<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-04T02:46:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக அபாயம் உள்ள பகுதிகள் அடையாளம் - உடன் வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/16-737-people-live-in-high-risk-areas-1785808368"></link>
            <id>https://tamilwin.com/article/16-737-people-live-in-high-risk-areas-1785808368</id>
            <summary type="text">நாட்டில் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் 16,737 குடும்பங்கள் வசித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக&amp;nbsp;இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் 16,737 குடும்பங்கள் வசித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக&nbsp;இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,</p><p>&nbsp;</p><h2>வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு</h2><p> கனமழை காரணமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள உடுதும்பர , கங்கை இஹல கோறளை மற்றும் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87796154-8b3a-4f71-ace5-aba79c65c075/26-6a714fe50862a.webp' />&nbsp;</p><p>&nbsp;அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டும் என்றும், பாறைச்சரிவுப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கால்வாய்கள் மற்றும் வீகளின் இருபுறமும் கடைகளைக் கட்டும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
டிட்வா புயலால் நிலச்சரிவுகள் தீவிரமடைந்த பகுதிகளில், இந்த மழையின் காரணமாக அவை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.</p><p>
மேலும், அபாயகரமான சூழ்நிலை காரணமாக, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் வர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T02:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் குழப்பநிலை! சொகுசு ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leaders-in-a-secret-conversation-1785807372"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leaders-in-a-secret-conversation-1785807372</id>
            <summary type="text">கொழும்பிலுள்ள பிரபல&amp;nbsp;சொகுசு ஹோட்டலில்&amp;nbsp;இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலுள்ள பிரபல&nbsp;சொகுசு ஹோட்டலில்&nbsp;இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இரகசிய உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>&nbsp;முன்னாள் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர்&nbsp;அனுஷா பல்பிட்டாவின் மகனின் திருமணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரகசிய சந்திப்பில் முக்கிய அரசியல்வாதிகள்</span></p><p>இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3785228f-764d-4666-b597-ed8cdc6677f2/26-6a714523257f0.webp' /><span style="color: inherit; font-size: 1.75rem;"></span></p><p>இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோர் உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இருப்பினும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T02:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமடையும் காலநிலை - பல பகுதிகளில் திடீர் மின்தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deteriorating-weather-power-outages-in-many-areas-1785809206"></link>
            <id>https://tamilwin.com/article/deteriorating-weather-power-outages-in-many-areas-1785809206</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மத்திய மாகாணத்தின் பல பகுதிகள், கொழும்பின் சில பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மத்திய மாகாணத்தின் பல பகுதிகள், கொழும்பின் சில பிரதேசங்கள் உட்பட ஏராளமான பிரதேசங்களில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>&nbsp;</p><h2>மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை</h2><p>அதிக மழை மற்றும் கடும் காற்று காரணமாக மின் கம்பி மீது மரங்கள் உடைந்து விழுந்த காரணத்தினால் பல பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29835bfe-38b7-43fa-b2da-4b23cd444b47/26-6a714bb5cc378.webp' />&nbsp;</p><p>குறித்த பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>இதேவேளை, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.&nbsp;</p><p>அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T02:19:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைகள் நடைபெறுமா..! நாளை அவசர கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-a-l-exams-amidst-adverse-weather-1785806162"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-a-l-exams-amidst-adverse-weather-1785806162</id>
            <summary type="text">நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக நாளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக நாளை (05) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.</p><p></p><h2>மோசமான வானிலை</h2><p>

தற்போதைய மழை நிலைமையை முன்னிட்டு, பரீட்சைகளை சீராக நடத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1974964b-14d8-4f3d-8a56-a5bf0f7b524e/26-6a7141060bd46.webp' /></p><p>
</p><p>
“உயர்தரப் பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மையமும் இணைந்து 5ஆம் திகதி கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம். </p><p>அதில் இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து திட்டமிடப்படும். பொதுவாக ஓகஸ்ட் மாதம் குறைந்த மழைப்பொழிவு காணப்படும் காலமாகும்.</p><p></p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p> தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இது தற்காலிகமான நிலைமை. 6, 7, 8 ஆகிய தினங்களுக்குப் பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e84a88bb-152f-40b9-a666-7f5c7094a738/26-6a714106b1bc5.webp' /></p><p> </p><p>பரீட்சைகள் 10ஆம் திகதிக்குப் பிறகே ஆரம்பமாக இருப்பதால், அதற்குள் இந்த பாதிப்பு பெருமளவில் குறைந்திருக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், ஓகஸ்ட் 6ஆம் திகதிக்குப் பின்னர், பசிபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள சூறாவளி அமைப்பின் தாக்கத்தால், இலங்கையில் மீண்டும் மழைப்பொழிவு ஓரளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T01:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் இயற்கையின் கோரத்தாண்டவம்..! இதுவரையில் 6 பேர் பலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-weather-condition-updates-1785805009"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-weather-condition-updates-1785805009</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கனமழை</h2><p>
</p><p>
நேற்று (03) பெய்த கனமழையால் பொல்பிட்டிய, மொரஹேனேகம பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c552ca87-8298-4bb4-bd85-8a8853b0b326/26-6a713b2181a29.webp' /></p><p>

நேற்று பெய்த கடும் மழையினால் அந்த வீட்டின் மீது மண்குன்று சரிந்து விழுந்ததாகவும், வீட்டுக்குள் இருந்த நால்வரும் அதில் சிக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இதற்கிடையில், நாவலப்பிட்டி, சோலங்கந்த பகுதியில் அமைந்திருந்த கடையொன்றின் மீது திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>6 பேர் பலி&nbsp;</h2><p>
இந்த விபத்துக்குப் பின்னர் நாவலப்பிட்டி – தொலஸ்பாகே (Dolosbage) வீதியின் 2ஆம் மைல் கல் அருகிலுள்ள பகுதி முழுமையாக போக்குவரத்துக்கு மூடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03aada1-f43a-4ed2-9fd9-d7fd87b66bde/26-6a713b227a8b0.webp' /></p><p>

