<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-02T10:30:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;இது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான முடிவுகளை doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாகப் பார்த்துக் கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:28:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - அமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-permanent-solution-water-problem-batti-1788342558"></link>
            <id>https://tamilwin.com/article/minister-permanent-solution-water-problem-batti-1788342558</id>
            <summary type="text">தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர்
பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி
செய்வதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர்
பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி
செய்வதற்கான முழு நடவடிக்கையும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல்
அமைச்சர் சுசில் ரணசிங்க எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவருமான கந்தசாமி பிரபு அழைப்பின் பேரில், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும்
நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு
பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(01)
இடம்பெற்றது. </p><p>இதன்போது குடிநீர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு
ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நீர் தேவைகளை பூர்த்தி செய்ய</h2><p>
தற்போது ஏற்பட்டுள்ள எல் நினோ தாக்கத்தினால் வறட்சி நிலையால் ஏற்பட்டுள்ள
குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக விசாரிப்பதற்கு நீர் தேவைகளை பூர்த்தி
செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காகன கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47408e9a-872f-4c08-b9ae-1d73dc1121c3/26-6a97f6f4cb8a6.webp' /></p><p>இந்த எல் நினோ தாக்கத்தினால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு
மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்
வழங்கும் பிரதானமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வருகின்ற நீர் படிப்படியாக
குறைந்து வருகிறது.</p><h2>வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை</h2><p>
</p><p>
இந்த நிலையில் மழைவீழ்ச்சி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என வானிலை அவதான
நிலையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த குடிநீர் பற்றாக்குறையை
எதிர் காலத்தில் தடுத்துக் கொள்வதற்காகவும் மக்களின் குடிநீர் பிரச்சனையை
பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f63b21a-bb36-4661-bf0a-c82e0e55a4d2/26-6a97f6f58ff33.webp' /></p><p>அதேவேளை எதிர் காலத்தில் மட்டு மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள்
இடம்பெறாமல் இருப்பதற்கு ஏனைய குளங்களை புனரமைப்பது தொடர்பாகவும் வளங்களை
தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான வாகன வசதிகள், இயந்திர வசதிகள் உட்பட அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு
அமைச்சர் பணித்துள்ளார்.</p><p>இந்த கலந்துரையாடல் மூலம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினைக்கான
நிரந்தர தீர்வையும் தற்போது வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய பிரதேச சபை உறுப்பினரின் பதவி விலகல்.. வெளியான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-saba-member-ganesharuban-resigned-1788343626"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-saba-member-ganesharuban-resigned-1788343626</id>
            <summary type="text">அண்மையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன்&nbsp;கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp;</p><p>யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp; &nbsp;</p><p>கைதினை தொடர்ந்து, தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் விலகினார்.&nbsp;</p><p>நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவாகியிருந்தது.&nbsp;</p><p>


இந்த தாக்குதல் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றதாகவும் உறுப்பினர் தலைமையிலான கும்பல் ஒன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில்&nbsp;பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் பின்வரும் காணொளியில் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F27977807035179367%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:16:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் தற்போதைய உடல்நிலை! கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/report-saleh-s-health-order-colombo-hospital-1788341817"></link>
            <id>https://tamilwin.com/article/report-saleh-s-health-order-colombo-hospital-1788341817</id>
            <summary type="text">
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின்&amp;nbsp; தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>
</p><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின்&nbsp; தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>


சுரேஷ் சலேக்கு மேலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறதா என்பது தொடர்பான தகவல்களையும் அறிக்கையில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>ஈஸ்டர் தாக்குதல்கள்&nbsp;</h2><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02d33567-ed39-46a1-9072-83bdd20cdd93/26-6a97f3075540f.webp' /></p><p>இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றார்.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி , தாயார் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம். கே. சிவாஜிலிங்கம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mk-sivajilingam-admitted-in-icu-colombo-hospital-1788342453"></link>
            <id>https://tamilwin.com/article/mk-sivajilingam-admitted-in-icu-colombo-hospital-1788342453</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அவர் நீண்டகாலமாக உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-appear-in-bribery-commision-friday-1788340632"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-appear-in-bribery-commision-friday-1788340632</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாக உள்ளார் என அவரது சட்டத்தரணி முதிதா ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பிட்ட திகதியில் காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இலஞ்ச -&nbsp;ஊழல் விசாரணை ஆணைக்குழு நாமலுக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்படி அறிவித்துள்ளது என்று சட்டத்தரணி கூறியுள்ளார்.</p><h2>நாமலின் கோரிக்கை..&nbsp;</h2><p> </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வெள்ளிக்கிழமை (4) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை முதலில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba55a75-bbb9-4878-aa96-2a23f658e670/26-6a97ef7daa16b.webp' /></p><p>

