<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-22T13:20:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நடைப்பெறுகின்ற குற்றச்செயல்களில் அரசுக்கும் தொடர்புள்ளது! சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-involved-ongoing-crimes-alleges-premachandran-1784719528"></link>
            <id>https://tamilwin.com/article/govt-involved-ongoing-crimes-alleges-premachandran-1784719528</id>
            <summary type="text">நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் செம்மணிப் படுகொலை ஆகிய விடயங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில் அதனைத்
திசை திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் செம்மணிப் படுகொலை ஆகிய விடயங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில் அதனைத்
திசை திருப்புவதற்காகவே புத்தர் கோயிலைக் கட்டுகிறார்களோ என சந்தேகம் எழுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நம்பிக்கையில்லாத் தீர்மானம்</h2><p>
</p><p>
அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்(20.07.2026) நீதி
அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பேரவைத்தலைவரிடம்
கையளிக்கப்பட்டது. </p><p>அது ஒருபக்கம் இருக்க, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய தூதுவர்கள் இன்று(22.07.2026) செம்மணிப் புதைகுழியை பார்வையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea092b9-2018-4153-bd05-9081d38471f8/26-6a60aef79c1bb.webp' /></p><p>
</p><p>
அங்கு 450ற்கும் மேற்பட்ட
உடலங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் திருகோணமலை - கன்னியா, வெந்நீரூற்றில் ஒரு
புத்தர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>

இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது உண்மை வெளிப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதனை மூடிமறைப்பதற்கான ஒரு செயலை செய்வதாகவே தோன்றுகிறது.
</p><p>
ஏற்கனவே
கன்னியா விடயத்தைப் பொறுத்தவரையில், 
அங்கு கட்டுமானங்கள் எதுவும் செய்யக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><h2>புத்தர் கோயில்&nbsp;</h2><p>
</p><p>அங்கு ஒரு புத்தர் கோயில் கட்டுவதற்காக நேற்றைய தினம்(21) அடிக்கல் நாட்டும்
நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p>இதனை பார்க்கின்ற பொழுது ஏற்கனவே
இருந்த நீதிமன்ற ஆணைகளுக்கு அப்பாற்பட்டுச் சென்று, இராணுவமோ அல்லது புத்த
பிக்குகளோ இதனை தங்களுடைய விருப்பத்திற்குச் செய்கிறார்களா, இல்லை அரசாங்கத்தினுடைய
வழிகாட்டுதலின்படி இவை நடைபெறுகிறதா என்றொரு கேள்வி
எழுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbd3195c-8ed9-4aaf-881b-33793666897f/26-6a60aef84bff0.webp' /></p><p>
</p><p>
இவ்வளவு நாளும் இல்லாமல் திடீரென்று நேற்றைய தினம்(21) அதைக் கட்ட
வேண்டிய ஒரு தேவை ஏன் ஏற்பட்டது? 

அத்துடன் செம்மணிப் புதைகுழி தொடர்பாகவும் ஒரு பன்னாட்டு நீதி
கோரப்படுகிறது. </p><p>அரசாங்கம் நிச்சயமாக அதற்கு ஒரு தீர்வைக் கொண்டுவர மாட்டாது.
ஏனென்றால் இந்த அரசாங்கத்திற்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:16:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503</id>
            <summary type="text">வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
</p><p>
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரியளவிலான முறைகேடுகள்</h2><p>

குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519db4b7-f595-4db2-8995-cbf8183fe716/26-6a6051d1a9cbc.webp' /></p><p>
</p><p>
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இந்ருவன்திலக ஜயகொடிதத் திட்டத்தின் கீழ், 640 வாகனங்களை இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புரிமைகள் வழங்கப்பட்டதாக, பிரதம கணக்காய்வாளரின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>இந்த செயல்முறை தொடர்பான சரியான தகவல்கள் பிரதம கணக்காய்வாளருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

வெளிநாடு செல்லாத நான்கு நபர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, விண்ணப்பத்தில் தொழில் குறிப்பிடப்படாத 60 நபர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, சிலருக்கு இரண்டு வீதம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது மற்றும் 4 மாதங்கள் போன்ற மிக குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டது போன்ற பல ஊழல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
</p><p>
எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி சொகுசு வாகனங்களுக்கான 6 மில்லியனிலிருந்து 12 மில்லியன் ரூபாவாக வரி வரம்பு உயர்த்தப்பட்டதால், அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி குற்றம்சாட்டிள்ளார்.</p><h2>சொகுசு வாகனங்கள் இறக்குமதி</h2><p>இது இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03021692-38f3-49f4-a5c0-5f9b08956d59/26-6a6051d273187.webp' /></p><p>
இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
CAB 7373 மற்றும் CAB 7171 ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்கள் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவ்வாறாக பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mp0jpPJOagE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:12:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 25 நாட்கள் கடலில் மிதந்த புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு: 140க்கும் மேற்பட்டோர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-mauritania-140-dead-refugee-boat-sinks-1784724826"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-mauritania-140-dead-refugee-boat-sinks-1784724826</id>
            <summary type="text">ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி அகதிகள் மற்றும்
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் தத்தளித்ததில், 140க்கும்
மேற்பட்டோர் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி அகதிகள் மற்றும்
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் தத்தளித்ததில், 140க்கும்
மேற்பட்டோர் உயிரிழந்தும் மாயமாகியும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள்
முகமை தெரிவித்துள்ளது.
</p><p>
தி கம்பியாவின் பாஃபுலோட்டோ பகுதியிலிருந்து புறப்பட்ட இந்த நடுக்கடல் படகு,
எரிபொருள் தீர்ந்ததால் சுமார் 25 நாட்கள் கடலிலேயே மிதந்து தத்தளித்துள்ளது.</p><p></p><h2>&nbsp;கடற்பகுதியில் சோகம்</h2><p>
</p><p>
ஜூலை 18 அன்று மவுரித்தேனியாவின் நௌதிபூ துறைமுகத்தை வந்தடைந்த போது, அதில் 38
பேர் மட்டுமே உயிருடனும் பலரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

உயிர்தப்பியவர்களில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து
தவிக்கும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.

அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60d0f59-0717-4169-b72a-c7da61b928d8/26-6a60c1a340bd1.webp' /></p><p>
</p><p>உயிரிழந்தவர்கள் அனைவரும் சஹாரா ஆபிரிக்கப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மவுரித்தேனியக் கடலோரக் காவல் படையின் தகவலின்படி, 160 பயணிகளுடன் புறப்பட்ட
இந்த படகில் 122 பேரைக் காணவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
ஜூலை 14 முதல் 18 வரை மவுரித்தேனியா கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மூன்று
வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகளில் 387 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும்,
இந்த பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>140க்கும் மேற்பட்டோர் பலி</h2><p>
</p><p>
ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கேனரி தீவுகளை அடையும் இந்த
அட்லாண்டிக் கடல் பாதை, உலகிலேயே மிகவும் அபாயகரமான புலம்பெயர்வுப் பாதைகளில்
ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
தகுதியற்ற மற்றும் அதிக கூட்ட நெரிசல் கொண்ட படகுகளில் நீண்ட தூரம் பயணிப்பதே
அதிக அளவிலான உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb81fae3-96e1-48df-89d0-3a1cc768530f/26-6a60c1a3e5c82.webp' /></p><p>
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் மவுரித்தேனிய அரசு எடுத்து வரும் கடுமையான
நடவடிக்கை காரணமாக, பெரும்பாலான அகதிகள் நீண்ட மற்றும் அதிக ஆபத்தான
கடல்பாதைகளைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.
</p><p>
இளைஞர்கள் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதைத் தடுக்க கல்வி மற்றும்
வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் உறவுகளை ஆரத்தழுவிக் கண்கலங்கிய ஐரோப்பிய ஒன்றியத் தூதர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-ambassador-strained-relations-in-semmani-1784724570"></link>
            <id>https://tamilwin.com/article/eu-ambassador-strained-relations-in-semmani-1784724570</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி,
நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,
வலிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி,
நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில்
சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுறிந்து மனுவையும் பெற்றுக்கொண்டனர்.
</p><p>இதன்போது&nbsp;ஐரோப்பிய ஒன்றியத் தூதர்&nbsp;செம்மணியில் உறவுகளை ஆரத்தழுவிக் கண்கலங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>தூதுவர்களிடம் கோரிக்கை மனு</h2><p>
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு
வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, இன்று புதன்கிழமை
முற்பகல் 9 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி,
பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய
ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள் என 8 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m8woVZt9kng" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>தூதுவர்களின் வருகையையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்
சங்கத்தினரும் சிவில் அமைப்புக்களும் இணைந்து செம்மணி - சித்துப்பாத்தி
மயானத்துக்கு முன்னால் ஏ - 9 வீதியோரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
</p><p>
இதன்போது, போராட்டம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற தூதுவர்கள் குழுவினர்,
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயான வாயிலில் வைத்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
</p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ உறவினர்களை
ஆரத்தழுவிக் கண்கலங்கியமையுடன், அவர்களின் கோரிக்கைகளையும் கவனமாகக்
செவிமடுத்தார்.</p><p> தொடர்ந்து, பாதிக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் சார்பில்
தூதுவர்களிடம் கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாவிற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! நிரந்தரத் தடை விதிக்கப்படலாமென எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-notice-for-visa-applicants-1784724005"></link>
            <id>https://tamilwin.com/article/important-notice-for-visa-applicants-1784724005</id>
            <summary type="text">அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் குற்றப் பின்னணிகள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கினால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் குற்றப் பின்னணிகள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கினால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அறிவிப்பில் மேலும்,</p><p>
சிறிய குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா மறுப்புக்கு வழிவகுக்கும். தூதரக அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களின் குற்றப் பின்னணி விபரங்கள் இருப்பதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be2417d-a7c4-43a1-8ec2-d92bf9ae5cee/26-6a60bf5068866.webp' /></p><h2>உண்மையை மட்டுமே வழங்க வேண்டும்</h2><p>
</p><p>
அத்துடன் விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழுமையான உண்மையை மட்டுமே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
பொய்யான தகவல்களை அளித்தால் எதிர்காலப் பயணங்கள் நிரந்தரமாகத் தடை செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Criminal convictions can permanently bar you from entering the United States. Even minor offenses can trigger visa denials. Consular officers have access to your criminal background and will discover past violations or arrests. Tell the truth on your application and in your… <a href="https://t.co/wpDQdIFLEn">pic.twitter.com/wpDQdIFLEn</a></p>&mdash; U.S. Embassy in Sri Lanka (@USEmbSL) <a href="https://x.com/USEmbSL/status/2079819083093053869?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீரூற்று அருகே புதிய கட்டுமானம் - விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த தொல்பொருள் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-construction-near-kaniya-hot-spring-1784725247"></link>
            <id>https://tamilwin.com/article/new-construction-near-kaniya-hot-spring-1784725247</id>
            <summary type="text">திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது
தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அந்த இடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது
தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அந்த இடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வுகள் இன்று(22.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

திருகோணமலை மாவட்ட அரச அதிபர் டபிள்யு.எம்.ஹேமந்தகுமார இதில் முதன்மை
விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டு வைத்துள்ளார்.</p><p></p><p> 

அத்துடன், வில்கம் விஹாரையின் நாயக்க தேரர் அம்பிட்டியே சீலவண்ஸ திஸ்ஸ தேரர் அனுஷ்டானம் வழங்கி வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f565a5c9-6cbe-4085-adb2-ed615576aef3/26-6a60bf841db02.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதேச கிராம
சேவகர், இஸ்லாமிய மத குரு மற்றும் துறைசார் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். </p><h2>

வரலாற்றுப் பின்னணியும் காணி உரிமையாளரின் வாதமும்</h2><p>
சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழ்மொழி மூலம், தமிழர்களான பௌத்தர்களுக்குப் பௌத்த
கல்வி கற்பிக்கும் சைத்தியம் ஒன்று அங்கு காணப்பட்டது என்று வரலாறுகள்
கூறுகின்றன. </p><p>

அதன் பின்னர் அந்த இடத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்
பிள்ளையார் கோயில் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தப்பட்டுள்ளன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1005437725610145%2F&show_text=true&width=476&t=0" width="476" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>இந்தக் காணி மடத்தடி முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது எனக்
குறிப்பிடும் உரிமையாளரான கோகிலவதனி கணேஷ் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,</p><p> 


கடந்த 2002 ஆம் ஆண்டு சிதிலமடைந்த கோயிலைப் புனர்நிர்மாணம் செய்ய நாம் முயன்றபோது
அது தொல்பொருள் திணைக்களத்தால் தடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் நான் தொல்பொருள்
திணைக்களத்துக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
செய்தேன்.</p><p> 

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டில் அந்த இடத்தில் எந்தக் கட்டுமானங்களும்
அமைக்கக் கூடாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார் என்றார். 

எனினும், தற்போது நீதிமன்ற உத்தரவையும் மீறி குறித்த இடத்தில் கட்டுமான
வேலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. </p><h2>



தொல்பொருள் திணைக்களத்தின் விளக்கம்</h2><p>
அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் உள்ள புராதன அழிவடைந்த சிதிலங்களை ஒன்றிணைத்து, அந்தப் புராதன
கட்டுமானத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது
என திருகோணமலை மாவட்ட தொல்பொருள்
திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யு.யு.சுரங்க பெரேரா தெரிவித்தார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

கன்னியாவில் இன்று நடைபெறும் நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல. இலங்கையின்
புராதன தொல்பொருள் இடமொன்றை பாதுகாக்கும் முயற்சியே இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86dbfc07-bbc9-4397-95a6-f4b37827f555/26-6a60bf8608363.webp' /></p><p> </p><p>இதற்குச் சிலர்
இன, மத சாயங்களைப்பூச நினைக்கின்றனர். அது அவ்வாறான ஒன்றல்ல.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் 1,000 தொல்லியல் பகுதிகளைப்
பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், இன்னும் சில தினங்களில் சேருநுவர பிரதேச
செயலகப் பிரிவின் சோமாவதி பாதுகாப்பு அரண் பகுதியில் அமைந்துள்ள
சோழர்காலத்தைச் சேர்ந்த ஸ்ரீ மங்களபுரம் சிவன் ஆலயத்தைப் பாதுகாக்கும்
வகையிலான கட்டுமானமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
</p><p>
 எனவே, தொல்லியல் திணைக்களம் மத,
இனவாத நோக்குடன் செயற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd895a6b-9a3a-46be-b3ca-8f8252e47c87/26-6a60bf853645c.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்! 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-passport-hits-highest-ranking-in-decade-1784722276"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-passport-hits-highest-ranking-in-decade-1784722276</id>
            <summary type="text">இலங்கை கடவுச்சீட்டின் (Passport) தரவரிசை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான Henley Passport Index தரவரிசைப்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடவுச்சீட்டின் (Passport) தரவரிசை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டுக்கான Henley Passport Index தரவரிசைப்படி, உலக நாடுகளில் இலங்கை 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் அல்லது சென்ற இடத்திலேயே விசா (Visa on Arrival) பெற்றுக்கொண்டு 39 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கை கடவுச்சீட்டு</h2><p>
</p><p>

Henley Passport Index என்பது உலக நாடுகளின் கடவுச்சீட்டு வலிமையை அளவிடும் முக்கியமான தரவரிசைகளில் ஒன்றாகும்.</p><p>

இந்த தரவரிசை, முன்கூட்டியே விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் 199 கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.

