<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-19T21:28:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிப்பானி இம்ரான் கைதுச் செய்தி! ஊடங்களுக்கு வெளியிட முடியாத இரகசிய நகர்வு - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-imran-arrest-1787170622"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-imran-arrest-1787170622</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுவின் தலைவரான கஞ்சிப்பானி இம்ரான் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&amp;nbsp;தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுவின் தலைவரான கஞ்சிப்பானி இம்ரான் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே&nbsp; அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h3>கஞ்சிப்பானி இம்ரான் கைது&nbsp;</h3><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகள் எதுவும் உண்மை&nbsp; கிடையாது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9b50c0-58db-4c3a-a101-a784ec5085d3/26-6a861e1ff0540.webp' /></p><p>வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. எனினும், கஞ்சிப்பானி இம்ரான் இன்னும் கைது செய்யப்படவில்லை.&nbsp;&nbsp;</p><p>கஞ்சிப்பானியைக் கைது செய்யும் செயல்முறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்ட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது முறையற்றது என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T21:20:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் போர் தீவிரம் : உலகளவில் நிலக்கரி நிறுவனங்களின் இலாபம் பெருமளவில் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/middle-east-war-situation-1787171994"></link>
            <id>https://tamilwin.com/article/middle-east-war-situation-1787171994</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான
யுத்தம் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு
விநியோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான
யுத்தம் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு
விநியோகத்தில் கடுமையான நெருக்கடிகள் உருவாகியுள்ள போதிலும், நிலக்கரி
உற்பத்தித் துறை வரலாறு காணாத இலாபத்தைப் பதிவு செய்து வருவதாகச் சர்வதேச
செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஈரானினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் மற்றும்
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாற்று எரிபொருளாக நிலக்கரி</h2><p>
</p><p>
இதனால் பல நாடுகள் தங்களது மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக,
அதிகளவில் கிடைக்கக்கூடிய நிலக்கரியை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தத்
தொடங்கியுள்ளன.
</p><p>
குறிப்பாக, ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான், தென் கொரியா, பங்களாதேஷ்,
தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் நிலக்கரி மூலம் மின்சாரம்
தயாரிக்கும் திட்டங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fab0efc4-d066-4047-8048-040a5e46cc60/26-6a86149c5cb4e.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாகத் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த
நிலக்கரி நிறுவனங்களின் அரையாண்டு இலாபம் இரட்டிப்பாகியுள்ளதாகத் தரவுகள்
சுட்டிக்காட்டுகின்றன.</p><p>

எவ்வாறாயினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்,
எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாகவே பல நாடுகள் காலநிலை
மாற்ற இலக்குகளைத் தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நிலக்கரிப்
பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T20:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி கமராக்கள் வழியாக கண்காணிக்கும் மொசாட் - நினைப்பதைவிட அருகில் அவர்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mossad-monitors-via-phone-cameras-1787156092"></link>
            <id>https://tamilwin.com/article/mossad-monitors-via-phone-cameras-1787156092</id>
            <summary type="text">உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் குறிவைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் குறிவைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
நாம் 24 மணி நேரமும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலம் எமது நடவடிக்கைகள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குரல் பதிவுகள் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, எங்கோ இருக்கும் மூன்றாம் தரப்பினருக்கு சென்றடைய வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p>

இதன் காரணமாக, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தொலைபேசி பயன்பாட்டை தவிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதேவேளை, பயனர்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு வரும் ஐபோன்கள் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் கமராக்கள் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
இது போன்ற நாம் அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வருகிறது “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-19T19:57:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கு மக்கள் முகம்கொடுக்கும் சவால்கள் : எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முக்கிய பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/challenges-facing-the-people-of-the-north-and-east-1787168666"></link>
            <id>https://tamilwin.com/article/challenges-facing-the-people-of-the-north-and-east-1787168666</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில்
அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப்
பிரதிநிதித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில்
அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்
சந்தித்துக் கலந்துரையாடினார்.
</p><p>
இந்தச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கவனத்தில் கொள்ளப்பட்டன.</p><h2>அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்&nbsp;பிரச்சினைகள் </h2><p> குறிப்பாக, இம்மாகாண
மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும்
அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிராந்திய மட்டப்
பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின்
கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e28ddf41-6ed5-446d-9aac-32a7313094e1/26-6a86079f6be6b.webp' /></p><p>

