<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-22T22:22:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 நாடுகளுக்கான விசா தடை குறித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கை : இரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-policy-on-visa-ban-for-75-countries-1787430409"></link>
            <id>https://tamilwin.com/article/trump-policy-on-visa-ban-for-75-countries-1787430409</id>
            <summary type="text">அமெரிக்காவில் 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் குடியேற்ற
விசாக்களை வழங்குவதை இடைநிறுத்தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு
வந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் குடியேற்ற
விசாக்களை வழங்குவதை இடைநிறுத்தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு
வந்த கொள்கையை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.</p><p>

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ
அதிகாரத்தை மீறி இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதாக மான்ஹாட்டன் கூட்டாட்சி
நீதிமன்ற நீதிபதி ஜெனெட் வர்காஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>குடியேற்றச் சட்டத்திற்கு முரணானது</h2><p>
</p><p>
தேசிய இனத்தின் அடிப்படையில் விசா வழங்குவதை ஒட்டுமொத்தமாகத் தடுப்பது
கூட்டாட்சி குடியேற்றச் சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f8bf07e-100c-431c-86b8-5530e42e65c8/26-6a8a060b21118.webp' /></p><p>
</p><p>
நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வந்த இந்த விசா இடைநிறுத்த உத்தரவால்
பாகிஸ்தான், பங்களாதேஷ், பிரேசில், கொலம்பியா உட்பட இலத்தீன் அமெரிக்கா,
பால்கன் பகுதிகள், தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச்
சேர்ந்த பல விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பொது நிதி ஆதாரங்கள்
தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள்
அவசியம் என ட்ரம்ப் நிர்வாகம் வாதிட்ட போதிலும், அதற்கு எதிராகத் தாக்கல்&nbsp;செய்யப்பட்ட வழக்கில் தற்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T22:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலாவில் நீர் இருப்பைக் கண்டறிய சீனாவின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-s-new-chang-e-7-moon-mission-aims-1787433639"></link>
            <id>https://tamilwin.com/article/china-s-new-chang-e-7-moon-mission-aims-1787433639</id>
            <summary type="text">நிலவின் தென் துருவத்தில் உள்ள நிழல் படிந்த பள்ளங்களில் உறைந்துள்ள நீர்
பனிக்கட்டியைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக, &#039;சாங்கே-7&#039; என்ற விண்கலத்தை
விண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவின் தென் துருவத்தில் உள்ள நிழல் படிந்த பள்ளங்களில் உறைந்துள்ள நீர்
பனிக்கட்டியைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக, 'சாங்கே-7' என்ற விண்கலத்தை
விண்ணில் செலுத்த சீனா தயாராகி வருகின்றது.
</p><p>
இந்த விண்கலம் வரும் ஓகஸ்ட் 24 முதல் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில்
விண்ணில் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
சுற்றுப்பாதை விண்கலம், தரையிறங்கி, ஊர்தி மற்றும் குதிக்கும் ரோபோ சாதனம்
ஆகிய நான்கு முக்கிய பகுதிகளைக் கொண்டு இந்த ஆய்வுப் பயணம்
திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>நீர் தொடர்பிலான தரவு</h2><p>
நிலவின் தென் துருவத்தில் உள்ள 21 கிலோமீட்டர் அகலமுடைய 'ஷேக்கிள்டன்'
