<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-20T03:30:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864</id>
            <summary type="text">மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.நீர்ப்பாசன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.&nbsp;</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1ae49f-8eaa-4bde-b72a-cfbc97e155f0/26-6aaf512bc1da2.webp' /></p><p>

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T03:21:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது வீதியோர மீன் விற்பனைக்கு இறுதி எச்சரிக்கை: மீறினால் நீதிமன்ற நடவடிக்கை எனச் சுகாதாரப் பிரிவு எச்சரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-warning-roadside-fish-sales-health-dept-1789873483"></link>
            <id>https://tamilwin.com/article/final-warning-roadside-fish-sales-health-dept-1789873483</id>
            <summary type="text">பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும்
வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும்
வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொது வீதியோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுவது குறித்து இன்று (19)
அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக் கடுமையான எச்சரிக்கை அறிவித்தல்
வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஏற்கனவே சில வழக்குகள் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள
நிலையில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில்
வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு இன்று இறுதி சந்தர்ப்பமாக
எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e559d641-cde2-467c-8c89-afcbfc615c73/26-6aaf4fa7c76f5.webp' /></p><p>
</p><p>
இனிவரும் நாட்களில் சட்டத்தை மீறிப் பொது வீதியோரங்களில் மீன் விற்பனையில்
ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகத்
தயவுதாட்சணியமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, அனைத்து மீன் வியாபாரிகளும் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் சுகாதார
விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, பொதுச் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும்
பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள்
கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T03:15:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமடையும் காலநிலை - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு&amp;nbsp;தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.நுவரெலியா, காலி, களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு&nbsp;தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98a27f1-9ead-4a8d-8327-4584a5246bc2/26-6aaf4a777695b.webp' /></p><h2>பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை</h2><p>காலி மாவட்டத்தின் நாகொட</p><p>களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர</p><p>கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை</p><p>கேகாலை மாவட்டத்தின் தெரணியகல</p><p>இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T02:52:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-about-substandard-baby-diapers-1789870722"></link>
            <id>https://tamilwin.com/article/warning-about-substandard-baby-diapers-1789870722</id>
            <summary type="text">இலங்கையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்கள் குறித்து&amp;nbsp;நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.டயப்பர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்கள் குறித்து&nbsp;நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>டயப்பர்கள் பயன்படுத்தும்போது அவை கிழிவது மற்றும் மக்கிப்போவது தொடர்பாக நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய , நுகர்வோர் விவகார அதிகாரசபை சிறப்பு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.</p><h2>திடீர் சோதனைகள் </h2><p>
 

இந்த விசாரணைகளின் போது, கொட்டாவை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் உள்ள இரண்டு வணிக இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d77b14d-1a7e-48e8-9c63-eff153d3db6f/26-6aaf45e90b70e.webp' /></p><p>

 

இதன்போது, பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது இணையதள விவரங்களைக் குறிப்பிடாமல், 85ஆம் இலக்க கட்டளையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை மற்றும் மொத்தமாக விநியோகித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
 

