<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-04T05:22:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114"></link>
            <id>https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114</id>
            <summary type="text">சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (4) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:52:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு கடுமையாகப் பாதிப்பு! நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-electricity-system-movement-warns-1788496802"></link>
            <id>https://tamilwin.com/article/national-electricity-system-movement-warns-1788496802</id>
            <summary type="text">தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. 

அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. </p><p>

அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பில் மேலும்,

பட்டங்கள் மற்றும் நூல்கள் உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கியதன் காரணமாக பல மின் பாதைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளன.</p><h2>கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>

அத்துடன், இது தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddbbf00e-cda1-427e-8981-75fd7fdf3dcd/26-6a9a4dff357aa.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அவசரகால நடவடிக்கையாக சில மின் விநியோகப் பாதைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட வேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குப் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டை பெற வரிசையில் காத்திருந்த முக்கியஸ்தர்! அதிகாரிகள் தொடர்பில் வெளியிட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-ambassador-mahinda-queues-passport-1788495909"></link>
            <id>https://tamilwin.com/article/former-ambassador-mahinda-queues-passport-1788495909</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதர் மஹிந்த சமரசிங்க பாராட்டியுள்ளார்.

சமூக வலைத்தள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதர் மஹிந்த சமரசிங்க பாராட்டியுள்ளார்.</p><p>

சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினையிட்டு அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,</p><h2>பாராட்டு</h2><p>
அண்மையில் இலங்கை கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சென்றிருந்தேன். அங்கு பணியாற்றிய அனைத்து அதிகாரிகளும் மிகவும் உதவிகரமாகவும் திறமையாகவும் செயற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/815bf8be-2cd3-4845-9426-1de037153dc3/26-6a9a4c41a065f.webp' />&nbsp;</p><p> </p><p>

எனவே அனைவருக்கும் தனது நன்றியை சமூக ஊடகப்பதிவின் மூலம் வெளிப்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T04:43:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பள அதிகரிப்பு! நாட்டை விட்டு வெளியேறும் அரச ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employees-leaving-the-country-1788494836"></link>
            <id>https://tamilwin.com/article/government-employees-leaving-the-country-1788494836</id>
            <summary type="text">

உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைச் சரியாகப் பராமரிப்பதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 50 முதல் 70 ரூபா வரை குறைப்பதற்கான சாத்தியங்கள் இருந்தும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது.</p><h2>உரிய சம்பள அதிகரிப்பு இல்லை</h2><p> </p><p>

பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன் காரணமாக, பொதுமக்கள் இரட்டைச் சுமைகளுக்குள் உள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6e52409-7a13-4288-8d0d-5335f9c2d3e9/26-6a9a4baf5b6ea.webp' /></p><p>

மேலும், உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமையினால், வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றனர். </p><p>

இவ்வாறான பல்வேறு நெருக்கடி நிலைகளைப் பொருட்படுத்தாமல், அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன் அவர்களது சம்பளத்தையும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது ஏன் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-04T04:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல்! குவிந்துள்ள ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்புசற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp;</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T04:07:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-oil-and-naphtha-prices-change-1788492118"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-oil-and-naphtha-prices-change-1788492118</id>
            <summary type="text">எரிபொருள் எண்ணெய் (Fuel Oil) மற்றும் நாஃப்தாவின் (Naphtha) விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (04) நள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் எண்ணெய் (Fuel Oil) மற்றும் நாஃப்தாவின் (Naphtha) விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.</p><h2>விலை விபரம்</h2><p>
</p><p>
அதன்படி, ஒரு லீற்றர் நாஃப்தாவின் விலை 210 ரூபாயிலிருந்து 35 ரூபாய் குறைக்கப்பட்டு 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df023be-7004-4922-bc45-1220ae4484d3/26-6a9a3d9b6dade.webp' /></p><p>

மேலும், ஒரு லீற்றர் எரிபொருள் எண்ணெயின் விலையை 248 ரூபாயிலிருந்து 38 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை ,210 ரூபாயாக நிர்ணயிக்கவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:48:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனின் கொடூர செயல் - கர்ப்பிணிப்பெண் குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-wife-and-baby-1788486637"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-wife-and-baby-1788486637</id>
            <summary type="text">புத்தளம் கல்பிட்டி, எஸ்.பி.ஆர்.வத்தை, தலவில பகுதியில் கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். 

