<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-06T18:23:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைவசமயத் தலைமைக்கு அகத்தியர் அடிகளார்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saiva-leaders-back-agathiyar-adigalar-in-jaffna-1788716105"></link>
            <id>https://tamilwin.com/article/saiva-leaders-back-agathiyar-adigalar-in-jaffna-1788716105</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சைவ அமைப்புகளின் தலைமைப் பிரதானிகளின் முக்கிய கூட்டம் இன்று (06) வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சைவ அமைப்புகளின் தலைமைப் பிரதானிகளின் முக்கிய கூட்டம் இன்று (06) வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்றது.</p><p>

இதன்போது, தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவ சமயிகளின் தலைவராக ஏகமனதாக முன்மொழிந்து ஏற்றுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.</p><h2>அகத்தியர் அடிகளார்</h2><p>
</p><p>
அத்துடன், இந்த தீர்மானத்தை சைவ சமய மக்கள், இந்து கலாசாரத் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அரச உயர் மட்டத்தினருக்கு தெரியப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.</p><p>

தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அருளாட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகிலாண்டேசுவரர் ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா, திருக்கோணேசுவர ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன், நயினை நாகபூசணி ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2efa0bd1-d23f-44d6-9658-07afd8f7575e/26-6a9da694e8294.webp' /></p><p>
</p><p>
மேலும், சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன், இலண்டன் கனகதுர்க்கை ஆலய அறங்காவலர் மருத்துவர் பரமநாதன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார், அகில இலங்கை சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
</p><p>
கிளிநொச்சி திருநெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம், வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன், சிவ சகோதரர்கள், சிவதொண்டர்கள் மற்றும் சிவமங்கையர் மாவட்ட இணைப்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.</p><h2>முக்கிய தீர்மானம்</h2><p>

இதேவேளை, யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிவகுரு ஆதீனம், சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சங்கம், மலையகத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிவசகோதரர் அமைப்பு, கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம் உள்ளிட்ட நாடளாவிய சைவ அமைப்புகளும், பிராந்திய மற்றும் நாடளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவ சமயிகளின் தலைமையாக ஏற்றுக்கொள்வதற்கான தமது ஆதரவை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36510e65-e682-4dc6-93ad-f72ac9c1e170/26-6a9da695c236f.webp' /></p><p>

அதேபோன்று, கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றமும் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்றுக்கொள்வதற்கான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
</p><p>
இதனிடையே, வெற்றிடமாக உள்ள நல்லை குருமகா சந்நிதானத்தின் அருளாட்சியை ஏற்று வீற்றிருக்குமாறு பல சைவ சமய அமைப்புகளும் நல்லை ஆதீன நம்பிக்கைப் பொறுப்புச்சபையும் தவத்திரு அகத்தியர் அடிகளாரிடம் விண்ணப்பித்திருந்தன.
</p><p>
அந்த விண்ணப்பத்தை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதனை நல்லை ஆதீன நம்பிக்கைப் பொறுப்புச்சபை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சைவ அமைப்புகளின் இணையம் வலியுறுத்தியுள்ளது.</p><h2>&nbsp;சைவ சமய மக்கள்</h2><p>
</p><p>
மேலும், திருக்கோவில்களில் ஆபாசமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கும் அயல் பிரதேச மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதிக ஒலி, ஒளி நிகழ்வுகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
அத்துடன், அனைத்து ஆலயங்களும் சைவ சமய மக்களுக்கு அறப்பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. </p><p>இதற்கு நயினை நாகபூசணி, வவுனியா சிவன், இலண்டன் கனகதுர்க்கை மற்றும் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்கள் முன்னுதாரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6920b2-c8c2-40df-86e7-7c751efff783/26-6a9da69698d46.webp' /></p><p>

மேலும், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட எதிர்கால அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் சைவ சமய மக்களின் அபிலாஷைகளை சட்டரீதியாக அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

