<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-15T13:20:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை- அளுத்தோயாவில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-shortage-of-drinking-water-aluthoya-1789474730"></link>
            <id>https://tamilwin.com/article/severe-shortage-of-drinking-water-aluthoya-1789474730</id>
            <summary type="text">திருகோணமலை- அளுத்தோயா கிராமப்
பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக மக்களின் அன்றாட
வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- அளுத்தோயா கிராமப்
பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக மக்களின் அன்றாட
வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மக்கள் எதிர்கொள்ளும் இந்த அத்தியாவசியக் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்கும்
வகையில், ஹிங்குராக்கொட பிரதேச சபை மற்றும் ஹிங்குராக்கொட பிரதேச செயலகம்
இணைந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு 16,000 லீற்றர்
குடிநீரை இலவசமாக விநியோகித்து வருகின்றன.
</p><p>
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில், "கிராமத்திலுள்ள கிணறுகள் அனைத்தும் முற்றிலும் வற்றிப்போயுள்ளதால்,
குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மற்றும் ஏனைய அன்றாடத் தேவைகளுக்கும்
தண்ணீரின்றி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.</p><h2>கோரிக்கை&nbsp;</h2><p> </p><p>தற்போது பிரதேச
செயலகத்தின் மூலம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போசர் (Bowser)
வண்டிகள் வாயிலாக விநியோகிக்கப்படும் குடிநீரையே மக்கள் நம்பியிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
மேலும், வறட்சியின் தாக்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள சிறுதானியப் பயிர்கள்,
பழமரங்கள் மற்றும் விவசாயச் செய்கைகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2861d247-f835-41d9-a4a1-803b8b437440/26-6aa93d2478b12.webp' /></p><p> </p><p>இதனால்
கிராமவாசிகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அழிவடைந்த
மரங்கள் மற்றும் பயிர்ச் செய்கைகளை மீண்டும் சீரமைக்க 5 முதல் 6 ஆண்டுகள் வரை
ஆகும்."
</p><p>
எனவே, விவசாயத்துறை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு
விஜயம் செய்து நிலமையை நேரில் ஆய்வு செய்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
உரிய இழப்பீடு/நிவாரணங்களையும், குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத்
தீர்வையும் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள்
உருக்கமான கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்டத்தில் அரச சேவைகளைப் பெறுவதில் 64.7% பேர் அதிருப்தி - ஆய்வில் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-service-in-trincomalee-district-1789474639"></link>
            <id>https://tamilwin.com/article/government-service-in-trincomalee-district-1789474639</id>
            <summary type="text">அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு செலவிடப்படும் நேரம் தொடர்பாக
திருகோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு செலவிடப்படும் நேரம் தொடர்பாக
திருகோணமலை மாவட்டத்தில் 64.7 சதவீதமான மக்கள் அதிருப்தியை
வெளிப்படுத்தியுள்ளதாக மாற்றுக் கொள்கை நிலையம் (Alternative Policy Centre)
மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறும்போது பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி
அந்தச் சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆராயும் நோக்கில்
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரிடையே
சேவைகளைப் பெறுவதில் நிலவும் அதிருப்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக
இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.</p><h2>நடத்தப்பட்டுள்ள ஆய்வு</h2><p>
</p><p>
மாற்றுக் கொள்கை நிலையத்தின் IFF நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட
“சாமானியனுக்கு மீண்டும்” என்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு
நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர், சேருவில மற்றும் பதவிய
சிறீபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 530 பேரை உள்ளடக்கியதாக இந்த
ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச செயலக அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட
பொதுமக்கள் அதிகளவில் சேவைகளைப் பெறும் அரச நிறுவனங்கள் ஆய்வுக்காகத்
தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் பணியாற்றும் அரச அதிகாரிகள், சிவில்
செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட
நேர்காணல்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p><p> 2026 மார்ச் 1 முதல் ஜூன் 1
வரையிலான காலப்பகுதியில் முறையான பயிற்சி பெற்ற 23 ஆய்வாளர்களைப் பயன்படுத்தி
இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/834fcf54-c2f8-440c-9b4e-36891f393b76/26-6aa93e2fd10b9.webp' /></p><p>

சேவைகளைப் பெறுவதில் காணப்படும் சிரமங்கள், சேவையைப் பெறும்போது எதிர்கொள்ளும்
பிரச்சினைகள், சேவையைப் பெறுவதற்காக செலவிட வேண்டிய நேரம் தொடர்பான திருப்தி,
சேவை வழங்கும்போது வித்தியாசமாக நடத்தப்படுகிறோமா என்பது, தமக்குத் தெரிந்த
மொழியில் சேவையைப் பெறுவதற்கான வாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும்
சிரமங்கள் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் மாற்று
வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆய்வின் மூலம்
ஆராயப்பட்டுள்ளன.</p><h2>நடைமுறை ரீதியான தடைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன் மூலம் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெறும்போது எதிர்கொள்ளும் நடைமுறை
ரீதியான தடைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

64.3% பேர் சேவைகளைப் பெறுவதில் சிரமம்

ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலக
அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சேவைகளைப் பெறும்போது பல்வேறு சிரமங்களை
எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மொத்த பதிலளித்தவர்களில் 64.3 சதவீதமானோர் அரச சேவைகளைப் பெறுவது சிரமமாக
இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், 30.3 சதவீதமானோர் மாத்திரமே அந்தச்
செயற்பாடு இலகுவாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காகச் சென்ற பலரும் அங்கு சேவை
வழங்கும் விதம் தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p> குறிப்பாக
வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களின் பற்றாக்குறை, அக்கறையற்ற அணுகுமுறை
உள்ளிட்ட விடயங்கள் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

திருகோணமலை பெரிய வைத்தியசாலையில் தனது முதலாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக
அனுமதிக்கப்பட்ட 27 வயதான எஸ். திலக்ஷிகா, வைத்தியர்களின் மற்றும்
சம்பந்தப்பட்ட பிரிவின் பொறுப்பான வைத்திய அதிகாரியின் கவனக்குறைவு காரணமாக
தனது முதலாவது குழந்தையை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
சேவைகளைப் பெறுவதற்காக பலமுறை அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை

ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் மேற்குறிப்பிட்ட அரச
நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுவதற்கு செலவிட வேண்டிய நேரம் தொடர்பாக
அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர், சேவைகளைப்
பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், ஒரே சேவையைப்
பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பலமுறை செல்ல வேண்டியுள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியவர்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின்
எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிண்ணியா இலக்கம் 03, ஹிஜ்ரா வீதி பகுதியைச் சேர்ந்த அப்துல் வஹாப் மொஹமட்
என்பவர், கிண்ணியா பெரியவெளி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுப்
பாதையை அகற்றுவதற்கு கிண்ணியா பிரதேச செயலக அலுவலகம் நடவடிக்கை எடுக்கவில்லை
எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f80bbcf3-d06b-402e-83db-21fdf88bac75/26-6aa93e2f1e208.webp' /></p><h2>சட்டவிரோத நடவடிக்கை</h2><p>
</p><p>
“எனது வயல் நிலத்தின் ஊடாக மணல் ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள் மற்றும்
டிப்பர் வாகனங்கள் உடனடியாகச் செல்வதை நிறுத்துமாறு கிண்ணியா பிரதேச செயலக
அலுவலகத்தில் பல சந்தர்ப்பங்களில் கூறினேன். ஆனால் அது தொடர்பாக எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை
செய்வதைவிட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிப்பதாகத்
தோன்றுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பணியாளர் பற்றாக்குறையும் மொழிப் பிரச்சினையும்

பொதுமக்கள் அரச சேவைகளைப் பெறச் செல்லும்போது எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கிய
பிரச்சினையாக பணியாளர் பற்றாக்குறை இந்த ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாமை, போதுமான எண்ணிக்கையில்
பணியாளர்கள் இல்லாமை மற்றும் மொழி தொடர்பான பிரச்சினைகள் பொதுமக்களுக்கு
கடுமையான தடைகளாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதனுடன் தொடர்புடையதாக, உறவினர்களின் செல்வாக்கு மற்றும் போதுமான பௌதிக
வளங்கள் இல்லாமை ஆகியவையும் முக்கியமான பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மூதூர் வெல்கட பகுதியைச் சேர்ந்த மங்களகாந்தி என்ற பெண் தனது கிராமம் தொடர்பான
பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.</p><p>

“யுத்த காலத்தில் எங்களுடைய கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் குடியேறியபோது எங்களுடைய பாரம்பரிய காணிகள் தொடர்பாக பல
பிரச்சினைகள் ஏற்பட்டன. எங்களுடைய கிராமம் மற்றும் பாரம்பரிய காணிகள் தொடர்பாக
அரச அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்துள்ளோம். ஆனால் எங்களுடைய பிரச்சினைகளுக்கு
உரிய தீர்வு கிடைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
42.2% பேர் வேறுபட்ட முறையில் நடத்தப்பட்டதாக தெரிவிப்பு

ஆய்வில் பங்கேற்றவர்களில் 42.2 சதவீதமானோர், இன, மத, பாலினம், சமூக நிலை
மற்றும் ஏனைய அடையாளங்களின் அடிப்படையில் தாங்கள் வேறுபட்ட முறையில்
நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேறுபட்ட முறையில்
நடத்தப்பட்டதாகக் கூறியவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக
இருந்துள்ளது.
</p><p>
வெள்ளாமலை, கருமலுத்தட்டு பகுதியைச் சேர்ந்த அஹமட் ரஹீம் சன்ரூஸ் என்பவர் தனது
காணி தொடர்பான பிரச்சினையை எடுத்துரைத்துள்ளார்.</p><h2>மொழிச் சேவைகள் தொடர்பில் சாதகமான நிலை</h2><p>
</p><p>
“திருகோணமலை வெள்ளம்வெளி பகுதியில் கடலோரமாக அமைந்துள்ள காணி எங்களுடைய
பாரம்பரிய காணியாகும். அதற்கான பழைய உரிமை ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. ஆனால்
இராணுவத்தினர் அந்தக் காணியைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்தக்
காணிக்குள் செல்லக்கூட எங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. நாங்கள்
முஸ்லிம்கள் என்பதால்தான் இவ்வாறு நடத்தப்படுகிறோம் என நினைக்கிறோம்” என அவர்
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/371a08ad-b9b4-431e-99f8-9448c7de13fa/26-6aa93e2e672f6.webp' /></p><p>
</p><p>
மொழிச் சேவைகள் தொடர்பில் சாதகமான நிலை

சேவைகளைப் பெறுவதற்கான அணுகல் மற்றும் காத்திருக்க வேண்டிய நேரம் தொடர்பாக
பொதுமக்கள் பரவலான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தாலும், சேவை வழங்கலின் சில
குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பில் திருப்தி காணப்படுவதாகவும் ஆய்வில்
தெரியவந்துள்ளது.

குறிப்பாக மொழி தொடர்பான சேவைகள் குறித்து சாதகமான கருத்துக்கள் அதிகளவில்
பதிவாகியுள்ளன.
</p><p>
ஆய்வில் பங்கேற்றவர்களில் 75 சதவீதமானோர் தங்களுக்கு தேவையான சேவைகளை தாம்
விரும்பும் மொழியில் பெற்றுக்கொள்ள முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, இருமொழி பேசக்கூடிய அதிகாரிகள் மற்றும் தேவையான ஆலோசனைகள் சில அரச
நிறுவனங்களில் கிடைப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த மகிந்த சேனாரத்ன என்பவர், “தற்போது பல
வைத்தியசாலைகளிலும் பிரதேச செயலக அலுவலகங்களிலும் எங்கள் மொழியில்
பணியாற்றக்கூடிய பணியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
அதேபோன்று ஆவணங்கள் மற்றும் கடிதங்களுக்கு இருமொழிச் சேவையும்
வழங்கப்படுகிறது. பொலிஸ் நிலையங்களிலும் முன்பைவிட இந்த வசதி மேம்பட்டுள்ளது.
எனவே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
முஸ்லிம் சமூகத்தினரின் அதிருப்தி தொடர்பில் அரசின் கவனம் அவசியம்

திருகோணமலை மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய விடயம்
என்னவெனில், அரச நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறுவதில் முஸ்லிம்
சமூகத்தினரிடையே அதிருப்தி நிலை ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுவதாகும்.
</p><p>
திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லிம் மக்கள்
தொகை 46.5 சதவீதமாக உள்ளது.

