<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-19T01:32:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து வரும் சில நாட்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rainfall-will-intensify-further-starting-today-1789779850"></link>
            <id>https://tamilwin.com/article/rainfall-will-intensify-further-starting-today-1789779850</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19.09.2026) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19.09.2026) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88235475-0494-4491-bd28-29b1d20ce213/26-6aade2c7d5510.webp' /></p><p> 

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T01:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் கார் - என் பெட்ரோல் எனக் கூறி விதிகளை மீற முடியாது : அமைச்சர் பிமல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/my-car-my-petrol-only-at-home-1789778300"></link>
            <id>https://tamilwin.com/article/my-car-my-petrol-only-at-home-1789778300</id>
            <summary type="text">வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களும் எரிபொருளும் தங்களது தனிப்பட்ட சொத்து என்று கூறி, வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணிக்க முடியாது என்றும், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களும் எரிபொருளும் தங்களது தனிப்பட்ட சொத்து என்று கூறி, வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணிக்க முடியாது என்றும், பொதுவான வீதிகளைப் பயன்படுத்தும்போது அனைத்து வாகன சாரதிகளும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
</p><p>
ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தனிநபர்கள் தங்கள் சொந்த வளாகத்திற்குள் தங்களது வாகனங்கள் குறித்துத் தாங்களே முடிவெடுக்க சுதந்திரம் பெற்றிருந்தாலும், மற்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய வீதிகளுக்கு அத்தகைய சுதந்திரம் பொருந்தாது என்று கூறியுள்ளார்.</p><h2>இயந்திர ரீதியாகத் தகுதியான நிலையில்</h2><p>

