<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-10T20:22:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரீச்சாவில் குழப்பம் விழைவிக்க பிரான்சில் இருந்து சென்ற உத்தரவு - சிக்கியது பெரும் ஆதாரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-2026-issue-1786391119"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-2026-issue-1786391119</id>
            <summary type="text">ரீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.


ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.</p><p>


ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் இந்தத் திருவிழாவிற்காக பெரும் உழைப்பைச் செலுத்திய நிலையில், எதிர்பாராத மக்கள் கூட்டத்தால் சில சிக்கல்கள் எழுந்தன. </p><p>

இருப்பினும், உணவுத் திருவிழாவின் தோல்விக்கு ஒரு குறிப்பிட்ட குழுவின் திட்டமிட்ட வன்முறை மற்றும் குழப்பங்கள் தான் காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த உணவுத் திருவிழாவைத் திட்டமிட்டு முறியடிக்க, பிரான்சிலிருந்து சில உத்தரவுகள் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இது குறித்து சில குரல் பதிவுகள் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>
மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், எதிர்பாராத நெருக்கடியாலும் ஏற்பட்ட சிரமங்களுக்கு கந்தையா பாஸ்கரன் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்.
</p><p>
 மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளார் .

 திருவிழா நடந்த இடத்தில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
</p><p>
 இது வெறும் உணவுப் பற்றாக்குறையினால் ஏற்பட்டதல்ல, மாறாகத் திட்டமிட்ட வன்முறை என்று காணொளி என்பதும் தெளிவாகின்றது.

கந்தையா பாஸ்கரன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்றும், அவர் தனது மண்ணின் மீதான பற்றுதலாலேயே இத்தகைய முதலீடுகளைச் செய்கிறார்.
</p><p> 
இந்தத் திருவிழா, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்பட்ட முயற்சி என்றும், சில விசமிகளின் குறுக்கீடுகளால் அது பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3Jg7aTaxRew" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்காலிகமாக மூடப்பட்ட பிரித்தானியாவின் பிரபல பொழுதுபோக்கு பூங்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/popular-uk-theme-park-closed-over-water-shortage-1786375439"></link>
            <id>https://tamilwin.com/article/popular-uk-theme-park-closed-over-water-shortage-1786375439</id>
            <summary type="text">பிரித்தானியாவில் ஐந்தாவது வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மேற்கு
லண்டனில் அமைந்துள்ள பிரபல ‘செசிங்டன் வேர்ல்ட் ஒஃப் எட்வென்ச்சர்ஸ்’ பொழுது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் ஐந்தாவது வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மேற்கு
லண்டனில் அமைந்துள்ள பிரபல ‘செசிங்டன் வேர்ல்ட் ஒஃப் எட்வென்ச்சர்ஸ்’ பொழுதுபோக்கு பூங்கா திடீர் நீர்
தட்டுப்பாடு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>

உள்ளூர் பகுதியில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை காரணமாகவே இந்தத் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக பூங்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>திடீர் நீர் தட்டுப்பாடு</h2><p>
</p><p>
அத்துடன், இன்றைய தினத்திற்காக முன்பதிவு செய்துள்ள பார்வையாளர்கள்
பூங்காவிற்கு வருகை தர வேண்டாம் என்றும், அவர்களின் நுழைவுச்சீட்டுகள்
'ரிட்டர்ன் புரொமிஸ்' (Return Promise) திட்டத்தின் கீழ் மறுபரிசீலனை
செய்யப்பட்டு எதிர்காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d373be57-fcf4-4625-930b-a20c91fcf727/26-6a79ee5bc3f70.webp' /></p><p>ஆண்டுதோறும் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தரும் ஐரோப்பாவின்
முன்னணி பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான செசிங்டன், இதற்கு முன்னர் 2018
ஆம் ஆண்டிலும் இதேபோன்று பிரதான நீர்ழாய் உடைந்தமையினால் மூடப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஃபா தலைவர் மீது ஐரோப்பிய, ஆசிய மற்றும் வட அமெரிக்க காற்பந்து கூட்டமைப்புகள் கடுமையான குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/global-football-federations-accuse-fifa-president-1786375986"></link>
            <id>https://tamilwin.com/article/global-football-federations-accuse-fifa-president-1786375986</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் சில வணிகப் பங்குகளைத் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில், FIFA தலைவர் ஜியாணி இன்ஃபான்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் சில வணிகப் பங்குகளைத் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில், FIFA தலைவர் ஜியாணி இன்ஃபான்டினோ ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

