<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-19T13:25:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும்! சில உயர் அதிகாரிகளுக்குச் சென்ற செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-high-ranking-officials-may-be-assassinated-1784459379"></link>
            <id>https://tamilwin.com/article/some-high-ranking-officials-may-be-assassinated-1784459379</id>
            <summary type="text">

சில உயர் அதிகாரிகளிடம், வாக்குமூலம் பெறும் போது, அந்த இடத்திற்குச் சென்று “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும்” என அச்சுறுத்தல் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சில உயர் அதிகாரிகளிடம், வாக்குமூலம் பெறும் போது, அந்த இடத்திற்குச் சென்று “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும்” என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் அதிகாரிகளுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், அவர்கள் தொடர்ந்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p> கேகாலை பகுதியில் நேற்றையதினம்(18.07.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு எதிரான வாக்குமூலம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

தற்போதைய நிலையில் நாட்டில் பல உயர் அதிகாரிகள் தொடர்ச்சியாக தங்களுடைய உயிரை தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர். 

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலங்களை வழங்கும் அதிகாரிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டு வருகின்றது. </p><p> 

சில அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறும் இடங்களில் வைத்தே, “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும்” என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1cb794e-1e77-4514-9604-b07850c92776/26-6a5cb55a653ff.webp' /></p><p> </p><p> 

அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு உள்ளானவர்களும் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். </p><p> 

அரசாங்கம், மக்கள் ஆணையை மீறி, மக்களை நசுக்கி, அடக்குமுறைகள் மூலம் ஆட்சியைத் தொடலாம் என நினைத்தால் அது தவறான எண்ணமாகும். இதற்கெதிராக நாங்கள் அணித் திரள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-19T13:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்தில் செல்பி எடுத்த வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த விபரீதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-woman-accident-taking-selfie-with-train-1784465164"></link>
            <id>https://tamilwin.com/article/young-woman-accident-taking-selfie-with-train-1784465164</id>
            <summary type="text">தொடருந்து பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட யுவதியொருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று (19.7.2026)) முற்பகல் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட யுவதியொருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது இன்று (19.7.2026)) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய தொடருந்து பயணித்தின் போது ​குறித்த யுவதி அம்பேவளை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே, அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

விபத்துக்குள்ளான யுவதி உள்ளிட்ட 3 துருக்கி யுவதிகள் இந்த தொடருந்து பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee62b8f3-ed82-45ce-84ee-9de223f7868d/26-6a5cc9c664c71.webp' /></p><p> </p><p>

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p> 

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T12:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸியின் உருக்கமான இறுதி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lionel-messi-message-argentina-world-cup-final-1784464031"></link>
            <id>https://tamilwin.com/article/lionel-messi-message-argentina-world-cup-final-1784464031</id>
            <summary type="text">2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் முன், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான லியோனல் மெஸ்ஸி தனது சக வீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் முன், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான லியோனல் மெஸ்ஸி தனது சக வீரர்களுக்காக உருக்கமான திறந்த கடிதம் ஒன்றை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
</p><p>
நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.</p><p></p><h2>வாருங்கள் அர்ஜென்டினா</h2><p> </p><p>அந்தப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல் வாய்ப்புகளை உருவாக்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.</p><p>

இறுதிப்போட்டிக்கு முன், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவுடன் எடுத்த குழுப் புகைப்படத்தை பகிர்ந்த மெஸ்ஸி, தனது பதிவில்,

"இந்த ஆண்டுகள் முழுவதிலும் அழகானது பட்டங்களை வென்றதல்ல.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Da9Q-rnt5q7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Da9Q-rnt5q7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Da9Q-rnt5q7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Leo Messi (@leomessi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> இந்த அணியுடன் ஒவ்வொரு நாளையும் பகிர்ந்து கொண்டதும், ஒன்றாகப் போராடியதும், கடினமான தருணங்களில் மீண்டு வந்ததும், ஒவ்வொரு அடியையும் ரசித்ததும்தான். </p><p>என் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இந்த அணியை ஒரு குடும்பமாக வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாளை என்ன நடந்தாலும், இந்த அணி யாராலும் அழிக்க முடியாத வரலாற்றை ஏற்கனவே எழுதி விட்டது. வாருங்கள் அர்ஜென்டினா!" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை</h2><p>

இந்த பதிவு, அர்ஜென்டினா அணியின் ஒற்றுமையையும் குடும்ப பாசத்தையும் வெளிப்படுத்துவதோடு, இறுதிப்போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும் அவர்கள் ஏற்கனவே வரலாறு படைத்துவிட்டனர் என்ற நம்பிக்கையையும் சக வீரர்களுக்கு அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be8495cc-4c2b-4c03-bd8f-49d8a43ede5a/26-6a5cc682c453e.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பைப் போட்டியாகவும், சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் இறுதிப் போட்டியாகவும் இருக்கலாம் என்ற ஊகங்களும் வலுத்துள்ளன.</p><p> எனினும், தனது எதிர்காலம் குறித்து பேசாமல், தற்போதைய போட்டியிலேயே முழு கவனம் செலுத்தி வருவதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், உலகக் கோப்பையை வெல்வதோடு மட்டுமல்லாமல், தொடரின் கோல்டன் பூட் விருதுக்கான போட்டியிலும் மெஸ்ஸி முன்னணி வீரர்களில் ஒருவராக உள்ளார்.</p><p> தற்போதைக்கு கிலியன் எம்பாப்பே அந்தப் பட்டியலில் முன்னிலையில் இருந்தாலும், அணியின் வெற்றியே தனது முதன்மை இலக்கு என மெஸ்ஸி வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T12:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிர்வாகத் திறனின்மை விமர்சனம்: கலந்தாலோசிப்போம் என டக்ளஸ் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-epdp-backed-councils-lack-governance-1784453744"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-epdp-backed-councils-lack-governance-1784453744</id>
            <summary type="text">ஈபிடிபி கட்சியின் ஆதரவுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்த சபைகளில் உள்ள
நிர்வாகத் திறனின்மை தொடர்பாக விமர்சனங்கள் எழுவது தமக்கு தெரியும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈபிடிபி கட்சியின் ஆதரவுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்த சபைகளில் உள்ள
நிர்வாகத் திறனின்மை தொடர்பாக விமர்சனங்கள் எழுவது தமக்கு தெரியும் என்றும்,
அது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றுஈழ மக்கள்
ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
</p><p>
அண்மையில் யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலுரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இலங்கை தமிழர் கட்சி</h2><p>இதன்போது அவர் மேலும் விளக்கமளிக்கையில்,</p><p>