பள்ளத்தின் அருகே தரையிறங்கி, அங்குள்ள நீர் பனிக்கட்டியின் அளவு, தன்மை
மற்றும் பயன்பாடு குறித்து இந்த மிஷன் ஆய்வு செய்யவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a7f5ca-55c4-452a-9395-407bb946a65b/26-6a8a12a9d0585.webp' /></p><p>
</p><p>
நிலவில் மனிதர்கள் தங்குவதற்கும், குடிநீராகப் பயன்படுத்துவதற்கும், ஐதரசன்
மூலம் ஏவுகணை எரிபொருள் தயாரிப்பதற்கும் இந்நீர் மிக அவசியமான ஒன்றாகப்
பார்க்கப்படுகின்றது.
</p><p>
இதற்கு முன்னர் இந்தியாவின் 'சந்திரயான்-3' நிலவின் தென் துருவத்தில்
வெற்றிகரமாகத் தரையிறங்கி நீர் தொடர்பிலான தரவுகளைச் சேகரித்திருந்த நிலையில்,
ரஷ்யாவின் 'லூனா-25' விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து மோதிச் சிதைந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T21:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-fifa-president-avoid-children-s-football-1787431395"></link>
            <id>https://tamilwin.com/article/request-fifa-president-avoid-children-s-football-1787431395</id>
            <summary type="text">சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர்
கால்பந்து தொடரில் பங்கேற்பதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர்
கால்பந்து தொடரில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு வட, மத்திய அமெரிக்க மற்றும்
கரீபியன் கால்பந்து கூட்டமைப்பான 'கொன்ககாஃப்'&nbsp; தலைவர் விக்டர்
மொன்டாக்லியானி கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் பங்குகளை விற்பனை செய்ய இன்ஃபான்டினோ மேற்கொண்ட
முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் யுவேஃபா, ஆசியாவின்
ஏ.எஃப்.சி மற்றும் கொன்ககாஃப் ஆகிய மூன்று முக்கிய கூட்டமைப்புகளும்
அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன.
</p><p>
இந்நிலையில், டொமினிகன் குடியரசில் நடைபெறும் கரீபியன் கால்பந்து ஒன்றியத்தின்
(CFU) 14 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் இன்ஃபான்டினோ பங்கேற்க
திட்டமிட்டிருந்தார்.</p><h2>நிர்வாக நெருக்கடி</h2><p>
</p><p>
எனினும், பிஃபாவைச் சூழ்ந்துள்ள தற்போதைய நிர்வாக நெருக்கடி காரணமாக அவரது
வருகை ஊடகங்களின் கவனத்தை திசைதிருப்பி, சிறுவர் விளையாட்டுப் போட்டியின்
தொழில்நுட்ப நோக்கம் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு, கொன்ககாஃப் தலைவர்
அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f20226fc-515b-4bd1-9434-3f99d5b94baa/26-6a8a0b79e80de.webp' /></p><p>
</p><p>
பிஃபா தலைவராக 2031 ஆம் ஆண்டு வரை நான்காவது முறையும் நீடிக்க இன்ஃபான்டினோ
முயற்சித்துவரும் போதிலும், பல சர்வதேச கால்பந்து சங்கங்களும் முக்கிய
அதிகாரிகளும் அவருக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T20:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் - பொலிஸாரின் அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-sri-lankan-criminals-arrested-in-dubai-1787409980"></link>
            <id>https://tamilwin.com/article/four-sri-lankan-criminals-arrested-in-dubai-1787409980</id>
            <summary type="text">டுபாயில் தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான கொண்ட ரஞ்சீ, அல்டோ தர்மே, பஸ் லலித் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான கொண்ட ரஞ்சீ, அல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாத்தே சத்து ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் படையினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>

