<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-20T13:33:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாவட்ட காணி மற்றும் அபிவிருத்தி மேலதிக அரசாங்க அதிபராக பாலசிங்கம் தேவரதன் கடமையேற்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/balasingam-devarathan-assumes-duties-agent-1784553825"></link>
            <id>https://tamilwin.com/article/balasingam-devarathan-assumes-duties-agent-1784553825</id>
            <summary type="text">வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான புதிய மேலதிக அரசாங்க அதிபராக (Additional Government Agent – Land &amp;amp; Developmen...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான புதிய மேலதிக அரசாங்க அதிபராக (Additional Government Agent – Land &amp; Development) பாலசிங்கம் தேவரதன், இன்று (20.07.2026) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><p>

இதற்கு முன்னர், கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக (Deputy Commissioner) நீண்டகாலம் பணியாற்றிய அவர், அப்பகுதியின் விவசாய மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.</p><h2>மேலதிக அரசாங்க அதிபர்</h2><p>
</p><p>
அவரது பணிக்காலத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் பந்தன் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளில் புதிய கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான முன்மொழிவுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைத்து, அதற்கான அனுமதிகளைப் பெற்று இரு கமநல சேவை நிலையங்களையும் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24f33a6e-d4c0-4ae3-a982-69421c64678c/26-6a5e2388c60f1.webp' /></p><p>
</p><p>
மேலும், கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நெற்காணி பதிவேட்டை (Paddy Land Register – PLR) முழுமையாகப் பூர்த்தி செய்த சாதனையும் அவருடைய பணிக்காலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
</p><p>
வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற எளிய கடமையேற்பு நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு, புதிய மேலதிக அரசாங்க அதிபருக்கு தங்களது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-20T13:33:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029 இல் அரசை வீட்டுக்கு விரட்டியடிப்போம்! மனோ கணேசன் எம்.பி. சபதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-drive-government-home-in-2029-mano-ganesan-1784550501"></link>
            <id>https://tamilwin.com/article/we-drive-government-home-in-2029-mano-ganesan-1784550501</id>
            <summary type="text">&quot;நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>"நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் நேற்று(19.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>ஜனாதிபதித் தேர்தல்
</h2><p>
2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தி இந்த அரசை வீட்டுக்கு அனுப்பத் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
</p><p>
தற்பொழுது நிகழும் மரணங்கள் தொடர்பில் எம்மால் தீர்க்கமாகக் கூற முடியாது என்றாலும், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணத்தில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f6233dd-d112-4ade-aeaf-69a151e347e4/26-6a5e19a6196ff.webp' /></p><p>
</p><p>
 நிஷாந்த போன்ற திறைசேரி அதிகாரிகள் சாதாரணமானவர்கள் அல்லர். எனவே, இந்த விவகாரங்கள் குறித்து நீதிமன்றம் முறையான விசாரணைகளை நடத்த வேண்டும்.</p><p>

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசின் தீர்மானம் முறையற்றது. 
மக்கள் இறுதியாக நம்பிச் செல்லும் ஒரே இடம் நீதிமன்றம் தான். </p><p>அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.


அரசுகள் வரும், போகும் ஆனால் நீதித்துறையின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p></p><h2>அரசை வீட்டுக்கு அனுப்புவோம்</h2><p> </p><p>அரசியல் காரணங்களுக்காக நீதித்துறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.

இது ஒரு அரசியல் கூட்டணி மட்டுமல்ல, நாட்டின் பிரச்சினைகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் பொதுவான மேடை. </p><p>

தற்போது ஆறு கட்சிகள் இணைந்துள்ளன, எதிர்காலத்தில் இன்னும் பல கட்சிகள் இதில் இணையும். அரசைக் கவிழ்க்கும் நோக்கம் எமக்கில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47fa35ac-bb83-43df-ac16-d95ee27a54b4/26-6a5e19a563e92.webp' /></p><p> </p><p>

அவர்கள் தமது பயணத்தைத் தொடரட்டும். ஆனால், வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தி அரசை வீட்டுக்கு அனுப்பத் தயாராக இருக்கின்றோம்.</p><p>



எதிர்க்கட்சிகள் நாட்டைச் சீர்குலைக்கப் பார்க்கின்றன என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்வைக்கும் குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.

பிரதமர் பொய்களைக் கூறக்கூடாது.</p><p> அன்று நாட்டைச் சீர்குலைக்கும் வேலைகளைச் செய்தது நீங்கள்தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் 

தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்குத் எனது முழுமையான ஆதரவை வழங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T12:59:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்ம மரணங்களை முன்னரே அறிந்த அநுர அரசு..! சாகர காரியவசம் புதிய குற்றச்சாட்டு.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-accusation-government-1784551951"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-accusation-government-1784551951</id>
            <summary type="text">இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும், அரசு அதனைத்
தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது, அரசியல் பிரசாரங்களிலேயே
கவனம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும், அரசு அதனைத்
தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது, அரசியல் பிரசாரங்களிலேயே
கவனம் செலுத்தி வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர
காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

பத்தரமுல்லையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(20.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> 

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

இந்த வருடத்தில் இதுவரை 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. 

நேற்று கூட 16 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அரசின் கிளின் சிறிலங்கா
திட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. </p><p>இதில் வீதிப் பயனாளிகளின்
வாகனங்களைச் சோதனையிடுவதும், அரச நிறுவனங்களுக்குள் தமது ஆதரவாளர்களை
உள்வாங்குவதுமே நடக்கிறதே தவிர, நாடு சுத்தப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7066cf9e-eadc-4d86-ba49-e13fe758925c/26-6a5e1aa797bc4.webp' /></p><p> </p><p>

இவ்வாறான அலட்சியப்போக்கினால் நிகழும் ஒவ்வொரு மரணத்திற்கும் அரசே பொறுப்புக்கூற வேண்டும் என்றார். 

நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மர்ம மரணங்கள் குறித்து கடும்
சந்தேகத்தை வெளியிட்ட அவர், சில உயிரிழப்புகள் தற்கொலை என முன்னரே
அறிவிக்கப்படுவது விந்தையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
</p><h2>
தொடர் மர்ம மரணங்கள்</h2><p>
323 கொள்கலன் திருட்டு விவகாரத்தில் முறைப்பாடு செய்த நபர், நந்தன குணதிலக,
கபில சந்திரசேன, திறைசேரி அதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் எனப் பலர்
மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து செய்தி வருவதற்கு முன்பே, அது
தற்கொலை எனப் பொலிஸ் அதிகாரி ஒருவர் அறிவித்தமை பெரும் சந்தேகத்தை
ஏற்படுத்துகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3f1b632-a192-444a-8d79-fe4beabb98cd/26-6a5e1aa862ebd.webp' /></p><p> அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மர்மமாக இறப்பதும்,
பின்னர் அவை தற்கொலை எனப் பிரச்சாரம் செய்யப்படுவதும் ஜனநாயகத்துக்குப்
பொருத்தமற்றது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>


அரசு டெங்கு மற்றும் கோவிட் 19 நோயைக் கட்டுப்படுத்திய அனுபவமுள்ளவர்களின்
ஆலோசனைகளைப் பெறாது, தனது அகந்தையுடன் செயற்படுகின்றது என்று தெரிவித்த சாகர காரியவசம், இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பிரதம நீதியரசரின்
பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசு ஏன் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கின்றது
என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதும் என்றார். </p><p> 


அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் தள்ளிவிட்டு, மக்களின் உயிரைக் காக்க அரசு
முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:55:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- கோட்டையில் தொடருந்து தடம்புரள்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-derailed-at-colombo-fort-1784550832"></link>
            <id>https://tamilwin.com/article/train-derailed-at-colombo-fort-1784550832</id>
            <summary type="text">கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் சற்றுமுன்னர் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.இதனால் தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் சற்றுமுன்னர் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.</p><p>இதனால் தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p> </p><p>கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மாலை 04.45 க்கு ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த 1164 இலக்க தொடருந்து, தாமதமாகி மேடையை வந்தடைய முற்பட்ட போது மாலை 04.35 அளவில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.</p><p></p><h2>அதிகாரிகள் நடவடிக்கை&nbsp;</h2><p> 

