<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-31T23:39:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மாவட்ட செயலகத்திற்குள் இரகசியமாக சென்ற ஊடக பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-media-minister-secretly-enter-secretariat-1785536850"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-media-minister-secretly-enter-secretariat-1785536850</id>
            <summary type="text">யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட
செயலகத்திற்குள் சென்று ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட
செயலகத்திற்குள் சென்று ஊடக பிரதி அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>ஊடகவியலாளர் போராட்டம் &nbsp;&nbsp;</h2><p>ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்புடன் அரசாங்க தகவல்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வு ஒன்றுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4c33fc-4b88-4665-ae33-6380e1b148f2/26-6a6d22ae8e5c3.webp' /></p><p>இந்நிலையில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு
ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக
நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ்
ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றுள்ளார்.</p><h2>யாழ்.ஊடக அமையத் தலைவர்&nbsp;</h2><p>படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை
சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம்
ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக
கோடிட்டு காட்டியுள்ளதாக , யாழ்.ஊடக அமையத் தலைவர் கே.செல்வக்குமார்
தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை
முன்னெடுத்துள்ளோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90079c79-770d-4f33-9837-484f091fc5fe/26-6a6d25aeda033.webp' /></p><p>எங்களுடன் கூட பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை
முன்னெடுக்கவில்லை.
</p><p>
இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39
ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள்
அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்தோம்.</p><p>

கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும்
எங்களோடு பேசுவதற்க்கு ஒத்துழைப்பு தந்தார்கள்.</p><h2>ஊடகவியலாளர்கள் படுகொலை</h2><p> </p><p>எங்களுடைய பேச்சை கேட்டார்கள்.
எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை சம்பந்தமான,
விசாரணையை சம்பந்தமாக கேட்டார்கள்.

ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார்.</p><p> இந்த
அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது
காட்டுகிறது.

நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில்
முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட
செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/546d7b85-0518-49d5-b35c-9a269e4dae83/26-6a6d252652ca4.webp' /></p><p>இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலாளருக்கு தெரியும். தெரிந்தும் அவர் இந்த
அரசுக்கு வக்காலத்து வாங்குறாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது. </p><p>தமது பதவிகளை
தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துறது உண்மையிலேயே மனதில்
வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும்

இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து
வலிகளோடுதான் இருக்கிறோம். </p><p>ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர்
படுகொலையை விசாரிப்போம். விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி
கூறினார்கள் என</p><p></p><p></p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T23:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற தீர்ப்பால் கதி கலங்கும் ராஜபக்சக்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-fate-court-ruling-historical-incident-1785528295"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-fate-court-ruling-historical-incident-1785528295</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.&nbsp;</p><p>இந்நியைில், குறித்த ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அத்துடன், பல முக்கிய முன்னாள் அரசியல் மற்றும் அரச தரப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.&nbsp;</p><p>இவ்விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. </p><p>

இலங்கை வரலாற்றிலேயே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருவரும் பதிவாகியுள்ளனர்.</p><p>நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p> 

இது உட்பட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mr_FJwTDCao" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T23:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல முக்கிய கோரிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/key-demands-at-batticaloa-coordination-meeting-1785535121"></link>
            <id>https://tamilwin.com/article/key-demands-at-batticaloa-coordination-meeting-1785535121</id>
            <summary type="text">மயிலத்தமடு–மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை விரவில் விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அன்னம் அதில் தாமதம் நிலவுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மயிலத்தமடு–மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை விரவில் விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அன்னம் அதில் தாமதம் நிலவுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நேற்று(31.07.2026) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை&nbsp;</h2><p> </p><p>


இந்த நிகழ்வானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நடைபெற்றுள்ளது.

