<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-22T09:23:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பளிப்பார்! முன்னாள் சபாநாயகரிடம் நெகிழ்ந்து பேசிய ‘பிரீ லோயர்ஸ்’ (Free Lawyers) அமைப்பு....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/free-lawyers-karu-jayasuriya-1787390194"></link>
            <id>https://tamilwin.com/article/free-lawyers-karu-jayasuriya-1787390194</id>
            <summary type="text">&amp;nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை பரிசீலிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை பரிசீலிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்குமாறு பிரீ லோயர்ஸ் (Free Lawyers) அமைப்பு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கலந்துரையாடப்பட்ட விடயங்கள்</span></p><p>‘பிரீ லாயர்ஸ்’ (Free Lawyers) அமைப்பு உட்பட சுதந்திர இயக்க மையத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று கரு ஜயசூரியவை சந்தித்த போதே இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
</p><p>கரு ஜயசூரியவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட மேலதிக தகவல்கள்..
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார் என்பதை நாம் அறிவோம். </p><p>உங்களால் ஒரு கோரிக்கையை முன்வைக்க முடியும். அவர் இதில் ஓரடி பின்வாங்குவதால் அவருக்கு எந்த அவமானமும் ஏற்படப்போவதில்லை. </p><p>ஜனாதிபதிக்கும் தவறுகள் நேரலாம். எனவே, அவர் ஓரடி பின்வாங்குவது ஒரு பிரச்சினையாகாது.
எமக்கு இப்போது இந்த நடவடிக்கைகளைப் பற்றி பேச வேண்டியுள்ள ஒரே இடம் நீதிமன்றமே ஆகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e122df2a-80a3-4f27-a18f-6d614b11d9d1/26-6a8968f4c99e5.webp' /></p><p>எனவே, இப்போது நீதிமன்றத்தையும் முழுமையாகத் தமக்குக் கீழ் கொண்டுவரவா இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டார்.
</p><p>கரு ஜயசூரிய தெரிவித்த கருத்து...
ஆரம்பத்திலிருந்தே நாமும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வேண்டாம் என்றே கூறினோம்.</p><p>சட்டத்தரணிகள் சங்கமும் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனமாகும். நாமும் அதற்காகவே ஆதரவு தெரிவித்தோம்.எனவே, இங்கு அதுவே அவசியமாகிறது. இதனால், இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என நாம் நம்புகிறோம் என குறிப்பிட்டார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T09:20:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugishwara-bandara-admitted-prison-hospital-illnes-1787387680"></link>
            <id>https://tamilwin.com/article/sugishwara-bandara-admitted-prison-hospital-illnes-1787387680</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அரசாங்கத்துக்குச் சொந்தமான 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>மருத்துவ சிகிச்சை</h2><p>

நவ மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுகீஸ்வர பண்டாரவின் காலில் காணப்பட்ட ‘வெரிகோஸ்’ (Varicose veins) நிலைமை தீவிரமடைந்து, நரம்பு ஒன்று வெடித்ததன் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவருக்குத் தேவையான முறையான மருத்துவ சிகிச்சை உடனடியாக வழங்கப்படாவிட்டால், கடுமையான பெக்டீரியா தொற்று ஏற்படக்கூடும் என அவருக்காக முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdd504ab-34fc-4d53-91e9-2eeda5cb5328/26-6a8965915d1f0.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, அவரது காலை அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படக்கூடும் என சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இந்த உடல்நிலையை கருத்திற்கொண்டு, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடக் கோரி, சட்டத்தரணிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.</p><h2>சிறைச்சாலை வைத்தியசாலை</h2><p>
</p><p>
எனினும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியின் உள்நிர்வாகம் அல்லது சுகாதார வசதிகள் தொடர்பில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தகைய அதிகாரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கே உரியது என சுட்டிக்காட்டிய நீதவான், குறித்த கோரிக்கையை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் நேரடியாக முன்வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9204fe3-4e66-4676-b945-a709e73b0830/26-6a896592536fd.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, ஏற்பட்டுள்ள உடல்நிலையை கருத்திற்கொண்டு, சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று (21) பிற்பகல் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
சுகீஸ்வர பண்டார, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில் விசேட திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T09:04:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் முழு இலங்கைக்கும் ஏற்படவுள்ள தாக்கம்! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-by-president-impact-of-el-nino-1787386446"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-by-president-impact-of-el-nino-1787386446</id>
            <summary type="text">எல் - நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகளின் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் - நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகளின் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது. </p><p>

குறித்த கூட்டம் நேற்றைய தினம் (21.08.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.</p><h2>ஜனாதிபதி கேள்வி</h2><p> </p><p>

இதுவரை பாதிக்கப்பட்டுள்ள எல் - நினோ நிலைமையால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும், மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய நீர்தேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வினவினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/561ca39b-3e28-47f7-b58e-7c3fcfc0a27a/26-6a89641407db4.webp' /></p><p> </p><p>

கடந்த யால பருவத்தில் முன்னெச்சரிக்கையுடன் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பயிர்ச் சேதங்கள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக விவசாய அமைச்சு அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய நீர்தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.</p><h2>முழு நாட்டிற்கும் கடுமையான வறண்ட காலநிலை</h2><p> 

அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்களின்படி எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் முழு நாட்டிற்கும் கடுமையான வறண்ட காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், அந்த தாக்கத்தினால் விவசாயம், பெருந்தோட்டத் தொழில், நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும் நீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அந்த நிலையை எதிர்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வினவினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deb0efe0-bb1c-42ed-a114-f13bd4d3eff2/26-6a896415a0274.webp' /></p><p> </p><p>

பாதிக்கப்படக்கூடிய காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றிப் பேணுவதுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்களின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து அந்த நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ba7c16-22ca-4a44-b0a5-8f7e9fa2fc50/26-6a8964172279e.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T08:59:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இசைக்குயில் நந்தா மாலினியின் மறைவு - பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-rites-of-the-late-nanda-malini-1787387783"></link>
            <id>https://tamilwin.com/article/final-rites-of-the-late-nanda-malini-1787387783</id>
            <summary type="text">இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய, மூத்த பாடகியான நந்தா மாலினி நந்தா மாலினியின் இறுதிக்கிரியைகள் பொரளைப் பொது மயானத்தில் இன்று (22) இடம்பெறவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய, மூத்த பாடகியான நந்தா மாலினி நந்தா மாலினியின் இறுதிக்கிரியைகள் பொரளைப் பொது மயானத்தில் இன்று (22) இடம்பெறவுள்ளன. </p><p>

அன்னாரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்போது நாவல, விஜயபாகு மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி சங்கீத ஆச்சிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.</p><h2>இறுதிச் சடங்கு</h2><p>
</p><p>

மதச் சடங்குகளைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணி வரை உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.</p><p>

பின்னர், உடலை ஏற்றிச் செல்லும் இறுதி ஊர்வலம், இறுதிச் சடங்குகளுக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இறுதிச் சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9Lwh5uUgsJ0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
மூத்த பாடகியான நந்தா மாலினி தனது 82ஆவது வயதில் கடந்த 20ஆம் திகதி காலமானார்.

அவருக்கு அரசியல்வாதிகள் , பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.</p><p>

இந்தநிலையில் நந்தா மாலனி அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.</p><p>

நுகேகொட, நாவல வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-22T08:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலையே அரசாங்கத்துக்கும்..! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-in-same-situation-as-gotabaya-1787383846"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-in-same-situation-as-gotabaya-1787383846</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற தவறினால் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என முன்னாள் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற தவறினால் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>&nbsp;நம்பிக்கையை ஏற்படுத்திய ஆட்சி</h2><p>
</p><p>
கடந்த காலங்களில் ஆட்சி அமைத்த ஒவ்வொரு தலைவரும் மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நம்பிக்கையை ஏற்படுத்தியே ஆட்சியை முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/125c08e1-1297-47d8-924c-25bb1c941e9c/26-6a8962ab65907.webp' /></p><p> 

ஆனால், தற்போதைய அரசாங்கத்திடம் மக்கள் ஆதரவை பெறக்கூடிய எந்தவொரு திட்டமும் இல்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் இதனை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். </p><p>

பொருளாதாரத்தைச் சீரமைக்க முடியாததால், குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் பொலிஸ் துறையைப் பயன்படுத்தி, முறையான சாட்சியங்கள் இல்லாமல் எதிர்கட்சியினரை கைது செய்து சிறையில் அடைத்து அரசாங்கம் தனது இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.</p><p>

தற்போது அரசாங்கம் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது. </p><h2>அரசியலமைப்பு திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு</h2><p>

 இந்த அரசியலமைப்பு திருத்தத்துக்கு நாட்டின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சர்வதேச சமூகமும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d8d087b-4230-4ffb-82c0-b887d5a93b19/26-6a8962ac16d77.webp' /></p><p>

அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக்கொள்வதால், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகள் தடைப்பட்டு நாடு தனிமைப்படுத்தப்படும்.</p><p>

எனவே, அரசாங்கம் ஜனநாயக விரோத அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற தவறினால், இந்த சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விட்டாலும், அதில் வென்றாலும் அல்லது தோற்றாலும் அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்படும். இறுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T08:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA பரிசோதனையில் புதிய திருப்பம்! அறையில் கிடைக்கப்பெற்ற பொருட்களால் அதிர்ச்சி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dna-evidence-emerges-in-anuradhapura-monk-case-1787384597"></link>
            <id>https://tamilwin.com/article/dna-evidence-emerges-in-anuradhapura-monk-case-1787384597</id>
            <summary type="text">அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவரை துர்நடத்தைக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவரை துர்நடத்தைக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முக்கியமான விஞ்ஞான ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளதாக தனியார் வலையொளியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாயில் காணப்பட்ட உயிரியல் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவை பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA மாதிரியுடன் பொருந்துவதாகத் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சந்தேகநபரின் அறிக்கை</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமி தனது முன்னைய வாக்குமூலத்தில், கூறப்பட்ட சில விடயங்களை குறித்த DNA பரிசோதனை முடிவு&nbsp; விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb4a874-ddce-4722-b86b-a9f6c97dfff0/26-6a895d3005683.webp' /></p><p>
மேலும், சந்தேகநபரான தேரர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் இருந்து பெண்களுடையதாக சந்தேகிக்கப்படும் நீண்ட தலைமுடிகள் சிலவற்றையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.
</p><p>
எனினும், அந்த தலைமுடிகள் பாதிக்கப்பட்ட சிறுமியுடையவை அல்ல என்பது DNA பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், பாதிக்கப்பட்ட சிறுமியைத் தவிர வேறு பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறித்த மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;DNA அறிக்கை</h2><p>

