<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-15T08:38:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/program-to-control-dengue-mosquitoes-in-mannar-1784103061"></link>
            <id>https://tamilwin.com/article/program-to-control-dengue-mosquitoes-in-mannar-1784103061</id>
            <summary type="text">மன்னார் நகரசபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும்
வகையில் மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் நகரசபை பிரிவில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும்
வகையில் மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில் பொது சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படையுடன் இணைந்து விசேட
வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.&nbsp;</p><p>குறித்த வேலைத்திட்டம் இன்றைய தினம் காலை வேளையில் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>டெங்கு பரிசோதனை வேலைத்திட்டம்</h2><p>இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு குறித்த
டெங்கு பரிசோதனை விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
</p><p>அதன்படி இன்றைய தினம் அரச அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிலையங்களில் டெங்கு
பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p></p><p>இதன்போது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு
காரணமான இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த ஆலோசனைகள்
வழங்கப்படும். அறிவித்தல்களை மீறி டெங்கு நுளம்பின் பெருக்கத்திற்கு உடந்தையாக
உள்ள உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T08:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/transfer-to-the-officer-who-shot-through-negombo-1784102579"></link>
            <id>https://tamilwin.com/article/transfer-to-the-officer-who-shot-through-negombo-1784102579</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் வெடித்த வன்முறை மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, உடனடியாகப் பல்லேகல சிறைக்குத் தற்காலிகமாக மாற்றப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் வெடித்த வன்முறை மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, உடனடியாகப் பல்லேகல சிறைக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார் என்று&nbsp; சிறைச்சாலைகள் ஆணையர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், கேள்விக்குட்படுத்தப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிமுறைகளுக்கு இணங்க நடத்தப்பட்டதா அல்லது அதிகார மீறலா என்பதைத் தீர்மானிப்பதற்காக ஒரு சிறப்பு விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;துப்பாக்கிச்சூடு</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், கைதிகள் குழு ஒன்று அங்கு இருந்த அதிகாரிகளைக் கொடூரமாகத் தாக்கி, சிறையின் கடைசி மரக்கதவை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1836953b-b8b2-4507-b83f-05da273f7da7/26-6a57433550dee.webp' /></p><p>
</p><p>
பத்து சிறை அதிகாரிகள் உட்பட 33 பேர் உயிரிழந்த இந்த வன்முறை மோதலின் போது, ​​கலவரத்தில் ஈடுபட்ட பல கைதிகளைப் பணயக்கைதிகளாகப் பிடித்திருந்த சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரி தனது துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
</p><p>
சிறையின் பிரதான வாயிலை மறித்துக்கொண்டு தப்பிக்க முயன்ற கைதிகள் மீது, அதிகாரி பிரதான வாயில் வழியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

இதனால் கைதிகள் பீதியடைந்து தப்பி ஓடினர்.</p><p></p><h2>&nbsp;பொலிஸ்அதிரடிப் படை</h2><p> </p><p>பின்னர், சிறை அதிகாரிகளும் சிறப்பு பொலிஸ்அதிரடிப் படையினரும் (STF) வாயில்களைத் திறந்து, பணயக்கைதிகளையும் காயமடைந்த கைதிகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddc5f5fb-15aa-40d7-9f92-0c79665a5608/26-6a574336001b9.webp' /></p><p>
</p><p>
சிறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தன் உயிரைப் பணயம் வைத்த இந்த அதிகாரி, துபாய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் பாதாள உலகக் கும்பல்களிடமிருந்து தற்போது தொடர்ச்சியான மரண அச்சுறுத்தல்களைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 கொலை செய்யப்பட்ட சக அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வெலிக்கடை சிறைக்கு வந்த நீதி மற்றும் சிறைகள் விவகாரங்கள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைச் சூழ்ந்துகொண்ட சிறை அதிகாரிகள், பாதாள உலகத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த அதிகாரியின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒருமனதாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p><b><i>You May Like This..</i></b></p><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bjQygnbYMMw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p>



</p>]]></content>
            <updated>2026-07-15T08:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி இரண்டாவது நாளாக முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ltte-treasure-media-denied-access-1784101374"></link>
            <id>https://tamilwin.com/article/ltte-treasure-media-denied-access-1784101374</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதி
கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதி
கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக
தெரிவித்து அகழ்வு பணி நேற்றைய தினம் (14.07.2026) ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது.
</p><p>
பாரதி பிரதான வீதி, தேவிபுரம் (அ) பகுதி
கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் இருப்பதாக
கூறி கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தின்
அனுமதியை பெற்று நேற்றையதினம் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகழ்வு பணியை
ஆரம்பித்திருந்தனர்.</p><p></p><p> </p><p>இருப்பினும் ஊடகங்களுக்கான செய்தி சேகரித்தலுக்கான அனுமதி
மறுக்கப்பட்டிருந்தது.</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>
</p><p>
ஊடகவியலாளருக்கு அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த
அகழ்வு பணியின் உண்மை தன்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் அப்பகுதியில்
செய்தி சேகரிக்க சென்ற போது குறித்த அகழ்வு இடம்பெறும் பகுதிக்குள்
செல்வதற்கும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்வதற்கும் அனுமதி
மறுக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
நேற்றையதினம் இடம்பெற்ற அகழ்வின் போது எதுவும் கிடைக்காத நிலையில் முதலாம்
நாள் அகழ்வு பணி நிறைவு பெற்றிருந்தது. </p><p>இந்த நிலையில் இரண்டாம் நாள் அகழ்வு பணி இன்றையதினம் (16.07.2026) இடம்பெறவுள்ளது.

இருப்பினும் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ
மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T08:05:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபேஸ்புக் மூலமாக வாகன மோசடி - பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-advertisements-using-robbery-scheme-1784100222"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-advertisements-using-robbery-scheme-1784100222</id>
            <summary type="text">ஃபேஸ்புக் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்துவிட்டு, பின்னர் அந்த வாகனங்களை மீண்டும் கொள்ளையடிக்கும் பாரிய மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபேஸ்புக் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்துவிட்டு, பின்னர் அந்த வாகனங்களை மீண்டும் கொள்ளையடிக்கும் பாரிய மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.
</p><p></p><h2>விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி</h2><p>
 

ரூபாய் 40 இலட்சம் பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட வேன் ஒன்றை, ஆயுதமேந்திய குழுவினர் மிரட்டி கொள்ளையடித்ததாக ஜூலை முதலாம் திகதி பொலிஸ் மா அதிபர் நிவாரணப் பிரிவில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p>

 

இம்முறைப்பாடு தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/751f1c28-764c-4916-a83b-a8fe371cea1d/26-6a573de701015.webp' /></p><p>அதற்கமைய, இந்த மோசடிச் சம்பவத்துடன் பெலும்மஹர, முந்துங்கொட பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உட்பட சுமார் 10 பேர் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
</p><p>
 

இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி யக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

சந்தேகநபர்கள் முகநூல் மூலம் வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி, அவற்றை விற்பனை செய்த பின்னர், திட்டமிட்ட முறையில் அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று ஆயுத முனையில் கொள்ளையடித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><h2>மேலும் இரு கொள்ளைச் சம்பவங்கள்&nbsp;</h2><p>
 

இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளனர்.</p><p>

 

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகெடிஹேன பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலைய உரிமையாளரின் வீட்டில் சோதனையிட்ட அதிகாரிகள், அங்கிருந்த 2 வாள்கள், 2 பிஸ்டல் மெகசின்கள், 3 தோட்டாக்கள் மற்றும் ஜீப் வண்டியொன்றை பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5730ba1-766b-431c-b424-9353aed8375b/26-6a573de7b13ff.webp' /></p><p>இதேபோன்ற முறையில் நடத்தப்பட்ட மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
</p><p>
 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நாளை (16) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T08:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு! வங்கிகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1183-billion-july-aswesuma-benefits-credited-today-1784100559"></link>
            <id>https://tamilwin.com/article/1183-billion-july-aswesuma-benefits-credited-today-1784100559</id>
            <summary type="text">ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் இன்று(15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலத்திட்ட உதவிகள் சபை அறிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் இன்று(15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலத்திட்ட உதவிகள் சபை அறிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, பயனாளிகளுக்கு சுமார் ரூ. 11.83 பில்லியன் தொகை வழங்கப்பட உள்ளது.</p><p></p><h2>அஸ்வெசும நலத்திட்ட உதவிகள்</h2><p>
</p><p>
இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 1,012,812 பயனாளிக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 9.35 பில்லியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed94dbb-dbc0-4336-9349-8782b9832dac/26-6a573adb03d90.webp' /></p><p>

இரண்டாம் கட்டத்தில், மேலும் ரூ. 2.46 பில்லியன் தொகை 211,647 பயனாளிக் குடும்பங்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
</p><p>
அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் திட்டத்தின் இரண்டு கட்டங்களின் கீழ், மொத்தமாக 1,224,459 பயனாளிக் குடும்பங்கள் இன்று ரூ. 11,825,596,250 தொகையைப் பெறும் என்று நலத்திட்ட உதவிகள் சபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-15T07:46:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பேசும் கட்சிகளின் சங்கம்: பின்னணியில் அநுர அரசாங்கம் இல்லை - நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-nalinda-jayatissa-1784094335"></link>
            <id>https://tamilwin.com/article/minister-nalinda-jayatissa-1784094335</id>
            <summary type="text">தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின்
பின்னணியில் அரசாங்கம் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த
ஜயதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின்
பின்னணியில் அரசாங்கம் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த
ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல்
திணைக்களத்தில் நேற்று (14.07.2026) நடைபெற்றது.</p><p></p><p> இதன்போது, நேற்றுமுன்தினம் கொழும்பில்
உருவாக்கப்பட்ட தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றியத்தின் பின்னணியில் அரசின்
தலையீடு ஏதேனும் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
</p><p>
அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>ஆளுங்கட்சிக்குள் பிரச்சினை</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறியதாவது, எதிரணிகளின் ஒன்றிணைவு குறித்து எதிர்க்கட்சித் தலைவரிடம் தான் நீங்கள் கேள்வி
எழுப்ப வேண்டும். ஆளுங்கட்சிக்குள் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் என்னிடம்
கேளுங்கள். எதிரணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டியது எதிர்க்கட்சித்
தலைவரின் பொறுப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4968b0-fbe4-41c0-adea-68642c9de2f0/26-6a5738ef87f2e.webp' /></p><p> நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் எமக்கு 159
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் உள்ளது. அவர்களுடன் நாம் எமது பயணத்தை
முன்னெடுத்து வருகின்றோம். எனவே, புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டிய
தேவைப்பாடு எமது அரசுக்குக் கிடையாது என்றார்.</p><p></p><h2>தீர்மானம்</h2><p>
</p><p>
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளின்
ஓர் அங்கமாக, பொதுக் கட்டமைப்பொன்றின் கீழ் இணைந்து செயற்படுவதற்கு ஆறு பிரதான
தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
</p><p>
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே இவ்வாறு
ஒன்றிணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T07:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதற்றத்தினால் மூடப்பட்ட வான் பரப்பு : கட்டுநாயக்கவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-srilankan-airlines-flights-returned-1784095873"></link>
            <id>https://tamilwin.com/article/two-srilankan-airlines-flights-returned-1784095873</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நேற்று(14) இரவு பதற்றம் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்ட நிலையில், குவைத் நகரம் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நேற்று(14) இரவு பதற்றம் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்ட நிலையில், குவைத் நகரம் மற்றும் தம்மாம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு&nbsp; பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL229 நேற்று(14) மாலை 5:10 மணிக்கு பஹாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டது, </p><p>அதே நேரத்தில் விமானம் UL253 மாலை 6:36 மணிக்கு தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.</p><p></p><h2>குவைத் சவூதி அரேபியா வான்வெளி மூடல்</h2><p> இவ்விரு விமானங்களும் ஏர்பஸ் A321neo ரக விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்பட்டன.
</p><p>
 

விமானங்கள் மத்திய கிழக்கை நெருங்கியபோது, ​​ஈரான் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, குவைத்தும் சவூதி அரேபியாவும் தத்தமது வான்வெளிகளைத் தற்காலிகமாக மூடின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f03e40b-707b-49cf-9fec-9aa3865c6153/26-6a572ed9e493e.webp' /></p><p>இந்நிலையில் தத்தமது இலக்குகளுக்கு உடனடியாகச் செல்ல இயலாததால், அந்த இரண்டு விமானங்களும் பாதிக்கப்பட்ட வான்வெளிக்கு அருகே சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
 

தற்காலிக வான்வெளி மூடல்கள் காரணமாக, வேறு பல சர்வதேச விமானங்களும் வானில் வட்டமிட்டுக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p>
 

இரு விமானங்களும் இன்று காலை (15) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பி வந்தடைந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T07:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உயிரிழந்த கோடீஸ்வர பெண் - சடலத்திற்கு போட்டி போடும் தரப்பினால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-groups-wait-for-a-women-s-body-1784080082"></link>
            <id>https://tamilwin.com/article/4-groups-wait-for-a-women-s-body-1784080082</id>
            <summary type="text">தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
பல சொத்துகளுக்கு உரிமையாளரான 75 வயதுடைய பெண், உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை பெற்றுக்கொள்வதில் நான்கு தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.
</p><p>
உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகளை முன்னெடுப்பதற்காக முன்வந்த நான்கு தரப்பினராலும் தமக்கு சட்டபூர்வமான உரிமை உள்ளதை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது.</p><p></p><p>
</p><h2><b>
கோடீஸ்வர பெண் </b></h2><p>நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை உடலை எந்த தரப்பினருக்கும் கையளிக்கப் போவதில்லை என மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397260a9-5830-4238-b3bc-5230eb0f6db6/26-6a56eae5a888a.webp' /></p><p>குறித்த பெண்ணுக்கு சொந்தமான 2 மாடி வீட்டின் மேல் தளத்தில், சுமார் 16 வருடங்களாக தம்பதி ஒன்று தங்கள் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். 

