<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-30T22:31:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி நிமிடங்களில் சீன தூதுவரின் கைகளை பிடித்த மகிந்த - கோட்டா: நடக்கப்போவது என்ன..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-gotabaya-chinese-ambassador-final-minutes-1785439433"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-gotabaya-chinese-ambassador-final-minutes-1785439433</id>
            <summary type="text">இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் அண்மையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.&amp;nbsp;இந்நிலையில், அண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் அண்மையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.&nbsp;</p><p>இந்நிலையில், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிரமப்பட்டு நடந்து செல்லும் காணொளி ஒன்று வெளியானது.&nbsp;</p><p>குறித்த காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், அவரின் ஆதரவாளர்கள் அவர் குறித்து வருத்தம் தெரிவித்து வந்தனர்.&nbsp;</p><p>அதேநேரம், பல தமிழ் மக்கள் வெளியிட்ட கருத்துக்கள் குறிப்பாக இறுதி போர் காலத்தில் தனது உறவினர்களை இழந்தவர்களின் வருத்தம் கலந்த கருத்துக்கள் கவனத்தை ஈர்த்தன.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-7HPFvKe7PQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் உள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளைத் திரும்பப் பெற மியன்மார் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/myanmar-agrees-to-repatriate-5-000-rohingya-1785442661"></link>
            <id>https://tamilwin.com/article/myanmar-agrees-to-repatriate-5-000-rohingya-1785442661</id>
            <summary type="text">மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் திரும்பப்
பெற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார்
இப்ராஹிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் திரும்பப்
பெற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார்
இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மலேசியாவில் உள்ளூர் மக்களுக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கும் இடையே
சமீபகாலமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>5,000 அகதிகள்</h2><p>
</p><p>
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், மியன்மாருடன்
மலேசியா வைத்துள்ள நல்லுறவு காரணமாகவே இந்தப் பேச்சுவார்த்தை சாத்தியமானதாகக்
குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c3c2c7-2f3c-48c1-ae18-eff739ed5a70/26-6a6bb396e9d3b.webp' /></p><p>மியன்மாருக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள 5,000 அகதிகளைக் கண்டறிந்து,
அடையாளம் கண்டு, பரிசீலனை செய்யும் பொறுப்பு தனது அமைச்சகத்திடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில்
தெரிவித்துள்ளார். </p><p>இதன் பின்னரே மியன்மாருடன் வெளியுறவுத்துறை மூலம் இறுதிப்
பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

பெப்ரவரி மாத நிலவரப்படி, மலேசியாவில் உள்ள ஐநா அகதிகள் அமைப்பில் சுமார்
1,26,000 ரோஹிங்கியா அகதிகள் பதிவு செய்துள்ளனர்.</p><p></p><h2>ஐ.நா அகதிகள் அமைப்பு</h2><p>
</p><p>
மலேசியாவில் சட்டப்பூர்வ அகதிகள் சட்டங்கள் இல்லாததால், அவர்கள் அனைவரும்
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்படுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9262c1f8-d9e5-4b74-aaae-79a36563b363/26-6a6bb397a94eb.webp' /></p><p>தற்போது மியன்மாரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அகதிகளை
அங்குத் திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஐநா அகதிகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
</p><p>சர்வதேசச் சட்டங்களின்படி எந்தவொரு நபரும் ஆபத்தான சூழல் நிலவும் நாட்டிற்கு
வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படக் கூடாது என்றும் அது
சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவின் வரைபடம்: ஆப்பிரிக்க நாடுகள் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wrong-african-names-on-us-summit-map-spark-row-1785440802"></link>
            <id>https://tamilwin.com/article/wrong-african-names-on-us-summit-map-spark-row-1785440802</id>
            <summary type="text">பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை
சமர்ப்பித்த வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளின்
பெயர்களும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை
சமர்ப்பித்த வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளின்
பெயர்களும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்க வெளியுறவுத்துறை தனது புதிய சுகாதார ஒப்பந்தங்கள் குறித்துப்
பேசியபோது திரையில் தவறான வரைபடம் தோன்றியுள்ளது.</p><p></p><h2>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்</h2><p>
</p><p>
மாநாட்டில் பங்கேற்றவர்கள் இதன் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில்
பகிர்ந்ததை அடுத்து இந்த விடயம் பூதாகரமானது.
</p><p>
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வில், அந்த வரைபடத்தில் OpenAI
நிறுவனத்தின் வாட்டர்மார்க் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0258641f-4c9d-4d82-ab06-ad176461916d/26-6a6bac6b04a67.webp' /></p><p>இதன் மூலம், அந்த வரைபடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி
வருவதாக ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த குளறுபடி குறித்து முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க
வெளியுறவுத்துறை, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அவசர அவசரமாக ஸ்லைடுகளை
மாற்றியபோது பணியாளர் ஒருவரால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாகக் கூறியுள்ளது.</p><p></p><h2>வரைபடக் குளறுபடி</h2><p>

