<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-31T05:15:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதிகள் தொடர்பில் விமான பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-customs-issues-warning-to-air-passengers-1785471631"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-customs-issues-warning-to-air-passengers-1785471631</id>
            <summary type="text">விமானம் அல்லது வேறு எந்த வழியிலும் பயணம் செய்யும்போது ஏனையவர்களுக்கு சொந்தமான பொதிகளையோ அல்லது பயணப்பொருட்களையோ கொண்டு செல்வதை தவிர்க்குமாறு விமான பயண...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானம் அல்லது வேறு எந்த வழியிலும் பயணம் செய்யும்போது ஏனையவர்களுக்கு சொந்தமான பொதிகளையோ அல்லது பயணப்பொருட்களையோ கொண்டு செல்வதை தவிர்க்குமாறு விமான பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை கடத்துவதற்காக, அறியாத பயணிகளை கடத்தல்காரர்கள் பயன்படுத்திக்கொள்ளும் அபாயம் இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் இலங்கை சுங்கத்துறை ஊடகப்பேச்சாளர் சந்தனா புஞ்சிஹேவ தெரிவிக்கையில்,</p><p></p><h2>கடுமையான குற்றங்களில் சிக்கும் அதிக அபாயம்</h2><p>
</p><p>
தாங்கள் என்ன கொண்டு செல்கிறோம் என்பதை அறியாமலேயே சாதாரண மக்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதற்கான அதிக அபாயம் இருப்பதாக கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c74c6903-00e4-4374-a303-40ad8b3ba87e/26-6a6c2dbf2a666.webp' /></p><p>
</p><p>
மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கூட போதைப்பொருள் கடத்தல்காரர்களால் இந்த வழியில் அறியாமல் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், சமீபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் போதைப்பொருள் இருப்பை இறக்குமதி செய்ய முயன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், தாங்களே பயணப்பொருட்களை சோதித்தாலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி போதைப்பொருட்களைக் கவனமாக மறைத்து வைப்பார்கள் என்றும், 'இலவச விமான டிக்கெட் கொடுத்து வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்வதாக' ஒருவர் கூறினால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைப் பற்றி மக்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்றும் சுங்கத்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
உலகின் பல நாடுகளில், போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், தங்களுக்குச் சொந்தமில்லாத பொருட்களையோ அல்லது பொதிகளையோ எந்த சூழ்நிலையிலும் கொண்டு செல்ல ஒப்புக்கொள்வது அனுமதிக்கப்படாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T05:08:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்! கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785471539"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785471539</id>
            <summary type="text">நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பின் நிலைமை குறித்து கடற்தொழிலாளர்களுக்கு&amp;nbsp;வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பின் நிலைமை குறித்து கடற்தொழிலாளர்களுக்கு&nbsp;வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவின் அறிவிப்பில் மேலும், கங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்பிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.</p><p></p><p> </p><p>மறு அறிவித்தல் வரைக்கும் இப்பகுதிகளில், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்தொழிலாளர்கள் உடனடியாக பாதுகாப்பான முறையில் கரைக்கு திரும்புவது அவசியம்.</p><h2>பாதுகாப்பு உறுதி</h2><p> </p><p>மேற்குறிப்பிட்ட இரண்டு பகுதிகளைத் தவிர நாட்டின் ஏனைய கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றமாகக் காணப்படலாம். இப்பகுதிகளில் மீன்பிடித் தடை விதிக்கப்படவில்லை என்றாலும், வானிலை மற்றும் கடலின் சீற்றத்தைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தொழிலுக்குச் செல்லவும்.
</p><p>கடற்தொழிலாளர்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் திடீர் முடிவாக இது அமைந்த போதிலும், கடற்தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாப்பதும் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுமே முதன்மையான நோக்கமாகும்.<b>&nbsp;</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6ec9a8-c18d-4e32-831e-9a3463d149db/26-6a6c2abf5f232.webp' /></p><p>எனவே, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்படும் போதும், தொழிலில் ஈடுபடும் போதும், கரைக்குத் திரும்பும் போதும் மீனவர்கள் தவறாது மிதவை அங்கிகளை அணியுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர் என்றுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T05:00:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delays-in-train-services-on-the-coastal-route-1785472262"></link>
            <id>https://tamilwin.com/article/delays-in-train-services-on-the-coastal-route-1785472262</id>
            <summary type="text">கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேருவளை மற்றும் மக்கொன தொடருந்து நிலையங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

