<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-15T07:43:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eath-quake-1786756934"></link>
            <id>https://tamilwin.com/article/eath-quake-1786756934</id>
            <summary type="text">புதிய இணைப்புஇந்தோனேசியாவை இன்று அதிகாலை (15) தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.&amp;nbsp;&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இந்தோனேசியாவை இன்று அதிகாலை (15) தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த சம்பவத்தால் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மூன்றாம் இணைப்பு</span></p><p>இந்தோனேசியாவை இன்று அதிகாலை (15) தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின் அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>இன்று காலை (15) இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.&nbsp;&nbsp;</p><p>
</p><p>அதன்படி, தேசிய புவியியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. </p><p>
இதனால் பல கட்டடங்களும் வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், உடனடியாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>இந்தோனேசிய நேரப்படி அதிகாலை 5:58 மணியளவில் புளோரெஸ் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb44d17-3aba-449b-b65d-c5adca40d765/26-6a7fdb372c54a.webp' /></p><p>கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள எண்டே நகரத்திற்கு வட-வடமேற்கே 68 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.</p><p>முதல் அதிர்வைத் தொடர்ந்து பல தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டு மேலதிக சேதங்களை உருவாக்கியுள்ளன.
</p><p>கிழக்கு நுசா தெங்காரா, மேற்கு நுசா தெங்காரா, தெற்கு சுலாவேசி மற்றும் தென்கிழக்கு சுலாவேசி ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இந்தோனேசியாவின் வானிலை, காலநிலையியல் மற்றும் புவிப்பௌதிகவியல் முகவர் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>பொதுமக்கள் கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><h2>கடற்கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>
கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக உயர்ந்த நிலப்பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
நிலநடுக்கத்தின் தாக்கம் புளோரெஸ் தீவின் பெரும்பகுதியில் உணரப்பட்டது. கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தின் சிக்கா பகுதியில் உள்ள பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. </p><p>
சேதமடைந்த கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் குறித்த உத்தியோகபூர்வ மதிப்பீடுகளை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.</p><p>
இதேவேளை, இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை கிடையாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T07:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிடிவாதம் பிடிக்கும் அநுர அரசாங்கம்.. நாமல் விடுத்த பகிரங்க சவால்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-1786777697"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-1786777697</id>
            <summary type="text">நீதித்துறை விவகாரத்தில் மூத்த வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்றே தீர்மானம் எடுத்ததாகக் கூறும் ஜனாதிபதி, அந்த வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை விவகாரத்தில் மூத்த வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்றே தீர்மானம் எடுத்ததாகக் கூறும் ஜனாதிபதி, அந்த வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p>மேலும், "உள்நாட்டுச் சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் மற்றும் கொமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தும் அரசாங்கம் இந்த தீர்மானத்தில் பிடிவாதமாக இருக்கின்றது.&nbsp;</p><p></p><h2>காணாமல் போன நிதி..&nbsp;</h2><p>நீதித்துறை வெற்றிடங்களை அல்லது பிரச்சினைகளை, அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதாலோ அல்லது ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாலோ ஒருபோதும் தீர்த்துவிட முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb4736f-9c37-4c58-90e8-de4bee496202/26-6a801488c2b2d.webp' /></p><p>
அத்துடன், சுங்கத்தில் கொள்கலன்கள் காணாமல் போனமை மற்றும் நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதியின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊடுருவல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை.</p><p>அது மாத்திரமன்றி, மகாநாயக்க தேரர்கள் எழுப்பிய கேள்விகளுக்குக் கூட ஜனாதிபதி இன்னும் உரிய பதிலளிக்கவில்லை.&nbsp;</p><p>அரசாங்கம் தனது சுய தேவைகளுக்காகவும் அரசியல் நிலைப்புத்தன்மைக்காகவும் நாட்டின் நீதித்துறை அமைப்பையும் மக்களையும் காட்டிக்கொடுத்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T07:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணத்திற்கு வழிவகுக்கும் தீவிரமான நிலை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-disease-children-extreme-heat-and-rain-1786776071"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-disease-children-extreme-heat-and-rain-1786776071</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளிடையே நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளிடையே நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
</p><p>
நிலவும் கடும் வெப்பத்தால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும் என்றும், எனவே அதிக தண்ணீர் அருந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, ஒரு சராசரி வயது வந்தவர் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><h2>மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள தகவல்</h2><p>
</p><p>
மேலும், குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கும்போது, ​​பெற்றோர்கள் அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cd7f89e-e08f-4a29-b3ca-7a3255962d18/26-6a800dce2234a.webp' /></p><p>

