<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-14T04:19:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மக்கள் மத்தியில் அதிகரிக்கும் ஆபத்து - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786678877"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786678877</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் தற்போது வெப்பமான வானிலை பதிவாகி வரும் நிலையில் மனநோய்க்கு இலக்காகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக காலி தேசிய மருத்துவமனையின் மனநல மர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் தற்போது வெப்பமான வானிலை பதிவாகி வரும் நிலையில் மனநோய்க்கு இலக்காகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக காலி தேசிய மருத்துவமனையின் மனநல மருத்துவரான ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். </p><p>

வெப்பநிலை உயர்வால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற நோய்களும் பதிவாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.</p><h2>மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை</h2><p> </p><p>

</p><p></p><p>இதேவேளை நாட்டின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் (14.08.2026) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fee5ac9b-6a32-4640-8307-23d94881addf/26-6a7e92c6299c6.webp' />&nbsp; &nbsp;</p><h2>வெப்பநிலையின் அளவு</h2><p>
</p><p>
இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
</p><p>
அதன்படி, கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T04:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்த சட்டமூலம் 18ஆம் திகதி நாடாளுமன்றில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-ammendment-will-be-submitted-on-18th-1786679769"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-ammendment-will-be-submitted-on-18th-1786679769</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>நீதித் துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதன் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஒரு நேர்மறையான நடவடிக்கையாகவே இந்தச் சட்டமூலம் அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>கடுமையான எதிர்ப்பு</h2><p>
</p><p>எனினும், இந்தச் சட்டமூலத்திற்கு நீதிச்சேவை சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சியின் பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் மகாநாயக்க தேரர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
</p><p>இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65ஆகவும் உயர்த்தப்படும்.</p><h2>நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்</h2><p>
இலங்கை அரசியலமைப்பின் 121ஆவது பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒரு சட்டமூலத்தை (முதல் வாசிப்பு) உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.</p><p> அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.</p><p>
இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அதிகளவிலான மனுக்களைத் தாக்கல் செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் பல்வேறு சிவில் அமைப்புகளும் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியலாகியுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:56:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - இளைஞர்கள் மீது தீவைப்பு - பிரதேச மக்கள் அடாவடித்தனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-were-set-on-fire-couple-arrested-1786673096"></link>
            <id>https://tamilwin.com/article/youth-were-set-on-fire-couple-arrested-1786673096</id>
            <summary type="text">களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் வீடு ஒன்றின் அருகில் வைத்து இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் வீடு ஒன்றின் அருகில் வைத்து இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

கடந்த 10 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
பெண் ஒருவரை இளைஞர்கள் கேலி செய்தமையால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b>இளைஞர்கள் மீது தீ வைப்பு</b></h2><p>

புலத்சிங்ஹல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53a81398-397f-4878-ba63-ffad96e66670/26-6a7e7d2d851d2.webp' />&nbsp;</p><p>சம்பவம் தொடர்பாக 29 வயதுடைய கணவன், மனைவி மற்றும் அவர்களின் 19 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட தம்பதியினர்&nbsp; பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். </p><p>

கடந்த 10 ஆம் திகதி இரவு பெண் பணியை முடித்துவிட்டு பேருந்தில் இறங்கி கணவருடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த கணவன் அந்த இளைஞர்களைத் எச்சரித்து விட்டு சென்றுள்ளார்.</p><h3><b>வீட்டின் மீது தாக்குதல் </b></h3><p>குறித்த இளைஞர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் சென்றுள்ளனர். 

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தம்பதி இளைஞர்களை நோக்கி பெட்ரோல் போத்தலை வீசியதுடன் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் முதலில் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் சந்தேகநபர்களின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-14T03:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்வெட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-minister-power-cut-announcement-1786596041"></link>
            <id>https://tamilwin.com/article/information-minister-power-cut-announcement-1786596041</id>
            <summary type="text">அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என்றும் எரிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>


செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.</p><h2>மின் உற்பத்தி பற்றாக்குறை&nbsp;</h2><p>எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் கூறும் இதுபோன்ற அறிக்கைகளால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் பீதியடைய வேண்டாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91966d74-49bf-4849-bfea-71d8535ca520/26-6a7e8b40692b2.webp' /></p><p>மேலும், அடுத்த ஆண்டு காற்றாலைகள் மூலம் 400 கிலோவாட் மின் உற்பத்தித்திறன் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
</p><p>தற்போது நாட்டின் மின்சார தேவையில் 48% புனல்மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும், மின் உற்பத்திப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது என்றும் அமைச்சர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:28:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-faces-serious-risk-of-sanctions-1786676889"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-faces-serious-risk-of-sanctions-1786676889</id>
            <summary type="text">சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. </p><h2><b>