இத்தகைய மக்கள் தொகை விகிதத்தைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் அரச சேவைகளைப்
பெறும்போது அதிருப்தியடையக் காரணமாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் அரசாங்கம்
உரிய கவனம் செலுத்த வேண்டியதுடன், மேற்குறிப்பிட்ட அரச நிறுவனங்களின் சேவை
வழங்கும் முழு நடைமுறையும் மேலும் முறையானதாகவும் திறமையானதாகவும் மாற்றப்பட
வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த. சாதாரண தரப் பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plan-reduce-number-g-c-e-ordinary-level-subjects-1789474838"></link>
            <id>https://tamilwin.com/article/plan-reduce-number-g-c-e-ordinary-level-subjects-1789474838</id>
            <summary type="text">எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழு திட்டமிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>2027ஆம் ஆண்டு முதல்</h2><p>
புதிய பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்காக சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கவியல் தொடர்பான புதிய கற்றல் தொகுதிகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/011ac2fe-5640-4969-8963-6b058247902c/26-6aa93e15af2cf.webp' /></p><p>
</p><p>
2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்வி மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><h2>புதிய கல்வி மறுசீரமைப்பு</h2><p>
</p><p>
இதன் ஆரம்பகட்டமாக தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் கற்றல் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/486636d2-d4b5-492a-93ba-b07dc31ff13c/26-6aa93e1507845.webp' /></p><p>
</p><p>
புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
சிறுவயதுக் கல்வியை முறையான கட்டமைப்புக்குள் கொண்டு வரும் வகையில் தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையும் உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் கீழ் முன்பள்ளிப் பதிவு, பாடத்திட்டத் தயாரிப்பு, ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:46:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா ராமநாதன் எம்பிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tid-probe-alleged-promotion-at-slpp-rally-1789458085"></link>
            <id>https://tamilwin.com/article/tid-probe-alleged-promotion-at-slpp-rally-1789458085</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த உத்தரவு, பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கிடைத்த முறைப்பாடு</h2><p>

முன்னதாக, சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32aee57f-0761-4f30-b632-821fceb40450/26-6aa8fa06ea4cf.webp' /></p><p>
</p><p>
செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றியிருந்தார்.</p><p>

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பான அரசியல் ஒப்பீட்டை முன்வைத்த அவர், தன்னை விடுதலைப் புலிகைளை சார்ந்தவர் எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி இந்த விதியை மீற முடியாது! செப்டெம்பர் 20 முதல் கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wearing-seatbelts-will-be-mandatory-all-vehicles-1789471357"></link>
            <id>https://tamilwin.com/article/wearing-seatbelts-will-be-mandatory-all-vehicles-1789471357</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து ஆசனங்களிலும் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து ஆசனங்களிலும் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
</p><p>
வாகன உற்பத்தியாளர்களால் ஆசன பட்டி பொருத்தப்படாத ஆசனங்களுக்கு அவற்றை பொருத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்யும் வகையில் வெளியிடப்பட்ட 2026 ஜூன் 17ஆம் திகதி இலக்கம் 2493/19 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்ற அனுமதி கிடைத்துள்ளது.</p><h2>&nbsp;அதிவேக நெடுஞ்சாலை</h2><p>
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், 2011ஆம் ஆண்டு ஒகஸ்ட் 3ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 1717/14 கொண்ட மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலைகள்) விதிமுறைகள் திருத்தப்பட்டு, 2025 செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2455/29 கொண்ட வர்த்தமானி மூலம் ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74e6a36f-5770-40f2-a746-635f59140777/26-6aa935da27088.webp' /></p><p>
இதனைத் தொடர்ந்து, ஆசன பட்டிகளை பொருத்துவதற்காக 3 மாத கால சலுகை வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த சலுகைக் காலம் 2025 டிசம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.</p><p>

எனினும், பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இந்த சலுகைக் காலம் மீண்டும் 2026 மார்ச் 20ஆம் திகதி முதல் ஜூன் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.</p><p>

இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது கட்டாயமாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி எரிபொருள் குழாய் முடக்கம்: மசகு எண்ணெய் விலை பீப்பாய் 108 டொலரைத் தாண்டியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-fuel-pipeline-shutdown-1789473222"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-fuel-pipeline-shutdown-1789473222</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய - மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக்
குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய - மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக்
குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில்
மசகு எண்ணெய்யின் விலை இரு சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இதன்மூலம், பிரெண்ட் ரகக் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை. 108.18 அமெரிக்க
டொலராக உயர்ந்துள்ளது.</p><h2>விநியோகத் தடை</h2><p>
</p><p>
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக்கிய ஆயுதமேந்திய குழுக்களால்
முன்னெடுக்கப்பட்ட தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த
விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தாமல் மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதற்குச் சவூதி
அரேபியா பயன்படுத்தி வந்த பிரதான பாதையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a14193-a389-4458-ba4d-8b263cb1f97a/26-6aa9354407bfc.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல்கள் மற்றும் சேதங்கள் காரணமாகச் சர்வதேசச் சந்தைக்கான
சவூதியின் மசகு எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதப் பற்றாக்குறை ஏற்படும்
அபாயம் உருவாகியுள்ளது.</p><h2>பாதையைச் சீரமைக்கும் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
தற்போதைய சூழ்நிலையில், இந்தப் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடையச் சில
வாரங்கள் வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தும் கணிசமாகக்
குறைந்துள்ளதால், மத்திய கிழக்கில் நிலவும் இந்த தீவிரச் சூழல் தொடருமாயின்,
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் அதிகரித்து ஒரு பீப்பாய் 120 முதல்
130 டொலர் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T12:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதப்படுத்தப்பட்ட டின்மீன் இறக்குமதியில் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/decline-in-canned-fish-imports-1789472802"></link>
            <id>https://tamilwin.com/article/decline-in-canned-fish-imports-1789472802</id>
            <summary type="text">நடப்பு ஆண்டில் பதப்படுத்தப்பட்ட டின் மீன் இறக்குமதி 99.8% அளவில் வீழ்ச்சியுற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் நடப்பு 2026ம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு ஆண்டில் பதப்படுத்தப்பட்ட டின் மீன் இறக்குமதி 99.8% அளவில் வீழ்ச்சியுற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அதன் பிரகாரம் நடப்பு 2026ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் வெறும் 5.4 மெட்ரிக் தொன்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டிற்கான பதப்படுத்தப்பட்ட மீன் இறக்குமதி 99.8% குறைந்துள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><h2>வீழ்ச்சி</h2><p>
கடந்த ஆண்டுகளின் புள்ளிவிபரங்களை நோக்கும்போது 2021இல் 8,758.1 மெட்ரிக் தொன்களும், 2022இல் 434.0 மெட்ரிக் தொன்களும், 2023இல் 7,904.4 மெட்ரிக் தொன்களும், 2024இல் 4,476.0 மெட்ரிக் தொன்களும் மற்றும் 2025இல் 601.1 மெட்ரிக் தொன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea070d55-f74f-460f-b52f-345a5ee23a11/26-6aa93312d578d.webp' /></p><p>

