<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-31T20:23:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவில் திருவிழாக்களில் கவர்ச்சி நடனங்களை நடாத்துவது சில புலம்பெயர் மக்களின் சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diaspora-plot-behind-sexy-temple-dances-1788200948"></link>
            <id>https://tamilwin.com/article/diaspora-plot-behind-sexy-temple-dances-1788200948</id>
            <summary type="text">தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்களங்களில் காணக்கூடியதாக இருந்தது .
</p><p>
இந்த விடயம் தொடர்பில் எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி லங்காசிறியின் நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், இது புலம்பெயர் தமிழர்கள் செய்யும் ஒருவகையான சதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு காலத்தில் வேங்கைகளால் வளர்க்கப்பட்ட மந்தைகள் தற்பொழுது நரிகளாலும் குள்ளநரிகளாலும் வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறானவர்களால் இந்த சமூகம் சீர்குழைக்கப்படுகிறது.
</p><p>
இது தொடர்பில் மக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். இவ்வாறானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் குறித்த கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.</p><p>கோயில்களிலும் தேவாலயங்களிலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது என்பது பிழையான ஒரு விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இது குறித்து மேலதிக தகவல்களை&nbsp;நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியின் ஊடாக&nbsp; விரிவாகப் பார்ப்போம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z9FgzuDkV8o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:55:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று முறை சீ.வி.கேவின் வீடு தேடி சென்ற தாய் வெளியிட்ட பகீர் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330</id>
            <summary type="text">இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நியாயவழி போராட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சிறுபிள்ளைதனமான காரணத்தை கூறி இலங்கை தமிழரசுக் கட்சி போராட்டம் மற்றும் மகா நாட்டை புறக்கணித்துள்ளது.</p><p>இது தொடர்பில் கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரனும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p>
ஒட்டுமொத்த தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு அரசு தரப்பில் பல தடைகள் விதிக்கப்பட்டன. </p><p>ஆனால் தற்பொழுது தமிழ் கட்சிகள் தரப்பே இவ்வாறான காரணங்களை கூறி தமிழர்களின் உணர்வுபூர்மான போராட்டங்களை புறக்கணிக்கின்றன.</p><p>இவ்வாறிருக்கையில், வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உபதலைவி அமலநாயகி, சி. வி. கே. சிவஞானத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தமை தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p> </p><p>

இது தொடர்பில் இன்னும் பல விடயங்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/adOL5hITeAk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 22இல் இறுதித் தீர்ப்பு..! வியப்பில் ஆழ்த்திய மைத்திரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி என அவர் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல கொடூர சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்க்ள தொடர்பில் அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக, பல உயிர்களை பறித்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்&nbsp;மைத்திரிபாலவின் ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறியது.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களும் உள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>&nbsp;இவ்வாறிருக்கையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பல கேள்விகளை எழுப்புகின்றது எனலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sgq8jMiHzoc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:18:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிட்லராக மாறும் ஜனாதிபதி அநுர குமார..! அச்சத்தில் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-kumara-becomes-like-hitler-sl-politicians-1788201236"></link>
            <id>https://tamilwin.com/article/anura-kumara-becomes-like-hitler-sl-politicians-1788201236</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வாதிகாரி ஹிட்லரை போல செயற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.</p><p>இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வாதிகாரி ஹிட்லரை போல செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 22ஆவது அரசியலமைப்பின் திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.</p><p>குறித்த சட்டமூல திருத்தத்திற்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p>குறிப்பாக, இந்த மனுக்களை தாக்கல் செய்தவர்கள் ராஜபக்சக்களின் ஆதரவாளர்களாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MJfnii76r0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகத்தைக் கொலை செய்யும் அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-is-killing-democracy-sajith-alleges-1788191597"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-is-killing-democracy-sajith-alleges-1788191597</id>
            <summary type="text">இலங்கையில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என பெருமை பேசி ஆட்சிக்கு
வந்த தற்போதைய அரசு, 22ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஜனநாயகத்தை தலைகீழாக
மாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என பெருமை பேசி ஆட்சிக்கு
வந்த தற்போதைய அரசு, 22ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஜனநாயகத்தை தலைகீழாக
மாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
மகாமான்ய டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தின் டிப்ளோமாதாரிகளுக்கான
பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சோசலிச முறை</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வை சீர்குலைக்கும் வகையில் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம்
நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து, நீதி வழங்கும் செயற்பாட்டைப்
படுகொலை செய்து சட்டத்தின் ஆட்சியை அரசு மீறி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58af608b-611e-44f3-a940-aad670ade7f5/26-6a95b3b2cb3f6.webp' /></p><p>

