<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-09T10:19:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு பிணை கிடைக்காதவாறு பயன்படுத்தப்படும் சட்டங்கள்! புலம்பும் ராஜபக்ச தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-bail-for-namal-rajapaksa-1788946294"></link>
            <id>https://tamilwin.com/article/no-bail-for-namal-rajapaksa-1788946294</id>
            <summary type="text">

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினரை முடக்கும் செயற்பாட்டில் இந்த அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.</p><h2>நாமலுக்குப் பிணை இல்லையா..</h2><p> </p><p>

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்தச் சட்டத்தின் கீழ் 46 பேரைக் கைது செய்து வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f890b86-fcc9-47cf-87a8-99154173ea33/26-6aa131ca5f45e.webp' /></p><p>

இலங்கையில் நீதித்துறைச் சுயாதீனம் மீறப்படுவது மற்றும் மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் ஏற்கனவே கவலை வெளியிட்டுள்ளன.
</p><p>
அரசாங்கம் தனது ஜனநாயக விரோதப் போக்கினை மாற்றிக் கொள்ளாவிட்டால், சர்வதேச அளவில் இலங்கை கடுமையான எச்சரிக்கைகளையும் சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-09T10:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-a-man-recovered-kotmale-reservoir-1788946933"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-a-man-recovered-kotmale-reservoir-1788946933</id>
            <summary type="text">தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலமே இன்றையதினம்(9)&nbsp; மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தலவாக்கலை சம்ன் பாடசாலைக்கு அருகாமையில் குறித்த நபருடைய கைப்பை ஒன்று
கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல்
வழங்கியுள்ளனர்.</p><h2>சடலம் மீட்பு</h2><p>

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று காலை முதல்
மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட நேர தேடுதலின் பின்னர், நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து குறித்த நபரின்
சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73bbae00-8256-4e22-a197-1324acc5fa55/26-6aa12e88e792d.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்ற பின்னர், பிரேதப்
பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><h2>விசாரணை</h2><p>

இதேவேளை, குறித்த நபர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு
ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/748956f9-f2f1-4e6b-af76-bc1914cc742e/26-6aa12e89ac98f.webp' /></p><p>பிரேதப் பரிசோதனை மற்றும் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம்
தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-chief-executive-officer-of-srilankan-airlines-1788944180"></link>
            <id>https://tamilwin.com/article/new-chief-executive-officer-of-srilankan-airlines-1788944180</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பொறியியல் தலைவராகப் பணியாற்றினார்.&nbsp;</p><p>இந்நிறுவனத்தில் பொறியியல் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பான மேலாளராகவும் (Accountable Manager) பணியாற்றி வந்த இவர், தற்போது இப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.</p><p>
2024ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த விபுல் மிஸ்ரா, விமானப் பொறியியல் மற்றும் சிரேஷ்ட விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் பரந்த அனுபவம் கொண்டவராவார்.</p><h2>முக்கிய பதவிகள்..&nbsp;</h2><p> </p><p>இதற்கு முன்னர், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஆகியவற்றில் சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0e94ef0-1019-453f-ad08-6dbda721871b/26-6aa129227fb9a.webp' /></p><p>
</p><p>
தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு முக்கிய மறுசீரமைப்பு கட்டத்திற்குள் நுழைய ஆயத்தமாகி வரும் முக்கியமானதொரு சூழலில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மிஸ்ரவின் இந்நியமனம் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:43:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினை : நிரந்தரத் தீர்வை முன்னெடுக்க தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-flooding-problem-in-the-sutumalai-area-1788945161"></link>
            <id>https://tamilwin.com/article/the-flooding-problem-in-the-sutumalai-area-1788945161</id>
            <summary type="text">சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை
ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தெற்கு
மேற்கு பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை
ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தெற்கு
மேற்கு பிரதேச சபையும் இணைந்து வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை
உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், குறித்த பகுதியில்
நீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதற்காக பொருத்தமான குளங்களையும்
உடனடியாகத் தூர்வாருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><h2>வெள்ளப்பாதிப்பைத் தடுப்பதற்கு</h2><p>
சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில்
காணப்படும் தடைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்
ஆளுநர் செயலகத்தில் நேற்று(08.09.2026) முன்னெடுக்கப்பட்ட
கலந்துரையாடலின் போது இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e72cecc-b2fa-4108-9165-31e7ad2b2846/26-6aa12579af60f.webp' /></p><p>
வெள்ளநீர் இயற்கையாகச் சென்று தேங்கக்கூடிய வகையில் நீர்வழிகளைச்
சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து
பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களைத்
தூர்வாருவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

