<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-03T12:26:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய படகு விபத்து - காணாமல் போன 28 பேரை மீட்க தீவிர தேடுதல் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indonesian-ferry-catches-fire-1785757334"></link>
            <id>https://tamilwin.com/article/indonesian-ferry-catches-fire-1785757334</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகில்
தீ விபத்து ஏற்பட்டதில், ஐவர் உயிரிழந்ததுடன், 238பேர் மீட்கப்பட்ட நிலையில்
காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகில்
தீ விபத்து ஏற்பட்டதில், ஐவர் உயிரிழந்ததுடன், 238பேர் மீட்கப்பட்ட நிலையில்
காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சுராபாயா நகரிலிருந்து சுலாவேசியில் உள்ள மகசார் நகருக்கு 271 பயணிகளுடன்
சென்று கொண்டிருந்த 'கே.எம். முதியாரா செந்தோசா' என்ற படகில் ஞாயிற்றுக்கிழமை
திடீரென தீப்பற்றியது.
</p><p>
</p><p></p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>இதில் இதுவரை 238 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 28
பேரை இன்னும் காணவில்லை.
</p><p>
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் இந்தோனேசிய கடற்படை, பொலிஸ் மற்றும்
மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f812b38-fb23-4fbf-aabc-b230e11bb455/26-6a70852845bdc.webp' /></p><p> இதற்காக 7 படகுகள் மற்றும் ஒரு
ஹெலிகொப்டர் மூலம் 10 மைல் சுற்றளவில் தேடுதல் நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சுராபாயாவில் உள்ள துறைமுகத்திற்கு அழைத்து
வரப்பட்டுள்ளனர். </p><p>விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை
என்றும், தேடுதல் பணி அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என்றும் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகுப் போக்குவரத்து முக்கியப் பங்கு
வகிக்கும் நிலையில், அங்கு இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T12:16:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் பெண் உயிரிழப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-due-to-inclement-weather-1785758392"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-due-to-inclement-weather-1785758392</id>
            <summary type="text">கினிகத்தேனை - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்து பெய்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கினிகத்தேனை - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது.</p><p></p><h2> 

வீட்டுக்குள் சிக்கியுள்ள மக்கள்</h2><p>
இந்த சம்பவத்தில், மேலும் பலர் வீட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f76a7ee4-f6c5-47ae-85f6-f90cb7a3684b/26-6a7084061cf5f.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T12:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் ஆளுநரிடம் மனு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-dumping-of-garbage-in-the-keerimalai-1785756889"></link>
            <id>https://tamilwin.com/article/action-dumping-of-garbage-in-the-keerimalai-1785756889</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் , வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் , வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மனு கையளித்துள்ளனர்.
</p><p>வலி வடக்கு பிரதேச சபை அமர்வில் நடைபெற்ற மாதாந்த அமர்வில், கீரிமலை
சுடலைக்கும் கொங்கிறீற் அணைக்கும் இடைப்பட்ட கடலரிப்பு ஏற்பட்ட தாழ்வான
பிரதேசத்தில் உக்கிய மண்ணினை கொட்டுவதற்கு வலி தெற்கு பிரதேச சபைக்கு அனுமதி
வழங்குவதென தீர்மானம் எடுக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டது.</p><p>

மாறாக, தற்போது வலி தெற்கு பிரதேச சபையினரால் மேற்குறிப்பிட்ட பகுதி அல்லது
வேறொரு பகுதியில் உக்காத பொருட்கள் இலத்திரனியல் பொருட்கள், கண்ணாடிப்
பொருட்கள், சிகை அலங்கரிப்பு நிலைய கழிவுகள், நீர் தேங்கும் தகர டப்பாக்கள்
என்பன அனுமதிக்குப் புறம்பான முறையற்ற விதத்தில் தொடர்ச்சியான முறையில்
கொட்டப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பாக பல தடவைகள் வலி வடக்கு பிரதேச பிரதேச சபைத் தவிசாளருக்கு
அறிவித்தும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
</p><p>
அத்துடன், தற்போது குப்பை கொட்டப்பட்டு வருகின்ற இடமானது குடியிருப்பை அண்டிய
இடமாகவும் அதே வேளை பல புனித இடங்கள், ஆலயங்களை அண்மித்ததாகவும் காணப்படுவதால்
இவற்றின் புனிதத் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cfa38b7-0658-4a16-bffe-cd333d92ec45/26-6a7080965a808.webp' /></p><p>

