<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-15T22:38:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு: இன்னும் 14 நாட்கள் மட்டுமே..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-to-taxpayers-1789502921"></link>
            <id>https://tamilwin.com/article/notice-to-taxpayers-1789502921</id>
            <summary type="text">025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதித் தொகையைச் செலுத்துவதற்கான இறுதித் திகதியை உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதித் தொகையைச் செலுத்துவதற்கான இறுதித் திகதியை உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.</p><p>

இதன்படி, நிலுவையில் உள்ள வரித்தொகையை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்குமாறு வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உரிய காலக்கெடுவுக்கு முன்னர் நிலுவைக் கட்டணங்களைச் செலுத்தி முடிக்குமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
</p><h2>
வரிச் செலுத்துவோருக்கு..</h2><p>
இந்த அறிவிப்பு பெருநிறுவன வருமான வரி (CIT), தனிநபர் வருமான வரி (IIT) மற்றும் கூட்டாண்மை வருமான வரி (PIT) ஆகியவற்றுக்குப் பொருந்தும்.

இணையவழி மற்றும் வங்கி ஊடாக வரி செலுத்தும் வசதி
வரி செலுத்துவோர் தங்களது வரிகளை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இணையவழி வரி செலுத்தும் தளத்தின் ஊடாகச் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12079cd2-886d-460b-bb4c-e1abc3fdbd8f/26-6aa9c55c4c15e.webp' /></p><p>
</p><p>
மேலும், CIT, IIT மற்றும் PIT ஆகிய வரிக் கட்டணங்களை இலங்கை வங்கியின் (BOC) எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்கூட்டியே அச்சிடப்பட்ட பணம் செலுத்தும் சீட்டைப் பயன்படுத்தாமல் வங்கியில் பணம் செலுத்தும் வரி செலுத்துவோர், தங்களது ஆவண அடையாள எண்ணை (DIN) பணம் செலுத்தும் சீட்டில் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், செலுத்தப்படும் பணம் சரியான முறையில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
தாமதமாகச் செலுத்தினால் வட்டி மற்றும் அபராதம்</h2><p>


வரிகளைச் செலுத்தத் தவறினாலோ அல்லது தாமதமாகச் செலுத்தினாலோ வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e5cddf1-6ab4-496d-bbab-f63cf39381e7/26-6aa9c55d329dd.webp' /></p><p>

அத்துடன், தாமதமாகச் செலுத்துவதற்காக விதிக்கப்படும் வட்டியைத் தள்ளுபடி செய்யவோ அல்லது குறைக்கவோ முடியாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், வங்கி வரைவோலை அல்லது பண ஆணை உரிய திகதிக்குப் பின்னர் பெறப்பட்டால், அந்தக் கட்டணம் தாமதமாகச் செலுத்தப்பட்டதாகக் கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வரி செலுத்துதல் தொடர்பில் உதவி தேவைப்படும் வரி செலுத்துவோர் 1944 என்ற உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T22:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல இடங்களில் களம் இறங்கும் CID - திகில் அடையும் மகிந்தவும் தென்னிலங்கையும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-swing-mahinda-southern-sri-lanka-gripped-panic-1789506937"></link>
            <id>https://tamilwin.com/article/cid-swing-mahinda-southern-sri-lanka-gripped-panic-1789506937</id>
            <summary type="text">இலங்கையின் பல இடங்களில் நடைபெற்ற ஊழல் சம்பவங்களுடன் தொடர்பான சில அதிகாரிகளை தேடி சிஜடி வலை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோட்டாபய மற்றும் மகிந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல இடங்களில் நடைபெற்ற ஊழல் சம்பவங்களுடன் தொடர்பான சில அதிகாரிகளை தேடி சிஜடி வலை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்சவோடு தொடர்புபட்ட பல சிறிய அதிகாரிகள் இதில் ஒழிந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p>இதனால் குறித்த அதிகாரிகளை இலக்கு வைத்து பல மாவட்டங்களில் பரவலாக&nbsp;சிஜடியினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p>இதனோடு தொடர்புபட்டு பல இரகசியக் கைதுகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pDgJ9q82r6E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T21:58:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழுவால் மட்டும் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது- ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/r-m-a-l-rathnayake-emphasizes-1789509254"></link>
            <id>https://tamilwin.com/article/r-m-a-l-rathnayake-emphasizes-1789509254</id>
            <summary type="text">தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாத்திரம் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாத்திரம் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

