<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-31T11:01:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788173259"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788173259</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (31.08.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.&amp;nbsp;கடந்த சனிக்கிழமை (29.08.2026) 24 கரட் தங்கம் பவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (31.08.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>கடந்த சனிக்கிழமை (29.08.2026) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 378,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று அதன் விலை 1000 ரூபாயால் குறைந்து 377,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d52c7804-d009-4690-a3aa-82cad9e9c2e1/26-6a955da360653.webp' /></p><p>
</p><p>இதேவேளை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நீதிமன்றில் முன்னிலை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம்&nbsp;இணைப்பு</span></p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த நிலையில், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு,&nbsp; அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்னர் அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு</h2><p>மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு முன்னிலையாகவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef81f79b-105d-4f60-b87d-d7e4b25fd357/26-6a94f5e55ec15.webp' /></p><p>இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p>தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.&nbsp;</p><p> </p><p>இதன் பின்னர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:34:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதன்முறையாக 10 பில்லியன் டொலரை கடந்த இலங்கையின் ஏற்றுமதி வருவாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-export-earnings-10-billion-1788169850"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-export-earnings-10-billion-1788169850</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.இது ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.</p><p>இது ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 10.437 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.</p><h2>ஆண்டின் முதல் ஏழு மாதங்களில்&nbsp;</h2><p>
</p><p>
 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க, ஜூலை 2026இல் நாட்டின் ஏற்றுமதி செயல்திறன் குறித்த புள்ளிவிவரங்களை, இன்று (31.08.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0cf27d-4208-4023-ba00-fe0e94d01ecb/26-6a9557c303394.webp' /></p><p>
 

ஓர் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கை 10.437 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என்று அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T10:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் ஆடம்பர விடுதியில் பதுங்கியிருந்து நாட்டை உலுக்கிய பிரபல குற்றவாளி! அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9-underworld-figures-return-to-the-srilanka-1788142649"></link>
            <id>https://tamilwin.com/article/9-underworld-figures-return-to-the-srilanka-1788142649</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்ட &#039;வெல்லே சாரங்கா&#039; என்று அழைக்கப்படும் சாரங்க பிரதீப் எனும் பிரபல பாதாள உலகக்குற்றவாளியை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்ட 'வெல்லே சாரங்கா' என்று அழைக்கப்படும் சாரங்க பிரதீப் எனும் பிரபல பாதாள உலகக்குற்றவாளியை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) வழங்கிய உளவுத்தகவல்களின் அடிப்படையில் டுபாயில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் வைத்து டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p>
இந்நிலையில், வெல்லே சாரங்கா உள்ளிட்ட ஒன்பது குற்றவாளிகள், அடுத்த சில வாரங்களில் இலங்கைக்குக் அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>இரகசியமாக போதைப்பொருட்களை அனுப்பும் நடவடிக்கை</h2><p>

இவர்கள் டுபாயில் பதுங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இலங்கைக்குள் போதைப்பொருட்களை இரகசியமாக அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b60a63f9-fd72-4d93-be35-ad67e57efe84/26-6a9557e600975.webp' />&nbsp;</p><p>

மேலும், வெல்லே சாரங்கா மீது கொலை, போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல், மிரட்டிப்பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>

மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் அதிகாரிகள், பாதாள உலகத்தலைவரான லலித் கண்ணங்கராவை கைது செய்வதற்காக டுபாய்க்கு சென்று, அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இந்த நடவடிக்கையில் ​​மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள், டுபாய் பொலிஸ் அதிகாரிகளுக்கு வெல்லே சாரங்கா என்ற பாதாள உலகத் தலைவர் குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளனர்.</p><p>

அதன்படி, டுபாய் பொலிஸார் பல வாரங்களாக நடத்திய தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, டுபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த வெல்லே சாரங்கா உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.</p><h2>ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி போதைப்பொருள் கடத்தல்&nbsp;</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட நேரத்தில், இந்த குற்றவாளிகளிடமிருந்து கொக்கைன் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661e7bb7-d6be-40c6-b9ab-426792b96809/26-6a9557e6aac11.webp' /></p><p>
வெல்லே சாரங்கா ஆடம்பர ஹோட்டல்களில் தங்கியிருந்தபடியே பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>

ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த கடத்தல்காரர்களுடன் இணைந்து, போதைப்பொருட்களை இழுவைப் படகுகளில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பும் கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>
போதைப்பொருள் தகராறு காரணமாக மோதரை பகுதியில் எவோனி சுதர்ஷனி பெர்னாண்டோ என்ற பெண்ணை சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மட்டக்குளிய, கொட்டஹேன, மோதரை உள்ளிட்ட பல பகுதிகளில் பல கொலைகளை இயக்கியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>

