<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-19T06:30:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு மரண எண்ணிக்கை 69ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-death-toll-rises-to-69-1787117602"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-death-toll-rises-to-69-1787117602</id>
            <summary type="text">தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தகவல்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.அதே நேரத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தகவல்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.</p><p>அதே நேரத்தில் மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 92,854 ஆக உயர்ந்துள்ளது.
</p><h2>டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சி</h2><p>சமீபத்திய புள்ளிவிவரங்கள் டெங்கு இறப்பு விகிதத்தை 0.07வீதமாகக் காட்டுகின்றன என்றும், இது நுளம்புகளால் பரவும் இந்த நோயால் ஏற்படும் தொடர்ச்சியான சுகாதாரச் சுமையை எடுத்துக்காட்டுகிறது என்றும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48a35eb-faaa-4884-88d3-c835ef951d14/26-6a8547413f0b8.webp' /></p><p>

 

இந்த ஆண்டில் டெங்கு பாதிப்புகள் கணிசமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் 29,964 பாதிப்புகளும், அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 21,533 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. </p><p>ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 7,516 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.</p><p>

 

கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 19,778 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த பாதிப்புகளில் 21.30வீதம் ஆகும். </p><p>டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நாடு முழுவதும் அதிக அபாயம் உள்ள 96 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T06:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை: ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rameswaram-boat-fishermen-announce-hunger-strike-1787119324"></link>
            <id>https://tamilwin.com/article/rameswaram-boat-fishermen-announce-hunger-strike-1787119324</id>
            <summary type="text">ராமநாதபுரம் - ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து
 கடற்றொழிலுக்கு வந்த கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராமநாதபுரம் - ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து
 கடற்றொழிலுக்கு வந்த கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி எதிர்வரும் 30ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.</p><h2>உண்ணாவிரத போராட்டம்</h2><p>
</p><p>
ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நேற்றைய தினம் (18) நடத்திய ஆலோசனை கூட்டத்தில்
இந்த முடிவை முடிவெடுத்துள்ளனர்.
</p><p>
மேலும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகு முந்தைய
ஆட்சியில் வழங்கிய நிவாரண தொகை போல இந்த ஆட்சியிலும் நிவாரணத் தொகை வழங்க
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd7d7a51-ef01-45a0-a192-95858e098090/26-6a85492ed9263.webp' /></p><p>
</p><p>
10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம்
அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட
போவதாக அறிவித்துள்ளனர்.
</p><p>
மேலும் எதிர்வரும் மாதம் 1ஆம் திகதியில் இருந்து தங்கச்சி மடத்தில் இதே
கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக
ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய அவசர ஆலோசனை
கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T06:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-ministers-wife-dies-in-an-accident-1787118240"></link>
            <id>https://tamilwin.com/article/former-ministers-wife-dies-in-an-accident-1787118240</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரும் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழந்துள்ளார். திடீர் விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்துள்ளார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரும் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழந்துள்ளார்.</p><p> திடீர் விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>தேசானி குணரத்ன என்ற 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><h2><b>மனைவி விபத்தில் மரணம்</b></h2><p>அவர்களுக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7af52dc-2ff8-443f-9692-052dac2591ee/26-6a854647cdae1.webp' /></p><p>காயமடைந்தவர் காரப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். </p><p>அவரது உடல் தணமல்வில பகுதியில் உள்ள அவர்களின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-19T06:07:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 19 முதல் கட்டாயமாகும் நடைமுறை - வெளியானது அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seat-belts-mandatory-from-september-19-1787117330"></link>
            <id>https://tamilwin.com/article/seat-belts-mandatory-from-september-19-1787117330</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டெம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் செப்டெம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சட்டம் கடுமையாக நடைமுறை</h2><p> </p><p>

மேலும், அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும். இந்த சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். 

ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் நபருக்கு 1000 ரூபா அபராதம் விதிக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/504a57a3-138f-4de3-b353-cc89575d4741/26-6a85457d6f32c.webp' /></p><p> </p><p>அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளில் ஆசனப்பட்டி அணியாத பயணிகளிடமிருந்து அபராதத்தை வசூலிக்க சட்டபூர்வ வாய்ப்பு உள்ளது.