​</p><p>இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கருத்து தெரிவிக்கையில், <br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b81206e-9ae5-40a6-b350-2a27cdbbba6f/26-6a6d1d3127e5a.webp' /></p><p>"கடந்த (20.05.2026 ) அன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மயிலத்தமடு–மாதவணை கால்நடை மேய்ச்சல் தரை காணிகளை விடுவிப்பது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்டது. எனினும், இந்த விடயத்தில் தற்போது நிலவும் தாமதத்திற்கான காரணம் என்ன?
</p><p>
உறுகாமம் – கித்துள் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இறங்குதுறை பிரச்சினைகளை நேரில் கள ஆய்வு செய்ததன் அடிப்படையில், நான் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி இருந்தேன், இதற்கு வெகு விரைவில் சுமூகமான முறையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

​</p><p>கோறளைப்பற்று - தெற்கு கிரான் பாலப் புனரமைப்பு மற்றும் கிரான் - பொண்டுகல்சேனை வீதி அபிவிருத்தியில் நிலவும் தாமதங்களைத் தவிர்த்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.</p><p></p><h2>யானை - மனித மோதல்</h2><p>
</p><p>
ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் மயிலவட்டவான் ஆற்றுப் பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டியது அவசியம்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்காக புதிய மாற்றுக் காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p>

யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்தும் வகையில், சேதமடைந்த யானை வேலிகளைப் புனரமைப்பதுடன் புதிய யானை வேலிகளையும் அமைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39bee555-5f37-41da-a93a-4112059dd79a/26-6a6d1d31d9433.webp' /></p><p>

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கழுவன்கேணி பகுதியில் புதிய துறைமுகம் ஒன்றை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது?</p><p>


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக அறுவடை இடம்பெறும் நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு செய்வதில் தாமதம் நிலவுகிறது.
</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட ரீதியில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவதன் அவசியம் என சுட்டிக்காட்டியள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T23:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகளுக்கான கட்டணம் முதல் நீதிக்கான தடைகள் வரை..! திணறும் பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-issues-legal-fees-to-justice-obstruction-1785532438"></link>
            <id>https://tamilwin.com/article/public-issues-legal-fees-to-justice-obstruction-1785532438</id>
            <summary type="text">“எங்களுக்கு சட்ட உதவி தேவை. ஆனால் பணம் இல்லாததால் நீதியை அணுக முடியவில்லை“ என பொதுமக்கள் சட்டத்தரணிகள் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>“எங்களுக்கு சட்ட உதவி தேவை. ஆனால் பணம் இல்லாததால் நீதியை அணுக முடியவில்லை“ என பொதுமக்கள் சட்டத்தரணிகள் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
</p><p>
அத்தாட்சிப்படுத்தல், வாடகை ஒப்பந்தங்கள், நில உடன்படிக்கைகள் மற்றும் சத்தியப் பிரமானங்கள் போன்ற எளிய ஆவணங்களுக்குக்கூட சில சட்டத்தரணிகள் மிக அதிகமான கட்டணங்களை அறவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>வழக்கு நீடிப்புகள், வழக்கு முன்னேற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவல் கிடைக்காமை, அடுத்த விசாரணைத் திகதி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் விளக்கப்படாமை என இன்னும் சில குற்றச்சாட்டுக்களையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.</p><p>
இதே போன்று நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள சாமானிய மக்களிடம் சட்டத்தரணிகள் அளவுக்கு அதிகமான பணத்தை பெறுவதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p>இந்த பிரச்சினை தொடர்பான மேலதிக விபரங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி ஆராய்கின்றது..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hz5LDV8lUD8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T22:55:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு : பொலிஸ் பிரதானி பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seattle-shooting-police-chief-resigns-1785529418"></link>
            <id>https://tamilwin.com/article/seattle-shooting-police-chief-resigns-1785529418</id>
            <summary type="text">அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கையாண்ட விதம் குறித்துக் கேள்விகள்
எழுந்த நிலையில், அந்நகர பொலிஸ் பிரதானி ஷா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கையாண்ட விதம் குறித்துக் கேள்விகள்
எழுந்த நிலையில், அந்நகர பொலிஸ் பிரதானி ஷான் பார்ன்ஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
</p><p>
சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற 'பைட் ஒஃப் சியாட்டில்' உணவுத்
திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2
வயதுக் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்ததுருடன் மேலும் மூவர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூட்டு சம்பவம்</h2><p>சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் 15 வயது சிறுவன்
ஒருவனைக் கைது செய்த நிலையில், தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது சியாட்டில் நகரத்திற்கு வெளியே நடைபெற்ற
கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொலிஸ் பிரதானி பார்ன்ஸ், இதுகுறித்து
பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் உடனடியாகச் சரியான தகவல்களைத் தெரிவிக்கத்
தவறினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a8e4d6b-cfc1-4069-b04e-7ee69a77395f/26-6a6d044d0bd76.webp' /></p><p>துப்பாக்கிச் சூடு நடந்து 5 மணி நேரம் வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும்
வெளியிடப்படாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும்
ஏற்படுத்தியது.
</p><p>
இதனைத் தொடர்ந்து சியாட்டில் மேயர் கேட்டி வில்சன், பார்ன்ஸின் இராஜினாமாவை
அறிவித்துவிட்டு, புதிய இடைக்கால பொலிஸ் பிரதானி 20 ஆண்டுகளுக்கும் மேலாக
அனுபவமுள்ள அண்ட்ரே சேல்ஸ் என்பவரை நியமித்துள்ளார்.
</p><p>
சியாட்டில் நகரில் கடந்த மூன்றாண்டுகளில் நான்கு பொலிஸ் பிரதானிகள்
மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T22:51:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் காவேரி நீர் விவகாரம்.. தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகாவிலிருந்து வந்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cm-vijay-should-not-come-karnataka-dk-shivakumar-1785523333"></link>
            <id>https://tamilwin.com/article/cm-vijay-should-not-come-karnataka-dk-shivakumar-1785523333</id>
            <summary type="text">தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>
காவேரி நீர் திறப்பு மற்றும் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p>

