<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-26T04:39:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல், திலித், உதய உள்ளிட்ட சிலருக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-against-wimal-udaya-dilith-1787716668"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-against-wimal-udaya-dilith-1787716668</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மீது கோட்டை நீதவான் பசான் அமரசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார, ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் குறித்த நபர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை ஆரம்பக்கட்ட அவதானிப்பில் தெரியவந்துள்ளதாக கோட்டை நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/863a2f96-3365-4cd6-baae-d6f0287eae1c/26-6a8e643dca458.webp' />&nbsp; &nbsp;</p><p>
2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்றம், நியாயாதிக்க சபை அல்லது நிறுவனத்தை அவமதித்தல் சட்டத்தின் கீழ், குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.</p><p>இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் நீதவான் முன்னிலையில் உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.</p><p>நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், குறித்த கருத்துக்கள் அடங்கிய திருத்தப்படாத இறுவட்டுக்களும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T03:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் தாயக கடற்பகுதியில் மறைந்து கிடக்கும் பொக்கிஷம் - பணக்கார நாடாக மாறப்போகும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-oil-and-gas-discovered-in-mannar-1787709157"></link>
            <id>https://tamilwin.com/article/massive-oil-and-gas-discovered-in-mannar-1787709157</id>
            <summary type="text">மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார். </p><p>

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் மூலம் இந்த இருப்பு உள்ளதென நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீல் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>எண்ணெய் மற்றும் எரிவாயு</b></h2><p> 

“இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அளவுகளின் அடிப்படையில் அதன் வணிக ரீதியான மதிப்பை கணிப்பிட முடியும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75fa4a8a-0b7c-4b1a-a5c0-eb18dbb8a172/26-6a8e4cf177029.webp' /></p><p>உண்மையில் இந்த மதிப்பீடு மாறக்கூடியது. அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு இதனைக் விடவும் அதிகமாக இருக்கக்கூடும். </p><p>

மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இயற்கை எரிவாயு மற்றும் திரவங்களை கண்டறிய முடிந்தது. </p><p>

இதன்மூலம் பெட்ரோலிய அமைப்பு காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. 

ஒப்பீட்டளவில் பெரிய பரப்பளவை உள்ளடக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், நவீன புவிசார் ஆய்வுத் தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளை சேகரிக்கவும், தரவுகளை விளக்குவதற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதேவேளை, இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் பெட்ரோலியம், இலங்கை முகங்கொடுத்துள்ள எரிபொருள் இறக்குமதி என்ற பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p> 

மேலதிக எரிபொருளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>

சட்டரீதியான சிக்கல்கள் </b></h3><p>இந்த முதலீட்டு அழைப்புக்காக மன்னார் படுகையில் ஒதுக்கப்பட்டுள்ள 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட 4 கடல்சார் கட்டங்கள் இதில் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19087cbc-54b6-4b79-8079-fe6b033b1d97/26-6a8e4d84261f6.webp' /></p><p>இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்ட பகுதிகள் இந்த 34,000 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் அடங்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதற்கமைய, இந்த ஆண்டு தோராயமாக 33,964 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதி 4 பகுதிகளாகப் பிரித்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-26T03:43:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகத்திற்கான QR பயன்பாடு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/qr-fuel-quota-system-to-continue-1787713811"></link>
            <id>https://tamilwin.com/article/qr-fuel-quota-system-to-continue-1787713811</id>
            <summary type="text">மத்திய கிழக்கு மோதல் இன்னமும் முடிவுக்கு வராததால் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் என அமைச்சரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு மோதல் இன்னமும் முடிவுக்கு வராததால் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

“மேற்கு ஆசியாவில் தொடரும் நெருக்கடிகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிச்சயமற்ற தன்மை என்பன உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் விநியோகத்தில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.</p><p> </p><h2><b>

எரிபொருள் விலைகள்</b></h2><p>இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கு QR முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d5a41e-1d20-45a6-a273-1a5299afaff2/26-6a8e5f3cbfe1a.webp' /></p><p>QR முறைமை மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் நடைமுறையில் இருந்த போதிலும், எரிபொருள் நுகர்வானது சிறிய அளவிலேயே வீழ்ச்சியடைந்துள்ளது.

 அதற்கமைய, டீசல் பாவனை சுமார் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>பெற்றோல் பாவனை சுமார் 9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தியாவசிய துறைகளுக்கு தொடர்ந்தும் தடங்கலின்றி எரிபொருள் வழங்கப்படும்.</p><p> உலகளாவிய எரிபொருள் நிலைமை சீரடையும் வரை QR முறையானது இன்னும் சில காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p>]]></content>
            <updated>2026-08-26T03:40:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-question-gotabaya-over-sugeeswara-1787711434"></link>
            <id>https://tamilwin.com/article/police-question-gotabaya-over-sugeeswara-1787711434</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
</p><p>
ரணிலின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டார ஜனாதிபதியின் செலவினங்களின் கீழ் இரண்டு சம்பளங்களை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், கடந்த ஜூன் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.</p><p> 