இலங்கை மக்கள் ஆசனப்பட்டி அணிவதன் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.</p><h2>உயிரிழப்புகளின் எண்ணிக்கை</h2><p> </p><p>அனைவரின் பாதுகாப்பிற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விபத்துகளின் போது ஆசனப்பட்டி இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/030b4f19-f3f0-4a55-a25c-1488130415d0/26-6a85457e2be25.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களுக்கு அவற்றை நிறுவுவதற்கு வழங்கப்பட்ட சலுகைக் காலமும் செப்டெம்பர் 19 அன்று முடிவடையும் என தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுலா குலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T05:56:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் மகன் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய பல கோடி ரூபா பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nadeem-basik-maithripala-sirisena-dehiwala-1787102942"></link>
            <id>https://tamilwin.com/article/nadeem-basik-maithripala-sirisena-dehiwala-1787102942</id>
            <summary type="text">பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல திடுக்கிடும் மற்றும் பயங்கர தகவல்கள் வெளிவருகின்றன.அந்த வகையில் அவரின் மகன் அரசியலில் ஈடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல திடுக்கிடும் மற்றும் பயங்கர தகவல்கள் வெளிவருகின்றன.</p><p>அந்த வகையில் அவரின் மகன் அரசியலில் ஈடுபட்டமை தொடர்பிலும் அவர் பல அரசியல் கட்சிகள் விகாரைகளுக்கு பணம் வழங்கிமையும் தெரியவந்துள்ளது. </p><p>
ஷிரான் பாசிக்கின் மகனான நதீம் பாசிக் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தெஹிவளை தொகுதி அமைப்பாளர் பதவியை பல கோடிகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கி பெற்றுக் கொண்டுள்ளதாக புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக தகவல்கள்
</p><p></p><h2>மைத்திரிக்கு கொடுத்த பல கோடி ரூபா</h2><p>
அமைப்பாளர் பதவியை பெற்றுக் கொண்ட பின்னர் அவர் தெஹிவளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே தனது பணிகளைச் செய்துள்ளார். அப்போது பல விகாரைகளுக்கு பண உதவி செய்துள்ளார்.</p><p>ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வந்த சந்தர்ப்பத்தில் இவரின் பெரும் தொகை பணம் ஒரு தேரரிடம் இருப்பதாக தகவல் உலாவியது. வெள்ளவத்தை ஹக்மன நந்தாலோக தேரரின் பெயரே அடிப்பட்டது. </p><p>ஹரக் கட்டாவின் பணம் தொடர்பிலும்&nbsp; இந்த தேரரே தொடர்புபட்டார் என நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன். ஆனால் இன்றுவரை யாரும் பதிலளிக்கவில்லை. </p><p>எனவே, அந்த தேரரின் பெயர் இங்கேயும் அடிப்பட்டது. ஆனால் எவ்வித விசாரணைகளும் நடக்கவில்லை.
இலங்கையில் உள்ள ஒரு மரணச் சடங்கு உதவிச் சங்கம் கூட வருமானம் எங்கிருந்து வருகிறது, அது எவ்வாறு செலவிடப்பட்டது என்பதில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5898d6cd-72c0-4111-8d6e-97f5f683e645/26-6a8506e15f5ef.webp' /></p><p>ஆனால், பில்லியன் கணக்கில் பணம் வரும் ஓர் அரசியல் கட்சி, எங்கிருந்து பணம் வந்தது, எதற்குச் செலவிடப்பட்டது என்பதைப் பகிரங்கப்படுத்துவதில்லையே மக்களும் அதைத் கேட்பதில்லை.
</p><p>எனவே, இந்த அரசியல் கட்சிகளுக்குப் பல்வேறு வழிகளில் பணம் வருகிறது. உளவு அமைப்புகள், போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள உலகக் குழுக்களிடமிருந்து பெரும் தொகை வருகிறது ஆனால் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. </p><p>
எனவே, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவரை இலங்கைக்குக் கொண்டு வந்த உடனேயே விசாரணையை மேற்கொள்வது பொலிஸார். </p><p>பொலிஸிலும் பழைய முறைகேடுகள் ஏதோவொரு வழியில் நடக்கக்கூடும். ஏனென்றால், நான் எப்போதும் கூறுவது போல, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை வழங்கி புதிய அரசியல்வாதிகளை உருவாக்கியிருந்தாலும், 18 இலட்சம் அரச ஊழியர்களைப் புதிதாகக் கொண்டுவர முடியாதே. அதனால் இவ்வாறான மோசடிகளை எமக்கு உடன் நிறுத்த முடியாது என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T05:47:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மற்றொரு பொருளாதார நெருக்கடி : ரணிலின் கூற்றுக்கு அநுர தரப்பு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-statement-anura-side-respond-1787114622"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-statement-anura-side-respond-1787114622</id>
            <summary type="text">2028இற்குப் பிறகு இலங்கை மற்றொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு, நாடு மீண்டும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2028இற்குப் பிறகு இலங்கை மற்றொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு, நாடு மீண்டும் திவாலாவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பதிலடி கொடுத்துள்ளார்.
</p><p>
2028ஆம் ஆண்டுக்குப் பிறகு கடன் திருப்பிச் செலுத்துதல் அதிகரிக்கும்போது இலங்கை ஒரு பெரும் சவாலை எதிர்கொள்ளும் என்று எச்சரித்திருந்த விக்ரமசிங்க, நாடு தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பை சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
</p><h2>8 பில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>
2026ஆம் ஆண்டின் இறுதியில் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என்று மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும், மதிப்பிடப்பட்ட 15 பில்லியன் அமெரிக்க டொலர் அளவை எட்டுவதற்குத் தேவைப்படும் கூடுதல் 7 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை எவ்வாறு திரட்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb58815-17bc-4c9a-9f36-3f7d2ae964e1/26-6a853da7d6ee7.webp' /></p><p>
இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த அபேசிங்க, இலங்கையின் கடன் பொறுப்புகள் குறித்து விக்ரமசிங்க தவறான கூற்றுகளை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p>இலங்கை 2025ஆம் ஆண்டில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பொறுப்புகளைச் செலுத்தியதாகவும், அதே நேரத்தில் தனது வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்து, 2026ஆம் ஆண்டில் ஏறத்தாழ 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பொறுப்புகளைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.</p><p>
2027இல் செலுத்தப்பட வேண்டிய தொகை குறைவாக, சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்று அவர் கூறினார்.
</p><p>
</p><h2>அந்நியச் செலாவணியைத் திரட்ட தவறினால்</h2><p>மத்திய வங்கி முதலீட்டாளர்களுக்கு வழங்கிய புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய அபேசிங்க, இலங்கை தனது கையிருப்பை வலுப்படுத்திக்கொண்டே தனது கடனைத் தொடர்ந்து திருப்பிச் செலுத்த முடியும் என்பதை அவை நிரூபிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2fbd9f-4da2-4865-aa94-55adb2a4c6a4/26-6a853da88cee4.webp' /></p><p>
</p><p>
2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கையிருப்பை உருவாக்கும் அதே வேளையில் கடன் திருப்பிச் செலுத்துதலைத் தொடர்வதில் எந்தச் சிரமமும் இருக்காது என்றும் அவர் வாதிட்டார்.</p><p>