இந்த வழக்கு தொடர்பான முன்னைய அறிக்கைகளில், சிறுமியின் ஆடைகளில் எந்தவிதமான உயிரியல் மாதிரிகளும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் இந்த DNA அறிக்கை வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக அமையக்கூடும் என சட்டத்துறை நிபுணர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d18fe0b-6832-4e61-a939-854198b9587e/26-6a895d30eccbc.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் தற்போது விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், வழக்கு எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சந்தேகநபரான தேரர் நீதிமன்றத்திற்கு வரும் சந்தர்ப்பங்களில் கறுப்பு நிற கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இரகசியமாக வருவது தொடர்பிலும் விசாரணை அறிக்கையொன்றை கோருமாறு அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T08:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஸ்பேவ பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்ட இளம் தம்பதியினர்!பெண்ணில் உடலில் போடப்பட்ட கரப்பான் பூச்சி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-lodges-complaint-with-hrcsl-against-police-1787385468"></link>
            <id>https://tamilwin.com/article/man-lodges-complaint-with-hrcsl-against-police-1787385468</id>
            <summary type="text">கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
</p><p>இவர்களை சட்டவிரோதமாகக் கைது செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம். 2023 ஆம் ஆண்டிலேயே நடந்துள்ளது.
சட்டத்தரணி தருஷ திஷாரா பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p>தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியுள்ளது. அது 46 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பாகும்.குறித்த சம்பவத்தின் பின்னணி...</p><p></p><h2>கடைக்கு சென்ற போது நடந்த சம்பவம்</h2><p>களுபோவிலையில் வசிக்கும் குறித்த தம்பதியினர் கெஸ்பேவையில் உள்ள நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் அதிகாலை வேளையில் இவர்களுக்குப் பசி ஏற்பட்டதால், இரவு கடைக்கு உணவு வாங்குவதற்காக இளைஞர் மட்டும் ஒரு சிறிய ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் செல்கின்றார்.</p><p>செல்லும்போது ஒரு பொலிஸ் ஜீப் வண்டி நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கின்றார். அந்த உணவகத்திற்கு அருகில் ஜீப்பில் இருந்தவர்கள் இவரை நிறுத்துகின்றனர். </p><p> "எங்கே செல்கிறீர்கள், எதற்காகச் செல்கிறீர்கள்?" என்று கேட்கின்றனர்.முதலில் அடையாள அட்டையைக் கேட்கின்றனர், இவர் அடையாள அட்டையைக் காட்டுகிறார். </p><p>அடையாள அட்டையில் தெஹிவளை முகவரி உள்ளது.
"இங்கு என்ன செய்கிறாய்?" எனக் கேட்க, இவர் விவரங்களைக் கூறுகிறார். </p><p>கூறிய பிறகு ஜீப்பில் ஏறுமாறு கூறி இவரை இழுக்க முயற்சித்த போது உணவகத்தில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் இருப்பதால் இவர் கடைக்குள் செல்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a479cf1-9130-437c-ad25-cfd5da35cbe9/26-6a89567e89bfe.webp' /></p><p>அதற்குப் பிறகு பொலிஸார் இவரைத் தாக்குகின்றனர்.
கழுத்தைப் பிடித்துத் தள்ளுகின்றனர்,பின்னர் வழுகட்டாயமாக கைவிலங்கிடுகின்றனர். </p><p>மேலும் ஜீப் வண்டியில் வைத்தும் இவரைத் தாக்குகின்றனர். தாக்கிவிட்டு ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் தாக்குகின்றனர். </p><p>முகத்தில் அடிக்கின்றனர், மண்டியிட வைக்கின்றனர். மிகக் கொடூரமாக சித்திரவதை செய்கின்றனர். "நீ 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்துகிறாய் அல்லவா?" எனக் கூறிப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் சுமத்துகின்றனர்.
</p><h2>சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு</h2><p>அதன் பிறகு இவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் உள்ளவர்களையும் மிரட்டி, சுற்றிலும் கிடந்த டொபி தாள்கள் மற்றும் அங்கிருந்த அட்டைப் பெட்டித் துண்டுகளைச் சேகரித்து, அவற்றை புகைப்படங்கள் எடுத்து, போதைப்பொருள் இருந்தது எனப் பொய் வழக்குப் போட்டு இவர்களைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
</p><p>பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கின்றனர். பெண்ணை சிறையில் போடவில்லை.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு, இந்த இளைஞரின் சட்டையைக் கழற்றச் சொல்லித் தாக்கினர். </p><p>தாக்கிவிட்டு பொலிஸ் சிறையில் அடைத்தனர்.
மற்றவர்களை வெளியே உட்கார வைத்திருந்தனர். சிறிது நேரத்தின் பிறகு மனைவியின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.அதன் பிறகு இரு அதிகாரிகள் இருந்த அறைக்கு அந்தப் பெண்ணை தனியாக வருமாறு கூறினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bccc87c-9ed7-4d36-82ca-b2b2ccda1fd4/26-6a89567f3b080.webp' /></p><p>சிறிது நேரத்தில் அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட இளைஞர் கூண்டிற்குள்ளிருந்து, "பெண் பொலிஸ் அதிகாரிகள் யாரும் இல்லாமல், பொலிஸ் நிலையத்திற்குள் பெண்களை தனியறைக்கு அழைத்துச் சென்று என்ன செய்கிறீர்கள்?" என்று கத்திக் கேட்டுள்ளார். </p><p>ஏனெனில் அந்த நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் பெண் அதிகாரிகள் எவரும் இருக்கவில்லை.பின்னர் மனைவி அறையிலிருந்து வெளியே வந்ததும் "என்ன நடந்தது?" என்று கேட்டபோது, பொலிஸார் தன் உடலில் கரப்பான் பூச்சிகளை (Cockroach) போட்டதாக கூறினார்.</p><p>காலை வரை வைத்திருக்கிறார்கள், பிறகு 'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிணை வழங்குகின்றனர்.அதன் பின்னரே இவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:59:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோடிக்கணக்கான தங்கம் மற்றும் பணம் கொள்ளை - ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-robbery-at-a-house-in-mount-lavinia-1787365110"></link>
            <id>https://tamilwin.com/article/massive-robbery-at-a-house-in-mount-lavinia-1787365110</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பீரிஸ் வீதி பகுதியில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து, 2 கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 20ஆம் திகதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளின் ஒரு பகுதி மற்றும் 15,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்கிஸ்ஸ தர்மபால வீதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

