<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-18T15:41:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம்- கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ: மக்கள் தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-jaffna-s-kallundai-garbage-dump-protest-1789743732"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-jaffna-s-kallundai-garbage-dump-protest-1789743732</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்று மாலை 6 மணி
முதல் தீப்பற்றி எரிந்து வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலை
ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்று மாலை 6 மணி
முதல் தீப்பற்றி எரிந்து வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
தீ பரவி நீண்ட நேரமாகியும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல்
தீயணைப்புப் படையினர் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.
</p><p>
குப்பை மேட்டிலிருந்து எழும் அடர்ந்த புகையின் காரணமாக, அந்த வீதியால்
பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி
வருகின்றனர்.</p><h2>போராட்டம்</h2><p> </p><p>இதன் காரணமாக, மாநகர சபைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்
எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec7cfd8-f636-4ca4-a807-f0cb866fbead/26-6aad54704ecba.webp' /></p><p>

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்
கந்தையா யெசீதன், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்று தான் செயற்படப் போவதாக
உறுதியளித்தார்.
</p><p>
மேலும், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை
தந்து நிலைமையை நேரில் பார்வையிட்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T15:23:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடைந்துள்ள ஈரான் போர்: உலகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ள ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-involving-iran-donald-trump-un-1789742345"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-involving-iran-donald-trump-un-1789742345</id>
            <summary type="text">ஈரானுடனான போர் ஏழாவது மாதமாக நீடித்து வரும் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உலகத்
தலைவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் ஏழாவது மாதமாக நீடித்து வரும் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உலகத்
தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
</p><p>
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்த
போதிலும், அப்பிராந்தியத்தில் தொடரும் பதற்ற நிலைமை உலக நாடுகளிடையே பெரும்
சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் விநியோகத்தை ஈரான் கட்டுப்படுத்தி வரும்
அதேவேளை, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தங்கள் பிடியை
இறுக்கியுள்ளனர்.</p><h2>எரிபொருள் விலைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன் காரணமாக உலக அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதுடன், செங்கடல்
பகுதியில் அமெரிக்கக் கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5f4109-b50c-4015-a099-654b00d19149/26-6aad4f793e236.webp' /></p><p>
</p><p>
ஹூதிகளுக்கு எதிராக நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்குவது,
வளைகுடா பிராந்திய நட்பு நாடுகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.</p><p>

அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் காரணமாக
ஜனாதிபதி ட்ரம்பின் செல்வாக்கு சரிவடைந்து வரும் நிலையில், வரவிருக்கும்
இடைக்காலத் தேர்தலிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><h2>பேச்சுவார்த்தை&nbsp;</h2><p>
</p><p>
ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகளின் ஆதரவின்றி ஆரம்பிக்கப்பட்ட இந்தப்
போர், தற்போது இருதரப்புக்கும் இடையே இழுபறி நிலையாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/634f602b-d659-4787-aba6-de751831fa0b/26-6aad4f79e9fa6.webp' /></p><p>
எதிர்வரும் வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின்
போது, வளைகுடா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த
ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
</p><p>
எனினும், போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்காவிற்குப் பெரும்
சவாலாகவே அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T14:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appeals-court-to-rule-on-suresh-sallay-s-1789741127"></link>
            <id>https://tamilwin.com/article/appeals-court-to-rule-on-suresh-sallay-s-1789741127</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
குறித்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்குவதா என்பது தொடர்பான உத்தரவை நவம்பர் 27ஆம் திகதி பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
</p><h2>&nbsp;ரிட் மனு</h2><p>
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (18) இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
</p><p>
இதன்போது, வழக்கு தொடர்பான வாய்மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறித்த உத்தரவு நவம்பர் 27ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bb72dcc-db6e-4d74-8c9d-2a76fea99668/26-6aad4d16bf6e2.webp' /></p><p>
</p><p>மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, இன்று தனது பதில் சமர்ப்பணங்களை நிறைவு செய்தார்.</p><p>

மேலும், வழக்கில் தொடர்புடைய தரப்பினர் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்குவதா என்பது தொடர்பான உத்தரவுடன், இடைக்கால நிவாரணம் கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பான தீர்மானமும் நவம்பர் 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T14:39:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரோஸ் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eros-and-tamil-liberation-tigers-hold-key-meeting-1789739216"></link>
            <id>https://tamilwin.com/article/eros-and-tamil-liberation-tigers-hold-key-meeting-1789739216</id>
            <summary type="text">ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மற்றும்
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா
ஆகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மற்றும்
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா
ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(17) இரவு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
</p><p>
வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் தழுவிய ரீதியில் தமிழ் பேசும் மக்களின்
வாழ்வாதாரம், இருப்பு மற்றும் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான தர்க்க
ரீதியான முன்னெடுப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.</p><h2>சந்திப்பு</h2><p>
</p><p>
குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் இரு கட்சிகளும் ஒருமித்து
பயணிப்பது தொடர்பிலும், மக்களுக்கான பயணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி
இரு கட்சிகளும் ஒருமித்து செயற்படுவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6bfc026-43ce-49f8-afd0-7aa338aaa010/26-6aad427bd1321.webp' /></p><p>
</p><p>
முதற்கட்டமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள முன்னாள் போராளிகளின்
வாழ்வாதாரம் குறித்த விடயத்தில் முயற்சிகள் மேற்கொள்வதெனவும், அதனைத்
தொடர்ந்து வடக்கு கிழக்கு மலையக மக்களின் இருப்பு தொடர்பிலான பிரச்சனைகளுக்கு
உரிய தீர்வினை கண்டறிதல், கல்வி விவசாய நடவடிக்கைளை ஊக்குவித்தல் போன்ற
விடயங்களைக் கையாள்வதன் ஊடாக அரசியல் இருப்பு தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக
இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p>

