<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-11T18:40:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிச்சத்திற்கு வந்த பாதாள உலகத்தின் அரசியல் தொடர்புகள்..! மரண தண்டனை மீண்டும் நடைமுறையாகுமா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-regardin-death-penalty-drug-trafficking-1786470851"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-regardin-death-penalty-drug-trafficking-1786470851</id>
            <summary type="text">இலங்கையில் தற்பொழுது&amp;nbsp; மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளாகியுள்ளன.


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்பொழுது&nbsp; மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளாகியுள்ளன.</p><p>


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு அரசியல்வாதிகளின் அனுசரணை இல்லாமல் இவ்வளவு பெரிய வலையமைப்பு இயங்க முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
 மாக்கந்தர மதுஷ் போன்ற பாதாள உலகத் தலைவர்கள் அரசியல்வாதிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் இதற்கான முக்கிய சான்றாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இலங்கையில் மரண தண்டனை சட்டம் புத்தகத்தில் இருந்தாலும், 1976 முதல் நடைமுறையில் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
</p><p>
போதைப்பொருள் குற்றங்களைக் குறைக்க மரண தண்டனையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதற்கு ஆதரவாகவோ அல்லது நிறைவேற்றுவதாகவோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
</p><p>
 மரண தண்டனைக்கு எதிரான வாதங்களில் மனித உரிமை கவலைகள், நீதித்துறை தவறுகள் நிகழ்ந்தால் அதைத் திருத்த முடியாது என்ற அம்சம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் (ICCPR) ஆகியவை முதன்மையாக உள்ளன.
</p><p>
வெறும் மரண தண்டனை மட்டுமே தீர்வாகாது; போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்களைக் கண்டறிதல்,பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளில் ஊழலை ஒழித்தல், விசாரணை மற்றும் நீதிமன்றச் செயல்பாடுகளை விரைவுபடுத்துதல் போன்ற கட்டமைப்பு ரீதியான மாற்றங்களே அவசியமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DEmhAJm0O5s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T18:03:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக காணி உரிமையை மறுக்கும் அரசின் தந்திரத்துக்கு துணை போக வேண்டாம்! மனோ கணேசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/up-country-land-rights-mano-ganesan-1786468362"></link>
            <id>https://tamilwin.com/article/up-country-land-rights-mano-ganesan-1786468362</id>
            <summary type="text">இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை என்ற ஒரு புதிய புரளி-சபையை கொண்டு வந்து பெருந்தோட்ட வாழ் மலையக தமிழருக்கும் காணி உரிமையை தந்திரமாக மறுக்கவும், அவர்களை வெளி பலான இடங்களில் குடியேற்றவும், தொடர்மாடி வீடுகளை கட்டி குடியேற்றவும், என்பிபி அரசு திட்டம் இடுகிறது. </p><p>

இது இவர்களது பழைய ஜேவிபி கொள்கை. இதற்கு இவர்கள் இன்று, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை ஐநா அலுவலகம், ஆகிய சர்வதேச நிறுவனங்களை தந்திரமாக பயன்படுத்த முயல்கிறார்கள்.</p><p></p><h2>காணிக்கான உரிமை</h2><p> </p><p>

காலநிலை, மண்சரிவு, நீர் பிடிப்பு, ஆகிய உன்னத விஷயங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கிறது. ஆனால், இவை எமது மக்களின் காணி உரிமைக்கு குந்தகம் விளைவிக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேச இயக்குனர் ஷனென் கோவ்லின் தலைமையிலான வங்கி குழுவினரிடம் தெளிவாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b2f17c-e32d-468b-a878-08d8b57bb51c/26-6a7b63c2e43a4.webp' /></p><p>ஏடிபி குழுவினருக்கு மனோ எம்.பி மேலும் கூறியுள்ளவை தொடர்பில், தமுகூ ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூற பட்டுள்ளதாவது;&nbsp; இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில், மலையக மக்கள் வளர்ச்சி குன்றிய பிரிவினர். இதற்கு வரலாற்று காரணங்கள் உள்ளன. </p><p>எமது மக்களுக்கு 2003 ஆண்டு தான் கடைசி தொகுதி குடியுரிமையே கிடைத்தது. 

ஆகவே நாம் ஆரம்பித்த புள்ளி தாமதம் ஆனது. ஆகவே வளர்ச்சியும் தாமதம் ஆனது. </p><p>இன்று எமது குடியுரிமை முழுமை அடைய வேண்டும் என்றால், எமது காணிக்கான உரிமை உறுதி படுத்த பட வேண்டும். காணி உரிமை இல்லாவிட்டால், எமது குடியுரிமை முழுமை அடையாது. அது கிடைத்தால், ஏனைய உரிமைகள் படிப்படியாக வந்து சேரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T18:02:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அச்சுறுத்தல்: துருக்கியில் இருந்து ரகசிய விமானத்தில் ட்ரம்ப் பயணம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-secretly-fled-turkey-amid-iran-threat-1786467290"></link>
            <id>https://tamilwin.com/article/trump-secretly-fled-turkey-amid-iran-threat-1786467290</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் துருக்கியில் இருந்து ரகசியமாக வேறு விமானத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் துருக்கியில் இருந்து ரகசியமாக வேறு விமானத்தில் பயணித்ததாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் கட்டாரால் வழங்கப்பட்ட புதிய விமானத்தில் துருக்கியின் அங்காராவுக்குச் சென்றிருந்தார்.</p><p></p><h2>ஈரான் அச்சுறுத்தல்&nbsp;</h2><p> எனினும், அங்கிருந்து புறப்படும் போது எதிர்பாராத விதமாக பழைய Air Force One விமானத்தை பயன்படுத்தியிருந்தார்.</p><p>

