<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-14T15:21:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - தந்தை வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-dies-in-japan-revealed-details-1786715325"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-dies-in-japan-revealed-details-1786715325</id>
            <summary type="text">ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். </p><p>

மகனின் எதிர்பாராத மரணத்தால் குடும்பமே நிலைகுலைந்துள்ளதாக தந்தையான ஜே.ஏ. லயனல் சுசந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
</p><p>
வளமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் தனது மகன் ஜப்பான் சென்ற நிலையில், இப்படியான துயரம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

இலங்கை இளைஞன்&nbsp;கொலை</b></h2><p>கடந்த எட்டாம் திகதி ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள நகரேயாமா நகரில் இடம்பெற்ற மோதலில் 21 வயதுடைய பிரவீன் இசுரு கொலை செய்யப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacf8a83-3114-43cb-a824-61aead40c71c/26-6a7f2e4111491.webp' /></p><p>இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். </p><p>

வழமையாக தாய், தந்தையுடன் உரையாறும் பிரவீன் அன்றைய தினம் தொலைபேசி அழைப்பை எடுக்காத நிலையில் அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.</p><p> 

எனினும் மகனிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காமையினால், தாய் மிகவும் கவலையடைந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>

மற்றொரு இலங்கையர்&nbsp; கைது </b></h3><p>கடந்த 11 ஆம் திகதி பெருமளவில் எதிர்பார்த்திருந்தும் மகனிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. காலை 11:20 மணியளவில் பிரவீனின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து வந்த அழைப்பில் வேறு ஒருவரை உரையாடினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328b345c-5c83-45de-9145-cde65378e381/26-6a7f2e41dfa14.webp' /></p><p>வன்முறை சம்பவம் ஒன்றில் சிக்கிய பிரவீன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதனை நம்ப முடியவில்லை. ஒரு மணி நேரத்தின் பின்னர் அடுத்த அழைப்பில் பிரவீன் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். </p><p>அந்த கணம் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. அதிலிருந்து இன்னமும் மீளவில்லை என தந்தை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

ஜப்பானிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், சிபா மாகாணத்தின் நகரேயாமா நகரில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவத்தினாலேயே பிரவீன் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இந்த கொலை முயற்சி தொடர்பில் மற்றொரு இலங்கையர் ஜப்பானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T15:05:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் கைதான பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786716134"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786716134</id>
            <summary type="text">துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட &quot;ஷிரான் பாசிக்&quot;, இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d033e3f3-ffe7-499c-8101-90cd0e495b59/26-6a7f24b700506.webp' /></p><p>
</p><p>மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மரத்திற்கு மேல் பதுக்கி வைக்கப்பட்ட குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bomb-recovered-in-kilinochchi-1786715659"></link>
            <id>https://tamilwin.com/article/bomb-recovered-in-kilinochchi-1786715659</id>
            <summary type="text">கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கை இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
குண்டு செயலிழப்பு</h2><p>
சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிசாருக்கு வழங்கப்பட்ட
தகவலுக்கமைவாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதியில் இருந்து குண்டு மீட்கப்பட்டு, செயலிழப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e676ed17-92fa-4164-9b8f-e86c62310de3/26-6a7f1eda3115c.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தர்மபுர பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-106th-day-1786711510"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-106th-day-1786711510</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வு பணியின்போது முன்னெடுக்கப்பட்ட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>குறித்த அகழ்வு பணியின்போது முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 07 என்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ள நிலையில், 02 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>செம்மணி அகழ்வுப் பணி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21986854-7ebb-4d70-9ca1-c77319a72594/26-6a7f160d8ab7e.webp' /></p><p>இதுவரையில் 554 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p> ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 547 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மனித என்புக்கூட்டு தொகுதி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் உலாவும் மான்களை பார்வையிட படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourists-flock-to-see-deer-in-trincomalee-1786713551"></link>
            <id>https://tamilwin.com/article/tourists-flock-to-see-deer-in-trincomalee-1786713551</id>
            <summary type="text">திருகோணமலையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மான் பூங்கா மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடித் திரியும் மான்கள், தற்போது வெளிநாட்டு
சுற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மான் பூங்கா மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடித் திரியும் மான்கள், தற்போது வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>


திருகோணமலைக்கு பல நாடுகளிலிருந்து மக்கள் தினம் தினம் வருகை தருகின்றனர்.</p><p>இந்த நிலையில், நகரப் பகுதியில் உள்ள மான் பூங்காவிலும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக உலா
வரும் இந்த மான்களை பார்வையிடுவதற்காகவே அண்மைக்காலமாக திருகோணமலைக்கு
வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக
அதிகரித்துள்ளது.</p><h2>

மான்களை காண ஆவலுடன் வரும் பயணிகள்</h2><p>
இங்கு வரும் பயணிகள் மான்களுக்கு உணவளித்தும், அவற்றுடன் புகைப்படங்கள்
மற்றும் சுயவிவரப் படங்கள் எடுத்தும், மிகவும் மகிழ்ச்சியோடு
பொழுதைக் கழித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c36744a9-8171-4bbb-b34d-46488a159297/26-6a7f170e38928.webp' /></p><p> </p><p>