குறித்த சந்திப்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின்
செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் நாமலுக்கு இந்திய அரிசிடமிருந்து அழைப்பு.. பிணைக்காக போராடும் மொட்டுதரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-airbus-case-bail-application-reasons-given-1789726135"></link>
            <id>https://tamilwin.com/article/namal-airbus-case-bail-application-reasons-given-1789726135</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று (18) கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டார்.</p><p>நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்த நிலையில், தற்போது விதிவிலக்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>முக்கிய நிகழ்வுகள்..&nbsp;</h2><p> இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடம் இருந்து ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அந்த விஜயத்தை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a284b1dc-f852-4c3a-882e-7b6c823e1bd4/26-6aad1844cca28.webp' /></p><p> </p><p>அதுமாத்திரமன்றி, வருடாந்த ஹிங்குராக்கொட எசல பெரஹரவின் போது இடம்பெறும் மதச்சடங்கில் கலந்துகொள்ளுமாறும் பிரதம பௌத்த மதகுரு ஒருவரால் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் பாதுகாப்புத் தரப்பின் கூற்றுப்படி, செப்டெம்பர் 26ஆம் திகதி அன்று இரவு 7:42 மணிக்கு விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க நாமல் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்றும், அதில் கலந்துகொள்ள முடியாமை அழைப்பு விடுத்த மதகுருவை அவமதிப்பதாக அமையும் என்றும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1efba68a-9014-4cdb-88e6-c9207a51ed19/26-6aad1845bb5a3.webp' /></p><p> மேலும், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்றும், தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியும் சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.</p><p> இந்தச் சமர்ப்பிப்புகளுக்குப் பதிலளித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்குரிய விதிவிலக்கான சூழ்நிலைகளாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0ZMklSZuEVo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-18T13:48:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடுபிடிக்கும் எயார்பஸ் விவகாரம்.. தப்பியோடிய நாமலின் உறவினர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-interpol-cid-1789735331"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-interpol-cid-1789735331</id>
            <summary type="text"> எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p> எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு செப்டம்பர் 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>அதுவரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டதுடன், பாதுகாப்புத் தரப்பு செப்டெம்பர் 22க்குள்ளும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 25க்குள்ளும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் எனப் பணித்தார்.</p><p>

வழக்கு விசாரணையின் போது முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலும் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.</p><h2>சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம்</h2><p> </p><p>அத்துடன், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுக்குத் தப்பியோடிய ஷசீந்திர ராஜபக்ச மற்றும் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக இன்டர்போல் மூலம் 'சிவப்பு எச்சரிக்கை' (Red Notice) விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbddea59-2f6a-4f04-b5a6-9ca52b707b98/26-6aad3cdca58dd.webp' /></p><p> </p><p>மேலும், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்குரிய முக்கியமான சூழ்நிலைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் நாமலின் பெயர் இடம்பெறவில்லை என்றும், நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச பிடியாணை&nbsp;</h2><p> </p><p>அத்துடன், இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்குச் செல்லவிருந்த விஜயம் இரத்தாகின்றமை மற்றும் செப்டெம்பர் 26 அன்று ஹங்குரன்கெத்த விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க முடியாமை ஆகியவற்றை சிறப்புச் சூழ்நிலைகளாகக் கருதி பிணை வழங்குமாறு கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a2d4b1-6e37-472a-944f-4d2f6d1f88f2/26-6aad3cdd9806e.webp' /></p><p>

