<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-21T21:16:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! போராட்டத்திற்கு அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-call-for-protest-semmani-mass-grave-1784668014"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-call-for-protest-semmani-mass-grave-1784668014</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம்(22.7.2026) போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம்(22.7.2026) போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>வடக்கு
கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் நிறைவுற்று பல வருடங்களாகியும் நீதி தரப்படாதிருக்கின்ற வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கும், தற்போது 454 மனித எலும்புக்கூடுகள்
அகலப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழி விடயத்திற்கும் உடனடியாக சர்வதேச நீதி
விசாரணை வேண்டும். </p><p>தமிழ் இன அழிப்பின் சான்றாதாரமாக இருக்கின்ற இவ்விடயங்களை
மூடிமறைத்து நீர்த்துப்போகச்செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகள்
அதிருப்தியளிக்கின்றன.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கவனயீர்ப்பு போராட்டம்</span></p><p> </p><p>நீதி கோரி தொடர்ச்சியாகப் போராடிவரும் ஏமாற்றும் அரசின்
கபட நாடகங்களுக்கு சர்வதேச சமூகம் ஏமார்ந்து போகக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a6c4ec-de3a-44f3-a307-413bc6def9a5/26-6a5fe0948af8e.webp' /></p><p> </p><p>அந்த வகையில் இன்றையதினம் காலை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட
வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை
ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை
முன்னெடுக்கவுள்ளோம். </p><p>காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகும் இப்போரட்டத்தில் தமிழ்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக
பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றோம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T21:11:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முன்னணி தொழிலதிபர் எப்படி வீழ்ந்தார்! லலித் கொத்தலாவலவின் அதிர்ச்சி கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-mahinda-lalith-kotelawala-1784666942"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-mahinda-lalith-kotelawala-1784666942</id>
            <summary type="text">இலங்கையின் முண்ணனி தொழிலதிபரான&amp;nbsp;லலித் கொத்தலாவவல மகிந்த ராஜபக்சவினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.மகிந்த ராஜபக்ச ஓமாகமவில் கட்டப்பட்ட விளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முண்ணனி தொழிலதிபரான&nbsp;லலித் கொத்தலாவவல மகிந்த ராஜபக்சவினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மகிந்த ராஜபக்ச ஓமாகமவில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை பார்வையிடுவதற்காக தன்னை உலங்குவானூர்தி யில் அழைத்து சென்றதாகவும் மைதானம், ஓட்டப்பந்தய தடம் அமைப்பதற்குமான 10 கோடி ரூபா பணத்தை தாம் அவர்களுக்கு கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.</p><p>இந்தநிலையிலே,&nbsp;லலித் கொத்தலாவவல செய்த உதவிக்காக அவரது பெயரை மைதானத்திற்கு சூட்டப்படும் என மகிந்த கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>பின்னர் மைதானம் திறக்கப்படும்போது தனது பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும்&nbsp; லலித் கொத்தலாவவல குறிப்பிடார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியுஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/O94aalPiYWc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:01:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெற்ற சிறப்பு யோகாசனப் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-yoga-practic-reecha-integrated-farm-1784665552"></link>
            <id>https://tamilwin.com/article/special-yoga-practic-reecha-integrated-farm-1784665552</id>
            <summary type="text">றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊழியர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்தும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.பாஸ்கரன் கந்தையாவின் ஏற்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊழியர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்தும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.</p><p>பாஸ்கரன் கந்தையாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், 75க்கும் மேற்பட்டவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.</p><p></p><h2>யோகா பயிற்சிகள்..&nbsp;</h2><p> ஆரம்பத்தில் சில ஆசனங்கள் கடினமாக இருந்தபோதிலும், பயிற்சியின் முடிவில் உடல் நெகிழ்வுத்தன்மையையும் மன அமைதியையும் அடைந்ததாக ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36a80513-6353-4a34-99a3-dd447371147f/26-6a5fd7b853c48.webp' /></p><p>இதனை தொடர்ந்து, ஊழியர்களின் நலன் கருதி, பண்ணையில் தொடர்ச்சியாக யோகா பயிற்சிகளை நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
</p><p>அதேநேரம், ஊழியர்களின் ஆர்வத்தைக் கண்டு யோகா பயிற்றுவிப்பாளர் கலைஞர் குமாரு யோகேஸ்வரன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்; ஆரோக்கியமே நமது மிகப்பெரிய செல்வம்."

