<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-25T07:46:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/professor-against-former-vice-chancellor-dismisse-1784963381"></link>
            <id>https://tamilwin.com/article/professor-against-former-vice-chancellor-dismisse-1784963381</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.
சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.
சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடு பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><p>

கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகத் தான் செயற்பட்ட வேளையில்
பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றது என பகிரங்கப்படுத்தியமை
பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு அமைவாகத் தவறானது எனக் காரணம் காட்டி அப்போதைய
பேரவை தன்னைத் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது.</p><p></p><h2>வழக்கு தள்ளுபடி</h2><p>அது தவறு எனத்
தீர்பளித்து, தன்னை மீளவும் 27.08.2022 முதல் செல்லுபடியாகும் வகையில் அப்
பதவியில் நியமிக்கக் கட்டளையிடுமாறு கோரி யாழ். பல்கலைக்கழக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடே பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9cb8d0b-4c93-4e3d-b240-875ae5fdf82d/26-6a6466a59d97d.webp' /></p><p>
இந்த வழக்கு மீதான கட்டளை கடந்த ஜூன் 30 ஆம் திகதி பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> முறைப்பாட்டாளரினால்
முன்வைப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆராயும் நியாயாதிக்கம் மேன்முறையீட்டு
சபைக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஜூரிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து கட்டளை
பிறப்பித்தனர்.
</p><p>
இதே பேராசியர் பல்கலைக்கழகத்துக்கெதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த
வழக்குகளைக் கடந்த வருடம் மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T07:32:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமை தவறிய அதிகாரிகள்! பின்னணியில் திடீரென மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/officials-dereliction-of-duty-leads-cyber-theft-1784956876"></link>
            <id>https://tamilwin.com/article/officials-dereliction-of-duty-leads-cyber-theft-1784956876</id>
            <summary type="text">நிதி அமைச்சகத்தின் கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் தத்தமது கடமைகளை முறையாக செய்யத்தவறியதன் காரணமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிதி அமைச்சகத்தின் கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் தத்தமது கடமைகளை முறையாக செய்யத்தவறியதன் காரணமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இணையவழித்திருட்டு நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
இலங்கை மத்திய வங்கி அரச நிதிக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>

மேலும், இலங்கை மத்திய வங்கி தொடர்பாக நிதி அமைச்சகம் பல உண்மைக்குப்புறம்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித்திருட்டு</h2><p>

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித்திருட்டு தொடர்பாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தின் அரச நிதிக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதுடன் அவற்றில் ஒன்றில் இந்த தகவல் உள்ளடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91edf81d-1bc1-44a2-a51c-42b3bf69ec38/26-6a644ef7afd4d.webp' /></p><p>

 மேலும், நிதி அமைச்சகத்தில் இருந்த அடிப்படை செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு பலவீனங்களின் காரணமாகவே, இணையவழி மோசடி குழு திரைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை திருடுவதற்கு தேவையான பின்னணி உருவாக்கப்பட்டது என்றும் அறிக்கை குறிப்பிடுகின்றது.</p><p>

நிதி அமைச்சகத்தின் வெளிநாட்டுக்கடன் செலுத்தும் செயல்முறையில் ஏற்பட்ட தோல்வியும் இந்த திருட்டுக்கு தேவையான பின்னணியை உருவாக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.</p><h2>நிதி அமைச்சகத்தின் மின்னஞ்சல் பாதுகாப்பு</h2><p>
</p><p>
இலங்கை மத்திய வங்கியால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், நிதி அமைச்சகத்தின் வெளி வளங்கள் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் கடன் பதிவேடுகளின்படி, பெறப்பட்ட செலுத்துகை அறிவுறுத்தல்கள் சரியானவையா என்பதை சரிபார்க்கும் மிக முக்கியமான கடமை ஒப்படைக்கப்பட்டிருந்த அமைச்சக அதிகாரிகள், தத்தமது கடமைகளை முறையாக செய்யவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், நிதி அமைச்சகத்தின் மின்னஞ்சலின் பாதுகாப்பை ஊடுருவல்காரர்களால் உடைக்க முடிந்ததாலும், அந்த கடமை ஒப்படைக்கப்பட்டிருந்த அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் சரியானவையா என்பதை சரிபார்க்க தவறியதாலும் இந்த திருட்டு நிகழ்ந்துள்ளது என்பது தெளிவாகின்றது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T07:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேர்மையான அரச சேவைக்கான தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clean-sri-lanka-programme-1784962885"></link>
            <id>https://tamilwin.com/article/clean-sri-lanka-programme-1784962885</id>
            <summary type="text">நேர்மையான அரச சேவைக்கான &quot;நேர்மைக்கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா&quot; தேசிய
செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க
எஸ்.சுதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேர்மையான அரச சேவைக்கான "நேர்மைக்கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய
செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க
எஸ்.சுதாகரனின் தலைமையில் நேற்றைய தினம் (24.07.2026) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல்
மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>

இதன்போது, 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரமாக”
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், நேர்மை வாரத்தை முன்னிட்டு
மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p>
</p><p>
மேலும், ஜூலை 28ஆம் திகதி காலை 9 மணிக்கு நேர்மை கலாசாரத்தை ஊக்குவிக்கும்
நோக்கில் நடைபவனி நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும்
கலந்துரையாடப்பட்டது.</p><h2>ஜனாதிபதி செயலக&nbsp;சுற்றறிக்கை</h2><p>
அந்தவகையில் ஜூலை 27 நிறுவன ரீதியாக நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை
28 நிதி, டிஜிட்டல், தொழில் முயற்சியாண்மை மற்றும் தொழிநுட்ப நேர்மையை
மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 29 ஆன்மீக, நெறிமுறை, கலாசார மற்றும் சமூக
நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 30 செயற்பாட்டு, உட்கட்டமைப்பு, சேவை
வழங்கல் மற்றும் உழைப்பு நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 31 சுற்றாடல், வள முகாமைத்துவ, கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மையை
மேம்படுத்தும் நாளாகவும் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள
சுற்றறிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி,மாவட்ட
செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T07:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த மாணவி கல்குவாரியிலிருந்து சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/girl-s-body-is-found-in-a-quarry-1784960434"></link>
            <id>https://tamilwin.com/article/girl-s-body-is-found-in-a-quarry-1784960434</id>
            <summary type="text">பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவலதென்ன, கஜுவத்த பகுதியில் கற்குழியொன்றிலிருந்து 17 வயது மாணவியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவலதென்ன, கஜுவத்த பகுதியில் கற்குழியொன்றிலிருந்து 17 வயது மாணவியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>பொலிஸாருக்கு நேற்று (24)