எனினும், இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்கான சிறப்புச் சூழ்நிலைகளாக அமையாது என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> மேலும், "வெலிகம பே" சம்பவம் தொடர்பிலும் நிமல் பெரேராவின் கணக்கில் 175 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சந்தேகத்திற்கிடமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பின்னர் நீதிவான், நாமல் ராஜபக்சவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_7gpEcJPq9g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக் கட்சியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பெண்ணிடம் கேட்ட மோசமான இலஞ்சம்! பகிரங்கப்படுத்திய பெண்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/podujana-peramuna-mahinda-rajapaksa-1789736720"></link>
            <id>https://tamilwin.com/article/podujana-peramuna-mahinda-rajapaksa-1789736720</id>
            <summary type="text">&amp;nbsp;உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து போட்டியிடத் தயாரான நிலையில்&amp;nbsp; வேட்புமனு வழங்குவதற்காகத் தன்னிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து போட்டியிடத் தயாரான நிலையில்&nbsp; வேட்புமனு வழங்குவதற்காகத் தன்னிடம் 'பாலியல் இலஞ்சம்' கேட்டதாக ''லக்மவட்ட ஹடக்' அமைப்பின் தலைவியும் நடிகையுமான மதுஷா ராமசிங்க
தென்னிலங்கை வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்து
எந்த ஊடகத்திலும் நான் இதைச் சொல்வேன்.மஹிந்த ராஜபக்சவுடன் மிக நெருக்கமாகச் செயல்படும் அவரது தனிப்பட்ட செயலாளர்களில் ஒருவர் இவர்.அதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.</p><p></p><h2>வேட்பு மனுத் தாக்கலின் போது நடந்த சம்பவம்</h2><p>பெயர்களைக் கூறுவது எனக்குப் பிரச்சினையில்லை. நான் பெயர்களைக் கூறுவேன். ஆனால் சிக்கல் என்னவென்றால் நான் பொலிஸுக்குச் சென்றபோது 'வீடியோக்கள் இருக்கிறதா?' என்று கேட்கிறார்கள். </p><p>நாம் ஒரு கட்சி அலுவலகத்திற்கோ அல்லது நாட்டின் தலைவரைச் சந்திக்கவோ செல்லும்போது காணொளி எடுத்தா செல்கிறோம்?
'ஆடை களையாவிட்டால் வேட்புமனு இல்லை' என்று கூறினார்கள். </p><p>வேட்புமனுத் தாக்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு கூறினார்கள். அவர் தனது வாயால் மூன்று முறை கூறினார். 
அண்ணே நான் எத்தனை வருடங்களாகப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் பணியாற்றியுள்ளேன் என்று பார்க்கிறீர்களா?' எனக் கேட்டேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d40d23d-ce08-409d-b8c5-4229e7ad0d45/26-6aad37131f72b.webp' /></p><p>நீங்கள் நீண்டகாலமாக அரசியலில் இருக்கிறீர்கள் தானே என்றார்.
நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைப்பாளர் பதவியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு முதன்முதலில் வெளியே வந்த நபர். </p><p>சோபித்த தேரர் நல்லாட்சியின் முதல் நிறைவு விழாவை நடாத்தும்போது அவர் இயற்கை எய்தினாரா அல்லது படுகொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தவேளையில் முதுகெலும்புடன் வெளியே வந்த ஒரே ஆள் நான் மட்டும்தான்.
</p><p>கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் சொல்வதானால் இவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நான் மதிக்கிறேன். அவருக்கு இந்தச் சம்பவம் முழுமையாகத் தெரியாது. </p><p>ஆனால் அந்த நேரத்தில் அவராலும் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் 'இவரைச் சேர்த்துக் கொண்டால் நாங்கள் விலகுவோம்' என்று அங்கிருக்கும் குழுக்கள் அச்சுறுத்துகின்றன. இதனாலே நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:23:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகள் - முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-presidents-house-confession-sunil-wattagala-1789719077"></link>
            <id>https://tamilwin.com/article/former-presidents-house-confession-sunil-wattagala-1789719077</id>
            <summary type="text">முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் உட்பட மூத்த அரசியல்வாதிகளின் இல்லங்களுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யும் நடைமுறையை நிறுத்த அரசாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் உட்பட மூத்த அரசியல்வாதிகளின் இல்லங்களுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யும் நடைமுறையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>விசாரணை நோக்கங்களுக்காக, எந்தவொரு நிலையில் உள்ள நபரும் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க முகமைகளின் முன் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.&nbsp;</p><p>
அரசியல் அந்தஸ்து அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சட்டம் சமமாகப் பொருந்தும் கொள்கையை இந்த முடிவு வலுப்படுத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார்.</p><h2>இல்லத்தில் விசாரணை..&nbsp;</h2><p>
</p><p>மேலும் அவர், "குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை போன்ற அரச நிறுவனங்களை அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவிப்பதன் மூலம் விசாரணைகளில் வெற்றி காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8729b9a-928a-40b4-9c45-1f1d5af228f7/26-6aacf7300e648.webp' /></p><p> சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் அரச நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் தற்போதைய நிர்வாகம் வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இந்த நிறுவனங்கள் அரசியல் தலையீடின்றி தங்கள் கடமைகளைத் திறம்படச் செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கை அரசியலமைப்பின் 12(1)ஆவது பிரிவின்படி, ஒவ்வொரு தனிநபருக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு உரிமை உண்டு.</p><p>அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் ஊழல் நடவடிக்கைகளைக் கையாள்வதில் பாரபட்சத்திற்கு இடமில்லை, அரசியல் சார்புகள் அல்லது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் சட்டம் மாறுபட்ட விதத்தில் பயன்படுத்தப்பட்ட காலம் முடிவுக்கு வந்துள்ளது.</p><p></p><h2>விடுக்கப்படும் எச்சரிக்கை&nbsp;</h2><p> இதன் விளைவாக, எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், இனி எந்தவொரு முக்கியப் பிரமுகரும் (VIP) தங்கள் இல்லத்திலிருந்தே வாக்குமூலம் அளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6dc97d-712f-4ca3-bb0b-d03577b00abf/26-6aacf73103483.webp' /></p><p>
</p><p>
நீதித்துறை செயல்முறை அல்லது விசாரணைகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>நாட்டிற்குள் இருக்கும் சந்தேக நபர்களை அழைத்து வர பிரிவு 106இன் கீழ் சட்ட அறிவிப்புகள் விடுக்கப்படும் அதே வேளையில், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை நாடு கடத்தி வர இன்டர்போல் (Interpol) 'சிவப்பு அறிவிப்புகள்' (Red Notices) பயன்படுத்தப்படுகின்றன.</p><p> சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய 74 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2OKIr8O5_1k" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T13:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் மிகவும் சிறிய வடிவிலான புதிய விலங்கினம் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-wild-cat-species-discovered-in-bolivia-1789735968"></link>
            <id>https://tamilwin.com/article/new-wild-cat-species-discovered-in-bolivia-1789735968</id>
            <summary type="text">பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் மிகவும் சிறிய வடிவிலான புதிய காட்டுப்பூனை
இனம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் முறைப்படி கண்டறிந்து பெயரிட்டுள்ளனர்.

கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் மிகவும் சிறிய வடிவிலான புதிய காட்டுப்பூனை
இனம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் முறைப்படி கண்டறிந்து பெயரிட்டுள்ளனர்.</p><p>

கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், புதிய உயிருள்ள பூனை இனம் ஒன்று
முறைப்படி கண்டறியப்பட்டு பெயரிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.
</p><p>
உள்ளூர் மக்களால் 'டில்காயோ' என அழைக்கப்படும் இப்பூனைக்கு 'லியோபார்டஸ்
டில்காயோ' (Leopardus tilcayo) என ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானப்
பெயரிட்டுள்ளனர்.</p><h2>அபூர்வப் பூனை</h2><p>
</p><p>
பொலிவியாவின் மேக மூட்டம் நிறைந்த யுங்காஸ் காட்டுப் பகுதியில் வாழும் இது,
சாதாரண வீட்டுப் பூனையை விட சிறியதுடன், சுமார் 1.4 கிலோகிராம் எடையும், 46
சென்டிமீட்டர் நீளமும் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da4c1297-7160-4ec4-9467-30c13a4426bf/26-6aad3949757db.webp' /></p><p>
</p><p>
வெளிர் பழுப்பு நிற உடலின் மீது ஒழுங்கற்ற புள்ளிகளைக் கொண்டுள்ள இப்பூனைகள்,
இரவில் தீவிரமாக இயங்கக்கூடியவை என்றும், சிறிய எலிகளை உணவாகக் கொள்ளக்கூடியவை
என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>&nbsp;புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த அபூர்வப் பூனை இனம் அழியும் ஆபத்தை
எதிர்கொண்டுள்ள விலங்குகளின் பட்டியலில் சேரக்கூடும் என்பதால், அவற்றின்
வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமென சூழலியலாளர்கள்
வலியுறுத்துகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை நெருக்கடி: நாடு முழுவதும் 500 நிலையங்கள் ஆபத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-supply-crisis-looms-as-foreign-oil-companies-1789735466"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-supply-crisis-looms-as-foreign-oil-companies-1789735466</id>
            <summary type="text">இலங்கையில் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களின் விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களின் விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.</p><h2>500 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்</h2><p>

