<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-09T17:23:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 ஆண்டுகள் கடந்தும் மறையாத சத்துருக்கொண்டான் நினைவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massacre-in-sathurukondan-batticaloa-1788972735"></link>
            <id>https://tamilwin.com/article/massacre-in-sathurukondan-batticaloa-1788972735</id>
            <summary type="text">மட்டக்களப்பு - சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம்
திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம் இன்று (09) மால...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம்
திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம் இன்று (09) மாலை
உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.</p><p>
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் உள்ள
உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.</p><h2>36ஆம் ஆண்டு நினைவேந்தல்</h2><p>
</p><p>1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி,
பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள்,
10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி இராணுவ
முகாமுக்கு அழைக்கப்பட்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fe7a8f9-6d73-4a5c-9f99-691c3e9a0c5c/26-6aa192b8c9fc7.webp' /></p><p>
இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவற்படையினராலும், ஒட்டுக்குழுவினராலும்
இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. </p><p>இந்தப் படுகொலையின் 36ஆம் ஆண்டு
நினைவேந்தல் இன்று சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.</p><h2>சத்துருக்கொண்டான் படுகொலை</h2><p>
</p><p>சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் குழந்தைவேல் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்
சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார்,மாநகரசபை உறுப்பினர்
ரகுநாதன்,சிவில் சமூக செயற்பாட்டாளர்களான அருட்தந்தை க.ஜெகதாஸ்,கண்டுமணி
லவகுகராசா,எஸ்.சிவயோநாதன்,மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட
சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி உட்பட பலர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/097c0303-1e1e-4b02-92fc-a8bfd6d79768/26-6aa192b9ab06e.webp' /></p><p>
</p><p>இதன்போது பிரதான ஈகச்சுடர் கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி,
சத்துருக்கொண்டான் கிராமங்களை சேர்ந்த உறவுகளை இழந்தவர்களினால் ஏற்றப்பட்டதை
தொடர்ந்து நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு
அகவணக்கம் செலுத்தப்பட்டது.</p><p>
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் நீதிகோரியும்
சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவமுகாம் பகுதியில் அகழ்வாய்வு
முன்னெடுக்குமாறு கோரியும் மனு ஒன்றும் இதன்போது வாசிக்கப்பட்டு
வழங்கப்பட்டது.</p><p>
இந்த நிகழ்வின்போது பெருமளவான பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும்
கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T17:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிரான சாட்சியங்கள் குறித்து சந்தேகம் வெளியிடும் மொட்டு கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/question-raised-about-namals-arrest-1788972656"></link>
            <id>https://tamilwin.com/article/question-raised-about-namals-arrest-1788972656</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவிற்கு எதிரான சாட்சியங்கள் குறித்து கட்சி சந்தேகம் ளெியிட்டுள்ளது.
நாமலை கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவிற்கு எதிரான சாட்சியங்கள் குறித்து கட்சி சந்தேகம் ளெியிட்டுள்ளது.
</p><p>நாமலை கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>
இன்று பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரசியல் பழிவாங்கல்</h2><p>
</p><p>தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் எதிராளிகளை அடக்குவதற்காகவே ஊழல் எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி வருவதாகச் சாகர காரியவசம் இதன்போது குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
நாமல் ராஜபக்‌சவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் போது முன்வைக்கப்படும் சாட்சியங்கள் மீது எவ்வித நம்பிக்கையும் வைக்க முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d592347-57a1-4216-a67c-7caf7fc5dd9d/26-6aa18e723329a.webp' /></p><p>
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அபேகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இதேவேளை, எந்தவிதமான அரசியல் பழிவாங்கல்களிலும் ஈடுபடவில்லை என சட்டத்தின் பிரகாரம் நாமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் மட்டும் இல்ல... அரபிக்கடலிலும் ஈரான்! ஹோர்முஸை தாண்டி விரியும் ஆதிக்கம் - வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-maritime-border-restrictions-iran-announces-1788969862"></link>
            <id>https://tamilwin.com/article/new-maritime-border-restrictions-iran-announces-1788969862</id>
            <summary type="text">ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ள புதிய கடல் எல்லைக்
கட்டுப்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, வழக்கமான ஹோர்முஸ் நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) அறிவித்துள்ள புதிய கடல் எல்லைக்
கட்டுப்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதன்படி, வழக்கமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியைத் தாண்டி, ஈரானின் தென்கிழக்குத்
துறைமுக நகரமான சாபஹார் (Chabahar) பகுதியிலிருந்து தொடங்கி ஓமன் வளைகுடா
மற்றும் அரபிக் கடலின் பரந்த பகுதிகள் வரை இந்த "தடைசெய்யப்பட்ட மண்டலம்
நீடிக்கப்படும்.</p><h2>எல்லைக் கட்டுப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
இதற்கான துல்லியமான புவியியல் எல்லை வரம்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்படும் என IRGC பேச்சாளர் உசேன் மொஹெபி (Hossein Mohebi)
தெரிவித்துள்ளார்.
</p><p>