தங்கம், பணம் கொள்ளை</b></h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, ஓபன் பகுதியில் வசிக்கும் 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2038685-6c18-4206-8504-74bcf123333c/26-6a890e72b315d.webp' />&nbsp;&nbsp;</p><p>சந்தேகநபர் திருடிய பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாவை செலவிட்டு, 18 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றையும், அப்பிள் ரக 3 கையடக்கத் தொலைபேசிகளையும், மற்றுமொரு கையடக்கத் தொலைபேசியையும் கொள்வனவு செய்துள்ளார்.</p><p>

மேலும், எஞ்சிய பணத்தில் ஒரு பகுதியை இரவு நேர கேளிக்கை விடுதிகளில் செலவிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>கடந்த 18 ஆம் திகதி வீட்டில் வசிப்பவர்கள் தமது உறவினர் ஒருவரின் நெதிமால பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குச்சென்றுள்ளனர்.</p><h3><b> பொலிஸில் முறைப்பாடு</b></h3><p>மறுநாள், 19ஆம் திகதி பீரிஸ் வீதியில் உள்ள தமது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் கலைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc7cc24b-6b42-46fc-bda3-4e1c948388a8/26-6a890e736b093.webp' /></p><p>இதனையடுத்து வீட்டை சோதனையிட்டபோது, மேல் மாடியில் அமைந்திருந்த ஜன்னல் ஒன்றை உடைத்து வீட்டுக்குள் திருடன் நுழைந்துள்ளார். ஒரு கோடி ரூபா பணத்தையும், ஒரு கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அனைத்து தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p> திருட்டில் ஈடுபட்ட நபர் அதே ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக கல்கிஸ்ஸ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். </p><p>இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பிச்சென்ற சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:54:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் சுற்றித்திரியும் ஷிரான் பாசிக்கின் தொடர்புடைய நெருக்கமான பெண்..! அழைப்பினால் அடுத்தடுத்து சிக்கவுள்ள பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-support-activities-arrest-4-people-1787369055"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-support-activities-arrest-4-people-1787369055</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு&amp;nbsp;கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு&nbsp;கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.</p><p>

கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் தற்போது உள்ள ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி, அவரது போதைப்பொருள் கடத்தல் வணிக நடவடிக்கைகளுக்கு உதவிவரும் நான்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தேகநபர்களும் அடுத்த சில நாட்களில் பொலிஸ் காவலில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>டுபாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்</h2><p>
</p><p>
இந்த சந்தேகநபர்களில் தற்போது டுபாயில் உள்ள ஒரு பெண்ணும் அடங்குவதாக&nbsp;கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be7a6bd-5742-4319-aeb3-299ea79089e8/26-6a893cc424f5c.webp' /></p><p>

குறித்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய தோழி என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த பெண் குறித்து டுபாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
</p><p>
இதற்கிடையில், பாசிக்கின் சொத்துக்களுக்கு பொறுப்பாளராக உள்ள அவருக்கு நெருக்கமான ஒருவரையும் கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், அவர் தனது வசிப்பிடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>

இதற்கிடையில், பாசிக் பயன்படுத்திய தொலைப்பேசி எண்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புடைய பல நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸ் புலனாய்வுக்குழுக்கள் பெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:47:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் சடுதியாகக் குறையும் வவுனிக்குள நீர்மட்டம் – அடுத்த போக நெற்செய்கைக்கு நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drought-causes-vavunikulam-water-level-drop-1787382889"></link>
            <id>https://tamilwin.com/article/drought-causes-vavunikulam-water-level-drop-1787382889</id>
            <summary type="text">நிலவும் கடுமையான வறட்சி மற்றும் மழையின்மை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

26 அடி கொள்ளளவைக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் கடுமையான வறட்சி மற்றும் மழையின்மை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
26 அடி கொள்ளளவைக் கொண்ட வவுனிக்குளத்தின் நீர்மட்டம், தற்போதைய வறட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.</p><h2>விவசாயிகள் கவலை</h2><p>

சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ள போதிலும், இன்னும் சில பகுதிகளில் அறுவடை நடவடிக்கைகள் நிறைவடையவில்லை.
</p><p>
இதேவேளை, மழையின்மை மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக அடுத்த போக நெற்செய்கையையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படக்கூடும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7245554e-12fd-40a4-8c6a-8a883c63f3a7/26-6a89502a9b7e8.webp' /></p><p>
</p><p>
கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கத்தால் பெய்த கனமழை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவையும் எட்டியிருந்தது.</p><p>

இதனடிப்படையில், இந்த வருட சிறுபோக பயிர்ச்செய்கைக்காக 5,500 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
</p><p>
வழமையாக கடந்த வருடங்களில் 4,000 முதல் 4,500 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் 5,060 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>நெற்செய்கை</h2><p>
</p><p>
சிறுபோக விதைப்பு காலத்தில் வவுனிக்குளத்தின் நீர்க் கொள்ளளவு மேலும் அதிகரித்ததையடுத்து, மேலதிகமாக 460 ஏக்கர் நிலப்பரப்பிலும் நெற்செய்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
</p><p>
இதனடிப்படையில், வவுனிக்குளத்தின் முழு விதைப்பு இலக்கான 6,600 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79f74f8-b6e0-4afe-8e54-c4e920f62c1e/26-6a89502b7246b.webp' /></p><p>
</p><p>
தற்போது சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில், குளத்தின் நீர்மட்டம் வழமையாக 10 முதல் 12 அடியாகக் காணப்பட வேண்டும்.

எனினும், தற்போதைய வறட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக, வவுனிக்குளத்தின் நீர்மட்டம் தற்போது 7 அடியாகக் குறைந்துள்ளது.</p><p>

சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள் நிலவும் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சுமார் 5 அடி 5 அங்குலமாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வவுனிக்குளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் இந்திரமோகன் சுனோஜ் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனால், அடுத்த போக நெற்செய்கையை மேற்கொள்வது தொடர்பில் விவசாயிகள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/job-vacancies-in-sri-lanka-400-000-1787365984"></link>
            <id>https://tamilwin.com/article/job-vacancies-in-sri-lanka-400-000-1787365984</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p>

இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ள போதிலும், நாட்டின் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை தொடர்கின்றன.</p><h2>ஆயிரக்கணக்கான பணி வெற்றிடங்கள்</h2><p>

தொழிற்துறைகளில் கடுமையான திறன் பற்றாக்குறை நிலவுவதோடு, ஆயிரக்கணக்கான பணி வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce3c9bd-5eef-4341-a8ef-bc2bda6d445f/26-6a894a3908c7d.webp' />&nbsp;</p><p> </p><p>இருப்பினும், தகுதியான தொழிலாளர்களை கண்டறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.
</p><p>
தற்போது வேலையற்ற நபர்களிடம் குறிப்பிட்ட தொழிற்தகைமைகளும் தொழில்நுட்ப நிபுணத்துவமும் இல்லை என்பதே யதார்த்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த சவாலை எதிர்கொள்ள வெளிநாட்டு ஊழியர்களை வரவழைப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதுடன்,வெளிநாடு செல்பவர்கள் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக தொழிற்பயிற்சித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதாகவும் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிர்வாகத்தின் மையம் மனிதநேயமே - AI உதவியாக இருக்க வேண்டும் – ஆளுநரின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ai-should-aid-not-replace-human-officials-governor-1787381494"></link>
            <id>https://tamilwin.com/article/ai-should-aid-not-replace-human-officials-governor-1787381494</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை
மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான
சேவைகளைத் துரிதப...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை
மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான
சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும்,
தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும் நிர்வாகத்தின் மையமாக மனிதநேயமே
தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார்.
</p><p>
வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது
தொடர்பான விசேட கலந்தாய்வுச் செயலமர்வு நேற்றையதினம் (21.08.2026) வெள்ளிக்கிழமை
வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.</p><h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>
</p><p>இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
</p><p>
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,</p><p>
"உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், அரச நிர்வாகமும்
அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் தகவல்களையும் சேவைகளையும்
உடனடியாகப் பெறவே விரும்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e3e67bb-9511-48a6-9e8a-ed41aa584b6b/26-6a8948568d044.webp' /></p><p> </p><p>இதற்காகப் பல அலுவலகங்களுக்குச் செல்வதையோ
அல்லது தேவையற்ற காலதாமதங்களையோ அவர்கள் விரும்புவதில்லை. ஒரு அதிகாரி
பெருமளவான ஆவணங்களை ஆராய்ந்து, தரவுகளை ஒப்பிட்டு முடிவெடுக்கும் நேரத்தைச்
செயற்கை நுண்ணறிவு கணிசமாகக் குறைக்கிறது.</p><p> மாகாண நிர்வாகத்தில் காணப்படும்
ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில், குறைந்த வளங்களைக் கொண்டு
அதிக சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் இது எமக்குத் தருகிறது.</p><p>

இன்று முன்வைக்கப்பட்டுள்ள 'ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டுக் கோபுர பூர்வீக
செயற்கை நுண்ணறிவு வடக்கு மாகாண நிர்வாகச் சூழலியல் தளம்' (Unified Control
Tower Native-AI Northern Province Governance Ecosystem Platform) என்ற
முன்மொழிவானது, மாகாண நிர்வாகத்தின் பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து டிஜிட்டல்
(Digital) மாற்றத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு விரிவான அணுகுமுறையாகும்.
எனினும், ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தின் வெற்றியானது அதன் தொழில்நுட்பத் திறனால்
மாத்திரம் அளக்கப்படக் கூடாது.</p><h2>&nbsp;தனிப்பட்ட தரவுகள்&nbsp;</h2><p>அது பொதுமக்களின் சிரமங்களை எவ்வளவுக்குக்
குறைத்து, அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.