கடந்த அரசு உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதிக்குச்
கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை ஸ்திரமடைந்ததாகக் கூறியது போல், தற்போதைய
அரசும் விவசாயிகளை மிதித்து நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை
ஏற்படுத்துகின்றது.</p><p> ஜனநாயக வரலாற்றில் மிகவும் தோல்வியடைந்த அரசாங்கம் இதுவே.

தீவிர சோசலிச முறை மூலம் செல்வத்தை உருவாக்க முடியாது.</p><h2>அரசியல் உரிமைகள்</h2><p> </p><p>முதலாளித்துவத்தினாலேயே
செல்வத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், அது சமூகத்தில் பிளவுகளை
ஏற்படுத்துவதால் மனிதாபிமான முதலாளித்துவமும் சமூகச் சந்தைப்
பொருளாதாரமும் அவசியம்.
</p><p>
ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ஆர். பிரேமதாஸ பின்பற்றிய நடுநிலைப் பாதையைப் போன்று,
இடதுசாரி மற்றும் வலதுசாரி கொள்கைகளின் சிறந்த குணாம்சங்களை ஒன்றிணைக்க
வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97fc0a1b-a651-4671-a049-53b2337ed9ed/26-6a95b3b38413e.webp' /></p><p>நாட்டின் 1978ஆம் ஆண்டு அரசமைப்பில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்
மட்டுமே நீதிமன்றத்தில் சவால் விடுக்கக் கூடியவையாக உள்ளன.</p><p>பொருளாதார,
சமூக, கலாச்சார, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளும் நீதிமன்றத்தில் சவால்
விடுக்கக்கூடிய அடிப்படை உரிமைகளாக மாற்றப்பட வேண்டும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:50:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kaniya-pillayar-temple-issue-court-order-1788195993"></link>
            <id>https://tamilwin.com/article/kaniya-pillayar-temple-issue-court-order-1788195993</id>
            <summary type="text">கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த
இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாண
வேலைகளுக்குத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த
இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாண
வேலைகளுக்குத் திருகோணமலை மேல் நீதிமன்றம்&nbsp; இடைக்காலத் தடை உத்தரவு
பிறப்பித்துள்ளது.</p><p>இந்த உத்தரவானது இன்று(31.08.2026) வழங்கப்பட்டுள்ளது.</p><h2>மேல் நீதிமன்றம் உத்தரவு</h2><p>
</p><p>
கன்னியா பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல்
முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே அப்படியே
இடைநிறுத்துமாறும், மேற்கொண்டு எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம்
என்றும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த இடத்தில் முன்னர் பிள்ளையார் கோயில் இருந்த நிலையில், அங்கு பௌத்த
தூபி இருப்பதாகக் கூறி தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பான
வழக்கில் 2019ஆம் ஆண்டில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்படி, கோயில் வேறொரு
இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், பழைய இடத்தில் உள்ள தூபியை 'பேணிப்
பாதுகாக்க மட்டுமே' தொல்பொருள் திணைக்களத்திற்கு உரிமையுண்டு எனவும்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d511e9-f46b-4325-86f1-70ccfbab7bec/26-6a95b79664df7.webp' /></p><p>ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற இணக்கப்பாட்டிற்கு முரணாகத்
தொல்பொருள் திணைக்களம் அங்கு புதிய கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததை அடுத்து,
காணியின் உரிமையாளர் தரப்பில் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்
செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
வழக்குத் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தொல்லியல்
சட்டத்தின் 20ஆவது பிரிவின் கீழும், நீதிமன்றத்தில் எட்டப்பட்ட
இணக்கத்தின்படியும் அந்த இடத்தில் 'பாதுகாத்தல்' மட்டுமே செய்யப்படலாமே தவிர,
புனர்நிர்மாணம் அல்லது புதிய கட்டுமானங்கள் எதையும் செய்ய முடியாது என வாதாடியுள்ளார்.
</p><p>
தொல்பொருள் திணைக்களம் அங்கு என்ன வகையான நிர்மாணங்களை மேற்கொள்கின்றது என்பது
குறித்த எழுத்துமூல அறிக்கையைச் சமர்ப்பிக்க அரச தரப்பு சட்டத்தரணி அவகாசம்
கோரியதை ஏற்று, வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அன்றைய தினம் வரை தற்போதைய நிலையே தொடர
வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:50:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபோதையில் வீடு புகுந்து தாக்கிய பிரதேச சபை உறுப்பினர்கள்.. எழுந்துள்ள கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-sabha-member-drunken-assault-condemned-1788190106"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-sabha-member-drunken-assault-condemned-1788190106</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான
குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான
குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்றேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீதியை பெற்றுக்கொடுத்தல்</h2><p>அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நெல்லியடியில் வயதான ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரின் வீட்டின்
மீது தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தெற்கு மேற்கு மற்றும் நல்லூர் பிரதேச
சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் மேற்கொண்ட அடாவடித்தனமான
தாக்குதல் சமூகத்தில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நள்ளிரவில்
மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தச் சம்பவம் கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான நடவடிக்கைகளை மீண்டும்
நினைவூட்டுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46a2cc14-2df8-4460-8d9c-64cc17fa0b95/26-6a95a2bea041d.webp' /></p><p>தற்போதைய ஆட்சியிலும் நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற
சம்பவங்கள் தொடர்கின்றன.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸார் எத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கும்
அடிபணியாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க
வேண்டும்.</p><p>