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம், ஏற்றுமதி, முதலீடுகள் மற்றும் சுற்றுலா வருவாய் ஆகியவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக துணை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p>எனினும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அதிக கடன் பொறுப்புகளுக்கு முன்னதாக, போதுமான அந்நியச் செலாவணியைத் திரட்டத் தவறினால், இலங்கை மற்றொரு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T05:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-issue-warning-to-rental-vehicle-passengers-1787112696"></link>
            <id>https://tamilwin.com/article/police-issue-warning-to-rental-vehicle-passengers-1787112696</id>
            <summary type="text">இலங்கையில் வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். 

அதன்படி தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.</p><p> 

அதன்படி தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார். </p><p>

வாடகை வாகன ஓட்டுநர்கள் அல்லது வாகன சேவைகளில் உதவி புரிபவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதை அடுத்து இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>உறுதிப்படுத்த வேண்டிய விடயம்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், வாகனம் முறைப்படி பதிவு செய்யப்பட்டது தானா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். வாகனத்தின் பதிவு எண், ரகம் மற்றும் ஓட்டுநரின் பெயரைச் சரிபார்க்க வேண்டும். 

குறிப்பாக இரவில் பயணிப்போர், தங்களது தொலைபேசி அல்லது கூகுள் வரைபடம் மூலம் தங்களது நேரலை இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c067a08-4efa-4fc3-aa1e-ce89b684685d/26-6a853627e14e8.webp' /></p><p> </p><p>இலக்கை அடையும் வரை அவர்கள் உங்களை கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இரவு நேர பயணங்களின் போது, ஓட்டுநர் அறிமுகமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது எதிர்பார்க்காத பாதைகளில் செல்ல முயன்றால் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். </p><p>பயணத்தின் போது முகம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரைக் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது. 

மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் புரிவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.</p><h2>தவிர்க்க வேண்டிய விடயம்</h2><p> </p><p>பயணத்தின் போது பணம், மடிக்கணினி, கைத்தொலைபேசி மற்றும் நகைகள் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களைப் பிறருக்குத் தெரியும் வகையில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8beadd1f-249c-48a1-9795-13a634897590/26-6a8536289efdf.webp' /></p><p> 

பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அச்சுறுத்தலை உணர்ந்தாலோ, உடனடியாக பொலிஸின் அவசர உதவி எண்களான 119 அல்லது அவசர தகவல் சேவையான 118 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>

அத்துடன், இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வாகன ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் என நினைவூட்டியுள்ள பொலிஸார், பயணிகளை அழைத்துச் செல்லும்போது முறையான நடத்தை விதிகளைப் பின்பற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T04:51:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை - வியட்நாம் நேரடி விமான சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/low-cost-flight-sri-lanka-and-vietnam-begins-1787111832"></link>
            <id>https://tamilwin.com/article/low-cost-flight-sri-lanka-and-vietnam-begins-1787111832</id>
            <summary type="text">இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietjet Air Line), தனது சேவையை ஆரம்பிக்கும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் (Vietjet Air Line), தனது சேவையை ஆரம்பிக்கும் வகையில் அதன் முதல் விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
</p><p>இதன் தலைமை விமானி மற்றும் உதவி விமானி ஆகிய இருவரும் இலங்கையர்கள் ஆவர்.
</p><p>
 

பாணந்துறையைச் சேர்ந்த திவங்க சில்வா மற்றும் மொரட்டுவையைச் சேர்ந்த ரந்தீர் பெரேரா ஆகியோரே விமானத்தை இயக்கினர்.
</p><h2>வாரத்திற்கு 3 நாட்கள்</h2><p>
 

வியட்ஜெட் விமான சேவையின் VJ-1875 என்ற இலக்கமுடைய முதலாவது விமானம், நேற்று (18) இரவு 09.33 மணிக்கு 169 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3745ac49-ab60-43ba-94ed-2ce7f1bd6b14/26-6a852c5e96402.webp' /></p><p>பின்னர் அந்த விமானம் 171 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் வியட்நாமின் ஹோசிமின் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
</p><p>
 