விமான போக்குவரத்துகள் </b></h2><p>“ICAO அல்லது ICAO, எனப்படும் சிவில் விமான சேவையின் அதாவது Civil Aviation Organization எனப்படும் அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80ad9b28-1b51-41cb-b8eb-9bc93889fcb1/26-6a7e88824e23c.webp' /></p><p>அது ஸ்தாபிக்கப்படுவது உலகத்தில் விமானப் போக்குவரத்துகள் வளர்ச்சியடையும் போது, அதில் உள்ள அதிகார பலத்தை ஓரிடத்திற்கு மையப்படுத்தி, அதன் நிபந்தனைகளுக்கு இணங்க உலகின் அனைத்து விமானங்களையும் கையாளுவதே அதன் எதிர்பார்ப்பாகும்.
</p><p>
எனவே, நாமும் அதில் ஓர் உறுப்பு நாடாக இருக்கின்றோம். நாமும் அதன் சட்டதிட்டங்களுக்கு இணங்க செயற்பட வேண்டும். இந்த தணிக்கை உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றது. </p><p>

ஒவ்வொரு நாட்டிலும் இது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற அந்தந்த நாட்டின் சிவில் விமான சேவை குறித்த பிரமாணங்களுடன் இருக்கின்றதா, அது சட்டப்பூர்வமாக பேணப்படுகின்றதா என்பது குறித்து ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் பரிசோதனையொன்றை, தணிக்கையொன்றை நடத்துகிறார்கள். </p><h3><b>

ஸ்ரீலங்கன் விமான சேவை</b></h3><p>அடுத்த ஆண்டிற்கான தணிக்கையின் முதற்கட்டப் பணிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவையும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதில் சில முறைக்கேடுகள் கண்டறியப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9b7548-89cf-4ce6-bd78-da23d7773a4c/26-6a7e89306314c.webp' /></p><p>மேலும் தணிக்கை சோதனையில் ஸ்ரீலங்கன் விமான சேவை தோல்வியடைந்துள்ளது. </p><p>இந்த நிலையிலேயே சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T03:16:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரமாக இடமாற்றப்பட்ட இஷாரா செவ்வந்தி! தீவிரமடையும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ishara-sevwandi-angunakolele-urgent-relocation-1786675678"></link>
            <id>https://tamilwin.com/article/ishara-sevwandi-angunakolele-urgent-relocation-1786675678</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
நேற்றிரவு அவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.</p><h2>சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்</h2><p>

சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக, இஷாரா செவ்வந்தி கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ஆம் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f3883fa-dbf6-4a85-8e85-b1c3a5ac629d/26-6a7e87daa5186.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் சிறப்பு பொலிஸ் குழுக்களினால் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
</p><p>
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் நேபாள பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றப்பிரிவில் இவர் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.</p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணை 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட அவரை ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T03:14:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பொது வைத்தியசாலை முன்பாக வாகனங்கள் நிறுத்த தடை! வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parking-front-of-mannar-general-hospital-1786673767"></link>
            <id>https://tamilwin.com/article/parking-front-of-mannar-general-hospital-1786673767</id>
            <summary type="text">மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக ‘வாகனம் நிறுத்த தடை’ (No
Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்களை முறையற்ற விதத்தில்
நிறுத்தும் நடவடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக ‘வாகனம் நிறுத்த தடை’ (No
Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்களை முறையற்ற விதத்தில்
நிறுத்தும் நடவடிக்கைக்கு எதிராக போக்குவரத்து பொலிஸார் விசேட
நடவடிக்கையை முன்னெடுத்தனர்.</p><p>
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனப்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h2>வாகன உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம்&nbsp;</h2><p>
இதன்போது, முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்திய வாகன உரிமையாளர்களுக்கு
எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff28c209-a5d4-4186-b627-cf54391f6857/26-6a7e7c313135b.webp' /></p><p>குறித்த பகுதியில் வாகனங்களை
நிறுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக போக்குவரத்து ஒழுங்கை பேணுவதற்கும்,
நோயாளர்களின் அவசரப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும்
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

