<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-18T15:32:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பலசரக்குக் கடை பூட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grocery-store-sealed-due-to-unhygienic-conditions-1787063772"></link>
            <id>https://tamilwin.com/article/grocery-store-sealed-due-to-unhygienic-conditions-1787063772</id>
            <summary type="text">மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட
பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக்
கடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட
பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக்
கடை ஒன்று பூட்டப்பட்டுள்ளது.</p><p>களுவாஞ்சிகுடி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று (18.08.2026 ) அதிரடியாகப் பூட்டப்பட்டுள்ளது.</p><p>
மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள்
இணைந்து மேற்கொண்ட களப் பரிசோதனையின் போது, குறித்த பலசரக்குக் கடையில்
கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவது கண்டறியப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>

அதனைத் தொடர்ந்து, பொது சுகாதாரப் பரிசோதகரால் இன்று களுவாஞ்சிகுடி
நீதிமன்றத்தில் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711c8a69-d935-4c31-8623-aa7a8c7babcc/26-6a84733b5041f.webp' /></p><p>
</p><p>
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கடை உரிமையாளரை 03 இலட்சம் ரூபாய்
சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன், இனங்காணப்பட்ட அனைத்து சுகாதாரக்
குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை கடையை உடனடி நடைமுறைக்கு
வரும் வகையில் பூட்டி வைக்குமாறு உத்தரவிட்டது.
</p><p>
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சுகாதாரப் பிரிவினரால்
முன்னெடுக்கப்படும் இத்தகைய தொடர் நடவடிக்கைகள், அப்பகுதி வியாபாரிகள்
மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T15:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அரசு சாரா தொண்டு நிறுவனம் ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/non-governmental-organization-employees-protest-1787064583"></link>
            <id>https://tamilwin.com/article/non-governmental-organization-employees-protest-1787064583</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனம் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்ட வரைவு (L.D.-0.6/2026) தற்போதைய வடிவில்
நிறைவேற்றப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனம் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்ட வரைவு (L.D.-0.6/2026) தற்போதைய வடிவில்
நிறைவேற்றப்படக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, நேற்று(17.08.2026) முல்லைத்தீவு மாவட்ட
செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
</p><p>

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட சமூக
அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T14:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - ராஜபக்சர்களுக்கு நெருக்கடியாகும் இரகசிய விசாரணைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-investigation-1787064282"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-investigation-1787064282</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது அவசியமற்றது என்றும், அதற்குப் பதிலாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது அவசியமற்றது என்றும், அதற்குப் பதிலாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை வழங்குவதுமே தற்போதைய காலத்தின் தேவை என்று மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிழகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
தற்போதைய இலங்கை அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளைத் தீவிரமாக கையாள்கின்றது.
</p><p>
உயிர்த்தஞாயிறு தாக்குதல் வழக்கில் ராஜபக்சர்கள் சம்மந்தப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் இந்த அரசாங்கம் அதில் கவனம் செலுத்துகின்றது.
</p><p>
ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அல்லது காணாமல் போனோர் விவகாரங்களில் மௌனம் காக்கின்றது.
</p><p> 
இலங்கையின் இனவாதக் கட்டமைப்பிலிருந்து அரசு விடுபடத் தயாராக இல்லை. </p><p>

எனவே, தமிழர்களுக்கு நீதிகிடைக்க உள்ளக விசாரணைகளை விட சர்வதேச பொறிமுறை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலையீடு மட்டுமே சிறந்த வழியாகும் என்று குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/68d9IKM59Us" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T14:50:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்புக்கூடுகளின் எண்ணிக்கை - இன்றும் புதிதாக 10 கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-skeletons-is-increasing-day-by-day-1787061346"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-skeletons-is-increasing-day-by-day-1787061346</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ள.

இந்த நடவடிக்கை மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ள.
</p><p>
இந்த நடவடிக்கை மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>

8 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு</h2><p>
இதன்போது, 10 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில், 08 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39cb163-7828-4611-87ab-6be19f52a704/26-6a84653c61b72.webp' /></p><p>
</p><p>

