<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-21T15:05:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிகளின் கணக்குகளை தானியங்கி முறையில் முடக்கம்: Uber நிறுவனத்திற்கு 966 மில்லியன் டொலர் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/automatic-suspension-of-driver-accounts-1787323508"></link>
            <id>https://tamilwin.com/article/automatic-suspension-of-driver-accounts-1787323508</id>
            <summary type="text">சாரதிகளின் கணக்குகளை அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்காமல் தானியங்கி
அமைப்புகள் மூலம் முடக்கியமைக்காக, uber நிறுவனத்திற்கு ஐரோப்பிய தரவுப்
பாதுகாப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாரதிகளின் கணக்குகளை அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்காமல் தானியங்கி
அமைப்புகள் மூலம் முடக்கியமைக்காக, uber நிறுவனத்திற்கு ஐரோப்பிய தரவுப்
பாதுகாப்பு விதிகளின் கீழ் 825 மில்லியன் யூரோ (சுமார் 966 மில்லியன் அமெரிக்க
டொலர்கள்) அபராதம் விதிக்க டச்சு தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை (AP)
தீர்மானித்துள்ளது.
</p><p>
ஐரோப்பிய பொதுத் தரவுப் பாதுகாப்பு விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட இரண்டாவது
மிகப்பெரிய அபராதத் தொகையாக இது கருதப்படுகின்றது.
</p><p>
2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில், மோசடிகளில் ஈடுபட்டதாக
சந்தேகிக்கப்பட்ட சாரதிகளின் கணக்குகளை போதிய மனித தலையீடுகள் இன்றியும்,
தெளிவான விளக்கமளிப்புகள் இன்றியும் கணினி அமைப்புகள் மூலம் Uber நிறுவனம்
தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் முடக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><h2>
விதிமீறல்களுக்கான அபாராதம்</h2><p>

நபர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை கணினி
வழிமுறைகள் மூலம் மட்டுமே எடுப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுப் பாதுகாப்பு
விதிகள் தடை செய்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56657479-a7ea-4b54-a7da-d73656b3aa3b/26-6a8864cb31768.webp' /></p><p>
</p><p>
மனித பரிசீலனை மற்றும் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இன்றி இவ்வாறான
முடிவுகள் எடுக்கப்பட்டமை கடுமையான விதிமீறல் என டச்சு கட்டுப்பாட்டகம்
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

இருப்பினும், இந்தத் தீர்மானத்தையும் விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும்
கடுமையாக மறுத்துள்ள Uber நிறுவனம், இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக
அறிவித்துள்ளது.</p><p>

சாரதிகளின் உரிமைகளைத் தாம் மதிப்பதாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான
சாரதிகளே இதனால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த அபராதத் தொகை மிகவும் அதிகமானது
என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகக் கட்டமைப்பு நெருக்கடி: வெனிசுலாவில் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-delay-in-venezuela-s-lubricant-exports-1787322301"></link>
            <id>https://tamilwin.com/article/major-delay-in-venezuela-s-lubricant-exports-1787322301</id>
            <summary type="text">&amp;nbsp;வெனிசுலா நாட்டின் சீரழிந்த எண்ணெய் துறைமுக முனையங்கள் காரணமாக, அந்நாட்டின்
மீளெழுச்சி பெற்றுவரும் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடுமையான பாதிப்புகளை
எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெனிசுலா நாட்டின் சீரழிந்த எண்ணெய் துறைமுக முனையங்கள் காரணமாக, அந்நாட்டின்
மீளெழுச்சி பெற்றுவரும் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடுமையான பாதிப்புகளை
எதிர்நோக்கியுள்ளது.
</p><p>
பழமையான உட்கட்டமைப்புகள், மின்சாரத் தடை மற்றும் தரப் பிரச்சினைகள் காரணமாக
கப்பல்களில் எண்ணெயை ஏற்றுவதற்கு சுமார் 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் துறைசார்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><h2>
உள்கட்டமைப்புச் சிக்கல்கள்</h2><p>
அமெரிக்காவுடனான உடன்படிக்கையைத் தொடர்ந்து வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை
விரைவாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இவ்வாறான உள்கட்டமைப்புச்
சிக்கல்கள் பெரும் தடையாக உருவெடுத்துள்ளன.
</p><p>
மசகு எண்ணெய் உற்பத்தி உயர்வடைந்துள்ள போதிலும், துறைமுகங்களின் பலவீனமான
நிலைமை காரணமாக அண்மைக்காலமாக நாளொன்றிற்கு 1.25 மில்லியன் பீப்பாய்களுக்கு
மேல் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/164bf949-9cd8-4048-ba49-f92a924f1cd4/26-6a8860555f576.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதத்தைக் கையாளும் ஹோசே துறைமுகப்
பகுதியில் எண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான கப்பல்கள் நங்கூரமிட்டு பல
நாட்கள் காத்திருக்கின்றன.
</p><h2>

ஏற்றுமதியை அதிகரிக்கத் திட்டம்</h2><p>பழமையான உள்கட்டமைப்புகளைப் புதுப்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படாத
நிலையில், ஏற்றுமதி அதிகரிக்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்
துறைமுகங்கள் திணறி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee7e2bee-6869-4a5b-91a0-fc16004b94e2/26-6a8860562c5c7.webp' /></p><p>
</p><p>
அத்துடன், காத்துக்கிடக்கும் கப்பல்களுக்கான தாமதக் கட்டணங்கள் மற்றும் தரப்
பிரச்சினைகள் தொடர்பில் பிணக்குகள் எழுந்துள்ளது.</p><p>

இந்த நிலையில், துறைமுகங்களின்
கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தங்கள் வசமே வைத்திருக்க அரசுக்குச் சொந்தமான
பி.டி.வி.எஸ்.ஏ நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஞ்சி பயன்படுத்துவோருக்கு விவசாயத் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-of-ginger-rot-disease-issues-warning-1787322077"></link>
            <id>https://tamilwin.com/article/threat-of-ginger-rot-disease-issues-warning-1787322077</id>
            <summary type="text">இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.</p><p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>எச்சரிக்கை</h2><p>