மனிதர்களோடு மிகவும் இயல்பாகப் பழகும் இந்த
மான்களின் குணம், தங்களுக்கு ஒரு புதுவிதமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைத் தருவதாக வெளிநாட்டுப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
</p><p>
திருகோணமலையின் இயற்கை எழிலோடு, இந்த மான்களின் பிரசன்னமும் இணைந்து
பிராந்தியத்தின் சுற்றுலாத்துறையை மேலும் ஒரு படி முன்னோக்கி எடுத்துச்
சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fweb.facebook.com%2Freel%2F1400771052196101%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு தரப்பினருக்கு இடையில் முரண்பாடு! பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-died-after-being-struck-1786712284"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-died-after-being-struck-1786712284</id>
            <summary type="text">குருநாகல்-வெல்லவ பகுதியில் தடியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (25) ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல்-வெல்லவ பகுதியில் தடியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (25) ஆம் திகதி பொலிஸ் அதிகாரிக்கும் வேறு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் நேற்று (13) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>வெல்லவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 54 வயது அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b18252-557d-4a4d-88a1-b7b32007ce14/26-6a7f148589db0.webp' /></p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-index-likely-reach-level-in-seven-districts-1786711016"></link>
            <id>https://tamilwin.com/article/heat-index-likely-reach-level-in-seven-districts-1786711016</id>
            <summary type="text">ஏழு மாவட்டங்களின் பல பகுதிகளில் பகல் நேரத்தில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு &#039;எச்சரிக்கை&#039; நிலைக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏழு மாவட்டங்களின் பல பகுதிகளில் பகல் நேரத்தில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை' நிலைக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
</p><p>
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், பகல் நேரங்களில், குறிப்பாக வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடும்போது, ​​எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07420a45-816d-4f37-b561-7b1effe5096e/26-6a7f102550049.webp' /></p><p>நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:19:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச மருத்துவமனைகளில் 25,000 நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில்.. வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/25-000-heart-patients-face-surgery-delays-1786708738"></link>
            <id>https://tamilwin.com/article/25-000-heart-patients-face-surgery-delays-1786708738</id>
            <summary type="text">அரச மருத்துவமனைகளில்&amp;nbsp;இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;25,000இற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச மருத்துவமனைகளில்&nbsp;இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>25,000இற்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் அவர்களால் இதய அறுவை சிகிச்சைகள், பிற முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தச் சூழ்நிலையின் மிகவும் தீவிரமான அம்சமாக, சில சமயங்களில் இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>அவசர சிகிச்சைகள்..&nbsp;</h2><p>உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருப்பது நோயாளிகளின் உயிருக்குக் கடுமையான ஆபத்தை விளைவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/684cf30f-5a00-40c0-90b7-c5fb2345ab85/26-6a7f1018cdd44.webp' /></p><p>
</p><p>
இந்த நெருக்கடி இதய அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் உரியதல்ல, மாறாக முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்கும் நீண்ட காத்திருப்போர் பட்டியல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>
மருத்துவ மற்றும் குடியுரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவரான சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ, தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவுள்ள சிகிச்சையை மேற்கொள்ள வசதியில்லாத ஏராளமான நோயாளிகள் அரச மருத்துவமனை அமைப்பையே சார்ந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டுகிறார்.</p><p>
</p><p>
அதன்படி, தனியார் துறையில் அவசர சிகிச்சை பெற வசதி உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், பொருளாதாரச் சிரமங்கள் உள்ள நோயாளிகள் நீண்ட காலம் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டியிருப்பது, சுகாதாரத் துறையில் சமத்துவம் தொடர்பான சிக்கல்களையும் எழுப்புகிறது.</p><p></p><h2>நோயாளிகளின் நிலைமை&nbsp;</h2><p>

காத்திருப்போர் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் ஏற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய தேவை விரைவாக எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/866128ba-07d7-489b-b5c9-dcbeaee012c1/26-6a7f1019a203e.webp' /></p><p>
</p><p>
இந்தச் சூழ்நிலைக்கு ஒரு குறுகிய காலத் தீர்வாக, அரசாங்க மருத்துவமனைகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நோயாளிகள், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரசாங்க மருத்துவமனைகளில் தினசரி செய்யப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் சேவைகளை மேலும் பெறவும், கூடுதல் சேவைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்குக் கூடுதல் படிகள் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:09:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி வரிகள் மீதான கூடுதல் கட்டணம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/surcharge-imposed-on-vehicle-import-duties-1786710954"></link>
            <id>https://tamilwin.com/article/surcharge-imposed-on-vehicle-import-duties-1786710954</id>
            <summary type="text">வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;நாளை (15.08.2026) வரை விதிக்கப்பட்டிருந்த இந்த 50% கூடுதல் கட்டணம் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நாளை (15.08.2026) வரை விதிக்கப்பட்டிருந்த இந்த 50% கூடுதல் கட்டணம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, நாளை முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு இந்நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ள நீடிப்பு</h2><p>