திருக்கோணேசுவர ஆலயத்தின் தலைவர் சட்டத்தரணி துசியந்தன் இந்தக் குழுவின் இணைப்பாளராக செயற்படவுள்ளார். </p><p>மூத்த சட்டத்தரணிகளான இரட்ணவேல், ஜெயரூபன், தயாபரன் மற்றும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சைவ சமய விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் உள்ளிட்டோர் குழுவில் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

இறுதியாக, வவுனியா சிவன் கோவிலில் இடம்பெற்ற மகேசுவர பூஜையைத் தொடர்ந்து, பயனுறுதியான கலந்துரையாடல்களுடன் கூட்டம் ஏகமனதான தீர்மானங்களையும் கொள்கைப் பிரகடனத்தையும் நிறைவேற்றி பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:45:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான மற்றும் வேதனைமிக்க பதிலடி கொடுக்கப்படும் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/further-attacks-will-be-more-painful-1788714682"></link>
            <id>https://tamilwin.com/article/further-attacks-will-be-more-painful-1788714682</id>
            <summary type="text">மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் முன்பை விட அதிவேகமான, கடுமையான மற்றும் வேதனைமிக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான், அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் முன்பை விட அதிவேகமான, கடுமையான மற்றும் வேதனைமிக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான், அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>ஈரானியப் பாராளுமன்ற சபாநாயகர் மொஹம்மத் பாகர் காலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>
அமெரிக்காவின் தடைகளால் பொருளாதாரப் பாதிப்புகளைச் சந்தித்து வரும் ஈரான், அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72d55492-99d9-44e4-9ca2-f1789873875d/26-6a9d9ebbb62c4.webp' /></p><p>ஈரானியப் புரட்சிகரக் காவல் படை அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று ஈரானின் 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் தாக்குதல் நடத்தியது.
</p><p>ஈரானுக்கு எதிரான போரில் "விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன" என்பதை அமெரிக்கா தாமதமாவதற்குள் புரிந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p> இனி ஈரானின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் பன்மடங்கு கடுமையான பதிலடி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
</p><p>வடக்கு ஈராக்கின் எர்பில் பகுதியில் அமெரிக்காவின் வான்வழிக் கண்காணிப்பு பலூன் ஒன்றை ஈரானியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90% பங்கு வகிக்கும் முக்கிய மையமான கார்க் தீவு கடந்த மாதங்களில் சுமார் 550 முறை தாக்குதலுக்கு உள்ளானபோதிலும், அதன் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரானிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சின் பாக்னெஜாத் தெரிவித்துள்ளார்.
</p><p>இராணுவப் போருக்கு நிகராக, தற்போது உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே ஈரானின் முக்கியப் போராக மாறியுள்ளதாகச் சபாநாயகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
</p><p>பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T17:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் 21ஆம் நாள் திருவிழா – வேல் விமான உற்சவம் கோலாகலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festiva-1788713852"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festiva-1788713852</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 21ஆம் நாள் திருவிழாவான வேல் விமான உற்சவம் இன்று(...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 21ஆம் நாள் திருவிழாவான வேல் விமான உற்சவம் இன்று(6) ஞாயிற்றுக்கிழமை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றது.
</p><p>
இதன்போது, ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனை தரிசித்தனர்.</p><h2>கலாசார அலுவல்கள் அமைச்சர்</h2><p>
</p><p>
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab4bbfe-d5a8-4ebe-aaad-90cb1e111cbd/26-6a9d9e480d2d4.webp' /></p><p>

