<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-10T17:45:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூசகமான முறையில் வாசனைச் சோப்புக்குள் ஹெரோயின் வைத்திருந்த இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heroin-in-perfumed-soap-33-year-old-youth-arrested-1783696515"></link>
            <id>https://tamilwin.com/article/heroin-in-perfumed-soap-33-year-old-youth-arrested-1783696515</id>
            <summary type="text">வாசனைச் சோப்புக்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்து, யாழ்ப்பாணம் நகர்ப்
பகுதியில் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர்
ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாசனைச் சோப்புக்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்து, யாழ்ப்பாணம் நகர்ப்
பகுதியில் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர்
யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று(09.07.2026) கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p>

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமாக
இடம்பெறுகின்றது என்று கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, யாழ். பொலிஸ்
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து
மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல்</h2><p>
</p><p>
உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரால் 'பாசல் சேவிஸ்' மூலம் வரவழைக்கப்பட்ட வாசனைச் சோப்புக்குள்
மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டிலும், கடந்த மாதமும் இதேபோன்ற
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டு பிணையில்
விடுவிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93c1a404-e0c7-4ef7-8953-93bbb5cf5650/26-6a510e119fab4.webp' /></p><p>

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், அவரை நீதிமன்றத்தில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ். பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், யாழ். பொலிஸ் பிரிவில் மாத்திரம் இந்த வாரத்தில் போதைப்பொருளுடன்
தொடர்புடைய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T17:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல் கைதிகளின் உள்முரண்பாடே - முன்னாள் இராஜாங்க அமைச்சர் முன்வைக்கும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-conflict-prisoners-justice-minister-1783699324"></link>
            <id>https://tamilwin.com/article/prison-conflict-prisoners-justice-minister-1783699324</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு
இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு
இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும்
புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல் அல்ல என்று முன்னாள் இராஜாங்க
அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "சிறைச்சாலை வார்டுகளில் நூற்றுக்கணக்கான கைதிகள் நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ள
சூழலில், இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று.&nbsp;</p><p> நானும் வெலிக்கடை
மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ சிறைகளில் கைதியாக இருந்தவன் என்ற அடிப்படையில்,
அங்குள்ள ஆபத்தான சூழல்களை நன்கு அறிவேன்.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்</h2><p> இத்தகைய சம்பவங்கள் மீண்டும்
நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இன்றும் உள்ளன.

சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்பது ஒரு தரப்பினரின்
வாதமாக இருந்தாலும், அங்குள்ள அடிப்படை சூழல் குறித்து இருவேறு கருத்துக்கள்
சமூகத்தில் நிலவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1381863f-35e0-4631-b143-fd1703735cf7/26-6a5121acd4e09.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சரின்
முடிவை மனதாரப் பாராட்டுகின்றேன்.
</p><p>
கடந்த காலங்களில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற பாரிய
பேரழிவுகளுக்குக் கூட பொறுப்பானவர்கள் எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை.
</p><p>அத்தகைய சூழலில், இந்தச் சம்பவத்துக்குத் தான் பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர்
தைரியமாக முன்வந்தமை போற்றத்தக்கது. </p><p>வெளிநாடுகளில் அசம்பாவிதங்களுக்குத்
தலைவர்கள் பொறுப்பேற்பதைப் போலவே, உள்நாட்டிலும் நீதி அமைச்சர் காட்டிய இந்தத்
துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை நான் மதிக்கின்றேன்" என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T16:47:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண் - கணவன் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-women-attacked-by-husband-in-italy-1783692668"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-women-attacked-by-husband-in-italy-1783692668</id>
            <summary type="text">இத்தாலியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில், கணவன் தனது மனைவியை கண்ணாடிப் போத்தலால் தலையில் பலமுறை தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில், கணவன் தனது மனைவியை கண்ணாடிப் போத்தலால் தலையில் பலமுறை தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த சம்பவம் அவர்களின் 12 வயது மகனின் கண் முன்னே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b>பெண் மீது தாக்குதல்</b></h2><p>இத்தாக்குதலில் படுகாயமடைந்த 38 வயதுடைய இலங்கை பெண், உடனடியாகமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb31b951-5250-4644-844c-6793aaf2d84d/26-6a5104f8a081f.webp' /></p><p>மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மண்டையோட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>அவர் தற்போது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண விடயம் தம்பதிக்கு இடையில் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.
</p><p>
இதன்போது, 41 வயதுடைய இத்தாலிய நாட்டவரான கணவன், கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். </p><h3><b>கணவன் கைது</b></h3><p>இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த சிறுவன், தற்காலிகமாக அவனது பாட்டியின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5135c3d8-6279-43bb-9660-d3d72035253e/26-6a5104f951c71.webp' /></p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரோம் நகர பொலிஸார், அடுக்குமாடி வீட்டிற்குள்ளேயே வைத்து தாக்குதல் நடத்திய கணவனைக் கைது செய்தனர். </p><p>கொலை முயற்சி மற்றும் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><p><b>YOU MAY LIKE THIS&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RNwoLfuUIcI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T16:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டமாஸ்கஸில் தொடர் குண்டுவெடிப்புகள்: சவால்களை எதிர்கொள்ளும் புதிய சிரிய அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bombings-damascus-syrian-government-challenges-1783698333"></link>
            <id>https://tamilwin.com/article/bombings-damascus-syrian-government-challenges-1783698333</id>
            <summary type="text">சிரியாவில் ஆசாத் ஆட்சி வீழ்ந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று
சக்திவாய்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவில் ஆசாத் ஆட்சி வீழ்ந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று
சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
</p><p>
ஜூலை 2ஆம் திகதி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த
வெடிவிபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, ஜூலை 7 ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்
தங்கியிருந்த ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலுக்கு அருகே நிகழ்ந்த இரட்டைத் தாக்குதலில்
ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.</p><p></p><h2>புதிய அரசு</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான ஐஎஸ்ஐஎல் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த
ஒரு கும்பலைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக சிரியாவின்
உள்துறை அமைச்சர் அனாஸ் கத்தாப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c575502-b52c-4ce6-bb56-33dbb17b2f92/26-6a51159ec6f2f.webp' /></p><p>
</p><p>
நீண்டகாலப் போருக்குப் பிறகு சிரியாவின் பொருளாதாரம், மின்சாரம் மற்றும்
உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ள சூழலில், புதிய அரசுக்கு இந்தத்
தொடர் குண்டுவெடிப்புகள் பெரும் பாதுகாப்புச் சவாலாக உருவெடுத்துள்ளன.
</p><p>
முன்னாள் ஆசாத் ஆட்சியின் முக்கியப் புள்ளிகள் மீதான உயர்மட்ட விசாரணைகள்
டமாஸ்கஸ் நீதிமன்றத்தில் நடந்துவரும் வேளையில், இந்தத் தாக்குதல்கள்
திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன.</p><p>

இருப்பினும், இது சிரியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புச் சீர்குலைவு அல்ல
என்றும், நாட்டின் ஸ்திரத்தன்மையை உலகிற்குத் தவறாகக் காட்டுவதற்காகவே
பயங்கரவாதிகள் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்
கருதுகின்றனர்.
</p><p>
பல வருடங்களாகப் போர்க் குண்டுகளுக்கு இடையே பழகிப்போன டமாஸ்கஸ் மக்கள், இந்த
அச்சத்திற்கு மத்தியிலும் தங்களின் வாழ்வாதாரத்திற்காகத் தினசரி வாழ்க்கையைத்
தொடர்ந்து நகர்த்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:54:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு நீடிக்கும் என எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-global-energy-shortage-will-persist-1783696971"></link>
            <id>https://tamilwin.com/article/warning-global-energy-shortage-will-persist-1783696971</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் தொடங்கியுள்ள நேரடி இராணுவ
மோதல்கள், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் நீட்டிக்கச் செய்யும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் தொடங்கியுள்ள நேரடி இராணுவ
மோதல்கள், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் நீட்டிக்கச் செய்யும் என்று
சர்வதேச எரிசக்தி முகவரகம் எச்சரித்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு
ஒப்பந்தத்தின் காரணமாக உலகளாவிய மசகு எண்ணெய் சந்தை மெல்ல மீண்டு வந்த
நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் அந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.</p><p>

உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG)
ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைத் தன்வசம் கொண்டுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' பகுதி,
இந்த வார மோதல்களால் மீண்டும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வீழ்ச்சி</h2><p>

இந்த மூலோபாய நீர்வழியின் மூடல் காரணமாக, உலக சந்தைக்கு வர வேண்டிய ஒரு
நாளைக்கு 14 மில்லியன் பெரல் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு உலகளாவிய
மசகு எண்ணெய்க்கான தேவை மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று
சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் மாதாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aec7aa7-4618-4c10-8bdb-728455aed834/26-6a510e4d77783.webp' /></p><p>

