<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-11T23:40:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..! அதிரவைக்கும் காணொளி - புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/180-dead-in-colombia-earthquake-1786490585"></link>
            <id>https://tamilwin.com/article/180-dead-in-colombia-earthquake-1786490585</id>
            <summary type="text">கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 570க்கும் மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்தநிலையில் நிலநடுக்கம் தொடர்பான பல திடுக்கிடும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>சக்திவாய்ந்த நிலநடுக்கம்</h2><p>
</p><p>
மேற்கு கொலம்பியாவின் சொகோ (Choco) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே பூமிக்கு அடியில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

தொடர்ந்து பல நில அதிர்வுகள் பதிவாகின. </p><p>இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.


அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">NEW footage is circulating from a magnitude 7.4 earthquake that struck Colombia&#39;s Pacific region today. <br><br>The epicenter was near San José del Palmar in Chocó department, at a depth of around 96 km. <br><br>It was felt strongly across much of Colombia—including Bogotá, Medellín, and… <a href="https://t.co/X03limcIts">pic.twitter.com/X03limcIts</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2086811623902052811?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.


கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது.இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><h2>அவசரநிலை பிரகடனம்</h2><p>குறிப்பாகக் காளி (Cali) மற்றும் பெரேரா (Pereira) நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் நடைமுறையில் உள்ளது.


நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,

நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.</p><p> அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. </p><p>18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A powerful earthquake struck Colombia, and several buildings appeared to be about to collapse due to the powerful tremors. <a href="https://x.com/hashtag/Earthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Earthquake</a> <a href="https://x.com/hashtag/colombia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombia</a> <a href="https://x.com/hashtag/colombiaearthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombiaearthquake</a> <a href="https://t.co/Kp2jWEuXlf">https://t.co/Kp2jWEuXlf</a> <a href="https://t.co/10A3kYSs2D">pic.twitter.com/10A3kYSs2D</a></p>&mdash; Bara (@Reueus) <a href="https://x.com/Reueus/status/2087024035591041294?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>


நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
காளி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
</p><p>
 ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T23:35:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி இயங்கும் 10 பேருந்துகள் அடையாளம்! வடக்கில் விரைவில் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-be-taken-against-private-bus-drivers-1786488410"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-be-taken-against-private-bus-drivers-1786488410</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துச் சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.</p><p>

இவ்வாறான பேருந்துகளுக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><h2>பரிசோதனை நடவடிக்கைகள்</h2><p>

இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் 10 பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டவிரோத பேருந்துச் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf22a95-adad-4f75-9582-92367c71ee05/26-6a7ba8c01b9ba.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் இது அநீதியை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயக்குவதற்கு ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
எனினும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><h2>விசேட நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து பேருந்துகளை பரிசோதிக்கவுள்ளனர்.</p><p>

இதன்போது, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும்.

அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abced9ba-a9aa-4cac-a279-eacf261f40bf/26-6a7ba8c0c491e.webp' /></p><p>

அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே பேருந்துச் சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-11T22:57:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல! மணிவண்ணன் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-solution-for-the-tamil-people-1786479754"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-solution-for-the-tamil-people-1786479754</id>
            <summary type="text">மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன்
தெரிவித்துள்ளார்.
</p><p>வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய
கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>


மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட முடியாது. உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது.</p><p></p><h2>மாகாண சபை தேர்தல்கள்&nbsp;</h2><p>2017 கிழக்கு மாகாண
சபை பதவியை இழந்திருந்தது
கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல் அரசாங்கங்கள்
வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது. அவர்களைப் பொறுத்தவரையில் இந்த
நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும்.</p><p> இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட
பகிரக்கூடாது. அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு
பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை
செயற்படுத்த கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb58efe-8edb-4ebf-b5bf-48b0726f23b5/26-6a7b944654d38.webp' /></p><p> </p><p>அந்த
அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா
அரசாங்கங்களாலும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
</p><p>
2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது மைத்திரிபால சிறிசேன ரணில்
விக்ரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி. அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த
சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல்
நடைபெறாமல் இருக்கிறது.</p><p> ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச்
சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.
13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும் நான் 100 வீதம்
ஏற்றுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்காக உயிரை கொடுப்பேன்.! நாமலின் மக்கள் சந்திப்பில் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-meeting-attended-by-namal-rajapaksa-1786480669"></link>
            <id>https://tamilwin.com/article/public-meeting-attended-by-namal-rajapaksa-1786480669</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற நபர் ஒருவர், நாமல் ராஜபக்சவின் தந்தையைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற நபர் ஒருவர், நாமல் ராஜபக்சவின் தந்தையைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>
அதாவது, மகிந்த ராஜபக்ச சொன்னால் தான் உயிரையும் கொடுக்கத் தயார் என்று கூறினார்.</p><p> 