2025இல் தொடங்கிய இறக்குமதிகளின் சரிவுப் போக்கு தொடர்ந்ததுடன், 2026 ஜனவரி - மே மாதங்களில் அது 5.4 மெட்ரிக் தொன்களாகக் கடுமையாகச் சரிந்தது.
</p><p>
இறக்குமதி செய்யப்படும் அளவுகளில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பதப்படுத்தப்பட்ட மீன்களின் அந்நியச் செலாவணிச் செலவும் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T11:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mayilathamadu-and-madhavanai-livestock-farmers-1789471297"></link>
            <id>https://tamilwin.com/article/mayilathamadu-and-madhavanai-livestock-farmers-1789471297</id>
            <summary type="text">மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை
வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின்
மூன்றா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை
வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின்
மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் (15.09.2026) சித்தாண்டியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
சித்தாண்டி சந்திக்கு அருகில் முகாமிட்டு மயிலத்தமடு, மாதவனை கால்நடை
பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக
முன்னெடுத்துவரும் அத்துமீறிய செயற்பாடுகள் இதுவரையில் தடுத்து நிறுத்தப்படாத
நிலையில் மேய்ச்சல் தரை காணிகள் இல்லாமல்போகும் நிலையில் கால்நடைகள் மீதும்
தொடர்ச்சியாக தாக்குதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த
நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9905e7d-3d74-4689-9f28-23ed2a496d2d/26-6aa92f9cf1b0d.webp' /></p><p>
இந்த நிலையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டு பூர்த்தி நாளையொட்டி இந்த கவனயீர்ப்பு போராட்டம் பண்ணையாளர்களினால்
முன்னெடுக்கப்பட்டது.</p><h2>போராட்டம்</h2><p>
இதன்போது மகாவலியே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், கால்நடைகளின் நிலத்தை
அபகரிக்காதே, கால்நடைகளின் மேய்ச்சல் நில அபகரிப்பினை தடுத்து
நிறுத்து, தமிழருக்கு ஒரு சட்டம், சிங்களவருக்கு ஒரு சட்டமா? சட்டத்தினை சமமாக, ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன், மகாவலியே மௌனம்
காப்பது ஏன்? போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.</p><p>இதன்போது கால்நடை பண்ணையாளர்கள் தமது துயரங்களை வெளிப்படுத்தும் வகையில்
அமைக்கப்பட்ட தமது வாடிகளை அத்துமீறிய குடியேற்றவாசிகள் எரித்து மேற்கொள்ளும்
அடாவடித்தனங்களை குறிக்கும்வ கையில் அமைக்கப்பட்ட குடிசையொன்றை எரித்து
போராட்டத்தினை முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1ea38ee-1f2f-41eb-8c12-21623877538a/26-6aa92f9ddb662.webp' /></p><p>
</p><p>அதேபோன்று தமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களை குறிக்கும் 1095
நாளைக்குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தீப்பந்ததினை எரித்து போராட்டத்தினை
முன்னெடுத்ததுடன் ஒரு பண்ணையாளர் பாலை தலையில் ஊற்றி போராட்டத்தினை
முன்னெடுத்தார்.
</p><p>இதன்போது மயிலத்தமடு மற்றும் மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் மூன்று
ஆண்டுகளைக் கடந்து, 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும்,
தங்களுக்கான நிரந்தர தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என பண்ணையாளர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த மே மாதம் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது அளித்த
வாக்குறுதிகள் மற்றும் உத்தரவுகள் இன்னும் அதிகாரிகளால்
நடைமுறைப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. </p><p>கடந்த 12ஆம் மற்றும்
13ஆம் திகதிகளில் மேய்ச்சல் நிலங்கள் சட்டவிரோதமாக உழவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாது போயுள்ள தோடு, உணவின்றி
மாடுகள் இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93653a65-efbb-4b0a-8257-4ae4899c0cd0/26-6aa92f9ec5c8e.webp' /></p><h2>பொலிஸில் முறைப்பாடு</h2><p>
பண்ணையாளர்களின் வாடிகளுக்குள் சட்டவிரோதத் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள்
பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து
பொலிஸில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்
சுமத்துகின்றனர்.</p><p>சட்டம் இருவேறாகப் பிரயோகிக்கப்படுகிறது: தமிழ் மக்கள் அல்லது பண்ணையாளர்கள்
சிறு தவறு செய்தாலும் வனவளத் திணைக்களம் மூலம் உடனடியாகக் கைது செய்யப்படும்
நிலையில், மேய்ச்சல் நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்கள் மீது எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe9f8b6-f924-4373-8e3a-febb9044c71a/26-6aa92f9f9bb6d.webp' /></p><p>
</p><p>ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, இன்னும் 5 நாட்களுக்குள் சட்டவிரோத
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத்
தவறினால், தங்களது அறவழிப் போராட்டத்தைச் "சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக"
மாற்றப்போவதாகப் பண்ணையாளர்கள் பகிரங்க எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>கால்நடைகளும் வாழ்வாதாரமும் முற்றாக அழிந்துபோனால்
பண்ணையாளர்கள் வீதியில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலைமையே உருவாகும் என்றும்,
இதற்கு அரசாங்கமும் மகாவலி அதிகார சபையுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும்
இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
இந்தபோராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான
ஞா.சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத்,சிவில் சமூக செயற்பாட்டாளர்களான
எஸ்.சிவயோகநாதன்,அருட்தந்தை லுக்காஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
ஈடுபட்டிருந்ததுடன் பெருமளவான புலனாய்வுத்துறையினர்களும்
குவிக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c298c62-5e85-4bd4-a3e0-6d3a3c8e4f42/26-6aa92fa0742c0.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T11:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கில் இடம்பெற்ற 5 கொலைகள்! பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-ordered-sivanesathurai-chandrakanthan-1789471791"></link>
            <id>https://tamilwin.com/article/court-ordered-sivanesathurai-chandrakanthan-1789471791</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:35:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jayarathna-herath-join-slfp-1789469853"></link>
            <id>https://tamilwin.com/article/jayarathna-herath-join-slfp-1789469853</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.
</p><p>சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா முன்னிலையில் கட்சியின் இணைந்து கொண்ட ஜயரத்ன ஹேரத், பொல்கஹவெல தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராகவும், குருநாகல் மாவட்டத் தலைவராகவும் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளார்.</p><p>ஜயரத்ன ஹேரத் இதற்கு முன்னர் குருநாகல், பொல்கஹவெல மற்றும் மாவத்தகம தேர்தல் தொகுதிகளில் கட்சியையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் அமைப்பாளராகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.</p><h2>கட்சியில் இணைவு</h2><p> </p><p>பின்னர், அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, அக்கட்சியின் யாபஹுவ தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05baa36a-dd09-41a0-99f2-b823babc0680/26-6aa92b258efff.webp' /></p><p>
</p><p>
ஜயரத்ன ஹேரத் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்ட சந்தர்ப்பத்தில், இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன, பிரதி செயலாளர் ஜகத் புஷ்பகுமார மற்றும் முன்னாள் வடமேல் மாகாண அமைச்சரும் குருநாகல் தொகுதி அமைப்பாளருமான லட்சுமன் வெண்டருவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T11:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இதுவரையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37-shooting-incidents-reported-in-sri-lanka-1789470651"></link>
            <id>https://tamilwin.com/article/37-shooting-incidents-reported-in-sri-lanka-1789470651</id>
            <summary type="text">இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>