எனவே, குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்து பொலிஸாரின்
அறிவுறுத்தல்களையும், வீதிப்போக்குவரத்து விதிகளையும் பொதுமக்கள்
கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e141cdd0-765c-484e-9e0b-57441b82c33e/26-6a7e7ca9ec3ed.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff28c209-a5d4-4186-b627-cf54391f6857/26-6a7e7c313135b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-14T02:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகூடிய வெப்ப அலை! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-warning-for-districts-1786672612"></link>
            <id>https://tamilwin.com/article/heat-warning-for-districts-1786672612</id>
            <summary type="text">நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (14) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (14) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.</p><h2>பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aee4b508-996d-4cae-bb33-1952b7029ad5/26-6a7e767101440.webp' /></p><p>
</p><p>
அதன்படி, கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>இதேவேளை, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T02:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பெண்ணிடம் பல கோடி ரூபா சொத்து பறிமுதல் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-arrested-with-millions-worth-property-1786671673"></link>
            <id>https://tamilwin.com/article/women-arrested-with-millions-worth-property-1786671673</id>
            <summary type="text">கொழும்பில் பெரிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தொட்டலங்க பொட்டி எனப்படும் பெண், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் பெரிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தொட்டலங்க பொட்டி எனப்படும் பெண், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் முறையற்ற விதத்தில் சுமார் எட்டுக் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களைச் சம்பாதித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> இந்த பெண்ணிடம் உள்ள சொத்துக்களில் இதுவரை 8.25 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2><b>சொத்துக்களின் பெறுமதி&nbsp;</b></h2><p> அத்துடன், அவரிடம் உள்ள சொத்துக்களின் பெறுமதி மேலும் பல கோடி ரூபாய் இருக்கும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aced6599-0dd0-431b-b49b-93fffd2a165c/26-6a7e74c594a2b.webp' /></p><p>தொட்டலங்க பொட்டி வசம் உள்ள ஏனைய சொத்துக்களைக் கண்டுபிடிப்பதற்காக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். </p><p>கொழும்பின் பிரதான போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவரான தொட்டலங்க பொட்டி, பொலிஸாரை ஏமாற்றி நீண்ட காலமாக தலைமறைவாக செயற்பட்டுள்ளார். </p><p>போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அவரிடம் உள்ள சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு சில மாதங்களுக்கு முன்பிருந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. </p><p>அதற்கமைய, போதைப்பொருள் வர்த்தகம் மூலம் தொட்டலங்க பொட்டி ஈட்டிய பணத்தைச் செலவிட்டு கொள்வனவு செய்திருந்த வீடுகள், கட்டடங்கள், கடை அறைகள், தங்க நகைகள் உள்ளிட்ட பல பெறுமதியான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு கைப்பற்றியுள்ளது. </p><p>இது தவிர, அவருக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தினையும் புலனாய்வாளர்களால் கண்டுபிடித்துள்ளனர். தொட்டலங்க பொட்டி இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-14T01:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சேவையை கைவிட்டுச்சென்றுள்ள ஆயிரக்கணக்கான தாதியர்கள்! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-nures-giving-up-their-jobs-1786671913"></link>
            <id>https://tamilwin.com/article/govt-nures-giving-up-their-jobs-1786671913</id>
            <summary type="text">தொழில் அழுத்தம் காரணமாக அரச சேவையில் இணைந்துள்ள தாதியர் பணியை கைவிடும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசு மருத்துவமனைகளில் நிலவும் கடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் அழுத்தம் காரணமாக அரச சேவையில் இணைந்துள்ள தாதியர் பணியை கைவிடும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அரசு மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான பணிச்சுமையைத் தாங்க முடியாமல் இதுவரை சுமார் 4,600 தாதியர் தமது சேவையை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2>அரசு ஊழியர்கள் விடுமுறை&nbsp;</h2><p>அரசு தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be47c60d-6534-494b-b579-6106f6a11af4/26-6a7e732ba7d91.webp' /></p><p>
</p><p>நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான பின்னர், அரசு ஊழியர்கள் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அரசு வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்தி, சுமார் 2,000 தாதியர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அரசு மருத்துவமனைகளில் தாதியர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவே இவ்வாறு அவர்கள் தமது அரசுப் பணியை கைவிட்டுச் சென்றுள்ளதாக சமன் ரத்னப்பிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T01:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த 08 மாதங்களில் பாதாள உலகக் குழு துப்பாக்கிச் சூடுகளில் 18 பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18-killed-in-underworld-shooting-1786671169"></link>
            <id>https://tamilwin.com/article/18-killed-in-underworld-shooting-1786671169</id>
            <summary type="text">கடந்த எட்டு மாத காலப் பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த எட்டு மாத காலப் பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
மித்தேனிய பகுதியில் நேற்று முன்தினம் மாலை 'பெக்கோ சமன்' என்ற பாதாள உலகக் குழுத் தலைவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>பாதாள உலக ஆயுதமேந்திய குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவரை 28 ஆக அதிகரித்துள்ளதுடன், இந்தத் தாக்குதல்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0080cc9c-3f4c-4eb1-8aa0-1777f9fbec2c/26-6a7e704298f32.webp' /></p><p>
</p><p>பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T01:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-govt-servents-penstion-age-must-be-increaed-1786670119"></link>
            <id>https://tamilwin.com/article/all-govt-servents-penstion-age-must-be-increaed-1786670119</id>
            <summary type="text">உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்த அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்படுமாயின், ஏனைய அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையும் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்த அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்படுமாயின், ஏனைய அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையும் உயர்த்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.</p><p>
அனைத்து அரசு மற்றும் அரை-அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>தொழற்சங்கங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் தேசிய பேரவை நேற்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.</p><h2>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை</h2><p>இந்தக் கோரிக்கையடங்கிய யோசனையில் உலப்பனே சுமங்கல தேரர், சமன் ரத்னப்பிரிய, ரவி குமுதேஷ், ஆனந்த பாலித, உதேனி திசாநாயக, சிந்தக்க பண்டார, பந்துல சமன் குமார, சுபுன் களுகோட்டகே, கயாமல் சுமனரத்ன, சுமேத சோமரத்ன மற்றும் சுபாஷ் கருணாரத்ன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501f35ea-33ee-4af3-9b4d-49a4ae096a79/26-6a7e93893c5e2.webp' /></p><p>சுமார் 15 இலட்சம் அரசு ஊழியர்களில் ஒரு குறிப்பிட்ட சேவைப் பிரிவினருக்கு மட்டும் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு தொடர்பில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T01:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை வினாத்தாள் பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம்..! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-a-l-exam-paper-leak-rumours-denied-1786669426"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-a-l-exam-paper-leak-rumours-denied-1786669426</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14) நடைபெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14) நடைபெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

