<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-15T17:12:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/impact-of-drought-intensifies-risk-ponds-drying-up-1786811460"></link>
            <id>https://tamilwin.com/article/impact-of-drought-intensifies-risk-ponds-drying-up-1786811460</id>
            <summary type="text">இலங்கையின் பல பிரதேசங்களில் வறட்சியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுத்தப்படுகின்றது.அத்தோடு, வறண்ட வானிலை காரணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல பிரதேசங்களில் வறட்சியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுத்தப்படுகின்றது.</p><p>அத்தோடு, வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.</p><p> இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><h2>கடுமையான வறட்சி</h2><p>

 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de136b7e-f73c-4e7e-8d17-d3c67b5a1443/26-6a809a269ff87.webp' /></p><p>

 

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>&nbsp;தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலையின் தாக்கம் சிறிய குளங்களையே பெரிதும் பாதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T16:57:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா - குறிசுட்டகுளம் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-man-dies-in-elephant-attack-in-vavuniya-1786811047"></link>
            <id>https://tamilwin.com/article/family-man-dies-in-elephant-attack-in-vavuniya-1786811047</id>
            <summary type="text">வவுனியா- குறிசுட்டகுளத்தில் யானை தாக்கியதில்
குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(15.8.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா- குறிசுட்டகுளத்தில் யானை தாக்கியதில்
குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த சம்பவமானது இன்று(15.8.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,

வவுனியா, குளவிசுட்டான் பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தில் தோட்ட வேலைக்கு
சென்ற போதே குறித்த குடும்பஸ்தர் மீது யானை தாக்கியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
இதில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நபரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db19c56-870c-4e19-b3a6-0f0259de225c/26-6a8092a9a540f.webp' /></p><p>இது தொடர்பில்
நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T16:28:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி அறிவிப்பிற்கு ஈரானின் கடுமையான பதிலடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-trump-will-soon-declare-hormuz-us-territory-1786810125"></link>
            <id>https://tamilwin.com/article/iran-trump-will-soon-declare-hormuz-us-territory-1786810125</id>
            <summary type="text">ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது, அது ஈரானுக்குச் சொந்தமானதாகவே உள்ளது தொடர்ந்து ஈரானுக்கே சொந்தமானதாக இருக்கும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாதி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்த அவர், “ஒரு ட்வீட் மூலமாகவோ, விமானந்தாங்கிக் கப்பல் மூலமாகவோ, உத்தரவு பிறப்பிப்பதன் மூலமாகவோ அல்லது தேர்தல் பிரசார உரையின் மூலமாகவோ ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற முடியாது” என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், ஈரான் சந்தித்துள்ளதாக அமெரிக்கா கூறும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத வரை, ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை ஈரான் தொடர்ந்து அமல்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eca50a7-7690-426a-a44b-346781b58de7/26-6a8090721f46a.webp' /></p><p>
</p><p>

இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு “முழுமையான கட்டுப்பாடு” இருப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

“நாம் இதை தொடர்ந்து வைத்திருப்போம் என்று நினைக்கிறேன்.</p><p> எங்கள் கடற்படை முற்றுகை ‘இரும்புச் சுவர்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.

 இதை ஈரான் எதுவும் செய்ய முடியாது” என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஈரான் இராணுவம் ட்ரம்பின் கூற்றை “பொய் மற்றும் கட்டுக்கதைகள்” என்று மறுத்துள்ளது.</p><h2>ட்ரம்பிற்கு பதிலடி</h2><p>

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து ஈரான் இஸ்லாமிய குடியரசின் முழுமையான நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் ஆயுதப்படைகளின் அனுமதி மற்றும் கண்காணிப்பு இல்லாமல் எந்தவொரு வர்த்தகக் கப்பல் அல்லது எண்ணெய் கப்பலும் இந்த நீரிணை வழியாக பாதுகாப்பாக செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7315299c-b144-4f58-848a-a9b121f959b0/26-6a809072e693c.webp' /></p><p>
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்கா “மிகப்பெரிய தவறான கணக்கீட்டை” மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ட்ரம்பின் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான கருத்து நகைச்சுவையாக கூறப்பட்டது என்று பின்னர் விளக்கம் அளித்ததாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
தற்போதைய அமெரிக்கா–ஈரான் மோதலின் முக்கிய பதற்றப் பகுதியாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது. 

