<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-28T05:22:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார்! அதிரடி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-not-obey-the-constition-says-basl-1785215897"></link>
            <id>https://tamilwin.com/article/anura-not-obey-the-constition-says-basl-1785215897</id>
            <summary type="text">&amp;nbsp;ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறியுள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அமைப்பின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறியுள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>நீதிமன்ற அமைப்பின் திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று எந்தவொரு அறிக்கையிலோ அல்லது தரப்பிலோ முன்மொழியப்படாத நிலையிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்குத் தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
வெற்றிடங்களை நிரப்பாமல் இந்த வயதெல்லை நீடிப்பை மேற்கொள்வது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நேரடி அரசியலமைப்பு மீறல் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6dfb9af-cb1d-4cfd-8b1f-ec5053cde3ef/26-6a683b9b4b92b.webp' /></p><p>
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
</p><p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் 8 நீதிபதி வெற்றிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. வழக்கமாக ஒரு நீதிபதி ஓய்வுபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அடுத்த நியமனத்திற்கான பெயரை ஜனாதிபதி பரிந்துரைப்பதே மரபு. ஆனால், அந்த அரசியலமைப்பு கடமையை ஜனாதிபதி செய்யத் தவறியுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
நிலுவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்பாமல், வேறு வழிகளில் நீதித்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசு முயல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
ஜனாதிபதியின் இந்தச் செயல் அரசியலமைப்பை மீறும் செயல் எனவும், இது ஒரு வகையான ஊழல் எனவும் தாம் பொறுப்புடன் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நீதி அமைச்சு இணைந்து, நீதிபதிகளின் ஆலோசனையுடன் தயாரித்த விரிவான அறிக்கையில் கூட ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.</p><p> சட்டம் தொடர்பான மாற்றங்களின் போது சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனை பெறப்படும் என்ற வாக்குறுதியும் மீறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>ஊடகங்கள் மூலம் இச்செய்தியை அறிந்த பின்னர், இது குறித்து விளக்கம் கேட்டு 2026 மார்ச் 30 அன்று நீதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>
இதனைத் தொடர்ந்து, சட்டத்தரணிகள் சங்கம் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி, கடந்த மே 25 அன்று ஜனாதிபதிக்கே நேரடியாகத் தமது கடுமையான எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாகப் பதிவுசெய்துள்ளதாக ராஜிவ் அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இவ்வளவு வெற்றிடங்களை வைத்துக்கொண்டு ஒரு நீதித்துறை நிறுவனத்தை எவ்வாறு இயக்க முடியும்? இன்றளவிலும் அந்த வெற்றிடங்களை ஜனாதிபதி நிரப்பவில்லை. அதைப்பற்றிப் பேசாமல் தேவையில்லாத காரணங்களைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள என ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>
 அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பெயர்களைப் பரிந்துரைத்து அனுப்ப வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பது தெளிவான அரசியலமைப்பு மீறலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T05:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் நல்ல நடவடிக்கைகளுக்கு தடையாகச் செயற்படும் எதிரணிகள்! வாசுதேவ கடும் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-obstructs-government-s-good-initiatives-1785215106"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-obstructs-government-s-good-initiatives-1785215106</id>
            <summary type="text">அரசு நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுக்கும்போது, அதனால் பாதிப்படையக்கூடியவர்கள் வேறு விடயங்களை
முன்னிலைப்படுத்திக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுக்கும்போது, அதனால் பாதிப்படையக்கூடியவர்கள் வேறு விடயங்களை
முன்னிலைப்படுத்திக்கொண்டு அரசைச் சுற்றிவளைத்து வருகின்றனர் என்று ஜனநாயக
இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார
தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்</p><p>

