<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-13T16:26:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களின் நிலைமை மோசம்! ஆபத்தை தடுக்க முடியாத கையறு நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் எனத் தெரிவித்துள்ளார் .</p><p>லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்தோடு, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>அரச வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி குற்றம் செய்திருந்தால் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மேலும், நியாயமான கைதுகளை தாம் வரவேற்பதாகவும், பக்கச்சார்பான பழிவாங்கும் கைதுகள் இடம்பெறுமான இருந்தால் நிச்சயமாக எதிர்த்து நிற்போம் எனவும் அவர் கூறினார்.</p><p>மேலும், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், ஆபத்துகளைத் தடுப்பதில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்தும் ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BbNQPnS1qrA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T15:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவடிப்பள்ளி ஆற்றில் கரையொதுங்கிய ஆணின் சடலம் - அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/male-body-washes-ashore-in-mavadippalli-river-1789295882"></link>
            <id>https://tamilwin.com/article/male-body-washes-ashore-in-mavadippalli-river-1789295882</id>
            <summary type="text">புதிய இணைப்புஅம்பாறை - மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13.09.2026) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அம்பாறை - மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13.09.2026) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, குறித்த சடலம் சாய்ந்தமருது, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய அஸ்ஜத் என்ற இளைஞனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், இன்று (13) மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>அம்பாறை- மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின்
சடலம் இன்று(13.9.2026) கரையொதுங்கிய நிலையில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ
இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார், சடலத்தை மீட்டு விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>அத்துடன்,
அவர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பிலும்
பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/784f47df-d4e5-4311-9dd7-ce75403b3cb7/26-6aa67d0cdcb46.webp' /></p><p>

சடலம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்கான
ஏற்பாடுகளைக் காரைதீவு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்க திரைமறைவில் நடைபெறும் டீல்! பிரபல தொழிலதிபரும் தொடர்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133</id>
            <summary type="text">இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் இப்போது அந்த ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. </p><p>ஆனால் இப்போது அந்த பெயர் கேட்பதில்லை. தேர்தல் காலங்களில் அந்தப் பெயர் அதிகமாகக் கேட்கும். அவர்தான் பசில் ராஜபக்ச.
அவர் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p> ஆனால் அவர் அந்த வழக்குகளுக்கு முன்னிலையாகக் கூட இலங்கைக்கு வரவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதாகவே கூறப்படுகிறது. சில வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உடல்நலக் குறைவு என அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.</p><h2>
</h2><p></p><h2>தொழிலதிபருடனான டீல்</h2><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் சம்பவங்களில் கூட அவர் இலங்கைக்கு வரவில்லை. முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச என்ன செய்கிறார்? </p><p>இலங்கையிலிருந்த பிரபல நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் பின்னணியில், பசில் ராஜபக்சவை ஏன் கைது செய்யவில்லை? அவரை ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை? போன்ற விடயங்களும் அரசியல் மேடைகளிலும் திரை மறைவிலும் பேசப்பட்டு வருகின்றன.</p><p>
புதிய தகவலின்படி, பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் "டீல்" (Deal) ஒன்றைச் செய்துகொண்டுள்ளதாகப் பேசப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e398dff-20d8-4a4c-a974-42c34e9c4867/26-6aa5f54f84faa.webp' /></p><p>தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், ஒரு டீல் மூலமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் மேடைகளின் திரை மறைவில் பேசப்படுகிறது.
</p><p>பொதுவாக எப்போதும் பல்வேறு டீல்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த டீல் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. </p><p>அந்தத் தொழிலதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் தொடர்புகளைப் பேணி வருபவர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>எப்படியோ, பசில் ராஜபக்ச அவருடன் ஒரு டீல் போட்டுக்கொண்டு, தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>you may like this video</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BLkNC88_Llw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும் இல்லை: ட்ரம்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gulf-nations-hold-talks-with-iran-strait-of-hormuz-1789308337"></link>
            <id>https://tamilwin.com/article/gulf-nations-hold-talks-with-iran-strait-of-hormuz-1789308337</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக வளைகுடா நாடுகள் நாளை(13) ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும்
இல்லை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக வளைகுடா நாடுகள் நாளை(13) ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும்
இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

அயர்லாந்து குடியரசில் உள்ள டூன்பெக் நகரில் அமைந்துள்ள தனது கோல்ஃப் ஓய்வு
விடுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானிய சிரேஷ்ட அதிகாரிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்துவது அந்த நாடுகளின் தனிப்பட்ட விருப்பம் எனச்
சுட்டிக்காட்டினார்.</p><h2>அமெரிக்காவுடன் ஒப்பந்தம்</h2><p>

ஈரான் அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள மிகவும்
தீவிரமாக விரும்புவதாகத் தனது பழைய கூற்றை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cffdb161-12c7-451c-823a-759a40cb53e4/26-6aa6b1a30f45e.webp' /></p><p>எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முன்னரோ அல்லது
அதற்கு உடனடியாவோ இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:22:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி எண்ணெய் குழாய்த் தொடர் முடக்கம்: உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறையும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shutdown-of-saudi-oil-pipeline-network-1789308931"></link>
            <id>https://tamilwin.com/article/shutdown-of-saudi-oil-pipeline-network-1789308931</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் பிரதான கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய்த்தொடர் மீது
நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,
அடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் பிரதான கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய்த்தொடர் மீது
நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,
அடுத்த சில நாட்களுக்குள் அது மீள இயங்காவிட்டால் உலகளாவிய எண்ணெய்
விநியோகத்தில் 4 சதவீத இழப்பு ஏற்படும் என வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்த சூழலில், சவூதி அரேபியா தனது தினமும் 4
மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்குத்
திருப்பி அனுப்ப இந்த குழாய்த்தொடரையே பயன்படுத்தி வந்தது.
</p><p>
தற்போது இந்த குழாய்த்தொடர் முடங்கியுள்ளதால், யான்பு துறைமுகத்தில் உள்ள
இருப்புக்கள் மூலம் இன்னும் 5 முதல் 7 நாட்களுக்கு மாத்திரமே ஏற்றுமதியைத்
தொடர முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2>எரிபொருள் விலையேற்றம்</h2><p>
இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க 5 முதல் 6 வாரங்கள் வரை செல்லக்கூடும் என ஒரு
தரப்பும், விரைவில் பகுதியளவில் பணிகளைத் தொடங்க முடியும் என மற்றொரு தரப்பும்
தெரிவித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/289a9c8e-b1eb-46c8-aff2-2d9cfb49877a/26-6aa6b033eeea3.webp' /></p><p>

இருப்பினும் சவூதி அரசு இந்த சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரப்பூர்வ
தகவல்கள் எதையும் இன்னும் வெளியிடவில்லை.</p><p>

ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பணவீக்கம்
அதிகரித்துள்ள நிலையில், சவூதியின் எண்ணெய் விநியோகமும் குறைந்தால் உலகளாவிய
ஆற்றல் நெருக்கடி மேலும் தீவிரமடையும் என சர்வதேச ஆற்றல் முகமை (IEA) கவலை
வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் பதிவாகவுள்ள வெப்பநிலை தொடர்பில் வெளிவந்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789303289"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789303289</id>
            <summary type="text">நாளைய தினம் (14.09.2026) பகல் வேளையில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அதன்படி வடமத்திய மற்றும் கிழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளைய தினம் (14.09.2026) பகல் வேளையில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

அதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் இவ்வாறான நிலைமை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வெப்பச் சுட்டெண் அவதானம்</h2><p>

இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பின்படி, </p><p>வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் அவதானம் செலுத்தப்பட வேண்டிய'மட்டத்தில் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448f3467-22df-47be-9d26-2a538262983c/26-6aa6a6aa038d9.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த அதிக வெப்பமான வானிலை நிலவுவதால் தேவையான சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T13:38:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தில் இணை உறுப்பினராகக் கனடா முயற்சி: பிரதமர் மார்க் கார்னி புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-associate-membership-in-the-european-union-1789303903"></link>
            <id>https://tamilwin.com/article/canada-associate-membership-in-the-european-union-1789303903</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பிய
ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தும் நோக்கில் கனடாவை அதன் &#039;இணை
உறுப்பினராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பிய
ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தும் நோக்கில் கனடாவை அதன் 'இணை
உறுப்பினராக' மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அந்நாட்டின் பிரதமர் மார்க்
கார்னி ஆராய்ந்து வருகின்றார்.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்துடனான வர்த்தகத்
தகராறு மற்றும் பரஸ்பர வரிகள் காரணமாகக் கனடாவின் பொருளாதாரம்
பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால் தனது வர்த்தகப் பங்காளிகளை வேறுபடுத்தும்
முயற்சியில் கனடா தீவிரமாக இறங்கியுள்ளது.</p><h2>பேச்சுவார்த்தை&nbsp;</h2><p>
</p><p>
கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில்
ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய கனிமங்கள் சார்ந்த
பொருட்கள், சேவைகள் மற்றும் தொழிலாளர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான
வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71111ece-dafc-47ba-8dcd-3d848c7a94bb/26-6aa6a17931612.webp' /></p><p>
</p><p>
அத்துடன், கனடியக் குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விசா அற்ற வேலை
வாய்ப்பு மற்றும் வசிப்பிட உரிமைகளைப் பெற்றுத் தருவது தொடர்பாகவும் பிரான்ஸ்
ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் கார்னி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>

இருப்பினும், புதிய 'இணை உறுப்பினர்' அந்தஸ்தை உருவாக்குவது தொடர்பில்
ஐரோப்பிய ஒன்றியம் ஆர்வம் காட்டிய போதிலும், உறுப்பு நாடுகளின் ஒப்புதலைப்
பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் இத்திட்டத்திற்குப் பெரும் சவாலாக
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T13:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு - அநுர ஆட்சியை கவிழ்க்க மாபெரும் பேரணிக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strong-opposition-to-the-22nd-amendment-1789305124"></link>
            <id>https://tamilwin.com/article/strong-opposition-to-the-22nd-amendment-1789305124</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைதி
வழியிலான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பில்
முன்னெடுக்கப்படவுள்ளது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைதி
வழியிலான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பில்
முன்னெடுக்கப்படவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்துள்ளார். </p><p>

இதற்காக அனைத்து முற்போக்கு மக்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்
மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர்
அலுவலகத்தில் இன்று(13.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். </p><h2>

22ஆவது திருத்தம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின்
சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது. 22 ஆவது
திருத்தத்துக்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9eb388c-30fc-4354-828b-0c33e9486d06/26-6aa6a1a8eb682.webp' /></p><p>
</p><p>
எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக
ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம்.
</p><p>
தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி
அரசாங்கம், இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி
ஆட்சியைக் கொண்டுவந்து, நாட்டின் அதிகாரத்தைப் பெலவத்தைக்குக் கொண்டு செல்லும்
முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.
</p><h2>
24ஆம் திகதி அணித்திரளும் மக்கள்</h2><p>
மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக, 220
இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. இதற்கு எதிராகப் பெரும்
மக்கள் பலத்தைத் திரட்டுவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93cb5261-97d5-40a5-a29b-3f6f7bfe7e58/26-6aa6a1a9ea909.webp' /></p><p>

பிரஜைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராகக் கொண்டுவரப்படும் இந்த
மோசமான 22 ஆவது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை
எடுக்கப்படும். இது அரசின் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
</p><p>
அரசின் சர்வாதிகார ஆட்சியைத் தோற்கடிக்கும் முதல் அடியைச் எதிர்வரும்
செப்டெம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி பதிக்கும் என்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8310ff70-0b8f-4362-8f76-aa210021c966/26-6aa6a1aac44f8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f10ac243-f58f-44aa-9028-4d46c953ddf2/26-6aa6a1ab9eac5.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T13:14:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு போக்குவரத்து சிக்னலில் கோளாறு - ஒரே நேரத்தில் ஒளிரும் இரு விளக்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/malfunction-in-the-traffic-signals-at-pannipitiya-1789303086"></link>
            <id>https://tamilwin.com/article/malfunction-in-the-traffic-signals-at-pannipitiya-1789303086</id>
            <summary type="text">கொழும்பு - பன்னிப்பிட்டிய அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பன்னிப்பிட்டிய அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொட்டாவை நோக்கிச் செல்லும் சாலையில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் அமைப்பில் சிவப்பு மற்றும் பச்சை விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிர்வதால் இந்த குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
பொதுமக்களின் கோரிக்கை</h2><p>

இந்த விடயம் தொடர்பில் மகரகம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பலரும் இது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01d92c66-369a-4989-a389-316358e16d61/26-6aa69b3c9200e.webp' /></p><p>
</p><p>
எனினும், தற்போதைய சூழ்நிலையில் விபத்துகள் ஏற்படக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p><p> 

எனவே, அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T12:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு! அழகுசாதனப் பொருட்கள் கொள்வனவு செய்வோருக்கான அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fine-on-company-for-selling-expired-cosmetics-1789300997"></link>
            <id>https://tamilwin.com/article/fine-on-company-for-selling-expired-cosmetics-1789300997</id>
            <summary type="text">அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும், கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும், கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள், விற்பனை விலை குறிப்பிடப்படாத நறுமணப் பொருட்கள் மற்றும் உரிய விபரங்களற்ற பூச்சு வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு</h2><p> </p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் (இலக்கம் 5) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. </p><p>

கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச்சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77923b9-1fbd-4800-bff5-9523c9e35d9a/26-6aa697b9d2a12.webp' /></p><p> </p><p>

உச்ச சில்லறை விலை குறிப்பிடப்படாமல் நறுமணப் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான அழகுசாதன பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உரிய உற்பத்தி விபரங்களன்றி அழகுசாதனப் பொருட்களை காட்சிப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அந்நிறுவனத்திற்கு எதிராகச் சுமத்தப்பட்டன.</p><h2>அபராதம் விதிப்பு</h2><p> 

அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் போது, குற்றச்சாட்டுகள் மூன்றையும் குறித்த நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. </p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
மேலும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் கொள்வனவு செய்வோர் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T12:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் மீது தாக்குதல்:மசகு எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-ship-attacked-in-the-strait-of-hormuz-1789301039"></link>
            <id>https://tamilwin.com/article/another-ship-attacked-in-the-strait-of-hormuz-1789301039</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஹோர்முஸ்
நீரிணைப் பகுதியில் பயணித்த வர்த்தகக் கப்பலொன்று தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஹோர்முஸ்
நீரிணைப் பகுதியில் பயணித்த வர்த்தகக் கப்பலொன்று தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதை அடுத்து, அதில் இருந்த
மாலுமிகள் உள்ளூர் அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
சவூதி அரேபியாவின் பிரதான கச்சா எண்ணெய் குழாய்த்தொடர் மீது ட்ரோன் தாக்குதல்
நடத்தப்பட்டு மூடப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய ஆற்றல் விநியோகம் குறித்த
அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.</p><h2>எண்ணெய் ஏற்றுமதி</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் 1,200
கிலோமீற்றர் நீளமுடைய இந்த எண்ணெய் குழாய்த்தொடர், ஹோர்முஸ் நீரிணை
மூடப்பட்டிருந்த காலத்தில் நாட்டின் 5 சதவீதமான எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய
வழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.தற்போது இத்தாக்குதல் காரணமாகப்
பிராந்தியத்தில் பதற்றம் மேலும் நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c64eb79-4a92-410f-9eb8-eccceb3b7b1b/26-6aa6964591004.webp' /></p><p>
அதேவேளை, யேமனின் செங்கடல் பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்களின்
தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக அமெரிக்காவின்
இராணுவ உதவியைச் சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான்
கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
எனினும், நேரடி இராணுவத் தலையீட்டைத் தவிர்த்து உளவுத்துறைத் தகவல்களை வழங்க
மாத்திரமே அமெரிக்கா உடன்பட்டுள்ளது.

நாளை ஓமானில் நடைபெறவுள்ள வளைகுடா நாடுகளின் கூட்டத்தில் ஹோர்முஸ் நீரிணையின்
எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41c10637-5ce6-4e19-b692-7cff8a3646a0/26-6aa6964643db6.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை அமைதியைத் திரும்பப் பெற ஈரான் விதித்துள்ள 7
நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை சுமுகமான உடன்பாடு எட்டப்படுவது
கடினம் எனப் பிராந்திய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T12:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாபன விதிக்கோவை திருத்தத்தில் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/concession-granted-to-government-officials-1789300939"></link>
            <id>https://tamilwin.com/article/concession-granted-to-government-officials-1789300939</id>
            <summary type="text">பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தாபன விதிக்கோவையை விட ஊழல் எதிர்ப்புச் சட்டமே முதன்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தாபன விதிக்கோவையை விட ஊழல் எதிர்ப்புச் சட்டமே முதன்மை பெறும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்
சிறப்புரிமை அல்லது விலக்களிப்பு அளிக்கப்பட்ட அரச அதிகாரிகளைப்
பொறுத்தவரையில் இது சாதகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> 

நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஒரு அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு
உரிமை, சிறப்புரிமை அல்லது விலக்களிப்பை மறுக்கும் அல்லது கட்டுப்படுத்தும்
வகையில் தாபன விதிக்கோவையின் எந்தவொரு சரத்தும் வியாக்கியானம்
செய்யப்படக்கூடாது என அமைச்சுச் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால்
வெளியிடப்பட்ட தாபன விதிக்கோவை திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0610458-20e4-4bf4-9482-f1ee1bee83bc/26-6aa690cd7e476.webp' /></p><p>

இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்,
அரச ஊழியர்களுக்கு முழுமையான விலக்களிப்பு வழங்கப்படவில்லை.
</p><p>
அத்துடன் அவர்கள் கடுமையான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை
நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T12:08:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொன்சேகா மீதான தாக்குதல் முயற்சி! சந்தேகநபரின் பிணைக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/general-sarath-fonseka-attack-case-1789299638"></link>
            <id>https://tamilwin.com/article/general-sarath-fonseka-attack-case-1789299638</id>
            <summary type="text">முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்
முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக
விளக்கமறியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்
முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருக்கு மேன்முறையீட்டு
நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு
செய்யச் சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் எனக் கூறப்படும் தம்பையா பிரகாஷன்
(தனுஷ்) என்பவரே பிணை பெற்றவராவார்.</p><h2>வழக்குத் தாக்கல்&nbsp;</h2><p>

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் மீது, முன்னாள் இராணுவத் தளபதி
மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சி தொடர்பாக 2012 செப்டம்பர் 20
அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இவர் கடந்த 14
ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20ce95c9-c2d5-4ebe-aff2-6621de9d8586/26-6aa68e208da92.webp' /></p><h2>பிணை வழங்கிய நீதிமன்றம்</h2><p>

இந்த நிலையில், நீண்டகால விளக்கமறியல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை
பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 200,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 4
சரீரப் பிணைகளின் கீழ் இவருக்கு அண்மையில் பிணை வழங்கியது.</p><p>

எனினும், இந்த பிணை உத்தரவுக்கு எதிராகச் சட்டமா அதிபர் திணைக்களம் மேன்
முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை
எட்டியுள்ளதாகவும், இந்த நேரத்தில் சந்தேகநபர் பிணையில் அனுமதிக்கப்பட்டால்,
அது நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்றும் சட்டமா
அதிபர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 நாட்களில் இலங்கை முழுவதும் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-arrivals-have-crossed-1-5-million-1789299650"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-arrivals-have-crossed-1-5-million-1789299650</id>
            <summary type="text">



இலங்கைக்கு இந்த வருடம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது என சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



இலங்கைக்கு இந்த வருடம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது என சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. </p><p>

இதற்கமைய, ஜனவரி 1 முதல் செப்டம்பர் 6 வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

1.5 மில்லியன் பயணிகள் வருகை</h2><p>
இந்த ஆண்டு இதுவரை, இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 395,377 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். 