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T16:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreigner-arrested-in-katunayake-airport-1786807966"></link>
            <id>https://tamilwin.com/article/foreigner-arrested-in-katunayake-airport-1786807966</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 14,600 வெளிநாட்டு சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2><b> போதைப்பொருள் தடுப்புப் பிரிவு</b></h2><p>சந்தேகநபர் 52 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/002e539d-eb22-45a5-8122-a7536fd92fb9/26-6a8087bbc8c5b.webp' /></p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-15T15:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்மாந்துறையில் மாடுகளைக் கடத்திச் சென்ற இரு இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-youths-arrested-smuggling-cattle-in-sammanthurai-1786807031"></link>
            <id>https://tamilwin.com/article/2-youths-arrested-smuggling-cattle-in-sammanthurai-1786807031</id>
            <summary type="text">சொகுசு காரைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச் சென்ற இரு
இளைஞர்களைச் சம்மாந்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அத்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொகுசு காரைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச் சென்ற இரு
இளைஞர்களைச் சம்மாந்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
</p><p>அத்தோடு, சந்தேகநபர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.&nbsp;</p><p>அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
நீண்டகாலமாக நடைபெற்றுவந்த விலங்குத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இத்திடீர்
சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.</p><h2>கைது</h2><p>இந்தச் சோதனையின் போது, மாடுகளைக் கடத்தப்
பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் அதிலிருந்த மாடுகளையும் பொலிஸார்
முதற்கட்டமாகக் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d121f694-eab9-4da1-b9d0-07e016f6423a/26-6a8082f9d8162.webp' /></p><p> பொலிஸாரைக் கண்டதும் காரில் வந்த இருவர்
தப்பியோடியபோதிலும், பொலிஸார் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி அவர்களை
விரைவாகக் கைது செய்தனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 கிராம் 430
மில்லிகிராம் மற்றும் 5 கிராம் 150 மில்லிகிராம் என மொத்தம் 10 கிராம் 580
மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.</p><h2>விசாரணை</h2><p>


சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம் கடத்தலுக்குப்
பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், 7 மாடுகள் மற்றும் வங்காமம், இறக்காமம் ஆகிய
பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆடுகள் என்பன பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a12cdef-a3e8-4f2a-8292-91d77d5dd5d2/26-6a8082fa908c7.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட நபர்கள் போதைப்பொருள் வியாபார வலையமைப்புடன்
தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும், பகுதி சார்ந்த விலங்குத் திருட்டுகள்
குறித்தும் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T15:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா-நிலாவினி விவகாரம்: பெண் தளபதியின் இரகசிய வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/contraceptive-pill-karuna-female-commander-1786804279"></link>
            <id>https://tamilwin.com/article/contraceptive-pill-karuna-female-commander-1786804279</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா முரண்பட்டபோது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.அவற்றில் மிக முக்கியமாக அந்தக்கால கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா முரண்பட்டபோது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.</p><p>அவற்றில் மிக முக்கியமாக அந்தக்கால கட்டத்தில் மகளிர் அணித்தலைவியாக இருந்த நிலாவினி என்ற பெண்ணுடன் கருணாவிற்கு இருந்த முறைகேடான உறவும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டு இருந்தது.</p><p>கருணா-நிலாவினி விவகாரம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாத்திரம் அல்ல சிறிலங்கா தரப்பிற்கு கூட தெரிந்த ஒரு விடயம் தான்.</p><p>அத்தோடு,&nbsp;கருணா தன்னோடு தறவான உறவில் இருந்ததாகவும், பல தடவைகள் தனக்கு அவர் கர்ப்பத்தடை மாத்திரை தந்ததாகவும் நிலாமினி விசாரணையில் தெரிவித்துள்ளார்.</p><p>விடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்திய ‘கருணா பிளவு’ சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நிகழ்வுகள் பற்றிய விடயங்களை உண்மைகள் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wuWF75v1fAc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T15:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் - குழு மோதலால் ஏற்பட்ட விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-brutally-killed-in-colombo-1786797110"></link>
            <id>https://tamilwin.com/article/man-brutally-killed-in-colombo-1786797110</id>
            <summary type="text">கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இராஜகிரிய பிரதேசத்தில் குழுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இராஜகிரிய பிரதேசத்தில் குழுக்களுக்கு இடையில் இன்று ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலில் உயிரிழந்தவர் இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த&nbsp;27 வயதான இளைஞன் என வெலிக்கடை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><h2><b> 

 நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்</b></h2><p>குறித்த நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையைத் தொடர்ந்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e423df7-4854-4bbf-853f-f800f96f5781/26-6a806810a13b8.webp' /></p><p>தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T14:34:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[25-க்கு மேல் வெற்றிடங்கள்..! பரீட்சைக்கான தீர்வை நம்பி காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374"></link>
            <id>https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374</id>
            <summary type="text">கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள்
கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதே பரீட்சைக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விண்ணப்பதாரர்களுக்கான பதில்</h2><p>மாறாக, இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் பரீட்சாதிகளுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96dfef27-c9d0-4694-8bad-546a40dc1367/26-6a80434804db6.webp' /></p><p>


இது தொடர்பில் மாகாண பொதுச் சேவை
ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக இது தொடர்பில் விளக்கம்
கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கான பதிலாக "நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட
2020.02.25 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றரிக்கை
மற்றும் 2022.04.26 ஆம் திகதிய 03/2022 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட
சுற்று நிரூபத்துக்கு அமைவாக நியமனங்கள் அனைத்தும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

25-க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்</h2><p>
கிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய
மாவட்டங்களில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதுடன்,
இதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். </p><p>

தற்போது வரை கிழக்கு மாகாணத்தில்
மொத்தமாக 25க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் கவனம்
செலுத்தி இந்த போட்டிப் பரீட்சையை விரைவில் நடத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T14:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறு அறிவிப்பு வரை தொடரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் - கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grama-sevaks-strike-1786789519"></link>
            <id>https://tamilwin.com/article/grama-sevaks-strike-1786789519</id>
            <summary type="text">பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கிராம நிலதாரிகள் தொடங்கியுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியதால், சனிக்கிழமைகளில் வேலைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கிராம நிலதாரிகள் தொடங்கியுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியதால், சனிக்கிழமைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த அறிவிப்பு இன்று(15.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.
</p><h2>


மறு அறிவிப்பு வரை..
</h2><p>
மறு அறிவிப்பு வரும் வரை சனிக்கிழமைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட கிராம உத்தியோகத்தர்கள் முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd9311cf-20c5-44ff-a455-a36b52c02a0f/26-6a8072d5567cd.webp' /></p><p>

 பயணப்படியை உயர்த்தாதது, சம்பளத்தை குறைந்தபட்ச தகுதியாக ஆக்குவது, கிராம உத்தியோகத்தர்களின் படிகளையும் உள்ளடக்கிய கம்மன்பில குழு பரிந்துரைத்த படிகளைப் பெறுவது, சனிக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஆற்றிய பணிக்கு ஒரு நாள் சம்பளம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் காரணமாக, கிராம நிலதாரிகள் கடந்த 10 மற்றும் 11 நாட்களாக உடல்நலக்குறைவு விடுப்பில் பணிக்கு வரவில்லை. </p><p>

இருப்பினும், இரண்டு நாட்கள் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியதாலும், தங்களது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வை வழங்கத் தவறியதாலும், கிராம உத்தியோகத்தர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.</p><h2>

கள பணிகள் இடைநிறுத்தம்</h2><p>

இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிராம நிலதாரிகள் சங்கத்தின் செயலாளர் நெவில் விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
ஒரு சங்கமாக நாங்கள் முடிவு செய்துள்ளோம், மேலும் பிற சங்கங்களையும் இன்று முதல் தங்களது சனிக்கிழமை அலுவலகப் பணிகளைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce18d9e-6fc9-487e-acfd-b89fc4b74e13/26-6a8072d607861.webp' /></p><p>

இதற்கமைய, எந்தவொரு கூடுதல் படியையும் பெறாமல் எங்களது விடுமுறையைத் தியாகம் செய்து அந்த அலுவலக நாளை நாங்கள் நீக்குவோம்.</p><p>

மேலும், அன்று நாங்கள் களப்பணிகளையும் செய்ய மாட்டோம். 

