<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-20T09:35:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி விசாக்களைத் தயாரித்ததற்காக முன்னாள் அரச அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-department-gov-employee-arrested-1789895758"></link>
            <id>https://tamilwin.com/article/ex-department-gov-employee-arrested-1789895758</id>
            <summary type="text">போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதிய கடவுச்சீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>புதிய கடவுச்சீட்டு</h2><p>

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளரான குறித்த சந்தேக நபரிடமிருந்து 48 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும், பாதுகாப்பு முத்திரைகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2e4c841-6c21-4edc-a7ae-0e415ddb0a66/26-6aafa6446fcde.webp' /></p><p>

பழைய கடவுச்சீட்டுகளிலிருந்து அகற்றப்பட்ட விசாக்களை புதிய கடவுச்சீட்டுகளில் பொருத்தி, தூதரகங்களில் சமர்ப்பித்து பல்வேறு நாடுகளுக்கு மோசடியாக வீசா பெற்றுக் கொள்ள அவர் உடந்தையாக இருந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T09:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமடையும் காலநிலை - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766</id>
            <summary type="text">இரண்டாம் இணைப்பு&amp;nbsp;&amp;nbsp;நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையை&amp;nbsp;தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இரண்டாம் இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையை&nbsp;தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

</p><p>இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கட்டம் 2&nbsp;மண்சரிவு&nbsp;எச்சரிக்கை</span></p><p>காலி மாவட்டம்: நாகொட, நெளுவ
</p><p>கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை
</p><p>கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல
</p><p>மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு
</p><p>இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட
</p><p>களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள</p><h2>கட்டம் 1 மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
</p><p>களுத்துறை மாவட்டம்: இங்கிரிய
</p><p>கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய
</p><p>மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ
</p><p>இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை
</p><p>காலி மாவட்டம்: தவலம</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு&nbsp;தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98a27f1-9ead-4a8d-8327-4584a5246bc2/26-6aaf4a777695b.webp' /></p><h2>பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை</h2><p>காலி மாவட்டத்தின் நாகொட</p><p>களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர</p><p>கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை</p><p>கேகாலை மாவட்டத்தின் தெரணியகல</p><p>இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789895492"></link>
            <id>https://tamilwin.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789895492</id>
            <summary type="text">குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

விசா இல்லாமல் சட்டவிரோதமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.</p><p>

விசா இல்லாமல் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தபோது குவைத் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்களே இன்று காலை (20) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர்.</p><p>
வீட்டுப் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக குவைத்திற்குச் சென்றிருந்த இவர்கள், தங்களது ஒப்பந்தப் பணியிடங்களிலிருந்து தப்பித்து, வேறு இடங்களில் சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.</p><h2>நாடு கடத்தல்</h2><p>
</p><p>
குவைத் நகரிலிருந்து இன்று காலை 03.10 மணிக்கு வந்தடைந்த ஜசீரா எயார்வேஸ் விமானம் JN-551 (J9-551)) மூலம் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39ea4d8-020e-4b32-a2d5-c48071ae3685/26-6aafa5c2dc8d4.webp' /></p><p>
</p><p>
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களைத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேவையான போக்குவரத்து மற்றும் நிதி ஆதாரங்களை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T09:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி தாழ்நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864</id>
            <summary type="text">புதிய இணைப்புமகாவலி கங்கையை சூழவுள்ள மேலும் பல பிரதேசங்களுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் விடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சூழவுள்ள மேலும் பல பிரதேசங்களுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ளது.
</p><p>
 

இதற்கமைய, கங்க இஹள கோரளை, உடபலாத்த, தொலுவ, உடநுவர, யடிநுவர, கங்கவட்ட கோரளை, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

எனவே, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனவே மகாவலி ஆற்று பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.&nbsp;</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1ae49f-8eaa-4bde-b72a-cfbc97e155f0/26-6aaf512bc1da2.webp' /></p><p>

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T08:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறியாமையில் செய்த தவறு..! மரணதண்டனை வழங்குவது மனித உரிமை மீறல் - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-capital-punishment-in-saudi-arabia-1789892271"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-capital-punishment-in-saudi-arabia-1789892271</id>
            <summary type="text">அறியாமையில் அல்லது தவறுதலாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமைக்காக மரணதண்டனை
வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள்
சக்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அறியாமையில் அல்லது தவறுதலாகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமைக்காக மரணதண்டனை
வழங்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.</p><p>

