<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-17T21:13:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் மீது குண்டுதாக்குதல்.. ட்ரம்ப் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bombing-oman-trump-issues-stern-warning-1786997407"></link>
            <id>https://tamilwin.com/article/bombing-oman-trump-issues-stern-warning-1786997407</id>
            <summary type="text">ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஓமான் தடையாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டுவீசப்படும் என அமெரிக்க ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஓமான் தடையாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டுவீசப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி முன்னேற்றம் அடைந்து வருகின்றன. </p><h2>

சரணடைதல்.. </h2><p>
இந்நிலையில், ஓமான் குறுக்கிட்டால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ec1f9d-e9d6-47bb-887b-7b032175a4c1/26-6a83763d121a4.webp' /></p><p> ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கான இரண்டு மாத கால அவகாசம் எந்த திருப்புமுனையும் இன்றி முடிவடைந்த நிலையில், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் நீண்டகால பங்காளியாகவும் அமைதிப் பேச்சுவார்த்தை மத்தியஸ்தராகவும் திகழும் ஓமான் மீது ட்ரம்ப் விடுத்துள்ள இந்த மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T20:59:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் முடிவுக்கு வர உள்ள ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-cid-1786995183"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-cid-1786995183</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய விசாரணைகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தான் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.வழக்கின் முறைப்பாட்டு தரப்பு சாட்சி விசாரணை 547 நாட்கள் நடைபெற்று இருக்கின்றன.</p><p>அந்தக் காலப்பகுதியில் 309 பேரிடம் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பொருட்கள் தடவியல் அறிக்கைகளும் சாட்சியங்களாக இதுவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>மிக விரைவிலே இந்த வழக்கு முடிவுக்கு வர உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp;நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F1l_ko6A4l8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T20:01:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வந்த கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை பிரச்சினை விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uniform-issue-at-kalmunai-base-hospital-resolved-1786989848"></link>
            <id>https://tamilwin.com/article/uniform-issue-at-kalmunai-base-hospital-resolved-1786989848</id>
            <summary type="text">அம்பாறை- கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சினை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக&amp;nbsp;இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சினை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக&nbsp;இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 06 ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட 37 மூவின சுகாதார உதவியாளர்களுள் 09 பேர் இஸ்லாமிய பெண்களாவர்.</p><p>அவர்களது சீருடைப் பிரச்சினை தொடர்பாக இன்று சுகாதார அமைச்சு தீர்க்கமான முடிவை அனுப்பியுள்ளது.</p><h2>சீருடை பிரச்சினை</h2><p>
</p><p>அதாவது குறித்த ஒன்பது இஸ்லாமிய பெண் சுகாதார உதவியாளர்களையும் அருகிலுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு கிடைத்திருக்கின்றது. அவர்கள் நாளை விடுவிப்பு செய்யப்படவிருக்கின்றார்கள்.அத்தோடு இந்த பிரச்சினை முடிவுக்கு வருகிறது என்று கூறினார்.</p><p>[DIBNMPஸ</p><p>இதேவேளை, கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை குழுவின் தலைவர் பிரபல சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரம் ராஜனிடம் கேட்ட பொழுது, ஆம் அதற்கான இடமாற்றக் கடிதம் இன்று சுகாதார அமைச்சிலிருந்து கிடைக்கப் பெற்றிருக்கின்றது.</p><p> நாளை அவர்கள் 9 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள் .
இதற்காக ஒத்துழைத்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எமது குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T19:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவை மிரட்டும் நாமல்! மகிந்தவின் - மனைவி பிள்ளைகளை கடுமையாக சாடிய அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-kumara-resigning-mahinda-family-chandrasekar-1786990242"></link>
            <id>https://tamilwin.com/article/anura-kumara-resigning-mahinda-family-chandrasekar-1786990242</id>
            <summary type="text">நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான தீர்மானத்தை தொடர்ந்து, சுவாரஸ்யமடைந்தே உள்ளது எனலாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான தீர்மானத்தை தொடர்ந்து, சுவாரஸ்யமடைந்தே உள்ளது எனலாம்.&nbsp;</p><p>இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைக்கு சென்றாலும் கூட அவரை சிறையில் வைத்தே ஜனாதிபதி ஆக்குவோம் என அவர் தரப்பினர் அரசாங்கத்தை எச்சரித்து வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவி விலகினால் அவரை கைது செய்யும் நிலை ஏற்படலாம் என எதிர்தரப்புக்களில் பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதேநேரம், கடற்றொழில் அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்பில் முன்வைத்துள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன.&nbsp;</p><p>இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZXdAKNMU7LA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T18:50:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chairman-tourism-development-authority-resigns-1786987341"></link>
            <id>https://tamilwin.com/article/chairman-tourism-development-authority-resigns-1786987341</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, வெளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களினால் தான் பதவியிலிருந்து விலகுவதாகப் புத்திக புத்திக ஹேவாவசம் தனது&nbsp; கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T17:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனையில் இலக்கு வைக்கப்பட்ட வைத்தியர் சுகுணன் - ஆதாரத்துடன் சிக்கிய நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hopsital-nurses-appointment-issue-1786987078"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hopsital-nurses-appointment-issue-1786987078</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.&amp;nbsp;இவ்விடயத்தை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>இவ்விடயத்தை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக இனரீதியான பிரசாரம்&nbsp;முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களுக்கான சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து புதிய நியமனம் பெற்றதாக 9 பேர் கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>அரச சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடைகளை அணிந்து வந்து வரும் நிலையில் சுகாதார அமைச்சினால் சிலர் நியமனங்களைப் பெற்று வைத்தியசாலைக்கு சீரூடையின்றி வந்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிற ஊழியர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், இவ்விவகாரத்தில்&nbsp;வைத்தியர் சுகுணனுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இவற்றை விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uwsQ0IbG0x0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-17T17:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துருகிரியவில் டுபாய் கசுனின் உறவினர் மீது துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-athurugiriya-one-person-injured-1786986810"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-athurugiriya-one-person-injured-1786986810</id>
            <summary type="text">அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.8.2026) இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>