ஐரோப்பிய (UEFA), ஆசிய (AFC) மற்றும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் (CONCACAF) காற்பந்து கூட்டமைப்புகள் கூட்டாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.</p><p></p><h2>FIFA தலைவர் மீதான விமர்சனம்</h2><p>

இது தொடர்பில் குறித்த மூன்று பிராந்தியக் கூட்டமைப்புகளின் தலைவர்களும்
பொதுச் செயலாளர்களும் இணைந்து வெளியிட்டுள்ள பகிரங்கக் கடிதத்தில், காற்பந்து
விளையாட்டு என்பது எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானதல்ல
என்றும், அது வீரர்கள், இரசிகர்கள் மற்றும் உறுப்புச் சங்கங்களுக்கே சொந்தமானது
என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இன்ஃபான்டினோவின் இந்த நடவடிக்கை விளையாட்டுத் தலைவருக்குரிய பண்பு அல்ல
என்றும் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63c5389b-bf2a-4780-9561-d046ecdabd62/26-6a7a151b8e0e1.webp' /></p><p>குறித்த சர்ச்சைக்குரிய வணிகப் பங்கு விற்பனைத் திட்டம் கைவிடப்பட்டு FIFA மன்னிப்புக் கோரியிருந்த போதிலும், இன்ஃபான்டினோவின் தலைமையை ஏற்க முடியாது என
நோர்வே காற்பந்துச் சம்மேளனம் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக்
கோரியுள்ளது.</p><p>இதனையடுத்து இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் அவருக்கு வழங்கி வந்த ஆதரவை&nbsp; மீளப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T19:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிலங்கு இல்லாமல் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி! ஏன் இந்தச் சிறப்புச் சலுகை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/relative-kanjipani-imran-shot-dead-maligawatte-1786386488"></link>
            <id>https://tamilwin.com/article/relative-kanjipani-imran-shot-dead-maligawatte-1786386488</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது கைவிலங்கு இடப்படுவது வழக்கம்.</p><p>

ஆனால், இஷாரா செவ்வந்தி கைவிலங்கு இன்றி, ஆடம்பரமான தோற்றத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது சமூக வலைதளங்களில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இஷாரா செவ்வந்தி சி.ஐ.டி (CID) காவலில் இருந்தபோது அவருக்கு கேக் வெட்டியது மற்றும் பிஸ்கட் வழங்கியது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.</p><p> 

அந்தச் சம்பவங்களின் போது சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

 இவருக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன, இவருக்குப் பின்னால் இருப்பவர் யார் என்பது போன்ற கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். </p><p>இதற்கான முறையான விளக்கத்தை பொலிஸ் தரப்பு வழங்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் #NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9zirngiDydA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T19:01:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-continues-on-day-102-1786377290"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-continues-on-day-102-1786377290</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(10.08.2026) முன்னெடுப்பட்டுள்ளன.

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(10.08.2026) முன்னெடுப்பட்டுள்ளன.</p><p>

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>செம்மணி மனித புதைகுழி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p> 48ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df1e7adc-d3ad-4a17-bd45-2208acd5b94c/26-6a79f84915978.webp' /></p><p>இந்த நிலையில்,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்படும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும்
சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம்..! இதுவரையில் 77 பலி பேர் என தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earthquake-pacific-coast-shakes-colombian-capital-1786385057"></link>
            <id>https://tamilwin.com/article/earthquake-pacific-coast-shakes-colombian-capital-1786385057</id>
            <summary type="text">கொலம்பியாவில் இன்று(10) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இது கடந்த பத்தாண்டுகளில் அந்நாட்டில் பதிவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் இன்று(10) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இது கடந்த பத்தாண்டுகளில் அந்நாட்டில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் என கூறப்பட்டுள்ளது.</p><p>


உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 7:34 மணிக்கு இந்த நிலநடுக்கம் நாட்டை உலுக்கியுள்ளது.</p><p></p><h2>5,000 மக்கள்</h2><p> </p><p>

இதன் மையப்புள்ளி, மேற்கு கொலம்பியாவில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் நகரமான சான் ஜோஸ் டெல் பால்மருக்கு வெளியே சுமார் மூன்று மைல் தொலைவில் பதிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd78dfe-5e41-4bff-aac2-b0b3bec99740/26-6a7a144eb19b3.webp' /></p><p>
</p><p>
 பொகோட்டா மற்றும் காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

