<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-07T10:17:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-seriously-injured-in-accident-death-1788774315"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-seriously-injured-in-accident-death-1788774315</id>
            <summary type="text">விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19
வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - துண...</summary>
            <content type="html"><![CDATA[<p>விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19
வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>
முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் கடந்த 04.09.2026 அன்று சைக்கிளில்
பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது எதிரே அதி வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியதில்
இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை
பலனின்றி நேற்றையதினம் (06.09.2026) உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>விபத்தில் படுகாயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக
தெரிவிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16aeea49-a153-4abd-b845-36e6ac3e3373/26-6a9e8d9288077.webp' /></p><p>இந்நிலையில், அவரது மரணம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:12:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள்! அதிகாரிகளிடம் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-to-freeze-the-assets-of-the-two-1788774781"></link>
            <id>https://tamilwin.com/article/action-to-freeze-the-assets-of-the-two-1788774781</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>அதன்படி, கடத்தல்காரர்களில் ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய, காந்திசபுர பகுதியில் உள்ள ஏக்கர் நிலம் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவற்றின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும், அதன் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார் தீவிர விசாரணை</h2><p>
</p><p>
மேலும், மற்றொரு கடத்தல்காரருக்கு எம்பிலிப்பிட்டிய, நியூ டவுன் பகுதியில் உள்ள 23.7 பேர்ச் நிலம் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவற்றின் பயன்பாட்டை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a5749b-b929-4b59-adcd-19202279c873/26-6a9e8b2f44bd7.webp' /></p><p>

இந்த கடத்தல்காரர்கள் தங்களின் நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் இந்த சொத்துக்களை வாங்கியிருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் குற்றங்களை முடிவுக் கொண்டு வர புதிய முயற்சி - இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-effort-to-end-corruption-crimes-1788774511"></link>
            <id>https://tamilwin.com/article/new-effort-to-end-corruption-crimes-1788774511</id>
            <summary type="text">ஊழல் மோசடி, போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக
எங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் மோசடி, போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக
எங்களுடன் இளைஞர் யுவதிகள் கைகோர்க்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் பிரதி தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில்
ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் அங்குராப்பணம் நேற்று(06.09.2026)
பாலமீன்மடுவில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p>

அதன் தலைவராக ஓய்வு
பெற்ற கிராம உத்தியோகத்தர் முத்துலிங்கம் செயலாளர் ஜேம்ஸ் ரூபசேன, பிரதி
தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில் ராஜ்குமார்
நியமிக்கப்பட்டனர்.</p><p>

 இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


அமைப்பின் நோக்கம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், 

மாவட்டத்தில் ஊழல், மோசடி, போதைப்பொருள் வியாபாரம், தொடர்பாக முக்கியமாக
இருக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையின் அடிப்படையில் இந்த
அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

எனவே பொது மக்கள் இந்த ஊழல் தொடர்பாக எங்களிடம் முறைப்பாடு செய்வதற்கு வெகு
விரைவில் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளோம். </p><p>இதில் எந்த விதமான அரசியல் சார்ந்த
அரசியல் செயற்பாடுகளும் இல்லை, இது முற்று முழுதாக அரசியலுக்கு அப்பாற்பட்டு
மக்களின் நலன் சார்ந்த ஒரு ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தி உரிய அதிகாரிகளின்
கவனத்திற்கு கொண்டு வந்து ஊழலை தடுப்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23963da5-71a5-4131-82c7-a0cb89eaa163/26-6a9e88c8bc59a.webp' /></p><p>

இன்று இந்த அமைப்பு உருவாக்கி தினமான நேற்று(06) அரச
திணைக்களங்கள் விடுமுறை நாளில் வன பரிபாலன சபை அரச வாகனத்தை எடுத்துக்கொண்டு
மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வழியிலே பாலமீன்மடுவில் அமைந்துள்ள ஒரு
தென்னந் தோட்டத்தில் திணைக்களத்தின் சீருடையை அணிந்து கொண்டு இருவர் நடந்து கொண்ட விதம் உயிராபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளது.</p><p> 


எனவே அரச வாகனத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாது மதுபோதைக்கு
பயன்படுத்திய இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறோம்.
</p><h2>
ஊழல் குற்றங்களை குறைக்க நடவடிக்கை</h2><p>