மாகாண சபை உள்ளிட்ட தேர்தல்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 


ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சி</h2><p>
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய அரசின் முத்துறைகளுடன் அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஒட்டுமொத்த மக்களும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் செயற்பாட்டில் பங்கேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06a500cb-00f2-4c00-9a97-dd8451c44c72/26-6aa9beb5ece3e.webp' /></p><p>
</p><p>
ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பு மாத்திரம் போதுமானதல்ல என சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயக விழுமியங்களையும் தேர்தல் செயற்பாடுகளையும் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T21:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தடவியல் பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valuable-items-stolen-in-vavuniya-1789508670"></link>
            <id>https://tamilwin.com/article/valuable-items-stolen-in-vavuniya-1789508670</id>
            <summary type="text">வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான
நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான
நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(15.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p> 

வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் பட்டப்பகலில்
புகுந்த திருடர், வீட்டுக் கதவினை சூட்சுமாக உடைத்து உள் நுழைந்து அங்கிருந்த
அலுமாரிகளை உடைத்துள்ளனர். </p><h2>

வீடு திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி</h2><p>
அதன் பின்னர், அதற்குள் இருந்த பெறுமதியான சங்கிலி, தோடுகள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43f44f16-b083-4135-ae0e-34a9301dc415/26-6aa9bcb4162f9.webp' /></p><p> </p><p>

காலை வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்ற ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு
திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தமை தெரியவந்துள்ளது.</p><p> 

இதனையடுத்து, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து,
வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p> 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியை நாடுவதற்கான நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c77d1639-d184-43fc-b7c1-423a18be0320/26-6aa9bcb510521.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc8c6f2a-b343-4071-b7a9-ab336c3c46a5/26-6aa9bcb5da4d6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc5e64a-ef89-4f25-aca3-a724e735f6c3/26-6aa9bcb6c13a9.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T21:46:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 நாட்கள் வைத்தியசாலையில்..! உயர்மட்டத்தினரை காப்பாற்ற முயற்சிக்கும் சுரேஷ் சலேவுக்கு கடைசி வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-report-regarding-suresh-sallay-1789507797"></link>
            <id>https://tamilwin.com/article/medical-report-regarding-suresh-sallay-1789507797</id>
            <summary type="text">தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கான சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னரே அவரிடம் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கான சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னரே அவரிடம் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்று(15.09.2026) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

100 நாட்கள் வைத்தியசாலையில் சுரேஷ் சலே</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், 

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வைத்து அவரிடம் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41ad2922-6b74-4450-bbd1-1655001aa7a4/26-6aa9b95518737.webp' /></p><p> </p><p>மருத்துவ சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னரே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்படும்.

சுரேஷ் சலே தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்து ஆராய்வதற்கு விசேட மருத்துவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விசேட ஆய்வுக்குழு நியமனம்</h2><p>
 அந்த குழுவின் அறிக்கைக்கு அமையவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும். தற்போது அவருக்குப் பெரியளவிலான சுகாதாரச் சிக்கல்கள் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. அவர் ஆரோக்கியமாகவே காணப்படுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55ad3e2f-bea7-47bf-a212-15d2a5660536/26-6aa9b955e5f45.webp' /></p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரிடம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. </p><p>அவர் எப்போதும் மருத்துவமனையிலேயே இருக்கப் போவதில்லை. 

சிகிச்சைகள் முடிவடைந்து வெளியேறியதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படும். </p><p>அதற்கான கால அவகாசம் போதாத பட்சத்தில் விசாரணைக்காலம் மேலும் நீடிக்கப்படும்.

சுரேஷ் சலேவின் நிலைமை குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு வைத்தியசாலை நிர்வாகத்திற்கு உள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T21:32:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு - இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக திரண்ட மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-to-biometric-data-identity-cards-1789506651"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-to-biometric-data-identity-cards-1789506651</id>
            <summary type="text">இலங்கையில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் ஆர்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
காலிமுகத்திடல் அருகே அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக நேற்று(15.09.2026) இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. </p><p>

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0e75efd-5d23-448c-95cb-283800ab3778/26-6aa9b4a18e76b.webp' /></p><p> 