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இந்த நிலைமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அங்கு Lanka IOC, Sinopec மற்றும் RM Packs உள்ளிட்ட எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b062e94f-66f2-472a-853e-5ecd24d343c1/26-6aad35bb06f4f.webp' /></p><p>
</p><p>
வெளிநாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் எரிபொருளை, அதனை இறக்குமதி செய்வதற்கான செலவைவிட குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனால் எரிபொருளை வழக்கமான முறையில் விநியோகிப்பதில் நிறுவனங்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
இந்த நிலைமை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு மட்டுமன்றி, அன்றாடம் போதுமான எரிபொருள் கிடைக்காமல் சிரமப்படும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>அரசாங்கத்திடம் கோரிக்கை</h2><p>

அரசுக்கு சொந்தமான இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் எரிபொருளை வழங்கி வருகின்றது.</p><p> </p><p>ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்வதால், அதிகளவான செயற்பாட்டு செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6fb2028-5632-40c1-9b64-01f21a66ff58/26-6aad35bbe55d6.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவது மேலும் சிக்கலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், எரிபொருள் விலையை ஒழுங்குபடுத்துவதற்காக சுயாதீனமான நிறுவனமொன்றை அமைக்குமாறு சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

நாடு முழுவதும் ஒரே மாதிரியான எரிபொருள் விலையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:01:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் 350 புதிய சுகாதார உதவியாளர்கள் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-350-new-health-assistants-in-north-1789736205"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-350-new-health-assistants-in-north-1789736205</id>
            <summary type="text">வட மாகாண சுகாதார சேவைக்கு 350 புதிய சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண தாதியர்
க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண சுகாதார சேவைக்கு 350 புதிய சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
</p><p>
வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண தாதியர்
கல்லூரி உள்ளிட்ட, மத்திய சுகாதார அமைச்சின் கீழும் வட மாகாண சபையின் கீழும்
உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கான 350 புதிய சுகாதார
உதவியாளர்களின் நியமனம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்
நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின்
தலைமையில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில்
நடைபெற்றது.</p><p>

இந்த நியமனத்தில், கீழ் நியமிக்கப்பட்ட 45 சுகாதார உதவியாளர்கள் யாழ்ப்பாணப்
போதனா வைத்தியசாலையிலும், 5 பேர் யாழ்ப்பாணம் தாதியர் கல்லூரியிலும், மாகாண
சபையின் கீழ் நியமிக்கப்பட்ட 300 பேர் வட மாகாணத்தில் உள்ள மற்ற
மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ச. ஸ்ரீபவனந்தராஜா,
மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், வட மாகாண பிரதம
செயலாளர், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள்,
வைத்தியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T12:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன மருந்து ஒப்பந்தங்களுக்கு அமெரிக்கா தளர்த்தல் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-restrictions-on-chinese-medical-agreements-1789734375"></link>
            <id>https://tamilwin.com/article/us-restrictions-on-chinese-medical-agreements-1789734375</id>
            <summary type="text">​சீனாவின் மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் பெரும்பாலான உரிம ஒப்பந்தங்களை
மேற்கொள்வதற்கு, அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையிலான
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>​சீனாவின் மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் பெரும்பாலான உரிம ஒப்பந்தங்களை
மேற்கொள்வதற்கு, அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையிலான
புதிய விதிமுறைகளை அமெரிக்க திறைசேரி திணைக்களம் தயாரித்து வருகின்றது.</p><p>

​தொற்றுநோய்க்காரணிகள் அல்லது ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய உயிரித்
தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளைத் தவிர்த்து, சீனாவில் முன்னெடுக்கப்படும்
ஏனைய புதிய மருந்து கண்டுபிடிப்புகளில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய
இந்த புதிய வரைவு வழிவகுக்கும்.</p><p>

இது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும்,
இந்த முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

​</p><h2>வர்த்தகக் கட்டுப்பாடு</h2><p>முன்னதாக, சீனப் பொருட்களுக்குக் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகளை
அமெரிக்கா விதித்திருந்த போதிலும், மருந்துத் துறையில் அவ்வாறான தீவிரக்
கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என ஃபைசர் (Pfizer) போன்ற முன்னணி அமெரிக்க
மருந்து உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88f2e311-6425-43bc-90f2-254cbffd26aa/26-6aad3088522f6.webp' /></p><p>

சீன மருந்துத் துறையை முற்றாகத் தடைசெய்வது, புதிய மருத்துவக்
கண்டுபிடிப்புகளை அமெரிக்கா சென்றடைவதைத் தடுக்கும் என அவர்கள் வாதிட்டுள்ளனர்.