1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ பிரிவின் கீழ் ஜனாதிபதிக்களிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a412c5ed-6adf-4fa0-b3e0-e3418923d7d5/26-6a7f12c83ed9d.webp' /></p><p> </p><p>

இருப்பினும், கடந்த மே மாதம் 15 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strong-winds-warning-meteorology-1786710986"></link>
            <id>https://tamilwin.com/article/strong-winds-warning-meteorology-1786710986</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் கங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரிக்கக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அதற்கமைய, அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

இதன் காரணமாக கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b41e47a-bfa1-4cd3-b91e-35a0c478636f/26-6a7f0f62266d0.webp' /></p><p> </p><p>

அத்துடன், நாளை (15) சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்பதுடன், மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T12:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைந்து போன 19 ஆயிரம் புத்தகங்கள் - நிறுவனத்திடம் நஷ்டத்தை மீட்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-into-the-missing-stock-of-textbooks-1786709734"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-into-the-missing-stock-of-textbooks-1786709734</id>
            <summary type="text">கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளராக மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான நாலக களுவெவ தெரிவித்துள்ளார். </p><p>

நிகழ்ச்சிக்கு பின்னர் இன்று(14.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>
விநியோகத்தில் நடந்த தவறு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 


காணாமல் போன பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள், ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டு வந்தன.
</p><p>
தற்போது தொலைந்து போனதாக கூறப்படும் புத்தகங்களின் மதிப்பை அந்த நிறுவனத்திடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7858555-b4bf-4e03-8664-1a4772a44af2/26-6a7f0e1f1717a.webp' /></p><p> </p><p>

கடந்த 12ஆம் திகதியன்று, கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர், திணைக்களத்தால் வழங்கப்பட்ட சுமார் 800,000 ரூபாய் மதிப்புள்ள பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள், திட்டமிட்டபடி விநியோக மையத்தில் ஒப்படைக்கப்படவில்லை என்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>
காணாமல் போன 19 ஆயிரம் புத்தகங்கள்</h2><p>
 கல்வி அமைச்சின் கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட, ஒன்றாம் வகுப்புக்கான 19,892 தமிழ் செயல்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் உரிய விநியோக மையத்திற்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்தப் பாடப் புத்தகங்களைக் கொண்டு செல்வதற்காக கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் போக்குவரத்து நிறுவனம், மே 4 ஆம் திகதி புத்தகங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதியைப் பெற்றிருந்தபோதிலும், அவை விநியோகிக்கப்பட வேண்டிய கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 மையங்களுக்குத் திட்டமிட்டபடி புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை என்றார்.


</p>]]></content>
            <updated>2026-08-14T12:47:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனக்கு அறவே பிடிக்காத விடயத்தை செய்ய ஜனாதிபதியே வற்புறுத்தினார்! கே.டி.லால்காந்த பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-k-d-lalkantha-election-statement-1786703047"></link>
            <id>https://tamilwin.com/article/minister-k-d-lalkantha-election-statement-1786703047</id>
            <summary type="text">எதிர்காலத்தில் கண்டி மாவட்டத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். 

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் கண்டி மாவட்டத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். </p><p>

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>ஜனாதிபதியின் வற்புறுத்தல்</h2><p> 

மேலும் தெரிவிக்கையில், தாம் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறினார். 

அத்துடன் நாட்டிற்கு சேவை செய்ய, ஒருவர் நாடாளுமன்றத்திற்குச் சென்று அரசியல் செய்ய வேண்டும். ஜனாதிபதி என்னை அவ்வாறு செய்ய வற்புறுத்தியதால், இந்த முறை நான் கண்டியில் வாக்குகள் கோரினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc3ce47-8829-4105-a5fd-5a7ae1a9eabf/26-6a7ef2146418e.webp' /></p><p> </p><p>

எனக்கு வாக்குகள் கேட்கும் வேலை அறவே பிடிக்காது. எனவே, எதிர்காலத்தில் கண்டி மாவட்டத்தில் வாக்குகள் கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் நான் கண்டிக்கு சேவை செய்வேன். 

நான் இந்த கட்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன். இந்த கட்சியை விட்டு எத்தனை பேர் வெளியேறியிருக்கிறார்கள்? நாங்கள் நகரக்கூட இல்லை.</p><h2>அரசாங்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தல்</h2><p> அதனால் தான் எங்கள் அரசாங்கம் இந்த நாட்டை தொடர்ந்து ஆண்டு வருகிறது. 

குறைந்தபட்சம் எங்களுக்கு சவால் விட யாராவது வரும் வரை, வேறு வழியில்லை. சரியான எதிர்க்கட்சி இருக்கிறதா? எனவே, இந்த நாட்டில் எங்கள் அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/834b3ec2-3844-4505-9b78-61dc4ec41f63/26-6a7ef2153a547.webp' /></p><p> </p><p>சில சமயங்களில் ஜனாதிபதி மாறலாம். 

அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகள் மாறக்கூடும். ஆனால் எங்கள் அரசாங்கம் மாறாது. அதுதான் உண்மையான நிலைமை. </p><p>கோட்ட எல்லை நிர்ணயப் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவோம். 

