<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-18T13:19:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் வெளியிடும் தகவல்களுக்குக் கட்டணம் அறவிட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/charge-a-fee-for-information-released-by-trump-1784380002"></link>
            <id>https://tamilwin.com/article/charge-a-fee-for-information-released-by-trump-1784380002</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக நிறுவனமான &#039;ட்ரம்ப் மீடியா
அண்ட் டெக்னொலஜி குரூப்&#039;, தனது &#039;ட்ரூத் சோசியல்&#039; தளத்தில் ஜனாதிபதி வெளியிடும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக நிறுவனமான 'ட்ரம்ப் மீடியா
அண்ட் டெக்னொலஜி குரூப்', தனது 'ட்ரூத் சோசியல்' தளத்தில் ஜனாதிபதி வெளியிடும்
பதிவுகளை மற்றவர்களுக்கு முன்னதாகவே உடனுக்குடன் வழங்குவதற்காக மாதம் $100,000
நிதியைக் கட்டணமாக அறவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

ஜனாதிபதி ஒருவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் உலகப் பொருளாதாரச் சந்தையில்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், நிதி வர்த்தக நிறுவனங்கள்
மற்றும் வங்கிகளைக் குறிவைத்து இந்தத் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p>

மேலும், மூன்று ஆண்டுத் திட்டமாகப் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு மாதக்
கட்டணமாக $60,000 வசூலிப்பது குறித்தும் பேசப்பட்டு வருகிறது.</p><p></p><h2>வணிகத் திட்டம்</h2><p>
</p><p>
ட்ரம்பின் இந்த வணிகத் திட்டம் அமெரிக்காவில் பெரும் தார்மீக மற்றும் சட்ட
ரீதியான விவாதங்களை எழுப்பியுள்ளது.</p><p>

ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தி ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் இலாபம் ஈட்ட
முயல்வதாவும், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மைக்கு இது முட்டுக்கட்டையாக
அமையும் என்றும் அரசியல் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடுமையாகக் குற்றம்
சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/612e5226-93ed-4410-825a-ffb11a6c9d66/26-6a5b7c3a1b901.webp' /></p><p>
</p><p>
இது ஒரு அப்பட்டமான ஊழல் நடவடிக்கை என்றும், ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வத்
தகவல்களைப் பணத்திற்காக முன்கூட்டியே விற்பது அமெரிக்க ஜனநாயகத்திற்கு
அச்சுறுத்தல் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><h2>ஈரான் மீதான தாக்குதல்&nbsp;</h2><p>

கடந்த காலங்களில் ஈரான் மீதான தாக்குதல் அறிவிப்புகள் மற்றும் வர்த்தகக்
கொள்கை மாற்றங்கள் போன்ற முக்கிய விவகாரங்களை ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல்
தளத்தின் மூலமே அறிவித்திருந்தார். இதனால் உலக எரிசக்தி மற்றும் நிதிச்
சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ce6ef11-2a3b-4868-bd48-5effb0c54984/26-6a5b7c3ac0870.webp' /></p><p>
</p><p>
தற்போது கொண்டுவரப்படவுள்ள இந்த புதிய கட்டண சேவை, தங்களுக்குப் பிடித்தமான
பணக்கார வர்த்தகர்களை மேலும் பணக்காரர்களாக்கவும், ஜனாதிபதி ட்ரம்ப்
குடும்பத்தினர் கல்லா கட்டவுமே உதவும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி
எம்பிக்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T13:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள மண்டை ஒடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/third-phase-of-the-chemmani-mass-grave-excavation-1784377828"></link>
            <id>https://tamilwin.com/article/third-phase-of-the-chemmani-mass-grave-excavation-1784377828</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(18) சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(18) சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 36ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக
ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவரின் என்புக் கூடு உள்ளடங்கலாக 06
என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>செம்மணி மனித புதைகுழி</h2><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 05 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018a4b55-c33b-4c64-9e8b-261f9e4980da/26-6a5b75addec51.webp' /></p><p>
</p><p>
வெள்ளை நிறத்திலான பாசிமணி, இரும்புத்துண்டு, வளையல் என்பவை பிற சான்று
பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
ஒரு மண்டையோடு வித்தியாசமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தம்
செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 90 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில்
,437 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 428 என்பு கூடுகள்
முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T12:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதா அரசு..! முஜிபுர் ரஹ்மான் எம்.பி கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-blownup-election-promise-mujibur-rahman-1784373766"></link>
            <id>https://tamilwin.com/article/government-blownup-election-promise-mujibur-rahman-1784373766</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசு, தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டுச் செயற்படுகின்றது என ஐக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசு, தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டுச் செயற்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> 

அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>புதிய அரசமைப்பை உருவாக்குதல்</h2><p>அந்த அறிக்கையில்,
</p><p>
 எதிர்க்கட்சியாக இருந்தபோது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் புதிய அரசமைப்பை உருவாக்குதல் ஆகியவையே தேசிய மக்கள் சக்தியின் பிரதான நிலைப்பாடுகளாக இருந்தன. இது குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் அந்தக் கட்சியினர் முன்வைத்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f363e938-447c-49af-bcfb-58dcb62d462d/26-6a5b671f99dcb.webp' /></p><p> </p><p>