​</p><p>இருப்பினும், இந்தத் தளர்த்தலுக்கு அமெரிக்காவின் சில அரசியல்வாதிகளும்,
சிறிய அளவிலான உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்ப்புத் தெரிவித்து
வருகின்றன.</p><h2>தேசிய பாதுகாப்பு</h2><p>
</p><p>
சீன நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய கோடிக்கணக்கிலான டொலர்
ஒப்பந்தங்கள், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன்,
மருத்துவத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும் என&nbsp; சுட்டிக்காட்டுகின்றனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6257b41-9b4e-4370-bac8-7853bc5c4267/26-6aad320825f64.webp' /></p><p>எதிர்வரும் வாரம் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக
இப்புதிய விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படமாட்டாது என
எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T12:46:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியாயமான விலையில் மின்சாரம் வழங்கும் வாய்ப்பு - அமைச்சரின் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-plans-supply-electricity-at-low-price-1789732101"></link>
            <id>https://tamilwin.com/article/government-plans-supply-electricity-at-low-price-1789732101</id>
            <summary type="text">அதிகளவில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி தூய்மையான மின் உற்பத்தியை மேற்கொள்வதுடன், குறைந்த உற்பத்திச் செலவில் நியாயமான விலையில் மக்களுக்கு மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகளவில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி தூய்மையான மின் உற்பத்தியை மேற்கொள்வதுடன், குறைந்த உற்பத்திச் செலவில் நியாயமான விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்கும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.</p><p>

அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் 40 மெகாவொட் மணிநேர மின்கல வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (18.09.2026) முற்பகல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
</p><p>
இந்நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திறனையும் மின் வலையமைப்பின் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், ஸ்டோர்எக்ஸ் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றலை பெருமளவில் பயன்படுத்தி,தூய்மையான வழியிலான மின்சார உற்பத்தி மற்றும் குறைந்த உற்பத்திச் செலவின் ஊடாக மக்களுக்கு நியாயமான விலையில் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><h2>அரசாங்கத்தின் நோக்கம்</h2><p>வினைத்திறனான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.


உலகின் வலுசக்தித்துறையானது பல்வேறு காலகட்டங்களிலும்,பல்வேறு சந்தர்ப்பங்களிலும் திருப்புமுனைகளுடன் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதை நாம் அறிவோம்.

இலங்கையின் வலுசக்தித்துறை, குறிப்பாக மின்சாரத்துறையைக் கருத்திற்கொள்ளும்போது,இன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15da9884-db56-4d1a-b0c1-bc02b83b668c/26-6aad2d22952a0.webp' /></p><p> </p><p>தற்போதைய அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில்இ நாட்டின் மின்சாரத்துறையில் ஏற்படுத்தப்படும் இந்த மாற்றமானது மிகவும் முக்கியமானதென நாம் நம்புகிறோம்.

நாம் ஏற்கனவே பகல் வேளையில் சூரிய சக்தியின் மூலம் சுமார் 3,000 மெகாவொட் அளவை உற்பத்தி செய்கிறோம். பகல் வேளையில் பொதுவாக 2,800 மெகாவொட் அளவிலான மின்சாரத் தேவையே உள்ளது. எனினும், இரவு வேளையில் நமக்கு 3,100 மெகாவொட் வரையான கேள்வி காணப்படுகிறது. </p><p>எல் நினோ நிலைமையுடன் சேர்த்து, ஒருவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அந்தத் தேவை இன்னும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பகல் வேளைகளில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக சூரிய மின்சக்தியை சேமித்து வைக்கும் வசதி இதுவரை இல்லாதிருந்தமையே நமக்கு நிலவிய பிரச்சினையாகும். அந்தப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக நாம் தற்போது 160 மெகாவொட் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

அதில் 130 மெகாவொட் தொடர்பான பொறுப்பை வின்ட்போர்ஸ் நிறுவனம் ஏற்றுச் செயல்படுகிறது.</p><h2>விலைமனுக் கோரல்</h2><p> </p><p>இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் இந்த 160 மெகாவொட்டையும் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க முடியும் என நாம் நம்புகிறோம்.


அதேபோன்று, மேலும் 400 மெகாவொட், 250 மெகாவொட் மற்றும் 150 மெகாவொட் என மின்கல சேமிப்புக்கான இதே வகையிலான விலைமனுக் கோரல் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். அவற்றில் சில மதிப்பீட்டு மட்டத்தில் உள்ளன. 2027 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர், பெரும்பாலும் முதல் 6 மாதங்களுக்குள், அந்தத் திட்டங்களையும் நமது மின் கட்டமைப்பில் சேர்க்க முடியும் என நம்புகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e17f3fe7-31be-476c-8bcf-4c8215a5f2cf/26-6aad2d234a243.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் ஒருபுறம் அதிக அளவிலான புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க முடிவதுடன், மறுபுறம் இரவு வேளையில் அதிகளவில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் ஏற்படும் அதிக செலவைக் குறைத்துக் கொள்ளவும் நமக்கு வாய்ப்பாக அமைகின்றது.
</p><p>
அதிகளவில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி தூய்மையான மின் உற்பத்தியை மேற்கொள்வதுடன், குறைந்த உற்பத்திச் செலவில் நியாயமான விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கும், திறமையான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குமான நமது அரசாங்கத்தின் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T12:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர் கைது.. லசித் மலிங்கவுக்கு ஏற்பட்ட சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lasith-malinga-uncle-renuka-perera-facebook-post-1789732513"></link>
            <id>https://tamilwin.com/article/lasith-malinga-uncle-renuka-perera-facebook-post-1789732513</id>
            <summary type="text">அண்மையில், ரேனுக பெரேரா என்பவர் லசித் மலிங்கவின் மாமனார் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியதை அடுத்து, இணையத்தில் அது பெரும் பேசுபொருளாக மாறியது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில், ரேனுக பெரேரா என்பவர் லசித் மலிங்கவின் மாமனார் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியதை அடுத்து, இணையத்தில் அது பெரும் பேசுபொருளாக மாறியது.&nbsp;</p><p> இருப்பினும், லசித் மலிங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இடுகையிட்டுள்ள பதிவொன்றில் இதன் உண்மைத்தன்மையை தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.</p><h2>முகப்புத்தக பதிவு..&nbsp;</h2><p> அந்தப் பதிவில், ரேனுக பெரேராவுக்கு இரண்டு மகன்கள் மட்டுமே உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372c0843-db4d-401f-95a1-7bb886171008/26-6aad2d2ebb3fb.webp' /></p><p> </p><p>ரேனுக பெரேராவுக்கு மகள்கள் எவரும் இல்லாத நிலையில், அவர் மலிங்கவின் மனைவியின் தந்தை அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகிறது. </p><p>அத்துடன், தனது உண்மையான மாமனார் பற்றிய விபரங்களையும் மலிங்க வெளிப்படுத்தியுள்ளார். </p><p>அவர், "எனது மாமனார் அமெரிக்காவில் நல்லமுறையில் வாழ்ந்து வருகிறார்" என்று அவர் கூறியுள்ளார்.</p><p>அண்மையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான ரேனுக பெரேரா இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T12:23:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாய் பிரியங்கரவின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கிய முன்னாள் கடற்படை சிப்பாய் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-figure-arrested-with-narcotics-worth-1789731566"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-figure-arrested-with-narcotics-worth-1789731566</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவொன்றின் போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையில் இயக்கி வந்ததாக சந்தேகிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவொன்றின் போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையில் இயக்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர், போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
வெல்லம்பிட்டிய, நாகஹமுல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>விசேட நடவடிக்கை</h2><p>
</p><p>
விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை II பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 716 கிராம் ஹெரோயின் மற்றும் 255 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a946f069-ca80-4726-8489-88a6cbdff847/26-6aad2b6f47e1d.webp' /></p><p>
</p><p>
மேலும், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான மகசின் மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டவர் முன்னர் இலங்கை கடற்படையில் பணியாற்றியவர் எனவும், பின்னர் சேவையிலிருந்து தப்பிச் சென்றவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> எனினும், 2025ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் அவர் சட்டபூர்வமாக கடற்படை சேவையிலிருந்து விலகியுள்ளார்.
</p><p>
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தற்போது டுபாயில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் ‘டுபாய் பிரியங்கர’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் நபரின் இலங்கையிலுள்ள போதைப்பொருள் வலையமைப்பை இவர் பிரதானமாக இயக்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d7f5b3b-0a1b-4ea2-9b90-4a6a1713ef3c/26-6aad2b6feecb4.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T12:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய மட்டக்குளி கோர விபத்து: கைதான சாரதி போதைப்பொருள் பயன்படுத்தவில்லை...! நீதிமன்றில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mattakkuliya-accident-driver-arrest-1789731145"></link>
            <id>https://tamilwin.com/article/mattakkuliya-accident-driver-arrest-1789731145</id>
            <summary type="text">மட்டக்குளி - கந்தஉட பகுதியில் பதிவான கோர விபத்து தொடர்பில் கைதான சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற போது கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை என அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளி - கந்தஉட பகுதியில் பதிவான கோர விபத்து தொடர்பில் கைதான சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற போது கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பான வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (17.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> 

