<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-05T05:41:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அரசமைப்பு விவகாரம்: தமிழ்பேசும் கட்சிகளிடம் இந்திய உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-constitution-issue-indian-high-commissioner-1785907227"></link>
            <id>https://tamilwin.com/article/new-constitution-issue-indian-high-commissioner-1785907227</id>
            <summary type="text">புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்
என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தை கடந்ததன் பின்னர்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்
என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தை கடந்ததன் பின்னர்,
அதனை புறந்தள்ளிவிட்டு மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது
புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என&nbsp;இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
சந்தோஷ் ஜா தமிழ்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு&nbsp;அழுத்தம் </h2><p>அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தம்
வழங்கிவரும் நிலையில், இலங்கைக்கு வருகை தரும் இந்திய வெளியுறவுச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி அதனை மீண்டும் வலியுறுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78944a17-6d38-44d3-b9f9-f3de63124014/26-6a72ccb854f7b.webp' />&nbsp;</p><p>

தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து
செயற்படுவதற்கு உடன்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய
உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக்
கலந்துரையாடினர்.
</p><p>
நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தச்
சந்திப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் எம்.ஏ. சுமந்திரன் மற்றும்
இரா. சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ்
பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முருகேசு சந்திரகுமார்
ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் மற்றும்
நிஸாம் காரியப்பர் ஆகியோரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர்
அலி, மொஹமட் தாஹிர் உள்ளிட்டோரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில்
ஜீவன் தொண்டமானும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் பாரத் அருள்சாமி
ஆகியோரும் கலந்துகொண்டனர்.</p><p>

இதன்போது, தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 1988 - 1989 ஆம்
ஆண்டுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எவ்வாறு கூட்டாக இணைந்து
செயற்பட்டன என்பது குறித்தும், தற்போது மீண்டும் ஒரு கட்டமைப்பாக
இணைந்திருப்பது குறித்தும் பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினர்.</p><h2>அநுர சஜித்துடனான சந்திப்புகள் குறித்து விளக்கம்</h2><p>கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்புக்கள் மற்றும் அங்கு
விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.</p><p>

குறிப்பாக, ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளை
ஆரம்பித்தல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், வடக்கு, கிழக்கு
மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், மலையக மக்களுக்கான
காணிப்பகிர்வு மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும், அவற்றுக்கு
ஜனாதிபதி அளித்த பதில்கள் குறித்தும் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டது.</p><h2>இந்திய உயர்ஸ்தானிகரின் நிலைப்பாடு</h2><p>பிரதிநிதிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த உயர்ஸ்தானிகர், மாகாண சபைத்
தேர்தல்களை விரைவாக நடத்துவது உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இந்தியா
ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு அழுத்தம் வழங்கியுள்ளது என்று
தெரிவித்துள்ளார். </p><p>மேலும், நாட்டுக்கு வருகைதரும் இந்திய வெளியுறவுச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி, அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அதனை
மீண்டும் வலியுறுத்துவார் எனவும் உறுதியளித்துள்ளார்.
</p><p>
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினை
கரிசனைக்குரியது என்பதை ஏற்றுக்கொண்ட அவர், மலையகத்தில் 'டித்வா' சூறாவளி
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி வழங்கல் குறித்தும்
விசாரித்தறிந்தார்.</p><h2>புதிய அரசமைப்பு விவகாரம்</h2><p>புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்துக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், "தற்போது
நடைமுறையில் உள்ள அரசமைப்பை கைவிட்டு, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து முழுமையாக
ஆரம்பிக்கப் போகின்றீர்களா?" எனப் பிரதிநிதிகளிடம் வினவினார்.
</p><p>அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், மாகாண சபைகள் முறைமை உள்ளிட்ட சில கூறுகள்
மூலம் அதிகாரப் பகிர்வுக்கான கட்டமைப்பு ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில்,
அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் தொடங்குவது ஆபத்தான விடயம் எனச்
சுட்டிக்காட்டினர். </p><p>புதிய அரசமைப்பு எனும் போது தற்போது இருப்பதை விடவும்
கூடுதலான அதிகாரப் பகிர்வு பற்றியே தாம் பேசுவதாகவும் குறிப்பிட்டனர்.
</p><p>
இதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், இந்த விடயத்தில் அவதானத்துடன் செயற்பட
வேண்டும் என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தைக் கடந்ததன்
பின்னர் அதனைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் தொடக்கப் புள்ளியில் இருந்து
ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T05:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-foreign-secretary-arrives-1785907655"></link>
            <id>https://tamilwin.com/article/indian-foreign-secretary-arrives-1785907655</id>
            <summary type="text">&amp;nbsp;இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று(05) கொழும்பு வந்தடைந்தார். 
தனது இந்த விஜயத்தின் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று(05) கொழும்பு வந்தடைந்தார்.</p><p> 
தனது இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.</p><p></p><p> 
இந்த விஜயம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட ஈடுபாடுகள் மற்றும் முக்கிய ஒத்துழைப்புப் பகுதிகளை மேலும் முன்னோக்கி கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da36f911-3291-4175-84fd-5a135c3de4df/26-6a72ccd051195.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:27:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சசிந்திர ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-issued-relation-sasindra-rajapaksa-case-1785905689"></link>
            <id>https://tamilwin.com/article/order-issued-relation-sasindra-rajapaksa-case-1785905689</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, குறித்த வழக்கை செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p> </p><p>இந்த வழக்கு விசாரணைக்காக சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93aa49e8-95b9-431c-9a92-8d3d5aa94c47/26-6a72c6b01be33.webp' /></p><p>இதனையடுத்து சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்கை செப்டம்பர் 28 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பாதையில் சடலம் கண்டெடுப்பு - பிரதான வழித்தட தொடருந்து சேவைகள் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-services-delayed-body-near-gampaha-station-1785904108"></link>
            <id>https://tamilwin.com/article/train-services-delayed-body-near-gampaha-station-1785904108</id>
            <summary type="text">கம்பஹா மற்றும் தாரளுவாவிற்கு இடையேயுள்ள கம்பஹா தொடருந்து நிலையம் அருகே, தொடருந்து தண்டவாளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதான வழித்தட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மற்றும் தாரளுவாவிற்கு இடையேயுள்ள கம்பஹா தொடருந்து நிலையம் அருகே, தொடருந்து தண்டவாளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதான வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் தாமதமாகி வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
 

