<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-08T09:26:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/western-province-branch-fuel-1786178382"></link>
            <id>https://tamilwin.com/article/western-province-branch-fuel-1786178382</id>
            <summary type="text">எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை நாளை (09.08.2026) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

நாட்டின் அதிகளவிலான எரிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேல் மாகாணக் கிளை நாளை (09.08.2026) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

 

நாட்டின் அதிகளவிலான எரிபொருள் விநியோகஸ்தர்கள் மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த கிளையை விரைவாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

 

தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இதுவரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து நியாயமான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இச்சங்கம் தொடங்கப்படுவதாகவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் கூறுகின்றது.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>

 

குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைத் தவிர, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே இச்சங்கத்தின் பிராந்தியக் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89352f9-f3fa-4761-8778-e0a55905beb1/26-6a76f08470dbe.webp' /></p><p>
</p><p>
 

இருப்பினும், எதிர்காலத்தில் அந்த இரு மாவட்டங்களையும் மையமாகக் கொண்டு கிளைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T09:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலியானது என சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு! முன்னாள் எம்.பிக்கு பிரித்தானியாவில் ஏற்பட்ட சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-passports-are-being-rejected-1786166774"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-passports-are-being-rejected-1786166774</id>
            <summary type="text">இலங்கையால் வழங்கப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் குறைந்த கடவுச்சீட்டுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியாவில் தடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையால் வழங்கப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் குறைந்த கடவுச்சீட்டுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>

கடவுச்சீட்டை சரிபார்க்கும் நடவடிக்கை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டை சரியாகப் படிக்க முடியாததால் அது போலியானது எனச் சந்தேகப்பட்டு, பிரித்தானிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

முன்னர் 64 பக்கங்களைக் கொண்டிருந்த கடவுச்சீட்டு தற்போது 48 பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d842a60-a529-4348-a021-eefb9fabdd39/26-6a76c9ddbf383.webp' /></p><p>ஆனால் அதற்காக வசூலிக்கப்படும் 6000 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய கடவுச்சீட்டுகளில் குறிப்புப் பக்கங்களோ அல்லது நீட்டிப்புப் பக்கங்களோ இல்லை. அச்சிடும் தரம் மிகவும் குறைவாக உள்ளது.</p><p>

குறிப்பாக குடிவரவு முத்திரையைப் பதிக்கும்போது, ​​மை மறுபக்கம் கசிவது போன்ற பிரச்சினைகள் காரணமாக சில நாடுகள் இந்த அனுமதிகளை நிராகரித்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
தரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை
</h2><p>இதற்கு பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளிக்கையில், அனுமதிகளின் தரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, உலகின் பிற நாடுகளால் பின்பற்றப்படும் ஒரு முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/521d996e-1f31-4039-9e1d-9a4b6791b6a0/26-6a76c9de834df.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான டெண்டர் தொடர்பாக ஒரு நீதிமன்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளது. மின்னணு கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vOj4NcDWjRo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-08T08:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்! பொதுமக்கள் விடுத்துள்ள வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-against-waste-dumped-on-the-roadside-1786173093"></link>
            <id>https://tamilwin.com/article/action-against-waste-dumped-on-the-roadside-1786173093</id>
            <summary type="text">தம்பலகாமம் - பத்தினிபுரம் பகுதியில் கழிவுகளை அகற்றுவதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சிலர் வீதியோரங்களில் வீட்டுக்கழிவுகள் மற்றும் வணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்பலகாமம் - பத்தினிபுரம் பகுதியில் கழிவுகளை அகற்றுவதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சிலர் வீதியோரங்களில் வீட்டுக்கழிவுகள் மற்றும் வணிகக்கழிவுகளை கொட்டி வருவதால் அசௌகரியங்களை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். </p><p>

வீதியோரங்களில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என அதிகாரிகளால் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை சிலர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கழிவுகளை வீசி செல்வதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h2>கழிவுகளால் ஏற்பட்டுள்ள நிலைமை</h2><p> </p><p>

இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில், முறையற்ற விதத்தில் கொட்டப்படும் பொலித்தீன் பைகள் மற்றும் பிற கழிவுகள் பலத்த காற்றினால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் குடிநீர் கிணறுகளுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. 

இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், குடிநீரும் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/745c9a8c-5ce5-47af-9695-2b2fc39ea6d3/26-6a76e66a500fc.webp' /></p><p> இறைச்சி மற்றும் கோழிக் கழிவுகள் வீதியோரங்களில் வீசப்படுவதால், உணவை தேடி ஏராளமான தெரு நாய்களும் காட்டு யானைகளும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருகின்றன.</p><p> 

வீதிகளில் யானைகள் மற்றும் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்து அபாயத்திற்கு உள்ளாவதோடு, அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>எவ்வித தீர்வும் எடுக்கப்படவில்லை</h2><p> </p><p>

இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்த போதிலும், இதுவரை எவ்வித முதற்கட்ட நடவடிக்கையோ அல்லது நிரந்தரத் தீர்வோ மேற்கொள்ளப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c98cdb75-77bc-43dc-b0d6-7d8e6584114b/26-6a76e66b30207.webp' /></p><p>

எனவே, பாரிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்கு முன் பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வீதியோரங்களில் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>

அத்துடன், ஒதுக்கப்பட்ட கழிவு சேகரிப்பு இடத்தில் கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7505a91-753f-4396-8058-e872dbb893b6/26-6a76e66c01cf6.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-commissioner-appointed-motor-traffic-1786176574"></link>
            <id>https://tamilwin.com/article/new-commissioner-appointed-motor-traffic-1786176574</id>
            <summary type="text">வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக
நி.தவலோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக
நி.தவலோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர்
சிவபாதசுந்தரம் சத்தியசீலன் நேற்று (07.08.2026)&nbsp; ஆளுநர்
செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.</p><p></p><h2>புதிய ஆணையாளர்</h2><p>
</p><p>
வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய
கு.காஞ்சனா மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/406f9d7b-5cc3-4eba-a17b-fde9d6134290/26-6a76e69af24d5.webp' /></p><p>இதனையடுத்து, ஏற்பட்ட
வெற்றிடத்துக்கு நி. தவலோஜினி&nbsp; நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஒன்பது சிறைச்சாலைகளில் ஆபத்தான நிலையிலுள்ள ஆயுதங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-in-sri-lanka-weapons-1786176170"></link>
            <id>https://tamilwin.com/article/prison-in-sri-lanka-weapons-1786176170</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத நிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>அங்குணுகொலபெலஸ்ஸ, பூஸ்ஸ, போகம்பரை, களுத்துறை, அநுராதபுரம், கொழும்பு மகசின், மொணராகலை, வட்டரக்க மற்றும் வாரியபொல ஆகிய சிறைச்சாலைகளில் இருந்த தோட்டாக்களே இவ்வாறு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகத் கணக்காய்வு அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>ஆபத்தான நிலையிலுள்ள ஆயுதங்கள்</h2><p>மேலும் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள 191 துப்பாக்கிகள் பழுதுபார்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
அதேபோல் 27 சிறைச்சாலைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி பாதுகாப்புக் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் 1038 பயன்படுத்த முடியாததோடு, அந்நிறுவனங்களில் அவற்றிற்கு கடும் பற்றாக்குறையும் காணப்படுகிறது.
</p><p>இவற்றில் 62 துப்பாக்கிகள், 50 மேகசின்கள் (Magazines) மற்றும் 1278 தோட்டாக்கள் விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டு 3 ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவை இதுவரை முறையாக பெற்றுக் கொள்ளப்படவில்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c43e3fc2-8a38-492a-9352-44a9f847f127/26-6a76e2ac33672.webp' /></p><p>இதனால் கலவர சூழ்நிலையின் போது அதிகாரிகளுக்கு அதை எதிர்கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>அதேபோல் நீதிமன்றக் கடமைகள், விசேட மருத்துவமனைக் கடமைகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளின் போதும் ஆயுதப் பற்றாக்குறை ஒரு தடையாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
</p><p>இந்தத் தகவல்கள் சிறைச்சாலைத் திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T08:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள மிக ஆபத்தான பொருட்கள்.. இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/award-winning-actress-rosamund-pike-sri-lanka-1786174796"></link>
            <id>https://tamilwin.com/article/award-winning-actress-rosamund-pike-sri-lanka-1786174796</id>
            <summary type="text">பிரித்தானிய நடிகையும் மைன்ஸ் அட்வைசரி குரூப் (MAG) அமைப்பின் தூதருமான ரொசமுண்ட் பைக், இலங்கையில் எஞ்சியுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் இறுதிவட்டப் பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய நடிகையும் மைன்ஸ் அட்வைசரி குரூப் (MAG) அமைப்பின் தூதருமான ரொசமுண்ட் பைக், இலங்கையில் எஞ்சியுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் இறுதிவட்டப் பணிகளைப் பார்வையிட வருகை தந்துள்ளார்.</p><p> நாட்டில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட நிலக்கண்ணிவெடி பகுதிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை அகற்றப்பட்டு, தற்போது 10 வீதத்திற்கும் குறைவான (சுமார் 20.8 சதுர கிலோமீட்டர்) நிலப்பரப்பே எஞ்சியுள்ளது. </p><p>இதில் பெரும்பாலான பகுதிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அமைந்துள்ளன.
</p><p>
இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான கண்ணிவெடிகளும் பிற வெடிபொருட்களும் அகற்றப்பட்டு, சுமார் ஒரு மில்லியன் மக்கள் அச்சமின்றி மீள்குடியேறியுள்ளனர்.</p><p></p><h2>252 பேர் பலி..&nbsp;</h2><p> </p><p>இதன் பயனாக, 2002இல் 252 ஆக இருந்த கண்ணிவெடி விபத்துகளின் எண்ணிக்கை 2024இல் இரண்டாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fab14b6-4e3d-4635-97af-cecbf8caeff8/26-6a76dedf68af1.webp' /></p><p> </p><p>சுமார் 2,000க்கும் மேற்பட்ட நபர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளதன் மூலம் தேசிய நல்லிணக்கமும் பொருளாதார மீட்சியும் சாத்தியமாகியுள்ளது.
</p><p>
முழுமையாக நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணையவுள்ள நிலையில், இது வடகிழக்கு மாகாணங்களின் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.</p><p> </p><p>தனது விஜயத்தின் போது மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் செல்லும் ரொசமுண்ட் பைக், அகற்றும் பணியாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். </p><p>2002 முதல் இலங்கையில் இயங்கிவரும் MAG அமைப்பு, இதுவரை சுமார் 103 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T07:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைகளில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ensure-the-safety-indian-fishermen-in-sl-prisons-1786173616"></link>
            <id>https://tamilwin.com/article/ensure-the-safety-indian-fishermen-in-sl-prisons-1786173616</id>
            <summary type="text">இலங்கை சிறைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் உயிருக்கான உத்தரவாதங்களை இந்திய
இலங்கை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய கடற்றொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் உயிருக்கான உத்தரவாதங்களை இந்திய
இலங்கை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சே.நல்லதம்பி இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
அவர் முன்வைத்த கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்டதான
குற்றச்சாட்டுகளில் இலங்கையின் பல சிறைகளிலும் தமிழக கடற்றொழிலாளர்கள் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர். </p><p>இதில் பலர் இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இது இலங்கை
சட்டதிட்டத்திற்கு உட்பட்ட விடயமாகினும் கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்றொழிலாளர்கள் என்பதனை
எவரும் மறுக்க முடியாது.</p><p></p><h2>வன்முறை</h2><p>

கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற
வன்முறையில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/098e6d5d-cc35-49fc-9786-3e150bfea510/26-6a76dcc6c4cb8.webp' /></p><p> </p><p>அதன்
பின்பும் ஒன்றன் பின்பு ஒன்றாக இன்று பல சிறைகளிலும் வன்முறை பரவுவதாகவே
இலங்கை செய்திகள் உள்ளது.

தற்போது கொழும்பு மெகசின் சிறை, குருவிட்ட மற்றும் பல்லன்சேனை சிறைகளில் இந்த
வன்முறை வெடித்ததுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். </p><p>&nbsp;எனவே இந்த விடயத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் உள்ள
இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T07:38:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நாமல் தங்கியிருந்த வீட்டுக்கு நடத்தப்பட்ட தாக்குதல்! மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-cardiff-city-of-wales-1786173774"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-cardiff-city-of-wales-1786173774</id>
            <summary type="text">&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் பிரித்தானியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதில் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் பிரித்தானியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதில் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் தான் தங்கியிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
</p><p>வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இந்த பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை..
</p><p>சிட்டி யுனிவர்சிட்டி லண்டன் வருவதற்கு முன்னர் நான் கார்டிப் (Cardiff) நகரத்தில் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.
</p><h2>
</h2><p></p><h2>கார்டிப் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்</h2><p>கார்டிப்பை நான் தேர்ந்தெடுப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது றக்பி விளைாயாட்டில் நான் கொண்டிருந்த ஈடுபடாகும்.</p><p>றக்பி விளையாடுவதற்காகவே அங்கு சென்றேன்.2006, 2007 காப்பகுதியியேலே நான் தங்கியிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p>இச்சம்பவம் தொடர்பில் Cardiff பொலிஸில் முறைப்பாடும் செய்திருந்தேன்.அவர்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தினர்.</p><p>ஆனால் நான் அது தொடர்பில் மேலதிக தகவல்களை தேடி பார்க்கவில்லை.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல கதைகள் சொல்லப்பட்டன.புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரை குற்றம்சாட்டினர். </p><p>ஆனால் நான் அதைத் தொடர விரும்பவில்லை. ஏனெனில் அந்தக் காலப் பகுதியில் இருந்த சூழ்நிலை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த அரசியல் நெருக்கடிகள் பற்றி தெரிந்திருந்ததால். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1dfe33b-e3a3-4690-93e6-4ed27340862e/26-6a76d9506bd34.webp' /></p><p>அத்தோடு புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் (diaspora) பெரிய அச்சுறுத்தல்கள் இருந்தன. </p><p>சில நிகழ்வுகளுக்குச் சென்றால் கூட புல்லட் புரூப் ஜாக்கெட் (bulletproof jacket), அதாவது குளிர்க்காக அணியும் எனது ஸ்வெட்டருக்குள் (armor plate) அணிந்துதான் சென்றேன். </p><p>அந்த விடயங்களை நாங்கள் அக்காலத்தில் ஊடகங்களுக்குச் சொல்லவில்லை. இதில் அரசியல் இலாபம் பெறவும் எங்களுக்குத் தேவை இருக்கவில்லை. </p><p>தீவிர பாதுகாப்புக் காரணங்களால் 2006, 2007, 2008 காலப்பகுதியில் நான் தங்கியிருந்த இடங்களைக் கூட அவ்வப்போது மாற்ற வேண்டியதாயிற்று.
</p><p>இங்கிலாந்தில் படிக்கும் போது, சில ஜனாதிபதிகளின் பிள்ளைகள் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு சென்றார்கள்.</p><p>இராணுவத் தளபதிகளின் பிள்ளைகள் கூட அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அது பேசக் கூடாத ஒரு விடயம், ஏனெனில் அவ்வாறு செய்ய முடியும். </p><p>ஆனால் நான் அழைத்துச் செல்லவில்லை.
யுத்தம் தொடங்கியதும் பாதுகாப்பு காரணங்களால் நான் லண்டனுக்கு மாறினேன். </p><p>அப்போதுதான் சிட்டி யுனிவர்சிட்டியைத் தேர்ந்தெடுத்தேன். அதைத் தேர்ந்தெடுப்பதற்கும் றக்பி விளையாட வேண்டும் என்பதற்காகத்தான்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vOj4NcDWjRo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-08T07:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலை குறைப்பு! இன்று முதல் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reduces-prices-of-10-essential-food-items-1786168095"></link>
            <id>https://tamilwin.com/article/reduces-prices-of-10-essential-food-items-1786168095</id>
            <summary type="text">இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதோசா, 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