"வருமான வரி செலுத்தாமல் புறக்கணிப்பவர்களை அதற்கு உட்படுத்தும் வகையில்
சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p></p><h2>மக்களை தூண்டிவிடும் எதிர்க்கட்சி</h2><p> </p><p>பழைய சட்டங்களின்படி வரி
மேன்முறையீட்டு வழக்குகள் முடிவடைய 15 ஆண்டுகளுக்கும் மேல் சென்ற நிலையில்,
குற்றவியல் வழக்குத் தொடுக்கும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. </p><p>அதேபோல்,
வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பணத்தை 30
நாள்களுக்குள் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என வெளிநாட்டுச் செலவாவணிச்
சட்டத்தின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு எதிராகக்
கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d8806ef-2229-440b-9b72-4ebf5224c1ff/26-6a683b766c0f8.webp' /></p><p>
அரசு நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளில்
இறங்கும்போது, இதனால் பாதிக்கப்படுபவர்கள் அரசுக்கு எதிரான
குற்றச்சாட்டுக்களைப் பிரசாரம் செய்து மக்களைத் தூண்டிவிடுகின்றனர்.
</p><p>
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சிக்கு எதிரான எதிர்ப்புகள், விவசாயிகளின்
பிரச்சினைகள் மற்றும் புத்தசாசனத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் தமது
சுயநலனுக்காக அரசின் மக்கள் நல நடவடிக்கைகளுக்குத் தடையாகச் செயற்பட்டு
வருகின்றன"&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/construction-work-on-the-central-expressway-1785214135"></link>
            <id>https://tamilwin.com/article/construction-work-on-the-central-expressway-1785214135</id>
            <summary type="text">மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர - கலகெதர இடையிலான நிர்மாணப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் மத்திய அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர - கலகெதர இடையிலான நிர்மாணப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்பிரகாரம் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் மிக முக்கியமான பகுதியான பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான 3 ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் தற்போதைக்கு 85% வரை நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வெற்றிகரமாக முடிவடைந்துள்ள சில பணிகள்</h2><p>
</p><p>
மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியே செல்லும் இந்த வீதிப் பகுதியில் நீண்ட பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6675519-46ca-462c-baa7-3002cd411d19/26-6a683ac8d21b5.webp' /></p><p>
</p><p>
இந்தப் பகுதி திறக்கப்படுவதன் மூலம் கொழும்பில் இருந்து கண்டிக்கு பயணிப்பதற்கான நேரம் ஒன்றரை மணி நேரமாகக் (1.5 மணி நேரம்) குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரகித ராஜபக்ச உட்பட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-four-people-rahitha-rajapaksa-1785214256"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-four-people-rahitha-rajapaksa-1785214256</id>
            <summary type="text">முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p> </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(28.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் சமகி ஜன பலவேகய (SJB) ஹொரன தேர்தல் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை வரையறுக்கப்பட்ட முன்னாள் நிறைவேற்று இயக்குனர் அருண ஸ்ரீ வருஷஹென்னடிகே ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da756029-c3c2-4a01-b3aa-e00e2a2a95f4/26-6a68358334bd0.webp' /></p><p></p><p></p><p></p><p><br></p><p><br></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T04:52:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக்கைதிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1021-prisoners-died-in-prison-last-five-years-1785211969"></link>
            <id>https://tamilwin.com/article/1021-prisoners-died-in-prison-last-five-years-1785211969</id>
            <summary type="text">சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.</p><p>

அவர்களில் 552 பேர், அதாவது ஐம்பத்து நான்கு சதவீதம் பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.</p><p>[HRWSSYY[</p><p>
</p><h2>
தண்டனை பெற்ற கைதிகள்
</h2><p>
உயிரிழந்தவர்களில் 469 பேர் தண்டனை பெற்ற கைதிகள் ஆவர்.
</p><p>
உயிரிழந்த கைதிகளில், 384 பேர் ஐஸ், ஹெரோயின் அல்லது பிற சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்த, விற்ற அல்லது வைத்திருந்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a0500a0-9d2c-483f-be44-9dc3f2359652/26-6a6833cadc421.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையே தடயவியல் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, கடந்த ஆண்டு இறுதிக்குள் 15,117 சந்தேகநபர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T04:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் முன்னாள் அமைச்சரை கதற விட்ட மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shantha-bandara-about-his-son-1785212806"></link>
            <id>https://tamilwin.com/article/shantha-bandara-about-his-son-1785212806</id>
            <summary type="text">கொழும்பில் சீன நாட்டவர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சீன நாட்டவர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

இந்நிலையில் தனது மகனான அனுத ஜனாதித் பண்டாரவிற்கு எதிராக எந்தவொரு சாட்சிகளும் இல்லை எனத் தனது சட்டத்தரணிகள் தெரிவித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நேற்று நீதிமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.</p><p> </p><h2><b> 

சட்ட நடவடிக்கை</b></h2><p>“என் மகன் மட்டுமல்ல, தவறு யார் செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a44dc7f-8d75-41f0-871b-a86d6c1b7404/26-6a68324f578ba.webp' /></p><p>ஆனால் கடந்த சில நாட்களாக பல பொய்யான செய்திகள் வெளிவருகின்றமை குறித்து மிகவும் வருத்தத்தில் உள்ளேன்.</p><p> 