நாட்டின் ஜனாதிபதி இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு
வடக்கில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.</p><p>
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி
தொடர்ந்து குரல் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் பானதுர நிலங்கவின் உறவினர் சுட்டுப் படுகொலை.. குடு சலிந்து குழுவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-near-kalutara-one-person-injured-1788198799"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-near-kalutara-one-person-injured-1788198799</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்புபயகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய&nbsp;இணைப்பு</h2><p>பயகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முக்கிய சந்தேக நபரான&nbsp;பானதுர நிலங்கவின்&nbsp;மைத்துனர்&nbsp;திலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்ஷிதா என்ற "குடு சலிந்து" என்பவரின் குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2> </h2><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>களுத்துறை அருகே சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><h2>வைத்தியசாலை அனுமதி</h2><p>

களுத்துறை மாவட்டத்தின் பயாகல அருகே கொஸ்ஹேன பிரதேசத்தில் குறித்த சம்பவம் இன்றிரவு பத்து மணியளவில் நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை நுண்ணறிவால் உலக நிதித் துறைக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ai-threatens-the-world-s-financial-system-1788195636"></link>
            <id>https://tamilwin.com/article/ai-threatens-the-world-s-financial-system-1788195636</id>
            <summary type="text">மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளினால் உலகளாவிய நிதி கட்டமைப்பிற்குப் பெரும் ஆபத்து இருப்பதாக நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் தலைவர் ஆண்ட்ரூ பெய்லி எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளினால் உலகளாவிய நிதி கட்டமைப்பிற்குப் பெரும் ஆபத்து இருப்பதாக நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் தலைவர் ஆண்ட்ரூ பெய்லி எச்சரித்துள்ளார்.</p><p>
வடக்கு கரோலினாவின் அஷ்வில்லி நகரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டத்தை முன்னிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>
உலகளாவிய நிதி கட்டமைப்புகளின் மீது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் நடத்தக்கூடிய சைபர் தாக்குதல்களே தற்போதைய மிக அவசரமான அச்சுறுத்தலாகும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb10348-aee3-4a50-b801-b895b7bec79c/26-6a95b33661018.webp' /></p><p>
"மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் ஆபத்துகள் தேச எல்லைகளைக் கடந்தது" எனக் குறிப்பிட்டுள்ள பெய்லி, பல நாடுகளில் இந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டையும் வெளியீட்டையும் கட்டுப்படுத்த முறையான வழிகாட்டுதல்கள் இல்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.
</p><p>கடந்த மாதம், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சோதனை அளவிலான சில ஏஐ மாதிரிகள், பரிசோதனை எல்லையைத் தாண்டிச் சென்று மற்றொரு நிறுவனத்தின் கணினி அமைப்பை ஹேக் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>
இங்கிலாந்தின் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனம் நடத்திய சோதனையில், எந்த்தோபிக் நிறுவனத்தின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரி போலியான அடையாளங்களைப் பயன்படுத்தித் தீங்கிழைக்கும் குறியீடுகளை கணினியில் புகுத்த முயன்றமை கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>
ஆறாவது மாதமாக நீடிக்கும் அமெரிக்க-ஈரான் போரினால் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்துள்ள சூழலில் ஜி20 கூட்டம் கூடுகிறது.</p><p>