வர்த்தகம், வணிகம், உணவுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதோசா, 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்த அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அரசுக்குச் சொந்தமான சில்லறை விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><h2>திருத்தப்பட்ட விலை விவரங்கள்&nbsp;</h2><p>
அதன்படி, நுகர்வோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோசா விற்பனை நிலையங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7f771e5-b276-413d-be6f-3b1b0562beb5/26-6a76c9cf07c43.webp' /></p><p>
</p><p>
திருத்தப்பட்ட விலை விவரங்கள் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, பூண்டு கிலோவின் விலை ரூ.699 இலிருந்து ரூ.649 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.259 இலிருந்து ரூ.224 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.259 இலிருந்து ரூ.239 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, பாசிப்பயறு, சிவப்பு பச்சை அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, கடலை மற்றும் உளுந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T06:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவின் மாபெரும் உணவுத் திருவிழா - அக்க்ஷய பாத்திரத்தில் கை நனைக்க உங்களுக்கும் வாய்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786168360"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786168360</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா நேற்று(07.08.2026) கோலாகலமாக ஆரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா நேற்று(07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இந்த மாபெரும் உணவுத் திருவிழா நேற்று 07.08.2026 முதல் ஆரம்பமாகி, 8 ,9 மற்றும் 10ஆம் திகதிகள் உட்பட நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் 10 வரை&nbsp; நடைபெறவுள்ளது.
</p><h2>
நீங்களும் இணைந்து கொள்ளலாம்... </h2><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், 
சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e8315c-7663-4230-8058-689ac5725c91/26-6a76c4e0be08b.webp' /></p><p>அத்துடன், உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>
மேலும், றீச்சாவின் உணவுத் திருவிழாவிற்கு <b>QICK FOOD </b>அனுசரணை வழங்குவதுடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பித்து கொண்டிருக்கின்றன.</p><p>உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். அழகை உலகிற்கு காட்டும் கலாச்சார உணவுத்திருவிழா - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cultural-food-festival-in-jaffna-1786167686"></link>
            <id>https://tamilwin.com/article/cultural-food-festival-in-jaffna-1786167686</id>
            <summary type="text">வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு
அறிமுகப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு
அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில்
“யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு இடம்பெறவுள்ளது.</p><p> 

இந்த நிகழ்வு, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. </p><p>
 
ஆகஸ்ட் 15ஆம் திகதி முதல், யாழ்ப்பாணத்தின்
வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப்
பிரமாண்ட விழா, வட மாகாண சுற்றுலாத்துறையை சர்வதேச அரங்கில் மேலும்
வலுப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின்
தனித்துவமான அடையாளங்களை உலகுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாகவும்
அமையவுள்ளது.</p><h2>

யாழ்ப்பாண அழகை உலகிற்கு காட்டும் கொண்டாட்டம்</h2><p>
இந்த நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின்
தலைவர் ஜே.விவேகானந்தன், 

 யாழ்ப்பாணத்தின் தொன்மைமிக்க கலாசாரப்
பாரம்பரியம், உலகப் புகழ்பெற்ற சுவைமிகு உணவுகள் மற்றும் கலை மரபுகளை
உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே
இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb8809b4-f6b0-4a68-88db-ecc6d8a6874e/26-6a76c204ad0d9.webp' /></p><p> 