அங்காரா விமான நிலையத்தில் ஊடகங்கள் முன்னிலையில் பழைய Air Force One விமானத்தில் ஏறிய ட்ரம்ப், பின்னர் விமான நிலைய உணவு விநியோக வாகனம் மூலம் ரகசியமாக மற்றொரு சிறிய விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21efe32f-9ae9-4b2c-bc78-bb4c1b9cb509/26-6a7b5519a84a8.webp' /></p><p>
</p><p>
அந்த விமானம் அமெரிக்க விமானப்படையின் C-32A விமானம் எனவும், அதில் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு பயணித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

ஈரானுடனான பதற்றம் அதிகரித்திருந்த காலகட்டத்தில் இந்தப் பயணம் இடம்பெற்றதுடன், ஈரான் துருக்கியின் அண்டை நாடாகவும் உள்ளது.</p><p></p><h2>உயர்மட்ட பாதுகாப்பு</h2><p>

இதனிடையே, கட்டார் வழங்கிய புதிய விமானம் ஜனாதிபதி மற்றும் அவரது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உயர்மட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0741377-e485-41ae-8b12-e63fea5d4bf4/26-6a7b551a5d689.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக பல எதிரிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தங்களிடம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவதாக வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஸ்டீவ் சியுங் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-11T17:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-august-festival-of-the-madhu-1786465719"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-august-festival-of-the-madhu-1786465719</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா
எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் திருவிழா
ஏற்பாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா
எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் திருவிழா
ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை
11.30 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம் பெற்றது.</p><p>மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த
கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்
ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து
நேசரத்தினம் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை
எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
</p><p>
மேலும் பிரதேச செயலாளர்கள்,நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின்
தவிசாளர்கள், இராணுவம்,கடற்படை,பொலிஸ் அதிகாரிகள்,வைத்தியர்கள்,சுகாதார
துறையினர், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.</p><h2>ஏற்பாடுகள்</h2><p>
</p><p>
இதன்போது மடு திருத்தலத்தில் ஆவணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து
விரிவாக ஆராயப்பட்டது.</p><p>இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 15
லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தர உள்ளதாக எதிர்
பார்க்கப் பட்டுள்ள நிலையில் வருகை தரும் மக்களின் நலனையும் பாதுகாப்பையும்
கருத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டிய அவசிய தேவைகள் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27e16bd4-7f43-4198-8ccc-a674ff03dbc3/26-6a7b520173f23.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக மடு திருவிழா காலப்பகுதியில் பாடசாலைகள் விடுமுறை என்பதால்
இலட்சக்கணக்கான மக்கள் தற்போது மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.</p><p>இந்த
நிலையில் திருவிழா நாட்களில் மக்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என எதிர்
பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு
போக்குவரத்து,சுகாதாரம்,மருத்துவம்,தங்கும்இடம்,குடி நீர்,மின்சாரம் மற்றும்
பாதுகாப்பு விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p>

மேலும் மடு திருத்தலத்திற்கு திருவிழா காலப்பகுதியில் வருகை தரும்
ஒருங்கிணைக்கப்பட்ட திருடர்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பிச்சையெடுப்போர்
தொடர்பாகவும் விசேட கவனமெடுத்து அதனைத் தடுப்பதற்குரிய விசேட ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருக்கின்றது.</p>]]></content>
            <updated>2026-08-11T16:54:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா ஊடாக தாயகத்தில் முதலீடு..! பலருக்கு தொழில்வாய்ப்பு வழங்கிய கந்தையா பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economic-investment-tamil-diaspora-essential-home-1786464771"></link>
            <id>https://tamilwin.com/article/economic-investment-tamil-diaspora-essential-home-1786464771</id>
            <summary type="text">புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தமிழர் தாயகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அவசியம் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தமிழர் தாயகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அவசியம் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,</p><p>


யுத்தத்தாலும், இனவழிப்பு செயற்பாடுகளாலும் எமது தாயக மண்ணில் இருந்து பல இலட்சக் கணக்கான தமிழர்கள் புலம் பெயர்த்து வெளிநாடுகளில் வாழுகின்றனர்.</p><p></p><h2>புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள்</h2><p> 

யுத்தத்தில் பின்னர், எமது தாயகம் பொருளாதார,சமூக, கலாசார,அரசியல் ரீதியாக சீர்குலைந்துள்ளது அல்லது சீர்குலைக்கப்பட்டுள்ளது.

