<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-05T06:35:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நகர மாரத்தான் போட்டிக்கான திட்டம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-plan-the-international-city-marathon-1785910501"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-plan-the-international-city-marathon-1785910501</id>
            <summary type="text">&#039;அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஒரு படி என்ற கருப்பொருளின் கீழ், விளையாட்டு
மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் முன்னணி பங்காளிகள் இணைந்து நடத்தும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>'அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஒரு படி என்ற கருப்பொருளின் கீழ், விளையாட்டு
மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் முன்னணி பங்காளிகள் இணைந்து நடத்தும்
'கொழும்பு மாரத்தான் 2026' உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.</p><p>இலங்கையை உலகளாவிய விளையாட்டு சுற்றுலா வரைபடத்தில் முதன்மைப்படுத்தும்
நோக்கிலும், கொழும்பு நகரை சர்வதேச நிகழ்வுகளுக்கான மையமாக நிலைநிறுத்தும்
நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம்
திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.</p><p></p><h2>முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு&nbsp;</h2><p>

கொழும்பில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்ற இதன் தொடக்க
விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி
அமைச்சர் சுகத் திலகரத்ன உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c676fe-8d36-494e-bf3a-6c5668721542/26-6a72d8f899b23.webp' /></p><p>

உலகப்புகழ்பெற்ற நகர மாரத்தான்களின் மாதிரியில் திட்டமிடப்பட்டுள்ள
இப்போட்டி, விளையாட்டு சிறப்பையும் சுற்றுலா மேம்பாட்டையும் ஒன்றிணைத்து
நாட்டிற்கு நீண்டகால நன்மைகளைத் தரும் என அமைச்சர் தனது உரையில்
குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், இந்நிகழ்வில் கொழும்பு மாரத்தான் 2026 இலச்சினையைக் கொண்ட
எல்.பி.எல் ஜப்னா கிங்ஸ் அணியின் உத்தியோகபூர்வ சீருடையும்
வெளியிடப்பட்டதுடன், அணியின் தலைவர் பானுக ராஜபக் ஷ நினைவுச் சீருடையை
அமைச்சரிடம் கையளித்தார்.</p><h2>சர்வதேச வீதி அளவீட்டு நிபுணர்கள்</h2><p>முழு மாரத்தான் (42.195 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.), 10 கி.மீ.
வீதி ஓட்டம், 5 கி.மீ. பொழுதுபோக்கு ஓட்டம் மற்றும் சிறுவர்களுக்கான மினி ரன்
என 5 பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ள இப்போட்டியில் 4,000 இற்கும் மேற்பட்ட
உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
சர்வதேச தடகள தரநிலைகளுக்கு அமைய, சர்வதேச வீதி அளவீட்டு நிபுணர்களின்
மேற்பார்வையிலும் இலங்கை தடகள சங்கத்தின் 100 சான்றளிக்கப்பட்ட அதிகாரிகளின்
வழிகாட்டலிலும் போட்டிகள் துல்லியமாக நடத்தப்படவுள்ளன.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:32:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன் - ஆறு மில்லியன் ரூபா பண மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/job-scam-women-get-cheated-1785903286"></link>
            <id>https://tamilwin.com/article/job-scam-women-get-cheated-1785903286</id>
            <summary type="text">வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 6,365,000 ரூபாவை மோசடி செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 6,365,000 ரூபாவை மோசடி செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில், கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
புத்தளம், பங்கதெனிய சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரை இணையவழி வங்கிச் சேவைகள் ஊடாகப் பணத்தை மாற்றியனுப்புமாறு சந்தேக நபர் நம்ப வைத்துள்ளார்.</p><p>
</p><h2><b>
பெண்ணிடமிருந்து மோசடி</b></h2><p>இந்த சம்பவம் குறித்த முறைப்பாடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பெறப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175acfbf-bdcb-48e9-86a3-d8ce55d0889b/26-6a72d8b263d00.webp' /></p><p>அத்துடன், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் அம்பிளாந்துறையை சேர்ந்தவர் என அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

சந்தேக நபர் கடந்த 3 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டார்.
</p><p>
பொலிஸாரின் தகவலுக்கமைய, இச்சம்பவத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து மோசடியாகப் பெறப்பட்ட மொத்தத் தொகை 6,644,000 ரூபாவாகும்.
</p><p>
சந்தேக நபர் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-05T06:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரும்பப் பெறப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-red-warnings-lifted-1785909732"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-red-warnings-lifted-1785909732</id>
            <summary type="text">தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எடுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எடுத்துள்ளது.
</p><p>
அதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.</p><p>
இந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று (05.08.2026) காலை 9.00 மணி முதல் நாளை (06) காலை 9.00 மணி வரை செல்லுபடியாகும்.</p><p></p><h2>எச்சரிக்கை நிலை 2&nbsp;</h2><p>கண்டி மாவட்டம் – உடபலத, டோலுவ, மெததும்பர, டெல்தொட்ட, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்க இஹல கோரளை மற்றும் உடுதும்பர.
</p><p>
கேகாலை மாவட்டம் – அரநாயக்க, தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்டை.
</p><p>
நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் தலவாக்கலை.
</p><p>
இரத்தினபுரி மாவட்டம் - ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/069afda6-2203-4086-969f-9a923422e4d7/26-6a72d63b5fd90.webp' /></p><h2>எச்சரிக்கை நிலை 1&nbsp;</h2><p>
கேகாலை மாவட்டம் – கேகாலை.
</p><p>
நுவரெலியா மாவட்டம் – ஹங்குரன்கெத்த.
</p><p>
இரத்தினபுரி மாவட்டம் – நிவித்திகல மற்றும் குருவிட்ட.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f1180d8-b0b1-44af-9d31-c071c0f9a52e/26-6a72d63c194cd.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள், மண்சரிவின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T06:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி 9 மணித்தியாலங்களுக்கு திறப்பு - சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-colombo-main-road-opened-for-9-hours-1785910907"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-colombo-main-road-opened-for-9-hours-1785910907</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - கண்டி பிரதான வீதிகளில் சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் போக்குவரத்து இன்று(05.08.2026) தடைப்பட்டு இருந்ததாகவும், அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - கண்டி பிரதான வீதிகளில் சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் போக்குவரத்து இன்று(05.08.2026) தடைப்பட்டு இருந்ததாகவும், அதிகாலை 6.30 மணியளவில் வழமைக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் நேற்று(04) இரவு ஏற்பட்ட
மண்சரிவு காரணமாக, அதே இடத்தில் மீண்டும் மண் சரிந்ததால் நேற்று இரவு 9.30 மணி
முதல் இரண்டு பிரதான வீதிகளிலும் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும்
முற்றாக பாதிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் மலைச்சரிவிலிருந்து பெருமளவு மண் மற்றும்
கற்கள் வீதியில் சரிந்ததால், அவற்றை அகற்றும் பணிகளில் பெரும் சிரமம்
ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><h2>
மண்சரிவு அபாயம்</h2><p>

இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயந்திரங்கள், பணியாளர்கள்
மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து இரவு முழுவதும் மீட்பு மற்றும் சீரமைப்பு
பணிகளில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84ac25bd-8dc6-416a-9a26-96b21db55608/26-6a72d754390fd.webp' /></p><p> </p><p>

கடும் முயற்சிகளின் பின்னர் இன்று அதிகாலை 6.30
மணியளவில் வீதியில் தேங்கியிருந்த மண் அகற்றப்பட்டு, ஒரு வழிப்
போக்குவரத்துக்கு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.</p><p>

எனினும், மண்சரிவு ஏற்பட்டுள்ள அந்தப் பகுதியில் மண் தொடர்ந்து
சரிந்துகொண்டிருப்பதால், எந்த நேரத்திலும் மீண்டும் போக்குவரத்து
பாதிக்கப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - கண்டி
பிரதான வீதிகளின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும், இந்த
வீதிகளை பயன்படுத்தும் அனைத்து வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன்
பயணிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><h2>
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>

இந்த போக்குவரத்து தடை காரணமாக வேலைக்குச் செல்ல முயன்ற அரச மற்றும் தனியார்
துறை ஊழியர்கள், பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பயணித்தவர்கள்,
வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டிய நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட
பலர் நீண்ட நேரம் சிக்கித் தவித்ததுடன், பல்வேறு அசௌகரியங்களையும்
எதிர்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d379862e-c032-4078-a54a-7577dd211e81/26-6a72d753547bb.webp' /></p><p>

மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியான கனமழை பெய்து
வருவதால், மலைச்சரிவுகள் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அனர்த்த
முகாமைத்துவ அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

எனவே, மலைப்பகுதி பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வானிலை
அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
கடைப்பிடித்து மிகவும் அவதானமாக பயணிக்குமாறு அதிகாரிகள் மீண்டும்
வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267ec3bb-361e-4db7-ae3b-086aaeb9a3f8/26-6a72d75512c50.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee03bc3-93ea-4ec8-b2eb-f64e8698e823/26-6a72d755dd440.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T06:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் 3ஆவது பரஸ்பர மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-discussion-chaired-by-the-president-1785907377"></link>
            <id>https://tamilwin.com/article/special-discussion-chaired-by-the-president-1785907377</id>
            <summary type="text">பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு
(3rd Mut...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு
(3rd Mutual Evaluation) குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க தலைமையில் நேற்று (04.08.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
</p><p>
சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த
மூன்றாவது மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச
மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம் என்று
ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.</p><p></p><h2>மதிப்பீட்டுக் குழுவின் கள ஆய்வு</h2><p>
</p><p>
இது குறித்த நிதியியல் தொடர்பான செயலணி (FATF) அறிமுகப்படுத்திய 40
பரிந்துரைகள் தொடர்பான தொழில்நுட்ப சாதக நிலை, அந்த பரிந்துரைகளைச்
செயற்படுத்துவதில் காணப்படும் 11 உடனடிப் பலன்கள் ஊடாக மதிப்பிடப்படும்
செயல்திறனும் இந்த பரஸ்பர மதிப்பீட்டின் போது மதிப்பீடு செய்யப்படுகிறது.

அதற்காக மதிப்பீட்டுக் குழுவின் கள ஆய்வானது இவ்வாண்டு மேற்கொள்ளப்படுகிறது.</p><p>
அதன்படி, எதிர்வரும் சில மாதங்களுக்குள் குறித்த பரிந்துரைகளை முறையாகச்
செயற்படுத்துவதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து
நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படுவதன் மூலம் குறித்த
செயல்முறையை வெற்றியடையச் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c31a45c3-b4ac-479f-b3b8-babcc477b9d4/26-6a72d00f84a3c.webp' /></p><p>
</p><p>
இந்த மதிப்பீட்டுச் செயல்முறைக்காக இலங்கை 2023 ஆம் ஆண்டு முதல் தயாராகி
வந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிக் காலக்கெடு விதிக்கப்பட்டு இந்த
தயார் நிலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின்
அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இது தேசிய மட்டத்திலான கணக்காய்வுச் செயல்முறையாவதுடன், இதனை ஆசிய பசுபிக்
பணம் தூய்தாக்கல் தொடர்பான குழு (APG) மேற்கொள்கிறது. </p><p>உள்நாட்டில் இந்தச்
செயல்முறைக்காக சுமார் 25 அரச நிறுவனத் தரப்பினர்கள் தொடர்புபடுவதுடன்,
இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை இலங்கை மத்திய வங்கியில் ஸ்தாபிக்கப்பபட்டுள்ள
நிதிப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்கிறது.</p><p></p><h2>செயல் திட்டங்களின் முன்னேற்றம்&nbsp;</h2><p>
</p><p>
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு
நிதியுதவி அளிப்பதைத் தடுத்தல் தொடர்பான செயலணியினால், தொடர்புடைய
மதிப்பீட்டுச் செயல்பாட்டின் போது இந்த தரப்பினர்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய
செயல் திட்டங்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.
</p><p>
அதன்படி, இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் செயல்
திட்டத்தை அமைச்சுகள் மற்றும் நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதன்
முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், அதன்போது எழுந்துள்ள
சிக்கல்களும் அவற்றை விரைவாகத் தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdf444f4-f306-4b9c-b51e-ec3786af45b7/26-6a72d010a33c3.webp' /></p><p>
</p><p>
இணையவழி ஊடாக இடம்பெறும் சூதாட்டத்தை (Online Gambling) நிறுத்துவதற்கு
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான சட்டங்களை இயற்றும்
பணிகளின் தற்போதைய நிலையையும் ஜனாதிபதி இங்கு கேட்டறிந்தார்.</p><p>

