<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-03T05:23:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் CCIB விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ccib-investigation-arundika-fernando-1788412093"></link>
            <id>https://tamilwin.com/article/ccib-investigation-arundika-fernando-1788412093</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB)தற்போது முன்னிலையாகியுள்ளது.

டுபாயிலிருந்து இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB)தற்போது முன்னிலையாகியுள்ளது.
</p><p>
டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் பகுதியாகவே அவர் இன்று (03) அழைக்கப்பட்டுள்ளார்.</p><h2>&nbsp;சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் வாக்குமூலம்&nbsp;</h2><p>

இதற்கமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தற்போது வாக்குமூலங்களை பதிவுசெய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec17e08f-363d-46ab-ae0b-2eadd881e1f6/26-6a99037734045.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவரது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:19:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரியாவைப் போல் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க முயற்சிக்கும் அரசாங்கம்! ஹர்ஷன ராஜகருணா எம்.பி. குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-election-harshana-rajakaruna-1788411008"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-election-harshana-rajakaruna-1788411008</id>
            <summary type="text">மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாகச்
சுமார் 20 ஆண்டுகள் தேர்தல்களின்றி வடகொரியாவைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை
முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாகச்
சுமார் 20 ஆண்டுகள் தேர்தல்களின்றி வடகொரியாவைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை
முன்னெடுக்க அரசாங்கம் முயன்று வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்றைய தினம் (02.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர்
மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு மக்களும் சர்வதேச சமூகமும்
வலியுறுத்தி வரும் நிலையில், அதனைப் புறக்கணித்துவிட்டு முழு உலகமும்
எதிர்க்கும் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d5934f4-ae81-4570-80be-7101c4024068/26-6a99026ecb608.webp' /></p><p> </p><p>ஒரேயொரு அரசியல் கட்சி மட்டுமே நாட்டை ஆட்சி செய்யும் ஒரு கட்சி
ஆட்சி முறையை அமைத்து, தேர்தல்கள் இன்றி நீண்ட காலம் ஆட்சியைத் தொடரவே அரசாங்கம் திட்டமிடுகின்றது.
</p><p>
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகக் கட்டமைப்புகள்
அழிக்கப்பட்டதாலேயே ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை பறிபோனது.</p><h2>சர்வாதிகாரப் பாதையை நோக்கி செல்லும் அரசாங்கம்</h2><p>
</p><p>
தற்போதைய அரசாங்கம் சட்டபூர்வமான முறையில் சர்வாதிகாரப் பாதையை நோக்கிச்
செல்வதாலேயே ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச அமைப்புகளும் இந்தத்
திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfce27cb-2836-43dc-8927-82eb08348d77/26-6a99026f7f285.webp' /></p><p>

எதிர்க்கட்சியினரே சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதாக
அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையானது. </p><p>மகாநாயக்க தேரர்கள், கத்தோலிக்க திருச்சபை
மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற முதன்மையான அமைப்புகள் ஏமாறும்
அளவுக்கு அறிவில்லாதவர்கள் அல்லர்.

அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் நாடு பாரிய சர்வதேச நெருக்கடிகளை
எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர் இடத்தில் பேரணி நிச்சயம்! பொதுஜன பெரமுன திட்டவட்டமாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-rally-in-anuradhapura-certain-minister-1788408608"></link>
            <id>https://tamilwin.com/article/protest-rally-in-anuradhapura-certain-minister-1788408608</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு அரசு பல்வேறு
நடவடிக்கைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு அரசு பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், அனுராதபுரத்தின் ஏதேனும்
ஓர் இடத்தில் இந்த போராட்டத்தை நடத்துவதை எவராலும் தடுக்க முடியாது என்றும்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித்
தலைமையகத்தில் நேற்றுப் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>தொழிலாளர்களின் குரலாக போராட்டம்&nbsp;</h2><p>

"கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் குரலாகவே
இந்த போராட்டம் அனுராதபுரத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. அனுராதபுர மாவட்ட
விவசாயிகளுக்குத் தேவையான உரம் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18b07b98-97cc-474c-bea2-ba1126ad27b0/26-6a98fc12e762d.webp' />&nbsp;</p><p> </p><p>வறட்சியான காலநிலையால் மக்கள்
சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். அரசின் மீதான மக்களின் எதிர்ப்பைக்
காட்டுவதற்காக 'சல் காது' அரங்கைக் கோரிய போதிலும், அரசு சட்டதிட்டங்களைச்
சுட்டிக்காட்டி மைதானத்தை வழங்க மறுத்துள்ளது.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வளர்ச்சி குறித்து
அரசுக்குச் பேரச்சம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே எங்களைத் தினமும் குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து அடக்குமுறைகளைப் பிரயோகிக்க
முயல்கின்றனர். </p><p>அரங்கம் மறுக்கப்பட்டாலும் அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர்
இடத்தில் போராட்டம் நிச்சயமாக நடைபெறும்." - என்றார்.
</p><h2>22ஆவது அரசமைப்பு திருத்தம்</h2><p>
22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் நீதிமன்றில்
இடம்பெற்றுவரும் நிலையில், இது நீதித்துறையின் சுயாதீனத்துக்கு
விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதை
அவர் ஆமோதித்துள்ளார்.</p><p>

நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது குறித்து மக்களுக்கு ஆட்சேபனை இல்லை
என்றாலும், நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் நிலவும் போது குறுக்கு வழியில் அரசு
தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வதையே மக்கள் எதிர்க்கின்றார்கள் என்று
குறிப்பிட்ட அவர், நாட்டின் உயர்ந்த நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும்
களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முறையற்ற குழாய்க் கிணறு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை - வடக்கு ஆளுநர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-governor-vedanayagan-s-announcement-1788409251"></link>
            <id>https://tamilwin.com/article/northern-governor-vedanayagan-s-announcement-1788409251</id>
            <summary type="text">எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில்,
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட
நடவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில்,
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
</p><p>
யாழ். பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம்
மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் ஆகியன இணைந்து ஏற்பாடு
செய்துள்ள 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப்பொருளிலான நிலத்தடி
நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி, நேற்று (02.09.2026) மாலை
நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகிலுள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன
வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. </p><p>இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக்
கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8acf25eb-405c-4565-b62d-fb3767d6b3e1/26-6a98f9c54ef11.webp' /></p><h2>யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர்&nbsp;</h2><p>அவர் மேலும் உரையாற்றுகையில், முந்தைய காலங்களில் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் மிகவும் தூய்மையாகக்
காணப்பட்டதுடன், மக்கள் கிணற்று நீரை நேரடியாகவே பருகி வந்தனர். ஆனால்
தற்போது, குடிதண்ணீருக்காக போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரை அதிக
விலைகொடுத்து வாங்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு மக்கள்
தள்ளப்பட்டுள்ளனர். </p><p>1950 களுக்குப் பின்னர் நிலத்தடி நீரை உறிஞ்சும் குழாய்க்
கிணறுகளின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளமை, முறையற்ற விதத்தில்
அதிகளவான குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டமை மற்றும் கழிவுநீர் நிலத்தடி
நீருடன் கலக்கின்றமை போன்ற காரணங்களால் நீரின் தரமும் அளவும் வெகுவாகப்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8feced75-8b98-47c7-9e19-523e29db885c/26-6a98f9c63547a.webp' /></p><p>

எனவே, குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட
நடவடிக்கைகளும், முறையான கண்காணிப்பு வழிமுறைகளும் உடனடியாக
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனைச் சாத்தியமாக்க உரிய தரப்பினருக்கு
அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.</p><h2>முறையான முகாமைத்துவ நடவடிக்கை</h2><p>
</p><p>
மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் திட்டங்களை விரிவுபடுத்துவதுடன், கழிவுநீர்
மற்றும் உவர் நீர் நன்னீருடன் கலப்பதைத் தடுக்க முறையான முகாமைத்துவ
நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05cf5768-3985-4677-abc2-b7bc12e6705b/26-6a98f9c70c598.webp' /></p><p>

நிலத்தடி நீரைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிநபரின் கூட்டுப் பொறுப்பாகும்.
விழிப்புணர்வுடன் செயற்பட்டு, எதிர்காலச் சந்ததியினருக்காக நமது நீர்
வளங்களைப் பாதுகாக்கும் இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு அனைவரும் முழுமையான
ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு! வாள்களும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-open-fire-on-three-wheeler-in-borella-1788409241"></link>
            <id>https://tamilwin.com/article/police-open-fire-on-three-wheeler-in-borella-1788409241</id>
            <summary type="text">பொரளை ,சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை பொருட்படுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.



அத்துடன் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை ,சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை பொருட்படுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p>



அத்துடன் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த ஐந்து சந்தேகநபர்களை&nbsp;பொலிஸார் உடனடியாக கைது தெரிவித்துள்ளனர்.</p><h2>வாள்களும் மீட்பு&nbsp;</h2><p>இதனையடுத்து முச்சக்கரவண்டியை சோதைனை நடத்தியதில் மூன்று வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7a0be85-9b65-4a29-8614-b8ed7c1af95a/26-6a98fa2faffaa.webp' />&nbsp;</p><p>இதற்கமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவு சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த மர்ம நபர்களால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-investigation-into-2-people-who-sought-bail-1788408708"></link>
            <id>https://tamilwin.com/article/cid-investigation-into-2-people-who-sought-bail-1788408708</id>
            <summary type="text">போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த இருவர் தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேல் நீதிமன்றத்தில் பிணை மனுக்களை தாக்கல் செய்ததாக கூறப்படும் இருவர் தொடர்பில் உடனடியாக விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

விசாரணையையடுத்து விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 மர்ம நபர்களால் சர்ச்சை</b></h2><p>வெல்லம்பிட்டியை சேர்ந்த நிமல் கருணாதிலக மற்றும் கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி அலெக்சாண்டர் ஆகிய இருவர் தொடர்பிலேயே விசாரணைகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be442de1-af60-4218-a5f1-6a3d0e5000da/26-6a98f61d765ef.webp' /></p><p>போதைப்பொருள் வர்த்தகர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக குறித்த இருவரும் தொழிலாகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பில் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கைகளை பரிசீலித்ததனை தொடர்ந்து நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45 சந்தேகநபர்கள் சார்பில் ஒரே வழக்கறிஞரின் ஊடாக பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு தொடர்பில் நீதிமன்றத்தில் வெளிவந்த தகவல்களையடுத்தே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p><p>

