<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-28T10:31:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணேமுல்ல சஞ்சீவவின் கொலை விவகாரம்! இஷாரா செவ்வந்தியிடமிருந்து மீண்டும் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ccd-permission-court-prison-to-question-sewwandi-1787909258"></link>
            <id>https://tamilwin.com/article/ccd-permission-court-prison-to-question-sewwandi-1787909258</id>
            <summary type="text">&amp;nbsp;கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளது.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இன்று (28) மனுவைத்தாக்கல் செய்யும் போது, ​​கொழும்பு குற்றப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம்&nbsp;</span></p><p> </p><p>இந்த சம்பவம் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த சந்தேகநபரிடமிருந்து வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1703799-f40f-4192-9a5a-af1f854079bf/26-6a915d7da67f1.webp' />&nbsp;</p><p>
</p><p>
மேலும், 2 ஆம் திகதி அங்குனுகொல பெலஸ்ஸ சிறைக்குச் சென்று வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளருக்கு தெரிவிக்குமாறும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.</p><p>

இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கருத்தில்கொண்ட நீதிபதி, கோரிக்கை தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T10:25:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்ட வானிலை - தொடர்ந்து குறையும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-levels-in-reservoirs-continue-to-drop-1787910041"></link>
            <id>https://tamilwin.com/article/water-levels-in-reservoirs-continue-to-drop-1787910041</id>
            <summary type="text">தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

அதன்படி, சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 18 சதவீதமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
</p><p>
அதன்படி, சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p> அதேநேரத்தில் ஹுருலு வேவாவின் நீர்மட்டம் 24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.</p><h2>குறைந்துள்ள நீர் கொள்ளளவு</h2><p>
</p><p>
மேலும், அதிமலை வேவாவின் நீர் கொள்ளளவு 5 சதவீதமும், மோரா வேவாவின் நீர் கொள்ளளவு 9 சதவீதமும், வெஹரகல நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 15 சதவீதமும், கௌடுல்ல வேவாவின் நீர் கொள்ளளவு 20 சதவீதமும், பதாவியா வேவாவின் நீர் கொள்ளளவு 22 சதவீதமும், தப்போவ வேவாவின் நீர் கொள்ளளவு 28 சதவீதமும் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd01269-6fd7-4b5a-b532-2096b9f1b50b/26-6a9160b615137.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், இலங்கையின் பல மாவட்டங்களில் மனித உடல் உணரும் வெப்பம் இன்று கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் பாகையாக பதிவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T10:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவின் வயதான அரசர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/king-harald-v-of-norway-europe-s-oldest-monarch-1787908832"></link>
            <id>https://tamilwin.com/article/king-harald-v-of-norway-europe-s-oldest-monarch-1787908832</id>
            <summary type="text">நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசாலையில் இன்று(28.08.2026) காலை 6:35 மணியளவில் அவர் காலமானதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>மன்னரின் மறைவு காரணமாக&nbsp;</h2><p>
 

ஐரோப்பாவின் மிகவும் வயதான நாட்டின் தலைவராக இருந்த ஐந்தாம் ஹெரால்ட், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நோர்வே நாட்டின் அரசராகப் பணியாற்றியுள்ளார்.

 

இ</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e83960bf-d68d-40b4-9459-a29ae6709fc4/26-6a9158b8d66eb.webp' /></p><p>1945 இல் மீண்டும் நோர்வே திரும்பிய ஹெரால்ட், நோர்வே அரச பாடசாலைகள், இராணுவக் கல்லூரி மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.
</p><p>
 

1991 ஜனவரி 21 ஆம் திகதி தனது தந்தையான ஐந்தாம் ஓலாஃப் மன்னரின் மறைவுக்குப் பிறகு அரியணை ஏறிய ஹெரால்ட், நோர்வே முடியாட்சியை நவீனமயமாக்க நடவடிக்கை எடுத்தார்.
</p><p>
 

2011 ஆம் ஆண்டு நோர்வேயில் 77 பேரைக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அவர் நிகழ்த்திய உணர்வுபூர்வமான உரை மற்றும் 2016 ஆம் ஆண்டு LGBTQ+ உரிமைகள், அகதிகள் மற்றும் மத நல்லிணக்கத்திற்காக அவர் ஆற்றிய உரை சர்வதேச கவனத்தைப் பெற்றது.
</p><p>
 

மன்னரின் மறைவு காரணமாக முழு நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

ஐந்தாம் ஹெரால்ட் மன்னரின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான இளவரசர் ஹாகன் (Haakon), நோர்வேயின் புதிய அரசராக அரியணை ஏறவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:55:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெயில் கொளுத்தும் நிலையில் வயல்களுக்கு தீ வைப்பு: சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arson-in-the-kandalai-area-1787906178"></link>
            <id>https://tamilwin.com/article/arson-in-the-kandalai-area-1787906178</id>
            <summary type="text">கந்தளாய் பகுதியில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் எஞ்சியுள்ள பயிர்க் கழிவுகளுக்கு தீ வைக்கும் நடைமுறை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பகுதியில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் எஞ்சியுள்ள பயிர்க் கழிவுகளுக்கு தீ வைக்கும் நடைமுறை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>


தற்போது அதிகளவான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், வயல்களில் தீ வைப்பதால் தீ கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவும் அபாயம் காணப்படுகிறது.</p><h2>விவசாய நிலங்களுக்கும் தீ பரவும் வாய்ப்பு</h2><p>


அத்துடன், வயல் பகுதிகளில் தீ வைப்பதால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், அதிகளவு புகை வெளியேறுவதன் காரணமாக சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e170c79f-ab0e-44d3-97f3-21de0dd1741a/26-6a91594ec1a5b.webp' /></p><p> </p><p> 

அறுவடைக்குப் பின்னர் பயிர்க் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், அதிக வெப்பநிலை நிலவும் காலங்களில் வயல்களுக்கு தீ வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p> 

மேலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வயல்களுக்கு தீ வைப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-28T09:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறுவடைக்குப் பின் வயல்களுக்கு தீ வைப்பு - கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/post-harvest-field-fires-threaten-livestock-1787907692"></link>
            <id>https://tamilwin.com/article/post-harvest-field-fires-threaten-livestock-1787907692</id>
            <summary type="text">தற்போது அதிகளவான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், வயல்களில் தீ வைப்பதால் தீ கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது அதிகளவான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், வயல்களில் தீ வைப்பதால் தீ கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவும் அபாயம் காணப்படுவதாக கந்தளாய் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>அத்துடன், வயல் பகுதிகளில் தீ வைப்பதால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், அதிகளவு புகை வெளியேறுவதன் காரணமாக சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>தீ வைப்பதை தவிர்த்தல்</h2><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில், அறுவடைக்குப் பின்னர் பயிர்க் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பில்
விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75c4b931-c93c-4f89-9d20-724927ef60fe/26-6a9152f8f0a02.webp' /></p><p>அதிக வெப்பநிலை
நிலவும் காலங்களில் வயல்களுக்கு தீ வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p>
மேலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்
வயல்களுக்கு தீ வைப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூதரகங்களாகும் அரச அமைச்சர் பங்களாக்கள்! இறுதிக்கட்டத்தில் ஒதுக்கீடு பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministerial-bungalows-embassy-offices-soon-1787894594"></link>
            <id>https://tamilwin.com/article/ministerial-bungalows-embassy-offices-soon-1787894594</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள ஒன்பது அமைச்சர் பங்களாக்களை தூதரகங்களுக்காக ஒதுக்கீடு செய்யும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள ஒன்பது அமைச்சர் பங்களாக்களை தூதரகங்களுக்காக ஒதுக்கீடு செய்யும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், ஒன்பது தூதரகங்கள் சில காலமாக அமைச்சர் பங்களாக்களை கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனைத்தவிர, வர்த்தக நடவடிக்கைகளுக்காக மேலும் ஆறு அமைச்சர் பங்களாக்களை ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>அரசாங்கத்தின் பிரதான நோக்கம்&nbsp;</h2><p>
</p><p>
இதன்படி, நீதிமன்றங்களை நிறுவுவதற்கான தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் அமைச்சர் பங்களாக்களை ஒதுக்கீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86a24b66-7948-42c1-b5e0-a599a3f65edb/26-6a9150e00a2c5.webp' /></p><p>
</p><p>
அமைச்சர்களுக்காக எந்த அமைச்சர் பங்களாக்களையும் பயன்படுத்தக்கூடாது என்று அரசாங்கம் கொள்கை முடிவு எடுக்காததால், அவற்றிலிருந்து வருவாய் ஈட்டுவதும், பொருளாதார ரீதியாகப் பயனுள்ள திட்டங்களுக்கு அவற்றை பயன்படுத்துவதுமே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>

சமீபத்தில் மூன்று அமைச்சர் பங்களாக்களில் சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், மற்றொரு அமைச்சர் பங்களாக்கள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை - மன்னார் மறைமாவட்ட ஆயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-government-hospital-1787907535"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-government-hospital-1787907535</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி
செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி
செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்
நிற்க வேண்டும் என&nbsp;மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.</p><p>மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக
பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் (28.08.2026)
வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த பயிற்சி மருத்துவ அதிகாரிகளை
வரவேற்கும் நிகழ்வு காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட
பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.</p><p>

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>நல்ல சேவை செய்வது தான் நோக்கம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் நல்ல உறவுகளை ஏற்படுத்துவதும், எங்களுடைய மாவட்டம், இந்த வைத்தியசாலை
நல்ல முறையில் இன்னும் உயர்வது எங்களுடைய கையில் தான் இருக்கிறது. ஒற்றுமை
வேண்டும். தேவையற்ற பிரிவினைகள் இருக்கக் கூடாது. எங்களுக்கு நல்ல சேவை
செய்வதுதான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d40f9c-8824-4eda-bbe4-141e1fff2fce/26-6a91508c34bc5.webp' /></p><p> வருகின்ற புதியவர்களோடு இணைந்து
நல்ல முறையில் செயல்படுகின்ற நல்ல மனப்பான்மை எங்களுக்கு இருக்க வேண்டும்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மேலும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்ட
உள்ளதாகவும், அவர்கள் வெகு விரைவில் வருகை தர உள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. </p><p>மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர
வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக நான் எல்லா
முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மாவட்டத்தில் உள்ள ஒரு வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் செயல்பட முடியும்.</p><p>ஆகவே,
இந்த வேளையிலே அரசியல் ரீதியான ஆதரவையும், அரச ரீதியான ஆதரவையும் நாங்கள்
கேட்டு நிற்கின்றோம்.

மன்னார் மக்களுக்கு தேவையான விடயம். இதில் இரண்டாவது கருத்து இருக்கக்
கூடாது. தேவையற்ற குழப்பங்களும் இருக்கக் கூடாது.ஆகவே, அந்த குழப்பங்களையும்
நாங்கள் அறிவோம்.</p><h2>மறுக்கும் வைத்தியர்கள்</h2><p> </p><p>இதனுடைய பின்னணியையும் நாங்கள் அறிவோம்.

