<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-19T18:39:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-s-main-conditions-for-the-us-1789837284"></link>
            <id>https://tamilwin.com/article/iran-s-main-conditions-for-the-us-1789837284</id>
            <summary type="text">போர் முடிவுக்கு வருவதற்கான ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவுக்கு வருவதற்கான ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செயலாளரும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை
பிரதானியுமான மொஹ்சன் ரேசாய் (Mohsen Rezaei), இதனை ஊடகம் ஒன்றிடம்
தெரிவித்துள்ளார்.</p><h2>திருப்திகரமான பதில் வராத வரை</h2><p>

அனைத்து முனைகளிலும் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை
உடனடியாக நிறுத்துவது,

முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகளை விடுவிப்பது,&nbsp;ஈரான் மீதான பொருளாதார மற்றும் பிற தடைகள் / முற்றுகைகளை (Blockade)
முடிவுக்குக் கொண்டுவருவது என்பன இந்த நிபந்தனைகளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c1f836-b282-4188-a95d-910fc3a94952/26-6aaec9084d2a3.webp' /></p><p>
இந்த நிபந்தனைகள் கட்டார் நாட்டின் மத்தியஸ்தம் மூலமாக
அமெரிக்காவிற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>
இந்த முன்மொழிவுகள் தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பரிசீலனை மற்றும் பதிலுக்காகக் காத்திருப்பதாக மொஹ்சன் ரேசாய் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்க தரப்பில் இருந்து முறையான மற்றும் திருப்திகரமான பதில் வராத வரை
பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் அவர்
தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தடையை மீறி புதிய உச்சம் தொட்ட ஈரானின் எண்ணெய் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-oil-sales-reach-two-year-high-1789838757"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-oil-sales-reach-two-year-high-1789838757</id>
            <summary type="text">ஈரானிய ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள தடையையும் மீறி, நாட்டின் எண்ணெய் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிலான புதிய உச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள தடையையும் மீறி, நாட்டின் எண்ணெய் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிலான புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஈரானின் திட்டமிடல் மற்றும் வரவுசெலவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>
ஈரானின் முக்கிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான 'மெஹர்' வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
செப்டம்பர் மாதத்தில் ஈரானின் எண்ணெய் விற்பனை 3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச மாதாந்த வருவாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ddfb920-ab34-4694-9b8f-311ac897c558/26-6aaec5aa2e155.webp' /></p><p>
ஆயினும், அமெரிக்க தடையை மீறி ஈரான் எவ்வாறு தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.</p><p>
கடற்படைத் தடை அமலில் இருந்தபோதிலும், ஈரானிய அரசு ஏற்கனவே கடலில் நிலைகொள்ளச் செய்திருந்த தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் விற்பனையைத் தொடர்ந்து பராமரித்து வந்திருக்கலாம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். </p><p>
எனினும், தற்போதும் அதே நடைமுறைதான் தொடர்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
</p><p>அதேவேளையில், ஈரானிய எண்ணெயைச் சுமந்து செல்லும் ஈராக்கியக் கப்பல்கள், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணை வழியே பயணிக்க தெஹ்ரான் அனுமதித்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T17:26:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-white-washed-by-england-1789838115"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-white-washed-by-england-1789838115</id>
            <summary type="text">இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடரைல் இலங்கை அணி படுதோல்வியைத் தழுவியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டித் தொடரில் இலங்கை மூன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடரைல் இலங்கை அணி படுதோல்வியைத் தழுவியுள்ளது.
</p><p>இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டித் தொடரில் இலங்கை மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதன் மூலம், இங்கிலாந்து வைற்வொஷ் முறையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
</p><p>மான்செஸ்டர் ஓல்ட் டிரப்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று, இலங்கையைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce9a02b-5636-4824-98f4-7b875cbcb4ac/26-6aaec32529a2d.webp' /></p><p>இதன்படி களமிற்கிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இதில் பெத்தும் நிஷ்ஷங்க 36 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.</p><p>பந்து வீச்சில் சோனி பேகர், ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜெக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
</p><p>பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அணி வெறும் 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கினை எட்டிப்பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
</p><p>இதில், இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், ஹரி புரூக் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
</p><p>பந்து வீச்சில் இலங்கை அணியின் சார்பில் தரிந்து ரட்னாயக்க ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக சோனி பேகரும், தொடரின் ஆட்டநாயகனாக ஹரி புருக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T17:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-son-found-dead-in-vavuniya-1789836788"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-son-found-dead-in-vavuniya-1789836788</id>
            <summary type="text">வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய&amp;nbsp; மகனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய&nbsp; மகனின் சடலம்
மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
குறித்த சடலங்கள் இன்று (19.09.2026) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பாக
மேலும் தெரியவருகையில்,</p><p>
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும்
இருந்துள்ளனர்.

இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த
காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை&nbsp;</h2><p>

இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய
நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec25deb-840f-4d6e-a9e2-2f6c0df6ad2e/26-6aaec2abd186d.webp' /></p><p> </p><p>சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்,&nbsp; சம்பவ இடத்திற்கு
சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த அலஸ்கிறின்(வயது 60) என்ற
பெண்ணும் அவரது மகனான அயந்தன்(வயது 35) என்ற இளைஞருமே சடலமாக
மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு
பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்த முன்னாள் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pramodya-files-rs-75-mn-lawsuit-against-slc-1789836800"></link>
            <id>https://tamilwin.com/article/pramodya-files-rs-75-mn-lawsuit-against-slc-1789836800</id>
            <summary type="text">&amp;nbsp;ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திடமிருந்து 75 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி முன்னாள் கிரிக்கட் வீரரும், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திடமிருந்து 75 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி முன்னாள் கிரிக்கட் வீரரும், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவருமான பிரமோதய விக்கிரமசிங்க வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>தமது பதவி நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டதாகக் கூறி, 75 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார். </p><p>
செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலுடன் 2025 டிசம்பர் 17 ஆம் திகதி தொடங்கிய தமது இரண்டு ஆண்டு காலப் பதவி, கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவினால், பதவிக் காலம் முடிய முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52959ebc-6569-427f-a17b-ac38e6834b8d/26-6aaebe028aed4.webp' /></p><p> </p><p>
முன் அறிவிப்பு, போதுமான நியாயமான காரணங்கள் அல்லது முறையான சட்ட நடைமுறைகள் எதுவுமின்றி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>நடைமுறையிலிருந்த ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததன் மூலம், அக்குழு பகுத்தறிவற்ற முறையிலும், இலங்கை கிரிக்கெட்டின் நலன்களுக்கு எதிராகவும் செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 
ஒப்பந்த மீறல், வருமான இழப்பு மற்றும் தனது தொழில்முறை நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு, உரிய வட்டி மற்றும் சட்டச் செலவுகளுடன் சேர்த்து 75 மில்லியன் ரூபாயை நட்டஈடாக வழங்க வேண்டும் என அவர் இந்த வழக்கின் மூலம் கோரியுள்ளார். </p><p>
இரண்டு ஆண்டு காலப் பதவியை ஏற்ற பிறகு, இலங்கை கிரிக்கெட்டுக்காகத் தனது நேரத்தையும் அனுபவத்தையும் முழுமையாக அர்ப்பணிக்கும் நோக்கில், தனது பிற தொழில்முறை ஈடுபாடுகளையும் வணிக நலன்களையும் ஒதுக்கி வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
இதன் காரணமாக, ஒப்பந்த அடிப்படையில் பெற வேண்டிய ஊதியத்தை இழந்ததுடன், கைவிட்ட வணிக வாய்ப்புகளினால் மேலதிக நிதி இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p> மேலும், இச்செயல் தனது தொழில்முறைத் தகுதி, நம்பகத்தன்மை மற்றும் நற்பெயருக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்வுக்குழுத் தலைவராகத் தனது முந்தைய பதவிக் காலத்தில் இலங்கை அணி அடைந்த முக்கிய வெற்றிகளையும் இந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தெரிவுக்குழு தலைவராக பதவி வகித்த காலத்தில், 2022 ஆம் ஆண்டு டி20 ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி வென்றமை, 2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியமை மற்றும் 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் ஒரு போட்டியில் கூடத் தோல்வியடையாமல் சாம்பியன் பட்டம் வென்றமை போன்ற சாதனைகளை பிரமோதய விக்ரமசிங்க பட்டியலிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T16:53:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் மோடியின் தலையீடு.. அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-sivarasa-saudi-death-penalty-mano-ganesan-1789805503"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-sivarasa-saudi-death-penalty-mano-ganesan-1789805503</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>மோடியின் நெருங்கிய நண்பர்</h2><p>தனது 'X' தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் மோடி, இலங்கையின் உயரிய சிவில் விருதான ஸ்ரீலங்கா ரத்னாவை ஏற்றுக்கொண்டவர் என்பதோடு இலங்கையின் நீண்டகால நண்பராகவும் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12841f69-88ca-4726-8436-19aacd55933f/26-6aae4672a6f19.webp' /></p><p>
</p><p>மேலும், "உங்கள் நண்பரும் ஸ்ரீலங்கா ரத்னா விருது பெற்றவருமான பிரதமர் நரேந்திர மோடியின் அவசரக் கவனத்திற்கு அனோஜன் சிவராசாவின் இக்கட்டான நிலையை கொண்டு வருமாறு நான் வலியுறுத்துகிறேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மனிதாபிமான அடிப்படையில் ஒரு தீர்வைப் பெறுவதற்காக, இளவரசர் சல்மானிடம் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டுப் பேசுமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">&lt;Appeal to President&gt; I urge President <a href="https://x.com/anuradisanayake?ref_src=twsrc%5Etfw">@anuradisanayake</a> to bring <a href="https://x.com/hashtag/Anojan_Sivarasa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Anojan_Sivarasa</a>’s desperate plight to the urgent attention of your friend, recipient of &quot;SriLanka Rathna&quot; Prime Minister Narendra Modi. <br><br>Given PM Modi’s close ties with Saudi Prime Minister and Crown Prince… <a href="https://t.co/4wFbn1RoZh">pic.twitter.com/4wFbn1RoZh</a></p>&mdash; Mano Ganesan (@ManoGanesan) <a href="https://x.com/ManoGanesan/status/2101198855983509724?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UlxAFBUeGpA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p><p><b><i>You may Like this...</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/e7LboISYa4M" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-19T16:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மோசமாக செயற்பட்ட இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-canada-1789832251"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-canada-1789832251</id>
            <summary type="text">கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர்&amp;nbsp;கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றிய 62 வயதான சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய சிறுவன் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