மேலும், குற்றத்தின் மூலம் ஈட்டப்படும் சொத்துக்களின் முகாமைத்துவம் தொடர்பான
அதிகாரசபையை நிறுவுவதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராய்ந்த
ஜனாதிபதி, அந்த அதிகாரசபையை மேலும் வினைத்திறனான மட்டத்தில் பேணிச் செல்ல
வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.</p><p> குறித்த அதிகாரசபையை நிறுவும்
பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், பணிக் குழாமை இணைத்துக்கொள்ளும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T05:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களுக்கு விரைவான நீதி : நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இலக்கு - அநுர தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aim-create-court-system-speedy-access-to-justice-1785907317"></link>
            <id>https://tamilwin.com/article/aim-create-court-system-speedy-access-to-justice-1785907317</id>
            <summary type="text">பொதுமக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் நீதிமன்றக்
கட்டமைப்பை ஸ்தாபிப்பதே நோக்கமாகும் என்று&amp;nbsp;ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.2027ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் நீதிமன்றக்
கட்டமைப்பை ஸ்தாபிப்பதே நோக்கமாகும் என்று&nbsp;ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>2027ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல்&nbsp;நேற்று(04.08.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள்</h2><p>நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பிரதான திணைக்களங்கள்,
அரச சபைகள் மற்றும் நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட நிதி
ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் பௌதிக மற்றும்
நிதியியல் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஆம்
ஆண்டு வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாகக்
கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a12b4d9-0fd8-484a-94a6-46eb88f77737/26-6a72cb517ef2d.webp' /></p><p>கொழும்பு மேல் நீதிமன்ற வளாகம், நீதி அமைச்சுக் கட்டிடம், புதுக்கடை
நீதிமன்ற வளாகம், காலி, மாத்தளை, கந்தளாய் உட்பட புதிய நீதிமன்ற வளாகங்களின்
நிர்மாணப் பணிகள் குறித்த முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.&nbsp;</p><p>மேலும், 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் காரணமாக இடையில்
நிறுத்தப்பட்ட நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் நிர்மாணிக்கும்
திட்டம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் 79 மில்லியன் மூலதனச் செலவுகளின் ஊடாக
மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம், சட்டவரைஞர் திணைக்களத்தின் கீழ்
38 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றமும் இங்கு
ஆராயப்பட்டன.</p><h2>ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்ப்பது</h2><p>தற்போது முக்கிய பங்கு வகிக்கும் சட்டவரைஞர் திணைக்களத்துக்குத் தேவையான மனித
வள அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக அதன்
செயல்திறனை அதிகரிப்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ece186f6-bdb4-4bd3-a03d-cf030c7f45da/26-6a72cb5260d35.webp' /></p><p>

பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான ஆய்வுகூட வசதிகளை வழங்குவதற்குரிய
உபகரணங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் கிடைக்கப்பெறும் எனவும் இங்கு
குறிப்பிடப்பட்டதுடன், மாதமொன்றுக்குப் பெற்றுக்கொள்ளப்படும் பகுப்பாய்வு
அறிக்கைகளின் அளவை 9 ஆயிரம் வரை அதிகரித்துக் கொள்வதற்கான திட்டங்கள்
குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p>

அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தைப் பொருத்தமான இடத்தில்
ஸ்தாபிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட
பிரிவினருக்குப் பணிப்புரை விடுத்தார்.&nbsp;</p><p>மேலும், பொறியியல் துறையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்
ஆட்களைச் சேர்ப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p>கொள்முதல் செயன்முறை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்,
அதில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, ஏற்கனவே டிஜிட்டல், சுகாதாரம்
மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்குத் தனித்தனி கொள்முதல் செயன்முறையைத்
தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T05:56:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான அகிலவிராஜ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/akila-viraj-in-the-bribery-corruption-commission-1785908875"></link>
            <id>https://tamilwin.com/article/akila-viraj-in-the-bribery-corruption-commission-1785908875</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார்.இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார்.</p><p>இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணகைள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கானவே அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகில விராஜ் கரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>

</p>]]></content>
            <updated>2026-08-05T05:55:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் - பிரதி அமைச்சர் மோதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clash-between-minister-and-deputy-1785909018"></link>
            <id>https://tamilwin.com/article/clash-between-minister-and-deputy-1785909018</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும், பிரதி அமைச்சர் ஜனித கொடிதுவக்கவிற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும், பிரதி அமைச்சர் ஜனித கொடிதுவக்கவிற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 
இதனால் அரசாங்கத்திற்குள் பாரிய நிர்வாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
நட்டத்தில் இயங்கும் சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பது தொடர்பான சர்ச்சை வலுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac4a476d-97f8-4e4f-a7f5-51bf76fdc48f/26-6a72cf1c8ac1c.webp' /></p><p>
</p><p>பணிநீக்கம் செய்யப்பட்ட விமான நிறுவன ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பில் பிரதி அமைச்சரால் கூட்டப்பட்ட முறையான விசாரணை ஒன்றில் அமைச்சர் நேரடியாகத் தலையிட்டபோது, கடந்த திங்கட்கிழமை இந்நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>காலையில் தொடங்கவிருந்த விசாரணையை மாலை வரை தாமதப்படுத்தி, பின்னர் கூட்டத்தை முன்கூட்டியே முடித்து வைத்ததன் மூலம் அமைச்சர், பிரதி அமைச்சரின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. </p><p>
சிவில் விமானப் போக்குவரத்துப் பிரதி அமைச்சரின் அதிகார வரம்பிற்குள் வருகின்ற போதிலும், அமைச்சரின் இத்தகைய தலையீடு தேசிய விமான நிறுவனத்தின் கடுமையான நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து முடக்கி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>
விமான நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் தலைமைத்துவ வெற்றிடம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள பின்னணியிலேயே இந்த அதிகாரப் போட்டி வெடித்துள்ளது. நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் அண்மைய விசாரணையின் போது, அதன் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார், கடந்த 16 மாதங்களாக ஒரு தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கத் தவறியமை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். </p><p>இரண்டு கட்ட நேர்காணல்கள் நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், ஒரு வருடம் மற்றும் நான்கு மாதங்களுக்கும் மேலாகப் பொருத்தமான ஒருவரை உள்ளூரிலோ அல்லது வெளியிலிருந்தோ கண்டுபிடிக்க முடியாமல் போனது ஒரு சோகமான நிலைமை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p>
இந்த வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில், சிறீலங்கன் எயர்லைன்ஸ் தவிசாளர், நிறுவனத்தின் உள்ளக அதிகாரிகளில் ஒருவரை இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தார்.
இதற்கமைய, மூன்று வாரங்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் தலைவர் மற்றும் வர்த்தகத் தலைவர் ஆகிய இரு உள்ளக நிர்வாகிகள் சுருக்கப்பட்டியலிடப்பட்டனர். </p><p>இதில் பிரதி அமைச்சருடன் கலந்தாலோசிக்காமல், தகவல் தொழில்நுட்பத் தலைவரைத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அமைச்சர் கருணாதிலக்க தனிச்சையாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 
இருப்பினும், சிறீலங்கன் எயர்லைன்ஸின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இடம்பெற்ற கடுமையான ஊழல் நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத் தலைவரைப் பதவியேற்க வைக்கும் நடவடிக்கை திடீரென முடங்கியது. </p><p>
தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சாமர பெரேராவின் நிர்வாகத்தின் கீழ் அப்பிரிவில் பாரதூரமான தவறான நிர்வாகம் இடம்பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p>அவர் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கும் தொழில்முறை அம்சத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>
பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வ நியமனத்தை அமைச்சர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள போதிலும், அவரை இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்த்துவதில் அமைச்சர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p> 
அதேவேளை, திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையில் ஜே.வி.பி சார்ந்த தொழிற்சங்கம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மண்டபத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.</p><p> தகவல் தொழில்நுட்பத் தலைவர் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, அவரது ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளதால், சிறீலங்கன் எயர்லைன்ஸைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் செயல்பாட்டு மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.&nbsp;</p><p>எனினும் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத் தரப்பில் அதிகாபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-05T05:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அரசமைப்பு விவகாரம்: தமிழ்பேசும் கட்சிகளிடம் இந்திய உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-constitution-issue-indian-high-commissioner-1785907227"></link>
            <id>https://tamilwin.com/article/new-constitution-issue-indian-high-commissioner-1785907227</id>
            <summary type="text">புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்
என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தை கடந்ததன் பின்னர்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்
என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தை கடந்ததன் பின்னர்,
அதனை புறந்தள்ளிவிட்டு மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது
புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என&nbsp;இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
சந்தோஷ் ஜா தமிழ்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு&nbsp;அழுத்தம் </h2><p>அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தம்
வழங்கிவரும் நிலையில், இலங்கைக்கு வருகை தரும் இந்திய வெளியுறவுச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி அதனை மீண்டும் வலியுறுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78944a17-6d38-44d3-b9f9-f3de63124014/26-6a72ccb854f7b.webp' />&nbsp;</p><p>

தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து
செயற்படுவதற்கு உடன்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய
உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக்
கலந்துரையாடினர்.
</p><p>
நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தச்
சந்திப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் எம்.ஏ. சுமந்திரன் மற்றும்
இரா. சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ்
பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முருகேசு சந்திரகுமார்
ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் மற்றும்
நிஸாம் காரியப்பர் ஆகியோரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர்
அலி, மொஹமட் தாஹிர் உள்ளிட்டோரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில்
ஜீவன் தொண்டமானும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் பாரத் அருள்சாமி
ஆகியோரும் கலந்துகொண்டனர்.</p><p>

இதன்போது, தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 1988 - 1989 ஆம்
ஆண்டுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எவ்வாறு கூட்டாக இணைந்து
செயற்பட்டன என்பது குறித்தும், தற்போது மீண்டும் ஒரு கட்டமைப்பாக
இணைந்திருப்பது குறித்தும் பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினர்.</p><h2>அநுர சஜித்துடனான சந்திப்புகள் குறித்து விளக்கம்</h2><p>கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்புக்கள் மற்றும் அங்கு
விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.</p><p>

குறிப்பாக, ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளை
ஆரம்பித்தல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், வடக்கு, கிழக்கு
மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், மலையக மக்களுக்கான
காணிப்பகிர்வு மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும், அவற்றுக்கு
ஜனாதிபதி அளித்த பதில்கள் குறித்தும் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டது.</p><h2>இந்திய உயர்ஸ்தானிகரின் நிலைப்பாடு</h2><p>பிரதிநிதிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த உயர்ஸ்தானிகர், மாகாண சபைத்
தேர்தல்களை விரைவாக நடத்துவது உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இந்தியா
ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு அழுத்தம் வழங்கியுள்ளது என்று
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27985385-91ef-4a7f-8cd1-e535d26bf7b7/26-6a72cd60ebd60.webp' />&nbsp;</p><p> </p><p>மேலும், நாட்டுக்கு வருகைதரும் இந்திய வெளியுறவுச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி, அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அதனை
மீண்டும் வலியுறுத்துவார் எனவும் உறுதியளித்துள்ளார்.
</p><p>
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினை
கரிசனைக்குரியது என்பதை ஏற்றுக்கொண்ட அவர், மலையகத்தில் 'டித்வா' சூறாவளி
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி வழங்கல் குறித்தும்
விசாரித்தறிந்தார்.</p><h2>புதிய அரசமைப்பு விவகாரம்</h2><p>புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்துக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், "தற்போது
நடைமுறையில் உள்ள அரசமைப்பை கைவிட்டு, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து முழுமையாக
ஆரம்பிக்கப் போகின்றீர்களா?" எனப் பிரதிநிதிகளிடம் வினவினார்.
</p><p>அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், மாகாண சபைகள் முறைமை உள்ளிட்ட சில கூறுகள்
மூலம் அதிகாரப் பகிர்வுக்கான கட்டமைப்பு ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில்,
அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் தொடங்குவது ஆபத்தான விடயம் எனச்
சுட்டிக்காட்டினர். </p><p>புதிய அரசமைப்பு எனும் போது தற்போது இருப்பதை விடவும்
கூடுதலான அதிகாரப் பகிர்வு பற்றியே தாம் பேசுவதாகவும் குறிப்பிட்டனர்.
</p><p>
இதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், இந்த விடயத்தில் அவதானத்துடன் செயற்பட
வேண்டும் என்றும், ஓர் இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தைக் கடந்ததன்
பின்னர் அதனைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் தொடக்கப் புள்ளியில் இருந்து
ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T05:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-foreign-secretary-arrives-1785907655"></link>
            <id>https://tamilwin.com/article/indian-foreign-secretary-arrives-1785907655</id>
            <summary type="text">&amp;nbsp;இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று(05) கொழும்பு வந்தடைந்தார். 
தனது இந்த விஜயத்தின் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று(05) கொழும்பு வந்தடைந்தார்.</p><p> 
தனது இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.</p><p></p><p> 
இந்த விஜயம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட ஈடுபாடுகள் மற்றும் முக்கிய ஒத்துழைப்புப் பகுதிகளை மேலும் முன்னோக்கி கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbd1f69d-bcef-4b45-a827-b82f9e5fc377/26-6a72cd0dcd383.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:27:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சசிந்திர ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-issued-relation-sasindra-rajapaksa-case-1785905689"></link>
            <id>https://tamilwin.com/article/order-issued-relation-sasindra-rajapaksa-case-1785905689</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, குறித்த வழக்கை செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p> </p><p>இந்த வழக்கு விசாரணைக்காக சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93aa49e8-95b9-431c-9a92-8d3d5aa94c47/26-6a72c6b01be33.webp' /></p><p>இதனையடுத்து சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்கை செப்டம்பர் 28 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T05:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பாதையில் சடலம் கண்டெடுப்பு - பிரதான வழித்தட தொடருந்து சேவைகள் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-services-delayed-body-near-gampaha-station-1785904108"></link>
            <id>https://tamilwin.com/article/train-services-delayed-body-near-gampaha-station-1785904108</id>
            <summary type="text">கம்பஹா மற்றும் தாரளுவாவிற்கு இடையேயுள்ள கம்பஹா தொடருந்து நிலையம் அருகே, தொடருந்து தண்டவாளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதான வழித்தட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மற்றும் தாரளுவாவிற்கு இடையேயுள்ள கம்பஹா தொடருந்து நிலையம் அருகே, தொடருந்து தண்டவாளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதான வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் தாமதமாகி வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
 