இரண்டு பிள்ளைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் கல்பிட்டி, எஸ்.பி.ஆர்.வத்தை, தலவில பகுதியில் கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். </p><p>

இரண்டு பிள்ளைகளின் தாயான கர்ப்பிணிப் பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பொலிஸாரின் அவசர தொலைபேசி சேவையான 119 இற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், உடனடியாக செயற்பட்ட கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.</p><p> </p><h2><b>

கர்ப்பிணிப்பெண் குத்திக் கொலை </b></h2><p>45 நிமிடங்களுக்குள் துரத்திச் சென்று சந்தேக நபரையும் குற்றத்திற்கு பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55acc1bb-8c19-4f11-a391-5d0218e60078/26-6a9a33b7d0e6e.webp' /></p><p>இவ்வாறு உயிரிழந்தவர் களாப்பள்ளி, தலவில முகவரியை சேர்ந்ததிலினி தில்ருக்ஷி என்ற 26 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T02:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரிப்பு: இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-import-amount-hiked-1788488532"></link>
            <id>https://tamilwin.com/article/oil-import-amount-hiked-1788488532</id>
            <summary type="text">நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
</p><p>2025 ஆம் ஆண்டின் ஜனவரி - ஜூலை காலத்தில் 2,265.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த எரிபொருள் இறக்குமதி செலவு, 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 3,621.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.</p><h2>கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு</h2><p>
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்தமையே இந்த உயர்வுக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae63d40f-0e27-4bfd-baac-7f0baa76847e/26-6a9a2b55bbf38.webp' /></p><p>
</p><p>2026 ஜூன் மாதத்தில் 465 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான மாதாந்த எரிபொருள் இறக்குமதி செலவு, ஜூலை மாதத்தில் 453 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்றே குறைந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு - பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217"></link>
            <id>https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
துப்பாக்கி சூடு</b></h2><p>துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e0266b-93c9-4a97-a0c7-a527bd40c2f2/26-6a9a1deda8785.webp' /></p><p>இந்தத் துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட காரணத்திற்காக நடத்தப்பட்டதாகவும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து கொழும்புப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடிக்குள் சிக்கவேண்டாம்! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warn-public-fake-traffic-fine-payment-1788486106"></link>
            <id>https://tamilwin.com/article/police-warn-public-fake-traffic-fine-payment-1788486106</id>
            <summary type="text">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு கோரும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.

போக்குவரத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு கோரும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.
</p><p>
போக்குவரத்து பொலிஸார் தரப்பிலிருந்து அழைப்பதாக கூறி மோசடியாளர்கள் இந்த மோசடியை மேற்கொள்வதாக தெரிவிக்கபடப்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் (Traffic Control and Road Safety Range) பொறுப்பதிகாரி டி.ஐ.ஜி. செனதீர விளக்கமளிக்கையில்,</p><h2>போக்குவரத்து விதிமீறல்கள்</h2><p>

பெறுநர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும் கூறி செய்திகள் பரப்பப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad810053-6dbf-4ad6-952a-7a64e15f575c/26-6a9a29aeeb448.webp' /></p><p>
</p><p>
சில நாட்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால் அபராதம் அதிகரிக்கும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அச்சுறுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