அவர்கள் உயிரிழந்த பெண்ணை மிகவும் அன்புடன் கவனித்து வந்துள்ளனர். அத்துடன், 14 வருடங்களாக அவரிடம் வாடகைப்பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.</p><p>

உயிரிழந்த பெண் சுகவீனமுற்று பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றபோது, அவரது அனைத்து தேவைகளையும் அந்த குடும்பமே நிறைவேற்றியுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>

இந்தக் குடும்பத்தினர் உடலை பொறுப்பேற்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முன்வந்தபோது, உயிரிழந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் என கூறி மேலும் மூவர் முன்வந்துள்ளனர்.</p><h3><b> 

பிரேத பரிசோதனை</b></h3><p>அவர்களில் உயிரிழந்த பெண்ணின் சகோதரியின் மகன், மற்றொரு உறவினர் மற்றும் கணவர் என்று கூறிக்கொள்ளும் நபர் ஒருவரும் அடங்குவர்.

உயிரிழந்த பெண் திருமணம் செய்யாதவர் என்பது தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae0bd03a-17ee-4154-b8ae-781ce94a7983/26-6a56eae657419.webp' /></p><p>இதனையடுத்து, கணவர் என்று கூறிக் கொள்ளும் நபர் சமர்ப்பித்த திருமணப் பதிவை ஆய்வு செய்ததில், அதில் குறிப்பிடப்பட்ட பெயர் உயிரிழந்த பெண்ணின் சகோதரியினுடையது என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
அதற்கமைய, உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கு ஒப்படைப்பது என்பதில் கடுமையான சிக்கல் நிலை எழுந்துள்ளது. 

இதனால், பிரேத பரிசோதனையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. </p><p>நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்து, உரிமை தொடர்பான சிக்கலை தீர்த்துக்கொண்டு வருமாறு பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T07:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளர் கடமையேற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-divisional-secretary-of-the-poonagara-1784097529"></link>
            <id>https://tamilwin.com/article/new-divisional-secretary-of-the-poonagara-1784097529</id>
            <summary type="text">பூநகரி பிரதேச செயலகத்தில் பதில் கடமை அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளராக
பணியாற்றி வந்த ச.குணஜா, நிரந்தர உதவிப் பிரதேச செயலாளராக
உத்தியோகபூர்வமாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூநகரி பிரதேச செயலகத்தில் பதில் கடமை அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளராக
பணியாற்றி வந்த ச.குணஜா, நிரந்தர உதவிப் பிரதேச செயலாளராக
உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.</p><p>இந்த நிகழ்வானது&nbsp;நேற்று(14.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>கடமைகளைப் பொறுப்பேற்பு</h2><p>

இதன்போது, பிரதேச செயலகத்தின் கணக்காளர் மற்றும் ஏனைய அலுவலர்கள்
இணைந்து அவருக்கு உளமார்ந்த வரவேற்பை வழங்கி, புதிய பொறுப்பில் சிறப்பாகச்
செயலாற்ற தங்களது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
புதிய பொறுப்பை ஏற்றுள்ள ச.குணஜாவுக்கு எதிர்கால பணிகள் அனைத்திலும் சிறப்பான
வெற்றிகளை பெறுவதற்கு பிரதேச செயலகத்தினர் மற்றும் மக்கள் வாழ்த்துக்களை
தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a152adad-a66d-478c-9fa4-5055f7824bae/26-6a572afb1f0f4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bd0b6ea-ed18-4301-80ac-a11da335ba27/26-6a572afbe5ad8.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T07:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராபுரத்தில் கோர விபத்தில் இருவர் பலி - கர்ப்பிணிப் பெண் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-killed-pregnant-woman-injured-in-accident-1784099004"></link>
            <id>https://tamilwin.com/article/2-killed-pregnant-woman-injured-in-accident-1784099004</id>
            <summary type="text">அனுராதபுரம், மிஹிந்துபுர பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை மோட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம், மிஹிந்துபுர பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
</p><p>
இன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் சிசு செரிய பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p> 

விபத்தில் படுகாயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
விபத்து இருவர் பலி</b></h2><p>விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5786235-dee2-47ed-885d-d6aa268d4582/26-6a5734c9032d8.webp' /></p><p>உயிரிழந்தவர்களில் ஒருவரும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் பொலநறுவையில் இருந்து நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
</p><p>
இதன்போது, மற்றொரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
விபத்து தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அனுராதபுரம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T07:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heritage-journey-from-jaffna-to-mannithalai-1784099494"></link>
            <id>https://tamilwin.com/article/heritage-journey-from-jaffna-to-mannithalai-1784099494</id>
            <summary type="text">வரலாற்றுப் பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயமான பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம்
மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொன்மை வாய்ந்த சிவத்தலங்களை தரிசிப்பதற்கான
&quot;...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுப் பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயமான பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம்
மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொன்மை வாய்ந்த சிவத்தலங்களை தரிசிப்பதற்கான
"மரபுரிமைப் பயணம்" நாளைய தினம்(26) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணக் கோட்டை முனீஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து, நாளைய தினம்
வியாழக்கிழமை காலை 07.30 மணியளவில் பயணம் ஆரம்பமாகி , துணைவி பிரகேஸ்வரன்
ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம், சாவகச்சேரி வாரிவரனேஸ்வரம் மற்றும் கிளிநொச்சி
உருத்திரபுரம் சிவன் ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று இறுதியாக பூநகரி மண்ணித்தலை
சிவாலயம் சென்றடையவுள்ளது.</p><p></p><h2>&nbsp;மரபுரிமை பயணம்</h2><p>
</p><p>
குறித்த பயணத்தில் இணைபவர்களுக்கு , போக்குவரத்து வசதிகள், உணவு
உபசாரங்கள் வழங்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92ab4087-51de-435c-aba5-fe5179bca593/26-6a573447668f7.webp' /></p><p>
</p><p>
இந்த புனித சிவ தரிசனப் பயணத்தினை தொல்லியல் திணைக்களம், வடமாகாண சுற்றுலா
பணியகம் மற்றும் இராஜ இராஜேந்திர சுவாமிகள் ஆகியோர் இணைந்து ஒழுங்கமைத்துள்ளனர்.</p><p>

சோழர் காலத்து ஆன்மீகப் பெருமையையும், நமது பாரம்பரிய மரபுரிமைகளையும்
போற்றிப் பாதுகாக்கும் இந்த வரலாற்றுப் பயணத்தில் ஆன்மீகப் பற்றாளர்களையும்,
பொதுமக்கள் அனைவரையும் அன்போடு கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர்
அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T07:18:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-education-development-sub-committee-meeting-1784095572"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-education-development-sub-committee-meeting-1784095572</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில், கடற்றொழில்,
நீரியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில், கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்
தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்தக் கூட்மானது நேற்றையதினம்(14.07.2026) பி. ப 02.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.</p><h2>ஆக்கபூர்வமான தீர்மானங்கள்</h2><p>
</p><p>
இந்தக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபன், கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று சுற்றுநிருபத்திற்கு
அமைவாக திட்டமிடல், சுற்றுலா, உணவு பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் கல்வி
ஆகிய உப குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைவாக கல்வி உபகுழுவின்
தலைவராக ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி
உபகுழுவின் முதலாவது கூட்டம் இது எனவும் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், அண்மையில்
வெளியாகிய க.பொ. த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி யாழ்ப்பாண மாவட்டம்
முதன்மை பெற்றிருக்கின்றது, அதற்காக உழைத்த அனைவருக்கும் அரசாங்க அதிபர்
என்ற ரீதியில் நன்றிகளையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f774c8c-418a-4824-b485-0e5a95b62fb8/26-6a5728eb2784d.webp' /></p><p> </p><p>