இவ்வாறு அரச வாகனத்தை மக்கள் வரிப்பணத்தில் அதற்கு எரிபொருளை நிரப்பி அரச
வாகனத்தில் மதுபானங்களை கொள்வனவு செய்து அரச சொத்தை வீணடித்து வரும் இவ்வாறான
சில அரச திணைக்கள ஊழல் மோசடி, அரச சொத்தை துஷ்பிரயோகம் செய்யும்
உத்தியோகத்தர்கள் தொடர்பாக வெளி கொண்டு வருவதன் மூலம் இந்த மோசடிகளை தடுக்க முடியும் என்பதற்காக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.</p><p>&nbsp;இன்று மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240b60b5-0449-4236-b839-b36316c33cfd/26-6a9e88c99276e.webp' /></p><p> </p><p>
அதேவேளை அரசாங்கம் முன்னெடுக்க இருக்கும்
பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் பாடசாலைக்குள் நுழையும்போது சோதனையிடும் திட்டத்தை கொண்டு வரவுள்ளது.
</p><p>
எனவே இலங்கையை ஒரு ஊழல் மோசடி போதைப் பொருள் அற்ற தூய்மையான நாடாக
கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு
அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்து இளைஞர் யுவதிகள் உங்கள்
பிரதேசத்தில் நடக்கும் ஊழல், மோசடி மற்றும் போதை வியாபாரம் போன்ற சட்டவிரோதமான
செயற்பாடுகள் தொடர்பாக தகவல்களை தந்து உதவினால் நாங்கள் பொலிஸாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத் தருவோம். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் யுவதிகள் எங்களுடன் கைகோர்க்கலாம் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிடுக்கு பிடியில் சிக்கியுள்ள நாமலின் பின்னணி! திடுக் தகவல்களை வெளியிட்ட பிமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/air-bus-case-proven-in-int-court-1788774281"></link>
            <id>https://tamilwin.com/article/air-bus-case-proven-in-int-court-1788774281</id>
            <summary type="text">எயார் பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பிலான பல முக்கிய தகவல்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன...</summary>
            <content type="html"><![CDATA[<div>எயார் பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பிலான பல முக்கிய தகவல்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
</div><div><br></div><div>ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் சவப்பெட்டிக்கு ஆணி அடித்த சம்பவமாக இந்த ஊழல் மோசடியை சுட்டிக்காட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
</div><div><br></div><div>லண்டன் நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</div><div><br></div><div> </div><div><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ef6ee1f-0563-4f43-955b-96d7032329ba/26-6a9e878b56f53.webp' /></div><div><br></div><div>எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்....</div><div><br></div><div>
 இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் விமானங்களை விற்பனை செய்யும் போது இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
</div><div><br></div><div>எயார் பாஸ் நிறுவனமானது மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல்களின் போது கையூட்டல் கொடுக்கப்பட்டமை லண்டன் மேல் நீதிமன்ற விசாரணைகளில் நிரூபிகக்ப்பட்டுள்ளது.</div><div><br></div><div>
</div><div>இந்த விசாரணைகள் ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டது.
ஏர்பஸ் கொள்வனவு செய்த போது 16 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.</div><div><br></div><div>
</div><div>2016 ஆம் ஆண்டு இந்த கொடுக்கல் வாங்கல்களை ரத்து செய்வதற்காக நட்டஈடாக 110 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.
</div><div><br></div><div>இந்த இரண்டு நடவடிக்கைகளின் போதும் ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
ஏயார்பஸ் கொள்வனவின் போதும் மோசடி இடம் பெற்றுள்ளது அதேபோன்று இந்த கொள்வனவை ரத்து செய்யும்போதும் மோசடி இடம் பெற்றுள்ளது.
</div><div><br></div><div>இந்த கொடுக்கல் வாங்கல்களின் மூலமே நாட்டின் விமான சேவை நிறுவனம் வீழ்ச்சி அடைந்தது.
ஆசியாவின் மிகவும் பழமையான ஓர் விமான சேவை நிறுவனமாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கருதப்படுகின்றது எனவே இந்த மோசடிகளின் மூலம் இந்த விமான சேவை நிறுவனத்திற்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டது.
</div><div><br></div><div>இது தேசிய ரீதியான ஓர் குற்றச் செயலாக கருதப்பட வேண்டும், இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒன்று, இரண்டு பேருக்கு மட்டுமல்லாமல் தொடர்புடைய சகலரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் இது சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அம்பலமான விடயமாகும்.
</div><div><br></div><div>எனவே இதை நாம் பழிவாங்கல்கள் மேற்கொள்கிறோம் என குற்றம் சுமத்த முடியாது.</div><div><br></div><div>
சர்வதேச நீதிமன்றங்களில் இந்த ஊழல் மோசடி குறித்து வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட, பிரான்ஸ் நிறுவனம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கையில் சாட்சியமளித்துள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</div>]]></content>
            <updated>2026-09-07T09:44:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்டும் ஸ்கேனருடன் ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-hands-with-a-treasure-hunting-scanner-1788771911"></link>
            <id>https://tamilwin.com/article/five-hands-with-a-treasure-hunting-scanner-1788771911</id>
            <summary type="text">முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு
கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஐந்து சந்தேக
நபர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு
கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஐந்து சந்தேக
நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(06.09.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p> கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்


நெலுக்குளம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d5c65b7-c80a-49bc-8b15-5d0b06b24f6e/26-6a9e830578207.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும்
ஸ்கேனர் ஒன்றும் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பறி
முதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்களை இன்று(07.09.2026) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T09:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/corruption-allegations-against-kumara-jayakody-1788771840"></link>
            <id>https://tamilwin.com/article/corruption-allegations-against-kumara-jayakody-1788771840</id>
            <summary type="text">