பிணை மனுதாரர் யார் என்பதை உறுதியாக உறுதிப்படுத்துவதற்காக அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><h3><b>
பிணை மனு</b></h3><p>இதன்போது, குறித்த பிணை மனுவைத் திரும்பப் பெற வழக்கறிஞர் அனுமதி கோரிய போதிலும், அதற்கு அனுமதி மறுத்த நீதிபதி, சந்தேகநபரையும் அவரது நெருங்கிய உறவினர்கள் இருவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து விடயங்களைக் விசாரித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da9d1e88-f6e3-4839-ac28-5413299d7f6a/26-6a98f61e27481.webp' /></p><p>பிணை மனுவை சமர்ப்பிப்பதற்காக நிமல் கருணாதிலக என்பவருக்குத் தாங்கள் எந்தவித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை எனவும், அத்தகைய நபர் எவரென்றும் தனக்குத் தெரியாது எனவும் சந்தேகநபரின் நெருங்கிய உறவினர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
</p><p>
இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பிணை மனுவை நிராகரிக்க நீதிபதி நடவடிக்கை எடுத்தார்.

மற்றொரு பிணை மனு வழக்கறிஞர் பிரபாஸ்வர பீரிஸ் ஊடாகச் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் இது போன்றதொரு விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>
இதன்போது, குறித்த போதைப்பொருள் வழக்கின் சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு அழைத்து, அவருக்காக பிணை மனுவை சமர்ப்பித்த நபர் தனக்குத் தெரிந்தவரா என நீதிபதி வினவியுள்ளார்.
</p><p>
அதற்குப் பதிலளித்த சந்தேகநபர், தனக்காக பிணை மனுவைச் சமர்ப்பித்த நபர் யார் என்பது தனக்குத் தெரியாது என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-03T04:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ராஜபக்சர்கள் யுகம்..! அரசாங்கம் சதி செய்வதாக நாமல் தரப்பு புலம்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rajapaksa-era-is-back-1788407617"></link>
            <id>https://tamilwin.com/article/the-rajapaksa-era-is-back-1788407617</id>
            <summary type="text">
மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்றையதினம்(02.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்து இழைத்த தவறை திருத்துவதற்கு தயாராகியுள்ளனர்.</p><h2>நாமலுக்கு வாய்ப்பு..</h2><p> 

இதன்படி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் முடிவு செய்துள்ள நிலையில், அதனை தடுப்பதற்கு இந்த அரசாஙக்ம் பல சதிகளை செய்து வருகின்றது.</p><p> 

நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும், மக்கள் இதனை தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c016b23d-abe1-4edb-bc34-8d714c3474c7/26-6a98f3f899e67.webp' /></p><p> </p><p> அரசாங்த்தின் மீதும், ஆட்சியாளர்களின் மீதும் மக்களுக்கு இப்போது நம்பிக்கைக் கிடையாது. 

மக்கள் இழைத்த தவறை சரிசெய்யும் பொருட்டு ராஜபக்சர்களின் ஆட்சியை மீளக் கட்டியெழுப்ப மக்கள் தயாராகியுள்ளனர்.
</p><p>
2029ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது மக்கள் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். இதனால் நாமல் ராஜபக்சவை எந்த வழியிலாவது நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-03T04:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரபல அரசியல்வாதியின் மகன் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muzammil-s-son-jamaldeen-arrested-at-the-airport-1788406442"></link>
            <id>https://tamilwin.com/article/muzammil-s-son-jamaldeen-arrested-at-the-airport-1788406442</id>
            <summary type="text">முன்னாள் ஆளுநரும் கொழும்பின் மாநகர சபையின் முன்னாள் மேயருமான ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகனான மொஹமட் இஷாம் ஜமால்தீன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஆளுநரும் கொழும்பின் மாநகர சபையின் முன்னாள் மேயருமான ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகனான மொஹமட் இஷாம் ஜமால்தீன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
நேற்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற விமானத்தில் லண்டன் செல்வதற்காக நேற்று பிற்பகல் 1.45 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த ஜமால்தீன் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><h2><b>
நிதி மோசடி </b></h2><p>47 வயதுடைய ஜமால்தீன், கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பயணத் தடை பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8197c097-fed9-4ccf-aef8-60cb0b246072/26-6a98efe1dacbe.webp' /></p><p>இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு அவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பிற்பகல் 4.30 மணியளவில் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>

