<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-19T07:39:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-killed-in-van-motorcycle-collision-1789801526"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-killed-in-van-motorcycle-collision-1789801526</id>
            <summary type="text">நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம்
பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது&amp;nbsp;இன்று (19.09.2026) காலை இடம்பெற்றுள்ளது.

லிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம்
பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது&nbsp;இன்று (19.09.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>சாரதி கைது</h2><p>
</p><p>
தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர்
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து
நேர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799477ef-95ae-4c91-8567-50473be76803/26-6aae34fb1a8b5.webp' /></p><p>
</p><p>
கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப்
பயணித்த வேன் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து
சம்பவித்துள்ளது.
</p><p>
இவ்விபத்து தொடர்பில் 42 வயதான வான் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>சம்பவம் தொடர்பில் நானுஓயா
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T07:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை இடம்பெற்ற கொடூரம்! தாயை காப்பாற்ற போராடிய மகன் - பலியான சகோதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-s-brother-dies-while-trying-to-save-mother-1789796227"></link>
            <id>https://tamilwin.com/article/son-s-brother-dies-while-trying-to-save-mother-1789796227</id>
            <summary type="text">அங்குருவடோட்ட - பெத்திகமுவ பகுதியில் இன்று அதிகாலை (19) நடந்த கூர்மையான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஹல்தோட்ட பகுதியை சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குருவடோட்ட - பெத்திகமுவ பகுதியில் இன்று அதிகாலை (19) நடந்த கூர்மையான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவத்தில் ஹல்தோட்ட பகுதியை சேர்ந்த 37 வயது நபர் உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர், போதைக்கு அடிமையானவர் என்றும், வீட்டில் அடிக்கடி சண்டைகளை ஏற்படுத்துபவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>

நேற்று இரவு (18) உயிரிழந்தவர் தனது தாயை தாக்கியபோது, ​​தாயை காப்பாற்றும் முயற்சியில் அவரது 35 வயது தம்பி அரிவாளால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25c1553a-5832-4688-8462-4f9166a05c9b/26-6aae2c6c69140.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் உயிரிழந்தவரால் தாக்கப்பட்ட தாய், காயங்களுடன் ஹொரன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் இதற்கு முன்னர் தனது தந்தையை தாக்கி காயப்படுத்தியதாகவும், தந்தையும் ஹொரன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகின்றது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக 35 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:57:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கந்தர்மட சந்தியில் விபத்து: ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-jaffna-kandarmadam-one-injured-1789800559"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-jaffna-kandarmadam-one-injured-1789800559</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற வீதி
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்றையதினம்(19.9.2026) இடம்பெற்றுள்ளது.

பலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற வீதி
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது இன்றையதினம்(19.9.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>

பலாலி வீதியூடாக யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பயணித்த மோட்டார்
சைக்கிளும் ஓட்டுமட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கந்தர்மட சந்தியில்
மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , சிகிச்சைக்காக யாழ்.போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/243a3740-23ab-4196-bd57-e78ed7fdc163/26-6aae31448c0b0.webp' /></p><p>விபத்து தொடர்பில் யாழ்ப்பாண
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை அதிபர்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள கடுமையான அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-rules-out-smart-boards-for-every-classroom-1789798797"></link>
            <id>https://tamilwin.com/article/harini-rules-out-smart-boards-for-every-classroom-1789798797</id>
            <summary type="text">ஒவ்வொரு வகுப்பறைக்கும் &#039;ஸ்மார்ட் போர்டுகள்&#039; (smart boards) வழங்கப்போவதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். 

நிகழ்வொன்றில் வைத்து அவர் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்டுகள்' (smart boards) வழங்கப்போவதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். </p><p>

நிகழ்வொன்றில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வியின் அனைத்து நிலைகளிலும் 'ஸ்மார்ட் போர்டுகள்' (smart boards) அவசியமில்லை என்பதால், ஒவ்வொரு வகுப்பறைக்கும் அவற்றை வழங்கப் போவதில்லை. </p><p>

