<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-03T23:14:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-s-mismanagement-opposition-leaders-1785797396"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-s-mismanagement-opposition-leaders-1785797396</id>
            <summary type="text">மக்களுக்கான எதிர்க்கட்சி&amp;nbsp; நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டின்
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள், நீதித்துறை புனரமைப்பு
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்கான எதிர்க்கட்சி&nbsp; நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டின்
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள், நீதித்துறை புனரமைப்பு
மற்றும் அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தலைவர்களின் முக்கிய
கருத்துக்கள் வருமாறு,</p><p></p><h2>பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்</h2><p>
சிறைச்சாலை அமைப்பில் மிக முக்கியமான தலைமைப் பதவி காலியாகி ஒரு வருடமும்
இரண்டு மூன்று மாதங்களும் ஆகப்போவதைச் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர்
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், "உடம்பு இருக்கின்ற போதிலும் அதற்குத் தலை இல்லை"
என்று விமர்சித்தார்.
</p><p>
முன்னாள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு மனித
உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்த போதிலும், அரசு அதனைச் சிறிதும்
கண்டுகொள்ளவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a673773-3151-43a4-9532-013c2f61744b/26-6a711f67f291b.webp' /></p><p> </p><p>ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு மதிப்பளிக்கப்படாவிட்டால்
அவ்வாணைக்குழுவினால் என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

11 ஆயிரம் கைதிகளுக்கு மட்டுமே வசதிகள் உள்ள சிறைச்சாலைகளில், அதைவிடப்
பன்மடங்கு அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். </p><p>இந்த அவல நிலைக்கு அரசே
பொறுப்பேற்று உடனடியாகப் புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரை
நியமிக்க வேண்டும் என்றார்.</p><p>

நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான புதிய சட்டங்கள் தனிநபர்களை
மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன என்று சாடிய அவர், இத்தகைய முக்கிய
தீர்மானங்கள் மக்கள் தீர்ப்பு மூலமே எடுக்கப்பட வேண்டும் என்றார்.</p><p></p><p>
</p><h2>ராஜித சேனாரத்ன</h2><p>
சிறைச்சாலைகளில் கைதிகள் சால்மன் மீன் டின்னுக்குள் அடைத்து வைக்கப்பட்டது
போல் பெரும் நெருக்கடியில் வாழ்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜித
சேனாரத்ன தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5993009-f48c-4301-80d9-06c0c61377cb/26-6a711f68bbbd6.webp' /></p><p>
</p><p>
தானும் சிறைக்குச் சென்று வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர், அடிப்படை
மலசலகூட வசதிகள்கூட இல்லாத இவ்வாறான சூழல் ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறும்
என்றும் எச்சரித்தார்.</p><p>

கடந்த காலத்தில் தமது அரசே சிறைச்சாலைகளைப் புனரமைத்து வசதிகளை மேம்படுத்தியது
என்றும், தற்போதைய அரசு அதனை முற்றாகப் புறக்கணித்துள்ளது என்றும் அவர்
குற்றம்சாட்டினார்.</p><p></p><h2>சுரேஷ் ராகவன்</h2><p>
நாட்டில் தற்போது ஒரு 'சைபர் பண்ணை' இயங்கி வருகின்றது என்று தெரிவித்த
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேஷ் ராகவன், அரசை விமர்சித்து கருத்துத்
தெரிவித்தவுடனே சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு "ஹாஹா" எதிர்வினைகள்
இடப்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.</p><p>

எதிர்க்கட்சியை 'குப்பைகள்' என விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும், அரசு
நாட்டின் அண்மைய வரலாற்றையாவது மதித்து நடக்க வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார்.</p><h2>பிரேமநாத் சி. தொலவத்த</h2><p>
இந்த அரசே திட்டமிட்டு நாட்டைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று முன்னாள்
அமைச்சர் பிரேமநாத் சி. தொலவத்த குற்றம்சாட்டினார்.