இந்த தரவரிசை, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b959f164-3217-4cd3-a16a-0d6896b3b3c2/26-6a60b86ad37f7.webp' /></p><p>
</p><p>
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை பெற்றுள்ள சிறந்த தரவரிசை இதுவாகும்.</p><p>

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
</p><p>
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இலங்கை 96ஆவது இடத்திலும், 2023 ஆம் ஆண்டு 100ஆவது இடத்திலும், 2022 ஆம் ஆண்டு 102ஆவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டு 107ஆவது இடத்திலும் இருந்தது.

2026 ஆம் ஆண்டின் 94ஆவது இடம், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை பெற்றுள்ள சிறந்த நிலையாகும்.</p><p></p><h2>மிக உயர்ந்த தரவரிசை</h2><p>

2017 ஆம் ஆண்டு இலங்கை 95ஆவது இடத்தில் இருந்தது.

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு 99ஆவது இடத்துக்கு சரிந்த இலங்கை, 2019 ஆம் ஆண்டு 96ஆவது இடத்துக்கு முன்னேறியது.
</p><p>
2020 ஆம் ஆண்டு 97ஆவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டு 107ஆவது இடத்திலும் இருந்தது.

2021 ஆம் ஆண்டின் 107ஆவது இடத்திலிருந்து தற்போது 2026 ஆம் ஆண்டு 94ஆவது இடத்துக்கு இலங்கை முன்னேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cea7a7e-3916-4966-981f-f6e000d8b6c9/26-6a60b86bbd357.webp' /></p><p>
அதாவது கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை கடவுச்சீட்டின் தரம் 13 இடங்கள் உயர்ந்துள்ளது.
</p><p>

இலங்கையின் இந்த முன்னேற்றத்துக்கு, அதிகரித்து வரும் சர்வதேச தொடர்புகள், சுற்றுலா வளர்ச்சி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் பல நாடுகளுடனான நல்லுறவுகள் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
</p><p>
இலங்கையின் இந்த முன்னேற்றம், நாட்டின் சர்வதேச தொடர்புகள் மற்றும் உலக நாடுகளுடனான நம்பிக்கை அதிகரித்து வருவதற்கான ஒரு சாதகமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு அளிப்பது பாராட்டத்தக்கது - ஆளுநர் நா.வேதநாயகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-governor-statement-regarding-business-1784722517"></link>
            <id>https://tamilwin.com/article/north-governor-statement-regarding-business-1784722517</id>
            <summary type="text">எமது பிரதேசத்தை சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின்
உற்பத்தி பொருட்களை, கொழும்பைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் நேரடியாகக்
கொள்வனவு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது பிரதேசத்தை சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின்
உற்பத்தி பொருட்களை, கொழும்பைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் நேரடியாகக்
கொள்வனவு செய்வதற்குரிய வணிக இணைப்பை ஏற்படுத்தும் இலங்கை தேசிய
ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
</p><p>
இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச்
சபை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வணிக இணைப்புக் கருத்தரங்கு, யாழ்ப்பாண
மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (22.07.2026) நடைபெற்றது. </p><p>இந்த கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட
உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>உற்பத்திகளுக்கான உரிய விலை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை
என்பதுடன், பயன்படுத்தப்படும் வளங்களினூடான உற்பத்திகளுக்கும் உரிய விலை
கிடைப்பதில்லை. விவசாயம் மற்றும் கடல்வளம் என்பன எமது மாகாணத்தின் தனிப்பெரும்
வளங்களாக உள்ளபோதிலும், விவசாய உற்பத்திகளைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது
அவற்றை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கோ போதிய
வசதிகள் இங்கு இல்லை.</p><p> இவ்வாறானதொரு பின்னணியில், சந்தைப்படுத்தலில் எமது
உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாண இத்தகைய வணிக
இணைப்புகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தொடர்ந்தும் அதே நிலையிலேயே
தேங்கி நிற்காமல், அவர்கள் வளர்ச்சி கண்டு ஏற்றுமதியாளர்களாக உருவெடுக்க
வேண்டும். அதற்காக எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு
நாம் தயாராக உள்ளோம். </p><p>முயற்சியாளர்களும் இந்த இலக்கை முழுமூச்சாகக் கொண்டு
தங்களது பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு எமது உற்பத்திகளை நேரடியாக ஏற்றுமதி
செய்வதற்கான செயன்முறை ரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. இது தொடர்பில் உரிய திணைக்களங்களின் சாதகமான ஒருங்கிணைப்பும்
எமக்குக் கிடைத்து வருகின்றது.</p><p></p><h2>கைத்தொழில் பேட்டைகளை நிறுவுதல்</h2><p> </p><p>சாத்தியமானளவு மிக விரைவில் இது நடைமுறைக்கு
வரும்.

நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகச் சிறிய மற்றும் நடுத்தர தொழில்
முயற்சியாளர்களே திகழ்கின்றனர். எமது வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம்
மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் இவர்களுக்கான பிரத்தியேக கைத்தொழில்
பேட்டைகள் இல்லை. சில தினங்களுக்கு முன்னர் இங்கு வருகைதந்திருந்த கைத்தொழில்
மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க
அபயசிங்கவிடம் இது தொடர்பில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். </p><p>அவர் ஏனைய
மாவட்டங்களிலும் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வளர்த்தெடுக்கும் பணிகளை நாம்
தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம். இவ்வாறான வணிக இணைப்பு
முயற்சிகள் நிச்சயமாக அவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும் எனத்
தெரிவித்தார்.</p><p>