அநுர அரசாங்கத்தின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வழக்கில் மேலதிக சாட்சியங்களை விசாரணை செய்யுமாறு கொழும்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>



அநுர அரசாங்கத்தின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வழக்கில் மேலதிக சாட்சியங்களை விசாரணை செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>

இன்று(07.06.2026) வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், நீதிமன்றத்தின் முன்பாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20f569f-d80b-4bed-aa39-00da1e343177/26-6a9e807d33e0a.webp' /></p><p> 

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி மேலதிக சாட்சியங்களை விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-09-07T09:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க மியாமி விமான நிலையத்தில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-miami-airport-in-us-1788771395"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-miami-airport-in-us-1788771395</id>
            <summary type="text">அமெரிக்க மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விபத்து நேற்று(06.09.2026) இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்துள்ளனர். </p><h2>

32 ஆண்டுகள் பழமையான விமானம் விபத்து</h2><p>
மேலும் சிலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து வந்த விமானம்,
தரையிறங்கும்போது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகிலுள்ள சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/778c03f7-9721-4aac-bef6-652ef3eb120a/26-6a9e7c9edd1f9.webp' /></p><p> </p><p>

இதேவேளை 21 ஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த இந்த போயிங் 767 விமானம் 32 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகின்றது. </p><h3>


200 அவசரகாலப் பணியாளர்களின் தீவிர முயற்சி</h3><p>
அத்துடன் சுமார் 200 அவசரகாலப் பணியாளர்கள் தீவிர முயற்சிக்குப் பின் தீயைக்
கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், விமானி, துணை விமானி மற்றும் கார்களில் இருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d45560b4-bcdd-46f4-8271-93b02e4a0c86/26-6a9e7c9fa4707.webp' /></p><p>

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை
(NTSB) விசாரணை நடத்தி வருகின்றது. 

விபத்து காரணமாக மியாமி விமான நிலையத்தில் 160க்கும் மேற்பட்ட விமானங்கள்
ரத்து செய்யப்பட்டு, பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு அமேசான் நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துள்ளதோடு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:58:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் இடம்பெறவுள்ள போராட்டம் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-special-screening-in-norway-ibc-tamil-1788770436"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-special-screening-in-norway-ibc-tamil-1788770436</id>
            <summary type="text">IBC தமிழ் மற்றும் &#039;Kollywood Entertainment Europe&#039; இணைந்து வழங்கும் &#039;போராட்டம்&#039; திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நோர்வேயில் நடைபெறவுள்ளது.

ராஜ் சிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>IBC தமிழ் மற்றும் 'Kollywood Entertainment Europe' இணைந்து வழங்கும் 'போராட்டம்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நோர்வேயில் நடைபெறவுள்ளது.</p><p>

ராஜ் சிவராஜ் இயக்கத்தில், பூவன் மதீசன் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்குகிறார்.</p><p>

இத்திரைப்படம் வருகின்ற ஒக்டோபர் 02 வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணிக்கு (20.00) ஒஸ்லோவில் உள்ள 'Nordisk Film Kino - Symra' திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbe5acc6-a825-4576-bb88-b86e0060633b/26-6a9e79c4cd8c8.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T08:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்சவின் மேல்முறையீடு திரும்பப்பெற அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-s-appeal-petition-withdrawn-1788767025"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-s-appeal-petition-withdrawn-1788767025</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், தனக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டை தொடர்வதை தடுக்கக்கோரி யோஷித ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மேல்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், தனக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டை தொடர்வதை தடுக்கக்கோரி யோஷித ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு&nbsp;திரும்பப்பெறப்பட்டுள்ளது. 

</p><p>அதன்படி, இன்று (07) மேல்முறையீட்டைத் திரும்பப்பெறுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை&nbsp;</span></p><p>அத்துடன், எதிர்காலத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், இதே விடயத்தை முன்வைக்க யோஷித ராஜபக்சவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdeda138-f3b9-4bfb-9921-bce60ae7f5a2/26-6a9e732bcd8fd.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T08:18:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை - கம்பளை வீதியில் நிலச்சரிவு: பொலிஸ் வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-on-kotmalai-gampola-road-1788767980"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-on-kotmalai-gampola-road-1788767980</id>
            <summary type="text">கொத்மலை - கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவுகள் காரணமாக பொலிஸ்
வாகனத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.&amp;nbsp;

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலை - கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவுகள் காரணமாக பொலிஸ்
வாகனத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.&nbsp;</p><p>

