<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-15T14:09:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flag-hoisting-ceremony-thellippalai-durga-amman-1786802062"></link>
            <id>https://tamilwin.com/article/flag-hoisting-ceremony-thellippalai-durga-amman-1786802062</id>
            <summary type="text">&amp;nbsp;வரலாற்று சிறப்புமிக்க. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம்
இன்று (15) கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.&amp;nbsp;தெல்லிப்பழை துர்க்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வரலாற்று சிறப்புமிக்க. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம்
இன்று (15) கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.</p><p>&nbsp;தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2026 மகோற்சவ பெருவிழாவில் இன்று
காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வசந்த
மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான் ஆகியோருக்கு
விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளது.</p><p> வசந்த மண்டபத்தில் இருந்து மூர்த்திகள் கொடிக்
கம்பத்திற்கு எழுந்தருளி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று
காலை 10.00 மணிக்கு இனிதே நடைபெற்றது.</p><h2>கொடியேற்றம்</h2><p>12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோசவத்தில் பத்தாம் நாள் திருவிழாவாக எதிர்வரும்
24 ஆம் தேதி சப்பறத் திருவிழாவும் 11ஆம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 25 ஆம்
தேதி ரத உற்சவமும் 12-ஆம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 26ஆம் தேதி தீர்த்த
உற்சவமும் சிறப்பாக நடைபெற உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4da943a2-eabc-4e4e-a2ef-d3115ed21eee/26-6a8071f94c341.webp' /></p><p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாலய மகோற்சவ விழாவில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T14:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-explanation-cry-for-justice-protest-1786800913"></link>
            <id>https://tamilwin.com/article/police-explanation-cry-for-justice-protest-1786800913</id>
            <summary type="text">யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா
நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா
நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று&nbsp; (15) வலிகாமம் கிழக்கு
பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எவ்வகையில் போராட்டத்திற்கு
அனுமதியளிக்க முடியும் விளக்கம் கேட்டு யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்தில் அவரது
அலுவலகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் தவிசாளரிடம் கேட்டபோது, யாழ்ப்பாண தலைமைப் பிரதான பொலிஸ்
பொறுப்பதிகாரியின் கடிதத்துடன் எனது அலுவலகத்திற்கு வருகை தந்த பொலிசார் என்னை
பதிலளிக்குமாறு கோரும் கடிதத்தினை கையளித்தனர்.</p><p></p><h2>ஐக்கியநாடுகள் சபை</h2><p>
</p><p>
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது செம்மணியில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராடுவதுடன்
பேரணியாக யாழிலுள்ள ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தில் மனு
கையளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7e2d5c6-cbc3-43d8-a7cb-55ddbeecb290/26-6a806e89a062f.webp' /></p><p> அந்தப் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகிய நீங்கள்
அனுமதி வழங்கியுள்ளமை பொலிஸ் தரப்பிற்குத் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இவ்வாறான
போராட்டத் தொடர் நடத்தப்படுவதன் மூலம், இலங்கையினுடைய வெவ்வேறு
இனத்தவர்களுக்கிடையே ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும்இ பொது
அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என பொலிஸ் கருதுவதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>விளக்கம்</h2><p>
</p><p>
மேலும் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடிதத்தில், பொலிஸ் தரப்பின் அனுமதியின்றி
இவ்வாறான போராட்டத் தொடரை நடத்துவதற்கு உங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா
எனக் கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>அத்துடன் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பின் அதற்கான
சட்டபூர்வமான அடிப்படை என்ன, இவ்வாறானதொரு போராட்டத் தொடரை எம்மால்
எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d50bc3b-2a97-4925-97d5-685abd2f8ab4/26-6a806e8a5563f.webp' /></p><p>
</p><p>
இந்தநிலையில் ஜனநாயக ரீதியிலான நீதி கோரிய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
நீதி கோரிய போராட்டத்தினை எமது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நடத்துவதற்கு
கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜனநாயக ரீதியிலான மனித உரிமைகளை வலியுறுத்திய
மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளைக் கருத்தில்
கொண்டு தான் அனுமதியளித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்
தியாகராஜா நிரோஷ் பொலிஸ் தரப்பிற்கு எழுத்து மூலம் பதிலளித்தள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T13:50:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய காகித கடைக்கு சென்ற 8 இலட்சம் பெறுமதியான புத்தகங்கள் - சாரதி உட்பட ஐவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/textbooks-worth-rs-8-lakh-sold-1786800112"></link>
            <id>https://tamilwin.com/article/textbooks-worth-rs-8-lakh-sold-1786800112</id>
            <summary type="text">கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களை, அவை கொண்டு செல்லப்பட்ட வழியில் வேறு ஒருவருக்கு குறைந்த வில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களை, அவை கொண்டு செல்லப்பட்ட வழியில் வேறு ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>

கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சுமார் 19,000 பாடநூல்கள், வெறும் 47,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தலங்கம பொலிஸாரால் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h2>
பழைய காகித கடைக்கு சென்ற பாடசாலை புத்தகங்கள்</h2><p>
ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, குறித்த பாடநூல்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, புத்தகங்கள் அனைத்தையும் பழைய காகிதங்களை கொள்வனவு செய்யும் நபர் ஒருவருக்கு விற்பனை செய்து, அதற்காக 47,000 ரூபாவைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c11b50-0f6b-4942-890c-d040a29356f5/26-6a806d765c2ea.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
</p><p>
இதன்போது, அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-15T13:45:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-work-chemmani-mass-grave-1786800379"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-work-chemmani-mass-grave-1786800379</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15.8.2026) முன்னெடுப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15.8.2026) முன்னெடுப்பட்டன.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><p>இந்தநிலையில், 53ஆவது நாளான இன்றைய தினம் 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வு
பணிகளின் போது, 562 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ac119c-6fbd-46f1-9612-30cd9ab870e7/26-6a806a44e0772.webp' /></p><p>இந்தநிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 557 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T13:31:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர் - குழு மோதலால் ஏற்பட்ட விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-brutally-killed-in-colombo-1786797110"></link>
            <id>https://tamilwin.com/article/man-brutally-killed-in-colombo-1786797110</id>
            <summary type="text">கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இராஜகிரிய பிரதேசத்தில் குழுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இராஜகிரிய பிரதேசத்தில் குழுக்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலில் உயிரிழந்தவர் இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த&nbsp;27 வயதான இளைஞன் என வெலிக்கடை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><h2><b> 

 நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்</b></h2><p>குறித்த நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையைத் தொடர்ந்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e423df7-4854-4bbf-853f-f800f96f5781/26-6a806810a13b8.webp' /></p><p>தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T13:23:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு 10 சதவீதமாக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-contribution-product-increase-10-percent-1786794647"></link>
            <id>https://tamilwin.com/article/northern-contribution-product-increase-10-percent-1786794647</id>
            <summary type="text">வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5
சதவீதமாக காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம்
நிர்ணயித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5
சதவீதமாக காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம்
நிர்ணயித்துள்ளோம் என
வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று(15.08.2026) வட மாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை
திறப்பு விழாவில் கலந்துகொண்டு 
உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சிறிய மற்றும் நடுத்தர தொழில்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், போரின் பின்னர் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்
முயற்சிகள் இன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.
</p><p>
ஒவ்வொரு ஆண்டும் தொழில் முயற்சியாளர்கள் புதிய
உற்பத்திப் பொருட்களை அறிமுகப்படுத்துவதும், புதுமையாகவும் புத்தாக்கமாகவும்
சிந்தித்து தமது தொழில்களை விரிவுபடுத்துவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறான புதிய முயற்சிகளே அவர்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக்
கொண்டு செல்லும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe188ca5-27bd-4849-bb94-3aabda72e9cc/26-6a8053329b02c.webp' /></p><p>
</p><p>
வட மாகாண உற்பத்திகளுக்கு உள்நாட்டு சந்தையைத் தாண்டி ஏற்றுமதி
சந்தையிலும் சிறந்த வாய்ப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகள் வடக்கில் உற்பத்தி செய்யப்படும்
பல்வேறு பொருட்களில் ஆர்வம் கொண்டிருப்பதால், அவர்களை ஒரு முக்கிய சந்தையாகக் 
கொண்டு ஏற்றுமதியை விரிவுபடுத்த முடியும்.
</p><p>
கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தித் திறன் அதிகமாக காணப்படுவதுடன், இந்தமுறை
சிறுபோகத்திலும் எதிர்பார்த்ததை விட அதிக விளைச்சல் கிடைத்துள்ளமை
வரவேற்கத்தக்கது.
</p><p>
இருப்பினும் இவ்வாறான உற்பத்திகளில்
பெரும்பகுதி பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களாக மாற்றப்படாமல்
மூலப்பொருட்களாகவே வெளிமாவட்டங்களுக்கும் வெளிப்பகுதிகளுக்கும் கொண்டு
செல்லப்படுகிறது.</p><h2>வட மாகாண தொழிற்துறை</h2><p>
</p><p>
இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க
வேண்டிய அதிகபட்ச பொருளாதாரப் பயன் கிடைப்பதில்லை.

மூலப்பொருட்களை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றுவதே வட
மாகாணத்தின் தொழில் வளர்ச்சியின் அடுத்த முக்கிய கட்டமாக இருக்க வேண்டும்.
</p><p>
உற்பத்தி, பதனிடல், பொதியிடல், சந்தைப்படுத்தல் மற்றும்
ஏற்றுமதி என முழுமையான உற்பத்திச் சங்கிலியை உருவாக்குவதன் மூலம் தொழில்
முயற்சியாளர்களின் வருமானத்தையும் போட்டித்திறனையும் உயர்த்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f39d2f0f-e00f-4627-a8a5-c43216b9a38b/26-6a80533373c35.webp' /></p><p>
</p><p>
வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தால் கடந்த காலங்களில் சிறிய அளவிலான
பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் தொழில்
முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>எதிர்காலத்தில் மிகக் குறைந்த
வட்டியுடனான கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளது. 

அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படும் இவ்வாறான வாய்ப்புகளை முழுமையாக
பயன்படுத்தி, தமது தொழில் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும்.
</p><p>
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன், வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர்
எஸ்.கிருஸ்ணேந்திரன், வட மாகாண பிரதம
செயலாளர் தனுஜா முருகேசன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சு.முரளிதரன்,
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன், தொழில் முயற்சியாளர்கள்,
உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகத் துறையினர் உள்ளிட்ட பலரும் 
பங்கேற்றுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:52:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட தமிழ் பெண்! நீதி கிடைப்பதில் பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/welikada-police-station-woman-death-1786773271"></link>
            <id>https://tamilwin.com/article/welikada-police-station-woman-death-1786773271</id>
            <summary type="text">வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு (OIC) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த சிந்தக்க அனுராத வவுனியாவுக்கு இடமாற்றப்பட்டு சாதாரண சேவையில் இணைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் புலனாய்வுச் செய்திச் சேவையொன்று ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
சலாகா (Salaka) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நெத்தி குமாரவின் மனைவி சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டில் பதுளை, தெமோதரை தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதான ஆர்.ராஜகுமாரி எனும் பெண் வேலை செய்து வந்துள்ளார்.</p><h2>பொய்க்குற்றச்சாட்டு&nbsp;</h2><p> </p><p>கொழும்பில் உள்ள வீடுகளில் பணிபுரிந்துவிட்டுச் செல்லும் ஏழைத் தொழிலாளர்கள் மீது பணம், தங்கம் அல்லது மாணிக்கக் கற்களைத் திருடிவிட்டதாகப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகக் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceae7495-a5fb-4e84-bf68-bbdbd343e716/26-6a7fff1983587.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தலையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>டிரான் அலஸுடன் நெருங்கிய தொடர்புடைய பெண் ஒருவர் சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண் மூலமாகப் பாரிய அழுத்தத்தைக் கொடுத்து, ஏழைத் தமிழ் பெண்மணி தன் வீட்டிலிருந்து சென்று இரண்டு நாட்களில் "தங்கக் கடிகாரம் மற்றும் 500 கிராம் தங்கம் திருடிவிட்டார்" எனச் சுதர்மா நெத்தி குமார பொய்க் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, அப்பெண் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அன்றைய OIC சிந்தக்க அனுராதவின் காலத்தில் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p>உயிரிழந்த பெண்ணின் உடலில் 34 பலத்த காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இரண்டு வயதில் ஒரு குழந்தை, 17 வயதில் ஒரு குழந்தை என மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.</p><p></p><h2>கடும் அழுத்தம்..&nbsp;</h2><p>
இச்சம்பவம் தொடர்பில் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை மேற்கொண்டபோது, அன்றைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏமில் ரஞ்சன் (Emil Ranjan) விசாரணைகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் டிரான் அலஸ் மற்றும் நெத்தி குமார ஆகியோரால் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c639875f-0328-4fe4-9ca1-f3fc243833b2/26-6a7fff1a386be.webp' /></p><p>