பேருவளை மற்றும் மக்கொன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74fdef5f-8632-4c5a-ab7c-615952d74c14/26-6a6c2946f36dc.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:49:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசிடம் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-request-government-provincial-election-1785471047"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-request-government-provincial-election-1785471047</id>
            <summary type="text">இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல்கள்
ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசிடம்
வலியுறுத்தியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல்கள்
ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசிடம்
வலியுறுத்தியுள்ளார்.</p><p>இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,</p><p>&nbsp;</p><h2>நேரடியான மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டிய அவசியம்</h2><p>"மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் சிறந்த முறையில் இயங்குவதாக சிலர் வாதிட்டாலும், அது யதார்த்தமானது அல்ல. அரச அதிகாரிகள் நிர்வாகத்தை
மேற்கொள்ளும்போது அவர்களுக்கு மக்களுக்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டிய
அவசியம் ஏற்படுவதில்லை என்பதால், மாகாண சபைகளுக்கு நேரடியான மக்கள்
பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74443a71-e80a-4b3a-b8a8-49cf4b652dff/26-6a6c20499ecbf.webp' /></p><p>

மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் இயங்குவது ஒரு குற்றமாகும்.
மாகாண சபை தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தினால், எதிர்காலத்தில்
நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என அனைத்து
நிறுவனங்களையும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயக்க முடியும் என்ற ஆபத்தான
நிலையை அது உருவாக்கும்.
</p><p>
எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி உலக ஜனநாயக தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள
நிலையில், அன்றைய தினமாவது அரசு மாகாண சபைத் தேர்தலை எப்போது, எந்த முறையில்
நடத்தப் போகின்றது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்." என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:11:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விவகாரத்தை முன்வைத்து கொழும்பிலும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-colombo-over-the-semmani-issue-1785469978"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-colombo-over-the-semmani-issue-1785469978</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதிகோரியும், அகழ்வுப்பணிகளை தடையின்றி தொடர வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று கவனவீர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதிகோரியும், அகழ்வுப்பணிகளை தடையின்றி தொடர வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>

'நீதிக்கான மக்கள் சக்தி' அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள் மற்றும் சிவில் சமூக
அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p>
</p><h2>செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள்&nbsp;</h2><p>
"செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தடையின்றி தொடர வேண்டும்"
மற்றும் "காணாமல்போன உறவுகளுக்கு நீதி வேண்டும்" போன்ற பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6567419-cab9-4393-897b-0a153ca1f58e/26-6a6c1d804ff28.webp' /></p><p>
இதில் கலந்துகொண்டவர்கள்,"செம்மணி இனப்படுகொலையின் சாட்சி", "செம்மணிக்கு நீதி
வழங்கு!", "தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்" மற்றும் "செம்மணி
மனிதப் புதைகுழியின் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுங்கள்" போன்ற
வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் பொறிக்கப்பட்ட
பெரிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசர முடிவுகள் அல்ல : ஆளும் தரப்பு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-freedom-of-expression-or-peaceful-protest-1785468629"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-freedom-of-expression-or-peaceful-protest-1785468629</id>
            <summary type="text">மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம்
நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு,
நிர்மாணிப்பு மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம்
நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு,
நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசு ஜனநாயக வழியில் முன்னோக்கிச் செல்வதற்கு இத்தகைய ஆரோக்கியமான
விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>11 இலட்சம் வழக்குகள்</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

"சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் நீதித்துறையைப் பலப்படுத்தவுமே மக்கள்
தெளிவான ஆணையை வழங்கினர். கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகளால்
பாதிக்கப்பட்டிருந்த நீதித்துறை, பொலிஸ் மற்றும் அரச நிறுவனங்களில் தற்போதைய
அரசு அரசியல் தலையீடுகளை முற்றிலும் நிறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b01b696a-2f37-4125-9dab-c012b3ec59ce/26-6a6c1be5e213d.webp' /></p><p>காணி வழக்குகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இழுபறியாக இருப்பதும், சிறுவர்
துஷ்பிரயோக வழக்குகள் தாமதமாவதும் முறைப்பாட்டாளர்களையும் எதிராளிகளையும்
பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றது.
</p><p>
தேங்கிக் கிடக்கும் சுமார் 11 இலட்சம் வழக்குகளை விரைவாக முடிவுக்குக்
கொண்டுவர புதிய நீதிமன்றங்களை அமைத்தல், புதிய நீதிபதிகளை நியமித்தல் மற்றும்
பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><h2>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது</h2><p>
</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு
பகுதி மட்டுமேயாகும். இது அவசர முடிவு அல்ல, இதற்கு முன் அரசமைப்புத்
திருத்தக் குழுக்களில் விமர்சகர்களாலும் விவாதிக்கப்பட்டு
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95da8b57-9a02-443a-b20f-e5573e3bf9d7/26-6a6c1be6d72d2.webp' /></p><p>நீதிமன்றங்களை டிஜிட்டல்மயமாக்குதல், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம்
மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் புதிய அதிகாரிகளையும்
உபகரணங்களையும் வழங்குதல் போன்றன முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>மேலும்,
பொலிஸாருக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அரசியல் தலையீடின்றி
சுதந்திரமாகச் செயற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்போது
மாறுபட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் எழுவது இயல்பானது. </p><p>மக்களின்
எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் அரசு கவனித்து, அவற்றை மதிப்பாய்வு செய்து
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை திறந்துவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inauguration-of-north-zone-registry-1785469563"></link>
            <id>https://tamilwin.com/article/inauguration-of-north-zone-registry-1785469563</id>
            <summary type="text">பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம்
பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம்
பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம் பகுதியில்
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர்
ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
</p><p>
வடக்கு மாகாண மக்களின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள
இந்தப் பதிவறையின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள்
சேதமடைந்திருந்தால், அவற்றின் பிரதிகளை இதுவரை கொழும்பு மாளிகாவத்தையில்
அமைந்துள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் மட்டுமே
பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.
</p><p>குறித்த ஆவணங்களை இனிமேல் வவுனியாவில் அமைந்துள்ள வடக்கு வலய பதிவறையிலேயே
பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், உடனடியாக பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் சேவை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் திருமணச் சான்றிதழ் மற்றும்
இறப்புச் சான்றிதழ்களை இவ்வலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் வசதிகள்
ஏற்படுத்தப்படவுள்ளன.</p><p>