இதுவரையில், செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு
பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f649ce0-4527-4e43-8772-8c6f2e669268/26-6a84653d75115.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39902bf3-6c00-40a3-933c-dd9c535b08b5/26-6a84653e4ef5d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fa555fa-5e78-47dd-b45c-49e9edb4f1b8/26-6a84653f266a6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T14:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missile-attack-on-ship-in-strait-of-hormuz-1787061756"></link>
            <id>https://tamilwin.com/article/missile-attack-on-ship-in-strait-of-hormuz-1787061756</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பலொன்று
இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பலொன்று
இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதலில் கப்பலின் இயந்திரப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன்,
ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று(18) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கப்பலின்
பாதுகாப்பு அதிகாரி UKMTO அமைப்புக்குத் தகவல் வழங்கியுள்ளார்.</p><h2>தீவிர விசாரணை</h2><p> அதனையடுத்து,
எஞ்சிய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஓமான் கடலோரப் பாதுகாப்புப்
படையினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c9a932-211a-467e-8313-15f2fc154cce/26-6a8467270a4d9.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதலினால் இதுவரை எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படவில்லை
எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது
குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், அப்பகுதியினூடாகப் பயணிக்கும் ஏனைய கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன்
செயல்படுமாறும், சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் தென்படின் உடனடியாகத்
தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T14:29:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையாகாத பசில் – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-issued-forfeit-bail-money-fails-appear-court-1787061515"></link>
            <id>https://tamilwin.com/article/order-issued-forfeit-bail-money-fails-appear-court-1787061515</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான வழக்கு இன்று(18) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மாத்தறை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான வழக்கு இன்று(18) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் காணியை, சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;அரசுடைமையாக்க உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
வழக்கில் பசில் ராஜபக்ச மூன்றாவது சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார். </p><p>அவரது சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
</p><p>
எனினும், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்காமல் பசில் ராஜபக்ச தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3a9779c-bc35-4748-96dd-e7aac0727add/26-6a846786d3e0f.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, மாத்தறை நீதவான் சதுர திசாநாயக்க, பசில் ராஜபக்ச செலுத்தியிருந்த பிணைத் தொகையை அரசுடைமையாக்க உத்தரவிட்டார்.

மேலும், அவருக்காக சரீரப் பிணையில் கையெழுத்திட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த கைது பிடியாணையை ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p><br><br><b><i>you may like this..<br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bfow4ehrrOI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b><br><br></p>]]></content>
            <updated>2026-08-18T14:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாராதிபதி ஒருவரின் இரட்டை வேடம் அம்பலம்: மனைவிக்கு சொகுசு காரும் இருமாடி வீடும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778"></link>
            <id>https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் தேடிப்பார்த்ததில் இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது.
ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் நல்ல கணவராகவும் இருந்துள்ளார். </p><p>தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு விசித்திரமான இரட்டை வேடம் தரித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>விகாராதிபதி போட்ட இரட்டை வேடம்</h2><p>சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில் இருந்துள்ளார். இவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
</p><p>குருநாகலையில் அமைந்துள்ள மணமகளின் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது. 
தான் திருமணம் செய்தது ஒரு பௌத்த துறவியை என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்தே இருந்துள்ளது. </p><p>அனைத்தும் தெரிந்தே இந்த காரியத்தை செய்துள்ளனர். பின்னர் குருநாகலை பகுதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டில் அப்பெண்ணை அவரது பெற்றோருடனும் தனது குழந்தையுடன் குடியமர்த்தியுள்ளார்.
</p><p>ஊர் மக்களுக்குச் சந்தேகம் வராதிருக்க விக் அணிந்து கொண்டு பிரதேச செயலகத்தின் அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என்று அப்பெண்ணின் வீட்டாரிடமும் ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.
</p><p>மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விகாரையிலிருந்தும் தான தர்மங்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று 5-6 நாட்கள் தங்கியிருந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e41492-7c28-489d-84c5-afa2a08b0104/26-6a84622c6f69d.webp' /></p><p>பின்னர் விகாரையிலிருந்து கொண்டு வந்த உணவை ஊர் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டுள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் பரோபகாரிகளிடம் விகாரையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி 2-3 இலட்சம் ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார். </p><p>அந்தப் பணத்தையே இந்தப் பெண்ணுக்குச் செலவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி விகாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார். </p><p>இவை தெரியவந்ததை அடுத்து குறித்த தேரர் விகாரைக்கு வந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:56:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிற்கு ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-issues-a-stern-warning-to-britain-ukraine-1787059946"></link>
            <id>https://tamilwin.com/article/russia-issues-a-stern-warning-to-britain-ukraine-1787059946</id>
            <summary type="text">உக்ரைனுக்கு ட்ரோன்களை வழங்கி, ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல்களை நடத்த
உதவுவதற்கு எதிராக பிரித்தானியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என
ரஷ்யா எச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு ட்ரோன்களை வழங்கி, ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல்களை நடத்த
உதவுவதற்கு எதிராக பிரித்தானியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என
ரஷ்யா எச்சரித்துள்ளது.</p><p>

பிரித்தானிய தயாரிப்பு ட்ரோன்கள் முதன்முறையாக ரஷ்ய எல்லைக்குள் நீண்டதூரத்
தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
</p><p>
இந்த செய்தி குறித்து லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,
உக்ரேனின் தீவிரவாத இயந்திரத்திற்குப் பிரித்தானியா வழங்கும் ஆதரவு அதிகரிக்க
அதிகரிக்க, அதற்காக அது செலுத்தும் விலையும் அதிகமாக இருக்கும் எனத்
தெரிவித்துள்ளது.</p><h2>தாக்குதல்</h2><p>

