<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-20T11:20:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் உத்தரவில் சலே செய்த வேலைகள்! விடுதலைப் புலிகள் தொடர்பில் கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-main-culprit-of-the-easter-attacks-1784541062"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-main-culprit-of-the-easter-attacks-1784541062</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியோடுதான் அனைத்து வேலைகளையும் செய்தார் என்று முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியோடுதான் அனைத்து வேலைகளையும் செய்தார் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

ஆரம்பத்தில் இருந்தே சுரேஷ் சலே, கோட்டாபய ராஜபக்சவின் அருகிலேயே தான் இருப்பார். கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்காமல் எதனையும் சுரேஷ் சலே செய்ததில்லை. கோட்டாபய ராஜபக்சவுக்குத் தேவையானைத் தவிர வேறு எதனையும் சலே செய்ததும் இல்லை.</p><p></p><h2>சலேவை அழைத்த கோட்டாபய&nbsp;</h2><p>
ஆரம்ப காலங்களில் சுரேஷ் சலே போன்று மேலும் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும். இதுபோன்றவர்கள்தான் பின்னர் புலனாய்வுச் சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.</p><p> 

நான் இராணுவத் தளபதியானதன் பின்னர் சுரேஷ் சலே எனக்கு கீழ் பணியாற்றவில்லை. சலே உள்ளிட்ட ஒரு சிலர் வழக்கமாக அலுவலகத்தில் இருந்து முக்கிய அறிக்கைகளை தயார்ப்படுத்தும் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். 

எனவே, எனக்கு கீழிருந்து வேறு ஒரு பிரிவிற்கு சுரேஷ் சலே உள்ளிட்டவர்களை மாற்றினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c999a66-5272-46c0-bdca-b0ef2e2b5ec1/26-6a5df156a2e87.webp' /></p><p> </p><p> சலே எனக்குக் கீழ் பணியாற்றியிருக்கவில்லை. ஆனால், சலேயைப் பற்றி நன்றாக எனக்குத் தெரியும். 

சலே உள்ளிட்டவர்களை எனக்கு கீழ் இருந்து நீக்கிய பிறகு அவர்களை, கோட்டாபய ராஜபக்ச தமக்கு கீழ் பணியாற்றுமாறு,&nbsp;கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலகத்திற்கு அழைத்துக் கொண்டார்.</p><p> 

இராணுவத்திற்குள் இருந்துகொண்டு, கொழும்பில் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவது போல தான் அவர்கள் பணியாற்றினர். அவர்கள் கொடுத்த சில அறிக்கைகள் பிழையான தகவல்களைக் கொண்டிருந்தது.
</p><p>
உதாரணமாக, நான் இராணுவத் தளபதியானபோது, சலே உள்ளிட்டவர்கள் தந்த அறிக்கையின் படி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மொத்த போராளிகள் 9 ஆயிரம் பேர் என்று இருந்தது. எனினும், அது ஒரு தவறான அறிக்கை என்பது எனக்குத் தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/595f83c1-e224-4083-bb23-2de1ecc05e76/26-6a5df15753da5.webp' /></p><p> எனவே, சலே, ஹெந்த விதாரண உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றி, அந்த இடத்திற்கு யுத்தக் களத்தில் நேரடியாக இருந்து பணியாற்றிய அதிகாரிகளை நியமித்தோம்.
</p><p>
அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் மொத்தம் 30 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என நான் கணித்திருந்தேன்.

அதேபோல, அதன் பின்னரான அறிக்கைகள் மற்றும் கணக்கெடுப்புகளின் ஊடாக கிட்டத்தட்ட 32ஆயிரம் பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. </p><p> 

எனவே, சலே உள்ளிட்டவர்கள் இராணுவத்திற்குள் இருந்து, இப்படியான வேலைகளைத் தான் செய்து கொண்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-secretary-pudukkudiyiruppu-appointed-1784540151"></link>
            <id>https://tamilwin.com/article/new-secretary-pudukkudiyiruppu-appointed-1784540151</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளராக&amp;nbsp;விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன்&amp;nbsp;உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.இந்த பதவியேற்றல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளராக&nbsp;விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன்&nbsp;உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.</p><p>இந்த பதவியேற்றல் நிகழ்வானது&nbsp;இன்றையதினம்(20.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பிரதேச சபை செயலாளர்</h2><p>புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய ச.கிருசாந்தன்,
முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனைக்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்தே இவர் புதிய செயலாளராக பொறுப்பேற்றுக்
கொண்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d8c48a1-f9d9-4d83-a0fb-5f4293bbaa16/26-6a5deeaaa54fc.webp' /></p><p>விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன் துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி
வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> புதிய செயலாளரை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் சபை
உறுப்பினர்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்து வரவேற்றிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22-students-hospitalised-in-kantale-1784543887"></link>
            <id>https://tamilwin.com/article/22-students-hospitalised-in-kantale-1784543887</id>
            <summary type="text">திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.</p><p>மாணவர்களில் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு வகை விதையை உட்கொண்ட பிறகு, இந்த மாணவர்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தரம் 06 இல் கல்வி கற்ற</h2><p>ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் குறித்த 22 மாணவர்களையும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa068254-b7c5-47ba-b3d9-bb5a630f2a36/26-6a5dff4805af1.webp' /></p><p>
கந்தளாய் பேராறு பகுதியில் தரம் 06 இல் கல்வி கற்ற 20 மாணவர்களும் 02 மாணவிகளுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/andy-burnham-set-become-britain-new-prime-minister-1784544591"></link>
            <id>https://tamilwin.com/article/andy-burnham-set-become-britain-new-prime-minister-1784544591</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆண்டி பர்ன்ஹாம்
இன்று பதவியேற்கிறார்.

கடந்த ஒரு தசாப்தத்தில் (10 ஆண்டுகள்) பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆண்டி பர்ன்ஹாம்
இன்று பதவியேற்கிறார்.
</p><p>
கடந்த ஒரு தசாப்தத்தில் (10 ஆண்டுகள்) பிரித்தானியாவின் ஏழாவது பிரதமராகப்
பொறுப்பேற்கும் அவர், நாட்டை முழுமையாக மாற்றி அமைக்கப் போவதாகவும், மக்களின்
வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாகவும்
உறுதியளித்துள்ளார்.
</p><p>
தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவி&nbsp;விலகலை செய்ததைத் தொடர்ந்து,
லேபர் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டி பர்ன்ஹாம், மன்னர்
சார்லஸைச் சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.</p><p></p><h2>&nbsp;கடுமையான பொருளாதார மந்தநிலை</h2><p>
</p><p>
56 வயதான ஆண்டி பர்ன்ஹாம், இதற்கு முன்பு கிரேட்டர் மான்செஸ்டர் நகரத்தின்
மேயராகப் பணியாற்றி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றவர்.

