<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-31T08:03:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-dollar-selling-price-rupees-1785482181"></link>
            <id>https://tamilwin.com/article/us-dollar-selling-price-rupees-1785482181</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(31) அதிகரித்துள்ளதாக&amp;nbsp;இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அத்தோடு. இலங்கை ரூபாயின் மதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(31) அதிகரித்துள்ளதாக&nbsp;இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>அத்தோடு. இலங்கை ரூபாயின் மதிப்பு பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக மேலும் சரிந்துள்ளது, அதே நேரத்தில் வளைகுடா நாணயங்களுக்கு எதிராக அது சிறிதளவு வலுப்பெற்றுள்ளது</p><p>அதன்படி,&nbsp;அமெரிக்க&nbsp; டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.33ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>கொள்முதல் பெறுமதி</h2><p>
</p><p>
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.05ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.80ஆகவும் விற்பனைப் பெறுமதி 393.23ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee2dec4d-6657-4f47-bf75-8681a8dfd24e/26-6a6c5257abed6.webp' /></p><p>
</p><p>
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.03ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.92ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230.25ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.34ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T07:44:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்காக செய்யப்பட்ட வரலாற்றுத் தவறு! பகிரங்கமாக அறிவித்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-announced-mahinda-s-mistake-to-the-world-1785477766"></link>
            <id>https://tamilwin.com/article/namal-announced-mahinda-s-mistake-to-the-world-1785477766</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 18ஆவது சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டது எமது அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறாகும் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் நாமல் ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 18ஆவது சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டது எமது அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறாகும் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக இந்த சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனினும் அது தவறான முடிவு என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம்(30.07.2026) முன்னிலையான பின்னர்&nbsp; நீதிமன்ற&nbsp; வளாகத்தில் வைத்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>தவறை உணர்ந்துவிட்டோம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>நாட்டின் நீதித்துறையின் மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது.&nbsp; &nbsp;ஆட்சியதிகாரம் மாறினாலும் நீதிமன்றங்கள் சுயாதீனமாகவே செயற்படுகின்றன என நாங்கள் நம்புகின்றோம். </p><p>ஆனால், இலங்கை பொலிஸார் மீது எமக்க நம்பிக்கை இல்லை. அவர்கள் ஜேவியினரால் இயக்கப்படுகின்றார்கள்.&nbsp; பெலவத்தையின் கட்டளைகளுக்கு இணங்கவே தற்போது இலங்கை பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cc683e2-2640-4e5e-99a6-6d98b8151e03/26-6a6c4e1eb63f8.webp' /></p><p>பிரதம நீதியரசருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிகாலம் நீடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்ட்டது.&nbsp; ஆனால், தனி நபர்களை இலக்காகக் கொண்டு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது அதன் விளைவு மோசமானதாக இருக்கக் கூடும்.</p><p>கடந்த ஆட்சிக்காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வரவேண்டும்&nbsp; என்பதற்காக அரசியலமைப்பின் 18ஆவது சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டது.&nbsp; இது முற்றிலும் தவறானது. இந்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டோம். இனி வரும் நாட்களில் இதுபோன்ற தவறுகளை நாங்கள் செய்யப் போவதில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97be7bac-2ddc-4383-a160-8e6ebae58138/26-6a6c4e1f812ea.webp' /></p><p>அதேபோல, அரசியலமைப்பின் 19 மற்றும் 20ஆம் சீர்த்திருத்தங்களும் தனிநபரை இலக்காகக் கொண்டே உருவாக்கப்பட்டது.</p><p>

</p><p>தற்போதைய அரசாங்கமும், இதுபோன்ற தவறை செய்யக் கூடாது.&nbsp; தனி நபரை இலக்காகக் கொண்டு நீதியரசர்களின்&nbsp; பதவிக் காலத்தை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பத் திருத்தம் கொண்டு வருவது என்பது தவறான எடுத்துக் காட்டாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T07:38:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறை மோதல் விவகாரம் : 2 மணி நேரம் சாட்சியம் அளித்த சிறை அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-case-chief-jailor-testifies-1785481328"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-case-chief-jailor-testifies-1785481328</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார, நேற்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, 10 அதிகாரிகள் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார, நேற்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, 10 அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் கொல்லப்பட்ட கொடூரமான சிறை மோதல் தொடர்பாக இரண்டு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.
</p><p>
நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில், பிற்பகல் 1.00 மணி தொடங்கி 3.00 மணி வரை சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>தற்போது சிகிச்சை பெற்றுவரும் நபர்கள்</h2><p>

விசாரணையைத் தொடர்ந்து, அந்த ஆதாரங்களில் தேசியப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50c67c06-277d-4f3b-aa6f-6de8c96ee2cb/26-6a6c4f48ee1f6.webp' /></p><p>

அந்த சாட்சியத்தை எந்த ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என்றும் தேசியப் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

விசாரணையின் போது, ​​சம்பவம் நடந்த சமயத்தில் வெலிக்கடையிலிருந்து நீர்கொழும்பு சிறைக்குப் பணியமர்த்தப்பட்டிருந்த 89 சிறைக் காவல் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. </p><p>

கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் குறித்த அறிக்கைகளையும் சிறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T07:35:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் எண்ணெய் விலைகளில் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-prices-fall-in-the-global-market-1785480830"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-prices-fall-in-the-global-market-1785480830</id>
            <summary type="text">உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அதன்படி, இன்று (31.7.2026) WTI கச்சா எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 