அரச நிறுவனங்களிடம் பொதுமக்களின் அடையாள, சுகாதார, நிதி மற்றும் காணி தொடர்பான
மிக முக்கியமான தனிப்பட்ட தரவுகள் காணப்படுகின்றன. </p><p>எனவே, நிர்வாகத்தில்
இவ்வாறான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது தரவுப் பாதுகாப்பு,
தனியுரிமை, அணுகல் கட்டுப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில்
ஆரம்பம் முதலே அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p><p> தொழில்நுட்பம் பரிந்துரைகளை
வழங்கினாலும், இறுதி நிர்வாகத் தீர்மானம் ஒரு அரச அதிகாரியிடமே இருக்கும்
என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20badb8-e609-4eb8-b30a-b0ab7532738e/26-6a89485770635.webp' /></p><p> </p><p>அத்தோடு, எமது மாகாணத்தின் தனித்துவமான சமூக,
மொழி, பண்பாட்டு மற்றும் புவியியல் சூழலுக்கு ஏற்றவாறே இவ்வாறான
கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.</p><p>
இந்தச் செயலமர்வில், இந்தியாவின் 'வாசா' தகவல் தொழில்நுட்ப சேவைகள் (VASA
InfoTech Services Pvt, Ltd) நிறுவனத்தின் ஸ்தாபகரும், முதன்மைச் செயற்கை
நுண்ணறிவு வியூகவியலாளருமான செந்தில்குமரன் மற்றும் தனசேகர் ஆகியோர்
வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
</p><p>
இந்நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம
செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட மாகாண
அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T06:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு மீது கடும் அதிருப்தியில் மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427"></link>
            <id>https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. </p><p>இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2><b>
அதிருப்தியில் மகிந்த </b></h2><p>நாட்டில், 22ஆவது திருத்தத்தை கொண்டு வருவதை விட, அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல பணிகள் இருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27909829-c702-4572-9af6-6f5c0ccbffd7/26-6a894624c29b1.webp' /></p><p>அவற்றை செய்து முடித்த பின்னர் தேவையான எந்தவொரு சட்டப்பிரிவையும் கொண்டு வருவதில் பிரச்சினையில்லை என அவர் கூறியுள்ளார். </p><p>

அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு பதிலாக வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
 அதற்கு பதிலளித்த அவர், “அதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. தேவையற்ற விடயங்களே முன்னிலைக்கு கொண்டு வரப்படுகின்றன. </p><h3><b>

அரசியலமைப்பு திருத்தம்</b></h3><p>மேலும், நாட்டின் பொதுமக்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை விட முக்கியமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விட வேறு பல பிரச்சினைகள் உள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42bfb3e-b898-4141-a03a-deba8e47a424/26-6a894625754d6.webp' /></p><p>சிலர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுகின்றனர். 

அந்தப் பிரச்சினைகளை தீர்க்காமல் தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. </p><p>மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-22T06:48:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வச்சந்நிதி ஆலய சூழலில் விதிமீறல்: ஐவருக்கு ரூ.50,000 அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/50-000-chewing-betel-near-selvachannithi-temple-1787380363"></link>
            <id>https://tamilwin.com/article/50-000-chewing-betel-near-selvachannithi-temple-1787380363</id>
            <summary type="text">தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் ஆலயத்தின் சுற்றாடலினை
வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாக பேணி வருவதுடன் ஆலய சுற்றாடலானது
புகையிலை அற்ற மண்டலமாக சுகாதாரத்தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முற்றாக தடை&nbsp;</h2><p>
</p><p>
குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும்
பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc1f767-e70b-4965-a230-3b085e2a34aa/26-6a8944f00bbae.webp' /></p><p>

இந்தநிலையில் குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றாடலில்
காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக கடந்த 20/08/2026 வியாழக்கிழமை
வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால்
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது
சம்பந்தவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட அடிப்படையில் தலா 10,000 ரூபா வீதம்
50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தேடப்பட்டு வரும் சீனப்பிரஜைகள் - பொது மக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512"></link>
            <id>https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p>இவ்வாறு கொலை செய்யப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது&nbsp;&nbsp;</p><p>இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f167eac-85bf-4175-a965-3cd9ba1fba06/26-6a89048ab3c50.webp' /></p><h2>வான் அல்லது கடல் வழி ஊடாக நாட்டைவிட்டுத்தப்பியோடக்கூடும்</h2><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். </p><p>

இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்&nbsp;சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/725f6ad8-6e4e-4af9-82e9-12d4da94009d/26-6a89048b64725.webp' /></p><p>குறித்த மூன்று சீன நாட்டவர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதுடன், சுற்றுலா விசாவில் வருகை தந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