“உங்கள் சொந்த வளாகத்திற்குள் ‘என் கார், என் பெட்ரோல்’ என்று நீங்கள் கூறலாம், ஆனால் அந்த மனப்பான்மையைப் பொது மக்கள் பயன்படுத்தும் வதகளுக்குக் கொண்டு வர முடியாது. சட்டம் அனைவருக்கும் பொருந்தும்,” என்று ரத்நாயக்க கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f12bb695-4182-40b4-9a09-08cd48e156cb/26-6aadde1f07bf6.webp' /></p><p>
வீதி விபத்துக்களால், அதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல், அதைத் தாண்டியும் பின்விளைவுகள் ஏற்படுவதாகவும், அதனால் மருத்துவப் பணியாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிற பொது அதிகாரிகள் பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
</p><p>
வீதி விபத்துக்களைத் தனித்தனிச் சம்பவங்களாகக் கருதாமல், அவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய அவற்றை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.</p><p>அமைச்சரால் கோடிட்டுக் காட்டப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, பயணங்கள் மற்றும் புனித யாத்திரைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட, 5,000 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் வீதிப் பாதுகாப்பு தகுதி ஆய்வுகளுக்கு உட்பட்டு சான்றிதழ் பெற வேண்டும்.
</p><p>
பயணிகள் போக்குவரத்திற்கு வாகனங்கள் இயந்திர ரீதியாகத் தகுதியான நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் இந்த ஆய்வுகள் தேவைப்படும் என்று ரத்நாயக்க தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T01:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக் கட்சியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பெண்ணிடம் கேட்ட மோசமான இலஞ்சம்! பகிரங்கப்படுத்திய பெண்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/podujana-peramuna-mahinda-rajapaksa-1789736720"></link>
            <id>https://tamilwin.com/article/podujana-peramuna-mahinda-rajapaksa-1789736720</id>
            <summary type="text">&amp;nbsp;உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து போட்டியிடத் தயாரான நிலையில்&amp;nbsp; வேட்புமனு வழங்குவதற்காகத் தன்னிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து போட்டியிடத் தயாரான நிலையில்&nbsp; வேட்புமனு வழங்குவதற்காகத் தன்னிடம் 'பாலியல் இலஞ்சம்' கேட்டதாக ''லக்மவட்ட ஹடக்' அமைப்பின் தலைவியும் நடிகையுமான மதுஷா ராமசிங்க
தென்னிலங்கை வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்து
எந்த ஊடகத்திலும் நான் இதைச் சொல்வேன்.மஹிந்த ராஜபக்சவுடன் மிக நெருக்கமாகச் செயல்படும் அவரது தனிப்பட்ட செயலாளர்களில் ஒருவர் இவர்.அதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.</p><h2>வேட்பு மனுத் தாக்கலின் போது நடந்த சம்பவம்</h2><p>பெயர்களைக் கூறுவது எனக்குப் பிரச்சினையில்லை. நான் பெயர்களைக் கூறுவேன். ஆனால் சிக்கல் என்னவென்றால் நான் பொலிஸுக்குச் சென்றபோது 'வீடியோக்கள் இருக்கிறதா?' என்று கேட்கிறார்கள். </p><p>நாம் ஒரு கட்சி அலுவலகத்திற்கோ அல்லது நாட்டின் தலைவரைச் சந்திக்கவோ செல்லும்போது காணொளி எடுத்தா செல்கிறோம்?
'ஆடை களையாவிட்டால் வேட்புமனு இல்லை' என்று கூறினார்கள். </p><p>வேட்புமனுத் தாக்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு கூறினார்கள். அவர் தனது வாயால் மூன்று முறை கூறினார். 
அண்ணே நான் எத்தனை வருடங்களாகப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் பணியாற்றியுள்ளேன் என்று பார்க்கிறீர்களா?' எனக் கேட்டேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d40d23d-ce08-409d-b8c5-4229e7ad0d45/26-6aad37131f72b.webp' /></p><p>நீங்கள் நீண்டகாலமாக அரசியலில் இருக்கிறீர்கள் தானே என்றார்.
நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைப்பாளர் பதவியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு முதன்முதலில் வெளியே வந்த நபர். </p><p>சோபித்த தேரர் நல்லாட்சியின் முதல் நிறைவு விழாவை நடாத்தும்போது அவர் இயற்கை எய்தினாரா அல்லது படுகொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தவேளையில் முதுகெலும்புடன் வெளியே வந்த ஒரே ஆள் நான் மட்டும்தான்.
</p><p>கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் சொல்வதானால் இவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நான் மதிக்கிறேன். அவருக்கு இந்தச் சம்பவம் முழுமையாகத் தெரியாது. </p><p>ஆனால் அந்த நேரத்தில் அவராலும் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் 'இவரைச் சேர்த்துக் கொண்டால் நாங்கள் விலகுவோம்' என்று அங்கிருக்கும் குழுக்கள் அச்சுறுத்துகின்றன. இதனாலே நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T00:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seat-belts-mandatory-rear-seat-passengers-1789776072"></link>
            <id>https://tamilwin.com/article/seat-belts-mandatory-rear-seat-passengers-1789776072</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் நேற்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் நேற்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விதிமுறையை மீறி ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகள்</h2><p>
வாகனங்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed50409d-a728-40e0-b315-0508bf71490d/26-6aadd58c67da0.webp' /></p><p>
எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிந்துள்ளதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T00:21:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 24 இல் கதி கலங்கப்போகும் கொழும்பு : 159 எம்பிக்களையும் மிரட்டும் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-set-to-be-shaken-on-september-24-1789764037"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-set-to-be-shaken-on-september-24-1789764037</id>
            <summary type="text">செப்டெம்பர் 24 ஆம் திகதி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த பேரணியைப்பார்த்து 159 எம்பிக்களும் கதிகலங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் 24 ஆம் திகதி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த பேரணியைப்பார்த்து 159 எம்பிக்களும் கதிகலங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி ஆட்சியைக் கொண்டுவந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.</p><p>மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. </p><p>இதற்கு எதிராகப் பெரும் மக்கள் பலத்தைத் திரட்டுவோம் என்றும்&nbsp;சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயங்களுடன் மேலும் பல விடயங்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pKw5uBl22W0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T23:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற அவமதிப்பு - திலித் ஜயவீர தாக்கல் செய்த ரிட் மனு பரிசீலனைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/contempt-of-court-writ-petition-filed-by-dilith-1789770496"></link>
            <id>https://tamilwin.com/article/contempt-of-court-writ-petition-filed-by-dilith-1789770496</id>
            <summary type="text">நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை வலுவிழக்கச் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்க உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.
</p><p>
குறித்த ரிட் மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய பட்டபெதிகே ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் (18) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>இதன்போது வழக்குக்குக் காரணமான, திலித் ஜயவீர பங்கேற்ற தொலைக்காட்சி நேர்காணலின் காணொளிப் பதிவை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி திறந்த நீதிமன்றத்தில் திரையிட்டுக் காண்பித்தார்.</p><h2>முழுமையான தகவல்களை ஆராயாமல்</h2><p>அதன்பின்னர், அக்காணொளித் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,&nbsp; இந்தக் காணொளியின் மூலம், அவர் வெளியிட்ட கருத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b6f1b91-c06b-422f-879f-298ea0e4901a/26-6aadcc7b00fcc.webp' /></p><p>தாம் நீதிமன்றத்தைக் மதிப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த கூற்றின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்குவந்ததாக நீதிவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் முழு விடயத்தையும் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்காமல், விசாரணை அதிகாரிகள் தேர்ந்தெடுத்த பகுதியை மாத்திரமே மன்றுக்கு சமர்ப்பித்துள்ளனர்.</p><p> ஆகையால் நீதிவான் முழுமையான தகவல்களை ஆராயாமல், குறிப்பிட்ட விடயங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே எனது சேவைபெறுனருக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.</p><p>2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்துக்கமைய, இவ்வாறானதொரு முறைப்பாடு கிடைக்கும் போது அச்சட்டத்திற்கு இணங்கச் செயற்பட வேண்டிய பொறுப்பு நீதிவானுக்கு உள்ளது. அதற்கமையவே நீதிவான் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்&nbsp;சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T23:43:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்காக சவூதி தூதுவரிடம் அவசர முறையீடு - தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முன்னெடுக்கும் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-appeal-to-saudi-ambassador-on-anojan-1789770673"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-appeal-to-saudi-ambassador-on-anojan-1789770673</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை
தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை
தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த
நாட்டுப்பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல்
அசீஸ் அல் சவுத்திடம் கோரிக்கை முன்வைக்கத் தமிழ் பேசும் மக்களின் அரசியல்
பேரவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