2.8 மற்றும் 4.8 ரிக்டர் அளவிலான பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.</p><p>

 இந்த தொடர் நிலநடுக்கங்களால், கட்டிடங்கள் உடனடியாக இடிந்து விழுந்து, இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் நசுக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>நிலநடுக்கம்&nbsp;</h2><p> </p><p>

அதிகாலையில் மேற்கு கொலம்பியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 77 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியதுடன், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.</p><p>

அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/707cd0a6-383c-4921-a44e-48b636436ac6/26-6a7a144f6b89f.webp' /></p><p>


டஜன் கணக்கான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதால், மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

கட்டிடங்கள் அதிர்ந்தபோது, ​​மக்கள் இடிபாடுகளிலிருந்து தப்பித்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்ததாக தேசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>பேரழிவு</h2><p> </p><p>

கொலம்பிய புவியியல் சேவை, இந்த நிலநடுக்கம் 107 கிலோமீட்டர் (66 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், எல் கெய்ரோ மற்றும் எல் அகுய்லா போன்ற அண்டை நகரங்களைப் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532d6bd-337b-4bb3-8eab-0e5f561f1a38/26-6a7a14501cfd5.webp' /></p><p>

நிலநடுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான பகுதி நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தில் இருப்பதாக USGS தெரிவித்துள்ளது. </p><p>

இந்த பேரழிவிற்கு வெறும் ஏழு மணி நேரத்திற்கு முன்பு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கொலம்பியாவின் அண்டை நாடான ஈக்வடாரில் உள்ள மூன்று நகரங்களைப் பாதித்தது. </p><p>

பெருவின் ஸ்டிபோவில், கிட்டத்தட்ட ஒரு நாள் முன்பு 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T18:11:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதிலுக்கு பதில் - ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்..! ட்ருத் சோசியலில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interesting-idea-iran-demand-trump-compensation-1786382594"></link>
            <id>https://tamilwin.com/article/interesting-idea-iran-demand-trump-compensation-1786382594</id>
            <summary type="text">எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஈரானால் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆதரிக்கப்பட்டதாகவும் கூறப்படும் தாக்குதல்கள் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஈரானால் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆதரிக்கப்பட்டதாகவும் கூறப்படும் தாக்குதல்கள் மற்றும் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிடம் இழப்பீடு கோரியுள்ளார்.
</p><p>
Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில்,</p><p> 

கடந்த ஐந்து மாதப் போரில் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோருவது தொடர்பான யோசனையை "சுவாரஸ்யமான யோசனை" என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரானிடம் இழப்பீடு</h2><p> </p><p>

அதேவேளை, அதற்குப் பதிலாக அமெரிக்காவும் ஈரானிடம் இழப்பீடு கோரும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் கோரி வரும் இழப்பீடு தொடர்பான விடயம், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117072168149236615/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

2000ஆம் ஆண்டு யேமன் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க்கப்பலான USS Cole மீது நடத்தப்பட்ட கொடிய குண்டுத் தாக்குதலையும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என FBI தெரிவித்துள்ளது. </p><p>

இந்தச் சம்பவத்தில் 17 அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

"இது ஒரு சுவாரஸ்யமான யோசனை. ஏனெனில், பல மோதல்களிலும் சாலையோர குண்டுத் தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த மக்களுக்காக, தற்போது நானும் ஈரானிடம் இழப்பீடு கோருகிறேன்.</p><p></p><h2>ட்ரம்ப் பதிவு</h2><p>
</p><p>
 இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஈரான் பிரபலமானது. ஆரம்பத்தில் ஜெனரல் சுலைமானி தலைமையிலும் இவை இடம்பெற்றன. USS Cole தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும், போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்காகவும் இந்த இழப்பீட்டை கோருகிறேன்" என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa5eed04-60b9-44d2-8b8e-8b762d66711f/26-6a7a0ae34eddc.webp' /></p><p>
</p><p>
மேலும், கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பொது எழுச்சிப் போராட்டங்களின்போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேருக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
"எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இந்த விடயத்தை உறுதியாக முன்வைக்குமாறு எனது பிரதிநிதிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p>YOU MAY LIKE THIS..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rampG3yZRg0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T17:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036</id>
            <summary type="text">கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  

