<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-22T12:13:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக பாவனைக்கு தடை : பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/french-parliament-passes-bill-banning-social-media-1784721649"></link>
            <id>https://tamilwin.com/article/french-parliament-passes-bill-banning-social-media-1784721649</id>
            <summary type="text">பிரான்சில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப்
பயன்படுத்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா
அந்நாட்டு நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப்
பயன்படுத்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், பாடசாலைகளில் மாணவர்கள் கைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் இந்த மசோதா
தடை விதிக்கிறது.
</p><p></p><h2>புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குள்</h2><p>
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே சிறுவர்களுக்குச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த
முழுமையான தடை விதிக்கும் முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b8df476-f0c4-4cb9-a920-2f36d88131dd/26-6a60b37fc4911.webp' /></p><p>
டிஜிட்டல் தளங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகள்
உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முக்கியத் திட்டமாக இதை முன்னெடுத்த
ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன், நாடாளுமன்றத்தின் இந்த முடிவை ஒரு "முக்கிய
முன்னேற்றம்" எனப் பாராட்டியுள்ளார்.
</p><p>ஒன்லைனில் குழந்தைகளையும் வளரிளம் பருவத்தினரையும் பாதுகாப்பதில்
ஐரோப்பாவிற்கே பிரான்ஸ் முன்னோடியாகத் திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வரவிருக்கும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குள், அதாவது செப்டெம்பர்
மாதத்திற்குள் இத்தடையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

எனினும், இது பிரான்ஸ் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை அந்நாட்டின்
அரசியலமைப்பு பேரவை ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னரே முழுமையாக நடைமுறைக்கு வரும்.</p><h2>கணக்குகள் முடக்கப்படும் நிலை</h2><p>புதிய சட்டவிதிகளின்படி, இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச்
செயல்படுத்தப்படவுள்ளது.</p><p>முதல் கட்டமாக, வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 15 வயதிற்குட்பட்ட
சிறுவர்கள் புதிதாக எந்தவொரு சமூக வலைத்தளக் கணக்கையும் தொடங்க முடியாது.
</p><p>
இரண்டாம் கட்டமாக, ஜனவரி 2027 முதல் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும்
அவர்களின் கணக்குகள் அனைத்தும் முழுமையாக முடக்கப்படும் என டிஜிட்டல் துறை
அமைச்சர் ஆன் லே ஹெனாஃப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e20aaa5-19d7-46bb-a1d0-03d5bd786b9c/26-6a60b3807cfca.webp' /></p><p>

அதேவேளையில், கல்வி, அறிவியல் மற்றும் கலைக்களஞ்சியம் சார்ந்த இணையதளங்களைப்
பயன்படுத்த இதில் எந்தத் தடையும் இருக்காது.

எதிர்ப்புகளும் ஆதரவுகளும்
இடதுசாரி எதிர்க்கட்சியான 'பிரான்ஸ் அன்போவ்ட்' கட்சி இந்த மசோதாவிற்கு
எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.</p><p>இணையத்தில் பெயர் வெளியிடாமல் இருக்கும் உரிமையை இது பறிப்பதாகவும்,
நடைமுறையில் இத்தடையை முழுமையாகச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்றும்
அவர்கள் வாதிடுகின்றனர்.
</p><p>
அதேவேளையில், குழந்தைகள் நல ஆர்வலர்களும் பெற்றோர்களும் இந்த முடிவைப்
பெருமளவில் வரவேற்றுள்ளனர்.

சமூக வலைத்தளங்களால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள், இணையவழி அச்சுறுத்தல்கள்
மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து தங்களது பிள்ளைகளைப் பாதுகாக்க இத்தகைய
கடுமையான நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்று அவர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-into-missing-persons-in-batticaloa-1784719376"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-into-missing-persons-in-batticaloa-1784719376</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும், காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து
இன்றைய தினம் (22.07.2026) பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும், காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து
இன்றைய தினம் (22.07.2026) பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்தது.</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மட்டக்களப்பு மேற்கு, ஏறாவூர்ப்பற்று
ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில்
இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><h2>வாக்குமூலங்கள் வழங்கும் நடவடிக்கை</h2><p></p><p>
</p><p>இந்த விசாரணை மற்றும் வாக்குமூலங்கள் வழங்கும் நடவடிக்கைகளை காணாமல்போனார்
அலுவலக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள், நீதியமைச்சின் சட்டத்தரணிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து முன்னெடுத்திருநதனர்.&nbsp;</p><p>காணாமல்போனோர் அலுவலகத்திற்கு காணாமல்போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால்
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் வாக்குமூலம்
பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின்
உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.</p><p></p><h2>முறைப்பாடுகள்</h2><p>இதேநேரம் நேற்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள அலுவலகம், பட்டிப்பளை பிரதேச
செயலகம், வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகளில் கிடைக்கப் பெற்ற 295
முறைப்பாடுகளில் 233 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள்
பதிவு செய்யப்பட்டதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>இதனடிப்படையில் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் 144 முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றில் 116 முறைப்பாடுகள்
விசாரணை செய்யப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில்
78 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 64 முறைப்பாடுகள்
விசாரணை செய்யப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு அலுவலகத்தில் 73 முறைப்பாடுகள்
பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 53 விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leader-refuses-to-meet-journalists-1784721964"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leader-refuses-to-meet-journalists-1784721964</id>
            <summary type="text">ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிர்த்துச்
சென்றமை தென்னிலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.&amp;nbsp;
ஐக்கிய ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிர்த்துச்
சென்றமை தென்னிலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின்
தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.</p><p></p><h2>விரைவாக புறப்பட்டுச் சென்றார்..</h2><p>
</p><p>
கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் நாடாளுமன்றத்தில்
முன்மொழியப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இந்தக் கூட்டத்தில்
தீவிரமாக ஆராயப்பட்டது.
</p><p>
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,
நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, முஜிபுர்
ரஹ்மான், எஸ். எம். மரிக்கார், சித்ரால் பெர்னாண்டோ மற்றும் ரோஹண பண்டார
உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்ததும் அவர்களில் பலரும் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4431771-4673-424c-897d-3b4713b8d04e/26-6a60b22e44e67.webp' /></p><p> </p><p>எனினும், கூட்டம் முடிந்து வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸவிடம், அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் தற்போதைய அரசியல்
சூழ்நிலைகள் குறித்துக் கேள்விகளை எழுப்ப முயன்றனர். </p><p>எனினும், அவர்
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டு அங்கிருந்து
விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:07:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-origin-doctor-arrested-in-canada-1784720125"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-origin-doctor-arrested-in-canada-1784720125</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோவில் உள்ள Hospital for Sick Children மருத்துவமனையில் பணியாற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோவில் உள்ள Hospital for Sick Children மருத்துவமனையில் பணியாற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குழந்தைகள் தொடர்பான பாலியல் துர்நடத்தை மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்ததாகவும், அவற்றை அணுகியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கை வம்சாவளி மருத்துவர்&nbsp;</h2><p>
</p><p>
44 வயதான திஸாநாயக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மின்னணு சாதனத்தை பயன்படுத்தி குறித்த உள்ளடக்கங்களை அணுகி பதிவிறக்கம் செய்ததாக கூறப்படும் விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a5e7366-8ae0-4a5e-9740-5d0e80714051/26-6a60b1340c0f7.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் மருத்துவமனை மற்றும் அவரது தனியார் இல்லத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இதன்போது, பணிக்காக பயன்படுத்தப்பட்ட கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
திஸாநாயக்க மீது குழந்தைகள் தொடர்பான பாலியல் துர்நடத்தை மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அவற்றை அணுகியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அவர் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலையாகவிருந்தார்.

எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மருத்துவமனை&nbsp;கண்டனம் </h2><p>

இந்த உள்ளடக்கங்கள் அவரது மருத்துவர் பணியுடன் தொடர்புடையவை என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
</p><p>
இதற்கிடையில், Hospital for Sick Children மருத்துவமனை இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தாங்கள் மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பொலிஸார் குறிப்பிட்டுள்ள செயற்பாடுகளை மருத்துவமனை கடுமையாக கண்டித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d61e53-5932-4aac-87e1-2f4718a0a06e/26-6a60b134cad04.webp' /></p><p>

விசாரணை தொடர்பான தகவல் கிடைத்தவுடன் திஸாநாயக்கவை உடனடியாக பணியில் இருந்து விடுப்பில் அனுப்பியதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டுகளுக்கும் அவரது மருத்துவ சேவைக்கும் தொடர்பு இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
</p><p>
நோயாளிகள் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு எந்த ஆபத்தும் இருப்பதாக தகவல் கிடைக்கவில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.</p><p>

திஸாநாயக்கவிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் குடும்பத்தினர் ஏதேனும் கவலைகள் இருந்தால், மருத்துவமனையின் நோயாளர் தொடர்பு பிரிவை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:06:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை படுகொலை: குட்டிமணி - தங்கத்துரை சிலை திறப்பு விழாவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuttimani-thangathurai-statue-unveiling-ceremony-1784720889"></link>
            <id>https://tamilwin.com/article/kuttimani-thangathurai-statue-unveiling-ceremony-1784720889</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் திருவுருவச் சிலை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் திருவுருவச் சிலை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
அவர்களின் 43ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி சிலை திறப்பு விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p>

இதனைத் தொடர்ந்து, குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் திருவுருவச் சிலைகளை வடிவமைத்த சிற்பி வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>சிலை திறப்பு விழா ஒத்திவைப்பு</h2><p>
</p><p>
அவர், இன்று (22.07.2026) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதி்க்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04359c43-d8a2-4100-ac09-be0f618805fe/26-6a60af5a0914e.webp' /></p><p>

இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலையாகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலை திறப்பு விழாவை எதிர்வரும் 4ஆம் திகதிவரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dee366b1-9403-4f64-b319-de80b4b21344/26-6a60af5aef63f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec2bda3-efaf-4ebd-812d-07fe4ed3a3cf/26-6a60af5bc319c.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T11:54:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்து - ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/egypt-uae-foreign-ministers-urgent-consultations-1784718454"></link>
            <id>https://tamilwin.com/article/egypt-uae-foreign-ministers-urgent-consultations-1784718454</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும்
பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து எகிப்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் பத்ர்
அப்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும்
பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து எகிப்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் பத்ர்
அப்தெலாட்டி, ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத்
அல் நஹ்யானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
</p><p>
இந்தச் சந்திப்பின் போது, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களைக் குறைப்பதற்கான
சர்வதேச முயற்சிகளை வலுப்படுத்துவது குறித்தும், சர்வதேசச் சட்டங்களின்படி
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதிசெய்வது
குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.
</p><p></p><h2>அரபு நாடுகளின் இறையாண்மை</h2><p>
மேலும், பல்வேறு அரபு நாடுகளின் மீது ஈரான் தொடர்ந்து நடத்தி வரும்
தாக்குதல்களுக்கு இரு நாடுகளின் அமைச்சர்களும் மீண்டும் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ce1e84-4a3e-4f31-bc98-78fbbdb14b43/26-6a60ac0c735f6.webp' /></p><p>இதுகுறித்து எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி கூறுகையில்,
"எகிப்து நாடு, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அனைத்து அரபு வளைகுடா
நாடுகளுடனும் முழுமையாகத் துணைநிற்கிறது.
</p><p>
ஈரானின் இந்தத் தாக்குதல்கள் அரபு நாடுகளின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும்
செயலாகும்.

