<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-24T17:41:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றியில் முடிந்த 200ஆவது உயிர் காக்கும் முயற்சி.. கனடாவிலிருந்து வந்த உதவிக்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/quality-baker-in-canada-batticaloa-lady-operation-1784912299"></link>
            <id>https://tamilwin.com/article/quality-baker-in-canada-batticaloa-lady-operation-1784912299</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை - முனைக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின்&amp;nbsp;முழு சிகிச்சைச் செலவையும் கனடா - ஸ்கார்பாரோவில் அமைந்துள்ள குவாலிட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை - முனைக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின்&nbsp;முழு சிகிச்சைச் செலவையும் கனடா - ஸ்கார்பாரோவில் அமைந்துள்ள குவாலிட்டி பேக்கரி உரிமையாளர்களான பிரான்சிஸ், ஜமுனா அந்தோணிப்பிள்ளை தம்பதியினர் உதவியுள்ளனர்.</p><p>இளம் பெண் குழந்தையின் தாயாரான வசந்தி அமல்ராஜ் என்பவரின் உயிரைக் காப்பாற்றும் நோக்கிலேயே, அவர்கள் இந்த உதவியை செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நன்றி தெரிவிப்பு&nbsp;</h2><p>
இறைவனின் பேரருளாலும், கொடையாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தாராள மனதாலும், தமது 200ஆவது உயிர் காக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமைப்பினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a02dc6bf-8c73-4914-bdc7-f0c7968182f9/26-6a63a0cfc9503.webp' /></p><p>

