<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T15:26:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- புறநகர்ப் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-athurugiriya-area-1788880114"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-athurugiriya-area-1788880114</id>
            <summary type="text">கொழும்பு- அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- அத்துருகிரிய, வளேகடே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்தோடு, காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்‌சக்கள் செய்தவற்றால் தான் நாடு இன்று இந்த நிலையில் சரி உள்ளது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-npp-government-1788879001"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-npp-government-1788879001</id>
            <summary type="text">நாட்டில் இடம்பெற்ற பல அரசாங்கத்தி்றகு எதிரான போராட்டங்களின் போது, அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகினர்.&amp;nbsp;குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இடம்பெற்ற பல அரசாங்கத்தி்றகு எதிரான போராட்டங்களின் போது, அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகினர்.&nbsp;</p><p>குறிப்பாக, அரகலய போராட்டத்தின் போது, பலரின் முகம் மக்கள் மனதில் அதிகம் பதிந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்திலும் சரி பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களிலும் சரி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான கூட்டங்களிலும் சரி ஒரே நபர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.&nbsp;</p><p>இது உண்மையில், சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்பதோடு இதன் பின்னணி குறித்து பல கேள்விகளும் எமக்கு எழுகின்றன.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், குறித்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தகவர்களில் ஒருவர், லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில், இன்று கலந்து கொண்டு&nbsp;ராஜபக்‌சக்கள் செய்தவற்றால் தான் நாடு இன்று இந்த நிலையில் சரி உள்ளது என குறிப்பிட்டார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-S-MtjcXCDU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:04:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் டித்வா வீட்டுத்திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-affected-during-ditwah-request-1788878400"></link>
            <id>https://tamilwin.com/article/people-affected-during-ditwah-request-1788878400</id>
            <summary type="text">&amp;nbsp;டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்த கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான
அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்த கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான
அவசரத் தேவை குறித்து தங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
</p><p>
டித்வா வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1,138 முழுமையாக
சேதமடைந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற சேதமடைந்த வீடுகளின்
கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு, அத்துடன் மீள்குடியேற்ற
வீட்டுத்திட்டங்களும் தற்போது மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றன.</p><p> இந்த திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்வதற்கு போதுமான
தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை.

இருப்பினும், தற்போதைய தொழில்நுட்ப பணியாளர் நிலைமை மிகவும் போதாததாக உள்ளது.
</p><p>தற்போது, மாவட்டத்தில் ஒரு (01) தொழில்நுட்ப அலுவலர் மற்றும் நான்கு (04)
தொழில்நுட்ப உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். </p><p>அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்
தொகுதிக்கு எதிராக, தொழில்நுட்ப அலுவலர்களுக்கு ஏழு (07) வெற்றிடங்களும்,
தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு நான்கு (04) வெற்றிடங்களும் உள்ளன.</p><p>

இந்த நிலைமை வீட்டுத்திட்டத்தின் முன்னேற்றத்தை நேரடியாக பாதித்து,
திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் மாவட்ட வீட்டு இலக்குகளை அடைவதை பாதகமாக
பாதிக்கலாம்.</p><p>

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் டித்வா வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்வதன்
அவசரத்தை கருத்தில் கொண்டு, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு போதுமான தொழில்நுட்ப
அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களை உடனடியாக நியமிக்க / நிலைநிறுத்த
தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு தங்கள் தலையீட்டை அன்புடன் கோருகிறேன்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T14:40:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படத்தின் மற்றுமொரு பாடல் வெளியானது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-new-song-released-deva-sang-1788875267"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-new-song-released-deva-sang-1788875267</id>
            <summary type="text">ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்றைய தினம் (08.09.2026) வெளியாகியுள்ளது.

இதனை தற்போது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் அடுத்த பாடல் இன்றைய தினம் (08.09.2026) வெளியாகியுள்ளது.
</p><p>
இதனை தற்போது இரசிகர்கள் கண்டு மகிழலாம்.</p><p>குறித்த பாடலானது, தேனிசை தென்றல் தேவாவினால் பாடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “போராட்டம்” திரைப்படத்திற்கு உள்நாட்டின் முன்னனி பாடகர்களும் தமது படைப்புக்களை வழங்கியுள்ளனர்.</p><p>
போராட்டம் திரைப்படத்தின், "சோறு தான் முக்கியம்” என்ற இந்தப் பாடல் பலரை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tFxiDagMXuo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T14:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-meeting-president-anura-1788873028"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-meeting-president-anura-1788873028</id>
            <summary type="text">இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை(8) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை(8) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.</p><p>இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்தும் நோக்கில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று
நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கொழும்பை வந்தடைந்தார்.
</p><p>
விசேட விமானத்தில் இன்று(8.9.2026) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண
ஜயசேகர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.</p><h2>ஜனாதிபதியுடன் சந்திப்பு</h2><p>

