<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-12T05:37:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786511505"></link>
            <id>https://tamilwin.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786511505</id>
            <summary type="text">கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம்&nbsp;நேற்று(11.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37154665-dd24-4e94-8e34-d507d512a553/26-6a7c04ae335f1.webp' /></p><p>இந்நிலையில், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:29:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவி - எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-government-help-by-inclement-weather-1786509095"></link>
            <id>https://tamilwin.com/article/indian-government-help-by-inclement-weather-1786509095</id>
            <summary type="text">சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத்
தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.</p><p>கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (11) செவ்வாய்க்கிழமை
நடைபெற்றபோது இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி</h2><p>அண்மையில் மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் சீரற்ற
காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக
இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f6ad07-66e3-4b3b-867f-44f49a574cbb/26-6a7bffb39c41c.webp' />&nbsp;</p><p>இதற்கமைய, கடந்த வாரம் கண்டியிலுள்ள இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர்
சரண்யா அம்மையாரை, பிரதேச சபை செயலாளர் விஜயசுந்தரம் மற்றும் உறுப்பினர்
பாஸ்கரன் ஆகியோருடன் சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை
வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.</p><p>அத்துடன், கொட்டகலை பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப்
பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 700 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,
மடிக்கணினிகள் மற்றும் புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கும், இளைஞர்,
யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், விவசாய நடவடிக்கைகளை
ஊக்குவிப்பதற்கும் உதவிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இந்த உதவிகளை வழங்குவதற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை
எடுக்கப்படும் என இந்திய தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக
இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய உதவித் தூதரகத்திற்கும் நன்றி
தெரிவிப்பதாகவும் பிரதேச சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>கொட்டகலை பிரதேசத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 88 விசேட தேவையுடைய
மாணவர்களுக்காக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்
ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர்
உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து, அவற்றை மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச்
சென்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபைத் தலைவர்
தெரிவித்துள்ளார்.</p><h2>விரைவில் புதிய கட்டட நிர்மாண பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தின் பயன்பாடு தொடர்பிலும் புதிய
தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

இதற்கமைய, உள்ளூர் விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளுக்கான மைதான வாடகையாக 10
ஆயிரம் ரூபாயும், வைப்புப் பணமாக மேலும் 10 ஆயிரம் ரூபாயும் அறவிடப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996ff3a9-273a-48f5-a5b4-cc16f9a5bfcd/26-6a7bffb470ce0.webp' />&nbsp;</p><p>
</p><p>
பிரதேசத்திற்கு வெளியேயுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளுக்கு 15 ஆயிரம்
ரூபாயும், 10 ஆயிரம் ரூபாய் வைப்புப் பணமும் அறவிடப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டது.</p><p>

எனினும், கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் நிகழ்வுகளுக்கு
மைதானத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மைதானத்தைப் பயன்படுத்துவோரின் வசதிக்காக மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகளும்
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab32374-8df7-486b-95ae-372cf7e8a200/26-6a7bffb545d59.webp' /></p><p>அத்துடன், கொட்டகலை பிரதேச சபைக்குச் சொந்தமான புதிய கட்டிடத்தின் நிர்மாணப்
பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்காக மத்திய மாகாண ஆளுநர், உள்ளூராட்சி
ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பைப்
பெற்றுக்கொள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் ராஜமணி பிரசாந்த்
கூறியுள்ளார்.</p><p>உறுப்பினர் சுதர்ஷன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, வட்டகொடை நகரில் யுவுஆ
இயந்திர சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிரபல வங்கிகளுடன் தொடர்பு கொண்டு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் அவரவர்
வட்டாரங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை விரைவாக நிறைவு
செய்து, அவற்றின் முழுமையான விபரங்களை நவம்பர் மாத இறுதிக்குள்
சமர்ப்பிக்குமாறும் பிரதேச சபைத் தலைவர் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் செல்லாத வகையில்,
அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய அனைத்து
உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், விசேட தேவையுடைய
பிள்ளைகளுக்கான கல்வி வசதிகள், விளையாட்டு மைதான அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு
விடயங்கள் தொடர்பில் கொட்டகலை பிரதேச சபையின் இன்றைய அமர்வில் கவனம்
செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T05:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்! அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employee-salary-sri-lanka-1786508674"></link>
            <id>https://tamilwin.com/article/government-employee-salary-sri-lanka-1786508674</id>
            <summary type="text">
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p> 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>சம்பளம் அதிகரிக்கப்படும்</h2><p> </p><p> 2027ஆம் ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச வருமானம் ஒப்பீட்டளவில் உயர்வடைந்து வருகின்றது. </p><p> இவற்றுள் கணிசமான பகுதி அரச அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருகின்றது. </p><p>

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர் மட்டத்தில் அரசாங்கம் அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2026இல் சம்பளம் அதிகரிக்கப்பட்டதோடு 2027இலும் அதிகரிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9eb5e55-5811-4cce-afbc-86dba2a24061/26-6a7bff97883a9.webp' /></p><p> 

மிகச் சிறந்த பொருளாதார நிலையில் இருந்து நாம் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை. பொருளாதார நிலை படிப்படியாக முன்னேறுகின்றது. அதற்கு ஏற்பவே அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலும் அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>

யாருக்கேனும் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்காணிப்பு கமராவை சேதப்படுத்தியவர்களிடம் தண்டப்பணம் அறவிட்ட நல்லூர் பிரதேசசபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-pradeshiya-sabha-fines-damaged-camera-1786508760"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-pradeshiya-sabha-fines-damaged-camera-1786508760</id>
            <summary type="text">நல்லூர் பிரதேசசபையினால் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் பிரதேசசபையினால் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

நல்லூர் பிரதேசசபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை</h2><p> 

இதன்மூலம் சட்டவிரோதமாக வீதிகளில் கழிவுகளை வீசி செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேசசபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d00b9c8c-3547-4fe3-9216-91dfe10c878e/26-6a7bfd235d861.webp' /></p><p> 