குறித்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது.
</p><p>

இத்தகைய தீவிர விசுவாசமான கருத்துக்கள் தற்போதைய சமூக மற்றும் அரசியல் சூழலுக்கு தேவையற்றவை என்றும், இத்தகைய உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள் சிக்கலானவை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>

இதேவேளை நாட்டில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயாராகி வருகின்றார்.</p><p>

இந்த வியடங்கள் மற்றும் நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய விடயங்களை பற்றி பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sUqdox2fSjw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T20:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகளின் இடையூறுக்கு எதிராக யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-municipal-council-members-stage-boycott-1786474583"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-municipal-council-members-stage-boycott-1786474583</id>
            <summary type="text">யாழ். மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர்
உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி
வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர்
உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி
வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர சபை உறுப்பினர்கள் இன்றையதினம் (11) அடையாளப்
பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

​</p><p>45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
அனைத்துக் கட்சிகளின் கூட்டுப் பங்களிப்புடன் குறித்த அடையாளப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

​</p><h2>பகிஷ்கரிப்புப் போராட்டம்&nbsp;</h2><p>இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி,
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் மக்கள்
பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbd56159-851f-4ac6-9977-cafe41ae20bd/26-6a7b7241dc92c.webp' /></p><p>இதன்போது அதிகாரிகளின் இந்த முறையற்ற செயற்பாடுகளினால், மக்களால் தெரிவு
செய்யப்பட்ட பிரதிநிதிகளால் மக்களின் அடிப்படை நலன்களை உரிய முறையில்
நிறைவேற்றவும், மக்களை சென்றடையவும் முடியாத இக்கட்டான சூழ்நிலை
ஏற்பட்டுள்ளதாக சபையின் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

​</p><p>மாநகர சபையின் ஊடாக மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அத்தியாவசிய சேவைகள்
மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பனவற்றில் அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதங்கள்
ஏற்படுத்தி வருவதாகவும், மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்புகளுக்குள்
தலையிட்டு முடக்க முற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><h2>தன்னிச்சையான செயற்பாடுகள்</h2><p>
</p><p>முன்னதாக, இன்றைய சபை அமர்வின்போது குறித்த அதிகாரிகளின் திட்டமிட்ட
இடையூறுகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் தீவிரமாக விவாதித்திருந்தனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5c38b8b-f061-4740-90d8-ebc549f87f6c/26-6a7b7242b629f.webp' /></p><p>இதன்போது, அதிகாரிகளின் இத்தகைய தன்னிச்சையான செயற்பாடுகள் சபையின்
நற்பெயருக்கும் மக்களின் உரிமைகளுக்கும் எதிரானது என விவாதிக்கப்பட்டு, அது
தொடர்பான தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

