<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-12T18:29:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரின் முன்னாள் அமீரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-sent-message-condolences-passing-qatar-1783879954"></link>
            <id>https://tamilwin.com/article/president-sent-message-condolences-passing-qatar-1783879954</id>
            <summary type="text">கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இரங்கல் செய்தி&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><h2>இரங்கல் செய்தி&nbsp;&nbsp;</h2><p>

தனது 'X' தளம் மூலம் வெளியிட்ட ஒரு செய்தியில், மறைந்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, கட்டாரிற்கு ஆற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையையும் சேவையையும் மரியாதையுடன் நினைவு கூர்வதாக அவர் கூறினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened by the passing of His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani, Father Emir of Qatar.<br><br>His visionary leadership and service to Qatar will be remembered.<br><br>On behalf of the Government and people of Sri Lanka, I extend heartfelt condolences to HH Sheikh Tamim bin…</p>&mdash; Anura Kumara Dissanayake (@anuradisanayake) <a href="https://x.com/anuradisanayake/status/2076331689014710763?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இலங்கை அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் சார்பாக, ஜனாதிபதி, கட்டாரின் தற்போதைய அமீர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
கட்டாரில் மாற்றத்தை ஏற்படுத்திய ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று (12) காலமானார்.
</p><p>
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கத்தார் நாட்டின் மிக உயர்ந்த அரச நிறுவனமான எமிரி திவான், நாட்டில் நான்கு நாட்கள் தேசிய துக்க காலத்தை அறிவித்துள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T18:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கையில் புதிய மாற்றம்! வெளியான தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ஊடாக முன்னெடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி, நாளை (13) முதல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய சம்பந்தப்பட்ட கைதிகள் காணொளி தொழில்நுட்பம் வழியாகவே விசாரணைகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைக்கைதிகள்</h2><p>
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களால் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
</p><p>
இந்த நிலையில், மாற்றப்பட்ட கைதிகளை ஒவ்வொரு நீதிமன்ற அமர்விற்கும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதில் நடைமுறை மற்றும் போக்குவரத்து தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b50b18-0d64-4485-954a-36d7a46b99f9/26-6a53a10e3b8f7.webp' /></p><p>
</p><p>
இதனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
</p><p>
அந்த குழு சேதங்களின் தன்மை மற்றும் அவற்றுக்கான மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T18:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கியமாகச் செயற்பட தமிழ்பேசும் மக்களின் ஆறு கட்சிகள் இணக்கம் - நாளை கொழும்பில் கூட்டாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-tamil-agree-work-together-colombo-tomorrow-1783877780"></link>
            <id>https://tamilwin.com/article/six-tamil-agree-work-together-colombo-tomorrow-1783877780</id>
            <summary type="text">இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள்
எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது சம்பந்தமான
இணக்கப்பாட்டுக்கு வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள்
எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது சம்பந்தமான
இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. </p><p>அந்த இணக்கப்பாடு குறித்து அவை ஆறும்
சேர்ந்து கூட்டாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாளை பிற்பகல்
1 மணிக்கு கொழும்பு - கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெறுகின்றது.</p><p>

