<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-07T20:19:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மனித உரிமைகள் விவகாரம்: ஜெனிவாவில் ஆரம்பமான முக்கிய அமர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/63rd-session-un-human-rights-council-begins-geneva-1788807653"></link>
            <id>https://tamilwin.com/article/63rd-session-un-human-rights-council-begins-geneva-1788807653</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின்
ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின்
ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
வோல்கர் துர்க் தொடக்க உரையாற்றினார். </p><p>இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மனித
உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைமைகள் குறித்தும் அவர் விசேடமாகக்
குறிப்பிட்டார்.</p><h2>ஜெனிவாவில் ஆரம்பம்</h2><p>
</p><p>
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள
நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள்
தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் தனது அண்மைய அறிக்கையில்
சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aeafe51-dcca-4039-bc3c-10653f6a0875/26-6a9f13359ade5.webp' /></p><p>

இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கை இந்த வாரம் பேரவையில்
உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், இலங்கை
விவகாரங்களுக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான
ஒடுக்குமுறைகள், சூடான், வெனிசுலா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பாரிய
மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>

இந்த விவகாரங்கள் தொடர்பான விரிவான அறிக்கைகளைப் பரிசீலித்து, உரிய
தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T19:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தடைக்கு பதிலடி! ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560"></link>
            <id>https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவரத்து பாதையையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஈரான் அரசாங்கம்
தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சேன் ரெசாய் இது
குறித்துத் தெரிவிக்கையில், புதிய தடை மண்டலத்திற்குள் நுழையும் கப்பல்கள்
அனைத்தும் உடனடியாகத் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்படும் எனக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;மசகு எண்ணெய் விலை</h2><p>

அத்துடன் ஓமான் நாட்டின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பினூடாக அமைக்கப்படும்
புதிய சர்வதேச கப்பல் பாதையை ஈரானே நிர்வகிக்கும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடற்பகுதியில் பரஸ்பர தாக்குதல்கள்
தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மசகு எண்ணெய் கொண்டு செல்லும்
கப்பல்களின் நடமாட்டம் பெருமளவில் குறைடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/966e7bc0-ebdf-4b2b-b4f2-5a844de3eb61/26-6a9ef570b3f80.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 97
டொலரைக் கடந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில்
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக
ஈரானிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T19:19:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752</id>
            <summary type="text">வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. </p><p>

இது இன ரீதியான மோதல்களைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்று
கூறப்படுகின்றது,
 
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
இந்தக் கிராமம் வரலாற்று ரீதியாகவே விவசாய நிலமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. 

இத்தகைய சம்பவங்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான ரொஷான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திலித் ஜெயவீர ஆகியோரின் செயற்பாடுகள் இருக்கலாம் எனத் தொடர்ந்து சந்தேகம் வெளியிடப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bPcMV8QJimw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T18:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-is-losing-the-people-s-trust-1788803306"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-is-losing-the-people-s-trust-1788803306</id>
            <summary type="text">அநுர அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்றும், அரச வளங்கள்
துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய
அமைப்பாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்றும், அரச வளங்கள்
துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய
அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
</p><p>
கொழும்பு, எதுல்கோட்டேயில் இன்று(7) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.</p><h2>கடுமையான விமர்சனம்</h2><p>
</p><p>
தற்போதைய அரசின் நிர்வாக நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு, சுகாதாரம்,
பொருளாதாரம் மற்றும் அரசமைப்பு விவகாரங்கள் தொடர்பில் அவர் கடுமையான
விமர்சனங்களை இதன்போது முன்வைத்தார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்கள்,
கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவோ அல்லது மக்கள்
நலன் சார்ந்த புதிய திட்டங்களை அறிவிக்கவோ நடத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bea7ba-cf56-4a22-9c8d-51a5deb28f6d/26-6a9efdcd0854c.webp' /></p><p> மாறாக, பழைய
பொய்களை மீண்டும் சமூகத்தில் பரப்பி, அரசின் மீதான மக்களின் விரக்தியை
மறைத்து, மக்களை மீண்டும் ஏமாற்றும் நோக்கிலேயே இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
</p><p>
தேசிய மக்கள் சக்தியின் பேருவளைக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு
ஏற்பாடுகள் மிகுந்த விமர்சனத்துக்குரியவை. ஜனாதிபதியின் பாதுகாப்பைக்
கருத்தில்கொண்டு பேருவளை மீன்பிடித் துறைமுகத்துக்குள் படகுகள் நுழைவதற்குத்
தடை விதிக்கப்பட்டதால், அந்தப் பகுதி மீனவர்கள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அரசு கூறிவரும்
நிலையில், ஜனாதிபதியின் கூட்டங்களுக்குப் பெருமளவு பாதுகாப்பு
வழங்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களில் 37 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் 17
உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை நாட்டின் உண்மையான பாதுகாப்பு நிலைமை
தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகின்றது.</p><h2>அநுரகுமார திஸாநாயக்க</h2><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதிகளின் கூட்டங்களை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்த
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அரச வாகனங்கள், பெருமளவிலான
பாதுகாப்புப் படையினர் மற்றும் அரச நிதியைப் பயன்படுத்தித் தனது கட்சியின்
கூட்டங்களை நடத்தி வருகின்றார்.</p><p> இது அரச நிதி மற்றும் அரச வளங்களை நேரடியாகத்
துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும்.