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் கலந்துகொண்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:09:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் பொய்யுரைப்பதை நிறுத்தவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-govt-telling-lies-says-marikkar-1788713716"></link>
            <id>https://tamilwin.com/article/npp-govt-telling-lies-says-marikkar-1788713716</id>
            <summary type="text">அரசாங்கம் பொய்யுரைப்பதை இன்னமும் நிறுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் பொய்யுரைப்பதை இன்னமும் நிறுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிக் காலத்தில் 40 வீதமான காலம் பூர்த்தியாகியுள்ளது எனவும், அவர் வழங்கிய வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>அதிவேக நெடுஞ்சாலைகள், மின்சார ரயில் கட்டமைப்பு, மீன் பிடித் தொழிலுக்கு அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய செயலி, கனிய வள அகழ்வு ஆய்வு போன்ற எந்தவொரு திட்டமும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5caa70c0-e8fe-4294-ab1a-c5b902b75f02/26-6a9d9af59da62.webp' /></p><p>
</p><p>பெரிய பேச்சுக்கள் பேசினாலும் நடைமுறையில் அமுல்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் அனைத்து துறைகளும் அழிவுப்பாதையில் செல்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>எனினும் அரசாங்கம் ஒரு விடயத்தை மட்டும் குறைவில்லாமல் செய்வதாகவும் அது பொய்யுரைப்பது எனவும் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>மக்களை ஏமாற்றும் அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் செய்து வருவதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T17:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவிடம், சஜித் எழுப்பியுள்ள கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-questions-about-22nd-ammendment-1788712735"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-questions-about-22nd-ammendment-1788712735</id>
            <summary type="text">20-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவைப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு, 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஏன் தேவையில்லை என்று ஜனாதிபதியிடம் தாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>20-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவைப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு, 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஏன் தேவையில்லை என்று ஜனாதிபதியிடம் தாம் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>
ரத்தொட்ட பகுதியில் நடைபெற்ற கட்சியின் மகளிர் அணிக் கூட்டமொன்றில் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது, அன்றைய அரசாங்கம் 20-ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்த வேளையில் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் எனக் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f454468-e476-454e-b898-575d7c862ea6/26-6a9d972075c7a.webp' /></p><p>
</p><p> ஆனால் இன்று, 22-ஆவது திருத்தத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என அரசாங்கத்தில் உள்ளவர்களே கூறி வருவதாகச் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
நாட்டில் தினமும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுச் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்துள்ள சூழலில், 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதித்து, சட்டத்தின் ஆட்சியை மேலும் சீரழிக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மனிதநேயமற்ற, மனித உரிமைகளை மீறுகின்ற, மக்கள் நலனுக்கு முன்னுரிமை தராத மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பொருட்படுத்தாத ஒரு அரசாங்கமாகும் என சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் தீப்பிடித்த விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-engine-on-fire-qantas-flight-from-queenstown-1788711328"></link>
            <id>https://tamilwin.com/article/the-engine-on-fire-qantas-flight-from-queenstown-1788711328</id>
            <summary type="text">நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த &#039;குவாண்டாஸ்&#039; விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த 'குவாண்டாஸ்' விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன
சிறிது நேரத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தமையால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
</p><p>
வானில் பறந்து கொண்டிருந்தபோதே எஞ்சினிலிருந்து தீப் பிளம்புகள் வெளியேறியதைக்
கண்டு பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

