<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-22T06:36:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தேடப்பட்டு வரும் சீனப்பிரஜைகள் - பொது மக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512"></link>
            <id>https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p>இவ்வாறு கொலை செய்யப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது&nbsp;&nbsp;</p><p>இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f167eac-85bf-4175-a965-3cd9ba1fba06/26-6a89048ab3c50.webp' /></p><h2>வான் அல்லது கடல் வழி ஊடாக நாட்டைவிட்டுத்தப்பியோடக்கூடும்</h2><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். </p><p>

இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்&nbsp;சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/725f6ad8-6e4e-4af9-82e9-12d4da94009d/26-6a89048b64725.webp' /></p><p>குறித்த மூன்று சீன நாட்டவர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதுடன், சுற்றுலா விசாவில் வருகை தந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

எனவே மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழி ஊடாகச் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்பதால், அவர்களைக் கைது செய்யப் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.</p><p>அதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு - 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு&nbsp; பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,500 கோடி ரூபாய் பெறுமதியான தங்க சிலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863"></link>
            <id>https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863</id>
            <summary type="text">ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது.</p><p>

எனினும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அத்தகைய சிலை எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2><b>
 தங்க சிலை</b></h2><p>தங்கச் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதனை தொடர்ந்து ஜா எல மெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48f63bec-bbd6-42c1-81e1-59439ec0a5ae/26-6a87b6f330040.webp' /></p><p>இதன்போது, அங்கு ஏதேனும் அறியப்படாத பொருள் இருப்பதாக தெரியவந்திருந்தது.</p><p>

எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், குறித்த இடத்தில் எந்தவொரு பொருளும் புதைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/transfers-for-teachers-national-schools-8-years-1787375914"></link>
            <id>https://tamilwin.com/article/transfers-for-teachers-national-schools-8-years-1787375914</id>
            <summary type="text">தேசிய பாடசாலைகளில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களையும் அடுத்த ஆண்டு முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய பாடசாலைகளில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களையும் அடுத்த ஆண்டு முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. </p><p>

இந்த ஆண்டு, தேசிய பாடசாலைகளில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 மாகாண அளவில் இடமாற்ற சபைகளை கூட்டி இந்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.</p><h2>ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்</h2><p> </p><p>

அடுத்த ஆண்டு இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ள கல்வி அமைச்சு, அதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc2634fd-e051-4379-9994-caa7cdf6eec4/26-6a893698aa1de.webp' /></p><p>
</p><p>
 இதற்கிடையில், தங்களது இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு பொதுச்சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்த ஆசிரியர்களுக்கு இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.</p><p> 

எனவே, ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்கான இடமாற்றங்களுக்கும் விண்ணப்பிக்கவில்லை. இடமாற்ற சபையிடம் அவர்கள் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் பொதுச் சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர். </p><p>

இடமாற்ற சபையிடம் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பிறகு, அதே பாடசாலையில் தொடர்ந்து பணியாற்றும் நோக்கத்தில் அந்த ஆசிரியர்கள் பொதுச்சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார்.</p><p> 

இதேவேளை, மேல்முறையீடுகள் மீதான முடிவுகள் எவ்வளவு தாமதமாகின்றனவோ, அந்த ஆசிரியர்கள் தங்கள் இலக்குகளை அடைவது அவ்வளவு எளிதாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T05:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பண்டத்தரிப்பு ஆலய திருவிழாவில் 400 பேரின் கண்களுக்கு பாதிப்பு! வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-temple-eye-damage-issue-1787373493"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-temple-eye-damage-issue-1787373493</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற
திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்று மற்றும் வாணவேடிக்கை
காரணமாக கண் பாதிப்படைந்த 400 இற்கும் மேற்பட்டோர் யாழ். போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகள்</h2><p>
</p><p>
பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் நேற்று (20)
இரவு உற்சவத்தின் போது அதிக வாணவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு, இசை
நிகழ்வின் போது அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்று வகைகளும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. </p><p>இதன் காரணமாகவே பொதுமக்கள் பலரது கண்கள்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a26059-e108-4583-8ff8-40ab2de045f0/26-6a892c275b072.webp' />&nbsp;</p><p>