இதன்படி, சனிக்கிழமை அலுவலக நாளை நாங்கள் புறக்கணிப்போம். </p><p>அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை கிராம உத்தியோகத்தர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே பிரிவு அலுவலகங்களில் இருப்பார்கள் என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-15T14:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flag-hoisting-ceremony-thellippalai-durga-amman-1786802062"></link>
            <id>https://tamilwin.com/article/flag-hoisting-ceremony-thellippalai-durga-amman-1786802062</id>
            <summary type="text">&amp;nbsp;வரலாற்று சிறப்புமிக்க. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம்
இன்று (15) கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.&amp;nbsp;தெல்லிப்பழை துர்க்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வரலாற்று சிறப்புமிக்க. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம்
இன்று (15) கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.</p><p>&nbsp;தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2026 மகோற்சவ பெருவிழாவில் இன்று
காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வசந்த
மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான் ஆகியோருக்கு
விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளது.</p><p> வசந்த மண்டபத்தில் இருந்து மூர்த்திகள் கொடிக்
கம்பத்திற்கு எழுந்தருளி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று
காலை 10.00 மணிக்கு இனிதே நடைபெற்றது.</p><h2>கொடியேற்றம்</h2><p>12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோசவத்தில் பத்தாம் நாள் திருவிழாவாக எதிர்வரும்
24 ஆம் தேதி சப்பறத் திருவிழாவும் 11ஆம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 25 ஆம்
தேதி ரத உற்சவமும் 12-ஆம் நாள் திருவிழாவாக எதிர்வரும் 26ஆம் தேதி தீர்த்த
உற்சவமும் சிறப்பாக நடைபெற உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4da943a2-eabc-4e4e-a2ef-d3115ed21eee/26-6a8071f94c341.webp' /></p><p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாலய மகோற்சவ விழாவில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T14:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-explanation-cry-for-justice-protest-1786800913"></link>
            <id>https://tamilwin.com/article/police-explanation-cry-for-justice-protest-1786800913</id>
            <summary type="text">யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா
நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா
நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று&nbsp; (15) வலிகாமம் கிழக்கு
பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எவ்வகையில் போராட்டத்திற்கு
அனுமதியளிக்க முடியும் விளக்கம் கேட்டு யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்தில் அவரது
அலுவலகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் தவிசாளரிடம் கேட்டபோது, யாழ்ப்பாண தலைமைப் பிரதான பொலிஸ்
பொறுப்பதிகாரியின் கடிதத்துடன் எனது அலுவலகத்திற்கு வருகை தந்த பொலிசார் என்னை
பதிலளிக்குமாறு கோரும் கடிதத்தினை கையளித்தனர்.</p><p></p><h2>ஐக்கியநாடுகள் சபை</h2><p>
</p><p>
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது செம்மணியில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராடுவதுடன்
பேரணியாக யாழிலுள்ள ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தில் மனு
கையளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7e2d5c6-cbc3-43d8-a7cb-55ddbeecb290/26-6a806e89a062f.webp' /></p><p> அந்தப் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகிய நீங்கள்
அனுமதி வழங்கியுள்ளமை பொலிஸ் தரப்பிற்குத் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இவ்வாறான
போராட்டத் தொடர் நடத்தப்படுவதன் மூலம், இலங்கையினுடைய வெவ்வேறு
இனத்தவர்களுக்கிடையே ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும்இ பொது
அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என பொலிஸ் கருதுவதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>விளக்கம்</h2><p>
</p><p>
மேலும் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடிதத்தில், பொலிஸ் தரப்பின் அனுமதியின்றி
இவ்வாறான போராட்டத் தொடரை நடத்துவதற்கு உங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா
எனக் கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>அத்துடன் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பின் அதற்கான
சட்டபூர்வமான அடிப்படை என்ன, இவ்வாறானதொரு போராட்டத் தொடரை எம்மால்
எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d50bc3b-2a97-4925-97d5-685abd2f8ab4/26-6a806e8a5563f.webp' /></p><p>
</p><p>
இந்தநிலையில் ஜனநாயக ரீதியிலான நீதி கோரிய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
நீதி கோரிய போராட்டத்தினை எமது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நடத்துவதற்கு
கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜனநாயக ரீதியிலான மனித உரிமைகளை வலியுறுத்திய
மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளைக் கருத்தில்
கொண்டு தான் அனுமதியளித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்
தியாகராஜா நிரோஷ் பொலிஸ் தரப்பிற்கு எழுத்து மூலம் பதிலளித்தள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T13:50:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய காகித கடைக்கு சென்ற 8 இலட்சம் பெறுமதியான புத்தகங்கள் - சாரதி உட்பட ஐவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/textbooks-worth-rs-8-lakh-sold-1786800112"></link>
            <id>https://tamilwin.com/article/textbooks-worth-rs-8-lakh-sold-1786800112</id>
            <summary type="text">கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களை, அவை கொண்டு செல்லப்பட்ட வழியில் வேறு ஒருவருக்கு குறைந்த வில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களை, அவை கொண்டு செல்லப்பட்ட வழியில் வேறு ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>

கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சுமார் 19,000 பாடநூல்கள், வெறும் 47,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தலங்கம பொலிஸாரால் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h2>
பழைய காகித கடைக்கு சென்ற பாடசாலை புத்தகங்கள்</h2><p>
ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, குறித்த பாடநூல்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, புத்தகங்கள் அனைத்தையும் பழைய காகிதங்களை கொள்வனவு செய்யும் நபர் ஒருவருக்கு விற்பனை செய்து, அதற்காக 47,000 ரூபாவைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c11b50-0f6b-4942-890c-d040a29356f5/26-6a806d765c2ea.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
</p><p>
இதன்போது, அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-15T13:45:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-work-chemmani-mass-grave-1786800379"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-work-chemmani-mass-grave-1786800379</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15.8.2026) முன்னெடுப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(15.8.2026) முன்னெடுப்பட்டன.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><p>இந்தநிலையில், 53ஆவது நாளான இன்றைய தினம் 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வு
பணிகளின் போது, 562 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ac119c-6fbd-46f1-9612-30cd9ab870e7/26-6a806a44e0772.webp' /></p><p>இந்தநிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 557 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T13:31:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு 10 சதவீதமாக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-contribution-product-increase-10-percent-1786794647"></link>
            <id>https://tamilwin.com/article/northern-contribution-product-increase-10-percent-1786794647</id>
            <summary type="text">வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5
சதவீதமாக காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம்
நிர்ணயித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5
சதவீதமாக காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம்
நிர்ணயித்துள்ளோம் என
வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று(15.08.2026) வட மாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை
திறப்பு விழாவில் கலந்துகொண்டு 
உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சிறிய மற்றும் நடுத்தர தொழில்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், போரின் பின்னர் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்
முயற்சிகள் இன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.
</p><p>
ஒவ்வொரு ஆண்டும் தொழில் முயற்சியாளர்கள் புதிய
உற்பத்திப் பொருட்களை அறிமுகப்படுத்துவதும், புதுமையாகவும் புத்தாக்கமாகவும்
சிந்தித்து தமது தொழில்களை விரிவுபடுத்துவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறான புதிய முயற்சிகளே அவர்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக்
கொண்டு செல்லும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe188ca5-27bd-4849-bb94-3aabda72e9cc/26-6a8053329b02c.webp' /></p><p>
</p><p>
வட மாகாண உற்பத்திகளுக்கு உள்நாட்டு சந்தையைத் தாண்டி ஏற்றுமதி
சந்தையிலும் சிறந்த வாய்ப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகள் வடக்கில் உற்பத்தி செய்யப்படும்
பல்வேறு பொருட்களில் ஆர்வம் கொண்டிருப்பதால், அவர்களை ஒரு முக்கிய சந்தையாகக் 
கொண்டு ஏற்றுமதியை விரிவுபடுத்த முடியும்.
</p><p>
கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தித் திறன் அதிகமாக காணப்படுவதுடன், இந்தமுறை
சிறுபோகத்திலும் எதிர்பார்த்ததை விட அதிக விளைச்சல் கிடைத்துள்ளமை
வரவேற்கத்தக்கது.
</p><p>
இருப்பினும் இவ்வாறான உற்பத்திகளில்
பெரும்பகுதி பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களாக மாற்றப்படாமல்
மூலப்பொருட்களாகவே வெளிமாவட்டங்களுக்கும் வெளிப்பகுதிகளுக்கும் கொண்டு
செல்லப்படுகிறது.</p><h2>வட மாகாண தொழிற்துறை</h2><p>
</p><p>
இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க
வேண்டிய அதிகபட்ச பொருளாதாரப் பயன் கிடைப்பதில்லை.