தற்போது சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பெரல் 76.37 டொலராக
நிலைபெற்றுள்ள போதிலும், வரும் வாரங்களில் விநியோகத் பற்றாக்குறை காரணமாக இதன்
விலை மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p><p></p><h2>ஈரான் தாக்குதல்</h2><p>
</p><p>
இதற்கிடையில், மோதலைத் தணித்து மீண்டும் தற்காலிகப் போர்நிறுத்தத்தைக்
கொண்டுவரப் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தீவிரப்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1079a26-615e-4721-a102-80542999ac0d/26-6a510e4e28b37.webp' /></p><p>
</p><p>
பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் போன்ற அண்டை நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல்
நடத்தியுள்ளதால், பிராந்திய அமைதியைக் காக்க எகிப்து மற்றும் வளைகுடா நாடுகள்
(GCC) இருதரப்பையும் போரைக் கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதி குறைப்பால் உலகளவில் 10 இலட்சம் பெண்களுக்கான உதவிகள் முடக்கம்! ஐ.நா. கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aid-for-1-million-women-worldwide-halted-funding-1783695034"></link>
            <id>https://tamilwin.com/article/aid-for-1-million-women-worldwide-halted-funding-1783695034</id>
            <summary type="text">உலகளவில் சர்வதேச நாடுகளின் நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால்,
கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் பெண்கள்
மற்றும் சிறுமிகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் சர்வதேச நாடுகளின் நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால்,
கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் பெண்கள்
மற்றும் சிறுமிகளுக்கான உயிர் காக்கும் அடிப்படை உதவிகள் முடங்கியுள்ளதாக
ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
பெண்களுக்கான அமைப்புகளிடம் உதவி கேட்டு வருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டில்
அதிகரித்துள்ள போதிலும், போதிய நிதியின்மையால் 90 சதவீத அமைப்புகளால்
அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஐ.நா.வின்
மகளிர் அமைப்பான 'யு.என். வுமன்' வெளியிட்ட அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
சர்வதேச அளவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் இருந்த
நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு
பதவியேற்ற பிறகு பல பில்லியன் டொலர் மதிப்பிலான வெளிநாட்டு நிதியுதவிகளை
அதிரடியாகக் குறைத்தது.</p><p></p><h2>அடிப்படைச் சேவை</h2><p>

மேலும், வெளிநாட்டு உதவிகளுக்கான 'யுஎஸ்ஏஐடி' அமைப்பு கலைக்கப்பட்டதால்,
அமெரிக்காவின் உலகளாவிய உதவிகள் 50 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தன.

அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற பிற முக்கிய
நன்கொடை நாடுகளும் தங்களின் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி மற்றும்
பாதுகாப்புச் செலவின அதிகரிப்பு காரணமாக நிதியுதவிகளைக் குறைத்துள்ளன.
</p><p>
கொங்கோ, ஹைட்டி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 52 நாடுகளில் செயல்படும் 855 பெண்கள்
அமைப்புகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், போதிய நிதியின்றி 40 சதவீத அமைப்புகள்
அடுத்த ஓராண்டுக்குள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூடப்படும்
அபாயத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b28d88-ee35-47fd-849e-db05fd165778/26-6a510a47e3e95.webp' /></p><p>
</p><p>
இந்த நிதி நெருக்கடியால் போர் சார்ந்த பாலியல் வன்கொடுமைகளால்
பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்த தாய்மார்கள் மற்றும் பாடசாலைப் படிப்பை
பாதியில் நிறுத்திய சிறுமிகள் ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த ஓராண்டில்
இருமடங்காக அதிகரித்துள்ள போதிலும், 62 சதவீத அமைப்புகளால் பெண்களுக்குப்
பாதுகாப்பான இடங்களையோ அடிப்படைச் சேவைகளையோ வழங்க முடியாத அவலநிலை
உருவாகியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்லைன் விசா வழங்க தனியார் நிறுவனங்களுக்கு முந்தைய அரசு அனுமதி..! நீதிமன்றத்தில் சூடுபிடிக்கும் வாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-decision-regarding-online-visa-1783671258"></link>
            <id>https://tamilwin.com/article/government-decision-regarding-online-visa-1783671258</id>
            <summary type="text">ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(10.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>கடந்த அரசாங்கத்தின் போது ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக அப்போதைய அமைச்சரவை எடுத்த முடிவை எதிர்த்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், பத்தாலி சம்பிகா ரணவக்க மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று(10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. </p><h2>

ஒன்லைன் விசா&nbsp;</h2><p>
இதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேக சிறிவர்தன இந்த தகவலை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50bc18fa-a748-40d1-951d-562bea567531/26-6a5104862abb8.webp' /></p><p> 

இந்த மனுவை பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன விசாரணை செய்துள்ள நிலையில், நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இந்த மனு விசாரணை செய்யப்பட்டுள்ளது. </p><p>