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தளபாடங்கள் சேமிப்பு மையங்களைக்
குறிவைத்து உக்ரைன் நீண்டதூரம் பாயும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
</p><p>
பிரித்தானிய தயாரிப்பு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து
அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு நேரடியாக உறுதிப்படுத்தவில்லை.</p><p>

இருப்பினும், புடினின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்
கொள்ள உக்ரைனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி தோளோடு தோள் நிற்பதாக
பிரித்தானியா அறிவித்துள்ளது.
</p><p>
ஏற்கனவே, 752 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான நிதி உதவித் திட்டத்தின் கீழ்,
2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 150,000 ட்ரோன்களை உக்ரைனுக்கு வழங்க
பிரித்தானியா உறுதியளித்துள்ளது.</p><p>
</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:54:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் பெரும் சோகம் - திருமணத்திற்கு 2 நாட்கள் - கோர விபத்தில் இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dies-in-an-accident-1787059366"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dies-in-an-accident-1787059366</id>
            <summary type="text">மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளது. 

இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25 வயதான ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளது. </p><p>

இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25 வயதான லக்மால் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.</p><p> 

தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.</p><p> 

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் லக்மால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>

இளைஞன் பலி</b></h2><p>தனது மகனின் திருமணப் பதிவுக்காக இரண்டு நாட்களும், வேலைக்காக இஸ்ரேல் செல்வதற்கு மூன்று நாட்களும் மட்டுமே இருந்த நிலையில் இந்த துயரம் இடம்பெற்றுள்ளதாக லக்மாலின் தந்தை தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c99afa-98dc-4b31-957c-887884e7a93b/26-6a8460d2e73af.webp' /></p><p>மகனின் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயாரின் இதயத்தில் இரத்தம் உறைந்ததன் காரணமாக தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மாத்தறை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் லக்மாலின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்கு முன்னரே கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பேருந்து ஓட்டுநர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக உறவினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனினும், சட்ட நடைமுறைகளின்படி சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p>அவரது சாரதி உரிமத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்துச் செய்து நீதிமன்றக் காவலில் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T13:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களை அடிமைப்படுத்தும் மெட்டா நிறுவனம் - எழுந்த பரபரப்பு குற்றச்சாட்டு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parents-sue-meta-company-1787060100"></link>
            <id>https://tamilwin.com/article/parents-sue-meta-company-1787060100</id>
            <summary type="text">ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின் மனநலத்தைப் பாதிக்கும் வகையில் தளங்களை வடிவமைத்ததாகக் கூறி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின் மனநலத்தைப் பாதிக்கும் வகையில் தளங்களை வடிவமைத்ததாகக் கூறி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பக்கட்ட
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>இது தொடர்பான விசாரணைகள் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><h2>
பெற்றோர்களின் கோரிக்கை</h2><p>
அமெரிக்காவின் 29 மாநிலங்கள் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.

மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடகத் தளங்களில் தொடர்ச்சியான ஸ்க்ரோலிங் மற்றும் அல்காரிதம் தூண்டுதல்கள் போன்ற அம்சங்கள் மூலம் சிறுவர்களை அடிமையாக்கும்
வகையில் வடிவமைத்துள்ளதாகவும், பெற்றோரின் அனுமதியின்றி அவர்களின் தரவுகளைச் சேகரிப்பதாகவும் மாநில சட்டவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3570fc8-3cbb-4f03-8eab-236ecbe5e7a6/26-6a846033bb182.webp' /></p><p>
</p><h2>
ட்ரில்லியன் கணக்கில் அபராதம் விதிக்க வாய்ப்பு</h2><p>
இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்திற்கு 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை
அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
பெற்றோரின் கட்டுப்பாடுகளை உறுதி செய்தல், மனநலத்தைப் பாதிக்கும்
அல்காரிதம்களை மாற்றுதல் மற்றும் தானாக மறையும் செய்திகளைத் தடைசெய்தல்
உள்ளிட்ட பல்வேறு கட்டாய மாற்றங்களை மெட்டா நிறுவனத்தில் கொண்டுவர வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/964b0c1b-de7c-41b5-a85b-ed710aafde11/26-6a8460348d08c.webp' /></p><p>

இந்த வழக்கின் போது மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்
சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்கா மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அவுஸ்திரேலியா,
பிரேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலும் மெட்டா நிறுவனம் இவ்வாறான சட்ட
மற்றும் ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.</p><p>