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான
பணிகள் குறைக்கப்பட்டு, இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், ஏனைய வைத்தியசாலைகளில் இருந்தும் வைத்தியர்களும் தாதியர்களும்
வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் பாதிப்பு காரணமாக 400 இற்கும்
மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.</p><h2>ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடு</h2><p>

இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்ட இந்த ஆலயத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடு
காரணமாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.</p><p>

இதனால் ஆலய நிர்வாகம் நீதிமன்ற பொறுப்பில் உள்ள காரணத்தால் இம்முறை திருவிழா
நீதிமன்ற பதிவாளரின் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளது.</p><p>லேசர் ஒளிக்கீற்றுத் தாக்கம் காரணமாக கண்ணில் பாதிப்படைந்தவர்களில் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பொலிஸார்,&nbsp; உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிகள் உள்ளிட்ட பல மாணவர்கள், அரச அலுவலகர்கள்
மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.</p><p>பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தின்
உற்சவத்தின்போது ஆலயச்சூழலில் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்று வகைகள்
பயன்படுத்தப்பட்டமையே இந்த கண் பாதிப்புக்கு முக்கிய காரணமாகும்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:57:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடையும் மகிந்த ராஜபக்ச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-fcid-mahinda-rajapaksa-1787371032"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-fcid-mahinda-rajapaksa-1787371032</id>
            <summary type="text">&amp;nbsp;நான் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டது மற்றும் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் - நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நான் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டது மற்றும் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் - நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க காலத்தில் கிடைத்த அனுபவங்கள் ஒரு தந்தையால் தன் பிள்ளைக்குக் கொடுக்க முடியாததை&nbsp; நல்லாட்சி அரசாங்கமும் ஜே.வி.பி.யும் எனக்கு வழங்கியுள்ளதாக தந்தை மகிந்த&nbsp;மகிழ்ச்சியடைகிறார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க நேற்று (21.08.2026) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>
</h2><p></p><h2>தந்தை ஒருவர் எதிர்பார்க்கும் முதிர்ச்சி</h2><p>ஊடகவியலாளர்கள் ஒருவர் நாமலிடம் இந்த விசாரணைகள் தொடர்பில் தந்தை மகிந்த ராஜபக்ச என்ன சொல்லுகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது மேலும் தெரிவித்த கருத்துக்கள்... </p><p>
இதனால் மகன் நாளுக்கு நாள் முதிர்ச்சியடைகிறார் என்றும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வார் என்றும் அவர் நம்புகிறார். </p><p>
தங்கல்ல பகுதியில் ஒருவர் ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார், ஆனால் அவருக்கு அதை எவ்வாறு வாங்கினார் என்று சொல்ல முடியாத போது, அது நாமல் ராஜபக்சவுடையது என்று சொல்கிறார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0c05e8d-a622-43b2-a138-36a9687f1c7f/26-6a891e1a87757.webp' /></p><p>இந்த அரசாங்கம் முதல் நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேர்தல் மேடைகளில் நாட்டில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் என்னுடையது என்றனர். </p><p>டுபாய் மெரியட் (Dubai Marriott) என்னுடையது என்றனர்.அக்காலத்தில் ஊழல் ஒழிப்புக்குழுவில் இருந்தவர்கள் தான் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கிறார்கள். </p><p>எனவே, அவர்கள் அன்று சொன்ன பொய்களுக்கும், தங்களால் புனையப்பட்ட பொய்களை சட்டபூர்வமாக்க முயற்சிக்கிறார்கள். </p><p>எங்களை விசாரணைக்கு வருமாறு கூப்பிட்டதும் நாங்கள் வந்து விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.அன்று நடந்துள்ளதும் இவ்வாறு தான் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; </p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:48:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரின் வாக்குமூலம்! பாழடைந்த வீட்டில் சிக்கிய ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-recovered-based-on-information-samitpura-sadhu-1787371463"></link>
            <id>https://tamilwin.com/article/gun-recovered-based-on-information-samitpura-sadhu-1787371463</id>
            <summary type="text">சமிட்புர சது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமிட்புர சது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான திமுத்து சதுரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ள சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய&nbsp; நேற்று (21) வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><h2>கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவு தீவிர விசாரணை</h2><p>28 வயதுடைய சந்தேகநபர் இலங்கையிலிருந்து தப்பியோடி ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c4f9c8-1b05-482a-921e-5e0fa6d1890b/26-6a89234aee0ab.webp' /></p><p>இதன்பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>இதற்கமைய,&nbsp; வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p> 