அந்த அறிவிப்புக்கு பதிலளித்த ராஜபக்ச, அறிவிப்பு விடுக்கப்பட்ட மறுநாள் தன்னால் முன்னிலையாக முடியும் என்று ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>இந்நிலையில், இலஞ்ச ஆணைக்குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்ததோடு, அதனைத் தொடர்ந்து வட்ஸ்அப் வழியாக அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வத் தகவல் மூலம், அவர் முதலில் திட்டமிடப்பட்ட திகதியில் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று அவருக்குத் தெரிவித்துள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்காகப் பெரிய ரக விமானக் குழுமத்தைக் கையகப்படுத்தியது தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷம்மி சில்வாவுக்கு விசாரணை அழைப்பு விடுத்துள்ள புலனாய்வுப் பிரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shammi-silva-krishantha-kapuwatte-summoned-1788335067"></link>
            <id>https://tamilwin.com/article/shammi-silva-krishantha-kapuwatte-summoned-1788335067</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.</p><p>தற்போது நடைபெற்று வரும் ஒரு விசாரணையின் ஒரு பகுதியாக, இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>திடீர் பதவி விலகல்கள்..</h2><p>
</p><p>
அதிகாரிகளின் கூற்றுப்படி, விசாரணையில் உள்ள விடயங்கள் தொடர்பான 36 அம்சங்களைக் கொண்ட ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளிக்குமாறு குறித்த இரண்டு முன்னாள் பதவியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/182f87f7-1e6e-4fb2-8cf3-b4ebdd0b4414/26-6a97e7940cf3e.webp' /></p><p>
நாட்டின் விளையாட்டு நிர்வாக அமைப்பிற்குள் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ஆளுகை தொடர்பான பிரச்சினைகள் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இருவரும் தங்கள் பதவிகளிலிருந்து விலகியிருந்தனர்.&nbsp;</p><p>இந்நிலையில், அவர்கள் பதவி விலகி சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:08:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள்! பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110"></link>
            <id>https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110</id>
            <summary type="text">&amp;nbsp;புதிய இணைப்புகொழும்பு - தலவத்துகொட பகுதியில் உள்ள விமான டிக்கெட் மற்றும் விசா வழங்கும் நிறுவனத்திலிருந்து 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;புதிய இணைப்பு</h2><p>கொழும்பு - தலவத்துகொட பகுதியில் உள்ள விமான டிக்கெட் மற்றும் விசா வழங்கும் நிறுவனத்திலிருந்து 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
</p><p>
நேற்று மதியம் நிறுவனத்திற்குள் புகுந்த நான்கு பேர் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களைக் கூர்மையான ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>சிசிடிவியில் பதிவான காட்சி</h2><p>

முகத்தை மூடியிருந்த சந்தேகநபர்கள், வெள்ளை நிற காரில் கொள்ளையடித்த பின்னர் தப்பிச்சென்றுள்ளதாக சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a2a2f53-de39-4087-b5b7-db7f7126d756/26-6a97e6f5547f6.webp' /></p><p>
</p><p>
சிசிடிவி காட்சிகளில் பதிவான படி, சந்தேகநபர்கள் முதலில் ஒரு ஊழியரை தாக்கிவிட்டு, பின்னர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
கொள்ளையர்கள் சுமார் 6 கோடி ரூபாய் பணத்தையும், உரிமையாளர் அணிந்திருந்த 4 தங்க நெக்லஸ்கள் மற்றும் 3 தங்க மோதிரங்களையும் கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>கொழும்பு&nbsp; - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில்&nbsp;சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்தவர்களே இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>குறித்த&nbsp;முகவர் நிலையத்திற்கு 4 பேர் வந்திருந்த நிலையில் பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1721cacd-d25b-4765-b29f-9c9701cdfdd0/26-6a97817496446.webp' /></p><p>சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/02tgeSpE-Qs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-02T09:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-stance-on-day-of-the-disappeared-1788336535"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-stance-on-day-of-the-disappeared-1788336535</id>
            <summary type="text">இறந்து விட்டார்கள் என்றால் ஒரேயடியாக அழுது தீர்த்து விதியைத் திட்டி
கண்ணீரால் காயம் ஆற்றிவிடலாம். ஆனால் நம் உறவுகளுக்கு என்ன நடந்தது, உயிரோடு
இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறந்து விட்டார்கள் என்றால் ஒரேயடியாக அழுது தீர்த்து விதியைத் திட்டி
கண்ணீரால் காயம் ஆற்றிவிடலாம். ஆனால் நம் உறவுகளுக்கு என்ன நடந்தது, உயிரோடு
இருக்கிறார்களா, இல்லையா, இன்று வருவார்களா, நாளை வருவார்களா? என தினம் தினம்எதிர்பார்ப்போடு செத்துப் பிழைப்பது எத்தனை கொடுமையானது.
</p><p>
இந்த நிலைமை வார்த்தைகளுக்குக் கட்டுப்படாதது. அனுபவிப்பர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய துயரத்தின் உச்சம் அது. 

அத்தகையோரை நினைவு கூரும் நாளே அனைத்துலக
காணாமல் போனோர் நாள். </p><p>கொஸ்டரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட “கைதாகிக்
காணாமல் போனோரின் உறவினர்களின் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. </p><p>

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள்
குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள்
அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இவ்வாறான இரகசியக் கைதுகளுக்கு
எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன.</p><h2> 

காணாமல் போனோர் நாள்</h2><p>

இவ்வாறு ஆரம்பமாகிய “காணாமல் போனோர் நாள்” இன்று உலகின் பல நாடுகளிலும் மறைந்து போக, இலங்கையில் யுத்தம்
முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அது தொடர்ச்சியாக நினைவு
கூறப்படுகின்றது. தொடர்ந்தும் நினைவு கூற வேண்டியுள்ளது.

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்து சென்ற நிலையில் இலங்கை இராணுவத்திடம்
ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம்
பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது. </p><p>

தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட
வாழ்வியலுடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சனைகள்
இருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fedb66bc-2f79-416a-b5c3-6f89251907a4/26-6a97e57233afa.webp' /></p><p> </p><p>

இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலத்தை விடுவித்தல்,
சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், பௌத்தமயமாக்கலை தடுத்தல், தமிழர் நிலப் பரப்பில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்தல், யுத்த
காலத்தின் போதும், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவும்
இராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுதல் என பல
பிரச்சனைகள் உள்ளன.</p><p> 

இவை அன்றாடம் அவர்களது வாழ்வியலில் தாக்கத்தினை ஏற்படுத்தி
வருகின்றன. இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது ஏனையவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதும் ஆகும்.</p><h2>