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கைப் பிரஜையான
சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே
அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p></p><h2>சவூதிச் சட்டம்</h2><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"சவூதிச் சட்டத்தில் அத்தகைய ஏற்பாடுகள் காணப்படலாம் என்றாலும், இந்தச்
சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை (இலங்கைப் பிரஜை)
என்பதால், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்தும்
சவூதி அரசு அவதானம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/987c7d9c-b4fd-46b6-9b9c-b7416562da52/26-6aaf9962d3f62.webp' /></p><p>

வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், அது
சர்வதேசத்தின் மத்தியில் தவறானதொரு முன்னுதாரணமாகிவிடும்.
</p><p>
மத நிந்தனை என்பது நியாயப்படுத்தக் கூடியதோ அல்லது அங்கீகரிக்கப்படக் கூடியதோ
அல்ல. எனினும், இந்த விவகாரம் முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட
வேண்டும்.

எனவே, இந்த விவகாரத்தில் இலங்கை அரசு நேரடியாக இராஜதந்திர ரீதியில் துரிதமாகத்
தலையிட வேண்டும்.</p><p>

ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் இந்த விடயம் அணுகப்பட
வேண்டும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T08:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-in-nuwara-eliya-normal-life-disrupted-1789891324"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-in-nuwara-eliya-normal-life-disrupted-1789891324</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் (19),நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற
காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து
வருகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் (19),நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற
காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து
வருகிறது.</p><p>இதன் விளைவாக இன்று (20) காலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக
உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும்
பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின்
பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையை எட்டியுள்ளது.</p><h2>கடும் பனிமூட்டம்</h2><p>
</p><p>
குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை,
தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான
வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா
பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால், சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக்
கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப்
பேணுமாறும், தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும்
பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7cf206b-a0de-41d2-925f-46a6f44fe6b8/26-6aaf95509d5a5.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள்
மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால், பல இடங்களில்
மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட சேவைகள்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும்
சிரமத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T08:26:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி மரண தண்டனை விவகாரம்: அனோஜனுக்காக அரசிடம் முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/capital-punishment-in-saudi-arabia-1789891037"></link>
            <id>https://tamilwin.com/article/capital-punishment-in-saudi-arabia-1789891037</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும்
இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசின் தலையீடுகள் மிகவும்
மந்த கதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும்
இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசின் தலையீடுகள் மிகவும்
மந்த கதியிலேயே உள்ளன என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இத்தகையதொரு விவகாரத்தில் பிரதி வெளிவிவகார
அமைச்சரை விட ஜனாதிபதி அல்லது பிரதமர் நேரடியாகத் தலையிடுவதே பொறுத்தமானது
என்றும் வலியுறுத்தினார்.</p><p>

சிவராசா அனோஜன் விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள்
சக்தியின் முன்னெடுப்புகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே
அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>சவூதி அரேபியா</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சவூதி அரேபியாவின் அரச தீர்மானத்துடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில் தற்போதைய
இலங்கை அரசின் தலையீடுகள் மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றன.</p><p>

பிரதி வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டால் எந்தவொரு பலனையும் எதிர்பார்க்க
முடியாது என்பதால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அல்லது பிரதமர் ஹரிணி
அமரசூரியவாவது இதில் நேரடியாகத் தலையிட வேண்டும்.</p><p>

சவூதி நாட்டின் சட்டங்கள் குறித்த அறிவின்றி மேற்படி இளைஞர் சமூக
வலைத்தளத்தில் பதிவிட்டமை தவறாக இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0213e02-53d0-447e-b1bd-f7276a71de5a/26-6aaf94ec39570.webp' /></p><p>எனினும், அவர் மனிதாபிமான
அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது பணிவான
கோரிக்கையாகும்.

பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவகாரத்தில்
முழுமையான கவனம் செலுத்தியுள்ளது. </p><p>தனிப்பட்ட ரீதியிலும் இதற்காக நான்
செயற்படவுள்ளேன்.அதற்கமைய, சிவராசா அனோஜனுக்கான பொதுமன்னிப்பைக் கோரி, கொழும்பிலுள்ள சவூதி
தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத்திடம்
எழுத்துமூலம் நான் நேரடியாகக் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.</p><p>

இந்த வாரத்துக்குள் அந்தக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளிக்கப்படும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T08:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முக்கிய நகர்வு - சஜித் உள்ளிட்ட 10 எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சிஐடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saleh-s-link-to-the-easter-attacks-sajith-cid-1789887805"></link>
            <id>https://tamilwin.com/article/saleh-s-link-to-the-easter-attacks-sajith-cid-1789887805</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.</p><p>