நமது அன்றாட பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அனைவரும் யோகாவைத் தொடர்ந்து செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம் என இதன்போது&nbsp; சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:37:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[64 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணம்: கால்பந்தாட்ட விரிவாக்கம் குறித்து FIFA பரிசீலனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-considering-expansion-football-world-cup-1784664085"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-considering-expansion-football-world-cup-1784664085</id>
            <summary type="text">48 அணிகள் பங்கேற்ற முதலாவது உலகக் கிண்ணக் கால்பந்து தொடர் நிறைவடைந்த
நிலையில், வருங்காலத்தில் உலகக் கிண்ணத் தொடரை 64 அணிகளாக விரிவாக்கம் செய்வது
குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>48 அணிகள் பங்கேற்ற முதலாவது உலகக் கிண்ணக் கால்பந்து தொடர் நிறைவடைந்த
நிலையில், வருங்காலத்தில் உலகக் கிண்ணத் தொடரை 64 அணிகளாக விரிவாக்கம் செய்வது
குறித்து பரிசீலிக்கப்படலாம் என FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ
தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அது சர்வதேச கால்பந்தாட்டத்தின் நிதி
மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணத்தில் 64 அணிகள் பங்கேற்கும் போது, முன்னணி நாடுகள் தகுதி பெறுவது
எளிதாகும். </p><p>இதனால் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையின் வணிக
மதிப்பு குறையக்கூடும்.

இதன் காரணமாக பிராந்திய கால்பந்து கூட்டமைப்புகள் நிதித்தேவைகளுக்காக FIFA
அமைப்பை அதிகளவில் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

இது FIFA அமைப்பின் நிதி ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் மேலும் அதிகரிக்கும்.</p><p></p><h2>போட்டிகளின் எண்ணிக்கை</h2><p>

இருப்பினும், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA மற்றும் ஆசிய கால்பந்து
கூட்டமைப்பு ஆகியவை இந்த விரிவாக்க யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

64 அணிகள் பங்கேற்றால் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 128 ஆக உயரும்.

இது கடந்த காலங்களை விட இருமடங்காகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cba0fba-bbb9-4a0c-a9c1-3234b4c8bd47/26-6a5fd4217d4ec.webp' /></p><p> இதனால் போட்டிகளை நடத்த கூடுதல்
மைதானங்கள், ஹோட்டல்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும்.

2030 உலகக் கிண்ணத்தை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள்
இணைந்தும், 2034 உலகக் கிண்ணத்தை சவுதி அரேபியாவும் நடத்தவுள்ள நிலையில்,
இவ்வளவு பெரிய தொடரை நடத்துவது பெரும் சவாலாக அமையும்.
</p><p>
போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வீரர்களின் பணிச்சுமை அதிகரித்து
காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், தொடர் நீண்ட நாட்கள் நடைபெறுவதால் பங்கேற்கும் நாடுகளின் கால்பந்து
சம்மேளனங்களுக்கு தங்குமிடம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் கணிசமாக உயரும்.
</p><p>
சிறிய நாடுகளுக்கு உலக மேடையில் வாய்ப்பு கிடைத்தாலும், போட்டியின் தரம்
மற்றும் முக்கியத்துவம் குறையக்கூடும் என்ற கவலையும் விளையாட்டு
வல்லுநர்களிடையே எழுந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:18:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mexican-drug-trafficker-sentenced-life-us-court-1784663947"></link>
            <id>https://tamilwin.com/article/mexican-drug-trafficker-sentenced-life-us-court-1784663947</id>
            <summary type="text">மெக்சிகோவின் மிகவும் கொடூரமான மற்றும் பயங்கரமான போதைப்பொருள் கடத்தல்
கும்பலான &#039;சினாலோவா கார்டெல்&#039; அமைப்பின் தலைவரான இஸ்மவேல் &#039;எல் மாயோ&#039;
ஜம்பாடாவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்சிகோவின் மிகவும் கொடூரமான மற்றும் பயங்கரமான போதைப்பொருள் கடத்தல்
கும்பலான 'சினாலோவா கார்டெல்' அமைப்பின் தலைவரான இஸ்மவேல் 'எல் மாயோ'
ஜம்பாடாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத்
தீர்ப்பளித்துள்ளது.</p><h2>நீதிமன்ற&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
சுமார் 40 ஆண்டுகளாகப் போதைப்பொருள் பேரரசை நடத்தி வந்த எல் மாயோ, தனது
கடத்தல் நடவடிக்கைகளுக்காகப் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாக
இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00dadb8f-4d5d-444a-9d51-60102dc803ec/26-6a5fcf8d8942d.webp' /></p><p>

கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, பல மில்லியன்
கிலோகிராம் கொக்கையின் போதைப்பொருளை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகக்
கடத்தியதை எல் மாயோ ஒப்புக்கொண்டார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த இறுதியான ஆயுள்
தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்த முக்கிய புள்ளிகளில்
ஒருவரான எல் மாயோவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த ஆயுள் தண்டனை, சர்வதேச
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க நீதித்துறைக்குக்
கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிற்கு சிலை வேண்டும் - 2029இல் சிறையில் நாமல் ஜனாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-namal-rajapaksa-family-2029-election-1784662229"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-namal-rajapaksa-family-2029-election-1784662229</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகின்றது.&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகின்றது.&nbsp;</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல முக்கிய அதிகாரிகளின் மர்ம மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.&nbsp;</p><p>இது தொடர்பில் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினர் மீது சில தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இந்நிலையில், பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டிற்கு ஜனாதிபதி ஆவாரோ இல்லையோ, சிறைச்சாலைக்கு ஜனாதிபதி ஆவார் என விமர்சித்துள்ளார்.&nbsp;</p><p>இவை உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/T-2cqHMz4ss" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட நான்கு பாடசாலை மாணவர்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-students-released-on-police-bail-1784659420"></link>
            <id>https://tamilwin.com/article/four-students-released-on-police-bail-1784659420</id>
            <summary type="text">வல்வெட்டுத்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டுத்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு மாணவர்களும் இரவாகியும் நீதிமன்றத்தில்
முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.</p><p> இந்த நிலையில் பல்வேறு
அழுத்தங்கள் பெற்றோர் மற்றும் உறவுகளால் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பிணை</h2><p> சிறுவர் என்ற காரணத்தினால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
எனினும் நாளை காலை 7:00 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை நாளைய தினம் எடுக்கப்பட
உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ec3efa7-f205-4a46-bf5b-5331caca0c9b/26-6a5fbf954fc03.webp' /></p><p>இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த
நிலையில் தற்போது பொலிஸ் பிணையில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:25:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய அரசியல்வாதி நேர்காணலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australian-politician-dog-video-1784658624"></link>
            <id>https://tamilwin.com/article/australian-politician-dog-video-1784658624</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் ஒன் நேஷன் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப்
பிரதமருமான பார்னபி ஜாய்ஸ், தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்றுப்
பேசிக் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் ஒன் நேஷன் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப்
பிரதமருமான பார்னபி ஜாய்ஸ், தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்றுப்
பேசிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தனது செல்லப் பிராணியான நாயை நோக்கிச்
சத்தமிட்டு அதட்டிய சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>