இந்த தடை நீடிப்பின் பின்னர், ஈரானின் முறையான அனுமதி அல்லது முன்
ஒருங்கிணைப்பு இல்லாமல் எந்தவொரு வணிக அல்லது சரக்குக் கப்பல்களும் இந்த
எல்லைக்குள் நுழைய முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d12cbe4-4f80-4d1e-b8f1-699b1e3b62f4/26-6aa1854db76b2.webp' /></p><p>


முன் அனுமதியின்றி நுழையும் கப்பல்கள் மீது ஈரானிய சட்டங்களின்படி பொருளாதார
மற்றும் செயல்பாட்டுத் தடைகள் விதிக்கப்படும்.

அத்தகைய கப்பல்களுக்கான கடல்சார் சேவைகள், கப்பல் காப்பீடு (Insurance)
மற்றும் தளவாட ஆதரவுகள் (Logistics services) அனைத்தும் ரத்து செய்யப்படும்.
</p><p>

எதிர்காலத்தில் அவை ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கவும் நிரந்தரத் தடை
விதிக்கப்படும்.


இந்த நிலையில்,அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும்
எண்ணெய் கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பிராந்தியக்
கடற்பகுதியில் ஈரானின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T16:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இலக்கத் தகடு விநியோகம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-number-plates-will-be-distributed-1788969557"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-number-plates-will-be-distributed-1788969557</id>
            <summary type="text">அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அனைத்து இலக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அனைத்து இலக்கத் தகடுகளும் விநியோகிக்கப்பட்ட பின்னர், வாகனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார். </p><p>

இன்று (09.09.2026) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><h2>வாகன இலக்கத் தகடுகள்</h2><p> </p><p>

இந்த வருடம் கடந்த மார்ச் 10 ஆம் திகதியே வாகன இலக்கத் தகடுகளை விநியோகிப்பதற்கான ஒப்பம் செய்யப்பட்டது. 

அன்றைய தினம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a4bf21c-c715-4a17-9e56-c9186eee3321/26-6aa18714d4c31.webp' /></p><p> </p><p>

2023 - 2024 காலப்பகுதிக்குரிய இலக்க தகடுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதேநேரம், குறித்த காலப்பகுதிக்குரிய 32 ஆயிரம் இலக்க தகடுகள் தற்போதும் உள்ளன. 

இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்குரிய இலக்கத் தகடுகளுக்காக மேலும் ஒரு ஒப்பந்தம் எதிர்வரும் வாரத்தில் செய்துக் கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் ஜனாதிபதி எவ்வாறு கருத்து வெளியிட முடியும்: சஜித் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-questions-presidents-remarks-on-22nd-1788969877"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-questions-presidents-remarks-on-22nd-1788969877</id>
            <summary type="text">உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எவ்வாறு கருத்துக்களை வெளியிட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எவ்வாறு கருத்துக்களை வெளியிட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி எவ்வாறு பகிரங்கமாகத் தெரிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, 20வது திருத்தச் சட்டத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என முன்னர் வாதிட்ட ஜனாதிபதி, தற்போது 22வது திருத்தத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை எனக் கூறுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>கடும் விமர்சனம்</h2><p>
</p><p>அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடித் தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன்பே, தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மை குறித்து ஜனாதிபதி எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்றும் அவர் வினவினார்.
</p><p>ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பிய கரிசனைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து சஜித் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a501586-b946-4d78-883c-fbe5b527ca8e/26-6aa190ea86eaf.webp' /></p><p>
முன்மொழியப்பட்டுள்ள திருத்தம், நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான 'லடிமர் ஹவுஸ் கோட்பாடுகளை' பலவீனப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சர்வதேச அமைப்பின் பங்களிப்பை அரசாங்கம் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>நாட்டின் பொருளாதாரம் </h2><p>
பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைச் சந்திக்க அதிகாரிகள் மறுத்ததாகக் குறிப்பிட்ட சஜித், இது தொடர்பாக நீதியமைச்சர் அச்சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
</p><p>அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் ஒருசேர பலவீனப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88d2cefd-80dc-4140-9b1d-d5b8ea345f75/26-6aa1839758334.webp' /></p><p>
அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்க முயன்றால் அதனை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஊடகங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்ட இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T16:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர்.. வெளியான பரபரப்பு காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiya-thero-remanded-video-released-1788965464"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiya-thero-remanded-video-released-1788965464</id>
            <summary type="text">மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;</p><p>
அண்மையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p>அதனை தொடர்ந்து, நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது&nbsp;11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர் செயற்பட்ட காணொளி தற்போது வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DRuexSLGZfo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T15:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-brutally-1788964795"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-brutally-1788964795</id>
            <summary type="text">இரத்தினபுரி, கெட்டலியன்பல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, கெட்டலியன்பல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் கெட்டலியன்பல்ல, கஹங்கம, இரத்தினபுரி முகவரியை சேர்ந்த 61 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;இக்கொலை இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b>கொடூரமான முறையில் கொலை</b></h2><p> </p><p>