தற்போது டுபாய் பொலிஸ் காவலில் உள்ள வெல்லே சாரங்கா உள்ளிட்ட 9 குற்றவாளிகளை விரைவாக இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து இலங்கை பொலிஸாருடன் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-arrivals-crossed-1-5-million-in-sl-1788169654"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-arrivals-crossed-1-5-million-in-sl-1788169654</id>
            <summary type="text">நாட்டிற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15 இலட்சத்திற்கும் அதிகமான&amp;nbsp;சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக&amp;nbsp;சுற்றுலா அபிவிருத்தி அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15 இலட்சத்திற்கும் அதிகமான&nbsp;சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக&nbsp;சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு 1,517,296 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p>அதேவேளை, ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 173,878 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><h2>சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p>
</p><p>
 

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,781 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0162704b-a72d-40f7-b6aa-2482332bb8d8/26-6a9552ec92c21.webp' /></p><p>
</p><p>
 

இரண்டாவதாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ளனர் (18,197 பயணிகள்).

 

மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).</p><h2>அதிகரிப்பு</h2><p>மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca490d8-a655-4f99-af37-f8942920502a/26-6a9552ed4d444.webp' /></p><p>அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).</p><p>மேலும், இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது பெப்ரவரி மாதத்திலாகும். (279,328 பயணிகள்).</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாணசபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-election-1788170534"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-election-1788170534</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
</p><p>
பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.</p><p>

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட வினாவொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் மேற்குறித்த கருத்தை ஊடகங்களுக்கு முன்வைத்திருந்தார்.</p><h2>யோசனை முன்வைப்பு</h2><p>
</p><p>
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளது.</p><p>

பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையான யோசனைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவும் முன்வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc1d08a-59c6-4724-b459-f0215d4d5866/26-6a9553187af46.webp' /></p><p>
</p><p>
முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்குமாறு செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமான விடயமாகும்.</p><h2>தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம்</h2><p>
</p><p>
மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

ஏனெனில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்திச் செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது.
</p><p>
தேர்தல் முறைமை குறித்து நாடாளளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும்.

அப்போது தான் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:12:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டிய சொகுசு ஹோட்டல்! ஓய்வுநிலை விரிவுரையாளர் வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-anuradhapura-1788168918"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-anuradhapura-1788168918</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் இருந்ததாகவும், அவரின் ஆலோசனைகளுக்கு அமையவே கோட்டாபய ராஜபக்ச நாட்டை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் இருந்ததாகவும், அவரின் ஆலோசனைகளுக்கு அமையவே கோட்டாபய ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கோட்டாபய ராஜபக்சவின் பல்வேறு செயற்பாடுகளும் குறித்த பெண்ணின் ஆலோசனைகளுக்கு அமையவே இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. </p><p>அமைச்சரவை நியமனம், சில அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கியமை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் அவரது ஆலோசனைப்படியே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவர் எவ்வாறு உறங்க வேண்டும் என்பதுகூட அந்தப் பெண்ணின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிடப்படும் பெண், அனுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான ‘ஞானக்கா’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஞானக்காவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டல் ஒன்று, அனுராதபுரத்தில் நுவரவெவ குளத்தை நிரப்பி அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவல்களை ருஹுணு பல்கலைக்கழகத்தின்&nbsp; ஓய்வுநிலை விரிவுரையாளரும்,&nbsp; பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடகப் பணிப்பாளருமான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p></p><h2>சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள்</h2><p>அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா? 
ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள்.</p><p>இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.
</p><p>நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. </p><p>இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது. குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e05147e-9951-449f-825b-ac96a0430e30/26-6a954ad85b05f.webp' /></p><p>நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது. இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல.</p><p>ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது. 
கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது. அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன.ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>
இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது. அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T10:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தாக மாறியுள்ள பட்டங்கள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-notice-to-kite-flyers-1788169264"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-notice-to-kite-flyers-1788169264</id>
            <summary type="text">&amp;nbsp;உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் மீண்டும் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

குறித்த இடங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் மீண்டும் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
</p><p>
குறித்த இடங்களுக்கு அருகில் பட்டம் விடுவதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் பிரதீப் ரத்னசேகர கூறியுள்ளார்.
</p><p>
பட்டம் விடுவதால் ஏற்படும் மின் அதிர்ச்சிகளால் ஆழமான தீக்காயங்களுடன் நோயாளிகள் அதிகளவு அனுமதிக்கப்படுவதாக அறிக்கைகள் வந்துள்ளன.</p><h2>பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலைகளில் கடுமையான தீக்காயங்களுடன் பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cf01b15-d26f-42be-bde5-dec06a621fe9/26-6a9551e818ab6.webp' /></p><p>