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், இலங்கை தேசிய
ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கௌசல் ராஜபக்ச, கைத்தொழில்
அபிவிருத்திச் சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் எஸ்.சிவகெங்காதரன், இந்தியத்
துணைத்தூதரக அதிகாரி, கைத்தொழில் முயற்சியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தக
சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:34:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் வீழ்ச்சிக்கு பொறுப்புக் கூறவேண்டிய ராஜபக்ச முகாம்! சஜித் அணியின் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-s-side-accuses-rajapaksa-s-team-1784722922"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-s-side-accuses-rajapaksa-s-team-1784722922</id>
            <summary type="text">நாட்டின் முழு வீழ்ச்சிக்கு ராஜபக்ச முகாமே பொறுப்பாளிகள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.&amp;nbsp;ஐக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் முழு வீழ்ச்சிக்கு ராஜபக்ச முகாமே பொறுப்பாளிகள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில்&nbsp; இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p>மேலும்,&nbsp; எதிர்வரும் 2029ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக&nbsp; ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவார் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><p>16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக்
கட்டுப்படுத்துவதற்காக இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்
மேற்கொள்வதற்கான தனிநபர் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பல
மாதங்கள் கடந்துள்ள போதிலும், அரசு அது குறித்து எவ்வித கவனமும் செலுத்தாமல்
அலட்சியமாகச் செயற்படுகின்றது.</p><p></p><h2>அதிகாரப் பரவலாக்கம்&nbsp;</h2><p> </p><p>உலக நாடுகள் சிறுவர்களின் பாதுகாப்புக்காகச் சட்டங்களை இயற்றிவரும் நிலையில்,
இலங்கையில் அரசு மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துகின்றது. </p><p>எதிர்க்கட்சித்
தரப்பால் தயாரிக்கப்பட்ட சட்டத் திருத்தம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு
அனுப்பப்பட்டுள்ள போதும், அரசு எதுவும் அறியாதது போல் மௌனம் காக்கின்றது.</p><p>உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசு முயற்சிப்பது
ஜனநாயகத்துக்கு எதிரானது. காலிபணியிடங்களை நிரப்புவதை விடுத்து இவ்வாறான
நடவடிக்கைகளில் ஈடுபடுவது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைச்
சீர்குலைப்பதாகும். இதற்குச் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள்
கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f9f5ef-3ed3-4c16-b1bc-d01b51fd04c7/26-6a60b5eb7c437.webp' /></p><p>

மின்சாரக் கட்டணம் 45 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விலை
சுமார் 150 ரூபாவால் அதிகரித்து, பணவீக்கமும் உயர்ந்துள்ளதால் சாதாரண மக்களும்
விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ஜனாதிபதியின் ஜனரஞ்சகத்தன்மை 75 சதவீதம் என அரசு கூறுமாயின்,
ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயக ரீதியிலான
அதிகாரப் பரவலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.
</p><p>
நாட்டின் வீழ்ச்சிக்கு ராஜபக்ச முகாமே பொறுப்பாகும். 2029 இல் ஐக்கிய மக்கள்
சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதுடன் சஜித் பிரேமதாஸ அடுத்த தலைவராக
உருவெடுப்பார். </p><p>மேலும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும்
இணைந்து தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பான பேச்சுகள் சுமுகமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:22:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலக கிண்ணம்: 47 நாடுகளை வீழ்த்திய ஸ்பெயின் - அமெரிக்காவில் சாதனை படைத்த இறுதி நாள் ஆட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-world-cup-captured-the-attention-of-millions-1784721995"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-world-cup-captured-the-attention-of-millions-1784721995</id>
            <summary type="text">கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்த FIFA உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின்
இறுதிப்போட்டியை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்த FIFA உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின்
இறுதிப்போட்டியை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) மக்கள் கண்டுகளித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


இது அமெரிக்காவில் கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்ட வரலாற்று சாதனைகளை முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><h2>


உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்</h2><p>

நியூஜெர்சியில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், கூடுதல் நேரத்தில்
ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a47f6710-f8ca-4a16-a925-462e55980a1a/26-6a60b30390dc4.webp' /></p><p> 



ஃபோக்ஸ் ஆங்கில அலைவரிசையில் 3.89 கோடி மக்களும், டெலிமுண்டோ மற்றும் பீகொக் ஸ்பானிஷ் தளங்களில் 2.39 கோடி மக்களும் இந்த போட்டியை கண்டுகளித்துள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F893247513331583%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> </p><p>



இது 2022 கட்டார் உலகக் கிண்ண இறுதிப்போட்டியை அமெரிக்காவில் பார்த்த
பார்வையாளர்களின் எண்ணிக்கையை (2.23 கோடி) விடப் பல மடங்கு அதிகம்.</p><h2> 



பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்..</h2><p>
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய இந்த உலகக் கிண்ணத் தொடரில், அமெரிக்க அணி 16ஆவது சுற்றோடு வெளியேறிய போதிலும் அந்நாட்டுப் பார்வையாளர்களின் ஆதரவு குறையவில்லை.
</p><p>
இங்கிலாந்து - மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான 16ஆவது சுற்றுப் போட்டியை சுமார் 4.5 கோடி மக்கள் கண்டுகளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40e8b286-4318-4b0d-8345-b1e310abbba6/26-6a60b302c702f.webp' /></p><p> 

இது அமெரிக்காவின் பிரதான விளையாட்டுத் தொடர்களான “மேஜர் லீக் பேஸ்பால்”
மற்றும் “என்பிஏ (NBA) ஃபேனல்ஸ்” இறுதிப்போட்டிகளின் பார்வையாளர்களின்
எண்ணிக்கையை விட அதிகம்.

அமெரிக்காவின் உள்ளூர் நேரத்திற்கு ஏற்ப போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதும்,
லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற தலைசிறந்த
நட்சத்திரங்களின் கடைசி உலகக் கிண்ணமாக இது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் 
பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.</p><p>அமெரிக்காவில் அமெரிக்கன் ஃபுட்பால், கூடைப்பந்து மற்றும் பேஸ்பால் ஆகிய
விளையாட்டுகளே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பாரம்பரிய கால்பந்து
விளையாட்டு அங்கு எந்த அளவிற்குப் பிரபலமடைந்துள்ளது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T12:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக பாவனைக்கு தடை : பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/french-parliament-passes-bill-banning-social-media-1784721649"></link>
            <id>https://tamilwin.com/article/french-parliament-passes-bill-banning-social-media-1784721649</id>
            <summary type="text">பிரான்சில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப்
பயன்படுத்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா
அந்நாட்டு நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப்
பயன்படுத்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், பாடசாலைகளில் மாணவர்கள் கைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் இந்த மசோதா
தடை விதிக்கிறது.
</p><p></p><h2>புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குள்</h2><p>
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே சிறுவர்களுக்குச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த
முழுமையான தடை விதிக்கும் முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b8df476-f0c4-4cb9-a920-2f36d88131dd/26-6a60b37fc4911.webp' /></p><p>
டிஜிட்டல் தளங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகள்
உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முக்கியத் திட்டமாக இதை முன்னெடுத்த
ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன், நாடாளுமன்றத்தின் இந்த முடிவை ஒரு "முக்கிய
முன்னேற்றம்" எனப் பாராட்டியுள்ளார்.
</p><p>ஒன்லைனில் குழந்தைகளையும் வளரிளம் பருவத்தினரையும் பாதுகாப்பதில்
ஐரோப்பாவிற்கே பிரான்ஸ் முன்னோடியாகத் திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வரவிருக்கும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குள், அதாவது செப்டெம்பர்
மாதத்திற்குள் இத்தடையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

எனினும், இது பிரான்ஸ் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை அந்நாட்டின்
அரசியலமைப்பு பேரவை ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னரே முழுமையாக நடைமுறைக்கு வரும்.</p><h2>கணக்குகள் முடக்கப்படும் நிலை</h2><p>புதிய சட்டவிதிகளின்படி, இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச்
செயல்படுத்தப்படவுள்ளது.</p><p>முதல் கட்டமாக, வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 15 வயதிற்குட்பட்ட
சிறுவர்கள் புதிதாக எந்தவொரு சமூக வலைத்தளக் கணக்கையும் தொடங்க முடியாது.
</p><p>
இரண்டாம் கட்டமாக, ஜனவரி 2027 முதல் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும்
அவர்களின் கணக்குகள் அனைத்தும் முழுமையாக முடக்கப்படும் என டிஜிட்டல் துறை
அமைச்சர் ஆன் லே ஹெனாஃப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e20aaa5-19d7-46bb-a1d0-03d5bd786b9c/26-6a60b3807cfca.webp' /></p><p>

அதேவேளையில், கல்வி, அறிவியல் மற்றும் கலைக்களஞ்சியம் சார்ந்த இணையதளங்களைப்
பயன்படுத்த இதில் எந்தத் தடையும் இருக்காது.