கிடைத்த தகவலின் அடிப்படையில், மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>
மஹவலதென்ன பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1647bfbb-13a5-4af6-83f3-c4b60839c7fd/26-6a645ceea6441.webp' /></p><p>
</p><p>
குறித்த மாணவி வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த நிலையில், அவரது தந்தை பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, அவரது சடலம் கற்குழியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சடலம் மீதான பிரேத பரிசோதனை</h2><p>
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,&nbsp;பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (25) பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T07:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்தில் உள்நாட்டு உற்பத்தியின் பங்கு குறைவாகவே உள்ளது - ஆளுநர் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-production-share-remains-low-gov-vedanayagan-1784958371"></link>
            <id>https://tamilwin.com/article/north-production-share-remains-low-gov-vedanayagan-1784958371</id>
            <summary type="text">உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய
மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு&amp;nbsp; மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய
மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு&nbsp; மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
 நேற்றுமுன்தினம்(23.07.2026) ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையின் தேசிய உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பைக் கணிசமான
அளவில் அதிகரிப்பது தொடர்பாக துறைசார் வல்லுநர்கள் மற்றும்
பங்குதாரர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி</h2><p>
</p><p>
தற்போது இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி இலக்கு 7 சதவீதமாக
நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், வட மாகாணம் தனது பொருளாதாரத்தை
மீட்டெடுப்பதற்கு 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதை முக்கிய இலக்காகக் கொண்டு
அதற்குரிய செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் இதன்போது
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad73f1b2-bde7-4968-9d61-e4ab5d15ccb7/26-6a64538591df6.webp' /></p><p>

இந்தக் கலந்துரையாடலில், 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா
பெருந்தொற்று மற்றும் 2022ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால்
பொருளாதாரத் தரவுகளில் பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டமையை ஆளுநர்&nbsp;சுட்டிக்காட்டியயுள்ளார்.</p><p>மேலும் வட மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்குக் கூடுதல்
கவனம் செலுத்த வேண்டிய துறைகள் தொடர்பிலும் அவர் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.</p><p></p><h2>விவசாயம் மற்றும் கடற்றொழில்</h2><p>

இதன்போது பின்வரும் முக்கிய துறைகள் மற்றும் அவற்றுக்கான திட்டங்கள் குறித்து
ஆராயப்பட்டுள்ளன:
</p><p>
நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் புதிய காணிகளைத் தேடுவதை விட, நவீன
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தற்போதைய உற்பத்தியின் வினைத்திறனை
அதிகரிப்பதில் அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும். </p><p>

சிறுதானியங்கள், பயறு வகைகள்,
பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை விரிவுபடுத்துவது அவசியமாகும்.
மேலும், பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக, பால் மா
இறக்குமதிக்காகச் செலவிடப்படும் சுமார் 400 மில்லியன் டொலர்களை மீதப்படுத்த
முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/923ae33d-67a1-4bfb-82b3-d06c3ce73df3/26-6a645386455af.webp' /></p><p>

அறுவடை செய்யப்படும் விவசாயப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யாமல், அவற்றை
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக
இலாபத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
</p><p>
வட மாகாணத்தின் பொருளாதாரத்தில் கடற்றொழில் சுமார் 3.7 சதவீத பங்களிப்பை
வழங்குகின்றது. கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி மற்றும் கடல் அட்டை வளர்ப்பு
போன்றவற்றை மேலும் ஊக்குவிப்பது முக்கிய தேவையாகும்.
</p><p>
தகவல் தொழில்நுட்பம் 1.12 சதவீதமும், சுற்றுலாத்துறை 0.3 சதவீதமும் என
இத்துறைகளின் தற்போதைய பொருளாதாரப் பங்களிப்பு மிகக் குறைவாகவே
காணப்படுகின்றது. இந்தத் துறைகளை மேம்படுத்துவதற்குப் உட்கட்டமைப்பு வசதிகள்
மற்றும் அரச-தனியார் துறை பங்குபற்றல் மிகவும் அவசியமாகின்றது.</p><p></p><h2>டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தரவுகள்&nbsp;</h2><p>வட மாகாணத்தில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, அரச கட்டடங்களில் கூரை மேல் சூரிய சக்தித் தகடுகளை பொருத்துதல் மற்றும் மின்கல சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.</p><p>
அதிக விளைச்சல் ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை
என்பதோடு, இடைத்தரகர்களே அதிக இலாபம் பெறுகின்றனர். </p><p>இதற்குத் தீர்வாகப் பெறுமதி
சேர் மையங்களை நிறுவுதல் மற்றும் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்துதல்
அவசியமாகும். 