இதன்பின்னர், பெறுநர்கள் மோசடி இணையதளங்களுக்கு வழிநடத்தப்பட்டு, அங்கு அவர்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகின்றார்கள்.
</p><p>
இதுபோன்ற இணைப்புகள் மூலம் மக்கள் தங்கள் வங்கி விவரங்களை உள்ளிட்டு, பின்னர் தங்கள் கணக்குகளிலிருந்து பணத்தை இழந்ததாக பொலிஸார்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
</p><p>
போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக வாகன சாரதிகளை இணையதளங்களுக்கு வழிநடத்தும் நடவடிக்கையை இலங்கை போக்குவரத்து பொலிஸார் அனுப்புவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அபராதங்களை செலுத்துவதற்கான&nbsp;ஒரே இணையவழி வழிமுறை</h2><p>
</p><p>
போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு தற்போது கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒரே இணையவழி வழிமுறை GovPay ஆகும்.
</p><p>
இதில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஒரு பொலிஸ் அதிகாரியால் வழங்கப்படும் தகவல்களை பயன்படுத்தி பணம் செலுத்தப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f25b7cfa-55d0-4bde-84b2-74e4f7beddfc/26-6a9a29afa6c82.webp' />&nbsp;</p><p>

"இலங்கை போக்குவரத்து பொலிஸ் துறையினால் அனுப்பப்படும் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்குத் தனி இணையதளம் எதுவும் இல்லை.

