<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-06T12:53:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று இரவு 7 மணி நேர நீர்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-hour-water-cut-in-wellawatte-tonight-1786018348"></link>
            <id>https://tamilwin.com/article/7-hour-water-cut-in-wellawatte-tonight-1786018348</id>
            <summary type="text">இன்று இரவு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக,&amp;nbsp; ஏழு மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று இரவு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக,&nbsp; ஏழு மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.</p><p>

 

அதன்படி, இன்று (06.08.2026) இரவு 10.00 மணி முதல் நாளை (07) காலை 5.00 மணி வரை நீர் விநியோகத் தடை நடைமுறையில் இருக்கும்.
</p><h2>நீரைச் சேமித்து வைக்குமாறு</h2><p>கழிவுநீர் மேலாண்மை மேம்பாட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தின் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12dfe505-e6f5-40b6-94bd-4fcd6b6192a2/26-6a7480a106863.webp' /></p><p>
 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்கூட்டியே போதுமான நீரைச் சேமித்து வைக்குமாறும், மின் தடை ஏற்படும் நேரத்தில் கிடைக்கும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

தற்காலிக நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T12:41:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! கடும் பீதியில் ராஜபக்ச குடும்பம், அரசியல் நட்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-and-friends-in-risk-1785999576"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-and-friends-in-risk-1785999576</id>
            <summary type="text">கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய அரசியல் நண்பர்களுக்கு எதிராக மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நடவடிக்கையை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய அரசியல் நண்பர்களுக்கு எதிராக மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நடவடிக்கையை சமகால அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. </p><p>

இந்நிலையில், பாரிய மோசடிகளில் இருந்து தப்பித்துக் கொண்டவர்கள் மீண்டும் சட்ட ரீதியாக சிக்கி சிறைக்கு செல்லும் நிலையில் உள்ளதால், அவர்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக 2015 – 2016ஆம் ஆண்டுகளில் குறைந்தது 14 வழக்குகள் தொடரப்பட்டு, பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மீளப் பெறப்பட்டிருந்தன.</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">மகிந்த உட்பட ராஜபக்ச குடும்பத்தினர்</b></p><p>அத்துடன், அக்குடும்பத்தின் நெருங்கிய நட்பு வட்டார உறுப்பினர்கள் தொடர்பிலும் அதே காலகட்டத்தில் குறைந்தது 15&nbsp; வழக்குகள் தொடரப்பட்டு மீளப் பெறப்பட்டிருந்தன.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50d8dd45-5ea2-4040-84b9-7958ca58e564/26-6a743f85efd07.webp' /></p><p>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் தொடரப்பட்டிருந்த 5 வழக்குகளை மீண்டும் தொடுக்குமாறு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அவரது 5 வழக்குகளுக்கு மேலதிகமாக, கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக 3 வழக்குகளும், ரோஹித அபேகுணவர்தன, பிரியங்கர ஜயரத்ன, தம்மிக பெரேரா மற்றும் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகிய ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்குகளும் மீளப் பெறப்பட்டிருந்தன.</p><h3><b>சொத்துக் குவிப்பு வழக்கு</b></h3><p>மேலும், கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் சொத்துக் குவிப்பு வழக்கும், மகிந்த ராஜபக்ச மீது சொத்துக் குவிப்பு வழக்கும், பசில் ராஜபக்ச மீது 5 சொத்துக் குவிப்பு வழக்குகளும், பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் ஒரு வழக்கும் தொடரப்பட்டு மீளப் பெறப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c63b3e1c-e806-4299-ac31-c3d30251cd4b/26-6a7441381d46a.webp' /></p><p>நாமல் ராஜபக்ச மீது 4 சொத்துக் குவிப்பு வழக்குகளும், ரோஹித ராஜபக்ச தொடர்பில் சொத்துக் குவிப்பு வழக்கும், கடற்படையில் சட்டவிரோதமாக இணைத்துக் கொள்ளப்பட்டு மக்கள் நிதி பயன்படுத்தப்பட்டது தொடர்பான மற்றுமொரு வழக்கும் எனத் தொடரப்பட்டிருந்த வழக்குகள் மீளப் பெறப்பட்டிருந்தன. </p><p>இவ்வாறு மீளப் பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் தொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-06T12:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனை குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/adjournment-further-consideration-petitions-salley-1786017571"></link>
            <id>https://tamilwin.com/article/adjournment-further-consideration-petitions-salley-1786017571</id>
            <summary type="text">சுரேஷ் சலேவின் மனுவிற்கு அமைவான இடையீட்டு மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரேஷ் சலேவின் மனுவிற்கு அமைவான இடையீட்டு மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைவான இடையீட்டு மனுக்கள் இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.&nbsp;</p><p></p><h2>மேலதிக பரிசீலனைகள்</h2><p>

இதன்போது, இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட இடையீட்டு மனுதாரர்களின் தரப்பு சட்டத்தரணிகள் சிலர் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5556b553-b36a-422e-bcca-a16f43354409/26-6a747decb35dd.webp' /></p><p> </p><p>அதற்கமைய, இடையீட்டு மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T12:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை - உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிக முக்கிய ஆவணங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-dismissed-yoshida-request-1786013392"></link>
            <id>https://tamilwin.com/article/court-dismissed-yoshida-request-1786013392</id>
            <summary type="text">வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச விடுத்த கோரிக்கையை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.&nbsp;</p><p>முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகிய இருவரும்&nbsp;அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் ஊழல் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் இது தொடர்பில் உரிய அறிவிப்புகளைப் பெற்ற பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னதாக உத்தரவிட்டார்.&nbsp;</p><h2>அரசாங்கத்திற்கு இழப்பு&nbsp;</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாடு, நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இருவருக்கும் எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce5aea9-e9cb-47ce-83d0-e72134a16143/26-6a7473eb6b28d.webp' /></p><p> அதன்படி, உரிய அறிவிப்புகளைப் பெற்ற பின்னர் சந்தேக நபர்களான இருவரையும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கும்படி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கோரியது, மேலும் முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
</p><p>
2006 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2007 ஜூன் 8ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், யோஷித ராஜபக்ச முறையான கல்வித் தகுதிகள் இன்றி கடற்படையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு பிரித்தானிய அரச இராணுவப் பயிற்சியும் வழங்கப்பட்டதாகவும், அதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, அவருக்கு முறையற்ற ஆதாயத்தை வழங்கியதாகவும் இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.&nbsp;</p><p></p><h2>வெளிநாட்டுப் பயணம்..</h2><p>கடந்த 31ஆம் திகதியன்று, இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் எட்டு குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல் பிரதிவாதி வசந்த கரன்னாகொட மற்றும் இரண்டாவது பிரதிவாதி யோஷித கனிஷ்க ராஜபக்ச ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a04a75b-8675-4f64-bd2c-55f192773aa4/26-6a7473ec32bd1.webp' /></p><p> </p><p>இதன்போது, இவ்வழக்கு தொடர்பாக 25 சாட்சிகளின் பெயர்களும் 47 ஆவணச் சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், சந்தேக நபரான யோஷித ராஜபக்சவுக்காக முன்னிலையான சட்டத்தரணி ரவின் நுவரபக்ச, தனது கட்சிக்காரர் ஒரு வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதால், அவர் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சிறப்பு மனுவின் மூலம் கோரியிருந்ததாகத் தெரிவித்தார்.</p><p>இருப்பினும், உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க இயலாது எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T12:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகரவின் சர்ச்சைக் கருத்து: நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-submitted-evidence-related-to-sagara-1786015999"></link>
            <id>https://tamilwin.com/article/police-submitted-evidence-related-to-sagara-1786015999</id>
            <summary type="text">பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்ப்பித்துள்ளது.</p><p> 

அதற்கமைய, குறித்த கருத்துத் தொடர்பாக செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான கருத்து குறித்து மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் 17661/2026 என்ற வழக்கு எண்ணின் கீழ் இன்று (06) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.</p><p></p><h2>விசாரணை</h2><p> 

இதன்போது, குறித்த விசாரணைகளுக்காக மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/548f9a98-5684-469b-981f-df3623793f3f/26-6a747423bdc91.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பொலிஸ் மா அதிபர் தொடர்பாக விடுத்த அச்சுறுத்தலான கருத்துத் தொடர்பான தொகுக்கப்படாத காணொளி காட்சிகளைப் பொலிஸாருக்கு வழங்குமாறு 6 ஊடக நிறுவனங்களுக்குக் கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டுள்ளார். </p><p>

