<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-06T10:26:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விஷேசம் நடந்த வீட்டில் 28 பவுண் நகை திருட்டு - பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/28-pounds-of-jewelry-stolen-in-jaffna-1786011840"></link>
            <id>https://tamilwin.com/article/28-pounds-of-jewelry-stolen-in-jaffna-1786011840</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு
ஒன்றில், திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுண் தங்க நகைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு
ஒன்றில், திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், விஷேசம் நடந்து மறுநாள், சொந்த வீட்டிற்கு செல்வதற்கான தயார்ப்படுத்தல் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு, குளியல் அறைக்கு சென்ற வேளையில், திருடர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.</p><h2>

28 பவுண் நகைகள் திருட்டு</h2><p>
சம்பவம் நடந்து அடுத்த நாள் காலையில், அறையில் உள்ள அலுமாரிகளை திறந்து பார்த்த பொழுது தாலி உட்பட 28 பவுண் தங்க நகைகள் திருட்டு போயுள்ளது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae62046b-0657-4aa9-b731-aec765613e77/26-6a74610896cc3.webp' /></p><p> </p><p> 


இதனைத் தொடர்ந்து, கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மோப்ப நாய்கள் மற்றும்
அருகில் உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:26:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gas-price-sri-lanka-litro-gas-price-1786010827"></link>
            <id>https://tamilwin.com/article/gas-price-sri-lanka-litro-gas-price-1786010827</id>
            <summary type="text">ஒகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதையும், சவாலான நாணய மாற்று விகித நிலவரங்களையும் மீறி, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் ஒகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
அதன்படி, இம்மாதம் முடியும் வரை தற்போதைய விலைகளே செல்லுபடியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த அறிவிப்புக்கமைய பின்வரும் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><b>12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் -&nbsp; 4,465 ரூபா</b></p><p><b>5 கிலோ எரிவாயு சிலிண்டர் - 1,792 ரூபா&nbsp;</b></p><p><b>2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் - 835 ரூபா</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b873230-f237-4e2b-b657-188cb4959129/26-6a7460cc7d341.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:24:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வறுமை குறைந்ததா! அரசின் புள்ளிவிபரங்களில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-poverty-status-economic-cost-1786008279"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-poverty-status-economic-cost-1786008279</id>
            <summary type="text">இலங்கையில் வறுமை குறைந்து விட்டதா என்ற கேள்வி இன்று அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்படுகின்றது.உலக வங்கி மற்றும் IMF மதிப்பீடுகளின்படி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வறுமை குறைந்து விட்டதா என்ற கேள்வி இன்று அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்படுகின்றது.</p><p>உலக வங்கி மற்றும் IMF மதிப்பீடுகளின்படி, நாட்டில் இன்னும் 24% முதல் 25% வரையிலான மக்கள் (சுமார் 53 - 55 இலட்சம் பேர்) வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.</p><p>2026 ஏப்ரல் மாதத்தின் அதிகாரப்பூர்வ அரசுத் தரவுகளின்படி, ஒரு நபர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் ரூ. 17,117 வருமானம் பெற வேண்டும். இதன்படி, 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 68,468 தேவைப்படுகிறது. </p><p>இது அடிப்படை வாழ்வாதாரத்திற்கான அளவு மட்டுமே தவிர, வசதியாக வாழ்வதற்கான தொகையல்ல. நகர்ப்புறங்களில் வாடகை, மின்சாரம், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளைக் கணக்கிட்டால் இத்தொகை போதுமானதாக இல்லை.</p><p>

பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வந்தாலும், 2022 நெருக்கடியின் நீண்டகால தாக்கம், உயர்ந்த வாழ்க்கைச் செலவு, வருமானமின்மை, வரி அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக வறுமை இன்னும் முழுமையாகக் குறையவில்லை.</p><p>தற்போது, பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்திருந்தாலும், அதன் பலன்கள் இன்னும் சாமானிய மக்களைச் சென்றடையவில்லை.</p><p>2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கையின் வறுமை நிலை குறித்த விரிவான உண்மையான தகவல்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9NVvM3PNRJk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு கையெழுத்து! பூஜித் மற்றும் ஹேமசிறியை தூக்கிலிடலாம் - அநுரவுக்குச் சென்ற அறிவுரை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-and-hemasiri-can-be-hanged-1786006892"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-and-hemasiri-can-be-hanged-1786006892</id>
            <summary type="text">தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய&amp;nbsp; இருவருக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார ஒரே ஒரு கையெழுத்தினை இட்டால் அவர்களைத்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய&nbsp; இருவருக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார ஒரே ஒரு கையெழுத்தினை இட்டால் அவர்களைத்&nbsp; தூக்கிலிட முடியும். அப்படிச் செய்தால் இந்த அரசாங்கம் மக்களிடத்தில் இன்னும் பிரபலமடையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.&nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை அனைவருக்கும் தெரியும். எனினும், தற்போது சிங்களவர்கள் அதனை செய்ததாக காட்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகின்றது.</p><h2>சிங்களவர்கள் மீதான தாக்குதல்கள்&nbsp;</h2><p> </p><p>கடந்த காலங்களில் சிங்கள மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. போர்த்துகீசர், ஆங்கிலேயர் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தினர். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கினர், தற்போது ஜேவிபியினரும் தாக்குதல் நடத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13529f54-b200-43b1-8439-1d21e4b3c2ea/26-6a745452eab1c.webp' /></p><p> </p><p>

பூஜித் ஜயசுந்தரவும், ஹேமசிறி பெர்னாண்டோவும் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் 300 பேரைக் கொன்றனர். குண்டுகளை&nbsp; இயக்கச் செய்ததும் அவர்கள்தான் என்பது போல காட்டுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.</p><p> ஆனால், ஜேவிபியுடன் தொடர்பில் இருந்து, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிமுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
</p><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் தற்போது பிரச்சினை இல்லை. அவர்கள் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். ஆனால், தண்டனை அனுபவித்து சிறைக்குள் இருப்பது பூஜித்தும், ஹேமசிறியும் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615e4e98-b3c5-426c-a992-7bea9b720f56/26-6a745453e7edb.webp' /></p><p>
</p><p>

மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் இன்னும் பிரபலமடைய வேண்டும் என்றால் இன்னும் ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கின்றது. முடியுமென்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு முடியும். </p><p>

வேண்டுமென்றால், கையொப்பம் ஒன்றை இட்டு அவர்களை தூக்கிலிட ஜனாதிபதிக்கு முடியும். அப்போது அரசாங்கம் இன்னும் மக்களிடத்தில் பிரபலமடைய முடியும்.</p><p>