நீண்ட காலமாக போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும், தண்ணீர் அருந்தாமல் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவது, சுற்றுலா செல்வது போன்றவை வெப்பத்தாக்கம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு தீவிரமான நிலை என்றும் கூறியுள்ளார்.</p><h2>முக்கிய அறிவுறுத்தல்</h2><p>

எனவே, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தண்ணீர் எடுத்துச்செல்லுமாறு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d82994-edd9-429d-86f2-d331cc5fd952/26-6a800dcec7b13.webp' /></p><p>
</p><p>
 இந்த காலகட்டத்தில் வயிற்றுப்போக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரும் சுத்தமான உணவும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>
குழந்தைகளுக்கு இனிப்புப் பானங்கள் மற்றும் தின்பண்டங்களைக் கொடுப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவங்களைக் குடிக்கக் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்கள்.. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்து எழுப்பப்படும் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-namal-karunaratna-speech-1786774896"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-namal-karunaratna-speech-1786774896</id>
            <summary type="text">நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்களும் இருக்கும்போது, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நீதித்துறை நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்களும் இருக்கும்போது, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நீதித்துறை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதில் என்ன தவறு உள்ளது எனப் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>&nbsp;80 வயதைக் கடந்தவர்கள்..&nbsp;</h2><p>சட்டங்களை இயற்றும் இடமாக நாடாளுமன்றமும், அச்சட்டங்களை நடைமுறைபடுத்தும் இடமாக நீதித்துறையும் திகழ்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00855b70-acae-4ebb-9ee1-2100b61d1922/26-6a800d706e31c.webp' /></p><p> நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்கள் மற்றும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு சட்டங்களை உருவாக்குபவர்கள் பலர் இருப்பதாகப் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>அவ்வாறிருக்கையில், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் விவகாரத்தை எதற்காக ஒரு பெரிய பிரச்சினையாக மாற்ற வேண்டும் என்றும் நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:55:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு நடக்கும் அநியாயங்கள் - சஜித் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-must-intervene-immediately-1786775672"></link>
            <id>https://tamilwin.com/article/government-must-intervene-immediately-1786775672</id>
            <summary type="text">அங்கவீனமுற்ற படை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து இருவேறு விதமாக நடத்தப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் இந்த குறைப்பாட்டிற்கு அரசாங்கம் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்கவீனமுற்ற படை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து இருவேறு விதமாக நடத்தப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் இந்த குறைப்பாட்டிற்கு அரசாங்கம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>&nbsp;அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் 


பிரேமதாசவின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(15.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கலந்துரையாடலில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இராணுவ வீரர்களுக்கான உரிமை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>நாட்டைக் காப்பாற்றுவதற்காக தமது அவயவங்கள் மற்றும் இன்னுயிரைத் தியாகம் செய்த நமது நாட்டின் வீரம் செறிந்த படை வீரர் சமூகம், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை பாதுகாப்பதில் மகத்தான சேவைகளை ஆற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f52fee9-2bea-4d45-aff0-0b839bad0fd9/26-6a800cb2c696f.webp' /></p><p> </p><p>

அவர்களுக்குச் செலுத்தக்கூடிய உச்சக்கட்ட நன்றிக்கடனைச் செலுத்த வேண்டும். </p><p>ஆனால்,&nbsp; இராணுவ வீரர்களின் பல பாரதூரமான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என்றார்.&nbsp; &nbsp;</p><p> </p><p></p><p></p><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T06:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-warning-be-bank-officials-1786763500"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-warning-be-bank-officials-1786763500</id>
            <summary type="text">&amp;nbsp;வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.
</p><p>
பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாக மோசடி</h2><p>

இதேவேளை, சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1fea9e1-0448-4cc3-b7ad-c6f3aebb45e6/26-6a7ff15f69cf5.webp' /></p><p>
</p><p>
குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்</h2><p>

இவர்கள் வங்கி கணக்குகளில் வைப்பில் உள்ள பண விபரங்களை அறிந்து பணம் மோசடியான முறையில் ஈட்டப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b9c0ad-09e2-42f7-b4ed-5cd708d1b3f1/26-6a7ff1603bb64.webp' /></p><p>
</p><p>
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் இடப்பட்ட போலி ஆவணங்களை அனுப்பி பொதுமக்களை நம்பவைக்கின்றமை தெரியவந்துள்ளது.</p><p> 