 இதனைக் கட்டி எழுப்புவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளின் பாரியளவான முதலீடுகள் அவசிய தேவையாகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/985dbd7f-b490-45a4-9ebf-7f33a8e38823/26-6a7b4bbe75bc6.webp' /></p><p> </p><p>

இந்த முதலீட்டுக்குத் தடையாக அரசியல் தீர்வு இன்மை, பேரின அடிப்படை வாதம்,குறுகிய அரசியல்,வணிகப் போட்டி,தனிப்பட்ட காழ்ப்புணர்வு போன்றவை காணப்படுகின்றன.
</p><p>
 அப்படி இருந்தும் சில தமிழ் உறவுகள் அந்த சவால்களையெல்லாம் முகங்கொடுத்து தமிழர் தாயகத்தில் முதலீடுகளைச் செய்து எமது மக்களுக்கு தொழில்வாய்ப்புகள்,வாழ்வாதாரம் என்பவற்றை வழங்கி முன்மாதிரியாகச் செயற்படுகின்றனர்.</p><p></p><h2>கிளிநொச்சியில் றீச்சா&nbsp;</h2><p> </p><p>

எடுத்துக்காட்டாக, தனது கடின உழைப்பினால், பொருளாதார மேம்பாடு அடைந்த கந்தையா பாஸ்கரன் , நெதர்லாந்தில்(ஹொலன்ட்) இருந்து தாயகம் வந்து கிளிநொச்சியில் றீச்சா என்ற அமைப்பின் பெயரில் முதலீடு செய்து சுமார் 500 தமிழ் உறவுகளுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிசமைத்துள்ளார்.</p><p>இதனைப் பார்த்து இன்னும் பல தமிழ் முதலீட்டார்கள் தாயக மண்ணில் முதலீடுகள் செய்வதற்கு தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். 

இதற்குத் தாயக மண்ணில் பலத்த ஆதரவுகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f046620f-4e4c-45c1-ac3e-dd65fadc3230/26-6a7b4bbf45151.webp' /></p><p>ஆனால் சில சுயநலமிக்கவர்கள், முரண்நிலைவாதிகள், காழ்ப்புணர்வாளர்கள் குறுகிய சிந்தனையோடு நல்லவல்ல முலீடுகளை குழப்ப நினைக்கின்றனர்.</p><p> 

முதலீட்டாளர்கள் சிறுதவறுகள் செய்தால், அவற்றை முறையாக அணுகி, ஆலோசனைகள் கூறி திருத்த வேண்டியது சமூகப் பொறுப்பாகும்.</p><p></p><h2>தமிழ்த்தேசிய உணர்வு மிக்க தமிழர்கள்&nbsp;</h2><p> </p><p>அதனை விடுத்து முதலீட்டார்களை திட்டமிட்டு வருத்துவது, அவர்களது முதலீடுகளை முடக்கி சீர்குலைக்க நினைப்பது, சமூகத்துக்கு இழைக்கின்ற கெடுதியாகும்.</p><p> இதனை தமிழ்த்தேசிய உணர்வு மிக்க தமிழர்கள் ஒரு போதும் செய்யமாட்டார்கள். 

ஆனால்,தன்னல வாதிகள், காழ்ப்புணர்வாளர்கள்,எதிர்மறை முகவர்கள் முதலீடுகளின் முக்கியத்துவத்தையோ,அதனால் சமூகம் பெறும் தொழில்வாய்ப்பு களையோ, சுற்றுலா மூலம் கிடைக்கும் டொலர் வருமானத்தையோ சிந்திக்க மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc2caa87-369b-4c58-88c6-0db09c68d41b/26-6a7b4bbfeeb4b.webp' /></p><p> 

இப்படியானவர்கள் பற்றி முற்போக்கான தமிழ் உணர் வாளர்கள் விழிப்பாக இருந்து தடைகளை உடைத்து, தமிழ் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி எமது தாயக மண்ணை வலுவூட்டி வளப்படுத்த வேண்டும்.</p><p> 

எதிர்மறைப் போக்குகளை நேரிடை செயற்பாடுகளால் முறியடித்து முதலீடுகளை வரவேற்போம்.நல்லவை செய்வோம், அல்லவை களைவோம்.தமிழர் தாயக மண்ணை வளப்படுத்துவோம், அதற்கு உதவியாக இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T16:23:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிகளவான போதைப்பொருளை நுகர்ந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-in-jaffna-consuming-large-drugs-1786462111"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-in-jaffna-consuming-large-drugs-1786462111</id>
            <summary type="text">யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.8.2026) இடம்பெற்றள்ளது. இதன்போது கோப்பாய் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.8.2026) இடம்பெற்றள்ளது.</p><p> </p><p>இதன்போது கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை</h2><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றிரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழை தோட்டம்
ஒன்றுக்குள் மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில் அவரை மீட்ட நண்பர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9c5ef88-f8d7-4bfe-aa82-55c8e6f67f5e/26-6a7b430a610b6.webp' /></p><p>
</p><p>
அவரது சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில், அதிகளவான
போதைப்பொருள் பாவனையால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T15:46:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் காட்டுத்தீ தீவிரம்: பாடசாலைகள் மூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/forest-fires-in-indonesia-schools-closed-1786461428"></link>
            <id>https://tamilwin.com/article/forest-fires-in-indonesia-schools-closed-1786461428</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் அதிகமான நிலப்பரப்பை அழித்து பரவி
வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 50,000 தீயணைப்பு வீரர்கள்
தீவிர நடவடிக்கைகளில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் அதிகமான நிலப்பரப்பை அழித்து பரவி
வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 50,000 தீயணைப்பு வீரர்கள்
தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

காட்டுத்தீ காரணமாக உருவான அடர்ந்த புகை மற்றும் மோசமான காற்றுமாசு காரணமாக,
மாணவர்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பல பாடசாலைகள்
தொடர்ச்சியாக மூடப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் இணையவழி மூலமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