அதேவேளை, நேற்று மாலை வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானானந்தகம பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தை கடந்து சென்ற 53 வயதுடைய நபர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
</p><p>

மேலும், நேற்று மதியம் கினிகத்தேன பொலிஸ் பிரிவின் அம்பகமுவ பகுதியில் கனமழையால் நீரில் மூழ்கியிருந்த வீதியைக் கடக்க முயன்ற 45 வயதுடைய நபர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T01:12:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் சட்டவிரோத குப்பைக் கொட்டல்: உடனடி நடவடிக்கை கோரி மனு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valikamam-north-pradeshiya-sabha-submitt-petition-1785804436"></link>
            <id>https://tamilwin.com/article/valikamam-north-pradeshiya-sabha-submitt-petition-1785804436</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மனு கையளித்துள்ளனர்.
</p><p>
வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு நேற்றைய தினம்(3)&nbsp; சென்ற வலி. வடக்கு
பிரதேச சபையின் உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நேரில் சந்தித்து,
மனுவை கையளித்துள்ளனர்

வலி. வடக்கு பிரதேச சபையில் 38 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் குறித்த
மனுவில் கையளித்துள்ளனர்.</p><p></p><h2>வலி வடக்கு பிரதேச சபை</h2><p>
</p><p>
வலி வடக்கு பிரதேச சபை அமர்வில் நடைபெற்ற மாதாந்த அமர்வில், கீரிமலை
சுடலைக்கும் கொங்கிறீற் அணைக்கும் இடைப்பட்ட கடலரிப்பு ஏற்பட்ட தாழ்வான
பிரதேசத்தில் உக்கிய மண்ணினை கொட்டுவதற்கு வலி தெற்கு பிரதேச சபைக்கு அனுமதி
வழங்குவதென தீன்மானம் எடுக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08b0919-5a81-4b0b-98d1-2050f3188644/26-6a713857c4129.webp' /></p><p>

மாறாக, தற்போது வலி தெற்கு பிரதேச சபையினரால் மேற்குறிப்பிட்ட பகுதி அல்லாது
வேறொரு பகுதியில் உக்காத பொருட்கள் இலத்திரனியல் பொருட்கள், கண்ணாடிப்
பொருட்கள், சிகை அலங்கரிப்பு நிலைய கழிவுகள், நீர் தேங்கும் தகர டப்பாக்கள்
என்பன அனுமதிக்குப் புறம்பான முறையற்ற விதத்தில் தொடர்ச்சியான முறையில்
கொட்டப்பட்டு வருகின்றது.</p><p>

இது தொடர்பாக பல தடவைகள் வலி வடக்கு பிரதேச பிரதேச சபைத் தவிசாளருக்கு
அறிவித்தும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p><h2>கீரிமலையில் குப்பைகள்</h2><p>

அத்துடன், தற்போது குப்பை கொட்டப்பட்டு வருகின்ற இடமானது குடியிருப்பை அண்டிய
இடமாகவும் அதே வேளை பல புனித இடங்கள், ஆலயங்களை அண்மித்ததாகவும் காணப்படுவதால்
இவற்றின் புனிதத் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4161c545-fcc3-48f2-b74d-51f4e2e4e3a7/26-6a7138589a5ee.webp' /></p><p>

எனவே இது தொடர்பாக தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருவதோடு இது தொடர்பாக
நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
அதேவேளை, கீரிமலையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க
கோரி, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், சுற்றாடல் அதிகார சபை ஆகியோரிடமும்
முறைப்பாடு செய்ய வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவில் நாமல் - ரோஹித ராஜபக்சவின் பெயர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harak-katta-audio-leak-namal-rohitha-rajapaksha-1785782930"></link>
            <id>https://tamilwin.com/article/harak-katta-audio-leak-namal-rohitha-rajapaksha-1785782930</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. 

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. </p><p>

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹித ராஜபக்ச, சாகல ரத்நாயக்க மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
ஹரக்கட்டாவைச் சிறையிலிருந்து விடுவிக்கவும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கவும் சுமார் ரூ. 20 கோடி லஞ்சம் கோரப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
இந்த டீலில் சரித் அபேசிங்க, முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
 ஹரக்கட்டாவை (நதுன் சிந்தக) சிறையிலிருந்து விடுவிப்பதற்கும் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் ரூ. 20 கோடி (2000 லட்சம் ரூபா) லஞ்சமாகப் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>

இதில் சுமார் ரூ. 12 கோடி (1200 லட்சம் ரூபா) ஏற்கனவே ஹவாலா (உண்டியல்) முறை மூலம் துபாயில் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUvKma_B1SM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த நல்லாட்சி காலத்தின் கொள்கைகளை இந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்துகிறது - சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-following-past-good-governance-policies-1785801231"></link>
            <id>https://tamilwin.com/article/govt-following-past-good-governance-policies-1785801231</id>
            <summary type="text">தன்னார்வு தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும்
ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையிலான&amp;nbsp; அரசின் செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னார்வு தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும்
ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையிலான&nbsp; அரசின் செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை தோற்றுவிப்பதாகவே தெரிகின்றதென சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று முன்தினம்(02.08.2026)&nbsp; மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கடந்த நல்லாட்சி அரசாங்கம்</h2><p> </p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல.
இதனை விளங்கிக்கொள்ள வேண்டும்.</p><p>

சமீபகாலமாக இதனை நாம் பார்க்கின்றபோது கடந்த
நல்லாட்சி அரசாங்கத்தில் 2018 ஆம் ஆண்டில் இது முதன் முதலாக பேசப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/264e56de-6fd2-4e35-bc0a-59c102a57b4c/26-6a712e7c85763.webp' /></p><p>அப்போது அந்த அரசாங்கத்தால் இது சம்பந்தமான வரைபு ஒன்று
வெளியிடப்பட்டிருந்தது. 

