<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-21T08:28:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்திற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143"></link>
            <id>https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143</id>
            <summary type="text">புதிய இணைப்புபண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வானவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வானவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு
காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
</p><p>இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர்&nbsp; எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.</p><p>
️ கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf0db8c-637c-4ee7-a408-b2a7e2bc8c8e/26-6a880a998b5a2.webp' /></p><p>
</p><p>உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து
கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்
சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களை தேய்க்க வேண்டாம்.
</p><p>சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
</p><p>“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன்
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக
வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.</p><h2>இரண்டாவது இணைப்பு<br></h2><p>யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை&nbsp;</h2><p>

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
</p><p>அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஆலயத் திருவிழா</h2><p>
</p><p>
மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4f5d61-1510-4a3f-bdb4-a5434702ed78/26-6a87f1b62cc5d.webp' /></p><p>
</p><p>இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>&nbsp;மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
</p><h2>பார்வை பிரச்சினை</h2><p>
இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96d6b16-a4d5-4f7b-9533-87ec33cef535/26-6a87f1b55bdf5.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T08:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையான பல்லேகம ஹேமரத்தன தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/venerable-pallegama-hemaratne-thero-in-court-1787299920"></link>
            <id>https://tamilwin.com/article/venerable-pallegama-hemaratne-thero-in-court-1787299920</id>
            <summary type="text">முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு விசாரணை இன்று(21.08.2026) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p> 


பல்லேகம ஹேமரத்தன தேரர் நீதிமன்ற வளாகத்திற்கு எப்படி வந்தார் என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு நீதவான் நீதிமன்றத்தின் பொறுப்பதிகாரருக்கு நீதவான் உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48750a73-3d3a-4d66-8f66-ce07fcf7752f/26-6a8808ad6c419.webp' /></p><p>

பல்லேகம ஹேமரத்தன தேரர் தனது வழக்கறிஞரின் காரில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/05w8InWKO7w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-21T08:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவன் உயிரிழப்பு : 3 ஆண்டுகளாக வெளியாகாத விசாரணை அறிக்கை - கேள்வி எழுப்பிய முஜுபுர் ரஹுமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dying-after-treatment-mujubur-rahman-question-1787296104"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dying-after-treatment-mujubur-rahman-question-1787296104</id>
            <summary type="text">கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி&amp;nbsp; சிகிச்சை பெற்ற மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி&nbsp; சிகிச்சை பெற்ற மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஸ்டென்ட் (Stent) மாற்றப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஸ்டென்ட்கள் அகற்றப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இந்த சிகிச்சையுடன் தொடர்புடைய மருத்துவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்ட சிலர், சம்பவத்திற்குப் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><h2>மரணம் தொடர்பான விசாரணை</h2><p>சிறுவனின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அதன் அறிக்கை இதுவரை பெற்றோரிடம் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ac2d150-20c0-415e-8d1c-aa715b3b1f3d/26-6a88002caf356.webp' /></p><p>

குறித்த விசாரணை அறிக்கை மருத்துவர் ரத்னபத்துவிடம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடம்பெற்று சுமார் மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த அறிக்கை பெற்றோருக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இதுவரை மூன்று முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னதாக பொலிஸ் மற்றும் சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய தரப்பினரிடம் இது குறித்து வினவப்பட்ட போதிலும், விசாரணையின் முடிவுகள் அல்லது உரிய பதில்கள் முறையாக வெளிப்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை, அறிக்கை பெற்றோரிடம் வழங்கப்படாததற்கான காரணம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து உரிய விளக்கமும் நடவடிக்கையும் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T07:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவப் பரிசோதனை முடிந்தது..மீண்டும் அடியாலா சிறைக்கு சென்ற இம்ரான் கான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-taken-back-to-jail-after-check-hospital-1787295492"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-taken-back-to-jail-after-check-hospital-1787295492</id>
            <summary type="text">பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் செய்தித் தொடர்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>மீண்டும் சிறை</h2><p> 

வைத்தியசாலையில் கண் வைத்தியர், இதயநோய் நிபுணர் மற்றும் பொது வைத்தியர் உள்ளிட்ட வைத்தியர்கள் அடங்கிய குழு அவரை விரிவாகப் பரிசோதித்ததாகவும், அவர் சிறையில் தொடர்ந்து இருப்பதற்கு மருத்துவ ரீதியாக தகுதியானவர் என வைத்தியவர்கள் தெரிவித்ததாகவும் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார்.
</p><p>
73 வயதான இம்ரான் கான், உடல்நல பிரச்சினைகள் காரணமாக வைத்திய சிகிச்சை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஒகஸ்ட் 20ஆம் திகதி நள்ளிரவில் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93fe9e99-81f8-43dc-986b-fe5c6e6050ea/26-6a8800e0cb7ce.webp' /></p><p>
</p><p>
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், அங்கிருந்து மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