எதிர்காலத்தில், இந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவோம் என கூறினார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8qGJOw0ArPc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-14T12:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு ஊழியர்களினால் இலங்கைக்கு கிடைத்துள்ள பில்லியன் டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remittances-of-foreign-workers-1786708202"></link>
            <id>https://tamilwin.com/article/remittances-of-foreign-workers-1786708202</id>
            <summary type="text"> சுற்றுலாப் பயணிகளின் வருகை மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் சுற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p> சுற்றுலாப் பயணிகளின் வருகை மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் சுற்றுலா வருவாய் 11.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த தகவலை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b908817-2ae7-4fff-9b34-92abb2a2d0c2/26-6a7f064ea250e.webp' /></p><p>

ஆகஸ்ட் மாதத்திற்கான பணவியல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ள மத்திய வங்கி, இந்த ஆண்டின் ஜூன் மாதமளவில் வெளிநாட்டு ஊழியர்களின் பணவனுப்பல்கள் (Remittances) 23.2 சதவீத வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்து, 4.6 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T12:14:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வருடங்களாக தொடரும் தமிழினப் படுகொலைகளுக்கு இதுவே சான்று..! உறவுகளின் கண்ணீரைத் துடைக்க நீட்டப்படும் கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-genocide-shows-our-people-destroyed-dmp-vp-1786702342"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-genocide-shows-our-people-destroyed-dmp-vp-1786702342</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியில் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் என்பதை வலியிறுத்தும் நீதியின் ஓலம்-02 தொடர் போராட்டத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியில் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் என்பதை வலியிறுத்தும் நீதியின் ஓலம்-02 தொடர் போராட்டத்திற்கு அனைத்துப் போராளிகளும் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>இன்று(14.08.2026) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு&nbsp; குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தொடர் போராட்டம்</h2><p>
</p><p>அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,</p><p>இந்தப் போராட்டத்தினை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டும்
முகமாக அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற
நிறுவனங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், பொதுமக்கள்
எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.</p><p>
இலங்கை தீவில் தமிழ் மக்கள் அரச படைகளாலும், அரச படைகளின் அனுசரணையின் கீழ்
இயங்கிய ஆயுதம் தாங்கிய குழுக்களாலும் கொத்துக் கொத்தாக பல்வேறு
இனப்படுகொலைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07819af-f903-4490-ba33-4ed2235e9c61/26-6a7eed3c61e77.webp' /></p><p> </p><p>

1956 தொடக்கம் 2009 யுத்தம்
மௌனிக்கும் வரையான காலப்பகுதில் இலட்சக்கணக்கான மக்கள் கொன்று
குவிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
இதன் ஒரு ஆதார பூர்வமான வெளிப்பாடே செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம். </p><p>இதுவரை
காலமும் தமிழ் தரப்புகளால் முவைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளுக்கு
ஆதாரம் கேட்டு நின்ற சர்வதேசத்திற்கு உண்மை ஒருக்காலும் உறங்காது என்பதை
வெளிப்படுத்தும் முகமாக படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகள் என்புக்
கூடுகளாகச் சாட்சியம் அளித்துள்ளார்கள்.</p><h2>தமிழ்&nbsp;இனப்படுகொலை</h2><p>
</p><p>
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று எங்கள் இனத்திற்கு
நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இந்தச் செம்மணி மனிதப்
படுகொலை திகழ்கின்றது.</p><p>இனியும் சர்வதேசம் மௌனமாகத் தான் இருக்கப்போகின்றதா?
என்ற கேள்வியே தற்போது தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>

ஐக்கிய நாடுகள் சபை மீது தமிழ் மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கை இன்னும்
குறையவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c90d852-8cea-44ce-a71a-7f1ec65e1b83/26-6a7eee38ac4f5.webp' /></p><p>செம்மணி உள்ளிட்ட அனைத்து படுகொலைகளுக்குமான சர்வதேச விசாரணையை
மேற்கொண்டு பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான நீதியை நிலைநாட்ட காலம் தாழ்த்தாது
முன்வர வேண்டும்.
</p><p>
இந்தக் கோரிக்கையை முன்நிலைப்படுத்தி 14ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம் -02 போராட்டத்திற்கு எமது
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் முழுமையான ஆதரவினை வழங்குவதுடன், எமது
கட்சியின் உறுப்பினர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களால் இயன்ற
ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.</p><h2>போராட்டத்தை குழப்ப நினைக்கும் அரசு</h2><p>
</p><p>
அத்துடன், இந்தப் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதமாகவும், எமது மக்கள் மத்தியில்
போராட்ட குணத்தை இல்லாமல் செய்யும் நோக்குடனும் அரச தரப்பு அமைப்புகளால்
குறித்த தினங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும்
அறிகின்றோம்.</p><p>

அன்றிருந்து இன்றுவரை எமது கைகளைக் கொண்டு எமது கண்களையே குத்தும்
கைங்கரியத்தை அரசு பல்வேறு வழிகளிலும் கச்சிதமாக செய்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/600f88e0-9662-46a7-a5f3-b1b5f7d8dd36/26-6a7eee39a6405.webp' /></p><p> </p><p>அந்த
நிலையில் இதுவும் ஆச்சரியமான விடயம் அல்ல.