இருப்பினும், இன்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் அல்லது புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து அரசு எந்தவிதக் கருத்துகளையும் முன்வைப்பதில்லை. இது தொடர்பான கலந்துரையாடல்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. </p><p>

அன்று நடைமுறையிலிருந்த அரசமைப்பைக் கடுமையாக விமர்சித்த தேசிய மக்கள் சக்தியினர், இன்று அதே அரசமைப்பையே பின்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர். </p><p>

அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான அரசியல் மறுசீரமைப்பை முற்றிலும் கைவிட்டுள்ளதுடன், அதன் செயற்பாடுகளில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T12:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்மமான முறையில் உயிரிழக்கும் முக்கிய சாட்சியாளர்கள்! எழுந்துள்ள பாரிய சந்தேகம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/key-witnesses-dying-under-mysterious-circumstances-1784375609"></link>
            <id>https://tamilwin.com/article/key-witnesses-dying-under-mysterious-circumstances-1784375609</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முக்கிய தகவல்களை
வெளிப்படுத்தியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முக்கிய தகவல்களை
வெளிப்படுத்தியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்
பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.</p><p>

குருநாகலில் இன்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து
வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அங்கு அவர் மேலும் கூறியதாவது,</p><p>

"இலங்கை வரலாற்றில் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார் என்று கூறப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.</p><p></p><h2>&nbsp;முக்கிய சாட்சியாளர்கள்</h2><p> </p><p>முன்னாள்
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இந்த மரணம் பெரும்
சந்தேகத்துக்குரியது. சர்ச்சைக்குரிய சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள்
தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழக்கின்றமை சமூகத்துக்கு விடுக்கப்படும்
அச்சுறுத்தலாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af5f446-aea6-4ab9-a5d1-dceb00915c13/26-6a5b6c234b1fd.webp' /></p><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சி.டி. விக்ரமரத்ன பல முக்கிய
விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு
அவருக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.
</p><p>இவ்வாறான பின்னணியில், இந்த மரணத்தைத் தற்கொலை என்று முத்திரை குத்த ஒரு
தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
</p><p>
தற்போது சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் கடும்
அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இது
மிகவும் முறையற்றதொரு செயற்பாடாகும். இந்த மரணம் குறித்து அரசு உரிய
விளக்கத்தை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T12:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம்! விக்டோரியா கல்லூரிக்கு முன் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/not-let-sumanthiran-attend-as-chief-guest-protest-1784369207"></link>
            <id>https://tamilwin.com/article/not-let-sumanthiran-attend-as-chief-guest-protest-1784369207</id>
            <summary type="text">சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாளைய தினம் நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாளைய தினம் நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பழைய மாணவர்கள் 
போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
இந்தப் போராட்டமானது இன்றையதினம்(18.07.2026) சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">150வது ஆண்டு விழா&nbsp;</span></h2><p> 

போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் "எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக வரவேண்டும்" என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது பழைய மாணவர்கள் யாராவதே விருந்தினராக அழைக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdeb79a-2218-4135-9034-8ce8836c2efb/26-6a5b5c67b61b9.webp' /></p><p> </p><p>

பாடசாலைக்கு தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாது. 

சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் நேற்றையதினமே எங்களுக்கு தெரியும். </p><p>

இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோருடன் சுமூகமாக பேசி முடிப்பதற்கு நாங்கள் முயற்சித்தோம். </p><p>ஆனால் அது பலனளிக்கவில்லை. 

ஒரு கட்டத்துக்கு மேல் "பழைய மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம், நாங்கள் பாடசாலை சமூகத்துடனேயே நிகழ்வுகளை நடாத்துகிறோம்" என்று அதிபர் கூறினார். அதன் பின்னரே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது.</p><p></p><h2>ஜனநாயக ரீதியிலான&nbsp;போராட்டம்</h2><p> </p><p>

இந்த 150வது ஆண்டு விழாவுக்கு என ஒரு விழா ஒழுங்கமைப்பு குழு தெரிவு செய்யப்பட்டது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. 

ஆனால் அந்த விழா குழுவினரை உள்வாங்கி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை. </p><p>அந்த ஏற்பாட்டுக் குழுவினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. 

பழைய மாணவர் சங்கத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c526742c-6166-4cdf-a498-383801931680/26-6a5b5c68c45f6.webp' /></p><p> </p><p>

எமது பழைய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக காணப்படுகிறது. 

போராட்டம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியாகவே முன்னெடுக்கப்படுகிறது.</p><p> எமது போராட்டத்தால் யாருக்காவது மனவுளைச்சல் ஏற்பட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. 

எமது கருத்தினை கேட்காமல் இந்த விருந்தினர் தெரிவு இடம்பெற்றதே காரணம். </p><p>எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். 