பண்ணை கடற்கரையையும் யாழ்ப்பாணக்
கோட்டையையும் அண்மித்த இயற்கை எழில் சூழ்ந்த முற்றவெளி பண்ணை மைதானத்தில்
நடைபெறும் இந்த விழா, வட மாகாண சுற்றுலாத்துறையின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு
முக்கிய மைல்கல்லாக அமையும். </p><p>

வட மாகாணத்தின் சுற்றுலா, கலாசாரம், கைவினை,
பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஒரே மேடையில் உலகிற்கு
வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமையும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a474c6c6-338d-442c-bfad-f67af55fca14/26-6a76c20575074.webp' /></p><p>
</p><p>
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் வட மாகாணத்தின் பாரம்பரிய
உணவுக் கண்காட்சி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை, கலாசார மற்றும்
நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள்,
உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள்
இடம்பெறவுள்ளன.
</p><p>
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், முதலீட்டாளர்கள், தொழில்
முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் இந்தப் பெருவிழாவில்
கலந்துகொள்ளுமாறு வட மாகாண சுற்றுலாப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:43:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-announcement-for-a-l-students-1786164477"></link>
            <id>https://tamilwin.com/article/special-announcement-for-a-l-students-1786164477</id>
            <summary type="text">நாடு முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 5ஆம் திகதி வரை 2,532 மையங்களில் நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 5ஆம் திகதி வரை 2,532 மையங்களில் நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த ஆண்டு பரீட்கையில் 264,496 பாடசாலை பரீட்சாத்திகளும், 107,814 தனிப்பட்ட&nbsp;பரீட்சாத்திகளும் உட்பட மொத்தம் 372,310 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.</p><h2>அனுமதிச் சீட்டு தொலைந்துவிட்டால்</h2><p>

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிச் சீட்டுகள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அஞ்சல் மூலமாகவும், தனிப்பட்ட&nbsp; விண்ணப்பதாரர்களின் அனுமதிச் சீட்டுகள் அவர்களது முகவரிகளுக்கும் அஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c91c13af-0e7b-4ef6-a225-b37b00d503c8/26-6a76bca591b27.webp' /></p><p>

அனுமதிச் சீட்டு தொலைந்துவிட்டால், அதைத் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் கூறினார்.</p><p>

பரீட்சையின்போது அடையாளத்தைச் சரிபார்க்க தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p>பரீட்சை அட்டவணையை உன்னிப்பாகக் கவனித்து, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பரீட்சை மையங்களுக்கு வருமாறு மாணவர்களுக்குத் பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. </p><h2>எந்தவொரு அவசர சூழ்நிலையிலும்</h2><p>மேலும், கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், நோட்டுகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் பரீட்சை அறைக்குள் கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bfe63e1-1115-4cbb-9fb5-84d76095988c/26-6a76bca651dbb.webp' /></p><p>

கடந்த ஆண்டுகளில் நடந்த பரீட்சை மோசடி காரணமாகப் பல மாணவர்களின் பரீட்சை முடிவுகள் நிறுத்திவைக்கப்பட வேண்டியிருந்தது என்று தேர்வு ஆணையர் ஜெனரல் தெரிவித்தார்.</p><p>

மேலும், எந்தவொரு அவசர சூழ்நிலையிலும் தேவையான வசதிகளை வழங்கத் பரீட்சைத் திணைக்களம் தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T05:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து பதற்றமான சூழ்நிலை - பின்னணி குறித்து வெளியான புலனாய்வு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/organized-team-behind-the-prison-riot-1786153725"></link>
            <id>https://tamilwin.com/article/organized-team-behind-the-prison-riot-1786153725</id>
            <summary type="text">நாடு முழுவதும் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகளின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகளின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
நாட்டின் ஐந்து சிறைச்சாலைகளில் கலவரங்கள் வெடிக்கக்கூடும் எனப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.</p><p> 

எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நாட்களில் கொழும்பு மெகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பல்லன்சேனை ஆகிய சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p> </p><h2><b>

கைதிகள் பலி
</b></h2><p>இந்த அமைதியற்ற சூழ்நிலை காரணமாக மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbe349fc-550a-45fb-a30f-10fb81354dd1/26-6a768e34dd1a3.webp' /></p><p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் மதிலுக்கு வெளியில் இருந்து அடையாளம் தெரியாத நபர்களால் வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்றதையடுத்து, கைதிகளுக்கு இடையே முதன்முதலில் பதற்றம் ஆரம்பமானது.</p><p>அது அடுத்த நாளும் தொடர்ந்தது.

