<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-23T18:57:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் விரைவில் ஏற்பட போகும் ஆபத்து - கிளிநொச்சியில் நள்ளிரவில் தப்பி ஓடிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/balck-july-1983-violence-remembrance-day-1784829993"></link>
            <id>https://tamilwin.com/article/balck-july-1983-violence-remembrance-day-1784829993</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொடூரமான இனப்படுகொலைகளில் உயிரிழந்த உயிர்களை நினைவுகூரும் நாள் இன்று.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொடூரமான இனப்படுகொலைகளில் உயிரிழந்த உயிர்களை நினைவுகூரும் நாள் இன்று.&nbsp;</p><p>தமிழ் மக்களுக்கு எதிரான இந்தக் கொடூரக் கலவரம், யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்துத் தொடங்கி, நாடளாவிய ரீதியில் பல வாரங்களுக்குத் தொடர்ந்தது.</p><p>இந்த கொடூரங்களில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உலகளாவிய ரீதியில் புலம்பெயர் வாழ்வைத் தொடங்கினர்.</p><p>23ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னணியே இப்படுகொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்பட்டது.&nbsp;</p><p>இருப்பினும், அப்போதைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு, விரைவில் சிங்களப் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழருக்கு எதிரான வன்முறைகளாக மாறியது.</p><p>செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் இதன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வோம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IDXl3SqO03g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T18:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் மீதான போர்க்குற்ற வழக்கைக் கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/icc-case-against-darfur-rebel-leader-banda-1784830130"></link>
            <id>https://tamilwin.com/article/icc-case-against-darfur-rebel-leader-banda-1784830130</id>
            <summary type="text">சூடானின் டார்ஃபூர் பகுதியில் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படை மீது 2007-ஆம்
ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான போர்க்குற்ற வழக்கில், கிளர்ச்சித்
தலைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானின் டார்ஃபூர் பகுதியில் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படை மீது 2007-ஆம்
ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான போர்க்குற்ற வழக்கில், கிளர்ச்சித்
தலைவர் அப்துல்லா பண்டா அபாகர் நுரைன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது.</p><p>

வழக்கு திரும்பப் பெறப்பட்டதற்கான காரணம்
கடந்த 2011ஆம் ஆண்டு பண்டா மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால்
உறுதி செய்யப்பட்டன.
</p><p>
இருப்பினும், வழக்கு பதிவாகி ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில்,
அவருக்கு எதிரான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் பலவீனமடைந்துவிட்டதாக அரசுத்
தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>

"குற்றம் சாட்டப்பட்ட சம்பவங்களுக்கு பண்டாவே பொறுப்பு என்று நம்புவதற்குப்
போதிய வலுவான ஆதாரங்கள் தற்போது இல்லை."
அரசுத் தரப்பின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தி ஹேக்கில் உள்ள சர்வதேச
குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், பண்டா மீதான விசாரணையை முடிவுக்குக்
கொண்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/576ec62f-12cf-4118-b28f-17e4e43fcc12/26-6a6259b225b42.webp' /></p><p>
</p><p>
அதேவேளையில், எதிர்காலத்தில் போதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவருக்கு
எதிராக மீண்டும் வழக்குத் தொடர இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது என்றும்
நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T18:13:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள சுரங்கத் தொழிலை தேசிய பாதுகாப்பு நலனாக அறிவித்தது சுவீடன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sweden-mining-industry-counter-china-dominance-1784828992"></link>
            <id>https://tamilwin.com/article/sweden-mining-industry-counter-china-dominance-1784828992</id>
            <summary type="text">சுரங்கத் தொழில் மற்றும் அபூர்வ கனிமங்களின் அகழ்வாராய்ச்சியைத் தனது &#039;தேசிய
பாதுகாப்பு நலனாக&#039; சுவீடன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனா மீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரங்கத் தொழில் மற்றும் அபூர்வ கனிமங்களின் அகழ்வாராய்ச்சியைத் தனது 'தேசிய
பாதுகாப்பு நலனாக' சுவீடன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