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை நாடாமன்றத்தில்
பரந்தளவில் முன்வைப்பது மற்றும் அவற்றுக்கான அவசியமான அரசியல் மற்றும் சமூகத்
தலையீடுகளைச் செய்வது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டது.
</p><p>
இந்த நிகழ்வில் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ்.ஏ. வாஸீத், எம்.டி.எம்.
தாஹிர், துறைராசா ரவிகரன், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ். உதுமாலெப்பை, ரவூப்
ஹக்கீம், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம்
காரியப்பர், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், மனோ கணேசன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T19:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிட்டு - இடியப்பம் விற்பனை செய்தவரின் மாடித் தோட்டம்! சுற்றிவளைத்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ganja-seller-arrested-1787165920"></link>
            <id>https://tamilwin.com/article/ganja-seller-arrested-1787165920</id>
            <summary type="text">கல்முனை பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த சந்தேக நபர் ஒருவர்&amp;nbsp; நேற்று(19.08.2026) கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த சந்தேக நபர் ஒருவர்&nbsp; நேற்று(19.08.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கல்முனை - கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மாடியிலேயே குறித்த கஞ்சாப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>இரகசிய தகவல்&nbsp;</h2><p>அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட&nbsp; சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p>கல்முனை&nbsp; தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியொன்றில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது,&nbsp; குறித்த கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/917e2f02-bc0c-4f22-80de-6075d6e95c30/26-6a860400be5ec.webp' /></p><p>இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில், இடியப்பம், பிட்டு போன்ற உணவுகளை விற்பனை செய்யும் போர்வையில்&nbsp; கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகளை பொலிஸ்&nbsp; நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T19:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய ஆபிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் சரிந்து வீழ்ந்து விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-mine-collapses-in-central-african-republic-1787164934"></link>
            <id>https://tamilwin.com/article/gold-mine-collapses-in-central-african-republic-1787164934</id>
            <summary type="text">மத்திய ஆபிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில், கெமரூன் எல்லைக்கு அருகில்
அமைந்துள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கமொன்று சரிந்து வீழ்ந்ததில் 30இற்கும் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆபிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில், கெமரூன் எல்லைக்கு அருகில்
அமைந்துள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கமொன்று சரிந்து வீழ்ந்ததில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கெமரூன் எல்லைக்கு அருகிலுள்ள சாம்போயே கிராமத்தில் இந்தச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.</p><h2>மீட்கப்பட்டுள்ள உடல்கள்&nbsp;</h2><p>
</p><p>
சம்பவ இடத்திலிருந்து இதுவரை 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும்
சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44ad511-75cd-49b2-85c9-c55051b6a631/26-6a85f9089cd92.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்பற்ற முறையில் இயங்கிவரும் இவ்வாறான சட்டவிரோத மற்றும் பாரம்பரியச்
சுரங்கங்களில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்மையால் அடிக்கடி இவ்வாறான
விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: பரிசீலனை மனுத் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-issued-regarding-imran-khan-1787161004"></link>
            <id>https://tamilwin.com/article/order-issued-regarding-imran-khan-1787161004</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச
நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அரசாங்கம் பரிசீலனை
மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.</p><h2>பரிசீலனை மனு</h2><p>
</p><p>
ராவல்பிண்டியின் அடியாலா சிறையிலுள்ள இம்ரான் கானை இஸ்லாமாபாத்திலுள்ள 'ஷிஃபா
சர்வதேச வைத்தியசாலைக்கு' இரண்டு நாட்களுக்குள் மாற்றுமாறும், ஐந்து
நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அமைத்து அவருக்குச் சிகிச்சை
அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4283983-b09e-4fba-bd49-8114c423497a/26-6a85e9aed18ca.webp' /></p><p>
</p><p>
எனினும், சிறை நடைமுறைகளின்படி தண்டனை பெற்ற கைதியொருவருக்கு அரசாங்கப் பொது
வைத்தியசாலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், சிறை அதிகாரிகளின்
கருத்துக்களைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டி அரசாங்கம் இந்த பரிசீலனை மனுவைத் தாக்கல் செய்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T17:37:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: விமல், திலித் உள்ளிட்ட 6 பேரின் கருத்துக்கள் அடங்கிய சீடிக்கள் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-sumbitted-wimal-udayas-speech-cids-to-court-1787159317"></link>
            <id>https://tamilwin.com/article/cid-sumbitted-wimal-udayas-speech-cids-to-court-1787159317</id>
            <summary type="text">&amp;nbsp;ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேரின் கருத்துக்கள் அடங்கிய சீடிக்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>இதன்போது, குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஆறு பேரின் அறிக்கைகள் அடங்கிய சி.டி.க்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92552229-9101-4bca-92ea-8452766020e0/26-6a85e316a08c5.webp' /></p><p>
</p><p>முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பதிரண ஆகிய ஆறு பேரும் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பான சி.டி.க்களே இவ்வாறு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>
இதேவேளை,, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக வவுனதீவு முகாமில் இருந்த இலங்கை ஆயுதப் படையினரின் புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்புப் புத்தகம் ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
</p><p>குறித்த குறிப்புப் புத்தகத்தை பொறுப்பில் வைத்திருந்த லெப்டினன்ட் கேணலிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T17:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்: மாணவி உயிரிழப்பு- சக மாணவிகள் மருத்துவமனையில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-dies-at-eastern-university-hostel-1787157562"></link>
            <id>https://tamilwin.com/article/student-dies-at-eastern-university-hostel-1787157562</id>
            <summary type="text">கிழக்கு பல்கலைக்கழகத்தின்,&amp;nbsp; கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்
மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதுடன், அதனை கண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு பல்கலைக்கழகத்தின்,&nbsp; கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்
மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதுடன், அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>



