<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-19T17:32:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: வெளிவராத பல உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sampanthan-itak-trinco-tamils-law-and-order-1784478894"></link>
            <id>https://tamilwin.com/article/sampanthan-itak-trinco-tamils-law-and-order-1784478894</id>
            <summary type="text">அப்பாவி தமிழர்களை காணி விவகாரத்திற்காக நீதிமன்றம் வரை கொண்டு சென்ற இரா.சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தார் என தமிழரசுக்கட்சி உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அப்பாவி தமிழர்களை காணி விவகாரத்திற்காக நீதிமன்றம் வரை கொண்டு சென்ற இரா.சம்பந்தன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருந்தார் என தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்ற கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.</p><p>லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு, தன்னைப் பொறுத்தவரையில் மறைந்த இரா.சம்பந்தன் திருகோணமலை மண்ணின் சாபக்கேடு எனவும் அவர் கூறினார்.</p><p>திருகோணமலை மாவட்ட மக்களினுடைய ஏகோபித்த தலைவராக சம்பந்தனை தமிழர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொண்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சம்பந்தன் எவ்வாறு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாமல் மௌனமாக இருந்தாரோ அதே போலவே தற்போதைய திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5_-ZdApAFhk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T17:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானாவில் 116 பேருடன் சென்ற பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-boat-carrying-people-capsizes-guyana-1784479653"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-boat-carrying-people-capsizes-guyana-1784479653</id>
            <summary type="text">தென் அமெரிக்க நாடான கயானாவின் கடற்கரைப் பகுதியில் 116 பயணிகள் மற்றும்
மாலுமிகளுடன் சென்ற எம்.வி. பரிமா என்ற படகு கடலில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்க நாடான கயானாவின் கடற்கரைப் பகுதியில் 116 பயணிகள் மற்றும்
மாலுமிகளுடன் சென்ற எம்.வி. பரிமா என்ற படகு கடலில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில், 50க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கயானாவின் தலைநகரான ஜார்ஜ்டவுனிலிருந்து போர்ட் கைடுமா நோக்கிச் சென்று
கொண்டிருந்த இந்த படகு, சனிக்கிழமை இரவு 11 மணியளவில் திடீரென விபத்தில்
சிக்கி உதவி கோரியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;துல்லியமான காரணங்கள்</h2><p>
</p><p>
இது குறித்து கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் கூறுகையில், இதுவரை 53 பேர்
பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், பகல் நேரத்தில் தேடுதல் பணிகள் தொடர்வதால்
மேலும் பலர் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e776a4c9-a102-41e0-9599-465dfa8615c6/26-6a5d0182181df.webp' /></p><p>

இந்த மீட்புப் பணியில் கயானாவின் கடலோர காவல்படை மற்றும் தனியார் கப்பல்கள்
தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுஆன் எட்கில்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விபத்துக்குள்ளான படகில் சுமார் 250 லைஃப் ஜாக்கெட்டுகள், எட்டு உயிர்காப்பு
படகுகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் இருந்ததாகக் கூறிய அவர்,
மீட்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் சம்பவ
இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><p>
எனினும், இந்த படகு விபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான துல்லியமான காரணங்கள்
இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T16:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு ரணில் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-and-dignitaries-tributec-t-wickramaratne-1784476051"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-and-dignitaries-tributec-t-wickramaratne-1784476051</id>
            <summary type="text">இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள்
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானதையடுத்து, அவரின் பூதவுடலுக்கு
நாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள்
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானதையடுத்து, அவரின் பூதவுடலுக்கு
நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் உயர்மட்ட
அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
</p><p>
கொழும்பு 08, பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடலுக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இன்று(18) நேரடியாக வருகை தந்து தமது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
</p><p>
மலர்ச்சாலைக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சி.டி.
விக்கிரமரத்னவின் பூதவுடலுக்கு மலரஞ்சலி செலுத்தியமையுடன், அன்னாரது
குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.</p><p></p><h2>இறுதி மரியாதை</h2><p>

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில், நாட்டின் பாதுகாப்பு
ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், பொலிஸ்மா அதிபராக இருந்த சி.டி.
விக்ரமரத்னவுக்குப் பலமுறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>

இதேபோல், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மலர்ச்சாலைக்கு
வருகை தந்து, நாட்டின் பாதுகாப்புத் துறையில் சி.டி. விக்ரமரத்ன ஆற்றிய
காத்திரமான சேவைகளை நினைவு கூர்ந்து இறுதி மரியாதை செலுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/423cb168-c6f1-461e-a4da-972749c04edc/26-6a5cfb5497601.webp' /></p><p>
</p><p>
கடந்த 2020ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி. விக்ரமரத்ன,
நாட்டின் நெருக்கடியான சூழல்களின் போது திறம்படச் செயற்பட்ட அதிகாரியாகப்
போற்றப்படுகின்றார். </p><p>அன்னாரின் இறுதிச் சடங்குகள், பொலிஸ் உயர் அதிகாரிகள்,
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பங்கேற்புடன், உத்தியோகபூர்வ பொலிஸ்
மரியாதைகளுடன் நாளை(20) நடைபெறவுள்ளன.</p><p>

இவரது மறைவையொட்டி நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல
முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்தும் மலர்ச்சாலைக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T16:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம்..! குடும்பத்தார் வெளியிட்ட தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-controversial-death-of-wickramaratne-igp-1784474449"></link>
            <id>https://tamilwin.com/article/the-controversial-death-of-wickramaratne-igp-1784474449</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என அவரது நெருங்கியவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என அவரது நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

இது குறித்த இறுதி நீதிமருத்துவ அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது.</p><p></p><h2>துயரச் சம்பவம்</h2><p>

கடந்த வெள்ளிக்கிழமை காலை, தனது மனைவி பிரியங்கி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுடன் வழக்கமான காலை நடைப்பயிற்சிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, 63 வயதான ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற தகவல்&nbsp; வெளியானது.</p><p>

சம்பவம் நிகழ்ந்தபோது விளையாட்டு உடையும் வெள்ளை நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்த அவர், மனைவி காலணியை அணிந்து முடிக்கும் வரை வீட்டின் முன்புறத்தில் அமர்ந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58fc975b-890f-4d93-80f7-1914540cc413/26-6a5cee842ed6f.webp' /></p><p> </p><p>

அப்போது பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்த நவீன ரக ரிவால்வரை பார்த்து அதை பரிசோதிக்க விரும்பியதாகவும், அதில் குண்டுகள் இல்லையா என்று நகைச்சுவையாகக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியின் மகசினை அகற்றி அவரிடம் கொடுத்ததாகவும், பின்னர் தண்ணீர் எடுக்க சமையலறைக்குச் சென்றபோது திடீரென ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>உடற்கூறு பரிசோதனை</h2><p> 

மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் உடனடியாக முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான உடற்கூறு பரிசோதனை அதே நாளில் நடத்தப்பட்டு, மேலதிக ஆய்வுகளுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f967121-564f-4292-bbac-18ddf1d1e9ba/26-6a5cee84d834e.webp' /></p><p> </p><p>

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையில் மரணத்திற்கான துல்லியமான காரணம் அடங்கிய நீதிமருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் இது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தாலும், பின்னர் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் அந்தக் குறிப்பு நீக்கப்பட்டு, துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்தார் என்று மட்டும் குறிப்பிடப்பட்டது.</p><p>

தற்போது இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்கள் இந்த மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. 