எனவே, பெரும்பாலான நேரங்களில், நாம் வாங்கும் நூல்கள் நீரில் நனைந்தாலோ அல்லது சில சமயங்களில் உலோகங்கள் கலந்து செய்யப்பட்ட மின்கடத்திகளாக செயற்படுகின்றன.
</p><p>
இவை உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் பட்டவுடன், அந்த நூல் வழியாக அதிக மின்சாரம் பாய்கிறது. இதன் காரணமாக திசுக்களும், இரத்த நாளங்கள், நரம்புகள் என அனைத்தும் தீக்காயமடைகின்றன.</p><p>

ஆகவே, பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T10:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் சில அரசியல்வாதிகளின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-opposition-s-intense-struggle-1788168345"></link>
            <id>https://tamilwin.com/article/the-opposition-s-intense-struggle-1788168345</id>
            <summary type="text">

சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயற்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயற்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார தெரிவித்துள்ளார்.</p><p>

பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

தற்போது நம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு மாத்திரமே காத்திருக்கின்றனர்.</p><h2>காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்&nbsp;</h2><p> </p><p>

வீடுகளில் கிளிகள், புறாக்கள் என செல்லப்பிராணிகளை மக்கள் கூடுகளில் வைத்து வளர்ப்பார்கள்.

அவை உணவு உண்ணும் போது அவற்றின் கூடுகளில் இருந்த உணவுகள் கீழே சிதறி விழும்.

இவ்வாறு விழும் உணவுகளுக்காகவே கூண்டுக்கு கீழே சிலப் பிராணிகள் காத்திருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993f7eab-4c44-436b-a1b0-768b8cf40471/26-6a954f3c54010.webp' /></p><p> </p><p>அப்படித்தான் இன்று நம் நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சியும்.

அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக சந்தர்ப்பங்களை நோக்கிக் காத்திருக்கின்றனர்.</p><p> 

தற்போதைய வெள்ளை ஆடைகளை களைந்து, சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்று அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/d7-8j-P_5fw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-31T09:54:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதவி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-archchuna-s-parliamentary-seat-to-supreme-court-1788165413"></link>
            <id>https://tamilwin.com/article/mp-archchuna-s-parliamentary-seat-to-supreme-court-1788165413</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31.08.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு&nbsp;</h2><p>இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b15f362-bce9-4035-87cb-7094f2ff3e3d/26-6a955207d95d1.webp' /></p><p>

எவ்வாறாயினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/price-of-bread-to-increase-by-rs-10-from-midnight-1788167217"></link>
            <id>https://tamilwin.com/article/price-of-bread-to-increase-by-rs-10-from-midnight-1788167217</id>
            <summary type="text">450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த&amp;nbsp; விலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
</p><p>குறித்த&nbsp; விலை திருத்தம் இன்று(31.08.2026) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4338dfa-b63f-4d44-91a5-d71d9bef138e/26-6a954695bc877.webp' /></p><p>

கோதுமை மாவுக்கான விலை 17 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-strait-of-hormuz-crude-oil-prices-1788166372"></link>
            <id>https://tamilwin.com/article/attack-strait-of-hormuz-crude-oil-prices-1788166372</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விலைகள் 2 வீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹோர்முஸ் நீரிணையில உள்ள ஈரானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விலைகள் 2 வீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஹோர்முஸ் நீரிணையில உள்ள ஈரானின் 'லராக்' தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை
ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்
அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதால் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 2.21 (2.51%) டொலராக உயர்ந்து தற்போது 90.31
ஆக பதிவாகியுள்ளது.</p><h2>எண்ணெய் விநியோகம்</h2><p>அமெரிக்க WTI மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 1.83 (2.19%) டொலராக உயர்ந்து தற்போது 85.23 டொலராக ஆக பதிவாகியுள்ளது.</p><p>

மேலும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் எதிர்வரும்
நாட்களில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6357fa47-6c4c-474f-9d29-562ea840f47d/26-6a9543c3b2141.webp' /></p><p>

கடந்த ஜூலைக்குப் பிறகு ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கா நடத்திய முதல் நேரடித்
தாக்குதல் இதுவாகும். </p><p>ஈரானும் இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளதால் இரு
நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் 6ஆவது மாதமாகத் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளப் பேரழிவு: காணாமல் போனோர் எண்ணிக்கை 4247 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flash-flood-disaster-in-nepal-1788166437"></link>
            <id>https://tamilwin.com/article/flash-flood-disaster-in-nepal-1788166437</id>
            <summary type="text">நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4247 ஆக உயர்ந்துள்ளது. 