எனினும் நீதிமன்றம் மீது எங்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. அதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் வந்துள்ளோம்.
</p><p>
எனது மகனுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்துவதற்கு முறையான சாட்சியங்கள் எதுவும் இருக்கவில்லை என எனது சட்டத்தரணிகள் என்னிடம் கூறினார்.
</p><p>
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இந்த வழக்கில் இருந்து நாம் விடுபடுவோம்.</p><p> பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கு எமது கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 
</p>]]></content>
            <updated>2026-07-28T04:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வகுப்பு உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/private-class-owner-arrested-with-ice-drugs-1785213386"></link>
            <id>https://tamilwin.com/article/private-class-owner-arrested-with-ice-drugs-1785213386</id>
            <summary type="text">ஹொரணை நகரப் பகுதியில் பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், 44 வயதுடைய ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை நகரப் பகுதியில் பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கைது செய்யப்பட்டவர், 44 வயதுடைய ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை நகரில் பிரபல மேலதிக வகுப்பு நிலையமொன்றை நடத்திவரும் நிலையில், ஹொரணை பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என்றும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2> 

ஐஸ் போதைப்பொருளுடன் கைது</h2><p>
சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை மற்றும் இலத்திரனியல் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a633574-bc8d-4f15-9d26-269ad87c5c2c/26-6a68320915bc2.webp' /></p><p>

நர்த்தனகல பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்குப் பொலிசார் சென்ற போது, அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், குறித்த சந்தேகநபர் மீது இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p>
சந்தேகநபரைத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T04:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vaccine-for-dengue-1785209951"></link>
            <id>https://tamilwin.com/article/vaccine-for-dengue-1785209951</id>
            <summary type="text">புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

நாட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. </p><p>

நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.</p><h2>தடுப்பூசியை பெறுவதற்கான அனுமதி</h2><p></p><p> </p><p>

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போதைக்கு குறித்த தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. நடப்பு ஜுலைமாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும். அதேநேரம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5233f2e4-cb05-4fed-955b-d33576a9d920/26-6a682960bd6a5.webp' /></p><h2>டெங்கு நோய்க்கான தடுப்பூசி</h2><p> </p><p>தற்போதைக்கு டெங்கு நோய்க்கான தடுப்பூசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நோய் ஏற்படுவதற்கு முன் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் பாதுகாப்புப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. </p><p>இதுவொரு புதிய தடுப்பூசி என்பதால், நோய் தடுப்பில் இது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்று தற்போது கூறுவது கடினம். 

இருப்பினும், பல நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. எனவே, இலங்கைக்கு இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T04:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயும் இளவயது மகளும் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-daughter-arrested-1785209639"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-daughter-arrested-1785209639</id>
            <summary type="text">அளுத்கம - தர்கா நகர பிரதேசத்தில் தாயொருவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வீடொன்றில் பதுங்கியிருந்த போதே களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அளுத்கம - தர்கா நகர பிரதேசத்தில் தாயொருவரும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

வீடொன்றில் பதுங்கியிருந்த போதே களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 நிதி மோசடிகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

மேலதிக விசாரணை</b></h2><p>மாகலந்தாவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தாயும், அவரது 15 வயதுடைய மூத்த மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/698b5aa3-fafd-44bb-8d0f-dfb0ef330a76/26-6a6824126b5a2.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3iCqdcQLNXU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-28T03:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 நாட்களுக்கு தொடர் தாக்குதல் - ட்ரம்ப் அறிவிப்பால் சரிந்த கச்சா எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-prices-fall-due-to-trump-s-announcement-1785209109"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-prices-fall-due-to-trump-s-announcement-1785209109</id>
            <summary type="text">13 நாட்கள் தொடர் தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ட்ரம்பின் அறிக்கைகளாலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>13 நாட்கள் தொடர் தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ட்ரம்பின் அறிக்கைகளாலும் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன.</p><h2>பதிவாகியுள்ள விலை&nbsp;</h2><p>
</p><p>
ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 0.8% சரிந்து, 81.95 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
</p><p>
ஒரு பரல் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 0.6% குறைந்து, 87.82 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/475c3688-f611-4598-a46e-7f780711eb5e/26-6a6821c29ddf5.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T03:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் பாதுகாப்பு சவாலா..! பாதாள உலகக் குழுக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-to-underworld-groups-1785207804"></link>
            <id>https://tamilwin.com/article/warning-to-underworld-groups-1785207804</id>
            <summary type="text">ஜனநாயகத்தையும் நாட்டின் கலாசார உரிமைகளையும் சீரழிக்கும் வகையிலேயே இந்த அரசு
செயற்பட்டு வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகத்தையும் நாட்டின் கலாசார உரிமைகளையும் சீரழிக்கும் வகையிலேயே இந்த அரசு
செயற்பட்டு வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