கண்காணிப்பு அரசுக்கு வழிவகுக்கும், இந்தியாவுக்கு தரவுகளைத் தாரைவார்க்கும் பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டையை எதிர்ப்போம், இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தங்கள் 7ஐயும் வெளிப்படுத்துக உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் எழுப்பியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T21:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சி! இரண்டாம் காலாண்டில் மந்தகதி வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-economy-slumps-second-quarter-1789504138"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-economy-slumps-second-quarter-1789504138</id>
            <summary type="text">இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கணிசமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கணிசமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><h2>பொருளாதார வளர்ச்சி வேகம்&nbsp;</h2><p>
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தேசிய கணக்கு மதிப்பீடுகளின்படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் இந்த பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ec3f5b1-dc78-4ed0-b444-7cdb8241cd1a/26-6aa9b2fbf418b.webp' /></p><p>
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தேசிய கணக்கு மதிப்பீடுகளின்படி, இரண்டாம் காலாண்டில் கைத்தொழில் துறை 7.3 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள அதேவேளை, சேவைத் துறை 2.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.</p><p>அதேவேளை விவசாயத் துறையில் 2.3 சதவீத பின்னடைவு பதிவாகியுள்ளது.
</p><h2>விவசாயத் துறையின் பின்னடைவு</h2><p>
கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு சுரங்க மற்றும் அகழ்வாராய்ச்சி தொழில், கட்டுமானத் துறை மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத் துறைகளின் வளர்ச்சி முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
</p><p>
சேவைத் துறையில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் 10 சதவீதமும், காப்பீட்டு சேவைகள் 8 சதவீதமும் மற்றும் நிதிச் சேவைகள் 7.7 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/981497bd-fb9d-48ca-a0e1-05b3f68dae30/26-6aa9b2fcf3aa5.webp' /></p><p>
விவசாயத் துறையின் பின்னடைவுக்கு நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் நெல் சாகுபடி குறைவடைந்தமையே முக்கிய காரணம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது.</p><p>2026 இரண்டாம் காலாண்டில் தற்போதைய சந்தை விலைகளின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8,254,176 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், இது 11.3 சதவீத வளர்ச்சியாகும்.
</p><p>
மத்திய கிழக்கு நெருக்கடி நிலை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சுற்றுலாத் துறையில் சற்று மந்தநிலை காணப்பட்ட போதிலும், இறக்குமதி அளவுகளின் வளர்ச்சி காரணமாக உள்நாட்டு உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மற்றும் கட்டுமானத் துறையின் விரிவாக்கம் என்பன பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T21:05:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிநபர் ஆதாயத்திற்காக அரசை அடகு வைத்தாரா அர்ச்சுனா..! நளிந்த ஜயதிஸ்ஸ கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-jayatissa-retaliated-against-arjuna-1789504469"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-jayatissa-retaliated-against-arjuna-1789504469</id>
            <summary type="text">நாட்டில் கடந்த தேர்தல்களின் போது புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள்,
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு நிதி உதவி வழங்கினார்கள் என
அனுராதபுரத்தில் நடைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் கடந்த தேர்தல்களின் போது புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள்,
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு நிதி உதவி வழங்கினார்கள் என
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில்,
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டை அரசு
முற்றாக நிராகரித்துள்ளது.
</p><p>
இவ்வாறான பொய்யான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(15.09.2026) நடைபெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


அரசுக்கு எதிராக பேசினாரா அர்ச்சுனா</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேடையிலும்
அதற்கு வெளியிலும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகப் பொலிஸாருக்கும் குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்துக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டின் சட்டத்துக்குப் புறம்பாக அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளை
ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு
எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be8626e2-565d-4a18-810b-b4f21c0807be/26-6aa9acb3a3cba.webp' /></p><p> இது குறித்த விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

அரசின் தேர்தல் பிரசாரங்களுக்குப் புலம்பெயர் இலங்கை தமிழர்களால் நிதி உதவி
வழங்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த
குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.
</p><h2>
வதந்திகளுக்கு பதிலடி</h2><p>
 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
மேடையில் நின்றுகொண்டு இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் பின்னணியில்
உள்ள நோக்கம் குறித்தும், அவர்களுக்கிடையிலான தொடர்பு குறித்தும் சிந்திக்க
வேண்டியுள்ளது.

அர்ச்சுனாவைத் தவிர புதிய நபர்கள் எவரும் அந்தக் கூட்டத்தில் இணையவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/922dd18c-ff7b-4686-bacd-37ae14c4d88f/26-6aa9acb466b0e.webp' /></p><p>
</p><p>மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் நாட்டில் புதிய அரசியல் கலாசாரம்
உருவெடுத்துள்ள போதிலும், பழைய அரசியல்வாதிகள் தங்களது பழைய அரசியல்
கலாசாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை. </p><p>

அத்தகைய நிராகரிக்கப்பட்ட கலாசாரத்தையும் தலைவர்களையும் மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
</p><p>
தீவிரவாத அமைப்புகளின் மீள் எழுச்சி அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகள் மூலம் யார் அரசியல் ஆதாயம் அடைய
முயற்சிக்கின்றார்கள் என்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்
என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T20:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க C5+ உச்சிமாநாடு சியோலில் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/historic-c5-summit-begins-in-seoul-1789499532"></link>
            <id>https://tamilwin.com/article/historic-c5-summit-begins-in-seoul-1789499532</id>
            <summary type="text">மத்திய ஆசிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும்
நோக்கில், தென்கொரியா முதன்முறையாக C5+ எனப்படும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின்
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆசிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும்
நோக்கில், தென்கொரியா முதன்முறையாக C5+ எனப்படும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின்
தலைவர்களை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சிமாநாட்டை சியோலில்
நடத்துகிறது.
</p><p>தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் அழைப்பின் பேரில் உஸ்பெகிஸ்தான்,
கஸகஸ்தான், துருக்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய
நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.</p><h2>உள்நாட்டு தொழில்துறைகளை மேம்படுத்த</h2><p>