அலவங்கினால் தலையில் தாக்கி, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283eb66d-990e-48bc-9140-a515a95b950c/26-6aa172ab2b533.webp' /></p><p>இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், கொலை செய்யப்பட்ட நபர் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. </p><p>&nbsp;கொலை சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளரின் சகோதரன் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் வீட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டவர்&nbsp; என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T14:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-moratuwa-a-short-1788964856"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-moratuwa-a-short-1788964856</id>
            <summary type="text">மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது&amp;nbsp;இன்று (9) மாலை இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவமானது&nbsp;இன்று (9) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p> </p><p>

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/255be5ac-216d-441c-8c8e-ad15474429b1/26-6aa171b1e2297.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:48:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-hacked-with-a-sword-court-jaffna-1788964149"></link>
            <id>https://tamilwin.com/article/person-hacked-with-a-sword-court-jaffna-1788964149</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவமானது&nbsp; வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த
பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக
பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக்
கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய
தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை
மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன்
தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து
வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4ec124a-e608-483e-a976-8f78154bacf4/26-6aa16f37f3e86.webp' /></p><p>
</p><p>
தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்,
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவுக்கு சபையில் கடுமையான எச்சரிக்கை விடுத்த பிரதி சபாநாயகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ramanadhan-archuna-warned-parliament-live-today-1788955379"></link>
            <id>https://tamilwin.com/article/ramanadhan-archuna-warned-parliament-live-today-1788955379</id>
            <summary type="text">இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது,&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிரதி சபாநாயகர்&amp;nbsp;ஹேமாலி வீரசேகர கடுமையாக எச்சரித்தார்.&amp;nbsp;சபை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது,&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிரதி சபாநாயகர்&nbsp;ஹேமாலி வீரசேகர கடுமையாக எச்சரித்தார்.&nbsp;</p><p>சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய தண்டனை வழங்க நேரிடும் என அவர் வலியுறுத்தினார்.</p><p>
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது,&nbsp; அர்ச்சுனா இராமநாதன் அடிக்கடி ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்பட்ட நிலையிலேயே சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதி சபாநாயகர், அவரை இவ்வாறு எச்சரித்தார்.</p><h2>தண்டனை வழங்க நேரிடும்..&nbsp;</h2><p>
</p><p>விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அடிக்கடி எழுந்து ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் நிலையியல் கட்டளை இலக்கங்களை குறிப்பிட்டு அர்ச்சுனா இராமநாதன் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be29657e-7dc7-414b-8d6d-513bd262d376/26-6aa1631adf409.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விவாதத்தில் உரையாற்றும் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருடன் தர்க்கங்களில் ஈடுபட்டனர். </p><p>இதன்போதும் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போது, அவரை எச்சரித்த பிரதி சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறான வகையில் நடந்து கொண்டால் நிலையியல் கட்டளை77, 78 மற்றும் 79 இன் கீழ் தண்டனை வழங்க நேரிடும் என்று தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகரசபை முதல்வர் விவகாரம்: ஆளுநரின் வர்த்தமானி மீதான தடை நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-municipal-council-mayor-issue-1788960601"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-municipal-council-mayor-issue-1788960601</id>
            <summary type="text">வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான
இடைக்கால தடைக் கட்டளையினை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல்
நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான
இடைக்கால தடைக் கட்டளையினை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல்
நீதிமன்றம் இன்று (09.09) உத்தரவிட்டது.
</p><p>
எதிர் மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்து மூல சமர்ப்பணங்களை வழங்க
அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் கால அவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><h2>தாக்கல்</h2><p>
</p><p>குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா
அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம்
இடம்பெற்றிருந்தது.
</p><p>
அந்த வகையில், இருதரப்பு விவாதங்களையும் எழுத்து மூல சமர்ப்பணமாக வழங்குமாறும்
அதனை கடந்த 28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய
வேண்டும் என்றும் கடந்த தவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0006461-6d1a-452b-bcc1-85837ecce998/26-6aa16232c554b.webp' /></p><p>
</p><p>
அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு
சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்து
மூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் கால அவகாசம்
மன்றால் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத்
தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ.தயாபரன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[800 மில்லியன் ரூபா கொள்ளை: பிரதான சூத்திரதாரி கைது - திடுக்கிடும் பின்னணி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/800m-thalawathugoda-agency-robbery-arrested-1788955502"></link>
            <id>https://tamilwin.com/article/800m-thalawathugoda-agency-robbery-arrested-1788955502</id>
            <summary type="text">தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசேட சோதனையில் சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
</p><p>கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><h2>அதிர்ச்சி தகவல்கள்&nbsp;</h2><p>
</p><p>கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி, முழங்காலிடச் செய்து தாக்குதல் நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436750de-6c60-42ba-8548-791732847319/26-6aa14b7023c22.webp' /></p><p> </p><p>பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>