எல் நினோ (El Nino) காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியான
காலநிலையே இந்தக் காட்டுத்தீ பரவலுக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.</p><p></p><h2>காட்டுத்தீ</h2><p>
</p><p>
சுமாத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் உள்ள ஆறு பிரதான மாகாணங்களில்
காட்டுத்தீ மிக மோசமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இரசாயனத் தெளிப்புகள் மூலம் செயற்கை
மழையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் விசேட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a0a3b45-f8ff-4769-98cb-76a23d0052a0/26-6a7b3cf729469.webp' /></p><p>

இருப்பினும், மழை மேகங்களின் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கைகளில்
சவால்கள் நிலவுவதாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

அதேவேளை, கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள பிரபல தேசிய பூங்கா ஒன்றில் பரவிய
காட்டுத்தீ பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், நாடு
முழுவதும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானங்கள் மற்றும்
ஹெலிகொப்டர்கள் அடங்கிய பெரும் படைகள் தொடர்ந்து மீட்புப் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T15:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க நீதியமைச்சரின் தீர்மானத்திற்கு விடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/funds-allocated-u-s-attorneygeneral-decision-trump-1786460479"></link>
            <id>https://tamilwin.com/article/funds-allocated-u-s-attorneygeneral-decision-trump-1786460479</id>
            <summary type="text">அரசாங்கத் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக
முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய நிதியத்தின் எதிர்காலம் குறித்து, புதிய
அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக
முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய நிதியத்தின் எதிர்காலம் குறித்து, புதிய
அமெரிக்க நீதியமைச்சர் ரொட் பிளான்ச் தீர்மானிப்பார் என அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>ட்ரம்பின் தனிப்பட்ட சட்டத்தரணியாகவும், பிரதி
நீதியமைச்சராகவும் கடமையாற்றிய ரொட் பிளான்ச், அமெரிக்காவின் தலைமைச்
சட்டத்தரணியாக முறைப்படி பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது.</p><p>
அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்களுக்கு
நஷ்டஈடு வழங்குவதற்காக $1.776 பில்லியன் பெறுமதியான நிதியம் ஒன்றை
உருவாக்குவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p></p><h2>அடுத்தகட்ட நகர்வுகள்</h2><p>

இருப்பினும், அமெரிக்க நீதியமைச்சினால் அந்த உத்தரவு அண்மையில் திரும்பப்
பெறப்பட்டதைத் தொடர்ந்தே ரொட் பிளான்ச்சின் நியமனத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல்
கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5722eec4-d250-4b64-8c78-dfe4cec9b68c/26-6a7b3b1e53156.webp' /></p><p>
</p><p>
சுமார் 10 பில்லியன் டொலர் பெறுமதியான வழக்கு ஒன்றைத் தீர்ப்பதற்காகவே இந்த
நிதி ஒதுக்கீடு முன்மொழியப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், இது ஜனாதிபதியின்
ஆதரவாளர்களுக்குச் சாதகமான நடவடிக்கை எனப் பல்வேறு தரப்பினரால்
விமர்சிக்கப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையிலேயே, குறித்த நிதியத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் அதன்
எதிர்கால நடைமுறைகள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் முழு அதிகாரமும்
நீதியமைச்சர் ரொட் பிளான்ச்சிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T15:09:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mstop-fishing-other-districts-mullaithivu-1786456791"></link>
            <id>https://tamilwin.com/article/mstop-fishing-other-districts-mullaithivu-1786456791</id>
            <summary type="text">வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில்
அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர்
நாயகம் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>அதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்
செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில் அமைச்சரிடம் நேரடியாகக்
கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அத்தகைய சட்டவிரோத கடற்றொழில்
செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் கூறினார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp; கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக்
காணப்படுகின்றன.</p><p></p><h2>கடற்றொழில் செயற்பாடுகள்</h2><p>
</p><p>
இவ்வாறு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்
செயற்பாடுகளின் புகைப்பட ஆதாரங்கள் எம்மிடம் கடற்றொழிலாளர்களால் கையளிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06405708-0fd5-48c6-8487-e749c530f2a5/26-6a7b36368c948.webp' /></p><p>
</p><p>அந்த புகைப்பட ஆதாரங்களை நான் ஏற்கனவே தங்களிடம் கையளித்திருக்கின்றேன்.

இருப்பினும் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் எமது முல்லைத்தீவுக்
கடற்பரப்பில் இடம்பெறுவது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களை மீண்டும் தங்களிடம்
கையளிக்கின்றேன்.</p><p>எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்படவேண்டுமென
வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T14:48:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலையின் பிரதான சூத்திரதாரி செவ்வந்தியா..! சட்ட ரீதியாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sevwandi-to-face-forensic-for-facial-examination-1786453621"></link>
            <id>https://tamilwin.com/article/sevwandi-to-face-forensic-for-facial-examination-1786453621</id>
            <summary type="text">பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

எனினும் குறித்த பெண் உண்மையில் தேடும் செவ்வந்தியா என்பது தொடர்பில் சந்தேகம் நீடித்து வரும் நிலையில், முகத்தை அடையாளம் காணும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
</p><p>
இவ்வாறான நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மூலம் செவ்வந்தியை அடையாளம் காண பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><h2><b>விளக்கமறியலில் வைக்குமாறு&nbsp;உத்தரவு </b></h2><p> 

குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd6f5516-25ea-4d49-b298-691d62c7d9f2/26-6a7b21863fb1b.webp' /></p><p>இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருக்குவிதாரண உத்தரவு பிறப்பித்தார்.</p><p> 

சுமார் 09 மாதங்கள் கொழும்பு குற்றப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p> </p><h3><b>சிறப்பு முகம் அடையாளம் </b></h3><p>இதன்போது பொலிஸார் சமர்ப்பித்த விடயங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb56af36-c74a-4bee-bb75-8514aeeece62/26-6a7b21872494a.webp' /></p><p>சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் சிறப்பு முகம் அடையாளம் காணும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் அனுமதி வழங்கினார்.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jqSWT_q16G0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-11T14:24:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமாருடன் இரகசிய பேச்சுவார்த்தை - முடிவை அறிவித்தது தமிழ்த்தேசிய பேரவை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-to-gajendra-kumar-for-party-alliance-1786456973"></link>
            <id>https://tamilwin.com/article/request-to-gajendra-kumar-for-party-alliance-1786456973</id>
            <summary type="text">ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால், தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால், தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p> 



கிளிநொச்சியில் இன்று(11.08.2026) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
</p><h2>


தமிழ் கட்சிகளின் கூட்டணி</h2><p>
தமிழ் கட்சிகள் (ஆறு கட்சிகள் சேர்ந்து) இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம்
மக்களுடைய மற்றும் மலையக மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்று
சேர்ந்திருக்கிறார்கள். அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அழைப்புகள்
விடுக்கப்பட்டிருக்கிறதா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார். </p><p>

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதிலளிக்கையில், </p><p>“ கடந்த வார நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூஃப் ஹக்கீம் நாடாளுமன்றத்திலே
என்னை கண்டு “பேசலாமா?” என்று கேட்டு, "நான் இந்த ஆறு கட்சிகளுடைய இந்த
முயற்சியிலே நானும், அதாவது தமிழ் தேசிய பேரவையும், வந்து சேர்ந்து கொள்ள
வேண்டும்" என்ற கருத்தை என்னிடம் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d315f36e-5805-4054-a079-e09a801ccb8d/26-6a7b2c91377da.webp' /></p><p>
</p><p>
அந்த ஆறு கட்சிகளுக்கும் தான் இந்த விடயத்தைச் சொல்லியிருப்பதாகவும், அந்த
வகையிலே வந்து எவருக்கும் தமிழ் தேசிய பேரவையை இணைத்துக் கொள்வதிலே எதிர்ப்பு இல்லை என்றும், ஆகவே நாங்கள் அதிலே எங்களுடைய அமைப்பு சார்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தேன். </p><p>

அந்த இடத்திலே நாடாளுமன்ற உறுப்பினர்
ராதாகிருஷ்ணனனையும் அந்த இடத்திற்கு அழைத்து, "நான்
கஜேந்திரனிடம் அவருடைய கட்சியை இந்த ஆறு கட்சிகளுடைய முயற்சியிலே வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம்" என்ற கருத்தை சொல்லியிருந்தார்.
</p><h2>
மத்திய குழுவுடன் பேச்சுவார்த்தை</h2><p>
அப்பொழுது நாங்கள் சொன்னது என்னவென்றால், எங்களுக்கு அந்த அழைப்பு
உத்தியோகபூர்வமாக விடுக்கப்படுகின்ற பொழுது, நாங்களும் எங்களுடைய மத்திய
குழுவுக்கு அதனை தெரிவித்து, எங்களுடைய மத்திய குழு அது சம்பந்தமாக ஒரு
தீர்மானம் எடுக்கும்.

அந்த முயற்சி சம்பந்தமாக நாங்கள் அதிலே உத்தியோகபூர்வமாக இருக்கிறோமோ இல்லையோ என்ற முடிவு அதன் மூலமாக தான் தெரிவிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e3f2e3a-0103-4ef0-a089-420da435e841/26-6a7b2c91de45b.webp' /></p><p>

ஏனென்றால் நாங்கள் அதில் இதுவரைக்கும் இந்த விடயம் சம்பந்தமாக எதுவும்
பேசவில்லை. ஊடகத்திலே தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பொறுத்தவரையில் எங்களுக்கு எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை.</p><p>