இருந்தும் சற்று அமைதியாக நாங்கள் இந்த முன்னெடுப்புகளை செய்கின்றோம். அதை விட
அமைதியாக வைத்தியசாலை பணிப்பாளர் தனது வேலைகளை செய்து கொண்டிருப்பது மிகவும்
போற்றத்தக்கது. எங்களுடைய மண்ணிலே அதாவது மன்னார் மாவட்டத்தில் நிறைய
வைத்தியர்கள் இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e83dfa3f-4656-4f3c-a6a3-2062df8ad74e/26-6a91508d35c56.webp' /></p><p> </p><p>அனைவரும் மாவட்டத்தில் கடமையாற்ற வர வேண்டும்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நிறைய வைத்தியர்கள் உள்ள போதும் தமது மண்ணில்
கடமையாற்ற இங்கு வருவதற்கு மறுக்கிறார்கள் என்று இங்குள்ள அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.</p><p> எனவே அவர்கள் இங்கே வந்து சேவை செய்ய வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் கூடியளவு எங்களுக்கு
நிறைய உதவி செய்கிறார்கள். இங்குள்ள வைத்தியர்களிடம் நல்ல முறையில் அணுகி
அவர்களுடைய அர்ப்பணத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:11:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவழி முதலீட்டு நுழைவாயில் சேவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-governor-urge-action-investment-challenge-1787902896"></link>
            <id>https://tamilwin.com/article/northern-governor-urge-action-investment-challenge-1787902896</id>
            <summary type="text">ஒருவழி முதலீட்டு நுழைவாயில்
(One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்
செயற்படுத்தப்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர்
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவழி முதலீட்டு நுழைவாயில்
(One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்
செயற்படுத்தப்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
நேற்று(27) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள
ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் முன்னேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>ஒருவழி முதலீட்டு நுழைவாயில்</h2><p>
வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகால நிர்வாகத்
தடைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த மே மாதம் 'வடக்கு முதலீட்டு
உச்சிமாநாடு – 2026' நிகழ்வின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு
ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0494067d-d131-46ea-a32c-a0baafa52a31/26-6a913f402ae20.webp' /></p><p>முதலீட்டாளர்கள் பல்வேறு திணைக்களங்களுக்கு தனித்தனியாகச் சென்று அனுமதிகளைப்
பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையைத் தவிர்த்து, ஒரே இடத்தின் ஊடாக தேவையான அரச
சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>நேற்றைய கலந்துரையாடலில், இந்தப் பொறிமுறையின் செயற்பாட்டு முன்னேற்றம், முதலீட்டு
முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகள், திணைக்களங்களுக்கு
இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவையை
வழங்குவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.</p><h2>மேம்படுத்துவதற்கான திட்டம்</h2><p>
</p><p>
அத்துடன், முதலீட்டு வாய்ப்புகள், அனுமதி நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய அரச
நிறுவனங்களின் சேவைகள் குறித்த தகவல்கள் தெளிவாகவும் இலகுவாகவும்
முதலீட்டாளர்களைச் சென்றடையும் வகையில் நுழைவாயிலை மேலும்
பயனுள்ளதாக்குவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a625d020-2dd1-4f36-8482-ae26b63ea51e/26-6a913f411665c.webp' /></p><p>முகாமைத்துவக்கழகம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன்
இந்த ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
கலந்துரையாடலில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா,
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல், வட மாகாணத்தின் 5 மாவட்டங்களினதும் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் வடக்கு முதலீட்டு
மாநாட்டின் திட்டத் தலைவர் இந்திர கௌசல் ராஜபக்ச, முகாமைத்துவக் கழகத்தின்
நிர்வாகப் பிரிவுத் துணைத் தலைவர் சாந்தி பகீரதன் மற்றும் முகாமைத்துவக்
கழகத்தின் யாழ்ப்பாணக்கிளைத் தலைவர் அநுராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T08:50:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வெளிநாட்டு கடனில் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-sri-lanka-foreign-debt-next-10-years-1787903697"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-sri-lanka-foreign-debt-next-10-years-1787903697</id>
            <summary type="text">அடுத்த 10 ஆண்டுகளுக்கு இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை எந்த பிரச்சினையுமின்றி திருப்பிச்செலுத்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 10 ஆண்டுகளுக்கு இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை எந்த பிரச்சினையுமின்றி திருப்பிச்செலுத்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கை மற்றொரு கடன் தவணை தவறுதலையோ அல்லது கடன் நெருக்கடியையோ சந்திக்காது என்றும் கூறியுள்ளார். </p><p>

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதால், அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டு கடனின் அளவு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>நாட்டின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு&nbsp;</h2><p> 

இதற்கமைய, ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டிய அந்த கடன் தொகையை எந்த பிரச்சினையுமின்றி திருப்பி செலுத்துவதற்கு தேவையான மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பை நாடு உருவாக்கி வருகின்றதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46ae660b-d03e-46ec-8fc3-0b5ef45307cf/26-6a91458167b68.webp' />&nbsp;</p><p>
</p><p>
சுற்றுலா வருவாய், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து வரும் பணப்பரிமாற்றங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் கடன்கள் ஆகியவற்றின் ஆதரவுடன், நாட்டின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு இந்த ஆண்டின் இறுதியில் 8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>

நாட்டின் தற்போதைய மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் 8 பில்லியன் அமெரிக்க டொலராக உயரும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு, வரும் ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

இதன் விளைவாக, இலங்கை ஆண்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவான அந்நியக்கடன் செலுத்துதலை எந்த பிரச்சினையுமின்றி செய்ய முடியும் என்று வீரசிங்க கூறியுள்ளார்.</p><h2>மத்திய கிழக்கு நெருக்கடி</h2><p> 

மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், இலங்கையால் அத்தகைய பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77b020c5-fcab-4626-9f58-8c02ed36763d/26-6a91458231f40.webp' /></p><p>
இந்த ஆண்டின் முதல் பாதியில் இலங்கை 5 சதவிகித பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதை சர்வதேச அளவிலும் பாராட்டப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக பணவீக்கம் தற்காலிகமாக 7 சதவீதமாக உயர்ந்திருந்தாலும், மத்திய வங்கியின் பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் அது 5 சதவீத இலக்கு நிலைக்கு திரும்பும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T08:23:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலவாக்கலை பேருந்து நிலையத்தில் பாரிய குளவிக்கூடு - அச்சத்தில் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wasp-nest-at-thalawakkala-busstand-passengers-fear-1787900198"></link>
            <id>https://tamilwin.com/article/wasp-nest-at-thalawakkala-busstand-passengers-fear-1787900198</id>
            <summary type="text">நுவரெலியா - தலவாக்கலை
பேருந்து நிலையத்தில் பாரிய
குளவிக்கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது.