அத்துடன், இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4247 ஆக உயர்ந்துள்ளது. </p><p>

அத்துடன், இதுவரை குறைந்தது 903 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி
செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2502 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
இதில் காணாமல் போன 4247 பேரில் 3655 பேர் நேபாள குடிமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>

இதேவேளை, 592 வெளிநாட்டினரைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39869a7a-c0d0-4a6e-8b6a-8f6cce14c356/26-6a9541642cabe.webp' /></p><p> </p><p>

காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கானோர் நேபாளத்தின் நீர்மின் நிலையங்களில்
பணிபுரிந்த ஊழியர்கள் ஆவர்.</p><p> வெள்ளம் சூழ்ந்தபோது இவர்கள் சிலர் சுரங்கங்களுக்குள் பணிபுரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
</p><p>
இந்த நிலையில், இது குறித்த சீன அரசு ஊடகங்களின் தகவல்படி, திபெத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 546 பேர் காணாமல் போயுள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/change-in-three-wheeler-fares-1788164089"></link>
            <id>https://tamilwin.com/article/change-in-three-wheeler-fares-1788164089</id>
            <summary type="text">எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்&amp;nbsp;முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்&nbsp;முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எரிபொருள் விலை திருத்தம்&nbsp;</span></p><p>நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45ab675a-0050-4443-aaf5-516f2c40704f/26-6a953c15687f4.webp' /></p><p>இதற்கமைய, அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p>இதற்கமைய, முதலாவது கிலோ மீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 90 ரூபாயும் அடங்கிய பழைய கட்டணத்தையே தொடர்ந்தும் அறவிடப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாவால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>மேலும், முச்சக்கர வண்டி கட்டணங்களைக் முறைப்படுத்துவது தொடர்பான அனைத்து விலை விபரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாரித்து அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதற்கமைய, சட்டபூர்வமான கட்டணத் திருத்தம் வரும் வரை,&nbsp; பழைய கட்டணத்தையே தொடர்ந்தும் அறவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T08:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தப்பியோடிய 24 வருட சிறைத்தண்டனைக் கைதி : தீவிர நடவடிக்கையில் பொலிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-to-24-years-in-prison-escapes-in-jaffna-1788164219"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-to-24-years-in-prison-escapes-in-jaffna-1788164219</id>
            <summary type="text">யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர
நடவடிக்கையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய
குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.
</p><h2>சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கை</h2><p>
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி
கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/291b2f04-a340-46d3-9518-37ba51e0187c/26-6a953b2e759d4.webp' /></p><p>
கைதி தப்பி சென்ற நிலையில் சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p>
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VgOna0Jso78" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-31T08:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் வீடொன்றை தாக்கிய கும்பல்: உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resignation-of-a-local-government-council-member-1788164554"></link>
            <id>https://tamilwin.com/article/resignation-of-a-local-government-council-member-1788164554</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட
குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச
சபை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட
குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச
சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர்
பதவியில் இருந்து விலகியுள்ளார். </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>


நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின்
மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது.</p><h2> 

பதவி விலகல்</h2><p>
இந்த தாக்குதல் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் உறுப்பினர் தலைமையிலான கும்பல் ஒன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f50df5c9-5f7a-4c7a-9a4a-b746974443c1/26-6a953b1467d3b.webp' /></p><p> </p><p>

இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக
அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கும்பலை மடக்கி
பிடித்துள்ளனர்.</p><p> 

இதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், குறித்த நபர் தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பதவி விலகல் செய்வதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T08:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் நாய் இறைச்சி விற்பனை குறித்த தகவலுக்கு வெளியான விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dog-meat-sales-in-sainthamaruthu-1788161839"></link>
            <id>https://tamilwin.com/article/dog-meat-sales-in-sainthamaruthu-1788161839</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் &#039;நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக&#039; சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பிரதேசத்தில் 'நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக' சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்மைத்தன்மையும் இல்லை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
கடந்த 29 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ்
உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை
மேற்கொண்டனர்.</p><p>

இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.</p><h2>சுகாதார நடைமுறை</h2><p> </p><p>குறித்த
இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட
கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்ப்ட்டமை
கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7be27a7-bb7c-472c-bed8-21b6b8aa71a3/26-6a953a8d544d6.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக்
கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.
</p><p>
எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில்
நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல்
செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>போலியான தகவல்</h2><p>
</p><p>
இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்,
பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்
நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0baa15b-86cb-4c39-aea2-5fc66bc95eb6/26-6a953a8e07afa.webp' /></p><p>
</p><p>
எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக
வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும்
கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-front-of-mannar-district-secretariat-1788163973"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-front-of-mannar-district-secretariat-1788163973</id>
            <summary type="text">மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பை
உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பை
உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த போராட்டம் இன்று (31.08.2026) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றது.</p><p>

