<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-14T18:21:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான ஓலம்: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cry-for-justice-tamil-groups-unite-to-demand-1786728740"></link>
            <id>https://tamilwin.com/article/cry-for-justice-tamil-groups-unite-to-demand-1786728740</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று(14.8.2026) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பமானது.&nbsp;</p><p>இதன்போது செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை
நினைவுகூரும் வகையில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றன. </p><p>கடந்த காலத்தில்
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கான நீதி இதுவரை முழுமையாக
கிடைக்கவில்லை என்ற வலியையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
வெளிப்படுத்தினர்.</p><h2>முக்கிய கோரிக்கை</h2><p>
</p><p>
இதேவேளை, இந்த நீதிக்கான போராட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக எதிர்வரும்
17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15268bcd-0340-4cf5-95c0-c065ea7e12c5/26-6a7f53a54194d.webp' /></p><p>தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால், சுயாதீனமான
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய
கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.&nbsp;</p><p>நீதிக்கான ஓலம்” என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூரும் நிகழ்வல்ல;
உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச்
செய்வதற்கான தொடர்ச்சியான குரல் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>அழைப்பு&nbsp;</h2><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் படுகொலைகளில்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தோளோடு தோள் நின்று, சர்வதேச விசாரணை, உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்தப் பயணத்தில் அனைத்து
தரப்பினரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5432024-9c15-4cc8-82b3-558023d7e51b/26-6a7f53a5e8c87.webp' /></p><p>செம்மணியில் எழுந்த நீதிக்கான குரல், எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம்
பொது நூலகத்திலிருந்து ஐ.நா. அலுவலகம் வரை செல்லும் பேரணியில் மேலும்
வலுப்பெறவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T17:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786716134"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786716134</id>
            <summary type="text">புதிய இணைப்புபிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான &quot;ஷிரான் பாசிக்&quot; என்பவர் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

அவருடன் மேலும் இரண்டு சந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான "ஷிரான் பாசிக்" என்பவர் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> 

அவருடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். </p><p>

இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d033e3f3-ffe7-499c-8101-90cd0e495b59/26-6a7f24b700506.webp' /></p><p>
</p><p>மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T17:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான்- அமெரிக்கா இடையே மோதல்கள்: பாரசீக வளைகுடாவில் பெரும் எண்ணெய்க் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786725631"></link>
            <id>https://tamilwin.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786725631</id>
            <summary type="text">பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>

ஈரானின் கெஷ்ம் மற்றும் சிரி தீவுகளுக்கு அருகே செயற்கைக்கோள் படங்களின் மூலம்
இரு பெரிய எண்ணெய் படலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p>
லைபீரியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதே
கெஷ்ம் தீவு அருகே ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு முக்கியக் காரணம் எனக்
கூறப்படுகிறது.</p><p></p><h2>மீட்புப் பணி</h2><p>

மற்றொருபுறம் ஓமன் கடற்பகுதியில் ரஷ்ய கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற கப்பல்
தரைதட்டி சுமார் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு எண்ணெய் பரவியுள்ளதால்
அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d66a2a-1953-4a75-b367-48ac92d4ba7a/26-6a7f450188bd1.webp' /></p><p>
</p><p>
தற்போதைய போர்ப் பதற்றம் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும்
சிக்கல் நீடித்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T16:40:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 51 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி - 1.4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் கொள்ளை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-house-break-in-2-arrested-in-robbery-case-1786725286"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-house-break-in-2-arrested-in-robbery-case-1786725286</id>
            <summary type="text">வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (14) தெரிவித்துள்ளனர்.</p><p>

கடந்த 8ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வாகன சாரதி மீது வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><h2>பெறுமதியான பொருட்கள்</h2><p>

பின்னர், வீட்டின் உரிமையாளரான 51 வயது பெண்ணின் வாயை பிளாஸ்டரால் ஒட்டி, கைகளை பின்புறமாகக் கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்துள்ளனர்.</p><p>