குற்றம் சுமத்தப்பட்ட, ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர். சிறையில் இருக்கவேண்டியவர்கள் இன்று வெளியில் உயர் பதவிகளில் சுதந்திரமாக உள்ளனர். வெளியில் இருக்க வேண்டியவர்கள் இன்று சிறையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:22:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-houses-for-colombo-1786010089"></link>
            <id>https://tamilwin.com/article/new-houses-for-colombo-1786010089</id>
            <summary type="text">அரசாங்கத்தின் தேசிய வீட்டுவசதி திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் தேசிய வீட்டுவசதி திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.</p><p> 

கொழும்பு மாவட்டம், கெஸ்பேவ பிரதேச செயலகப் பிரிவு, பெலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீடற்ற பயனாளி குடும்பத்திற்கு, "வசதியான வீடு - அபிவிருத்தி பெற்ற குடும்பம்" என்ற வீட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை வழங்கும் நிகழ்வில் இன்று (06) பங்கேற்றபோது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.</p><h2>குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள்</h2><p> </p><p>

தேசிய வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு வீடற்ற 30,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/833696f9-1469-420b-8fd7-2f4850e40936/26-6a745f3ad2b91.webp' />&nbsp;</p><p> 

மேலும், வீட்டுவசதி, அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, மற்றும் தோட்டப்பயிர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சுகளின் கூட்டுத் திட்டமாக இந்த தேசிய வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கமைய, சமுர்த்தி மேம்பாட்டுத்துறையும் இந்த ஆண்டு 1,000 க்கும் மேற்பட்ட வீடுகளை பயனாளிகளுக்காக நிர்மாணிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் கொந்தளிப்பு காரணமாக நெடுந்தீவில் கரையொதுங்கிய தமிழக கடற்தொழிலாளர்களின் படகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamilnadu-fishermen-s-boat-stranded-on-neduntheevu-1786009748"></link>
            <id>https://tamilwin.com/article/tamilnadu-fishermen-s-boat-stranded-on-neduntheevu-1786009748</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற காலநிலையால் நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு
கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.&amp;nbsp;இதன்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற காலநிலையால் நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு
கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.&nbsp;</p><p>இதன்போது படகில் இருந்த 11 கடற்தொழிலாளர்கள்
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில்
கரையொதுங்கியுள்ளதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p></p><h2>கடற்தொழிலாளர்கள் மீட்பு</h2><p>இதனையடுத்து, சம்பவ
இடத்திற்கு சென்ற கடற்படையினர் படகில் இருந்த கடற்தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf3a0bc-af9f-49ad-922f-eefa5e99b3c3/26-6a745c37b9c49.webp' /></p><p>

படகினை மயிலிட்டி மீன்பிடித்துறைமுக பகுதிக்கு எடுத்துள்ள செல்ல நடவடிக்கை
எடுத்துள்ள கடற்படையினர், மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்களை, கடற்தொழில் நீரியல்
வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:09:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திறந்து வைக்கப்பட்ட நல்லூரான் வடக்கு வாசல் வளைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalluran-north-gate-arch-inaugurated-1786009288"></link>
            <id>https://tamilwin.com/article/nalluran-north-gate-arch-inaugurated-1786009288</id>
            <summary type="text">அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும்
மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குப் திசையில் கோவில் வீதியில்
அமைக்கப்பட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும்
மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குப் திசையில் கோவில் வீதியில்
அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான நல்லூரான் வடக்கு வாசல் வளைவு திறந்து வைக்கப்பட்டது.</p><p>ஆடிக் கார்த்திகை நன்னாளான இன்று.(06.08.2026) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் கண்டது.</p><h2>காளை மாட்டு வண்டில்</h2><p>
</p><p>
காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன்,
நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில்
மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் வந்து தொடர்ந்து, தெய்வேந்திர
முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, முருகப்பெருமானுக்காக எடுத்துவரப்பட்ட
நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக
புதிய வளைவின் ஊடாகச் சென்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60ea7a4d-36e0-41da-8e26-8eeb6f6b19bd/26-6a745ad86d6e8.webp' /></p><p>அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய
விரிப்புக் காண்டது.
</p><p>இந்த நிகழ்வில் முருகன் அடியவர்கள், வடமாகாண ஆளுநர், யாழ்.மாநகர முதல்வர், யாழ்
மாநகர ஆணையாளர், வடமாகாண பிரதி பிரதம செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T09:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/phone-numbers-of-emergency-examination-period-1786007689"></link>
            <id>https://tamilwin.com/article/phone-numbers-of-emergency-examination-period-1786007689</id>
            <summary type="text">5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளின் போது ஏற்படும் அனர்த்த நிலைமைகள் குறித்து தகவல் தெரிவிக்க, 5 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளின் போது ஏற்படும் அனர்த்த நிலைமைகள் குறித்து தகவல் தெரிவிக்க, 5 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த பேரிடர் மேலாண்மை மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>
முப்படைகள் மற்றும் பொலிஸாரின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.</p><p>இதற்கமைய, அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்தி, பேரிடர் மேலாண்மை மையம் ஒரு சிறப்பு திட்டத்தைத் தயாரித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>5 புதிய தொலைபேசி எண்கள் அறிமுகம்&nbsp;</h2><p>இந்த திட்டம் பரீட்நைக்கு முன்பும் பின்பும் நடைமுறையில் இருக்கும் என்றும், பேரிடர் ஏற்படும் பட்சத்தில், மாணவர்களை பரீட்சை மையங்களுக்கு அழைத்துச்செல்லவும், வினாத்தாள்களைக் கொண்டு செல்லவும், அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றவும் தேவையான வசதிகளை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53e9fa0d-206d-486c-8d87-b10757c1aabf/26-6a7456bfcde7c.webp' /></p><p> இதற்கமைய, பரீட்சைக்கு முந்தைய நாள் 5 புதிய தொலைபேசி எண்கள் வழங்கப்படும் என்றும், மேலும், 117 என்ற தொலைபேசி எண்ணும் செயல்பாட்டில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து தங்கள் பணிகளை தொடரத் திட்டமிடப்பட்டுள்ளதாக&nbsp;பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T09:41:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயகம - போடைஸ் - ஹட்டன் பிரதான வீதி மீண்டும் திறப்பு - மக்களின் ஒற்றுமையால் போக்குவரத்து வழமைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diagama-bodise-hatton-main-road-reopens-1786008775"></link>
            <id>https://tamilwin.com/article/diagama-bodise-hatton-main-road-reopens-1786008775</id>
            <summary type="text">கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் கடும் மழையால் பல்வேறு பகுதிகளில்
மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் பதிவாகி வருகின்றன. அந்த வகையில்,
டயகம - போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் கடும் மழையால் பல்வேறு பகுதிகளில்
மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் பதிவாகி வருகின்றன. </p><p>அந்த வகையில்,
டயகம - போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து
விழுந்ததால் கடந்த 3ஆம் திகதி முதல் இவ்வீதியின் ஊடான அனைத்து போக்குவரத்தும்
முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது.</p><p>
இதன் காரணமாக அன்றாடம் இவ்வீதியை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், மாணவர்கள்,
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பல்வேறு
அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், நீண்ட மாற்றுப் பாதைகளை பயன்படுத்த வேண்டிய
நிலையும் ஏற்பட்டிருந்தது.</p><p>
இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, நேற்று (05)
அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவியின் தலைமையிலும், அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டாரவின் ஒருங்கிணைப்பிலும், வீதியை மீளத் திறப்பதற்கான அவசர நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இந்த பணிகளுக்கு ஆக்ரா கல் குவாரியின் உரிமையாளர் சின்னத்தம்பி முழுமையான
ஒத்துழைப்பையும் இயந்திர வசதிகளையும் வழங்கியதுடன், பிரதேச மக்கள், சமூக நலன்
விரும்பிகள், வாகன சாரதிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், அல்பியன் தோட்ட
நிர்வாகம் உள்ளிட்ட பல தரப்பினரும் ஒன்றிணைந்து பாரிய அளவிலான சிரமதான
பணிகளில் ஈடுபட்டனர்.</p><p>