மாநாட்டிற்கு முன்னதாக இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது,
முக்கியமான கனிம வளங்கள், எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும்
போக்குவரத்து போன்ற துறைகளில் கூட்டுப் பங்களிப்பை விரிவுபடுத்துவது குறித்து
விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bff57e6-8935-4060-824b-8e4db03fb693/26-6aa9a77d61186.webp' /></p><p>சீனாவிற்கு இருக்கும் தொழிற்சார் மூலப்பொருட்களின் அதிகளவிலான தேவையை
குறைத்து, தமக்கான விநியோகச் சங்கிலியைப் பல்வகைப்படுத்த தென்கொரியாவிற்கு
மத்திய ஆசிய நாடுகளின் கனிம வளங்கள் அவசியமாகின்றன.
</p><p>
அதேவேளை, மத்திய ஆசிய நாடுகள் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு நிறுத்திக்
கொள்ளாமல், தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளை ஈர்த்து உள்நாட்டு தொழில்துறைகளை
மேம்படுத்த தென்கொரியாவை ஒரு முக்கிய பங்காளியாகக் கருதுகின்றன.</p><h2>அரசியல் ரீதியாக எந்தவொரு அழுத்தமும்&nbsp;</h2><p>
</p><p>
இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் யூனியனால் வலுக்கட்டாயமாக
இடம்பெயர்க்கப்பட்ட 'கொரியோ-சரம்' சமூகத்தினர் மூலமாக இரு
பிராந்தியங்களுக்கும் இடையே பல தசாப்த கால கலாசாரப் பிணைப்பு நிலவி
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d70ba6-ae78-470c-821a-907c42760634/26-6aa9a77e1a98c.webp' /></p><p>இத்துடன், தென்கொரியாவின் கே-பாப் (K-pop) மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள்
மூலம் உருவாகியுள்ள கலாசாரச் செல்வாக்கும், வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கான
வாய்ப்புகளும் இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான உறவை மேலும்
பலப்படுத்தியுள்ளன.</p><p>

ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ள மத்திய ஆசிய பிராந்தியத்தில்,
அரசியல் ரீதியாக எந்தவொரு அழுத்தமும் இல்லாத ஒரு வணிகப் பங்காளியாக தென்கொரியா
தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்த உச்சிமாநாடு வழிவகுத்துள்ளதாக அரசியல்
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T20:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் கமத்தொழில் வளர்ச்சிக்கு உதவ தயார் - சீனா முன்வைத்துள்ள புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/agricultural-development-in-sri-lanka-1789502447"></link>
            <id>https://tamilwin.com/article/agricultural-development-in-sri-lanka-1789502447</id>
            <summary type="text">இலங்கையின் கமத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான உயர்தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கமத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான உயர்தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள்ளார்.
</p><p>
கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவை நேற்றுமுன் தினம்(14.09.2026) 
 சந்தித்துக் கலந்துரையாடி போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

இதன்போது, பசுமைக்குடில் விவசாயம் மற்றும் நவீன ஸ்மார்ட் விவசாயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><h2> 

காலநிலைகளை கண்டறியும் செயலி</h2><p>
கைபேசி செயலிகள் மூலம் பயிர்களுக்கு ஏற்ற மண், ஈரப்பதம் உள்ளிட்ட அனைத்து சுற்றுச்சூழல் நிலைகளையும் அளவிட்டு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சீனா தற்போது உருவாக்கியுள்ளதாகவும், அந்தத் தொழில்நுட்ப உதவியை இலங்கைக்கு வழங்க விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f21c097-fbb2-4a1c-b354-6e1398f4aa88/26-6aa9a45d75ea0.webp' /></p><p>