அந்த வரைபிலே இருந்த சில விடயங்கள் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள்
மீது அரசியல் தலையீடுகளை கொண்டுவரும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டிருந்தன.
</p><p>
அதற்காக ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு சார்பற்ற
நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை சார்ந்த நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் எல்லாம்
எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. இந்த நிலையில்தான் அந்த வரைபு
சட்டமாக்கப்படுகின்ற முயற்சி கைவிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ae57dba-3afb-4e7a-bc93-2682ca0efd96/26-6a712e7d64dda.webp' /></p><p>
பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் நிலைமை
காரணமாக இந்தச் சட்டத்தை முன்னெடுப்பதில் உரிய காலம் அவர்களுக்கு இல்லாததன் காரணமாக அது கைவிடப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:19:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்தேசியத்தை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட சக்திகள் - 2009க்குப் பிறகு ஏற்பட்டுள்ள பக்க விளைவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/forces-against-tamil-nationalism-since-2009-1785797703"></link>
            <id>https://tamilwin.com/article/forces-against-tamil-nationalism-since-2009-1785797703</id>
            <summary type="text">2009 மே மாதம் போர் முடிவடைந்த பின்னரான நிலைமையிலிருந்து 2026 ஆம் ஆண்டு வரை, கடந்த 17 ஆண்டுகளாக இலங்கை தீவில் சிறை கைதிகள் மீதான தாக்குதல்களும் கொலைகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2009 மே மாதம் போர் முடிவடைந்த பின்னரான நிலைமையிலிருந்து 2026 ஆம் ஆண்டு வரை, கடந்த 17 ஆண்டுகளாக இலங்கை தீவில் சிறை கைதிகள் மீதான தாக்குதல்களும் கொலைகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.</p><p>

அதேபோல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விதிக்கப்பட்ட மரண தண்டனை, போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பாதாள உலகக் குழுக்கள் செய்யும் கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.</p><p></p><h2>இனவாத பிரச்சினை</h2><p>
</p><p>
ஆகவே, இலங்கையில் 80 ஆண்டுகால இனவாத பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் இழுத்துச் செல்லப்படுவதன் பக்கவிளைவுகளே, அரசியலமைப்புச் சட்டங்களைக் கேள்விக்குட்படுத்துகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை சிங்கள அரசியல் தலைவர்கள் உணராமல் இல்லை. </p><p>இந்தத் தவறான வரலாற்றுப் போக்கை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

குறிப்பாக, 1980களில் போர் தீவிரமடைந்தபோது, ​​வடகிழக்கு, கொழும்பு மற்றும் மலையாளத்தில் வசித்து வந்த தமிழர்களின் வீடுகள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657ad611-d09f-43ad-a7c3-1ffb12a59c44/26-6a712e094670f.webp' /></p><p>

இந்தச் சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதோடு, சிறைகளுக்குள் கொலை செய்தல், தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களும் அரங்கேற்றப்பட்டன.</p><p>
இதற்கிடையில், தமிழ்-முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சில ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்பட்டன

தமிழ்ப் பகுதிகளில் சட்டவிரோதக் கொலைகள், துர்நடத்தைகள் மற்றும் கொள்ளை போன்ற செயல்கள் இந்தக் குழுக்கள் மூலம் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதால், பிராந்திய வேறுபாடுகளும் கடுமையாகத் தூண்டிவிடப்பட்டன.
</p><p>

வடகிழக்கில் நடைபெறும் பறிப்பு மீறல்கள், பௌத்த நோய்களை உருவாக்குதல் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை பௌத்த பாரம்பரியமாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன.</p><h2>ஊழல் மற்றும் மோசடிகள்</h2><p>

இந்தச் செயலுக்காக, 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்திற்கும் பௌத்தப் பிக்குகளுக்கும் வழங்கப்பட்ட வரம்பற்ற அதிகாரமே, இன்று கொழும்பின் தென்பகுதியில் நிகழும் அச்சுறுத்தல் கொலைகளுக்குக் காரணமாகும்.
</p><p>
2005 முதல் 2014 வரை ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்தபோது அரங்கேறிய ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார துர்செயல்களுக்கு இதுவே காரணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90545c92-671b-440d-8575-578be87e07dc/26-6a71239f96a6a.webp' /></p><p>
இந்தக் கசப்பான உண்மையை அனைத்து சிங்களத் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள்.

சட்டப்பூர்வமான கொலைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களின் பின்னணிகளையும் நேர்மையாக விசாரித்தால், 2009-க்கு முந்தைய போரின் போது ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.</p><p>


இந்த மூல காரணம் வெளிவந்தால், 'தேசிய மக்கள் சக்தி' என்ற பெயரில் தற்போது ஆட்சி அமைத்துள்ள ஜேவிபி-யும் குற்றவாளி கூண்டில் அடைக்கப்படும்.
ஏனெனில், 2009-ல் போரைத் தூண்டியவர் மகிந்த தான் என்பதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.</p><p>

ஆகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மூலமாகவும், ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடிகளை மட்டும் விசாரிக்கும் நகர்வுகள் மூலமாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, ஈழத் தமிழர்களின் விவகாரங்களை அதன் உள் இயக்கத்திற்குள்ளேயே முடக்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது.</p><p></p><h2>சிங்கள அரசியல் தலைவர்கள்</h2><p>
</p><p>
மகிந்த, ரணில் மற்றும் சந்திரிகா போன்ற சிங்கள அரசியல் தலைவர்களுக்கு கட்சி அரசியலைத் தாண்டி ஆதரவளிக்க வேறு மாற்று இல்லை.
இருப்பினும், அநுர, தந்திரமான ஒரு நகர்வின் மூலம் மகிந்த, ரணில், சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவும், சிங்கள மக்களின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார்.</p><p>
</p><p>
மகிந்த, ரணில் மற்றும் சஜித்துக்கு அநுரவின் இந்த தந்திரம் புரியவில்லை.
இப்போது இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86963a9f-5fcb-4c51-9a19-79dbdf83c9d7/26-6a7123a102c13.webp' /></p><p>
</p><p>
1948 ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பில், தமிழர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிறுபான்மையினர் காப்பீட்டுப் பிரிவை (பிரிவு 29) நடைமுறைப்படுத்த மறுத்த பௌத்த அரசியல் சிந்தனை, இன்றைய அநுர அரசாங்கம் வரை தொடர்கிறது.</p><p>

