<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-20T21:36:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இது சர்வாதிகாரத்தின் முதல் படி! நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-govt-rajitha-senarathna-condomns-1784582867"></link>
            <id>https://tamilwin.com/article/anura-govt-rajitha-senarathna-condomns-1784582867</id>
            <summary type="text">மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை
நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை
நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறி என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சாடியுள்ளார்.&nbsp;</p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த ஆண்டு 2.3 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, இந்த ஆண்டு
4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.</p><p>&nbsp;</p><p>
</p><p>
பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டிய சூழலில், உலக வங்கி
அதனை 3 சதவீதமாகவே கணித்துள்ளது.</p><p>

ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை விட்டுச் செல்லும்போது இருந்த அதே 6 பில்லியன்
டொலர் மட்டத்திலேயே வெளிநாட்டு கையிருப்பு தேக்கமடைந்துள்ளது.
</p><p>
சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதார நிலை
மோசமடையக்கூடும் என எச்சரித்துள்ள நிலையிலும், அரசு அதற்குத் தீர்வு காணாமல்
அரசமைப்புத் திருத்தங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது.</p><p></p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>
</p><p>
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் ஒன்பது நீதியரசர்
வெற்றிடங்கள் உள்ளன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமல்,
ஏன் பதவிக்காலத்தை நீடிக்க இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்? இது சட்டத்தரணிகள்
சங்கம் மற்றும் நீதிபதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0a4a07a-5f75-4425-98a3-c5f9da737dde/26-6a5e939a6597b.webp' /></p><p> </p><p>இவர்களுக்கு ஒரு
சலுகை வழங்கினால், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் என அனைவரும்
இதே கோரிக்கையை விடுப்பார்கள். </p><p>இவ்வாறான சர்வாதிகாரப் போக்கு நாட்டின்
எதிர்காலத்துக்குப் பெரும் ஆபத்தாகும்.

நிர்வாகத் துறை மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றால் பொதுமக்களிடம் சர்வஜன
வாக்கெடுப்பு கோர வேண்டும். </p><p>தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை
ஒழிப்போம் என்று சொன்னவர்கள், இன்று அதிகாரத்தைப் பலப்படுத்த அரசமைப்பைத்
திருத்த முற்படுகின்றார்கள். </p><p>மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள்
மீது சர்வதேச கண்காணிப்பு உள்ளஇன்றைய சூழலில், இவ்வாறான நடவடிக்கைகள்
நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T21:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கடற்படைத் தளபதி டேமியனுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anua-secretary-congratulates-new-navy-commander-1784580918"></link>
            <id>https://tamilwin.com/article/anua-secretary-congratulates-new-navy-commander-1784580918</id>
            <summary type="text">இலங்கைக் கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ்
அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்
குமாநாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக் கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ்
அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்
குமாநாயகவை சந்தித்துக்
கலந்துரையாடினார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(20.7.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>
</p><p>
இலங்கைக் கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ்
அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, ஜனாதிபதியின் செயலாளர் தனது மனமார்ந்த
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p></p><h2>நினைவுப் பரிசு</h2><p>
</p><p>
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் நினைவாக, கடற்படைத் தளபதியால் ஜனாதிபதியின்
செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f48375-57ad-4cb4-92df-2b0161ccf596/26-6a5e91e082eba.webp' /></p><p>
இந்தச் சந்திப்பில் இருவரும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடற்படை சார்
விடயங்கள் குறித்து சுருக்கமாகக் கலந்துரையாடினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T21:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலையில் கருணாவுடன் சென்ற பெண் யார்..! - நான்காவது கோடீஸ்வரரான மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-eelam-karuna-a-woman-1784569691"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-eelam-karuna-a-woman-1784569691</id>
            <summary type="text">முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p> பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு கருணா சென்ற போது நடந்த சம்பம் தொடர்பிலேயே அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>பிரியந்த ஜயகொடி, "எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார்.</p><p>அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>யார் அந்த பெண்? என தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.. இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yBaWqANNAjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T20:51:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்கு தயாராகும் நீண்ட பட்டியல் - அவுஸ்திரேலியாவுக்கு விரைந்த சிஐடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-police-cid-investigation-to-autralia-1784575213"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-police-cid-investigation-to-autralia-1784575213</id>
            <summary type="text">இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக, கைது செய்வதற்கான விரிவான பட்டியலைத் தயாரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக, கைது செய்வதற்கான விரிவான பட்டியலைத் தயாரித்து, குழுக்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த விசாரணை பணச்சலவை, இணையவழி மோசடி மற்றும் சர்வதேச இலஞ்சம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கலாம்.</p><p> 