இந்த விபத்தின் காரணமாக தொடருந்தின் ஒரு பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதற்கு முன்னர் கடந்த 7 ஆம் திகதியும் இதே தொடருந்து தடம்புரண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/012d528e-fa8e-4852-a41e-576d65ba6d81/26-6a5e1924b2182.webp' /></p><p> 

இந்த தடம்புரள்வு காரணமாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதுடன், தொடருந்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> 

இந்தநிலைமையினால் மாலை வேளையில் பயணிக்கும் ஏனைய சில அலுவலக தொடருந்துகளும் சற்று தாமதமடையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T12:49:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் பெரும் பரபரப்பு! நாடாளுமன்றம் முற்றுகை - பிரதமர் மோடி அவசரமாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delhi-battlefield-besieg-parliament-modi-evacuated-1784549845"></link>
            <id>https://tamilwin.com/article/delhi-battlefield-besieg-parliament-modi-evacuated-1784549845</id>
            <summary type="text">நீட் (NEET) உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்ப்பு தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் (NEET) உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து இன்று (20) புது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டன.</p><p>

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், தேசியத் தேர்வு முறையில் வெளிப்படையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><h2>டெல்லியில்&nbsp;பதற்றம்</h2><p>

ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை டெல்லி பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன் தடியடியும் நடத்தினர்.</p><p>

பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் சிதறி ஓடியதுடன், சிலர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0003c8be-e11f-4586-a478-3eb634ab82c5/26-6a5e17228a7f6.webp' /></p><p>
</p><p>
மே மாதத்தில் தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி (CJP), இந்தியாவின் கல்வி முறை, வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான அதிருப்தியை மையமாகக் கொண்டு அண்மைக் காலங்களில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.</p><p>

இந்தப் போராட்டம், CJP-க்கு ஆதரவாக 20 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் தீவிரமடைந்தது.
</p><p>
இதற்கிடையில், போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மத்திய டெல்லியின் சில பகுதிகளில் அமலில் இருந்த தடையுத்தரவை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><h2>இணைய சேவைகள்&nbsp;நிறுத்தம்</h2><p>
</p><p>
அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக CJP-யின் இரண்டு பிரதிநிதிகள் மூத்த அமைச்சரொருவரைச் சந்தித்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்ததாக இயக்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனிடையே, போராட்டத்தை ஒட்டி மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280812eb-bac0-4151-b311-a89f5e49cd8f/26-6a5e17236e89d.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதுடன், மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.</p><p>போராட்டம் மிகத் தீவிரமடைந்து, மாணவர்கள் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில்களை நெருங்கியதை அடுத்து, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அனைத்து பாதுகாப்புக் கதவுகளும் அவசரமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.</p><p> பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்குள் இருந்த மூத்த அரசு அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.</p><p></p><h2>பிரதமர் மோடி</h2><p>
</p><p>
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மிக அருகில் திரண்டு முழக்கமிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு, நாடாளுமன்ற வளாகத்தை விட்டு அவசரமாக வெளியேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965c1b5a-9c62-4311-b383-15f35286068f/26-6a5e17242a98f.webp' /></p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ராஜீவ் சவுக், ஜன்பத், படேல் சவுக், மத்திய செயலகம் உள்ளிட்ட 5 முக்கிய டெல்லி மெட்ரோ தொடருந்து&nbsp; நிலையங்களின் நுழைவு வாயில்களும் உடனடியாக மூடப்பட்டன.</p><p> நாடாளுமன்றத்தின் உள்ளேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நீட் முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக கடும் முழக்கங்களை எழுப்பியதால் அவையும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றப் பகுதி பலத்த ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T12:44:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயிர்களை அழித்ததாக தகராறு : கால்நடை உரிமையாளர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cattle-owner-brutally-hacked-to-death-1784550501"></link>
            <id>https://tamilwin.com/article/cattle-owner-brutally-hacked-to-death-1784550501</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை , ஹுங்கம பகுதியில் கால்நடைகள் பயிர்களை அழித்தது
தொடர்பான தகராறு முற்றியதில், கால்நடை உரிமையாளர் ஒருவர் வெட்டிக் கொலை
செய்யப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை , ஹுங்கம பகுதியில் கால்நடைகள் பயிர்களை அழித்தது
தொடர்பான தகராறு முற்றியதில், கால்நடை உரிமையாளர் ஒருவர் வெட்டிக் கொலை
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் கால்நடைகள், மற்றொருவர் பயிரிட்டிருந்த
மரக்கறி பயிர்களை அழித்துள்ளன. </p><p>இது குறித்த இழப்பீட்டைப் பேசுவதற்காக,
சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர் நேற்று(19.07.2026) சந்தேகநபரின் வீட்டுக்குச்
சென்றுள்ளார். இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்,
பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.</p><p></p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த பயிர்ச்செய்கை மேற்கொண்ட நபர் மற்றும்
அவரது சகோதரர் ஆகிய இருவரும் இணைந்து, கால்நடைகளின் உரிமையாளரை கூரிய
ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f98c3a-23fd-4d3a-93ba-c356c5bb2d79/26-6a5e16364070c.webp' /></p><p>படுகாயமடைந்த நபர் உடனடியாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்
சென்றுள்ளனர். </p><p>அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஹுங்கம பொலிஸார்
தீவிரப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T12:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rs-14-6-million-fine-for-not-follow-regulations-1784550458"></link>
            <id>https://tamilwin.com/article/rs-14-6-million-fine-for-not-follow-regulations-1784550458</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 2006-ஆம் ஆண்டின் 6-ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 2006-ஆம் ஆண்டின் 6-ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் (FTRA) விதிகளுக்கு இணங்கத் தவறிய 11 நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவிப்பை இன்று(20.07.2026) இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) வெளியிட்டுள்ளதுடன், 11 நிறுவனங்களுக்கு அபராதத் தொகை 14.6 மில்லியன் இலங்கை ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2> 

14.6 மில்லியன் ரூபாய் அபராதம்</h2><p>
இலங்கையின் பணமோசடித் தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்தல் (AML/CFT) ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்படும் நிதிப் புலனாய்வுப் பிரிவு, அச்சட்டத்தின் 19(1) மற்றும் 19(2) பிரிவுகளின் கீழ் நிர்வாகத் தண்டனைகளை விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ef8d37-de43-4ca2-ac6f-7d99c8d50e42/26-6a5e164ac2d87.webp' /></p><p> </p><p>

அந்த நிறுவனங்களில் கண்டறியப்பட்ட விதிமீறலின் தன்மை மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையில் இந்தத் தண்டனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும், தண்டனையாக வசூலிக்கப்பட்ட அனைத்துப் பணமும் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்த நடைமுறைப்படுத்தல் நடவடிக்கை, அறிக்கை நிறுவனங்களிடையே இணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நிதி அமைப்பின் நேர்மையை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/abjO4wfTafk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-20T12:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களோடு தொடர்புபடும் சர்ச்சைக்குரிய மரணங்கள்! மீண்டும் போர் வெற்றியை கையிலெடுக்கும் மகிந்த தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-deaths-linked-to-rajapaksa-family-1784549427"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-deaths-linked-to-rajapaksa-family-1784549427</id>
            <summary type="text">இன்று நாட்டில் அடிக்கடி நிகழும் உயர் அதிகாரிகளின் சர்ச்சைக்குரிய மரணங்களை ராஜபக்சர்களோடு தொடர்புபடுத்த அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக பொதுஜன பெரமுனவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று நாட்டில் அடிக்கடி நிகழும் உயர் அதிகாரிகளின் சர்ச்சைக்குரிய மரணங்களை ராஜபக்சர்களோடு தொடர்புபடுத்த அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டில் தற்போது நிகழும் எந்தவொரு பாதகமான சம்பவத்திற்கும் ராஜபக்ச குடும்பமே காரணம் என கூறும் அரசாங்கம், ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி பேச மறுக்கின்றது.</p><p></p><h2>அரசியல் பழிவாங்கல்&nbsp;</h2><p> </p><p> 


நாட்டில் நிகழும் சர்ச்சைக்குரிய மரணங்களை ராஜபக்சர்களுடன் இந்த அரசாங்கம் தொடர்புபடுத்துகின்றது.
</p><p>
ஆனால், மகிந்த ராஜபக்ச அவருடைய ஆட்சிக்காலத்தில், போரை முடிவுக்குக் கொண்டு வந்தமை, நெடுஞ்சாலைகள், மற்றும் மாபெரும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்து கவனம் செலுத்தவில்லை.