20 ஆயிரம் வரையிலானோர் காணாமலாக்கப்பட்டார்களா..</h2><p>

இலங்கை நாட்டைப் பொறுத்தவரை யுத்த காலத்தின் போது முப்படைகள், பொலிஸார்
மற்றும் புலனாய்வுத் துறையினரால் சந்தேகத்தின் பேரிலும், சுற்றி
வளைப்புக்களின் போதும் கைது செய்யப்பட்டவர்களும், இறுதி யுத்தத்தின் போது
அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் அறிவிப்புக்கமைய பலர் முன்னிலையில்
ஒப்படைக்கப்பட்டோருமே காணாமல் ஆக்கப்பட்டோராகவுள்ளனர்.</p><p> 


சுமார் 17 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச
நிறுவனங்களினதும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களினதும் அறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666cad38-54b3-4f44-94ef-0c26ba73c986/26-6a97e572ecd0f.webp' /></p><p> </p><p>

இதன் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இவர்களுக்கான தீர்வு என்பது தமிழ் மக்களின் மத்தியில் பதற்றத்தினையும்,
ஏமாற்றத்தினையும் கொடுத்து இன்று வரை அவை கானல் நீராகவே உள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்படுவோர் குறித்து காத்திரமான
நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய அரசியல் புறச் சூழல் எதுவும் காணப்படவில்லை.
</p><p>

ஆனால் இன்று யுத்தம் முடிந்து 17 வருடங்கள் கடந்து விட்ட போதும் அதில் உள்ள
முன்னேற்றம் என்பது கண் துடைப்புக்களுடனேயே உள்ளது. தற்போதைய அநுரகுமார
திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமானது தேர்தலின் போது காணாமல்
ஆக்கப்பட்டோருக்கான நீதி வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில் இன்று ஆட்சி
பீடம் ஏறி மாதங்கள் பல கடந்த நிலையிலும் அது குறித்து காத்திரமான நடவடிக்கை
எடுக்கவில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டாகும்.
</p><h2>

உறவுகளின் நிலையை அறிய நடத்தப்படும் போராட்டங்கள்</h2><p>

 கடந்த ரணில் மற்றும் மைத்திரி கூட்டரசாங்கமானது பொறுப்பு கூறுவதற்கான ஐ.நா மனித உரிமைப்
பேரவையின் இரண்டு பிரேரணைகளை ஏற்று அவற்றை நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணையும்
வழங்கியிருந்தது. 

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றினையும்
நிறுவியுள்ளது. </p><p>ஆயினும் சர்வதேச அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும், கால
நீடிப்புக்கள் ஊடாக அதனை நீர்த்துப் போகச் செய்யவதற்காகவும் இவற்றின் மூலம்
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதே தவிர, அதில் எந்த முன்னேற்றத்தையும்
அவதானிக்க முடியவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.</p><p>


தமக்கு தேவை மரண சான்றிதழோ அல்லது இழப்பீடோ அல்ல. நம்மவர்களுக்கு என்ன நடந்தது என்ற நீதியே தேவை என அவர்கள் போராடி வருவதுடன் ஓ.எம்.பி அலுவலகத்தையும் எதிர்த்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f253e2f-3226-4ce0-9031-c47d74bec867/26-6a97e573a43ee.webp' /></p><p>
</p><p>
அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அவர்களுக்குரிய கிரியைகளை நடத்தி ஆத்ம
சாந்திக்காக வழிபடலாம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகள், தமது கணவன்மார், மனைவிமார், உறவுகள் மீள வருவார்கள் என்ற நம்பிக்கையோடு
காத்திருக்கின்றனர்.
</p><p>
 அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை எண்ணி தினம்
தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். கால நீடிப்புக்களும்,
இழுத்தடிப்புக்களும் செய்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம்
யாருக்கு பொறுப்புக் கூற போகின்றது. </p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைத்து
திரிந்து நாளாந்தம் போராட்டம் நடத்திய தாய்மார்கள் மரணித்திருக்கின்றார்கள்.
அவர்கள் தமது பிள்ளைகளின் முடிவு தெரியாமலேயே தமது உயிரையும் மாய்த்து
விட்டார்கள்.</p><p> இந்த நிலையை நீடிக்க விடுவதா அல்லது அந்த மக்களுக்கு நீதியைப்
பெற்றுக் கொடுப்பதா என்பதை தமிழ் தலைமைகளும் உணரவேண்டும்.

வடக்கு - கிழக்கு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என
வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் ஆண்டுகள் பல கடந்தும்
நீண்டுகொண்டிருக்கிறது.
</p><h2>
தமிழ் தேசத்தின் வலிகளை புரிந்த கொண்ட NPP அரசாங்கம்</h2><p>

 அவ்வப்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தமிழர்
தாயகப் பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும போராட்டங்களும், ஊர்வலங்களும்
நடைபெற்றும் வருகின்றன. மக்களின் கண்ணீரால் அந்த பிரதேசங்கள் தினமும் நனைந்து
கொண்டிருக்கின்றன.</p><p> 

போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தால்
வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், தமிழ் தேசியக் கட்சிகளால் கடந்த காலங்களில்
வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. </p><p>

அந்த மக்கள் அரசாங்கம் மீதும், தமிழ் தலைமைகள் மீதும் அதிருப்தி கொண்டவர்களாக
மாறியிருக்கின்றார்கள்.

 தொடர் போராட்டங்களால் உடல், உள ரீதியாகவும் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றார்கள்.</p><p>

காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் சிறைச்சாலைகளிலும், இராணுவ தடுப்பு முகாம்களிலும்
மற்றும் சித்திரவதைக் கூடங்களிலும் இருப்பதாக ஆதாரங்கள் பலவும், தகவல்களும்
வெளியாகியிருந்த நிலையில் கூட அவர்களை விடுவிப்பதற்கும் அல்லது அவர்களுக்கு
என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் சர்வதேச அழுத்தத்தின் ஊடாக இலங்கை
அரசாங்கத்தை பதில் அளிக்க வலியுறுத்தும் நிலையில் தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக செயற்படாமை என்பது நம்பிக்கையோடு இருக்கும் அந்த மக்களின் மனங்களில் பலத்த சலனங்களை உருவாக்கியிருக்கின்றது.

