<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-12T18:38:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீசனிங் பவுடரில் போதைப்பொருள்..! 2 நாடுகள் அதிரடி நடவடிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/poppy-seed-blend-seasoning-powder-banned-1786557882"></link>
            <id>https://tamilwin.com/article/poppy-seed-blend-seasoning-powder-banned-1786557882</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான டிரேடர் ஜோஸின் &quot;எவரிதிங் பட் தி
பாகல்&quot; என்ற சீசனிங் பவுடருக்கு சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் தடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான டிரேடர் ஜோஸின் "எவரிதிங் பட் தி
பாகல்" என்ற சீசனிங் பவுடருக்கு சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் தடை
விதித்துள்ளன.

இந்தச் சீசனிங் பவுடரில் சேர்க்கப்பட்டுள்ள பாப்பி விதைகளில் போதைப்பொருளான
மார்பின் மற்றும் கோடீன் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
பொப்பி விதைகள் இயற்கையிலேயே போதைத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், அறுவடைக்
காலங்களில் தாவரத்தின் பாலுடன் தொடர்பு ஏற்படுவதால் போதைப்பொருள்களின் வீரியம்
அதில் கலக்க வாய்ப்புள்ளது.</p><p></p><p>
</p><h2>&nbsp;தென் கொரியாவில் தடை</h2><p>
போதைப்பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இணையதளங்களில் விற்கப்பட்ட
20-க்கும் மேற்பட்ட சீசனிங் பவுடர் விளம்பரங்களை சிங்கப்பூர் போதைப்பொருள்
தடுப்புப் பிரிவு அகற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c3b87ca-4967-4037-82ff-31a939cd4de9/26-6a7cb6bbcf09a.webp' /></p><p>

மேலும், கைவசம் உள்ள பொருட்களை உடனடியாக அழிக்குமாறு பொதுமக்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் இதை வாங்கி வந்த
நிலையில், ஆய்வில் போதைப்பொருள் கலப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து
சியோல் நிர்வாகமும் இதற்கு முழுமையான தடை விதித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T18:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issues-faced-by-the-marine-fishers-of-mannar-1786554013"></link>
            <id>https://tamilwin.com/article/issues-faced-by-the-marine-fishers-of-mannar-1786554013</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கடற்றொழில், நீரியல்
மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்
இடம்பெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பேசப்பட்டது.</p><p>அத்தோடு, தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு இடை
நிறுத்தி வைக்கப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக அனுமதியை மீண்டும் வழங்குவது
குறித்தும் ஆராயப்பட்டது.</p><p></p><h2>கடற்றொழில் நடவடிக்கை</h2><p>
</p><p>கடற்றொழில் நடவடிக்கைகளின் போது சில தொழில்களுக்கான வழங்கப்படுகின்ற பாஸ்
நடைமுறை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு
அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் குறித்த தொழில்களுக்கு
அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை
விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/836dd8a2-1385-43e1-8836-ad075f405a15/26-6a7cb4d56571a.webp' /></p><p>
</p><p>
மேலும் மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள கண்டல் தாவரங்களை வெட்டி
கடற்றொழில் நடவடிக்கை களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் இதனால் எதிர் காலத்தில்
கடலரிப்பு ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் எனவே குறித்த கண்டல் தாவரங்களை
வெட்டுகின்ற கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என
கலந்து கொண்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்லாஹ்வுக்கே புகழ்..! ஹோர்முஸ் குறித்து ட்ரம்பின் பரபரப்பு பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praise-be-to-allah-i-think-well-keep-it-trump-says-1786555216"></link>
            <id>https://tamilwin.com/article/praise-be-to-allah-i-think-well-keep-it-trump-says-1786555216</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், </p><p>அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைப் பாராட்டிய ட்ரம்ப், அதனை “எஃகு சுவர்” என பலரும் அழைப்பதாகக் குறிப்பிட்டார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>மேலும், ஈரானால் இதற்கு எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கிலிருந்து உலக நாடுகளுக்கு எரிசக்தி உள்ளிட்ட பொருட்களின் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக, அமெரிக்கா கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p> எனினும், ஈரான் இந்தக் கூற்றை கடுமையாக நிராகரித்து வருகிறது.