நிலைமையை உடனடியாகச் சீர்செய்த விமானி, விமானத்தை கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான
நிலையத்திற்குத் திருப்பி அனுப்பி, அங்கு அதனைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/VIDEO?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VIDEO</a>: Flames erupted from the engine of a Qantas flight shortly after takeoff from Queenstown on Sept. 5, forcing the Sydney-bound aircraft to divert to Christchurch. Videos of the fiery moment circulated on social media. <a href="https://t.co/6QZ5ObUzNN">pic.twitter.com/6QZ5ObUzNN</a></p>&mdash; Saudi Gazette (@Saudi_Gazette) <a href="https://x.com/Saudi_Gazette/status/2096583345899508060?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி
பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
பறவைகளின் மோதலால் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படும் நிலையில், வானில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த காட்சிகள்
சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறையினர் மேலதிக விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அரசாங்கம் படைத்துள்ள சாதனை: மார் தட்டிக் கொள்ளும் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-says-npp-govt-made-a-record-1788711018"></link>
            <id>https://tamilwin.com/article/anura-says-npp-govt-made-a-record-1788711018</id>
            <summary type="text">இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>இலங்கை வரலாற்றில் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் மட்டுமே இனவாத அடிப்படையிலான பிரச்சினைகள் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>வரலாற்றில் முதல் தடவையாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இனவாத அடிப்படையிலான பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08808ae0-56bf-42bf-b4f7-c58bd6f2050b/26-6a9d906f9d3fb.webp' /></p><p>
கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இனவாதத்தை போஷித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சில அரசாங்கள் சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும் முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கும் ஒரே கணக்கிலிருந்து பணம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ஓரே வங்கிக் கணக்கிலிருந்து சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும், முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கும் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>மக்களை ஒன்றிணைத்து ஆட்சி செய்வதனை தவிர்த்து பிரித்தாளும் ஓர் முறையை கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>இனவாதத்தை தூண்டி, மக்களை நாய்களைக் போன்று கடித்துக் கொள்ளச் செய்த அரசாங்கங்களே கடந்த காலங்களில் ஆட்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்படவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் கிழமைகளில் காத்திருக்கும் அபாயம்! பிணை பெறுவதில் பாரிய சிக்கல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-judgement-1788699794"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-judgement-1788699794</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கும் இலஞ்ச ஊழல் வழக்காக பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த விடயம் ராஜபக்சர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,&nbsp; கிரிஷ் வழக்கில் 70 மில்லியன் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மேலும், இது சம்பந்தமாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் 
பணிப்பாளர் நாயகத்தால் 'பீ' அறிக்கை சமர்ப்பித்தால் அந்த வழக்கும் இதனுடன் சேர்ந்து, நாமலுக்கு பிணையில் செல்லும் அனுமதியில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளின் வருகை</span></p><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் ஒன்று நிகழவுள்ளது.</p><p> உலகின் மிகப்பெரிய இரு விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “எயார்பஸ்” நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து வாக்குமூலம் மற்றும் சாட்சியங்களை வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zS2Cv0mlPKk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மட்டுமே நாமல் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார் என்பதல்ல. நாமலை இதில் தொடர்புபடுத்துவதற்கு பிரதானமாக சான்றுகள் பல சமர்ப்பிக்கப்படவுள்ளன. </p><p>இதன்படி, இலங்கையில் உள்ள மேலும் சில சாட்சியாளர்கள் வாக்குமூலம் வழங்கவுள்ளதாகக் கூறப்படும் வேளையில், அதில், ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு சாரதியும் அடங்கியுள்ளனர்.</p><h2>வெளிச்சத்திற்கு வரும் ஆதாரங்கள்</h2><p> </p><p>எனவே இது நிமலின் வாக்குமூலம் மட்டுமல்ல, எயார்பஸ் நிறுவனத்தின் சாட்சியங்களில் நாமலுடன் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் கலந்துரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற பல விடயங்கள் சேர்க்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cee8cdb-1e8e-4087-8437-a05aee318e2c/26-6a9d6494e913a.webp' /></p><p>நீதிமன்ற தகவல்களின் படி, எயார்பஸ் நிறுவனத்தில் சாட்சியம் அளிப்பது யார் அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.</p><p> அதாவது, ஒரு இலஞ்ச வழக்கில் இலஞ்சம் கொடுத்த தரப்பு தான் இலஞ்சம் கொடுத்ததாகக் கூற வேண்டும்.</p><p>மேலும் அந்த இலஞ்சம் கொடுத்த நபருடன் இந்த குறிப்பிட்ட நபர் எவ்வாறு தொடர்புபடுகிறார் என்பது பற்றிய தெளிவான சான்றுகளையோ அல்லது இலஞ்சம் கொடுத்த தரப்பின் வாக்குமூலத்தையோ சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>தற்போது கூறப்படும் தகவல்களின் படி இதுவரை வெளிப்படுத்தப்படாத பல விடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் வரப்போகும் நாமல்! வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788687758"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788687758</id>
            <summary type="text">எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>நாமலின் மனைவி</h2><p>
</p><p>
இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அந்த அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, இந்த மாதம் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் கூட்டமொன்று அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CWIGW7iZQtY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
குறித்த கூட்டத்தில் நாமல் ராஜபக்ச சிறப்புரையொன்றை ஆற்றவிருந்ததாகவும், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அந்த உரையை ஆற்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதனிடையே, நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக அவரது மனைவி லிமினி ராஜபக்ச அனுராதபுர கூட்டத்தில் கலந்துகொள்வார் என வெளியான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மறுத்துள்ளார்.</p><h2>அரசியல் பழிவாங்கல்</h2><p>அது போலியான தகவல் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் தான் அமைச்சராக இருந்த கடந்த அரசாங்கத்தின் போது, இது போன்ற நிகழ்வு நடந்திருந்தாலும் நான் அதனையும் அனுமதித்திருக்க மாட்டேன். ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec306d82-3523-4653-b84c-36dcef26b87b/26-6a9d3f5975255.webp' /></p><p>
</p><p>
மேலும், அனுராதபுர கூட்டத்தில் நாமலுக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், மகிந்த ராஜபக்ச எந்தவித உரையையும் ஆற்றமாட்டார் என்றும், மக்களோடு மக்களாக இணைந்து கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T15:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் இலங்கைக்கு வறட்சி அபாயம் - 7 மாவட்டங்களில் நீர் விநியோகம் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drought-threat-to-sri-lanka-due-to-el-nino-1788706402"></link>
            <id>https://tamilwin.com/article/drought-threat-to-sri-lanka-due-to-el-nino-1788706402</id>
            <summary type="text">எல் நினோ காரணமாக நாட்டில் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காரணமாக நாட்டில் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் 21.5% ஆகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று(06.09.2026) நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