குழந்தைகளுக்குப் பொருத்தமான வயதிலேயே தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் போர்டுகளை வாங்குவதற்காக பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><h2>பணம் வசூலிக்க வேண்டாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d876a3-265b-4568-aac7-3aed3e22a77c/26-6aae2e5136c13.webp' /></p><p>
</p><p>
அத்துடன் பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டாம் என்று தயவுசெய்து அதிபர்களிடம் கூறுங்கள். தேவையற்ற முறையில் இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவது பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடும். இது அடிமையாகும் நிலைக்குக்கூட வழிவகுக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
மேலும் தேவை மற்றும் வயதுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு திட்டமிட்ட முறையிலேயே ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டலுக்குள் நடந்த பயங்கரம் - விருந்தின் போது வன்முறை - இருவர் மீது துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fight-in-hotel-2-injured-1789797754"></link>
            <id>https://tamilwin.com/article/fight-in-hotel-2-injured-1789797754</id>
            <summary type="text">கேகாலையிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின் போது, ​​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விருந்தில் இரு தரப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலையிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின் போது, ​​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>
குறித்த விருந்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வாக்குவாதம் முற்றியுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b> 

துப்பாக்கி சூடு </b></h2><p>இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253d40eb-fec8-429d-b8ae-1eda7ed25f83/26-6aae28425bd35.webp' /></p><p>ஹோட்டல் ஊழியருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் உரிமை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-19T06:14:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கடலாமையுடன் கரை சேர்ந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-arrested-in-jaffna-with-two-sea-mines-1789796916"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-arrested-in-jaffna-with-two-sea-mines-1789796916</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் நபரொருவர் கடலாமைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.&amp;nbsp;குறித்த சம்பவம் இன்றைய தினம் (19.09.2026) இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் நபரொருவர் கடலாமைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>குறித்த சம்பவம் இன்றைய தினம் (19.09.2026) இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது அவரிடமிருந்து இரண்டு
கடலமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>சேத்தான்குளம் பகுதியில் கடலாமையுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ்
குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5b62351-8f40-44d2-8ac6-5025f5fc4a48/26-6aae269cc918a.webp' /></p><h2>பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள்</h2><p>கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 50 கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள இரண்டு
ஆமைகள், ஆமைகளை கரைக்கு கொண்டு வர பயன்படுத்திய படகு என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>கைது செய்யப்பட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஆமைகள்
இரண்டையும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5502ae-1baf-4c3e-b97f-b1b699ed4c85/26-6aae269d93f0d.webp' /></p><p>விசாரணைகளைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான்
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:07:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையா!மொட்டு கட்சியின் முக்கிய புள்ளி தெரிவித்துள்ள கருத்து...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/milinda-rajapaksha-namal-rajapaksa-1789797902"></link>
            <id>https://tamilwin.com/article/milinda-rajapaksha-namal-rajapaksa-1789797902</id>
            <summary type="text">மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>அது அவ்வாறிருக்க நாமலை இரண்டு வருடம் சிறையில் அடைத்தாலும்.அந்த இரண்டு ஆண்டைப் பயமின்றி சிறையில் இருந்துவிட்டு வருவார் என மொட்டுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் நாமலின் நண்பருமான மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>தென்னிலங்கை வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எந்த தடங்கல் வந்தாலும் நாம் இந்த மண்ணில் அரசியல் செய்வோம். சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, கெட்ட வார்த்தைகள் பேசி எமது அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது.</p><h2>
</h2><p></p><h2>அதிகாரத்தை கைப்பற்றும் எமது வழி</h2><p>ஒரு பயங்கரவாத அமைப்புடன் நாம் அரசியல் செய்யவில்லை. எமது அரசியல் கிராமத்து மக்களுடன்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி -பாராளுமன்றத்தை விடப் பெரியது என்று கூறி பல விளையாட்டுகளில் பாடம் கற்றுக்கொண்ட மனிதர்கள் தான் நம்மிடம் இருக்கிறார்கள். </p><p>மகிந்த ராஜபக்ச இந்நாட்டின் மிகப்பெரிய மக்கள் தலைவராக இருந்தபோதும் இரண்டு தவணைகளுடன் வீட்டிற்குச் சென்றார். கோட்டாபய ராஜபக்ச மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் வீட்டிற்குச் செல்ல நேரிட்டது. </p><p>அதனால் யாரும் இதில் 50, 60 ஆண்டுகள் அதிகாரத்தில் இருக்க நிரந்தரக் குத்தகை எடுக்கவில்லை. மக்கள் தேவையான நேரத்தில் முடிவெடுப்பார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c81d47-366d-45fc-a335-2c73940a3c06/26-6aae26112774f.webp' /></p><p>ஆட்சியை கைப்பற்ற எந்தவொரு திட்டமும் தேவையில்லை.மக்களிடம் உண்மையைப் பேசினால் போதும்.வீடுகளுக்குத் தீவைத்து, பாராளுமன்றத்திற்குத் தீவைத்து, நீதிமன்றங்கள் மீது குண்டுவீசி அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் நினைக்கலாம்.</p><p>எமது அரசியல் கட்சி ஒருபோதும் அவ்வாறு நினைத்ததில்லை. நாம் அதிகாரம் எடுப்பதற்கு ஒரே ஒரு வழியைத்தான் நினைக்கிறோம். </p><p>அதுதான் சரியான நேரத்தில் நியாயமான ஒரு தேர்தல் நடக்கும்போது, மக்கள் அத்தேர்தலுக்குச் சென்று வாக்களித்து, நாம் தேர்தலின் மூலம் வெற்றியடைவோம் என்பது மட்டுமே. அதற்கான அரசியல் செயல்பாட்டில்தான் நாம் இருக்கிறோம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்க தரப்பிலிருந்து வசூலிக்க தவறிய பெருந்தொகை பணம்! வெளியான முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-fail-to-collect-crores-rupees-dna-reports-1789795647"></link>
            <id>https://tamilwin.com/article/police-fail-to-collect-crores-rupees-dna-reports-1789795647</id>
            <summary type="text">இலங்கையில் டிஎன்ஏ அறிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களிலிருந்து வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாயை வசூலிக்க அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டிஎன்ஏ அறிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களிலிருந்து வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாயை வசூலிக்க அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
</p><p>
தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வசூலிக்க தவறிய பணம்&nbsp;</h2><p>
</p><p>
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் தடய அறிவியல் மற்றும் டிஎன்ஏ பிரிவு, டிஎன்ஏ அறிக்கை வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38330478-aa9e-4802-a7f7-c771cdce7393/26-6aae24da29567.webp' /></p><p>

