<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-15T04:45:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை - கடுமையாகும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-to-those-in-government-service-action-1789441405"></link>
            <id>https://tamilwin.com/article/warning-to-those-in-government-service-action-1789441405</id>
            <summary type="text">அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்சாட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் நல அலுவல்கள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
</p><p>
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா பவுல்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

இதற்கான உரிய அமைச்சரவை ஆவணத்தை சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்</h2><p>

இந்த சான்றிதழை பொலிஸ் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் மூலம் பெற வேண்டும் என்றும், தற்போது அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்களது பணிக்கால இடைவெளி மற்றும் சம்பள உயர்வுகளை பெறும்போது, ​​குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூறும் சான்றிதழை புதுப்பித்து வழங்குவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a9c9b94-6143-4425-93a1-148633381344/26-6aa8cd2078dea.webp' />&nbsp;</p><p>

இந்த சான்றிதழின் அவசியத்தை அமைச்சரவை அறிக்கை மூலம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பொலிஸ் அல்லது தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து சான்றிதழைப்பெற நாங்கள் பரிசீலித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
 மேலும், அரச பணியில் சேரும்போது, ​​குழந்தைகளுடன் பழகும் வாய்ப்புள்ள பணிகளில் பணியாற்றுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது குற்றவாளிகள் என்றோ குற்றம் சாட்டப்பட்டிருக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

எனவே, ஒரு நாடாக நாம் முன்னேறிச்செல்வதற்கு இது போன்ற வி்யங்கள் அவசியமானவை என விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T04:44:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-corruption-free-sri-lankan-government-1789444192"></link>
            <id>https://tamilwin.com/article/a-corruption-free-sri-lankan-government-1789444192</id>
            <summary type="text">தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து
ஊழலற்ற ஆட்சியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து
ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
அத்துடன் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது எவரும் விரல்
சுட்டிக் குற்றம் சுமத்த முடியாத அளவுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன்
கூடிய புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி
அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
"தற்போதைய அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு அளித்த தேர்தல்
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை முழுமையாக
உறுதிசெய்து ஊழலற்ற தூய்மையான ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில்
நிலைநிறுத்தியுள்ளது.</p><h2>மக்கள் ஆட்சி&nbsp;</h2><p>
</p><p>
கடந்த கால ஆட்சி முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நாட்டின் சாதாரண
மக்களையும் நிர்வாகக் கட்டமைப்போடு நேரடியாக இணைக்கும் வகையில் மக்கள்
பங்கேற்புடனான ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
</p><p>
பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் குறைகளைக்
கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகளை வழங்குவதற்காக அரசியல் தலைமைத்துவம்
நேரடியாகவே மக்களிடம் செல்லும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29962b70-266d-4d93-a5f3-f3b78aa88dcc/26-6aa8c6499b001.webp' /></p><p> </p><p>இதன்
முதற்கட்டமாக, ஜனாதிபதி நேரடியாகப் புலத்சிங்கள, பேருவளை, பொலன்னறுவை மற்றும்
அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து மக்களின் நிலைமைகளைக்
கேட்டறிந்துள்ளார்.</p><p> </p><p>இதேபோன்று, ஜனாதிபதி மாவட்ட மட்டத்திலும், அமைச்சர்கள்
தொகுதி மட்டத்திலும், நகர சபைத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்,
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வரையிலும் நேரடியாகச் சென்று மக்களையும் அரச
அதிகாரிகளையும் சந்தித்துப் பணியாற்றி வருகின்றனர். </p><p>இது ஒரு சங்கிலித் தொடர்
போன்ற கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது.