நாளாந்தம் பல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - தலவாக்கலை
பேருந்து நிலையத்தில் பாரிய
குளவிக்கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையக்
கட்டடத்தின் நாவலப்பிட்டி பேருந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் இந்த பாரிய குளவிக்கூடு அமைந்துள்ளது.</p><h2>பாதுகாப்பு அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
குறித்த குளவிக் கூடு கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில்
காணப்படுவதாகவும், இதுவரை பொதுமக்களுக்கு குளவிக் கொட்டு சம்பவங்கள்
இடம்பெறவில்லை எனவும் அங்கு கடமையாற்றும் பேருந்து சாரதிகள் மற்றும்
நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில், குளவிக் கூட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், ஒரே
நேரத்தில் அதிகளவான குளவிகள் வெளியேறி பொதுமக்களை தாக்கக்கூடிய அபாயம்
காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a629f59-e67c-4125-99bb-c38c9afa3b70/26-6a913a17b98e7.webp' /></p><p>
குறிப்பாக, பேருந்துகளின் தொடர்ச்சியான இயக்கம், அதிர்வுகள் மற்றும் அதிகளவான
மக்கள் நடமாட்டம் காணப்படும் இந்த இடத்தில், குளவிக்கூடு அமைந்திருப்பது
எதிர்காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.</p><p>

குளவிகள் தமது கூட்டை பாதுகாக்கும் இயல்பைக் கொண்டுள்ளதால், கூட்டை நேரடியாக
கலைப்பது அல்லது அதற்கு இடையூறு ஏற்படுத்துவது குளவிகளின் தாக்குதலைத்
தூண்டக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>குளவிக்கூட்டை அகற்றல்</h2><p>
</p><p>
மலையகத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலர்
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அதிகளவில்
ஒன்றுகூடும் தலவாக்கலை பேருந்து நிலையத்தில் காணப்படும் இந்த குளவிக் கூட்டை
அதிகாரிகள் உடனடியாக அவதானத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7d5d20-180f-4510-9f6c-962c620b6397/26-6a913a188e2b2.webp' /></p><p>அதேவேளை உரிய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பாதுகாப்பு
நடவடிக்கைகளுடன், குளவிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>தற்போது ஆபத்து ஏற்படவில்லை என்பதால் எதிர்காலத்திலும் ஆபத்து ஏற்படாது என
அலட்சியப்படுத்தாமல், மக்கள் அதிகம் கூடும் பொது இடம் என்பதால்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என&nbsp; சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசுக் காரில் சட்டவிரோத மதுபானம் கடத்தல்! இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-arrested-smuggling-illegal-liquor-luxury-car-1787900918"></link>
            <id>https://tamilwin.com/article/two-arrested-smuggling-illegal-liquor-luxury-car-1787900918</id>
            <summary type="text">வென்னப்புவையில் இருந்து பாணந்துறை வரை சொகுசுக் கார் ஒன்றில் சட்டவிரோத மதுபானம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வென்னப்புவையில் இருந்து பாணந்துறை வரை சொகுசுக் கார் ஒன்றில் சட்டவிரோத மதுபானம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வாடகைக்கு பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து பாணந்துறை பகுதிக்கு சட்டவிரோத மதுபானம் கடத்தப்படுவதாக மேல் மாகாண குற்றத் தடுப்புபிரிவுக்கு இரகசியத்தகவல் கிடைத்திருந்தது.&nbsp;</p><h2>பொலிஸாரால் கைப்பற்றல்</h2><p>அதனடிப்படையில் ஹொரணை அருகே கிந்தெல்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்டபோது, அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு சட்டவிரோத மதுபானப் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41ef187d-9af8-4eba-9d8e-7c5d15550fd8/26-6a913de57e458.webp' /></p><p>
இதன்போது 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் 8 பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. </p><p>அதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபாய் என்று கூறப்படுகின்றது. </p><p>அதனையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோய் தடுப்பூசிகள் தேக்கம் - அரச நிறுவனங்களின் அலட்சியத்தால் தாறுமாறாக உயரும் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cancer-vaccines-in-a-backlog-1787902615"></link>
            <id>https://tamilwin.com/article/cancer-vaccines-in-a-backlog-1787902615</id>
            <summary type="text">சுகாதார அமைச்சின் கீழுள்ள இரண்டு அரச நிறுவனங்களின் அசமந்தப் போக்கு காரணமாக அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சுமார் 1,60,000 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார அமைச்சின் கீழுள்ள இரண்டு அரச நிறுவனங்களின் அசமந்தப் போக்கு காரணமாக அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சுமார் 1,60,000 புற்றுநோய் தடுப்பூசிகள் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்சனை காரணமாகவே, குறித்த 1,60,000 அளவிலான புற்றுநோய் தடுப்பூசி மருந்துகள், மருத்துவ விநியோகப் பிரிவின் சேமிப்புக் களஞ்சியங்களில் தேங்கியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><h2>

கள்ளச் சந்தையில் 25,000 ரூபாய்க்கு விற்பனை</h2><p>

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் மருத்துவ விநியோகப் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட ஒருங்கிணைப்புப் பிழையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளது என்று குறித்த மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e6f605b-329e-43bf-8523-e90d9beed329/26-6a913b0013689.webp' /></p><p>

புற்றுநோய் தடுப்பூசி அடங்கிய பெட்டியில் தேவையான அனைத்து தகவல்களும், சிலிண்டரின் முன்புறத்தில் உள்ள சரியான விலைச்சீட்டிலும், அதாவது உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதி திகதி மற்றும் பொருளின் தரம் ஆகியவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>

இருப்பினும், சிலிண்டரின் பின்புறத்தில் உள்ள விலைச்சீட்டில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்சனை காரணமாக, மருத்துவ விநியோகப் பிரிவு இந்த இருப்பை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.</p><p> 