ஈழத் தமிழர்களால் கோரப்பட்ட போர்க்குற்ற விசாரணை அல்லது இனவாத விசாரணை போன்ற எந்தவொரு சர்வதேச விசாரணை முறைகளையும் ஏற்கக்கூடாது என்பதே இலங்கை ஒற்றை அரசாங்க கட்டமைப்பின் திட்டமிடல் நிலைப்பாடாகும்.
</p><p>2009-க்குப் பிந்தைய இந்த நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு முக்கிய அரணாக இலங்கை நீதித்துறை விளங்குகிறது. இதற்கிடையில், சந்திரிகா, மகிந்த, ரணில் மற்றும் கோட்டாபய ஆகியோர் தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள நீதித்துறையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.</p><h2>நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை</h2><p> </p><p>தற்போதும் நீதித்துறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் முடிவானது, நீதித்துறை சேவை ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் பொது ஆய்வுகள் எதுவுமின்றி, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவுக்கு, 2026 ஜூலை 27 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01a2f871-a2e8-488e-9c7e-d102ae6e619a/26-6a712e0a19d33.webp' /></p><p>

எனவே, தமிழ் தேசியக் கட்சிகள் இந்த வரலாற்றுச் சான்றுகளை உலக அரங்கில் வெளிக்கொணர்வதிலும், தமிழர்களுக்கு எதிரான அநீதியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலும், தமது அரசியல் நீதியை நிலைநாட்டுவதிலும் தோல்வியடைந்தன.
</p><p>
ஒளி சக்திகளின் நுட்பமான தாவர முறைகளுக்குப் பணிந்து, சிங்கள அரசியல் தலைவர்களின் நலன்களுக்கு ஏற்ப, தமிழ் கட்சிகள் இலங்கைக்குள்ளேயே ஒரு உள் பொறியியல் தீர்வை நோக்கிப் பயணிக்கின்றன.</p><p>

அந்த உள் பொறியியல் மூலம் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆகவே, ஈழத் தமிழர்களிடையே உள்ள குடிமைச் சமூகப் பொது அமைப்புகளும் கல்வியாளர்களும் சிந்திப்பதற்கான தருணம் இதுவே.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்த்தரப்பை நடுநடுங்க வைக்கும் அநுர அரசு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-anura-government-makes-the-opposition-tremble-1785801748"></link>
            <id>https://tamilwin.com/article/the-anura-government-makes-the-opposition-tremble-1785801748</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 நீதிபதிகளின் ஓய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

 நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது பொருத்தமற்றது என சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> 


 இந்தநிலையில் நீதி அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இந்த கால நீடிப்பு குறித்த விளக்கங்களை அளித்து ஆசி பெற்றுள்ளனர். 

இது அரசாங்கம் இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p><p>

இந்த ஓய்வு வயது நீடிப்பு என்பது அரசாங்கத்திற்குச் சாதகமான ஒரு நகர்வு என்றும், இது தொடர்பான விவாதங்கள் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த செயல்பாட்டின் விளைவாக உருவெடுத்துள்ளதாகவும் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
</p><p>
சுருக்கமாகச் சொன்னால், சட்டத்துறை சார்ந்து அரசியலமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்த அச்சமே இந்த சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1maNlg0ypc8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மூடிமறைப்பதற்காகவே சிறை கலவரங்கள்..! எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-claim-equal-punishment-for-maithri-ranil-1785792067"></link>
            <id>https://tamilwin.com/article/prison-claim-equal-punishment-for-maithri-ranil-1785792067</id>
            <summary type="text">தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெற்று வருகின்ற சிறைச்சாலை மோதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? அல்லது இதில் வேறு&amp;nbsp;ஏதும் சதிகள் காணப்படுகிறதா? என&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெற்று வருகின்ற சிறைச்சாலை மோதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? அல்லது இதில் வேறு&nbsp;ஏதும் சதிகள் காணப்படுகிறதா? என&nbsp; சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.</p><p>லங்கா சிறியின் நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

மஹர சிறைச்சாலையில் மோதல் இடம்பெற்று சில மணி நேரத்திற்குள் அங்கு வருகைத்தந்திருந்த மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பில் விசாரித்தால் இது திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விடும்.
</p><p>
அன்று வருகைத்தந்திருந்தவர்களுள் ஒருசிலர் நாமல் ராஜபக்சவினுடைய கட்சியினரா? என்ற விமர்சனங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன. நாமல் ராஜபக்சவுடன் இணைந்திருந்தவர்களுடைய சில புகைப்படங்களும் அன்றைய காணொளிகளில் வெளியாகி இருந்தன.
</p><p>&nbsp;உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் ராஜபக்சர்கள் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பது தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் தற்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்திலே அவற்றை மூடிமறைப்பதற்காக இவ்வாறான கலவரங்களை இவர்கள் தோற்றுவிக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்த சம்பவம் தொடர்பிலான இன்னும் பல முக்கிய விடயங்களை இந்த நிகழ்ச்சியின் ஊடாக விரிவாக பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OV5mhqGqwJI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T23:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-s-mismanagement-opposition-leaders-1785797396"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-s-mismanagement-opposition-leaders-1785797396</id>
            <summary type="text">மக்களுக்கான எதிர்க்கட்சி&amp;nbsp; நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டின்
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள், நீதித்துறை புனரமைப்பு
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்கான எதிர்க்கட்சி&nbsp; நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டின்
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள், நீதித்துறை புனரமைப்பு
மற்றும் அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தலைவர்களின் முக்கிய
கருத்துக்கள் வருமாறு,</p><p></p><h2>பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்</h2><p>
சிறைச்சாலை அமைப்பில் மிக முக்கியமான தலைமைப் பதவி காலியாகி ஒரு வருடமும்
இரண்டு மூன்று மாதங்களும் ஆகப்போவதைச் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர்
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், "உடம்பு இருக்கின்ற போதிலும் அதற்குத் தலை இல்லை"
என்று விமர்சித்தார்.
</p><p>
முன்னாள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு மனித
உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்த போதிலும், அரசு அதனைச் சிறிதும்
கண்டுகொள்ளவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a673773-3151-43a4-9532-013c2f61744b/26-6a711f67f291b.webp' /></p><p> </p><p>ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு மதிப்பளிக்கப்படாவிட்டால்
அவ்வாணைக்குழுவினால் என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

