<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-15T05:05:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-warning-be-bank-officials-1786763500"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-warning-be-bank-officials-1786763500</id>
            <summary type="text">&amp;nbsp;வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.
</p><p>
பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாக மோசடி</h2><p>

இதேவேளை, சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1fea9e1-0448-4cc3-b7ad-c6f3aebb45e6/26-6a7ff15f69cf5.webp' /></p><p>
</p><p>
குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்</h2><p>

இவர்கள் வங்கி கணக்குகளில் வைப்பில் உள்ள பண விபரங்களை அறிந்து பணம் மோசடியான முறையில் ஈட்டப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b9c0ad-09e2-42f7-b4ed-5cd708d1b3f1/26-6a7ff1603bb64.webp' /></p><p>
</p><p>
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் இடப்பட்ட போலி ஆவணங்களை அனுப்பி பொதுமக்களை நம்பவைக்கின்றமை தெரியவந்துள்ளது.</p><p> 

இவர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகளும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. </p><p>

இதேவேளை, ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர்கள் மோசடி காரர்களால் இலக்குவைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.&nbsp; </p><p>எனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

&nbsp; &nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T04:56:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலநிலையால் இலங்கைக்கு காத்திருக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-poses-a-risk-of-impacting-the-country-1786763119"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-poses-a-risk-of-impacting-the-country-1786763119</id>
            <summary type="text">எல் நினோ காலநிலையால் ஏற்படும் விளைவுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் தாக்கம் செலுத்துவதற்கான அபாயம் உள்ளதாக மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலையால் ஏற்படும் விளைவுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் தாக்கம் செலுத்துவதற்கான அபாயம் உள்ளதாக மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>

மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட புதிய அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> எல் நினோ காலநிலை விவசாயத்துறைக்கு ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடைவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> </p><h2><b>

பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்</b></h2><p>அத்துடன், எல் நினோ காலநிலை நிகழ்வு காரணமாக நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c62bead-4179-4861-932e-d6804132752d/26-6a7fdbdf5b1b4.webp' /></p><p>எல் நினோ காலநிலை நிகழ்வு நாட்டிற்கு இரு வழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். 

முதலாவது வறண்ட காலநிலை மூலமும், இரண்டாவது அதிக மழைவீழ்ச்சி மூலமும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் உயர் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் இது ஒரு அபாயமாக பெயரிடப்பட்டுள்ளது. </p><p>

எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை விடக் குறைவான தாக்கமே நாட்டின் மீது ஏற்பட்டுள்ளது. </p><h3><b>

மத்திய வங்கி அறிக்கை</b></h3><p>அதன் காரணமாக இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஸ்திரமாகப் பேணப்படும் என அனைத்துச் சுட்டிகளும் காட்டுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52dc217b-40cc-49d5-a76b-19c7bc159843/26-6a7fdcdfbe799.webp' /></p><p>மீண்டும் மத்திய கிழக்கு நெருக்கடி தீவிரமடைவதும், காலநிலை மாற்றங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக நிச்சயமற்ற தன்மையைச் சேர்க்கின்றன என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. </p><p>

உலகளாவிய ரீதியில் இந்த ஆண்டு ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 80 அமெரிக்க டொலர் மட்டத்தில் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. </p><p>