மக்கள் தேர்தல் மூலம் பிரதேச சபையின் உறுப்பினர்களை தெரிவு செய்த பின்னர் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516ceb8d-dc4e-4582-ab8c-fb775e531f28/26-6a5ca0ec27cac.webp' /></p><p>ஆகவே ஒரு முயற்சியாக ஆதரவு வழங்கிப் பார்ப்போம் என்று தான் வழங்கினோம். அப்படித்தான் முதலில் மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினோம். </p><p>ஆனால் அவராலும் சரியாக செய்ய முடியவில்லை.

 இலங்கை தமிழர் கட்சிக்கு ஆதரவளித்த பின்னர் அவர்களாலும் சரியாக செயல்பட முடியவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.</p><p></p><h2>ஆட்சியில் பங்கெடுக்க விருப்பமில்லை</h2><p> </p><p>

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைமைகளான சி.வி.கே சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் கதைத்து விரைவில் ஒரு முடிவுக்கு வரவிருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d1394ca-6f59-469a-b6bc-9f5e8fa9fdfa/26-6a5c9fdfdd575.webp' />&nbsp;</p><p>

எமக்கு ஆட்சியில் பங்கெடுக்க விருப்பமில்லை. ஊர்காவற்துறையை எடுத்துப் பார்த்தால் எங்களுக்கு தான் பெரும்பான்மை உள்ளது. ஆனால் நாங்கள் பதவியை விரும்பவில்லை. </p><p>

இன்றைய ஆட்சியாளர்களிடம் மக்களது பிரச்சினையை தீர்ப்பதற்கான வழியில்லை. அதனால்தான் ஆட்சியில் பங்கெடுக்காமல் வெளியில் இருந்து கொண்டு சரியானவற்றுக்கு ஆதரவளிப்பதும் பிழையானதை எதிர்ப்பதும் என்று முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T12:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்! ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-injured-in-shooting-at-dehiwala-cemetery-1784460290"></link>
            <id>https://tamilwin.com/article/man-injured-in-shooting-at-dehiwala-cemetery-1784460290</id>
            <summary type="text">தெஹிவலை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவலை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் தெஹிவலை –மவுண்ட் லவினியா பொது மயானத்திற்குள் நுழைந்து, உள்ளே இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>

காயமடைந்தவர் சிகிச்சைக்காக தெற்கு கொழும்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dbae694-3468-4142-9586-a84f19b3abb9/26-6a5cb77eb4dc1.webp' /></p><p> </p><p>

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் 
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T11:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் சந்திரசேகரனுடன் எந்த முரண்பாடும் இல்லை - ரஜீவன் எம்.பி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-problem-between-me-and-party-rajeevan-mp-states-1784451980"></link>
            <id>https://tamilwin.com/article/no-problem-between-me-and-party-rajeevan-mp-states-1784451980</id>
            <summary type="text">கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கும் எனக்கும் இடையிலோ அல்லது எனக்கும் எங்கள்
கட்சிக்கும் இடையிலோ எந்த பிரச்சினைகளும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கும் எனக்கும் இடையிலோ அல்லது எனக்கும் எங்கள்
கட்சிக்கும் இடையிலோ எந்த பிரச்சினைகளும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் நேற்று(18.07.2026) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்</h2><p>
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
</p><p>
 ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் என்னால் கூறப்பட்டதாக திரிபுபடுத்தப்பட்டு பரவி வரும் செய்திகள் தொடர்பாக பின்வரும் விளக்கத்தை வழங்க வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
</p><p>

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டத்தின் போது அர்ச்சுனா இராமநாதன் கூட்டத்திலிருந்து
வெளியேற்றப்பட்டமை குறித்து நான் எனது வருத்தத்தை பதிவு செய்திருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ebb38dd-5869-4208-ba36-4eb8f107a866/26-6a5c98337ccc1.webp' /></p><p>
மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் சார்பில் கேள்விகளை முன்வைக்கும் போது,
அதற்கான உரிய விளக்கங்களையும் பதில்களையும் அரச அதிகாரிகள் வழங்குவது
நல்லாட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைக் கடமையாகும் என்பதே எனது
நிலைப்பாடாகும்.
</p><p>எனது முகநூல் பதிவை அடிப்படையாகக் கொண்டு, எனக்கும் நான்
பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் முரண்பாடு
இருப்பதாகவும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகரை நான் விமர்சித்ததாகவும் சிலர் பரப்பி வரும் செய்திகள்
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.</p><p></p><h2>கேள்வி கேட்கும் உரிமை</h2><p>
</p><p>
நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்வாறான கருத்தை வெளிடவில்லை. அதேபோல்,
அமைச்சருடனோ அல்லது எனது கட்சியுடனோ எந்தவித கருத்து முரண்பாடோ அல்லது அரசியல்
பிரச்சினையோ இல்லை என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பொதுவாக, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு போன்ற முக்கியமான
கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அரச அதிகாரிகளோ கூட்டத்தை இடைநடுவில்
விட்டு வெளியேறுவது நல்ல முன்னுதாரணமாக அமையாது என்பதே எனது கருத்தாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca36c0d-ab80-455c-9695-2dcb283bb39c/26-6a5c98342e98f.webp' /></p><p>

குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களின் மூத்த அதிகாரிகள்
யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த நிலையில், மாவட்ட அபிவிருத்தி
தொடர்பான பல முக்கிய விடயங்கள் மற்றும் அனுமதிகள் அன்றைய தினம்
பரிசீலிக்கப்படாமல் போனமை குறித்து நான் கவலை வெளியிட்டிருந்தேன்.</p><p>மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கேள்விகள் தொடர்பான விடயங்கள் இயன்றவரை
முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டால், தேவையான
தரவுகளுடன் முழுமையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவதற்கு அது உதவியாக
இருக்கும் என்பதையும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.</p><p> இது கேள்வி கேட்கும்
உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கமல்ல மாறாக, பயனுள்ள நிர்வாக கலந்துரையாடலை
உறுதிப்படுத்தும் ஒரு நடைமுறை ஆலோசனையாகும்.</p><p></p><h2>மக்கள் நலனும் மாவட்ட அபிவிருத்தியும்</h2><p>கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளால் உரிய முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், தேவையான
இடங்களில் சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நான்
கேட்டுக்கொண்டிருந்தேன்.</p><p>மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், அமைச்சினால்
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள், நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு
அமைவாக நடைபெறுவது மிகவும் அவசியமானது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/897f8bf5-5158-44c0-a811-5a8d42d0cdd5/26-6a5c9834d2774.webp' /></p><p>மாவட்ட அபிவிருத்தி பணிகள் தடையின்றி
முன்னெடுக்கப்பட வேண்டுமெனில், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அரச
அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் பரஸ்பர மரியாதையுடனும்
ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
</p><p>
மக்களின் நலனையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் முன்னிறுத்தி,
பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் செயற்படுவது நம் அனைவரின் கடமையாகும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T11:21:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/historic-mavitapuram-kandaswamy-temple-festival-1784459482"></link>
            <id>https://tamilwin.com/article/historic-mavitapuram-kandaswamy-temple-festival-1784459482</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய 2026
மகோற்சவப் பருவிழா இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.முருகப்பெருமானுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய 2026
மகோற்சவப் பருவிழா இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.</p><p>முருகப்பெருமானுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று
காலை மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று முருகப் விநாயகப்
பெருமான், சிவன் உமாதேவியார் சமேதராயும் மற்றும் முருகப் பெருமான் வள்ளி
தெய்வானை சமேதராயும் வசந்த மண்டபத்திலிருந்து கொடித் தம்பம் எழுந்தருளி
கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.</p><p></p><h2>கொடியேற்றம்</h2><p>மாவை கந்தனின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
25 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் (11/08 )
தேர்த் திருவிழாவும் (12/08) ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித
தீர்த்தத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51803276-c6b4-4bb8-8b14-0c666f671955/26-6a5cb2cc08c7d.webp' /></p><p>நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஏராளமான
பக்தர்கள் மாவை கந்தனின் கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T11:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு தொடர்பில் அரசுக்கு எதிர்க்கட்சி நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extension-of-the-tenure-of-the-chief-justices-1784457220"></link>
            <id>https://tamilwin.com/article/extension-of-the-tenure-of-the-chief-justices-1784457220</id>
            <summary type="text">&quot;புதிய அரசமைப்பொன்றின் ஊடாகவே நீதியரசர்களின் பதவிக்காலத்தைத் திருத்தம்
செய்ய முடியும் அவ்வாறன்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மாத்திரம்
பதவிக்காலத...</summary>
            <content type="html"><![CDATA[<p>"புதிய அரசமைப்பொன்றின் ஊடாகவே நீதியரசர்களின் பதவிக்காலத்தைத் திருத்தம்
செய்ய முடியும் அவ்வாறன்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மாத்திரம்
பதவிக்காலத்தை நீட்டிப்பது முறையற்ற செயலாகும் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா
தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் நேற்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.</p><p></p><h2>எதிர்க்கட்சி நிபந்தனை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"நீதித்துறையை அரசியல் மயமாக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. நீதிமன்றக்
கட்டமைப்பில் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியே
பொறுப்புக் கூற வேண்டும். கீழ் நீதிமன்றங்களில் வெற்றிடங்கள் நிலவுவதால், உயர்
மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டிய
அவசியமில்லை என ஜனாதிபதி கூறுவது முற்றிலும் தவறானது. </p><p>நீதியரசர்களின்
நியமனங்களைத் தாமதப்படுத்துவதால், தகுதியுள்ள பல நீதிபதிகளின் பதவி உயர்வுகள்
தடுக்கப்படுகின்றன.