இந்த சம்பவம் இன்று(07.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>



டித்வா புயல் ஏற்பட்ட பாதிப்பு</h2><p>
டித்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொத்மலை - கம்பளை பிரதான வீதியின் பனங்கம்மன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக, அந்தச்
வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன் விளைவாக, பேருந்து
இல்லாததால், பனங்கம்மன பகுதியிலிருந்து கொத்மலை புதுநகரில் உள்ள காமினி
திசநாயக்க பாடசாலைக்கு வரும் குழந்தைகளும் ஆசிரியர்களும் நிலச்சரிவு ஏற்பட்ட
இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec48330a-a0c5-4bf4-b46c-44f3a2d2aaed/26-6a9e6f5d069fe.webp' /></p><p>
</p><p>
இதனை கருத்தில் கொண்டு கொத்மலை பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆய்வாளர் இந்திகா லலித்
மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகள், தங்களது இரண்டு பொலிஸ் வாகனங்களை
பயன்படுத்தி, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பாடசாலைக் குழந்தைகளையும்
ஆசிரியர்களையும் வாகனங்களை பாடசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை
எடுத்திருந்தனர்.
</p><p>
கொத்மலை - கம்பளை பிரதான வீதியின் பனங்கம்மன பகுதியில்
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பேருந்து சேவையை கொத்மலை பணிமனை இன்னும்
தொடங்காததால், பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இந்தச் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். </p><h2>

பொலிஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை</h2><p>
இது தொடர்பாக நாங்கள் வினவியதற்குப் பதிலளித்த கொத்மலை காவல்
நிலையப் பொறுப்பாளர், தாங்கள் கொத்மலை பணிமனை மேலாளருடன் இந்த விடயம் குறித்து
விவாதித்ததாகவும், (07) ஆம் திகதி பிற்பகலில் இருந்து கொத்மலை நியூ
டவுனிலிருந்து நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்குப் பேருந்து சேவையை இயக்க பணிமனை மேலாளர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/334d6103-a9be-4a7d-aa56-3d9c9b35fdca/26-6a9e6f5ddac9b.webp' /></p><p>

இந்த பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவைத் தொடர்ந்து, 2026
ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் மீண்டும்
நிலச்சரிவு மற்றும் வீதி வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.</p><p>