நீர்மட்டம் குறைவு</h2><p>

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டமும் 25.3% ஆகக் குறைந்துள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியானது, பல மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து கடுமையாகப் பாதித்து வருகின்றது. 

இந்த நிலையில், பொலன்னறுவை மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் மழை பெய்வதால், வறட்சியிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2922fb2-55c0-4233-bbec-99c3a2480d8e/26-6a9d7ed0b7076.webp' /></p><p> </p><p>

இருப்பினும், அந்த பகுதிகளில் பிற்பகலில் சிறிதளவு மழை பெய்தபோதிலும், வரும் வாரத்திலும் கடும் வெப்பம் தொடரும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>

7 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு</h2><p>

இதற்கிடையில், தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியானது தீவின் 7 மாவட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
</p><p>
எல் நினோ சூழலானது, அந்த மாவட்டங்களின் நீர் ஆதாரங்களுக்கும், முக்கியமாக விவசாயத் தொழில்களுக்கும் ஒரு துயரமான நிலையை ஏற்படுத்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e371ab14-af68-4a33-b3fa-a3206b8f3fce/26-6a9d7ed18a535.webp' /></p><p> </p><p>

மொனராகலை மாவட்டத்தில் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட பல சிறிய குளங்கள் ஏற்கனவே முற்றிலுமாக வற்றிவிட்டன.</p><p>