இலங்கையர் கைது</b></h2><p>பாதிக்கப்பட்ட 16 வயதான சிறுவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>சந்தேக நபரான இலங்கையர் மீது தகாத வகையில் செயற்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>

குறித்த நபரால் எவராது பாதிக்கப்பட்டிருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-19T15:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-in-a-van-with-ice-drugs-and-cash-1789830868"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-in-a-van-with-ice-drugs-and-cash-1789830868</id>
            <summary type="text">சம்மாந்துறைப் பகுதியில் நீண்ட காலமாகப் பொலிஸாரைத் தப்பித்து ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் பெருந்தொகையான &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன்&amp;nbsp; கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறைப் பகுதியில் நீண்ட காலமாகப் பொலிஸாரைத் தப்பித்து ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் பெருந்தொகையான 'ஐஸ்' போதைப்பொருளுடன்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் நேற்று
(18) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே, அல் முனீர் வீதியில்
வைத்து அவர் பயணித்த வானுடன் பொலிஸாரினால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருளும்,
போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்
பணத்தொகையும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58e088c9-1771-4486-8301-b7f5ec26ad68/26-6aaea7844ce1a.webp' /></p><p>
</p><p>சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T15:23:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்துக்கு எதிரான பரந்துபட்ட கூட்டணி! ரணில் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-broad-anti-government-alliance-1789829960"></link>
            <id>https://tamilwin.com/article/a-broad-anti-government-alliance-1789829960</id>
            <summary type="text">ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்.
</p><p>
இலங்கையின் நீண்டகால சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கான உத்தேச தேசிய கொள்கைக் கட்டமைப்பு தொடர்பாக, பெலவத்தையைத் தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.</p><h2>பிரதான நோக்கம்&nbsp;</h2><p>கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்த கலந்துரையாடல்களை இலகுபடுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f3c3b8-7426-4aca-8573-ebfda1f41522/26-6aaea566b2eeb.webp' /></p><p>
</p><p>
குறித்த ஆவணம் ஐக்கிய தேசியக் கட்சிக்காக மாத்திரம் தயாரிக்கப்படவில்லை எனவும், பெலவத்தையைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
பொதுவான தேசிய வேலைத்திட்டமொன்றின் ஊடாக அரசியல் கட்சிகளிடையே சாத்தியமான பரந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீடுகளை ஊக்குவித்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, அடுத்த 20 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக்கூடிய கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T15:08:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-lifts-economic-sanctions-on-eritrea-1789829714"></link>
            <id>https://tamilwin.com/article/us-lifts-economic-sanctions-on-eritrea-1789829714</id>
            <summary type="text">செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிராந்திய நலன்களை முன்னெடுக்கும்
நோக்கில் எரித்திரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை
நீக்குவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிராந்திய நலன்களை முன்னெடுக்கும்
நோக்கில் எரித்திரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை
நீக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
</p><p>
2021 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால்
எரித்திரியாவின் ஆளும் கட்சி மற்றும் இராணுவத்தைக் இலக்குவைத்து இந்தத் தடைகள்
விதிக்கப்பட்டிருந்தன.
</p><p>
எத்தியோப்பியாவின் திக்ரே (Tigray) பிராந்திய மோதலின் போது எரித்திரியப்
படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே
இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.</p><h2>நியாயமற்ற தடை</h2><p>
</p><p>
செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சையாளர்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து
வரும் நிலையிலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்ட சூழலிலும், செங்கடலின் உபாய
முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள எரித்திரியாவின் அமைவிடம்
அமெரிக்காவிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4846a258-2de9-4582-b071-ca1d5a0cdd4c/26-6aaea2545d7d7.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், எரித்திரியா மீது பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 'தேசிய அவசரகால
நிலை' முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை எரித்திரிய அரசாங்கம் வரவேற்றுள்ளதுடன்,
தங்களது நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நியாயமற்ற தடைகளை
நீக்கியமைக்காக ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்திற்குத் தனது நன்றியையும்
தெரிவித்துக் கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T15:03:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறை சந்தையில் நடக்கும் அநீதி..! பாதிப்படையும் வியாபாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vendors-allege-unfair-treatment-valvettithurai-1789827141"></link>
            <id>https://tamilwin.com/article/vendors-allege-unfair-treatment-valvettithurai-1789827141</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபையின் மரக்கறி சந்தையில் அநீதி இடம்பெறுவதாக சந்தை வியாபாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று(19) ஊடகங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபையின் மரக்கறி சந்தையில் அநீதி இடம்பெறுவதாக சந்தை வியாபாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், </p><p>கடந்த பல வருடங்களாக 220 ரூபாவாக இருந்த நில வாடகை திடீரென 1,420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><h2>&nbsp;மரக்கறி சந்தையில் அநீதி</h2><p>

நில வாடகை அதிகரிப்பு தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபைக்கு பல தடவைகள் எழுத்துமூலம் அறிவித்த போதிலும், தமது தரப்பு நியாயத்தை சபை கவனத்தில் கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.
</p><p>
மேலும், தாம் வரி செலுத்தவில்லை எனக் கூறி, தமது வியாபாரப் பொருட்களை நகர சபையினர் சில நாட்களுக்கு முன்னர் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தமது வருமானத்திற்கு ஏற்ற வகையில் குறைந்த பரப்பளவிலான இடத்தை வாடகைக்கு பெற்று அதற்கான வரியை செலுத்துவதற்கு தாம் தயாராக இருந்ததாகவும், குறைந்த நிலப்பரப்பை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2822341561468230%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
சந்தை குத்தகைதாரர் தம்மிடமிருந்து வரியைப் பெற மறுத்ததாகவும், அதேவேளை தாம் வரி செலுத்தவில்லை என நகர சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரி குறிப்பிட்டார்.
</p><p>
தமது வியாபாரப் பொருட்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, தற்போது எந்தவித தொழிலும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் உபதவிசாளரிடம் கருத்து கோரப்பட்டபோது, தாம் தற்போது தொலைவில் இருப்பதால் உடனடியாக பதிலளிக்க முடியாது எனவும், பிறிதொரு நாளில் பதில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T14:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு வார்த்தைக்காக ஒரு உயிரைப் பறிக்காதீர்கள்..! அனோஜனுக்காக சவுதியிடம் சஜித் உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/premadasa-urges-saudi-arabia-1789825027"></link>
            <id>https://tamilwin.com/article/premadasa-urges-saudi-arabia-1789825027</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் இலங்கை புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் இலங்கை புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு கருணை காட்டுமாறு சவுதி அரேபிய அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