வீட்டின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p>ஆரம்பகட்ட விசாரணைகளில், வீட்டுக்குள் யாரும் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமருத்துவ நிபுணர்களின் ஆரம்பக் கணிப்பின்படி, பொதுவாக துப்பாக்கி மூலம் நிகழும் தற்கொலைச் சம்பவங்களில் தலையில் காயம் ஏற்படுவது வழக்கம்.</p><h2>&nbsp;சந்தன விக்ரமரத்னவின் மரணம்</h2><p>ஆனால் இச்சம்பவத்தில் மார்பில் குண்டு பாய்ந்திருப்பது விசாரணையில் முக்கிய கவனத்துக்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cc2e745-a336-48c7-a9b9-5449ac559aa9/26-6a5cee8589206.webp' /></p><p>

 எனினும் இதன் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியாது என்றும், முழுமையான நீதிமருத்துவ மற்றும் பாலிஸ்டிக் (Ballistic) ஆய்வு அறிக்கைகளின் பின்னரே இறுதி முடிவு எடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><p>
</p><p>
இதற்கிடையில், சந்தன விக்ரமரத்ன தவறான முடிவெடுத்துகொண்டார் என்ற கருத்தை அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

 மரணத்திற்கு முந்தைய நாட்களிலும் அவர் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.</p><p>கண் பரிசோதனைக்கான நேரத்தை முன்பதிவு செய்திருந்ததோடு, நண்பரைச் சந்திக்கவும், ஜூலை 31ஆம் திகதி நடைபெறவிருந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தார்.</p><p>சம்பவம் நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்புகூட தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் "காலை வணக்கம்" செய்தி அனுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
மேலும், தனது இளைய மகனின் குடும்பப் பிரச்சினையால் அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களையும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.</p><p> 

மகன் கைது செய்யப்பட்டதாக அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக வெளியான தகவல்களும் முற்றிலும் பொய்யானவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>அதிர்ச்சியூட்டும் தகவல்கள்</h2><p>

ஏழு மாத வயதுடைய பேத்தியை மிகவும் நேசித்த அவர், அவளை பள்ளிக்குச் செல்லும் நாளைக் காண ஆவலுடன் இருந்ததாகவும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் குறித்த நூல் ஒன்றை எழுதி வந்ததாகவும், அதன் வரைவை நண்பர்களிடம் கருத்துக்காக அனுப்பியிருந்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.</p><p>

இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அவர் அளித்த சாட்சியத்துடன் இந்த மரணத்தை தொடர்புபடுத்தி ஊகங்கள் வெளியானாலும், மூத்த பொலிஸ் அதிகாரிகள் அவற்றை நிராகரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc591b30-a6c5-4743-8354-9dbfba953e55/26-6a5cee865e783.webp' /></p><p>அந்த வாக்குமூலம் ஏற்கனவே நீதிமன்றத்தில் பதிவாகியிருந்ததுடன், அதில் புதிய அல்லது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
சந்தன விக்ரமரத்ன 2020 நவம்பர் 25ஆம் திகதி இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். மூன்று முறை சேவை நீட்டிப்பு பெற்ற அவர், 2023ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.</p><p>

2019ஆம் ஆண்டு முதல் நீண்டகாலம் பதில் பொலிஸ் மா அதிபராகவும் பணியாற்றிய அவர், இலங்கை வரலாற்றில் மிக நீண்ட காலம் பதில் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த அதிகாரியாகவும் பதிவாகியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-19T16:06:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாட்சிகளை அகற்றும் முயற்சி இது..! விக்ரமரத்னவின் மரணம் குறித்து இடதுசாரி மையம் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/this-is-an-attempt-to-eliminate-witnesses-1784475769"></link>
            <id>https://tamilwin.com/article/this-is-an-attempt-to-eliminate-witnesses-1784475769</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் சாதாரணமானதாகத்
தெரியவில்லை என்றும், அதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகத் தமக்குத் தீவிர
சந்தேகம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் சாதாரணமானதாகத்
தெரியவில்லை என்றும், அதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகத் தமக்குத் தீவிர
சந்தேகம் எழுந்துள்ளது என்று இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா
தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் இன்று(19) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>டி.என்.ஏ. பரிசோதனை</h2><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c762d7a-5818-4d0f-a682-84bfbc2af531/26-6a5cf2387e370.webp' /></p><p>
"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பல தீர்க்கமான சாட்சியங்களை
முன்னாள் பொலிஸ்மா அதிபர் வழங்கியிருந்தார். </p><p>குறிப்பாக, 'சாரா ஜாஸ்மின்'
என்பவரின் டி.என்.ஏ. பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டாம் எனத் தமக்குக்
கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்திருந்தார்.
</p><p>இத்தகைய பாரதூரமான விடயங்களை வெளிப்படுத்திய சில நாள்களிலேயே அவர்
உயிரிழந்திருக்கின்றமை பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தருகின்றது.

கடந்த காலங்களிலும் சாட்சியங்களை வழங்கிய நபர்கள் தற்கொலை செய்துகொண்ட
சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>&nbsp;சி.டி. விக்ரமரத்னவின் மரணம்&nbsp;</h2><p> இந்த வரிசையில் இவருடைய மரணத்தையும் ஒரு பாரதூரமான
பிரச்சினையாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb21d31d-9246-4215-820f-f556874d9a9b/26-6a5cf2394fd42.webp' /></p><p>
</p><p>
இந்த நாட்டின் நிழல் அரசின் ஆதிக்கம் இன்னும் தொடர்கின்றது என்பதையும்,
சாட்சிகளைத் திட்டமிட்டு அகற்றும் வேலைத்திட்டம் ஒன்று
முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகத்தையும் இது வலுப்படுத்துகின்றது.

