<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T22:18:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் வழக்கு விசாரணை! இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளுக்கு நீதவான் கடும் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-regarding-the-purchase-of-airbus-aircraft-1788903667"></link>
            <id>https://tamilwin.com/article/case-regarding-the-purchase-of-airbus-aircraft-1788903667</id>
            <summary type="text">ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே வழக்கின் விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p>அதன்போதே வழக்கின் விசாரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கத் தவறிய இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை நீதவான் அசங்க எஸ் போதரகம கடுமையாக கண்டித்துள்ளார்.
</p><h2>கடுமையான உத்தரவு</h2><p>
இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், விசாரணைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் வாய்மூலமாக நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc21afa3-fa89-42eb-8b83-c83d3c6a4966/26-6aa083651b925.webp' /></p><p>
</p><p>
அதன்போது கடுமையாக ஆத்திரமுற்ற நீதவான் அசங்க எஸ். போதரகம, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு தனியான சட்டங்களோ அதிகாரங்களோ இல்லை என்றும், நீதிமன்றத்தின் முன்னர் குறித்த ஆணைக்குழுவும் பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அத்துடன் வழக்கொன்றின் விசாரணையின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஒவ்வொரு தவணையின் போதும் எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியது பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து விசாரணையளார்களின் பொறுப்பாகும் என்றும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன் அவ்வாறான விசாரணை அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றத்தில் முன்னிலையாகும் அதிகாரிகள் வழக்கு விசாரணை தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்து கொண்டே நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் அவர் கடுமையான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>[AA0DO6Hஸ</p>]]></content>
            <updated>2026-09-08T21:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சத்தில் நாமலின் மனைவி! ரங்க திஸாநாயக்காவால் திணறும் மகிந்த குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-issu-namal-arrest-mahinda-family-tiuble-1788898965"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-issu-namal-arrest-mahinda-family-tiuble-1788898965</id>
            <summary type="text">&amp;nbsp;ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினரிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக ரங்க திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், விசாரணைகளில் அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அவர் பதவியேற்றபோது சுமார் 8,000 வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், தற்போது அவற்றில் 44 சதவீதமான வழக்குகள் முடிவுறும் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 29-க்கும் மேற்பட்ட வழக்குகள் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடையவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், 'சிரிலிய சவ்வியா' அமைப்பு மற்றும் மகரகம அபேக்ஷா வைத்தியசாலை தொடர்பான நிதி விவகாரங்கள் குறித்து குற்றத்தடுப்பு புலனாய்வுத் துறையினர் (CID) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் பல உறுப்பினர்கள் சட்ட ரீதியான விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, குடும்பம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p>

இந்தநிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் அவரது இல்லாத குறையை ஈடுசெய்யும் வகையில், லிமினி ராஜபக்சவை அரசியல் களத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லிமினி ராஜபக்ச மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p> இது தொடர்பாக குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T21:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – இந்திய சுகாதார அமைச்சர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-india-health-ministers-hold-talks-1788900436"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-india-health-ministers-hold-talks-1788900436</id>
            <summary type="text">இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே
இருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே
இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று(8) நடைபெற்றது.</p><p>

கிழக்கு திமோரின் திலி நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின்
தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள
நிலையிலேயே, இம்மாநாட்டின் பக்க அம்சமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
</p><h2>இலங்கையின் சுகாதாரத் துறை</h2><p>
இலங்கை எதிர்கொண்ட அனைத்துக் கடினமான தருணங்களிலும் இந்திய அரசாங்கம் வழங்கிய
ஆதரவுக்கும் நட்புறவுக்கும், இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பில் தனது
நன்றியைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ
தெரிவித்துக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9cf69d7-b1c1-41e4-87aa-25c1fda8f7c1/26-6aa078be737ec.webp' /></p><p>
</p><p>
இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும்
திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, குறிப்பாகக் காசநோய் ஒழிப்பு
நடவடிக்கைகளை மேலும் வெற்றியடையச் செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும்
ஏனைய உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைச்சர் இதன்போது
இணக்கம் தெரிவித்தார்.</p><p>