இது பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் விடுக்கப்பட்ட
கடுமையான அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்டார்.
</p><p>
மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை உறுதி செய்ய, மத்திய கிழக்கு
பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த இணைந்து செயல்படுவதன்
முக்கியத்துவத்தை இரு தூதுவர்களும் இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளனர். </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரட்சியால் வற்றியுள்ள குளங்கள் - நீர்த்தாங்கிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drought-dries-ponds-water-tanks-25-000l-supply-1784714803"></link>
            <id>https://tamilwin.com/article/drought-dries-ponds-water-tanks-25-000l-supply-1784714803</id>
            <summary type="text">மட்டக்களப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதனால் மக்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் இன்றிலிருந்து நாளாந்தம் சுமார் 25...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதனால் மக்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் இன்றிலிருந்து நாளாந்தம் சுமார் 25,000 லீற்றர் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை&nbsp; நிலவி வருகின்றமையினால், கிராமியக் குளங்கள் வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.</p><p></p><h2>குடிநீர் வழங்கத் திட்டம்</h2><p>
</p><p>


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று&nbsp; பிரதேசத்திற்குட்பட்ட
பெரியபோரதீவு பெரியகுளம், கோவில்போரதீவுக் குளம், பொறுகாமம் குளம்,
வெல்லாவெளிக் குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமைந்துள்ள கிராமியக் குளங்கள்
முற்றாக வற்றியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51ca22d8-9211-45c6-9a62-b28895229c2a/26-6a609c2d0d1aa.webp' /></p><p>
</p><p>


இந்த நிலையில்,&nbsp; கால்நடைகளும் நீர் தேடிச் செல்வதோடு, வற்றிய குளங்களில் அந்தப் பகுதி
மக்கள் மீன்பிடி&nbsp; நடவடிக்கை மேற்கொள்வதையும், பறவைகள் இரைதேடி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
</p><p>


இதேவேளை,&nbsp; கிராமங்களிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதனால் மக்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் இன்றிலிருந்து நாளாந்தம் சுமார் 25,000 லீற்றர் குடிநீர் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின்
தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி - சிக்கலில் ரணில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/715-million-us-dollars-illegally-smuggled-ranil-1784709571"></link>
            <id>https://tamilwin.com/article/715-million-us-dollars-illegally-smuggled-ranil-1784709571</id>
            <summary type="text">2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர&nbsp; குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p> ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இதில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தரப்பு உட்பட பலரும் கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><h2>105 நிறுவனங்கள்</h2><p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 214.7 பில்லியன்) வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு (CoPF) அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இந்த தகவலை, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட குழுவில் வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01db3a16-9394-4ffc-b00c-45df3df4161c/26-6a60874c87536.webp' /></p><p>
</p><p>
அவரின் விளக்கத்தின்படி, 2025 ஜனவரி 20, பெப்ரவரி 23 மற்றும் மார்ச் 6 ஆகிய திகதிகளில், இலங்கை சுங்கத் திணைக்களம் மூன்று அறிக்கைகளை பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தது.
</p><p>
 வெளிநாடுகளுக்கு இறக்குமதிக்காக பணம் அனுப்பப்பட்ட போதிலும், அதற்கான பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்பதே அந்த அறிக்கைகளின் மையக் குற்றச்சாட்டாகும்.</p><p>

முதல் அறிக்கையில் 89 நிறுவனங்கள், இரண்டாவது அறிக்கையில் மேலும் 4 நிறுவனங்கள், மூன்றாவது அறிக்கையில் மேலும் 12 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன.</p><p> இதன்படி, மொத்தம் 105 நிறுவனங்கள் இந்த சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளில் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளன.

விசாரணைகளின் அடிப்படையில், 2023 ஜனவரி 1 முதல் 2026 மார்ச் வரை, இந்த 105 நிறுவனங்கள் டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் (Telegraphic Transfers - TT) மூலம் சுமார் ரூ.214.7 பில்லியன் (அமெரிக்க டொலர் 715 மில்லியன்) வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளன.</p><p></p><h2>227 வங்கிக் கணக்குகள்</h2><p> </p><p>ஆனால், அந்தப் பணத்திற்கு ஈடான எந்தப் பொருட்களும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>

சுங்கத் திணைக்களத்தின் அறிக்கைகளைத் தொடர்ந்து, CID-யின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) இந்த பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p>

விசாரணைகளின் போது, 105 நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், மொத்தம் 55 நபர்களே அந்த அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c98fcb-62d6-4726-9c64-0624a46611bd/26-6a60874d66768.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்தப் பரிவர்த்தனைகளுக்காக 227 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் சுமார் 24,300 டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 13 முக்கிய வங்கிகள், தற்போது விசாரணைக்குட்பட்டுள்ள இந்தப் பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளதாகவும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
</p><p>
விசாரணைகள் முன்னேறிய நிலையில், இந்த மோசடி வலையமைப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;முக்கிய போதைப்பொருள் கடத்தல்</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட நபர் 43 நிறுவனங்களின் உரிமையாளராக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் மட்டும் ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலரை டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
CID-யின் குற்றச்சாட்டுப்படி, குறித்த நபர் இலங்கையில் உள்ள தரகர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, அவர்கள் வழங்கிய போலியான ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949acb14-8fdc-4859-9c07-efd50248324a/26-6a60874e1ec81.webp' /></p><p> </p><p>தரகர்கள் பயன்படுத்திய அலுவலகங்களில் இருந்த கணினிகளிலேயே போலி விலைப்பட்டியல் (Invoices) தயாரிக்கப்பட்டு, அவை வங்கிகளுக்கு ஆதார ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும் விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
மேலும், இந்தப் பரிவர்த்தனைகளில் சில வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் விசாரணைகளில் எழுந்துள்ளதாக அசங்க கரவிட்ட தெரிவித்தார்.
</p><p>
விசாரணைகளின் போது, இந்த நிதி மோசடிக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான தகவல்களும் வெளியாகியுள்ளன. குறிப்பாக, துபாயில் இருந்து இயங்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் பணம், இதே முறையைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக CID தெரிவித்துள்ளது.</p><h2>முக்கிய சந்தேகநபர்</h2><p>
</p><p>
துபாயை மையமாகக் கொண்டிருந்த மூன்று முக்கிய சந்தேகநபர்களில் இருவர், இன்டர்போல் (Interpol) உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், போதைப்பொருள் வியாபாரிகளின் பணம் துபாயில் உள்ள மற்றொரு நபர் மூலம் இயக்கப்பட்டதாகவும், இலங்கையில் தரகர்கள் வசூலித்த பணம் இறுதியில் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bda8f0f9-0118-4619-bd90-cbe7c36988b5/26-6a6089c2beaf0.webp' /></p><p>
</p><p>
இந்த நடவடிக்கையின் மையத்தில் இருந்ததாகக் கூறப்படும் நபர், வசூலிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை கமிஷனாக வைத்துக்கொண்டு, மீதியை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p> பணத்தின் மூலாதாரம் குறித்து அவருக்கு முழுமையான அறிவு இருந்ததா என்பது தொடர்பிலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
</p><p>
மேலும், அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஏராளமான போலி சுங்க ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக CID தெரிவித்துள்ளது.</p><h2>விரிவான விசாரணை</h2><p>
</p><p>
இதற்கிடையில், களனி பொலிஸ் பிரிவில் சோதனையிடப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து ரூ.30 மில்லியன் பணம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் தனி விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>அந்தப் பணம், இதேபோன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மற்றொரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a82e458-11f3-4cfc-b5fe-f231a06a63ca/26-6a6089c204e30.webp' /></p><p>
</p><p>
அந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், அந்த நிறுவனம் மட்டும் ஒரு அரச வங்கி மற்றும் இரண்டு தனியார் வங்கிகள் ஊடாக சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலரை இதே முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

