<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-17T14:43:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் உல்லாசம் - ஒரே நாளில் குணமடைந்த ஷிரந்தி! அம்பலமான ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-enjoying-in-singapore-1789650949"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-enjoying-in-singapore-1789650949</id>
            <summary type="text">சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. </p><p>

கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றையதினம் நாட்டில் இருந்து சிங்கபூருக்கு சென்றிருந்தார். </p><p>

இந்நிலையில் இதயம் தொடர்பான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சிங்கபூரில் மிகவும் பிரபல்யம் பெற்ற மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி</b></h2><p>ஆனால் மிகவும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3087eea-7ff8-431e-9cdc-de9a87d5a283/26-6aabf2d99a43e.webp' /></p><p>அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

நோயாளியாக சென்ற ஒரே நாளில் குணமடைந்து பொருட்களை கொள்வனவு செய்யும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.</p><p> </p><h3><b>

புதிய புகைப்படங்கள்</b></h3><p>ஏற்கனவே நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே ஷிரந்தி சிங்கப்பூர் சென்றுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f8ef4d-5d63-49fd-889d-69f3cde1e3e7/26-6aabf2da4ea2e.webp' /></p><p>இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஷிரந்தியின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. </p><p>

நிதி மோசடி குற்றச்சாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-17T14:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் துறைமுகத்தால் வீழ்ந்த இலங்கை - சிக்கலில் அநுர..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற ஏற்கனவே இருந்த முக்கிய உட்கட்டமைப்புகள் முழுமையான திறனை எட்டுவதற்கு முன்னதாகவே அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்ற பாரிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>

அத்தகைய திட்டங்களுக்காக வர்த்தகக் கடன்களைப் பெற்றுக்கொண்டு முதலீடு செய்தமை நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்பார்த்த அளவில் வருமானத்தை ஈட்டாத நிலையில், அதனை 99 வருட குத்தகைக்கு வழங்கியமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

ஒரு திட்டத்தை அமைப்பதற்காக கடன் பெற்று, பின்னர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்தச் சொத்தையே குத்தகைக்கு வழங்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
குறிப்பாக, ஊழலை கட்டுப்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vV22r-uibKE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T14:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார அமைச்சரால் வவுனியாவில் தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foundation-stone-nurses-hostel-vavuniya-1789650321"></link>
            <id>https://tamilwin.com/article/foundation-stone-nurses-hostel-vavuniya-1789650321</id>
            <summary type="text">வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இன்று (17.09)
இடம்பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இன்று (17.09)
இடம்பெற்றது.
</p><p>
வவுனியா வைத்தியசாலையின் நான்கு மாடிகளை கொண்ட குறித்த விடுதிக்காக மாகாண
குறித்து ஒதுக்கப்பட்ட நிதியாக 114.9 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி நிகழ்வை
ஆரம்பித்து வைத்தார்.
</p><p>
அதனைத்தொடர்ந்து சிறுவர் மருத்துவ விடுதிக்கான பூங்கா ஒன்றையும் அவர் திறந்து
வைத்திருந்தார்.
</p><p>
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான்,
மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, பல்கலைக் கழக துணைவேந்தர் அற்புதராஜா,
வைத்தியசாலை பணிப்பாளர் நிலக்சன், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை
சமூகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T13:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காட்டிக்கொடுத்த கோடீஸ்வர வர்த்தகரை பழிவாங்க ராஜபக்சர்கள் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawsuit-in-australia-against-nimal-pererah-1789648782"></link>
            <id>https://tamilwin.com/article/lawsuit-in-australia-against-nimal-pererah-1789648782</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற லஞ்ச விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற லஞ்ச விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வழக்குத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவினர் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2><b>நிதி மோசடி</b></h2><p> 

மேலும், நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படும் விசாரணையில் அவர் நான்காவது சந்தேக நபராகவும் பெயரிடப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d685ff8-dfca-4b49-b13c-755dac402ce9/26-6aabe1c21fd02.webp' /></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனாவின் மனைவிக்கு எயார்பஸ் நிறுவனம் வழங்கிய இலஞ்ச&nbsp; பணத்தில் ஒரு பகுதியான 800,000 அமெரிக்க டொலர்கள், தனது நிறுவனத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதை நிமல் பெரேரா தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார்.</p><p>

அத்துடன், அதற்கு இணையான தொகையான 100 மில்லியன் ரூபாயை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார். </p><p>

சர்வதேச இலஞ்ச பரிவர்த்தனை மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை தனது சொந்தக் கணக்கில் வைப்பிலிட்டதன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டதை நிமல் பெரேரா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
இதற்கு பழிவாங்கும் நோக்கில் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-17T12:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா இராமநாதன் எம்.பிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-mp-archuna-1789647952"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-mp-archuna-1789647952</id>
            <summary type="text">பேஸ்லைன் வீதியில் கார் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி, ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்லைன் வீதியில் கார் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி, ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வழக்கின் பிரதிவாதித் தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கார் விபத்து</h2><p>

