<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-13T12:24:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை! பொலிஸ் அதிகாரிகளுக்கு பறந்தது உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attention-to-motorcycles-traveling-on-the-road-1786619451"></link>
            <id>https://tamilwin.com/article/attention-to-motorcycles-traveling-on-the-road-1786619451</id>
            <summary type="text">18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இன்று (13.08.2026) இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>விபரீதமான மனநிலையுடன் வாகனம் செலுத்தல்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோட்டார்சைக்கிள்களில் குழுக்களாக பயணிக்கும் சிலர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விபரீதமான மனநிலையுடன் வாகனங்களைச் செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்தகைய நபர்களுக்கு எந்தவித மன்னிப்பும் அளிக்காமல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76165016-dd6a-413b-bf03-b2ac521729e4/26-6a7db64d418df.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

அத்துடன், 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>
சத்தம் மாற்றியமைக்கப்பட்ட, அசல் வடிவம் மாற்றப்பட்ட, பதிவு செய்யப்பட்ட மற்றும் கொள்ளளவை விட அதிக கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T12:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடிந்து விழுந்த ஹட்டன் - விக்டன் தோட்ட பாலம் : தடைப்பட்டுள்ள பேருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-000-people-affected-by-collapsehat-wigton-bridge-1786618057"></link>
            <id>https://tamilwin.com/article/5-000-people-affected-by-collapsehat-wigton-bridge-1786618057</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஹட்டன் - விக்டன் பகுதியில் அமைந்துள்ள சீமெந்து பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஹட்டன் - விக்டன் பகுதியில் அமைந்துள்ள சீமெந்து பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.</p><p>

இதனால் பேருந்து சேவை
தடைப்பட்டுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>பாதிக்கப்பட்ட மக்கள்</h2><p>
</p><p>
விக்டன் தோட்டத்தில் 5 பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு அருகிலுள்ள நகரம்
ஹட்டன் ஆகும். மேலும் அந்த வழித்தடத்தில் தினமும் சுமார் 6 தனியார்
பேருந்துகள் இயக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32eb9fba-0e3d-42dd-8d7e-fa5e0559d862/26-6a7da981cf517.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்ட விக்டன் தோட்டத் தொழிலாளர்கள்,
இதற்கு முன்பும் பாலம் இடிந்து விழுந்ததாகவும், அப்போது தோட்டத் தொழிலாளர்களே
தற்காலிகமாக சரிசெய்ததாகவும் தெரிவித்துள்ளதுடன் தற்போது பாலத்தின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்துள்ளதால், தங்களால் அதை சரிசெய்ய முடியவில்லை
என கூறுகின்றனர்.</p><p>

மேலும், விக்டன் பகுதி மக்கள், தங்கள் பகுதியில்தான் ஆண்டு முழுவதும் அதிக மழை
பெய்கிறது என்றும், அந்த மழையின் காரணமாக பல இடங்களில் பெரிய
பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்படைகிறது என்றும்
கூறுகின்றனர்.</p><h2>போக்குவரத்து சிரமம்</h2><p>
</p><p>
உடைந்த பாலம் வரை பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், குழந்தைகளும்
ஆசிரியர்களும் விக்டன் தோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சுமார் 1 கிலோமீட்டர்
தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. </p><p>

மேலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக, தங்கள்
தோட்டத்திலிருந்து இந்த உடைந்த பாலம் வரை செல்வதற்கு ஒரு முச்சக்கர வண்டியில்
பயணித்தால் சுமார் 500 ரூபா கட்டணம் வசூலிப்பதாக கூறுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b8dde14-b728-4d1f-a592-6d1b23e130d4/26-6a7da982eeef7.webp' /></p><p>அத்துடன் தேர்தல் காலத்தில் உடைந்த பாலம் மீண்டும் கட்டப்படும் என்று அரசியல்வாதிகள்
வாக்குறுதி அளித்தபோதிலும், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.</p><p>
எனவே, ஹட்டன் - விக்டன் மக்கள், உடைந்த பாலத்தை சரிசெய்ய வேண்டும் அல்லது
நீடித்து நிலைக்கும் ஒரு புதிய பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T11:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானின் கைது நடவடிக்கை குறித்து பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-explain-challenges-kanjipani-imran-1786618446"></link>
            <id>https://tamilwin.com/article/police-explain-challenges-kanjipani-imran-1786618446</id>
            <summary type="text">மலேசியாவில் பாதாள உலகத் தலைவரான காஞ்சிபானி இம்ரான் என்பவரைக் கைது செய்த சமீபத்திய நடவடிக்கை தோல்வியுற்றது என்ற கருத்துக்களைப் பொலிஸார் நிராகரித்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் பாதாள உலகத் தலைவரான காஞ்சிபானி இம்ரான் என்பவரைக் கைது செய்த சமீபத்திய நடவடிக்கை தோல்வியுற்றது என்ற கருத்துக்களைப் பொலிஸார் நிராகரித்துள்ளனர். </p><p>