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாதுகாக்கப்படுவதால், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது அவர்களின் தன்னார்வ சம்மதம் மற்றும் முழுமையான ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல்</h2><p>
சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அவர்களிடம் நம்பகமான தகவல்கள் அல்லது ஆதாரங்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில், அந்தத் தகவல்கள் என்ன என்பதை ஆராய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
இதற்கமைய, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், நாடாளுமன்ற ஹன்சார்ட் அறிக்கைகளில் பதிவாகியுள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளின் பிரதிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1def562-8ea5-4505-8af5-39fa7c245f99/26-6aaf8e0437109.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>விசாரணைக்கு உதவும் வகையில் இந்தத் தகவல்கள் பெறப்படுவதாகவும், இது முழுமையாக தன்னார்வ அடிப்படையிலான செயல்முறை என்றும் விசாரணை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கவுள்ளனர்.</p><p>இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள 24 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.</p><h2>வழக்கு விசாரணை&nbsp;</h2><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>

நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் இந்தக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

வழக்கில் இருதரப்பினரும் தங்களது இறுதி எழுத்துமூல சமர்ப்பிப்புகளை கொழும்பு அலுத்கடே எம்.எம்.சி. கட்டிடத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சமர்ப்பித்து நிறைவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c82481d4-d495-44dc-ad5c-53950b3e63e0/26-6aaf8e04e2822.webp' /></p><p>



இதற்கிடையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, கடந்த 100 நாட்களுக்கு அண்மித்த காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது அவசியமா என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோரியிருந்தார்.
</p><p>
எனினும், அவ்வாறான அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறப்படும் நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் காட்டு யானை அட்டகாசம்: உயிர்தப்பிய வயோதிப குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-elephant-rampage-in-keppapulavu-1789889822"></link>
            <id>https://tamilwin.com/article/wild-elephant-rampage-in-keppapulavu-1789889822</id>
            <summary type="text">முல்லைத்தீவு- கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் நேற்று(19.9.2026) இரவு புகுந்த காட்டு யானை, வீட்டு யன்னல்களை உடைத்து அட்டகாசத்தில்
ஈடுபட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு- கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் நேற்று(19.9.2026) இரவு புகுந்த காட்டு யானை, வீட்டு யன்னல்களை உடைத்து அட்டகாசத்தில்
ஈடுபட்டுள்ளது.</p><p>

குறித்த வீட்டில் வயோதிப குடும்பம் வசித்து வந்த நிலையில், காட்டு யானை
வீட்டிற்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியபோது உயிர்தப்பியுள்ளனர்.
</p><p>அத்துடன், வீட்டின் வளாகத்தில் இருந்த பயன்தரும் மரங்களையும் காட்டு யானை
சேதப்படுத்தியுள்ளது.</p><h2>கோரிக்கை</h2><p> </p><p>இதேவேளை, அப்பகுதியிலுள்ள ஏனைய வீடுகளின்
வளாகங்களுக்குள் புகுந்த யானை, தென்னை உள்ளிட்ட பயன்தரும் மரங்களையும்
சேதப்படுத்திச் சென்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் அறிந்துகொண்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.
யூட்சன் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து
நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bbf8bea-59c9-4dc8-9768-d0ba3e1d79a8/26-6aaf9028db96f.webp' /></p><p>
</p><p>குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் தொடர்ச்சியாக புகுந்து மக்களின்
வீடுகள், பயன்தரும் மரங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சேதப்படுத்தி வருவதாக
அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களின் உயிர்களையும்
உடமைகளையும் பாதுகாக்கும் வகையில், யானை வேலிகளை அமைத்து தமது பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதுடன், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித்
தருமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:50:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அவதானம் - கிங் கங்கை கரையோர மக்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-along-the-gin-river-1789889182"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-along-the-gin-river-1789889182</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக கிங் கங்கையை சூழவுள்ள பல தாழ்நில பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக கிங் கங்கையை சூழவுள்ள பல தாழ்நில பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> நீர்ப்பாசன திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>தற்போது வரை பதிவாகியுள்ள மழை வீழ்ச்சிக்கமைவாக, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>தாழ்நிலப்பகுதிகளில் வாழும்&nbsp;மக்களுக்கு&nbsp;எச்சரிக்கை </h2><p>
</p><p>
 