11 ஆயிரம் கைதிகளுக்கு மட்டுமே வசதிகள் உள்ள சிறைச்சாலைகளில், அதைவிடப்
பன்மடங்கு அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். </p><p>இந்த அவல நிலைக்கு அரசே
பொறுப்பேற்று உடனடியாகப் புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரை
நியமிக்க வேண்டும் என்றார்.</p><p>

நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான புதிய சட்டங்கள் தனிநபர்களை
மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன என்று சாடிய அவர், இத்தகைய முக்கிய
தீர்மானங்கள் மக்கள் தீர்ப்பு மூலமே எடுக்கப்பட வேண்டும் என்றார்.</p><p></p><p>
</p><h2>ராஜித சேனாரத்ன</h2><p>
சிறைச்சாலைகளில் கைதிகள் சால்மன் மீன் டின்னுக்குள் அடைத்து வைக்கப்பட்டது
போல் பெரும் நெருக்கடியில் வாழ்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜித
சேனாரத்ன தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5993009-f48c-4301-80d9-06c0c61377cb/26-6a711f68bbbd6.webp' /></p><p>
</p><p>
தானும் சிறைக்குச் சென்று வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர், அடிப்படை
மலசலகூட வசதிகள்கூட இல்லாத இவ்வாறான சூழல் ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறும்
என்றும் எச்சரித்தார்.</p><p>

கடந்த காலத்தில் தமது அரசே சிறைச்சாலைகளைப் புனரமைத்து வசதிகளை மேம்படுத்தியது
என்றும், தற்போதைய அரசு அதனை முற்றாகப் புறக்கணித்துள்ளது என்றும் அவர்
குற்றம்சாட்டினார்.</p><p></p><h2>சுரேஷ் ராகவன்</h2><p>
நாட்டில் தற்போது ஒரு 'சைபர் பண்ணை' இயங்கி வருகின்றது என்று தெரிவித்த
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேஷ் ராகவன், அரசை விமர்சித்து கருத்துத்
தெரிவித்தவுடனே சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு "ஹாஹா" எதிர்வினைகள்
இடப்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.</p><p>

எதிர்க்கட்சியை 'குப்பைகள்' என விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும், அரசு
நாட்டின் அண்மைய வரலாற்றையாவது மதித்து நடக்க வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார்.</p><h2>பிரேமநாத் சி. தொலவத்த</h2><p>
இந்த அரசே திட்டமிட்டு நாட்டைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று முன்னாள்
அமைச்சர் பிரேமநாத் சி. தொலவத்த குற்றம்சாட்டினார்.

சிறைச்சாலை நெருக்கடியிலும் மனித உரிமைகள் பிரகடனத்துக்கு அரசு
தலைவணங்குவதில்லை என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f0092c7-1cef-4f48-826b-19d2c8b01602/26-6a711f696a830.webp' /></p><p>
</p><p>
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் ஏராளமான நீதியரசர்கள்
காலியிடங்கள் நிலவுவதால் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும், தமக்குச்
சாதகமான தீர்மானங்களை எடுக்கும் நபர்களை மட்டுமே அரசு தக்கவைத்துக்கொள்ளப்
பார்க்கின்றது என்றும் தெரிவித்தார். </p><p>எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளின்
எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக
இந்தக் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-08-03T23:11:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி - 6 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் திட்டவட்டமான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-meeting-with-leaders-six-tamil-parties-1785792920"></link>
            <id>https://tamilwin.com/article/president-meeting-with-leaders-six-tamil-parties-1785792920</id>
            <summary type="text">தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ்க் கட்சிகளின்
தலைவர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் நேற்றையதினம்(3)&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ்க் கட்சிகளின்
தலைவர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் நேற்றையதினம்(3)&nbsp; ஜனாதிபதி செயலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் சுமுகமான சந்திப்பு நடைபெற்றுள்ளது.</p><p>அந்தச் சந்திப்பில் திட்டவட்டமான - விசேடமாகக் குறிப்பிடத்தக்க -
தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்று தெரியவருகின்றது.
</p><p>
வழமை போல கருத்துப் பரிமாற்றங்களை அடுத்து வாய்மொழி மூல உறுதிமொழிகள்
சிலவற்றுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது எனச் சந்திப்பில் பங்கு பற்றிய
கட்சிகளின் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.</p><p></p><h2>தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள்</h2><p>

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,
தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளின் பிரதிநிதிகளே ஜனாதிபதியை அவரது செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
</p><p>
வழமை போல் புதிய அரசமைப்பு திருத்தத்துக்கான நடவடிக்கைகள் விரைவில்
ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.</p><p>

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகள் அவர்களுக்கு விடுவிக்கப்பட
வேண்டும் என்ற அரசின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என்று
கூறிய ஜனாதிபதி, இராணுவத்தின் கைவசம் உள்ள அத்தகைய காணிகளை விடுவிப்பதில் என்ன
நெருக்கடி என்பது குறித்து இராணுவத்திடம் தாம் அறிக்கை கோரியிருக்கின்றார்
என்றும் அது கிடைத்ததும் அவ்விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்
சொன்னார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca79713-1639-4b8b-82c5-46d42842bf20/26-6a710f265ac76.webp' /></p><p>
</p><p>
மலையக மக்களுக்கு காணிகளைப் பகிர்ந்து அளிப்பதில் சில நெருக்கடிகள்
இருக்கின்றன என்று சொன்ன ஜனாதிபதி, மலையகத் தோட்டங்களை நிர்வகிக்கும்
கம்பனிகள் இவற்றில் இறுக்கமான நிலைப்பாட்டில் இருக்கின்றன என்று
குறிப்பிட்டார்.</p><p>