இதன்படி, 2014 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அந்த அறிக்கைகளுக்காக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய தொகையை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T05:59:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்புள்ளையில் சூரியஒளி மின்னுற்பத்திப் புரட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/solar-power-revolution-in-dambulla-1789795927"></link>
            <id>https://tamilwin.com/article/solar-power-revolution-in-dambulla-1789795927</id>
            <summary type="text">தம்புள்ளையில் அமைக்கப்பட்டள்ள 5 மெகாவொட் &#039;தியஜனனி&#039; மிதக்கும் சூரிய மின்நிலையம் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தின் 10.5 ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளையில் அமைக்கப்பட்டள்ள 5 மெகாவொட் 'தியஜனனி' மிதக்கும் சூரிய மின்நிலையம் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.</p><p>

நீர்த்தேக்கத்தின் 10.5 ஏக்கர் நீர்ப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த மின்னுற்பத்தி கட்டமைப்பின் ஊடாக 7,500 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கக் கூடியதாக இருப்பதுடன், ஆண்டொன்றுக்கு 6,440 மெட்ரிக் தொன் நச்சுப் புகை (Co₂) வெளியேற்றம் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தம்புள்ளை இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 5 மெகாவொட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 'தியஜனனி' மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் நேற்று (18.09.2026) தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe22923-a1ff-4d34-a338-e2f9f30af33d/26-6aae20bc990fa.webp' /></p><h2>திட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு</h2><p>
</p><p>
இத்திட்டத்தின் ஊடாக ஆண்டுதோறும் சுமார் 6,440 மெட்ரிக் தொன் கார்பன் டைஒக்சைடு (Co₂) வெளியேற்றத்தை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இலங்கையின் மின்சார உற்பத்தியில் எரிபொருள் மீதான சார்பைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிகளவில் பயன்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்தத் திட்டம் மற்றுமொரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பைப் பயன்படுத்தி சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை மூலம் நிலப்பரப்பைப் பாதுகாத்துக்கொண்டே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313b79d9-4fc1-40c7-b144-02fb91f99076/26-6aae20bd92c27.webp' /></p><h2>நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு</h2><p>

டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை அடிப்படையாக கொண்ட மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் பெருமளவிலான நிதியை எதிர்காலத்தில் கட்டுப்படுத்துவதற்கும், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய திட்டங்கள் பங்களிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>அரசாங்கத்தின் நிலையான எரிசக்தி கொள்கையின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள 'தியஜனனி' திட்டம், இலங்கையின் மின்சார உற்பத்தித் துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் திட்டமாக அமைந்துள்ளது.
</p><p>
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்களித்த தியஜனனி (தனியார்) நிறுவனம், எரிசக்தி அமைச்சு, இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்களித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287ae0bb-4095-4c0c-babf-12cc646fadfd/26-6aae20be674e9.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T05:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interpol-notice-issued-for-basil-rajapaksa-1789789756"></link>
            <id>https://tamilwin.com/article/interpol-notice-issued-for-basil-rajapaksa-1789789756</id>
            <summary type="text">மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவித்தல் (Blue Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><h2>கைது உத்தரவு..&nbsp;</h2><p>இதனை&nbsp;பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3694b67-624d-4f00-9dfd-066cacec12ba/26-6aae0ac91dd09.webp' /></p><p> </p><p>வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் உட்பட தேடப்படும் நபர்களின் அடையாளம், இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளைக் கண்டறிந்து அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச சட்ட அமலாக்க வழிமுறைகளை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.</p><p>சந்தேகநபர் ஒருவர் இருக்கும் நாடு அல்லது முகவரி தொடர்பில் தகவல்கள் அறியப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் திரட்டுவதற்காகவே இந்த நீல நிற அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும், எவ்வித அரசியல் தராதரமும் பாராது குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T05:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-is-seriously-concerned-anojan-issue-1789793038"></link>
            <id>https://tamilwin.com/article/government-is-seriously-concerned-anojan-issue-1789793038</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிவராஜா அனோஜனின் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிவராஜா அனோஜனின் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சவூதி அரேபியாவில் உள்ள அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.</p><h2>சவூதி அரேபிய இராச்சியத்தில் சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
சவூதி அரேபிய இராச்சியத்தில் தற்போது சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து வரும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b87d3dbc-0179-4fe6-9d58-ea0d4ad04adb/26-6aae185565628.webp' /></p><p>