மேலும், சரியான திட்டமிடலுக்குத்
தற்போதைய பொருளாதாரத் தரவுகள், குறிப்பாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தரவுகள்
மிகவும் அவசியமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/672183dd-bb51-4b11-8d27-f0d8870f96ea/26-6a645386e8dbe.webp' /></p><p>அத்துடன், நவீன விவசாய
தொழில்நுட்பங்கள் குறித்து சுமார் 800 இளம் விவசாயிகளுக்குப் பயிற்சி
வழங்குவதற்கான திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.
</p><p>
விவசாயம், கடற்றொழில், கால்நடை மற்றும் சிறு கைத்தொழில் என அடையாளம் காணப்பட்ட
ஒவ்வொரு துறைக்குமான விரிவான திட்ட அறிக்கைகள் மற்றும் முதலீட்டு
முன்மொழிவுகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் தயாரித்து நிதி
ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்பட வேண்டும்
என இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இந்த விசேட கலந்துரையாடலில், வட மாகாண ஆளுநரின் செயலாளர், வட மாகாண
விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயப் பீடாதிபதி,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடத்தின் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல்&nbsp;திணைக்களத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T06:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18th-convocation-ceremony-southeastern-university-1784958160"></link>
            <id>https://tamilwin.com/article/18th-convocation-ceremony-southeastern-university-1784958160</id>
            <summary type="text">இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா,
பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் இன்று(25.07....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா,
பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் இன்று(25.07.2026) ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
பல்கலைக்கழகத்தின் வேந்தர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில்,
துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும்
பல்கலைக்கழகப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><h2>சான்றிதழ்கள் வழங்கி வைப்பு</h2><p>
இளமானி மற்றும் முதுமாணி பட்டங்கள் வழங்கல்

இன்றைய பட்டமளிப்பு விழாவில் கலை, கலாசாரம், மேலாண்மை, வர்த்தகம், பொறியியல்,
பயன்பாட்டு அறிவியல் மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களைச்
சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இளமானி (Undergraduate), முதுமாணி (Postgraduate) மற்றும் கலாநிதி பட்டங்கள் அதிகார பூர்வமாகச் சான்றிதழ்களுடன்
வழங்கி வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/434f6c13-8463-4641-a66a-b93323bbf6d9/26-6a6456e65b841.webp' /></p><p>பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T06:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-on-the-matara-tissa-main-road-1784958878"></link>
            <id>https://tamilwin.com/article/accident-on-the-matara-tissa-main-road-1784958878</id>
            <summary type="text">மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியில் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியில் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிச்சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, வீரவில பிரதேச செயலகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி, பின்னர் வீதியிலிருந்து விலகிச்சென்று அருகிலிருந்த மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbdf8be-f640-4109-9c48-8b7cda052a22/26-6a64536093cd2.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>

இச்சம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T06:10:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-for-sri-lankan-foreign-workers-1784954292"></link>
            <id>https://tamilwin.com/article/land-for-sri-lankan-foreign-workers-1784954292</id>
            <summary type="text">
வெளிநாட்டில் பணி புரிந்து சேவைக் காலம் நிறைவடைந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் தொழிலாளர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, காணிகள் வழங்க சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வெளிநாட்டில் பணி புரிந்து சேவைக் காலம் நிறைவடைந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் தொழிலாளர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, காணிகள் வழங்க சமகால அநுர அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, திட்டமிட்ட சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>இதுதொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p></p><h2><b>

அநுரவின் அதிரடி அறிவிப்பு</b></h2><p>இதன்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் காணிகள் தொடர்பில் வலுவான ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டடியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e207c0b4-2fae-4da4-8f1b-0cef0bcd7b15/26-6a6445512b6af.webp' /></p><p>மேலும் அது குறித்து ஆராய்வதற்காக நிதி அமைச்சு ஊடாக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்தார்.</p><p>

அத்துடன், மலையக மக்களுகு்கு 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
வெளிநாட்டு உதவி மற்றும் கடன் திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக சில ஒதுக்கீடுகள் திருப்பிச் செல்வதை தவிர்ப்பதற்காக வினைத்திறனான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-25T06:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 ஆண்டுகளுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி - அநுர ஆட்சியிலும் தொடரும் அவலம்.. மக்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/road-reconstruction-in-koslanda-estate-area-1784958904"></link>
            <id>https://tamilwin.com/article/road-reconstruction-in-koslanda-estate-area-1784958904</id>
            <summary type="text">கொஸ்லந்தை - மீரியபெத்த தோட்டப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை எதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஸ்லந்தை - மீரியபெத்த தோட்டப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சினை தொடர்பில் அலட்சியமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
சந்திரபுரம், கொஸ்லந்தை எஸ்டேட், மீரியபெத்த, அம்பராகல உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 6,000க்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கை இந்த வீதியின் மோசமான நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>

100 வருடங்களுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி</h2><p>
100 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு புனரமைப்பும் இன்றி, குறித்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55432ca0-7d40-4f96-91c5-9da550d9d118/26-6a645049b7cad.webp' /></p><p>

இதுவரை பல அரசாங்கங்கள் மாற்றமடைந்த போதிலும், இந்த பிரச்சினை தொடர்பில் அரசியல் அலுவலகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும், பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஆனால் இதுவரை எவரும் உரிய தீர்வோ அல்லது பதிலோ வழங்கவில்லை என்றும், தங்களது வாக்குகளால் உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளால் கூட எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது தங்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், இதனால் அப்பகுதி இளைஞர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
மக்களின் கோரிக்கை</h2><p>
இதற்கிடையில், கடந்த மே 18ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார குறித்த பகுதிக்கு விஜயம் செய்து, “இரண்டு வாரங்களுக்குள் அனுமதி பெறப்படும்; இந்தத் திட்டத்திற்காக ரூ.500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது” என உறுதியளித்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc39541-49a7-42e8-8021-58f8b30f81ac/26-6a64504adb18a.webp' /></p><p>
</p><p>
எனினும், இரண்டு மாதங்கள் கடந்தும் எந்தவித நடவடிக்கையோ பதிலோ இல்லாத நிலையில், சில பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களது சொந்த பகுதிகளுக்கே முன்னுரிமை வழங்கி வீதி புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
இதனால், வீதி புனரமைப்பு பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பெண்கள், மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட பலர் தினமும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதால், ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82625241-7e46-4bb0-8b55-0061f26dba19/26-6a64504ba860d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b1d96aa-8324-4733-9182-aea34f4bde2c/26-6a64504c73fa6.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:59:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறப்பு QR குறியீட்டுடன் டிஜிட்டல் மரணச் சான்றிதழ்கள்! இலங்கையில் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-launches-digital-death-certificate-1784955666"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-launches-digital-death-certificate-1784955666</id>
            <summary type="text">டிஜிட்டல் மரணச் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.

மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் மரணச் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் கீழ், இந்தச் செயல்பாடுகள் தற்போது களுத்துறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

அதன்படி, முன்னர் கையால் எழுதப்பட்ட சான்றிதழ்களுக்குப் பதிலாக, தற்போது கணினி அடிப்படையிலான தரவுத்தளம் மூலம் மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.</p><h2>பாதுகாப்பான தரவுச் சேமிப்பு</h2><p>

டிஜிட்டல் முறை மூலம் மரணச் சான்றிதழ்களை வழங்குவது, அதிகாரிகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தரவு அமைப்பைப் பராமரிக்கவும், நிறுவனங்களுக்கு இடையே திறமையான தரவுப் பரிமாற்றத்தை எளிதாக்கவும், பாதுகாப்பான தரவுச் சேமிப்பின் மூலம் தகவல் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுகிறது.</p><p></p><p>

புதிய முறையின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு மரணச் சான்றிதழிலும் ஒரு சிறப்பு QR குறியீடு இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e97a7735-9332-44ba-be0a-7905140145ac/26-6a64488adb086.webp' /></p><p> </p><p>இதன் மூலம், டிஜிட்டல் தளம் வழியாக யார் வேண்டுமானாலும் அதன் நம்பகத்தன்மையை விரைவாகச் சரிபார்க்க முடியும்.
</p><p>
இந்தச் சான்றிதழ்கள், பாதுகாப்பு அம்சங்கள் உட்பொதிக்கப்பட்ட சிறப்புத் தாளில் அச்சிடப்படுகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T05:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள எல்நினோ தாக்கம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-impact-request-use-water-sparingly-1784953002"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-impact-request-use-water-sparingly-1784953002</id>
            <summary type="text">எல்நினோ தாக்கம் இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ தாக்கம் இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>

பெண்கள் வாழ்வுரிமைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை
மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாணம், வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று 
நடைபெற்றது.</p><p></p><h2>இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள எல்நினோ&nbsp;</h2><p>
</p><p>
இச்செயலமர்வில் முதன்மை வளவாளராக யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும், கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து
பிரதீபராஜா கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88dad8df-cbed-4b9c-9bea-655839897f38/26-6a6446b97b390.webp' /></p><p>

இந்த செயலமர்வில் முக்கிய அம்சங்கள் ஒன்றான வெப்பத்தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக பேராசிரியர் மேலும் கூறுகையில், </p><p>

இந்து சமுத்திர பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால்
பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.</p><p>

மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள
எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத்தாக்கத்தை
ஏற்படுத்தும்.</p><h2>நீரின் ஊடாக கடத்தப்படும் வெப்பம்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, வேகமாக பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை
விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது. இதனால் இந்து சமுத்திர கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக
வேகமாக பரவி வருகிறது.</p><p>
அத்துடன் இந்த கடல் வெப்ப ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9c3c99-b125-4e63-8f06-283aae58088f/26-6a6446ba2c7e3.webp' /></p><p>
</p><p>
இலங்கையை பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார்
மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது
உருவாக்கும்.
</p><p>
மேலும், வறட்சியும், மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான
காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும்.எல்நினோ, அக்டோபர் மற்றும்
நவம்பர் மாதங்களில் பாரிய மழை வீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.</p><p>
அக்டோபர் மாதத்திற்கு பின்னரே காற்றழுத்தத்தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான
சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.</p><h2>சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றல்</h2><p>
</p><p>
"எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர்
முகாமைத்துவத்தை பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய
நீர்த்தட்டுப்பாட்டை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
இந்நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின்
முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச்செயற்பாட்டாளர்கள் எனப்பலரும்
கலந்துகொண்டனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:16:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக்குழு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த பொலிஸ் அதிகாரி! மனைவி தொடர்பில் வழக்குத்தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-police-office-files-case-against-wife-1784940567"></link>
            <id>https://tamilwin.com/article/senior-police-office-files-case-against-wife-1784940567</id>
            <summary type="text">நாட்டை உலுக்கிய பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் பலரை கைது செய்த உயர் பொலிஸ் அதிகாரியொருவர், தனது மனைவியினால் வீட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டை உலுக்கிய பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் பலரை கைது செய்த உயர் பொலிஸ் அதிகாரியொருவர், தனது மனைவியினால் வீட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.</p><p>நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு அண்மையில் தலைமை தாங்கிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு நீதிமன்றின் உதவியை நாடியுள்ளார்.</p><p></p><h2>வீட்டு வன்முறை தொடர்பாக வழக்குத்தாக்கல் </h2><p>
</p><p>குறித்த உயர் பொலிஸ் அதிகாரி, தனது மனைவிக்கு எதிராக தொடர்ந்த வீட்டு வன்முறை வழக்கு தொடர்பாக அவரது மனைவி நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ உரைகளை சமர்ப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf89759-a4d7-44b9-ba69-e59f66bad80b/26-6a64409267cc4.webp' /></p><p>தனது மனைவியிடமிருந்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைச்செயல்கள் காரணமாக பாதுகாப்பு உத்தரவை வழங்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>தான் பணிபுரியும் இடத்திற்கு வந்து இடையூறு விளைவிப்பது, தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்வது மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுப்பது போன்ற காரணங்களால் தான் கடுமையான உளவியல் மற்றும் சுகாதார ரீதியிலான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
எவ்வாறாயினும், குறித்த பொலிஸ் அதிகாரியின் மனைவி, கணவரால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.</p><h2>நீதிமன்றில் எழுத்துப்பூர்வ கடிதம் தாக்கல்</h2><p> 
இது தொடர்பில் தனது சட்டத்தரணி ஊடாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
இது ஒரு வீட்டு வன்முறை அல்ல என்றும், கணவரின் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்காமை போன்ற காரணங்களை அடிப்படையாகக்கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தகராறு மட்டுமே என்றும் மனைவியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளரார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e24f9bf-82ad-47b2-9fba-52d8f39d64a1/26-6a6408191b65e.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>பொலிஸ் அதிகாரி குறிப்பிடுவது போன்ற வன்முறைச்சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்த எந்தவொரு மருத்துவ அறிக்கையோ அல்லது சுயாதீன சாட்சியங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் மனைவியின் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
இதற்கமைய, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு உத்தரவை இரத்து செய்யுமாறு அவர் நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
</p><p>குறித்த உயர் பொலிஸ் அதிகாரியின் தரப்பிலிருந்து இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T04:50:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் ஏற்படவுள்ள தாக்கம்! வடக்கில் அதிகாரிகளுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-governor-statement-regarding-farmers-1784952676"></link>
            <id>https://tamilwin.com/article/north-governor-statement-regarding-farmers-1784952676</id>
            <summary type="text">எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு
மாவட்டத்திலும் விவசாயக் குழுக் கூட்டங்களை உடனடியாக நடத்தி நெல்
விதைப்புக்கான திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு
மாவட்டத்திலும் விவசாயக் குழுக் கூட்டங்களை உடனடியாக நடத்தி நெல்
விதைப்புக்கான திகதியைத் தீர்மானிக்குமாறும், போதிய நீருள்ள குளங்களின் கீழான
சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்குமாறும் வட மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
</p><p>
எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் மற்றும் தணிப்பு
நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்ட கலந்துரையாடல் ஆளுநர்
செயலகத்தில் நேற்று (24.07.2026) இடம்பெற்றது.</p><p>