சவூதி அரேபியாவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடயத்தில்,
கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு
வழங்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு, இலங்கைக் குடியரசுக்கான
சவூதி அரேபியத் தூதுவரை நேரடியாகச் சந்தித்து அவர் ஊடாக ஒரு கூட்டு வேண்டுகோளை
முன்வைக்க வேண்டும் எனத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அங்கத்துவச்
சகோதரக் கட்சித் தலைவர்களிடம் கோரியுள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/902c4ee1-7e8a-4279-a11e-13088a2138aa/26-6aadbbea3d91c.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் நாம் பேரவைக்குள் அவசரமாக உரையாடுகின்றோம். மேலும், இந்த
விடயத்தை நமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஊடாகவும் முன்னெடுத்து,
இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இந்த விடயத்தைச் சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச்
செல்லுமாறும் கோருகின்றோம் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T22:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை மீட்க தீவிர முயற்சி - விஜித ஹேரத்துடன் கந்தசாமி பிரபு அவசர சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kandasamy-prabhu-holds-an-urgent-meeting-1789769312"></link>
            <id>https://tamilwin.com/article/kandasamy-prabhu-holds-an-urgent-meeting-1789769312</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் அனோஜன் எனும் இளைஞரின் விடுதலை தொடர்பில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் உடன் அவசர சந்திப்பொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் அனோஜன் எனும் இளைஞரின் விடுதலை தொடர்பில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் உடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். </p><p>