இந்த சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சமூக ஊடகங்களின் செயல்பாட்டு முறையில்
பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T13:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவகற்றல் பணியில் ஈடுபட்ட ஷிரான் பாசிக் எவ்வாறு கோடீஸ்வரரானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787054724"></link>
            <id>https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787054724</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான&amp;nbsp;ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் கழிவகற்றல் பணியில் ஈடுபட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான&nbsp;ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.</p><p>தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த ஷிரான் பாசிக் இளமை காலத்தில் மிக வறுமையில் வாடியவர்.</p><p>1978 ஒக்டோபர் 24 ஆம் திகதி தெஹிவளையில் பிறந்த இவர் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமையாளராக மாறியுள்ளார். </p><p>ஆரம்பத்தில் தெஹிவளைப் பகுதியில் இருந்த "கசிப்பு ஆனந்தா" என்பவருடன் இணைந்து சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.</p><p> அப்பகுதியின் அரசியல்வாதியாக இருந்த தனசிறி அமரதுங்கவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>தனசிற தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் மேயராகவும் பணியாற்றினார். அவருடனும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>சட்டவிரோத மதுபான விற்பனை</h2><p>பின்னர் இந்தச் சட்டவிரோத மதுபான விற்பனையில் இருந்து போதைப்பொருள் வியாபாரத்திற்கு மாறியுள்ளார். அப்போது "பொட்ட நௌபர்" என்பவரிடமிருந்து மொத்தமாகப் போதைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
</p><p>அத்துடன் தெஹிவளை களுபோவில வைத்தியசாலை பகுதியில் ஏற்பட்ட பிரதேச ரீதியான அதிகாரப் போட்டியின் விளைவாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பித்து அவர் துபாய்க்குச் செல்கிறார். </p><p>சுமார் நான்கு ஆண்டுகள் துபாயில் தங்கியிருந்து பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்து தனது வலையமைப்பைப் பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>
தெஹிவளை - கல்கிஸ்ஸை நகர சபையில் பணியாற்றிய காலத்தில் அடையாளம் கண்டுகொண்ட நண்பர்களான நாஜின் மொஹமட் சித்தீக் ஆகியோரையும் இணைத்துக் கொண்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6121b2-26a8-467f-a40e-58a7e2026bc6/26-6a844a8723b9c.webp' /></p><p>நாஜின் என்பவரே ஷிரான் பாசிக்குக்கு மொஹமட் சித்தீக்கை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த அறிமுகத்தின் ஊடாக சித்தீக் பிரதான விநியோகஸ்தராகச் செயற்பட்டுள்ளார். பாசிக்கே இந்த போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இயக்கியுள்ளார்.
</p><p>போதை பொருளை கடத்துவதற்காக தெற்குக் கடலோர மீன்பிடிச் சமூகத்துடனும் சிலாபம் பிரதேச மீன்பிடிச் சமூகத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தெற்கில் இயங்கிய பிரதான போதைப்பொருள் மாபியாவான 'தெஹிபாலே' என்பவர் இவருக்கு எதிராக செயற்பட்டுள்ளார். </p><p>அவருடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் காரணமாக துபாய் நாட்டிற்குச் சென்று அங்கிருந்து நிரந்தரச் செயல்பாட்டு மையம் ஒன்றை அமைத்து இந்த போதை வலையமைப்பை இயக்கியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><h2>சர்வதேச போதைப்பொருள் கடத்தல்</h2><p>அதன் பின்னர் போதைப்பொருள் வலையமைப்பின் மற்றொரு பிரதான நபராகக் கருதப்படும் மொஹமட் சித்தீக்குடன் இணைந்து ஆப்கானிஸ்தான் விநியோகப் பாதைகள் ஊடாக ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற செயற்கைப் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கொண்டு வர இவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
</p><p>இவரின் உண்மையான பெயர் ஷிரான் பாசிக், இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளார். இதில் ஒரு கடவுச்சீட்டைப் பெற்ற விதம் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியது.
</p><p>தெஹிவளையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் வாழும் 68- 34 வத்த பகுதிகளில் நலன்புரித் திட்டங்களை இவர் முன்னெடுத்துள்ளார்.</p><p> இதற்குப் பயன்படுத்தப்பட்ட பணம் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>இவ்வாறு அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் பணம் செலவிட்டுள்ளார். இது தவிர தமக்கு வரக்கூடிய அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நட்புறவைப் பேணி பணப் பரிமாற்றம் மற்றும் உதவிகளைச் செய்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p></p><p></p><p></p><hr><p><br></p><p><b><i>You may like this..</i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/P8LCpaKjXQg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><hr><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை நெருக்கடிக்கான தீர்வு! ராகுல தேரர் வலியுறுத்தும் முக்கிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/solution-to-the-prison-overcrowding-crisis-1787059028"></link>
            <id>https://tamilwin.com/article/solution-to-the-prison-overcrowding-crisis-1787059028</id>
            <summary type="text">இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 45,000 பேர் தற்போது சிறைச்சாலைகளில் இருப்பது ஒரு பாரதூரமான நிலை என்று பொகவந்தலாவ ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 45,000 பேர் தற்போது சிறைச்சாலைகளில் இருப்பது ஒரு பாரதூரமான நிலை என்று பொகவந்தலாவ ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
லங்காசிறியின் நேர்காணலொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
இவ்வளவு பெரிய எண்ணிக்கை சமூகத்தில் நிலவும் ஒழுக்கச் சீரழிவைச் சுட்டிக்காட்டுகிறது.