அத்துடன், நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலைகள்
மற்றும் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்குப் பெரும்
அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் எச்சரித்துள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

பாதாள உலகக்கும்பலின் தலையீடு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

அரசைத் தவிர நாட்டின் ஏனைய அனைத்துத் தரப்பினரும் தற்போதைய அபாயகரமான
சூழ்நிலையை உணர்ந்துள்ளனர். நாட்டில் நிலவும் பாதுகாப்பின்மை காரணமாக,
பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளைக் கூட சுதந்திரமாக நடத்த முடியாத சூழல்
உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de69657e-75bb-4fcd-80dc-b02c0340af38/26-6a681c8196ae2.webp' /></p><p> </p><p>

பாதுகாப்பை பலப்படுத்துவதற்குப் பதிலாக ஊர்வலங்களுக்குக்
கட்டுப்பாடுகளை விதிப்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகின்றது.
</p><p>பாரம்பரிய ஊர்வலங்களில் என்னென்ன கலாசார அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பதை
பாதாள உலகக் குழுக்களா தீர்மானிக்கின்றன?</p><h2>


நீதிபதிகளின் வயது எல்லை அதிகரிப்பு</h2><p>
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை உயர்த்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சி, நீதித்துறையை முழுமையாகத்
தங்களது அரசமைப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டமிட்ட
செயலாகும். </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச அமைப்புகள் மற்றும்
நீதிபதிகள் சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
வரும் நிலையில், அரசு தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப்
பயன்படுத்தி இதனை நிறைவேற்ற முயல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3393dc-4b2d-4d81-bf9e-bf4e616eb505/26-6a681c826e2bf.webp' /></p><p>
</p><p>
அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்துத் தைரியமாகச் செயற்படும் இலங்கை
சட்டத்தரணிகள் சங்கத்தின் மீது, ஆளும் தரப்பினர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப்
பயன்படுத்தி அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். </p><p>நாட்டின் ஜனநாயகத்தைப்
பாதுகாக்கவே அச்சங்கம் குரல் கொடுத்து வருகின்றது.

நாடாளுமன்றத்தைக் கூத்து மேடையாக மாற்றாமல், சீர்குலைந்து வரும் தேசிய
பாதுகாப்பையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசு உடனடியாக
முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T03:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நிறுவனத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! நான்காவது இடத்துக்கு முன்னேற்றம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-records-fourth-biggest-improvement-1785193804"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-records-fourth-biggest-improvement-1785193804</id>
            <summary type="text">சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. </p><p>
இலங்கை, முதலீட்டாளர் உறவுகள் (Investor Relations) மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) ஆகியவற்றில் விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளது.
</p><p>
சர்வதேச நிதி நிறுவனத்தால் (IIF) வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, இத்துறையில் மிக அதிக முன்னேற்றத்தை அடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>IIF இன் அறிக்கை</h2><p>IIF இன் “Investor Relations and Debt Transparency Report 2026: The Transparency Dividend” அறிக்கையின்படி, உலகின் வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகள் 57 இல் இலங்கையின் ஒட்டுமொத்த முதலீட்டாளர் உறவுகள் புள்ளி எண்ணிக்கை 2025 இல் 37.33 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2026 இல் 43.67 வரை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. </p><p>