சுகாதாரத்துறை தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்று
மீறப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccb5880-9d38-4586-91c0-2d0e65ee3087/26-6a9efdcdb5b4b.webp' /></p><p> தேர்தலுக்கு முன்னர் சுகாதாரத் துறைக்கான 'வட்' வரியை
நீக்குவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி, தற்போது மக்கள் தமக்குத் தேவையான
நேரத்தில் வைத்தியசாலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில்,
மருத்துவரின் பரிந்துரையுடனேயே வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்ற புதிய
முறையை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றார்.</p><p> இவ்வாறான நடவடிக்கைகள் இலவச சுகாதார
சேவையைப் படிப்படியாக இல்லாதொழிக்கும் முயற்சியாகும்.

அதேவேளை, 22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
சபாநாயகருக்குக் கிடைப்பதற்கு முன்னரே ஜனாதிபதி அது தொடர்பில் கருத்து
வெளியிட்டமை தவறான முன்னுதாரணமாகும்.</p><p> நீதிமன்றத் தீர்ப்பை முன்கூட்டியே
கணித்துச் செயற்பட முடியாது. அரசமைப்பு ரீதியான குழப்பங்களைத் தவிர்க்க இந்த
விவகாரம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு நடத்தப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது.</p><h2>மக்களின் வாழ்வாதாரம்</h2><p> </p><p>அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட
தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் காரணமாக சுமார் 10 ஆயிரம் மில்லியன் ரூபா
நட்டம் ஏற்பட்டுள்ளது.</p><p> துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் இரகசியமாக
வெளியேற்றப்பட்டமை மற்றும் திறைசேரிக்கு 2.5 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டமை
உள்ளிட்ட தவறான நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் கறுப்புப்
பொருளாதாரம் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c52877-9301-4206-b5c4-05af9bdba46f/26-6a9efdce6a2e6.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக அத்தியாவசியப் பொருள்களின்
விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சி அரசியலை அழிப்பதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பு
அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் ஜனநாயகத்துக்கு நேரடியான
அச்சுறுத்தலாகும். மக்கள் ஆணையின்றி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் எந்தவொரு
அரசையும் மக்கள் இறுதியில் விரட்டியடிப்பார்கள்.

எதிர்க்கட்சியை அச்சுறுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும்
பதிலளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T18:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷாந்தி படுகொலை இடம்பெற்று 30 ஆண்டுகள் – நினைவுகூரப்படும் செம்மணி படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/krishanthi-commemoration-in-chemmani-1788799887"></link>
            <id>https://tamilwin.com/article/krishanthi-commemoration-in-chemmani-1788799887</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை
மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை
மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
இன்றைய தினம்(7) திங்கட்கிழமை மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.
</p><p>
இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட
ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><h2>கிரிசாந்தி நினைவேந்தல்</h2><p>
</p><p>
1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம்
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த
போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.</p><p>

கிருஷாந்தியை, செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள்
அவதானித்து மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a95ed88-c20b-41f7-ba7d-424a55fdd048/26-6a9ef08d2723a.webp' /></p><p>

இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின்
சகோதரன், குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில்
வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய
சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ
முகாமில் விசாரித்துள்ளனர்.
</p><p>
அதனையடுத்து மாணவியைத் தேடிச் சென்ற மூவரையும் இராணுவத்தினர் படுகொலை
செய்திருந்தனர்.
</p><p>
அன்றைய தினம் நள்ளிரவு கிருஷாந்தி உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட நால்வரின்
உடல்கள் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைத்திருந்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T17:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் வேட்டைத் திருவிழா! குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788797698"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788797698</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா அல்லது ஒருமுகத் திருவிழா இன்று(7) சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா அல்லது ஒருமுகத் திருவிழா இன்று(7) சிறப்பாக இடம்பெற்றது.</p><p>

இதன்போது, முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆலய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
</p><p>
இதனை முன்னிட்டு கட்டியம் சொல்லப்பட்டதுடன், பாரம்பரிய மரபுகளுக்கு அமைவாக இடம்பெற்ற வீதி உலாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81132bdc-c963-4f39-a832-ae1e241a8765/26-6a9ee40eef06c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T16:19:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த ஆபத்தான நபர் - நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-who-returned-to-sri-lanka-1788790718"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-who-returned-to-sri-lanka-1788790718</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கொலை சம்பவம் தெஹிவளை ஓபன் பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியில் இடம்பெற்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளார். </p><p>

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் உறவினரான பூத களுவா என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

குத்தி கொலை</b></h2><p>நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்து உறக்கத்தில் இருந்த களுவா மீது கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7321441-bbe1-4e71-b2ea-c6cc96912148/26-6a9eca660dd26.webp' /></p><p>படுகாயம் அடைந்த களுவா, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p> 

கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார். </p><p>

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். </p><p>

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jaiQIN4g2fs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-07T16:03:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சோதனை: மணல் ஏற்றிய வாகனம் பறிமுதல் - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/midnight-raid-in-jaffna-1788792586"></link>
            <id>https://tamilwin.com/article/midnight-raid-in-jaffna-1788792586</id>
            <summary type="text">யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(06.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2> 



மணல் ஏற்றிய வாகனம் பறிமுதல்</h2><p>

சம்பவம் குறித்து மெலும் தெரிய வருகையில்,
</p><p>
கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம்
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை,
வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7f45fb1-f50c-4c7f-9540-6f71436b60c0/26-6a9ecf589f5e4.webp' /></p><p> </p><p>

இதன் அடிப்படையில், குறித்த பகுதியை நேற்று(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி
பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளனர்.</p><p>

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி
பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர்
ஒருவருக்கு சொந்தமானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த நிலையில், குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து
இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதுடன், விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; </p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T14:51:08+00:00</updated>
        </entry>
    </feed>