எனவே, இந்த மரணம் குறித்து மிக விரிவான மற்றும் முறையான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p> மறுபுறம், ஒரு குறிப்பிட்ட குடும்பத்துடன்
தொடர்புடைய ஊழல் நிறைந்த இரு ஊடக நிறுவனங்கள், இந்த மரணத்தை அவசரமாகத் தற்கொலை
எனச் சித்தரிக்க முயற்சித்தன.</p><p> அவ்வாறான ஊடகங்களின் இத்தகைய செயற்பாடே, எமது
சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T15:50:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் படகு விபத்து: தேடும் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-accident-in-indonesia-search-operations-1784474760"></link>
            <id>https://tamilwin.com/article/boat-accident-in-indonesia-search-operations-1784474760</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று
கடலில் மூழ்கியதில், மூன்று நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 வயது
சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று
கடலில் மூழ்கியதில், மூன்று நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 வயது
சிறுமி உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக
நடைபெற்று வருகிறது.</p><p>

சுமார் 78 பயணிகள் மற்றும் மாலுமிகளுடன் 'கே.எம். நுருல் சல்சா' என்ற படகு
கடந்த புதன்கிழமை புறப்பட்டுச் சென்றபோது, திடீரென இன்ஜின் பழுதடைந்து கடலில்
மூழ்கி விபத்துக்குள்ளானது.</p><p></p><h2>விபத்து</h2><p>
</p><p>
விபத்து நேரிட்டபோது, படகில் இருந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த மீன்பிடி
வலைகள், கார்க் துண்டுகள் மற்றும் கேன்களைக் கயிறுகளால் ஒன்றாகக் கட்டி, அதன்
மீது ஏறி உயிர் பிழைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd194162-e0c6-4786-a08b-3a32df8ed40b/26-6a5ceec55668c.webp' /></p><p>&nbsp;மாலை இருள் சூழ்வதற்கு முன்னதாக, கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு
ஆண், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகிய 5 பேரையும் உள்ளூர் மீன்பிடி
படகு ஒன்று கண்டறிந்து மீட்டது.
</p><p>
பலத்த காற்றின் காரணமாக தாங்கள் மற்ற குழுவினரிடமிருந்து பிரிந்துவிட்டதாக
அவர்கள் மீட்புக் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தேடும் பணி</h2><p>

இந்த விபத்தில் இதுவரை 47 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/034bb6c1-66b5-4252-aefc-a44ebef4e1a9/26-6a5ceec6063e1.webp' /></p><p>

கடலில் மாயமான எஞ்சியவர்களைத் தேடும் பணியில் ஐந்து பெரிய கப்பல்கள், ஒரு
உளவு விமானம் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
</p><p>
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு போக்குவரத்து
பொதுவான ஒன்றாக இருந்தாலும், போதிய பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அளவுக்கு
அதிகமான பயணிகளை ஏற்றுவது போன்ற காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி
நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T15:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-development-electricity-issues-mannar-1784471793"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-development-electricity-issues-mannar-1784471793</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சாரம் தொடர்பாக ஆராயும் விசேட
கலந்துரையாடல் இடம்பெற்றது.மன்னார் மாவட்டச்
செயலகத்தில் இன்றைய தினம் (19)வல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சாரம் தொடர்பாக ஆராயும் விசேட
கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>மன்னார் மாவட்டச்
செயலகத்தில் இன்றைய தினம் (19)வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம்
தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>இந்தக் கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டத்தின் மின்சார வசதிகள், வெள்ளத்
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல்வேறு
முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.</p><p></p><h2>கலந்துரையாடல்</h2><p>

குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் மின்சார அபாயங்களைத்
தடுக்கும் வகையில் மின் இணைப்புகளை பாதுகாப்பான முறையில் உயர்த்தி அமைப்பது,
சிலாவத்துறை, முருங்கன் மல்வத்து ஓயா பாலம் அருகில் உள்ள மின் கேபிள் களின்
பாதுகாப்பை மேம்படுத்துதல், தள்ளாடி கடற்கரை வீதியில் வீதி விளக்குகளை
அமைப்பது , மடு பிரதேச செயலகப் பிரிவின் சோதி நகர் பகுதியில் மின்சார வசதி
அற்ற குடும்பங்களுக்கு இலவச கிராமப்புற மின் மயமாக்கல் திட்டத்தின் கீழ்
மின்சார இணைப்புகளை வழங்குவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
</p><p>
மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட மறுசீரமைக்க தக்க எரிசக்தி திட்டங்கள்
தொடர்பாகவும், மன்னார் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிறுவனங்களின்
சமூகப் பொறுப்புணர்வு திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f9b52f-7b60-46a7-8f3f-634fb10cf685/26-6a5ce8b717b8f.webp' /></p><p>இருப்பினும், மன்னார் தீவுக்கு வெளியேயான கொண்டாச்சி, முள்ளிக்குளம் போன்ற
பகுதிகளில் தற்போது புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டு வருகின்றன.இலங்கையின்
கனிம வளங்கள் தொடர்பாக ஒரு புதிய கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், அப்பகுதி மக்களுடன் கலந்தாலோசித்து, அந்த விவாதங்களின் முடிவுகளின்
அடிப்படையில் இறுதி முடிவு எட்டப்படும்.என வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது
இல்யாஸ் முஹம்மது அர்கம் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T15:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவோடு இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்..! மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை இலக்கு வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airstrikes-nuclear-power-plant-water-desalination-1784471212"></link>
            <id>https://tamilwin.com/article/airstrikes-nuclear-power-plant-water-desalination-1784471212</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும்
கடுமையான போர் மூண்டுள்ளது.

கடந்த ஆறு நாட்களாக இருதரப்பும் மாறி மாறி ஏவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும்
கடுமையான போர் மூண்டுள்ளது.</p><p>

கடந்த ஆறு நாட்களாக இருதரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும்
நிலையில், ஈரானில் கட்டுமானப் பணியில் உள்ள அணுமின் நிலையம் ஒன்றின் மீது
அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>