ஈரானிடம் தற்போது கடற்படை மற்றும் விமானப்படை இல்லை என்றும், அந்நாட்டு வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறினார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117083017680231697/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பெருமளவில் சிதைக்கப்பட்டு பின்வாங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தனது பதிவின் இறுதியில், “ஈரான் இனி மத்திய கிழக்கின் கொடுமைப்படுத்துபவன் அல்ல” என்று கூறிய ட்ரம்ப், “அல்லாஹ்வுக்கே புகழ்!” என குறிப்பிட்டார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானின் நிபந்தனைகள்

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்பட வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.</p><h2>&nbsp;ட்ரம்ப் நிர்வாகம்</h2><p>
</p><p>
ஈரானின் புரட்சிகர காவல்படை, இந்த நிபந்தனைகள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை தனது முற்றுகை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானுடன் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a761fa3-315b-42a7-b701-a74250c99de6/26-6a7cad7eba04a.webp' /></p><p> </p><p>இது நவம்பர் இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்நிலையில், ஈரானுடன் “அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானில் பணவீக்கம் அதிகரித்து வருவதையும், அந்நாட்டிடம் பணம் இல்லை என்பதையும் அமெரிக்கா கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-08-12T17:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் இறுதிக்கட்டம்: நடுக்கத்தில் பிள்ளையான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-law-and-order-1786547574"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-law-and-order-1786547574</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் மிக முக்கியமான பிரதான விசாரணை நிறைவடைந்துள்ளது.நவுஃபர் மௌலவி உட்பட 24 எதிரிகளுக்கு எதிராகக் கொழும்பு மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் மிக முக்கியமான பிரதான விசாரணை நிறைவடைந்துள்ளது.</p><p>நவுஃபர் மௌலவி உட்பட 24 எதிரிகளுக்கு எதிராகக் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையான இருந்தார்கள் என்கின்ற அடிப்படையில் பிள்ளையான், சுரேஸ் சலே போன்றோர் விசாரிக்கப்படுகின்றனர்.அத்தோடு, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் தப்பித்துக் கொ்ணடு இருப்பதாக கூறப்படுகின்றது.</p><p>மேலும்,&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடைமுறைப்படுத்திய ஒரு இராணுவ அதிகாரி இன்னும் தப்பித்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் பின்னணி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றிய முழுமையான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F4tJB1jZvCA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T17:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தின் பெருமை தாய்லாந்தில் – அவுஸ்திரேலிய கராத்தே அணியில் யாழ் வீரர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-athlete-to-represent-the-australian-team-1786551564"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-athlete-to-represent-the-australian-team-1786551564</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகியுள்ளார்.</p><p>

இவர், இன்று(12) புதன்கிழமை தாய்லாந்தில் ஆரம்பமாகியுள்ள நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய அணியின் சார்பில் பங்கேற்றுள்ளார்.</p><h2>கராத்தே பாடசாலைகள்</h2><p>
</p><p>
சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த ரத்னம் ரோஸி ஹரிந்த், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்து, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e82499-1bd9-4cba-97de-9b0ec16f4746/26-6a7ca18a8f2dd.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிரிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.</p><p>

தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வரும் இவர், கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ளதுடன், சென்செயாகவும் செயற்பட்டு வருகின்றார்.
</p><p>
மேலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கராத்தே பாடசாலைகள் ஊடாக 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சிகளை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-12T16:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கனரக வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-killed-tipper-truck-three-wheeler-in-vavuniya-1786552662"></link>
            <id>https://tamilwin.com/article/one-killed-tipper-truck-three-wheeler-in-vavuniya-1786552662</id>
            <summary type="text">வவுனியா-&amp;nbsp; சூடுவெந்தபுலவு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்று(12.8.2026) மால...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா-&nbsp; சூடுவெந்தபுலவு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது இன்று(12.8.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>