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தற்போது இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>தொடருந்து சேவைகள் தாமதம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aa40501-878f-4215-9112-d1dd3d784bcd/26-6a72c28554243.webp' /></p><p>
 

சடலம் அகற்றப்பட்டு, தேவையான விசாரணைகள் நிறைவடையும் வரை, அந்த வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் தாமதத்துடன் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத இணையவழி வலைத்தளங்களை உடனடியாக முடக்க உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-unlicensed-online-gambling-websites-1785897053"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-unlicensed-online-gambling-websites-1785897053</id>
            <summary type="text">நாட்டில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் அனைத்து சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்களையும் உடனடியாக முடக்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் அனைத்து சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்களையும் உடனடியாக முடக்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.</p><p>&nbsp; &nbsp;</p><h2>விசேட நடவடிக்கை</h2><p>இதேவேளை, இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f657fabc-9b03-47da-a299-a98c6888ad12/26-6a72bfde384c8.webp' />&nbsp;</p><p>இத்தகைய நடவடிக்கைகள் பணமோசடி, கடத்தல்கள், மனித கடத்தல் மற்றும் சட்டவிரோத எல்லைதாண்டல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு வழிவகுக்கின்றமையும் கறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:46:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக பாதை வாகனங்கள் குறித்த கட்டாய நடைமுறை - வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seat-belts-mandatory-for-traveling-on-expressways-1785902840"></link>
            <id>https://tamilwin.com/article/seat-belts-mandatory-for-traveling-on-expressways-1785902840</id>
            <summary type="text">அதிவேக பாதைகளில் இயங்கும் வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்கு வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக பாதைகளில் இயங்கும் வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்கு வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.
</p><p>
தொழில்துறை பங்காளர்களின் கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆசனப்பட்டி அணிதல்</h2><p> </p><p>

மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட 2011ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மோட்டார் வாகனங்கள் (அதிவேகப் பாதைகள்) கட்டளையின் கீழ், அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆசனப்பட்டிகள் இல்லாத வாகனங்களில் அவற்றை மறுசீரமைத்துப் பொருத்துவதற்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப சலுகை காலம் கடந்த ஜூன் 19ஆம் திகதியுடன் முடிவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07d6098-c67b-4eea-89ec-285723df6c9a/26-6a72bb8c323d4.webp' /></p><h2>சலுகை காலம் நீடிப்பு</h2><p>
</p><p>
இந்த காலக்கெடுவை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, 2026 ஜூன் 17ஆம் திகதியிட்ட 2493/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசாங்கம் இக்கட்டளையில் திருத்தம் செய்து, சலுகை காலத்தை எதிர்வரும் செப்டெம்பர் 19 வரை நீடித்தது.
</p><p>
நாடாளுமன்ற ஒப்புதலுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூழ்ச்சிதாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்! மரிக்கார் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-sri-lanka-2019-1785902248"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-sri-lanka-2019-1785902248</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை
விதிக்கப்பட்டதைப் போன்று, அந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான
சூழ்ச்சிதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை
விதிக்கப்பட்டதைப் போன்று, அந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான
சூழ்ச்சிதாரிகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார்.
</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வருடத்துக்கான
அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான 71 ஆயிரத்து 700 மில்லியன் ரூபாவுக்கான
குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>முழுமையான நீதி</h2><p>
</p><p>
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>"உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின்
முன்னாள் செயலாளருக்கும் முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33d4feaf-9b84-4e1d-ba73-c0f2aaff4f90/26-6a72ba7fb381c.webp' /></p><p> தாக்குதலைத் தடுக்கத் தவறினார்கள் என்று தெரிவித்தே
இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் தவறு என்று கூற வரவில்லை.</p><p>

ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டுமென்றால்,
தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதைப் போன்று, இதில்
நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட சூழ்ச்சிதாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட
வேண்டும்.
</p><p>
ஒரு குழுவினர்தான் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டனர். அதனால்தான் அவர்களால்
அதனைத் தடுக்க முடியாமல் போனது. எனவே, பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்பட
வேண்டும். சஹ்ரானை வழிநடத்தியவர்களும் கட்டாயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். </p><p>இதன்போது அரசின் நிதி மற்றும் வருமானக் கொள்கை குறித்தும் அவர் விமர்சனங்களை
முன்வைத்தார்.</p><p>