சீனா மீதான அதிகப்படியான சார்ந்து வாழும் நிலையைத் தவிர்க்கவும், புதிய
சுரங்கக் கொள்கையை விரைவுபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுத்தமான ஆற்றல் உற்பத்தி, பாதுகாப்புத் துறை மற்றும் மின்சார வாகனத்
தயாரிப்பிற்குத் தேவையான அபூர்வ கனிமங்களை வெட்டி எடுப்பதிலும், அவற்றைச்
சுத்திகரிப்பதிலும் சீனா உலக அளவில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.</p><p></p><h2>தேசிய பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
ஐரோப்பிய தொழில் துறை சீனா மீது கொண்டுள்ள இந்த அதிகப்படியான சார்பு ஒரு
'கட்டமைப்பு அபாயம்' என்று சுவீடன் துணைப் பிரதமரும் தொழில்துறை அமைச்சருமான
எப்பா புஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40d40910-5825-4464-99bd-19fa41eefd27/26-6a62573bcd7d4.webp' /></p><p>
</p><p>
சுவீடனில் உள்ள 'பெர் கெய்ஜர்' பகுதி, 120 கோடி டன் தாது வளங்களையும் 22
இலட்சம் டன் அபூர்வ கனிம ஒக்சைடுகளையும் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்
மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும்.
</p><p>
சுரங்கத் தொழிலைத் தேசிய பாதுகாப்பு நலனாக அறிவிப்பதன் மூலம், திட்டமிடுதல்
மற்றும் அனுமதிகளை விரைவுபடுத்தி முதலீடுகளை ஈர்க்க முடியும் என அரசு
நம்புகிறது.</p><p></p><h2>புதிய நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்த புதிய நடவடிக்கை சுவீடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பின்
பாதுகாப்பு திறன்களை கணிசமாக உயர்த்தும் என்றும், சுரங்க திட்டங்களுக்கு அரசு
நிலங்களை ஒதுக்குவதை எளிதாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37016fbc-f8a8-44ff-89e1-c63e89b5d654/26-6a62573c80604.webp' /></p><p>
</p><p>
சுரங்கத் துறையில் முதலீடுகளை ஈர்க்க அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம்
ஒன்றை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
</p><p>
இருப்பினும், சுரங்க விரிவாக்கம் தங்களின் பாரம்பரிய மான்களை மேய்க்கும்
வாழ்வியலைப் பாதிக்கும் எனக் கூறி, அப்பகுதியில் வாழும் 'சாமி' பழங்குடியின
மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T18:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அனுசரணையில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் - நீதி கிடைக்க கொஞ்சம் காலம் செல்லும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-chemmani-npp-government-1784825970"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-chemmani-npp-government-1784825970</id>
            <summary type="text">தமிழின வரலாற்றில் முந்தைய அரச கட்டமைப்பு ரீதியாகவும் நடந்தேறிய அநீதிகளும் வன்முறைகளும் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல. தலைமுறை தலைமுறையாகச் சுமக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின வரலாற்றில் முந்தைய அரச கட்டமைப்பு ரீதியாகவும் நடந்தேறிய அநீதிகளும் வன்முறைகளும் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல.</p><p> தலைமுறை தலைமுறையாகச் சுமக்கப்படும் இந்த வலியும் இழப்பும், நீதிக்கான எதிர்பார்ப்பை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.</p><p>வரலாற்று ரீதியான இந்த நீதிக்கான பயணத்தில், சர்வதேச அமைப்புகளின் பங்கு, வரலாற்று நிகழ்வுகளின் ஆவணப்படுத்தல் அல்லது அரசியல் தீர்வுகள் குறித்து தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>இந்நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையால் தான் இன்னமும் லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்த வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் உட்பட பல தகவல்கள் குறித்து கலந்துரையாடுகின்றது நேருக்கு நேர் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PuqfCeSztBs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:53:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பொது நூலகத்திற்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hiniduma-sunil-senevi-visits-jaffna-public-library-1784827643"></link>
            <id>https://tamilwin.com/article/hiniduma-sunil-senevi-visits-jaffna-public-library-1784827643</id>
            <summary type="text">பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி,
யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி,
யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இன்று(23) விஜயம் மேற்கொண்டார்.</p><p>