அத்துடன், கடல் நீரிலும் வளரக்கூடிய மேம்படுத்தப்பட்ட கலப்பின நெல் ரகங்கள் மற்றும் வறண்ட, ஈரமான வானிலை நிலைகளுக்கு ஏற்ப நிலத்தை தயார்படுத்தும் தொழில்நுட்பமும் சீனாவிடம் உள்ளதாக சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
சேவை, தொழில் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே நேரத்தில் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டியதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டதாக விவசாய அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
கால்நடைத் துறை வளர்ச்சிக்கான திட்டம்</h2><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df79209d-44e2-4dec-a0bd-10da36f02c82/26-6aa9a45e44ec4.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, இச்சந்திப்பில் கலந்துகொண்ட விவசாய அமைச்சின் செயலாளர், இலங்கைக்குத் தேவையான பெரும்பாலான விவசாய இயந்திரங்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கை விவசாயிகளுக்காக சீன அரசு வழங்கும் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
</p><p>
பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சீன நிறுவனங்கள் ஏற்கனவே பங்களிப்பு செய்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T20:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் - வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thileepan-s-remembrance-day-1789501908"></link>
            <id>https://tamilwin.com/article/thileepan-s-remembrance-day-1789501908</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக
அனுஸ்டிக்கப்பட்டது.

போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக
அனுஸ்டிக்கப்பட்டது.
</p><p>
போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்ப்பாட்டாளர்களின்
ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியில்
நேற்று(15.09.2026) நடைபெற்றுள்ளது.</p><p> 

இதன்போது தியாகி திலீபனின் நினைவு படத்திற்கு மலர் மாலை அணிவித்து, ஈகைசுடர்
ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6fc4a2-c624-4719-9559-07c5ca57c434/26-6aa9a1fa89a76.webp' /></p><p>
</p><p>
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மாநகரசபை முதல்வர்
சு.காண்டீபன், வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன், மாநகர சபை
உறுப்பினர் தர்மா மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள்,
முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T19:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார சேவையில் புதிய மாற்றம்: அரசு அறிமுகப்படுத்தும் 39 புதிய திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-change-in-healthcare-services-1789500803"></link>
            <id>https://tamilwin.com/article/new-change-in-healthcare-services-1789500803</id>
            <summary type="text">பொதுமக்களின் அதிகரித்து வரும் சுகாதார சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 39 புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களின் அதிகரித்து வரும் சுகாதார சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 39 புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.</p><p>
அதனடிப்படையில், மருத்துவமனைகள் உள்ளிட்ட பெரும்பாலான அரச சுகாதார சேவை நிறுவனங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், அதிநவீன உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் நவீன சுகாதார சேவை தரநிலைகளுக்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.</p><h2>

39 புதிய திட்டங்கள்</h2><p>

இதற்கமைய, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட யோசனைகளில் 41 திட்ட யோசனைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a800a07-95a3-4c22-9655-1e740236c1fc/26-6aa99dc97fae8.webp' /></p><p>
</p><p>
குறித்த திட்ட யோசனைகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் த்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>

2027-2031 காலப்பகுதிக்குரிய அரசாங்க முதலீட்டுத் திட்டத்தில் யோசனைகள் தற்போது உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களில் 39 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தயார் நிலையைக் கருத்திற்கொண்டு, 2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதற்காக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த 39 புதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T19:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 22 இறுதித் தீர்ப்பு: வைத்தியர்களுடன் போலி நாடகமா..! சுரேஷ் சலேவுக்கு கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-verdict-on-the-easter-sunday-attacks-1789499833"></link>
            <id>https://tamilwin.com/article/final-verdict-on-the-easter-sunday-attacks-1789499833</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, 100 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, 100 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் வைத்தியசாலையில் தங்கியிருப்பது போலி நாடகமா என்ற கேள்வியையும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி திலீப பீரிஸ் எழுப்பியுள்ளார்.</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாக்குதலுக்கு காரணமானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதேவேளை, சிறையில் இருந்தவர்களையும் விடுதலை செய்து, தேசத்திற்கு பெரும் அநீதி இழைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><h2>

ராஜபக்சர்கள் அரங்கேற்றும் போலி நாடகங்கள்</h2><p>
இலங்கையில் இருந்த வளங்களை கொள்ளையடித்த ராஜபக்சர்கள், தற்போது மேடைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea07bf8b-0987-4325-86d4-88385a483e37/26-6aa999e9092e8.webp' /></p><p>
</p><p>
மேலும், செப்டம்பர் 22ஆம் திகதி குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள முக்கிய குற்றவியல் வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுரேஷ் சலே வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
</p><p>
இவ்வாறான நிலையில், சுரேஷ் சலேவின் வைத்தியசாலை தங்கல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
</p><p>
இதுபோன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது News Insight நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TQJRICBAAbw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T19:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண் - அநுர அரசாங்கம் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262"></link>
            <id>https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262</id>
            <summary type="text">நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

வெளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p> 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.</p><p> 