கடந்த ஆட்சிக் காலங்களில் கொடிகட்டிப் பறந்த ஊழல், இலஞ்சம் மற்றும் நிர்வாக
முறைகேடுகளை முழுமையாக ஒழிக்கவே இந்த அரசை மக்கள் தோற்றுவித்ததன் முதன்மை
நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e30d0e-97db-4654-a6fe-8b1ea8a9643e/26-6aa8c648e2f0c.webp' /></p><p> </p><p>அந்த மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், தற்போதுள்ள 159
நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளோ எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும்
ஈடுபடவில்லை. </p><p>மக்கள் பிரதிநிதிகள் மீது எவரும் விரல் சுட்டிக் குற்றம் சுமத்த
முடியாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய அரசியல் கலாசாரம்
உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அரசியல்வாதிகள் எவரும் இனி ஊழல் சார்ந்த செயல்களுக்கு அரச
அதிகாரிகளையோ அல்லது பொதுமக்களையோ தூண்டப்போவதில்லை. </p><p>இதனால் அரச அதிகாரிகள்
எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் அஞ்சாமல், சுதந்திரமாகவும் தைரியமாகவும்
நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற முடியும். மக்கள் பிரதிநிதிகளும் அரச
அதிகாரிகளும் கைகோர்த்து நாட்டுக்காகப் பணியாற்றுவதற்கு இதுவொரு பொன்னான
வாய்ப்பாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T04:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு எதிராக உரிய தருணத்தில் ஒரே தளத்தில் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்! வெளியாகவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-parties-taking-field-against-government-1789443172"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-parties-taking-field-against-government-1789443172</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும்
சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான
பிளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும்
சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான
பிளவு அல்ல என்றும், உரிய தருணத்தில் அரசுக்கு எதிராக அனைத்து
எதிர்க்கட்சிகளும் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து களமிறங்கும் என்றும் ஐக்கிய
மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடனான உத்தியோகபூர்வ கூட்டணி குறித்த இறுதித்
தீர்மானம் அடுத்த தேசிய தேர்தலின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,</p><h2>&nbsp;அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட அனுராதபுரம் பேரணி</h2><p> "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட அனுராதபுரம்
பேரணியானது, தற்போதைய அரசின் தோல்விகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை
நாட்டு மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85f3ac0-3cc9-4994-a7f0-a9fb5f0dae10/26-6aa8c151a69fb.webp' /></p><p>
</p><p>உறங்கிக்கொண்டிருந்த மக்களை மீண்டும் விழிப்படையச் செய்து, அவர்களின்
போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய ஒரு முக்கியமான பேரணியாகவே அதனைப் பார்க்க
முடிகின்றது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்
அரசுக்கு எதிராகத் தனியாகப் பல போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக, இம்மாத இறுதியில் கொழும்பில் பிரம்மாண்டமான
முறையில் ஒன்றுகூடி, முக்கிய கலந்துரையாடல்களையும் பேரணிகளையும் நடத்த
ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
</p><p>
நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உள்ள பல்வேறு அரசியல் இயக்கங்கள்
இணைந்து தற்போது கூட்டு எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு வருகின்றன.</p><h2>பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் </h2><p>
</p><p>
எதிர்க்கட்சிகள் தனித்தனியாக மக்கள் சந்திப்புகளை நடத்துவதைப் பார்த்து அவை
பிளவுபட்டுள்ளதாகச் சிலர் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. ஒவ்வொரு
கட்சியும் தத்தமது பலத்துக்கு ஏற்ப மக்களைத் திரட்டுவது அரசியல் ரீதியாக
இயல்பான ஒரு விடயமாகும்.</p><p> எனினும், அரசுக்கு எதிராக இறுதிச் சந்தர்ப்பம்
வரும்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகவே கைகோர்த்து களமிறங்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது
குறித்து நீண்டகாலமாகப் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/149081de-d98c-4704-bbd1-c69a01c768f6/26-6aa8c1525bdf2.webp' /></p><p> இரு கட்சிகளின்
தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் முக்கிய குழுவினர் பலமுறை நேரில்
சந்தித்துப் பேசியுள்ளனர். </p><p>ஏற்கனவே உள்ளூராட்சி மன்ற அமைப்புகளின்
தேர்தல்களின்போது இரு கட்சிகளும் அடிமட்ட அளவில் இணைந்து செயற்பட்டது போல்,
தற்போதும் ஆதரவாளர்கள் மத்தியில் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி நல்லிணக்கம்
தொடர்கின்றது.