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதரகத்துடனான ஒருங்கிணைப்புடனும் இவ்விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
</p><p>இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவுதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சு தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு, அனோஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
</p><p>வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T05:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/united-states-fraud-1789794096"></link>
            <id>https://tamilwin.com/article/united-states-fraud-1789794096</id>
            <summary type="text">&amp;nbsp;எயார் பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது. சுவீடன் நாட்டிலிருந்தே குறித்த தகவல்கள் கசிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எயார் பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது. சுவீடன் நாட்டிலிருந்தே குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.</p><p>எயார்பஸ் (Airbus) மோசடியில் அமெரிக்க டொலர் இரண்டு மில்லியன். ஆனால் இதன் மதிப்பு அமெரிக்க டொலர் 54 மில்லியன்.</p><p>இலங்கை ரூபாவில் சொல்ல முடியாத தொகையாகும்.இந்த மோசடி தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p></p><h2>ஆரம்பிக்கப்பட்ட காலம்</h2><p>இந்த மோசடியின் ஆரம்பம் 2008 இலிருந்து என்று தான் அறிக்கைகளில் உள்ளது. ஆனால் 2013 இலிருந்து இலங்கையில் உள்ள கணக்குகளுக்கு (Accounts) மில்லியன் கணக்கில் அமெரிக்கப் பணம் அனுப்பப்பட்டுள்ளது .
</p><p>2013ல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலகட்டமாகும். அக்காலத்தில் இலங்கைக்கு வந்த CPCU என்னும் திட்டத்துடன் தொடர்புடைய பணம் என்று தான் சொல்லப்படுகிறது.</p><p>ஆனால் அப்போது இலங்கையில் உள்ளவர்களுக்கு இது குறித்துப் பெரிய அறிவு இருக்கவில்லை.
இது தொடர்பில் 2019-இல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு முறைப்பாட்டை B-அறிக்கையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது, </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d1f0bae-19e2-48c1-8be2-4f6490e28946/26-6aae17322158a.webp' /></p><p>அதாவது FCID-இல் இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார பாரிய அளவிலான ஊழல் ஒன்றைச் செய்துள்ளார் என்று. </p><p>ஆனால் இது தொடர்பாக முதன்முதலில் இலங்கை ஊடகங்களில் வெளிவந்த பெயர் தான் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards,).
இந்த ரியன்ஷி எட்வர்ட் என்பவர் நுவரெலியா ரேஸ்கோர்ஸ் மைதானம், ரோயல் டர்ஃப் கிளப் (Royal Turf Club) 2012-இல் ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளார்.</p><p>அப்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பாக இருந்தார்.
அதாவது அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது 2013-14 காலப்பகுதியில் வந்த இந்தப் பணம், இலங்கையில் உள்ள பலரின் கணக்குகளுக்கு வந்துள்ளது.</p><p>Ascension என்ற கணக்கும், ரெயான் எட்வர்ட்டின் மனைவி புண்யாவின் கணக்கும், அதைத் தொடர்ந்து மேகான்ஃபீல்ட் (Magonfield Construction) என்ற கணக்கும் மற்றும் மேலும் சில கணக்குகளும் வந்துள்ளது.</p><p> இந்தச் சம்பவத்தை அமெரிக்கா இலங்கைக்கு 2016 டிசம்பர் மாதத்தில் அறிவிக்கிறது. ஏன் இந்த ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards பற்றிய விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
</p><h2>
</h2><h2>மோசடி மூடிமறைக்கப்பட்ட விதம்</h2><p>ரவி வைத்தியலங்கார என்ற ஊழல் அதிகாரி கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனியாகக் கம்பனி ஒன்றை ஆரம்பித்து, FCID-இல் இருந்த கொண்டே அதை பணம் சம்பாதிக்கும் ஒரு இடமாக மாற்றியுள்ளார். </p><p>FCID-க்கு இவரை யார் கொண்டுவந்து போட்டது? இவருக்கு இங்கு வர யார் அனுமதி அளித்தது?
அதாவது 54 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பவம் எப்படி மூடிமறைக்கப்பட்டது? இவர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மூடி மறைத்துள்ளார். </p><p>ஏனெனில் இது ரவி வைத்தியலங்காரவால் மட்டும் செய்யக்கூடிய விடயமல்ல. 
நல்லாட்சி அரசாங்கத்தில் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards- ரவி வைத்தியலங்காவைக் காப்பாற்றியது நவீன் திசாநாயக்க.
</p><p>ஏனெனில் இந்த CPCU திட்டத்திற்காக 2016-இல் ரெயான் எட்வர்ட்டுடன் நவீன் திசாநாயக்க ஆகியோர் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72123656-8074-4e2e-abce-a3e6a460023d/26-6aae1732cd8cc.webp' /></p><p>ஏனெனில் 2016-இல் ரியன்ஷி எட்வர்ட்டிற்கு (Rienzie Edwards 30 வருடங்களுக்கு நுவரெலியா ரேஸ்கோர்ஸ் (Racecourse) மைதானத்தைக் குத்தகைக்கு விட திட்டமிட்டதே நவீன் திஸாநாயக்கா தான். </p><p>மேலும் நவீன் திசாநாயக்கதான் இந்த ரியன்ஷி எட்வர்ட்டின் பின்னணியில் இருந்து இவரை அரசியல் ரீதியாகப் பாதுகாத்த நபர்.
இப்போது அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.</p><p>இந்த வழக்குகளுக்கு அடிப்படையாக அமைந்த முக்கிய காரணங்கள்- 
CPCU திட்டத்திற்கு முதலீட்டாளர்களிடம் (Investors) அதாவது அமெரிக்கக் குடிமக்களிடம் இருந்து எனக் கூறப்படுகிறது. </p><p>
உலகத்தில் இல்லாத ஒரு திட்டத்தைக் காட்டி, இதில் முதலீடு செய்யுமாறு அமெரிக்கக் குடிமக்களிடம் பெறப்பட்ட பணம் என்றுதான் அமெரிக்க நீதிமன்றம் கூறுகிறது.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) நிச்சயமாக இதன் தகவல்கள் இருக்க வேண்டும்.</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T05:04:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் பதற்றம்: டோகோ எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தி சிறைபிடித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-us-deal-about-war-1789792209"></link>
            <id>https://tamilwin.com/article/iran-us-deal-about-war-1789792209</id>
            <summary type="text">உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான வழித்தடமான ஹோர்முஸ்
நீரிணையில் சட்டவிரோதமாக பயணிக்க முயன்றதாக கூறி டோகோ (Togo) நாட்டு
கொடியுடன் சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான வழித்தடமான ஹோர்முஸ்
நீரிணையில் சட்டவிரோதமாக பயணிக்க முயன்றதாக கூறி டோகோ (Togo) நாட்டு
கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை
(IRGC) தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>
மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவின் கொடியுடன் பயணித்த 'ட்ரெண்ட்' (Trend) என்ற
எண்ணெய் கப்பல், ஈரானின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ஹோர்முஸ் நீரிணையைக்
கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.</p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
இதன் போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஈரானிய புரட்சிகர காவல்
படையின் கடற்படை, அந்தப் பிராந்தியத்திற்குள் கப்பல் "சட்டவிரோதமாக
நுழைந்ததாக" குற்றம்சாட்டி தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
தாக்குதலின் காரணமாகக் கப்பலில் தீப்பற்றியதையடுத்து கப்பல் உடனடியாக
இயக்கத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, ஈரானிய கடற்படையினர் கப்பலைக்
கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து பிரிட்டனின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பான UKMTO,
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