பிராந்திய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததால் அவர் 'King of the
North' (வடக்கின் ராஜா) என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/057736db-9e07-4090-960e-2ada9eb534da/26-6a5dff1f172f9.webp' /></p><p>

நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்றவுடன், பிரித்தானியா சந்தித்து வரும்
கடுமையான பொருளாதார மந்தநிலை, பொதுச் சேவைகளின் நலிவுற்ற நிலை மற்றும் பொதுப்
பயன்பாட்டு நிறுவனங்களின் மோசமான செயல்பாடு போன்ற அடுக்கடுக்கான சவால்களை அவர்
எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</p><p>

அரசியல் அமைப்பில் அதிரடி மாற்றம்
பிரித்தானியா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மாற்றமாக
இந்தத் தருணம் இருக்கும் என்று பர்ன்ஹாம் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைத்து, அனைத்துப் பகுதி மக்களும்
எளிமையான, மலிவான வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதே தனது முதல் முன்னுரிமை என்று
அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;புதிய அமைச்சரவை</h2><p>
</p><p>
வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்புப் போக்குடைய நைஜல் ஃபரேஜின் 'ரிஃபார்ம்
யுகே' கட்சியின் சவால்களைச் சமாளிக்க, லேபர் கட்சிக்குள் இருக்கும் ஒரே வலுவான
தலைவர் பர்ன்ஹாம் தான் என்று அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af371750-1b0d-4d63-b5f4-77c017e26d57/26-6a5dff1fbc192.webp' /></p><p>
</p><p>
புதிய அமைச்சரவை மற்றும் கொள்கை முடிவுகள்
பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை
அறிவிக்கவுள்ளார்.

குறிப்பாக, நாட்டின் மிக முக்கியப் பதவியான நிதி அமைச்சர் பதவிக்கு உள்துறை
அமைச்சர் ஷபானா மஹ்மூத் நியமிக்கப்படலாம் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
</p><p>
அரசியல் ரீதியாக, சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கக் கொண்டு வரப்பட்டு
பெரும் தோல்வியைச் சந்தித்த 'டிஜிட்டல் அடையாள அட்டை' திட்டத்தை அவரது அரசு
ஏற்கனவே ரத்து செய்துள்ளது.
</p><p>
மேலும், பெரும் கடனில் மூழ்கி, கழிவுநீர் கசிவுப் முறைப்பாடுகளில் சிக்கியுள்ள
பிரித்தானியாவின் மிகப்பெரிய பொது நீர் விநியோக நிறுவனமான 'தேம்ஸ் வாட்டர்'
நிறுவனத்தை அரசே நேரடியாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்
(தேசியமயமாக்கல்) அதிரடி முடிவுகளையும் பர்ன்ஹாம் எடுக்கவுள்ளதாகத் தகவல்கள்
வெளியாகியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:57:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலியில் பயங்கரவாத தாக்குதல்: 50 இராணுவ வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/over-50-soldiers-killed-in-a-terrorist-attack-mali-1784542901"></link>
            <id>https://tamilwin.com/article/over-50-soldiers-killed-in-a-terrorist-attack-mali-1784542901</id>
            <summary type="text">ஆபிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அனெஃபிஸ் நகருக்கு
அருகே, மாலி நாட்டு இராணுவம் மற்றும் ரஷ்யாவின் &#039;ஆபிரிக்கா கார்ப்ஸ்&#039;
அமைப்பின் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அனெஃபிஸ் நகருக்கு
அருகே, மாலி நாட்டு இராணுவம் மற்றும் ரஷ்யாவின் 'ஆபிரிக்கா கார்ப்ஸ்'
அமைப்பின் கூட்டு வாகன அணிவகுப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர
தாக்குதலில் குறைந்தது 50 மாலி நாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p>

மாலி நாட்டின் வடக்குப் பகுதியைத் தனி நாடாகக் கோரிப் போராடி வரும் துவாரெக்
பிரிவினைவாதிகள் மற்றும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய
ஆயுதமேந்திய குழுக்கள் இந்த தாக்குதலுக்கு கூட்டாகப் பொறுப்பேற்றுள்ளன.</p><p></p><h2>மாலி இராணுவ வீரர்கள்</h2><p>
</p><p>
மாலி இராணுவ வீரர்களும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ரஷ்யாவின்
ஆபிரிக்கா கார்ப்ஸ் பாதுகாப்புப் படையினரும் அனெஃபிஸ் பகுதி வழியாக
வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது, அங்கு மறைந்திருந்த ஆயுதமேந்திய
பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிகளாலும் வெடிகுண்டுகளாலும் தாக்குதல்
நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74be4f4b-3e54-424a-b192-f492551f5763/26-6a5df9403f47b.webp' /></p><p>
</p><p>
எதிர்பாராத இந்த தாக்குதலில் இராணுவ வாகனங்கள் நிலை குலைந்தன.

சம்பவ இடத்திலிருந்து வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளில்,
இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்து கிடப்பதும், ஏராளமான இராணுவ வாகனங்கள்
முற்றிலுமாக எரிக்கப்பட்டு அழிந்து போயிருப்பதும் தெரியவந்துள்ளது.</p><p>
மேலும், சில மாலி நாட்டு வீரர்களைப் பயங்கரவாதிகள் உயிருடன் சிறைபிடித்துச்
சென்றுள்ளதும் அந்த வீடியோக்களில் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>&nbsp;பெரும் பின்னடைவு </h2><p>

மாலி நாட்டின் வடக்குப் பகுதியில் தன்னாட்சி கோரி வரும் துவாரெக் இனப்
பிரிவினைவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி
வருகிறது.</p><p>

அதே நேரத்தில் அல்-கொய்தா மற்றும் ஐஎஸ் போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளும்
இந்த பிராந்தியத்தில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e67a8ed5-cb10-4035-a694-f662aed713dd/26-6a5df940f2aca.webp' /></p><p>

அரசுக்கு ஆதரவாக ரஷ்யப் படைகள் அங்கு களம் இறக்கப்பட்ட போதிலும், சமீபகாலமாகப்
பயங்கரவாதிகள் இராணுவத்தினரைக் குறிவைத்து நடத்தும் கொரில்லா ரகத்
தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
</p><p>
தற்போது நடந்துள்ள இந்த கொடூரத் தாக்குதல் மாலி இராணுவத்திற்கும், அங்குள்ள
ரஷ்யப் படைகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:44:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஆட்டமா இது..! ஸ்பெயின் வெற்றிக்கு பின் ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/argentina-players-clash-after-spain-win-1784543028"></link>
            <id>https://tamilwin.com/article/argentina-players-clash-after-spain-win-1784543028</id>
            <summary type="text">



நியூஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா தோல்வியட...</summary>
            <content type="html"><![CDATA[<p>



நியூஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு அணி வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>கூடுதல் நேரத்தில் ஃபெர்ரான் டோரஸ் அடித்த தீர்க்கமான கோலின் மூலம், ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பை கிண்ணத்தை கைப்பற்றியது. இருப்பினும், இறுதி விசில் ஒலித்த பிறகு இரு அணி வீரர்களுக்கிடையே பதற்றமான சூழல் உருவாகி மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
வீரர்களுக்குள் வெடித்த மோதல்</h2><p>
அப்போது, வெற்றியைக் கொண்டாட ஸ்பெயின் அணியின் மாற்று வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்தபோது, அர்ஜென்டினா தடுப்பாட்ட வீரர் நஹுயல் மொலினா, ஸ்பெயின் வீரர் ஒருவரை நோக்கி கை நீட்டியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd39f34b-53da-41c6-852f-ca85b687024d/26-6a5df7f6128ec.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, ஆர்ஜென்டினா&nbsp; வீரர் லியாண்ட்ரோ பரேடெஸும் மோதலில் ஈடுபட்டார். இதன் காரணமாக, போட்டி முடிந்த பின்னர் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.</p><p>

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலர் ஆர்ஜென்டினா அணியின் நடத்தையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.</p><h2>
ஆர்ஜென்டினா&nbsp; அணியின் குற்றச்சாட்டுக்கள்</h2><p>
இதற்கிடையில், வெற்றியாளர் பதக்கங்களையும் உலகக் கோப்பையையும் பெற்றுக்கொள்ள ஸ்பெயின் வீரர்கள் தயாரானபோது, அவர்கள் தங்களுக்கு முதுகு காட்டியதாக ஆர்ஜென்டினா அணி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec4b4f3-241f-452b-ba1b-ae00bdb1c3e4/26-6a5df7f6d3494.webp' /></p><p>
</p><p>
ஆனால், ஆர்ஜென்டினா தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, தங்கள் அணி தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியும் என்றும் கூறி, வீரர்களின் செயல்பாட்டை நியாயப்படுத்தினார்.</p><p>

இந்த இறுதிப் போட்டி ஆரம்பம் முதலே கடுமையான உடல்ரீதியான மோதல்களுடன் நடைபெற்றது. கூடுதல் நேரத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெளியேற்றப்பட்டதும் ஆட்டத்தின் பரபரப்பை மேலும் அதிகரித்தது.
</p><h2>
உலக சாம்பியனான ஸ்பெயின்</h2><p>
போட்டி முடிந்த பின்னர், ஆர்ஜென்டினா ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸியின் பெயரை முழக்கமிட்டபோது, அவர் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். </p><p>

39 வயதான மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்து இதுவரை எந்த உறுதியான அறிவிப்பும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82b216b-6f5b-4c1e-bb02-a087a8551df4/26-6a5df7f783a08.webp' /></p><p> </p><p>இருப்பினும், இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியே அவரது கடைசி உலகக் கோப்பை ஆட்டமாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
நாக்-அவுட் சுற்றுகள் முழுவதும் தோல்வியின்றி ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, உலக சாம்பியன் பட்டத்தை வென்று தனது வெற்றி மகுடம் சூடியது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Argentina should hang their heads in shame. <br><br>Insufferable in victory against England and pathetic in defeat against Spain. <br><br>Billions are watching and you chose to start a fight and disgrace your nation. Do better. <a href="https://x.com/hashtag/ArgentinaVsEspa%C3%B1a?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ArgentinaVsEspaña</a> <a href="https://x.com/hashtag/ESPARG?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ESPARG</a> <a href="https://t.co/VDAPixw5cv">pic.twitter.com/VDAPixw5cv</a></p>&mdash; Lewis Mackenzie (@Lewismac101) <a href="https://x.com/Lewismac101/status/2078966429332774990?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:28:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை துறைமுக வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள் அகற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remove-illegal-buildings-erected-on-trincomalee-1784540319"></link>
            <id>https://tamilwin.com/article/remove-illegal-buildings-erected-on-trincomalee-1784540319</id>
            <summary type="text">திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள்,
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட
நடவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள்,
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட
நடவடிக்கையின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சம்பந்தப்பட்ட
தரப்பினரால் இன்று(20.07.2026) அகற்றப்பட்டுள்ளது.
</p><p>
திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் கட்டப்பட்டுள்ள
28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலத்தைக் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம்
மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை, 17.5 அடி அகலம் கொண்ட கட்டடம் ஆகியவை
சட்டவிரோதமான முறையில் எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளதாக&nbsp;தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு</h2><p>கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள
மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31 (2)இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின்
பிரகாரம் அவற்றை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள்
முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு
உடைத்தல் கட்டளையானது 14.07.2025 அன்று ஒட்டப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f735d0a-4f49-416b-8de5-c6b64f5e62e2/26-6a5df6ec80a68.webp' /></p><p>இந்நிலையில் குறித்த உடைத்தல் கட்டளைக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினரால்
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு
உடைத்தல் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.</p><p> இந்நிலையிலேயே இந்த சட்டவிரோத
கட்டுமானங்கள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளன.</p><h2>பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறச் செய்ய</h2><p>
</p><p>
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான குறித்த பகுதியில் சில கடற்றொழிலாளர்கள் மீன்
வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர்
அவர்கள் வெளியேற்றப்பட்டு, சுற்றுலா பணியகத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு தனியார்
ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் உரிய அரச
திணைக்களங்களில் சட்ட அனுமதி பெறப்படாத உணவு விடுதி ஒன்று இயங்கி வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f735d0a-4f49-416b-8de5-c6b64f5e62e2/26-6a5df6ec80a68.webp' /></p><p>,அத்துடன் குறித்த பகுதியில் கட்டப்பட்டுள்ள மலசலகூடத்தின் கழிவுகள் நேரடியாக
கடலினுள் கலக்கும் அபாயமும், குறித்த கட்டடங்கள் கடல்காட்டியினை மறைக்கும்
வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த பகுதியை மக்கள் பயன்படுத்தும் வகையிலும் சுற்றுலாத்துறை மேம்படும்
வகையிலும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் திட்டங்களை மேற்கொண்டு திருகோணமலையை
பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறச் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்கள்! தீவிரமடையும் தாக்குதலினால் பெரும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-tankers-explode-in-the-strait-of-hormuz-1784541015"></link>
            <id>https://tamilwin.com/article/oil-tankers-explode-in-the-strait-of-hormuz-1784541015</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம்
முறிந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை
எட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம்
முறிந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை
எட்டியுள்ளது.</p><p>இன்று திங்கட்கிழமை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக ஈரானிய நகரங்களைக்
குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p></p><h2>கப்பல்கள் வெடித்துச்சிதறி செயலிழந்துள்ளதாக ஈரான் அறிவிப்பு</h2><p>
</p><p>
இதற்கிடையே, உலகின் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு
எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறி செயலிழந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதால்
உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc669df-2481-46e8-a759-7bbdd7b54091/26-6a5df4561d3a7.webp' /></p><p>ஈரானின் முக்கிய நகரங்களான தப்ரிஸ், சாபஹார், கொனாரக், பந்தர் மார்ஷஹர்
மற்றும் பந்தர் இமாம் கொமேனி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் அமெரிக்க ஏவுகணைகள்
தாக்கியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் திறனை அழிப்பதற்காகவே இந்த புதிய
அலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம்
தெரிவித்துள்ளது.
</p><p>
சர்வதேச கடல் வழித்தடங்களை ஈரான் கட்டுப்படுத்த நினைக்கும் வரை அமெரிக்காவின்
இந்த பதிலடி தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ
திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த மோதல்களின் எதிரொலியாக பஹ்ரைன் நாட்டில் வான்வழித்தாக்குதலுக்கான அபாய
சங்குகள் ஒலிக்கப்பட்டன.