இந்த இரண்டு வழக்குகளிலும், CID-யின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் குற்ற வருவாய் விசாரணைப் பிரிவு (Proceeds of Crime Investigation Division) இணைந்து விரிவான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_miJ0OkMcYs" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T11:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரானில் மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-sentences-man-to-death-for-spying-us-israel-1784713263"></link>
            <id>https://tamilwin.com/article/iran-sentences-man-to-death-for-spying-us-israel-1784713263</id>
            <summary type="text">&quot;புரட்சிக்கு எதிரான பயங்கரவாத அமைப்பில்&quot; உறுப்பினராக இருந்து, அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலுக்கு சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு
கைதுசெய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>"புரட்சிக்கு எதிரான பயங்கரவாத அமைப்பில்" உறுப்பினராக இருந்து, அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலுக்கு சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு
கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம்
தெரிவித்துள்ளது.
</p><p>இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் மெஹ்தி கான்கி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மரண தண்டனை</h2><p>
</p><p>
ஈரான் நாட்டின் கரஜ் பகுதியில் உள்ள இவரது வீட்டில் பாதுகாப்புப் படையினர்
சோதனை நடத்தியபோது, கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ரிமோட் மூலம் இயங்கும்
வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், தோளில் வைத்து சுடக்கூடிய வெடிகுண்டு
குழாய்கள் மற்றும் சக்திவாய்ந்த வெடிமருந்துகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள்
கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446f0cad-a237-4a5c-8dfc-c2e8a4904b82/26-6a6093c92c0dd.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபருக்கு, நீதித்துறை விசாரணைக்குப் பின்
இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜஸ்தானில் கடைக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/leopard-enters-shop-and-attacks-employee-rajasthan-1784717769"></link>
            <id>https://tamilwin.com/article/leopard-enters-shop-and-attacks-employee-rajasthan-1784717769</id>
            <summary type="text">இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வணிகக் கடை ஒன்றுக்குள் திடீரென
புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த ஊழியரைத் தாக்கி பெரும் பரபரப்பையும்
பீதியைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வணிகக் கடை ஒன்றுக்குள் திடீரென
புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த ஊழியரைத் தாக்கி பெரும் பரபரப்பையும்
பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்தத் திடுக்கிடும் சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக்
கெமராவில் (CCTV) பதிவாகி வைரலாகி வருகிறது.</p><p></p><h2>பெரும் பரபரப்பு </h2><p>
திடீரென கடைக்குள் பாய்ந்த சிறுத்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்
அதனிடமிருந்து தப்பிக்க முயன்றபோதும், அது அவரைத் தாக்கியது.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம்
பிடித்த நிலையில், வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb559550-26ca-4f0a-962d-b551b08b227e/26-6a60a621ade11.webp' /></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக்
குழுவினர், கடைக்குள் சிக்கியிருந்த சிறுத்தையைத் திறம்படப் போராடிப்
பொறிவைத்து அடைத்தனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> : A leopard entered a liquor shop in Rajasthan&#39;s Tonk district after attacking three people. The salesman managed to lock the animal inside the shop, allowing Forest Department officials to safely rescue it after a five-hour operation.<a href="https://x.com/hashtag/Rajasthan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Rajasthan</a> <a href="https://x.com/hashtag/Tonk?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tonk</a> <a href="https://x.com/hashtag/Leopard?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Leopard</a> <a href="https://x.com/hashtag/Wildlife?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Wildlife</a>… <a href="https://t.co/jdcWumQISd">pic.twitter.com/jdcWumQISd</a></p>&mdash; upuknews (@upuknews1) <a href="https://x.com/upuknews1/status/2079235951541576149?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பின்னர், மயக்க ஊசி செலுத்தி அதை பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் அடர்ந்த
வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விடுவித்தனர்.
</p><p>
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-bandara-further-remanded-1784717740"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-bandara-further-remanded-1784717740</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(22.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p></p><p>
</p><p>

இரண்டு அரசாங்க நிறுவனங்களிலிருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர் விசாரணையின் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார ஜூன் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp;</p><h2>


சம்பள மோசடி</h2><p>
இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் (CCIB) முறைப்பாடு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec65f71a-2550-4571-9305-7e1767840762/26-6a60a48c1ed97.webp' /></p><p> 

இது தொடர்பான விசாரணையில், பண்டார 2022 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச்&nbsp; செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளர் பதவியை வகித்ததும் தெரியவந்துள்ளது. </p><p>