மேற்படி பதிவில், </p><p>

இலங்கை இளைஞர் அனோஜனின் விடுதலை தொடர்பில் விஜித ஹேரத் உடன், மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் அவசர சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டேன்.
</p><p>
இதன்போது இலங்கையின் ஒட்டு மொத்த மக்கள் சார்பிலும் அனோஜன் விடுவிக்கப்பட வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கை தொடர்பிலும் அவரது குடும்பத்தால் விடுக்கப்படும் கருணை அடிப்படையிலான தனிப்பட்ட விடுவிப்பு கோரிக்கை தொடர்பிலும், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வெளி விவகார அமைச்சர் இவ்விவகாரத்தில் நேரடி தலையீட்டை மேற்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96358395-f099-44c5-8fb1-0eadd8e63981/26-6aadb6e4b0642.webp' /></p><h2>

 
அதிகாரபூர்வமான அறிவிப்பு கிடைக்கப்பெறவில்லை..
</h2><p>
இது தொடர்பில் அமைச்சர் 
அனோஜன் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்குத் தேவையான சட்ட முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் 
இலங்கை அரசாங்கத்தால் தூதரகம் ஊடாக சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டு, அனோஜன் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு ஏற்ப அவசியமான அனைத்துவிதமான உதவிகளையும் வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வரும்.
</p><p>
அதே வேளை, இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத போதிலும், வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f577661-62ba-4348-a5d1-10673b8be6ff/26-6aadb6e5c55e2.webp' /></p><p>
</p><p>

அத்துடன் ​இதுவரை மரண தண்டனை அல்லது தீர்ப்பு சம்பந்தமான எந்தவொரு அதிகாரப்பூர்வ பிரதியும், அது தொடர்பான அறிக்கைகளும் வெளிவிவகார அமைச்சிற்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் தற்போதைய நிலவரப்படி, 
இலங்கை மக்களினதும் அரசினதும் சார்பில் சவுதி அரேபியா அரசிடம் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்த்து அதற்கேற்ற முறையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு தீவிரமாக முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

உண்மையில் தான் நேரடி கவனம் செலுத்தி வருவதாகவும் என்னிடம் உறுதி கூறினார்.</p><p>

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக அனோஜன் குடும்ப உறுப்பினர்களை அமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து பேசும் வேண்டுகோளையும் முன் வைத்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fphoto.php%3Ffbid%3D122221474328550927%26set%3Da.122111964638550927%26type%3D3&show_text=true&width=500" width="500" height="850" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T22:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்தது - கேமராவில் சிக்கிய காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-trip-bus-loses-wheel-on-expressway-1789768322"></link>
            <id>https://tamilwin.com/article/school-trip-bus-loses-wheel-on-expressway-1789768322</id>
            <summary type="text">பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று விழுந்த காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சம்பவம் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று விழுந்த காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற தனியார் பேருந்து ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது, குறித்த தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென கழன்று தனியாக விழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1755352d-e56b-4179-8e49-991d8cb00b17/26-6aadb2da7b58c.webp' /></p><p>

எனினும், பேருந்தில் பயணித்த மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>
இந்த சம்பவம், மற்றுமொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp; </p><p></p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T21:53:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் அனோஜனிற்கு இறுதி நிமிடங்களில் நடந்த மறைக்கப்பட்ட உண்மைகள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970"></link>
            <id>https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவுக்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றும், மாறாக 5 வருட சிறைத்தண்டனையும் 3,000 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
</p><p>
இவ்வாறு இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உண்மை என்ன என்பது தொடர்பில் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.</p><p>

இந்நிலையில், அனோஜன் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரி முகநூலில் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p>

அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன? அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களுடன், செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jPMCFUTKFaI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T21:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி நாடகங்களால் நாட்டு மக்களை பெலவத்தையின் சிறைக் கைதிகளாக்க அரசு முயற்சி - சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-allegations-against-the-anura-government-1789764224"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-allegations-against-the-anura-government-1789764224</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும்
பெலவத்தையின் சிறைக்கைதிகளாக மாற்ற அரசு முயற்சிக்கின்றது என்று
எதிர்க்கட்சித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும்
பெலவத்தையின் சிறைக்கைதிகளாக மாற்ற அரசு முயற்சிக்கின்றது என்று
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.</p><p>

ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் எதிர்க்கட்சித்
தலைவர் அலுவலகத்தில் நேற்று(18.09.2026) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><h2>

