<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-31T07:04:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரித் திணைக்களத்திற்கு எதிரான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-cricketers-win-tax-battle-1788159834"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-cricketers-win-tax-battle-1788159834</id>
            <summary type="text">இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாக வீரர்களைக் கருதி, முன்நிகழ் நிபந்தனையுடன் வரி விதிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. </p><p>
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயத்தால் இன்று நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a853aad-a0ba-4866-a3ae-8b50f63781a5/26-6a95275b4665f.webp' /></p><p> </p><p>
2024 அக்டோபரில், தேசிய கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘ஊழியர்கள்’ என வகைப்படுத்தி, அவர்களுக்கு முன் கூட்டிய தனிநபர் வருமான வரியை விதிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முயன்றது. </p><p>
தங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாகக் கருதக் கூடாது என்றும், தாங்கள் பல ஆண்டுகளாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாகவே' அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.</p><p> 
ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், பணிக்கொடை, வருடாந்த விடுமுறை மற்றும் மகப்பேறு விடுமுறை போன்ற எந்தவொரு ஊழியர் சலுகைகளும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை வீரர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். </p><p>
இந்த முந்தைய திகதியிட்ட வரியை அமல்படுத்தியதால் தங்களின் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதாக 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வீரர்கள் சத்தியக் கடதாசிகள் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டனர். </p><p>
வீரர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்க முயல்கிறார்கள் என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே நிலவியதாகக் ஆண் கிரிக்கெட் வீரர்களின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன குறிப்பிட்டார்.</p><p> 
வீரர்கள் வரி கட்டுவதைத் தவிர்க்கவில்லை என்றும், ஊழியர்களாகத் தவறாக வகைப்படுத்தப்பட்டு வரி வசூலிப்பதை மட்டுமே எதிர்த்து வழக்காடினர் என தெளிவுபடுத்தினார். </p><p>
அண்மையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 'விளையாட்டு வீரர்கள்' அதிகாரப்பூர்வமாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாக' வகைப்படுத்தப்பட்ட போதிலும், அந்தத் திருத்தம் மனுதாரர்களுக்குப் பொருந்தாது என இறைவரித் திணைக்களம் வாதிட்டது.</p><p> 
எனினும், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இறைவரித் திணைக்களத்தின் தீர்மானத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. </p><p>
ஆண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஷெனாலி டயஸ், சிதத் கஜநாயக்க ஆகியோருடன் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன முன்னிலையானார்கள்.
</p><p> பெண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலுடன் விகும் ஜெயசிங்க, மணித் தசநாயக்க ஆகியோர் முன்னிலையாகினர்.</p><p>
 அரசுத் தரப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜெயசிங்க ஆஜரானார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா முன்னிலையானார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T07:04:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: தாய்மார்களின் கதறல்களுக்கு தீர்வு இல்லையே..! ஐ.நா. பிரதிநிதி கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-enforced-disappearances-1788159562"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-enforced-disappearances-1788159562</id>
            <summary type="text">&amp;nbsp;வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவம் என
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்கான
பணிக் குழு பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் கவலை வெளியிட்டுள்ளார். </p><p>

நேற்று(30.08.2026) யாழ்ப்பாணம் - தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளால் ஏற்பாடு செய்த சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை
முன்னிட்டு “சர்வதேச நீதியை நோக்கிய பயணம்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற
சர்வதேச மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் கதறல்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்களின் துயரங்களை நன்கு அறிவோம்.

தமது பிள்ளைக்கு என்ன நடந்தது என அறியாமலே அம்மாக்கள் இறக்கின்ற சம்பவங்கள்
அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில்
தளர்வு நிலை இருப்பதை மறுக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1880c833-93c4-4a1b-88f1-c172ad3e983f/26-6a9527410c507.webp' /></p><p>
</p><p>

இதனை அறிந்த நாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்புகளுடன் இணைந்து வேலை
செய்துவருகின்ற நிலையில், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள்
தொடர்பில் இறுதியான எண்ணிக்கையை பெற முடியவில்லை.</p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை</h2><p>
இலங்கையில் விடுதலைப் புலிகள் காலம் மற்றும் ஜேவிபியால் காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை நாம் சேகரித்து வைத்துள்ள நிலையில்,
வெள்ளை வான் காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் பணத்துக்காக என பல வடிவங்களில்
இலங்கையில் காணாமல் ஆக்கப்படுதல் இடம்பெற்றிருக்கின்றது.
</p><p>
வடக்கு - கிழக்கில் அரச படைகளால் காணி இழந்த மக்கள் போராடி வருகிறார்கள்,
அவர்களுடைய ஆதங்களையும் கேட்டு அளித்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93dccbda-9ae7-4f1c-a45f-e0bb21e663c6/26-6a952741bcda0.webp' /></p><p>
</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இந்த சர்வதேச மாநாடு ஆனது நாம்
அவர்களுடன் நெருக்கமாவதற்கும் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.


எமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் மனிதாபிமான ஆணை உள்ளது, வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக அங்கத்துவ
நாடுகளை இணைக்க முடியும்.</p><p>

இதுவரை 61 ஆயிரத்து 626 வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில்100 மேற்பட்ட
நாடுகளுக்கு அனுப்பியுள்ளதுடன், தொடர்ந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்
தொடர்கிறது.
</p><h2>
சாட்சியங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..</h2><p>

முழுமையான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இருந்தும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் தரவுகளை அரச அதிகாரிகள் மறைக்க முயற்சித்தமை மட்டுமல்லாது
மறைத்தும் இருக்கிறார்கள்.
</p><p>
அதன் பாதிப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் உற்பட அவர்களின்
குடும்பமும் அதன் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc632bd1-482e-470f-aefc-6f22405ef129/26-6a95274279f41.webp' /></p><p>
</p><p>
ஆகவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில்
தமது முழுமையான பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்பதை கூறிக் கொள்வதுடன், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில் அனைத்து தரப்பினர்களும் தமது
முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.
</p><p>