மாறாக, எல்லாத் தீமைகளுக்கும் ராஜபக்ச குடும்பமே காரணம் என கூறுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a34dd99-8533-47e6-a9b6-2bde0dd849a1/26-6a5e124494d45.webp' /></p><p> </p><p>

மேலும், போரில் வெற்றிபெற தங்களை அர்ப்பணித்த போர் வீரர்களையும், புலனாய்வு அதிகாரிகளையும் சிறையில் அடைத்து, அரசியல் பழிவாங்கலில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.</p><p> 

அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான கோப்புக்களை மறைத்த அதிகாரிகள், தற்போது அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்து கொண்டு, உண்மையான குற்றவாளிகளைத் தேடுவதற்குப் பதிலாக அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e91d4b0-b0a3-4b66-8a31-f35af36c3eaf/26-6a5e124557617.webp' /></p><p> </p><p>


இதேவேளை, தற்போது நாட்டு மக்களின் மீது அதிக வரிச்சுமையை சுமத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளில் இந்த அரசாங்கம் ஈடுபடுகின்றது. </p><p>

ஒருபுறம், ஜனாதிபதியின் திட்டத்தன் கீழ் 75 சதவீதமானோர் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், மறுபுறம் நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் அதிகரித்த வாழ்க்கைச் சுமையால் நெருக்கடியான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0nxZdnsn4AE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-20T12:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்னவிற்கு இரங்கல் தெரிவித்த ஜீவன் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-thondaman-condolences-to-c-d-wickramaratne-1784549853"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-thondaman-condolences-to-c-d-wickramaratne-1784549853</id>
            <summary type="text">இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
ஜீவன் தொண்டமான், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி அஞ்சலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
ஜீவன் தொண்டமான், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று(20.07.2026) இடம்பெற்றுள்ளன.</p><p>


இதற்கமைய, பல அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்த நிலையில், 
முன்னாள் பொலிஸ் மா அதிபர்
சி.டி. விக்ரமரத்னவின் மறைவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>

அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு
தனக்குக் கிடைத்ததாகவும், அமைதியான, பணிவான, கடமையுணர்வுமிக்க அதிகாரியாக அவர்
நாட்டிற்கு கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர் என்றும் அவரது சாதனைகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ba3bcf4-be8b-4c8e-98cd-a3e019884b54/26-6a5e128259176.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கை பொலிஸ் 
அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த ஜீவன்
தொண்டமான், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண கடற்படைத் தளபதி மற்றும் அரசாங்க அதிபர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-province-navy-commander-transferred-1784548867"></link>
            <id>https://tamilwin.com/article/northern-province-navy-commander-transferred-1784548867</id>
            <summary type="text">பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல்
புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபனை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல்
புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>குறித்த சந்திப்பானது இன்றைய தினம்(20.07.2026) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச்
செயலகத்தில் மரியாதை நிமித்தமாக இடம்பெற்றது.</p><p></p><h2>கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது, வட மாகாணத்தில் தனது பணிக்காலத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து
பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக
அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df5ec7c-8cad-42ae-8697-0948da17c419/26-6a5e0fe4ed559.webp' /></p><p>
அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகேயின் சேவையைப்
பாராட்டிய அரசாங்க அதிபர், அவரின் புதிய பொறுப்புகள் சிறப்புற அமைய மனமார்ந்த
வாழ்த்துகளையும் தெரிவித்தார்.</p><p>ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே , கொழும்பு கடற்படை தலைமையகத்தின்
மூன்றாம் நிலையிலுள்ள பிரதி பிரதானியாகப் பொறுப்பேற்கவுள்ளதுடன், கிழக்கு
மாகாண கடற்படைத் தளபதியாக மேலதிக கடமைகளையும் பொறுப்பேற்கவுள்ளார்.
</p><p>
வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய காலப்பகுதியில், புனித கச்சதீவு அந்தோனியார்
திருவிழா, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம் உள்ளிட்ட முக்கிய மத
நிகழ்வுகளுக்கான கடல் வழிப் போக்குவரத்து ஏற்பாடுகளை திறம்பட
ஒருங்கிணைத்ததுடன் நெடுந்தீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான பயணிகள்
கடற்போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்கும் முழுமையான ஒத்துழைப்பை
வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இச்சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க
அதிபர் (காணி) பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன்
மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T12:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழலற்ற சிறந்த நாட்டை உருவாக்குவோம் - ஆளும் தரப்பு தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-corruption-free-politics-pm-arun-hc-1784546798"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-corruption-free-politics-pm-arun-hc-1784546798</id>
            <summary type="text">ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் இல்லாத சிறந்த அரசியல் கலாசாரம் கொண்ட நாடாக இலங்கையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையின் கீழ் நாம் கட்டியெழுப்பி வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் இல்லாத சிறந்த அரசியல் கலாசாரம் கொண்ட நாடாக இலங்கையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையின் கீழ் நாம் கட்டியெழுப்பி வருகின்றோம் என&nbsp;பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.</p><p> இன்று(20.07.2026)&nbsp; திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைப்பெற்ற நீண்ட காலமாக நிலவி வந்த காணி சம்மந்தமான பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி கச்சேரி
நடமாடும் சேவையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>காணி கச்சேரி நடமாடும் சேவை</h2><p>


இந்த நடமாடும் சேவையில் நீண்டகாலமாக நிலவி வந்த பொது மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், </p><p>

காணிக்கான ஆவணங்களை பெற பலமுறை முயற்சித்த போதிலும் தீர்வு கிடைக்கவில்லை.

தற்போதைய நிலையில் காணிக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b342af55-9e4c-4ae7-8025-59852a995faf/26-6a5e0a0f3219d.webp' /></p><p> இதற்காக பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் தம்பலகாமம்
பிரதேச செயலாளருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.


முன்னர் நடைபெற்ற காணி நடமாடும் சேவையில் கடந்த கால அரசாங்கம் மூலமாக எதுவும்
கிடைக்கவில்லை. </p><p>ஆனால் இன்றைய காணி நடமாடும் சேவையினர் எதிர்வரும் திங்கட்கிழமை காணி உரிமை பத்திரத்தை பெற்று தருவோம்
என கூறினார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><h2>ஊழல் மோசடி அற்ற நாடு&nbsp;</h2><p>
</p><p>
இதன் போது உரையாற்றிய பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர, </p><p>

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றன.
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் மூவின சமூகங்களை சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c3ce111-412a-4c67-8ecd-54f228a1b607/26-6a5e0a0fe3e7d.webp' /></p><p>
</p><p>
இங்கு பல காணி பிணக்குகள் காணப்படுகின்றன இதனை தீர்க்க முயற்சித்து வருகிறோம். 

இலங்கை பல்வேறு
தரப்பட்ட பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி உலகளாவிய ரீதியில் தலைசிறந்த
நாடாக மாறிவருகிறது.</p><p>

ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் இல்லாத சிறந்த அரசியல் கலாசாரம்
கொண்ட நாடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க&nbsp; தலைமையின் கீழ் நாம் கட்டியெழுப்பி
வருகின்றோம்.</p><p></p><h2>மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு</h2><p> </p><p>

அத்துடன் சிறந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரினதும் ஒத்துழைப்புடன் முன்னேற
வேண்டும். 

எந்த சவாலாக இருந்தாலும் அதற்கு முகங்கொடுத்து முன்னேறி வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98fc8ebf-29f7-4492-8102-dbf5afea14a9/26-6a5e0a0e70e19.webp' /></p><p>
</p><p>பல பிரச்சினைகள் இருந்தாலும் சரியான முகாமைத்துவத்தின் ஊடாக அவற்றை கொண்டு செல்ல
வேண்டும். 