சிறைச்சாலை நெருக்கடியிலும் மனித உரிமைகள் பிரகடனத்துக்கு அரசு
தலைவணங்குவதில்லை என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f0092c7-1cef-4f48-826b-19d2c8b01602/26-6a711f696a830.webp' /></p><p>
</p><p>
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் ஏராளமான நீதியரசர்கள்
காலியிடங்கள் நிலவுவதால் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும், தமக்குச்
சாதகமான தீர்மானங்களை எடுக்கும் நபர்களை மட்டுமே அரசு தக்கவைத்துக்கொள்ளப்
பார்க்கின்றது என்றும் தெரிவித்தார். </p><p>எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளின்
எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக
இந்தக் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-08-03T23:11:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி - 6 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் திட்டவட்டமான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-meeting-with-leaders-six-tamil-parties-1785792920"></link>
            <id>https://tamilwin.com/article/president-meeting-with-leaders-six-tamil-parties-1785792920</id>
            <summary type="text">தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ்க் கட்சிகளின்
தலைவர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் நேற்றையதினம்(3)&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ்க் கட்சிகளின்
தலைவர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் நேற்றையதினம்(3)&nbsp; ஜனாதிபதி செயலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் சுமுகமான சந்திப்பு நடைபெற்றுள்ளது.</p><p>அந்தச் சந்திப்பில் திட்டவட்டமான - விசேடமாகக் குறிப்பிடத்தக்க -
தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்று தெரியவருகின்றது.
</p><p>
வழமை போல கருத்துப் பரிமாற்றங்களை அடுத்து வாய்மொழி மூல உறுதிமொழிகள்
சிலவற்றுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது எனச் சந்திப்பில் பங்கு பற்றிய
கட்சிகளின் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.</p><p></p><h2>தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள்</h2><p>

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,
தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளின் பிரதிநிதிகளே ஜனாதிபதியை அவரது செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
</p><p>
வழமை போல் புதிய அரசமைப்பு திருத்தத்துக்கான நடவடிக்கைகள் விரைவில்
ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.</p><p>

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகள் அவர்களுக்கு விடுவிக்கப்பட
வேண்டும் என்ற அரசின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என்று
கூறிய ஜனாதிபதி, இராணுவத்தின் கைவசம் உள்ள அத்தகைய காணிகளை விடுவிப்பதில் என்ன
நெருக்கடி என்பது குறித்து இராணுவத்திடம் தாம் அறிக்கை கோரியிருக்கின்றார்
என்றும் அது கிடைத்ததும் அவ்விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்
சொன்னார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca79713-1639-4b8b-82c5-46d42842bf20/26-6a710f265ac76.webp' /></p><p>
</p><p>
மலையக மக்களுக்கு காணிகளைப் பகிர்ந்து அளிப்பதில் சில நெருக்கடிகள்
இருக்கின்றன என்று சொன்ன ஜனாதிபதி, மலையகத் தோட்டங்களை நிர்வகிக்கும்
கம்பனிகள் இவற்றில் இறுக்கமான நிலைப்பாட்டில் இருக்கின்றன என்று
குறிப்பிட்டார்.</p><p>

மாகாண சபைத் தேர்தலை என்ன முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில்
நிறுவப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவு கிடைத்ததும் தேர்தல்
நடத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தெரிவுக்குழுவின் செயற்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும்,
இது காலத்தை இழுத்தடிக்கும் வேலை என்றும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள்
ஜனாதிபதியிடம் ஒரே குரலில் தெரிவித்தனர்.</p><p></p><h2>&nbsp;மாகாண சபைத் தேர்தல்</h2><p>
</p><p>
இந்தச் சந்திப்புக் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலக
முன்றிலில் வைத்து ஊடகங்களுக்குத் கருத்து தெரிவிக்கையில்,</p><p>
"தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் குழுவாக ஜனாதிபதியைச் சந்தித்து,
அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுகளை
நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது புதிய அரசமைப்பைக் கொண்டுவருவது தொடர்பான
வாக்குறுதிகள் சுட்டிக்காட்டப்பட்டன. </p><p>அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, சிறிய
தாமதம் ஏற்பட்ட போதிலும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என
உறுதியளித்தார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் இதுவரை நடத்தப்படாமை குறித்து கேள்வி
எழுப்பியபோது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை வந்த பின்னரே
முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0283bb5a-f25f-4282-8125-1719823ec40c/26-6a710f274b17c.webp' /></p><p>

