<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-10T23:26:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் நிலக்கரி இறக்குமதியில் 462 கோடி ரூபா பெறுமதியான நிலக்கரி மாயம்! சபையில் தெரிவித்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/120-000-metric-tonnes-coal-rs-4-62-billion-1789078576"></link>
            <id>https://tamilwin.com/article/120-000-metric-tonnes-coal-rs-4-62-billion-1789078576</id>
            <summary type="text">அரசின் பொய் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசின் பொய் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"அரசால் கொண்டுவரப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களில் சுமார் 1,20,000 மெட்ரிக்
தொன் நிலக்கரி காணாமல் போயுள்ளது. இதன் சந்தை மதிப்பு 462 கோடி ரூபாவாகும்.
</p><p>
இரண்டு நிலக்கரி கப்பல்களின் அளவுக்கு இணையான இந்த இழப்புக்கு யார் பொறுப்பு?
அரசு வாங்கிய பின்னரே நிலக்கரியைச் சாப்பிட்டுள்ளதா?</p><p>

பணவீக்கத்துக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்றும், 10
சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும்,
இன்று செவனகல தொழிற்சாலையின் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு, சம்பளம்
குறைக்கப்பட்டு, தொழிற்சாலையே மூடப்பட்டுள்ளது.</p><h2>30 ரூபா கூடுதல் வரி</h2><p>

குறைந்த காலத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என உறுதியளித்துவிட்டு, 6
ஆயிரம் ரூபாவாக இருந்த கட்டணத்தை தற்போது 8 ஆயிரம் ரூபாவாக உயர்த்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f22c7bf-8895-41a7-8785-07dbe8615508/26-6aa32d03ca2ce.webp' /></p><p>
</p><p>எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும் எனக் கூறிவிட்டு லீற்றருக்கு 30 ரூபா
கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள்
மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியும் நீக்கப்படவில்லை.
</p><p>
150 ரூபாவுக்கு நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறிய போதிலும் உரமும்
தண்ணீரும் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை. அரிசி இறக்குமதி செய்யப்பட
மாட்டாது எனக் கூறிவிட்டு தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது.</p><p>

பட்டதாரிகளுக்கு 35 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கூறி அவர்களை
அரசியல் ரீதியாகப் பயன்படுத்திவிட்டு அரசு கைவிட்டுவிட்டது.

நாட்டின் நிதி அமைச்சிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஜனாதிபதி
கூறினாலும், கிராமங்களில் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் நடைபெறவில்லை.</p><p>

ஹேக்கர்கள் மூலம் 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல்போயுள்ளன. துறைமுகத்தில் 323
கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கொள்கலனைக்
கைப்பற்றிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவே விசாரணை நடத்தப்படுகின்றது.
</p><p>
அரசின் பொய்கள், ஊழல்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று கட்சி
பேதமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். நீதிமன்றம், சிறைச்சாலை
அல்லது அடக்குமுறைகளைக் காட்டி இந்த மக்கள் போராட்டத்தை அரசால் தடுத்து
நிறுத்த முடியாது." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் இலங்கை ஜனாதிபதி நேரில் வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-gives-assurance-indian-defence-minister-1789078420"></link>
            <id>https://tamilwin.com/article/anura-gives-assurance-indian-defence-minister-1789078420</id>
            <summary type="text">இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும்
தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும்
தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மேற்படி
இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாகக்
கலந்துரையாடப்பட்டுள்ளன என்றும், இதன்போதே இந்த உறுதிமொழியை இலங்கை ஜனாதிபதி
வழங்கியுள்ளார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>முக்கிய திட்டங்கள்..&nbsp;</h2><p>

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன ஆக்கிரமிப்பு மற்றும்
இலங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் பீஜிங்கின் விரிவடைந்து
வரும் ஆதிக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுள்ளது என்றும் இந்திய ஊடகங்கள்
குறிப்பிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d88942-a972-43d3-945e-48d26a2bb9ac/26-6aa32b95de34a.webp' /></p><p>
</p><p>
38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட
இந்தப் பயணத்தின் போது, இலங்கை விமானப்படைக்கான எல் - 70 ரக பீரங்கிகளை
மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாடுகளின் தேசிய மாணவர் படையணி மற்றும்
தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு இடையே ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது
குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
</p><p>
இந்திய அரசின் மானியத்தின் கீழ் இலங்கையின் வான் பாதுகாப்பு திறன்களை
வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