திருடப்பட்ட அரச நிதிகளைக் கண்டறியவும், சர்வதேச குற்றக் குழுக்களைக் குறிவைக்கவும் CID, அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்நிலையில், ஏர்பஸ் விமான ஒப்பந்தங்கள் தொடர்பான பெரும் வெளிநாட்டு நிதி முறைகேடுகள் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் புலனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p>

இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wDwDUkPZbmU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p> 

</p>]]></content>
            <updated>2026-07-20T19:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/measures-to-reduce-prison-overcrowding-anura-1784573675"></link>
            <id>https://tamilwin.com/article/measures-to-reduce-prison-overcrowding-anura-1784573675</id>
            <summary type="text">சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும்
அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும்
அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது</p><p>குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று(20)முற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் உயர் அதிகாரிகள்
கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.</p><p></p><h2>ஆலோசனை&nbsp;</h2><p> </p><p>குறிப்பாக, சிறைச்சாலை வசதிகளை நவீனமயப்படுத்துதல் மற்றும்
அவற்றை விரிவுபடுத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளால்
முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து ஜனாதிபதி விரிவாகக்
கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bfcff50-cf24-4843-a473-4ef371b127d2/26-6a5e6ef43b538.webp' /></p><p>
</p><p>
இந்தச் சந்திப்பில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன
நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்
(ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்
செயலாளர் அயேஷா ஜினசேன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த
குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>
சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைத்தல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை
முன்னெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விரைவாகச் செயற்படுத்துமாறு
ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கூட்டணியின் பின்னணியில் பரபரப்பு! கட்சியின் முக்கியஸ்தர்கள் பற்றிய இரகசிய பேச்சுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-alliance-ranil-sajith-namal-sjb-slpp-1784570042"></link>
            <id>https://tamilwin.com/article/new-alliance-ranil-sajith-namal-sjb-slpp-1784570042</id>
            <summary type="text">தற்போது இலங்கையில் புதிய அரசியல் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகள் தீவிரமான நடைபெற்று வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.இந்தநிலையிலே, ரணில் விக்ரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது இலங்கையில் புதிய அரசியல் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகள் தீவிரமான நடைபெற்று வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.</p><p>இந்தநிலையிலே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச ஆகியோர் தங்களது அரசியல் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் பரந்த கூட்டணிகளை உருவாக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்தோடு, ஐக்கியதேசியக்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இரு தரப்பினரின் தலைமைத்துவத்திலும் அதற்கான ஆர்வம் மந்தமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>குழுஅமைப்பு, செயலாளர் பதவி, பொருளாளர் நியமனம் போன்ற விடயங்களில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>புதிய கூட்டணியின் பின்னணி தொடர்பான விடயங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m2EEUQnaLBg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T18:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் இலக்கு வைக்கப்படும் சுரேஷ் சலே! சி.டி.விக்ரமரத்னவின் சாட்சிகளை அழிக்கும் மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானியாவிலுள்ள ராணுவ ஆய்வாளர் அரூஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,

இதில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் மிக முக்கியமானது.
</p><p>
சிறைக்குள் இருக்கும் சுரேஷ் சலேவுக்கும் இதே போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஒரு சிறை கலவரத்தை உருவாக்கி அவரைத் தாக்குவதோ அல்லது படுகொலை செய்வதோ இலகுவாகச் செய்யப்படலாம்.
</p><p>
மரணமடைந்தவர்கள் எவரும் தவறான முடிவெடுக்கும் மனநிலையில் இல்லை என்றும், அவர்களது மரணங்களுக்கு முன் குடும்பப் பிரச்சனைகள் அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.
</p><p>

அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான சாட்சிகளை அழிப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயல்வதாகவும், இவ்வாறான கொலைகள் ஒரு 'கொலை கலாச்சாரத்தை' மீண்டும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
</p><p>
அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இந்த விசாரணைகளை எவ்வளவு வேகமாக முன்னெடுக்கிறது என்பதில்தான் இந்த வழக்குகளின் வெற்றி தங்கியுள்ளது. </p><p>