சுதுமலைப் பகுதியில் வெள்ளப்பாதிப்பைத் தடுப்பதற்கான இந்நடவடிக்கைகள்
தாமதமின்றி ஆரம்பிக்கப்பட்டு, தேவையான மேலதிக நடவடிக்கைகளும் நிலைமைகளின்
அடிப்படையில் தொடர்ந்து அடுத்தகட்டமாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த இந்தியப் பிரஜையின் உடல் நல்லடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-indian-national-who-died-in-negombo-prison-1788945233"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-indian-national-who-died-in-negombo-prison-1788945233</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த இந்தியரான உம்னிதாத் சரத்சந்திரனின் உடல், அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த இந்தியரான உம்னிதாத் சரத்சந்திரனின் உடல், அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
</p><p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பான வழக்கு, நேற்று (08) நீர்கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பொலிசார் குறித்த அறிவித்தலை சமர்ப்பித்துள்ளனர்.
</p><p>
அதன் பிரகாரம் இந்த மாதம் 2ஆம் தேதி நீர்கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மாணிக்க ஹேன பொது மயானத்தில் இந்தியப் பிரஜையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையில்இ இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் 11 சந்தேக நபர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அவர்களை அடையாளம் காண்பதற்காக, மூடிய ஆடைகளுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு சிறை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1f1b1e-bc2b-40ab-8f32-6d5af78c3024/26-6aa127c01c196.webp' /></p><p>
</p><p>
மேலும், இதுவரை 81 சந்தேக நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏறத்தாழ 2200 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வழக்கு ஆதாரங்களாகக் பொலிசாரின் காவலில் எடுக்கப்பட்டு அரசாங்க ரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிவியல் பூர்வமான தரவுகளுடன் புதிய தேசிய இளைஞர் கொள்கை: அமைச்சர் சுனில் குமார் கமகே அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-national-youth-policy-based-on-scientific-data-1788944255"></link>
            <id>https://tamilwin.com/article/new-national-youth-policy-based-on-scientific-data-1788944255</id>
            <summary type="text">இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் நேரடித் தலையீட்டுடன், இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் நேரடித் தலையீட்டுடன், இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு
மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள்
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே தெரிவித்தார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(8.9.2026) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, நாட்டின் எந்தவொரு துறையிலும் உணர்திறன் மிக்க, அபிவிருத்தியடைந்த தேசியக்
கொள்கைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.</p><h2>சமூக அபிவிருத்தி</h2><p> எனவே, அரசு என்ற ரீதியில் இளைஞர்களின்
முன்னேற்றத்துக்காகப் பொறுப்புக்கூறக்கூடிய, அறிவியல் பூர்வமான கொள்கை ஒன்றை
உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும்.
</p><p>
அரசின் கொள்கைப் பிரகடனத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகவே, இளைஞர்
சமுதாயத்துக்கான புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் பணிகள் முறைப்படி
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf90e9c-fb00-4510-9050-2bdf27eb52a1/26-6aa122add149c.webp' /></p><p>
</p><p>
புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக, இளைஞர்கள்
எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் உள்ளடக்கும் வகையில் 9 முக்கிய
துறைகளின் கீழ் ஆராய்ச்சிப் பத்திரங்களைச் சமர்ப்பிப்பதற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெறுமனே கொள்கைகளை அறிவிக்காமல், பெறப்படும் இந்த ஆராய்ச்சிப் பத்திரங்களின்
முடிவுகள் மற்றும் அறிவியல் பூர்வமான தரவுகளின் அடிப்படையிலேயே புதிய இளைஞர்
கொள்கை தயாரிக்கப்படும்.
</p><p>
இளைஞர் சமுதாயத்தின் மறைந்திருக்கும் திறன்களை முறையாக அடையாளம் கண்டு,
நாட்டின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அவர்களைத் தீவிரப்
பங்காளிகளாக்குவதே இந்தத் தேசிய மாநாட்டின் முதன்மை நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்! கைபேசியில் உள்ள இரகசிய தரவுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834"></link>
            <id>https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834</id>
            <summary type="text">மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவு, ஆப்பிள் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

குற்றப் புலனாய்வுத்திணைக்களம் இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.</p><h2>நீதவான் விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (09) மீண்டும் தொடங்கப்பட்டபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த உண்மைகளை கூடுதல் அறிக்கையுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c615cb3-09cb-417c-af69-20b988f18787/26-6aa1062f762c6.webp' /></p><p>

சம்பந்தப்பட்ட கைபேசியின் தரவுகள் தொடர்பாக முந்தைய நாள் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவு, ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p>