அதன்படி, இன்று (31.7.2026) WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71% குறைந்து 82.16 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p>

 

ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 1.16% குறைந்து 88 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் விலை</h2><p>

 

அத்துடன், முர்பான் ரக கச்சா எண்ணெய் விலையும் 2.60% சரிவடைந்துள்ளதுடன், அதன்படி அவ்வகையான கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.71 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c958940-732a-4487-b43e-e6047afdde4b/26-6a6c49a86bbbc.webp' /></p><p>
</p><p>
 

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரத்திற்கு அமைவாக மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) பெரும்பாலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
</p><p>கூட்டுத்தாபனம் தற்போது பெற்றுள்ள இலாபத்தைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை திருத்தத்தை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T07:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alcohol-and-sugary-drinks-could-be-deadly-1785468449"></link>
            <id>https://tamilwin.com/article/alcohol-and-sugary-drinks-could-be-deadly-1785468449</id>
            <summary type="text">எல் நினோ நிலைமையுடன் நிலவும் வெப்பத்தின் மத்தியில் மதுபானம் மற்றும் இனிப்பு பானங்களை அருந்துவது மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கை விடுக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ நிலைமையுடன் நிலவும் வெப்பத்தின் மத்தியில் மதுபானம் மற்றும் இனிப்பு பானங்களை அருந்துவது மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>
இது வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தி மரணத்தை உருவாக்கலாம் எனவும் சுகாதார அமைச்சின் தொழில்சார் சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.</p><p> 

இந்நாட்களில் மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை காணப்படுகின்றது.</p><p> </p><h2><b> நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்கள்</b></h2><p>மதுபானம் அருந்துவதனால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்கள் தோன்றக்கூடும் என அந்தப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் இனோகா சுரவீர தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edeeb290-78d0-4854-bb64-b4fdc8b3d49e/26-6a6c466fb7656.webp' /></p><p>வெப்பமான வானிலை எதிர்வரும் சில நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும். உடல் நீரிழப்புக்கு உள்ளாகாமல் பாதுகாப்பதற்கு சுத்தமான நீர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது.</p><p>எல் நினோ நிலைமையுடன் வளிமண்டலத்தின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும். இதனால், சிறுவர்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். </p><h3><b>மரணங்கள் கூட நிகழக்கூடும்</b></h3><p>மேலும் பாதுகாப்பான முறைகளைப் பின்பற்ற வேண்டும். விசேடமாக தொற்றா நோய்களைக் கொண்ட சிறுநீரக நோயாளர்கள், இதய நோயாளர்கள், பக்கவாத நோயாளர்கள் மற்றும் நீரிழிவு நோயாளர்கள் தமது மருந்து மாத்திரைகளை முறையாக பெற்றுக்கொண்டு சுகாதாரப் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் முக்கியமானது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00e32648-18d3-489c-809e-1da5fb2335e1/26-6a6c467066446.webp' /></p><p>வெப்பத் தாக்கத்திற்கு உள்ளாவதால் மரணங்கள் கூட நிகழக்கூடும். இதனால் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறும் சமூக வைத்திய நிபுணர் இனோகா சுரவீர மேலும் கேட்டுக்கொண்டார்.

</p>]]></content>
            <updated>2026-07-31T06:59:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி யாழில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-jaffna-demanding-justice-journalists-1785479644"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-jaffna-demanding-justice-journalists-1785479644</id>
            <summary type="text">படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள்
மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள
வல...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள்
மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள
வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று(31.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><p> </p><h2>



ஊடகவியலாளர்கள் போராட்டம்</h2><p>

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி
அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e96a80d2-4c10-435a-80db-469de0a62765/26-6a6c42781833c.webp' /></p><p>
இதற்கு முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து
கொள்ளவிருந்த நிலையிலேயே இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளார். </p><p>

இந்த நிலையில், நீதியான விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி, ஊடக
பிரதிஅமைச்சரின் நிகழ்வினை யாழ். ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள்
புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a2e7de3-7d3c-417d-921a-48ae3f334ae6/26-6a6c427903293.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c109a025-c786-4e7a-9eb6-3dccc931b902/26-6a6c4279c0fcc.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T06:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் டெங்கு - உயிரிழப்பு 62 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-62-1785475057"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-62-1785475057</id>
            <summary type="text">நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அந்தப் பிரிவு வெளியிட்ட அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>

அந்தப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,724 ஆக அதிகரித்துள்ளது.
</p><p></p><h2>கம்பஹாவில் அதிகளவான நோயாளர்கள்&nbsp;&nbsp;</h2><p>
அதன்படி, ஜூலை மாதத்தில் நேற்று (30) நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,350 ஆகப் பதிவாகியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/549f2bf4-02a2-41ec-9ede-005420bfd827/26-6a6c3d3b32f7d.webp' /></p><p>

இந்த ஆண்டு இதுவரை கம்பஹா மாவட்டத்தில் இருந்து 17,971 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 16,814 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் இருந்து 5,873 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,829 ஆக கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