இந்த மாநாட்டில் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா தூதரகங்களைச் 
சேர்ந்த பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், ரவிகரன், 
ஸ்ரீநேசன் , வடக்க மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், தமிழ் மக்கள்
கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய
மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்னம் சுகாஸ், போராளிகள் கட்சியின்
தலைவர் வேந்தன், ஈ பி ஆர் எல் தலைவர் சுரேஷ் பிரேம சந்திரன், உட்பட
மாதகுருமார்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:04:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்தவர் பொலிஸில் ஒப்படைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-to-grassland-allaipiddy-man-arrested-1788159785"></link>
            <id>https://tamilwin.com/article/fire-to-grassland-allaipiddy-man-arrested-1788159785</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்
இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர்
இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்
இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர்
இன்று(31.8.2026) பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள் மற்றும் கால்நடைகளின்
மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் புற்றரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு
நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இதன் காரணமாக பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாகி வருவதுடன்,
புகை மற்றும் தீ பரவல் காரணமாக வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும்
போக்குவரத்துக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>புற்றரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை
அடையாளம் காணவோ அல்லது கைது செய்யவோ முடியாத நிலை காணப்பட்டதால், வேலணை பிரதேச
சபையும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>இந்நிலையில், இன்று குறித்த பகுதியில் ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்தபோது அவர்
கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13539f1-f51d-458d-b85c-a30af6a6a9cc/26-6a95272bc47ce.webp' /></p><p>
</p><p>எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த நபர் மனநலப்
பாதிப்புக்குள்ளானவர் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் பயணிக்க அரசாங்கம் உத்தேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-intends-to-continue-working-imf-1788158621"></link>
            <id>https://tamilwin.com/article/government-intends-to-continue-working-imf-1788158621</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் இணைந்து பயணிக்கும் வகையில் புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் இணைந்து பயணிக்கும் வகையில் புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாத தொடக்கத்தில் நாட்டிற்கு வருகை தர உள்ளது.</p><h2>புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட</h2><p>

விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஏழாவது மீளாய்விற்காக வரும் பிரதிநிதிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் காலாவதியாகும் தற்போதைய ஒப்பந்தத்திற்குப் பதிலாக, மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8fd8df5-dfc3-4454-8bd4-09a056bb8ddd/26-6a952399a9bf6.webp' /></p><p>
ஏழாவது மீளாய்வும், 300 மில்லியன் டொலர் கடன் தவணையை வழங்குவதற்கான தீர்மானமும் அதன்போது மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>மார்ச் 2027 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஒப்பந்தத்தையும் அவர்கள் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
</p><p>
அதன்படி, உள்நாட்டின் எதிர்ப்பு மற்றும் பொதுமக்களின் அதிருப்தியைப் பொருட்படுத்தாமல், மார்ச் 2027 முதல் நடைமுறைக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:02:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் முடிவுக்கு வரும் அநுரவின் ஆட்சி! உறுதியாகக் கூறும் முக்கியப் பிரமுகர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-s-reign-to-end-before-tamil-new-year-1788157876"></link>
            <id>https://tamilwin.com/article/anura-s-reign-to-end-before-tamil-new-year-1788157876</id>
            <summary type="text">எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தற்போதைய நாடாளுமன்றம் முடிவுக்கு வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தற்போதைய நாடாளுமன்றம் முடிவுக்கு வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.</p><p> 

காலியில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

தற்போதைய அரசாங்கம், அவர்களிடம் 159 பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறிக்கொண்டிருந்தாலும் இன்னும் சில காலத்திற்குள் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க, ஒன்று சேர்ந்துள்ள இந்த எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்கும் என்பதை கூறிக் கொள்கின்றேன்.</p><h2>அரசாங்கத்தை தோற்கடிப்போம்..</h2><p>

எதிர்க்கட்சிகளாக இருக்கும் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால், அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் இலக்கை அடைய முடியும்.
</p><p>
இந்த தேசத்திற்கு ஏதாவது சேவையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் அரசியலை தேர்ந்தெடுத்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5289544e-3d62-458a-b5e7-226087797c01/26-6a952283e1387.webp' /></p><p>

தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியம். </p><p>

நான் ஒரு விடயத்தை உறுதியாகச் சொல்ல முடியும். 159 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அரசாங்கம் நீண்ட காலத்திற்கு பயணிக்காது. விரைவில் முடிவுக்கு வரும். இதனை நினைவிற் கொள்ளுங்கள். </p><p>

தமிழ் - சிங்கள் புத்தாண்டிற்கு முன்னதாகவே இந்த ஆட்சி முறியடிக்கப்படும். நாடாளுமன்றம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:43:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலைகள் நிலத்திற்குள் வரும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788155836"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788155836</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில், மனித உடலால் உணரப்படும் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில், மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, பொதுமக்கள் முடிந்தவரை அதிக நீர் அருந்தவும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடல் அலைகள் உயர வாய்ப்பு</h2><p>

இதற்கிடையில், புத்தளம் முதல் கொழும்பு வரையிலும், காலி மற்றும் மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2 - 3 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7230900f-697d-4c14-825d-335185427d98/26-6a95217d9a799.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, சிலாபம் முதல் கொழும்பு வரையிலும், காலி முதல் மாத்தறை வரையிலும் உள்ள பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையவும் வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>குறித்த கடல் பகுதிகளில் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் தொடரும் தொடருந்து விபத்துகள் - புனரமைக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788157604"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788157604</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புனரமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புனரமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(31.08.2026) கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 


பாதுகாப்பு தொடருந்து கடவை புனரமைப்பு</h2><p>
இதன்போது, கிளிநொச்சி உமையாள் புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார்
35க்கும் மேற்பட்ட பாதுகாப்புபற்ற கடவைகள் காணப்படுகின்றன. இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு போராட்டக்காரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd377bf3-3fdf-414c-8ea1-fa282525a4de/26-6a951f479a0c4.webp' /></p><p> 

 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மத்த
தலைவர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள்,
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அண்மையில் தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.</p><p>


இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், போக்குவரத்து அமைச்சர், தொடருந்து திணைக்களம் ஆகியவற்றிற்கான மனுக்களும் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865ce238-d88d-43c2-96a4-7f750ce75c5d/26-6a951f48c199f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a78ef65-348c-481f-9608-08b9324fbd4b/26-6a951f499932b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89a01cf-4852-4eac-9717-d345191867cb/26-6a951f4a81368.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7504cb51-2bbe-4df8-ace4-626fa1878e10/26-6a951f4b5d99d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-supply-to-batticaloa-for-4-hours-daily-1788155905"></link>
            <id>https://tamilwin.com/article/water-supply-to-batticaloa-for-4-hours-daily-1788155905</id>
            <summary type="text">வறண்ட வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சைக் குளத்தில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், அங்கு தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறண்ட வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சைக் குளத்தில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், அங்கு தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
அதன் தலைவர் ஏ. எம். பி. சி. டி. பண்டாரா, உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக, தினமும் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