மனுக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​தலைமை சட்டத்தரணிக்காக முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வத்தன்மையை ஆராய தற்போதைய அமைச்சரவை ஒரு துணைக் குழுவை நியமித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><h2>


ஒப்பந்தங்களை தொடர அரசத்தரப்பு முடிவு</h2><p>
அந்தக் குழு சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்ந்து வருவதாகக் கூறி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக திகதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea29428b-e318-4f12-bc02-9ee6dc86f014/26-6a510486dc174.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து மனுதாரர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன்,</p><p> </p><p>

தற்போதைய அரசு அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்ய முடிவு செய்திருந்தாலும், இந்த மனுவைத் தொடர எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>

 இந்த மனுவில் தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.</p><p> 

அதன்படி, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரருக்கு அமர்வு உத்தரவிட்டதுடன், இந்த மனுவை செப்டம்பர் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் திகதியிட்டு ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T14:41:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-officers-killed-in-negombo-clash-promoted-1783692785"></link>
            <id>https://tamilwin.com/article/8-officers-killed-in-negombo-clash-promoted-1783692785</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய கடந்த 5 மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்குள் கிளம்பிய மோதலில் 8 அதிகாரிகள் உட்பட 29 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p>

இதன் அடிப்படையில், நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>

கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்ட கைதிகள்</h2><p>
அத்துடன், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 29 அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/111933e8-297a-4336-8dbc-ffba4edbc9a9/26-6a51011db2169.webp' /></p><p>
</p><p>
அவர்களில் உள்ள அனைத்து கைதிகளும் கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

இந்நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவற்றை இன்னும் முழுமையாகப் பதிவு செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஏனெனில், சில அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதற்கு உகந்த உடல்நிலையில் இல்லை.</p><p>

இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த எட்டு சிறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>

அதிகாரிகளுக்கு பதவி உயர்வு</h2><p>

கொலை செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு சிறைக்காவலர் எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதலாம் வகுப்பு சிறைக்காவலர் பதவிக்கும், மற்ற சிறைக்காவலர்கள் சார்ஜென்ட் (Sergeant) பதவிக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73edd57-3283-452d-9abb-74380e1cb02c/26-6a51011e5fe0c.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்து கைதிகளும் இன்று மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். </p><p>

சிறைச்சாலையில் நடந்த மோதலின் போது படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சார்ஜென்ட் கமகே உபாலியின் உடல், இன்று(10.07.2026) கம்புருபிட்டியாவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த சார்ஜென்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று(10) பிற்பகல் அம்பகஹாவெவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-10T14:26:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் வைத்தியசாலை கழிவு அகற்றலில் பாரிய மோசடி: சிவில் புலனாய்வு முன்னணி முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-fraud-disposal-at-anuradhapura-hospital-1783687968"></link>
            <id>https://tamilwin.com/article/massive-fraud-disposal-at-anuradhapura-hospital-1783687968</id>
            <summary type="text">அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை அகற்றும்
ஒப்பந்தத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள
சிவில் புலனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை அகற்றும்
ஒப்பந்தத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள
சிவில் புலனாய்வு முன்னணி, இது தொடர்பாகச் சுகாதார அமைச்சின் செயலாளரிடம்
முறைப்பாட்டை அளித்துள்ளது.
</p><p>
கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதியன்று, சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம்
மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கோரப்பட்ட டெண்டரில் மூன்று நிறுவனங்கள்
விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன. </p><p>விதிகளின்படி, ஒரு கிலோகிராமுக்கு
ஆகக்குறைந்த விலையான 179 ரூபாவைக் கோரிய நிறுவனத்துக்கே ஒப்பந்தம்
வழங்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p></p><h2>நிதி நட்டம்</h2><p>

எனினும், அந்தத் தேர்வு இரத்துச் செய்யப்பட்டு, ஒரு கிலோகிராமுக்கு 230 ரூபா
கோரியிருந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb4096f4-e424-415b-b980-971a2c71a59a/26-6a50ebfb547ce.webp' /></p><p> </p><p>இந்த முறைகேடான
தெரிவினால், ஒரு கிலோகிராமுக்கு 51 ரூபா வீதம், அரசுக்கு மொத்தம் 3 கோடியே 31
இலட்சத்துக்கும் அதிகமான நிதி நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சிவில் புலனாய்வு
முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனம், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான சமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது என்று அந்த அமைப்பு குற்றம்
சாட்டியுள்ளது.</p><p></p><h2>முறைகேடுகள்</h2><p> </p><p>'சமல் ராஜபக்ச வேஸ்ட் பெசிலிட்டி மேனேஜ்மென்ட்' என இருந்த அந்த
நிறுவனத்தின் பெயர் தற்போது 'ஜி.எஃப்.சி' என மாற்றப்பட்டுள்ளது என்று
ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec4928f6-0f9b-4897-a02d-66053247c34c/26-6a50ebfc2b64a.webp' /></p><p>