காணாமல் போனோருக்கான செயலகம் தொடர்பில் ஐ.நா பரிந்துரையை ஏற்று கடந்த கால
அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd29e8d-4d2c-4d30-9491-454d63d4edc9/26-6a97e5745cf2a.webp' /></p><p> </p><p>காணாமல் போனோருக்கான
செயலகம் உருவாக்குதல் மற்றும் நிர்வாகமும் கடமைகளை நிறைவேற்றலும் என்ற
பெயரிலான அந்த சட்டம் நடைமுறைக்கும் வந்துள்ளது. 

இருப்பினும் அந்த அலுவலகம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், மனிதவுரிமையாளர்களும், சிவில்
சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.
</p><p>
ஆனால், தற்போதைய அநுர அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு
அமைச்சர் சட்டத்தரணி ஹர்சண நாணயக்கார, காணாமல் ஆக்கப்பட்ட
குடும்பங்கள் அனுபவிக்கும் வேதனையையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
</p><h2>


 ஓய்வூதியத் திட்டங்கள்</h2><p>இவ்வாறான
சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம். தமது
அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு
குடும்பத்தின் உரிமை அரசியல் கோரிக்கையல்ல.

 அது ஓர் அடிப்படை மனித உரிமையாகும். அது நீதியுடன் தொடர்புடைய ஒரு விடயமாகும். </p><p>

அதேபோன்று, இது ஒரு
குறிப்பிட்ட இனக்குழுவுக்கு மாத்திரம் உரித்தான பிரச்சினையல்ல. இலங்கையில்
வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு இன மற்றும் அரசியல் பின்னணிகளைக் கொண்ட
நபர்கள் காணாமல் போயுள்ளனர். 

எனவே, இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காண்பது ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தின் பொறுப்பாகும் என அண்மையில் யாழில் இடம்பெற்ற ஓஎம்பி அலுவலக நிகழ்வில் தெரிவித்துள்ளார். </p><p>

அவர் கூறிய படி நீதியான விசாரணை இடம்பெறுமா என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கேள்வியாகும்.

ஆக, இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இந்த அரசாங்கம்
சிரத்தையுடன் கையாள வேண்டும்.</p><p> இரகசிய தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள் என
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களை அவர்களது
குடும்பத்துடன் இணைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b3079e-df16-4352-a549-30ed00ae7cde/26-6a97e57516c3e.webp' /></p><p> </p><p>

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர்
கொல்லப்பட்டிருந்தால் அவர்களுக்கான இழப்பீடு சர்வதேச சட்ட நியாயங்களுக்கு
ஏதுவான நிலையில் வழங்கப்பட வேண்டும்.
</p><p>

அவர்கள் உயிருடன் இந்த காலப்பகுதியில்
உழைத்திருக்க கூடிய பணத்தை வழங்குவதன் மூலமும் அவர்கள் கொல்லப்பட்ட
காலப்பகுதியில் இருந்து அவர்களுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதன் மூலமும் அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை
என்றாலும் குறைந்த பட்சம் தீர்க்க முடியும். </p><p>

ஒரு உயிருக்கான விலை பணம் என்பது
அல்ல. ஆனால் கொல்லப்பட்டிருந்தால் அதற்குரிய பரிகாரமாக இழப்பீடு
வழங்கப்படுவதும் அந்த கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும் கட்டாயமானதே.

இதுவே காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் பாதிக்கப்பட்ட மக்களின்
எதிர்பார்ப்பாகவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T08:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/24-hour-water-cut-for-several-colombo-1788337365"></link>
            <id>https://tamilwin.com/article/24-hour-water-cut-for-several-colombo-1788337365</id>
            <summary type="text">அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்களில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.
</p><p>இந்தத் தடை&nbsp; செப்டெம்பர் 3, இரவு 8.00 மணி முதல் செப்டெம்பர் 4, இரவு 8.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
</p><h2>பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்</h2><p>
நுகேகொடை, கொஹுவல, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர, அங்குலான, இண்டிபெத்திய , கட்டுபெத்த, கல்தெமுல்ல, மோதர, கொரலவெல்ல, எகொட உயன மற்றும் கடுகுருண்டா ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a98aace-d300-4479-9ff0-684e524d50fb/26-6a97e03a80342.webp' /></p><p>
செத்சிறிபாய, ஹிம்புட்டான, உடுமுல்ல வீதி, மாளிகைகொடெல்ல, வங்கி சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹேவ்லாக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை சுற்றுவட்டார வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைபடும்.
</p><p>
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை, நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் வணிக நிறுவனங்களும் முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும், நீர் விநியோகத் தடைக்காலத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கை செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்! அரசிடம் இம்ரான் எம். பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/living-cost-of-people-imran-mp-request-1788337659"></link>
            <id>https://tamilwin.com/article/living-cost-of-people-imran-mp-request-1788337659</id>
            <summary type="text">வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து
வருகின்றனர். எனவே வாழ்க்கை செலவை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க
வேண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து
வருகின்றனர். எனவே வாழ்க்கை செலவை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்
கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. </p><p>எனினும்
மக்களின் வருமானம் அதிகரிக்க வில்லை. இதனால் மூன்று வேளை உணவு உண்பதில் பல
குடும்பத்தினர் சிரமப் படுகின்றனர்.

நாட்டில் அதிகமான அரச உத்தியோகத்தர்கள் குறைந்த சம்பளம் பெறுவோராவர்.
</p><p>பிள்ளைகளின் கல்விச் செலவு, உணவுச் செலவு என்பவற்றை சமாளிக்க முடியாமல்
இவர்கள் கஷ்டப் படுகின்றனர்.