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது. </p><p>இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p></p><h2>இடம்பெறும் போராட்டங்கள்..&nbsp;</h2><p>இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>
இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecbfa3bf-bb71-4c42-9df5-b3421e94b6d6/26-6a6cf0a4a845a.webp' /></p><p>
</p><p>
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீர்வள மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.</p><p> இதன் பின்னர் பேசிய அவர், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். </p><p>இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம்.


போதிய நீர் இல்லை என்று கூறியும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது வேதனை அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40dafa6-8f24-41eb-b1eb-c335214f2128/26-6a6cf0a599890.webp' /></p><p> </p><p>தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது. </p><p>வேறொரு திகதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T21:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allow-establishment-chinese-embassy-in-london-1785528477"></link>
            <id>https://tamilwin.com/article/allow-establishment-chinese-embassy-in-london-1785528477</id>
            <summary type="text">மத்திய லண்டனில் சீனாவின் பிரம்மாண்ட தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த
அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது தான் என பிரித்தானிய உயர் நீதிமன்றம்
தீர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய லண்டனில் சீனாவின் பிரம்மாண்ட தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த
அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது தான் என பிரித்தானிய உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
இதன் மூலம் தூதரக கட்டுமானத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>சீனத் தூதரகம்&nbsp;</h2><p>
</p><p>
லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரோயல் மிண்ட் கோர்ட்' குடியிருப்பு
பகுதியில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட தூதரகம் தொடர்பாக, அப்பகுதி
குடியிருப்புவாசிகள் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்திருந்தது.
</p><p>
இந்த தூதரகம் அமைந்தால் சீன எதிர்ப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின்
மனித உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், உளவு
பார்க்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacef4b5-6a2f-42fb-8b99-6616822f0252/26-6a6d01ecdf564.webp' /></p><p>எனினும், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வீடமைப்பு அமைச்சகமும்
உள்ளூர் நிர்வாகமும் அனைத்துக் கவலைகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகே
சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறி குடியிருப்புவாசிகளின் மனுவை
நிராகரித்தது.
</p><p>
சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம்,
பிரித்தானியாவிலேயே மிகப்பரிய தூதரக வளாகமாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக குடியிருப்புவாசிகள்
அமைப்பின் தலைவர் லூக் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:46:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் வெளியான காணொளிகள் - மெட்டா தலைவருக்கு எதிராக வழக்கு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/videos-released-insulting-prime-minister-modi-1785527403"></link>
            <id>https://tamilwin.com/article/videos-released-insulting-prime-minister-modi-1785527403</id>
            <summary type="text">இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, மெட்டாவின் இந்தியத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, மெட்டாவின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸுக்கு எதிராக ஹைதராபாத் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p> பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களுக்கு மத்தியில், பாஜக ஆதரவாளர்களின் முறைப்பாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>வழக்கு பதிவு&nbsp;</h2><p>
இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனத்திற்கு விரைவில் அறிவித்தல் அனுப்ப
உள்ளதாக ஹைதராபாத் பொலிஸ் இணையவழிக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதற்குப் பதிலளித்துள்ள மெட்டா செய்தித் தொடர்பாளர், சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைப்பதாகத்
தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d564cd35-867a-4594-8863-0fc2867f70a4/26-6a6cff5276ee4.webp' /></p><p>சமீபத்தில் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி, சட்டவிரோதமான
உள்ளடக்கங்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்ற நிபந்தனை
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முகப்புத்தகத்தில் பயனர் பதிவிடும் கருத்துகளுக்கு நிறுவன முகாமையாளர்கள்
நேரடியாகப் பொறுப்பாக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[43 சீன நிறுவனங்களின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bans-imports-from-43-chinese-companies-1785525994"></link>
            <id>https://tamilwin.com/article/us-bans-imports-from-43-chinese-companies-1785525994</id>
            <summary type="text">சீனாவின் சின்ஜியாங் பகுதியில் சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகவும், மனித உரிமை மீறல்களில்
ஈடுபடுவதாகவும் கூறி, மேலும் 43 சீன நிறுவனங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் சின்ஜியாங் பகுதியில் சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகவும், மனித உரிமை மீறல்களில்
ஈடுபடுவதாகவும் கூறி, மேலும் 43 சீன நிறுவனங்களின் பொருட்களுக்கு அமெரிக்கா
தடை விதித்துள்ளது.
</p><p>
அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சீனாவின் முன்னணி
மின்தேக்கி தயாரிப்பு நிறுவனமான ஹுனான் ஐஹுவா குழுமம் உட்பட பல நிறுவனங்கள்
இந்தத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>உழைப்புத் தடுப்புச் சட்டம்</h2><p>

இந்தத் தடையின் மூலம் மின்தேக்கி தயாரிப்புத் துறை மட்டுமன்றி, மருந்தாக்கம்,
உலோகங்கள் மற்றும் பருத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பல்வேறு
நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbd210dc-8665-4ed1-a96d-74aa456bfce2/26-6a6cf9b1e3547.webp' /></p><p>'உய்குர் கட்டாய உழைப்புத் தடுப்புச் சட்டத்தின்' கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த
நடவடிக்கையால், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 144-லிருந்து தற்போது
187 ஆக உயர்ந்துள்ளது.</p><p>

சின்ஜியாங் பகுதியில் உய்குர் மற்றும் இதர மத அல்லது இன சிறுபான்மையினரை
சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து மனித உரிமை மீறல்களில் சீனா ஈடுபடுவதாக
அமெரிக்கா தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், தன் மீதான இந்தக்
குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:39:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் அரசு நீதித்துறையை சரியான முறையில் கட்டமைக்கும் - கந்தசாமி பிரபு எம் பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-prabhu-opposition-members-in-panic-mode-1785515358"></link>
            <id>https://tamilwin.com/article/mp-prabhu-opposition-members-in-panic-mode-1785515358</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில்
கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது
என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில்
கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது
என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று (31.07.2026) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தக் கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 10, 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>அதேபோன்று கடந்த மாதம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு
கூட்டத்தில் மயிலத்தமடு மாதவனை காணி தொடர்பில்&nbsp; ஆராயந்துள்ளோம். அந்த காணிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கையை
அரசாங்கம் மேற்கொள்ளும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0793be-2d9f-48a0-a7cc-b20504424281/26-6a6cf1f433dca.webp' /></p><p>