​</p><p>குறித்த தீர்மானத்தை அடுத்து, அதிகாரிகளின் போக்கைக் கண்டிக்கும் வகையிலும்,
அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லும் நோக்க்குடனேயே
இன்றைய அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இதே நேரம்
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது,
ஊடகங்களை சந்திக்கவோ கருத்து கூறவோ தனக்கு அவசியம் இல்லை என மாநகரின் ஆணையாளர்
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-11T19:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முடிவெடுத்து உயிரிழப்பதை தடுக்க துரித நடவடிக்கை: ஆளுநர் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-action-to-prevent-suicides-governor-1786472539"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-action-to-prevent-suicides-governor-1786472539</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும்
சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான
து...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும்
சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான
துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு&nbsp;வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.</p><p>அத்துடன், அதற்கான ஒருங்கிணைந்த
கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (11.8.2026) மாலை நடைபெற்ற விசேட
உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்தப் பணிப்புரையை வழங்கினார்.</p><p></p><h2>உயிரிழப்புகள்</h2><p>
</p><p>
கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 80
உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0622a4-b266-45c9-8dc0-41c4391b2dc0/26-6a7b6b84a43c8.webp' /></p><p> தேசிய
மட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு சுமார் 30 பேர் என்ற அளவில்
இவ்வாறான உயிரிழப்புகள் பதிவாகி வருவதாக மருத்துவ நிபுணர்கள்
சுட்டிக்காட்டினர்.</p><p> குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இந்தப்
போக்கு அதிகரித்து வருவதும் கவலைக்குரிய விடயமாகக் குறிப்பிடப்பட்டது.</p><p></p><h2>சுகாதாரத் துறை</h2><p>
</p><p>
மது பாவனைக்கு அடிமையாதல், குடும்ப வன்முறை, குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான
தொடர்பாடல் குறைவு, பெற்றோர் – பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் – மாணவர்கள்
இடையிலான நெருக்கம் குறைவடைதல், தனிமை, சமூக மற்றும் உளவியல் அழுத்தங்கள்
உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்நிலைக்கு செல்வாக்குச் செலுத்தி வருவதாக
மருத்துவ நிபுணர்கள் கலந்துரையாடலில் எடுத்துரைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68da1147-614e-4a67-b343-e571c4337b8a/26-6a7b6ccfa117a.webp' /></p><p> </p><p>இந்தச் சவாலை
எதிர்கொள்வதற்கு சுகாதாரத் துறையின் முயற்சிகள் மட்டும் போதுமானதல்ல்
சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் அவசியம் என்றும்
வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T18:41:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிச்சத்திற்கு வந்த பாதாள உலகத்தின் அரசியல் தொடர்புகள்..! மரண தண்டனை மீண்டும் நடைமுறையாகுமா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-regardin-death-penalty-drug-trafficking-1786470851"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-regardin-death-penalty-drug-trafficking-1786470851</id>
            <summary type="text">இலங்கையில் தற்பொழுது&amp;nbsp; மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளாகியுள்ளன.


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்பொழுது&nbsp; மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளாகியுள்ளன.</p><p>


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு அரசியல்வாதிகளின் அனுசரணை இல்லாமல் இவ்வளவு பெரிய வலையமைப்பு இயங்க முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
 மாக்கந்தர மதுஷ் போன்ற பாதாள உலகத் தலைவர்கள் அரசியல்வாதிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் இதற்கான முக்கிய சான்றாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இலங்கையில் மரண தண்டனை சட்டம் புத்தகத்தில் இருந்தாலும், 1976 முதல் நடைமுறையில் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
</p><p>
போதைப்பொருள் குற்றங்களைக் குறைக்க மரண தண்டனையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதற்கு ஆதரவாகவோ அல்லது நிறைவேற்றுவதாகவோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
</p><p>
 மரண தண்டனைக்கு எதிரான வாதங்களில் மனித உரிமை கவலைகள், நீதித்துறை தவறுகள் நிகழ்ந்தால் அதைத் திருத்த முடியாது என்ற அம்சம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் (ICCPR) ஆகியவை முதன்மையாக உள்ளன.
</p><p>
வெறும் மரண தண்டனை மட்டுமே தீர்வாகாது; போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்களைக் கண்டறிதல்,பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளில் ஊழலை ஒழித்தல், விசாரணை மற்றும் நீதிமன்றச் செயல்பாடுகளை விரைவுபடுத்துதல் போன்ற கட்டமைப்பு ரீதியான மாற்றங்களே அவசியமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DEmhAJm0O5s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T18:03:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக காணி உரிமையை மறுக்கும் அரசின் தந்திரத்துக்கு துணை போக வேண்டாம்! மனோ கணேசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/up-country-land-rights-mano-ganesan-1786468362"></link>
            <id>https://tamilwin.com/article/up-country-land-rights-mano-ganesan-1786468362</id>
            <summary type="text">இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை என்ற ஒரு புதிய புரளி-சபையை கொண்டு வந்து பெருந்தோட்ட வாழ் மலையக தமிழருக்கும் காணி உரிமையை தந்திரமாக மறுக்கவும், அவர்களை வெளி பலான இடங்களில் குடியேற்றவும், தொடர்மாடி வீடுகளை கட்டி குடியேற்றவும், என்பிபி அரசு திட்டம் இடுகிறது. </p><p>