வவுனியாவில் இருந்து சென்று கொண்டிருந்த கனரக வாகனம் சூடுவெந்தபுலவு
பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில்
இந்த விபத்து இடம்பெற்றது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/630f94b4-b010-4307-ba36-4d11f4764e17/26-6a7ca158e2010.webp' /></p><p> மேலும் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
விபத்து தொடர்பாக வவுனியா, உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T16:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஸ்கெலிய ஓல்டன் தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/leopard-carcass-recovered-at-maskeliya-1786544986"></link>
            <id>https://tamilwin.com/article/leopard-carcass-recovered-at-maskeliya-1786544986</id>
            <summary type="text">மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்டத்தின்
கிங்கோரா பிரிவில், சிறுத்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(12...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்டத்தின்
கிங்கோரா பிரிவில், சிறுத்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இன்று(12) பிற்பகல் சுமார் 2 மணியளவில் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த
தொழிலாளர்கள் குழுவினர், வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில்
கிடப்பதை அவதானித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, தொழிலாளர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர், தோட்ட முகாமையாளர் சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமாரவிற்கு அறிவித்துள்ளார்.</p><p></p><h2>சடலம் கண்டெடுப்பு</h2><p>
</p><p>
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் வனவிலங்கு
அதிகாரிகள் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed1ae3d3-7804-49d8-938b-7f2ec8c31cb6/26-6a7c88b2ed527.webp' /></p><p>

நல்லத்தண்ணியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளின் தலையீட்டுடன், இறந்த நிலையில்
காணப்பட்ட சிறுத்தையின் சடலம் தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச்
செல்லப்பட்டுள்ளது.
</p><p>எவ்வாறாயினும், சிறுத்தை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை
உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T15:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு கும்பலுடன் தொடர்புடைய நபரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-at-peko-saman-s-mother-mitheniya-1786542777"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-at-peko-saman-s-mother-mitheniya-1786542777</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.</p><p>

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8.2026) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4cd45d-559a-4438-89d9-b556e587d15c/26-6a7c7fed2b8bb.webp' /></p><p>கேஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், பெக்கோ சமன் என்ற நெதுன்கொட நிர்மல பிரசன்ன என்பவரும் அக்குழுவில் இருந்தார்.</p><p>பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>இதேவேளை, பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T14:07:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூற்றாண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய போர்க்கப்பலின் சிதைவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wreckage-of-a-british-warship-discovered-1786541666"></link>
            <id>https://tamilwin.com/article/wreckage-of-a-british-warship-discovered-1786541666</id>
            <summary type="text">கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான
&#039;ஹெச்.எம்.எஸ் டைகர்&#039; என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான
'ஹெச்.எம்.எஸ் டைகர்' என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழு
கண்டுபிடித்துள்ளது.
</p><p>
1908-ஆம் ஆண்டு கடற்படைப் பயிற்சியின் போது, மற்றொரு போர்க்கப்பல் மீது
தற்செயலாக மோதியதில் 'ஹெச்.எம்.எஸ் டைகர்' இரண்டாகப் பிளந்து கடலில்
மூழ்கியது.

இதில் 57 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>சிதைவுகள்&nbsp;</h2><p>

'புரோஜெக்ட் எக்ஸ்ப்ளோர்' என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த லியோ ஃபீல்டிங்
மற்றும் டான் மெக்முலன் ஆகியோர் ஐந்து ஆண்டுகள் வரலாற்று ஆவணங்களை ஆய்வு
செய்து, வைட் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் இந்த போர்க்கப்பலின்
எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701ffd79-4e0d-4689-88d6-bb364ba6064d/26-6a7c7968ca0e1.webp' /></p><p>

தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள 'ஆயுதப் படைகள்
சட்டத்தின்' கீழ், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க போர்க்கப்பல் சிதைவுகள்
சேதப்படுத்தப்படாமல் 'பாதுகாக்கப்பட்ட பகுதியாக' அறிவிக்கப்பட்டு
பராமரிக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியில் 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/day-50-third-phase-of-semmani-mass-grave-1786540493"></link>
            <id>https://tamilwin.com/article/day-50-third-phase-of-semmani-mass-grave-1786540493</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(12.08.2026) நடைபெற்றுள்ளது.