பதிவாகியுள்ள 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட 867 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aaf461f-72ca-4e89-8295-7b2a2fd88e5e/26-6aa929ceb2cd2.webp' /></p><p>

அவற்றில் T-56 ரக துப்பாக்கிகள் 14, கைத்துப்பாக்கிகள் 31, ரிவோல்வர்கள் 25 உள்ளிட்ட ஏனைய ஆயுதங்களும் அடங்குவதாக அவர் கூறினார்.</p><p>அதேவேளை, 2025ஆம் ஆண்டு முழுவதும் 2,404 ஆயுதங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாடு! வட மாகாண கடற்றொழில் சங்கங்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-province-fisheries-societies-press-meet-1789467225"></link>
            <id>https://tamilwin.com/article/northern-province-fisheries-societies-press-meet-1789467225</id>
            <summary type="text">உள்ளூர் கடற்தொழிலாளர்கள் சிலர் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருவதாக வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்ளூர் கடற்தொழிலாளர்கள் சிலர் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருவதாக வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்றைய தினம் (15.09.20263) இடம்பெற்றிருந்தது.</p><h2>தடை செய்யுமாறு கோரிக்கை</h2><p> </p><p>

சட்டவிரோத கடற்றொழில்களை தடை செய்யுமாறு கோரி வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஊடாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c023121-b0ea-4f00-a298-a5f2f1c6480e/26-6aa926cc0730d.webp' /></p><p> </p><p>

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் கடற்தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருகின்றனர்.</p><h2>பாதிப்பு</h2><p>
</p><p>
இதனால் ஏனைய சிறு தொழில் கடற்தொழிலாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்றனர். 

சட்டவிரோத தொழிலை நிறுத்துவதற்கு கடற்படை முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும் சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக காணப்படுகின்றனர்.
</p><p>
எனவே தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாட்ட கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய தரப்புகள் முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-15T11:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு வைத்தியசாலையில் தாமதமாகும் சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கை! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-report-regarding-suresh-saleh-issue-1789466006"></link>
            <id>https://tamilwin.com/article/medical-report-regarding-suresh-saleh-issue-1789466006</id>
            <summary type="text">அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமை தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமை தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு&nbsp;அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2> சுரேஷ் சலே கைது விவகாரம்</h2><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d8ba6fc-f4d0-4fc3-a9cc-022774987ee7/26-6aa9193da697a.webp' /></p><p>இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப்பெற்று வருகின்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>you may like this video</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JizdtBakd1s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமுகாமையாளரை நீக்குமாறு கோரி தொடருந்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-trade-unions-strike-removal-manager-1789467237"></link>
            <id>https://tamilwin.com/article/railway-trade-unions-strike-removal-manager-1789467237</id>
            <summary type="text">தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரை பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தொடருந்து தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரை பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தொடருந்து தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை அறிவித்துள்ளன.
</p><p>தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்ததால், ஒருங்கிணைந்த தொடருந்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அடையாள வேலைநிறுத்தத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளன.
</p><p>
போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் ஒருங்கிணைந்த புகையிரத திணைக்கள தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒரு விசேட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்கள் அந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.</p><h2>முக்கிய கோரிக்கை</h2><p>

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ​​தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தொடருந்து துறையில் நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள், ஊழியர் பிரச்சினைகள் மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் பல சிரமங்களை விளக்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df0729c-b8b9-46e0-9a5a-84e81f7a69e8/26-6aa922dd9f7f5.webp' /></p><p> </p><p>மேலும், தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையளரின் நிர்வாகத்தின் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லாததால், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதே தங்களின் முக்கிய கோரிக்கை என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
</p><p>
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்பு அல்ல என்றும், திறமையான மற்றும் நம்பகமான சேவையை நிறுவுவதன் மூலம் பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்குவதும் தொடருந்து துறையை மீண்டும் நிலைநிறுத்துவதும் இதன் முதன்மை நோக்கம் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T10:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கோரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-demanding-solutions-to-problems-1789465962"></link>
            <id>https://tamilwin.com/article/protest-demanding-solutions-to-problems-1789465962</id>
            <summary type="text">வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் இன்று முதல்&amp;nbsp;சுகயீன விடுப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.&amp;nbsp;வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் இன்று முதல்&nbsp;சுகயீன விடுப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;</p><p>வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும்
நிர்வாக மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்க கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த போராட்டம் காரணமாக கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான சேவைகளைவ பெறமுடியாது பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d2e386-fc91-4ab8-804a-180ee8dfa483/26-6aa9156cdfd9b.webp' /></p><h2>போராட்டக்காரர்களின் வலியுறுத்தல்</h2><p>இதன்போது போராட்டத்தரப்பினர் வடக்கு மாகாண நிர்வாகமே கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமே எமது உரிமைகளையும், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கச் செய்யாதே என கோரியுள்ளனர்.
</p><p>
மேலும் எமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது தொழிற்சங்கப் போராட்டம் ஓயாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91ac3691-b02c-4830-a81e-c5bcc38dbb80/26-6aa9156db0da4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82798ebf-f0b8-4005-88af-4728ebca05b5/26-6aa916ccb2c76.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:59:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா நகரையே உலா வரும் மட்டக்குதிரைகள்: வாகன ஓட்டிகள் விபத்து அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ponies-roam-the-streets-of-nuwara-eliya-accident-1789465174"></link>
            <id>https://tamilwin.com/article/ponies-roam-the-streets-of-nuwara-eliya-accident-1789465174</id>
            <summary type="text">நுவரெலியாவில் அண்மைக் காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும்
மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.அத்துடன் தொடர்ந்து
மழை பெய்ய தொடங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் அண்மைக் காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும்
மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.</p><p>அத்துடன் தொடர்ந்து
மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால்
வீதியில் வழுக்குதன்மையும் அதிகரித்து விபத்துகளும் ஏற்படுகின்றன.</p><p>

மட்டக்குதிரைகளை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம்
காட்டுவதால் அதன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>