குறித்த வழக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொட்டாவை கடையில் உள்ள நிறுவனத்திற்கு 10,000 ரூபாயும், புறக்கோட்டை கடையில் உள்ள நிறுவனத்திற்கு 25,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>முறைப்பாடுகளுக்கு...</h2><p>
</p><p>எனவே குழந்தை டயப்பர்கள் போன்ற சுகாதார பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது, பொதியில் குறிப்பிட்டுள்ள இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட தொடர்புடைய லேபிள் தகவல்களை பரிசீலிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbff5047-08bd-4755-a948-f654c3dc4737/26-6aaf45e9b3921.webp' /></p><p>
</p><p>இவற்றினை பயன்படுத்தும்போது கிழிதல் அல்லது வேறு ஏதேனும் தரக்குறைபாடுகள் ஏற்படுமாயின், அலுவலக நேரங்களில்1977 என்ற உடனடி அழைத்து முறைப்பாடு செய்யுமாறும் அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T02:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகளுக்கு சிறையில் சிறப்பு சலுகைகளா! விளக்கும் அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-special-security-for-politicians-in-prison-1789869772"></link>
            <id>https://tamilwin.com/article/no-special-security-for-politicians-in-prison-1789869772</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறைச்சாலையில் விசேட சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சிறையிலட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறைச்சாலையில் விசேட சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>சிறையிலடைக்கப்படும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு சிறப்புப் பாதுகாப்பினை வழங்குவதற்குச் சிறைச்சாலைகள் திணைக்களம் கடமைப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
சிறைச்சாலையிலுள்ள ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் பொதுவான பாதுகாப்பே அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19893c8c-9955-42d1-a32f-1d1c306d806d/26-6aaf3ece63bde.webp' /></p><p>
</p><p>அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களிலும் எந்தவித சிறப்புச் சலுகையோ அல்லது விசேட மாற்றங்களோ இருக்காது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>
அண்மைய நாட்களாகவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T02:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பினை சூழ எழுந்துள்ள அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/21-iraninan-ships-around-the-lankan-sea-1789869099"></link>
            <id>https://tamilwin.com/article/21-iraninan-ships-around-the-lankan-sea-1789869099</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் 21 ஈரானிய கப்பல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள பதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் 21 ஈரானிய கப்பல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் 47 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
அவற்றில் 21 கப்பல்கள் ஈரானுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
'MarineTraffic.com' இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், மாத்தறையிலிருந்து காலி, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு வரையிலான இலங்கையை அண்டிய சர்வதேச கடல் பகுதியில் இந்த 21 ஈரானிய கப்பல்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/072bf828-085b-4366-b7a9-ffdac9a818d5/26-6aaf3c312cd4a.webp' /></p><p> </p><p>
ஸ்ட்ரீம் (Stream), ஹால்டி (Halti), ட்ரீம் II (Dream II), சீ க்ளிஃப் (Sea Cliff), ஸ்னோ (Snow), ஹெல்ம் (Helm), டைமண்ட் II (Diamond II), டீப் சீ (Deep Sea), டினோ I (Dino I), ஹெர்பி (Herby), செவின் (Sevin), ஆம்பர் (Amber), ஹென்னா (Henna), ஹியூஜ் (Huge), டோர் (Dore), சோனியா I (Sonia I), பெலிசிட்டி (Felicity), டியூன் (Dune), ஹீரோ II (Hero II), டெய்ஸி (Daisy) மற்றும் ஷிபா (Shiba) ஆகிய ஈரானிய கப்பல்களே இவ்வாறு இலங்கையைச் சுற்றியுள்ள சர்வதேச கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்த ஈரானிய கப்பல்கள் கடந்த ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 
மேலும், இலங்கை அருகே நிறுத்தப்பட்டுள்ள இந்த அனைத்து ஈரானிய கப்பல்களும் அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட கப்பல்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>ஏற்கனவே இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T01:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-warns-about-loan-repayment-1789868450"></link>
            <id>https://tamilwin.com/article/imf-warns-about-loan-repayment-1789868450</id>
            <summary type="text">இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும், அது தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும், அது தொடர்பான ஆபத்துக்கள் இன்னும் அதிக மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>
அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்துடன் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நிறைவடையும் போதும் இந்த அதிக ஆபத்துள்ள நிலைமை நீடிக்கும் என நாணய நிதியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
கடந்த 2026 மே 28 அன்று இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று வாரியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1790b61-3920-4a90-9fd1-f99e69801e3b/26-6aaf39a966324.webp' /></p><p>
</p><p>கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளபோதிலும் கடன் நிலைபேறுதன்மை குறித்த ஆபத்து அதிகமாகவே உள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. </p><p>
இந்த பின்னணியில், 2027ஆம் ஆண்டில் இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும் என பொருளாதார மற்றும் நிதித் துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். </p><p>
இது குறித்து அரசாங்கத்தின் உள்மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் போதிலும், 2027 இல் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய கடன் வேலைத்திட்டத்திற்குச் செல்வது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
இதேவேளை, நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. </p><p>இதன்போது, நாடு அடைந்துள்ள பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் சுமையைக் குறைக்கவும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என ஜனாதிபதி பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T01:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 24இல் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள சகல பாதைகளையும் முற்றுகையிட அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-to-blockade-all-roads-parliament-september-24-1789866743"></link>
            <id>https://tamilwin.com/article/call-to-blockade-all-roads-parliament-september-24-1789866743</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் நீதித்துறையைத் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் அரசின் முயற்சியை முறியடிப்பதற்காக,
எதிர்வரும் 24ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் நீதித்துறையைத் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் அரசின் முயற்சியை முறியடிப்பதற்காக,
எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பிரதான
பாதைகளையும் முற்றுகையிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய ஒருங்கிணைந்த
தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆனந்த பாலித அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று(19.09.2026)ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><h2>சாதாரண பொதுமக்களுக்கான சிவில் பாதுகாப்பு</h2><p>மேலும் தெரிவித்ததாவது:-"அரசு தனது ஊழல்வாதிகளைப் பாதுகாக்கவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும்
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்ற முயல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d350c6b-f014-4029-bcbf-0d15a1cc0da1/26-6aaf3656ab267.webp' /></p><p>

