<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-16T04:19:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிஷாத்துக்கும் சஹ்ரானுக்கும் நெருங்கிய தொடர்பு - நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-and-sahran-had-close-relationship-1789526024"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-and-sahran-had-close-relationship-1789526024</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினருக்கு உள்ள தொடர்புகள் குறித்து மேலும் 2 சிறப்புக் சாட்சியங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினருக்கு உள்ள தொடர்புகள் குறித்து மேலும் 2 சிறப்புக் சாட்சியங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p>
அவற்றில் ஒரு சாட்சியம், அப்போதைய இராணுவ உளவுத்துறையின் தகவல் வழங்குநர் ஒருவரால் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் பாதுகாப்பின் கீழ் பல சந்தர்ப்பங்களில் சஹ்ரான் ஹாசீம் மன்னார் கடல் வழியாக இந்தியா சென்றிருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.</p><p>
</p><h2><b>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்</b></h2><p>அரச சேவையில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவிற்கு வெளிநாட்டு பயணத் தடையையும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கோரியிருந்தார். அந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b7c756-4431-4a77-8d92-18c5967fbe32/26-6aaa16758523f.webp' /></p><p>
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்த வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
சந்தேகநபரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, விசாரணைகளின் முன்னேற்றம் எனக் கூறி சமர்ப்பிக்கப்படும் பி அறிக்கைகள் பொய்யான கூற்றுகள் என தெரிவித்தார்.
</p><p>
இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-09-16T04:09:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் நாமல்! பொலிஸார் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245"></link>
            <id>https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.</p><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p>நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன அவர்களால் கொழும்பு காவல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்ட உத்தரவின்படி முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.</p><h2>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்&nbsp;</h2><p>
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/054778a2-ae82-4d7a-afef-871a00c2411c/26-6aaa09826bcb0.webp' /></p><p>இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>நீதிமன்றத்திற்கு அறிக்கை </h2><p>

இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.</p><p>

இதற்கமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்! விலை திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-fuel-price-change-announcement-1789525963"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-fuel-price-change-announcement-1789525963</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை என&amp;nbsp;அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை என&nbsp;அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(15) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,&nbsp;</p><h2>எரிபொருள் விலை திருத்தம் </h2><p>இதுவரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d934443-bf28-4771-9435-87e135c57b18/26-6aaa018ca0b03.webp' /></p><p>எனவே எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம்.</p><p>இதற்கு முன்னர் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களே தற்போது நாட்டை வந்தடைகின்றன. எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தற்போதுள்ள விலையில் எரிபொருட்களை விநியோகிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளன.</p><h2>உலக சந்தை நிலவரம்</h2><p> கடந்த 3 மாதங்களாக எரிபொருள் விலையில் அரசாங்கம், நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கியிருக்கின்றது.


இதற்காக 57 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. </p><p>எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T02:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறிய மகிந்தவின் மனைவி ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaks-left-the-country-1789524390"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaks-left-the-country-1789524390</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இன்று அதிகாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p> 

இன்று அதிகாலை அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

கடந்த சில தினங்களாக உடல்நல குறைவாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். </p><p> </p><h2><b>

நிதிக் குற்றங்கள்</b></h2><p>இந்நிலையில் உறவினர் ஒருவருடன் ஷிரந்தி ராஜபக்ச சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddcfc96e-d28d-404a-ada0-c0c9c9056364/26-6aaa034862488.webp' /></p><p>குறித்த இருவரும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் SQ469 என்ற விமானத்தில், அதிகாலை சுமார் 1.10 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டனர்.</p><p>எதிர்வரும்&nbsp;நாட்களில்
 நிதிக்குற்றங்கள் தொடர்பான விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T02:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்ம நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சலே - கண்டுபிடிக்க முடியாமல் திணறும் வைத்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/salley-spent-a-hundred-days-in-the-hospital-1789523907"></link>
            <id>https://tamilwin.com/article/salley-spent-a-hundred-days-in-the-hospital-1789523907</id>
            <summary type="text">நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
</p><p>
அவரது உடல்நிலை தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைக்குமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடந்த 2 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உத்தரவிடப்பட்டிருந்தது.
</p><p>
எனினும், நேற்றும் பணிப்பாளர் நீதிமன்றத்தில் சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை.