சமூக வலைத்தளமான எக்ஸில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><h2>மரண தண்டனை</h2><p>
</p><p>
ஒரு வார்த்தைக்காக ஒருவரின் உயிரைப் பறிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, அனோஜனுக்கு கருணை வழங்குவதற்கான வாய்ப்பை சவுதி அதிகாரிகள் திறந்துவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு மதத்தை, அவமதிப்பாகக் கருதப்படும் ஒரு வார்த்தையால் அழிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A man’s life should not be taken for a word.<br><br>If the reported death sentence against Sri Lankan migrant worker Anojan Sivarasa is confirmed, I hope Saudi Arabia will show the mercy that lies at the heart of every great faith.<br><br>A religion that has endured for centuries cannot be… <a href="https://t.co/LPsXdzyED0">https://t.co/LPsXdzyED0</a></p>&mdash; Sajith Premadasa (@sajithpremadasa) <a href="https://x.com/sajithpremadasa/status/2101279904252014604?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
ஒரு வார்த்தைக்கு பதிலாக ஒருவரின் உயிரைப் பறிப்பதிலேயே ஒரு மதத்தின் வலிமை தங்கியிருக்கக் கூடாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன், ஒவ்வொரு சிறந்த மதத்தின் அடிப்படையிலும் காணப்படும் கருணையை சவுதி அரேபியா வெளிப்படுத்தும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:54:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய ட்ரம்ப் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-bans-media-outlets-entering-white-house-1789823552"></link>
            <id>https://tamilwin.com/article/trump-bans-media-outlets-entering-white-house-1789823552</id>
            <summary type="text">தங்களுக்கு எதிராகப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக் கூறி CNN, MS NOW
மற்றும் Politico ஆகிய முன்னணி ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி
சேகரிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்களுக்கு எதிராகப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக் கூறி CNN, MS NOW
மற்றும் Politico ஆகிய முன்னணி ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி
சேகரிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் தடை விதித்துள்ளார்.
</p><p>
தமது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி
ட்ரம்ப், குறித்த ஊடகங்கள் தமது நிர்வாகத்தைப் பற்றித் தொடர்ந்து உண்மைக்குப்
புறம்பான செய்திகளை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