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி, காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட
செயலகத்திற்கு முன்பாக சுகயீன விடுமுறை போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e8dfa18-73d1-4ed0-84af-26e3b39161cc/26-6a9539c864134.webp' /></p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்</h2><p>
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தல், உரிமைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு
காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டது.
</p><p>
மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்
சேவை நிலை, பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக
நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட
வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
</p><p>
குறித்த போராட்டத்தில் மாவட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற பல
நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து
கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca487d8-e4b3-434d-b3ee-f7b90cd91b3e/26-6a9539c933a37.webp' /></p><h2>மகஜர் கையளிப்பு</h2><p>போராட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஐ சந்தித்து ஜனாதிபதிக்கு
கையளிக்க வேண்டிய மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச
திணைக்களங்களில்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் ஸ்தம்பிதம்
அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T08:22:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் விவசாய குளங்களை அழிப்பதை உடன் நிறுத்தி குடிநீருக்கு தனி நீர் திட்டம் அமைக்கவும் - விவசாயிகள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/separate-water-project-for-drinking-water-1788158587"></link>
            <id>https://tamilwin.com/article/separate-water-project-for-drinking-water-1788158587</id>
            <summary type="text">உன்னிச்சைக் குளத்தில் இருந்து &#039;குடிநீர்&#039; என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை உறிஞ்சுகின்றது என விவசாயிகள் சுட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உன்னிச்சைக் குளத்தில் இருந்து 'குடிநீர்' என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை உறிஞ்சுகின்றது என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இதனால் நீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதால், விவசாய குளங்களில் இருந்து குடிநீரை பெறுவதை நிறுத்தி குடிநீருக்கு ஒரு தனி நீர் திட்டம் அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
மாவட்ட விவசாயிகள் இன்றைய தினம் (31.08.2026) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.</p><h2>நீர் குறைவு</h2><p> </p><p>

குறித்த அறிக்கையில் மேலும்,

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலையினால் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளதுடன் விவசாய குளங்களில் இருந்து நீர் மட்டம் வரலாறு காணமுடியாதளவிற்கு நீர் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48fe82a2-0e89-43da-87a1-4fd3f4a7cc1e/26-6a95367379e47.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் மாவட்டத்தில் 65 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்ற போதிலும் 40 வீதமான விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கப்படுகின்றது. </p><p>

இந்த மாவட்டத்தில் பெரிய குளமான உன்னிச்சைக் குளத்தில் இருந்து விவசாயத்துக்கு நீர்பாசனம் வழங்கப்படுகின்றதுடன் இந்த குளத்தில் இருந்து மாவட்டத்திலுள்ள மக்களுக்கு குடிநீரை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை பெற்று வருகிறது.
</p><p>
இதனால் விவசாயத்திற்கான நீரை பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஒரு இலாப நோக்கு நிறுவனம். ஆனால் இலாபத்திற்காக ஒரு மாவட்டத்தின் உணவு உற்பத்தியும் எதிர்கால தலை முறையையும் பலி கொடுக்க முடியாது.</p><h2>விவசாயத்திற்கு தனி கொள்கை</h2><p> </p><p>

இரணைமடுவில் விவசாயிகள் ஒன்றுபட்டு எதிர்த்த பின்னர் விவசாய குளங்களில் கை வைக்காதீர்கள் என்ற பாடம் கிடைத்தது. அதை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு, வுனியாவில் தனி குடிநீர் நீர் தேக்கமும் அமைக்கப்பட்டு குடிநீருக்கு தனி கொள்கையும், விவசாயத்திற்கு தனி கொள்கையும் பின்பற்றப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b4dbd56-40f2-4a10-8b52-712b5e652b60/26-6a9536742f7d6.webp' /></p><p>
</p><p>
ஆனால் மட்டக்களப்பில் மட்டும் ஏன் இந்த இரட்டை நீதி? இங்கு 65 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். ஆனால் 40 வீதமான விவசாய நிலங்களுக்கு மட்டும் நீர்ப்பாசனம் வழங்கப்படுகின்றது.</p><p> இவ்வாறு இருக்கையில் உன்னிச்சைக் குளத்தில் இருந்து 'குடிநீர்' என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் சபை நீரை உறிஞ்சுகிறது. 

இதனால் விவசாயிகளின் விவசாயம் யால, மகா போகங்கள் தண்ணீரின்றி அழிவு, வெள்ள காலத்தில் விவசாயிகள் மாத்திரமில்லாமல் கட்டுமானங்களும் அழிவடையும் நிலை, கடன் சுமையில் விவசாயிகளின் இளம் பிள்ளைகளின் கல்வியும் எதிர்காலமும் கேள்விக்குறி, மாவட்ட பொருளாதாரம் சீரழிவு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறதுடன் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T08:08:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவனகல சீனி தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/closed-sevanagala-sugar-manufacturing-factory-1788162182"></link>
            <id>https://tamilwin.com/article/closed-sevanagala-sugar-manufacturing-factory-1788162182</id>
            <summary type="text">அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட்ட செவனகல சீனி தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரும் வரை காலவரையறையின்றி மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட்ட செவனகல சீனி தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரும் வரை காலவரையறையின்றி மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.</p><p>

ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பைக் குறைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஊழியர்களுக்கு விடுமுறை&nbsp;</h2><p>
</p><p>
கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணி முதல் செவனகல பிரிவின் சில ஊழியர்கள் தமது கடமைகளிலிருந்து விலகி, உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43e2575-b915-41d8-aed6-726bae88342d/26-6a95362b0721c.webp' /></p><p> </p><p>இதன் காரணமாக ஏற்படும் நிதி இழப்பைத் தடுப்பதற்காக கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
</p><p>
அத்துடன், கடந் 28 ம் திகதி மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>

எவ்வாறாயினும், தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் ஊழியர்கள் வழக்கம் போல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததன் காரணமாகவே, இவ்வாறு தொழிற்சாலையைக் காலவரையறையின்றி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><h2>இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமை</h2><p>
</p><p>
கடந்த காலங்களில் இரண்டு பில்லியன் ரூபா லாபத்துடன் இயங்கிய செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலை, தற்போதைக்கு நட்டத்தில் இயங்குவதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1362b596-7378-407b-b12c-bfb5fe32dd92/26-6a95362bae7f8.webp' /></p><p>அத்துடன் கடந்த வருடத்துக்கான ஊக்குவிப்பு போனஸ் கொடுப்பனவும் இதுவரை வழங்கப்படாத நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.</p><p>
எனினும் மறு அறிவித்தல் காலவரையறையின்றி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதன் காரணமாக சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக தொழில்வாய்ப்புகளை இழக்க நேர்ந்துள்ளது.</p><p>அதற்கு மேலதிகமாக தொழிற்சாலையை நம்பி வாழ்ந்த சுமார் நான்காயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T08:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு நிதியுதவி வழங்க முன்வந்த அநுர: எச்சரிக்கை விடுத்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-making-false-promises-namal-1788159149"></link>
            <id>https://tamilwin.com/article/anura-making-false-promises-namal-1788159149</id>
            <summary type="text">அநுர அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேபாளத்திற்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்றும் இலங்கையில் மக்களை ஏமாற்றியது போன்று நேபாளத்தையும் இந்த அரசாங்கம் ஏமாற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>விவசாயிகளுக்கு கூறிய பொய்யை போன்று நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் வழங்குவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டுவிட வேண்டாம் என நாமல் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.</p><p>டித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் தகரம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் வீட்டிற்கு 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ae7eb8-8410-4348-8953-54bc8409d216/26-6a9524afea737.webp' />&nbsp;&nbsp;</p><p>
இதேபோன்று நேபாளத்திற்கும் இந்த அரசாங்கம் பொய் வாக்குறுதி அளித்து விட்டதோ தெரியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டு மக்களை ஏமாற்றக்கூடாது எனவும் நெல் கொள்வனவு செய்தால் அதற்கான உரிய விலையை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நாட்டு மக்களை ஏமாற்றும் அநுர அரசாங்கம்</h2><p>
</p><p>மேலும் எரிபொருள் விலைகளை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
அரசாங்கம் எரிபொருள் விலையை குறைப்பதாகவும் வரிகளை குறைப்பதாகவும் கூறிய ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட போதிலும் நாளுக்கு நாள் வரி அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc732d0c-d76d-4b4d-a49b-4f8602834d0b/26-6a953269537ba.webp' /></p><p>
</p><p>வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கம் வரிகளை குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சி பீடம் ஏறிய போதிலும் நாளுக்கு நாள் வரி அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
உள்நாட்டு விவசாயிகள் தொழில் முனைவோர் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T07:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டனில் குளவி கொட்டு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/17-people-stung-by-wasps-admitted-to-hospital-1788161337"></link>
            <id>https://tamilwin.com/article/17-people-stung-by-wasps-admitted-to-hospital-1788161337</id>
            <summary type="text">ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வனராஜ தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (31.8.2026) காலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வனராஜ தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இன்று (31.8.2026) காலையில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழு
மீது குளவிகள் தாக்கியதில் காயமடைந்த 16 பெண் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும்
ஒரு ஆண் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>குளவி கொட்டு&nbsp;</h2><p>