இச்சம்பவத்தில் காலஞ்சென்ற சந்தேகநபரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>பிரேத பரிசோதனை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை</h2><p>
அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரேதப் பரிசோதகருக்கும் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை வழங்கியுள்ளது.</p><p>இந்த வழக்கை அக்டோபர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-6UFFQLSCYg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-09T09:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தின் பின்னடைவு - நாடாளுமன்றில் மஞ்சுள சுரவீர சரமாரியாக கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lagging-behind-of-nuwara-eliya-manjula-suraveera-1788941807"></link>
            <id>https://tamilwin.com/article/lagging-behind-of-nuwara-eliya-manjula-suraveera-1788941807</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம் எதிர்கொண்டுள்ள நீண்டகால அபிவிருத்தி மற்றும் சமூகப்
பிரச்சினைகள் தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம் எதிர்கொண்டுள்ள நீண்டகால அபிவிருத்தி மற்றும் சமூகப்
பிரச்சினைகள் தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான
மஞ்சுள சுரவீர, நாடாளுமன்றத்தில் நேற்று (08.09.2026) பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற ரீதியில்,
மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் சில கேள்விகளை முன்வைக்க
விரும்புவதாகத் தெரிவித்த அவர்,

குறைந்த கல்வியறிவு காணப்படும் மாவட்டம் எது?

குறைந்த அளவில் வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்ட மாவட்டம் எது?

மந்தபோசணம் அதிகமாக காணப்படும் மாவட்டம் எது?

அரச சேவையாளர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சேவையாற்ற வேண்டிய நிலை
காணப்படும் மாவட்டம் எது?

என்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.</p><h2>சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள்</h2><p>
</p><p>
அத்துடன், சுத்தமான குடிநீரை குறைந்த அளவில் பயன்படுத்தும் பகுதிகள் மற்றும்
மக்கள் தொடர்பான பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809bdf8d-8975-4851-aca9-8f67c3eb59e5/26-6aa11b7d323ce.webp' /></p><p>

நுவரெலியா மாவட்டம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இவ்வாறான அடிப்படைப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும்
அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'எந்நாளும் 88, 89 பற்றி எழுதிக்கொண்டு வந்து அதனை மாத்திரம்
பேசிக்கொண்டிருப்பது போதாது' எனக் குறிப்பிட்ட மஞ்சுள சுரவீர, நாட்டின்
தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் விழிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><h2>அணிதிரளும் மக்கள்</h2><p>
</p><p>
மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும்,
அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கு மக்கள் அணிதிரண்டு வருவதாகவும் அவர்
நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர் மற்றும் அரச
சேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பில் நீண்டகால தீர்வுகள் அவசியம் என
வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள்
எதிர்காலத்தில் எந்தளவுக்கு முன்னெடுக்கப்படுகின்றன என்பதே தற்போது கவனத்தை
ஈர்த்துள்ள விடயமாக உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் பெயரில் போலி விளம்பரங்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-advertisements-in-the-name-police-police-warn-1788940954"></link>
            <id>https://tamilwin.com/article/fake-advertisements-in-the-name-police-police-warn-1788940954</id>
            <summary type="text">இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>பொலிஸ் திணைக்களத்தின் அறிவுறுத்தல்</h2><p>


இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமானவை அல்ல என்றும், போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f044e9-7402-4759-b326-8d5ed6876b6a/26-6aa115eda1b9b.webp' />&nbsp;</p><p>
</p><p>


இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் அல்லது அறிவித்தல்கள் உண்மையானவை அல்ல என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>


எனவே, இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><p><b>&nbsp;YOU MAY LIKE THIS..&nbsp;&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/36KppViOQFg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-09T08:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது சர்வதேச அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pressure-on-sri-lanka-at-un-human-rights-council-1788939661"></link>
            <id>https://tamilwin.com/article/pressure-on-sri-lanka-at-un-human-rights-council-1788939661</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கம் வழங்கிய மனித உரிமைகள் சீர்திருத்த வாக்குறுதிகளை உடனடியாக
உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என இங்கிலாந்து தலைமையிலான
&#039;இலங்கைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் வழங்கிய மனித உரிமைகள் சீர்திருத்த வாக்குறுதிகளை உடனடியாக
உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என இங்கிலாந்து தலைமையிலான
'இலங்கைக்கான முக்கிய குழு' வலியுறுத்தியுள்ளது.

​</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63வது கூட்டத்தொடரில்,
இங்கிலாந்தின் மனித உரிமைகளுக்கான தூதர் எலினோர் சாண்டர்ஸ் இங்கிலாந்து, கனடா,
மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகளின் சார்பில் இந்த
கூட்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.