டெண்டர் தொழில்நுட்பக் குழுவில் உள்ள சில அதிகாரிகள், தங்கள் தனிப்பட்ட
இலாபத்துக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தகுதியான நிறுவனங்களை
ஓரங்கட்டிவிட்டு, அதிக விலை கோரிய நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர்.</p><p>

மருத்துவக் கழிவுகளை அகற்றுவது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்துடன்
தொடர்புடைய முக்கியமான விடயமாக இருப்பதால், இத்தகைய முறைகேடுகள் பெரும்
அபாயங்களை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கலவரம்! 48 மணிநேரம் அமைதி காத்த அநுர அரசாங்கம் - பின்னணி குறித்து நாமலுக்கு சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783681873"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783681873</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரை அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தமை தொடர்பில் எமக்கு சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரை அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தமை தொடர்பில் எமக்கு சந்தேகம் நிலவுகின்றது என்று பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>நேற்றையதினம் இடம்பெற்ற&nbsp; நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>எமக்கு சந்தேகம்..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>இந்த அரசாங்கம் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்காக இளைஞர்களை காரணம் எதுவுமின்றி சிறைகளில் அடைத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p><p>சிறையில் இருக்கக் கூடிய போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமே தவிர அவர்களை சிறையில் அடைப்பது சாத்தியமற்றது.</p><p>11 ஆயிரம் கைதிகள் மாத்திரம் அனுமதிக்கக் கூடிய சிறைச்சாலைகளில்&nbsp; மிக அதிகளவிலானோரை அடைத்து வைத்துள்ளதோடு, அவர்களை கண்காணிப்பதற்கு மிகக் குறைந்த அளவிலான பொலிஸ் அதிகாரிகளையே நியமித்துள்ளனர்.&nbsp; இதன் காரணமாக சிறைச்சாலையின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aa1c9bd-bb3b-40eb-bf6a-98c1c3674fea/26-6a50d89adff2c.webp' /></p><p>கிட்டத்தட்ட 30 உயிர்களைக் காவு கொள்ளும் அளவுக்கு ஒரு மோதல் வெடிக்கும் வரை அரசாங்கத்தின் உளவுத் துறை என்ன செய்தது.&nbsp; சம்பவத்தின் போது உடனடி உத்தரவுகள் எவையும் பிறப்பிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் என்ன. தமக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் அமைச்சரிடத்திலேயே தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>அத்துடன் சம்பவம் நடந்த 48 மணித்தியாலங்கள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கம் மௌனமாகவே இருந்தது.&nbsp; இதுகுறித்து எமக்கு பலத்த சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gN9PtQS-Fzc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-10T13:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 வாரங்களாக தொடரும் உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு போராட்டம் - அநுர அரசிடம் முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-security-zone-land-release-1783688359"></link>
            <id>https://tamilwin.com/article/high-security-zone-land-release-1783688359</id>
            <summary type="text">இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களின் காணிகள் தொடர்பாக
தற்போதைய அரசாங்கம், தங்களுடைய சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களின் காணிகள் தொடர்பாக
தற்போதைய அரசாங்கம், தங்களுடைய சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்
பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன், மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்
பிரதேசங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஜே.வி.பி.
பிரதிநிதிகளுக்கு இருக்கின்ற நிலையில் எமது மக்களை ஏமாற்றப்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p> 

“உயர் பாதுகாப்பு வலயங்கள்” என்ற அடிப்படையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில்
இருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு முன்னெடுக்கப்படுகின்ற மயிலிட்டிப் பிரதேச
மக்களின் அமைதிவழப் போராட்டம் இன்று(10.07.2026) 12 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p> 

இந்த போராட்டத்திற்கு தார்மீக ரீதியிலான ஆதரவை வழங்கும் வகையில், போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b629ff48-0b58-46e5-8065-3b03330b5359/26-6a50ed2a1fcbc.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் என்ற கோட்பாட்டினை முன்வைத்து கடந்த
காலங்களில் எமக்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் பலத்திற்கமைய,
பல்லாயிரக்கணக்கான தனியார் காணிகளை கட்டம் கட்டமாக விடுவித்து வந்தோம்.
</p><h2>

அநுர அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை</h2><p>
இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தினர், மக்களின் காணிகள் அனைத்தும்
விடுவிக்கப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்கி வாக்குளைப் பெற்றுக்
கொண்டனர்.