அந்த நடவடிக்கையானது ஒரு வெளிநாட்டின் சட்டங்களையும் நடைமுறைகளையும் கையாள்வதை உள்ளடக்கியிருந்தது என்றும் கூறியுள்ளனர்.
</p><h2>மலேசிய நடவடிக்கை</h2><p>
ஊடகங்களிடம் பேசிய உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்கவே நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd88dd0-c183-436f-862d-000542e6a306/26-6a7dac2c298ba.webp' /></p><p>

இலங்கை அதிகாரிகள் தங்கள் சொந்த அதிகார வரம்பில் செயல்படுவது போலவே ஒரு வெளிநாட்டில் செயல்பட முடியாது என்று விளக்கிய அவர், இந்தச் சூழ்நிலையை, ஒருவர் தனது சொந்த வட்டாரத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியின் புவியியல் மற்றும் நடைமுறைகளுடன் பரீட்சயமில்லாமல் இருப்பதற்கு ஒப்பிட்டுள்ளார்.
</p><p>
எனவே, மலேசிய நடவடிக்கையை ஒரு தோல்வியாகக் கருதக்கூடாது என்றும், மாறாக வெளிநாட்டு சட்ட மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுக்கு இது ஒரு கற்றல் அனுபவமாக அமைய வேண்டும் என்றும் ஒலுகலா கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T11:36:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் - உதவிக்கரம் நீட்டிய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/food-packages-with-help-of-the-indian-government-1786618142"></link>
            <id>https://tamilwin.com/article/food-packages-with-help-of-the-indian-government-1786618142</id>
            <summary type="text">சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட 391 குடும்பங்களுக்கு இந்திய
அரசாங்கத்தின் அனுசரணையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட 391 குடும்பங்களுக்கு இந்திய
அரசாங்கத்தின் அனுசரணையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
கண்டி இந்திய உதவி தூதரகத்தின் உதவி தூதுவர் வி.எஸ்.சரண்யா தலைமையில் இந்த
நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (13.08.2026) நடைபெற்றுள்ளது.</p><p>

கொட்டகலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணி பிரசாத் விடுத்த வேண்டுகோளுக்கு
அமைவாகவும், அவரது ஏற்பாட்டிலும் இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு
முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188531c1-a732-4aa8-b884-c5f373fcfe18/26-6a7da120b74f3.webp' /></p><h2>அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்கள்</h2><p>
</p><p>
கடந்த காலங்களில் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட சீரற்ற
காலநிலை காரணமாக கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற
அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுத்திருந்தனர். </p><p>இதனால் பல குடும்பங்களின்
அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த உலர் உணவுப் பொதிகள்
வழங்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8459a0ca-efa7-466f-8960-568945a6d0fb/26-6a7da1216e0e9.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக கொட்டகலை, ரொப்கில், மவுண்ட்வேர்னன், எரின்டன், தலவாக்கலை உள்ளிட்ட
பல பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்த நிவாரண உதவியைப்
பெற்றுக் கொண்டனர்.</p><h2>உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு</h2><p>
</p><p>
ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்
பொதிகள் வழங்கப்பட்டன. சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அயல்நாடான இந்தியா தொடர்ச்சியாக
வழங்கிவரும் மனிதாபிமான உதவிகளின் ஒரு பகுதியாக இந்த நிவாரணப் பொதிகள்
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி
பிரசாத், தலவாக்கலை பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் பத்திநாயக்க, பிரதேச சபை
உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5c6565d-ff8b-4cee-8b08-45ca5e2cf789/26-6a7da12224ce3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc779d25-9210-4981-be26-aa396bb59784/26-6a7da122d115d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd688a8-da48-4a47-af3d-00112ecbd97f/26-6a7da12388099.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:49:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கவுள்ள அநுர! பதவி விலகவும் தயார் என பகிரங்கமாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ready-to-face-consequences-anura-1786604816"></link>
            <id>https://tamilwin.com/article/ready-to-face-consequences-anura-1786604816</id>
            <summary type="text">நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
“எனது நிர்வாக அதிகாரமோ அல்லது எங்களிடம் உள்ள எந்த அதிகாரமோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப்படாது.</p><h2><b>அரசியலமைப்பில் மாற்றம்</b></h2><p> அரசியலமைப்புத் திருத்தங்களின் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி பதவி விலக வேண்டியிருந்தது. 

