<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-13T17:40:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமன் மோதல்களில் ஒரே மாதத்தில் 1,500க்கும் அதிகமான வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1500-soldiers-killed-yemen-conflicts-single-month-1789318534"></link>
            <id>https://tamilwin.com/article/1500-soldiers-killed-yemen-conflicts-single-month-1789318534</id>
            <summary type="text">ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாட்டின்
மேற்கு கடலோரப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில், கடந்த ஒரு மாத
காலத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாட்டின்
மேற்கு கடலோரப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில், கடந்த ஒரு மாத
காலத்தில் மாத்திரம் இருதரப்பையும் சேர்ந்த 1,500 க்கும் அதிகமான போர்
வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
கடந்த ஒகஸ்ட் 9 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரையிலான
காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில், அரசாங்க ஆதரவு தேசிய எதிர்ப்புப்
படையைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 1,500 பேர்
காயமடைந்துள்ளதாக அல்ஜும்ஹூரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>1,500க்கும் வீரர்கள் பலி</h2><p>
</p><p>
இதேவேளை, இதே காலப்பகுதியில் 1,000 க்கும் மேற்பட்ட ஹூதி கிளர்ச்சியாளர்கள்
கொல்லப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9755f26b-2eb3-40f7-9867-122e7ac1a0b6/26-6aa6dbd00b449.webp' /></p><p>
</p><p>
இருப்பினும் இச்சேத விபரங்களை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என
தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் தெற்கு மற்றும்
வடக்கு பிராந்தியங்களில் உள்ள முக்கிய முகாம்களைக் கைப்பற்றும் நோக்கில்
ஹூதிகள் முன்னேறி வரும் நிலையில், அங்கு தொடர்ந்தும் தீவிர மோதல்கள்
இடம்பெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் மூலம் வெளிப்பட்ட பிரிக்ஸ் அமைப்பின் எல்லைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/limits-brics-grouping-revealed-iran-conflict-1789319311"></link>
            <id>https://tamilwin.com/article/limits-brics-grouping-revealed-iran-conflict-1789319311</id>
            <summary type="text">புதுடில்லியில் நிறைவடைந்த பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பொருளாதார
ஒத்துழைப்பு மற்றும் அமைப்பின் விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்ட
போதிலும், அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுடில்லியில் நிறைவடைந்த பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பொருளாதார
ஒத்துழைப்பு மற்றும் அமைப்பின் விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்ட
போதிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்டு வரும் போரைக்
கண்டித்து நேரடி அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமை அமைப்பின் புவிசார்
அரசியல் எல்லைகளை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

11 உறுப்பு நாடுகளையும் 10 பங்களிப்பு நாடுகளையும் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில்,
ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
</p><p>
எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்தியப் போட்டியும் பாதுகாப்பு
குறித்த மாறுபட்ட நிலைப்பாடுகளும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு
எதிராக அமைப்பாக இணைந்து குரல் கொடுப்பதற்குப் பெரும் தடையாக அமைந்துள்ளன.</p><h2>இராணுவ மோதல்</h2><p>
</p><p>
அத்துடன், இந்தியாவைப் பொறுத்தவரையில் பிரிக்ஸ் அமைப்பை அமெரிக்காவிற்கு
எதிரான கூட்டணியாகப் பார்க்காமல், தனது மூலோபாய சுயாட்சியைப் பேணுவதற்கான ஒரு
தளமாகவே கருதுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5996f75f-4e2e-4741-b23b-89d31a9d48f6/26-6aa6db1d9f61d.webp' /></p><p>