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு இணங்க நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T11:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-for-attention-grabbing-protest-in-mannar-1786015618"></link>
            <id>https://tamilwin.com/article/call-for-attention-grabbing-protest-in-mannar-1786015618</id>
            <summary type="text">&#039;எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்&#039; என்ற கோரிக்கையை
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>'எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்' என்ற கோரிக்கையை
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும்
வெளிப்படுத்தியும், நாளை(07.08.2026) காலை 9.30 மணிக்கு மன்னார் நகர
சுற்றுவட்டத்துக்கு முன்பாக ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.</p><p>
</p><p>
காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில், மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><h2>மக்களின் நியாயமான கோரிக்கை</h2><p>
இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு
மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை
மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக இடையறாது போராடி வரும் மக்களின் நியாயமான
கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf7db936-f203-4bd4-8c69-e4cdea027fd3/26-6a74738f4b8ef.webp' /></p><p>மனித உரிமைகள், காணி உரிமைகள், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும்
அனைத்து சிவில் சமூக அமைப்புகள், மக்கள் அமைப்புகள், மனித உரிமை
செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் தங்களது மேலான பங்களிப்பை
வழங்குமாறு ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.
</p><p>
அத்துடன், மன்னாருக்கு வர இயலாத நண்பர்கள் மற்றும் அமைப்புகள் தங்களது
மாவட்டங்களில் குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய
பகுதிகளில் நடைபெற்று வரும் ஆதரவு கவனயீர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று, நில
உரிமைக்காகப் போராடும் மக்களின் நீதியான கோரிக்கைக்கு ஒற்றுமையையும் ஆதரவையும்
வெளிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T11:53:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-grave-1786016583"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-grave-1786016583</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர்.
ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில்,
எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர்.
ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில்,
எதிர்வரும் நாட்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது.
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய
பரிசோதனைகள் தொடர்பான நிர்வாக ரீதியான கலந்துரையாடல் மற்றும் திறந்த நீதிமன்ற
அமர்வு, நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் செம்மணி அகழ்வாய்வுத் தளத்தில்
நேற்று(05.08.2026) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.</p><p>

இந்த அமர்வில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ்
சோமதேவா, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, காணாமல்போனோர் குடும்பங்கள்
மற்றும் ஓ.எம்.பி. சார்பிலான சட்டத்தரணிகள் மற்றும் யாழ். மாவட்ட
சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
</p><h2>
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய சமர்ப்பணங்கள்</h2><p>

01. தொல்லியல் அறிக்கை: தற்போதைய அகழ்வுப் பணிகள் மற்றும் அடுத்த கட்ட
நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றுக்கு
சமர்ப்பித்ததுடன், அகழ்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான என்புத் தொகுதிகளில்
துப்பாக்கிச் சன்னம் துளைத்தது போன்ற அடையாளங்கள் இல்லை எனவும் நிபுணர்களால்
தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa1df06-bb24-42f6-b2f6-19d19dccefa1/26-6a74745d46d73.webp' /></p><p>
</p><p>
02. எல்லைகளைத் தாண்டிய ஆய்வு: செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட
சித்துப்பாத்தி இந்து மயானத்தின் தற்போதைய எல்லைச் சுவர்களுக்கு அப்பால்,
செய்மதிப் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு ஸ்கான் மற்றும் அகழ்வுப்
பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சட்டத்தரணி க.சுகாஷ் சமர்ப்பணம் செய்தார்.</p><p>

03. காலத்தை நிர்ணயிக்கும் பரிசோதனை: அகழ்ந்தெடுக்கப்படும் என்புத்
தொகுதிகளுக்குக் காபன் - 14 பரிசோதனை மாத்திரமின்றி, தடயவியல் பொருள்களையும்
அடிப்படையாகக் கொண்டு காலத்தை நிர்ணயிக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
எனக் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர் சட்டத்தரணி மீராக் ரஹீம்
மற்றும் சட்டத்தரணி குமரவடிவேல் குருபரன் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
</p><p>
04. நான்காம் கட்ட அகழ்வு: எழுந்தமானமாகக் குழிகளைத் தோண்டும்போது என்புத்
தொகுதிகள் ஏதேனும் அடையாளம் காணப்பட்டால், அடுத்த கட்டமாக 4 வாரங்கள் வரை
அகழ்வுப் பணிகளைத் தொடரத் தயாராக இருப்பதாக நிபுணர்கள் மன்றில் தெரிவித்தனர்.</p><h2>


நீதிமன்ற உத்தரவு</h2><p>
சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிவான், ஸ்கேன் செய்யப்பட்டு
முழுமையாக ஆய்வு செய்யப்படாத பகுதிகளில் எழுந்தமானமாகக் குழிகளைத் தோண்டி
ஆய்வு செய்யவும், தடயப் பொருள்கள் காணப்பட்டால் தொடர்ச்சியாக முழுமையான
ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b69e7791-2783-4f10-963e-f7f9ab1014f4/26-6a74745deafea.webp' /></p><p>
</p><p>
அத்துடன், யாழ். பல்கலைக்கழக ஆய்வு அறிக்கைகள் மற்றும் சமர்ப்பிக்கப்படாத ஏனைய
அறிக்கைகளையும் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு கட்டளையிடப்பட்டது.
</p><p>
ஜி.பி.ஆர். ஸ்கான் பரிசோதனை அறிக்கை மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான
அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு, கார்பன் - 14 பரிசோதனை குறித்த இறுதித்
தீர்மானத்தை எடுப்பதற்கான அடுத்த கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 14ஆம் திகதி
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபையின் துணைத் தலைவர் பதவி நீக்கம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chavakachcheri-municipal-council-deputy-chairman-1786015925"></link>
            <id>https://tamilwin.com/article/chavakachcheri-municipal-council-deputy-chairman-1786015925</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில்
இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மனு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில்
இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு திகதியிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான வழக்கு நேற்று(05.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

 இதற்கமைய, வழக்கு விசாரணையின் பின்னரான தீர்ப்பு எதிர்வரும் ஆக்ஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><h2> 

ஆளுநருக்கு எதிரான மனுதாக்கல்</h2><p>
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த
ஞானப்பிரகாசம் கிஷோரை வடமாகாண ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் பதவியிலிருந்து
நீக்கியிருந்தார்.</p><p>

இந்தப் பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அதனை
இரத்துச் செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d2f873c-7059-4a06-b509-bcdc8038fa44/26-6a7470e730624.webp' /></p><p>
</p><h2>
தீர்ப்பு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு</h2><p>
குறித்த மனு தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண
அமர்வில் பல தடவைகள் இடம்பெற்றிருந்தன. </p><p>மனுதாரர் சார்பிலும் பதிலாளிகள்
சார்பிலும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, வழக்கின்
தீர்ப்பு நேற்று(05) வழங்கப்படும் என நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.
</p><p>
இந்த நிலையில், நேற்றைய நீதிமன்ற அமர்வில் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட
போது, தீர்ப்பை வழங்காமல் அதனை எதிர்வரும் ஆக்ஸ்ட் 19 ஆம் திகதி வரை ஒத்தி
வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இதன் மூலம் ஞானப் பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கம் சட்டபூர்வமானதா? அல்லது
இல்லையா? என்பது தொடர்பான நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மேலும் இரண்டு
வாரங்களுக்கு பின்னர் வெளியாகவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிந்துலையில் மண்மேடு சரிந்து மூன்று வீடுகள் சேதம்: அச்சத்தில் வாழும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-houses-damaged-as-mound-of-earth-collapses-1786015048"></link>
            <id>https://tamilwin.com/article/three-houses-damaged-as-mound-of-earth-collapses-1786015048</id>
            <summary type="text">தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை நோனா
தோட்டத்தின் புதிய வீடமைப்பு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் மூன்று வீடுகள் கடுமையாக சேதமடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை நோனா
தோட்டத்தின் புதிய வீடமைப்பு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் மூன்று வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.</p><p>மேலும் இரண்டு
வீடுகள் எந்நேரமும் சரிந்து விழக்கூடிய அபாய நிலையில் காணப்படுவதால் அப்பகுதி
மக்கள் கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.</p><p>