சுமார் 900 ரூபா விலையுள்ள இந்தத் தடுப்பூசி, தற்போது கள்ளச் சந்தையில் 25,000 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகவும், அந்த விலையில் கூட இதனைக் கொள்வனவு செய்வது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:38:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டே நாட்களில் கோடிக்கணக்கில் வருமானம்: அதிவேக நெடுஞ்சாலையில் குவிந்த வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/expressways-generate-over-rs-124-million-1787893587"></link>
            <id>https://tamilwin.com/article/expressways-generate-over-rs-124-million-1787893587</id>
            <summary type="text">கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபா வருமானம் ஈட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. </p><p>இந்த இரு நாட்களிலும் மொத்தம் 325,316 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.&nbsp;</p><h2>120 மில்லியன் ரூபா வருமானம்</h2><p>

ஓகஸ்ட் 27ஆம் திகதி 161,553 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 64,164,930 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337fbe5f-0ca5-4636-8236-6042c542366f/26-6a9117554188a.webp' /></p><p>
இந்தக் காலப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (E01) மற்றும் வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/GbmpCCFkr_w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட மருத்துவர்களுக்கான புதிய சேவைப் பிரிவு - அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-service-unit-for-specialist-doctors-1787902075"></link>
            <id>https://tamilwin.com/article/new-service-unit-for-specialist-doctors-1787902075</id>
            <summary type="text">விசேட மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த விசேட ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த விசேட மருத்துவர் ஆர்.ஞானசேகரம், சுமார் 15 முதல் 20 ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு நீண்டகாலத் தேவை நிறைவேற்றப்பட்டதில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மேலும் தரமான மற்றும் பொறுப்பான விசேட மருத்துவ சேவைகளைப் பெற வழிவகுக்கும் என்று விசேட மருத்துவர் ஆர்.ஞானசேகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>இலங்கையின் மருத்துவ சேவை</h2><p>

மேலும், இந்தப் புதிய சேவைப் பிரிவு இலங்கையின் மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5badc3ad-87ed-42d3-84bb-7c1242422ae6/26-6a9139696e0bf.webp' /></p><p>
</p><p>
இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, அதற்கான தேவையான தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும், அதை நனவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் விசேட மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் மருத்துவர் ஞானசேகரம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:32:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்த விவகாரம்: நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட தயாராகும் அரசாங்கம்! சம்பிக்க சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/champika-ranawaka-statement-about-constitution-1787900551"></link>
            <id>https://tamilwin.com/article/champika-ranawaka-statement-about-constitution-1787900551</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய
தரப்பினரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய
தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீள பெறப் போவதில்லை என அவர்
குறிப்பிடுவது நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டுச் செயற்படத் தயாராக இருப்பதையே
மறைமுகமாகக் காட்டுகின்றது என்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்
முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்று (27.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>சர்வதேச மட்டங்களில் கடுமையான எதிர்ப்பு</h2><p>

அவர் மேலும் கூறுகையில், எவ்விதமான விரிவான கலந்துரையாடல்களும் இல்லாமல் நீதிபதிகளின் பதவிக்காலத்தை
இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்குத் தேசிய மற்றும்
சர்வதேச மட்டங்களில் கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d083510-940a-44d9-8add-495be15e5d7c/26-6a91361f4ac7b.webp' /></p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு, இந்த தீர்மானத்தை மீள் பரிசீலிக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>நீதிபதிகளின் பதவிக்காலம்</h2><p>
இந்த சட்டமூலம் தற்போது உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள
பின்னணியில், எவருக்காகவும் அதனை மீளப்பெறப் போவதில்லை என ஜனாதிபதி கூறுவது,
நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட அரசாங்கம் தயாராகின்றது என்பதையே
வெளிப்படுத்துகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa7eb7d0-00d7-467e-a373-2fa05aad436d/26-6a91362007777.webp' /></p><p>

நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பது அரசாங்கத்திற்கு மட்டுமே
சாதகமாக அமையுமே தவிர, நாட்டு மக்களுக்கு அதனால் எந்தவிதப் பயனும் கிடைக்கப்
போவதில்லை. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நீதித்துறையை
மாற்றியமைக்கும் இவ்வாறான முயற்சிகள் முற்றிலும் தவறானவை என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய மின்படலங்கள் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: காலநிலை மாற்றத்தால் புதிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-to-users-of-solar-panels-1787900844"></link>
            <id>https://tamilwin.com/article/notice-to-users-of-solar-panels-1787900844</id>
            <summary type="text">வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்படலங்களை, காலை 8.00 மணி முதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்படலங்களை, காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>

தற்காலிகமாக இடைநிறுத்தம்</h2><p>இதன்படி, கடந்த 27ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை குறித்த 300 கிலோவோட்டிற்கும் அதிகமான உற்பத்தித் திறன் கொண்ட மின்படலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06416e73-c3b8-4a2a-80fe-d70489da3501/26-6a9133ff568cc.webp' /></p><p> மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையில் சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் தேசிய மின் கட்டமைப்புடன் அதன் இணைப்பு தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.</p><p>