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், விசாரணைகள் மர்மமாகவே முடிந்துவிடும் என குறிப்பிட்டார்.
</p><p>
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D49rkYHSU6A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜி.ஐ.டி (GIT) பரீட்சை முடிவுகள் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/git-exam-results-released-1784569201"></link>
            <id>https://tamilwin.com/article/git-exam-results-released-1784569201</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான முடிவுகளை இலங்கைத் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்யை தினம் (20 ஜூலை)&amp;nbsp; இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான முடிவுகளை இலங்கைத் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
</p><p>இன்யை தினம் (20 ஜூலை)&nbsp; இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
இப்பரீட்சைக்காக 199,598 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 200,235 பேர் விண்ணப்பித்திருந்தனர். </p><p>
அவர்களில் 147,407 பரீட்சார்த்திகள் தோற்றிய இப்பரீட்சையானது, 325 ஒருங்கிணைப்பு மையங்களின் ஒத்துழைப்புடன் 1,669 பரீட்சை மையங்களில் நடாத்தப்பட்டது.
</p><p> பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை (Index Number) உள்ளீடு செய்து, www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகப் பரீட்சை முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.
</p><p>பரீட்சார்த்திகள் ஜூலை 23, 2026 முதல் ஆன்லைன் பரீட்சை இணையதளம் வழியாகத் தங்களது சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ முடிவுத் தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.</p><p>
அதேபோல, பாடசாலைகளும் கல்வி அதிகாரிகளும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்தி பரீட்சை முடிவுத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
பரீட்சார்த்திகள் மேலும் தகவல்களைப் பெற பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற உடனடி உதவி இலக்கம் (Hotline) அல்லது பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் முடிவுகள் கிளையைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T17:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/france-denounces-extremely-serious-1784568763"></link>
            <id>https://tamilwin.com/article/france-denounces-extremely-serious-1784568763</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் பல மணி நேரம் சட்டவிரோதமாகச் சிறைபிடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் பல மணி நேரம் சட்டவிரோதமாகச் சிறைபிடித்து விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
இச்சம்பவத்திற்கு ஈரானுக்குக் கடுமையான "விளைவுகள்" ஏற்படும் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ழான்-நோயல் பரோ எச்சரித்துள்ளார். 
ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. </p><p>தூதரக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ராஜதந்திரப் பாதுகாப்பை முற்றிலும் மீறி, ஈரானியப் பாதுகாப்புப் படையினர் "மிகக் கடுமையான அச்சுறுத்தல் நடவடிக்கையில்" ஈடுபட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p> 
எவ்விதக் காரணமும் இன்றி இரண்டு ஊழியர்களும் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, அவர்களில் ஒருவர் மீது உடலளவிலான தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
பின்னர் விடுவிக்கப்பட்ட இருவரும் பாதுகாப்பாகத் தூதரகத்திற்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் அடுத்த சில மணிநேரங்களில் பிரான்ஸ் திரும்பவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb5ab7f-527f-4dde-9880-ebe07921989b/26-6a5e5bbf70a1f.webp' /></p><p> </p><p>
பாதிக்கப்பட்ட அந்த இரு ஊழியர்களும் ஈரானியக் கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உள்ளிட்ட சிவில் சமூகத்தினருக்கு ஆதரவளிக்கும் பிரான்ஸின் திட்டங்களைப் பராமரித்து வந்தவர்கள் என்பதால், இந்தத் தாக்குதல் நடவடிக்கை மேலும் அதிர்ச்சியளிப்பதாக அமைச்சர் பரோ சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 
இச்சம்பவம் குறித்து ஈரானிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு பகிரங்கக் கருத்தையும் வெளியிடவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதி ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-members-of-the-finance-commission-appointment-1784567148"></link>
            <id>https://tamilwin.com/article/new-members-of-the-finance-commission-appointment-1784567148</id>
            <summary type="text">நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர்.
அனீஸ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர்.
அனீஸ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அதன் ஏனைய உறுப்பினர்களாக ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>நியமனக் கடிதங்கள்</h2><p>
</p><p>இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத்
குமாநாயக்க, இன்று(20.7.2026)பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து
அவர்களிடம் வழங்கி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e51929d4-919d-4622-9557-e0755365848c/26-6a5e59ff2d74b.webp' /></p><p>