"பாரம்பரியமாக சுமுகமான உறவுகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையால்
வகைப்படுத்தப்படும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையின் முழு
அளவிலான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆழமான கலந்துரையாடல்களை
நடத்தினர்" என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையில்
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T22:50:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய மெல்கம் ரஞ்சித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cardinal-met-president-on-easter-attack-talk-1789076353"></link>
            <id>https://tamilwin.com/article/cardinal-met-president-on-easter-attack-talk-1789076353</id>
            <summary type="text">கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க
மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான
சந்திப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க
மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான
சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையே சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை
மேலும் வலுப்படுத்துவதற்கும், எந்தவிதமான இனவாத அல்லது மத ரீதியான
வெறுப்புணர்வையும் அனுமதிக்காமல் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்கும் அரசு
முன்னெடுக்கும் திட்டம் குறித்து இந்தச் சந்திப்பின் போது விசேட கவனம்
செலுத்தப்பட்டது.</p><h2>முக்கிய விடயங்கள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம்
குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a381c0f0-d969-4f9c-a16d-c0a4d1f57630/26-6aa3259392f7c.webp' /></p><p>
</p><p>
மக்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல்
பாதிப்புக்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய அழிவுகளை தடுப்பதற்கு
எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
</p><p>
அனைத்து சமூகங்களுக்கிடையேயும் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக அரசு
எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கத்தோலிக்க மதத் தலைவர்கள் பாராட்டியமையுடன்,
இந்த முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.</p><p>

மேலும், கத்தோலிக்கச் சமூகத்தினர் வசித்து வருகின்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு
வசதிகளை அபிவிருத்திச் செய்வது உட்பட அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்
மற்றும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p>

அருட்தந்தை சிறில் காமினி, அருட்தந்தை ஜூலியன் பெற்றிக் மற்றும்
அருட்தந்தைமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட
பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T21:56:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் அறிவில்லாதவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தமிழ் மக்கள் தவறு செய்துவிட்டார்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-parliament-sri-lanka-sritharan-1789075143"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-parliament-sri-lanka-sritharan-1789075143</id>
            <summary type="text">இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் மீதான அதிருப்தி அதிகம் வெளியிடப்பட்டு வருகின்றது.குறிப்பாக, வடக்கு - கிழக்கை சேர்ந்த மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் மீதான அதிருப்தி அதிகம் வெளியிடப்பட்டு வருகின்றது.</p><p>குறிப்பாக, வடக்கு - கிழக்கை சேர்ந்த மக்கள், தமிழ் தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக விமர்சிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்,&nbsp;அரசியல் அறிவில்லாதவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தமிழ் மக்கள் தவறு செய்துவிட்டார்கள் என தெரிவித்தார்.&nbsp;</p><p>லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>இதன்போத அவர் மேலும் குறிப்பிடுகையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EBE0Xi0Z0xY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T21:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மேடையேறும் பிரபலங்கள் யார்..! நடுக்கத்தில் பிக்குமார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-12th-meeting-in-anuradhapura-namal-in-prison-1789070223"></link>
            <id>https://tamilwin.com/article/namal-12th-meeting-in-anuradhapura-namal-in-prison-1789070223</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.&amp;nbsp;இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல் ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் இடம்பெறவிருந்த, பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் அவரை கைது செய்ததாக நாமலின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தினர்.&nbsp;</p><p>அதேநேரம், நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் குறித்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவாறு இடம்பெறும் என அக்கட்சி அறிவித்தது.&nbsp;</p><p>அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமலுக்கு பதிலாக அக்கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில் தென்னிலங்கை அரசியல் களத்தில் அரசின் அதிரடி நடவடிக்கையால் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iAgQBFo2_cc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T20:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேசுபொருளாகும் 1980களின் ரெட்ரோ புகைப்படங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/80s-trending-chatgpt-edits-users-are-warned-1789066120"></link>
            <id>https://tamilwin.com/article/80s-trending-chatgpt-edits-users-are-warned-1789066120</id>
            <summary type="text">ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை பெறுவது அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நாம் பகிரும் புகைப்படங்கள் தனிப்பட்ட தரவுகளாகக் கருதப்படுவதோடு, அவை எடுக்கப்பட்ட இடம், நேரம் மற்றும் சாதனத்தின் பெயர் போன்ற நுட்பமான எக்சிஃப் (EXIF) தகவல்களையும் கொண்டிருக்கின்றன. </p><p>ChatGPTஇல் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றும்போது, அதன் நகல் OpenAI அமைப்புகளில் சேமிக்கப்பட்டு, பயனரின் கணக்கு வரலாற்றின் பகுதியாக மாறுகிறது.</p><h2>சேகரிக்கப்படும் தகவல்கள்..&nbsp;</h2><p> </p><p>பயனர் அந்த உரையாடலை நீக்கினாலும், சட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தரவுகள் சுமார் 30 நாட்கள் வரை OpenAI சேவையகங்களில் தக்கவைக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a92edf9e-ef75-4c50-a095-08924d0940de/26-6aa304747b32f.webp' /></p><p> </p><p>வணிகக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது, சாதாரணத் தனிநபர் கணக்குகளின் தரவுக் கொள்கைகள் மாறுபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