மேலும் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளானாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வைத்திய குழு ஒன்றையும் நீதிமன்றம் நியமித்திருந்தது.</p><p>
</p><h2><b>
நோய் கண்டறிதல்&nbsp; அறிக்கை</b></h2><p>எனினும், இந்த வைத்திய குழுவிற்கு அறிக்கையை தயாரிப்பதற்கு தேவையான நோய் கண்டறிதல் உள்ளிட்ட அறிக்கைகளை வைத்தியசாலை பணிப்பாளர் அனுப்பி வைக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் தெரியவந்தது.
</p><p>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைக்குத் தொடர்புடைய வகையில் தடுத்து வைப்பு உத்தரவின் கீழ் இருக்கும் சந்தேகநபரான சுரேஷ் சலே, விசாரணைகளை முழுமையாக முடக்கிவிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஓய்வெடுத்து வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-09-16T02:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானத்துடன் செயற்படவும்..! வெள்ளப்பெருக்கு நிலைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-regarding-flood-situation-1789523233"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-regarding-flood-situation-1789523233</id>
            <summary type="text">நாட்டில் உள்ள பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகமாக இருந்தாலும், வெள்ளப்பெருக்கு நிலையை எட்டும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் உள்ள பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகமாக இருந்தாலும், வெள்ளப்பெருக்கு நிலையை எட்டும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய ஆற்றுப்படுகைகளில் குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><h2>கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய மழைவீழ்ச்சி</h2><p>

கீழ் ஜின் கங்கை பகுதியில், பத்தேகம அருகே பல இடங்களில் சுமார் 125 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேல் களு கங்கை படுகையில் உள்ள இரத்தினபுர பகுதியில் சுமார் 75 மில்லிமீட்டர் மழையும், கீழ் படுகையில் உள்ள கெஸ்பேவா அருகே உள்ள பகுதிகளில் சுமார் 100 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc863889-8fb7-427c-9a8f-e3886428d054/26-6aa9fd0445127.webp' /></p><p>

கொழும்பு அருகே உள்ள பகுதிகளிலும் சுமார் 100 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மகாவலி ஆற்றின் மேல் படுகைப் பகுதிகளைச் சேர்ந்த பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் 50 முதல் 75 மி.மீ வரையிலும், அம்பாறையில் உள்ள கல் ஓயா படுகைக்கு அருகிலுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 100 மி.மீ வரையிலும் மழை பதிவாகியுள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
</p><p>
மட்டிக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 75 மி.மீ மழையும், அனுராதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் கிட்டத்தட்ட 40 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இருப்பினும், தற்போது பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயரவில்லை என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் கூறியுள்ளார்.</p><p>இருப்பினும், குறித்த பகுதிகளில் மேலும் குறிப்பிடத்தக்க மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T02:20:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சான்றிதழ் இணையத்தள சேவை தற்காலிகமாக முடக்கம்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/olice-certificate-website-service-suspended-1789523832"></link>
            <id>https://tamilwin.com/article/olice-certificate-website-service-suspended-1789523832</id>
            <summary type="text">பொலிஸ் சான்றிதழ் (Police Clearance Certificate) வழங்கும் இணையத்தள முறைமை தற்செயலாகப் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் சான்றிதழ் (Police Clearance Certificate) வழங்கும் இணையத்தள முறைமை தற்செயலாகப் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, இணையத்தளம் மூலம் சான்றிதழ்களை பெறுவதில் தாமதம் நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>எனவே பொதுமக்கள் தமக்குரிய சான்றிதழ்களைத் தமது பிரதேச பொலிஸ் நிலையத்தில் (Police Station) நேரில் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கோர விபத்து - இரண்டு பெண்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-women-killed-after-being-struck-by-train-1789520893"></link>
            <id>https://tamilwin.com/article/2-women-killed-after-being-struck-by-train-1789520893</id>
            <summary type="text">களுத்துறை புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலையில் தொடரூந்தில் மோதுண்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

அனுராதபுரத்திற்கு செல்லும் புகையிரதத்தில் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலையில் தொடரூந்தில் மோதுண்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

அனுராதபுரத்திற்கு செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்காக சென்ற பெண்ணும் அவரது மருமகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதிகாலை 4.30 மணியளவில் புகையிரதப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதியுள்ளனர்.</p><p>
</p><h2><b>
இரண்டு பெண்கள் பலி</b></h2><p>இவர்கள் புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் நடந்து சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e689ba6-8f24-412c-9b63-52838e4fe0c9/26-6aa9f02a35be6.webp' /></p><p>அவரது மகள் மற்றும் மற்றொரு பெண் உறவினர் ஆகிய மூவரும் அனுராதபுரத்தில் ஆன்மீக நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக புகையிரத நிலையத்திற்கு சென்றுள்ளனர். </p><p>

இந்த கோர விபத்தில் பெண்ணும் அவரது மருமகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>



உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களும் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. </p><p>