தெற்கு மாகாணத்தில் 12,738 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 7,370 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T06:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருதங்கேணியில் அதிகாரத்திலுள்ளவர்களுடன் மக்கள் நேரடி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-direct-meeting-power-in-maruthankerni-1785478752"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-direct-meeting-power-in-maruthankerni-1785478752</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் ஏற்பாட்டில் &quot;மக்கள் சந்திப்பு&quot; நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த நிகழ்வு, மருதங்கேணி கலாசார மத்திய நிலையத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் ஏற்பாட்டில் "மக்கள் சந்திப்பு" நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> 

இந்த நிகழ்வு, மருதங்கேணி கலாசார மத்திய நிலையத்தில் இன்று(31.07.2026) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><h2> 

அபிவிருத்தி திட்டங்கள்&nbsp;</h2><p>
இதன்போது, அப்பகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால
நடவடிக்கை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9019d0e-4ede-40c4-9819-54b1ad6ce8b3/26-6a6c3e8167498.webp' /></p><p>
</p><p>
இந்த நிகழ்வில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் 
பொதுமக்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
</p><p>
“வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் நோக்கோடும், மக்களின் பங்களிப்போடும்
முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, பிரதேச மக்களுக்குத் தங்கள் கருத்துக்களை
அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் நேரடியாகத் தெரிவிப்பதற்கான
சிறந்ததொரு தளமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e567170-077b-452b-97bc-d856c8de5dc2/26-6a6c3e8240363.webp' /></p>]]></content>
            <updated>2026-07-31T06:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பில் கோர விபத்தில் பலியான இளைஞர்கள்..! மூன்று பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-youths-arrested-accident-in-negombo-1785474865"></link>
            <id>https://tamilwin.com/article/3-youths-arrested-accident-in-negombo-1785474865</id>
            <summary type="text">நீர்கொழும்பு – கட்டானா பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அருகில் (30) திகதி அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் தொடர்பில்&amp;nbsp;மூன்று பேர் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு – கட்டானா பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அருகில் (30) திகதி அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் தொடர்பில்&nbsp;மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அதிகாலை 1.45 மணியளவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில்&nbsp;மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.</p><p>இந்த விபத்தில் நீர்கொழும்பு, தாகொன்ன வீதியைச் சேர்ந்த 18 வயதான சிரிவர்தன ஆராச்சிலாகே தலிஷ் நிம்நெத் சிரிவர்தன மற்றும் 19 வயதான விஜேசுந்தர அப்புஹாமிலாகே கவிந்து ஹஷான் சோமதிலக ஆகிய இளைஞர்கள்&nbsp;உயிரிழந்திருந்தனர்.</p><p></p><h2>லொறிக்கு தீ வைப்பு</h2><p>இந்த விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்கு காரணமானதாக கூறப்படும் கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b776553f-e28c-4d8d-aac4-12105a9c873e/26-6a6c3db42a3e2.webp' /></p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், கொள்கலன் லொறிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில்&nbsp;மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நீர்கொழும்பு மற்றும் கிம்புலபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 20, 25 மற்றும் 26 வயதுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e27b5de5-3d99-4d42-af11-c4f5c60280b9/26-6a6c3db3788c6.webp' /></p><p>இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய கண்டெய்னர் லொறியின் சாரதியான பன்னில – தென்ன பகுதியை சேர்ந்தவரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>அதே பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T06:16:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறையைச் சொந்தப் பைகளுக்குள் போட்டுக்கொள்ள என்.பி.பி அரசு முயற்சி! எழும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-trying-take-control-of-judiciary-1785474423"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-trying-take-control-of-judiciary-1785474423</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில்
அரசு தலையிடுவது தொடர்பாக &#039;ஜனநாயகத்துக்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கம்&#039; தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில்
அரசு தலையிடுவது தொடர்பாக 'ஜனநாயகத்துக்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கம்' தனது
பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(30.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய
அச்சங்கத்தின் இயக்குனர் அபீத எதிரிசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசின் இந்தத் தீர்மானத்துக்கு
'நீதிபதிகள் சேவை சங்கம்' மற்றும் 'இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்' ஆகிய
நாட்டின் பிரதான நீதித்துறை சார்ந்த இரு அமைப்புகளும் மிகத் தெளிவாக
எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8b5c13d-c096-400b-8155-bfc543e353c3/26-6a6c32701f44c.webp' /></p><p>சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரேரணையில் நீதித்துறை
சுதந்திரத்தையும் அரசமைப்பையும் பாதுகாக்குமாறு கோரப்பட்டுள்ளதோடு, நீதிபதிகள்
சேவை சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்ற 65 உறுப்பினர்களும் ஒருமனதாக இந்தத்
திட்டத்துக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p><p>நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் ஏகோபித்த குரலில் எதிர்த்த போதிலும், அரசு தனது
அமைச்சரவையில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுத் தன்னிச்சையாக நிறைவேற்ற
முயல்வது எதேச்சதிகாரமான போக்காகும்.</p><p>

நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகளவில் நிலுவையில் உள்ளமையால்தான்
ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக அரசு கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலையாகும்.</p><h2>அரசியல் மற்றும் பொருளாதார&nbsp;சூழ்நிலை</h2><p>
ஏனெனில் அதிகளவிலான வழக்குகள் மேல் நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான்
நீதிமன்றங்களிலேயே தேங்கியுள்ளன. </p><p>மாறாக, அரசியல்வாதிகள் தொடர்புடைய
வழக்குகளைப் பாதுகாக்கவும், நீதித்துறையைத் தங்கள் அரசியல் அதிகாரத்தின் கீழ்
கொண்டுவரவுமே அரசு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f8ae81-1a6d-4875-83a2-cb272cd91cb4/26-6a6c32710d9ab.webp' /></p><p>நாடு எத்தகைய அரசியல் மற்றும் பொருளாதார இக்கட்டான சூழ்நிலைகளில்
இருந்தபோதிலும், நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றமே எப்போதும் நாட்டைப்
பாதுகாத்து நின்றன. </p><p>ஆனால், தற்போது அரசு தனது மக்கள் ஆணையைக் தவறாகப்
பயன்படுத்தி, நீதிபதிகளையும் சட்டத்தரணிகளையும் ஒடுக்கி, நீதிமன்றத்தைச்
சொந்தப் பைகளுக்குள் போட்டுக்கொள்ள முயல்கின்றது.
</p><p>
நீதிமன்றத்தின் நிலைமை இதே போக்கில் தொடர்ந்து, அரசின் இந்தத் தீர்மானங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டின் நீதித்துறைக்கு நினைவஞ்சலி
செலுத்தி எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டிய பரிதாப நிலைமையே ஏற்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T05:53:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mervin-silva-s-money-fraud-revealed-1785463057"></link>
            <id>https://tamilwin.com/article/mervin-silva-s-money-fraud-revealed-1785463057</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முறையற்ற சொத்துக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முறையற்ற சொத்துக்கள் தொடர்பான வழக்கு மூலம் பல அரசியல்வாதிகளுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சேர்த்த பல சொத்துக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் அடுத்த மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><p>
</p><h2><b>
சட்டவிரோத சொத்துக்கள்</b></h2><p>இதன்போது பல வங்கிகளின் முகாமையாளர்கள் பல கணக்குகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/143d78e5-88d6-45bd-9471-d863297d6d43/26-6a6c0d438c6e6.webp' /></p><p>மேர்வின் சில்வா 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொழில் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக பதவியேற்றிருந்தார்.
</p><p>
2 வருடங்கள் வரையிலான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தனது சட்டப்பூர்வமான வருமான வழிகளால் பெருமளவிலான சொத்துகு்களை சேர்த்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பான் ஏசியா வங்கியின் கொழும்பு கிளையில் மாத்திரமன்றி, 10 நிலையான வைப்புகளில் 1823 லட்சத்துக்கும் அதிகமான ரூபாவை வைப்பிலிட்டுள்ளார். 

இதில் உள்ள ஒரு வைப்பு மாத்திரம் 6 கோடி ரூபா பெறுமதியைக் கொண்டுள்ளது. </p><p>அத்துடன், 366, 365 மற்றும் 225 லட்சம் ரூபாவைத் தாண்டிய மேலும் 3 பெரிய வைப்புகளும் அங்கு காணப்பட்டுள்ளன.
</p><p>
இது தவிர அவர் பான் ஏசியா வங்கியில் 33 லட்சம் ரூபாவைத் தாண்டிய மேலும் 5 நிலையான வைப்புக் கணக்குகளைப் பராமரித்து வந்துள்ளமையும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
</p><p>
தனது மனைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஏ. மேரி லூசிடா சில்வா மற்றும் மகன் மாலக மனோஜித் சில்வா ஆகியோருடன் இணைந்து பல கூட்டு கணக்குகளையும் அவர் பராமரித்து வந்துள்ளார்.</p><p></p><h2>கூட்டுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பணம்</h2><p>
</p><p>
பான் ஏசியா வங்கியில் மனைவியுடன் இணைந்து முன்னெடுத்த கூட்டுக்கணக்கு ஒன்றில் 2,140,199.36 ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் ஹற்றன் நேஷனல் வங்கியுடன் மகனின் பெயரில் பேணப்பட்ட கணக்கில் 2,687,852.25 ரூபாயும் 2010ஆம் ஆண்டளவில் காணப்பட்டுள்ளது.
</p><p>
இது தவிர, மாலக சில்வாவின் பெயரில் மாத்திரம் வெலிபல் பைனான்ஸ் நிறுவனத்தில் 15 மற்றும் 35 மில்லியன் ரூபா வீதம் இரண்டு கணக்குகள் காணப்பட்டன.

அத்துடன், மகள் சந்தீபனி மல்லிகா சில்வா மற்றும் மருமகன் பெயரில் தலா 15 மில்லியன் ரூபா வைப்புகளும் அதே நிறுவனத்தில் பராமரித்து வரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c23952f3-616a-4450-b5c7-6ee4bb0581b1/26-6a6c33aeaec15.webp' /></p><p>
</p><p>
மேர்வின் சில்வாவின் பெயரிலும் குறித்த நிறுவனத்தில் 14 மில்லியன் ரூபா வைப்புகள் இருந்தன.
</p><p>
மூன்று வங்கிகளில் பராமரித்து வந்த நடப்புக் கணக்குகளில் 2012ஆம் ஆண்டளவில் 47 லட்சத்திற்கும் அதிகமான பணம் மீதியாக இருந்தது.