அவர் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கடன் சுமையில் இருந்துள்ளார்.</p><p>
அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண வீடொன்றில் தனக்கு ஏற்பட்ட பகிரங்க அவமானமும், கடன் சுமையுமே இந்தக் கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>
தனியாக இக்குற்றத்தைச் செய்ய முடியாததால், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். </p><p>அவர் மூலம் பொமிரியாவைச் சேர்ந்த மேலும் இருவர் இணைக்கப்பட்டனர்.
கொள்ளைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் கூடி திட்டமிட்டுள்ளனர்.</p><h2>&nbsp;போலி இலக்கத் தகடுகள்&nbsp;</h2><p>
</p><p>ஹன்வெல்ல நிதி நிறுவனமொன்றில் பெறப்பட்ட வாடகை வாகனத்திற்குப் போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தி இக்குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ef4c39-dd6a-4af1-9246-4eca3a84e85d/26-6aa158e3e5d2a.webp' /></p><p>
</p><p>கொள்ளைக்குப் பிறகு கும்பல் மீண்டும் சித்தமுல்ல வீட்டிற்குச் சென்று கொள்ளைப் பொருள்களைப் பிரித்துக் கொண்டுள்ளது.</p><p> பிரதான சூத்திரதாரி: 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகள் என்பனவற்றையும் மற்ற இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>
பிரதான சூத்திரதாரி தனது பங்கிலிருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியாவிலுள்ள நண்பரிடம் பாதுகாப்பிற்காகக் கொடுத்துள்ளார். 1.3 மில்லியன் ரூபாயைக் கொண்டு அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்டுள்ளதுடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்ற கடன்களையும் அடைத்துள்ளார். </p><p>பொலிஸார் இவரின் பங்கில் 300,000 ரூபாவைத் தவிர மற்ற அனைத்துப் பணத்தையும் மீட்டுள்ளனர்.
ஏனைய சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி மோசடியில் சிக்கிக் கொண்ட பிரிலோயர்ஸ் அமைப்பின் மைத்திரி குணரத்ன! திறைசேரி நிதி மோசடியை கடுமையாக விமர்சித்தவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-gunaratne-coal-1788959175"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-gunaratne-coal-1788959175</id>
            <summary type="text">&amp;nbsp;2015–2016 காலப்பகுதியில் நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்காக லிபர்ட்டி கொமோடிட்டீஸ் Liberty Commodities நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2015–2016 காலப்பகுதியில் நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்காக லிபர்ட்டி கொமோடிட்டீஸ் Liberty Commodities நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதன் காரணமாக சுமார் 1,575,630 அமெரிக்க டொலர் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிலக்கரி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று (08.09.2026) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>இந்த ஒப்பந்தத்தில் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் அன்றைய தலைவராகப் பணியாற்றிய பிரிலோயர் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கையொப்பமிட்டிருந்தார்.
</p><p></p><h2>முன்னாள் செயலாளரின் சாட்சியம்</h2><p>இது குறித்த சாட்சியத்தை அன்றைய மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய டி. அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று சாட்சியமளித்த அமரதுங்க 2015–2016 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உடனடி நிலக்கரி கொள்முதல் தொடர்பாகத் தமது குழு விசாரணை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
</p><p>அமரதுங்கவின் சாட்சியத்தின்படி லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு விநியோகிக்க தேவையான நிலக்கரியின் தொழில்நுட்பத் தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விடக் குறையும் பட்சத்தில் விநியோகஸ்தரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதம் அல்லது விலை மாற்றியமைத்தல் தொடர்பில் ஏல ஆவணங்களில் இருந்த நிபந்தனைகள் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் போது பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0aee1f1-06e2-42de-b149-22fe10cf5df4/26-6aa159c9557a1.webp' /></p><p>தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் கொள்முதல் குழு ஆகியன சமர்ப்பித்த கருத்துக்களையும் சரியாகப் பின்பற்றாமல் இறுதி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அமரதுங்க ஆணைக்குழுவின் முன் தெரிவித்துள்ளார்.
</p><p>இங்கு எளிமையாக கூறுவதானால்இ நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விடக் குறைந்த தரமுடைய நிலக்கரி பெறப்பட்டால் விநியோகஸ்தருக்குச் செலுத்தப்படும் தொகையிலிருந்து கழிக்கப்பட வேண்டிய பணத்தைக் கணக்கிடும் சூத்திரம் ஏல ஆவணத்தில் இருந்தவாறு அல்லாமல் விநியோகஸ்தருக்குச் சாதகமான முறையில் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருந்தமையே பிரச்சினையாகும்.
</p><h2>கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை</h2><p>குறித்த ஆணைக்குழு விசாரணையில் வெளிவந்த தகவல்கள்: 2009 முதல் 2016 ஜூன் வரையிலான காலப்பகுதியில் நுரைச்சோலை மின்நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையிலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. </p><p>இதில் ஆறு நீண்டகால நிலக்கரி கொள்முதல்களும் ஐந்து உடனடி கொள்முதல்களும் இதில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின்படி முதலாவது கொள்முதலுக்காக 'லிபர்ட்டி கொமோடிட்டீஸ்' நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததுடன் 165,000 மெட்ரிக் தொன்னுக்கான ஒப்பந்தம் 2015 ஆகஸ்ட் 17 அன்று கையொப்பமிடப்பட்டிருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bedfee0-c6bb-4171-93b0-dd49be6dbdf1/26-6aa159ca0e74f.webp' /></p><p>இதன்போது ஏல ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருந்த வரைவு ஒப்பந்தத்தில் (draft agreement) குறிப்பிடப்பட்டிருந்த சல்பர் (Sulphur) மற்றும் சாம்பல் (Ash) ஆகியவற்றிற்கான விலை சரிசெய்தல் சூத்திரங்கள் இறுதி ஒப்பந்தத்தை எட்டும் போது மாற்றப்பட்டிருந்ததாகக் கணக்காய்வாளர் தலைமை அதிபதி நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார். </p><p>
புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையொப்பமிடாமல் அதே ஒப்பந்தமே பின்னர் இரண்டாவது மற்றும் நான்காவது கொள்முதல்களுக்காகவும் சமர்ப்பித்ததால் அவ்விரண்டு கொள்முதல்களையும் பாதித்திருந்ததாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>நேற்று ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த அமரதுங்கஇ தனது தலைமையிலான மூவர் கொண்ட குழு இவ்வொப்பந்தம் தொடர்பாக மைத்திரி குணரத்னவிடமும் விசாரணை நடத்தியதாகக் கூறினார். அவ்விசாரணையின் போதுஇ குறித்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதை குணரத்ன ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QCU165-PbAg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எடை குறைந்த பாண் விற்பனை: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raids-on-outlets-selling-underweight-bread-1788957301"></link>
            <id>https://tamilwin.com/article/raids-on-outlets-selling-underweight-bread-1788957301</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