சுமார் 40 அடி உயரத்தில் அமைந்திருந்த மண்மேடு, அதிகாலை சுமார் 3.00 மணியளவில்
திடீரென வீடுகளின் பின்புறமாக சரிந்து விழுந்ததாக பாதிக்கப்பட்டவர்கள்
தெரிவித்தனர்.</p><p></p><h2>பாரிய உயிரிழப்பு</h2><p> இந்த திடீர் மண்சரிவினால் வீடுகளின் பின்புற சுவர்கள் இடிந்து
சேதமடைந்ததுடன், சில வீடுகளின் கூரைகளும் பகுதியளவில் உடைந்து
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d4aeac6-25ea-4433-b87b-99463aa1bc77/26-6a746f751bbd6.webp' /></p><p>

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீடுகளில் குடும்பத்தினர் உறங்கிக்
கொண்டிருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட பெரும் சத்தத்தைத் தொடர்ந்து
வெளியேறியதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.</p><p> சில நொடிகள் கூட
தாமதமாகியிருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என அவர்கள்
வேதனையுடன் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>அபாயம்&nbsp;</h2><p>வீடுகள் கடுமையாக சேதமடைந்திருந்த போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
இதுவரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவில்லை என்பது கவலைக்கிடமான
விடயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/814460b6-1798-4116-8ca9-4040ab084f4e/26-6a746f743beb2.webp' /></p><p> </p><p>பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அதே வீடுகளிலேயே சிறுவர்கள்,
முதியவர்கள் மற்றும் நோயாளர்களுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக
அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்மேடு மேலும் சரிந்து
விழக்கூடிய அபாயம் நீடித்து வருவதாகவும், ஒவ்வொரு மழை பெய்யும் தருணத்திலும்
உயிரை பணயம் வைத்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T11:27:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனமழை தாக்கம் : ஹட்டன் போக்குவரத்து சபை தினசரி வருமானம் பாரியளவு வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-sltb-has-dropped-to-1-million-bad-weather-1786012369"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-sltb-has-dropped-to-1-million-bad-weather-1786012369</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையின் தினசரி வருமானம் 3.3 மில்லியனிலிருந்து 1 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் குறித்த போக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபையின் தினசரி வருமானம் 3.3 மில்லியனிலிருந்து 1 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் குறித்த போக்குவரத்து சபையின் மேலாளர் பாலித வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p> 

ஊடகங்களுக்கு ஒரு சிறப்பு அறிக்கை அளித்த அவர், சாதாரண நாட்களில் ஹட்டன் பணிமனை 75 நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பேருந்துகளை இயக்குவதாகக் கூறியுள்ளார்.</p><h2>மூன்று நாட்களில்</h2><p>
அந்தக் காலங்களில் தனது பணிமனைப் பேருந்துகளில் சுமார் 18,000-26,000 பயணிகள் பயணம் செய்து வந்தபோதிலும், கனமழை காரணமாக 03,04,05 ஆகிய மூன்று நாட்களில் ஒரு நாளைக்கு 9,218 முதல் 10,000 பயணிகள் மட்டுமே பயணம் செய்ததால் வருவாய் குறைந்துள்ளதாக பணிமனை மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17202c39-c598-429f-b3ed-097f74c026c0/26-6a746e9f1dd90.webp' /></p><p>
பாடசாலை விடுமுறைகள் மற்றும் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பயணிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாததாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.</p><p>

மேலும், தனது பணிமனையில் 328 ஊழியர்கள் பணிபுரிவதாகவும், இந்த மாதம் அவர்களது சம்பளத்தை வழங்குவதற்காக அவர்கள் சுமார் ரூ. 1.38 மில்லியன் சம்பாதித்துள்ளதாகவும் மேலாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T11:23:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இழப்பீட்டு தொகை குறிப்பிடாமல் கடிதத்தில் கையொப்பம் வாங்க முயற்சி - தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/confusion-at-the-tellipalla-divisional-secretariat-1786014031"></link>
            <id>https://tamilwin.com/article/confusion-at-the-tellipalla-divisional-secretariat-1786014031</id>
            <summary type="text">&amp;nbsp;&quot;மக்களின் காணி மக்களுக்கே.. &quot; எனக் கூறி ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இன்னொரு பக்கம், மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில் கையகப்படுத்த தீவிரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;"மக்களின் காணி மக்களுக்கே.. " எனக் கூறி ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இன்னொரு பக்கம், மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில் கையகப்படுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக வலி. வடக்கு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p> 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக தனியார் காணிகளை
சுவீகரித்துக்கொண்டு அதற்கான நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் காணி
உரிமையாளர்களுக்கும் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர்களுக்கு
இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம்(04.08.2026) தெல்லிப்பழை பிரதேச
செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படாது பலாலி விமான
நிலையமாக இருந்த காலப்பகுதியில் 436 காணி உரிமையாளர்களின் 267 ஏக்கர் காணிகளை அரசாங்கம் சுவீகரித்துள்ளது. </p><h2>


உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனம்</h2><p>
ஆனால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டமையால் , அக்கால பகுதியில்,
விமான நிலைய அபிவிருத்திகள் தடைப்பட்டு, காணி சுவீகரிப்பு நடவடிக்கையும்
தடைப்பட்டது.

பின்னரான 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்நாட்டு யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள்
இடம்பெயர்ந்தனர்.</p><p>

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கட்டம் கட்டமாக விமான நிலையத்திற்கு
அண்மித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட
போதிலும், விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணம் என அப்பகுதி
மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17bf69f2-1a82-4c80-9ad9-aa2b64ef25d8/26-6a746a8a2e4e1.webp' /></p><p>
</p><p>
விமான நிலையத்திற்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
காணிகளுக்கு மேலதிகமாகவும் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு
வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
</p><h2>

508 ஏக்கர் காணி சுவீகரிப்பு</h2><p>
இந்த நிலையில், விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்ட பலாலி மேற்கு , மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும்
குரும்பசிட்டி ஆகிய 4 நான்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட 267 ஏக்கர்
காணி தவிர தற்போது மேலதிகமாகவும் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு கடந்த மே மாதம் 26ஆம் திகதி
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் , இலங்கை
இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட விசேட குழுவினர்கள் வருகை தந்து நேரில் ஆராய்ந்து
சேர்ந்த பின்னர் கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றும் போது
774.98 ஏக்கர் காணி விமான நிலையத்திற்கு தேவை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09b7012b-717c-4200-91bd-2d1ed8913fab/26-6a746a8b22c46.webp' /></p><p> </p><p>

1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையமாக காணப்பட்ட போது, 267 ஏக்கர் காணியே விமான
நிலைய விஸ்தரிப்புக்கு தேவை என சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச
விமான நிலையமாக தரமுயர்ந்துள்ள நிலையில்,&nbsp; சர்வதேச விமான
நிலையத்திற்காக மேலதிகமாக சுமார் 508 ஏக்கர் காணி சுவீகரிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படவுள்ளன.
</p><h2>


காணிக்குள் உள்ள சொத்துகளுக்கு மதிப்பீடு</h2><p>


இந்நிலையிலேயே, முதல் கட்டமாக, 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்ட காணி உரிமையாளர்களை அழைத்து , அவர்களின் காணிகளுக்கு இழப்பீடு
வழங்குவது தொடர்பில் முதல் கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது

1986ஆம் ஆண்டு காணிகளை சுவீகரித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட
போது, காணிக்குள் இருந்த சொத்துக்களுக்கும் மதிப்பீடு காணப்பட்டது.
</p><p>
இதன்படி, அவற்றுக்கும் பெறுமதி இருந்தது.

தற்போது வெறும் காணிகளுக்கு மட்டுமே மதிப்பீடு நடைபெறவுள்ளது. ஒரு காணியில்
வீடும், வணிக கட்டடமும் இருந்து இருந்தால், அந்த காணியில் இருந்த
கட்டங்களுக்கான பெறுமதியினை தற்போது மதிப்பீடு செய்ய முடியாது.