இந்தக் கூட்டத்தில்
மத்திய மாகாண ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான தீர்மானங்களை
எடுப்பதற்கு பங்களிப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் 
கருத்து தெரிவிக்கையில்,</p><p>பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வழி நடத்தலின் கீழ்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டு
கல்வி உபகுழுக் கூட்டங்களை நடாத்தி மாவட்டத்தில் கல்வி தொடர்பாக
எதிர்நோக்கும் சவால்களை ஆராய்ந்து முன்னிலைப்படுத்துவதற்காக இக்கூட்டம்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>வட மாகாணத்தில் அபிவிருத்தி&nbsp;</h2><p> </p><p>

யாழ். மாவட்டத்தில்15 பிரதேச
செயலகங்களிலும் 05 கல்வி வலயங்களிலும் கல்வி தொடர்பான பிரச்சினைகளை
ஆராய்வதுடன் தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதுடன் ஏனைய பிரச்சினைகளை
மத்திய அமைச்சின் மட்டத்திற்கு கொண்டு செல்வதும் இதன் நோக்காகும்.
</p><p>
மேலும் வட மாகாணத்தில் அபிவிருத்தி இல்லாமல் காணப்படும் பாடசாலைகளை
அபிவிருத்தி செய்தல், ஆளணி பற்றாக்குறை போன்றன காணப்படுகிறது, அதனை
தீர்க்க வேண்டும், கல்விப் பெறுபேறுகளில் கடந்தகால யுத்த அசாதாரண
நிலைமைகள் தாக்கம் செலுத்துகிறது.
</p><p>
தாயை இழந்த, தந்தையை இழந்த, பெற்றோரை
இழந்து அநாதை இல்லங்களில் பிள்ளைகள் இருக்கின்றனர், கல்வியில் எதிர்நோக்கும்
பிரச்சினைகளை ஆராய்ந்து முன்னிலைக்கு கொண்டு வர வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e60d76-153a-4633-ac41-0dad2cd90b9c/26-6a5728ea5ce10.webp' /></p><p>மேலும், குறைவான மாணவர்களை
கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைத்தல், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கல்வி
அமைச்சினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான பொறிமுறையை வகுத்தல், வட
மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றம், கஸ்ட அதிகஸ்ட பிரதேசங்கள், உள்ளிட்ட
விடயங்களை இக் கூட்டத்தில் ஆராயப்பட உள்ளதாகவும் இவை தொடர்பில் ஆக்கபூர்வமான
கருத்துக்களை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
</p><p>
இந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கல்வி
சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை இக்கூட்டத்தில் முன்வைக்குமாறும்,
அரசாங்கமானது ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் ஏனைய ஆளனி வெற்றிடங்களை
படிப்படியாக நிவர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார்.</p><h2>இலங்கை வறுமை ஒழிப்பு</h2><p> 

மேலும் இலங்கை வறுமை
ஒழிப்பில் முன்னிலை வகித்து வருவதாகவும், கல்வித் துறையில் தற்போது வறுமை
மற்றும் போதைப் பொருள் பாவனை என்பனவும் தாக்கத்தை ஏற்படுத்தி
பின்னிப்பிணைந்துள்ளதாகவும், வறுமை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு
போன்ற செயற்றிட்டத்தில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும்,
எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதலான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட ரீதியாகவும்
ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். </p><p>

மேலும், மக்களுக்கு
விமர்சிக்கும் உரிமை உண்டு எனவும், அந்த விமர்சனத்தை தவறாக சிலர்
சித்தரிப்பதாகவும், எமது அரசாங்கத்திடம் இலஞ்சம், பொய் மோசடி இல்லாத அரசியல்
கலாச்சாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். </p><p>

மேலும், இக் கூட்டத்தில் கலந்து
கொண்டவர்கள் கல்வி மேம்பாட்டுக்கு தங்களுடைய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும்
கருத்துக்களையும் முன்வைக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/963855c6-3d45-4469-8388-01768c54c836/26-6a5728e991546.webp' /></p><p>இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள், நெடுந்தீவு ஆசிரியர்களுக்கான
தங்குமிட வசதிகளை ஏற்படுத்தல், குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை
ஒன்றிணைக்கும் செயற்பாடு, பாடரீதியான ஆசிரியர்களின் தேவைப்பாடுகள், தொழில்
கல்வி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், சமாந்திர வகுப்பு என்பன
தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.</p><p>

இந்தக் கலந்துரையாடலில் வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் இளைஞர்கள்
விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர் க.சிவகரன், மாகாண கல்வி பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன்,
ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், மாவட்ட செயலக
பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வலயக்
கல்வி பணிப்பாளர்கள், கல்வித்துறையோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள், மாவட்ட
செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T07:12:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹாவில் இடம்பெற்ற விபத்து! 19 வயது இளைஞர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fatal-accident-in-gampaha-19-year-old-youth-dies-1784095158"></link>
            <id>https://tamilwin.com/article/fatal-accident-in-gampaha-19-year-old-youth-dies-1784095158</id>
            <summary type="text">கம்பஹா, வெலிவேரிய - பியகம வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற&amp;nbsp; &amp;nbsp;கோர விபத்தில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, வெலிவேரிய - பியகம வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற&nbsp; &nbsp;கோர விபத்தில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது நேற்று(14.072026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>ஒருவர் உயிரிழப்பு</h2><p>
</p><p>விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, </p><p>பியகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, மற்றுமொரு முச்சக்கர வண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து அருகில் வந்த கார் ஒன்றின்
மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
</p><p>
இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியான கடுவெல பகுதியைச் சேர்ந்த 19
வயதுடைய இளைஞர், மீட்கப்பட்டு உடுபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eed06c7c-c1be-4936-9162-81535f86f1bf/26-6a5721b78f782.webp' /></p><p>

விபத்தில் காரின் சாரதியும் காயமடைந்த நிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக
கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய மற்றுமொரு முச்சக்கர வண்டியின் சாரதி, வெலிவேரியப் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.&nbsp; </p><p>சம்பவம் குறித்து வெலிவேரியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T07:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டியில் பேருந்து மோதி பாதசாரி பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pedestrian-dies-after-being-hit-by-bus-in-kandy-1784093772"></link>
            <id>https://tamilwin.com/article/pedestrian-dies-after-being-hit-by-bus-in-kandy-1784093772</id>
            <summary type="text">கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கொவிபல சந்திப் பகுதியில் நேற்று(14.07.2026) இடம்பெற்ற விபத்தில், பாதசாரி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கொவிபல சந்திப் பகுதியில் நேற்று(14.07.2026) இடம்பெற்ற விபத்தில், பாதசாரி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக
உயிரிழந்துள்ளார்.</p><p>