இதன்போது 05 மனித எலும்புக்கூடு இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(12.08.2026) நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன்போது 05 மனித எலும்புக்கூடு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><h2>அகழ்வு பணிகள் முன்னெடுப்பு</h2><p>
அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007248ea-719e-4e6a-ab86-e8f4346417c2/26-6a7c74eb9693c.webp' /></p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 544 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13de944-ebe8-47f2-bd59-5c7ac3866e9a/26-6a7c74ec73893.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d946238e-7dbd-4ec9-a514-1d05471703d3/26-6a7c74ed536d6.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ துறைசார் கற்கைநெறிகளுக்கான கல்வி நிறுவனம் ஏறாவூரில் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/educational-institute-medical-courses-in-eravur-1786535944"></link>
            <id>https://tamilwin.com/article/educational-institute-medical-courses-in-eravur-1786535944</id>
            <summary type="text">தாதிய உதவியாளர் கல்வி நிலையம், திறந்து வைக்கப்படுவது சேவை
செய்யத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு நல்வாய்ப்பாய் அமையும் என
மட்டக்களப்பு போதனா வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாதிய உதவியாளர் கல்வி நிலையம், திறந்து வைக்கப்படுவது சேவை
செய்யத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு நல்வாய்ப்பாய் அமையும் என
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்&nbsp; எஸ்.எல்.
தாஹிறா சபியுதீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு 
புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் மருத்துவ துறைசார் பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தாதியர் பயிற்சி நெறி</h2><p>
</p><p>
கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் தராதரத்துடன் கூடிய இந்தப் பயிற்சி நெறிக்கு
நாடெங்கிலுமிருந்தும் 35 தாதிய உதவியாளர் பயிலுநர்கள் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்கள்.
</p><p>
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தாஹிறா,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb79388c-c93b-4afd-9500-c2b762cd72e6/26-6a7c69e7b510b.webp' /></p><p> </p><p>மூன்றாம் நிலைக் கல்வி
தொழில்சார் கல்விச் சான்றிதழுடன் கூடிய இந்த தாதிய உதவியாளர் பயிற்சியைப்
பூர்த்தி செய்வதற்குரிய பணியிடப் பயிற்சிகளுக்கு சகல உதவிகளையும் வழங்க
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
</p><p>
இந்தப்
பயிற்சி நெறி அரச, தனியார் வைத்தியசாலைகளிலோ
அல்லது வெளிநாடுகளிலுள்ள வைத்தியசாலைகளிலோ பணியாற்றுவதற்கும், உங்கள்
வாழ்க்கையை பொருளாதார ரீதியில் வளப்படுத்திக் கொள்வதற்கும் 
உங்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.</p><h2>மனித நேயம் மிக்க கற்கை</h2><p>

சூம் தொழிநுட்பத்தின் வாயிலாக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு
புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் தவிசாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.எம். பௌஸ், 

தாதிய சேவை என்பது வெறும்
சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றுவதல்ல. </p><p>அது அன்பு, மனித நேயம் ஆகியவற்றின்
ஊற்றாக இருக்கும்.