 
ஆகவே நாங்கள் முதல் அதில் கலந்து கொள்வதா இல்லையா? என்று முடிவு எடுப்பதற்கு முன்னர், எங்களுடைய மத்திய குழு அறிவித்தாலும் கூட, நாங்கள் முதல் அவர்களோடு பேசி, அவர்களுடைய முயற்சியினுடைய நோக்கங்கள் சம்பந்தமாக ஒரு தெளிவடைந்த பின்னரே இது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என நினைக்கின்றோம்” என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9gwcRvWz0D0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-11T14:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: மூன்று பணியாளர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-cargo-ship-in-the-red-sea-killed-1786454807"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-cargo-ship-in-the-red-sea-killed-1786454807</id>
            <summary type="text">செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப்
பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில்
பயணித்த மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப்
பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில்
பயணித்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஏமன் கடலோரப் காவல் படை மற்றும்
இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தன்சானியக் கொடியுடன் ஓமானின் சலாலா துறைமுகத்திலிருந்து ஜிபூட்டி நோக்கிப்
பயணித்த 'திஹாமா' என்ற சிறிய சரக்குக் கப்பலே இவ்வாறு தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த
ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்ற போதிலும், ஹூதி அமைப்பு இதுவரை இதற்கு உத்தியோகபூர்வமாகப்
பொறுப்பேற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55123ee9-c187-44ef-877a-9f6b9c53a9cc/26-6a7b27ace53d3.webp' /></p><p>
</p><p>சவூதி அரேபியாவிற்கு எதிராக ஹூதி அமைப்பினர் செங்கடலில் கடற்படை முற்றுகையை
அறிவித்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன் காரணமாக செங்கடல் வழியிலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் மீண்டும்
பதற்றமும் பாதுகாப்பற்ற சூழலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:46:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 164ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-earthquake-hits-colombia-1786455666"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-earthquake-hits-colombia-1786455666</id>
            <summary type="text">கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இரண்டாவது
நாளாக இன்றும்(11.08.2026) மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இரண்டாவது
நாளாக இன்றும்(11.08.2026) மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளதாகவும், 
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் பல நகரங்களில்
பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>


இதற்கமைய, பெரைரா மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களில் பல மாடி கட்டிடங்கள்
தரைமட்டமாகியுள்ளதுடன், மணிசாலேஸ் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க
தேவாலயத்தின் கோபுரம் ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.</p><h2>

நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்&nbsp;</h2><p>
காலி நகரில் மட்டும் குறைந்தது 85 பேர் உயிரிழந்துள்ளதுடன், அங்குள்ள பிரதான
வைத்தியசாலை ஒன்றின் மேல் தளங்கள் இடிந்து வீழ்ந்ததால் நோயாளிகள் வீதிகளில்
வைக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf81dab-3ea3-48cd-b93a-accb2b6507f4/26-6a7b26a6d9ecc.webp' /></p><p>
</p><p>
இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை
மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

மீட்புப் பணிகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து
செயற்பட்டு வருகின்றனர்.</p><p>

கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
பொருட்டும் காலி மற்றும் பெரைரா ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்குச் சட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிகப் பாதுகாப்புப் படையினரும்
குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:42:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பாடசாலை ஒன்றில் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஆளுநருக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/letter-to-north-governer-1786452149"></link>
            <id>https://tamilwin.com/article/letter-to-north-governer-1786452149</id>
            <summary type="text">மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகவும், அதிபர் சேவை அதிகாரிகளுக்கான நீதி கோருதல் தொடர்பாகவும் உருத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகவும், அதிபர் சேவை அதிகாரிகளுக்கான நீதி கோருதல் தொடர்பாகவும் உருத்திரசேனை அமைப்பின் பிரதிநிதி சுஜீவன் கடிதம் ஒன்றினை வட மாகாண ஆளுநர்
நா.வேதநாயகனுக்கு அனுப்பியுள்ளார். </p><p>அந்த கடிதத்தில்,

மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் (1AB தர தேசிய பாடசாலை) அதிபர்
நியமனம் தொடர்பில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும், அங்கு
கடமையாற்றும் தகுதியான அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்தும்
தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
</p><p>
பொதுவாக ஒரு தேசிய பாடசாலையில், இலங்கை அதிபர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த ஒருவரே
அதிபராகப் பதவி வகிக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை அதிபர் சேவை
தரம் 3இல் உள்ள அருட்சகோதரர் சந்தியோகு என்பவர் அதிபராகப் பணியாற்றி, கடந்த
ஆகஸ்ட் 3ஆம் திகதியுடன் ஓய்வுபெற்றுள்ளார்.</p><h2>பொறுப்பு வழங்கப்பட்ட அதிபர்</h2><p>அவரது ஓய்வைத் தொடர்ந்து, அதே பாடசாலையில் இலங்கை அதிபர் சேவை தரம் 3இல் உள்ள
தகுதியான மூவர் (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த இரு ஆண்கள்
மற்றும் மன்னாரைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்) கடமையில்
உள்ளனர்.</p><p>இருப்பினும், அவர்களைப் புறக்கணித்துவிட்டு, அதே பாடசாலையில் இலங்கை
ஆசிரியர் சேவை தரம் 3இல் கற்பிக்கும் அருட்சகோதரர் சத்தியன் என்பவருக்கு
அதிபர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407945e5-3de2-4f52-9a22-7dcc8fe2e046/26-6a7b250675272.webp' />&nbsp; &nbsp;</p><p>வலயக் கல்விப் பணிப்பாளரின்
உத்தியோகபூர்வக் கடிதம் மூலம் இந்நியமனம் வழங்கப்பட்டிருந்தாலும், இது வட
மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன் அவர்களின் அறிவுறுத்தலின்
பேரிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
</p><p>
இப்பாடசாலை ஒரு தேசிய பாடசாலையாக இருந்தபோதிலும், "டி லா சால்" (De La Salle)
கிறிஸ்தவ மிஷனரியால் நிர்வகிக்கப்படுவதால், தகுதி வாய்ந்த வேற்று மதத்தவர்கள்
இங்கு அதிபராகப் பதவி வகிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே, தாங்கள் தலையிட்டு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு
கேட்டுக்கொள்கின்றேன்.</p><h2>தகுதிக்கு ஏற்ப நியமனம்</h2><p> தகுதிக்கேற்ற நியமனம்: குறித்த பாடசாலையில் அதிபர் தரத்தில் பணியாற்றும்
தகுதியுடைய இரு இந்து ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்குக்
கீழ்நிலை தரத்தில் (ஆசிரியர் தரம்) உள்ள ஒருவரின் கீழ் பணியாற்றப் பணிப்பது
மிகுந்த அநீதியாகும். </p><p>எனவே, அவர்களின் தகுதிக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் உள்ள
பாடசாலைகளில் அவர்களை அதிபர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு
வேண்டுகின்றேன்.

