<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-30T15:36:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ வான்வெளியை மீறி போலந்து நிலப்பரப்பில் விழுந்த ரஷ்ய ஏவுகணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russian-missile-breaches-nato-airspace-lands-1785422943"></link>
            <id>https://tamilwin.com/article/russian-missile-breaches-nato-airspace-lands-1785422943</id>
            <summary type="text">உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தீவிர தாக்குதலின் போது, ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று
போலந்நேட்டோவின் வான்வெளியை மீறி அந்நாட்டு நிலப்பரப்பில் விழுந்துள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தீவிர தாக்குதலின் போது, ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று
போலந்நேட்டோவின் வான்வெளியை மீறி அந்நாட்டு நிலப்பரப்பில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான போலந்தின் கிழக்கு பிராந்தியத்தில்
அமைந்துள்ள லூப்லின் உள்ளிட்ட பகுதிகளில், அதிகாலையில் வான்வழித் தாக்குதல்
எச்சரிக்கை சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டன.
</p><p>
சைரன் ஒலிகள் ஒலிப்பதற்கு முன்பாக, குறைந்த உயரத்தில் விமானங்கள் பறப்பது
போன்ற பயங்கர சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் விவரித்துள்ளனர்.</p><p></p><h2>ஏவுகணைத் தாக்குதல்</h2><p>

​உக்ரைன் எல்லையோரத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து,
போலந்து இராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது போர் விமானங்களை
வான்வெளியில் பறக்கவிட்டதோடு, தரைவழி வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தயார்
நிலையில் வைத்தது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77cfb56a-e842-496b-9a0f-b8e44ac04a32/26-6a6b66877b537.webp' /></p><p>போலந்து எல்லைக்குள் நுழைந்த ஏவுகணை ஒரு காலியான பகுதியில் விழுந்ததாகவும்,
இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள்
தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், நேட்டோ வான்வெளியை மீறி ரஷ்ய ஏவுகணை போலந்து எல்லைக்குள் விழுந்த
சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T14:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்த தேசப்பிரிய அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pc-election-must-conducted-says-mahinda-1785423477"></link>
            <id>https://tamilwin.com/article/pc-election-must-conducted-says-mahinda-1785423477</id>
            <summary type="text">இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
</p><p>இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் அரசாங்கத்திடம் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளார்.</p><p>மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் சிறந்த முறையில் இயங்குவதாக சிலர் கூறிய போதிலும் அது யதார்த்த பூர்வமானது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/696fec53-cf9f-4129-b8a4-509d04fed4e1/26-6a6b66771da52.webp' /></p><p>
</p><p>அரச அதிகாரிகள் நிர்வாகம் செய்யும் போது அவர்கள் மக்களுக்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டிய அவசியம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>எனவே நாட்டின் மக்களுக்கு நேரடியாக பொறுப்பு சொல்லக்கூடிய வகையில் மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
</p><p>மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி மாகாணசபைகள் இயங்குவது ஓர் குற்றமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
மாகாண சபை தேர்தலை நடத்தாது விட்டால் அது நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை உள்ளூராட்சி மன்றங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்க முடியும் என்ற நிலையை உருவாக்குமல்லவா என கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி உலக ஜனநாயக தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதாகவும் அந்த திகதியிலாவது அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை எப்போது எந்த முறையில் நடத்துவது என்பதை அறிவிக்க வேண்டுமென மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T14:58:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-heat-ravages-germany-9-800-dead-so-far-1785417709"></link>
            <id>https://tamilwin.com/article/severe-heat-ravages-germany-9-800-dead-so-far-1785417709</id>
            <summary type="text">தற்போது ஜேர்மனியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த திணைக்களம் இன்று (30)...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது ஜேர்மனியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>குறித்த திணைக்களம் இன்று (30) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>&nbsp;இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வெப்பநிலை</h2><p>
</p><p>
 

அந்நாட்டில் ஒரு வாரத்தின் சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை விட அதிகரித்ததன் காரணமாக, இந்த மரணங்களின் சதவீதம் வேகமாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f9bb9c-cdb5-4c95-b958-11db14b86fcc/26-6a6b5fcdb750b.webp' /></p><p>
</p><p>
 

அதேவேளை, வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் எல்லையைத் தாண்டக்கூடும் என்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U37ol8F6CBM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-30T14:35:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் சிக்கிய இரத்மலானை சைமா..! கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-imran-s-financial-affairs-are-in-tatters-1785421247"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-imran-s-financial-affairs-are-in-tatters-1785421247</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரத்மலானை சைமா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் என பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரத்மலானை சைமா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் என பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

அத்துடன், கெஹல்பத்தாரா பத்மே மலேசியாவில் பதுங்கியிருக்கவும் அவர் உதவியதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>

இரத்மலானை சைமா உட்பட மூவர் கைது</h2><p>

மலேசிய பொலிஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில், தனுஷ்க கௌசல்யா என்ற இரத்மலானை சைமா உட்பட மூன்று பேரை இலங்கை பொலிஸார் குழு ஒன்று அண்மையில் கைது செய்துள்ளது.</p><p> 

இது தொடர்பான விசாரணையில், ​​கஞ்சிபானி இம்ரான் என்ற குற்றவாளியின் அனைத்து நிதி விவகாரங்களையும் அவரே கையாண்டது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f06b7b9-72af-4041-8477-f7b35772771c/26-6a6b5e68e565e.webp' /></p><p> </p><p>

சைமா என்ற சந்தேக நபர், கஞ்சிபானி இம்ரானின் சமூக ஊடக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்துள்ளார். </p><p>

இதற்கமைய, அவரது குரல் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கும் அவரே பொறுப்பு என்பது தெரியவந்துள்ளது.</p><h2>

கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்</h2><p>
கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில், கடந்த ஆண்டு கெஹல்பத்தாரா பத்மே மலேசியாவில் பதுங்கியிருக்க அவர் வழிவகுத்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7783a75-4999-4550-bb49-f64c148496dd/26-6a6b5e69cba4a.webp' /></p><p>
</p><p>
தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குடு அஞ்சுவின் நெருங்கிய நண்பராகவும் அவர் சில காலமாக இருந்து வந்ததாகவும், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் கைகோர்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

சைமாவைக் கொல்ல குடு அஞ்சு திட்டமிட்டிருந்த நிலையில், கஞ்சிபானி இம்ரான் அதுபற்றி சைமாவிடம் தெரிவித்த பின்னர், அவர் கஞ்சிபானி இம்ரானுடன் நட்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், அவர் மலேசியாவிற்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி: கனடாவிலிருந்து மில்லியன் கணக்கான பரல்களுடன் புறப்பட்ட எண்ணெய் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strait-of-hormuz-crisis-1785420219"></link>
            <id>https://tamilwin.com/article/strait-of-hormuz-crisis-1785420219</id>
            <summary type="text">மத்திய கிழக்கின் ஹோர்முஸ் நீரிணை வழியாக மசகு எண்ணெய் விநியோகத்தில்
ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள்
கனடாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கின் ஹோர்முஸ் நீரிணை வழியாக மசகு எண்ணெய் விநியோகத்தில்
ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள்
கனடாவின் “டிஎம்எக்ஸ்” மசகு எண்ணெயைக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன.
</p><p>
கப்பல் கண்காணிப்பு நிறுவனமான “கெப்லர்” வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம்
ஆண்டிற்குப் பின்னர் கனடாவிலிருந்து ஜப்பானுக்கு முதன்முறையாக மசகு எண்ணெய்
ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.</p><p></p><h2>