தற்போது வர்த்தகப் பயிரான இஞ்சி, குருணாகல், கண்டி, மாத்தளை, அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 2,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தமயந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1139422-8434-4bac-bd7e-d3434a8bd7c1/26-6a88625896673.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே இந்த நோய் தொற்றியிருந்தால், அதுபோன்ற புதர்களை எரித்து அழிக்குமாறு அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T14:36:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143"></link>
            <id>https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143</id>
            <summary type="text">புதிய இணைப்புயாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நில...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த ஒளிக்கு காரணமான மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர்
இளவாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம்(21) மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><p> அந்தவகையில் அவரை எதிர்வரும் மூன்றாம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>ஐந்தாவது இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் தற்போதுவரை 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.<br><br>பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்து ஒன்றும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நான்காவது இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது
நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய
வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின்
விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WQ7bM1YT4SA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது
தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற
திருவிழாவில் அதிகளவு ஒலி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும்
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை
மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c9126fe-085d-4814-86c6-16b9041742f6/26-6a8843de7f133.webp' /></p><p>
</p><p>கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு
மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள்
தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று
ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள்
மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55
பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84d11e32-fddd-485e-bc99-2487af8f2a96/26-6a8843df65f63.webp' /></p><p>
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக
வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>
மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும்
தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>இரண்டாவது இணைப்பு&nbsp;</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு
காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
</p><p>இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர்&nbsp; எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.</p><p>
️ கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf0db8c-637c-4ee7-a408-b2a7e2bc8c8e/26-6a880a998b5a2.webp' /></p><p>
</p><p>உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து
கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்
சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களை தேய்க்க வேண்டாம்.
</p><p>சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
</p><p>“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன்
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக
வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை&nbsp;</h2><p>

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
</p><p>அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஆலயத் திருவிழா</h2><p>
</p><p>
மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4f5d61-1510-4a3f-bdb4-a5434702ed78/26-6a87f1b62cc5d.webp' /></p><p>
</p><p>இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>&nbsp;மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
</p><h2>பார்வை பிரச்சினை</h2><p>
இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96d6b16-a4d5-4f7b-9533-87ec33cef535/26-6a87f1b55bdf5.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CFWVi5B8mkE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:20:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் அரசியலுக்கு வருகின்றாரா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/is-kandiah-bhaskaran-entering-politics-1787320749"></link>
            <id>https://tamilwin.com/article/is-kandiah-bhaskaran-entering-politics-1787320749</id>
            <summary type="text">தான் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தான் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.</p><p>

தற்போதைய அரசியல் சூழலும் சில அரசியல்வாதிகளின் விமர்சனங்களுமே தன்னை அரசியல் களத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் குறிப்பிட்ட அவர், </p><p>

தான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணையவில்லை என்றும், தற்போதைக்கு தனது சமூகப் பணிகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தனது சொந்த முயற்சியில் ‘ரீச்சா’ (REECHA) உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருவது சில அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தான் வளர்வது தங்களது அரசியலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என சில அரசியல்வாதிகள் கருதுவதாகவும், இதன் காரணமாகவே தன்னை அரசியல்வாதியாக சித்தரித்து விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் கந்தையா பாஸ்கரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் இருப்பதைவிட, தன்னைச் சுற்றியுள்ள அரசியல்வாதிகளே தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து அரசியல் களத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா அல்லது தனது தொழில் மற்றும் சமூகப் பணிகளில் தொடர்ந்து பயணிப்பாரா என்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6A0I_zgeOSg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T14:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்பு: ஆயிரக்கணக்கானோர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/751-suspects-arrested-sri-lanka-1787320068"></link>
            <id>https://tamilwin.com/article/751-suspects-arrested-sri-lanka-1787320068</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்தோடு, அவர்களில் நான்கு பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அத்தோடு, அவர்களில் நான்கு பேருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளதுடன் மேலும் மூவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

நேற்று (20) மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட முழுமையான சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை 753 ஆகும்.</p><p></p><h2>தேசிய நடவடிக்கை</h2><p> 

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தல், போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf761a87-c63b-4a4b-ba3a-c42b92876e22/26-6a885b6f1200f.webp' /></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:13:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஆபத்தான நிலையில் மீன்வளம் - விசாரணை துரிதப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-launches-detailed-investigation-1787320457"></link>
            <id>https://tamilwin.com/article/government-launches-detailed-investigation-1787320457</id>
            <summary type="text">நாட்டில் மீன்வளம் குறைந்து வருவதாக இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு இலங்கையின் கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் மீன்வளம் குறைந்து வருவதாக இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் துணை அமைச்சராக தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ரத்ன கமகே தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பில் இன்று(21.08.2026) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

நாட்டில் குறைந்து வரும் மீன்வளம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டில் மீன்வளம் குறைந்து வருவதாக செய்தித்தாள் அறிக்கைகளை நான் பார்த்திருக்கிறேன். </p><p>அதில் ஓரளவு உண்மை இருப்பதாகத் தெரிகிறது.


கடல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கடல் மாசுபாடு மற்றும் அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மீன் இருப்பு குறைவதற்கு பங்களிக்கக்கூடும்.
</p><p>
உலகின் பல்வேறு கடல் பகுதிகளிலும் இதேபோன்ற மாற்றங்கள் காணப்படுவதால், இந்த நிலைமை எல் நினோ நிகழ்வுகளுடன் தொடர்புடையதா என்பதை விசாரிக்க வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d1600b-76ff-449c-b75c-602250656646/26-6a885ca34b0ae.webp' /></p><p>
</p><p>
 கடலில் பாசிகளின் அளவு குறைவது ஒளிச்சேர்க்கை செயல்முறையைத் தடுக்கின்றதால், மீன் இனங்களின் வளர்ச்சிக்கும் உயிர்வாழ்விற்கும் தேவையான கடல் சூழலையும் பாதிக்கக்கூடும்.</p><h2>

காலநிலை மாற்றம்..</h2><p>
மேலும், கடல் வெப்பநிலை அதிகரிப்பால், சில மீன் இனங்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு இடம்பெயர வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமையால் நாட்டில் ஆங்காங்கே பாரம்பரியமாக மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் மீன்வளம் குறைவதற்கு வழிவகுக்கலாம்.</p><p>

சட்டவிரோத மற்றும் அழிவுகரமான மீன்பிடி முறைகளால் மீன்வளத்திற்கு ஏற்படக்கூடிய சேதத்தால், ஒழுங்குபடுத்தப்படாத இதுபோன்ற மீன்பிடி முறைகள் மீன்வளத்தைப் பாதிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/999a3619-5378-45f7-98e8-65cfbca61776/26-6a885ca43b393.webp' /></p><p>