செய்தியாளர் தீவிரமான அரசியல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த வேளையில்,
கெமராவிற்கு அப்பால் குரைத்துக் கொண்டிருந்த நாயைப் பார்த்து, கீழே உட்கார் (Sit down) எனத் திடீரென உரத்த குரலில் கத்தினார்.</p><p></p><h2>&nbsp;சர்வதேச அரசியல்&nbsp;</h2><p>
</p><p>
காரசாரமான விவாதமும் நாயின் குறுக்கீடும் ஒன் நேஷன் கட்சியின் தலைவரான பாலின் ஹேன்சன், பிரித்தானியாவின் தீவிர
வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சனைச் சந்தித்தது தொடர்பாகவும், சர்வதேச அரசியல்
சூழல்கள் குறித்தும் செய்தியாளர் கடினமான கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Barnaby Joyce yelling at his dog off camera… <a href="https://x.com/hashtag/abc730?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#abc730</a> <a href="https://t.co/T63fMidAym">pic.twitter.com/T63fMidAym</a></p>&mdash; Andrew Hawkins (@AndrewNJHawkins) <a href="https://x.com/AndrewNJHawkins/status/2079144626062250001?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அந்த நேரத்தில் நாயின் குறுக்கீட்டால் கவனச்சிதறல் அடைந்த பார்னபி ஜாய்ஸ்,
செய்தியாளரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பேட்டியைத் தொடர முயன்றார்.
</p><p>
இருப்பினும், தொடர்ந்து இடையூறு ஏற்பட்டதால் "தயவுசெய்து மரியாதையாகப்
பேசுங்கள், இல்லையென்றால் இந்த நேர்காணல் பாதியிலேயே நின்றுவிடும்" என்று
கோபத்துடன் செய்தியாளரை எச்சரித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகப்
பேசப்பட்டு வருகிறது.
</p><p>
நேரலையில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம், தீவிரமான அரசியல் விவாதத்தின் இடையே
பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நேர்காணலின்
காணொளி, தற்போது சமூக வலைத்தள பயனாளர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் படைகளின் வெளியேற்றம்.. தெற்கு லெபனான் நகருக்குள் நுழைந்த லெபனான் இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lebanese-army-enters-southern-lebanese-city-1784656128"></link>
            <id>https://tamilwin.com/article/lebanese-army-enters-southern-lebanese-city-1784656128</id>
            <summary type="text">அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தெற்கு
லெபனான் நகரான &#039;ஜவ்தார் அல்-கார்பியே&#039; பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள்
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தெற்கு
லெபனான் நகரான 'ஜவ்தார் அல்-கார்பியே' பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள்
வெளியேறியுள்ளன.</p><p>

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் லெபனான் நாட்டு இராணுவ வீரர்கள் தீவிர ரோந்து
மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக நுழைந்துள்ளனர்.
</p><p>
இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா ஏற்படுத்திய அமைதி
ஒப்பந்தத்தின் நடைமுறைச் சாத்தியக்கூறுகளுக்கான முதல் சோதனையாகப்
பார்க்கப்படுகிறது.
</p><p>
அமெரிக்காவின் திட்டப்படி, தெற்கு லெபனானின் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து
இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக வெளியேறும்.</p><p>

அதே வேளையில், அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரின்
ஆயுதங்களைக் பறிமுதல் செய்து, அரசாங்கத்தின் அதிகாரத்தை லெபனான் இராணுவம்
முழுமையாக நிலைநிறுத்தும்.</p><p></p><h2>இஸ்ரேலிய இராணுவம்</h2><p>

இந்த திட்டம் 'பைலட் ஸோன் திட்டம்' (எனப் பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வமாகத்
தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/051a7906-f552-44e5-a8d6-af93bce8e7df/26-6a5fb10219d3f.webp' /></p><p>

இராணுவம் நகருக்குள் நுழைந்த போதிலும், வெடிக்காத வெடிமருந்துகள் மற்றும்
கண்ணிவெடிகளை அகற்றும் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், பாதுகாப்பு
உறுதிசெய்யப்படும் வரை மக்கள் ஊருக்குள் திரும்ப வேண்டாம் என லெபனான் இராணுவம்
கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

நகரத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் முற்றிலும் அழிந்துள்ளதாகவும், எஞ்சிய
வீடுகளும் பலத்த சேதமடைந்து வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும்
அப்பட்டினத்தின் மேயர் ஆபெத் எஸ்ஸெடின் கவலை தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹிஸ்புல்லா அமைப்பை லெபனான் அரசால் முழுமையாக ஆயுதமேற்பாக்கம் செய்ய முடியுமா
என்ற சந்தேகத்தை இஸ்ரேல் எழுப்பியிருந்தாலும், நீண்டகால அமைதிக்கு இந்த
ஒப்பந்தம் அவசியம் எனத் தெரிவித்துள்ளது.