மல்பெரி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் என தம்மைக் காட்டிக்கொண்டு, 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-03T03:56:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு கொள்கலன் முனையத்தின் 2ஆம் கட்டப்பணிகளில் முறைகேடு! சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irregularities-work-eastern-container-terminal-1788406805"></link>
            <id>https://tamilwin.com/article/irregularities-work-eastern-container-terminal-1788406805</id>
            <summary type="text">கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பல
குறைபாடுகளும் முறைகேடுகளும் நிகழ்ந்துள்ளதாக அங்கு
பணியாற்றும் பொறியியலாளர்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பல
குறைபாடுகளும் முறைகேடுகளும் நிகழ்ந்துள்ளதாக அங்கு
பணியாற்றும் பொறியியலாளர்களும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும்
சுட்டிக்காட்டுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் நிர்மாணப்
பணிகள் தொடர்பில் அதன் பொறியியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த
கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>3 முறை காலநீடிப்பு</h2><p>

"2022 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டு 2025 ஜனவரி 3ஆம் திகதிக்குள்
நிறைவடையவிருந்த இந்த திட்டத்தை இதுவரை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை 3 முறை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c23baf7-8677-4082-bd70-4800276fbc7a/26-6a98ee2f64686.webp' /></p><p> </p><p>எனினும், இந்த எந்தவொரு
காலநீடிப்புக்கும் அமைச்சரவை அனுமதிகூடப் பெறப்படவில்லை.

திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக் குழுவும் தனித்தனியாக செயற்பட
வேண்டும் என்ற விதி மீறப்பட்டு, பொறியியலாளர்கள் இரு பிரிவுகளுக்கும்
சேவையாற்றும் நபர்களாக மாற்றப்பட்டுள்ளதால் நடுநிலைப் பேணலில் சிக்கல்கள்
எழுந்துள்ளன.</p><p>

வேலைத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை குறித்துப் பாரதூரமான சந்தேகங்கள்
எழுந்துள்ளமை குறித்து துறைமுக அமைச்சர் கவனத்தில்கொள்ள வேண்டும்.</p><p>

சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுதல், அறவிடப்பட வேண்டிய கட்டணங்களை
நீக்குதல், தொடர்ச்சியான நட்டத்தை ஏற்படுத்துதல் போன்ற செயல்கள்
சந்தேகத்துக்குரியவை.
</p><h2>3 ஆவது கட்ட காலநீடிப்பு</h2><p>
தற்சமயம் 3ஆவது கட்டக் காலநீடிப்பு 2026 ஜூலை 7ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள
நிலையில், 4ஆவது கட்டம் துறைமுக அதிகார சபையின் அனுமதியின்றி
நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய கொடுப்பனவுகளும் சட்டவிரோதமானவையாகக்
காணப்படுகின்றன.
</p><p>
இந்தத் திட்டத்துக்குத் தேவையான மனிதவளம் போட்டித் தன்மையான முறையின் கீழ்
2019ஆம் ஆண்டின் முகாமைத்துவ சேவைகள் சுற்றுநிரூபத்தைப் பயன்படுத்தி
ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட போதிலும், இவர்களின் சம்பளத்தில் எந்தவொரு
புதுப்பித்தலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T03:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் கடன் சுமை தொடர்பில் பரவும் தகவல்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-spread-about-sri-lanka-s-debt-load-1788403598"></link>
            <id>https://tamilwin.com/article/information-spread-about-sri-lanka-s-debt-load-1788403598</id>
            <summary type="text">இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும்
பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும்
பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி
அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஊடங்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p>
மத்திய வங்கியின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்திப் பரப்பப்படும் செய்திகள்
குறித்து தெளிவுபடுத்திய அவர், கடன்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் காலாண்டு
வாரியாக 'Debt Bulletin ' அறிக்கை மூலமாகவே அரசால் பொறுப்புடன்
வெளியிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>உள்நாட்டு உற்பத்தி</h2><p>
</p><p>
நாட்டின் மொத்த கடனை அமெரிக்க டொலர்களில் கணக்கிடும்போது கடன் சுமை
குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், 2025 டிசம்பர் 31 நிலவரப்படி 100.3
பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த மொத்தக் கடன், 2026 மார்ச் மாதத்தில்
98.9 பில்லியன் டொலராகவும், 2026 ஜூன் மாத இறுதியில் 95.04 பில்லியன்
டொலராகவும் மேலும் குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05a0d2b5-5dd7-4bf2-9b1e-a56eb8b47e70/26-6a98e318ec133.webp' /></p><p>