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T01:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப் பொருள் குறித்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை வேகமாக வழங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/making-fast-action-for-drug-test-1789521641"></link>
            <id>https://tamilwin.com/article/making-fast-action-for-drug-test-1789521641</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் தொடர்பிலான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை 3 மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் தொடர்பிலான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை 3 மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
பத்தரமுல்லையில் உள்ள அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதுவரை போதைப்பொருளின் நிகர எடை 10 கிராமிற்கு மேல் இருந்தால் பிணை பெறுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87488bc8-2343-4652-ba66-4717d13f5562/26-6aa9eeeb3472d.webp' /></p><p>
</p><p>உத்தேச புதிய சட்டத் திருத்தத்தின்படி, கைது செய்யப்படும் போது போதைப்பொருளின் நிகர எடை 100 கிராமிற்கு குறைவாக இருந்தால் மேல் நீதிமன்றத்திலேயே பிணை பெற வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
திணைக்களத்தில் நிலவிய 118 இரசாயனப் பகுப்பாய்வாளர் வெற்றிடங்களில் சுமார் 70 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை தீவிரமாகப் பணியாற்றி அறிக்கைகளை விரைவுபடுத்துவதால், ஆய்வக அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் கணிசமாகக் குறையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
</p><p>இதேவேளை, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் டி.என்.ஏ பரிசோதனைகளின் தரத்தை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய ஆய்வக உபகரணங்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி அஸுசா குபோட்டாவினால் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் காமிணி பெரேராவிடம் கையளிக்கப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T01:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 24இல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் - வருண ராஜபக்ச அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-protest-to-besiege-parliament-september-24-1789519995"></link>
            <id>https://tamilwin.com/article/public-protest-to-besiege-parliament-september-24-1789519995</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம்
திகதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் மாபெரும் மக்கள் போராட்டம்
நடத்தப்படவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம்
திகதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் மாபெரும் மக்கள் போராட்டம்
நடத்தப்படவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதி அமைப்பாளர்
வருண ராஜபக்ச அறிவித்துள்ளார்.
</p><p>
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று(15.09.2026) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>மக்கள் திசைகாட்டியை நம்பியதற்கு</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் ஜனநாயகத்தை ஒழித்து, சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை
அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தத்துக்கு அரசாங்கத்த
உள்ளிருந்தே பல தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e4f982-2820-4ec1-8a06-f406574e4cba/26-6aa9edcb0f387.webp' /></p><p> ஜனாதிபதியை
ஆட்சிக்குக் கொண்டுவரப் பங்களிப்பு வழங்கிய லால் விஜேநாயக்க மற்றும் உபுல்
குமாரப்பெரும ஆகியோரும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.</p><p>பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து இதுவரை தனது நிலைப்பாட்டை
வெளிப்படுத்தாமல் மௌனம் காக்கின்றார்.</p><p> மக்கள் திசைகாட்டியை நம்பியதற்கு ஹரிணி
அமரசூரிய உள்ளிட்ட குழுவினரே காரணம் என்பதால், இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக
அவரால் வாக்களிக்க முடியாது. அவர் தனது தெளிவான நிலைப்பாட்டை நாட்டுக்கு
வெளிப்படுத்த வேண்டும்.</p><h2>மாற்றத்தைக் கோரியவர்களுக்கும் அழைப்பு</h2><p>
</p><p>
இந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்துக்குள் தோற்கடிக்கும் பொறுப்பும் வல்லமையும்
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் திசைகாட்டி குழுவினருக்கே உள்ளது. </p><p>அதனை
நாடாளுமன்றத்துக்கு வெளியே தோற்கடிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சிகள்
ஏற்றுக்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b11203-fd9c-473d-b9f3-ebb5d9af61e9/26-6aa9edcbba7eb.webp' /></p><p>

22ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும்
செப்டெம்பர் 24 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஜனநாயக மக்கள் போராட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளது. </p><p>அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு அருகில் திரண்டு
போராட்டத்தில் ஈடுபடுமாறு அனைத்து மக்களுக்கும், குறிப்பாக காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலம் முறைமை
மாற்றத்தைக் கோரியவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கோடி ரூபா கடத்தலை காட்டிக்கொடுத்த நபரை கொலை செய்ய முயற்சி - சிக்கிய முக்கிய புள்ளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226"></link>
            <id>https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226</id>
            <summary type="text">
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதானி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
செல்லக்கதிர்காமம் பகுதியில் வைத்து வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி 325 கிலோகிராம் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த நபரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்</b></h2><p>இதற்காக அங்கொடை பிரியங்கர மற்றும் ரூபன் ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் 1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9f5234-11e3-44de-85b7-b7265395a1ef/26-6aa950c131178.webp' /></p><p>கொலை ஒப்பந்தத்தின் பிரதான சந்தேகநபரான மதுக்க சாமர என்ற மதுவாவிடம் இருந்து 2 கத்திகள், 8 கிராம் ஹெரோயின் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் போலியான இலக்கத் தகட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பிரதான சந்தேகநபருடன் இங்கிரிய பிரதேசத்தில் வசித்து வந்த நலின் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேக நபர் கைது செய்யப்படும்போது தனது மகனுக்கு எழுதிய உயிரை மாய்ப்புக்கான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்தி தமது உயிரைப் பணயம் வைத்து இந்தக் கொலையை செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><h3><b>