இதற்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் கடல்நீர்
சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாகத்
தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வான்வழித் தாக்குதல்</h2><p>
</p><p>
முன்னதாக, ஜோர்டானில் நடத்தப்பட்ட ஈரான் தாக்குதலில் இரண்டு அமெரிக்க இராணுவ
வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த
புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64ff9232-318c-4d79-97c0-35403162e448/26-6a5ce26cce1de.webp' /></p><p>
</p><p>
வொஷிங்டனில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி, அமெரிக்க மத்திய கட்டளை
அமைப்பு ஈரானின் கடலோரக் கண்காணிப்பு மையங்கள், வான் பாதுகாப்பு வசதிகள்
மற்றும் ஏவுகணை-ட்ரோன் சேமிப்புக் கிடங்குகளை இலக்காகக் கொண்டு நடத்தியுள்ளது.
</p><p>
ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், அதற்குப் பதிலடியாக
வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்பதால்,
அமெரிக்கா தனது இலக்குகளை இராணுவ நிலைகளோடு சுருக்கிக் கொண்டுள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணைப் பகுதி</h2><p>
</p><p>
இதற்கிடையே, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில்
பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/279d4237-6ca2-4655-9e6e-50a475741f0b/26-6a5ce26daa007.webp' /></p><p>
</p><p>
மேலும், ஜோர்தானின் அகாபா நகரிலுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகப்
பகுதிகளில் "குறிப்பிட்ட மற்றும் நம்பகமான அச்சுறுத்தல்" இருப்பதாகக் கூறி,
அமெரிக்கக் குடிமக்கள் அங்குச் செல்ல வேண்டாம் என ஜோர்தானில் உள்ள அமெரிக்கத்
தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
வளைகுடா நாடுகளின் அழுத்தம் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த
பிராந்தியப் போர் மேலும் தீவிரமடைந்து வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை
ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T14:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் வாங்கச் சென்ற இளைஞர் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-arrested-for-stealing-motorcycle-batticaloa-1784471910"></link>
            <id>https://tamilwin.com/article/youth-arrested-for-stealing-motorcycle-batticaloa-1784471910</id>
            <summary type="text">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை ஓட்டிப் பார்ப்பதாக கூறி, திருடிச் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை ஓட்டிப் பார்ப்பதாக கூறி, திருடிச் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த கைது நடவடிக்கை இன்று(19.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


27 வயது இளைஞர் கைது</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

காத்தான்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை
செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்ற இளைஞர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாக உரிமையாளரிடம் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47cebbfd-e3c1-41cc-a2e8-044a2150cc36/26-6a5ce1b374b87.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் என உரிமையாளரிடம் அனுமதி வாங்கிய பின்னர், அங்கிருந்து எடுத்துச் சென்று மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிஞ்சை விளக்கு அருகில் நிறுத்தி விட்டு, இன்னொரு நபருக்கு மோட்டார் சைக்கிளை கைமாற்ற முயன்றுள்ளார்.</p><p> 

இதனையடுத்து, மட்டக்களப்பு பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் இவர் செய்த 8 குற்றச் செயல்களும் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T14:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட குவைத் பிரதமர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuwaiti-pm-visits-those-injured-in-iran-attack-1784469941"></link>
            <id>https://tamilwin.com/article/kuwaiti-pm-visits-those-injured-in-iran-attack-1784469941</id>
            <summary type="text">வளைகுடா நாடான குவைத் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன்
தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தாக்குதலில் காயமடைந்து அல்-அதான்
மருத்துவமனையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளைகுடா நாடான குவைத் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன்
தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தாக்குதலில் காயமடைந்து அல்-அதான்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை குவைத் பிரதமர் ஷேக் அகமது
அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
</p><p>
இந்த சந்திப்பின் போது பிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சர் அகமது அப்துல்வஹாப்
அல்-அவாதியும் உடனிருந்தார்.</p><p>

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் உடல் நலம் குறித்து
கேட்டறிந்த பிரதமர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளின்
தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.</p><p></p><h2>மருத்துவ உதவி</h2><p>

மேலும், காயமடைந்தவர்களின் நிலைமையை அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக்
கண்காணிக்கும் என்றும், அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும்
வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff016ebf-fc16-4670-8f51-15843e657660/26-6a5cdfd80ee0e.webp' /></p><p>
</p><p>
கடந்த சில நாட்களாக குவைத்தை இலக்காகக் கொண்டு ஈரான் தீவிர வான்வழித்
தாக்குதல்களை நடத்தி வரும் இக்கட்டான சூழ்நிலையில் பிரதமரின் இந்த மருத்துவமனை
வருகை அமைந்துள்ளது.&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T14:32:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டார் பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chathuranga-abayasinghe-visited-kilinochchi-today-1784470433"></link>
            <id>https://tamilwin.com/article/chathuranga-abayasinghe-visited-kilinochchi-today-1784470433</id>
            <summary type="text">கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க
இன்று19.07.2026 கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

தேசிய உப்பு உற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க
இன்று19.07.2026 கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.</p><p>

தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் கீழுள்ள ஆனையிறவு உப்பு உற்பத்தி
நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் உப்பு உற்பத்தி செயற்பாடுகளை
பார்வையிட்டார்.</p><h2>தொழிற்சாலைக்கு விஜயம்</h2><p>
</p><p>
தொடர்ந்து பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு விஜயம்
மேற்கொண்ட பிரதியமைச்சர் இரசாயன தொழிற்சாலையின் கட்டுமானப்பணிகளை
பார்வையிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bbd9f2d-59a0-4b06-837c-ad5d77c83d3c/26-6a5cdd86cc146.webp' /></p><p>
</p><p>
பிரதியமைச்சரோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் தலைவர்
சதானந்தன் நேசராஜன், தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சிவசோதி
சிவசங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7da1b6d1-f8ed-46fa-ac0f-5f51101a1cf9/26-6a5cdd87ac922.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12792705-5531-48fc-bb94-72357c6f2fd0/26-6a5cdd88ab886.webp' /></p>]]></content>
            <updated>2026-07-19T14:22:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகாபா விமான நிலையத்திற்கு செல்ல தடை - அமெரிக்கர்களுக்கு ஜோர்தான் அரசு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aqaba-airport-banned-1784470751"></link>
            <id>https://tamilwin.com/article/aqaba-airport-banned-1784470751</id>
            <summary type="text">ஜோர்தானின் கடற்கரை நகரமான அகாபாவில் உள்ள விமான நிலையம் மற்றும்
துறைமுகத்திற்கு அமெரிக்க குடிமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அமெரிக்க
தூதரகம் எச்சரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்தானின் கடற்கரை நகரமான அகாபாவில் உள்ள விமான நிலையம் மற்றும்
துறைமுகத்திற்கு அமெரிக்க குடிமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அமெரிக்க
தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அங்கு எந்தவித அச்சுறுத்தலும்
இல்லை என்று ஜோர்தான் அரசு தெரிவித்துள்ளது.
</p><p>
இதுகுறித்து அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>


 ஜோர்தான் அரசு விளக்கம்</h2><p>
அகாபா விமான நிலையமும்
துறைமுகமும் வழக்கம் போன்று இயங்கி வருவதாகவும், அந்த இரு இடங்களில் இருந்து வெளியேறுமாறும் ஜோர்தான் அதிகாரிகள் எந்தவொரு "வெளியேற்ற உத்தரவையும்
பிறப்பிக்கவில்லை" என அரசு செய்தி தொடர்பாளர் முகமது அல்-மொமானி
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a99697-07c8-48c0-9d15-0daca33dd364/26-6a5cdce16bfe4.webp' /></p><p>
</p><p>
மேலும், கடந்த சில மணிநேரங்களில் சம்பந்தப்பட்ட ஜோர்தான் அதிகாரிகளால்
எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்களும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். </p><p>