2032 ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருந்த மொத்த உள்நாட்டு
உற்பத்தியின் 95 வீதம் எனும் கடன் சுமை அளவை இலங்கை ஏற்கனவே 2025 டிசம்பர்
மாதத்துக்குள் எட்டிவிட்டதுடன், 2026 ஜூன் மாதமளவில் இந்தப் பங்கு 88.8 வீதமாக
மேலும் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
கடன் தொகை எண்களின் அடிப்படையில் மாறுபடுவதும் நாட்டின் கடன் பெறும் திறன்
அதிகரிப்பதும் பொருளாதார ரீதியில் இரு வேறுபட்ட விடயங்களாகும் என்று
குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் அதிகாரப்பூர்வ
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்களை முன்வைக்க வேண்டும்
என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T03:01:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை பணமோசடி வழக்கில் சிக்கிய பெண் தொழிலதிபர்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-court-order-thilini-priyamali-1788401924"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-court-order-thilini-priyamali-1788401924</id>
            <summary type="text">கோடீஸ்வர தொழிலதிபர்களின் தொழில்களில் முதலீடு செய்வதாக வாக்குறுதியளித்து அவர்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, பிணையில் வெளிவந்துள்ள தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோடீஸ்வர தொழிலதிபர்களின் தொழில்களில் முதலீடு செய்வதாக வாக்குறுதியளித்து அவர்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, பிணையில் வெளிவந்துள்ள திலினி பிரியமாலியை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> கோட்டை நீதிபதி பாசன் அமரசேன நேற்று (02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.</p><h2>பிடியாணை உத்தரவு&nbsp;</h2><p>சந்தேகநபருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813bcb13-50de-4212-866c-eca94ca71e3b/26-6a98db4d69107.webp' />&nbsp;</p><p>மேலும் சந்தேகநபர் இல்லாமல் 192-வது பிரிவின் கீழ் வழக்கை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபரின் பிணைதாரர்கள் மறுநாள் முன்னிலையாகுமாறு நீதிபதி அறிவிப்புகளையும் பிறப்பித்துள்ளார்.
</p><p>இதன்படி, வழக்கின் விசாரணை நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் திட்ட முதலீட்டிற்காக குறித்த பெண் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், அரசாங்கத்தின்பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களிடம் இருந்து பல கோடி ரூபாவிற்கும் அதிகமாக நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய திலினி பிரியமாலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T02:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரக்கணக்கானோரின் வங்கி கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ள பணம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/september-month-aswesuma-money-today-credit-bank-1788399827"></link>
            <id>https://tamilwin.com/article/september-month-aswesuma-money-today-credit-bank-1788399827</id>
            <summary type="text">2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><p>நலன்புரி நன்மைகள் சபை இதனை அறிவித்துள்ளது.</p><h2>வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொள்ளலாம்&nbsp; &nbsp;</h2><p> </p><p>

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cb454a9-b5b0-4a38-aed7-75ca1beea003/26-6a98d54bbafbe.webp' />&nbsp;</p><p> </p><p>இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது. </p><p>

உரிய பயனாளிகள் இன்று (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T02:02:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று இரவு முதல் பல பகுதிகளில் நீர்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/24-hour-water-cut-in-colombo-areas-1788396341"></link>
            <id>https://tamilwin.com/article/24-hour-water-cut-in-colombo-areas-1788396341</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.</p><h2>நீர்வெட்டு</h2><p>
</p><p>
இதன்படி, நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடஉயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdd77081-7d53-48bb-a89a-2f809253e2bd/26-6a98c54835c0a.webp' /></p><p>
</p><p>
மேலும், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நீர் விநியோகம் தடைப்படுவதால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முக்கியஸ்தர் வீடொன்றிற்கு உதவி தேடிச்சென்ற 3 தாய்மார்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-party-boycotts-jaffna-global-conference-1788382296"></link>
            <id>https://tamilwin.com/article/major-party-boycotts-jaffna-global-conference-1788382296</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
</p><p>

இந்தநிலையில் குறித்த மாநாட்டிற்கு வடக்கிலுள்ள முக்கிய கட்சியொன்று கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.</p><p>

இதனால் இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளான நிலையில், 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப தலைவி அ. அமலநாயகி இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெளிவுப்படுத்தினார்.
</p><p>


அதாவது குறித்த கட்சியை நேரில் சென்று அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முற்று முழுவதாக மறுப்பதாக அமலநாயகி குறிப்பிட்டார்.</p><p>

கட்சியின் முக்கியஸ்தர் வீட்டிற்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து சென்ற நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.மீண்டும் ஒகஸ்ட் மாதமளவில்&nbsp; சென்று நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் குறித்த முக்கியஸ்தர் வெளியில் சென்றுள்ளார் என்ற பதிலே கிடைத்தது.</p><p>

எனவே அழைப்பிதழை மட்டுமே கொடுத்து விட்டு வந்ததாக குறிப்பிட்டார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1VkU2Km2zbg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மேயர் - திடீர் மரணத்தின் பின்னணியில் எழுந்துள்ள சந்தேகம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-mayor-embroiled-in-multiple-controversies-1788395093"></link>
            <id>https://tamilwin.com/article/former-mayor-embroiled-in-multiple-controversies-1788395093</id>
            <summary type="text">அம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றையதினம்(2) சடலமாக மீட்கப்பட்டுள்ளமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றையதினம்(2) சடலமாக மீட்கப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
முதற்கட்ட விசாரணைகளில் இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டாலும், பொலிஸார் இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>இந்தநிலையில், எராஜ் பெர்னாண்டோ மீது பல சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து, பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவரைத் தாக்குதல் நடத்த மற்றும் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>2015ஆம் ஆண்டு இடம்பெற்ற&nbsp; ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 2014 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகப் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>
பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இவரின் மரணத்தில் அரசியல் தாக்கம் உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் 
NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MrLQGVaVBrk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்கின்றன- யாழ். ஊடக அமையத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-journalists-still-face-issue-17-years-1788392134"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-journalists-still-face-issue-17-years-1788392134</id>
            <summary type="text">போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான
பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான
பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் நினைவு தினமானது யாழ். ஊடக
அமையத்தில் நேற்று(02.09.2026) இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழ் மக்களின் இனப்பிரச்சினை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் ஊடகவியலாளர்களே
தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். தென்னிலங்கை ஊடகங்கள் அதனை
வெளிப்படுத்தத் தவறிவிட்டன.</p><p>