மேலும், மீன்வளத்தின் தற்போதைய நிலை, மீன் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றின் வாழ்விடங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றைப் பாதிக்கும் காரணிகள் குறித்து ஒரு விரிவான ஆய்வை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு NARA-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், கண்டறியப்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், மீன்வளத்தைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு NARA-விடம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த ஆய்வறிக்கை மீன்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.</p><p><b>YOU MAY&nbsp; LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ok1iskLKzWo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-08-21T14:11:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்..! கொழும்பில் பட்டப்பகலில் கைவரிசையை காட்டிய போலி வங்கி அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-escapes-from-colombo-hotel-1787312729"></link>
            <id>https://tamilwin.com/article/man-escapes-from-colombo-hotel-1787312729</id>
            <summary type="text">

கொழும்பு - கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வந்த நபர், ஒருவர் ஹோட்டலில் உள்ள பொருட்களை திருடிய சென்றதாக தெரிவிக்கப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பு - கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வந்த நபர், ஒருவர் ஹோட்டலில் உள்ள பொருட்களை திருடிய சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இந்த சம்பவம் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
ஹோட்டலில் நடந்த சம்பவம்</h2><p>
மேலும் தெரியவருகையில், </p><p> 

கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வந்த நபர்
தன்னை ஒரு தனியார் வங்கியின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளதுடன், இரவு உணவிற்காக ஒரு குழுவினர் வரவுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார். </p><p>இதன்போது, ஹோட்டலில் இருந்து அதிக அளவு உணவு மற்றும் பானங்களை ஆர்டர் செய்துள்ளார். 

அதன் பின்னர், ஹோட்டல் பரபரப்பாக இருந்தபோது அந்த நபர் ஹோட்டலில் இருந்து பொருட்களைத் திருடிவிட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9abd0e53-a5cc-4751-8603-620bfd067e79/26-6a88417e73e4b.webp' /></p><p> 

 இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் கம்பெனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளது. 

பொலிஸார் நடத்திய விசாரணையில், இந்த சந்தேக நபர் இதற்கு முன்னர் குருந்துவத்த, பெலியகொட மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் இதேபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. </p><p>

அவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி வருகின்றனர். </p><h2>

பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்</h2><p>
பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன், இந்த சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ee54e89-23ac-416e-9ae0-e7e28234b953/26-6a88417f4978c.webp' /></p><p> </p><p>பல்வேறு சமயங்களில் சில தனிநபர்களால் செய்யப்படும் இதுபோன்ற மோசடிச் செயல்கள் பொலிஸ் நிலையங்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.</p><p> 

மேலும், கடைகள் மற்றும் பிற ஸ்தாபனங்களுக்கு வருகை தரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் முடிந்தவரை கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு இலங்கை பொலிஸ் அறிவுறுத்துகிறது.</p><p></p><p></p><p><b><i>You may like this..</i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VqzXPZK5BHs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-21T13:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலைக்குள் நுழையுமா CID! அமைச்சரின் அதிரடியால் ஆட்டம் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-enter-kalmunai-base-hospital-health-ministry-1787249944"></link>
            <id>https://tamilwin.com/article/cid-enter-kalmunai-base-hospital-health-ministry-1787249944</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர குற்றப்புலனாய்வுத்துறையினர் இந்த விடயத்திலே தலையிட வேண்டும் என தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர குற்றப்புலனாய்வுத்துறையினர் இந்த விடயத்திலே தலையிட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களை இழிவுபடுத்தி&nbsp;சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்து வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.</p><p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலை ஊழியர்கள், ஏனைய பணியாளர்களையும் இலக்கு வைத்து பதிவுகள் இடுவதால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்தோடு, ஆடை விவகாரம் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.</p><p>மேலும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்காமல் இரு தரப்பினருக்கும் சமமான நீதியினை வழங்குமாறும், இனங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RkNsFChSL3w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T13:43:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி வடக்கு காணி விடுவிப்பு போராட்டம் - ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valikamam-land-release-protest-statement-police-1787317932"></link>
            <id>https://tamilwin.com/article/valikamam-land-release-protest-statement-police-1787317932</id>
            <summary type="text">​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி
கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார்
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி
கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார்
வாக்குமூலம் பெற்றுள்ளனர்.</p><p>

​வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிக்குமாறு
கோரி, பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்களால் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு ஈ.பி.டி.பி கட்சியினர் தொடர்ந்தும்
ஆதரவு வழங்கி வருகின்றனர்.

​</p><p>இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16.08.2026) பலாலியில் இடம்பெற்ற
போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதாகக்
குற்றஞ்சாட்டப்பட்டு, அனுஷியா ஜெயகாந்த் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக பலாலி
பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

​</p><h2>வாக்குமூலம்</h2><p>இதன் தொடர்ச்சியாக, பலாலி பொலிஸ் நிலையத்திற்கு இன்று (21) அழைக்கபட்ட
அனுஷியா ஜெயகாந்திடம் பொலிஸார் முறையான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1156ee01-6383-44dd-82c9-ef437546f76f/26-6a885008b62f9.webp' /></p><p>இந்த விசாரணையின் போது, சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் ஈ.பி.டி.பி
கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் வலி
வடக்கு நிர்வாக செயலாளர் இ. ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோரும் அவருடன்
சென்றிருந்தனர்.

​</p><p>இதேநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்திலிருந்து
வெளியேறிய ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், உடனடியாகவே மயிலிட்டியில் இடம்பெற்ற
மக்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