ஆனால் எமது மக்களின் தன்மானத்தில் கை வைக்கும் நிகழ்வுகளுக்கு எமது மக்களே
தகுந்த பாடங்களை வழங்குவார்கள். </p><p>எத்தனை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும்
கொண்ட கொள்கையின்படி, உறுதியாக நின்று நீதியின் ஓலம் -02 போராட்டத்தினை
வலுவுள்ளதாக்கி சர்வதேசத்திற்கு ஒருமித்த செய்தியை எமது மக்கள்
தெரிவிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T12:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுகின்றதா இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்..! எழும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allegation-against-the-sri-lanka-bar-association-1786707799"></link>
            <id>https://tamilwin.com/article/allegation-against-the-sri-lanka-bar-association-1786707799</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சி சார்பாகவே நடந்து கொள்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சி சார்பாகவே நடந்து கொள்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நாட்டில் தற்போது நிலுவையிலுள்ள வழக்குகளை முடித்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதி, நீதிபதிகளின் வயது எல்லையை அதிகரிக்க வேண்டும் என தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்.</p><p>

கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் போன்று நடந்துக் கொள்ளாமல், மக்களின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடிக் கொடுக்கும் வகையில், ஜனாதிபதி தற்போது நடந்துக் கொள்கிறார்.</p><p> 

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டு தான், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் மறுப்பு தெரிவிக்கின்றது என்றார்.&nbsp; &nbsp; </p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TQ5F7042GRA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p>&nbsp;&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T11:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வெவ்வேறு முகங்களை காட்டுகிறது இலங்கை அரசாங்கம்! கடுமையான குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tharmalingam-suresh-statement-about-government-1786706259"></link>
            <id>https://tamilwin.com/article/tharmalingam-suresh-statement-about-government-1786706259</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கிலே பெருமளவு முதலீடுகளைச் செய்ய இந்தியா முன்வந்த போதும் இந்த அரசாங்கம் அதற்குத் துணையாக இல்லை, அவர்கள் இரண்டு முகத்தைக் காட்டுகின்றார்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கிலே பெருமளவு முதலீடுகளைச் செய்ய இந்தியா முன்வந்த போதும் இந்த அரசாங்கம் அதற்குத் துணையாக இல்லை, அவர்கள் இரண்டு முகத்தைக் காட்டுகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்த அரசாங்கம் சீனாவிற்கு ஒரு முகத்தையும், இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி, மாறாக எங்களுடைய தமிழர்களை தொடர்ச்சியாக நசுக்கிக் கொண்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
முல்லைத்தீவு - வல்லிபுனம் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (14.08.2026) மட்டக்களப்பில் மிக உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/115f721e-485d-40c2-9a6b-728e4b45613e/26-6a7efe983e740.webp' /></p><p> 

இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>படுகொலை</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாணவர்களை விடுதலைப் புலிகள் அல்லது அவங்களுடைய பாஷையிலே சொல்லப் போனால் அவர்கள் பயங்கரவாதிகள் என்ற விடயத்தை இந்த சர்வதேச அரங்குக்கு அரங்கேற்றுவதற்காக அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சு, இலங்கையினுடைய வெளியுறவுத்துறை அமைச்சு மிக பொய்யான கதைகளைக் கட்டி விடயங்களை வெளியே கொண்டுவர முயன்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10da31ac-3d55-45ed-94de-5c704d5c6841/26-6a7efe9934bbd.webp' /></p><p> </p><p>

ஆனால் அன்றைய காலகட்டத்தில் அன்றைய அந்தத் தொண்டு நிறுவனங்கள் அங்கே இருந்தது. அந்த தொண்டு நிறுவனங்கள், இல்லை, இந்த மாணவச் செல்வங்கள் இவர்கள் வெறும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வந்திருந்தவர்கள், இவர்கள் மீது வீணாகக் குண்டடிக்கப்பட்டு இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயம் அந்தத் தொண்டு நிறுவனங்கள் வெளியே கொண்டு வந்ததால் தான் அந்த உண்மை சர்வதேசத்திற்குத் தெரியவந்தது. </p><p>

இவ்வாறு எமது மண்ணிலே பல படுகொலைகள் நடந்து ஏறியிருக்கின்றது. கடந்த 77 வருடங்களாக எங்களுடைய இனம் படுமோசமாக இனவெறியாட்டத்திற்கு உட்பட்டு, சிங்கள பேரினவாத பூதம் தொடர்ந்தும் வந்தே இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த பூமியாக மாற்றுவதற்காக அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்கள். 