இருப்பினும், நாடு முழுவதும் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
</p><h2>நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த&nbsp;</h2><p>இலங்கை ஒரு நாளைக்குச் சுமார் 2.8 மில்லியன் கன மீட்டர் நீரை உற்பத்தி செய்கிறது என்றும், அதில் 23 முதல் 24 சதவீதம் பெரிய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படுகிறது என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f998aa40-90e6-4fe2-8c14-e566b0cba601/26-6a951ea922d95.webp' /></p><p>மேலும் 65 சதவீதம் ஆறுகள் மற்றும் ஓடைகள் தொடர்பான நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது என்றும், அதில் கிட்டத்தட்ட 600,000 கன மீட்டர் களனி ஆற்றில் இருந்து பெறப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>இதற்கிடையில், மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்கள் மட்டுமே வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
மொனராகலை மாவட்டத்தின் பிபில மற்றும் மெடகம பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் தலைவர் ஏ. எம். பி. சி. டி. பண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென இடிந்து வீழ்ந்த கொழும்பு நீதிமன்ற கட்டிடத்தின் பகுதி! வழக்கு விசாரணகள் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-district-court-announced-closed-today-1788154970"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-district-court-announced-closed-today-1788154970</id>
            <summary type="text">கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது.

தற்போதைய அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது.
</p><p>
தற்போதைய அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று(31) கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம தெரிவித்துள்ளார்.</p><h2>நீதிமன்ற நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
மேலும், இன்று(31) நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d99f9319-ec39-4004-ad1c-465bb263b7aa/26-6a951849be295.webp' /></p><p>
</p><p>
கட்டடத்தின் கட்டமைப்பில் மேலும் உறுதியற்ற தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதால், யாரும் கட்டிடத்திற்குள் நுழையக்கூடாது என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
அத்துடன் இன்று விசாரணைக்காக பட்டியடலிடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளின் விசாரணைகளும் 2026 செப்டம்பர் 30 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதற்கிடையில், இடைக்காலத் தடை உத்தரவுகளை நீடிப்பதற்கான கோரிக்கைகள் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதற்கேற்ப மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HW94IK6MNBY" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-31T05:59:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எங்கள் ஆட்சியில் கட்டாயம் நீதி கிடைக்கும்! நீதி அமைச்சர் உறுதிமொழி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harshana-nanayakkara-statement-1788155452"></link>
            <id>https://tamilwin.com/article/harshana-nanayakkara-statement-1788155452</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு - கிழக்கு
உறவுகள் நடத்திய போராட்டத்தையும், மாநாட்டையும் தாம் முழுமையாக மதிப்பதாக நீதி
மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு - கிழக்கு
உறவுகள் நடத்திய போராட்டத்தையும், மாநாட்டையும் தாம் முழுமையாக மதிப்பதாக நீதி
மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகால வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில் தமது அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><h2>நீதி கட்டாயம்</h2><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எமது ஆட்சியில் கட்டாயம் நீதியைப்
பெற்றுக் கொடுப்போம். </p><p>இத்தகைய கொடூரச் செயல்களுடன் தொடர்புடைய உண்மையான
குற்றவாளிகள் உரிய முறையில் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தகுந்த தண்டனை
சட்டத்தின் மூலம் வழங்கியே தீருவோம் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca5d40a0-5635-4e32-a153-a5713850084d/26-6a95163f9aff6.webp' /></p><p>
</p><p>
வடக்கு - கிழக்கு இணைந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் "நீதிக்கான நீள் பயணம்" எனும் மாபெரும் சர்வதேச
மாநாடு நேற்று மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. </p><p>தந்தை செல்வா கலையரங்கில்
நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய
இயக்குநர் ஸ்மிருதி சிங் மற்றும் ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ்
உள்ளிட்ட சர்வதேசப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.</p><h2>அஞ்சலி நிகழ்வு</h2><p>
</p><p>
மாநாட்டுக்கு முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்
தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணியாகத் தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த
பின்னரே மாநாடு ஆரம்பமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062659ef-c198-416c-87a9-7df1f845ad71/26-6a95163ee1b2b.webp' /></p><p>

குறிப்பாக, மாநாட்டு மண்டபத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுப்
பொருள்கள் மற்றும் அவர்கள் விரும்பிச் சேகரித்த நினைவுப் பொருள்கள்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
</p><p>
இத்தகைய சர்வதேச அளவிலான கவனயீர்ப்புகளும் போராட்டங்களும் தொடரும் சூழலில்,
அரசாங்கம் மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-batticaloa-have-been-suffering-for-20-years-1788152655"></link>
            <id>https://tamilwin.com/article/people-batticaloa-have-been-suffering-for-20-years-1788152655</id>
            <summary type="text">மட்டக்களப்பு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரையை அண்டிய
பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம்
எனும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரையை அண்டிய
பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம்
எனும் பெயர் சூட்டப்பட்டு உருவாக்கி குடியேற்றப்பட்டு மக்களிடம்
கையளிக்கப்பட்டது. </p><p>இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி
அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்டதை அடுத்து ஒரு சிலருக்கு
மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.
</p><p>
அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மீனவர் கிராமத்தில் ஒரு சிலர்
குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர்.</p><h2>அடிப்படை வசதிகள் இன்றி&nbsp;</h2><p>இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. மலசலகூடம், குடிநீர்,
மின்சாரம் இன்றி ஒரு நகர் பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்
வாழ்ந்து வருகின்ற முன்னாள் போராளியும் 2 பிள்ளைகளின் தந்தையும் கடற்றொழிலாளியுமான
அமர்தலிங்கம் நவராஜ் தெரிவிக்கையில்.
</p><p>
நான் பாலமீன்மடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டு பிறந்த நான் விடுதலைப் புலிகள்
அமைப்பில் இருந்து செயற்பட்டு புனர்வாழ்வு பெற்று வந்த பின்னர் திருமணம்
முடித்து நான் இருப்பதற்கு சொந்தமாக காணி, வீடு, மலசலகூடம் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef11231-6680-4412-b82f-463f11e80ee1/26-6a951257b4415.webp' /></p><p> பரல் வைத்து
கிணறு அமைத்து தண்ணீர் பெற்று வருகின்றோம். அத்துடன் எனது பிள்ளைகள் மனைவி தொழு
நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்வாறு அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் சில அரச சார்பற்ற
நிறுவனங்கள் மலசல கூடம் அமைத்து தருவதாக முன்வந்த போதிலும் பிரதேச செயலாளர்,
கிராம உத்தியோகத்தர் இது அரச காணி, கடல் பாதுகாப்பு வலையம் என தெரிவித்து
அனுமதிதர மறுத்து வருகின்றனர்.</p><p>