குற்றம் செய்தவர்களைச் சிறையில் அடைப்பது அல்லது தூக்குத்தண்டனை வழங்குவது மட்டும் நிரந்தரத் தீர்வல்ல.</p><p> சட்டத்தின் மீதான பயம் தேவை என்றாலும், தனிமனிதனின் மனமாற்றமே முக்கியமானது.
</p><p>
பல இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்குப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் போதிய நேரம் செலவிடாததும், அவர்களைச் சரியாக வழிநடத்தாததும் முக்கிய காரணம்.
</p><p>
சிறைச்சாலைகளுக்குள் நடக்கும் கலவரங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் சமூகத்தின் அடிமட்டக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தாலேயே நிகழ்கின்றன என்றும், குடும்ப அமைப்பைப் பலப்படுத்தி அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்குவதே இதற்கான தீர்வாகும் என்று குறிப்பிட்டார்.</p><p>

முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_CHAy6j8RzI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய பிரதான வீதி: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/road-accident-in-jaffna-1787058913"></link>
            <id>https://tamilwin.com/article/road-accident-in-jaffna-1787058913</id>
            <summary type="text">யாழில் சேதமடைந்த வீதி ஒன்றில் எட்டு விபத்துகள் இடம்பெற்றும் வீதி
அபிவிருத்தி அதிகாரசபையானது இதுவரை நடவடிக்கை எடுக்காத விடயம் மக்கள்
மத்தியில் விசனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் சேதமடைந்த வீதி ஒன்றில் எட்டு விபத்துகள் இடம்பெற்றும் வீதி
அபிவிருத்தி அதிகாரசபையானது இதுவரை நடவடிக்கை எடுக்காத விடயம் மக்கள்
மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

782 வழித்தட யாழ் - காரைநகர் வீதியானது மானிப்பாய் - எழுமுள்ளி பகுதியில்
சேதமடைந்துள்ளது. வீதியின் முழு அகலமும் சுமார் 15 அடிகள் நீளத்திற்கு
சேதமடைந்துள்ளது.
</p><p>
வீதியில் நிலத்தின் கீழுள்ள குடிநீர் வழங்கல் குழாயானது சேதமடைந்ததால் தண்ணீர்
வீதியை பிரித்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாய்ந்தது.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>இந்நிலையில் அந்த தண்ணீர் குழாயானது சீர் செய்யப்பட்டது இருப்பினும் அந்த
வீதியானது சீர் செய்யப்பட்டாமல் காப்பெற் உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.
</p><p>&nbsp;அத்துடன் அந்த இடத்தில் இதுவரை எட்டு விபத்துகள் ஏற்பட்டதாகவும், அந்த எட்டு
விபத்துக்களில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a6d832-38b8-4123-a18a-ae814476489c/26-6a845cbb763d9.webp' /></p><p>குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியாக
காணப்படுகிறது. அந்த வீதியானது திருத்தம் செய்யப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறே
காணப்பட்டால் மரணங்கள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. </p><p>அவ்வாறு இடம்பெறும்
உயிரிழப்புகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையே பொறுப்பு கூறவேண்டிய தேவை
காணப்படுகிறது.</p><p>

எனவே மேலும் விபத்துகள் அல்லது அசம்பாவிதங்கள் எவையும் ஏற்பட முன்னர் அந்த
வீதியை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693e95b6-45bd-4cc3-ad0e-3ae3bb04a057/26-6a845cbc4b3f8.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:27:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rambukkana-siddhartha-thero-dies-1787057970"></link>
            <id>https://tamilwin.com/article/rambukkana-siddhartha-thero-dies-1787057970</id>
            <summary type="text">விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார். அவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார். </p><p>அவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே இயற்கை எய்தியுள்ளார்.</p><p>பௌத்த கலாச்சாரம் தொடர்பான பாடல்கள் உட்பட, பல்வேறு தலைப்புகளில் அவர் இயற்றிய பல பிரபலமான பாடல்கள், இந்த நாட்டிலுள்ள இசை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார அமைச்சின் நடவடிக்கை – வவுனியா வைத்தியசாலைக்கு நிபுணர்கள் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-surgeons-appointed-vavuniya-general-hospital-1787055656"></link>
            <id>https://tamilwin.com/article/new-surgeons-appointed-vavuniya-general-hospital-1787055656</id>
            <summary type="text">வட மாகாணத்தின் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலையான வவுனியா
மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவி வந்த தீவிர மயக்கவியல் மற்றும்
சத்திரசிகிச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலையான வவுனியா
மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவி வந்த தீவிர மயக்கவியல் மற்றும்
சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு
காணப்பட்டுள்ளது.
</p><p>
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் விடுத்த வேண்டுகோளையடுத்து,
சுகாதார அமைச்சினால் புதிய நிபுணத்துவ மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>கடந்த மூன்று மாதங்கள்</h2><p>