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அன்பு, பண்பு, கருணை, கனிவு,
மனித நேயம், சேவை மனப்பான்மை ஆகியவற்றுடன் பராமரிப்பு செய்யக்கூடியதாக
இருந்தால் அது பெரும் பாக்கியமாக இருக்கும். அதனாலேயே நாம் இந்தக் கல்வி
நிலையத்தை ஏறாவூரில் ஆரம்பிக்கிறோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b6cab31-21dd-4fb3-b51f-34aae50e60a3/26-6a7c69e8892d9.webp' /></p><p>எதிர்காலத்தில் இந்தக்
கல்வி நிலையம் மனித நேயத்தின் கலங்கரை விளக்காகத் மிளிர்ந்து முழு
நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழும் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த நிகழ்வில், ஏறாவூர் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்
வானதி கிரிதரன், கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய முகாமையாளர் யூ.எல்.
நூகுலெப்பை, திட்ட ஆலோசகர் யூ. முஜிபுர்றஹ்மான், கற்கை நெறிகளுக்கான
இணைப்பாளர் இஸ்ஸத் முஸ்தபா, காதி நீதிவான் அலிமுஹம்மத், முன்னாள் அதிபர்
எம்.எம்.ஜலால்தீன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய 22ஆவது சட்டமூலத் திருத்தம்.. ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-president-anura-kumara-1786540023"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-president-anura-kumara-1786540023</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவு, ஒரு தனிநபருக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவு, ஒரு தனிநபருக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காகவே எடுக்கப்பட்டது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
முழு அமைப்பின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விரிவான சீர்திருத்தங்களில் இந்தத் திருத்தம் ஒரு அங்கம் மட்டுமே என்றும், இது தனது தனிப்பட்ட கருத்தோ அல்லது அரசாங்கத்தின் ஒரே கருத்தோ அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>

இன்று பிற்பகல் (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இலங்கை சட்டத்தரணி சங்கத்துடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதைத் தெரிவித்துள்ளார்.</p><h2>வயது நீடிப்பு&nbsp;</h2><p> </p><p>

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடலின் போது, ​​நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மீது கவனம் ஈர்க்கப்பட்டதோடு, இது தொடர்பாக இலங்கை சட்டசபையினரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6bb1eb7-a1d9-4194-98ae-1cee7a914fbd/26-6a7c74a057fc6.webp' /></p><p>இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவ்விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டையும், நீதித்துறையை மேம்படுத்துவதற்காக அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளையும் விளக்கினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
நீதி வழங்கும் செயல்முறையானது நீதிமன்றங்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுவதில்லை, மாறாக அது புலனாய்வு, வழக்குத் தொடர்தல் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுச் செயல்முறையாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கங்கை தீர்த்தப் படிக்கட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ganga-theertha-staircase-officially-opened-1786530761"></link>
            <id>https://tamilwin.com/article/ganga-theertha-staircase-officially-opened-1786530761</id>
            <summary type="text">திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர்
சுவாமி தேவஸ்தானத்தின் “கங்கை
தீர்த்தப் படிக்கட்டு” உத்தியோகபூர்வமாக திறந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர்
சுவாமி தேவஸ்தானத்தின் “கங்கை
தீர்த்தப் படிக்கட்டு” உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வானது இன்று(12.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>கங்கை தீர்த்தப் படிக்கட்டு</h2><p>

இந்த தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது 100 ஆண்டுகளுக்கும்
மேலாக பொதுமக்கள் மற்றும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களால்
தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கோரிக்கையாகும்.
</p><p>
இதுகுறித்து கருத்து தெரிவித்த குமார் ஜெயக்குமரன்,

கங்கை தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது இன்று நேற்று எழுந்த
கோரிக்கை அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c549be5-f126-4a87-8f4b-508fd8006467/26-6a7c4f812a5c0.webp' /></p><p> </p><p>

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களும் பக்தர்களும்
இதற்காக எதிர்பார்த்து வந்துள்ளனர். 