இந்த சம்பவம் இன்று(19.08.2026) இடம்பெற்றதாக&nbsp; எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20
வயதுடைய மாணவியான கே. யாழினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><h2>
20 வயது மாணவி உயிரிழப்பு</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு
முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில்
தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
</p><p>
இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்று(19) பிற்பகல் சுமார் 12.00
மணியளவில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9076d30c-53e3-413d-a521-66721f35b611/26-6a85dcf1c159c.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவத்தை பார்த்தவுடன், அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள்
உடனடியாக உயிரை மாய்த்துக் கொண்ட&nbsp; கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும்
மீட்டு மட்டக்களப்பு&nbsp; போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.</p><h2>

இறப்பு வீதம் அதிகரிப்பு</h2><p>
இந்த நிலையில், மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சைப் பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c4ec791-e1b5-4c31-b2af-093c2b1ab373/26-6a85dcf28dd7e.webp' /></p><p> 

அத்துடன், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T17:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரான் பாஷிக்குடன் பணப் பரிமாற்றம் செய்தாரா ! – பிரபல மாடல் அழகி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-any-connection-with-shiran-basik-says-piumi-1787158686"></link>
            <id>https://tamilwin.com/article/no-any-connection-with-shiran-basik-says-piumi-1787158686</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினுர் சிரான் பாஷிக்குடனான தொடர்புகள் குறித்து பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி விளக்கமளித்துள்ளார்.
போதைப்பொருள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினுர் சிரான் பாஷிக்குடனான தொடர்புகள் குறித்து பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி விளக்கமளித்துள்ளார்.
</p><p>போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சிரான் பாஷிக் என்பவருடன் தான் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
</p><p>தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், சிரான் பாஷிக் என்ற நபரை தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c47dfb0-248d-41f7-bb5b-4f6d7f47e477/26-6a85e09f96168.webp' /></p><p>
</p><p>தன்னிடம் இருப்பது தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே எனவும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ சொந்தமான பணம் எதுவும் தன்னிடம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
பியுமி ஹன்சமாலி தொடர்பில் காலத்திற்கு காலம் இவ்வாறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தன்னை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ள பியூமி ஹன்சமாலி, தான் ஒருபோதும் பொய்யான தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>இதனிடையே, பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சிரான் பாஷிக், அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p>
அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>அங்கு சிரான் பாஷிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எனினும், பியூமி ஹன்சமாலி தனது சமூக ஊடகப் பதிவில், சிரான் பாஷிக்குடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அவருடன் பணப் பரிமாற்றம் மேற்கொண்டதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-are-ready-for-referendom-says-nalinda-1787158161"></link>
            <id>https://tamilwin.com/article/we-are-ready-for-referendom-says-nalinda-1787158161</id>
            <summary type="text">&amp;nbsp;22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அரசாங்கம் மதித்து செயற்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>இந்த விவகாரம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் செப்டெம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49baa8ac-1842-4e6a-a8bb-dc272c0c4c99/26-6a85de93104c8.webp' /></p><p>
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் குறிப்பிட்டார்.</p><p> மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என மேலும் கூறினார்.</p><p>நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என தீர்மானிக்கப்பட்டால், அதற்கேற்ப செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம் எனவும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், அதற்கும் நாம் தயாராக உள்ளோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:49:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஆதரவுக்கு ஈராக் பிரதமர் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iraqi-pm-praises-iran-s-supportive-stance-1787157200"></link>
            <id>https://tamilwin.com/article/iraqi-pm-praises-iran-s-supportive-stance-1787157200</id>