மாகாண சபைத் தேர்தலை என்ன முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில்
நிறுவப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவு கிடைத்ததும் தேர்தல்
நடத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தெரிவுக்குழுவின் செயற்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும்,
இது காலத்தை இழுத்தடிக்கும் வேலை என்றும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள்
ஜனாதிபதியிடம் ஒரே குரலில் தெரிவித்தனர்.</p><p></p><h2>&nbsp;மாகாண சபைத் தேர்தல்</h2><p>
</p><p>
இந்தச் சந்திப்புக் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலக
முன்றிலில் வைத்து ஊடகங்களுக்குத் கருத்து தெரிவிக்கையில்,</p><p>
"தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் குழுவாக ஜனாதிபதியைச் சந்தித்து,
அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுகளை
நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது புதிய அரசமைப்பைக் கொண்டுவருவது தொடர்பான
வாக்குறுதிகள் சுட்டிக்காட்டப்பட்டன. </p><p>அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, சிறிய
தாமதம் ஏற்பட்ட போதிலும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என
உறுதியளித்தார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் இதுவரை நடத்தப்படாமை குறித்து கேள்வி
எழுப்பியபோது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை வந்த பின்னரே
முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0283bb5a-f25f-4282-8125-1719823ec40c/26-6a710f274b17c.webp' /></p><p>

இருப்பினும், அந்தத் தெரிவுக்குழுவின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும்,
தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கே அது பயன்படுத்தப்படுவதாகவும் நாங்கள்
சுட்டிக்காட்டினோம்.</p><p>

இதனையடுத்து, தெரிவுக்குழுவின் தலைவருடன் இது குறித்து நேரடியாக ஆலோசித்து
உரிய தீர்வை வழங்குவார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள்
இராணுவத்தினராலும் ஏனைய அரசு நிறுவனங்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை
குறித்தும் விவாதிக்கப்பட்டது.
</p><p>
கொள்கை ரீதியாக அந்த நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு
உடன்பட்டிருந்தாலும், நடைமுறையில் தாமதம் நிலவுவது குறித்துச்
சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>நிலங்களை விடுவிப்பதில் உள்ள தடைகள் குறித்து
இராணுவத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இவற்றுடன், மலையக மக்களுக்குச் சொந்தமான காணி உரிமை இன்னமும் கிடைக்கப் பெறாத
நிலைமை குறித்தும், தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்டு
மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்பட்ட போதிலும், அதற்கான முறையான
பதில்களோ தீர்வுகளோ இன்னமும் எட்டப்படவில்லை." - என்று எம். ஏ. சுமந்திரன்
மேலும் தெரிவித்தார்.</p><p></p><h2>&nbsp;மலையக சமூகம்</h2><p>
</p><p>
இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத்
தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்
தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/979b5a8e-e44d-4b20-8555-bd6bdb536cb0/26-6a710f2803218.webp' /></p><p>
</p><p>
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டதுடன்,
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது
எனவும், எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாட
எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
</p><p>
தற்போதைய அரசின் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்புக்கான
முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குறித்த பணியை
அவசரமாகச் செய்ய முடியாது எனவும், பல்வேறு சமூகங்களுக்கு இடையே உள்ள
பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய சமூகப் பரிசீலனையாக அது குறித்துக்
கவனம் செலுத்துவது முக்கியம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.</p><h2>நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை</h2><p> இது 1948, 1972 மற்றும்
1978 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புகளைப் போன்று, ஒரு
தரப்பினரால் மாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் அரசமைப்பாக இருக்கக் கூடாது
என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசமைப்பு
திருத்தப்பட வேண்டும் என்பதுடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும்
ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார்.</p><p> எனினும்,
இந்தச் சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொண்டுவரப்படும் அரசமைப்புத் திருத்தத்தை
விட, புதிய மக்கள் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதே அவசியமாகும் எனச்
சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான கருத்தாடலைத் தொடங்குவதன்
முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8746b062-1295-4614-a23b-ceee0df7a5b8/26-6a710f28b7b0d.webp' /></p><p>
</p><p>
பல்வேறு சமூகப் பிரிவினரும் தமது தேவைகளுக்காக மாத்திரம் செயற்படுவதைத்
தாண்டி, இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்படும் நாட்டை உருவாக்கும் அடித்தளம்
தற்போதைய அரசின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த
காலத்தில் நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களும் இடம்பெறவில்லை என்பதையும்
சுட்டிக்காட்டினார். </p><p>நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் முறையான ஆட்சி
முறைமையே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.</p><p>