​​</p><h2>உடன்படிக்கையில் காட்டிய ஈடுபாடு</h2><p> </p><p>பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச தொழிலாளர்
அமைப்பின் (ILO) 190வது உடன்படிக்கையை இலங்கை ஏற்றுக்கொண்டதையும்,
மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கையில் காட்டிய ஈடுபாட்டையும் இந்த குழு
வரவேற்றுள்ளது.</p><p>

​அத்துடன் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படாமல்
இருப்பது, கூட்டுக்குழிகள் கண்டறியப்படுவது, சிவில் சமூக அமைப்புகள் மற்றும்
ஊடகவியலாளர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த குழு பெரும்
கவலையை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b31fcd8a-54e5-4b72-92fb-b2d1726cb403/26-6aa113eb7e491.webp' /></p><h2>வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்</h2><p>

பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பொறுப்புக்கூறல் செயல்முறையை
முன்னெடுப்பது, நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தடுப்புக்காவல்
நிலையங்களில் மனித உரிமைகளைப் பேணுவது மற்றும் சுயாதீன நிறுவனங்களை
வலுப்படுத்துவது போன்ற சட்ட சீர்திருத்தங்களை உடனே மேற்கொள்ள இந்த அறிக்கையில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

​</p><p>இதன் மூலம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மீண்டும்
சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வ அமைப்பல்ல : ஹர்ஷன சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commonwealth-lawyers-association-is-not-official-1788939295"></link>
            <id>https://tamilwin.com/article/commonwealth-lawyers-association-is-not-official-1788939295</id>
            <summary type="text">பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால்
உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல எனவும், அது தனிப்பட்ட
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால்
உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல எனவும், அது தனிப்பட்ட
நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும் எனவும் நீதி மற்றும்
தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(08.09.2026) நடைபெற்ற அமர்வில், பொதுநலவாய
நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>அமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "எதிர்க்கட்சித் தலைவர் வழமை போன்று பல விடயங்களைச் சபையில்
குறிப்பிடுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942d8a2c-a884-45dc-9569-0023c52e0aa4/26-6aa10fc84ef4d.webp' /></p><p> பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம்
தவறானது என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஆனால், இது பொதுநலவாய
உறுப்பு நாடுகளினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல,
மாறாக, தனிப்பட்ட நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும்.&nbsp;</p><p>இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இங்கு வந்து பல விடயங்களைக் குறிப்பிட்டுச்
சென்றுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை நாம் ஆராய
வேண்டும்.
</p><p>
இந்த அமைப்பின் தலைவர் என்னைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில்,
நானும் அதற்கு அனுமதியளித்திருந்தேன். எனினும், அன்றைய தினம் நான் கொழும்பில்
இல்லாத காரணத்தால் அவர் அந்தச் சந்திப்பை மறுத்துவிட்டார். </p><p>ஆகவே, இந்தச்
சங்கத்தின் நிலைப்பாட்டைப் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ
நிலைப்பாடாக ஏற்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள்.. அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-ships-among-47-vessels-near-sri-lanka-1788867082"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-ships-among-47-vessels-near-sri-lanka-1788867082</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
</p><p>
வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நேற்று (08) இத்தகவலை வெளியிட்டார்.
</p><p>
இக்கப்பல்கள் இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு 24 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.</p><h2>இலங்கைக்கு அருகில்..&nbsp;</h2><p>

இவற்றில் ஈரானிய கப்பல்கள் மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் அடங்கியுள்ளன என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c202b0-e6a8-4909-905b-bc5f5f97a2e3/26-6aa10cc2d90b0.webp' /></p><p>

இதுவரை எந்தவொரு கப்பலும் இலங்கையிடம் வசதிகளையோ அல்லது உதவிகளையோ கோரவில்லை என்றும், இலங்கை தரப்பிலிருந்து அவற்றுக்கு எந்தவித வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
இருப்பினும், கடற்படை தற்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை என்றும் உறுதியளித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி தலைமையில் அரச இலக்கிய விருது விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/state-literary-awards-ceremony-of-president-1788938949"></link>
            <id>https://tamilwin.com/article/state-literary-awards-ceremony-of-president-1788938949</id>
            <summary type="text">இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புகளால் வளப்படுத்திய
இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி
அநுரகுமார திஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புகளால் வளப்படுத்திய
இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
</p><p>
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள்
திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கியக் குழு ஆகியவை இணைந்து
67ஆவது முறையாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.</p><h2>அரச விருதுகள்</h2><p>
</p><p>
2025ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய
எழுத்தாளர்களைப் பாராட்டி, 50 இற்கும் மேற்பட்ட பிரிவுகளில் அரச விருதுகள்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ac28720-8e35-4be3-a138-bfac3424103c/26-6aa10cb22bdb0.webp' />&nbsp;</p><p>

இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றியமைக்காக, வாழ்க்கையில் ஒருமுறை
மட்டுமே வழங்கப்படுகின்ற உயரிய 'சாஹித்யரத்ன' கௌரவ விருதுகள் மூன்று மொழிப்
படைப்பாளிகளுக்கு ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டன.</p><p>

சிங்கள மொழிப் பிரிவில் பராக்கிரம கொடித்துவக்குக்கும், தமிழ் மொழிப் பிரிவில்
கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கும், ஆங்கில மொழிப் பிரிவில்
பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகாவுக்கும் மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன.</p><h2>2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது</h2><p>
</p><p>
இதன்போது 2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்குரிய நூற்தொகுதி, நினைவுமலர்
மற்றும் மும்மொழிகளிலான 2026 இலக்கிய இதழ் ஆகியவை ஜனாதிபதியிடம்
உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.</p><p>

மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, புத்தசாசன, சமய மற்றும்
கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும்
கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, கலாசார அலுவல்கள்
பணிப்பாளர் கே.எஸ். தில்ஹானி, இலங்கைக் கலைக் கழகத்தின் தலைவர் கீர்த்தி
வெலிசரகே, தேசிய இலக்கிய உப கழகத்தின் தலைவர் கமல் பெரேரா ஆகியோருடன்,
நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை பிச்சைக்காரருடன் ஒப்பிட்ட கம்மன்பில.. 800,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-vijitha-hearath-responds-gammanpila-1788937122"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-vijitha-hearath-responds-gammanpila-1788937122</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன் ஒப்பிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார். </p><p>அரசியல் விடயம் தொடர்பில் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொள்வதை பிச்சைக்காரனுக்கு பணம் கொடுப்பதுடன் ஒப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், அவ்வாறு பார்த்தால் நாமல் ராஜபக்ச ஒரு பிச்சைக்காரராகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான ஒப்பீட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.&nbsp;</p><h2>&nbsp;800,000 அமெரிக்க டொலர்..&nbsp;</h2><p> பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதற்கும் அரசியல்வாதிக்கு பணம் கொடுப்பதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளதுடன், அரசியல்வாதிகள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவர் என்பதால் கம்மன்பிலவின் தர்க்கத்தையே கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9a91fe-b6c8-4f7f-a36b-e5a64a9fb301/26-6aa107e6076ed.webp' /></p><p> </p><p>அத்துடன், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் Gen Z தலைமுறையினர் ஆதரவாக இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்படவில்லை மாறாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் போதே தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p> முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த கம்மன்பில, தொழிலதிபர் நிமல் பெரேராவினால் நாமல் ராஜபக்சவுக்கு 800,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தொகையை எவ்வாறு தரகு எனக் கூற முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p>அத்துடன், நன்கொடைகளைப் பெறுவது சட்டவிரோதம் என்றால் வீதியிலுள்ள பிச்சைக்காரர் கூட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என வாதிட்டிருந்தமைக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
</p><p>
இன்று காலை (09) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b476ebc-f478-4ebf-b383-16c7ad5cd7af/26-6aa107cf821fb.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி' டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

</p><p>இன்று (09) காலை 8.00 மணிக்கு அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயற்சி</h2><p>'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f3d237-d22b-4484-83e9-bfe334436d18/26-6aa0c473cf192.webp' /></p><p>
</p><p>இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கொண்டா ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:17:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! எண்ணெய் கப்பல்கள் மீது தீவிர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-between-iran-and-the-us-1788937019"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-between-iran-and-the-us-1788937019</id>
            <summary type="text">கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் ஐந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாங்கள் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.​</p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்தானில் உள்ள ‘அல் அஸ்ராக்’ (Al Azraq) இராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.</p><h2>கப்பல்களை அப்புறப்படுத்துமாறு எச்சரிக்கை</h2><p>​ 