இதன்போது நீதிமன்றில் முன்னிலையான விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபர் செலுத்திச் சென்ற மின்சாரத்தால் இயங்கும் கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக முன்னோக்கிப் பயணித்துள்ளது. தானாகவே வேகத்துடன் முன்னோக்கி சென்றமையால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><h2>கார் பரிசோதனை</h2><p>
ஆகையால் வாகனத்தின் இயந்திரம் அல்லது, தொழில்நுட்ப அமைப்பில் கோளாறு ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான நிபுணர் குழுவினரால், குறித்த கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. 

அத்தோடு வைத்திய குழுவின் மூலம் சந்தேகநபரின் மனநிலை தொடர்பான மதிப்பிட்டை பெறுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.</p><p> 

அதனை தொடர்ந்து சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது சேவைபெறுநர் மதுபானம் அல்லது சட்டவிரோத போதைப்பொருளையோ ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்காக ஆயுர்வேத மருந்துகளை எடுத்து வருபவர். போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்வதற்கான பொலிஸார் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் போது, போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்தமைக்கு அம்மருந்துகளே காரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b7306d-d208-4a9e-92c7-1f5f542e2a69/26-6aad2469b9abb.webp' /></p><p> </p><p>எனது சேவை பெறுநர் செலுத்திய காரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் என்றார். 

இந்நிலையில் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதால் பொதுமக்களிடையே அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளமையால், அவருக்கு பிணை வழங்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு</h2><p> </p><p>

இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான் எதிர்வரும் 30ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். </p><p>

மட்டக்குளி கந்தஉட பெர்குசன் வீதி சந்திக்கருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை (16) இரவு, வத்தளை பகுதியில் இருந்து அதிக வேகத்தில் வந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. </p><p>

இதன்போது விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் காயமடைந்த 13 நபர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், 03 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:57:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ஜப்பான் மத்திய வங்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/japan-s-central-bank-sharply-raised-interest-rates-1789731325"></link>
            <id>https://tamilwin.com/article/japan-s-central-bank-sharply-raised-interest-rates-1789731325</id>
            <summary type="text">ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான &#039;பேங்க் ஒஃப் ஜப்பான்&#039; நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும்
தனது கொள்கை வட்டி விகிதத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான 'பேங்க் ஒஃப் ஜப்பான்' நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும்
தனது கொள்கை வட்டி விகிதத்தை 1.25% ஆக உயர்த்தியுள்ளது.
</p><p>
இது கடந்த 31 ஆண்டுகளில் ஜப்பானில் பதிவான மிக உயர்ந்த வட்டி விகித அளவாகும்.
</p><p>
வங்கிக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், வட்டி
உயர்விற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும்
வாக்களித்தனர்.</p><h2>பொருளாதார வளர்ச்சி</h2><p>
</p><p>பிரதமர் சானே தகாய்ச்சி தனது அமைச்சரவையை மாற்றியமைத்து,
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய திட்டங்களைச்
செயல்படுத்தப் போவதாக அறிவித்த மறுநாளே மத்திய வங்கி இந்த அதிரடி முடிவை
எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87780030-b231-423b-87f6-4dc53c7bd7b7/26-6aad250197dbe.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், மத்திய வங்கியின் தலைவர் கசுவோ உயேடா செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.
</p><p>
இனிவரும் மாதங்களில் வட்டி விகிதங்கள் எந்த வேகத்தில் மீண்டும் உயர்த்தப்படும்
என்பது குறித்த முக்கியக் குறிப்புகள் இந்தச் சந்திப்பில் வெளியாகும் என உலக
நிதிச் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்துள்ளனர்.</p><h2>வட்டி விகிதம் அதிகரிப்பு</h2><p>
</p><p>
மேலும் இந்த வட்டி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் ஜப்பானிய
நாணயமான 'யென்' (Yen) மதிப்பு வலுவடையத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b24223ff-61d6-4660-ba5a-71c43ae2dc66/26-6aad25024ac7a.webp' /></p><p>&nbsp;ஜப்பானில் கடன் வாங்குவோருக்கான வட்டிச் சுமை சற்றே அதிகரிக்கும் என்றாலும்,
வங்கிகளில் பணம் சேமிப்போருக்குக் கூடுதல் வட்டி கிடைக்கும்.</p><p>