இத்துறையில் 6.3 புள்ளிகள் என்ற பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இலங்கை, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக "வேகமாக முன்னேறும் நாடுகளின்" பட்டியலில் இணைந்துள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34d0447-a1e1-41d6-a82f-5bd73cc64657/26-6a67e54ebcafc.webp' /></p><p>கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) தரவுகள் மற்றும் கொள்கைகளை முறையாகப் பரப்புரை செய்தமையே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><h2>
கடன் வெளிப்படைத்தன்மை</h2><p>
2025 இல் 19 ஆம் இடத்தில் இருந்த இலங்கை, கடந்த ஆண்டில் பின்பற்றிய முறைசார்ந்த கடன் முகாமைத்துவ நடைமுறைகள் காரணமாக 2026 இல் 5 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.
</p><p>
இந்த முன்னேற்றத்திற்கு அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் ஏனைய அரசு நிறுவனங்கள் இணைந்து முதலீட்டாளர்களுடன் பேணிய முறைசார்ந்த உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடன் தகவல்களை வழங்கியமை பெரிதும் உதவியுள்ளது.
</p><p>
</p><p></p><p>இலங்கை அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் சர்வதேச மூலதனச் சந்தையில் நாட்டின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, முதலீட்டாளர் தளத்தை விரிவுபடுத்தவும், கடன் வாங்கும் செலவைக் குறைக்கவும் எதிர்காலத்தில் இது பெரும் பக்கபலமாக அமையும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T03:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சந்தைப் பொருட்களுக்கு அதிரடி சோதனை - அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-issued-by-the-ministry-of-science-1785205844"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-issued-by-the-ministry-of-science-1785205844</id>
            <summary type="text">தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சந்தையில் விற்பனை செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் தரநிலைகளைச் சரிபார்க்கும் ஒரு சிறப்புத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சந்தையில் விற்பனை செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் தரநிலைகளைச் சரிபார்க்கும் ஒரு சிறப்புத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது</p><p>இது தொடர்பான அறிவிப்பு இன்று(28.07.2026) வெளியிடப்பட்டுள்ள நிலையில், பெட்டா பொதுச் சந்தை வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>


உணவுப் பொருட்கள் உட்பட சோதனை</h2><p>


இதன்போது, சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் பொம்மைகள் போன்ற நுகர்வோர் பொருட்கள், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குகின்றனவா என்பதைச் சரிபார்க்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0376d6bc-f1c1-4242-9521-4fead4ce1b65/26-6a68151cdd4e6.webp' /></p><p> 

நுகரப்படும் உணவுப் பொருட்களில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் உள்ளனவா என்பதை ஆராய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றது. 


அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள இலங்கைத் தர நிர்ணய நிறுவனம் (SLS) மற்றும் தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ITI) ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களும் இந்தத் தரச் சோதனைத் திட்டத்தில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
பொருட்களின் நிலை குறித்து நுகர்வோருக்கு நேரடியாகத் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குத் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><h2>


பெட்டாவில் ஆரம்பமாகும் சோதனை நடவடிக்கை</h2><p>
இது தொடர்பான நிகழ்வில் கலந்துக் கொண்ட பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

"உணவுப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆகியவை ஒரே தரத்தில் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது நாங்கள் செய்யும் பணிகளில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea2a87b-bd33-4147-af51-4293f52c7b35/26-6a68151db2fba.webp' /></p><p> </p><p>

எங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள எஸ்.எல்.எஸ் நிறுவனம் மற்றும் ஐ.டி.ஐ நிறுவனம் ஆகியவை, தொடர்புடைய பிற நிறுவனங்களுடன் இணைந்து கோட்டைக்குச் சென்று, உணவில் ஏதேனும் கலக்கப்பட்டுள்ளதாக என்பதையும், மற்ற பொருட்களின் தரநிலைகள் அதற்கேற்ப உள்ளதா என்பதையும் சரிபார்க்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.</p><p>

 நாங்கள் பெட்டாவுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலை குறித்த தகவல்களை வழங்குவோம். மேலும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அதில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்கும் போதுமான விளக்கங்களையும் கொடுக்கவுள்ளோம் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-recognition-for-sri-lanka-1785204542"></link>
            <id>https://tamilwin.com/article/international-recognition-for-sri-lanka-1785204542</id>
            <summary type="text">இலங்கை பொருளாதார அளவில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நாணய நிதியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதலீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொருளாதார அளவில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நாணய நிதியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

2026 ஆம் ஆண்டின் முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p></p><p> </p><p>

தொடர்புடைய அறிக்கையின்படி, மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.</p><h2>

இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்</h2><p>

இதன்படி, வியட்நாம் முதலிடத்திலும், பெலிஸ் இரண்டாம் இடத்திலும், மொசாம்பிக் மூன்றாம் இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a005680-c372-4e55-971b-56d6afb37152/26-6a680f7eac8d9.webp' /></p><p>
</p><p>
கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டு உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை இதுவரை விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.</p><p>

கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசைகளிலும் இலங்கை 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய மோசடியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் - முக்கிய அரசியல்வாதி மீது வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/500-luxary-vehicles-illegally-imported-1785200922"></link>
            <id>https://tamilwin.com/article/500-luxary-vehicles-illegally-imported-1785200922</id>
            <summary type="text">பல கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 சொகுசு வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சுங்க வரியை ஏய்த்து,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 சொகுசு வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>சுங்க வரியை ஏய்த்து, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 500 வாகனங்கள் வீதிகளில் செலுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p></p><h2>சட்டவிரோதமாக வாகன இறக்குமதி</h2><p>நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அதிநவீன சொகுசு வாகனங்கள் எனவும் இவை பாகங்களாகப் பிரிக்கப்பட்டு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>இந்த சட்டவிரோத நடவடிக்கைக்குச் சில ஊழல் நிறைந்த சுங்க அதிகாரிகளும், வாகனங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1adc73a6-fd85-4d93-8cb8-05460c3bf22c/26-6a68011bc9b23.webp' /></p><p>
சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது வீதிகளில் செலுத்தப்பட்டு வரும் பெரும்பாலான வாகனங்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.</p><p>அடையாளம் காணப்பட்டுள்ள சொகுசு வாகனங்களை விரைவில் பொலிஸ் பொறுப்பில் எடுப்பதற்குப் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்த சட்டவிரோதப் பதிவுகள் அனைத்தும் கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியின் போதே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சுங்க அதிகாரிகள் மீது பாயும் சட்டம்</h2><p>

போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர்கள் இருவர் உட்படப் பல அதிகாரிகள் அண்மையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77dce21f-ced4-4cda-8d71-fe408272e62a/26-6a680cd3d8a47.webp' /></p><p>
</p><p>கடந்த 2023 ஆம் ஆண்டு பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனைகளில், இரகசியமாக கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 100 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. </p><p>
அவற்றில் பெரும்பாலான வாகனங்களை அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய நபர்களே பயன்படுத்தி வந்துள்ளனர்.</p><p>
அப்போதைய சோதனைகளின் போது மேலும் 400 போலி வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்ட நிலையில், அன்றைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அந்த விரிவான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T01:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு: NPPயின் தலைமைத்துவ குழுவிலிருந்து வந்த எதிர்ப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-npp-lawyer-judges-retirement-age-extension-1785200192"></link>
            <id>https://tamilwin.com/article/senior-npp-lawyer-judges-retirement-age-extension-1785200192</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்திகுள்ளேயே எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விடயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்திகுள்ளேயே எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>இவ்விடயம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றி NPPயின் தலைமைத்துவ குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
</p><p>இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர் 
இந்தப் போராட்டம் கட்சிகளுக்கு இடையிலான போராட்டமோ அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமோ அல்ல. இந்தப் போராட்டத்தின் அர்த்தம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</p><h2>

</h2><p></p><h2>கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>கட்சியினால் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. யாரோ தனிநபர்கள் அல்லது ஏதேனும் தரப்பினர் மத்தியில் அப்படி ஒரு யோசனை இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.
</p><p>இவ்விடயம் தொடர்பில் என்னை அமைதியாக இருக்குமாறு கூறியபோது, நான் எனது நிலைப்பாட்டைத் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் தலைமைக் குழு கூட்டத்திலும் நான் கூற வேண்டியதைக் கூறிவிட்டேன்.</p><p>நான் இதற்கு எதிராக செயற்படுவேன் என்று தெளிவுபடுத்தினேன்.
நான் 45 ஆண்டுகளாக சட்டத்தரணியாகப் பணியாற்றியுள்ளேன். அதற்கு மேலாக சுமார் 50 ஆண்டுகள் இடதுசாரி இயக்கத்தில் செயற்பட்டுள்ளேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f86e71b-32d8-4187-b86f-86011b391848/26-6a68000800eab.webp' /></p><p>நாகரிகமான சமூகத்தில் நாகரிகமான மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே எமது அரசியலின் நோக்கமாகும். எனது அரசியலிலும் நான் அதையே பின்பற்றி வந்துள்ளேன்.
</p><p>எனது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதிக்கும் வழங்கியுள்ளேன். 1970களில் பண்டாரநாயக்க அதன் பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் நிஹால் ஜயவிக்ரம போன்றவர்களுக்கு எதிராக நாம் போராடியது நினைவிருக்கிறது. </p><p>நாகரிகமான சமூகத்தில் நாகரிகமான மனிதர்களாக வாழ்வதற்கு நீதிமன்ற சுதந்திரம் அவசியம் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாம் போராடினோம்.
</p><p>நீதிமன்ற சுதந்திரம் இல்லாவிட்டால் நாம் அடிமைத்தனத்திற்கு தள்ளப்படுவோம். நிறைவேற்று அதிகாரம் தனக்கு வேண்டியதைச் செய்ய முடியும். </p><p>அத்தகைய சூழ்நிலை நாட்டில் அராஜகத்தையே ஏற்படுத்தும்.
எனவே, நாட்டில் மிகவும் முக்கியமான விடயம் நீதிமன்ற சுதந்திரமாகும். அது வீழ்ச்சியடைந்தால், நீதிமன்ற சுதந்திரம் என்ற ஒட்டுமொத்தக் கோட்பாடும் முற்றாகச் சரிந்துவிடும். </p><p>அதன் பின்னர் நாம் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு சர்வாதிகார சமூகம் உருவாவதற்கான சூழலையே விட்டுச் செல்வோம் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T01:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjuna-ramanathan-granted-bail-appearing-court-1785195727"></link>
            <id>https://tamilwin.com/article/arjuna-ramanathan-granted-bail-appearing-court-1785195727</id>
            <summary type="text">கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>

