<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-14T00:17:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மலசலகூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chicken-meat-sold-bathroom-toilet-vavuniya-1783986217"></link>
            <id>https://tamilwin.com/article/chicken-meat-sold-bathroom-toilet-vavuniya-1783986217</id>
            <summary type="text">வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப்
பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப்
பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட
நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
</p><p>
வவுனியா, வைரவபுளியங்குளம், தொடருந்து வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும்
சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>அக்கடைக்குரிய கோழிகள்
மலசலகூடம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் வைக்கப்பட்டு, அப்பகுதியில் வைத்து உரிக்கப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் கடையில் இறைச்சியாக
நீண்டகாலமாக விற்பனை செய்யப்படடு வந்துள்ளது.</p><p></p><h2>பொதுமக்களின் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த காலங்களில் எந்தவித
நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவ்விற்பனை நிலையம் இயங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ace3063-89b3-4c13-8098-12e30a7bbe2c/26-6a557b41053e5.webp' /></p><p>இந்நிலையில், விசேட டெங்கு ஒழிப்பு
நடவடிக்கையின் போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுத்த போது சுகாதார சீர்கேட்டுடன்
குறித்த கோழி இறைச்சிக் கடை இயங்கி வைத்தமை தெரிய வந்துள்ளது.
</p><p>குறித்த இறைச்சிக்கடை தொடர்பில் சுகாதார
பரிசோதகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடடிக்கை
எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு - நீதிமன்று விடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-professor-raghuram-court-respondents-1783984545"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-professor-raghuram-court-respondents-1783984545</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர்
சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என
தொடரப்பட்ட வழக்கில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர்
சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என
தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும்
என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம்
ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக
மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய
பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தனர்.&nbsp;</p><p>அதை அடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள் </h2><p>
</p><p>இதற்கிடையில், முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த
முன்னாள் மாணவியுடன் உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள்
டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன. அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள்
பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c9d7f57-6029-47e3-bdd4-a0494d3f7946/26-6a55747ddc4dc.webp' /></p><p>
இந்நிலையிலையே, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு
சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி
சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி, தன் மீது குற்றச்சாட்டை
முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக
துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப், டிக்டொக்,
பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை
பிரசுரித்தமைக்கு எதிராக என 14 பேரை எதிர் மனு தரர்களாக குறிப்பிட்டு வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
போது, முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக
வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக, பதிவிட்ட
அவதூறான பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு
சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.
</p><p>
அத்துடன் எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப கட்டளையிட்ட மன்று, எதிர்
மனுதரர்களின் காரணங்காட்டுதலுக்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ஆம்
திகதிக்கு மன்று
திகதியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஓரணியில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-parties-united-for-tamil-people-1783983315"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-parties-united-for-tamil-people-1783983315</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு
கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில்
அணிதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு
கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில்
அணிதிரண்டுள்ளன. </p><p>இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆறு கட்சிகளினதும்
தலைவர்கள் நேற்று மதியம் கொழும்பு - பம்பலப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரே மேசையிலிருந்து வெளியிட்டனர்.</p><p>
</p><p>
இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., அமீர் அலி,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அதன் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி., இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின்
தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்
தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மற்றும் அதன் உபதலைவர்
சுரேந்திரன் குருசாமி ஆகியோர் ஒரே மேடையில் இருந்து இந்த அறிவிப்பை நேற்று விடுத்தனர்.</p><p></p><h2>பொதுவான பிரச்சினைகள்&nbsp;</h2><p>

இதனையொட்டி ஆறு கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்
பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட பொது தளத்தை உருவாக்க இணக்கம் என்ற
தலைப்பில் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை
வருமாறு, "இன்று சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது
சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும்,
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான
தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fab9f02-8dad-419c-b04e-f17a9c27696c/26-6a556dc4eef4b.webp' /></p><p>
</p><p>
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை
தனித்தனியாக பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட
பிரதிநிதிகள், பொதுவான நலன்கள் காணப்படும் விடயங்களை அடையாளம் கண்டு,
சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு
பொறிமுறையாக இந்த தளம் அமையும் எனத் தெரிவித்தனர். இதன்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.&nbsp;</p><p>அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதாக
வழங்கிய உறுதிமொழியை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
அந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசிடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்கத்
தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசமைப்பு நீதியும், சமத்துவமும், அர்த்தமுள்ள
அதிகாரப் பகிர்வும் உறுதி செய்யப்படும் வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை
உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><h2>மாகாண சபைத் தேர்தல்கள்&nbsp;</h2><p>மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு வருட காலத்துக்குள் நடத்தப்படும் என அரசு
தெரிவித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக இடம்பெறும் தாமதங்கள் குறித்து
பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c4861b-3a6f-4e86-a038-f19371fc2db4/26-6a556dc5a57a1.webp' /></p><p>
</p><p>
மேலும், ஜனநாயகப் பங்கேற்பையும் பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் உறுதி
செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு ஒருமித்த
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p>நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கும் தீவிரமான காணி தொடர்பான
பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகப் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.</p><p>

இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் அர்த்தமுள்ள
கலந்துரையாடல்களை முன்னெடுத்து, நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க
வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
இந்த பொதுத் தளத்தின் ஊடாக தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான
உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் மீண்டும் தெரிவித்தமையுடன், இந்த விடயங்களில்
பொதுவான அணுகுமுறையொன்றை உருவாக்குவது நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும்
அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என நம்பிக்கை
வெளியிட்டனர்" என்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீராடச் சென்ற பாடசாலை மாணவன் மாயம்! தொடரும் தேடுதல் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-10-student-missing-after-drowning-in-river-1783975722"></link>
            <id>https://tamilwin.com/article/grade-10-student-missing-after-drowning-in-river-1783975722</id>
            <summary type="text">நுவரெலியா- லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்ட ஆற்றுப் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர்
ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா- லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்ட ஆற்றுப் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர்
ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.</p><p>குறித்த சம்பவம் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>மாயமான மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10-ஆம்
ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p>
தற்போது பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணைப் பரீட்சைக்குத்
தோற்றியிருந்த குறித்த மாணவன், இன்று பரீட்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது
நண்பர்கள் சிலருடன் இணைந்து வோல்ட்றீம் தோட்டத்திலுள்ள ஆற்றுப் பகுதிக்குச்
சென்று விளையாடியதாகவும், பின்னர் நீராடச் சென்றபோது எதிர்பாராத விதமாக
ஆற்றில் மூழ்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மாணவருடன் மொத்தம் பத்து மாணவர்கள் ஆற்றுப்
பகுதிக்கு சென்றிருந்ததாகவும், அவர்களில் குறித்த மாணவன் நீரில் அடித்துச்
செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e636b440-ace8-432d-9fd6-854ea504f274/26-6a554f2ca1205.webp' /></p><p>
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் லிந்துலை பொலிஸார், பிரதேசவாசிகள்
மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல்
நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.</p><p> தொடர்ந்து சுழியோடிகளின் உதவியுடன் ஆற்றில் தீவிர
தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! காலம் கடந்த உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-sri-lanka-thero-1783971567"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-sri-lanka-thero-1783971567</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.&amp;nbsp;&quot;விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>"விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா? </p><p>இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியுள்ளார்.&nbsp;</p><p>இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில்,&nbsp;விடுதலை புலிகளின் தலைவரை குறித்த இந்த கருத்து தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/h7yCxCoAiUU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T22:38:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ள மிக சக்திவாய்ந்த பாரிய விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tu-214pu-doomsday-russia-massive-plane-iran-1783976305"></link>
            <id>https://tamilwin.com/article/tu-214pu-doomsday-russia-massive-plane-iran-1783976305</id>
            <summary type="text">ரஷ்யா, தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் டூம்ஸ்டே விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் டூம்ஸ்டே விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்த விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>Tu-214PU, கடுமையான அச்சுறுத்தல்களிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, பாதுகாப்பான தொடர்பு மற்றும் Command-Control அமைப்புகளுடன் கூடிய வானில் பறக்கும் கட்டளை மையம் ஆகும்.</p><p></p><h2>அதி பாதுகாப்பான அமைப்புக்கள்..&nbsp;</h2><p>அமெரிக்கா சமீபத்தில் ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் அமைப்புகள், விமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05ad9ea6-0ace-4849-9f99-05cd623ebc87/26-6a555478bdd96.webp' /></p><p>ரஷ்யாவின் டூம்ஸ்டே விமானம் தெஹ்ரானில் தரையிறங்கியது, இது ரஷ்யா மற்றும் ஈரான் இடையிலான உயர் மட்ட இராணுவ மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.</p><p>Tu-214PU, Tu-214 பயணிகள் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும். 1989இல் முதன்முதலாக பறந்த இந்த விமானம், பல்வேறு சிறப்பு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டுள்ளது. </p><p>அதில் மிகவும் நவீனமயானது இந்த Tu-214PU விமானம்.

இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதைக் காட்டுகிறது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-13T21:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றிரவும் நாளையும் ஈரானை கடுமையாக தாக்குவோம்.. சற்றுமுன்னர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-us-going-strike-iran-tonight-tomorrow-1783974775"></link>
            <id>https://tamilwin.com/article/trump-us-going-strike-iran-tonight-tomorrow-1783974775</id>
            <summary type="text">இன்று இரவும் நாளையும் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.போர்நிறுத்த ஒப்பந்தம்இது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று இரவும் நாளையும் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2>போர்நிறுத்த ஒப்பந்தம்</h2><p>இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திங்கட்கிழமை இரவும் செவ்வாய்க்கிழமையும் ஈரான் மீது அமெரிக்கா கடுமையாகத் தாக்குதல் நடத்துவோம்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38325d79-2073-45c7-aa96-a7654fc7d92c/26-6a554d5d14299.webp' /></p><p>மேலும், போர்நிறுத்த ஒப்பந்தம், ​​ஈரானுக்கான ஒரு சோதனை என்றும், அதை அவர்கள் மதிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T20:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் இரண்டு ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாகும்! அரசுக்கு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-npp-government-opposition-party-political-1783970508"></link>
            <id>https://tamilwin.com/article/anura-npp-government-opposition-party-political-1783970508</id>
            <summary type="text">ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அரசியல் நடவடிக்கை என்னவென்றால் பல்வேறு எதிர்க்ட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஒன்றிணைத்து தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அரசியல் நடவடிக்கை என்னவென்றால் பல்வேறு எதிர்க்ட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஒன்றிணைத்து தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பொதுவான அரசியல் முன்னணியை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த ஒன்றிணைவு அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடன் நடைபெறுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.</p><p>நீதித்துறையின் சுயாதீனத்திற்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டையும் எதிர்கட்சியினர் முன்வைக்கின்றனர்.ஊழல் நிதிமோசடி உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிற விசாரணை அதிகாரிகளின் எதிர்காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகலாம் எனக் கூறப்படுகின்றது.</p><p>இதேபோல் இன்னும்&nbsp; இரண்டு வருடத்தில்&nbsp;வருகின்ற எங்களுடைய ஆட்சியிலே இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு உங்களை நாங்கள் சிறையில் அடைப்போம்.அந்தக்காலம் விரைவிலே நடக்கும் எனவும் அரசாங்கத்தைப் பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் சவால் விடுத்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/P_igHhCuEKs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T20:38:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் அநுரவிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மைகள்! ஆபத்தாகும் நிமிடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-issue-anura-kumara-govet-security-1783964480"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-issue-anura-kumara-govet-security-1783964480</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோசமான வன்முறை சம்பவங்கள்&amp;nbsp;நடந்து இன்றுடன் ஒருவாரம் கடக்கின்றது.&amp;nbsp;இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இன்னமும் பல்வேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோசமான வன்முறை சம்பவங்கள்&nbsp;நடந்து இன்றுடன் ஒருவாரம் கடக்கின்றது.&nbsp;</p><p>இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இன்னமும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.&nbsp;</p><p>இலங்கை வரலாற்றிலேயே இடம்பெற்ற மிகக் கொடூரமான வன்முறை தாக்குதல்களில் ஒன்றாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>இதளை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது குறித்து தொடர்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதேநேரம், இவ்வாறான சம்பவங்களை எதிர்நோக்கும் அளவு நாட்டின் படை பலம் உள்ளிட்டவை திடமாக உள்ளனவா எனவும் பல அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றை ஊடறுப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nVxJ9EwKYpI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T20:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் 9MM வெற்று தோட்டாக்கள்! CID யின் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9mm-spent-cartridges-found-at-negombo-prison-cid-1783961438"></link>
            <id>https://tamilwin.com/article/9mm-spent-cartridges-found-at-negombo-prison-cid-1783961438</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டு இருப்பதுடன் விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டு இருப்பதுடன் விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளும் கொலை செய்யப்பட்டு இருந்தனர்.</p><p>இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை அடையாளம் காணும் விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இந்தநிலையில், 14 கைதிகள் துப்பாக்கி காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கின்றார்கள்.அதில் இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>துப்பாக்கிக் காயங்களுடன் உயிரிழந்த கைதிகளின் உடல்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் நீதிமன்றின் உத்தரவில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் அடையாளம் காணும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.</p><p>மேலும், துப்பாக்கிக் குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.துப்பாக்கிக் குண்டுகளை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களோ அல்லது சுட்ட நபரோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vz-p2oPKElM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T20:18:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென பதவி விலகிய கொழும்பு மாநகர சபை உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-municipal-council-member-resigns-suddenly-1783960854"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-municipal-council-member-resigns-suddenly-1783960854</id>
            <summary type="text">கொழும்பு மாநகர சபையின் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான தீபா எதிரிசிங்க, பதவி விலகியுள்ளார். 