ஹட்டன் நேஷனல் வங்கியில் 32.5 மில்லியன் ரூபாவும், DFCC வர்த்தன வங்கியில் 6.8 மில்லியன் ரூபா வைப்புகளும் அவரிடம் இருந்தன.</p><p>

மேர்வின் சில்வா கொள்வனவு செய்துள்ள பல அசையா சொத்துக்கள் தொடர்பிலும் பல தகவல்கள் இந்த வழக்கில் தெரியவந்துள்ளது.
</p><p>
முன்னாள் அமைச்சர் கொழும்பின் உச்ச பெறுமதியைக் கொண்ட பிரதேசங்களில் சொத்துக்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். </p><p>

அதற்கமைய, கொழும்பு 07, குரும்பட்டியின் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் 71.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும், ராஜகிரிய, நாவல வீதியிலிருந்து 39.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும் அவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இது தவிர தலுபிட்டிய பிரதேசத்திலிருந்து 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

மேலும் விக்டோரியா திட்டத்திற்குச் சொந்தமான குண்டசாலை நிலகம பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்கக் காணியை 1994ஆம் ஆண்டு முதல் 1,600 ரூபா போன்ற மிகக் குறைந்த குத்தகைக்கு அவர் கையகப்படுத்தியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

நிதி மோசடி</b></h3><p>அமைச்சராக இருந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் 7 வாகனங்களைக் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dba2a2b-1a8f-48e5-a1e3-4e24e729a04e/26-6a6c0d4467c6c.webp' /></p><p>இந்த வாகனங்கள் மிக குறுகிய காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அவர் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி போர்ஷே ரக மோட்டார் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார். அதிலிருந்து 3 மாதங்களுக்கு பின்னர் ஜூலை மாதத்தில் தனது மகன் மாலக சில்வாவுக்கு 28.8 மில்லியன் ரூபா பெறுமதியான ரேஞ்ச் ரோவர் வாகனத்தைக் கொள்வனவு செய்து கொடுத்துள்ளார்.</p><p> 

அதிலிருந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் தனது பயன்பாட்டிற்காக 32.3 மில்லியன் ரூபா பெறுமதியான பென்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார். இந்த வாகனங்களுக்கு மேலதிகமாக 20 லட்சம் ரூபா பெறுமதியான லேன்ட் ரோவர் வாகனம், 9 மில்லியன் ரூபா பெறுமதியான ஹையுன்டாய் ஜீப் வாகனம் மற்றும் 58 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு லொறி வாகனங்களும் இரண்டு வருடங்களுக்குள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவரது நாளாந்த செலவு முறையும் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்தமை வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள் மூலம் தெளிவாகும் மற்றொரு விடயமாகும். </p><p>

மேலும் அவர் சம்பத் மற்றும் செலான் வங்கிகளின் இரண்டு கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் 42 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுள்ளார்.
</p><p>
அதேபோல் மூலங்கள் வெளிப்படுத்தப்படாத 34.7 மில்லியன் ரூபா அளவிலான பிரம்மாண்டமான கடன் தொகையொன்றையும் செலுத்தி முடித்துள்ளார்.
</p><p>
இதற்கு மேலதிகமாக ரித்து ஆகர்ஷா எனும் நபருக்காக 240,000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகைக்கு இணங்க தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் தனக்காக எந்தவொரு உயிர் காப்பீட்டு ஒப்பந்தத்தையும் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக 6 காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பராமரித்து வந்துள்ளார்.
</p><p>
இதற்காக வருடாந்தம் 13 லட்சம் வரையிலான பணம் தவணையாகச் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 4 காப்பீட்டு ஒப்பந்தங்களும் மாலக சில்வாவிற்காகவே பராமரித்து வரப்பட்டுள்ளன.</p><p>