இந்த நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் உட்பட 118 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், பாணின் சரியான எடை பேணப்படுகிறதா என்பதும், எடை மற்றும் விலை சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வர்த்தக முறைகேடுகள்</h2><p> </p><p>

கிடைக்கப்பெற்றுள்ள ஆரம்பக்கட்ட அறிக்கைகளின்படி, எடைக் தகவல்கள் பெறப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளின் அடிப்படையில் 54 நிறுவனங்களில் எடை குறைந்த பாண் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>அதற்கமைய, குறித்த பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கை மற்றும் அவற்றின் மூலம் ஏனைய விற்பனை நிலையங்களுக்கு பாண் விநியோகிக்கப்படும் விதம் குறித்துப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a17c36ea-225d-41e4-b36e-f376fc809ea1/26-6aa157b0b4e25.webp' /></p><p>ஒரு முழுப் பாண் 450 கிராமும், அரைப் பாண் 225 கிராமும் கொண்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 

பாணின் எடை, விலை அல்லது ஏனைய வர்த்தக முறைகேடுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் உடனடி அழைப்பு இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலுள்ள நாமலை பார்க்க சென்று சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் நேற்று ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>

அதற்கு பதிலளித்தவர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இருப்பதனால் ஷிரந்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி</b></h2><p><i>“நாமல் ராஜபக்சவை பார்க்க ஷிராந்தி ராஜபக்ச தனது வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்வதை நாங்கள் கண்டோம். அது எப்படி சாத்தியம்? இப்போது ஏனைய கைதிகளையும் அவ்வாறே வாகனத்தில் சென்று பார்க்க முடியுமா..! அல்லது இது நாமலுக்கு மட்டும் கிடைக்கும் விசேட சலுகையா</i>..! என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc742a5-fa7d-4a50-9aef-2c48b5106ee2/26-6aa0c09b01f70.webp' /></p><p>“<i>சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் உள்ளனர். அத்தகையவர்களைப் பார்ப்பதற்காக சிறைச்சாலை திணைக்களத்தின் முறையொன்று உள்ளது. அந்த முறையின் அடிப்படையில்தான் அது நடந்திருக்க வேண்டும், எனக்கு அது குறித்து சரியாகத் தெரியாது</i>” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><i>

வாகனத்தை உள்ளே கொண்டு செல்வது இருக்கட்டும், ஒரு சாதாரண நபர் அங்கு வாகனத்தை நிறுத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லையே </i>என ஊடகவிலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். சரியான காரணத்தை விசாரித்துவிட்டு தகவல்களை வெளிப்படுத்துகிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Di9SgPrs56M" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-09T13:03:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருடாந்தம் 1000 சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு - வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/900-1-000-childhood-cancer-cases-detected-1788955536"></link>
            <id>https://tamilwin.com/article/900-1-000-childhood-cancer-cases-detected-1788955536</id>
            <summary type="text">இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்குப் புற்றுநோய் கண்டறியப்படுவதாக, தேசிய புற்றுநோய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்குப் புற்றுநோய் கண்டறியப்படுவதாக, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NCCP) சமூக மருத்துவ ஆலோசகரான வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
</p><p>
 