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய்</h2><p>

எக்ஸான் மொபில் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட “ஃப்ரீடம் க்ளோரி” என்ற
கப்பல், 7,50,000 பரல் மசகு எண்ணெயுடன் நேற்று(29.07.2026) வான்கூவர்
துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82ac42c5-20fe-4e83-8f12-90d66029bdd2/26-6a6b5a52a497f.webp' /></p><p>
</p><p>
ஜப்பானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான “எனியோஸ்” இந்த மசகு
எண்ணெயைக் கொள்முதல் செய்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலால் எண்ணெய் விலைகள்
உயர்ந்ததைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பை
டோக்கியோ நிர்வாகம் 1.3 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதமாகக் குறைத்துள்ளது.</p><p>

இந்த மோதல் வெடிப்பதற்கு முன் வரை, ஜப்பான் தனது மசகு எண்ணெய் தேவையில் 90
சதவீதத்திற்கும் அதிகமான தொகையை ஹோர்முஸ் நீரிணை வழியே இறக்குமதி செய்து
வந்தது.
</p><h2>
போர் பதற்றத்தால் அதிகரித்த எண்ணெய் விலை</h2><p>
தற்போது போர் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டதால், ஜப்பான், இந்தியா, மலேசியா
மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கனடாவிலிருந்து மசகு எண்ணெயைக்
கொள்முதல் செய்ய தீவிரமாக இறங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/185ac4cc-430d-428c-b80b-109afa4b4f86/26-6a6b5a5371915.webp' /></p><p>

கனடாவின் “ட்ரான்ஸ் மவுண்டன்” குழாய் வழித் திட்டம் மூலம் நாளொன்றுக்கு
8,90,000 பரல் மசகு எண்ணெய் கொண்டு செல்லப்படுகின்றன.
</p><p>
இந்த ஆண்டில் வான்கூவரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த மசகு எண்ணெய்யில் 77
சதவீதம் ஆசிய நாடுகளுக்கே சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T14:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை கட்டுமான மோசடியில் முரண்பட்ட ஆதாரங்கள் - பழைய மாணவர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflicting-evidence-in-school-construction-scam-1785419257"></link>
            <id>https://tamilwin.com/article/conflicting-evidence-in-school-construction-scam-1785419257</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக, கல்லூரியின் பழைய மாணவர் சதாசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக இன்று (30.07.2026) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>


விசாரணையில் வெளியான மோசடிகள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

பாடசாலையில் காணப்பட்ட பழமையான மதிலை இடிப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில், சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் இடிக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த மதிலை அமைப்பதற்காக பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும், முறைகேடான வகையிலும் பெறப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, வலிகாமம் கல்வி வலயத்தினால் இரண்டு கடிதத் தலைப்புகளில் கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒன்றில் திகதி குறிப்பிடப்படாமல் உயர் அதிகாரியின் கையொப்பம் இடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a137109-9f61-4c72-b260-7d2a12bb5525/26-6a6b56709205f.webp' /></p><p>

அத்துடன், குறித்த மதிலை மீளப் புனரமைப்பதற்கு மாத்திரமே வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், யாருடைய தூண்டுதலின் பேரில் மதில் முழுமையாக இடிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது.

மேலும், தற்போது இடம்பெற்ற 150ஆவது ஆண்டு விழாவுக்கான நிதி, பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.</p><h2>

போதிய அனுமதிகள் இன்றி கட்டப்பட்ட மதில்</h2><p>
எமது முறைப்பாடுகள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை முறையான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.</p><p>

குறித்த மதிலை கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே, தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதியை வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0aa632d-d755-4803-9372-d7ddd8bbdef8/26-6a6b5671588d0.webp' /></p><p>
</p><p>
ஆகவே, குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதுடன், புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய அனுமதிகள் இன்றி தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவர்கள் மீது வெறுமனே நடவடிக்கை எடுப்பது மாத்திரம் போதாது. </p><p>மாறாக, இதுபோன்ற தவறுகள் இனிமேல் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்றார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mikhvven7U8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண பங்குகளை தனியாருக்கு விற்கும் FIFA திட்டம்..! AFC தலைவர் கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-plans-sell-world-cup-shares-private-investors-1785418045"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-plans-sell-world-cup-shares-private-investors-1785418045</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் FIFA அமைப்பின் திட்டத்திற்கு ஆசிய கால்பந்து
சம்மேளனத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் FIFA அமைப்பின் திட்டத்திற்கு ஆசிய கால்பந்து
சம்மேளனத்தின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக தங்களைக் கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்தது "முற்றிலும்
ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்றும் அவர் குற்றம் சாடியுள்ளார்.

FIFA அமைப்பு தனது உலகக் கிண்ணத் தொடர் மற்றும் பிற தொடர்களை நடத்துவதற்காக
20 பில்லியன் டொலர் மதிப்பிலான வணிக துணை நிறுவனத்தை உருவாக்கத்
திட்டமிட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் (28.07.2026) அறிவித்தது.</p><p></p><p> </p><p> 


இந்த அறிவிப்பு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஆசிய கால்பந்து
சம்மேளனம் உள்ளிட்ட பிராந்திய கால்பந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.</p><h2>

FIFA அமைப்பின் திட்டத்திற்கு உறுப்பு நாடுகள் மறுப்பு</h2><p>
இது குறித்து 47 உறுப்பு நாடுகளுக்கு ஷேக் சல்மான் எழுதியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது,
"இந்தத் திட்டம் குறித்து எந்தவொரு நிலையிலும் ஆசிய கால்பந்து சம்மேளனத்துடன்
FIFA அமைப்பு கலந்தாலோசிக்கவில்லை என்பதை மிகுந்த கவலையுடனும் ஏமாற்றத்துடனும்
சுட்டிக்காட்டுகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec26f04-5763-49e8-b0dd-b4f84d4dfd4e/26-6a6b51becdf8c.webp' /></p><p> </p><p>

மேலும், இத்திட்டத்தின் நிதி, சட்டம் மற்றும் நிர்வாக
ரீதியான எந்தவொரு விரிவான விளக்கத்தையும் FIFA வழங்கவில்லை. FIFAவின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, பிராந்திய கால்பந்து
கூட்டமைப்புகளின் ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய
அடிப்படைத் தூண்களையே தகர்ப்பதாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளது. </p><p>

எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதிக்குள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால்,
ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் 40 மில்லியன் டொலர் வழங்கப்படும் என FIFA 
தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ அறிவித்திருந்தார்.</p><p>