இங்கு அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு அருகிலுள்ள முழு அரச காணிகளையும் பெரிய
பணக்காரர்களுக்கு வழங்குகின்றன.</p><p> நாங்கள் ஏழைகள் காணி இல்லாமல் வீடு இல்லாமல்
வாழுகின்ற எங்களுக்கு ஒரு 10 பேச் காணி தருமாறு அரசாங்கத்திடம்
கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்ட 55 வயதுடைய பெண் கூறுகையில், நான் அடிப்படை
வசதி எதுவும் இன்றி பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் நானும் கணவரும் வாழ்ந்து
வருகின்றேன்.</p><p>இங்கு முதல் பிரச்சினை 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். இங்கு
இளம் யுவதிகள், வயது முதிர்ந்தோர் இருக்கின்றனர். அவர்களுக்கு மலசலகூடம்,
கிணறு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். </p><h2>அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்</h2><p>தேர்தல் காலத்தில்
மட்டும் அரசியல்வாதிகள் வருவார்கள் எங்களுக்கு வாக்கு போடுங்க அதை
செய்கின்றோம். இதை செய்கின்றோம் என்று தெரிவிப்பார்கள் இதுவரை எந்த அரசியல்
வாதிகளும் எதுவும் செய்ததும் இல்லை வந்ததும் இல்லை. </p><p>எனவே எங்களின் அடிப்படை
உரிமையான மலசலம், குடிநீர், மின்சாரத்தை செய்து தருமாறு ஜனாதிபதியிடம்
கேட்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad0119b-c27e-46ca-bd3e-83f6090af824/26-6a95125893d56.webp' /></p><p>எங்களுக்கு பக்கத்தில் அரச காணி அதிகமாக இருக்கின்றது. அதை பணம் படைத்தவர்கள்
பிடித்து வேலிநாட்டி ஒரு வியாபாரமாக விற்பனை செய்து பிழைக்கின்றனர்.</p><p>கேட்டால்
அவர்களுக்கு உரிய காணி என பொய் சொல்கின்றனர். எனவே நீண்ட காலமாக குடியிருக்கும் 30 குடும்பங்களுக்கு காணி
அனுமதிப்பத்திரங்கள் வழங்குங்கள் அல்லது மாற்றுக் காணிகளை வழங்குங்கள். இதில்
இருந்து யாரும் எழும்ப போவதில்லை என்றார்.</p><p>கடற்றொழிலாளியான 65 வயதுடைய வைரமுத்து அமிர்தலிங்கம் தெரிவிக்கையில், இந்த
கிராமத்துக்கு வந்து 10 வருடம் குடிப்பதற்கு குடி நீரை பெறுவதற்கு பணம் இல்லாத
காரணத்தால் நில மட்டத்தில் பரல் அமைத்து குடிநீர் பெற்று வருகின்றேன்.</p><p>இந்த
நிலையில் கிராம உத்தியோகத்தர் வந்து உங்களுக்கு காணிக்கு உறுதி இல்லை வேறு
இடத்தில் தருகிறேன் என தெரிவித்து ஒன்றும் தரவில்லை.</p><p>நாங்கள் இந்த ஓலை
குடிசையில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.&nbsp; குடிநீர், மலசல கூடம் இல்லை இவ்வாறு அரசாங்கம் எங்களுக்கு செய்கிறது.</p><p>நான் தோணியில் சென்று கஷ்டத்தின் மத்தியில் மீன் பிடித்து வருகின்றேன். இன்று
எனது வாழ்கையை பாருங்கள் கியுபார் பணமும் இல்லாது தத்தளிக்கிறேன்.&nbsp;</p><p> எனவே ஏதாவது நன்மையை செய்து உதவுங்கள். அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்.</p><h2>எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல்</h2><p>கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாயார் தெரிவிக்கையில், ஓலைக்குடிசையில் கடந்த 12
வருடமாக நானும் எனது மகனும் வாழ்ந்து வருகின்றோம்.</p><p>நான் வீட்டு வேலைக்கு
சென்று வேலை செய்து வருகின்ற வருமானத்தில் வாழ்ந்து வருவதுடன் மலசல கூடம்
குடிநீர். மின்சாரம் இன்றி குப்பி விளக்கில் எனது மகன் கல்வி கற்று
க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர் தரத்திற்கு சென்றுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34877ec8-5cae-4850-82b9-fb5013c04ad2/26-6a9512596e745.webp' /></p><p>இதுவரை எங்களுக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு ஆவணம் கூட
இதுவரை தரவில்லை.</p><p> உடைந்த ஓலைக்குடிசை கூட திருத்த முடியாது துன்பப்பட்டு
வாழ்ந்து வருகிறோம். எனவே அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவும் என்றார்.
</p><p>
இவ்வாறு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் நகர்ப்புறத்தில் இருக்கும்
இந்த மீனவர் எழுச்சி கிராம மக்களுக்கு அடிப்படை மனித உரிமை மீறல்
இடம்பெற்றுள்ளது </p><p>எனவே இந்த மக்களின் அடிப்படையான குடிநீர். மலசல கூடம்,
மின்சாரம் போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டியது அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கடப்பாடு ஆகும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள்
கருத்தில் கொண்டு இந்த ஏழை மக்களின் சொல்லோன துன்பங்களுக்கான தீர்வை
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d39f03-5208-465f-a483-ae315bf6c257/26-6a95142d71595.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f411c6b-231c-47a1-b02c-f442380df14d/26-6a95142e4821a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:43:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைகளில் மாற்றம்! அடுத்தடுத்து வெளியாகவுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/september-month-fuel-price-change-1788153335"></link>
            <id>https://tamilwin.com/article/september-month-fuel-price-change-1788153335</id>
            <summary type="text">நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. </p><p>

