<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-19T02:23:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-involved-in-illegal-money-transaction-arrested-1787104057"></link>
            <id>https://tamilwin.com/article/boy-involved-in-illegal-money-transaction-arrested-1787104057</id>
            <summary type="text">கொழும்பில் பணச் சலவைச் சட்டத்தின் கீழ் பதின்ம வயது இளைஞன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சட்டவிரோதமான உண்டியியல் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் பணச் சலவைச் சட்டத்தின் கீழ் பதின்ம வயது இளைஞன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சட்டவிரோதமான உண்டியியல் முறையில் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நபர் ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p> 

குற்றங்கள் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று மாலை வெள்ளவீதி பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

பணச் சலவை</b></h2><p>இந்த நிலையில் 10,467,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டமைக்கான முறையான ஆவணங்களை குறித்த இளைஞனால் உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d080aadc-aa87-402f-a035-6713ad26d6a0/26-6a850f0a1cab0.webp' /></p><p>பணச் சலவைச் சட்டத்தின் கீழ் மற்றும் போலியான 1000 ரூபாய் நாணயத்தாள்களுடனும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிருலப்பனை பகுதியை சேர்ந்த 19 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது. </p><p>குற்றங்கள் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-19T02:04:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் மகன் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய பல கோடிரூபா பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nadeem-basik-maithripala-sirisena-dehiwala-1787102942"></link>
            <id>https://tamilwin.com/article/nadeem-basik-maithripala-sirisena-dehiwala-1787102942</id>
            <summary type="text">பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல திடுக்கிடும் மற்றும் பயங்கர தகவல்கள் வெளிவருகின்றன.அந்த வகையில் அவரின் மகன் அரசியலில் ஈடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல திடுக்கிடும் மற்றும் பயங்கர தகவல்கள் வெளிவருகின்றன.</p><p>அந்த வகையில் அவரின் மகன் அரசியலில் ஈடுபட்டமை தொடர்பிலும் அவர் பல அரசியல் கட்சிகள் விகாரைகளுக்கு பணம் வழங்கிமையும் தெரியவந்துள்ளது. </p><p>
ஷிரான் பாசிக்கின் மகனான நதீம் பாசிக் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தெஹிவளை தொகுதி அமைப்பாளர் பதவியை பல கோடிகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கி பெற்றுக் கொண்டுள்ளதாக புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக தகவல்கள்
</p><p></p><h2>மைத்திரிக்கு கொடுத்த பல கோடி ரூபா</h2><p>
அமைப்பாளர் பதவியை பெற்றுக் கொண்ட பின்னர் அவர் தெஹிவளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே தனது பணிகளைச் செய்துள்ளார். அப்போது பல விகாரைகளுக்கு பண உதவி செய்துள்ளார்.</p><p>ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வந்த சந்தர்ப்பத்தில் இவரின் பெரும் தொகை பணம் ஒரு தேரரிடம் இருப்பதாக தகவல் உலாவியது.வெள்ளவத்தை ஹக்மன நந்தாலோக தேரரின் பெயரே அடிப்பட்டது. </p><p>ஹரக் கட்டாவின் பணம் தொடர்பிலும்&nbsp; இந்த தேரரே தொடர்பு பட்டார் என நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன். ஆனால் இன்றுவரை யாரும் பதிலளிக்கவில்லை. </p><p>எனவே,அந்த தேரரின் பெயர் இங்கேயும் அடிப்பட்டது.ஆனால் எவ்வித விசாரணைகளும் நடக்கவில்லை.
இலங்கையில் உள்ள ஒரு மரணச் சடங்கு உதவிச் சங்கம் கூட வருமானம் எங்கிருந்து வருகிறது, அது எவ்வாறு செலவிடப்பட்டது என்பதில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5898d6cd-72c0-4111-8d6e-97f5f683e645/26-6a8506e15f5ef.webp' /></p><p>ஆனால்,பில்லியன் கணக்கில் பணம் வரும் ஓர் அரசியல் கட்சி, எங்கிருந்து பணம் வந்தது, எதற்குச் செலவிடப்பட்டது என்பதைப் பகிரங்கப்படுத்துவதில்லையே மக்களும் அதைத் கேட்பதில்லை.
</p><p>எனவே, இந்த அரசியல் கட்சிகளுக்குப் பல்வேறு வழிகளில் பணம் வருகிறது. உளவு அமைப்புகள், போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள உலகக் குழுக்களிடமிருந்து பெரும் தொகை வருகிறது ஆனால் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. </p><p>
எனவே, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவரை இலங்கைக்குக் கொண்டுவந்தவுடனேயே,விசாரணையை மேற்கொள்வது பொலிஸார். </p><p>பொலிஸிலும் பழைய முறைகேடுகள் ஏதோவொரு வழியில் நடக்கக்கூடும். ஏனென்றால், நான் எப்போதும் கூறுவது போல, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை வழங்கி புதிய அரசியல்வாதிகளை உருவாக்கியிருந்தாலும்,</p><p>18 இலட்சம் அரச ஊழியர்களைப் புதிதாகக் கொண்டுவர முடியாதே.அதனால் இவ்வாறான மோசடிகளை எமக்கு உடன் நிறுத்த முடியாது என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T02:02:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள நாமல்! மகிந்த உட்பட பலர் கலக்கத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksas-shocking-behaviour-1787048452"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksas-shocking-behaviour-1787048452</id>
            <summary type="text">சமகாலத்தில் ராஜபக்சர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகாலத்தில் ராஜபக்சர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. </p><p>