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தால், இந்த
அரசைத் தமிழ் மக்கள் தங்களது அரசாகக் கருதியிருப்பார்கள். அரச ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a0479b-e0b0-4ff1-a02d-ae83489f8b5b/26-6a98b554534ee.webp' /></p><p>செம்மணி
மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் மற்றும் படுகொலை
செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்களில் செய்தி சேகரித்தமை
போன்ற காரணங்களைக் காட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன்
டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.
</p><p>
நடைபெறும் உண்மையான சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின்
கடமை. தங்களுக்கு எதிரான விடயங்களை மறைக்கும் விதமாகச் செய்திகளைத் தணிக்கை
செய்வதில் அரச ஊடகங்கள் செயற்படுகின்றன.</p><p>

சுதந்திரமாகச் செய்தி அறிக்கையிடுவதற்குத் தடை விதித்து ஊடகவியலாளர்களை மன
உளைச்சலுக்குள்ளாக்கும் போக்கு ஜனநாயக நாட்டுக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய மரணம் - அம்பலமான திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-death-that-shook-colombo-1788391502"></link>
            <id>https://tamilwin.com/article/the-death-that-shook-colombo-1788391502</id>
            <summary type="text">நாட்டில் அண்மை காலமான அரசியல் தரப்பில் பல முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்ற நிலையில், 
அம்பாந்தோட்டையின் முன்னாள் நகரபிதா எராஜ் பெர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அண்மை காலமான அரசியல் தரப்பில் பல முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்ற நிலையில், 
அம்பாந்தோட்டையின் முன்னாள் நகரபிதா எராஜ் பெர்னாண்டோ மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இவர் தவறான முடிவின் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உயிரிழப்பின் பின்னணி என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இவர் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) ஆகியவற்றின் கீழ் அம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக (நகரபிதா) பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்பொழுது நாட்டில் அரசியல் தரப்பில் பல முக்கிய நபர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பொழுது இவ்வாறான மரணங்கள் நிகழ்வதும் வழமையான விடயமாக மாறியுள்ளது.</p><p>
இவ்வாறான நிலையில் இவருடைய மரணத்திற்கு பின்னணியிலும் ஏதாவது அரசியல் காரணங்கள் காணப்படலாம் என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் சில அதிர்ச்சி ஊட்டும் தகவல்களை லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hCXh9BxV9x4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்துக்கு எதிராக கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-protest-colombo-against-22nd-amendment-1788392725"></link>
            <id>https://tamilwin.com/article/massive-protest-colombo-against-22nd-amendment-1788392725</id>
            <summary type="text">அரசு கொண்டுவர முனையும் 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு
எதிராகப் பொதுமக்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து&amp;nbsp; பிரம்மாண்டப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு கொண்டுவர முனையும் 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு
எதிராகப் பொதுமக்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து&nbsp; பிரம்மாண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள்
சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.</p><p>குறித்த போராட்டமானது&nbsp;இன்று(3) பிற்பகல் 2 மணிக்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.</p><h2>22ஆவது திருத்தம்</h2><p>

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை
நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப்
பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf72aad0-ceed-4b97-bdce-9836c26c3060/26-6a98b917b76ba.webp' /></p><p>