இதன்போது நூலகத்தின் தற்போதைய செயற்பாடுகள், எதிர்கால அபிவிருத்தித்
திட்டங்கள் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள்
தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.</p><p></p><h2>எதிர்கால நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
மேலும், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் சேவைகளை நவீனமயப்படுத்துதல்,
வாசகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், ஆவணங்கள் மற்றும் அரிய நூல்களைப்
பாதுகாக்கும் திட்டங்கள், டிஜிட்டல் நூலக வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.</p><p>யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு எதிரே அமைந்துள்ள தொன்மை வாய்ந்த பழைய
மாவட்டச் செயலகக் கட்டடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர்,
அதன் புராதனத் தன்மை அழியாதவாறு அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான எதிர்காலத் திட்ட ஏற்பாடுகள் குறித்து
விரிவாக ஆராய்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1287ba4a-31b0-4dbf-a6b8-4ba4afe956a2/26-6a62511a9f67b.webp' /></p><p> இது தொடர்பான விசேட விளக்கங்களை ஹினிதும சுனில் செனவி இதன்போது உரிய அதிகாரிகளுக்கு
வழங்கினார்.</p><p>
</p><p>
இந்தநிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ் மாநகர ஆணையாளர்
அரவிந்தராஜ், யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் இமானுவேல் தயாளன், யாழ்ப்பாணம்
பொது நூலகத்தின் நிர்வாகத்தினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர்
கலந்துக் கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a8d415-acb1-4cf0-bc35-2990d509fdaa/26-6a62511b7b858.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cebc4f1f-2cea-4cda-9b0a-ccf2f090b732/26-6a62511c4ac15.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:36:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-one-death-1784826853"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-one-death-1784826853</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவு, பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே உள்ள ஒரு விழா மண்டபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவு, பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே உள்ள ஒரு விழா மண்டபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p>
ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa34ac4c-d268-4830-9769-cc55ec6cb392/26-6a624fe01b913.webp' /></p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>
இச்சம்பவம் தொடர்பாக வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/child-s-skeleton-raincoat-semmani-mass-grave-1784826475"></link>
            <id>https://tamilwin.com/article/child-s-skeleton-raincoat-semmani-mass-grave-1784826475</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின்
என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின்
என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான இன்றைய தினம்(23.7.2026) 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>என்பு கூடுகள் அடையாளம்</h2><p>
</p><p>
அதேவேளை இன்றைய தினம் மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 95 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:21:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[குச்சவெளி இளைஞர் துன்புறுத்தப்பட்டு பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டதாக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaint-that-a-kuchchaveli-youth-was-tortured-1784825162"></link>
            <id>https://tamilwin.com/article/complaint-that-a-kuchchaveli-youth-was-tortured-1784825162</id>
            <summary type="text">குச்சவெளி, காசிம்நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரஹீம் முகம்மது நிஸ்லான்
என்ற இளைஞர், கடற்படையினரால் தாக்கப்பட்டதுடன், பொய் வழக்கில்
சிக்கவைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குச்சவெளி, காசிம்நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரஹீம் முகம்மது நிஸ்லான்
என்ற இளைஞர், கடற்படையினரால் தாக்கப்பட்டதுடன், பொய் வழக்கில்
சிக்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 16.07.2026 அன்று பிற்பகல் 3.00 மணியளவில், நண்பருடன் மோட்டார்
சைக்கிளில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கடற்படையைச் சேர்ந்த
இருவர் தங்களை வழிமறித்தனர்.</p><p>பின்னர் மோட்டார் சைக்கிளிலிருந்து வலுக்கட்டாயமாக
இழுத்துச் சென்று சுமார் 200 முதல் 300 மீற்றர் தூரம் கடற்கரையை நோக்கி
அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் அவர்
கூறியுள்ளார்.
</p><p>
சம்பவத்தை அறிந்து அங்கு வந்த தனது தாயாரையும் சகோதரியையும் கடற்படையினர்
தாக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bfc1faf-01e2-430c-a967-09f8737b0c79/26-6a624894e21e4.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல், கரையில் நிறுத்தப்பட்டிருந்த
OFRP-A-5694 CHW பதிவு இலக்கம் கொண்ட படகில் தன்னை வலுக்கட்டாயமாக
ஏற்றியதாகவும், தனது காலில் சுமார் 40 கிலோ எடையுள்ள பாராங்கல்லைக் கட்டி,
"சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையெனில்
கடலில் தூக்கி வீசிவிடுவோம்" என உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும்
தெரிவித்துள்ளார்.
</p><p>
பின்னர் படகு மூலம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு
வந்த தனது பெற்றோரை துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய பின்னர், தன்னையும்
குறித்த படகையும் குச்சவெளி வடக்கு கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்து பொய்
வழக்குப் பதிவு செய்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய களியாட்ட விடுதிகளுக்கு வர்த்தக வரி குறைப்பு: புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/business-tax-cut-uk-nightclubs-prime-minister-1784824023"></link>
            <id>https://tamilwin.com/article/business-tax-cut-uk-nightclubs-prime-minister-1784824023</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின்
களியாட்ட விடுதிகள், கிளப்புகள் மற்றும் நேரலை இசைக்கூடங்களுக்கான வர்த்தக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின்
களியாட்ட விடுதிகள், கிளப்புகள் மற்றும் நேரலை இசைக்கூடங்களுக்கான வர்த்தக
வரியை வரும் ஏப்ரல் மாதம் முதல் 20 வீதம் குறைப்பதாக அறிவித்துள்ளார்.
</p><p>
அதிகாரத்திற்கு வந்த மூன்று நாட்களில் அவர் வெளியிட்டுள்ள மூன்றாவது முக்கிய
நிவாரண அறிவிப்பு இதுவாகும்.
</p><p>
இந்த வரி குறைப்பின் மூலம் சராசரியாக ஒரு களியாட்ட விடுதி ஆண்டுக்கு சுமார்
£1,100 (தோராயமாக $1,472) வரை சேமிக்க முடியும்.

நாட்டின் சுமார் 32,000 வணிக நிறுவனங்கள் இதனால் பயனடையும்.</p><p></p><h2>முக்கிய நடவடிக்கைகள்&nbsp;</h2><p> </p><p>இந்த வரி சலுகை
திட்டத்தால் பிரித்தானிய அரசுக்கு ஆண்டிற்கு £100 மில்லியன் செலவாகும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.

பதவிக்கு வந்த குறுகிய காலத்தில், வீட்டு மின்சாரக் கட்டணத்தில் வரியை
நீக்கியது மற்றும் பேருந்துக் கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தது போன்ற
அதிரடி நடவடிக்கைகளையும் பர்ன்ஹாம் எடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/628daf4a-aa90-4fc5-b930-0d4c58a7fbf1/26-6a6244e71b529.webp' /></p><p>
</p><p>
மக்கள் தங்கள் சமூகத்தில் விரும்பும் உள்ளூர் வணிக நிறுவனங்களுக்கு இந்த
அரசாங்கம் எப்போதும் உறுதுணையாக நிற்கும் என பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்கத்தின் இந்த முடிவை சிறு சுயாதீன உணவகங்கள் மற்றும் ஜே.டி. வெதர்ஸ்பூன்
போன்ற முன்னணி களியாட்ட விடுதி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.