மகிந்த வீட்டில் நடத்தும் கூட்டங்களின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மட்டுமல்லாமல் சில சந்தர்ப்பங்களில் மகிந்த ராஜபக்சவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நாமல் கருத்து வெளியிட்டு வருவதாக, அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது. </p><p>

கடந்த நாட்களில் விவசாயிகளை சந்தித்த சந்தர்ப்பத்திலும் கோட்டாபய ராஜபக்ச மீது நாமல் ராஜபக்சவினால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.</p><p> </p><h2><b>

நாமலின் பிரச்சார இயக்கம்</b></h2><p>நாமல் ராஜபக்ச முன்னெடுத்து வரும் பிரச்சார இயக்கம் குறித்து ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb224d2-4e7e-4bec-9667-323b6f5d22f4/26-6a85074781586.webp' /></p><p>மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாமல் இவ்வாறு செயற்பட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர். </p><p>

கோட்டாபய ராஜபக்ச தனது பிரச்சார இயக்கத்தின் அடிப்படையாக 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 04ஆம் திகதி அன்று வியத்மக அமைப்பை உருவாக்கினார்.</p><h3><b> 

கீழ்த்தரமான&nbsp;அரசியல் </b></h3><p>மருத்துவர் நாலக கொடஹேவ, பேராசிரியர் சன்ன ஜெயசுமன உள்ளிட்ட தரப்பினர் அந்த இயக்கத்தின் நிறுவனர்களாக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac0f0b8-621e-4695-bd56-fc0a492721b5/26-6a8507483f57c.webp' /></p><p>எனினும், நாமல் ராஜபக்சவின் பிரச்சார இயக்கம் மிலிந்த ராஜபக்ச, இராஜ் வீரரத்ன, அர்ஜுன் கமலநாத் போன்ற தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறான நிலையில் அரசியல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 