22 ஆவது திருத்தம்</h2><p>
நாட்டின் ஜனநாயக முறையானது சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய பிரதான
மூன்று தூண்களையும், சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றையும்
அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,
நடைமுறையில் காணப்படும் ஜனநாயக முறையையும் அதன் பிரதான தூண்களையும் அழிப்பதே
தற்போதைய அரசின் நோக்கம் என்றார்.
</p><p>
தடைகள் மற்றும் சமன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்தத் தூண்களின்
அதிகாரங்கள், 22 ஆவது திருத்தம் மூலம் நீக்கப்படுகின்றன என்றும்,
நீதித்துறையின் சுதந்திரம் இல்லாமல் செய்யப்பட்டு நிர்வாகத்துறையின்
கைபொம்மையாக அது மாற்றப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe8d910-979f-4a08-b0cb-b3d951218ac7/26-6aada2d4c5d74.webp' /></p><p>
</p><p>
 இதன் மூலம் தனிக் கட்சி ஆட்சியை ஏற்படுத்தி நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும்
பெலவத்தை கட்சித் தலைமையகத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றது என்றும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
22 ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தொடர்ந்தும் குரல் கொடுத்து
வருகின்றது என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, தூக்கத்திலிருந்த தரப்புகளை
விழித்தெழச் செய்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதற்கு எதிராகக்
குரல் எழுப்பியுள்ளதாகவும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து சர்வதேச
தரப்பினரையும் தூதுக்குழுக்களையும் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><h2>


சமூகத்தை பெலவத்தை மயமாக்க அரசு நடவடிக்கை</h2><p>

அரசுக்குத் தெளிவான மக்கள் ஆணை உள்ளது என்று கூறிக்கொண்டு, அந்த ஆணையைத்
தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு
வருகின்றது என்றும், இது குறித்து பொதுமக்களுக்குத் தாம் விழிப்புணர்வை
ஏற்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a47c00d-9da7-425a-b97e-69d4ee8d64f7/26-6aada2d599b05.webp' /></p><p>

இளைஞர் கழகத் தேர்தல்கள் நடைபெற்ற வேளை பெலவத்தையின் பட்டியலின் பெயரில்
நியமனங்கள் வழங்கப்பட்டதை ஐக்கிய மக்கள் சக்தியினரே எதிர்த்தது என்று
தெரிவித்த அவர், தற்சமயம் கிராமத்திலுள்ள சுயாதீனமாக இயங்கும் தொண்டு
நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் என்பவற்றைப் பெலவத்தை மயமாக்கி, தனிக் கட்சி
ஆட்சிக்குக் கொண்டு செல்ல அரசு முயற்சிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்,

மக்களைப் பணிய வைத்து முழு நாட்டையும் அடிபணியச் செய்யும் திருத்தமாகவே இந்த
22 ஆவது திருத்தம் காணப்படுகின்றது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
நாட்டில் தற்போதும் பொய்யும் புரட்டுமே காணப்படுகின்றது என்று தெரிவித்த
எதிர்க்கட்சித் தலைவர், கடந்த கால ஏமாற்று வேலைகளினாலேயே நாடு
வங்குரோத்தடைந்தது என்றும், இதனால் விவசாயிகள் உட்பட 220 இலட்சம் மக்களும்
அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், கடந்த கால அரசமைப்புத் திருத்தங்களுக்குக் கையை உயர்த்தியவர்கள்
தற்போதைய ஆளும் தரப்பிலேயே இருக்கின்றனர் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி
அத்தகைய காரியங்களைச் செய்யாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T20:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவயதிலேயே போதைப்பொருள் பாவனை - 11 வயது சிறுவனின் வீட்டிற்கே சென்ற பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-year-old-boy-went-viral-on-social-media-1789763455"></link>
            <id>https://tamilwin.com/article/11-year-old-boy-went-viral-on-social-media-1789763455</id>
            <summary type="text">11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸாரின் முகநூல் பக்கத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, பதிவொன்று பகிரப்பட்டுள்ளது.</p><p> </p><p>