இவர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகளும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. </p><p>

இதேவேளை, ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர்கள் மோசடி காரர்களால் இலக்குவைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.&nbsp; </p><p>எனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

&nbsp; &nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை: உலகறியச் செய்த வைத்தியர்களின் சிறப்பான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/achievement-at-trincomalee-hospital-1786771245"></link>
            <id>https://tamilwin.com/article/achievement-at-trincomalee-hospital-1786771245</id>
            <summary type="text">திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல்






திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை வைத்தியசாலையில் நிகழ்ந்த சாதனை: மிக பெரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றல்






திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை மூலம் மிகப்பெரிய சிறுநீரகக் கல் ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சிகிச்சை இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 52 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">3 கிலோ 100 கிராம் சிறுநீரகக் கல் மீட்பு</span></p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த நபர் திருகோணமலை பகுதியில் வசித்து வருபவர் என்றும் 
சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்ட கல் 3 கிலோ 100 கிராம் எடையுடையது என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15477e24-ae55-4f8f-84b0-65c3ec120353/26-6a7fff8f78095.webp' /></p><p>
</p><p>
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>


இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.</p><p>

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா..! பலப்படுத்தப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8000-police-and-tri-forces-kandy-esala-perahera-1786771062"></link>
            <id>https://tamilwin.com/article/8000-police-and-tri-forces-kandy-esala-perahera-1786771062</id>
            <summary type="text">
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாதுகாப்பிற்காக முப்படைகளை சேர்ந்த சுமார் 8,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் பாதுகாப்பிற்காக முப்படைகளை சேர்ந்த சுமார் 8,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>

அதற்கேற்ப, 6,200 பொலிஸ் அதிகாரிகள், 564 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், 1,200 முப்படை உறுப்பினர்கள் மற்றும் 29 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>14 இடங்களில் வீதி தடைகள்&nbsp;</h2><p>
</p><p>
கண்டி எசல பெரஹரா நிகழ்வு ஆகஸ்ட் 18 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca58f50d-8eba-4280-b47b-13c2e9eb646d/26-6a7fffd1d8758.webp' /></p><p>
இதேவேளை, பாதுகாப்பிற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், பெரஹராவின் போது 14 இடங்களில் வீதி தடைகள் அமைக்கப்படும் என்றும்,&nbsp;13 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T05:57:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலியார் குளம் வற்றியதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-suffering-due-drying-mudaliar-pond-1786766485"></link>
            <id>https://tamilwin.com/article/people-suffering-due-drying-mudaliar-pond-1786766485</id>
            <summary type="text">திருகோணமலை - உப்புவெளி கமநல சேவை பிரிவுக்குட்பட்ட முதலியார் குளம் நீர்
இன்றி முற்றிலும் வற்றிப்போயுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான
விவசாயிகளும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - உப்புவெளி கமநல சேவை பிரிவுக்குட்பட்ட முதலியார் குளம் நீர்
இன்றி முற்றிலும் வற்றிப்போயுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான
விவசாயிகளும், நன்னீர் மீனவக் குடும்பங்களும் கடுமையான பாதிப்புகளை
எதிர்நோக்குகின்றனர்.</p><p>

குளத்தில் நீர்மட்டம் முற்றிலும் வற்றியதால் விவசாய நிலங்களுக்கான
நீர்ப்பாசனம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்</h2><p> </p><p>

இதனால்
பெரும் முதலீடு செய்துள்ள விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடும்
நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0f6d8b-9e22-4f4b-be7c-7566e1ff73bb/26-6a7fe6ce5c94b.webp' /></p><p>