சுஜீஸ்வர பண்டார மேற்கண்ட பதவிகளை வகித்த காலத்தில் அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன மற்றும் ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.</p><p>
</p><h2><b>
பண மோசடி</b></h2><p>சுஜீஸ்வர பண்டார ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் 1.93 மில்லியன் ரூபாவும், திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் 4.26 மில்லியன் ரூபாவும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab3969e-ef48-4d3e-96c0-ef2b5d93a7ec/26-6a8e57c3b9862.webp' /></p><p>இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பணி ஜனாதிபதி செயலக செயலாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவினால் பிணை நிராகரிக்கப்பட்டது. </p><p>

அத்துடன் அவரை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T03:04:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027-ஐ நோக்கி தீவிரமடையும் விசாரணை - காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று(25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p> 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2> 

உறவுகளை இழந்தவர்களுக்கு கொடுக்கப்படும் நிதி</h2><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

பல ஆண்டுகளாகத் தங்களது உறவுகளைத்
தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை நாம் முழுமையாக உணர்கின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கிச் செயற்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd5398fa-6d70-4c33-8996-7d34c608ceeb/26-6a8e009b7fdda.webp' /></p><p> </p><p>

அதன் வெளிப்பாடாகவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு
வருகின்றன. </p><p>


ஒரு குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கலாம். எனவே, உண்மையைத் தேடும் விசாரணைக்கு இணையாக, அந்த குடும்பங்களின் பொருளாதார
மற்றும் சமூக வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.


இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.</p><p> அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன.</p><p> 

இவ்வாறான இடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக
ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச்
செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும். 

உண்மை, நீதி, நிவாரணம்,
கண்ணியம், மீள்நிகழாமை ஆகியன ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என்றார்.</p><h2> 


57 மில்லியன் செலவில் மனித புதைகுழி ஆய்வு</h2><p>

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய நீதி
அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, 


எமது அரசாங்கத்திலே முக்கியமான ஒரு கொள்கை இருக்கின்றது, சட்டம் அனைவருக்குமே
சமன். சட்டத்துக்கு மேலாக ஒருவரும் இல்லை. காணாமலாக்கப்பட்ட பிரச்சனைகள் போன்ற
சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் சட்டம் சரியான முறையிலே
நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c3964a2-c24e-4a63-9d18-a423ed76dd80/26-6a8e009c72e1d.webp' /></p><p> </p><p>

அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதே எமது
எதிர்பார்ப்பு, நாட்டு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியதும் இந்த
எதிர்பார்ப்பிலாகும். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளைப்
பலப்படுத்தும் நோக்கில் அலுவலகத்தின் ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி
செய்யப்பட்டுப் புதிதாக 69 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக
2025ஆம் ஆண்டில் சுமார் 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், செம்மணி சமூகப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞான
ரீதியாக முன்னெடுப்பதற்காக 57 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை
உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.</p><p> 

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய
தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
</p><h2>
2027 முழுமையாக நிறைவடையும் விசாரணைகள்</h2><p>

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்துத்
தெரிவிக்கையில், 

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற சுமார் 19,000
முறைப்பாடுகளில் 9,000க்கும் மேற்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவான 2,300 பேரில் 1,940 பேருக்கான
விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657ae54b-9430-421c-95e9-b83fe70d4a4f/26-6a8e009d599e3.webp' /></p><p>

இடைநிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
எஞ்சியுள்ள அனைத்து விசாரணைகளையும் 2027ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு
செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன்,
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள், வடக்கு மாகாணப் பிரதிப்
பிரதம செயலாளர் - நிர்வாகம், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின்
தலைவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும்
பங்கேற்றிருந்தனர்.
</p><p>
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ
முகாம் ஒன்றும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T01:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-warning-for-sri-lanka-1787707770"></link>
            <id>https://tamilwin.com/article/flood-warning-for-sri-lanka-1787707770</id>
            <summary type="text">இலங்கையில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூமென வளிமண்டலவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>அந்த காலப்பகுதியில் வழமையான மழைவீழ்ச்சியை விட தீவிரமான மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார். </p><p>“எதிர்வரும் 6 மாத காலநிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2><b> எல் நினோ நிலைமை</b></h2><p>அத்துடன், எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் எல் நினோ நிலைமை கடுமையாக பாதிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/142e27d1-b085-45af-b59a-486717276a12/26-6a8e42ffca537.webp' /></p><p>இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும்.</p><p> நாட்டின் சில பிரதேசங்களுக்கு 75 மில்லிமீட்டர் அளவிலான மழை எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>இது தவிர, ஏனைய மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களிலும் வெப்பமாக காலநிலை தொடரும்"&nbsp; என அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-26T01:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rainfall-may-increase-in-sri-lanka-1787706480"></link>
            <id>https://tamilwin.com/article/rainfall-may-increase-in-sri-lanka-1787706480</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் இன்று(26.8.2026) 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, மேற்கு, சபரகமுவ மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் இன்று(26.8.2026) 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். </p><p>அனுராதபுரம்

, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>பலத்த காற்று</h2><p> அம்பாறை, 

மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.தீவின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446c3464-bb01-48d2-87a7-fd00314f542d/26-6a8e3c72e50b9.webp' /></p><p>
</p><p>மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T01:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியொன்றில் மர்மான உயிரிழந்த நபர் - 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199</id>
            <summary type="text">அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.</p><p>

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட விகாரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனியாகத் தங்கியிருந்த 67 வயதான ரோகன் அரியதிலகே என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர் பெந்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் சிற்றுண்டி தயாரிப்பாளராக பணிபுரிந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 சடலம் கண்டுபிடிப்பு</b></h2><p>இந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது மிகவும் சிதைந்து, வீங்கி, துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8e5257-b5b8-4ad2-b3dd-528328c76f1d/26-6a8da71160db6.webp' /></p><p>சுமார் 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். </p><p>

கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, உயிரிழந்த நபரின் அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த ஒருவர் சென்று பார்த்தபோது, ​​சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p>]]></content>
            <updated>2026-08-26T01:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-day-of-the-victims-missing-persons-1787704404"></link>
            <id>https://tamilwin.com/article/international-day-of-the-victims-missing-persons-1787704404</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பங்கேற்புடன்&nbsp; நடைபெற்றது.&nbsp;</p><p>குறித்த நிகழ்வானது நேற்றையதினம் (25.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.</p><p>நிகழ்வில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><h2>உரிய ஏற்பாடு</h2><p>இதன் போது உரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மாவட்டத்தில் சுமார் 2,300 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகப்
பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,940 பேருக்கான விசாரணைகள்
நிறைவடைந்துள்ளன. </p><p>ஒவ்வொரு காணாமலாக்கப்பட்டவரின் பின்னாலும் ஒரு மனித உயிரும்,
ஒரு குடும்பத்தின் சமூக, பொருளாதார மற்றும் உணர்வுபூர்வமான வாழ்வும்
உள்ளடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1b26d5-faee-48dc-b915-d24063a62b9b/26-6a8e380cc7af7.webp' /></p><p>வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீண்டகாலமாக சொல்லொணாத்
துயரங்களையும், மனவேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர்.</p><p>எனவே,
அவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து, சட்டத்துறை, நீதித்துறை
மற்றும் நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அவர்களுக்கான
உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T00:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட கண்ணிவெடிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mines-located-strait-of-hormuz-have-been-removed-1787701702"></link>
            <id>https://tamilwin.com/article/mines-located-strait-of-hormuz-have-been-removed-1787701702</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனைக் கூறியுள்ளார்.</p><h2>ஈரானுக்கு எச்சரிக்கை</h2><p>இந்நிலையில், புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலும் அல்லது படகும் உடனடியாகவும் துல்லியமாகவும் அழிக்கப்படும் என்று ஈரானுக்கு எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8816a73-a367-483f-87c8-141bedf99f3c/26-6a8e2c3d7054a.webp' /></p><p>மேலும், நீரிணையில் கண்ணிவெடிகள் வைப்பதற்கு எதிரான “பூஜ்ய சகிப்புத்தன்மை”கொள்கை முழு வீச்சில் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T00:06:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பலரையும் கதி கலங்க வைத்த கதறல்! யாரும் அறியாத பல தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-protest-tamils-missing-person-1787697648"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-protest-tamils-missing-person-1787697648</id>
            <summary type="text">காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடுமையான எதிர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடுமையான எதிர்ப்புக்களையும், தமது மனக்குமுறல்களையும் வெளிப்படுத்தி இருந்தனர்.</p><p>காணாமல் போனவர்கள் குறித்த 2007ஆம் ஆண்டு நினைவுகள் எப்போதும் மனதினை வதைத்த வண்ணம் உள்ளன. அத்தோடு, OMP அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்சியாக கூறி வருகின்றனர்.</p><p>அத்தோடு, இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கோரி வடக்கு கிழக்கிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர்.</p><p>காணாமல் போனோர் விடயமாக இருக்கலாம் அல்லது நாட்டை சீரழித்த விடயமாக இருக்கலாம் இவை அனைத்திற்குமே காரணகர்த்தாவாக ராஜபக்ச குடும்பத்தினரே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு,&nbsp; ராஜபக்ச குடும்பத்தினரே இந்த விவகாரங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.</p><p>இந்தப் பொறுப்பு இயற்கையாக கிடைக்குமா அல்லது&nbsp; கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா அல்லது கடந்த கால அரசாங்கம் போன்று தற்போதைய அரசாங்கமும் நடந்து கொள்ளுமா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலே எழுகின்றது.</p><p>காணாமல் போனவர்கள் குறித்த 2007 நினைவுகள் மற்றும் தற்போதைய சூழல் பற்றிய விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NT4jM-nb1qE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T23:19:32+00:00</updated>
        </entry>
    </feed>