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் நேற்று (30) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்</h2><p>
</p><p>
இதன்படி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c5847af-c66b-4e4a-a704-ddffb638744c/26-6a9512512de69.webp' /></p><p> </p><p>

அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.</p><p> 

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அறிவித்திருந்துள்ளது.</p><h2>லங்கா ஐஓசி நிறுவன விலை திருத்தம்</h2><p>
</p><p>
இந்த விலை திருத்தத்தினையடுத்து லங்கா ஐஓசி நிறுவனம், ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைத்து, அதன் புதிய விலை 399 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
</p><p>
ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அறிவித்துள்ளது.</p><p>இதற்கமைய, பாடசாலை பேருந்து கட்டணம், முச்சக்கரவண்டி கட்டணம், எரிவாயு விலை போன்றவற்றில் அடுத்தடுத்து&nbsp; திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:34:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கிய பெண் உட்பட இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு - சிறுவனை தொடர்ந்து தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-missing-in-the-sea-in-colombo-1788142852"></link>
            <id>https://tamilwin.com/article/4-missing-in-the-sea-in-colombo-1788142852</id>
            <summary type="text">எப்பமுல்லா, பமுனுகம கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>எப்பமுல்லா, பமுனுகம கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், நீரில் மூழ்கி காணாமல் போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. </p><p>

உயிரிழந்தவர்கள் 35 வயதுப் பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் என தெரியவந்துள்ளது.</p><p><b>

முதல் இணைப்பு</b></p><p>கம்பஹா, பமுனுகம - எபாமுல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளனர்.</p><p> பெண், இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பமுனுபுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இவ்வாறு காணாமல் போனவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>பொலிஸார் மேலதிக விசாரணை</b></h2><p>குறித்த நால்வரும் ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff7b1ec7-8dc9-4c3b-ae18-04695229343c/26-6a94e62469f37.webp' /></p><p>காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். </p><p>பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><b><i>you may like this video&nbsp;&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jQKPRnoeIFg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-31T05:21:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்வாழ்வு மையத்திற்காக தரப்பட்ட காணியில் கட்டடம் அமைத்துத் தருமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-abusers-use-more-than-alcohol-abusers-1788150592"></link>
            <id>https://tamilwin.com/article/drug-abusers-use-more-than-alcohol-abusers-1788150592</id>
            <summary type="text">மது பாவனையாளர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகமாக உள்ளதாக விமோசனா புனர்வாழ்வு இல்லத்தின் பணிப்பாளர் செல்விகா சகாதேவன் தெரிவித்துள்ளார். 

அத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மது பாவனையாளர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகமாக உள்ளதாக விமோசனா புனர்வாழ்வு இல்லத்தின் பணிப்பாளர் செல்விகா சகாதேவன் தெரிவித்துள்ளார். </p><p>

அத்துடன் இவர்களின் புனர்வாழ்விற்காக அரசாங்கத்தால் தரப்பட்ட காணியில் கட்டடமொன்றை அமைத்து தர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

மட்டு. ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (30.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>போதை பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய காலகட்டத்திலே மது, போதைப்பொருள் பாவனை என்பது மிகவும் அதிகரித்து கொண்டு வருகிறது. நாடளாவிய ரீதியிலே நாங்கள் புனர்வாழ்வு சேவையைச் செய்து அதிகமான வெற்றியையும் கண்டிருக்கிறோம். </p><p>

தற்போது நாங்கள் ஒரு வாடகை இடத்திலேயே இந்தச் சேவையைச் செய்து வருகிறோம். எங்களிடம் குணமடைந்தவர்கள் இலங்கையில் அத்தனை மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். 

எனவே எங்களுக்கு அரசாங்கம் ஒரு ஏக்கர் காணியைத் தந்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f15d9d6b-10e0-4710-9224-491075a78ff9/26-6a950bd397302.webp' /></p><h2>கட்டடம் தேவை</h2><p> </p><p>அதில் நான் கட்டடம் ஒன்றை அமைத்து இந்தச் சேவையை மேலும் திறம்படச் செய்ய எண்ணியுள்ளேன். 

எனினும் இப்போது நான் வாடகைக்கு இருக்கும் இடத்தை உரிமையாளர்களுக்கு அந்தக் கட்டடம் தேவைப்படுவதால் நாங்கள் இன்னும் ஒரு இடத்திற்கு நகர வேண்டிய தேவை உள்ளதால், இன்னொரு இடத்தைக் கண்டுபிடித்து நாங்கள் செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. </p><p>