இதற்கமைய, கிங் கங்கையைச் சார்ந்த தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வலிவிட்டிய - திவிதுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட கிங் கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு&nbsp;எச்சரிக்கை&nbsp;விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db40352b-d48b-43e2-b084-eac2bc40013e/26-6aaf8dfcb27ad.webp' /></p><p>எனவே அப்பகுதி மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்களவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அநுர அரசு! விமல் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/freedom-of-remembrance-in-the-north-wimal-1789888620"></link>
            <id>https://tamilwin.com/article/freedom-of-remembrance-in-the-north-wimal-1789888620</id>
            <summary type="text">வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும்
சுதந்திரமாகச் செயற்பட்டு வரும் நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த
சிங்களவர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும்
சுதந்திரமாகச் செயற்பட்டு வரும் நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த
சிங்களவர்களையே தற்போதைய அரசு நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது என்றும் தேசிய
சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச
தெரிவித்தார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

"யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டின் தேசிய பாதுகாப்பை
உறுதிப்படுத்தி, இறையாண்மையைப் பாதுகாத்த முப்படையின் தளபதிகளும் அவர்களின்
குடும்பத்தாரும், அத்துடன் முன்னாள் அரச தலைவர்களின் குடும்பத்தாரும் இன்று
அரசால் திட்டமிட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.</p><h2>திலீபனின் நினைவேந்தல்</h2><p>

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும்
எவ்வித தடையுமின்றிச் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/408760cf-6d40-4279-a2b5-d3a1fa44a2af/26-6aaf8b46e2920.webp' /></p><p> </p><p>வடக்கில் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வும் அரச அனுசரணையுடனேயே முன்னெடுக்கப்படுகின்றது. </p><p>ஆனால்,
இந்தப் பகுதிகளில் சிங்களவர்களின் உரிமைகள் திட்டமிட்ட முறையில்
மறுக்கப்படுவதுடன், சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் இத்தகைய
செயற்பாடுகளுக்கு அரசு மறைமுகமாக ஆதரவு வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது எனத் தெரித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை! அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-split-within-npp-rumors-regarding-pm-1789887193"></link>
            <id>https://tamilwin.com/article/no-split-within-npp-rumors-regarding-pm-1789887193</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர்
சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும்
இல்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர்
சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும்
இல்லை எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.</p><p>