கடலோர நாடான நைஜீரியா, சஹாரா பாலைவனத்திற்குள் இருப்பது போல்
காட்டப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக் நாடு, ஆப்பிரிக்காவின் கொம்பு
பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. </p><p>அதேபோல், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி
கோஸ்ட் நாடு, கண்டத்தின் முற்றிலும் எதிர் திசையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31a50e7b-4ce3-433e-a782-4bda83c2932c/26-6a6bac6babcaa.webp' /></p><p>

இந்த ஸ்லைடை உருவாக்கியவருக்கும், அதை அங்கீகரித்தவருக்கும் ஆப்பிரிக்க
நாடுகள் எங்கு இருக்கின்றன என்பதே தெரியவில்லை என்று சர்வதேச ஆய்வாளர்கள்
விமர்சித்துள்ளனர்.</p><p>

இருப்பினும், இந்த வரைபடக் குளறுபடியைத் தாண்டி மாநாட்டின் விவாதங்கள்
பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாகவும், எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில்
அமெரிக்கா தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை
தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழரசுக் கட்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-against-tamil-nadu-party-adjourned-1785437770"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-against-tamil-nadu-party-adjourned-1785437770</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த கட்டளையானது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
</p><p>இந்த கட்டளையானது நேற்று(30.07.2026) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தினால்&nbsp; பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்கு&nbsp;ஒத்திவைப்பு</h2><p>இந்தக் கட்டளைக்குப் பின்னரே அடுத்த கட்டமாக மூல வழக்கு மீதான விவகாரத்தை
நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

வழக்கில் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி
இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பில் தமது எழுத்துமூல சமர்ப்பணத்தை
தாமே முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ff2ed11-cc6b-4dda-830f-8f9eb127db6c/26-6a6ba58a51c92.webp' /></p><p>