பல கொலை குற்றச்சாட்டுக்கள்</b></h3><p>பிரதான சந்தேகநபரான மதுவாவின் மைத்துனரான சுசாந்த என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த நபருக்கும் மதுவாவுக்கும் எதிராக வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ce1d0-9da5-4f2f-9839-8d9747d7e295/26-6aa950c1e2283.webp' /></p><p>சந்தேகநபர்கள் ஜீப் வாகனத்தில் கிரிந்த பகுதியில் அமைந்துள்ள தகவல் வழங்கியவரின் வீட்டிற்கு சென்று, அவரை கடத்திச் சென்று கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்து வீதியில் வீசிவிட்டு, குறித்த ஜீப் வாகனத்திற்குத் தீயிட்டு அழிக்கவும் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலைத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குற்றச் செயலுக்காக பயன்படுத்தவிருந்த ஜீப் வாகனம் கடுவலை, ஹேவகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை சூழ்ந்துள்ள காற்றழுத்த தாழ்வு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/low-atmospheric-disturbance-continue-srilanka-1789518311"></link>
            <id>https://tamilwin.com/article/low-atmospheric-disturbance-continue-srilanka-1789518311</id>
            <summary type="text">இலங்கையின் சூழவுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால், இன்று சில பகுதிகளில் 75 மிமீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சூழவுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால், இன்று சில பகுதிகளில் 75 மிமீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>தற்போது நிலவும் வானிலையின்படி மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மேகமூட்டமான வானம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</h2><p>
 

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு, நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a348c475-36ae-42cd-8d20-e70d5fe8603e/26-6aa9e6d14ebe0.webp' /></p><p>
 

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலுக்கு எதிராக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T00:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருக்கள்மடம் அகழ்வாய்வுப் பணிகள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurukkalmadam-excavation-work-scheduled-1789516511"></link>
            <id>https://tamilwin.com/article/kurukkalmadam-excavation-work-scheduled-1789516511</id>
            <summary type="text">குருக்கள்மடம் பகுதியில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம் பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண்
படிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருக்கள்மடம் பகுதியில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம் பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண்
படிவ மாதிரி பரிசோதனைகளுக்காக அகழ்வாய்வு நடவடிக்கை மேற்கொள்ளவிருந்த நிலையில் மற்றுமொரு திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>நேற்று
தொடக்கம் ஒரு வாரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஆய்வினை மேற்கொள்ளும் நிபுனர்களின்
வேண்டுகோளுக்கமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 06ம்
திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.</p><h2>பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில்&nbsp;</h2><p>
</p><p>
முன்னமே கடந்த பங்குனி 30ஆம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு எத்தகு தடயங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அப்பணிகள்
இடைநிறுத்தப்பட்டிருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd446a0-30ae-457c-877f-966b29b6d295/26-6aa9deb893e87.webp' /></p><p>
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் குறித்த பகுதில் மேலும்
சில இடங்களைச் சுட்டிக்காடி தங்கள் சொந்த செலவில் ஸ்கேன் பரிசோதனை
மேற்கொள்வதற்காக அனுமதி கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற
உத்தரவின் அடிப்படையில் குறித்த பகுதி ஸ்கேன் செய்யப்பட்டதுடன். குறித்த
அறிக்கையின் பிரகாரம் நேற்றைய தினம் தொடக்கம் ஒரு வாரத்திற்கு அகழ்வாய்வு
மேற்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதனடிப்படையில் நேற்றைய தினம் அகழ்வாய்வினை மேற்கொள்ளும் தடயவியல் நிபுனர்களின்
கோரிக்கைக்கு அமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகளை எதிர்வரும் ஐப்பசி மாதம்
06ம் திகதி தொடக்கம் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் மீண்டும்
உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T00:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்..! நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ready-to-accept-the-high-court-verdict-1789509079"></link>
            <id>https://tamilwin.com/article/ready-to-accept-the-high-court-verdict-1789509079</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் பொது வெளியில் கூறப்படும்
கருத்துக்களுக்கு எம்மால் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது.
உயர்நீதிமன்றத்தால் என்ன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் பொது வெளியில் கூறப்படும்
கருத்துக்களுக்கு எம்மால் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது.
உயர்நீதிமன்றத்தால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு
நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(15.09.2026) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத்
தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
</p><h2>மூன்றில் இரண்டு பெரும்பான்மை</h2><p>
"அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழு திருத்தச் சட்ட
மூலம் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் எம்மால் எந்த
நடவடிக்கையும் எடுக்க முடியாது. </p><p>இவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பவர்கள்
எவரானாலும் அவர்கள் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று மனுத் தாக்கல் செய்ய
முடியும். அவற்றை ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1387ca67-e8eb-408b-a114-1c757ba2b1e3/26-6aa9d569a95be.webp' /></p><p>நாட்டில் நடைமுறையிலுள்ள அரசமைப்புக்கமைய சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்
போது, எந்தளவு பெரும்பான்மை வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.
</p><p>அந்தவகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமானதா அல்லது அதற்கும் மேல்
சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா என்பதை அரசால் தீர்மானிக்க முடியாது.
</p><h2>நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பின்னர்</h2><p>
உயர்நீதிமன்றத்தால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு
நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/105a5829-203a-4653-a953-39bd34af6cd3/26-6aa9d56a665db.webp' /></p><p>22ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்
தாக்கல் செய்திருப்பவர்களும் நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையின்
அடிப்படையிலேயே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