கடந்த மூன்று மாதங்களாக இந்த வைத்தியசாலையில் ஒரேயொரு மயக்கவியல் நிபுணர்
(Consultant Anaesthetist) மற்றும் ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணர்
(Consultant Surgeon) மட்டுமே பணியாற்றி வந்தனர். </p><p>ஒரே மருத்துவரை நம்பி அவசர
அறுவை கூடங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் இதய கதீட்டராக்கம்
(Primary PCI) உள்ளிட்ட பல துறைகள் இயங்கியதால், வைத்தியசாலை சேவைகள்
கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b2f5ebc-02d2-45ec-adc9-552e00a43044/26-6a84517607304.webp' /></p><p>
</p><p>புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், வேதனை தணிப்பு சிகிச்சைகள் மற்றும் தீவிர
காயங்களுக்கான அவசர அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.</p><p>

காது-மூக்கு-தொண்டை (ENT), வாய் மற்றும் முகச்சீரமைப்பு (OMF), மகப்பேறியல்,
எலும்பியல் மற்றும் சிறுநீரக சிகிச்சைகளுக்கான காத்திருப்புக்கான காலம் பல
மடங்கு அதிகரித்தது.
</p><p>
மேலும் அவசர சிகிச்சைகளுக்காக நோயாளர்களை யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம்
போதனா வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.</p><h2>நிரந்தர தீர்வு</h2><p>
</p><p>
பொதுமக்களும் சுகாதாரத் துறையினரும் இதுகுறித்து பெரும் கவலை வெளியிட்டிருந்த
நிலையில், இவ்விடயம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் கவனத்திற்கு
கொண்டு செல்லப்பட்டது.
</p><p>
உடனடியாகச் செயற்பட்ட அவர், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவை
நேரடியாகத் தொடர்புகொண்டு வவுனியா வைத்தியசாலையின் தற்போதைய அவலநிலை குறித்து
விளக்கி, நிரந்தர தீர்வை வழங்குமாறு வலியுறுத்தினார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிய தீவிர
மயக்கவியல் நிபுணர் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் ஆகியோர் உடனடியாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த நியமனங்கள் மூலம் ஸ்தம்பிதமடைந்திருந்த அறுவை சிகிச்சை சேவைகள்
மீண்டும் சீரடைந்து, வவுனியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் சிரமங்கள்
குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-18T12:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 75 வருடங்களின் பின்னர் ஏற்படவுள்ள ஆபத்தான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dangerous-el-nino-warning-1787029188"></link>
            <id>https://tamilwin.com/article/dangerous-el-nino-warning-1787029188</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் எல் நினோ நிலைமை மிகவும் தீவிரமாக மாறும் அபாயம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் எல் நினோ நிலைமை மிகவும் தீவிரமாக மாறும் அபாயம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவர் இதனை குறிப்பிட்டுள்ளார். </p><p>

கடந்த 75 வருடங்களுக்குள் ஏற்பட்ட எல் நினோ நிலைமைகளை விடவும் மிகவும் தீவிரமான நிலைமை இந்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h2><b>

எல் நினோ</b></h2><p>இந்த எல் நினோ நிலைமையானது படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80cd1add-abd5-4790-8c89-cd495dc37db1/26-6a844fb014bc9.webp' /></p><p>இந்த ஆண்டின் இறுதிக்குள் மிகவும் தீவிரமான எல் நினோவாக மாறுவதற்கான வாய்ப்புகள் 90 வீதத்திற்கும் அதிகமாகவுள்ளதாக உலகளாவிய தரவுகள் காட்டுகின்றன. </p><p>

இது கடந்த 75 வருடங்கள் இல்லாத ஆபத்து தற்போது ஏற்பட்டுள்ளது. </p><p>

1950ஆம் ஆண்டு முதல் இதுவரை ஏற்பட்ட எல் நினோ நிகழ்வுகளுடன் ஒப்பிடும் போது இந்த எல் நினோ நிலைமையானது ஏனைய அனைத்து எல் நினோ நிலைமைகளையும் விட மிகவும் தீவிரமானதாக மாறுவதற்கான சாத்தியக்கூறு தற்போது 70 சதவீதத்திற்கு அருகில் கணிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-18T12:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுங்கேணி மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணி விரைவில்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reconstruction-of-nedunkerni-central-bus-stand-1787055815"></link>
            <id>https://tamilwin.com/article/reconstruction-of-nedunkerni-central-bus-stand-1787055815</id>
            <summary type="text">நெடுங்கேணி மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளைச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாண வீதி பயணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெடுங்கேணி மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளைச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

இது தொடர்பில் வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ. விமலேஸ்வரன் பணிப்புரை விடுத்துள்ளார்.</p><h2>

பேருந்து நிலையம் புனரமைப்பு</h2><p>
வவுனியா வடக்கு, நெடுங்கேணி மத்திய பேருந்து நிலையத்தில் இதுவரை காலமும் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை என பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் நேரில் சென்று பேருந்து நிலையத்தின் நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c492ed95-dc61-4a18-a1a7-772f6716041a/26-6a844f7b1a279.webp' /></p><p>
</p><p>
இதன்போது, பேருந்துகள் கட்டாயமாக பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், எதிர்வரும் 01.09.2026 முதல் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தக் கள விஜயத்தில் வவுனியா வடக்கு உதவித் தவிசாளர் வி. சஞ்சீவன் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-18T12:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-kandaswamy-temple-pudukudiyiruppu-1787053757"></link>
            <id>https://tamilwin.com/article/sri-kandaswamy-temple-pudukudiyiruppu-1787053757</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(18.08.2026) செவ்வாய்க்கிழமை வெகு சிறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(18.08.2026) செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.</p><p>