முதலியார் குளத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு
வந்த பல குடும்பங்கள், குளம் வற்றியதால் தொழில் செய்ய வழியின்றி அன்றாட
உணவிற்கே திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
சுற்றியுள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையைப்
பூர்த்தி செய்வதிலும் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T05:51:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-cheated-people-through-the-facebook-1786759793"></link>
            <id>https://tamilwin.com/article/man-cheated-people-through-the-facebook-1786759793</id>
            <summary type="text">இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிறுவனமொன்றின் ஊடாக இலகுவான கட்டண முறையில் வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதாக கூறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>நிறுவனமொன்றின் ஊடாக இலகுவான கட்டண முறையில் வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதாக கூறி பேஸ்புக் விளம்பரங்களை வெளியிட்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி கோடி கணக்கான ரூபாவை மோசடி செய்துள்ளார். </p><h2><b>நிதி மோசடிகள்</b></h2><p>இது தொடர்பான முறைப்பாட்டிற்கமைய, மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bfe9e05-135b-40d9-b1e6-5a3f62d68751/26-6a7ff0db1c689.webp' /></p><p>இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் பெருமளவிலான நிதி மோசடிகள் தொடர்பில் 16 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளது.</p><p> அத்துடன், மேலும் பல முறைப்பாடுகள் எதிர்காலத்தில் கிடைக்கப் பெறவுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p> சந்தேகநபருக்கு எதிராக 10 திறந்த பிடியாணைகளும் 5 திகதியிடப்பட்ட பிடியாணைகளும் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><h3><b>மேலதிக விசாரணை</b></h3><p>வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் குறித்த நிறுவனம் நுகோகொட ஹைலெவல் வீதியில் கட்டடமொன்றில் பேணப்பட்டு வந்தது. அத்துடன், அதன் பணிப்பாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சந்தேகநபர் நீண்ட காலமாக இந்த நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e83f837-441f-4801-9d49-026ea5f21940/26-6a7ff0dbc2891.webp' /></p><p>இந்தச் சந்தேகநபருக்கு எதிராக உள்ள முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர். </p><p>சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-15T05:49:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேசுபொருளாகிய நீதியமைச்சர் வாகனம் செலுத்தும் காணொளி.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-leaked-video-revealed-1786769958"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-leaked-video-revealed-1786769958</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஒகஸ்ட் 13, 2026ஆம் திகதி அன்று வாகனம் செலுத்துவது போன்ற நேரலை ஒளிபரப்பு என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஒகஸ்ட் 13, 2026ஆம் திகதி அன்று வாகனம் செலுத்துவது போன்ற நேரலை ஒளிபரப்பு என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
ஃபேக்ட் கிரெசெண்டோ ஸ்ரீலங்கா இணையதளத்தின்படி, அவர், அமைச்சரவை அமைச்சராவதற்கு முன்பு, தேசிய மக்கள் சக்தியின் மொரட்டுவ தேர்தல் அமைப்பாளராகப் பணியாற்றியபோது, ​​ஒகஸ்ட் 13, 2023 அன்று இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது.</p><p>

"இன்று ஒகஸ்ட் 13" என்று அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் மீண்டும் பரவியதால், இது இந்த ஆண்டு ஒகஸ்ட் 13 அன்று பதிவு செய்யப்பட்டது என்று சில பயனர்கள் நம்புகின்றனர்.</p><h2>பகிரப்பட்ட காணொளி..&nbsp;</h2><p>

இருப்பினும், இந்தக் காணொளி ஒகஸ்ட் 13, 2023 முதல் இணையத்தில் பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது.

மொரட்டுவவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி தொகுதி கூட்டத்திற்கு ஹர்ஷன நாணயக்கார ஆதரவாளர்களை அழைக்கும் முழு காணொளியும் இதில் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5d74281-51aa-487e-a03c-1a5f86fe7112/26-6a7ffcefe5f81.webp' /></p><p> </p><p>இதில் அப்போதைய தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>
மேலும், ஹர்ஷன நாணயக்கார வாகனம் ஓட்டும் போது தனது சொந்த கைபேசியைப் பயன்படுத்தி காணொளியைப் பதிவு செய்தார் என்ற கூற்றுகளையும் உண்மை சரிபார்ப்பு மறுத்துள்ளது.
</p><p>
ஃபேக்ட் கிரெசெண்டோ ஸ்ரீலங்கா இணையதளத்தின்படி, முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபர், ஹர்ஷன நாணயக்கார வாகனம் செலுத்துவதையும் கெமராவுடன் பேசுவதையும் பதிவு செய்யும் முழு காணொளியும் காணப்படுகிறது.
</p><p>
அதன்படி, ஃபேக்ட் கிரெசெண்டோ இணையதளம், இந்தக் காணொளி அண்மையில் என்பதால் சமூக ஊடகப் பதிவுகளை "தவறாக வழிநடத்துபவை" என வகைப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T05:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலநிலையால் இலங்கைக்கு காத்திருக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-poses-a-risk-of-impacting-the-country-1786763119"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-poses-a-risk-of-impacting-the-country-1786763119</id>
            <summary type="text">எல் நினோ காலநிலையால் ஏற்படும் விளைவுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் தாக்கம் செலுத்துவதற்கான அபாயம் உள்ளதாக மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலையால் ஏற்படும் விளைவுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் தாக்கம் செலுத்துவதற்கான அபாயம் உள்ளதாக மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>

மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட புதிய அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> எல் நினோ காலநிலை விவசாயத்துறைக்கு ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடைவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> </p><h2><b>

பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்</b></h2><p>அத்துடன், எல் நினோ காலநிலை நிகழ்வு காரணமாக நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c62bead-4179-4861-932e-d6804132752d/26-6a7fdbdf5b1b4.webp' /></p><p>எல் நினோ காலநிலை நிகழ்வு நாட்டிற்கு இரு வழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். 