எதிர்ப்புகளும் ஆதரவுகளும்
இடதுசாரி எதிர்க்கட்சியான 'பிரான்ஸ் அன்போவ்ட்' கட்சி இந்த மசோதாவிற்கு
எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.</p><p>இணையத்தில் பெயர் வெளியிடாமல் இருக்கும் உரிமையை இது பறிப்பதாகவும்,
நடைமுறையில் இத்தடையை முழுமையாகச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்றும்
அவர்கள் வாதிடுகின்றனர்.
</p><p>
அதேவேளையில், குழந்தைகள் நல ஆர்வலர்களும் பெற்றோர்களும் இந்த முடிவைப்
பெருமளவில் வரவேற்றுள்ளனர்.

சமூக வலைத்தளங்களால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள், இணையவழி அச்சுறுத்தல்கள்
மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து தங்களது பிள்ளைகளைப் பாதுகாக்க இத்தகைய
கடுமையான நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்று அவர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-into-missing-persons-in-batticaloa-1784719376"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-into-missing-persons-in-batticaloa-1784719376</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும், காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து
இன்றைய தினம் (22.07.2026) பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும், காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து
இன்றைய தினம் (22.07.2026) பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்தது.</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மட்டக்களப்பு மேற்கு, ஏறாவூர்ப்பற்று
ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில்
இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><h2>வாக்குமூலங்கள் வழங்கும் நடவடிக்கை</h2><p></p><p>
</p><p>இந்த விசாரணை மற்றும் வாக்குமூலங்கள் வழங்கும் நடவடிக்கைகளை காணாமல்போனார்
அலுவலக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள், நீதியமைச்சின் சட்டத்தரணிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து முன்னெடுத்திருநதனர்.&nbsp;</p><p>காணாமல்போனோர் அலுவலகத்திற்கு காணாமல்போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால்
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் வாக்குமூலம்
பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின்
உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.</p><p></p><h2>முறைப்பாடுகள்</h2><p>இதேநேரம் நேற்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள அலுவலகம், பட்டிப்பளை பிரதேச
செயலகம், வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகளில் கிடைக்கப் பெற்ற 295
முறைப்பாடுகளில் 233 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள்
பதிவு செய்யப்பட்டதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>இதனடிப்படையில் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் 144 முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றில் 116 முறைப்பாடுகள்
விசாரணை செய்யப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில்
78 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 64 முறைப்பாடுகள்
விசாரணை செய்யப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு அலுவலகத்தில் 73 முறைப்பாடுகள்
பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 53 விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leader-refuses-to-meet-journalists-1784721964"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leader-refuses-to-meet-journalists-1784721964</id>
            <summary type="text">ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிர்த்துச்
சென்றமை தென்னிலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.&amp;nbsp;
ஐக்கிய ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிர்த்துச்
சென்றமை தென்னிலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின்
தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.</p><p></p><h2>விரைவாக புறப்பட்டுச் சென்றார்..</h2><p>
</p><p>
கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் நாடாளுமன்றத்தில்
முன்மொழியப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இந்தக் கூட்டத்தில்
தீவிரமாக ஆராயப்பட்டது.
</p><p>
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,
நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, முஜிபுர்
ரஹ்மான், எஸ். எம். மரிக்கார், சித்ரால் பெர்னாண்டோ மற்றும் ரோஹண பண்டார
உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்ததும் அவர்களில் பலரும் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4431771-4673-424c-897d-3b4713b8d04e/26-6a60b22e44e67.webp' /></p><p> </p><p>எனினும், கூட்டம் முடிந்து வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸவிடம், அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் தற்போதைய அரசியல்
சூழ்நிலைகள் குறித்துக் கேள்விகளை எழுப்ப முயன்றனர். </p><p>எனினும், அவர்
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டு அங்கிருந்து
விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:07:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை வம்சாவளி மருத்துவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-origin-doctor-arrested-in-canada-1784720125"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-origin-doctor-arrested-in-canada-1784720125</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோவில் உள்ள Hospital for Sick Children மருத்துவமனையில் பணியாற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோவில் உள்ள Hospital for Sick Children மருத்துவமனையில் பணியாற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குழந்தைகள் தொடர்பான பாலியல் துர்நடத்தை மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்ததாகவும், அவற்றை அணுகியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கை வம்சாவளி மருத்துவர்&nbsp;</h2><p>
</p><p>
44 வயதான திஸாநாயக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மின்னணு சாதனத்தை பயன்படுத்தி குறித்த உள்ளடக்கங்களை அணுகி பதிவிறக்கம் செய்ததாக கூறப்படும் விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a5e7366-8ae0-4a5e-9740-5d0e80714051/26-6a60b1340c0f7.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் மருத்துவமனை மற்றும் அவரது தனியார் இல்லத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இதன்போது, பணிக்காக பயன்படுத்தப்பட்ட கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
திஸாநாயக்க மீது குழந்தைகள் தொடர்பான பாலியல் துர்நடத்தை மற்றும் சுரண்டல் உள்ளடக்கங்களை வைத்திருந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அவற்றை அணுகியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அவர் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலையாகவிருந்தார்.

எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மருத்துவமனை&nbsp;கண்டனம் </h2><p>

இந்த உள்ளடக்கங்கள் அவரது மருத்துவர் பணியுடன் தொடர்புடையவை என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
</p><p>
இதற்கிடையில், Hospital for Sick Children மருத்துவமனை இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தாங்கள் மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பொலிஸார் குறிப்பிட்டுள்ள செயற்பாடுகளை மருத்துவமனை கடுமையாக கண்டித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d61e53-5932-4aac-87e1-2f4718a0a06e/26-6a60b134cad04.webp' /></p><p>

விசாரணை தொடர்பான தகவல் கிடைத்தவுடன் திஸாநாயக்கவை உடனடியாக பணியில் இருந்து விடுப்பில் அனுப்பியதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டுகளுக்கும் அவரது மருத்துவ சேவைக்கும் தொடர்பு இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
</p><p>
நோயாளிகள் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு எந்த ஆபத்தும் இருப்பதாக தகவல் கிடைக்கவில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.</p><p>

