<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-27T23:30:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது திடீரென வெளியேற்றப்பட்ட பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-suddenly-evicted-nallur-temple-festival-1787854472"></link>
            <id>https://tamilwin.com/article/woman-suddenly-evicted-nallur-temple-festival-1787854472</id>
            <summary type="text">யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.</p><p>இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பெண்ணொருவர் திடீரென வெளியேற்றப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>எதற்காக குறித்த பெண் வெளியேற்றப்பட்டார் என்பதற்கான சரியான காரணம் தெரியாமல் கூட சிலர் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.</p><p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருக்கும் விதிமுறைகளை யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டியது அவசியம்.&nbsp;</p><p>அந்தவகையில், ஆலயத்தின் உட்பகுதியில் இருந்து புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை. எனவே, குறித்த பெண் அதனை மீறியதாகவும் அவரை வெளியில் இருந்து புகைப்படம் எடுக்குமாறு அறிவுறுத்தி வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது உட்பட சர்வதேசத்தில் மற்றும் நாட்டில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RmNDeKRbHN4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T22:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நற்சான்றிதழ் பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-notice-applicants-for-police-credentials-1787861585"></link>
            <id>https://tamilwin.com/article/special-notice-applicants-for-police-credentials-1787861585</id>
            <summary type="text">பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் இணையத்தள கட்டமைப்பு செயலிழந்த தினத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் இணையத்தள கட்டமைப்பு செயலிழந்த தினத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸ் ஊடகப்பிரிவினால் இது தொடர்பான விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படுகின்ற பொலிஸ் நற்சான்றிதழ்கள், பத்தரமுல்ல, சுஹூருபாய கட்டிடத்தின் 17ஆம் மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் நிருவகிக்கப்படுகின்றன.
</p><p>
பொலிஸ் நற்சான்றிதழ் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள், அது தொடர்பான அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் போன்ற செயற்பாடுகள் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு அமைப்பு ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த தரவு அமைப்பானது கடந்த 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதியன்று பிற்பகல் 12.50 மணிக்குச் செயற்பாடற்ற நிலைக்குள்ளானது.</p><h2>ஏற்பட்ட&nbsp;செயலிழப்பு&nbsp;</h2><p> இது குறித்து இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப முகவர்களுக்கு (ICTA) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைப்பை மீள இயங்கச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cae8e36-398d-414e-9947-9a3828f63a01/26-6a909ae35e88e.webp' /></p><p> அதற்கமைய, விண்ணப்பதாரர்கள் தற்போது வழமை போன்று இணையம் ஊடாகக் பொலிஸ் நற்சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
</p><p>
இதற்கிடையே கடந்த 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று தரவு அமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து, அன்றைய தினம் விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நற்சான்றிதழ் தரவு அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.</p><p> எனவே, அந்தத் திகதியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், புதிய விண்ணப்பமொன்றினை மீளவும் இணையவழியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
புதிய விண்ணப்பத்திற்குரிய சம்பந்தப்பட்ட அறிக்கைகள் பெறப்பட்டதன் பின்னர் பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கப்படும். </p><p>மேலும், முந்தைய விண்ணப்பத்திற்காகச் செலுத்தப்பட்ட 5,100 ரூபாய் கட்டணமானது, விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்துவதற்குப் பயன்படுத்திய கடன் அட்டைக்கு (Credit Card) மீளச் (Refund) செலுத்தப்படும் என்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T21:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-enforced-disappearances-1787860557"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-enforced-disappearances-1787860557</id>
            <summary type="text">30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
தினத்தையொட்டி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
ஏற்பாடு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
தினத்தையொட்டி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான
ஆதரவை வழங்க வேண்டும் என்று தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி அழைப்பை
தாயகச் செயலணி விடுத்துள்ளது.
</p><p>
எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் அனைத்துத்
தரப்பினரும் கலந்துகொண்டு அதனைச் சிறப்பிக்க வேண்டும் என்று தாயகச் செயலணி
கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>