பழைய மாணவர்கள் என்ற வகையில் எமக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T11:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பம் ஒன்றினை கொடூரமாக கொலை செய்ய முயற்சி - ஒருவர் பலி - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-sentenced-to-death-in-2001-murder-case-1784372989"></link>
            <id>https://tamilwin.com/article/five-sentenced-to-death-in-2001-murder-case-1784372989</id>
            <summary type="text">கொலை குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து கம்பஹா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

25 ஆண்டுகளுக்கு முன்பு வெலகெதரா பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலை குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து கம்பஹா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p> 

25 ஆண்டுகளுக்கு முன்பு வெலகெதரா பகுதியில் திருமணமாகாத ஆண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்தமை மற்றும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் கீழ் நேற்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

2001 ஒக்டோபர் 31 ஆம் திகதி வெலகெதராவின் தியகவிட்டாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் இந்தக் கும்பல் புகுந்து, கற்கள், தடிகளாலும், வாள்களாலும் அங்கு வசித்தவர்களை கொடூரமாக தாக்கியதாக நீதிமன்றம் கண்டறிந்தது.</p><h2><b>மரண தண்டனை</b></h2><p> இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூவர் படுகாயம் அடைந்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdc3e9c9-6168-46ab-87a2-d6378f8ad0dc/26-6a5b63fd8d48e.webp' /></p><p>தந்தை, தாய், அவர்களது இரண்டு குழந்தைகள் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் கொலை மற்றும் கொடூரமான தாக்குதல் குற்றங்களில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, ஐவருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி மரண தண்டனை விதித்தார்.<br></p>]]></content>
            <updated>2026-07-18T11:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்கா மோதல் எதிரொலி! குவைத் விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/air-operations-kuwait-airport-temporarily-suspend-1784372027"></link>
            <id>https://tamilwin.com/article/air-operations-kuwait-airport-temporarily-suspend-1784372027</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றநிலையால், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள் தற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றநிலையால், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
</p><p>
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானின் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும்பாலான விமானங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தற்காலிகமாக நிறுத்தம்</h2><p>

அரசு செய்தி நிறுவனமான KUNA வெளியிட்ட தகவலின்படி,

"குவைத் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் தரையிறக்க நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான விமானங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
</p><p>
 பயணிகள் தங்களது விமான நிலையை தொடர்ந்து சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என குவைத் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54a31062-21db-47fc-ae49-f7daae261722/26-6a5b617639b48.webp' /></p><p>

இந்த நடவடிக்கை, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பிராந்திய நாடுகள் மீது பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ள சூழலில் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான குவைத் மீதும் அச்சுறுத்தல் நிலவி வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த ஜூன் மாதம், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்து நீடித்த அமைதி ஒப்பந்தத்தை நோக்கி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்த போதிலும், தற்போது மீண்டும் இரு தரப்புக்கும் இடையே பதற்றம் தீவிரமடைந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T11:20:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மறைவு.. LPL போட்டிகளில் ஒரு நிமிட மௌன அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-cricket-board-mourns-coach-sobers-1784370651"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-cricket-board-mourns-coach-sobers-1784370651</id>
            <summary type="text">முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று(18.07.2026) இடம்பெறவுள்ள LPL போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு ஒரு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று(18.07.2026) இடம்பெறவுள்ள LPL போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது. </p><p>

இந்த போட்டிகள் கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 


சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவு</h2><p>
இது தொடர்பில் வெளியான அறிக்கையில், </p><p>சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. 

சர் கேரி சோபர்ஸ், இலங்கை கிரிக்கெட்டுடன் மிகவும் சிறப்பான மற்றும் நீண்டகாலத் தொடர்பைக் கொண்டிருந்த ஒரு மாபெரும் மனிதர் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

 குறிப்பாக 1980-களின் முற்பகுதியில், அவர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ce13fb-4982-4b6e-82c6-c2d5619644c6/26-6a5b5aede0076.webp' /></p><p> 

அதன் பின்னர், 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.</p><p> 

இவ்வளவு தொண்டுகளை இலங்கை கிரிக்கட்டிற்காக செய்த சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக குடும்பத்தினருக்கு தனது இரங்கலை இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.</p><p> 