மக்கள் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு
பெரும்பான்மைக்கு மேலாக இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்பட
வேண்டும்.
</p><p>
இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும்
நாடாளுமன்றத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதே செப்டெம்பர் 24ஆம்
திகதி நடக்கவுள்ள போராட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p>
இதற்காகச் சட்டத்தரணிகள் சங்கம், 54 தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள்
அனைவரும் திரண்டு வர வேண்டும்.</p><p>

நாட்டில் பாதாள உலகக் குற்றங்களும் போதைப்பொருள் புழக்கமும் பாடசாலைகள் வரை
ஊடுருவியுள்ள நிலையில், சாதாரண பொதுமக்களுக்கான சிவில் பாதுகாப்பு முற்றாகச்
சீர்குலைந்துள்ளது.</p><h2>குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல்</h2><p>அண்மையில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இரு அப்பாவிச் சிறுவர்கள் இரவில்
உறங்கிக்கொண்டிருந்தபோது கொடூரமாகக் கொல்லப்பட்ட போதிலும், அரசு அது குறித்து
எவ்வித அனுதாபமும் தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446b9139-1b73-447f-aecd-4de6af0420d1/26-6aaf3657628d4.webp' /></p><p> பாதாள உலகத்தையும் குற்றங்களையும்
ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று குற்றச் செயல்களைக்
கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
</p><p>
இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு
விடுக்கப்படவில்லை. இந்தியா மற்றும் சீனாவிடம் பெருமளவிலான கடன்களைப்
பெற்றுள்ள போதிலும், இவ்வாறான சர்வதேச மாநாடுகளில் இலங்கை புறக்கணிக்கப்படுவது
தற்போதைய அரசுக்குச் சர்வதேச அளவில் எவ்வித இராஜதந்திர அங்கீகாரமும் இல்லை
என்பதையே காட்டுகின்றது.
</p><p>
மேலும், எரிபொருள் விலைச்சூத்திரத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாமல் கனிம
எண்ணெய் கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ள போதிலும்,
புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்காமல், திருகோணமலை தொட்டிகளையும்
வெளிநாடுகளுக்கு வழங்கிவிட்டு மீண்டும் சட்டவிரோதமான முறையில் எரிபொருள்
விலையை உயர்த்த அரசு ஆயத்தமாகி வருகின்றது" என்றும் குறிப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-20T01:27:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை - விஜித ஹேரத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/highest-efforts-underway-secure-a-pardon-anojan-1789864152"></link>
            <id>https://tamilwin.com/article/highest-efforts-underway-secure-a-pardon-anojan-1789864152</id>
            <summary type="text">சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன்
விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன்
விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
</p><p>
இந்தச் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இன
நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களைப் பதிவேற்றம்
செய்வதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
</p><h2>இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு</h2><p>
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனைப் பகுதியைச் சேர்ந்த சிவராசா
அனோஜன் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21fd3aac-994a-48f0-adc7-13380bed92b6/26-6aaf304b0faa5.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் தெரிவித்ததாவது:-&nbsp;"கதிர்காமம் பாதயாத்திரை சென்ற குழுவுடன் இருந்த நாயின் மீது நடத்தப்பட்ட
தாக்குதலைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இரு தரப்பினருக்கும் இடையில்
கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. </p><p>இவ்வாறான பின்னணியில் சவூதியில் தொழில்
புரிந்த கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞர் சமூக வலைத்தளத்தில்
பதிவேற்றம் செய்த கருத்தால் இன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை இளைஞரான அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச
தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><h2>அனோஜனுக்கு மன்னிப்பு</h2><p>கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துடன்
அமைச்சின் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
அனோஜன் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக இன
நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களைப் பதிவேற்றம்
செய்வதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dbf6e10-b3ae-4165-ba37-effc7c73a1fc/26-6aaf304bbf70c.webp' /></p><p>