அடுத்து குருவிட்ட சிறைச்சாலையிலும் கைதிகளுக்கு இடையே கடும் பதற்ற நிலை ஏற்பட்டது.</p><h3><b> சிறைச்சாலைக்கு இடமாற்றம் </b></h3><p>ஆத்திரமடைந்த கைதிகள் அங்கிருந்த மருத்துவமனை மற்றும் பல கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5143927-9676-4837-9a0e-4f2549c6037d/26-6a768e3593f68.webp' /></p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆயிரம் பேருக்கும் அதிகமான கைதிகளுக்கு இடவசதிகள் போதாது எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.</p><p> 
 
நீர்கொழும்பு பல்லன்சேனை சிறைச்சாலையிலும் காலை உணவு வழங்குவதற்காகச் சிறைக் கூண்டுகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது, போதைப்பொருள் தகராறைக் அடிப்படையாகக் கொண்டு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vOj4NcDWjRo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-08T05:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கதி - துயரத்தில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-university-student-dies-1786166423"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-university-student-dies-1786166423</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பயிலும் மாணவியொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(06....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பயிலும் மாணவியொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

27 வயதில் உயிரிழப்பு</h2><p>
இவ்வாறு உயிரிழந்த மாணவி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பயிலும் நிரோஷினி என்றும் அவருக்கு தற்போது 27 வயது என்றும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8edc93e2-50a2-4c09-8e8e-494bfb1553ae/26-6a76bcc835bc4.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி
மாணவி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கற்ற சமூகத்தின் தொடர்ச்சியான இழப்புகள் பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QzFSaLZZXIE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-08T05:21:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்! பொதுமக்களுக்கான விசேட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786160763"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786160763</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இன்றைய தினத்திற்கான (08.08.2026) காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும்,

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p> </p><p>

அதன்படி, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
</p><p>
குறித்த பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4323414-fcaf-42a8-a2bc-4706b6a63ccb/26-6a76b8f542f24.webp' /></p><h2>பலத்த காற்று வீசக்கூடும்</h2><p>
</p><p>
வடமேல் மாகாணத்தில் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T05:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை! மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scolarship-exam-in-sri-lanka-1786162126"></link>
            <id>https://tamilwin.com/article/scolarship-exam-in-sri-lanka-1786162126</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என&amp;nbsp;பரீட்சைகள் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என&nbsp;பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம்</h2><p>
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் உள்ள 2723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09.08.2026) நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 294089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் சிங்கள மொழியில் 220366 விண்ணப்பதாரர்களும், தமிழ் மொழியில் 73723 விண்ணப்பதாரர்களும் பதிவு செய்துள்ளனர்.</p><p>இப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம் ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/457c3aff-8959-4697-b130-5800f4a63d03/26-6a76b2216bd2e.webp' /></p><p> </p><p>

பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மாணவர்களின் மன ஒருமைப்பாட்டைப் பேணி, கவனத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்குத் தொடங்கி காலை 10.45 மணிக்கு நிறைவடையும்.</p><h2>அறிவுறுத்தல்</h2><p> 

அதன்பின் கிடைக்கும் சிறிய இடைவேளைக்குப் பிறகு, காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணி நேர காலம் முதல் வினாத்தாளுக்காக ஒதுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0360b0d4-0f9f-4b49-af44-3dec0164ef59/26-6a76b222242b6.webp' /></p><p>
</p><p>
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாக குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T04:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கைது செய்யப்பட்ட சொகுசு பேருந்து உரிமையாளர் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/luxury-bus-owner-arrested-vavuniya-court-orders-1786161865"></link>
            <id>https://tamilwin.com/article/luxury-bus-owner-arrested-vavuniya-court-orders-1786161865</id>
            <summary type="text">வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சொகுசு
பேருந்தின் உரிமையார் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சொகுசு
பேருந்தின் உரிமையார் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்த
நிலையில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டிருந்தார். </p><p>அதன் பின் குறித்த பேருந்து சேவையின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம்
வழங்குவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டிருந்தார்.</p><h2>போக்குவரத்து நடவடிக்கைகளின் போது</h2><p>

இந்நிலையில் குறித்த பேருந்து உரிமையாளரை புதன்கிழமை (05.08.2026) வவுனியா மாவட்ட
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில அவர் நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டதுடன், சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53ca0034-15a1-4db5-9dfd-1dd016b63c9c/26-6a76b3b0d08ca.webp' /></p><p>இச்சம்பவம் தொடர்பில் குறிதத சொகுசு பேரூந்தின உரிமையாளர்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