அடுத்த ஆண்டு ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 70 அமெரிக்க டொலர் மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T04:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு வீதியின் ஒரு வழிப்பாதை திறப்பு! சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-colombo-road-traffic-returns-to-normal-1786766717"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-colombo-road-traffic-returns-to-normal-1786766717</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில்&amp;nbsp;குயில்வத்தை பகுதியில் தடைப்பட்டிருந்த ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில்&nbsp;குயில்வத்தை பகுதியில் தடைப்பட்டிருந்த ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>குயில்வத்தை பகுதியில் இன்று (15) அதிகாலை 1.00 மணியளவில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதி முற்றாக தடைப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில்
குறித்த மண்மேடு அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>வாகன சாரதிகளுக்கு&nbsp;அறிவுறுத்தல்</h2><p>எனினும், தற்போது போக்குவரத்திற்காக ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டுள்ள போதிலும், மீண்டும் மண்மேடு சரிந்து விழும் ஆபத்து நிலவுவதால் அப்பாதையூடாக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d71714-8cdf-41ac-b56d-09277e3d62aa/26-6a7fe88182756.webp' />&nbsp;</p><p>அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து, பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண்சரிவுகள், நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.</p><p> இதனால்
பாதிப்புக்குள்ளான வீதிகளை உரிய முறையில் சீரமைக்கும் வரை அந்த வழியில்
செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T04:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earthquake-in-indonesia-tsunami-report-srilanka-1786764549"></link>
            <id>https://tamilwin.com/article/earthquake-in-indonesia-tsunami-report-srilanka-1786764549</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என&amp;nbsp;இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என&nbsp;இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.</p><p>இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளது.</p><p></p><h2>பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்</h2><p>அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a45dd36f-a95f-4431-811b-a280a374a783/26-6a7fe31bd0408.webp' /></p><p>அத்துடன் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், நிலவரம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியிருந்தது.</p><p>அதன்படி, தேசிய புவியியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் - போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-officials-who-abuse-power-1786763472"></link>
            <id>https://tamilwin.com/article/government-officials-who-abuse-power-1786763472</id>
            <summary type="text">அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை&amp;nbsp; தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை&nbsp; தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>யாழ் ஊடக அமையத்தில் இன்று (15.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்</h2><p>
</p><p>
எதிர்வரும் திங்கட்கிழமை 17ஆம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு
மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23db9e98-8bea-4bde-a0e0-a78a863f2fbf/26-6a7fde595d622.webp' /></p><p>
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண
தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன்
குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T03:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[49 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் - அநுர ஆட்சியில் அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-sri-lanka-after-49-years-1786762627"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-sri-lanka-after-49-years-1786762627</id>
            <summary type="text">இலங்கை அரசியல் வரலாற்றில் 49 ஆண்டுகளின் பின்னர் அநுர அரசாங்கத்தில் துண்டுவிழும் தொகையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியல் வரலாற்றில் 49 ஆண்டுகளின் பின்னர் அநுர அரசாங்கத்தில் துண்டுவிழும் தொகையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> புதிதாக கடன் பெறாத காரணத்தால் கடந்தாண்டு ஆகக் கூடுதான ஆரம்ப நிலுவையை சாத்தியமாக்க முடிந்ததாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;துண்டுவிழும் தொகை</b></p><p>அரச ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5817d069-f379-41d7-85dc-41e73730457a/26-6a7fd6e4d0d6e.webp' />

&nbsp;&nbsp;<b style="color: inherit; font-size: 1.75rem;"></b></p><p>1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் மொத்த தேசிய உற்பத்தி சார்ந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையை 2.5 சதவீதம் வரை குறைக்க முடிந்ததாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>பொருளாதாரத்தை வலுவாக்கும் நோக்கத்துடன் மீண்டெழும் செலவினங்களையும் முதலீட்டு செலவினங்களையும் முறையாக நிர்வகித்ததன் மூலம் இத்தகைய கூடுதலான ஆரம்ப நிலுவை சாத்தியமானது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:03:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணி நேரத்தில் கொந்தளிப்பாகும் கடல்! எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1786761519"></link>
            <id>https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1786761519</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில்&amp;nbsp;அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில்&nbsp;அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம்&nbsp;இன்று (15) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><h2>பலத்த காற்று வீச வாய்ப்பு</h2><p>மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல சுற்று மழை பெய்யும் என்றும், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cb3978c-8d3d-4498-aee6-d6a9c7efdddd/26-6a7fd6be6c338.webp' /></p><p>

மேலும், வடமத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
இதற்கிடையில், நாட்டைசுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கொழும்பு மற்றும் காலி வழியாக சிலாவிலிருந்து மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>
காற்று மேற்கு முதல் தென்மேற்கு திசையிலிருந்து வீசும், மேலும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 30-40 கி.மீ. அளவில் இருக்கும்.</p><h2>&nbsp;கடல் பகுதிகள் கொந்தளிப்பு</h2><p>
</p><p>
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். ஏனைய கடல் பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cf92244-1d12-4653-aaa2-3eae0332c676/26-6a7fd6bf1c7fc.webp' /></p><p>காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்.ஏனைய கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கலாம்.</p><p>இந்தப் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T03:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பில் CCIBயில் ஷிரான் பாசிக்..! சட்டவிரோத சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-drug-trafficker-shiran-basik-island-1786757347"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-drug-trafficker-shiran-basik-island-1786757347</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபர் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபருடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு நபர்களும் விசாரணைக்காக பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>தெஹிவளை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் சர்வதேச பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். இவர் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பிச்சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63c09c02-5390-416e-850e-e0e47814360e/26-6a7fcf5b6905f.webp' /></p><p>இந்நிலையில், ஈரான்-அமெரிக்கப் போரின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்க ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தனது கைப்பேசியில் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபர் மே 26 அன்று டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.</p><p>சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், பயங்கரமான மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருத்தல், சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினராக இருத்தல் மற்றும் சேதம் / தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