2 வருடங்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் 485 மில்லியன் ரூபாவுடனான பிரம்மாண்டமான சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்து எதிர்கால வழக்கு விசாரணைகளின் போது மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T05:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதிகள் தொடர்பில் விமான பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-customs-issues-warning-to-air-passengers-1785471631"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-customs-issues-warning-to-air-passengers-1785471631</id>
            <summary type="text">விமானம் அல்லது வேறு எந்த வழியிலும் பயணம் செய்யும்போது ஏனையவர்களுக்கு சொந்தமான பொதிகளையோ அல்லது பயணப்பொருட்களையோ கொண்டு செல்வதை தவிர்க்குமாறு விமான பயண...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானம் அல்லது வேறு எந்த வழியிலும் பயணம் செய்யும்போது ஏனையவர்களுக்கு சொந்தமான பொதிகளையோ அல்லது பயணப்பொருட்களையோ கொண்டு செல்வதை தவிர்க்குமாறு விமான பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை கடத்துவதற்காக, அறியாத பயணிகளை கடத்தல்காரர்கள் பயன்படுத்திக்கொள்ளும் அபாயம் இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் இலங்கை சுங்கத்துறை ஊடகப்பேச்சாளர் சந்தனா புஞ்சிஹேவ தெரிவிக்கையில்,</p><p></p><h2>கடுமையான குற்றங்களில் சிக்கும் அதிக அபாயம்</h2><p>
</p><p>
தாங்கள் என்ன கொண்டு செல்கிறோம் என்பதை அறியாமலேயே சாதாரண மக்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதற்கான அதிக அபாயம் இருப்பதாக கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c74c6903-00e4-4374-a303-40ad8b3ba87e/26-6a6c2dbf2a666.webp' /></p><p>
</p><p>
மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கூட போதைப்பொருள் கடத்தல்காரர்களால் இந்த வழியில் அறியாமல் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், சமீபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் போதைப்பொருள் இருப்பை இறக்குமதி செய்ய முயன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், தாங்களே பயணப்பொருட்களை சோதித்தாலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி போதைப்பொருட்களைக் கவனமாக மறைத்து வைப்பார்கள் என்றும், 'இலவச விமான டிக்கெட் கொடுத்து வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்வதாக' ஒருவர் கூறினால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைப் பற்றி மக்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்றும் சுங்கத்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
உலகின் பல நாடுகளில், போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், தங்களுக்குச் சொந்தமில்லாத பொருட்களையோ அல்லது பொதிகளையோ எந்த சூழ்நிலையிலும் கொண்டு செல்ல ஒப்புக்கொள்வது அனுமதிக்கப்படாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z6vl1mp1F3Y" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T05:08:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்! கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785471539"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785471539</id>
            <summary type="text">நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பின் நிலைமை குறித்து கடற்தொழிலாளர்களுக்கு&amp;nbsp;வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பின் நிலைமை குறித்து கடற்தொழிலாளர்களுக்கு&nbsp;வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவின் அறிவிப்பில் மேலும், கங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்பிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.</p><p></p><p> </p><p>மறு அறிவித்தல் வரைக்கும் இப்பகுதிகளில், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்தொழிலாளர்கள் உடனடியாக பாதுகாப்பான முறையில் கரைக்கு திரும்புவது அவசியம்.</p><h2>பாதுகாப்பு உறுதி</h2><p> </p><p>மேற்குறிப்பிட்ட இரண்டு பகுதிகளைத் தவிர நாட்டின் ஏனைய கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றமாகக் காணப்படலாம். இப்பகுதிகளில் மீன்பிடித் தடை விதிக்கப்படவில்லை என்றாலும், வானிலை மற்றும் கடலின் சீற்றத்தைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தொழிலுக்குச் செல்லவும்.
</p><p>கடற்தொழிலாளர்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் திடீர் முடிவாக இது அமைந்த போதிலும், கடற்தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாப்பதும் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுமே முதன்மையான நோக்கமாகும்.<b>&nbsp;</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6ec9a8-c18d-4e32-831e-9a3463d149db/26-6a6c2abf5f232.webp' /></p><p>எனவே, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்படும் போதும், தொழிலில் ஈடுபடும் போதும், கரைக்குத் திரும்பும் போதும் மீனவர்கள் தவறாது மிதவை அங்கிகளை அணியுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர் என்றுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T05:00:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delays-in-train-services-on-the-coastal-route-1785472262"></link>
            <id>https://tamilwin.com/article/delays-in-train-services-on-the-coastal-route-1785472262</id>
            <summary type="text">கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேருவளை மற்றும் மக்கொன தொடருந்து நிலையங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

பேருவளை மற்றும் மக்கொன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74fdef5f-8632-4c5a-ab7c-615952d74c14/26-6a6c2946f36dc.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:49:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசிடம் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-request-government-provincial-election-1785471047"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-request-government-provincial-election-1785471047</id>
            <summary type="text">இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல்கள்
ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசிடம்
வலியுறுத்தியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல்கள்
ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசிடம்
வலியுறுத்தியுள்ளார்.</p><p>இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,</p><p>&nbsp;</p><h2>நேரடியான மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டிய அவசியம்</h2><p>"மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் சிறந்த முறையில் இயங்குவதாக சிலர் வாதிட்டாலும், அது யதார்த்தமானது அல்ல. அரச அதிகாரிகள் நிர்வாகத்தை
மேற்கொள்ளும்போது அவர்களுக்கு மக்களுக்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டிய
அவசியம் ஏற்படுவதில்லை என்பதால், மாகாண சபைகளுக்கு நேரடியான மக்கள்
பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74443a71-e80a-4b3a-b8a8-49cf4b652dff/26-6a6c20499ecbf.webp' /></p><p>

மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் இயங்குவது ஒரு குற்றமாகும்.
மாகாண சபை தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தினால், எதிர்காலத்தில்
நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என அனைத்து
நிறுவனங்களையும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயக்க முடியும் என்ற ஆபத்தான
நிலையை அது உருவாக்கும்.
</p><p>
எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி உலக ஜனநாயக தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள
நிலையில், அன்றைய தினமாவது அரசு மாகாண சபைத் தேர்தலை எப்போது, எந்த முறையில்
நடத்தப் போகின்றது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்." என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:11:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விவகாரத்தை முன்வைத்து கொழும்பிலும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-colombo-over-the-semmani-issue-1785469978"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-colombo-over-the-semmani-issue-1785469978</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதிகோரியும், அகழ்வுப்பணிகளை தடையின்றி தொடர வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று கவனவீர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதிகோரியும், அகழ்வுப்பணிகளை தடையின்றி தொடர வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>