ஏனெனில் பெரும்பாலான காணிகளுக்குள் கட்டடங்கள் இல்லை. காணிகளுக்குள் கட்டங்கள்
இருந்தாலும், அந்த கட்டடங்கள் 40 வருடங்களுக்கு முந்தியவை என்பதால்
அவற்றுக்கும் பெறுமதியில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/359e8472-cf81-4589-b001-a966f5b96a8c/26-6a746a8be9af0.webp' /></p><p>
</p><p>
காணி 1986ஆம் ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டலும், 2022ஆம்
ஆண்டே சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தல்
விடுக்கப்பட்டமையால், 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியை காணி
மதிப்பீட்டு திணைக்களத்தினர் நிர்ணயித்து, அதற்கான விலையே காணி விலையாக
நிர்ணயித்து அந்த பணம் இழப்பீடாக வழங்கப்படவுள்ளது. </p><p>

அத்துடன், கடந்த 2022ஆம் ஆண்டு விலை
நிர்ணயிக்கப்பட்டாலும் , 2026ஆம் ஆண்டே இழப்பீட்டு தொகை கிடைக்குமாயின் , அந்த
நான்கு வருடங்களுக்கான வட்டியும் சேர்த்தே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

காணிகளுக்குள் இருந்த சொத்துக்களுக்கு இழப்பீடு இல்லை என்ற கவலை இருந்தாலும், 2022ஆம் ஆண்டில் காணியின் சந்தை பெறுமதியில் இழப்பீடு வழங்கப்படும்
என்ற அதிகாரிகளின் உறுதி மொழியை நம்பி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணிகளை
வழங்கி , இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள பெருமளவானோர் சம்மதித்தனர்.

இந்த நிலையிலேயே தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கும் காணி
உரிமையாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.</p><h2> 


குழப்பத்தை ஏற்படுத்திய கடிதம்</h2><p>

கூட்டத்தில் காணி உரிமையாளர்களுக்கு வழங்கிய சத்திய
கடதாசியில் காணப்பட்ட விடயங்களே காணி உரிமையாளர்கள் மத்தியில்
குழப்பத்தை ஏற்படுத்தியது. 




குறித்த சத்திய கடதாசியில், 04 ஆகஸ்ட் 2026 என திகதியிடப்பட்டு, 

"பிரிக்கப்படாத ஒரே காணி அலகாகக் கொண்டு, தனிப்பட்ட அமைவிடத்தைக்
கருத்திற் கொள்ளாமல்
ஒவ்வொரு ஆளுக்கும் சொந்தமான காணியின் அளவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நான்
இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்கின்றேன் " என்ற கூற்று காணி
உரிமையாளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்பட்டது.
</p><p>
குறித்த பகுதியில் உள்ள காணிகள் அனைத்தையும் "LOT - 1 " ஆக அடையாளப்படுத்தி,
அதனை ஒரு காணியாக விலையை மதிப்பீடு செய்து,&nbsp; அந்த காணியின் பெறுமதியை , காணி
உரிமையாளர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்வதா எனக் குழப்பமடைந்தனர்.

ஒவ்வொருவருடைய காணியும் ஒவ்வொரு பெறுமதியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24599f7f-bbc6-4d4b-adfc-34718efc6234/26-6a746a8cbce1c.webp' /></p><p> பிரதான வீதியோரத்தை அண்டிய
காணியும், பிரதான வீதியில் இருந்து 15ஆவது காணியாக உள்ள காணியும் ஒரே பெறுமதி
அல்ல. காணிகள் அவற்றின் அமைவிடத்திற்கு ஏற்ப பெறுமதி மாறுபடும். 

அதனால் காணிகளை தனித்தனியாக அடையாளப்படுத்தி, இந்த காணிக்கு எவ்வளவு என தனித்தனியாக
இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்தனர்.

சத்திய கடதாசியில் காணப்பட்ட அடுத்த கூற்றான " காணியின் உரிமையினை உறுதி
செய்வதற்கு காணி உறுதி இல்லாத போது செல்லுபடியான சட்டரீதியான ஆவணங்களை
அடிப்படையாகக் பெற்றுக்கொள்ள நான் சம்மதம் தெரிவிக்கின்றேன். அதனை கொண்டு
தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டினை பெற்றுக்கொள்கிறேன்" என காணப்பட்ட கூற்று.
</p><p>
எங்குமே காணிக்கு இவ்வளவு இழப்பீடு என குறிப்பிடப்படவில்லை. பல இலட்ச ரூபாய்
பெறுமதியான காணிகளுக்கு சில ஆயிரம் ரூபாய் தான் விலை என விலை மதிப்பீடு செய்து
, அதனை இழப்பீடாக தந்தால் அதொரு நியாமான விடயமாக அமையாது.
</p><p>
எனவே எமது காணிக்கு எவ்வளவு இழப்பீட்டு தொகை என நாம் அறிந்து கொண்டாலே ,
அதற்க்கான சம்மதத்தை தெரிவிக்க முடியும் என தெரிவித்தனர்.

அத்துடன் சத்திய கடதாசியில் நான்காவது கூற்றாக , " காணிக்கான இழப்பீட்டுக்
கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து கொண்டதன் பின்னர் ஒப்பமிட நான்
உடன்படுகின்றேன்" என காணப்பட்ட கூற்று , காணிக்கு எவ்வளவு இழப்பீடு என
எமக்கு தெரிவிக்காது </p><p> காணிகளுக்கான விலை மதிப்பீட்டை இனி தான் மேற்கொள்ள
போவதாக கூறிக்கொண்டு " இழப்பீட்டுக் கொடுப்பனவு தொடர்பில் முழுமையாக அறிந்து
கொண்டதன் பின்னர் " என சத்திய கடதாசியில் குறிப்பிட்டு எம்மை கையொப்பம் இட
கேட்பது எவ்வாறு நியாயம் என கேட்டு , காணி உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட
தொடங்கினர்.
</p><h2>
காணி உரிமையாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்</h2><p>
இதனையடுத்து, கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு பெருமளவான பொலிஸார்
வரவழைக்கப்பட்டனர். அது காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும்
குழப்பத்தை ஏற்படுத்தியதையடுத்து, அதனால் பெருமளவான காணி உரிமையாளர்கள்,
மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளனர். </p><p>

தொடர்ந்து காணி உரிமையாளர்கள் தரப்பில் 07 பேர் கொண்டு குழு ஒன்று அமைப்பது
என்றும், அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக சத்திய கடதாசியில் திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என
தீர்மானித்து கூட்டம் முடிவடைந்தது

பெரும்பாலான மக்கள் இழப்பீடோ அல்லது வேறு இடங்களில் வழங்கப்படும் மாற்று
காணிகளையோ ஏற்க மறுத்து, "எங்கள் பூர்வீக நிலமே எங்களுக்கு வேண்டும்" என
உறுதியாக நின்று போராடி வருகின்றனர்</p><h2>40 வருடங்கள் நடக்கும் போராட்டம்</h2><p>
அவ்வாறான நிலையில் 40 வருட காலமாக தாம் போராடி களைத்து விட்டோம் , அரசாங்கம்
தரும் நியாயமான இழப்பீட்டை பெற்றுக்கொள்வோம் என முன் வந்த போதிலும், காணி
உரிமையாளர்களுக்கு சத்திய கடதாசி அவ நம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன், வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும்
யாழ்ப்பாண சர்வதேச விமான விமான நிலைய விஸ்தரிப்பு அவசியம்.
</p><p>
பொருளாதார வளர்ச்சிக்காக, தலைமுறைகள் தாண்டியும் தமது பூர்வீக நிலங்களுக்கு
செல்ல வேண்டும் என போராடி வரும் மக்களின் மனப்பூர்வ ஒப்புதலின்றி அவர்களின்
காணிகளைச் சுவீகரிப்பது அநீதியாகும்.</p><p>
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வினை வழங்கியே
அபிவிருத்தி விடயங்களை முன்னெடுக்க வேண்டும் அதுவே சமூக நீதியுமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-06T11:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி- பவானி வீதி விடுவிப்புக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/release-of-bhavani-road-thaiyiddy-tissa-vihara-1786012402"></link>
            <id>https://tamilwin.com/article/release-of-bhavani-road-thaiyiddy-tissa-vihara-1786012402</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட
பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார்
தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட
பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார்
தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><p>அத்தோடு, வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தன் , செயலாளர் வழக்கிலிருந்து
விடுவிக்கப்பட்டனர்.</p><p>