</p>]]></content>
            <updated>2026-08-15T02:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி! மத்தியவங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-by-the-central-bank-of-sri-lanka-1786758932"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-by-the-central-bank-of-sri-lanka-1786758932</id>
            <summary type="text">நடுத்தர காலத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

புவிசார் அரசியல் போக்குகளின் தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடுத்தர காலத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p> 

புவிசார் அரசியல் போக்குகளின் தாக்கம், மாறிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழல்கள், அத்துடன் காலநிலை அபாயங்கள் ஆகியவையே இந்த அதிக நிச்சயமற்ற தன்மைக்குக் காரணங்கள் என்றும் மத்திய வங்கி கூறுகின்றது.</p><h2>மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி</h2><p>

வியாழக்கிழமை (13) இரவு இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணயக்கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed9215bd-0a8c-4c89-bbd5-9253e337762a/26-6a7fca28a3663.webp' /></p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள், உலகளாவிய எரிசக்தி சந்தைகள், வர்த்தகப் பரிமாற்றங்கள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும் என்றும், அதன் மறைமுக விளைவுகள் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T02:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eath-quake-1786756934"></link>
            <id>https://tamilwin.com/article/eath-quake-1786756934</id>
            <summary type="text">புதிய இணைப்புஇந்தோனேசியாவை இன்று அதிகாலை (15) தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலநடுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இந்தோனேசியாவை இன்று அதிகாலை (15) தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின் அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>இன்று காலை (15) இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.&nbsp;&nbsp;</p><p>
</p><p>அதன்படி, தேசிய புவியியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. </p><p>
இதனால் பல கட்டடங்களும் வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், உடனடியாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>இந்தோனேசிய நேரப்படி அதிகாலை 5:58 மணியளவில் புளோரெஸ் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb44d17-3aba-449b-b65d-c5adca40d765/26-6a7fdb372c54a.webp' /></p><p>கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள எண்டே நகரத்திற்கு வட-வடமேற்கே 68 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.</p><p>முதல் அதிர்வைத் தொடர்ந்து பல தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டு மேலதிக சேதங்களை உருவாக்கியுள்ளன.
</p><p>கிழக்கு நுசா தெங்காரா, மேற்கு நுசா தெங்காரா, தெற்கு சுலாவேசி மற்றும் தென்கிழக்கு சுலாவேசி ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இந்தோனேசியாவின் வானிலை, காலநிலையியல் மற்றும் புவிப்பௌதிகவியல் முகவர் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>பொதுமக்கள் கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><h2>கடற்கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>
கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக உயர்ந்த நிலப்பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
நிலநடுக்கத்தின் தாக்கம் புளோரெஸ் தீவின் பெரும்பகுதியில் உணரப்பட்டது. கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தின் சிக்கா பகுதியில் உள்ள பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. </p><p>
சேதமடைந்த கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் குறித்த உத்தியோகபூர்வ மதிப்பீடுகளை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.</p><p>
இதேவேளை, இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை கிடையாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T01:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு - மகிந்த - கோட்டாபயவிற்கு கிடைக்குமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airstrike-on-the-sencholai-girls-home-complex-1786738447"></link>
            <id>https://tamilwin.com/article/airstrike-on-the-sencholai-girls-home-complex-1786738447</id>
            <summary type="text">2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
</p><p>
அந்தக் காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தனர்.
</p><p>
செஞ்சோலை தாக்குதல் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர்கள் வெளியிட்ட அறிக்கைகளில், இலங்கை வான்படையின் தாக்குதலில் சிறுவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
எனினும், செஞ்சோலை வளாகம் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் என இலங்கை அரசாங்கம் அப்போது விளக்கம் அளித்திருந்தது.