ஆலயத்தில் இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழாவில் பெருமளவான பக்த அடியவர்கள் கலந்து கொண்டு, எம்பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.
</p><h2>
கொடியேற்றத்துடன் ஆரம்பம்</h2><p>
</p><p>
கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா பதினொரு தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1facdd-fd62-4b68-88aa-142b290cf2f9/26-6a8447f8341bf.webp' /></p><p>
</p><p>

இதன்படி, 23.08.2026 அன்று மாம்பழத் திருவிழாவும், 24.08.2026 அன்று
வேட்டைத்திருவிழாவும், 25.08.2026 அன்று சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.</p><p>

இதனைத் தொடர்ந்து, 26.08.2026 அன்று மகா தேர்த்திருவிழாவும், 27.08.2026 அன்று
தீர்த்தத் திருவிழாவும், 28.08.2026 அன்று பூங்காவனத் திருவிழாவும்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1441e085-a07c-4540-bee2-03965269bfd3/26-6a8447f934d6d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db4e2be7-d5dc-427e-805d-e14543715d45/26-6a8447fa11941.webp' /></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/petition-against-the-22nd-amendment-1787053019"></link>
            <id>https://tamilwin.com/article/petition-against-the-22nd-amendment-1787053019</id>
            <summary type="text">அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (18) முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.</p><h2>சர்வஜன வாக்கெடுப்பு&nbsp;</h2><p>இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfdbac5-d45f-48fe-8ebc-e5d17cbdec8d/26-6a8446d021141.webp' /></p><p>

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கினால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.</p><p>இதேவேளை,&nbsp;22வது திருத்தச் சட்ட மூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரத்தினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:49:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் 36வது ஆண்டு நினைவு தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/36th-anniversary-death-of-reverend-john-hairbutt-1787052272"></link>
            <id>https://tamilwin.com/article/36th-anniversary-death-of-reverend-john-hairbutt-1787052272</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான
மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த நிலையில் கடத்தப்பட்டு காணால்போன
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான
மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த நிலையில் கடத்தப்பட்டு காணால்போன
அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் 36வது ஆண்டு நினைவு தினம் இன்று(18) அனுஸ்டிக்கப்பட்டது.
</p><p>இதன்போது அவருடன் காணாமல் ஆக்கப்பட்ட அவரின் உதவியாளரான பேட்ரம் பிரான்சிஸ்
நினைவுகூரப்பட்டார்.</p><h2>&nbsp;நினைவு தினம்</h2><p>
</p><p>
ஊரணி சந்தியில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள
அருட்தந்தையின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமான நடைபெற்றது.
</p><p>
1923ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவர், தனது 17 வயதில் இலங்கைக்கு வந்து
தான் சாகும் வரையில் கிழக்கு மண்ணில் வாழ்ந்து, திருகோணமலை நகரத்து
மண்ணிற்கும், மட்டக்களப்பு மண்ணிற்கும் கல்வித்துறை மற்றும் விளையாட்டு
துறைகளுக்கு அளப்பரிய சேவையாற்றிய, இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைக்காய்
குரல் கொடுத்தவர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da04083-c5fb-49ac-9559-85b9f3db0c41/26-6a844467e417d.webp' /></p><p>

அமெரிக்காவில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்ற
யேசு சபையில் இணைந்து அருட்தந்தை ஜோன் ஹேர்பட்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தொடர்ந்த அடிகளாரின் சேவை, அந்தக்
கல்லூரியை இலங்கையில் தேசியரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் "வெல்லப்பட முடியாத
அணி" என்னும் நிலலைக்கு உயர்த்தியது.</p><h2>தமிழ் மக்கள்&nbsp;</h2><p>