</p><p>&nbsp;இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்துப்
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் வொஷிங்டன்
சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T18:17:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் இரகசிய நகர்வு! பறிபோகும் மற்றுமொரு தமிழர் பாரம்பரிய சின்னம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanniya-hot-springs-trinco-tamils-1784654738"></link>
            <id>https://tamilwin.com/article/kanniya-hot-springs-trinco-tamils-1784654738</id>
            <summary type="text">திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் நாளை(22.7.2026) புத்த விகாரைக்கான அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் நாளை(22.7.2026) புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தகவல்&nbsp;வெளியாகியுள்ளது.</p><p>இந்தநிலையிலே, தமிழர்களின் தொன்மை வாய்ந்த பண்பாட்டு, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>அத்தோடு, குறித்த பகுதியிலே எந்தவிதமான கட்டுமானப்பணிகளும் செய்யக் கூடாது என திருகோணமலை நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p>இதனையடுத்து, தொால்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலே குறித்த இடத்திலே விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அத்தோடு, இந்த நிகழ்விற்கு அரச அதிகாரிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக தமிழர்களின் பாரம்பரியம், மரபு சார்ந்த இடங்கள், வரலாறு சார்ந்த இடங்கள் கையகப்படுத்தும் நிகழ்வு தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்சியாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.</p><p>எனவே இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன்,&nbsp;பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SAmU-uev_Fg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T17:58:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2003இல் விடுதலைப் புலிகள் புலனாய்வுப் பிரிவில் நடந்த ரகசியப் பிளவு! வரலாற்றின் மறுபக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/significant-split-liberation-tigers-intelligence-1784644587"></link>
            <id>https://tamilwin.com/article/significant-split-liberation-tigers-intelligence-1784644587</id>
            <summary type="text">2003-ஆம் ஆண்டு தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் ஏற்பட்ட முக்கியமான பிளவு பெரியதாக வெளியில் பேசப்படவில்லை.

மட்டக்களப்பு-அம்பாறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2003-ஆம் ஆண்டு தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் ஏற்பட்ட முக்கியமான பிளவு பெரியதாக வெளியில் பேசப்படவில்லை.</p><p>

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த ரெஜினால்ட், பொட்டம்மானின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க முடியாது என்று கூறி, தனது கீழ் இருந்த 52 போராளிகளுடன் பிரிந்து சென்றார்.</p><p> 

இது விடுதலைப்புலிகளின் அமைப்பின் கட்டமைப்பைப் பாதித்த ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.</p><p>

கருணா கிழக்கில் தனது சொந்த அதிகாரத்தைச் செலுத்த விரும்பியதாலேயே இந்தப் பிரிவு ஏற்பட்டது. 

ரெஜினால்ட் தலைமையிலான குழு நேரடியாக கருணாவின் கீழ் இயங்கத் தொடங்கியது.
</p><p>
கருணாவின் பிரிவுக்குப் பிறகு, அவர் கொழும்புக்குத் தப்பிச் சென்றபோது ரெஜினால்ட்டும் அவருடன் சென்றார்.</p><p> 

இருப்பினும், தளபதி சார்ள்ஸ் முன்னரே திட்டமிட்டபடி, ரெஜினால்ட்டுக்கு உதவிய இளைஞர் மூலமாகவே அவரை வன்னிக்குக் கடத்தி வந்தனர்.
</p><p>
வன்னிக்குக் கொண்டுவரப்பட்ட ரெஜினால்ட்டிடம், "துரோகம் எப்படி வலிக்கும் என்று காட்டுவதற்காகவே உன்னை இங்கு கொண்டு வந்தேன்" என்று சார்ள்ஸ் கூறியது, துரோகத்தின் விளைவுகளை உணர்த்தும் ஒரு உணர்ச்சிகரமான தருணமாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது உண்மைகள் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oK5W5uhPSqM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T17:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 தொண்டு நிறுவனங்களை குறி வைத்த இஸ்ரேல் - ஊடகங்கள் கையில் சிக்கிய முக்கிய ஆவணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-targets-15-charities-1784638453"></link>
            <id>https://tamilwin.com/article/israel-targets-15-charities-1784638453</id>
            <summary type="text">உலகளவில் செயல்பட்டு வரும் முன்னணி மனிதநேய மற்றும் தொண்டு நிறுவனங்களை
இஸ்ரேலிய அரசு எவ்வாறு நுணுக்கமாகக் கண்காணித்து ஆய்வு செய்தது என்பதை
அம்பலப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் செயல்பட்டு வரும் முன்னணி மனிதநேய மற்றும் தொண்டு நிறுவனங்களை
இஸ்ரேலிய அரசு எவ்வாறு நுணுக்கமாகக் கண்காணித்து ஆய்வு செய்தது என்பதை
அம்பலப்படுத்தும் இரகசிய ஆவணம் ஒன்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