மூலப்பொருட்களை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றுவதே வட
மாகாணத்தின் தொழில் வளர்ச்சியின் அடுத்த முக்கிய கட்டமாக இருக்க வேண்டும்.
</p><p>
உற்பத்தி, பதனிடல், பொதியிடல், சந்தைப்படுத்தல் மற்றும்
ஏற்றுமதி என முழுமையான உற்பத்திச் சங்கிலியை உருவாக்குவதன் மூலம் தொழில்
முயற்சியாளர்களின் வருமானத்தையும் போட்டித்திறனையும் உயர்த்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f39d2f0f-e00f-4627-a8a5-c43216b9a38b/26-6a80533373c35.webp' /></p><p>
</p><p>
வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தால் கடந்த காலங்களில் சிறிய அளவிலான
பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் தொழில்
முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>எதிர்காலத்தில் மிகக் குறைந்த
வட்டியுடனான கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளது. 

அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படும் இவ்வாறான வாய்ப்புகளை முழுமையாக
பயன்படுத்தி, தமது தொழில் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும்.
</p><p>
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன், வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர்
எஸ்.கிருஸ்ணேந்திரன், வட மாகாண பிரதம
செயலாளர் தனுஜா முருகேசன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சு.முரளிதரன்,
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன், தொழில் முயற்சியாளர்கள்,
உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகத் துறையினர் உள்ளிட்ட பலரும் 
பங்கேற்றுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:52:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட தமிழ் பெண்! நீதி கிடைப்பதில் பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/welikada-police-station-woman-death-1786773271"></link>
            <id>https://tamilwin.com/article/welikada-police-station-woman-death-1786773271</id>
            <summary type="text">வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு (OIC) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த சிந்தக்க அனுராத வவுனியாவுக்கு இடமாற்றப்பட்டு சாதாரண சேவையில் இணைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் புலனாய்வுச் செய்திச் சேவையொன்று ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
சலாகா (Salaka) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நெத்தி குமாரவின் மனைவி சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டில் பதுளை, தெமோதரை தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதான ஆர்.ராஜகுமாரி எனும் பெண் வேலை செய்து வந்துள்ளார்.</p><h2>பொய்க்குற்றச்சாட்டு&nbsp;</h2><p> </p><p>கொழும்பில் உள்ள வீடுகளில் பணிபுரிந்துவிட்டுச் செல்லும் ஏழைத் தொழிலாளர்கள் மீது பணம், தங்கம் அல்லது மாணிக்கக் கற்களைத் திருடிவிட்டதாகப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகக் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceae7495-a5fb-4e84-bf68-bbdbd343e716/26-6a7fff1983587.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தலையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>டிரான் அலஸுடன் நெருங்கிய தொடர்புடைய பெண் ஒருவர் சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண் மூலமாகப் பாரிய அழுத்தத்தைக் கொடுத்து, ஏழைத் தமிழ் பெண்மணி தன் வீட்டிலிருந்து சென்று இரண்டு நாட்களில் "தங்கக் கடிகாரம் மற்றும் 500 கிராம் தங்கம் திருடிவிட்டார்" எனச் சுதர்மா நெத்தி குமார பொய்க் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, அப்பெண் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அன்றைய OIC சிந்தக்க அனுராதவின் காலத்தில் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p>உயிரிழந்த பெண்ணின் உடலில் 34 பலத்த காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இரண்டு வயதில் ஒரு குழந்தை, 17 வயதில் ஒரு குழந்தை என மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.</p><p></p><h2>கடும் அழுத்தம்..&nbsp;</h2><p>
இச்சம்பவம் தொடர்பில் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை மேற்கொண்டபோது, அன்றைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏமில் ரஞ்சன் (Emil Ranjan) விசாரணைகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் டிரான் அலஸ் மற்றும் நெத்தி குமார ஆகியோரால் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c639875f-0328-4fe4-9ca1-f3fc243833b2/26-6a7fff1a386be.webp' /></p><p>

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதுடன் சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. </p><p>இருப்பினும், தற்போது இந்த OIC சிந்தக்க அனுராதவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, (RTM 14) உத்தரவின் மூலம் கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