“<i><b>நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்</b></i>” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heartiest congratulations to Minister Kamzy Gunaratnam on taking oaths as the Minister of Transport of Norway. A proud moment for Sri Lankan community in Norway given the shared heritage. I wish Minister Gunaratnam every success in leading her Ministry.</p>&mdash; Vijitha Herath (@HMVijithaHerath) <a href="https://x.com/HMVijithaHerath/status/2098377957895225542?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2><b>முதலாவது தமிழ்&nbsp;பெண்</b></h2><p>

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம், நோர்வேயில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தமிழ் பெண்ணாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b76f8fff-057d-4be3-8f5d-3976bcf16d81/26-6aa9630584a9a.webp' /></p><p>கடந்த 11ஆம் திகதி தனது அமைச்சினை பொறுப்பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் மக்களின் வாழ்த்தினை பெற்று வருகிறார்.</p><p> 

போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து கொள்கைகள், அத்துடன் அஞ்சல் சேவைகள் தொடர்பான பொறுப்புகளுக்கு இவர் தலைமை தாங்குவார்.
</p><p>
1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கம்சாயினி குணரத்னம் என்ற பெயரில் பிறந்த இவர், யுத்த சூழ்நிலை காரணமாக சிறு வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு சென்றிருந்தார்.</p><p> </p><h3><b>

பிரதான அமைச்சு பதவி</b></h3><p>தனது 19 வயது முதல் தொழிலாளர் கட்சியின் மூலம் அரசியல் பயணத்தை ஆரம்பித்த கம்சி, சமகாலத்தில் பிரதான அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ce473e-195f-4d51-8a97-825bb5037c46/26-6aa96306382ba.webp' /></p><p>ஒஸ்லோவின் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, பின்னர் ஒஸ்லோவின் துணை மேயர், நாடாளுமன்ற உறுப்பினர் என படிப்படியாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். </p><p>

இலங்கையில் போர் காரணமாக காணாமல் போனவர்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நோர்வே நாடாளுமன்றத்தில் கம்சி குணரட்னம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-15T18:53:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியன்மார் இராணுவத்திற்குத் தரவுகளை வழங்கிய குற்றச்சாட்டு : நோர்வே பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/providing-data-myanmar-military-norwegian-1789494283"></link>
            <id>https://tamilwin.com/article/providing-data-myanmar-military-norwegian-1789494283</id>
            <summary type="text">மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர்,
அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர்,
அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி
மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைபுரிந்ததாகக் கூறி, பிரபல
தொலைத்தொடர்பு நிறுவனமான டெலினோர் (Telenor) மீது நோர்வே பொலிஸார் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
விசாரணைகளின் ஒரு பகுதியாக ஓஸ்லோவிலுள்ள டெலினோர் நிறுவனத்தின் தலைமையகத்தில்
நோர்வே குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்
செவ்வாய்க்கிழமை சோதனைகளை மேற்கொண்டனர்.
</p><h2>மியன்மாரிலிருந்து முற்றாக வெளியேறிய</h2><p>
மியான்மார் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது கடுமையான மனித உரிமை மீறல்களைச்
செய்து வந்த காலப்பகுதியில், அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தொலைபேசி
அழைப்பு விபரங்கள் மற்றும் இருப்பிடத் தரவுகளை இராணுவத்திடம் கைமாற்றியதாகக்
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40f79765-953b-4f25-88dd-f2c7233650ca/26-6aa992c4e818d.webp' /></p><p>இதேவேளை, இராணுவ ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் தமது
ஊழியர்கள் சிறைவாசம், சித்திரவதை மற்றும் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்
என்ற அசாதாரண சூழல் காரணமாகவே இத்தகைய முடிவை எடுக்க வேண்டியிருந்ததாக
டெலினோர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.</p><p>

அத்துடன், தடைகள் விதிக்கப்பட்ட கண்காணிப்புக் கருவிகளை வெளியாட்களுக்குக்
கைமாற்றியமை மற்றும் நோர்வே வெளியுறவு அமைச்சின் அனுமதியின்றி வர்த்தகத்தை
விற்பனை செய்தமை தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

2022 மார்ச் மாதத்துடன் மியன்மாரிலிருந்து முற்றாக வெளியேறிய அந்நிறுவனம்,
பொலிஸாரின் விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகத்
தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T18:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மில்லியன் ரூபாய் மோசடி: மேல் மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prasanna-sanjeeva-arrested-1789496594"></link>
            <id>https://tamilwin.com/article/prasanna-sanjeeva-arrested-1789496594</id>
            <summary type="text">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன சஞ்சீவ, மோசடியான டெண்டர் நடைமுறைகள் செய்த குற்றத்திற்காக தொடர்பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன சஞ்சீவ, மோசடியான டெண்டர் நடைமுறைகள் செய்த குற்றத்திற்காக தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