இது குறித்த தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு
அறிவிக்கப்பட்ட பின்னர், 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதம்
நடத்தப்படவுள்ளது.</p><p> எனவே, பொது வெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு எம்மால்
பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T23:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு: இன்னும் 14 நாட்கள் மட்டுமே..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-to-taxpayers-1789502921"></link>
            <id>https://tamilwin.com/article/notice-to-taxpayers-1789502921</id>
            <summary type="text">025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதித் தொகையைச் செலுத்துவதற்கான இறுதித் திகதியை உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதித் தொகையைச் செலுத்துவதற்கான இறுதித் திகதியை உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.</p><p>

இதன்படி, நிலுவையில் உள்ள வரித்தொகையை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்குமாறு வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உரிய காலக்கெடுவுக்கு முன்னர் நிலுவைக் கட்டணங்களைச் செலுத்தி முடிக்குமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
</p><h2>
வரிச் செலுத்துவோருக்கு..</h2><p>
இந்த அறிவிப்பு பெருநிறுவன வருமான வரி (CIT), தனிநபர் வருமான வரி (IIT) மற்றும் கூட்டாண்மை வருமான வரி (PIT) ஆகியவற்றுக்குப் பொருந்தும்.

இணையவழி மற்றும் வங்கி ஊடாக வரி செலுத்தும் வசதி
வரி செலுத்துவோர் தங்களது வரிகளை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இணையவழி வரி செலுத்தும் தளத்தின் ஊடாகச் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12079cd2-886d-460b-bb4c-e1abc3fdbd8f/26-6aa9c55c4c15e.webp' /></p><p>
</p><p>
மேலும், CIT, IIT மற்றும் PIT ஆகிய வரிக் கட்டணங்களை இலங்கை வங்கியின் (BOC) எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்கூட்டியே அச்சிடப்பட்ட பணம் செலுத்தும் சீட்டைப் பயன்படுத்தாமல் வங்கியில் பணம் செலுத்தும் வரி செலுத்துவோர், தங்களது ஆவண அடையாள எண்ணை (DIN) பணம் செலுத்தும் சீட்டில் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், செலுத்தப்படும் பணம் சரியான முறையில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
தாமதமாகச் செலுத்தினால் வட்டி மற்றும் அபராதம்</h2><p>


வரிகளைச் செலுத்தத் தவறினாலோ அல்லது தாமதமாகச் செலுத்தினாலோ வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e5cddf1-6ab4-496d-bbab-f63cf39381e7/26-6aa9c55d329dd.webp' /></p><p>

அத்துடன், தாமதமாகச் செலுத்துவதற்காக விதிக்கப்படும் வட்டியைத் தள்ளுபடி செய்யவோ அல்லது குறைக்கவோ முடியாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், வங்கி வரைவோலை அல்லது பண ஆணை உரிய திகதிக்குப் பின்னர் பெறப்பட்டால், அந்தக் கட்டணம் தாமதமாகச் செலுத்தப்பட்டதாகக் கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வரி செலுத்துதல் தொடர்பில் உதவி தேவைப்படும் வரி செலுத்துவோர் 1944 என்ற உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T22:24:59+00:00</updated>
        </entry>
    </feed>