நீங்களும் பதவி விலக வேண்டியிருக்கும்&nbsp;என சட்டத்தரணிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.</p><p>நான் பதவி விலகத் தயாராகவே உள்ளேன். மக்களின் ஆணையை மீறி ஆட்சியில் இருக்க ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0a38cea-bae6-4cbb-b57e-0c667e69bf07/26-6a7d82698a140.webp' /></p><p> </p><p>

மேலும், அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆபத்தை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> ஆபத்துக்கள் இல்லாமல் மாற்றம் நிகழும் என்று நான் நினைக்கவில்லை. மாற்றம் எப்போதும் ஆபத்துக்களுடன் ஏற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது. </p><h3><b>

அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கை</b></h3><p>இதன்போது நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.</p><p>இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48bf7657-e35f-4b64-ab91-33c7a8eb2a45/26-6a7d826a43de6.webp' /></p><p>
</p><p>
நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மட்டுமே இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும்.</p><p>அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். </p><p>மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p></p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1046735007716312%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-08-13T10:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/road-accident-in-sri-lanka-1786616197"></link>
            <id>https://tamilwin.com/article/road-accident-in-sri-lanka-1786616197</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநரகத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (13.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>விபத்துக்களில் உயிரிழப்பு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விபத்துக்களில் 1693 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகள், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 119 பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள், 115 சைக்கிள் ஓட்டுநர்கள், 136 ஓட்டுநர்கள் மற்றும் 162 பயணிகள் அடங்குகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba8d780-ca08-421b-bb21-979db731ffca/26-6a7d9d4212e89.webp' /></p><h2>வீதி விபத்துகளில் சற்று குறைவு</h2><p>

மேலும், இதுவரை 3125 கடுமையான விபத்துகள், 6477 சிறிய விபத்துகள் மற்றும் 2388 இழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன. </p><p>

இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது வீதி விபத்துகளில் சற்று குறைவு காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையை நடுவீதியில் விட்டு தப்பியோடிய தாய்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-abandons-daughter-in-wattegama-town-1786614177"></link>
            <id>https://tamilwin.com/article/mother-abandons-daughter-in-wattegama-town-1786614177</id>
            <summary type="text">கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.</p><p>

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><h2>பொலிஸார்&nbsp;&nbsp;விசாரணை</h2><p>

இன்று காலை (13) சுமார் 07.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த தாய் ஒருவர் குழந்தையை இறக்கிவிட்டு சென்றுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/971c2ec9-5da3-4a03-93b6-5c88cd90a7be/26-6a7d96655b9d5.webp' />&nbsp;</p><p>

தமிழ்மொழியில் பேசும் குழந்தைக்கு தான் வசிக்கும் கிராமம் மற்றும் மாகாணம் குறித்த எந்த தகவலும் தெரியாது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
</p><p>
இருப்பினும், குழந்தையை இறக்கிவிட்ட முச்சக்கர வண்டியின் எண் தெளிவாக தெரியாததால், நகரில் உள்ள ஏனைய கண்காணிப்பு கமரா அமைப்புகளை சரிபார்த்து தகவல்களை பெற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:09:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் 93 சந்தேக நபர்களை மீட்டுவர சிவப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-notices-issued-93-suspects-hiding-abroad-1786612939"></link>
            <id>https://tamilwin.com/article/red-notices-issued-93-suspects-hiding-abroad-1786612939</id>
            <summary type="text">இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். </p><p>இன்று (13.08.2026) நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் வெளியிட்டுள்ளார்.</p><h2>35 முக்கிய குற்றவாளிகள்</h2><p>

மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், 2024, 2025 மற்றும் இந்த ஆண்டில், இந்த சிவப்பு அறிவிப்புகள் மூலம் 38 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7604dc3b-a73e-49e4-b2d4-279379c86f3a/26-6a7d94b306d87.webp' /></p><p>கூடுதலாக, பொலிஸ் மா அதிபரின் (IGP) நேரடித் தலையீட்டின் மூலம் மேலும் 35 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் நிலங்கள் உள்ளிட்ட பெரும் அளவிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு சிறப்புத் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.</p><p>