மேற்படி பதிவில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
</p><p>
11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்தும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.</p><h2>பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை</h2><p> இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb33cb7c-d4d1-44f3-acd5-ed647687d5a4/26-6aada0366e84f.webp' /></p><p> 

பொலிஸ் பிரதித் தலைவர் தர்ஷிக குமாரியின் அறிவுறுத்தல்களின் பேரில், தலைமை ஆய்வாளர் நிமாலி பொன்சேகா மற்றும் ஆய்வாளர் கந்தீபன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று(18.09.2026) 
 கணேமுல்லாவில் உள்ள சுமேத மாவத்தையில் குறித்த சிறுவன் இருப்பதை கண்டறிந்துள்ளனர். </p><p>

மேலும், குறித்த சிறுவன், பாதுகாப்பற்ற சூழலில் வளர்வதை அவதானித்த பொலிஸார், பொலிஸ் பாதுகாப்புப் பொறுப்பில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதன் பின்னர், குறித்த சிறுவனும், அவனது தாயாரும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். </p><p>

இந்த நிலையில், சிறுவனின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்த பின்னர், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T20:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா நடைமுறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australian-migration-reforms-1789760940"></link>
            <id>https://tamilwin.com/article/australian-migration-reforms-1789760940</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு நபர்களின் பணி&amp;nbsp;பணி விடுமுறை விசா விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு நபர்களின் பணி&nbsp;பணி விடுமுறை விசா விதிகளை கடுமையாக்க உள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>அஸ்திரேலியாவில் பெரும்பாலான சர்வதேச மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தங்கி படித்தும் பகுதி நேரமாக வேலை செய்தும் வருகின்றனர்.
</p><h2>மாணவர் விசாக்களை புதுப்பிக்க</h2><p>
கடந்த 2023ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் உச்சபட்சமாக 5,18,000 வெளிநாட்டவர்கள் தங்கி வருவதாக அறிக்கை ஒன்று வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a146456-fd3c-4a97-a5a3-b8261a2288b0/26-6aad9bb450914.webp' /></p><p>இதையடுத்து அவுஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி கட்சியான ஒன் நேஷன் கட்சி, அந்நாட்டு மக்களிடையே தீவிரமாக எழுச்சி பெற்று&nbsp;வரும் நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிகமாக புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை&nbsp;7,50,000 ஆக குறைக்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்தது.</p><p>இதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், விசா காலம் முடிந்தும் இங்கு தங்கியிருப்பவர்கள்&nbsp;மீதான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் சர்வதேச மாணவர்கள் தகுதி அளவில் முன்னேறினால் மட்டுமே, தங்களது மாணவர் விசாக்களை புதுப்பிக்க&nbsp;அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>[BYVHUNC</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் உயிரை காப்பாற்ற போராடும் இலங்கை தாய் - சவூதி மன்னர்களிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-s-mother-s-request-1789761902"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-s-mother-s-request-1789761902</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு சென்று நிலைமை குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்.
</p><p>
இந்த விஜயம் நேற்று(18.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


இதன்போது, அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப
உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல்
தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன்
கலந்துரையாடுவதாகவும் நம்பிக்கையளித்துள்ளார்.
</p><p>
இதன்போது கருத்து வெளியிட்ட ரிஷாட் பதியுதீன்,
</p><p>
அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>

சவூதி அரேபியா மன்னர்களிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை.</h2><p>

மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும்
சவூதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bca5976e-1be5-49a7-8e1f-66a7bda0d99d/26-6aad9a1856c9c.webp' /></p><p> </p><p>

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை
தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை
எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளோம்.</p><p> 

இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில்
தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
</p><p>
இதேவேளை, அனோஜனின் மற்றும் பெற்றோர் குடும்பத்தினர் அனுஜனின் விடுதலை
தொடர்பில் கொண்டிருக்கின்ற அதே உணர்வுடன் தாங்களும் முஸ்லிம் சமூகமும் செயற்படுவோம் என்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfc610cb-f8f6-45b4-948b-80331e8bc287/26-6aad9a19695f1.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T20:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேர்த்திக்கடன் செலுத்த சென்ற தாய்க்கு நேர்ந்த கதி - நேரில் பார்த்த 16 வயது மகள் கொடுத்த வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-accident-in-anuradhapura-1789760907"></link>
            <id>https://tamilwin.com/article/train-accident-in-anuradhapura-1789760907</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரண்டு இரண்டு பெண் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் மரணத்திற்கான கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரண்டு இரண்டு பெண் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளதுடன், 16 வயது மகளிடம் இருந்து வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>


அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரு அதிகாரிகளும் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளனர்.</p><h2>

இறப்புக்கான காரணம்</h2><p>
இவர்களின் இறப்பிற்கு விபத்தின் பொழுது ஏற்பட்ட பலத்த காயங்களே காரணம் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுத்துறை - தோட்டமுன மரண விசாரணை அதிகாரி நிரோஷா நிலுக்ஷினி முன்னெடுத்துள்ளதுடன், களுத்துறை நாகோடா போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900d876d-f318-4151-aa0e-cb0014aaaf86/26-6aad964410218.webp' /></p><p> </p><p>

அத்துடன், சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி கே.எம்.டி.பி. குணதிலகா சமர்ப்பித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டது.</p><p>

 மாதுகம - மகா களுபஹானவைச் சேர்ந்த 58 வயதான விதான கமகே ரேணுகா தமயந்தி மற்றும் அகலவத்தை - உடவெலவைச் சேர்ந்த 53 வயதான தேவனி குருகே ஸ்ரீயானி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். </p><p>

 இருவரும் செருப்பிட்ட சிவில் பாதுகாப்புப் படை முகாமில் பணியாற்றிய அதிகாரிகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. </p><h2>

16 வயது மகள் பார்த்த சம்பவம்</h2><p>

சம்பவம் நடந்த தினத்தில், ஸ்ரீயானியின் 16 வயது மகள் சித்துமினி ஜெயநெத்தி, அதிகாலையில் தனது தாயார் மற்றும் தோழியுடன் அனுராதபுரம் செல்வதற்காக பேருந்தில் களுத்துறைக்கு வந்ததாக கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2971e0e8-b6b0-4187-a6fa-d43acb65aa03/26-6aad9644f0b1c.webp' /></p><p>

அதன் பின்னர் அவர் மைதானத்தின் பக்கத்திலிருந்து தொடருந்து தண்டவாளத்தில் நுழைந்து தொடருந்து நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​எதிர்பாராதவிதமாக ஒரு தொடருந்து வந்தது.

தொடருந்து வருவதைக் கண்டவுடன், தான் சுமந்து வந்த இரண்டு பைகளையும் தொடருந்து மேடையில், வீசிவிட்டு உடனடியாக மேடையில் இருந்து மேலே ஏறுவதற்கு முயற்சித்துள்ளனர்.</p><p>

மேலும், தனது தாயாரையும் மற்ற பெண்ணையும் தூக்க முயன்றதாகவும், ஆனால் அதற்குப் போதுமான நேரம் இல்லாத காரணத்தினால், அப்போது, ​​அவர்கள் இருவரும் தொடருந்து மேடையை பிடிக்க முயன்றபோது, ​​திடீரென வந்த தொடருந்து மோதி தூக்கி வீசப்பட்டதாக மகள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். </p><h2>

பயணத்தில் கலந்துக் கொள்ளாத கணவர்</h2><p>

இவர்களின் பிரேதப் பரிசோதனையின்போது சாட்சியமளித்த, உயிரிழந்த ஸ்ரீயானியின் கணவர் செனரத் ஜெயநெத்தி, “தனக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததால் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளவில்லை” என்றார். </p><p> 

 இதனைத் தொடர்ந்து, ரேணுகா தமயந்தியின் மகளான லக்ஷிகா மதுஷானி, தனது தாய் அதிகாலையில் அனுராதபுரம் செல்வதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டதாகவும், அவரை மத்துகம பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட பின்னரே இவ்வாறு விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:51:42+00:00</updated>
        </entry>
    </feed>
