாறான
விமர்சனங்கள் என்னை மேலும் வலுவான முடிவுகளை எடுப்பதற்கே தூண்டுகின்றன.
</p><p>உண்மைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் எனக்கு, இதுபோன்ற அரசியல் சவால்கள்
ஒரு பொருட்டல்ல." - என்றார்.</p><p>

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நீதி அமைச்சர்,
சிறைச்சாலைத் துறை மற்றும் நீதி அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து
நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மேலும்
சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சரை நீக்கிவிட்டு விசாரணையை நடத்துங்கள்!- நளின் பண்டார எம்.பி. இடித்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783828370"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783828370</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில்
செயற்படுகின்றது என்று&amp;nbsp; ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில்
செயற்படுகின்றது என்று&nbsp; ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைப் பதவியிலிருந்து
நீக்காமல் இந்தச் சம்பவம் குறித்து ஒருபோதும் நியாயமான விசாரணையை முன்னெடுக்க
முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக்
கூறினார்.</p><p></p><h2>போகம்பரை சிறைச்சாலைக்கு எதிர்ப்பு</h2><p>

இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட நளின் பண்டார எம்.பி.,
</p><p>
"நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாம் தீவிர அவதானம்
செலுத்தியுள்ளோம். பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட நீதி அமைச்சருக்கு எதிராக
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளோம்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இன்று ஆட்சிக்கு
வந்து அதே பொறுப்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89f65f3-8d61-408b-afa0-7853199647e0/26-6a531a1f8db02.webp' /></p><p>
சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்குப் பதிலாக, வரலாற்றுச் சிறப்புமிக்க
போகம்பரை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசு
எடுத்து வரும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அவர் தனது கடுமையான எதிர்ப்பைத்
தெரிவித்தார்.</p><p>
</p><p>
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
</p><p>
"போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வந்து,
சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாற்றியமைத்தோம். ஆனால்,
தற்போதைய அரசு மீண்டும் அதனைச் சிறைச்சாலையாக மாற்றுகின்றது.</p><p> ஒரு நாட்டின்
கொள்கை என்பது சிறைச்சாலையைக் குறைப்பதாகவே இருக்க வேண்டும். சிறைச்சாலைகள்
தேவையென்றால் வேறு பொருத்தமான இடங்களைக் கண்டறியலாம். வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த இடங்களை இவ்வாறு பயன்படுத்துவது தவறு"என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f4e3f0-8d4b-42f4-9e40-5860a962b667/26-6a531a205f3f2.webp' /></p><p>

தகுதியான அரச அதிகாரிகளை முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்வது ஒட்டுமொத்த அரச
பொறிமுறையையும் வீழ்ச்சியடையச் செய்கின்றது என்று சாடிய அவர், "சிறைச்சாலைகள்
ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை நீக்கியமை நியாயமற்றது. அவரை மீண்டும்
பதவியில் அமர்த்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதையும் அரசு
கவனத்தில் கொள்ள வேண்டும். </p><p>மஹர சிறைச்சாலைச் சம்பவத்தின் போது இருந்தவாறே,
இப்போதும் ஜனாதிபதி தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்"&nbsp; என்று வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T04:41:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலில் கொழும்பில் சிக்கிய பெண் - மீட்கப்பட்ட பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-in-colombo-with-drugs-1783829255"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-in-colombo-with-drugs-1783829255</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன்&amp;nbsp;பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (11) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன்&nbsp;பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>நேற்று (11) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> 

சந்தேகநபரான பெண் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/125d6992-a71f-450c-b955-0cc7d554c03d/26-6a5313094e883.webp' /></p><p> </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 538 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-07-12T04:07:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-prices-record-decline-in-international-market-1783823156"></link>
            <id>https://tamilwin.com/article/gold-prices-record-decline-in-international-market-1783823156</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (12) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,108.44 அமெரிக்க டொலராக பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (12) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.</p><p>

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,108.44 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p>
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 59.7 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இலங்கை நிலவரம்&nbsp;</h2><p>இதன்படி, இலங்கையில் இன்று (12) பதிவாகியுள்ள தங்கவிலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 373,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10d1ec9-86ae-4ead-9a6e-d40642e70ee0/26-6a530c82c02c8.webp' />&nbsp;</p><p>