ஆகவே அரசாங்கத்தால் எங்களுக்குத் தரப்பட்ட அந்தக் காணியில் எங்களுக்கு புதியதொரு கட்டடத்தை அமைத்துத் தந்தால் இலகுவாக இருக்கும். இதனை ஜனாதிபதிக்கும் சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-31T05:07:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் சிகிரியாவில் தோண்டப்பட்ட நிலம்! அரசு இலச்சினை வாகனத்துடன் சிக்கிய மூவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/treasure-excavated-sigiriya-three-arrested-1788150355"></link>
            <id>https://tamilwin.com/article/treasure-excavated-sigiriya-three-arrested-1788150355</id>
            <summary type="text">சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,
நடு இரவில் ஹேமர் இயந்திரத்தைக் கொண்டு நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த மூவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,
நடு இரவில் ஹேமர் இயந்திரத்தைக் கொண்டு நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த மூவர்
சந்தேகத்தின் பேரில் சிகிரியா வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சிகிரியா வனவிலங்கு அலுவலகப் பிரதானியும் வனவிலங்கு கட்டுப்பாட்டாளருமான
எஸ்.எஸ்.மலிந்தவுக்குக் கிடைத்த இரகசியத்தகவலின் அடிப்படையில், சிகிரியா
சரணாலயப் பகுதிக்குள் வனவிலங்கு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.</p><h2>மூவர் கைது&nbsp;</h2><p>
</p><p>
குறித்த பகுதியில் தேசிய நீர் வழங்கல் வாரியத்துக்குச் சொந்தமானது என குறிப்பிடும் அரசு இலச்சினை பொறிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று
நிறுத்தப்பட்டிருந்ததை கண்ட அதிகாரிகள், நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த
மூவரை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4d7eafc-a838-4e43-a849-95b08c85e0ad/26-6a9506cd7197e.webp' /></p><p>
</p><p>
தாம் நீர் இணைப்பு வழங்குவதற்காகவே தோண்டுவதாக அவர்கள் தெரிவித்த போதிலும்,
நள்ளிரவு வேளையில் அது தொடர்பில் சரியான பதிலளிக்க தவறியுள்ளனர்.</p><p>இதனையடுத்து, பாறைகளைத் துளையிடும் ஹேமர் இயந்திரம் மற்றும்
அகழ்வாராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கருவிகள் கைப்பற்றப்பட்டன.</p><h2>&nbsp;நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தம்புள்ளை நீர் வழங்கல் வாரியத்தில்
பணிபுரிபவர்கள் என்றும், மற்றவர் அந்த நிலத்தின் உரிமையாளர் என்றும் வனவிலங்கு
கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கைப்பற்றப்பட்ட ஹேமர் இயந்திரத்தின் முனை தேய்ந்திருப்பதைக் கொண்டு, இவர்கள்
இதற்கு முன்னரும் வேறொரு இடத்தில் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>
கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று திங்கட்கிழமை தம்புள்ளை நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T04:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருள் சூழ்ந்த சிறைச்சாலைகளாக அரச அலுவலகங்கள்! இலங்கையில் நடைமுறைக்கு வரப்போகும் திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-institutions-for-peoples-bimal-1788149169"></link>
            <id>https://tamilwin.com/article/government-institutions-for-peoples-bimal-1788149169</id>
            <summary type="text">அரச அலுவலகங்கள் ஆடம்பரமான அமைப்புகளுக்குப் பதிலாக, மக்கள் வரிப்பணத்தில் உருவாகுகின்றவை என்பதை உணர்த்தும் வகையில் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச அலுவலகங்கள் ஆடம்பரமான அமைப்புகளுக்குப் பதிலாக, மக்கள் வரிப்பணத்தில் உருவாகுகின்றவை என்பதை உணர்த்தும் வகையில் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றப்பட வேண்டுமென பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரச நிறுவனங்களின் அமைப்பு</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பழைய சுவர்களால் சூழப்பட்ட, இருள் சூழ்ந்த சிறைச்சாலைகள் போன்ற அமைப்பிலிருந்து அரச அலுவலகங்கள் வெளியேற வேண்டும். 

எனினும் அலுவலகங்களின் அளவு என்பது அதிகாரிகளின் பதவியைக் காட்டுவதாக இருக்கக்கூடாது. </p><p>ஆடம்பரமான அமைப்புகளுக்குப் பதிலாக, மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் அரச நிறுவனங்கள் சாதாரண மக்களுக்கு சொந்தமானவை என்பதை உணர்த்தும் வகையில் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7681135-aed3-4fc3-bfd5-d8f23170c2ab/26-6a9501ed28744.webp' /></p><h2>முழுமையாக நடைமுறைக்கு வரும் திட்டங்கள்</h2><p> 

அத்துடன், பத்தரமுல்லை செத்சிர்றிபாய வளாகத்தின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடையும் போது நாட்டில் டிஜிட்டல் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத் திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வந்துவிடும்.

இதனால், கோப்புகளை சேமித்து வைப்பதற்கான பெரிய அலமாரிகளுக்குப் பதிலாக இக்கட்டடம் ஒரு நவீன காகிதமற்ற மையமாக செயற்படும்.
</p><p>
வெவ்வேறு இடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களால் ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் தீர்மானம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T04:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவை அன்று ஏளனம் செய்தவர்களில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! மகிழ்ச்சியில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-party-mocked-mahinda-namal-is-proud-1788148852"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-party-mocked-mahinda-namal-is-proud-1788148852</id>
            <summary type="text">அன்று தமது அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கடுமையான
முறையில் விமர்சித்தவர்கள், இன்று அதே திட்டங்களே நாட்டின் பொருளாதாரத்தை காக்கும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அன்று தமது அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கடுமையான
முறையில் விமர்சித்தவர்கள், இன்று அதே திட்டங்களே நாட்டின் பொருளாதாரத்தை காக்கும் முதன்மை மையங்கள் என தங்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளதையிட்டு தாம் மகிழ்ச்சியடைகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய
அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
லுணுகம்வெஹர பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,</p><h2>மகிந்த ராஜபக்சவை அன்று ஏளனம் செய்தவர்கள்</h2><p>
</p><p>
"2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்தங்கிய நிலையிலிருந்த அம்பாந்தோட்டை
மாவட்டத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது, அது மகிந்த
ராஜபக்சவுக்கு அம்புல் தியல் கொண்டு செல்வதற்காகவே என எதிர்த்தரப்பினரால்
ஏளனம் செய்யப்பட்டது. ஆனால், இன்று அதே நெடுஞ்சாலையில் வாகனங்கள் நெரிசலாகப்
பயணிப்பதைக் காணமுடிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8788fc4-3e58-4ec5-8ba8-2685fcf7d04a/26-6a950047d7ad0.webp' /></p><p> </p><p>மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம்,
கொழும்புத் துறைமுக நகரம் மற்றும் உமா ஓயா போன்ற திட்டங்களை அன்று
எதிர்த்தவர்களே இன்று நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவை அவசியம் என்று
ஒப்புக்கொள்கின்றார்கள்.
</p><p>
எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. </p><p>வறட்சியால் நீர்நிலைகள் வற்றியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக
அரசு எதிர்க்கட்சியையும் ராஜபக்சர்களையும் குறை கூறிக்கொண்டிருந்ததே தவிர,
நீர்நிலைகளைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><h2>மக்கள் மீது கடுமையான வரிச்சுமை</h2><p>
</p><p>
மேலும், அறுவடைக்காலத்தில் அரிசி மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதால்
உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>சேனைப் பயிர்ச்செய்கைக்கு அனுமதி
மறுக்கப்படுகின்றது.

ஆட்சியைப் பிடித்த நாள் முதல் மக்கள் மீது கடுமையான வரிச்சுமையைச் சுமத்தி
அரசு துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53ab0dc6-7319-4d26-9a30-a97b016c6b9c/26-6a9500488dd76.webp' />&nbsp;</p><p> மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள்
விலையேற்றத்துக்குக் காரணங்களைக் கூறும் அரசு, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி
செய்த நிறுவனங்களுக்கு எதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

துறைமுக மற்றும் நிதி அமைச்சுசார் முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள்
நிலவுகின்றன.
</p><p>
தேர்தல் காலத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்களித்துவிட்டு,
இன்று வேலை கேட்டுச் செல்லும் இளைஞர்களை அரசு விரட்டியடிக்கின்றது.