காயமடைந்தவர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p> 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான டுபாய் கசுனின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d687ba7-f212-47bd-ada4-c13f0f91179c/26-6a834b0c68f5d.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T17:20:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-police-officers-arrested-for-accepting-a-bribe-1786986221"></link>
            <id>https://tamilwin.com/article/2-police-officers-arrested-for-accepting-a-bribe-1786986221</id>
            <summary type="text">சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(17) இலஞ்ச ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>குறித்த கைது நடவடிக்கையானது இன்று(17) இலஞ்ச ஊழல் விசாரணை
ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>அண்மையில் கைதான போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து
விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப்
பெற்றதாக கூறப்படுகின்றது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், சாய்ந்தமருது
பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின்
பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f5dfa52-ee35-4f89-95a8-b02809b7a60b/26-6a833eeeb42b8.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T17:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 - கலாசார, உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2026-cultural-food-festival-kandiah-baskaran-1786983113"></link>
            <id>https://tamilwin.com/article/2026-cultural-food-festival-kandiah-baskaran-1786983113</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p>

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.</p><p> 

கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்று (17.08.2026) வரை இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.&nbsp;</p><h2>தனித்துவ அடையாளம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்தநிலையில், இன்று (17.08.2026) இத்திருவிழா நிகழ்விற்கு றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) வருகை தந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0787ca3-d167-4743-b001-c955ea05e0f5/26-6a8339c6a1d37.webp' /></p><p>
</p><p>
நிகழ்வில் வடக்கின் பாரம்பரிய உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப் பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, பாரம்பரிய கலை மற்றும் உணவுக் கலாசாரத்தை உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லும் முயற்சியாக இத்திருவிழா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இ. ஜீன் கரோல் வழக்கு: டொனால்ட் ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை மீண்டும் நிராகரித்தது அமெரிக்க உயர் நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-supreme-court-rejects-donald-trump-1786983511"></link>
            <id>https://tamilwin.com/article/us-supreme-court-rejects-donald-trump-1786983511</id>
            <summary type="text">எழுத்தாளர் இ. ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க
டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எழுத்தாளர் இ. ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க
டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அமெரிக்க உயர்
நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.</p><p>