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T03:38:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட 500 பேர் தொடர்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494"></link>
            <id>https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494</id>
            <summary type="text">அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>குவியும் முறைப்பாடுகள்</h2><p>
</p><p>இந்த 500க்கும் மேற்பட்ட நபர்களில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 60 அரசியல்வாதிகளும், கிட்டத்தட்ட 100 உயர் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb54b70-dbc8-4414-9695-3a40c03e0473/26-6a530457e255b.webp' /></p><p>
</p><p>ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் சொத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>சம்பந்தப்பட்ட நபர்களால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களின் உண்மைத்தன்மை குறித்து இந்த விசாரணையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><h2>சொத்து விபரங்களை சமர்ப்பிக்க&nbsp;காலக்கெடு </h2><p>
சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய உத்தியோகத்தர் பிரிவில் அண்மையில் ஊடகவியலாளர்களும் கப்பல்துறை ஆவணப் பணியாளர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc07406-c362-4d18-a864-4784a93862cc/26-6a530e6b92991.webp' /></p><p>
இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த போதிலும், இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அது ஜூலை 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
</p><p>2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின்படி, சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க அல்லது ஓராண்டிற்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T03:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-s-warning-to-the-public-1783821306"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-s-warning-to-the-public-1783821306</id>
            <summary type="text">பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில்,</p><p>&nbsp;</p><h2>சட்டவிரோத&nbsp;நடவடிக்கை</h2><p>ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவரே பொறுப்பு என்று கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d64fbc-1100-45b6-8f03-a817fe525ce4/26-6a52f602b6c26.webp' />&nbsp;</p><p>

சிலர் சிறிய மாதாந்திர கட்டணத்திற்கு தங்களது வங்கிக்கணக்கை வாடகைக்கு விட முன்வருகின்றனர். அவ்வாறு வாடகைக்கு விடப்பட்ட கணக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
எனவே இவ்வாறான சூழல் ஏற்படுமாயின் மற்றவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீங்களும் சட்டப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் எச்சரித்துள்ளது.
</p><p>
இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T02:58:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல் தொடர்பில் விசாரிக்க இருவேறு குழுக்கள்..! 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை இடமாற்ற முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-attack-important-announcement-1783823973"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-attack-important-announcement-1783823973</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில்
விசாரணை நடத்துவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில்
விசாரணை நடத்துவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் ஏற்பட்ட சொத்து சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு விசேட
குழுவும், மோதல் சம்பவம் குறித்து தனியானதொரு விசாரணையை முன்னெடுப்பதற்காகச்
சிறைச்சாலைகள் திணைக்களத்தால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நீர்கொழும்பு
சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மேலும் 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை
நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f114b2d-2423-42ff-8824-7367cdf4cb17/26-6a52fe677cd0c.webp' /></p><p>

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றை மையமாகக்கொண்டு கைதிகளின் இரு
குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள்
உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p> இந்த மோதலின் போது 8 சிறைச்சாலை
அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T02:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-1783820555"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-1783820555</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட&amp;nbsp;தலா 05 இலட்சம் ரூபா நஷ்டஈடு&amp;nbsp; ஒரு ஆரம்பக்கட்ட தொகை மட்டுமே என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட&nbsp;தலா 05 இலட்சம் ரூபா நஷ்டஈடு&nbsp; ஒரு ஆரம்பக்கட்ட தொகை மட்டுமே என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து பலர் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான&nbsp;ஏ.சி. கஜநாயக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>இறுதிச்சடங்கு ஏற்பாடுகள்&nbsp;</h2><p>சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சத்திற்கு அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e830ae79-872b-4f48-9f5f-3a4e57adc085/26-6a52f929b14aa.webp' /></p><p>
அனைத்து இறுதிச் சடங்கு ஏற்பாடுகளும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
இதற்கிடையில், மோதலில் காயமடைந்த சிறை அதிகாரிகளுக்கு சில இழப்பீடுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
</p><p>மேலும், மோதலில் காயமடைந்த 7 சிறை அதிகாரிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இவர்களில் மூவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T02:22:00+00:00</updated>
        </entry>
    </feed>