பொதுவாகக் காலப்போக்கில் தான் மக்களுக்கு அரசின் மீது வெறுப்பு ஏற்படும்.</p><p> ஆனால்
இந்த அரசுக்கோ ஆட்சிக் கட்டிலில் ஏறிய நாளிலிருந்தே மக்களைப் பிடிக்காமல்
போய்விட்டது.

இனியாவது பொய் கூறுவதையும் மக்களை ஏமாற்றுவதையும் அரசு நிறுத்திவிட்டு,
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
</p><p>
மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து
முன்நின்று போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T04:17:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் மக்கள் செல்வாக்கில் கடும் வீழ்ச்சி! திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/decline-public-influence-tissa-attanayake-warns-1788146303"></link>
            <id>https://tamilwin.com/article/decline-public-influence-tissa-attanayake-warns-1788146303</id>
            <summary type="text">இரு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை
நிறைவேற்ற தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு
50 சதவீதத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை
நிறைவேற்ற தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு
50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்
கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>அரசின் மீதான மக்களின் செல்வாக்கு</h2><p>

"ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது அளிக்கப்பட்ட
வாக்குறுதிகள், ஊழலற்ற நிர்வாகம், முறைமை மாற்றம் மற்றும் எரிபொருள்,
மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதியையும் அரசால்
நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7347e1d8-a432-4a6e-bfb9-4e7e055d82ae/26-6a94f81dd59d1.webp' /></p><p>
</p><p>
சமீபத்திய 'வெரிடே ரிசர்ச்' ஆய்வறிக்கையின்படி, அரசின் மீதான மக்களின்
செல்வாக்கு 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதுடன்,
பொருளாதாரத்தைக் கையாள்வது குறித்த நம்பிக்கை 40 சதவீதத்துக்கும் கீழே
வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>
நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்தவே 22ஆவது அரசமைப்புத் திருத்தம்
கொண்டுவரப்படுகின்றது என்று அரசு கூறுவது அப்பட்டமான பொய்.</p><p>

நாட்டின் நிலுவையிலுள்ள வழக்குகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவை நீதிவான்
நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே உள்ளனவே தவிர உயர்
நீதிமன்றத்திலோ அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்திலோ அல்ல. தன் விருப்பத்துக்கு ஏற்ப இயங்கும் ஒரு நீதித்துறை அமைப்பை உருவாக்கவே அரசு
முயல்கின்றது.</p><h2>உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்&nbsp;</h2><p>இதற்கு எதிராக வரலாற்றிலேயே இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான
மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த காலத்தில் நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயன்ற எந்தவொரு அரசும்
நீதிமன்றத்திடமிருந்து தக்க பதிலடியையே பெற்றுள்ளன என்ற வரலாற்றை இந்த அரசு
நினைவில்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be15a3d9-859a-494d-838c-0483d7c875b7/26-6a94f81e8f736.webp' /></p><p>

மக்களின் உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய அரசு,
மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.
</p><p>
22ஆவது திருத்தம் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல்
ஓடிய நீதி அமைச்சர், "எங்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. அரசுடன்
விளையாட வேண்டாம்" என கூறி தனது அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>
அதிகார மமதையில் இந்தத் திருத்தத்தைப் பலவந்தமாக நிறைவேற்ற முயன்றாலும்
இறுதியில் மக்கள் முன்னிலையில் அரசால் தலைநிமிர்ந்து நிற்க முடியாது." -
என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T03:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ரவி கருணாநாயக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384</id>
            <summary type="text">சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு</h2><p>மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு முன்னிலையாகவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef81f79b-105d-4f60-b87d-d7e4b25fd357/26-6a94f5e55ec15.webp' /></p><p>இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p>தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.&nbsp;</p><p> </p><p>இதன் பின்னர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T03:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு எதிராக வியூகம் அமைக்கும் ரணில்! தென்னிலங்கையில் அரசியில் திடீர் திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-sajiths-party-to-rejoin-again-1788145652"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-sajiths-party-to-rejoin-again-1788145652</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் பலமாக உள்ள அநுர அரசாங்கத்திற்கு எதிராக வெற்றியை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வியூகங்களை அமைத்து வருகிறார். 

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் பலமாக உள்ள அநுர அரசாங்கத்திற்கு எதிராக வெற்றியை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வியூகங்களை அமைத்து வருகிறார். </p><p>

அதற்கமைய எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டணியாக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.</p><h2><b> 

ரணில் - சஜித் கட்சிகள்</b></h2><p>தற்போது அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இரு கட்சியின் தலைவர்களும் தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f206aa99-dd72-482a-accc-1406df3e8f10/26-6a94f2fd08211.webp' /></p><p>இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
“<b><i>அடுத்த தேர்தலுக்கு நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தே செல்லவுள்ளோம். அது இப்போது தீர்மானிக்கப்பட்டு விட்டது.

உரிய நேரத்தை பின்னர் அறிவிப்போம். ஒரு கூட்டணியாகவே செயற்படும். ஐக்கிய தேசிய கட்சியும் நாமும் இணைந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதை நாட்டின் மக்கள் அறிவார்கள் என</i></b> ” என ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-31T03:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலையில் இஷாரா செவ்வந்தியின் பரிதாப நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ishara-sewwandi-s-current-situation-1788144530"></link>
            <id>https://tamilwin.com/article/ishara-sewwandi-s-current-situation-1788144530</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்ந்தும் அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்ந்தும் அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதற்கமைய, குறித்த சிறைச்சாலையின் பெண் பிரிவில் உள்ள ஏனைய கைதிகளுடன் பழகாதவாறு தனிச் சிறையில் அவர் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

தற்போது குறித்த சிறைச்சாலையில் 130 இற்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>
</p><h2><b>
செவ்வந்தியின் பரிதான நிலை</b></h2><p>அத்துடன், கனேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய தொடர்புடைய சிலரும் ஆண் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edce5b01-52b8-460a-b1ab-4afa7578c740/26-6a94ee4cce7f4.webp' /></p><p>எனினும், இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டாலும், சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே இவ்வாறான விசேடமான இடம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
வழமையாக கைதிகள் காலை 6 மணிக்குச் சிறைக் கூண்டுகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவதுடன், அவர்கள் மீண்டும் மாலை 4 மணியளவில் தான் அறைகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். </p><p> 

எனினும், விசேட பாதுகாப்பின் கீழ் தனிச் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட எந்தவொரு கைதிக்கும் இந்த வசதி கிடைக்காது.
</p><p>
இஷாரா செவ்வந்தி காலை 6 மணிக்குச் சிறைக் கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவார். காலை உணவளிக்கப்பட்ட பின் மீண்டும் 15 நிமிடங்களுக்கு பின்னர் சிறைக் கூண்டிலேயே தங்க வைக்கப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h3><b>

தீவிர கண்காணிப்பு</b></h3><p>அவர் மீண்டும் வெளியே அழைத்துச் செல்லப்படுவது மதிய உணவு வழங்குவதற்காக 15 நிமிடங்களுக்கு மாத்திரமே ஆகும். 