நாங்கள் நிச்சயமாக மக்களுடைய
அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண தயாராக உள்ளோம் என
தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த நடமாடும் சேவையில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள்
பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர கலந்து கொண்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான பொது மக்கள், காணி ஆணையாளர் என். அருள் செல்வன், தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப்
பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் காணி உத்தியோகத்தர் என பலரும் கலந்து
கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T12:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலிமுகத்திடலில் அதிரவைத்த கால்பந்து உற்சாகம்! இறுதிப் போட்டியை நேரலையாகக் கண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-vs-argentina-world-cup-final-colombo-1784548678"></link>
            <id>https://tamilwin.com/article/spain-vs-argentina-world-cup-final-colombo-1784548678</id>
            <summary type="text">ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணக் கால்பந்து
தொடரின் இறுதிப் போட்டியை இராட்சத திரைகளில் நேரலையாகக் காண்பதற்கு,
நள்ளிரவைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணக் கால்பந்து
தொடரின் இறுதிப் போட்டியை இராட்சத திரைகளில் நேரலையாகக் காண்பதற்கு,
நள்ளிரவையும் பொருட்படுத்தாது கொழும்பு காலிமுகத்திடலில் பல்லாயிரக்கணக்கான
இரசிகர்கள் திரண்டதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.</p><p>

தங்களது ஆதரவு அணிகளின் ஜெர்சிகளை அணிந்தவாறும், கொடிகளை ஏந்தியவாறும்
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த
இரசிகர்கள் எழுப்பிய உற்சாக ஒலி நள்ளிரவிலும் ஒட்டுமொத்த மைதானத்தையும்
அதிரவைத்தது.</p><p></p><h2>கால்பந்து உற்சாகம்</h2><p>
</p><p>
சாதாரண இரசிகர்களின் இந்த அதீத உற்சாகக் கொண்டாட்டத்தில், விளையாட்டுத்துறை
அமைச்சரும் ஒரு சாதாரண பார்வையாளராகக் கலந்துகொண்டமை அங்கிருந்தோரை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa5434f-7067-4591-8f97-7c3728ba5086/26-6a5e105c975af.webp' /></p><p> விசேட பிரமுகர்களுக்கான எவ்வித ஆடம்பரங்களுமின்றி,
சாதாரண மக்களுடன் அமர்ந்து அவரும் போட்டியின் ஒவ்வொரு விறுவிறுப்பான
கணத்தையும் ஆவலோடு இரசித்துப் பார்த்தார்.
</p><p>
இலங்கையில் கால்பந்து விளையாட்டுக்கான உத்வேகத்தையும், இளைஞர்களின் விளையாட்டு
ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விசேட நேரலை ஒளிபரப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>

நள்ளிரவையும் தாண்டி நீடித்த இந்தப் பிரம்மாண்ட நிகழ்வு காரணமாகக்
காலிமுகத்திடல் சூழலிலுள்ள நடமாடும் உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்கள்
பெரும் வருமானத்தைப் பெற்றுக்கொண்டன.</p><p></p><h2>&nbsp;பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்</h2><p>அத்தோடு, கொழும்பில் தங்கியிருந்த
கணிசமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கால்பந்து திருவிழாவில்
இணைந்துகொண்டு மகிழ்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf47ac8-67a2-427a-a22d-4ed73a2c22af/26-6a5e105d4c1c9.webp' /></p><p>
</p><p>
பெருந்திரளான மக்கள் கூடியதால் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாதிருப்பதைத்
தவிர்க்க, காலிமுகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பொலிஸ்
பாதுகாப்பும், போக்குவரத்து ஒழுங்குகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.</p><p>

நள்ளிரவையும் பகலாக்கிய இந்தக் கால்பந்து உத்வேகம், இலங்கையில்
கிரிக்கெட்டுக்கு இணையாகக் கால்பந்து விளையாட்டும் மக்கள் மத்தியில் எவ்வளவு
பலமாக வேரூன்றியுள்ளது என்பதை மீண்டும் நிரூபிப்பதாக அமைந்திருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T12:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-action-at-palali-public-hall-1784543032"></link>
            <id>https://tamilwin.com/article/police-action-at-palali-public-hall-1784543032</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலி சந்தியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதற்காக வருபவர்களின் பயன்பாட்டிற்காக
வலி.வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலி சந்தியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதற்காக வருபவர்களின் பயன்பாட்டிற்காக
வலி.வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும்
தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.</p><p>
அதேவேளை குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம்
என்பவற்றை வைத்தமை தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்கு மூலம்
பெற்ற பின்னர் அவற்றை மல்லாகம் நீதிமன்றில் ஒப்படைத்து, சட்ட நடவடிக்கை
எடுக்க உள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பலாலி பொதுநோக்கு மண்டபம்</h2><p>
</p><p>

யாழ்ப்பாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலாத்தளங்களில் பொதுச் சுகாதார
வசதிகளை ஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை தினசரி கண்காணித்து
முறையாகப் பராமரிக்க வேண்டும் என வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9567662c-6662-4d7a-83f6-f5538a0e4c69/26-6a5df95fd592b.webp' /></p><p>இதனையடுத்து பலாலி பொதுநோக்கு
மண்டபத்தில் சுற்றுலா பயணிகளின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த, குடிநீர்
தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
</p><p>
அதேவேளை, கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளாக பலாலி சந்தியில் , பலாலி மக்கள்
தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடாத்தியிருந்தனர்.</p><p></p><h2>போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்&nbsp;</h2><p> </p><p>எதிர்வரும்
ஞாயிறுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அந்தப் பகுதியில் கொட்டகை அமைக்க
பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/136ead30-d339-4b2e-b7c7-1217e9548a4c/26-6a5e057caf96b.webp' /></p><p>போராட்டக்காரர்கள் குறித்த பொதுநோக்கு
மண்டபத்தில் இளைப்பாறுவதுடன், மதிய உணவுகளை அந்த மண்டபத்தில் இருந்து
உட்கொள்வதுடன் அங்கிருக்கும் குடிநீர் தாங்கி மற்றும், தற்காலிக மலசல
கூட்டத்தினையே பயன்படுத்தி வந்துள்ளனர். அதனாலேயே பலாலி பொலிஸார் அவற்றை
அங்கிருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வயோதிப பெண்கள், முதியவர்கள் எனப் பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் அங்கிருந்த மலசல கூடம் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றை பலாலி பொலிஸார்
எடுத்து சென்றமை அந்தப் பகுதி மக்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் வரலாற்றுத் திருப்பம்: மகப்பேறு விடுப்பு பெற்ற முதல் பெண் மேயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-female-mayor-in-japan-to-take-maternity-1784545601"></link>
            <id>https://tamilwin.com/article/first-female-mayor-in-japan-to-take-maternity-1784545601</id>
            <summary type="text">&amp;nbsp;ஜப்பானில் மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் பெண் மேயர் 

எடுத்து புதிய சாதனை
படைத்த பெண் மேயர்









ஜப்பான் நாட்டின் வரலாற்றிலேயே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜப்பானில் மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் பெண் மேயர் 

எடுத்து புதிய சாதனை
படைத்த பெண் மேயர்









ஜப்பான் நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக, பதவியில் இருக்கும் ஒரு மேயர்
மகப்பேறு விடுப்பு எடுத்து புதிய சாதனை செய்துள்ளார்.
</p><p>
மேற்கு ஜப்பானில் உள்ள சுமார் 69,000 மக்கள் தொகை கொண்ட யவதா நகரத்தின் மேயரான
ஷோகோ கவாடா எடுத்துள்ள இந்த முடிவு, நாடு முழுவதும் விவாதங்களை
ஏற்படுத்தியதோடு சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p></p><p>

கடந்த 2023ஆம் ஆண்டில், தனது 33ஆவது வயதில் ஜப்பானின் மிக இள வயது பெண்
மேயராகப் பொறுப்பேற்ற போதே தமக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம்
இருந்ததாக கவாடா தெரிவித்துள்ளார்.</p><h2>
சட்டத்தில் இடமில்லை..</h2><p>
யவதா நகர சபை ஊழியர்களுக்கு 16 வாரங்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதி உள்ள
போதிலும், மேயர் பதவிக்கு அத்தகைய விதிகள் எதுவும் ஜப்பானிய சட்டத்தில் இல்லை.
இதனால், கவாடா தனக்கான புதிய நடைமுறை விதியை முறைப்படி உருவாக்க
வேண்டியிருந்தது.
</p><p>
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர்
கூறியதாவது,