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதுடன் சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. </p><p>இருப்பினும், தற்போது இந்த OIC சிந்தக்க அனுராதவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, (RTM 14) உத்தரவின் மூலம் கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

ஏழைப் பெண்ணை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்கினை எதிர்கொண்டு வரும் நபர், V8 சொகுசு வாகனத்தில் வந்தே புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். </p><p>இவர் ஒரு பெரும் ஊழல்வாதி என்றும், ராஜகிரிய மற்றும் வெலிக்கடை பகுதி மக்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் 11 ஸ்பா (SPA) மையங்களை நடத்தி வந்ததியாகவும், அவற்றில் இருந்து லஞ்சப் பணம் வசூலித்ததாகவும், இரண்டு ஸ்பா மையங்களைக் ஒப்பந்த அடிப்படையில் (Contract) வழங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
</p><p>
இவ்விடயங்கள் வெலிக்கடை பொலிஸாருக்கும், தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தெரியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்த ஏழைப் பெண்ணிற்காகப் பேசுவதற்கு யாரும் முன்வராத நிலையில், ராஜகுமாரியின் வழக்கேட்டுக்கோப்புகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மூன்று மாடி கட்டிடம்! மனித உரிமைகள் அதிகாரி கிளப்பும் சர்ச்சை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-district-pallai-1786797573"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-district-pallai-1786797573</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளை பகுதியில் புதிதாக மூன்று மாடி கொங்கிரீட் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும் அங்கு 100 முதல் 150 பேர் வரை வேலை செய்து வருவதாகவும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளை பகுதியில் புதிதாக மூன்று மாடி கொங்கிரீட் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும் அங்கு 100 முதல் 150 பேர் வரை வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது. </p><p>இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் முகமாக மாற்றப் போகிறார்களா? அல்லது இங்கு வெடிகுண்டுகள் தயாரிக்கப் போகிறார்களா?என அங்கிருக்கும் சிங்கள அதிகாரிகள் தங்களிடம் தெரிவிப்பதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜெயசேகர, இன்று நடத்திய ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>
</h2><p></p><h2>49 ஏக்கர் அரசாங்கக் காடுகள் அழிப்பு</h2><p>பளை பகுதியில் சுமார் 49 ஏக்கர் அரசாங்கக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வன அலுவலக அதிகாரி ஏழு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.</p><p>நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதி , பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன , பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோருக்கு தனிப்பட்ட கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளோம். அதற்கான ஆதாரங்கள் புகைப்படங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>அந்தப் பகுதியில் சிங்களவர்கள் இல்லை, மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சிங்களவர்களும் அதிகாரிகளுமே நம்மிடம் இதைக் கூறுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87bddff9-6a66-4693-9aee-6ebdae90032a/26-6a805e07eabe0.webp' /></p><p>புதிதாகக் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் அல்லது மத்திய அரசின் எவ்வித அனுமதியும் இன்றி இவ்வளவு பெரிய கட்டிடங்களை எவ்வாறு கட்ட முடிந்தது? </p><p>இதன் பின்னணியில் இருப்பது யார்?
அங்குள்ளவர்கள் கூறும் தகவல்களின்படி, அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் ஒரு வெளிநாட்டுத் திட்டமாக இதற்கு உதவி செய்வதாக கூறப்படுகிறது. </p><h2>
ஏழு வழக்குகள் தாக்கல்</h2><p>தற்போது 7 வழக்குகளைத் தாக்கல் செய்த வன அலுவலக அதிகாரியை (RFO) கொலை செய்வதற்கு&nbsp; சம்பந்தப்பட்ட தமிழர்கள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் தற்போது அந்த அதிகாரி பயத்தில் வழக்கு நடைபெறும் திகதிகளில் மட்டும் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு, ஏனைய நாட்களில் விடுமுறை எடுத்து ஒளிந்து வாழ்கிறார்.
</p><p>இவ்வாறானதொரு சூழ்நிலையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடம் நாம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளோம். இந்த RFO மற்றும் அதே வன அலுவலகத்தில் பணிபுரியும் அவரது மனைவி ஆகிய இருவரையும் குருநாகலுக்கு இடமாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டோம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5269ed52-6899-45df-9e67-e73447fc8496/26-6a805e0744e99.webp' /></p><p>முதற்கட்டமாக அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். </p><p>
மேலும் பொலிஸ் நிலையததில் உள்ள எந்தவொரு அதிகாரியும் இது குறித்து கண்டுக்கொள்ளவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வனத்துறையின் ஏனைய அதிகாரிகளும் கூட இந்தப் பிரச்சினைக்குப் பயப்படுகிறார்கள். எனவே இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படவுள்ள மிக ஆபத்தான நபர்கள்.. பதற்றத்தில் பல அரசியல்வாதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/73-red-warranted-persons-to-bring-back-1786791354"></link>
            <id>https://tamilwin.com/article/73-red-warranted-persons-to-bring-back-1786791354</id>
            <summary type="text">வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். </p><p>கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.</p><h2>கலக்கத்தில் பலர்..&nbsp;</h2><p> நாட்டில் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு சர்வதேச நாடுகளிலிருந்தும் வெளிநாட்டுத் தூதரகங்களிலிருந்தும் பலத்த ஆதரவும் பாராட்டும் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7edc0da8-da5a-41fc-ac04-f4361275414f/26-6a8052d9073eb.webp' /></p><p> </p><p> இந்தச் சோதனைகளை நிறுத்துமாறு தனக்கு எந்தவித வெளிப்புற அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ வரவில்லை என்றும், மேலதிக சோதனைகளை நடத்துமாறு கோரிக்கைகளே கிடைக்கப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார். </p><p>இருப்பினும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் முதலீடு செய்து ஆதரவளித்தவர்கள் தற்போது கடும் கலக்கத்தில் இருப்பதை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்தார். </p><p> அரசியல்வாதிகள் சிலர் தனக்கு எதிராக வெளியிடும் அறிக்கைகள் குறித்துத் தனக்கு எந்தப் பயமும் இல்லை என்றும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>அரசியல்வாதிகளின் நிலை&nbsp;</h2><p> </p><p>தான் எந்தவொரு சமூக அநீதியையோ அல்லது அழிவையோ ஏற்படுத்தாததால், சிறப்புப் பாதுகாப்பு இல்லாமலும் கூட நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குத் தன்னால் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/418556f2-a4ff-4f43-a44f-75a0c207f38f/26-6a8052d9f0331.webp' /></p><p>மக்களிடையே செல்ல முடியாத நிலை தனக்கு இல்லை என்றும், பொய்களைக் கூறி சமூகத்தை அழித்த அரசியல்வாதிகளுக்கே அந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார். </p><p>மேலும் 73 பேரைச் சிவப்பு எச்சரிக்கை மூலம் நாட்டிற்கு அழைத்துவர வேண்டி உள்ளதாகவும், சர்வதேச ரீதியில் நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:23:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயலுக்கு சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dies-after-being-attacked-by-elephant-1786795681"></link>
            <id>https://tamilwin.com/article/dies-after-being-attacked-by-elephant-1786795681</id>
            <summary type="text">வவுனியா - வடக்கு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட குளவிசுட்டான் குறிசுட்ட குளம் பகுதியில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வடக்கு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட குளவிசுட்டான் குறிசுட்ட குளம் பகுதியில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>இந்த சம்பவம் இன்று(15.08.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>குறித்த நபர், குறிசுட்டகுளம் பகுதியில் உள்ள வயல் நிலத்தினை பார்வையிட சென்ற போது யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
</p><h2>

இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு</h2><p>
இவ்வாறு உயிரிழந்தவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய குளவிசுட்டான் நெடுங்கேணியினை சேர்ந்த குலராஜசிங்கம் ஸ்ரீதரன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74b27422-f58e-49e9-97e5-e56fb3977af1/26-6a80598cb9d0e.webp' /></p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உடலத்தினை நெடுங்கேணி வைத்தியசாலை கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>
அதன் பின்னர், குடும்பஸ்தரின் சடலம் மேலதிக விசாரணைக்காக வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T12:21:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிக்கபுரம் – பாரதிபுரம் வீதி புனரமைப்புப் பணி ஆரம்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/manikapuram-bharathipuram-road-work-begins-1786792739"></link>
            <id>https://tamilwin.com/article/manikapuram-bharathipuram-road-work-begins-1786792739</id>
            <summary type="text">மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, 25 மில்லியன் ரூபாய்&amp;nbsp; நிதி ஒதுக்கீட்டில் மானிக்கபுரம் – பாரதிபுரம் இணைப்பு வீதிப் பணிகளை புதுக்குடியிருப்பு பிரதேச ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, 25 மில்லியன் ரூபாய்&nbsp; நிதி ஒதுக்கீட்டில் மானிக்கபுரம் – பாரதிபுரம் இணைப்பு வீதிப் பணிகளை புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆரம்பித்து வைத்துள்ளது.</p><p>

இந்த நிகழ்வானது இன்று (15.08.2026) புது குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.</p><h2>வீதி புணரமைப்பு</h2><p>இந்த நிகழ்வு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன், பிரதேச சபை உறுப்பினர் அகிலன்,&nbsp; திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff8394e-a0e9-41c0-8779-b03a47b18047/26-6a804bc83c6d8.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு பகுதியில் முற்றாக தீக்கிரையாகிய வீடு - தெய்வாதீனமாக உயிர் தப்பிய வீட்டார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-house-destroyed-by-fire-family-escapes-1786791685"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-house-destroyed-by-fire-family-escapes-1786791685</id>
            <summary type="text">மட்டக்களப்பு - செங்கலடி சந்தை பகுதியில் மின்சார கசிவு காரணமாக வீடொன்று முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது.

இந்த விபத்தானது இன்று (15.08.2026) காலையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - செங்கலடி சந்தை பகுதியில் மின்சார கசிவு காரணமாக வீடொன்று முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது.</p><p>

இந்த விபத்தானது இன்று (15.08.2026) காலையில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
மின்சாரக் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து சம்பவித்துள்ளதாக
ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இன்று காலை வேளையில் குறித்த வீட்டின் மின் ஒழுக்கு காரணமாகவே தீ மூண்டுள்ளது.</p><h2>உடமைகளை இழந்த வீட்டார்</h2><p>
</p><p>
குறுகிய நேரத்திற்குள் தீ வீடு முழுவதும் வேகமாக பரவியதால், வீட்டினுள்
இருந்தவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
</p><p>
தீயின் வீரியம் அதிகமாக இருந்தபோதிலும், வீட்டின் உரிமையாளர்களும்
குடியிருப்பாளர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6db9494-e68f-459d-8b88-ac28b6771c05/26-6a8047c7c50cc.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் எந்தவித
உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட வேளை அருகாமையிலிருந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உடனடியாக
செயற்பட்டு, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
</p><p>
ஆயினும், இந்தத் தீ விபத்தின் காரணமாக வீட்டின் கூரை, மரத்தளபாடங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் உடமைகள் உட்பட அனைத்தும் முற்றாக எரிந்து
சாம்பலாகியுள்ளன. இதனால் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள்
சேதமடைந்துள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