மேலும், ஈரான் அனுப்பிய அச்சுறுத்தல் தரும் ட்ரோன்களை தங்கள் நாட்டு இராணுவம்
இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் அறிவித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் ஏவுகணை வீச்சு
</h2><p>அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அகாபா விமான
நிலையம், குவைத்தில் உள்ள அல்-அதிரி முகாம், அலி அல் சலிம் விமான தளம் மற்றும்
சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை குறிவைத்து தங்களது புரட்சிகர
காவல் படை பயங்கர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியதாக ஈரான்
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/085cfead-8568-4a5a-be2a-0760e1d616a2/26-6a5df456c6376.webp' /></p><p>
</p><p>
மேலும், குவைத்தில் உள்ள முக்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது
ஈரான் நடத்திய தாக்குதலில் அங்கு கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

அமெரிக்க இராணுவத்தின் வழிகாட்டுதலின் படி ஆபத்தான தெற்கு கடல் வழித்தடத்தைப்
பயன்படுத்த முயன்ற இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு கப்பல்கள் வெடித்துச்சிதறி,
நகர முடியாமல் கடலிலேயே முடங்கியுள்ளதாக ஈரானியப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் வரை இந்த ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில்
ஒரு சொட்டு எண்ணெய் அல்லது எரிவாயு கூட பாதுகாப்பாகச் செல்ல முடியாது என்றும்
ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
இந்த பதற்றமான சூழலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின்
எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
</p><p>
இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 2 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல்
90 டொலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.</p><h2>

உயரும் அமெரிக்க வீரர்களின் பலி எண்ணிக்கை
</h2><p>ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில், வீழ்த்தப்பட்ட
ஈரானிய ட்ரோன் ஒன்றைச் செயலிழக்க வைக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில்
அமெரிக்க வீரர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d810f27a-9baf-4cf9-a44b-1c25bf94ce15/26-6a5df24a06768.webp' />&nbsp;&nbsp;</p><p>

இதன்மூலம் இந்த போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்த அமெரிக்க இராணுவ
வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 420 க்கும் மேற்பட்ட
வீரர்கள் காயமடைந்துள்ளனர்.</p><p>

கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை
முடக்குவதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடங்கிய இந்த போரில்,
ஈரான் மற்றும் லெபனானில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T10:13:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வண்டிகளுடன் ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-arrested-with-tipper-trucks-1784533481"></link>
            <id>https://tamilwin.com/article/5-arrested-with-tipper-trucks-1784533481</id>
            <summary type="text">தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு
முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர் வண்டிகளுடன் ஐவர் பொலிஸாரால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு
முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர் வண்டிகளுடன் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(19.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத&nbsp;மணல் அகழ்வு</h2><p>சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றை அடுத்து திருகோணமலை பொலிஸார் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். </p><p>

இதன்போது சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 4 டிப்பர் வண்டிகளும் ஒரு உளவு இயந்திரமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 5 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f07106-139e-4381-89cf-940ca507b5ba/26-6a5def2e03e97.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் (22.07.2026) ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கல்லாறு பகுதியில் தற்போது வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் மணலானது கட்டுமானப் பணிகளுக்கு உகந்ததாக காணப்படவில்லை எனவும் உப்பு மணலினையே கல்லாறு பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T09:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[விதை போன்ற உணவை சாப்பிட்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22-students-admitted-to-hospital-1784539416"></link>
            <id>https://tamilwin.com/article/22-students-admitted-to-hospital-1784539416</id>
            <summary type="text">கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உணவு ஒவ்வாமை</h2><p>
</p><p>கந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6b1586-de6a-47b0-8d64-84afb818a5e1/26-6a5dec6f56641.webp' /></p><p> </p><p>