அதன்படி, சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, 2024இல் ரூ.1,490 மில்லியனும், 2025இல் ரூ. 1,549 மில்லியனும் கோரப்பட்டுள்ளது.</p><p>

மேலும், ஜனவரி 1, 2026 முதல் இன்று வரை ரூ. 839 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடக ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்! அரசியலுக்குள் இருக்கும் படுகொலையாளிகள் அச்சத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288"></link>
            <id>https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288</id>
            <summary type="text">படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளார்கள்.</p><p> நீதித்துறை மற்றும் விசாரணை கட்டமைப்பு தொடர்பில் எவ்வழியிலாவது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தி அதனூடாக தம்மை பாதுகாத்துக்கொள்ளவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.</p><h3>எதிர்க்கட்சியினரின் விமர்சனம்&nbsp;</h3><p>முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தி சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கியவர்கள் இன்று நீதித்துறையின் சுயாதீனம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. </p><p>நீதித்துறைக்கு எதிராக செயற்பட்டால் அதன் பாதிப்பு எவ்வாறானதாக அமையும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே எதிர்க்கட்சியினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5669b0-40f0-4b8e-b2f4-25a925f77b50/26-6a7d92c5e01bc.webp' /></p><p>ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படப் போவதில்லை.</p><p>

படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது கலக்கமடைந்து விசாரணை அதிகாரிகள் மீதும், நீதித்துறை கட்டமைப்பின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு கட்டித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி : பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/housing-scam-worth-crores-through-facebook-1786610401"></link>
            <id>https://tamilwin.com/article/housing-scam-worth-crores-through-facebook-1786610401</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, குறிப்பாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>மேற்கொள்ளப்பட்ட விசாரணை</h2><p>
அந்த விளம்பரங்களை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ள நிலையில், வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e86fb7-abeb-4f17-896e-553f34984e42/26-6a7d87ef0e033.webp' /></p><p>
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/J-XJgIZxg7g" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிய ஜீவன் தொண்டமான் நேரடி விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-visits-maskeliya-district-hospital-1786609860"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-visits-maskeliya-district-hospital-1786609860</id>
            <summary type="text">மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று
பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற
உறுப்பினரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று
பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நோயாளர்களுக்கு தடையற்றதும் தரமானதுமான
சுகாதார சேவையை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை விரைவில் பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (12.08.2026) கண்காணிப்பு விஜயமொன்றை
மேற்கொண்ட ஜீவன் தொண்டமான், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, அங்கு
காணப்படும் அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் மற்றும் நோயாளர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
</p><p>
இதன்போது, வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர்
யு.சு.யு. ரிஷான் உள்ளிட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் அவர் விரிவான
கலந்துரையாடலில் ஈடுபட்டார்.</p><h2>மஸ்கெலியா வைத்தியசாலையின் செயற்பாடு</h2><p>
</p><p>
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் சீரான செயற்பாட்டிற்கு மொத்தமாக 27
ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 14 ஊழியர்கள் மாத்திரமே கடமையில்
இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனால் 13 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதுடன், இந்த நிலைமை
வைத்தியசாலையின் அன்றாட சேவைகளிலும் நோயாளர்களுக்கான சிகிச்சை
நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23323dd5-2508-4901-b94a-2bd9ea4a14e6/26-6a7d89544f914.webp' /></p><p>
</p><p>
நோயாளர்களுக்கு தடையின்றி மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு இந்த ஊழியர்
பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜீவன் தொண்டமான்
வலியுறுத்தினார்.
</p><p>
நான்கு மாடிகளைக் கொண்ட மஸ்கெலியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு
மின்தூக்கிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்காத நிலையில் இருப்பதும் இந்த
விஜயத்தின்போது தெரியவந்தது.
</p><p>
இதனால் வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும்
பொதுமக்களை ஒரு மாடியிலிருந்து மற்றொரு மாடிக்கு மாற்றுவதில் பாரிய சிரமங்கள்
ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
குறைந்த மின் அழுத்தமே மின்தூக்கிகள் இயங்காததற்கான முக்கிய காரணமாக
தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்சார இணைப்பை சீரமைத்து இரண்டு
மின்தூக்கிகளையும் விரைவில் இயங்கச் செய்வதற்கான நடைமுறைத் தீர்வை
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
</p><p>
70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் வைத்தியசாலையாக
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை காணப்படுகின்ற போதிலும், முறையான வைத்திய
ஆய்வுக்கூட வசதி இல்லாதிருப்பது பாரிய குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டது.
</p><p>
இரத்த மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாதிரிகளை
டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d0fa46-1227-4b9a-ba44-72614761ab9f/26-6a7d8955229a9.webp' /></p><h2>நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை</h2><p>
</p><p>
அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நோயாளர்கள் நீண்ட நேரம்
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், சிகிச்சை வழங்குவதிலும் தாமதம்
ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, மஸ்கெலியா வைத்தியசாலையிலேயே தேவையான அடிப்படை ஆய்வுக்கூட வசதிகளை
ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜீவன்
தொண்டமான் வலியுறுத்தினார்.</p><p>