புளியங்குளததில் ஏற்பட்ட விபத்து சம்பவம் துர்திஸ்டவசமானது. ஏற்றுக் கொள்ள
முடியாத ஒன்று. </p><p>போக்குவரத்து நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் எதிர்பாரதவை.
இருந்த போதும் அன்றைய சம்பவம் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாதவை. </p><p>குறித்த
பேருந்து விபத்தால் மரணித்த குடும்பஸ்தரின் இழப்பை எம்மால் ஏற்றுக் கொள்ள
முடியாது. இதற்காக நாம் மனம் வருந்துவதுடன அவர்களின் குடும்பத்திற்கு எமது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கான தேவையான சில
உதவிகளையும் நாம் செய்திருந்திருந்தோம்.</p><p>எனினும், விபத்தின் போது எமது சொகுசு பேரூந்தை செலுத்திய சாரதியின் தவறை எமது
பணிக்குழு கவனம் செலுத்த தவறியுள்ளனர்.</p><p> இந்த தவறுக்கு வருந்துவதுடன், நாம்
ஒன்று, இரண்டு வருடமல்ல. 30 வருடங்களுக்கு மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டு
வருகின்றோம் . ஒரு நாள் கூட எமது பேரூந்தில் இருந்து எந்தவித சட்டவிரோதமான
எதுவித செயற்பாடுகளும், இதுவரையில் இடம்பெறவில்லை. </p><p>அவ்வளவு தூரம் மக்களுக்கான
சேவையை நாம் நிதானமாகவும், கவனமாகவும் முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
</p><h2>பல ஆயிரக்கணக்கான பயணிகள்&nbsp;</h2><p>தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் எமது
சேவையைப் பெறுகின்றார்கள். குறித்த சம்பவத்தை வைத்து என் மீதும், எமது சேவை மீதும் சிலர் சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9944ee0-dbf9-4490-8388-a5bba7efc34c/26-6a76b1b7070b9.webp' /></p><p>ஆனால் துரதிஸ்ட வசமாக இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் அதற்கு பொறுப்பான
எனது நிறுவன உத்தியோகத்தர் கவனயின்மை தொடர்பில் மனம் வருந்துவதுடன், இவ்வாறான
சம்பவங்கள் இடம்பெறாத வகையில் எமது சேவையை உறுதிப்படுத்தி எதிர் காலத்தில்
முன்னெடுப்போம் எனத் தெரிவிப்பதுடன், எமது நிறுவனத்தின் மக்கள் சேவை இன்னும்
வீரியத்துடனும் பலத்துடனும மக்களது நம்பிக்கை குறையாத வகையில தொடரும். </p><p>எமது
சேவை மீது மக்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது. அதற்கேற்ப எமது சேவை தொடரும்.</p><p>

இவ்விபத்துக்கு பின்னர் எமது நிறுவனத்தின் மீது கருசனை கொண்டு பலர்
நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் முகநூல் மூலமும் தொடப்பு கொண்டு நிலமைகளை
விசாரித்து ஆலோசனைகள் வழங்கியிருந்தனர்.</p><p> அனைவருக்கும் எமது நன்றியை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T04:42:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் - கொழும்புக்கு இடையில் மேம்படுத்தப்பட்ட நேரடி விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/edelweiss-air-increases-colombo-flights-1786156141"></link>
            <id>https://tamilwin.com/article/edelweiss-air-increases-colombo-flights-1786156141</id>
            <summary type="text">சுவிட்ஸர்லாந்தின் லீஷர் விமான சேவையான எடல்வெய்ஸ், சூரிச் - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்ஸர்லாந்தின் லீஷர் விமான சேவையான எடல்வெய்ஸ், சூரிச் - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. </p><p>

 2026 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான குளிர்கால அட்டவணையின் போது வாரத்திற்கு 3 விமான சேவைகளாக விரிவுபடுத்தவுள்ளது.</p><p> இது கடந்த குளிர்காலப் பருவத்தில் வழங்கப்பட்ட வாரத்திற்கு 2 முறை என்ற சேவையிலிருந்து அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><b> பருவகாலத்தின் முதல் விமானம்</b></h2><p>அதற்கமைய, மேம்படுத்தப்பட்ட அட்டவணையானது சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை இடையேயான பயணத்திற்கான அதிகரித்துவரும் தேவையை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c536398-8284-4314-bda9-407b3e70725f/26-6a76b2387061f.webp' /></p><p>பருவகாலத்தின் முதல் விமானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று சூரிச்சிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், இந்த சேவைகள் 2027ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சூரிச்சிலிருந்து கொழும்பிற்கு திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.</p><p> </p><h3><b>விமான சேவைகள்</b></h3><p>கொழும்பில் இருந்து சூரிச்சுக்கான விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994d18c5-0c91-46e2-bf3c-c4ea0d0362b6/26-6a76b23920486.webp' /></p><p>இந்த அதிகரிப்பு இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான வான்வழி இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அத்துடன், குளிர்காலப் பயணப் பருவத்தில் பயணிகளுக்குக் கூடுதல் பயணத் தெரிவுகளையும் இது வழங்கும். </p><p>மேலும், லுப்தான்சா குழுமத்தின் மூலம் ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல இடங்களுக்குச் செல்வதற்கான வசதியான இணைப்புகளையும் சூரிச் விமான நிலையம்&nbsp; வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-08-08T04:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த விமான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-passenger-arrested-in-bia-1786162249"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-passenger-arrested-in-bia-1786162249</id>
            <summary type="text">இலங்கை வந்த விமான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 60 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வந்த விமான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>60 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட் தொகையை நாட்டுக்கு கொண்டு வந்த சந்தேக நபர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொட, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய, நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடும் நபர் என தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>ப்ளை டுபாய் விமான சேவை</b></h2><p>அவர் இன்று அதிகாலை 04.00 மணியளவில் டுபாயில் இருந்து ப்ளை டுபாய் விமான சேவையின் FZ-569 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d6f42a-3f07-4ca1-95c2-840903453315/26-6a76add84b4b5.webp' /></p><p>குறித்த நபர் கொண்டு வந்த 2 பயணப் பைகளுக்குள் இருந்து பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட Top Gun வகையைச் சேர்ந்த 40,000 சிகரெட்டுகள் அடங்கிய 200 சிகரெட் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். </p><p>அதற்கமைய, சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 19ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-08T04:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தபால் துறையை நவீனமயப்படுத்த அரசு விசேட திட்டம் - ஜனாதிபதி செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-special-to-modernize-postal-sector-1786161780"></link>
            <id>https://tamilwin.com/article/government-special-to-modernize-postal-sector-1786161780</id>
            <summary type="text">இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தபால் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(07.08.2026) நடைபெற்றுள்ளது. </p><p>