இருப்பினும், இந்த வரி தள்ளுபடி ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு
விரிவாக்கப்படவில்லை.
</p><p>
உணவகங்களும் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும்,
ஹோட்டல்களுக்கான வரி 110 வீதம் வரை உயர வாய்ப்புள்ளதால், பட்ஜெட்டில் இதர
விருந்தோம்பல் துறை நிறுவனங்களுக்கும் வரிச் சீர்திருத்தங்கள் செய்யப்பட
வேண்டும் என்றும் 'யூகே ஹாஸ்பிட்டாலிட்டி' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
வரி ஏய்ப்பு செய்யும் ஒன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீதான நடவடிக்கை மற்றும்
புகைப்பிடிக்கும் 'வேப்' கடைகளுக்கான சலுகைகளை ஆய்வு செய்வதன் மூலம் இந்த வரி
குறைப்பிற்கான நிதி திரட்டப்படும் என பிரித்தானிய அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T16:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலோகன் சிவப்பு அட்டை சர்ச்சை: ஃபிஃபா மீது நோர்வே அதிகாரப்பூர்வ முறைப்பாடு அளிக்கத் தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/balogun-red-card-controversy-complaint-with-norway-1784823053"></link>
            <id>https://tamilwin.com/article/balogun-red-card-controversy-complaint-with-norway-1784823053</id>
            <summary type="text">அமெரிக்க கால்பந்து வீரர் ஃபோலரின் பலோகனின் தடையை நீக்கிய ஃபிஃபாவின் (FIFA)
நடவடிக்கைக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு அளிக்க நோர்வே கால்பந்து
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க கால்பந்து வீரர் ஃபோலரின் பலோகனின் தடையை நீக்கிய ஃபிஃபாவின் (FIFA)
நடவடிக்கைக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு அளிக்க நோர்வே கால்பந்து
சம்மேளனம் (NFF) முடிவு செய்துள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கை "ஒட்டுமொத்த கால்பந்து விளையாட்டையும் ஆபத்தில் தள்ளியுள்ளது"
என்று நோர்வே கால்பந்து தலைவர் லிஸ் கிளாவனஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
உலகக்கிண்ண தொடரில் போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பலோகன்
சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

இதனால் பெல்ஜியத்திற்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாடத் தடை
விதிக்கப்பட்டது.</p><p></p><h2>தடை&nbsp;</h2><p>
</p><p>
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஃபிஃபா தலைவர் ஜியானி
இன்ஃபாண்டினோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, பலோகனின் தடை
இடைநிறுத்தப்பட்டது.
</p><p>
இந்த தலையீடு உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்தப்
போட்டியில் பெல்ஜியம் 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவைத் தோற்கடித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47fb5410-45bd-4ba1-91e1-c85017196a6e/26-6a62431df39a5.webp' /></p><p>

அரசியல் தலைவர்களின் தலையீட்டிற்கு ஏற்ப விதிகளை வளைப்பது மிகவும் ஆபத்தான
முன்உதாரணமாகிவிடும் என நோர்வே கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் லிஸ் கிளாவனஸ்
எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>அடிப்படை விதி</h2><p>

"இதுபோன்ற அடிப்படை விதிகளை மீறும்போது, அது விளையாட்டின் பாதுகாப்பிற்கே
அச்சுறுத்தலாக அமையும்.

இந்த முடிவு வெளிப்படையான வெளிப்புற அழுத்தங்களால் எடுக்கப்பட்டது என்பதை
அனைவரும் அறிவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1902b446-04e9-4723-b4e1-aed317292082/26-6a62431ea36b1.webp' /></p><p> </p><p>ஃபிஃபா தலைமை தனது தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்."

மேலும், ஃபிஃபாவின் ஒழுங்குமுறைக் குழுத் தலைவர் முகமது அல்-கமாலி, மற்ற
உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததற்கும்
அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு, உலகக் கிண்ண தொடரை 64 அணிகளாக உயர்த்த
முன்மொழிந்துள்ளதையும் கிளாவனஸ் நிராகரித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T16:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செக் குடியரசில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: படைவீரர் ஒருவர் பலி - 4 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/military-helicopter-crash-czech-republic-1784823053"></link>
            <id>https://tamilwin.com/article/military-helicopter-crash-czech-republic-1784823053</id>
            <summary type="text">செக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள இராணுவ தளத்தில் இராணுவ ஹெலிகொப்டர்
ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 படைவீரர்களில் ஒருவர் பரிதாபமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள இராணுவ தளத்தில் இராணுவ ஹெலிகொப்டர்
ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 படைவீரர்களில் ஒருவர் பரிதாபமாக
உயிரிழந்தார்.</p><p>

தலைநகர் பிராக்கில் இருந்து தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் உள்ள நமேஸ்ட்
நாத் ஒஸ்லாவோ என்ற இராணுவ தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.</p><p>பெல் டெக்ஸ்ட்ரான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட UH-1Y வெனம் ரக ஹெலிகாப்டர்
இந்த விபத்தில் சிக்கியது.

விபத்தில் காயம் அடைந்த மூன்று வீரர்கள் நடுத்தர அளவிலான காயங்களுடன்
பர்னோவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.</p><p></p><h2>ட்ரெபிக் மருத்துவமனை&nbsp;</h2><p>ஒரு வீரர் இலேசான காயங்களுடன்
ஜிஹ்லாவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், விபத்தின் போது ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட மூன்று
பேர் ட்ரெபிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c33fd1d5-ac43-42bb-ac10-ca4873e5903c/26-6a623ea9cff8c.webp' /></p><p>