2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி லசந்த அபேவர்தன என்பவர் பேஸ்லைன் வீதியில் காரை செலுத்திச் சென்றபோது, அவரது காரை விபத்துக்குள்ளாக்கி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602c5feb-8cd1-4399-a362-d3a134edc242/26-6aabe0fb7d40e.webp' /></p><p>
</p><p>
கிராண்ட்பாஸ் பொலிஸார் இந்த வழக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று (17) முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவடைந்தது.</p><p>

இதனையடுத்து, பிரதிவாதித் தரப்பு சாட்சிய விசாரணைக்காக வழக்கு நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:45:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர் - இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-chinese-ambassador-meets-prime-minister-harini-1789647512"></link>
            <id>https://tamilwin.com/article/new-chinese-ambassador-meets-prime-minister-harini-1789647512</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16.09.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16.09.2026) அலரி மாளிகையில் நடைபெற்றது.
</p><p>
2027ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள இலங்கை - சீன இருதரப்பு இராஜதந்திர
உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்வி, டிஜிட்டல்மயமாக்கல்
மற்றும் அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து
இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.</p><h2>உதவியை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p>
</p><p>
பாடசாலை மாணவர்களுக்காகச் சீன அரசு வழங்கும் சீருடை உதவி தொடர்பில் விசேடமாகக்
கலந்துரையாடப்பட்டது. வருடாந்த தற்காலிக ஏற்பாட்டுக்குப் பதிலாக, கல்வி
ஆண்டின் ஆரம்பத்தில் உரிய நேரத்தில் சீருடைகளை வழங்கும் வகையில், 3 முதல் 5
வருடங்கள் வரையான நீண்டகாலக் கட்டமைப்பின் ஊடாக இந்த உதவியை
நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e1205af-d0c4-448e-8eb8-e2cd22503d68/26-6aabdced4bd6c.webp' /></p><p>
</p><p>
கல்வித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கையாக, சீனாவின் உதவியுடன்
நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் முன்னேற்றம் மீளாய்வு
செய்யப்பட்டது.</p><p> இதன் கீழ், நாடளாவிய ரீதியிலுள்ள 500 டிஜிட்டல்
வகுப்பறைகளுக்காக 900 ஸ்மார்ட் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. </p><p>அத்துடன், கல்வி
டிஜிட்டல்மயமாக்கல் கொள்கைகளைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல்
செயலணிக்குழு குறித்துப் பிரதமர் தூதுவருக்கு விளக்கமளித்ததுடன், சீன அரசின்
முழுமையான ஆதரவையும் தூதுவர் உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d86cc73-b1e1-4c24-ab4d-b2ae13ec7d41/26-6aabdcee61f10.webp' /></p><h2>இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு</h2><p>
</p><p>
சீன அரசின் புலமைப்பரிசில் திட்டம் மற்றும் சீனத் தூதுவர் புலமைப்பரிசில்
திட்டம் மூலம் இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்
குறித்தும், பிள்ளைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பிராந்திய மற்றும்
சர்வதேச மட்டங்களில் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும்
பேசப்பட்டது.
</p><p>
'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது சீனா வழங்கிய ஒத்துழைப்பைப்
பிரதமர் பாராட்டியதுடன், திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள்
மற்றும் வெள்ள நிலைமையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச்
சேதங்களுக்குத் தனது கவலையையும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் திறனை மேம்படுத்த இரு
நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3be3413-70c2-4028-9acd-e02aca0a01ff/26-6aabdcef369da.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95940024-be8b-457f-b3ac-03b6b2661c07/26-6aabdcf00abc0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடும் மகிந்தவின் சாம்ராஜ்ஜியம்.. பரிதாப நிலையில் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-family-podujana-peramuna-politics-1789643633"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-family-podujana-peramuna-politics-1789643633</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய பொதுக்கூட்டம் இறுதியில் அக்கட்சிக்கு குழப்பம், முரண்பாடுகள் மற்றும் ஒழுக்கமின்மை நிறைந்த ஒரு அரசியல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய பொதுக்கூட்டம் இறுதியில் அக்கட்சிக்கு குழப்பம், முரண்பாடுகள் மற்றும் ஒழுக்கமின்மை நிறைந்த ஒரு அரசியல் பேரழிவாக மாறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த கட்டுரையில், கூட்டத்தை தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், மதுபோதையில் இருந்த கட்சி ஆதரவாளர்கள் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதும், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை வெளிப்படையாக 'திருடன்' என்று முழக்கமிட்டதும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p> </p><p>மேலும், பலர் வரவிருக்கும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்றும் வெளிப்படையாகக் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>நாமலின் கைது..&nbsp;</h2><p>எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பாக செப்டெம்பர் 4ஆம் திகதியன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது; எனவே, இந்தக் கைது நடவடிக்கையை மக்கள் அனுதாபத்தைப் பெறுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த SLPP முயன்றதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a97d11-e786-409d-99b3-1daba4793b64/26-6aabd67403c22.webp' /></p><p>அவர் இல்லாத நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை கட்சி மேடைக்குக் கொண்டு வந்தமை பரவலான பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.&nbsp;</p><p>அரசியல் பிழைப்புக்காக உடல்நலம் குன்றிய ஒரு தலைவரைப் பயன்படுத்திக் கொண்டதாக இது விமர்சிக்கப்படுவதாக குறித்த கட்டுரை தெரிவிக்கின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b3513a-e265-464e-9bbb-e8e57fadef05/26-6aabd671c0098.webp' /></p><p>மேலும், இக்கூட்டம் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிக்குள் நிலவும் ஆழமான கொள்கை ரீதியான குறைபாடுகள், இரட்டை வேடம் மற்றும் பிளவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.</p><p>