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது
என்றும், பின்னர் தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையே முரண்பாடுகள்
உருவாகியுள்ளன என்றும் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டன.</p><h2>புதிய வதந்திகள்</h2><p> எனினும், அவ்வாறான
எந்தவொரு நிலைமையும் எங்குமே இடம்பெறவில்லை. தற்போது பிரதமர் தொடர்பாகப் புதிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a810966-2c6f-4496-8daa-7fb21724b7c4/26-6aaf848a292db.webp' /></p><p>
</p><p>பிரதமருக்கு எதிராக ஜே.வி.பி. சூழ்ச்சி செய்வதாகக் கூறப்படுகின்றது. இவை
அனைத்தும் முற்றிலுமாக உண்மைக்குப் புறம்பான தகவல்களாகும்.
</p><p>
பைத்தியங்கள் பலவற்றைப் பேசலாம், குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால்,
வைத்தியர்கள் எதற்கும் குழம்பமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்தவர்களின் பெயரில் அஸ்வெசும பணம்..! ரூ.30 மில்லியன் மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/norwood-probe-sri-lanka-s-largest-aswesuma-fraud-1789885741"></link>
            <id>https://tamilwin.com/article/norwood-probe-sri-lanka-s-largest-aswesuma-fraud-1789885741</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு சுமார் 30 மில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தொகை உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடிகளில் மிகப்பெரியதாக இது அமையக்கூடும் என ஆங்கில வாராந்த பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>பாரிய மோசடி</h2><p>
</p><p>
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக, உயிரிழந்த வயோதிபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c16c16-a123-4866-8ec8-afa0499c4cbb/26-6aaf81fabcf20.webp' /></p><p>
</p><p>
நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய இந்த மோசடி தொடர்பில் இதுவரை 20 அரச ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால் சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோர்வூட் பிரதேச செயலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடியில் சுமார் 30 மில்லியன் ரூபாவும், தலவாக்கலை பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய சம்பவத்தில் சுமார் 2 மில்லியன் ரூபாவும் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;10 பேர் பணி நீக்கம்</h2><p>
</p><p>
நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு, நோர்வூட் சம்பவம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. எனினும், இதுவரை இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
</p><p>
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, நோர்வூட் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 18 அரச ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44727423-f910-4e9e-a56e-cd7ec17cbe2c/26-6aaf81fb6f3ce.webp' /></p><p>
</p><p>
அவர்களில் 10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நான்கு ஊழியர்களும் ஆறு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.
</p><p>
மேலும், இரண்டு பெண் அரச ஊழியர்கள் அரச சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பத்திரிக்கை&nbsp; செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு சுகாதாரத்துறையின் சவால்கள் குறித்து அமைச்சர் நளிந்தவுடன் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-northern-health-sector-nalintha-mp-1789886348"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-northern-health-sector-nalintha-mp-1789886348</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை
அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை
அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தலைமையிலான மாகாண அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்று(19.9.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.</p><p>இதன்போது, இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை
நிர்வகித்து வருவதுடன், மாவட்டப் பொது மருத்துவமனைகளும் மாகாண சபையின்
நிர்வாகத்துக்குட்பட்டே இயங்கி வருகின்றமை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக
எடுத்துரைக்கப்பட்டது.</p><h2>நிதி ஒதுக்கீடுகள்&nbsp;</h2><p> இதனைக் கருத்திற்கொண்டு, ஏனைய மாகாணங்களுடன்
ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு அதிகளவான மூலதன மற்றும்
பராமரிப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
குறிப்பாக, நிதி ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக
இல்லாத நிலை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதிகளவான
மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க
வேண்டியிருப்பதால் மாகாண சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நிதிச் சுமையும்
சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37702179-2656-4ad7-a998-84f05d31dd6c/26-6aaf800c0d6a4.webp' /></p><p>
</p><p>
மேலும், மருத்துவமனைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமல்,
மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான ஒதுக்கீடாக ஒருங்கிணைந்த முறையில் நிதி
வழங்கப்படுவதால் நடைமுறையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பிலும்
அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
</p><p>வடக்கு மாகாண சுகாதார சேவையின் தற்போதைய தேவைகள் மற்றும் நடைமுறைச்
சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது தொடர்பிலும், குறிப்பாக மேலதிக
நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் நிதி ஆணைக்குழுவுடன்
கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மருத்துவர் நளிந்த
ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:41:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் என்னால் பொறுப்பேற்க முடியாது! ரணில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-cannot-take-responsibility-if-the-country-ranil-1789885734"></link>
            <id>https://tamilwin.com/article/i-cannot-take-responsibility-if-the-country-ranil-1789885734</id>
            <summary type="text">&quot;நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல்
போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>"நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல்
போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள்
பொறுப்பெடுப்பீர்களா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், என்னால் இனி
நாட்டை பொறுப்பேற்க முடியாது. ஏனெனில் நான் தற்போது நாடாளுமன்றத்தில்
இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களால்
எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>நாட்டுக்குள் கலவரங்கள்&nbsp;</h2><p>

"அரசியல் செய்யும்போது அதிகளவான பொறுமை இருக்க வேண்டும். அப்போது தான்
தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியுமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d173665-295f-4722-bbb9-bddafff24f93/26-6aaf7fa03a6e2.webp' /></p><p> </p><p>ஆட்சி அதிகாரம் என்பது எப்போதும் ஒரே
மாதிரி இருக்கப்போவதில்லை.

அதிகாரம் கிடைக்கும்போது அதனை நாட்டுக்காக முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ள
வேண்டும். அதேநேரம், எப்போது வேண்டுமானாலும் எதிர்கட்சியில் இருப்பதற்கும்
தயாராக இருக்க வேண்டும்.</p><p> அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியைக்
கைப்பற்றுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

நாட்டுக்குள் கலவரங்கள் ஏற்பட்டு, நாடு முற்றாக வீழ்ச்சியடையும் போது ஆட்சியைப்
பொறுப்பேற்க யாருமே முன்வராத இக்கட்டான நிலையில் தான் நான் முன்வந்தேன். யாரும்
முன்வராவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் ஒன்று இருக்கப்போவதில்லை என்பதாலேயே
நாட்டை பொறுப்பேற்றேன்.</p><h2>இக்கட்டான நிலைமைகளில் அரசாங்கம்</h2><p>

இவ்வாறான இக்கட்டான நிலைமைகளில் அச்சப்பட்டுக்கொண்டு இருக்க முடியாது.
எவ்வாறாவது நாட்டை நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணத்துடனேயே
பொறுப்பேற்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9762fbc-478c-4d5b-9524-5bf9838cef0e/26-6aaf7fa0e34fa.webp' /></p><p>
</p><p>
ஜே.ஆர். ஜயவர்த்தன நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதுடன், நாட்டை
முன்னேற்றுவதற்காக அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை
எடுத்தார்.