இதன்படி, கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட பஸ் லலித் என்பவரை எதிர்வரும் திங்கட்கிழமை (24) இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>இலங்கை குற்றவாளிகள் நால்வர்</h2><p>
</p><p>
கொண்ட ரஞ்சீ, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அல்டோ தர்மே என்பவர் குற்றச்சாட்டு எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/523f0b33-22bf-408f-936e-e5dc35e617de/26-6a89ba8c96029.webp' /></p><p>
மேலும், கொழும்பு பொரளை – வனாத்தமுல்லை பகுதியில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள வனாத்தே சத்து என்பவரும் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் தரப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், பஸ் லலித்தை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>&nbsp;அழைத்து வர நடவடிக்கை</h2><p> 

இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியவை டுபாய் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி கண்காணிப்பிலும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் வழிகாட்டுதலிலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/730a7120-a639-4e3f-b676-082dd5e8d1c5/26-6a89ba8d93a77.webp' /></p><p>
</p><p>
மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பஸ் லலித்தை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக டுபாய் சென்றுள்ளனர்.
</p><p>
ஹங்வெல்ல பகுதியில் பல்வேறு கொள்ளை, கப்பம் பெறுதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் பஸ் லலித் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T20:17:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் மூழ்கிய பாரிய சரக்குக் கப்பல்! மீட்புப் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/panama-flagged-cargo-ship-sinks-off-1787427661"></link>
            <id>https://tamilwin.com/article/panama-flagged-cargo-ship-sinks-off-1787427661</id>
            <summary type="text">பனாமா நாட்டுக் கொடியுடனான &#039;&#039;ஓஷன் வின்னர்&quot; சரக்குக் கப்பலொன்று&amp;nbsp; வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ளது.&amp;nbsp;இந்தியாவின் ஒடிசா கடலோரப் பகுதியில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பனாமா நாட்டுக் கொடியுடனான ''ஓஷன் வின்னர்" சரக்குக் கப்பலொன்று&nbsp; வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ளது.&nbsp;</p><p>இந்தியாவின் ஒடிசா கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் இந்த சரக்குக் கப்பல் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>சம்பவத்தை அடுத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>மீட்புப் பணிகள்&nbsp;</h2><p>இதன்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களுள் பெரும்பாலானவர்கள் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8f3f5b1-8dc4-40c4-bf1d-c5331dfef9ba/26-6a89ff1f3927f.webp' /></p><p>இதன்படி, குறித்த கப்பலில் 20 சீனர்கள், மூன்று மியான்மர் நாட்டினர் மற்றும்&nbsp; பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர்&nbsp; உட்பட 24 பணியாளர்கள் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>இந்தியக் கடற்படையினரும், கடலோரக் காவல்படையினரும் மீட்புப் பணியில் ஈடுட்டுள்ள நிலையில், இதுவரை 2 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T19:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய குடும்பம்: சிறுமியும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-drowns-at-sea-in-the-uk-young-girl-dies-1787425231"></link>
            <id>https://tamilwin.com/article/family-drowns-at-sea-in-the-uk-young-girl-dies-1787425231</id>
            <summary type="text">பிரித்தானியாவில் அண்மையில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்
உயிரிழந்த சம்பவத்தில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் அண்மையில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்
உயிரிழந்த சம்பவத்தில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமியும் சிகிச்சைப் பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
</p><p>
லண்டனைச் சேர்ந்த பாலஸ்தீன வம்சாவளி குடும்பத்தினர், இங்கிலாந்தில் நிலவும்
கடுமையான வெப்ப அலை காரணமாக ஷோரேஹாம் கடற்கரைக்குச் சென்றிருந்த போதே இந்த
விபத்து நிகழ்ந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் சிறுமியின் தந்தையான ஹஸன் அல்-கவாஸ் (55), தாய் ஸீனா அலய்ன்
(37) மற்றும் 14 வயது சகோதரி சாரா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திலேயே
நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயதான சாஜா அல்-கவாஸ் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக
பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0252d706-292c-4e81-9a3c-d29935c0ef43/26-6a89f4b66c443.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் போதிலும், இது
எவ்வித வெளிநபர்களின் தலையீடும் இன்றி இடம்பெற்ற விபத்து என
முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>மேலும், ஐரோப்பா முழுவதிலும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக
நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T19:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசுர வேகத்தில் கோடீஷ்வரர்களாக மாறும் அநுர அரசாங்கத்தின் அமைச்சர்கள்! வெளியாகும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministers-who-became-millionaires-1787421887"></link>
            <id>https://tamilwin.com/article/ministers-who-became-millionaires-1787421887</id>
            <summary type="text">ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகத் தெரிவித்த அநுர அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது அப்படி எந்த வாக்குறுதியும் வழங்கவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகத் தெரிவித்த அநுர அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது அப்படி எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை என தப்பியோடப் பார்க்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், அரசாங்கத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் இன்று அசுர வேகத்தில் கோடீஷ்வரர்களாக மாறி வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>ஏமாற்றமடைந்த அரச ஊழியர்கள்</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மக்களுக்கு அழகான வாழ்க்கையைத் தரப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c623f26-bae3-4258-beac-cbe4681af9ff/26-6a89e5c150213.webp' /></p><p> </p><p> 

விவசாயிகளின் நெல்லுக்கு, நியாயமான உத்தரவாத விலையை வழங்கி அவர்களைக் கௌரவிப்பதாகக் கூறியவர்கள், இன்று அவர்களின் சுயமரியாதையை அடியோடு அழித்துள்ளனர்.</p><p> </p><p>