'நீதிக்கான மக்கள் சக்தி' அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள் மற்றும் சிவில் சமூக
அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p>
</p><h2>செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள்&nbsp;</h2><p>
"செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தடையின்றி தொடர வேண்டும்"
மற்றும் "காணாமல்போன உறவுகளுக்கு நீதி வேண்டும்" போன்ற பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6567419-cab9-4393-897b-0a153ca1f58e/26-6a6c1d804ff28.webp' /></p><p>
இதில் கலந்துகொண்டவர்கள்,"செம்மணி இனப்படுகொலையின் சாட்சி", "செம்மணிக்கு நீதி
வழங்கு!", "தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்" மற்றும் "செம்மணி
மனிதப் புதைகுழியின் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுங்கள்" போன்ற
வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் பொறிக்கப்பட்ட
பெரிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசர முடிவுகள் அல்ல : ஆளும் தரப்பு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-freedom-of-expression-or-peaceful-protest-1785468629"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-freedom-of-expression-or-peaceful-protest-1785468629</id>
            <summary type="text">மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம்
நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு,
நிர்மாணிப்பு மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம்
நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு,
நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசு ஜனநாயக வழியில் முன்னோக்கிச் செல்வதற்கு இத்தகைய ஆரோக்கியமான
விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>11 இலட்சம் வழக்குகள்</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

"சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் நீதித்துறையைப் பலப்படுத்தவுமே மக்கள்
தெளிவான ஆணையை வழங்கினர். கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகளால்
பாதிக்கப்பட்டிருந்த நீதித்துறை, பொலிஸ் மற்றும் அரச நிறுவனங்களில் தற்போதைய
அரசு அரசியல் தலையீடுகளை முற்றிலும் நிறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b01b696a-2f37-4125-9dab-c012b3ec59ce/26-6a6c1be5e213d.webp' /></p><p>காணி வழக்குகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இழுபறியாக இருப்பதும், சிறுவர்
துஷ்பிரயோக வழக்குகள் தாமதமாவதும் முறைப்பாட்டாளர்களையும் எதிராளிகளையும்
பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றது.
</p><p>
தேங்கிக் கிடக்கும் சுமார் 11 இலட்சம் வழக்குகளை விரைவாக முடிவுக்குக்
கொண்டுவர புதிய நீதிமன்றங்களை அமைத்தல், புதிய நீதிபதிகளை நியமித்தல் மற்றும்
பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><h2>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது</h2><p>
</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு
பகுதி மட்டுமேயாகும். இது அவசர முடிவு அல்ல, இதற்கு முன் அரசமைப்புத்
திருத்தக் குழுக்களில் விமர்சகர்களாலும் விவாதிக்கப்பட்டு
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95da8b57-9a02-443a-b20f-e5573e3bf9d7/26-6a6c1be6d72d2.webp' /></p><p>நீதிமன்றங்களை டிஜிட்டல்மயமாக்குதல், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம்
மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் புதிய அதிகாரிகளையும்
உபகரணங்களையும் வழங்குதல் போன்றன முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>மேலும்,
பொலிஸாருக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அரசியல் தலையீடின்றி
சுதந்திரமாகச் செயற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்போது
மாறுபட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் எழுவது இயல்பானது. </p><p>மக்களின்
எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் அரசு கவனித்து, அவற்றை மதிப்பாய்வு செய்து
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை திறந்துவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inauguration-of-north-zone-registry-1785469563"></link>
            <id>https://tamilwin.com/article/inauguration-of-north-zone-registry-1785469563</id>
            <summary type="text">பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம்
பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம்
பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம் பகுதியில்
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர்
ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
</p><p>
வடக்கு மாகாண மக்களின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள
இந்தப் பதிவறையின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள்
சேதமடைந்திருந்தால், அவற்றின் பிரதிகளை இதுவரை கொழும்பு மாளிகாவத்தையில்
அமைந்துள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் மட்டுமே
பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.
</p><p>குறித்த ஆவணங்களை இனிமேல் வவுனியாவில் அமைந்துள்ள வடக்கு வலய பதிவறையிலேயே
பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், உடனடியாக பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் சேவை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் திருமணச் சான்றிதழ் மற்றும்
இறப்புச் சான்றிதழ்களை இவ்வலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் வசதிகள்
ஏற்படுத்தப்படவுள்ளன.</p><p>

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வத்தம்பி
திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்
மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.உமாமகேஸ்வரன்,
பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின்
அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:46:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monthly-fuel-price-revision-today-1785467817"></link>
            <id>https://tamilwin.com/article/monthly-fuel-price-revision-today-1785467817</id>
            <summary type="text">மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று(31.07.2026) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதுஇதற்கமைய, இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பின்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று(31.07.2026) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது</p><p>இதற்கமைய, இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பின்னர், நாட்டில் எரிபொருள் விலைகள் தொடர்பிர் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் விலை சூத்திரம்</h2><p>

இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3ba711-9496-4cdf-98ce-6205d4e3706c/26-6a6c15ea15077.webp' /></p><p>
</p><p>இதன்படி, ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 89.69 டொலராகவும், ஒரு பரல் WTI கச்சா எண்ணெய்யின் விலை 84.5 டெலராகவும் பதிவாகியுள்ளது.</p><p>எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OI5qZw5OcBY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-31T03:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துக்குள் இளைஞனின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-dies-inside-the-bus-1785460429"></link>
            <id>https://tamilwin.com/article/man-dies-inside-the-bus-1785460429</id>
            <summary type="text">
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையமைப்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வாகன ஓட்டுநராக பணியாற்றிய இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையமைப்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வாகன ஓட்டுநராக பணியாற்றிய இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
</p><p>
பேருந்திற்குள் தூக்கிட்டு அவர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">பொலிஸார் விசாரணை</b></p><p>நேற்றையதினம் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00121aec-a893-48ac-8962-432d029d2761/26-6a6c14b781080.webp' />&nbsp;&nbsp;</p><p>உயிரிழந்தவர் மாஸ்பொத, போகொடை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான சுரேஷ் காரியவசம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p>சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மதுவரித்திணைக்கள வருமானத்தில் பதிவான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excise-revenue-increases-in-liquor-prices-1785462595"></link>
            <id>https://tamilwin.com/article/excise-revenue-increases-in-liquor-prices-1785462595</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரித்திணைக்களம் 141.5 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.மது...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரித்திணைக்களம் 141.5 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. ஹேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வருவாய் அதிகரிப்பு பதிவு</h2><p>