ஓமன் நாட்டின் கசாப் (Khasab) பகுதிக்கு வடகிழக்கே சுமார் 16 நவாடிகல் மைல்
தொலைவில், அடையாளம் தெரியாத எறிபொருள் (Projectile) தாக்கி ஒரு வணிகக்
கப்பலில் பாதுகாப்பு சம்பவம் நிகழ்ந்ததை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9792588-a778-43e8-bc9a-ef746f184ee6/26-6aae13cb411b9.webp' /></p><h2>பாதுகாப்பாக உள்ள மாலுமிகள்</h2><p>
</p><p>
கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், மாலுமிகள் பாதுகாப்பாக
உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஈரானிய கடற்படை தளபதி கூறுகையில் "அமெரிக்க
இராணுவத்தின் தூண்டுதலின் பேரிலேயே இந்தக் கப்பல் தங்களது கடல் எல்லை விதிகளை
மீற முயன்றதாகவும், அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு
கப்பலும் அழிவையே சந்திக்கும்" எனக் கூறினார்.
</p><p>
பிராந்திய மோதல்களுக்கு மத்தியிலும், ஈரானின் கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும்
கப்பல்களை ஈரான் தொடர்ந்து இலக்கு வைத்து வருகிறது.
</p><p>
தற்போது நடந்துள்ள இந்தத் தாக்குதல் சம்பவத்தால், சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விநியோகத்தில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும், கப்பல்
போக்குவரத்துக்கான காப்பீட்டுச் செலவுகள் உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T04:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-dies-in-an-accident-1789792014"></link>
            <id>https://tamilwin.com/article/women-dies-in-an-accident-1789792014</id>
            <summary type="text">குருநாகல் - நீர்கொழும்பு வீதியில் மெட்டியகான, தும்மலெவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் சிறிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - நீர்கொழும்பு வீதியில் மெட்டியகான, தும்மலெவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

மோட்டார் சைக்கிளும் சிறிய பாரவூர்தியும் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><h2><b>
பெண் உயிரிழப்பு</b></h2><p>உயிரிழந்தவர் தம்பதெனிய மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து கரப்பந்து விளையாட்டுத் துறையை சேர்ந்த சாகரிகா லக்மாலி ஹேவகே என்பவராகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa9e00d-699b-461a-ab94-d6dae5ba1585/26-6aae105b25a87.webp' /></p><p>

மேலும் அவர் வடமேல் மாகாண விளையாட்டு அதிகாரியும், தேசிய கரப்பந்து மற்றும் கடற்கரை கரப்பந்து நடுவராகவும் செயற்பட்டு வந்துள்ளார். </p><p> 

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T04:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள முக்கிய பரீட்சை பெறுபேறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plans-to-recruit-23-000-graduate-teachers-1789789872"></link>
            <id>https://tamilwin.com/article/plans-to-recruit-23-000-graduate-teachers-1789789872</id>
            <summary type="text">பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டி பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அதன் முடிவுகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டி பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>அதன் முடிவுகளின் அடிப்படையில், 23,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.</p><h2>ஆட்சேர்ப்பு நடத்த&nbsp;திட்டம்</h2><p>