அத்துடன் The New York Times மற்றும் The Washington Post ஆகிய ஊடகங்களும்
பொய்ச் செய்திகளையே வெளியிடுவதாகத் தெரிவித்துள்ள அவர், வரும் நாட்களில்
மேலும் பல ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.</p><h2>நேரடித் தாக்குதல்&nbsp;</h2><p>
</p><p>
ட்ரம்பின் இந்த தீர்மானத்திற்குக் குறித்த ஊடக நிறுவனங்களும் ஊடகப்
பாதுகாப்பு அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
</p><p>
அமெரிக்க அரசியலமைப்பின் முதலாவது திருத்தத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள
செய்தி சேகரிக்கும் அடிப்படை உரிமையை அரசோ அல்லது அதிபரோ முடக்க முடியாது
எனவும், இந்தத் தடையை சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாகவும் CNN மற்றும்
Politico நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/651f775d-43fe-41d4-8161-60ec776a19bd/26-6aae8d7309f01.webp' /></p><p>
</p><p>
அரசியலமைப்பின் படி, ஊடகவியலாளர்களின் செய்திகளின் உள்ளடக்கத்தைக் காரணம்
காட்டி வெள்ளை மாளிகைக்கான அணுகலைத் தன்னிச்சையாக மறுக்க முடியாது என 1977 ஆம்
ஆண்டைய நீதிமன்றத் தீர்ப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த நடவடிக்கை சுதந்திரமான ஊடகவியலின் மீதான நேரடித்
தாக்குதல் என தேசிய பிரஸ் கிளப் உட்படப் பல அமைப்புகள்
கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:40:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி சிறையில் உள்ள அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-demanding-release-of-sivarasa-anojan-1789820969"></link>
            <id>https://tamilwin.com/article/protest-demanding-release-of-sivarasa-anojan-1789820969</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் சிறையில் உள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் கவனயீர்ப்புப் போராட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் சிறையில் உள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(19) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் மற்றும் தூக்குக் கயிற்றின் உருவம் உள்ளிட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும், அவரை விடுதலை செய்யுமாறு கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.</p><h2>கவனயீர்ப்புப் போராட்டம்</h2><p>
</p><p>
இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போராட்டத்தின் பேச்சாளர் ஒருவர், இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே சிவராசா அனோஜன் தற்போதைய சட்ட சிக்கலில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f80c4a-2790-4f72-b662-200b1bfe5717/26-6aae89ed4b01c.webp' /></p><p>
</p><p>
எனவே, இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் கருத்திற்கொண்டு, சிவராசா அனோஜனை விடுதலை செய்து அவர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து நிம்மதியாக வாழ்வதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
மேலும், அனோஜனின் குடும்பத்தின் நிலைமையையும் கருத்திற்கொண்டு, அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1050596304470167%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:11:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனக் குழு பங்கேற்க விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palestinian-delegation-at-the-un-meeting-1789821450"></link>
            <id>https://tamilwin.com/article/palestinian-delegation-at-the-un-meeting-1789821450</id>
            <summary type="text">ஐ.நா தலைமையக ஒப்பந்தங்கள் மற்றும் அதை நடத்தும் நாடு என்ற ரீதியில் தனக்குள்ள
கடமைகளைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா தலைமையக ஒப்பந்தங்கள் மற்றும் அதை நடத்தும் நாடு என்ற ரீதியில் தனக்குள்ள
கடமைகளைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என
ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர சேவையின் பேச்சாளர் அன்வர் எல் அனூனி
தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனிடையே, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எதிர்வரும் பொதுச் சபைக்
கூட்டத்தொடரில் பதிவுசெய்யப்பட்ட காணொளி செய்தி மூலமாக உரையாற்றுவதற்கு ஐ.நா
பொதுச் சபை அண்மையில் வாக்களித்து அனுமதியளித்திருந்தது.
</p><p>
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐ.நாவின் பணிகளில் பாலஸ்தீனம்
முழுமையாகப் பங்கேற்பதைப் பாதிக்கும் என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ
குட்டேரஸும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.</p><h2>விசா தடை</h2><p>
</p><p>
பாலஸ்தீன அதிகாரசபையும் பாலஸ்தீன விடுதலை அமைப்பும் (PLO) அமைதி முயற்சிகளை
சீர்குலைப்பதாகக் குற்றம்சாட்டியே அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த விசா தடையை
நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b0dc360-7d0b-4efa-ad9d-95e309e8bda3/26-6aae87e810759.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், பாலஸ்தீன அரசுக்கான சர்வதேச அங்கீகாரத்தை வலியுறுத்தவும்
இரு-நாட்டுத் தீர்வை மீண்டும் முன்னெடுக்கவும் இம்முறை காணொளி வாயிலாக
ஜனாதிபதி அப்பாஸ் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:02:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி இளவரசரின் இராஜகீய மன்னிப்பு.. அனோஜனை காப்பாற்ற இருக்கும் வழி சாத்தியமாகுமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sivarasa-anojan-death-sentence-saudi-arabia-law-1789813237"></link>
            <id>https://tamilwin.com/article/sivarasa-anojan-death-sentence-saudi-arabia-law-1789813237</id>
            <summary type="text">சவூதி அரேபியா, இஸ்லாமியச் சட்டமுறையான ஷரியாவின் (Sharia) அடிப்படையிலேயே தனது நீதித்துறையைச் செயல்படுத்துவதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியா, இஸ்லாமியச் சட்டமுறையான ஷரியாவின் (Sharia) அடிப்படையிலேயே தனது நீதித்துறையைச் செயல்படுத்துவதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அதன்படி, அங்கு மரண தண்டனையானது பிரதானமாக மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. </p><p>முதலாவதாக, 'கிசாஸ்' (Qisas) எனும் பழிக்குப்பழி சட்டத்தில், நீதியின் கீழ் திட்டமிடப்பட்ட கொலைக் குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது; இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை (Diyya) பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னிக்க முடியும்.</p><h2>சவூதி அரேபிய சட்டம்..&nbsp;&nbsp;</h2><p>இரண்டாவதாக, 'ஹதுத்' (Hudud) பிரிவின் கீழ் மத நூல்களில் வரையறுக்கப்பட்ட தேசத்துரோகம், மதம் மாறுதல் போன்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c9bd40d-4e35-4a1e-8532-230de916b83a/26-6aae837a9912a.webp' /></p><p> </p><p>மூன்றாவதாக, 'தஸீர்' (Tazir) எனும் நீதிபதிகளின் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவின் கீழ் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் மத நிந்தனை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு பிரதானமாக வாள் மூலம் தலை துண்டித்தல் முறையிலேயே தண்டனை நிறைவேற்றப்படுகிறது.</p><p>இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜன், சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்தார்.</p><p> சமூக வலைத்தளத்தில் அவர் இட்ட பின்னனூட்டலில், இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கருத்து ஒன்றை வெளியிட்ட, நிலையில் இவ்விவகாரம் பேசுபொருளானதுடன் கடும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானது.&nbsp;</p><p>அவர் உடனடியாக அக்கருத்தை நீக்கி பகிரங்கமாக மன்னிப்பு கோரிய போதிலும், அது தொடர்பாக சவூதி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>இளவரசரின் சிறப்பு அதிகாரம்&nbsp;</h2><p> இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கின் ஆரம்ப விசாரணையில் அல்-அஹ்சா (Al-Ahsa) நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315a44a3-5f1f-465d-8b29-d84a1045825d/26-6aae837c2559f.webp' /></p><p> எனினும், மேல்முறையீட்டின் போது இந்தத் தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>சவூதி சட்டப்படி, மத நிந்தனை தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மன்னிப்பு வழங்க முடியாது என்றாலும், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இருக்கும் சிறப்பு அதிகாரமான 'இராஜகீய மன்னிப்பு' (Royal Clemency) மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்ற மேன்முறையீட்டின் மூலமாகவோ தண்டனையைக் குறைக்க முடியும்.</p><p><i>(இராஜகீய மன்னிப்பு (Royal Pardon / Presidential Pardon) என்பது ஒரு நாட்டின் தலைவர் (அரசர் அல்லது ஜனாதிபதி) தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, குற்றவாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைப்பது அல்லது முழுமையாக இரத்து செய்வது ஆகும்.)</i></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f1067c0-f57d-451f-b5bc-1832cfecdc1f/26-6aae837b6ac5a.webp' /></p><p> </p><p>தற்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனடியாக தலையிட்டு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>அனோஜனின் குடும்பத்தினரும் தங்களது மகனை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கை அரசு சவூதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாந்தோட்டத்திற்குள் சிக்கிய ஆடம்பர மாளிகை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் - அடுத்தடுத்து பல வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றுமொரு மாந்தோப்பு மற்றும் ஆடம்பர வீடு ஒன்றை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. </p><p>