இதற்கு இணையான வகையில், இலங்கையின் ஆரம்ப சுகாதாரச் சேவை அமைப்பை மேலும்
வலுப்படுத்துதல் மற்றும் அதன் தரத்தை உயர்த்துதல் தொடர்பிலும் இங்கு விரிவாகக்
கலந்தாலோசிக்கப்பட்டது.
</p><p>
கிராமப்புற மட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகளை மேலும்
விரிவாக்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது குறித்தும், அது
தொடர்பில் இரு நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும் இதன்போது
மேலதிக கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T21:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் முடிவுக்கு வழிவகுக்குமா! ரஷ்யா–உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் புதிய யோசனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zelensky-says-us-has-good-ideas-to-end-war-1788895762"></link>
            <id>https://tamilwin.com/article/zelensky-says-us-has-good-ideas-to-end-war-1788895762</id>
            <summary type="text">ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அமைதிப்
பேச்சுவார்த்தையாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சில
&#039;நல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அமைதிப்
பேச்சுவார்த்தையாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சில
'நல்ல யோசனைகளை' முன்வைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி
செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கத் தூதுவர்கள் இருவரும் கடந்த வார இறுதியில் ரஷ்யா மற்றும்
உக்ரைனுக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் பல மணிநேரப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.</p><h2>நல்ல யோசனைகள்</h2><p>
</p><p>
இருப்பினும், ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக்
கொண்டுவருவதில் உடனடி முன்னேற்றங்கள் எதுவும் எட்டப்படவில்லை.
</p><p>
செய்தியாளர்களுடனான உரையாடலின் போது இந்த அமைதித் திட்டம் குறித்துப்
குறிப்பிட்ட ஸெலென்ஸ்கி, அமெரிக்கத் தூதுவர்கள் முன்வைத்த புதிய யோசனைகள்
மிகவும் பயனுள்ளவையாக இருந்ததாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfdd8fd2-6ea7-4dcb-819d-b85c3e31ce6f/26-6aa0650997ccf.webp' /></p><p>

இது குறித்து விரிவான தகவல்களை வெளியிடாத அவர், முதலில் அமெரிக்கத்
தூதுவர்களுடன் இணைந்து இந்த திட்டங்களில் பணியாற்றுவதற்கு உக்ரைன்
ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார்.</p><p>

அத்துடன், இம்மாத பிற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச்
சந்தித்து குளிர்கால வான் பாதுகாப்பு ஆதரவுப் பொதி குறித்து விவாதிக்கத்
திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், மூன்று தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள உக்ரைன்,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள் விரைவில் சந்திக்கவுள்ளதுடன்,
துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இக்
கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-08T20:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் தாக்குதல் வரப்போகிறது...ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னரே நெதன்யாகுவுக்கு நேரடியாக தகவல் வழங்கிய UAE ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-was-warned-about-hamas-2023-attack-1788887397"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-was-warned-about-hamas-2023-attack-1788887397</id>
            <summary type="text">2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வார் பாரிய தாக்குதலொன்றைத் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரடியாக எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இஸ்ரேலிய ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>மிகப்பெரிய தாக்குதல்&nbsp;</h2><p>
சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது, காசாவில் இருந்து “சில்சால்” எனப்படும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பின் சயீத் எச்சரித்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் இரத்தக்களரியையும் ஸ்திரமின்மையையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், இந்தத் தாக்குதல் ஆபிரகாம் ஒப்பந்தங்களையும் பாதிக்கக்கூடும் என பின் சயீத் கவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

எனினும், நெதன்யாகு இந்த எச்சரிக்கைக்கு ஒப்பீட்டளவில் அமைதியாக பதிலளித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/379db03b-6a88-4337-b651-92c606f05986/26-6aa0487fd4d4d.webp' /></p><p>
</p><p>
ஹமாஸ் மேற்கு கரையில் நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம் என தான் கருதுவதாக நெதன்யாகு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த இந்த முக்கியமான எச்சரிக்கை குறித்து ஷின் பெட், மொசாட் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நெதன்யாகு அறிவிக்கவில்லை என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்&nbsp;</h2><p>
</p><p>
பின் சயீத் பின்னர் இந்த உரையாடல் குறித்து சிஐஏ இயக்குநர் வில்லியம் ஜே. பேர்ன்ஸிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்ரேலின் ஷின் பெட் மற்றும் ஹமாஸ் இடையே இரகசிய நேரடி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு இரு தரப்பும் நெருங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆனால், அந்த ஒப்பந்தம் இஸ்ரேல் தரப்பில் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட காலமாக காத்திருந்த சின்வார், 2023 செப்டெம்பரில் இடைத்தரகர் ஊடாக தான் “சில்சால்” எனப்படும் தாக்குதலைத் தயாரித்து வருவதாக எச்சரித்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6df83d-79ff-4d52-a4cf-382914bf8dfb/26-6aa04880890d5.webp' /></p><p>

அந்தத் தாக்குதலை “மிகப்பெரிய ஆச்சரியம்” மற்றும் “பயங்கரமான நடவடிக்கை” என அவர் விவரித்ததாகவும் கூறப்படுகிறது.