எதிராளிகளான தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின்
நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் முன்னைய பொதுச்செயலாளர் மருத்துவர்
சத்தியலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் எழுத்து மூல
சமர்ப்பணங்களை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.
</p><p>அத்துடன் ஏனைய எதிராளிகளான சிறீதரன் எம்.பி, குகதாசன் எம்.பி, சீ.யோகேஸ்வரன்
ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரனும், வழக்காளி தரப்பில்
வழக்காளியின் சட்டத்தரணியும் இந்த விவகாரத்தையொட்டி தமது எழுத்து மூல
சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.</p><p>இதனையடுத்து இந்த விவகாரத்தையொட்டி
நீதிமன்றின் கட்டளை ஓகஸ்ட் 28ஆம் திகதி வழங்கப்படும் எனத் தெரிவித்து நீதிபதி
வழக்கை ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சுகாதார அமைப்பை முற்றிலுமாக ஒதுக்கிய ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-administration-quits-who-completely-1785436462"></link>
            <id>https://tamilwin.com/article/trump-administration-quits-who-completely-1785436462</id>
            <summary type="text">அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) வழங்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) வழங்கப்பட்ட நிதியை முழுமையாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. </p><p>இதனால் WHO-க்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><h2>தடுப்பூசி விநியோகம்</h2><p>
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுப்படி, சுகாதாரத்துறை அமைச்சர் ரொபர்ட்
கென்னடி ஜூனியர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் காவி
அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதை அமெரிக்க நிதியுதவிக்கான
நிபந்தனையாக முன்வைத்துள்ளனர்."</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c09b60-c7f7-4c4f-9cfe-58c8763ceeb9/26-6a6b9c24965b3.webp' /></p><p> உலகெங்கிலும் தடுப்பூசி விநியோகத்தை விரிவுபடுத்தும் இந்த சர்வதேச
திட்டத்திற்கு மீண்டும் நிதியுதவி வழங்குமாறு வலியுறுத்தி வந்த குடியரசுக் கட்சி
செனட்டர் சூசன் காலின்ஸ், இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
</p><p>
மேலும், தடுப்பூசிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து, மாற்று
முறைகளை நோக்கிய கூட்டாண்மையை உருவாக்க காவி அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உலக சுகாதார அமைப்பு</h2><p>
</p><p>
உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால மோதல் போக்கின்
தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9ffd61f-8492-437f-8467-875be28e3472/26-6a6b9c23c90f6.webp' /></p><p>ஏற்கனவே கடந்த 2025 ஜனவரியில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, உலக
சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும் என்றும், அதற்கான நிதி
நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படுவதால், போலியோ,
காசநோய், எச்.ஐ.வி (HIV), மலேரியா மற்றும் தட்டம்மை போன்ற நோய்களைத் தடுக்கும்
திட்டங்களும், காசா, சூடான் போன்ற போர் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் அவசர
மருத்துவ உதவிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என நிபுணர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து அதிரடியாக இருவர் கைது - சந்தேக நபர்களிடம் இருந்த மீட்கப்பட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-held-in-batticaloa-with-stolen-goods-1785426076"></link>
            <id>https://tamilwin.com/article/two-held-in-batticaloa-with-stolen-goods-1785426076</id>
            <summary type="text">மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்வையிடுவதற்காக வந்த அவரது சகோதரன் மற்றும் நண்பர் ஆகிய இருவரையும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்வையிடுவதற்காக வந்த அவரது சகோதரன் மற்றும் நண்பர் ஆகிய இருவரையும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த கைது நடவடிக்கையானது நேற்றை தினம்(19.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைது செய்யப்பட்டோர்</h2><p>
</p><p>

குறித்த சிறைக்கைதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவராவார். </p><p>இவரை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்த நிலையிலேயே அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய இருவரும் போதைப்பொருட்களுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb44ca16-5cec-4ff0-97d1-c95e0f647cc3/26-6a6b8b722a86b.webp' /></p><p>

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி 7 அரைக் கிலோ கொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலை சம்பவத்தை அடுத்து அவர் உட்பட அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>போதைப்பொருள் வியாபரி</h2><p>இதனையடுத்து குறித்த சகோதரனை பார்வையிட அவரது தம்பியும் அவரின் நண்பன் ஆகிய இருவரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.</p><p> </p><p>

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமைய பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c3427d-3754-4304-a4a1-3381a6c6bbbb/26-6a6b8b72cf602.webp' /></p><p> </p><p>

இதன்போது அங்கிருந்த தொட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிக்கிராம் ஹெரோயின் 500 மில்லி கிராம் ஐஸ் போதைபொருட்களுடன் கைது செய்துள்ளனர். </p><p>

இதில் போதைப்பொருள் வியாபரியின் சகோதரன் ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் வெளியே வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p> 