எனவே இது தொடர்பாக தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருவதோடு இது தொடர்பாக
நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, கீரிமலையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க
கோரி, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், சுற்றாடல் அதிகார சபை ஆகியோரிடமும்
முறைப்பாடு செய்ய வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T11:52:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி - நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-will-decrease-from-tomorrow-1785756823"></link>
            <id>https://tamilwin.com/article/flood-will-decrease-from-tomorrow-1785756823</id>
            <summary type="text">நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனை குறிப்பிட்டார். </p><p>

அதற்கமைய, நாளை நண்பகலின் பின்னர் நிலவும் மழை நிலைமை குறையும் என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2><b>நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்</b></h2><p> 

மேலும் ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f250cb-b451-4fc5-9b6d-401de7b611a4/26-6a707e8ce803e.webp' /></p><p>அது தீவிரமடைவதுடன் எதிர்வரும் 06ஆம் திகதிக்குப் பின்னர் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும் மேலும் தெரிவித்தார். </p><p>அதற்கமைய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடைமழை பெய்யக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Qxch2UrB3q4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-03T11:42:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 பேருக்கு சர்ச்சைக்குரிய விசா வழங்கியது யார்....! பின்னணியில் செயற்பட்ட மறைகரம்! ஆபத்தாக மாறும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/visas-for-60-suspicious-chinese-were-obtained-1785723755"></link>
            <id>https://tamilwin.com/article/visas-for-60-suspicious-chinese-were-obtained-1785723755</id>
            <summary type="text">இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. </p><p>இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வணிக விசா மட்டுமே காணப்பட்டுள்ளது. </p><p>சந்தேகம் எழுந்தமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினால் இந்த விசாக்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அந்த அனுமதிப்பத்திரங்கள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2><b>வதிவிட விசா</b></h2><p> அதன்பின்னர், அவசரமாக சீன பிரஜைகள் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, அத்தகைய விசாக்களை வழங்குவதற்கான நீண்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7eb652-1bf3-4a9c-a087-afc28ca70964/26-6a70051b69747.webp' /></p><p>இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>இந்த நிலையில், எதிர்காலத்தில் இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் ஊடாக விசாரணையொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><h3><b>சீன கும்பல்</b></h3><p>இலங்கையில் செயற்படும் சீன மாபியா குழுக்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இவ்வாறு செயற்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0facd9b4-7fdf-4357-9917-e97247cbfb94/26-6a700590879cc.webp' /></p><p>கடந்த வாரம் கொழும்பில் சீன கும்பல் ஒன்று ஆயுதமுனையில் சீன பிரஜையான கோடீஸ்வரரை கடத்தி கொலை செய்திருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-08-03T11:27:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு: சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-risk-in-nawalapitiya-gampola-peradeniya-1785754319"></link>
            <id>https://tamilwin.com/article/flood-risk-in-nawalapitiya-gampola-peradeniya-1785754319</id>
            <summary type="text">மகாவலி கங்கையின் நீர்மட்டம் தற்போது பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி கங்கையின் நீர்மட்டம் தற்போது பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (03) திறக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;இதற்கமைய, மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமையால் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்றும்&nbsp;சம்பத் கொட்டுவேகொட குறிப்பிட்டார்.</p><p></p><h2>வெள்ள அபாயம்</h2><p> </p><p>

உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரளை, பஸ்பாகே கோரளை மற்றும் கங்கவட்ட கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்&nbsp; மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d781d5-04e3-404e-8e33-4a16a166a87d/26-6a7078f61f643.webp' /></p><p> 

தற்போது குறித்த பகுதிகளுக்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் அனுப்பப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறியத்தரப்பட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p> 

ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவசர நிலைகள் ஏற்பட்டின், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு சம்பத் கொட்டுவேகொட, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T11:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் மூழ்கிய மலையகம் - கொட்டகலை மக்களை மீட்கும் முயற்சியில் இராணுவத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-personnel-in-an-attempt-to-rescue-of-kotagala-1785755788"></link>
            <id>https://tamilwin.com/article/army-personnel-in-an-attempt-to-rescue-of-kotagala-1785755788</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக, மலையகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக, மலையகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, இன்று(03.08.2026) கொட்டகலை - கினிகத்ஹேன பிளாக்வாட்டர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2> 

பொதுமக்கள் கவனத்திற்கு.. </h2><p>

இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை இலங்கை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e55e8d-39b3-4379-81ed-1d1bb701d296/26-6a7078a876659.webp' /></p><p> </p><p>