தற்போது அவர் மீண்டும் சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>இதற்கிடையில், இம்ரான் கானின் உடல்நிலை சிறையில் மோசமடைந்துள்ளதாகவும், அவரது வலது கண்ணின் பார்வை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>இம்ரான் கானின் உடல்நிலை</h2><p>
செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், இம்ரான் கானை 48 மணி நேரத்திற்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும் என்றும், அவரது தனிப்பட்ட வைத்தியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவை அணுகுவதற்கு அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
</p><p>
ஆனால், இம்ரான் கானுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் எதுவும் தெரிவிக்கவில்லை என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/BREAKING?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BREAKING</a><br><br>Imran Khan shifted to hospital<br><br>Former Pakistan PM Imran Khan has been moved from Rawalpindi’s Adiala Jail to Shifa International Hospital in Islamabad under heavy security<br><br>The transfer came after Pakistan’s Supreme Court ordered a medical examination by a panel… <a href="https://t.co/hAn6BnkKMJ">pic.twitter.com/hAn6BnkKMJ</a></p>&mdash; Nabila Jamal (@nabilajamal_) <a href="https://x.com/nabilajamal_/status/2090656262136729675?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

மேலும், தனியார் வைத்தியசாலைக்கு பதிலாக அரசு வைத்தியசாலையிலேயே அவரது மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என சட்ட அமைச்சர் அசாம் நசீர் தாரார் வலியுறுத்தியிருந்தார்.
</p><p>
உயர்நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்போவதாக PTI எச்சரித்ததைத் தொடர்ந்து, இம்ரான் கான் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>

இம்ரான் கான் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் முதல் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T07:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலுள்ள மனைவியிடம் பணம் கேட்டு கொடூர செயல் - கடுமையாக தாக்கப்பட்ட பிள்ளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-arrested-for-attacked-their-kids-1787284882"></link>
            <id>https://tamilwin.com/article/father-arrested-for-attacked-their-kids-1787284882</id>
            <summary type="text">
கேகாலையில் பிள்ளைகளை துன்புறுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பலாங்கொட, பின்னவல பகுதியை சேர்ந்த 25 வயதான இள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கேகாலையில் பிள்ளைகளை துன்புறுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பலாங்கொட, பின்னவல பகுதியை சேர்ந்த 25 வயதான இளம் தந்தையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

4 வயதான சிறுமி மற்றும் 7 வயதான சிறுவனை, சந்தேகநபர் மோசமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">கடுமையாக தாக்கப்பட்ட பிள்ளைகள்</b></p><p>வெளிநாட்டிலுள்ள மனைவிடம் பணம் கேட்டு, இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p>பணம் அனுப்பவில்லை என பிள்ளைகளை கொலை செய்யப் போவதாகவும் சந்தேக நபர் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/585dfe03-8114-4b37-b126-55e28cd29eb1/26-6a87d3432a2c4.webp' /></p><p>அதற்கமைய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தாக்குதலுக்கு இலக்கான பிள்ளைகள் மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p> 

 </p>]]></content>
            <updated>2026-08-21T07:36:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு! இலங்கையில் ஏற்பட்டுள்ள தாக்கம் - நாடாளுமன்றில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1787293924"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1787293924</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கை செலவிலும் கடுமையான தாக்கத்தை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கை செலவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>எரிபொருள் இறக்குமதி செலவு</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு 3168 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e16862a-0011-49d3-bd86-0b72770b63ba/26-6a87f5ec624da.webp' /></p><p> </p><p>

இது கடந்த ஆண்டின் (2025) இதே காலகட்டத்தில் 1995 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. இதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

நிதி மற்றும் விலை ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இந்த ஆண்டு மே மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 100 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தப்பட்டு 8.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>விலை மதிப்பீடுகளில் வெளிப்படைத்தன்மை</h2><p>
</p><p>
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் விசேட எரிபொருள் வகைகளை இறக்குமதி செய்யத் தனித்தனி கேள்விப்பத்திர நடைமுறைகள் பின்பற்றப்படுவதுடன், விலை மதிப்பீடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/060adfed-efdd-4fe0-af18-3933d8b76d32/26-6a87f5ed20f10.webp' /></p><p> </p><p>