திஸாநாயக்கவிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் குடும்பத்தினர் ஏதேனும் கவலைகள் இருந்தால், மருத்துவமனையின் நோயாளர் தொடர்பு பிரிவை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T12:06:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை படுகொலை: குட்டிமணி - தங்கத்துரை சிலை திறப்பு விழாவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuttimani-thangathurai-statue-unveiling-ceremony-1784720889"></link>
            <id>https://tamilwin.com/article/kuttimani-thangathurai-statue-unveiling-ceremony-1784720889</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் திருவுருவச் சிலை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் திருவுருவச் சிலை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
அவர்களின் 43ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி சிலை திறப்பு விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p>

இதனைத் தொடர்ந்து, குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் திருவுருவச் சிலைகளை வடிவமைத்த சிற்பி வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>சிலை திறப்பு விழா ஒத்திவைப்பு</h2><p>
</p><p>
அவர், இன்று (22.07.2026) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதி்க்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04359c43-d8a2-4100-ac09-be0f618805fe/26-6a60af5a0914e.webp' /></p><p>

இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலையாகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலை திறப்பு விழாவை எதிர்வரும் 4ஆம் திகதிவரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dee366b1-9403-4f64-b319-de80b4b21344/26-6a60af5aef63f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec2bda3-efaf-4ebd-812d-07fe4ed3a3cf/26-6a60af5bc319c.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T11:54:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்து - ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/egypt-uae-foreign-ministers-urgent-consultations-1784718454"></link>
            <id>https://tamilwin.com/article/egypt-uae-foreign-ministers-urgent-consultations-1784718454</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும்
பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து எகிப்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் பத்ர்
அப்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும்
பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து எகிப்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் பத்ர்
அப்தெலாட்டி, ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத்
அல் நஹ்யானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
</p><p>
இந்தச் சந்திப்பின் போது, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களைக் குறைப்பதற்கான
சர்வதேச முயற்சிகளை வலுப்படுத்துவது குறித்தும், சர்வதேசச் சட்டங்களின்படி
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதிசெய்வது
குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.
</p><p></p><h2>அரபு நாடுகளின் இறையாண்மை</h2><p>
மேலும், பல்வேறு அரபு நாடுகளின் மீது ஈரான் தொடர்ந்து நடத்தி வரும்
தாக்குதல்களுக்கு இரு நாடுகளின் அமைச்சர்களும் மீண்டும் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ce1e84-4a3e-4f31-bc98-78fbbdb14b43/26-6a60ac0c735f6.webp' /></p><p>இதுகுறித்து எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி கூறுகையில்,
"எகிப்து நாடு, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அனைத்து அரபு வளைகுடா
நாடுகளுடனும் முழுமையாகத் துணைநிற்கிறது.
</p><p>
ஈரானின் இந்தத் தாக்குதல்கள் அரபு நாடுகளின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும்
செயலாகும்.

இது பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் விடுக்கப்பட்ட
கடுமையான அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்டார்.
</p><p>
மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை உறுதி செய்ய, மத்திய கிழக்கு
பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த இணைந்து செயல்படுவதன்
முக்கியத்துவத்தை இரு தூதுவர்களும் இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளனர். </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரட்சியால் வற்றியுள்ள குளங்கள் - நீர்த்தாங்கிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drought-dries-ponds-water-tanks-25-000l-supply-1784714803"></link>
            <id>https://tamilwin.com/article/drought-dries-ponds-water-tanks-25-000l-supply-1784714803</id>
            <summary type="text">மட்டக்களப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதனால் மக்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் இன்றிலிருந்து நாளாந்தம் சுமார் 25...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதனால் மக்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் இன்றிலிருந்து நாளாந்தம் சுமார் 25,000 லீற்றர் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை&nbsp; நிலவி வருகின்றமையினால், கிராமியக் குளங்கள் வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.</p><p></p><h2>குடிநீர் வழங்கத் திட்டம்</h2><p>
</p><p>


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று&nbsp; பிரதேசத்திற்குட்பட்ட
பெரியபோரதீவு பெரியகுளம், கோவில்போரதீவுக் குளம், பொறுகாமம் குளம்,
வெல்லாவெளிக் குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமைந்துள்ள கிராமியக் குளங்கள்
முற்றாக வற்றியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51ca22d8-9211-45c6-9a62-b28895229c2a/26-6a609c2d0d1aa.webp' /></p><p>
</p><p>


இந்த நிலையில்,&nbsp; கால்நடைகளும் நீர் தேடிச் செல்வதோடு, வற்றிய குளங்களில் அந்தப் பகுதி
மக்கள் மீன்பிடி&nbsp; நடவடிக்கை மேற்கொள்வதையும், பறவைகள் இரைதேடி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
</p><p>


இதேவேளை,&nbsp; கிராமங்களிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதனால் மக்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலம் இன்றிலிருந்து நாளாந்தம் சுமார் 25,000 லீற்றர் குடிநீர் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின்
தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[715 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு! 105 நிறுவனங்களை சிக்கவைத்த பெரும் நிதி மோசடி - சிக்கலில் ரணில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/715-million-us-dollars-illegally-smuggled-ranil-1784709571"></link>
            <id>https://tamilwin.com/article/715-million-us-dollars-illegally-smuggled-ranil-1784709571</id>
            <summary type="text">2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர&nbsp; குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p> ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இதில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தரப்பு உட்பட பலரும் கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><h2>105 நிறுவனங்கள்</h2><p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 214.7 பில்லியன்) வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு (CoPF) அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இந்த தகவலை, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட குழுவில் வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01db3a16-9394-4ffc-b00c-45df3df4161c/26-6a60874c87536.webp' /></p><p>
</p><p>
அவரின் விளக்கத்தின்படி, 2025 ஜனவரி 20, பெப்ரவரி 23 மற்றும் மார்ச் 6 ஆகிய திகதிகளில், இலங்கை சுங்கத் திணைக்களம் மூன்று அறிக்கைகளை பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தது.
</p><p>
 வெளிநாடுகளுக்கு இறக்குமதிக்காக பணம் அனுப்பப்பட்ட போதிலும், அதற்கான பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்பதே அந்த அறிக்கைகளின் மையக் குற்றச்சாட்டாகும்.</p><p>

முதல் அறிக்கையில் 89 நிறுவனங்கள், இரண்டாவது அறிக்கையில் மேலும் 4 நிறுவனங்கள், மூன்றாவது அறிக்கையில் மேலும் 12 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன.</p><p> இதன்படி, மொத்தம் 105 நிறுவனங்கள் இந்த சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளில் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளன.