இருப்பினும், அந்தத் தெரிவுக்குழுவின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும்,
தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கே அது பயன்படுத்தப்படுவதாகவும் நாங்கள்
சுட்டிக்காட்டினோம்.</p><p>

இதனையடுத்து, தெரிவுக்குழுவின் தலைவருடன் இது குறித்து நேரடியாக ஆலோசித்து
உரிய தீர்வை வழங்குவார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள்
இராணுவத்தினராலும் ஏனைய அரசு நிறுவனங்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை
குறித்தும் விவாதிக்கப்பட்டது.
</p><p>
கொள்கை ரீதியாக அந்த நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு
உடன்பட்டிருந்தாலும், நடைமுறையில் தாமதம் நிலவுவது குறித்துச்
சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>நிலங்களை விடுவிப்பதில் உள்ள தடைகள் குறித்து
இராணுவத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இவற்றுடன், மலையக மக்களுக்குச் சொந்தமான காணி உரிமை இன்னமும் கிடைக்கப் பெறாத
நிலைமை குறித்தும், தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்டு
மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்பட்ட போதிலும், அதற்கான முறையான
பதில்களோ தீர்வுகளோ இன்னமும் எட்டப்படவில்லை." - என்று எம். ஏ. சுமந்திரன்
மேலும் தெரிவித்தார்.</p><p></p><h2>&nbsp;மலையக சமூகம்</h2><p>
</p><p>
இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத்
தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்
தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/979b5a8e-e44d-4b20-8555-bd6bdb536cb0/26-6a710f2803218.webp' /></p><p>
</p><p>
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டதுடன்,
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது
எனவும், எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாட
எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
</p><p>
தற்போதைய அரசின் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்புக்கான
முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குறித்த பணியை
அவசரமாகச் செய்ய முடியாது எனவும், பல்வேறு சமூகங்களுக்கு இடையே உள்ள
பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய சமூகப் பரிசீலனையாக அது குறித்துக்
கவனம் செலுத்துவது முக்கியம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.</p><h2>நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை</h2><p> இது 1948, 1972 மற்றும்
1978 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புகளைப் போன்று, ஒரு
தரப்பினரால் மாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் அரசமைப்பாக இருக்கக் கூடாது
என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசமைப்பு
திருத்தப்பட வேண்டும் என்பதுடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும்
ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார்.</p><p> எனினும்,
இந்தச் சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொண்டுவரப்படும் அரசமைப்புத் திருத்தத்தை
விட, புதிய மக்கள் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதே அவசியமாகும் எனச்
சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான கருத்தாடலைத் தொடங்குவதன்
முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8746b062-1295-4614-a23b-ceee0df7a5b8/26-6a710f28b7b0d.webp' /></p><p>
</p><p>
பல்வேறு சமூகப் பிரிவினரும் தமது தேவைகளுக்காக மாத்திரம் செயற்படுவதைத்
தாண்டி, இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்படும் நாட்டை உருவாக்கும் அடித்தளம்
தற்போதைய அரசின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த
காலத்தில் நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களும் இடம்பெறவில்லை என்பதையும்
சுட்டிக்காட்டினார். </p><p>நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் முறையான ஆட்சி
முறைமையே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.</p><p>