அத்துடன் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற யானை - மனித மோதலை
தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள யானை வேலி தொடர்பாகவும் வாழைச்சேனை கடதாசி ஆலையில்
இருக்கும் தண்ணீர் தாங்கி அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
</p><p>
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு தொடர்பாக கடந்த கால ஆட்சியாளர்கள் எதிர்மறையான சிந்தனையில் செயற்பட்டு வருகின்றனர்.</p><p></p><h2>கூட்டு சேர்ந்த எதிர்க்கட்சி&nbsp;</h2><p>
</p><p>
இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பில் மாறுபாடான கருத்துக்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.
</p><p>
 உதாரணமாக சாரை பாம்புக்கு மண்ணெண்னை ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல பதறியடித்துக் கொண்டு திரிவதை பார்கக்கூடியதாக உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9aee788d-3a1b-4908-964e-9c5f2f8023c1/26-6a6cf1f3812d6.webp' /></p><p>கூட்டு சேர மாட்டோம் என்றவர்கள் இன்று கூட்டு சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பதை எதிர்க்கின்ற நிலை உருவாகியுள்ளது.
</p><p>
இவர்களின் நோக்கம் மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து தாங்களை விடுவித்து கொள்வதே ஆகும்.</p><p>எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:37:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு.. ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-mirissa-one-injured-1785513191"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-mirissa-one-injured-1785513191</id>
            <summary type="text">மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் இன்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.&amp;nbsp;வைத்தியசாலையில் அனுமதி&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் இன்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.&nbsp;</p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p>
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec199fe-dd52-44ff-bec7-4c1d7ce45f62/26-6a6cc879f0e7b.webp' /></p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p> 