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வத்தம்பி
திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்
மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.உமாமகேஸ்வரன்,
பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின்
அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:46:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monthly-fuel-price-revision-today-1785467817"></link>
            <id>https://tamilwin.com/article/monthly-fuel-price-revision-today-1785467817</id>
            <summary type="text">மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது
அதன்படி, இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பிறகு, நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது</p><p>
அதன்படி, இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பிறகு, நாட்டில் எரிபொருள் விலைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் விலை சூத்திரம்</h2><p>

இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3ba711-9496-4cdf-98ce-6205d4e3706c/26-6a6c15ea15077.webp' /></p><p>
</p><p>
அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை $89.69 ஆகவும், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை $84.5 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துக்குள் இளைஞனின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-dies-inside-the-bus-1785460429"></link>
            <id>https://tamilwin.com/article/man-dies-inside-the-bus-1785460429</id>
            <summary type="text">
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையமைப்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வாகன ஓட்டுநராக பணியாற்றிய இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையமைப்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வாகன ஓட்டுநராக பணியாற்றிய இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
</p><p>
பேருந்திற்குள் தூக்கிட்டு அவர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">பொலிஸார் விசாரணை</b></p><p>நேற்றையதினம் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00121aec-a893-48ac-8962-432d029d2761/26-6a6c14b781080.webp' />&nbsp;&nbsp;</p><p>உயிரிழந்தவர் மாஸ்பொத, போகொடை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான சுரேஷ் காரியவசம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p>சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mervin-silva-s-money-fraud-revealed-1785463057"></link>
            <id>https://tamilwin.com/article/mervin-silva-s-money-fraud-revealed-1785463057</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முறையற்ற சொத்துக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முறையற்ற சொத்துக்கள் தொடர்பான வழக்கு மூலம் பல அரசியல்வாதிகளுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சேர்த்த பல சொத்துக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் அடுத்த மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p>
</p><h2><b>
சட்டவிரோத சொத்துக்கள்</b></h2><p>இதன்போது பல வங்கிகளின் முகாமையாளர்கள் பல கணக்குகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/143d78e5-88d6-45bd-9471-d863297d6d43/26-6a6c0d438c6e6.webp' /></p><p>மேர்வின் சில்வா 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொழில் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக பதவியேற்றிருந்தார்.
</p><p>
2 வருடங்கள் வரையிலான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தனது சட்டப்பூர்வமான வருமான வழிகளால் பெருமளவிலான சொத்துகு்களை சேர்த்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பான் ஏசியா வங்கியின் கொழும்பு கிளையில் மாத்திரமன்றி, 10 நிலையான வைப்புகளில் 1823 லட்சத்துக்கும் அதிகமான ரூபாவை வைப்பிலிட்டுள்ளார். 

இதில் உள்ள ஒரு வைப்பு மாத்திரம் 6 கோடி ரூபா பெறுமதியைக் கொண்டுள்ளது. </p><p>அத்துடன், 366, 365 மற்றும் 225 லட்சம் ரூபாவைத் தாண்டிய மேலும் 3 பெரிய வைப்புகளும் அங்கு காணப்பட்டுள்ளன.
</p><p>
இது தவிர அவர் பான் ஏசியா வங்கியில் 33 லட்சம் ரூபாவைத் தாண்டிய மேலும் 5 நிலையான வைப்புக் கணக்குகளைப் பராமரித்து வந்துள்ளமையும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
</p><p>
தனது மனைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஏ. மேரி லூசிடா சில்வா மற்றும் மகன் மாலக மனோஜித் சில்வா ஆகியோருடன் இணைந்து பல கூட்டு கணக்குகளையும் அவர் பராமரித்து வந்துள்ளார்.
</p><p>
பான் ஏசியா வங்கியில் மனைவியுடன் இணைந்து முன்னெடுத்த கூட்டுக்கணக்கு ஒன்றில் 2,140,199.36 ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் ஹற்றன் நேஷனல் வங்கியுடன் மகனின் பெயரில் பேணப்பட்ட கணக்கில் 2,687,852.25 ரூபாயும் 2010ஆம் ஆண்டளவில் காணப்பட்டுள்ளது.
</p><p>
இது தவிர, மாலக சில்வாவின் பெயரில் மாத்திரம் வெலிபல் பைனான்ஸ் நிறுவனத்தில் 15 மற்றும் 35 மில்லியன் ரூபா வீதம் இரண்டு கணக்குகள் காணப்பட்டன.