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு என்ற அடிப்படையில்
முழுமையான நடவடிக்கைகளை இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம்.</p><p> நாடு என்ற
அடிப்படையில் இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இன
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டிய
பொறுப்பு அனைவருக்கும் உண்டு" என்றும் குறிப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AzfhA81atbs" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T01:06:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலை வழக்கில் சிக்கப் போகும் ஷிரந்தி - இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thajudeen-murder-shiranthi-in-struggle-1789787626"></link>
            <id>https://tamilwin.com/article/thajudeen-murder-shiranthi-in-struggle-1789787626</id>
            <summary type="text">முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் சமகால அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் சமகால அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. </p><p>

தற்போதைய நிலவரத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையாகி உள்ளனர். </p><p> 

இந்நிலையில் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை மற்றும் பல நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b>குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம்</b></h2><p>

இந்தக் குற்றங்கள் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்சவிடமிருந்து எதிர்வரும் நாட்களில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>முதற்கட்டமாக எதிர்வரும் 24 ஆம் திகதி அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

CT ஸ்கேனருக்காக நிதி திரட்டியமை, தாஜுதீன் கொலை, நீலப் படையணி வழக்கு மற்றும் சிரலிய சவிய தொடர்பில் ஷிரந்தியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4228bcd-dd2d-4186-a00b-78128c47672f/26-6aaeb3279e021.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

அதற்கமைய, இந்த வழக்குகள் தொடர்பான அறிக்கைகள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க விசாரணைக் குழுக்கள் தயாராகி வருகின்றன. </p><p>

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்காக ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். 