கடந்த 1990களில் நியூயோர்க்கில் உள்ள பேரங்காடி ஒன்றில் வைத்துத் தம்மை
பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் அது குறித்து தவறான
தகவல்களை வெளியிட்டு தமக்கு அவதூறு ஏற்படுத்தியதாகவும் கூறி இ. ஜீன் கரோல்
வழக்குத் தொடர்ந்திருந்தார்.
</p><p>
இவ்வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், ட்ரம்ப் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும்
அவதூறு வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 5 மில்லியன் டொலர் நஷ்டஈடு
வழங்குமாறு உத்தரவிட்டது.</p><h2>நஷ்டஈடு</h2><p>
</p><p>
கடந்த ஜூன் மாதம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் தாக்கல் செய்த மனுவை உயர்
நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அம்மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி
ட்ரம்ப்பின் சட்டத்தரணிகள் மீண்டும் விண்ணப்பித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5073dfbf-189d-4e58-80af-0e4af4282ce7/26-6a8335099a6de.webp' /></p><p>
</p><p>
இந்நிலையிலேயே, அந்த மறுபரிசீலனை மனுவையும் உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி
செய்துள்ளது.
</p><p>
அதேவேளை, ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கரோலின் குற்றச்சாட்டுகளை
மறுத்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், அவருக்கு 83.3
மில்லியன் டொலர் நஷ்டஈடு விதிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:21:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advanced-level-exam-student-passes-away-1786981013"></link>
            <id>https://tamilwin.com/article/advanced-level-exam-student-passes-away-1786981013</id>
            <summary type="text">யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர்&amp;nbsp; பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.8.2026) இடம்பெற்றுள்ளது.இதன்போது அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர்&nbsp; பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>சிகிச்சை</h2><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை
எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a721f3af-a9e3-4f6b-a13d-0b89a00aa7fd/26-6a832d8ada213.webp' /></p><p> </p><p>இதன்போது அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.பின் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.</p><p>அதன்பின்னர் மீண்டும் 12 ஆம் திகதி
உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெற்றார்.</p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
பின்னர் நேற்றிரவு (16) உணவு அருந்திவிட்டு இருந்தவேளை வலிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து
விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/967c780f-b90b-4cd4-9440-da0f2c9e3585/26-6a832d8b912ee.webp' /></p><p>
</p><p>
அவரது மரணம் சம்பந்தமான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா
மேற்கொண்டார்.
</p><p>
உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் குறித்த மரணத்துக்கான காரணம்
கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T15:49:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deshabandu-tennakoon-drugs-crime-1786925811"></link>
            <id>https://tamilwin.com/article/deshabandu-tennakoon-drugs-crime-1786925811</id>
            <summary type="text">பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் &#039;சோல் பீச்&#039; (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் 'சோல் பீச்' (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கியதில் மறைக்கப்பட்ட உண்மை கதையொன்றை புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க வெளியிட்டுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்களில்,</p><p>சவேந்திர சில்வாவின் கோரிக்கையின் அடிப்படையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்தார் என்று குறித்த ஹோட்டலின் முகாமையாளர் ரிபா காதர் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
</p><p></p><h2>பழிவாங்கிய சம்பவம்</h2><p>இருப்பினும், இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டாகும். அதாவது தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய போது ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கோட்டுள்ளார். அதை கொடுக்க மறுத்ததால் பழி தீர்க்கும் முகமாக தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gKFV72M95uY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின்னர், அவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊடக பிரசாரத்திற்கு தேவையான கூட்டங்கள் அனைத்தும் 'சோல் பீச்' ஹோட்டலிலேயே நடைபெற்றன.
</p><p>இந்த பிரசாரங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் 'சோல் பீச்' ஹோட்டலே வழங்கியது. அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதும், "இதை நிரந்தரமாக்கிக்கொள்ள எனக்கு இவ்வளவு தொகை பணம் வேண்டும்" என்று கேட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d3c367-cb7b-41c4-8e3d-2cdd12638cd7/26-6a8252f52914c.webp' /></p><p>அதற்கு ஷிரான் பாஷிக், "இந்த நேரத்தில் அவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேசபந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனை நிராகரித்த பின்னர் தனக்கு உதவிய நபரை பழிவாங்குவதற்காக இந்த ஹோட்டலை இடித்தார். தான் கேட்ட பணம் கிடைக்காததால் பழிவாங்கும் நோக்கில் இதைச்செய்தார்.</p><p>அக்காலத்தில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் (OIC) என பொலிஸில் உள்ள அனைவரும் வந்து சாப்பிட்டு, குடித்தது இந்த 'சோல் பீச்' ஹோட்டலில் தான். இது அனைவருக்கும் தெரிந்த விடயம். </p><p>ஆனால், அதற்கு அடுத்ததாக உள்ள 'பரகுடா' (Barracuda) உணவகத்தில் பொலிஸாரால் சும்மா ஒரு தேநீர் கூட குடிக்க முடியாது என்றும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T15:35:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் பிரதமரின் அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல்: ஈரானிய எல்லையிலிருந்து ஏவப்பட்டதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drone-attack-on-iraqi-prime-minister-s-office-1786980440"></link>
            <id>https://tamilwin.com/article/drone-attack-on-iraqi-prime-minister-s-office-1786980440</id>
            <summary type="text">பர்ஸானியின் அலுவலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரதானியின் இல்லத்தைக்
குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பர்ஸானியின் அலுவலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரதானியின் இல்லத்தைக்
குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தாக்குதல், இன்று(17.08.2026) ஈராக்கில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற இத் தாக்குதல்களில்
எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என குர்திஸ்தான்
பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
“ஹதீத்-110” ரகத்தைச் சேர்ந்த இரண்டு ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
நேரடி அச்சுறுத்தல்</h2><p>
இந்த தாக்குதலானது ஈரானிய எல்லைப் பகுதிக்குள் இருந்தே ஏவப்பட்டதாக குர்திஷ்
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், ட்ரோன்கள் இலக்குகளைச் சரியாகத் தாக்கியதா என்பது குறித்த தெளிவான
விவரங்கள் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1537e31a-d7aa-4eef-b909-111a6074d673/26-6a83296773130.webp' /></p><p>

இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரதமர் மஸ்ரூர் பர்ஸானி, இது
சட்டவிரோதமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான ஒரு நடவடிக்கை எனக்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும்
விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய குர்திஷ் எதிர்ப்பு
அமைப்புகளுக்கு ஈராக் பிராந்தியம் புகலிடம் அளிப்பதாக ஈரானும் அதன் ஆதரவு
ஆயுதக் குழுக்களும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றன.
</p><p>
எனினும், அண்டை நாடுகளுக்கு எதிராகத் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்த
அனுமதிக்கவில்லை என ஈராக்கிய குர்திஷ் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T15:32:10+00:00</updated>
        </entry>
    </feed>