இக்கலந்துரையாடலில் 'சூம்' தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்ட வளிமண்டலவியல்
திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர், எல் நினோ தாக்கம் குறித்து விரிவான
விளக்கமளித்தார்.</p><p></p><h2>இலங்கையில் எல் நினோ தாக்கம்</h2><p> </p><p>ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இதன் தாக்கம்
ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படும் எனவும், ஒவ்வொரு எல் நினோவும் தனக்கே
உரித்தான தனித்துவமான தன்மைகளைக் கொண்டிருக்கும் எனவும் அவர்
சுட்டிக்காட்டினார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் காலநிலையை எதிர்கொள்வது தொடர்பில் விரிவாக
ஆராயப்பட்டது. </p><p>இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக்
கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.பிரதீபராஜா, வட மாகாணத்துக்கான
மழைவீழ்ச்சியானது வழமைபோன்று அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்
தாழமுக்கங்களால் ஏற்படும் எனத் தெரிவித்தார். மழை பெய்யும் நாட்களின்
எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மழைவீழ்ச்சியின் அளவு அதிகமாக இருக்கும்
எனவும், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மழைக்கான வாய்ப்பு
மிகக் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>அத்துடன், அக்டோபர் 12ஆம்
திகதிக்குப் பின்னரே வட மாகாணத்துக்கான மழைவீழ்ச்சி ஆரம்பமாவதற்கான
சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்
எஸ்.சிவஸ்ரீ, மத்திய விவசாய அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய எதிர்வரும் அக்டோபர்
மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நெல் விதைப்பை நிறைவு செய்ய வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார். </p><p>அத்துடன், மூன்று அல்லது மூன்றரை மாத கால நெல்
இனங்களையே பயிரிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><h2>மழைவீழ்ச்சியால் பயிர் பாதிப்பு</h2><p>
</p><p>யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் நெல் விதைக்கப்பட்டு 12 நாட்கள்
கடந்த பின்னர் கிடைக்கும் மழைவீழ்ச்சியால் பயிர்கள் பாதிக்கப்படுவது குறைவாக
இருக்கும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>இதனைக் கருத்திற்கொண்டு,
ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயக் குழுக் கூட்டங்களை நடத்திப் பொருத்தமான நெல்
விதைப்புத் திகதிகளைத் தீர்மானிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.</p><p></p><p>
</p><p>
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் த.ராஜகோபு கருத்துத்
தெரிவிக்கையில், குளங்களில் சிறுபோகப் பயிர்ச்செய்கை நிறைவடைந்த பின்னரும்
சராசரியாக 20 சதவீதமான நீர் எஞ்சியுள்ளதாகத் தெரிவித்தார். வன்னேரிக்குளத்தில்
மூன்றாம் போகமாகச் சிறுதானியப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையையும்
அவர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து ஆளுநர் பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு
வழங்கினார்.</p><p>
அதிக வெப்பத்தால் குளங்களில் நீரின் ஆவியாதல் வீதம் அதிகமாக இருக்கும்
என்பதால், தற்போது எஞ்சியுள்ள நீரைப் பயன்படுத்தி மூன்றாம் போகமாகச்
சிறுதானியப் பயிர்ச்செய்கையை முன்னெடுக்க விவசாயிகள் விரும்பினால், பொருத்தமான
குளங்களில் அதற்கு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்.