இருப்பினும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்திற்கு மிகக் குறைந்த
அவகாசம் வழங்கப்பட்டிருப்பது வியப்பளிப்பதாகவும், FIFAவுடன் மேலும்
பேச்சுவார்த்தை நடத்தும் வரை உறுப்பு நாடுகள் இந்த திட்டம் தொடர்பில் எந்தவொரு
முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் ஷேக் சல்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T13:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்துக்கு வெளியே வந்து நாமல் ராஜபக்ச எம்.பி. ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-obsession-with-not-coming-out-of-court-1785415908"></link>
            <id>https://tamilwin.com/article/namal-obsession-with-not-coming-out-of-court-1785415908</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின்
அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அதிகாரப் போதையில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின்
அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அதிகாரப் போதையில்
மூழ்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டினார்.
</p><p>
கொழும்பு புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (30.7.2026) முன்னிலையான பின்னர்,
நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தரைமட்டத்தின் உண்மையான ஆழம் புரியாமல் உயரத்தில் பறக்கும் இந்த அரசாங்கம்,
பாய்ந்து பார்க்கும் போது தான் எவ்வளவு பெரிய பள்ளத்தில் வீழ்ந்திருக்கின்றோம்
என்பதைப் புரிந்துகொள்ளும். அவ்வாறு விழுந்து அடிபட்டு விநாசமடைவதற்கே அரசாங்கம்
முற்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
நாட்டின் நீதித்துறை மீது தமக்கு இன்னமும் முழுமையான நம்பிக்கை உள்ள போதிலும்,
தற்போதைய பொலிஸ் கட்டமைப்பு முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டு 'ஜே.வி.பி
பொலிஸாக' அல்லது 'பலவத்தை பொலிஸாக' செயற்படுவதால் பொலிஸார் மீது எவ்வித
நம்பிக்கையும் இல்லை என்றார்.
</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் திட்டம் குறித்துச்
சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்து அரசமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது
வரலாற்றுப் பிழையாகும். இத்தகைய நபர்களை மையமாகக் கொண்ட திருத்தங்களால்
நாட்டிற்கு எந்தப் பயனும் ஏற்பட்டதில்லை.
</p><p>
நாட்டில் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடி, அசாத்தியமான வரிச்சுமை மற்றும்
விலை உயர்வால் திண்டாடி வருகின்றனர். விவசாயிகள் மற்றும் மீனவர்களும் கடுமையான
வாழ்வாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் அன்றாடப்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அரசு தங்களின் உத்தேச
அரசமைப்புத் திருத்தங்கள் மற்றும் அதிகார மமதையில் மட்டுமே கவனம்
செலுத்துகின்றது என்றார்.</p><p></p><p>
</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>
சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாவை 'என்.ஆர் கன்சல்டன்சி'
நிறுவனத்தில் முதலீடு செய்து பணச்சலவையில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட
நால்வருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு தலைமை நீதிவான்
முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
2015ஆம் ஆண்டு 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க
அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>

இரண்டு தனியார் வங்கிக் கணக்குகளைப் பரிசீலித்து விவரங்களைப் பெற
வேண்டியுள்ளதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கால அவகாசம் கோரியதையடுத்து,
வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் 29ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கில் பிணையில் உள்ள நாமல் ராஜபக்ச, நித்யா சேனாதி சமரநாயக்க, சுஜானி
போகொல்லாகம மற்றும் சுதர்ஷன பண்டார கணேகொடை ஆகிய நால்வரும் இன்று
நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.&nbsp;</p><p>அத்துடன், 'கவர்ஸ் கோர்பரேட் சர்வீசஸ்'
நிறுவனத்தின் மூலம் முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட 125 மில்லியன் ரூபாவைப்
பயன்படுத்திப் பங்குகளைக் கொள்முதல் செய்ததாகச் சட்டமா அதிபரினால் கொழும்பு
மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு நிதிச் சலவை தடுப்பு வழக்கும்
நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-30T13:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியக் கடல் பகுதியில் தொடரும் ஈரானின் மசகு எண்ணெய் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-s-crude-oil-sales-continue-malaysian-waters-1785415773"></link>
            <id>https://tamilwin.com/article/iran-s-crude-oil-sales-continue-malaysian-waters-1785415773</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகைகளையும் மீறி,
மலேசியக் கடலோரப் பகுதிகளில் ஈரானிய மசகு எண்ணெய் விற்பனை தொடர்வதாக கடல்சார் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகைகளையும் மீறி,
மலேசியக் கடலோரப் பகுதிகளில் ஈரானிய மசகு எண்ணெய் விற்பனை தொடர்வதாக கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த சனிக்கிழமை, ஈரானின் 'ஹியூமானிட்டி' என்ற பிரம்மாண்ட மசகு எண்ணெய்
கப்பல், மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணைகளைக் கடந்து மலேசியாவின்
தென்கிழக்குக் கடற்பகுதிக்கு வந்தடைந்தது.
</p><p>
மலேசியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் அமைந்துள்ள சர்வதேச
கடல் எல்லைப் பகுதியான 'EOPL' என்ற இடத்தில் இக்கப்பல் நங்கூரமிட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவின் தடை</h2><p>
</p><p>
அங்கு காத்திருக்கும் இடைத்தரகர் கப்பல்களுக்கு 'கப்பலிலிருந்து கப்பலுக்கு'
எண்ணெயை மாற்றி விநியோகிப்பதற்காகவே இந்தக் கப்பல் அமைப்பை முடக்கியுள்ளதாகக்
கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91253b04-a103-4f77-b8a1-934880324163/26-6a6b4d48b0148.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு மாற்றப்படும் மசகு எண்ணெய் பெரும்பாலும் சீனாவிற்கே கொண்டு
செல்லப்படுகிறது.</p><p>பல தசாப்தங்களாகவே, அமெரிக்காவின் தடைக்குள்ளான ஈரான், ரஷ்யா மற்றும் வெனிசுலா
ஆகிய நாடுகளின் எண்ணெய் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் ஒரு மறைமுகச்
சந்தையாக இந்தப் பகுதி செயல்பட்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T13:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பின்னணியில் இருந்த இரகசிய திட்டங்கள் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-1785415662"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-1785415662</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், அந்த சமயத்தில் அங்கு பணியாற்றிய சிறை அதிகாரி ஒருவர் கூறிய விடயங்களை ஊடகத்திலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், அந்த சமயத்தில் அங்கு பணியாற்றிய சிறை அதிகாரி ஒருவர் கூறிய விடயங்களை ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>


இது தொடர்பான விசாரணைகள் இன்று(30.07.2026) நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் இடம்பெற்ற போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் இடம்பெற்ற வேளையில், பிரதம சிறை அதிகாரியாக இருந்த விக்ரம ஜயந்த குமாரவிடம், அந்த சமயத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் சுமார் 3 மணித்தியாலங்கள் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c01f1c3d-8080-4e60-998c-0fa33fe7ae85/26-6a6b487288e46.webp' /></p><p>


சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர், பிரதம சிறை அதிகாரி அளித்த சாட்சியத்தில் தேசியப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.</p><h2> 

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு</h2><p>

அந்தத் தகவல்களை வெளியிடுவது நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதால், அந்தச் சாட்சியத்தின் உள்ளடக்கங்களை எந்த ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf99642a-bf9d-4fee-be67-b1e4ed208ca1/26-6a6b487376568.webp' /></p><p>
</p><p>
தொடர்புடைய சாட்சியங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், வெலிக்கடை சிறையிலிருந்து நீர்கொழும்பு சிறைக்கு வந்த 89 சிறை அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் குறித்தும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Imbi17elPMY" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T12:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாக தொடரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-mullaitivu-1785412616"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-mullaitivu-1785412616</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது
பூர்வீக காணிகளை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது
பூர்வீக காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இரண்டாவது கட்டமாக
முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (30.07.2026) 37ஆவது
நாளை எட்டியுள்ளது.
</p><p>கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக
வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய
வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.</p><p></p><h2>போராட்டம் முன்னெடுப்பு</h2><p>
</p><p>தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி
உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p>தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை
உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான
கோரிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05f9ccd3-9aae-4624-bff0-d01e1e211776/26-6a6b471c5578f.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை
அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில்,
போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T12:44:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில்லாமல் அவதிக்குள்ளாகும் வவுனியா வடக்கு பிரதேச மக்கள் - ரவிகரன் எம்.பி கொடுத்த வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-of-vavuniya-north-area-suffer-without-roads-1785413834"></link>
            <id>https://tamilwin.com/article/people-of-vavuniya-north-area-suffer-without-roads-1785413834</id>
            <summary type="text">வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாமடு கிராம அலுவலர்
பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், வினாசிகுளம்
பாலத்தையும் நிர்மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாமடு கிராம அலுவலர்
பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், வினாசிகுளம்
பாலத்தையும் நிர்மாணிக்குமாறு அப்பகுதி மக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார்.</p><p> 