ஆனால், தற்போது தங்களுடைய வாக்குறுதியை மறந்து ஒவ்வொருவரும் வெவ்வேறு
கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி ஒரு கருத்தினை தெரிவிக்கின்றார்.
</p><p>
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மற்றுமொரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்,
அந்தக் கட்சிய சார்பாக எமது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள்
வேறுவிதமான கதையை சொல்கின்றார்கள்.
</p><p>
இவ்வாறு எங்களுடைய மக்களை ஏமாற்றாமல் காணி விடுவிப்பு தொடர்பான உண்மையான
நிலைப்பாட்டினை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dee01b7-2dd8-4ed7-9415-e2f69ccfd1b2/26-6a50ed2b176ca.webp' /></p><p>
</p><p>

இந்த விடயத்தில் எங்களுடைய மக்களின் வாக்குகளைப் பெற்றக்கொண்ட ஜே.வி.பி.
பிரதிநிதிகள், வெறுமனவே தங்களுடைய கட்சியின் அரசியலையும் வேலைத்
திட்டத்தினையும் எமது மக்களிடம் எடுத்து வருகின்ற துதுவர்களாக இருக்காமல்,
எங்களுடைய மக்களின் எதிர்பார்ப்புக்களை தென்னிலங்கைகுக்கு எடுத்துச்
செல்கின்ற எமது மக்களின் பிரதிநிதிகளாக அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
</p><p>

இந்நிலையில், எங்களைப் பொறுத்தவரையில் தனியார் காணிகள் அனைத்தும்
விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து
முன்னெடுக்கப்படுகின்ற சாத்வீகப் போராட்டங்கள் அனைத்திற்கும் செயலாளர் நாயகம்
டக்ளஸ் தேவானந்தா சார்பில் தார்மீக ஆதரவு தொடரும் என்பதை தெரிவித்துக்கு
கொள்கின்றோம் என்றார்.
</p><p>
இப்போராட்டத்தின் இறுதியில் ஏற்பாட்டாளர்களினால், தங்களுடைய அபிலாசைகளை
வெளிப்படுத்திய மனு ஒன்றும் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9818a4-cd73-45c9-85bd-61c74cf944b9/26-6a50ed2be999c.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: எரிபொருள் விலை இருமடங்காக உயர்வு - ட்ரம்ப்பின் ரகசிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/blockade-of-the-strait-of-hormuz-1783687392"></link>
            <id>https://tamilwin.com/article/blockade-of-the-strait-of-hormuz-1783687392</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள போரினால்,
உலகளவில் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்
போக்குவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள போரினால்,
உலகளவில் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்
போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, கடந்த ஜூலை 7ஆம் திகதிக்குப் பிறகு, 10,000 டன் எடையுள்ள எந்தவொரு பெரிய கப்பலும் அமெரிக்கா ஒருங்கிணைத்த பாதுகாப்பான கடல்வழிப் பாதை வழியாகச்
செல்லவில்லை என்றும், ஓமன் நாட்டை ஒட்டிய கடல்வழிப் பாதையில் போக்குவரத்து
முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>
கடல்வழிப்போக்குவரத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் ட்ரம்ப்</h2><p>

கடந்த பெப்ரவரி மாதம் இந்த போர் தொடங்குவதற்கு முன்பு, நாளொன்றுக்கு சராசரியாக
130 கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை வெறும்
5 கப்பல்கள் மட்டுமே பாதையைக் கடந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3896863a-0fb0-4150-933d-d2563b938a35/26-6a50e9757ee79.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத், கத்தார்,
ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது
ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>

இந்த கடுமையான போர்ச் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகச் சங்கிலி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களின்
பாதிப்பால் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.</p><h2>

டீசல் விலை அதிகரிப்பு</h2><p>
தற்போதைய சூழலில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பெரலுக்கு 76.58 டொலர் என்ற
அளவில் நிலையாக நீடித்தாலும், எதிர்வரும் கோடைக் காலத்தில் எண்ணெய் இருப்பு
குறைவதால் இதன் விலை பெரலுக்கு 10 முதல் 15 டொலர்கள் வரை மேலும்
அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0a0fed1-b0bf-4293-8f14-fddce555be98/26-6a50e97648191.webp' /></p><p>