"மகப்பேறு விடுப்பு எடுக்கும் முதல் மேயர் நான்தான் என்பதை அறிந்து நானே
மிகவும் ஆச்சரியப்பட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc39b2a-8a68-4951-a83c-c84742bec9b3/26-6a5e01b673701.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம், ஜப்பானில் இதுவரை இளம் பெண்களோ அல்லது பொதுவாகப் பெண்களோ மேயர்
போன்ற உயர்பதவிகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வந்துள்ளனர் என்பதை என்னால்
உணர்ந்து கொள்ள முடிந்தது” என்றார். </p><p>


கடந்த ஆண்டு ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனாயே தகைச்சி பொறுப்பேற்ற
போதிலும், ஜப்பானிய அரசியலில் இன்னும் ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
</p><h2>
பிரசவத்திற்கான விடுமுறை</h2><p>

உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கையில், அரசியல் அதிகாரப்
பகிர்வுப் பிரிவில் ஜப்பான் 125ஆவது இடத்தில்தான் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c302ac7c-9899-42b6-91f1-7c232fcd9520/26-6a5e01b747bf0.webp' /></p><p>

ஜப்பானில் பிறப்பு விகிதம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்த
அமைப்பில் பெரிய சீர்திருத்தங்கள் தேவை என்று கவாடா வலியுறுத்தியுள்ளார்.

பாலின சமத்துவம் மற்றும் வேலை நேரச் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசும் நாம்,
தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் உட்பட எந்தத் துறையில் இருப்பவர்களும்
பயமின்றி குழந்தை பெற்றுக் கொள்ளும் சமூகச் சூழலை உருவாக்க வேண்டும் என்று
அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அவ்வாறு செய்யத் தவறினால் மக்கள் தொகை சரிவும் பொருளாதார வீழ்ச்சியும்
தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><h2>

மேயரின் முடிவிற்கு எதிர்ப்பு</h2><p>

வரும் செப்டெம்பர் மாதம் கவாடாவுக்குக் குழந்தை பிறக்கவுள்ள நிலையில், உள்ளூர்
மக்கள் மற்றும் சக அதிகாரிகள் பெரும்பாலானோர் இவரது முடிவுக்கு ஆதரவு
தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இணையத்தில் சிலர் இதற்கு எதிர்மறையான விமர்சனங்களை
முன்வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c302ac7c-9899-42b6-91f1-7c232fcd9520/26-6a5e01b747bf0.webp' /></p><p>

அவர் தனது கடமையைச் செய்யாமல் விடுப்பு எடுப்பதற்காகவே பதவியில் இருக்கிறார்
என்று சிலர் பதிவிட்டது தமக்கு ஏமாற்றமளிப்பதாக மேயர் வருத்தத்துடன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேபோன்று, உள்ளூர் மக்கள் சிலர், ஒரு பெண் மேயர் மகப்பேறு விடுப்பு எடுப்பதை
வரவேற்தாகவும், ஆனால் விடுப்புக் காலத்தில் அவருக்கு 100% முழுச் சம்பளம்
வழங்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தங்களது கருத்துக்களைப்
பகிர்ந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்தமிழ் விழாவில் கலந்துக் கொண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandrasekhar-mp-attended-muthamil-festival-1784546460"></link>
            <id>https://tamilwin.com/article/chandrasekhar-mp-attended-muthamil-festival-1784546460</id>
            <summary type="text">சுவாமி விபுலானந்தர் அவர்களின் 79 ஆவது நினைவு தினத்தையும், 102 ஆவது துறவற ஆண்டினையும் முன்னிட்டு, மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவாமி விபுலானந்தர் அவர்களின் 79 ஆவது நினைவு தினத்தையும், 102 ஆவது துறவற ஆண்டினையும் முன்னிட்டு, மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழா, 19.07.2026 அன்று மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
</p><p>
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.</p><h2>முத்தமிழ் விழா</h2><p> </p><p>அதேவேளை, புத்தசமய, கலாசாரங்கள் மற்றும் சமய விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க&nbsp; அதிதியாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.</p><p>

விழாவின் ஆரம்ப நிகழ்வாக, மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் சுவாமி விபுலானந்தரின் நினைவைப் போற்றும் ஊர்வலம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68ae04a7-52e0-46da-8034-20781e2e74b4/26-6a5e0658470a9.webp' /></p><p> </p><p>பின்னர் பிரதம அதிதிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், சுவாமி விபுலானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் முத்தமிழ் கலைநிகழ்ச்சிகள், இசை, நடனம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.</p><h2>&nbsp;இராமலிங்கம் சந்திரசேகர்</h2><p>
</p><p>
விபுலானந்தர் நினைவாக பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட முத்தமிழ் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், சமூக சேவையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd4a0f66-fc9d-48d5-a6c8-0d6d8eacde18/26-6a5e06591674a.webp' /></p><p> </p><p>இதன்போது பிரதம அதிதி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.</p><p>

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சுவாமி விபுலானந்தர் தமிழ் மொழி, கலை, கல்வி மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகள் கடந்து நினைவுகூரப்பட வேண்டிய பெரும் பாரம்பரியமாகும் என்றும், இளம் தலைமுறையினரிடையே தமிழ் மொழி, முத்தமிழ், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
</p><p>
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், அரச அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-20T11:28:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வந்த நாட்டை உருவாக்கும் அநுர தரப்பின் கனவில் சிக்கிச் சிதையும் இலங்கை மக்கள்! வெளிவரும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-increasing-burden-of-living-for-sri-lankans-1784545608"></link>
            <id>https://tamilwin.com/article/the-increasing-burden-of-living-for-sri-lankans-1784545608</id>
            <summary type="text">அரசாங்கம் நாட்டை செல்வந்த நாடாக மாற்ற&amp;nbsp; முயற்சிக்கும் நிலையில்,&amp;nbsp; அதற்கு எதிர்மாறாக இலங்கை மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துச் செல்கின்றது எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் நாட்டை செல்வந்த நாடாக மாற்ற&nbsp; முயற்சிக்கும் நிலையில்,&nbsp; அதற்கு எதிர்மாறாக இலங்கை மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துச் செல்கின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>செல்வந்த நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை உள்ள போதிலும், மக்கள் கட்டாயமாக வறுமைச் சுமையை சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.&nbsp;</p><p></p><h2>அதிகரிக்கும் வாழ்க்கைச் சுமை</h2><p>அதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமை நாட்டு மக்கள் வாழ்க்கையை மேலும் கடினமாக்கியுள்ளது.&nbsp; அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் தளர்த்தி உடனடி நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f924ebf6-96bc-4b73-8ab9-4d76f81d9afd/26-6a5e05a72d32a.webp' /></p><p>மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.&nbsp;</p><p>எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த வரி மின்சாரக் கட்டணங்களில் நேரடித் தாக்கத்தைச் செலுத்துகின்றது.&nbsp; வாழ்க்கைச் செலவையும் அதிகரிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:26:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் உத்தரவில் சலே செய்த வேலைகள்! விடுதலைப் புலிகள் தொடர்பில் கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-main-culprit-of-the-easter-attacks-1784541062"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-main-culprit-of-the-easter-attacks-1784541062</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியோடுதான் அனைத்து வேலைகளையும் செய்தார் என்று முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியோடுதான் அனைத்து வேலைகளையும் செய்தார் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

ஆரம்பத்தில் இருந்தே சுரேஷ் சலே, கோட்டாபய ராஜபக்சவின் அருகிலேயே தான் இருப்பார். கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்காமல் எதனையும் சுரேஷ் சலே செய்ததில்லை. கோட்டாபய ராஜபக்சவுக்குத் தேவையானைத் தவிர வேறு எதனையும் சலே செய்ததும் இல்லை.</p><p></p><h2>சலேவை அழைத்த கோட்டாபய&nbsp;</h2><p>
ஆரம்ப காலங்களில் சுரேஷ் சலே போன்று மேலும் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும். இதுபோன்றவர்கள்தான் பின்னர் புலனாய்வுச் சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.</p><p> 

நான் இராணுவத் தளபதியானதன் பின்னர் சுரேஷ் சலே எனக்கு கீழ் பணியாற்றவில்லை. சலே உள்ளிட்ட ஒரு சிலர் வழக்கமாக அலுவலகத்தில் இருந்து முக்கிய அறிக்கைகளை தயார்ப்படுத்தும் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். 