இதனைவிட இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வந்த போது
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான
மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த, அருட் தந்தை&nbsp; 1990ம் ஆண்டு
ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி ஏறாவூர் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்.</p><p>[RXF54Mஸ</p><p>
1990ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வாழைச்சேனை பகுதியில்
இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் முற்றுகையிடப்பட்டிருந்த
தமிழ் மக்கள், கிறிஸ்தவ குருவானவர்கள், அருட்சகோதரிகள் போன்றோரை பாதுகாப்பான
முறையில் வெளியேற்றிவிட்டு, தனது வாகன ஓட்டுனரான 'பேட்ரம் பிரான்சிஸ்' என்ற
தமிழ் இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு
நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, ஏறாவூர் பகுதியில் வைத்து
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
</p><p>அவரை நினைவுகூரும் வகையில் இன்று ஊறணியில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து
அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
</p><p>இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,பொது மக்கள் என
பலர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keheliya-corruption-eradication-commission-1787029367"></link>
            <id>https://tamilwin.com/article/keheliya-corruption-eradication-commission-1787029367</id>
            <summary type="text">புதிய இணைப்புஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்குமாறு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக ரம்புக்வெல்ல இன்று காலை இலஞ்ச ஆணையத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களை விட கூடுதலாக 6 ஊழியர்களை பணிக்கமர்த்தி அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் (18) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தற்போது இடம்பெற்று வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p>இதேவேளை, 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியதாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ARfG7K_BvuM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-18T11:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் படுகொலைச் செய்ய 53 மாணவர்கள் - 20 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/53-students-commit-murder-in-mullaitivu-1787051783"></link>
            <id>https://tamilwin.com/article/53-students-commit-murder-in-mullaitivu-1787051783</id>
            <summary type="text">முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த
செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த
செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய
மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த 58 பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலின் போது, பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும்
பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இவர்களின் 20ஆ ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம்
இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக
அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>

20ஆவது வருட நினைவு தினம்</h2><p>

தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சமூக
செயற்பாட்டாளர் சாம்பசிவம் உதயன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்
உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/587d47fe-679a-48ff-b799-5dac13c9a489/26-6a843f8a7d105.webp' /></p><p>வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில்
அனுஷ்டிக்கப்படுவதுடன், தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்
நிகழ்வு இடம்பெறுவது வழக்கமாக உள்ளது.
</p><p>
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், அரசியல்
பிரமுகர்கள், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளின்
உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள்,
செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc20156-dd07-4503-8193-b17375ccb64c/26-6a843f8b9394a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6bbf696-7874-426b-8132-27d63df9909b/26-6a843f8c7484d.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T11:18:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பனைமரக்கூடலில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்பாட்டுக்குள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-palm-grove-in-mannar-under-control-1787049371"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-palm-grove-in-mannar-under-control-1787049371</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமம் வடக்கு பகுதியில் பனைமரக்கூடலில் ஏற்பட்ட
தீவிபத்து, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில்,
கிராம பொதுமக்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமம் வடக்கு பகுதியில் பனைமரக்கூடலில் ஏற்பட்ட
தீவிபத்து, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில்,
கிராம பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அணைக்கப்பட்டு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த தீ விபத்தானது இன்று(18.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>விபத்து தொடர்பான அவசர நடவடிக்கை</h2><p>
</p><p>இந்த விபத்து தொடர்பான அவசர நடவடிக்கைகளில் கிராம பொதுமக்கள் தீயணைப்பு
பணிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f6c97d0-f749-49c6-83ca-bc508bb65fe6/26-6a843bc3ce4a8.webp' /></p><p>கட்டுப்படுத்தல் நடவடிக்கை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்
பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53b5884f-1506-4e23-ab09-0c4b4d16000f/26-6a843bc4b290b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய பயங்கரவாதத் தடுப்பு சட்டம் - வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/replace-prevention-of-terrorism-act-1787043687"></link>
            <id>https://tamilwin.com/article/replace-prevention-of-terrorism-act-1787043687</id>
            <summary type="text">1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய சட்டமான “பயங்கரவாதத்திலிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய சட்டமான “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை” அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.</p><p>

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>

தற்போதுள்ள சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பூர்வாங்க வரைவைத் தயாரிப்பதற்காக ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
</p><h2>
அரசாங்க வர்த்தமானியில் வெளியிடத் திட்டம்</h2><p>
 மேலும், அந்த பூர்வாங்க வரைவின் அடிப்படையில் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு, 2026 ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79bac0ff-ffa3-4452-b411-00760f70def2/26-6a843ca62f7b8.webp' /></p><p>
</p><p>
சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட தொடர்புடைய வரைவு மசோதாவிற்கு தற்போது தலைமை சட்டத்தரணிகளின் ஒப்புதல் கிடைத்துள்ளது.</p><p> 

இந்த வரைவு மசோதா விரைவில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பின்னர் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல வங்கி முகாமையாளர்கள் கைது விவகாரம்! அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-managers-arrest-issue-goverment-statement-1787047618"></link>
            <id>https://tamilwin.com/article/bank-managers-arrest-issue-goverment-statement-1787047618</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக நாட்டிலிருந்து பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக நாட்டிலிருந்து பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

இன்று (18) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சட்டவிரோதமாக அனுப்பியுள்ள பணம்</h2><p>

ஜனவரி மாதம் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் நிதி குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (FCID) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f100f3-7da4-41e4-9145-5ff2c8b5efcf/26-6a843a05224b2.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் 89 கணக்குகள் ஊடாக 10,151 தடவைகளில் சட்டவிரோதமாக பணத்தை அனுப்பியுள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய கடந்த ஜூன் 19 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 4 வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:04:00+00:00</updated>
        </entry>
    </feed>