​</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T13:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-full-financial-review-of-shiran-basik-1787316585"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-full-financial-review-of-shiran-basik-1787316585</id>
            <summary type="text">&amp;nbsp;ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட்சம் ரூபாய் வாடகை செலுத்தியுள்ளார். </p><p>தனது சொந்தத் தந்தைக்கு எவ்வாறு ஒரு நபர் வாடகை செலுத்த முடியும்? என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இது பணச்சலவை நடவடிக்கையாகவே இடம்பெற்றுள்ளது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவிப்பதுடன் அது தொடர்பிலும் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>
</h2><p></p><h2>'சோல் பீச்' ஹோட்டல் கட்டட காணி</h2><p>
'சோல் பீச்' ஹோட்டல் தொடர்பான சாட்சியங்களை வழங்கிய போது இதை உடைத்து அகற்றியது தொடர்பாக கடந்த காலத்தில் பெரும் பேச்சுகள் எழுந்தன. அந்தப் பேச்சுகளுக்கு அப்பால் இதன் உரிமையாளர் யார் என்பது குறித்து ஷிரான் பாசிக் தனக்கு முன்னுரிமை கொடுத்துக் கூறியுள்ளார்.
</p><p>ஹோட்டல் அமைந்துள்ள காணி தனது தந்தையிடமிருந்தே கிடைத்தது என்றும் தந்தைக்கு ஆனந்த என்பவரால் நன்கொடை உறுதிப்பத்திரம் மூலம் அது வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>அவ்வாறு கிடைத்த காணியிலேயே இந்த உணவகம் அமைக்கப்பட்டு ஒரு திட்டமாக செயற்படுத்தப்பட்டதாக அவர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளில் வெளிவந்த பிரதான விடயம் என்னவெனில்இ இந்த நன்கொடை உறுதிப்பத்திரம் என்பது முற்றிலும் பொய்யான ஒன்றாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14ae6d57-b84e-4ac9-bf65-f5c9425c9a5c/26-6a88496bdcbdf.webp' /></p><p>இது ஒரு போலி உறுதிப்பத்திரம் என தெரிவிக்கின்றன. மேலும்இ இந்தக் காணியின் உரிமை எந்தவொரு தனிநபருக்கும் உரியது அல்ல என்றும் இது பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரச காணியாகும.</p><p>
'சோல் பீச்' ஹோட்டல் அமைந்துள்ள அதே வளாகத்திலேயே இந்த ஓமhன் ஓல்டிங்ஸ் நிறுவனத்திற்குரிய கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. 
அரசுக்குச் சொந்தமான காணியை பலவந்தமாக ஆக்கிரமித்து இவ்வாறான கட்டடம் உயர்த்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இது தொடர்பாக போலி நன்கொடை உறுதிப்பத்திரத்தைத் தயாரித்தமைக்காக ஷிரானின் தந்தை மற்றும் இதற்கு உதவிய சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர புலனாய்வு அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
</p><h2>
பெறப்பட்ட சட்டவிரோத ஆவணங்கள்</h2><p>அத்துடன் இதில் பல்வேறு நபர்கள் தொடர்புபட்டுள்ளதுடன் அவர்களின் தகவல்களும் வெளிவந்துள்ளன. மேலும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இதற்காக எவ்வித முறையான அனுமதியும் பெறப்படவில்லை.
</p><p>குறிப்பாக இந்த ஹோட்டல் தொடருந்து பாதைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அப்படியிருக்க பிரதான வீதியிலிருந்து தொடருந்து பாதையைக் கடந்து உணவகத்திற்குச் செல்வதற்காக இவர்கள் தொடருந்து திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். </p><p>இது பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலிருந்து உள்ள ஒரு சட்டமாகும் என புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர். அந்தச் சட்டத்தின்படி அதனை ஒரு அனுமதியாகக் கொண்டு உணவகத்திற்கு மின்சாரம் மற்றும் நீர் வசதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>ஆனால் இவை அனைத்துமே போலி மற்றும் சட்டவிரோதமானவை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த உணவகத்திற்காகப் பெறப்பட்ட மதுபான உரிமங்கள் கூட முற்றிலும் சட்டவிரோதமானவை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>
ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான இந்த உணவகத்திற்கு வந்து சென்ற ஒரு முன்னாள் பிரதி அமைச்சர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்திலேயே இந்த உணவக வளாகத்திற்கு வந்து சென்றுள்ளார். </p><p>அவர் அங்கு வந்து சென்றமைக்கான புகைப்படங்கள் உணவகத்தில் இருந்து புலனாய்வு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர்! அரசாங்கம் கொண்டுள்ள நம்பிக்கை - வெளிப்படுத்தும் நிதி பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-reserves-to-reach-9-billion-1787313055"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-reserves-to-reach-9-billion-1787313055</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் அதிகரித்து வரும் சாதகமான போக்கின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (21.08.2026) உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>நாட்டிற்கு கிடைத்துள்ள பணம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf9de5c1-f970-4203-9124-06f0a9942ed3/26-6a8844cb17245.webp' /></p><p>இதனிடையே, 2028ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ள குறிப்பிடத்தக்க வெளிநாட்டுக் கடன் மீளச் செலுத்தல்களை கருத்திற்கொண்டு, வெளிநாட்டு நாணய வருவாய் மூலங்களை பல்வகைப்படுத்துவதற்கும், அதிகளவிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு ஈர்ப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p>முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் ஊடாக நாட்டிற்குள் வரும் நிகர வெளிநாட்டு நாணய வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகிறது.</p><h2>வெளிநாட்டு கடன்</h2><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fb324bb-eae7-4f8d-9b6e-01a1cd9afcdd/26-6a8844cbdaeba.webp' />&nbsp;&nbsp;</p><p>2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், பாரம்பரியமற்ற துறைகள் ஊடாக வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>அத்துடன், சர்வதேச தொழிலாளர் சந்தையில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய துறைகளுக்கு இலங்கை தொழிலாளர்களை வழிநடத்துவதற்கான நிதி மற்றும் பொருளாதார உத்திகளும் வகுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவாலி ஆலய திருவிழாவில் நடந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-incident-occurred-where-palm-tree-safety-fence-1787312501"></link>
            <id>https://tamilwin.com/article/an-incident-occurred-where-palm-tree-safety-fence-1787312501</id>
            <summary type="text">நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று(21) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது
பனை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று(21) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> இதன்போது
பனை மரம் ஒன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.</p><h2>ஆலய திருவிழா</h2><p>

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின்
நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க
அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019f66ac-5f15-48a9-9d0c-8af64fc7a396/26-6a883f31dc659.webp' /></p><p>
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப்
பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின்
பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு
தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும்
விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட
அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது
கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட
பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய
நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 நாட்களில் 8 ஆயிரத்தை தாண்டிய நோயாளர்கள் - இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-000-dengue-patients-registered-in-20-days-of-aug-1787311377"></link>
            <id>https://tamilwin.com/article/8-000-dengue-patients-registered-in-20-days-of-aug-1787311377</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கை முழுவதும் மொத்தம் 8,043 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கை முழுவதும் மொத்தம் 8,043 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், இந்த ஆண்டில் இதுவரையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,381ஆக உயர்ந்துள்ளதாகவும், டெங்கு தொடர்பான 71 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் NDCU கூறுகிறது.</p><h2>டெங்கு நோய் தொற்று</h2><p>
</p><p>
தற்போது டெங்கு நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 0.076% ஆக உள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் 8,043 நோய்த்தொற்றுகள் பதிவாகியிருந்தாலும், ஜூலையில் பதிவான 29,964 நோய்த்தொற்றுகள் மற்றும் ஜூன் மாதத்தில் பதிவான 21,533 நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது ஓகஸ்ட் மாதத்தில் ஒரு சிறிய சரிவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கூடுதலாக, மொத்த நோய்த்தொற்றுகளில் 52.94%, அதாவது 49,440 நோயாளிகள், மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.</p><p>