இரு கட்சிகளும் எப்போது உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கப் போகின்றன என்பதை
இரு கட்சித் தலைவர்களுமே உரிய நேரத்தில் தீர்மானிப்பார்கள்.</p><p>

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்திலோ அல்லது அடுத்த தேசிய தேர்தல்
வரவிருக்கும் சந்தர்ப்பத்திலோ இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு
வெளிப்படுத்தப்படும்.
</p><p>
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவராக
இன்னமும் மஹிந்த ராஜபக்சவே தொடர்ந்தும் திகழ்கின்றார்.</p><p> இத்தகைய சிரமங்களுக்கு
மத்தியிலும் கூட அவரைப் பேரணிகளுக்கு அழைத்து வருகின்றமை, பொதுமக்களுக்கும்
அவருக்குமான பலமான பிணைப்பையே மீண்டும் காட்டுகின்றது என்பதை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T03:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அரச கடன் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-released-sri-lanka-government-debt-1789436012"></link>
            <id>https://tamilwin.com/article/information-released-sri-lanka-government-debt-1789436012</id>
            <summary type="text">
இந்த ஆண்டில் (2026) இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த அரச கடன் 744 பில்லியனாக அதிகரித்துள்ளது. 

அரச கடன் மேலாண்மை அலுவலகத்தின் சமீபத்திய அறிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இந்த ஆண்டில் (2026) இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த அரச கடன் 744 பில்லியனாக அதிகரித்துள்ளது. </p><p>

அரச கடன் மேலாண்மை அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h2>கடன் தொகை&nbsp;</h2><p> 

அதன்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் 32,233 பில்லியனாக கடன் இருந்துள்ளது.</p><p>

இவை இரண்டாம் காலாண்டின் (ஜூன் மாத இறுதியில்) இறுதியில் 32,977 பில்லியனாக அதிகரித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T03:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணீர்ப்புகைக்குண்டுகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/expired-police-tear-gas-1789438833"></link>
            <id>https://tamilwin.com/article/expired-police-tear-gas-1789438833</id>
            <summary type="text">பொலிஸ் பிரிவின் வசம் உள்ள கண்ணீர்ப்புகை குண்டுகளின் கையிருப்பில் 70 சதவீதம் காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் தலைமையக வட்டார தகவல்களில் வெளியாகியுள்ளன.

இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் பிரிவின் வசம் உள்ள கண்ணீர்ப்புகை குண்டுகளின் கையிருப்பில் 70 சதவீதம் காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் தலைமையக வட்டார தகவல்களில் வெளியாகியுள்ளன.
</p><p>
இருப்பினும், நாட்டில் கலவரங்களை அடக்குவதற்குத் தேவையான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பொலிஸ் பிரிவிடம் உள்ளதாகவும் தலைமையகம் கூறுகின்றது.</p><h2>ஐந்து ஆண்டுகளுக்கு இறக்குமதி</h2><p>
</p><p>
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகள், மார்ச் 22 முதல் ஜூலை 2022 போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பின்னர் பயன்படுத்தப்படாமையினால் காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ee2bf91-cf2b-470a-a66c-0efbde39fc32/26-6aa8b161b2131.webp' /></p><p> </p><p>

அவசர கொள்முதல்களின் கீழ் வெளிநாடுகளிலிருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வாங்கப்படுவதாகவும், அந்த கண்ணீர்ப்புகைக்குண்டுகள் பொலிஸ் களப்படை தலைமையகத்தால் நாடு முழுவதும் உள்ள கலவரத் தடுப்புக் பொலிஸ் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் தலைமையகம் கூறுகின்றது. </p><p>

மேலும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கண்ணீர்ப்புகைக் குண்டின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் என்றும் கூறப்படுகின்றது.</p><h2>கண்ணீர்ப்புகை குண்டுகள் காலாவதி</h2><p>

இவை காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தெரிவிக்கின்றது. </p><p>

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் போராட்டங்களை அடக்குவதற்கு கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும், இதன் காரணமாக பொலிஸ் வசம் இருந்த சில கண்ணீர்ப்புகை குண்டுகள் காலாவதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T02:45:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/restrictions-on-fuel-supply-at-500-fuel-stations-1789436026"></link>
            <id>https://tamilwin.com/article/restrictions-on-fuel-supply-at-500-fuel-stations-1789436026</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. </p><p>

தனியார் எரிபொருள் நிறுவனங்களால் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான 250 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சினொபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 150 மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனத்திற்கு சொந்தமான 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என மொத்தம் 500 நிலையங்களுக்கு டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