இதில் அந்த ஆறு கட்சிகளினதும் தலைவர்களும் ஒரே மேசையிலிருந்து தங்கள் கூட்டுச்
செயற்பாட்டுக்கான இணக்கப்பாட்டையும் அது தொடர்பான திட்டங்களையும் நாளை
அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>கட்சிகளின் ஐக்கியம்&nbsp;&nbsp;</h2><p>
வடக்கு, கிழக்கு தமிழர்கள் தரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும்
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி, மலையகத் தமிழர்கள் தரப்பில் தமிழ்
முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம்கள்
தரப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஆகியனவே ஒன்றுபட்டுச் செயற்பட இணங்கியிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d9a019-a90e-45c3-b350-5a96790d595a/26-6a53d552a68ee.webp' /></p><p>
</p><p>
பிரதான எதிரணிக் கூட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தமிழ்பேசும் மக்களின்
கட்சிகளின் ஐக்கிய செயற்பாட்டுக்கு இணங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்தக் கூட்டு அமைப்புக்கு பெயர் ஏதும் உண்டா என்று கேட்ட போது ''இப்போதைய நிலையில் இது ஒரு கூட்டு அமைப்பல்ல. ஒன்றுபட்டு விடயங்களை
எதிர்கொள்வதற்கான இணக்கப்பாடு மட்டுமே.</p><p> அதனால் அதற்கு விசேடமான பெயர்
ஒன்றுமில்லை'' என்று இந்த ஏற்பாட்டுக்குப் பின்னணியில் செயற்படும் கட்சித்
தலைவர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T17:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பிரித்தானிய அமைச்சர் அன் விடிகோம்ப் கொலை - அரசியல் பின்னணி இல்லை என பொலிஸ் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murder-former-uk-minister-police-explain-political-1783874942"></link>
            <id>https://tamilwin.com/article/murder-former-uk-minister-police-explain-political-1783874942</id>
            <summary type="text">பிரித்தானியாவின் முன்னாள் பெண் அமைச்சரும், ரிஃபார்ம் யூகே கட்சியின்
முக்கிய நிர்வாகியுமான அன் விடிகோம்ப் (வயது 78) கொலையின் பின்னணியில் அரசியல்
காரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் முன்னாள் பெண் அமைச்சரும், ரிஃபார்ம் யூகே கட்சியின்
முக்கிய நிர்வாகியுமான அன் விடிகோம்ப் (வயது 78) கொலையின் பின்னணியில் அரசியல்
காரணங்கள் எதுவும் இருப்பதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்று அந்நாட்டு&nbsp;பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

தென்மேற்கு பிரித்தானியாவின் கிராமப்புற பகுதியில் உள்ள அவரது இல்லத்தில், கடந்த
வியாழக்கிழமை அன் விடிகோம்ப் படுகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
</p><p>
இந்த கொடூரக் கொலை தொடர்பாக வடக்கு பிரித்தானியாவின் ரோதர்ஹாம் பகுதியைச் சேர்ந்த
28 வயதுடைய பிரித்தானிய இளைஞர் ஒருவரை பொலிஸார் சனிக்கிழமை இரவு கைது
செய்துள்ளனர்.
</p><p>
இந்த வழக்கு குறித்து டெவோன் மற்றும் கார்ன்வால் பகுதியின் உதவி தலைமை பொலிஸ் அதிகாரி மேட் லாங்மேன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போதைய விசாரணை
நிலவரப்படி, இந்த சம்பவத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவொரு தொடர்பும்
இல்லை.</p><p></p><h2>பல்வேறு கோணங்கள்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