எதிர்வரும் 10 திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தக் காலகட்டத்தில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள்
மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கையின் மூத்த
அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c215f8d8-61d3-40f9-8af0-8812d2486138/26-6aa012fedc177.webp' /></p><p>&nbsp;பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் அவர்
சந்திக்கவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மற்றும் ரணில் மீதான ஊழல் விசாரணைகள் குறித்து UNHRC அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136"></link>
            <id>https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136</id>
            <summary type="text">இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது வழக்கமான அமர்வில் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 ஊழல் விசாரணை ஆணைக்குழு</b></h2><p>இதேவேளை, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfd58f6-158c-4e64-823d-ac4ede5572a9/26-6a9f8af8dc64c.webp' /></p><p>மிகவும் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான பொதுப்பண முறைக்கேடு விசாரணைகள் குறித்தும் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
அத்துடன் நாட்டில் நிலவும் நிதி அழுத்தம் மற்றும் அரச வருமான பகிர்வு தொடர்பில் பிரதான விடயங்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன:</p><p>

2026 ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கமைய நாட்டின் அரச வருமானத்தில் 49.38 சதவீதம் பெறப்பட்ட கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டியுள்ளதெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h3><b>மேலதிக அழுத்தம்</b></h3><p>அரச வருமானத்தில் பெரும்பகுதி கடன் சேவைக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம், கல்வி, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1.9 முதல் 2.4 சதவீதம் என்ற சிறிய தொகையே ஒதுக்க முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0a2a5b-4255-4bb7-b1ca-8e82989806c3/26-6a9f8c13865f4.webp' /></p><p>வரையறுக்கப்பட்ட அரச நிதி வெளிப்பாட்டின் மத்தியில் சக்திவள, உணவு மற்றும் உர விலையேற்றம் காரணமாக மக்கள் மீது மேலதிக அழுத்தம் ஏற்படக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து இலங்கைக்குள் சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், நிறுவனங்களை வலுப்படுத்துதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் ஊடாக ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தச் சீர்திருத்தங்களை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆனந்தசங்கரியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandrasekar-met-anandasangari-kilinochchi-1788871041"></link>
            <id>https://tamilwin.com/article/chandrasekar-met-anandasangari-kilinochchi-1788871041</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
சந்தித்து கலந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
சந்தித்து கலந்துரையாடினார்.</p><p>குறித்த கலந்முரையாடலானது இன்றையதினம்(8) தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>

இதன்போது, வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அமைச்சர்
அன்புடன் விசாரித்ததுடன், அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும்
கேட்டறிந்துகொண்டார்.</p><h2>தற்போதைய நிலைமை</h2><p>
</p><p>
இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, வடக்கு மக்களின் நலன் உள்ளிட்ட
பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ba5b7f-e142-406c-8b4d-f7c9d0d8e8ca/26-6aa007d619b39.webp' /></p><p>
</p><p>
நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட வீ. ஆனந்தசங்கரியை சந்தித்து அவருடன்
கலந்துரையாடியமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T13:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் எயார்பஸ் ஊழலில் தொடர்புப்பட்ட இருவரின் மர்ம மரணங்கள்! நான்கு மரணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141</id>
            <summary type="text">எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரின் விபரங்கள் இன்றைய நிலையில் வெளிவந்துள்ளது.
</p><p>எயார்பஸ் ஊழல் தொடர்பில் முதன் முதலில் தகவலை வெளியிட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிராந்திய முகாமையாளரும் ஊடகவியலாளருமான ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் மரணம்.
</p><p>இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் ராஜபக்சர்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் தான் ரஜீவ பிரகாஷ் ஜயவீர. அவர் எவ்வாறு இறந்தார் என்ற பதிவுகள் இல்லை. </p><h2>
</h2><p></p><h2>முதன் முதலில் இதை வெளிப்படுத்தியவர்</h2><p>பின்னர் கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தில் 'நான் தற்கொலை செய்துகொள்கிறேன்' என்று எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது என வழக்கு முடிக்கப்பட்டது.மற்றையது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம். </p><p>இவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் அநேகர் அறிவர்.ஆனால் நாடே அறியாமல் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
அடுத்த நபர்இ இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மற்றும் ராஜபக்சர்களின் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக செயற்பட்ட சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே. </p><p>இவர் சிரந்தி ராஜபக்சவிற்கு எதிரான 'சிரிலிய' வழக்கு 'சில் ரெதி' (தானம் வழங்கும் வெள்ளை புடவை) நிதி மோசடி வழக்குகளில் அரசு சார்பில் முன்னிலையானவர். இவர்தான். மேலும் லிட்ரோ எரிவாயு வழக்கு - மிக் விமான கொள்வனவு வழக்குகள் போன்றவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து 
வாதாடியவர்.
</p><p>2019 இல் ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இவரைச் சிறையில் அடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலிருந்தும் நெருக்கடிகளைக் கொடுத்தனர். அலரிமாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஊழல் எதிர்ப்புப் பிரிவிலிருந்து இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கொண்டே சம்பளம் பெற்றார் என்று பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. </p><h2>
அறிப்படாத இரு மரணங்கள்</h2><p>ஊடகங்களில் அதைப் பரப்பி இவரன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். மறுபுறம் ராஜபக்சர்களின் ஆதரவாளர்களுக்கு நடந்த அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு இவரை ஒரு பிரதிவாதியாக அனுப்பி முடக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் முடக்கினர்.
</p><p>அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டில் இவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். திடீரென உயிரிழப்பது நடக்கக்கூடிய ஒன்றுதான் ஆனால் இக்காலத்தில் திடீரென இறப்பது என்பது படுகொலை செய்யப்படுவதற்கான ஒரு விசேட அறிகுறியாகும். </p><p>
கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா விஜயநாயக்கவின் நிறுவனத்திற்கு 2.5 பில்லியன் டொலர்கள் அனுப்பப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.அந்தக் கணக்கிலிருந்து மூன்று இடங்களுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>
சேபிள் விஷன் (Sable Vision) - அது நிமால் பெரேராவிற்குச் சொந்தமான சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனம். அடுத்து எஸ்.எல். எக்ரோ (SL Agro) - அதுவும் சிங்கப்பூரில் உள்ள ஒரு கணக்கு.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8585c813-a465-4a52-9a54-a9c1d79d3237/26-6a9ffdff833a7.webp' /></p><p>மற்றொன்று நேரடியாகக் கபில சந்திரசேனவின் அவுஸ்திரேலிய கணக்குகளுக்குச் சென்றுள்ளது. இவ்வாறு மூன்று இடங்களுக்குப் பணம் சென்றுள்ளது.
எஸ்.எல். எக்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் யோஹன் விஜயநாயக்க. </p><p>இந்த நபரை யாருக்கும் தெரியாது.ஆனால் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கி பழகியவர்.
இந்த நபரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். கொரோனா தொற்றினால் இறந்ததாக முத்திரைக் குத்தப்பட்டு பிரேதப் பரிசோதனை கூட நடத்தப்படவில்லை.
</p><p>இவர் 27 வயது இளைஞர். எனவே 27 வயது நபர் திடீரென உயிரிழப்பது சந்தேகத்திற்குரியது அங்கும் ஒரு மர்மம் உள்ளது.</p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T12:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-the-country-s-official-reserve-assets-1788868164"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-the-country-s-official-reserve-assets-1788868164</id>
            <summary type="text">நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஓகஸ்ட் மாதத்தில் 4.6% அதிகரித்து 6,905 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, 2026 ஓகஸ்ட் மாதத்தில் 4.6% அதிகரித்து 6,905 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.</p><h2>நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம்</h2><p>