இந்த நீண்டகால தேவையை நிறைவேற்றுவதற்கான
ஒரு சிறிய பங்களிப்பையாவது நாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே நானும் எனது
குழுவினரும் முன்வந்துள்ளோம்.
</p><p>
இந்தப் பணியின் நோக்கம் எந்தவொரு தனிநபருக்கும் புகழ் தேடுவதோ, அரசியல்
அல்லது வேறு எந்த தனிப்பட்ட நோக்கத்திற்காகவோ அல்ல.</p><h2>பொதுமக்களின் கோரிக்கை</h2><p> </p><p>

பொதுமக்களின் நீண்டகால
கோரிக்கையை நிறைவேற்றுவதும், பக்தர்களுக்கு சிறந்த வசதியை ஏற்படுத்துவதும்,
ஆலயத்தின் புனிதத்தன்மை மற்றும் சிறப்பை மேலும் மேம்படுத்துவதுமே எங்களுடைய
நோக்கமாகும்.</p><p>
</p><p>
ஆலயம் என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ சொந்தமானது
அல்ல. அது மக்களின் ஆன்மீக மற்றும் பண்பாட்டு அடையாளத்துடன் தொடர்புடைய ஒரு
புனிதத் தலம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3134aa29-2e86-4e89-8421-a1848471e2ba/26-6a7c4f8215714.webp' /></p><p> எனவே, ஆலயத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில்
அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும்.</p><p>

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வந்த இந்த
கோரிக்கைக்கு தற்போது ஒரு நடைமுறைத் தொடக்கம் கிடைத்திருப்பது முக்கியமான
விடயமாகும். இந்த முயற்சிக்கு பொதுமக்களிடமிருந்து ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என
நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் - மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் ஆண்டகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/preserve-madu-shrine-traditions-says-bishop-1786517677"></link>
            <id>https://tamilwin.com/article/preserve-madu-shrine-traditions-says-bishop-1786517677</id>
            <summary type="text">மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை
ஏற்படுத்தக் கூடாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு
அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை
ஏற்படுத்தக் கூடாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு
அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(11.08.2026) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன்
தலைமையில் மடுவில் இடம் பெற்ற மடு பெருவிழாவிற்கான ஆயத்த நடவடிக்கைகள்
குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>திருவிழாவுக்கான ஆயத்தங்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பெரு நிலப்பரப்பில் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் முறைகள் வழிபாடுகளுக்கான சட்ட திட்டங்களுக்கு ஒப்பாக மடு விழாவை சிறந்த முறையில்
நடத்துவதற்கு அரசு உதவி எமக்கு தேவை. இதற்காகத்தான் நாம் இதை வர்த்தமானியில்
பிரசுரிக்கப்பட்ட பெருவிழா என்கின்றோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f637543c-7701-48b8-ba20-4940f317652a/26-6a7c19065eda0.webp' /></p><p>அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மடு பாரம்பரியத்தை கடைப்பிடித்து அதற்கமைய
இந்த திருவிழாவுக்கான ஆயத்தங்களை பல நூற்றாண்டு காலமாக ஒழுங்குபடுத்தி
முன்னெடுத்து வருகிறோம். </p><p>இதற்கு உங்கள் ஒத்துழைப்பு எமக்கு மிக மிக அவசியம்.

சுகாதாரம், மருத்துவம், சாரணர் சேவை, ஜோன் ஆம்புலன்ஸ், கழிவு அகற்றும்
நடவடிக்கை,பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் மின்சாரம், உணவு
மற்றும் கடைகள், போக்குவரத்து, சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடயங்கள்
போன்றவற்றில் உங்கள் உதவிகள் அவசியம் தேவையானது.</p><h2>சட்ட திட்டங்கள்&nbsp;</h2><p>

மடு திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மாற்றங்களை
ஏற்படுத்தக் கூடாது. சில சட்ட திட்டங்கள் மடு
திருத்தலத்திற்கு உரித்துடையதாக இருக்கிறது.
</p><p>
இந்த சட்டத்திட்டங்களை நாங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறியத் தந்திருக்கிறோம்.
இந்த பாரம்பரியத்தை நாம் ஒரே மனப்பான்மையுடன் ஒருமித்து
செயற்பட்டால்தான் சிறந்த முறையில் நடத்த முடியும்.
அதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6378d40f-dce7-4b50-85f0-3ff8526ad8aa/26-6a7c190734971.webp' /></p><p>குறிப்பாக இங்கு கழிவு அகற்றுதல் மற்றும் பாதுகாப்பு போன்றவைகள் அவசியமாகிறது. சில
கடைகள் இந்த மடுத்திருத்தல பகுதிக்குள் வர முடியாது.</p><p> 