 இதனைத் தொடர்ந்து, மூவர் இணைந்து குறித்த பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியுள்ளனர்.</p><p>
 வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
</p><p>
இதன்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c478ef0c-fd5a-4ffa-9562-cea1409b3afb/26-6a7f44fd2fa02.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
</p><p>
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலாவின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய உக்குவெல, மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 29 வயதுடைய களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பாதிக்கப்பட்ட பெண்</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது சொத்துக்கள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அவரது முதல் கணவரின் மகனே இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு திட்டமிட்டு மூல காரணமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நபர் தனது காரில் களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேகநபர்களை அழைத்து வந்து, வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a92e6ad9-f0cf-4610-b80b-d93d0169f2da/26-6a7f44fdeb087.webp' /></p><p>
</p><p>
மேலும், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள் மற்றும் 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T16:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பில் ஏமாற்றும் படைத்தரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/military-release-of-point-pedro-post-office-land-1786724501"></link>
            <id>https://tamilwin.com/article/military-release-of-point-pedro-post-office-land-1786724501</id>
            <summary type="text">பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் அம்பலப்படுத்தி உள்ளார்.</p><p>

பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலின் அழைப்பில் இன்று (14)
வெள்ளிக்கிழமை பருத்தித்துறைக்கு விஜயம் மேற்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பருத்தித்துறை அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக இயங்கும் இடத்திற்கு சென்று
அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலமைகளை கேட்டறிந்து கொண்டார்.</p><p>அத்துடன் இராணுவ
கட்டுப்பாட்டி உள்ள பழைய கட்டிடம் மற்றும் விடுவிக்கப்பட தீர்மானிக்கப்பட்ட
இடம் என்பவற்றை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.</p><p></p><h2>காணி விடுவிப்பு</h2><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக
அண்மையில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வெகுஜன ஊடக பிரதியமைச்சர்
கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட அஞ்சல் திணைக்கள தரப்பினரிடம்
உறுதியளித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9436ca-d891-40af-8010-58d05a687f5e/26-6a7f4302b684f.webp' /></p><p> </p><p>இது தொடர்பில் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வைத்து
நேரில் சந்தித்து கதைக்கும் போது குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்
விஜயத்தின் போது முன்வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்ததுடன் அதனை நிறைவேற்றுவது
தொடர்பில் சாதகமான நிலையினையும் வெளிப்படுத்தி இருந்தார்.</p><p>படைத்தரப்பின் இருப்பை காரணம் காட்டி பருத்தித்துறை தபால் நிலைய காணி
விடுவிக்கப்படாமையை ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது. அதற்கான
அழுத்தங்களை வழங்கி உரிய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.</p><p>காணி விடுவிப்பு இடம்பெற்று வரும் மேற்குறித்த நிலைவரங்கள் தொடர்பில்
அண்மையில் கனேடிய தூதர் மற்றும் இந்திய தூதருடனான சந்திப்பில்
தெளிவுபடுத்தியதுடன், காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தி உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T16:32:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொசாட்டுடன் இணைந்து கிழக்கில் இனங்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-ashraf-eastern-province-sl-politics-1786720082"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-ashraf-eastern-province-sl-politics-1786720082</id>
            <summary type="text">தமிழ் மக்களிற்கும், முஸ்லிம் மக்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்காக ரணசிங்க பிரேமதாச மொசாட்டின் தந்திரத்தை கையில் ஊர்காவல் படையை ஆரம்பித்ததாக மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களிற்கும், முஸ்லிம் மக்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்காக ரணசிங்க பிரேமதாச மொசாட்டின் தந்திரத்தை கையில் ஊர்காவல் படையை ஆரம்பித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, ரணசிங்க பிரேமதாச சிறுபாண்மைக்குள் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்காக 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வந்தவுடன் இனங்களிடையே பிரித்தாலும் தந்திரத்தை கையாண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திலே தமிழ் சகோதரர்களும், முஸ்லிம் சகோதரர்களும் ஆதரவு தெரிவித்ததை தட்டிகழிப்பதற்காக&nbsp; ரணசிங்க பிரேமதாச பல்வேறு சூழ்ச்சிகளை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு,&nbsp;ஊர்காவல் படையை பிரேமதாச ஆரம்பித்ததையடுத்து சிறிலங்கா இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டு இனப்படுகொலை இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.</p><p>மொசாட்டுடன் தொடர்புபடுத்தப்படும் கிழக்கின் சர்ச்சைக்குரிய சம்பவங்களின் பின்னணி என்ன என்பது தொடர்பான மேலதிக தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/J82m0U8-z3Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T16:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - தந்தை வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-dies-in-japan-revealed-details-1786715325"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-dies-in-japan-revealed-details-1786715325</id>
            <summary type="text">ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். </p><p>