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தற்போது இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>தொடருந்து சேவைகள் தாமதம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aa40501-878f-4215-9112-d1dd3d784bcd/26-6a72c28554243.webp' /></p><p>
 

சடலம் அகற்றப்பட்டு, தேவையான விசாரணைகள் நிறைவடையும் வரை, அந்த வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் தாமதத்துடன் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத இணையவழி வலைத்தளங்களை உடனடியாக முடக்க உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-unlicensed-online-gambling-websites-1785897053"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-unlicensed-online-gambling-websites-1785897053</id>
            <summary type="text">நாட்டில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் அனைத்து சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்களையும் உடனடியாக முடக்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் அனைத்து சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்களையும் உடனடியாக முடக்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.</p><p>&nbsp; &nbsp;</p><h2>விசேட நடவடிக்கை</h2><p>இதேவேளை, இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f657fabc-9b03-47da-a299-a98c6888ad12/26-6a72bfde384c8.webp' />&nbsp;</p><p>இத்தகைய நடவடிக்கைகள் பணமோசடி, கடத்தல்கள், மனித கடத்தல் மற்றும் சட்டவிரோத எல்லைதாண்டல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு வழிவகுக்கின்றமையும் கறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:46:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக பாதை வாகனங்கள் குறித்த கட்டாய நடைமுறை - வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seat-belts-mandatory-for-traveling-on-expressways-1785902840"></link>
            <id>https://tamilwin.com/article/seat-belts-mandatory-for-traveling-on-expressways-1785902840</id>
            <summary type="text">அதிவேக பாதைகளில் இயங்கும் வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்கு வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக பாதைகளில் இயங்கும் வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்கு வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.
</p><p>
தொழில்துறை பங்காளர்களின் கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆசனப்பட்டி அணிதல்</h2><p> </p><p>

மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட 2011ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மோட்டார் வாகனங்கள் (அதிவேகப் பாதைகள்) கட்டளையின் கீழ், அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆசனப்பட்டிகள் இல்லாத வாகனங்களில் அவற்றை மறுசீரமைத்துப் பொருத்துவதற்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப சலுகை காலம் கடந்த ஜூன் 19ஆம் திகதியுடன் முடிவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07d6098-c67b-4eea-89ec-285723df6c9a/26-6a72bb8c323d4.webp' /></p><h2>சலுகை காலம் நீடிப்பு</h2><p>
</p><p>
இந்த காலக்கெடுவை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, 2026 ஜூன் 17ஆம் திகதியிட்ட 2493/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசாங்கம் இக்கட்டளையில் திருத்தம் செய்து, சலுகை காலத்தை எதிர்வரும் செப்டெம்பர் 19 வரை நீடித்தது.
</p><p>
நாடாளுமன்ற ஒப்புதலுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூழ்ச்சிதாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்! மரிக்கார் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-sri-lanka-2019-1785902248"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-sri-lanka-2019-1785902248</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை
விதிக்கப்பட்டதைப் போன்று, அந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான
சூழ்ச்சிதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை
விதிக்கப்பட்டதைப் போன்று, அந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான
சூழ்ச்சிதாரிகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார்.
</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வருடத்துக்கான
அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான 71 ஆயிரத்து 700 மில்லியன் ரூபாவுக்கான
குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>முழுமையான நீதி</h2><p>
</p><p>
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>"உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின்
முன்னாள் செயலாளருக்கும் முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33d4feaf-9b84-4e1d-ba73-c0f2aaff4f90/26-6a72ba7fb381c.webp' /></p><p> தாக்குதலைத் தடுக்கத் தவறினார்கள் என்று தெரிவித்தே
இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் தவறு என்று கூற வரவில்லை.</p><p>

ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டுமென்றால்,
தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதைப் போன்று, இதில்
நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட சூழ்ச்சிதாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட
வேண்டும்.
</p><p>
ஒரு குழுவினர்தான் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டனர். அதனால்தான் அவர்களால்
அதனைத் தடுக்க முடியாமல் போனது. எனவே, பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்பட
வேண்டும். சஹ்ரானை வழிநடத்தியவர்களும் கட்டாயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். </p><p>இதன்போது அரசின் நிதி மற்றும் வருமானக் கொள்கை குறித்தும் அவர் விமர்சனங்களை
முன்வைத்தார்.</p><p>