இதேவேளை, அம்மானில் உள்ள அமெரிக்க தூதரகம், "குறிப்பிட்ட மற்றும் நம்பகமான
அச்சுறுத்தல்" இருப்பதாகக் கூறி, அமெரிக்க குடிமக்கள் அந்த விமான நிலையம்
மற்றும் துறைமுகப் பகுதிகளிலிருந்து தள்ளி இருக்குமாறு எச்சரிக்கை அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T14:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 ஆண்டுகளாக காணிகளை இழந்த வலி.வடக்கு மக்கள்: 5வது வாரமாக தொடரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palaly-protest-today-1784468364"></link>
            <id>https://tamilwin.com/article/palaly-protest-today-1784468364</id>
            <summary type="text">வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் பலாலி சந்தியில் இன்று (19) ஐந்தாவது வாரமாகவும் தொடர் கவனயீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் பலாலி சந்தியில் இன்று (19) ஐந்தாவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>

கடந்த 36 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளை இழந்து வாழ்ந்து வரும் மக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது நிலங்களை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><h2>தொடரும் போராட்டம்</h2><p>
</p><p>
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது காணிகளில் தற்போது இராணுவம் விவசாய நடவடிக்கைகளையும் வர்த்தக நிலையங்களையும் நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dbeb96f-e648-4bc6-99da-16a94f9c0ba1/26-6a5cd7eabe530.webp' /></p><p> </p><p>அதேவேளை, உண்மையான உரிமையாளர்களான தாங்கள் நீண்ட காலமாக வீடுகளும் காணிகளும் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
</p><p>
எனவே, தங்களது காணிகளையும் வீடுகளையும் உடனடியாக விடுவித்து மீளக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:58:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி அகழாய்வு பணிகள்: அமர்ந்த நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-work-at-the-semmani-human-burial-site-1784467794"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-work-at-the-semmani-human-burial-site-1784467794</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள்
அகழாய்வு பணிகள் இன்று(19.7.2026) நீதிமன்றத்தின் கண்காணிப்பில்
முன்னெடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள்
அகழாய்வு பணிகள் இன்று(19.7.2026) நீதிமன்றத்தின் கண்காணிப்பில்
முன்னெடுக்கப்பட்டன.</p><p>

இன்றைய அகழாய்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு
அடையாளம் காணப்பட்டன.</p><p>

இதன்மூலம், செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446
மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 434
மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>அகழாய்வு பணிகள்</h2><p>
</p><p>
மேலும், இன்று 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த
நிலையில் புதைக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/672c1bed-9713-499b-8029-86100b506942/26-6a5cd60b1145c.webp' /></p><p> கடந்த ஆண்டு இடம்பெற்ற
2ஆம் கட்ட அகழாய்விலும் இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித
எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில்
புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்படுவது இது இரண்டாவது
சந்தர்ப்பமாகும்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:51:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - நல்லதண்ணீர் வீதி புனரமைப்புப் பணி ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/titwah-damaged-hatton-nallathanniya-road-restored-1784465317"></link>
            <id>https://tamilwin.com/article/titwah-damaged-hatton-nallathanniya-road-restored-1784465317</id>
            <summary type="text">டித்வா அனர்த்தத்தால் கடுமையாக சேதமடைந்த ஹட்டன் - நல்லதண்ணி பிரதான
வீதியை முழுமையாக புனரமைக்கும் பணிகள் இன்று(19.07.2026) உத்தியோகபூர்வமாக
ஆரம்பிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>டித்வா அனர்த்தத்தால் கடுமையாக சேதமடைந்த ஹட்டன் - நல்லதண்ணி பிரதான
வீதியை முழுமையாக புனரமைக்கும் பணிகள் இன்று(19.07.2026) உத்தியோகபூர்வமாக
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத்
தலைவருமான மஞ்சுளி சுரவீர தலைமையில், மஸ்கெலியா மற்றும் நோர்வூட் பகுதிகளில்
இந்தப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>87 மில்லியன் ரூபாய் நிதி&nbsp;</h2><p>
</p><p>
இந்தத் திட்டத்திற்காக சுமார் 87 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32b05a47-c3dc-4bb7-8c32-9832f9b380b4/26-6a5ccc67158e5.webp' /></p><p> </p><p>

அந்த நிதியின் மூலம் டித்வா காரணமாக சேதமடைந்த
மதகுகள், வீதியோரப் பாதுகாப்புக் கட்டமைப்புகள், பக்கச் சுவர்கள் மற்றும்
பாதுகாப்புச் சுவர்கள் என்பன முன்னைய நிலையை விட உறுதியான மற்றும் தரமான
முறையில் மீளமைக்கப்படவுள்ளன.
</p><p>அத்துடன், ஹட்டன் - நல்லதண்ணி பிரதான வீதியில் சுமார் 16 கிலோமீட்டர்
நீளத்திற்கு கார்பெட்&nbsp; வீதி அமைக்கும் பணிகளும் தற்போது
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வீதி புனரமைப்புப் பணி</h2><p>
</p><p>
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுளி சுரவீர,
</p><p>
மக்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த அபிவிருத்தித்
திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1ee6c9f-4825-43b5-a277-e60cdbc36f41/26-6a5ccc6829806.webp' /></p><p>