"காயமடைந்த வீரர்களுக்கும், உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கும் தேவையான
அனைத்து உதவிகளையும், பராமரிப்பையும் வழங்குவதே எங்களின் தற்போதைய முதன்மை
முன்னுரிமையாகும்."
</p><p>
இந்த விபத்து குறித்து விசாரணை முடிவடையும் வரை, இராணுவத்தில் உள்ள அனைத்து
H-1 ரக ஹெலிகொப்டர்களின் இயக்கத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக செக்
இராணுவம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T16:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழினத்தின் சாபக்கேடு அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-bimmal-slams-archchuna-1784789983"></link>
            <id>https://tamilwin.com/article/minister-bimmal-slams-archchuna-1784789983</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் அவசியமற்ற, கேவலமான மற்றும் வக்கிரமான முறையில் நடந்துகொள்ளும் உறுப்பினர்கள் ஒன்றிரண்டு பேர் உள்ளனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் அவசியமற்ற, கேவலமான மற்றும் வக்கிரமான முறையில் நடந்துகொள்ளும் உறுப்பினர்கள் ஒன்றிரண்டு பேர் உள்ளனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்கள் மனநோயாளி என்பதால் பொறுமையுடன் இருக்கிறேன் என நாடாளுமன்றத்தில் இன்று(23.07.2026) உரையாற்றும் போது அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஒழுங்கு தொடர்பான பிரச்சினை ஒன்றை எழுப்ப முயற்சித்த போதே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
</p><h2><b>
தமிழ் மக்களுக்கே அவமானம் </b></h2><p>அதற்கு பதிலளித்த அமைச்சர், 

“அர்ச்சுனா எம்.பி தமிழ் மக்களுக்கே அவமானம் சேர்க்கும் ஒரு நபர். எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது நடந்துகொண்ட விதத்தை அவதானித்தீர்களா? அவை மைக் மூலம் கேட்காமல் இருக்கலாம். காணொளிகளிலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த நாடாளுமன்றத்தின் நான்கு சுவர்கள் தான் சாட்சியாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f003da0-5dfb-4469-923f-d6b7c8d0512b/26-6a61c1b2cbf1b.webp' /></p><p>அவர் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, வெளியே செல்லும்போது நடந்துகொள்வதும் இப்படித்தான். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை இன்று நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>

அவருக்கு அருகில் இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார் பொன்னம்பலம், சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். </p><p>முன்னர் சபாநாயகர் கரு ஜெயசூரியவை இங்கிருந்த நாற்காலிகளால் தாக்கியுள்ளனர். ஆனாலும், இந்தளவுக்குக் கேவலமான முறையில் யாரும் பேசியதில்லை&nbsp;என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><h2><b>
நிலையியற் கட்டளை</b></h2><p>இதன்போது அர்ச்சுனா இராமநாதன் ஏதோ கூற முயற்சித்துள்ளார். மடையனைப் போன்று நடந்துகொள்ள வேண்டாம். நாடாளுமன்றத்தை நகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அர்ச்சுனா எம்.பி. என்னை குறித்து இதற்கு முன்பும் அவதூறான முறையில் பேசியுள்ளார் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c8c008-c40e-4a62-a252-c332b610ae46/26-6a61c1b37afab.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில், அங்கு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,&nbsp; உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியற்ற வகையில் பேசுவது பொருத்தமானதல்ல என&nbsp; &nbsp;தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>அத்துடன், “மடையனைப் போன்ற கதைகளைக் கூற வேண்டாம் எனக் கூறுவதைத் தவிர்க்கவும். நீங்கள் நிலையியற் கட்டளைகளைத் தெரிந்து கொண்டு வாருங்கள். </p><p>பிமல் ரத்நாயக்க, குமார் பொன்னம்பலம் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் பற்றிக் கூறினார். இங்கு அத்தகையதொரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. </p><p>இங்குள்ளவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, குமார் பொன்னம்பலத்தின் மகனாவார்”&nbsp; என சஜித் மேலும்&nbsp; குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனையடுத்து குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி, நான் சைக்கோவாக இருக்கலாம். ஆனால், ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என சபையில் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T15:44:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் விபத்து: இந்திய சுற்றுலாப் பயணி உட்பட இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/racing-motorcycle-fire-indian-tourist-injured-1784820320"></link>
            <id>https://tamilwin.com/article/racing-motorcycle-fire-indian-tourist-injured-1784820320</id>
            <summary type="text">திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில், ரேசிங் மோட்டார்
சைக்கிள் ஒன்று தீப்பற்றி எர...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில், ரேசிங் மோட்டார்
சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகியுள்ளது.</p><p>குறித்த சம்பவமானது இன்று (23.7.2026) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.</p><p>திருகோணமலையிலிருந்து கபரணை நோக்கி இந்தியத் தம்பதியினர் பயணித்த காரும்,
கபரணையிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகமாக வந்த உயர் ரக ரேசிங் மோட்டார்
சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>காரில் மோதிய
வேகத்தில் மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறி, கணப்பொழுதில் தீப்பற்றி
எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளது.
</p><p>விபத்தில் பலத்த காயமடைந்த 27 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உடனடியாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a89a2f9-f7d4-4595-b6ba-5a8b806c7a49/26-6a6235dab4fb2.webp' /></p><p>
</p><p>காரை ஓட்டி வந்த இந்திய நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.</p><p> லேசான காயங்களுக்கு உள்ளான அவரது மனைவிக்கு முதலுதவி சிகிச்சைகள்
அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி
வைக்கப்பட்டார்.
</p><p>
இந்த விபத்துக்கான முதன்மை காரணம் குறித்து கல்லோயா பொலிஸார் மேலதிக தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T15:42:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டக்ளஸ் தேவானந்தா விமானத்தை கடத்த போட்ட திட்டம்! வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-devananda-s-welikada-prison-experience-1784817684"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-devananda-s-welikada-prison-experience-1784817684</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விமானத்தில் தன்னை அழைத்து சென்ற போது அந்த விமானத்தை கடத்துவது தனது நோக்கமாக இருந்ததாக&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விமானத்தில் தன்னை அழைத்து சென்ற போது அந்த விமானத்தை கடத்துவது தனது நோக்கமாக இருந்ததாக&nbsp;ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, இந்த விடயத்தை அரசியலாக்கி மக்கள் நலன் சார்ந்து செயற்பட எத்தனித்ததாகவும் அவர் கூறினார்.</p><p>மேலும், சகல ஆயுதங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் தாம் பாலஸ்தீனத்திலே பயிற்சி பெற்றதாகவும் விமானத்தை கடத்துவதற்கான திறமை தனக்கு இருந்ததாகவும் டக்ளஸ் சுட்டிக்காட்டினார்.</p><p>தன்னோடு விமானத்தில் இருந்த கைதி இந்த விடயத்தை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>வெலிக்கடை சிறைச்சாலையில் தாம் 1983 ஆம் ஆண்டு சிங்கள காடையர்களாலும், 1998 மற்றும் 1999 ஆம் தமிழ் காடையர்களாலும் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.</p><p>அத்தோடு, இந்தத் தாக்குதல் சம்பவம் அரசியல் உந்துதலோடு இடம்பெற்றதாகவும் சில அமைச்சர்களின் பெயர்களும் இதன்போது குறிப்பிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை அவர் வழங்கிய நேர்காணலில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_u3PpAPiRaY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T15:14:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் இருந்து வந்த பொதி - முகநூல் நண்பரை நம்பி ரூ. 8 இலட்சம் இழந்த தமிழ் பெண்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-woman-loses-trusting-facebook-friend-1784814966"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-woman-loses-trusting-facebook-friend-1784814966</id>
            <summary type="text">மட்டக்களப்பில் முகநூலில் மூன்று நாட்கள் பழகிய நபர் வெளிநாட்டிலிருந்து பொதி அனுப்புவதாகக் கூறியதை நம்பிய பெண்ணொருவர் சுமார் 8 இலட்சம் ரூபாயை இழந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் முகநூலில் மூன்று நாட்கள் பழகிய நபர் வெளிநாட்டிலிருந்து பொதி அனுப்புவதாகக் கூறியதை நம்பிய பெண்ணொருவர் சுமார் 8 இலட்சம் ரூபாயை இழந்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,</p><p>

மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 13ஆம் திகதி முதல் முகநூல் ஊடாக லண்டனில் வசிப்பதாகத் தெரிவித்த டான் என்ற வைத்தியருடன் நண்பராக பழகி வந்துள்ளார்.</p><p></p><h2>3 நாட்களுக்கு பின் வந்த அழைப்பு</h2><p>
</p><p>
அதன் பின்னர், கடந்த 16ஆம் திகதி, குறித்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்புகொண்ட நபர் ஒருவர், தாம் கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் இயங்கும் வெளிநாடுகளில் இருந்து வரும் பொதிகளை விநியோகிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8285ef67-e627-452c-8ccc-cf76d91f9c8b/26-6a621e4642edc.webp' /></p><p>
</p><p>
அவர், லண்டனில் இருந்து வைத்தியர் டான் அனுப்பிய பொதி ஒன்று வந்துள்ளதாகவும், அதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், அந்த பொதியை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க 87 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கொன்றிற்கு செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை நம்பிய பெண், கடந்த 17ஆம் திகதி உடனடியாக 87 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.</p><h2>தொலைபேசி செயலிழப்பு</h2><p> </p><p>பின்னர், மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகக் கூறப்பட்டதையடுத்து, மொத்தமாக 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.

அதன் பின்னரும் மேலும் 1 இலட்சம் ரூபாய் செலுத்துமாறு மோசடி கும்பல் கோரிய நிலையில், சந்தேகமடைந்த பெண், "இனிமேல் பணம் வழங்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b55718e-d0e6-4e4d-9c67-81ef03284ca9/26-6a621e470eb19.webp' /></p><p>

இதையடுத்து, குறித்த நபர்களின் தொலைபேசி எண்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொதிகள் அனுப்புவதாகக் கூறி பணம் பறிக்கும் இணையவழி மோசடிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, தெரியாத நபர்களை நம்பி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும், இதுபோன்ற கோரிக்கைகள் விடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:59:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் வரலாறு காணாத வேகத்தில் பரவும் வைரஸ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-in-congo-death-toll-exceeds-1-000-1784814160"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-in-congo-death-toll-exceeds-1-000-1784814160</id>
            <summary type="text">ஜனநாயக கொங்கோ குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,030ஐ கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயக கொங்கோ குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,030ஐ கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உலகளவில் இதுவரை பதிவான எபோலா பரவல்களிலேயே இதுவே மிகவும் அதிவேகமாகப் பரவும்
தொற்றாக உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
</p><p>
கொங்கோ சுகாதார அமைச்சகம் மற்றும் ஆப்பிரிக்க நோய்க்கட்டுப்பாடு மையத்தின்
தரவுகளின்படி, மே மாதம் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை
2,470-க்கும் மேற்பட்டோருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>தாக்கம் தீவிரம்</h2><p>
</p><p>
2013-2016 காலக்கட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் 11,000-க்கும் மேற்பட்ட
உயிர்களைப் பறித்த மோசமான எபோலா அலையில், 1,000 மரணங்கள் பதிவாக சுமார் 8
மாதங்கள் வரை ஆனது.
</p><p>
ஆனால் தற்போதைய அலை, வெறும் 10 வாரங்களுக்கும் குறைவான காலத்தில் 1,000
மரணங்களைக் கடந்து அதிவேகமாகப் பரவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a14fdd-da33-4799-b91d-80505c84f298/26-6a621bb30231e.webp' /></p><p>
</p><p>
தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் 'பண்டிக்புக்யோ' எனப்படும் அரிதான வகையைச்
சேர்ந்ததாகும்.