புலனாய்வாளர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தாலும், இது அரசியல்
தூண்டுதலால் நடத்தப்பட்ட கொலை என்பதற்கான எந்தவொரு முகாந்திரமும் இதுவரை
கிடைக்கவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f1a060-4992-4678-b801-cf4b8a2d08cf/26-6a53c96ac80c3.webp' /></p><p>
</p><p>
முன்னதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், விசாரணக்குப்
பின் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டார்.
</p><p>
தீவிர சமூகக் கொள்கை பற்றாளரான அன் விடிகோம்ப், 1990களில் ஜான் மேஜரின்
கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தில் இளநிலை அமைச்சராகப் பணியாற்றியவர்.
</p><p>
2010இல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய அவர், பின்னர் நைஜல்
ஃபரேஜின் ரிஃபார்ம் யூகே கட்சியில் இணைந்து அதன் குடியேற்றம் மற்றும்
நீதித்துறைக்கான செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வந்தார்.
</p><p>
பிரித்தானியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஜோ காக்ஸ் (2016) மற்றும் டேவிட் அமேஸ்
(2021) ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் மற்றும் தீவிரவாதக்
காரணங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் அன்
விடிகோம்பின் இந்த மரணம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T17:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 640 பேர் கைது! நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரின் குற்றத்தடுப்பு வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/640-arrested-single-day-nationwide-police-crime-1783869793"></link>
            <id>https://tamilwin.com/article/640-arrested-single-day-nationwide-police-crime-1783869793</id>
            <summary type="text">பொலிஸ்மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள்
ஒழிப்புச் சோதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ்மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள்
ஒழிப்புச் சோதனை நடவடிக்கைகளில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 30
முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 640 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்
ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது,
நாடு முழுவதும் 27 ஆயிரத்து 217 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு
உட்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>640 பேர் கைது</h2><p> குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக
அடையாளம் காணப்பட்ட 30 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குற்றச்செயல்களுடன் தொடர்புடையோர் - 640 நபர்கள், பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் - 88 சந்தேகநபர்கள், நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் - 228 சந்தேகநபர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393a7079-1471-432f-a086-d3fb0f42f41c/26-6a53b450c2040.webp' /></p><p>
</p><p>
அதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 சாரதிகளுக்கு எதிராகவும், ஆபத்தான
முறையில் வாகனம் செலுத்திய 133 சாரதிகளுக்கு எதிராகவும், ஏனைய போக்குவரத்து
விதிமீறல்களுக்காக 4 ஆயிரத்து 51 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பொலிஸ்
நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் வலய மட்டத்திலான இந்த விசேட சோதனை
நடவடிக்கைகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்
பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T15:35:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வணிகப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்குகிறது: ட்ரம்ப் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commercial-traffic-hormuz-operating-usual-despite-1783867236"></link>
            <id>https://tamilwin.com/article/commercial-traffic-hormuz-operating-usual-despite-1783867236</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும்
போதிலும், ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறந்துதான் உள்ளது
என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும்
போதிலும், ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறந்துதான் உள்ளது
என்று ஜனாதிபதி&nbsp; டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
NBC தொலைக்காட்சியின் 'மீட் த பிரஸ்' நிகழ்ச்சியுடனான நேர்காணலின் போது
டொனால்ட் ட்ரம்ப் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
சமீபத்திய மோதல் சூழலில், "மறுஅறிவிப்பு வரும் வரை" ஹோர்முஸ் நீரிணையை
மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7623313-541a-4152-b48b-b530143433bd/26-6a53ad21d0ff4.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கப்பல்கள் அதன் வழியே தொடர்ந்து பயணித்து வருவதாக அமெரிக்க
இராணுவம் முன்னதாக வலியுறுத்திக் கூறியிருந்தது.
</p><p>
"ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை. கப்பல் போக்குவரத்து
தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது," என்று மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப்
படைகளைக் கண்காணிக்கும் சென்ட்காம் (CENTCOM) அமைப்பு எக்ஸ் (X) தளத்தில்
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T15:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை விவகாரம் விஸ்வரூபம் - உலக எண்ணெய் விநியோகத்திற்கு புதிய அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-closes-strait-of-hormuz-causing-fuel-shortage-1783866436"></link>
            <id>https://tamilwin.com/article/iran-closes-strait-of-hormuz-causing-fuel-shortage-1783866436</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா
விமானம்) தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா
விமானம்) தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
</p><p>
வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரு
நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு
வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க தாக்குதல் அதிகரிப்பு</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (US CENTCOM)
நேற்றைய தினம்(11) ஈரானின் 140 இராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளது.