இந்தக் கடினமான பயணத்தில் உறுதுணையாகவும் பலமாகவும் இருக்கும் அனைத்துக் கருணை உள்ளங்களுக்கும் தமது ஆழ்ந்த மற்றும் பணிவான நன்றிகளை அவர்கள் உரித்தாக்கியுள்ளனர்.
</p><p>
அத்துடன், அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த Dr. காந்திஜி, Dr. லூஷாந்தா, Dr. அருள்நிதி ஆகியோருக்கும், லங்கா - மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நிர்வாகம் மற்றும் மருத்துவக் குழு உறுப்பினர்களுக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
</p><p>மக்களின் நம்பிக்கையே எங்களது நோக்கம், இணைந்து செயல்பட்டு, நாம் தொடர்ந்து பல உயிர்களைக் காப்பாற்றுவோம் என்றும் குறித்த அமைப்பினர் உறுதியளித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T17:29:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்காது எனது வீட்டில் துண்டித்தது ஏன் என கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyer-filles-case-against-mahinds-utility-bill-1784913369"></link>
            <id>https://tamilwin.com/article/lawyer-filles-case-against-mahinds-utility-bill-1784913369</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வீராக்கெட்டிய இல்லத்தில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌சவின் திருமண விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7c2482-add6-4ea3-ac98-fd7e86f2b596/26-6a639ddab658c.webp' /></p><p> </p><p>
இம்மனு ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> 
விசாரணையின் போது கருத்துக்களைக் கவனத்திற் கொண்ட நீதிபதிகள் அமர்வு, இலங்கை மின்சார சபை (CEB) தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதால், அதற்குப் பதிலாக உருவாகியுள்ள பதிலீட்டு நிறுவனத்தை இம்மனுவின் எதிர்மனுதாரராகச் சேர்ப்பதற்கு மனுதாரர் தரப்பிற்கு அனுமதி வழங்கியது. </p><p>
இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 04-ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.</p><p>
சட்டத்தரணி விஜித குமார என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் திருமண விழா 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 முதல் 15 வரை மஹிந்த ராஜபக்‌ஷவின் வீராக்கெட்டிய இல்லத்தில் நடைபெற்றது.</p><p> 
இந்த விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு ரூபா சுமார் 26.8 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட வேண்டியிருந்தது. </p><p>
செப்டம்பர் 12 முதல் 15 வரை வீராக்கெட்டிய இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பாதுகாப்பு விளக்குகள் வழங்குமாறு அப்போதைய மின்சக்தி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p> 
இதற்கமைய மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான கட்டணத்தை ராஜபக்‌ச குடும்பத்தினர் செலுத்துவார்கள் எனக் கூறப்பட்ட போதிலும், நீண்டகாலமாக அத்தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.</p><p> 
எதிர்மனுதாரர்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இலவசமாக மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மின்சார சபையின் இந்த பாரபட்சமான செயல்பாடு, அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என அறிவிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>
இதேவேளை, மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், நாமல் ராஜபக்‌ஷவின் திருமண விழாவிற்கான நிலுவையில் இருந்த மின்சாரக் கட்டணத்தைத் தாம் செலுத்திவிட்டதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T17:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரிச்சுமையால் திணறும் மக்கள்! அரசுக்கு ஆபத்தாகும் எதிர்காலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-struggling-tax-burden-government-sl-anura-1784908214"></link>
            <id>https://tamilwin.com/article/people-struggling-tax-burden-government-sl-anura-1784908214</id>
            <summary type="text">இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, நாட்டுமக்கள் மீது கடுமையான வரிச்சுமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>மேலும், அண்டை நாடான இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வரிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சர்வதேச நாணயநிதியம் நாட்டிற்கு வருகை தரும் போது இலங்கை பொருளாதாரம் மேம்பாடு அடைவதும் அதன்பிறகு நீண்ட காலத்தில்&nbsp;சர்வதேச நாணயநிதியம் நாட்டிற்கு வருகை தந்ததால் எந்த விதமான பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும் ஒரு ஆய்வில் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>மேலும், இந்த அரசாங்கம் மட்டுமல்ல, கடந்த கால அரசாங்கங்களும் நீண்ட காலத்தில் மிகப்பெரிய நன்மையை இலங்கைக்கு கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wSySGE4DOZE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T17:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா மற்றும் ரஷ்யாவிற்கு டிரம்ப் விடுக்கும் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-warns-china-russia-1784911457"></link>
            <id>https://tamilwin.com/article/trump-warns-china-russia-1784911457</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் போர் தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் போர் தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இடையில் தற்பொழுது நடைபெற்று வரும் போரில் சீனாவோ அல்லது ரஷ்யாவோ பங்கேற்கவில்லை என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், அந்த நாடுகள் இதில் தலையிட்டால் அது அவர்களுக்கு "மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dca82ed2-f194-45d2-915c-e556069fbe42/26-6a63966325f74.webp' /></p><p> </p><p>
இது குறித்து தமது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களுடனான பேச்சுவார்த்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
சீனாவின் பெய்ஜிங் நகரில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஈரானுக்கு எந்தச் சூழ்நிலையிலும் ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ போவதில்லை என ஜனாதிபதி ஷி ஜின்பிங் தம்மிடம் உறுதியளித்தார் எனவும் இதில் சீன நிறுவனங்களும் அடங்கும்எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதேபோல, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஈரானுக்கு ஆயுதங்களை விற்கப் போவதில்லை என் கூறியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>
சிலவேளகைளில் சீனாவோ அல்லது இதில் ஈடுபட்டால், அது அவர்களுக்கு மிகவும் மோசமானதாக முடியும். நிச்சயம் அது அவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவரைக் இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்தது.</p><p> 
இப்போரின் தொடக்கத்தில் வளைகுடா பகுதியில் உள்ள சி.ஐ.ஏ மையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு, ரஷ்யா இலக்கு தொடர்பான தகவல்களையோ அல்லது ட்ரோன் தொழில்நுட்பங்களையோ வழங்கி உதவியதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.</p><p> 
எனினும், இது குறித்த அறிக்கைக்கு கருத்து தெரிவிக்க ரஷ்ய அரசாங்கம் மறுத்துவிட்டது. 
ஈரானுக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய உதவியதற்காக ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T16:44:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு சொந்தமான காட்டு பகுதிக்குள் அத்துமீறிய நடவடிக்கை.. 9 பேர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nine-people-arrested-trespassing-govt-forests-1784910633"></link>
            <id>https://tamilwin.com/article/nine-people-arrested-trespassing-govt-forests-1784910633</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம்
பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம்
பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதியின்றி கட்டடம் அமைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>அரசிற்கு சொந்தமான குறித்த பகுதி தொடர்பாக நீதிமன்ற வழக்கு
நடைபெற்று வரும் நிலையில் எவரும் செல்வதற்கு அனுமதி
மறுக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>அதிகாரிகளுக்கு&nbsp;இடையூறு </h2><p>இந்நிலையில், அத்துமீறி கட்டட அபிவிருத்தி
நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாக வனவள திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22fe2ee1-6e33-42db-bfdb-c264c9709172/26-6a6395a316260.webp' /></p><p>இதன்போது, அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக சிறப்பு
அதிரடிப்படையினர் வரவழைக்கப்படுள்ளனர்.&nbsp;</p><p>இதனை அடுத்து 09 சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டு, பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>சந்தேக நபர்களை கிளிநொச்சி
மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான்
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூறாண்டுகள் பழைமையான புதிருக்கு விடை - இரண்டு சீனர்கள் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/answer-century-old-puzzle-2-history-winning-1784909658"></link>
            <id>https://tamilwin.com/article/answer-century-old-puzzle-2-history-winning-1784909658</id>
            <summary type="text">கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு சீனர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு சீனர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
</p><p>
சீனாவைச் சேர்ந்த 35 வயதான ஹோங் வாங்கி மற்றும் 37 வயதான யு டெங் ஆகிய
இருவருக்கும் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.</p><p>

100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் இருந்த கடினமான கணிதப்
புதிர்களுக்குத் தீர்வு கண்டதற்காக இவர்களுக்கு இந்த உயரிய விருது
கிடைத்துள்ளது.</p><p></p><h2>உலகளாவிய கணித வல்லுநர்கள்</h2><p>

இதில் ஹோங்வாங்கி, 1917இல் ஜப்பானிய கணிதவியலாளர் சோய்ச்சி காக்கியா
முன்வைத்த காக்கியா ஊசிப் புதிருக்கு முப்பரிமாண அடிப்படையில் விடை
கண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eedcce3f-8001-421e-b791-22d3ec9c77a9/26-6a63917a2e5ea.webp' /></p><p>

ஃபீல்ட்ஸ் மெடல் விருதைப் பெறும் வரலாற்றின் 3ஆவது பெண்மணி என்ற பெருமையை
ஹாங் வாங்கி பெற்றுள்ளதால், இச்சாதனை சீனாவில் பெரும் கொண்டாட்டமாக
மாறியுள்ளது.
</p><p>
6சீனாவில் பிறந்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் உயர்கல்வி கற்ற இவ்விரு
பேராசிரியர்களுக்கும் உலகளாவிய கணித வல்லுநர்கள் தங்களது வாழ்த்துகளைத்
தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:24:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemoration-those-massacred-black-july-1983-1784906685"></link>
            <id>https://tamilwin.com/article/commemoration-those-massacred-black-july-1983-1784906685</id>
            <summary type="text">1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(24) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(24) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.</p><p>

யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்பாக நினைவேந்தல் நடைபெற்ற
நினைவேந்தல் நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி
அஞ்சலி செலுத்தினர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரணிகளை அடக்குவதை விட்டு குற்றங்களைக் கட்டுப்படுத்துங்கள்! நாமல் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curb-opposition-crimes-namal-mp-government-1784905278"></link>
            <id>https://tamilwin.com/article/curb-opposition-crimes-namal-mp-government-1784905278</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினரை முடக்குவதிலேயே அரசு பிரதான கவனம் செலுத்தி வருகின்றது
என&amp;nbsp;ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினரை முடக்குவதிலேயே அரசு பிரதான கவனம் செலுத்தி வருகின்றது
என&nbsp;ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டினார்.</p><p>பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(24.7.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு,&nbsp; எதிரணிகளை அடக்குவதை விட்டு நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாதாள
உலகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துங்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>முறையான விசாரணை</h2><p>எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை விடுத்து,
முறையான விசாரணைகளை நடத்துமாறு அரசிடம் வலியுறுத்திய அவர், விவசாயிகள்,
மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு எதிராக
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/709eb8df-ba62-442b-8151-fb71f173fe28/26-6a63833ded34a.webp' /></p><p>
</p><p>நாட்டின் எதிர்கால அரசியலுக்கு இளைஞர் தலைமுறையின் பங்களிப்பு மிக அவசியமானது
என்று குறிப்பிட்ட அவர், அதற்கமைய தெய்வேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி மட்டத்தில் புதிய
இளைஞர் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை மோசமானவர் என கூறிய மகிந்த! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglasdevananda-exclusive-interview-video-tamil-1784905211"></link>
            <id>https://tamilwin.com/article/douglasdevananda-exclusive-interview-video-tamil-1784905211</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட தான் மோசமானவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை சில சந்தர்ப்பங்களில் கூறுவார் என ஈழ மக்கள் ஜனந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட தான் மோசமானவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை சில சந்தர்ப்பங்களில் கூறுவார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.</p><p>


எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,

தமிழ் கைதிகளின் கோரிக்கையை ஏற்று, விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்கச் சென்றபோது தான் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.</p><p>

இந்தத் தாக்குதல் மிகவும் திட்டமிட்டுக் கொலை செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
தான் எப்போதுமே தமிழ் மக்களின் நலன்களையே முதன்மையாகக் கொண்டு செயல்படுவதாகவும், அதிகாரத்தில் இருப்பது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே தவிர சுயநலத்திற்காக அல்ல.

சிறைச்சாலைக்குள் சிறிய கற்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தக் தாக்குதல் நடத்தப்பட்டது.
</p><p>
 இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிறைச்சாலை நிர்வாகத்தின் சில அதிகாரிகளின் பங்கு இருந்திருக்கலாம் என்றும், தன்னை உள்ளே வைத்து மரணமடைய வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பிலான முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RL2gNI_wZM0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:14:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடல் பதற்றம்: நன்னம்பிக்கை முனை வழியாக எண்ணெய் கப்பல்கள் பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-sea-tension-oil-tankers-rerouted-suez-canal-1784904032"></link>
            <id>https://tamilwin.com/article/red-sea-tension-oil-tankers-rerouted-suez-canal-1784904032</id>
            <summary type="text">ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெற்கு செங்கடலில் கப்பல் போக்குவரத்திற்கு
விடுத்துள்ள புதிய அச்சுறுத்தலைத் தொடர்ந்து, &#039;டார்ம் இன்னோவேஷன்&#039; என்ற
டேங்கர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெற்கு செங்கடலில் கப்பல் போக்குவரத்திற்கு
விடுத்துள்ள புதிய அச்சுறுத்தலைத் தொடர்ந்து, 'டார்ம் இன்னோவேஷன்' என்ற
டேங்கர் கப்பல் ஆசியாவிற்கான தனது பயணப் பாதையை மாற்றி அமைத்துள்ளது.
</p><p>
டென்மார்க் கொடியுடன் பயணிக்கும் இந்த எண்ணெய் பொருட்கள் ஏற்றிச் செல்லும்
கப்பல், சவூதி அரேபியாவின் 'யான்பு' துறைமுகத்தில் இருந்து சுமார் 5,00,000
பெரல் 'நாப்தா' எரிபொருளை ஏற்றிக்கொண்டு ஜப்பான் நோக்கிப் புறப்பட்டது.
</p><p>
இருப்பினும், பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தெற்கு செங்கடல்
வழியாகச் செல்வதைத் தவிர்த்து, சுயஸ் கால்வாய் மற்றும் ஆப்பிரிக்காவின்
நன்னம்பிக்கை முனை சுற்றியுள்ள நீண்ட கடல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக
கப்பலின் உரிமையாளரான 'டார்ம்' நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
சவூதி அரேபியாவிற்கு எதிராக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடற்படை முற்றுகையை
அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96814111-39e1-43f2-be6f-83c161b6b911/26-6a637ae083416.webp' /></p><p>
</p><p>
செங்கடலின் பாப் எல்-மந்தேப் நீரிணை வழியாகச் செல்ல முடியாமல் மாற்றுப்
பாதையைப் பயன்படுத்தும்போது, ஆசியாவிற்குச் செல்லும் எரிபொருள் கப்பல்களின்
பயண நேரம் மேலும் 30 நாட்கள் வரை அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>