கடந்த ஜூலை மாத இறுதியில் 6,600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்த நிலையிலேயே இந்த நீடித்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa41b6ce-dae4-40d8-94f2-eee63758fefe/26-6a9ffc326e3b1.webp' /></p><p>


சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த நிதியும் இந்த மொத்தக் கையிருப்பில் உள்ளடங்கியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XsEcQGgNk0o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:14:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்காக ரணிலுடன் மேற்கொள்ளப்பட்ட இரகிய ஒப்பந்தம்.. அம்பலப்படுத்தும் அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-case-since-ranil-gov-vijitha-herath-1788867274"></link>
            <id>https://tamilwin.com/article/namal-case-since-ranil-gov-vijitha-herath-1788867274</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு, தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்பட்டது அல்ல என்றும், அது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு, தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்பட்டது அல்ல என்றும், அது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்டது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெளிவுபடுத்தினார்.</p><p>

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த வழக்கு தொடங்கப்பட்டது என்பதை வலியுறுத்திக் கூறினார்.</p><h2>ரணில் ஆட்சிக்காலம்&nbsp;</h2><p>

"இது நாங்கள் தொடர்ந்த வழக்கு அல்ல. இது முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தொடரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f58dab58-eb7c-4c51-8bd8-444dd8d35aa2/26-6a9ffb688b0fb.webp' /></p><p> அவர் இதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது," என்று ஹேரத் கூறினார்.

முந்தைய அரசாங்கம் இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளையோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளையோ மேற்கொள்ளத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், இதனை "அவர்களுக்கு இடையிலான ஒரு உடன்பாடு" என்றும் வர்ணித்தார்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதும், இதற்கு முன் கவனிக்கப்படாமல் இருந்த அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கான தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:14:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் - நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-year-old-boy-dies-1788868499"></link>
            <id>https://tamilwin.com/article/six-year-old-boy-dies-1788868499</id>
            <summary type="text">பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிஸாரினால் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாலம் அமைப்பு பணிகளின் மேற்பார்வையாளரான தொழிநுட்ப உதவியாளரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்ற மதுஞ்சலா கேதீஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை 6ஆம் கட்டை நெடியமடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழியொன்றுக்குள் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.</p><h2>சிறுவர் உயிரிழப்பு</h2><p>
</p><p>
6ஆம் கட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் தரம் ஒன்றைச் சேர்ந்த நாகராசா நவதீபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57c7be92-ea6f-4a7b-97b6-a1f0a2410abb/26-6a9ffb4cbadc9.webp' /></p><p>
</p><p>
குறித்த பாலம் 6 கட்டைப்பிரதேசத்தில் நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் பாலம் அடைப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றது. இப்பாலத்திலத்திற்கு அருகில் பாரிய குழி தோண்டப்பட்டுள்ளது.</p><p> அக்குழியில் நான்கரை அடி நீர் உள்ளது.