"அரசு மேலதிக வருமானத்தைத் தேடிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், இந்த
மேலதிக வருமானத்துக்காக அரசு வரிகளை அதிகரித்து சாதாரண மக்களுக்கு எவ்வாறான
அழுத்தங்களைக் கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf0156c2-7631-4ade-b44d-0840bd300d68/26-6a72ba8066104.webp' /></p><p> அரசுக்கு 71 பில்லியன்
மாத்திரமல்ல, அதனைவிட அதிகமான பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏனெனில், அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி
செலவிடப்படாமல் அவ்வாறே திறைசேரிக்கு மீள அனுப்பப்படுகின்றது.
</p><p>
அவ்வாறில்லாமல், அரசு திறம்பட நிதி முகாமைத்துவம் செய்து மேலதிக வருமானத்தை
ஈட்டியுள்ளதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. </p><p>மாறாக, அமைச்சுக்களுக்கு
ஒதுக்கப்பட்ட பணத்தை எந்தவொரு அபிவிருத்தியும் செய்யாமல் மீளப்
பெற்றுக்கொண்டுள்ளது என்றே கூற வேண்டும்"&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:23:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் : காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palali-airport-development-project-1785901550"></link>
            <id>https://tamilwin.com/article/palali-airport-development-project-1785901550</id>
            <summary type="text">பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பிற்கென மயிலிட்டி வடக்கு(J/246),
தென்மயிலை(J/240), பலாலி மேற்கு(J/256), குரும்பசிட்டி(J/242) ஆகிய கிராம
அலுவலர் பிரிவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பிற்கென மயிலிட்டி வடக்கு(J/246),
தென்மயிலை(J/240), பலாலி மேற்கு(J/256), குரும்பசிட்டி(J/242) ஆகிய கிராம
அலுவலர் பிரிவுகளில் 1986ஆம் ஆண்டுகாலப்பகுதியில் பொது மக்களின் காணிகள்
சுவீகரிக்கப்பட்டன.
</p><p>
இந்நிலையில் குறித்த காணி உரிமையாளர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் நோக்கில்
காணி உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் நேற்றையதினம்(04.08.2026) தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்
பிரதேச செயலாளர் சிவகெங்கா தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
</p><p></p><h2>கோரிக்கை ஒன்று முன்வைப்பு</h2><p>
குறித்த காணிகளுக்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு விலை மதிப்பீட்டு
திணைக்களத்தின் விலை மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக் கொள்ளவது அவசியமென்பதால்
இதற்கான சம்மதம் தெரிவிக்கும் படிவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3799c37-f110-4c62-a4e1-02fb0555d2ec/26-6a72b79c1ae24.webp' /></p><p>தொடர்ந்து தமது காணிகளுக்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்த
காணி உரிமையாளர்களிடம் விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் மதிப்பீட்டினை
மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்களது காணிகளை 2022ஆம் காலப்பகுதிக்கு உரியதாக
மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் காணி அமைச்சினால்
அனுப்பி வைக்கப்பட்ட படிவத்தின் ஆங்கில மொழி மூலமான படிவமும் தமிழ் மொழி
மூலமான படிவமும் ஒப்படைக்கப்பட்டது.
</p><p>
குறித்த படிவத்தில் தீர்மானிக்கப்பட்ட மதிப்பீட்டினை நட்ட ஈடாக பெற்றுக்கொள்ள
சம்மதிக்கிறேன் என்ற சொற்றொடர் தமக்கு குழப்பமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய
காணி உரிமையாளர்கள், அதனை விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால்
மேற்கொள்ளப்படும் விலை மதிப்பீட்டுக்கு உடன்படுகிறேன் என மாற்றுமாறு கோரிக்கை
ஒன்றை முன்வைத்திருந்தனர்.
</p><p>
குறித்த விடயம் அமைச்சுக்கு உட்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மாவட்ட அரசாங்க
அதிபரால் இதனைத் திருத்தி அமைச்சுக்கு அனுப்பி அவர்களிடமிருந்து முடிவினை
பெற்றுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டதுடன், அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக
காணி உரிமையாளர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டதுடன், தொடர்
நடவடிக்கைகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திறக்கப்படும் வான் கதவுகள்: அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotmale-reservoir-sluice-gates-reopen-1785900383"></link>
            <id>https://tamilwin.com/article/kotmale-reservoir-sluice-gates-reopen-1785900383</id>
            <summary type="text">கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதற்கமைய, வினாடிக்கு சுமார் 130 கன அடி நீர் மகாவலி கங்கைக்கு திறந்து விடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
இவ்வாறு நீர் திறந்து விடப்படுவதன் காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a5991c-e67e-4f2b-afae-8a1935edcf57/26-6a72b51ee3b79.webp' /></p><p> இதனால், உலப்பனை, கெடிஓயா, கம்பளை, பேராதனை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளில் மகாவலி கங்கையின் இருமருங்கிலும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:02:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் விடயத்தில் சிக்கிய பிரபல நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/famous-actress-in-struggle-sri-lanka-1785842640"></link>
            <id>https://tamilwin.com/article/famous-actress-in-struggle-sri-lanka-1785842640</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நடிகை ரிது ஆகர்ஷா முற்றாக மறுத்துள்ளார். </p><p>