நேற்று(02) பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பெய்து வரும் கனமழையால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec5ef262-ebd3-42f3-a7f2-842a4a8e961f/26-6a7078fc19c3b.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T11:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-s-writ-petition-on-sep-22-1785754648"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-s-writ-petition-on-sep-22-1785754648</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்துத் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்துத் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.</p><p>அந்த மனுவை விசாரிக்க அனுமதிப்பதா அல்லது மறுப்பதா என்பது குறித்து செப்டெம்பர் 22ஆம் திகதி அன்று உத்தரவு பிறப்பிக்கும் என அறிவித்துள்ளது.</p><p></p><h2>ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c98e681-d16f-4a0b-917a-bc3c0e69d834/26-6a7078691e3dd.webp' /></p><p>இந்த வழக்கு தொடர்பான எழுத்து பூர்வமான வாதங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T11:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA அமைப்பின் முடிவிற்கு இலங்கை கால்பந்து சம்மேளம் வரறே்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warnings-of-major-floods-along-the-kelani-river-1785750968"></link>
            <id>https://tamilwin.com/article/warnings-of-major-floods-along-the-kelani-river-1785750968</id>
            <summary type="text">FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோவினால் முன்மொழியப்பட்ட FIFA முன்னோக்கு நிறுவன முன்முயற்சியைத் திரும்பப் பெறுவதற்கான முடிவை வரவேற்று, இலங்கை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோவினால் முன்மொழியப்பட்ட FIFA முன்னோக்கு நிறுவன முன்முயற்சியைத் திரும்பப் பெறுவதற்கான முடிவை வரவேற்று, இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

இந்த முடிவு, FIFA-வின் உறுப்பு சங்கங்களுக்கு இடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை உறுதி செய்வதில் கியானி இன்ஃபான்டினோ கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக FFSL தெரிவித்துள்ளது.</p><p></p><h2>FIFA அமைப்பின் உறுப்பு சங்கங்கள்</h2><p>
</p><p>
FFSL தலைவர் ஜஸ்வர் உமர், இந்த முடிவு இன்ஃபான்டினோவின் உள்ளடக்கிய தலைமைத்துவ பாணியை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>அத்துடன், உறுப்பு சங்கங்களின் கருத்துக்கள் மற்றும் கவலைகளுக்கு செவிசாய்க்கும் அவரது விருப்பத்தையும் இது எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a33c0efd-0051-46da-b6b8-b0a759d1ed36/26-6a7076fbe7da3.webp' /></p><p>
</p><p>
FIFA தனது உறுப்பு சங்கங்கள் மற்றும் முடிவெடுக்கும் அமைப்புகளுடன் தொடர்ந்தும் ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கும் என FFSL நம்பிக்கை தெரிவித்துள்ளது.</p><p>எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் கூட்டு விவாதங்களின் ஊடாகவும், உலகளாவிய கால்பந்தின் சிறந்த நலன்களைக் கருத்திற்கொண்டும் உருவாக்கப்படும் எனவும் FFSL குறிப்பிட்டுள்ளது.</p><p>
மேலும், ஆசியா முழுவதிலும் உள்ள பல உறுப்பு சங்கங்களில் கியானி இன்ஃபான்டினோவுக்கு கிடைத்துள்ள ஆதரவை வரவேற்பதாகவும், மக்களை ஒன்றிணைக்கவும், கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், உலகளாவிய கால்பந்து சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்தவும் கால்பந்தைப் பயன்படுத்துவதற்கான அவரது தொலைநோக்குப் பார்வைக்கு FFSL தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FFFOSL%2Fposts%2Fpfbid0UDTkZjCwLrZWTzatwrFCcuzf6WBUjvAQMPcu4kuPWjmK51iYg3Lh4qrGyvL2bPasl&show_text=true&width=500" width="500" height="679" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T11:09:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் சீரற்ற காலநிலை: நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rains-disrupt-water-supply-1785754440"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rains-disrupt-water-supply-1785754440</id>
            <summary type="text">
நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக, அசுபினி எல்ல மற்றும் மாவநெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் எடுக்கும் இடங்கள் அடைப்பட்டுள்ளதாக தெரிவிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக, அசுபினி எல்ல மற்றும் மாவநெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் எடுக்கும் இடங்கள் அடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன் காரணமாக அந்த நிலையங்கள் வழக்கம் போன்று இயங்குவது கடினமாகியுள்ளதாகவும், மாவநெல்ல மற்றும் அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 

நீர்விநியோகம் தடை</h2><p>
மாவநெல்ல முதல் கரந்தன சந்திப்பு வரையிலும், மாவநெல்ல - ரம்புக்கான சாலை நெடுகிலும் உள்ள பகுதிகளுக்குக் குறைக்கப்பட்ட அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57ba987f-e04e-483f-bc14-910c18eebdfc/26-6a707540394d6.webp' /></p><p> </p><p>

வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், நீர் எடுக்கும் இடங்களைச் சுத்தம் செய்து, நிலையங்களை மீண்டும் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கூடிய விரைவில் இயல்பான நீர் விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-03T11:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறைமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்: சிறிதரன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/struggle-continue-sovereignty-is-reclaimed-1785751703"></link>
            <id>https://tamilwin.com/article/struggle-continue-sovereignty-is-reclaimed-1785751703</id>
            <summary type="text">இறமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பில் நேற்று(2.8) இடம்பெற்ற நிகழ்வொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.</p><p>மட்டக்களப்பில் நேற்று(2.8) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இறமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.அது ஆயுதப் போராட்டமா, அறவழிப் போராட்டமா என்பதை எங்களுக்கு எதிராக யார் போர் தொடங்குகிறாரோ, அவர் தான் தீர்மானிக்க வேண்டும்.</p><p></p><h2>போராட்டம்&nbsp;</h2><p>&nbsp;நாங்கள் என்ன
ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை இப்பொழுதும் இலங்கை அரசு தான் தீர்மானிக்க
வேண்டும்.அது அறவழியா, ஆயுதமா என்பதை காலம் தான் அதற்குரிய பதிலையும்
சொல்லும்.</p><p>போர் என்பதும்
போராட்டத்தினுடைய வலி என்பதும் எங்களுக்குள் இருக்கிறது.நாங்கள் ஒரு தேசத்தின் விடுதலைக்காகப் போராடினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70dc825d-ddc8-4b15-ab41-b74c73bd133d/26-6a7070fb1c865.webp' /></p><p> </p><p>எங்களுடைய கைகளிலே
துப்பாக்கி இருந்தது, பெரிய பீரங்கிகள் இருந்தது, விமானங்கள் இருந்தது,
கப்பல்கள் இருந்தது. நாங்கள் போராடினோம்; உலகத்தின் கண்களை நிமிர்ந்து பார்க்க
வைத்தோம். </p><p>ஆனால், மௌனிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் நாங்கள்
பேசப்படுகிறோம், ஒரு இனமாக இந்த உலகத்திலே அங்கீகரிக்கப்படுகிறோம்.
காலமும் சூழலும் இயற்கையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. </p><p>இயற்கை தான்
விரும்பும் பொழுது, அந்த நேரத்தில் உள்ள ஒரு தலைவனை இயற்கை தெரிவு செய்கிறது.
ஆகவே தலைவர்கள் பிறந்து வருவதில்லை இருப்பவர்களில் ஒருவரை இயற்கை தானாகத்
தெரிவு செய்கிறது எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T10:44:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பறிமுதல் - சிறிநாத் எம்.பி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lands-of-the-tamil-people-through-archaeology-1785750461"></link>
            <id>https://tamilwin.com/article/lands-of-the-tamil-people-through-archaeology-1785750461</id>
            <summary type="text">வடக்கு கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியானது என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட
முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியானது என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட
முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார
நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து
வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (03)
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மக்களின் பொருளாதார நிலைமை</h2><p>

மிக முக்கியமாக சமகால அரசு பல வாக்குறுதிகளை தந்திருந்தது இருந்தபோதும் தமிழ்
மக்களுக்கு அரசியல் உரிமை சம்மந்தமாக இந்த அரசு ஆட்சியை பொறுப்பேற்று
ஒன்றரை வருடம் ஆகியும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாத ஒரு
நெருக்கடியான சூழ்நிலை இருக்கிறது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30df54b4-f2e9-47e7-8988-d980dbcbd2a2/26-6a706dfad7e92.webp' /></p><p>இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலைமைகளை
மேம்படுத்துவதற்கு பல விடயங்கள் கூட இன்று பாரியளவில் கொண்டு செல்லப்படாமல்
இருக்கிறது.
</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அண்மையில் மாவட்ட அபிவிருத்திக்குழு
கூட்டத்தில் பல விடயங்கள் முன்வைக்கின்ற முக்கியமாக கித்துள் முந்தனை ஆறு நீர்
பாசன திட்டம் சம்பந்தமாக மாவட்டத்தில் அடிப்படையாக விவசாயம் பொருளாதாரத்தையும்
அதோடு மீன்பிடி வெள்ள தடுப்பு நடவடிக்கை எதிர்கால குடிநீர் தேவைகொண்டு செல்ல
வேண்டிய திட்டம் ஒதுக்கப்பட்ட ஆய்வுகளுக்கான நிதியில் ஒரு வீதம்
பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை காட்டப்பட்டது.</p><p>இது மிக மனவருத்தமான விடயம் அது மட்டுமல்ல அது சம்மந்தமாக கேள்வி எழுப்பி
இருந்தோம் அதற்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.</p><h2>&nbsp;தமிழ் மக்களின் பாரிய வாக்குகள்</h2><p>கடல்சார் அபிவிருத்தியை கொண்டுவருவதற்கு களுவங்கேணி பகுதியில் ஒரு மீன்
பதப்படுத்தும் தொழிற்சாலை கோரியிருந்தோம் அதற்கான நிதி ஆரம்ப காலங்களில்
கொடுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தும் எமக்கு அறிவிக்கப்படாமல் பிரதேச
அபிவிருத்தி கூட்டங்களில் உறுதிமொழி அளித்தனர்.</p><p> அதனை வேறு தேவைக்கு
மாற்றப்பட்டதாக கடந்த மாவட்ட அபிவிருத்தி குழுவில் கூறப்பட்டது