ஐஸ்கிறீம்
வியாபாரம் அன்று தொட்டு இங்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. சிறு
பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்தல் தடை
செய்யப்பட்டுள்ளது. ஆனால் மடு எல்லைப் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்டவைகள்
விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-12T13:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த கடற்படையினரின் ஆதரவு வேண்டும்! ஆளுநர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-navy-support-to-control-indian-fishermen-1786540173"></link>
            <id>https://tamilwin.com/article/governor-navy-support-to-control-indian-fishermen-1786540173</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த
கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த
கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.
</p><p>
புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல்
எம்.டி.கே.விஜேவர்த்தன, இன்று (12.08.2026) புதன்கிழமை மாலை ஆளுநர்
செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை மரியாதை நிமித்தம்
சந்தித்து கலந்துரையாடியபோதே ஆளுநர் இந்த விடயங்களை வலியுறுத்தினார்.
</p><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல்வளப்
பாதுகாப்புக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலாக காணப்படுவதாக
சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>சட்ட&nbsp; நடவடிக்கை</h2><p> குறிப்பாக, சட்டவிரோத கடற்றொழில் முறைகள் கடல் வளங்களை
அழிப்பதுடன், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய கடற்தொழிலையும் பாதித்து
வருவதாக அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94c36f9-d957-4f3a-b407-76cde2ec6632/26-6a7c739c986dc.webp' /></p><p>

மேலும், வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும்
நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் ஆளுநர் கவனம் செலுத்தினார்.
</p><p>இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்றொழில் மற்றும்
நீரியல் வளத் திணைக்களத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயற்பட்டு, சட்ட
அமுலாக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் வட மாகாண கடற்படைத்
தளபதியிடம் கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shootout-yala-national-park-1786538582"></link>
            <id>https://tamilwin.com/article/shootout-yala-national-park-1786538582</id>
            <summary type="text">யால தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு நடவடிக்கையின் போது வேட்டைக்காரர்களுக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு நடவடிக்கையின் போது வேட்டைக்காரர்களுக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> 

இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த நடவடிக்கை நேற்று (11) தனமல்வில யால தேசிய பூங்கா தலைமையக அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் வனப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>

பூங்காவிற்குள் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரைக் கைது செய்ய முயன்றபோதே, வேட்டைக்காரர்கள் வனவிலங்கு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடியாக அதிகாரிகளும் தற்காப்பிற்காக மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/262968bc-bdea-4329-802e-77b5e8e72ab7/26-6a7c6ecb05c7a.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டின் போது சந்தேகநபர்கள் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், எல்லகல இடதுகரை, திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து இரு மான்களின் 41 கிலோகிராம் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-a4QqXcx3KQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகைகளைதான் மாகாணசபைகளுக்கு ஒதுக்கீடு செய்து வந்தார்கள்! பிரபு எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prabu-mp-statement-1786537069"></link>
            <id>https://tamilwin.com/article/prabu-mp-statement-1786537069</id>
            <summary type="text">இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகை நிதி ஒதுக்கீடுகளை மாகாணசபைகளுக்கு வழங்கி வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி
அரசாங்கம் இந்த நாட்டை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகை நிதி ஒதுக்கீடுகளை மாகாணசபைகளுக்கு வழங்கி வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி
அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்றுதன் பின் மாகாணசபைகளுக்கான அதிக நிதி
ஒதுக்கீடுகள் எந்த ஒரு தங்கு தடையும் இன்றி தொடர்ச்சியாக
வழங்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>