இதன் காரணமாக வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. </p><p>

இந்நிலையில், நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ஒன்று அண்மையில் சிலரினால் அடித்து நாசமாக்கப்பட்டது.</p><h2>சந்தேகநபர்கள் அடையாளம்</h2><p> </p><p>

எனினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏனைய கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளை பயன்படுத்தி குறித்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d14c1cb6-f491-4ba2-a78d-de67aa664add/26-6a7bfd244d90f.webp' /></p><p> 

இதனையடுத்து, சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கமராவின் பெறுமதியுடன் தண்டப்பணத்தையும் சேர்த்து ரூபா 80,000 தொகையை குறித்த நபர்களிடமிருந்து நல்லூர் பிரதேச சபையினால் அறவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b3b6de-e62b-44d0-acc4-4ac2fef9c7a1/26-6a7bfd2522952.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - பிரதமரின் தலையீட்டால் உண்மை அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-dies-in-abu-dhabi-1786496464"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-dies-in-abu-dhabi-1786496464</id>
            <summary type="text">அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
</p><p>
கம்பளை - அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான் லியனகே என்ற இளைஞனின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றையதினம் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளன. </p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">உறவினர்கள் நடவடிக்கை</b></p><p>கடந்த 2 வருடங்கள் 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அபுதாபிக்குச் சென்ற இளைஞன் தாக்குதல் ஒன்றினால் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e7bf07d-9375-4c9c-96a4-8d534dd0eb7c/26-6a7bf0371d6fb.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p> </p><p> 

இதனையடுத்து, உயிரிழந்த இளைஞரின் மாமா, அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையத்திடம் தகவல்களைக் கோரியபோதிலும், ஒப்பந்தக் காலம் முடிவடைந்துவிட்டதாக கூறி அந்த நிறுவனம் பொறுப்பிலிருந்து நழுவ முயன்றுள்ளது.</p><p>இதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>சிங்கப்பூரிலிருந்து உடனடியாக நாடு திரும்பிய தாயாரும் உறவினர்களும் தேவையான சட்ட ஆவணங்களைத் தயாரித்து அபுதாபி நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.

எனினும் அது பலனளிக்கவில்லை.</p><h2>பிரதமர் தலையீடு&nbsp;</h2><p>இதற்கிடையில் நிர்க்கதிக்குள்ளான குடும்ப உறவினர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.</p><p>

இதன் காரணமாக பிரதமரின் பணிப்புரையின் பேரில் பிரதமர் செயலகம் தலையீடு செய்து, சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
</p><h3><span style="font-size: 14px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5498f0e5-289b-4909-b11b-9c51f125e237/26-6a7bf037d9652.webp' /></span></h3><p>பிரதமரின் மற்றும் அமைச்சின் முயற்சியால் கடந்த ஜுலை மாதம் 29 ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சடலம், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலை ஊடாகப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.&nbsp;</p><p>அங்கு இடம்பெற்ற மரணப் பரிசோதனை மற்றும் நீர்கொழும்பு நீதவான் உத்தரவிற்கமைய, தலையில் ஏற்பட்ட பலத்த தாக்கம் காரணமாக இரத்தம் உறைந்தமையும், உடலின் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களுமே இந்த மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் அபுதாபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T04:59:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான யோஷித ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-to-cid-investigation-1786509266"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-to-cid-investigation-1786509266</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.வாக்குமூலமொன்று வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.</p><p>வாக்குமூலமொன்று வழங்குவதற்காக&nbsp;குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T04:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரம்! உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuruwita-prison-clash-post-mortem-report-1786503881"></link>
            <id>https://tamilwin.com/article/kuruwita-prison-clash-post-mortem-report-1786503881</id>
            <summary type="text">&amp;nbsp;குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.</p><p>

நேற்று முன்தினம் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, இரண்டு கைதிகளும் பலத்த துப்பாக்கிச்சூட்டுக்காயங்களால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, ஒரு கைதி தலையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுக் காயத்தாலும், மற்றொருவர் மார்பில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டு காயத்தாலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் நிலை</h2><p>

கடந்த வெள்ளிக்கிழமை குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fee3ee9-e9cf-4aac-bde8-e631ab70ed77/26-6a7bf26b0bf07.webp' />&nbsp;</p><p>

கைதிகளுள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலை தீவிரமடைந்ததாகவும், இதனைக் கட்டுப்படுத்துதவற்காக துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை குண்டுகளும் நடத்தப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கூறியிருந்தார்.
</p><p>
இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, கலவரக் கட்டுப்பாட்டுப்பிரிவு மற்றும் இராணுவமும் வரவழைக்கப்பட்டன.</p><p>

இதற்கு முன்னர் நீர்கொழும்பு, மஹர, மெகசின் மற்றும் பல்லன்சேன சிறைகளிலும் கலவரம் வெடித்தது.</p><p>இதில், நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 சிறை அதிகாரிகளும் 17 கைதிகளும் உயிரிழந்தனர்.</p><p> 