வீதியின் குறுக்கே விழுந்திருந்த மிகப்பெரிய கற்பாறைகள் சாதாரண முறையில் அகற்ற
முடியாத அளவுக்கு இருந்ததால், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வெடிபொருட்கள்
பயன்படுத்தி அவை உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன. </p><p>அதனைத் தொடர்ந்து வீதி முழுமையாக
சுத்தம் செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டது.

இதன் மூலம் இன்று முதல் டயகம–போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியின்
ஊடாக அனைத்து வகையான வாகனங்களும் வழமைபோல் பயணிக்கத் தொடங்கியுள்ளன. நீண்ட
நாட்களாக போக்குவரத்து தடை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் இதனால்
பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.</p><p>
வீதியை மிகக் குறுகிய காலத்திற்குள் மீளத் திறப்பதற்காக தன்னலமின்றி
ஒத்துழைப்பு வழங்கிய அக்கரப்பத்தனை பிரதேச சபை, பொலிஸார், ஆக்ரா கல் குவாரி
நிர்வாகம், அல்பியன் தோட்ட நிர்வாகம், வாகன சாரதிகள், பஸ் உரிமையாளர்கள்
மற்றும் பிரதேச மக்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியை
தெரிவித்துள்ளனர்.
</p><p>இதேவேளை, தொடர்ந்தும் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மண்சரிவு
மற்றும் கற்பாறை சரிவு அபாயம் முழுமையாக நீங்கவில்லை என அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர். </p><p>எனவே, இவ்வீதியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த
அவதானத்துடன் பயணிக்குமாறும், மழைக்கால பாதுகாப்பு அறிவுறுத்தல்களை
கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T09:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/instructions-issued-to-expressway-drivers-1786007600"></link>
            <id>https://tamilwin.com/article/instructions-issued-to-expressway-drivers-1786007600</id>
            <summary type="text">பயிலுனர் உரிமம் அல்லது எல் போர்ட்டை பயன்படுத்தி செலுத்தும் வாகனங்கள் அல்லது கற்றல் அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களால் இயக்கப்படும் வாகனங்கள் அதிவேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயிலுனர் உரிமம் அல்லது எல் போர்ட்டை பயன்படுத்தி செலுத்தும் வாகனங்கள் அல்லது கற்றல் அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களால் இயக்கப்படும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது என இலங்கை போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

அத்துடன், கற்றல் அனுமதிப்பத்திரம் வாகனம் ஓட்டும் பயிற்சிக்காக மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு ஒரு நபரை அங்கீகரிக்கவில்லை என்றும் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p> </p><h2>


சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p>

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்குவதற்கு செல்லுபடியாகும் முழு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

முழு உரிமம் பெற்ற சாரதி ஒருவர், கற்பவருடன் சென்றாலும், “எல்” தகடுகளைக் காட்டும் வாகனத்தை அதிவேக நெடுஞ்சாலையில் ஓட்ட முடியாது என பொலிஸார் மேலும் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fc23d99-226f-4833-bb6e-faceab973621/26-6a7454a0995af.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலை அணுகல் புள்ளிகளில் அத்தகைய வாகனங்கள் நுழைய மறுக்கப்படும் என்றும் சட்டத்தை மீறி ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைபவர்கள் அபராதம் அல்லது வழக்கு உட்பட சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> 

அதே போன்று, வாகனத்தை சட்டவிரோதமாக இயக்கினால், விபத்து காரணமாக கொடுக்கப்படும் காப்பீடு கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்றும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இது போன்ற விதிமுறைகள், அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதற்கான சட்டக் கட்டுப்பாடுகள் தொடர்பில் கற்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-06T09:32:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் உயர் அதிகாரிகளின் சொத்து விபரம் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asset-declarations-politicians-anti-corruption-act-1785999850"></link>
            <id>https://tamilwin.com/article/asset-declarations-politicians-anti-corruption-act-1785999850</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்படி, பொதுப் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைப் பொதுமக்கள் அணுக அனுமதிக்கப்படுவார்கள் என...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்படி, பொதுப் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைப் பொதுமக்கள் அணுக அனுமதிக்கப்படுவார்கள் என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "2023ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் எண் 09, நமது நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த சட்டமாகும்.</p><p> அச்சட்டத்தின் 86 மற்றும் 88ஆம் பிரிவுகளின்படி, நமது நாட்டின் அனைத்து உயர் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் தங்களது தகவல்களைச் சேர்க்க வேண்டும் எனக் கோரப்பட்டது.</p><p> அதன்படி, அச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதி முதல் கீழ் மட்டம் வரையிலான சுமார் 300 பேர், இந்தத் தகவல்கள் அனைத்தையும் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.</p><p> இது அச்சிட்ட வடிவில் வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது. பின்னர், இதை இணையவழியில் வழங்கும் முறையை வழங்குவதற்காகச் சட்டம் திருத்தப்பட்டது” என குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இலங்கையின் ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைத் திருத்தியமைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். </p><p>இதனை மூத்த அரச அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள சொத்து அறிவிப்புக் கட்டமைப்பில் மாற்றங்களைப் பரிந்துரைத்து, 2026 ஜூலை 24ஆம் திகதி அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு வரைவுத் திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>குறித்த செய்தியின்படி, இந்தச் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 1,60,000 சொத்து அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்ட பின்னரே, முன்மொழியப்பட்ட திருத்தம் ஆரம்பத்தில் வகுக்கப்பட்டது.</p><h2>தனியார் துறையினரின் கோரிக்கைகள்</h2><p>மேலும், அரச சபைகளில் பணியாற்றும் பல தனியார் துறை வல்லுநர்களும் கவலைகளை எழுப்பியுள்ளனர். அவர்கள், தங்களது அறிவிப்புகளைக் கட்டாயமாகப் பொதுவெளியில் வெளியிடுவது தங்களது தனியுரிமையை மீறக்கூடும் என குற்றம் சுமத்தியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18f1d428-4584-499e-8676-7fa0c67c9147/26-6a7446c5beaa9.webp' /></p><p>