மாத்தளையிலிருந்து கடுகஸ்தோட்டை நோக்கிப் பயணித்த பேருந்து, வீதியைக் கடக்க
முயன்ற பெண் ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>பரிதாபமாக உயிரிழந்தப் பெண்</h2><p>
</p><p>
இந்த விபத்தில் கடுகஸ்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே
உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a2a39c5-aaf4-4c73-9c61-439657382cea/26-6a571ed94f7d2.webp' /></p><p>விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கடுகஸ்தோட்டைப் பொலிஸார்,
விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதியைக் கைது செய்துள்ளனர்.</p><p>

இந்த விபத்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T06:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-hiding-and-making-troubles-1784078234"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-hiding-and-making-troubles-1784078234</id>
            <summary type="text">பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>கஞ்சிபானி இம்ரான் கொலைகள் மற்றும் கொடூரமான மனிதநேயமற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, இலங்கையின் பாதாள உலகக் குழுவின் மிகக் கொடூரமான மற்றும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>சர்வதேச பொலிஸாரின் வலையிலிருந்தும் தப்பித்து, வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்து கொண்டு, இலங்கையில் அச்சுறுத்தலான பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை இயக்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முக்கிய சூத்திரதாரி</span></p><p>2019ஆம் ஆண்டு துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதன் பின்னர், அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சிபானி இம்ரான், 2021ஆம் ஆண்டு பிணையில்&nbsp; செல்ல அனுமதிக்கப்பட்டதைத்&nbsp; தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடினார்.</p><p> அன்றிலிருந்து போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளின் எல்லைகளைக் கடந்து நடமாடி வரும் கஞ்சிபானி இம்ரான், பல கொடூரமான கொலைகளின் பின்னணியில் இருக்கும் முக்கிய சூத்திரதாரியாக விளங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cc94e88-b95e-4fde-b6f4-45eb3856f3e4/26-6a56df9c53820.webp' />&nbsp;&nbsp;</p><p>
'கஞ்சிபானி இம்ரான்' வெறும் உள்நாட்டு பாதாள உலக குழு செயற்பாடுகளை மட்டும் மேற்கொள்ளவில்லை எனவும், தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச பாரிய மாஃபியா கும்பல்களுடன் கைகோர்த்துள்ளதாக&nbsp; புலனாய்வுத்துறை தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.</p><p> 
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை சர்வதேச தொழில்நுட்பங்கள் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி இயக்கி வரும் கஞ்சிபானி இம்ரானினால் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சாதாரணமானதொன்றல்ல என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f0605a6-493e-4ffe-89d4-a5ba12598312/26-6a5703a1865af.webp' />&nbsp;</p><p>
இந்தக் குற்றவாளியைக் கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார், சர்வதேச பொலிஸ் ஊடாக 2024 ஆகஸ்ட் 02 அன்று 'A-888' என்ற இலக்கத்தின் கீழ் 'சிவப்பு அறிவித்தல்' (Red Notice) ஒன்றைப் பிறப்பித்துள்ளனர். </p><p>
எனினும், தொடர்ச்சியாகத் தனது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டு, பாதுகாப்புப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவி தலைமறைவாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
இவ்வாறானதொரு கொடூரமான குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது தேசியப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும் எனவும் இந்த நபர் தொடர்பில் தகவல்கள் இருந்தால் குற்றப் புலனாய்வு பிரிவு அல்லது இன்டர்போலிற்கோ தகவல் வழங்க முடியும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EXpWfkYKgfQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T06:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காக்கைதீவு மீள் சுழற்சி மையத்தால் பிரச்சினை - மாநகர சபை முன் போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kakkaithivu-recycling-center-people-protest-1784094021"></link>
            <id>https://tamilwin.com/article/kakkaithivu-recycling-center-people-protest-1784094021</id>
            <summary type="text">காக்கைதீவு மீள் சுழற்சி மையத்தால் தாங்கள் தினமும் இன்னல்களை எதிர்கொள்வதாக
தெரிவித்து, அதற்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இன்றையதினம்(15....</summary>
            <content type="html"><![CDATA[<p>காக்கைதீவு மீள் சுழற்சி மையத்தால் தாங்கள் தினமும் இன்னல்களை எதிர்கொள்வதாக
தெரிவித்து, அதற்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இன்றையதினம்(15.07.2026) காக்கை தீவு மக்கள் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.</p><p></p><h2>கொட்டப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்படுவதில்லை</h2><p>
</p><p>
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாம் இந்த குப்பை மேட்டால் அன்றாடம் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளுகிறோம்.
</p><p>குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களால்
பாதிக்கப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a5c4224-2eb8-4062-bd14-85fd94616509/26-6a572358b9133.webp' /></p><p>அங்கே கொட்டப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்படுவதில்லை. ஈழமக்கள் ஜனநாயகக்
கட்சியின் ஆளுகைக்கு உட்பட்டு மாநகர சபையானது காணப்பட்ட போது தரமான கழிவு
முகாமைத்துவம் பேணப்பட்டது. </p><p>கழிவுப் பொருட்கள் மூலம் சேதனப் பசளை
தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இவ்வாறான
மனிதத்துக்கு ஒவ்வாத பிரச்சினைகள் இடம்பெறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be929a2f-7401-4b34-be4c-240445e8b12a/26-6a572359999d5.webp' /></p><p>
</p><p>
கழிவுகளை எரிக்கிறார்கள். இதனால் அருகில் இருக்க முடிவதில்லை.

இந்த பிரச்சினைக்கு முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வெளியே வந்து எமக்கு
தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மாநகர சபைக்கு உள்ளே செல்ல
வேண்டி ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T06:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல உயிர்களை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைக் கலவரம்! உரிய நேரத்தில் மேலிடத்தில் இருந்து கிடைக்காத கட்டளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1784093029"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1784093029</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் உக்கிரமடைந்த போது, மேலிடத்தில் இருந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு சரியான&amp;nbsp; கட்டளைகள் கிடைக்காமையே இந்த பேரழிவுக்குக் கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் உக்கிரமடைந்த போது, மேலிடத்தில் இருந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு சரியான&nbsp; கட்டளைகள் கிடைக்காமையே இந்த பேரழிவுக்குக் காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்&nbsp; மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக் கிழமை வன்முறை வெடித்த போதே, தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.&nbsp;</p><p></p><h2>பாதுகாப்பு நடவடிக்கை&nbsp;</h2><p>திங்கட்கிழமை மீண்டும் அசம்பாவிதம் ஏற்படாதிருக்க&nbsp; தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் செய்திருக்க வேண்டியது அவசியம்.&nbsp;</p><p>எனினும், அமைச்சரின் அலட்சியத்தால் திங்கட்கிழமை, முதல் நாளை விட பயங்கரமான மோதல்கள் இடம்பெற்று சிறை அதிகாரிகள் பலியாகினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a955c5-313a-4625-9db6-32e9948d51ac/26-6a572224c1d35.webp' /></p><p>நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின்போது&nbsp; உரிய நேரத்தில் தங்களுக்கு மேலிடத்தில் இருந்து எவ்விதக் கட்டளைகளும் கிடைக்காமையே இந்த பேரழிவுக்குக் காரணம் என்று இறுதியில் சிறை அதிகாரிகளே அமைச்சரிடம் நேரடியாகக் குறைபட்டனர்.&nbsp;</p><p>அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்திற்குள் கடமையில் இருந்த போதே,&nbsp; இந்த சிறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச இழப்பீட்டை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T06:04:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-sb-dissanayake-s-brother-arrest-1784094106"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-sb-dissanayake-s-brother-arrest-1784094106</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