இந்த சொத்துக்கள் பிரபலமான தனியார் கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு நபரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த சொத்துக்கள் தம்புள்ளை நகருக்கு அருகில் மாந்தோட்டம் அடங்கிய மூன்று காணிப்பகுதிகளில் உள்ளது.</p><h2><b> 

பினாமி பெயரில் கொள்வனவு </b></h2><p>இவற்றில் ஒரு காணிப்பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சொத்துக்களுக்காக 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஷிரான் பாசிக் செலவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0871032-92f8-4b6c-8c0f-4f64fcdd5803/26-6aae017a78504.webp' /></p><p>பினாமி பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தோட்டம் மற்றும் காணிகளை விசாரணை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.</p><p> 

அத்துடன், அந்த காணிகளை பராமரித்து வரும் நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ஷிரான் பாசிக் கொள்வனவு செய்த 150 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றொரு ஆடம்பர வீட்டையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாவரமண்டிய பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

இந்த ஆடம்பர வீடு தனியார் கல்வி ஆசிரியரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அந்த வீட்டில் ஆசிரியரின் தாயார் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.</p><p> </p><h3><b>போதைப்பொருள் கடத்தல்காரர் </b></h3><p>ஷிரான் பாசிக்கும் அந்தத் தனியார் கல்வி ஆசிரியருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கண்டறிந்துள்ள பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இது தொடர்பான வேறு பல சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a1401d-930e-4f55-a585-93ab83425fd8/26-6aae017b2dadd.webp' /></p><p>அந்த ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இலங்கை திரும்பியவுடன் விசாரணைக்காக உடனடியாக அழைக்கப்படுவார் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கை திரும்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:40:35+00:00</updated>
        </entry>
    </feed>