மேலும், இந்தப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கும்,
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
</p><p>
அத்துடன், மக்கள் எதிர்பார்த்திருந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும்
கட்டம் கட்டமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உறுதியுடன் செயல்பட்டு
வருகிறது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:50:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவாலயங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – கர்தினால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-not-intrested-in-gods-1784455630"></link>
            <id>https://tamilwin.com/article/people-not-intrested-in-gods-1784455630</id>
            <summary type="text">உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளில் கூட தற்பொழுது தேவாலயங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளில் கூட தற்பொழுது தேவாலயங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போதைய மனித சமூகத்தில் சமய மற்றும் ஆன்மீக வாழ்க்கை மீதான ஆர்வம் வேகமாக குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் வார இறுதி நாட்களில் தேவாலயங்களுக்கு வருவதற்குப் பதிலாக, பல்வேறு பொழுதுபோக்குகள் மற்றும் வினோத நடவடிக்கைகளுக்காக அதிக நேரத்தை செலவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0db8166-cc94-4df6-8478-6ed828d63302/26-6a5ca1cfbf171.webp' /></p><p>
</p><p>ஐரோப்பாவில் உள்ள பிரம்மாண்டமான பசிலிக்காக்கள் மற்றும் தேவாலயங்கள் இன்று வெற்று இடங்களாக மாறியுள்ளன எனவும், அதற்கு பதிலாக விளையாட்டு மைதானங்களும் பொழுதுபோக்கு மையங்களும் மக்களால் நிரம்பியுள்ளன எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
</p><p>இறைவன் மீதான நம்பிக்கை சிதைவடைந்துள்ளதால், மனிதன் தற்காலிக திருப்தியையும் பௌதீக வளங்களையும் சேகரிப்பதன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறான் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மனிதநேயத்தின் உன்னத குணங்களை மறந்து, உடல் ரீதியான தேவைகளை மட்டுமே சிந்திக்கும் ஒரு சமூகம் உருவாகி வருவதாகவும், இவ்வாறானதொரு பின்னணியில் ஆன்மீக வாழ்க்கைக்கு மிகக் குறைந்த இடமே கிடைத்துள்ளதாகவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T13:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசில் வீழ்ச்சிக் காணும் விவசாயம்..! திலித் ஜயவீர எம்.பி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dilith-govt-responsible-for-farmers-decline-1784461109"></link>
            <id>https://tamilwin.com/article/dilith-govt-responsible-for-farmers-decline-1784461109</id>
            <summary type="text">எமது நாட்டின் முன்னோடியாக இருக்கும் விவசாயத்தை அநுர அரசு சட்டவிரோதம் எனக் கூறி, பாரம்பரியத்தைச் சீரழிக்க முற்படுகின்றது என சர்வஜன அதிகாரம் கட்சியின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது நாட்டின் முன்னோடியாக இருக்கும் விவசாயத்தை அநுர அரசு சட்டவிரோதம் எனக் கூறி, பாரம்பரியத்தைச் சீரழிக்க முற்படுகின்றது என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.</p><p>அம்பாறை - தெஹியத்தகண்டிய பிரதேச சபை மைதானத்தில் நேற்று(18.07.2026) இடம்பெற்ற “விவசாயிகளின் பேரணி - 2026” மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விவசாயிகளின் வீழ்ச்சி</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>நாட்டில் நமக்கென்று தனித்துவமான கலாசாரம் உள்ளது. உலகளாவிய மற்றும்
பிராந்திய ரீதியில் நாம் முன்னேற்றமடைய வேண்டுமாயின், எமது கலாசாரத்தை
அடித்தளமாகக் கொண்டே செயற்பட வேண்டும்.</p><p> உலகில் எந்தவொரு நாடும் தனது
கலாசாரத்தைச் சீரழித்து முன்னேற்றமடைந்ததில்லை என்பதை அரசு உணர வேண்டும்.

இன்றைய விவசாயிகள் பெரும் நட்டங்களைச் சந்தித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe1e8bb5-0dfb-4b2e-94b6-1a472664a12f/26-6a5cd32fc58ce.webp' /></p><p> </p><p>நகைகளை அடகு
வைத்தும், காணிகளை அடகு வைத்தும், உறவினர்களிடம் கடன் பெற்றும் வாழ்வாதாரத்தை
நடத்தி வருகின்றனர்.</p><p> விவசாயம் என்பது தங்களின் கடமை என்று கருதுவதாலேயே இந்தத்
தொழிலில் அவர்கள் இன்றும் நிலைத்திருக்கின்றனர். விவசாயிகளை மீண்டும் வீழ்ச்சியடையாத வகையில் கட்டியெழுப்புவதற்கு “தொழில்முனைவு” அணுகுமுறை அவசியம்.</p><p> சர்வஜன அதிகாரம் என்ற ரீதியில்,
விவசாயிகளுக்கு மீண்டும் இவ்வாறானதொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படாதவாறு முறையான
தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் 600 தென்னம் பிள்ளைகள் திருட்டு - விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-agricultural-service-in-vaiyaru-area-1784463629"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-agricultural-service-in-vaiyaru-area-1784463629</id>
            <summary type="text">கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் உள்ள கமநல சேவை நிலையத்தினால் கடந்த
2025 ஆம் ஆண்டு “பிடியளவு கமநிலத்திற்கு“ தேசிய வேலை திட்டத்தின் கீழ் விவசாய
அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் உள்ள கமநல சேவை நிலையத்தினால் கடந்த
2025 ஆம் ஆண்டு “பிடியளவு கமநிலத்திற்கு“ தேசிய வேலை திட்டத்தின் கீழ் விவசாய
அமைச்சர் கே. டி. லால்காந்த பங்குபற்றுதலுடன் நடுகை செய்யப்பட்ட
600 தென்னம்பிள்ளைகள் காணாமல் போயுள்ளதுடன் தென்னங்கண்றுகள்
நடுகைசெய்யப்பட்ட நிலம் சிறுவர்களின் விளையாட்டு திடலாக மாறியுள்ளது.</p><p>


இந்த தேசிய வேலை திட்டத்தின் ஆரம்ப
நிகழ்வு பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p><h2>தென்னைப்பயிர் செய்கை</h2><p>


இதன் போது தென்னைப்பயிர் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தென்னை அபிவிருத்தி
சபையிடமிருந்து 600 தென்னம் பிள்ளைகளை பெற்று கமநலசேவை நிலையத்தினால் தெரிவு செய்யப்பட்ட தனியொரு பயனாளிக்கு 225 தென்னைகளும் இரண்டு பயனாளிகளுக்கு தலா 150 தென்னைகள் வீதமும்
மூன்று பயனாளிகளுக்கு தலா 20 பிள்ளைகளும் ஒரு பயனாளிக்கு 15 தென்னைகளும் என
600 பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f1d2098-a340-4741-8dd5-04c20466bac6/26-6a5cc40b49169.webp' /></p><p>அத்துடன், அன்றைய தினத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட
நிதியின் கீழ் ஐந்து பயனாளிகளுக்கு தரிசான நிலங்களை துப்புரவு செய்து
நிலக்கடலை உற்பத்தி செய்வதற்காக நிலக்கடலை மற்றும் நடுகை இயந்திரங்கள் என்பன
வழங்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-19T13:40:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உயரும் முட்டை விலை - புதிய விலை நாளை முதல் நடைமுறையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/egg-prices-to-increase-from-tomorrow-1784466768"></link>
            <id>https://tamilwin.com/article/egg-prices-to-increase-from-tomorrow-1784466768</id>
            <summary type="text"> முட்டைகளின் விலை நாளை (20) முதல் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு வெள்ளை முட்டையின் வில...</summary>
            <content type="html"><![CDATA[<p> முட்டைகளின் விலை நாளை (20) முதல் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, ஒரு வெள்ளை முட்டையின் விலை ரூ.41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலை ரூ.42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>விலை உயர்வு</h2><p>
</p><p>
குளியாப்பிட்டியில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இந்த விலை உயர்வை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d6b32e-8a92-41ea-b821-caa12a57c622/26-6a5cd16dd26a2.webp' /></p><p>
</p><p>
முட்டை விலை உயர்வுக்கு அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டினார். </p><p>