</p>]]></content>
            <updated>2026-07-30T20:49:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈபிடிபியுடன் இணைந்தது போல் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடனும் இணைகின்றதா தமிழரசுக் கட்சி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamilarasu-katchi-sumanthiran-epdp-tmvp-1785434064"></link>
            <id>https://tamilwin.com/article/tamilarasu-katchi-sumanthiran-epdp-tmvp-1785434064</id>
            <summary type="text">தற்போது வடக்கு கிழக்கில் ஒரு புதிய கூட்டணியாக தமிழரசுக் கட்சியும் புதிய ஜனநாயகக் கூட்டமைப்பும் உருவாகியிருக்கின்றது எனலாம்.&amp;nbsp;இந்நிலையில், தமிழரசுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது வடக்கு கிழக்கில் ஒரு புதிய கூட்டணியாக தமிழரசுக் கட்சியும் புதிய ஜனநாயகக் கூட்டமைப்பும் உருவாகியிருக்கின்றது எனலாம்.&nbsp;</p><p>இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன், இந்த கூட்டணியில் இடம்பெற்ற ஒரு முக்கிய நகர்விற்கு ஆதரவு வழங்கியிருக்கவில்லை.&nbsp;</p><p>முன்னதாக அவர்களுக்கிடையில் வேறுபாடு இருந்திருக்கலாம் ஆனால், தற்போது&nbsp;சுமந்திரன் அந்த கூட்டணி தர்மத்தோடு செயற்பட்டிருக்கவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் பலர் விமர்சிக்கின்றனர்.&nbsp;</p><p>அதேநேரம், அவர் தனது தீர்மானங்கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்தும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6UknUjBX6VE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T18:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-dismiss-case-of-harakkata-1785427450"></link>
            <id>https://tamilwin.com/article/court-dismiss-case-of-harakkata-1785427450</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர முடியாது என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><p>ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தப்பிச் செல்வதற்குச் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இந்த சந்தேகநபர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b89806b-4480-440f-b2d2-af7f9a1df614/26-6a6b75fbd2086.webp' /></p><p> </p><p>
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முடியாது என்றபோதிலும், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்திற் கொண்டு, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித சட்டத் தடையும் இல்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T18:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடி: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-grip-strait-of-hormuz-drone-attack-1785432423"></link>
            <id>https://tamilwin.com/article/iran-grip-strait-of-hormuz-drone-attack-1785432423</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் போர், உலகளாவிய கடல்வழி
வர்த்தகம் மற்றும் மசகு எண்ணெய் விநியோகத்தை முடக்கும் அபாயத்தை
ஏற்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் போர், உலகளாவிய கடல்வழி
வர்த்தகம் மற்றும் மசகு எண்ணெய் விநியோகத்தை முடக்கும் அபாயத்தை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
எகிப்தின் டமியேட்டா துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த அமெரிக்காவுக்குச்
சொந்தமான எரிவாயுக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ட்ரோன் தாக்குதல்
நடத்தப்பட்டது.
</p><p>
சுயஸ் கால்வாய் பகுதிக்கு மிக அருகில் நடந்த இத்தாக்குதல், சவூதி அரேபியாவின்
எண்ணெய் ஏற்றுமதிக்கு எஞ்சியிருந்த பாதுகாப்பான வழியான சுயஸ் கால்வாய் மூலமான
கப்பல் போக்குவரத்திற்கும் புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
</p><p>
உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்போது
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p></p><h2>ஈரான் நடத்திய தாக்குதல்</h2><p>அனுமதி பெறாமல் இந்த ஹோர்முஸ் நீரிணை
வழியாகச் செல்ல முயன்ற மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6428219-ffa8-45d5-b959-38f3fc1dc7b4/26-6a6b8a7fc832b.webp' /></p><p>
</p><p>
ஓமன் நாடு ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தைச் சீரமைக்க முன்வைத்த திட்டத்தை ஈரான்
நிராகரித்துள்ள போதிலும், பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானின்
இராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியது.
</p><p>
இப்போரில் முதன்முறையாகச் சவூதி அரேபியா, அமெரிக்காவுடன் இணைந்து ஈராக்கில்
உள்ள ஈரான் ஆதரவுப் படைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p>

இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீதும்,
குவைத்தில் உள்ள சீனாவுக்குச் சொந்தமான கட்டிடம் மீதும் ஈரான் தாக்குதல்
நடத்தியுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் சுயஸ் கால்வாய் அருகேயான தாக்குதல்கள்
காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் 8% வரை உயர்ந்து,
ஒரு பீப்பாய் 90 டொலரை நெருங்கியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T17:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நெறி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-s-livelihood-training-begins-in-jaffna-1785424860"></link>
            <id>https://tamilwin.com/article/women-s-livelihood-training-begins-in-jaffna-1785424860</id>
            <summary type="text">பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் ஜீவ ஊற்று
அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை அலுவலகம் இன்றையதினம் யாழ்ப்பாணம்,
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் ஜீவ ஊற்று
அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை அலுவலகம் இன்றையதினம் யாழ்ப்பாணம்,
அரியாலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய கட்டிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு தேசியக்
கொடியேற்றலுடன் ஆரம்பமானது.</p><h2>பெண்களின் வாழ்வாதார மேம்பாடு</h2><p> </p><p>அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள்
வரவேற்கப்பட்டதுடன், பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்கள் நாடா வெட்டி புதிய கிளை
அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.</p><p>
புதிய கிளை அலுவலகத்தின் ஊடாக பெண்களுக்கான தையல் பயிற்சி, ஆரி வேலைப்பாடு,
கேக் ஐசிங், அழகுக்கலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சி வகுப்புகள்
முன்னெடுக்கப்படவுள்ளதுடன் கிறிஸ்தோபர் எமி (கனடா ) அவர்களின்
நிதி அனுசரணையில் தையல் பயிற்சி நெறி முதற்கட்டமாக இன்றையதினம் உத்தியோக
பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11e3780-2f60-42c3-9d02-a85c3996bf89/26-6a6b6bdf561ac.webp' /></p><p>பெண்களுக்கு தொழில்திறன்களை வழங்கி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும்
தன்னம்பிக்கையையும் உயர்த்தும் நோக்கில் இந்த இலவச கற்கைநெறிகள் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதன் ஒரு பகுதியாக ஜீவ ஊற்று அன்பின் கரத்தின்
நான்காவது கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் யாழ் மாவட்ட உத்தியோகத்தர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தனிமனித மேம்பாட்டு வழிநடத்துனரும் பத்மஷாலா நல்வாழ்வு நிறுவனத்தின் நிறுவுனருமான நளினாசினி அம்பிகைபாகன், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் நிறுவனர் தரன் ஶ்ரீ, வன்னி தமிழீழ மக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் நிரூபன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T17:07:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக வெளியான தகவலை மறுக்கும் சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-rejects-report-of-air-defence-missile-1785430417"></link>
            <id>https://tamilwin.com/article/china-rejects-report-of-air-defence-missile-1785430417</id>
            <summary type="text">&amp;nbsp;சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை ஈரான் இன்னும் சில வாரங்களில் பெறவுள்ளதாக சர்வதேச செய்தி நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை ஈரான் இன்னும் சில வாரங்களில் பெறவுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது என்றும் உண்மைக்குப் புறம்பானது என்றும் சீனா மறுத்துள்ளது.
</p><p>குறித்த ஊடகம் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. </p><p>
அதில், சீனாவிலிருந்து ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08d9b93-4f28-4499-913f-d9463ea53369/26-6a6b819369fd8.webp' /></p><p>
</p><p>அந்தச் செய்தியின்படி, முதற்கட்டமாகச் மேற்கு சீனாவில் உள்ள உரும்கி நகரிலிருந்து விமானங்கள் மூலம் பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கு இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>
பீஜிங்கில் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>
தொடர்புடைய விவகாரங்களில் சீனா பலமுறை தனது நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தச் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை மற்றும் ஆதாரமற்றவை. </p><p>சீனா எப்போதும் அமைதிக்காகவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவுமே பாடுபடுகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த ஏவுகணை விநியோகத்திற்கான வழித்தடமாக குறிப்பிடப்பட்டிருந்த பாகிஸ்தானும் ஒரு நாளுக்கு முன்பாகவே இச்செய்தியை மறுத்திருந்தது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T16:53:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பில் கோர விபத்தில் பலியான இளைஞர்கள்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cctv-footage-2-teens-killed-negombo-crash-1785428597"></link>
            <id>https://tamilwin.com/article/cctv-footage-2-teens-killed-negombo-crash-1785428597</id>
            <summary type="text">அதிவேகத்தில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேகத்தில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><p>
நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியில், போலவலன பகுதியில் நேற்று இரவு இரண்டு இளைஞர்களின் உயிரைப் பறித்த கொடூர வீதி விபத்து தொடர்பான அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p>கன்டெய்னர் முனையத்திற்குள் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்த பிரைம் மூவர் ரக லொறியின் டிரெய்லர் பகுதியில், அதிவேகமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியது அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p></p><h2>தீ வைக்கப்பட்ட வாகனம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த விபத்தின் காரணமாக, மோட்டார் சைக்கிள்களை செலுத்தி வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b30cbb8-6440-4471-9844-ae3d0ae1a643/26-6a6b8023ab3c9.webp' /></p><p>