2013ஆம் ஆண்டு இஸ்ரேலின் நலன்புரி மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சக இணையத்
தளத்திலிருந்து பெறப்பட்ட இந்த இரகசிய ஆவணத்தில், உலகம் முழுவதும் செயல்படும்
150க்கும் மேற்பட்ட சர்வதேச தன்னார்வ அமைப்புகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு
பட்டியலிடப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>

குறி வைக்கப்படும் 15 தொண்டு நிறுவனங்கள்</h2><p>
இந்த ஆவணத்தில் “ஒக்ஸ்ஃபாம்“, பிரான்ஸின் “பிரீமியர் அர்ஜென்ஸ்” மற்றும்
ஜெர்மனியின் “மெடிகோ இன்டர்நேஷனல்” போன்ற சுமார் 15 சர்வதேச தொண்டு
நிறுவனங்கள் பிரத்தியேகமாகக் குறி வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdf88a7-22e8-48fb-8a67-114806530810/26-6a5f6cc4318e6.webp' /></p><p>
</p><p>
இஸ்ரேலுக்கு எதிரான “பாய்காட், டைவெஸ்ட்மென்ட், சாங்க்ஷன்ஸ்” (BDS)
இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுதல், இஸ்ரேலை விமர்சித்தல் மற்றும்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அனுமதியின்றி திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆகிய குற்றச்சாட்டுகள் அந்த ஆவணத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
</p><p>
இருப்பினும், ஒக்ஸ்ஃபாம் உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் குற்றச்சாட்டுகளை
முற்றிலுமாக மறுத்துள்ளன.</p><h2>

மனித உரிமை ஆர்வலர்களின் சுட்டிக்காட்டல்</h2><p>
பாலஸ்தீனத்தில் உயிர்காக்கும் பணிகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களை இஸ்ரேல்
பல ஆண்டுகளாகக் கண்காணித்து வந்ததற்கு இந்த ஆவணம் ஒரு தெளிவான சான்றாகும் என
மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05a2d6f5-6b53-47c6-b31b-cb19365489b7/26-6a5f6cc4e7021.webp' /></p><p> 

BDS இயக்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும்
சட்டத்தை 2017ஆம் ஆண்டு இஸ்ரேல் இயற்றுவதற்கு முன்பாகவே, இத்தகைய அமைப்புகளைப்
பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை அந்நாடு தீவிரமாகத்
தொடங்கியிருந்ததை இந்த அறிக்கை வெளியில் கொண்டு வந்துள்ளது.&nbsp; </p><p></p><p></p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T17:38:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றவாளிகளை கைது செய்வதில் ஏற்படும் தாமதம்.. பாதுகாப்புப் பிரதி அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aruna-jayasekara-explains-federation-anura-1784654044"></link>
            <id>https://tamilwin.com/article/aruna-jayasekara-explains-federation-anura-1784654044</id>
            <summary type="text">சமஷ்டியைத் தருவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க பெறவில்லை எனவும், மாறாக அவர் நேர்மையாகச் செயற்பட்டதன்
அடிப்படையிலேயே மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமஷ்டியைத் தருவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க பெறவில்லை எனவும், மாறாக அவர் நேர்மையாகச் செயற்பட்டதன்
அடிப்படையிலேயே மக்கள் அவரை ஆதரித்துள்ளனர் எனவும் பாதுகாப்புப் பிரதி
அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், அரசு எப்போதும் ஜனநாயக
அம்சங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது.
</p><p>மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக
ஏன் விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.</p><p>&nbsp;</p><h2>சட்டபூர்வமான முறை</h2><p>
</p><p>எனினும், அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமான முறையிலேயே இடம்பெறுவதால் சில
தாமதங்கள் ஏற்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb91dd3-227f-4781-b8e3-41d9902afc31/26-6a5fabbc33701.webp' /></p><p>

கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றபோது, அங்குள்ள மக்கள் அவருக்கு
உற்சாகமான வரவேற்பை அளித்தமையுடன் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர்.</p><p>