மஹர மற்றும் மெகசின் சிறைகளில் வெடித்த கலவரத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T04:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786505387"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786505387</id>
            <summary type="text">இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&amp;nbsp;நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p>நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (12.08.02026) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>அதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p> வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும், ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae2eac2-2e68-4528-a957-540fef7bcb3d/26-6a7beec53ed89.webp' /></p><p> </p><p>சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். </p><p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.</p><h2>கொந்தளிப்பான கடற்பரப்பு</h2><p> இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோடிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86cc484a-08bd-448d-a8c0-e720dfde1db2/26-6a7beec5e9af4.webp' /></p><p> </p><p>மேலும், கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 முதல் 3 மீற்றர் உயரம் வரை எழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T03:59:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து: இளைஞர் பலி - மற்றுமொருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-main-road-young-man-died-1786504125"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-main-road-young-man-died-1786504125</id>
            <summary type="text">கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை (12) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.</p><p>இன்று அதிகாலை (12) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு
பாரஊர்திகள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>பாரஊர்தியை வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்டவேளை பின்னால் வந்த பாரஊர்தி
மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eba1cd10-8331-40b8-a6b4-ca9dce9bbbb8/26-6a7be9e461ef7.webp' />&nbsp;</p><p>இந்த விபத்தில் பாரஊர்தியின் உதவியாளரான 21வயதான
சத்தியராசா சஞ்சயன் என்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.</p><p>மேலும், 28 வயதான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>சம்பவம் தொடர்பாக
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T03:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-dispute-heads-toward-settlement-1786501558"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-dispute-heads-toward-settlement-1786501558</id>
            <summary type="text">கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டு இறுதி சுங்கத்தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டு இறுதி சுங்கத்தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு தீர்வொன்றைப் பரிந்துரைப்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்கள்</h2><p> 

குறிப்பிட்ட வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு பொருத்தமான இணக்கப்பாட்டை எட்டுவதற்குத் தேவையான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணி என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3eb62aa-77fd-44be-8170-611c2df0f79b/26-6a7be0e87d72f.webp' />&nbsp;</p><p>இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவிக்கவில்லை என இலங்கை சுங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p><p>இருப்பினும், நியாயமான காரணங்களால் சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் அறிவித்தால், அவை தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்றும் இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்தொன்றில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக்கோளாறு - பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-on-coastal-line-suffers-a-technical-fault-1786500493"></link>
            <id>https://tamilwin.com/article/train-on-coastal-line-suffers-a-technical-fault-1786500493</id>
            <summary type="text">ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தொன்றில் இன்று காலை (12) தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
பெருவளை தொடருந்து நிலையம் மற்றும் மக்கோண த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தொன்றில் இன்று காலை (12) தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.</p><p>
பெருவளை தொடருந்து நிலையம் மற்றும் மக்கோண தொடருந்து நிலையத்திற்கிடையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக, ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:19:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-of-policy-interest-rates-1786498601"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-of-policy-interest-rates-1786498601</id>
            <summary type="text">இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> </p><p>2.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் பொருளாதாரம் மீண்டு வருகின்றது.</p><h2>நாணயக்கொள்கை பராமரிப்பு</h2><p> மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இல்லாத வகையில் நாணயக் கொள்கையைப் பராமரிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba0fa5cf-f574-41ed-819a-43b5e29fd6f5/26-6a7bd4f148a59.webp' />&nbsp;</p><p>பணவீக்கம் தற்போதைய மட்டங்களிலேயே உச்சத்தை எட்டி, அடுத்த ஆண்டில் 5 சதவீத இலக்கை நோக்கி மீண்டும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஈரான் போரினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தனது முதல் அதிகரிப்பாக கடந்த மே மாதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி உயர்வைக் கொண்டுவந்து மத்திய வங்கி சந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இடம்பெறும் மீட்சியில் அதன் அறிவுறுத்தலில் தெரிவு செய்யப்பட்ட ஆபத்தான வழிமுறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

பணவீக்கம் 7 சதவீதமாக உயரும் என மத்திய வங்கி எதிர்பார்த்ததால், மே மாத வட்டி உயர்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும், தற்போதைய பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலேயே உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார். </p><p>இதேவேளை, மே மாத வட்டி அதிகரிப்பின் முழுமையான தாக்கம் பொருளாதாரத்தில் வெளிப்பட 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும், அடுத்த ஆண்டின் முதலரை பகுதியில் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கிற்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.</p><p>இதற்கமைய, மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி திஸ்ஸ விகாரை பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான பரப்புரைகள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786497326"></link>
            <id>https://tamilwin.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786497326</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
பொப்பிலியான சுனேத்ரா த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
</p><p>பொப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய உரிமைகளை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் தலைவரான கலகம குசலதம்ம தேரர் திரிபுபடுத்தப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>பவானி வீதி விடுவிப்பு</h2><p>
தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பரப்புரைகள் முன்வைக்கப்படுகின்றன.</p><p>குறித்த ஊடக சந்திப்பில் தேரர் தெரிவித்த கருத்து
திஸ்ஸ விகாரையின் நடுவே வீதியொன்றை அமைக்க வேண்டும் என ஒருவித அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.</p><p>பலாலி பொலிஸாரினால் பெறப்பட்டிருந்த தடை உத்தரவை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் முற்றாக இரத்து செய்துள்ளது. இதன்படி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வீதி அமைக்கும் பணியை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc6e656-6a35-44ce-be95-0af911b326f6/26-6a7bc9304bcdb.webp' /></p><p>சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தேரர் 'இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வீதி அமைக்கப்பட மாட்டாது, யாரும் பதற்றமடைய வேண்டாம்' என அறிக்கை விட்டிருந்தார். </p><p>இருப்பினும், விகாராதிபதி தேரரின் அறிக்கையை விட வலிவடக்கு பிரதேச செயலாளரின் கூற்றே பலமானதாக மாறியுள்ளது. அரசாங்கம் இதுவரை செய்த விடயங்கள், </p><p>கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளை பார்க்கும்போது, அவர்களின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகமும் பயமும் எங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T01:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடரும் அநுரவின் வேட்டை! அடுத்தடுத்து சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள் - பலரை காட்டிக்கொடுத்த சைமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-people-had-phone-connection-with-saima-1786497593"></link>
            <id>https://tamilwin.com/article/10-people-had-phone-connection-with-saima-1786497593</id>
            <summary type="text">அநுர அரசாங்கத்தில் போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக மேலும் பல அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிக்கவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கத்தில் போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக மேலும் பல அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. </p><p>

சில தினங்களுக்கு முன்னர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இரத்மலானையைச் சேர்ந்த சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலகச் சந்தேகநபர்கள் பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளனர். </p><p>