இவ்வாறு மேய்ச்சல் தரை, விவசாயம், மீன்பிடித்துறை போன்றவற்றை அபிவிருத்தி
செய்வதற்கான எந்த ஒரு சிறந்த திட்டமிடல் முறைமையும் இல்லாது தமிழ் மக்கள் மீது
பல நெருக்கடிகளை கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd7ba15a-e7cd-432f-809e-cef76fa40634/26-6a706dfbcb3fb.webp' /></p><p>ஆகவே இவ்வாறான விடயங்களை அரசு மிக பொறுப்பான முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை
கொள்ளக் கூடிய வகையில் கையாள வேண்டும் தென்னிலங்கையில் இருக்கின்ற இனவாத
சக்திகளுக்கு பயந்தே அதனை கைவிட்டு தற்போது துணிச்சலாக பல சந்தர்ப்பங்களில்
நடவடிக்கை எடுப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p>
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல விசாரணைகளை முன்னெடுத்து பல பேரை கைது
செய்வதுடன் போதைப்பொருள் பாதாள குழுக்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஊழல்
மற்றும் இலஞ்சம் விடயங்களை முன்னெடுத்து செல்கின்ற இந்த அரசாங்கத்துக்கு ஏன்
தென்னிலங்கையில் இருக்கும் இந்த இனவாத சக்தி சக்திகளுக்கு பயந்து கொண்டு இந்த
விடயங்களை மெதுவாக மந்தமாக கையாளுகின்றதா?

அல்லது அரசுக்கும் அடிப்படையாக தமிழ் தேசியம் சார்ந்த விடயங்கள் வளர்ந்து
விடக் கூடாது என்ற எண்ணம் இருக்கிறதா? என சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய
நிலைமை இருக்கின்றது.</p><p>எனவே இதனை நீக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் காலங்களில்
தமிழ் மக்களின் பாரிய வாக்குகளை பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசுக்கும்
இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-08-03T10:37:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-regarding-electricity-tariff-changes-1785752524"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-regarding-electricity-tariff-changes-1785752524</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு மின்சார கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு மின்சார கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) சமர்ப்பித்த மின்சார விநியோக செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>இரண்டாவது காலாண்டில் நடைமுறை</h2><p>அதன்படி, நடப்பு காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் அவசியமில்லை என அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894e266f-3e4a-4d16-a3c2-d37eec1ae573/26-6a706e3ecf23f.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதற்கமைய, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண முறைமையே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YoydhtVzwHM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-03T10:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களு கங்கை நீர்மட்டம் உயர்வு: இரத்தினபுரி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalu-ganga-water-level-rises-1785752492"></link>
            <id>https://tamilwin.com/article/kalu-ganga-water-level-rises-1785752492</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
களு கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வரும் நீரியல் அளவீட்டு நிலையங்களில் பதிவாகியுள்ள நீர்மட்டத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதன்படி, களு கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்கள் கவனத்திற்கு..&nbsp;</h2><p>

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகலை, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91cfa037-6e38-4188-84de-7e3023972835/26-6a706c79dfa8e.webp' /></p><p>
</p><p>
எனவே, இரத்தினபுரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களும், சாரதிகளும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், நிலைமையை கருத்திற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T10:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் கனமழை - பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-expected-in-slanka-next-36-hour-1785750483"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-expected-in-slanka-next-36-hour-1785750483</id>
            <summary type="text">அடுத்து 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பு இன்று(03.08.2026) 3 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்து 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பு இன்று(03.08.2026) 3 மணியளவில் வெளியாகியுள்ளது. </p><p>