ஆனால், தாக்குதலுக்குப் பின்னர் வெளியான புகைப்படங்களில், சிறுவயதுடைய மாணவிகள் சீருடைகளுடன் காணப்பட்டமை தொடர்பிலும் பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
</p><p>
இந்நிலையில், சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதுபோன்ற சூழலில், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடந்தகால குற்றங்கள் மற்றும் அநீதிகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழ் சமூகத்திலும் நிலவி வருகிறது.</p><p>

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டு மக்களின் நலனுக்காகவும் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும் செயற்படுவதாகத் தெரிவித்து வருகிறார்.
</p><p>
இவ்வாறான அரசியல் மாற்றங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமா என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாகப் பேசுகிறது ‘செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6_lUEKeR67Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-15T00:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கும் ஜனாதிபதி..! குற்றஞ்சாட்டும் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-warns-threat-judicial-independence-1786754047"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-warns-threat-judicial-independence-1786754047</id>
            <summary type="text"> நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p> நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>நீதித்துறையின் சுயாதீனம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

“நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கடுமையான வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03971abb-db90-40d3-872a-87584bf85e36/26-6a7fb7b9b8a29.webp' /></p><p>
</p><p>
எனினும், அரசாங்கம் அந்த வலியுறுத்தல்களை கருத்திற்கொள்ளவில்லை.
மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்தின் பிரதான ஆலோசகர்களாக உள்ளனர்.

எனினும், இந்த அரசாங்கம் அவர்களின் ஆலோசனைகளையும் மதிக்கவில்லை.
</p><p>22ஆவது திருத்தத்தை கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளது.</p><h2>ஜனாதிபதிக்கு ஆலோசனை</h2><p>

நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கிறார்.

நீதித்துறையை அரசியல்மயப்படுத்துவதால் ஏற்படும் அபாயத்தையே ஜனாதிபதி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51bb1bbe-b1eb-43f6-a6ac-5b0ac9b87acb/26-6a7fb7ba6e003.webp' /></p><p>

22ஆவது திருத்தம் தொடர்பில் உரிய தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே தீர்மானம் எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய அந்த சிரேஷ்ட தரப்பினர் யார் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T00:50:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களை சேகரித்த நபர் கைது - மீட்கப்பட்டுள்ள இரகசிய குரல் பதிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arrested-for-collecing-data-on-prison-1786753884"></link>
            <id>https://tamilwin.com/article/person-arrested-for-collecing-data-on-prison-1786753884</id>
            <summary type="text">&amp;nbsp;சிறைச்சாலை அதிகாரிகளைப் பற்றிய தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறைச்சாலை அதிகாரிகளைப் பற்றிய தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த முகமட் அஸ்மான் ஷெரிப்டீன் என்பவரின் நெருங்கிய சகா ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மீட்கப்பட்டுள்ள குரல் பதிவுகள்&nbsp;</h2><p>கடந்த ஆண்டு தெஹிவளை, வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அஸ்மானின் மோட்டார் சைக்கிள் ஓட்டுநராகவும் இவர் செயற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c47077a-0508-487f-bdfe-df7a48e41dfb/26-6a7fb35e2c12c.webp' /></p><p> </p><p>
அத்துடன், புதிய மெகசின் சிறைச்சாலை மோதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>கைது செய்யப்பட்ட நபரின் கைப்பேசியைப் பொலிஸார் பரிசோதித்தபோது, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "கொஸ் மல்லி" என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் அவர் பேசிய பல குரல் பதிவுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அந்த உரையாடல்களில், சிறைச்சாலை அதிகாரிகளைப் பற்றிச் சேகரிக்கப்பட்ட விபரங்களும், அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இச்சம்பவம் குறித்து சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T00:31:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drink-more-water-1786753080"></link>
            <id>https://tamilwin.com/article/drink-more-water-1786753080</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் அதிகளவான வெப்பநிலை குறித்து சுகாதாரத்துறையினர் விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
</p><p>தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, வெளிப்புறங்களில் கடினமான பணிகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும், தேவையான அளவு நீரைக் அருந்துமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.</p><h2>விடுத்துள்ள அறிவுறுத்தல்</h2><p>
இந்த வானிலை சூழ்நிலையில் காலநிலை அவ்வப்போது மாற்றமடைவதால், அதிக வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து போதுமான அளவு நீரைக் குடிப்பது மிகவும் முக்கியமானது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5a84fb9-77a0-4f12-9a35-e56cce3d8600/26-6a7fb03a58958.webp' /></p><p>
</p><p>மேலும், கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தோலில் பூசும் கிரீம்களைப் பயன்படுத்துவதும், உடலை நன்றாக மூடி ஆடை அணிவதும் முக்கியம் எனவும் இதன் மூலம் சூரிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போதைய வானிலை காரணமாக மன அழுத்தம் போன்ற நோய்கள் தீவிரமடையக்கூடும் எனவும், இது மனநலத்தைப் பாதித்து நினைவாற்றல் மற்றும் கவனத்தைச் செலுத்தும் திறனைக் குறைக்கக்கூடும் எனவும் ராகம மருத்துவ பீடத்தின் குழந்தைகள் மற்றும் சிறார்கள் மனநல விசேட நிபுணர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T00:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி விவகாரத்தில் மக்களைத் திசைதிருப்பக் கூடாது..! சிறீதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786751324"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786751324</id>
            <summary type="text">தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p>