அவர்கள் வெளிப்படுத்தும் தகவல்களுக்கமைய, அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலரும் சிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><h2><b>
கைது செய்ய நடவடிக்கை</b></h2><p>அவர்களுடன் தொலைபேசித் தொடர்புகளைப் பேணிய 10 நபர்கள் குறித்த தகவல்கள் வெளிவரவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7fc919a-1bb9-4fc5-be17-94d896fd3123/26-6a7bcdc0e6447.webp' /></p><p>மேலும் அவர்களுக்குக் குற்றச் செயல்களைச் செய்வதற்கு ஒப்பந்தம் வழங்கிய நபர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன் இந்த குழுவினருக்கு ஆயுதங்களை வழங்கியவர்களையும் எதிர்வரும் காலத்தில் கண்டறிய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-12T01:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி பலி - படுகாயமடைந்த நிலையில் தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-kids-drown-and-dead-1786497114"></link>
            <id>https://tamilwin.com/article/2-kids-drown-and-dead-1786497114</id>
            <summary type="text">புத்தளம், கற்பிட்டியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம், கற்பிட்டியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.</p><p>

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரகன்ஹேன பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நேற்று பிற்பகல் படகு கவிழ்ந்துள்ளது.</p><p>

அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
</p><h2><b>
சிறுவர்கள் பலி</b></h2><p>நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் 7 வயதுடைய சிறுவனும் 13 வயதுடைய சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3ef7bf0-0838-4828-b684-4f2d0f5c397c/26-6a7bc9b2aa90e.webp' /></p><p>கடற்றொழிலுக்காக பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவத்தில் காயமடைந்த தந்தை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p><p>

</p>]]></content>
            <updated>2026-08-12T01:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேவிபியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் உறவினர் அதிரடியாக கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/k-d-lalkantha-arrested-1786490460"></link>
            <id>https://tamilwin.com/article/k-d-lalkantha-arrested-1786490460</id>
            <summary type="text">ஜேவிபியின் பிரதான பாத்திரங்களில் ஒருவரும் அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சரின் உறவினர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.கமத்தொழில், கால்நடை வளங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேவிபியின் பிரதான பாத்திரங்களில் ஒருவரும் அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சரின் உறவினர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனரே கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>சுசந்த சுதர்சன எனப்படும் குறித்த நபர் அமைச்சர் லால் காந்தவின் மனைவியின் தங்கையின் கணவர் ஆவார்.
</p><p></p><h2>வாகன மோசடி</h2><p>அரச வாகன ஏலத்தின் போது நபர் ஒருவரிடம் 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக அமைச்சர் லால் காந்தவின் மைத்துனருக்கு எதிராக சுரங்க ரஞ்சித் சமரவீர என்பவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>நேற்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அனைத்துக் காரணிகளும் வெளிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை&nbsp;கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85ee431a-e320-4cd5-ba58-9eef436b7f05/26-6a7bae5ec2678.webp' /></p><p>கைது செய்யப்பட்ட அமைச்சரின் மைத்துனரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாததால் நேற்று இரவு&nbsp; அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.</p><p><span style="color: inherit;">அமைச்சர் லால் காந்த தரப்பிலிருந்து எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.&nbsp;</span>யாருக்கும் சட்டம் சமமாக இருக்க வேண்டும். அமைச்சர்களுக்கோ அல்லது அவர்களுடைய ஆட்களுக்கோ மட்டுமல்ல, சொந்தக் காரர்களுக்கும் அதுவே நிலைமை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T00:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகிக்க முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-officer-arrest-supply-drugs-magazine-prison-1786494999"></link>
            <id>https://tamilwin.com/article/prison-officer-arrest-supply-drugs-magazine-prison-1786494999</id>
            <summary type="text">பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட அதிகாரியிடமிருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;சிறை அதிகாரி கைது</h2><p>

இந்தச் சம்பவம் தொடர்பில், தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் முதலில் கல்கிசை பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதியொருவர் வட்ஸ்அப் அழைப்பு மூலம் போதைப்பொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய இடம் தொடர்பில் தகவல் வழங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b877cfa1-af07-41d3-b3fc-5e8be601270a/26-6a7bc199ceaa4.webp' /></p><p>

அதற்கமைய, குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்டு, அதனை பொரளை வனாத்த வீதியில் வைத்து மற்றொரு நபரிடம் ஒப்படைக்கத் தயாராகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, சிறைச்சாலை விளையாட்டு உடையில் வந்த நபரொருவர் சந்தேகநபருக்கு அருகில் சென்று போதைப்பொருள் அடங்கிய பொதியைப் பெற முற்பட்டுள்ளார்.</p><p>

அப்போது மறைந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe3bf0a-482d-4db2-a190-05658a590f0c/26-6a7bc19abc46f.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரி கடந்த ஜனவரி மாதமே மெகசின் சிறைச்சாலையில் பணியில் இணைந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
தங்காலை – பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய குறித்த சிறைச்சாலை அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T00:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழில் சார் கற்கைகள் தொடர்பான பல்கலைக்கழக பீடம் துரித கதியில் அமைக்கப்படும்..! கடற்தொழில் அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishing-studies-faculty-be-set-up-soon-sri-lanka-1786493922"></link>
            <id>https://tamilwin.com/article/fishing-studies-faculty-be-set-up-soon-sri-lanka-1786493922</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒழுங்கிணைப்புக்குழுக்கூட்டம்
இன்று(101.08.2026) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்
தலைமையில் நடைபெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒழுங்கிணைப்புக்குழுக்கூட்டம்
இன்று(101.08.2026) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்
தலைமையில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற
உறுப்பினர்களான காதர்மஸ்தன்,செல்வம் அடைக்கலநாதன்,து.ரவிகரன் ஆகியோருடன்
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த ஹகவத்த மற்றும்
திணைக்கள அதிகாரிகள் பொலிசார்,கடற்படையினர் கடற்தொழில் சமூக அமைப்புக்களின்
பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.</p><h2>கடற்தொழில் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை
கடற்படையினரின் உதவியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3d1f9e3-2989-4578-b452-3054813e2c4f/26-6a7bbe4a4f572.webp' /></p><p> நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் மீன்வளப்பினை மேம்படுத்தல்நடவடிக்கை
மேற்கொள்ளல்

சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 54 வீடுகள் இந்த மாத
இறுதிக்குள் கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக முல்லைத்தீவு மாவட்ட
கடற்தொழில் நீரியல்வளப்பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதி
ஒதுக்கப்பட்டு இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது விரைவில் அது அமையவுள்ளது என
அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;கடற்படையினரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும்
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களதின் ஆளணி பற்றாக்குறையினை
நிவர்த்தி செய்ய இந்த மாதம் 19 ம் திகதி 8 பேர் புதிய நியமனம் பெறவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தில் 4542 கடற்றொழிலாளர்&nbsp; குடும்பங்கள் ஊடாக இந்த ஆண்டு ஒகஸ்ட்
மாதம் வரை 8220.49 மெட்ரிக்தொன் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளபோது இந்த அளவு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களும்
உள்ளடங்கப்பட்டுள்ளது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T00:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் மாதத்தில் சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில் வர்த்தகம் செய்தல்: EUR/USD-க்குப் பொறுமை தேவை கணிப்பு அல்ல அது ஏன்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eur-usd-trading-in-august-why-patience-matters-1786492114"></link>
            <id>https://tamilwin.com/article/eur-usd-trading-in-august-why-patience-matters-1786492114</id>
            <summary type="text">சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை
அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான
போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை
அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான
போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடினமான
வர்த்தகச் சூழல்களில் சிலவாகும். </p><p>ஓகஸ்ட் மாதம் நெருங்கி வரும்
நிலையில், பணவீக்கம் மத்திய வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட அளவைக்
காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது, அதேவேளையில் பல முக்கியப்
பொருளாதாரங்களில் விலை மாறும் வேகம் குறைகிறது.</p><p> ஐரோப்பிய
மத்திய வங்கி மற்றும் யுஎஸ் ஃபெடரல் ரிசர்வ் ஆகிய இரண்டின்
மீதான எதிர்பார்ப்புகளையும் சந்தைகள் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து
வருவதால், யூரோ/டொலர் பரிமாற்ற வீதமானது, ஒன்றுக்கொன்று
முரண்படும் பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டங்களுக்கு இடையில்
சிக்கியுள்ளது.</p><p> யூரோ அல்லது யுஎஸ் டொலர் ஆகிய இரண்டுமே
தீர்க்கமான பேரியல் சாதகத்தைக் கொண்டிருக்காதபோது​ தற்போதும்
வணிகத்தை மேற்கொண்டுவரும் வர்த்தகர்கள் தங்கள் கவனத்தைத்
திசைசார் கணிப்பிலிருந்து, ஒழுங்குபடுத்தப்பட்ட செயலாக்கம் மற்றும்
புறநிலை இடர் மேலாண்மைக்கு மாற்ற வேண்டும்.
</p><h2>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலைப் புரிந்துகொள்ளுதல்
</h2><p>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழல்-பாணி நிலைமைகள் நாணயச்
சந்தைகளுக்கு ஒரு விரக்தி தரும் பொறியை உருவாக்குகின்றன,
கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் பலவீனமடையும் பொருளாதார
வளர்ச்சி ஆகியவற்றின் கலவையானது, மத்திய வங்கிகள் கடினமான
கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளுகிறது. இந்தச்
சூழல் ஒவ்வொரு வாரமும் முரண்பாடான பொருளாதாரச்
சமிக்ஞைகளை உருவாக்குகிறது. </p><p>ஒரு நாள், எதிர்பார்த்ததை விட
அதிகமான பணவீக்கக் குறியீடு இருப்பது, உயர் வட்டி வீதங்களைச்
சுட்டிக்காட்டி, நாணயத்தின் வலிமையை அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fbca282-f3d0-4e81-94c8-fbefc65c05ea/26-6a7bb80d667a2.webp' /></p><p> அடுத்த நாள்,

ஒரு மோசமான உற்பத்தி அறிக்கையானது பொருளாதாரச் சுழற்சி
மெதுவாக இருப்பதை உணர்த்தி, உடனடியாக நாணய மதிப்பின்
பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.
யூரோ மண்டலத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம் மறுக்க
முடியாதபடி நிலையற்றதாகவே உள்ளது.</p><p> சமீபத்திய OECD
பகுப்பாய்வானது, பலவீனமான உலகளாவிய வளர்ச்சிச் சூழலைச்
சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐரோப்பா குறிப்பாக எரிசக்தி விலையின்
சடுதியான மாற்றங்கள் மற்றும் மந்தமான தேவை ஆகியவற்றால்
பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில், யுஎஸ்
தரவுகளும் இது போன்ற ஒரு சிக்கலான சித்திரத்தை அளிக்கின்றன.</p><p>
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட சமீபத்திய தரவு, ஜூன் மாதத்தில் யுஎஸ்
நுகர்வோர் பணவீக்கம் 3.5% ஆகக் குறைந்துள்ளதைக் குறிக்கிறது.
</p><p>ஒருங்கிணைந்த உலகளாவிய வளர்ச்சிக் கண்ணோட்டம் இல்லாததால்,
EUR/USD இன் பாரம்பரிய உந்தும் காரணிகளைப் புரிந்துகொள்வது
கடினமாகிறது. பொதுவாக, ஒரு பிராந்தியத்தில் காணப்படும் வலுவான
வளர்ச்சியும் உயரும் வட்டி வீதங்களும் அதன் நாணயத்தின் மதிப்பை
உயர்த்துகின்றன. </p><p>இன்று, இரு பிராந்தியங்களும் வளர்ச்சி
மந்தநிலையையும் குறையாத பணவீக்கத்தையும் எதிர்கொள்கின்றன.
மாறிவரும் இந்தச் சூழலால், யுஎஸ் மற்றும் ஐரோப்பா இடையிலான
வட்டி வீத வேறுபாடுகள் சந்தையால் தொடர்ந்து மறுமதிப்பீடு
செய்யப்பட்டு வருகின்றன. எண்ணெய் விலையில் மீண்டும்
ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு மத்தியிலும், வட்டி வீதங்கள் ஏற்கனவே
பொருத்தமான நிலையில் இருப்பதாகக் கொள்கை வகுப்பாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளதால், ஜூலை மாதத்தில் ECB எச்சரிக்கையுடன்
செயல்படும் என்று சந்தைகள் பரவலாக எதிர்பார்க்கின்றன. இதனால்,
EUR/USD ஜோடிக்கு நிலையான போக்குகளை உருவாக்க முடியாமல்
சிரமம் ஏற்படுகிறது. </p><p>ஒவ்வொரு புதிய பொருளாதார வெளியீடும் சந்தை
எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்து, திட்டவட்டமான ஏற்றங்களுக்குப்
பதிலாக அடிக்கடி தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.</p><h2>