சமத்துவமான நடைமுறை: கிறிஸ்தவப் பாடசாலைகளில் இந்துக்கள் அதிபராக வர முடியாத
நிலைப்பாடு இருப்பது போல, இந்துப் பாடசாலைகளிலும் ஏனைய மதத்தவர்களுக்கு இதைப்
போன்ற நடைமுறைகளே பின்பற்றப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cdbcf76-0254-4f4d-bac4-027d0e6682a4/26-6a7b25073805f.webp' /></p><p>
</p><p>
நிர்வாகக் கட்டுப்பாடு: குறிப்பாக, வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்
பற்றிக் ரஞ்சன் அவர்களின் இந்துக்கள், இந்து மாணவர்கள் மற்றும் இந்துப்
பாடசாலைகளுக்கு எதிரான மறைமுகச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, நடுநிலையோடு
செயற்பட உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
</p><p>
இவ்விஷயத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு, தகுதியுடைய
அதிகாரிகளுக்கு நீதியைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு மிகத் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலா தொற்றின் தாக்கம் தீவிரம் - உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-on-the-rise-1786455085"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-on-the-rise-1786455085</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனம்
உறுதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனம்
உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
இதுவரை ஐந்து மாகாணங்களில் 4,381 பேருக்குத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வரலாற்றில் மிக வேகமாகவும் தீவிரமாகவும் பரவி வரும் எபோலா தொற்றாக இது
பதிவாகியுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><h2>
நோய் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு</h2><p>
தற்போது பரவி வரும் 17 ஆவது எபோலா அலையானது “புண்டிக்புகியோ” வகையைச்
சேர்ந்தது என்றும், இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது
சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6245dcb7-6dcb-4647-a088-c52470fdc307/26-6a7b24b03c4a5.webp' /></p><p>

நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம், நாட்டின்
உட்கட்டமைப்பு பலவீனம் மற்றும் பாதுகாப்பு அற்ற சூழல் என்பன இந்த வைரஸ்
விரைவாகப் பரவுவதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.</p><p>

அண்டை நாடான உகாண்டாவிற்கும் இந்தத் தொற்று பரவியுள்ளதைத் தொடர்ந்து, உலக
சுகாதார நிறுவனம் இதனை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார
அவசரநிலையாக அறிவித்துள்ளது.
</p><p>
கடந்த காலங்களில் ஏற்பட்ட எபோலா பரவல்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை
உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்படைந்துள்ளமை
மருத்துவ உலகிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
</p><p>
நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உதவிகளை
விரைவுபடுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:33:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு கிடைத்த இரகசிய தகவல் - விரைவில் காத்திருக்கும் பெரும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/secret-information-received-the-anura-government-1786454301"></link>
            <id>https://tamilwin.com/article/secret-information-received-the-anura-government-1786454301</id>
            <summary type="text">கடந்த 3 வாரங்களில் பல சிறைகளில் கைதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சிறைகளுக்குள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் 
இனிவரும் வாரங்களில் இது போன்ற சம்பவங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 3 வாரங்களில் பல சிறைகளில் கைதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சிறைகளுக்குள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் 
இனிவரும் வாரங்களில் இது போன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறலாம் என இலங்கையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவங்களுக்கு பின்னால் சில சதி இருப்பதாக மூத்த அரச அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் அரசாங்கம் இது தொடர்பில் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் உள்ளகத்தில் ஒரு பதற்றத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஆனால் அதன் பின்னணியை பார்க்கும் போது இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை உடைக்க சிலர் முற்படுவதாகவும் அங்குள்ள குற்றவாளிகளை வெளியேற்றி தென்னிலங்கையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்....&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9TM-LHWgTAI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தேர் திருவிழாவில் பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chain-snatched-woman-mamangeswarar-temple-1786453350"></link>
            <id>https://tamilwin.com/article/chain-snatched-woman-mamangeswarar-temple-1786453350</id>
            <summary type="text">மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின்
போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின்
போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியாதோரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(11.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>

குறித்த ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா சம்பவ தினமான இன்று காலை 8:30
மணியளவில் ஆலயத்தில் தேர் வீதி உலாவின் போது, ஆயிர்க்கணக்கான மக்கள்
திரண்டிருந்த நிலையில் அதனை தரித்துக் கொண்டிருந்த மூதூரைச் சேர்ந்த 63 வயது
பெண்ணின் கழுத்தில் இருந்த (2½) பவுண் தங்க சங்கிலியை இனம்தெரியாதோரால்
அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டையடுத்து பொலிசார் தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9165e7e-5721-4eae-bfe4-1fe3b5183152/26-6a7b220d380d6.webp' /></p><p>இதேவேளை, ஆலயப் பெருவிழா நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருவதால்,
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தமது ஆபரணங்கள், பணப்பைகள் உள்ளிட்ட உடைமைகளின்
பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூட்டுக்குள் சிக்கியிருந்த மர்மப் பொருள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-update-on-the-chemmani-mass-grave-1786453807"></link>
            <id>https://tamilwin.com/article/today-update-on-the-chemmani-mass-grave-1786453807</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 15 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 15 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்று(11.08.2026) இடம்பெற்ற போதே குறித்த மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><h2>
15 மனித எலும்பு கூடுகள் அடையாளம்</h2><p>

யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e0cdcd3-af7e-42e8-a3a3-b4137fac7db8/26-6a7b1f7c4efdc.webp' /></p><p>
</p><p>
இதுவரை மொத்தமாக 539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில், 524 மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
516 வது இலக்கமிடப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில்
மீட்கப்பட்ட தாயத்து தகடு போன்ற ஒன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய்
நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701d1e1d-46e9-48f5-b9ce-e1270fc17cc7/26-6a7b1f7d5f77d.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b89f75f-08c9-44e1-bd4b-da0f35399943/26-6a7b1f7e36765.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a97881-0ea2-4b93-b4f1-8ae8b92c9775/26-6a7b1f7f161a1.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் ஆணையினை நிறைவேற்றும் நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு - ஆளும் தரப்பு பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judges-act-of-fulfilling-the-people-s-mandate-1786451268"></link>
            <id>https://tamilwin.com/article/judges-act-of-fulfilling-the-people-s-mandate-1786451268</id>
            <summary type="text">மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை
நீடிப்பு என&amp;nbsp;கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை
நீடிப்பு என&nbsp;கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கையில் நீதியரசர்களின் காலநீடிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர்களின் இரண்டு
ஆண்டுகால நீடிப்பு தொடர்பில் இன்று எதிர்கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a1886a-1d1c-429a-8b08-789786b95281/26-6a7b1cbf2058d.webp' /></p><p>கடந்த 76
ஆண்டுகளாக நாட்டினை குற்றச்செயல்கள் நிறைந்த நாடாக இவர்கள் மாற்றி
இருக்கின்றார்கள். அதனால் தான் 40ஆயிரத்திற்கும் அதிகமான சிறைக்கைதிகள்
இருக்கின்றார்கள்.</p><p> 20 ஆயிரம் கைதிகள் இருக்கும் இடத்தில் 40 ஆயிரம் கைதிகள்
காணப்படுகின்றார்கள்.&nbsp;</p><p>இலஞ்சஊழல் மோசடிக்கு எதிராக போதைப்பொருளுக்கு எதிராக இவ்வாறான
குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் சட்டநடவடிக்கைகளும் வேகமாக
முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றபோது அனுபவம் உள்ள
நீதியரர்கள், அதிகாரிகள், சட்டத்தரணிகள் தேவை. இவை அனைத்தினையும் கருத்தில்
கொண்டுதான் இந்த கால எல்லை நீடிப்பிற்கான அனுமதியினை பெற்றுக் கொடுக்கின்றோம்.</p><p>இதில் எந்தவிதமான தனிப்பட்ட லாபங்கள் கிடையாது. நாட்டு மக்கள் ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று ஆணை
வழங்கியிருக்கின்றார்கள்.</p><h2>குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுபவர்களாக&nbsp;</h2><p>அந்த மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு
நடவடிக்கையையே இந்த நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு.</p><p>
இது குறித்து தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது விமர்சனம் செய்து
வருகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316c0afe-94c7-4735-a9d4-d8fc6b1b284b/26-6a7b1cbff0252.webp' /></p><p>இதனால் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்ற வேகத்தினை பார்க்கின்ற
போது தங்கள் குடும்பமே உள்ளே சென்று கம்பி எண்ண வேண்டிய நிலை வரும் என்று
அவர்களுக்கு தெரியும்.</p><p>இவர்கள் சிறைக்கு செல்கின்ற வரிசையினை பார்க்கின்றபோது
கடந்த 26 ஆண்டுகளாக இந்த நாட்டினை நாசம் செய்து கொள்ளையடித்த ராஜபக்ச கும்பல் கூட்டாக சேர்ந்து ஆட்டம் காணுக்கின்ற நிலை இருக்கின்றது.</p><p>இந்த ராஜபக்சக்களுக்கு வால்பிடிக்கின்றவர்களை தேடிப்பாக்கின்றபொழுது
எல்லாருமே இன்று குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுபவர்களாக
இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு: ஈழத் தமிழர்களுக்கான காய் நகர்த்தல் தொடர்பான திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/project-related-to-the-movement-crops-eelam-tamils-1786452723"></link>
            <id>https://tamilwin.com/article/project-related-to-the-movement-crops-eelam-tamils-1786452723</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக, சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக, சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் இயங்கும் வள்ளுவன் தமிழ்ப் பாடசாலையின் முதல்வர் முருகவேள் தெரிவித்துள்ளார்.</p><p>

“அகளகம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடம் தமிழர்களின் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் முருகவேள், வெளிநாடுகளில் தமிழ் மாணவர்களுக்காக விசேட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தமிழர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயணங்களின் போது தமிழ்நாடு மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பல தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு, ஈழத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அவரது முழுமையான கருத்துக்களை காணொளியில் தொடர்ந்து காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u9zfHVtj19g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:53:01+00:00</updated>
        </entry>
    </feed>