எனவே, அந்தக் கவலைகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.&nbsp;</p><p>
இருப்பினும், கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அரசியல் சாராத நபர்களின் தனியுரிமை குறித்த கவலைகள் நிவர்த்தி செய்யப்படுவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கிடைக்கப்பெறும் வகையில் அந்த முன்மொழிவைத் திருத்தியமைக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுப் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை ஆய்வு செய்வதற்கான பொதுமக்களின் உரிமையை இந்த மாற்றங்கள் பாதுகாக்கும் அதே வேளையில், சட்டத்தின் கீழ் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய பிற பிரிவுகளுக்கு ஒரு மாறுபட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து திருத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு! இந்தியாவின் தலையீட்டை எதிர்பார்க்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-statement-1786002431"></link>
            <id>https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-statement-1786002431</id>
            <summary type="text">ஈழத் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத்தர இந்தியாவின் தலையீட்டை பணிவன்புடன் வேண்டுகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத்தர இந்தியாவின் தலையீட்டை பணிவன்புடன் வேண்டுகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,&nbsp;இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினரால் இன்று (06.08.2026) எழுதப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,</p><p>நாம், தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்கள், தாங்கள் இலங்கைக்கு
மேற்கொள்ளும் விஜயத்தை உளமார வரவேற்கிறோம். எமக்கு சந்திப்பதற்கான வாய்ப்பை
வழங்கியதற்காக எமது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>கடந்த 77
ஆண்டுகளாக இலங்கைத் தீவில் இனமுரண்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வரும் ஈழத்
தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை பெற்றுத் தர இந்தியாவின்
தலையீட்டை பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

இனமுரண்பாட்டிற்கான தீர்வாக இலங்கை அரசு தற்போது புதிய அரசியலமைப்பொன்றை
உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.</p><h2>இந்திய அரசின் தலையீடு</h2><p> </p><p>அந்த அரசியலமைப்பில் ஈழத் தமிழ் மக்களின்
அரசியல் அபிலாஷைகள் பிரதிபலிக்கப்படுவது இன்றியமையாததாகும். அந்த
நோக்கத்துடன், தமிழ் நாட்டிலுள்ள எமது உறவினர்களின் ஆதரவுடனும், மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களினதும் தமிழ்நாட்டின் அரசியல் தலைமையினதும்
ஒத்துழைப்புடனும், இந்திய அரசின் தலையீட்டை நாடி வந்துள்ளோம். அதன்படி, 2025
டிசம்பரிலும் 2026 ஜூலையிலும், எனது தலைமையில் எமது அமைப்பின் பிரதிநிதிகள்
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச்
சந்தித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013035c9-489b-4ab7-8ce1-684387f3a5f4/26-6a7444941aac5.webp' /></p><p> </p><p>அதனைத் தொடர்ந்து, இரு சந்தர்ப்பங்களிலும் தமிழ்நாட்டின்
எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்தித்து எமது
கோரிக்கைகளை முன்வைத்தோம்.

மேதகு அவர்களே,

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில், இந்தியாவின் தலையீட்டின் விளைவாக
1987 ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. </p><p>அந்த
உடன்படிக்கையில், தமிழர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில்
பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்கள் என அங்கீகரிக்கப்பட்டதுடன், வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த ஒரே நிர்வாக அலகாக இருந்து சுயாட்சியை
அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
</p><p>
ஆயினும், அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி, இலங்கை அரசு
அரசியலமைப்பில் பதின்மூன்றாவது திருத்தத்தை அறிமுகப்படுத்தி, ஒற்றையாட்சி
அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் மாகாண சபை முறையை நிறுவியது.

இந்திய - இலங்கை உடன்படிக்கையின் உண்மையான நோக்கத்தையும், ஈழத் தமிழ் மக்களின்
சுயாட்சிக்கான அரசியல் அபிலாஷைகளையும் பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே மாகாண
சபை முறை இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் திட்டமிட்டு
அமைக்கப்பட்டது.</p><h2>மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரம்</h2><p> </p><p>பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட
மாகாண சபை முறை இலங்கையின் கடுமையான ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள்
அமைந்துள்ள காரணத்தினால், 1987 (2) SLR 312 என்ற அரசியலமைப்பின்
பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் சட்டமூலம் தொடர்பான வழக்கில்
இலங்கை உச்ச நீதிமன்றம், பொருளுள்ள அதிகாரப் பகிர்வு எதுவும் சாத்தியமில்லை
என்றும், அனைத்து அதிகாரங்களும் இறுதியில் மத்திய அரசின் முழுமையான
கட்டுப்பாட்டிலேயே நிலைத்திருக்கின்றன என்றும் தீர்ப்பளித்தது.
</p><p>
அந்தத் தீர்ப்பின் சாராம்சம் பின்வருமாறு சுருக்கமாகக் கூறப்படலாம்:

“அரசியலமைப்பின் 2ஆம் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஒற்றையாட்சி அரசு’
(Unitary State) என்ற சொல், ‘கூட்டாட்சி அரசு’ (Federal State) என்ற
கருத்திற்கு நேர்மாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சி முறையில்,
இறையாண்மை அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் கூட்டாட்சி மாநிலங்களுக்கும் இடையே
பகிர்ந்தளிக்கப்படுகின்றன; அவை அரைத் தன்னாட்சியுடைய அலகுகளாக விளங்குகின்றன.
</p><p>
ஆனால், ஒற்றையாட்சி அரசில், தேசிய அரசே அனைத்து அரசாங்க மட்டங்களுக்கும் மேலாக
உயர்ந்த சட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஒற்றையாட்சி அரசின் அடிப்படை அம்சம்,
இறையாண்மை பிரிக்க முடியாதது என்பதாகும். அதாவது, மத்திய அரசின் அதிகாரங்கள்
எந்த வகையிலும் வரையறுக்கப்படாதவையாகும்.
</p><p>
ஒற்றையாட்சி அரசின் இரண்டு அடிப்படை அம்சங்கள்:
</p><p>
1. மத்திய நாடாளுமன்றத்தின் மேலாதிக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5673ddc4-d1e5-432a-9354-5d0d20949f61/26-6a744494e35b0.webp' />&nbsp;&nbsp;</p><p>
2. இறையாண்மை கொண்ட கீழமை அமைப்புகள் இல்லாமை.