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ஊடாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையாகும். அவை திசை திருப்பக்கூடியவையாகும். அவ்வாறான தகவல்கள் எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2><b>
வழக்கு தாக்கல்</b></h2><p>600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை குறுகிய காலத்திற்குள் குவித்துள்ளதாக மேர்வின் சில்வாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79afb64-0366-45db-bf49-da4a63be9415/26-6a729b5b80f9f.webp' /></p><p>வழக்கின் நீதிமன்ற அறிக்கைகளில், ரிது ஆகர்ஷா என்ற பெயரில் DFCC வங்கி கணக்கு ஒன்றிற்கு பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் DFCC வங்கியில் கணக்கு ஒன்றைப் பராமரிக்கவில்லை. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கிலக்கம் எனக்குச் சொந்தமானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
</p><h3><b>
சட்டவிரோத சொத்து</b></h3><p>அதை உறுதிப்படுத்தும் வகையில் DFCC வங்கியினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றையும் அவர் தனது அறிக்கையுடன் இணைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9feb382a-c28d-4ce3-b070-a455ad1bb32c/26-6a729b5c33a31.webp' /></p><p>மேலும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தான் பாடசாலை மாணவியாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இந்த குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை ரிது ஆகர்ஷா வலியுறுத்தியுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EWd7DFMtezI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:58:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-minister-of-tourism-discussion-governor-1785900972"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-minister-of-tourism-discussion-governor-1785900972</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன்
குணசேகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன்
குணசேகரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.</p><p></p><h2>சுற்றுலா மேம்பாட்டுத்திட்டம்&nbsp;</h2><p>
இக்கூட்டத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை சுற்றுலா மேம்பாட்டுத்
திட்டம் குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387e3681-9fc3-4f03-a954-4ba513abb302/26-6a72b443330a2.webp' /></p><p> அத்துடன், அப்பகுதியில்
அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சின்
ஊடான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்குப் பல
முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருகின்றபோதிலும், வனவளத் திணைக்களம்,
வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்
உள்ளிட்டவர்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் நிலவும் தாமதங்கள் குறித்து
ஆளுநர் எடுத்துரைத்துள்ளார்.
</p><p>
ஆளுநர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் அவதானிப்புகள் குறித்து கவனம்
செலுத்திய சுற்றுலாத்துறை பிரதியமைச்சர், மாகாணத்தில் சுற்றுலாத்துறையை
ஊக்குவிப்பது தொடர்பிலும், மாவட்ட ரீதியிலான ஒருங்கிணைந்த சுற்றுலா
அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு துரிதமாகச் செயற்படுத்துவது என்பது
குறித்தும் ஆளுநருடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.</p><p>

இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், ஆளுநரின்
செயலாளர், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர், ஆளுநரின்
பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின்
இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை சிறைச்சாலையில் தீவிர பாதுகாப்பு - ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tight-security-for-south-prisons-1785893586"></link>
            <id>https://tamilwin.com/article/tight-security-for-south-prisons-1785893586</id>
            <summary type="text">நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

காலி, பூஸ்ஸ, மாத்தறை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் வீரவில சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தப்படவுள்ளது. </p><p>

இது தொடர்பில், தென் மாகாண ஆளுநர் சுசிறிபால மானவடுவின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.</p><p>
</p><h2><b>
அவசர பாதுகாப்புக் குழு</b></h2><p>நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவான அமைதியின்மை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தென்னிலங்கையில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்வதே இந்த அவசர பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b4604bb-afe3-4db4-a0e2-6d8548e9ea9a/26-6a72b333efab8.webp' /></p><p>மக்களின் பாதுகாப்பு, உயிர், உடைமைகள் மற்றும் அமைதியான சூழ்நிலையை தொடர்ந்தும் பேணிச் செல்வது தொடர்பில் எவ்வித தளர்வான கொள்கையும் கடைப்பிடிக்கப்பட மாட்டாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p>

நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, அனைத்துப் பாதுகாப்பு பிரிவுகளும் இணைந்து எத்தகைய அவசர நிலையையும் உடனடியாக எதிர்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-08-05T03:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fever-warning-to-the-srilanka-people-1785900112"></link>
            <id>https://tamilwin.com/article/fever-warning-to-the-srilanka-people-1785900112</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p>

மத்திய, சபரகமுவ, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய நான்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>இலவச மருந்துகளை வழங்க நடவடிக்கை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அசுத்தமான நீரில் விளையாடுவதால் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல், தொற்று மஞ்சள் காமாலை மற்றும் தொழுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமில் முத்துகுட எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f620382-d10f-478b-b069-4a593a6609c3/26-6a72aea40cc0d.webp' /></p><p> </p><p>