இதனுடன், வைத்தியசாலையில் காணப்படும் நோயாளர் காவுவண்டி அடிக்கடி பழுதடைவதால்,
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக ஏனைய
வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
</p><p>
நோயாளர்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், நோயாளர்
காவுவண்டியை முறையாக பராமரிப்பதுடன், அவசர தேவைகளின் போது பயன்படுத்தக்கூடிய
மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர்
ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8370ab4b-4771-4de5-9701-27a8d02dbba3/26-6a7d8955eca41.webp' /></p><p>
</p><p>
வைத்தியசாலையில் நேரில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட
செயலாளருக்கு உடனடியாக தொலைபேசி ஊடாகத் தெரியப்படுத்தியுள்ளதாக ஜீவன்
தொண்டமான் தெரிவித்தார்.
</p><p>
மேலும், குறித்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும்
நோக்கில் மாவட்ட செயலாளரை இன்றைய தினம் (13.08.2026)&nbsp; நேரடியாக சந்தித்து
கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமன் தாயார் கொலை விவகாரம்! வெளிநாட்டில் தீட்டப்பட்ட திட்டம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/backhoe-saman-s-mother-murder-investigation-1786604890"></link>
            <id>https://tamilwin.com/article/backhoe-saman-s-mother-murder-investigation-1786604890</id>
            <summary type="text">பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

மேலும், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கரந்தெனிய சுத்தாவின் குடும்பத்தினர், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>&nbsp;</p><h2>பெக்கோ சமன், கெஹெல்பத்தர பத்மேவுடன் இந்தோனேசியாவில் கைது&nbsp;</h2><p>

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பெக்கோ சமன், கெஹெல்பத்தர பத்மேவுடன் சேர்ந்து கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cb948e7-4bfb-452f-8b97-737df959ca7a/26-6a7d79f6b8c37.webp' />&nbsp;</p><p>
</p><p>
மித்தெனிய கஜ்ஜா என்று அழைக்கப்படும் அருண பிரியந்த விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பெக்கோ சமன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் இன்று காலை (13) உருபோக்கா - மாத்தறை வீதியில் உள்ள தம்பஹல பொல்வத்த பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>கொலைக்கான காரணம்&nbsp;</h2><p>

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிதியாவ பகுதியில் உள்ள வீட்டிற்கு வருகை தந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று (12) துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c1b1bec-bbd9-490c-be16-172663006005/26-6a7d79f76eb7a.webp' /></p><p>

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார், மித்தெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>
இதன்போது 9 மி.மீ. ரக துப்பாக்கியை கொண்டு நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், பெண்ணின் மார்பை நோக்கி சுமார் 7 முறை சுட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>

இந்நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T08:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தடி நீர்வளத் திட்டங்களை பாதிக்கும் கருத்துக்களை ஏற்க முடியாது - ஆளுநர் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-regret-that-affect-groundwater-projects-1786607403"></link>
            <id>https://tamilwin.com/article/governor-regret-that-affect-groundwater-projects-1786607403</id>
            <summary type="text">நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில்
முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்களையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில்
முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்களையும், கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாதது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
</p><p>யாழ்ப்பாணத்தில்&nbsp;இன்று (13.08.2026) நடைபெற்ற நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் இறுதிச் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நிலத்தடி நீர்வளத் திட்டம்</h2><p>
</p><p>