2026ஆம் ஆண்டிற்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள மொத்த 245 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கில், முதல் ஆறு மாதங்களுக்கான இலக்கு 119.3 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6337249c-6c95-48bd-8b42-1142dae94e7f/26-6a6c09cc5b4b3.webp' /></p><p>
</p><p>
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் 118.6 சதவீத வருவாய் இலக்கை எட்டும் வகையில் திணைக்களம் வருவாய் ஈட்டியுள்ளது.</p><p>

மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான 117.03 பில்லியன் ரூபாய் வருவாயுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வருவாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T02:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கிய சம்பவத்தால் அதிர்ச்சியில் பெற்றோர் - மாணவ குழுவால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-students-abused-a-female-student-1785384991"></link>
            <id>https://tamilwin.com/article/school-students-abused-a-female-student-1785384991</id>
            <summary type="text">இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்கள், அதே வகுப்பை சேர்ந்த மாணவியை கடுமையான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்கள், அதே வகுப்பை சேர்ந்த மாணவியை கடுமையான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த நிலையில் குறித்த 5 மாணவர்களும் குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
</p><p>
அதற்கமைய, சந்தேகநபர்களான மாணவர்களில் இருவரை 28 நாட்களுக்கு சிறுவர் நல்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2><b>

மருத்துவப் பரிசோதனை</b></h2><p>அத்துடன், ஏனைய மூன்று மாணவர்களையும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fff2f28-591f-4a23-a91a-cfd1a59b2cfd/26-6a6bf66a43d21.webp' /></p><p>தகாத செயற்பாட்டுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய குருவிட்ட பொலிஸார் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் குறித்த மாணவர்கள் குழு கைது செய்யப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட 5 மாணவர்களில் இருவரும் மாணவியுடன் கடுமையான முறையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய 3 மாணவர்களும் அதற்கு உதவி மற்றும் உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T02:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களை துன்புறுத்தும் பொலிஸார் - கடுமையாகும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bibehaving-police-will-be-punished-1785464348"></link>
            <id>https://tamilwin.com/article/bibehaving-police-will-be-punished-1785464348</id>
            <summary type="text">பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் உதய குமார வூட்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சேவை இடைநிறுத்தம்</h2><p>
</p><p> வதுபிட்டிவல பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கடையொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்துமாறு கூறி, மோட்டார் சைக்கிள் சாரதியை திட்டித்தீர்த்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அவரது சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c134ef-dc4d-4544-a75f-b9c20d040f3e/26-6a6c061db5e87.webp' /></p><p>நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் சேவை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>அந்த உப பொலிஸ் பரிசோதகர், மோட்டார் சைக்கிள் சாரதியிடம் "வேண்டுமானால் எனது சீருடையை நீயே போட்டுக்கொள்" என்று கூறும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
</p><p>இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த உப பொலிஸ் பரிசோதகரின் பணி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T02:19:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் கசிந்த கஞ்சிபானி இம்ரானின் இரகசிய தகவல்கள்..! திடீரென தலைமறைவான கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kpi-malaysia-has-been-relocated-1785462815"></link>
            <id>https://tamilwin.com/article/kpi-malaysia-has-been-relocated-1785462815</id>
            <summary type="text">போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவரான கஞ்சிபானி இம்ரான் (KPI) மலேசியாவில் உள்ள தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவரான கஞ்சிபானி இம்ரான் (KPI) மலேசியாவில் உள்ள தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரத்மலானை சைமா என்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி வெளிப்படுத்திய தகவலின்படி அவர் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><h2>மலேசியாவிற்கு சென்ற&nbsp;பொலிஸ் குழு</h2><p>
கஞ்சிபானி இம்ரானை கைது செய்யும் நோக்கத்தில், பொலிஸ் குழுவொன்று சமீபத்தில் மலேசியாவிற்கு சென்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f716d6-5304-47c8-a461-da33bee1a747/26-6a6c04c4db3dd.webp' />&nbsp;</p><p> </p><p>இதன்போது, கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பின் நெருங்கிய கூட்டாளியான ரத்மலானை சைமாவை, மலேசிய பொலிஸாரின் உதவியுடன் உள்ளூர் பொலிஸ் குழு கைது செய்துள்ளது.</p><p>

இருப்பினும், பொலிஸ் தலைமை ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் நாட்டை விட்டு வெளியேறிய பொலிஸ் குழு, கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக மலேசிய பொலிஸாருடன் இணைந்து தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.</p><h2>ரத்மலானை சைமா கைது</h2><p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட ரத்மலானாவைச் சேர்ந்த சைமா, சில காலமாக ரத்மலானாவை சேர்ந்த குடு அஞ்சுவுடன் இணைந்து ஒரு போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதன்பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T02:13:30+00:00</updated>
        </entry>
    </feed>