13ஆவது திருத்தத்தைத் தருகின்றோம், சமஷ்டி தருகின்றோம் என்றெல்லாம் வாக்குறுதி
அளித்து ஜனாதிபதி மக்களின் ஆதரவைப் பெறவில்லை. வடக்கில் ஒரு பேச்சும்,
தெற்கில் வேறு பேச்சும் பேசும் அரசியல் கலாசாரம் அவரிடம் கிடையாது. </p><p>உண்மையின்
அடிப்படையில் செயற்படுவதாலும், அவரது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையாலுமே
மக்கள் அவரை ஆதரிக்கின்றனர்.</p><p> அதுமட்டுமன்றி, மலையகம் மற்றும் கிழக்கு
மாகாணங்களிலும் ஜனாதிபதிக்கு மக்கள் தொடர்ந்து தமது வலுவான ஆதரவை வழங்கி
வருகின்றனர்" என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T17:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்: 20 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flash-floods-in-afghanistan-20-dead-1784652659"></link>
            <id>https://tamilwin.com/article/flash-floods-in-afghanistan-20-dead-1784652659</id>
            <summary type="text">ஆஃப்கானிஸ்தானின் கிழக்கே அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் வீசிய பருவமழை
காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆஃப்கானிஸ்தானின் கிழக்கே அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் வீசிய பருவமழை
காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

வெள்ள நீரில் சிக்கி இதுவரை குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,
80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள்
தெரிவிக்கின்றன.
</p><p>
நூரிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான பாரூன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்புகள், உணவகங்கள் மற்றும் கடைகளை அடித்துச்
சென்று முற்றிலும் சேதப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>மீட்புக் குழு</h2><p> </p><p>வெள்ளத்தில் சிக்கி 100க்கும்
மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

சேறு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியிலும்,
உடல்களைக் கண்டெடுக்கும் பணியிலும் உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ce8607-1fd1-47ed-9d54-5bfcb661d881/26-6a5fa625cab70.webp' /></p><p>
</p><p>
பாரூன் நகரத்தின் மேயர் (முதல்வர்) மற்றும் அப்பகுதியின் பல அரசு ஊழியர்களும்
வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக ஆஃப்கான் ஆளுநர் அலுவலகம்
உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதிக்கான போக்குவரத்து மற்றும்
தொடர்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>கடும் வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
தெற்காசிய பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழையால் ஆஃப்கானிஸ்தான்
மட்டுமின்றி இந்தியா, நேபாளம் உள்ளிட்ட அயல்நாடுகளிலும் கடும்
வெள்ளப்பெருக்கும் சேதமும் ஏற்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b0ba3a-572b-476c-a6ba-d56385d65a75/26-6a5fa6269c732.webp' /></p><p>
</p><p>
மேலும் பல மாகாணங்களில் பலத்த மழை மற்றும் வெள்ள அபாயம் நீடிப்பதால் ஆஃப்கான்
தேசிய அனர்த்த முகாமைத்துவ ஆணைக்குழு மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச்
செல்லுமாறு எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T17:02:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் என்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-day-39-13-bone-cages-identification-1784651080"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-day-39-13-bone-cages-identification-1784651080</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(21.7.2026) நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(21.7.2026) நடைபெற்றது.</p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்றைய தினம் அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
சில என்புக்கூடுகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் சில
என்புக்கூடுகளுக்கு மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>என்பு கூடுகள் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>அதேவேளை குவியலாக காணப்பட்ட என்பு குவியலுக்குள் மண்டையோடுகளும்
காணப்படுவதனால், ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பில் மேலதிகமான தகவல் கூற
முடியும் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43e799a7-e229-4909-857a-b75ddb4a57a5/26-6a5fa084c461d.webp' /></p><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 03 சிறுவர்களின் என்புக்கூடுகள் 04
என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 93 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
467 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 444 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T16:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் பாதிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-virus-intensifies-in-congo-death-toll-rises-1784650041"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-virus-intensifies-in-congo-death-toll-rises-1784650041</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மீண்டும் தீவிரமடைந்துள்ள எபோலா வைரஸ்
பாதிப்பில் பலியானோர் எண்ணிக்கை 930 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், நோய் பரவும் வேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மீண்டும் தீவிரமடைந்துள்ள எபோலா வைரஸ்
பாதிப்பில் பலியானோர் எண்ணிக்கை 930 ஆக அதிகரித்துள்ளது.</p><p>அத்துடன், நோய் பரவும் வேகம்
கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO)
எச்சரித்துள்ளது.
</p><p>
அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உறுதிசெய்யப்பட்ட
மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,344 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><h2>உயிரிழப்புகள்</h2><p> </p><p>குறிப்பாக, ஒரே நாளில்
37 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த மே 15 அன்று எபோலா பரவல் முதன்முதலில் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு,
தற்போது பதிவாகி வரும் நாளாந்தப் பாதிப்புகள் மிக அதிகபட்சமாக உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d0f767a-32b2-4cf0-bf54-9aa29f1e73ba/26-6a5f9b2d87d7f.webp' /></p><p> </p><p>நோயாளிகளின் உமிழ்நீர் மற்றும் உடல் திரவங்கள் மூலம் பரவக்கூடிய இந்த எபோலா
வைரஸ், கொங்கோவின் 5 மாகாணங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
தற்போது 724 நோயாளிகள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை
பெற்று வருகின்றனர்.