புகைப்படங்கள் மட்டுமன்றி பயனரின் IP முகவரி, சாதன விவரங்கள், இருப்பிடம் மற்றும் உரையாடல் பழக்கவழக்கங்கள் போன்ற பிற தகவல்களும் சேகரிக்கப்படுவதால், AI மூலம் ஒரு நபரின் முழுமையான சுயவிவரத்தை ஊகிக்க முடியும்.</p><p>[</p><p> </p><p>எனவே, மற்றவர்களின் அனுமதி இன்றி அவர்களின் படங்களையோ அல்லது குழந்தைகளின் புகைப்படங்களையோ பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p> மேலும், தனிப்பட்ட ஆவணங்கள் உள்ள படங்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதுடன், AI மாடல் பயிற்சிக்காக உங்கள் தரவுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அமைப்புகளில் (Settings) 'Data Controls' விருப்பத்தை முடக்குவது பாதுகாப்பானது.</p><p>இந்த ட்ரெண்டுகள் சில நாட்களில் மறைந்துவிட்டாலும், நாம் வழங்கும் தரவுகள் இணைய அமைப்புகளில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T19:32:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனவாத விசமிக்கு மைத்திரிபால கொடுத்த பொதுமன்னிப்பு செல்லாது..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/general-amnesty-granted-maithripala-agitator-1789062957"></link>
            <id>https://tamilwin.com/article/general-amnesty-granted-maithripala-agitator-1789062957</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
</p><p>
காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.&nbsp;</p><p>கடந்த 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.</p><p>இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.&nbsp;</p><p>இந்நிலையில், குறித்த பொதுமன்னிப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் விதித்துள்ள அதிரடி தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qBdszQyKhuU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T19:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு விசேட சலுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/compensation-of-foreign-workers-die-1789045586"></link>
            <id>https://tamilwin.com/article/compensation-of-foreign-workers-die-1789045586</id>
            <summary type="text">வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் நிவாரணம் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>

வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழந்த 50 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ரூ. 70 மில்லியன் இழப்பீடு வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2> 


இழப்பீடு தொகை அதிகரிப்பு</h2><p>
முன்னதாக, வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் ஒருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரூ. 6 லட்சம் வழங்கி வந்தது.</p><p> 

இந்த தொகை, போதுமானதாக இல்லாத காரணத்தால் குறித்த தொகையை ரூ. 2 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

ஆண்டுதோறும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 250 பேர் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான காரணத்தால் அந்த நாட்டிலேயே உயிரிழக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8ef468-3418-46a3-b65d-b32caca65032/26-6aa2b516902b8.webp' /></p><p> 

இந்த நிலையைக் குறைக்கவும், குழுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்குப் பணமாக அனுப்புகின்றனர். 