1956ஆம் ஆண்டு எங்களுடைய தலைவர்கள், தமிழ் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7680b9e-dd93-4d39-bd04-ff13e834e256/26-6a7efe9a0fc78.webp' /></p><h2>தமிழர்களுடைய பிரச்சினை</h2><p> </p><p>1974ஆம் ஆண்டு தமிழர் ஆராய்ச்சி மாநாட்டிலே எங்களுடைய தலைவர்கள், எங்களுடைய அடித்துக் கொல்லப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள். அதேபோன்று தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஒவ்வொரு படுகொலைகளிலும் இளைஞர் யுவதிகள் குறிவைக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இங்கே இருக்கிற இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த ஜனாதிபதியும் எந்த வழியிலும் தயாரான ஒரு நிலையிலே இல்லை.</p><p> இங்கே இந்த நாட்டிலே சட்டத்தை இயற்றுகின்ற அரசியலமைப்பு, தமிழர்களையும் முஸ்லிம் மக்களையும் ஒடுக்குகின்ற ஒரு அரசியலமைப்பாக இருக்கின்றது, அது ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பாக இருக்கின்றது. 

அனைத்து, இங்கே பல இன மக்கள் வாழுகின்ற இந்த நாட்டிலே அந்த அரசியலமைப்பு ஒரு சமஷ்டிக் கட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும் என்றுதான் எங்களுடைய போராட்டம் நடைபெறுகின்றது என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5ca939-af02-4680-828f-db1e61017174/26-6a7efe9ad9a95.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84013e92-9bdd-4c47-8a62-301bc50b068b/26-6a7efe9bafd47.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T11:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-national-missing-after-drowning-1786704972"></link>
            <id>https://tamilwin.com/article/indian-national-missing-after-drowning-1786704972</id>
            <summary type="text">காலி பெந்தொட்டை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெந்தொட்டை கடற்கரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி பெந்தொட்டை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பெந்தொட்டை கடற்கரையில் நேற்று(13.08.2026) பிற்பகல் நீராடிக் கொண்டிருந்தபோதே அவர் எதிர்பாராத விதமாக கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். </p><p>இவர் 24 வயதுடைய இந்திய பிரஜை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><h2>தொடர் தேடுதல் நடவடிக்கை</h2><p>
காணாமல் போயுள்ள நபர் தனது நண்பர் ஒருவருடன் பெந்தொட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளதுடன், குறித்த ஹோட்டலின் பின்னால் உள்ள கடற்கரையில் அவர் நீராடிக்கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b850ab6d-781b-45e5-bc3b-209ff68710e3/26-6a7efccd183a8.webp' /></p><p>

காணாமல்போயுள்ள நபரை மீட்பதற்காக பொலிஸார் கடற்படையினரின் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T11:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவுக்கு ரணில் வழங்கியுள்ள அவசர அறிவுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-anura-government-ranil-1786704361"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-anura-government-ranil-1786704361</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p>இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
</p><p>
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 107(5) ஆம் உறுப்புரைக்கான திருத்தங்கள் தொடர்பில் மக்களின் விருப்பத்தை அறிந்துகொள்ள அரசியலமைப்பின் 13ஆவது அத்தியாயத்திற்கு அமைவாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;22ஆவது திருத்தம்&nbsp;</h2><p> </p><p>மேலும், இலங்கைக் குடியரசில் இறையாண்மை மக்களிடமே உள்ளதுடன் அதனை பிரிக்க முடியாது என்ற அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையே இதன் அடிப்படையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2face0c9-4a84-40ce-9694-1f01320a6905/26-6a7efab2d1e36.webp' /></p><p>
அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆகிய உறுப்புரைகள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.&nbsp;</p><p> நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்யும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிப்பதுடன் அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையை மீறும் செயலாகும் என்றும், இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயம் தேவை என்றும் 2022ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூகத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி, வெளிப்படைத்தன்மையற்ற முறையில் இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவது குறித்துக் கவலை வெளியிட்டுள்ள அவர்கள், நீதித்துறை சார்ந்த இந்த விடயத்தில் சார்புத்தன்மை அல்லது பாரபட்சம் ஏற்படுவதைத் தவிர்க்க சர்வதேச நீதித்துறை தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
எனவே, மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் ஒரே சட்டப்பூர்வமான வழிமுறையாகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர், அரசியலமைப்பின் 85(1) உறுப்புரைக்கு அமைவாக இந்தச் சட்டமூலத்தைச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை ஊடாக எடுக்குமாறு ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T11:26:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் காலநிலை மாற்றம் - 68,041 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/68-041-people-affected-by-dry-weather-1786704653"></link>
            <id>https://tamilwin.com/article/68-041-people-affected-by-dry-weather-1786704653</id>
            <summary type="text">வறண்ட வானிலை காரணமாக இதுவரையில் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம்(NDRSC)அறிவித்துள்ளது.