மலையக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டு, தோட்டத் தொழிலாளர்கள்
மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு வதிவிடத்துக்காக 10 பேர்ச் காணிக்கான
சட்டபூர்வ உரிமையை வழங்கும் அரசின் திட்டம் தொடர்பில் இங்கு கருத்துத்
தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வி. இராதாகிருஷ்ணன், கம்பனிகளின்
எதிர்ப்புக் காரணமாகத் தங்களது அரசுகளால் நிறைவேற்றிக்கொள்ள முடியாதிருந்த
அந்தப் பணியானது, தற்போதைய அரசின் கீழ் நிறைவேறும் என எதிர்பார்ப்பதாகவும்
குறிப்பிட்டார்.
</p><p>
எந்தவொரு மக்களும் வசிக்காத மலையகப் பிரதேசங்களில் கூட நில வெடிப்புகள்
பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கேற்ப மத்திய மலையகத்தின்
நிலையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே அந்த சிக்கலுக்கான தீர்வு காணப்பட
வேண்டும் எனவும், அதற்காகத் தற்போது தனி அதிகாரசபையொன்று
ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><h2>பொருளாதார நிவாரணம்</h2><p> அத்தகைய நடவடிக்கைகளின் ஊடாக
மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது அரசின் எதிர்பார்ப்பாகும்
எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
</p><p>
வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு தேவைகளின் அடிப்படையில் தோட்டக்
கம்பனிகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், 2042 ஆம் ஆண்டுக்கு
முன்னர் இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் மேலும்
குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன்படி, வெகுவிரைவில் நிறுவனங்களுடன் புதிய
ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளமையால், மலையக மக்களுக்கு நிலத்துக்கான
சட்டபூர்வ உரிமையை வழங்குவது தொடர்பான சரத்துகளை அதில் உள்வாங்க
எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d464674-c23c-4add-b21f-dd5c43c861df/26-6a710f297353d.webp' /></p><p>
</p><p>
இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்
திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த மக்களுக்கு
வீட்டுரிமை கிடைத்த போதிலும், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச்
செலுத்துவது உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் பல நடைமுறைச்
சிக்கல்களை எதிர்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான்
சுட்டிக்காட்டினார்.
</p><p>
அந்த மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்காக தொண்டமான் அமைப்பையும்
நெவிடா அமைப்பையும் இணைத்து புதிய வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு ஏற்கனவே
முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பெருந்தோட்ட மற்றும் சமூக
உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை
விட அதிகமான தொகையை 2027 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்க
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p>

வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் நிலவும் காணிப் பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க, மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்பதே அரசின்
நிலைப்பாடு என்றும், ஆணைக்குழுக்களை நியமிப்பது உள்ளிட்ட அதற்கான பல சாதகமான
நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><h2>டித்வா அனர்த்தம்</h2><p>
</p><p>
மேலும், போரினால் வீடுகளை இழந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வாக,
அந்த மக்களுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் 13 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக
2027 மற்றும் 2028 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு
செய்யப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
</p><p>
டித்வா அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்
கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும்
வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும்
குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தப் பணிகள் நிறைவடையும் வரை அந்த மக்களுக்கு வாடகை
வீட்டுக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும்
தெரிவித்தார்.
</p><p>
மாகாண சபைத் தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணிகள்
குறித்தும் இங்கு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், தொல்பொருள்
திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகார சபை போன்ற
நிறுவனங்கள் பழைய கொள்கைகளின் அடிப்படையில் செயற்படுவதால் வடக்கு மற்றும்
கிழக்கு மாகாண மக்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் குறித்தும்
பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெளிவுபடுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd2299d-6777-41e6-86a6-06c207ad3893/26-6a710f2a2f0f2.webp' /></p><p>
</p><p>
இந்த அனைத்துக் கருத்துகளையும் கேட்டறிந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு,
இவ்வாறான ஒரு கூட்டணியை உருவாக்குதல் தொடர்பில் அனைவருக்கும் தனது நன்றியைத்
தெரிவித்தார். </p><p>மேலும், சமூகத்தில் தவறான புரிதல்கள் ஏதும் ஏற்படாதவாறு பொதுவாக
மக்கள் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் பிரதிநிதிகளிடம்
ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
</p><p>
மேற்படி சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் தவிசாளர்
எம்.எஸ்.எஸ். அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம். தாஹிர்,
என்.பி.எம்.எம். தாஹிர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன்
பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி., ஜனநாயகத் தமிழ்த் தேசியக்
கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சுரேஷ் பிரேமச்சந்திரன்,
முருகேசு சந்திரகுமார், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ.
சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி., இலங்கை முஸ்லிம் காங்கிரஸின்
சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., பொதுச்செயலாளர் நிசாம் கரியப்பர்
எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வி. இராதாகிருஷ்ணன் எம்.பி.
மற்றும் பரத் அருள்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்." - என்றுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T22:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தியும் தமது வன்முகத்தை காட்டி நிற்கின்றது - மா.சக்திவேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/m-satthivel-npp-showing-its-fierce-side-too-1785784410"></link>
            <id>https://tamilwin.com/article/m-satthivel-npp-showing-its-fierce-side-too-1785784410</id>
            <summary type="text">அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின்
காலத்திலும் தமது வன் முகத்தை காட்டி நிற்கின்றது என கிறிஸ்தவ ஒத்துழைப்பு
இயக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின்
காலத்திலும் தமது வன் முகத்தை காட்டி நிற்கின்றது என கிறிஸ்தவ ஒத்துழைப்பு
இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் இன்று(03.08.2026) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையிலே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முள்ளிவாய்க்கால்&nbsp;நினைவேந்தல்</h2><p>

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாற்றம் எனும் தொனியோடு ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி முள்ளிவாய்க்காலில்
நிகழ்த்திய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்காக தெற்கில் நினைவேந்தல்
நடத்துபவர்களையும் அந்த நினைவுகளில் வளவாளர்களாக கலந்து கொள்பவர்களையும்
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து வருகிறது.
</p><p>
இதனை கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் வன்மையாக
கண்டிப்பதோடு நினைவேந்தல் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாட்டினை
நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9641c75d-5aad-4ad9-a745-186b0d92ffcd/26-6a70eab19dec1.webp' /></p><p>கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும்
முள்ளிவாய்க்கால் நிறைவேந்தலை இனவாத கும்பல்களின் எதிர்ப்புக்கு மத்தியில்
தெற்கில் நடத்தி வருகின்றது. </p><p>

அந்த வகையில் கடந்த வருடம் (2025) நீர்கொழும்பில்
நினைவேந்தல் நடத்திய போது இனவாத கும்பல் எதிர்ப்பினை நிகழ்த்த திரண்டதோடு
நிகழ்வுக்குள் பொலிசாரும் நுழைந்து பதற்ற நிலையை ஏற்படுத்தினர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து நினைவேந்தலை ஒழுங்கு செய்த கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின்
அருட் சகோதரி ஒருவரும், அருட்தந்தை ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்
விசாரணைக்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>அரச பயங்கரவாதம்</h2><p> </p><p>