செப்டெம்பர் 15ஆம் திகதி சின்வாரின் எச்சரிக்கை ஷின் பெட்டை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதனைத் தொடர்ந்து, அப்போதைய ஷின் பெட் தலைவர் ரோனென் பார், நெதன்யாகுவுக்கு அது குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், இஸ்ரேல் “மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது” என ரோனென் பார் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>&nbsp;கடும் எதிர்வினை</h2><p>
காசா மற்றும் மேற்கு கரையில் தாக்குதல் அல்லது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

எனினும், அந்தக் கூட்டத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இதன்பின்னர், எகிப்திய புலனாய்வுத் தலைவர் அப்பாஸ் கமெலும் ஹமாஸ் “வழக்கத்திற்கு மாறானதும் பயங்கரமானதுமான நடவடிக்கை” ஒன்றைத் திட்டமிடுவதாக நெதன்யாகுவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

காசா நிலைமையை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நெதன்யாகு அவரிடம் தெரிவித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8742e07e-7c74-4322-97f3-4d6dda4b2629/26-6aa048813a4be.webp' /></p><p>

இதனையடுத்து, 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி அதிகாலை 6.29 மணியளவில் ஹமாஸின் தாக்குதல் ஆரம்பமானது.

இந்தத் தாக்குதலின்போது சுமார் 251 பேர் கடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், ‘ஹாரெட்ஸ்’ வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நெதன்யாகுவின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.
</p><p>
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் நெதன்யாகு குறித்த காலப்பகுதியில் பேசவில்லை என்றும், அவரிடமிருந்து எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் இஸ்ரேலில் அரசியல் ரீதியாகவும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னெட், ஐக்கிய அரபு அமீரக மற்றும் எகிப்திய தரப்புகளிடமிருந்து எச்சரிக்கைகள் கிடைத்தபோதும் நெதன்யாகு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஒக்டோபர் 7 பேரழிவுக்கு நெதன்யாகு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:36:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்பிலிப்பிட்டியவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-near-embilipitiya-one-person-injured-1788895289"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-near-embilipitiya-one-person-injured-1788895289</id>
            <summary type="text">எம்பிலிப்பிட்டிய அருகே இன்று(8) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிப்பிட்டிய அருகே இன்று(8) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் இலக்கு வைக்கப்பட்ட நபர் படுகாயமடைந்துள்ளார்.</p><h2>&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
அதனையடுத்து அவர் தனமல்வில மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/400e09f0-a2ff-4b19-8fcb-faf69f666e86/26-6aa0617f3272b.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்இதுவரை கண்டறியப்படவில்லை. போதைப் பொருள் வர்த்தகம் காரணமாக ஏற்பட்ட போட்டியே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:27:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற துடிக்கும் ரணில்! நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்சர்களுடன் நடந்துள்ள டீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.

பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.

பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரைமறைவு அரசியல் நகரவுகளும் அம்பலமாகின்றன.
</p><p>
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் தற்போது கருத்துக்கள் வெளியாகின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு ஒரு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தநிலையில்,அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மக்கள் கூட்டத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>

நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை,
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய 22 மில்லியன் அமெரிக்க டொலர் ஹொங்காங் வங்கி கணக்கு விவகாரத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கஅம்பலப்டுத்தியுள்ளார்</p><p>.

 நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் இந்த ஹாங்காங் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தில் இருந்த சிலர் தலையிட்டு அந்த நடவடிக்கைகளைத் தடுத்ததாக ஆசு மாரசிங்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

 இந்தத் தகவல்கள் மூலம், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் 'டீலிங்' (Deal) குறித்த விடயங்களை ஆசு மாரசிங்க வெளிப்படுத்தியுள்ளார் .</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/twa6VY8TL_U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால் ட்ரம்ப் வெளியிட்ட வரைபடப் பதிவால் சர்ச்சை: ஐஸ்லாந்து கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-over-map-post-by-donald-trump-1788886635"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-over-map-post-by-donald-trump-1788886635</id>
            <summary type="text">அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான
அமெரிக்கத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான
அமெரிக்கத் தூதுவரை அழைத்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தனது அதிருப்தியைத்
தெரிவித்துள்ளது.
</p><p>
டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட
வரைபடத்தில் அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய
அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் அனைத்தும் அமெரிக்கக் கொடியால்
மூடப்பட்டு 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என பெயரிடப்பட்டிருந்தது.
</p><p>
இந்த வரைபடப் பதிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐஸ்லாந்து
வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்து வரும்
கருத்துக்கள் ஏற்கனவே வாஷிங்டன் மற்றும் டென்மார்க் இடையே ராஜதந்திர
பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><h2>கண்டனம்</h2><p>
</p><p>
கிரீன்லாந்து மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக மாற விரும்பவில்லை என
டென்மார்க் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ffe90c-4b3c-4080-8f17-442eb62384fb/26-6aa0422149055.webp' /></p><p>

ஐரோப்பிய ஒன்றியம் கிரீன்லாந்தில் 200 மில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்த சில
மணிநேரங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p>