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அரசைத் தவிர
நாட்டில் உள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முழுமையான
எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்த அவர், </p><p>நாட்டின் ஜனநாயகத்தைப்
பாதுகாக்க இந்தச் சட்டமூலத்துக்கு மக்களின் கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது
அத்தியாவசியமானது என்றார்.</p><h2>&nbsp;இறுதித் தீர்ப்பு</h2><p>
</p><p>
இந்த விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் நீதித்துறையை விமர்சிக்கத்
தயாராக இல்லை என்றும், உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகவே தாம்
காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20532401-ea4a-48ac-ba07-263d2d734f29/26-6a98b91710778.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், எவ்வாறாயினும் திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என நீதி
அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கின்றமை நீதித்துறைக்கு அழுத்தம்
கொடுக்கும் முயற்சியாகவே உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் நீதி அமைச்சர்
தற்போது ஒரு வேடிக்கையான மனிதராக மாறிவிட்டார் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார
எம்.பி. கடுமையாகச் சாடினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் தன்மானத்தின் அடையாளம் தமிழரசுக் கட்சி- சி.வி.கே.சிவஞானம் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-party-founded-on-tamil-self-respect-1788382092"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-party-founded-on-tamil-self-respect-1788382092</id>
            <summary type="text">தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான
பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குகிறது என இலங்கை தமிழரசுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான
பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குகிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று(02.09.2026) வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்ற அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தனித்துவமும் தன்மானமும்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் தன்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட
தனித்துவமானதும் பழம்பெருமை மிக்கதுமான அரசியல் கட்சியாகும்.
</p><p>தமிழரசுக் கட்சியின் தனித்துவமும் தன்மானமும் எந்த இடங்களில்
கேள்விக்குள்ளாக்கப்படுகின்றதோ, அந்த இடங்களில் தமிழரசுக் கட்சி
பிரசன்னமாகாது.இது எங்களுடைய உறுதியான நிலைப்பாடாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5902f206-9b12-42ad-bf6a-773f9e41a96d/26-6a98a65bb8f21.webp' /></p><p>பழம்பெரும் கட்சியான தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தியோ அல்லது ஓரங்கட்டியோ
தீர்மானங்களை எடுத்துவிட்டு, அதன் பின்னர் பகிரங்கமாக ‘வாருங்கள்’ என அழைப்பு
விடுத்தால் எவ்வாறு நாம் அங்கு செல்ல முடியும்? அவ்வாறு அழைக்கப்படும்
இடங்களுக்கு நாம் செல்லவும் மாட்டோம்.
</p><p>தமிழரசுக் கட்சி யாராவது அழைத்த இடத்தில் சென்று அமருகின்ற கட்சி அல்ல.
அதற்கென ஒரு தனித்துவமும் கௌரவமும் இருக்கின்றது.</p><h2>நிலைப்பாட்டின் உறுதி</h2><p> </p><p>இதனை ஏனைய தமிழ் அரசியல்
கட்சிகளும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழரசுக் கட்சியை கடந்த காலங்களில் வழிநடத்தியவர்கள் முதுகை வளைத்து அரசியல்
செய்தவர்கள் அல்லர். அவர்கள் முதுகை நிமிர்த்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக
குரல் கொடுத்தவர்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3cfc6f0-d478-4968-baf0-8ee4048da2b1/26-6a98a65b125a3.webp' /></p><p>அந்த வழியில் வந்த நாங்களும் வளைந்து செல்ல முடியாது.
எங்களை மதிப்பவர்களிடம் ஒரு படி கீழிறங்கி சென்று பேசுவதற்கும், இணைந்து
செயல்படுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் எங்களை மதிக்காதவர்களிடம்
எங்களுடைய தன்மானத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து செயல்பட முடியாது.
</p><p>தேவைப்பட்டால் ஒரு படி மேலே சென்று எங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக
வெளிப்படுத்தவும் தயாராக இருக்கின்றோம்.
இதனை நான் ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகில இலங்கை ரீதியில் முதலிடம்: புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாணவன் சாதனை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122"></link>
            <id>https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை படைத்துள்ளார்.
</p><p>யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி
கற்று வரும் மாணவன் சு. சபின், புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப்
பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.</p><h2>அகில இலங்கை முதலிடம்&nbsp;</h2><p>
</p><p>மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலை
சமூகத்திற்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக
கல்விச் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197570-8255-44dd-94e8-86061f262ff9/26-6a986c8f2f563.webp' /></p><p>2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று(2) வெளியானமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:35:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trincomalee-development-committee-meeting-1788379804"></link>
            <id>https://tamilwin.com/article/trincomalee-development-committee-meeting-1788379804</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்,
மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஸ்ரீபதி (காணி) அவர்களின் தலைமையில்
மாவட்ட செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்,
மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஸ்ரீபதி (காணி) அவர்களின் தலைமையில்
மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்தக் கூட்டத்தில் சிறுவர்கள் மற்றும் மகளிருடன் தொடர்புடைய துறைசார்
தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>முக்கிய தீரமானங்கள்</h2><p>

பிரதேச மட்டத்தில் இனங்காணப்பட்டு கலந்துரையாடப்பட்டு, தீர்வு காணப்படாத
நிலையில் மாவட்ட மட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் இந்தக் கூட்டத்தில்
முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e389ecc-608a-4643-a0c9-69ddc12b3c8b/26-6a9883cd166a1.webp' /></p><p>குறிப்பாக, சிறுவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, உரிமைகள், உளசமூக நலன்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான
தீர்வுகளை முன்னெடுப்பதற்கான பல்வேறு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-coordination-meets-under-mp-prabhu-1788375807"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-coordination-meets-under-mp-prabhu-1788375807</id>
            <summary type="text">மட்டக்களப்பு - மண்முனை தெற்கு, எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச
செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்&amp;nbsp; களுவாஞ்சிகுடி பிரதேச செயலக
மாநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - மண்முனை தெற்கு, எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச
செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்&nbsp; களுவாஞ்சிகுடி பிரதேச செயலக
மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>இந்தக் கூட்டமானது நேற்று(02.09.2026) நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><h2>அபிவிருத்திப் பணிகள்</h2><p>
</p><p>
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மண்முனை - தெற்கு, எருவில்
பற்று பிரதேசசபையின் தவிசாளர் எம்.வினோராஜ் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>அத்துடன் திணைக்களங்களின் தலைவர்கள்,பாதுகாப்பு துறையினர்,பிரதேசசபை
உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ad05021-3322-45bb-983f-aba57654a264/26-6a9875f80487b.webp' /></p><p>இந்தக் கூட்டத்தின்போது&nbsp; பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திப்
பணிகள், நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அவசரப் பிரச்சினைகள்
குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டு பல முக்கிய தீர்மானங்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
பிரதேசத்தில் 281 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில்
மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது 100வீதம்
பூர்த்தியடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்களின் பிரச்சினைகள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அதேவேளை, இளைஞர்களை பாதிக்கும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதிக வேகம்
காரணமாக ஏற்படும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்குத் தெளிவான
வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>அத்துடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களைக்
கைது செய்யவும், விதிமுறைகளை மீறி அதிவேகமாகச் செல்லும் சாரதிகளுக்கு எதிராகத்
தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f917256-8d15-4a77-a0db-1ceae3cb15af/26-6a9875f6ef25f.webp' /></p><p>