அத்துடன், மகள் சந்தீபனி மல்லிகா சில்வா மற்றும் மருமகன் பெயரில் தலா 15 மில்லியன் ரூபா வைப்புகளும் அதே நிறுவனத்தில் பராமரித்து வரப்பட்டுள்ளன.
</p><p>
மேர்வின் சில்வாவின் பெயரிலும் குறித்த நிறுவனத்தில் 14 மில்லியன் ரூபா வைப்புகள் இருந்தன.
</p><p>
மூன்று வங்கிகளில் பராமரித்து வந்த நடப்புக் கணக்குகளில் 2012ஆம் ஆண்டளவில் 47 லட்சத்திற்கும் அதிகமான பணம் மீதியாக இருந்தது.

ஹட்டன் நேஷனல் வங்கியில் 32.5 மில்லியன் ரூபாவும், DFCC வர்த்தன வங்கியில் 6.8 மில்லியன் ரூபா வைப்புகளும் அவரிடம் இருந்தன.</p><p>

மேர்வின் சில்வா கொள்வனவு செய்துள்ள பல அசையா சொத்துக்கள் தொடர்பிலும் பல தகவல்கள் இந்த வழக்கில் தெரியவந்துள்ளது.
</p><p>
முன்னாள் அமைச்சர் கொழும்பின் உச்ச பெறுமதியைக் கொண்ட பிரதேசங்களில் சொத்துக்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். </p><p>

அதற்கமைய, கொழும்பு 07, குரும்பட்டியின் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் 71.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும், ராஜகிரிய, நாவல வீதியிலிருந்து 39.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும் அவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இது தவிர தலுபிட்டிய பிரதேசத்திலிருந்து 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

மேலும் விக்டோரியா திட்டத்திற்குச் சொந்தமான குண்டசாலை நிலகம பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்கக் காணியை 1994ஆம் ஆண்டு முதல் 1,600 ரூபா போன்ற மிகக் குறைந்த குத்தகைக்கு அவர் கையகப்படுத்தியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

நிதி மோசடி</b></h3><p>அமைச்சராக இருந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் 7 வாகனங்களைக் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dba2a2b-1a8f-48e5-a1e3-4e24e729a04e/26-6a6c0d4467c6c.webp' /></p><p>இந்த வாகனங்கள் மிக குறுகிய காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அவர் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி போர்ஷே ரக மோட்டார் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார். அதிலிருந்து 3 மாதங்களுக்கு பின்னர் ஜூலை மாதத்தில் தனது மகன் மாலக சில்வாவுக்கு 28.8 மில்லியன் ரூபா பெறுமதியான ரேஞ்ச் ரோவர் வாகனத்தைக் கொள்வனவு செய்து கொடுத்துள்ளார்.</p><p> 

அதிலிருந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் தனது பயன்பாட்டிற்காக 32.3 மில்லியன் ரூபா பெறுமதியான பென்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார். இந்த வாகனங்களுக்கு மேலதிகமாக 20 லட்சம் ரூபா பெறுமதியான லேன்ட் ரோவர் வாகனம், 9 மில்லியன் ரூபா பெறுமதியான ஹையுன்டாய் ஜீப் வாகனம் மற்றும் 58 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு லொறி வாகனங்களும் இரண்டு வருடங்களுக்குள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவரது நாளாந்த செலவு முறையும் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்தமை வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள் மூலம் தெளிவாகும் மற்றொரு விடயமாகும். </p><p>

மேலும் அவர் சம்பத் மற்றும் செலான் வங்கிகளின் இரண்டு கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் 42 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுள்ளார்.
</p><p>
அதேபோல் மூலங்கள் வெளிப்படுத்தப்படாத 34.7 மில்லியன் ரூபா அளவிலான பிரம்மாண்டமான கடன் தொகையொன்றையும் செலுத்தி முடித்துள்ளார்.
</p><p>
இதற்கு மேலதிகமாக ரித்து ஆகர்ஷா எனும் நபருக்காக 240,000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகைக்கு இணங்க தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் தனக்காக எந்தவொரு உயிர் காப்பீட்டு ஒப்பந்தத்தையும் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக 6 காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பராமரித்து வந்துள்ளார்.
</p><p>
இதற்காக வருடாந்தம் 13 லட்சம் வரையிலான பணம் தவணையாகச் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 4 காப்பீட்டு ஒப்பந்தங்களும் மாலக சில்வாவிற்காகவே பராமரித்து வரப்பட்டுள்ளன.</p><p>