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், யாழ்ப்பாண குடாநாட்டின் குடிநீர், விவசாயம்,
மக்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி ஆகிய அனைத்தும் நிலத்தடி
நீர்வளத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது.</p><p> எனவே நிலத்தடி நீரைப் பாதுகாப்பது ஒரு சுற்றுச்சூழல்
நடவடிக்கை மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் தேசிய
பொறுப்புமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5331b7-8be8-487c-bd3e-823d94e76f13/26-6a7d7a2bb30be.webp' /></p><p>
</p><p>
இந்தத் திட்டத்தின் ஊடாக நிலத்தடி நீர் கண்காணிப்பு நிலையங்கள்
நிறுவப்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீரின் அளவு மற்றும் தரம் தொடர்பான தகவல்களை
தொடர்ச்சியாக பதிவு செய்யும் நவீன கண்காணிப்பு முறைமை உருவாக்கப்பட்டுள்ளமை,
மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மீள்நிரப்பு நடவடிக்கைகள், பாடசாலை
மாணவர்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு
பெறுபேறுகள் உருவாக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது.</p><p>

பல மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ள தொண்டமனாறு நீரேரித் தடுப்பணைத் திட்டத்தின் பயன்கள் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ள நிலையில்,
குறுகியகால அழுத்தங்களின் அடிப்படையில் அவற்றின் நோக்கத்தை பாதிக்கும்
தீர்வுகளை முன்வைப்பது பொருத்தமற்றது.</p><h2>நீர்வளப் பாதுகாப்பு&nbsp;</h2><p> </p><p>

எதிர்கால தீர்மானங்கள்
அனைத்தும் அறிவியல் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட
வேண்டும்.

நிலத்தடி நீர்வளப் பாதுகாப்பு என்பது ஒரு தனி நிறுவனத்தின் பொறுப்பு அல்ல. </p><p>மாறாக திணைக்களங்கள், ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உள்ளூராட்சி
மன்றங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும்
ஒருங்கிணைந்து செயற்பட்டால்தான் நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21743dfb-a2d4-4b79-ad8c-57d387be45fe/26-6a7d7a2c8f4e4.webp' /></p><p>

வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்கள் நிறைவடைந்த பின்னரும்
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p>

இந்த நிகழ்வில் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கைக்கான
பிரதிநிதிகள், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி, வட மாகாண
விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்,
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், யாழ்ப்பாண
பல்கலைக்கழக கல்வியாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பலர்
கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T08:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மணல் அகழ்வினால் வயல் நிலங்கள் சேதமாக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farmers-complain-illegal-sand-mining-1786605218"></link>
            <id>https://tamilwin.com/article/farmers-complain-illegal-sand-mining-1786605218</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும்
வயல் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும்
வயல் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
மேலும் மணல் அகழ்விற்காக உழவு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சட்டவிரோத மணல் அகழ்வு</h2><p>

குறித்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள்
தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59f55b79-1ce0-43d6-80f1-3d32bb99b85a/26-6a7d6fa691c6e.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் கணவன் - இலங்கையில் இளம் மனைவியின் மோசமான செயலால் ஏற்பட்டுள்ள விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-threatening-1786596707"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-threatening-1786596707</id>
            <summary type="text">இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கம்பஹாவின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
திக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, இளம் மனைவி இணைய விளையாட்டுகள் ஊடாக அறிமுகமான சந்தேகநபருடன் முறையற்ற காதலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
இளம் மனைவியின் செயல்</b></h2><p>அத்துடன், அந்த இளைஞருடன் அவர் பயணங்கள் மேற்கொண்ட போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a287d2f-7a81-44a6-a467-086dc99c19d1/26-6a7d50496edd5.webp' /></p><p>வெளிநாட்டில் வசிக்கும் தனது கணவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்ற தகவலைத் தொடர்ந்து, குறித்த பெண் காதலை கைவிட்டுள்ளார். </p><p>

அதனால் கோபமடைந்த சந்தேகநபர் இவ்வாறு பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு புகைப்படங்களை சமூக வலைத்தளத்திற்கு அனுப்புவதற்கு முன்னர், தன்னுடன் மீண்டும் இணையாவிட்டால் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
</p><h3><b>
பழி வாங்கும் நடவடிக்கை</b></h3><p>அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை விடுத்ததுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவரை அழைத்துச்சென்றுள்ளார்.
</p><p>
இளைஞனின் அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் குறித்த பெண் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0a1c6a3-7325-45db-9cd0-432c40e34099/26-6a7d504a21607.webp' /></p><p>இதன் காரணமாக பழி வாங்கும் நோக்கில் சந்தேகநபர் பெண்ணின் புகைப்படத்துடன் “<b>காதலி காணாமல்போயுள்ளார் கண்டுபிடித்து தாருங்கள்</b>” என சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், கணவருக்கும் வட்ஸ்அப் குறுஞ்செய்திகள் ஊடாக மனைவியின் தகாத புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
தனது தகாத புகைப்படங்கள் சமூக வலைத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் திக்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்தார். </p><p>