நான்கு மாவட்டங்களில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறண்ட வானிலை காரணமாக இதுவரையில் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம்(NDRSC)அறிவித்துள்ளது.
</p><p>

நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.
</p><h2>

நான்கு மாவட்டங்கள் பாதிப்பு</h2><p>
இதற்கமைய, மட்டைக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுர மாவட்டங்களில் உள்ள மக்கள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96a6dc84-0d58-4c67-abab-aecc22d116bb/26-6a7ef9053be49.webp' /></p><p>
</p><p>
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

அத்துடன், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்குத் தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.</p><p>

இவ்வாறு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T11:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை : 740 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrested-740-suspects-1786701486"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrested-740-suspects-1786701486</id>
            <summary type="text">நாடு முழுவதும் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக இலங்கை பொலிஸாரினால் தொடங்கப்பட்ட &#039;ஒன்றிணைந்த தேசம் - தேசிய இயக்கம்&#039; என்ற பிரசாரத்தின் கீழ், நேற்று(13...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக இலங்கை பொலிஸாரினால் தொடங்கப்பட்ட 'ஒன்றிணைந்த தேசம் - தேசிய இயக்கம்' என்ற பிரசாரத்தின் கீழ், நேற்று(13.08.2026) மொத்தம் 740 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>

 

கடந்த ஆண்டு அக்டோபர் 30 அன்று தொடங்கப்பட்ட இந்த பிரசாரம், நாடு முழுவதும் போதைப்பொருட்களுக்கான தேவையைக் குறைப்பது, போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><h2>தடுப்புக் காவல் உத்தரவு</h2><p>
 

அதன்படி, பொலிஸார் நேற்று சந்தேக நபர்களைக் கைது செய்ததோடு, இந்த நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebf84c3-8831-45bb-86a2-0999852d0af6/26-6a7ef13a9a828.webp' /></p><p>மேலதிக விசாரணைகளை எளிதாக்கும் வகையில் எட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற நான்கு சந்தேக நபர்கள் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T10:46:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபர்கள் வழங்கவுள்ள தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-cid-inquiry-court-order-1786702490"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-cid-inquiry-court-order-1786702490</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில், எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சிய விசாரணை, தினசரி அடிப்படையில் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில், எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சிய விசாரணை, தினசரி அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது. </p><p>

கொழும்பு சிறப்பு மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (14) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.</p><p>

இன்றைய விசாரணையின் போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு பிரதிவாதியும் நீதிமன்றத்தில் தங்களின் எதிர்கால பாதுகாப்பு நிலைப்பாடுகளைத் தனித்தனியாகத் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேலதிக சாட்சிகள்..&nbsp;</h2><p> </p><p>

இதன்படி, முதலாம் சந்தேகநபரான நௌஃபர் மௌலவி உட்படப் பெரும்பாலான சந்தேகநபர்கள் குற்றவாளிக் கூண்டிலிருந்தவாறு வாக்குமூலம் அளிப்பதுடன், தங்கள் சார்பாக மேலதிக சாட்சிகளையும் அழைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/732c9589-db52-4570-a44e-167084623abc/26-6a7eedf3980fa.webp' /></p><p>
அதேநேரம், ஆறாவது சந்தேகநபரான முகமது அன்வர் முகமது ரிஸ்கான் குற்றவாளிக் கூண்டில் மௌனம் காப்பார் என்றும், அவர் சார்பாக வேறு சாட்சிகள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

பிற சந்தேகநபர்கள் சிலர் சாட்சிகள் எவரையும் அழைக்காமல் குற்றவாளிக் கூண்டிலிருந்து மட்டுமே வாக்குமூலம் அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.</p><p>

அனைத்து குற்றவாளிகளினதும் நிலைப்பாடுகளைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், பிரதிவாதிகள் தரப்பு வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியப் பதிவுகளை எதிர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தினமும் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T10:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயாரின் இறுதி அஞ்சலி! சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pako-saman-mother-murter-5-team-investigation-1786701680"></link>
            <id>https://tamilwin.com/article/pako-saman-mother-murter-5-team-investigation-1786701680</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த &#039;பெக்கோ சமன்&#039; தனது தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கோரி இதுவரை எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த 'பெக்கோ சமன்' தனது தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கோரி இதுவரை எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிதியாவ பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களினால் (12) திகதி பெக்கோ சமனின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டார்.</p><p>&nbsp;</p><h2>பிரேத பரிசோதனை&nbsp;</h2><p>
</p><p>
இந்த நிலையில், அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ இறுதி அஞ்சலி செலுத்த கோரிக்கை விடுத்தாலும், தேவையான பாதுகாப்பை வழங்குவதாக மித்தெனியா பொலிஸ் உறுதி செய்தால் மட்டுமே பெக்கோ சமன் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்படுவார் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a35bb5d-d3c9-40ca-a25a-83925fe8bc25/26-6a7eebdb07277.webp' />&nbsp;</p><p>
இதற்கமைய, பெக்கோ சமனின் தாயாரின் பிரேத பரிசோதனை தற்போது தங்கல்லை வைத்தியசாலையில் நடைபெற்று வரும் நிலையில், பின்னர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிஸ் கூறியுள்ளது.</p><p>

அதன்படி, பெக்கோ சமனின் தாயாரின் இறுதிச்சடங்குகள் நாளை மித்தெனியவில் உள்ள குடும்ப மயானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T10:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-faces-serious-risk-of-sanctions-1786676889"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-faces-serious-risk-of-sanctions-1786676889</id>
            <summary type="text">சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. </p><h2><b>