இந்த குறிப்பிட்ட வகை வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது
நேரடி மருத்துவ சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்பது நிலைமையை மேலும்
சிக்கலாக்கியுள்ளது.</p><p>

கொங்கோவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு
தொண்டு நிறுவன ஊழியர்களுக்குத் தொற்று உறுதிப்பட்டு, அவர்கள் ஜெர்மனிக்கு
அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். பிரான்ஸிலும் ஒரு
தொற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T13:57:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர் குறித்து அமெரிக்க-ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-and-russian-foreign-ministers-hold-talks-1784813235"></link>
            <id>https://tamilwin.com/article/us-and-russian-foreign-ministers-hold-talks-1784813235</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின்
கூட்டமைப்பான &#039;ஆசியான்&#039; மாநாட்டின் இடையே, உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க
வெளியுறவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின்
கூட்டமைப்பான 'ஆசியான்' மாநாட்டின் இடையே, உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க
வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே
லாவ்ரோவ் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
</p><p>
சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில், போரை முடிவுக்குக்
கொண்டுவருவது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர்.
</p><p>
இச்சந்திப்பின் போது, உக்ரைன் மோதலுக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில்
தீர்வு காண ரஷ்யா தயாராக இருப்பதை அமைச்சர் லாவ்ரோவ் மீண்டும்
உறுதிப்படுத்தினார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
ஆகஸ்ட் 2025-இல் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட்
ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்வைத்த
முன்மொழிவுகளுக்கு ரஷ்யா இன்னமும் கட்டுப்பட்டு இருப்பதாக அவர்
தெளிவுபடுத்தினார்.
</p><p>
அதேவேளையில், உக்ரைனுக்கு மேலைநாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து
ஆயுதங்களை வழங்கி வருவதை ரஷ்யா ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ரஷ்யாவிற்கு
"மூலோபாயத் தோல்வியை" ஏற்படுத்த முனையும் ஐரோப்பிய நாடுகளின் கொள்கைகள்
பிராந்திய அமைதியை சீர்குலைப்பதாகவும் லாவ்ரோவ் சாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/068edb83-d19d-49c8-b235-2d1ac94d9151/26-6a6217e52814a.webp' /></p><p>
</p><p>
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு
அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு நேர்மையாகவும்
சுமுகமாகவும் அமைந்ததாகத் தெரிவித்தார்.
</p><p>
அர்த்தமற்ற இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா ஆக்கபூர்வமான
பங்களிப்பை வழங்க எப்போதும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாகக்
கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>எரிபொருள் கட்டமைப்பு</h2><p>
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளுக்கும் விருப்பம் இருந்தாலும், உக்ரைன்
மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அமைதித் தீர்வை
எட்டுவதே தற்போதைய மிகப்பெரிய சவாலாக உள்ளது என ரூபியோ சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a78367-5ae0-40d5-a096-00c01637e211/26-6a6217e5cccf4.webp' /></p><p>

மற்றொருபுறம், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, முடங்கிக்கிடக்கும்
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் அமெரிக்க
தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னருடன் கலந்தாலோசனை
நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அண்மைக்காலமாக உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் எரிபொருள்
கட்டமைப்புகளைப் பாதித்துள்ள நிலையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் மீண்டும்
நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது சர்வதேச அளவில்
உற்றுநோக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T13:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..! நியாயம் கேட்டு சென்ற பெற்றோர் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-assaulted-by-teacher-suffers-mental-health-1784812633"></link>
            <id>https://tamilwin.com/article/student-assaulted-by-teacher-suffers-mental-health-1784812633</id>
            <summary type="text">ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கொழும்பிலுள்ள தமிழ் மகளிர் பாடசாலையொன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் சில மாணவிகள், அவர்களின் வகுப்பாசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>

மாணவி வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

இதில் ஒரு மாணவி கடுமையான உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
</p><p>
ஆரம்ப சிகிச்சைகளால் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகளில் மாணவிக்கு நோய் பயம் மற்றும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b191e63c-4520-475f-98dc-9d0258f06132/26-6a62160715e28.webp' /></p><p>

பின்னர், மனநல வைத்திய நிபுணரின் பரிசோதனையிலும் அதே நிலைமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் பெற்றோர் அறிவித்ததுடன், மாணவிக்கான வகுப்பு மாற்றத்தையும் கோரியுள்ளனர்.</p><p> 