இக்கூட்டம் எதிர்க்கட்சிப் பிரிவுகளுக்கு இடையிலான கடுமையான உட்கட்சி மோதல்களையும் முரண்பாடான கூட்டணிகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p></p><h2>தள்ளாடிய நிலையில் மகிந்த..&nbsp;</h2><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் மாறிய முன்னாள் கூட்டாளிகளைப் பேச்சாளர்கள் கடுமையாகச் சாடினர்; அதே நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், இயற்கை உரம் தொடர்பான நெருக்கடி போன்ற கடந்தகால நிர்வாகத் தோல்விகளுக்கு அவர்கள் மீது குற்றம் சாட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3b86bc8-f6c3-4cb9-887b-a5d7e3a87fe3/26-6aabd67343461.webp' /></p><p> குறிப்பாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மேடையில் தன்னை பற்றி வெளிப்படையாக கருத்து ஒன்றை முன்வைத்த போது, ​​விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற முக்கிய தேசியவாதத் தலைவர்கள் கூட்டத்தினருடன் இணைந்து ஆரவாரம் செய்தனர்; </p><p>இது அவர்களின் தீவிர தேசபக்தி ஒரு அரசியல் நாடகம் என்பதையும், கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் அவர்களுக்கு இருந்த பற்றாக்குறையையும் வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87f762ed-3180-4439-b594-0a3f05fd552b/26-6aabd67286cd9.webp' /></p><p>இந்தக் குழப்பநிலை முக்கிய எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் காணப்படும் ஒரு பரந்த போக்கை பிரதிபலிக்கிறது; நீண்ட காலத் திட்டம் ஏதுமின்றி, உடனடி எதிர்வினைகளைச் சார்ந்த குறுகிய கால உத்திகளிலேயே அவர்கள் சிக்கியுள்ளதாக அந்த கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது.&nbsp;</p><p>இதன் காரணமாக, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் அரசியல் வியூகங்களுக்கு தானே வழிவகுத்து கொடுத்தது போல் ஒருநிலையில் மொட்டுக் கட்சி தற்போது இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qq-62n-HLu8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-17T12:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை தாக்கிப் பெண் ஒருவர் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-in-elephant-attack-1789643602"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-in-elephant-attack-1789643602</id>
            <summary type="text">பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரலகங்வில, ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><h2>காட்டு யானை தாக்குதல்</h2><p>
</p><p>
மேற்படி பெண் இன்று அதிகாலை தனது வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த
வேளையிலேயே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்று பொலிஸாரின்
முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a81482-c4af-4f3d-a55b-b87b4f0fade2/26-6aabd8ff62b94.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:12:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது! என்பிபி அமைச்சர் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-will-not-be-intimidated-by-anything-1789646655"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-will-not-be-intimidated-by-anything-1789646655</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை
அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல்
நகர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை
அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல்
நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள் எனவும்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
தெரிவித்தார்.</p><p>

பதுளை - ஹெலிஎல பிரதேசத்தில் இன்று(17)&nbsp; ஊடகங்களுக்குக் கருத்து
வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>அரசு கிராமம் கிராமமாக மக்கள் சந்திப்புகளை நடத்துவது எதிர்க்கட்சியினரின்
நடவடிக்கைகளுக்குப் பயந்து அல்ல. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்தக்
கூட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்
சூழ்நிலைகள் காரணமாகவே அவை தாமதமாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09bc28dd-d18e-43ef-a055-76250b8404ed/26-6aabd91598d0e.webp' /></p><p> </p><p>மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு
அமைய, அபிவிருத்திப் பணிகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளும்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.</p><h2>மோசடிகள் அம்பலம்</h2><p>
</p><p>
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் அம்பலமாகி வரும் நிலையில்,
முந்தைய ஆட்சியாளர்களே மக்களிடம் பழிவாங்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
</p><p>நீதித்துறையின் செயற்பாடுகளில் அரசு எந்தவித தலையீடும் செய்யவில்லை.
விசாரணைகளை முறையான மற்றும் விரைவான வழியில் நடத்துவதற்குத் தேவையான வசதிகளை
மட்டுமே செய்து கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d72cac-77d1-4368-a5a7-4c0f39a295af/26-6aabd9164c691.webp' /></p><p>

குற்றப் புலனாய்வு விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்படும்போது,
சிதைந்துபோன எதிர்க்கட்சிக் குழுக்கள் அச்சம் காரணமாக ஒன்றிணைய முற்படுவது
இயல்பான ஒரு விடயமே தவிர, அதில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை.</p><p>

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களோ அல்லது
எதிர்க்கட்சியினரோ என்ற பாகுபாடின்றி சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே
கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெமட்டகொடவில் பரபரப்பு! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shot-at-dematagoda-black-bridge-1789644659"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shot-at-dematagoda-black-bridge-1789644659</id>
            <summary type="text">தெமட்டகொட களுபாலம் பகுதியில் இன்று(17) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெமட்டகொட களுபாலம் பகுதியில் இன்று(17) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.</p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;ஒருவர் பலி</h2><p>