இவ்வாறு அனுமதிக்கும்போது கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவை மற்றும் நிலத்தடி
நீரைச் செறிவூட்டுதல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு மிகவும் கவனமாகச்
செயற்பட வேண்டும்.
</p><p>
இம்முறை கிடைக்கப்பெறவுள்ள அதிகளவான மழைநீரை உச்ச அளவில் தேக்கி வைப்பதற்கு
ஏதுவாக, குளங்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட புனரமைப்புச் செயற்பாடுகளை விரைந்து
முன்னெடுக்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களுக்கான மாற்று குடிநீர் விநியோக
மூலங்களைக் கண்டறியும் செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும், இது தொடர்பில்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினருடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறும்
ஆளுநர் அறிவுறுத்தினார்.
</p><p>
இதேவேளை, நீரின் ஆவியாதல் வீதம் அதிகமாகக் காணப்படும் தற்போதைய நிலையில்,
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாகக்
குறைவடைந்து வருவதால், பொதுமக்களும் விவசாயிகளும் நீரை மிகவும் சிக்கனமாகப்
பயன்படுத்த வேண்டும் எனப் பேராசிரியர் பிரதீபராஜா இதன்போது விசேட
கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
</p><p>
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,
அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்,
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர்
அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T04:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்த பயணி! கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த பொதியில் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-passenger-arrested-in-bia-1784945336"></link>
            <id>https://tamilwin.com/article/spain-passenger-arrested-in-bia-1784945336</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கொகைன் போதைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த வெளிநாட்டவர் சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கொகைன் போதைப்பொருளுடன் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விவசாய பொறியியலாளரான 79 வயதுடைய ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><h2>&nbsp;விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதி&nbsp;</h2><p>கடந்த 22 ஆம் திகதி சியரா லியோனில் இருந்து அடிஸ் அபாபா மற்றும் தோஹா ஊடாக கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR654 விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4794e3d-5c61-4bb2-85df-e5cb60db52c7/26-6a642f2392621.webp' /></p><p>சந்தேகநபர் கொண்டு வந்த பயணப்பையை சுங்க அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும், சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருட்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், அவரது மற்றைய பயணப்பை குறித்த விமானத்தில் வராத காரணத்தினால், உரிய வருகை நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
தாமதமாக வந்த பயணப் பை பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன், அதைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு வந்துள்ளார்.
</p><h3>பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயணப்பை</h3><p>குறிப்பிட்ட பயணப் பையை விடுவிப்பதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் அது எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cdd66a2-9a3c-4a78-b494-19165c2e0c3f/26-6a642f244435e.webp' /></p><p>இதன் போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவதானிக்கப்பட்டதையடுத்து, அது முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பயணப் பையினுள் மிகவும் நுட்பமான முறையில் முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கொகைன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன் மொத்த எடை 2.198 கிலோகிராம் எனவும் இதன்பெறுமதி 109.9 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பாக&nbsp; ஆரம்ப விசாரணைகளை&nbsp;இலங்கைச் சுங்கம் தொடங்கியுள்ளது.
</p><p>
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட கொகைன் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-25T04:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்து இன்று வெளியாகவுள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/neet-protest-india-1784952262"></link>
            <id>https://tamilwin.com/article/neet-protest-india-1784952262</id>
            <summary type="text">இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று(25.07.2026) முட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று(25.07.2026) முடிவெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

நீட் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் திகதியில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.</p><p></p><h2>இன்று நண்பகலுக்குள் முடிவு</h2><p>ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும் இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று வருகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33128aeb-11c7-4a19-aa4e-76e67644a2aa/26-6a643ab13ca93.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடக் கோரி தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானர். </p><p>மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>

இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்தே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
</p><p>
இதனையடுத்து, அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் அவகாசம் கோரியதுடன், தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் குறித்து இன்று (ஜூலை 25) நண்பகலுக்குள் முடிவெடுப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T04:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! இந்தியாவில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-suspected-wattala-shooting-arrested-in-india-1784949761"></link>
            <id>https://tamilwin.com/article/two-suspected-wattala-shooting-arrested-in-india-1784949761</id>
            <summary type="text">வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இருவரை இராமேஸ்வரம் கடலோர காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இருவரை இராமேஸ்வரம் கடலோர காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளையை சேர்ந்தவர்கள் என்றும் 30 மற்றும் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது.</p><p>கடந்த வியாழக்கிழமை வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸ் சந்தேகிப்பதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>கடவுச்சீட்டின்றி சட்டவிரோதமாக ஊடுருவல்</h2><p>இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (23) இரவு மன்னார் பேசாலை கடற்கரையிலிருந்து ரூ.3 இலட்சம் பணம் கொடுத்து படகில் புறப்பட்டு, நேற்று (24) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8de0bfc-e2a5-4164-a20d-985111b69f0e/26-6a64334658e62.webp' /></p><p>கடவுச்சீட்டு இன்றிச் சட்டவிரோதமாக ஊடுருவியதற்காக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைக்க மரைன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>மேலும், இருவர் மீதும் இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p>இதன் காரணமாக, இருவரையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து 'கியூ' பிரிவு பொலிஸார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><h2>5 பொலிஸ் குழுக்கள் விசாரணை</h2><p>இதேவேளை, வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நேற்று இரவு பிறந்த நாள் வரவேற்பு மண்டபமொன்றில் நடைபெற்ற விருந்தொன்றிற்குள் புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய நபரொருவர் உயிரிழந்திருந்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1b6e75-6cc3-4253-af31-1a0b278342db/26-6a6433470954c.webp' /></p><p>இந்த சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரைக் இலக்கு வைத்தே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், இலக்குத் தவறியதால் அவருக்கு அருகில் இருந்தவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>மேலும், துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனவழிப்புக்கு நீதிகோரி போராட்டத்தில் குதித்த புலம்பெயர் தமிழர்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-diaspora-joins-fight-for-justice-1784951871"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-diaspora-joins-fight-for-justice-1784951871</id>
            <summary type="text">தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டமானது, லண்டனில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த போராட்டமானது, லண்டனில் உள்ள இலங்கை தூதுரகம் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இடங்களில் புலம்பெயர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>இனவழிப்பு&nbsp;</h2><p> </p><p>

இதன்போது, 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற யூலை படுகொலை மற்றும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளதுடன், பதாதைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09b209d6-0ba7-46d3-a69c-1d0bc70658a0/26-6a6434b82bf20.webp' /></p><p> </p><p>


அத்துடன், 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம்
திகதி தொடங்கி இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில்
உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட
அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.</p><p> 

அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7665002-a4cf-41ff-a5ee-9e856c0ca7df/26-6a6434b92594c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6412a737-aeb6-46f2-b1fc-fd5e24cc8ba5/26-6a6434b9ea4f4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07e497a-76c0-4250-937c-5ae755dae262/26-6a6435396864b.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணொளி எடுக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-killed-in-elephant-attack-1784947790"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-killed-in-elephant-attack-1784947790</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் – மன்னகண்டல் நெல்
வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் – மன்னகண்டல் நெல்
வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் சென்றிருந்த நபர் ஒருவர்,
அதே யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம்&nbsp; நேற்று(24.07.2026) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நபர் ஒருவர் வசந்தபுரம் – மன்னகண்டல் நெல் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9c5a61e-6155-47a4-874a-dfa48cd3f970/26-6a642d0fa37b7.webp' /></p><p>இதன்போது குறித்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளார்.</p><p>இந்நிலையில் காயமடைந்த அவர் முதலில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். </p><p>பின்னர் மேலதிக சிகிச்சைக்காக
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், மாலை 4.00
மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>உயிரிழந்தவர் கைவேலி, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பூபாலசிங்கம் கமலேஸ்வரன்
(வயது 49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T03:27:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு - பல கோணங்களில் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodies-of-two-women-recovered-in-ampara-1784947028"></link>
            <id>https://tamilwin.com/article/bodies-of-two-women-recovered-in-ampara-1784947028</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணைகளின் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக சடலம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><h2>மருதமுனை சம்பவத்தில் தீவிர விசாரணை</h2><p>மருதமுனையை சேர்ந்த (வயது 20) திருமணமாகாத பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2956c5-d0bd-4a39-b682-424fc85e6fbc/26-6a6427f4cccc6.webp' /></p><p>இந்த மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் மற்றும்
விமர்சனங்கள் பரவியதை தொடர்ந்து சம்பவம் குறித்து பல கோணங்களில் பொலிஸாரும், அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p>இந்நிலையில், கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் சம்பவ இடத்திற்குச்சென்று
மரண விசாரணை மேற்கொண்டார். </p><p>உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம்
நிலவுவதனால் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு
அனுப்புமாறு உத்தரவிட்டார்.</p><h2>அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பு </h2><p>அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை
முன்னெடுக்கப்பட்டது. </p><p>இதன்போது உயிரிழப்பின் துல்லியமான காரணத்தைக்
கண்டறிவதற்காக சடலத்தின் சில உயிரியல் அவயங்கள் கொழும்பிலுள்ள அரச
பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் புதன்கிழமை (22) மாலை உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூபாலசிங்கம்
கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5c0759-3fba-47ac-b00d-314cb0e9a957/26-6a6427f581754.webp' /></p><h2>ஒரு பிள்ளையின் தாய் மரணம்</h2><p>
இதேவேளை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் திருமணமான 28 வயதுடைய பெண் வியாழக்கிழமை
(23) மாலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
</p><p>
வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சம்மாந்துறை நீதிமன்ற
நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
</p><p>உயிரிழந்த பெண்&nbsp;ஒரு பிள்ளையின் தாய் என்றும், அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் மரணத்திற்கான
பின்னணி குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ்
குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T03:11:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய நாட்டவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russian-arrested-in-sri-lanka-1784946825"></link>
            <id>https://tamilwin.com/article/russian-arrested-in-sri-lanka-1784946825</id>
            <summary type="text">அளுத்கம, மொரகல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அளுத்கம, மொரகல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்து இணையம் ஊடாக பணம் உழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 35 வயதுடைய ரஷ்ய நாட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

எந்தவொரு சட்டபூர்வமான விசா அனுமதியும் இன்றி சுமார் 7 ஆண்டுகளாக இவர் இவ்வாறு நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.</p><p></p><h2><b>சட்டபூர்வமான விசா அனுமதி</b></h2><p>

கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, வெளிநாட்டவரிடம் இருந்த 5 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சா பொதியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/166e34f4-e241-4d8c-8597-7a3a0d5ade84/26-6a6423dbc697f.webp' /></p><p>அவரது கடவுச்சீட்டைப் பரிசோதித்தபோது, அவர் 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்துள்ளார். அத்துடன், அன்றிலிருந்து நீண்ட காலமாக விசா இன்றித் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேக நபர் இணையம் ஊடாகப் பணம் உழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் சஞ்சீவ தெரிவித்தார்.</p><p> 

இது தவிர, சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான ரஷ்ய நாட்டவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி, இரண்டு மடிக்கணினிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T02:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 17இற்குள் விண்ணப்பிக்கவும் - பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-from-the-mahapola-fund-1784946369"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-from-the-mahapola-fund-1784946369</id>
            <summary type="text">மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான&amp;nbsp; இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான&nbsp; இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் இதனை அறிவித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026 ஆகஸ்ட் 17இற்குள் தங்களது இணையவழிப் பதிவை நிறைவு செய்யுமாறு நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p></p><h2>இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளில் மாத்திரம்&nbsp;</h2><p>
இறுதித் தெரிவுப்பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, இறுதி திகதிக்கு முன்னதாக <a href="https://mahapola.lk/BankApp2025/" target="_blank">https://mahapola.lk/BankApp2025/</a>&nbsp;என்ற மஹாபொல இணையதளத்தில்&nbsp;பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355673bf-2d34-4ede-9db1-48414b25a80d/26-6a642206a3a50.webp' /></p><p>
</p><p>
இணையவழிப் பதிவை நிறைவு செய்த பிறகு, மாணவர்கள் விண்ணப்பத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழுடன் அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>