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அமெரிக்காவுடன் நேரடி இராணுவ மோதல்களில்
ஈடுபடுவதைத் தவிர்த்து, பல்துருவ உலக அமைப்பை நோக்கிய மெதுவான மாற்றங்களையே
விரும்புகின்றன.
</p><p>
எனவே, பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்கா தலைமையிலான உலக அமைப்பை உடனடியாகத்
தகர்க்கும் ஒரு இராணுவ அல்லது அரசியல் கூட்டமைப்பாகச் செயற்பட முடியாது
என்றபோதிலும், டொலர் அல்லாத வர்த்தகம், மேம்பாட்டு நிதியுதவிகள் மற்றும்
சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தங்கள் மூலம் உலகளவில் ஒரு பலமிக்க
பேச்சுவார்த்தைக் கூட்டணியாகத் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தும் எனக்
கருதப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுர்வேத கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை: சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-for-selling-ganja-lehyam-1789317936"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-for-selling-ganja-lehyam-1789317936</id>
            <summary type="text">ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(1...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(13.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
அம்பாறை- அக்கரைப்பற்று வன்னியர் வீதியில் விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியம்
கைப்பற்றப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த லேகியம்
கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/319fa91e-95c5-4418-b006-215a9b451e06/26-6aa6d3cb5e572.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T16:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓரணியில் திரண்ட தமிழர்கள்! செம்மணி பிரகடனம் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1789316636"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1789316636</id>
            <summary type="text">தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பில் ஈழத்தமிழ் குடிசார் அமைப்புக்களும் பொது
மக்களும் நல்லூர் கிட்டு பூங்காவில் 13 சரம்பர் 2026 அன்று ஓரணியில் திரண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பில் ஈழத்தமிழ் குடிசார் அமைப்புக்களும் பொது
மக்களும் நல்லூர் கிட்டு பூங்காவில் 13 சரம்பர் 2026 அன்று ஓரணியில் திரண்டு செம்மணி பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ்
இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களான வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி
ஒற்றுமையாக நாம் ஒன்றுபட்டு இங்கு கூடி கீழ்வரும் பிரகடனங்களை
வெளியிடுகின்றோம்.</p><h2>செம்மணி</h2><p>
</p><p>
செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை
வேண்டும்.</p><p>செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ்
இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன.
</p><p>
இந்த சான்றுப் பொருட்களானவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா
அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை
நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய கூடிய ஆபத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f1d87f3-bac5-487a-a93a-6bae45f97538/26-6aa6d03fef509.webp' /></p><p>

எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற
வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப்
புதைகுழி, மன்னார் மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும்
அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான
சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல்
அகழ்தெடுக்கப்படும் தடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும்
ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு
விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
</p><p>
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக
நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை
உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசினால் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள்
தொடர்பாக சில அமைப்புக்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும், ஆதாரங்களும், சர்வதேச
குற்றவியில் விசாரணை ஒன்றுக்காக பாரப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படல்
வேண்டும்.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரும் உள்ளகப் பொறிமுறைகளை நாம்
முற்றாக நிராகரிப்பதுடன், அதற்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உடனடியாக
உருவாக்கப்பட வேண்டும்.
</p><h2>
அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை</h2><p>
 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்
நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் அனைவரும் உடன்
விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம்
உடனடியாக நீக்கப்படவும் வேண்டும்.

அத்துடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவானது என்னும் பெயரில் வேறு எந்தவொரு புதிய
சட்டத்தையும் உருவாக்கக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d15d660-e465-4f4f-9dbd-37c0ef1ee075/26-6aa6d040a3b24.webp' /></p><p>
</p><p>வடக்கு–கிழக்கு தமிழர் தாயகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும்
வகையிலான இராணுவமயமாக்கல் அகற்றப்படல் வேண்டும்.

அம்பாறை தொடக்கம் மன்னார் வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின்
தொன்மையான வரலாறு. கலை. பண்பாடு மற்றும் மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p>

தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, பௌத்த கலாசார
திணைக்களம், வனவள, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களின் ஊடாக
மேற்கொள்ளப்பட்டிருந்த மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார்
இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உடனடியாக அகற்றப்படவும்
நிறுத்தப்படவும் வேண்டும்.