குறித்த நபர் தனது முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LkJmXvR9a1Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் அல்லது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.</p><p>

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கு செல்லும் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்.. நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renuka-perera-arrested-bribery-inquiry-comission-1789626591"></link>
            <id>https://tamilwin.com/article/renuka-perera-arrested-bribery-inquiry-comission-1789626591</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரே...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>56 அனுமதிப்பத்திரங்கள்&nbsp;&nbsp;</h2><p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/667a4d71-873e-443e-bc09-642c31994fdd/26-6aab8b48b898a.webp' /></p><p>

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட நடைமுறை தொடர்பானவையே இக்குற்றச்சாட்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>

விசாரணை மற்றும் அதனைத் தொடரும் சட்ட நடவடிக்கைகள் குறித்த மேலதிக விவரங்கள் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாகவும் பெரேரா மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6n0dAt4jQ1s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:31:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் விமானக் கொள்முதல் சர்ச்சை! நாமல் தொடர்பில் நீதிமன்றில் அம்பலமான உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-emails-reveal-communications-with-namal-1789627963"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-emails-reveal-communications-with-namal-1789627963</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணையின்போது மீட்கப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணையின்போது மீட்கப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கும் ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளன என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று(16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச நேற்றையதினம்(16) நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.</p><h2>ஏர்பஸ் பரிவர்த்தனை&nbsp;</h2><p>
</p><p>
 ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக ராஜபக்சவிற்கும் ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களை தடயவியல் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக அரசுத் தரப்புக்காக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்தார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a96db4-0f75-46f8-810d-70fcf20de11f/26-6aab968274fe9.webp' /></p><p> </p><p> தடயவியல் விசாரணையின் போது, ​​ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல் தகவல்களை எங்களால் மீட்க முடிந்தது.</p><p> 

அந்த மின்னஞ்சல்கள், இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக சந்தேக நபர் செயல்பட்ட விதத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் குறிப்பிட்டார்.</p><p>

ஏர்பஸ் அதிகாரிகள் இலங்கைக்குப் பயணம் செய்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடமும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மேலும் தெரிவித்தனர்.</p><h2>ஜனாதிபதியின் மகன்</h2><p>
</p><p>
அந்தப் பரிவர்த்தனை தொடர்பான வெளிநாட்டு தடயவியல் தணிக்கை ஆவணங்களையும் புலனாய்வாளர்கள் பெற்றிருந்தனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

புலனாய்வாளர்களால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், மார்ச் 23, 2013 திகதியிட்ட ஏர்பஸ் மின்னஞ்சல் ஒன்றும் அடங்கும்.</p><p> 

அதில், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான நிறுவனத்தின் தரப்பை "ஜனாதிபதியின் மூலமாக" அமைச்சரவையிடம் முன்வைப்பதாக "ஜனாதிபதியின் மகன்" உறுதியளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db0c5a1b-3221-47d6-a552-2797f3be6457/26-6aab96832c40c.webp' /></p><p>
</p><p>
ஏர்பஸ் விமானக் கொள்முதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிகள் தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான விசாரணை நடவடிக்கைகளின் போது இந்த சமர்ப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

இந்த வழக்கில் மற்றொரு சந்தேக நபராக உள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான பிஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;23ஆம் திகதி வரை விளக்கமறியல்</h2><p>

அந்த நிதிகளில் இருந்து 800,000 அமெரிக்க டொலர்கள், தொழிலதிபர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் கணக்கிற்குப் பின்னர் மாற்றப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>

சுமார் 100 மில்லியன் ரூபாய்க்கு சமமான தொகை பின்னர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, பெரேரா இலஞ்ச ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த சாட்சியத்திலும் பிரமாணப் பத்திரத்திலும் கூறியிருந்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896d6c29-a9e1-4082-864e-fd4e27aa9a15/26-6aab9683d640e.webp' /></p><p>
</p><p>
ராஜபக்சவின் வழக்கறிஞர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.

ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் அனில் சில்வா, அப்பணம் பெரேராவுக்குச் சொந்தமான கணக்கில் பெறப்பட்டதாக வாதிட்டதோடு, தனது கட்சிக்காரருக்கு எதிரான அரசுத் தரப்பின் வழக்கையும் மறுத்து, பணம் செலுத்தியது தொடர்பான குற்றச்சாட்டைக் கேள்விக்குள்ளாக்கினார்.
</p><p>
பணச்சலவை விசாரணையில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, ராஜபக்சவின் பிணை மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவிருக்கும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may Like this..<br><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2sl4gFFV-FM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-17T11:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ordered-immediate-remove-waste-dumped-1789643422"></link>
            <id>https://tamilwin.com/article/ordered-immediate-remove-waste-dumped-1789643422</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அள்ளுவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

கீரிமலை பகுதியில் சுமார் 300 டிப்பர் அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவற்றை மீள அள்ளுமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><h2>&nbsp;விசேட கூட்டம்</h2><p>