எனவே சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், வங்கி மற்றும் பிற இரகசியத் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த மோசடிக்கு பலியானவர்கள், விசாரணைக்காகத் தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
போக்குவரத்து அபராதங்கள் எனக்கூறப்படும் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறு கோரும் அழைப்புகளை புறக்கணிக்குமாறு பொலிஸார் வாகன சாரதிகளை வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இருவர் அபுதாபியிலிருந்து நாடு கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-deportees-abu-dhabi-brought-back-to-sri-lanka-1788484985"></link>
            <id>https://tamilwin.com/article/two-deportees-abu-dhabi-brought-back-to-sri-lanka-1788484985</id>
            <summary type="text">இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.நேற்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்துள்ளனர்.</p><h2>கையடக்க தொலைபேசிகளில் சிக்கிய காணொளி</h2><p>
</p><p>இரு சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்தபோது, ஈரான் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான காணொளிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee6cc27-157a-4ca9-9b51-28575b4aadaa/26-6a9a2100af27c.webp' />&nbsp;</p><p>
</p><p>
நாடு கடத்தப்பட்ட இரு சந்தேகநபர்களும் 36 மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இவர்களிடம் மேலதிக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T01:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மனைவிக்கு நபர் செய்த மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-husband-arrested-for-leaking-photos-1788485292"></link>
            <id>https://tamilwin.com/article/ex-husband-arrested-for-leaking-photos-1788485292</id>
            <summary type="text">கண்டியில் பெண்ணொருவரின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டியில் பெண்ணொருவரின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் கண்டி உப அலுவலக அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபர் நேற்று கினிகத்தேனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>பொலிஸார்&nbsp;விசாரணை</b></h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்தவராகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab3170e6-20d8-49c4-b286-50da127f0b10/26-6a9a2de145503.webp' /></p><p>சந்தேகநபர் முறைப்பாட்டாளருடன் திருமணம் செய்திருந்தார். எனினும் சட்டப்பூர்வமாக பிரிந்திருந்த நிலையில் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T01:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் இளைஞர்கள் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் முன்னிலையான பெண் சட்டத்தரணிக்கு அரசினால் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyer-achala-seneviratne-attorney-general-1788483145"></link>
            <id>https://tamilwin.com/article/lawyer-achala-seneviratne-attorney-general-1788483145</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இந்த அரசாங்கத்திலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவரைச் சிறையில் அடைத்து, பல்வேறு துன்புறுத்தல்களைச் செய்வதற்கான தீட்டப்பட்ட திட்டம் ஒன்று கசிந்துள்ளது.</p><p>
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவறுகள் குறித்து துணிச்சலாக நேருக்கு நேர் பேச கூடிய ஒரு பெண் தான் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன.</p><p>அவருக்கு எதிராக அவரை பாதுகாக்க வேண்டிய தரப்பே செயற்பட முற்படுகிறது. 
சூழ்ச்சிக்கு மேல் சூழ்ச்சி செய்கிறார்கள், ஒரு புறம் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த, மறுபுறம் மக்களைக் கடும் விரக்திக்கு உள்ளாக்க. இதுவும் ஒரு வகையான 'டீப் ஸ்டேட்' (Deep State)ஆக இருக்கலாம். </p><h2>
</h2><p></p><h2>பழிவாங்க காத்திருக்கும் குழுக்கள்</h2><p>“டீப் ஸ்டேட்” என்பது அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சிகளில் மட்டும் இயங்குவதில்லை. இவை பல்வேறு அரச நிறுவனங்களுக்குள், நீதிமன்றங்களுக்குள், பொலிஸ் திணைக்களத்திற்குள், சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் என எந்தவொரு அரச நிறுவனத்திற்குள்ளும் இயங்க முடியும்.
</p><p>கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலைசெய்த வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணவர்தன போன்றவர்களைச் சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்தது.</p><p>ரவீந்திர விஜேகுணவர்தனவிற்குத் தூதுவர் பதவி வழங்கி, மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்திருந்த போது, கடந்த காலங்களில் அச்சலா தனது வழக்கில் ரவீந்திர விஜேகுணவர்தனவை ஒரு சந்தேக நபராகப் பெயரிடுமாறு கோரினார்.
</p><p>அவர் இன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராகப் பேசி, எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததன் விளைவாக,இன்று கடும் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689e707e-e749-49c6-b75a-632fdf092428/26-6a9a164b0c1f9.webp' /></p><p>இன்று அவரைச் சுற்றி வளைத்து, தாக்கத் தொடங்கியுள்ளார்கள். ஏனெனில் சமூக நீதி மற்றும் சட்டத்தைப் பற்றி அவர் பேசுவதால்.அவர் யாருடைய பணத்திற்கும் சோரம் போகாத ஒரு பெண்மணி. </p><p>
கோட்டாபய காலத்தில் எந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்த ஒரு பெண் சட்டத்தரணி.உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் வாழ்க்கையைக் கழித்த ஓர் இரும்புப் பெண்மணி. இன்று என்ன நடந்துள்ளது? அதை விட இன்று மோசமாகியுள்ளது. </p><p>தொழில்ரீதியாக அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பல்வேறு குழுக்களைப் பயன்படுத்தி, முக்கியமாக அதற்கு ஏற்ற சில பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகவும் கேவலமான முறையில் தாக்குதலுக்கு மேல் தாக்குதல் நடத்த, வழக்குகளில் சிக்க வைக்கக் கடுமையான முயற்சி நடக்கிறது.&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You May Like THis Video..<br></i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jnKI70IglD4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T00:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவிற்கு எதிராக கருணாவின் வாக்குமூலம்: நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241</id>
            <summary type="text">தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>திடுக்கிடும் தகவல்கள்</h2><p>

உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஓருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) சிஐடியினருக்கு வழங்கிய மிக உணர்வுபூர்வமான வாக்குமூலத்தின் விபரங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0707941-ee83-4b2a-92aa-c5d979e04cfe/26-6a99b11aacf4d.webp' /></p><p>
</p><p>
அதில், சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இல்லாத நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாகக் காட்டிப் பாரிய நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
</p><p>
கருணா&nbsp; லண்டனுக்குச் செல்வதற்காகச் சிங்களப் பெயர் கொண்ட போலி கடவுச்சீட்டையும், அதற்கான விசா வசதிகளையும் சுரேஷ் சலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 கருணா லண்டன் சென்றடைந்த பின்னர், சுரேஷ் சலேயும் அங்கு சென்று, கருணாவின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், லண்டன் பொலிஸாருக்குக் கருணாவின் போலி கடவுச்சீட்டு விபரங்களை வழங்கி, அவரை அங்கு கைது செய்து சிறையிலடைக்க சுரேஷ் சலே திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருணா&nbsp; தனது வாக்குமூலத்தின் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>கருணாவின் வாக்குமூலம்</h2><p>
</p><p>
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் சட்டமா அதிபர் திணைக்களம்; நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 5 ஆம் திகதி முதல் அவர் உணவை உட்கொள்ள மறுத்து, தனது உடல்நிலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுபோயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd5863b-091f-456f-b846-d4c339dc4875/26-6a9a16233d8ab.webp' /></p><p>
</p><p>
தற்போது விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை, மேலும் அங்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், சுரேஷ் சலே தனது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளின் கடவுச்சொற்களை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தடுப்புக் காவல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சலே தொடர்பில் கருணா அம்மான் நீதிமன்றில் குற்றம் சுமத்தியதாக சிங்கள இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருணா தரப்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MGfXDBgbP70" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-04T00:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று கைது செய்யப்படுவாரா நாமல்..! பாதுகாப்புக்காக கொழும்பில் கூடப்போகும் ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

 இதேவேளை, நாமல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

 இதேவேளை, நாமல் ராஜபக்ச
தனக்கு எதிராக 12-ஆம் திகதிக்கு முன்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இலங்கை விமான சேவை தொடர்பான மோசடி அல்லது அவுஸ்திரேலிய ஊடகமொன்று வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் (அம்பாந்தோட்டை வைத்தியசாலை திட்டம்) தொடர்பாக விசாரணைகளுக்காக இவர் அழைக்கப்பட்டிருக்கலாம்&nbsp; என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகும்போது பதற்றமான சூழல் நிலவக்கூடும் என்றும், அவருடைய ஆதரவாளர்கள் கொழும்பில் கூடத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அவுஸ்திரேலிய ஊடகத்தின் Four Corners ஆவணப்படத்தில், அம்பாந்தோட்டை வைத்தியசாலை கட்டுமானத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

 இதில் பல மில்லியன் டொலர் பணப்பரிமாற்றங்கள் முறையற்ற வகையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p>

 நிமல் பெரேரா (Nimal Perera) என்பவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாயைப் பெற்ற விவகாரம் தொடர்பாக நாமல் ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.</p><p> ரக்பி போட்டித் தொடரை நடத்துவதற்காக இந்தப் பணம் பெறப்பட்டதாக அவர் கூறினாலும், அதில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>&nbsp;கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்துள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்ச இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருவதுடன், இவை அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றும் கூறி வருகிறார்.</p><p>

இன்று(4) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகவுள்ள சூழலில், இவை மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tmeEO-Dq2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவனின் உயிரைப் பறித்த நாவற்பழம் - மட்டக்களப்பில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dies-eating-suspected-venom-tainted-fruit-1788481574"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dies-eating-suspected-venom-tainted-fruit-1788481574</id>
            <summary type="text">நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>11 வயது
சிறுவன்</h2><p>
</p><p>
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த, 37ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி பயின்று வந்த ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15fe789e-d689-42a0-b497-3350e173fcf8/26-6a9a1296dcb04.webp' /></p><p>