வீதி சேதமடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தற்காலிக மரக்கட்டைகளைப் பயன்படுத்தி மிகவும் ஆபத்தான முறையில் இப்பகுதியைக் கடந்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0adc3a0f-2a80-482b-b7ac-23944b3af55c/26-6a9e6f984877b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/317493b1-6813-41b8-bae9-3cb592d3a457/26-6a9e6f5ea7a6b.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நாளை மறுதினம் சில பாடசாலைகளுக்கு விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-holiday-jaffna-district-1788765822"></link>
            <id>https://tamilwin.com/article/school-holiday-jaffna-district-1788765822</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம்
மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை
மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம்
மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை
மறுதினம்(09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி
அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
வழங்குமாறு ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த
விடயம் தொடர்பில் ஆளுநராாா பரிசீலிக்கப்பட்டது.</p><h2>குறித்த விடுமுறைக்கு பதிலாக&nbsp;</h2><p>யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர்
கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம்
விசேட விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
அறிவுறுத்தியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9fab81b-2d70-4d3e-a1d2-de0988d05cc6/26-6a9e6a44badb3.webp' /></p><p>
அதேவேளை, குறித்த விடுமுறை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை
ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள
வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IC0q81wY66A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788764910"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788764910</id>
            <summary type="text">மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="font-size: 14px;">கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.</span></p><p>&nbsp;</p><h2>02.09.2026 ஆம் திகதி ஏற்பட்ட சர்ச்சை..&nbsp;&nbsp;</h2><p>அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார் என்ற செய்தி (02.09.2026) <a href="https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216" target="_blank"><b>எமது தளத்தில்</b></a> செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டிருந்தது.</p><p>குறித்த திகதியில்&nbsp;மட்டக்களப்பு பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்யவும், கைது செய்யவும் தயக்கம் காட்டிய நிலையில் எமது தளத்தில் செய்தி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இந்த சூழலில் எமது தளத்தில் வெளியான குறித்த&nbsp;காணொளியை அடிப்படையாக வைத்து இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_taHX-CZ18s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயால் இவ்வருடம் இதுவரை 73 பேர் உயிரிழப்பு! 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/73-people-have-died-from-dengue-so-far-this-year-1788765744"></link>
            <id>https://tamilwin.com/article/73-people-have-died-from-dengue-so-far-this-year-1788765744</id>
            <summary type="text">இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாடு முழுவதும் இதுவரை 96 ஆயிரத்து 228 டெங்கு நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர் என்றும் அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
செப்டெம்பர் மாதத்தின் முதல் நான்கு நாள்களில் மாத்திரம் 737 டெங்கு நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர்.</p><h2>அதிகமான நோயாளிகள்..&nbsp;</h2><p>மாகாண ரீதியில், மேல் மாகாணமே அதிகளவான டெங்கு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd0cf2e7-dd1a-414e-b912-df76e19c0607/26-6a9e69dff345f.webp' /></p><p>
</p><p>நாட்டில் பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.84 சதவீதமானோர், அதாவது 50
ஆயிரத்து 851 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளனர்.
</p><p>
அதேவேளை, தென் மாகாணத்தில் 13 ஆயிரத்து 950 பேரும், மத்திய மாகாணத்தில் 8
ஆயிரத்து 818 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7 ஆயிரத்து 925 பேரும் டெங்கு
நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T07:38:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை சீர்ப்படுத்த நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/improve-transport-service-nuwara-eliya-bus-stand-1788763950"></link>
            <id>https://tamilwin.com/article/improve-transport-service-nuwara-eliya-bus-stand-1788763950</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில்
பேருந்துகள் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு
சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில்
பேருந்துகள் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு
சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸ்
பிரிவினர் மற்றும் மத்திய மாகாண போக்குவரத்துச் சபை அதிகாரிகள் பேருந்து சேவை
வழங்குநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் தனியார் பேருந்துகள், இன்று(07.09.2026) நுவரெலியா பிரதேச போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய
மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் சாலை ஆய்வாளர்களால் திடீர்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
</p><h2>பயணிகள் பாதுகாப்பாக ஏறி</h2><p>
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பேருந்து சேவைகளை மேலும் ஒழுங்குபடுத்தி, பயணிகளுக்கு பயனுள்ள போக்குவரத்து
சேவையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d2c20e2-348f-460c-8725-a2939ac7e0e8/26-6a9e655dda4a3.webp' /></p><p>இதில் பேருந்துக்காகக் காத்திருக்கும் போது முறையான வரிசையைப் (Queue)
பின்பற்றுதல், பேருந்தை அதற்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடப் பெட்டிக்குள் சரியாக
நிறுத்த வேண்டும். </p><p>வீதியின் நடுவில் நிறுத்தக் கூடாது, பயணிகள் பாதுகாப்பாக
ஏறி, இறங்கும் வரை பேருந்தை முழுமையாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும்,
பேருந்தில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட
ஒலியெழுப்பிகள் (Horns) மற்றும் அதிக சத்தம் எழுப்பும் உதிரிபாகங்களைப்
பயன்படுத்துவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார்
எச்சரித்துள்ளனர்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகள் உரிய முறையில் சென்று
கொடுக்கப்பட்டுள் ள நேரத்தில் தரித்து நின்று, அங்கு காத்திருக்கும் பயணிகளை
ஏற்றிச் செல்வதுடன், பயணிகளுக்குத் தேவையான சரியான பயணத் தகவல்கள் மற்றும்
வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56cdc3d9-9391-47ed-b192-ba070cd547d7/26-6a9e655eb82ab.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பேருந்து தரிப்பு நிலையங்களுக்கு வெளியே பயணிகளை ஏற்றிச் செல்வதைத்
தவிர்த்து, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்திற்கொள்ளவு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலே குறிப்பிட்ட அனைத்து அறிவுறுத்தல்களுக்கு இணங்கிச் செல்லத் தவறும்
பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T07:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சந்திக்க அடுத்தடுத்து சிறைச்சாலைக்கு சென்ற அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-went-to-prison-another-to-meet-namal-1788763332"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-went-to-prison-another-to-meet-namal-1788763332</id>
            <summary type="text">தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்திக்க அரசியல்வாதிகள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று வருவதாக தகவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்திக்க அரசியல்வாதிகள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

எயார்பஸ் ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்சவின் நலம்&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் நலம் குறித்து விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு இன்று காலை சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a5f4ac-e999-4cff-b225-0ace2fc35d63/26-6a9e61d717af1.webp' />&nbsp;</p><p> 

இதனையடுத்து பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவும் நாமல் ராஜபக்சவை சந்திக்க சற்றுமுன் வெலிக்கடை சிறைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் நலன் குறித்து விசாரிப்பதற்காக அவர் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தனவும் வெலிக்கடை சிறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நேற்று முன் தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:05:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயது மகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-arrested-for-killing-father-1788764543"></link>
            <id>https://tamilwin.com/article/son-arrested-for-killing-father-1788764543</id>
            <summary type="text">சொந்தத் தந்தையைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை, உக்குவளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொந்தத் தந்தையைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
மாத்தளை, உக்குவளை - குறிவல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
இச்சம்பவத்தில் உக்குவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
</p><p>தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே, மகன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
கைது செய்யப்பட்ட 16 வயது சந்தேகநபர் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் அடைத்து வீழ்த்த முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-not-down-1788763973"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-not-down-1788763973</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்து வீழ்த்தி விட முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்து வீழ்த்தி விட முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>வெலிக்கடை சிறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை பார்வையிட சென்ற போது ஊடகங்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.</p><p>
அரசியலில் மரணிப்பதற்கும் சிறையில் செல்வதற்கு அடைபடுவதற்கு அஞ்சாதவர்களினால் மட்டுமே ஆபத்துக்களை எதிர்நோக்கி முன்னோக்கி செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6298575-7142-496a-aea7-0005f40c9241/26-6a9e5f47149da.webp' /></p><p>
</p><p>துரதிஸ்டவசமாக அவ்வாறு தைரியமானவர்கள் அரசியலில் வெகு சிலரே உள்ளதாகவும் அவ்வாறான தைரியமான ஒருவரே நாமல் ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்த விடயத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்பதே தென்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நாமல் ராஜபக்சவை பொய்யான ஓர் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைப்பதற்கான முயற்சி மூலம் ஜனாதிபதிக்கு இந்த விடயம் புரியவில்லை என்பது புலனாகின்றது என உதய கமன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T06:53:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த இலங்கை அகதிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-refugee-in-sea-off-thalaimannar-1788763005"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-refugee-in-sea-off-thalaimannar-1788763005</id>
            <summary type="text">இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட 11 பேருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தினால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட 11 பேருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த சம்பவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள் மணல் தீவுகளில் சிக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