அங்கு பிரபலமான மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> எனினும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-20T00:42:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனீவாவில் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகத்தை பாராட்டிய மொட்டுக் கட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/geneva-human-rights-convention-2026-slpp-1789864461"></link>
            <id>https://tamilwin.com/article/geneva-human-rights-convention-2026-slpp-1789864461</id>
            <summary type="text">இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஒரு தமிழ் புலம்பெயர் சமூகம் (Diaspora) இருக்கின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தை விடவும் சக்திவாய்ந்த சமூகமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஒரு தமிழ் புலம்பெயர் சமூகம் (Diaspora) இருக்கின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தை விடவும் சக்திவாய்ந்த சமூகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் திகழ்கிறார்கள் என நாமல் ராஜபக்சவின் விடுதலைக்காக ஜெனீவா சென்றதாக பேசப்பட்ட மொட்டுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் நாமலின் நெருங்கிய நம்பருமான மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>ஜெனீவா சென்று வந்த பின்னர் வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் அவர் தொடர்ந்து பேசியதாவது. </p><h2> 
</h2><p></p><h2>ஜெனீவாவில் நடந்த பெனல் கலந்துரையாடல்</h2><p>தமிழின படுகொலை மற்றும் தமிழீழத்திற்கான போராட்டத்தில் அவர்களின் பெரும் முயற்சியை நான் ஜெனீவாவில் 2022 இலும் பார்த்தேன். அந்த விடயத்தில் நாம் இப்போது தோற்றுப்போயிருக்கிறோம். </p><p>நான் கலந்துகொண்ட ஒரு விவாத அரங்கில் (Panel Discussion), "துர்கா" என்ற பெண் தமிழின படுகொலை தொடர்பில் பேசினார். அவர் மிகவும் புத்திசாலி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். </p><p>அவரைப் போல மூன்று நான்கு தமிழ் யுவதிகள் பேசினார்கள். அவர்கள் ஒரு வகையில் "சிறிய லக்ஷ்மன் கதிர்காமர்" போன்றவர்கள் அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் அதாவது பிரிவினைவாத கோட்பாட்டில்.
</p><p>அவர்களுடன் போட்டியிட அல்லது மோத வேண்டுமானால், நமது தேசியவாதக் முகாமிலிருந்தும் (Nationalist camp) ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், லண்டன் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் போன்ற சிறந்த இடத்தில் பயின்ற, திறமையான, புத்திசாலித்தனமான, இந்த கருத்தியலைச் சரியாகப் புரிந்துகொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும். </p><p>அது உடனடியாக நடக்கக்கூடிய ஒன்றல்ல.
ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தே அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் சில ஆளுமைகளை உருவாக்கினார்கள் . </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf9e17d5-ef51-40e3-9084-61b7ad08f1b5/26-6aaf2a0f8db0a.webp' /></p><p>உதாரணமாக இப்போது கனடாவில் கெரி ஆனந்தசங்கரி அமைச்சராக இருக்கிறார். 
இப்போது அவர்கள் இருக்கும் நாட்டில் இரண்டு மூன்று அரசியல் கட்சிகள் இருந்தால், அந்த எல்லா கட்சிகளிலுமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானர்கள் இருக்கிறார்கள். </p><p>அதனால் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. 
எனவே இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட (Organized) ஒரு விடயம். </p><p>இதற்கு முகங்கொடுப்பது எப்படி என்பது குறித்து நாம் தனியாகப் பேச வேண்டும். பல்கலைக்கழகங்களில் பயின்ற, தேசியவாதச் சிந்தனையுள்ள புத்திசாலி இளைஞர்களாகிய உங்களுக்கு இதை முன்னெடுத்துச் செல்வதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.</p><p>இலங்கையின் மனித உரிமைகள் அறிக்கை என்பது ஒவ்வொருவரும் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T00:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அரசமைப்பை உருவாக்கும் வாக்குறுதியில் மாற்றமே இல்லை! நீதி அமைச்சர் ஹர்ஷன உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-change-in-promise-to-draft-a-new-constitution-1789862065"></link>
            <id>https://tamilwin.com/article/no-change-in-promise-to-draft-a-new-constitution-1789862065</id>
            <summary type="text">நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் விசேட கவனம்
செலுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் விசேட கவனம்
செலுத்தப்படும் எனவும், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள்
முழுமையாக இரத்துச் செய்யப்படும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள்
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
</p><p>
புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டுக்குப் பொருத்தமான முரண்பாடற்ற வகையில் புதிய அரசமைப்பு ஒன்று
உருவாக்கப்படும் என நாம் அளித்த வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2349c0c-e3c0-4be4-ae9d-02e868feb9eb/26-6aaf23d244c70.webp' /></p><p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து செப்டெம்பர் 21 ஆம் திகதியுடன்
இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. </p><p>இந்த இரண்டாண்டு காலப்பகுதியில் பல்வேறு
வெளியகத் தாக்கங்களுக்கு மத்தியிலும் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதுடன், அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