முன்னதாக, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து எண்ணெய் கப்பல்களின் ஊழியர்களும், தங்கள் கப்பல்களை உடனடியாக அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்துமாறு IRGC எச்சரிக்கை விடுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13d0e7bd-3399-44e2-ac59-0507791a4e6d/26-6aa10767430e5.webp' /></p><p>
</p><p>
மேலும் இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைவாய்ப்பு மாபியாவால் இஸ்ரேல் கனவுகள் கலைந்தன!- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dreams-of-israel-shattered-by-the-employment-mafia-1788937734"></link>
            <id>https://tamilwin.com/article/dreams-of-israel-shattered-by-the-employment-mafia-1788937734</id>
            <summary type="text">தற்போதைய அரசின் பலவீனமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கைகளாலும்,
செயற்றிறனற்ற செயற்பாடுகளாலும் நாட்டின் வேலைவாய்ப்பு மாபியா தீவிரமடைந்து,
இஸ்ரேல் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசின் பலவீனமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கைகளாலும்,
செயற்றிறனற்ற செயற்பாடுகளாலும் நாட்டின் வேலைவாய்ப்பு மாபியா தீவிரமடைந்து,
இஸ்ரேல் செல்லும் இளைஞர்களின் கனவுகள் கலைந்துவிட்டன என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
</p><p>
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த
'இஸ்ரேலிய உட்கட்டமைப்புத் துறை லொட்டரி எதிர்பார்ப்பு ஐக்கிய அமைப்பினரைச்'
சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"இதற்குக்கூட நிர்மாணத் துறையைச் சேர்ந்த 3 ஆயிரத்து 500 பேருக்காக நான் குரல்
கொடுத்தேன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் உட்கட்டமைப்புத்துறைக்கு எந்தவொரு
வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.</p><h2>திருத்திக் கொள்ள வேண்டிய பலவீனங்கள்</h2><p>வேலைகளுக்குச் செல்ல
எதிர்பார்த்திருப்போர் பொலிஸ் அறிக்கைகள் மற்றும் தகுதிப் பரிசோதனைகளைப்
பெற்றுக்கொண்டும் கூட அவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
</p><p>தற்போது 560 பேர் இந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன், மேலும்
1,200 பேர் உட்கட்டமைப்பு லொட்டரி முறையில் காத்திருக்கின்றனர்.
</p><p>
அரசின் ஊடாக இந்த வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும்போது 10 இலட்சம் ரூபா போன்ற
குறைவான தொகையே செலவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5968ee86-0ec0-4a5f-802e-2009306a5a1f/26-6aa10607b0b2b.webp' /></p><p> </p><p>ஆனால், தனியார் நிறுவனங்கள் ஊடாகச் செல்வதாயின் 35
இலட்சம் ரூபா வரை செலுத்த வேண்டியுள்ளது. </p><p>இந்த வேலைத்திட்டத்தில் பாரிய
சுரண்டல்களும் சூறையாடல்களும் இடம்பெறுகின்றன. இந்த அநீதிக்கு எதிராக நான்
எப்போதும் முன்நிற்பதுடன், சபா பீடத்துக்குள்ளும் சென்று இந்தப் பிரச்சினைகளை
வலுவாக முன்வைப்பேன்.
</p><p>
முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த
தற்போதைய அரசு, இந்தச் சுரண்டல் முறையை உடனடியாக ஒழித்து, 10 இலட்சம் ரூபா
செலவில் இஸ்ரேல் செல்லும் வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9467708-1145-4160-a204-458d3fa3fca4/26-6aa106086cd44.webp' /></p><p> பொய்
கூறும் அரசியலை நிறுத்திவிட்டு, இந்தப் பலவீனங்களை உடனடியாகத்
திருத்திக்கொள்ளுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்த அமைதி வழியிலான ஆர்ப்பாட்ட இடத்துக்கு நேரடியாக வருகை தந்த
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநீதிக்குள்ளாகி வேலைவாய்ப்பை
எதிர்பார்த்துக் காத்திருப்போரைச் சந்தித்து அவர்கள் முகங்கொடுத்துள்ள
பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதிக்கு பதிலாக அமைச்சர் விஜித ஹேரத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-will-not-participate-un-general-assembly-1788936911"></link>
            <id>https://tamilwin.com/article/president-will-not-participate-un-general-assembly-1788936911</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்
கூட்டத் தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும்,
அவருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்
கூட்டத் தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும்,
அவருக்குப் பதிலாக இலங்கை சார்பில் அமைச்சர் மட்டத்திலான பிரதிநிதித்துவம்
இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய(08.09.2026) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்
தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை
சார்பில் தாம் கலந்துகொண்டு, செப்டெம்பர் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளார் என்று
கூறியுள்ளார்.
</p><h2>நியூயோர்க் புறப்பட</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740b6be8-b995-4f04-9a92-73ca3d9da1a1/26-6aa10560bef2f.webp' /></p><p>
இந்த வருடாந்த ஐ.நா. மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டெம்பர் 26 ஆம் திகதி தாம்
நியூயோர்க் புறப்படத் திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defense-minister-sri-lanka-after-38-years-1788934223"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defense-minister-sri-lanka-after-38-years-1788934223</id>
            <summary type="text">மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
</p><p>
இந்தக் கூட்டம் இன்று காலை (09.09.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>இருதரப்புப் பேச்சுவார்த்தைகள்</h2><p>ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FRajnathSinghBJP%2Fposts%2Fpfbid0tTZb4N86Q7oqsWodjXcHLHr6BoLXNzq6uDxiRUzbmEUxxC6N447ofKAkXJa7JV1Wl&show_text=true&width=500" width="500" height="787" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
</p><p>
இந்தப் பயணத்தின்போது, ​​இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் ஹரினி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த மற்றும் ஒரு குழுவினரையும் சந்திக்க உள்ளார்.</p><p>

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் செயலாக்கம் குறித்தும் இந்தப் பயணத்தின்போது ஆய்வு செய்யப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p> 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூலில் தவறான தொழிலை ஊக்குவித்த இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18-year-old-arrested-for-promoting-work-facebook-1788933447"></link>
            <id>https://tamilwin.com/article/18-year-old-arrested-for-promoting-work-facebook-1788933447</id>
            <summary type="text">சமூகவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களை நடத்தி வந்த 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூகவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களை நடத்தி வந்த 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குற்றப் புலனாய்வுத் துறையின் இணையக்கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, மேலும் பல சமூக ஊடகக்குழுக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><h2>குடும்ப உறுப்பினர்களை பற்றிய திரிபுபடுத்தப்பட்ட கருத்து</h2><p>
</p><p>
மேலும், அவற்றில் ஈடுபட்டுள்ள அனைவரும் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8d0b21-6153-4ebe-88a5-9a6ae3a9831c/26-6aa0fc5adb39a.webp' />&nbsp;</p><p>
</p><p>
சமூக விரோத பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பல சமூக ஊடகக்குழுக்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, நடத்தப்பட்ட விசாரணைகளில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த குழுக்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை பற்றியே திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.</p><p>