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து, இன்று (09.09.2026) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
</p><h2>புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து</h2><p>
 

மிகவும் பொதுவாகக் கண்டறியப்படும் புற்றுநோய்களின் வகைகள் இரத்தப் புற்றுநோய், நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் என வைத்தியர் சுராஜ் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1a4e0ff-f46c-484f-8ef0-d9997756ecb9/26-6aa153088eb48.webp' /></p><p>
 

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கேற்ப தகுந்த சிகிச்சை அளித்தால், அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியம் மிக அதிகம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரைப் பாதிக்கும் புற்றுநோய்கள் மற்றும் அவற்றின் சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், செப்டெம்பர் மாதம் உலகெங்கிலும் “குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக” அனுசரிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் ஆயிரம் வாகனங்கள்! இறக்குமதியாளர்களின் அவசர செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-in-sri-lanka-1788956145"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-in-sri-lanka-1788956145</id>
            <summary type="text">துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் ஆயிரம் வாகனங்களை உடனடியாக விடுவிக்குமாறு இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் அவசரக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் ஆயிரம் வாகனங்களை உடனடியாக விடுவிக்குமாறு இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் அவசரக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். </p><p>

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான எல்லை தாண்டிய கடன் பத்திரங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடிச் சூழலில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.</p><h2>நிதி இழப்பு</h2><p> 

இந்த பிரச்சினையால் நீண்ட காலமாக வாகனங்களை விடுவிக்க முடியாமல் தாங்கள் கடும் சிரமங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d553db81-69a2-490e-9730-0083b60836de/26-6aa14f3fe043d.webp' /></p><p> </p><p>

தற்போதுள்ள சட்ட மற்றும் தொழிநுட்பத் தடைகளைத் தாண்டி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாகத் தலையிட்டு, இந்த வாகனத் தொகுதியை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று இறக்குமதியாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:22:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானமாக இருக்கவும்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warns-to-be-cautious-about-hot-weather-1788955375"></link>
            <id>https://tamilwin.com/article/warns-to-be-cautious-about-hot-weather-1788955375</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. 

அதன்படி வட மத்திய, கிழக்கு மாகாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. </p><p>

அதன்படி வட மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவதானம் தேவைப்படும் நிலை</h2><p> </p><p>

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09.09.2026) வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் மேலும், பகல் வேளையில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண், அவதானம் தேவைப்படும் நிலையை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fc03c7d-bccb-42c4-a0da-030eef59c8b0/26-6aa14ca091b66.webp' /></p><p>
</p><p>
எனவே, இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:12:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றம் மீது ஜனாதிபதி அழுத்தம் கொடுக்கின்றாரா: முன்னாள் எம்.பி. ஜகத் குமார கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-exerting-pressure-on-the-judiciary-1788952354"></link>
            <id>https://tamilwin.com/article/president-exerting-pressure-on-the-judiciary-1788952354</id>
            <summary type="text">22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என ஜனாதிபதி அறிவித்திருப்பது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என ஜனாதிபதி அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்குச் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.</p><p>

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "ஒருபுறம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்துப்
பேசிக்கொண்டிருக்கும்போது, மறுபுறம் ஜனாதிபதி பல்வேறு கூட்டங்களில்
கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான வகையில் நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைக்கும்
எனக் கூறுகின்றார்.</p><h2>நீதித்துறை</h2><p>
</p><p>
நீதிமன்றம் என்ன கூறப் போகின்றது என்பதை மக்கள் எதிர்பார்க்கும் நிலையில்,
தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி முன்கூட்டியே கருத்து வெளியிடுவது நீதிமன்றத்
தீர்ப்பு ஜனாதிபதியின் கைகளில் இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை
ஏற்படுத்தும்.</p><p>