உலக கிரிக்கெட் விளையாட்டுக்கு அவர் விட்டுச்சென்ற மகத்தான பாரம்பரியம், பல தலைமுறை வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-18T10:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு புகைப்படத்தில் தொடங்கிய கதை... உலகக் கோப்பை இறுதியில் மெஸ்ஸி - யமால் வரலாற்று சந்திப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/messi-and-lamine-yamal-s-viral-photo-internet-1784369161"></link>
            <id>https://tamilwin.com/article/messi-and-lamine-yamal-s-viral-photo-internet-1784369161</id>
            <summary type="text">உலக கால்பந்தின் வரலாற்றில் மிகச் சிறப்பான தருணங்களில் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி அமையவுள்ளது. நடப்பு உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக கால்பந்தின் வரலாற்றில் மிகச் சிறப்பான தருணங்களில் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி அமையவுள்ளது. </p><p>நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணிகள் மோதும் இந்தப் போட்டியில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும், அவரது வாரிசாகக் கருதப்படும் லமின் யமாலும் முதல் முறையாக ஒரே மைதானத்தில் எதிரணிகளாக களமிறங்குகின்றனர்.</p><p></p><h2>2007-ல் தொடங்கிய தொடர்பு</h2><p>
</p><p>
39 வயதான மெஸ்ஸியும், 19 வயதான லமின் யமாலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சந்திப்பது கால்பந்து ரசிகர்களுக்கு வரலாற்று தருணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இவர்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதல் முறை அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33ce4c3f-1d8f-457f-969c-ee5066b732bf/26-6a5b57c3bbb89.webp' /></p><p>
2007ஆம் ஆண்டு, பார்சிலோனா அணியின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்து வந்த 20 வயது மெஸ்ஸி, வெறும் ஐந்து மாத குழந்தையாக இருந்த லமின் யமாலை கையில் தூக்கி குளிப்பாட்டிய புகைப்படங்கள் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நினைவுச் சின்னங்களாக மாறியுள்ளன.
</p><p>
அந்த புகைப்படங்களை பார்சிலோனாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜோன் மோன்ஃபோர்ட் எடுத்திருந்தார்.
</p><p>
யூரோ 2024 தொடரில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றபோது, லமின் யமாலின் தந்தை தனது இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தை "இரு ஜாம்பவான்களின் தொடக்கம்" என்ற தலைப்புடன் பகிர்ந்ததைத் தொடர்ந்து அவை மீண்டும் பரவலாக பேசப்பட்டது.</p><p></p><h2>எப்படி அந்த சந்திப்பு நடந்தது</h2><p>
கத்தலான் நாளிதழான Sport, பார்சிலோனா மற்றும் யுனிசெஃப் இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற குடும்பங்களுக்கு, தங்களது குழந்தையுடன் பார்சிலோனா முதல் அணியின் வீரர்களுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>
அந்த போட்டியில் லமின் யமாலின் குடும்பமும் தேர்வு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5144b1-6b02-4a0a-a8c1-acb9ffcb661b/26-6a5b57c48a070.webp' /></p><p> </p><p>அன்றைய தினம் முற்றிலும் தற்செயலாக, லமின் யமாலுடன் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட வீரர் லியோனல் மெஸ்ஸிதான்.

அந்த புகைப்படங்கள் பார்சிலோனாவின் கேம்ப் நௌ மைதானத்தின் விருந்தினர் உடைமாற்றும் அறையில் எடுக்கப்பட்டன.
</p><p>
"குழந்தையை எப்படி கையாள்வது என்று மெஸ்ஸிக்கே தெரியவில்லை"

புகைப்படக் கலைஞர் ஜோன் மோன்ஃபோர்ட் BBC Sport-க்கு அளித்த பேட்டியில்,

"மெஸ்ஸி மிகவும் அமைதியான, வெகுளியான மனிதர். ஒரு சிறிய குழந்தையை திடீரென கையில் தூக்கி புகைப்படம் எடுக்க வேண்டிய சூழல் வந்தபோது, என்ன செய்வது என்று அவருக்கே தெரியாமல் இருந்தது. </p><p>ஆனால் சில நிமிடங்களில் அதற்கேற்றபடி பழகிக் கொண்டார்," என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், லமின் யமாலின் தாய் ஷீலா எபானா மிகவும் ஒத்துழைப்புடன் இருந்ததாகவும், அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் இருந்தாலும் மிகவும் பணிவானவர்களாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;19 ஆண்டுகளுக்கு முன்பு&nbsp;</h2><p>
லியோனல் மெஸ்ஸி

11 கோல்கள்
1 லா லிகா பட்டம்
1 UEFA சாம்பியன்ஸ் லீக் பட்டம்

லமின் யமால்

56 கோல்கள்
3 லா லிகா பட்டங்கள்
1 கோபா டெல் ரே
யூரோ 2024 சாம்பியன்

என்கிற சாதனைகளைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
'என் பெற்றோருக்கு நான் எதையும் திருப்பிக் கொடுக்க முடியாது'

மொராக்கோவைச் சேர்ந்த முனிர் நஸ்ராவி மற்றும் ஈக்வடோரியல் கினியாவைச் சேர்ந்த ஷீலா எபானா ஆகியோரின் மகனான லமின் யமால், பொருளாதார சிரமங்களையும் மீறி தன்னை கால்பந்தில் வளர்த்த பெற்றோருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9feff089-391e-4d96-a52f-ea74f7b503b9/26-6a5b57c53d818.webp' /></p><p>
</p><p>
"என்னுடைய அம்மாவும் அப்பாவும் செய்ததை, என் குழந்தைக்காகத்தான் என்னால் செய்ய முடியும். அவர்கள் செய்த உதவிக்கு நான் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது," என்று அவர் முன்னதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
வரலாறு படைக்கவுள்ள உலகக் கோப்பை இறுதி