இதற்கு முன்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றும் 12 ரவைகளும் மட்டக்குளி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.</p><p>இதற்கமைய, கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:22:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dies-after-being-trapped-in-plowing-machine-1787370963"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dies-after-being-trapped-in-plowing-machine-1787370963</id>
            <summary type="text">கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை (21-08-2026) சிறுவன் தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>நேற்று மாலை (21-08-2026) சிறுவன் தனது உறவினரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியில்&nbsp; நின்றுக்கொண்டிருந்த போது தவறுதலாக வாகனத்தை இயக்கி திருப்ப முயன்ற போது சிறுவன் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</p><h2>பொலிஸார் தீவிர&nbsp;விசாரணை</h2><p>இதனையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d47a381-6fe7-413c-bbdc-bccbe4c7a84a/26-6a891eaf7ebe0.webp' /></p><p>



இச்சம்பவம் தொடர்பாக உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதியை கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>உயிரிழந்த குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T03:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல் - DNA மாதிரியில் அம்பலமாகவுள்ள உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sewwandi-s-forensic-report-ready-1787368721"></link>
            <id>https://tamilwin.com/article/sewwandi-s-forensic-report-ready-1787368721</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் கைதான இஷாரா செவ்வந்தியை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி DNA மற்றும் புகைப்பட பரிசோதனைகள் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் கைதான இஷாரா செவ்வந்தியை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி DNA மற்றும் புகைப்பட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
முக அடையாள பரிசோதனை</b></h2><p>நீதிமன்றில் தகவல்களை முன்வைத்த கொழும்பு குற்றப் பிரிவினர், கடந்த 17ஆம் திகதி இஷாரா செவ்வந்தி அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் முக அடையாள பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec22bd5a-1a55-4bc3-a48f-7bb817e66efd/26-6a89181f61bce.webp' /></p><p>இதன்போது DNA மாதிரிகள், புகைப்படப் பதிவுகள் மற்றும் காணொளி காட்சிகளும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
மேலும், இந்த சம்பவத்தின் 32ஆவது சந்தேகநபர்களான பட்டுவத்தையைச் சேர்ந்த சாமர மற்றும் கம்பஹா ஒஸ்மான் ஆகியோருக்கான தடுப்பு காவல் உத்தரவு 13ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.</p><p>

இதனால், அவர்களுக்கு மேலும் 90 நாட்களுக்கு தடுப்பு உத்தரவு பெற்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.</p><p>

இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணம் ஊடாக மன்னாருக்கு தப்பிச் செல்ல உதவியதாக கூறப்படும் 41 மற்றும் 42ஆவது சந்தேகநபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றப்பிரிவினர் தெரிவித்தனர்.
</p><p>
அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-22T03:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான ஐவர்..! விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monaragala-accident-death-update-1787361613"></link>
            <id>https://tamilwin.com/article/monaragala-accident-death-update-1787361613</id>
            <summary type="text">மொனராகலை - கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கும்புக்கன பகுதியில் உழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை - கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கும்புக்கன பகுதியில் உழவு இயந்திரமும், டிப்பர் லொறியொன்றும் மோதிக்கொண்டதில் ஐவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
டிப்பர் லொறியில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><h2>இருவர் கைது</h2><p>
</p><p>
இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இவர்கள் பூஜை வழிபாட்டிற்காக குடும்பமாக டிப்பர் லொறியில் சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c38517e-2dff-48e8-b1a0-c3bb95f790cf/26-6a8909e3b120d.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த,
ஆர்.டி.ஷெஹான் எரங்க (20), நிரோஷன் தேவேந்திர (55), ஏ.எம். திலகரத்ன பண்டார (56), பசிந்து தினேஷ் (வயது 21) மற்றும் தாரக மதுஷான் (31 வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஏ.எம். திலகரத்ன பண்டார (56) மற்றும் பசிந்து தினேஷ், தந்தை மற்றும் மகன் ஆவர்.
</p><p>
இதனையடுத்து விபத்திற்குள்ளான டிப்பர் லொறி சாரதி மற்றும் பயணிகளை ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T03:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமடைந்துள்ள சுரேஷ் சலேவின் உடல்நிலை! மனைவி விடுத்துள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sale-health-condition-request-president-1787367322"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sale-health-condition-request-president-1787367322</id>
            <summary type="text">அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்க வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் ஆகஸ்ட் 20 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்&nbsp;</h2><p>
</p><p>
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd3af394-d83d-4829-b6ff-8ec84372e5d2/26-6a8913cd4ea5d.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.</p><h2>அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
</p><p>
இருதய பிரச்சினைகள் காரணமாக அவருக்கு இதயக்கருவி பொருத்தப்பட்டதாகவும், தற்போது தேசிய வைத்தியசாலையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44bd53e-9173-4d22-b66c-51a0a24c74ce/26-6a8913ce1ff74.webp' /></p><p>
</p><p>
எனவே சலேவை நீதிமன்ற கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்கு தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
அத்துடன், சலே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யமாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.&nbsp; </p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T03:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பெருந்தொகை தங்கம், பணம் கொள்ளை - ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-robbery-at-a-house-in-mount-lavinia-1787365110"></link>
            <id>https://tamilwin.com/article/massive-robbery-at-a-house-in-mount-lavinia-1787365110</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பீரிஸ் வீதி பகுதியில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து, 2 கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 20ஆம் திகதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளின் ஒரு பகுதி மற்றும் 15,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்கிஸ்ஸ தர்மபால வீதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

தங்கம், பணம் கொள்ளை</b></h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை, ஓபன் பகுதியில் வசிக்கும் 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2038685-6c18-4206-8504-74bcf123333c/26-6a890e72b315d.webp' /></p><p>அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>சந்தேக நபர் திருடிய பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாவை செலவிட்டு, 18 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றையும், அப்பிள் ரக 3 கையடக்கத் தொலைபேசிகளையும், மற்றுமொரு கையடக்கத் தொலைபேசியையும் கொள்வனவு செய்துள்ளார்.</p><p>