அதன் அடிப்படையில் மாணவி வேறு வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், மாணவி புதிய வகுப்பில் ஒரு நாள் மட்டுமே கல்வி கற்ற நிலையில், தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் வகுப்பாசிரியர் மற்றொரு ஆசிரியருடன் முரண்பாடு கொண்டதாகவும், அதன் பின்னர் மாணவி அந்த வகுப்பில் தொடர வேண்டாம், என மாற்று ஏற்பாடுகள் செய்யலாம் என அதிபர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
</p><h2>
பொலிஸாரிடம் முறைப்பாடு</h2><p>
இதற்கிடையில், மாணவியின் தாயாரிடம் பாடசாலையின் உப அதிபர், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும், மாணவியை திறமையற்றவர் மற்றும் ஒழுக்கமற்றவர் என்ற தொனியில் விமர்சித்ததாகவும், மாணவியின் தந்தையையும் குறிப்பிட்டு அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

தமக்கும் தமது மகளுக்கும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளதுடன், பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்த மாணவியின் தந்தை, இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/658429ce-ad25-4c0a-aa0b-9688e7ead523/26-6a621607b8922.webp' /></p><p>
</p><p>
மேலும், கல்வி அமைச்சர், சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் முறைப்பாட்டுக் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, பொலிஸார் விசாரணைக்காக அழைத்தபோது, அதிபரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது, பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது, மாணவியின் தாயாருக்கு எந்தவித அழுத்தமும் வழங்கப்படாது என உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.</p><p> இதனைத் தொடர்ந்து, பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><h2>
பெற்றோர் - மாணவிக்கு எதிராக விமர்சனம் பரவல்</h2><p>
இந்த விவகாரம் குறித்த பாடசாலையைத் தாண்டி ஏனைய பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும், பாடசாலைக்குள்ளும் வெளியிலும் மாணவியின் தாயாருக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d84f7afe-55bf-4372-8623-f0c0b75a62f9/26-6a621608680b3.webp' /></p><p> </p><p>மேலும், மாணவியின் தந்தை குறித்து "சண்டைக்காரர்", "பிரச்சினைக்குரியவர்" என்ற வகையிலான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைத்து, பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய செயல் என மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், மாணவி பாடசாலைக்குச் செல்லவே அச்சமடைந்துள்ளதாகவும், இத்தகைய சூழலில் அவர் எவ்வாறு கல்வியைத் தொடர முடியும்? அவரது பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவார்கள்? என்ற கேள்விகளையும் பெற்றோர் எழுப்பியுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய அரசாங்கத்தில் ஈழத் தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-uma-kumaran-in-british-parliament-1784808812"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-uma-kumaran-in-british-parliament-1784808812</id>
            <summary type="text">




பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>




பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த சில வாரங்களில் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஹன்டி பெர்கம் பதவியேற்றார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, அவரது புதிய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>பிரித்தானியாவில் கிடைத்த அங்கீகாரம்</h2><p>
இதன்படி, வெளிநாட்டு அமைச்சகத்தின் இராஜாங்க அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இலங்கை, இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழ் பெண் உறுப்பினர் என்ற பெருமையையும் உமா குமரன் பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1d645d-3e21-4d91-8c6a-c0c3774511aa/26-6a62061821d1d.webp' /></p><p>

இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி வந்ததாகவும் கூறப்படுகின்றது. </p><p>

அத்துடன், கடந்த 14ஆம் திகதி, உள்துறை அமைச்சர் யூஹெட் கூப்பருடன் செம்மணி விவகாரம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் இலங்கை மற்றும் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-of-foreign-ministers-of-sl-philippines-1784811043"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-of-foreign-ministers-of-sl-philippines-1784811043</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, இலங்கை, இந்திய, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, இலங்கை, இந்திய, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளனர்.</p><p>இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஆகியோரைச்&nbsp;சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><p>இந்த சந்திப்புத் தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள இந்திய
வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிராந்திய அளவிலான இந்த முக்கிய
மாநாட்டின்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களைச்
சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>விவகாரங்கள்&nbsp;</h2><p>ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும்
பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில், பிராந்திய பாதுகாப்பு, கூட்டுறவு
மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் தொடர்பில் தீவிரமாக
விவாதிக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5995bb-b369-42fc-8e24-cfe681db5ccd/26-6a6210d2718a6.webp' /></p><p>
</p><p>
இன்றும், நாளையும் நடைபெறவுள்ள 33 ஆவது ஆசிய பிராந்திய கூட்டமைப்பு மாநாடு
மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நட்பு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்தின் 50 ஆவது
ஆண்டு விழா ஆகிய இரண்டிலும் அமைச்சர் விஜித ஹேரத் உரை நிகழ்த்தவுள்ளார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

ஆசியான் அமைப்பின் பொதுச்செயலாளர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய
அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்படப் பல்வேறு நாடுகளின்
வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்து அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில்
ஈடுபடவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85d349b-0a4f-404d-bb98-18adf62941c0/26-6a621268b9bcb.webp' /></p><p>

பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரச் செயலாளர் மா. தெரேசா பி. லசாரோவைச் சந்தித்து
இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளது.</p><p>அத்துடன், இப்பயணத்தின் ஒரு
பகுதியாகப் பிலிப்பைன்ஸின் மண்டனாவோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின்
கௌரவத் தூதரக அலுவலகத்தையும் அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வமாகத் திறந்து
வைக்கவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T13:09:08+00:00</updated>
        </entry>
    </feed>