தமிழினப் படுகொலை மீள நிகழாமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும், தொடரும்
கட்டமைப்புசார் இனவழிப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும், நிலையான
இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் - சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு
முற்றாக நீக்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை
அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு எட்டப்படுவதனை சர்வதேச சமூகம்
உறுதிப்படுத்த வேண்டும் என் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T16:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களின் நிலைமை மோசம்! ஆபத்தை தடுக்க முடியாத கையறு நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் எனத் தெரிவித்துள்ளார் .</p><p>லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்தோடு, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>அரச வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி குற்றம் செய்திருந்தால் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மேலும், நியாயமான கைதுகளை தாம் வரவேற்பதாகவும், பக்கச்சார்பான பழிவாங்கும் கைதுகள் இடம்பெறுமான இருந்தால் நிச்சயமாக எதிர்த்து நிற்போம் எனவும் அவர் கூறினார்.</p><p>மேலும், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், ஆபத்துகளைத் தடுப்பதில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்தும் ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BbNQPnS1qrA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T15:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவடிப்பள்ளி ஆற்றில் கரையொதுங்கிய ஆணின் சடலம் - அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/male-body-washes-ashore-in-mavadippalli-river-1789295882"></link>
            <id>https://tamilwin.com/article/male-body-washes-ashore-in-mavadippalli-river-1789295882</id>
            <summary type="text">புதிய இணைப்புஅம்பாறை - மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13.09.2026) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அம்பாறை - மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13.09.2026) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, குறித்த சடலம் சாய்ந்தமருது, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய அஸ்ஜத் என்ற இளைஞனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், இன்று (13) மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>அம்பாறை- மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின்
சடலம் இன்று(13.9.2026) கரையொதுங்கிய நிலையில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ
இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார், சடலத்தை மீட்டு விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>அத்துடன்,
அவர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பிலும்
பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/784f47df-d4e5-4311-9dd7-ce75403b3cb7/26-6aa67d0cdcb46.webp' /></p><p>

சடலம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்கான
ஏற்பாடுகளைக் காரைதீவு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்க திரைமறைவில் நடைபெறும் டீல்! பிரபல தொழிலதிபரும் தொடர்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133</id>
            <summary type="text">இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் இப்போது அந்த ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. </p><p>ஆனால் இப்போது அந்த பெயர் கேட்பதில்லை. தேர்தல் காலங்களில் அந்தப் பெயர் அதிகமாகக் கேட்கும். அவர்தான் பசில் ராஜபக்ச.
அவர் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p> ஆனால் அவர் அந்த வழக்குகளுக்கு முன்னிலையாகக் கூட இலங்கைக்கு வரவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதாகவே கூறப்படுகிறது. சில வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உடல்நலக் குறைவு என அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.</p><h2>
</h2><p></p><h2>தொழிலதிபருடனான டீல்</h2><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் சம்பவங்களில் கூட அவர் இலங்கைக்கு வரவில்லை. முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச என்ன செய்கிறார்? </p><p>இலங்கையிலிருந்த பிரபல நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் பின்னணியில், பசில் ராஜபக்சவை ஏன் கைது செய்யவில்லை? அவரை ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை? போன்ற விடயங்களும் அரசியல் மேடைகளிலும் திரை மறைவிலும் பேசப்பட்டு வருகின்றன.</p><p>
புதிய தகவலின்படி, பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் "டீல்" (Deal) ஒன்றைச் செய்துகொண்டுள்ளதாகப் பேசப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e398dff-20d8-4a4c-a974-42c34e9c4867/26-6aa5f54f84faa.webp' /></p><p>தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், ஒரு டீல் மூலமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் மேடைகளின் திரை மறைவில் பேசப்படுகிறது.
</p><p>பொதுவாக எப்போதும் பல்வேறு டீல்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த டீல் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. </p><p>அந்தத் தொழிலதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் தொடர்புகளைப் பேணி வருபவர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>எப்படியோ, பசில் ராஜபக்ச அவருடன் ஒரு டீல் போட்டுக்கொண்டு, தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>you may like this video</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BLkNC88_Llw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும் இல்லை: ட்ரம்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gulf-nations-hold-talks-with-iran-strait-of-hormuz-1789308337"></link>
            <id>https://tamilwin.com/article/gulf-nations-hold-talks-with-iran-strait-of-hormuz-1789308337</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக வளைகுடா நாடுகள் நாளை(13) ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும்
இல்லை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக வளைகுடா நாடுகள் நாளை(13) ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும்
இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

அயர்லாந்து குடியரசில் உள்ள டூன்பெக் நகரில் அமைந்துள்ள தனது கோல்ஃப் ஓய்வு
விடுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானிய சிரேஷ்ட அதிகாரிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்துவது அந்த நாடுகளின் தனிப்பட்ட விருப்பம் எனச்
சுட்டிக்காட்டினார்.</p><h2>அமெரிக்காவுடன் ஒப்பந்தம்</h2><p>