விசாரணைகளின் அடிப்படையில், 2023 ஜனவரி 1 முதல் 2026 மார்ச் வரை, இந்த 105 நிறுவனங்கள் டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் (Telegraphic Transfers - TT) மூலம் சுமார் ரூ.214.7 பில்லியன் (அமெரிக்க டொலர் 715 மில்லியன்) வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளன.</p><p></p><h2>227 வங்கிக் கணக்குகள்</h2><p> </p><p>ஆனால், அந்தப் பணத்திற்கு ஈடான எந்தப் பொருட்களும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>

சுங்கத் திணைக்களத்தின் அறிக்கைகளைத் தொடர்ந்து, CID-யின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) இந்த பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p>

விசாரணைகளின் போது, 105 நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், மொத்தம் 55 நபர்களே அந்த அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c98fcb-62d6-4726-9c64-0624a46611bd/26-6a60874d66768.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்தப் பரிவர்த்தனைகளுக்காக 227 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் சுமார் 24,300 டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 13 முக்கிய வங்கிகள், தற்போது விசாரணைக்குட்பட்டுள்ள இந்தப் பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளதாகவும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
</p><p>
விசாரணைகள் முன்னேறிய நிலையில், இந்த மோசடி வலையமைப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;முக்கிய போதைப்பொருள் கடத்தல்</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட நபர் 43 நிறுவனங்களின் உரிமையாளராக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் மட்டும் ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலரை டெலிகிராபிக் பணப் பரிமாற்றங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
CID-யின் குற்றச்சாட்டுப்படி, குறித்த நபர் இலங்கையில் உள்ள தரகர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, அவர்கள் வழங்கிய போலியான ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949acb14-8fdc-4859-9c07-efd50248324a/26-6a60874e1ec81.webp' /></p><p> </p><p>தரகர்கள் பயன்படுத்திய அலுவலகங்களில் இருந்த கணினிகளிலேயே போலி விலைப்பட்டியல் (Invoices) தயாரிக்கப்பட்டு, அவை வங்கிகளுக்கு ஆதார ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும் விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
மேலும், இந்தப் பரிவர்த்தனைகளில் சில வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் விசாரணைகளில் எழுந்துள்ளதாக அசங்க கரவிட்ட தெரிவித்தார்.
</p><p>
விசாரணைகளின் போது, இந்த நிதி மோசடிக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான தகவல்களும் வெளியாகியுள்ளன. குறிப்பாக, துபாயில் இருந்து இயங்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் பணம், இதே முறையைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக CID தெரிவித்துள்ளது.</p><h2>முக்கிய சந்தேகநபர்</h2><p>
</p><p>
துபாயை மையமாகக் கொண்டிருந்த மூன்று முக்கிய சந்தேகநபர்களில் இருவர், இன்டர்போல் (Interpol) உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், போதைப்பொருள் வியாபாரிகளின் பணம் துபாயில் உள்ள மற்றொரு நபர் மூலம் இயக்கப்பட்டதாகவும், இலங்கையில் தரகர்கள் வசூலித்த பணம் இறுதியில் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bda8f0f9-0118-4619-bd90-cbe7c36988b5/26-6a6089c2beaf0.webp' /></p><p>
</p><p>
இந்த நடவடிக்கையின் மையத்தில் இருந்ததாகக் கூறப்படும் நபர், வசூலிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை கமிஷனாக வைத்துக்கொண்டு, மீதியை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p> பணத்தின் மூலாதாரம் குறித்து அவருக்கு முழுமையான அறிவு இருந்ததா என்பது தொடர்பிலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
</p><p>
மேலும், அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஏராளமான போலி சுங்க ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக CID தெரிவித்துள்ளது.</p><h2>விரிவான விசாரணை</h2><p>
</p><p>
இதற்கிடையில், களனி பொலிஸ் பிரிவில் சோதனையிடப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து ரூ.30 மில்லியன் பணம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் தனி விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>அந்தப் பணம், இதேபோன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மற்றொரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a82e458-11f3-4cfc-b5fe-f231a06a63ca/26-6a6089c204e30.webp' /></p><p>
</p><p>
அந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், அந்த நிறுவனம் மட்டும் ஒரு அரச வங்கி மற்றும் இரண்டு தனியார் வங்கிகள் ஊடாக சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலரை இதே முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

இந்த இரண்டு வழக்குகளிலும், CID-யின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் குற்ற வருவாய் விசாரணைப் பிரிவு (Proceeds of Crime Investigation Division) இணைந்து விரிவான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_miJ0OkMcYs" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T11:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரானில் மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-sentences-man-to-death-for-spying-us-israel-1784713263"></link>
            <id>https://tamilwin.com/article/iran-sentences-man-to-death-for-spying-us-israel-1784713263</id>
            <summary type="text">&quot;புரட்சிக்கு எதிரான பயங்கரவாத அமைப்பில்&quot; உறுப்பினராக இருந்து, அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலுக்கு சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு
கைதுசெய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>"புரட்சிக்கு எதிரான பயங்கரவாத அமைப்பில்" உறுப்பினராக இருந்து, அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலுக்கு சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு
கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம்
தெரிவித்துள்ளது.
</p><p>இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் மெஹ்தி கான்கி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மரண தண்டனை</h2><p>
</p><p>
ஈரான் நாட்டின் கரஜ் பகுதியில் உள்ள இவரது வீட்டில் பாதுகாப்புப் படையினர்
சோதனை நடத்தியபோது, கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ரிமோட் மூலம் இயங்கும்
வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், தோளில் வைத்து சுடக்கூடிய வெடிகுண்டு
குழாய்கள் மற்றும் சக்திவாய்ந்த வெடிமருந்துகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள்
கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446f0cad-a237-4a5c-8dfc-c2e8a4904b82/26-6a6093c92c0dd.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபருக்கு, நீதித்துறை விசாரணைக்குப் பின்
இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜஸ்தானில் கடைக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/leopard-enters-shop-and-attacks-employee-rajasthan-1784717769"></link>
            <id>https://tamilwin.com/article/leopard-enters-shop-and-attacks-employee-rajasthan-1784717769</id>
            <summary type="text">இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வணிகக் கடை ஒன்றுக்குள் திடீரென
புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த ஊழியரைத் தாக்கி பெரும் பரபரப்பையும்
பீதியைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வணிகக் கடை ஒன்றுக்குள் திடீரென
புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த ஊழியரைத் தாக்கி பெரும் பரபரப்பையும்
பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்தத் திடுக்கிடும் சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக்
கெமராவில் (CCTV) பதிவாகி வைரலாகி வருகிறது.</p><p></p><h2>பெரும் பரபரப்பு </h2><p>
திடீரென கடைக்குள் பாய்ந்த சிறுத்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்
அதனிடமிருந்து தப்பிக்க முயன்றபோதும், அது அவரைத் தாக்கியது.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம்
பிடித்த நிலையில், வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb559550-26ca-4f0a-962d-b551b08b227e/26-6a60a621ade11.webp' /></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக்
குழுவினர், கடைக்குள் சிக்கியிருந்த சிறுத்தையைத் திறம்படப் போராடிப்
பொறிவைத்து அடைத்தனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> : A leopard entered a liquor shop in Rajasthan&#39;s Tonk district after attacking three people. The salesman managed to lock the animal inside the shop, allowing Forest Department officials to safely rescue it after a five-hour operation.<a href="https://x.com/hashtag/Rajasthan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Rajasthan</a> <a href="https://x.com/hashtag/Tonk?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tonk</a> <a href="https://x.com/hashtag/Leopard?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Leopard</a> <a href="https://x.com/hashtag/Wildlife?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Wildlife</a>… <a href="https://t.co/jdcWumQISd">pic.twitter.com/jdcWumQISd</a></p>&mdash; upuknews (@upuknews1) <a href="https://x.com/upuknews1/status/2079235951541576149?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பின்னர், மயக்க ஊசி செலுத்தி அதை பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் அடர்ந்த
வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விடுவித்தனர்.
</p><p>
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T11:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-bandara-further-remanded-1784717740"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-bandara-further-remanded-1784717740</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(22.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p></p><p>
</p><p>