மேலும், ஐக்கிய ராச்சியத்திலிருந்து 152,625 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 102,473 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 91,763 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e51f06f-a8a4-4b42-ab43-5abdaddb0eb5/26-6aa68d78b5e75.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், செப்டம்பர் 1 முதல் 6 வரை 31,885 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:48:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை ஜனாதிபதியானால் மகனும் ஜனாதிபதியாக வேண்டுமா.. இனி வாய்ப்பே இல்லை! அநுரவின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-s-announcement-at-the-public-rally-1789299114"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-s-announcement-at-the-public-rally-1789299114</id>
            <summary type="text">தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற முறைமை 2024 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துவிட்டது என்று ஜனாதிபதி அநு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற முறைமை 2024 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துவிட்டது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் பேரணில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பழைய அரசியல் முடிந்துவிட்டது&nbsp;</h2><p> </p><p>

மேலும், ஊழல்வாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்குவதற்கு ஏற்ற சமூகத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6593bf0c-4e47-4ab6-9e66-bd537bf7e8ca/26-6aa68b0bbc643.webp' /></p><p>

அத்துடன், தந்தை ஜனாதிபதியாகவிருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும், தந்தை பிரதமரானால் மகனும் பிரதமராக வேண்டும், தந்தை அமைச்சரானால் மகனும் அமைச்சராக வேண்டும் என்ற பழைய அரசியல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே முடிவுக்கு வந்துவிட்டது எனவும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தற்போது கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தை அடுத்து, நொச்சியாகம பகுதியில் இடம்பெறவுள்ள மக்கள் பேரணியில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p><iframe width="1337" height="752" src="https://www.youtube.com/embed/eLsJ1Ydheq0" title="🔴 LIVE:  அனுராதபுரத்தில் ஜனாதிபதி அநுர பிரம்மாண்ட பொதுக்கூட்டம் |  President Anura Live Speech" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:48:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் கலாவதியான அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-fines-person-for-selling-expired-cosmetics-1789296772"></link>
            <id>https://tamilwin.com/article/court-fines-person-for-selling-expired-cosmetics-1789296772</id>
            <summary type="text">கொழும்பு - பொரளை பகுதியில் அமைந்துள்ள பிரபல நிறுவனமொன்று, விலைக் குறிப்புகள் இன்றி காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை விற்பனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பொரளை பகுதியில் அமைந்துள்ள பிரபல நிறுவனமொன்று, விலைக் குறிப்புகள் இன்றி காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை விற்பனை செய்த குற்றத்திற்கான நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

பொரளை பகுதியில் இயங்கி வரும் பிரபல அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் கலாவதியான பொருட்கள் மற்றும் வாசணை திரவியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நுகர்வோர் விவகார அதிகாரசபையால் தாக்கல் செய்யப்பட்டன.
</p><h2>
நீதிமன்ற உத்தரவு</h2><p>
இதில் ஒரு வழக்கின் தொடர்பில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் (எண். 5) முன்பாக 3 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒகஸ்ட் 18 ஆம் தேதி, நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பாக நடத்திய சோதனையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அதிகபட்ச சில்லறை விலையைக் குறிப்பிடாமல் வாசனைத் திரவியங்களை விற்பனை செய்ததும், காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ததும், மற்றும் தேவையான தகவல்கள் இன்றி காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/036ae438-5eb8-41c1-8111-5eef69782aeb/26-6aa68b0be1b5b.webp' /></p><p> </p><p>

இதனை அடிப்படையாகக் கொண்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட நிலையில், நீதவான் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ. 300,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><p>
இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சற்று அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-13T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sinhalization-of-the-north-east-sl-1789296710"></link>
            <id>https://tamilwin.com/article/sinhalization-of-the-north-east-sl-1789296710</id>
            <summary type="text">21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சீனாவும் இலங்கைதீவும் நெருக்கமாக கைகொடுக்க தொடங்கிவிட்டன. இதற்கு பின்னே இந்துசமுத்திர கடலாதிக்கமே முதன்மை பெறுகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சீனாவும் இலங்கைதீவும் நெருக்கமாக கைகொடுக்க தொடங்கிவிட்டன. இதற்கு பின்னே இந்துசமுத்திர கடலாதிக்கமே முதன்மை பெறுகிறது.</p><p> சீனா இந்துசமுத்திரத்தை கட்டுப்படுத்துவதே அதனுடைய புதிய பட்டுப்பாதை விஸ்தரிப்புக்கு அடித்தளமாக அமையும் என்பதனால் இலங்கையை மையப்படுத்தி பர்மாவின் கோகோ தீவு, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகம், செங்கடயிலே ஜிபூட்டி, மற்றும் கெனியாவின் லாமோ தீவு என்பவற்றில் தனது நிலையான துறைமுகங்களை அமைத்துக் கொண்டு விட்டது. </p><p> இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவில் நிலை எடுப்பது இன்றைய புவிசார் அரசியலிலும், பூகோள அரசியலிலும் சீனாவின் கையை ஓங்க வைப்பதற்கான மூலோபாயமாகும்.</p><h2>கடல்சார் தொழில் நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
இதன் அடிப்படையில் இலங்கைத்தீவை மையப்படுத்தி இந்துசமுத்திரத்தில் சீனா மேற்கொள்ளும் ஏகபோகத் தன்மை கொண்ட(Monopolistic) ஏகபோக(Monopoly) வர்த்தகக் கடல்வழி, மற்றும் கடல்சார் தொழில் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வது மிக அவசியமானது. </p><p>முதலில் ஏகபோக (Monopoly) என்பது ஒரு குறிப்பிட்ட சந்தை அல்லது சேவையில் ஒரே நிறுவனம் அல்லது நாடு ஆதிக்கம் செலுத்தி ஏனையவர்களின் போட்டியைக் கணிசமாகக் கட்டுப்படுத்தும் நிலைமை என்பதனையே குறித்து நிற்கிறது.
</p><p>
 அதே நேரத்தில் ஏகபோக நடத்தை(Monopolistic behaviour) என்பது குறித்த நாடோ நிறுவனமோ முழுமையான ஏகபோகம் இல்லாவிட்டாலும், முதலீடு, உட்கட்டமைப்பு, துறைமுகக் கட்டுப்பாடு, விநியோகச் சங்கிலி, நிதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் போட்டியாளர்களைவிட மிகப்பெரிய ஆதிக்கத்தை உருவாக்கும் செயற்பாடாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/559bd519-e281-472c-8b55-b0ae49da7803/26-6aa6886ab4d06.webp' /></p><p> </p><p>இந்த அடிப்படையில் பார்க்கும்போது, “சீனா இலங்கையில் முழுமையான கடல்வழி Monopoly ஒன்றை ஏற்கனவே உருவாக்கிவிட்டது”. </p><p>இலங்கை சார்ந்த முக்கியமான கடல்சார் உட்கட்டமைப்புகளில் சீனாவின் நீண்டகால பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கு இன்று பெருமளவில் அளவில் அதிகரித்துள்ளது என்பதே உண்மையாகும்.
</p><p>
இலங்கைத் தீவின் தென் பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகம் இதற்கு மிக முக்கியமான உதாரணமாகும். 2017 ஒப்பந்தத்தின் கீழ் China Merchants Port Holdings (CMPort) நிறுவனத்துடன் இலங்கை அரசு PPP முறையில் இணைந்தது. Hambantota International Port Group-இல் சீன நிறுவனத்திற்கு 85% பங்கும் Sri Lanka Ports&nbsp;Authority-க்கு 15% பங்கும் வழங்கப்பட்டது.</p><p> அதேவேளை, துறைமுக நிலத்தின் உரிமை சீனாவுக்கு விற்கப்படவில்லை 99 வருட குத்தகை அடிப்படையிலான இரண்டு முறை புதுப்பிக்கக்கூடிய சட்ட ஏற்பாடும் செய்யப்பட்டதாக இலங்கை அரசின் ஆவணங்கள் குறிப்பிடுவதில் இருந்து“இலங்கைத் துறைமுகத்தை சீனா முழுமையாக கைப்பற்றிவிட்டது” என்று கூறுவதில் தவறு ஏதுமில்லை. </p><p> இந்து மகா சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வணிக இயக்கத்தில் சீன நிறுவனத்துக்கு நீண்டகாலப் பெரும்பங்கு கிடைத்திருப்பது சீனாவின் புதிய பட்டுப்பாதை வியூகத்துக்கு கிடைத்த வெற்றி என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
</p><p>