இது
எமது அமைப்புக்கு விடுக்கப்பட்ட இனவாத அடக்குமுறை அச்சுறுத்தலாகவே
கருதுகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில்
தற்போது அந்த நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட பன்னாட்டு குற்றங்கள் நூலின்
ஆசிரியர் சிரிஞானேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு
பிரிவினர்(CTID)அழைத்திருப்பது அச்சுறுத்தலின் அடுத்த கட்டம் எனலாம்.</p><p>

தெற்கில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராக 1971 மற்றும் 1988களில்
நிகழ்த்திய கிளர்ச்சியினை அடக்க அரச பயங்கரவாதம் திட்டமிட்ட வகையில்
சித்திரவதை முகாம்களுக்குள் பெருந்தொகையான இளைஞர்களை சித்திரவதைக்கு
உட்படுத்தி படுகொலைகளை செய்தது மட்டுமல்ல சமூக புதைகளுக்குள்ளும் தள்ளியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79e8993-ca4d-406c-8f28-a2ccc3ef09c3/26-6a70eab0e9a77.webp' /></p><p>இத்தகைய கிளர்ச்சி இனியும் நிகழாதிருக்க வடக்கு கிழக்கின் அரசியல் எழுச்சியை
பயங்கரவாதமாகவும், பிரிவின வாதமாகவும், தேசத்துரோகமாகவும் அடையாளப்படுத்தி
சிங்கள இளைஞர்களின் மூளையை சலவை செய்து அவர்கள் கைகளில் ஆயுதத்தை திணித்து இன
அழிப்பையும் இனப்படுகொலையையும் அரங்கேற்றி வெற்றி கொண்டாட்டம் நடத்துகின்றது.
</p><p>
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை தெற்கில் நடத்துவதன் மூலம் அரச பயங்கரத்தின்
முகம் வெளிப்பட்டு விடும். வடக்கின் மக்கள் நீதி குரல் எழுப்புவது போல தெற்கின்
மக்களும் நீதி குரல் எழுப்புவர் என தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும்
பயப்படுகின்றது.</p><p></p><h2>முதலாளித்துவ பேரினவாத கட்டமைப்பு&nbsp;</h2><p> </p><p>

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னால் இருக்கின்ற
முதலாளித்துவ பேரினவாத கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்துவதை தடை
செய்வதன் ஓர் அங்கமாகவே தற்போது பல்வேறு மட்டங்களில் விசாரணைகளை முடுக்கி
விடுகின்றனர்.</p><p>இந்நிலையில் தெற்கின் முற்போக்கு சக்திகள் கடந்த கால அரச பயங்கரவாதத்தின்
செயல்பாடுகளுடன் தொடர்புடைய சித்திரவதை முகாம்கள், சமூக புதை குழிகள்
என்பவற்றுக்கான நீதியைத் தேடும் முகமாக மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை
ஆரம்பித்தால் மட்டுமே வடக்கில் அரச பயங்கரவாதத்தின் முகத்தினையும் அது
நிகழ்த்திய கொடூரத்தையும்தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b333a73a-b2c2-4a78-b387-4ac1080e39cf/26-6a70eab043452.webp' /></p><p>

அத்தோடு
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு எதிராகவும் குரல்
கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.</p><p>

இன்று கிறிஸ்தவ ஒத்துழைப்பு
இயக்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எடுக்கும் அடக்குமுறை
செயற்பாடுகள் தெற்கில் ஏனைய அமைப்புக்களுக்கு எதிராகவும் அது விரிவடையும்
என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றோம் என குறிப்பிட்ப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T21:23:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் PickMe கட்டண முறைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-wheeler-drivers-protest-against-pickme-1785782549"></link>
            <id>https://tamilwin.com/article/three-wheeler-drivers-protest-against-pickme-1785782549</id>
            <summary type="text">திருக்கோணமலை பகுதியில் சேவையாற்றும்
முச்சக்கர வண்டி சாரதிகள் பிக்மி(PickMe) செயலியின் கட்டண முரண்பாடுகள்
மற்றும் சேவை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருக்கோணமலை பகுதியில் சேவையாற்றும்
முச்சக்கர வண்டி சாரதிகள் பிக்மி(PickMe) செயலியின் கட்டண முரண்பாடுகள்
மற்றும் சேவை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

அலஸ்தோட்டம் சந்தியில் இருந்து பேரணியாக புறப்பட்ட சாரதிகள், மூன்றாம் கட்டை
வழியாக பிக்மி(PickMe) அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.</p><p></p><h2>வருமான இழப்பு</h2><p>
</p><p>
சாரதிகளின் குற்றச்சாட்டின்படி, திருக்கோணமலை சாரதிகளுக்கு குறைந்த கட்டணங்கள்
நிர்ணயிக்கப்படுவதால் வருமான இழப்பு ஏற்படுவதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>உதாரணமாக
திருக்கோணமலையில் இருந்து சிகிரியா செல்ல ரூ.9,000 கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிரியாவில் இருந்து திருக்கோணமலை வருவதற்கு ரூ.12,000 கட்டணம் அறவிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a210883-5fa3-4b6e-bcc5-c3ead97c6874/26-6a70e2cb1eeb4.webp' /></p><p>இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர்
வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் கலந்துகொண்டு பிக்மி(PickMe) நிறுவன பிரதிநிதிகளுடன்
கலந்துரையாடியுள்ளார். </p><p>இதனையடுத்து குறித்த நிறுவனம்14 நாட்களுக்குள் உரிய தீர்வை வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a805fd5b-0eae-4fd8-9ff5-44468c8cb385/26-6a70e2cbeec74.webp' /></p><p>அதேவேளை, வெளிப்பிரதேச வாகனங்கள் தொடர்பாக பிரதேச சபை முன்னர் நிறைவேற்றிய
தீர்மானம் குறித்து ஏற்பட்ட சர்ச்சை தொடர்பிலும் பொலிஸார் இன்று விசாரணை
மேற்கொண்டதுடன் அதற்கு தவிசாளரும் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T20:51:18+00:00</updated>
        </entry>
    </feed>