புதிய யாப்பு உருவாக்க நடவடிக்கைகளில் மக்கள் பங்குபற்றுவதற்கான மனநிலை இருக்க
வேண்டும். அதற்கு நாட்டின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை
அத்தியாவசியமானதாகும்.</p><p>

பலராலும் எதிர்க்கப்பட்டு வந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள்
முழுமையாக இரத்துச் செய்யப்படும்.

அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கான, மனித
உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு அமையப் புதிய சட்டம் ஒன்று
உருவாக்கப்படும்.</p><h2>தனிப்பட்ட பிரச்சினையே தவிர&nbsp;</h2><p>நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊழலுக்கு
எதிராகக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23afcc31-b380-4759-950d-4963f7934e85/26-6aaf23d2f1dfd.webp' /></p><p>கடந்த காலங்களில்
சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டவர்கள் இன்று
சட்டத்துக்குட்படுத்தப்பட்டுள்ளமை பாரியதொரு மாற்றமாகும்.
</p><p>
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர்தான் மக்கள்
மத்தியில் போலியான நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர். </p><p>நீதிபதிகளின் பதவிக்
காலத்தை அதிகரிப்பதால் சட்டத்தின் ஆட்சிக்கும் நீதித்துறையின்
சுயாதீனத்துக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.