19 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையை கையில் தூக்கி குளிப்பாட்டிய மெஸ்ஸி, இன்று அதே குழந்தையுடன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எதிரணியாக மோதவிருக்கிறார்.
</p><p>
ஒரு புகைப்படத்தில் தொடங்கிய இந்தக் கதை, உலக கால்பந்தின் மிகப் பெரிய மேடையில் நிறைவடையவிருக்கிறது.</p><p> மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை கனவா? அல்லது லமின் யமாலின் புதிய யுகத்தின் தொடக்கமா? என்பதற்கான பதில் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T10:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம பகுதியில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் 16 இளைஞர்கள் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/16-youths-arrested-illegally-modified-motorcycles-1784365618"></link>
            <id>https://tamilwin.com/article/16-youths-arrested-illegally-modified-motorcycles-1784365618</id>
            <summary type="text">ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களும் 16 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களும் 16 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
ஹோமாகம பகுதியில் அதிவேகமாகச் சென்று அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>



16 சாரதிகளுக்கு பிணை</h2><p>
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில், சைலன்சர்களை மாற்றுதல், பக்கவாட்டுக் கண்ணாடிகள் மற்றும் மண் காப்பான்களை அகற்றுதல், இலக்கத் தகடுகள் இல்லாமை மற்றும் விளக்கு அமைப்புகளில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb72e2f9-a3b3-4511-a19f-74fdb71ea204/26-6a5b428aaa302.webp' /></p><p> </p><p> 

இந்த மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T10:29:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணை முடிவை பொறுத்தே பொலிஸ் மரியாதை! சி.டி. விக்ரமரத்ன விவகாரத்தில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-dies-in-suspected-suicide-1784362002"></link>
            <id>https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-dies-in-suspected-suicide-1784362002</id>
            <summary type="text">
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடற்கூறு பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடற்கூறு பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று(17) நடைபெற்றுள்ளன.
</p><p>
விசாரணையின் ஆரம்ப கட்டமாக, கொழும்பு கிழக்கு முல்லேரியாவைச் சேர்ந்த நீதிமருத்துவ அதிகாரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் வசித்த வீட்டிற்கு சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தேவையான மருத்துவ குறிப்புகளைப் பதிவு செய்தார்.</p><p></p><h2>&nbsp;தவறான முடிவு&nbsp;</h2><p>
</p><p>
நீதிமருத்துவ மற்றும் நீதவான் விசாரணைகளின் மூலம் இது தவறான முடிவு என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி அவரது உடலுக்கு பொலிஸ் சீருடை அணிவிக்கவோ அல்லது பொலிஸ் மரியாதை செலுத்தவோ முடியாது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இலங்கை பொலிஸ் வரலாற்றில், பொலிஸ் மா மா அதிபராக பதவி வகித்த ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்த முதல் சம்பவம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92cefe73-f064-4f89-aa92-a81b9ab28735/26-6a5b39875b7a3.webp' /></p><p>
</p><p>

இதற்கு முன்பும் தவறான முடிவு செய்து கொண்ட எந்த பொலிஸ் அதிகாரிக்கும் அதிகாரப்பூர்வ பொலிஸ் மரியாதை வழங்கப்படவில்லை என்றும் உயர் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
நேற்று(17) காலை மாலபே – தலஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அளித்த வாக்குமூலத்தின்படி, "ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது சேவைத் துப்பாக்கியை கேட்டுள்ளார்.</p><p> </p><p>பின்னர், ஒரு தண்ணீர் கொண்டு வருமாறு காவலரை வெளியே அனுப்பியுள்ளார். அதன்பிறகே துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்ப விசாரணைகளில், அவரது மார்புப் பகுதியில் ஒரு தோட்டா பாய்ந்திருந்தது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்தே அந்த ரிவால்வர் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டது.
</p><p>
 பொலிஸாரின் தகவலின்படி, நேற்று காலை வழக்கம்போல தனது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். காலை சுமார் 7.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.</p><p></p><h2>சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு&nbsp;</h2><p>
</p><p>
உடனடியாக குடும்பத்தினரும் அயலவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் அவரை இரத்தக் காயங்களுடன் முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.</p><p>

உயிரிழக்கும் போது அவர் அறுபது வயதை கடந்திருந்ததுடன், இரண்டு மகன்களின் தந்தையாக இருந்தார்.


சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தலங்கம பொலிஸார் மற்றும் பல உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298f7301-2682-449a-9641-82b914b173c1/26-6a5b398838157.webp' /></p><p>

நீதியியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் உள்ளிட்ட குழுக்கள் அறிவியல் ஆதாரங்களை சேகரித்தனர்.</p><p>தற்போதைய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>
 பொலிஸ் வட்டாரங்களின் தகவலின்படி, அண்மைக்காலமாக அவரது குடும்பத்தில் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமும் குடும்பத் தகராறும் இந்த துயரமான முடிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><p>

அவரது மகனின் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அதோடு குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>வாழ்க்கையின் இறுதிக் கட்டம்</h2><p>
</p><p>
தான் பல ஆண்டுகள் கண்ணியமாக வழிநடத்திய பொலிஸ் அமைப்பே தனது குடும்ப விவகாரத்தில் நடந்துகொண்ட விதமும், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளும் அவரை மனரீதியாக மிகவும் பாதித்ததாக நெருங்கியவர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e150f28-09f6-4277-9b4a-c2a381373754/26-6a5b39892ca97.webp' /></p><p>
</p><p>
வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் எதிர்கொண்ட இந்த குடும்பப் பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்ட சமூக அவப்பெயரை தாங்க முடியாமல் அவர் கடுமையான மனவேதனையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

சி.டி. விக்ரமரத்ன மத நம்பிக்கையுடன் வாழ்ந்தவர். அவர் இறைச்சி உணவுகளைத் தவிர்த்ததுடன், மது மற்றும் புகைப்பழக்கங்களிலிருந்தும் முற்றிலும் விலகி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அவருடன் பொலிஸ் பயிற்சியில் இணைந்து பயின்ற ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பொன்சேகா, பொலிஸ் மா அதிபராக இருந்த காலத்திலும் அவர் தியான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.</p><p><b><i>You May Like This..<br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2p8NloyZP5w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-07-18T10:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[25ஆவது நாளை எட்டிய கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keppapilavu-land-liberation-protest-enters-25thday-1784364335"></link>
            <id>https://tamilwin.com/article/keppapilavu-land-liberation-protest-enters-25thday-1784364335</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமது பூர்வீகக் காணிகளை
மீளப் பெற்றுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமது பூர்வீகக் காணிகளை
மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட
தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(18.07.2026) 25ஆவது நாளை எட்டியுள்ளது.
</p><p>
இன்றைய போராட்டத்தில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா
கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், மக்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.</p><p></p><h2>25ஆவது நாளை எட்டியுள்ள&nbsp;போராட்டம்</h2><p>
</p><p>
தமது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள கேப்பாப்பிலவு மக்கள்,
பல ஆண்டுகளாக அமைதியான ஜனநாயக வழிமுறைகளில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து
வருகின்றனர்.
</p><p>
இருப்பினும், தங்களது சொந்தக் காணிகளில் மீளக் குடியேறவும், விவசாயம் உள்ளிட்ட
வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாத நிலை தொடர்வதாக அவர்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56079074-57a0-4b4c-9b95-86122da5c8d4/26-6a5b3f72f2ed4.webp' /></p><p>
</p><p>
கேப்பாப்பிலவு பூர்வீகக் காணிகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு இதுவரை
நிரந்தரமான தீர்வு எட்டப்படாத நிலையில், தங்களது நில உரிமைகளை மீண்டும்
வலியுறுத்தும் நோக்கில் மக்கள் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை
ஆரம்பித்துள்ளனர்.</p><p>

கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக
வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. </p><p>