சமீபகாலமாக மின் ஒழுக்கு காரணமான விபத்துக்கள் அதிகரித்து வருவதால், மின்சாரப்
பயன்பாட்டின் போது பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் விழிப்புடன் இருக்குமாறு
பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T11:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் 80வது சுதந்திர முன்னிட்டு யாழில் கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flag-hoisting-in-jaffna-of-india-independence-day-1786780996"></link>
            <id>https://tamilwin.com/article/flag-hoisting-in-jaffna-of-india-independence-day-1786780996</id>
            <summary type="text">இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம்(15.08.2028) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய
தேசியக்கொடி ஏற்றப்பட்டு,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம்(15.08.2028) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய
தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம், கச்சேரி - நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்
தூதுவரின் வாசஸ்தலத்தில் காலை 9 மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத்
தூதர் சாய் முரளி ஏற்றி வைத்துள்ளார்.</p><h2>கொடி ஏற்றம்</h2><p>
</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின்
வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்துள்ளார்.
</p><p>
இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள்,
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99988bda-8d74-4dfc-acaf-7e9d37f50281/26-6a80308e39d40.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98f49b3-4d27-4b89-8652-fab580937e1e/26-6a80308f1b102.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 இலட்சம் செலவில் பாதை புனரமைப்பு பணி நிறைவு - பொதுமக்கள் நெகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotagala-errington-colony-main-road-reconstruction-1786787658"></link>
            <id>https://tamilwin.com/article/kotagala-errington-colony-main-road-reconstruction-1786787658</id>
            <summary type="text">கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும்
பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் போட்டு புனரமைப்பதற்கான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும்
பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் போட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று(15) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
கொட்டகலை எரிங்டன் கொலனி பகுதிக்கு செல்லும் இந்த பிரதான வீதி, கடந்த பல
வருடங்களாக உரிய முறையில் புனரமைக்கப்படாத நிலையில், குன்றும் குழியுமாக
காணப்பட்டு வந்தது.</p><h2>வீதி புனரமைப்பு</h2><p> </p><p>இதனால் இந்த வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள், பாடசாலை
மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி
வந்தனர்.</p><p>

குறிப்பாக மழைக்காலங்களில் வீதியில் நீர் தேங்குவதுடன், குழிகள் மேலும்
பெரிதாகி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாகவும் மக்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0630d38-bf3f-497c-8985-37da71bf9d20/26-6a803c6ccbf61.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த
முக்கியமான வீதியை விரைவாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக
விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வீதியை கொங்கிறீட் இட்டு புனரமைக்கும் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 15ஆம் திகதி கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி
யாகுல மேரி தலைமையில் நடைபெற்றது.</p><h2>நிரந்தரத் தீர்வு</h2><p>
</p><p>
இந்த வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் எரிங்டன் பகுதியில் நேரடியாக வசிக்கும்
சுமார் 300 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், ரொப்கில், எரிங்டன் உள்ளிட்ட அதனை
அண்டிய பல பகுதிகளைச் சேர்ந்த மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களும் இதன் மூலம்
பயனடையவுள்ளனர்.
</p><p>
பிரதேச மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன், அவசர மருத்துவ
சேவைகள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து மற்றும் தொழிலாளர்களின் அன்றாட
பயணங்களுக்கும் இந்த வீதி புனரமைப்பு பெரும் உதவியாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc39a747-d0c4-41fb-9c35-78250d2af5c9/26-6a803c6da5591.webp' /></p><p>

நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட வீதிக்கு நிரந்தரத் தீர்வொன்று
கிடைத்துள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி யாகுல மேரி, வட்டார
உறுப்பினர் அமித ஆனந்த, பிரஜாசக்தி தலைவர் சுனில் வீரசிங்க, குடாஓயா வட்டார
பிரஜாசக்தி தலைவர் லோகநாதன், அமைப்பாளர் கிருஸ்ணன் சசிகுமார் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:52:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை வினாத்தாள் முறைகேடுகள் விவகாரம்! ஆரம்பமான சிஐடி விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-level-question-paper-incident-cid-investigations-1786788429"></link>
            <id>https://tamilwin.com/article/a-level-question-paper-incident-cid-investigations-1786788429</id>
            <summary type="text">&amp;nbsp;அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் சமீபத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து குற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் சமீபத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
</p><h2>வினாத்தாள் பொதிகள் திறக்கப்பட்டுள்ள விவகாரம்</h2><p>
குறித்த மையத்தில் வினாத்தாள் பொதிகள் திறக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் எந்த வினாத்தாள்களும் கசிந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20a51c8-8b51-4b56-bfcc-53e29ba84475/26-6a8044948bf5e.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவம் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், பொலிஸாரும் விசாரணையை நடத்தியுள்ளன. </p><p>

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், பரீட்சை பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T10:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் எங்கள் கண்மணிகள் நாடகம் தமிழர் பகுதிகளில் அரங்கேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmaniyil-engal-kanmanigal-drama-1786776840"></link>
            <id>https://tamilwin.com/article/chemmaniyil-engal-kanmanigal-drama-1786776840</id>
            <summary type="text">செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த
தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள்
” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும் ஆற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த
தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள்
” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும் ஆற்றுகைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p>செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதாக இந்த நாடகம் அமைந்துள்ளது.</p><h2>செம்மணியில் எங்கள் கண்மணிகள்</h2><p>

கலைப்புலவர் ஜெயம் ஜெகனின் எழுத்துரு, பாடல் வரிகள் மற்றும்
நெறியாள்கையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடகம், அரங்கத்திற்குள்
மட்டுப்படுத்தப்படாமல் மக்களோடு மக்களாகவும், மாணவர்களிடம் நேரடியாகவும்
கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
</p><p>
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும்
மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் மக்களினதும்,
மாணவர்களினதும் பார்வைக்காக நாடக ஆற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/381eafab-6c7e-4416-8ad4-add17d2d4b80/26-6a800f4a38db5.webp' /></p><p>
</p><p>
சுமார் 30 நிமிடங்கள் கொண்ட இந்த நாடகம், செம்மணியில் இடம்பெற்ற கொடூர
சம்பவங்களை மையப்படுத்தி, அன்றைய மக்களின் மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கையில்
இருந்து படிப்படியாக இடம்பெற்ற இராணுவ ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தல் மற்றும்
மனித உரிமை மீறல்களை காட்சிப்படுத்துகின்றது. </p><p>