நிச்சயமற்ற தன்மையின் உளவியல்
</h2><p>விலைகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மாறும் போக்குடைய
சூழல்களைவிட, இழுபறியான சந்தை நிலவரங்கள் வர்த்தகர்கள்மீது
பெரும்பாலும் அதிக உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>ஒரு
தெளிவான சந்தைப் போக்கு நிலவும்போது, ​​வர்த்தகர்கள் தங்கள்
வர்த்தகத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகாட்டும்
ஆதரவையும் எதிர்ப்பு நிலைகளையும் எளிதாக அடையாளம் காண
முடியும். ஒரு சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில், ஒரு குறிப்பிட்ட
திசையை நோக்கிய தெளிவான போக்கு இல்லாத நிலை
விரக்தியையும், அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடிய நடத்தை சார்ந்த
தவறுகளையும் ஏற்படுத்துகிறது.
</p><p>விலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாறிக்கொண்டிருக்கும் சூழலில்,
அளவுக்கு அதிகமாக வர்த்தகம் செய்வது மிகவும் பொதுவான ஓர்
ஆபத்தாகும். அடுத்தப் பெரிய சந்தை நகர்வைப் பிடித்து லாபம்
பெறலாம் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள் ஒவ்வொரு மேக்ரோ
தலைப்புச் செய்தியையும் அடிக்கடி பின்பற்றிச் செல்கிறார்கள். இந்த
உறுதிப்படுத்தும் சார்புநிலை, உண்மையில் சீரற்ற சந்தை ஏற்றத்
தாழ்வுகள் மட்டுமே உள்ள இடங்களில் போக்குகளைக் காண
அவர்களைத் தூண்டுகிறது. </p><p>எதிர்பார்ப்பைவிடச் சிறந்த ஒரு
வேலைவாய்ப்பு அறிக்கை, ஒரு தீவிரமான நீண்டகால முதலீட்டு
நிலையைத் தூண்டக்கூடும்; ஆனால், சில மணித்தியாலங்களிலேயே
ஒரு மோசமான கொள்முதல் முகாமையாளர்கள் குறியீட்டுக்
கணக்கெடுப்பு அந்த நகர்வைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும். அடுத்த
ஏற்றத்தைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற அச்சம், தொடர்ச்சியான
தவறான சமிக்ஞைகள் மூலமாக மூலதனத்தை வற்றச் செய்கிறது.</p><p>
EUR/USD ஜோடி பல வாரங்களாக ஒரு குறுகிய வரம்பிற்குள்
தேக்கமடைந்திருக்கும்போது, ​​கட்டாயப்படுத்தி வர்த்தகம் செய்ய
வேண்டும் என்ற உளவியல் உந்துதல் மிகத் தீவிரமாகிறது.</p><p> குறுகிய
கால வேக மாற்றத்தை ஓர் அடிப்படை மாற்றமாகக் தவறாகக் கருதி,

வர்த்தகர்கள் குறைந்த கால அளவுகளுக்கு மாறத் தொடங்குகிறார்கள்.
நிச்சயமற்ற பேரியல் பொருளாதாரச் சூழல்களில் மூலதனத்தைப்
பாதுகாப்பது, பெரிய திசைசார் நகர்வுகளைக் கைப்பற்றுவதைப்
போலவே பல நேரங்களில் மதிப்புமிக்கது என்பதை அனுபவமிக்க
வர்த்தகர்கள் புரிந்துகொள்கிறார்கள். </p><p>பொறுமையும், தேர்ந்தெடுக்கப்பட்ட
வர்த்தக நிறைவேற்றமும் அதயாவசியமானவையாகின்றன. இத்தகைய
சூழல்களில், குறைவாக வர்த்தகம் செய்வதே பெரும்பாலும் அதிக
லாபம் தரும் மூலோபாயமாக அமைகிறது.</p><h2>
அமைப்பு தெளிவாக இல்லாதபோது, ​​சூழல் அதிக முக்கியத்துவம்
பெறுகிறது</h2><p>
நிலையற்ற பேரியல் சூழல்களில் செயல்படுவதற்குப் பொறுமைக்கு
அப்பால் கூடுதல் திறன்கள் தேவைப்படுகின்றன.</p><p> உண்மையற்ற
தொடக்கங்கள், முக்கியச் செய்திகளின் தலைகீழ் மாற்றங்கள், திடீர்
விலை மாற்றங்கள் ஆகியவற்றைத் தாங்கக்கூடிய ஒரு வர்த்தகச்
செயல்முறை இதற்குத் தேவைப்படுகிறது. பணவீக்கத் தரவுகள்,
வளர்ச்சிகுறித்த கவலைகள், மத்திய வங்கியின் சமிக்ஞைகள், வட்டி
வீதம்குறித்த மாறிவரும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே
EUR/USD ஜோடி இழுபறிக்கு உள்ளாகும்போது, ​​வர்த்தகச் சூழலின்
ஒவ்வொரு அம்சமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
</p><p>
இங்குதான், விஷயத்தைத் திணிக்காமல் Exness-ஐ அறிமுகப்படுத்த
முடியும். EUR/USD போன்ற ஒரு சந்தையில், அடுத்தடுத்த தரவு
வெளியீடுகளின் அடிப்படையில் சூழல் மாறக்கூடும் என்பதால், CFD
வர்த்தகர்களுக்கு நிதானத்துடன் செயல்பட உதவும் சூழல்
தேவைப்படுகிறது. </p><p>ஒரு தரகரால் பேரியல் சித்திரத்தை மேலும்
தெளிவுபடுத்த முடியாது, ஆனால் முடிவெடுப்பது தொடர்பான
பின்வரும் கவனச்சிதறல்களைக் குறைக்க அவரால் உதவ முடியும்:
அதாவது, பிழையின்றி ஓர்டர் செய்யப்பட்டதா, செலவுகள்

புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றனவா மற்றும் CFD வர்த்தகர்
கவனத்தைச் சிதறடிக்காமல் இடர் அபாயத்தை நிர்வகிக்க முடியுமா
என்பன.</p><p>
இது முக்கியமானது, ஏனெனில் வரம்பு-பிணைக்கப்பட்ட நாணயச்
சந்தைகள் பெரும்பாலும் தயக்கம் மற்றும் அதிகப்படியான
எதிர்வினையைச் சம அளவில் தண்டிக்கின்றன. ஒரு CFD வர்த்தகர்
ஏற்கனவே ஓர் உண்மையான கொள்கைச் சமிக்ஞையை மற்றொரு
தவறான நகர்விலிருந்து பிரித்தறிய முயற்சிக்கும்போது, ​​அந்த
வர்த்தகத்தின் செயல்முறைகள் நிச்சயமற்ற தன்மைக்கு மற்றொரு
ஆதாரமாக மாறிவிடக் கூடாது. மிகவும் சீரான செயலாக்கமும்
தெளிவான விலை நிர்ணயமும் பின்வருவனவற்றின் மீதான
கவனத்தை அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க உதவலாம்:
</p><p>அமைவு, ஆபத்து மற்றும் வர்த்தகத்தில் இருப்பதற்கான காரணம்.
EUR/USD ஜோடி உண்மையில் வர்த்தகம் செய்யப்படும் விதத்தின்
அடிப்படையில், Exness Terminal கூட இந்த விவாதத்திற்குப்
பொருத்தமானதாக அமைகிறது. </p><p>அந்த ஜோடி அரிதாகவே ஒரே ஒரு
சமிக்ஞையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. CFD
வர்த்தகர்கள் ஒரே நேரத்தில் டொலர், யூரோஸோன் தரவுகள், ஃபெட்
குறித்த எதிர்பார்ப்புகள், ECB-இன் கருத்துகள், தங்கம், கச்சா எண்ணெய்,
பங்குச் சந்தை மனநிலை ஆகியவற்றைக் கவனிக்க
வேண்டியிருக்கலாம். </p><p>வரைபட பகுப்பாய்வு, செயல்படுத்துதல், நிலை
முகாமைத்துவம், கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கான ஒற்றைப்
பணிச்சூழல், அந்தப் பரந்த பேரியல் கண்ணோட்டத்தை ஒன்றிணைத்து
வைத்திருக்க உதவுகிறது.</p><p> குறிப்பாக, EUR/USD கூடிக் குறையாமல்,
கிடைமட்டமாக நகரும்போதும், ஒவ்வொரு நகர்விற்கும் பின்னால்
இருக்கும் காரணங்கள் மாறிக்கொண்டே இருக்கும்போதும் இது மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
இடர் கட்டுப்பாடானது வகுத்த அதே திட்டத்தின் ஒரு பகுதியாக
மாறுகிறது. தெளிவான போக்கு நிலவும் ஒரு சூழலில், CFD

வர்த்தகர்கள் பெரும்பாலும் சந்தை அமைப்பையே தங்கள் பணிகளைச்
செய்ய அனுமதிக்க முடியும். EUR/USD சந்தையில் ஏற்ற இறக்கங்கள்
அதிகமாக இருக்கும்போது, ​​சந்தை அமைப்பு சாதகமான
வாய்ப்புகளைக் குறைவாகவே வழங்குகிறது. </p><p>பிரத்தியேகமான விலை
நிலைகள் அடிக்கடி சோதிக்கப்படுகின்றன, சந்தைகுறித்த உறுதிப்பாடு
விரைவாகக் குறைகிறது; இதனால், வர்த்தகம்
நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே திட்டத்தை மாற்றியமைக்க CFD
வர்த்தகர்கள் தூண்டப்படலாம்.</p><p> வெளிப்பாடு, மார்ஜின் மற்றும் கணக்கின்
நிலைகுறித்த தெளிவான புலப்படுநிலையானது, வர்த்தகத்தை
உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளின் அடிப்படையில் அல்லாமல்,
விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ள உதவுகிறது.
உட்கட்டமைப்பானது நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்கின்றன என்பது
விஷயமல்ல. அது தீர்ப்பதில்லை.</p><p> முக்கியமான விஷயம்
என்னவென்றால், நிலையற்ற சந்தைகள் ஏற்கனவே CFD வர்த்தகரிடம்
போதும் என்கிற அளவுக்குச் சவால்களை முன்வைக்கின்றன. EUR/USD
ஜோடியானது இரண்டு பலவீனமான கண்ணோட்டங்களுக்கு இடையே
சிக்கியிருக்கும்போது, ​​கையாள வேண்டிய மற்றொரு காரணியைச்
சேர்ப்பதற்குப் பதிலாக, வர்த்தக ஒழுக்கத்தைக் காக்க அந்தத் தளம்
உதவ வேண்டும்.</p><p>
முடிவுரை
பணவீக்க மந்தநிலையின்போது வெற்றிகரமான EUR/USD வர்த்தகம்
என்பது, ஒவ்வொரு பொருளாதார வெளியீட்டையும் கணிப்பதை விட,
சந்தைகள் ஒரு வழிகாட்டலைத் தேடும்போது ஒழுக்கத்தைக்
கடைப்பிடிப்பதைப் பற்றியதே ஆகும். ஓகஸ்ட் மாதத்தில் சேதம்
ஏற்படுத்தும் சந்தைச் சூழலானது, பேரியல் முதலீட்டாளர்கள் மற்றும்
சில நாட்கள் அல்லது வாரங்கள் வரை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள்
ஆகிய இரு தரப்பினரின் பொறுமையையும் சந்தேகமின்றிச் சோதிக்கும்.</p><p>
வர்த்தகர்கள் இத்தகைய நிச்சயமற்ற பேரியல் சூழல்களை ஒரு