தவிசாளர் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகிருந்து வாதங்களை
முன்வைத்திருத்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/945321cd-cdf1-451f-b5fc-661aef3a6d9a/26-6a74661d79593.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:48:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு கையெழுத்து! பூஜித் மற்றும் ஹேமசிறியை தூக்கிலிடலாம் - அநுரவுக்குச் சென்ற அறிவுரை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-and-hemasiri-can-be-hanged-1786006892"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-and-hemasiri-can-be-hanged-1786006892</id>
            <summary type="text">தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய&amp;nbsp; இருவருக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார ஒரே ஒரு கையெழுத்தினை இட்டால் அவர்களைத்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய&nbsp; இருவருக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார ஒரே ஒரு கையெழுத்தினை இட்டால் அவர்களைத்&nbsp; தூக்கிலிட முடியும். அப்படிச் செய்தால் இந்த அரசாங்கம் மக்களிடத்தில் இன்னும் பிரபலமடையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.&nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை அனைவருக்கும் தெரியும். எனினும், தற்போது சிங்களவர்கள் அதனை செய்ததாக காட்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகின்றது.</p><h2>சிங்களவர்கள் மீதான தாக்குதல்கள்&nbsp;</h2><p> </p><p>கடந்த காலங்களில் சிங்கள மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. போர்த்துகீசர், ஆங்கிலேயர் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தினர். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கினர், தற்போது ஜேவிபியினரும் தாக்குதல் நடத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13529f54-b200-43b1-8439-1d21e4b3c2ea/26-6a745452eab1c.webp' /></p><p> </p><p>

பூஜித் ஜயசுந்தரவும், ஹேமசிறி பெர்னாண்டோவும் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் 300 பேரைக் கொன்றனர். குண்டுகளை&nbsp; இயக்கச் செய்ததும் அவர்கள்தான் என்பது போல காட்டுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.</p><p> ஆனால், ஜேவிபியுடன் தொடர்பில் இருந்து, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிமுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
</p><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் தற்போது பிரச்சினை இல்லை. அவர்கள் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். ஆனால், தண்டனை அனுபவித்து சிறைக்குள் இருப்பது பூஜித்தும், ஹேமசிறியும் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615e4e98-b3c5-426c-a992-7bea9b720f56/26-6a745453e7edb.webp' /></p><p>
</p><p>

மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் இன்னும் பிரபலமடைய வேண்டும் என்றால் இன்னும் ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கின்றது. முடியுமென்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு முடியும். </p><p>

வேண்டுமென்றால், கையொப்பம் ஒன்றை இட்டு அவர்களை தூக்கிலிட ஜனாதிபதிக்கு முடியும். அப்போது அரசாங்கம் இன்னும் மக்களிடத்தில் பிரபலமடைய முடியும்.</p><p>

குற்றம் சுமத்தப்பட்ட, ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர். சிறையில் இருக்கவேண்டியவர்கள் இன்று வெளியில் உயர் பதவிகளில் சுதந்திரமாக உள்ளனர். வெளியில் இருக்க வேண்டியவர்கள் இன்று சிறையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PpZxqySgcSc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T10:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் துர்நாற்றம் - பாதசாரிகள் பொதுமக்கள் பெரும் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foul-smell-waste-pedestrians-public-suffering-1786009789"></link>
            <id>https://tamilwin.com/article/foul-smell-waste-pedestrians-public-suffering-1786009789</id>
            <summary type="text">கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள்
முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன்,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள்
முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன்,
அப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை
எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாததால் சுற்றுச்சூழல்
மாசடைந்து, பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பிரதேச
மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.</p><p> </p><p>குறிப்பாக மழைக்காலத்தில் கழிவுகள் தேங்கி
நிற்பதால், கொசுப் பெருக்கம் அதிகரித்துத் தொற்றுநோய்கள் பரவும் அபாயம்
உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>
</p><p>
அத்துடன், பாதையோரங்களில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள்
பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்திற்கும்
பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன.
</p><p>
இந்நிலைமை தொடர்பில் கல்முனை மாநகர சபையோ அல்லது சம்பந்தப்பட்ட பொது சுகாதார
பரிசோதகர்களோ (PHI) இதுவரை எவ்வித உரிய கவனமும் செலுத்தவில்லை எனப் பிரதேச
மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p>

எனவே, சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் குவிந்துள்ள
கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும், சீரான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை
முன்னெடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T10:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விஷேசம் நடந்த வீட்டில் 28 பவுண் நகை திருட்டு - பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/28-pounds-of-jewelry-stolen-in-jaffna-1786011840"></link>
            <id>https://tamilwin.com/article/28-pounds-of-jewelry-stolen-in-jaffna-1786011840</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு
ஒன்றில், திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுண் தங்க நகைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு
ஒன்றில், திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், விஷேசம் நடந்து மறுநாள், சொந்த வீட்டிற்கு செல்வதற்கான தயார்ப்படுத்தல் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு, குளியல் அறைக்கு சென்ற வேளையில், திருடர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.</p><h2>

28 பவுண் நகைகள் திருட்டு</h2><p>
சம்பவம் நடந்து அடுத்த நாள் காலையில், அறையில் உள்ள அலுமாரிகளை திறந்து பார்த்த பொழுது தாலி உட்பட 28 பவுண் தங்க நகைகள் திருட்டு போயுள்ளது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae62046b-0657-4aa9-b731-aec765613e77/26-6a74610896cc3.webp' /></p><p> </p><p> 


இதனைத் தொடர்ந்து, கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மோப்ப நாய்கள் மற்றும்
அருகில் உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:26:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gas-price-sri-lanka-litro-gas-price-1786010827"></link>
            <id>https://tamilwin.com/article/gas-price-sri-lanka-litro-gas-price-1786010827</id>
            <summary type="text">ஒகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதையும், சவாலான நாணய மாற்று விகித நிலவரங்களையும் மீறி, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் ஒகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
அதன்படி, இம்மாதம் முடியும் வரை தற்போதைய விலைகளே செல்லுபடியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த அறிவிப்புக்கமைய பின்வரும் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><b>12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் -&nbsp; 4,465 ரூபா</b></p><p><b>5 கிலோ எரிவாயு சிலிண்டர் - 1,792 ரூபா&nbsp;</b></p><p><b>2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் - 835 ரூபா</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b873230-f237-4e2b-b657-188cb4959129/26-6a7460cc7d341.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:24:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வறுமை குறைந்ததா! அரசின் புள்ளி விபரங்களில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-poverty-status-economic-cost-1786008279"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-poverty-status-economic-cost-1786008279</id>
            <summary type="text">இலங்கையில் வறுமை குறைந்து விட்டதா என்ற கேள்வி இன்று அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்படுகின்றது.உலக வங்கி மற்றும் IMF மதிப்பீடுகளின்படி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வறுமை குறைந்து விட்டதா என்ற கேள்வி இன்று அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்படுகின்றது.</p><p>உலக வங்கி மற்றும் IMF மதிப்பீடுகளின்படி, நாட்டில் இன்னும் 24% முதல் 25% வரையிலான மக்கள் (சுமார் 53 - 55 இலட்சம் பேர்) வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.</p><p>2026 ஏப்ரல் மாதத்தின் அதிகாரப்பூர்வ அரசுத் தரவுகளின்படி, ஒரு நபர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் ரூ. 17,117 வருமானம் பெற வேண்டும். இதன்படி, 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 68,468 தேவைப்படுகிறது. </p><p>இது அடிப்படை வாழ்வாதாரத்திற்கான அளவு மட்டுமே தவிர, வசதியாக வாழ்வதற்கான தொகையல்ல. நகர்ப்புறங்களில் வாடகை, மின்சாரம், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளைக் கணக்கிட்டால் இத்தொகை போதுமானதாக இல்லை.</p><p>

பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வந்தாலும், 2022 நெருக்கடியின் நீண்டகால தாக்கம், உயர்ந்த வாழ்க்கைச் செலவு, வருமானமின்மை, வரி அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக வறுமை இன்னும் முழுமையாகக் குறையவில்லை.</p><p>தற்போது, பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்திருந்தாலும், அதன் பலன்கள் இன்னும் சாமானிய மக்களைச் சென்றடையவில்லை.</p><p>2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கையின் வறுமை நிலை குறித்த விரிவான உண்மையான தகவல்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9NVvM3PNRJk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-houses-for-colombo-1786010089"></link>
            <id>https://tamilwin.com/article/new-houses-for-colombo-1786010089</id>
            <summary type="text">அரசாங்கத்தின் தேசிய வீட்டுவசதி திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் தேசிய வீட்டுவசதி திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.</p><p> 

கொழும்பு மாவட்டம், கெஸ்பேவ பிரதேச செயலகப் பிரிவு, பெலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீடற்ற பயனாளி குடும்பத்திற்கு, "வசதியான வீடு - அபிவிருத்தி பெற்ற குடும்பம்" என்ற வீட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை வழங்கும் நிகழ்வில் இன்று (06) பங்கேற்றபோது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.</p><h2>குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள்</h2><p> </p><p>