எரிபொருள் இறக்குமதி</b></h2><p>குறித்த நிறுவனங்கள் நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விலைக்கும், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யும் விலைக்கும் இடையில் காணப்படும் பாரிய இடைவெளியே இந்த நிலைக்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee50eb56-0873-4b1c-a1a4-115e18ff3a09/26-6aa8a3c55c954.webp' /></p><p>நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> “இதன் காரணமாகப் பொதுமக்களும், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.</p><p> தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. </p><h3><b>விலை சூத்திரம்</b></h3><p>தற்போதைய அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருளை விற்பனை செய்வதனால் தமக்கு பாரிய நட்டம் ஏற்படும் என குறித்த தனியார் நிறுவனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c55659-d546-4418-8ddf-be395f36e788/26-6aa8a3c6183d0.webp' /></p><p>இவ்வாறு ஏற்படும் நட்டத்தைக் குறைத்துக் கொள்வதற்காகவே குறித்த நிறுவனங்கள் சந்தைக்கான எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. </p><p>எனினும், இந்த நிறுவனங்கள் எமக்குத் தொடர்ந்தும் எரிபொருளை வழங்குவதாக உறுதியளித்திருந்தன” என குமார் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T02:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலட்சக்கணக்கானோருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1-20-000-people-recruited-goverment-job-this-year-1789436693"></link>
            <id>https://tamilwin.com/article/1-20-000-people-recruited-goverment-job-this-year-1789436693</id>
            <summary type="text">இந்த ஆண்டு பரீட்சைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தகுதியின் அடிப்படையில் 1,20,000 க்கும் மேற்பட்ட புதிய நபர்கள் அரச சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு பரீட்சைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தகுதியின் அடிப்படையில் 1,20,000 க்கும் மேற்பட்ட புதிய நபர்கள் அரச சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>இதன்படி, தனிப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் அரச சேவையில் சேர்க்கும் கலாச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>கேகாலை, ருவன்வெல்லாவில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>பொதுமக்களுக்கு&nbsp;&nbsp;வழங்கப்படும்&nbsp;சேவைகள் </h2><p>
உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூராட்சி திணைக்களங்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71ed0dc0-9ab3-4432-9db8-262204466860/26-6aa8a7c6e7a5b.webp' /></p><p>
</p><p>
பொது நிதிகளை சிக்கனமாகவும் வீணாக்காமலும் பயன்படுத்தி, 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் பிரதான நோக்கத்தை அடைவதற்கு பொதுச் சேவையும் உள்ளூராட்சி நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>பிறப்பு முதல் இறப்பு வரையிலும், இறப்பிற்கு பிறகும் கூட, பல தேவைகளில் இந்த உள்ளூராட்சி நிறுவனங்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. இது மக்களின் வாழ்க்கையுடன் மிகவும் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. </p><p>இருப்பினும், சில சமயங்களில், இந்த உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் சேவைகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததைக் காண்கிறோம். எனவே, இந்த உள்ளாட்சி வாரத்தை மீண்டும் செயல்படுத்த நினைத்தோம். இதை ஒரு வாரத்திற்குள் மட்டுப்படுத்தாமல், இந்தத் திட்டம் வழங்கும் அறிவு, புரிதல் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, வரும் ஆண்டு முழுவதும் இந்தச் சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.</p><h2>அரச சேவைக்காக ஆட்சேர்ப்பு</h2><p>
</p><p>
இன்று, நடமாடும் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. எதிர்காலத்தில், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்வேறு கல்வித் திட்டங்கள், கலை, கலாச்சார மற்றும் விளையாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட, மக்களைப் பாதிக்கும் அத்தியாவசிய சேவைகளை ஒரே வளாகத்தில் வழங்குவது மற்றும் அவற்றை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வது உட்பட, இந்த வாரம் ஏற்பாடு செய்யப்படும்.
</p><p>மத்திய அரசின் கீழ் இது தான் நிலை. மாகாண சபைகளின் கீழும் இதே நிலை தான். எனவே, ஒரு அரசாங்கமாக, இந்த ஆண்டு மட்டும் அரச சேவைக்காக 1,20,000-க்கும் மேற்பட்டோரை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.சில ஆட்சேர்ப்புகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.</p><p>செப்டம்பர் 01, 2019 நிலவரப்படி 180 நாட்களை நிறைவுசெய்த, தற்காலிக, பதவி, ஒப்பந்தம் போன்ற அடிப்படையில் இருந்த அனைவரையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T02:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18-years-old-boy-killed-brutally-1789434493"></link>
            <id>https://tamilwin.com/article/18-years-old-boy-killed-brutally-1789434493</id>
            <summary type="text">கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><h2><b>