சம்பவ தினமான நேற்று மாலை, சிறுவனின் வீட்டிற்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த நாவற்பழம் ஒன்றை சிறுவன் எடுத்து உண்டுள்ளார்.
</p><p>
இதனையடுத்து சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><h2>ஆரம்பகட்ட விசாரணைகள்</h2><p>
</p><p>
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நிலத்தில் கிடந்த நாவற்பழத்தின் மீது பாம்பின் விஷம் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c380020e-4cea-4b28-b24f-37cbca7ec364/26-6a9a1297b44ee.webp' /></p><p>
</p><p>
சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்: தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய துல்லியமான தகவல்கள்!அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்... -]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>நேற்று முன்தினம் இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.</p><h2>
</h2><p></p><h2>தகவல் சேகரிக்கும் புலனாய்வு அதிகாரி</h2><p>இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். </p><p>இந்தியாவின் சிறப்புப் பொலிஸ் பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் "பிரதீப்" எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும். </p><p>இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார். 
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார். </p><p>அவரை நாம் "சார்லஸ்" எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.
</p><p>சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக பொலிஸின் சிறப்புப் பிரிவான 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. </p><p>
சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.
</p><h2>இந்தியாவில் இருந்து வந்து முதல் தகவல்</h2><p>2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.
</p><p>சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள், </p><p>குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.
</p><p>இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய 'Q' பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b2b0ab-d818-42dc-a5e5-70a05eb47d73/26-6a9a0dc927dbc.webp' /></p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார். </p><p>அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. 
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது, </p><p>மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், </p><p>அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "பலமிக்க அரசியல்வாதி ஒருவர்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).
</p><h2>வவுணதீவு சம்பவத்தின் உண்மைத் தன்மை</h2><p>2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார். </p><p>"நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?" என வினவுகிறார். அதற்கு, "தமிழக 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்; </p><p>இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்" எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO - Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.</p><p>அதற்கு சி.ஓ., "இது குறித்து மேலும் ஆராயுங்கள்" எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29894d6f-036d-4834-9f36-2639d5a65830/26-6a9a0dc9e0815.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில் 
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி, </p><p>"இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. 
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார். </p><p>கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், "இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் பொலிஸாரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள். </p><p>இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.
</p><h2>குண்டு வெடிப்பின் பின்னர்</h2><p>குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் "உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்" எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது. </p><p>ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலத்தமடு - மாதவனை பகுதியில் கண்டனப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-the-mayilathamadu-madhavan-area-1788467670"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-the-mayilathamadu-madhavan-area-1788467670</id>
            <summary type="text">மயிலத்தமடு - மாதவனை பகுதியில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள்
முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மயிலத்தமடு - மாதவனை பகுதியில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள்
முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்து செங்கலடி பிரதேச செயலகத்திற்கு
முன்பாக போராட்டம் ஒன்று&nbsp; முன்னெடுக்கப்பட்டது.</p><p>இந்தப் போராட்டமானது நேற்றைய தினம்(03.09.2026) நடைபெற்றுள்ளது.</p><h2>ஆராயப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>நேற்று ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவிருந்த
நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கூட்டமானது தேசிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் அரச மற்றும்
அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cadc2069-032b-4947-b2b4-cb07ad92db99/26-6a99fc4d68445.webp' /></p><p>கல்வி, சுகாதாரம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாக
இங்கு ஆராயப்பட்டுள்ளதுடன் குறிப்பாக ஏறாவூபற்று பிரதேச எல்லைக்குள் இடம்பெறும் சட்ட விரோத மணல்
அகழ்வு தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் ஏறாவூர் நகர சபையால் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் விலங்கு கழிவுகளினால் மக்கள் பாதிப்படைகிற விடயம்
தொடர்பாகவும், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் முன்வைத்த
பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும் எதிர்வரும் மாரி மழைக்காலத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும்
அசௌகரியங்களுக்கான முன் ஏற்பாடுகள் மற்றும் கஷ்டப் பிரதேசங்களுக்குச் செல்லும்
அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை
சீரமைப்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள்
வழங்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் மாயமான குடு சலிந்துவின் வழக்கு ஆவணங்கள் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kudu-salindu-s-missing-case-files-1788479887"></link>
            <id>https://tamilwin.com/article/kudu-salindu-s-missing-case-files-1788479887</id>
            <summary type="text">“குடு சலிந்து” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சலிந்து மல்ஷித குணரத்னேவுக்கு எதிராக பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>“குடு சலிந்து” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சலிந்து மல்ஷித குணரத்னேவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரு தனித்தனி வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்ரப ஏற்படுத்தியது.</p><p>