இதன்போதே மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>


வீதியில்லாமல் அவதிக்குள்ளாகும் மக்கள்</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாண்டான்குளம் வீதி சீரின்றிக்
காணப்படுவதாலும், அந்த வீதியோடு இணைந்துள்ள வினாசிகுளம் பாலம் இதுவரை நிர்மாணிக்கப்படாமல் காணப்படுவதால் வினாசிகுளம் கிராம மக்கள் பாரிய போக்குவரத்து
இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38e5ba5-f890-45fd-9967-dbd2bedcea25/26-6a6b41474a3e5.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், குறித்த சாண்டான்குளம் வீதியும், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலமும்
சீரின்றிக்காணப்படுவதால் வினாசிகுளம் கிராமத்தில் வசிக்கின்ற 300இற்கும்
மேற்பட்ட குடும்பங்கள் வைத்தியசாலை, பாடசாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைளை
பெறுவதற்கு பாரிய போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக இதன்போது
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டது.</p><p>


அத்துடன், மழைக்காலங்களில் சாண்டான்குளம் வீதியூடான போக்குவரத்து
முற்றாகத் தடைப்படும் நிலையும் காணப்படுவதாகவும், சேனைப்புலவு கிராமத்தினூடாக 4 கிலோமீற்றர் தூரம் சுற்றி, பலத்த
இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து தமது அத்தியாவசிய தேவைகளை
நிறைவேற்றிவருவதாகவும் வினாசிகுளம் கிராமமக்கள் ரவிகரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 குறித்த வினாசிகுளம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்
பெரியகுளம், மாமடு, பழம்பாசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பலத்த
போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். </p><p>

குறிப்பாக விவசாயத்திற்குரிய
உள்ளீடுகளைக் கொண்டுவருவதிலும், அறுவடைகளை எடுத்துச் செல்வதிலும் பாரிய
போக்குவரத்து நெருக்கடிகள் காணப்படுவதாக எம்.பியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
</p><h2>


கோவிட் - 19 தொற்று காலப்பகுதி இடைநிறுத்தம்</h2><p>
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் தொடர்ச்சியாக
கோரிக்கை விடுத்துவந்த நிலையில், கடந்தகாலத்தில் அப்பாலத்தினை
நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், நாட்டில் ஏற்பட்ட
கோவிட் - 19 பெருந்தொற்றினைக் காரணங்காட்டி குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள்
இடைநிறுத்தப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a072d4-934e-4c67-b1b6-5ad41e5561cd/26-6a6b4148255f7.webp' /></p><p> 


எனவே சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்புச்செய்வதுடன், வினாசிகுளம்
பாலத்தினையும் நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>

இந்நிலையில் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், மக்களின் குறைபாடுகளையும்
கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வீதியைச்
சீரமைப்பது தொடர்பிலும், வினாசிகுளம் பாலத்தினை நிர்மானிப்பது தொடர்பிலும்
தம்மால் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். 



மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கள விஜயத்தின் போது, 
வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான செ.சுசீலன், த.தனுசன், இலங்கைத்
தமிழசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளைச் செயலாளர் அமலன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T12:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பு விதிகளை அப்பட்டமாக மீறி நீதித்துறையைச் சீரழிக்க அரசு முயற்சி! சந்திம வீரக்கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extension-of-retirement-age-for-judges-1785412621"></link>
            <id>https://tamilwin.com/article/extension-of-retirement-age-for-judges-1785412621</id>
            <summary type="text">நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும்
பாதிக்கும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று முன்னாள்
அமைச்சரும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும்
பாதிக்கும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று முன்னாள்
அமைச்சரும் சட்டத்தரணியுமான சந்திம வீரக்கொடி குற்றம் சாட்டினார்.</p><p>

கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை
அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர்
மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p> "இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே மக்கள் தற்போதைய அரசுக்கு
ஆணையளித்தனர். இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப்
பலத்தைப் பெற்றுக்கொண்டது.</p><p></p><h2>சரியான அணுகுமுறை</h2><p> </p><p>எனினும், மக்கள் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி,
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் அரசமைப்புத் திருத்தம்
ஒன்றைக் கொண்டுவர அரசு தீர்மானித்துள்ளது. </p><p>இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும்
பெறப்பட்டு, மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கு
அரசமைப்பில் இடமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407a2b84-4dd1-4ad7-a31b-528eed552a3e/26-6a6b3d1fb2b65.webp' /></p><p> </p><p>இவ்வாறான திருத்தங்களுக்குப் நாடாளுமன்றத்தில் மூன்றில்
இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் சூழலில்,
நீதிபதிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் அரசு ஏன் செயற்பட வேண்டும்?

முன்னாள் பிரதம நீதியரசர்கள் 10 பேர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்திலும்,
அரசமைப்புத் திருத்தங்களை கடந்த காலத்துக்குப் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்த முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அரசமைப்பின்படி ஓய்வுபெறும் வயது 65 என
இருக்கும்போது, 67 வயது வரை பதவியில் நீடிக்க அனுமதிப்பது பல சட்ட ரீதியான
கேள்விகளை எழுப்புகின்றது.</p><p>
வழக்குகளை விரைவுபடுத்துவதற்காகவே இந்தச் சேவைக்கால நீடிப்பு எனக்
கூறப்பட்டாலும், பெரும்பாலான வழக்குகள் நீதிவான் மற்றும் மாவட்ட
நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f650e38d-3452-428c-92a1-8acb880d4394/26-6a6b3d20691ee.webp' /></p><p> எனவே, அந்த நீதிமன்றங்களுக்குத் தேவையான
உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே சரியான அணுகுமுறையாகும்.
</p><p>
இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மட்டுமன்றி, சர்வதேச
சட்டத்தரணிகள் அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. </p><p>பொதுமக்கள், நீதிபதிகள்
அல்லது சட்டத்தரணிகள் யாரும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை.