அதன்பின்னர் அந்த உணவை உண்கொண்ட அனைவரும் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>அவர்களில் 20 ஆண் பிள்ளைகளும், 2 பெண் பிள்ளைகளும் அடங்குகின்றனர். இதில் 5 மாணவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, குறித்த மாணவன் வழக்கமாக வெளிநாட்டில் இருந்து
கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து நண்பர்களுடன்
பகிர்ந்து உண்பது வழமையாக இருந்துள்ளது.</p><h2>கந்தளாய் பொலிஸார் விசாரணை</h2><p>இன்றும் சூரியகாந்தி விதைகள் என
நினைத்து, வீட்டில் இருந்த ஆமணக்கு (Castor) விதைகளையும் அவற்றுடன் சேர்த்து
கொண்டு வந்து பகிர்ந்து உண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
இதன் காரணமாகவே மாணவர்களுக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T09:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா - பொலிஸ் விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statue-ceremony-of-kuttimani-and-thangadurai-1784538302"></link>
            <id>https://tamilwin.com/article/statue-ceremony-of-kuttimani-and-thangadurai-1784538302</id>
            <summary type="text">குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக
வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக
வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ
விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை
எதிர்வரும் 25ஆம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>வெலிக்கடை சிறைக் கலவரத்தில்</h2><p>இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின்
முன்னாள் உறுப்பினர் சதீஸ் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்கு
அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b6d1e22-b672-4033-ab84-eb7d0d95bbbd/26-6a5de6752c963.webp' /></p><p>
வெலிக்கடை சிறை கலவரத்தின் போது குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோர் படுகொலை
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T09:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் விவகாரம் - பணம் கைமாற்றப்பட்ட வங்கிக்கணக்குகளை கண்டுபிடிக்க அவுஸ்திரேலியா புறப்படும் முக்கிய குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-arrives-australia-team-to-investigate-1784531842"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-arrives-australia-team-to-investigate-1784531842</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர்களையும், ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர்களையும், சாட்சிகளையும் கண்டுபிடிக்க முக்கிய அதிகாரிகள் குழுவொன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிறப்பு குழு அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க உள்ளது.</p><p></p><h2>சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களை பதிவுசெய்ய திட்டம்</h2><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பத்து விமானங்களை கொள்வனவு செய்வதற்காக, 2013 ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்ற வழக்கில் முக்கிய சந்தேகநபர்களை தேடி குழு பயணிக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0b35eab-cbd3-4786-9a6e-8af631157c2d/26-6a5dd54cb2495.webp' /></p><p>
எயார்பஸ் இலஞ்ச பரிவர்த்தனையில் பணம் மாற்றப்பட்டதாக கூறப்படும் வங்கிக்கணக்குகளை வைத்திருந்ததாக கூறப்படும், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கும், ஆதாரங்களை கண்டறிவதற்கும் இந்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இலஞ்ச பணம் அனுப்பப்பட்டதாக கூறப்படும் வங்கிக்கணக்கின் உரிமையாளர் என்று கூறப்படும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா, அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக இலஞ்ச ஆணையம் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
</p><p>
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களான, காலஞ்சென்ற கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச ஆகியோர் வெளிநாட்டில் உள்ளனர்.</p><h2>நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவு</h2><p>

இவர்களுக்கு எதிராக கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f8a46e5-8424-4e57-9ee0-708067be1b83/26-6a5dd54d629a4.webp' /></p><p>
</p><p>
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழுவும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.
</p><p>
புருனேயில் போலி நிறுவனத்தை நிறுவியமை மற்றும் ஒரு புகழ்பெற்ற ஐரோப்பிய சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து (ஐரோப்பிய வானூர்தி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம் (EADS)) 1,454,645.54 யூரோக்கள் (இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள்) இலஞ்சம் பெற்றமை தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T09:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனமடுவவில் கோர விபத்து: இராணுவ வீரர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-corporal-killed-bus-collision-near-anamaduwa-1784536988"></link>
            <id>https://tamilwin.com/article/army-corporal-killed-bus-collision-near-anamaduwa-1784536988</id>
            <summary type="text">புத்தளம் மாவட்டம் அனமடுவ, பரமகண்ட சந்தி அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் மாவட்டம் அனமடுவ, பரமகண்ட சந்தி அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><p>
</p><h2>&nbsp;நீண்டகால இராணுவப் பயிற்சி</h2><p>
உயிரிழந்தவர் அனமடுவ, உறியாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதான இராணுவ கோப்ரல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
திருகோணமலையில் இடம்பெற்ற நீண்டகால இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து நேற்று வீட்டிற்கு திரும்பிய அவர், இன்று மீண்டும் கடமைக்கு செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fac7d553-5d20-4d34-8730-4be7c9a71ac1/26-6a5de38e5d932.webp' /></p><p>
</p><p>
இன்று காலை தனது இரு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்ட பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. </p><p>புத்தளம் சாலையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த புத்தளம் டிப்போவுக்கு சொந்தமான SLTB பேருந்தே விபத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பேருந்தின் சாரதி&nbsp;</h2><p>

பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அது மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
மோதலின் பின்னர் பேருந்து சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்த பின்னரே நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்ததுடன், இராணுவ கோப்ரல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2642c24d-408c-48a2-8781-da5d8a418363/26-6a5de38f0d499.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவரின் மகள்களில் ஒருவர் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விபத்து இடம்பெற்ற வீதிப் பகுதி கடந்த சில ஆண்டுகளில் பல உயிரிழப்பு விபத்துகள் இடம்பெற்ற இடமாக காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு மேற்கொண்டு வருகின்ற நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T09:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை வளாகத்தில் பற்றி எரிந்த ஆசிரியரின் கார் - சிசிடிவி கேமராவில் சிக்கிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-boy-who-started-the-teacher-s-car-1784533312"></link>
            <id>https://tamilwin.com/article/the-boy-who-started-the-teacher-s-car-1784533312</id>
            <summary type="text">ஆசிரியரின் வாகனம் தீப்பிடித்து எரியக் காரணமான தீக்குச்சிகளைப் பற்ற வைத்த எட்டு வயது சிறுவனின் வயதை கருத்திற் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிரியரின் வாகனம் தீப்பிடித்து எரியக் காரணமான தீக்குச்சிகளைப் பற்ற வைத்த எட்டு வயது சிறுவனின் வயதை கருத்திற் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என சர் ஜொன் கொத்தலாவல கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. </p><p>

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

சிறுவன் மீது எந்தவிதக் குற்றச்சாட்டுகளோ அல்லது அழுத்தமோ கொடுக்கப்படாது என வலியுறுத்தியுள்ளதுடன், பாடசாலை அதிகாரிகள் முறையற்ற செல்வாக்கைப் பிரயோகித்ததாக சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
தீப்பிடித்து எரிந்த கார்</h2><p>




 ஜூலை 3 ஆம் திகதி பிற்பகல் 2.55 மணியளவில், பாடசாலை வளாகத்திற்குள் ஆசிரியர் ஒருவரின் வாகனம் தீப்பிடித்து எறிந்துள்ளது. 