இந்த விமான சேவை செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் வாரத்திற்கு 3 நாட்கள் வியட்நாமின் ஹோசிமின் நகர விமான நிலையத்திற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையே இயக்கப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T04:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை உரிய அனுமதிகளுடன் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/steps-distribute-sand-public-with-proper-permits-1787110773"></link>
            <id>https://tamilwin.com/article/steps-distribute-sand-public-with-proper-permits-1787110773</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை அடுத்த வாரம் முதல்
உரிய அனுமதிகளுடன் பொது மக்களுக்கு துரிதமாக விநியோகிப்பதற்கும்,
இரணைமடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை அடுத்த வாரம் முதல்
உரிய அனுமதிகளுடன் பொது மக்களுக்கு துரிதமாக விநியோகிப்பதற்கும்,
இரணைமடுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் சில இடங்களில் மண்ணைக் கழுவி மணல்
பெற்றுக் கொள்ளும் பணிகளுக்கான கேள்விக் கோரலை விரைவாக மேற்கொள்வதற்கும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மணல்
மற்றும் கிரவல் அகழ்வு, விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று
(18.08.2026) மாலை நடைபெற்ற போதே இந்த தீர்மானங்கள்
எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>கலந்துரையாடல் ஏற்பாடு</h2><p> கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்டச்
செயலாளர் சு.முரளிதரன், இரணைமடு நீர்வழிந்தோடும் பகுதிகளில் ஏற்கனவே
சேகரிக்கப்பட்டுள்ள மணல், கழுவி எடுக்கப்பட்ட மணல் மற்றும் கிரவல் ஆகியவற்றை
முறையாக விநியோகிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இக்கலந்துரையாடல் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை
எதிர்வரும் அக்டோபர் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டிய நிலை இருப்பதால்,
கட்டுமானத் தேவைகளுக்கான மணல் மற்றும் கிரவல் தடையின்றிக் கிடைப்பது
அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>மேலும், கிளிநொச்சி மாவட்ட
பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தால் மணல் விநியோகத்துக்கான அனுமதி
கோரப்பட்டுள்ளமை மற்றும் கழுவி எடுக்கப்படும் மணலை முறையாக விநியோகிப்பதற்கான
பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b1b6763-a54a-4378-aeec-e37c36a45134/26-6a8529e74691f.webp' /></p><p>
</p><p>
இதன்போது உரையாற்றிய ஆளுநர், “வட மாகாணத்தில் மாகாணத் திணைக்களங்கள்
மற்றும் மத்திய அரசாங்கத் திணைக்களங்கள் ஊடாக பல்வேறு அபிவிருத்தி மற்றும்
அரசாங்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை
நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்கள்
நிலவுகின்றன.</p><p>மக்களுக்கு தேவையான மணலை அவர்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை
உருவாகியுள்ளது. அதிகரித்துள்ள விலை காரணமாக சாதாரண மக்கள் பெரும் சிரமங்களை
எதிர்கொள்கின்றனர். </p><p>இந்த நிலைமையைச் சீர்செய்து, குறைந்த விலையில்
மக்களுக்குத் தேவையான மணலை வழங்குவதற்கான ஒரு முறையான பொறிமுறையை
உருவாக்குவதற்காக கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு
வருகின்றோம்” என தெரிவித்தார்.</p><h2>மணல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம்</h2><p>
</p><p>
மணல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் மக்கள் மத்தியில் கோபம், ஏமாற்றம்
மற்றும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், 'கூட்டங்கள் நடத்தப்படுகின்றன ஆனால் மக்களுக்கு தேவையான மணல் கிடைக்கவில்லை' என்ற குற்றச்சாட்டு
தொடர்ச்சியாக முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அதேவேளை, அரச திணைக்களங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டுள்ள தெளிவான
அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதாகவும்
அவர் சுட்டிக்காட்டினார். </p><p>அரச நிறுவனங்கள் சட்டரீதியான அனுமதிகளைப்
பெறுவதற்காக அணுகும் போது செயன்முறைகள் நீடிக்கப்படுகின்ற நிலையில்,
தனிநபர்களுக்கு அதே திணைக்களங்களால் அனுமதிகள் விரைந்து வழங்கப்படுகின்றனவா
என்ற கேள்வியும் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>

'மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக நாங்கள் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தி,
இறுக்கமான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றோம். ஆனால் அவை நடைமுறைக்கு
வருவதில் தாமதம் ஏற்படுகின்றது. அதேவேளை தனியார் தரப்பினருக்கு விரைந்து
அனுமதிகள் வழங்கப்படுகின்ற நிலை ஏற்பட்டால், இது வெறும் நிர்வாகத் தாமதமாக
மட்டும் பார்க்க முடியாத நிலையை உருவாக்குகின்றது. இத்தகைய செயற்பாடுகள் இந்த
அரசாங்கத்தின் நற்பெயரைப் பாதிக்கும் வகையில் இடம்பெறும் சதிவேலையா என்ற
சந்தேகத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன' என ஆளுநர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e52021-c1cf-491f-94ce-6a7ff78eb12b/26-6a8529e83b5f3.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சால்
கனியவளங்களின் அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை வரைவு
வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். அதன் பிரகாரம், மாவட்டச்
செயலாளரின் தலைமையில் அமைக்கப்படும் மாவட்டக் குழுவின் ஊடாக கனியவளங்கள்
தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் நடைமுறை வலுப்பெறும் எனவும் அவர்
குறிப்பிட்டார்.</p><h2>இடையூறுகள் தொடர்பில் ஆராய்வு</h2><p>
</p><p>
கலந்துரையாடலின் போது, கனகராயன் ஆற்று பகுதியில் ஏற்கனவே அள்ளிக்
குவிக்கப்பட்டுள்ள மணலைத் துரிதமாக விநியோகிப்பது தொடர்பில் முதற்கட்டமாக
ஆராயப்பட்டது. அதற்கான அனுமதிகளை வழங்குவதில் காணப்பட்ட இடையூறுகள் தொடர்பில்
விரிவாக ஆராயப்பட்டதுடன், உரிய சட்டரீதியான அனுமதிகளை பெற்று, கிளிநொச்சி
மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தின் ஊடாக அடுத்த வாரம் முதல் மணலை
விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
</p><p>
அத்துடன், குளங்களில் இருந்து மண் அகழ்ந்து கழுவும் செயன்முறை மூலம்
பெறப்படும் மணலை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாகக்
கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில்
சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விரைந்து கடிதங்களை வழங்குமாறு
அறிவுறுத்தப்பட்டதுடன், அடுத்த மாத இறுதிக்குள் கழுவி எடுக்கப்பட்ட மணலை
விநியோகித்து முடிக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
கல்மடுக்குளத்தில் இருந்து மண்ணைக் கழுவும் செயன்முறை இதுவரை
ஆரம்பிக்கப்படாதமை தொடர்பில் ஆளுநர் கேள்வி எழுப்பியதுடன், அதனைத் தாமதமின்றி
ஆரம்பிக்குமாறும் பணிப்புரை வழங்கினார். இதேபோன்று, ஏற்கனவே அனுமதி
வழங்கப்பட்டுள்ள சில குளங்களில் மண் கழுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாதமை
தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றையும் உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை
எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
மேலும், இரணைமடுக்குளத்தில் மண் கழுவும் செயன்முறையை முன்னெடுக்கக்கூடிய
மேலும் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான கேள்விக்
கோரலை விரைந்து மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, மேலும்
இரு இடங்களில் ஆற்றுப்படுக்கைகள் மற்றும் நீர்வழிந்தோடும் வாய்க்கால்களைத்
துப்புரவு செய்வதற்காக அகழப்படும் மண்ணைக் கழுவி மணல் பெற்றுக்கொள்ளும்
பணிக்கான கேள்விக் கோரலையும் விரைவாக மேற்கொள்ள இக்கலந்துரையாடலில்
தீர்மானிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0acde9a3-12f8-423a-8014-c223b333f0c1/26-6a8529e913473.webp' /></p><p>

மக்களுக்குத் தேவையான மணலை நியாயமான விலையில், தடையின்றி விநியோகிப்பது ஒரு
நிறுவனத்தின் அல்லது ஒரு சில அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல என வலியுறுத்திய
ஆளுநர், இச்செயன்முறையில் பங்கேற்கும் ஒவ்வொரு திணைக்களத்துக்கும்
பொதுமக்களுக்கான சமூகப் பொறுப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p> சட்டரீதியான
நடைமுறைகளைப் பின்பற்றியபடியே, மக்களின் தேவையை முன்னுரிமைப்படுத்தி
தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
</p><p>
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், தூய்மை இலங்கை செயலணியின்
மாவட்ட இணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர்,
பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர்,
கணக்காளர், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி
உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மத்திய
சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்
பணியகத்தின் பொறியியலாளர், பிரதேச சபைகளின் செயலாளர்கள், நீர்ப்பாசனத்
திணைக்களப் பொறியியலாளர்கள், ஒப்பந்தகாரர்கள், பாரவூர்தி உரிமையாளர் சங்கப்
பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T04:07:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் குறித்த தவறான தகவல்கள் : சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrest-spread-false-inform-l-t-t-e-training-camp-1787109879"></link>
            <id>https://tamilwin.com/article/arrest-spread-false-inform-l-t-t-e-training-camp-1787109879</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சரிபார்க்கப்படாத தவறான தகவல்களை வழங்கிய ஒருவரை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சரிபார்க்கப்படாத தவறான தகவல்களை வழங்கிய ஒருவரை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.</p><p>

இந்த சந்தேக நபர் நேற்று (18.08.2026) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><h2>இன்று நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படுவதாக, சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு மூலம் சரிபார்க்கப்படாத பொய்த் தகவலைப் பரப்பிய குற்றத்திற்காக இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d596dd-6c85-4b06-86d0-59e3afe82e59/26-6a85262a1b8ae.webp' /></p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பெல்லன்விலவில் உள்ள பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் ஆவார்.
</p><p>
இந்தச் சந்தேக நபர் இன்று(19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p><p>மேலும், இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்படி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T03:42:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்வது தொடர்பில் கடுமையாகும் சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-s-new-rules-for-overseas-fund-transfers-1787107752"></link>
            <id>https://tamilwin.com/article/govt-s-new-rules-for-overseas-fund-transfers-1787107752</id>
            <summary type="text">இலங்கையின் 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அனுமதியை வழங்கியுள்ளது. 

