<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T00:12:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரால் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்படாது: ஐக்கிய அரபு இராச்சியம் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-exports-will-not-be-affected-by-iran-conflict-1788824628"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-exports-will-not-be-affected-by-iran-conflict-1788824628</id>
            <summary type="text">வொஷிங்டன் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில்,
தனது எரிபொருள் ஏற்றுமதியும் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிவிடாத வகையில்
மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வொஷிங்டன் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில்,
தனது எரிபொருள் ஏற்றுமதியும் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிவிடாத வகையில்
மாற்று வழிகளை உருவாக்கி வருவதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.</p><p>

அபூதாபியில் நடைபெற்ற ஹிலி உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய அரபு இராச்சிய
ஜனாதிபதி ஆலோசகர் அன்வர் கர்காஷ், நாட்டின் கிழக்கரை துறைமுகங்களின் திறனை
அதிகரிப்பதுடன், புதிய குழாய் வழிகள் மற்றும் தொடருந்து போக்குவரத்து மூலம்
மாற்று வர்த்தக பாதைகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.</p><h2>எரிபொருள் விநியோகம்</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம்
பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நீரிணை
சர்வதேச நல்வழிப் பாதையாகவே தொடர வேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியம்
வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e8f8a7-ddd9-40d1-8ba3-dfd9c694a63a/26-6a9f4ec3b99a7.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளை மட்டும்
முழுமையாக நம்பியிருக்க முடியாது என அக்கூட்டத்தில் உரையாற்றிய கதார் வெளி
விவகார அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.
</p><p>
பிராந்திய பாதுகாப்புக்கு சொந்த தேசிய வல்லமைகளை கட்டியெழுப்புவதே ஒரே வழி என
அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T23:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினி ராஜபக்சவை களமிறக்கி அனுதாப வாக்குகளை பெறும் முயற்சியில் ராஜபக்ச குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-attempting-garner-sympathy-votes-1788817692"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-attempting-garner-sympathy-votes-1788817692</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் கைதுச் சம்பவத்தை ஒரு அரசியல் பழிவாங்கலாகச் சித்தரித்து, பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற முயற்சிக்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் கைதுச் சம்பவத்தை ஒரு அரசியல் பழிவாங்கலாகச் சித்தரித்து, பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
</p><p>
நாமல் ராஜபக்சவால் அநுராதபுரத்தில் 12ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள் முடியாததால் அவரது மனைவி கலந்து கொள்ளுவார் என்று கூறப்படுகின்றது.</p><p>

ஜனநாயக ரீதியாக யாருக்கும் அரசியலில் ஈடுபட உரிமை உண்டு என்பதால், அவர் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. 

ராஜபக்ச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மீது பல ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளது.
</p><p>
அத்தகைய குற்றச்சாட்டுகள் இதுவரை இல்லாத ஒருவராக லிமினி ராஜபக்ச இருப்பதால், அவரை முன்னிலைப்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றது.
</p><p>
இது குடும்பத்தின் ஒரு அரசியல் யுக்தியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.</p><p>

முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jG41FGmsQkI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T23:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு சர்ச்சை! 2 மில்லியன் டொலர் இழப்பு - 200 மில்லியன் டொலர் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 16.84 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சுமார் 16.84 மில்லியன் டொலர் லஞ்சம் பெற முயற்சிக்கப்பட்டதாகவும், அதில் 2 மில்லியன் டொலர் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
விமானக் கொள்வனவு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இலங்கைக்கு சுமார் 200 மில்லியன் டொலர் (65.6 பில்லியன் ரூபா) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விவகாரத்தில், 16.84 மில்லியன் டொலர் இலஞ்சமாகப் பெற முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இறுதியில் சுமார் 2 மில்லியன் டொலர் மட்டுமே இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், கொள்வனவு ஒப்பந்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட ரத்து கட்டணங்கள் (Cancellation fees), விமான பராமரிப்பு செலவுகள் மற்றும் லீசிங் செலவுகள் போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு NewsInsightTamil...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AdsYi1CP5b0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு முன்னாள் - இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692"></link>
            <id>https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பில்&nbsp; இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>ஊழல் மற்றும் மோசடி&nbsp;</h2><p>
</p><p>
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும், சட்டம் தனது கடமையை சுயாதீனமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b2cb381-ccb6-4956-a056-80da9170dc42/26-6a9f34620bb13.webp' /></p><p>
</p><p>
விசாரணைகளின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கந்தசாமி பிரபு கூறினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதிகள், ஆளுநர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ச சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>&nbsp;ராஜபக்ச குடும்பத்தினர்</h2><p>

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிடுவது குறித்து கந்தசாமி பிரபு விமர்சனம் முன்வைத்தார்.</p><p>

ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சித்த போதிலும், பின்னர் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்ததாகவும், தற்போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9378d683-be9d-42d2-9ff5-f6e879190905/26-6a9f34638e8e6.webp' /></p><p>
</p><p>
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் கந்தசாமி பிரபு மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:06:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029க்கு முன் அனைவரும் சிறையில்! நடுநடுங்கும் ராஜபக்ச குடும்பம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/everyone-jail-before-2029-rajapaksa-family-tremble-1788814458"></link>
            <id>https://tamilwin.com/article/everyone-jail-before-2029-rajapaksa-family-tremble-1788814458</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 

இதேவேளை, யோஷித ராஜபக்ச தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
</p><p>
கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அழுத்தம் அதிகரித்து வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>

நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் யோஷித ராஜபக்ச எதிர்கொண்டுள்ள சட்ட நெருக்கடிகள், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.</p><p>

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

அதனால் இது ராஜபக்ச குடும்பத்தினருக்கு உறக்கமில்லாத இரவுகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுகின்றது லங்காசிறியின் நாட்டுநடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/M1HrfKLwrlc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T21:07:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மனித உரிமைகள் விவகாரம்: ஜெனிவாவில் ஆரம்பமான முக்கிய அமர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/63rd-session-un-human-rights-council-begins-geneva-1788807653"></link>
            <id>https://tamilwin.com/article/63rd-session-un-human-rights-council-begins-geneva-1788807653</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின்
ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின்
ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
வோல்கர் துர்க் தொடக்க உரையாற்றினார். </p><p>இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மனித
உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைமைகள் குறித்தும் அவர் விசேடமாகக்
குறிப்பிட்டார்.</p><h2>ஜெனிவாவில் ஆரம்பம்</h2><p>
</p><p>
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள
நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள்
தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் தனது அண்மைய அறிக்கையில்
சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aeafe51-dcca-4039-bc3c-10653f6a0875/26-6a9f13359ade5.webp' /></p><p>

இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கை இந்த வாரம் பேரவையில்
உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், இலங்கை
விவகாரங்களுக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான
ஒடுக்குமுறைகள், சூடான், வெனிசுலா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பாரிய
மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>

இந்த விவகாரங்கள் தொடர்பான விரிவான அறிக்கைகளைப் பரிசீலித்து, உரிய
தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T19:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தடைக்கு பதிலடி! ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560"></link>
            <id>https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவரத்து பாதையையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஈரான் அரசாங்கம்
தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சேன் ரெசாய் இது
குறித்துத் தெரிவிக்கையில், புதிய தடை மண்டலத்திற்குள் நுழையும் கப்பல்கள்
அனைத்தும் உடனடியாகத் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்படும் எனக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;மசகு எண்ணெய் விலை</h2><p>

அத்துடன் ஓமான் நாட்டின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பினூடாக அமைக்கப்படும்
புதிய சர்வதேச கப்பல் பாதையை ஈரானே நிர்வகிக்கும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடற்பகுதியில் பரஸ்பர தாக்குதல்கள்
தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மசகு எண்ணெய் கொண்டு செல்லும்
கப்பல்களின் நடமாட்டம் பெருமளவில் குறைடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/966e7bc0-ebdf-4b2b-b4f2-5a844de3eb61/26-6a9ef570b3f80.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 97
டொலரைக் கடந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில்
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக
ஈரானிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T19:19:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலர் பற்றாக்குறையால் நெருக்கடியில் இலங்கை - அநுர ஆட்சியில் தொடரும் ஊழல் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861</id>
            <summary type="text">இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும் முறைகேடான நிர்வாகமுமே முதன்மைக் காரணம் என இடதுசாரி கேந்திர
அமைப்பின் செயற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இன்று(07.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாமல் ராஜபக்ச தனக்கு எதுவுமே தெரியாது எனப் பொறுப்பற்ற முறையில் நடந்து
கொள்கின்றார்.</p><p> இருப்பினும், கைதான நபர் ஒருவரின் வாக்குமூலங்களும், கேமன்
தீவுகளில் நடைபெற்ற விருந்தொன்றில் தொழிலதிபர் நிமால் பெரேராவுடன் நாமல்
ராஜபக்ச இணைந்து இருக்கும் புகைப்படங்களும் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றன.
</p><h2>
கப்பம் பெறும் ஊழல்வாதிகள்</h2><p>
கப்பம் பெறுபவர்களுடனும் ஊழல்வாதிகளுடனும் கேமன் தீவுகளில் சூதாட்டத்தில்
ஈடுபட்டது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
</p><p>
ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச, சஜித் பிரேமதாஸ மற்றும் உதய கம்மன்பில
போன்ற அரசியல்வாதிகள் வெளிநாட்டு ஒப்பந்தங்களில் பெருமளவு நிதி முறைகேடுகளைச் செய்துவிட்டு, தற்போது ஏதும் அறியாதவர்கள் போல் நடிக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b81c9f-fc88-44e6-998c-fb372ca9f59f/26-6a9eb91841043.webp' /></p><p>