பாடசாலை மாணவர்கள் மற்றும்
வீதியில் பயணித்தவர்கள் காணாமலாக்கப்பட்டமை, பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான
பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி
அலைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் வேதனைகள் போன்ற பல்வேறு சம்பவங்கள்
நாடகத்தில் உணர்வு பூர்வமாக எடுத்துக்காட்டப்படுகின்றன.</p><p>
</p><p>
மேலும் செம்மணியை வெறுமனே ஒரு மயானமாக பார்க்க முடியாது என்றும், அது
புதைகுழிகளையும் அங்கு புதைக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையும் தாங்கி நிற்கும்
இடம் என்பதையும் வலியுறுத்தும் காட்சிகள் பார்வையாளர்களின் மனதை நெகிழச்
செய்கின்றன.</p><h2>நீதிக்கான கோரிக்கை</h2><p>
</p><p>
இந்த நாடகம் சிங்கள சகோதரர்களிடமும் நீதிக்கான கோரிக்கையை முன்வைப்பதுடன்
சர்வதேச சமூகத்தினதும் மனித உரிமை அமைப்புகளினதும் தலையீட்டின் ஊடாக உண்மையும்
நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் நிறைவடைகின்றது.
</p><p>
இதுவரை 40இற்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டுள்ளது.
நாடகத்தை பார்வையிட்ட பலரும் காட்சிகளின் உணர்வு பூர்வமான தன்மையால் கண்ணீர்
மல்கியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083b408c-8209-42f7-8182-f3618ac42d13/26-6a800f4962fda.webp' /></p><p>
</p><p>
ஜெயம் நாடக கல்லூரியின் ஒழுங்கமைப்பில் ஆற்றுகைப்படுத்தப்பட்டு வரும்
இந்த நாடகத்தில் மொத்தமாக 15 நடிகர்கள் பங்கேற்கின்றனர். எழுச்சிப்
பாடலாசிரியர் செல்லக்குட்டி இசையமைத்துள்ளார். 
தபேலா இசையில் ந.நவதர்சன்
பங்களித்துள்ளார்.</p><p>

செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளின் உண்மையையும், அவர்களுக்கான நீதிக்கான
கோரிக்கையையும் அடுத்த தலைமுறைக்கும் உலக சமூகத்திற்கும் கொண்டு செல்லும் ஒரு
கலை வடிவிலான போராட்டக் குரலாகவே “செம்மணியில் எங்கள் கண்மணிகள்” நாடகம்
வடமாகாணம் முழுவதும் தொடர்ந்து பயணித்து வருகின்றது.</p><p>
11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தெருவெளி நாடகமானது செம்மணியில் நீதியின் ஓலம்
நிறுவுபெறும் 17ஆம் திகதி இறுதி நாளில் செம்மணியில் இடம்பெறவுள்ளதுடன் 20 ஆம்
திகதி வரை இந்த நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆண், பெண் கலைஞர்கள் இணைந்து இந்த துணிச்சலாக
நாடகத்தை அரங்கேற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-prices-to-increase-in-sri-lanka-1786787833"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-prices-to-increase-in-sri-lanka-1786787833</id>
            <summary type="text">இலங்கையில் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி வரிகள் மீதான 50 வீத கூடுதல் வரியை டிசெம்பர் 31 வரை நீடிக்கும் அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p>இறக்குமதி வரிகள் மீதான 50 வீத கூடுதல் வரியை டிசெம்பர் 31 வரை நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, இந்த நீடிப்பு காட்சியக விலைகளை கணிசமாக உயர்த்தும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>அதன்படி, ஒரு சுசுகி வேகன் ஆர் சுமார் 500,000 ரூபா, ஒரு டொயோட்டா ரைஸ் 1 மில்லியன் ரூபா, ஒரு ஹோண்டா வெசல் 1.5 - 2 மில்லியன் ரூபா, ஒரு டொயோட்டா பிராடோ 3 மில்லியன் ரூபா, ஒரு லேண்ட் குரூசர் 5 மில்லியன் ரூபா மற்றும் ஒரு டபுள் கேப் 2 - 2.5 மில்லியன் ரூபா வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>விலை அதிகரிப்பு..&nbsp;</h2><p>அதேநேரம், தற்போது காட்சியகங்களில் உள்ள வாகனங்கள், மே 15இற்கு முன்னர் தொடங்கப்பட்ட கடன் கடிதங்களின் (LCs) கீழ் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், அவற்றுக்கு கூடுதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/349a5195-c2ea-4a28-9b06-e3269c347098/26-6a8041b8cdde7.webp' /></p><p>
இருப்பினும், மே 15இற்குப் பிறகு திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் (LCs) கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும், இது விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

"கூடுதல் கட்டணம் நீட்டிக்கப்படாது என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் பல்வேறு காரணங்களால் அது தொடரப்பட்டுள்ளது. </p><p>இதன் விளைவாக, வாகன விலைகளில் மேலும் உயர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்" என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>மேலும் அவர், "இதுவரை அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் 90 வீத கூடுதல் கட்டணத்திற்கு உட்படாத கடன் கடிதங்களின் கீழ் இருந்தன.&nbsp;</p><p>ஆனால் இப்போது புதிய வரியின் கீழ் வரும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:46:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[25-க்கு மேல் வெற்றிடங்கள்..! பரீட்சைக்கான தீர்வை நம்பி காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374"></link>
            <id>https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374</id>
            <summary type="text">கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள்
கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதே பரீட்சைக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விண்ணப்பதாரர்களுக்கான பதில்</h2><p>மாறாக, இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் பரீட்சாதிகளுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96dfef27-c9d0-4694-8bad-546a40dc1367/26-6a80434804db6.webp' /></p><p>


இது தொடர்பில் மாகாண பொதுச் சேவை
ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக இது தொடர்பில் விளக்கம்
கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கான பதிலாக "நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட
2020.02.25 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றரிக்கை
மற்றும் 2022.04.26 ஆம் திகதிய 03/2022 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட
சுற்று நிரூபத்துக்கு அமைவாக நியமனங்கள் அனைத்தும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

25-க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்</h2><p>
கிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய
மாவட்டங்களில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதுடன்,
இதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். </p><p>

தற்போது வரை கிழக்கு மாகாணத்தில்
மொத்தமாக 25க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் கவனம்
செலுத்தி இந்த போட்டிப் பரீட்சையை விரைவில் நடத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவில் சேகரிக்கப்பட்ட சிறை அதிகாரிகளின் தகவல்கள்! கசிந்த இரகசிய குரல் பதிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arrested-for-collecing-data-on-prison-1786753884"></link>
            <id>https://tamilwin.com/article/person-arrested-for-collecing-data-on-prison-1786753884</id>
            <summary type="text">சிறைச்சாலை அதிகாரிகளை பற்றிய தகவல்களை இரகசியமாக சேகரித்து வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் புதிய மெகசின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை அதிகாரிகளை பற்றிய தகவல்களை இரகசியமாக சேகரித்து வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த முகமட் அஸ்மான் ஷெரிப்டீன் என்பவரின் நெருங்கிய சகா ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மீட்கப்பட்டுள்ள குரல் பதிவுகள்&nbsp;</h2><p>கடந்த ஆண்டு தெஹிவளை, வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அஸ்மானின் மோட்டார் சைக்கிள் சாரதியாகவும் இவர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c47077a-0508-487f-bdfe-df7a48e41dfb/26-6a7fb35e2c12c.webp' /></p><p> </p><p>
அத்துடன், புதிய மெகசின் சிறைச்சாலை மோதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>கைது செய்யப்பட்ட நபரின் கைப்பேசியைப் பொலிஸார் பரிசோதித்தபோது, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "கொஸ் மல்லி" என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் அவர் பேசிய பல குரல் பதிவுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அந்த உரையாடல்களில், சிறைச்சாலை அதிகாரிகளைப் பற்றிச் சேகரிக்கப்பட்ட விபரங்களும், அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இச்சம்பவம் குறித்து சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T10:26:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்புக்கு அமைச்சர் உடனடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-takes-immediate-action-to-pirates-1786787979"></link>
            <id>https://tamilwin.com/article/minister-takes-immediate-action-to-pirates-1786787979</id>
            <summary type="text">&amp;nbsp;கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்பு உள்ளிட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் நடைமுறைத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்பு உள்ளிட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் நடைமுறைத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை மாவட்ட மீன்வள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>