அதன்படி, ஆசிரியர் தேர்வு பரீட்சையில் பங்கேற்ற 15,000 பட்டதாரிகளும், பொதுத் தேர்வில் பங்கேற்ற 8,000 பேரும் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/977d06b8-56f9-4f04-9fe0-bd5742f51b8f/26-6aae0e4aa8a01.webp' /></p><p>
</p><p>
அக்டோபர் மாதத்தில் நேர்காணல்கள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், டிசம்பர் மாதத்திலும் ஆட்சேர்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக&nbsp; கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T04:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாந்தோட்டத்திற்குள் சிக்கிய ஆடம்பர மாளிகை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் - அடுத்தடுத்து பல வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றுமொரு மாந்தோப்பு மற்றும் ஆடம்பர வீடு ஒன்றை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. </p><p>

இந்த சொத்துக்கள் பிரபலமான தனியார் கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு நபரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த சொத்துக்கள் தம்புள்ளை நகருக்கு அருகில் மாந்தோட்டம் அடங்கிய மூன்று காணிப்பகுதிகளில் உள்ளது.</p><h2><b> 

பினாமி பெயரில் கொள்வனவு </b></h2><p>இவற்றில் ஒரு காணிப்பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சொத்துக்களுக்காக 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஷிரான் பாசிக் செலவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0871032-92f8-4b6c-8c0f-4f64fcdd5803/26-6aae017a78504.webp' /></p><p>பினாமி பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தோட்டம் மற்றும் காணிகளை விசாரணை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.</p><p> 

அத்துடன், அந்த காணிகளை பராமரித்து வரும் நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ஷிரான் பாசிக் கொள்வனவு செய்த 150 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றொரு ஆடம்பர வீட்டையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாவரமண்டிய பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

இந்த ஆடம்பர வீடு தனியார் கல்வி ஆசிரியரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அந்த வீட்டில் ஆசிரியரின் தாயார் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.</p><p> </p><h3><b>போதைப்பொருள் கடத்தல்காரர் </b></h3><p>ஷிரான் பாசிக்கும் அந்தத் தனியார் கல்வி ஆசிரியருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கண்டறிந்துள்ள பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இது தொடர்பான வேறு பல சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a1401d-930e-4f55-a585-93ab83425fd8/26-6aae017b2dadd.webp' /></p><p>அந்த ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இலங்கை திரும்பியவுடன் விசாரணைக்காக உடனடியாக அழைக்கப்படுவார் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கை திரும்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. .</p>]]></content>
            <updated>2026-09-19T03:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையவழி வணிகம் மூலம் பெருந்தொகை பணமோசடி! இரண்டு வருடங்களின் பின்னர் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-in-online-money-laundering-case-1789784697"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-in-online-money-laundering-case-1789784697</id>
            <summary type="text">பெருந்தொகை&amp;nbsp;இணையவழி&amp;nbsp;பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர்&amp;nbsp;கைது செய்யப்பட்டுள்ளார்.இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருந்தொகை&nbsp;இணையவழி&nbsp;பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கம்பஹா, படுவத்த பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சந்தேகநபர், ஒரு டெலிகிராம் குழுவின் மூலம் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுளளது.&nbsp;&nbsp;</p><h2>இணையவழி பணமோசடி </h2><p>மேலும், இணையவழி வணிகம் மூலம் பணம் சம்பாதித்துத்தருவதாக வாக்குறுதியளித்து, அவர் பெற்ற&nbsp; 542,877 ரூபாவிலிருந்து&nbsp; 66,999 ரூபாவை மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38333686-b09c-4552-9569-da9c43f3b6a9/26-6aadfcde57a0e.webp' /></p><p>இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பாக 2024.02.10 அன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப்புலனாய்வுப்பிரிவின் வடமேற்கு மாகாணப்பிரிவு இந்த விசாரணையை தொடங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>