கடந்த மூன்று நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகள்
குறிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8abdcd4d-76c1-4ca1-aa18-600933027139/26-6a53a4ca7a81e.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது இஸ்லாமிய
புரட்சிகர காவல்படையை (IRGC) ஏவி, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ
மையங்கள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளைக் குறி வைத்து ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியுள்ளது.
</p><p>
ஜோர்டானில் உள்ள அமெரிக்க கட்டுப்பாட்டு மையம், குவைத்தில் உள்ள ரேடார் தளம்,
கத்தாரில் உள்ள போர்விமான பராமரிப்பு மையம் மற்றும் ஓமானில் உள்ள அமெரிக்க
கடற்படை தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல்களால் கத்தாரில் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் ஈரானின்
ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதால் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியமும்
பெரும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.
</p><h2>

எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்</h2><p>

இதேவேளை, ஓமன் கடற்பகுதியில் பயணித்த 'ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி' (GFS Galaxy)
என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அதில் பயணித்த 11
இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு இந்திய கடற்படை வீரர் காணாமல்
போயுள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd798904-0c1d-41ff-8804-0b78ff1918d6/26-6a53a4cb42cb5.webp' /></p><p> </p><p> 

இந்த பகுதியில் அமெரிக்காவின் தலையீடு முடியும் வரை ஹோர்முஸ் நீரிணை
திறக்கப்படாது என ஈரான் தெரிவிக்கும் நிலையில், உலகளவில் மசகு
எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு எரிபொருள் விலை உயரும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>

உலகப் பொருளாதாரத்தை உலுக்கி வரும் இந்த பிரச்சினையைத் தீர்க்க ஓமன் மற்றும்
பாகிஸ்தான் நாடுகள் தீவிர சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T14:29:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மைதானத்திற்கு ஒரு பெண்ணுடன் வந்த கருணா: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விவரித்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-amman-and-pillayan-priyantha-jayakody-1783862479"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-amman-and-pillayan-priyantha-jayakody-1783862479</id>
            <summary type="text">விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா&amp;nbsp; அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா&nbsp; அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த சம்பம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியந்த ஜயகொடி இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த செவ்வியில்,</p><p>
எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார். </p><h2>


</h2><p></p><h2>பொலிஸ் மைதானத்தில் நடந்த சம்பவம்</h2><p>அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார். </p><p>அவர் இருபுறமும் பாதுகாப்புப் பிரிவினரை வைத்துக்கொண்டு நடக்கும்போது, அந்த மைதானத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய ஒரு பொலிஸ் தடகள வீரரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போதேஜு 1990 ஆம் ஆண்டு&nbsp; தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் கைப்பற்றிக் கொண்ட பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரை சரணடையுமாறு கூறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce727709-c3d3-4db5-ad4e-03761416d0a1/26-6a5394d1bf566.webp' /></p><p>
</p><p>ஆனால் போதேஜு சரணடைய முடியாது என்று கூறியவர். அவர் சார்பாக நாம் இன்னும் பொலிஸ் விளையாட்டு விழாக்களில் சவால் கிண்ணம் ஒன்று வழங்கப்படுகிறது. </p><p>அவர் கண்டி புனித அந்தோனியார் கல்லூரி உருவாக்கிய ஒரு திறமையான தடகள வீரர்.விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் பொலிஸ் மைதானத்தில் குறித்த பெண்ணுடன் நடைபயிற்சி செய்யும் போது அங்கு இருந்த மற்றொரு அதிகாரி என் அருகில் வந்து இவ்வாறு கூறினார்.</p><h2>&nbsp;துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை</h2><p>கிழக்கில் நிராயுதபாணியாக இருந்து 674 பொலிஸாரை கொலை செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கி போதேஜு போன்ற திறமையான ஒரு வீரரைக் கொன்ற கொலையாளி, கருணா அம்மான் இன்று பொலிஸ் பாதுகாப்புடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திலேயே நடந்து திரியும்போது, எனக்குள் பாரியதொரு ஆக்ரோஷம் ஏற்படுகிறது.</p><p>இதனை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது?" என்று அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் கூறினார்.
எனக்குத் தெரிந்தவரை, இது தொடர்பாக எந்தவொரு விசாரணையும் நடக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55c68bf5-0c23-41e9-a690-c23e35a5c9b1/26-6a539e34752c7.webp' /></p><p> </p><p>அந்தப் படுகொலைகளுக்கு முழுமையான தலைமைத்துவத்தை வழங்கிய கருணா இந்நாட்டின் அமைச்சரானார். அத்தோடு பழமையான அரசியல் கட்சியொன்றின் உபதலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. </p><p>அதேபோல், இதில் இரண்டாவது இடத்தில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிரதிமைச்சரானார். அவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். </p><p>எனவே, இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையைத் தவிர, இன்றுவரை இந்த மனிதப் பேரவலக் கொலைகள் குறித்து விசாரணை எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp; </p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xYo28VM_jxI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-12T14:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழந்த அதிகாரிகளுக்கு அரசு வெளியிட்ட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-negombo-prison-conflict-that-shook-the-country-1783864198"></link>
            <id>https://tamilwin.com/article/the-negombo-prison-conflict-that-shook-the-country-1783864198</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த
சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த
சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான
நட்டஈடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 


உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபா என்பது
ஆரம்பக்கட்ட நிவாரணக் கொடுப்பனவு மட்டுமே என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின்
ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார்.</p><p></p><p> 

உயிரிழந்த அதிகாரிகளின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள்
திணைக்களத்தின் முழுமையான செலவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ள என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான ஏனைய உதவிகளை
வழங்குவதற்கும் திணைக்களம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> </p><h2>

அதிகாரிகளின் தற்போதைய நிலைமை</h2><p>
இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகள்
தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேச்சாளர், 

"தற்போது 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1211b792-e686-403c-9f4c-fa45b1686609/26-6a539c0f33f31.webp' /></p><p> </p><p>அவர்களில் மூவர், கொழும்பு தேசிய
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இவர்களுக்கான நட்டஈடு மற்றும் இதர உதவிகள் குறித்தும் சிறைச்சாலைகள்
திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T13:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களை ஏமாற்றுகின்றதா அநுர அரசாங்கம்..! மனோ அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-deceiving-the-up-country-people-1783862727"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-deceiving-the-up-country-people-1783862727</id>
            <summary type="text">பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி
உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க
வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி
உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க
வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.
வலியுறுத்தினார்.
</p><p>
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,</p><p>
"எங்கள் மக்கள் 'தேவதூதர்கள் வந்துவிட்டார்கள்' என நம்பி இந்த அரசுக்கு
வாக்களித்தனர்.</p><p></p><h2>மலையக மக்கள்</h2><p> ஹட்டன் பிரகடனத்தில் காணி உரிமை குறித்துக் கூறி வாக்குகளைப்
பெற்ற அரசு, தற்போது அது குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்? இது
தொடர்பில் தமக்கான கொள்கையை வெளிப்படையாகவும், வார்த்தை ஜாலங்கள் இல்லாமலும்
அரசு அறிவிக்க வேண்டும்." - என்று அவர் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b692a955-7f94-40ec-8da0-5113cbab8333/26-6a5399e79dc29.webp' /></p><p>