கழிவுகளை மீள அள்ளுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து, வலி. வடக்கு பிரதேச சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று(17) வியாழக்கிழமை நடைபெற்றிருக்க வேண்டிய சபை அமர்வை புறக்கணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/695af07e-2409-48c7-b9a8-9d2bd7203577/26-6aabccd3a0951.webp' /></p><p>
</p><p>
கடந்த 14ஆம் திகதி கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கூட்டம் நடத்துவதற்கு சபையில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கூட்டம் நடைபெறவில்லை எனவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.</p><p>

இதனையடுத்து, சபை அமர்வு நடைபெறாதமை தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் வலி. வடக்கு பிரதேச சபையினருடன் இணைந்து கீரிமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டனர்.</p><h2>&nbsp;கீரிமலை பகுதியில் கழிவுகள்</h2><p>

இதன் பின்னர், கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், குறித்த இடம் கழிவுகளை கொட்டுவதற்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது மற்றும் கொட்டப்பட்ட கழிவுகளை எவ்வாறு மீள அகற்றுவது என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நாளை வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறும் உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c68197-b6bc-4324-99b6-b11984d24b46/26-6aabccd4762b1.webp' /></p><p>

இதேவேளை, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்து, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
தெல்லிப்பழை பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த விவகாரம் தொடர்பில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.</p><p>

கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு செல்லும் வழிகாட்டல் பலகை இடிக்கப்பட்டமைக்கு கண்டனம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/demolition-of-the-mullivaikkal-memorial-1789642080"></link>
            <id>https://tamilwin.com/article/demolition-of-the-mullivaikkal-memorial-1789642080</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான வழிகாட்டும் பலகை பரந்த முல்லைத்தீவு வீதியில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றுவதற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான வழிகாட்டும் பலகை பரந்த முல்லைத்தீவு வீதியில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்றுவதற்கு பொலிஸாரால் நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு குறித்த வழிகாட்டல் பலகை வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்பட்டுள்ளது. </p><p>

இதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. </p><p>

அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு - வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் முற்றத்தின் வழிகாட்டிப் பலகை இடித்தழிக்கப்பட்டது.</p><h2>வழிகாட்டிப் பலகை இடித்தழிப்பு</h2><p> </p><p>

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலையை நினைவேந்துவதற்கான முள்ளிவாய்கால் முற்றத்திற்கு செல்வதற்கான பாதையை சுட்டிக்காட்டுவதற்காக முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டிப் பலகை கடந்த 2026.09.14 அன்று முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை காரணம் காட்டி வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இடித்தழிக்கப்பட்டுள்ளமையானது அரச திணைக்களங்கள் ஊடாக தமிழினம் மீதான ஒடுக்குமுறைகள் தடையின்றி தொடர்வதனையே காட்டி நிற்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2fbba8-02cc-442c-9f98-1df6a105e988/26-6aabc9eaacb69.webp' /></p><p> </p><p>

வகை தொகையின்றி தமிழினம் கொத்துக் குண்டுகளாலும், இன்னும் உலகில் மனித குலத்திற்கெதிரானதென தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும், போர் முறைகளாலும் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்ட இனப்படுகொலையை கண்ணீரோடு நினைவுகூரும் உரிமை தமிழினத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டி நிற்கும் ஒன்றாகவே இவ் வழிகாட்டல் பலகையின் இடித்தழிப்பு அமைந்துள்ளது. </p><p>முல்லைத்தீவு பரந்தன் வீதியின் வீதியோரங்கள் நெடுகிலும் இராணுவ முகாம்களிற்கான பெயர்ப்பலகைகளும், காவலரண்களும் அனுமதியற்ற கட்டடங்களாகவும், கட்டமைப்புக்களாகவும், அமைக்கப்பட்டுள்ளமை வெளிப்படையானதொன்றாகும்.</p><p> இடித்தழிக்கப்பட்ட இவ்வழிகாட்டல் பலகைக்கு அப்பால் சில 100 மீற்றர் தூரம் தள்ளி முள்ளிவாய்கால் மேற்குப் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் பெயர் பொறிக்கப்பட்ட கட்டமைப்பு, இதே வீதியில் புக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றிச் சின்னம் போன்ற இன்னும் பல கட்டுமானங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களாகவே உள்ளன.</p><h2>முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றால் கட்டளை&nbsp;</h2><p> </p><p>இந்நிலையில் இவ்வழிகாட்டி, அனுமதியற்ற கட்டடம் என முல்லைத்தீவு பொலிசாரால் கடந்த 2026.06.11 இல் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடுக்கப்பட்ட B/692/2026 இலக்க வழக்கின் மீதான கட்டளையாகவே இவ்வழிகாட்டி அமைப்பை அகற்றுமாறு பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது. </p><p>ஏற்கனவே முல்லைத்தீவு பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இவ்வழிகாட்டிப் பலகை மேல் அமைக்கப்பட்டிருந்த "காயமடைந்த பாடசாலைச் சிறுவன் ஒருவன் இரத்தம் தோய்ந்த ஆடையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திற்கு செல்லும் பாதையை சுட்டிக்காட்டுவது போல்" அமைக்கப்பட்டிருந்த சிலையை அகற்றுவதற்காக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்ட போதிலும், நீதிமன்றினால் அச்சிலையை அகற்றுவதற்கான கட்டளை வழங்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb5e150-0135-4d51-bb0b-215d50ed3ac0/26-6aabc9eb67bf2.webp' /></p><p> </p><p>இருந்த போதிலும் இரவோடிரவாக அடையாளம் தெரியாதோரால் அச்சிலை அகற்றப்பட்டது. தற்போதைய நிலையில் இலங்கை பொலிஸாரின் ஆதரவுடன் இந்த முள்ளிவாய்கால் முற்ற வழிகாட்டல் கல்லும் அகற்றப்பட்டிருக்கின்றது. </p><p>இந்த வகையில் இலங்கையில் எந்த அரசாங்கங்கள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் தமிழர் விரோத செயற்பாடுகளையும், தமிழின அழிப்பு செயற்பாடுகளையும் கட்டமைக்கப்பட்ட வகையில் அரங்கேற்றி வருவது வெள்ளிடைமலை. </p><p>ஆகவே இலங்கை அரசாங்கத்தினுடைய இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு விரைந்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தினையும் வலியுறித்தி நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எம்.ஆர்.பி அத்தநாயக்க காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-deputy-minister-amrb-attanayake-passes-away-1789639618"></link>
            <id>https://tamilwin.com/article/former-deputy-minister-amrb-attanayake-passes-away-1789639618</id>
            <summary type="text">முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான ஏ. எம். ஆர். பி. அத்தநாயக்க காலமானார்.