2 வருடங்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் 485 மில்லியன் ரூபாவுடனான பிரம்மாண்டமான சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்து எதிர்கால வழக்கு விசாரணைகளின் போது மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-07-31T02:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மதுவரித்திணைக்கள வருமானத்தில் பதிவான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excise-revenue-increases-in-liquor-prices-1785462595"></link>
            <id>https://tamilwin.com/article/excise-revenue-increases-in-liquor-prices-1785462595</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரித்திணைக்களம் 141.5 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.மது...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரித்திணைக்களம் 141.5 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. ஹேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வருவாய் அதிகரிப்பு பதிவு</h2><p>

2026ஆம் ஆண்டிற்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள மொத்த 245 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கில், முதல் ஆறு மாதங்களுக்கான இலக்கு 119.3 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6337249c-6c95-48bd-8b42-1142dae94e7f/26-6a6c09cc5b4b3.webp' /></p><p>
</p><p>
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் 118.6 சதவீத வருவாய் இலக்கை எட்டும் வகையில் திணைக்களம் வருவாய் ஈட்டியுள்ளது.</p><p>

மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான 117.03 பில்லியன் ரூபாய் வருவாயுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வருவாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T02:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கிய சம்பவத்தால் அதிர்ச்சியில் பெற்றோர் - மாணவ குழுவால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-students-abused-a-female-student-1785384991"></link>
            <id>https://tamilwin.com/article/school-students-abused-a-female-student-1785384991</id>
            <summary type="text">இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்கள், அதே வகுப்பை சேர்ந்த மாணவியை கடுமையான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்கள், அதே வகுப்பை சேர்ந்த மாணவியை கடுமையான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த நிலையில் குறித்த 5 மாணவர்களும் குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
</p><p>
அதற்கமைய, சந்தேகநபர்களான மாணவர்களில் இருவரை 28 நாட்களுக்கு சிறுவர் நல்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2><b>

மருத்துவப் பரிசோதனை</b></h2><p>அத்துடன், ஏனைய மூன்று மாணவர்களையும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fff2f28-591f-4a23-a91a-cfd1a59b2cfd/26-6a6bf66a43d21.webp' /></p><p>தகாத செயற்பாட்டுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய குருவிட்ட பொலிஸார் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் குறித்த மாணவர்கள் குழு கைது செய்யப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட 5 மாணவர்களில் இருவரும் மாணவியுடன் கடுமையான முறையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய 3 மாணவர்களும் அதற்கு உதவி மற்றும் உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T02:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களை துன்புறுத்தும் பொலிஸார் - கடுமையாகும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bibehaving-police-will-be-punished-1785464348"></link>
            <id>https://tamilwin.com/article/bibehaving-police-will-be-punished-1785464348</id>
            <summary type="text">பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் உதய குமார வூட்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சேவை இடைநிறுத்தம்</h2><p>
</p><p> வதுபிட்டிவல பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கடையொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்துமாறு கூறி, மோட்டார் சைக்கிள் சாரதியை திட்டித்தீர்த்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அவரது சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c134ef-dc4d-4544-a75f-b9c20d040f3e/26-6a6c061db5e87.webp' /></p><p>நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் சேவை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>அந்த உப பொலிஸ் பரிசோதகர், மோட்டார் சைக்கிள் சாரதியிடம் "வேண்டுமானால் எனது சீருடையை நீயே போட்டுக்கொள்" என்று கூறும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
</p><p>இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த உப பொலிஸ் பரிசோதகரின் பணி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T02:19:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் கசிந்த கஞ்சிபானி இம்ரானின் இரகசிய தகவல்கள்..! திடீரென தலைமறைவான கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kpi-malaysia-has-been-relocated-1785462815"></link>
            <id>https://tamilwin.com/article/kpi-malaysia-has-been-relocated-1785462815</id>
            <summary type="text">போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவரான கஞ்சிபானி இம்ரான் (KPI) மலேசியாவில் உள்ள தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவரான கஞ்சிபானி இம்ரான் (KPI) மலேசியாவில் உள்ள தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரத்மலானை சைமா என்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி வெளிப்படுத்திய தகவலின்படி அவர் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><h2>மலேசியாவிற்கு சென்ற&nbsp;பொலிஸ் குழு</h2><p>
கஞ்சிபானி இம்ரானை கைது செய்யும் நோக்கத்தில், பொலிஸ் குழுவொன்று சமீபத்தில் மலேசியாவிற்கு சென்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f716d6-5304-47c8-a461-da33bee1a747/26-6a6c04c4db3dd.webp' />&nbsp;</p><p> </p><p>இதன்போது, கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பின் நெருங்கிய கூட்டாளியான ரத்மலானை சைமாவை, மலேசிய பொலிஸாரின் உதவியுடன் உள்ளூர் பொலிஸ் குழு கைது செய்துள்ளது.</p><p>