குறித்த காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் மீள
ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே இந்த தொடர் கவனயீர்ப்பு
போராட்டம் 25ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83536e47-07a5-4d1f-83f7-3de1d3beddef/26-6a5b3f7408ab0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T09:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 ஏக்கர் காணியை கையகப்படுத்திய இராணுவ அதிகாரி - அரசின் அசமந்தப் போக்கிற்கு எழும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/equal-rights-movement-media-conference-1784355157"></link>
            <id>https://tamilwin.com/article/equal-rights-movement-media-conference-1784355157</id>
            <summary type="text">ஒரு இராணுவ உயர் அதிகாரிக்காக பொதுமக்களுடைய 100 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திரானந்த டீ சில்வா தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு இராணுவ உயர் அதிகாரிக்காக பொதுமக்களுடைய 100 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திரானந்த டீ சில்வா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நேற்று(17.07.2026) இடம்பெற்ற சம உரிமை இயக்கத்தின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>காணி விடுவிப்பு</h2><p> குறிப்பாக முல்லைதீவு
மாவட்டம் - கேப்பாப்புலவு, யாழ்ப்பாணம் மாவட்டம் - பலாலி, வயாவிளான், மயிலிட்டி
பகுதிகளில் உள்ள காணிகள் இதுவரையில் உரிய மக்களிடம் கையளிக்கப்படவில்லை.</p><p>இந்த விடயம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் எதிர்கட்சிகளாக இருந்த போது,&nbsp; சுட்டிக்காட்டியவர்கள் இன்று அரசாங்கமாக மாறிய பொழுது கூறிய விடயங்களை அவர்கள் நிறைவேற்றவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f126984-9bd6-42d5-8251-13a8f7281da2/26-6a5b1a65069a5.webp' /></p><p>இவர்களின் இடதுசாரி கொள்கை என்பது பொய்யான
கொள்கையாகவே உள்ளது. இவர்களின் இடதுசாரி கொள்கையை வைத்துக்கொண்டு பொய்யாக
அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><p>ஒரு
இராணுவ உயர் அதிகாரிக்காக 100 ஏக்கர் பொதுமக்களுடைய காணியை வலிகாமம் - வடக்கு
பகுதியில் கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, உரிய காணி உரிமையாளருக்கு காணி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T08:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக மோசடி - பொலிஸாரின் தந்திரத்தில் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australia-job-man-arrested-for-defrauding-people-1784340216"></link>
            <id>https://tamilwin.com/article/australia-job-man-arrested-for-defrauding-people-1784340216</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை வெளிநாட்டு வேலைவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று முன்தினம் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடமிருந்து தலா 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை குறித்த நபர் பணம் பெற்றுள்ளார்.</p><p></p><p>
</p><h2><b>
பண மோசடி</b></h2><p>அதற்கமைய, இவரால் மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69f48b1b-7b8e-4b41-adee-d75edf4bb9d6/26-6a5b2e05d7e99.webp' /></p><p>குறித்த சந்தேக நபருக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
</p><p>
அவரை கைது செய்ய அதிகாரிகள் பலமுறை முயற்சி செய்தும், அவர் தொடர்ந்து அதிகாரிகளிடமிருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். </p><p>இறுதியாக, தந்திரமாக செயல்பட்ட அதிகாரிகள், வெளிநாட்டு வேலை தேவை என்று கூறி அவரைத் தொடர்புகொண்டு, அவிசாவளை நகரில் வைத்து பெரும் முயற்சிக்குப் பிறகு கைது செய்தனர்.</p><p></p><h3><b> வெளிநாட்டு வேலை</b></h3><p>கைது செய்யப்பட்ட நபர், இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் விற்பனை முகாமையாளராக பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1311285-1798-4e81-b22f-49229c3abf7d/26-6a5b2e0691122.webp' /></p><p>சந்தேகநபருக்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. </p><p>பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமமின்றி வெளிநாட்டு வேலைகளுக்காக ஆட்களைச் சேர்த்தல் மற்றும் பண மோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அவர், நேற்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T07:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் விலை உயர்வு தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரேரணை நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mullaitivu-fish-price-hike-motion-passed-1784357485"></link>
            <id>https://tamilwin.com/article/mullaitivu-fish-price-hike-motion-passed-1784357485</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த கூட்டமானது, நேற்று முன்தினம்(16.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>மீன் விலை உயர்வை கட்டுப்படுத்தல்</h2><p>
</p><p>இதன்போது, பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பல்வேறு
பிரச்சினைகள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதுடன், மக்களின்
நலனை கருத்தில் கொண்டு மீன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய
பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f49626f-e46c-4717-a176-dda1fb3047de/26-6a5b259396610.webp' /></p><p>கடல் வளம் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் கூட சாதாரண மக்கள் வாங்கக்கூடிய
மீன்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், கடற்றொழிலாளர்கள் குறைந்த
விலையில் விற்பனை செய்யும் மீன்கள் இடைத்தரகர்கள் மூலம் பல மடங்கு விலை
உயர்த்தப்பட்டு நுகர்வோரிடம் சென்றடைகிறது. இது கண்டிக்கத்தக்க விடயமாகவே காணப்படுகிறது.
</p><p>
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், பிரதேச சபைக்குட்பட்ட
பகுதிகளில் மீன் விற்பனையில் ஈடுபடும் நடமாடும் வியாபாரிகள் மற்றும் மாலை
நேரங்களில் வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்கள் கட்டாயமாக பிரதேச
சபையிடமிருந்து அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்ற பிரேரணை
அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p></p><h2>நுகர்வோர் பாதிப்பை கட்டுப்படுத்தல்</h2><p>
மேலும் மீன் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு
கடற்தொழில் அமைச்சர், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் கடற்தொழில்
சமாசங்களுக்கு கடிதம் அனுப்புவதற்கும் சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db31ae6e-0d4c-45fb-849a-dcfd02071def/26-6a5b2592e6125.webp' /></p><p>
</p><p>மேலும் சாதாரண மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் நியாயமான விலையில்
கடலுணவுகளை பெற்றுக்கொள்ளும் சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும்,
இடைத்தரகர்களின் காரணமாக மீன்களின் விலை சடுதியாக உயர்வதால் நுகர்வோர்
பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அத்துடன் முல்லைத்தீவு மட்டுமன்றி வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இதே பிரச்சினை காணப்படுவதால், நாடளாவிய
ரீதியில் நிலையான விலை கட்டுப்பாட்டு பொறிமுறையை அரசாங்கம் விரைவில்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கு.அகிலன் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T07:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-involved-drug-trade-has-been-arrested-1784359570"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-involved-drug-trade-has-been-arrested-1784359570</id>
            <summary type="text">நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் 3,820
மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் 3,820
மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p>