இந்த நிலைமையினால் பிள்ளைகளின் உணவுத்தேவையை சரியாகப் பூர்த்தி செய்ய முடியாத
நிலை பெற்றோருக்கு ஏற்படுகின்றது.</p><p> இதனால் போசாக்கு குறைந்த பிள்ளைகளின்
எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

மக்களின் வாழ்க்கை தரத்தைப் பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தப்
பொறுப்பை அரசாங்கம் சரிவர நிறைவேற்ற வேண்டும்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும்</p>]]></content>
            <updated>2026-09-02T08:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக்விமான இறக்குமதியில் நிதி மோசடி : உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udayanga-weeratunga-s-foreign-travel-ban-1788335693"></link>
            <id>https://tamilwin.com/article/udayanga-weeratunga-s-foreign-travel-ban-1788335693</id>
            <summary type="text">மிக்விமான இறக்குமதியில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் ஒரு குழுவினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிக்விமான இறக்குமதியில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக்குற்றப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை&nbsp;ஜனவரி 6 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இவ்விவகாரத்தில் சந்தேக நபர் இன்று (02.09.2026) நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவு</h2><p>

சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர், அவர் ஒரு வணிகத்தில் ஈடுபட்டுள்ள நபர் என்பதால், தனது கட்சிக்காரர் அவசியமான பணிக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d7c3421-6150-4578-a393-5958eef14cdd/26-6a97d9d622fa4.webp' /></p><p>
அதன்படி, சந்தேக நபரின் பயணத் தடையை அடுத்த நீதிமன்றத் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் மேயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-hambantota-mayor-eraj-fernando-death-1788331611"></link>
            <id>https://tamilwin.com/article/former-hambantota-mayor-eraj-fernando-death-1788331611</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>அவரது சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயது என்றும் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d13ed191-25d2-4bed-b17d-f4a4dfd84965/26-6a97cf1f09b42.webp' /></p><p>இவர் 2014 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xv3HrOfRynA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இதனையடுத்து 2018 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T07:24:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலவாக்கலையில் இறைச்சிக் கடை ஊழியர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-butcher-shop-employees-arrested-1788331769"></link>
            <id>https://tamilwin.com/article/two-butcher-shop-employees-arrested-1788331769</id>
            <summary type="text">தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி
எலும்புகள் மற்றும் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த இறைச்சிக் கடை ஊழியர்கள்
இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி
எலும்புகள் மற்றும் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த இறைச்சிக் கடை ஊழியர்கள்
இருவர் நேற்று (01.09.2026) கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>இதன்போது கழிவுகளை ஏற்றிச்சென்ற ஆட்டோவும்
அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை&nbsp;</h2><p>
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழுள்ள பொது சுகாதார
பரிசோதகர்களால்
இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b72ffccf-259b-4806-b3f0-91eeca11a6a8/26-6a97cbce87729.webp' /></p><p>
சந்தேக நபர்கள் இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று
முற்படுத்தப்பட்டனர்.
</p><p>
இதன்போது சந்தேக நபர்கள் இருவருக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணை
வழங்கி நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p>ஹட்டன் - கொட்டகலை நகரில் மாட்டிறைச்சி கடை நடத்தும் உரிமையாளர், கழிவுகளை
அகற்றுவதற்குச் சரியான முறைமை ஒன்றைக் கையாளாமல், நாளாந்தம் சேரும்
மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் ஏனைய கழிவுகளைத் தனது கடையில் பணிபுரியும்
இரு ஊழியர்கள் மூலம் ஆட்டோவில் ஏற்றிச் சென்று டெவோன் ஓடையில் கொட்டி
வந்துள்ளார்.
</p><p>
இது குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொட்டகலை சுகாதார
வைத்திய அதிகாரி கே. சுதர்சனின் ஆலோசனையின் பேரில், சுகாதார பணிமனையின் ஏனைய
பொது சுகாதார பரிசோதகர்களுடன் சென்று, சந்தேகநபர்கள் இருவரும் கழிவுகளை
ஓடையில் கொட்டிய போதே கையும் மெய்யுமாகப் பிடித்ததாகக் கொட்டகலை சுகாதார
மருத்துவ அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் தேவன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>பல தோட்டங்களுக்கான பாதைகள்</h2><p>சந்தேகநபர்கள் இருவரும் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் உள்ள 60 அடி தொடருந்து இரும்புப் பாலத்திற்கு அருகில் இக்கழிவுகளைக் கொட்டி வந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/271ced87-fe83-4d12-8592-d97433ada920/26-6a97cea896863.webp' /></p><p>
இந்தக் கழிவுகள் கொட்டப்படும் ஓடைப் பகுதிக்கு மிக அருகில் கிறிஸ்டஸ் பார்ம்
(Christas Farm) உள்ளிட்ட பல தோட்டங்களுக்கான பாதைகள் அமைந்துள்ளன. </p><p>இந்த
சட்டவிரோத நடவடிக்கையால், அப்பாதையைப் தினசரி பயன்படுத்தும் பெருமளவிலான
தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்ததாக பொது சுகாதார
பரிசோதகர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
கொட்டகலை நகரில் கோழி இறைச்சி கடைகளின் கழிவுகளும் இதேபோன்று எடுத்துவரப்பட்டு
டெவோன் ஓடையில் கொட்டப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களையும்
சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T07:22:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளும் கட்சியின் 159 எம்.பிக்களை உடனடியாக விசாரிக்குமாறு அவசர முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaints-corruption-commission-159-jvp-mps-1788328199"></link>
            <id>https://tamilwin.com/article/complaints-corruption-commission-159-jvp-mps-1788328199</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>இந்த முறைப்பாடு வெல்லும் தெற்கு அமைப்பொன்றினால் இன்று (02) காலை இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டது. 