நகரில் மற்றும் பிரதான வீதியில் திரியும் மட்டக்குதிரைகளை
பிடித்து அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு
பராமரிக்க நடவடிக்கை எடுத்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும்,
நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின்
எதிர்பார்ப்பாக உள்ளது.
</p><p>
கட்டுப்பாடின்றி உலா வரும் மட்டக்குதிரைகள் காரணமாக தற்போதைய காலக்கட்டத்தில்,
குறுகிய வீதியில் வாகனங்கள் செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4337fb-3f7c-4fa6-ab12-1fa346ba580b/26-6aa915a7be25a.webp' /></p><p>
</p><p>இந்நிலையில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், ஆங்காங்கே மட்டக்குதிரைகள்
மேய்வதும், அவைகள் வீதியில் தங்களுக்குள் சண்டையிட்டு வாகன ஓட்டிகளின் மீது
மோதி கீழே விழச்செய்கின்றன.</p><p>எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும்.
பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில் சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை
எடுத்து மாநகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி
வணிகசேகர தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T09:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வீடொன்றில் சுற்றிவளைக்கப்பட்ட கும்பல் - பொலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-for-threatening-to-kill-police-1789457829"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-for-threatening-to-kill-police-1789457829</id>
            <summary type="text">போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த வீட்டு உரிமையாளரை கைது செய்ய பொலிஸார் சென்றபோது, ​​அவரது மனைவி கத்தியால் வெட்டி கொன்றுவிடுவதாக மிரட்டி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதியினர், அநுராதபுரத்தில் உள்ள ஜெயந்தி பட்டுமாக பகுதியில் வசித்து வந்தவர்கள் ஆவர்.</p><h2>சந்தேகநபர்கள் தப்பியோட்டம்&nbsp;</h2><p>
</p><p>
அநுராதபுர தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலின்படி, ஒரு பெண் பொலிஸ் அதிகாரியுடன் பல அதிகாரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63e44f87-fd76-48fd-a0de-32d062e163c8/26-6aa912eb90a40.webp' /></p><p>
</p><p>
சோதனைக்காக பொலிஸார் வீட்டை நெருங்கிய உடனேயே, சந்தேகநபர்களில் ஒருவர் வீட்டிலிருந்து தப்பியோடிவிட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த வீட்டு உரிமையாளரை கைது செய்ய பொலிஸார் சென்றபோது, ​​அவரது மனைவி கத்தியால் வெட்டி கொன்றுவிடுவதாக மிரட்டி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 3200 மில்லிகிராம் ஹெரோயினுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர மற்றும் ஆபத்தான தருணங்களில் பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ள விசேட மொபைல் செயலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-mobile-app-to-access-police-assistance-1789463580"></link>
            <id>https://tamilwin.com/article/special-mobile-app-to-access-police-assistance-1789463580</id>
            <summary type="text">அவசர மற்றும் ஆபத்தான சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயலியொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர மற்றும் ஆபத்தான சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயலியொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
குறித்த புதிய செயலியானது 'SOS' வசதியுடன் கூடிய புதிய மொபைல் செயலியாகும் என்று இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>SOS பொத்தான் பயன்படுத்தல்</h2><p>
</p><p>
அதன் பிரகாரம் இச்செயலியில் உள்ள 'SOS' பொத்தானைச் சிறிது நேரம் அழுத்திப் பிடிப்பதன் மூலம், குறித்த நபரின் இருப்பிடம் உடனடியாக அப்பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99657c50-23b8-4be3-95a2-bc8a98c478e5/26-6aa90ef11de64.webp' /></p><p>
</p><p>
தேசிய அடையாள அட்டை, பெற்றோரின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இச் செயலியில் பதிவு செய்ய முடியும்.</p><p>மேலும் பொலிஸ் அவசர சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:26:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய மிக் விமான ஒப்பந்தம்! முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா FCIDயில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-air-force-commander-donald-perera-fcid-1789462925"></link>
            <id>https://tamilwin.com/article/former-air-force-commander-donald-perera-fcid-1789462925</id>
            <summary type="text">முன்னாள் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வரவழைக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வரவழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய மிக் விமான ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, அவர் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><h2>எஃப்.சி.ஐ.டி.யில் வாக்குமூலம்</h2><p>

அதன்படி, சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து அவரிடமிருந்து தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த விசாரணையில் மேலும் பல மூத்த தலைவர்களும் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a62b91d4-e78e-4df6-ab0e-977604c12779/26-6aa90c1b04f11.webp' /></p><p> </p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் சமீபத்தில் இதே விசாரணை தொடர்பாக எஃப்.சி.ஐ.டி-யின் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள நினைவுக்கல் அகற்றம்: மக்கள் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rda-workers-remove-mullivaikal-memorial-stone-1789462405"></link>
            <id>https://tamilwin.com/article/rda-workers-remove-mullivaikal-memorial-stone-1789462405</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு
செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு
A35 பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு
செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு
A35 பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லை வீதி அபிவிருத்தி
அதிகார சபையின் ஊழியர்கள் அகற்றியமையானது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை
ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழினப்படுகொலையின் அடையாளச் சின்னமாக முல்லைத்தீவு மாவட்டத்தின்
முள்ளிவாய்க்கால் பகுதியில் காணப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு
செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும்&nbsp; நினைவுக்கல் ஒன்று கடந்த மே மாதம் (18.05.2026) அன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.</p><p>&nbsp;இதன் பின்னணியில் அரச புலனாய்வாளர்களால் இது தொடர்பில் பல்வேறு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த நினைவுக் கல்லின் ஒரு பகுதியாக இருந்த
ஒரு மனிதரின் உருவம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து
அழிக்கப்பட்டிருந்தது.</p><h2>குற்றச்சாட்டு</h2><p> இதன் தொடர்ச்சியாக இந்த நினைவுக்கல்லினை அகற்றுவதற்கு
அரச புலனாய்வுப் பிரிவு கடுமையான முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.இதன் ஒரு அங்கமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் இந்த நினைவுக்கல்லினை அகற்றியுள்ளனர்.இந்த சம்பவமானது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை
ஏற்ப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654f6b7a-6eca-4f5b-9612-d55c6b60bd5b/26-6aa9093b6bcb0.webp' /></p><p>&nbsp;இந்த விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையானது தமிழ் மக்களின் உணர்வுகளை
நினைவுகளை அழிக்க துணை போகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக
வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணியில் மக்கள் பாலத்தின் ஒரு பகுதியையாவது
அழிக்க வேண்டாம் என கோரிய போதும் பழைய பாலம் இருக்கக் கூடியவாறே பாலம்
அமைக்கக்கூடிய வழிவகைகள் இருந்தும் அதனை செய்யாது மாவட்ட அபிவிருத்திக் குழு
கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட போதும் அமைதியாக இருந்து மிக சூட்சுமமாக
குறித்த பாலத்தை முழுமையாக அழித்து புதிய பாலத்தை அமைத்து வருகிறது.</p><p>&nbsp;குறிப்பாக இந்த அரசும் தனது திணைக்களங்கள் ஊடாக திட்டமிட்டு இவ்வாறு தமிழ்
மக்களின் உணர்வுகளை மதிக்காது இவ்வாறு பழைய அரசுகளை போலவே செயற்ப்படுவதாக
மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T09:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் வேலையை தொடரும் நாமல்! பிள்ளையான் - கருணாவைத் தொடர்ந்து அர்ச்சுனா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450"></link>
            <id>https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450</id>
            <summary type="text">
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்ச மாற்றியுள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்றையதினம்(15.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தடை செய்யப்பட்ட அமைப்பை பிரசாரம் செய்வது அவருக்கே நல்லதல்ல.</p><h2>அர்ச்சுனாவின் உறுதி மொழி&nbsp;</h2><p> 