ஈரான் அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள மிகவும்
தீவிரமாக விரும்புவதாகத் தனது பழைய கூற்றை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cffdb161-12c7-451c-823a-759a40cb53e4/26-6aa6b1a30f45e.webp' /></p><p>எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முன்னரோ அல்லது
அதற்கு உடனடியாவோ இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:22:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி எண்ணெய் குழாய்த் தொடர் முடக்கம்: உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறையும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shutdown-of-saudi-oil-pipeline-network-1789308931"></link>
            <id>https://tamilwin.com/article/shutdown-of-saudi-oil-pipeline-network-1789308931</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் பிரதான கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய்த்தொடர் மீது
நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,
அடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் பிரதான கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய்த்தொடர் மீது
நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,
அடுத்த சில நாட்களுக்குள் அது மீள இயங்காவிட்டால் உலகளாவிய எண்ணெய்
விநியோகத்தில் 4 சதவீத இழப்பு ஏற்படும் என வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்த சூழலில், சவூதி அரேபியா தனது தினமும் 4
மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்குத்
திருப்பி அனுப்ப இந்த குழாய்த்தொடரையே பயன்படுத்தி வந்தது.
</p><p>
தற்போது இந்த குழாய்த்தொடர் முடங்கியுள்ளதால், யான்பு துறைமுகத்தில் உள்ள
இருப்புக்கள் மூலம் இன்னும் 5 முதல் 7 நாட்களுக்கு மாத்திரமே ஏற்றுமதியைத்
தொடர முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2>எரிபொருள் விலையேற்றம்</h2><p>
இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க 5 முதல் 6 வாரங்கள் வரை செல்லக்கூடும் என ஒரு
தரப்பும், விரைவில் பகுதியளவில் பணிகளைத் தொடங்க முடியும் என மற்றொரு தரப்பும்
தெரிவித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/289a9c8e-b1eb-46c8-aff2-2d9cfb49877a/26-6aa6b033eeea3.webp' /></p><p>

இருப்பினும் சவூதி அரசு இந்த சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரப்பூர்வ
தகவல்கள் எதையும் இன்னும் வெளியிடவில்லை.</p><p>

ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பணவீக்கம்
அதிகரித்துள்ள நிலையில், சவூதியின் எண்ணெய் விநியோகமும் குறைந்தால் உலகளாவிய
ஆற்றல் நெருக்கடி மேலும் தீவிரமடையும் என சர்வதேச ஆற்றல் முகமை (IEA) கவலை
வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் பதிவாகவுள்ள வெப்பநிலை தொடர்பில் வெளிவந்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789303289"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789303289</id>
            <summary type="text">நாளைய தினம் (14.09.2026) பகல் வேளையில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அதன்படி வடமத்திய மற்றும் கிழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளைய தினம் (14.09.2026) பகல் வேளையில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

அதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் இவ்வாறான நிலைமை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வெப்பச் சுட்டெண் அவதானம்</h2><p>

இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பின்படி, </p><p>வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் அவதானம் செலுத்தப்பட வேண்டிய'மட்டத்தில் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448f3467-22df-47be-9d26-2a538262983c/26-6aa6a6aa038d9.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த அதிக வெப்பமான வானிலை நிலவுவதால் தேவையான சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T13:38:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தில் இணை உறுப்பினராகக் கனடா முயற்சி: பிரதமர் மார்க் கார்னி புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-associate-membership-in-the-european-union-1789303903"></link>
            <id>https://tamilwin.com/article/canada-associate-membership-in-the-european-union-1789303903</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பிய
ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தும் நோக்கில் கனடாவை அதன் &#039;இணை
உறுப்பினராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பிய
ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தும் நோக்கில் கனடாவை அதன் 'இணை
உறுப்பினராக' மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அந்நாட்டின் பிரதமர் மார்க்
கார்னி ஆராய்ந்து வருகின்றார்.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்துடனான வர்த்தகத்
தகராறு மற்றும் பரஸ்பர வரிகள் காரணமாகக் கனடாவின் பொருளாதாரம்
பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால் தனது வர்த்தகப் பங்காளிகளை வேறுபடுத்தும்
முயற்சியில் கனடா தீவிரமாக இறங்கியுள்ளது.</p><h2>பேச்சுவார்த்தை&nbsp;</h2><p>
</p><p>
கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில்
ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய கனிமங்கள் சார்ந்த
பொருட்கள், சேவைகள் மற்றும் தொழிலாளர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான
வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71111ece-dafc-47ba-8dcd-3d848c7a94bb/26-6aa6a17931612.webp' /></p><p>
</p><p>
அத்துடன், கனடியக் குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விசா அற்ற வேலை
வாய்ப்பு மற்றும் வசிப்பிட உரிமைகளைப் பெற்றுத் தருவது தொடர்பாகவும் பிரான்ஸ்
ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் கார்னி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>