இதன்போது, ​​மாவட்டத்தின் கடற்றொழிலை மேம்படுத்துவது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் விரிவான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>

 அதில், பங்கேற்ற மீன்வள சங்கங்களின் பிரதிநிதிகள், தாங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தொழில்ரீதியான பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.</p><h2>

கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்</h2><p>

 ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், அத்தகைய நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழிக்கவும் அமைச்சகம் ஒரு உடனடி மற்றும் நிரந்தரத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று மீன்வள சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/309d966c-713f-458f-883a-4ed539f7ed60/26-6a803cd2093e4.webp' /></p><p> </p><p>

ஒலுவில் துறைமுகத்தை ஒரு முழுமையான மீன்வளத் துறைமுகமாக வகைப்படுத்தவும், துறைமுகத்தில் தேங்கியுள்ள மணலை அகற்றி மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு துறைமுகத்தை மேம்படுத்தவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. </p><p>

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசித்து எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு நடைமுறைக்கு உகந்த மற்றும் உடனடித் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:18:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணத்திற்கு வழிவகுக்கும் தீவிரமான நிலை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-disease-children-extreme-heat-and-rain-1786776071"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-disease-children-extreme-heat-and-rain-1786776071</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளிடையே நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளிடையே நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
</p><p>
நிலவும் கடும் வெப்பத்தால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும் என்றும், எனவே அதிக தண்ணீர் அருந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, ஒரு சராசரி வயது வந்தவர் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><h2>மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள தகவல்</h2><p>
</p><p>
மேலும், குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கும்போது, ​​பெற்றோர்கள் அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cd7f89e-e08f-4a29-b3ca-7a3255962d18/26-6a800dce2234a.webp' /></p><p>

நீண்ட காலமாக போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும், தண்ணீர் அருந்தாமல் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவது, சுற்றுலா செல்வது போன்றவை வெப்பத்தாக்கம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு தீவிரமான நிலை என்றும் கூறியுள்ளார்.</p><h2>முக்கிய அறிவுறுத்தல்</h2><p>