இதற்கமைய, 300மறுக்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அவற்றின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vSxBLvrRRhQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மல்வத்து - அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-receive-blessing-asgiri-mahanayake-monks-1787898917"></link>
            <id>https://tamilwin.com/article/president-receive-blessing-asgiri-mahanayake-monks-1787898917</id>
            <summary type="text">கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா
விழாவில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா
விழாவில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு
மகா நாயக்க தேரர்கள் உட்பட அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.</p><p>ஜனாதிபதி குறித்த விஜயத்தை நேற்றைய தினம்(27.08.2026) மேற்கொண்டிருந்தார்.</p><h2>தேரர்களிடம் ஆசி பெற்ற&nbsp;ஜனாதிபதி </h2><p>
</p><p>
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து தரப்பின்
மகா நாயக்க&nbsp; திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகா நாயக்க
தேரரைச் சந்தித்து ஆசி பெற்றமையுடன், அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடலிலும்
ஈடுபட்டுள்ளார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, மல்வத்து தரப்பின் அனுநாயக அதிவணக்கத்துக்குரிய
திம்புல்கும்புரே விமலதம்ம அனுநாயக தேரரையும் சந்தித்து, அவரிடமும் ஆசி
பெற்றதோடு சிறுகலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0db8498-50ae-4392-8f27-2f10e51f3460/26-6a912fd8130ea.webp' /></p><p>இதனை அடுத்து அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி,
அஸ்கிரி தரப்பின் மகா நாயக்க வராகொட ஸ்ரீ ஞானரதன மகா
நாயக்க தேரரின் நலன் விசாரித்ததோடு அவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
</p><p>மேலும் மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்துவ வைத்தியர் ஹர்ச சுரங்கவும் இந்தச் சந்திப்பில்
இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:02:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை! அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1787898938"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1787898938</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள்
முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக
மக்களின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள்
முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக
மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்றைய தினம் (27.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசமைப்புத் திருத்தம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 22ஆவது அரசமைப்புத் திருத்தம் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும்
கேட்டறிந்த பின்னரே கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி கூறுவது உண்மைக்குப்
புறம்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e5cf78-c719-4d23-9016-cf4dca1da3fb/26-6a9130bf1232e.webp' /></p><p> </p><p>நாட்டின் நீதியரசர்கள், நீதிச் சேவை ஆணைக்குழு, இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம், நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும்
இலங்கை சட்ட ஆணைக்குழு என எந்தவொரு முக்கிய தரப்பினருடனும் அவர் இது குறித்து
எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது குறித்துக் கலந்துரையாட ஏப்ரல் மாதத்திலேயே
நேரம் கோரியிருந்த போதிலும், அமைச்சரவை ஒப்புதல் பெற்று வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்ட பின்னரே அவர்களுக்குச் சந்திப்பு வாய்ப்பளிக்கப்பட்டது.</p><h2>ஆலோசனை</h2><p> </p><p>தான்
கூறுவது தவறு என்றால், எந்தெந்த நாள்களில் எந்தெந்தத் தரப்பினருடன் ஆலோசனை
நடத்தப்பட்டது என்ற விவரங்களை ஜனாதிபதி உடனடியாக வெளியிட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c434b7c-b9c5-4035-ae3d-6cc8f67ce1ff/26-6a9130bfdb2eb.webp' /></p><p>

ஜனாதிபதி திறந்த மனதுடன் செயற்படாமல் தன்னிச்சையாக எடுத்துள்ள
இத்தீர்மானத்தின் விளைவை இறுதியில் முழு நாடும் அனுபவிக்க நேரிடும்.
</p><p>
5 வருட காலத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையின்படி ஒரு மக்களின் பிரதிநிதியாக
மட்டுமே ஜனாதிபதி செயற்பட முடியுமே தவிர, நாட்டின் உரிமையாளரைப் போலச் செயற்பட
முடியாது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்: 472 பேர் பலி - 1 535 பேர் காணாமல் போனதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-toll-in-nepal-floods-rises-1787899767"></link>
            <id>https://tamilwin.com/article/death-toll-in-nepal-floods-rises-1787899767</id>
            <summary type="text">நேபாளம் - சீன எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் - சீன எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது. </p><p>

மேலும், 1,535 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 469 பேரும், திபெத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
 இயற்கைப் பேரழிவு</h2><p>
கடந்த 26ஆம் திகதி பாறைகள், பனி, மண் மற்றும் பெருக்கெடுத்த நீர் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பட்ட இயற்கைப் பேரழிவினால் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், “வான்டர்” என்ற வர்த்தக செயற்கைக்கோள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், வெள்ளத்திற்கு முன்னரும் பின்னரும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Our thoughts are with the communities affected by this week’s devastating flash floods in Nepal. <br><br>To support ongoing response and recovery efforts, Vantor has activated its Open Data Program, providing free access to high-resolution satellite imagery for frontline organizations… <a href="https://t.co/RqQJdqAghr">pic.twitter.com/RqQJdqAghr</a></p>&mdash; Vantor (@vantortech) <a href="https://x.com/vantortech/status/2093038515927842948?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி எடுக்கப்பட்ட படங்களில், ஆற்றங்கரையில் அமைந்திருந்த பல அடுக்குகளைக் கொண்ட பெரிய எல்லைக் கட்டிடம், சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன.</p><h2>

வர்த்தக செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள்</h2><p>

ஆனால், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி, அதாவது பேரழிவு ஏற்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படங்களில், அந்த உள்கட்டமைப்புகளில் பெரும்பாலானவை பாறைகள், மண் மற்றும் இடிபாடுகளால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728aac89-81e9-46b2-a4e0-d509bc20daad/26-6a9130cfb93e9.webp' /></p><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட ஏனைய செயற்கைக்கோள் படங்களிலும் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதையோ அல்லது இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளதையோ காண முடிகிறது.
</p><p>
இந்தப் பேரழிவைத் தொடர்ந்து, நேபாளத்தில் 977 பேரும், திபெத்தில் 558 பேரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இன்னும் கண்டுபிடிக்கப்படாதவர்களில், அப்பகுதி வழியாகப் பயணித்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் உட்பட குறைந்தது 540 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மருந்தகம் சுற்றிவளைப்பு - கைப்பற்றப்பட்டுள்ள மருந்துகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pharmacy-selling-banned-drugs-raided-in-colombo-1787897393"></link>
            <id>https://tamilwin.com/article/pharmacy-selling-banned-drugs-raided-in-colombo-1787897393</id>
            <summary type="text">அரசாங்க மருத்துவமனைகள் தவிர வேறெந்த இடத்திலும் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்று கொழும்பில் சுற்றிவளைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்க மருத்துவமனைகள் தவிர வேறெந்த இடத்திலும் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்று கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><p>

கொழும்பு - மருதானை பிரதேசத்தில் அமைந்திருந்த மருந்தகம் ஒன்றே இவ்வாறு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><h2>போதைப்பொருளுக்கு பயன்படுத்தும் மாத்திரைகள்</h2><p>