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சைபர் தாக்குதல்கள் தவிர, ஏஐ நிறுவனங்களின் மிதமிஞ்சிய சந்தை மதிப்பீடு மற்றும் அரசு-தனியார் துறைகளின் அதிகரித்து வரும் கடன் சுமை ஆகியவையும் நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு கூடுதல் அபாயங்களாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T17:03:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவனல்லையில் சிறிய ரக வான் - லொறி மோதி விபத்து.. நால்வர் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/small-van-lorry-collision-accident-mawanella-1788192228"></link>
            <id>https://tamilwin.com/article/small-van-lorry-collision-accident-mawanella-1788192228</id>
            <summary type="text">மாவனல்லை - கடோல் பாலம் (செங்கற் பாலம்) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவனல்லை - கடோல் பாலம் (செங்கற் பாலம்) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

அரணாயக்கவிலிருந்து மாவனல்லை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனல்லையிலிருந்து உஸ்ஸாபிட்டிய நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொரி ஒன்றும் கடோல் பாலத்தின் மீது நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

சம்பவம் இன்று (31) நண்பகல் அளவில் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ceb4308-3fac-4c46-8386-873381c94eb4/26-6a95add4e96a4.webp' /></p><p>
</p><p>
விபத்தின் போது வானில் பயணித்த நால்வரே காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>
காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, ஏனையவர்கள் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T16:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது ஓய்வு தொடர்பில் மெஸ்ஸி வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lionel-messi-announces-retirement-1788194107"></link>
            <id>https://tamilwin.com/article/lionel-messi-announces-retirement-1788194107</id>
            <summary type="text">அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி, தனது 21 ஆண்டுகால சர்வதேசக் கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி, தனது 21 ஆண்டுகால சர்வதேசக் கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகத் உத்தியோகபூர்வ அறிவித்துள்ளார்.</p><p>
சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இந்த முடிவை எடுப்பது மிகவும் வேதனையாக இருந்தது, இன்னமும் மனதிற்குள் வலிக்கிறது.</p><p> ஆனால் விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்," என மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.</p><h2>உலகக் கிண்ண இறுதிப் போட்டி</h2><p>
2005ஆம் ஆண்டு அறிமுகமான மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 125 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c5299d-75a1-4626-b60d-756995419788/26-6a95ad3ccc5c2.webp' /></p><p>
</p><p>022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத்தை அர்ஜென்டினா வெல்வதற்கு அணித் தலைவராக அணியை வழிநடத்தினார்.</p><p> மேலும், 2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 'கோபா அமெரிக்கா' கிண்ணங்களையும் வென்று கொடுத்துள்ளார்.</p><p>
ஸ்பெயின் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியே அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி விளையாடிய கடைசிச் சர்வதேசப் போட்டியாகும்.
</p><p>அர்ஜென்டினா அணியில் புதிய தலைமுறை வீரர்கள் உருவாகி வருவதைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ள மெஸ்ஸி, தேசிய அணிக்காகச் சாதனை படைத்ததில் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
8 முறை 'பாலன் டி ஓர்' (Ballon d'Or) விருது வென்ற மெஸ்ஸி, அமெரிக்காவின் 'இன்டர் மயாமி' கழகத்திற்காக தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T16:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூட்டப்பட்ட மகுடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crown-bestowed-upon-maithripala-sirisena-in-2026-1788186566"></link>
            <id>https://tamilwin.com/article/crown-bestowed-upon-maithripala-sirisena-in-2026-1788186566</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குறித்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
</p><h2>
முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த பட்டம்</h2><p>