இதேவேளை, நாட்டின் ஏற்றுமதித் துறையில் உணவு, உரம் மற்றும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சர்வதேச சந்தையில் கடுமையான விலைப் போட்டியையும் அதிகரித்துள்ள போக்குவரத்துச் செலவுகளையும் எதிர்கொண்டு வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T06:54:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து பழுது : அமைச்சர் அளித்த விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-kks-train-breakdown-1787292686"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-kks-train-breakdown-1787292686</id>
            <summary type="text">இயந்திரத்தின் மோசமான நிலையே கொழும்பு - காங்கேசன்துறை (கேகேஎஸ்) தொடருந்து நேற்று (20) பழுதடையக் காரணமாக அமைந்தது என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயந்திரத்தின் மோசமான நிலையே கொழும்பு - காங்கேசன்துறை (கேகேஎஸ்) தொடருந்து நேற்று (20) பழுதடையக் காரணமாக அமைந்தது என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93990955-51c8-41b0-b628-7b2f3fd1babe/26-6a87f5eedbd01.webp' /></p><p>மேலும் தற்போது சேவையில் உள்ள பெரும்பாலான இயந்திரங்கள் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T06:53:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் உள்ள ஏழு அரசாங்க பங்களாக்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plan-to-lease-7-government-bungalows-in-colombo-1787287064"></link>
            <id>https://tamilwin.com/article/plan-to-lease-7-government-bungalows-in-colombo-1787287064</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான ஏழு அமைச்சர் பங்களாக்களையும் முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான ஏழு அமைச்சர் பங்களாக்களையும் முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;முதலீட்டு நோக்கங்கள்</h2><p>

அரச வருவாயை அதிகரித்தல், புதிய வணிக வாய்ப்புகளையும், சுற்றுலா ஈர்ப்புகளையும் உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுக்காக முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை அழைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4b62af7-4bb2-462a-b9d2-e43dc80a72fd/26-6a87f24c062da.webp' />&nbsp;</p><p>
கொழும்பு 05, ஸ்டேன்மோர் கிரசென்ட் (Stanmore Crescent) உள்ள B13, B14 மற்றும் B20 ஆகிய பங்களாக்களும், மலலசேகர மாவத்தையில் உள்ள C61 மற்றும் C62 ஆகிய பங்களாக்களும், ஸ்கெல்டன் வீதியில் உள்ள E01 மற்றும் E02 ஆகிய பங்களாக்களும் முதலீட்டு நோக்கங்களுக்காக வழங்கப்பட உள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T06:38:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787292283"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787292283</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (21.08.2026) அதிகரிப்பு பதிவாகியுள்ளது.அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,536 டொலர்களாக பதிவாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (21.08.2026) அதிகரிப்பு பதிவாகியுள்ளது.</p><p>அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,536 டொலர்களாக பதிவாகியுள்ளது.</p><h2>வெள்ளியின் விலை</h2><p>இதேவேளை வெள்ளியின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>அதன்படி ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 68.94 டொலர்களாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd712aa-6cf9-4200-9758-20dcca2cf716/26-6a87ededcc6b2.webp' /></p><p>
இந்த நிலையில் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T06:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை மற்றும் பரீட்சை கால அட்டவணை வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-term-schedule-for-2027-released-1787289996"></link>
            <id>https://tamilwin.com/article/school-term-schedule-for-2027-released-1787289996</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள்

உள்ளிட்ட விபரங்களை&amp;nbsp; கல்வி, உயர்கல்வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள்

உள்ளிட்ட விபரங்களை&nbsp; கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள&nbsp; எண் 31/2026-ஐ&nbsp;சுற்றறிக்கையில் இந்த தகவல் உள்ளடங்கியுள்ளது.</p><h2>பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை அட்டவணை</h2><p>இந்த சுற்றறிக்கைக்கு அமைய, 2027 ஆம் ஆண்டில் அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சை அட்டவணைகளைக் கருத்திற் கொண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை 197 நாட்களுக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea350fc4-aaff-4c1b-9dc1-4d5f915d3f47/26-6a87e7f14e296.webp' />&nbsp;</p><h2>சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான&nbsp;தவணை </h2><p>முதலாம் தவணை 2027 ஜனவரி 4 (திங்கட்கிழமை) முதல் 2027 ஏப்ரல் 09 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இரண்டாம் தவணை&nbsp; 2027 ஏப்ரல் 26 திங்கட்கிழமை முதல் 2027 ஜூலை 30 வரை நடைபெறவுள்ளது.</p><p>மூன்றாம் தவணை 2027 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை முதல் 2027 டிசம்பர் 03 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது.</p><h2>முஸ்லிம் பாடசாலைகளுக்கான அறிவிப்பு</h2><p>முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கை இரண்டு தவணைகளாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், சாதாரண தரப் பரீட்சை - 2027 டிசம்பர் மாதத்திலும் நடைபெறவுள்ளன.</p><p>மேலும், சிறப்பு காரணங்களுக்காக ஒரு நாள் பாடநாலை மூடப்பட நேர்ந்தால், அதற்குப் பதிலாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/H18we1ZNcGM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T06:02:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்.. கிளிநொச்சியில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-protest-today-1787291721"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-protest-today-1787291721</id>
            <summary type="text">&quot;எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்&quot; என அரசை வலியுறுத்தி
போராட்டம் ஒன்று இன்று(21) கிளிநொச்சியில் நடைபெற்றது.