இந்த பதற்றமான சூழலிலும், ஆசியப் பங்குச் சந்தைகளான ஜப்பான், தென் கொரியா
மற்றும் ஹொங்கொங் சந்தைகள் இன்று இலாபத்துடன் உயர்வுடன் வர்த்தகத்தைத்
தொடங்கியுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Bqxne06FmU0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T12:45:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறப்பாக இடம் பெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/annual-festival-st-arockia-annai-church-nanattan-1783685178"></link>
            <id>https://tamilwin.com/article/annual-festival-st-arockia-annai-church-nanattan-1783685178</id>
            <summary type="text">நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியை இன்றைய
தினம் வெள்ளிக்கிழமை (10) காலை குருக்கல் இணைந்து கூட்டுத்திருப்பலியாக
ஒப்புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியை இன்றைய
தினம் வெள்ளிக்கிழமை (10) காலை குருக்கல் இணைந்து கூட்டுத்திருப்பலியாக
ஒப்புக் கொடுத்தனர்.</p><p>

தாழ்வுபாடு பங்குத்தந்தை அருட்தந்தை ரெஜினோல்ட் அடிகளார் தலைமையில்
அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக்
கொடுத்தனர்.</p><h2>திருவிழா திருப்பலி</h2><p>
</p><p>
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி யும் அதனைத் தொடர்ந்து
திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6589906c-2658-444f-af3c-a9188c6c2b0d/26-6a50e7c981b0b.webp' /></p><p>

இதன் போது அருட்தந்தையர்கள்,இருட்சகோதரர்கள்,அருட்சகோதரிகள் மக்கள் என பலர்
கலந்து கொண்டனர்.நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த
திருவிழாவுக்கான கொடியேற்றத்தின் போது நானாட்டான் பங்கிற்குற்பட்ட 8 துணை
ஆலயங்களின் கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10)
புனித ஆரோக்கிய அன்னை ஆலய கொடி இறக்கப் பட்ட நிலையில் குறித்த துணை ஆலயங்களின்
கொடிகளும் இறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T12:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-protest-demand-release-of-lands-1783683440"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-protest-demand-release-of-lands-1783683440</id>
            <summary type="text">வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ &quot; பங்களா முன்பாக&amp;nbsp;போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக&nbsp;போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். </p><p>குறித்த போராட்டமானது இன்று(10.07.2026) 12ஆவது வாரமாகவும் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>17 வருடங்கள் கடந்த நிலையில்</h2><p>
வலி. வடக்கு பலாலி மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத
கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்,
அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/975441bc-7205-4774-b611-74c92e85e2d4/26-6a50de472d22a.webp' /></p><p>
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே
காணப்படுகிறது.</p><p>இந்நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக
காணி உரிமையாளர்கள் போராடி வருவதோடு, காணிகள் விடுவிக்கப்படாத நிலையில்
காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை
முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.</p><p>குறிப்பாக இன்றையதினம்
வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னடுத்தனர்.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயக
கட்சியின் ஊடக பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா, பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் எனப் பலர்
கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T12:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clashes-at-colombo-magazine-prison-1783684216"></link>
            <id>https://tamilwin.com/article/clashes-at-colombo-magazine-prison-1783684216</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;குறித்த சம்பவம்&amp;nbsp;இன்று (10.07.2026) பிற்பகல் இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>குறித்த சம்பவம்&nbsp;இன்று (10.07.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>இதன்போது சிறையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>இரு கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி</h2><p> </p><p>இந்த மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a57ccc-377f-4b21-b90b-4826055333d6/26-6a50e5edbaf6c.webp' /></p><p> </p><p>எனினும் இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p>மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T12:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்! அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களை ஆரம்பிக்கும் சிஐடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-police-investigation-1783655455"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-police-investigation-1783655455</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு, சிறை வள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது.
</p><p>
குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு, சிறை வளாகத்தில் மோதல் நடந்த இடங்கள், சேதம் ஏற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. </p><p>

 இந்த சம்பவம் தொடர்பாக கைதிகளிடம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெறத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள்</h2><p> 

மோதல் இடம்பெற்ற போது அன்று பணியில் இருந்த சிறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.

இதனையடுத்து நீர்கொழும்பு சிறைக்கு வெளியே இருந்த மக்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c00273c1-0fa3-4968-bccb-22bf4c0cf894/26-6a50a66646606.webp' />&nbsp;</p><p>

கடந்த 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் கைதிகளும், சிறை அதிகாரிகளும் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் 8 சிறை அதிகாரிகளும் அடங்கியுள்ளனர்.
</p><p>
இதேவேளை, உயிரிழந்த சிறை அதிகாரிகளின் பிரேத பரிசோதனையில், அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின்படி, தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேருக்கு, ஐந்து பேர் கொண்ட தடயவியல் குழு பிரேதப் பரிசோதனை நடத்தியது.</p><p>