குறித்த விசாரணைகளின் போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சமூக ஊடகக்குழுவை நடத்தி வந்த ஒருவர் வெயங்கொட பகுதியில் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளக பொறிமுறைக்கே ஆதரவளியுங்கள் என ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-assertion-at-the-geneva-session-1788933189"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-assertion-at-the-geneva-session-1788933189</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு
வரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட எந்தவொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு
வரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட எந்தவொரு
வெளியகப் பொறிமுறையையும் இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க
தெரிவித்தார்.
</p><p>
ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
63 ஆவது கூட்டத் தொடரில் நேற்றைய அமர்வின்போது 'இலங்கையில் நல்லிணக்கம்,
பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில்
அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்து மூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர்
அவா டபோவினால் வாசிக்கப்பட்டது.</p><p>

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்குப் பதிலளித்து இலங்கை
அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றும்போதே நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித்
திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>வெளியகப் பொறிமுறை</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம்
முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப் பொறிமுறையானது
இனங்களைத் துருவமயப்படுத்துவதுடன், நாட்டுக்குள் தேவையற்ற பிளவுகளைத்
தோற்றுவிக்கும். எனவே, இத்தகைய பொறிமுறைகள் தேசிய செயன்முறைகளைப்
பலவீனப்படுத்தும் என்பதால் அவற்றை நாம் நிராகரிக்கின்றோம்.</p><p>

நல்லிணக்கத்தையும் சுபீட்சத்தையும் அடைவதற்கான தேசிய பொறிமுறைக்கே ஐ.நா. மனித
உரிமைகள் பேரவை தனது ஆதரவை வழங்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை அரசு வெளிப்படைத்தன்மையுடனும்
ஒத்துழைப்புடனும் இணைந்து செயலாற்றி வருகின்றது. அதேவேளை, தேசிய ரீதியிலான
உள்ளகப் பொறிமுறைகளையே நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75619318-1c23-4213-8b63-6230fba46a18/26-6aa0fad3b5e1d.webp' /></p><p> </p><p>அதற்கமைவாக,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டுப் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள
சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அது
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில்
மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களும் முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>அரசாங்கத்தின் முற்போக்கான நடவடிக்கை</h2><p>
</p><p>
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய
ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவை அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள
ஆணைக்கு அமைவாகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.
</p><p>
மேலும், உள்நாட்டு யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச்
சென்றவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
வரலாற்றில் முதன்முறையாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை
இலக்காகக் கொண்டு அரசாங்கம் முற்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
</p><p>
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பீடமேறி இரண்டு ஆண்டுகள்
பூர்த்தியடைந்துள்ள நிலையில், டித்வா சூறாவளி மற்றும் உலகளாவிய நெருக்கடி நிலை
போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி
நகர்த்தி வெற்றிகரமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வு : வடக்கு மாகாண ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/graduate-teacher-interview-northern-province-1788932525"></link>
            <id>https://tamilwin.com/article/graduate-teacher-interview-northern-province-1788932525</id>
            <summary type="text">பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத்
தீர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத்
தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத்
தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடலானது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (08.09.2026) ஆளுநர்
செயலகத்தில் நடைபெற்றது.
</p><h2>பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்&nbsp;</h2><p>
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்
வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், இலங்கை ஆசிரியர் சேவைக்கு 23 ஆயிரத்து 344
பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393690cc-231b-4cc0-bb18-367d510b8299/26-6aa0f4f469350.webp' /></p><p>
இதனடிப்படையில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளுக்கான
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் போட்டிப் பரீட்சை
நடத்தப்பட்டிருந்தது.</p><p>அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்
நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறும் பட்டதாரிகளை அழைத்தல், நேர்முகத்
தேர்வுகளை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.</p><p>
இவற்றை காலதாமதமின்றி மேற்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர், ஆளுநரின்
செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின்
செயலாளர், பிரதம செயலாளருக்காக பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், மாகாண
கல்விப் பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், ஆளுநரின் உதவிச்
செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-case-politicians-in-risk-1788929226"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-case-politicians-in-risk-1788929226</id>
            <summary type="text">டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p> 