கோழித் தீவனத்திற்கு தேவையான சோளத்தின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டில் உற்பத்தியாகும் சோளம் தொழில்துறையின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>&nbsp;கடும் நஷ்டம்</h2><p>

மேலும், அரிசி உள்ளிட்ட மாற்று தீவனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் கோழிகளின் உடல்நலமும் செரிமானமும் பாதிக்கப்பட்டு, முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/232481a9-4fb6-427a-b79c-fd400548aa53/26-6a5cd16e83933.webp' /></p><p>
</p><p>
சில வர்த்தகர்கள் விலங்கு தீவனங்களில் இரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகளை கலப்பதால் ஏராளமான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் பண்ணையாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.</p><p>

இதன் காரணமாக தினசரி முட்டை உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் அறிந்திருந்தாலும், இதுவரை பயனுள்ள தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி கட்டிடப்படும் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு எதிரப்பு - சுமந்திரன் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-council-act-on-illegal-military-hospital-1784455929"></link>
            <id>https://tamilwin.com/article/northern-council-act-on-illegal-military-hospital-1784455929</id>
            <summary type="text">உள்ளூராட்சி சபையில் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட பலாலி இராணுவ
வைத்தியசாலையை இடிப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை, வலிகாமம் வடக்கு பிரதேச
சபை முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்ளூராட்சி சபையில் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட பலாலி இராணுவ
வைத்தியசாலையை இடிப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை, வலிகாமம் வடக்கு பிரதேச
சபை முன்னெடுக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(18.07.2026)&nbsp;பலாலி இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>காணி சுவீகரிப்பு வர்த்தமானி</h2><p> </p><p>

</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>வலிகாமம் வடக்கில் 2 ஆயிரத்து 176 காணிகள் தொடர்பான வழக்கிலும், அந்த
வைத்தியசாலை அமைந்துள்ள காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9a5a94-ba6d-4bee-bb76-725192125c6f/26-6a5ca5ce0c5b3.webp' /></p><p> இந்த விடயம்
நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அது ஏற்கனவே
சுவீகரிக்கப்பட்ட காணி என்ற நிலைப்பாட்டையே அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.
</p><p>அந்தக் காணி சுவீகரிப்பு வர்த்தமானியை இரத்துச் செய்ய வேண்டும் என்பதே எமது
தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது. அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.</p><p></p><h2>உள்ளூராட்சி மன்றத்தின் அனுமதி </h2><p>
</p><p>சுவீகரிக்கப்பட்ட காணிக்குள் வைத்தியசாலையை அமைப்பதாக அவர்கள்
பதிலளிக்கின்றனர்.

எந்தவொரு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாயினும், அந்தப் பிராந்தியத்துக்குரிய
உள்ளூராட்சி மன்றத்தின் கட்டிட அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0572fae8-10d1-4da2-be58-9ec2a65c0278/26-6a5ca7517aac0.webp' /></p><p> ஆனால், இது
அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானமாகும். இதனை உடனடியாக நிறுத்துமாறு
வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. </p><p>அவர்கள் அந்த
அறிவுறுத்தலைப் பின்பற்றத் தவறினால், குறித்த கட்டிடத்தை இடிப்பதற்கான
அடுத்தகட்ட நடவடிக்கைகளை வலிகாமம் வடக்கு பிரதேச சபை மேற்கொள்ளும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் திறக்கப்படவுள்ள ரஷ்ய எரிபொருள் விற்பனை நிலையங்கள் - அரசு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/establish-russian-fuel-outlets-in-sri-lanka-1784459157"></link>
            <id>https://tamilwin.com/article/establish-russian-fuel-outlets-in-sri-lanka-1784459157</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் எரிபொருள் தேவையை உறுதி செய்ய ரஷ்யாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக,...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் எரிபொருள் தேவையை உறுதி செய்ய ரஷ்யாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக, இரண்டு ரஷ்ய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களைத் திறக்க முறையான பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

</p><p>
திருகோணமலையில் நேற்று(18.07.2026) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>ரஷ்ய எரிபொருள்&nbsp;நிலையங்கள்</h2><p>அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,</p><p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து உலகளவில்
எரிபொருள் நெருக்கடி ஒன்று உருவாகத் தொடங்கியுள்ளதுடன், இது
சுற்றுலாத்துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

எனினும், ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாம் மேற்கொண்ட பல்வேறு
முன்னேற்பாடு நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க
முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd7fa7a3-6d6e-42bf-8ed3-424743146686/26-6a5cb5f7c9a80.webp' /></p><p>கடந்த காலங்களில் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாத
போதும், இலங்கையில் நிலவிய அந்நியச் செலவாணி பற்றாக்குறை காரணமாகவே
எரிபொருளைச் சீராகப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p>
ஆனால் தற்போது, உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள
நிலையிலும், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ப போதிய அந்நியச் செலவாணி
கையிருப்பை தற்போதைய அரசு பேணி வருகிறது. </p><p>இதன் காரணமாகவே நாட்டில் எரிபொருள்
தட்டுப்பாடோ அல்லது நீளமான வரிசைகளோ ஏற்படவில்லை. மத்திய கிழக்கில் தற்காலிகமாக ஏற்பட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து,
மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ள சூழலை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருக்கிறது.</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>அண்மையில் இலங்கை வந்திருந்த ரஷ்ய வெளிவிவகார
பிரதி அமைச்சர் மற்றும் ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ஆகியோருடன் உயர்மட்டப்
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.</p><p>

அதன் பிரதிபலனாகவே, இரு ரஷ்ய நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை
நிலையங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0c1e6d5-7743-4389-9e4d-f8058aa33ad2/26-6a5cb5f723e31.webp' /></p><p>

இந்த நடைமுறைகள் அனைத்தும் நாட்டின் முறையான சட்ட திட்டங்களுக்கு இணங்கவே
முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த இரு ரஷ்ய நிறுவனங்களும் தங்களுக்கான
முறையான அனுமதிகளையும் பதிவுகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.</p><p>