டெண்டர் நடைமுறைகளை மீறி பயணிகள் போக்குவரத்து அனுமதிகளை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4.1 மில்லியனுக்கும் அதிகமான ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இன்று(15.09.2026) அவரைக் கைது செய்துள்ளது.
</p><h2>
மோசடி குற்றச்சாட்டு</h2><p>
அவருடைய பதவிக் காலத்தில் மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை சட்ட விதிமுறைகளை மீறி, முறையான டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயணிகள் போக்குவரத்து அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad71711a-a0a8-41b5-80ae-a6d7075a226a/26-6aa98d41e1173.webp' /></p><p>
</p><p>
இந்த சட்டவிரோத அனுமதிகள் மூலமாக அரசாங்கத்திற்கு மொத்தம் 4,160,000 ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

வெளித்தரப்பினருக்குச் சட்டவிரோதமாகப் பயனளித்து ஊழல் புரிந்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T18:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில நாட்களில்.. சரித்திரம் படைக்கவுள்ள போராட்டம் திரைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-music-launch-event-1789495539"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-music-launch-event-1789495539</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வெளிவரவுள்ள
போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில்
கோலமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வெளிவரவுள்ள
போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில்
கோலமாக இடம்பெற்றது. </p><p>

இந்த திரைப்படமானது,உதைப்பந்தாட்ட வீரரனொருவனின் கதையாகவும், ஈழத்தை களமாகவும் 
கொண்டு பல சவால்களுக்கு மத்தியில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
</p><p>
கதாநாயகனாக றீகன் அறிமுகமாகியுள்ளதுடன் , கதாநாயகியாக நிவேதிகா ராசையா நடித்துள்ளார். </p><p>