குறித்த போராட்டம் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>"எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்" என அரசை வலியுறுத்தி
போராட்டம் ஒன்று இன்று(21) கிளிநொச்சியில் நடைபெற்றது.
</p><p>
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம்
முன்பாக A9 வீதியில் நடைபெற்றது.</p><h2>போராட்டம்&nbsp;</h2><p>
</p><p>
மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற குறித்த போராட்டத்தில், சிவில் அமைப்புக்கள், காணி உரிமையாளர்கள்,
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8553768-d551-40e4-adb0-a4f31300c514/26-6a87e916341b6.webp' /></p><p>

யாழ்ப்பாணம் வலிவடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு, மட்டக்களப்பு மயிலத்தமடு,
மாதவனை மற்றும் இயக்கச்சி, கிராஞ்சி பகுதிகளில் காணி இழந்த மக்களின் தொடர்
உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T06:01:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு - ரூ.235 மில்லியன் நிதி ஒதுக்கீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-air-conditioned-boat-for-neduntheevu-1787289914"></link>
            <id>https://tamilwin.com/article/new-air-conditioned-boat-for-neduntheevu-1787289914</id>
            <summary type="text">நெடுந்தீவு மக்களின் நீண்டகால கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும்
வகையில், புதிய படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெடுந்தீவு மக்களின் நீண்டகால கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும்
வகையில், புதிய படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப்
பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் ரூ.235 மில்லியன் சிறப்பு
நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள்
அமைச்சர்&nbsp;இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள
பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான
கலந்துரையாடல்&nbsp;நேற்று(20.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு அரசாங்க அதிபர்
அலுவலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து பிரச்சினை</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;குறித்த திட்டத்தை விரைவாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான
அனுமதிகள், தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால
அவகாசம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1226912-be5a-4b2a-8469-fa7bcecdc476/26-6a87e50fcda39.webp' /></p><p>நெடுந்தீவிற்கான புதிய படகு கொள்வனவு செய்யப்பட்டு சேவையில்
ஈடுபடுத்தப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் பயணிகள் கடற்போக்குவரத்து மேலும்
இலகுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>

அத்துடன், நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி
நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தி, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கருத்துத்
தெரிவிக்கையில், இன்றைய கலந்துரையாடலின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாகத்
தெரிவித்தார். </p><p>அதன்படி, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்
அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூ.235 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு
கிடைத்துள்ளதாகவும், சமூக சக்தி திட்டத்தின் கீழ் ஏற்கனவே யாழ்ப்பாண
மாவட்டத்திற்கு ரூ.652 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தார்.</p><p>

மேலும், தற்போது யாழ்ப்பாண மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில்
ஒன்றாக நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து பிரச்சினை காணப்படுவதாக அரசாங்க
அதிபர் தெரிவித்தார்.</p><h2>கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவதன் மூலம்</h2><p>குறிக்கட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டு வரும் ‘வடதாரகை’
மற்றும் ‘நெடுந்தாரகை’ ஆகிய இரு படகுகளும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு
சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e75b52b-b85e-4772-808f-862fd9d1978c/26-6a87e510dc04a.webp' /></p><p>அதேவேளை, ‘குமுதினி’ படகு திருத்தப்
பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இ</p><p>தன் காரணமாக நெடுந்தீவு மக்கள் மட்டுமன்றி, நெடுந்தீவுக்கு வருகை தரும்
சுற்றுலாப் பயணிகளும் கடற்போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு
வருவதாக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>கடற்போக்குவரத்து சேவையில் கடற்படைத் தளபதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கி
வருவதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், புதிய குளிரூட்டப்பட்ட படகு சேவையை
கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவதன் மூலம் நெடுந்தீவு மக்களும், உள்ளூர்
மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பயனடைவார்கள் எனக்
குறிப்பிட்டார்.</p><p> இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்
கடற்போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை கணிசமாகக் குறைக்க முடியும்
எனவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-21T05:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrested-for-attempting-to-dig-up-treasure-1787287992"></link>
            <id>https://tamilwin.com/article/arrested-for-attempting-to-dig-up-treasure-1787287992</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரணைமடு 55ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&amp;nbsp;குறித்த சம்பவம் நேற்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரணைமடு 55ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (19.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p>கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு
அமைவாக குறித்த பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>எட்டு பேர் கைது</h2><p>இதன்போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec5d2c1f-b705-4c85-9667-86e36e9ee4e1/26-6a87e6077446f.webp' /></p><p> கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, சிலாபம், யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.</p><p>குறித்த சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும்
சிறிய ரக வாகனம் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425c6a57-ee4e-45b2-867d-5728c8998427/26-6a87e6088dfc3.webp' /></p><p>சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82e5c6e-b9ca-454a-a5c7-849bacb867ba/26-6a87e609711d0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T05:56:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் நடந்த தாக்குதல் - தமிழர் பகுதி மாநகரசபை உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் வைத்தியசாலையில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-at-batticaloa-festival-1787290940"></link>
            <id>https://tamilwin.com/article/attack-at-batticaloa-festival-1787290940</id>
            <summary type="text">மட்டக்களளப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள
ஆலயம் ஒன்றில் வைத்து மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும்
அவரது சகோதரரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களளப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள
ஆலயம் ஒன்றில் வைத்து மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும்
அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(20.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><h2>