உயர் நீதிமன்றத்துக்கு நியமனம் பெறும் தகுதியுள்ளவர்கள், மேன்முறையீட்டு
நீதிமன்றத்திலேயே ஓய்வுபெறும் துரதிர்ஷ்டவசமான நிலை கடந்த காலங்களிலும்
காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad019c64-d391-4315-a3a9-b66d52f91635/26-6a5cad4252fc1.webp' /></p><p> தற்போதைய அரசு அரசமைப்புத் திருத்தம் ஒன்றின் மூலம் பிரதம
நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்க முயற்சிக்கின்றது.
அதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம். </p><p>புதிய அரசமைப்பு
உருவாக்கத்தின் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை அரசு திருத்தம் செய்வதில்
எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. </p><p>ஆனால், குறிப்பிட்ட சிலரை மட்டும் தெரிவு
செய்து, அவர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது சட்டத்துக்குப் புறம்பான மற்றும்
முறையற்ற செயலாகவே அமையும்&nbsp;என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T10:56:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் காணி சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெற வேண்டும்! தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-urges-withdrawal-of-land-gazette-1784445866"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-urges-withdrawal-of-land-gazette-1784445866</id>
            <summary type="text">வலி. வடக்கில் மக்களுடைய காணிகளை உள்ளடக்கி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட
சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெற வேண்டும் என&amp;nbsp; தமிழரசுக் கட்சியின் பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கில் மக்களுடைய காணிகளை உள்ளடக்கி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட
சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெற வேண்டும் என&nbsp; தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>
நேற்று(18.07.2026) தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின்&nbsp; இல்லத்தில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனான சந்திப்பின் பின்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வலி. வடக்கு காணிகள்&nbsp;</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> வலி. வடக்கில் இராணுவ வைத்தியசாலை மீளக் கட்டப்பட்டு
வருகிறது. அது தொடர்பில் அவதானத்தைச் செலுத்தினோம்.
</p><p>
ஏற்கனவே வலி. வடக்கு காணிகள் தொடர்பான வழக்கில் இராணுவ வைத்தியசாலை
அமைக்கப்பட்டுள்ள காணியும் உள்ளடங்குகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7801db5-967c-4045-ab95-b0e26cba034e/26-6a5c81bb3c386.webp' /></p><p>வைத்தியசாலையை கட்டுவதற்கு உள்ளூராட்சி மன்றத்தின் கட்டட அனுமதி பெறப்பட
வேண்டும். அவ்வாறு பெறப்படாத கட்டிடங்களை அகற்றுவதற்கு பிரதேச சபைக்கு அதிகாரம்
இருக்கிறது.
</p><p>
இவ்வாறான ஒரு நிலையில் அரசாங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வலி. வடக்கு
காணி சுவீகரிப்பு வர்த்தமானியை திரும்ப பெற வேண்டுமென நாம் கோரிக்கை
முன்வைக்கின்றோம்.</p><p></p><h2>மாகாண சபைத்&nbsp; தேர்தல்</h2><p>
</p><p>
மேலும்,&nbsp; கொழும்பில் ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில்
கலந்துரையாடினோம்.</p><p>அந்தக் கலந்துரையாடலில் மாகாண சபை தேர்தலை வலியுறுத்துவது, புதிய அரசியல் அமைப்பு மற்றும் காணி உரிமம் தொடர்பான விடயங்களுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644711a1-4599-4cce-b592-ffde6e04b79a/26-6a5c81ba8cbd7.webp' /></p><p>
இலங்கை சனத் தொகையில் ஏறத்தாழ 25 சதவீதமாக காணப்படுகின்றவர்கள் நாம். ஒன்றாக இணைந்து
ஒரு செயற்பாட்டை வலியுறுத்தும் போது அது பலமானதாக இருக்கும்.
</p><p>அத்துடன் பல போராட்டங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட மாகாண பாடசாலைகள் மற்றும்
வைத்தியசாலைகளை நாங்களே மத்திக்கு கொடுப்பதற்கு முனைய கூடாது.&nbsp; அதற்காக
எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T10:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண ஆசிரியர்களுக்கு மாவட்ட ரீதியிலான நியமனங்கள் வழங்கப்படும்: ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-district-posts-for-northern-teachers-1784449444"></link>
            <id>https://tamilwin.com/article/governor-district-posts-for-northern-teachers-1784449444</id>
            <summary type="text">இந்தமுறை மத்திய அரசாங்கத்தின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டாலும்,
எதிர்காலத்தில் மாகாண சபையின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தமுறை மத்திய அரசாங்கத்தின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டாலும்,
எதிர்காலத்தில் மாகாண சபையின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது,
மாவட்ட ரீதியிலான நியமனங்களை வழங்குவதற்கே எதிர்பார்ப்பதாக வட மாகாண
ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று(18.07.2026) யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற சர்வதேச கல்வி மாநாடு ஒன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சமூக மேம்பாட்டுக்கான செயற்றிட்டம்</h2><p> யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட கல்வித் துறை மற்றும் பட்டதாரிப்
படிப்புகள் பீடம் ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது சர்வதேச கல்வி மாநாட்டின்
ஓர் முக்கிய அங்கமாக, 'வட மாகாணத்தில் க.பொ.த. சாதாரண தர அடைவு
மட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான பல்துறைசார் ஈடுபாட்டாளர்களின் உரையாடல்'
எனும் தொனிப்பொருளிலான மாநாடு நேற்று(18) சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம்
இராமநாதன் வீதியில் அமைந்துள்ள கம்சியா மஹாலில் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfae210a-3515-4b2d-8d20-f7fb2e1fadad/26-6a5c92b48f8fb.webp' /></p><p>இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படும் செயற்றிட்டங்களை வட மாகாணசபை
ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.</p><p> யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும்
பொறியியல் பீடங்களுடனும் கலைபீடத்துடனும்
சந்திப்புகளை நடத்தி, அவர்கள் ஊடாக எமது சமூக மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களை
எவ்வாறு முன்னெடுக்கலாம் என ஆராய்ந்துள்ளோம்.</p><p></p><h2>ஆசிரியர் வளப்பங்கீடு</h2><p> </p><p>எமது கல்விப் புலத்துக்கு உதவும்
வகையில் விஞ்ஞான பீடத்தினரும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்கள்.
இதேபோன்று வவுனியா பல்கலைக்கழகத்துடனும் நாம் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.</p><p>
</p><p>
இந்தக் கலந்துரையாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்று, எமது மாகாணத்தின்
கல்வி மேம்பாட்டுக்காகப் பல விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca25755c-1496-4086-a845-1594e67c3e5e/26-6a5c92b56dd59.webp' /></p><p>குறிப்பாக,
ஆசிரியர்கள் தொடர்பில் பல சவால்கள் காணப்படுகின்றன. மாகாணத்தினுள் ஆசிரியர்
வளப்பங்கீடு சீராக அமையவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. </p><p>அதனைச்
சீர்செய்ய மிகவும் அழுத்தமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும்,
நடைமுறையில் அதன் வெளிப்பாடு மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றது.</p><p>
தலைமைத்துவத்தின் தேவைப்பாடு குறித்து இங்கு பலராலும் வலியுறுத்தப்பட்டது.
அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்&nbsp;என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T10:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்திலுள்ள 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/steps-to-completely-renovate-10-ponds-in-mannar-1784444306"></link>
            <id>https://tamilwin.com/article/steps-to-completely-renovate-10-ponds-in-mannar-1784444306</id>
            <summary type="text">அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( &#039;வாரி
மஹிம&#039; ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாகவும் விரைவாகவும் புனரமைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( 'வாரி
மஹிம' ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாகவும் விரைவாகவும் புனரமைப்பு
செய்யப்பட இருக்கின்றன.</p><p> அந்த வகையில் நேற்றைய தினம்(18.07.2026) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான குழுவினர் குளங்களை நேரடியாகச் சென்று பார்வையிடப்பட்டுள்ளனர்.</p><h2>குளங்கள் புனரமைப்பு வேலைத்திட்டம்</h2><p>இதன்போது பொறியியலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின்
பொறியியலாளர்கள், குளங்களைச் சேர்ந்த கமக்காரர் அமைப்புகள், பிரஜாசக்தி
தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e5f286-1d3d-4c60-98d3-f4deef8d361a/26-6a5c777d9983c.webp' /></p><p>முதலில் இவர்கள் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இருக்கும்
அலிகண்டல் குளத்தை பார்வையிட்டுள்ளனர்.