இந்த தகவல்களின் அடிப்படையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கு சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-22T11:08:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் மகன்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-s-son-arrested-for-cheating-foreigner-1784685252"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-s-son-arrested-for-cheating-foreigner-1784685252</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்பு சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய&nbsp;இணைப்பு </h2><p>சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) இன்று (22) அனுமதி வழங்கியுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து, கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்டதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசாரணை அதிகாரிகளின் தகவல்களுக்கமைய, இந்தக் கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனே திட்டமிட்டு முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><p>
</p><h2><b>
 மூவர் கைது</b></h2><p>இதன்போது கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் ஒருவர் பிரபல முன்னாள் வர்த்தகர் ஒருவரின் பேரன் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நான்கு சந்தேகநபர்களில் மூவர் முதலில் கைது செய்யப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a30a56-ce22-43a2-9290-3fc4cfc91c12/26-6a6027c211c20.webp' /></p><p>அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
அதற்கமைய, குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் அவர் சட்டத்தரணிகள் ஊடாக நேற்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.</p><p>

2 கோடி ரூபாய் இலங்கைப் பணத்திற்கு அமெரிக்க டொலர்களை மாற்றித் தருவதாகக் கூறி, இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

அதற்கமைய, குறித்த சீன நாட்டவரை கொள்ளுப்பிட்டி பகுதிக்கு வரவழைத்தவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><h3><b>
விசாரணை அதிகாரிகள்</b></h3><p>அதன் பின்னர் ஏனைய மூன்று பேரும் கைவிலங்குடன் சென்று, தாங்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறிக்கொண்டு, சீன நாட்டவரிடம் இருந்த 2 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd3b7004-6014-4b50-9757-b19fccc81a6e/26-6a6027c2cda22.webp' /></p><p>இது தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செயற்பட்ட நிலையப் பொறுப்பதிகாரி மூவரை முதலில் கைது செய்தனர்.</p><p> முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-22T10:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெற்ற விவசாயக் குழுக்கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-district-agricultural-committee-meet-1784715460"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-district-agricultural-committee-meet-1784715460</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக்கூட்டம் இன்றைய தினம்(22.07.2026) மாவட்ட
அரசாங்க அதிபர் சு.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக்கூட்டம் இன்றைய தினம்(22.07.2026) மாவட்ட
அரசாங்க அதிபர் சு.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
</p><p>
இக்கலந்துரையாடலில் சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நெற் கொள்வனவு
மற்றும் சிறுபோக விவசாய செய்கைக்கான நீர்ப்பாசன தேவைப்பாடு தொடர்பாக விரிவாக
ஆராயப்பட்டதுடன் கடுமையான வெப்பநிலை காணப்படுவதால் மக்கள் நீரை
சிக்கனமாகவும் மாசுபடுத்தாது பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.</p><h2>வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு</h2><p>
விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உப உணவு உற்பத்தி திட்டம்,
உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப திட்டம் மற்றும் வனவிலங்குகளிடமிருந்து
பயிர்களை பாதுகாப்பதற்கான "பாதுகாப்புத் துப்பாக்கி " திட்டம் ஆகிய
திட்டங்களுக்கான முன்மொழிவுகளை விவசாயிகள் தமது அமைப்புகள் மூலமாக
சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94921c52-41be-45f1-b924-af6c5270c06d/26-6a609d4ecc600.webp' /></p><p>வீதிகளில் நெல் உலர்த்துவதால் ஏற்படும் வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கான
மாற்று நடைமுறைகள் உள்ளிட்ட விவசாய துறைசார்ந்த விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
</p><p>இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி),விவசாய
பணிப்பாளர்,பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,
அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், துறை சார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள்
மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் அங்கத்தவர்கள்,
மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து
கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T10:38:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென உயிரிழந்த இளம் யுவதி! சந்தேகம் இருப்பதாக தந்தை அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-woman-who-died-at-ratnapura-hospital-1784683555"></link>
            <id>https://tamilwin.com/article/young-woman-who-died-at-ratnapura-hospital-1784683555</id>
            <summary type="text">இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த&amp;nbsp; 21 வயதுடைய யுவதியின்&amp;nbsp;மரணத்தில் சந்தேகம் இருப்பதாக&amp;nbsp;தெரிவித்து&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த&nbsp; 21 வயதுடைய யுவதியின்&nbsp;மரணத்தில் சந்தேகம் இருப்பதாக&nbsp;தெரிவித்து&nbsp;தந்தை சுகாதார அமைச்சுக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.</p><p>மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து, இம்மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>மரணத்துக்கான காரணம்&nbsp;</h2><p>மருத்துவ தரப்பினரின் அலட்சியம் மகளின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c45c2d7d-b7fa-43ae-9ee8-886c3366d1ff/26-6a6097e672034.webp' /></p><p>தனது மகள், கடந்த 3ஆம் திகதி இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 13வது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நோய் நிலைமை குறித்து முறையாக பரிசோதிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>தனது மகளுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி, வாயிலிருந்து இரத்தம் வடிதல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, கடும் மூச்சுத்திணறல் போன்றவற்றுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று அவரது ஒட்சிசன் அளவு 85 சதவீதமாக குறைந்ததாகவும், அவசர சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமலும் இருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>உடற்கூறாய்வு பரிசோதனை</h2><p>இதனைத்தொடர்ந்து&nbsp;உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து&nbsp;மாரடைப்பு ஏற்பட்டதன் பின்னரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>மேலும், உடற்கூறாய்வு பரிசோதனை (Histopathological examination) மேற்கொள்ளபடவிருக்கும் நிலையில், நியூமோனியாவே தற்காலிக மரணத்துக்கான காரணம் என நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்ததாக தந்தை கூறியுள்ளார்.</p><p>

எனவே, யுவதியின் மரணம் தொடர்பில், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தந்தை, உரிய அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T10:14:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து சென்ற அருட்சகோதரிகளுக்கு நேர்ந்த கதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-nuns-from-colombo-involved-in-accident-1784711525"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-nuns-from-colombo-involved-in-accident-1784711525</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து இன்று(22.07.2026) பறைய நாளங்குளம் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> 

இந்த விபத்து இன்று(22.07.2026) பறைய நாளங்குளம் இரும்புப் பாலத்தில்இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>