 </p>]]></content>
            <updated>2026-08-19T01:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் திணைக்களத்திலிருந்து விலகிய பெரும் தொகையினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-department-sri-lanka-1787098245"></link>
            <id>https://tamilwin.com/article/police-department-sri-lanka-1787098245</id>
            <summary type="text">பொலிஸ் திணைக்களத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூன் 24 ஆம் திகதி வரையிலான சுமார் 7 ஆண்டுகளில் 4,308 பொலிஸார் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் திணைக்களத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூன் 24 ஆம் திகதி வரையிலான சுமார் 7 ஆண்டுகளில் 4,308 பொலிஸார் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. </p><p>இவ்வாறு விலகியவர்களில் 3,936 ஆண் பொலிஸாரும் 372 பெண் பொலிஸார் என்றும் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் அதிகமானோர் கடந்த 2025 ஆம் ஆண்டிலேயே விலகியுள்ளனர். </p><p>அந்த ஆண்டில் மட்டும் 838 ஆண் அதிகாரிகளும் 49 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 887 பேர் சேவையிலிருந்து விலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 699 ஆண் அதிகாரிகளும் 59 பெண் அதிகாரிகளுமாக மொத்தம் 758 அதிகாரிகள் விலகியுள்ளனர்.
</p><h2>
</h2><p></p><h2>சேவையை விட்டு செல்வதற்கான காரணங்கள்</h2><p>தமது சேவைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஓய்வு பெறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் பங்களித்துள்ளன.</p><p> இது தவிர, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் -ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக 658 அதிகாரிகளைச் சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் மொத்தம் 30,815 வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதில் சாதாரண பொலிஸ் சேவையில் 28,164 வெற்றிடங்களும், விசேட அதிரடிப்படையில் (STF) 2,651 வெற்றிடங்களும் அடங்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a64f126-c104-4b16-8147-0f5c060c6f3b/26-6a84f488177bf.webp' /></p><p>வழக்கமான ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்ற நடைமுறைகளுக்கு அமைவாக இந்தக்வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்காக புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், பொலிஸ் அதிகாரிகளின் சேவையை மேம்படுத்துவதற்கான மனவலிமையை உயர்த்துவதற்கும் பொலிஸ் திணைக்களம் பல வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. </p><p>நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள், விடுதி வசதிகளை மேம்படுத்துதல், தொற்றா நோய்களைக் கண்டறிவதற்கான மருத்துவ முகாம்கள் மற்றும் தரமான மருந்துகளை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T00:17:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடியில் புதிய ஜனாதிபதி.. அநுரவுக்கு எதிராக கூடிய ஆறு கட்சிகளின் முடிவு என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rauf-hakeem-kalmunai-hospital-issue-1787082727"></link>
            <id>https://tamilwin.com/article/rauf-hakeem-kalmunai-hospital-issue-1787082727</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் ஊழியர்களில் சிலர் சீருடை அணியாமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் ஊழியர்களில் சிலர் சீருடை அணியாமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்றப்பட்டு, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p> </p><p>நாட்டில் பேசுபொருளாகிய இவ்விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா நேரடியாகத் தலையிட்டிருந்தார்.&nbsp;</p><p>

இந்நிலையில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவர் முன்னதாக&nbsp;ஹிஸ்புல்லா தொடர்பில் முன்வைத்திருந்த நையாண்டிக் கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>நாட்டிற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என்ற போதிலும், காத்தான்குடி பொறுத்த மட்டில்&nbsp;ஹிஸ்புல்லா தான் ஜனாதிபதி என குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>இது உட்பட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/C4qcoQhvYv8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T23:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று நீதிமன்றங்களின் பிடியில் சிக்கிய பிள்ளையான் - சுற்றிவளைக்கப்பட்ட சகாக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-pillayan-court-inquiry-1787078543"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-pillayan-court-inquiry-1787078543</id>
            <summary type="text">பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&amp;nbsp;

கிழக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்கில் தற்போது அவருக்கான தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பல முக்கிய ஆதாரங்களும் அவரின் சகாக்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.</p><p>தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன் காணொளி மூலமாக நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னிலைபடுத்தப்பட்ட போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.&nbsp;</p><p>இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XjU_g5Y62II" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T22:58:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களிடையே பரவும் கொடிய நோய்.. 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/salmonella-pacteria-in-uk-1787086349"></link>
            <id>https://tamilwin.com/article/salmonella-pacteria-in-uk-1787086349</id>
            <summary type="text">பிரித்தானியாவில் சால்மொனெல்லா பெக்டீரியா தொற்று பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் சால்மொனெல்லா பெக்டீரியா தொற்று பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளைப் பயன்படுத்தியமையினாலேயே இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.</p><h3>தீவிர சிகிச்சை</h3><p> </p><p>பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் கெஃபேக்கள் மற்றும் உணவகங்களில் உணவருந்தியவர்கள் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0b6ab87-1a23-4865-81fb-994a4ce3f906/26-6a84c8c9ea847.webp' /></p><p> அதேவேளை, பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகள் அல்லது கோழி இறைச்சி இதற்கு காரணமல்ல என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த தொற்றின் காரணமாக இதுவரை மொத்தம் 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 34 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இதில் இருவருக்கு இரத்தத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 1 வயதுக் குழந்தை முதல் 90 வயது முதியவர்கள் வரை அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T22:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை நிர்வாக பிரச்சினை விவகாரம்: வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-controversy-1787082183"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-controversy-1787082183</id>
            <summary type="text">கல்முனை வைத்தியசாலை நிர்வாக பிரச்சினையை அரசியல் ரீதியான பிரச்சினையாக மாற்றி இனங்களிடையே பிரிவினைவாதத்தை சில அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வைத்தியசாலை நிர்வாக பிரச்சினையை அரசியல் ரீதியான பிரச்சினையாக மாற்றி இனங்களிடையே பிரிவினைவாதத்தை சில அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கான சீருடை விடயத்தில் சில அரசியல்வாதிகள்&nbsp; இனரீதியான சர்ச்சையை ஏற்படுத்த முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு, சில வங்குரோத்து அரசியல்வாதிகள் நாட்டை பிரிவடைய செய்ய வேண்டும் என்றும் நாட்டின் ஆட்சியை மாற்ற வேண்டும் என்றும் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.</p><p>கல்முனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் சில அரசியல்வாதிகள் முகநுலில் தவறான பதிவுகளை வெளியிட்டு இனங்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க முயல்வதாகவும் குறிப்பிட்டார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_1pRnWV2G1s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T21:55:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/british-person-dies-in-sri-lanka-1787024856"></link>
            <id>https://tamilwin.com/article/british-person-dies-in-sri-lanka-1787024856</id>
            <summary type="text">மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த விகாரைக்கு வழிபாட்டுக்காக சென்ற இரண்டு பெண்கள், நபர் ஒருவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக விகாராதிபதிக்கு தெரிவித்துள்ளனர். </p><p>

இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p> </p><h2><b>சடலம் கண்டுபிடிப்பு</b></h2><p>சடலம் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் காலணிகள், தலைக்கவசம் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/064eb03c-13b6-4c25-a7ec-41a1db3bb7a6/26-6a847d6b34a2b.webp' /></p><p>குறித்த வெளிநாட்டவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் 52 வயதுடைய கர்தெரா ஒய்தப் எனப்படும் பிரித்தானிய பிரஜை என தெரியவந்துள்ளது. </p><p>

அவர் வருகை தந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் வெலிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.
</p><h3><b>
 பொலிஸார்&nbsp;விசாரணை</b></h3><p>வாடகை அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு விகாரைக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d83b5b0-1f9d-4082-b668-549dde795091/26-6a847d6bdb79c.webp' /></p><p>குறித்த வெளிநாட்டவரின் விசா காலம் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப சோதனைகளில் தெரியவந்துள்ளது.</p><p> வெளிநாட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-18T20:59:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[2028இல் அநுர அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சிக்கல்.. ரணில் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-economy-ranil-warns-1787068190"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-economy-ranil-warns-1787068190</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 2027 மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2028ஆம் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 2027 மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
2028ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், நாட்டில் 15 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணிக் கையிருப்பு இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>
இந்த ஆண்டின் இறுதிக்குள் 8 பில்லியன் டொலர் கையிருப்பு இருக்கும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும், அது நிறைவேறினால், மேலும் 6 பில்லியன் டொலர் திரட்டப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, அந்த 6 பில்லியன் டொலரைத் திரட்டுவதற்கான ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>கடுமையான நெருக்கடி&nbsp;</h2><p>மேலும், "நாங்கள் வெளியேறியபோது, ​​பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் 6 பில்லியன் டொலரை சேமித்தோம். இந்தப் பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210cb5e3-79c6-4def-ab0c-215639c8c8e4/26-6a8484568dfbc.webp' /></p><p>2028க்குப் பிறகு நாம் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். 2028க்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த, நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 15 பில்லியன் டொலராக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போது, ​​​​6 பில்லியன் டொலர் மட்டுமே உள்ளது.&nbsp;</p><p> இன்றிலிருந்து நாம் 8 பில்லியன் டொலரை சேமிக்க வேண்டும். இந்த ஆண்டின் இறுதிக்குள் 8 பில்லியன் டொலர் இருக்கும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.</p><p>சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மார்ச் 2027இன் இறுதியில் முடிவடையும். நாம் சர்வதேச நாணய நிதியத்தில் தொடர்ந்து இணைந்திருப்போமா இல்லையா? அரசாங்கத்தின் திட்டம் என்ன?

இந்த நாட்டில் உள்ள பிரதான பிரச்சினை, நாம் மீண்டும் கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவோம் என்பதுதான்.</p><p> அரசியலமைப்பைத் திருத்தி, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதா வேண்டாமா? என்பது இல்லை, நமது கவனம் இங்கேதான் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T20:58:30+00:00</updated>
        </entry>
    </feed>