இதனால் கீழமை சட்டமன்றங்கள் இருக்க முடியாது என்பதல்ல. </p><p>ஆனால் அவை அனைத்தும்
மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் மட்டுமே இயங்குகின்றன; மத்திய அரசினால்
உருவாக்கப்படவோ அல்லது கலைக்கப்படவோ முடியும். எனவே அவை இறையாண்மை கொண்ட
அமைப்புகளாகக் கருதப்பட முடியாது. </p><p>மத்திய அரசுக்கும் கீழமை அமைப்புகளுக்கும்
இடையே எழும் எந்த முரண்பாடும், மத்திய அரசால் சட்டரீதியாகத் தீர்க்க
முடியாததாக இருக்க முடியாது.</p><h2> ஆகவே, ஒற்றையாட்சி அரசின் அத்தியாவசிய அம்சங்கள்:
</h2><p>
1. மத்திய நாடாளுமன்றத்தின் மேலாதிக்கம்.
</p><p>2. இறையாண்மை அதிகாரம் கொண்ட கீழமை அமைப்புகள் இல்லாமை.

மாறாக, கூட்டாட்சி அரசில், அரசின் அதிகாரங்கள் கூட்டாட்சி அரசுக்கும்
மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. எந்த அரசும் மற்றொன்றின்
கீழ்ப்படிவாக இருப்பதில்லை; ஒவ்வொன்றும் தமக்குரிய அதிகார வரம்பிற்குள் சமமான
அதிகாரத்தையும் தன்னாட்சியையும் கொண்டிருக்கும். கூட்டாட்சி அரசு சில
விடயங்களில் இறையாண்மை அதிகாரங்களைப் பயன்படுத்தும்; மாநிலங்கள் ஏனைய
விடயங்களில் தமது இறையாண்மை அதிகாரங்களை சுயாதீனமாகப் பயன்படுத்தும். </p><p>இதுவே
கூட்டாட்சி அரசியலமைப்பிற்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கும் இடையிலான
அடிப்படை வேறுபாடாகும். ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ், இறையாண்மை முழுமையாக
மத்திய அரசிடமே நிலைத்திருக்கிறது.”

இதுவே கடந்த 38 ஆண்டுகளாக, ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் உருவாக்கப்பட்ட
பதின்மூன்றாவது திருத்தமும் மாகாண சபை முறையும் ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியல்
தீர்வை வழங்குவதில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததற்கான அடிப்படை காரணமாகும்.
</p><p>தமிழர் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஒருமித்த
நிலைப்பாடும், தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் இயங்கும் அனைத்து அரசியல்
கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே ஆகும். 2009 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற
ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்மக்கள் இந்த நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும்
உறுதிப்படுத்தி வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc57bf0d-e008-4814-adb1-7dc239731bcb/26-6a7445c3b8def.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள இலங்கை அரசு, 2015 முதல் 2019 வரையிலான
காலப்பகுதியில் பதவியில் இருந்த அரசால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவை —
அதாவது “ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பை (“ஏகிய ராஜ்ய” என்பது சிங்களத்தில்
“ஒற்றையாட்சி அரசு” என்பதைக் குறிக்கும்) — இறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்தத்
திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.</p><p> </p><p>தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசின்
மூத்த தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் இதனை வெளிப்படையாக மீண்டும்
உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த முன்மொழியப்பட்ட “ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு,
ஏற்கனவே தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தைவிடவும்
பலவீனமானதாகும்.
</p><p>
மேதகு அவர்களே,

தமிழ் தேசத்தையும், அதன் இறையாண்மையையும், சுயநிர்ணய உரிமையையும்
அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பு முறையாக இலங்கையின் அரசியலமைப்பு
மாற்றப்படாத வரையில், ஒரே நாட்டிற்குள் தமிழ்மக்களின் தனித்துவ அடையாளத்தையும்
தேசிய இருப்பையும் பாதுகாப்பது சாத்தியமில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.</p><h2>“ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு</h2><p>
</p><p>
எனவே, இந்திய அரசு இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்தி, முன்மொழியப்பட்ட
“ஏகிய ராஜ்ய” அரசியலமைப்பு இயற்றப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின்
ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை ஒழிக்கவும், தமிழ் தேசத்தை அங்கீகரித்து அதன்
தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக் கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை
உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>இந்திய–இலங்கை உடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட எமது வரலாற்றுத் தாயகப்
பகுதிகளில், சுயாட்சி மற்றும் தன்னாட்சியின் மூலம் தமிழ் மக்கள் தமது
சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியலமைப்பு ஒழுங்கு ஏற்படுத்தப்பட
வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இலங்கை, இந்தியாவின் ஆதரவின்றி
தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/163b8fc8-295a-4d82-9377-c838aace1a98/26-6a7445c4aac70.webp' /></p><p> </p><p>மேலும், தமிழ்நாட்டுடன்
நெருங்கிய பொருளாதார உறவுகளையும் இணைப்புகளையும் உருவாக்காது நிலையான
பொருளாதார வளர்ச்சியை அடைவதும் மிகவும் கடினமாகும். </p><p>இந்நிலையிலே, இந்தியா
இலங்கையின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தி, தமிழ்மக்கள்
நாடிவரும் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் தீர்மானகரமான பங்கை வகிக்கக்கூடிய
நிலையில் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

மேற்கண்ட வேண்டுகோளை தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தங்களின் கனிவான
பரிசீலனைக்காக மிகுந்த மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றேன்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:29:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-regarding-school-holidays-1786003324"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-regarding-school-holidays-1786003324</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சிங்கள மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு அறிக்கையை வெளியிட்டுள்ளது. </p><p>

அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் கல்வியாண்டின் முதல் கட்டம் நாளை (07) நிறைவடையும்.
</p><p>
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் கல்வியாண்டின் முதல் கட்டம் செப்டெம்பர் (2) ஆம் திகதி நிறைவடையும்.</p><p></p><h2>விடுமுறைகள்&nbsp;</h2><p>அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாவது கல்வியாண்டின் இரண்டாம் கட்டம், செப்டெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை அன்று தொடங்குவதாகவும், மூன்றாவது கல்வியாண்டு டிசம்பர் 4ஆம் திகதி அன்று நிறைவடைவதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eaedb7a-1db1-4374-9a12-ebda4dafb258/26-6a7444bf1ade2.webp' /></p><p> </p><p>இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் 1000 பொலிஸ் அதிகாரிகள் பணியில்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1000-police-personnel-for-colombo-1786001884"></link>
            <id>https://tamilwin.com/article/1000-police-personnel-for-colombo-1786001884</id>
            <summary type="text">சுமார் 1000 பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவிற்காக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்வுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 1000 பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவிற்காக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இத்திருவிழா இம்மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடைபெற உள்ளது.
</p><p>
திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் வாகன அணிவகுப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம்&nbsp; தெரிவித்துள்ளது.</p><h2>போக்குவரத்து நெரிசல்கள்</h2><p>இந்த அணிவகுப்பு காலி முகத்திடல் வட்டச்சந்தியில் இருந்து தொடங்கி, கொள்ளுப்பிட்டி சந்திப்பு, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி வட்டச்சந்தி, ஆர்.ஏ. தெமேல் மாவத்தை, பம்பலப்பிட்டி சந்திப்பு, பௌத்தலோக மாவத்தை, தும்முல்ல, தர்ஸ்டன் வீதி, கிளாஸ் ஹவுஸ், நிதஹாஸ் மாவத்தை, ஹோர்டன் வட்டச்சந்தி, கன்னங்கர மாவத்தை, சொய்சா வட்டச்சந்தி, லிப்டன் வட்டச்சந்தி, இப்பன்வலா சந்திப்பு, டேலி வீதி, டி.ஆர். வழியாகச் செல்லும். விஜேவர்தன மாவத்த, ரீகல் சந்திப்பு, செராமிக் சந்திப்பு, லோட்டஸ் ரோடு வழியாக போர்ட் சிட்டி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2fdd285-911b-4a14-a197-ade89d1b2568/26-6a74431a894cf.webp' /></p><p>அதன்படி குறித்த காலப்பகுதியில், சனிக்கிழமை (08) அன்று மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படக்கூடும்.&nbsp;</p><p>எனவே, மேற்கண்ட வீதிகளைத் தவிர்த்து மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T08:18:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! கடும் பீதியில் ராஜபக்ச குடும்பம், அரசியல் நட்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-and-friends-in-risk-1785999576"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-and-friends-in-risk-1785999576</id>
            <summary type="text">கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய அரசியல் நண்பர்களுக்கு எதிராக மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நடவடிக்கையை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய அரசியல் நண்பர்களுக்கு எதிராக மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நடவடிக்கையை சமகால அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. </p><p>

இந்நிலையில், பாரிய மோசடிகளில் இருந்து தப்பித்துக் கொண்டவர்கள் மீண்டும் சட்ட ரீதியாக சிக்கி சிறைக்கு செல்லும் நிலையில் உள்ளதால், அவர்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக 2015 – 2016ஆம் ஆண்டுகளில் குறைந்தது 14 வழக்குகள் தொடரப்பட்டு, பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மீளப் பெறப்பட்டிருந்தன.</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">மகிந்த உட்பட ராஜபக்ச குடும்பத்தினர்</b></p><p>அத்துடன், அக்குடும்பத்தின் நெருங்கிய நட்பு வட்டார உறுப்பினர்கள் தொடர்பிலும் அதே காலகட்டத்தில் குறைந்தது 15&nbsp; வழக்குகள் தொடரப்பட்டு மீளப் பெறப்பட்டிருந்தன.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50d8dd45-5ea2-4040-84b9-7958ca58e564/26-6a743f85efd07.webp' /></p><p>ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் தொடரப்பட்டிருந்த 5 வழக்குகளை மீண்டும் தொடுக்குமாறு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அவரது 5 வழக்குகளுக்கு மேலதிகமாக, கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக 3 வழக்குகளும், ரோஹித அபேகுணவர்தன, பிரியங்கர ஜயரத்ன, தம்மிக பெரேரா மற்றும் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகிய ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்குகளும் மீளப் பெறப்பட்டிருந்தன.</p><h3><b>சொத்துக் குவிப்பு வழக்கு</b></h3><p>மேலும், கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் சொத்துக் குவிப்பு வழக்கும், மகிந்த ராஜபக்ச மீது சொத்துக் குவிப்பு வழக்கும், பசில் ராஜபக்ச மீது 5 சொத்துக் குவிப்பு வழக்குகளும், பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் ஒரு வழக்கும் தொடரப்பட்டு மீளப் பெறப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c63b3e1c-e806-4299-ac31-c3d30251cd4b/26-6a7441381d46a.webp' /></p><p>நாமல் ராஜபக்ச மீது 4 சொத்துக் குவிப்பு வழக்குகளும், ரோஹித ராஜபக்ச தொடர்பில் சொத்துக் குவிப்பு வழக்கும், கடற்படையில் சட்டவிரோதமாக இணைத்துக் கொள்ளப்பட்டு மக்கள் நிதி பயன்படுத்தப்பட்டது தொடர்பான மற்றுமொரு வழக்கும் எனத் தொடரப்பட்டிருந்த வழக்குகள் மீளப் பெறப்பட்டிருந்தன. </p><p>இவ்வாறு மீளப் பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் தொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-06T08:09:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு விவகாரம்.. தொடரும் 45ஆவது நாள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-liberation-issue-people-keppapilavu-45th-day-1786001498"></link>
            <id>https://tamilwin.com/article/land-liberation-issue-people-keppapilavu-45th-day-1786001498</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது
பூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது
பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்ட்தை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p>குறித்த போராட்டம், இன்று (06.08.2026) இரண்டாவது கட்டத்தின் 45ஆவது
நாளை எட்டியுள்ளது.
</p><p>
கேப்பாப்புலவு பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ள 55 குடும்பங்களுக்கு
சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளை முதற்கட்டமாக விடுவிக்க கோரி
தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>மீள் குடியேறுவதற்கான உரிமை</h2><p>
</p><p>
தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி
உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1934d3a-c3ee-4cc7-8cef-ade99b5f7570/26-6a743a0deaac3.webp' /></p><p> </p><p>தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை
உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான
கோரிக்கையாகும்.</p><p>
</p><p>
இந்நிலையில், போராட்டம் 45ஆவது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை
அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில்,
போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T07:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டகலை பகுதியில் பொறியில் சிக்கியிருந்த சிறுத்தை உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/leopard-trapped-in-trap-rescued-alive-1786000114"></link>
            <id>https://tamilwin.com/article/leopard-trapped-in-trap-rescued-alive-1786000114</id>
            <summary type="text">திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்
தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் மிருகங்களை வேட்டையாடும் ஒருவரால்
வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்
தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் மிருகங்களை வேட்டையாடும் ஒருவரால்
வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நடவடிக்கையை இன்று(06.08.2026) நுவரெலியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும், ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலையின் கால்நடை வைத்தியரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர். </p><p>

கடந்த (05) ஆம் திகதி மாலை 5மணியளவில் சிறுத்தை ஒன்று பொறியில்
சிக்கியிருப்பதை தோட்டத் தொழிலாளர்கள் கண்டு, தோட்ட முகாமையாளருக்கு தகவல்
தெரிவித்துள்ளனர்.</p><p> 