எனவே, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தண்ணீர் எடுத்துச்செல்லுமாறு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d82994-edd9-429d-86f2-d331cc5fd952/26-6a800dcec7b13.webp' /></p><p>
</p><p>
 இந்த காலகட்டத்தில் வயிற்றுப்போக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரும் சுத்தமான உணவும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>
குழந்தைகளுக்கு இனிப்புப் பானங்கள் மற்றும் தின்பண்டங்களைக் கொடுப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவங்களைக் குடிக்கக் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T09:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் திடீரென விபத்துக்குள்ளான கப்பல்.. மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில்! ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/navy-vessel-accident-in-sri-lanka-1786780450"></link>
            <id>https://tamilwin.com/article/navy-vessel-accident-in-sri-lanka-1786780450</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் விபத்துக்குள்ளான&amp;nbsp;கடற்படை கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<h2><b>புதிய இணைப்பு&nbsp;</b></h2><p>கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் விபத்துக்குள்ளான&nbsp;கடற்படை கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>ஒருவரை காணவில்லை எனவும் அவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></h2><p>கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் கடற்படைக்கு சொந்தமான டோரா கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p>குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். </p><p>குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. </p><h3><b> டோரா கப்பல் விபத்து</b></h3><p>கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9819d73f-de27-4990-bed9-b880d246717c/26-6a801c8b90507.webp' /></p><p>அதற்கமைய, விபத்துக்குள்ளான கப்பலைக் கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான Mi-17 மற்றும் பெல் 412 ஆகிய உலங்கு வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-08-15T09:31:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறன்று பாதுகாப்பை பலப்படுத்தாத இரு கட்டளை அதிகாரிகள்! குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-deshabandu-tennakoon-1786785364"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-deshabandu-tennakoon-1786785364</id>
            <summary type="text">&amp;nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகள் மீது இன்னும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.&amp;nbsp;ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகள் மீது இன்னும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.&nbsp;ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குற்றப்புலனாய்வுத் துறையிடம் (CID) உள்ளன.</p><p>பரிந்துரைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு மூன்றாவது முறையாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நடவடிக்கை எடுக்குமாறு CID க்கு நேரடி அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன.</p><h2>புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p> </p><p>இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் பதிநாயக்க ஆகியோர் இத்தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கண்டுபிடிக்கவில்லை என்றது. </p><p>ஆனால், அதைவிடவும் பாரதூரமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அதிகாலைக்கு முன்னர் கொழும்பின் பாதுகாப்பு கட்டமைப்பின் முக்கிய புள்ளியான கட்டளையிடும் பதவிகளை வகித்த இவர்கள் இருவரும், தாக்குதலை தடுத்திருக்கக்கூடிய கட்டமைப்பு சார்ந்த புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் செயல்பாடற்று இருந்துள்ளனர்.
</p><h2>
</h2><p></p><p>அக்காலத்தில் கொழும்பு - வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தென்னகோனின் நடத்தை குறித்து ஆணைக்குழு அறிக்கையில், கட்டளைச் சங்கிலி எவ்வாறு செயலிழந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. </p><p>சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க என்பவரால் விரிவான புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டு தெளிவான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன. </p><p>உடல் பரிசோதனைகள், வாகனச் சோதனைகள், வாகன நிறுத்துமிடக் கட்டுப்பாடுகள் மற்றும் தேவாலயங்களைச் சுற்றி சாதாரண உடையில் பொலிஸாரைப் பாதுகாப்பில் ஈடுபடுத்துதல் ஆகியவை அந்த உத்தரவுகளில் அடங்கும்.</p><h2>உத்தரவுகளை செயல்படுத்திய அதிகாரி</h2><p>
</p><p>இவற்றில் எதுவுமே களமட்டத்தை வந்தடையவில்லை. தென்னகோன் தனது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த உத்தரவுகளை அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அவரது மேசை கோப்பிலேயே பார்வையிடாமல் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகள் நாடு முழுவதையும் விழிப்புடன் வைத்திருந்த நேரத்தில், தென்னகோனின் உத்தியோகபூர்வ தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957c0f5d-2e71-46ab-a31c-33f4169fe033/26-6a802e574fd75.webp' /></p><p> </p><p>அவர் தனது குடும்பத்தினருடன் கிழக்குக் கடற்கரை ஓய்வு விடுதி ஒன்றில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஒரு நேரடி தேசிய பாதுகாப்பு நெருக்கடியின் போது ஒரு கட்டளை அதிகாரி தொடர்பில் இல்லாமல் இருப்பது, விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியபடி, முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலைமையாகும்.
</p><p>மேலும் அப்போதைய கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த பதிநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டும் பாரதூரமானதே.தாக்குதலுக்கு முன்னர் சில மணிநேரங்களில் ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு அவருக்கும் தெளிவான எச்சரிக்கைகள் கிடைத்திருந்தும் அவரும் அலட்சியப் போக்கிலே இருந்துள்ளார்.</p><p> அப்போது கொழும்பு - தெற்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்கிரமசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் பாதுகாப்புத் திட்டத்தை அப்படியே செயல்படுத்தியிருந்தார்.</p><p>அதிகாரிகளைப் பணியில் அமர்த்துதல், தெஹிவளை உட்பட தனது அதிகாரப் எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் இலக்கு வைக்கப்பட்ட சோதனைகளை நடத்துதல் மூலம் அவரது பிரிவில் அச்சுறுத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டன.&nbsp; &nbsp;</p><h2>ஆணைக்குழுவின் பரிந்துரைகள்</h2><p> </p><p>தாக்குதலினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தடுத்திருக்க முடியும் என்பதற்கு ஆணைக்குழுவிற்கு கிடைத்த தெளிவான சான்று இதுவாகும்.</p><p>
தேசபந்து தென்னகோன் - புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயல்படத் தவறியமை, பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை, அல்லது அதிகாரிகளைப் பணியில் அமர்த்தத் தவறியமை - முறையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றவியல் அலட்சியம் குறித்து வழக்குத் தொடுப்பதற்கான விசாரணையை நடத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லலித் பதிநாயக்கவுக்கும் குறித்த பரிந்துரைகளையே விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da39d5e-3ce2-4ea4-89d1-22cc92f69dc4/26-6a802e569f93b.webp' /></p><p> சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள ஆதாரங்களின்படி, இரு அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகளை தொடங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டு வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் முறையான அறிவுறுத்தல்கள் CIDக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டுள்ளன.</p><p>இரண்டு முறையும் கோப்பு முன்னோக்கி நகரவில்லை.
முன்னாள் CID பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க - தென்னகோன் மற்றும் பதிநாயக்க ஆகிய இருவருக்கும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>அவரது மேற்பார்வை காலத்தில் விசாரணைகளை தாமதப்படுத்துவதில் அவரது பங்கும் இருந்தது CID ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T09:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய - ரணில் ஆட்சிக் காலங்களில் நடந்த சதி.. அம்பலப்படுத்திய புலனாய்வாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-political-meetings-government-money-1786779442"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-political-meetings-government-money-1786779442</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் சிறப்புத் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி அரச நிதியைப் பயன்படுத்தி, எந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் சிறப்புத் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி அரச நிதியைப் பயன்படுத்தி, எந்தவொரு திட்டத்தையும் நிறைவு செய்யாமல் அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புத் திட்டப் பணிப்பாளராகவும் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார மீதான வழக்கு விசாரணையின் போது இது தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சுகீஸ்வர பண்டாரவை நீதிமன்றத்தில்&nbsp; முன்னிலைபடுத்திய போது, மத்திய குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்த தகவலை கொழும்பு மேலதிக நீதிவானிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><h2>அரசியல் கூட்டங்கள்</h2><p>2022 ஜூலை 14 முதல் 2024 டிசம்பர் 21 வரையிலான காலப்பகுதியில், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சம்பளம் மற்றும் படிகளைப் பெற்று, அந்த நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக&nbsp;சுகீஸ்வர பண்டார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195bb142-870d-4500-8e19-cddba8b2558d/26-6a802e6468e39.webp' /></p><p>சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மேலதிக முன்னேற்ற அறிக்கையையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் சமர்ப்பித்துள்ளது.
</p><p>
குறித்த நிதியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அரசியல் கூட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறப்புத் திட்டப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படும் நபர்களிடம் எதிர்காலத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்திற்கு மீண்டும் அறிவிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புடன் நிறைவு பெற்ற ஆவணித் திருவிழா - மடு அன்னையின் ஆசிர்வாதத்திற்காக திரண்ட பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/festival-of-mother-madu-1786783160"></link>
            <id>https://tamilwin.com/article/festival-of-mother-madu-1786783160</id>
            <summary type="text">
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15.08.2026) 6 மணியளவில் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. &amp;nbsp;மன்னார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15.08.2026) 6 மணியளவில் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. &nbsp;</p><p>மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் இந்த திருப்பலி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோரும் திருப்பலியில் இணைந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
</p><h2>
10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள்</h2><p>
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, பாலஸ்தீன அரசின் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a6817b-54e6-46d9-9192-a1416b095454/26-6a8029d6ccc9a.webp' /></p><p>
</p><p>
இதேவேளை், நாட்டின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா நடந்து முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/077496bf-a5a0-4405-adb2-d63a6c9cedcc/26-6a8029d798bbf.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8270e06-6f7f-45ce-b6ea-cda9b7223ae2/26-6a8029d874774.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T08:57:23+00:00</updated>
        </entry>
    </feed>