நிதி ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து
ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:26:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகு கைது செய்யப்பட மாட்டார்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-threatens-more-attacks-on-iran-1784568316"></link>
            <id>https://tamilwin.com/article/trump-threatens-more-attacks-on-iran-1784568316</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும்போது அவர் எந்த வகையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும்போது அவர் எந்த வகையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
</p><p>இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
அமெரிக்காவில் இருக்கும் வரை இஸ்ரேல் பிரதமர் எந்த வடிவத்திலும், எந்த சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என உறுதியளித்து பதிவிட்டுள்ளார்.
</p><p>எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெதன்யாகு அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்.</p><p></p><h2>நேரடி உத்தரவு&nbsp;</h2><p>
அந்த சந்தர்ப்பத்தில் அவரைக் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நகர அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி அறிவித்திருந்தார். </p><p>
இந்நிலையிலேயே டொனால்ட் ட்ரம்ப் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f874a121-a154-48e0-9982-9533b3e86dd7/26-6a5e5a0302aa5.webp' /></p><p>
</p><p>இதேவேளை, ஒவ்வொரு முறை ஈரான் ஒரு அமெரிக்கப் போர் வீரரைக் கொல்லும்போதும், அதற்கான விலையை அவர்கள் பல மடங்கு அதிகமாகச் செலுத்துவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p> இந்த நேரடி உத்தரவு பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் டானியல் கேன் மற்றும் அனைத்து இராணுவத் தலைவர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி: கொழும்பில் தேசிய செயலமர்வு இன்று ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/efforts-govt-national-workshop-colombo-1784567121"></link>
            <id>https://tamilwin.com/article/efforts-govt-national-workshop-colombo-1784567121</id>
            <summary type="text">அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு
செய்யப்பட்ட அரச துறையின் மாற்றத்திற்காக தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை
நுண்ணறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு
செய்யப்பட்ட அரச துறையின் மாற்றத்திற்காக தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை
நுண்ணறிவு பற்றிய தேசிய செயலமர்வு இன்று கொழும்பில்
ஆரம்பமாகியது.</p><p>

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தச் செயலமர்வை, ஐக்கிய நாடுகள் பொருளாதார
மற்றும் சமூக விவகாரங்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள்
மற்றும் டிஜிட்டல் அரச நிர்வாகப் பிரிவு, அதன் அரச நிர்வாகம் தொடர்பான
செயற்திட்ட அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள்
அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.</p><p>
</p><p>
அரச துறையில் தரவுக் கட்டுப்பாடு, டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் செயற்கை
நுண்ணறிவைப் பொறுப்புடனும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவது குறித்து
சிரேஷ்ட அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதே இந்தச் செயலமர்வின் பிரதான
நோக்கமாகும்.</p><p></p><h2>கட்டுப்பாட்டுச் சட்டகம்..</h2><p>
</p><p>
குறிப்பாக, சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், தரவு
முகாமைத்துவம், ஒன்றிணைந்து செயல்படக்கூடிய அரச கட்டமைப்பு மற்றும் செயற்கை
நுண்ணறிவின் நெறிமுறை சார்ந்த பயன்பாடு குறித்து இதில் பரந்த அளவில் கவனம்
செலுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c40e1088-ea92-43f7-9a58-02a57b137ff3/26-6a5e59db7da60.webp' /></p><p>

மூன்று நாள் நிகழ்ச்சியில், தேசிய தரவுக் கட்டுப்பாட்டுச் சட்டகத்தை
உருவாக்குதல், டிஜிட்டல் அரச சேவைகள், உற்பத்தித்திறன் சார்ந்த மற்றும் முகவர்
சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள்
விரிவாக ஆராயப்படும்.</p><p> விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் குழுச்
செயற்பாடுகள் மூலம் அரச அதிகாரிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். </p><p>இதன் மூலம்
இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தவும், சான்றுகளின் அடிப்படையில்
தீர்மானங்களை எடுக்கும் கலாசாரத்தை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும்
உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூடத்தில் கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-attempts-suicide-in-court-batti-1784564248"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-attempts-suicide-in-court-batti-1784564248</id>
            <summary type="text">மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட கைதி ஒருவர் நீதவான்
நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தவறான முடிவெடுக்க ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட கைதி ஒருவர் நீதவான்
நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தவறான முடிவெடுக்க முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த சம்பவமானது இன்றையதினம்(20.7.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><p>திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக
குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.</p><p></p><h2>கைது</h2><p>இதனையடுத்து, வழக்கிற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்ற பிடியாணை
பிறப்பித்ததையடுத்து கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிஸார் கைது செய்து மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15 ஆம்திகதி முற்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db21f2a8-9c23-45ed-b0d0-e0440c5e12b3/26-6a5e54508652c.webp' /></p><p>இதனையடுத்து அவரை 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டதையடுத்து மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.</p><p>