குழந்தைகள் உட்பட 11 பேர் மீட்பு</h2><p>

தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, மணல் தீவுகளில் நின்ற 2 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5
சிறுவர்கள் அடங்கலாக 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d5a8870-e301-4275-855f-06b4585776da/26-6a9e5c60a30a8.webp' /></p><p> </p><p> 

இதனைத் தொடர்ந்து, இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.</p><p>

இவ்வாறு மீட்கப்பட்ட 11 பேரும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்ட நிலையில், நேற்று(06.09.2026) மன்னார் பதில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். </p><h2>

நீதிமன்ற உத்தரவு</h2><p>

இதன்போது, மீட்கப்பட்ட 11 பேரில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தலா 2
இலட்சம் ரூபா ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்னார் பதில் நீதிவான், அடுத்த
தவணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்கும்போது கிராம சேவகர்களிடம் பதிவு செய்து,
அதற்கான பதிவுகளை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78dc3f70-d035-43b7-99a4-74a12f96322a/26-6a9e5c615de3e.webp' /></p><p> </p><p>அத்துடன், , வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு மன்னார் பதில் நீதிவான்
ஒத்திவைத்தார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் - மனோ கணேசன் எம்.பி முழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-defeated-election-itself-mano-ganesan-1788761977"></link>
            <id>https://tamilwin.com/article/government-defeated-election-itself-mano-ganesan-1788761977</id>
            <summary type="text">சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக
வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக
ரீதியிலான தேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக
வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக
ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும் தமிழ்
முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் நான்காவது
தேசிய மாநாடு நேற்றுமுன்தினம்(05.09.2026) இலங்கை மன்றக் கல்லூரியில்
நடைபெற்றது. </p><p>அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்
கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எந்தவித அச்சமும் இல்லை</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும்
மத்தியில் எதிர்க்கட்சிகள் செயற்பட வேண்டியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e94664-008e-4acc-853e-4c3c8f217034/26-6a9e5c5f32917.webp' /></p><p>இரண்டுக்கு மூன்றாக
வளைந்துகொடுக்குமாறு எமக்குக் கூறப்பட்டால், அதற்கு அஞ்சி வளைந்துகொடுக்க
வேண்டிய அவசியமோ, சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியமோ எமக்குக்
கிடையாது. </p><p>எமக்கு எந்தவித அச்சமும் இல்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள
விரும்புகின்றேன்.</p><p>அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்தைப்
பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்தே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
</p><p>அஞ்சுவதும் இல்லை, வளைந்துகொடுப்பதும் இல்லை என்பதில் நாம் மிகவும் உறுதியாக
இருக்கின்றோம்.

வேறுவேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளாகிய எமக்குள் கருத்து
வேறுபாடுகளும் உள்முரண்பாடுகளும் காணப்படலாம். </p><p>ஆனால், தனிப்பட்ட அல்லது கட்சி
நலன்களுக்கு அப்பால் தேசியப் பற்றும் நாட்டின் ஜனநாயக உரிமைகளும் எமக்கு மிக
முக்கியமாகும். அந்த வகையில், மக்கள் நலன் சார்ந்து நாம் கொள்கை ரீதியாக
இணைந்து செயற்படுவதில் எந்தவிதப் பிரச்சினையோ அல்லது தயக்கமோ எமக்கு இல்லை.&nbsp;</p><h2>தேர்தலில் வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பம்</h2><p>அதேவேளை, மக்கள் ஆணையினால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்றைச்
சட்டவிரோதமான முறையிலோ, வன்முறைகள் மூலமாகவோ அல்லது வீதியில் இறங்கி கலவரங்களை
ஏற்படுத்தியோ நாம் ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/851f1f02-395e-4708-a167-3627d0ba9478/26-6a9e5c5fdf8b4.webp' /></p><p>
எமது கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களோ அல்லது கட்சிகளோ வரலாற்று ரீதியாக அவ்வாறான
வன்முறை அரசியலை முன்னெடுத்ததும் இல்லை, அதனை ஆதரித்ததும் இல்லை. </p><p>ஆனால், அரசை
நடத்தி வரும் தற்போதைய ஆட்சியாளர்களே கடந்த காலங்களில் வீதிகளில் இறங்கி
ஆர்ப்பாட்டங்களையும் கலவரங்களையும் செய்து, அன்றைய அரசுகளை நிலைகுலையச்
செய்தனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
</p><p>
எனவே, எமது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து யாரும் தேவையின்றிப்
பதற்றமடையவோ அல்லது தேவையற்ற அச்சம் கொள்ளவோ வேண்டியதில்லை.&nbsp;</p><p>அரசமைப்புக்கு உட்பட்டு, தேர்தல் மூலம் ஜனநாயக வழியிலேயே நாம் இந்த அரசி
வீழ்த்துவோம். அது அரசமைப்பு ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கும் இந்த நாட்டின்
மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையாகும்.
</p><p>
சரியான முறையில், சட்டபூர்வமான தேர்தல் களத்திலேயே இந்த அரசைத் தோற்கடிப்போம்
என்ற செய்தியை உறுதியாகக் கூற விரும்புகின்றோம்.

தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான நிர்வாக நகர்வுகளும் முடிவுகளுமே, அவர்களைத்
தேர்தலில் வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தித் தரும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T06:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினிக்குப் பதில் கோட்டாபயவை களமிறக்க மொட்டுக் கட்சி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-replaces-limini-1788750677"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-replaces-limini-1788750677</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்குள் இழுத்து வர மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்குள் இழுத்து வர மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>
இலங்கையின் முப்படைகள், அவர்களின் குடும்பத்தார் மட்டுமன்றி பெரும்பான்மை இன சிந்தனைக் கொண்ட சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தனி செல்வாக்கொன்று உள்ளது.</p><h2>மீண்டும் கோட்டாபய&nbsp;</h2><p>
</p><p>
கடந்த காலங்களில் மொட்டுக் கட்சியின் வாக்கு வங்கியில் குறித்த பிரிவின் வாக்குகள் கணிசமான செல்வாக்குச் செலுத்தியிருந்தன.</p><p>

இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களின் போது அதனை மீண்டும் மொட்டுக் கட்சியின் வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34630ec-e281-4d11-9381-78234873537a/26-6a9e385eef912.webp' /></p><p>
</p><p>
அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதரபுரத்தில் ஆரம்பமாகவுள்ள மொட்டுக்கட்சியின் மக்கள் போராட்டப் பேரணி தொடக்கம் ஏனைய முக்கிய நிகழ்வுகளில் கோட்டாபய ராஜபக்சவை கலந்து கொள்ள வைக்கும் தீர்மானத்தை மொட்டுக் கட்சி மேற்கொண்டுள்ளது.
</p><p>
அதே நேரம் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க, ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்தவர் என்ற வகையில் அவர் அரசியல் களத்தில் பிரபலம் பெறுவதை ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கிய சக்திகள் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T06:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய ஆவணங்களுடன் இறுதிக்கட்டத்தில் எயார்பஸ் விவகாரம்! மற்றுமொரு ராஜபக்சவை கைது செய்ய களமிறங்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-case-5-countries-investigation-of-bribery-1788750575"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-case-5-countries-investigation-of-bribery-1788750575</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த விவகாரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள&nbsp;விசாரணை </h2><p> 

இந்நிலையில், அஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச உதவியுடன் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/967c6952-b27e-4958-b1f2-cdfa9fd9fee8/26-6a9e584c51a7b.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இந்த பரிவர்த்தனை தொடர்பான அனைத்து ஆவணங்கள், மின்னஞ்சல்கள், கணக்கு விவரங்கள் போன்றவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
</p><p>
மேலும், விசாரணையின் போது, ​​நாமல் ராஜபக்சவிற்கு எதிராக கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யும் எயார்பஸ் (Airbus) ஒப்பந்த ஊழல் வழக்கில், நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த வேளையில், கபில சந்திரசேன மே 08 அன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.</p><p>

கைது செய்யப்பட்ட போது கபில சந்திரசேன நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மற்றும் அதன் பின்னணியில் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.</p><h2>சந்தேகநபர்களுக்கு திறந்த பிடியாணை&nbsp;</h2><p> </p><p>