இருப்பினும், பொலிஸ் தலைமை ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் நாட்டை விட்டு வெளியேறிய பொலிஸ் குழு, கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக மலேசிய பொலிஸாருடன் இணைந்து தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.</p><h2>ரத்மலானை சைமா கைது</h2><p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட ரத்மலானாவைச் சேர்ந்த சைமா, சில காலமாக ரத்மலானாவை சேர்ந்த குடு அஞ்சுவுடன் இணைந்து ஒரு போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதன்பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T02:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள கடுமையான பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-is-too-dangerous-to-sri-lanka-1785461691"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-is-too-dangerous-to-sri-lanka-1785461691</id>
            <summary type="text">எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.</p><p> எதிர்பாராத விதமாக வறண்ட காலநிலை அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p></p><p> </p><h2><b>உயர் வெப்பநிலை</b></h2><h2><b> </b></h2><p>உலகளாவிய ரீதியில் அசாதாரண காலநிலை நிலைகளை உருவாக்கும் எல் நினோ நிகழ்வு இம்முறை கடுமையான ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/992e086f-f29f-441e-979f-852f25f6ae49/26-6a6bfd10a85ad.webp' />
</p><p>
ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது உயர் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>இந்த காலநிலை பயிர்ச் செய்கைக்கு கடுமையான பாதிப்புக்களை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>எல் நினோ நிலைமையால் பயிர்ச் செய்கைக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைத்துக் கொள்வதற்கு விவசாய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுவது அவசியமாகும் எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-31T01:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவினால் ஊடகங்களை அச்சுறுத்திய இரகசிய உளவுத்துறை கொலைக் கும்பல் தொடர்பான புதிய தகவல்கள்.....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-army-intelligence-sri-lanka-1785460209"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-army-intelligence-sri-lanka-1785460209</id>
            <summary type="text">முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இலங்கையின் இராணுவ உளவுத்துறை பொறிமுறையின் கீழ் சாதாரண கட்டளை முறைமைக்கு அப்பால்,இரகசியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இலங்கையின் இராணுவ உளவுத்துறை பொறிமுறையின் கீழ் சாதாரண கட்டளை முறைமைக்கு அப்பால்,இரகசியமாக இயங்கிய ஒரு பிரிவு தொடர்பில் எவ்வித நீதி நடவடிக்கைகளும் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது. </p><p>
இந்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை மற்றும் அச்சுறுத்தல் -தாக்குதல்- பயமுறுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட இராணு அதிகாரிகள் இரண்டு தசாப்தங்கள் கடந்த நிலையில் சுதந்திரமாக நாட்டில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இவ்வாறான ஒரு பிரிவு இயங்குவதை அரசாங்கம் ஒருபோதும் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. </p><h2>