குளவி தாக்குதலில் காயமடைந்த ஒரு தோட்டத் தொழிலாளி ஊடகங்களிடம் கூறுகையில்,
ஹட்டன் காவல் பிரிவின் கீழ் உள்ள வனராஜ தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள 7ஆவது
தேயிலைத் தோட்டத்தில், ஒரு மரம் மற்றும் பாறையில் கட்டப்பட்டிருந்த குளவிக்
கூட்டிற்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் தாக்கப்பட்டதாக
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d6d022f-2f63-4047-9aa6-fd70e8695932/26-6a952d3f6db17.webp' /></p><p>
</p><p>
குளவியால் தாக்கப்பட்ட மற்றொரு தோட்டத் தொழிலாளி கூறுகையில், புகையை உருவாக்கி
குளவிகளால் தாக்கப்பட்ட குழுவை காப்பாற்ற முயன்றபோதிலும், புகையை உருவாக்கிய
குழுவையும் குளவிகள் தாக்கியதாக தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:29:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கோரி சபாநாயகருக்கு தயாசிறி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dayasiri-calls-for-clarification-on-allegations-1788161256"></link>
            <id>https://tamilwin.com/article/dayasiri-calls-for-clarification-on-allegations-1788161256</id>
            <summary type="text">&amp;nbsp;பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.</p><p> 
பிரதம நீதியரசரின் குடும்பச் சொத்துக்கள், தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நஷ்டஈடு வழக்கில் அவரது பங்களிப்பு உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகளைப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சபையில் முன்வைத்திருந்ததாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
பிரதம நீதியரசரின் மகனுடன் தொடர்புடைய 185 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் கொழும்பிலுள்ள ஆடம்பர வீடொன்றைப் பெற்றுக்கொண்டமை.</p><h2>நீதித்துறை நடவடிக்கை</h2><p> </p><p>
சொத்து பிரகடனங்கள் மற்றும் அவற்றின் வருமான மூலங்கள் குறித்த சந்தேகங்கள்.
பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள்.</p><p>
எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்டஈடு வழக்கு தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்த கரிசனைகள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18fcf161-ba07-417d-8b24-bf69b425d8e9/26-6a952ceaeaa6d.webp' /></p><p>
குடும்பச் சொத்துக்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் நடைமுறைகளுக்கும் இடையே முறையற்ற செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் என சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>
இக்குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்துத் தான் எந்தவொரு முடிவிற்கும் வரவில்லை என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>இவற்றை அலட்சியப்படுத்துவது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என எச்சரித்துள்ளார். </p><p>
இக்குற்றச்சாட்டுகள் உண்மை எனக் நிரூபிக்கப்பட்டால், அவை நீதித்துறையின் சுயாதீனம், ஒழுக்கநெறிகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது பாரிய கேள்விகளை எழுப்பும் என்பதால், தகுதியான சுயாதீன அதிகாரசபைகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881fea96-e4bc-418d-8ecc-64b97407e5d5/26-6a952cea3e7fb.webp' /></p><p>
</p><p> மாறாக, இவை பொய்யானவை என்றால், நாடாளுமன்றத்தில் இதுபோன்று பகிரங்கமாகப் பேசப்பட்டது பிரதம நீதியரசரின் நற்பெயருக்கும் நீதித்துறையின் கண்ணியத்திற்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உண்மையைத் தெளிவுபடுத்துவது மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>பிரதம நீதியரசரையோ அல்லது நீதித்துறையையோ அவமதிக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், பொய்யாக இருந்தால் நீதித்துறை கட்டமைப்பின் நாணயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் நிறைவாகக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரித் திணைக்களத்திற்கு எதிரான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-cricketers-win-tax-battle-1788159834"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-cricketers-win-tax-battle-1788159834</id>
            <summary type="text">இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாக வீரர்களைக் கருதி, முன்நிகழ் நிபந்தனையுடன் வரி விதிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. </p><p>
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயத்தால் இன்று நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><h2>உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முயற்சி</h2><p>2024 அக்டோபரில், தேசிய கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘ஊழியர்கள்’ என வகைப்படுத்தி, அவர்களுக்கு முன் கூட்டிய தனிநபர் வருமான வரியை விதிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முயன்றது.</p><p>
தங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாகக் கருதக் கூடாது என்றும், தாங்கள் பல ஆண்டுகளாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாகவே' அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a853aad-a0ba-4866-a3ae-8b50f63781a5/26-6a95275b4665f.webp' /></p><p> 
ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், பணிக்கொடை, வருடாந்த விடுமுறை மற்றும் மகப்பேறு விடுமுறை போன்ற எந்தவொரு ஊழியர் சலுகைகளும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை வீரர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். </p><p>
இந்த முந்தைய திகதியிட்ட வரியை நடைமுறைப்படுத்தியதால் தங்களின் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதாக 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வீரர்கள் சத்தியக் கடதாசிகள் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.</p><h2>வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கிறார்களா..</h2><p> </p><p>
வீரர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்க முயல்கிறார்கள் என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே நிலவியதாகக் ஆண் கிரிக்கெட் வீரர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன குறிப்பிட்டார்.</p><p> 
வீரர்கள் வரி கட்டுவதைத் தவிர்க்கவில்லை என்றும், ஊழியர்களாகத் தவறாக வகைப்படுத்தப்பட்டு வரி வசூலிப்பதை மட்டுமே எதிர்த்து வழக்கு பதிவு செய்தார்கள் என தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1efa1638-4aee-495e-8fc6-fa6f70a06d17/26-6a952be0a2c58.webp' /></p><p> </p><p>
அண்மையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 'விளையாட்டு வீரர்கள்' அதிகாரப்பூர்வமாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாக' வகைப்படுத்தப்பட்ட போதிலும், அந்தத் திருத்தம் மனுதாரர்களுக்குப் பொருந்தாது என இறைவரித் திணைக்களம் வாதிட்டது.</p><p> 
எனினும், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இறைவரித் திணைக்களத்தின் தீர்மானத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.</p><h2>ஆண் கிரிக்கெட் அணி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்</h2><p>ஆண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஷெனாலி டயஸ், சிதத் கஜநாயக்க ஆகியோருடன் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன முன்னிலையானார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34cf5c39-7c83-426b-a471-fd2d3bbb4815/26-6a952be15a2aa.webp' /></p><p> பெண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ கப்ராலுடன் விகும் ஜெயசிங்க, மணித் தசநாயக்க ஆகியோர் முன்னிலையாகினார்கள்.</p><p>
 அரசுத் தரப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜெயசிங்க முன்னிலையாகினார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா முன்னிலையாகினார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:23:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: தாய்மார்களின் கதறல்களுக்கு தீர்வு இல்லையே..! ஐ.நா. பிரதிநிதி கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-enforced-disappearances-1788159562"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-enforced-disappearances-1788159562</id>
            <summary type="text">வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவம் என
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்கான
பணிக் குழு பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் கவலை வெளியிட்டுள்ளார். </p><p>