அக்குழியினை பார்வையிட்ட சிறுவன் கால் சறுகி உள்ளே விழுந்துள்ளார். அதிலிருந்து சற்றுநேரத்தில் சிறுவனின் தயார் சிறுவனைத் தேடிச் சென்ற வேளை குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.</p><h2>கடும் கண்டனம்</h2><p>
</p><p>
சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் தோண்டப்பட்ட குழிகள் உள்ள பிரதேசத்தில் அபாய அடையாளங்கள் எதுவும் இடவில்லையென பொது மக்கள் கவலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e666f14-9462-4606-ae75-7eb243fd89e3/26-6a9ffb4d89266.webp' /></p><p>
</p><p>
குறித்த பாலம் நிர்மாணிக்கும் இடத்தில் அபாய அறிவிப்புக்கள் தொடர்பான பதாகைகள் எதுவும் இடப்படவில்லை என்பதனால் மேற்பார்வையாளர் ஆயித்தியமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
</p><p>
இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறையில் குறித்த தொழிநுட்ப உதவியாளர் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T12:11:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[12ஆம் திகதி லிமினி கலந்து கொண்டால் அரசியலில் ஏற்படப்போகும் அதிரடி திருப்பம்..! திடீரென சிஐடிக்கு முக்கிய முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-s-wife-files-complaint-1788864277"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-s-wife-files-complaint-1788864277</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.</p><p> 

நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி ராஜபக்‌ச மற்றும் அவரது குடும்பத்தினரை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் தொடர்ச்சியாக அநாகரிகமான அவதூறுப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்து அதற்கு எதிராக கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.</p><p>

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (08) சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அச்சுறுத்தல்கள் குறித்து முறைப்பாடு</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஏற்கனவே நாமல் ராஜபக்‌ச ரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து முறைப்பாடு செய்தோம்.

தற்போது அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பதை எதிர்பார்த்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4181a81-d66e-4ecf-956d-62d7e48b35c4/26-6a9ff30e2fd1e.webp' /></p><p> </p><p>

தேசிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் நாமல் ராஜபக்‌ச இல்லாத குறையை நிவர்த்தி செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச, ஷிரந்தி ராஜபக்‌ச, கோட்டாபய ராஜபக்‌ச, நாமல் ராஜபக்‌சவின் சகோதரர்கள் மற்றும் நாமல் ராஜபக்‌சவின் மனைவியான லிமினி ராஜபக்‌ச உள்ளிட்ட பலரை களமிறக்குமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.</p><p>

குறிப்பாக நாமல் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய லிமினியை களமிறக்குங்கள் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து வலுவாக எழுகிறது. கடந்த காலங்களில் நாமல் ராஜபக்‌சவுடன் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் போது அவரது ஆளுமை, மொழிவளம் மற்றும் வணிக அறிவு என்பவற்றை மக்கள் அவதானித்த காரணத்தினாலேயே இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>அவதூறு பரப்பல்</h2><p>
</p><p>
ஒரு நாட்டின் தலைவரின் மனைவி மக்கள் முன்னிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆளுமையும் திறமையும் அவரிடம் உள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத வங்குரோத்து அரசியல் கும்பல், எதிர்வரும் 12ஆம் திகதி பேரணியில் லிமினி ராஜபக்‌ச கலந்துகொண்டால் அது அரசியல் திருப்புமுனையாக மாறும் என்ற அச்சத்தில் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e2b1af-dab1-423a-b4b0-cba99e2b0f6f/26-6a9ff30edc9d8.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, அவரது தந்தை திலக் வீரசிங்க மற்றும் அவரது வியாபாரங்களை இலக்கு வைத்து பாரிய அசத்திய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். திலக் வீரசிங்க என்பவர் திறமையான, நேர்மையான, குணநலன் மிக்க, நாட்டிற்குப் புகழைத் தேடிக்கொடுத்த ஒரு வர்த்தகர் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.
</p><p>
நாட்டின் தலைவர்களின் குடும்பங்களை இலக்கு வைத்து இவ்வாறு சேறுபூசும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளோம். 

பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய அவதூறுகளையும் இழிவான செயற்பாடுகளையும் தடுப்பதற்கான அவசியமான சட்டத் திருத்தங்கள் நாமல் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கட்டாயம் கொண்டுவரப்படும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியின் முக்கிய தளங்களை நோக்கி ஏவப்பட்ட பாரிய ஏவுகணைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/houthi-attacks-on-saudi-arabia-73-injured-1788865229"></link>
            <id>https://tamilwin.com/article/houthi-attacks-on-saudi-arabia-73-injured-1788865229</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள நான்கு முக்கிய தளங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள நான்கு முக்கிய தளங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.</p><h2>&nbsp;73 பேர் காயம்&nbsp;</h2><p>
</p><p>
தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவூதியின் கமிஸ் முஷைத் பகுதியிலுள்ள விமானப்படை தளம், அப்ஹா, நஜ்ரான் மற்றும் ஜஸான் பகுதியிலுள்ள சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd8828a-a662-44e9-8427-ad158f33b50b/26-6a9ff0c916920.webp' /></p><p>
</p><p>
இத்தாக்குதல்களில் எண்ணெய் ஆலைகள் தீப்பிடித்து எரிந்ததோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 73 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>ஊடகக் கட்டுப்பாடுகள் காரணமாக சேதங்கள் தொடர்பான புகைப்படங்கள் உடனடியாக வெளியாகாத போதிலும், எல்லைப் பகுதியில் சவூதியின் டிரக்குகள் மீதான தாக்குதல் காட்சிகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788865362"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788865362</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.இன்று (08.09.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று (08.09.2026) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை வரை செல்லுபடியாகும்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

இதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0031db3-ddb3-4c11-be62-6cd9df5e75ba/26-6a9ff0447531e.webp' /></p><p> </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T11:25:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[51.37 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து நாட்டினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-thai-nationals-arrested-at-bia-1788865379"></link>
            <id>https://tamilwin.com/article/two-thai-nationals-arrested-at-bia-1788865379</id>
            <summary type="text">பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் ரூபாய் 51.37 மில்லியன்
மதிப்புள்ள குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் ரூபாய் 51.37 மில்லியன்
மதிப்புள்ள குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து
நாட்டினரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைது
செய்துள்ளனர்.</p><p>
பேங்கொக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் (TG-307) விமானம் மூலம் நேற்று திங்கட்கிழமை
(07) வந்திறங்கிய பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையின் போதே
இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.</p><h2>போத்தல்களில் மறைத்து வைப்பு..&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட 39 வயதான நபரின் பயணப் பையிலிருந்த 8 பிளாஸ்டிக்
போத்தல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.224 கிலோ குஷ் கஞ்சா (மதிப்பு
ரூ. 22.24 மில்லியன்) மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94e6c4e2-264a-4121-88f4-73c9cdc39890/26-6a9febe773c4c.webp' /></p><p>
</p><p>
அதேபோன்று, 23 வயதான மற்றொரு நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 8 பிளாஸ்டிக்
போத்தல்களில் மறைக்கப்பட்டிருந்த 2.272 கிலோ குஷ் கஞ்சா (மதிப்பு ரூ. 22.72
மில்லியன்) மற்றும் அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641
கிராம் ஹஷிஷ் (மதிப்பு ரூ. 6.41 மில்லியன்) கைப்பற்றப்பட்டன.</p><p>

அத்துடன் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட 5.137 கிலோ போதைப் பொருட்களுடனும்,
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க
விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB)
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பில் சூதாட்ட மறைமுக விளம்பரங்கள் - ஆய்வாளர் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cricket-researcher-questions-betting-linked-ads-1788863079"></link>
            <id>https://tamilwin.com/article/cricket-researcher-questions-betting-linked-ads-1788863079</id>
            <summary type="text">இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தயம் தொடர்பான
மாற்றுத் தொழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தயம் தொடர்பான
மாற்றுத் தொழில்களின் விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்படுவது
குறித்து சிரேஷ்ட ஆய்வாளர் மருத்துவர் சஞ்சனா ஹட்டோட்டுவா கேள்வி
எழுப்பியுள்ளார்.
</p><p>இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சிறப்பம்சங்கள்
அடங்கிய 5 காணொளிகளில், '1xBAT' நிறுவனத்தின் சின்னம் சுமார் 14 நிமிடங்கள்
இடம்பெற்றுள்ளது. </p><p>Galle போட்டிகளையும் சேர்த்து 10 காணொளிகளில் சுமார் 25
நிமிடங்கள் இந்த விளம்பரம் காட்டப்பட்டுள்ளது.</p><h2>விளம்பரங்கள் காட்சிப்படுத்தல்</h2><p>

இந்த நிலையில் விக்கெட்டுக்குப் பின்னால் உள்ள விளம்பரப் பாய், எல்லை விளம்பரங்கள் மற்றும் பார்வைத் திரைகள் மூலமாக 1xBAT, Parimatch Sports மற்றும் batbricks7 போன்ற
வெளிநாட்டுச் சூதாட்டப் பின்னணி கொண்ட முத்திரைகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d77791b2-0129-4c33-a86f-5b22ae9b0027/26-6a9fe5d102eb9.webp' /></p><p>

அத்துடன் 1xbet.com போன்ற தளங்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
தடை செய்துள்ள நிலையிலும், 2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை
ஆணையச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் இத்தகைய விளம்பரங்கள் இடம்பெறுவது
சட்டம் அமுலாக்கத்தின் பலவீனத்தைக் காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்.
</p><p>
இதனிடையே "இலங்கையின் எல்லைக்குள் நடைபெறும் போட்டிகளில் சூதாட்ட விளம்பரங்களை
அனுமதிப்பதில்லை" என ஸ்ரீலங்கா கிரிக்கெட் முன்னர் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சேர்க்கைக்கு இலஞ்சம்: பாடசாலை அதிபர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-admission-principal-arrested-swift-action-1788863854"></link>
            <id>https://tamilwin.com/article/student-admission-principal-arrested-swift-action-1788863854</id>
            <summary type="text">காலி, உணவட்டுன - ரூமசலா பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரண்டு
மாணவர்களைச் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, உணவட்டுன - ரூமசலா பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரண்டு
மாணவர்களைச் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(7.9.2026) இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>2026-ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளில் இரு
குழந்தைகளைச் சேர்ப்பதற்காக, அஹங்கமவைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஆரம்பத்தில்
ரூ. 600,000 கேட்டுள்ளார்.</p><h2>கைது</h2><p>
</p><p>
இந்தநிலையில் பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தத் தொகை ரூ. 3,00,000 ஆகக்
குறைக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 1,50,000 அதிபரால்
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