எனவே, அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, அரசமைப்பு விதிகளை மதித்து,
நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதுகாக்க முன்வர
வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T12:02:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் தமிழ் அரசியல்வாதிகள் - தீர்வு தருவதாக கூறிய அநுர எங்கே..! பதில் கிடைக்காத தொடர் கேள்விகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-politicians-languishing-in-jail-1785412374"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-politicians-languishing-in-jail-1785412374</id>
            <summary type="text">தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என
சமூக நீதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என
சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய
அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவரால் இன்று(30.07.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2> 


தமிழர்கள் மீதான இனவாதம்</h2><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

"அரசியல் கைதிகளை என்று எவரும் இல்லை" என சிங்கள பௌத்த அரசியல் நிலைப்பாட்டில்
நின்று தற்போதைய அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அண்மையில் (22/7)
நாடாளுமன்றத்தில் கூறியதோடு அரசியல் கைதிகள் என்பதற்கான பொருள் கோடல்
சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் இல்லை என நியாயம் கற்பித்திருப்பது தமிழர்களின்
அரசியல் அபிலாசைகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் நிலைப்பாட்டினால்
தொடர்ந்தும் தண்டிக்கப்படும் குற்றம் என்பதை நிரூபிக்கவே அன்றி
வேறொன்றுமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fcb27be-a8d2-4ab0-bdb7-e6c8b558a46d/26-6a6b3bc178b6f.webp' /></p><p> </p><p>இந்நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் மதிக்காது 1972
மற்றும் 1978 அரசியல் யாப்புகள் கொண்டு வந்ததோடு தமிழ் தேச அரசியலை
அழிக்கவும், ஒட்டுமொத்த தமிழர்களையும் (சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு
கைகோர்த்தவர்கள் தவிர) அனைவரையும் பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள் என
அடையாளப்படுத்தப்பட கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தினை தொடர்ந்தும்
பாதுகாத்துக் கொண்டு சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் அரசியல் கைதிகள் தொடர்பாக
பொருள் கோடல் இல்லை என்பது அரசியல் கேளிக்கூத்தாகும்.
</p><p>
யுத்தத்தினை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என மார்தட்டும் மகிந்த
ராஜபக்சவின் ஆட்சி காலத்திலும், இறுதி யுத்த நாட்களில் நானே நாட்டின் தலைமை
பொறுப்பிலிருந்தேன் எனக் கூறும் மைத்திரியின் ஆட்சிக்காலத்திலும் அரசியல்
கைதிகள் சமூகமயமாக்கப்பட்டனர். </p><p>

அது அவர்களின் அரசியல் தேவைக்காகவே அன்றி
தமிழர்களின் அரசியல் நலனுக்காக அல்ல என்பதையும் கூற விரும்புகின்றோம்.
</p><p>
இறுதியாக தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னர் தமிழர் தாயகத்தில் தனது
தேர்தல் வாக்கு வேட்டை மேடைகளில் நின்று "நாம் பதவிக்கு வந்தால் அரசியல்
கைதிகளை விடுதலை செய்வோம்" என வாக்குறுதி அளித்து தமிழர்களின் வாக்குகளை
கவர்ந்து பதவியில் அமர்ந்த பின்னர், நீதி அமைச்சர் ஊடாக தனது நிலைப்பாட்டினை
தெரிவிப்பதும் தனதும் தனது அரசாங்கத்தினாலும் நிலைப்பாட்டினை சிங்களவர்களுக்கு
வெளிப்படுத்தவே. இது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்.</p><h2>

சிறையில் வாடும் அரசியல் கைதிகள்</h2><p>




தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை
என்பது வரலாற்று உண்மை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef103ac8-06cf-488d-bee6-5f8bd1b055d2/26-6a6b3bc24c4bf.webp' /></p><p> </p><p>

அரசியல் கைதிகளாக தமிழர்களால் அடையாளப்படுத்தப்பட்டோரின் விடுதலைக்காக தமிழர் தாயகத்திலும், தாயகத்திற்கு வெளியில் கொழும்பு
நகரிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. </p><p>

நாடாளுமன்றத்திலும்
நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் விடுதலைக் குரல்கள் எழுப்பப்பட்டன. அரசியல்
கைதிகள் தமது விடுதலைக்காக சாகும் வரையான உண்ணாவிரத போராட்டங்கள் செய்தும்
எத்தகைய பலனும் கிட்டவில்லை.</p><h2>



ஜனாதிபதியிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை</h2><p>

இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்"ஜனாதிபதி
அநுரகுமாரவிடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கும்பிட்டு கேட்டு
விட்டோம். அதைவிட வேறு எவ்வாறு கேட்பது" என பகிரங்கமாக கூறிய விடயம்
தமிழர்களுக்கு வேதனை அளிக்கின்றது.</p><p>

ரவிகரன் மேற்கூறிய கூற்றினை கூறியதன் மூலம் எதனை எதிர்பார்த்தார்
என்பதைவிட இவ்விடயம் உண்மையாக இருக்குமாயின் அது தமிழர்களுக்கும், தமிழர்களின்
அரசியலுக்கும், அரசியல் கைதிகளுக்கும் பலத்த அவமானமாகும். நாங்கள் கும்பிட
வேண்டும் அவர்களின் காலடியில் விழ வேண்டும் என்பதே சிங்கள பேரினவாதத்தின்
விருப்பமாகும்.

மீண்டும் மீண்டும் கூறுகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a131896-34c0-441a-8b09-20c9b9905e0d/26-6a6b3bc2f1fbf.webp' /></p><p> தமிழர்களின் விடுதலை அரசியல் செயற்பாட்டில்
தம்மை முழுமையாக ஈடுபடுத்தி தற்போதும் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதற்கான ஆக்கப்பூர்வமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கான
சட்ட திருத்தங்களை செய்யுங்கள். </p><p>அரசியல் ரீதியில் போராடி சிறைகளில் நீண்ட
காலம் வாடுவோரை பாதுகாக்கவும் அவர்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும்
பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்கின்றோம்.

உங்கள் அரசியல் தேவைக்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை
நீடிப்பதற்காக எடுக்கின்ற முயற்சிக்குள் சட்டத்துறை அதன் சுயாதீனம் சிக்கி
இருக்கின்ற அவல நிலையினை முழு நாடும் அறிந்ததே. </p><p>

இத்தகைய நிலையிலும் உங்கள்
நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக துடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தமிழ்
மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதன் முன்னோடியாக
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட திருத்தங்களை சடுதியாக மேற்கொள்வது
நாட்டிற்கும் நாட்டின் அரசியல் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல நாட்டின்
சுபீட்சத்திற்கும் வழி வகுக்கும் என்பதையும் கூற விரும்புகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளிகளுக்கு அரசு வெளியிட்ட விசேட அறிவிப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-allowance-be-distributed-to-banks-tomorrow-1785410608"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-allowance-be-distributed-to-banks-tomorrow-1785410608</id>
            <summary type="text">2026 ஜூலை மாதத்திற்கான, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும முதியோர் உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. 