இந்தக் குளத்தை முழுமையாக புனரமைப்பு செய்வதன் ஊடாக, விவசாயிகள் தங்களுடைய
விவசாய நிலங்களில் தொடர்ச்சியாகப் பயிர்ச் செய்கையை நடத்துவதற்குரிய வாய்ப்புக் கிட்டும். </p><p>இந்தக்குளம் ஏற்கனவே 'டித்வா' புயலின்
காரணமாக முழுமையாக பாதிப்படைந்திருக்கின்றது. எனவே இது முழுமையாக புனரமைப்பு
செய்யப்பட இருக்கிறது.</p><h2>நெல் உற்பத்தி அதிகரிகரிப்பு</h2><p>
</p><p>எதிர்வரும் திங்கட்கிழமை மேலும் ஆறு குளங்களை பார்வையிட்டு, விரைவாக அந்த
வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2c73d9-1956-401e-b284-6b112738cff2/26-6a5c777eb0c4f.webp' /></p><p>இந்த வருடத்தின்
பெரும் போகத்திற்கு முற்பகுதியில் இந்தக் குளங்கள் முழுமையாக புனரமைப்பு
செய்யப்பட்டு, விவசாயிகளின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
</p><p>
அரசாங்கத்தினுடைய விசேடமான செயல்திட்டமாக இந்த விவசாய குளங்கள் புனரமைத்து
விவசாயிகளுக்குக் கொடுப்பதன் ஊடாக, நெல் உற்பத்தியை அதிகரித்து இலங்கையில்
காணப்படுகின்ற நெல்லினுடைய தட்டுப்பாடு மற்றும் நெல் உற்பத்தி சார்
நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்காக இந்தத் திட்டங்கள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T10:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விவகாரத்தில் அநுர அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : முன்னாள் வட மாகாண உறுப்பினர் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-npc-member-urges-govt-on-chemmani-issue-1784439978"></link>
            <id>https://tamilwin.com/article/ex-npc-member-urges-govt-on-chemmani-issue-1784439978</id>
            <summary type="text"> எதிர்வரும் 22ஆம்&amp;nbsp; திகதி இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு செம்மணி மனிதப் புதைகுழியை அவதானிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் செம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p> எதிர்வரும் 22ஆம்&nbsp; திகதி இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு செம்மணி மனிதப் புதைகுழியை அவதானிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் செம்மணி விடயத்தில் சர்வதேச விசாரணைக்கு அநுர அரசு ஒத்துழைப்பதற்கு ஐரோப்பிய
ஒன்றியம் வலியுறுத்த வேண்டும் என வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா
குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>அவர் நேற்று(18.07.2026) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைகுழி&nbsp;</h2><p>
அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p>

தமிழர் தாயகத்தில் மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக செம்மணிப்
புதைகுழி மாறியுள்ளது. உள்நாட்டில் மனிதப் புதைகுழி தொடர்பாக கடந்த காலத்தில்
மேற்கொள்ளப்பட்ட சகல பொறிமுறைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க
தவறியதால் உள்நாட்டுப் பொறிமுறையில் ஏமாற்றம் அடைந்ததுடன் நம்பிக்கையையும்
இழந்து விட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53e3c2d1-12e9-463c-98a1-bac96d53ceed/26-6a5c68e7dd2ea.webp' /></p><p>

ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் 2019 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக சகல சிவில்
அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி நிற்கும் ஒரே நிலைப்பாடான
சர்வதேச விசாரணைப் பொறிமுறையை மேற்கொள்ள இலங்கையின் தற்போதைய அநுர அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கான அழுத்தங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு
மேற்கொள்ள வேண்டும்.</p><p> கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இப்படியான பல
கோரிக்கைக் கடிதங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியுள்ளனர்.</p><p>தற்போதைய அநுர அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் விவகாரத்தில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடித்து கடந்து செல்லப் பார்க்கின்றனர். ஆனால் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இல்லை. இது தான் நிதர்சனம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T10:33:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தீர்மானம் - மனோ கணேசன் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mano-s-announcement-of-no-confidence-motion-1784455229"></link>
            <id>https://tamilwin.com/article/mano-s-announcement-of-no-confidence-motion-1784455229</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னும்
கையொப்பமிடவில்லை என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னும்
கையொப்பமிடவில்லை என அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,</p><p>

"நீதி அமைச்சருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படவுள்ள நம்பிக்கையில்லாப்
பிரேரணையில் நாங்கள் இதுவரை கையொப்பமிடவில்லை. அந்தப் பிரேரணை தொடர்பாக நாம்
இன்னும் எவ்விதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை.</p><p>&nbsp;</p><h2>சுயாதீனமாக முடிவெடுக்கும் உரிமை</h2><p>
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் நாம் அங்கம் வகித்தாலும், சுயாதீனமாக
முடிவெடுக்கும் உரிமை எமக்கு உண்டு. அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும்
எங்களிடம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c1bd2a-59ce-48d9-80e9-036d816e6e3b/26-6a5ca4b17156d.webp' /></p><p>
</p><p>
எது எவ்வாறாக இருப்பினும், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் அரசு
பொறுப்பேற்று, அதற்கு முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும்." என்று அவர்
வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T10:19:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை புலனாய்வாளர்களுக்கு முதன் முறையாக கிடைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-photo-of-the-leader-of-the-ltte-1784453820"></link>
            <id>https://tamilwin.com/article/first-photo-of-the-leader-of-the-ltte-1784453820</id>
            <summary type="text">1994ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தையின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது சரியான தோற்றத்துடனான புகைப்படத்தை முதன் முதலில் நாங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>1994ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தையின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது சரியான தோற்றத்துடனான புகைப்படத்தை முதன் முதலில் நாங்கள் பார்த்தோம் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p> 

வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், </p><p>


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.</p><p></p><h2>முதல் புகைப்படம்</h2><p>
</p><p>

ஒரு இராணுவத் தளபதியாக பிரபாகரனை முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், எனது கையால் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. எனது பணி அதுவல்ல.&nbsp; இராணுவத் தளபதியின் பணி ஒருவரது தலையில் துப்பாக்கியால் சுடுவது அல்ல.</p><p> 

எனினும், எமது இளவயதில் இப்படியொரு நிலை இருந்திருந்தால் ஒருவேளை அந்த எண்ணம் எனக்குத் தோன்றியிருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd5b55b7-6b41-4e87-8777-7ac1820b50c3/26-6a5c9ed5a63d5.webp' /></p><p>

அத்துடன், ஆரம்பக் காலத்தில் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகத் தான் வாழ்ந்தார்கள். எனவே அவர்களை நேருக்கு நேர் சந்திக்கும், மோதும் சந்தர்ப்பங்கள் இருந்ததில்லை. </p><p>

1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையின் போதுதான், பிரபாகரனின் உண்மையான புகைப்படம் கூட புலனாய்வாளர்களுக்கு கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2c7c996-2673-45d6-99c2-a43ae55f7d4d/26-6a5c9ed664a0f.webp' /></p><p> </p><p>

அதுவரை பிரபாகரனின் தோற்றம் தொடர்பான தெளிவான ஒரு புகைப்படமும் எங்களிடம் இருந்ததில்லை. </p><p>1994ஆம் கிடைத்த புகைப்படத்திற்கு முதல், பிரபாகரனின் சாதாரண தரப் பரீட்சைக்கான அடையாள அட்டையில் இருந்த ஒரு புகைப்படம் தான் புலனாய்வாளர்களிடம் இருந்தது. </p><p>அதன்பிறகு, பிரபாகரன் இந்தியாவில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு தெளிவான புகைப்படத்தைத் தான் நாங்கள் முதன் முதலில் பார்த்தோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/t-xdegcJuRc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-19T09:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு! நம்பிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/confidence-motion-against-the-minister-of-justice-1784454597"></link>
            <id>https://tamilwin.com/article/confidence-motion-against-the-minister-of-justice-1784454597</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை,
அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று
ஐக்கிய ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை,
அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.
பெரேரா தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் அனைத்து
உறுப்பினர்களும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை
வெளியிட்டுள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>நீதி அமைச்சருக்குரிய பொறுப்புகள்</h2><p>
</p><p>
"நீதி அமைச்சர் தனக்குரிய பொறுப்புகளை தட்டிக்கழித்துள்ளார். நீர்கொழும்பு
சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள்
மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது கடமையை நிறைவேற்ற அவர்
தவறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126a7021-b070-406f-ba71-3e90472a5510/26-6a5c9dc6e1d14.webp' /></p><p> </p><p>இதன் காரணமாகவே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்
பிரேரணையைச் சமர்ப்பிக்கத் தீர்மானித்தோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்தப் பிரேரணையில்
கையெழுத்திட்டனர்.</p><p> நீதி அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை நாட்டு மக்கள்
ஏற்றுக்கொண்டுள்ளதால், இந்தப் பிரேரணையைச் சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும்
இதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T09:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசுக்குத் தைரியமில்லை! எதிர்க்கட்சி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-not-have-courage-provincial-elections-1784452753"></link>
            <id>https://tamilwin.com/article/government-not-have-courage-provincial-elections-1784452753</id>
            <summary type="text">&quot;மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு இதுவரை எந்தவிதமான வினைத்திறனான
நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்றச்
செயற...</summary>
            <content type="html"><![CDATA[<p>"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு இதுவரை எந்தவிதமான வினைத்திறனான
நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்றச்
செயற்குழுவின் நடவடிக்கைகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
எம்.பி. தெரிவித்தார்.</p><p>மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>எதிர்க்கட்சி குற்றச்சாட்டு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>அவர்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>
</p><p>
"மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவோம் என்று அரசு மேடைப் பேச்சுகளில்
மாத்திரமே கூறி வருகின்றது, செயலில் ஒன்றும் நடக்கவில்லை. செயற்குழுவில்
முன்வைக்கப்படும் யோசனைகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே அரசின்
செயற்பாடுகள் அமைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ceb7b0-9ebc-4849-9b5a-b07e6c76d489/26-6a5c987d71548.webp' /></p><p> </p><p>தேர்தலை விரைவாக நடத்தும் எவ்வித நோக்கமும்
அரசுக்கு இல்லை.