மகனின் எதிர்பாராத மரணத்தால் குடும்பமே நிலைகுலைந்துள்ளதாக தந்தையான ஜே.ஏ. லயனல் சுசந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
</p><p>
வளமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் தனது மகன் ஜப்பான் சென்ற நிலையில், இப்படியான துயரம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

இலங்கை இளைஞன்&nbsp;கொலை</b></h2><p>கடந்த எட்டாம் திகதி ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள நகரேயாமா நகரில் இடம்பெற்ற மோதலில் 21 வயதுடைய பிரவீன் இசுரு கொலை செய்யப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacf8a83-3114-43cb-a824-61aead40c71c/26-6a7f2e4111491.webp' /></p><p>இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். </p><p>

வழமையாக தாய், தந்தையுடன் உரையாறும் பிரவீன் அன்றைய தினம் தொலைபேசி அழைப்பை எடுக்காத நிலையில் அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.</p><p> 

எனினும் மகனிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காமையினால், தாய் மிகவும் கவலையடைந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>

மற்றொரு இலங்கையர்&nbsp; கைது </b></h3><p>கடந்த 11 ஆம் திகதி பெருமளவில் எதிர்பார்த்திருந்தும் மகனிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. காலை 11:20 மணியளவில் பிரவீனின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து வந்த அழைப்பில் வேறு ஒருவரை உரையாடினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328b345c-5c83-45de-9145-cde65378e381/26-6a7f2e41dfa14.webp' /></p><p>வன்முறை சம்பவம் ஒன்றில் சிக்கிய பிரவீன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதனை நம்ப முடியவில்லை. ஒரு மணி நேரத்தின் பின்னர் அடுத்த அழைப்பில் பிரவீன் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். </p><p>அந்த கணம் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. அதிலிருந்து இன்னமும் மீளவில்லை என தந்தை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

ஜப்பானிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், சிபா மாகாணத்தின் நகரேயாமா நகரில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவத்தினாலேயே பிரவீன் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இந்த கொலை முயற்சி தொடர்பில் மற்றொரு இலங்கையர் ஜப்பானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T15:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மரத்திற்கு மேல் பதுக்கி வைக்கப்பட்ட குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bomb-recovered-in-kilinochchi-1786715659"></link>
            <id>https://tamilwin.com/article/bomb-recovered-in-kilinochchi-1786715659</id>
            <summary type="text">கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கை இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
குண்டு செயலிழப்பு</h2><p>
சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிசாருக்கு வழங்கப்பட்ட
தகவலுக்கமைவாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதியில் இருந்து குண்டு மீட்கப்பட்டு, செயலிழப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e676ed17-92fa-4164-9b8f-e86c62310de3/26-6a7f1eda3115c.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தர்மபுர பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-106th-day-1786711510"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-106th-day-1786711510</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வு பணியின்போது முன்னெடுக்கப்பட்ட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>குறித்த அகழ்வு பணியின்போது முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 07 என்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ள நிலையில், 02 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>செம்மணி அகழ்வுப் பணி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21986854-7ebb-4d70-9ca1-c77319a72594/26-6a7f160d8ab7e.webp' /></p><p>இதுவரையில் 554 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p> ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 547 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மனித என்புக்கூட்டு தொகுதி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் உலாவும் மான்களை பார்வையிட படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourists-flock-to-see-deer-in-trincomalee-1786713551"></link>
            <id>https://tamilwin.com/article/tourists-flock-to-see-deer-in-trincomalee-1786713551</id>
            <summary type="text">திருகோணமலையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மான் பூங்கா மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடித் திரியும் மான்கள், தற்போது வெளிநாட்டு
சுற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மான் பூங்கா மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடித் திரியும் மான்கள், தற்போது வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>