பதவியேற்றபோது, ​​ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாநகர சபையின் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான தீபா எதிரிசிங்க, பதவி விலகியுள்ளார். </p><p>

பதவியேற்றபோது, ​​ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>புதிய நியமனம்..&nbsp;</h2><p> 

அவர் பதவி விலகிய போதிலும், கட்சியின் மத்தியக் குழுவில் தொடர்ந்து ஈடுபட்டு வருவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cc2b27f-5af8-46c9-878e-cf6557342554/26-6a5518d5b6d07.webp' /></p><p> 

இருப்பினும், இலங்கை சுதந்திரக் கட்சி எதிர்காலத்தில் கொழும்பு மாநகர சபைக்கு ஒரு புதிய உறுப்பினரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. </p><p>

தொடர்புடைய பெயர் பின்னர் அரசிதழில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>

இலங்கை சுதந்திரக் கட்சிக்குள் இதுபோன்ற பதவி விலகல்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளதாகவும், இது அக்கட்சிக்குள் ஒரு இயல்பான செயல்முறை என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T19:16:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் - பராமரிப்பு தளம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-strikes-iran-submarine-ship-maintenance-sencom-1783967188"></link>
            <id>https://tamilwin.com/article/us-strikes-iran-submarine-ship-maintenance-sencom-1783967188</id>
            <summary type="text">ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் நள்ளிரவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் நள்ளிரவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.</p><p>

தெற்கு ஈரானில் உள்ள பண்டார் அப்பாஸ் கடற்படைத் தளத்தில் (Bandar Abbas Naval Base) இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>ட்ரோன்&nbsp;தாக்குதல்கள்&nbsp;</h2><p>குறித்த தளத்தின் மீது ஒரே திசையில் சென்று தாக்கும் பல ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள கட்டளையகம், இது தொடர்பான காணொளி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef169131-986d-4e7d-b177-216ff5a76569/26-6a5538e720d63.webp' /></p><p>

"நேற்று இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களானது, வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவில் சீர்குலைத்துள்ளது" என கட்டளையகம் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T19:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் 9 நெல் களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9-more-paddy-warehouses-in-ampara-1783966501"></link>
            <id>https://tamilwin.com/article/9-more-paddy-warehouses-in-ampara-1783966501</id>
            <summary type="text">அம்பாறை
மாவட்டத்தில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்படும் என
மாவட்டச் செயலாளர் அனுபமா மங்கள
விக்ரமாராச்சி தெரிவித்தார்.அம்பாறை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை
மாவட்டத்தில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்படும் என
மாவட்டச் செயலாளர் அனுபமா மங்கள
விக்ரமாராச்சி தெரிவித்தார்.</p><p>அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் நேற்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில் ,குறித்த பகுதியில் இரண்டு பிரதான நெல் களஞ்சியசாலைகள் அமைந்துள்ள போதிலும்,
தற்போது 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு களஞ்சியசாலை மாத்திரமே நெல்
கொள்முதலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><p></p><h2>நெல் களஞ்சியசாலைகள்</h2><p>
வரவிருக்கும் நாட்களில் விவசாயிகளின் அறுவடை நிலவரங்களுக்கு ஏற்ப, அம்பாறை
மாவட்டத்தில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4c39722-6604-4755-99c2-9ebaf336eb3a/26-6a552ee8e699b.webp' /></p><p>இதுவரை 18 தனியார் களஞ்சியசாலைகள் நெல் சேமிப்புத் தேவைகளுக்காக ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர், நெல் சந்தைப்படுத்தல்
சபையின் ஏனைய களஞ்சியசாலைகளில் உள்ள பழைய இருப்புக்களை அகற்றுவதற்காக ஏற்கனவே
ஒப்பந்தப்புள்ளிகள் (Tenders) கோரப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் நீக்கப்படும் என்றும் கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T18:53:38+00:00</updated>
        </entry>
    </feed>