இந்த குறித்த நபரை வழக்கு விசாரணைக்காக சம்பவ தினமான இன்று திங்கட்கிழமை (20)
காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால்
அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டார்.</p><p></p><h2>விசாரணை</h2><p>இதனை தொடர்ந்து குறித்த நபரை திறந்த நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அந்த
வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை தொடர்ந்து எதிர்வரும் 3ம்
திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவரை
நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b837a00-a83a-441d-bbcb-97fb71679833/26-6a5e54513834b.webp' /></p><p>இந்த நிலையில் தொடர்ந்து திறந்த நீதிமன்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது
பிற்பகல் 3.00 மணியளவில் நீதிமன்ற சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்குள்
வைத்து குறித்த கைதி தனது கழுத்தையும், கையையும் கூரிய கத்தியால் வெட்டி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த நிலையில் படுகாயமடைந்து உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் இடத்துக்கு தடயவியல் பொலிஸ் பிரிவினர்
அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினின் உலகக் கிண்ண வெற்றி.. அமெரிக்கா - இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி - ஈரான் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-world-cup-victory-us-israel-iran-praises-1784565318"></link>
            <id>https://tamilwin.com/article/spain-world-cup-victory-us-israel-iran-praises-1784565318</id>
            <summary type="text">2026 - உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் பெற்ற வெற்றிக்கு
ஈரான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரே...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 - உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் பெற்ற வெற்றிக்கு
ஈரான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு
இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.</p><p>

காஸா மீதான இஸ்ரேலின் கொடூரமான போர் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல்
போர் ஆகியவற்றை ஸ்பெயின் அரசு கடுமையாகக் கண்டித்திருந்தது.</p><p>

இதன் காரணமாக, சமூக ஊடகங்களில் ஸ்பெயின் அணிக்கு உலகளவில் பெரும் ஆதரவு
பெருகியிருந்தது. மறுபுறம், இஸ்ரேலின் கொள்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஆர்ஜென்டினா
ஜனாதிபதி ஜேவியர் மிலிக்கு ஆதரவாக இஸ்ரேலிய அரசியல்வாதிகளும் கால்பந்து
இரசிகர்களும் ஆர்ஜென்டினாவை ஆதரித்தனர்.</p><p></p><h2>நாட்டின் சுதந்திரம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் ஆர்ஜென்டினாவை
வீழ்த்தி வெற்றி பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5dbbdd0-c80e-48c9-953c-b2d26625b130/26-6a5e51782a632.webp' /></p><p>
</p><p>
இதுகுறித்து ஈரானின் மூத்த அதிகாரி முகமது பாகர் கலிபாஃப் திங்கள்கிழமை அன்று
கூறியதாவது, "பாலஸ்தீன மக்களுக்காக ஸ்பெயின் வீரர்கள் குரல் கொடுத்ததும், ஈரானுக்கு
ஸ்பெயின் வழங்கிய ஆதரவும் அந்த அறிவுமிக்க, மரியாதைக்குரிய நாட்டின்
சுதந்திரத் தன்மையைக் காட்டுகிறது.
</p><p>
ஸ்பெயினின் இந்த வெற்றி அந்நாட்டு மக்களை மட்டுமின்றி, உலகில் சுதந்திரம்,
சுதந்திரமான சிந்தனை மற்றும் நீதியை விரும்பும் பல நாடுகளின் இதயங்களையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>"முன்னதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில்
பகாய் பேசுகையில், சமீபத்திய மாதங்களில் ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை மற்றும்
ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில் ஸ்பெயின் தேசிய அணியின் நடத்தையும், ஸ்பெயினின்
பொதுவான நிலைப்பாடும் மிகவும் மதிப்புமிக்கது" என்று பாராட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T16:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பயணத்தைத் ஒத்திவைக்க இந்தியக் குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-citizens-to-postpone-travel-to-iran-1784562022"></link>
            <id>https://tamilwin.com/article/indian-citizens-to-postpone-travel-to-iran-1784562022</id>
            <summary type="text">ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற
சூழல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களைத்
தற்காலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற
சூழல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களைத்
தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

மேலும், ஏற்கனவே ஈரானில் இருக்கும் இந்தியர்கள், அங்கு கிடைக்கக்கூடிய விமானச்
சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்துப்
பரிசீலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு
எண்ணெய் கப்பல்கள் "வெடித்துச் சிதறி" முடக்கப்பட்டதாக ஈரான் அறிவித்ததை
அடுத்து, அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகள்
அதிகரித்துள்ளன.</p><p></p><h2>தாக்குதல்கள்</h2><p>
</p><p>
இதன் பின்னணியில், திங்கட்கிழமை அன்று அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஒன்பதாவது
நாளாக ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4fe63bd-efe2-4e2f-9802-37e0b59a6a44/26-6a5e4168142b9.webp' /></p><p>

ஒரு மாதத்திற்கு முன்பு கையெழுத்தான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம்
முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இந்தத்
தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்குவகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான இந்த மோதல், சர்வதேச அளவில் எரிபொருள்
தட்டுப்பாடு மற்றும் பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T15:40:59+00:00</updated>
        </entry>
    </feed>