முன்னதாக, ஏமன் கடலோரப் பகுதியில் ஹூதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களால்
சுயஸ் கால்வாய் வழியிலான கப்பல் போக்குவரத்து 50 சதவீதத்திற்கும் மேல்
குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T14:47:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழையும் மர்ம கும்பல் - அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/katunayake-airport-officers-to-be-transfer-1784871965"></link>
            <id>https://tamilwin.com/article/katunayake-airport-officers-to-be-transfer-1784871965</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க சுங்க அதிகாரிகள் குழுவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யத் தயாராகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க சுங்க அதிகாரிகள் குழுவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 போதைப்பொருட்கள், வெளிநாட்டு சிகரட்டுகள், சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை நாட்டுக்குள் கடத்த முயற்சித்ததை வெற்றிகரமாக முறியடித்து, அரச வருமானத்தை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிகாரிகளே இவ்வாறு மாற்றப்படவுள்ளனர். </p><p>அண்மையில் பதவியேற்ற சுங்கப் பணிப்பாளர், சில சுங்க தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் குறுகிய நோக்கங்களைக் கொண்ட சில நபர்களின் அழுத்தங்களே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.</p><p></p><h2>முக்கிய நோக்கம்&nbsp;</h2><p> </p><p>அத்துடன் திசை திருப்பல்கள் காரணமாக இந்த இடமாற்றங்களுக்கான பின்னணி தயாரிக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.</p><p> அண்மைக் காலமாக பெருமளவிலான கடத்தல்காரர்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைத்து மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர். </p><p>குறித்த அதிகாரிகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக இதற்கு முன்னர் பல்வேறு வணிக மற்றும் தனிப்பட்ட உறவுகளுடன் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சில அதிகாரிகளை மீண்டும் இந்த பதவிகளில் நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bb82d75-a8fe-4036-b8fe-af67d3d3a150/26-6a6351c99b008.webp' /></p><p> </p><p>கடந்த காலங்களில் விமான நிலையத்திற்குள் செயற்பட்ட ஊழல் முறைகள் மற்றும் சட்டவிரோத கடத்தல்களுக்கு மீண்டும் இடமளிப்பதே இந்த நடவடிக்கை பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாக இருக்குமா என்ற வலுவான சந்தேகமும் எழுந்துள்ளது.</p><p> அரச வருமானத்தை அதிகரித்தல், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் அரச நிறுவனங்களுக்குள் நிலவும் ஊழலை ஒழித்தல் என்பவற்றுக்கு தற்போதைய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. </p><p>இவ்வாறான பின்னணியில், இடம்பெறவுள்ள இவ்வாறான இடமாற்றங்களால் ஒட்டுமொத்த சுங்க அமைப்பின் நேர்மையான அதிகாரிகளின் சேவை ஊக்கம் வீழ்ச்சியடையக்கூடும் எனத் துறைசார் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p>you may like this..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/otC5_7BUI_A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-24T14:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-in-france-spain-40-000-people-evacuated-1784902224"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-in-france-spain-40-000-people-evacuated-1784902224</id>
            <summary type="text">தென்மேற்கு பிரான்ஸின் &#039;காப் ஃபெரெட்&#039; தீபகற்ப பகுதியில் காட்டுத்தீ மிக
வேகமாகப் பரவி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு
வருகின்றனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்கு பிரான்ஸின் 'காப் ஃபெரெட்' தீபகற்ப பகுதியில் காட்டுத்தீ மிக
வேகமாகப் பரவி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு
வருகின்றனர்.
</p><p>
இதுவரை 10,000 ஹெக்டேயர் பரப்பளவிலான அடர்ந்த வனப்பகுதிகள் தீயில் முழுமையாக
எரிந்து சாம்பலாகியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தீயின் அச்சுறுத்தலால் சுமார் 40,000 மக்கள் படகுகள் மற்றும் சாலைகள்
வழியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>காட்டுத்தீ</h2><p>
</p><p>
இதேபோல் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகிலும் காட்டுத்தீ பரவி
வருவதால், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசரநிலையை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06790fdf-fb83-46a9-a80e-efa2116568a2/26-6a637252a9a59.webp' /></p><p>
</p><p>
மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசும் காற்றும், 37 பாகை செல்சியஸ் வெப்பமும்
தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
</p><p>
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாகக் காட்டுத்தீ
தீவிரமடைந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியம் விசேட தீயணைப்பு விமானங்களை அனுப்பி
உதவி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T14:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வெளியான விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-announcement-for-students-al-examination-1784899986"></link>
            <id>https://tamilwin.com/article/special-announcement-for-students-al-examination-1784899986</id>
            <summary type="text">2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதனை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><p> </p><h2>பாடசாலை விண்ணப்பதாரர்கள்</h2><p>

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலையக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிக்கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2853c03c-c76b-4a2e-a3c8-5eee37b0bc40/26-6a637102c49d9.webp' /></p><p> 

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.</p><p></p><h2>விசேட அறிவிப்பு</h2><p> 

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் தமது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின், மேற்கூறிய இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் அவற்றை இணையவழியில் (Online) திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363d0e8a-ce5e-49b2-8cae-7ce11d33a721/26-6a63710374dee.webp' /></p><p> 