கோட்டை நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, கடந்த 24ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிடியாணை பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4347b215-5c0b-45c2-92ad-9e1d998f67c8/26-6a67f7f2f3bf5.webp' /></p><p>

இவ்வழக்கில் அர்ச்சுனா இராமநாதன் மட்டுமல்லாமல், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>
அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பிடியாணை பிறப்பித்திருந்தது.
</p><p>
இந்நிலையில், நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நாடாளுமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை வழங்கப்பட்டது.

அத்துடன் இவ்வழக்கு ஒக்டோபர் 09 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T00:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி ரூபாவில் சிக்கிய மகிந்த! சாட்சியாக மாறிய முக்கிய பிரமுகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajin-vaas-give-statement-against-mahinda-1785198091"></link>
            <id>https://tamilwin.com/article/sajin-vaas-give-statement-against-mahinda-1785198091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சாட்சியமளித்துள்ளார்.
</p><p>இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் அவர் மூன்று மணித்தியாலங்கள் சாட்சியமளித்துள்ளார்.</p><p>
இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையின் போது, சுமார் 100 கோடி ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நேற்றைய தினம்(27) லஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0b1143c-9846-4636-a8e5-c671b163f834/26-6a682443ee9c6.webp' />&nbsp;&nbsp;</p><p>
ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அங்கு சென்ற அவர், சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p>
குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவே ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>“இலஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி“ அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.</p><h2>வெளிநாட்டில் உள்ள தொடர்புகள்</h2><p>
சிங்கப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியின் படி, TPL Itma நிறுவனம் மற்றும் Heliat எனும் ஆலோசனை நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7a8c2ff-670c-495c-aa96-dfacc0c0e563/26-6a6824449d8a4.webp' /></p><p>
</p><p>சஜின் வாஸ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>
மேலும், அந்த பணம் தங்கல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் சீ.எஸ்.என். ஊடக வலைப்பின்னலுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை அழைத்திருந்தது.</p><p>
வாக்கு மூலத்தில் எவ்வாறான விடயங்களை சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T00:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நான் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறேன் - இம்ரான் மகரூப் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-maghroob-committed-to-people-s-needs-1785195174"></link>
            <id>https://tamilwin.com/article/imran-maghroob-committed-to-people-s-needs-1785195174</id>
            <summary type="text">கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் தொடர்ச்சியாக 
முயற்சி செய்து வருகிறேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் தொடர்ச்சியாக 
முயற்சி செய்து வருகிறேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(27.07.2026) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கிண்ணியா தள வைத்தியசாலை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

திருகோணமலையில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேசம்
மட்டுமன்றி, அதனைச் சூழவுள்ள பல கிராமங்களின் மக்களும் தங்களது அத்தியாவசிய
சுகாதார சேவைகளுக்காக கிண்ணியா தள வைத்தியசாலையையே நம்பியுள்ளனர்.</p><p>