சிறைச்சாலையில் உணவு சமைத்துப் பரிமாறும் நேரத்திலேயே இஷாரா செவ்வந்தி இவ்வாறு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ad1385-c230-4c66-b921-14d5c9b44212/26-6a94ee4d8512b.webp' /></p><p>மீண்டும் சிறைக் கூண்டில் வைக்கப்படும் இஷாரா செவ்வந்தி, இரவு உணவு வழங்குவதற்காகவே மாலை 4 மணிக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்.

இது தவிர, காலை 6 மணிக்கும் மாலை 5 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் தினசரி 30 நிமிடங்கள் இஷாரா செவ்வந்தி வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>

உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே இது மேற்கொள்ளப்படுகிறது. அதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ், ஏனைய கைதிகளுடன் பழகாதவாறு சந்தேகநபருக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p>
இஷாரா செவ்வந்திக்கு சிறைச்சாலைக்குள் விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>

அண்மையில் குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளார். அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையானது இஷாரா செவ்வந்தியின் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.</p><p>

அது நடைமுறையிலுள்ள சிறைச்சாலைச் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தவொரு கைதியும் மாதத்திற்கு இருமுறை சிறைச்சாலை ஊடாக தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளனர். </p><p>சம்பந்தப்பட்ட கைதி அது தொடர்பிலான கோரிக்கையை முதலில் சிறைச்சாலையிடம் முன்வைக்க வேண்டும்.
</p><p>
அதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பின் கீழ் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசுவதற்கு இரண்டு நிமிடங்கள் மாத்திரமே கால அவகாசம் கிடைக்கும் என சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.</p>]]></content>
            <updated>2026-08-31T03:01:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைக்காக செலவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம்! விண்ணப்பித்தும் வருகை தராத மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/90-million-without-students-for-the-git-exam-1788140275"></link>
            <id>https://tamilwin.com/article/90-million-without-students-for-the-git-exam-1788140275</id>
            <summary type="text">க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான பொதுத்தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு (GIT) விண்ணப்பித்திருந்த கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் பரீட்சைக்கு வருகை தரவில்லை...</summary>
            <content type="html"><![CDATA[<p>க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான பொதுத்தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு (GIT) விண்ணப்பித்திருந்த கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் பரீட்சைக்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதன் காரணமாக 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வீணடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆண்டு செயல்திட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>மூன்று முறை&nbsp;நடத்தப்பட்ட&nbsp;பரீட்சை</h2><p> </p><p>

பொதுத் தகவல் தொழில்நுட்ப பாட பரீட்சை 2019 முதல் 2024 வரை ஆறு ஆண்டுகளில் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b146199-351b-451e-8909-cc08f3d2e0be/26-6a94e99ecfbf0.webp' /></p><p>
இந்த பரீட்சை மூன்று முறை நடத்தப்பட்ட நிலையில், க.பொ.த உயர் தர பரீட்சைக்கு வந்த மாணவர்களில் 36 சதவீதம் பேர் பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கு விண்ணப்பித்த மாணவர்களில் 42 சதவீதம் பேர் பரீட்சைக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த பரீட்சையை நடத்துவதற்காக பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் அடையப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>

பரீட்சை நடத்தப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும், மதிப்பீட்டுச் செலவுகள் நீங்கலாக, விண்ணப்பித்து வராத மாணவர்களுக்காக பல கோடி ரூபாய் வீணாக செலவிடப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T02:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச அதிகாரி மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-government-officer-died-jaffna-holiday-duty-1788137548"></link>
            <id>https://tamilwin.com/article/female-government-officer-died-jaffna-holiday-duty-1788137548</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில் பங்கேற்பதற்காக உடுவில் பிரதேச செயலகமும் அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.</p><h2>மின் கசிவு</h2><p>இன்று போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3da1739c-f050-4de6-a457-181f5f01a781/26-6a94d0d9e17e3.webp' /></p><p>
</p><p>

இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புபட்ட நிலையில், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரையும், சக உத்தியோகத்தர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பற்ற மின் இணைப்பு அல்லது மின் கசிவே இந்த உயிரிழப்புக்குக் காரணமா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T02:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் பட்டதாரி யுவதியை கடத்திய காதலன்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-students-kidnapped-colombo-1788141106"></link>
            <id>https://tamilwin.com/article/university-students-kidnapped-colombo-1788141106</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச்சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச்சென்ற காதலனை கைது செய்ய&nbsp;இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>சந்தேகநபரான, அப்பெண்ணின் காதலனை கைது செய்வதற்காக, நாரஹேன்பிட்ட மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களால் நேற்று (30 ஆம் திகதி) இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>காரை நோக்கி துப்பாக்கிச்சூடு&nbsp;</h2><p>இதன்படி, நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef91a40b-06a5-4d9f-a16f-a17c54976805/26-6a94e063840a2.webp' /></p><p>
</p><p>
எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> 

இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே&nbsp; யுவதியின் காதலனால் கடத்தப்பட்டமை தெரியவந்திருந்தது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வெளியான காரணம்</span></p><p>யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நிலையில், அவர் கடத்தப்படுவதாக யுவதியின் தந்தை பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>இதன்படி, சந்தேகநபரை , கைது செய்வதற்காக, நாரஹேன்பிட்ட மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களால் நேற்று (30 ஆம் திகதி) இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p>இச்சம்பவம் தொடர்பாக குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T02:01:11+00:00</updated>
        </entry>
    </feed>