அதேபோல கொழும்பு துறைமுகத்திலும் சீனாவின் பங்குகள் மேலோங்கியே உள்ளது. அதே நேரத்தில் கொழும்பு துறைமுக நகரம்(Colombo Port City) மூலம் துறைமுகம், நிதி, வர்த்தகம், சேவைகள், முதலீடு மற்றும் நகர்ப்புற பொருளாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.</p><p> Port City-யின் முதன்மை மேம்பாட்டாளராக(developer) China Harbour Engineering Company செயல்படுகிறது. இது China Communications Construction Companyன் துணை நிறுவனமாகும். இலங்கையில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இந்த சீன நிறுவனங்களுடன் தங்களுடைய உறவை புதுப்பித்து மேன்மேலும் பலப்படுத்துவதே வழக்கமானது.</p><h2>இலங்கை–சீனா உறவு</h2><p> </p><p>அது ஜே .ஆர் ஜெயவர்த்தனா ஆரம்பித்து வைத்த புவிசார் அரசியலை(geopolitical) அரசியல் புவியியலால் அரசியற் புவியியல்(Political Geography). வெற்றி கொள்ளும் அரசியல் ராஜதந்திர வியூகமாகும். அந்த அடிப்படையிலேயே இன்றைய எம்.பி.பி அரசாங்கமும் இலங்கை–சீனா இருதரப்பு ஒத்துழைப்பில் தொடர்ந்து முன்னெறியுள்ளன.
</p><p>
இலங்கை அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்துசமுத்துவத்தின் வலுச்சமநிலையை தன்பக்கம் திருப்புவதற்காக சீனா இந்துசமுத்திர துறைமுக நாடுகளை லாவமாக கையாள முனைகிறது. </p><p>இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது சீனாவின் அணுகுமுறையை வெறும் “துறைமுகம் கட்டுதல்” என்று பார்ப்பதைவிட, “துறைமுகம் → தளவாட மேலாண்மை(logistics) → தொழில் → வர்த்தகம் → நிதி → சேவை” என்ற ஒரு சங்கிலித் தொடராக முழுமையான இந்து சமுத்திர வர்த்தக கடல்சார் பொருளாதார வலையமைப்பை உருவாக்கும் முயற்சியாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1279fb-a8f4-4b30-92b6-63400b275df9/26-6aa6886b6857c.webp' /></p><p>
</p><p> 

சீனா இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் தனியாகக் கட்டுப்படுத்தாமல் இந்தியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களும் இலற்கைப் பொருளாதாரத்தில் செயற்படுகின்றன. </p><p>ஆனால் நாட்டின் நிறுவனங்கள் துறைமுகம் + தளவாட மேலாண்மை+ தொழில் + ஆற்றல் + நகர்ப்புற முதலீடு போன்ற பல அடுக்குகளில் தொடர்ந்து பெருமளவு பங்கெடுக்கும்போது, அது சீனாவின் ஏகோபோக ஆதிக்கத்தை(monopolistic influence) உருவாக்கும் சாத்தியத்தையே ஏற்படுத்தியள்ளது. </p><p> இதை சீனாவின் ஏகபோகத் திட்டம். இதனை மேற்குலகத்தையும் இந்தியாவையும் இந்து சமுத்திர வலுச்சம் நிலையில் பின்னோக்கித் தள்ளும் ஏகோபோக கேட்பாடு என்று கூறலாம்.
</p><p>
 இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை பயன்படுத்தி தனது “புதிய பட்டுப்பாதை“, "சந்தை குண்டு" கோட்பாட்டிற்கு இலங்கைதீவை ஒரு நெம்புகோளாக சீனா பயன்படுத்த முனைகிறது. இலங்கை இந்துசமுத்திரத்தின் முக்கிய சர்வதேச கடல்வழிகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், அதன் துறைமுகங்களின் மூலோபாய முக்கியத்துவம் மிக அதிகம்.</p><p> அதே நேரத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு துறைமுகங்களும், நிலமும் இந்திய துணை கண்டத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற புவியியல் கேந்திரத் தன்னை கொண்டிருப்பதனால் தற்போது தெற்கில் தன்னை வலுப்படுத்திய பின்னர், இப்போது வடக்கு நோக்கி அது தனது கவனத்தை செலுத்த முனைகிறது.
</p><p>
 இந்தியாவுக்கு இலங்கை முக்கியமான இந்திய-இலங்கை உடன்படிக்கையில் இந்தியாவின் எதிர் நாடுகளுக்கு இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனை உண்டு. ஆனால் வாணிபத்திற்காக என்றும், துறைமுக அபிவிருத்தி என்ற போர்வையிலும் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு சீனாவை அனுமதித்துவிட்டது. </p><p>இன்றைய வணிகத் துறைமுகங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் போர் சூழ்நிலைகளில் இராணுவத் தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய திறனை உருவாக்கும் கட்டுமானப்பலம் சீனாவிடம் உண்டு. எனவே அம்பாந்தோட்டை சீனாவின் இராணுவத் தளமாக எந்த நேரமத்திலும் மாற்றி அமைக்கப்படலாம்.</p><p> 2017 ஒப்பந்தத்தில் துறைமுகத்தை இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஏற்பாடுகளும், பாதுகாப்புப் பொறுப்பு இலங்கை அரசிடமே இருக்கிறது என பலரும் வாதிடலாம். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம் மீறப்பட்டுத்தானே அம்மாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.</p><h2>துறைமுக வளர்ச்சி</h2><p>
</p><p>
சீனாவின் இலங்கை மீது அதீத ஈடுபாட்டை கொண்டு செயற்படுவது ஏதோ இலங்கைக்கு தானதர்மம் வழங்குவதற்காகவோ, அல்லது இலங்கை மக்களின் அவ்விருத்தியில் நன்மனம் கொண்டே அல்ல. அது தனது உலகம் தழுவிய அரசியல், பொருளியல் நலன்களை முழுமையாக அடைவதற்காக இலங்கையில் தனது சில்லறை பணத்தைக் கொட்டுவது அவசியமாகிறது. </p><p>இதனையே தமிழில் இறால் போட்டு சுறா பிடிப்பது" என்பர். சீனாவின் முதலீட்டினால் இலங்கைக்கு துறைமுக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தளவாட மேலாண்மை(logistics) மற்றும் சரக்கு மாற்று ஏற்றுமதி(transshipment) வாய்ப்புகள், தொழில்துறை மண்டல வளர்ச்சி, புதிய நிதி மற்றும் சேவைத் துறை, தொழில்நுட்பப் பரிமாற்றம், அன்னியச் செலவாணி வருமானம் போன்ற பல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde8c46f-8f58-4281-96cc-d2064fb240cc/26-6aa6886c1b8f2.webp' /></p><p> </p><p>ஆயினும் இலங்கை தொடர்ந்து சீனாவின் கடன்கார நாடாகவே இருப்பதனையை சீனா விரும்பும். அதற்கேற்ற பொருளாதார வணிக செயற்பாடுகளையே சீனா இலங்கையில் ஊக்கிவிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