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நேற்று(14) நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டுள்ளார்.</p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>

புதைகுழியைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35643df7-7f1a-417d-a287-1624cb19a44d/26-6a7fac66e1b41.webp' /></p><p>

“பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம். ஆனால், குழுக்கள் தங்களுக்குள் மோதி, யாரையும் கொண்டுவந்து புதைத்ததாக நாங்கள் இதுவரை அறியவில்லை. அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.</p><p>

நாட்டின் நீதி அமைச்சர், மக்களைத் திசைதிருப்பும் வகையில் இவ்வாறான வார்த்தைகளை தெரிவிக்க கூடாது. தமிழர்கள் எதிர்பார்ப்பதைப் போல இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானது. 

ஏனெனில், இங்கு நடந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.</p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்</h2><p> </p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாண மண்ணில் 1995ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயும், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.

இதனை நாங்கள் சொல்லவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477e41a3-6715-47e6-b7e4-42bafc3cd108/26-6a7fac68a5487.webp' /></p><p> </p><p>இலங்கையின் கிரிசாந்தி கொலை வழக்கில் சாட்சியாக இருக்கின்ற சோமரத்ன ராஜபக்ச இதனைத் தெரிவித்திருக்கிறார். இப்போதும் தெரிவித்து வருகிறார்.

சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைத் தோண்ட வேண்டும்.அப்போதுதான் உண்மை வெளியில் வரும்.</p><p>

அந்த உண்மைகளை மறைப்பதற்காக எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு&nbsp; தேவையற்ற விடயம் போன்ற கதைகளைச் சொல்ல அமைச்சர் முன்வரக் கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.<br><br><b><i>You may Like This..<br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mTXdy12Pjmc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-15T00:05:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை உலுக்கிய வரலாறு காணாத கனமழை: இதுவரையில் 8 பேர் பலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/record-breaking-heavy-rains-hit-japan-8-dead-1786749867"></link>
            <id>https://tamilwin.com/article/record-breaking-heavy-rains-hit-japan-8-dead-1786749867</id>
            <summary type="text">கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டோக்கியோவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை
நீடித்து வருகிறது.

வழக்கமாக ஒகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழையின் அளவை விட 3 மடங்கு அதிகமான மழை
வெறும் அரை நாளில் பதிவாகியுள்ளது.</p><h2>வரலாறு காணாத கனமழை</h2><p>
</p><p>
ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி
பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் முற்றிலும்
துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95cb1d6b-38f6-45f6-b2c1-7428dc119931/26-6a7fa49969e6e.webp' /></p><p>

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களைப்
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p>

அதேநேரம் தொடருந்து மற்றும் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் நரிட்டா
சர்வதேச விமான நிலையத்தில் 7,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இரவு முழுவதும் விமான
நிலையத்திலேயே முடங்கினர்.</p><p>

மேலும், 1,800-க்கும் மேற்பட்டோர் அரச அலுவலகக் கட்டிடங்களில்
தஞ்சமடைந்துள்ளனர்.
</p><p>
ஆபத்தின் அளவை உணர்த்தும் நிலை 5 அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தற்போது
நிலை 4 ஆகக் குறைக்கப்பட்டிருந்தாலும், மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம்
தொடர்ந்து நிலவுவதாகப் பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T23:28:28+00:00</updated>
        </entry>
    </feed>