நாட்டின் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்தி, நுகர்வோர் சந்தையை நிலைநிறுத்த
இந்த நடவடிக்கை உதவும் எனக் கருதப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தபால் பெட்டிக்கு மாலை அணிவித்து பட்டதாரிகள் நூதன போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/graduates-protest-by-garlanding-a-postbox-jaffna-1789729550"></link>
            <id>https://tamilwin.com/article/graduates-protest-by-garlanding-a-postbox-jaffna-1789729550</id>
            <summary type="text">யாழில் வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய்
உடைத்து நூதன முறையில் போராட்டம் நடாத்தியுள்ளனர்.குறித்த போராட்டமானது&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய்
உடைத்து நூதன முறையில் போராட்டம் நடாத்தியுள்ளனர்.</p><p>குறித்த போராட்டமானது&nbsp;இன்று(18.9.2026) மதியம் 2 மணியளவில் யாழ்.தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.</p><p>இதன்போது, வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.</p><h2>கோரிக்கை</h2><p> </p><p>1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு, பட்டதாரிகள் 5
ஆயிரம் பேர் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளதை
கண்டித்து இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97efe4f4-b01f-4c1b-8f04-a737d947c40f/26-6aad1fff12a5b.webp' /></p><p>
</p><p>
தபால் நிலையத்தில் இருந்து மனு அனுப்பிய போது, தபால் பெட்டிக்கு மலர் மாலை
அணிவித்தும் மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைக்கும் போது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அத்துடன், தமது வேலை வாய்ப்பு
தொடர்பில் கடவுளும், எமது தாய் தந்தையர்களுமான பொது மக்கள் ஆதரை வழங்க
வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-kilinochchi-1789729275"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-kilinochchi-1789729275</id>
            <summary type="text">கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி
மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது.</p><h2>மகஜர் கையளிப்பு</h2><p>இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை போராட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32163783-3fec-40d9-92a1-b857cd47e514/26-6aad1c8756d6b.webp' /></p><p> கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் வாள்
வெட்டுக்குழுக்கள் வாள் வெட்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், கடந்த
வாரத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும்
வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரட்டைவேடம் போடும் அர்ச்சுனா எம்.பி..! குற்றஞ்சாட்டும் விமல் வீரவன்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimal-weerawansa-make-controversial-remark-archuna-1789724921"></link>
            <id>https://tamilwin.com/article/wimal-weerawansa-make-controversial-remark-archuna-1789724921</id>
            <summary type="text">உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான நிலைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.</p><h2>புலம்பெயர் தமிழர்கள்</h2><p>
</p><p>
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து, தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவரே இராமநாதன் அர்ச்சுனா என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
</p><p>
அப்போது அனைவருக்கும் நல்லவராகத் தெரிந்த அவர், தற்போது எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் வேறு விதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/znPLorqc7l0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>

அண்மையில் தெற்கில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய அர்ச்சுனா, தனது வாழ்நாளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியான தமிழீழம் உருவாக இடமளிக்கப் போவதில்லை என்றும், தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் மோதலில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
</p><p>
அர்ச்சுனாவின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>&nbsp;இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனுக்கு சிலை அமைக்கப்பட்டு, மக்கள் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதாகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p><h2>திலீபனின் சிலை</h2><p>
</p><p>
திலீபனின் பெயரைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதைத் தடுப்பது உள்ளிட்ட பிரிவினைவாதக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் இருந்தவர் என்றும், அவர் ஒரு பயங்கரவாதி என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/764e2daa-0acf-4bf8-aaf4-8f2a2c81dcc9/26-6aad0d44b7be5.webp' /></p><p>

இவ்வாறான நிலையில், திலீபனின் சிலையை நிறுவி அவருக்கு அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படும் தமிழ் தேசியவாதக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

மேலும், நாட்டின் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் தீவிரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பெறப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் முக்கிய பகுதியில் இருவாரத்திற்குள் அகற்றப்படவுள்ள ஹோட்டல்கள்! அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotels-to-be-removed-within-two-weeks-1789727413"></link>
            <id>https://tamilwin.com/article/hotels-to-be-removed-within-two-weeks-1789727413</id>
            <summary type="text">கொழும்பு - கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.</p><p> 

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>காணி உரித்து வழங்குவதற்கான நடவடிக்கை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், பொது மக்களுக்கு சட்டத்தின் பிரகாரம் காணி உரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கடந்த காலங்களில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஊடாகவே காணி முறைகேடுகள் இடம்பெற்றன. அரசியல் தலையீடுகளுடன் தான் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றன. </p><p>

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் அரசியல் அதிகாரத்துடன் அரச காணிகளை கைப்பற்றியுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e36da5f8-0eef-40a4-b10e-74f3e00d9eec/26-6aad199073805.webp' /></p><p> </p><p>

அவர்களுக்கு எதிராகவும் தற்போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பிரதான பேசுபொருளாக காணப்பட்ட மல்வானை சொகுசு இல்லம் மற்றும் காணி, கதிர்காம பகுதியில் சொகுசு இல்லம் மற்றும் அதனுடனான காணி அரசுடமையாக்கப்பட்டுள்ளது.</p><h2>காணி வழங்கல்</h2><p> </p><p>

மல்வானை இல்லத்தை பல்கலைக்கழக விடுதியாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 2 வருட காலத்தில் ஒரு அடி நிலத்தை கூட சட்டவிரோதமான முறையில் எவருக்கும் வழங்கவில்லை. 