 ஆரம்பகட்ட விசாரணை</b></h2><p>உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4f3026-8f5a-4b8f-9d24-5272bb4f78b1/26-6aa89c8eeeaa4.webp' /></p><p>தனிப்பட்ட தகராறு ஒன்று முற்றியதன் காரணமாக இருவரால் இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
 இந்த கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><h3><b>

பழைய தகராறு </b></h3><p>இதேவேளை, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eef92656-57cb-41af-8789-135f041a1ab7/26-6aa89c8fa3950.webp' /></p><p>யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யக்கலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 பழைய தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மர்ம பொதி - தப்பியோடிய பயணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mystery-box-in-katunayake-airport-1789435229"></link>
            <id>https://tamilwin.com/article/mystery-box-in-katunayake-airport-1789435229</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6 ஆம் இலக்கப் பொதி பகுதியில் அருகில் மர்மமான முறையில் கைவிடப்பட்டிருந்த பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த பொதிக்குள் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6 ஆம் இலக்கப் பொதி பகுதியில் அருகில் மர்மமான முறையில் கைவிடப்பட்டிருந்த பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p> அந்த பொதிக்குள் பெருமளவு குஷ் ரக போதைப்பொருள் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p> இரண்டு பொதிகளுக்குள் காற்றுப்புகாதவாறு 60 பொட்டலங்களாக பொதியிடப்பட்டிருந்தது. </p><h2><b>தப்பியோடிய பயணி</b></h2><p>இந்தப் போதைப்பொருள், நேற்று தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-405 விமானத்தில் வந்த பயணி ஒருவரால் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/349ea38a-d730-44c7-abd5-e1cde87819d2/26-6aa89ffcd1764.webp' /></p><p>விமான நிலையத்திற்குள் வைத்து சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தின் காரணமாகவே குறித்த பயணி இந்தப் போதைப்பொருளைக் கைவிட்டுத் தப்பியோடியிருக்கலாம் எனப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். </p><p>குறித்த பொதிகளைக் கொண்டுவந்த விமானப் பயணி யார் என்பதைக் கண்டறிவதற்காக தற்போது விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் தொகுதி இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது. 
</p>]]></content>
            <updated>2026-09-15T01:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்களுக்குப் பைத்தியமில்லை – ஐக்கிய மக்கள் சக்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-chance-for-rajapakshes-any-more-1789435638"></link>
            <id>https://tamilwin.com/article/no-chance-for-rajapakshes-any-more-1789435638</id>
            <summary type="text">ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றுவதற்கு மக்களுக்கு பைத்தியம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றுவதற்கு மக்களுக்கு பைத்தியம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>2022 ஆம் ஆண்டு நாட்டை பொருளாதார ரீதியாக வங்ரோத்தடையச் செய்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் நாட்டின் ஜனாதிபதி பீடமேற்றுவதற்கு இந்த நாட்டு மக்களுக்குத் பைத்தியம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed46766-9178-4fbb-a4e7-7eec218cef40/26-6aa89ef7b8bf4.webp' /></p><p>
</p><p>தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகள் உண்மையென்றால், அவர் பத்து சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதைக் கூடத் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
</p><p>2029-இல் இவர்தான் நல்ல பையன் எனக் கூறி, அவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு யாராவது ஆதரவாகக் கையை உயர்த்தினால், அவர்கள் சோறு சாப்பிடும் மனிதர்களாக இருக்க முடியாது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
</p><p>தங்களைப் போல் அல்லாமல் ராஜபக்சக்களிடம் அதிகளவில் பணம் உள்ளது. அதனால், எந்நேரத்திலும் பேருந்துகளில் ஆட்களை ஏற்றிவந்து பிரம்மாண்டமான பேரணிகளை நடத்த அவர்களால் முடியும்.</p><p> ஆனால், அத்தகைய செயற்கையான கூட்டங்களைக் கண்டு அச்சப்படவோ அல்லது பெரிதாக யோசிக்கவோ தேவையில்லை ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T01:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்காகவே மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்..! ரோஹித அபேகுணவர்தன எம்.பி விடுத்த அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-have-united-again-for-the-sake-of-mahinda-1789430564"></link>
            <id>https://tamilwin.com/article/we-have-united-again-for-the-sake-of-mahinda-1789430564</id>
            <summary type="text">சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்சவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த
நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு
அனுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்சவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த
நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு
அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப் போவதில்லை என்று புதிய
ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது, "நாங்கள் மகிந்த வேண்டாம் என்று கூறிவிட்டு ரணில் விக்ரமசிங்கவின் பக்கம்
செல்லவில்லை.</p><h2>நெருக்கடியான சந்தர்ப்பத்தில்</h2><p>கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவித்த அந்த
இக்கட்டான காலகட்டத்தில்தான் நாட்டைப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, மிகக்
குறுகிய காலத்துக்குள் நாட்டை அந்தப் பேராபத்திலிருந்து வெற்றிகரமாகப்
பாதுகாத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72410334-94a2-4d26-a1e6-96972e9b0cfb/26-6aa892585138b.webp' /></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எங்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் சில
கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகள் காணப்பட்டமை உண்மையே.</p><p> அதற்காக இத்தகைய
ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாம் பிரிந்து நிற்க முடியாது. </p><p>மகிந்த
ராஜபக்சவுக்காகவே நாம் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.

தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் எழுந்துள்ள நெருக்கடியான
சந்தர்ப்பத்தில் சகல எதிர்க்கட்சிகளும் எந்தவித பேதமுமின்றி ஒன்றுபட வேண்டும்.</p><p>
அந்த ஒற்றுமையே எதிர்காலத்தில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பாக அமையும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T00:34:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் நிறுவன மின்னஞ்சலால் ஆபத்தில் நாமல் ராஜபக்ச! முக்கிய பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769</id>
            <summary type="text">எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் 
ராஜபக்ச இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூற முனைந்தாலும்
சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 
2013 மார்ச் 23 ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் (Email) ஒன்றின் மூலம் பல கதைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச விமானங்களை கொள்வனவு செய்யும் யோசனையை ஜனாதிபதி மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து விடயத்தை முடித்து தருவதாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
அது தொடர்பில் எயார்பஸ் (Airbus) நிறுவனம் அனைத்து மின்னஞ்சல்களையும் வழங்கியுள்ளது. எயார்பஸ் கொள்வனவு தொடர்பான வேலையை நான் தந்தைக்குச் சொல்லி செய்து தருகிறேன் தந்தை மூலமாக அல்லது ஜனாதிபதி மூலமாக இதற்குத் தேவையான அமைச்சரவை அனுதியை பெற்று தருவதாக கூறியுள்ளார்.
</p><h2>நாமலின் பங்களிப்பு</h2><p>இதற்கு இணையாக 2013 மார்ச் 27 ஆம் திகதி அன்றைய சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இக்கொள்வனவுக்கான அனுமதியைக் கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பpத்துள்ளார்.</p><p>VZMHUS</p><p> </p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 13 ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. என்னவென்றால் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாதீன பணிப்பாளர் சபையைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல் இலங்கைக்கு வந்த எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் இந்த பாரிய அளவிலான விமானக் கொள்வனவின் போது விமான ஓட்டும் பயிற்சி மையம் (Pilot Training Centre) ஒன்றும் பெருந்தொகை செலவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>
ஹம்பாந்தோட்டையில் விமான ஓட்டும் பயிற்சி</h2><p>அந்தப் பயிற்சி மையத்தை தனது சொந்த தேர்தல் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் நிறுவுமாறு எயார்பஸ் நிறுவன பிரதிநிதிகளிடம் நாமல் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>மின்னஞ்சல் சான்றுகள் மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளதாகவே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நிமல் பெரேரா அளித்துள்ள வாக்குமூலம் தனக்கு எயார்பஸ் நிறுவனத்துடனோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனோ எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f8eb70-d0ad-4b6a-a54c-4d4f3d98ea46/26-6aa7f39bafd6d.webp' /></p><p>ஆனாலும் நாமல் ராஜபக்ச வெளிநாட்டு ஆலோசனைச் சேவை ஒன்றின் மூலம் பணம் கிடைக்கவுள்ளதாகவும் அப்பணத்தை வைப்பு செய்வதற்கு வெளிநாட்டு கணக்கு ஒன்றைத் தருமாறும் கோரியுள்ளார்.</p><p>தனக்கு வெளிநாட்டு ஆலோசனை சேவை மூலம் பணம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே நிமல் பெரேரா தனக்குச் சொந்தமான 'SABREVISION' என்ற நிறுவனத்தின் கணக்கு இலக்கத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>
இந்தக் கணக்கிற்கு 'Biz Solutions' எனும் நிறுவனம் மூலம் அதாவது அப்போதைய கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க பணிப்பாளராக இருந்த புரூணையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் நிமல் பெரேராவின் வெளிநாட்டு கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளது. </p><p>பின்னர் அந்த பணத்தை இலங்கையில் 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jpF2dBCZozI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-15T00:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை பிற்போடவே செயற்குழுவை பயன்படுத்தும் அநுர அரசு - எழும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-uses-executive-committee-postpone-elections-1789429072"></link>