புறநிலை சார்ந்த பகுப்பாய்வுடனும், கட்டாயப்படுத்தி வர்த்தகம்
செய்வதை உறுதியாகத் தவிர்த்தும் அணுக வேண்டும். </p><p>சீரான
நிறைவேற்றலை ஆதரிக்கும் ஒரு வலுவான வர்த்தக
உள்கட்டமைப்பைச் சார்ந்திருப்பதன் மூலம், வர்த்தகர்கள் சவாலான,
ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் கட்டுண்ட சந்தைகளைச் சமாளித்து,
தங்கள் மூலதனத்திற்குப் பாதிப்பின்றி வெளிவர முடியும்.</p>]]></content>
            <updated>2026-08-12T00:02:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிச்சத்திற்கு வந்த பாதாள உலகத்தின் அரசியல் தொடர்புகள்..! மரண தண்டனை மீண்டும் நடைமுறையாகுமா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-regardin-death-penalty-drug-trafficking-1786470851"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-regardin-death-penalty-drug-trafficking-1786470851</id>
            <summary type="text">இலங்கையில் தற்பொழுது&amp;nbsp; மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளாகியுள்ளன.


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்பொழுது&nbsp; மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளாகியுள்ளன.</p><p>


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு அரசியல்வாதிகளின் அனுசரணை இல்லாமல் இவ்வளவு பெரிய வலையமைப்பு இயங்க முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
 மாக்கந்தர மதுஷ் போன்ற பாதாள உலகத் தலைவர்கள் அரசியல்வாதிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் இதற்கான முக்கிய சான்றாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இலங்கையில் மரண தண்டனை சட்டம் புத்தகத்தில் இருந்தாலும், 1976 முதல் நடைமுறையில் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
</p><p>
போதைப்பொருள் குற்றங்களைக் குறைக்க மரண தண்டனையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதற்கு ஆதரவாகவோ அல்லது நிறைவேற்றுவதாகவோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
</p><p>
 மரண தண்டனைக்கு எதிரான வாதங்களில் மனித உரிமை கவலைகள், நீதித்துறை தவறுகள் நிகழ்ந்தால் அதைத் திருத்த முடியாது என்ற அம்சம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் (ICCPR) ஆகியவை முதன்மையாக உள்ளன.
</p><p>
வெறும் மரண தண்டனை மட்டுமே தீர்வாகாது; போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்களைக் கண்டறிதல்,பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளில் ஊழலை ஒழித்தல், விசாரணை மற்றும் நீதிமன்றச் செயல்பாடுகளை விரைவுபடுத்துதல் போன்ற கட்டமைப்பு ரீதியான மாற்றங்களே அவசியமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DEmhAJm0O5s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T23:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..! அதிரவைக்கும் காணொளி - புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/180-dead-in-colombia-earthquake-1786490585"></link>
            <id>https://tamilwin.com/article/180-dead-in-colombia-earthquake-1786490585</id>
            <summary type="text">கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 570க்கும் மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்தநிலையில் நிலநடுக்கம் தொடர்பான பல திடுக்கிடும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>சக்திவாய்ந்த நிலநடுக்கம்</h2><p>
</p><p>
மேற்கு கொலம்பியாவின் சொகோ (Choco) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே பூமிக்கு அடியில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

தொடர்ந்து பல நில அதிர்வுகள் பதிவாகின. </p><p>இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.


அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">NEW footage is circulating from a magnitude 7.4 earthquake that struck Colombia&#39;s Pacific region today. <br><br>The epicenter was near San José del Palmar in Chocó department, at a depth of around 96 km. <br><br>It was felt strongly across much of Colombia—including Bogotá, Medellín, and… <a href="https://t.co/X03limcIts">pic.twitter.com/X03limcIts</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2086811623902052811?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.


கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது.இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><h2>அவசரநிலை பிரகடனம்</h2><p>குறிப்பாகக் காளி (Cali) மற்றும் பெரேரா (Pereira) நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் நடைமுறையில் உள்ளது.


நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,

நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.</p><p> அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. </p><p>18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A powerful earthquake struck Colombia, and several buildings appeared to be about to collapse due to the powerful tremors. <a href="https://x.com/hashtag/Earthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Earthquake</a> <a href="https://x.com/hashtag/colombia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombia</a> <a href="https://x.com/hashtag/colombiaearthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombiaearthquake</a> <a href="https://t.co/Kp2jWEuXlf">https://t.co/Kp2jWEuXlf</a> <a href="https://t.co/10A3kYSs2D">pic.twitter.com/10A3kYSs2D</a></p>&mdash; Bara (@Reueus) <a href="https://x.com/Reueus/status/2087024035591041294?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>


நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
காளி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
</p><p>
 ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T23:35:21+00:00</updated>
        </entry>
    </feed>