திருவிழாவில் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
இருதயபுரம் ஆலயத்தில் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் நேற்று இரவு மாநகரசபை
உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் கடுமையான
தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
</p><p>
ஆலயத்தில் நடைபெற்ற வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இந்த தாக்குதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7df97c29-8aea-49ce-a779-c8327cfa2ba2/26-6a87e5a74f3b6.webp' /></p><p>
</p><h2>
வைத்தியசாலையில் இருவர் அனுமதி</h2><p>
மட்டக்களப்பில் கடந்த காலத்தில் பிரபலமாகியிருந்த குழுவினரே இந்த தாக்குதலை
முன்னெடுத்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களின் உறவினர்கள்
தெரிவித்தனர்.
</p><p>
ஆனாலும் இதுவரையில் தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்படவில்லை என்றும்
தெரிவித்தனர்.</p><p>

தாக்குள்ளானவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருவதாக
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p></p><p></p><p><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-1jqO2syUu8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-21T05:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வவுனியா மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/81-year-old-man-sentenced-to-15-years-in-prison-1787288503"></link>
            <id>https://tamilwin.com/article/81-year-old-man-sentenced-to-15-years-in-prison-1787288503</id>
            <summary type="text">12 வயதுடைய பேத்தியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 81 வயதுடைய
முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 வயதுடைய பேத்தியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 81 வயதுடைய
முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற
நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.</p><p>

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p>

இந்த சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாக இருந்த நிலையில், இது தொடர்பான வழக்கின்
குற்றப்பகிர்வு பத்திரம் 2024 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><h2>விடுக்கப்பட்டுள்ள&nbsp;கோரிக்கை </h2><p>
</p><p>
குறித்த வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக்
கருத்தில்கொண்டு கருணை காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9ef3d0-2393-421c-8790-a4d6feacb7cd/26-6a87dd5aa9b9b.webp' />&nbsp;</p><p>

எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாவலர்களில் ஒருவரான
தாத்தாவினாலேயே இக்குற்றச்செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான
உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமையை நீதிமன்றம்
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரச
சட்டத்தரணியால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதை புறக்கணித்து 15 ஆண்டுகள்
கடூழிய சிறைத்தண்டனையும், 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>முக்கிய தீர்ப்பு&nbsp;</h2><p>
அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு
1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்தவும், அதனை
செலுத்தத்தவறின் மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும் வவுனியா மேல்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615f1195-78be-4566-8448-10d55bfef919/26-6a87dd5a039a5.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதன்போது அரச சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின்
அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை
அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
அத்துடன், இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T05:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-health-inspectors-prepare-continued-strike-1787285388"></link>
            <id>https://tamilwin.com/article/public-health-inspectors-prepare-continued-strike-1787285388</id>
            <summary type="text">இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.</p><p>பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர், நிர்வாக விதிமுறைகளுக்குப் புறம்பாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியே அச்சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பைத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. </p><h2>டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும்&nbsp;</h2><p>

அதன்படி, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் நேற்று (20) முதல் நாடு முழுவதும் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும் விலகிக்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79c96004-83c2-4079-adfb-d0ed39f61aab/26-6a87de596a312.webp' /></p><p>
 

இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள்(PHI) ஒன்றியமும் இப்பிரச்சினை தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளருக்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T05:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசமாக சிக்கிய இடியப்ப வியாபாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remanded-until-august-31st-1787286636"></link>
            <id>https://tamilwin.com/article/remanded-until-august-31st-1787286636</id>
            <summary type="text">கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான
முறையில் கஞ்சா வளர்த்து வந்த 56
வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான
முறையில் கஞ்சா வளர்த்து வந்த 56
வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த வழக்கு நேற்றைய தினம் (20.08.2026) கல்முனை நீதவான் முன்னிலையில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>சூட்சுமமாக வளர்க்கப்பட்ட கஞ்சா</h2><p> </p><p>கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4ஆம் மாடி மொட்டை
மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை பொலிஸார் கடந்த புதன்கிழமை (19) முற்றுகையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0badfaf8-b660-4f6a-bde3-aa87112502cd/26-6a87d82081b18.webp' /></p><p>

அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய
உத்தியோகத்தர்களான ஜவாத், இஸ்மத் ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு
அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து
பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா
செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1331cd6b-e4a4-4e8d-b037-a4b4fbfb8d45/26-6a87d821747ab.webp' /></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>
</p><p>
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற
சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா விற்பனையில்
ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>குறித்த வீட்டின் மொட்டை மாடியில் மிகவும்
பாதுகாப்பாக வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பிடுங்கிய பொலிஸார்,
அவற்றைச் சான்றுப் பொருட்களாகக் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு
எடுத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf81862b-e957-4e07-8885-3d2b0c804f30/26-6a87d8224ae4d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T04:46:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய உதவி திட்டம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/develop-eastern-relation-indian-assistance-program-1787284825"></link>
            <id>https://tamilwin.com/article/develop-eastern-relation-indian-assistance-program-1787284825</id>
            <summary type="text">கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாணத்தின்
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையே கூட்டம் ஒன்று நடைபெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாணத்தின்
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையே கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.</p><p>அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்தக் கூட்டம் நிகழ்ந்துள்ளது.</p><h2>கலந்துரையாடப்பட்ட விடயங்கள்</h2><p>இதன்போது, கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக
முன்னேற்றம், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களின் முன்னேற்றம்,
மாகாணப் பணப் பரிமாற்ற முறை குறித்த கலந்துரையாடல், அமைச்சுக்களின்
கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் உள்ள பிரச்சினைகள், மாகாண வருவாய் இலக்குகளை
அடைதல், கிழக்கு மாகாண சபைக்குள் உள்ள அமைச்சகங்கள் மற்றும் திணைக்களங்களில்
உள்ள திட்டங்களின் மீளாய்வு மற்றும் அவற்றில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிறுவனத் தலைவர்களின் தலையீடு போன்ற விடயங்கள் குறித்து விரிவான
கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cabe38a8-ea41-4b29-8d3b-2dc7fb1a3e7a/26-6a87d265282ae.webp' /></p><p>இந்தக் கூட்டத்தில் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து
கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T04:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச FCIDஇல் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-appears-before-fcid-1787285911"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-appears-before-fcid-1787285911</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று காலை (21) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று காலை (21) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்கவே அவர் முன்னிலையாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb69073-1174-4e36-9868-c4222ca7c000/26-6a87d51ea9aa7.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T04:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nanda-malinis-death-instructions-to-government-1787285079"></link>
            <id>https://tamilwin.com/article/nanda-malinis-death-instructions-to-government-1787285079</id>
            <summary type="text">மூத்த இசைக்கலைஞர் பாடகி நந்தா மாலனியின் மறைவை முன்னிட்டு&amp;nbsp;அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு&amp;nbsp;பொது நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த இசைக்கலைஞர் பாடகி நந்தா மாலனியின் மறைவை முன்னிட்டு&nbsp;அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு&nbsp;பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp;</p><p>இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுநாள் (23) ஆகிய மூன்று நாட்களை தேசிய துக்க நாளாக அரசு அறிவித்துள்ளது.</p><p>
அதன்படி, அந்நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு&nbsp; அறிவித்துள்ளள்ளது.</p><h2>சுற்றறிக்கை வெளியீடு&nbsp;</h2><p>நாட்டின் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையிலும், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20612fa6-b190-4572-a3c2-6c93c204dfd0/26-6a87d5585dfe7.webp' /></p><p>இது தொடர்பாக, அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்/அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை எண் 04/2026-இன் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

21 ஆகஸ்ட் 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோகா பண்டார கையொப்பமிட்டுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T04:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் சிக்கிய ஆபத்தான நபர் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-man-arrested-in-dubai-1787277451"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-man-arrested-in-dubai-1787277451</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ள வனாத்தே சத்து என அழைக்கப்படும் பாதாள உலகக்குழுவின் முக்கிய நபர் தொடர்பில் பல தகவல்கள் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ள வனாத்தே சத்து என அழைக்கப்படும் பாதாள உலகக்குழுவின் முக்கிய நபர் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஊழல் தடுப்பு அதிரடிப்படை மற்றும் டுபாய் தேசிய பாதுகாப்பு பொலிஸ் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, சந்தேக நபர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் பாதாள உலகக்குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பான முக்கிய நபராக செயற்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
கொலைகள், தாக்குதல்கள்</b></h2><p>கஞ்சிபானியின் உத்தரவின் பேரில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்பாடுகளும் வனாத்தே சத்துவின் வழிநடத்தலின் கீழ் இடம்பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84faeb30-b7a7-4bf1-bc34-3fef0ff8dbe0/26-6a87ccb21ba52.webp' /></p><p>பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட மற்றும் வலான ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர் ரோஹன் ஓலுகல ஆகியோரின் முழுமையான பங்களிப்புடன், டுபாய் தேசிய பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் உதவியோடு இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
டுபாயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அல் ராசிக் அல் கைமா எனப்படும் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள ஆடம்பரமான வீட்டில் அவர் மறைந்திருந்தபோது, டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன அல்லது வனாத்தே சத்து விசாரணைக்காக நேற்று மதியம் டுபாய் பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின்போது, உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், டுபாய் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், இந்த சந்தேக நபர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
வனாத்தே சத்து என்ற இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல கொலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பதுர்தீன் என்பவரை அவர் வெட்டிக் கொலை செய்தமை, மாளிகாவத்தையில் இளைஞரை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><h3><b> 