இதுவரை 460-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு
திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T16:15:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் படைகள் வெளியேற அமெரிக்க ஆதரவு தேவை: ட்ரம்பை இன்று சந்திக்கிறார் லெபனான் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-support-needed-for-withdrawal-israeli-forces-1784647668"></link>
            <id>https://tamilwin.com/article/us-support-needed-for-withdrawal-israeli-forces-1784647668</id>
            <summary type="text">தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாக வெளியேற்றவும், லெபனான்
இராணுவத்தைக் கட்டுக்கோப்பாகப் பலப்படுத்தவும் அமெரிக்காவின் ஆதரவைக் கோரி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாக வெளியேற்றவும், லெபனான்
இராணுவத்தைக் கட்டுக்கோப்பாகப் பலப்படுத்தவும் அமெரிக்காவின் ஆதரவைக் கோரி,
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச்
சந்திக்கவுள்ளார்.
</p><p>
தனது 4 நாள் அமெரிக்கப் பயணத்தின் இறுதிக்கட்டமாக செவ்வாய்க்கிழமை
நடைபெறவுள்ள இச்சந்திப்பிற்கு முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
மார்கோ ரூபியோவைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.</p><p></p><h2>அமெரிக்க ஆதரவு</h2><p>
</p><p>
2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு லெபனான் ஜனாதிபதி ஒருவர் வொஷிங்டனுக்கு
அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.</p><p>

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானின் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து
படிப்படியாக வெளியேறும் "பைலட் ஜோன் திட்டம்" தொடங்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc2b645d-3d08-49e4-9192-cb702ab51c4b/26-6a5f94449d6f1.webp' /></p><p>
</p><p>
இதன் முதல்கட்டமாக 'ஜவ்தார் அல்-கார்பியே' நகரிலிருந்து இஸ்ரேலியப் படைகள்
விலகியதைத் தொடர்ந்து, அங்கு லெபனான் இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

அதே வேளையில், தெற்கு லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பிடம் இருக்கும்
ஆயுதங்களைக் பறிமுதல் செய்து, அப்பகுதியை முழுமையாக அரசாங்கக் கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டுவர லெபனான் அரசு முயற்சித்து வருகிறது.</p><p></p><h2>&nbsp;லெபனான் ஜனாதிபதி</h2><p>
</p><p>
இஸ்ரேலுடனான லெபனானின் நேரடிப் பேச்சுவார்த்தையையும் ஆயுதங்களை
ஒப்படைப்பதையும் ஹிஸ்புல்லா அமைப்பு தீவிரமாக எதிர்த்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d721a16-4cc9-4aba-b71c-74275c815ca0/26-6a5f94456c83b.webp' /></p><p>

மறுபுறம், ஹிஸ்புல்லா அமைப்பு முழுமையாக ஆயுதமேற்பாக்கம் செய்யப்படும் வரை
தாங்கள் முழுமையாக வெளியேற மாட்டோம் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.</p><p>

உள்நாட்டுப் பூசல்கள் மற்றும் பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு இடையே, நாட்டின்
பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த சர்வதேச நிதியுதவியும்
அமெரிக்காவின் ஆதரவும் தங்களுக்கு மிகவும் அவசியம் என லெபனான் அரசு
தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T15:49:35+00:00</updated>
        </entry>
    </feed>