சீனா இலங்கை அரசுடன் நெருக்கமான உறவைப் பேணுகிறது. </p><p>அதேநேரம், தற்போது வடக்கு–கிழக்கில் உள்ள தமிழ் மக்களிடம் அபிவிருத்தி, உதவி, மீன்பிடி, வீடமைப்பு, கல்வி போன்ற சமூக-பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நல்லெண்ணத்தை உருவாக்குவது அதன் இராஜதந்திர வியூகத்தின் புதிய பரிமாணத்தை காட்டுகிறது. </p><p>சீனாவின் அணுகுமுறையில் ஒரு முரண்பாடு இருப்பது போல தோன்றும் ஆனால் சீனாவைப் பொறுத்தளவில் அதற்கு பூனை கருப்பாக இருந்தால் என்ன? சிவப்பாக இருந்தால் என்ன? எலி பிடிப்பதே அதன் கண்ணு கருத்துமான இலக்காகும்.

சீனாவின் இலங்கை கடல்சார் முதலீடுகளை வட- கிழக்கிற்கு நகர்த்துவது “சீனாவின் ஆக்கிரமிப்பு”என்று வர்ணிப்பது அரசியல் ரீதியாக வலுவான வாதம்தான். </p><p> சீனா வட- கிழக்கில் தமிழர்களுக்கு அபிவிருத்தி உதவி என்ற பெயரிலே மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் சிங்கள அவர்களை வடக்கு நோக்கி இழுத்து வடக்கை வடகிழக்கை சிங்கள மயமாக்களை இலகுபடுத்துவதோடு, தமிழர்களிக்கு அபிவிருத்தி உதவி் செய்வதன் மூலமாக சீனா தமிழர்களுடன் நெருக்கமான உறவை பேணுவதாக ஒரு போக்கை காட்டுவதனால் இந்தியா தமிழர்மீது அதிருப்தி கொள்ள வைப்பதான செயலாகவும் அமைகிறது. </p><p>இதன் மூலம் தமிழர்- இந்திய உறவை பிரித்து ஈழத் தமிழர்களை தனிமைப்படுத்தும் தொந்தரவு உத்தியாகவும் இது அமைகிறது. இத்தகைய வேலை திட்டத்தை சீனா எழுமாத்திரமாக செய்கின்ற ஒரு நாடு அல்ல. அது நீண்ட காலத் திட்டத்தோடும் பெரும் இலக்குகளோடும் வெற்றி என்ற நம்பிக்கையோடுமே அது ஆரம்பிக்கும்.
</p><p>
இவ்வாறுதான் இலங்கைத்தீவில் 2000 ஆண்டு வரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உச்ச நிலை அடைந்து ராணுவச் சமநிலை அடைந்தபோது சீனா தமிழக விடுதலைப் போராட்டத்திற்கு பின் கதவால் உதவுவதாக வாக்களித்தது.அபாரம் செயற்பட்டது.</p><p> அதே நேரத்தில் அது முன்தவால் இலங்கை அரசோடு இணைந்து இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது யுத்தத்தில் பெருமலான ஆயுத தளவாட பலங்களையும் அது செய்தது அதன் மூலம் மேற்குலக நாடுகளும் இந்தியாவும் சீனாவுடன் போட்டி போட்டு இலங்கைக்கு உதவ முன்வந்து தமது இருப்பை தக்க வைக்க அவர்களும் நுழைந்தனர். </p><p>ஆனாலும் சீனாவுக்கே வெற்றிக்கனி கிடைத்தது. விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கான அனைத்து ராணுவ, புலனாய்வு, இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டான் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டார்கள். </p><p>தமிழக விடுதலைப் புலிகள் வீழ்த்தியதன் சன்மானம்தான் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பதை தத்துவார்த்த ரீதியில் அறிவார்ந்து ஆராய்ந்தால் உண்மை புரியும்.


தற்போது சீனா வட- கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில சிங்கள மயமாக்களை இலகுபடுத்துகிறது.</p><p> தமிழர்களுடன் அபிவிருத்தி உதவி் மூலம் நெருக்கமான உறவை பேனுவதக காட்டுவதனால் இந்தியா தமிழர்மீது அதிருப்தி கொள்ளும். இது தமிழர்- இந்திய உறவை பதிப்பதாக அமையும். இது பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. ஈழத் தமிழர்கள் அறிவார்ந்த சிந்திக்க தவறின் வல்லமை வாய்ந்த நாடுகளும், வர்த்தக ஏகோபோக உரிமையை இந்து சமுத்திரத்தில் நிலைநாட்ட முனையும் நாடுகளும் ஈழத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துவர்.</p><h2>புவிசார் அரசியல்</h2><p> </p><p>தற்போது கொங்கொங்கில் உள்ள சீன பல்கலைக்கழகம் இலங்கை தீவுக்குள் ஒரு தமிழ் சுயாதீன தமிழரசை உருவாக்குவதற்கான சர்வதேச சட்ட தடைகளும் நடைமுறைகளும் பற்றி ஒரு ஆய்வு செய்வதாக பெரிதாக பேசப்படுகிறது. இது ஈழத் தமிழர்களுக்கு பெரு மகிழ்ச்சியை கொடுப்பதாக அமையலாம். </p><p>ஈழத் தமிழர்களை தம்பக்கம் திருப்புவதற்கான உத்தியாகும் அமையலாம். ஆனால் இதன் முடிவு மேற்குலகமும், இந்தியாவும் ஈழத் தமிழர்களை ஒதுக்கி மேலும் நசுக்குவதற்கான தந்துரோபாயத்தை கொண்ட செயற்பாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீனா வட-கிழக்கில் அபிவிருத்தி செய்கிறது என்றால் அந்த அபிவிருத்தி திட்டம் நோக்கி பெருமளவு சிங்களவர்கள் கவர்ந்திழுக்கப்படுவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d76e931-46b7-4c2c-8fe0-8c4a952f3b9b/26-6aa6886cc48a5.webp' /></p><p> </p><p>ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி எவ்வாறு சிங்களமயமாகிவிட்டது. அதேபோல வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற மணலாற்றுப் பகுதியும் சிங்களப்படுத்தப்பட்டு வடகிழக்கு மாகாணங்கள் இரண்டு துண்டாக நிலத் தொடர்பு பிரிக்கப்பட்டது. வடக்கில் ராணுவ அழுத்தம், அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான இளையவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். </p><p>இதனால் அங்கு பெரும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட தொடங்கிவிட்டது. அதனை சிங்கள மக்களைக் கொண்டு நிரப்புவதன் மூலம் சிங்கள மக்களை நிரந்தர குடியிருப்பாளராக வடக்கிலே அமர்த்தி விட முடியும். அதன் மூலம் காலப்போக்கில் தமிழர்களை இனக்கலப்பு செய்து அழித்தொழிப்புச் செய்ய முடியும். தமிழர்களைச் சிங்கள மயப்படுத்துவது என்பது இலங்கைத் தீவை சீன மயப்படுத்தலாகவே அமையும்.</p><p>