இரண்டு அரசாங்க நிறுவனங்களிலிருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர் விசாரணையின் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார ஜூன் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp;</p><h2>


சம்பள மோசடி</h2><p>
இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் (CCIB) முறைப்பாடு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec65f71a-2550-4571-9305-7e1767840762/26-6a60a48c1ed97.webp' /></p><p> 

இது தொடர்பான விசாரணையில், பண்டார 2022 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச்&nbsp; செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளர் பதவியை வகித்ததும் தெரியவந்துள்ளது. </p><p>

இந்த தகவல்களின் அடிப்படையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கு சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-22T11:08:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் மகன்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-s-son-arrested-for-cheating-foreigner-1784685252"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-s-son-arrested-for-cheating-foreigner-1784685252</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்பு சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய&nbsp;இணைப்பு </h2><p>சீன நாட்டுப் பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) இன்று (22) அனுமதி வழங்கியுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து, கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்டதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசாரணை அதிகாரிகளின் தகவல்களுக்கமைய, இந்தக் கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனே திட்டமிட்டு முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><p>
</p><h2><b>
 மூவர் கைது</b></h2><p>இதன்போது கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் ஒருவர் பிரபல முன்னாள் வர்த்தகர் ஒருவரின் பேரன் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நான்கு சந்தேகநபர்களில் மூவர் முதலில் கைது செய்யப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a30a56-ce22-43a2-9290-3fc4cfc91c12/26-6a6027c211c20.webp' /></p><p>அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
அதற்கமைய, குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் அவர் சட்டத்தரணிகள் ஊடாக நேற்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.</p><p>

2 கோடி ரூபாய் இலங்கைப் பணத்திற்கு அமெரிக்க டொலர்களை மாற்றித் தருவதாகக் கூறி, இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

அதற்கமைய, குறித்த சீன நாட்டவரை கொள்ளுப்பிட்டி பகுதிக்கு வரவழைத்தவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><h2><b>
விசாரணை அதிகாரிகள்</b></h2><p>அதன் பின்னர் ஏனைய மூன்று பேரும் கைவிலங்குடன் சென்று, தாங்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறிக்கொண்டு, சீன நாட்டவரிடம் இருந்த 2 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd3b7004-6014-4b50-9757-b19fccc81a6e/26-6a6027c2cda22.webp' /></p><p>இது தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செயற்பட்ட நிலையப் பொறுப்பதிகாரி மூவரை முதலில் கைது செய்தனர்.</p><p> முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m8woVZt9kng" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-07-22T10:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெற்ற விவசாயக் குழுக்கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-district-agricultural-committee-meet-1784715460"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-district-agricultural-committee-meet-1784715460</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக்கூட்டம் இன்றைய தினம்(22.07.2026) மாவட்ட
அரசாங்க அதிபர் சு.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக்கூட்டம் இன்றைய தினம்(22.07.2026) மாவட்ட
அரசாங்க அதிபர் சு.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
</p><p>
இக்கலந்துரையாடலில் சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நெற் கொள்வனவு
மற்றும் சிறுபோக விவசாய செய்கைக்கான நீர்ப்பாசன தேவைப்பாடு தொடர்பாக விரிவாக
ஆராயப்பட்டதுடன் கடுமையான வெப்பநிலை காணப்படுவதால் மக்கள் நீரை
சிக்கனமாகவும் மாசுபடுத்தாது பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.</p><h2>வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு</h2><p>
விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உப உணவு உற்பத்தி திட்டம்,
உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப திட்டம் மற்றும் வனவிலங்குகளிடமிருந்து
பயிர்களை பாதுகாப்பதற்கான "பாதுகாப்புத் துப்பாக்கி " திட்டம் ஆகிய
திட்டங்களுக்கான முன்மொழிவுகளை விவசாயிகள் தமது அமைப்புகள் மூலமாக
சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94921c52-41be-45f1-b924-af6c5270c06d/26-6a609d4ecc600.webp' /></p><p>வீதிகளில் நெல் உலர்த்துவதால் ஏற்படும் வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கான
மாற்று நடைமுறைகள் உள்ளிட்ட விவசாய துறைசார்ந்த விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
</p><p>இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி),விவசாய
பணிப்பாளர்,பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,
அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், துறை சார்ந்த திணைக்களங்களின் அதிகாரிகள்
மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் அங்கத்தவர்கள்,
மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து
கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T10:38:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென உயிரிழந்த இளம் யுவதி! சந்தேகம் இருப்பதாக தந்தை அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-woman-who-died-at-ratnapura-hospital-1784683555"></link>
            <id>https://tamilwin.com/article/young-woman-who-died-at-ratnapura-hospital-1784683555</id>
            <summary type="text">இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த&amp;nbsp; 21 வயதுடைய யுவதியின்&amp;nbsp;மரணத்தில் சந்தேகம் இருப்பதாக&amp;nbsp;தெரிவித்து&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த&nbsp; 21 வயதுடைய யுவதியின்&nbsp;மரணத்தில் சந்தேகம் இருப்பதாக&nbsp;தெரிவித்து&nbsp;தந்தை சுகாதார அமைச்சுக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.</p><p>மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து, இம்மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>மரணத்துக்கான காரணம்&nbsp;</h2><p>மருத்துவ தரப்பினரின் அலட்சியம் மகளின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c45c2d7d-b7fa-43ae-9ee8-886c3366d1ff/26-6a6097e672034.webp' /></p><p>தனது மகள், கடந்த 3ஆம் திகதி இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 13வது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நோய் நிலைமை குறித்து முறையாக பரிசோதிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>தனது மகளுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி, வாயிலிருந்து இரத்தம் வடிதல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, கடும் மூச்சுத்திணறல் போன்றவற்றுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று அவரது ஒட்சிசன் அளவு 85 சதவீதமாக குறைந்ததாகவும், அவசர சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமலும் இருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>உடற்கூறாய்வு பரிசோதனை</h2><p>இதனைத்தொடர்ந்து&nbsp;உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து&nbsp;மாரடைப்பு ஏற்பட்டதன் பின்னரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>மேலும், உடற்கூறாய்வு பரிசோதனை (Histopathological examination) மேற்கொள்ளபடவிருக்கும் நிலையில், நியூமோனியாவே தற்காலிக மரணத்துக்கான காரணம் என நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்ததாக தந்தை கூறியுள்ளார்.</p><p>

எனவே, யுவதியின் மரணம் தொடர்பில், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தந்தை, உரிய அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T10:14:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து சென்ற அருட்சகோதரிகளுக்கு நேர்ந்த கதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-nuns-from-colombo-involved-in-accident-1784711525"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-nuns-from-colombo-involved-in-accident-1784711525</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து இன்று(22.07.2026) பறைய நாளங்குளம் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> 

இந்த விபத்து இன்று(22.07.2026) பறைய நாளங்குளம் இரும்புப் பாலத்தில்இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>

நால்வர் படுகாயம்</h2><p>

இதன்போது வாகனத்தில் பயணித்த 4 அருட்சகோதரிகள் 
காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e991edaf-3073-406f-93b6-88be157b20d9/26-6a6097a854bd5.webp' /></p><p> </p><p> 

அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், மேலதிக
சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yA720c1vZEs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:13:23+00:00</updated>
        </entry>
    </feed>