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:35:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-court-order-today-1785519190"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-court-order-today-1785519190</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p>இலங்கை வரலாற்றிலேயே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருவரும் பதிவாகியுள்ளனர்.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக இவர்கள் இருவரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>முன்னதாக&nbsp;2022ஆம் ஆண்டில், மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இருவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்துத் தீர்ப்பளித்தது. </p><p>அதனை தொடர்ந்து, இதற்கு எதிராக அரசு தலைமை சட்டத்தரணி தாக்கல் செய்த மேல்முறையீடு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த வழக்கில் எதிர் தரப்பின் சாட்சியங்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமையே இதற்கு ஆரம்பமாகும்.&nbsp;</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tNtQzCV29AI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுடனான தனது ஷெங்கன் தடையற்ற பயண ஒப்பந்தத்தை இடைநிறுத்திய இத்தாலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/italy-suspends-schengen-free-travel-spain-1785526341"></link>
            <id>https://tamilwin.com/article/italy-suspends-schengen-free-travel-spain-1785526341</id>
            <summary type="text">சியூட்டாவிற்குள் பெருமளவில் மக்கள் எல்லையைக் கடந்து வருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளற்ற ஷெங்கன் திட்டத்தின் கீழ் ஸ்பெயினுடனான தனது எல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டாவிற்குள் பெருமளவில் மக்கள் எல்லையைக் கடந்து வருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளற்ற ஷெங்கன் திட்டத்தின் கீழ் ஸ்பெயினுடனான தனது எல்லை ஏற்பாடுகளை இடைநிறுத்துவதாக இத்தாலி அறிவித்துள்ளது.</p><h2>பாரிஸுடன் உடன்பாடு</h2><p>
</p><p>
இத்தாலிக்கு ஸ்பெயினுடன் தரைவழி எல்லை இல்லை என்றாலும், இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே விமானம் அல்லது படகு மூலம் பயணம் செய்பவர்களைப் பாதிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dbc400f-471e-4127-bb10-9986167062ee/26-6a6cfabdc7cf5.webp' /></p><p>
</p><p>
பிராங்கோ - இத்தாலிய தரைவழி எல்லையில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த பாரிஸுடன் உடன்பாடு எட்டியுள்ளதாகவும் இத்தாலியின் உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785507297"></link>
            <id>https://tamilwin.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785507297</id>
            <summary type="text">முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பு</h2><p>கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da702191-badf-46d6-8dce-1355440f5c0c/26-6a6caeb1dd789.webp' /></p><p> </p><p>
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக, உளவுத்துறை எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. </p><p>
இவ்வழக்கில், உத்தியோகபூர்வ கடமைகளைப் புறக்கணித்து உயிரிழப்புகளுக்குத் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. </p><p>
இதனைத்தொடர்ந்து, அதே வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:32:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜிதவுக்கு மரண தண்டனை: கலக்கத்தில் ராஜபக்சர்கள் - ஆட்டத்தை ஆரம்பித்ததா அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-first-sentence-of-the-easter-sunday-attack-1785502005"></link>
            <id>https://tamilwin.com/article/the-first-sentence-of-the-easter-sunday-attack-1785502005</id>
            <summary type="text">இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட முதலாவது தண்டனைக்கான&amp;nbsp; நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கின்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட முதலாவது தண்டனைக்கான&nbsp; நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கின்றது. </p><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்தும் அதனை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு, முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும்&nbsp; கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(31.07.2026) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>கடந்த 2019ஆம் ஆண்டு&nbsp; ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட மிக மிலேச்சத்தனமாக கொடூர தாக்குதல் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்.&nbsp;</p><p></p><h2>அரசியல் மாற்றத்திற்கான தாக்குதல்</h2><p>ஆரம்பத்தில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாளடைவில் இது இலங்கையின் ஒரு சாராரின் அரசியல் தேவைக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்ற வாதம் வலுப்பெற்றது.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்தது. அந்த ஆட்சி இடைநடுவே கவிழ்ந்து போக அடுத்ததாக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ddbe68c-cdf5-4e10-8f23-aae5001db469/26-6a6cb44f6d49a.webp' /></p><p>இப்படி வந்த அரசாங்கங்களிடத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான உண்மையான&nbsp; சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர மக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த ஆட்சிகளின் போது இது தொடர்பான விசாரணைகள் மந்த கதியிலேயே இடம்பெற்றன.&nbsp;</p><p>எனினும், 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கத்திடமும் இதே கோரிக்கையை மக்கள் முன்வைத்ததோடு, அநுர தரப்பும் இது தொடர்பில் மிகத் தீவிரமான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.