இந்த விடயம் தொடர்பில், நீதிமன்ற ஊழியர்கள் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>காணாமல் போன வழக்கு ஆவணங்கள்</h2><p>
</p><p>
இவர்களுள் ஏழு பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>

காணாமல் போன வழக்கு ஆவணங்கள் தொடர்பில் பாணந்துறை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கடந்த செப்டெம்பர் 1ஆம் திகதி பாணந்துறை தெற்கு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6f50ed-4a05-4038-adda-a276ac32166d/26-6a9a0b9a7b987.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கை மூலம் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் பாணந்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
காணாமல் போன ஆவணங்களில், குடு சலிந்துவின் உத்தரவின் பேரில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்களும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கின் ஆவணங்களும் அடங்குகின்றன.
</p><p>
கடந்த ஒகஸ்ட் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் மொஷன் மூலம் அழைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பான அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கண்டுபிடிக்க முடியாததால், அந்த வழக்கு ஒகஸ்ட் 31ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுவதற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.</p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>

இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த வழக்கு ஆவணங்கள் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.
</p><p>
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில், குறித்த ஆவணங்கள் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அலுவலக உதவியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவை ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec3344c5-9e62-497c-91c3-e2855a4c0383/26-6a9a0b9b2fe93.webp' /></p><p>
</p><p>
எனினும், பின்னர் அந்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமரா காட்சிகளையும் எதிர்காலத்தில் பொலிஸார் பரிசோதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You May Like This Video..</i></b></p><p><br></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jnKI70IglD4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T00:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி – கிளிநொச்சியில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-young-man-died-after-colliding-with-a-tree-1788461516"></link>
            <id>https://tamilwin.com/article/a-young-man-died-after-colliding-with-a-tree-1788461516</id>
            <summary type="text">கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பனை மரத்துடன் மோதுண்டதால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பனை மரத்துடன் மோதுண்டதால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவமானது நேற்று(03.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><h2>22 வயது இளைஞன் உயிரிழப்பு</h2><p>அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக
கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதுண்ட
நிலையில் படுகாயம் அடைந்து இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dae6db87-bc47-4bb3-88fc-81b7cbabe9a2/26-6a99c44ef2513.webp' /></p><p>இவ்வாறு உயிரிழந்தவர் கிளிநொச்சி -&nbsp;உதய நகர் பகுதியைச் சேர்ந்த புஷ்பராசா சமர்நிலவன் எனும் 22
வயதுடைய இளைஞன் என அடையாளங்காணப்பட்டுள்ளது.</p><p>உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத
பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T23:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vadamaratchi-east-coordination-meeting-debate-1788457653"></link>
            <id>https://tamilwin.com/article/vadamaratchi-east-coordination-meeting-debate-1788457653</id>
            <summary type="text">வடமராட்சி - கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன்
ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் வடமராட்சி கிழக்கு
பிரதேச செயலக மாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமராட்சி - கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன்
ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் வடமராட்சி கிழக்கு
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>இந்தக் கூட்டமானது இன்று(03.09.2026) காலை 9:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><h2>பிரதேச அபிவிருத்தி</h2><p>
</p><p>இதன்போது றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், நாட்டின் வருமானதிற்கு
சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.</p><p>அதற்கு நியாயமற்ற எதிர்ப்புக்களும் பொய் பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. வெற்றிலை கேணி கடற்கரையை ஒரு நீல கடற்கரையாக மாற்ற
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b056de1c-fc89-48a0-9412-f875d6b8a833/26-6a9a08d11405b.webp' /></p><p>அத்துடன் பிரதேச அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல விடயங்கள் நடந்தால் நான் ஏற்றுக் கொள்வேன். எதிரான
விடயங்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.</p><p>மக்களிற்கு கிடைக்க வேண்டிய
நன்மைகளை யாரும் தடுக்க கூடாது. மக்களின் நலன்கள் சார்ந்தே முடிவுகள்
எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட வேண்டிய வீதிகள், மற்றும்
செயற்றிட்டங்களுக்கான அனுமதிகள், வழங்கப்பட்டுள்ளன.</p><h2>மக்கள் எதிர்ப்பு&nbsp;</h2><p>
</p><p>இந்திய நிறுவனம் ஒன்றிற்கு முதலீட்டுக்காக ஆழியவழையில் காணி வழங்குவதற்கு
சபையில் அனுமதி கோரப்பட்டிருந்தது.</p><p>அதனையடுத்து ஆழியவழையில் இடம் பொருத்தமில்லாத நிலையில் உள்ளதாலும், ஆழியவழை,
வெற்றிலைக்கேணி ஆகிய பகுதி மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கும் என்ற காரணத்தையும் முன்வைத்து மக்கள் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac51c317-51fe-4556-9c28-4d212dd90b82/26-6a9a08d1d4825.webp' /></p><p>பின்னர் குறித்த இந்திய முதலீட்டு திட்டத்திற்கு ஆழியவழையில்
 காணி வளங்குவதில்லை என்றும் அதனை நாகர்கோவில் கிராமத்திற்கு மாற்றுவது என்றும்
தீர்மானிகப்பட்டுள்ளது.</p><p>மேலும் அவசர வெளியேற்ற பாதைகள் புனரமைப்பை துரிதப்படுத்துதல், டித்வா புயலால்
பாதிக்கபட்ட வீதிகளை புனரமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் வனஜீவராஜிகள் திணைக்களத்தால்
அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கும் மக்களின் கோரிக்கைகள் தொடர்பி்ல் வன ஜீவராஜிகளின் திணைக்களத்தின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T23:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சுங்கவரியை குறைக்க உதவிய இலங்கையின் முக்கிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-tax-cuts-reason-is-forced-labor-abolition-plan-1788464938"></link>
            <id>https://tamilwin.com/article/us-tax-cuts-reason-is-forced-labor-abolition-plan-1788464938</id>
            <summary type="text">இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க சுங்கவரியை குறைக்க கட்டாய உழைப்பு
ஒழிப்புத் திட்டமே உதவியதாக விவசாய பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க
தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க சுங்கவரியை குறைக்க கட்டாய உழைப்பு
ஒழிப்புத் திட்டமே உதவியதாக விவசாய பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க
தெரிவித்துள்ளார்.