மக்கள் மத்தியில் தமக்கு ஆதரவு இருப்பதாகக் கூறும் அரசு, தைரியமிருந்தால்
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். </p><p>தேர்தல் ஒன்று இடம்பெற்றால்
மட்டுமே மக்கள் தமது உண்மையான அபிப்ராயத்தை வெளிப்படுத்துவார்கள். அரசின்
மீதான மக்களின் நம்பிக்கை தற்போது பெருமளவு சிதைவடைந்துள்ளதால், அரசு
தேர்தலுக்குச் செல்ல அஞ்சுகின்றது என&nbsp;குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T09:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்த வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தியுங்கள்! கூட்டு தமிழ் பேசும் கட்சிகளிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-request-tamil-speaking-party-form-coalition-1784451579"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-request-tamil-speaking-party-form-coalition-1784451579</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும், தமிழ் மக்கள் சார்ந்த இதர முக்கிய
விடயங்கள் தொடர்பிலும் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும், தமிழ் மக்கள் சார்ந்த இதர முக்கிய
விடயங்கள் தொடர்பிலும் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின்
இராஜதந்திரிகளைச் சந்தித்து வலியுறுத்துமாறு, ஜனநாயகத் தமிழ்த் தேசியக்
கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனான நேற்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அதிகாரப் பகிர்வு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"அதிகாரப் பகிர்வு, புராதன சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய அரசியல்
நிலவரங்கள் குறித்து வடக்கு - கிழக்கு தமிழ்க் கட்சிகள், மலையகத் தமிழ்க்
கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அடங்கிய ஆறு கட்சிகளின் கூட்டுச்
சந்திப்பில் விரிவாகப் பேசினோம்.

தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாகாண சபையின் அதிகாரங்களை அரசு எந்தக் காரணத்தைக்
கொண்டும் பறிமுதல் செய்யக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c802d3f-400c-4c2f-9bc7-a57268a308e9/26-6a5c93ce3079e.webp' /></p><p> </p><p>அண்மையில் மன்னார் மற்றும் தெல்லிப்பழை
ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள்
முன்னெடுக்கப்பட்டமை சட்டவிரோதமானதும், அரசமைப்புக்கு முரணானதும் ஆகும்.
</p><p>பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை
மீண்டும் மத்திய அரசுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை நாம் எதிர்க்கின்றோம்.</p><p></p><h2>&nbsp;மாகாண சபைத் தேர்தல்</h2><p>
</p><p>இவ்வாறான விடயங்கள் குறித்து மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த
வேண்டியது அவசியம்.
</p><p>
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், புதிய அரசமைப்பை உருவாக்குதல் மற்றும்
மக்களின் காணிப் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆறு கட்சிகளின் கூட்டு மன்றத்தில்
முன்னிலைப்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d617d568-f9a4-4f93-8f79-731b1bfb4919/26-6a5c93cf115d9.webp' /></p><p> </p><p>குறிப்பாக, இந்த விவகாரங்கள் தொடர்பாக
இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்துக்
கலந்துரையாடுமாறு, குறித்த மன்றத்தில் சுமந்திரன் உள்ளிட்ட தலைவர்களிடம்
வலியுறுத்தியுள்ளோம். </p><p>இவ்வாறான கூட்டுச் செயற்பாடுகளே சிறுபான்மை தேசிய
இனங்களின் பிரச்சினைகளுக்கு வலுச்சேர்க்கும் என&nbsp;குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T09:07:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண அதிகாரங்களை நாங்களாகவே மத்திய அரசுக்குத் தாரைவார்க்கக் கூடாது! சுமந்திரன் அறிவுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-powers-to-the-central-government-1784448157"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-powers-to-the-central-government-1784448157</id>
            <summary type="text">&quot;காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று நாம் தொடர்ந்து
குறைகூறி வருகின்றோம், இந்நிலையில், தற்போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள
அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>"காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று நாம் தொடர்ந்து
குறைகூறி வருகின்றோம், இந்நிலையில், தற்போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்களையும் மத்திய அரசு மீளப் பெறுவதற்கு ஏதுவாக நாம் நடந்து
கொள்ளக்கூடாது" என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.</p><p>