பணியகம் ஏற்கனவே அவர்களுக்காகப் பெரிய அளவிலான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.</p><h2> 

வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட திட்டம்</h2><p>

மேலும், நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் பணியாற்றி வருகிறோம். இந்தத் திட்டங்களில் ஒன்று, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபாயை வீட்டுக் கடனாக வழங்குவதாகும்.
</p><p>
 இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன என்றும், அந்த வட்டியின் ஒரு பகுதியை பணியகமும் செலுத்துகின்றது என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார். </p><p>

 இது தவிர, பணியகம் தற்போது தொழிலாளர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களையும் வழங்கி வருகின்றது என்பதையும் அமைச்சர் நினைவூட்டியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T18:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைத் தமிழரை செருப்பால் அடிக்க முற்பட்ட இராமேஸ்வரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆட்சியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-in-rameshwaram-been-disrespected-1789061152"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-in-rameshwaram-been-disrespected-1789061152</id>
            <summary type="text">இராமேஸ்வரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னனிடம் விடுப்பு கேட்டு வந்த இலங்கைத் தமிழரை தகாத
வார்த்தையில் பேசி செருப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராமேஸ்வரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னனிடம் விடுப்பு கேட்டு வந்த இலங்கைத் தமிழரை தகாத
வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க முற்பட்ட சம்பவம் இன்று (10) பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக
தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை தமிழக
அரசு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு
முகாமில் தங்க வைத்துள்ளனர்.
</p><p>
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1500க்கும் மேற்பட்ட இலங்கை
தமிழர்கள் வசித்து வருகின்றனர்.</p><h2>&nbsp;மருத்துவ சிகிச்சை</h2><p>
</p><p>
இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள உறவினர்களை
சந்திக்க செல்லவும், மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் போது மண்டபம் இலங்கை
தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் விடுப்பு பெற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c328e82b-66cb-4265-9f68-2a8d6834ba95/26-6aa2e97d7ac08.webp' /></p><p>

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரான ஜெகன் என்பவர் சென்னையில் மருத்துவ
சிகிச்சைக்கு செல்வதற்காக மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார்
ஆட்சியரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விண்ணப்பித்துள்ளார்.</p><p>
ஆனால் விடுப்பு அளிப்பதற்கு சார் ஆட்சியர் பணம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
பணம் அளிக்காததால் இலங்கைத் தமிழர் ஜெகனுக்கு விடுப்பு அளிக்காமல் இருந்து
வந்த நிலையில் இன்று மீண்டும் விடுப்பு விண்ணப்பம் குறித்து கேட்க சென்ற
ஜெகனை சார் ஆட்சியர் கலை மன்னன் தகாத வார்த்தையால் பேசி செருப்பால் அடிக்க
முயன்ற காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், இது தொடர்பில் பலரும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் வீதியில் நோயாளர் காவு வண்டி கோர விபத்து! சாரதி பரிதாப உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ambulance-accident-driver-tragically-killed-1789061136"></link>
            <id>https://tamilwin.com/article/ambulance-accident-driver-tragically-killed-1789061136</id>
            <summary type="text">குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருள்களை
ஏற்றிச் சென்ற&amp;nbsp; நோயாளர் காவு வண்டி ஒன்று, பாதெனிய - அனுராதபுரம் வீதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருள்களை
ஏற்றிச் சென்ற&nbsp; நோயாளர் காவு வண்டி ஒன்று, பாதெனிய - அனுராதபுரம் வீதியில் உள்ள
கத்தபஹுவ பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தானது இன்று(10.9.2026) பிற்பகல் 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் நோயாளர் காவு வண்டி&nbsp; சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நோயாளர் காவு வண்டியில் பயணித்த நால்வரும், லொறியில் இருந்த இருவரும்
படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு அம்பன்பொல மற்றும் கல்கமுவ
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b433d62e-80d2-4608-aa8f-2369a48d62e4/26-6aa2e8124592b.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:25:47+00:00</updated>
        </entry>
    </feed>