</h2><p></p><h2>புலனாய்வு பிரிவில் இயங்கிய இரகசிய குழு</h2><p>இந்த குழுவுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது யார் என்பது மட்டுமல்ல அந்த உத்தரவுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரமுள்ள நிறுவனங்கள் தொடர்ந்தும் தவிர்த்தது ஏன் எனற் கேள்வியும் எழுந்துள்ளது.
</p><p>எந்தவொரு மேற்பார்வைக் குழுவிற்கும் பொறுப்புக்கூறக் கடமைப்படாத, பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிக்கு மட்டுமே பொறுப்புக்கூறும் ஒரு பிரிவாக இரகசியமாக இயங்கியது. இந்தப் பிரிவின் நேரடிப் தளபதியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரண செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>அரச புலனாய்வுச் சேவையுடன் (SIS) இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்புகளில், செயற்பாட்டுத் திறமையை விட இரகசியத்தைப் பேணுதல் மற்றும் அரசாங்கத்திற்கு, குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட விசுவாசத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34408139-fe84-4878-9788-14779a862bd6/26-6a6bf5f3eff6b.webp' /></p><p>இந்தப் பிரிவு கொஹுவல இராணுவ முகாமில் நிறுவப்பட்டிருந்தது. இந்த உறுப்பினர்கள் சாதாரண இராணுவத்தினரிடமிருந்து தனித்து வாழ்ந்ததுடன், தனி உணவு மற்றும் வசதிகளைப் பெற்று, சாதாரண இராணுவ ஒழுக்கம் மற்றும் பரிசோதனைகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தனர்.
</p><p>2009 ஆண்டளவில் போர் இறுதிப் கட்டத்தை எட்டியிருந்ததால், இந்தப் பிரிவு யுத்த களத்திற்காகக் கட்டியெழுப்பப்படவில்லை மாறாக ஏனைய உட்புற அடக்குமுறை நடவடிக்கைகளுக்காகவே உருவாக்கப்பட்டது.
</p><p>கண்ணுக்குத் தெரியாமல் தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம்.....
ஒரு சாதாரண குற்றக் கும்பலிலிருந்து இந்தப் பிரிவை வேறுபடுத்துவது, ஆயுதமேந்திய உறுப்பினர்கள் எவ்வித தடையுமின்றி கொழும்பு நகரத்திற்குள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த சிக்கலான ஒருங்கிணைப்பு அமைப்பாகும்.
</p><p>கண்காணிப்பு கெமராக்களில் சிக்காமல் இருக்க போலி இலக்கத் தகடுகளைப் பொருத்திய வெள்ளை நிற வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியுள்ளனர்.
</p><h2>ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்கள்</h2><p>பல ஆண்டுகளாகச் செயற்பட்ட இந்தப் பிரிவின் தாக்குதல்களில் ஒரே மாதிரியான முறைமை காணப்பட்டது. இரவு வேளையில் வெள்ளை வேன்களில் வருதல், T-56 துப்பாக்கிகளைக் காட்டி ஊடகர்களை அச்சுறுத்தல் மற்றும் இறுதியில் பெற்றோல் ஊற்றி ஊடக நிறுவனங்களைத் தீயிட்டுக் கொளுத்தி அழித்தல்.
</p><p>2009 ஜனவரி 6 அதிகாலை 2:30 மணிக்கு தெபானமவில் அமைந்துள்ள சிரச TV ஒளிபரப்பு மையத்தின் பிரதான கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுவெடிப்பு சம்பவம். </p><p>உளவுத்துறையின் உட்புற தகவல்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் கூற்றுகளின்படி, இது அரசாங்கத்தின் அனுசரணையுடன், அரச நிதியில் இயங்கிய ஒரு இரகசியப் பிரிவின் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce27932-adc4-4ca4-b51e-a25f61eed5a3/26-6a6bf5f4a36db.webp' /></p><p>2010 ஜூலை 29 சியத TV கங்காராமய 12 பேரடங்கிய கும்பல் வந்து, ஊழியர்களுக்குத் துப்பாக்கிகளைக் காட்டி முழங்காலிடச் செய்து, ஒளிபரப்பு உபகரணங்களுக்குப் பெற்றோல் இட்டு நிறுவனத்தையும் தீயிட்டுக் கொளுத்தியது.
</p><p>2011 ஜனவரி 11 லங்கா ஈ நியூஸ் மாலபே 6 பேரடங்கிய கும்பல் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவின் வளாகத்திற்குள் நுழைந்து, கணினி அமைப்புகள் மற்றும் 7,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட ஆவணக் காப்பகத்தைத் தீயிட்டு அழித்தது.
</p><h2>படுகொலைகள், கடத்தல்கள்</h2><p>
லசந்த விக்கிரமதுங்க: 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் படுகொலை. பிரகீத் எக்னலிகொட கடத்தல். MBC/MTV செய்தி முகாமையாளர் செவோன் டேனியல் சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமெரிக்கத் தூதரகப் பிரிவுகளின் தலையீட்டின் பேரில் தப்பினார். </p><p>லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 5 மாத தீவிர கண்காணிப்புக்குப் பிறகு ஐக்கிய இராச்சியத்திற்குத் தப்பிச் சென்றார். இந்த குழுவினர் சாதாரண இராணுவச் சம்பளத்திற்கு மேலதிகமாக பல சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p>இந்தத் தாக்குதல்கள் இருளில் நடந்த ஏதேச்சையான சம்பவங்கள் அல்ல, அரச நிதியில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்பதால், குற்றப் புலனாய்வுத் துறை (CID), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. </p><p>ஆனால் கேள்வி என்னவென்றால், இலங்கையின் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்றாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துமா என்பதாகும்.</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T01:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்.. வெளியான முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-tax-revenue-year-2-71-trillion-1785455353"></link>
            <id>https://tamilwin.com/article/government-tax-revenue-year-2-71-trillion-1785455353</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 வீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.&amp;nbsp;நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 வீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.&nbsp;</p><p>நிதி அமைச்சின் நிதிக்கொள்கை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொது நிதி ஆய்வறிக்கையின்படி, இக்காலப்பகுதியில் வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளது.