ஜெ. ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் போது உடடும்பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான ஏ. எம். ஆர். பி. அத்தநாயக்க காலமானார்.
</p><p>
ஜெ. ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் போது உடடும்பர தொகுதியின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உயர் கல்வி பிரதி அமைச்சராக நாட்டின் உயர் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவையை ஆற்றிய ஒரு மக்கள் பிரதிநிதியாவார்.</p><h2>இறுதிச்சடங்குகள்&nbsp;</h2><p>இவரது உடல் இன்று (17) பிற்பகல் 2.00 மணி முதல் செப்டம்பர் 19, சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை பேராதனை, எரியகம, கொழும்பு வீதியில் உள்ள தனியார் மயானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e82ecbca-f2f4-4191-8cf1-338821583f83/26-6aabc1f609075.webp' /></p><p>மேலும், இறுதிச்சடங்குகள் செப்டம்பர் 19, சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு மஹையாவ பொது மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:33:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் 'டித்வா' போன்ற மற்றொரு பேரழிவு - சஜித் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-constitution-another-disaster-ditva-1789639758"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-constitution-another-disaster-ditva-1789639758</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது &#039;டித்வா&#039; போன்றே மற்றொரு பாரதூரமான
பேரழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதன்
மூலம் ஜனநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது 'டித்வா' போன்றே மற்றொரு பாரதூரமான
பேரழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதன்
மூலம் ஜனநாயகத்துக்கு மரண அடி கொடுக்க அரசு செயற்பட்டு வருகின்றது என்றும்
குற்றம் சாட்டினார்.
</p><p>
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு
வீடுகளை வழங்கும் நோக்கத்துடன் வத்தளை மொனார்க் மண்டபத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;சஜித் எச்சரிக்கை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"22 ஆவது திருத்தத்தின் ஊடாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும்
நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமையாக்கும் பெரும் சதித்திட்டம்
இதுவாகும்.

இது ஜனநாயகத்தைச் சுருக்கி, நாட்டில் தனிக்கட்சி ஆட்சி முறையை உருவாக்கும்
செயற்பாடாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fcb6b34-898a-4f37-90f5-b2943755312d/26-6aabbd297694b.webp' /></p><p>

நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிக்க முற்படும் இந்த முயற்சியைத்
தோற்கடிக்காவிட்டால், மக்கள் சுதந்திரமாக அரசியல் செய்யவோ கருத்துக்களைத்
தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும்.