அசுத்தமான நீரிலிருந்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால், தடுப்பு சிகிச்சையை நாட வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை கருத்திற்கொண்டு அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து இலவச மருந்துகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>
 இதற்கிடையில், வயிற்றுப்போக்கு, தொற்று மஞ்சள் காமாலை, தொழுநோய், டெங்கு உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை உணர்ந்தால், அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T03:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிவகாரச் செயலர் : தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-foreign-secretary-to-arrive-sri-lanka-today-1785899006"></link>
            <id>https://tamilwin.com/article/indian-foreign-secretary-to-arrive-sri-lanka-today-1785899006</id>
            <summary type="text">இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகாரச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி இன்று(05.08.2026)&amp;nbsp; இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

கொழும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகாரச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி இன்று(05.08.2026)&nbsp; இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
</p><p>
கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில்
நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு,
உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள்
குறித்துக் கலந்துரையாடுவதே அவரின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது.
</p><p></p><h2>விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக</h2><p>
தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய
மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து விரிவான
பேச்சுகளை நடத்தவுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/288d2666-9b3a-44fc-84ad-fc4a463ee813/26-6a72ac164dd6a.webp' /></p><p>
இந்தியாவின் 'அண்டைய நாடுகளுக்கு முதலுரிமை' கொள்கையின் அடிப்படையில்,
இலங்கையுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த
புதுடில்லி தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.</p><p>இந்த விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக, வடக்கு - கிழக்கு மற்றும்
மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுடனான விக்ரம்
மிஸ்ரியின் தனித்தனிச் சந்திப்புகள் அமைகின்றன.
</p><p>
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன், காணி மற்றும்
பொலிஸ் அதிகாரங்களுடன் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த இந்தியத் தரப்பு
கொழும்பு அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனத் தமிழ் தலைமைகள் வலியுறுத்தவுள்ளன.</p><h2>வழக்கமான இராஜதந்திரச் சந்திப்பாக</h2><p>முன்னர் கைவிடப்பட்ட சம்பூர் திட்டம், தற்போது இலங்கை மின்சார சபை மற்றும்
இந்திய நிறுவனத்துடன் இணைந்து 120 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டமாக
மாற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b831d17-2a40-4c7b-b5bf-010a07ba0932/26-6a72ac1704668.webp' /></p><p>மின் உற்பத்தி இணைப்பு, எரிபொருள் குழாய் இணைப்பு மற்றும் கடல்வழி
போக்குவரத்து போன்ற உத்திசார் இணைப்புத் திட்டங்களின் தாமதங்கள் குறித்து
இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>இந்தியாவின் 450 மில்லியன் டொலர் உதவித் திட்டத்தில் (350 மில்லியன் டொலர்
கடன் உதவி மற்றும் 100 மில்லியன் டொலர் மானியம்), இலங்கை அரசு அதனை முறையாகப்
பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது.</p><p>மேலும், 22 டீசல்
எஞ்சின்களை மானியமாக வழங்க இந்தியா முன்வந்த போதிலும், அதற்குரிய கோரிக்கைப்
பத்திரங்களை இலங்கை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.</p><p> இலவச
வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் தடைகள் குறித்தும் இந்தியா கவலை கொண்டுள்ளது.
</p><p>
விக்ரம் மிஸ்ரியின் இந்த விஜயமானது வழக்கமான இராஜதந்திரச் சந்திப்பாக
மட்டுமில்லாமல், பிராந்திய மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான
நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், தேங்கிக் கிடக்கும் திட்டங்களை
விரைவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய பரீட்சார்த்தக் களமாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T03:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை: அரசாங்கத்தின் தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/service-extension-for-police-officers-1785895053"></link>
            <id>https://tamilwin.com/article/service-extension-for-police-officers-1785895053</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு வயதெல்லையை அடைந்த அதிகாரிகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு வயதெல்லையை அடைந்த அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
60 வயதை பூர்த்தி செய்த குறைந்த தர பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p>பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி நிலை முதல் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவி வரை கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இச்சேவை நீடிப்புக்காக விண்ணப்பிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b8d99a-79d1-4053-9a80-d3efa09e8c1d/26-6a729893293a6.webp' /></p><p>
</p><p>இதற்கமைய நல்ல உடல் தகுதியுடனும், நன்நடத்தையுடனும், களங்கமற்ற சேவையாற்றி 60 வயதை பூர்த்தி செய்த அதிகாரிகள் இந்த சேவை நீடிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, மிக விரைவில் இந்த சேவை நீடிப்புகள் வழங்கப்படவுள்ளன.
பொலிஸ் திணைக்களத்தில் பெருமளவிலான வெற்றிடங்கள் நிலவுவதாகவும், ஒரே தடவையில் அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வது கடினம் என்பதாலும், அதற்கு தற்காலிக தீர்வாகவே இந்த சேவை நீடிப்பு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>பொலிஸ் திணைக்களத்தில் 84,000 அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய போதிலும், தற்போது 50,000க்கும் குறைவான அதிகாரிகளே கடமையாற்றி வருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T03:17:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ்மா அதிபர் குறித்த சாகரவின் சர்ச்சையான கருத்து: அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-controversial-comment-igp-minister-order-1785898126"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-controversial-comment-igp-minister-order-1785898126</id>
            <summary type="text">பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய
கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய
கருத்துக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு
அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சாகர காரியவசம்,
நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபரிடம் அரசுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுமாறு
கோரியதுடன், அவர் வீதியில் பொதுமக்களிடம் அடிவாங்கும் பொலிஸ்மா அதிபராக
வரலாற்றில் இணைவதைத் தான் காண விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.</p><p>
சாகர காரியவசத்தின் இந்த கருத்து குறித்து ஊடகங்களிடம் கருத்துததெரிவித்த
அமைச்சர் ஆனந்த விஜேபால,</p><p>&nbsp;</p><h2>விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப சட்ட நடவடிக்கைகள்&nbsp;</h2><p> அரசு இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை இலகுவாக
எடுத்துக்கொள்ளாது. அரசியல் அதிகாரத்துக்காக கடந்த காலங்களில்
மக்களைப் பலி கொடுத்த ஓர் அரசியல் இயக்கத்தின் மனநிலையே இத்தகைய கூற்றுகளில்
பிரதிபலிக்கின்றது என்றும் அவர் விமர்சித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8bf8dc2-125e-4872-b22c-9fef8ab248a8/26-6a72aaab0e1e7.webp' /></p><p>
தற்போதைய பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை மிகவும் திறம்பட ஆற்றி வருகின்றமையைச்
சுட்டிக்காட்டிய அமைச்சர், ஊழல், இலஞ்சம் மற்றும் அரச சொத்துக்கள்
துஷ்பிரயோகம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர விசாரணைகள்
காரணமாக அச்சமடைந்துள்ள நபர்களே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
என்றும் சந்தேகம் வெளியிட்டார்.</p><p>

விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் எச்சரித்தார்.</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:14:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழப்பு! ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-people-died-inclement-weather-9-districts-1785897242"></link>
            <id>https://tamilwin.com/article/8-people-died-inclement-weather-9-districts-1785897242</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8
பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து
8...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8
பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து
832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
அறிவித்துள்ளது.
</p><p>
9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;</p><h2>ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு</h2><p>

நாடு முழுவதும் அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள்
பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec127e72-cedd-4bbb-8237-baef7522ff10/26-6a72a34e5485e.webp' />&nbsp;</p><p>நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>நுவரெலியா மாவட்டத்தில் 1,091 குடும்பங்களைச்
சேர்ந்த 3 ஆயிரத்து 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள 20
நிவாரண முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 195 பேரும்,
உறவினர் வீடுகளில் 224 பேரும் தங்கியுள்ளனர்.</p><p>
மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பிரதான வீதிகளில் ஏற்பட்ட தடங்கல்கள்,
மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் மண்மேடுகள் சரிந்தமை போன்ற
காரணங்களால் தடைப்பட்டிருந்த முக்கிய போக்குவரத்துப் பாதைகள் சீரமைக்கப்பட்டு
மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p> குறிப்பாக, கடுகண்ணாவ பகுதியில்
மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி வீதி மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்து
முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.
</p><p>
எனினும், நுவரெலியா - பதுளை, நுவரெலியா - ஹட்டன் மற்றும் நுவரெலியா - கண்டி
(டொப்பாஸ் முதல் லபுக்கலை வரை) பிரதான வீதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால்,
சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார்
கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
களனி மற்றும் களு கங்கை ஆற்றுப் படுகைகளுக்காக விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய
எச்சரிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்
அறிவித்துள்ளது.</p><h2>மண்சரிவு அபாயம்</h2><p>இந்த ஆறுகளின் நீர்மட்டம் சீரான நிலையை எட்டியுள்ளமையால் இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> எவ்வாறாயினும், நீரியல் மற்றும் இடர்
முகாமைத்துவப் பிரிவு தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றது என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரிய பண்டார
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fed55a3-4bc3-41ba-a47f-af0832ff32cf/26-6a72a34da260f.webp' />&nbsp; &nbsp;</p><p>
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை
பெய்யக்கூடும். சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில
இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி
எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>மேலும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள்
குறித்து பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நாட்டின் மலைப்பாங்கான பிராந்தியங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்
நிலவுகின்றது. </p><p>அதற்கமைய, கண்டி (கங்கா இஹல கோரளை, உடுதும்பர, பச்பாகே கோரளை),
கேகாலை (எட்டியாந்தோட்டை), நுவரெலியா (அம்பகமுவ, நோர்வூட்) ஆகிய பிரதேச
செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலைச் சிவப்பு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T02:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-bomb-attack-in-ratmalana-house-1785896396"></link>
            <id>https://tamilwin.com/article/hand-bomb-attack-in-ratmalana-house-1785896396</id>
            <summary type="text">இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்று மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டின் மீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்று மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதுடன், அவற்றில் ஒன்று வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> எனினும் இந்த வெடிப்பினால் எவருக்கும் எந்தவிதமான காயங்களும் அல்லது சேதங்களும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>பொலிஸார் மேலதிக விசாரணை</b></h2><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008c5d70-97b4-4d1a-9b3b-dcedcbdd8426/26-6a72a22643b7e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-05T02:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-the-employees-provident-fund-1785895897"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-the-employees-provident-fund-1785895897</id>
            <summary type="text">ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>
தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப்பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>சட்ட வரைஞருக்கு ஆலோசனை</h2><p>
1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316e685a-cfa1-4f8a-a5ce-c8502bb5aa6d/26-6a729f20998e7.webp' /></p><p>
இலங்கை மத்திய வங்கி இதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், தொழில் திணைக்களம் ஆரம்ப வரைவை தயாரித்துள்ளது.</p><p>
இதற்கமைய, ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குமாறு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T02:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை! பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-tuition-classes-banned-from-midnight-1785894513"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-tuition-classes-banned-from-midnight-1785894513</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயா்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயா்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் இன்று (05) நள்ளிரவுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.</p><p>
புலமைப்பரிசில் பரீட்சை முடியும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தடை செய்யப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>இந்த காலகட்டத்தில், புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கேள்விகளை கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவது, விநியோகிப்பது அல்லது விளம்பரப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a368c5-40a2-47bc-aa52-1c1d744e0149/26-6a729ac58d4f6.webp' /></p><p>பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், அத்துடன் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் விளம்பரங்களை செய்வது அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பதும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் ஆகஸ்ட் 09 அன்று நடைபெற உள்ளது.</p><p>