"அரசு மேலதிக வருமானத்தைத் தேடிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், இந்த
மேலதிக வருமானத்துக்காக அரசு வரிகளை அதிகரித்து சாதாரண மக்களுக்கு எவ்வாறான
அழுத்தங்களைக் கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf0156c2-7631-4ade-b44d-0840bd300d68/26-6a72ba8066104.webp' /></p><p> அரசுக்கு 71 பில்லியன்
மாத்திரமல்ல, அதனைவிட அதிகமான பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏனெனில், அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி
செலவிடப்படாமல் அவ்வாறே திறைசேரிக்கு மீள அனுப்பப்படுகின்றது.
</p><p>
அவ்வாறில்லாமல், அரசு திறம்பட நிதி முகாமைத்துவம் செய்து மேலதிக வருமானத்தை
ஈட்டியுள்ளதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. </p><p>மாறாக, அமைச்சுக்களுக்கு
ஒதுக்கப்பட்ட பணத்தை எந்தவொரு அபிவிருத்தியும் செய்யாமல் மீளப்
பெற்றுக்கொண்டுள்ளது என்றே கூற வேண்டும்"&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:23:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் : காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palali-airport-development-project-1785901550"></link>
            <id>https://tamilwin.com/article/palali-airport-development-project-1785901550</id>
            <summary type="text">பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பிற்கென மயிலிட்டி வடக்கு(J/246),
தென்மயிலை(J/240), பலாலி மேற்கு(J/256), குரும்பசிட்டி(J/242) ஆகிய கிராம
அலுவலர் பிரிவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பிற்கென மயிலிட்டி வடக்கு(J/246),
தென்மயிலை(J/240), பலாலி மேற்கு(J/256), குரும்பசிட்டி(J/242) ஆகிய கிராம
அலுவலர் பிரிவுகளில் 1986ஆம் ஆண்டுகாலப்பகுதியில் பொது மக்களின் காணிகள்
சுவீகரிக்கப்பட்டன.
</p><p>
இந்நிலையில் குறித்த காணி உரிமையாளர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் நோக்கில்
காணி உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் நேற்றையதினம்(04.08.2026) தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்
பிரதேச செயலாளர் சிவகெங்கா தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
</p><p></p><h2>கோரிக்கை ஒன்று முன்வைப்பு</h2><p>
குறித்த காணிகளுக்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு விலை மதிப்பீட்டு
திணைக்களத்தின் விலை மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக் கொள்ளவது அவசியமென்பதால்
இதற்கான சம்மதம் தெரிவிக்கும் படிவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3799c37-f110-4c62-a4e1-02fb0555d2ec/26-6a72b79c1ae24.webp' /></p><p>தொடர்ந்து தமது காணிகளுக்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்த
காணி உரிமையாளர்களிடம் விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் மதிப்பீட்டினை
மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்களது காணிகளை 2022ஆம் காலப்பகுதிக்கு உரியதாக
மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் காணி அமைச்சினால்
அனுப்பி வைக்கப்பட்ட படிவத்தின் ஆங்கில மொழி மூலமான படிவமும் தமிழ் மொழி
மூலமான படிவமும் ஒப்படைக்கப்பட்டது.
</p><p>
குறித்த படிவத்தில் தீர்மானிக்கப்பட்ட மதிப்பீட்டினை நட்ட ஈடாக பெற்றுக்கொள்ள
சம்மதிக்கிறேன் என்ற சொற்றொடர் தமக்கு குழப்பமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய
காணி உரிமையாளர்கள், அதனை விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால்
மேற்கொள்ளப்படும் விலை மதிப்பீட்டுக்கு உடன்படுகிறேன் என மாற்றுமாறு கோரிக்கை
ஒன்றை முன்வைத்திருந்தனர்.
</p><p>
குறித்த விடயம் அமைச்சுக்கு உட்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மாவட்ட அரசாங்க
அதிபரால் இதனைத் திருத்தி அமைச்சுக்கு அனுப்பி அவர்களிடமிருந்து முடிவினை
பெற்றுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டதுடன், அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக
காணி உரிமையாளர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டதுடன், தொடர்
நடவடிக்கைகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திறக்கப்படும் வான் கதவுகள்: அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotmale-reservoir-sluice-gates-reopen-1785900383"></link>
            <id>https://tamilwin.com/article/kotmale-reservoir-sluice-gates-reopen-1785900383</id>
            <summary type="text">கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதற்கமைய, வினாடிக்கு சுமார் 130 கன அடி நீர் மகாவலி கங்கைக்கு திறந்து விடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
இவ்வாறு நீர் திறந்து விடப்படுவதன் காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a5991c-e67e-4f2b-afae-8a1935edcf57/26-6a72b51ee3b79.webp' /></p><p> இதனால், உலப்பனை, கெடிஓயா, கம்பளை, பேராதனை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளில் மகாவலி கங்கையின் இருமருங்கிலும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T04:02:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் விடயத்தில் சிக்கிய பிரபல நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/famous-actress-in-struggle-sri-lanka-1785842640"></link>
            <id>https://tamilwin.com/article/famous-actress-in-struggle-sri-lanka-1785842640</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நடிகை ரிது ஆகர்ஷா முற்றாக மறுத்துள்ளார். </p><p>

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ஊடாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையாகும். அவை திசை திருப்பக்கூடியவையாகும். அவ்வாறான தகவல்கள் எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2><b>
வழக்கு தாக்கல்</b></h2><p>600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை குறுகிய காலத்திற்குள் குவித்துள்ளதாக மேர்வின் சில்வாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79afb64-0366-45db-bf49-da4a63be9415/26-6a729b5b80f9f.webp' /></p><p>வழக்கின் நீதிமன்ற அறிக்கைகளில், ரிது ஆகர்ஷா என்ற பெயரில் DFCC வங்கி கணக்கு ஒன்றிற்கு பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் DFCC வங்கியில் கணக்கு ஒன்றைப் பராமரிக்கவில்லை. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கிலக்கம் எனக்குச் சொந்தமானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
</p><h3><b>
சட்டவிரோத சொத்து</b></h3><p>அதை உறுதிப்படுத்தும் வகையில் DFCC வங்கியினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றையும் அவர் தனது அறிக்கையுடன் இணைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9feb382a-c28d-4ce3-b070-a455ad1bb32c/26-6a729b5c33a31.webp' /></p><p>மேலும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தான் பாடசாலை மாணவியாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இந்த குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை ரிது ஆகர்ஷா வலியுறுத்தியுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EWd7DFMtezI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:58:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-minister-of-tourism-discussion-governor-1785900972"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-minister-of-tourism-discussion-governor-1785900972</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன்
குணசேகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன்
குணசேகரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.</p><p></p><h2>சுற்றுலா மேம்பாட்டுத்திட்டம்&nbsp;</h2><p>
இக்கூட்டத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை சுற்றுலா மேம்பாட்டுத்
திட்டம் குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387e3681-9fc3-4f03-a954-4ba513abb302/26-6a72b443330a2.webp' /></p><p> அத்துடன், அப்பகுதியில்
அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சின்
ஊடான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்குப் பல
முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருகின்றபோதிலும், வனவளத் திணைக்களம்,
வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்
உள்ளிட்டவர்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் நிலவும் தாமதங்கள் குறித்து
ஆளுநர் எடுத்துரைத்துள்ளார்.
</p><p>
ஆளுநர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் அவதானிப்புகள் குறித்து கவனம்
செலுத்திய சுற்றுலாத்துறை பிரதியமைச்சர், மாகாணத்தில் சுற்றுலாத்துறையை
ஊக்குவிப்பது தொடர்பிலும், மாவட்ட ரீதியிலான ஒருங்கிணைந்த சுற்றுலா
அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு துரிதமாகச் செயற்படுத்துவது என்பது
குறித்தும் ஆளுநருடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.</p><p>

இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், ஆளுநரின்
செயலாளர், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர், ஆளுநரின்
பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின்
இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை சிறைச்சாலையில் தீவிர பாதுகாப்பு - ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tight-security-for-south-prisons-1785893586"></link>
            <id>https://tamilwin.com/article/tight-security-for-south-prisons-1785893586</id>
            <summary type="text">நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

காலி, பூஸ்ஸ, மாத்தறை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் வீரவில சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தப்படவுள்ளது. </p><p>

இது தொடர்பில், தென் மாகாண ஆளுநர் சுசிறிபால மானவடுவின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.</p><p>
</p><h2><b>
அவசர பாதுகாப்புக் குழு</b></h2><p>நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவான அமைதியின்மை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தென்னிலங்கையில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்வதே இந்த அவசர பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b4604bb-afe3-4db4-a0e2-6d8548e9ea9a/26-6a72b333efab8.webp' /></p><p>மக்களின் பாதுகாப்பு, உயிர், உடைமைகள் மற்றும் அமைதியான சூழ்நிலையை தொடர்ந்தும் பேணிச் செல்வது தொடர்பில் எவ்வித தளர்வான கொள்கையும் கடைப்பிடிக்கப்பட மாட்டாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p>

நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, அனைத்துப் பாதுகாப்பு பிரிவுகளும் இணைந்து எத்தகைய அவசர நிலையையும் உடனடியாக எதிர்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-08-05T03:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fever-warning-to-the-srilanka-people-1785900112"></link>
            <id>https://tamilwin.com/article/fever-warning-to-the-srilanka-people-1785900112</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p>

மத்திய, சபரகமுவ, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய நான்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>இலவச மருந்துகளை வழங்க நடவடிக்கை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அசுத்தமான நீரில் விளையாடுவதால் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல், தொற்று மஞ்சள் காமாலை மற்றும் தொழுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமில் முத்துகுட எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f620382-d10f-478b-b069-4a593a6609c3/26-6a72aea40cc0d.webp' /></p><p> </p><p>

அசுத்தமான நீரிலிருந்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால், தடுப்பு சிகிச்சையை நாட வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை கருத்திற்கொண்டு அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து இலவச மருந்துகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>
 இதற்கிடையில், வயிற்றுப்போக்கு, தொற்று மஞ்சள் காமாலை, தொழுநோய், டெங்கு உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை உணர்ந்தால், அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T03:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிவகாரச் செயலர் : தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-foreign-secretary-to-arrive-sri-lanka-today-1785899006"></link>
            <id>https://tamilwin.com/article/indian-foreign-secretary-to-arrive-sri-lanka-today-1785899006</id>
            <summary type="text">இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகாரச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி இன்று(05.08.2026)&amp;nbsp; இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