</p><p> </p><p>2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியிருந்தது.</p><p> இருப்பினும், இம்முறை உபரி பதிவாகியமைக்கு அரச வருமானம் 27 வீதம் அதிகரித்தமையும், அரச செலவினங்கள் சீரமைக்கப்பட்டமையுமே முக்கிய காரணம் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>பற்றாக்குறை&nbsp;</h2><p>

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருவாய் 2,710.6 பில்லியன் ரூபாவாக (2.71 டிரில்லியன் ரூபா) அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4569de60-2e2e-4638-ab41-70c5e15bca3e/26-6a6be695e552a.webp' /></p><p> </p><p>இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.9 வீதம் அதிகரிப்பாகும். இதன்படி, ஆண்டின் மொத்த வரி வருவாய் இலக்கான 4.91 டிரில்லியன் ரூபாவில் 55.2 சதவீதத்தை முதல் ஆறு மாதங்களிலேயே அரசாங்கம் எட்டியுள்ளது.</p><p> வரி வருவாயில் அதிக பங்களிப்பை இலங்கை சுங்கம் வழங்கியுள்ளதுடன், அது 1,290 பில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. இது மொத்த வரி வருவாயில் சுமார் 48 சதவீதமாகும். இரண்டாவது அதிகபட்ச பங்களிப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கியுள்ளதுடன், அது 1,248 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.</p><p>இது மொத்த வரி வருவாயில் 46 சதவீதமாகும். தவிர, மதுவரித் திணைக்களம் 138 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளதுடன், ஏனைய வருவாய் வழிகளிலிருந்து 35 பில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மொத்த வரி வருவாய்&nbsp;</h2><p>
</p><p>
சுங்க வருவாயில் பிரதான வருவாய் மூலமாக இறக்குமதிகளின் மீது விதிக்கப்பட்ட பெறமதி சேர் வரி (VAT) அமைந்துள்ளதுடன், இதன் மூலம் இந்த 6 மாதங்களில் 443.7 பில்லியன் ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 354 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 25 வீதம் அதிகரிப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22369a50-89d5-4921-87ae-4a08caf94fc9/26-6a6be696edbe0.webp' /></p><p> </p><p>மோட்டார் வாகன வரியிலிருந்தான வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், அது 129.1 பில்லியன் ரூபாவிலிருந்து 106.5 வீதம் அதிகரித்து 266.4 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. </p><p>சுங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருவாயில் 63 சதவீதம் மோட்டார் வாகன இறக்குமதி வரியிலிருந்தே பெறப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் சேகரிக்கப்பட்ட வருவாயில் வருமான வரி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதுடன், அது 568.4 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.</p><p></p><h2>இலங்கை பொருளாதாரம்</h2><p> </p><p>இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16 சதவீத அதிகரிப்பாகும். கார்ப்பரேட் வருமான வரி 26 சதவீதத்தாலும், தனிநபர் வருமான வரி 15 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e04045-67ff-4b0f-8870-b61d00b53314/26-6a6be697a5c70.webp' /></p><p> மேலும், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் பெறமதி சேர் வரி (VAT) வருவாய் 26 சதவீதமும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 15 சதவீதமும் அதிகரித்துள்ளன. </p><p>அதேவேளை, மதுபானங்கள் மீது மதுவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட மதுவரி 27 சதவீதம் அதிகரித்து 137.5 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

வரி வருவாய்க்கு மேலதிகமாக, வரி அல்லாத வருவாயும் 43.6 சதவீதம் அதிகரித்து 243.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. </p><p>இருப்பினும், அரசாங்கத்தின் மொத்த செலவினம் 7.9 வீதம் அதிகரித்து சுமார் 2.95 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், மீண்டெழுஞ் செலவினம் 6.5 வீதம் மற்றும் மூலதனச் செலவினம் 23.6 வீதம் அதிகரித்துள்ளன. </p><p>இதனிடையே, வட்டி செலுத்துகைகள் 2 வீதம் குறைந்து 1,234.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 4.7 சதவீத வளர்ச்சியை விட, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக பொது நிதியியல் ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.</p>]]></content>
            <updated>2026-07-31T00:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gajendrakumar-meets-valvettithurai-farmers-1785453792"></link>
            <id>https://tamilwin.com/article/gajendrakumar-meets-valvettithurai-farmers-1785453792</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில்
வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுக்கும் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில்
வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுக்கும் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்திப்பபொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள்
தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மக்களின் கோரிக்கை</h2><p>
</p><p>

அத்துடன்&nbsp; புகையிலைச் செய்கை தடையிலிருந்து முழுமையாக மீள 3 - 4 வருட கால அவகாசம்
வழங்கப்பட வேண்டும் என்றும்&nbsp; புகையிலைக்குப் பதிலாகச் சிறந்த மாற்றுப் பயிர் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76a4859d-d3f5-4635-ba16-2416fc467322/26-6a6bdda25b16d.webp' /></p><p>மேலும் மாற்றுப் பயிராகச் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டு சந்தைக்குக் கொண்டுவரும்
வேளையில், அரசாங்கம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதால் ஏற்படும்
நஷ்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.</p><p>இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் விவசாயிகளின் பிரச்சினையை எதிர்வரும்
நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கவுள்ளதாகவும், விசேட பிரேரணை ஒன்றையும்
கொண்டுவர உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T23:49:36+00:00</updated>
        </entry>
    </feed>