அதற்கமைய, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அனுமதியை வழங்கியுள்ளது. </p><p>

அதற்கமைய, இலங்கையில் இருந்து அங்கீகரிக்கப்படாத முறையில் பணப் பரிமாற்றம் செய்வது குற்றவியல் குற்றமாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்வைக்கப்பட்ட இந்த திருத்தத்தின் கீழ், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்பணமாக வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்பிவிட்டு, நியாயமான காலப்பகுதிக்குள் அதற்கேற்ற பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.</p><p> </p><h2><b>பணப் பரிமாற்றம் </b></h2><p>அதனை செய்யத் தவறும் ஒருவரின் பரிவர்த்தனையானது, அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுச் செலாவணிப் பரிமாற்றமாகக் கருதப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d78129f2-921a-47be-984b-9bac7b4c86ab/26-6a851d8c3de86.webp' /></p><p>தற்போதைய சட்டத்திற்கமைய, அங்கீகரிக்கப்படாத முறையிலான பண அனுப்பீட்டின் பெறுமதிக்குச் சமமான நிதிக் தண்டப்பணத்தை இலங்கை மத்திய வங்கியால் இலங்கை ரூபாயில்ல் விதிக்க முடியும். </p><p>

எனினும் அவ்வாறான பரிவர்த்தனைகள் தற்போது வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் குற்றவியல் குற்றங்களாக வகைப்படுத்தப்படவில்லை. இதனால் குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கான சட்ட அடிப்படையானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><h3><b>

அமைச்சரவை&nbsp;அனுமதி </b></h3><p>வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்கு புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு வலுவூட்டும் வகையில் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0836b861-65bc-4859-abb4-9c2936acdae7/26-6a851d8ce3bc1.webp' /></p><p>அதற்கமைய, நிதியியல், திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்ற ரீதியில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அனுமதி வழங்கியுள்ளது. </p><p>

அத்துடன், 2017 ஆம் ஆண்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தைத் திருத்தி, அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களைக் குற்றவியல் குற்றங்களாக மாற்றும் இவ்வாறான விதிகளை அறிமுகப்படுத்தவும் தீர்மானித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T03:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் பெரும் சோகம் - திருமணத்திற்கு 2 நாட்கள் - கோர விபத்தில் இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dies-in-an-accident-1787059366"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dies-in-an-accident-1787059366</id>
            <summary type="text">மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளது. 

இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25 வயதான ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளது. </p><p>

இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25 வயதான லக்மால் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.</p><p> 

தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.</p><p> 

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் லக்மால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>

இளைஞன் பலி</b></h2><p>தனது மகனின் திருமணப் பதிவுக்காக இரண்டு நாட்களும், வேலைக்காக இஸ்ரேல் செல்வதற்கு மூன்று நாட்களும் மட்டுமே இருந்த நிலையில் இந்த துயரம் இடம்பெற்றுள்ளதாக லக்மாலின் தந்தை தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c99afa-98dc-4b31-957c-887884e7a93b/26-6a8460d2e73af.webp' /></p><p>மகனின் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயாரின் இதயத்தில் இரத்தம் உறைந்ததன் காரணமாக தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மாத்தறை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் லக்மாலின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்கு முன்னரே கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பேருந்து ஓட்டுநர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக உறவினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனினும், சட்ட நடைமுறைகளின்படி சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p>அவரது சாரதி உரிமத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்துச் செய்து நீதிமன்றக் காவலில் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T02:43:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள நாமல்! மகிந்த உட்பட பலர் கலக்கத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksas-shocking-behaviour-1787048452"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksas-shocking-behaviour-1787048452</id>
            <summary type="text">சமகாலத்தில் ராஜபக்சர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகாலத்தில் ராஜபக்சர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. </p><p>

மகிந்த வீட்டில் நடத்தும் கூட்டங்களின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மட்டுமல்லாமல் சில சந்தர்ப்பங்களில் மகிந்த ராஜபக்சவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நாமல் கருத்து வெளியிட்டு வருவதாக, அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது. </p><p>