மேலும், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வாக, சியம்பலாண்டுவ பிரதேச சபையும் நீர் வழங்கல் வாரியமும், சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் 48 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள குழாய்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்களிடம் கொழும்பு பேராயர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cardinal-appeals-to-fishing-community-1788704557"></link>
            <id>https://tamilwin.com/article/cardinal-appeals-to-fishing-community-1788704557</id>
            <summary type="text">கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.பேருவலை, பண்டாரவத்தையில் அமைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.</p><p>பேருவலை, பண்டாரவத்தையில் அமைந்துள்ள புனித லாசரஸ் தேவாலயத்தில் இன்று(06.09.2026)&nbsp; நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.</p><h2>கடற்றொழிலாளர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை</h2><p>போதைப்பொருள் கடத்தலுக்குத் தங்களது மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e52c68b4-4952-4883-aa87-166ef15130fe/26-6a9d772e80a92.webp' /></p><p>
</p><p>நாட்டிற்குள் நுழையும் கணிசமான அளவிலான போதைப்பொருட்கள் கடல் வழியாக, மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தியே கொண்டு வரப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
போதைப்பொருள் பழக்கம் நாட்டின் இளைஞர்களின் வாழ்க்கையை முற்றிலும் சீரழிப்பதுடன், அவர்களின் குடும்பங்களுக்கும் மீள முடியாத கடுமையான பாதிப்புகளையும் துயரங்களையும் ஏற்படுத்தி வருவதாக அவர் கவலையுடன் எச்சரித்துள்ளார்.
</p><p>தங்களது படகுகள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதற்கு மீனவ சமூகம் எவ்விதத்திலும் துணைபோகவோ வசதி செய்து கொடுக்கவோ வேண்டாம் என தாம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறுமையிலும் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் - பதக்கம் அணிவித்து கௌரவித்த தருணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-achieves-good-results-in-mullaitivu-1788699866"></link>
            <id>https://tamilwin.com/article/student-achieves-good-results-in-mullaitivu-1788699866</id>
            <summary type="text">“எதிர்காலத்தில் பொறியியலாளராக வருவதே தனது இலட்சியம்” என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 166 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>“எதிர்காலத்தில் பொறியியலாளராக வருவதே தனது இலட்சியம்” என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 166 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் மகேந்திரன் மாருதியன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 4ஆம் திகதி வெளியாகியிருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, தமது கல்விப் பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.
</p><h2>
தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேறுகள்</h2><p>
இந்நிலையில், நாளை நாடளாவிய ரீதியில் புதிய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கோம்பாவில் திம்பிலி கிராமத்தில் வசித்து வரும் மாணவன் மகேந்திரன் மாருதியன், வறுமையான சூழலிலும் விடாமுயற்சியுடன் கல்வியில் கவனம் செலுத்தி சிறப்பான பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d75601c-5bf6-4502-92b8-0d8d83205518/26-6a9d6dfc8acee.webp' /></p><p>
</p><p>
மாணவனின் சாதனையைப் பாராட்டும் வகையில், புதுக்குடியிருப்பில் இயங்கி வரும் அறிவொளி புத்தகசாலையின் இயக்குநர் இன்று (06.09.2026) மாணவனின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு பதக்கம் அணிவித்து, பரிசுப் பொருட்களையும் வழங்கி கௌரவித்துள்ளார்.</p><h2>

மாணவனின் இலட்சியம்</h2><p>

தனது எதிர்கால இலட்சியம் தொடர்பில் மாணவன் மகேந்திரன் மாருதியன் கருத்துத் தெரிவிக்கையில்,

“எதிர்காலத்தில் பொறியியலாளராக வர வேண்டும் என்பதே எனது இலட்சியம்” எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59fe6f3-2be0-4ca9-af3d-917eb6e8cd22/26-6a9d6dfda4a30.webp' /></p><p>
</p><p>
கிராமப்புறச் சூழலில் இருந்து கல்வியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று, மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ள இம்மாணவனின் சாதனை, ஏனைய மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.</p><p>

இவ்வாறான திறமையான மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு சமூகத்தினர், நலன்விரும்பிகள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் பல சிறந்த கல்விமான்களையும் தொழில்சார் நிபுணர்களையும் உருவாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T13:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திரைமறைவில் களமிறங்கும் மகிந்த! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-takes-to-the-stage-in-anuradhapura-1788677676"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-takes-to-the-stage-in-anuradhapura-1788677676</id>
            <summary type="text">&amp;nbsp;அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய&nbsp; இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ச&nbsp; (04) திகதி கைது செய்யப்பட்டார்.
</p><h2>12 ஆம் திகதி பேரணி நிச்சயமாக நடைபெறும்&nbsp;</h2><p>
இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc229498-1916-4a01-ba11-2a8a88d7e348/26-6a9d3b149f880.webp' /></p><p>
</p><p>
இந்த பின்னணியில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாபெரும் பேரணியில் நாமல் ராஜபக்சவின் வெற்றிடத்தை ஈடுசெய்ய மகிந்த ராஜபக்ச அநுராதபுரத்திற்கு வருகை தருவார் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி 12 ஆம் திகதி நிச்சயமாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