தெற்கு மாகாணத்தில் 13,697 நோய்த்தொற்றுகளும், மத்திய மாகாணத்தில் 8,441 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4c16795-f85a-4a5a-9253-913c9d6ed239/26-6a883aa31b5f8.webp' /></p><p>
</p><p>
மாவட்ட அளவில், கம்பஹாவில் அதிகபட்சமாக 19,888 வழக்குகளும், அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 18,535 வழக்குகளும், கண்டி மாவட்டத்தில் 6,755 வழக்குகளும் பதிவாகியுள்ளன.</p><p>மொத்தம் 76 சுகாதார மருத்துவ அதிகாரப் பகுதிகள் டெங்கு நோய்க்கான அதிக அபாயமுள்ள பகுதிகளாகத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்குமாறும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மணி நேர நீர்வெட்டு..! தமிழர் பகுதி மக்களுக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-hour-water-cut-in-batticaloa-1787309879"></link>
            <id>https://tamilwin.com/article/4-hour-water-cut-in-batticaloa-1787309879</id>
            <summary type="text">எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
நாளை(22) முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
நாளை(22) முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே மக்கள் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய
நீர்வழங்கல் அதிகாரசபை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன்
அறிவித்துள்ளார்.</p><h2>நீர் வெட்டு</h2><p>

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின்
நீர்மட்டம் வெகுவாக குறைடைந்து செல்லுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9a03dc-a5e4-47ce-b824-5b255ed8496c/26-6a883252de40d.webp' /></p><p>இந்த நிலையில் தொடர்ச்சியாக
நீர் வளங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை
நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்ளுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதேவேளை தற்போது உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வரலாற்றில் முதல் தடவையாக 10
அடியாக குறைந்துள்ளதுடன் தற்போது மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என
வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d1d8f8f-28ea-4e59-a323-b730f0aff4dd/26-6a8839a7a6326.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிறப்பு விமான விபத்தில் 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alaska-charter-flight-crash-kills-8-1787307360"></link>
            <id>https://tamilwin.com/article/alaska-charter-flight-crash-kills-8-1787307360</id>
            <summary type="text">அண்மையில் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் நடந்த வாடகை விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் நடந்த வாடகை விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜிலிருந்து சுமார் 725 கிலோமீட்டர் (450 மைல்கள்) மேற்கே அமைந்துள்ள கேப் நியூவென்ஹாம் ரேடார் தள விமான நிலையத்தை அணுகும்போது அந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>விமான விபத்து</h2><p>
</p><p>
இந்த சம்பவத்தின்போது விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு விமானிகளும் இருந்ததாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் கூறியுள்ளார்.
</p><p>
ஆங்கரேஜை தளமாகக் கொண்ட செக்யூரிட்டி ஏவியேஷன் என்ற விமான வாடகை நிறுவனத்தால் இயக்கப்படும் செஸ்னா 441 ரக விமானம் இது என அறிக்கைகள் அடையாளம் காட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54977dd3-5880-4d65-bb85-d9938404ffd2/26-6a88387adb7ee.webp' /></p><p> </p><p>விபத்து குறித்த செய்தியைத் தொடர்ந்து, அலாஸ்கா செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p>
"நான் அலாஸ்கா முழுவதும் செக்யூரிட்டி ஏவியேஷனுடன் விரிவாகப் பயணம் செய்துள்ளேன், மேலும் அவர்களின் அனுபவம் வாய்ந்த பல விமானிகளைச் சந்தித்துள்ளேன்," என அந்தத் தொலைதூரப் பகுதியில் செயல்படும் வாடகை நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.</p><p>விமானப்படை அலாஸ்கன் கட்டளைப் பிரிவு ‘நமது இராணுவக் குடும்பத்திற்கான இழப்பு’ என இரங்கல் தெரிவிக்கிறது.&nbsp; அந்த விமானம் “பொதுமக்களுக்கான ஒப்பந்த விமானம்” என அமெரிக்க இராணுவத்தின் அலாஸ்கன் கட்டளைப் பிரிவு கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் மேற்கோள்காட்டியுள்ளது.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிப்பாய் சபைக்கு தீச்சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/member-arriving-manipay-council-carrying-fire-pot-1787310834"></link>
            <id>https://tamilwin.com/article/member-arriving-manipay-council-carrying-fire-pot-1787310834</id>
            <summary type="text">மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் நா. பகீரதன், தீச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் நா. பகீரதன், தீச்சட்டியுடன் திடீரென சபைக்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>சுகாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
கல்லூண்டாய் குப்பை மேடு தொடர்ச்சியாக தீப்பற்றி எரிவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் சுகாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக உறுப்பினர் நா. பகீரதன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eaca82c-3581-4f2b-a5eb-1bfc92a48a20/26-6a883480a4332.webp' /></p><p>

குறிப்பாக, குப்பை மேட்டில் பொலித்தீன் மற்றும் பம்பஸ் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதால் அப்பகுதி மக்கள் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்தப் பிரச்சினை தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலும் பலமுறை பேசப்பட்டுள்ளதுடன், ஊடகங்கள் மூலமும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><h2>யாழ்ப்பாண மாநகர சபை</h2><p>
</p><p>
எனினும், இதுவரை பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p>

இதனை வெளிப்படுத்தும் வகையில், கல்லூண்டாய் குப்பை மேட்டில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்களை அடையாளப்படுத்தும் விதமாக நெருப்பு சட்டியுடன் சபைக்குள் நுழைந்ததாகவும் நா. பகீரதன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c2cd70b-2b99-4399-991b-88c201cd1d52/26-6a88348189f10.webp' /></p><p>
</p><p>
மேலும், கல்லூண்டாய் குப்பை மேடு தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் க. ஜெசீதனின் நடவடிக்கைகள் தமக்கு திருப்தியளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.</p><p>

யாழ்ப்பாண மாநகர சபையின் நடவடிக்கைகளுக்கு தவிசாளர் துணைபோவதாகவும், இந்த விடயம் தொடர்பில் தாம் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நா. பகீரதன் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-inflation-rises-1787309574"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-inflation-rises-1787309574</id>
            <summary type="text">நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்திற்கமைய, ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