எனவே, பரீட்சார்த்திகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>பௌதிகவியல் முதலாம் வினாத்தாள்</h2><p>

இந்நிலையில், அம்பாந்தோட்டை மாவட்டம் அம்பாலாந்தோட்டையில் உள்ள உயர்தரப் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமொன்றில், இன்று நடைபெறவுள்ள பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் தவறுதலாக வேறு வினாத்தாள் பொதிகளுடன் வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c068379-84dc-4e39-893d-5159788586f8/26-6a7e6b2c66a9f.webp' /></p><p>

நேற்று(13) நடைபெற்ற இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியிலிருந்தே, இன்று(14) பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எவ்வாறாயினும், குறித்த வினாத்தாள் பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><h2>உடனடி விசாரணை</h2><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b8ff826-6ff8-418e-8400-c3048082a8cf/26-6a7e6b2d19093.webp' /></p><p>
</p><p>
மேலும், குறித்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-14T01:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழுக்களின் குடும்பங்களை இலக்கு வைத்து தொடரும் பழிவாங்கும் நடவடிக்கைகள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-underworld-feuds-escalate-amid-crackdown-1786668573"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-underworld-feuds-escalate-amid-crackdown-1786668573</id>
            <summary type="text">பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்காக பொலிஸார் வெளிநாடுகளுக்குச் சென்று, சர்வதேச பொலிஸ் ஒத்துழைப்புடன் அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்காக பொலிஸார் வெளிநாடுகளுக்குச் சென்று, சர்வதேச பொலிஸ் ஒத்துழைப்புடன் அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருகின்றனர்.</p><p>

“நீந்துவதற்குத் தண்ணீரில் இறங்கத்தான் வேண்டும்” என உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில், பாதாள உலகக் குழுக்களின் தலைவர்களுக்கிடையிலான மோதல்கள் தற்போது பழிவாங்கும் சம்பவங்களாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதற்கு உதாரணமாக, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
</p><p>
அண்மையில், கஞ்சிபானி இம்ரானின் மாமாவும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