மேலும் மீதிப் பணத்தைக் கேட்டுத் தொடர்ந்து வற்புறுத்திய அதிபர், பணத்தைத்
தராவிட்டால் குழந்தைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கி விடுவதாக மிரட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b2b19b2-019b-4b97-acc6-1cd401023ea4/26-6a9fe74433ea2.webp' /></p><p>
</p><p>
அத்துடன் பாதிக்கப்பட்ட தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில், ஹபரடுவ
பகுதியிலுள்ள பிரபல கடையில் வைத்து ரூ. 2,50,000 இலஞ்சப் பணத்தைப்
பெற்றுக்கொண்டபோது அதிபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
</p><p>
மேலும் சந்தேக நபரான அதிபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனைவியை போன்று நாமலின் மனைவிக்கும் கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/planned-to-use-namal-s-wife-for-political-games-1788858330"></link>
            <id>https://tamilwin.com/article/planned-to-use-namal-s-wife-for-political-games-1788858330</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவிக்கு அழுத்தம் பிரயோகிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 உயிர்த்த ஞாயிறு தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவிக்கு அழுத்தம் பிரயோகிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நடாத்தப்படும் விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவிற்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயின் மனைக்கு வழங்கப்பட்ட அரசியல் அழுத்தம், போன்ற அழுத்தம், நாமலின் மனைவிக்கும் பிரயோகிக்க முயற்சிகள் இடம்பெற்றுள்ளது. </p><p>

எதிர்வரும் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் நாமல் ராஜபக்சவின் மனைவியைப் பிரசார உத்தியாக கலந்துகொள்ள செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

நாமலின் மனைவிக்கு அழுத்தம் </b></h2><p>அதற்காக திஸக்குட்டியாராச்சி உள்ளிட்ட குழுவினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுஜன கட்சி மேலும் வங்குரோத்து அடைந்துள்ளமை இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16420f9a-bc72-4b59-9c9e-d30145452019/26-6a9fe734667da.webp' /></p><p>சுரேஷ் சலேயின் மனைவியும் மகனும் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு நடுவழியில் கைவிடப்பட்டுள்ள விதம் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T10:45:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்கள் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-case-defendants-written-submission-1788862619"></link>
            <id>https://tamilwin.com/article/easter-case-defendants-written-submission-1788862619</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 23,270 குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 24 பிரதிவாதிகள்&amp;nbsp;கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 23,270 குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 24 பிரதிவாதிகள்&nbsp;கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களை தாக்கல் செய்துள்ளனர்.</p><p>
இதன்படி, வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22 அன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.</p><h2>இருபத்து நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்</h2><p>
</p><p>
நீதிபதிகளான&nbsp;நவரத்ன மராசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் அமர்வின் முன் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7767c2f9-3563-411a-8324-8033387b3a7a/26-6a9fe35e835fd.webp' /></p><p>இந்த வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
நௌபர் மௌலவி உட்பட இருபத்து நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:36:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து வந்த நாமல்! நாடாளுமன்றத்தில் பேசிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-speech-namal-rajapaksa-1788862275"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-speech-namal-rajapaksa-1788862275</id>
            <summary type="text">அரசியல் பழிவாங்கல்கள் மூலம் தங்களை முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் பழிவாங்கல்கள் மூலம் தங்களை முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>நாமல் ராஜபக்ச விளக்கப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(8.9.2026), நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>சிறையில் இருக்கும் கைதிகளின் மனித உரிமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் சிறைச்சாலை அமைப்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அவர், சுதந்திரம் மட்டுமே பறிக்கப்பட வேண்டுமே தவிர, மனித கண்ணியம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.</p><h2>பொருளாதாரக் கொள்கைகள்</h2><p>
</p><p>தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான தோல்விகளை விமர்சித்து, மக்கள் நலனுக்கான திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கூறினார்.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எல் நினோ
காலநிலைத் தாக்கத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/559efa07-746a-4fca-a9c2-5fbbd6f67c7a/26-6a9ff42cd1483.webp' /></p><p> </p><p>ஆனால்,
விவசாயிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களையும் உதவிகளையும்
இந்த அரசு வழங்கத் தவறிவிட்டது.</p><p>

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
ஆனால், அவை நிறைவேற்றப்பட்டனவா என்பது தெரியவில்லை.
அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நிதி உதவி வழங்கப்படும் என
அரசு அறிவித்தது. அது வழங்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p> எனவே, தயவுசெய்து
நேபாளத்தை ஏமாற்றிவிட வேண்டாம். இது சர்வதேச மட்டத்தில் நமது நாட்டுக்கு
நல்லதல்ல.