தனிநபர் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வுச் சமன்பாடுகளைப் பாதுகாக்க
வேண்டும்.
</p><p>
எல் நினோ மற்றும் லா நினோ நிலைமைகள் காரணமாக வறட்சி, வெள்ளம், மண்சரிவு போன்ற
அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
தற்போதைய அனர்த்த முகாமைத்துவ பொறிமுறைகள் காலாவதியாகிவிட்டன. பேரழிவுகள்
ஏற்படுவதற்கு முன்னரே தாக்கங்களைக் குறைக்கும் புதிய வேலைத்திட்டங்களை அரசு
உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனஇலாகா ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; காணி விடுவிப்பு தொடர்பில் களஆய்வு முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/field-assessment-regarding-land-release-initiated-1789639255"></link>
            <id>https://tamilwin.com/article/field-assessment-regarding-land-release-initiated-1789639255</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத் திணைக்களத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத் திணைக்களத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில், வனவளத்
திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த காணிகளை விடுவிப்பது
தொடர்பில் இணைந்த களஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அந்தவகையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம், வனவளத் திணைக்களம், நாடாளுமன்ற
உறுப்பினர் துரைரராசா ரவிகரன், காணிகளுக்குரிய மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த
பகுதிக்கு நேரில் சென்று இணைந்த களஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>உணவுப் பயிர்ச்செய்கைக்கென வழங்கப்பட்ட காணி</h2><p>
</p><p>
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறிப்பாக கடந்த 1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் மதவளசிங்கன்குளம் கிராமஅலுவலர்
பிரிவிற்குட்பட்ட பகுதியில் மக்களுக்கு உப உணவுப் பயிர்ச்செய்கைக்கென
வழங்கப்பட்ட காணிகளை தற்போது வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66dead11-fa47-4bc3-8ddc-f9df7e18a4c0/26-6aabbb9003e0a.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் காணிகளுக்குரிய பொதுமக்கள் குறித்த வனவளத்திணைக்களத்தின்
ஆக்கிரமிப்பு விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின்
கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
</p><p>
இத்தகையசூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 15.05.2026அன்று
இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்
கூட்டத்தில் மதவளசிங்கன்குளம் பகுதியில் உபஉணவுப் பயிற்செய்கைக்கென மக்களுக்கு
வழங்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.</p><h2>களஆய்வு</h2><p>
</p><p>
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனது வலியுறுத்தலுக்கமைய வனவளத்
திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை வனவளத்திணைக்களம்,
பிரதேச செயலகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், காணிகளுக்குரிய
பொதுமக்கள் இணைந்து இணைந்த களஆய்வொன்றை மேற்கொள்வதென குறித்த பிரதேச
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90a37a69-5c07-4d69-9dbe-32f190993659/26-6aabbb912847b.webp' /></p><p>
</p><p>
குறித்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தீர்மானத்திற்கு
அமைவாக கடந்த 15.09.2026அன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மக்களின் காணிகளை
விடுவிப்பது தொடர்பாக இணைந்த களஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba4b90d-783d-41ce-829d-34f9763c53d4/26-6aabbb9203e56.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aa3d630-50f6-40dc-bc31-63d2562f15d6/26-6aabbb92cf838.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கில் தியாக தீபத்திற்கு அஞ்சலி - நிகழ்வை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு உறுப்பினர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tribute-to-the-flame-of-sacrifice-thiyaga-deepam-1789633389"></link>
            <id>https://tamilwin.com/article/tribute-to-the-flame-of-sacrifice-thiyaga-deepam-1789633389</id>
            <summary type="text">வலி. வடக்கு பிரதேசசபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட
தமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு பிரதேசசபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட
தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.</p><p>வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் (17.09.2026) பிரதேச
சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவிருந்தது.</p><h2>சபை அமர்வு புறக்கணிப்பு</h2><p>
</p><p>
அதன்போது கீரிமலை பகுதிகளில் அனுமதியின்றி வலி. தெற்கு பிரதேச சபையினர்
கழிவுகளை கொட்டியமைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேசசபை தவிசாளர் நடவடிக்கை
எடுக்காதமையை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், சபை
அமர்வில் கலந்து கொள்ளாது புறக்கணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e49fa5cf-2590-40ed-b440-b47fa5ed11e5/26-6aabb4367b391.webp' /></p><p>
அதேநேரம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை,
சபா மண்டபத்தினுள் செய்யாது, பிரதேச சபை வளாகத்தினுள் செய்வதற்கான
ஏற்பாடுகளை செய்து, அதில் தவிசாளரை கலந்து கொள்ளுமாறு அழைத்தனர்.
</p><p>
அதற்கு, தவிசாளர் சபையை புறக்கணித்து, வெளியே நடக்கும் நினைவேந்தல் நிகழ்வில்
தான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6828e17e-f1e1-46b0-afe5-68ccd39f64bd/26-6aabb4377cda8.webp' /></p><h2>அஞ்சலி</h2><p> அவருடன் இணைந்து தமிழரசு
கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் தாமும் கலந்து கொள்ள மாட்டோம் என
நிகழ்வினை புறக்கணித்தனர்.
</p><p>
அதனை அடுத்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதேச சபை
வளாகத்தினுள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்து,
தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி
செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c83710f-bff6-4059-b866-118b41a0679b/26-6aabb438565e0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:37:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் அதிகாலை நேர்ந்த கோர விபத்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trinco-accident-1789636455"></link>
            <id>https://tamilwin.com/article/trinco-accident-1789636455</id>
            <summary type="text">திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர்
படுகாயமடைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர்
படுகாயமடைந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (17)
அதிகாலை இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

மோட்டார் சைக்கிள் சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த தோப்பூர் -செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அன்சார் அல்ஹாம்
வயது (33) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/326b89c7-b2b6-450c-bb5d-8e176cff4753/26-6aabb3ec52490.webp' /></p><p>அத்தோடு அவரோடு மோட்டார்
சைக்கிளில் பயணித்த சித்திக் சாபி வயது (26) எனும் மற்றுமொரு நபர்
படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>

உயிரிழந்தவரின் ஜனாஸா ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா ஜனாஸாவை
பார்வையிட்ட பின்னர் ஜனாஸா பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் பொது
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T09:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து: சாரதி தொடர்பில் வெளியான தகவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410</id>
            <summary type="text">புதிய இணைப்புமட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காரின் சாரதி, எதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காரின் சாரதி, எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>