மேலும்,'KGF' திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திய நடிகர் கருடா ராம் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்களும், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/234c8c3c-26a5-4a1a-a220-3e24ec839320/26-6a9590332cbe0.webp' /></p><p> 

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T16:06:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலராலும் மறக்க முடியாத FR.S.J இம்மானுவேலை சந்தித்தார் IBC பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bhaskaran-kandiah-meets-former-priest-in-person-1788175214"></link>
            <id>https://tamilwin.com/article/bhaskaran-kandiah-meets-former-priest-in-person-1788175214</id>
            <summary type="text">யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேலை தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேலை தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.</p><p>

இந்த சந்திப்பு இன்று (31.08.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருக்கும்&nbsp; அருட்தந்தை இம்மானுவேல், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வராகவும், யாழ்ப்பாணம் புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
அத்துடன், உலகத் தமிழர் பேரவையின் தலைவராகவும் செயற்பட்டுள்ள அவர், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் குரலாகவும் சர்வதேச அளவில் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><h2>

நாட்டை விட்டு வெளியேறிய இம்மானுவேல்</h2><p>
இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில், 1997ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1823532035128557%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>இதனையடுத்து இங்கிலாந்து சென்ற அவர், அங்கு ஓராண்டு காலம் பணியாற்றிய பின்னர் ஜெர்மனிக்குச் சென்று, மூன்ஸ்டர் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 2007ஆம் ஆண்டு வரை குருவாகப் பணியாற்றினார்.</p><p>
அங்கு பணியாற்றிய காலத்திலும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பணிகளை முன்னெடுத்ததுடன், அவர்களின் பிரச்சினைகளை சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து எடுத்துச் சென்றார்.
</p><h2>
ஈழ விடுதலைப் போராட்டம்</h2><p>
இதனையடுத்து, 2010ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவராக அருட்தந்தை இம்மானுவேல் தெரிவுசெய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393e8925-4054-46a0-9e31-5686853e20e2/26-6a9565b19d22f.webp' /></p><p>
</p><p>
ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் தமிழீழ தேசியத் தலைமையின் நிலைப்பாட்டுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கும் சர்வதேச அரங்கில் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த அவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அருட்தந்தை இம்மானுவேலை, தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f5dc20b-fbb6-424a-8352-828e3238edfb/26-6a9565b0c52b1.webp' />


&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c548eb8-ff9a-462b-87c9-980e84820182/26-6a9565b26e35c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b83abe78-594b-4f7b-b3ef-2c54de1cbb8a/26-6a9565b33fa91.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1615279-ecef-4ca3-9243-93758feb51bb/26-6a9565b40bd1f.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T16:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித மற்றும் டெய்சி பாட்டியின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-and-daisy-aachi-s-case-adjourned-again-1788188365"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-and-daisy-aachi-s-case-adjourned-again-1788188365</id>
            <summary type="text">பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று (31) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்போது கருத்து தெரிவித்த அரச சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான ஒரு விடயம் குறித்து பிரதிவாதி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.</p><h2>விசாரணை</h2><p> </p><p>குறித்த மேன்முறையீடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், அந்த திகதிக்குப் பின்னர் வரும் ஒரு திகதியில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48e3ff3-ecb2-4b71-828a-a1c907ff4232/26-6a959b305e6b6.webp' /></p><p>
</p><p>
முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, செப்டம்பர் 28 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பிரதிவாதிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 57 மில்லியன் ரூபாவை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T15:24:21+00:00</updated>
        </entry>
    </feed>