மட்டக்களப்பில் இன்றைய தினம் (12.08.2026) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அதிக நிதி விடுவிப்பு</h2><p> </p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற தொகையிலும் பார்க்க அதைவிட அதிகமான தொகை 2026ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதுபோன்று எதிர்வரும்
காலங்களிலும் 2027ஆம் ஆண்டுக்கு இன்னும் அதிகமான நிதி விடுவிப்பதற்கு நாம்
தயாராக இருக்கின்றோம்.
</p><p>


மாகாணசபையின் ஊடாக மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்தி செயல்பாடுகள்
அங்கிருக்கின்ற திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி
செயற்பாடுகள், அதுபோன்று பிரதேச மட்டத்தில் இருக்கின்ற சபைகள் உள்ளிட்ட
அனைத்துக்கும் நாங்கள் அதிகமான நிதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a25f6247-2cdc-4518-8864-80de9def52b6/26-6a7c6a30346f7.webp' /></p><p>



இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகைகளைதான் மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வந்திருந்தார்கள். ஆனால் இப்போது இந்த
நாட்டை சரியான பொருளாதார கட்டமைப்பு உட்படுத்தி அரச வருமானம் மட்டும் துறைகளை
அதிகரித்து அந்த நிதிகளைக் கொண்டு சரியாக முகாமை செய்து அதனூடாக அபிவிருத்தி
செய்யும் வேலைத்திட்டங்களையும் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.
</p><p>


அந்த வகையில் அவ்வாறான நிதிகளை மாகாணங்களுக்கு நாம் பகிர்ந்து அளித்துக்
கொண்டிருக்கின்றோம். அவ்வாறு வழங்கப்படுகின்ற நிதி உதவிகளைக் கொண்டு
வைத்தியத்துறை சார்ந்த திட்டங்கள், கல்வித்துறை சார்ந்த செயற்பாடுகள், மற்றும்
ஏனைய விடயங்களுக்காகவும் தாராளமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><h2>சுதேச வைத்தியம்</h2><p>
</p><p>குறிப்பாக எங்களது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகள் சில
தேவைகளோடு இயங்குகின்றன அவ்வாறான தேவைகளையும், வரும்காலங்களில் பூர்த்தி
செய்து வைக்கப்படும்.



பிரதேச மக்கள் பழமை மாறாது சுதேச வைத்தியத்திலே அவர்களது ஆர்வத்தை
காட்டுகின்றார்கள். </p><p>என்னதான் ஆங்கில மருத்துவத்துறை வளர்ச்சி
அடைந்திருந்தாலும் மக்கள் சுதேச வைத்தியத்துறையில் நாட்டம் செலுத்தி
வருகின்றார்கள். அதற்காக வைத்தியர்கள் அவர்களது கடமைகளையும் சிறப்பாக
மேற்கொண்டு வருகின்றார்கள் அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை கிழக்கு மாகாண
சபையின் ஊடாக ஆளுநர் பங்களிப்பினை வழங்கி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed3d9eb2-58a7-46ec-a1d3-4ffe57ae731b/26-6a7c6a314a334.webp' /></p><p>
</p><p>


கிழக்கு மகாண ஆளுநர் ஊடாக வீதி அபிவிருத்தி, பாடசாலை கட்டிடங்கள் அமைத்தல்,
உள்ளிட்ட பல அபிவிருத்தித் இடத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் அதிகளவு நிதி தேங்கி இருக்கின்றன.
அந்த நிதியை பயன்படுத்தி தவிசாளர் மக்களுக்கு பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள
வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். </p><p>அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற
சட்ட திட்டங்களை சரியான முறையில் முன்னெடுக்கின்ற சபையாக மண்முனை தென் எருவில்
பற்று சபை திகழ்கின்றது. அதன் தவிசாளர் கட்சி பேதங்களை கடந்து மக்கள் சேவையை
முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T12:46:08+00:00</updated>
        </entry>
    </feed>