களுவாஞ்சிகடி வைத்தியசாலையின் கழிவகற்றல் 15 நாட்களுக்கும் மேலாக
மேற்கொள்ளப்படவில்லை என்ற முறைப்பாடு தொடர்பில் பிரதேச சபைக்கு உடனடியாக
நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>மேலும், வைத்தியசாலையின்
செயற்கை கருத்தரிப்பு மையத்தின் செயல்பாடுகள் மந்தகதியில் இருப்பது
குறித்தும், சேவைக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டும் முறையான சேவைகள்
கிடைக்கவில்லை என்பது குறித்தும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி விரைவில்
தனிக் கூட்டமொன்றைக் கூட்டித் தீர்வு காணத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:31:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் தீவிரமடையும் நிவாரணப் பணிகள்: உயிரிழப்பு 1,100 ஐக் கடந்தது என ஐ.நா அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/46-nepal-hydropower-workers-may-still-be-alive-1788377339"></link>
            <id>https://tamilwin.com/article/46-nepal-hydropower-workers-may-still-be-alive-1788377339</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பேரழிவுமிக்க திடீர்
வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் நிவாரண
நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பேரழிவுமிக்க திடீர்
வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் நிவாரண
நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
</p><p>
இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு காரணமாக உருவான இந்த
வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் இதுவரை குறைந்தது 1,114 பேர்
உயிரிழந்துள்ளதுடன், சுமார் 4,000 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><h2>காலநிலை மாற்றத்தினால்&nbsp;ஏற்பட்ட&nbsp;பேரழிவு</h2><p>
</p><p>
திபெத் பகுதியில் 21 பேர் உயிரிழந்திருப்பதுடன், 540க்கும் மேற்பட்டோர்
காணாமல் போயுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட பாலங்கள் முற்றாக
அழிவடைந்துள்ளதால், தொலைதூரக் கிராமங்களுக்கு இராணுவ வானூர்திகள் மூலமே
உணவும் அத்தியாவசியப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/065cf357-9634-4b2b-a930-921dd26912c2/26-6a9881f2961e7.webp' /></p><p>வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 12,000க்கும் மேற்பட்டோர் இதுவரை
மீட்கப்பட்டுள்ள போதிலும், நீர்மின் நிலையச் சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ள
தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்தப் பேரழிவு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நேபாளப் பிரதமர் பாலேந்திர
ஷா, இது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத ஒரு பேரழிவு
எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 மாதகால அவசரநிலையை அறிவித்துள்ள நேபாள
அரசு, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து 4 மாதகால சர்வதேச நிவாரணக்
கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.&nbsp;</p><h2>46 தொழிலாளர்கள்&nbsp;</h2><p>&nbsp;இந்தநிலையில், நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் திடீர்
வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, ரசுவாகாதி நீர்மின் நிலையத்தின்
நிலத்தடிச் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 46 தொழிலாளர்கள் இன்னும் உயிருடன்
இருக்கக் கூடும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.</p><p>

சுரங்கப் பாதையின் பாதுகாப்பான பகுதிக்குள் அவர்கள் சிக்கியிருப்பதாகவும்,
அங்கு உணவும் குடிநீரும் இருப்பதனால் அவர்கள் ஒரு வாரத்தின் பின்னரும்
உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் நேபாள மின்சார சபையின் பணிப்பாளர்&nbsp; ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;279 பேர் பாதுகாப்பாக மீட்பு</h2><p>

ரசுவா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த 111 மெகாவோட் மின் உற்பத்தி நிலையத்தின்
சுரங்கங்களுக்குள் நேபாள இராணுவத்தினர் மற்றும் இந்திய, சீன சிறப்பு மீட்புக்
குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd895c0-5ce1-4fcf-ae28-8245a3db3dff/26-6a988004ecc86.webp' /></p><p>இதுவரை நீர்மின் திட்டப் பகுதிகளில் இருந்து 279 பேர் பாதுகாப்பாக
மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இயற்கை பேரழிவினால் நாட்டில் இதுவரை 1,114க்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளதுடன், 600 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.</p><p>
எஞ்சியவர்களை மீட்கும் பணியில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச
மீட்புக் குழுக்களின் உதவிகள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:30:47+00:00</updated>
        </entry>
    </feed>