குறித்த மருந்தகத்தில் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மருத்துவரொருவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகளும் மருதானை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, நரம்பியல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd6073c-236f-4504-ac35-c254f9e843d8/26-6a912b1b476ac.webp' /></p><h2>8 வகை மருந்துகள் கைப்பற்றல்</h2><p>மேலும், அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ விநியோகப் பிரிவினால் வழங்கப்படும், தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட 8 வகையான மருந்துகளும் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன. உரிய தகுதிகள் இல்லாத ஒருவரால் இந்த மருந்தகம் நடத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்காக வழங்கப்படும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்த மருந்தகத்திற்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு துரித விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும் - நீதி அமைச்சர் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-overcrowding-will-decrease-in-next-months-1787897609"></link>
            <id>https://tamilwin.com/article/prison-overcrowding-will-decrease-in-next-months-1787897609</id>
            <summary type="text">அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை
விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது
ஒன்றரை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை
விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது
ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்
என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்துள்ளார்.</p><p>

அநுராதபுரம் சிறைச்சாலையை நேற்று(27.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்கள்</h2><p>மேலும் கூறுகையில்,

"அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் கிடைப்பதில் நீண்டகாலமாக ஏற்பட்டுவந்த
தாமதம் காரணமாகவே, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 23
ஆயிரம் கைதிகள் விசாரணைகள் முடிக்கப்படாமல் தொடர்ந்தும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4511c554-5d29-42a6-b7db-3c8bdc32e383/26-6a912b4b84d59.webp' /></p><p>இந்த நிலைமையை மாற்றியமைக்கும் பொருட்டு, அரச பகுப்பாய்வாளர்
திணைக்களத்துக்குப் புதிதாக 70 அதிகாரிகள் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன்
மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை துரிதமாக
வழங்கப்பட்டு வருகின்றன.
</p><p>
கைதிகளின் அடிப்படைப் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் உயிர் மற்றும்
உடைமைகளைப் பாதுகாப்பதை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக அனைத்துச்
சிறைச்சாலைகளிலும் பிரத்தியேகமான கூட்டுப் பொறிமுறை ஒன்றையும் அரசு தற்போது
நிறுவியுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது! சுட்டிக்காட்டும் சமன் ரத்னப்பிரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saman-ratnapriya-statement-1787897371"></link>
            <id>https://tamilwin.com/article/saman-ratnapriya-statement-1787897371</id>
            <summary type="text">முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை
ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசாங்கம் கூறிவரும் கருத்துக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை
ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசாங்கம் கூறிவரும் கருத்துக்கள்
முற்றிலும் பொய் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய
சுட்டிக்காட்டினார்.
</p><p>
கொழும்பில் நேற்று (27.08.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே
அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஊழல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் எந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன
என்பது கூட இந்த அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இவ்வாறான வழக்குகள் அனைத்தும்
நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே
நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a1e903-6070-4e62-a01b-b4475e384058/26-6a9128f434585.webp' /></p><p>

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை ஆரம்பத்தில் உயர்
நீதிமன்றத்துக்கே கொண்டுவரப்பட்டது. அதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகள்
காரணமாகவே, பின்னர் அது மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் அதன் கீழ் உள்ள
நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.</p><h2>நிலுவையில் உள்ள வழக்குகள்</h2><p> </p><p>இதில் 10,000 வரையிலான வழக்குகள் மட்டுமே உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு
நீதிமன்றங்களில் உள்ளன. எஞ்சிய 10 இலட்சத்து 90 ஆயிரம் வழக்குகள் அனைத்தும்
கீழ் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c210e1b-e09d-4013-b88a-680e028fdc6b/26-6a9128f5275cf.webp' /></p><p>
</p><p>
கீழ் நீதிமன்றங்களிலேயே அதிகளவிலான நீதிபதி வெற்றிடங்கள் காணப்படுகின்ற
போதிலும், கடந்த எட்டு மாதங்களாக அரசு அந்த வெற்றிடங்களை நிரப்பாமல்
வைத்துள்ளது.</p><p> </p><p>அதை முறைப்படி நிரப்பாமல், வெறும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன்
மூலம் நீதிமன்றப் பிரச்சினைகளுக்கோ அல்லது மோசடிக்காரர்களைச் சட்டத்தின் முன்
நிறுத்துவதற்கோ எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:21:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது - சுனில் ஹந்துன்னெத்தி எம் பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-national-salt-co-new-building-inaugurated-1787893101"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-national-salt-co-new-building-inaugurated-1787893101</id>
            <summary type="text">கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என தொழில்துறை மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.</p><p> 

நேற்று(27.08.2026) நடைபெற்ற மன்னார் தேசிய உப்பு நிறுவனம் புதிய நிர்வாகத் தொகுதி மற்றும் களஞ்சியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>2 கோடியே 58 இலட்சம்&nbsp;ரூபா&nbsp;ஒதுக்கீடு</h2><p>
</p><p>மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்திற்கு காலடி எடுத்து வைக்கும் பொழுது, நடப்பு அரசாங்கத்தின் ஒரு அமைச்சராக நான் வருகைத்தந்திருந்தேன். </p><p>இன்று பல பேரையும் இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. 

அதே நேரத்திலே, நான் இந்த இடத்தில் பழைய மன்னார் உப்பு கூட்டுத்தாபனத்தின் கட்டிடத் தொகுதியின் ஒரு புகைப்படத்தை பார்த்தேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/145a2ea6-8e91-4283-bb45-6eb2f5f01c1b/26-6a911f29965fa.webp' /></p><p>இதனையடுத்து இந்த உப்பளத்தின் 4,000 ஏக்கர் நிலப்பரப்பையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற தேவைப்பாடு எங்களுக்கு இருந்தது. 