</p><h2>ஐந்து காரணங்களின் கீழ் முறைப்பாடு&nbsp;</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை, பொதுமக்களின் நன்மைக்காக பயன்படுத்தாமல், ஜே.வி.பி (JVP) கட்சியின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்வதன் மூலம், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைத்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a00c97-9483-4bf1-bbcb-8741f319a48e/26-6a97c9fa13736.webp' />&nbsp;</p><p>
 2023-ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் எண் 09-இன் கீழ் இந்த விவகாரம் குறித்து அவசர விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஆணையத்தை கோரியுள்ளது.
</p><p>
குறித்த முறைப்பாட்டில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் 159 உறுப்பினர்களையும் வரவழைத்தல், அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல், விசாரணை நடத்துதல் மற்றும் கட்சியின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தல் ஆகிய ஐந்து காரணங்களின் கீழ் முறைப்பாடு தாக்கல் செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T06:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vijitha-herath-begins-uae-visit-1788328852"></link>
            <id>https://tamilwin.com/article/vijitha-herath-begins-uae-visit-1788328852</id>
            <summary type="text">இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு அலுவல்கள், வேலை வாய்ப்பு மற்றும் சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு அலுவல்கள், வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று செப்டெம்பர் 2 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 
</p><p>
 

இந்தப் பயணத்தின் போது, ​​அமைச்சர் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விவாதிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல முக்கிய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7d147be-5672-414b-93c4-ae4a6262c45a/26-6a97c0dc6d217.webp' /></p><p>
 

 

வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின்படி, அமைச்சர் நாளை டுபாயில் நடைபெறும் “உங்கள் கனவுகளுக்கு அப்பால் இலங்கை” நிகழ்வின் இரண்டாவது பதிப்பிலும் பங்கேற்பார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:29:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரைக்குள் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/battaramulla-seelarathna-thero-attacked-unknown-1788329394"></link>
            <id>https://tamilwin.com/article/battaramulla-seelarathna-thero-attacked-unknown-1788329394</id>
            <summary type="text">அடையாளம் தெரியாத நபர்களால் ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;இதன் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடையாளம் தெரியாத நபர்களால் ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>இதன் காரணமாக அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தப்பியோடிய சந்தேகநபர்..&nbsp;</h2><p>

இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c55f15-c4a1-4cb6-88b1-6ecaaad8d726/26-6a97c05138756.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>
தாக்குதலின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்காக பல விசேட பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>மேலும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7TDXml5xToU" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-02T06:23:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச புலனாய்வு பிரிவுடன் இணைந்து அதிரடி காட்டிய இலங்கை அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-sri-lankan-operation-pakistan-drug-network-1788327395"></link>
            <id>https://tamilwin.com/article/us-sri-lankan-operation-pakistan-drug-network-1788327395</id>
            <summary type="text">இலங்கை வழியாக சர்வதேச சந்தைகளுக்குக் கடத்த முயன்ற 21 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை ஒரு கூட்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முறியடித்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வழியாக சர்வதேச சந்தைகளுக்குக் கடத்த முயன்ற 21 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை ஒரு கூட்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முறியடித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட கடத்தல் வலையமைப்பு ஒன்று சர்வதேச சந்தைகளுக்குக் கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இச்சம்பவம் தொடர்பில், ஒகஸ்ட் 14 முதல் 29 வரை, வெளிநாட்டுத் தரப்புப் பிரிவு மற்றும் பாகிஸ்தானின் போதைப்பொருள் தடுப்புப் படையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றால் உளவுத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>உளவுத் தகவல்கள்&nbsp;</h2><p>இதன்படி, பாகிஸ்தானிலிருந்து வந்துகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான கடல்வழி கொள்கலன்களை இலங்கையின் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் (PNB) இடைமறித்ததாக அமெரிக்க தூதரகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c44603e-ede5-48a5-90e6-fb816d5cfa58/26-6a97badbae0e7.webp' /></p><p>இந்த நடவடிக்கையின் போது, சவர்க்கார துண்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 463 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p> </p><p>குறித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நாட்டினர் உட்பட பல சந்தேக நபர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.</p><p>

பயங்கரவாதத்திற்கு நிதியளித்து, இரு நாடுகளிலும் உள்ள சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகடந்த குற்ற அமைப்புகளை ஒழிப்பதில், அமெரிக்கா - இலங்கை கூட்டாண்மையின் வலிமையை இந்த நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்க வெளியுறவுத் துறையின் சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்ட அமலாக்க விவகாரங்களுக்கான பணியகம் (INL) மூலம் இலங்கை பொலிஸார் மற்றும் சுங்கத்துறைக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவியின் தொடர்ச்சியாக இந்த ஒத்துழைப்பு அமைகிறது என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T06:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-year-old-child-died-falling-into-the-bucket-1788326885"></link>
            <id>https://tamilwin.com/article/2-year-old-child-died-falling-into-the-bucket-1788326885</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில்
இரண்டு வயது 8 மாதங்களுமான குழந்தையொன்று வாளிக்குள்&amp;nbsp;வீழ்ந்த நிலையில்&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில்
இரண்டு வயது 8 மாதங்களுமான குழந்தையொன்று வாளிக்குள்&nbsp;வீழ்ந்த நிலையில்&nbsp;உயிரிழந்துள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று(01.09.2026) இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>தலைகீழாக வாளிக்குள் விழுந்து</h2><p>
கொக்கட்டிச்சோலை கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான
நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cdd5bf8-3efb-4a02-a1c4-11cd3cf99f46/26-6a97b86c32d0f.webp' /></p><p>
குறித்த சிறுவன் வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய
வாளியின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.</p><p> இதன்போது, எதிர்பாராதவிதமாக
சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல்
ஏற்பட்டுள்ளது.</p><p>உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு
சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.
</p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p>
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை
அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப்
பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9122bc5-867c-4c84-a487-18937b2a9bbf/26-6a97b86ce81f1.webp' /></p><p>