திருகோணமலைக்கு பல நாடுகளிலிருந்து மக்கள் தினம் தினம் வருகை தருகின்றனர்.</p><p>இந்த நிலையில், நகரப் பகுதியில் உள்ள மான் பூங்காவிலும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக உலா
வரும் இந்த மான்களை பார்வையிடுவதற்காகவே அண்மைக்காலமாக திருகோணமலைக்கு
வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக
அதிகரித்துள்ளது.</p><h2>

மான்களை காண ஆவலுடன் வரும் பயணிகள்</h2><p>
இங்கு வரும் பயணிகள் மான்களுக்கு உணவளித்தும், அவற்றுடன் புகைப்படங்கள்
மற்றும் சுயவிவரப் படங்கள் எடுத்தும், மிகவும் மகிழ்ச்சியோடு
பொழுதைக் கழித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c36744a9-8171-4bbb-b34d-46488a159297/26-6a7f170e38928.webp' /></p><p> </p><p>

மனிதர்களோடு மிகவும் இயல்பாகப் பழகும் இந்த
மான்களின் குணம், தங்களுக்கு ஒரு புதுவிதமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைத் தருவதாக வெளிநாட்டுப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
</p><p>
திருகோணமலையின் இயற்கை எழிலோடு, இந்த மான்களின் பிரசன்னமும் இணைந்து
பிராந்தியத்தின் சுற்றுலாத்துறையை மேலும் ஒரு படி முன்னோக்கி எடுத்துச்
சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fweb.facebook.com%2Freel%2F1400771052196101%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு தரப்பினருக்கு இடையில் முரண்பாடு! பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-died-after-being-struck-1786712284"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-died-after-being-struck-1786712284</id>
            <summary type="text">குருநாகல்-வெல்லவ பகுதியில் தடியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (25) ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல்-வெல்லவ பகுதியில் தடியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (25) ஆம் திகதி பொலிஸ் அதிகாரிக்கும் வேறு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் நேற்று (13) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>வெல்லவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 54 வயது அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b18252-557d-4a4d-88a1-b7b32007ce14/26-6a7f148589db0.webp' /></p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-index-likely-reach-level-in-seven-districts-1786711016"></link>
            <id>https://tamilwin.com/article/heat-index-likely-reach-level-in-seven-districts-1786711016</id>
            <summary type="text">ஏழு மாவட்டங்களின் பல பகுதிகளில் பகல் நேரத்தில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு &#039;எச்சரிக்கை&#039; நிலைக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏழு மாவட்டங்களின் பல பகுதிகளில் பகல் நேரத்தில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை' நிலைக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
</p><p>
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், பகல் நேரங்களில், குறிப்பாக வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடும்போது, ​​எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07420a45-816d-4f37-b561-7b1effe5096e/26-6a7f102550049.webp' /></p><p>நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:19:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச மருத்துவமனைகளில் 25,000 நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில்.. வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/25-000-heart-patients-face-surgery-delays-1786708738"></link>
            <id>https://tamilwin.com/article/25-000-heart-patients-face-surgery-delays-1786708738</id>
            <summary type="text">அரச மருத்துவமனைகளில்&amp;nbsp;இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;25,000இற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச மருத்துவமனைகளில்&nbsp;இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>25,000இற்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் அவர்களால் இதய அறுவை சிகிச்சைகள், பிற முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தச் சூழ்நிலையின் மிகவும் தீவிரமான அம்சமாக, சில சமயங்களில் இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>அவசர சிகிச்சைகள்..&nbsp;</h2><p>உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருப்பது நோயாளிகளின் உயிருக்குக் கடுமையான ஆபத்தை விளைவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/684cf30f-5a00-40c0-90b7-c5fb2345ab85/26-6a7f1018cdd44.webp' /></p><p>
</p><p>
இந்த நெருக்கடி இதய அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் உரியதல்ல, மாறாக முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்கும் நீண்ட காத்திருப்போர் பட்டியல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>
மருத்துவ மற்றும் குடியுரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவரான சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ, தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவுள்ள சிகிச்சையை மேற்கொள்ள வசதியில்லாத ஏராளமான நோயாளிகள் அரச மருத்துவமனை அமைப்பையே சார்ந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டுகிறார்.</p><p>
</p><p>
அதன்படி, தனியார் துறையில் அவசர சிகிச்சை பெற வசதி உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், பொருளாதாரச் சிரமங்கள் உள்ள நோயாளிகள் நீண்ட காலம் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டியிருப்பது, சுகாதாரத் துறையில் சமத்துவம் தொடர்பான சிக்கல்களையும் எழுப்புகிறது.</p><p></p><h2>நோயாளிகளின் நிலைமை&nbsp;</h2><p>