தமிழர்களின் இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட “நீதியின்
ஓலம் - இரண்டு” போராட்டத்தின் இறுதி நாளில் வாசிக்கப்பட்ட அறிக்கை, ஐக்கிய
நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் தாயகச் செயலணி
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e200c7e-ec12-423b-9873-624e3ffd6d97/26-6a9097c0dd717.webp' /></p><p> </p><p>இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஐ.நா. கூட்டத் தொடரில் அந்த
அறிக்கை நேரடியாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் தாயகச் செயலணி
அறிவித்துள்ளது.</p><p>

ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை ஏற்றுக்கொண்டு, அனைத்துத் தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புகளும் முழுமையான
ஆதரவை வழங்குவதுடன், அறிக்கையில் கையொப்பமிட்டுத் தர வேண்டும் என்றும் தாயகச்
செயலணி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்குத் தமிழர் தாயகம்
தழுவிய ரீதியில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் மற்றும் தெருக்கூத்துகளை நடத்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பாடசாலை
மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் இந்த நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முழுமையான
ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தாயகச் செயலணி கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T21:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-illegal-sand-mining-fields-kilinochchi-1787859112"></link>
            <id>https://tamilwin.com/article/increase-illegal-sand-mining-fields-kilinochchi-1787859112</id>
            <summary type="text">கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல
சேவை நிலைய பிரிவுவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல
சேவை நிலைய பிரிவுவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல்
நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>எந்தவித அனுமதியும் இன்றி இரவு வேளைகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு குறித்த
பகுதியில் இடம் பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>

இதனால் நெற்செய்கை மேற்கொள்ளும் வயல்கள் பாதிப்படைந்து வருவதாகவும்,
தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்
பொலிஸாருக்கு தெரியாமல் மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் உரிமையாளர்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d34083db-f54c-4550-af43-d58717e15dbe/26-6a90926c3ddf3.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய திணைக்கள அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக
உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குறித்த மணல் அகழ்வைத் தடுத்து
நிறுத்தாது விட்டால் பெரும் போக நெற்செய்கையில் பெரும் பாதிப்பை
விவசாயிகளாகிய நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும்
தெரிவிக்கின்றனர்.
</p><p>
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குறித்த பகுதியில் மணல் அகழ்வை தடுத்து
நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T20:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-steps-reduce-fuel-prices-sri-lanka-1787860324"></link>
            <id>https://tamilwin.com/article/government-steps-reduce-fuel-prices-sri-lanka-1787860324</id>
            <summary type="text">​சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை
இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று
திருகோணமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>​சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை
இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை
விடுத்துள்ளார்.

​</p><p>கிண்ணியாவில் இன்று (27)இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

​</p><p>அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
​"ஈரான் மற்றும் ஓமான் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாடுகளின் காரணமாக ஹோர்முஸ்
நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து சுமுகமடைந்துள்ளது. </p><p>இதன் எதிரொலியாக
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன.
​சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும்போதெல்லாம், அந்தப் சுமையை
மக்கள் மீது சுமத்தி உடனடியாக இங்கு எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கம்,
உலகச் சந்தையில் விலை குறையும்போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்கத் தயங்குவது
ஏன்?