சீனா வட–கிழக்கில் தமிழர்களுடன் நேரடி உறவை உருவாக்குவது தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தவும் இனமயமாக்கல் செய்யவும் அதே நேரத்தில் இந்தியாவின் தமிழர் துருப்புச்சீட்டை(Tamil card) பலவீனப்படுத்தும் ஒரு திட்டமிட்ட அல்லது வேண்டுமென்றே உருவாக்கப்படும் உத்தி(deliberate strategy) என்பதை சீனா–இந்தியா–இலங்கை–தமிழர் என்ற நான்கு தரப்பினரின் புவிசார் அரசியல் உத்திகளையும் (geopolitical strategy) தனித்தனியாக ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும்.
</p><p>
இதன் மூலம் சீன“நாங்கள் இனப்பிரச்சினையில் ஒரு தரப்பை ஆதரிப்பவர்கள் அல்ல இலங்கையின் அனைத்து மக்களுடனும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேற்கொள்கிறோம்.” என்பதாக அமைவதனால் இது தமிழர்களிடையே சீனாவைப் பற்றிய ஆதரவு பார்வையை உருவாக்கக்கூடியது. </p><p>ஆனால் அதிகாரம் இல்லாத தமிழர்களுக்கான அபிவிருத்தி என்பது இறுதியில் சிங்களமயமாக்கல் என்பதாகவே முடியும்.

சிங்களமயமாக்கல் என்ற வாதம் எழுமாத்திரத்திலோ அல்லது ஆராயப்படாமலோ முன் வைக்கப்படவில்லை. </p><p>மாறாக வடகிழக்கு தமிழர்களின் நில அபகரிப்பு அல்லது நில உரிமை மாற்றம், புதிய குடியேற்றங்கள், இராணுவமயமாக்கல், அரச நிர்வாக எல்லைகளின் மாற்றம், பௌத்த மத நிறுவனங்களின் விரிவாக்கம், உள்ளூர் தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதத்தில் மாற்றம், மீன்பிடி வளங்களின் கட்டுப்பாடு போன்ற பல்துறை கட்டமைப்புகள் சார்ந்த தரவுகளை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படத்தியர் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையிலேயே சிங்களமயமாக்கல் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.</p><p>

இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் வடக்கு–கிழக்கு தமிழர்களுக்கு வரலாற்று, அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்தியா இலங்கை மீதான மேலாண்மை செலுத்துவதற்கு தன்னை ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒரு முக்கிய பங்காளியாகக் கருதுகிறது. </p><p>இந்நிலையில் சீனாவின் வடக்கு நோக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகளும் தமிழ் மக்களுடனான நெருங்கிச் செல்லும் தமிழர்-இந்திய உறவு சிக்கலுக்கு உள்ளாக்குகின்ற அதேநேரம் அது ஒரு மறைமுகமான புவிசார் அரசியல் தாக்கத்தை(geopolitical effect) ஏற்படுத்துவதாக இருக்கிறது.</p><h2>சீனாவின் நகர்வு</h2><p>
</p><p>
சீனா வடக்கு-கிழக்கு தமிழ்ச் சமூகத்துடன நேரடி சமூக-பொருளாதார தொடர்பையும் உருவாக்கினால், அது இந்தியாவின் பாரம்பரிய influence-க்கு போட்டியாக மாரும். சீனா திட்டமிட்ட ரீதியில் ஈழத் தமிழர் உடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதனால் இலங்கை அரசையும் தன்னுடைய இறுக்கமான பிடிக்குள் வைத்திருக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516af76a-01b7-4665-bc24-838e026d3d1d/26-6aa6886d7a6cf.webp' /></p><p> </p><p>அதன் மூலம் மேன்மேலும் இலங்கையிடமிருந்து வரக்கூடிய அனைத்தையும் பெறுவதற்கான வாய்ப்பையும் அது பெற்றுக் கொடுக்கும். ஆனால் மறுவலத்தில் தமிழர்கள் சீனாவுடன் அதிகமான பொருளாதார/அரசியல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், இந்தியா அதை தனது இராஜதந்திர, பாதுகாப்பு, மற்றும் பிராந்திய செல்வாக்கின் கோணத்தில் திறக்க விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே பார்க்கும். </p><p>இதனால் தமிழர்களுக்கு ஒரு மூலோபாய இக்கட்டான நிலை (strategic dilemma) தோற்றுவிக்கும். அதாவது இது இந்தியாவின் பாரம்பரிய செல்வாக்குப் பரப்புக்குள் சீனாவின் இருப்பை அதிகரிக்கும் ஒரு இராஜதந்திர முயற்சியாக இருக்கிறது. </p><p>இது இந்தியா–தமிழர் உறவில் அவநம்பிக்கை உருவாகும் சூழலை ஏற்படுத்தக்கூடியது. ஈழத் தமிழர்கள் இந்தியா–சீனா போட்டியின் இடைநிலைக் களமாக மாற்றிவிடும் அபாயம் தற்போது சீனாவின் நகர்வால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.</p><p></p><p></p><p>


 </p>]]></content>
            <updated>2026-09-13T11:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்! அநுராதபுர பேரணி மேடையில் இருந்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-rajapaksa-will-also-face-imprisonment-1789274275"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-rajapaksa-will-also-face-imprisonment-1789274275</id>
            <summary type="text">
சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர், மகிந்தவுக்காகதான் செய்தோம், அவரிடம் தான் பணத்தைக் கொடுத்தோம் என பொய்யாக வாக்குமூலம் வழங்கினால், மகிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர், மகிந்தவுக்காகதான் செய்தோம், அவரிடம் தான் பணத்தைக் கொடுத்தோம் என பொய்யாக வாக்குமூலம் வழங்கினால், மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படுவார்&nbsp;என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p> இன்று இப்படித்தான் நியாயமற்ற முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>அநுராதபுரத்தில் நேற்றையதினம்(12.09.2026) இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>மகிந்தவும் கைது செய்யப்படுவார்..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> 