காணி வழங்கல் நடவடிக்கைகள் சட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்படுகிறது. </p><p>கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும். சட்டத்தின் பிரகாரமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனது மகனை மீட்டுத் தாருங்கள்: மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீருடன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-s-mother-s-heartfelt-plea-1789713484"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-s-mother-s-heartfelt-plea-1789713484</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச்
சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர
நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச்
சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர
நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும்
இலங்கை அரசாங்கத்திடம் அழுது புலம்பியவாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சமூக ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த இளைஞர் சவூதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.</p><h2>பகிரங்கமாக மன்னிப்பு</h2><p>
</p><p>
குறித்த பதிவை அவர் உடனடியாகவே சமூக ஊடகத்திலிருந்து நீக்கியதுடன், அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.</p><p>

மேன்முறையீட்டில் அதிகரித்த தண்டனை

இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28e7b630-3fb0-4e09-b293-92fb421af0a2/26-6aad17f5663c7.webp' /></p><p> </p><p>எனினும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு விசாரணைகளின் போது இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவரது தாயார்,</p><p> “எனது மகன் தெரியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம். அவனை மன்னித்து, உயிருடன் மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அழுது புலம்பியவாறு வேண்டுகோள் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2883528b-e08e-4955-87b4-ddbe64906b74/26-6aad17f644ee9.webp' /></p><p>
</p><p>
இளைஞர் அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் சவூதி அதிகாரிகளுடன் அவசரமாக உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் பிரதேச சமூக தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7YTjX2owAAo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp;இதேவேளை, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இளைஞர் அனோஜனைக் காப்பாற்றுவதற்காகச்
சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் அவசரமாக
மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறிப்பாக சவூதி அரசிடம் கருணை மனுக்கோருவது தொடர்பிலும் உயர்மட்டப்
பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல் கொள்வனவில் அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-move-regarding-paddy-procurement-1789727095"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-move-regarding-paddy-procurement-1789727095</id>
            <summary type="text">விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில்
குறித்த செயற்பாட்டின் ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில்
குறித்த செயற்பாட்டின் ஊடாக நெல் கொள்வனவு பணிகளை அரிசி ஆலை உரிமையாளர்கள்
இன்று (18.09.2026) மேற்கொண்டிருந்தனர்.&nbsp;</p><p>நெல் சந்தைப்படுத்தல் சபை தவிர்ந்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட செயலகம் மூலம் முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு&nbsp;விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையிலேயே இதற்கான நடவடிக்கை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a221276-8d2c-419b-8065-2f5c3b1ee957/26-6aad1646d3902.webp' /></p><h2>நெல் கொள்வனவு&nbsp;</h2><p>கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த நெல் கொள்வனவு
இடம்பெற்றது.</p><p>குறித்த நெல் கொள்வனவு தொடர்பாக நெல் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள்
கருத்து தெரிவிக்கையில், முன்பு எந்த அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்படாத நடவடிக்கையை
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/760db5cb-cde2-4793-8397-d7b14e6554be/26-6aad1647cb708.webp' /></p><p> </p><p>அந்த வகையில் கிளிநொச்சி
மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் களஞ்சியங்கள் பற்றாக்குறை காரணமாக
நெல் கொள்வனவினை நிறுத்தியதை அடுத்து தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு
எந்த அரசாங்கமும் வழங்காத 25 மில்லியன் ரூபாய் நிதியினை எந்த வட்டியும் இன்றி
வழங்கி விவசாயிகளிடம் நெல்லினை அரச விலைக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை
செய்துள்ளது. </p><p>இதேபோன்று இனி வரும் காலங்களில் குறித்த நடவடிக்கை தொடர்ச்சியாக
மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/000895f5-bf41-4921-96fd-533cd392e921/26-6aad16f6d2a75.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:48:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின் ஓயா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/workers-admitted-to-hospital-stung-by-wasps-1789727950"></link>
            <id>https://tamilwin.com/article/workers-admitted-to-hospital-stung-by-wasps-1789727950</id>
            <summary type="text">வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இன்று (18.9.2026) பிற்பகல் வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தோட்டத்தில்
தேயிலை பறிக்கும் போது, தேயிலைச் செடிகளுக்குள் இருந்த குளவி கூடு கலைந்ததைத்
தொடர்ந்து, அவர்கள் இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தனர்.</p><p>

காயமடைந்தவர்கள் அனைவரும் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></p><p>
</p><p>
தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து
தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb607651-bb87-4b10-8fca-c5d12baff0dc/26-6aad14d26ab5b.webp' /></p><p>வைத்தியசாலை வட்டாரங்களின் தகவலின்படி, இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் எவரும் கவலைக்கிடமான
நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:43:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனுக்கு நான்காவது நாள் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tribute-to-thileepan-the-martyr-s-lamp-in-pedro-1789726168"></link>
            <id>https://tamilwin.com/article/tribute-to-thileepan-the-martyr-s-lamp-in-pedro-1789726168</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.&amp;nbsp;குறித்த நிகழ்வு பருத்தித்துறை நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>குறித்த நிகழ்வு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் பருத்தித்துறை
நினைவுத் தூபியில் இன்று (18.09.2026) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><h2>அஞ்சலி நிகழ்வு</h2><p>

இதில் யாழ். மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் அமைப்பின்
தலைவி மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆம்பித்து வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f30289c3-b68d-4b50-81ee-223c2c1ebff5/26-6aad0f79ded4b.webp' /></p><p> பருத்தித்துறை நகர
பிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் மலரஞ்சலி செலுத்தி மலர அஞ்சலி நிகழ்வை
ஆரம்பித்து வைத்தார். </p><p>அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர்
இந்திரன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:19:26+00:00</updated>
        </entry>
    </feed>