விபத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் சிலர் அந்த பிரைம் மூவர் லொறிக்கு தீ வைத்துள்ளனர். </p><p>நீர்கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் படையினரும், கட்டான பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
</p><p>
இந்த உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து மற்றும் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஆகிய இரண்டும் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு, தாகொன்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தலிஷ நிம்னெத் சிறிவர்தன மற்றும் 19 வயதுடைய கவிந்து ஹஷான் சோமதிலக்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T16:50:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மன்னிப்புச் சபை, இந்தியா மீது பரபரப்புக் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/amnesty-says-indian-arms-exports-to-israel-1785429915"></link>
            <id>https://tamilwin.com/article/amnesty-says-indian-arms-exports-to-israel-1785429915</id>
            <summary type="text">காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போருக்கு இடையே, இஸ்ரேலுக்கு இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போருக்கு இடையே, இஸ்ரேலுக்கு இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட “மேட் இன் இந்தியா” (Made in India) என்ற தலைப்பிலான அறிக்கையில், ஏற்றுமதி சார்ந்த விரிவான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>ஒக்டோபர் 7, 2023 முதல் நவம்பர் 30, 2025 வரையிலான காலத்தில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்குக் குறைந்தபட்சம் 2,596 ஆயுத ஏற்றுமதி கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec95b7ca-9b7b-4da9-a422-a1e9ea7875eb/26-6a6b7f9cc5a48.webp' /></p><p>
</p><p>சிறிய ரக ஆயுதப் பாகங்கள், பீரங்கி குண்டு உரைகள் மற்றும் 'லோயிட்டரிங் டியூனிஷன்ஸ்' எனப்படும் ட்ரோன்களுக்கான வெடிமருந்து தலைப்பகுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.</p><p>
இவை இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ், ரஃபேல் மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.</p><p>
அனுப்பப்பட்ட ஆயுதங்களை விநியோகம் செய்த நிறுவனங்களில் பல, நேரடியாக இந்திய அரசின் கீழ் அல்லது கட்டுப்பாட்டில் இயங்குபவை என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 
மேலும், சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்த இந்தியா தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>முக்கிய விநியோக நிறுவனங்களின் உரிமையாளராகவும் கட்டுப்பாட்டாளராகவும் இருந்து, இஸ்ரேலுக்குச் செல்லும் ஆயுதங்களை இந்தியா தயாரித்து வழங்கி வருகிறது. </p><p>இந்த ஆயுதப் பரிமாற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமார்ட் தெரிவித்துள்ளார்.
</p><p>
2026-ஆம் ஆண்டின் மத்தியில், இது தொடர்பாக இந்திய அரசுக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 9 உற்பத்தி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியதாகவும், ஆனால் அறிக்கை வெளியாகும் வரை எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T16:46:29+00:00</updated>
        </entry>
    </feed>