இதற்கமைய, ஜூன் மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்திற்கமைய, ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. </p><p>

இதற்கமைய, ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்கம், ஜூலை மாதம் வரை 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><h2>உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம்</h2><p>

அத்துடன், ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் பணவீக்க விகிதம், ஜூலை மாதத்தில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1fc3a62-941a-46c5-b51e-3972cc40805d/26-6a883641db0ab.webp' /></p><p>

இதற்கிடையில், ஜூன் மாதத்தில் 9.3 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம், ஜூலை மாதத்தில் 9.2 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைவ திருவிழாக்களில் கலந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-devotees-attending-festivals-1787311314"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-devotees-attending-festivals-1787311314</id>
            <summary type="text">நேற்றைய தினம்(20) எமது யாழ். மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினம்(20) எமது யாழ். மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்ட்டிருக்கின்றமை மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்துள்ளது என தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>

சைவ கோயில்களில் இடம்பெற்ற களியாட்டங்கள்</h2><p>

 அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
</p><p>
இந்த சம்பவத்தை போன்று, கடந்த மாதங்களில் சில ஆலய திருவிழாக்களில் மிகவும் விரும்பத்தகாத ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் சைவ சமயங்களிடையே பெறும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8488106b-6459-4dc9-90e9-8198d0cfc59f/26-6a883595465e5.webp' /></p><p>
</p><p>
சைவ பரிபாலன சபை இந்து கலாச்சார திணைக்களம் என்பன சில ஒழுங்குவிதிகளை
கட்டுப்பாடுகளை ஏற்கனவே திருக்கோவில்களிடம் வலியுறுத்தி உள்ளன அது
வரவேற்கத்தக்கது.</p><h2>

பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>

ஆதலினால் அன்புக்குரிய ஆலய அறங்காவலர்களே எக்காரணம் கொண்டும் ஆலய
திருவிழாக்களில் இவ்வாறான எந்த களியாட்டங்களிற்கோ அதிக வெளிச்சம் பாய்ச்சல்
நிகழ்வுகளிற்கோ ஒலி எழுப்புதலுக்கோ இடம் அளிக்காதீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/435be783-98d7-4c09-b0e3-de96be9b6a0a/26-6a88359621188.webp' /></p><p>
</p><p>
இந்த விடயத்தை மிகவும் சிரத்தை எடுத்து தலைமேற்கொண்டு கோவிலை தழுவிய குடிகள்
குடிகளை தழுவிய கோவில் என்பதற்கு உயிர் கொடுக்குமாறு அனைத்து ஆலயம் சார்ந்த
சைவ பெருமக்களையும் கேட்டுக் கொள்கின்றோம். </p><p>

அதே நேரம் சட்டத்தை மிக இறுக்கமாக
நடைமுறைப்படுத்துமாறு சகல சம்பந்தப்ட்ட தரப்புக்களையும் கோருவதுடன்
அவர்களிற்கு அனைத்து சைவ சமயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு
கொள்கின்றோம்

பாதிக்கப்பட்ட பக்தர்கள் விரைந்து குணம்பெற அன்பே உருவான இறை சிவனை
பிரார்த்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br><br><b><i>you may like this..</i></b></p><hr><p><b><i><br></i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4WCYiz2i_Z4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-21T11:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை கட்டாயம் கவனியுங்கள்..! வாகனம் வைத்திருப்போருக்கு பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-issued-a-warning-regarding-vehicle-thefts-1787308016"></link>
            <id>https://tamilwin.com/article/police-issued-a-warning-regarding-vehicle-thefts-1787308016</id>
            <summary type="text">மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக நிறுத்தி வைப்பதால், அவற்றை குற்றவாளிகள் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக நிறுத்தி வைப்பதால், அவற்றை குற்றவாளிகள் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர், 

வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதுடன், அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களும் திருடப்படுவதாக தெரிவித்துள்ளார்.</p><h2>பொலிஸார் எச்சரிக்கை</h2><p>
</p><p>
சில சந்தர்ப்பங்களில் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், வாகனத்தை இயக்க நிலையில் வைத்துவிட்டு வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியின் சாவியை வாகனத்திலேயே விட்டுச் செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/648d3db6-2d0f-495c-b210-76ff8d4e9209/26-6a882e99f31e5.webp' /></p><p> </p><p>

இவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகள் மிகக் குறுகிய நேரத்தில் வாகனங்களை திருடிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், வீடுகளுக்கு வெளியே வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைப்பதுடன், வீட்டு வளாகத்தின் வாயில் கதவுகளுக்கு பூட்டு போடாமல் இருப்பதால் வாகனங்கள் திருடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>வாகனத் திருட்டு</h2><p>

நெரிசல் அதிகமான இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அருகிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அது தொடர்பில் தெரியப்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> 

வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் அல்லது பணியாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf75c5f-6c97-4927-9434-6555eabf9e47/26-6a882e9ac690e.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
வாகனம் திருடப்பட்டால், உடனடியாக 119 அல்லது 118 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p><br><br><b><i>YOU MAY LIKE THIS..<br><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PjDQ294dN3c" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-21T11:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் FCIDஇலிருந்து வெளியேறிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-appears-before-fcid-1787285911"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-appears-before-fcid-1787285911</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாக்குமூலம் அளித்த பின்னர், சற்று நேரத்திற்கு முன்பு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாக்குமூலம் அளித்த பின்னர், சற்று நேரத்திற்கு முன்பு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார் </p><p>நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, இன்று காலை (21) FCIDஇற்கு வருகை தந்த நிலையில் அந்தப் பிரிவால் நடத்தப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக FCIDஇல் முன்னிலையானார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று காலை (21) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்கவே அவர் முன்னிலையாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb69073-1174-4e36-9868-c4222ca7c000/26-6a87d51ea9aa7.webp' /></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zm1BRBjqgJ4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-21T10:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம் - வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-discussion-led-by-the-mannar-district-1787306524"></link>
            <id>https://tamilwin.com/article/special-discussion-led-by-the-mannar-district-1787306524</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள்
முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான
வட்டியற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள்
முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான
வட்டியற்ற கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், மன்னார்
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (21.08.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில்
நடைபெற்றது.
</p><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கு
அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதம
கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் திணைக்கள அதிகாரிகள், பலநோக்குக்
கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார்
அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><h2>நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகையில், இச்சிறுபோக
அறுவடை ஆரம்பித்தது முதல் அரசாங்கத்தின் மூலம் நெல் சந்தைப்படுத்தல் சபையின்
ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து அறுவடைகளை முடித்து நெல்லை
வைத்திருக்கும் நிலையில், அவர்கள் அதை விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்புடன்
காத்திருப்பதால் அரசாங்கத்தினால் தற்போது புதிய சுற்றுநிருபம்
வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f3e253f-0cab-4fc1-9e0a-b74c93e4eff9/26-6a882a7c541ce.webp' /></p><p> </p><p>அதன்படி பலநோக்குக் கூட்டுறவுச்
சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு
அரசாங்கத்தின் ஊடாக வட்டியற்ற கடன்களை வழங்கி, விவசாயிகள் வைத்திருக்கும்
நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
எனவே எமது மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட
தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லைக் கொள்வனவு செய்து, அதனைச் சேமித்து
அரிசியாக்குவதற்கான வசதிகளை வைத்திருந்தால் உடனடியாக இந்தச் செயல் திட்டத்தில்
இணைந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு அவர்
வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3afc3e-47a0-4cb1-9e41-09016d029674/26-6a882a7d4210c.webp' /></p><h2>நிர்ணயித்த விலையில் கொள்முதல்</h2><p>
</p><p>