பிரதான மேடைக்கு சென்று மக்களிடையே உரையாற்றுவதற்கு பதிலாக, மேடைக்கு முன்பாகவோ அல்லது மற்றொரு தளத்திலோ இருந்து பேரணியில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T12:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு பணம் குறித்து சிஐடியின் அதிரடி நடவடிக்கை.. ஜனாதிபதி இன்று வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-stopped-dollars-flowing-black-economy-anura-1788697354"></link>
            <id>https://tamilwin.com/article/govt-stopped-dollars-flowing-black-economy-anura-1788697354</id>
            <summary type="text">கறுப்பு பொருளாதாரம் மூலம் சட்டவிரோதமாக டொலர்கள் வெளியேறுவதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சுங்கத்திணைக்களத்தின் நடவடிக்கைகள் மூலம் அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு பொருளாதாரம் மூலம் சட்டவிரோதமாக டொலர்கள் வெளியேறுவதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சுங்கத்திணைக்களத்தின் நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
</p><p>மேலும், நாட்டின் வருடாந்த தேயிலை ஏற்றுமதி வருவாய்க்கு சமமான சுமார் 1 பில்லியன் டொலர் தொகையானது சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டிருந்ததாகக் கூறினார். </p><p>சட்டவிரோத வழிகள் மூலம் டொலர்கள் வெளியேறுவதைத் தடுக்க CID மற்றும் சுங்கத் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திறைசேரிக்கு வர வேண்டிய ஒவ்வொரு சதமும் முறையாக வந்து சேர்வதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>நிதி ஒதுக்கீடு&nbsp;</h2><p>
</p><p>
முறைகேடான பொருளாதாரத்தை முடக்கியதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 16.7 வீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத சாதனையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.[<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A6qZIoUMNZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p> </p><p>மேலும், செலவினங்களைக் கட்டுப்படுத்தி வருவாயை அதிகரித்ததன் மூலம் 1957 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
அடுத்த ஆண்டு மூலதனச் செலவினங்களுக்காக வரலாற்றுச் சாதனையாக 2 டிரில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்ட அளவிலான அபிவிருத்திப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T12:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தினசரி மின்சாரத் தேவையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/daily-electricity-demand-drops-1788695121"></link>
            <id>https://tamilwin.com/article/daily-electricity-demand-drops-1788695121</id>
            <summary type="text">தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. </p><p>

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய அறிக்கையொன்றின் மூலம் இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.</p><h2>மின்சாரத் தேவை</h2><p>

இதற்கமைய, ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மின்சாரத் தேவை 2947 மெகாவோட்டாகக் காணப்பட்டதுடன், அது செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 2936 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளது. </p><p>

அதேமாதம் இரண்டாம் திகதி அந்த பெறுமதி 2934 மெகாவோட்டாக பதிவாகியிருந்தது. செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி தினசரி மின்சாரத் தேவை 2920 மெகாவோட்டாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08c2e722-abab-476a-9ef8-0aaa8a76bca4/26-6a9d5b3a7edc0.webp' /></p><h2>மின்சார உற்பத்தி</h2><p> </p><p>

அத்துடன், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. </p><p>

அது செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரம் வரை உயர்வடைந்துள்ளது. </p><p>

எனினும், செப்டெம்பர் மாதம் 2 மற்றும் 3ஆகிய திகதிகளில் முறையே 58.34 மற்றும் 58.08 கிகாவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T12:24:21+00:00</updated>
        </entry>
    </feed>