வீரகெட்டியாவைச் சேர்ந்த ஒருவரிடம் மதுபான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, சந்தேக நபர் அவரிடமிருந்து 27.5 மில்லியன் ரூபாயைப் பெற்றதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை</h2><p>
 


அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், நேற்றைய தினம் (14) காலை ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து ஜெயலத் பண்டார திசாநாயக்கவை கைது செய்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f7e2ec-db14-4e4c-a415-ba09cc54fac1/26-6a571f9b75cfe.webp' /></p><p>
 

58 வயதுடைய சந்தேகநபரான அவரை இன்றையதினம் (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:50:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி! மிகவும் செலவு குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/each-tourist-spends-148-dollars-in-sri-lanka-1784084661"></link>
            <id>https://tamilwin.com/article/each-tourist-spends-148-dollars-in-sri-lanka-1784084661</id>
            <summary type="text">சமகாலத்தில் இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளின் நாளாந்த செலவு மிகவும் குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகாலத்தில் இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளின் நாளாந்த செலவு மிகவும் குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

2026 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாளொன்றுக்கு 148 டொலர்களை மட்டுமே செலவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

2018 - 2019 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நாள் ஒன்றுக்கு 171 டொலர்களை செலவு செய்த நிலையில் தற்போது அந்தளவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>சுற்றுலாப் பயணிகள்</b></h2><p>148 டொலர் என்பது நேற்று நிலவரத்திற்கமைய, இலங்கை நாணய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாயாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b379007-e636-4663-901e-698e9a518ab5/26-6a5721379fce7.webp' /></p><p>களுத்துறை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். </p><p>2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் செலவிடும் டொலர் தொகையை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். </p><p>2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஒரு டொலரின் பெறுமதி இலங்கை ரூபாயில் 160 முதல் 180 ரூபாய் வரை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-07-15T05:42:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல் - ஹர்ஷ டி சில்வா கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harsha-de-silva-statement-1784093081"></link>
            <id>https://tamilwin.com/article/harsha-de-silva-statement-1784093081</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு
முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய
மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு
முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
</p><p>
நீதித்துறை தொடர்பான இந்த அரசின் தன்னிச்சையான போக்கு குறித்து ஊடகங்களிடம்
கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு விமர்சித்தார்.</p><p></p><h2>கொள்கை ரீதியிலான விவாதம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்துத்
துறையினரினதும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக ஒரு பொதுவான கொள்கை
ரீதியிலான விவாதம் அவசியம். </p><p>அதை விடுத்து, திடீரென ஒரு சட்டமூலத்தைக்
கொண்டுவந்து குறிப்பிட்ட சில நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்க
முற்படுவது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது.
</p><p>
அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்வது என்பது, வெறும் 8 அல்லது 16 நபர்களின்
பதவிக்காலத்தை நீடிப்பதற்காக இருக்குமாயின், அது ஓர் அப்பட்டமான அரசியல்
தேவைக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இத்தகைய போக்கு நாட்டின் மிக
உயர்ந்த அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் மயமாக்கிவிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94a4c704-2de4-4693-8621-588c3e976cc6/26-6a571c0ec22c0.webp' /></p><h2>மோசமான விளைவுகள்</h2><p>
</p><p>
முன்னொரு காலத்தில் நாடாளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியின்
பதவிக்காலத்தை நீடிக்க முற்பட்டபோதும், பிரதம நீதியரசரைப் பதவியிலிருந்து
நீக்கியபோதும் நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அந்த மோசமான விளைவுகளை
நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
</p><p>
எனவே, அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களை மட்டுமன்றி, நாட்டின் கல்விமான்கள்,
சட்ட வல்லுநர்கள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றின்
கருத்துகளுக்கும் மதிப்பளித்து, இந்தத் தவறான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட
வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:39:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-1784091516"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-1784091516</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில், சிறைச்சாலைகள் அவசர
நிலைமைகளைக் கையாளும் படையணி உத்தியோகத்தர்கள் 10 பேர் மற்றும் கைதிகள் 21
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில், சிறைச்சாலைகள் அவசர
நிலைமைகளைக் கையாளும் படையணி உத்தியோகத்தர்கள் 10 பேர் மற்றும் கைதிகள் 21
பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
</p><p>
இது தொடர்பான வழக்கு விசாரணை, நீர்கொழும்பு நீதிவான் ஷிலனி பெரேரா
முன்னிலையில் நேற்று(14.07.2026) இடம்பெற்றது.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>இதன்போது தாக்கல்
செய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் முக்கிய அம்சங்கள்
வருமாறு,</p><p> நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, சிறைச்சாலைகள் அவசர
நிலமைகளை கையாளும் படையணி குழுவைச் சேர்ந்த 10 உத்தியோகத்தர்கள் (சிறைச்சாலை
காவலாலர்கள்) மற்றும் 21 கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், சிறைச்சாலை
அதிகாரிகள் உட்பட 287 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
</p><p>
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின்
பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக நீதிமன்றில் விளக்கமளிக்கையில்,</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca194473-c836-484f-aece-6b355332b83e/26-6a5718e9e2f3d.webp' /></p><p>மோதல்
சம்பவம் இடம்பெற்றபோது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து
கைதிகளிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற வேண்டியுள்ளது.</p><p> தற்போது இந்தக்
கைதிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் மாற்றப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டுள்ளமையால், அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்குத்
தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு
உத்தரவிடுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.</p><p>