காத்திருப்போர் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் ஏற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய தேவை விரைவாக எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/866128ba-07d7-489b-b5c9-dcbeaee012c1/26-6a7f1019a203e.webp' /></p><p>
</p><p>
இந்தச் சூழ்நிலைக்கு ஒரு குறுகிய காலத் தீர்வாக, அரசாங்க மருத்துவமனைகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நோயாளிகள், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரசாங்க மருத்துவமனைகளில் தினசரி செய்யப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் சேவைகளை மேலும் பெறவும், கூடுதல் சேவைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்குக் கூடுதல் படிகள் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:09:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி வரிகள் மீதான கூடுதல் கட்டணம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/surcharge-imposed-on-vehicle-import-duties-1786710954"></link>
            <id>https://tamilwin.com/article/surcharge-imposed-on-vehicle-import-duties-1786710954</id>
            <summary type="text">வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;நாளை (15.08.2026) வரை விதிக்கப்பட்டிருந்த இந்த 50% கூடுதல் கட்டணம் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நாளை (15.08.2026) வரை விதிக்கப்பட்டிருந்த இந்த 50% கூடுதல் கட்டணம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, நாளை முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு இந்நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ள நீடிப்பு</h2><p>

1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ பிரிவின் கீழ் ஜனாதிபதிக்களிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a412c5ed-6adf-4fa0-b3e0-e3418923d7d5/26-6a7f12c83ed9d.webp' /></p><p> </p><p>

இருப்பினும், கடந்த மே மாதம் 15 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கடன் கடிதங்கள் (LC) திறக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strong-winds-warning-meteorology-1786710986"></link>
            <id>https://tamilwin.com/article/strong-winds-warning-meteorology-1786710986</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் கங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரிக்கக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அதற்கமைய, அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

இதன் காரணமாக கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b41e47a-bfa1-4cd3-b91e-35a0c478636f/26-6a7f0f62266d0.webp' /></p><p> </p><p>

அத்துடன், நாளை (15) சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்பதுடன், மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T12:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைந்து போன 19 ஆயிரம் புத்தகங்கள் - நிறுவனத்திடம் நஷ்டத்தை மீட்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-into-the-missing-stock-of-textbooks-1786709734"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-into-the-missing-stock-of-textbooks-1786709734</id>
            <summary type="text">கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளராக மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான நாலக களுவெவ தெரிவித்துள்ளார். </p><p>

நிகழ்ச்சிக்கு பின்னர் இன்று(14.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>
விநியோகத்தில் நடந்த தவறு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 