சுற்றுலாத்துறை, எரிபொருள் விநியோகம் என எந்தவொரு துறையாக இருந்தாலும்,
உலகளாவிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் அரசாங்கம் முன்கூட்டியே
தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
</p><p>
கடந்த கால பொருளாதார நெருக்கடியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை,
மீண்டும் அத்தகையதொரு நிலைக்குள் தள்ளப்படக் கூடாது என்பதில் ஜனாதிபதியும் அரச
நிர்வாகமும் முழு மூச்சாகச் செயற்பட்டு வருகிறது என உறுதியளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-arrested-chinese-cigarettes-katunayake-airport-1784466161"></link>
            <id>https://tamilwin.com/article/2-arrested-chinese-cigarettes-katunayake-airport-1784466161</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கைது இருவர் செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கைது இருவர் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(19.7.2026) மெற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>இருவர் கைது</h2><p> </p><p>குறித்த நபர்கள் இந்த சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfab02e9-8c49-483b-b469-1e486635d602/26-6a5ccd7cca849.webp' /></p><p>26 வயதுடைய இந்த சந்தேக நபர்கள் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்களை வசிப்பிடமாகக் கொண்ட, அந்நாட்டு உணவகமொன்றில் பணிபுரிபவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.</p><p>சந்தேகநபர்கள் இருவரும் இந்த சிகரெட் தொகையை கம்போடியாவில் கொள்வனவு செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திற்கு வந்து, அங்கிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p></p><h2>பிணை</h2><p> </p><p>

இதன்போது அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 53,200 சிகரெட்டுகளைக் கொண்ட 266 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97dd2f84-12ed-4c91-be84-e7ef4102304b/26-6a5ccd7d89204.webp' /></p><p> </p><p>

சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் நாட்டுக்குள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T13:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும்! சில உயர் அதிகாரிகளுக்குச் சென்ற செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-high-ranking-officials-may-be-assassinated-1784459379"></link>
            <id>https://tamilwin.com/article/some-high-ranking-officials-may-be-assassinated-1784459379</id>
            <summary type="text">

சில உயர் அதிகாரிகளிடம், வாக்குமூலம் பெறும் போது, அந்த இடத்திற்குச் சென்று “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும்” என அச்சுறுத்தல் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சில உயர் அதிகாரிகளிடம், வாக்குமூலம் பெறும் போது, அந்த இடத்திற்குச் சென்று “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும்” என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் அதிகாரிகளுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், அவர்கள் தொடர்ந்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p> கேகாலை பகுதியில் நேற்றையதினம்(18.07.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு எதிரான வாக்குமூலம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

தற்போதைய நிலையில் நாட்டில் பல உயர் அதிகாரிகள் தொடர்ச்சியாக தங்களுடைய உயிரை தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர். 

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலங்களை வழங்கும் அதிகாரிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டு வருகின்றது. </p><p> 

சில அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறும் இடங்களில் வைத்தே, “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும்” என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1cb794e-1e77-4514-9604-b07850c92776/26-6a5cb55a653ff.webp' /></p><p> </p><p> 

அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு உள்ளானவர்களும் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். </p><p> 

அரசாங்கம், மக்கள் ஆணையை மீறி, மக்களை நசுக்கி, அடக்குமுறைகள் மூலம் ஆட்சியைத் தொடலாம் என நினைத்தால் அது தவறான எண்ணமாகும். இதற்கெதிராக நாங்கள் அணித் திரள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-19T13:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்தில் செல்பி எடுத்த வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த விபரீதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-woman-accident-taking-selfie-with-train-1784465164"></link>
            <id>https://tamilwin.com/article/young-woman-accident-taking-selfie-with-train-1784465164</id>
            <summary type="text">தொடருந்து பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட யுவதியொருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று (19.7.2026)) முற்பகல் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட யுவதியொருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது இன்று (19.7.2026)) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய தொடருந்து பயணித்தின் போது ​குறித்த யுவதி அம்பேவளை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே, அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

விபத்துக்குள்ளான யுவதி உள்ளிட்ட 3 துருக்கி யுவதிகள் இந்த தொடருந்து பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee62b8f3-ed82-45ce-84ee-9de223f7868d/26-6a5cc9c664c71.webp' /></p><p> </p><p>

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p> 

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T12:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸியின் உருக்கமான இறுதி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lionel-messi-message-argentina-world-cup-final-1784464031"></link>
            <id>https://tamilwin.com/article/lionel-messi-message-argentina-world-cup-final-1784464031</id>
            <summary type="text">2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் முன், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான லியோனல் மெஸ்ஸி தனது சக வீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் முன், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான லியோனல் மெஸ்ஸி தனது சக வீரர்களுக்காக உருக்கமான திறந்த கடிதம் ஒன்றை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
</p><p>
நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.</p><p></p><h2>வாருங்கள் அர்ஜென்டினா</h2><p> </p><p>அந்தப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல் வாய்ப்புகளை உருவாக்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.</p><p>

இறுதிப்போட்டிக்கு முன், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவுடன் எடுத்த குழுப் புகைப்படத்தை பகிர்ந்த மெஸ்ஸி, தனது பதிவில்,

"இந்த ஆண்டுகள் முழுவதிலும் அழகானது பட்டங்களை வென்றதல்ல.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Da9Q-rnt5q7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Da9Q-rnt5q7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Da9Q-rnt5q7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Leo Messi (@leomessi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> இந்த அணியுடன் ஒவ்வொரு நாளையும் பகிர்ந்து கொண்டதும், ஒன்றாகப் போராடியதும், கடினமான தருணங்களில் மீண்டு வந்ததும், ஒவ்வொரு அடியையும் ரசித்ததும்தான். </p><p>என் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இந்த அணியை ஒரு குடும்பமாக வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாளை என்ன நடந்தாலும், இந்த அணி யாராலும் அழிக்க முடியாத வரலாற்றை ஏற்கனவே எழுதி விட்டது. வாருங்கள் அர்ஜென்டினா!" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை</h2><p>

இந்த பதிவு, அர்ஜென்டினா அணியின் ஒற்றுமையையும் குடும்ப பாசத்தையும் வெளிப்படுத்துவதோடு, இறுதிப்போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும் அவர்கள் ஏற்கனவே வரலாறு படைத்துவிட்டனர் என்ற நம்பிக்கையையும் சக வீரர்களுக்கு அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be8495cc-4c2b-4c03-bd8f-49d8a43ede5a/26-6a5cc682c453e.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பைப் போட்டியாகவும், சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் இறுதிப் போட்டியாகவும் இருக்கலாம் என்ற ஊகங்களும் வலுத்துள்ளன.</p><p> எனினும், தனது எதிர்காலம் குறித்து பேசாமல், தற்போதைய போட்டியிலேயே முழு கவனம் செலுத்தி வருவதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், உலகக் கோப்பையை வெல்வதோடு மட்டுமல்லாமல், தொடரின் கோல்டன் பூட் விருதுக்கான போட்டியிலும் மெஸ்ஸி முன்னணி வீரர்களில் ஒருவராக உள்ளார்.</p><p> தற்போதைக்கு கிலியன் எம்பாப்பே அந்தப் பட்டியலில் முன்னிலையில் இருந்தாலும், அணியின் வெற்றியே தனது முதன்மை இலக்கு என மெஸ்ஸி வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T12:44:20+00:00</updated>
        </entry>
    </feed>