இந்த துப்பாக்கிச்சூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். </p><p> 

இந்த துப்பாக்கிச்சூடு தற்போது பிரான்ஸில் பதுங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான குடு அஞ்சு என்பவரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அண்மையில் குடு அஞ்சுவின் நெருங்கிய நபர் ஒருவர் இரத்மலானை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><h2><b>

துப்பாக்கி சூடு</b></h2><p>இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முகமது அஸ்மின் மொஹிதீன் என்ற 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17b6613f-9ec6-4ce8-b1f0-a5db6fe45ba7/26-6a79e3a216e66.webp' /></p><p>கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து பிற்பகல் 1.30 மணியளில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பியோடியுள்ளனர். </p><p> 

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p>

உயிரிழந்தவர் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் மன்னன் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் விதம் அருகிலுள்ள கட்டடமொன்றின் சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3Jg7aTaxRew" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-10T16:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் - துருக்கி - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அச்சப்பட தேவையில்லை: ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-turkey-saudi-security-deal-iran-state-1786373553"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-turkey-saudi-security-deal-iran-state-1786373553</id>
            <summary type="text">​பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே
கையெழுத்திடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், தெஹ்ரானுக்கு (ஈரானுக்கு)
எதிராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே
கையெழுத்திடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், தெஹ்ரானுக்கு (ஈரானுக்கு)
எதிராக அமைந்தது என அஞ்சத் தேவையில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

​</p><p>ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், பிராந்திய நாடுகள் வெளிச்சக்திகளைச் சாராமல் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகவே இந்த ஒப்பந்தத்தைப் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2> புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>

​பிராந்தியத்தின் புவிசார் மற்றும் வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு,
துல்லியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு செயற்படுத்தப்படும்
எந்தவொரு திட்டமும், அப்பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும்
ஸ்திரமின்மையை தடுக்கவும் உதவும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18607002-05d0-485b-a1d2-ae6279883f11/26-6a79e957be462.webp' /></p><p>

​சவுதி அரேபியாவின் மக்கா நகரில் இடம்பெற்ற சந்திப்பில், பாகிஸ்தான் பிரதமர்
ஷெஹ்பாஸ் ஷரீப், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகான் மற்றும் சவுதி பட்டத்து
இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோரால் இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி: சர்வதேச நியதிகளுடன் விசாரணை நடத்த சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/begin-the-chemmani-inquiries-1786377814"></link>
            <id>https://tamilwin.com/article/begin-the-chemmani-inquiries-1786377814</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ்
பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,</p><h2>செம்மணி மனித புதைகுழி</h2><p>
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500க்கும் மேற்பட்ட
என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.100 நாட்களைத் தாண்டி அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட
நடவடிக்கைகளை நோக்கி அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால்
இதுவரை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ecb540-d2f2-4691-8a56-487dc7e083bd/26-6a79f93917361.webp' /></p><p>
</p><p>
முக்கியமாக, இந்த என்புக்கூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, காணாமல்
ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள
முடியும்.

அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை
என்பதும்; அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும்
உண்மையானது. </p><p>அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது
கையளிக்கப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு
உட்பட்ட வகையில், அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள்
எதிர்பார்க்கின்றோம்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை
அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக
இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும்
நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக்
குறைவு என்ற அடிப்படையில், ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய
வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da005d3-b8f5-4062-bfe7-4f70743ba501/26-6a79f939bd775.webp' /></p><p>
</p><p>
ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த
கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து, இது வரையில் எடுக்கப்பட்ட
என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசத்திற்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786376865"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786376865</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசதிக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
தலா இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசதிக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>தலா இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையின் அடிப்படையில் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.</p><h2>பிணையில் செல்ல அனுமதி</h2><p>
</p><p>சாகர, மத்திய குற்றவியல் விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடுவெல நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.</p><p>
இதேவேளை, சாகர காரியவசம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175d1307-bb04-4125-993f-e9924cce9f09/26-6a79f2a3376ed.webp' /></p><p>
கடுவல நீதவான் அருண இந்திரஜித் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
பொலிஸ் மா அதிபர் தொடர்பில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T15:47:54+00:00</updated>
        </entry>
    </feed>