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளின்படி, நாட்டுக்காகப் பெறப்பட்ட
கடன்களுக்கு இணையான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது
தெளிவாகின்றது.
</p><p>
 எனவே, கடனாகப் பெறப்பட்ட பல மில்லியன் டொலர்களுக்கு என்ன
நடந்தது என்பதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். ஜே.வி.பி. இந்தியாவுக்கு முன் மண்டியிட்டுள்ளது என்று விமல் வீரவன்ச கூறுவது
அறியாமையாகும். </p><h2>

எரிபொருள் வாங்க டொலர் இன்மை...</h2><p>

நாட்டில் எரிபொருள் வாங்குவதற்குக் கூட டொலர் இல்லாத நிலையை
உருவாக்கி, நாட்டை இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளியது
யார்?</p><p> தரமற்ற மற்றும் கழிவு உரக் கப்பல்களை நாட்டுக் குள் கொண்டுவந்து
நாட்டின் விவசாயத் துறையை முற்றாக அழித்தது யார் என்பதை விவசாயிகள் நன்கு
அறிந்து வைத்துள்ளனர். 

இனிமேலும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற அவர்கள் தயாராக இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98606de4-a1af-4d06-9285-5e738fb24868/26-6a9eb91915988.webp' /></p><p>
</p><p>
மக்களின் வரிப்பணத்திலும் வெளிநாட்டுக் கடன்களிலும் சுகபோகம் அனுபவித்த இந்த
ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே. </p><p>தற்போது சட்டமா
அதிபர் திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி
மிகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T19:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைதால் Gen Z தலைமுறை ஆத்திரமடைந்தார்களா..! ரணிலின் கருத்தை நிராகரித்த முக்கியஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranils-statement-about-namals-arrest-is-wrong-1788783437"></link>
            <id>https://tamilwin.com/article/ranils-statement-about-namals-arrest-is-wrong-1788783437</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டதால் 'Gen Z' தலைமுறையினர் ஆத்திரமடைந்துள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>மக்களிடம் பேச இதுவே காரணம்</h2><p>
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் 'Gen Z' தலைமுறையினர் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.</p><p>பழைய அரசியல் கலாசாரத்தை மீண்டும் கொண்டுவர பிற்போக்கு சக்திகள் சதி செய்தால் மட்டுமே 'Gen Z' தலைமுறையினர் அதற்கு எதிராகக் கொதித்தெழுவார்கள் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03576b35-0132-4882-8724-f343c38a70bf/26-6a9eafa7362dc.webp' /></p><p>
நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு இளைஞர் தலைமுறையினரிடம் எதிர்ப்பில்லை என்றும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கே அது தொடர்பில் எதிர்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்ச மீதான விளக்கமறியல் உத்தரவு</h2><p>
</p><p>தற்போதைய அரசாங்கத்திடம் நன்மையும் தீமையும் ஆகிய இரு பக்கங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒருவித குழப்ப நிலையை உணர்ந்ததாலேயே தேசிய மக்கள் சக்தி மக்கள் பேரணிகளை நடத்தத் தீர்மானித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d76a1daa-16fe-4602-b6d9-c63c59dc9881/26-6a9eafa7de73a.webp' /></p><p>நாமல் ராஜபக்‌ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை மட்டுமே பிரதான காரணியாக வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p> எனினும், நாமல் சிறையிலிருப்பது அந்த பேரணியைச் வெற்றிபெறச் செய்ய அவர்களுக்கு ஒருவகையில் உதவியாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.</p><p>
அரசாங்கம் தற்போது அடிமட்ட அழுத்தத்தை உணர்ந்துள்ளதாலேயே மீண்டும் மக்களிடம் சென்று உரையாடலைத் தொடங்கத் தீர்மானித்துள்ளது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T19:07:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752</id>
            <summary type="text">வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. </p><p>

இது இன ரீதியான மோதல்களைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்று
கூறப்படுகின்றது,
 
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
இந்தக் கிராமம் வரலாற்று ரீதியாகவே விவசாய நிலமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. 

இத்தகைய சம்பவங்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான ரொஷான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திலித் ஜெயவீர ஆகியோரின் செயற்பாடுகள் இருக்கலாம் எனத் தொடர்ந்து சந்தேகம் வெளியிடப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bPcMV8QJimw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T18:54:08+00:00</updated>
        </entry>
    </feed>