இதனைப் பரிசீலித்த நீதிவான் ஷிலனி பெரேரா, கைதிகளிடம் வாக்குமூலம் பெற தேவையான
வசதிகளை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவு
பிறப்பித்துள்ளார்.</p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை&nbsp;மோதல்</h2><p> </p><p>அத்துடன், கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு
சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தின் வணிக குற்றப் பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் களுஆராய்ச்சி
உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நீதிமன்றில் மேலதிக அறிக்கை ஒன்றை தாக்கல்
செய்துள்ளனர்.
</p><p>
தொடர்ந்து மன்றில் விடயங்களை முன்வைத்த வணிக குற்றப் பிரிவினர், இக்கொலைச்
சம்பவங்களுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்படும் அனைத்து சந்தேகநபர்களுக்கும்
எதிராக கொலைக் குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச்
சொத்துக்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடரப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb4089a-f039-4933-9634-13b81e5adbe0/26-6a5718e93b85a.webp' /></p><p>தண்டனைச் சட்டக்கோவையின் 102, 113, 146, 186, 300, 315, 316, 317, 344 ஆகிய
பிரிவுகளின் கீழும் ஏனைய சட்டங்களின் கீழும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்தோடு மனிதப் படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் தற்போது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், தோட்டாக்கள் அடங்கிய 60 துப்பாக்கிகள் வழக்குப்
பொருளாக குறிப்பிடப்பட்டு, வழக்குப்பொருள் களஞ்சியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p> அதற்கமை வழக்கு விசாரணைக்கு அவசியமான சந்தரப்பங்களின்
போது அவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.</p><h2>உயிரிழந்தவர்களின் சடலங்கள்</h2><p>
</p><p>
மேலும் விடயங்களை முன்வைத்த அதிகாரிகள், கைதிகள் சிறைச்சாலை வளாகத்தில்
பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் டிவிஆர் இயந்திரங்களைச்
சேதப்படுத்தியுள்ள போதிலும், அதிலிருந்த இரண்டு கணினி வன்வட்டுக்களை
அதிகாரிகள் மீட்டுள்ளனர்.</p><p> அவற்றை இரசாயனப் பகுப்பாய்வுக்காக மொரட்டுவை
பல்கலைக்கழகத்தின் கணினிப் பிரிவுக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகள்
இதன்போது நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். நீதிவான் அதற்கு
அனுமதி வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1a75c1f-940e-46ce-9330-0a2ad3c8bcfe/26-6a571cb0f21d8.webp' /></p><p>
</p><p>மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியால்
வழங்கப்பட்ட 3 சுருக்கமான பிரேத பரிசோதனை அறிக்கைகளும் மன்றில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கொடூரமான தாக்குதல்கள், துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள்
குறித்து அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்த மோதல் குறித்து நீதிமன்றில்
தெரிவிக்கையில், </p><p>கனம் நீதிவான் அவர்களே, கடந்த 5 ஆம் திகதி காலையிலேயே
இந்தச் சம்பவத்துக்கான ஆரம்பப் புள்ளி உருவானது.</p><p></p><h2>நீர்கொழும்பு பொலிஸார்</h2><p> சிறைச்சாலையின் 'ஏ 1' அறையில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஷ் புஷ்பகுமார எனப்படும் 'கடுவெல்லேகம சுரேஷ்'
என்ற கைதி, உடற்பயிற்சி செய்ய வழங்கப்பட்ட நேரம் போதாது எனக் கூறி
அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலவரம் செய்துள்ளார்.</p><p>

இதனால் அவர் 'எல்' வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அவர் மோதலில்
ஈடுபட்டமையால் மீண்டும் 'ஏ 1' அறைக்கு கொண்டு வரப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/232424ce-c21a-4650-b521-c662b2614867/26-6a5718e7c9612.webp' /></p><p>அங்கு ஏற்பட்ட
கடுமையான மோதலில் ஆரம்பத்தில் இரு கைதிகள் உயிரிழந்தமையுடன் 36 பேர்
காயமடைந்தனர். இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள்
முயன்றபோது, கைதிகள் முழுச் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டையும் தமது
கைகளுக்குள் கொண்டு வந்தனர். </p><p>இதனால் அதிகாரிகள் நீர்கொழும்பு பொலிஸாருக்கும்,
நீர்கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கும் அவசர தகவல் வழங்கினர். எனினும்,
சம்பவ இடத்தைச் சோதனையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளைக் கைதிகள் உள்ளே
அனுமதிக்கவில்லை.</p><p>
மறுநாள் வரை சிறைச்சாலை கைதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதனால்
சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பிலிருந்து 89 சிறைச்சாலை பொலிஸ்
உத்தியோகத்தர்களை வரவழைத்துள்ளனர்.</p><h2>மோதலை கட்டுப்படுத்தல்</h2><p> </p><p>அந்தக் காலப்பகுதியில் சிறைச்சாலையில் மொத்தம்
2 ஆயிரத்து 417 கைதிகள் இருந்தனர். 162 தண்டனை பெற்ற கைதிகள், 2 ஆயிரத்து 255
விளக்கமறியல் கைதிகள், இதில் பெண்கள் 161 பேர் அடங்குவர். </p><p>அத்துடன் 161
சிறைச்சாலை ஊழியர்கள் கடமையில் இருந்தனர். மொத்தம் 16 கைதிகள் அறைகள்
காணப்படுகின்றன.
</p><p>
கடந்த 6 ஆம் திகதி காலை உணவு வழங்கச் சென்ற போது, 'அதிகாரிகளே உள்ளே வர
வேண்டாம், உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்கள்' எனக் கைதிகள்
எச்சரித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dc8d9fa-0f8c-4111-b763-0c2c9be5b56e/26-6a5718e72026f.webp' /></p><p>அன்றைய தினம் காலை 10.30 மணிக்கும் 10.50 மணிக்கும்
இடைப்பட்ட நேரத்திலேயே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p> இதன்போது கைதிகள்
நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கத் தொடங்கினர். அதிகாரிகள் ஓடி
வந்து இரும்பு வலைக் கதவு வழியாக தப்பித்துக் கொண்டனர்.</p><p>ஆனால், மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்ற சிறைச்சாலைகள் அவசர
நிலமைகளைக் கையாளும் படையணி குழு உத்தியோகத்தர்களுக்கு வலைக் கதவுப் பக்கமாக
ஓடிவந்து தப்புவது குறித்து போதிய பரிச்சயம் இல்லாதமையால், அவர்கள் உள்ளேயே
மாட்டிக்கொண்டுள்ளனர்.</p><h2>சோதனை நடவடிக்கை</h2><p>அங்கே கைதிகள் அவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கைதிகள்
சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து, துப்பாக்கிகளைத் எடுத்து சுடத்
தொடங்கிய பின்னரே, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பதில் துப்பாக்கிச்
பிரயோகம் மேற்கொண்டனர்.</p><p>

சிறைச்சாலைக்குள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ரி - 56 ரக தோட்டாக்கள்
மற்றும் 9 எம்.எம். ரக தோட்டாக்கள் உட்பட 271 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e527e0e2-29f9-44ba-a4c8-608196bf79d4/26-6a5718e65223a.webp' /></p><p>தற்போது 3 விசாரணைக் குழுக்களைச் சேர்ந்த 40 அதிகாரிகள் இந்த விவகாரத்தில்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சந்தேகநபர்கள்
பெயரிடப்படவுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேத விவரங்களை மதிப்பிட மதிப்பீட்டுத்
திணைக்களத்துக்கு உத்தரவிடுமாறும், இராணுவத்தினரால் பொருத்தப்பட்டிருந்த
சிசிரிவி கமராக்களின் நிகழ்நிலை பதிவுகளைப் பெற்றுக்கொள்ள இராணுவ சமிக்ஞை
படையணிக்கு உத்தரவிடுமாறும் பொலிஸார் கோரிய நிலையில், அனைத்து
கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை நீதிவான் பிறப்பித்துள்ளார்.</p><p>

மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிவான், இந்த வழக்கின்
விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் 16 ஆம் திகதி மன்றில்
சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மரண விசாரணைகள் தொடர்பான வழக்குகளில், இதுவரை
சாட்சியம் அழைக்கப்படாத மரணங்கள் குறித்து, சாட்சியங்களை வழங்குவதற்குத்
தேவையான நடவடிக்கைகளைத் தயார்படுத்த வேண்டும் என்றும் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருவோருக்கு சிக்கல்! இலக்கு வைக்கும் மர்மக் கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-thieves-targeting-homes-of-foreign-visitors-1784092625"></link>
            <id>https://tamilwin.com/article/gang-thieves-targeting-homes-of-foreign-visitors-1784092625</id>
            <summary type="text">காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து
மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்.மாவட்ட
குற்றத்தடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து
மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்.மாவட்ட
குற்றத்தடுப்புப் பிரிவினரால்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>குறித்த கைது நடவடிக்கை நேற்று(14.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும்
கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க யூரோ மற்றும் இலங்கை
மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb58bb9-f0e1-4ece-adc0-99ca7f709d11/26-6a57195a884e5.webp' /></p><p>இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய
யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை
துரிதப்படுத்தியிருந்தனர்.</p><p>விசாரணைகளுககு அமைய காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
சந்தேநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளது.
</p><p>சந்தேநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u3OdJ0CDSnw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:27:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி அகழ்வுப் பணி இன்று மீண்டும் ஆரம்பம்! இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-excavation-work-resumes-today-1784091019"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-excavation-work-resumes-today-1784091019</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம்
கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15.07.2026) காலை மீண்டும்
ஆர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம்
கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15.07.2026) காலை மீண்டும்
ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட
அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.</p><p></p><p> கடந்த 32
நாள்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன்
பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.</p><p> இந்நிலையில், இன்று பணிகள்
மீண்டும் தொடரவுள்ளன.
</p><h2>
இதுவரையிலான அகழ்வுப் பணிகள்</h2><p>
முதலாம் கட்டம்: கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி, 9 நாள்கள் நடைபெற்ற
அகழ்வுகளில் 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.</p><p>

இரண்டாம் கட்டம்: கடந்த ஆண்டு ஜூன் 26 முதல் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை 45
நாள்கள் நடைபெற்ற அகழ்வுகளில், முதலாம் கட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை உட்பட
மொத்தம் 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdca9789-01cd-4d5c-a023-a822bdae8b10/26-6a571525e0e82.webp' /></p><p>
</p><p>
மூன்றாம் கட்டம் (முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி): கடந்த ஏப்ரல் 27 முதல் மே
9 வரை 12 நாள்களும், ஜூன் 1 முதல் ஜூன் 23 வரை 22 நாள்களும் பணிகள்
இடம்பெற்றன. </p><p>இதில் மே மாதம் மட்டும் 21 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
</p><p>
இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 412
எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 409 எலும்புக்கூடுகள்
இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு ஒழிப்புக்காக களமிறங்கும் முப்படை- நாளை முதல் விசேட கூட்டு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tri-services-to-launch-joint-operation-dengue-1784090384"></link>
            <id>https://tamilwin.com/article/tri-services-to-launch-joint-operation-dengue-1784090384</id>
            <summary type="text">இலங்கையில் டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத்
தடுப்பதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் புதிய விசேட
கூட்டு ஒழிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத்
தடுப்பதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் புதிய விசேட
கூட்டு ஒழிப்பு செயற்றிட்டமொன்று நாளை((16) முதல்
முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர்
வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.</p><p>

இது குறித்து ஊடகங்களிடம் மேலும் குறிப்பிடுகையில்,

"நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 69 ஆயிரத்து 951 டெங்கு
தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். </p><p></p><h2>அதிகளவிலான தொற்றாளர்கள்&nbsp;</h2><p>குறிப்பாக, இந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 14
ஆயிரத்து 572 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு தொற்று காரணமாக
இதுவரை 48 மரணங்கள் சம்பவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/453ff9b4-2307-4aac-987b-36b113aacd32/26-6a57141448721.webp' /></p><p>தற்போது மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
ஆரம்பத்தில் கொழும்பு மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும்,
தற்போதைய நிலவரப்படி கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள்
பதிவாகியுள்ளனர். </p><p>சதவீத அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 20.6 சதவீதமும்,
கொழும்பு மாவட்டத்தில் 20.2 சதவீதமும் பாதிப்புகள் காணப்படுகின்றன.</p><p> மேலும்,
களுத்துறை, கொழும்பு மாநகர சபை எல்லைகள் மற்றும் காலி, மாத்தறை
மாவட்டங்களிலும் டெங்கு பரவல் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனைக் கட்டுப்படுத்துவதற்காக, 'தூய்மையான இலங்கை' திட்டத்துடன் இணைந்து
சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை
செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்புடன் புதிய விசேட செயற்றிட்டம்
ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><h2>நுளம்புகள் பெருகும் இடங்கள்</h2><p>முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்
இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் ஒரு வார காலத்துக்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898d6929-9026-4c15-923f-a87e29c29ef1/26-6a571414ef860.webp' /></p><p>
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கும் தலா 10 குழுக்கள் வீதம்
நிறுத்தப்பட்டு, வீடுகள் மற்றும் பொது இடங்கள் தீவிர சோதனைக்கு
உட்படுத்தப்படும்.
</p><p>
ஒரு வார காலத்தின் பின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட
நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.&nbsp;</p><p>பொதுமக்கள் தங்களின் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் இந்தத்
தேசியப் பணியில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். </p><p>நீர் சேமிப்புத் தொட்டிகள்
மற்றும் கொள்கலன்களை முறையாக மூடி வைப்பதுடன், நுளம்புகள் பெருகும் இடங்களை
உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும்" என்று வைத்தியர் கபில கன்னங்கர,
பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
ஒரு நுளம்பின் பரவல் எல்லை 150 மீற்றர் வரை உள்ளதால், தனிநபர் பொறுப்புடன்
சமூகக் கூட்டுப் பொறுப்பும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T05:02:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-died-after-his-motorcycle-collided-with-lorry-1784088132"></link>
            <id>https://tamilwin.com/article/man-died-after-his-motorcycle-collided-with-lorry-1784088132</id>
            <summary type="text">மொனராகலை, மாகந்தனமுல்ல வீதியின் லிதேகடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன
விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை, மாகந்தனமுல்ல வீதியின் லிதேகடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன
விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த விபத்து நேற்று(14.07.2026) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p></p><h2>சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில்</h2><p>
மொனராகலை நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றும், அதற்கு
எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் லிதேகடை சந்திப் பகுதியில்
எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9c2b774-2af3-4393-930d-eb94d3de922a/26-6a57097cb1d2c.webp' /></p><p>இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 52 வயதுடைய நபர் பலத்த
காயங்களுக்குள்ளான நிலையில், மீட்கப்பட்டு சிறிகல வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இருப்பினும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்
பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
விபத்து தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T04:16:10+00:00</updated>
        </entry>
    </feed>