மேலும், எஞ்சிய பணத்தில் ஒரு பகுதியை இரவு நேர கேளிக்கை விடுதிகளில் செலவிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>கடந்த 18ஆம் திகதி வீட்டில் வசிப்பவர்கள் தமது உறவினர் ஒருவரின் நெதிமால பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்றுள்ளனர்.</p><h3><b> பொலிஸில் முறைப்பாடு</b></h3><p>மறுநாள், 19ஆம் திகதி பீரிஸ் வீதியில் உள்ள தமது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் கலைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc7cc24b-6b42-46fc-bda3-4e1c948388a8/26-6a890e736b093.webp' /></p><p>இதனையடுத்து வீட்டை சோதனையிட்டபோது, மேல் மாடியில் அமைந்திருந்த ஜன்னல் ஒன்றை உடைத்து வீட்டுக்குள் திருடன் நுழைந்துள்ளார். ஒரு கோடி ரூபா பணத்தையும், ஒரு கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அனைத்து தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p> திருட்டில் ஈடுபட்ட நபர் அதே ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக கல்கிஸ்ஸ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். </p><p>இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பிச் சென்ற சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T02:50:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரமாக டுபாயிக்கு பறந்த CCIB அதிகாரிகள் குழு! இலங்கைக்கு அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-central-crime-investigation-bureau-1787358493"></link>
            <id>https://tamilwin.com/article/the-central-crime-investigation-bureau-1787358493</id>
            <summary type="text">மத்திய குற்றப்புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளனர். 
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்டமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய குற்றப்புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளனர். </p><p>
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p></p><h2>அழைத்துவரவுள்ள ஆபத்தான நபர்</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவரை அவசரமாக இலங்கைக்கு கொண்டு வரமுடியாது என்றும், அங்குள்ள சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலேயே அவரைக் பொறுப்பேற்க விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ள நிலையில் அதிகாரிகள் அவசரமாக டுபாய் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>'லலித் கன்னங்கர' அல்லது 'பஸ் லலித்' என்று அழைக்கப்படுபவரையே இவ்வாறு அழைத்து வரச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6306fb9-ffd6-432c-83b0-4fb70345b258/26-6a88ed1f87d86.webp' />&nbsp;&nbsp;</p><p>இவர் அவிசாவளை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவராவார். </p><p>இந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்திருப்பது இலங்கை பொலிஸாருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஏனெனில், அவரை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p>இவர் சட்டத்தரணிகள் ஊடாக தப்பிச் செல்வதற்கு பலமுறை முயன்றபோதிலும் அது பலனளிக்கவில்லை என்றும், டுபாயில் அவரது வழக்கு முடிவுக்கு வந்துள்ளதுடன், தற்போது அவரை அழைத்து வருவதே எஞ்சியுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><h2>பாதாள உலகக்குழுவை சேர்ந்த பல முக்கிய நபர்கள் கைது</h2><p>கடந்த காலத்தில் அவர் வந்து சென்றதாகவும் தகவல்கள் பரவின. இவர் ஹோமாகம, அதுருகிரிய மற்றும் அவிசாவளை வரையிலான பகுதிகளில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவராவார். குறித்த பகுதிகளில் இவரும் 'ஹந்தா' என்பவருமே செயற்பட்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1fac2f-cdf1-4ddd-93d0-3675c5bd2530/26-6a88fffc44de7.webp' /></p><p>எவ்வாறாயினும் இன்று (22.08.2026) அல்லது 24 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>பிரதான பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர். </p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவினர் வெளிநாடுகளில் உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக மிகவும் சுறுசுறுப்பாகவும் அர்ப்பணிப்புடனும் உரிய உத்திகளின் படி செயற்பட்டு வருகின்றனர்.</p><p>எனவே, இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுவதுடன், பலரது உயிர்களைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T01:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-temple-issue-1787361148"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-temple-issue-1787361148</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில்
இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID)
வெளிப்பாட்டினால் ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில்
இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID)
வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய
நிபுணர் மலரவன் தெரிவித்துள்ளார்.</p><p>

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தனது மருத்துவ அறிக்கையில் இந்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


 தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><h2>அதிகரித்துள்ள எண்ணிக்கை</h2><p>
சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை இரவு 9.30
மணி நிலவரப்படி 400ஐ தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 400ஐ
கடந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T01:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைக் காப்பாற்ற யோஷிதவை பலிகடாவாக்கிய மகிந்த! புது புதுக் காரணம் கூறும் ராஜபக்ச தரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-reason-why-mahinda-joined-yoshitha-in-the-navy-1787358358"></link>
            <id>https://tamilwin.com/article/the-reason-why-mahinda-joined-yoshitha-in-the-navy-1787358358</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்தார் என்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்தார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். </p><p>

பொதுஜன பெரமுனவின் கட்சி அவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நாட்டைக் காப்பாற்ற களமிறக்கப்பட்ட யோஷித&nbsp;</h2><p> </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

கடந்த காலத்தில் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்ட வந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர்கள் மீதும், அதில் பங்கெடுத்த இராணுவ வீரர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b105c12-1348-4a02-930e-1f145b5e5727/26-6a88f39d4f63d.webp' /></p><p> </p><p> 

அன்று மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தார். </p><p>

அப்படிச் செய்யாவிட்டால், பிரபாகரன் இந்த நாட்டைத் தனது அரசாங்கமாக மாற்றியிருப்பார். 

வடக்கு சென்று இனறு குட்டிக் கரணம், அடிக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட எவராலும் அங்கு சென்றிருக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0e088bb-97a1-4da5-8b24-211445b47167/26-6a88f39e035cb.webp' /></p><p>ஆனால், நாட்டைக் காப்பாற்றிய யோஷித ராஜபக்ச மீது இன்று தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p> 

இதன்மூலம், தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீதான 300இற்கும் மேற்பட்ட கொள்கலன் கடத்தல், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:56:10+00:00</updated>
        </entry>
    </feed>