கொழும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகாரச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி இன்று(05.08.2026)&nbsp; இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
</p><p>
கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில்
நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு,
உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள்
குறித்துக் கலந்துரையாடுவதே அவரின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது.
</p><p></p><h2>விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக</h2><p>
தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய
மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து விரிவான
பேச்சுகளை நடத்தவுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/288d2666-9b3a-44fc-84ad-fc4a463ee813/26-6a72ac164dd6a.webp' /></p><p>
இந்தியாவின் 'அண்டைய நாடுகளுக்கு முதலுரிமை' கொள்கையின் அடிப்படையில்,
இலங்கையுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த
புதுடில்லி தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.</p><p>இந்த விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக, வடக்கு - கிழக்கு மற்றும்
மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுடனான விக்ரம்
மிஸ்ரியின் தனித்தனிச் சந்திப்புகள் அமைகின்றன.
</p><p>
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன், காணி மற்றும்
பொலிஸ் அதிகாரங்களுடன் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த இந்தியத் தரப்பு
கொழும்பு அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனத் தமிழ் தலைமைகள் வலியுறுத்தவுள்ளன.</p><h2>வழக்கமான இராஜதந்திரச் சந்திப்பாக</h2><p>முன்னர் கைவிடப்பட்ட சம்பூர் திட்டம், தற்போது இலங்கை மின்சார சபை மற்றும்
இந்திய நிறுவனத்துடன் இணைந்து 120 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டமாக
மாற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b831d17-2a40-4c7b-b5bf-010a07ba0932/26-6a72ac1704668.webp' /></p><p>மின் உற்பத்தி இணைப்பு, எரிபொருள் குழாய் இணைப்பு மற்றும் கடல்வழி
போக்குவரத்து போன்ற உத்திசார் இணைப்புத் திட்டங்களின் தாமதங்கள் குறித்து
இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>இந்தியாவின் 450 மில்லியன் டொலர் உதவித் திட்டத்தில் (350 மில்லியன் டொலர்
கடன் உதவி மற்றும் 100 மில்லியன் டொலர் மானியம்), இலங்கை அரசு அதனை முறையாகப்
பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது.</p><p>மேலும், 22 டீசல்
எஞ்சின்களை மானியமாக வழங்க இந்தியா முன்வந்த போதிலும், அதற்குரிய கோரிக்கைப்
பத்திரங்களை இலங்கை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.</p><p> இலவச
வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் தடைகள் குறித்தும் இந்தியா கவலை கொண்டுள்ளது.
</p><p>
விக்ரம் மிஸ்ரியின் இந்த விஜயமானது வழக்கமான இராஜதந்திரச் சந்திப்பாக
மட்டுமில்லாமல், பிராந்திய மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான
நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், தேங்கிக் கிடக்கும் திட்டங்களை
விரைவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய பரீட்சார்த்தக் களமாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T03:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை: அரசாங்கத்தின் தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/service-extension-for-police-officers-1785895053"></link>
            <id>https://tamilwin.com/article/service-extension-for-police-officers-1785895053</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு வயதெல்லையை அடைந்த அதிகாரிகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு வயதெல்லையை அடைந்த அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
60 வயதை பூர்த்தி செய்த குறைந்த தர பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p>பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி நிலை முதல் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவி வரை கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இச்சேவை நீடிப்புக்காக விண்ணப்பிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b8d99a-79d1-4053-9a80-d3efa09e8c1d/26-6a729893293a6.webp' /></p><p>
</p><p>இதற்கமைய நல்ல உடல் தகுதியுடனும், நன்நடத்தையுடனும், களங்கமற்ற சேவையாற்றி 60 வயதை பூர்த்தி செய்த அதிகாரிகள் இந்த சேவை நீடிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, மிக விரைவில் இந்த சேவை நீடிப்புகள் வழங்கப்படவுள்ளன.
பொலிஸ் திணைக்களத்தில் பெருமளவிலான வெற்றிடங்கள் நிலவுவதாகவும், ஒரே தடவையில் அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வது கடினம் என்பதாலும், அதற்கு தற்காலிக தீர்வாகவே இந்த சேவை நீடிப்பு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>பொலிஸ் திணைக்களத்தில் 84,000 அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய போதிலும், தற்போது 50,000க்கும் குறைவான அதிகாரிகளே கடமையாற்றி வருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T03:17:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ்மா அதிபர் குறித்த சாகரவின் சர்ச்சையான கருத்து: அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-controversial-comment-igp-minister-order-1785898126"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-controversial-comment-igp-minister-order-1785898126</id>
            <summary type="text">பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய
கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய
கருத்துக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு
அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சாகர காரியவசம்,
நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபரிடம் அரசுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுமாறு
கோரியதுடன், அவர் வீதியில் பொதுமக்களிடம் அடிவாங்கும் பொலிஸ்மா அதிபராக
வரலாற்றில் இணைவதைத் தான் காண விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.</p><p>
சாகர காரியவசத்தின் இந்த கருத்து குறித்து ஊடகங்களிடம் கருத்துததெரிவித்த
அமைச்சர் ஆனந்த விஜேபால,</p><p>&nbsp;</p><h2>விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப சட்ட நடவடிக்கைகள்&nbsp;</h2><p> அரசு இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை இலகுவாக
எடுத்துக்கொள்ளாது. அரசியல் அதிகாரத்துக்காக கடந்த காலங்களில்
மக்களைப் பலி கொடுத்த ஓர் அரசியல் இயக்கத்தின் மனநிலையே இத்தகைய கூற்றுகளில்
பிரதிபலிக்கின்றது என்றும் அவர் விமர்சித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8bf8dc2-125e-4872-b22c-9fef8ab248a8/26-6a72aaab0e1e7.webp' /></p><p>
தற்போதைய பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை மிகவும் திறம்பட ஆற்றி வருகின்றமையைச்
சுட்டிக்காட்டிய அமைச்சர், ஊழல், இலஞ்சம் மற்றும் அரச சொத்துக்கள்
துஷ்பிரயோகம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர விசாரணைகள்
காரணமாக அச்சமடைந்துள்ள நபர்களே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
என்றும் சந்தேகம் வெளியிட்டார்.</p><p>

விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் எச்சரித்தார்.</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:14:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழப்பு! ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-people-died-inclement-weather-9-districts-1785897242"></link>
            <id>https://tamilwin.com/article/8-people-died-inclement-weather-9-districts-1785897242</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8
பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து
8...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8
பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து
832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
அறிவித்துள்ளது.
</p><p>
9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;</p><h2>ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு</h2><p>

நாடு முழுவதும் அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள்
பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec127e72-cedd-4bbb-8237-baef7522ff10/26-6a72a34e5485e.webp' />&nbsp;</p><p>நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>நுவரெலியா மாவட்டத்தில் 1,091 குடும்பங்களைச்
சேர்ந்த 3 ஆயிரத்து 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள 20
நிவாரண முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 195 பேரும்,
உறவினர் வீடுகளில் 224 பேரும் தங்கியுள்ளனர்.</p><p>
மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பிரதான வீதிகளில் ஏற்பட்ட தடங்கல்கள்,
மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் மண்மேடுகள் சரிந்தமை போன்ற
காரணங்களால் தடைப்பட்டிருந்த முக்கிய போக்குவரத்துப் பாதைகள் சீரமைக்கப்பட்டு
மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p> குறிப்பாக, கடுகண்ணாவ பகுதியில்
மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி வீதி மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்து
முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.
</p><p>
எனினும், நுவரெலியா - பதுளை, நுவரெலியா - ஹட்டன் மற்றும் நுவரெலியா - கண்டி
(டொப்பாஸ் முதல் லபுக்கலை வரை) பிரதான வீதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால்,
சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார்
கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
களனி மற்றும் களு கங்கை ஆற்றுப் படுகைகளுக்காக விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய
எச்சரிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்
அறிவித்துள்ளது.</p><h2>மண்சரிவு அபாயம்</h2><p>இந்த ஆறுகளின் நீர்மட்டம் சீரான நிலையை எட்டியுள்ளமையால் இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> எவ்வாறாயினும், நீரியல் மற்றும் இடர்
முகாமைத்துவப் பிரிவு தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றது என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரிய பண்டார
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fed55a3-4bc3-41ba-a47f-af0832ff32cf/26-6a72a34da260f.webp' />&nbsp; &nbsp;</p><p>
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை
பெய்யக்கூடும். சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில
இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி
எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>மேலும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள்
குறித்து பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நாட்டின் மலைப்பாங்கான பிராந்தியங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்
நிலவுகின்றது. </p><p>அதற்கமைய, கண்டி (கங்கா இஹல கோரளை, உடுதும்பர, பச்பாகே கோரளை),
கேகாலை (எட்டியாந்தோட்டை), நுவரெலியா (அம்பகமுவ, நோர்வூட்) ஆகிய பிரதேச
செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலைச் சிவப்பு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T02:43:42+00:00</updated>
        </entry>
    </feed>