நால்வர் படுகாயம்</h2><p>

இதன்போது வாகனத்தில் பயணித்த 4 அருட்சகோதரிகள் 
காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e991edaf-3073-406f-93b6-88be157b20d9/26-6a6097a854bd5.webp' /></p><p> </p><p> 

அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், மேலதிக
சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yA720c1vZEs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:13:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு! வெளியான விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/stop-the-destruction-of-tamil-history-immediately-1784713801"></link>
            <id>https://tamilwin.com/article/stop-the-destruction-of-tamil-history-immediately-1784713801</id>
            <summary type="text">கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் வரலாற்று, பண்பாட்டு
முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான
அடிக்கல் நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் வரலாற்று, பண்பாட்டு
முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள்
மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின்
திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை(22) கருத்து தெரிவிக்கும் போதே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>தமிழரின் வரலாறு </h2><p> </p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

கன்னியா வெந்நீர் ஊற்று என்பது தமிழர்களுக்கும், குறிப்பாக இந்து
மக்களுக்கும், மிக நீண்டகால வரலாற்று மற்றும் ஆன்மீக தொடர்புடைய புனிதத்
தலமாகும். இப்பகுதியை புனித இடமாகவும் தமிழ் மக்கள் பல தலைமுறைகளாகக் கருதி
வந்துள்ளனர் வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/860a876e-cf9a-4400-a9ab-2a9093e225e8/26-6a6095928637e.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், புனித பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்ததாகக் கூறப்படும் பகுதியில்
புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள
தகவல்கள் மக்களிடையே பதற்றத்தையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும்
உருவாக்கியுள்ளது.
</p><p>
கன்னியா என்பது ஒரு மதத் தலம் மட்டுமல்ல அது திருகோணமலையின் வரலாறு தமிழர்
பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்களின் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு
முக்கிய தமிழர் மரபுரிமைச் சின்னமாகும்.</p><p></p><h2>உடனடியாக நிறுத்துங்கள்&nbsp;</h2><p> இதுபோன்ற வரலாற்று மற்றும் மத
உணர்வுகள் சம்பந்தப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும்
அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும்,
தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட
வேண்டும்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும் முன்வைக்கும்
கவலைகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய முறையில் கவனத்தில்
கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5b4a00d-b321-4e77-9465-54e55fb94454/26-6a609593698c8.webp' /></p><p> </p><p>அனைத்து இனங்களும் மதங்களும் பரஸ்பர மரியாதையுடனும்
நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.
</p><p>
மேலும், கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகள்
குறித்து வெளிப்படையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்
என்றும், எந்தவொரு அபிவிருத்தி அல்லது கட்டுமான நடவடிக்கைகளும் சட்ட
நடைமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அனைத்து சமூகங்களின் மத, பண்பாட்டு
உணர்வுகளை மதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
</p><p>
அதேவேளை 2020 ஆம் ஆண்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அந்த இடத்தில் எந்தச்
சமய கட்டடங்களும் கட்டாதிருப்பதை சட்டம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T10:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி போராட்ட களத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-create-chaos-at-the-semmani-protest-site-1784713363"></link>
            <id>https://tamilwin.com/article/police-create-chaos-at-the-semmani-protest-site-1784713363</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம்(22.07.2026) செம்மணி சித்துப்பாத்தி இந்து
மயானத்திற்கு வருகை தந்தனர். இதன்போது சித்துப்பாத்தி மனிதப் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம்(22.07.2026) செம்மணி சித்துப்பாத்தி இந்து
மயானத்திற்கு வருகை தந்தனர். </p><p>இதன்போது சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு
நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>இந்நிலையில்,&nbsp; அந்த படங்கள் தாங்கிய பதாகைகளை ஊடகவியலாளர்கள் காணொளி மற்றும் புகைப்படம் பதிவுசெய்யும்போது அதனை மறைக்கும் வகையில் பொலிஸார் குறுக்கே நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4pi7W6u4q98" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><h2>பொலிஸாருக்கு கூறிய நிலையில்</h2><p>
</p><p>போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7bf6357-d077-4e61-b638-aa313c15dec0/26-6a6093c17402d.webp' /></p><p>காணாமல் ஆக்கப்பட்ட சிறார்களது படங்களை தாங்கிய
பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதன்போது அவற்றை மறைக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு கூறிய
நிலையிலும் அவர்கள் அங்கிருந்து நகராமல் நின்றதால் போராட்டக்காரர்களுக்கும்
பொலிஸாருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.</p><p>
பின்னர் பொலிஸார் அங்கிருந்து நகர்ந்து சென்றதாக&nbsp; எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! தாமதமாகும் பிரேத பரிசோதனை அறிக்கை - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kapila-chandrasena-autopsy-report-issue-1784707579"></link>
            <id>https://tamilwin.com/article/kapila-chandrasena-autopsy-report-issue-1784707579</id>
            <summary type="text">மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரண விசாரணை தொடர்பான பிரேத பரிசோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரண விசாரணை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பான நினைவூட்டல் கடிதமொன்று அரச சட்ட வைத்திய அதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (22) மீண்டும் அனுப்பியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><h2>மீண்டும் நினைவூட்டல் கடிதங்கள்&nbsp;</h2><p>இந்த சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக வழங்குமாறு அரச சட்ட வைத்திய அதிகாரிக்கு இதற்கு முன்னர் அறிவிப்பொன்று அனுப்பப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e00fd62d-c16c-4fbf-a865-1b4bb3e91f9f/26-6a60931480a20.webp' /></p><p>இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​தடயவியல் அறிக்கை பெறப்படவில்லை என்று கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2><p><span style="font-size: 14px;">இதற்கமைய, பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு மீண்டும் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.</span></p></h2><p>இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் மாதம் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:53:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவில் அமைப்புக்கள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் முன்வைத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-withdraw-north-land-civil-society-1784707224"></link>
            <id>https://tamilwin.com/article/government-withdraw-north-land-civil-society-1784707224</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் 2013 ஆம் ஆண்டு 5ஆம் மாதம் சுவீகரிப்பு வர்த்தமானி மூலம்
வலி வடக்கு மக்களின் 6317 ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்
பெறுவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் 2013 ஆம் ஆண்டு 5ஆம் மாதம் சுவீகரிப்பு வர்த்தமானி மூலம்
வலி வடக்கு மக்களின் 6317 ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்
பெறுவதற்கான அழுத்தத்தை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றிய
பிரதிநிதிகளிடம் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.</p><p>
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான
உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று(21.07.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள
தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற போதே இந்தக் கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>காணி விடுவிப்பு</h2><p>குறித்த கோரிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 35 வருடங்கள் கடந்தும் பொது
மக்களுடைய காணிகள் பாதுகாப்பு படைகளினால் விடுவிக்கப்படாமல்
கையகப்படுத்தப்பட்டிருக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a863f024-62bb-406f-8833-4fc424883648/26-6a608dc700523.webp' /></p><p>வலி.வடக்கு மக்களின் சுமார் 6 ஏக்கருக்கு மேற்பட்ட காணி பாதுகாப்பு அமைச்சினால்
வர்த்தமானி மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வர்த்தமானி இதுவரை
மீளப் பெறப்படவில்லை.
</p><p>
பொதுமக்களுடைய காணிகளை பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து விடுவிப்பதற்கும்
சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு
அழுத்தத்தை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.</p><p></p><h2>கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்</h2><p>கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, மனித உரிமைகள், நல்லாட்சி,
சமூக நீதி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் நிலையான
அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கருத்துப்
பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74adcb91-c973-4196-ac63-d1e17479f79c/26-6a608dc7d7647.webp' /></p><p>