​</p><p>தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையில், எரிபொருள் விலை
குறைக்கப்பட்டால் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், போக்குவரத்து
கட்டணங்கள் மற்றும் மீனவர்கள், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் குறையும்.
</p><p>எனவே, உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைத்து
மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும்" என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-27T19:52:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ: 12 பேர் உயிரிழப்பு - 54 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deadly-forest-fire-northern-algeria-12-dead-1787858230"></link>
            <id>https://tamilwin.com/article/deadly-forest-fire-northern-algeria-12-dead-1787858230</id>
            <summary type="text">வடக்கு அல்ஜீரியாவின் கடலோரப் பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீ
காரணமாகக் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காயமடைந்துள்ளதாக
அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு அல்ஜீரியாவின் கடலோரப் பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீ
காரணமாகக் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காயமடைந்துள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாகவே இந்த
காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்துள்ளது.</p><h2>உயிர்சேதங்கள்&nbsp;</h2><p>
</p><p>
ஜிஜெல், பெஜாயா மற்றும் திசி ஓசோ ஆகிய மாகாணங்களில் அதிகளவில் உயிர்சேதங்கள்
ஏற்பட்டுள்ளதுடன், பல குடியிருப்புப் பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக
வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd548c6-fedd-4f65-ba36-8298428d937b/26-6a908eb6b14ba.webp' /></p><p>
</p><p>
நாடு முழுவதும் 69 இடங்களில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப்
படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
</p><p>
பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்தப் பகுதியில் தீவிர வெப்ப அலை மற்றும்
காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக உலக வானிலை அமைப்பு
கவலை வெளியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T19:23:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்காவின் மிக நுணுக்கமான உளவியல் தாக்குதல்.. ட்ரம்ப் கையிலெடுத்துள்ள கடுமையான ஆயுதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-united-states-middle-east-economic-d-day-1787849288"></link>
            <id>https://tamilwin.com/article/iran-united-states-middle-east-economic-d-day-1787849288</id>
            <summary type="text">ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான &quot;Economic D-Day&quot; பொருளாதாரத் தடைகளை அதிகாரப்பூர்வமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான "Economic D-Day" பொருளாதாரத் தடைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p> அமெரிக்க கருவூலத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஈரானுடன் எண்ணெய் வணிகம், வங்கிப் பரிவர்த்தனை, டிஜிட்டல் சொத்துக்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் தொடர்பில் இருக்கும் எந்தவொரு நாடோ அல்லது நிறுவனமோ அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் அனைத்து பொருளாதாரப் பாதைகளையும் முடக்குவதே இதன் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இதற்குப் பதிலடியாகத் தானும் அமெரிக்கா மீது நிதி ரீதியான தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானும் எச்சரித்துள்ளது. </p><p>ஈரான் - அமெரிக்க போர் பதற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், அமெரிக்கா கையாளும் இந்த மிக நுணுக்கமான யுக்தி சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இது குறித்து மிக ஆழமாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kuwqKWzBX2Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T18:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-injured-in-an-accident-in-kilinochchi-1787856659"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-injured-in-an-accident-in-kilinochchi-1787856659</id>
            <summary type="text">A9வீதி கிளிநொச்சி 155ஆம் கட்டை இளைஞர் சேவை மன்றத்திற்கு முன்பாக நேற்றிரவு
இடம்பெற்ற விபத்தில் 32வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.&amp;nbsp;டிப்பர் வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>A9வீதி கிளிநொச்சி 155ஆம் கட்டை இளைஞர் சேவை மன்றத்திற்கு முன்பாக நேற்றிரவு
இடம்பெற்ற விபத்தில் 32வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.&nbsp;</p><p>டிப்பர் வாகனமும் மோட்டார்
சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>விபத்து
தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T18:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை திரும்பப் பெறமாட்டோம்! ஜனாதிபதியின் அதிரடியான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-anura-kumara-1787847895"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-anura-kumara-1787847895</id>
            <summary type="text">சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை&amp;nbsp;திரும்பப் பெறமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.&amp;nbsp;அண்மைய காலமாக,...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை&nbsp;திரும்பப் பெறமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>அண்மைய காலமாக, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>குறிப்பாக, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினரால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>அதேநேரம், இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பல மோசமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் எவ்வாறான பதிலை வழங்குவார் என நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையிலேயே நேற்றைய தினம் அவர் நிகழ்த்திய உரை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FrbTK1osark" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T18:20:33+00:00</updated>
        </entry>
    </feed>