பெருந்தோட்டக் காணிகள் அரசுக்குச் சொந்தமானவை என்றும், நிறுவனங்கள் வெறும்
குத்தகைதாரர்கள் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டிய அவர்,</p><p> தோட்டங்களில் மக்கள்
மேற்கொள்ளும் கட்டுமானங்களை 'அத்துமீறியவை' எனக் கூறித் தடுப்பதற்கும்,
உடைப்பதற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசு நிறுவனங்களே அனுமதி
வழங்குகின்றன எனவும் குற்றம் சாட்டினார்.
</p><p>
குறிப்பாக, பெருந்தோட்ட அமைச்சின் கீழ் உள்ள கண்காணிப்புப் பிரிவு மற்றும்
காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அவர்
விமர்சித்தார்.</p><p></p><h3>மனோ கணேசன் எம்.பி.</h3><p>
</p><p>
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை உடனடியாகப்
பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், அரசின் காணி உரிமை கொள்கை வரையறுக்கப்படும்
வரை, வீடில்லா மக்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களை 'அத்துமீறியவை' எனக் கூறி
வழக்குத் தொடர்வதையோ அல்லது அவற்றை உடைத்து அகற்றுவதையோ உடனடியாக இடைநிறுத்த
வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்&nbsp; வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a0dc5e5-d950-471e-8e95-3e818259d335/26-6a5399e6ecb0f.webp' /></p><p>
</p><p>
நல்லாட்சி அரசின் போது, தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சரவை மற்றும்
நாடாளுமன்ற ஒப்புதலுடன் 'ஏழு பேர்ச் காணி, தனி வீடு' என்ற உரிமையைச்
சட்டபூர்வமாக ஆரம்பித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். </p><p>200 ஆண்டுகாலப்
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கிய அந்தப் பயணத்தை, இந்த அரசு
முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை சுரண்டி சொத்து சேர்த்த 500 அரசியல் தலைவர்கள் - விசாரணையில் அம்பலமாகும் விவரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494"></link>
            <id>https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494</id>
            <summary type="text">அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>குவியும் முறைப்பாடுகள்</h2><p>
</p><p>இந்த 500க்கும் மேற்பட்ட நபர்களில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 60 அரசியல்வாதிகளும், கிட்டத்தட்ட 100 உயர் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb54b70-dbc8-4414-9695-3a40c03e0473/26-6a530457e255b.webp' /></p><p>
</p><p>ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் சொத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>சம்பந்தப்பட்ட நபர்களால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களின் உண்மைத்தன்மை குறித்து இந்த விசாரணையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><h2>சொத்து விபரங்களை சமர்ப்பிக்க&nbsp;காலக்கெடு </h2><p>
சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய உத்தியோகத்தர் பிரிவில் அண்மையில் ஊடகவியலாளர்களும் கப்பல்துறை ஆவணப்பணியாளர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc07406-c362-4d18-a864-4784a93862cc/26-6a530e6b92991.webp' /></p><p>
இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த போதிலும், இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அது ஜூலை 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
</p><p>2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின்படி, சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க அல்லது ஓராண்டிற்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலிடத்தில் இலங்கை: எதில் தெரியுமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-ranks-3rd-countries-heaviest-traffic-1783861278"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-ranks-3rd-countries-heaviest-traffic-1783861278</id>
            <summary type="text">உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக &#039;நம்பியோ&#039; (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ளது.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ளது.</p><p>

அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.</p><p></p><h2>இலங்கை முதலிடம்&nbsp;</h2><p>

உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தைக் கொண்ட 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான போக்குவரத்து குறியீட்டின் (Traffic Index) மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக நைஜீரியா முதலிடத்திலும், கோஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e0576b-6e1c-4226-a0e3-6e28a3692f9c/26-6a53932be58c1.webp' /></p><p> </p><p>ஒஸ்ட்ரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் குறைந்த நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன. </p><p>

பயணத்திற்காகச் செலவிடப்படும் நேரம், அதற்காகச் செலவாகும் எரிபொருள் அளவு, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மன உளைச்சல், கார்பன்-டை-ஒக்சைடு (CO2) வெளியேற்றம் மற்றும் போக்குவரத்து அமைப்பில் உள்ள திறமையின்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தரவுகள் தயாரிக்கப்படுகின்றன.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-12T13:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த இரண்டாவது யாத்திரிகரும் உயிரிழப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/second-pilgrim-kathirgamam-pilgrimage-passes-away-1783859905"></link>
            <id>https://tamilwin.com/article/second-pilgrim-kathirgamam-pilgrimage-passes-away-1783859905</id>
            <summary type="text">கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர்&amp;nbsp; திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(12) ஞாயிற்றுக்கிழமை காலை பாணமையில் இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர்&nbsp; திடீரென உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று(12) ஞாயிற்றுக்கிழமை காலை பாணமையில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>இரண்டாவது யாத்திரிகர்</h2><p>
</p><p>
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்பவரே இவ்வாறு மரணமான
யாத்திரிகர் ஆவார்.