</p><p>இதன் அடிப்படையில், ஆட்சிக்கு வந்தபின்னர் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்&nbsp; தொடர்பான விசாரணைகளை அநுர அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டியது.&nbsp;&nbsp;</p><p>இதன் தொடர்ச்சியாக,&nbsp; முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மிக முக்கியத் தலைகளின் பெயர்கள் வெளிவந்தன.</p><h2>அம்பலத்தப்படுத்தப்பட்ட சூத்திரதாரிகள்&nbsp;</h2><p> </p><p>இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், அரச புலனாய்வு சேவைகளின் முன்னாள்&nbsp; பணிப்பாளர் சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோர் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது அரசாங்கம்.&nbsp;&nbsp;</p><p>இதில், சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஏலவே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக,&nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a12853-fd70-4b19-9e2e-52ed30f1c7d9/26-6a6cb4501f373.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, ராஜபக்ச விசுவாசிகளான தென்னிலங்கையின் காலாவதியான பல அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும்&nbsp; போராடியும் ஓய்ந்து போயினர்.&nbsp; கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பயணத் தடையின் பின்னரே இந்த எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன.&nbsp;</p><p>எனினும், விசாரணைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அநுர அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்ததுடன், தொடர் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.&nbsp;</p><h2>இரகசியமாக நடத்தப்பட்ட கூட்டம்</h2><p>இப்படியான நிலையில் தான்,&nbsp; உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடந்த 7 வருடங்களின் பின்னர் இன்று அவருக்கு&nbsp; மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> எனவே, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஊடாக அடுத்து கைது செய்யப்படப் போகின்ற, தண்டனை விதிக்கப்படப்போகின்ற முக்கிய புள்ளிகள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.&nbsp;</p><p>அதேசமயம், அண்மையில்,&nbsp; முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணத்தின் பின்னர் ஒரு சில தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c30e685-380a-4785-8a04-7fc7b48ae7ad/26-6a6cb450c9a90.webp' /></p><p> </p><p>குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.&nbsp; </p><p>அந்தக்கூட்டத்தில், சுரேஷ் சலே, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைப்பது தொடர்பில் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><h2>ஆசாத் மௌலானா வெளியிட்ட&nbsp; தகவல்</h2><p>இந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் ராஜபக்சர்களின் தீவிர விசுவாசிகள் என்பதோடு,&nbsp; சுரேஷ் சலே,&nbsp; கோட்டாபய ராஜபக்ச நினைப்பதை மாத்திரம் செய்யக்கூடிய ஒருவராக இருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p>முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு இடையிலான&nbsp; நெருக்கம் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார். கோட்டாபய ராஜபக்ச ஒரு கட்டளையிட்டால் அதற்கு மறுப்பேச்சின்றி சுரேஷ் சலே அந்தக் கட்டளையை செய்து முடிப்பார் என சரத் பொன்சேகா&nbsp; குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38ca5785-3492-454a-919e-d6a084fb01a3/26-6a6cb4517aa8d.webp' /></p><p>அது மாத்திரமல்ல, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு பிரதானமாக தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வந்தவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்.</p><p>இதன்போது, பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய ஆசாத் மௌலானா சனல் 4 ஊடகத்தின் ஊடாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விபரங்களை வெளியிட்டிருந்தார்.&nbsp;&nbsp;</p><p>அதனடிப்படையில், ஐரோப்பிய நாடொன்றில் இருக்கும் ஆசாத் மௌலானாவைத் தேடிச் சென்ற இலங்கை&nbsp; குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரிடம்&nbsp; விசாரணைகளை மேற்கொண்டதிலும், ராஜபக்ச குடும்பத்திற்கும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் இடையிலான தொடர்பு குறித்த பல தகவல்கள் வெளியாகியிருந்தன.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நடுக்கத்தில் ராஜபக்சர்கள்</span></h2><p>இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்&nbsp; நடந்து முடிந்த பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானை,&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,&nbsp; முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும்,&nbsp; கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர்&nbsp; பிள்ளையானை விடுவிப்பது தொடர்பான உத்தரவாதம் ஒன்றை அவரிடம் வழங்கிவிட்டு வந்ததாகவும் ஆசாத் மௌலானாவிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளிவந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22e651ce-a27e-48de-afaa-4324fedb2bf9/26-6a6cb4522d03b.webp' /></p><p>இப்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளின் முடிவுகளை எந்தக் கோணத்தில் வைத்துப் பார்த்தாலும் அது ராஜபக்சர்களையே கைகாட்டி நிற்கின்றது.</p><p> இழந்த ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்தி, மக்களின் உயிரைக் கேடயமாக வைத்து ஆட்சியைப் பிடித்ததாக&nbsp; கோட்டாபய ராஜபக்ச தரப்பு மீது அரசியல்வாதிகளும், மக்களும் என குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இந்த விசாரணைகளின் தொடர்ச்சி ராஜபக்சர்களையே கைகாட்டி நிற்கும் நிலையில்,&nbsp; அடுத்து கைது செய்யப்படப் போவது யார்? என்ற கேள்வி எழுகின்றது.&nbsp; பொறுத்திருந்து பார்க்கலாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை சூத்திரதாரிகள் யார்..?? ராஜபக்சர்கள் தப்புவார்களா..??&nbsp; அடுத்தடுத்த தண்டனைகள் உறுதியாகுமா என்பதை..&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:31:50+00:00</updated>
        </entry>
    </feed>