தேசிய வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு வீடற்ற 30,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/833696f9-1469-420b-8fd7-2f4850e40936/26-6a745f3ad2b91.webp' />&nbsp;</p><p> 

மேலும், வீட்டுவசதி, அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, மற்றும் தோட்டப்பயிர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சுகளின் கூட்டுத் திட்டமாக இந்த தேசிய வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கமைய, சமுர்த்தி மேம்பாட்டுத்துறையும் இந்த ஆண்டு 1,000 க்கும் மேற்பட்ட வீடுகளை பயனாளிகளுக்காக நிர்மாணிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் கொந்தளிப்பு காரணமாக நெடுந்தீவில் கரையொதுங்கிய தமிழக கடற்தொழிலாளர்களின் படகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamilnadu-fishermen-s-boat-stranded-on-neduntheevu-1786009748"></link>
            <id>https://tamilwin.com/article/tamilnadu-fishermen-s-boat-stranded-on-neduntheevu-1786009748</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற காலநிலையால் நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு
கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.&amp;nbsp;இதன்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற காலநிலையால் நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு
கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.&nbsp;</p><p>இதன்போது படகில் இருந்த 11 கடற்தொழிலாளர்கள்
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில்
கரையொதுங்கியுள்ளதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><h2>கடற்தொழிலாளர்கள் மீட்பு</h2><p>இதனையடுத்து, சம்பவ
இடத்திற்கு சென்ற கடற்படையினர் படகில் இருந்த கடற்தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf3a0bc-af9f-49ad-922f-eefa5e99b3c3/26-6a745c37b9c49.webp' /></p><p>

படகினை மயிலிட்டி மீன்பிடித்துறைமுக பகுதிக்கு எடுத்துள்ள செல்ல கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>இவ்வாறு மீட்கப்பட்ட 11 இந்திய மீனவர்களும் தற்போது கடற்படையினரின் முகாமில்
தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், நெடுந்தீவுப் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்படவுள்ளனர்.&nbsp;</p><p>அத்துடன், மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்களை, கடற்தொழில் நீரியல்
வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p>மேலதிக தகவல் மற்றும் புகைப்படங்கள் - ராகேஷ்</p>]]></content>
            <updated>2026-08-06T10:09:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திறந்து வைக்கப்பட்ட நல்லூரான் வடக்கு வாசல் வளைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalluran-north-gate-arch-inaugurated-1786009288"></link>
            <id>https://tamilwin.com/article/nalluran-north-gate-arch-inaugurated-1786009288</id>
            <summary type="text">அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும்
மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குப் திசையில் கோவில் வீதியில்
அமைக்கப்பட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும்
மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குப் திசையில் கோவில் வீதியில்
அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான நல்லூரான் வடக்கு வாசல் வளைவு திறந்து வைக்கப்பட்டது.</p><p>ஆடிக் கார்த்திகை நன்னாளான இன்று.(06.08.2026) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் கண்டது.</p><h2>காளை மாட்டு வண்டில்</h2><p>
</p><p>
காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன்,
நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில்
மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் வந்து தொடர்ந்து, தெய்வேந்திர
முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, முருகப்பெருமானுக்காக எடுத்துவரப்பட்ட
நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக
புதிய வளைவின் ஊடாகச் சென்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60ea7a4d-36e0-41da-8e26-8eeb6f6b19bd/26-6a745ad86d6e8.webp' /></p><p>அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய
விரிப்புக் காண்டது.
</p><p>இந்த நிகழ்வில் முருகன் அடியவர்கள், வடமாகாண ஆளுநர், யாழ்.மாநகர முதல்வர், யாழ்
மாநகர ஆணையாளர், வடமாகாண பிரதி பிரதம செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T09:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/phone-numbers-of-emergency-examination-period-1786007689"></link>
            <id>https://tamilwin.com/article/phone-numbers-of-emergency-examination-period-1786007689</id>
            <summary type="text">5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளின் போது ஏற்படும் அனர்த்த நிலைமைகள் குறித்து தகவல் தெரிவிக்க, 5 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளின் போது ஏற்படும் அனர்த்த நிலைமைகள் குறித்து தகவல் தெரிவிக்க, 5 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த பேரிடர் மேலாண்மை மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>
முப்படைகள் மற்றும் பொலிஸாரின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.</p><p>இதற்கமைய, அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்தி, பேரிடர் மேலாண்மை மையம் ஒரு சிறப்பு திட்டத்தைத் தயாரித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>5 புதிய தொலைபேசி எண்கள் அறிமுகம்&nbsp;</h2><p>இந்த திட்டம் பரீட்நைக்கு முன்பும் பின்பும் நடைமுறையில் இருக்கும் என்றும், பேரிடர் ஏற்படும் பட்சத்தில், மாணவர்களை பரீட்சை மையங்களுக்கு அழைத்துச்செல்லவும், வினாத்தாள்களைக் கொண்டு செல்லவும், அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றவும் தேவையான வசதிகளை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53e9fa0d-206d-486c-8d87-b10757c1aabf/26-6a7456bfcde7c.webp' /></p><p> இதற்கமைய, பரீட்சைக்கு முந்தைய நாள் 5 புதிய தொலைபேசி எண்கள் வழங்கப்படும் என்றும், மேலும், 117 என்ற தொலைபேசி எண்ணும் செயல்பாட்டில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து தங்கள் பணிகளை தொடரத் திட்டமிடப்பட்டுள்ளதாக&nbsp;பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T09:41:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயகம - போடைஸ் - ஹட்டன் பிரதான வீதி மீண்டும் திறப்பு - மக்களின் ஒற்றுமையால் போக்குவரத்து வழமைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diagama-bodise-hatton-main-road-reopens-1786008775"></link>
            <id>https://tamilwin.com/article/diagama-bodise-hatton-main-road-reopens-1786008775</id>
            <summary type="text">கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் கடும் மழையால் பல்வேறு பகுதிகளில்
மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் பதிவாகி வருகின்றன. அந்த வகையில்,
டயகம - போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் கடும் மழையால் பல்வேறு பகுதிகளில்
மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் பதிவாகி வருகின்றன. </p><p>அந்த வகையில்,
டயகம - போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து
விழுந்ததால் கடந்த 3ஆம் திகதி முதல் இவ்வீதியின் ஊடான அனைத்து போக்குவரத்தும்
முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது.</p><p>
இதன் காரணமாக அன்றாடம் இவ்வீதியை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், மாணவர்கள்,
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பல்வேறு
அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், நீண்ட மாற்றுப் பாதைகளை பயன்படுத்த வேண்டிய
நிலையும் ஏற்பட்டிருந்தது.</p><p>
இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, நேற்று (05)
அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவியின் தலைமையிலும், அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டாரவின் ஒருங்கிணைப்பிலும், வீதியை மீளத் திறப்பதற்கான அவசர நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1033734299471542%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>இந்த பணிகளுக்கு ஆக்ரா கல் குவாரியின் உரிமையாளர் சின்னத்தம்பி முழுமையான
ஒத்துழைப்பையும் இயந்திர வசதிகளையும் வழங்கியதுடன், பிரதேச மக்கள், சமூக நலன்
விரும்பிகள், வாகன சாரதிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், அல்பியன் தோட்ட
நிர்வாகம் உள்ளிட்ட பல தரப்பினரும் ஒன்றிணைந்து பாரிய அளவிலான சிரமதான
பணிகளில் ஈடுபட்டனர்.</p><p>

வீதியின் குறுக்கே விழுந்திருந்த மிகப்பெரிய கற்பாறைகள் சாதாரண முறையில் அகற்ற
முடியாத அளவுக்கு இருந்ததால், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வெடிபொருட்கள்
பயன்படுத்தி அவை உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன. </p><p>அதனைத் தொடர்ந்து வீதி முழுமையாக
சுத்தம் செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டது.