இத்திட்டத்தின் கீழ் சந்தையில் நெல்லுக்கான நியாயமான விலையை உறுதி செய்யும்
பொருட்டு 1 kg வெள்ளை நாடு நெல் 120 ரூபாவிற்கும், சிவப்பு நாடு நெல் 120
ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும் அரசு நிர்ணயித்த விலையில்
கொள்முதல் செய்யப்படவுள்ளதுடன், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம்
அதிகபட்சமாக 14% ஆகவும் பதர் நெல்லின் அளவு 9%க்கு மிகாமலும் இருத்தல்
வேண்டும்.</p><p>

அத்துடன் நிலப்பரப்பின் அடிப்படையில் 1 ஏக்கர் வரை பயிர்செய்த விவசாயிகளிடம்
இருந்து அதிகபட்சமாக 1000 kg நெல்லும், 1 முதல் 3 ஏக்கர் வரை பயிர்
செய்தவர்களிடம் 2500 kg நெல்லும், 3 முதல் 5 ஏக்கர் வரை பயிர் செய்தவர்களிடம்
4000 kg நெல்லும் அதிகபட்சமாக கொள்முதல் செய்யப்பட உள்ள நிலையில்
நாளொன்றுக்கு அதிகபட்சம் 25 மெட்ரிக் தொன் வரை அரைக்கும் திறன் கொண்ட, மாவட்ட
செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு
அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபாய் வரை வட்டியற்ற கடன் ஒதுக்கப்பட்டு, ஆரம்ப
முன்பணமாக 25% விடுவிக்கப்பட்டு மீதித் தொகை 3 சம தவனைகளில் வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5c04b9-cfa7-4088-9828-488c26abaf8f/26-6a882a7e23cdf.webp' /></p><p>
</p><p>
அரசினால் வழங்கப்படும் இந்நிதியை 240 நாட்களுக்குள் முழுமையாக மீளச் செலுத்த
வேண்டும் என்பதுடன், தவறும்பட்சத்தில் எஞ்சிய தொகைக்கு ஆண்டுக்கு 10% வட்டி
அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும், முந்தைய அரசாங்கம்
கடன்களை மீளச் செலுத்தாத ஆலை உரிமையாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட
மாட்டார்கள் என்றும் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
</p><p>
தொடர்ந்து, தகுதியான பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவுச்
சங்கங்களும் உடனடியாக மாவட்ட செயலகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்
செயற்திட்டத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44e86a3-dd5d-40d0-b251-aa981b7c5826/26-6a882a7ef1402.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்றுமதியாளர்களின் வரிப்பணம் திரும்பப்பெறுவதில் தாமதம் - கோப் குழுவில் ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ird-explains-vat-refund-delays-on-time-1787304320"></link>
            <id>https://tamilwin.com/article/ird-explains-vat-refund-delays-on-time-1787304320</id>
            <summary type="text">சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்டு வரி(VAT) பணத்தைத் திரும்பப் பெறுவதில் சந்திக்கும் தாமதங்கள் தொடர்பில் பொது நிதிக் குழு (CoPF) கே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்டு வரி(VAT) பணத்தைத் திரும்பப் பெறுவதில் சந்திக்கும் தாமதங்கள் தொடர்பில் பொது நிதிக் குழு (CoPF) கேள்வியெழுப்பியுள்ளது.&nbsp;</p><p> 

அத்துடன், சுமார் 95% பணம் திரும்பச் செலுத்துதல்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படுவதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.</p><p>பணம் திரும்பச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவது குறித்து ஏற்றுமதியாளர்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளைக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், IRD-யின் வரி டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்னணு விலைப்பட்டியல் திட்டங்களை CoPF ஆய்வு செய்தபோது இந்தப் பிரச்சினை வெளிவந்துள்ளது.</p><h2>காலகெடுவுக்குள் பணம் செலுத்தப்படுகின்றதா...</h2><p> </p><p>

பணம் திரும்பச் செலுத்துதல் குறித்து சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் முறைப்பாடு அளிப்பதாகவும், தேவையான காலக்கெடுவுக்குள் பணம் செலுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e738f9c4-ebcc-411a-8fcb-534bd91f750b/26-6a882a2490f4c.webp' /></p><p>
</p><p>

மேலும், 14 நாட்களுக்குள் பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்குப் பதிலளித்த IRD அதிகாரிகள், நிலுவையில் உள்ள வரி விவகாரங்கள், வருமான வரி தாக்கல் இணக்கம், ஆவணங்கள் மற்றும் ஒரு கோரிக்கைக்கு ஒதுக்கப்பட்ட இடர் வகைப்பாடு உள்ளிட்ட தனிப்பட்ட கோப்புகளின் சூழ்நிலைகளைப் பொறுத்தே பணம் திரும்பச் செலுத்தும் செயல்முறை அமையும் என்று குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

"சில நேரங்களில், அவர்கள் கையாள விரும்பாத ஒரு நிலுவைத் தொகை இருக்கும். அத்தகைய நேரங்களில், எங்களால் அவர்களுக்கு 14-15 நாட்களுக்குள் பணத்தை வழங்க முடியாது. </p><p>அவர்கள் அதைக் கையாண்ட பின்னர் தான் நாங்கள் அதை வழங்க வேண்டும்," என்று ஒரு IRD அதிகாரி CoPF-இடம் கூறினார்.

பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோப்புகள், இடர் மற்றும் இணக்கக் கருத்தாய்வுகளின்படி வகைப்படுத்தப்படுவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.</p><h2>இரண்டு வாரங்கள் தொடரும்</h2><p>

கோரிக்கைகள் அதிக, நடுத்தர அல்லது குறைந்த இடர் என வகைப்படுத்தப்படுவதாகவும், குறைந்த மற்றும் நடுத்தர இடர் கொண்ட கோரிக்கைகளுக்கான பணம் திரும்பச் செலுத்துதல் பொதுவாக 14-15 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் IRD கூறியது.</p><p> 

அதிக இடர் கொண்ட கோரிக்கைகளுக்குப் பணம் திரும்பச் செலுத்தப்படுவதற்கு முன்பு ஒரு தனி சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cbeab45-7618-4494-b6c7-50ecb607a60d/26-6a882a2543176.webp' /></p><p>
</p><p>
"சுமார் 95% பணம் திரும்பச் செலுத்துதல், கொடுக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படும்," என்று ஒரு IRD அதிகாரி குழுவிடம் கூறினார்.</p><p>

மீதமுள்ள வழக்குகளில் ஏற்படும் தாமதங்கள், தவறுகள், ஆவணச் சிக்கல்கள் அல்லது வரி செலுத்துவோரின் கோப்பு தொடர்பான குறிப்பிட்ட சூழ்நிலைகளால் ஏற்படக்கூடும் என்று அந்த அதிகாரி கூறினார்.
</p><p>
பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள பிரச்சினைகளை மதிப்பிடுவதற்குத் தரவுப் பகுப்பாய்வு பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-decline-in-us-dollar-selling-rate-in-sri-lanka-1787306006"></link>
            <id>https://tamilwin.com/article/the-decline-in-us-dollar-selling-rate-in-sri-lanka-1787306006</id>
            <summary type="text">அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாவாக குறைந்துள்ளது. அதே சமயம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(21.08.2026) அமெரிக்க டொலருக்கு எதிராக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாவாக குறைந்துள்ளது.</p><p> அதே சமயம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(21.08.2026) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.</p><h2>டொலரின் பெறுமதி&nbsp;</h2><p>
</p><p>
இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 326.05இலிருந்து ரூ. 325.10 ஆகக் குறைந்துள்ளது. மேலும் அதன் விற்பனை விகிதமும் ரூ. 335.01இலிருந்து ரூ. 334.23 ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56be3058-d5b3-45dc-8f26-41d9f7bf2ad9/26-6a882286ee908.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொரிய விமானிகளைக் காப்பாற்றிய இலங்கைத் தொழிலாளர்கள்! கிடைத்துள்ள அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-workers-save-korean-pilots-1787302984"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-workers-save-korean-pilots-1787302984</id>
            <summary type="text">4 ஆண்டுகளுக்கு முன்பு, 3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்&amp;nbsp;தென் கொரிய படகொன்றின் மாலுமியுடன் இணைந்து&amp;nbsp;மஞ்சள் கடலில்&amp;nbsp; தீப்பிடித்து விழுந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 ஆண்டுகளுக்கு முன்பு, 3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்&nbsp;தென் கொரிய படகொன்றின் மாலுமியுடன் இணைந்து&nbsp;மஞ்சள் கடலில்&nbsp; தீப்பிடித்து விழுந்த விமானமொன்றில் இருந்து 2 விமானிகளை காப்பாற்றியுள்ளனர்.</p><p>அவ்வாறு உயிரைக் காப்பாற்றிய 2&nbsp;இலங்கையர்களுக்கு தேசிய நலனுக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை காரணம் காட்டி, அங்கு நீண்ட காலம் தங்குவதற்கான திறன்மிகு தொழிலாளர் விசாக்களை வழங்கியதாக அந்த நாட்டு நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>திறன்மிகு தொழிலாளர் தகுதி&nbsp;</h2><p>மூன்றாவது மீட்பாளர் ஏற்கனவே நீண்ட கால வதிவிடத் தகுதியைப் பெற்றிருப்பதுடன் 2022 ஆகஸ்ட் 12 அன்று, சியோலுக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால் இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது.</p><p> இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து கீழே விழுந்த போர் விமானத்தின் விமானிகளை, கடற்றொழில் படகில் இருந்த இலங்கைத் தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b427d77-16df-48da-a688-fea3f86ba3ba/26-6a881d8da7f5d.webp' /></p><p>அந்த நேரத்தில், அந்த மூன்று பேரும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் துறைகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பொதுவாக வழங்கப்படும் E-9 விசாக்களை வைத்துக்கொண்டு, வேலைவாய்ப்பு அனுமதி முறையின் கீழ் தென் கொரியாவில் இருந்துள்ளனர். </p><p>இந்தத் தகுதி, தொழிலாளர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கும். வெள்ளிக்கிழமை அன்று E-7-4 திறன்மிகு தொழிலாளர் தகுதி வழங்கப்பட்ட அந்த இரு நபர்களும், ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் வரை தென் கொரியாவில் தங்கியிருக்கலாம்.</p><h2>அதிகாரப்பூர்வ அங்கீகாரம்</h2><p> </p><p>அதன் பிறகு, நீட்டிப்புகளின் எண்ணிக்கைக்கு வரம்பின்றி, அவர்களின் விசாக்களை இரண்டு ஆண்டு இடைவெளிகளில் புதுப்பித்துக் கொள்ளலாம். </p><p>இதனையடுத்து "நமது சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்புகளை ஆற்றியுள்ள வெளிநாட்டினர் நாட்டில் நிலையாக வாழ்வதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்" என நீதித்துறை அமைச்சர் ஜங் சங்-ஹோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70a4a7f-f60b-4e4a-be68-5b387715c92c/26-6a881d8e58f5f.webp' /></p><p> </p><p>அந்த வீரர்களின் செயல்களுக்கு கிடைத்த மற்றொரு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த மே மாதம், இரண்டு விமானிகளைக் காப்பாற்ற உதவியதற்காக, விமானப்படைத் தலைமைத் தளபதியிடமிருந்து அவர்கள் ஒரு பாராட்டுக் கடிதத்தைப் பெற்றுள்ளனர். </p><p>4 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்தத் தொழிலாளர்களின் செயல், இறுதியில் 2 உயிர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தென் கொரியாவில் அவர்களின் வாழ்க்கைப் போக்கையும் மாற்றியமைத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:17:31+00:00</updated>
        </entry>
    </feed>