ஆடம்பரமான வாழ்க்கை</b></h3><p>அத்துடன், வனாத்தமுல்லையில் இளைஞர் ஒருவரை கொலை செய்தமை, கடுவெல கொரதொட்ட பகுதியில் மூன்று இளைஞர்களை கொலை செய்தமை, கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டமை, வனாத்தே பிம்சர என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இந்த நபருக்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbe98e2f-b3ed-4b58-94c0-baf3a05d2389/26-6a87ccb2c51aa.webp' /></p><p>இதற்கு மேலதிகமாக, வனாத்தே சத்து கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பிலும் முக்கிய நபராக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
இந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய நபர் டுபாயில் தங்கியிருந்து கஞ்சிபானி இம்ரான் வழங்கிய உத்தரவுகளை செயற்படுத்தியது.

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். </p><p>அவர் டுபாயில் தங்கியிருந்த ஆடம்பர வீடும், பயன்படுத்திய சொகுசு மோட்டார் வாகனமும் டுபாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mlVVgRCY_js" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T04:27:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மீட்பு : இருவர் தப்பி ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/llegal-fishing-equipment-recovered-from-kanthalai-1787282584"></link>
            <id>https://tamilwin.com/article/llegal-fishing-equipment-recovered-from-kanthalai-1787282584</id>
            <summary type="text">கந்தளாய் குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கம்பிக்கூடுகள் மற்றும் நைலோன் வலைகளை
கந்தளாய் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், கம்பிக்கூடுகள் மற்றும் நைலோன் வலைகளை
கந்தளாய் பொலிஸார் நேற்று மாலை (20.08.2026) மீட்டுள்ளனர்.
</p><p>
கந்தளாய் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த
இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே
இவை கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>

கைப்பற்றப்பட்ட பொருட்கள்</h2><p>கம்பிக்கூடுகள் - 22,&nbsp; நைலோன் வலைகள் - 160 மீற்றர் என்பன பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb20850-650a-45a4-9d2b-a3129c8c083b/26-6a87cbeee9229.webp' /></p><p>பொலிஸாரின் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பின் போது, மீன்பிடியில் ஈடுபட்டிருந்த
இருவர் தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> தப்பியோடிய சந்தேகநபர்களைக்
கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.
</p><p>
கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சான்றுகளை இன்று கந்தளாய் நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d513eb-102d-4aed-bf3e-e18161e8981f/26-6a87cbefcca1a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T03:54:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-blood-purification-machines-donated-hospitals-1787280810"></link>
            <id>https://tamilwin.com/article/six-blood-purification-machines-donated-hospitals-1787280810</id>
            <summary type="text">சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு
இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான
ஒரு வாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு
இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான
ஒரு வாய்ப்பாகும்.</p><p> அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக
தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும்
வகையில் 83 ஆயிரத்து 544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு
இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p><h2>நோயாளியின் சிகிச்சை&nbsp;</h2><p>

இந்த இயந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும்,
மல்லாவி ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கான
வரித்தீர்வாக வடக்கு மாகாண சபையால் 3.5 மில்லியன் இலங்கை ரூபா
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c15aa7-d2ae-4c7a-8295-662ca9dabeaf/26-6a87c0b7cf2fe.webp' /></p><p>

செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண
மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு
நேற்று(20.08.2026) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ
சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.</p><p>கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண
சுகாதாரப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மருத்துவத்துறை
நிபுணர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.</p><p>நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுநீரக நோயாளிகள் சிகிச்சைக்காக வாரத்தில் பல
தடவைகள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதுடன், சில
குடும்பங்கள் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகக்
குறிப்பிட்டார். </p><p>ஒரு நோயாளியின் சிகிச்சை அவரின் தனிப்பட்ட பிரச்சினையாக
மட்டுப்படாமல், முழுக் குடும்பத்தின் வாழ்வியலையும் பாதிக்கின்றது என்றும்
அவர் தெரிவித்தார். </p><p>எனவே, குருதி சுத்திகரிப்பு வசதிகளை நோயாளிகளின்
வாழ்விடங்களுக்கு அருகில் கொண்டு செல்வது மருத்துவ சேவையை மேம்படுத்துவதுடன்,
அவர்களது வாழ்க்கைச் சுமையையும் குறைக்கும் மனிதநேயப் பணியாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீண்டகால மனிதநேயப் பணி</h2><p>சிறுநீரக நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கவனத்துக்குரிய சுகாதாரச்
சவாலாக மாறியுள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும்
வவுனியா மாவட்டங்களில் இது தொடர்பான ஆய்வுகளும் சுகாதாரத் தரவுகளின்
அடிப்படையிலான கவனமும் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ஆளுநர்
சுட்டிக்காட்டினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5f85e2-0410-4612-b80d-c83f4d880b2a/26-6a87c0b8b24e3.webp' /></p><p>
குடிநீரின் தரம், நீண்டகால நீர் பயன்பாடு, விவசாயத்தில் பயன்படுத்தப்படும்
இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து ஆய்வுகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இந்நோய்க்கு ஒரே ஒரு காரணியைச்
சுட்டிக்காட்டுவது அறிவியல் ரீதியாகப் பொருத்தமானதல்ல என்றும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
விவசாயம், சுற்றுச்சூழல், குடிநீர் மற்றும் மக்களின் சுகாதாரம் ஆகிய
அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
சிகிச்சை வழங்குவதோடு மட்டும் இந்தப் பிரச்சினையை அணுகாமல், சிறுநீரக நோய்
அதிகரிப்பதற்கான காரணிகளைப் புரிந்துகொண்டு தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம்
செலுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.&nbsp;</p><p>செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் நிறுவனர் செந்தில்குமரனின் நீண்டகால
மனிதநேயப் பணியையும் ஆளுநர் பாராட்டினார். தாம் 2007ஆம் ஆண்டு கிளிநொச்சி
மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் வீடமைப்புத் திட்டமொன்றுக்கான
அடிக்கல் நடும் நிகழ்வில் செந்தில்குமரனுடன் இணைந்து பங்கேற்றிருந்ததை
நினைவுகூர்ந்த ஆளுநர், அக்காலத்திலிருந்தே அவர் சேவை மனப்பாங்குடன் செயற்பட்டு
வருவதாகத் தெரிவித்தார்.</p><h2>தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவி</h2><p>வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளுக்கான இவ்வாறான பங்களிப்புகள் வடக்கு
மாகாணத்துக்குள் மட்டும் மட்டுப்படாத மனிதநேயத் தொடர்பின் வெளிப்பாடாக
அமைகின்றன என ஆளுநர் தெரிவித்தார்.</p><p> செந்தில்குமரன் கனடாவில் வாழ்ந்து
வருவதுடன், அங்கு மேற்கொள்ளும் தொழில் மற்றும் சமூகப் பங்களிப்புகளுடன்
இணைந்து தாயக மக்களுக்காகவும் தொடர்ச்சியாக உதவி செய்து வருவது
பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec9d9d51-50cd-4796-aaa8-a56e2d21e8e9/26-6a87c0b9678bf.webp' /></p><p>

முன்னர் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய தரப்பினருக்கான வரித்தீர்வை
நடவடிக்கைகளில் வடக்கு மாகாண சபை ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், இவ்வாறான
மனிதநேய நன்கொடைகளை ஊக்குவித்து வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகளை
நிறைவேற்றுவதற்கான கூட்டாண்மைகளை மேலும் விரிவுபடுத்த மாகாண நிர்வாகம் தயாராக
இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
</p><p>
இன்று வழங்கப்படுவது ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் என்றாலும், அதன்
உண்மையான பெறுமதி அதைவிடப் பெரியது. இது சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை
வாய்ப்பையும், குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், வடக்கு மாகாண மக்களுக்கு
மனிதநேயப் பங்காளித்துவத்தின் மீது புதிய நம்பிக்கையையும் வழங்குகின்றது
என்றும் ஆளுநர் தெரிவித்தார். </p><p>கனடா மக்களின் மனிதநேயப் பங்களிப்புக்கும்
செந்தில்குமரனின் அர்ப்பணிப்புக்கும் வடக்கு மாகாண மக்களின் சார்பில் அவர்
நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
</p><p>
இந்நிகழ்வில் கனடா உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு
மாகாண சுகாதாரப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அணிகளின் உறுப்பினர்கள்,
செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இருதயச்
சத்திரசிகிச்சையால் பயன்பெற்ற சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T03:06:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-police-headquarters-request-1787279962"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-police-headquarters-request-1787279962</id>
            <summary type="text">பத்தரமுல்ல, இசுஹுருபாய கட்டடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதி அறிக்கை தரவு அமைப்பில் செயலிழப்பு ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பத்தரமுல்ல, இசுஹுருபாய கட்டடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதி அறிக்கை தரவு அமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p> 

இந்த அனுமதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், அறிக்கைகளை கோருதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகிய நடவடிக்கைகள் தரவு அமைப்பொன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
</p><p>
 குறித்த தரவு அமைப்பு நேற்று நண்பகல் முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

பொலிஸ் அனுமதி அறிக்கை</b></h2><p>இது தொடர்பாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db697fb-8c78-4382-bf97-423171cb95b0/26-6a87bbad8f50d.webp' /></p><p>அத்துடன், தரவு அமைப்பை மீளச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

எனவே, குறித்த தரவு அமைப்பு மீள செயல்படும் வரை பொலிஸ் அனுமதி அறிக்கைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

தரவு அமைப்பு மீளவும் இயங்கியவதுடன் பொலிஸ் அனுமதி அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-21T02:45:11+00:00</updated>
        </entry>
    </feed>