இந்த நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூலை மாதத்திற்கான, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும முதியோர் உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை நாளை(31.07.2026) முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><h2> 

 அஸ்வெசும முதியோர் உதவித்தொகை</h2><p>
இதற்கமைய, அஸ்வெசும நல உதவித் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 621,638 பெரியவர்களுக்காக ரூ. 3,108,190,000 தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39820754-6f05-4b47-b7f5-c083228ae700/26-6a6b3625437b6.webp' /></p><p> </p><p>

அதே போன்று, அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 77,324 பெரியவர்களுக்காக ரூ. 386,620,000 தொகை வரவு வைக்கப்படவுள்ளது.</p><p>

இதன்படி, இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்தத் தொகை ரூ. 3,494,810,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213</id>
            <summary type="text">கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

இவ்வாறான நிகழ்வுகளின் போது போதை மாத்திரைகளை விநியோகிக்கும் இளம் கடத்தல்காரர் ஒருவர், 23,000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் தொகையுடன் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2><b>போதை மாத்திரை விநியோகம்</b></h2><p>கைதான இளைஞரிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய, இந்த போதை மாத்திரைகளும் ஹெரோயினும் நாளாந்தம் இளைஞர், யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக இரகசியமாக வரவழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>இசை நிகழ்ச்சிகளில் நடனமாடும் இளைஞர் யுவதிகளை இலக்காக கொண்டு இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6026ede3-5dd9-4a15-a76d-b04996354a8f/26-6a6acf0c9c639.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த போதை மாத்திரைகள் கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் பல மாகாணங்களுக்கும் விநியோகிப்பதற்காக கடத்தல்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>ஒரு போதை மாத்திரையின் மதிப்பு 100 ரூபாவாகும், எனினும் இக்கூட்டத்தினர் அந்தப் போதை மாத்திரைகளை 200 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்றுள்ளனர். </p><p>இந்த போதை மாத்திரைகளுக்கு மேலதிகமாக, சந்தேக நபரிடமிருந்த சுமார் 800 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-in-mullaitivu-prasanna-kumara-gunasena-1785409265"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-in-mullaitivu-prasanna-kumara-gunasena-1785409265</id>
            <summary type="text">போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனஇன்றைய தினம்(30) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு
விஜயம் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனஇன்றைய தினம்(30) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு
விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.</p><p>அத்துடன் நடைபெறும்
அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார்.
</p><p>
இதன் ஓர் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஒழுங்கமைப்பிலும் பிரதி அமைச்சரின் தலைமையிலும் விசேட கலந்துரையாடல்
மாவட்ட செயலக அரியாத்தை மண்டபத்தில் மு.ப 11.30 மணிக்கு நடைபெற்றது.</p><p></p><h2>கலந்துரையாடல்</h2><p>

மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள
மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5725831d-821b-442e-8e4f-38d1b5c2d739/26-6a6b349541415.webp' /></p><p>
</p><p>
குறித்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் வீதி அபிவிருத்திகள் தொடர்பிலும் பொதுப் போக்குவரத்து மற்றும்
நகரமயமாக்கல் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. </p><p>தொடர்ந்து
எதிர்காலத்தில் மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி தேவைகள்,போக்குவரத்து தேவைகள்
தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லாட்சி காலத்தில் நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிக்கப்படவில்லை - அஜித் பி. பெரேரா ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1785408922"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1785408922</id>
            <summary type="text">நல்லாட்சி அரச காலத்தில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லாட்சி அரச காலத்தில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையே
எடுக்கப்பட்டதே தவிர, அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க எந்தவொரு
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

கொழும்பில் நேற்று (29.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>தீர்மானம் எடுக்கப்படவில்லை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 2015, 2016, 2017 காலப்பகுதியில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக
எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.</p><p> மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும்
உயர்நீதிமன்ற நீதியரசர்கள், நீதிபதிகளின் எண்ணிக்கையே அப்போது
அதிகரிக்கப்பட்டது. நீதிமன்ற முறைமைச் சட்டத்தைத் திருத்தி மேல்நீதிமன்ற
நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தோம்.</p><p> இதற்கு எவரும் எதிர்ப்புத்
தெரிவிக்கவில்லை.

தற்போதைய திருத்தத்தின் குறிப்பிட்ட திகதியைக் கவனிக்கும் போது, இது ஒரு
தனிநபரை இலக்கு வைத்தது என்பது தெளிவாகின்றது. </p><p>தனிநபரை இலக்கு வைத்த
அரசமைப்புத் திருத்தம் எனக் கடுமையான விமர்சனங்கள் எழும்போதே, உயர்நீதிமன்ற
நீதியரசர்கள் மாத்திரமின்றி அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லை
அதிகரிக்கப்படுகின்றது என அரசாங்கம் நியாயம் கூற முற்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c549615-3d84-46a1-8701-5d0049b7edc1/26-6a6b348fb7a56.webp' /></p><h2>தயாரிக்கப்பட்டுள்ள வரைவு</h2><p>
</p><p>
இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நீதி அமைச்சில் இதற்காக எப்போது ஒரு
குழு கூடியது? நாடாளுமன்றத்தின் நீதி விவகார ஆலோசனைக் குழு கூடிப்
பரிந்துரைகளைப் பெற்றதா? இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சந்திப்பதற்கு நேரம்
ஒதுக்குவதற்கு முன்னதாகவே, இந்த வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும்
பெறப்பட்டுள்ளது.</p><p> இந்த விவகாரத்தில் சட்டத்தரணிகள் சங்கம் புறக்கணிக்கப்பட்டமை
ஏன்?

அரசமைப்பின் 107 ஆவது பிரிவில் உள்ள அனைத்து விதிகளும் நீதித்துறையின்
சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட
நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான இந்த விதிகளில் கைவைக்கவில்லை. அவருக்குப்
பின்வந்த எந்தவொரு ஜனாதிபதியும் இதில் தலையிடவில்லை.
</p><p>
நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீரழிக்கும், ஒரு தனிநபரை இலக்கு வைக்கும்,
நீதித்துறை சுயாதீனத்தை இல்லாதொழிக்கும் இந்த அர்த்தமற்ற திருத்தத்தைக்
கொண்டுவரும் பாவச் செயலில் பங்கேற்க வேண்டாம் என நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T11:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கிலங்கையின் தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/theerthotsavam-thanthamalai-murugan-temple-1785407899"></link>
            <id>https://tamilwin.com/article/theerthotsavam-thanthamalai-murugan-temple-1785407899</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு
தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்த
உற்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு
தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்த
உற்சவம் இன்று(30.07.2026) ஆயிரக்கணக்கான முருக பக்தர்களின் அரோகரா
கோசத்திற்கு மத்தியில் இடம்பெற்றது.
</p><p>அதிகாலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதன் பின்பு
ஆலய முன்றலிலே அமைந்துள்ள தீர்த்தக் கேனியில் நாதஸ்வர மேளங்கள் தாளங்கள்
முழங்க தீர்த்தத் திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.</p><p></p><h2>இந்த வருடத்திற்கான திருவிழா நிறைவு</h2><p>


கதிர்காம கந்தன் ஆலயத்திற்கு செல்ல முடியாத முருக பக்தர்கள் சின்னக்
கதிர்காமம் என அழைக்கப்படும் இந்த தாந்தாமலை முருகன் ஆலயத்தில் தங்களது வேண்டுதலை
நிறைவேற்றுவது ஒரு பண்டைய மரபாக இருந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0995cb5f-2b86-47aa-9554-6db5e5c91039/26-6a6b2d2d4ad5e.webp' /></p><p>உற்சவகால பிரதம குரு சிவ ஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய
பிரதம குரு சிவ ஸ்ரீ பு.நவரூபன் குருக்கள் தலைமையில் தினமும் பகல் இரவு
பூஜைகளுடன் 21 நாள் திருவிழாக்கள் நடைபெற்றன.</p><p>



கடந்த 09ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ்ஆலய வருடாந்த திருவிழா
சுவாமி உள்வீதி வெளிவீதி வலம் வருதல் இடம்பெற்று வியாழக்கிழமை ஆலய வளாகத்தில்
அமைந்துள்ள தீர்த்தக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன்
இவ்வருடத்திற்கான திருவிழா நிறைவு பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T11:18:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பொலிஸ் சாவடி மீது ட்ரோன் தாக்குதல்: 11 பொலிஸ் அதிகாரிகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/serious-attack-on-police-station-in-pakistan-1785409553"></link>
            <id>https://tamilwin.com/article/serious-attack-on-police-station-in-pakistan-1785409553</id>
            <summary type="text">பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின்
ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பொலிஸ் சாவடி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின்
ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பொலிஸ் சாவடி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்
தாக்குதலில் குறைந்தது 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். </p><p>