​</p><p>இலங்கையில் கட்டாய உழைப்பை ஒழிக்கும் திட்டம் காரணமாக, இலங்கை ஏற்றுமதிகள்
மீதான அமெரிக்க வரிகள் 12.5% இலிருந்து 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஐ.நாவின் அபிவிருத்தி இலக்கு</h2><p>
இந்த நிலையில் ​ நாட்டின் சில தோட்டப் பகுதிகளில் இன்னமும் கட்டாய உழைப்பு
பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், அதை முழுமையாக ஒழிக்க
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

​அத்துடன் 2030ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி
வருமானத்தை அடைவதையும், ஐ.நா-வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதையும்
இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

​</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc9436b6-5011-4094-8ee7-d61a1cf042de/26-6a99d369c6b9f.webp' /></p><p>இதனால் இலங்கை தற்போது ஐ.நா. 'கூட்டணி 8.7' (Alliance 8.7) உலகளாவிய
அமைப்பின் துணைத் தலைமைப் வகிப்பதால், குழந்தை உழைப்பு, நவீன அடிமைத்தனம்
மற்றும் கட்டாய உழைப்பை ஒழிப்பது இன்றியமையாதது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

​</p><p>மேலும் பெந்தர-எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பயிலரங்கில் சர்வதேச தொழிலாளர்
அமைப்பின்(ILO) பிரதிநிதி ஜானி சிம்ப்சன் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின்
உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T23:44:30+00:00</updated>
        </entry>
    </feed>