ஏனெனில், தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் சார்பாக அவர் நாடாளுமன்றத்தில் செயற்பட மாட்டேன் என்றும், அரசுக்கு எதிராக சதி செய்யமாட்டேன் என்றும்&nbsp; உறுதி செய்திருக்கின்றார்.</p><p>

அதையும் மீறி, தடை செய்யப்பட்ட அமைப்பொன்று தொடர்பில் அவர் பிரசாரம் செய்வாரெனில் அது அவருக்குத்தான் நல்லதல்ல.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, அந்த மேடையில் இருந்தவன் என்ற வகையில், அர்ச்சுனா இராமநாதனின் அன்றைய முழு உரையிலும் நான் கண்டுகொண்ட விடயம், வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு அவர் ஒரு முயற்சி செய்து வருகின்றார் என்பது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c4d5294-e75e-4f1b-b4db-6fc0395549d2/26-6aa9046a5b4fc.webp' /></p><p> 

தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சகோதரர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காக, அதற்குரிய ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதற்காக அர்ச்சுனா இராமநாதன் முயற்சி செய்து வருகின்றார்.</p><p>

இந்த நாட்டைப் பிரிக்க எண்ணுபவர்களுக்கு இந்த நடவடிக்கை கண்ணை குத்துகிறது போலும்.</p><p>

ஆனால், அர்ச்சுனாவின் கடந்த கால வரலாற்றையும், அவர் நாடாளுமன்றத்திற்கு வந்த விதத்தினையும் நோக்கும் போது, அவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழும்.
</p><p>
நிச்சயமாக அவருடைய இந்த மாற்றத்திற்கு ஒரே காரணம், நாமல் ராஜபக்ச தான். வேறு யாரும் இல்லை.
அவர்தான் அர்ச்சுனாவை மாற்றியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89794755-dd61-4190-989e-d18612429dbe/26-6aa9046b230e7.webp' /></p><p>

அதேபோல, கருணாவையும், பிள்ளையானையும் மாற்றி அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்து, அவர்களுடைய மக்களுக்கு அபிவிருத்தியைக் காட்டியது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான்.
</p><p>
ஆனால் ஒருபோதும் கருணாவோ, பிள்ளையானோ, ஆட்சி மாற்றத்தைக் கோரவோ, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்றோ கோரியதில்லை.
</p><p>
இப்போது அர்ச்சுனாவும் வடக்கை தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்று கேட்கப் போவதில்லை. அந்த நிலையை எற்படுத்தியது நிச்சயமாக நாமல் ராஜபக்சதான். இது ஒரு பாரிய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-15T08:50:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சேதமடைந்துள்ள ருமேஷ் தரங்கவின் 5 ஈட்டிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inquiry-sought-damage-rumesh-tharanga-s-javelins-1789461464"></link>
            <id>https://tamilwin.com/article/inquiry-sought-damage-rumesh-tharanga-s-javelins-1789461464</id>
            <summary type="text">இலங்கையைச் சேர்ந்த உலக சாம்பியன் ருமேஷ் தரங்க, இலங்கை திரும்பும் விமானப் பயணத்தின்போது அவரது விளையாட்டு உபகரணங்கள் சந்தேத்திற்கிடமான முறையில் சேதமடைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையைச் சேர்ந்த உலக சாம்பியன் ருமேஷ் தரங்க, இலங்கை திரும்பும் விமானப் பயணத்தின்போது அவரது விளையாட்டு உபகரணங்கள் சந்தேத்திற்கிடமான முறையில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்த ஈட்டி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் 92.07 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டி உட்பட அவர் பயன்படுத்திய 5 ஈட்டிகளுமே சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>உபகரணங்கள் சேதம்</h2><p> </p><p>

அல்டிமேட் மற்றும் டைமண்ட் லீக் ஆகிய இரண்டு செம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5:10 மணிக்கு துருக்கிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான TK-730 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d791f23e-ea28-472b-b7a9-f05bd6306e1a/26-6aa906836a4fd.webp' /></p><p>

 
இந்தநிலையில்,
அவருக்குப் புதிய ஈட்டிகளை (javelins) வழங்கவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

தரங்கவின் பயிற்சிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், அரசாங்கச் செலவில் சர்வதேசத் தரத்திலான புதிய ஈட்டிகளை விரைவாக வாங்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.</p><p>
எங்கள் தடகள நட்சத்திரத்திற்கும் அவரது ஒலிம்பிக் கனவுக்கும் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து உறுதுணையாக நிற்கும், என்று அமைச்சர் கூறினார்.</p><h2>ஒலிம்பிக் போட்டி இலக்கு</h2><p>
</p><p>
ஹங்கேரியின் புடாபெஸ்டிலிருந்து திரும்பும் பயணத்தின்போது தரங்கவுக்குச் சொந்தமான ஐந்து ஈட்டிகளும் சேதமடைந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சேதம் தொடர்பாக விமான நிறுவனத்திடம் இழப்பீடு கோருவது குறித்தும், அதேவேளையில் சாத்தியமான சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17babeb0-df41-4b91-8d67-854d92c5f100/26-6aa906841e422.webp' /></p><p>
</p><p>
வரவிருக்கும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராகும் அதேவேளையில், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியை இலக்காகக் கொண்டுள்ள தரங்கவுக்குத் தேவையான அரச ஆதரவையும் வசதிகளையும் தொடர்ந்து வழங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:49:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு- கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனைகள் அபிவிருத்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-of-hospitals-in-the-northern-eastern-1789458597"></link>
            <id>https://tamilwin.com/article/development-of-hospitals-in-the-northern-eastern-1789458597</id>
            <summary type="text">சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபா செலவில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனை அபிவிருத்திகளுக்கான செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபா செலவில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனை அபிவிருத்திகளுக்கான செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.</p><p>

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி, சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், 7,148 மில்லியன் ரூபாய் செலவிலான புதிய வைத்தியசாலைக் கட்டடங்களுக்கு நாளை (16) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.</p><p>&nbsp;ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவராண்மை (JICA) மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன் உதவிகளின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><h2>அங்குரார்ப்பணம்&nbsp;</h2><p>
</p><p>
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இதய நோய் சிகிச்சைக்காக 3,545 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. </p><p>இதில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், இதய பரிசோதனை ஆய்வகங்கள் (Catheter labs), நவீன பரிசோதனைக் கூடங்கள், எக்ஸ்-ரே மற்றும் ஈ.சி.ஜி (ECG) வசதிகள் உள்ளிட்ட பல நவீன கட்டமைப்புகள் இடம்பெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b67449-ca45-4dc4-9b4d-9b8a43c26806/26-6aa8fd83ac855.webp' /></p><p>
</p><p>
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் JICA நிதியுதவியின் கீழ் 2,403 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளைக் கொண்ட அதிநவீன இதய நோய் சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
</p><p>
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவு வளாகம் அமைக்கப்படவுள்ளது.</p><h2>அவசர சிகிச்சை</h2><p>