விமான போக்குவரத்துகள் </b></h2><p>“ICAO அல்லது ICAO, எனப்படும் சிவில் விமான சேவையின் அதாவது Civil Aviation Organization எனப்படும் அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80ad9b28-1b51-41cb-b8eb-9bc93889fcb1/26-6a7e88824e23c.webp' /></p><p>அது ஸ்தாபிக்கப்படுவது உலகத்தில் விமானப் போக்குவரத்துகள் வளர்ச்சியடையும் போது, அதில் உள்ள அதிகார பலத்தை ஓரிடத்திற்கு மையப்படுத்தி, அதன் நிபந்தனைகளுக்கு இணங்க உலகின் அனைத்து விமானங்களையும் கையாளுவதே அதன் எதிர்பார்ப்பாகும்.
</p><p>
எனவே, நாமும் அதில் ஓர் உறுப்பு நாடாக இருக்கின்றோம். நாமும் அதன் சட்டதிட்டங்களுக்கு இணங்க செயற்பட வேண்டும். இந்த தணிக்கை உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றது. </p><p>

ஒவ்வொரு நாட்டிலும் இது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற அந்தந்த நாட்டின் சிவில் விமான சேவை குறித்த பிரமாணங்களுடன் இருக்கின்றதா, அது சட்டப்பூர்வமாக பேணப்படுகின்றதா என்பது குறித்து ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் பரிசோதனையொன்றை, தணிக்கையொன்றை நடத்துகிறார்கள். </p><h3><b>

ஸ்ரீலங்கன் விமான சேவை</b></h3><p>அடுத்த ஆண்டிற்கான தணிக்கையின் முதற்கட்டப் பணிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவையும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதில் சில முறைக்கேடுகள் கண்டறியப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9b7548-89cf-4ce6-bd78-da23d7773a4c/26-6a7e89306314c.webp' /></p><p>மேலும் தணிக்கை சோதனையில் ஸ்ரீலங்கன் விமான சேவை தோல்வியடைந்துள்ளது. </p><p>இந்த நிலையிலேயே சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MaEVwCaWqAM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T10:03:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மெகசின் சிறைச்சாலை தாக்குதல்: சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் நபர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-prisoners-in-magazine-prison-1786697758"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-prisoners-in-magazine-prison-1786697758</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தாக்குதல் இடம்பெற்ற அன்று முதலில் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சம்பவத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தாக்குதல் இடம்பெற்ற அன்று முதலில் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சம்பவத்தில் நேரில் பார்த்ததாக கூறப்படும் நபரொருவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஒகஸ்ட் 6ஆம் திகதி இரவு கைதிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும்&nbsp;நவோத் தில்ஷான் என்ற நபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>குறித்த நபர் சம்பவம் இடம்பெற்ற போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>கடுமையான தாக்குதல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றைய தினம் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரவு 10 மணியளவில் பெருமளவிலான சிறைச்சாலை அதிகாரிகள் பூட்டப்பட்டிருந்த சிறைக் கதவுகளைப் பலவந்தமாக உடைத்து உள்ளே நுழைந்து, கைதிகளின் பெயர்களை அழைத்து, இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6fe167-b32e-44b9-bcb3-20611bcfd1e7/26-6a7ee5d6aafe2.webp' /></p><p>
</p><p>பின்னர், அவர்கள் உட்பட மேலும் பல கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கேயும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, வான் மூலம் சிறைச்சாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.</p><h2>வைத்தியசாலைக்குள்ளும் தாக்குதல்</h2><p>எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், காயமடைந்த ஏனைய கைதிகளின் இரத்தத்தை உடலில் பூசிக் கொண்டு, இறந்தது போல் நடித்தேன். இதன் காரணத்தினாலேயே நான் மேலும் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தப்பினேன்.</p><p>சிறைச்சாலை வைத்தியசாலைக்குள்ளும் இத்தாக்குதல்கள் தொடர்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூரமாக தாக்கப்பட்டு நடுவீதியில் கைவிடப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/surgery-for-4-year-old-girl-found-missing-1786699208"></link>
            <id>https://tamilwin.com/article/surgery-for-4-year-old-girl-found-missing-1786699208</id>
            <summary type="text">கண்டி - வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில் தாயினால் வீதியில் கைவிடப்பட்டு சென்ற 4 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில் தாயினால் வீதியில் கைவிடப்பட்டு சென்ற 4 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.</p><p>

நேற்று காலை (13) சுமார் 07.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த தாய் ஒருவர் குழந்தையை நடுவீதியில் இறக்கிவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்றிருந்தார்.</p><p></p><h2>சிறுமிக்கு அறுவை சிகிச்சை</h2><p>

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் அவசர எண்ணுக்கு அழைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e7ddf61-1f00-4199-a0d2-233c4bd266bb/26-6a7ee4d43f5c8.webp' />&nbsp;</p><p>
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய தாய் தப்பிச்செல்லும் காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. </p><p>

இதனையடுத்து சிறுமியின் தாயையும் அவரது காதலர் என அடையாளம் காணப்பட்ட நபரையும் இன்று (14) பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

இந்நிலையில்,கொடூரமாக தாக்கப்பட்டிருந்த சிறுமி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். </p><p>

சிறுமி மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:50:19+00:00</updated>
        </entry>
    </feed>