சுகாதாரத்துறையை மேம்படுத்துவோம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேசிய மக்கள்
சக்தி அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வைத்தியசாலைகளில்
மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது.</p><p>

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முறையான தலையீடுகளை அரசு
மேற்கொள்ளவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில், தற்போது வைத்தியசாலைக்குச்
செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றனர். கிராமப்புற மக்கள் முழுமையாக அரச
வைத்தியசாலைகளையே நம்பியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4d5d48-0b3e-41a4-9fd7-ebdf3f889a57/26-6a9ff42c1c63f.webp' /></p><p>எனவே, கொத்தமல்லி குடித்துவிட்டு வீட்டில் இருக்குமாறு கூறுவதற்கு
ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் கிடையாது. டெங்கு நோயாளர்களும் கொத்தமல்லி
குடித்துவிட்டுத் தூங்க முடியுமா. </p><p>கொத்தமல்லி குடிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், நோயாளிகளுக்கு
வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறும் அடிப்படை உரிமை இருக்க வேண்டும்.
</p><p>
கதைகளைக் கூறி இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நீங்கள் கட்டடங்களின் இரண்டாம் மாடிக்கு அடிக்கல் நாட்டுங்கள் அல்லது
மலசலக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டுங்கள். </p><p>ஆனால், முதற்கட்டமாகக் கொத்தமல்லி
விலையைக் குறைக்கவும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை
எடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/n-Pq_K_SNvY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><b>மேலதிக தகவல்-ராகேஷ்</b></p>]]></content>
            <updated>2026-09-08T10:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - ஜனாதிபதியின் முன்மொழிவிற்கு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/digital-transform-units-to-in-gov-institutions-1788861079"></link>
            <id>https://tamilwin.com/article/digital-transform-units-to-in-gov-institutions-1788861079</id>
            <summary type="text">அரச நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றத்தை ஒருங்கிணைத்து நிர்வகிக்க தனித்தனியான டிஜிட்டல் மாற்று அலகுகளை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றத்தை ஒருங்கிணைத்து நிர்வகிக்க தனித்தனியான டிஜிட்டல் மாற்று அலகுகளை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது.
</p><p>
2025 அக்டோபர் 21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் 2025 - 2030, அரச நிறுவனங்களுக்குள் துறைசார் டிஜிட்டல் மாற்றத்தை மேற்பார்வையிடுவதற்கும், தேசிய டிஜிட்டல் பொதுமுறை முயற்சிக்கு இணங்குவதற்கும் வலுவான மற்றும் தரப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பு தேவை என்பதை அடையாளம் கண்டுள்ளது.</p><h2>டிஜிட்டல் மாற்று நடவடிக்கை</h2><p>
</p><p>
அதற்கேற்ப, டிஜிட்டல் மாற்று நடவடிக்கைகளை திறம்பட நிர்வகித்து ஒருங்கிணைப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் டிஜிட்டல் மாற்று அலகு ஒன்றை நிறுவ முன்மொழியப்பட்டது.</p><p>

கவ்டெக் இலங்கை (தனியார்) நிறுவனம் இந்த அலகுகளை நிறுவி செயல்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் ஏற்பாடுகளை விவரிக்கும் டிஜிட்டல் மாற்று அலகு குறிப்புச் சட்டகத்தை தயாரித்துள்ளது.

இந்த சட்டகத்தின் கீழ், ஒவ்வொரு டிஜிட்டல் மாற்று அலகின் தலைவராக ஒரு முதன்மை டிஜிட்டல் அதிகாரி நியமிக்கப்படுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea65c9a-fa4f-4091-8a7e-59f6a71ab332/26-6a9fe1087684d.webp' /></p><h2>அமைச்சரவை அனுமதி</h2><p> </p><p>அவர் அந்தந்த நிறுவனத்தின் தலைவருக்கு நேரடியாக அறிக்கை செய்வார்.

இந்த அலகுகள், நிறுவன கட்டமைப்பு , தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு , இணையப் பாதுகாப்பு, இடைச்செயல்பாடு மற்றும் பிற டிஜிட்டல் மாற்று தொடர்பான விடயங்களில் கவ்டெக் இலங்கையிடமிருந்து சிறப்பு நிபுணத்துவத்தையும் ஆலோசனை ஆதரவையும் பெற அரச நிறுவனங்களுக்கு வழிவகுக்கும்.</p><p>

டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:21:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித - யானை மோதலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-urge-department-wildlife-immediate-action-1788862232"></link>
            <id>https://tamilwin.com/article/public-urge-department-wildlife-immediate-action-1788862232</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு
ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு
ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம்
வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர அச்சமும் பதற்றமும்
ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறித்த பிரதேசங்களை அண்மித்துள்ள விவசாய நிலங்கள், மக்கள் குடியிருப்புகள்
மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளை நோக்கி இரவு நேரங்களில் காட்டு
யானைகள் ஊடுருவுகின்றன. </p><p>இதனால் விவசாயிகள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை
முன்னெடுக்க முடியாமலும், பொதுமக்கள் இரவு வேளைகளில் வீடுகளை விட்டு வெளியேற
முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><h2>தடுப்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>


யானைகள் தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து வருவதால் மனித
உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4780cf6b-d92f-41fb-80e0-da55f83050bb/26-6a9fe10a18798.webp' /></p><p>
</p><p>எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் சம்பவிப்பதற்கு முன்னர் வனஜீவராசிகள்
பாதுகாப்புத் திணைக்களம் தலையிட்டுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
எனப் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நேரடியாக வருகை தந்து
நிலமையை ஆராய்ந்து, யானைகள் ஊடுருவுவதைத் தடுக்க நிரந்தரமான நடைமுறைச்
செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.</p><p>யானைகள் வழமையாக நடமாடும் பாதைகள்
மற்றும் கிராமங்களுக்குள் நுழையும் இடங்களைக் கண்டறிந்து முறையான
கண்காணிப்புப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.</p><p>அவசர காலங்களில் பொதுமக்கள்
உடனடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் அவசர உதவிப் பிரிவையும்
கண்காணிப்பையும் வலுப்படுத்த வேண்டும்.</p><p>