அன்று ஜே.ஆர். பாதுகாத்து வந்த ஜனநாயகத்தை யாராவது இல்லாமலாக்க
முற்படுவார்களாகின், அதற்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். </p><p>அன்று
ஏகாதிபத்தியவாதத்துக்கு எதிராக ஜே.ஆர். நாடு பூராகவும் மக்களை ஒன்றிணைத்துச்
சத்தியாக்கிரகப் போராட்டங்களை மேற்கொண்டதைப் போன்று, தற்போதும் அவ்வாறானதொரு
நிலை ஏற்படுமாகின் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:39:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலைக்காக கொட்டும் மழையிலும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-seeks-release-of-anojan-1789884769"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-seeks-release-of-anojan-1789884769</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையை குறைத்து கருணை வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>

“மனிதாபிமான வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><h2>கொட்டும் மழை</h2><p>
</p><p>
கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62cc88b-cbc6-4a21-99cf-b930b9f6d953/26-6aaf7bcfc49db.webp' /></p><p>
</p><p>
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அவருக்கு கருணை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடம்பர வீடுகளை கட்டித்தருவதாக பெருந்தொகை பணமோசடி - சிஐடியிடம் சிக்கிய பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-by-promising-to-build-houses-1789870247"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-by-promising-to-build-houses-1789870247</id>
            <summary type="text">இலகுவான கட்டண முறையில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி ஒரு தனியார் நிறுவனமொன்று பெருந்தொகை பணமோசடியை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலகுவான கட்டண முறையில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி ஒரு தனியார் நிறுவனமொன்று பெருந்தொகை பணமோசடியை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மிரிஹான சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

பணம் பெற்ற பின்னரும் வீடுகளை கட்டித்தராதது குறித்து அப்பிரிவினருக்கு வந்த 245 முறைப்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>நிதி மோசடிக்கு உடந்தை</h2><p>

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2929dfa1-6389-437a-bc5f-563a7f89984f/26-6aaf75f99ffc2.webp' /></p><p>

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்த 4 கார்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
30 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்களும் முறையே கஹவத்த மற்றும் கடுவெல பகுதியை சேர்ந்தவர்களாவர்.
</p><p>
இதற்கமைய, சந்தேகநபர்கள் நேற்று (19) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் 29ஆம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவுக்கு சிறீதரன் எம்பி அனுப்பியுள்ள அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sivarasa-anojan-sritharan-mp-president-anura-1789883113"></link>
            <id>https://tamilwin.com/article/sivarasa-anojan-sritharan-mp-president-anura-1789883113</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா
அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது
குடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா
அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது
குடும்பப் பின்னணியைக் கருத்திற்கொண்டு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க
இராஜதந்திர அழுத்தங்களை வழங்குமாறு நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியிடம் கடிதம்
மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
மத நிந்தனைக் குற்றச்சாட்டில் சவூதி நீதிமன்றத்தால் முன்னர் தண்டிக்கப்பட்ட
அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை
விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் ஜனாதிபதிக்கு இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.&nbsp;</p><p> அந்தக் கடிதத்தில், "சிவராசா அனோஜன் குற்ற நோக்கத்துடன் சவூதிக்குச் செல்லவில்லை. பெற்றோர்
சிவராசா மற்றும் யோகேஸ்வரி அடங்கிய குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப்
பகிர்ந்து, வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கத்துடனேயே அவர் அங்கு புலம்பெயர்
தொழிலாளராகப் பணியாற்றினார்.</p><h2>அனோஜன் விவகாரம்..&nbsp;</h2><p>
</p><p>
பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல்
ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில் இந்தக் குடும்பமும்
ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126b8a6c-f2ea-4403-922c-da3f056de2c0/26-6aaf73e01fc02.webp' /></p><p>

இவ்வாறான கடுமையான தண்டனை, ஏற்கனவே இன்னல்களை எதிர்கொண்டுள்ள ஒரு
குடும்பத்தின் எதிர்கால வாழ்வை முற்றாகச் சீர்குலைத்து மேலும் கீழ்நிலைக்குத்
தள்ளும் விளைவை ஏற்படுத்தும்.