இவரது சடலம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2b3e38f-7777-4de2-a404-ac381caadc31/26-6a538c8fd4dcd.webp' /></p><p>
</p><p>
சடலத்தை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.புனிதராஜன்
பார்வையிட்டார்.</p><p>

இதேவேளை பாதயாத்திரை முதல் யாத்திரிகர் கடந்த 8 ஆம் திகதி பொத்துவில் -
குண்டுமடு பகுதியில் உயிரிழந்தார். அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T12:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் சிலை வைக்க வேண்டாம்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/don-t-put-a-statue-of-ira-sampanthan-in-the-east-1783859650"></link>
            <id>https://tamilwin.com/article/don-t-put-a-statue-of-ira-sampanthan-in-the-east-1783859650</id>
            <summary type="text">இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர். அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர். அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்
அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும், பொது இடத்தில் அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி
கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்த விடயம் தொடர்பில், ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று(12.07.2026) ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>

சிறைச்சாலை மோதலுக்கு கண்டனம்</h2><p>
மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, </p><p> 

மட்டக்களப்பு கிரானில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கட்சி காரியாலயம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சுமாராக 6 மாதங்களாக கட்சி வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாதவொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59761588-f780-4324-bcaa-ed987154f397/26-6a538a2a84c5e.webp' /></p><p> </p><p>

இருந்த போதிலும் கட்சி தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தற்போதுள்ள எங்களுடைய நிகழ்ச்சி நிரலில், இலங்கை தமிழரசுக்கட்சியை கிழக்கு மண்ணில் இருந்து விரட்டியடிப்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. </p><p> சிலருக்கு இந்த விடயத்தை கேட்கும் பொழுது ஏளனமாக இருக்கும், ஆனால் இப்படியொரு சம்பவம் விரைவில் நடக்கும். 



கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் பல சட்டவிரோத
செயற்பாடுகளுக்கான காரணங்களை விரைவில் அநுர அரசாங்கம் கண்டறிய வேண்டும்.</p><p> 

அத்துடன், இதுபோன்ற குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். </p><h2> 

 

சிலை உடைக்கப்படும்..</h2><p>
இதேவேளை, இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இதன்போது வலியுறுத்திக் கொள்கின்றேன். </p><p>


மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சி தலைவரான இரா. சம்மந்தனுக்கு உருவ
சிலை அமைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f116607-db89-4e19-994e-e4f3753d5013/26-6a538a2b42685.webp' /></p><p> </p><p> அப்படியாயின், அந்த நினைவு தூபி அமைப்பது அவர்களது சொந்த இடங்களில் அமைக்க வேண்டும், ஆனால் பொது இடங்களில் நினைவு தூபி அமைக்கக் கூடாது.


இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதருக்கு கிழக்கில் சிலை வைப்பதற்கான அங்கீகாரத்தை வழங்க முடியாது. </p><p>அவ்வாறு பொது இடங்களில் சிலை அமைக்கும் பட்சத்தில், எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன், அதனை அகற்றுவதற்கான முழு முயற்சிகளும் எடுக்கப்படும். </p><p>


இந்த விடயத்தை வன்முறை, மிரட்டல், அச்சுறுத்தல் என கூறுவதற்கு முதலே இதனை அறிவித்துக் கொள்கின்றோம். இருந்தபோதும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த
சிலையை அமைக்க முயன்றால் அதனையும் அகற்றப்படும் என உறுதியாக கூறிக்
கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:36:09+00:00</updated>
        </entry>
    </feed>