இதனைத் தொடர்ந்து, தோட்ட முகாமையாளர் நுவரெலியா வனவிலங்கு
அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்தியுள்ளார்.</p><h2>

நான்கு வயது சிறுத்தை மீட்பு</h2><p>
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்கள், “ தற்போது 
விதிமுறைப்படி வேலை செய்யும்” தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்
நிலையிலும், மனிதநேய அடிப்படையில் ரந்தெனிகலையிலிருந்து வருகை தந்து, பொறியில்
சிக்கிய சிறுத்தையை மயக்கமடையச் செய்து மீட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad82e832-9289-4756-b588-2853dc304520/26-6a74335943daf.webp' /></p><p> 

மீட்கப்பட்ட சிறுத்தை சுமார் 4 வயதுடைய பெண் சிறுத்தை என்றும், சிறுத்தையின்
அடிவயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் இரண்டு கம்பிகளாலான பொறிகள்
இறுக்கியதில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், மீட்கப்பட்ட சிறுத்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது தங்களது
வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருவதாக வைத்தியர் அகலங்க பிணிதிய மேலும்
தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:49:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-arrested-with-ice-drug-in-kinniya-1786001722"></link>
            <id>https://tamilwin.com/article/one-arrested-with-ice-drug-in-kinniya-1786001722</id>
            <summary type="text">&amp;nbsp;கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில், 357 கிராமும் 830
மில்லி கிராமும் நிறையுடைய &#039;ஐஸ்&#039; (Ice) போதைப்பொருளுடன்&amp;nbsp;ஒருவர் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில், 357 கிராமும் 830
மில்லி கிராமும் நிறையுடைய 'ஐஸ்' (Ice) போதைப்பொருளுடன்&nbsp;ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

</p><p>நேற்று (05) இரவு பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டுச்
சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர் கிண்ணியா, அல்-அக்ஸா கல்லூரி வீதியை சேர்ந்த&nbsp;24 வயதுடைய இளைஞர் என
அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc12bc17-d351-42d7-bfa9-fe06f001ef0d/26-6a743ba3f169b.webp' /></p><p>

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபா
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை கிண்ணியா
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T07:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனையில் சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-traders-who-violated-1786001193"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-traders-who-violated-1786001193</id>
            <summary type="text">கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட
வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப்
பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட
வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப்
பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன்
நெறிப்படுத்தலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸஹ்ரா
சாரப்தீன் வழிகாட்டலில் இக்கடமை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக சுகாதார வைத்திய
அதிகாரி வைத்தியர் எம்.எச். ரிஸ்பின் தலைமையில், கல்முனை தெற்கு சுகாதார
வைத்திய அதிகாரி பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கல்முனை மாநகர
சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில்
அதிரடிச் சுகாதாரப் பரிசோதனையை முன்னெடுத்தனர்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இப்பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறிகள்,
பழங்கள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், சுகாதார
விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட சில வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b413c4-abd9-4a95-9e3f-a8cbcac42658/26-6a74373010a6b.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சந்தைப் பகுதியிலுள்ள வியாபாரிகளுக்குச் சுகாதார விதிமுறைகள்,
உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அத்தியாவசியச் சுகாதார ஆலோசனைகளும்
அதிகாரிகளால் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-06T07:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற நீர் விநியோகத்தால் கிளிநொச்சி மக்கள் கடும் அவதி : எழுந்துள்ள விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-residents-suffering-due-water-supply-1785999399"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-residents-suffering-due-water-supply-1785999399</id>
            <summary type="text">கிளிநொச்சியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால்
விநியோகிக்கப்படுகின்ற குழாய் வழி குடிநீர் விநியோகம் சீரற்ற முறையில்
இடம்பெறுவதனால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால்
விநியோகிக்கப்படுகின்ற குழாய் வழி குடிநீர் விநியோகம் சீரற்ற முறையில்
இடம்பெறுவதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், தட்டுவன்கொட்டி,
ஆனையிறவு, உமையாள்புரம் மற்றும் பூநகரி உள்ளிட்ட உவர் நிலப்
பிரதேசங்களில் நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாததால்,
அப்பகுதி மக்கள் நீர் வழங்கல் சபையின் குடிநீர் விநியோகத்தையே முழுமையாக
நம்பியுள்ளனர். </p><h2>நீர் விநியோகம் வழமைக்கு&nbsp;திரும்பி விடும்</h2><p>இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நீர்
விநியோகம் தடைப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1357dbef-8298-42f6-9c38-66a25e21f77d/26-6a7433b515058.webp' /></p><p>

குறிப்பாக காலை வேளையில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும்
நேரங்களிலும், மாலை வேளையிலும் இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால்
மாணவர்களும், உத்தியோகத்தர்களும் தங்களது நாளாந்தக் கடமைகளைச் சரிவரச்
செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறிப்பாக பூநகரி, தட்டுவன்கொட்டி போன்ற குடிநீர் பற்றாக்குறை நிலவும்
பிரதேச மக்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>எனவே, கிளிநொச்சி
நீர் வழங்கல் சபை இவ்விடயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி,
எதிர்காலத்தில் சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்யத் தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். </p><p>எனினும், குறித்த சில நாட்களில் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பி விடும் என கிளிநொச்சி மாவட்ட நீர்
வழங்கல் சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T07:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடி - தீவிர பாதுகாப்பில் நீதிபதிகள்- அடுத்துவரும் நாட்களில் அம்பலமாகவுள்ள ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eater-attack-tight-security-for-judges-1785988687"></link>
            <id>https://tamilwin.com/article/eater-attack-tight-security-for-judges-1785988687</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>அதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><h2><b>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்</b></h2><p>கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கண்ணன் ஆகியோரைக் கொண்ட இந்த விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு நாளாந்தம் விசாரிக்கப்பட்டு வருகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b7cbf71-839f-4682-90a4-7c0cfe63c9b4/26-6a74206fc7c49.webp' /></p><p>சில சாட்சிகள் இரவு வேளைகளிலும் தொடர்ச்சியாக விசாரிக்கப்படுவதே இம்முறையீட்டு வழக்கின் சிறப்பம்சமாகும்.</p><p> இந்த வழக்கு விசாரணை, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பிலானதாகும். </p><p>முகமது இப்ராஹிம் முகமது நவ்பர் எனப்படும் நவ்பர் மௌலவி உட்பட 24 முறைப்பாட்டாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பல தீர்க்கமான தகவல்கள் வெளிவந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9NVvM3PNRJk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:25:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கத்துரை சிலை அமைப்பு விவகாரம்: ஏற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவு விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuttimani-thangathurai-case-issus-1785999231"></link>
            <id>https://tamilwin.com/article/kuttimani-thangathurai-case-issus-1785999231</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இவர் இன்று(6.8.2026) காலை முதல் தற்போது வரை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் நேற்றைய தினம்(5.8) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f280e72e-1e38-4a52-81c4-2fc6568f3eee/26-6a74379c1a7d8.webp' /></p><p>