நாட்டில் தேர்தல் எதுவும் நடைபெறாத நிலையில் ஜனாதிபதி மக்கள் கூட்டங்களை நடத்த
ஆரம்பித்துள்ளார். இவ்வாறான அவசர மக்கள் சந்திப்புகள் மூலம் நீதித்துறைக்கு
அழுத்தம் கொடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7df6bab7-a089-4274-807a-82300a946f4f/26-6aa14a2f4c500.webp' /></p><p>
</p><p>
அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு எதையும்
செய்யவில்லை. மாறாக, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்
செல்வந்தர்களாகியுள்ள நிலையில், மக்கள் இரண்டு வேளை உணவைக் கூடப்
பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.</p><p>22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக எதிர்க்கட்சியை முழுமையாக அரசின்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, எதிர்வரும் தேர்தல்களை நடத்தாமல்
இருப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நோக்கி பயணித்த காருடன் மோதிய மோட்டார்சைக்கிள்! ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-kilinochchi-1788953823"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-kilinochchi-1788953823</id>
            <summary type="text">கிளிநொச்சி - ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (09-09-2026) பிற்பகல் வேளையில் இடம்பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் இன்று (09-09-2026) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p>கிளிநொச்சி இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரும், உமையாள்புரம்
பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.&nbsp;</p><h2>வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4894a82-a636-4727-b516-b8638a687ab4/26-6aa148ec8f200.webp' /></p><p>இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் அவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p>மேலதிக செய்தி - தேவந்தன்</p>]]></content>
            <updated>2026-09-09T11:57:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள்.. கல்வி அமைச்சின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/16000-uni-students-hostel-project-pm-harini-1788954039"></link>
            <id>https://tamilwin.com/article/16000-uni-students-hostel-project-pm-harini-1788954039</id>
            <summary type="text">16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதற்காக புதிய விடுதி கட்டுமானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று நாடாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதற்காக புதிய விடுதி கட்டுமானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். </p><p>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் கல்வி அமைச்சு மூலம் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் விடுதி புனரமைப்பு மற்றும் புதிய கட்டுமானங்களுக்காகக் கடன்கள் ஏதுமின்றி உள்நாட்டு நிதியிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;55 புதிய விடுதிகள்</h2><p> அத்துடன், சவூதி அபிவிருத்தி நிதியுதவியின் கீழ் வயம்ப மற்றும் சபரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட விடுதிகளுக்காக வெளிநாட்டு கடனுதவிகளும் ஒதுக்கிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aac86558-716c-4cd1-91ac-677382f02c1e/26-6aa1482f37c00.webp' /></p><p>

வவுனியா, யாழ்ப்பாணம் (கிளிநொச்சி வளாகம்), தென்கிழக்கு, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் சபரகமுவ போன்ற தங்குமிடப் பற்றாக்குறை நிலவும்,&nbsp; நகர்ப்புறமல்லாத பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை அளித்து 55 புதிய விடுதிகள் கட்டப்படவுள்ளன. </p><p>மேலும், தனியார் விடுதிகளுக்கான கட்டணங்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய கொள்கை ஒன்றைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரைவு செய்து வருகிறது. </p><p>இக்கொள்கை சுகாதாரம், பாதுகாப்பு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்வதோடு, பொது - தனியார் பங்களிப்புடன் நிலங்களை வழங்கி கூடுதல் விடுதிகளைக் கட்டுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:51:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 30வரை விதிக்கப்பட்ட காலக்கெடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciaboc-calls-for-written-reasons-by-september-30-1788951743"></link>
            <id>https://tamilwin.com/article/ciaboc-calls-for-written-reasons-by-september-30-1788951743</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், ஜூன் 30, 2026 என்ற நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பிறகு மற்றும் ஆகஸ்ட் 31, 2026 அன்றோ அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், ஜூன் 30, 2026 என்ற நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பிறகு மற்றும் ஆகஸ்ட் 31, 2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பித்த நபர்கள் மீது பொருந்தக்கூடிய வகையில் நிர்வாகத் தண்டனைகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.</p><p>

ஒரு அறிக்கையை வெளியிட்ட ஆணையகம், 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 90ஆம் பிரிவின்படி, தாமத நாட்களின் எண்ணிக்கை தொடர்பான இந்த நிர்வாக அபராதம் சட்டபூர்வமாக விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.</p><h2>எழுத்துபூர்வமான சமர்ப்பிப்புகள்</h2><p>எழுத்துபூர்வமான சமர்ப்பிப்பில், சமர்ப்பிக்கும் நபரின் தேசிய அடையாள அட்டை (NIC) எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று ஆணையகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/621bcad4-1db1-43a4-b0be-cf68e93cc144/26-6aa144f6cada7.webp' /></p><p>

 

தாமதத்திற்கான காரணங்களையும், அதற்கான துணை ஆவண ஆதாரங்களையும் 2026 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கத் தவறினால், அது தாமதத்திற்கான நியாயமான காரணத்தைக் காட்டத் தவறியதாகக் கருதப்படும் என்று மேலும் கூறியுள்ளது.
</p><p>&nbsp;“தாமதத்திற்கான காரணங்கள்” மின்னஞ்சல் சமர்ப்பிப்பின் தலைப்பில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
 

தபால் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் உறையின் மேல் இடது மூலையில், “தாமதத்திற்கான காரணங்கள்” குறிப்பிடப்பட வேண்டும்.
</p><p>
 

எழுத்துபூர்வமான சமர்ப்பிப்புகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்:
</p><p>
 

இயக்குநர் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புப் பிரிவு)