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் திடீரென உயிரிழந்த அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspicious-death-of-famous-model-sula-pathmendra-1788312817"></link>
            <id>https://tamilwin.com/article/suspicious-death-of-famous-model-sula-pathmendra-1788312817</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரனவின் பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

சூலாபத்மேந்திரவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
பிரேத பரிசோதனையின் போது அவரது உடலில் வெளிப்புற அல்லது உள் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c721d6c-d400-4d7e-a2f9-4e9cf9c7c71f/26-6a9793974ba40.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், மேலதிக விசாரணைக்காக உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
45 வயதான சூலாபத்மேந்திர பிலியந்தல, தும்போவிலவில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில், 31 ஆம் திகதியன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LyjOQmQ_ei8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
குறித்த தொழிலதிபருடன் அவர் காதல் உறவில் இருந்ததாகவும், 30 ஆம் திகதி பத்தரமுல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த விருந்தை தொடர்ந்து, 31 ஆம் திகதி அதிகாலை பிலியந்தலவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதன்பின்னர் அங்கு அறையில் உறங்கச்சென்ற நிலையில், மதியம் சுமார் 12.45 மணியளவில் அவரை எழுப்ப முயன்றபோதும், அவர் பதிலளிக்காததால் 1990 ஆம்புலன்ஸ் அவசர சேவை வரவழைக்கப்பட்டுள்ளது.</p><h2>மரணம் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட தொழிலதிபர் மற்றும் உயிரிழந்தவரின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
அதன்படி, மரணம் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc1f987-f062-44f4-856c-2d58d0b6c5cc/26-6a97939803488.webp' /></p><p>
</p><p>
கேஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை தெரிவித்த பின்னர், பதில் நீதவான் சம்பவ இடத்தையும் உடலையும் ஆய்வு செய்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், களுபோவில போதனா வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியினால் பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
பிலியந்தல பொலிஸ் பொறுப்பாசிரியர் பிரதம ஆய்வாளர் சமிந்த குலசிங்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SIg-Zv7vr2I" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:42:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் கியூஆர் குறியீடு மற்றும் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-fuel-price-next-month-change-1788325712"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-fuel-price-next-month-change-1788325712</id>
            <summary type="text">எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலைகளை மேலும் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திண...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலைகளை மேலும் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>எரிபொருள் கியூஆர் குறியீடு பயன்பாடு</h2><p>மேலும் கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de87fe0d-6349-4735-803f-61039642d59a/26-6a97b6e5c95c1.webp' /></p><p>
எரிபொருள் விலைகளை குறைப்பதற்காக தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதால், மக்களுக்கு முதல் வாய்ப்பிலேயே நிவாரணம் வழங்கப்படும்.</p><p>
மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் ஒரே நேரத்தில் குறைப்பது சாத்தியமில்லை என்றும், எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலைகளில் மேலும் குறைப்பது தொடர்பில் ஆராயப்படும் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><h2>எரிபொருள் விலை உயர்வில் தாக்கம்</h2><p>
</p><p>
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலை காரணமாக உலகளவில் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
</p><p>
கப்பல் கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் முன்பதிவு இரத்து போன்ற காரணிகளும் எரிபொருள் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனவே கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T05:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-barriers-for-arresting-foreigners-1788320383"></link>
            <id>https://tamilwin.com/article/no-barriers-for-arresting-foreigners-1788320383</id>
            <summary type="text">இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை கைது செய்வதில் உரிய நாடுகளுடன் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்புக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்காத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை கைது செய்வதில் உரிய நாடுகளுடன் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்புக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்காது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p>

“சீனாவில் இருந்து மட்டுமின்றி வேறு நாடுகளில் இருந்தும் வருகை தரும் நபர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.</p><h2><b>

சட்டத்தின் கீழ் கைது </b></h2><p>பின்னர், அந்த நாட்டில் நிலவும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/515047a8-08b8-4a69-8ccb-8507bdce401c/26-6a97b33b1f2ac.webp' /></p><p>இதனால், அந்தந்த நாடுகளுடன் செய்துகொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அல்லது கூட்டாகச் செயற்படுவதில் எந்தவித சிக்கலும் ஏற்படுவதில்லை.
</p><p>
சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்துவது மாத்திரமின்றி, அறிவுப் பரிமாற்றம், ஆற்றல் மேம்பாடு போன்றவையும் அதன் கீழ் இடம்பெற்றுள்ளன. </p><p>