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபரின்
பணிப்புரைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட
சுற்றிவளைப்புகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>திடீர் சோதனை</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.பி.வி. கஸ்தூரி ஆராய்ச்சி
வழிகாட்டலிலும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. இப்னு அஸார்
நெறிப்படுத்தலில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
அம்பாறை மாவட்ட புலனாய்வு அதிகாரி ஏ.ஆர்.எம். பிர்தௌஸ் வழங்கிய இரகசியத்
தகவலொன்றின் அடிப்படையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி
பொலிஸ் பரிசோதகர் பி.பிரகலாதன் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர்
இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca41463-b7e8-4322-b481-524f4b12bf71/26-6a5b2d3f2ba84.webp' /></p><p>
</p><p>
இதன்போது, சந்தேகநபரின் வீட்டை முற்றுகையிட்டு பொலிஸார் நடத்திய திடீர்
சோதனையின் போதே, மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள்
கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் காவலில்
வைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T07:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்லைன் விளையாட்டுக்காக கடையை உடைத்து திருடிய சிறுவர்கள் கைது: விசாரணையில் சிக்கிய தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boys-arrested-for-breaking-into-a-shop-stealing-1784358542"></link>
            <id>https://tamilwin.com/article/boys-arrested-for-breaking-into-a-shop-stealing-1784358542</id>
            <summary type="text">கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து, ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடிய மாணவர்கள் இருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து, ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடிய மாணவர்கள் இருவர் 
 எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(17.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


14 வயது சிறுவர்கள் கைது</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கடந்த 4ஆம் திகதி குறித்த இரு மாணவர்களும், எப்பாவல நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள கைபேசிக் கடையை அதிகாலை நேரத்தில் உடைத்து தொலைபேசிகளை திருடிச் சென்றுள்ளனர்.</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தலவ நபாதவெவ மற்றும் எப்பாவல ரொட்டவெவ பகுதிகளில் வசிக்கும் 14 வயதுடைய மாணவர்கள் என்றும், அவர்கள் எப்பாவல, தெகல்ல பகுதியில் உள்ள உறைவிட பாடசாலையொன்றில் கல்வி கற்று வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cbf4c61-5dce-4c0a-a266-8c518ad65407/26-6a5b29c541807.webp' /></p><p> 

இந்தச் சம்பவம் தொடர்பான விவரங்களை தம்புட்டெகம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், சம்பந்தப்பட்ட கைபேசிகளின் EMI எண்கள் மற்றும் தொலைபேசி சமிக்ஞைகள் மூலம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

திருட்டு நடந்த நேரத்தில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள், தம்புட்டெகம பொலிஸ் பிரிவின் அதிகாரப்பூர்வ நாய் ஜானி மற்றும் கைரேகைப் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளின் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><h2>

10 இலட்சம் பெறுமதியான கைபேசிகள் மீட்பு</h2><p>
கைது செய்யப்பட்டபோது, ​​சந்தேக நபர்களிடமிருந்து ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள 6 திருடப்பட்ட ஸ்மார்ட் மொபைல் போன்களும், ரூ. 5,000 மதிப்புள்ள பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு கடைக்குச் சென்று பல நவீன மொபைல் போன்களின் விலைகளைப் பற்றி விசாரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c99e7f4-6fc4-4754-ba5a-ed36395f86f6/26-6a5b29c5e7d5c.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர், அவர் தனது தந்தையிடம் தனக்கு ஒரு மொபைல் போன் வாங்கித் தருமாறு கேட்டதாகவும், ஆனால் அவரது தந்தை அதற்கு விருப்பமின்மையை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அந்த மாணவர், மற்றொரு நண்பருடன் வந்து மொபைல் போன்களைத் திருடியுள்ளார். </p><p>

இவ்வாறு திருடப்பட்ட மொபைல் போன்களில் இரண்டைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக வைத்துக்கொண்டு, மற்ற நவீன மொபைல் போன்களைப் பிரிவெனாவைச் சேர்ந்த ஒரு தேரரருக்கும் அவரது தந்தைக்கும் மற்றும் பல மாணவர்களுக்கும் கொடுத்துள்ளார். </p><h2>

சிம் கார்ட் கொடுத்த தேரர்</h2><p>
கோயிலைச் சேர்ந்த தேரர் ஒருவருக்குச் சொந்தமான சிம் கார்டை, திருடப்பட்ட கைபேசியில் இந்த மாணவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் தங்களது கைபேசிகளைப் பயன்படுத்தி இணைய விளையாட்டு விளையாடி வந்ததாகவும், அந்த விளையாட்டுக்கு அடிமையானதன் காரணமாகவே இந்தத் திருட்டைச் செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c27a2c19-c545-46c8-ad49-fd13645c449a/26-6a5b29c69b714.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் திருடப்பட்ட கைபேசிகளும் இன்று(18.07.2026) தம்புட்டெகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். </p><p>

எப்பாவல பொலிஸ் அயலாரின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு அயலார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஒன்று இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T07:25:13+00:00</updated>
        </entry>
    </feed>