இதேவேளை, ஈழ சினிமாவின் பிரபல நடிகர் நடிகைகளும் நடித்துள்ளார்கள்.</p><p> 

அத்துடன், இந்த திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><h2> 

இசை வெளியிட்டு விழா</h2><p>
படத்தில் பாடல்களை வாகீசன் ராசையா , உமாகரன் ராசையா , பொத்துவில் அஸ்மீன் ,
பூவன் மதீசன் , கே.எஸ் சாந்தகுமார் மற்றும் அருண் யோகதாசன் ஆகியோர்
எழுதியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d9505-26b4-4d77-b27b-4a6a0a4a9fdd/26-6aa98910beefd.webp' /></p><p>
</p><p>
பாடல்களை தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா,
பாடகர் சத்யன், பாடகி கோவை கமலா ஆகியோருடன், ஈழத்தின் பிரபல பாடகரான வாகீசன், கோகுலன் சாந்தன், தேவன் அய்யா , பூவன் மதீசன், டயஸ் மற்றும் அக்சலா ஆகியோர் பாடியுள்ளனர்.
</p><p>
இசை வெளியீட்டு நிகழ்வில், தென்னிந்தியாவின் பிரபல யூடியூப்பரான மைக் செட்
சிறீராம், பிரபல பாடகர் சத்யன் உள்ளிட்டோருடன் திரைப்பட குழுவினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T18:06:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approval-appropriation-bill-for-year-2027-1789491202"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approval-appropriation-bill-for-year-2027-1789491202</id>
            <summary type="text">எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
அதனையடுத்து சட்ட வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட, இந்தச் சட்டமூலம் தற்போது சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றுள்ளது.
</p><h2>நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க</h2><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் கோரி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d073db3d-8e5d-48c3-bff3-2ebf727477ed/26-6aa97e68032fe.webp' /></p><p>
தற்போதைக்கு குறித்த சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மிகவிரைவில் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T17:22:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றின் இரகசியத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எப்படித் தெரிந்தது..! சஜித் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/how-anura-know-court-decision-1789488853"></link>
            <id>https://tamilwin.com/article/how-anura-know-court-decision-1789488853</id>
            <summary type="text">&amp;nbsp;22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><h2>22வது அரசியலமைப்புத் திருத்தம்</h2><p>
</p><p>22வது அரசியலமைப்புத் திருத்தத்தையும் நீதித்துறைத் திருத்தச் சட்டமூலத்தையும் ஒன்றாகவே பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தத் திருத்தங்கள் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c80c4ce2-2584-4464-b1e8-6463c75d53be/26-6aa96ed6c5c43.webp' /></p><p>
</p><p>இதன் மூலம் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பலத்த பாதிப்பு ஏற்படுவதுடன், சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்தரப்புகளுக்கு இடையிலான அதிகாரப் பங்கீடு மற்றும் சமநிலை முறையும் சீர்குலையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
மேலும், அரசியலமைப்பின் 3, 4, 83 மற்றும் 107 ஆகிய பிரிவுகளுடன் 22வது திருத்தத்தைப் பரிசீலிக்கும்போது, இது மக்களின் இறையாண்மையை பாதிக்குமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மேலதிகமாகச் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அவசியமாகலாம் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
ஜனநாயகத்தைச் சுருக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனக் குற்றம்சாட்டிய அவர், மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
எனவே, வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அமைதியான போராட்டப் பேரணியில் இணைந்து ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க முன்வருமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் குறித்து சஜித்திடம் வாக்கு மூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-sajith-will-be-questioned-1789492296"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-sajith-will-be-questioned-1789492296</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரதி சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p>
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்டவர்கள் பிரதான சூத்திரதாரிகளை பாதுகாப்பதாக தாம் முதலில் கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bf080a2-54e3-49ba-8cc6-206d3f0cbcbb/26-6aa97c4983a1c.webp' /></p><p>
தமக்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கூறியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடமும் வாக்கு மூலங்கள் பதியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே அறிந்திருந்தும், இராணுவப் புலனாய்வுத் துறையினர் அனைத்துத் தகவல்களையும் சதித்திட்டமாக மறைத்து, தாக்குதல் நடப்பதற்கு அனுமதித்து அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
</p><p>மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>
சுரேஷ் சலே, தேசிய வைத்தியசாலையை ஓய்வு விடுதியாக மாற்றிக் கொண்டு ஓய்வெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p>இந்த வழக்கு எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T17:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வெளியானது அவசர தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789491793"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789491793</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, தங்கள் கைபேசிகளில் அவசரகால எச்சரிக்கை வந்தால், பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
</p><h2>
அவசரகால அறிவிப்பு</h2><p>
மேலும், அவசரகால சூழ்நிலைகளில், மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் 911 என்ற அவசரகால சேவை எண்ணையும், மற்ற பகுதிகளில் 998 என்ற எண்ணையும் அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba170f6-14b3-4be5-9889-0abd3c681f31/26-6aa97b164cdd0.webp' /></p><p>
</p><p>
துணைத் தூதரகத்தின் அவசரகால தொடர்பு எண்ணான 056 098 6671ஐயும் அழைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:07:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவுக்கு வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் அதிரடி கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-youths-arrested-in-south-korea-1789491106"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-youths-arrested-in-south-korea-1789491106</id>
            <summary type="text">தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள இளைஞர் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h2>
கஞ்சாவை பயன்படுத்தி போதைப்பொருள் தயாரிப்பு</h2><p>
குறித்த இலங்கை இளைஞர்கள் குழு, கஞ்சாவை பயன்படுத்தி ஹஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eca14c0-d165-4e0d-93e5-01651f627e9b/26-6aa977f698c3e.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் தென்கொரியப் பொலிஸார் இளைஞர்கள் குழுவைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஹஷிஷ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை குண்டுவெடிப்பு: விசாரணையில் சிக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955"></link>
            <id>https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் பொலிஸாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
</p><p>கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதிகாலை, தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>தெஹிவளை குண்டுத்தாக்குதல்</h2><p>இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர்களின் தந்தையின் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகக் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.</p><p>தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்ட வீடும், தாக்குதலுக்கு உள்ளான வீடும் ஒரே ஒரு சுவரால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்ததால், தவறுதலாக இந்த குடும்பத்தின் மீது குண்டு வீசப்பட்டதாகக் கைதான நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e4b3ef-bd2a-4719-bd5a-257825de39e8/26-6aa975591622a.webp' /></p><p>பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கொஸ் மல்லி” என்ற தனது உறவினர் மற்றும் போதிய வத்த பகுதியைச் சேர்ந்த “அவிஷ்கா” ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாகச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.</p><p>தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காகக் கேரேஜ் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டதைக் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>விசாரணையில் வெளிவந்த இரகசியம்</h2><p> 
வாகனத்தைக் கேரேஜில் ஒப்படைத்த நபர் மற்றும் கேரேஜ் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
செப்டம்பர் 10 இரவு 9 மணியளவில், களுபோவில சரணங்கர வீதியைச் சேர்ந்த ஹிருத்ம ஷாஷ்மிக என்ற “ஹிரு மல்லி” மற்றும் தாக்குதலை நடத்திய மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ என்ற “மது” ஆகியோர் அந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c30a4f8-6b98-405b-98b7-539292286b0d/26-6aa97559bff30.webp' /></p><p> </p><p>
மேலும், ஆகஸ்ட் 1 ஆம் திகதி இரத்மலானை கண்டவல வீதியில் “ஜதுங்க பிரியந்த” என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மது என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. </p><p>
தற்போது தாக்குதலை நடத்திய நபர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். 
இவர்கள் இருவரும் விரைவில் நீதிமன்ற அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:42:43+00:00</updated>
        </entry>
    </feed>