அரச ஊழியர்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிப்பதாகக் கூறியவர்கள் இன்று அதனை மறுக்கின்றனர். </p><p> 


 ஜனாதிபதி அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் வாக்களித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad27dd2-345b-4cbb-b233-890873552754/26-6a89e5c204887.webp' /></p><p> ஆனால் இன்று மக்கள் ஏமாற்றப்பட்டுள்ள அதேவேளையில், அரசாங்கத்தின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் மட்டுமே அசுர வேகத்தில் கோடீஸ்வரர்களாக உருவெடுத்துள்ளனர்.</p><p>

நாடாளுமன்றச் சலுகைகளை அனுபவிக்கமாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று நாடாளுமன்ற உணவுக்காக மட்டும் 80 சதவீதத்துக்கும் அதிகமான கூடுதல் செலவை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T18:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; ஜன்னல் வழி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள்..! எழுப்பப்பட்டுள்ள கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1787411716"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1787411716</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றம்சாட்டியுள்ளது. </p><p>

அத்துடன் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சேனக பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இந்த நிலையில் நேற்றைய தினம் (21) குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>உண்மையான சிக்கல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அங்கு உயிரிழந்த கைதிகளைக் கொலை செய்தது யார் என்பது தொடர்பான உண்மையான சிக்கல் எழுந்துள்ளது. 

ஏனெனில், உயிரிழந்த கைதிகளில் பெரும்பாலானோர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாகவே மரணமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df3da57d-bfe9-4a8b-9842-22bb8320c7ea/26-6a89c94486c90.webp' /></p><p> எனவே, இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்? அல்லது கைதிகளே தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டார்களா? அப்படியில்லை எனில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? போன்ற கேள்விகளை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

அத்துடன், சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? அவர்கள் நாட்டின் குற்றவியல் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் இல்லையா? என்பதையும் நாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தோம். </p><p>