யாழ்ப்பாணத்தில் நேற்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின்
பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.</p><p></p><h2>அதிகாரப் பகிர்வு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அதிஉச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய முறைமை மாற்றமே எமது அடிப்படைத்
தீர்வாகும். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் தற்போது மாகாணங்களுக்குப்
பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc69057f-6399-431a-a857-3788f8ae938c/26-6a5c8cbb7130e.webp' /></p><p> </p><p>தேசிய பாடசாலைகள் மற்றும் தேசிய வைத்தியசாலைகள்
என்ற போர்வையில், மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை மத்திய அரசு மீளப்
பெறுவதை நாம் முழுமையாக எதிர்க்க வேண்டும். </p><p>இவ்வாறான நிறுவனங்கள் தேசிய
மயமாக்கப்படுவதால் எமக்கு நன்மைகள் கிடைக்கும் என்ற தவறான புரிதல் சிலரிடம்
உள்ளது. அவ்வாறான எண்ணப்பாடுகளைக் கைவிட்டு, போராட்டங்கள் ஊடாகப்
பெற்றுக்கொண்ட அதிகாரங்களை நாங்களாகவே மத்திய அரசுக்குத் தாரைவார்க்கக் கூடாது.</p><p>

நாட்டின் சனத்தொகையில் 25 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகள்
ஒன்றிணைந்து, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், அதியுச்ச அதிகாரப்
பகிர்வுடன் கூடிய புதிய அரசமைப்பை உருவாக்குதல் மற்றும் காணிப்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.</p><p></p><h2>&nbsp;வடக்கு - கிழக்கு</h2><p> இது
தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்துக்
கலந்துரையாடவுள்ளோம்.

தொல்லியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகத்துடன் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நானும் கலந்துரையாடியுள்ளோம். </p><p>தொல்லியல் திணைக்களத்தைப்
பயன்படுத்தி, வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்கும்
முயற்சியைக் கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac2c1d7d-2519-4ba4-8422-995ec12547aa/26-6a5c8cbc48300.webp' /></p><p>
</p><p>
மந்திரிமனை மீள் உருவாக்கம் மற்றும் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை
விவகாரங்களில் எமது மக்களின் வழிபாட்டு உரிமைகளை உறுதிப்படுத்துவது
தொடர்பாகவும் அவருடன் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T08:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடங்கியது முகநூல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-is-down-1784449697"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-is-down-1784449697</id>
            <summary type="text">உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் முடங்கியுள்ளது. 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் முடங்கியுள்ளது. </p><p>

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

கணினிகளின் ஊடாக முகநூல் சமூக வலைத்தளத்தை பார்வையிட முடியவில்லை. எனினும், ஒரு சில தொலைபேசிகளில் முகநூல் சமூக வலைத்தளம் இயங்குகிறது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27d951bd-abc0-46cb-ab98-2ac811bad692/26-6a5c8b4d6c77c.webp' /></p><p></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T08:31:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-shooting-in-kalubowila-1784427521"></link>
            <id>https://tamilwin.com/article/police-shooting-in-kalubowila-1784427521</id>
            <summary type="text">புதிய இணைப்புபிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை (19) கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரை தாக்கிய நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை (19) கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரை தாக்கிய நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதன்போது கூர்மையான ஆயுத தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபரும் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p></p><h2>கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல்&nbsp;</h2><p>

கூர்மையான ஆயுதங்களை ஏந்தியபடி இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு சந்தேகநபர்கள், பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டை தாக்கி அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5a6475-18f6-4b17-a410-ca4c9e391efc/26-6a5c84d3bb82e.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதன்பின்னர், சந்தேகநபர்கள் பிலியந்தலாவை நோக்கி தப்பிச்செல்வதாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HYHENil4KRM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
அதன்படி, பிலியந்தலாவ பொக்குந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​தப்பிச்சென்ற இரண்டு சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிளை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிள் சாரதி தனது கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.</p><p>இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸ் அதிகாரியை மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், சந்தேகநபரின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்ததில் அவர் கீழே விழுந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>
</p><p>இதனையடுத்து காயமடைந்த 24 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மற்றைய நபர் தப்பிச்சென்றுள்ளார்.</p><h2>போதைப்பொருள் தகராறு</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கொஸ் மல்லி என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் உத்வியாளரே காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

</p><p>மேலும், தாக்குதலுக்குள்ளான வீட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p><p>போதைப்பொருள் தகராறு காரணமாக வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p>குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை மற்றும் பொரலெஸ்கமுவ பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று காலை (19) நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது, ​​சந்தேகநபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரரை தாக்க முயன்றுள்ளார்.
</p><p>
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>

இவ்வாறு காயமடைந்த சந்தேக நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

மோட்டார் வாகனத்தில் வந்த மற்றொரு நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>இன்று (19) காலை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸார்&nbsp;&nbsp;விசாரணை</h2><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7393c176-d618-4699-b260-cfd5e2c2bb5d/26-6a5c3d676b45a.webp' /></p><p>
</p><p>சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-19T07:36:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல்போன குடும்பஸ்தர் 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-family-man-recovered-dead-after-three-days-1784445700"></link>
            <id>https://tamilwin.com/article/missing-family-man-recovered-dead-after-three-days-1784445700</id>
            <summary type="text">மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற
நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர்
சடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற
நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மேற்படி நபர் கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில்
காணாமல்போயிருந்தார்.
</p><p>
இந்நிலையில், தேடுதல் நடவடிக்கைகளின்போது, அவரது வீட்டுக்கு அருகில் இருந்த
பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து அவர் நேற்று(18)o சனிக்கிழமை சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613d1e02-c7d3-43f9-a00e-572ea8491937/26-6a5c7cb4b098c.webp' /></p><p>

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் படல்கும்புரை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T07:28:57+00:00</updated>
        </entry>
    </feed>