சவூதி அரேபியாவின் மதப் பாரம்பரியம், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் சட்ட
ஆட்சியை முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
</p><p>
இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய
விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன. அந்த அறவிழுமியங்களின்
அடிப்படையில் அனோஜனின் வயது, குடும்பப் பின்னணி மற்றும் சமூக-பொருளாதாரச்
சூழலைக் கருத்திற்கொள்ள வேண்டும்.</p><p>

எனவே, தர்மம் மற்றும் அறத்தின் அடிப்படையில் இவற்றுக்குச் சாதகமான தீர்வொன்றை
வழங்குவதற்காகச் சவூதி அரேபிய அரசுடன் இணைந்து அவசியமான இராஜதந்திர
நடவடிக்கைகளையும் அழுத்தங்களையும் வழங்குமாறு உங்களைத் தயவுடன்
கேட்டுக்கொள்கின்றேன்." என்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T05:49:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் காலநிலை - இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notification-disaster-management-rain-situation-1789877761"></link>
            <id>https://tamilwin.com/article/notification-disaster-management-rain-situation-1789877761</id>
            <summary type="text">


நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதாகவும், 100 மி.மீ க்கு மேல் மழை பெய்யக்கூடும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரும், ஊடகப்பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.</p><h2>பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை</h2><p> </p><p>

எனவே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதால், இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83dbbbd2-25ff-47db-8f2c-369fac76a611/26-6aaf65e59c197.webp' /></p><p>

"நிலச்சரிவுக்கான அறிகுறிகளை சிறப்பு கவனத்துடன் கவனியுங்கள். உங்கள் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்திருந்தாலோ, தரையில் விரிசல்கள் இருந்தாலோ, பதிய மண் ஊற்றுகள் உருவானாலோ, அல்லது ஏற்கனவே உள்ள ஊற்றுகள் வற்றிப்போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் அந்த பகுதிகளை விட்டு தற்காலிகமாக வெளியேறுவது மிக அவசியம்." என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p> 




 </p>]]></content>
            <updated>2026-09-20T05:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று பெண்கள் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-thai-women-arrested-in-katunayake-1789873416"></link>
            <id>https://tamilwin.com/article/three-thai-women-arrested-in-katunayake-1789873416</id>
            <summary type="text">சட்டவிரோதமாக பாங்கொக்கிலிருந்து நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக பாங்கொக்கிலிருந்து நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களிடமிருந்து 5 கிலோகிராமிற்கும் அதிகமான 'குஷ்' மற்றும் 2.4 கிலோகிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளன.</p><h2>போதைப்பொருள்&nbsp;&nbsp;ஒழிப்புப்பிரிவினர்&nbsp;விசாரணை</h2><p>பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் (PNB) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் அத்துமீறி போதைப்பொருட்களை கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc75cc1-3d15-459c-b211-204967abfb79/26-6aaf6baa0a44b.webp' /></p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 31, 36 மற்றும் 38 ஆகிய வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் 
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T05:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்கள் எதிர்பார்த்து நிற்கும் அனோஜனின் விடுதலை.. தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srineshan-mp-anojan-sivarasa-death-sentence-saudi-1789875338"></link>
            <id>https://tamilwin.com/article/srineshan-mp-anojan-sivarasa-death-sentence-saudi-1789875338</id>
            <summary type="text">அனோஜனின் விடுதலை அல்லது அவர்கள் தண்டனை குறைப்பு தொடர்பில் இஸ்லாமியமாக சகோதரர்கள்,
அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமான முறையில் பரிசோதனை செய்து அவருட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜனின் விடுதலை அல்லது அவர்கள் தண்டனை குறைப்பு தொடர்பில் இஸ்லாமியமாக சகோதரர்கள்,
அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமான முறையில் பரிசோதனை செய்து அவருடைய
விடுதலைக்கு அவருடைய தண்டனை குறைப்புக்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று (19.09.2026)
மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில், "இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவில் தொழில் நிமித்தமாக சென்று பணியாற்றிய
அம்பாறை மாவட்டம் நற்பட்டிமுளை கிராமத்தைச் சேர்ந்த சிவராஜா அனோஜனது நிலைமை
தொடர்பாக அண்மையில் வேதனையான தண்டனை தொடர்பான விடயம் பரவலாகியுள்ளது.</p><h2>முன்வைக்கப்படும் கோரிக்கை..&nbsp;</h2><p>
</p><p>