மலையக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டு, தோட்டத் தொழிலாளர்கள்
மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு வதிவிடத்துக்காக 10 பேர்ச் காணிக்கான
சட்டபூர்வ உரிமையை வழங்கும் அரசின் திட்டம் தொடர்பில் இங்கு கருத்துத்
தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வி. இராதாகிருஷ்ணன், கம்பனிகளின்
எதிர்ப்புக் காரணமாகத் தங்களது அரசுகளால் நிறைவேற்றிக்கொள்ள முடியாதிருந்த
அந்தப் பணியானது, தற்போதைய அரசின் கீழ் நிறைவேறும் என எதிர்பார்ப்பதாகவும்
குறிப்பிட்டார்.
</p><p>
எந்தவொரு மக்களும் வசிக்காத மலையகப் பிரதேசங்களில் கூட நில வெடிப்புகள்
பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கேற்ப மத்திய மலையகத்தின்
நிலையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே அந்த சிக்கலுக்கான தீர்வு காணப்பட
வேண்டும் எனவும், அதற்காகத் தற்போது தனி அதிகாரசபையொன்று
ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><h2>பொருளாதார நிவாரணம்</h2><p> அத்தகைய நடவடிக்கைகளின் ஊடாக
மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது அரசின் எதிர்பார்ப்பாகும்
எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
</p><p>
வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு தேவைகளின் அடிப்படையில் தோட்டக்
கம்பனிகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், 2042 ஆம் ஆண்டுக்கு
முன்னர் இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் மேலும்
குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன்படி, வெகுவிரைவில் நிறுவனங்களுடன் புதிய
ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளமையால், மலையக மக்களுக்கு நிலத்துக்கான
சட்டபூர்வ உரிமையை வழங்குவது தொடர்பான சரத்துகளை அதில் உள்வாங்க
எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d464674-c23c-4add-b21f-dd5c43c861df/26-6a710f297353d.webp' /></p><p>
</p><p>
இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்
திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த மக்களுக்கு
வீட்டுரிமை கிடைத்த போதிலும், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச்
செலுத்துவது உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் பல நடைமுறைச்
சிக்கல்களை எதிர்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான்
சுட்டிக்காட்டினார்.
</p><p>
அந்த மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்காக தொண்டமான் அமைப்பையும்
நெவிடா அமைப்பையும் இணைத்து புதிய வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு ஏற்கனவே
முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பெருந்தோட்ட மற்றும் சமூக
உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை
விட அதிகமான தொகையை 2027 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்க
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p>

வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் நிலவும் காணிப் பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க, மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்பதே அரசின்
நிலைப்பாடு என்றும், ஆணைக்குழுக்களை நியமிப்பது உள்ளிட்ட அதற்கான பல சாதகமான
நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><h2>டித்வா அனர்த்தம்</h2><p>
</p><p>
மேலும், போரினால் வீடுகளை இழந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வாக,
அந்த மக்களுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் 13 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக
2027 மற்றும் 2028 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு
செய்யப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
</p><p>
டித்வா அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்
கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும்
வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும்
குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தப் பணிகள் நிறைவடையும் வரை அந்த மக்களுக்கு வாடகை
வீட்டுக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும்
தெரிவித்தார்.
</p><p>
மாகாண சபைத் தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணிகள்
குறித்தும் இங்கு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், தொல்பொருள்
திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகார சபை போன்ற
நிறுவனங்கள் பழைய கொள்கைகளின் அடிப்படையில் செயற்படுவதால் வடக்கு மற்றும்
கிழக்கு மாகாண மக்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் குறித்தும்
பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெளிவுபடுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd2299d-6777-41e6-86a6-06c207ad3893/26-6a710f2a2f0f2.webp' /></p><p>
</p><p>
இந்த அனைத்துக் கருத்துகளையும் கேட்டறிந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு,
இவ்வாறான ஒரு கூட்டணியை உருவாக்குதல் தொடர்பில் அனைவருக்கும் தனது நன்றியைத்
தெரிவித்தார். </p><p>மேலும், சமூகத்தில் தவறான புரிதல்கள் ஏதும் ஏற்படாதவாறு பொதுவாக
மக்கள் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் பிரதிநிதிகளிடம்
ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
</p><p>
மேற்படி சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் தவிசாளர்
எம்.எஸ்.எஸ். அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம். தாஹிர்,
என்.பி.எம்.எம். தாஹிர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன்
பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி., ஜனநாயகத் தமிழ்த் தேசியக்
கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சுரேஷ் பிரேமச்சந்திரன்,
முருகேசு சந்திரகுமார், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ.
சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி., இலங்கை முஸ்லிம் காங்கிரஸின்
சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., பொதுச்செயலாளர் நிசாம் கரியப்பர்
எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வி. இராதாகிருஷ்ணன் எம்.பி.
மற்றும் பரத் அருள்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்." - என்றுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T22:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தியும் தமது வன்முகத்தை காட்டி நிற்கின்றது - மா.சத்திவேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/m-satthivel-npp-showing-its-fierce-side-too-1785784410"></link>
            <id>https://tamilwin.com/article/m-satthivel-npp-showing-its-fierce-side-too-1785784410</id>
            <summary type="text">அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின்
காலத்திலும் தமது வன் முகத்தை காட்டி நிற்கின்றது என கிறிஸ்தவ ஒத்துழைப்பு
இயக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின்
காலத்திலும் தமது வன் முகத்தை காட்டி நிற்கின்றது என கிறிஸ்தவ ஒத்துழைப்பு
இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் இன்று(03.08.2026) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையிலே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முள்ளிவாய்க்கால்&nbsp;நினைவேந்தல்</h2><p>