அதற்கமைய பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், சந்தேகநபரை முன்தினம் கைது செய்துள்ளனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UOFfru3Sle8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-13T07:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு 10 இயந்திர படகுகள் வழங்கி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-boats-donated-to-trincomalee-fishermen-1786601451"></link>
            <id>https://tamilwin.com/article/10-boats-donated-to-trincomalee-fishermen-1786601451</id>
            <summary type="text">டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த,
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு 10 இயந்திர கடற்றொழில் படகுகள் வழங்கி
வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த,
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு 10 இயந்திர கடற்றொழில் படகுகள் வழங்கி
வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதற்கான நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளர் W.G.M
ஹேமந்தகுமார தலைமையில் இன்று(13)&nbsp; நடைபெற்றுள்ளது.</p><h2>10 இயந்திர படகுகள்</h2><p>
</p><p>
இதனை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், வெளி விவகார வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண்
ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர்
வழங்கி வைத்துள்ளனர்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58dabcce-3f42-4289-b264-5a378e04c645/26-6a7d61e7b2ba4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T07:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-notice-to-tax-payers-1786602417"></link>
            <id>https://tamilwin.com/article/special-notice-to-tax-payers-1786602417</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதற்கமைய, வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதமாக செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><h2>ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகள்</h2><p>காசோலைகள், வங்கி வரைவோலைகள் அல்லது கட்டளைப் பத்திரங்கள் மூலம் செய்யப்படும் கட்டணங்கள் உரிய திகதிக்குப் பின்னர் பெறப்பட்டால், அவை தாமதமானதாகவே கருதப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab465bd-2b60-40fa-ba9d-378370117fd3/26-6a7d6bc50873a.webp' /></p><p>மேலும், ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகள் ஆகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இணையவழியில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், முற்பண வரியை (Withholding Tax) ஓகஸ்ட் 15, 2026 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் வரி செலுத்துவோரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

</p><p>ஜூலை மாதத்திற்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை ஆகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் அத்துறை அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T07:01:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமன் தாயார் கொலை விவகாரம் : சிக்கிய மோட்டார் சைக்கிள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/backhoe-saman-s-mother-motorcycle-used-in-murder-1786601707"></link>
            <id>https://tamilwin.com/article/backhoe-saman-s-mother-motorcycle-used-in-murder-1786601707</id>
            <summary type="text">பாதாள உலக தலைவர் &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள், உருபோக்கா பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக தலைவர் 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள், உருபோக்கா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

உருபோக்கா - மாத்தறை வீதியில் உள்ள தம்பஹல பொல்வத்த பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில், ஒரு சிறு பாலத்திற்கு அருகே அந்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><h2>பொலிஸ் விசாரணைகள் முன்னெடுப்பு</h2><p>
 

கிடைத்த தகவலின் அடிப்படையில் உருபோக்கா பொலிஸாரினால் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebbc9684-c83d-4ed8-a177-4d89b19be369/26-6a7d69ae0b3e0.webp' /></p><p>

 

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிதியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று (12) துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.</p><p>

 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயாரான பாதிக்கப்பட்டவர், மித்தெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
</p><p>
 

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைத்துப்பாக்கி வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதேவேளையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rY6s6kUfodg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் நீர் இன்றி கருகிய 25 ஏக்கர் நெற்பயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/25-acres-of-rice-crops-wither-amid-water-shortage-1786600260"></link>
            <id>https://tamilwin.com/article/25-acres-of-rice-crops-wither-amid-water-shortage-1786600260</id>
            <summary type="text">அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய, ஹம்மிலாவ பகுதியில் நிலவும்
கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான வயல்
நிலங்கள் நீர் இன்றி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய, ஹம்மிலாவ பகுதியில் நிலவும்
கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான வயல்
நிலங்கள் நீர் இன்றி முற்றாகக் கருகி அழிந்துள்ளதாக விவசாயிகள் பெரும் கவலை
தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த
நெற்பயிர்களே இவ்வாறு அழிந்து போயுள்ளதாக
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.</p><h2>நீர் இன்றி கருகிய 25 ஏக்கர் நெற்பயிர்கள்</h2><p>