இதற்காக நாங்கள் 2 கோடியே 58 இலட்சம் ரூபாவை திரைசேரியிலிருந்து ஒதுக்கீடு செய்து இந்தக் கட்டிடத்தொகுதியை நாம் அமைத்திருக்கிறோம்.</p><p>
இந்த உப்பு நிறுவனத்திற்காக நாம் ஒதுக்கிய இந்தப் பணம், உங்களது வியர்வையினால் பெறப்பட்ட பணமாகும். அதாவது, நீங்கள் உற்பத்தி செய்த உப்பினை விற்று பெற்ற இலாபத்தினால் திரைசேரிக்கு வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.</p><h2>தேசிய உப்பு உற்பத்தி</h2><p> </p><p>

ஆகவே, இது உங்களுடைய சொத்து.உங்களது உழைப்பினால் இந்தப் பணம் சம்பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் சந்தோஷத்துடன் தெரிவிக்க வேண்டும்.
</p><p>
அதுமட்டுமல்லாமல், உங்களுக்குத் தெரியும், உப்பு இல்லாமல் உணவு இல்லை. ஆகவே, எல்லோருக்கும் உப்பு அத்தியாவசியமான ஒரு பொருள். ஆனால், எல்லோராலும் இந்த உப்பு உற்பத்தி செய்ய முடியாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c963eb4-ea81-4f9c-97a1-105bb7475178/26-6a911f2a865d2.webp' /></p><p>உப்பு உற்பத்தி செய்வதற்கு ஒரு காலம் தேவை. அதே நேரத்தில், சிறந்த சூரிய ஒளி, கடல் நீர் மற்றும் நல்ல காற்று கிடைக்கப் பெற வேண்டும். இதன் ஊடாகவே தூய்மையான உப்பை உற்பத்தி செய்ய முடியும்.
</p><p>
உங்களுக்குத் தெரியும், 788 மில்லியன் ரூபாய் நாங்கள் இந்த உப்பு உற்பத்திக்கு முதலீடு செய்து, அதில் 2 கோடியே 58 மில்லியன் ரூபாய்கள் எங்களுக்கு வருமானமாகக் கிடைக்க பெற்றிருக்கின்றது.
</p><p>
அதே நேரத்தில், இந்த தேசிய உப்பு உற்பத்தியில் 100க்கு 30 சதவீதமான உப்பு மன்னார் உப்பளத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் இந்த இடத்திலே ஞாபகமூட்டல் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது! பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-jayasinghe-explanation-regard-government-1787895821"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-jayasinghe-explanation-regard-government-1787895821</id>
            <summary type="text">அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு
எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த
ஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு
எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த
ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து
தெரிவிப்பதற்கு ராஜபக்சக்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது
என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மஹரகம பகுதியில் நேற்று (27.08.2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>அரசமைப்பின் 22ஆவது திருத்தம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினரே மக்கள் மத்தியில்
தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர். இந்தத் திருத்தம் நாட்டுக்கும்
நாட்டு மக்களுக்கும் முற்றிலும் சாதகமானதே தவிர எவ்விதத்திலும் பாதகமானதல்ல.
</p><p>
எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானோர் ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்கள்,
பலர் பிணையில் உள்ளவர்களுமாவர். கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான
விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதனாலேயே இவர்கள்
கலக்கமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c551454-1735-4071-9c35-5ef04227d07f/26-6a91249d1243c.webp' /></p><p> ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது அவர்களின் தனிப்பட்ட
பிரச்சினையே தவிர, அது மக்களின் பிரச்சினையல்ல என்றார்.</p><h2>நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை</h2><p>

இந்த நாட்டில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை ராஜபக்சக்களின்
காலத்தில் தான் முழுமையாக இல்லாமல் போனது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி
பண்டாரநாயக்கவை அவர்கள் முறையற்ற வகையிலேயே பதவி நீக்கம் செய்தனர். </p><p>அதற்காக
அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் பிரதி
அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:03:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா. மனித உரிமை பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-the-semmani-issue-at-the-human-rights-council-1787896255"></link>
            <id>https://tamilwin.com/article/un-the-semmani-issue-at-the-human-rights-council-1787896255</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி
செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய
நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி
செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் குறித்து அழுத்தம் பிரயோகிக்க
வேண்டும் என்று அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு
அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை
விடுத்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,


</p><h2>செம்மணியில் தடயவியல் அகழ்வாய்வுகள்</h2><p>
இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு அவுஸ்திரேலிய ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான
தருணம் இது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6272753d-362d-4772-b12f-422e828fb522/26-6a9123efafd85.webp' /></p><p>
</p><p>"இலங்கையில் யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் தடயவியல் அகழ்வாய்வுகளில் 500
இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>சில
எலும்புக்கூடுகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது, அவை குழந்தைகள் மற்றும்
சிறுவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.</p><p>

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தரவுகளின்படி இலங்கையில் நாடளாவிய ரீதியில்
சுமார் 20 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவற்றுள்
குறைந்தபட்சம் ஒரு புதைகுழி தொடர்பில் கூட முழுமையான விசாரணைகள்
நடத்தப்படவில்லை.</p><h2>சர்வதேச மன்னிப்புச்சபை ஆதரவு</h2><p>
</p><p>
மேலும், 1998ஆம் ஆண்டு முதன்முறையாகச் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச
ஆதரவுடனான சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்ததிலிருந்து செம்மணி விவகாரம்
ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b62a5ded-8532-4030-94d1-ed7af539628a/26-6a9123f061a0b.webp' /></p><p>
</p><p>
அண்மையில் செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தடயவியல் நிபுணர்களின் பங்கேற்புடன்
சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்
தொடரில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை
உறுதிப்படுத்த ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா உறுதியளித்திருந்தது.
</p><p>அந்த வாக்குறுதியை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கமைய, செம்மணி
தளத்தைப் பாதுகாத்தல், மனித எச்சங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுயாதீன
விசாரணைகளை உறுதிப்படுத்த இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுதல் போன்ற
நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று டேவிட்
ஷுபிரிட்ஜ் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:00:21+00:00</updated>
        </entry>
    </feed>