இருப்பினும், புதிய 'இணை உறுப்பினர்' அந்தஸ்தை உருவாக்குவது தொடர்பில்
ஐரோப்பிய ஒன்றியம் ஆர்வம் காட்டிய போதிலும், உறுப்பு நாடுகளின் ஒப்புதலைப்
பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் இத்திட்டத்திற்குப் பெரும் சவாலாக
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T13:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு - அநுர ஆட்சியை கவிழ்க்க மாபெரும் பேரணிக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strong-opposition-to-the-22nd-amendment-1789305124"></link>
            <id>https://tamilwin.com/article/strong-opposition-to-the-22nd-amendment-1789305124</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைதி
வழியிலான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பில்
முன்னெடுக்கப்படவுள்ளது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைதி
வழியிலான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பில்
முன்னெடுக்கப்படவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்துள்ளார். </p><p>

இதற்காக அனைத்து முற்போக்கு மக்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்
மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர்
அலுவலகத்தில் இன்று(13.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். </p><h2>

22ஆவது திருத்தம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின்
சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது. 22 ஆவது
திருத்தத்துக்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9eb388c-30fc-4354-828b-0c33e9486d06/26-6aa6a1a8eb682.webp' /></p><p>
</p><p>
எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக
ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம்.
</p><p>
தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி
அரசாங்கம், இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி
ஆட்சியைக் கொண்டுவந்து, நாட்டின் அதிகாரத்தைப் பெலவத்தைக்குக் கொண்டு செல்லும்
முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.
</p><h2>
24ஆம் திகதி அணித்திரளும் மக்கள்</h2><p>
மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக, 220
இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. இதற்கு எதிராகப் பெரும்
மக்கள் பலத்தைத் திரட்டுவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93cb5261-97d5-40a5-a29b-3f6f7bfe7e58/26-6aa6a1a9ea909.webp' /></p><p>

பிரஜைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராகக் கொண்டுவரப்படும் இந்த
மோசமான 22 ஆவது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை
எடுக்கப்படும். இது அரசின் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
</p><p>
அரசின் சர்வாதிகார ஆட்சியைத் தோற்கடிக்கும் முதல் அடியைச் எதிர்வரும்
செப்டெம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி பதிக்கும் என்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8310ff70-0b8f-4362-8f76-aa210021c966/26-6aa6a1aac44f8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f10ac243-f58f-44aa-9028-4d46c953ddf2/26-6aa6a1ab9eac5.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T13:14:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு போக்குவரத்து சிக்னலில் கோளாறு - ஒரே நேரத்தில் ஒளிரும் இரு விளக்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/malfunction-in-the-traffic-signals-at-pannipitiya-1789303086"></link>
            <id>https://tamilwin.com/article/malfunction-in-the-traffic-signals-at-pannipitiya-1789303086</id>
            <summary type="text">கொழும்பு - பன்னிப்பிட்டிய அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பன்னிப்பிட்டிய அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொட்டாவை நோக்கிச் செல்லும் சாலையில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் அமைப்பில் சிவப்பு மற்றும் பச்சை விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிர்வதால் இந்த குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
பொதுமக்களின் கோரிக்கை</h2><p>

இந்த விடயம் தொடர்பில் மகரகம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பலரும் இது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01d92c66-369a-4989-a389-316358e16d61/26-6aa69b3c9200e.webp' /></p><p>
</p><p>
எனினும், தற்போதைய சூழ்நிலையில் விபத்துகள் ஏற்படக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p><p> 

எனவே, அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T12:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு! அழகுசாதனப் பொருட்கள் கொள்வனவு செய்வோருக்கான அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fine-on-company-for-selling-expired-cosmetics-1789300997"></link>
            <id>https://tamilwin.com/article/fine-on-company-for-selling-expired-cosmetics-1789300997</id>
            <summary type="text">அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும், கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும், கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள், விற்பனை விலை குறிப்பிடப்படாத நறுமணப் பொருட்கள் மற்றும் உரிய விபரங்களற்ற பூச்சு வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு</h2><p> </p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் (இலக்கம் 5) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. </p><p>

கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச்சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77923b9-1fbd-4800-bff5-9523c9e35d9a/26-6aa697b9d2a12.webp' /></p><p> </p><p>

உச்ச சில்லறை விலை குறிப்பிடப்படாமல் நறுமணப் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான அழகுசாதன பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உரிய உற்பத்தி விபரங்களன்றி அழகுசாதனப் பொருட்களை காட்சிப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அந்நிறுவனத்திற்கு எதிராகச் சுமத்தப்பட்டன.</p><h2>அபராதம் விதிப்பு</h2><p> 

அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் போது, குற்றச்சாட்டுகள் மூன்றையும் குறித்த நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. </p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
மேலும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் கொள்வனவு செய்வோர் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T12:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் மீது தாக்குதல்:மசகு எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-ship-attacked-in-the-strait-of-hormuz-1789301039"></link>
            <id>https://tamilwin.com/article/another-ship-attacked-in-the-strait-of-hormuz-1789301039</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஹோர்முஸ்
நீரிணைப் பகுதியில் பயணித்த வர்த்தகக் கப்பலொன்று தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஹோர்முஸ்
நீரிணைப் பகுதியில் பயணித்த வர்த்தகக் கப்பலொன்று தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதை அடுத்து, அதில் இருந்த
மாலுமிகள் உள்ளூர் அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
சவூதி அரேபியாவின் பிரதான கச்சா எண்ணெய் குழாய்த்தொடர் மீது ட்ரோன் தாக்குதல்
நடத்தப்பட்டு மூடப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய ஆற்றல் விநியோகம் குறித்த
அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.</p><h2>எண்ணெய் ஏற்றுமதி</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் 1,200
கிலோமீற்றர் நீளமுடைய இந்த எண்ணெய் குழாய்த்தொடர், ஹோர்முஸ் நீரிணை
மூடப்பட்டிருந்த காலத்தில் நாட்டின் 5 சதவீதமான எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய
வழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.தற்போது இத்தாக்குதல் காரணமாகப்
பிராந்தியத்தில் பதற்றம் மேலும் நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c64eb79-4a92-410f-9eb8-eccceb3b7b1b/26-6aa6964591004.webp' /></p><p>
அதேவேளை, யேமனின் செங்கடல் பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்களின்
தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக அமெரிக்காவின்
இராணுவ உதவியைச் சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான்
கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
எனினும், நேரடி இராணுவத் தலையீட்டைத் தவிர்த்து உளவுத்துறைத் தகவல்களை வழங்க
மாத்திரமே அமெரிக்கா உடன்பட்டுள்ளது.

நாளை ஓமானில் நடைபெறவுள்ள வளைகுடா நாடுகளின் கூட்டத்தில் ஹோர்முஸ் நீரிணையின்
எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41c10637-5ce6-4e19-b692-7cff8a3646a0/26-6aa6964643db6.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை அமைதியைத் திரும்பப் பெற ஈரான் விதித்துள்ள 7
நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை சுமுகமான உடன்பாடு எட்டப்படுவது
கடினம் எனப் பிராந்திய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T12:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாபன விதிக்கோவை திருத்தத்தில் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/concession-granted-to-government-officials-1789300939"></link>
            <id>https://tamilwin.com/article/concession-granted-to-government-officials-1789300939</id>
            <summary type="text">பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தாபன விதிக்கோவையை விட ஊழல் எதிர்ப்புச் சட்டமே முதன்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தாபன விதிக்கோவையை விட ஊழல் எதிர்ப்புச் சட்டமே முதன்மை பெறும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்
சிறப்புரிமை அல்லது விலக்களிப்பு அளிக்கப்பட்ட அரச அதிகாரிகளைப்
பொறுத்தவரையில் இது சாதகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> 

நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஒரு அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு
உரிமை, சிறப்புரிமை அல்லது விலக்களிப்பை மறுக்கும் அல்லது கட்டுப்படுத்தும்
வகையில் தாபன விதிக்கோவையின் எந்தவொரு சரத்தும் வியாக்கியானம்
செய்யப்படக்கூடாது என அமைச்சுச் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால்
வெளியிடப்பட்ட தாபன விதிக்கோவை திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0610458-20e4-4bf4-9482-f1ee1bee83bc/26-6aa690cd7e476.webp' /></p><p>

இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்,
அரச ஊழியர்களுக்கு முழுமையான விலக்களிப்பு வழங்கப்படவில்லை.
</p><p>
அத்துடன் அவர்கள் கடுமையான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை
நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T12:08:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொன்சேகா மீதான தாக்குதல் முயற்சி! சந்தேகநபரின் பிணைக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/general-sarath-fonseka-attack-case-1789299638"></link>
            <id>https://tamilwin.com/article/general-sarath-fonseka-attack-case-1789299638</id>
            <summary type="text">முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்
முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக
விளக்கமறியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்
முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருக்கு மேன்முறையீட்டு
நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு
செய்யச் சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் எனக் கூறப்படும் தம்பையா பிரகாஷன்
(தனுஷ்) என்பவரே பிணை பெற்றவராவார்.</p><h2>வழக்குத் தாக்கல்&nbsp;</h2><p>

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் மீது, முன்னாள் இராணுவத் தளபதி
மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சி தொடர்பாக 2012 செப்டம்பர் 20
அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இவர் கடந்த 14
ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20ce95c9-c2d5-4ebe-aff2-6621de9d8586/26-6aa68e208da92.webp' /></p><h2>பிணை வழங்கிய நீதிமன்றம்</h2><p>

இந்த நிலையில், நீண்டகால விளக்கமறியல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை
பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 200,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 4
சரீரப் பிணைகளின் கீழ் இவருக்கு அண்மையில் பிணை வழங்கியது.</p><p>

எனினும், இந்த பிணை உத்தரவுக்கு எதிராகச் சட்டமா அதிபர் திணைக்களம் மேன்
முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை
எட்டியுள்ளதாகவும், இந்த நேரத்தில் சந்தேகநபர் பிணையில் அனுமதிக்கப்பட்டால்,
அது நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்றும் சட்டமா
அதிபர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 நாட்களில் இலங்கை முழுவதும் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-arrivals-have-crossed-1-5-million-1789299650"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-arrivals-have-crossed-1-5-million-1789299650</id>
            <summary type="text">



இலங்கைக்கு இந்த வருடம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது என சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



இலங்கைக்கு இந்த வருடம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது என சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. </p><p>

இதற்கமைய, ஜனவரி 1 முதல் செப்டம்பர் 6 வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

1.5 மில்லியன் பயணிகள் வருகை</h2><p>
இந்த ஆண்டு இதுவரை, இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 395,377 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். 

மேலும், ஐக்கிய ராச்சியத்திலிருந்து 152,625 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 102,473 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 91,763 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e51f06f-a8a4-4b42-ab43-5abdaddb0eb5/26-6aa68d78b5e75.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், செப்டம்பர் 1 முதல் 6 வரை 31,885 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:48:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை ஜனாதிபதியானால் மகனும் ஜனாதிபதியாக வேண்டுமா.. இனி வாய்ப்பே இல்லை! அநுரவின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-s-announcement-at-the-public-rally-1789299114"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-s-announcement-at-the-public-rally-1789299114</id>
            <summary type="text">தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற முறைமை 2024 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துவிட்டது என்று ஜனாதிபதி அநு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற முறைமை 2024 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துவிட்டது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் பேரணில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பழைய அரசியல் முடிந்துவிட்டது&nbsp;</h2><p> </p><p>

மேலும், ஊழல்வாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்குவதற்கு ஏற்ற சமூகத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6593bf0c-4e47-4ab6-9e66-bd537bf7e8ca/26-6aa68b0bbc643.webp' /></p><p>

அத்துடன், தந்தை ஜனாதிபதியாகவிருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும், தந்தை பிரதமரானால் மகனும் பிரதமராக வேண்டும், தந்தை அமைச்சரானால் மகனும் அமைச்சராக வேண்டும் என்ற பழைய அரசியல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே முடிவுக்கு வந்துவிட்டது எனவும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தற்போது கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தை அடுத்து, நொச்சியாகம பகுதியில் இடம்பெறவுள்ள மக்கள் பேரணியில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p><iframe width="1337" height="752" src="https://www.youtube.com/embed/eLsJ1Ydheq0" title="🔴 LIVE:  அனுராதபுரத்தில் ஜனாதிபதி அநுர பிரம்மாண்ட பொதுக்கூட்டம் |  President Anura Live Speech" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:48:27+00:00</updated>
        </entry>
    </feed>