இந்த அனுமதி அட்டைத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்பதுடன், அந்தத் திருத்தக் காலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. </p><p>

இந்தப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம், 011-2784208 அல்லது 011-2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள், 011-2784422 என்ற தொலைநகல் (Fax) இலக்கம் மற்றும் gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பரீட்சைத் திணைக்களத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T14:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களுக்கு அனுமதி அளித்தால் தாக்குதல்: பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-if-permission-granted-to-us-bombers-iran-uk-1784901596"></link>
            <id>https://tamilwin.com/article/attack-if-permission-granted-to-us-bombers-iran-uk-1784901596</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் B-52 குண்டுவீச்சு
விமானங்கள் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என
ஈரான் எச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் B-52 குண்டுவீச்சு
விமானங்கள் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என
ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>

இங்கிலாந்தின் 'ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃபோர்டு' தளத்திலிருந்து அமெரிக்க விமானங்கள்
இயங்கினால், அந்த தளங்கள் தங்களின் தாக்குதலுக்கு உரிய இலக்காகும் என ஈரான்
கூறியுள்ளது.</p><p>

இதற்குக் பதிலளித்த பிரித்தானியா, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தங்கள் மீது
நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில்
இருப்பதாகக் கூறியுள்ளது.</p><p></p><h2>ஈரான் எச்சரிக்கை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல்களைப் பாதுகாக்க, அமெரிக்காவுடனான
தற்காப்பு ஒப்பந்தங்களின்படி தொடர்ந்து செயல்படுவோம் என பிரித்தானிய அரசு
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54aa064d-c904-4e69-b28d-b2fe078085ce/26-6a6370aa75869.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரித்தானியக் கூட்டுத் தளமான
'டியாகோ கார்சியா' மீது ஈரான் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியிருந்தது.</p><p>

அரசு ஆதரவு பெற்ற மறைமுகக் குழுக்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்
கொண்டுவரப்பட்ட புதிய சட்டப் அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஈரானின் புரட்சிகர
காவல்படைக்கு ஆதரவு அளிப்பதை பிரித்தானியா இந்த மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத்
தடை செய்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T14:03:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-excavation-work-temporarily-suspended-1784899267"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-excavation-work-temporarily-suspended-1784899267</id>
            <summary type="text">செம்மணி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன்(24.7.2026) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.&amp;nbsp;செம...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன்(24.7.2026) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.&nbsp;</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம்
வெள்ளிக்கிழமை, புதிதாக 01 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு
என்புகூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மூன்று என்புக்
கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p>
</p><p>
மேலும் 437ஆவது என்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புடன்
தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சான்று
பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eca330b-1f1a-4027-9e6a-5615e0f52840/26-6a636e1634c39.webp' /></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
480 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 479 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித் பிரேமதாச -சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய அரச தரப்பு எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajeev-amarasuriya-sajith-basl-1784888109"></link>
            <id>https://tamilwin.com/article/rajeev-amarasuriya-sajith-basl-1784888109</id>
            <summary type="text">எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய ஆகியோருக்கிடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையில் கொடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய ஆகியோருக்கிடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையில் கொடுக்கல் வாங்கல் ஒன்று அதாவது டீல் ஒன்று நடந்துள்ளதாக அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவிதான இன்று (24.07.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.</p><p>அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை நீடிப்பு விவகாரத்தில் தங்களுக்கு உதவி செய்யுமாறு நடத்தப்பட்ட இரகசி கலந்துரையாடலில் வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலின் போது மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை வழங்குவதாக சஜித் பிரேமதாச ரஜீவ் அமரசூரியவுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்</h2><p>இந்த கலந்துரையாடல் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.இந்த சட்டத்தரணிகள் சங்கம் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடாத்தான தலையீட்டிற்கு எதிராக, </p><p>அதாவது ராஜபக்ச ஆட்சியில் முழு நீதிமன்ற அமைப்பையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதம நீதியரசரை வெளியேற்ற முற்பட்ட போது, அதற்கு எதிராக நிமிர்ந்து நின்ற ஒரு சட்டத்தரணிகள் சங்கம் அன்று இருந்தது. </p><p>அதேபோல் தான், 'அரகலய' போராட்ட காலத்திலும் இந்நாட்டின் இலட்சக்கணக்கான பொது மக்களுக்காக நின்ற சங்கம் அது.
ஆனால் இன்று, அதன் தற்போதைய தலைவர் ஒரு சிறிய குழுவுடன் சேர்ந்து, முதலமைச்சர் பதவிக்காக முழுச் சட்டத்தரணிகள் சங்கத்தின் நோக்கத்தையும் காட்டிக்கொடுத்து, சஜித் பிரேமதாசவுக்கு பக்கச் சார்பாக செயற்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/143a6df2-3bc5-4774-9cf2-1fd937cb58e6/26-6a633b2fd16fe.webp' /></p><p>சட்டத்தரணிகள் சங்கத்தில் உள்ள சகோதர சட்டத்தரணிகளிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால்: உங்களுக்குப் புகழ்பெற்ற ஒரு வரலாறு உள்ளது. </p><p>நீங்கள் அநீதிக்கும் அநியாயத்திற்கும் எதிராக எப்போதும் நிமிர்ந்து நின்ற ஒரு சட்டத்தரணிகள் சங்கம். எனவே, தலைவரின் அடுத்த முதலமைச்சர் கனவுக்காக ஒரு சிலரின் நலனுக்காக உங்களின் அந்த கௌரவமிக்க சட்டத்தரணி பதவியை காட்டிக் கொடுக்காதீர்கள்.</p><p>&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமன் கடலில் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்: சோமாலியக் கொள்ளையர்களின் பிடியில் எம்.டி ஆசானா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cargo-ship-hijacked-in-the-sea-of-yemen-1784898115"></link>
            <id>https://tamilwin.com/article/cargo-ship-hijacked-in-the-sea-of-yemen-1784898115</id>
            <summary type="text">ஏமன் நாட்டின் ஏடன் வளைகுடாவில் பயணித்த &#039;எம்.டி ஆசானா&#039; (MT Asana) என்ற
எரிபொருள் மற்றும் இரசாயனப் பொருள் ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல்
கடத்தப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமன் நாட்டின் ஏடன் வளைகுடாவில் பயணித்த 'எம்.டி ஆசானா' (MT Asana) என்ற
எரிபொருள் மற்றும் இரசாயனப் பொருள் ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல்
கடத்தப்பட்டுள்ளது.
</p><p>
தன்சானியக் கொடியுடன் பயணித்த இந்த கப்பல், தற்போது சோமாலியக்
கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த கப்பலில் ஜெர்மனியைச் சேர்ந்த 8 பேர் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 10
பேர் உட்பட மொத்தம் 20 பணியாளர்கள் உள்ளனர்.</p><p></p><h2>அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
கப்பலில் உள்ள கொள்ளையர்களுக்குச் சிறிய படகுகள் மூலம் உணவுகள் கொண்டு
செல்லப்படுவதை உள்ளூர்வாசிகள் நேரில் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aea8c665-ae0d-4e25-8fdf-a67395a51b18/26-6a63650bb6592.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக 'கடல்சார் கடத்தல்' என ஐக்கிய இராச்சிய
கடல்சார் வர்த்தக நடவடிக்கைப் பிரிவு (UKMTO) உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
கடந்த 2008 முதல் 2018 வரை தீவிரமாக இருந்த சோமாலியக் கொள்ளையர்களின்
அச்சுறுத்தல், 2023க்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:14:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய 54 வயது நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/54-year-old-man-sentenced-20-years-in-prison-1784896756"></link>
            <id>https://tamilwin.com/article/54-year-old-man-sentenced-20-years-in-prison-1784896756</id>
            <summary type="text">2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால்
கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கிய 54 வயது பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால்
கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கிய 54 வயது பாதுகாவலரை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி
ஏ.ஏ. ஆனந்தராஜா குற்றவாளியாக இனம் கண்டு தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகியமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் புலன்
விசாரணைகளின் பிரகாரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த எதிரிக்கு எதிராக
வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><h2>14 வயதுடைய சிறுமி</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர்
திணைக்களத்தினால் குற்ற பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95911b4d-45de-4663-8349-68b62c297099/26-6a6362ff1307c.webp' /></p><p>
</p><p>குறித்த வழக்கானது விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் எதிரி
தலைமறைவாகியிருந்தார். </p><p>அதனை தொடர்ந்து எதிரி இல்லாத விளக்கத்துக்கு
நியமிக்கப்பட்ட இவ்வழக்கானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி ஸ்ரீ
சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தபட்டிருந்தது.</p><p></p><h2>மேல் நீதிமன்றம் அதிரடி</h2><p>
</p><p>
குறித்த விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா,