            <summary type="text">&amp;nbsp;ஈராக்கிற்கு ஈரான் வழங்கிய ஆதரவையும், குறிப்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புக்கு எதிரான போரின்போது வழங்கிய உதவியையும் ஈராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈராக்கிற்கு ஈரான் வழங்கிய ஆதரவையும், குறிப்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புக்கு எதிரான போரின்போது வழங்கிய உதவியையும் ஈராக் பிரதமர் அலி அல்-சைதி பாராட்டியுள்ளார்.
</p><p>ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் காலிபாப் ஈராக்கிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவருடன் இடம்பெற்ற சந்திப்பில் ஈராக் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துதல், கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d6b097-56ee-4367-b82b-30b10526aa41/26-6a85dad288e02.webp' /></p><p>
</p><p>மேலும், ஈரான்–ஈராக் உறவுகளை மேலும் மேம்படுத்தவும், இரு நாட்டு மக்களின் பொதுவான நலன்களை அடைவதற்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஈராக் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை காலிபாப் பாராட்டியுள்ளார்.</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் பலத்தை பயன்படுத்துவோம் – இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-to-use-force-wherever-and-necessary-1787156545"></link>
            <id>https://tamilwin.com/article/israel-to-use-force-wherever-and-necessary-1787156545</id>
            <summary type="text">இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்கள் உருவாகுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்கள் உருவாகுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயால் சாமிர் தெரிவித்துள்ளார்.</p><p>
சிரியாவில் உள்ள விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பின்னர், இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள முதலாவது கருத்தாக இது அமைந்துள்ளது.</p><p>
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள தெற்கு சிரியா பகுதிகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது எயால் சாமிர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஹீப்ரு மொழி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b1cf81-3ae2-42d8-b704-f3f9254c8895/26-6a85d843268ba.webp' /></p><p>
</p><p>“எமது எல்லைகளுக்கு அருகில் விரோத சக்திகள் தங்களது இருப்பை நிலைநிறுத்துவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் எமது இராணுவ பலத்தை துல்லியமாக பயன்படுத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
</p><p>இதேவேளை, சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகிலுள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.</p><p>
துருக்கி இராணுவத்தினர் குறித்த விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
</p><p>இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையில் பாதுகாப்பு விவகாரங்களில் தற்போதைய நிலையைத் தொடர்வது தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டிருந்ததாகவும், ஆனால் துருக்கி இராணுவத்தினரை விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்துவதற்கு அனுமதிப்பதன் மூலம் டமாஸ்கஸ் அந்த உடன்பாட்டை மீறும் நிலைக்கு சென்றிருந்ததாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
</p><p>எனினும், இஸ்ரேலின் இந்தக் குற்றச்சாட்டுகளை துருக்கி நிராகரித்துள்ளதுடன், அவை “அடிப்படையற்றவை” என தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வருடங்களாக போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் மக்கள் - கிளிநொச்சியில் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-demanding-reconstruction-of-kilinochchi-1787153708"></link>
            <id>https://tamilwin.com/article/protest-demanding-reconstruction-of-kilinochchi-1787153708</id>
            <summary type="text">கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(19....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(19.08.2026) வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
விஸ்வமடு சந்தியில் இருந்து பிரமந்தனாறு பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியின் சுமார் இரண்டு கிலோமீட்டர் பகுதி ஏற்கனவே புனரமைக்கப்பட்டு காபெட் வீதியாக காணப்படுகிறது. எனினும், எஞ்சியுள்ள சுமார் மூன்று கிலோமீட்டர் வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
16 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி</h2><p>

குறித்த வீதி புனரமைக்கப்படாத பிரச்சினை சுமார் 16 வருடங்களுக்கும் மேலாக தொடர்வதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் நாளாந்த போக்குவரத்து நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ee1d30-153e-4e75-a419-d9af8395f441/26-6a85cdc667f4a.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதிலும், கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இந்த வீதியின் மோசமான நிலை பாதிப்பை ஏற்படுத்துவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், பிரமந்தனாறு பிரதான வீதியின் எஞ்சிய பகுதியையும் விரைவாக புனரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a21d2f-aedf-4e6d-8827-bac728475daf/26-6a85cdc76f039.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T15:38:12+00:00</updated>
        </entry>
    </feed>