கல்வி உதவித்தொகை கொடுப்பனவுகள், விண்ணப்பதாரரின் பெயரில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தனிநபர் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று மஹாபொல நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், 2024 - 2025 மஹாபொல கல்வி உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தத்தமது பல்கலைக்கழகங்கள் மூலம் தங்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
</p><p>
பல்கலைக்கழகங்கள் அத்தகைய மேன் முறையீடுகளை 2026 ஒக்டோபர் 15, அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T02:40:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உச்சத்தை தொட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இலங்கையில் பதிவான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-and-silver-prices-change-1784945966"></link>
            <id>https://tamilwin.com/article/gold-and-silver-prices-change-1784945966</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (25) சடுதியாக அதிகரித்துள்ளன.அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,054.89 அமெரிக்க டொலராக ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (25) சடுதியாக அதிகரித்துள்ளன.</p><p>அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,054.89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 58.31 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.</p><p></p><h2>இலங்கையில் இன்று தங்கத்தின் விலை</h2><p>
</p><p>
அமெரிக்க டொலரின் மதிப்பு மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்கள் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்றும் குறிப்பிடுகின்றன.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b350517-9429-4827-bf9a-399c154c0691/26-6a642032a39ed.webp' /></p><p>இதேவேளை,&nbsp;சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.</p><p>இதற்கமைய,&nbsp;இலங்கையில் இன்று (ஜூலை 25, 2026) நிலவரப்படி, ஒரு கிராம் 24 கரட் தங்கத்தின் விலை தோராயமாக ரூ. 46,070 ஆகவும், 8 கிராம் (ஒரு பவுன் ) 24 கரட் தங்கத்தின் விலை ரூ. 368,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-25T02:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு போர்ட் சிட்டியில் ஏற்பட்ட மோதல்! படுகொலை செய்யப்பட்ட சீனப்பிரஜை குறித்து அம்பலமான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murdered-china-citized-is-cyber-criminial-1784941545"></link>
            <id>https://tamilwin.com/article/murdered-china-citized-is-cyber-criminial-1784941545</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் வைத்து சீன பிரஜைகள் குழுவொன்றினால் கடத்திச்செல்லப்பட்டு, எஹெலியகொட - கரதன காட்டுப்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு தாக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் வைத்து சீன பிரஜைகள் குழுவொன்றினால் கடத்திச்செல்லப்பட்டு, எஹெலியகொட - கரதன காட்டுப்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும்&nbsp;சீனப்பிரஜை குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், சர்வதேச கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடி வலையமைப்பின் பிரதானியான "ஹாஃபோங்" (Hao Feng) எனப்படும் சீனக் கோடீஸ்வரர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இந்த கொடூர கொலையானது சர்வதேச கணினி குற்ற வலையமைப்பை சேர்ந்த மாஃபியா கும்பல் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடிகள்</h2><p>
</p><p>கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடிகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம் தொடர்பான தகராறே இந்த படுகொலைக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af1fe06a-f639-4e24-8cdc-0b34e1fce68f/26-6a6418ff2ad32.webp' /></p><p>இந்த சீனப் பிரஜையை கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவத்துடன் சுமார் 20 சீனர்கள் தொடர்புபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் எஹெலியகொட பொலிஸாரும் பரந்த அளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>
விசாரணைகளின்படி, குறித்த சீன கோடீஸ்வரர் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், கொழும்பு துறைமுக நகரின் பாலத்தின் மீது அவருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு சீனநாட்டவர்களும் இக்குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p> 
இவர்கள் தங்களை அவரது நண்பர்களாக காண்பித்துக்கொண்டே அவரை துறைமுக நகருக்கு அழைத்து சென்றுள்ளனர்.</p><p>
மேற்படி இரு சீனர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
துறைமுக நகரில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், திட்டமிட்ட சீனக் கும்பலால் கடத்தப்பட்ட இந்தக் கோடீஸ்வரர், எஹெலியகொட - கரதன பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>அதன் பின்னர், அவரது உடலை அப்பகுதியிலுள்ள காட்டுக்குள் கற்களை கொண்டு மூடிவிட்டு அக்கும்பல் தப்பிச்சென்றுள்ளது.
</p><p>எஹெலியகொட கரதன பகுதியில் சட்டவிரோத மதுபான முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று, கற்களுக்கு இடையே மனித கை ஒன்று வெளியே தெரிவதைக் கண்டு சோதனை செய்தபோது, அது கடத்தப்பட்ட சீனப் பிரஜையின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.</p><p> </p><p>இதனைத் தொடர்ந்தே இக்கொலை தொடர்பான பரந்த அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><h2>கொலையாளிகளுக்கு வெளிநாட்டு பயணத்தடை</h2><p>
</p><p>கொலையாளிகள் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, அவர்களுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெறுவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56b1388-21cf-4571-8de5-cfa403b0e09e/26-6a640bea8c0fa.webp' />&nbsp; &nbsp;</p><p>
இதேவேளை, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இச்சம்பவம் தொடர்பில் விரைவான மற்றும் முறையான விசாரணைகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>மேலும், சந்தேகநபர்களான சீனப்பிரஜைகளுக்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படாத வகையில் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சீனத் தூதரகம் இலங்கை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய திட்டமிட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T02:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதியுயர் அபாயமிக்க பகுதிகள் அடையாளம்..! கொழும்பு உள்ளிட்ட பல மாவட்ட மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-warning-many-districts-including-colombo-1784943753"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-warning-many-districts-including-colombo-1784943753</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு காய்ச்சலால் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு காய்ச்சலால் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (23) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 114 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> இம்மாதத்தில் கடந்த 23 நாட்களில் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை காணக்கூடியதாக உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு</h2><p>அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 59 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8b79c50-abe3-4d24-9e83-4f7ab5ddc2e6/26-6a6416b71fc2c.webp' /></p><p> </p><p>மேல் மாகாணத்தில் 42,414 (52.84 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 12,154 (15.17 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, குருநாகல், அம்பாந்தொட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்</p><h2>இரத்தப்பரிசோதனை</h2><p>&nbsp;இதேவேளை, காய்ச்சல் ஏற்படுமாயின் கட்டாயமாக அவர் ஓய்வெடுப்பது அவசியம் என்றும், டெங்கு நோய் உறுதிப்படுத்தப்படும் வரை தகுதியுள்ள வைத்தியர் ஒருவரை நாடி, அவரின் ஆலோசனைக்கு அமைவாக இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதும், அவர் அறிவுறுத்தும் பட்சத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதும் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றாத போதே, நோய் நிலைமை தீவிரமடைவதோடு, அதனால் உயிரிழப்புகள் ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுகிறது. தகுந்த நேரத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டால் டெங்கு காய்ச்சலால் ஏற்படக் கூடிய மரணங்களைக் குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T01:51:57+00:00</updated>
        </entry>
    </feed>