அதன் பின்னர், சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, எட்டு வயது சிறுவன் ஒருவன், 
 வாகனத்தின் அருகே சுற்றித் திரிந்து ஒரு தீப்பெட்டியை வீசியெறிவது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdbf4ad8-2cdc-4a64-992d-720ae667c502/26-6a5de025daacf.webp' /></p><p> </p><p>

காப்பீட்டு நோக்கங்களுக்காக, ஆசிரியர் குருநாகலை தலைமையக பொலிஸாரிடம் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களைச் சமர்ப்பித்து முறைப்பாடு கொடுத்த நிலையில், 
ஆனால் அதில் சிறுவனின் பெயர் குறிப்பிடவில்லை. </p><p>

ஆசிரியர், குழந்தையையோ அல்லது பெற்றோரையோ எந்த வகையிலும் வற்புறுத்தவில்லை. அவர் தனது முறைப்பாடுகளில் குழந்தையின் பெயரைக் கூட விரும்பவில்லை.</p><h2>
தாயார் செய்த முறைப்பாடு</h2><p>
இருப்பினும், ஆசிரியருக்கு எதிரான முறைப்பாடுகளில் குழந்தையின் பெயரையும் தாய் சேர்த்திருப்பது வருந்தத்தக்கது.</p><p> 

 ஜூலை 4 ஆம் திகதி, குழந்தை தனது பெற்றோருடன் தலைமை ஆசிரியர் மற்றும் பிரதித் தலைமை ஆசிரியர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது, </p><p>

இதன்போது, சிறுவன் ​​பல தீக்குச்சிகளைப் பற்றவைத்து, அதில் ஒன்றை காரின் பம்பரில் வீசியதை அவன் ஒப்புக்கொண்டான். பெற்றோர் இந்தச் செயலை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8874401b-4dd0-4e6d-8c9d-6813e0f2ce90/26-6a5de02693c42.webp' /></p><p>

மேலும் சிறுவனின் தந்தை சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார். 

குற்றப் புலனாய்வு அலுவலகத்தைச் (SOCO) சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காரைப் பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் செல்ல அனுமதியளித்துள்ளனர். </p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவன் பாடசாலைக்கு தவறாமல் வருகை தருவதாகவும், அவரின் பாதுகாப்பும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதாக பழைய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 




</p>]]></content>
            <updated>2026-07-20T08:45:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட நாமல் மற்றும் மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-limini-rajapaksa-1784518526"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-limini-rajapaksa-1784518526</id>
            <summary type="text">மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரின் மனைவி லிமினி ராஜபக்ச இருவரும் கடந்த வாரம் திடீர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொண்டிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரின் மனைவி லிமினி ராஜபக்ச இருவரும் கடந்த வாரம் திடீர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
</p><p>
அவர்கள் இருவரும் கடந்த வார ஆரம்பத்தில் முதன்முதலாக மாலைதீவை சென்றடைந்துள்ளனர். அது சாதாரண ஒரு விஜயம் அல்ல, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹின் மகளின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகவே சென்றுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>மாலைதீவில் நடந்த திருமண நிகழ்வு</h2><p>
மாலைதீவில் அமைந்துள்ள மிக ஆடம்பரமான உல்லாச விடுதி (Resort) ஒன்றில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான திருமண விழாவில் இலங்கையிலிருந்து விசேட விருந்தினர்களாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்திருந்தது.
</p><p>
ஆனாலும், இந்த விஜயம் அத்துடன் முடிவடையவில்லை. மாலைத்தீவு திருமண நிகழ்வு முடிந்த உடன், நாமல் ராஜபக்ச அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbf689e4-2e03-4d6c-8bb8-ac8cdb8076cc/26-6a5d9780d382a.webp' /></p><p>சிங்கப்பூரில் நடைபெற்ற உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான கிழக்காசிய மாநாட்டில் (Global Economic Cooperation East Summit) உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.
</p><p>
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் அங்கு விசேட உரை ஒன்றையும் ஆற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3dNaOe5-MUg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-20T08:39:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய கொடியேற்றம் நிகழ்வுகள் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flag-hoisting-ceremony-at-kataragama-temple-1784532287"></link>
            <id>https://tamilwin.com/article/flag-hoisting-ceremony-at-kataragama-temple-1784532287</id>
            <summary type="text">புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவின் (ஏசல பெரஹரா) மிக முக்கியமான கொடியேற்றம் நிகழ்வு இன்று(20.07.2026) இடம்பெற்றுள்ளது.கதிர்காமத்தில் இடம்பெறும் இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவின் (ஏசல பெரஹரா) மிக முக்கியமான கொடியேற்றம் நிகழ்வு இன்று(20.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>கதிர்காமத்தில் இடம்பெறும் இந்த கொண்டாட்டம் சுமாராக 14 முதல் 15 நாட்கள் கொண்ட ஆடிப் பெருவிழா, தெய்வானை
அம்மன் கோயில் கொடியேற்றத்துடன்&nbsp; உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/378163b2-28a9-4d3e-8eaa-7ec4918ed429/26-6a5dcfcec875b.webp' /></p><p>அத்துடன், தெய்வானை அம்மன் கதிர்காம முருகனின் மூத்த தேவியாகக் கருதப்படுவதால்,
அன்னைக்கு முதல் மரியாதை செலுத்தும் விதமாக இந்தக் கொடியேற்றம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விழாவில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T08:06:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத யாத்திரைகளுக்குத் தடை இல்லை : தொழிலாளர் அமைச்சு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-ban-on-religious-pilgrimages-1784530171"></link>
            <id>https://tamilwin.com/article/no-ban-on-religious-pilgrimages-1784530171</id>
            <summary type="text">தம்பாதிவா மற்றும் தாய்லாந்திற்கான சமய யாத்திரைகளைத் தடை செய்ய, தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்பாதிவா மற்றும் தாய்லாந்திற்கான சமய யாத்திரைகளைத் தடை செய்ய, தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ பரிந்துரைத்ததாகக் கூறப்படும் சமூக ஊடகக் கூற்றுகளை தொழிலாளர் அமைச்சு பொய்யென நிராகரித்துள்ளது.
</p><p>
ஓர் அறிக்கையில், அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் புனையப்பட்டது என்றும், அமைச்சர் அப்படி ஒரு அறிக்கையை ஒருபோதும் வெளியிடவில்லை என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><h2>பொய்யான கூற்றுக்கள் பரப்பப்பட்டு வருவதாக&nbsp;</h2><p> இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட குழுக்களால் இந்தப் பொய்யான கூற்றுக்கள் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் குற்றம் சாட்டியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ec6b0e4-d981-4292-bcd9-5662a9e2038f/26-6a5dcd434d96a.webp' /></p><p>
வன்மையாகக் கண்டனம் தெரிவித்த அமைச்சு, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்ட தரம் குறைந்த பொய்ப் பிரசாரம் பரப்பப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T07:41:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்ட்டன் - தியகல பிரதான வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/manjula-unite-to-build-a-new-national-culture-1784529031"></link>
            <id>https://tamilwin.com/article/manjula-unite-to-build-a-new-national-culture-1784529031</id>
            <summary type="text">அரசாங்கம், அதிகாரிகள், மக்கள் என மூன்று பிரிவினர் உள்ளனர். நாம் அனைவரும்
ஒன்றினைந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் ஒரு புதிய கலாசாரத்தினை உருவாக்க 
வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம், அதிகாரிகள், மக்கள் என மூன்று பிரிவினர் உள்ளனர். நாம் அனைவரும்
ஒன்றினைந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் ஒரு புதிய கலாசாரத்தினை உருவாக்க 
வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி
குழுத்தலைவருமான மஞ்சுள சுரவீர தெரிவித்துள்ளார்.
</p><p>62 கோடி ரூபா செலவிலான நோர்ட்டன் - தியகல பிரதான வீதி புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அபிவிருத்தி வேலைத்திட்டம்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