சந்தேகநபர் இன்று (17) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>நேற்று (16) இரவு மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>இந்த விபத்து இடம்பெற்ற போது குறித்த சாரதி கஞ்சா போதையில் இருந்ததாக பொலிஸார் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி&nbsp; விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p>போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>விபத்து தொடர்பிலான விசாரணைகளின் போது, ​​சாரதியின் உடலில் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இருந்ததை தடயவியல் வைத்திய பரிசோதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2SYTyf9oUlE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்து குறித்த மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.</p><p>

நேற்றிரவு (16) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>இந்த விபத்து தொடர்பான பொலிஸாரின் கூற்றுப்படி, செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d3ee77c-9573-4a2b-bf46-f178827de425/26-6aab66b2ce044.webp' /></p><p>
இதனைத்தொடர்ந்து அந்த கார் இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.</p><h2>உயிரிழந்தவர்களின் விபரம்</h2><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளிவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் இருவர் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36267214-b0a9-4fd5-86e5-d238a7e8d490/26-6aab66b3814c0.webp' /></p><p> 

மூன்றாவது நபரின் வயது கண்டறியப்படாத நிலையில் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த விபத்து தொடர்பில் மட்டக்குளியை சேர்ந்த 52 வயதான கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> </p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warrants-aravinda-de-silva-and-his-wife-recalled-1789633255"></link>
            <id>https://tamilwin.com/article/warrants-aravinda-de-silva-and-his-wife-recalled-1789633255</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய வானூர்திகளை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபருக்கு பிணையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய வானூர்திகளை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபருக்கு பிணையாளர்களாக தோன்றிய இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.</p><p>கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (17) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><h2>தாயாரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள்&nbsp;</h2><p>தனது தாயாரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் காரணமாக தமது கட்சிக்காரர்களால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லட்டுவெஹெட்டி தெரிவித்த வாதங்களை கருத்தில் கொண்ட பின்னர், நீதவான் பிடியாணையை திரும்பப்பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3703aed7-a95f-4f44-bd85-e90a2183bd1b/26-6aabaf6f75f6e.webp' /></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க என்பவருக்கு பிணை நின்ற பிணையாளர்களான அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர்&nbsp; நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையினாலேயே இந்த பிடியாணை நேற்று (16) பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p>அதன்படி, இன்று (17) நீதிமன்றத்தில் இருவருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமானதாலும், இறுதிச்சடங்கு நேற்று (16) நடைபெற்றதாலும் அவர்களால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p><h2>சந்தேகநபருக்கு&nbsp;&nbsp;வழங்கப்பட்ட&nbsp;பிணை</h2><p>சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை பறிமுதல் செய்யாததற்கான காரணங்களை கூறுவதற்காக, சம்பந்தப்பட்ட வழக்கு நேற்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/accf1db8-fb14-4eb9-bd3a-39031b9017ec/26-6aabaf7029483.webp' /></p><p>
அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி, சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான கபில சந்திரசேனவின் மனைவிக்கு, தலா ரூ. 20 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணை பத்திரங்களின் பேரில் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
</p><p>
அதன்படி, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரை கைது செய்வதற்காக நேற்று (16) நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப்பெறுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:16:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல கனவுகளுடன் புறப்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragic-death-engineering-student-at-sea-1789632005"></link>
            <id>https://tamilwin.com/article/tragic-death-engineering-student-at-sea-1789632005</id>
            <summary type="text">மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் அடுத்த மாதம் இணையவிருந்த 22 வயதான திறமையான மாணவன் ஒருவர், மாரவில கடற்கரையில் வீசிய திடீர் அலை சீற்றத்தில் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் அடுத்த மாதம் இணையவிருந்த 22 வயதான திறமையான மாணவன் ஒருவர், மாரவில கடற்கரையில் வீசிய திடீர் அலை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.</p><p>
குளியாப்பிட்டிய, போதிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சலித்த தனுர்தர மதுஷன் விதானகே என்ற இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் சிறந்த சித்திகளைப் பெற்று பல்கலைக்கழக பிரவேசத்திற்காக காத்திருந்த காலத்தில், அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.</p><h2>திடீரென வந்த அலை..&nbsp;</h2><p> </p><p>இதன்போது, இதுவரை கடலைப் பார்த்திராத தனது சக ஊழியர்கள் அறுவரை, அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மாரவில குருசடி தேவாலயத்திற்கு அருகிலுள்ள கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8170f62-d840-4cf4-885a-59ebe448c0ea/26-6aaba7e3a3a0c.webp' /></p><p>
</p><p>
நண்பர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், சலித்த கடற்கரையோரப் பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக வந்த மிகப்பெரிய அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. </p><p>அவர் ஒரு திறமையான நீச்சல் வீரராக இருந்தபோதிலும், கடலின் நீரோட்டத்திற்கு முன்னால் அவரால் உயிர்தப்ப முடியாமல் போயுள்ளது.</p><p> கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, மறுநாள் பிற்பகல் அவரது சடலம் கரையொதுங்கியது.
</p><p>இச்சம்பவம், அவரின் குடம்பத்திற்கு, ஈடுசெய்ய முடியாத பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:14:20+00:00</updated>
        </entry>
    </feed>