இந்த விடயத்தில் இலங்கை அரசு தனது முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது
எனது வேண்டுகோளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b595717e-8158-4d05-af65-51f6cabe0af2/26-6aaf56122d66e.webp' /></p><p> </p><p>அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து
உரையாடுவதற்கும், தனது மகனுக்கு நேர்ந்துள்ள விடயத்தில் இருந்து தண்டனையை
குறைப்பதற்கு அல்லது விடுவிப்பதற்கு உரிய இராஜதந்திர நடவடிக்கையை மனிதாபிமான
அடிப்படையில் செய்யுமாறு கோரி இந்த ஏற்கனவே ஜனாதிபதிக்கு நாம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெப்பமிட்டு எங்களது வேண்டுகோளை விடுத்து இருக்கின்றோம்.
அதற்குரிய பதில் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. </p><p>இருந்தபோதிலும் அனோஜனின் தண்டனை
தொடர்பில் வெளிய விவகார அமைச்சு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடத்திலும் இந்த விடயம் தொடர்பில் நாங்கள் தெரிவித்து இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c530dc3-9c25-468b-9f4a-0ab2ef2c2968/26-6aaf61b049733.webp' /></p><p> </p><p>அவர்களும் இந்த
விடயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர்கள்
கூறியிருக்கின்றார்கள் அதனை விரைவாக எடுக்க வேண்டும் என நாம் கேட்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம்,&nbsp;சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா
அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சு உடனடியாக உத்தியோகபூர்வமாக
உறுதிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அனோஜனின் விடுதலைக்காகத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவை சார்பில் சவூதி
அரேபிய தூதரக உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திப்பதற்கு நேரம் கோரவுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.</p><h6><b>மேலதிக தகவல் - ராகேஷ்&nbsp;</b></h6><p>மேலும்,&nbsp;இலங்கைச் சைவ இணையம், "சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோயனின் உயிரை காப்பதற்கு அனைத்து
தரப்புக்களும் எடுத்து வரும் முயற்சிகள் மனதை ஆறுதல்படுத்துகின்றது. எதிர்வினையாக பதிந்த மத நிந்தனை முகப்புத்தக பதிவு இநத பாரதூரமான உயிரை
பறிக்கும் தண்டனை வரை வந்து நிற்பது மனதை மிகவும் வருத்துகின்றது. </p><p>அவரது உயிரை காப்பதில் பெற்றோரின் கண்ணீரை துடைப்பதில் இலங்கை அரசும் அதேநேரம்
சகோதர எம நாட்டு இசுலாமிய ஆன்மீக அரசியல் பிரதிநிதிகளூம் எடுத்து வரும் அதீத
முயற்சிகள் மிகவும் நன்றிக்குரியவை, அதே போல தமிழ் பிரதிநிதிகள் கொடுத்து வரும் உச்சபட்ச அழுத்தமும்
பாராட்டத்தக்கது" என குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><h6><b>மேலதிக தகவல் - எரிமலை&nbsp;</b></h6><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T04:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்து இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-was-cremated-is-alive-again-1789782914"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-was-cremated-is-alive-again-1789782914</id>
            <summary type="text">அனுராதபுரம் -&amp;nbsp;&amp;nbsp;கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் -&nbsp;&nbsp;கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொருவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவமொன்று குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>குறித்த நபர்&nbsp;இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், சுமார் 02 மாதங்களின் பின்னர் திடீரென உயிருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.</p><p>குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியே சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் வராததால் அவரது மனைவி கொக்காவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h2>மீட்கப்பட்டுள்ள சடலம்&nbsp;&nbsp;</h2><p>இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஹபனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காப்பகப்பகுதியில் நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f87b5f9-7e2e-4673-b71d-0adb69fcdaaf/26-6aaf56d48ec32.webp' /></p><p> புத்தாண்டிற்கு மகன் வாங்கிக்கொடுத்த ஆடைகளுடன் அச்சடலத்தின் ஆடைகள் ஒத்துப்போனமையினால், சடலம் தனது கணவருடையது என எண்ணி மனைவி மற்றும் உறவினர்கள் தவறாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, ஓகஸ்ட் 31 ஆம் திகதி பொலன்னறுவையில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் தான சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இவ்வாறான பின்னணியில், குறித்த நபர் திடீரென தனது சகோதரியின் வீட்டை சென்றடைந்துள்ளார்.</p><p>இதன்போது அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து கொக்காவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட சடலம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T03:45:29+00:00</updated>
        </entry>
    </feed>