வழக்கு தொடுநர் தரப்பு குறித்த எதிரிக்கு எதிரான குற்ற சாட்டினை
சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாகவும் அதன் பிரகாரம் எதிரிக்கு 20
ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம்,
மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட
வேண்டுமென தீர்ப்பினை வழங்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4aea362-f9cf-48b2-8e35-1676f2dbf8d0/26-6a6362fe5fa1b.webp' /></p><p>
</p><p>
குறித்த குற்ற செயலின் போது எதிரியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல்
மற்றும் உளவியல் சித்திரவதைகள், குறித்த சிறுமி கர்ப்பம் தரித்தமை, எதிரி
வழக்கு விசாரணைகளில் இருந்து தலைமறைவாகியமை, சிறுமியின் பாதுகாவலரே
குறித்த செயலை புரிந்தமை போன்ற காரணிகள் எதிரிக்கு அதிகபட்ச தண்டனை
விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளது என மேல் நீதிமன்ற நீதிபதி ஏ ஏ
ஆனந்தராஜா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:05:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகினார் பங்களாதேஷ் ஜனாதிபதி ஷஹாபுதீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bangladesh-president-resigns-1784897235"></link>
            <id>https://tamilwin.com/article/bangladesh-president-resigns-1784897235</id>
            <summary type="text">பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><p>பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> 

2024ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்களின் போது நபர்களைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><h2>பதவி விலகல்</h2><p>

அந்த வழக்குகளை எதிர்கொள்வதற்காகத் தான் மீண்டும் பங்களாதேஷிற்கு வருகை தரவுள்ளதாக ஹசீனா வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்து சில நாட்களுக்குப் பின்னரே ஜனாதிபதியின் இந்த பதவி விலகல் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ce7f64-1eee-41af-a50f-4d70ef087f18/26-6a636179ede16.webp' /></p><p> </p><p>

மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ள பாராளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தீன் அகமட் திரும்பி வந்த பின்னர், ஜனாதிபதி தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T12:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையர் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-nadu-police-arrest-two-sri-lankan-trespasser-1784895822"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-nadu-police-arrest-two-sri-lankan-trespasser-1784895822</id>
            <summary type="text">தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமான முறையில் ஊடுருவிய
இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன்
பொலிசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமான முறையில் ஊடுருவிய
இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன்
பொலிசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>

குறித்த கைது நடவடிக்கையானது இன்று(24.07.2026) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>இருவர் கைது</h2><p>
</p><p>
இராமேஸ்வரம் - மரைன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்று பார்த்த போது இலங்கையைச் சேர்ந்த இருவர் வந்திருந்தது
தெரிய வந்துள்ளது.
</p><p>
இதையடுத்து இருவரையும் கைது செய்த மரைன் பொலிசார் இராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d97b0a3a-11e0-4229-ab1c-96d73fd47954/26-6a635acb3c11c.webp' /></p><p>

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை - வட்டாலை பகுதியைச்
சேர்ந்த லூசிநந்த்(30) மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(31)
ஆகியோர் என மரைன் பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>

மேலும், இவர்கள் இருவரும் நேற்று(23) இரவு மன்னார் - பேசாலை கடற்கரையில்
இருந்து 3 இலட்ச ரூபா பணம் கொடுத்து படகு ஒன்றில் புறப்பட்டு இன்று(24)
அதிகாலை சுமார் 4 மணி அளவில் தனுஷ்கோடி - கம்பிப்பாடு கடற்கரையில் வந்து
இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தமிழக பொலிசார்</h2><p>

இந்த இருவர் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள
அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர்கள் இருவர் மீதும்
போதைப் பொருள் கடத்தல் வழக்கு
மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் பல நிலுவையில் உள்ளதுடன், இலங்கையின்
போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்தமையும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c04b1615-bd7f-4c99-af40-fb85972b79d8/26-6a635aca8a0a5.webp' /></p><p>

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து கடல் வழியாக
தமிழகத்திற்குள் ஊடுருவி தமிழகம் அல்லது கேரளா மாநிலங்களில் சட்ட விரோதமாக
மறைந்திருக்கலாம் என்பதற்காக வந்திருக்கலாம் என தெரிய வந்தன்
அடிப்படையில் தொடர்ந்து இவர்களிடம் மத்திய மாநில பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
சட்டவிரோதமாக தமிழகத்திற்கு நுழைந்ததன் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன் இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு வழக்குகள் இலங்கை
நிலுவையில் உள்ளதால் இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப உயர்
அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.</p><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T12:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டு யானையுடன் வான் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-family-members-injured-in-wild-elephant-crash-1784893438"></link>
            <id>https://tamilwin.com/article/six-family-members-injured-in-wild-elephant-crash-1784893438</id>
            <summary type="text">அனுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர துருலிய சேவன அருகில்,
காட்டு யானையுடன் வான் ஒன்று மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர துருலிய சேவன அருகில்,
காட்டு யானையுடன் வான் ஒன்று மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6
பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் இன்று(24.07.2026) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மனித - யானை மோதல்</h2><p>
</p><p>

பாதுக்கப் பகுதியில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று அனுராதபுரம்
- குருநாகல் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென வீதியைக்
கடந்து சென்ற காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64cde805-d61e-4c3b-994e-334c9d4aebf7/26-6a6352da2edd2.webp' /></p><p>இந்த விபத்தில் வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இவர்களில் இருவரின்
உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்தப் பகுதியில் மனித - யானை மோதல் என்பது இன்று, நேற்று உருவான பிரச்சினை
அல்ல என்றும், கடந்த 18 வருடங்களாக இது தொடர்ந்தும் நீடித்து வருகின்றது
என்றும் கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p></p><h2>உடனடி தீர்வு</h2><p> </p><p>

எனினும், இதற்குரிய தீர்வுகளைப்
பெற்றுக்கொடுக்க வேண்டிய அதிகாரிகள் நீண்ட காலமாக அசமந்தப் போக்கில்
செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b1b9e03-9e2e-4377-99aa-6ed2367994d8/26-6a6352dad220d.webp' /></p><p>முன்பு விவசாயத்தை முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த இந்தப் பகுதி
மக்கள், தொடரும் யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது விவசாயக்
கைத்தொழிலைக் கூடக் கைவிடும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். </p><p>

எனவே,
உயிரிழப்புக்களைத் தவிர்க்கும் வகையில் மனித - யானை மோதலுக்கு உடனடியான
 தீர்வை வழங்குமாறு கிராம மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T12:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித ராஜபக்ச மீதான காணி அபகரிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-grabbing-case-against-yoshitha-1784893764"></link>
            <id>https://tamilwin.com/article/land-grabbing-case-against-yoshitha-1784893764</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்சவுக்கு எதிராகத்
தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்சவுக்கு எதிராகத்
தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை
ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில்
விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p></p><p>