இதற்கிடையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28650489-31c3-4f75-b672-3e511daf1bb2/26-6a9e584d02872.webp' />&nbsp;</p><p>
</p><p>
பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்து நாட்டிற்கு திரும்பக்கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த விசாரணையில், மற்றொரு சந்தேகநபரான ஷமிந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும், கேள்விக்குட்பட்ட எயார்பஸ் பரிவர்த்தனை தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க எயார்பஸ் தாய் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 அதன்படி, விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எயார்பஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 3 முறை அந்நாட்டிற்குச் சென்று 4 வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p> </p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T06:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளை அச்சுறுத்தும் போதைப்பொருள்..! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drugs-threatening-schools-shocking-information-1788760015"></link>
            <id>https://tamilwin.com/article/drugs-threatening-schools-shocking-information-1788760015</id>
            <summary type="text">கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகள் மட்டுமன்றி, கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் போதை மாத்திரைகளின் பரவல் விரிவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகள் மட்டுமன்றி, கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் போதை மாத்திரைகளின் பரவல் விரிவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>40,000 கைதிகள் தற்போது சிறைச்சாலையில்</h2><p>தற்போது சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70 சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8420115f-c35a-44be-8703-82b6fbbdd8db/26-6a9e559366b75.webp' /></p><p>
</p><p>
அவற்றில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 40,000 கைதிகள் தற்போது சிறைச்சாலைகளில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T06:11:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி சோதனை.. 7 சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seven-suspects-arrested-with-drugs-1788760593"></link>
            <id>https://tamilwin.com/article/seven-suspects-arrested-with-drugs-1788760593</id>
            <summary type="text">அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட
சிறப்புச் சோதன நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட
சிறப்புச் சோதன நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 8000
மில்லிகிராம் ஹெரோயினுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>

திஸ்ஸபுர பாலம் கடௌரா சந்தி அருகில் 2,800 மில்லிகிராம் ஹெரோயினுடன் 21 வயது
இளைஞன் கைது செய்யப்பட்டார்.</p><h2>சோதனை நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
பாலம் கண்டுவ பகுதி மின்மாற்றி அருகே ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த
சமனபெட்டாவைச் சேர்ந்த நபர் 3000 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் கடத்தலுக்குப்
பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee02fca-8c96-486c-bde4-794c1f679e35/26-6a9e534b62cec.webp' /></p><p>
</p><p>
பிரிட்ஜ் கேம்ப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் 2,200 மில்லிகிராம்
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உஹன பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;உஹன சோதனையை முடித்துவிட்டு பொலிஸார் திரும்பியபோது, கரங்கவா கிராமத்தில்
சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வரைச் சோதனையிட்டனர்.</p><p> இதன்போது அவர்களிடம்
இருந்து முறையே 100, 110, 90 மற்றும் 95 மில்லிகிராம் வீதம் மொத்தம் 395
மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
</p><p>
அம்பாறை நகரைச் சேர்ந்த இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு,
மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T06:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலுக்கு சிறப்பு அனுமதி! சிறைக்கூடத்திற்கு விசேட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-is-allowed-to-receive-food-from-home-1788759615"></link>
            <id>https://tamilwin.com/article/namal-is-allowed-to-receive-food-from-home-1788759615</id>
            <summary type="text">
கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின்தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு, வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின்தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு, வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.</p><h2>சந்திப்பதற்கு அனுமதி&nbsp;</h2><p> </p><p>

மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba668078-6957-4260-94ec-893bde825494/26-6a9e52b3ea9cf.webp' /></p><p> 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p> 

இதேவேளை, நாளைய தினம்(08.09.2026) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் நாமல் ராஜபக்ச கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p><p> 


</p>]]></content>
            <updated>2026-09-07T05:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் பரவும் குற்றச்சாட்டு - விளையாட்டுத்துறை அமைச்சர் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sports-minister-denies-spreading-allegations-1788757688"></link>
            <id>https://tamilwin.com/article/sports-minister-denies-spreading-allegations-1788757688</id>
            <summary type="text">தனக்கு பாதணிகளோ அல்லது ஈட்டியோ இல்லை என்றும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை
என்றும் தடகள வீரர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்துறை அமைச்சர்
சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனக்கு பாதணிகளோ அல்லது ஈட்டியோ இல்லை என்றும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை
என்றும் தடகள வீரர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்துறை அமைச்சர்
சுனில் குமார கமகே முற்றாக நிராகரித்துள்ளார்.
</p><p>
குறித்த வீரர் ஏற்கனவே தேசிய அணியில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தேவையான
அனைத்து விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><h2>அரசாங்கத்தின் உதவி</h2><p>
</p><p>
இதேவேளை 'மிஷன் ஒலிம்பிக் 2028' திட்டத்தின் கீழ் தடகள வீரர்களுக்கு மாதம் ரூ.
110, 000 முதல் ரூ. 210, 000 வரை நிதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3807664d-42a1-4016-9602-0fdfdb9f4b6c/26-6a9e4d1c32b7a.webp' /></p><p>
</p><p>
மேலும் சுமார் 370 வீரர்களுக்கு மாதம் ரூ. 60000 ஊட்டச்சத்து உதவித்தொகையும்,
1,500 பாடசாலை மாணவர்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித்தொகையும் அரசாங்கத்தால்
வழங்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இந்த நிலையில் அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு இதுபோன்ற தவறான தகவல்களை
சமூக வலைத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ பரப்புவது உண்மைக்கு புறம்பானது என
அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2275501826578633%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-07T05:35:33+00:00</updated>
        </entry>
    </feed>