எனவே, எனக்கு கீழிருந்து வேறு ஒரு பிரிவிற்கு சுரேஷ் சலே உள்ளிட்டவர்களை மாற்றினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c999a66-5272-46c0-bdca-b0ef2e2b5ec1/26-6a5df156a2e87.webp' /></p><p> </p><p> சலே எனக்குக் கீழ் பணியாற்றியிருக்கவில்லை. ஆனால், சலேயைப் பற்றி நன்றாக எனக்குத் தெரியும். 

சலே உள்ளிட்டவர்களை எனக்கு கீழ் இருந்து நீக்கிய பிறகு அவர்களை, கோட்டாபய ராஜபக்ச தமக்கு கீழ் பணியாற்றுமாறு,&nbsp;கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலகத்திற்கு அழைத்துக் கொண்டார்.</p><p> 

இராணுவத்திற்குள் இருந்துகொண்டு, கொழும்பில் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவது போல தான் அவர்கள் பணியாற்றினர். அவர்கள் கொடுத்த சில அறிக்கைகள் பிழையான தகவல்களைக் கொண்டிருந்தது.
</p><p>
உதாரணமாக, நான் இராணுவத் தளபதியானபோது, சலே உள்ளிட்டவர்கள் தந்த அறிக்கையின் படி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மொத்த போராளிகள் 9 ஆயிரம் பேர் என்று இருந்தது. எனினும், அது ஒரு தவறான அறிக்கை என்பது எனக்குத் தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/595f83c1-e224-4083-bb23-2de1ecc05e76/26-6a5df15753da5.webp' /></p><p> எனவே, சலே, ஹெந்த விதாரண உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றி, அந்த இடத்திற்கு யுத்தக் களத்தில் நேரடியாக இருந்து பணியாற்றிய அதிகாரிகளை நியமித்தோம்.
</p><p>
அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் மொத்தம் 30 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என நான் கணித்திருந்தேன்.

அதேபோல, அதன் பின்னரான அறிக்கைகள் மற்றும் கணக்கெடுப்புகளின் ஊடாக கிட்டத்தட்ட 32ஆயிரம் பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. </p><p> 

எனவே, சலே உள்ளிட்டவர்கள் இராணுவத்திற்குள் இருந்து, இப்படியான வேலைகளைத் தான் செய்து கொண்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-secretary-pudukkudiyiruppu-appointed-1784540151"></link>
            <id>https://tamilwin.com/article/new-secretary-pudukkudiyiruppu-appointed-1784540151</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளராக&amp;nbsp;விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன்&amp;nbsp;உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.இந்த பதவியேற்றல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளராக&nbsp;விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன்&nbsp;உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.</p><p>இந்த பதவியேற்றல் நிகழ்வானது&nbsp;இன்றையதினம்(20.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பிரதேச சபை செயலாளர்</h2><p>புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய ச.கிருசாந்தன்,
முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனைக்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்தே இவர் புதிய செயலாளராக பொறுப்பேற்றுக்
கொண்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d8c48a1-f9d9-4d83-a0fb-5f4293bbaa16/26-6a5deeaaa54fc.webp' /></p><p>விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன் துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி
வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> புதிய செயலாளரை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் சபை
உறுப்பினர்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்து வரவேற்றிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/andy-burnham-set-become-britain-new-prime-minister-1784544591"></link>
            <id>https://tamilwin.com/article/andy-burnham-set-become-britain-new-prime-minister-1784544591</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆண்டி பர்ன்ஹாம்
இன்று பதவியேற்கிறார்.

கடந்த ஒரு தசாப்தத்தில் (10 ஆண்டுகள்) பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆண்டி பர்ன்ஹாம்
இன்று பதவியேற்கிறார்.
</p><p>
கடந்த ஒரு தசாப்தத்தில் (10 ஆண்டுகள்) பிரித்தானியாவின் ஏழாவது பிரதமராகப்
பொறுப்பேற்கும் அவர், நாட்டை முழுமையாக மாற்றி அமைக்கப் போவதாகவும், மக்களின்
வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாகவும்
உறுதியளித்துள்ளார்.
</p><p>
தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவி&nbsp;விலகலை செய்ததைத் தொடர்ந்து,
லேபர் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டி பர்ன்ஹாம், மன்னர்
சார்லஸைச் சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.</p><p></p><h2>&nbsp;கடுமையான பொருளாதார மந்தநிலை</h2><p>
</p><p>
56 வயதான ஆண்டி பர்ன்ஹாம், இதற்கு முன்பு கிரேட்டர் மான்செஸ்டர் நகரத்தின்
மேயராகப் பணியாற்றி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றவர்.

பிராந்திய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததால் அவர் 'King of the
North' (வடக்கின் ராஜா) என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/057736db-9e07-4090-960e-2ada9eb534da/26-6a5dff1f172f9.webp' /></p><p>

நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்றவுடன், பிரித்தானியா சந்தித்து வரும்
கடுமையான பொருளாதார மந்தநிலை, பொதுச் சேவைகளின் நலிவுற்ற நிலை மற்றும் பொதுப்
பயன்பாட்டு நிறுவனங்களின் மோசமான செயல்பாடு போன்ற அடுக்கடுக்கான சவால்களை அவர்
எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</p><p>

அரசியல் அமைப்பில் அதிரடி மாற்றம்
பிரித்தானியா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மாற்றமாக
இந்தத் தருணம் இருக்கும் என்று பர்ன்ஹாம் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைத்து, அனைத்துப் பகுதி மக்களும்
எளிமையான, மலிவான வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதே தனது முதல் முன்னுரிமை என்று
அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;புதிய அமைச்சரவை</h2><p>
</p><p>
வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்புப் போக்குடைய நைஜல் ஃபரேஜின் 'ரிஃபார்ம்
யுகே' கட்சியின் சவால்களைச் சமாளிக்க, லேபர் கட்சிக்குள் இருக்கும் ஒரே வலுவான
தலைவர் பர்ன்ஹாம் தான் என்று அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af371750-1b0d-4d63-b5f4-77c017e26d57/26-6a5dff1fbc192.webp' /></p><p>
</p><p>
புதிய அமைச்சரவை மற்றும் கொள்கை முடிவுகள்
பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை
அறிவிக்கவுள்ளார்.

குறிப்பாக, நாட்டின் மிக முக்கியப் பதவியான நிதி அமைச்சர் பதவிக்கு உள்துறை
அமைச்சர் ஷபானா மஹ்மூத் நியமிக்கப்படலாம் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
</p><p>
அரசியல் ரீதியாக, சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கக் கொண்டு வரப்பட்டு
பெரும் தோல்வியைச் சந்தித்த 'டிஜிட்டல் அடையாள அட்டை' திட்டத்தை அவரது அரசு
ஏற்கனவே ரத்து செய்துள்ளது.
</p><p>
மேலும், பெரும் கடனில் மூழ்கி, கழிவுநீர் கசிவுப் முறைப்பாடுகளில் சிக்கியுள்ள
பிரித்தானியாவின் மிகப்பெரிய பொது நீர் விநியோக நிறுவனமான 'தேம்ஸ் வாட்டர்'
நிறுவனத்தை அரசே நேரடியாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்
(தேசியமயமாக்கல்) அதிரடி முடிவுகளையும் பர்ன்ஹாம் எடுக்கவுள்ளதாகத் தகவல்கள்
வெளியாகியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:57:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலியில் பயங்கரவாத தாக்குதல்: 50 இராணுவ வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/over-50-soldiers-killed-in-a-terrorist-attack-mali-1784542901"></link>
            <id>https://tamilwin.com/article/over-50-soldiers-killed-in-a-terrorist-attack-mali-1784542901</id>
            <summary type="text">ஆபிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அனெஃபிஸ் நகருக்கு
அருகே, மாலி நாட்டு இராணுவம் மற்றும் ரஷ்யாவின் &#039;ஆபிரிக்கா கார்ப்ஸ்&#039;
அமைப்பின் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அனெஃபிஸ் நகருக்கு
அருகே, மாலி நாட்டு இராணுவம் மற்றும் ரஷ்யாவின் 'ஆபிரிக்கா கார்ப்ஸ்'
அமைப்பின் கூட்டு வாகன அணிவகுப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர
தாக்குதலில் குறைந்தது 50 மாலி நாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p>