இது குறித்து விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில், "இம்முறை நெற்செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு சுமார் 100,000 ரூபாய் வரை செலவு
செய்து மிகவும் அர்ப்பணிப்புடன் பயிர்களைப் பராமரித்து வந்தோம். </p><p>

உரம், விதை
நெல், உழவுப் பணிகள் எனப் பெரும் தொகையை முதலீடு செய்திருந்தோம். இன்னும் ஒரு
மாதத்தில் அறுவடையை எதிர்பார்த்திருந்த வேளையிலேயே, இந்த நீர் பற்றாக்குறை
எங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.&nbsp;ஒட்டுமொத்தப் பயிர்களும் நீர் இன்றி இற்றுப் போய்விட்டன" என குறிப்பிட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d41d9fd7-484b-422f-a7fb-8b1d9458af57/26-6a7d5edc399dd.webp' /></p><p>விவசாயத்தை மட்டுமே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்ட இந்தப் பகுதி மக்கள்,
அறுவடைக்கு கைக்கெட்டிய பயிர் வாய்க்கெட்டாமல் போனதால் தங்களது
வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.</p><p>

எனவே, பாதிக்கப்பட்ட தமக்கு உரிய நட்டஈட்டைப் பெற்றுத்தர அதிகாரிகள் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தப் பகுதிக்கான விவசாய நீர் விநியோகத்தை
முறையாக மேலாண்மை செய்ய உரிய தரப்பினர் முன்வர வேண்டும் எனவும் ஹம்மிலாவ பகுதி
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T06:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செல்வோருக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraudulent-job-offer-in-israel-1786602274"></link>
            <id>https://tamilwin.com/article/fraudulent-job-offer-in-israel-1786602274</id>
            <summary type="text">வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர்&amp;nbsp;இன்று (13.08.2026) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர்&nbsp;இன்று (13.08.2026) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;</p><p>இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைதாகியிருந்தனர்.&nbsp;</p><h2>கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்</h2><p>
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 7 கடவுச்சீட்டுகள், இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e211cfe7-d773-42c4-a71d-8a3485938f78/26-6a7d6737be263.webp' /></p><p>
இஸ்ரேலில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வந்து, போலி ஒப்பந்தங்களை தயாரித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T06:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். ஆனைக்கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள் காட்சிப்படுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/display-of-archaeological-artifacts-anaikottai-1786603232"></link>
            <id>https://tamilwin.com/article/display-of-archaeological-artifacts-anaikottai-1786603232</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் அண்மையில் தொல்லியல்
அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள்
இன்றைய தினம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் அண்மையில் தொல்லியல்
அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்கள்
இன்றைய தினம் (13) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, நாளை தினமும் இந்த காட்சிப்படுத்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஈழத்தின் பண்டைய வரலாறு</h2><p>
இந்த கண்காட்சியில் எமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய
பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும்
காட்சிப்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46aeb4d3-7c90-4ba5-b345-967c0c2fd98b/26-6a7d66e2527a3.webp' /></p><p>
இக்கண்காட்சி ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின்
தொன்மை சிறப்பையும் நேரில் கண்டுகொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளது.</p><p>இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அதனை தொடர்ந்து மங்கல
விளக்கேற்றல், இறைவணக்கம் இணைத்தல் என்பன இடம்பெற்றிருந்தன. </p><p>இதன்பின்னர் தொல்லியல்
ஆய்வுத் தளமானது உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. அதனை
தொடர்ந்து விருந்தினர்களது உரைகள், பேராசிரியர்கள் - விரிவுரையாளர்களது உரைகள்
என்பன இடம்பெற்றன.</p><p>இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதகுருக்கள், வாழ்நாள்
பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா, தொல்லியல் பேராசிரியர் ராஜ்சேமதேவா, யாழ்.
பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அனித்தா சசிதரன், சண்டிலிப்பாய் பிரதேச
செயலர் பிரபாகரமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், களனி பல்கலைக்கழக
மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டு தொல்லியல்
சின்னங்களை பார்வையிட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46aeb4d3-7c90-4ba5-b345-967c0c2fd98b/26-6a7d66e2527a3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c29821b1-ffd6-4097-8bb9-db6ef041e8f4/26-6a7d66e30f665.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283302e5-2d74-4695-a65c-1afa47955309/26-6a7d66e3bd99f.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b7be2a6-1b75-495b-a066-df97d02317e5/26-6a7d66e47640c.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T06:40:42+00:00</updated>
        </entry>
    </feed>