நீதிமன்றக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்படும் போது நிலுவையில் உள்ள வழக்குகள்
துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.</p><p> இதனால் எதிர்க்கட்சியில் உள்ள
ஊழல்வாதிகள் பாதிக்கப்படலாம். அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர
பொதுப் பிரச்சினையல்ல.
</p><p>
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக எப்போதுமே
ஒன்றுபட்டதில்லை. மாறாக, தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு
எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, தங்களைப்
பாதுகாத்துக்கொள்வதற்காகவே தற்போது அவர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்" என்றும் குறிப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்‌ச காலத்தில் உருப்பெற்ற பாதாள உலகத் தலைவர்கள் : பொன்சேகா சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-underworld-leaders-emerged-rajapaksa-regime-1789854370"></link>
            <id>https://tamilwin.com/article/all-underworld-leaders-emerged-rajapaksa-regime-1789854370</id>
            <summary type="text">தற்போது பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அனைவரும் ராஜபக்‌ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவர்கள் எனவும், நாளுக்கு நாள் அதிகரித்து
வரும் பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அனைவரும் ராஜபக்‌ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவர்கள் எனவும், நாளுக்கு நாள் அதிகரித்து
வரும் பாதாள உலகச் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக
அமைந்துள்ளதால் அவை நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத்
தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
</p><p>
கொழும்பில் நேற்று(1.0.202) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள்
எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
</p><h2>புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான கூற்றுகள்</h2><p>
நாளுக்கு நாள் பாதாள உலகச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன எனவும், இவை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இவ்வாறான செயற்பாடுகள்
நிச்சயமாகக் கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்
வலியுறுத்தினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7994a73f-10a1-470a-bb68-18b0b6256ced/26-6aaf0da2e1947.webp' /></p><p>
அழுத்தம் அதிகரிக்கும் போது இவர்களின் செயற்பாடுகளும் மேலும் அதிகரிக்கின்றன
எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசு ஆர்வத்துடன்
செயற்படுகின்றது என்று நான் கருதுகின்றேன். அது குறித்து நாம் மகிழ்ச்சியடைய
முடியும். சில நபர்கள் குறித்து நான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தேன்.
தற்போது மீண்டும் அதே நபர்கள் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன. </p><p>இந்த
விசாரணைகளில் விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் கூறினார்.
</p><p>
இந்த நடவடிக்கைகள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் தேவைக்கேற்ப அல்லது
தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன என்று சிலர்
கூறுவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான
கூற்றுகள் வெறும் பேச்சுக்காகப் பேசப்படும் விடயங்களே என்றார்.
</p><p>
மேலும், பேராயர் மல்கம் ரஞ்சித் தனது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்
கோருவதற்கு முழுமையான உரிமை உள்ளது என்றும், அரசு இதுவரையில் சரியான
பாதையிலேயே செல்கின்றது எனத் தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><h2>மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசு</h2><p>ராஜபக்‌ச குடும்பத்தினர் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிவந்து
கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், ஷிராந்தி ராஜபக்‌ச வெளிநாட்டுக்குச்
சென்றிருப்பது தொடர்பிலும் பேசப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99919d69-2772-4f51-b64e-7cb68a2b896a/26-6aaf0da399716.webp' /></p><p>
ராஜபக்‌ச குடும்பத்தின் ஒட்டுமொத்த பரம்பரையும், தந்தைகள், மாமன்மார்கள்,
மூத்தவர்கள், மருமகன்கள் மற்றும் மகன்கள் உள்ளிட்ட பலரும் நாட்டைச்
சூறையாடியதாகத் தான் முன்னர் கூறியுள்ளதை நினைவுபடுத்திய அவர், அவர்கள் செய்த
செயல்கள் தொடர்பில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
</p><p>
ஷிராந்தி ராஜபக்‌ச தொடர்பிலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
வேண்டும் எனவும், சட்டவிரோதமாகப் பணம் தொடர்பான நடவடிக்கைகள்
இடம்பெற்றிருந்தால் அதற்கும் அவர்கள் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்
எனவும் அவர் வலியுறுத்தினார்.&nbsp;</p><p>2029 ஆம் ஆண்டு நாட்டை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க வேண்டும் என யாராவது
நினைத்தால், அது நாட்டில் எவரும் விரும்பக்கூடாத முட்டாள்தனமான செயலாகும் எனக்
குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அவர் செல்ல வேண்டிய பாதை அவருக்குத் திறந்தே
இருக்கின்றது எனவும், அவர் விரைவாக அந்தப் பாதையில் செல்வார் எனவும்
விமர்சித்தார்.
</p><p>
தற்போதைய அரசுக்கு இன்னும் மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் உள்ளது
எனவும், நீண்டகாலமாக வீழ்ச்சியடைந்த நாட்டை ஓரிரு வருடங்களில் எந்த அரசாலும்
முழுமையாகக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
எனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசுக்கு அதன் ஐந்து வருட கால
முழுமையான அவகாசத்தை வழங்க வேண்டும் எனவும், அந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அவர்களின் பொறுப்பாகும் எனவும்
அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T22:50:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா.. அநுர தரப்பிடம் சரத் வீரசேக கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statue-of-prabhakaran-in-the-north-1789847402"></link>
            <id>https://tamilwin.com/article/statue-of-prabhakaran-in-the-north-1789847402</id>
            <summary type="text">
வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசாங்கம் அனுமதியளிக்குமா என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி தொடுத்திருந்தார்.</p><p>
</p><p>
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,</p><p> 

வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும்.</p><h2>நல்லாட்சி அரசாங்கத்தின் தவறு&nbsp;</h2><p>
</p><p>
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகள் தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.
</p><p> 
வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, அதனை திறக்கும் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடைகளுடன் கலந்து கொண்டுள்ளார்கள். கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி இதனை ஏற்றுக் கொள்வாரா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a17b1a-6988-4b5d-b05d-e29ff60986bf/26-6aaeef5d7881e.webp' /></p><p>
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியாக பிரபல்யமடைய வேண்டும்&nbsp; என்பதற்காக அரசாங்கம் பாதுகாப்புசார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்துகின்றது.</p><p> 

நல்லாட்சி அரசாங்கமும் இதே தவறை இழைத்தது. அதன் விளைவு தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. </p><p>