அதன்படி, 14 மரணங்கள் துப்பாக்கிச்சூட்டாலும், மேலும் 9 மரணங்கள் தாக்குதல்களாலும் ஏற்பட்டதாக பிரேதப் பரிசோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>மற்றொரு குழுவினர் தொடர்ந்தும் சிகிச்சை</h2><p>

 இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொரு குழுவினர், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4b6d1ce-17a1-4fa0-9636-81ae89fccbe1/26-6a50a666f1e43.webp' />&nbsp;</p><p>

இதற்கிடையில், 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையின் பிரதான ஜன்னலிலிருந்து கைதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சிறை அதிகாரி குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. </p><p>

குறித்த அதிகாரிக்கு தற்போது சில கைதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், அவருடன் பணியாற்றும் சக அதிகாரிகள் அவருடன் இருப்பதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

சம்பவம் நடந்த நேரத்தில், அவர் நீர்கொழும்பு சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறையில் சேர்ந்துள்ளதுடன், பல சிறைகளிலும் பணியாற்றியுள்ளார். </p><p>

சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளுடன் இணக்கமாக பழகும் அதிகாரியாக அவர் கருதப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T12:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை: ஐந்துபேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-abducted-and-tortured-in-jaffna-5-arrested-1783682988"></link>
            <id>https://tamilwin.com/article/youth-abducted-and-tortured-in-jaffna-5-arrested-1783682988</id>
            <summary type="text">யாழில் திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான
கூரிய இரு வாள்களுடன் ஐவர்
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான
கூரிய இரு வாள்களுடன் ஐவர்
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக
சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன்
கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து தெரியவருகையில், யாழ் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர்
கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.</p><p></p><h2>சோதனை</h2><p>&nbsp;கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டு சென்ற குறித்த கும்பல்&nbsp; இளைஞனை உடைகளை
களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை
யாழ் பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டுவந்து விடுவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த கார் வேகமாக ஓட்டி சென்றபோது வீதிக்கடமையில் இருந்த
பொலிஸ் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da640eef-c93e-4355-b861-74cb5b6a8252/26-6a50dc701aa02.webp' /></p><p>
</p><p>
சந்தேகமுற்ற பொலிஸார் குறித்த "காரை" துரத்திச் சென்று இடைமறித்து
சொதித்துள்ளனர்.

சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய "வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு "சேட்"டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.</p><p></p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதையடுத்து பொலிசார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ்
போதையும் மீட்கப்படுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f491333-2822-447a-80fc-651f98d2be26/26-6a50dc70d7ddb.webp' /></p><p>
</p><p>
இதேவேளை பொலிசாதின் சாதுரியத்தால் கண்டறியப்பட்ட குறித்த கடத்தலுடன்
தொடர்புடைய இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொலிசார்
தெரிவித்தனர்.</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T11:58:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை கிளப்பிய குரல் பதிவு - யாழ். மாணவி மீது புதிய குற்றச்சாட்டு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-university-chancellor-student-controversy-1783684118"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-university-chancellor-student-controversy-1783684118</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட விடயங்கள் தொடர்பிலான மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட விடயங்கள் தொடர்பிலான மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விவாகரத்துடன் தொடர்புடைய 14 பேரை எதிர் மனுதாரர்களாக
கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ் நிலை காப்பு சட்டத்தின்
கீழ், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம்
தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இவ்வாறு 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

மாணவி மீது துணைவேந்தர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம்
ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக
மாணவியும், இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவருமான பெண்ணொருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66c4d7a-3614-4aa2-9b1a-e8616ae7340f/26-6a50dca6194aa.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த நிலையில் , முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் உடன் முன்னாள் மாணவி உரையாடிய தொலைபேசி பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><h2>

மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு</h2><p>

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில்,&nbsp; நிகழ்நிலை காப்பு
சட்டத்தின் பிரிவு 20 இன் கீழ், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி
சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரை எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f232f177-7454-49dc-a92e-6474a071ef4b/26-6a50dca6c2a0c.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை
முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக
துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப் , டிக்டொக் ,
பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை
பிரசுத்தமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

வழக்கில் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா ? இல்லையா என்பதனை 
முடிவு செய்வதற்காக வழக்கு இன்றைய நாளுக்கு திகதியிடப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, வழக்கு இன்று(10) விசாரணைக்கு எடுத்து
கொள்ளப்பட்ட போது, எந்தவித கட்டளைகளும் வழங்கப்படாது, வழக்கினை எதிர்வரும்
13ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:51:20+00:00</updated>
        </entry>
    </feed>