இதற்கமைய, மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கு இன்று மாலை, இரவு என மழை தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p></p><p> </p><p>

அத்துடன், நாட்டில் உள்ள பல ஆறுகள் வெள்ள மட்டத்தை அடைந்துள்ள நிலையில், மகாவலி, களுகங்கை, களனி கங்கை போன்றன பல இடங்களில் பெருக்கெடுத்துள்ளன.</p><h2>பொதுமக்கள் கவனத்திற்கு..&nbsp;</h2><p> </p><p>

இதனால் ஆற்றங்கரையோரங்கள், நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகள், மற்றும் தாழ்நிலப்பகுதி மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dbe5037-7980-4a74-9290-b2a2ec92fbb0/26-6a70655606ed4.webp' /></p><p> </p><p>

இதன்படி, நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இன்று இரவு வரை காத்திருக்காமல் பகல் பொழுதே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது என்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்! களனி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949"></link>
            <id>https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949</id>
            <summary type="text">புதிய இணைப்புஅடுத்த 24 மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப்பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அடுத்த 24 மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப்பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

களனி ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாக அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே மழை தொடர்வதால், தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி ஆற்றுப்பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, களனி ஆற்றில் நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும். எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, களனி ஆற்றுப் படுகைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நிலை 01 விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, இந்த அறிவிப்பு 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த நிலைமை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

இதற்கிடையில், அப்பகுதிகள் வழியாகச்செல்லும், வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளராக பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிகமான மழையும் பதிவு</h2><p>
அதன்படி, மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் அமைந்துள்ள நாவலப்பிட்டிய, நானுஓயா மற்றும் வத்தளை போன்ற பகுதிகளில் சுமார் 200 மி.மீ மழையும், சில இடங்களில் 200 மி.மீ-க்கு அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a4d9a8-60a2-4665-af65-6bc89e790b1d/26-6a6ffd2f897aa.webp' /></p><p>

இதன் காரணமாக, நாவலப்பிட்டிய மற்றும் பேராதெனியாவிற்கு இடையே மகாவலி ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;தற்போது நீர்மட்டம் வேகமாக உயராவிட்டாலும், இயல்பான உயர்வையே கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
வெள்ள நிலைமை பேரிடர் நிலை வரை மோசமடையாது என்று எதிர்பார்ப்பதாகவும், நேற்று இரவு சில இடங்களில் 70 மி.மீ-க்கு மேல் மழை பெய்ததால் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததில் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், சில தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும், கலா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா&nbsp; பகுதிகளில் அதிக மழை பெய்யாததால், அப்பகுதிகளில் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XROoBlpm-0s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-03T09:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமடையும் வானிலை : பேராதனைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-students-of-university-of-peradeniya-1785735082"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-students-of-university-of-peradeniya-1785735082</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;நாட்டில் நிலவும் கடுமையான சீரற்ற வானிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின்
அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை தற்கால...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>நாட்டில் நிலவும் கடுமையான சீரற்ற வானிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின்
அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு குறித்து விழிப்புடன் இருக்குமாறு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தர் பேராசிரியர் தெரன்ஸ் மதுஜித் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d0dd1d-9b26-4f9e-b452-eb2bc3a7b318/26-6a7031433d26b.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொண்டு, ஏற்படக்கூடிய பேரழிவுகளைத் தடுப்பதற்காக, மகாவலி படுக்கையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என துணைவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள்</h2><p>
நேற்று இரவு (02) முதல் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.</p><p> நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக, பேராதனைapy; உள்ள 'கறுப்புப் பாலம்' அருகே அமைந்துள்ள பாலம் சீரமைக்கும் தளமும் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1ffdd79-bbb0-4543-a409-faa45699efae/26-6a703143eb99b.webp' /></p><p>இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>எனவே, மகாவலி ஆற்றங்கரையிலும், அப்பகுதிகளிலுள்ள தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T09:48:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பலத்த மழை! கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-in-batti-fishermen-livelihoods-affected-1785748468"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-in-batti-fishermen-livelihoods-affected-1785748468</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் 47.8 மில்லி மீற்றர் மழை
வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக மட்டக்களப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் 47.8 மில்லி மீற்றர் மழை
வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>


இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>நேற்றையதினம்(2.8.2026) பிற்பகல் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக கடல் சார் தொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு தொழிலுக்கு செல்லாத காரணத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>
</p><p>


இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட கரையோர பகுதிகளிலும் கடற்றொழிலாளர்கள் தங்களது மீன்பிடி
படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளதுடன் கடற்கரையில் கடலின்
நிலைமையைப் பற்றி அவதானித்த வண்ணம் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/910a0883-b151-40ff-818b-bf53be273a38/26-6a7062cd39141.webp' /></p><p>
</p><p>


எனினும் திங்கட்கிழமை காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வானிலை மப்பும், மந்தாரமுமாகவுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T09:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/holidays-for-central-province-schools-1785721272"></link>
            <id>https://tamilwin.com/article/holidays-for-central-province-schools-1785721272</id>
            <summary type="text">புதிய இணைப்புதற்போது நிலவும் கடுமையான வானிலை காரணமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைளும் நாளை (04) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தொட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தற்போது நிலவும் கடுமையான வானிலை காரணமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைளும் நாளை (04) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் தீவிர வானிலையைக் கருத்தில் கொண்டு, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>நுவரெலியா மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளைய தினமும்(04/07/2026) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நிலவி வரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக&nbsp; மாவட்ட கல்விப் பிரிவுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின்&nbsp; நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்தமலை மற்றும் ஹகுரங்கெத்த ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. </p><h3>இரண்டாம் இணைப்பு</h3><p>மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலையங்களில் உள்ள பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​</p><p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

​</p><p>இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​</p><p> </p><p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>பாடசாலைகளுக்கான விடுமுறை</h2><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f46d3b6-986d-4567-9c08-4e393c93cc7a/26-6a6ff501880ff.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.</p><p>நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6JYetNXTCG8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-03T09:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி நகரில் வெள்ளப்பெருக்கு : மேலும் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flooding-in-kandy-town-1785748336"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flooding-in-kandy-town-1785748336</id>
            <summary type="text">தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி நகரின் சில பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிகாரிகள் நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி நகரின் சில பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ae173bb-3972-4102-a476-f78ba4a76bce/26-6a705f86b6e87.webp' /></p><p>மேலும் கலு கங்கா படுக்கையில் இதுவரை பெய்துள்ள கனமழை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், அடுத்த சில மணி நேரங்களில் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pyRsY8UMUUE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-03T09:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா-வட்டவளை பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/watawala-records-highest-rainfall-severe-weather-1785745287"></link>
            <id>https://tamilwin.com/article/watawala-records-highest-rainfall-severe-weather-1785745287</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்தில் நுவரெலியா-வட்டவளை பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.அத்தோடு,&amp;nbsp; டொலொஸ்பாகே (172.0 மி.மீ), நாவலப்பிட்டி (153.4 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்தில் நுவரெலியா-வட்டவளை பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p>அத்தோடு,&nbsp; டொலொஸ்பாகே (172.0 மி.மீ), நாவலப்பிட்டி (153.4 மி.மீ), ஹட்டன் (148.4 மி.மீ), கிதுல்கல (140.8 மி.மீ), ஹுனுகல் ஓயா (137.8 மி.மீ), கொட்டகலை (137.1 மி.மீ.), 137 மி.மீ. வெவெல்வத்த (112.4 மி.மீ) மற்றும் வலேபொட (101.2 மி.மீ.) ஆகிய இடங்களிலும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p>சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>நிலச்சரிவு அபாயம்</h2><p>
மத்திய உயர்நிலப்பகுதிகள் மற்றும் இரத்தினபுரி, கேகாலை, காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad461e5b-d262-43fd-ad36-420d2b01d1b1/26-6a70571ee47e9.webp' /></p><p>
</p><p>மேலும், நிலச்சரிவு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி - கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extreme-weather-alert-kadugannawa-road-closed-1785745497"></link>
            <id>https://tamilwin.com/article/extreme-weather-alert-kadugannawa-road-closed-1785745497</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால்&amp;nbsp;கண்டி - கொழும்பு பிரதான வீதி, பஹால கடுங்கன்னாவ பகுதியிலிருந்து மூடப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால்&nbsp;கண்டி - கொழும்பு பிரதான வீதி, பஹால கடுங்கன்னாவ பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்தோடு,&nbsp; கண்டி - கணேதன்ன வீதியும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை</h2><p>இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மறுஅறிவித்தல் வரும்வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6145558-958e-4faf-8024-b946d5766a6c/26-6a7053d4ae0e2.webp' /></p><p>மேலும்,ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:36:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பிரசவிக்க தயாரான கர்ப்பிணி தாய் உயிரிழப்பு - இரத்த பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-child-die-from-dengue-fever-1785722563"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-child-die-from-dengue-fever-1785722563</id>
            <summary type="text">களுத்துறை - வாதுவை பகுதியில் கர்ப்பிணி தாயொருவரும் சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை - வாதுவை பகுதியில் கர்ப்பிணி தாயொருவரும் சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. </p><p>

முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், குறித்த கர்ப்பிணி தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

வாதுவையை சேர்ந்த 34 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>பரிசோதனையில் வெளியான தகவல்</h2><p>
</p><p>
குறித்த பெண்ணுக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் மூலம் காய்ச்சல் தணிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345b8b3a-4ec7-43f8-86c7-a6dec8598a78/26-6a7051146290d.webp' /></p><p>

எனினும், மலச்சிக்கல் உபாதை காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பதற்கான பரிசோதனைகளின் போது அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

எனினும், குறித்த தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி இல்லாத காரணத்தினால், அரச மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.</p><p>இதன்போது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p>
இதனையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி குழந்தையும், 29ஆம் திகதி மாலையில் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
</p><p>
குறித்த பெண் உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தொடர் மழையின் கோர தாண்டவம்! முதலாவது மரணம் நாவலப்பிட்டியவில் பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-dead-in-nawalapitiya-embankment-collapse-1785745207"></link>
            <id>https://tamilwin.com/article/one-dead-in-nawalapitiya-embankment-collapse-1785745207</id>
            <summary type="text">நாவலப்பிட்டிய - சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டிய - சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

கடந்த இரண்டு தினங்களாக மலையகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.</p><p></p><h2> 

ஒருவர் உயிரிழப்பு</h2><p>

இதன்படி, நாவலப்பிட்டிய - சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 65 வயதுடையவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3e26f6e-3574-4fb4-ac42-044d4d11f358/26-6a7050097bd11.webp' /></p><p> </p><p>இதேவேளை,&nbsp; &nbsp;கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், மலையகத்தில் வாழும் மக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,&nbsp; நாவலப்பிட்டி பிரதேசத்தில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக திரு.பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசை கவிழ்க்கும் சதியில் ரணில்! நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-secrete-plan-mystery-photo-released-1785725070"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-secrete-plan-mystery-photo-released-1785725070</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

இந்த பின்னணி குறித்து இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால அம்பலப்படுத்தியுள்ளார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜு அமரசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்ட இரகசியச் சந்திப்பு தொடர்பான புகைப்படம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><h2><b>

மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு</b></h2><p>இந்த புகைப்படம் மூலம் நாட்டின் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக அஜித் தர்மபால சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22e4cb3f-33db-43e3-8ead-c3ec497062d6/26-6a70189894fc2.webp' /></p><p>சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அந்தப் புகைப்படத்தில், ரணில் விக்ரமசிங்க மதுக் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டும், சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறார். </p><p>

அவருடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜு அமரசூரிய உள்ளிட்ட உயர் தரப்பினர் கலந்துரையாடும் காட்சி பதிவாகியுள்ளது.</p><p> 

இந்தச் சந்திப்பானது சாதாரண பாமர மக்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. தங்களைச் சேர்ந்த உயர் வர்க்கத்தினருக்கு ஏதேனும் அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படும்போது, இவ்வாறான கூட்டத்தினர் உடனடியாக ஒன்றிணைந்து அதைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படும் ஒன்றாகும்.</p><p>
</p><h2><b>
அரங்கேறும் குழப்பங்கள்</b></h2><p>மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று நாட்டில் இயங்கிக் கொண்டிருந்தாலும், அதற்குள் அரச அதிகாரிகள், உயர்மட்ட பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களை உள்ளடக்கிய ஒரு மறைமுக சக்தியாக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2061f02-3f3d-4f7e-a275-d987ddc7e2fc/26-6a701abbd3bc0.webp' /></p><p>மஹர மற்றும் நீர்கொழும்பு போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அரங்கேறும் குழப்பங்கள் மற்றும் அசம்பாவிதங்களுக்குப் பின்னால் இந்த மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பின் சூழ்ச்சிகள் உள்ளது. </p><p>

அரசாங்கம் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சமகால அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்தாலும், இந்த உயர்மட்டக் குழாமினர் தங்களது வர்க்கத்தினரை பாதுகாப்பதற்காகவும், வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகவும் தொடர்ந்தும் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-03T08:22:39+00:00</updated>
        </entry>
    </feed>