எனினும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையோ அல்லது தூதரகங்களோ
உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T17:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நாமல் ராஜபக்சவுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட பூஜை வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-prayers-namal-blessings-for-namal-1788883446"></link>
            <id>https://tamilwin.com/article/special-prayers-namal-blessings-for-namal-1788883446</id>
            <summary type="text">கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விசேட பூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது.</p><p>
இன்று (8.9.2026) புன்னைச்சோலை காளி கோயில் மாவட்ட அமைப்பாளர்
சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.</p><h2>விசேட ஆசீர்வாத பூஜை</h2><p>
</p><p>இது தொடர்பில் மாவட்ட அமைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மக்களின் அரசியலுக்காக வெகுவிரைவில் பயணிக்க
உள்ள அவருக்கு நல்லாசி வேண்டி மட்டக்களப்பு பூராகவும் அனைத்து மத
தலங்களுக்கும் சென்று ஆசீர்வாதத்தை பெறுவதற்காக திட்டமிட்டுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ef6e7f1-9ce9-4b4c-a34d-a0a4b41f2718/26-6aa038d8c2f24.webp' /></p><p> அதன்
பிரகாரம் இன்று மட்டு புன்னைச்சோலை காளி கோயில் இந்த விசேட ஆசீர்வாத பூஜையை
இன்று ஆரம்பித்துள்ளதாக மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன்
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் எயார்பஸ் ஊழலில் தொடர்புப்பட்ட இருவரின் மர்ம மரணங்கள்! நான்கு மரணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141</id>
            <summary type="text">எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரின் விபரங்கள் இன்றைய நிலையில் வெளிவந்துள்ளது.
</p><p>எயார்பஸ் ஊழல் தொடர்பில் முதன் முதலில் தகவலை வெளியிட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிராந்திய முகாமையாளரும் ஊடகவியலாளருமான ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் மரணம்.
</p><p>இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் ராஜபக்சர்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் தான் ரஜீவ பிரகாஷ் ஜயவீர. அவர் எவ்வாறு இறந்தார் என்ற பதிவுகள் இல்லை. </p><h2>
</h2><p></p><h2>முதன் முதலில் இதை வெளிப்படுத்தியவர்</h2><p>பின்னர் கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தில் 'நான் தற்கொலை செய்துகொள்கிறேன்' என்று எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது என வழக்கு முடிக்கப்பட்டது.மற்றையது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம். </p><p>இவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் அநேகர் அறிவர்.ஆனால் நாடே அறியாமல் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
அடுத்த நபர்இ இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மற்றும் ராஜபக்சர்களின் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக செயற்பட்ட சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1476e2e-2420-4e81-912a-ecbc47f9d61a/26-6aa03b84a5daa.webp' /></p><p> </p><p>இவர் சிரந்தி ராஜபக்சவிற்கு எதிரான 'சிரிலிய' வழக்கு 'சில் ரெதி' (தானம் வழங்கும் வெள்ளை புடவை) நிதி மோசடி வழக்குகளில் அரசு சார்பில் முன்னிலையானவர். இவர்தான். மேலும் லிட்ரோ எரிவாயு வழக்கு - மிக் விமான கொள்வனவு வழக்குகள் போன்றவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து 
வாதாடியவர்.
</p><p>2019 இல் ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இவரைச் சிறையில் அடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலிருந்தும் நெருக்கடிகளைக் கொடுத்தனர். அலரிமாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஊழல் எதிர்ப்புப் பிரிவிலிருந்து இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கொண்டே சம்பளம் பெற்றார் என்று பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. </p><h2>
அறிப்படாத இரு மரணங்கள்</h2><p>ஊடகங்களில் அதைப் பரப்பி இவரன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். மறுபுறம் ராஜபக்சர்களின் ஆதரவாளர்களுக்கு நடந்த அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு இவரை ஒரு பிரதிவாதியாக அனுப்பி முடக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் முடக்கினர்.
</p><p>அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டில் இவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். திடீரென உயிரிழப்பது நடக்கக்கூடிய ஒன்றுதான் ஆனால் இக்காலத்தில் திடீரென இறப்பது என்பது படுகொலை செய்யப்படுவதற்கான ஒரு விசேட அறிகுறியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f41c91-cf8f-4880-b5ec-8213f7a76535/26-6aa03b8644647.webp' /></p><p> </p><p>
கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா விஜயநாயக்கவின் நிறுவனத்திற்கு 2.5 பில்லியன் டொலர்கள் அனுப்பப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.அந்தக் கணக்கிலிருந்து மூன்று இடங்களுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>
சேபிள் விஷன் (Sable Vision) - அது நிமால் பெரேராவிற்குச் சொந்தமான சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனம். அடுத்து எஸ்.எல். எக்ரோ (SL Agro) - அதுவும் சிங்கப்பூரில் உள்ள ஒரு கணக்கு.</p><h2>உயிரிழப்பு</h2><p>மற்றொன்று நேரடியாகக் கபில சந்திரசேனவின் அவுஸ்திரேலிய கணக்குகளுக்குச் சென்றுள்ளது. இவ்வாறு மூன்று இடங்களுக்குப் பணம் சென்றுள்ளது.
எஸ்.எல். எக்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் யோஹன் விஜயநாயக்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a9987a4-97e0-4de3-8f69-d4af650aa248/26-6aa03b8592877.webp' /></p><p> </p><p>இந்த நபரை யாருக்கும் தெரியாது.ஆனால் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கி பழகியவர்.
இந்த நபரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். கொரோனா தொற்றினால் இறந்ததாக முத்திரைக் குத்தப்பட்டு பிரேதப் பரிசோதனை கூட நடத்தப்படவில்லை.
</p><p>இவர் 27 வயது இளைஞர். எனவே 27 வயது நபர் திடீரென உயிரிழப்பது சந்தேகத்திற்குரியது அங்கும் ஒரு மர்மம் உள்ளது.</p><p></p><p>&nbsp; &nbsp;</p><p> &nbsp; &nbsp;&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-09-08T16:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருள்காட்சி வழங்கிய வேல் பெருமான் – நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற சப்பரத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-today-1788884143"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-today-1788884143</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா
நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய தினம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா
நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய தினம்(8) செவ்வாய்க்கிழமை மாலை சப்பர திருவிழா நடைபெற்றது.
</p><p>
கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று
வருகின்றது.</p><h2>சப்பரத் திருவிழா</h2><p> இன்றைய தினம் மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று ,
தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் சப்பரத்தில் எழுந்தருளி ,
சப்பர திருவிழா இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b3f504-dd53-467b-8fe5-62ca1c0a5c6e/26-6aa036b8ed0bd.webp' /></p><p>
</p><p>
நாளைய தினம்(9) புதன்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி
,தொடர்ந்து ஆறுமுக சுவாமி காலை 07 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு
அருட்காட்சியளிப்பார்.
</p><p>
தேர் திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர்
தேசங்களிலும் இருந்தும் இலட்ச கணக்கான பக்தர்கள் ஆறுமுக சுவாமியின்
அருட்காட்சியினை கண்டு களிக்க ஒன்று கூடுவார்கள்.

காவடிகள் , பிரதட்டைகள் , கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது
நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:24:48+00:00</updated>
        </entry>
    </feed>