அத்துடன், 28 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்று(29.07.2026) இரவு நிகழ்ந்த இந்த தாக்குதலின் போது, தாக்குதலாளர்கள்
முதலில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட “ட்ரோன்” விமானங்களைப் பயன்படுத்தி
பொலிஸ் சாவடியைத் தாக்கியுள்ளனர்.</p><p></p><p> </p><h2>


11 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு</h2><p>
இதனைத் தொடர்ந்து, சாவடியைச் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பல மணி நேரப் பதிலடித் தாக்குதலில், தாக்குதல்
நடத்தியவர்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகளுடன் விரைந்த உதவி பொலிஸ் அத்தியாட்சகர் தியார் கான் உட்பட 11 பொலிஸார் இந்த மோதலில் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c742dd7c-07cf-4532-a902-6f8da1d132e2/26-6a6b3071b4088.webp' /></p><p> </p><p>

தாக்குதலாளர்கள் மூன்று பொலிஸ் வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், மற்றொரு பொலிஸ்
வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளதாக மாவட்ட பொலிஸ் அதிகாரி முஜாஹித் ஹுசைன்
தெரிவித்துள்ளார். 

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப்
பொறுப்பேற்கவில்லை.</p><p> இருப்பினும், சமீபகாலமாக ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில்
பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பொலிஸாரைக் குறிவைத்துத் தாக்குதல்கள் கணிசமாக
அதிகரித்துள்ளன.
</p><p>
எல்லையோரப் பகுதிகளில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளே இதன் பின்னணியில்
இருப்பதாக பாகிஸ்தான் சந்தேகம் எழுந்துள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T11:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டா மனைவியிடம் 120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சரித் அபேசிங்க- மீண்டும் பிணை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sarith-abeysinghe-back-in-prison-1785408186"></link>
            <id>https://tamilwin.com/article/sarith-abeysinghe-back-in-prison-1785408186</id>
            <summary type="text">பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக இரண்டு நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி சரித் அபேசிங்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக இரண்டு நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி சரித் அபேசிங்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று(30.07.2026) அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>
ஹரக் கட்டா மனைவி கொடுத்த மோசடி வழக்கு</h2><p>

ஹரக் கட்டா என்ற சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல்காரரின் மனைவியிடமிருந்து ரூ. 120 மில்லியன் இலஞ்சம் பெற்றது தொடர்பான ஒரு சம்பவத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரகித் ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு, கடந்த 28ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f5c3f24-cd76-4793-b3e8-6a4ea95255fc/26-6a6b2e2983ba6.webp' /></p><p> </p><p>

இந்த உத்தரவு நேற்றுமுன்தினம்(28.07.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

இதற்கமைய, ரகித் ராஜபக்ச உட்பட இரண்டு சந்தேக நபர்கள் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றியதால், சிறைக் காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது. </p><p>

இருப்பினும், சந்தேக நபரான சரித் அபேசிங்க பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் சிறைக் காவலில் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/k7GCeWHoONA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-30T10:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resolving-land-disputes-through-mobile-services-1785407128"></link>
            <id>https://tamilwin.com/article/resolving-land-disputes-through-mobile-services-1785407128</id>
            <summary type="text">கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலவி வந்த
காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி நடமாடும் சேவை இன்றைய தினம்
(30-07.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலவி வந்த
காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி நடமாடும் சேவை இன்றைய தினம்
(30-07.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>இதன்போது நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பல காணிப்பிணக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டன.</p><p></p><h2>நேரடி தீர்வு</h2><p>&nbsp;மக்களுக்கு தங்களது காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு துரிதமான மற்றும் நேரடி தீர்வுகளை வழங்குவதற்கான இத்தகைய சேவைகள் மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலர்பிரிவு ரீதியாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e46b378-524d-4588-8e5e-b4e248a8f55d/26-6a6b2da85fdf9.webp' /></p><p>

இந் நடமாடும் சேவையில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வடமாகாணக் காணி
ஆணையாளர் இ.குருபரன்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அஜிதா பிரதீபன் ,கண்டாவளை
பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன்,வடமாகாண உதவி காணி ஆணையாளர் விதுசா தினேஸ்
,மாகாணக் காணி ஆணையாளர் திணைக்கள அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள்
உள்ளிட்டோர். கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0dce936-d70d-49fe-9e04-897406d1121f/26-6a6b2da9387fa.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0dce936-d70d-49fe-9e04-897406d1121f/26-6a6b2da9387fa.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37c3d3bf-d727-434d-98a4-c2d9ac7c8474/26-6a6b2daa0ca1a.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T10:55:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலை தடயங்களை அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என விமர்சிப்பது அபத்தம் - பொ. ஐங்கரநேசன் காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/p-ingaranesan-statement-about-inapadugolai-1785405794"></link>
            <id>https://tamilwin.com/article/p-ingaranesan-statement-about-inapadugolai-1785405794</id>
            <summary type="text">&quot;இளைய தலைமுறை தமிழ்த் தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின்
வரலாறும், நாம் பட்ட வதைகளும் வலியும் தெரியாது&quot; என இளைய தலைமுறை மீது நாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>"இளைய தலைமுறை தமிழ்த் தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின்
வரலாறும், நாம் பட்ட வதைகளும் வலியும் தெரியாது" என இளைய தலைமுறை மீது நாம்
குற்றம் சுமத்தி வருகிறோம், அவர்களை வரலாறு தெரியாதவர்களாக ஆக்கியது யார்?
நாமல்லவா? தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக்
குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று
விமர்சிப்பது பெருத்த அபத்தம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்
பொ. ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று (29.07.2026) கொக்குவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. </p><p>இந்நிகழ்ச்சிக்குத்
தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஈழத்தமிழர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்த தென்னாசியாவின் மிகப்பெரும்
நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டி
அழிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும், வேறு எங்கும்
காணக்கிடைக்காத வரலாற்று ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன.</p><p></p><h2>வரலாற்றுப் பிழை</h2><p>
</p><p>இந்த நாசகாரியத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மேற்பார்வையில் அரச படைகளே
அரங்கேற்றியது. நமது வரலாற்றில் நாம் சந்தித்த மிகப்பெரும் பண்பாட்டுப்
படுகொலை இது. ஒரு வரலாற்றுக் கடத்தியாக எரியுண்ட நூலகத்தை அதே நிலையில் நாம்
பேணிப்பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வரலாற்றுத் தவறாக நூலகத்தைப்
புனரமைத்து நடந்தது எதுவுமே தெரியாதவாறு வெள்ளையடித்து பேரினவாத அரசைப்
பாதுகாக்கும் வரலாற்றுப் பிழையையே நாம் இழைத்தோம்.
</p><p>
இலங்கையில் தமிழினம் மீது 1956 இல் நிகழ்த்தப்பட்ட கல்லோயாப் படுகொலை தொடங்கி
2009 இல் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைவரை பல தடவைகள்
இனவழிப்புக்கு ஆளாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பாக, 1983இல்
நிகழ்த்தப்பட்ட 'கறுப்பு ஜீலை' தமிழினப்படுகொலையே அதிகூடிய எண்ணிக்கையான
உயிரிழப்புகளையும், பலகோடிப்பெறுமதியில் சொத்திழப்புகளையும் ஏற்ப்படுத்திய
முதலாவது இனப்படுகொலையாகும். இதுவே உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ் மக்களை
எதிலிகளாக இடம்பெயரவைத்த முதலாவது படுகொலையுமாகும்.</p><p></p><h2>செம்மணிப் புதைகுழி</h2><p> ஆனால்
இவற்றையெல்லாவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய
நினைவுச் சின்னங்களை இதுவரையில் நாம் அமைக்க முற்படாததும் பெரும் வரலாற்றுத்
தவறே. செம்மணிப் புதைகுழியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும்
எலும்புக்கூடுகளுக்கும் நாளை இதே நிலை ஏற்பட்டுவிக்கூடாது.