கடந்த நாட்களில் விவசாயிகளை சந்தித்த சந்தர்ப்பத்திலும் கோட்டாபய ராஜபக்ச மீது நாமல் ராஜபக்சவினால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.</p><p> </p><h2><b>

நாமலின் பிரச்சார இயக்கம்</b></h2><p>நாமல் ராஜபக்ச முன்னெடுத்து வரும் பிரச்சார இயக்கம் குறித்து ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb224d2-4e7e-4bec-9667-323b6f5d22f4/26-6a85074781586.webp' /></p><p>மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாமல் இவ்வாறு செயற்பட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர். </p><p>

கோட்டாபய ராஜபக்ச தனது பிரச்சார இயக்கத்தின் அடிப்படையாக 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 04ஆம் திகதி அன்று வியத்மக அமைப்பை உருவாக்கினார்.</p><h3><b> 

கீழ்த்தரமான&nbsp;அரசியல் </b></h3><p>மருத்துவர் நாலக கொடஹேவ, பேராசிரியர் சன்ன ஜெயசுமன உள்ளிட்ட தரப்பினர் அந்த இயக்கத்தின் நிறுவனர்களாக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac0f0b8-621e-4695-bd56-fc0a492721b5/26-6a8507483f57c.webp' /></p><p>எனினும், நாமல் ராஜபக்சவின் பிரச்சார இயக்கம் மிலிந்த ராஜபக்ச, இராஜ் வீரரத்ன, அர்ஜுன் கமலநாத் போன்ற தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறான நிலையில் அரசியல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 

 </p>]]></content>
            <updated>2026-08-19T02:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துறைமுக நகரில் அதிசொகுசு படகில் இளைஞர் மற்றும் யுவதிகளின் மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-party-on-a-yacht-near-the-port-city-raid-1787106157"></link>
            <id>https://tamilwin.com/article/youth-party-on-a-yacht-near-the-port-city-raid-1787106157</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் சொகுசு படகில் இளைஞர் யுவதிகளுக்காக நடத்தப்பட்ட விருந்துபசாரம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, உரிமமின்றி மதுபானம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் சொகுசு படகில் இளைஞர் யுவதிகளுக்காக நடத்தப்பட்ட விருந்துபசாரம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது, உரிமமின்றி மதுபானம் விற்பனை செய்த இரண்டு சிற்றுண்டிச்சாலைகள் உள்ளிட்ட 3 இடங்களும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி சிறப்புக் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>

அதற்கமைய, 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சந்தை மதிப்புடைய 19,500 மில்லிலீட்டர் உள்நாட்டு மதுபானம், 45,400 மில்லிலீட்டர் வெளிநாட்டு மதுபானம் மற்றும் 2,44,925 மில்லிலீட்டர் பியர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2><b>சந்தேக நபர்கள் கைது</b></h2><p>
</p><p>
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி சிறப்புக் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7ecd3ea-c17f-4be6-841d-8819c00adc3e/26-6a85157f8f2c7.webp' /></p><p>கைது செய்யப்பட்ட குறித்த 3 சந்தேக நபர்களும் கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 
</p>]]></content>
            <updated>2026-08-19T02:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதியில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-involved-in-illegal-money-transaction-arrested-1787104057"></link>
            <id>https://tamilwin.com/article/boy-involved-in-illegal-money-transaction-arrested-1787104057</id>
            <summary type="text">கொழும்பில் பணச் சலவைச் சட்டத்தின் கீழ் பதின்ம வயது இளைஞன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சட்டவிரோதமான உண்டியியல் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் பணச் சலவைச் சட்டத்தின் கீழ் பதின்ம வயது இளைஞன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சட்டவிரோதமான உண்டியியல் முறையில் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நபர் ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p> 

குற்றங்கள் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று மாலை வெள்ளவீதி பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

பணச் சலவை</b></h2><p>இந்த நிலையில் 10,467,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டமைக்கான முறையான ஆவணங்களை குறித்த இளைஞனால் உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d080aadc-aa87-402f-a035-6713ad26d6a0/26-6a850f0a1cab0.webp' /></p><p>பணச் சலவைச் சட்டத்தின் கீழ் மற்றும் போலியான 1000 ரூபாய் நாணயத்தாள்களுடனும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிருலப்பனை பகுதியை சேர்ந்த 19 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது. </p><p>குற்றங்கள் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-19T02:04:49+00:00</updated>
        </entry>
    </feed>