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை மக்களின் நீண்ட காலமாக
பாதித்து வரும் காணி உரிமைப் பிரச்சினைகள், காணி மீட்பில் நிலவும் தாமதங்கள்,
காணி அபகரிப்பு, மற்றும் சுவீகரிப்பு அவற்றின் காரணமாக மக்கள் எதிர்நோக்கும்
சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதார சவால்கள் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும்
முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த கலந்துரையாடலில்
கார்மென் மொரேனோ – ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி
பெலிக்ஸ் நியுமன் ஜெர்மனி தூதுவர் ரெமி லம்பேர்ட் – பிரான்ஸ் தூதுவர் டாமியானோ
பிராங்கோவிக் ,இத்தாலி தூதுவர்
விபே டி போயர் , மற்றும் தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் சாரா பொன்சேகா
சில்வா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத சொத்துகள் தொடர்பான பொலிஸாரின் அறிவிப்பு : உடனடியாக திரும்பப் பெற ஐ.தே.க வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-statement-regarding-illegal-assets-1784710065"></link>
            <id>https://tamilwin.com/article/police-statement-regarding-illegal-assets-1784710065</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் அல்லது ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை பொலிஸார் கடந்த ஜூலை 9ஆம் திகதி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் அல்லது ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு இலங்கை பொலிஸார் கடந்த ஜூலை 9ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
</p><p>
முறையான வழிகாட்டுதல்கள் இன்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தேவையற்ற துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர்</h2><p>
ஐக்கிய இராச்சியத்தின் சுயாதீன விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள Statement of Common Purpose அடிப்படையில், சட்டத்தையும் பொது அமைதியையும் பாதுகாப்பதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதும், சமூக அமைதியை பேணுவதும் பொலிஸாரின் பிரதான பொறுப்புகளாகும். </p><p>ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அந்த அடிப்படை கொள்கைக்கு முரணானதாக இருப்பதாக ஐ.தே.க. சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1628b371-e05c-4a3d-ac83-74adc07082bc/26-6a6087e1da4fd.webp' /></p><p>மேலும், தெளிவான சட்டபூர்வ வருமான ஆதாரம் இன்றி ஈட்டப்பட்ட சொத்துக்களை அடையாளம் காணும் நடைமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் இல்லாத சூழலில், இந்த அறிவிப்பு பொதுமக்களை துன்புறுத்தும் கருவியாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கையில் சொத்து வரி (Wealth Tax) நடைமுறையில் இல்லாத நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வமான வழிகளில் பலர் சொத்துக்களை ஈட்டுகின்றனர் என்றும், வரி முறைமை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சிலர் தங்களது சொத்துக்களை முறையாக வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடும் என்றும் ஐ.தே;.க. கட்சி குறிப்பிட்டுள்ளது.</p><p>
இவ்வாறான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து தெளிவான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
</p><p>
இதனால், தற்போதைய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தெளிவான சட்ட வழிகாட்டுதல்களுடன் புதிய அறிவிப்பொன்றை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:07:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலையாக சில ஊடகவியலாளர்களுக்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/journalists-summoned-to-privileges-committee-1784704430"></link>
            <id>https://tamilwin.com/article/journalists-summoned-to-privileges-committee-1784704430</id>
            <summary type="text">மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் நடத்திய கூட்டமொன்று தொடர்பான செய்தியொன்றை வெளியிட்ட&amp;nbsp; ஊடகவியலாளர்களுக்கு நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் நடத்திய கூட்டமொன்று தொடர்பான செய்தியொன்றை வெளியிட்ட&nbsp; ஊடகவியலாளர்களுக்கு நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.</p><p>இவர்கள்&nbsp;நாளை(23.07.2026) பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு&nbsp; அழைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம்</h2><p>
</p><p>
அநுராதபுரம் பகுதியில் சிறுமி ஒருவர் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விசாரிப்பதற்காக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் நடத்திய கூட்டம் பற்றி செய்தி வெளியிட்ட ஒரு சம்பவத்தின் அடிப்படையில், சிங்கள சேவை ஒன்றின் ஊடகவியலாளர்கள் நாளை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவில முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
அநுராதபுரம் பகுதியில் சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பதற்காக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் ஜூன் 5ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76f8c8d7-392a-4661-93a4-d15e083c4b9f/26-6a6076fedb4fb.webp' /></p><p> அது தொடர்பான செய்தி வெளியிட்டமை குறித்தே இந்த ஊடகவியலாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் ஒரு அதிகாரப்பூர்வ சட்டரீதியான குழு அல்லாத சூழலில், இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்களை சிறப்புரிமைகள் குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பது, மக்களின் தகவல் அறியும் உரிமையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என ஊடக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T09:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் மேசையில் இருந்த மது போத்தல் - காணொளியால் எழுந்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officers-caught-drinking-alcohol-duty-1784708910"></link>
            <id>https://tamilwin.com/article/police-officers-caught-drinking-alcohol-duty-1784708910</id>
            <summary type="text">முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.</p><p> 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்த மேசையில் மது போத்தல் இருந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருவது சந்தேகத்தை தூண்டியுள்ளது.</p><p></p><p> </p><h2>