மக்கள் இன்று அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் செய்து
கொடுக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.</p><p> 

வீதியில் மரம் ஒன்று வீழ்ந்தால் கூட அதனை வெட்டுவதற்கு
அரசாங்க அதிகாரிகள் வர வேண்டும் என நினைக்கின்றனர். இந்த நிலை மாற
வேண்டும்.&nbsp;</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6573bbf-0b03-4f78-b61f-febcfe5d42ba/26-6a5dc8fb329b9.webp' /></p><p>நாம் அனைவரும் ஒன்றிணைந்து சங்கங்கள் மற்றும் அமைப்புக்களை உருவாக்கி எமது பிரதேசத்திற்கு தேவையான அபிவிருத்தியினை அரசாங்கத்துடன் இணைந்து
செயற்படுத்துவதற்கான கலாசாரத்தினை உருவாக்க வேண்டும்.
</p><p>
அப்போது தான்
இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் எமது பிரதேசத்தின் அனைத்து தேவைகளையும்
நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
</p><p>இந்த அரசாங்கம் வளமான நாடு மாற்றும் அழகான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.</p><p></p><h2>வீதிப் புனரமைப்பு</h2><p>
</p><p>
இன்று கூட நான் இவ்வாறான மூன்று அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துவிட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.</p><p>

அதே போன்று இந்த பிரதேசத்தில்
சுமார் 16 கிலோமீற்றர் கார்பட் இட்டு புனரமைக்கும் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f830f853-6dfa-4248-9917-0253bc1f841a/26-6a5dc8f958910.webp' /></p><p>இதனை அண்மித்த
பிரதேசங்களுக்கு சுமார் 97 கிலோமீற்றர் கார்பட் இட்டு புனரமைப்பதற்கு தேவையான
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>

மத்திய மாகாணத்தில் அபிவிருத்தி பணிகளுக்காக சுமார்
96 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் 60 பில்லியன் நிதி நுவரெலியா
மாவட்டத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் இவ்வளவு காலம் எதிர்ப்பார்த்த அபிவிருத்தி தற்போது நகரத் தொடங்கியுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் தட்டுப்பாடு</h2><p>

இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலினால் பாரிய சிக்கல்கள் ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இடம்பெற்று வருகின்ற அமெரிக்க மற்றும் ஈரானுக்கு இடையிலான யுத்தம் காரணமாக சர்வதேச ரீதியில் தார் மற்றும் எரிபொருள்
பெற்றுக்கொள்வது தடையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bb9f63e-05a2-43ff-be8d-19734f944f5a/26-6a5dc8fa5fc11.webp' /></p><p> எந்த தடைகள் வந்தாலும் டித்வாவினை
முகாமைத்துவம் செய்து முன்னெடுத்தது போல் இதனையும் நாம் சிறந்த முறையில் செய்து
முடிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இந்த நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள், தேசிய மக்கள் சக்தியின் அரசியல்
பிரமுகர்கள், பொது மக்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
பொறியியலாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-20T07:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வாள் - குண்டு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sword-bullet-recovered-an-assistant-superintendent-1784531619"></link>
            <id>https://tamilwin.com/article/sword-bullet-recovered-an-assistant-superintendent-1784531619</id>
            <summary type="text">யாழில் கடமை புரியும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து
வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளதாக&amp;nbsp;தகவல் வெளியாகியுள்ளது.இந்நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் கடமை புரியும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து
வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளதாக&nbsp;தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்நிலையில் வாக்குமூலம்
வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>வாக்குமூலம்</h2><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2efa078-54fe-4eff-98bb-8e546427f10c/26-6a5dccc4da14c.webp' /></p><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரியின் கண்டி பகுதியில் உள்ள
வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு
பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்நிலையில் இது குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் கண்டி மாவட்ட
குற்றத்தடுப்பு பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T07:23:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரம் 103ஆவது பிறந்த நாள் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udupi-singam-sivasithambaram-s-103rd-birthday-1784531894"></link>
            <id>https://tamilwin.com/article/udupi-singam-sivasithambaram-s-103rd-birthday-1784531894</id>
            <summary type="text">முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழர் விடுதலை
கூட்டணியின் தலைவருமான உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரத்தின் 103ஆவது ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழர் விடுதலை
கூட்டணியின் தலைவருமான உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரத்தின் 103ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வு, இன்று(20.07.2026) 8 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது, அவருடைய திரு உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c646689c-65cb-4ad8-9d59-5fb46e626ba6/26-6a5dcbf8b2914.webp' /></p><p> 

இதேவேளை, உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரத்தின் நினைவுகள் நினைவு கூரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நிகழ்வில், தங்க முகுந்தன், முன்னாள் கிராம சேவையாளர்
ரவிக்குமார், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் கு. சுரேந்திரன்
உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd84561b-94ab-4e0a-8191-b709535bb47e/26-6a5dcbf99e7c5.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4af78db3-ac47-4862-9079-18f269c69c48/26-6a5dcbfa71fbb.webp' /></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T07:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-dies-after-falling-1784520542"></link>
            <id>https://tamilwin.com/article/women-dies-after-falling-1784520542</id>
            <summary type="text">மாவத்தகம பிரதேசத்தில் தனது மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் ஒருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவத்தகம பிரதேசத்தில் தனது மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் ஒருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர் இங்குறுவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனுக்கேவத்தை வசிக்கும் 46 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான ரத்நாயக்க முதியன்சேலாகே வசந்தா குமாரி திசாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
மாவத்தகம நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தனது மகளை பேருந்தில் ஏற்றுவதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலையில் சற்று தொலைவில் அமைந்துள்ள பிரதான வீதிக்கு வந்துள்ளார்.</p><p>&nbsp;</p><p>
</p><h2><b>
தாய்க்கு நேர்ந்த கதி</b></h2><p>மகளை பேருந்தில் ஏற்றிவிட்டு மீண்டும் வீடு நோக்கி செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f935d81-138f-4899-ae7c-f9e404155151/26-6a5dbd6bd4978.webp' /></p><p>குப்புற விழுந்தமை காரணமாக நீரில் மூழ்கி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
</p><p>
நீண்டகாலமாக சுகயீனமுற்று இருந்த அவர் அதற்கான மருந்துகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><h3><b> 