இந்நிலையில் நேற்று பிற்பகல் வல்வெட்டித்துறை பொலிஸ் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக இன்று அழைப்பதற்கான அழைப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cNHc4rtOBGE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T07:18:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் நிவாரண பணியாளர்கள் படுகொலை! இலங்கை அரசிடம் நீதி கோரும் ஐ.நாவின் நிபுணர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muthur-relief-workers-massacre-un-demand-justice-1785997217"></link>
            <id>https://tamilwin.com/article/muthur-relief-workers-massacre-un-demand-justice-1785997217</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20
ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
உண்மையையும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20
ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
உண்மையையும் நீதியையும் இழப்பீட்டையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்குமாறு
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, இலங்கை இராணுவத்துக்கும்
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்திருந்த சூழலில்,
மூதூரில் பிரான்ஸ் தொண்டு நிறுவனமான 'ஏசிஎப்' அலுவலக வளாகத்தில் 17 நிவாரணப்
பணியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.</p><h2>துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் உயிரிழந்த பலர்&nbsp;</h2><p> </p><p>பெரும்பான்மையானோர் துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் கொல்லப்பட்டிருந்தமையுடன்,
அக்காலகட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய குடிதண்ணீர் மற்றும்
சுகாதார சேவைகளை வழங்கி வந்த ஒரே சர்வதேச தொண்டு நிறுவனமாக ஏசிஎப் மாத்திரமே
செயற்பட்டு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50db7554-5f62-4e5d-a9e9-ff817d1f86bd/26-6a742cd82c649.webp' /></p><p>

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர்கள்,
கொல்லப்பட்டவர்கள் எவரும் ஆயுதம் ஏந்திய போராளிகள் அல்லவென்றும், மோதலில்
சிக்கிய பொதுமக்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்கி வந்த மனிதநேயப்
பணியாளர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>நிவாரணப் பணியாளர்கள் மீதான
இத்தாக்குதலானது சர்வதேச மனிதநேய விதிகளுக்கு முரணானது மட்டுமன்றி, மோதலால்
பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்குச் சென்றடைய வேண்டிய அத்தியாவசிய
உதவிகளையும் முற்றாக முடக்கியதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்
அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை உட்படப் பல்வேறு சர்வதேச
விசாரணைகள், இப்படுகொலைக்கு இலங்கைப் பாதுகாப்புப் படையினரே பொறுப்பு என
நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளன.</p><p> இருப்பினும்,
இலங்கையின் உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்கள் போதிய சாட்சியமின்மை,
சாட்சிகளுக்கான பாதுகாப்பின்மை மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக தோல்வியடைந்தன.</p><h2>படுகொலைக்கு காரணமானவர்கள்&nbsp;</h2><p>

குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு இந்த விசாரணைகளைக் கண்காணித்த சர்வதேச சுயாதீன
புகழ்பெற்ற நபர்கள் குழு, இலங்கை அரசிடம் அரசியல் விருப்பமின்மை நிலவுவதாகக்
கூறி விசாரணைகளில் இருந்து விலகிக்கொண்டதை ஐ.நா. நிபுணர்கள்
நினைவுகூர்ந்துள்ளனர்.</p><p> கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும்,
இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவோ அல்லது சட்டத்தின்
முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவோ இல்லை. </p><p>இந்த தொடர்ச்சியான
தண்டனையின்மையானது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஆறாத துயரத்தை மேலும்
நீட்டிப்பதுடன், நாட்டின் சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையையும்
சீர்குலைத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இப்படுகொலையின் விளைவாக, காந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் மற்றும்
கிணறுகள் சீரமைப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பணிகள் தடைப்பட்டன.</p><p> இதனால்
அப்பகுதியில் இருந்த 3 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த
மக்கள் பாதுகாப்பற்ற குடிதண்ணீர், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரினால்
பரவும் நோய்களுக்கு ஆளாகினர்.</p><h2>நிவாரண பணியாளர்கள் வெளியேற்றம்</h2><p>அத்துடன், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட
அச்ச சூழ்நிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து 2
ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரணப் பணியாளர்கள் வெளியேறியதுடன், 2009 ஆம் ஆண்டு
போர் நிறைவடையும் வரை நிவாரணப் பணிகளுக்கான இடைவெளியும் பெருமளவில்
சுருங்கியது.
</p><p>
உலகளவில் நிவாரணப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் தற்போதைய
சூழலில், மூதூர் படுகொலை போன்ற கொடூர சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறல்
இல்லாமல் இருப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று ஐ.நா.
நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

எனவே, மூதூர் படுகொலை தொடர்பில் உடனடியாகச் சுயாதீனமான, நடுநிலையான மற்றும்
நம்பிக்கையான விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறும், பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறும் அவர்கள் இலங்கை அரசை
வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T06:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்கால அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785996135"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785996135</id>
            <summary type="text">மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு&amp;nbsp;பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு&amp;nbsp;தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு&nbsp;பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு&nbsp;தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று (06.08.2026) காலை 10 மணிக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.</p><h2>கடற்பரப்பில் காற்றின் வேகம்</h2><p>அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். 

இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p> 

எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மேற்கூறிய கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவ மற்றும் கடற்படை சமூகங்களுக்குக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், திருகோணமலை, கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இந்தக் கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><h2>அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்</h2><p> 

எனவே, இந்தக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர். </p><p>

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்துத் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T06:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவிக் கொட்டுக்கு இலக்கான 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/30-students-admitted-to-hospital-1785997942"></link>
            <id>https://tamilwin.com/article/30-students-admitted-to-hospital-1785997942</id>
            <summary type="text">திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் திடீரென குளவிக் கொட்டுக்கு இலக்காகி, 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் திடீரென குளவிக் கொட்டுக்கு இலக்காகி, 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி</h2><p> </p><p>


பாடசாலை நேரத்தில் எதிர்பாராதவிதமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள் உடனடியாகப் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15a2671-1529-488b-b807-629e130348cb/26-6a742b0f20db5.webp' /></p><p>

அவர்களில் மூவரின் நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேல் அதிக சிகிச்சைக்காக அவர்கள் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a0cc66f-e0fb-44ed-a91f-804cc867faf6/26-6a742b0ff01f7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/974d97b2-353d-43b0-a3ca-16191aebaba8/26-6a742b10ba375.webp' /></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cNHc4rtOBGE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T06:34:59+00:00</updated>
        </entry>
    </feed>