மாலி நாட்டின் வடக்குப் பகுதியைத் தனி நாடாகக் கோரிப் போராடி வரும் துவாரெக்
பிரிவினைவாதிகள் மற்றும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய
ஆயுதமேந்திய குழுக்கள் இந்த தாக்குதலுக்கு கூட்டாகப் பொறுப்பேற்றுள்ளன.</p><p></p><h2>மாலி இராணுவ வீரர்கள்</h2><p>
</p><p>
மாலி இராணுவ வீரர்களும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ரஷ்யாவின்
ஆபிரிக்கா கார்ப்ஸ் பாதுகாப்புப் படையினரும் அனெஃபிஸ் பகுதி வழியாக
வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது, அங்கு மறைந்திருந்த ஆயுதமேந்திய
பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிகளாலும் வெடிகுண்டுகளாலும் தாக்குதல்
நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74be4f4b-3e54-424a-b192-f492551f5763/26-6a5df9403f47b.webp' /></p><p>
</p><p>
எதிர்பாராத இந்த தாக்குதலில் இராணுவ வாகனங்கள் நிலை குலைந்தன.

சம்பவ இடத்திலிருந்து வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளில்,
இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்து கிடப்பதும், ஏராளமான இராணுவ வாகனங்கள்
முற்றிலுமாக எரிக்கப்பட்டு அழிந்து போயிருப்பதும் தெரியவந்துள்ளது.</p><p>
மேலும், சில மாலி நாட்டு வீரர்களைப் பயங்கரவாதிகள் உயிருடன் சிறைபிடித்துச்
சென்றுள்ளதும் அந்த வீடியோக்களில் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>&nbsp;பெரும் பின்னடைவு </h2><p>

மாலி நாட்டின் வடக்குப் பகுதியில் தன்னாட்சி கோரி வரும் துவாரெக் இனப்
பிரிவினைவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி
வருகிறது.</p><p>

அதே நேரத்தில் அல்-கொய்தா மற்றும் ஐஎஸ் போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளும்
இந்த பிராந்தியத்தில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e67a8ed5-cb10-4035-a694-f662aed713dd/26-6a5df940f2aca.webp' /></p><p>

அரசுக்கு ஆதரவாக ரஷ்யப் படைகள் அங்கு களம் இறக்கப்பட்ட போதிலும், சமீபகாலமாகப்
பயங்கரவாதிகள் இராணுவத்தினரைக் குறிவைத்து நடத்தும் கொரில்லா ரகத்
தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
</p><p>
தற்போது நடந்துள்ள இந்த கொடூரத் தாக்குதல் மாலி இராணுவத்திற்கும், அங்குள்ள
ரஷ்யப் படைகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:44:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஆட்டமா இது..! ஸ்பெயின் வெற்றிக்கு பின் ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/argentina-players-clash-after-spain-win-1784543028"></link>
            <id>https://tamilwin.com/article/argentina-players-clash-after-spain-win-1784543028</id>
            <summary type="text">



நியூஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா தோல்வியட...</summary>
            <content type="html"><![CDATA[<p>



நியூஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு அணி வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>கூடுதல் நேரத்தில் ஃபெர்ரான் டோரஸ் அடித்த தீர்க்கமான கோலின் மூலம், ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பை கிண்ணத்தை கைப்பற்றியது. இருப்பினும், இறுதி விசில் ஒலித்த பிறகு இரு அணி வீரர்களுக்கிடையே பதற்றமான சூழல் உருவாகி மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
வீரர்களுக்குள் வெடித்த மோதல்</h2><p>
அப்போது, வெற்றியைக் கொண்டாட ஸ்பெயின் அணியின் மாற்று வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்தபோது, அர்ஜென்டினா தடுப்பாட்ட வீரர் நஹுயல் மொலினா, ஸ்பெயின் வீரர் ஒருவரை நோக்கி கை நீட்டியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd39f34b-53da-41c6-852f-ca85b687024d/26-6a5df7f6128ec.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, ஆர்ஜென்டினா&nbsp; வீரர் லியாண்ட்ரோ பரேடெஸும் மோதலில் ஈடுபட்டார். இதன் காரணமாக, போட்டி முடிந்த பின்னர் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.</p><p>

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலர் ஆர்ஜென்டினா அணியின் நடத்தையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.</p><h2>
ஆர்ஜென்டினா&nbsp; அணியின் குற்றச்சாட்டுக்கள்</h2><p>
இதற்கிடையில், வெற்றியாளர் பதக்கங்களையும் உலகக் கோப்பையையும் பெற்றுக்கொள்ள ஸ்பெயின் வீரர்கள் தயாரானபோது, அவர்கள் தங்களுக்கு முதுகு காட்டியதாக ஆர்ஜென்டினா அணி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec4b4f3-241f-452b-ba1b-ae00bdb1c3e4/26-6a5df7f6d3494.webp' /></p><p>
</p><p>
ஆனால், ஆர்ஜென்டினா தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, தங்கள் அணி தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியும் என்றும் கூறி, வீரர்களின் செயல்பாட்டை நியாயப்படுத்தினார்.</p><p>

இந்த இறுதிப் போட்டி ஆரம்பம் முதலே கடுமையான உடல்ரீதியான மோதல்களுடன் நடைபெற்றது. கூடுதல் நேரத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெளியேற்றப்பட்டதும் ஆட்டத்தின் பரபரப்பை மேலும் அதிகரித்தது.
</p><h2>
உலக சாம்பியனான ஸ்பெயின்</h2><p>
போட்டி முடிந்த பின்னர், ஆர்ஜென்டினா ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸியின் பெயரை முழக்கமிட்டபோது, அவர் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். </p><p>