மருத்துவ அறிக்கை</b></h3><p>இப் பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதுடன், தனது இரு பிள்ளைகளுடன் அவர் மாவத்தகம துனுக்கேவத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/404de908-fd1c-49fb-8fa8-6295456be09d/26-6a5dbd6c8606b.webp' /></p><p>குருநாகல் போதனா வைத்தியசாலையின் நீதிவான் மருத்துவ அதிகாரி யூ.எல்.எம்.எஸ். பெரேரா அவர்களால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணம் என நீதிவான் மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T07:18:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கு செல்ல வேண்டியவர்கள் நாங்கள் அல்ல..! சந்திரசேகரின் குற்றச்சாட்டுக்களுக்கு மனோ கணேசன் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mano-responds-to-chandrasekhars-allegations-1784530992"></link>
            <id>https://tamilwin.com/article/mano-responds-to-chandrasekhars-allegations-1784530992</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போது தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்திருப்பது, அநுர அரசால் தான் கைது செய்யப்படக் கூடாது என்பதற்காக தான் என்றும், வாக்குறுதிகளை கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போது தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்திருப்பது, அநுர அரசால் தான் கைது செய்யப்படக் கூடாது என்பதற்காக தான் என்றும், வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p> 

“களம்” நிகழ்ச்சிக்கு ஒன்லைன் வழியாக இணைந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

போராட்டங்கள் செய்து, ஆட்சியை பிடித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 22 மாதங்களாகியும் இதுவரையில் தமிழ் மக்களுக்காக ஒன்றும் செய்ய வில்லை.</p><p>இதனை நாங்கள், சுமாராக 30 மாதங்களுக்கு பின்னர் தட்டிக்கேட்போம். 

மாறாக, நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை, மேடை அமைத்தோம், இதுவொரு கூட்டு முயற்சியாக பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1811b9-87fd-40cd-9116-4dce8180a44a/26-6a5dc8e082d9c.webp' /></p><p>

மக்களுக்காக நாங்கள் கேட்கும் மாகாண சபை தேர்தல், காணி விடுவிப்பு போன்ற விடயங்களை அரசாங்கம் கருத்திற் கொள்ளாவிட்டால் 30 மாதங்களுக்கு பின், மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றார்.</p><p>

அநுர அரசாங்கத்தில் நடக்கும் மோசடிகளையும், நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் இயங்கும் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கையும் களம் நிகழ்ச்சி இன்னும் ஆழமாக ஆராய்கிறது...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DOo04M9fE1k" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T07:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி - இளம் காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-driven-drugged-driver-24-year-old-youth-dies-1784528634"></link>
            <id>https://tamilwin.com/article/bus-driven-drugged-driver-24-year-old-youth-dies-1784528634</id>
            <summary type="text">சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாரவில-முடுக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், யுவதியொருவர் காயமடைந்த நிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாரவில-முடுக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், யுவதியொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

நேற்று முன்தினம் (18) நீர்கொழும்பிலிருந்து மாரவில நோக்கிச்சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதி </h2><p>
</p><p>
தனியார் பேருந்து சாரதி போதைப்பொருளை பயன்படுத்தி பின்னர் போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்தி மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b264e1f-d61c-4856-8020-78038b11e7a7/26-6a5dc73882e2a.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தினையடுத்து சிலாபம் பகுதியை சேர்ந்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கொச்சிக்கடை -தலுவகொட்டுவ பகுதியை சேர்ந்த துலரா தனஞ்சய சில்வா (24) என்ற இளைஞர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 20 வயது யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
உயிரிழந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் காதலன் என்றும், இருவரும் தேவாலயத்திற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T07:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்பத்தைத் தணிக்க வான் எல குளத்தில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-elephants-take-refuge-in-van-ela-pond-1784527777"></link>
            <id>https://tamilwin.com/article/wild-elephants-take-refuge-in-van-ela-pond-1784527777</id>
            <summary type="text">திருகோணமலையின் கந்தளாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது
கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இந்த அதீத வெப்ப அலை
கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையின் கந்தளாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது
கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. </p><p>இந்த அதீத வெப்ப அலை
காரணமாக மனிதர்கள் மட்டுமன்றி, காடுகளில் வாழும் வனவிலங்குகளும் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்நிலையில், நிலவி வரும் கடும் வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக, கந்தளாய்
– வான் எல குளத்தைத் தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வருகை தந்துள்ளன.</p><p></p><h2>அசாதாரண வெப்பம் காரணமாக&nbsp;</h2><p>

பகலின் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்
நோக்கில், பெரிய யானைகள் முதல் குட்டிகள் வரை பல டஜன் கணக்கான யானைகள் வான் எல
குளத்து நீரில் மூழ்கியும், தும்பிக்கைகளால் நீரை இறைக்கும் காட்சிகள் தற்போது இப்பகுதியில் பதிவாகி
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc39ef62-2a20-426d-a066-f9ece89127f1/26-6a5dc13fb33de.webp' /></p><p>வழமையாக மாலை வேளைகளில் காட்டை விட்டு வெளியேறும் இந்த யானைக் கூட்டங்கள்,
தற்போது நிலவும் அசாதாரண வெப்பம் காரணமாக நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கத்
தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3acd1197-132d-4b92-b876-b040cefd20c1/26-6a5dc1408c09e.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T06:33:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமடையும் அதிகூடிய வெப்ப அலை! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-heatwave-in-5-districts-1784526825"></link>
            <id>https://tamilwin.com/article/severe-heatwave-in-5-districts-1784526825</id>
            <summary type="text">கிழக்கு மாகாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் இன்று (20) முதல் கடுமையான வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இயற்கை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் இன்று (20) முதல் கடுமையான வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் நேற்று (19) விடுத்த இந்த எச்சரிக்கையின் படி இந்த தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உடல் வெப்பநிலை&nbsp;அதிகரிக்கும் </h2><p> 

கிழக்கு மாகாணம் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce979d2-ba08-4ff4-bfc6-8980ff4baa22/26-6a5dbc275f45b.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, சில இடங்களில் பகல் நேரங்களில் உடல் வெப்பநிலை "கவனிக்கத்தக்க" அளவிற்கு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, கடும் வெப்பத்தின் தாக்கங்களை குறைப்பதற்காக, போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் வெப்பமான நேரங்களில் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்தல் உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T06:13:01+00:00</updated>
        </entry>
    </feed>