எனவே மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழி ஊடாகச் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்பதால், அவர்களைக் கைது செய்யப் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.</p><p>அதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு - 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு&nbsp; பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,500 கோடி ரூபாய் பெறுமதியான தங்க சிலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863"></link>
            <id>https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863</id>
            <summary type="text">ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது.</p><p>

எனினும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அத்தகைய சிலை எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2><b>
 தங்க சிலை</b></h2><p>தங்கச் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதனை தொடர்ந்து ஜா எல மெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48f63bec-bbd6-42c1-81e1-59439ec0a5ae/26-6a87b6f330040.webp' /></p><p>இதன்போது, அங்கு ஏதேனும் அறியப்படாத பொருள் இருப்பதாக தெரியவந்திருந்தது.</p><p>

எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், குறித்த இடத்தில் எந்தவொரு பொருளும் புதைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/transfers-for-teachers-national-schools-8-years-1787375914"></link>
            <id>https://tamilwin.com/article/transfers-for-teachers-national-schools-8-years-1787375914</id>
            <summary type="text">தேசிய பாடசாலைகளில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களையும் அடுத்த ஆண்டு முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய பாடசாலைகளில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களையும் அடுத்த ஆண்டு முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. </p><p>

இந்த ஆண்டு, தேசிய பாடசாலைகளில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 மாகாண அளவில் இடமாற்ற சபைகளை கூட்டி இந்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.</p><h2>ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்</h2><p> </p><p>

அடுத்த ஆண்டு இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ள கல்வி அமைச்சு, அதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc2634fd-e051-4379-9994-caa7cdf6eec4/26-6a893698aa1de.webp' /></p><p>
</p><p>
 இதற்கிடையில், தங்களது இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு பொதுச்சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்த ஆசிரியர்களுக்கு இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.</p><p> 

எனவே, ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்கான இடமாற்றங்களுக்கும் விண்ணப்பிக்கவில்லை. இடமாற்ற சபையிடம் அவர்கள் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் பொதுச் சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர். </p><p>

இடமாற்ற சபையிடம் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பிறகு, அதே பாடசாலையில் தொடர்ந்து பணியாற்றும் நோக்கத்தில் அந்த ஆசிரியர்கள் பொதுச்சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார்.</p><p> 

இதேவேளை, மேல்முறையீடுகள் மீதான முடிவுகள் எவ்வளவு தாமதமாகின்றனவோ, அந்த ஆசிரியர்கள் தங்கள் இலக்குகளை அடைவது அவ்வளவு எளிதாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T05:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் 400 பேரின் கண்களுக்கு பாதிப்பு! வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-temple-eye-damage-issue-1787373493"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-temple-eye-damage-issue-1787373493</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற
திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்று மற்றும் வாணவேடிக்கை
காரணமாக கண் பாதிப்படைந்த 400 இற்கும் மேற்பட்டோர் யாழ். போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகள்</h2><p>
</p><p>
பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் நேற்று (20)
இரவு உற்சவத்தின் போது அதிக வாணவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு, இசை
நிகழ்வின் போது அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்று வகைகளும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. </p><p>இதன் காரணமாகவே பொதுமக்கள் பலரது கண்கள்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a26059-e108-4583-8ff8-40ab2de045f0/26-6a892c275b072.webp' />&nbsp;</p><p>

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான
பணிகள் குறைக்கப்பட்டு, இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், ஏனைய வைத்தியசாலைகளில் இருந்தும் வைத்தியர்களும் தாதியர்களும்
வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும்
மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.</p><h2>ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடு</h2><p>

இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்ட இந்த ஆலயத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடு
காரணமாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.</p><p>