எனவே, இந்த
வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதன் தரத்தையும்
சேவைகளையும் மேம்படுத்த வேண்டும் என்பது நீண்டகாலமாக மக்களால்
முன்வைக்கப்பட்டு வரும் நியாயமான கோரிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84295278-69b3-4006-bd30-0084e79ab9a1/26-6a67eae08bf7e.webp' /></p><p>
</p><p>
இந்த மக்களின் கோரிக்கையை நான் ஒரு அரசியல் கோஷமாக அல்லாது, மக்களின் அடிப்படை
உரிமையாகக் கருதி பல வருடங்களாக தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றேன்.
</p><p>
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உரைகளிலும், நாடாளுமன்ற ஒத்திவைப்பு
பிரேரணைகளின் போதும், திருகோணமலை மாவட்ட மக்களின் சார்பில் பலமுறை இந்தக்
கோரிக்கையை முன்வைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.</p><h2>தொடர் முயற்சி</h2><p>

அதேபோன்று, ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும்
கிழக்கு மாகாண ஆளுநர்களை பலமுறை நேரில் சந்தித்து இந்த விடயத்தின் அவசியத்தை
வலியுறுத்தியுள்ளேன்.
</p><p>
இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி
மற்றும் நிர்வாகச் சவால்கள் காரணமாக இந்த முயற்சி எதிர்பார்த்த வேகத்தில்
முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce30087-00ad-4d93-9ff1-d0237abc78ca/26-6a67ebd9695f7.webp' /></p><p>

இருந்தபோதிலும், மக்களின் நலனுக்கான இந்தக் கோரிக்கை கைவிடப்படாமல்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நான் செயல்பட்டு
வந்துள்ளேன்.
</p><p>
அதன் ஒரு முக்கிய அங்கமாக, 2025 டிசம்பர் 15 ஆம் திகதி கிழக்கு மாகாண 
ஆளுநருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, கிண்ணியா தள வைத்தியசாலையை
மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை
விடுத்தேன் என குறிபப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-28T00:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடிக்கடி பழுதடையும் அரச பேருந்து.. கடும் சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/students-delayed-getting-school-due-broken-bus-1785194363"></link>
            <id>https://tamilwin.com/article/students-delayed-getting-school-due-broken-bus-1785194363</id>
            <summary type="text">பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>குறித்த பேருந்து, பருத்திதுறையில் இருந்து மாலை 6 மணிக்கு சேவையை ஆரம்பித்து கட்டை காட்டில்
தரித்து காலையில் பருத்தித்துறையை நோக்கி சேவையில் ஈடுபடும்.
</p><p>
இந்த பேருந்தில் பாடசாலை மாணவர்கள், அரச
உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் என பலர் பயணம் செய்து
வருகின்றனர்.</p><p>இந்நிலையில், நேற்று (27.07.2026) காலை முதலாவது சேவையாக கட்டைக்காட்டிலிருந்து ஆரம்பித்து
பருத்தித்துறை நோக்கி செல்லும் வழியில் நாகர்கோயில் குடியிருப்பு பகுதியில்
பழுதடைந்ததால், அதில் பயணத்தினை மேற்கொண்ட மாணவர்கள் உட்பட பலரும் 45
நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதிக்கப்படும் பயணிகள்&nbsp;</h2><p> இதனால் பருத்தித்துறையில்
உள்ள பல உயர்தர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் வழமையாக கிளினிக்
சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் உட்பட அரச
உத்தியோகத்தர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dedb48c-7aa9-4a87-902d-3ef19adcaa4d/26-6a67eae52baa4.webp' /></p><p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 762 வழி சேவை மக்களின் நலன் கருதி
குடியிருப்புகள் ஊடாக தங்களுடைய சேவைகளை செய்து வருகின்ற போதும் இரவு தங்கல்
சேவைக்காக ஈடுபடும் குறித்த பேருந்து பழைய பேருந்தாக இருப்பதினால் அடிக்கடி காலை
நேரங்களில் பழுதடைந்து வருகின்றது.</p><p>

இதேவேளை பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்ற மாணவர்கள் கேவிலிலிருந்து
பருத்தித்துறை நோக்கி செல்கின்ற பேருந்து தாமதமாக செல்வதனால் பெரிதும்
பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
நேற்றைய தினம் நாகர்கோவில் பகுதியில் பேருந்து பழுதான நிலையில் பிறிதொரு
பேருந்து ஒரு மணித்தியாலம் தாமதித்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T23:34:39+00:00</updated>
        </entry>
    </feed>