இதற்கிடையில், மோசமான வானிலை நிலவுவதை கருத்தில் கொண்டு, 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பான&nbsp; சிறப்பு கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T02:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித ராஜபக்சவுக்கு தொடரும் ஏமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-reject-yositha-s-request-1785894372"></link>
            <id>https://tamilwin.com/article/court-reject-yositha-s-request-1785894372</id>
            <summary type="text">வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விடுத்த கோரிக்கை தொடர்பில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விடுத்த கோரிக்கை தொடர்பில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று அறிவித்துள்ளார். </p><p>அது தொடர்பான உத்தரவை உயர் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் அறிவுறுத்தினார். </p><p>மேலும் அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யோசித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகிய இருவருக்கும் நீதவான் உத்தரவிட்டார்.</p><p> </p><h2><b>வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு</b></h2><p>இந்த நிலையில் சந்தேக நபரான யோசித ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, யோசித ராஜபக்ச, வர்த்தக உச்சி மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கோரிக்கை விடுத்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fb08448-1e94-42b6-aa4e-892dd2216a4d/26-6a7297ab2f324.webp' /></p><p>இதன்போது நீதவான், சந்தேக நபருக்கு எதிராக லஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>இதனால் இந்த கோரிக்கைக்கான உத்தரவை வழங்க முடியாது என்றும், அது தொடர்பான உத்தரவை மேல் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். </p><p>நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் நீதவான் தெரிவித்தார்.
</p>]]></content>
            <updated>2026-08-05T01:53:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை மோதல்கள் அலையாக மாறுமா..! நீதி அமைச்சர் ஹர்ஷன அதிர்ச்சித் தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisons-attacks-harshna-nanayakara-1785891790"></link>
            <id>https://tamilwin.com/article/prisons-attacks-harshna-nanayakara-1785891790</id>
            <summary type="text">சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து விசேட அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிறைச்சாலை கட்டமைப்பைத் திட்டமிட்ட வகையில்
பலவீன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து விசேட அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிறைச்சாலை கட்டமைப்பைத் திட்டமிட்ட வகையில்
பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது
என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில்&nbsp; நடைபெற்ற அமர்வில் மஹர சிறைச்சாலை
மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p></p><h2>மஹர சிறைச்சாலை</h2><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,
</p><p>
"மஹர சிறைச்சாலையில் கடந்த 1 ஆம் திகதி மாலை 3.45 மணியளவில் மூன்று கைதிகள்
சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி கூச்சலிட்டுப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e96f012-262e-4b23-9dc2-cc6dbaffe304/26-6a728e105b1bc.webp' /></p><p> </p><p>சிறைச்சாலை அதிகாரி அங்கு சென்று அவர்களுடன் பேச்சு நடத்திய
போதிலும், ஒரே நேரத்தில் சுமாராக ஆயிரம் கைதிகள் ஒன்றுகூடி கலகம் ஏற்படுத்தும்
வகையில் செயற்பட்டுள்ளனர்.
</p><p>
இதனைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆயுதங்களைப் பாதுகாப்பாக
மறைத்துவிட்டு பிரதான இரும்பு வாசல்களை மூடியுள்ளனர். எனினும், கைதிகள்
கதவுகள் மீது கற்களால் தாக்குதல் நடத்தியதுடன், சமையலறை, உணவு உண்ணும் இடம்,
வைத்தியசாலை, பதிவுப் பிரிவு மற்றும் அலுவலகப் பகுதிகளைச் சேதப்படுத்தியும் தீ
வைத்தும் அழித்துள்ளனர். </p><p>பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும்
இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை</h2><p>
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் கைதிகளுக்கு இடையிலான முரண்பாடாக
இருந்தபோதிலும், மஹர சிறைச்சாலையில் அவ்வாறான தன்மை காணப்படவில்லை. ஒரே
கட்டத்தில் ஆயிரம் பேர் ஒன்றுகூடியமை சந்தேகத்துக்குரியது.
</p><p>
கைதிகள் கூண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக,
சமையலறை, உணவு உண்ணும் இடம் மற்றும் வைத்தியசாலை போன்றவையே திட்டமிட்டுத்
தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6a0b578-0d18-40a3-b784-997e8b4e5bd6/26-6a728e0fa6895.webp' /></p><p>
</p><p>
மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாள்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா
என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. </p><p>தற்காலிக ஏற்பாடாக வேறு சிறைச்சாலைகளில் உணவு சமைக்கப்பட்டு மஹர
சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>
</p><h2>நெருக்கடிகளுக்குத் தீர்வு&nbsp;</h2><p>
சிறைச்சாலையின் சொத்துகளுக்குத் தீ வைத்து அழிக்கப்பட்டமை மக்களின்
வரிப்பணத்தையே பாதிக்கின்றது என்பதைக் கைதிகளின் உறவினர்கள் புரிந்துகொள்ள
வேண்டும்.

சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண எனது
தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e0a892e-6c3c-4187-9f41-1b1fa527f30e/26-6a728e110e1ce.webp' /></p><p>
</p><p>
மேலும், சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது.</p><p> மூன்று சிறைச்சாலைகள் தொடர்பில் விசேட தகவல்கள்
கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய சிறைச்சாலைகளில் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T01:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்ய வெளிநாடொன்றில் விசேட நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mission-to-arrest-kpi-1785891497"></link>
            <id>https://tamilwin.com/article/mission-to-arrest-kpi-1785891497</id>
            <summary type="text">&amp;nbsp;மலேசியாவில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான &#039;கஞ்சிபானி இம்ரான்&#039; என்பவரைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மலேசியாவில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான 'கஞ்சிபானி இம்ரான்' என்பவரைக் கைது செய்வதற்காக, உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹான் ஓலுகல தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று பாரிய கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
</p><p>மலேசிய பொலிஸாரால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரான் ஒளிந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களை இலக்கு வைத்து அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>பொலிஸார் விசேட நடவடிக்கை</h2><p>
</p><p>கஞ்சிபானி இம்ரான் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், சர்வதேச பொலிஸாருடன் இணைந்து நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல்வழிப் பாதைகளில் மலேசிய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe9f39d3-9bfa-425c-8364-45086caa9019/26-6a728aab6a47c.webp' /></p><p>மலேசியாவில் அவருக்கு உள்ள தொடர்புகள் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
</p><p>தற்போது மலேசிய பொலிஸாரின் காவலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியான 'ரத்மலானே சீமா' உட்பட மூன்று குற்றவாளிகளிடம் பொலிஸ் உதவி ஆணையர் ரோஹான் ஓலுகல மற்றும் மலேசிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இதன் மூலம் கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது பின்னணி குறித்த பல முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.</p><p></p><h2>&nbsp;பாதாள உலகக் தலைவர்</h2><p>
இந்த பாதாள உலகக் குழுத் தலைவரைக் கைது செய்யும் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.
</p><p>பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரும் இந்த நடவடிக்கையில் நேரடியாகப் பங்களித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85877dc2-b424-41d7-b9d5-bf0b00e20ada/26-6a728f841575d.webp' /></p><p>
</p><p>கஞ்சிபானி இம்ரானின் பிரதான சகாவான ரத்மலானே சீமா மலேசியாவில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கஞ்சிபானி இம்ரான் தனது மறைவிடத்தை மாற்றி வேறு பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
எப்படியாவது இந்த பாதாள உலகக் தலைவரைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னேற்றங்களை ஆய்வு செய்து தேவையான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வந்தடைந்த இந்திய அணி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/team-india-have-arrived-in-sri-lanka-1785890470"></link>
            <id>https://tamilwin.com/article/team-india-have-arrived-in-sri-lanka-1785890470</id>
            <summary type="text">2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது.
</p><p>
 
இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>இலங்கை கிரிக்கெட்</h2><p>
</p><p>
 இரண்டாவது போட்டி வரும் ஓகஸ்ட் 23 முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (S.S.C.) மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11998204-820f-4ecc-b6a8-849aa6dc7216/26-6a72886452b57.webp' /></p><p>
</p><p>
 உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 5ஆவது இடத்திலும், இலங்கை 6ஆவது இடத்திலும் உள்ளதால், இரு அணிகளுக்கும் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மிகவும் முக்கியமானவை ஆகும்.
</p><p>
 
இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு ஆயத்தமாகும் வகையில், ஆகஸ்ட் 07 முதல் 10 ஆம் திகதி வரை கொழும்பு என்.சி.சி (N.C.C.) மைதானத்தில் பயிற்சிப் போட்டியொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-son-fled-the-country-and-his-wife-1785873297"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-son-fled-the-country-and-his-wife-1785873297</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த நாட்களில் அவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
</p><p>
கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
</p><p>
இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் மற்றும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
தஹாம் திருமணம் செய்துகொண்ட குடும்பத்தின் வணிக நிறுவனமான எல்காடோ (Elcardo), ஆரம்பத்தில் நுழைவாயில்கள் (gates) தயாரிக்கும் நிறுவனமாக இருந்து, பின்னர் வாகன இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அகில ரவிநக வீரரத்ன மற்றும் அஸ்வினி டயஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BCAwXNr7v-g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:41:56+00:00</updated>
        </entry>
    </feed>