ஏழைப் பெண்ணை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்கினை எதிர்கொண்டு வரும் நபர், V8 சொகுசு வாகனத்தில் வந்தே புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். </p><p>இவர் ஒரு பெரும் ஊழல்வாதி என்றும், ராஜகிரிய மற்றும் வெலிக்கடை பகுதி மக்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் 11 ஸ்பா (SPA) மையங்களை நடத்தி வந்ததியாகவும், அவற்றில் இருந்து லஞ்சப் பணம் வசூலித்ததாகவும், இரண்டு ஸ்பா மையங்களைக் ஒப்பந்த அடிப்படையில் (Contract) வழங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
</p><p>
இவ்விடயங்கள் வெலிக்கடை பொலிஸாருக்கும், தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தெரியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்த ஏழைப் பெண்ணிற்காகப் பேசுவதற்கு யாரும் முன்வராத நிலையில், ராஜகுமாரியின் வழக்கேட்டுக்கோப்புகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மூன்று மாடி கட்டிடம்! மனித உரிமைகள் அதிகாரி கிளப்பும் சர்ச்சை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-district-pallai-1786797573"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-district-pallai-1786797573</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளை பகுதியில் புதிதாக மூன்று மாடி கொங்கிரீட் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும் அங்கு 100 முதல் 150 பேர் வரை வேலை செய்து வருவதாகவும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளை பகுதியில் புதிதாக மூன்று மாடி கொங்கிரீட் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும் அங்கு 100 முதல் 150 பேர் வரை வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது. </p><p>இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் முகமாக மாற்றப் போகிறார்களா? அல்லது இங்கு வெடிகுண்டுகள் தயாரிக்கப் போகிறார்களா?என அங்கிருக்கும் சிங்கள அதிகாரிகள் தங்களிடம் தெரிவிப்பதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜெயசேகர, இன்று நடத்திய ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>
</h2><p></p><h2>49 ஏக்கர் அரசாங்கக் காடுகள் அழிப்பு</h2><p>பளை பகுதியில் சுமார் 49 ஏக்கர் அரசாங்கக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வன அலுவலக அதிகாரி ஏழு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.</p><p>நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதி , பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன , பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோருக்கு தனிப்பட்ட கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளோம். அதற்கான ஆதாரங்கள் புகைப்படங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>அந்தப் பகுதியில் சிங்களவர்கள் இல்லை, மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சிங்களவர்களும் அதிகாரிகளுமே நம்மிடம் இதைக் கூறுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87bddff9-6a66-4693-9aee-6ebdae90032a/26-6a805e07eabe0.webp' /></p><p>புதிதாகக் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் அல்லது மத்திய அரசின் எவ்வித அனுமதியும் இன்றி இவ்வளவு பெரிய கட்டிடங்களை எவ்வாறு கட்ட முடிந்தது? </p><p>இதன் பின்னணியில் இருப்பது யார்?
அங்குள்ளவர்கள் கூறும் தகவல்களின்படி, அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் ஒரு வெளிநாட்டுத் திட்டமாக இதற்கு உதவி செய்வதாக கூறப்படுகிறது. </p><h2>
ஏழு வழக்குகள் தாக்கல்</h2><p>தற்போது 7 வழக்குகளைத் தாக்கல் செய்த வன அலுவலக அதிகாரியை (RFO) கொலை செய்வதற்கு&nbsp; சம்பந்தப்பட்ட தமிழர்கள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் தற்போது அந்த அதிகாரி பயத்தில் வழக்கு நடைபெறும் திகதிகளில் மட்டும் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு, ஏனைய நாட்களில் விடுமுறை எடுத்து ஒளிந்து வாழ்கிறார்.
</p><p>இவ்வாறானதொரு சூழ்நிலையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடம் நாம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளோம். இந்த RFO மற்றும் அதே வன அலுவலகத்தில் பணிபுரியும் அவரது மனைவி ஆகிய இருவரையும் குருநாகலுக்கு இடமாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டோம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5269ed52-6899-45df-9e67-e73447fc8496/26-6a805e0744e99.webp' /></p><p>முதற்கட்டமாக அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். </p><p>
மேலும் பொலிஸ் நிலையததில் உள்ள எந்தவொரு அதிகாரியும் இது குறித்து கண்டுக்கொள்ளவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வனத்துறையின் ஏனைய அதிகாரிகளும் கூட இந்தப் பிரச்சினைக்குப் பயப்படுகிறார்கள். எனவே இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படவுள்ள மிக ஆபத்தான நபர்கள்.. பதற்றத்தில் பல அரசியல்வாதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/73-red-warranted-persons-to-bring-back-1786791354"></link>
            <id>https://tamilwin.com/article/73-red-warranted-persons-to-bring-back-1786791354</id>
            <summary type="text">வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். </p><p>கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.</p><h2>கலக்கத்தில் பலர்..&nbsp;</h2><p> நாட்டில் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு சர்வதேச நாடுகளிலிருந்தும் வெளிநாட்டுத் தூதரகங்களிலிருந்தும் பலத்த ஆதரவும் பாராட்டும் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7edc0da8-da5a-41fc-ac04-f4361275414f/26-6a8052d9073eb.webp' /></p><p> </p><p> இந்தச் சோதனைகளை நிறுத்துமாறு தனக்கு எந்தவித வெளிப்புற அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ வரவில்லை என்றும், மேலதிக சோதனைகளை நடத்துமாறு கோரிக்கைகளே கிடைக்கப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார். </p><p>இருப்பினும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் முதலீடு செய்து ஆதரவளித்தவர்கள் தற்போது கடும் கலக்கத்தில் இருப்பதை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்தார். </p><p> அரசியல்வாதிகள் சிலர் தனக்கு எதிராக வெளியிடும் அறிக்கைகள் குறித்துத் தனக்கு எந்தப் பயமும் இல்லை என்றும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>அரசியல்வாதிகளின் நிலை&nbsp;</h2><p> </p><p>தான் எந்தவொரு சமூக அநீதியையோ அல்லது அழிவையோ ஏற்படுத்தாததால், சிறப்புப் பாதுகாப்பு இல்லாமலும் கூட நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குத் தன்னால் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/418556f2-a4ff-4f43-a44f-75a0c207f38f/26-6a8052d9f0331.webp' /></p><p>மக்களிடையே செல்ல முடியாத நிலை தனக்கு இல்லை என்றும், பொய்களைக் கூறி சமூகத்தை அழித்த அரசியல்வாதிகளுக்கே அந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார். </p><p>மேலும் 73 பேரைச் சிவப்பு எச்சரிக்கை மூலம் நாட்டிற்கு அழைத்துவர வேண்டி உள்ளதாகவும், சர்வதேச ரீதியில் நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:23:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயலுக்கு சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dies-after-being-attacked-by-elephant-1786795681"></link>
            <id>https://tamilwin.com/article/dies-after-being-attacked-by-elephant-1786795681</id>
            <summary type="text">வவுனியா - வடக்கு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட குளவிசுட்டான் குறிசுட்ட குளம் பகுதியில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வடக்கு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட குளவிசுட்டான் குறிசுட்ட குளம் பகுதியில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>இந்த சம்பவம் இன்று(15.08.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>குறித்த நபர், குறிசுட்டகுளம் பகுதியில் உள்ள வயல் நிலத்தினை பார்வையிட சென்ற போது யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
</p><h2>

இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு</h2><p>
இவ்வாறு உயிரிழந்தவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய குளவிசுட்டான் நெடுங்கேணியினை சேர்ந்த குலராஜசிங்கம் ஸ்ரீதரன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74b27422-f58e-49e9-97e5-e56fb3977af1/26-6a80598cb9d0e.webp' /></p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உடலத்தினை நெடுங்கேணி வைத்தியசாலை கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>
அதன் பின்னர், குடும்பஸ்தரின் சடலம் மேலதிக விசாரணைக்காக வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T12:21:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிக்கபுரம் – பாரதிபுரம் வீதி புனரமைப்புப் பணி ஆரம்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/manikapuram-bharathipuram-road-work-begins-1786792739"></link>
            <id>https://tamilwin.com/article/manikapuram-bharathipuram-road-work-begins-1786792739</id>
            <summary type="text">மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, 25 மில்லியன் ரூபாய்&amp;nbsp; நிதி ஒதுக்கீட்டில் மானிக்கபுரம் – பாரதிபுரம் இணைப்பு வீதிப் பணிகளை புதுக்குடியிருப்பு பிரதேச ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, 25 மில்லியன் ரூபாய்&nbsp; நிதி ஒதுக்கீட்டில் மானிக்கபுரம் – பாரதிபுரம் இணைப்பு வீதிப் பணிகளை புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆரம்பித்து வைத்துள்ளது.</p><p>

இந்த நிகழ்வானது இன்று (15.08.2026) புது குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.</p><h2>வீதி புணரமைப்பு</h2><p>இந்த நிகழ்வு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன், பிரதேச சபை உறுப்பினர் அகிலன்,&nbsp; திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff8394e-a0e9-41c0-8779-b03a47b18047/26-6a804bc83c6d8.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:12:09+00:00</updated>
        </entry>
    </feed>