இதன் மூலம் இன்று முதல் டயகம–போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியின்
ஊடாக அனைத்து வகையான வாகனங்களும் வழமைபோல் பயணிக்கத் தொடங்கியுள்ளன. நீண்ட
நாட்களாக போக்குவரத்து தடை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் இதனால்
பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.</p><p>
வீதியை மிகக் குறுகிய காலத்திற்குள் மீளத் திறப்பதற்காக தன்னலமின்றி
ஒத்துழைப்பு வழங்கிய அக்கரப்பத்தனை பிரதேச சபை, பொலிஸார், ஆக்ரா கல் குவாரி
நிர்வாகம், அல்பியன் தோட்ட நிர்வாகம், வாகன சாரதிகள், பஸ் உரிமையாளர்கள்
மற்றும் பிரதேச மக்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியை
தெரிவித்துள்ளனர்.
</p><p>இதேவேளை, தொடர்ந்தும் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மண்சரிவு
மற்றும் கற்பாறை சரிவு அபாயம் முழுமையாக நீங்கவில்லை என அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர். </p><p>எனவே, இவ்வீதியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த
அவதானத்துடன் பயணிக்குமாறும், மழைக்கால பாதுகாப்பு அறிவுறுத்தல்களை
கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T09:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/instructions-issued-to-expressway-drivers-1786007600"></link>
            <id>https://tamilwin.com/article/instructions-issued-to-expressway-drivers-1786007600</id>
            <summary type="text">பயிலுனர் உரிமம் அல்லது எல் போர்ட்டை பயன்படுத்தி செலுத்தும் வாகனங்கள் அல்லது கற்றல் அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களால் இயக்கப்படும் வாகனங்கள் அதிவேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயிலுனர் உரிமம் அல்லது எல் போர்ட்டை பயன்படுத்தி செலுத்தும் வாகனங்கள் அல்லது கற்றல் அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களால் இயக்கப்படும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது என இலங்கை போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

அத்துடன், கற்றல் அனுமதிப்பத்திரம் வாகனம் ஓட்டும் பயிற்சிக்காக மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு ஒரு நபரை அங்கீகரிக்கவில்லை என்றும் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p> </p><h2>


சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p>

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்குவதற்கு செல்லுபடியாகும் முழு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

முழு உரிமம் பெற்ற சாரதி ஒருவர், கற்பவருடன் சென்றாலும், “எல்” தகடுகளைக் காட்டும் வாகனத்தை அதிவேக நெடுஞ்சாலையில் ஓட்ட முடியாது என பொலிஸார் மேலும் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fc23d99-226f-4833-bb6e-faceab973621/26-6a7454a0995af.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலை அணுகல் புள்ளிகளில் அத்தகைய வாகனங்கள் நுழைய மறுக்கப்படும் என்றும் சட்டத்தை மீறி ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைபவர்கள் அபராதம் அல்லது வழக்கு உட்பட சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> 

அதே போன்று, வாகனத்தை சட்டவிரோதமாக இயக்கினால், விபத்து காரணமாக கொடுக்கப்படும் காப்பீடு கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்றும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இது போன்ற விதிமுறைகள், அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதற்கான சட்டக் கட்டுப்பாடுகள் தொடர்பில் கற்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-06T09:32:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் உயர் அதிகாரிகளின் சொத்து விபரம் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asset-declarations-politicians-anti-corruption-act-1785999850"></link>
            <id>https://tamilwin.com/article/asset-declarations-politicians-anti-corruption-act-1785999850</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்படி, பொதுப் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைப் பொதுமக்கள் அணுக அனுமதிக்கப்படுவார்கள் என...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்படி, பொதுப் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைப் பொதுமக்கள் அணுக அனுமதிக்கப்படுவார்கள் என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "2023ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் எண் 09, நமது நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த சட்டமாகும்.</p><p> அச்சட்டத்தின் 86 மற்றும் 88ஆம் பிரிவுகளின்படி, நமது நாட்டின் அனைத்து உயர் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் தங்களது தகவல்களைச் சேர்க்க வேண்டும் எனக் கோரப்பட்டது.</p><p> அதன்படி, அச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதி முதல் கீழ் மட்டம் வரையிலான சுமார் 300 பேர், இந்தத் தகவல்கள் அனைத்தையும் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.</p><p> இது அச்சிட்ட வடிவில் வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது. பின்னர், இதை இணையவழியில் வழங்கும் முறையை வழங்குவதற்காகச் சட்டம் திருத்தப்பட்டது” என குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இலங்கையின் ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைத் திருத்தியமைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். </p><p>இதனை மூத்த அரச அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள சொத்து அறிவிப்புக் கட்டமைப்பில் மாற்றங்களைப் பரிந்துரைத்து, 2026 ஜூலை 24ஆம் திகதி அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு வரைவுத் திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>குறித்த செய்தியின்படி, இந்தச் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 1,60,000 சொத்து அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்ட பின்னரே, முன்மொழியப்பட்ட திருத்தம் ஆரம்பத்தில் வகுக்கப்பட்டது.</p><h2>தனியார் துறையினரின் கோரிக்கைகள்</h2><p>மேலும், அரச சபைகளில் பணியாற்றும் பல தனியார் துறை வல்லுநர்களும் கவலைகளை எழுப்பியுள்ளனர். அவர்கள், தங்களது அறிவிப்புகளைக் கட்டாயமாகப் பொதுவெளியில் வெளியிடுவது தங்களது தனியுரிமையை மீறக்கூடும் என குற்றம் சுமத்தியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18f1d428-4584-499e-8676-7fa0c67c9147/26-6a7446c5beaa9.webp' /></p><p>

எனவே, அந்தக் கவலைகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.&nbsp;</p><p>
இருப்பினும், கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அரசியல் சாராத நபர்களின் தனியுரிமை குறித்த கவலைகள் நிவர்த்தி செய்யப்படுவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கிடைக்கப்பெறும் வகையில் அந்த முன்மொழிவைத் திருத்தியமைக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுப் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை ஆய்வு செய்வதற்கான பொதுமக்களின் உரிமையை இந்த மாற்றங்கள் பாதுகாக்கும் அதே வேளையில், சட்டத்தின் கீழ் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய பிற பிரிவுகளுக்கு ஒரு மாறுபட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து திருத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு! இந்தியாவின் தலையீட்டை எதிர்பார்க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-statement-1786002431"></link>
            <id>https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-statement-1786002431</id>
            <summary type="text">ஈழத் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத்தர இந்தியாவின் தலையீட்டை பணிவன்புடன் வேண்டுகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத்தர இந்தியாவின் தலையீட்டை பணிவன்புடன் வேண்டுகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,&nbsp;இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினரால் இன்று (06.08.2026) எழுதப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,</p><p>நாம், தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்கள், தாங்கள் இலங்கைக்கு
மேற்கொள்ளும் விஜயத்தை உளமார வரவேற்கிறோம். எமக்கு சந்திப்பதற்கான வாய்ப்பை
வழங்கியதற்காக எமது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>கடந்த 77
ஆண்டுகளாக இலங்கைத் தீவில் இனமுரண்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வரும் ஈழத்
தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை பெற்றுத் தர இந்தியாவின்
தலையீட்டை பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

இனமுரண்பாட்டிற்கான தீர்வாக இலங்கை அரசு தற்போது புதிய அரசியலமைப்பொன்றை
உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.</p><h2>இந்திய அரசின் தலையீடு</h2><p> </p><p>அந்த அரசியலமைப்பில் ஈழத் தமிழ் மக்களின்
அரசியல் அபிலாஷைகள் பிரதிபலிக்கப்படுவது இன்றியமையாததாகும். அந்த
நோக்கத்துடன், தமிழ் நாட்டிலுள்ள எமது உறவினர்களின் ஆதரவுடனும், மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களினதும் தமிழ்நாட்டின் அரசியல் தலைமையினதும்
ஒத்துழைப்புடனும், இந்திய அரசின் தலையீட்டை நாடி வந்துள்ளோம். அதன்படி, 2025
டிசம்பரிலும் 2026 ஜூலையிலும், எனது தலைமையில் எமது அமைப்பின் பிரதிநிதிகள்
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச்
சந்தித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013035c9-489b-4ab7-8ce1-684387f3a5f4/26-6a7444941aac5.webp' /></p><p> </p><p>அதனைத் தொடர்ந்து, இரு சந்தர்ப்பங்களிலும் தமிழ்நாட்டின்
எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்தித்து எமது
கோரிக்கைகளை முன்வைத்தோம்.