"மனித உயிரிழப்புகள் அல்லது பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை
எடுப்பதை விட, அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்வதே முக்கியமானது" எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unsanitary-conditions-front-mannar-medical-office-1788860098"></link>
            <id>https://tamilwin.com/article/unsanitary-conditions-front-mannar-medical-office-1788860098</id>
            <summary type="text">மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு முன்பு குப்பைகள் மற்றும்
பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு முன்பு குப்பைகள் மற்றும்
பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார
சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறிப்பாக, அப்பகுதியில் காணப்படும் கால்வாய்களில் பொலித்தீன் மற்றும் ஏனைய
கழிவுகள் தேங்கி உள்ளதால், மழை நீர் உள்ளிட்ட நீர் முறையாக ஓட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் நீர் தேங்கி, நுளம்புகள் பெருகுவதற்கான சூழல்
உருவாகியுள்ளது டன், டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக
சுட்டிக்காட்டப்படுகிறது.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
அதேவேளை, குறித்த பகுதியில் கடைகளை நடத்தி வரும் சில வியாபாரிகளால் அதிகளவான
பொலித்தீன் கழிவுகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாகவும், முறையான கழிவு
முகாமைத்துவம் இல்லாதமையே இந்நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக
இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67e13916-9c63-4796-a005-e95ff6c49be3/26-6a9fdbb936633.webp' /></p><p>
</p><p>
நேற்றைய தினம் தற்காலிகமாக குறித்த வடிகால்கள் துப்புரவு செய்யப்பட்ட போதிலும்
நிரந்தரமாக குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை

சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய இடத்திற்கு முன்பு இவ்வாறான சுகாதார சீர்கேடு
ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரணியை குழப்பும் நோக்கில் நாமலின் திடீர் கைது! களமிறங்கும் மகிந்த - ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unp-congratulations-rally-joint-mahinda-1788858990"></link>
            <id>https://tamilwin.com/article/unp-congratulations-rally-joint-mahinda-1788858990</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
</p><p>
 ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><h2>நாமல் ராஜபக்ச கைது விவகாரம்&nbsp;</h2><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3624758-0cf3-4fd9-bf15-4ba1f90be91d/26-6a9fd960c3311.webp' />&nbsp;</p><p>

எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில், நடைபெறவுள்ள பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை ஐ.தே.க. விமர்சிப்பது இரட்டை வேட அரசியல்! நிருக்ச குமார சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-the-rajapaksa-family-1788859808"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-the-rajapaksa-family-1788859808</id>
            <summary type="text">நல்லாட்சி அரச காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதையே ஐக்கிய
தேசியக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லாட்சி அரச காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதையே ஐக்கிய
தேசியக் கட்சி விமர்சித்து அறிக்கை வெளியிடுவது அவர்களின் இரட்டை வேடத்தையும்
வெட்கக்கேடான அரசியலையும் வெளிப்படுத்துவதாக 'ஒருமித்த எதிர்க்கட்சியின்' இணை
அழைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்தார்.</p><p>

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் தலதா அதுகோரள
ஆகியோர் சட்டத்தையும் பொலிஸையும் தம்வசம் வைத்திருந்த நல்லாட்சி காலத்தில்,
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள்
மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.</p><h2>வீழ்ச்சியடைந்த ஐதேக</h2><p>ஆனால், தற்போது அந்தக்
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுகளும் சட்ட நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்படும் போது, ஐக்கிய தேசியக் கட்சி அதை விமர்சித்து அறிக்கை
வெளியிடுவது முற்றிலும் முரண்பாடானது.
</p><p>
முன்னர் நாட்டின் பிரதான சக்தியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது
தனது வாக்கு வங்கியை 2 சதவீதத்துக்கும் குறைவாக இழந்து பெரும்
வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3a39e51-1126-404e-804a-4441ef46e50e/26-6a9fd806ce0d4.webp' /></p><p> </p><p>இவ்வாறான கொள்கையற்ற இரட்டை வேட அரசியலாலேயே அந்தக்
கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளதுடன், தற்போது அக்கட்சியில்
இருக்கும் எஞ்சிய உறுப்பினர்கள் கூட வீதியில் இறங்கி நடமாட முடியாத சூழல்
உருவாகியுள்ளது.
</p><p>
மேலும், ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக மக்களும் ஐக்கிய தேசியக் கட்சியின்
ஆதரவாளர்களும் உயிரைப் பணயம் வைத்துப் போராடியே ஆட்சி மாற்றத்தைக்
கொண்டுவந்தனர். </p><p>அவ்வாறு போராடிய ஆதரவாளர்களுக்கு இன்று வரை நீதி
கிடைக்கவில்லை. நாட்டைக் சூறையாடிய ஊழல்வாதிகளுடன் கைகோர்த்துச் செயற்படும்
ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தகைய நடவடிக்கைகளை ஒருமித்த எதிர்க்கட்சி
தொடர்ந்து கண்டிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T09:40:58+00:00</updated>
        </entry>
    </feed>