தற்போது இடம்பெற்றுவரும் இந்த விசாரணைகளில் எந்தவொரு நடுநிலைமையையும் எங்களால் காண முடியவில்லை. கைதிகளை படுகொலை செய்த நபர்களுக்கு எதிராகவும் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நீதிமன்றில் நமது பிரதான கோரிக்கையாக இருந்தது என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T18:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா: 16,000க்கும் அதிகமான தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-over-16-000-vaccines-1787418798"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-over-16-000-vaccines-1787418798</id>
            <summary type="text">கொங்கோவில் மிக மோசமான எபோலா வைரஸ் பரவல் பதிவாகி வரும்
நிலையில், அந்நாட்டிற்கு 16,250 &#039;எர்வெபோ&#039; தடுப்பூசிகள் முதற்கட்டமாக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோவில் மிக மோசமான எபோலா வைரஸ் பரவல் பதிவாகி வரும்
நிலையில், அந்நாட்டிற்கு 16,250 'எர்வெபோ' தடுப்பூசிகள் முதற்கட்டமாக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளி அமைப்புகள் இணைந்து
அறிவித்த 70,000 தடுப்பூசி அளவுகளில் இந்த முதற்கட்டத் தொகுதி வெள்ளிக்கிழமை
இரவு நாட்டின் தலைநகரான கின்சாசாவைச் சென்றடைந்துள்ளது.
</p><p>
எஞ்சிய தடுப்பூசிகள் வரும் வாரங்களில் நாட்டின் பிற பகுதிகளுக்கு
அனுப்பப்படவுள்ளன.</p><h2>தடுப்பூசிகள்</h2><p>
</p><p>
தற்போது பரவி வரும் 'புண்டிபுக்கியோ' வகை எபோலா வைரஸுக்கு அதிகாரப்பூர்வமாக
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e57c3939-24e9-4386-b3cd-abb36630ae15/26-6a89d8b043dc5.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், எர்வெபோ தடுப்பூசி ஓரளவிற்கு பாதுகாப்பை வழங்கக்கூடும் என
விலங்கு சோதனைகளின் ஆரம்பகட்ட தரவுகள் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம்
தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
</p><p>
கடந்த மே மாத நடுப்பகுதியில் இருந்து பரவி வரும் இந்த நோய்த்தொற்றினால் இதுவரை
5,300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,500 க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர். இந்நோய்ப்பரவல் "அதிவேகமாக" தீவிரமடைந்து வருவதாக ஐக்கிய
நாடுகள் சபை எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T17:55:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை விளக்கமறியலில் வையுங்கள்! மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944</id>
            <summary type="text">குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அநுரகுமார திசாநாயக்கவிடம் அவசர எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p>அத்தோடு, தனது கணவரை&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பாமல் சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>விசாரணை என்ற பெயரில் சிஐடியினர்&nbsp;சுரேஷ் சலேவை கொடுமைப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும்&nbsp;மனோரி சலே சுட்டிக்காட்டினார்.</p><p>எனவே சுரேஷ் சலேவின் உடல்நிலைநிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்&nbsp;மனோரி குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp; நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Na6vJ8cRq8s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T17:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அனுரவிடம், நாமல் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-urges-president-to-act-on-allegations-1787417333"></link>
            <id>https://tamilwin.com/article/namal-urges-president-to-act-on-allegations-1787417333</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>குளியாப்பிட்டியவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
</p><p>குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான தனது நிலைப்பாட்டை நிரூபிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4348e130-3168-4155-ae0f-80c898ab46ab/26-6a89d2f7707ae.webp' /></p><p>
</p><p>திருடர்களைப் பிடிப்பது மற்றும் நேர்மையை உறுதி செய்வது குறித்து ஜனாதிபதி தொடர்ந்து பேசுகிறார். அந்த உறுதிப்பாட்டை நிரூபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
</p><p>தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த பல்வேறு வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>நெல் கொள்வனவு விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
அத்துடன், பொதுமக்கள் எதிர்கொள்ளும் வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். </p><p>தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது, குறிப்பாக இளம் தொழில் முனைவோருக்கு, மேலும் சிரமமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
அரச நிறுவனங்களைச் சார்ந்ததாகக் கூறப்படும் பாதுகாப்பு மற்றும் இணையவழி சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>இச்சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>விவசாயிகள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசியல் முரண்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
“அரசாங்கம் மோதல்களை ஒதுக்கி வைத்து மக்களுக்காக பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையே தவிர, மேலும் அரசியல் முரண்பாடுகளை அல்ல” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
</p><p>கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு எதிர்க்கட்சியே பொறுப்பு என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
</p><p>துறைமுகத்தின் செயற்பாடுகளில் தலையிடும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அனைத்து முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:50:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானுடன் தொடர்பு - ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-faces-police-complaint-batticaloa-1787402432"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-faces-police-complaint-batticaloa-1787402432</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமை, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்</h2><p>

முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜநாதன் பிரபாகரன், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gvv9aBSNaXs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் எழுத்துமூல ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>மட்டக்களப்பு நீதவான் ஒருவரை இடமாற்றம் செய்து தனக்கு சாதகமான நீதவானை நியமிக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டில் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17dd0a21-2d58-4314-a3fd-3a188b5defb6/26-6a899bc8b33d9.webp' />&nbsp; &nbsp;</p><p>
அத்துடன், ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை இடித்து, அந்த இடத்தில் மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.</p><h2>&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் ஹிஸ்புல்லா தொடர்பில் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாட்டில் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>

இந்த முறைப்பாடு தொடர்பில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்ததாகவும் இராஜநாதன் பிரபாகரன் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b331cf78-1700-40f4-802d-f78ecd2cbb8e/26-6a899bc996931.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, இந்த நடவடிக்கை முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல எனவும், குறிப்பிட்ட ஒரு தனிநபருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையே எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தனிநபர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T16:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-in-jaffna-for-abducting-girl-1787414912"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-in-jaffna-for-abducting-girl-1787414912</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில்&amp;nbsp; இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில்&nbsp; இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை
காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><h2>விசாரணை</h2><p>

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அச்சுவேலி பகுதியை
சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில்
வைத்துள்ளார் என்பதனை அறிந்த பொலிஸார் , இளைஞனை கைது செய்ததுடன் ,
சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29362eda-d1e7-4737-81ac-801d41142181/26-6a89ce07426b6.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ள பொலிஸார் , சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T16:28:01+00:00</updated>
        </entry>
    </feed>