எனவே, அரசியல் வெற்றிக்காக பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அலட்சியப்டுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-19T22:35:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டும் வீழ்ச்சி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economic-growth-rate-falls-again-1789852296"></link>
            <id>https://tamilwin.com/article/economic-growth-rate-falls-again-1789852296</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கணிசமான அளவில் மீண்டும் வீழ்ச்சியுற்றிருப்பதை சுட்டிக் காட்டும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, சீர்திருத்தங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கணிசமான அளவில் மீண்டும் வீழ்ச்சியுற்றிருப்பதை சுட்டிக் காட்டும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் போனால் பாரிய நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.</p><p>

அட்வகேட்டா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும் பொருளாதார ஆய்வாளருமான தனநாத் பெர்னாண்டோ, அண்மையில் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வுக் கட்டுரையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம்</h2><p>
அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டும் கணிசமான அளவில் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42f274d0-e68f-490c-914e-ca33019829e6/26-6aaefd7d23238.webp' /></p><p>தற்போதைய பொருளாதாரம் 2018ஆம் ஆண்டில் இருந்த நிலையைக்கூட எட்டவில்லை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகளை ஆய்வு செய்யுயும்போது, ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீதமாகப் பதிவான பொருளாதார வளர்ச்சி விகிதம், இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட ஒரு சதவீதப் புள்ளி குறைந்து 4.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p>பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை நாட்டின் எதிர்காலத்திற்கு சாதகமற்ற போக்கு எனலாம்.

குறிப்பாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ​​இரண்டாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (சுமார் 3,029.8 பில்லியன் ரூபா), 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை (3,121.5 பில்லியன் ரூபா) விட கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைவாகவே உள்ளது.</p><p>
பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்றுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
</p><p>
இரண்டாவது காலாண்டில் துறைரீதியாக பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்யும்போது, ​​விவசாயத் துறை 2.3 சதவீதம் சுருங்கியுள்ளது. அதே நேரத்தில் நெல் உற்பத்தி 15.1 சதவீதமும், பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் கிட்டத்தட்ட 15 சதவீதமும் குறைந்துள்ளன.</p><h2>நாடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி</h2><p>தொழில்துறை 7.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முதன்மையாக கட்டிட கட்டுமானத் துறை (13.9மூ) மற்றும் சுரங்கம் மற்றும் கல் குவாரித் துறை (17.4மூ) ஆகியவற்றின் வளர்ச்சியால் ஏற்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e5f468f-425c-4cf1-94c9-a489caa508e8/26-6aaefd7dd0547.webp' /></p><p>
சேவைத் துறை சராசரியாக 2.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இருப்பினும், பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் மந்தநிலை, சாமானிய மக்களின் வருமான ஆதாரங்களையும் ஊதியங்களையும் நேரடியாகப் பாதிக்கிறது. </p><p>இது வறுமையின் அபாயத்தை அதிகரிப்பதோடு, கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு நாடு மீண்டும் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
</p><p>
மேலும், இது சர்வதேச கடன் மதிப்பீடுகளில் முன்னேறுவதற்கு ஒரு தடையாக அமையும்.

நாடு எதிர்கொள்ளும் இந்த அபாயத்தைக் கடக்க, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நீண்ட காலத்திற்கு 6 முதல் 7 சதவிகித அளவில் பராமரிக்க வேண்டும் என்பதுடன், இதற்காக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தாண்டிய விரிவான பொருளாதார சீர்திருத்தங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.
</p><p>
மேலும், சீர்திருத்தங்கள், குறிப்பாக காணிச் சீர்திருத்தங்கள், தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் பொதுத்துறையில் செயல்திறன் மேம்பாடுகள் ஆகியவை உடனடியாகச் செயல்படுத்தப்படாவிட்டால், நாடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்ல நேரிடும் என்றும் தனநாத் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T21:34:35+00:00</updated>
        </entry>
    </feed>