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஜூலை 09 ஆம் திகதி சுகாதார மற்றும்
வெகுசன ஊடக அமைச்சின் 2027 வரவு - செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின்
போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, தபால் திணைக்களத்தை
நவீனமயமாக்குவதில் நிலவும் தற்போதைய சிக்கல்களைக் கண்டறிவதையும், தபால் சேவையை
மிகவும் செயற்திறனான மற்றும் இலாபகரமான சேவையாக மாற்றுவதற்கான வாய்ப்புகள்
மற்றும் ஆற்றல்களைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல்
இடம்பெற்றுள்ளது.</p><h2>

நவீனமயமாக்கப்படும் தபால் சேவை</h2><p> 

தற்பொழுது தபால் திணைக்களம் வங்கி மற்றும் காப்புறுதி நிறுவனங்களுடன் இணைந்து
நிதிச் சேவைகள், சம்பிரதாய தபால் சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகிய
மூன்று பிரதான வழிகளில் தனது சேவைகளை வழங்குவதாக தபால் மா அதிபர் எஸ். ஆர்.
டப்ளியூ. எம். ஆர். பி. சத்குமார இங்கு சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f018e4-1dd2-478b-ab55-959781f38275/26-6a76aac3e1362.webp' /></p><p>
</p><p>
பொருள்கள் விநியோகத்திற்கான பெரும் சாத்தியக்கூறும் சந்தை வாய்ப்பும் தற்போது
உருவாகியுள்ளது என்றும், சந்தை வாய்ப்புகளில் 10-15 வீத பங்களிக்கும் அந்தச்
சேவைகளை விரைவாக விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்றும் தபால் மா அதிபர் இங்கு
தெரிவித்தார்.
</p><p>
குறிப்பாக அதற்கு, வர்த்தக முடிவுகளை எடுக்கும் திறனை அதிகரித்தல், இலாபகரமான
சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற
மறுசீரமைப்பு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய தபால் மா
அதிபர், இந்த நோக்கத்திற்காக திறைசேரியுடன் இணைந்து தற்போது ஆய்வு
நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><p>

உலக தபால் சேவை, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, நவீன
விடயங்களுடன், தன்னை மாற்றிக்கொண்டு அபிவிருத்தியில் முன்னேறியுள்ளது என்று
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c21879d-c866-41c1-81ee-08b431efb0db/26-6a76aac4caa02.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f54b9f88-ad27-48c3-8095-a553b3c6ab08/26-6a76aac59d676.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:05:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் விபத்துகளில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcyclists-most-common-fatalities-road-accident-1786156289"></link>
            <id>https://tamilwin.com/article/motorcyclists-most-common-fatalities-road-accident-1786156289</id>
            <summary type="text">வீதி விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களிலேயே நிகழ்கின்றன என்று வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கூறியுள்ளது. 

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீதி விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களிலேயே நிகழ்கின்றன என்று வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கூறியுள்ளது. </p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன, தகுந்த தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசத்தை அணிவதன் மூலம் விபத்துகளில் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.</p><h2>2025 ஆம் ஆண்டில்</h2><p>

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் நாயகமும், சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான மனோஜ் ரணகலா, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை 1,626 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df555df1-d40d-420d-8c58-65432d13c127/26-6a76a2e9877a9.webp' /></p><p>2025 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவான 1,585 என்ற எண்ணிக்கையை விட இது அதிகம் என்றும் மனோஜ் ரணகல கூறியுள்ளார்.</p><p>

இந்த காலகட்டத்தில் 749 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 ஓட்டுநர்களும் அடங்குவர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T03:30:58+00:00</updated>
        </entry>
    </feed>