ஷிரான் பாசிக் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், சிலரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><h2><b>
கறுப்புப் பணம்</b></h2><p>அதற்கமைய, தெஹிவளை, கல்கிஸ்சை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மற்றும்&nbsp;புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணைக் குழுக்கள் அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c81b70-feeb-45a3-97b1-4fd1f2d1dcfb/26-6aa0e808903fb.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் தனசிறி அமரதுங்க, ஷிரான் பாஸிக்கின் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை சட்டப்பூர்வ சொத்துகளாக மாற்ற உதவி செய்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடற்கரைகளில் ஹோட்டல்களை அமைக்க ஷிரான் பாஸிக்கிற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் அதிகாரிகளால் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.</p><p>
</p><h3><b>
அநுர அரசின் நடவடிக்கை</b></h3><p>ஷிரான் பாஸிக்கின் தொலைபேசி மற்றும் வங்கிப் பரிமாற்றங்களின் தரவுகளும் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/408a329a-07ff-4b2b-bbd4-1c2937549901/26-6aa0e809441cc.webp' /></p><p>பாஸிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மேலும் 3 முன்னணி அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் நாட்களில் நேரடியாக வாக்குமூலம் பெற விசாரணைக் குழுக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.</p><p>வெள்ளவத்தை முதல் தெஹிவளை, கல்கிஸ்ஸ கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத ஹோட்டல்களை நீக்கப் போவதாக சமகால அநுர அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><i><b>you may like this video </b></i></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3P6P7mu8JVo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i></i></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதியின் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை : சுனில் ஹந்துன்நெத்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amentment-1788929705"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amentment-1788929705</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதில் எந்த
முரண்பாடும் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதில் எந்த
முரண்பாடும் இல்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.</p><p>

களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய
விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>22 தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
"உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அரசமைப்புத்
திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
வாக்குகள் அவசியமானவை என்பதால், அதனை நாடாளுமன்றத்தில் விரைவாகச் சமர்ப்பித்து
நிறைவேற்றுவதாகவே ஜனாதிபதி குறிப்பிட்டார்.
</p><p>
ஒருவேளை உயர்நீதிமன்றம் இந்தச் சட்டமூலத்துக்குச் சர்வஜன வாக்கெடுப்பு (மக்கள்
தீர்ப்பு) அவசியம் என உத்தரவிட்டால், அதனை எதிர்கொள்வதிலும் அரசுக்கு எவ்வித
ஆட்சேபனையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea47dfc9-43ea-49ef-9cd9-aec5404ecce2/26-6aa0f3ca511c9.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், அரசின் இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத்
தெரிவித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான
நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகச் சுதந்திர செயற்பாட்டு மையம், இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளது.</p><p>

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசின் சார்பில் திட்டமிட்ட தாமதம்
எதுவும் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறைகளில் ஏற்படும்
இயல்பான நடைமுறைத் தாமதங்களே இதற்குக் காரணம். இது நீண்டகால யுத்தம்,
பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பரந்த விடயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315872ef-7922-430f-a1fa-ff0528e9763a/26-6aa0f3c98296a.webp' /></p><p>
</p><p>
மேலும், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வடக்கு, கிழக்கு
மக்களுக்கு நேரடியாகத் தொடர்புடையது என்பதால், அனைத்துத் தரப்பினரின்
கருத்துகளையும் கேட்டு விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டியுள்ளது.
</p><p>
சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பான பொலிஸாரின் நடைமுறை விளக்கங்களும் சட்ட
வரையறைகளும் சிக்கலானதாக அமைந்திருப்பதும் தாமதத்துக்கு மற்றொரு காரணமாகும்.
</p><p>எவ்வாறாயினும், அரசு அளித்த வாக்குறுதியின்படி, பொதுமக்களின் ஆலோசனைகளைப்
பெற்று நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் வகையில் மிக
விரைவில் இதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா உறுதியாகத் துணை நிற்கும்! பாதுகாப்புத் துறை அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-statement-1788930351"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-statement-1788930351</id>
            <summary type="text">இலங்கை எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். </p><p> 

இலங்கைக்கான விஜயத்தின் போது நேற்றைய தினம் (08.09.2026) கொழும்பில் இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி</h2><p>
</p><p>
இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த உறவுகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa4754e-f3d5-475c-b233-bc9c5ad0d998/26-6aa0f1ca0e7fd.webp' /></p><p> </p><p>

இந்தியாவின் வேகமான பொருளாதார மாற்றத்தை எடுத்துரைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர், உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாகவும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.</p><h2>இந்தியாவின் பொருளாதாரம்</h2><p>
</p><p>
2014ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் அது இரட்டிப்பாகி தற்போது சுமார் 4 டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d75d2e0-ca5e-45a5-b7db-733a75454fee/26-6aa0f1cae0864.webp' /></p><p> </p><p>மேலும், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:43:11+00:00</updated>
        </entry>
    </feed>