முதலாவது வறண்ட காலநிலை மூலமும், இரண்டாவது அதிக மழைவீழ்ச்சி மூலமும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் உயர் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் இது ஒரு அபாயமாக பெயரிடப்பட்டுள்ளது. </p><p>

எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை விடக் குறைவான தாக்கமே நாட்டின் மீது ஏற்பட்டுள்ளது. </p><h3><b>

மத்திய வங்கி அறிக்கை</b></h3><p>அதன் காரணமாக இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஸ்திரமாகப் பேணப்படும் என அனைத்துச் சுட்டிகளும் காட்டுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52dc217b-40cc-49d5-a76b-19c7bc159843/26-6a7fdcdfbe799.webp' /></p><p>மீண்டும் மத்திய கிழக்கு நெருக்கடி தீவிரமடைவதும், காலநிலை மாற்றங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக நிச்சயமற்ற தன்மையைச் சேர்க்கின்றன என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. </p><p>

உலகளாவிய ரீதியில் இந்த ஆண்டு ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 80 அமெரிக்க டொலர் மட்டத்தில் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. </p><p>

அடுத்த ஆண்டு ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 70 அமெரிக்க டொலர் மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T04:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு வீதியின் ஒரு வழிப்பாதை திறப்பு! சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-colombo-road-traffic-returns-to-normal-1786766717"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-colombo-road-traffic-returns-to-normal-1786766717</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில்&amp;nbsp;குயில்வத்தை பகுதியில் தடைப்பட்டிருந்த ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில்&nbsp;குயில்வத்தை பகுதியில் தடைப்பட்டிருந்த ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>குயில்வத்தை பகுதியில் இன்று (15) அதிகாலை 1.00 மணியளவில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதி முற்றாக தடைப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில்
குறித்த மண்மேடு அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>வாகன சாரதிகளுக்கு&nbsp;அறிவுறுத்தல்</h2><p>எனினும், தற்போது போக்குவரத்திற்காக ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டுள்ள போதிலும், மீண்டும் மண்மேடு சரிந்து விழும் ஆபத்து நிலவுவதால் அப்பாதையூடாக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d71714-8cdf-41ac-b56d-09277e3d62aa/26-6a7fe88182756.webp' />&nbsp;</p><p>அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து, பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண்சரிவுகள், நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.</p><p> இதனால்
பாதிப்புக்குள்ளான வீதிகளை உரிய முறையில் சீரமைக்கும் வரை அந்த வழியில்
செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fweb.facebook.com%2Freel%2F1591267252524255%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T04:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earthquake-in-indonesia-tsunami-report-srilanka-1786764549"></link>
            <id>https://tamilwin.com/article/earthquake-in-indonesia-tsunami-report-srilanka-1786764549</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என&amp;nbsp;இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என&nbsp;இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.</p><p>இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளது.</p><p></p><h2>பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்</h2><p>அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a45dd36f-a95f-4431-811b-a280a374a783/26-6a7fe31bd0408.webp' /></p><p>அத்துடன் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், நிலவரம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியிருந்தது.</p><p>அதன்படி, தேசிய புவியியல் நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் - போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-officials-who-abuse-power-1786763472"></link>
            <id>https://tamilwin.com/article/government-officials-who-abuse-power-1786763472</id>
            <summary type="text">அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை&amp;nbsp; தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை&nbsp; தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>யாழ் ஊடக அமையத்தில் இன்று (15.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்</h2><p>
</p><p>
எதிர்வரும் திங்கட்கிழமை 17ஆம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு
மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23db9e98-8bea-4bde-a0e0-a78a863f2fbf/26-6a7fde595d622.webp' /></p><p>
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண
தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன்
குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T03:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[49 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் - அநுர ஆட்சியில் அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-sri-lanka-after-49-years-1786762627"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-sri-lanka-after-49-years-1786762627</id>
            <summary type="text">இலங்கை அரசியல் வரலாற்றில் 49 ஆண்டுகளின் பின்னர் அநுர அரசாங்கத்தில் துண்டுவிழும் தொகையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியல் வரலாற்றில் 49 ஆண்டுகளின் பின்னர் அநுர அரசாங்கத்தில் துண்டுவிழும் தொகையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> புதிதாக கடன் பெறாத காரணத்தால் கடந்தாண்டு ஆகக் கூடுதான ஆரம்ப நிலுவையை சாத்தியமாக்க முடிந்ததாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;துண்டுவிழும் தொகை</b></p><p>அரச ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5817d069-f379-41d7-85dc-41e73730457a/26-6a7fd6e4d0d6e.webp' />