இது இவர்களது பழைய ஜேவிபி கொள்கை. இதற்கு இவர்கள் இன்று, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை ஐநா அலுவலகம், ஆகிய சர்வதேச நிறுவனங்களை தந்திரமாக பயன்படுத்த முயல்கிறார்கள்.</p><p></p><h2>காணிக்கான உரிமை</h2><p> </p><p>

காலநிலை, மண்சரிவு, நீர் பிடிப்பு, ஆகிய உன்னத விஷயங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கிறது. ஆனால், இவை எமது மக்களின் காணி உரிமைக்கு குந்தகம் விளைவிக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேச இயக்குனர் ஷனென் கோவ்லின் தலைமையிலான வங்கி குழுவினரிடம் தெளிவாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b2f17c-e32d-468b-a878-08d8b57bb51c/26-6a7b63c2e43a4.webp' /></p><p>ஏடிபி குழுவினருக்கு மனோ எம்.பி மேலும் கூறியுள்ளவை தொடர்பில், தமுகூ ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூற பட்டுள்ளதாவது;&nbsp; இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில், மலையக மக்கள் வளர்ச்சி குன்றிய பிரிவினர். இதற்கு வரலாற்று காரணங்கள் உள்ளன. </p><p>எமது மக்களுக்கு 2003 ஆண்டு தான் கடைசி தொகுதி குடியுரிமையே கிடைத்தது. 

ஆகவே நாம் ஆரம்பித்த புள்ளி தாமதம் ஆனது. ஆகவே வளர்ச்சியும் தாமதம் ஆனது. </p><p>இன்று எமது குடியுரிமை முழுமை அடைய வேண்டும் என்றால், எமது காணிக்கான உரிமை உறுதி படுத்த பட வேண்டும். காணி உரிமை இல்லாவிட்டால், எமது குடியுரிமை முழுமை அடையாது. அது கிடைத்தால், ஏனைய உரிமைகள் படிப்படியாக வந்து சேரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T18:02:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அச்சுறுத்தல்: துருக்கியில் இருந்து ரகசிய விமானத்தில் ட்ரம்ப் பயணம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-secretly-fled-turkey-amid-iran-threat-1786467290"></link>
            <id>https://tamilwin.com/article/trump-secretly-fled-turkey-amid-iran-threat-1786467290</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் துருக்கியில் இருந்து ரகசியமாக வேறு விமானத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் துருக்கியில் இருந்து ரகசியமாக வேறு விமானத்தில் பயணித்ததாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் கட்டாரால் வழங்கப்பட்ட புதிய விமானத்தில் துருக்கியின் அங்காராவுக்குச் சென்றிருந்தார்.</p><p></p><h2>ஈரான் அச்சுறுத்தல்&nbsp;</h2><p> எனினும், அங்கிருந்து புறப்படும் போது எதிர்பாராத விதமாக பழைய Air Force One விமானத்தை பயன்படுத்தியிருந்தார்.</p><p>

அங்காரா விமான நிலையத்தில் ஊடகங்கள் முன்னிலையில் பழைய Air Force One விமானத்தில் ஏறிய ட்ரம்ப், பின்னர் விமான நிலைய உணவு விநியோக வாகனம் மூலம் ரகசியமாக மற்றொரு சிறிய விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21efe32f-9ae9-4b2c-bc78-bb4c1b9cb509/26-6a7b5519a84a8.webp' /></p><p>
</p><p>
அந்த விமானம் அமெரிக்க விமானப்படையின் C-32A விமானம் எனவும், அதில் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு பயணித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

ஈரானுடனான பதற்றம் அதிகரித்திருந்த காலகட்டத்தில் இந்தப் பயணம் இடம்பெற்றதுடன், ஈரான் துருக்கியின் அண்டை நாடாகவும் உள்ளது.</p><p></p><h2>உயர்மட்ட பாதுகாப்பு</h2><p>

இதனிடையே, கட்டார் வழங்கிய புதிய விமானம் ஜனாதிபதி மற்றும் அவரது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உயர்மட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0741377-e485-41ae-8b12-e63fea5d4bf4/26-6a7b551a5d689.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பல எதிரிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தங்களிடம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவதாக வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஸ்டீவ் சியுங் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-11T17:43:15+00:00</updated>
        </entry>
    </feed>