எனவே, பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், பாதாள உலகக் கும்பல்களின் பழிவாங்கும் கலாசாரமும் ஆயுதப் பயன்பாடும் தொடர்ந்து வருகின்றன.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகிறது லங்காசிறியின் “நாட்டு நடப்பு” நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LgG1a8QZ_6I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T00:53:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஜனாதிபதிக்கு உயிரச்சுறுத்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-judiciary-reforms-anura-takes-risk-1786666370"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-judiciary-reforms-anura-takes-risk-1786666370</id>
            <summary type="text">நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நாட்டில் நிலவும் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நாட்டில் நிலவும் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
</p><p>
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11இலிருந்து 17 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நீதித்துறை மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணம், கடந்த 5 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைதான் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நீதிபதிகள் ஓய்வு பெறுவதால் இந்த வழக்கு மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, பதவிக்கால நீடிப்பு மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது எந்தவொரு தனிப்பட்ட நீதிபதிக்கோ அல்லது குறிப்பிட்ட நபருக்கோ வழங்கப்படும் சலுகையல்ல என்றும், மாறாக ஒட்டுமொத்த நீதித்துறையையும் வலுப்படுத்துவதற்கான ஒரு “அமைப்புமுறை மாற்றம்” என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால், தனது தனிப்பட்ட பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை ஜனாதிபதி உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இருந்தபோதிலும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேவையானால் அந்த ஆபத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்காக தனது பதவிக்கே ஆபத்து ஏற்பட்டாலும் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நாட்டு மக்களின் பொதுநலனுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் எந்தவொரு ஆபத்தையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், தனது பதவியை இழந்தாலும் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8ZMqGKOf2IA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T00:46:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் திருகோணமலையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-development-committee-meeting-trinco-1786662262"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-development-committee-meeting-trinco-1786662262</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்றையதினம் (13) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
</p><p>குறித்த கூட்டம், மாவட்ட செயலாளர்
W. G. H. ஹேமந்தகுமாரவின் ஒருங்கிணைப்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்
வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.</p><h2>ஒருங்கிணைப்புக் குழு</h2><p>

இதில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார
மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா
மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர்
கலந்துகொண்டு, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் தேவைகள்
குறித்துத் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6edc8961-1c47-4d37-9cf5-1d9f3f6b2504/26-6a7e4e6ef3a2f.webp' /></p><p>
</p><p>
கூட்டத்தின் தொடக்கத்தில், இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் இதன் மூலம்
எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
விரிவாக விளக்கமளித்தார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, கடந்த மாவட்ட கடற்றொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.
</p><p>
குறிப்பாக, திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும்
சிக்கல்களுக்கு விரைவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப்
பெற்றுக்கொடுப்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
இந்தக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின்
செயலாளர், திருகோணமலை மாவட்ட மீன்பிடி கூட்டுத்தாபன அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள், மாவட்ட மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T23:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆடை விவகாரம்..! யாரும் அறியாத திடுக்கிடும் தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877"></link>
            <id>https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
 
இந்த நிலையில், அரசு ஊழிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p> 
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் கடமையின் போது அனுமதிக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று,&nbsp; 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் (RDHS) இருப்பதன் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் வைத்தியசாலைப் பெயர்களில் உள்ள மாற்றங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.</p><p>

இந்த விவாதம் எந்த ஒரு மதத்திற்கும் அல்லது இனத்திற்கும் எதிரானது அல்ல என்றும், சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதே அவசியம் எனவும் சமூக மட்டங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அரச ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளை (Uniform) மட்டுமே பணி நேரத்தில் அணிய வேண்டும் என்று இலங்கையின் பொது நிர்வாக மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகள் வலியுறுத்துகின்றன.

 குறிப்பாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை (கடித இலக்கம்: 2/176/212), சுகாதாரப் பணி உதவியாளர்கள் மற்றும் கனிஷ்ட தர ஊழியர்கள் முழங்கால் வரை இருக்கும் ஆடைகளை (Cream colour gown) அணிய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது.</p><p>

 எந்தவொரு மத அல்லது இன ரீதியான அடையாளங்களையும் அல்லது உடைகளையும் பணி நேரத்தில் அணிய அனுமதி இல்லை என்றும், அரசியலமைப்பு மத சுதந்திரத்தை வழங்கினாலும், அரச கடமைகளில் சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுவது கட்டாயம் என்றும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 குறித்த சீருடைகளை அணியத் தவறும் ஊழியர்களுக்கு எதிராக அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இந்தச் சுற்றறிக்கையின் கட்டாய விதிமுறையாக உள்ளது.
</p><p>
இந்த விதிமுறைகள் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் பொதுவானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mqj0Hav3DsQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T22:55:56+00:00</updated>
        </entry>
    </feed>