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைபயில் நோயாளர்களின் நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்திய நிதியுதவியின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளைக் கொண்ட புதிய விடுதிக் கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04352821-30f0-4cbd-b75d-1418fd4ed9d5/26-6aa8fd8460eb4.webp' /></p><p>

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.&nbsp;</p><p> இத்திட்டங்கள் நிறைவடையும் போது, கொழும்பு வரை செல்ல வேண்டிய அவசியமின்றி, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பொதுமக்கள் தங்கள் சொந்தப் பகுதிகளிலேயே நிபுணத்துவ இதய நோய் மற்றும் அவசர சிகிச்சைகளை விரைவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வங்கித்துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து! பெரும் அதிர்ச்சியில் வங்கி உயர் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-losing-their-bank-accounts-1789442535"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-losing-their-bank-accounts-1789442535</id>
            <summary type="text">இலங்கையின் வங்கித்துறையை இலக்கு வைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட டிஜிட்டல் மோசடி குழுக்கள் செயற்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வங்கித்துறையை இலக்கு வைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட டிஜிட்டல் மோசடி குழுக்கள் செயற்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இது நாட்டின் நிதிப் பாதுகாப்பு மற்றும் வங்கித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அதிகாரிகளும் முக்கிய வணிக வங்கித் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.</p><p> 

இலகுவான வருமானத்தை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் இந்த வலைப்பின்னல்கள் மூலம் வங்கித்துறையை சர்வதேச நிதிக் குற்றங்களுக்கான பாதையாக மாற்றி வருகின்றன.</p><p>
</p><h2><b>
மோசடி கும்பல்கள் </b></h2><p>இந்த மோசடியாளர்கள் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சட்டப்பூர்வமான வணிகங்கள் என மக்களை நம்பவைத்து ஏமாற்றுவதாக சில முன்னணி வங்கிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f2a0ae-b73f-401c-a480-ba5634b0cfd5/26-6aa8f5751ae09.webp' /></p><p>இதன்போது ஆரம்பக் கட்டத்தில் சிறிய தொகையை கணக்குகளுக்கு வரவு வைத்து வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குகின்றனர்.

பின்னர் அவர்களின் வங்கிக்குறிப்பு விவரங்கள், இரகசிய எண்கள் மற்றும் பிற முக்கியமான பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முற்படுகின்றனர்.
</p><p>
இவ்வாறு பெற்றுக்கொள்ளும் இரகசியத் தகவல்கள் மூலம் கணக்குகளின் கட்டுப்பாட்டை குற்றவாளிகள் கைப்பற்றுகின்றனர்.</p><h2>மில்லியன் கணக்கான பணம்&nbsp;</h2><p>

அதனை தொடர்ந்து கணக்கு உரிமையாளருக்குத் தெரியாமல் பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களுக்கு அக்கணக்குகளைப் பயன்படுத்துவதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6506a51a-6b16-434b-be93-7d745bc05e64/26-6aa8f575ccbae.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p><span style="font-size: 14px;">வாடகை அடிப்படையில் அல்லது விலைக்கு வாங்கப்பட்ட இத்தகைய கணக்குகள் ஊடாக ஏற்கனவே மில்லியன் கணக்கான பணம் புழக்கத்தில் விட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.</span></p><p>இந்த மோசடிகளின் தீவிரத்தன்மை அதன் சர்வதேச பரிமாணங்களினால் மேலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-15T08:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பைகளை மீள அள்ள வலி.தெற்கு பிரதேச சபைக்கு கொடுத்த காலக்கெடு நிறைவு - குப்பைகளுக்கு தொடர்ந்தும் தீ வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continued-burning-of-garbage-1789454509"></link>
            <id>https://tamilwin.com/article/continued-burning-of-garbage-1789454509</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி. தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி. தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்
என வலி. வடக்கு பிரதேச சபை காலக்கெடு விதித்தும் குப்பைகள் மீள அள்ளப்படாமல் ,
தீயிட்டு கொளுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 20ஆம் திகதி தவிசாளர்
சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
அதன்போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be5c52b2-b2ca-4303-9e34-077254278926/26-6aa8f5a32b92c.webp' /></p><h2>ஏக மனதாக தீர்மானம்</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர்
செப்டெம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும் , அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்
என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
அந்நிலையில் 13ஆம் திகதியுடன் குப்பைகளை மீள
அள்ள கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், வலி. வடக்கு பிரதேச சபை
உறுப்பினர்கள் இன்றைய தினம் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு சென்ற வேளை
குப்பைகள் மீள அள்ளப்படாது, தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் குப்பை
மேட்டில் இருந்து புகை எழுந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ad515aa-e346-4eeb-9eab-72c2fedc5bcd/26-6aa8f5a408ff2.webp' /></p><p>

அது தொடர்பில் அயலில் வசிக்கும் மக்களிடம் உறுப்பினர்கள் வினாவிய போது,
தொடர்ந்து குப்பைகள் அப்பகுதிகளில் கொட்டப்படுவதாகவும், குப்பைகளுக்கு
தினமும் தீ வைப்பதனால் எழும் புகை மண்டலத்தால், வீடுகளில் மூச்சு விட
சிரமப்படும் நிலையிலே வாழ்கின்றோம்.</p><h2>கவலை</h2><p> </p><p>இதனை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும்
கோரிக்கை விடுத்த போதிலும் , தம்மை பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை என
கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>அதேவேளை அனுமதியின்றி கழிவுகளை கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிப்பதற்கு என
இன்றைய தினம் திங்கட்கிழமை சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும், அதன்
போது, வலி. தெற்கு பிரதேசசபையினர் கழிவுகளை மீள அள்ளாது விடின் அடுத்த கட்ட
நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கூட்டத்தில் தீர்மானிப்பதாக கடந்த 20ஆம் திகதி
நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb90e937-74b0-4e22-8b8a-a3d4ad5ffebf/26-6aa8f5a4d6124.webp' /></p><p>
</p><p>
அந்நிலையில் குறித்த கூட்டம் இன்றைய தினம் நடைபெறவில்லை. கூட்டம்
நிறுத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும்,
எதிர்வரும் வியாழக்கிழமை சபையின் வழமையான மாதாந்த கூட்டத்திற்கே கடிதம்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb535ab1-3108-4b66-96d9-6b4c157b42a9/26-6aa8f5a5b07dc.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:37:27+00:00</updated>
        </entry>
    </feed>