காணாமல் போன பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள், ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டு வந்தன.
</p><p>
தற்போது தொலைந்து போனதாக கூறப்படும் புத்தகங்களின் மதிப்பை அந்த நிறுவனத்திடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7858555-b4bf-4e03-8664-1a4772a44af2/26-6a7f0e1f1717a.webp' /></p><p> </p><p>

கடந்த 12ஆம் திகதியன்று, கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர், திணைக்களத்தால் வழங்கப்பட்ட சுமார் 800,000 ரூபாய் மதிப்புள்ள பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுப் புத்தகங்கள், திட்டமிட்டபடி விநியோக மையத்தில் ஒப்படைக்கப்படவில்லை என்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>
காணாமல் போன 19 ஆயிரம் புத்தகங்கள்</h2><p>
 கல்வி அமைச்சின் கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட, ஒன்றாம் வகுப்புக்கான 19,892 தமிழ் செயல்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் உரிய விநியோக மையத்திற்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்தப் பாடப் புத்தகங்களைக் கொண்டு செல்வதற்காக கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் போக்குவரத்து நிறுவனம், மே 4 ஆம் திகதி புத்தகங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதியைப் பெற்றிருந்தபோதிலும், அவை விநியோகிக்கப்பட வேண்டிய கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 மையங்களுக்குத் திட்டமிட்டபடி புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை என்றார்.


</p>]]></content>
            <updated>2026-08-14T12:47:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனக்கு அறவே பிடிக்காத விடயத்தை செய்ய ஜனாதிபதியே வற்புறுத்தினார்! கே.டி.லால்காந்த பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-k-d-lalkantha-election-statement-1786703047"></link>
            <id>https://tamilwin.com/article/minister-k-d-lalkantha-election-statement-1786703047</id>
            <summary type="text">எதிர்காலத்தில் கண்டி மாவட்டத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். 

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் கண்டி மாவட்டத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். </p><p>

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>ஜனாதிபதியின் வற்புறுத்தல்</h2><p> 

மேலும் தெரிவிக்கையில், தாம் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறினார். 

அத்துடன் நாட்டிற்கு சேவை செய்ய, ஒருவர் நாடாளுமன்றத்திற்குச் சென்று அரசியல் செய்ய வேண்டும். ஜனாதிபதி என்னை அவ்வாறு செய்ய வற்புறுத்தியதால், இந்த முறை நான் கண்டியில் வாக்குகள் கோரினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc3ce47-8829-4105-a5fd-5a7ae1a9eabf/26-6a7ef2146418e.webp' /></p><p> </p><p>

எனக்கு வாக்குகள் கேட்கும் வேலை அறவே பிடிக்காது. எனவே, எதிர்காலத்தில் கண்டி மாவட்டத்தில் வாக்குகள் கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் நான் கண்டிக்கு சேவை செய்வேன். 

நான் இந்த கட்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன். இந்த கட்சியை விட்டு எத்தனை பேர் வெளியேறியிருக்கிறார்கள்? நாங்கள் நகரக்கூட இல்லை.</p><h2>அரசாங்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தல்</h2><p> அதனால் தான் எங்கள் அரசாங்கம் இந்த நாட்டை தொடர்ந்து ஆண்டு வருகிறது. 

குறைந்தபட்சம் எங்களுக்கு சவால் விட யாராவது வரும் வரை, வேறு வழியில்லை. சரியான எதிர்க்கட்சி இருக்கிறதா? எனவே, இந்த நாட்டில் எங்கள் அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/834b3ec2-3844-4505-9b78-61dc4ec41f63/26-6a7ef2153a547.webp' /></p><p> </p><p>சில சமயங்களில் ஜனாதிபதி மாறலாம். 

அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகள் மாறக்கூடும். ஆனால் எங்கள் அரசாங்கம் மாறாது. அதுதான் உண்மையான நிலைமை. </p><p>கோட்ட எல்லை நிர்ணயப் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவோம். 

எதிர்காலத்தில், இந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவோம் என கூறினார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8qGJOw0ArPc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-14T12:38:23+00:00</updated>
        </entry>
    </feed>