இன்றைய நீதிமன்ற அமர்வின்போது பிரதிவாதியான யோசித ராஜபக்ச ஆஜராகியிருக்கவில்லை. அவர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி
சம்பத் மெண்டிஸ், யோசித ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு
காரணமாகவே அவரால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாமல் போயுள்ளது என்பதை குறிப்பிட்டார்.</p><h2>விசாரணையை&nbsp;ஒத்திவைக்குமாறு&nbsp;கோரிக்கை</h2><p> </p><p>அத்துடன், வழக்கு விசாரணையை வேறொரு தினத்துக்கு
ஒத்திவைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சட்டத்தரணியின் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட்
20ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</p><p></p><p> </p><p>மேலும், அன்றைய தினம் அந்த
வழக்கில் சாட்சியமளிக்க வேண்டிய கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துச்
சாட்சிகளையும் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நீதிபதி இதன்போது
அறிவுறுத்தினார்.
</p><p>
தெஹிவளை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் 100 கோடி ரூபாவுக்கும் அதிக
பெறுமதியைக் கொண்ட ஐந்து காணிகளைச் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியதாகக்
குற்றஞ்சாட்டப்பட்டு, சட்டமா அதிபரால் யோசித ராஜபக்சவுக்கு எதிராக இந்த
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T12:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் - யாழ் கடற்றொழில் சமாசத்தின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-on-border-crossing-indian-fishermen-jaffna-1784892086"></link>
            <id>https://tamilwin.com/article/fire-on-border-crossing-indian-fishermen-jaffna-1784892086</id>
            <summary type="text">எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய
கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய
கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்
சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
</p><p>
இன்று(24.07.2026) யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.</p><p></p><h2>இந்திய கடற்றொழிலாளர்கள்</h2><p>
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், </p><p>

இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள்
அத்துமீறி நுழைந்து எமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக
அழித்துவிட்டு செல்கின்றனர்.
</p><p>
இந்திய கடற்றொழிலாளர்களின் இத்தகைய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில்
இதனை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b56e8004-994e-404a-afe4-a69905a20af4/26-6a634c9a9c803.webp' /></p><p>
இந்திய தமிழக புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றதன் பின் அதிகளவிலான இந்திய
கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட
இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி
பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்தனர்.</p><p></p><h2>துப்பாக்கி பிரயோகம்&nbsp;</h2><p>
</p><p>

இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான வருகை எமது கடற்றொழிலாளர்களை வாழ்வாதார நீதியாக
பாதிப்பது மட்டுமல்லாது கடற்றொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு செல்லவும்
நிர்ப்பந்தித்துள்ளது.&nbsp;</p><p>
இலங்கை கடற்படையிடம் வினயமாக கேட்கிறோம்.&nbsp; எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களை
கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது அவர்களின்
வருகையை கட்டுப்படுத்துங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85629a08-c8b9-4037-82b4-0fa0288508f7/26-6a634c99caa31.webp' /></p><p>
</p><p>
எங்களால் இனியும் பொறுமை காக்க முடியாது நாட்டின் ஜனாதிபதியையும் துறைசார்
அமைச்சரையும் சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாக கூற இருக்கிறோம்.
</p><p>
சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை ஆகவே எமது கடற்பகுதியை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடம் உள்ள நிலையில் எல்லை
தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு
கட்டுப்படுத்துங்கள். நாங்கள் பக்க பலமாக இருப்போம் என 
குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T12:15:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கியவர்கள் மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்! அமைச்சர் சந்திரசேகரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-jaffna-public-library-talking-welfare-people-1784892909"></link>
            <id>https://tamilwin.com/article/fire-jaffna-public-library-talking-welfare-people-1784892909</id>
            <summary type="text">&quot;1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே
நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத்
தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>"1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே
நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத்
தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்" என்று
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்தார்.</p><p>

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்&nbsp; நடைபெற்ற சபை
ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு&nbsp;குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> கறுப்பு ஜூலை கலவரம்</h2><p>
</p><p>
அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,</p><p>
"1983 ஆம் ஆண்டில் நுவரெலியாவை எரித்துச் சாம்பலாக்கியது யார்? ஐக்கிய தேசிக்
கட்சியினரே எமது மக்களை நாசமாக்கினார்கள்.

பதுளையில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் ராணுவத்தினர் கோடு போட்டனர். அதன்
பின்னரே வந்த ஐதேக காடையர்கள் கடைகளை எரித்து நாசமாக்கினார்கள். பச்சிளம்
குழந்தைகளைக் கூட இந்தப் பாவிகள் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe5a587f-4cbb-4757-a99c-1a3e08d77a27/26-6a63510b83867.webp' /></p><p>
</p><p>
தோட்டத் தொழிலாளர்களைச் சீரழித்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான்.
அவர்கள் அவசரகாலச் சட்டத்தையும், கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும்
கொண்டுவந்தார்கள்.

1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் மோசடி செய்தனர்.</p><p></p><h2>யாழ். பொது நூலகம்</h2><p> எங்களின் இதயமாகக்
கருதப்பட்ட யாழ். பொது நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கியவர்களும் அவர்களே.

அக்காலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வடக்கு மக்களின்
விருப்பம் பிரதிபலிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1af7a4-3892-4533-ae41-958e21b1ff73/26-6a63510c3842b.webp' /></p><p> அதற்கு எதிராக எமது தலைவர் ரோஹண விஜேவீர வழக்கு
தாக்கல் செய்தார். அந்த வழக்கில் வெற்றி பெற்றிருந்தால், ஜனநாயக ரீதியில்
தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால், எமது கட்சியைத் தடை செய்தார்கள். </p><p>தேர்தல் நடத்தப்பட்டு எமது கட்சியைச்
சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தால், ஜே.ஆரின்
அடக்குமுறைகளை எதிர்த்திருப்பார்கள்; கறுப்பு ஜூலை போன்ற கொடூரச் சம்பவமும்
நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T11:48:51+00:00</updated>
        </entry>
    </feed>