எந்தவொரு சாட்சியங்களும் இன்றி இந்த அரசாங்கம் நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளது. இதுதான் சட்டமா.</p><p>

தற்போது சிறையில் இருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மகிந்த ராஜபக்சவுக்காகதான் நாங்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டோம், அவரிடம் பெருந்தொகை பணத்தினைக் கொடுத்துள்ளோம் என சாட்சியளித்தால் என்ன நடக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa0595a-c76a-448e-8a78-db4346570b0b/26-6aa634825a506.webp' /></p><p>
</p><p>
அந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் அரசாங்கத்தின் சாட்சியாளர்களாக மாறுவார்கள். எமது தலைவர் மகிந்த சிறையில் அடைக்கப்படுவார். இது மிகவும் ஆபத்தான ஒரு விடயம்.
</p><p>
வாயில் பிட்டு வைத்திருப்பது போல அமைதியாக இருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நான் ஒன்றை கூற விரும்புகின்றேன்.
</p><p>
இந்த லொத்தர் சீட்டிழுப்பில் சிறைக்குச் செல்லப்போகும் அடுத்த அதிர்ஷ்டசாலி நீங்களாக இருக்கலாம். தவறு செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உள்ளே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f944d29c-00e5-487f-bcbb-74c614b8a5de/26-6aa634832ef2e.webp' />&nbsp;</p><p> </p><p>


ஹிட்லர் காலத்து கெஸ்டபோ பொலிஸாரும், அநுர குமார வசம் இருக்கும் பொலிஸாரும் ஒன்றுதான். சட்டம் சமமாக பிரயோகப்படுத்தப்படவில்லை. </p><p>

தற்போது இருக்கும் அநுர குமாரக்களும், விஜித ஹேரத்களும், லால் காந்தக்களும், வசந்த சமரசிங்கக்களும் இன்று கோடீஷ்வரர்களாக மாற கருப்புப் பணமே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலை பொதுப் பேருந்துகளுக்கு அவசர அறிவிப்பு: உறுதியாக நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seat-belts-mandatory-for-buses-on-expressways-1789296892"></link>
            <id>https://tamilwin.com/article/seat-belts-mandatory-for-buses-on-expressways-1789296892</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பொதுப் பேருந்துகளில் ஆசனப்பட்டியின் பயன்பாடு செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பொதுப் பேருந்துகளில் ஆசனப்பட்டியின் பயன்பாடு செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. </p><p>

ஆசனப்பட்டி வசதிகள் இல்லாத பேருந்துகள், ஆசனப்பட்டி அணியத் தவறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய விதிமுறை</h2><p> </p><p>

இந்த புதிய விதிமுறை குறித்து பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளால் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. </p><p>

பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கை செப்டெம்பர் 19 முதல் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.கே.சந்திரபால உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f23b5fb2-3147-4446-b386-d16d46fc6aca/26-6aa684a777e90.webp' /></p><h2>அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நடைமுறைத் திகதிக்கு முன்னர் மேலதிக விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:10:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு இரக்கமற்ற தண்டனை! பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-bomb-blast-sri-lanka-1789292145"></link>
            <id>https://tamilwin.com/article/easter-bomb-blast-sri-lanka-1789292145</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் கருணை காட்டாது அனைவருமே கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் கருணை காட்டாது அனைவருமே கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மக்கள் நலன் சார்ந்த அரசாங்கங்களாக இருக்கவில்லை.</p><h3>இரக்கமற்ற தண்டனை&nbsp;</h3><p>ஊழல் நிறைந்த அந்த அரசாங்கங்கள் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளையே பாதுகாத்தன.</p><p>

நாட்டில் வேரூன்றி இருக்கும் பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தின் முழுமையாக இல்லாதொழிப்பதே எமது அரசாங்கத்தின் முக்கிய பணி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ceef95-e36d-4f44-9900-16a0226b2b62/26-6aa68334e0779.webp' />&nbsp; &nbsp;</p><p> </p><p>

இந்தக் குற்றங்களோடு தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் இரக்கம் காட்டப்படமாட்டாது.</p><p> 

தங்களுக்கு எதிராக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதற்காக, தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. </p><p> 

தமக்கு எதிரான செய்தியை எழுதியதற்காக துப்பாக்கியால் ஊடகவியலாளர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19f4ef49-297a-49ae-88d4-6725d6141f14/26-6aa68335b9e59.webp' /></p><p> 

வாக்குகளைப்பெற்று, ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டில் பாரிய குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் இருக்கின்றார்கள். இந்தக் குற்றங்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்டப்படமாட்டாது. </p><p>

இத்தகைய குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்குதே தேசிய மக்கள் சக்தியின் பணி. அதனை நாங்கள் சரியாக செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும்! வெளிவந்துள்ள புதிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789293970"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789293970</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும் என ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும் என ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p> 

குறித்த அறிக்கையில் மேலும்,

2026ஆம் ஆண்டைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டும் வரலாற்றில் மிகக் கடுமையான வெப்பம் நிலவும் ஆண்டாக அமையக்கூடும்.</p><h2>உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும்</h2><p>
</p><p>உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலை காணப்படுவதுடன், 2027ஆம் ஆண்டிலும் கடுமையான வெப்பநிலை பதிவாகும் சாத்தியம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13b3619-be74-41ce-984e-a1fb347a2d3f/26-6aa67fe858fd2.webp' /></p><p> 

மேலும், எல் நினோ காலநிலை நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும். அது இதுவரை பதிவானவற்றில் மிகவும் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக அமையக்கூடும்.</p><p> 

இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் உலகின் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய காலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T10:51:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட தகவல்கள் பறிமுதல் - தீவிரமடையும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jagath-wickramaratne-s-personal-information-seized-1789296141"></link>
            <id>https://tamilwin.com/article/jagath-wickramaratne-s-personal-information-seized-1789296141</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு
தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய
க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு
தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய
குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) சில ஆவணங்களை தன்வசம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, சபாநாயகரின்
உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான அனைத்து
ஆவணங்கள் விசாரணைக்காக பெறப்பட்டுள்ளன.</p><h2>ஆவணங்களாக பெற்ற அதிகாரிகள்</h2><p>

மேலும், சபாநாயகரின் தனிப்பட்ட ஊழியர்களின் விபரங்கள், சம்பள விபரங்கள்
மற்றும் வாகனப் பயன்பாடு உள்ளிட்ட ஆவணங்களை நாடாளுமன்ற அதிகாரிகள் இலஞ்ச ஊழல்
ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6e96e8-7ca5-454d-8aa7-cade16c1fb9d/26-6aa67e0f8648a.webp' /></p><p>நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்னவினால்,
மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு, தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்று வருகின்றது. 

​</p><p>இதனிடையே, ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள
நிலையில், சபாநாயகர் விவாதத்திற்குத் தலைமை தாங்குவதும், சட்டமூலத்திற்குச்
சான்றளிப்பதும் பொருத்தமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற
உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:43:28+00:00</updated>
        </entry>
    </feed>