&nbsp;&nbsp;<b style="color: inherit; font-size: 1.75rem;"></b></p><p>1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் மொத்த தேசிய உற்பத்தி சார்ந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையை 2.5 சதவீதம் வரை குறைக்க முடிந்ததாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>பொருளாதாரத்தை வலுவாக்கும் நோக்கத்துடன் மீண்டெழும் செலவினங்களையும் முதலீட்டு செலவினங்களையும் முறையாக நிர்வகித்ததன் மூலம் இத்தகைய கூடுதலான ஆரம்ப நிலுவை சாத்தியமானது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T03:03:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணி நேரத்தில் கொந்தளிப்பாகும் கடல்! எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1786761519"></link>
            <id>https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1786761519</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில்&amp;nbsp;அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில்&nbsp;அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம்&nbsp;இன்று (15) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><h2>பலத்த காற்று வீச வாய்ப்பு</h2><p>மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல சுற்று மழை பெய்யும் என்றும், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cb3978c-8d3d-4498-aee6-d6a9c7efdddd/26-6a7fd6be6c338.webp' /></p><p>

மேலும், வடமத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
இதற்கிடையில், நாட்டைசுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கொழும்பு மற்றும் காலி வழியாக சிலாவிலிருந்து மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>
காற்று மேற்கு முதல் தென்மேற்கு திசையிலிருந்து வீசும், மேலும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 30-40 கி.மீ. அளவில் இருக்கும்.</p><h2>&nbsp;கடல் பகுதிகள் கொந்தளிப்பு</h2><p>
</p><p>
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். ஏனைய கடல் பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cf92244-1d12-4653-aaa2-3eae0332c676/26-6a7fd6bf1c7fc.webp' /></p><p>காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்.ஏனைய கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கலாம்.</p><p>இந்தப் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T03:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பில் CCIBயில் ஷிரான் பாசிக்..! சட்டவிரோத சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-drug-trafficker-shiran-basik-island-1786757347"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-drug-trafficker-shiran-basik-island-1786757347</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபர் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபருடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு நபர்களும் விசாரணைக்காக பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>தெஹிவளை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் சர்வதேச பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். இவர் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பிச்சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63c09c02-5390-416e-850e-e0e47814360e/26-6a7fcf5b6905f.webp' /></p><p>இந்நிலையில், ஈரான்-அமெரிக்கப் போரின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்க ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தனது கைப்பேசியில் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபர் மே 26 அன்று டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.</p><p>சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், பயங்கரமான மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருத்தல், சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினராக இருத்தல் மற்றும் சேதம் / தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lmxEkperTlA" width="640" height="360" class="note-video-clip"></iframe>

</p>]]></content>
            <updated>2026-08-15T02:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி! மத்தியவங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-by-the-central-bank-of-sri-lanka-1786758932"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-by-the-central-bank-of-sri-lanka-1786758932</id>
            <summary type="text">நடுத்தர காலத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

புவிசார் அரசியல் போக்குகளின் தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடுத்தர காலத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p> 

புவிசார் அரசியல் போக்குகளின் தாக்கம், மாறிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழல்கள், அத்துடன் காலநிலை அபாயங்கள் ஆகியவையே இந்த அதிக நிச்சயமற்ற தன்மைக்குக் காரணங்கள் என்றும் மத்திய வங்கி கூறுகின்றது.</p><h2>மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி</h2><p>

வியாழக்கிழமை (13) இரவு இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணயக்கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed9215bd-0a8c-4c89-bbd5-9253e337762a/26-6a7fca28a3663.webp' /></p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள், உலகளாவிய எரிசக்தி சந்தைகள், வர்த்தகப் பரிமாற்றங்கள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும் என்றும், அதன் மறைமுக விளைவுகள் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T02:08:46+00:00</updated>
        </entry>
    </feed>