இதனால் ஆலய நிர்வாகம் நீதிமன்ற பொறுப்பில் உள்ள காரணத்தால் இம்முறை திருவிழா
நீதிமன்ற பதிவாளரின் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளது.</p><p>லேசர் ஒளிக்கீற்றுத் தாக்கம் காரணமாக கண்ணில் பாதிப்படைந்தவர்களில் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பொலிஸார்,&nbsp; உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிகள் உள்ளிட்ட பல மாணவர்கள், அரச அலுவலகர்கள்
மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.</p><p>பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தின்
உற்சவத்தின்போது ஆலயச்சூழலில் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்று வகைகள்
பயன்படுத்தப்பட்டமையே இந்த கண் பாதிப்புக்கு முக்கிய காரணமாகும்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:57:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடையும் மகிந்த ராஜபக்ச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-fcid-mahinda-rajapaksa-1787371032"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-fcid-mahinda-rajapaksa-1787371032</id>
            <summary type="text">&amp;nbsp;நான் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டது மற்றும் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் - நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நான் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டது மற்றும் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் - நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க காலத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு தந்தையால் தன் பிள்ளைக்குக் கொடுக்க முடியாததை&nbsp; நல்லாட்சி அரசாங்கமும் ஜே.வி.பி.யும் எனக்கு வழங்கியுள்ளதாக தந்தை மகிந்த&nbsp;மகிழ்ச்சியடைகிறார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க நேற்று (21.08.2026) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>
</h2><p></p><h2>தந்தை ஒருவர் எதிர்பார்க்கும் முதிர்ச்சி</h2><p>ஊடகவியலாளர்கள் ஒருவர் நாமலிடம் இந்த விசாரணைகள் தொடர்பில் தந்தை மகிந்த ராஜபக்ச என்ன சொல்லுகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது மேலும் தெரிவித்த கருத்துக்கள்... </p><p>
இதனால் மகன் நாளுக்கு நாள் முதிர்ச்சியடைகிறார் என்றும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வார் என்றும் அவர் நம்புகிறார். </p><p>
தங்கல்ல பகுதியில் ஒருவர் ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார், ஆனால் அவருக்கு அதை எவ்வாறு வாங்கினார் என்று சொல்ல முடியாத போது, அது நாமல் ராஜபக்சவுடையது என்று சொல்கிறார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0c05e8d-a622-43b2-a138-36a9687f1c7f/26-6a891e1a87757.webp' /></p><p>இந்த அரசாங்கம் முதல் நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேர்தல் மேடைகளில் நாட்டில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் என்னுடையது என்றனர். </p><p>டுபாய் மெரியட் (Dubai Marriott) என்னுடையது என்றனர்.அக்காலத்தில் ஊழல் ஒழிப்புக்குழுவில் இருந்தவர்கள் தான் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கிறார்கள். </p><p>எனவே, அவர்கள் அன்று சொன்ன பொய்களுக்கும், தங்களால் புனையப்பட்ட பொய்களை சட்டபூர்வமாக்க முயற்சிக்கிறார்கள். </p><p>எங்களை விசாரணைக்கு வருமாறு கூப்பிட்டதும் நாங்கள் வந்து விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.அன்று நடந்துள்ளதும் இவ்வாறு தான் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; </p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:48:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரின் வாக்குமூலம்! பாழடைந்த வீட்டில் சிக்கிய ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-recovered-based-on-information-samitpura-sadhu-1787371463"></link>
            <id>https://tamilwin.com/article/gun-recovered-based-on-information-samitpura-sadhu-1787371463</id>
            <summary type="text">சமிட்புர சது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமிட்புர சது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ள சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய&nbsp; நேற்று (21) வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><h2>கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவு தீவிர விசாரணை</h2><p>28 வயதுடைய சந்தேகநபர் இலங்கையிலிருந்து தப்பியோடி ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c4f9c8-1b05-482a-921e-5e0fa6d1890b/26-6a89234aee0ab.webp' /></p><p>இதன்பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>இதற்கமைய,&nbsp; வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p> 

இதற்கு முன்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றும் 12 ரவைகளும் மட்டக்குளி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.</p><p>இதற்கமைய, கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:22:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dies-after-being-trapped-in-plowing-machine-1787370963"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dies-after-being-trapped-in-plowing-machine-1787370963</id>
            <summary type="text">கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை (21-08-2026) சிறுவன் தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>நேற்று மாலை (21-08-2026) சிறுவன் தனது உறவினரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியில்&nbsp; நின்றுக்கொண்டிருந்த போது தவறுதலாக வாகனத்தை இயக்கி திருப்ப முயன்ற போது சிறுவன் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</p><h2>பொலிஸார் தீவிர&nbsp;விசாரணை</h2><p>இதனையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d47a381-6fe7-413c-bbdc-bccbe4c7a84a/26-6a891eaf7ebe0.webp' /></p><p>



இச்சம்பவம் தொடர்பாக உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதியை கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>உயிரிழந்த குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T03:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல் - DNA மாதிரியில் அம்பலமாகவுள்ள உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sewwandi-s-forensic-report-ready-1787368721"></link>
            <id>https://tamilwin.com/article/sewwandi-s-forensic-report-ready-1787368721</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் கைதான இஷாரா செவ்வந்தியை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி DNA மற்றும் புகைப்பட பரிசோதனைகள் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் கைதான இஷாரா செவ்வந்தியை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி DNA மற்றும் புகைப்பட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
முக அடையாள பரிசோதனை</b></h2><p>நீதிமன்றில் தகவல்களை முன்வைத்த கொழும்பு குற்றப் பிரிவினர், கடந்த 17ஆம் திகதி இஷாரா செவ்வந்தி அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் முக அடையாள பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec22bd5a-1a55-4bc3-a48f-7bb817e66efd/26-6a89181f61bce.webp' /></p><p>இதன்போது DNA மாதிரிகள், புகைப்படப் பதிவுகள் மற்றும் காணொளி காட்சிகளும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
மேலும், இந்த சம்பவத்தின் 32ஆவது சந்தேகநபர்களான பட்டுவத்தையைச் சேர்ந்த சாமர மற்றும் கம்பஹா ஒஸ்மான் ஆகியோருக்கான தடுப்பு காவல் உத்தரவு 13ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BliXJ74NRc4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இதனால், அவர்களுக்கு மேலும் 90 நாட்களுக்கு தடுப்பு உத்தரவு பெற்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.</p><p>

இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணம் ஊடாக மன்னாருக்கு தப்பிச் செல்ல உதவியதாக கூறப்படும் 41 மற்றும் 42ஆவது சந்தேகநபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றப்பிரிவினர் தெரிவித்தனர்.
</p><p>
அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-22T03:42:16+00:00</updated>
        </entry>
    </feed>