அதன்படி, படுவத்த பகுதியை சேர்ந்த 38 வயதான சந்தேகநபர் நேற்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T03:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் அவசரமாக நாடு திரும்பும் ஷிரந்தி ராஜபக்ச! அறுவை சிகிச்சையிலும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-singapore-return-to-sri-lanka-1789723079"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-singapore-return-to-sri-lanka-1789723079</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் நாடு&amp;nbsp;திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் உடல்நலக்குறைவால...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் நாடு&nbsp;திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p>இருப்பினும், ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளாமல், இலங்கையிலேயே செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>நாட்டிலிருந்து தப்பியோட்டம்</h2><p>அவரது மருத்துவ நிலை குறித்து அறிந்துக்கொள்ள பொதுமக்களுக்கு ஆர்வம் இருந்தபோதிலும், ஒருவரின் நோய் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், அதை நாடு முழுவதற்கும் கட்டாயம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.</p><p>இதன் விளைவாக, அவரது உடல்நிலை தொடர்பான விபரங்களை வெளியிட குடும்பத்தினர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2321a1f4-569c-4900-a48d-cfb51af38742/26-6aad0b6692e4b.webp' />&nbsp;&nbsp;</p><p>தேவையான வைத்திய சிகிச்சையைப் பெற்ற பிறகு அவர் இலங்கைக்கு திரும்புவார் என்றும், இருப்பினும் அதற்கான சரியான நேரத்தை வைத்திய ஆலோசனையைப் பொறுத்து நிர்ணயிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>வெளியான சர்ச்சை</h2><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (16) திகதி அதிகாலை சுமார் 1:10 மணியளவில் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/591fa84a-90a2-45bf-b7ba-0fff0cff81f1/26-6aadf73fd3609.webp' /></p><p>அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச்சென்றிருந்தார்.</p><p>இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்‌சவை நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இதனையடுத்து ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D0Hs4lADBiM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T02:45:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-in-saudi-arabia-case-alisabry-1789784498"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-in-saudi-arabia-case-alisabry-1789784498</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்துக்காக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இலங்கை அரசாங்கம் சட்ட உதவி</h2><p>குறித்த இளைஞன் சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்தை நீக்கி பகிரங்கமாக மன்னிப்புக்கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2cf8d77-b3a9-41f4-b116-52d9086726f7/26-6aadf1b4b2fc9.webp' /></p><p>இந்நிலையில், அனோஜனுக்கு மனந்திரும்பி தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.</p><p>மேலும், இலங்கை அரசாங்கம் அவருக்கு உரிய சட்ட உதவியை வழங்கி, உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T02:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகனங்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி - வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-for-vehicle-price-down-1789782331"></link>
            <id>https://tamilwin.com/article/reason-for-vehicle-price-down-1789782331</id>
            <summary type="text">இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்து வைக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. </p><p>

இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த, பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்யும் போது சுங்க மதிப்பீட்டிற்காக வழங்கப்படும் 15 சதவீத தேய்மானக் கழிவு தொடர்பான விடயம் வெளிச்சத்திற்கு வந்தமையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 இந்தப் விலை சரிவு புதிய வாகனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> </p><h2><b>வாகனங்களின் விலை</b></h2><p>300,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை அமைந்துள்ள இந்தத் திடீர் விலை சரிவு குறித்த விவரங்களை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிஹே வெளியிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92421cfa-0ad5-4a8e-8907-58628e8cf2f3/26-6aadf0f85bd6d.webp' /></p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். </p><p>

இதன் காரணமாக யாரிஸ், ரெய்ஸ், வெசல், வேகன் ஆர், டைகட்சு மீரா மற்றும் சுஸுகி வேன்கள் உள்ளிட்ட பல பிரபலமான வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>

தற்போதைய சந்தை நிலவரம் காரணமாக, சில விற்பனையாளர்கள் வாகனங்களை நஷ்டத்தில் கூட விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p>

சுங்க மதிப்பீட்டு முறை, குறிப்பாக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பான மதிப்பீட்டு முறை குறித்து, சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. </p><p>


இந்த நடைமுறை அரசாங்கத்தின் வரி வருவாயை கணிசமாக பாதிக்கிறது என்று சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.</p><p> </p><h3><b>

வரி இழப்பு </b></h3><p>அதேவேளையில், இந்த மதிப்பீட்டு முறை பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உண்மையான பரிவர்த்தனை மதிப்பைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது என்று இறக்குமதியாளர்கள் வாதிடுகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a29626d-77a1-4b2a-bb62-df00f00b263c/26-6aadf2cb618c6.webp' /></p><p>இதற்கிடையில், 2019ஆம் ஆண்டில் 2,000cc திறன் கொண்ட 13 Audi A5 வாகனங்கள் 1,400cc திறன் கொண்டவையாக அறிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வரி இழப்பு 160 மில்லியன் ரூபாய் என்று சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியது.</p><p><span style="color: inherit;">வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வுக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது.</span></p><p>

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், சில பிரபலமான மாடல்களின் விலைகள் 500,000 ரூபாய் முதல் 900,000 ரூபாய் வரை உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-19T02:18:47+00:00</updated>
        </entry>
    </feed>