நேற்று(30.08.2026) யாழ்ப்பாணம் - தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளால் ஏற்பாடு செய்த சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை
முன்னிட்டு “சர்வதேச நீதியை நோக்கிய பயணம்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற
சர்வதேச மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் கதறல்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்களின் துயரங்களை நன்கு அறிவோம்.

தமது பிள்ளைக்கு என்ன நடந்தது என அறியாமலே அம்மாக்கள் இறக்கின்ற சம்பவங்கள்
அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில்
தளர்வு நிலை இருப்பதை மறுக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1880c833-93c4-4a1b-88f1-c172ad3e983f/26-6a9527410c507.webp' /></p><p>
</p><p>

இதனை அறிந்த நாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்புகளுடன் இணைந்து வேலை
செய்துவருகின்ற நிலையில், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள்
தொடர்பில் இறுதியான எண்ணிக்கையை பெற முடியவில்லை.</p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை</h2><p>
இலங்கையில் விடுதலைப் புலிகள் காலம் மற்றும் ஜேவிபியால் காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை நாம் சேகரித்து வைத்துள்ள நிலையில்,
வெள்ளை வான் காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் பணத்துக்காக என பல வடிவங்களில்
இலங்கையில் காணாமல் ஆக்கப்படுதல் இடம்பெற்றிருக்கின்றது.
</p><p>
வடக்கு - கிழக்கில் அரச படைகளால் காணி இழந்த மக்கள் போராடி வருகிறார்கள்,
அவர்களுடைய ஆதங்களையும் கேட்டு அளித்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93dccbda-9ae7-4f1c-a45f-e0bb21e663c6/26-6a952741bcda0.webp' /></p><p>
</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இந்த சர்வதேச மாநாடு ஆனது நாம்
அவர்களுடன் நெருக்கமாவதற்கும் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.


எமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் மனிதாபிமான ஆணை உள்ளது, வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக அங்கத்துவ
நாடுகளை இணைக்க முடியும்.</p><p>

இதுவரை 61 ஆயிரத்து 626 வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில்100 மேற்பட்ட
நாடுகளுக்கு அனுப்பியுள்ளதுடன், தொடர்ந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்
தொடர்கிறது.
</p><h2>
சாட்சியங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..</h2><p>

முழுமையான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இருந்தும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் தரவுகளை அரச அதிகாரிகள் மறைக்க முயற்சித்தமை மட்டுமல்லாது
மறைத்தும் இருக்கிறார்கள்.
</p><p>
அதன் பாதிப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் உற்பட அவர்களின்
குடும்பமும் அதன் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc632bd1-482e-470f-aefc-6f22405ef129/26-6a95274279f41.webp' /></p><p>
</p><p>
ஆகவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில்
தமது முழுமையான பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்பதை கூறிக் கொள்வதுடன், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில் அனைத்து தரப்பினர்களும் தமது
முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.
</p><p>

இந்த மாநாட்டில் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா தூதரகங்களைச் 
சேர்ந்த பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், ரவிகரன், 
ஸ்ரீநேசன் , வடக்க மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், தமிழ் மக்கள்
கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய
மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்னம் சுகாஸ், போராளிகள் கட்சியின்
தலைவர் வேந்தன், ஈ பி ஆர் எல் தலைவர் சுரேஷ் பிரேம சந்திரன், உட்பட
மாதகுருமார்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:04:01+00:00</updated>
        </entry>
    </feed>