அதன் பின்னர் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Oc9OjHvdm0s" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-02T05:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய வேண்டும்! ஆளுநர் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-development-projects-completed-due-time-1788324736"></link>
            <id>https://tamilwin.com/article/northern-development-projects-completed-due-time-1788324736</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின்
முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள்
நிறைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின்
முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள்
நிறைவு செய்வதுடன் தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட
நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் வேண்டும் என்று வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>ஆளுநருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின்
செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள்
ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று(01.09.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>தீர்வுகளை விரைவாக மேற்கொள்ள&nbsp;</h2><p>
இந்தக் கலந்துரையாடலில் மாகாண சபையால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட
வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கையைத் தயாரித்தல், இவ்வாண்டில்
நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்
மற்றும் அவற்றை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள்
தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d7de8a2-e67f-4b50-a6c1-810408e3f87f/26-6a97b259e4089.webp' /></p><p>மேலும், நிரல் அமைச்சுக்களினால் மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் மேலதிக நிதியை
உரிய நோக்கத்துக்காகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p> திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்
காணப்படும் தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட மனிதவள மற்றும் நடைமுறைச்
சவால்களை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தேவையான தீர்வுகளை விரைவாக மேற்கொள்ள
வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><h2>கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்</h2><p>இதன்போது, பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலின் கீழ் பணியாற்றும் கள
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலையங்கள் மற்றும் அவர்களின் பணிகளை
மேலும் ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d725311-452c-45f8-9344-0eb96b164bb9/26-6a97b25acf235.webp' /></p><p> </p><p>கள மட்டத்தில்
அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் திட்டங்களின் கண்காணிப்பு
மற்றும் நடைமுறைப்படுத்தலை மேம்படுத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகள் குறித்து
கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p>இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின்
செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப்
பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்தின் ஊடாக தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசு முயற்சி! எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-attempts-the-22nd-amendment-1788324914"></link>
            <id>https://tamilwin.com/article/government-attempts-the-22nd-amendment-1788324914</id>
            <summary type="text">ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு, தற்போது
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீரழிக்கவும்,
நீதிமன்றத்தின் சுயா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு, தற்போது
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீரழிக்கவும்,
நீதிமன்றத்தின் சுயாதீனத்துக் குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் அரசு
முயல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைச் சவாலுக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட
மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நேற்று பரிசீலனைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இதன்போது, நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்த பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,</p><h2>22ஆவது திருத்த&nbsp;நடைமுறை</h2><p>
</p><p>
"உலகளாவிய நடைமுறைகளை ஆராயும்போது, 22ஆவது திருத்தமானது அனைத்து வகையிலும்
நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழிப்பதாக அமைகின்றது.</p><p> பொதுநலவாய நாடுகள்
சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் இதனால் நீதித்துறைக்குப் பாரிய
பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e0b21b-18f7-494e-a0bb-4a9f22402201/26-6a97ae1d8ac4c.webp' /></p><p>

தற்போதைய அரசு தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காக நாட்டில் ஒற்றைக் கட்சி
ஆட்சியை நிறுவுவதற்கும், இளைஞர் கழகத் தேர்தல்கள் மற்றும் சிவில் பாதுகாப்புச்
குழு நியமனங்கள் முதற்கொண்டு ஜனநாயகத்தை முடக்குவதற்கும் இந்தத்
திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
</p><p>
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு
இடையேயான சமநிலையைப் பாதிக்கச் செய்யும் இந்த 22ஆவது திருத்தம்
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம்
நிறைவேற்றப்படாமல், கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.</p><p>

நாட்டில் தொழில் துறைகள் வீழ்ச்சியடைதல், வேலையின்மை அதிகரிப்பு போன்ற பல
பாரிய பிரச்சினைகள் நிலவும்போது, அரசிடம் உள்ள ஒரே தேசிய வேலைத்திட்டம்
நகைச்சுவையான தீர்வுகளை வழங்குவது மட்டுமே.

அடிப்படை உரிமைகளை மேம்படுத்தும் அரசமைப்புத் திருத்தமே தற்போது அவசியமானது என்றார்.</p><p>&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u4Zq0eyUb5E" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-02T05:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்.ஜி.ஓ. சட்டமூலம் - 22ஆவது திருத்தம் - ஆடை உரிமை குறித்து கல்முனையில் விரிவான ஆராய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ngo-bill-22nd-amendment-clothing-rights-discussed-1788325215"></link>
            <id>https://tamilwin.com/article/ngo-bill-22nd-amendment-clothing-rights-discussed-1788325215</id>
            <summary type="text">அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாசார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான
விடயங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாசார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான
விடயங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று கல்முனை ஆசாத் பிளாசாவில்
இடம்பெற்றது.</p><p>

வைத்தியர் சட்டத்தரணி வை.எல்.எம். யூசுப் தலைமையில் நடைபெற்ற
இக்கலந்துரையாடலில் 20-க்கும் மேற்பட்ட கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் சமூக
ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும்
முன்வைத்தனர்.
</p><p>
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம், 22ஆவது
அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் உதவி சுகாதார ஊழியர்களின் கலாச்சார
ஆடை அணியும் உரிமை மறுக்கப்பட்டமை ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில்
இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் போது முஸ்லிம் சமூகம் பகடைக்காயாகப்
பயன்படுத்தப்பட்டு, அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் கடுமையான பாதிப்புகள்
ஏற்படுத்தப்பட்டதைப் போன்று, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இப்புதிய
சட்டமூலங்கள் மற்றும் சம்பவங்கள் ஊடாகவும் எதிர்காலத்தில் முஸ்லிம்
சமூகத்திற்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா
என்பது பற்றி ஆழமாக ஆராயப்பட்டது.
</p><p>
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் என்.ஜி.ஓ. சட்டமூலத்தின் சாதக, பாதக
அம்சங்கள் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. </p><p>குறிப்பாக,
முஸ்லிம்களின் சமய மற்றும் கலாச்சார நிறுவனங்கள், மதரஸாக்கள் உள்ளிட்ட சமூக
அமைப்புகளின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இச்சட்ட ஏற்பாடுகள் எத்தகைய
தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.</p><p>

அதேவேளை, முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தமது சமய, கலாச்சார
அடையாளங்களின் அடிப்படையில் ஆடை அணியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு
நிரந்தரமான சட்ட ரீதியான தீர்வு அவசியம் என்றும் கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்டது.
</p><p>
இக்கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள்
விரிவாக முன்வைக்கப்பட்ட போதிலும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும்
நலன்களையும் பாதுகாப்பதற்கு ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க சமூகத் தலைமைகள்
உருவாக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களில்
சமூகத்திற்குத் தெளிவான வழிகாட்டல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது</p>]]></content>
            <updated>2026-09-02T05:00:28+00:00</updated>
        </entry>
    </feed>