            <id>https://tamilwin.com/article/govt-uses-executive-committee-postpone-elections-1789429072</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு
நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு
நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் பொதுச்செயலாளரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற
விசேட செயற்குழுவின் உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
</p><p>
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் கால
அவகாசம் நீடிக்கப்பட்டமை மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்தக் குழு
கூட்டத்தைப் புறக்கணித்தமை குறித்து ஊடகங்கள் வினவியபோதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><h2>பழைய முறைமையின் கீழ்</h2><p>
அவர் மேலும் கூறுகையில்,&nbsp;"மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்று
ஆராய்ந்து விதப்புரைகளையும் யோசனைகளையும் முன்வைப்பதற்காக இந்த நாடாளுமன்ற
விசேட குழு கடந்த 8 மாத காலமாகக் கூடியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7aeae2f-e9d7-4d90-820a-4ffb4b9aaf50/26-6aa8893f3d1b5.webp' /></p><p>
மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று
குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவும், சட்டமா அதிபர் திணைக்களமும் தெளிவாக
அறிக்கை சமர்ப்பித்துள்ளன.</p><p> பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாயின்
அதற்குரிய சட்ட திருத்தங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>அந்தப் பரிந்துரைகள்
குறித்துக் கவனம் செலுத்தினால் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு உடனடியாகத்
தீர்வு காணலாம்.</p><h2>காலத்தை வீணடிக்கும் விசேட செயற்குழு</h2><p>ஆனால், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த
பரிந்துரைகள் எதைக் குறித்தும் அரசு எந்தவொரு கவனமும் செலுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/802346a6-0095-4a76-9fe1-51ae8733aa6b/26-6aa8893fea5ee.webp' /></p><p> தேர்தலை
எப்படியாவது பிற்போடுவதற்கான யோசனைகளுக்கு மாத்திரமே அரசு
முன்னுரிமையளித்துச் செயற்பட்டது.
</p><p>
இதற்கமைய, இந்தக் குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17
ஆம் திகதி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறையற்ற
செயலாகும்.
</p><p>
தேர்தலை நடத்தும் உண்மையான நோக்கம் அரசிடம் சிறிதும் கிடையாது. குழு அறிக்கை
சமர்ப்பித்தவுடன் தேர்தலை நடத்தத் தயார் என்று கூறிக்கொண்டு அரசு
திட்டமிட்டுக் காலத்தை இழுத்தடித்து வருகின்றது.</p><p>

எனவே, இவ்வாறு காலத்தை வீணடிக்கும் இந்த விசேட செயற்குழுவில் தொடர்ந்து
பங்குபற்றுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த
நான்கு உறுப்பினர்களும் இனி அந்தக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டோம்
என்று ஒருமித்தமாகத் தீர்மானித்துள்ளோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:55:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் கூட்டத்தில் நடந்த அட்டகாசம் - அநுரவின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869"></link>
            <id>https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
</p><p>
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் குடிப்பது அவர்களது உரிமை அதை யாரும் தடுபக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
</p><p>மேலும் அநுரவுக்கு எதிரான பேரணியில் நாமலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.</p><p>.இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DM_VJcCmwvE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிராந்தியை நெருங்கும் நிதிக் குற்றப் பிரிவு! மகிந்தவின் மாளிகையில் திடுக்கிடும் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-urgently-summons-police-officer-anura-1789426268"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-urgently-summons-police-officer-anura-1789426268</id>
            <summary type="text">தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், குறித்த சிடி ஸ்கேனர் இயந்திரம் சீன அரசாங்கத்தினால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>ஏற்கனவே நாமல் ராஜபக்ச விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதுதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/e_N3-34LArk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:16:52+00:00</updated>
        </entry>
    </feed>