39 வயதான மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்து இதுவரை எந்த உறுதியான அறிவிப்பும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82b216b-6f5b-4c1e-bb02-a087a8551df4/26-6a5df7f783a08.webp' /></p><p> </p><p>இருப்பினும், இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியே அவரது கடைசி உலகக் கோப்பை ஆட்டமாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
நாக்-அவுட் சுற்றுகள் முழுவதும் தோல்வியின்றி ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, உலக சாம்பியன் பட்டத்தை வென்று தனது வெற்றி மகுடம் சூடியது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Argentina should hang their heads in shame. <br><br>Insufferable in victory against England and pathetic in defeat against Spain. <br><br>Billions are watching and you chose to start a fight and disgrace your nation. Do better. <a href="https://x.com/hashtag/ArgentinaVsEspa%C3%B1a?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ArgentinaVsEspaña</a> <a href="https://x.com/hashtag/ESPARG?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ESPARG</a> <a href="https://t.co/VDAPixw5cv">pic.twitter.com/VDAPixw5cv</a></p>&mdash; Lewis Mackenzie (@Lewismac101) <a href="https://x.com/Lewismac101/status/2078966429332774990?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:28:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை துறைமுக வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள் அகற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remove-illegal-buildings-erected-on-trincomalee-1784540319"></link>
            <id>https://tamilwin.com/article/remove-illegal-buildings-erected-on-trincomalee-1784540319</id>
            <summary type="text">திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள்,
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட
நடவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள்,
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட
நடவடிக்கையின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சம்பந்தப்பட்ட
தரப்பினரால் இன்று(20.07.2026) அகற்றப்பட்டுள்ளது.
</p><p>
திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் கட்டப்பட்டுள்ள
28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலத்தைக் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம்
மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை, 17.5 அடி அகலம் கொண்ட கட்டடம் ஆகியவை
சட்டவிரோதமான முறையில் எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளதாக&nbsp;தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு</h2><p>கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள
மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31 (2)இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின்
பிரகாரம் அவற்றை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள்
முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு
உடைத்தல் கட்டளையானது 14.07.2025 அன்று ஒட்டப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f735d0a-4f49-416b-8de5-c6b64f5e62e2/26-6a5df6ec80a68.webp' /></p><p>இந்நிலையில் குறித்த உடைத்தல் கட்டளைக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினரால்
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு
உடைத்தல் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.</p><p> இந்நிலையிலேயே இந்த சட்டவிரோத
கட்டுமானங்கள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளன.</p><h2>பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறச் செய்ய</h2><p>
</p><p>
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான குறித்த பகுதியில் சில கடற்றொழிலாளர்கள் மீன்
வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர்
அவர்கள் வெளியேற்றப்பட்டு, சுற்றுலா பணியகத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு தனியார்
ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் உரிய அரச
திணைக்களங்களில் சட்ட அனுமதி பெறப்படாத உணவு விடுதி ஒன்று இயங்கி வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f735d0a-4f49-416b-8de5-c6b64f5e62e2/26-6a5df6ec80a68.webp' /></p><p>,அத்துடன் குறித்த பகுதியில் கட்டப்பட்டுள்ள மலசலகூடத்தின் கழிவுகள் நேரடியாக
கடலினுள் கலக்கும் அபாயமும், குறித்த கட்டடங்கள் கடல்காட்டியினை மறைக்கும்
வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த பகுதியை மக்கள் பயன்படுத்தும் வகையிலும் சுற்றுலாத்துறை மேம்படும்
வகையிலும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் திட்டங்களை மேற்கொண்டு திருகோணமலையை
பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறச் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்கள்! தீவிரமடையும் தாக்குதலினால் பெரும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-tankers-explode-in-the-strait-of-hormuz-1784541015"></link>
            <id>https://tamilwin.com/article/oil-tankers-explode-in-the-strait-of-hormuz-1784541015</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம்
முறிந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை
எட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம்
முறிந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை
எட்டியுள்ளது.</p><p>இன்று திங்கட்கிழமை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக ஈரானிய நகரங்களைக்
குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p></p><h2>கப்பல்கள் வெடித்துச்சிதறி செயலிழந்துள்ளதாக ஈரான் அறிவிப்பு</h2><p>
</p><p>
இதற்கிடையே, உலகின் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு
எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறி செயலிழந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதால்
உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc669df-2481-46e8-a759-7bbdd7b54091/26-6a5df4561d3a7.webp' /></p><p>ஈரானின் முக்கிய நகரங்களான தப்ரிஸ், சாபஹார், கொனாரக், பந்தர் மார்ஷஹர்
மற்றும் பந்தர் இமாம் கொமேனி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் அமெரிக்க ஏவுகணைகள்
தாக்கியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் திறனை அழிப்பதற்காகவே இந்த புதிய
அலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம்
தெரிவித்துள்ளது.
</p><p>
சர்வதேச கடல் வழித்தடங்களை ஈரான் கட்டுப்படுத்த நினைக்கும் வரை அமெரிக்காவின்
இந்த பதிலடி தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ
திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த மோதல்களின் எதிரொலியாக பஹ்ரைன் நாட்டில் வான்வழித்தாக்குதலுக்கான அபாய
சங்குகள் ஒலிக்கப்பட்டன.

மேலும், ஈரான் அனுப்பிய அச்சுறுத்தல் தரும் ட்ரோன்களை தங்கள் நாட்டு இராணுவம்
இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் அறிவித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் ஏவுகணை வீச்சு
</h2><p>அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அகாபா விமான
நிலையம், குவைத்தில் உள்ள அல்-அதிரி முகாம், அலி அல் சலிம் விமான தளம் மற்றும்
சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை குறிவைத்து தங்களது புரட்சிகர
காவல் படை பயங்கர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியதாக ஈரான்
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/085cfead-8568-4a5a-be2a-0760e1d616a2/26-6a5df456c6376.webp' /></p><p>
</p><p>
மேலும், குவைத்தில் உள்ள முக்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது
ஈரான் நடத்திய தாக்குதலில் அங்கு கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

அமெரிக்க இராணுவத்தின் வழிகாட்டுதலின் படி ஆபத்தான தெற்கு கடல் வழித்தடத்தைப்
பயன்படுத்த முயன்ற இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு கப்பல்கள் வெடித்துச்சிதறி,
நகர முடியாமல் கடலிலேயே முடங்கியுள்ளதாக ஈரானியப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் வரை இந்த ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில்
ஒரு சொட்டு எண்ணெய் அல்லது எரிவாயு கூட பாதுகாப்பாகச் செல்ல முடியாது என்றும்
ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
இந்த பதற்றமான சூழலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின்
எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
</p><p>
இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 2 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல்
90 டொலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.</p><h2>

உயரும் அமெரிக்க வீரர்களின் பலி எண்ணிக்கை
</h2><p>ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில், வீழ்த்தப்பட்ட
ஈரானிய ட்ரோன் ஒன்றைச் செயலிழக்க வைக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில்
அமெரிக்க வீரர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d810f27a-9baf-4cf9-a44b-1c25bf94ce15/26-6a5df24a06768.webp' />&nbsp;&nbsp;</p><p>

இதன்மூலம் இந்த போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்த அமெரிக்க இராணுவ
வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 420 க்கும் மேற்பட்ட
வீரர்கள் காயமடைந்துள்ளனர்.</p><p>

கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை
முடக்குவதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடங்கிய இந்த போரில்,
ஈரான் மற்றும் லெபனானில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:13:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வண்டிகளுடன் ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-arrested-with-tipper-trucks-1784533481"></link>
            <id>https://tamilwin.com/article/5-arrested-with-tipper-trucks-1784533481</id>
            <summary type="text">தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு
முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர் வண்டிகளுடன் ஐவர் பொலிஸாரால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு
முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர் வண்டிகளுடன் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(19.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத&nbsp;மணல் அகழ்வு</h2><p>சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றை அடுத்து திருகோணமலை பொலிஸார் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். </p><p>

இதன்போது சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 4 டிப்பர் வண்டிகளும் ஒரு உளவு இயந்திரமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 5 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f07106-139e-4381-89cf-940ca507b5ba/26-6a5def2e03e97.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் (22.07.2026) ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கல்லாறு பகுதியில் தற்போது வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் மணலானது கட்டுமானப் பணிகளுக்கு உகந்ததாக காணப்படவில்லை எனவும் உப்பு மணலினையே கல்லாறு பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T09:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[விதை போன்ற உணவை சாப்பிட்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22-students-admitted-to-hospital-1784539416"></link>
            <id>https://tamilwin.com/article/22-students-admitted-to-hospital-1784539416</id>
            <summary type="text">கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உணவு ஒவ்வாமை</h2><p>
</p><p>கந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6b1586-de6a-47b0-8d64-84afb818a5e1/26-6a5dec6f56641.webp' /></p><p> </p><p>

அதன்பின்னர் அந்த உணவை உண்கொண்ட அனைவரும் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>அவர்களில் 20 ஆண் பிள்ளைகளும், 2 பெண் பிள்ளைகளும் அடங்குகின்றனர். இதில் 5 மாணவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, குறித்த மாணவன் வழக்கமாக வெளிநாட்டில் இருந்து
கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து நண்பர்களுடன்
பகிர்ந்து உண்பது வழமையாக இருந்துள்ளது.</p><h2>கந்தளாய் பொலிஸார் விசாரணை</h2><p>இன்றும் சூரியகாந்தி விதைகள் என
நினைத்து, வீட்டில் இருந்த ஆமணக்கு (Castor) விதைகளையும் அவற்றுடன் சேர்த்து
கொண்டு வந்து பகிர்ந்து உண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
இதன் காரணமாகவே மாணவர்களுக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T09:37:57+00:00</updated>
        </entry>
    </feed>