இனப்படுகொலைக்கு ஆளான ஒரு சமூகம் வரலாற்றை நினைவுகூரும் விதமாகச் சின்னங்களை,
நிறுவுவது இன்றியமையாதது.</p><p> இவை' வெறுமனே அழுது அரற்றி மனதை ஆற்றுவதற்கான
இடங்கள் அல்ல. அடுத்த தலைமுறைகளுக்குக் கடந்தகால உண்மைகளைக் கடத்துகின்ற
வரலாற்றுப் பாடசாலைகளாகவும் உள்ளன. நீதிக்கான தொடர் போராட்டங்களின்
எரிசக்தியாகவும் இவை விளங்குகின்றன. ஒரு பொது வெளியில் எழுப்பப்படும்
நினைவாலயம் குற்றவாளிகள் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதைத் தடுத்து அவர்கள்
மீதான பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.</p><p></p><p> </p><p>இந்த
முக்கியத்துவங்களைக் கருத்திற்கொண்டு இனவழிப்பின் தடயங்களை முக்கியத்து
நினைவுச்சின்னங்களாகவோ, நினைவு வளாகமாகவோ, ஓர் ஆவணக்காப்பகமாகவோ
பேணிப்பாதுகாக்க இனிமேலாவது முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-30T10:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி விபத்து - பாடசாலை மாணவி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallathanni-accident-school-girl-death-1785405845"></link>
            <id>https://tamilwin.com/article/nallathanni-accident-school-girl-death-1785405845</id>
            <summary type="text">கடந்த 22 ஆம் திகதி நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 22 ஆம் திகதி நல்லத்தண்ணி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இந்த விபத்தில் கீழ் நல்லத்தண்ணி முர்ரே தோட்டத்தினை சேர்ந்த மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியில் 8ஆம் வகுப்பில் கல்வி பயின்ற மாணவி செல்வம் திஷ்னா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மாணவியின் சடலம் மீதான மரண விசாரணை</h2><p>மாணவியின் சடலம் மீதான மரண விசாரணையின் பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3466a508-92c1-4d7d-bced-fa0484e10450/26-6a6b27200e46a.webp' /></p><p>நல்லத்தண்ணியிலிருந்து மாஸ்கெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர
வண்டி கடந்த 22ஆம் திகதி மோகினி எல்ல பகுதியில் பிரதான வீதியில் இருந்து
விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியிருந்தது.</p><p>இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பின் இருக்கையில் பயணித்த அவரது உறவினரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>நல்லத்தண்ணி பொலிஸார் விசாரணை&nbsp;</h2><p> 

 

முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவிகளும், ஒரு பாடசாலை மாணவனும் படுகாயமடைந்து, கண்டி போதனா வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
</p><p>இந்நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:29:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத பேருந்து நிலையம் - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrenovated-hatton-bus-stand-1785406685"></link>
            <id>https://tamilwin.com/article/unrenovated-hatton-bus-stand-1785406685</id>
            <summary type="text">மலையகத்தில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையப் பகுதியாக பார்க்கப்படும் ஹட்டன் பேருந்து நிலையம் எந்தவித புனரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையகத்தில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையப் பகுதியாக பார்க்கப்படும் ஹட்டன் பேருந்து நிலையம் எந்தவித புனரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காணப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். </p><p>

ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்கிறது.</p><p></p><p>

சர்வதேச புகழ்பெற்ற சிவனொளி பாதமலை (ஆதாம் சிகரம்), சென் கிளையார் மற்றும்
டெவோன் நீர்வீழ்ச்சிகள், எல்ல சமவெளி, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன்
ஆலயம், காயத்திரி பீடம் உள்ளிட்ட பல சுற்றுலா மற்றும் சமயத் தலங்களுக்கு
பயணிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரதான
இணைப்புத் தளமாகவும் இந்த பேருந்து நிலையம் பார்க்கப்படுகின்றது. </p><h2>


ஹட்டன் பேருந்து நிலையம்</h2><p>

கடந்த 1986ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட ஹட்டன் பேருந்து நிலையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தனியார் பேருந்து நிலையம் தனியாக அமைக்கப்பட்டு, தனியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. எனினும், இந்த இரு நிலையங்களும் பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89f1082-f795-4961-9187-eab0470db591/26-6a6b25c328b19.webp' /></p><p>
</p><p>

குறிப்பாக மழைக்காலங்களில் பேருந்து தரிப்பு நிலையம் முழுவதும் நீர் தேங்கி,
பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது என்றும், வளாகம் முழுவதும் குப்பைகள்
மற்றும் வெற்றிலை எச்சில்கள் சிதறிக்கிடப்பதுடன், மழைநீர் வடிகால்கள்
குப்பைகளால் அடைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகின்றது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். </p><p>


அத்துடன், போதுமான மற்றும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால்,
சிலர் பேருந்து தரிக்கும் பகுதிகளிலேயே சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,
தெரிவிக்கப்படுகிறது. </p><p>தற்போது உள்ள பொது கழிப்பறைகளும் போதிய சுகாதார
பராமரிப்பின்றி காணப்படுவதால், பயணிகளும் பொதுமக்களும் கடும் சிரமங்களை
எதிர்கொண்டு வருகின்றனர்.</p><h2>

பொதுமக்களின் கோரிக்கை</h2><p>
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்
பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தை முழுமையாக நவீனமயமாக்க வேண்டும் என பல
ஆண்டுகளாக பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்ந்து
கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82bb63bd-e6d0-4756-a29e-5a14e7b41a50/26-6a6b25c41f4e5.webp' /></p><p> 

இருப்பினும், 2016ஆம் ஆண்டில் சில தற்காலிக
மற்றும் மேலோட்டமான திருத்தப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், நிரந்தர
தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
இதனிடையே, புதிய அரசாங்கம் ஹட்டன் நகர அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவை
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருந்தாலும், பேருந்து தரிப்பு நிலையத்தை
புனரமைக்கும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என மக்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனவே, மலையகத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் ஹட்டன் பேருந்து தரிப்பு
நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய சுத்தமான, பாதுகாப்பான மற்றும் சுற்றுலாப்
பயணிகளுக்கு ஏற்ற வகையில் உடனடியாக புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/127fe8d3-0468-4ffc-86db-b58c87a0a8eb/26-6a6b25c4e9e0e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca93364b-844e-4fcc-92d5-dc4204045ce8/26-6a6b25c5bffc5.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/452a8a47-e052-40e9-871e-571eaaf16b86/26-6a6b25c691f6a.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T10:22:19+00:00</updated>
        </entry>
    </feed>