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆணையம்

எண் 36, மலலசேகர மாவத்த

கொழும்பு 07
</p><p>
 

மின்னஞ்சல்: ald@ciaboc.gov.lk
</p><p>
தொலைபேசி/தொலைநகல்: 0112587287

வாட்ஸ்அப்: 0767011954
</p><p>
 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:50:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலைப் போல என்னையும் கைது செய்திருக்கலாம்! ஆவலாக கேட்கும் சாமர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamara-s-new-reason-for-namal-s-arrest-1788953794"></link>
            <id>https://tamilwin.com/article/chamara-s-new-reason-for-namal-s-arrest-1788953794</id>
            <summary type="text">&amp;nbsp;நாமல் ராஜபக்சவைக் கைது செய்ததன் மூலம், இந்த அரசாங்கம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நாமல் தரப்பு ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு உதவி செய்துள்ளது, அது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாமல் ராஜபக்சவைக் கைது செய்ததன் மூலம், இந்த அரசாங்கம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நாமல் தரப்பு ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு உதவி செய்துள்ளது, அதுபோல என்னையும் கைது செய்து சுதந்திரக் கட்சியின் பேரணிக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

மேலும் அவர் தெரிவிக்கையில், </p><p>

“எமது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்து இந்த அரசாங்கம் தற்போது விளக்கமறியலில் வைத்திருக்கின்றது. ஆனால், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முறைமையே முழுமையாக தவறானது.&nbsp;</p><h2>என்னையும் கைது செய்திருக்கலாமே..</h2><p>முதலில், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கி நிமல் பெரேரா என்பவர், ஒரு திருடன். அவர் இந்த நாட்டில் கொள்ளையடித்து, சொத்துக்களைக் குவித்து, கோடீஷ்வரராக மாறிய பின்னர், தற்போது வெளிநாடொன்றில் சென்று வசிக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f785224-154a-4e69-b59a-a37bb53bd24c/26-6aa14618e0e1e.webp' />&nbsp; &nbsp;</p><p> 

அப்படி வெளிநாட்டில் சென்று வசிக்கும் ஒரு மோசடிக்காரர் வழங்கிய வாக்குமூலத்தின்படி இந்த அரசாங்கம் நாமலைக் கைது செய்துள்ளது.</p><p>முதலில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஒரு விடயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும், இலஞ்சம் கொடுப்பதும் தவறு, இலஞ்சம் பெறுவதும் தவறு.</p><p>

அப்படியாயின், இலஞ்சம் கொடுத்த நிமல் பெரேராவை முதலில் நாட்டுக்கு அழைத்து வந்து கைது செய்திருக்க வேண்டும். அதன் பின்னரே இலஞ்சம் பெற்றவரைக் கைது செய்திருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b8cba9d-f4fb-4917-8500-5a1db54ab73e/26-6aa1461995133.webp' /></p><p>

இந்த அரசாங்கம், நாமல் ராஜபக்சவைக் கைது செய்து, அவர் தலைமையில் 12ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டத்திற்கு சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. நாமல் ராஜபக்சவுக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கின்றது.</p><p> 

இதேபோல செப்டெம்பர் 2ஆம் திகதி எமது சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றும் இருந்தது.&nbsp; இந்த அரசாங்கம் அப்போது எமக்கு உதவி செய்திருக்கலாம். அந்தக் கூட்டத்தின்போது, என்னையும்&nbsp; கைது செய்திருந்தால், எங்களுடைய கட்சியின் கூட்டமும் வெற்றிபெற்றிருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jcMelpCL8lI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/there-cant-be-two-laws-for-south-and-north-1788952617"></link>
            <id>https://tamilwin.com/article/there-cant-be-two-laws-for-south-and-north-1788952617</id>
            <summary type="text">முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>குறித்த விஹாரைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
எமது மக்கள் முல்லைத்தீவு விகாரைக்கு செல்ல ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b62ddd-bb33-44e9-b46a-a88096c402e2/26-6aa14420610e1.webp' /></p><p>
இதை செய்ய முடியாது எனவும் வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p> நாமல் ராஜபக்சவை கைது செய்யும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தரப்புக்கள் மகிழ்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும் தங்களால் அவ்வாறு மகிழ்ச்சி அடைய முடியாது என தெரிவித்துள்ளார்.</p><p>
ராணுவத்தைச் சேர்ந்த படை வீரர்கள் காதலிக்காது, திருமணம் செய்து கொள்ளாது 17 18 வயதிலேயே ராணுவத்தில் இணைந்து உயிர்த்தியாக்கம் செய்து இந்த நாட்டை பாதுகாத்தனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>சில ராணுவ படை வீரர்கள் முதல் முறை விடுமுறையை கூட பெற்றுக் கொண்டு வீடு திரும்ப முடியாது உயிரிழந்திருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>வடகிழ் சிங்கள மக்கள் செல்வதனால் வடக்கு மக்களே பயனடைகின்றார்கள் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
</p><p>ஒரே நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒவ்வொரு புலம்பெயர் அமைப்புகளுக்கு தேவையான வகையில் இந்த நாட்டை ஆட்சி செய்ய இடம் அளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>படைவீரர்கள் உயிர் தியாகம் செய்து இந்த நாட்டை பாதுகாத்தனர் எனவும் எனவே அவ்வாறான ஓர் பின்னணியில் நாட்டை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T11:33:59+00:00</updated>
        </entry>
    </feed>