பொலிஸ் அதிகாரியின் மேசையில் இருந்த மது போத்தல்</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,</p><p> 

 துணுக்காய் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் மல்லாவி பொலிஸ் நிலையக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
அந்த வேளையில், இரவு நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்த மேசையில் மது போத்தல் இருந்ததாகக் கூறி, அந்த சந்தேக நபர் தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2b0fb88-50cf-434e-b01c-1e9ae3a3e885/26-6a608006546ed.webp' /></p><p>
</p><p>
பின்னர், அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த காணொளியை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றியுள்ளார்.</p><h2>

வீட்டிற்கே சென்று மிரட்டிய பொலிஸ் அதிகாரிகள்</h2><p>

இதனைத் தொடர்ந்து, மல்லாவி பொலிஸார் குறித்த இளைஞரின் வீட்டிற்குச் சென்று அவரை எச்சரித்ததுடன், பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், பொலிஸ் நிலையத்திற்கு வராவிட்டால், போலி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்போம் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் காரணமாக, குறித்த இளைஞர் தற்போது பொலிஸ் நிலையத்திற்கு செல்லாமல் தலைமறைவாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தி, தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடமும், சிவில் பாதுகாப்பு அமைச்சிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T08:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்புகள் இயக்கம்: அமெரிக்க தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/air-defense-systems-in-tehran-no-us-strikes-yet-1784709682"></link>
            <id>https://tamilwin.com/article/air-defense-systems-in-tehran-no-us-strikes-yet-1784709682</id>
            <summary type="text">ஈரானின் தலைநகரான தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் வான் பாதுகாப்பு அமைப்புகள்
செயல்படும் சப்தம் கேட்டதாக அல் ஜசீரா நிருபர் ரசூல் செர்டார் அடாஸ்
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தலைநகரான தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் வான் பாதுகாப்பு அமைப்புகள்
செயல்படும் சப்தம் கேட்டதாக அல் ஜசீரா நிருபர் ரசூல் செர்டார் அடாஸ்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், நேற்றிரவு எந்தவிதத் தாக்குதல்களும் நடக்கவில்லை என்றும்,
வெடிசப்தங்கள் எதுவும் கேட்கவில்லை என்றும் அரச அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தான பிறகு, தலைநகரில் வான் பாதுகாப்பு
அமைப்புகள் இயக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் தெஹ்ரானுக்கு மிக அருகில் உள்ள பகுதியாக,
சுமார் இரண்டு மணி நேரப் பயணத் தொலைவிலுள்ள செம்னான் நகரம் இருந்ததுடன், கடந்த
வாரம் ஒரு சிவிலியன் விமான நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4ca9dd-6ce9-4f94-b7d5-0feef8e654d4/26-6a6085f1c7701.webp' /></p><p>
</p><p>
எனினும், தலைநகர் தெஹ்ரானை இலக்கு வைத்து இதுவரை எந்தவொரு நேரடித்
தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T08:58:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - தமிழ் யுவதி உட்பட உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/homagama-fire-accident-details-of-5-1784705795"></link>
            <id>https://tamilwin.com/article/homagama-fire-accident-details-of-5-1784705795</id>
            <summary type="text">ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று காலை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழ் யுவதி உட்படு ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

தீ விபத்தில் நச்சு புகையை சுவாசித்த பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2><b>
உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்</b></h2><p>அதற்கமைய, தெனியாய, கொலவெங்கமவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார, அட்டகலம்பன்ன, கௌடாவவவை சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான், மஸ்கெலியாவை சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி, பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியோ எட்வர்ட்
தெனியாய, கொலவெங்கமவை சேர்ந்த திலீத் மதுஷங்க ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d927b38-8c33-45e0-83d8-23e45279ac89/26-6a607547e4207.webp' /></p><p>இதேவேளை, ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் உட்பட பல அவசியமான அனுமதிகளைப் புதுப்பிக்கவில்லை என்ற விடயம் தற்போது வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IW-0kuGgCko" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-22T08:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் மோடி பதவி விலகக் கோரி போராட்டம்! கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rahul-gandhi-released-after-protest-detention-1784705930"></link>
            <id>https://tamilwin.com/article/rahul-gandhi-released-after-protest-detention-1784705930</id>
            <summary type="text">பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி &#039;லோக் கல்யாண் மார்க்&#039; பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி 'லோக் கல்யாண் மார்க்' பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, ​​டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட சத்ராசல் மைதானத்தில் இருந்து ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.</p><p></p><h2>பிரியங்கா காந்தி&nbsp;</h2><p> 

பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி சென்றார்.


காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால் மற்றும் பவன் கேரா ஆகியோர் லோக் கல்யாண் மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3feeb385-edfb-4958-85b7-bd0b5280c0e6/26-6a60795ea0eaf.webp' /></p><p>

கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
</p><p>
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (NDA) இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவியிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவும் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்றார்.</p><p></p><h2>&nbsp;ராகுல் காந்தி</h2><p>
</p><p>


நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்ப தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர்கள், 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்திய 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகே போராட்டம் நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a81d331-92b2-4ac5-a1ee-39c38603230b/26-6a60795f5845e.webp' /></p><p>

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, "அரசு எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை அதேவேளையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவும் விரும்பவில்லை. இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p><b><i>you may like this video&nbsp;&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FKHYEJoGJyE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T08:03:49+00:00</updated>
        </entry>
    </feed>