மேதகு அவர்களே,

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில், இந்தியாவின் தலையீட்டின் விளைவாக
1987 ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. </p><p>அந்த
உடன்படிக்கையில், தமிழர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில்
பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்கள் என அங்கீகரிக்கப்பட்டதுடன், வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த ஒரே நிர்வாக அலகாக இருந்து சுயாட்சியை
அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
</p><p>
ஆயினும், அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி, இலங்கை அரசு
அரசியலமைப்பில் பதின்மூன்றாவது திருத்தத்தை அறிமுகப்படுத்தி, ஒற்றையாட்சி
அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் மாகாண சபை முறையை நிறுவியது.

இந்திய - இலங்கை உடன்படிக்கையின் உண்மையான நோக்கத்தையும், ஈழத் தமிழ் மக்களின்
சுயாட்சிக்கான அரசியல் அபிலாஷைகளையும் பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே மாகாண
சபை முறை இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் திட்டமிட்டு
அமைக்கப்பட்டது.</p><h2>மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரம்</h2><p> </p><p>பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட
மாகாண சபை முறை இலங்கையின் கடுமையான ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள்
அமைந்துள்ள காரணத்தினால், 1987 (2) SLR 312 என்ற அரசியலமைப்பின்
பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் சட்டமூலம் தொடர்பான வழக்கில்
இலங்கை உச்ச நீதிமன்றம், பொருளுள்ள அதிகாரப் பகிர்வு எதுவும் சாத்தியமில்லை
என்றும், அனைத்து அதிகாரங்களும் இறுதியில் மத்திய அரசின் முழுமையான
கட்டுப்பாட்டிலேயே நிலைத்திருக்கின்றன என்றும் தீர்ப்பளித்தது.
</p><p>
அந்தத் தீர்ப்பின் சாராம்சம் பின்வருமாறு சுருக்கமாகக் கூறப்படலாம்:

“அரசியலமைப்பின் 2ஆம் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஒற்றையாட்சி அரசு’
(Unitary State) என்ற சொல், ‘கூட்டாட்சி அரசு’ (Federal State) என்ற
கருத்திற்கு நேர்மாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சி முறையில்,
இறையாண்மை அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் கூட்டாட்சி மாநிலங்களுக்கும் இடையே
பகிர்ந்தளிக்கப்படுகின்றன; அவை அரைத் தன்னாட்சியுடைய அலகுகளாக விளங்குகின்றன.
</p><p>
ஆனால், ஒற்றையாட்சி அரசில், தேசிய அரசே அனைத்து அரசாங்க மட்டங்களுக்கும் மேலாக
உயர்ந்த சட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஒற்றையாட்சி அரசின் அடிப்படை அம்சம்,
இறையாண்மை பிரிக்க முடியாதது என்பதாகும். அதாவது, மத்திய அரசின் அதிகாரங்கள்
எந்த வகையிலும் வரையறுக்கப்படாதவையாகும்.
</p><p>
ஒற்றையாட்சி அரசின் இரண்டு அடிப்படை அம்சங்கள்:
</p><p>
1. மத்திய நாடாளுமன்றத்தின் மேலாதிக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5673ddc4-d1e5-432a-9354-5d0d20949f61/26-6a744494e35b0.webp' />&nbsp;&nbsp;</p><p>
2. இறையாண்மை கொண்ட கீழமை அமைப்புகள் இல்லாமை.

இதனால் கீழமை சட்டமன்றங்கள் இருக்க முடியாது என்பதல்ல. </p><p>ஆனால் அவை அனைத்தும்
மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் மட்டுமே இயங்குகின்றன; மத்திய அரசினால்
உருவாக்கப்படவோ அல்லது கலைக்கப்படவோ முடியும். எனவே அவை இறையாண்மை கொண்ட
அமைப்புகளாகக் கருதப்பட முடியாது. </p><p>மத்திய அரசுக்கும் கீழமை அமைப்புகளுக்கும்
இடையே எழும் எந்த முரண்பாடும், மத்திய அரசால் சட்டரீதியாகத் தீர்க்க
முடியாததாக இருக்க முடியாது.</p><h2> ஆகவே, ஒற்றையாட்சி அரசின் அத்தியாவசிய அம்சங்கள்:
</h2><p>
1. மத்திய நாடாளுமன்றத்தின் மேலாதிக்கம்.
</p><p>2. இறையாண்மை அதிகாரம் கொண்ட கீழமை அமைப்புகள் இல்லாமை.

மாறாக, கூட்டாட்சி அரசில், அரசின் அதிகாரங்கள் கூட்டாட்சி அரசுக்கும்
மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. எந்த அரசும் மற்றொன்றின்
கீழ்ப்படிவாக இருப்பதில்லை; ஒவ்வொன்றும் தமக்குரிய அதிகார வரம்பிற்குள் சமமான
அதிகாரத்தையும் தன்னாட்சியையும் கொண்டிருக்கும். கூட்டாட்சி அரசு சில
விடயங்களில் இறையாண்மை அதிகாரங்களைப் பயன்படுத்தும்; மாநிலங்கள் ஏனைய
விடயங்களில் தமது இறையாண்மை அதிகாரங்களை சுயாதீனமாகப் பயன்படுத்தும். </p><p>இதுவே
கூட்டாட்சி அரசியலமைப்பிற்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கும் இடையிலான
அடிப்படை வேறுபாடாகும். ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ், இறையாண்மை முழுமையாக
மத்திய அரசிடமே நிலைத்திருக்கிறது.”

இதுவே கடந்த 38 ஆண்டுகளாக, ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் உருவாக்கப்பட்ட
பதின்மூன்றாவது திருத்தமும் மாகாண சபை முறையும் ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியல்
தீர்வை வழங்குவதில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததற்கான அடிப்படை காரணமாகும்.
</p><p>தமிழர் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஒருமித்த
நிலைப்பாடும், தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் இயங்கும் அனைத்து அரசியல்
கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே ஆகும். 2009 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற
ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்மக்கள் இந்த நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும்
உறுதிப்படுத்தி வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc57bf0d-e008-4814-adb1-7dc239731bcb/26-6a7445c3b8def.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள இலங்கை அரசு, 2015 முதல் 2019 வரையிலான
காலப்பகுதியில் பதவியில் இருந்த அரசால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவை —
அதாவது “ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பை (“ஏகிய ராஜ்ய” என்பது சிங்களத்தில்
“ஒற்றையாட்சி அரசு” என்பதைக் குறிக்கும்) — இறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்தத்
திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.</p><p> </p><p>தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசின்
மூத்த தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் இதனை வெளிப்படையாக மீண்டும்
உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த முன்மொழியப்பட்ட “ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு,
ஏற்கனவே தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தைவிடவும்
பலவீனமானதாகும்.
</p><p>
மேதகு அவர்களே,

தமிழ் தேசத்தையும், அதன் இறையாண்மையையும், சுயநிர்ணய உரிமையையும்
அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பு முறையாக இலங்கையின் அரசியலமைப்பு
மாற்றப்படாத வரையில், ஒரே நாட்டிற்குள் தமிழ்மக்களின் தனித்துவ அடையாளத்தையும்
தேசிய இருப்பையும் பாதுகாப்பது சாத்தியமில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.</p><h2>“ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு</h2><p>
</p><p>
எனவே, இந்திய அரசு இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்தி, முன்மொழியப்பட்ட
“ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு இயற்றப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின்
ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை ஒழிக்கவும், தமிழ் தேசத்தை அங்கீகரித்து அதன்
தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக் கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை
உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>இந்திய–இலங்கை உடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட எமது வரலாற்றுத் தாயகப்
பகுதிகளில், சுயாட்சி மற்றும் தன்னாட்சியின் மூலம் தமிழ் மக்கள் தமது
சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியலமைப்பு ஒழுங்கு ஏற்படுத்தப்பட
வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இலங்கை, இந்தியாவின் ஆதரவின்றி
தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/163b8fc8-295a-4d82-9377-c838aace1a98/26-6a7445c4aac70.webp' /></p><p> </p><p>மேலும், தமிழ்நாட்டுடன்
நெருங்கிய பொருளாதார உறவுகளையும் இணைப்புகளையும் உருவாக்காது நிலையான
பொருளாதார வளர்ச்சியை அடைவதும் மிகவும் கடினமாகும். </p><p>இந்நிலையிலே, இந்தியா
இலங்கையின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தி, தமிழ்மக்கள்
நாடிவரும் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் தீர்மானகரமான பங்கை வகிக்கக்கூடிய
நிலையில் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

மேற்கண்ட வேண்டுகோளை தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தங்களின் கனிவான
பரிசீலனைக்காக மிகுந்த மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றேன்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:29:24+00:00</updated>
        </entry>
    </feed>