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாற்றம் எனும் தொனியோடு ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி முள்ளிவாய்க்காலில்
நிகழ்த்திய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்காக தெற்கில் நினைவேந்தல்
நடத்துபவர்களையும் அந்த நினைவுகளில் வளவாளர்களாக கலந்து கொள்பவர்களையும்
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து வருகிறது.
</p><p>
இதனை கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் வன்மையாக
கண்டிப்பதோடு நினைவேந்தல் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாட்டினை
நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9641c75d-5aad-4ad9-a745-186b0d92ffcd/26-6a70eab19dec1.webp' /></p><p>கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும்
முள்ளிவாய்க்கால் நிறைவேந்தலை இனவாத கும்பல்களின் எதிர்ப்புக்கு மத்தியில்
தெற்கில் நடத்தி வருகின்றது. </p><p>

அந்த வகையில் கடந்த வருடம் (2025) நீர்கொழும்பில்
நினைவேந்தல் நடத்திய போது இனவாத கும்பல் எதிர்ப்பினை நிகழ்த்த திரண்டதோடு
நிகழ்வுக்குள் பொலிசாரும் நுழைந்து பதற்ற நிலையை ஏற்படுத்தினர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து நினைவேந்தலை ஒழுங்கு செய்த கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின்
அருட் சகோதரி ஒருவரும், அருட்தந்தை ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்
விசாரணைக்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>அரச பயங்கரவாதம்</h2><p> </p><p>

இது
எமது அமைப்புக்கு விடுக்கப்பட்ட இனவாத அடக்குமுறை அச்சுறுத்தலாகவே
கருதுகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில்
தற்போது அந்த நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட பன்னாட்டு குற்றங்கள் நூலின்
ஆசிரியர் சிரிஞானேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு
பிரிவினர்(CTID)அழைத்திருப்பது அச்சுறுத்தலின் அடுத்த கட்டம் எனலாம்.</p><p>

தெற்கில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராக 1971 மற்றும் 1988களில்
நிகழ்த்திய கிளர்ச்சியினை அடக்க அரச பயங்கரவாதம் திட்டமிட்ட வகையில்
சித்திரவதை முகாம்களுக்குள் பெருந்தொகையான இளைஞர்களை சித்திரவதைக்கு
உட்படுத்தி படுகொலைகளை செய்தது மட்டுமல்ல சமூக புதைகளுக்குள்ளும் தள்ளியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79e8993-ca4d-406c-8f28-a2ccc3ef09c3/26-6a70eab0e9a77.webp' /></p><p>இத்தகைய கிளர்ச்சி இனியும் நிகழாதிருக்க வடக்கு கிழக்கின் அரசியல் எழுச்சியை
பயங்கரவாதமாகவும், பிரிவின வாதமாகவும், தேசத்துரோகமாகவும் அடையாளப்படுத்தி
சிங்கள இளைஞர்களின் மூளையை சலவை செய்து அவர்கள் கைகளில் ஆயுதத்தை திணித்து இன
அழிப்பையும் இனப்படுகொலையையும் அரங்கேற்றி வெற்றி கொண்டாட்டம் நடத்துகின்றது.
</p><p>
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை தெற்கில் நடத்துவதன் மூலம் அரச பயங்கரத்தின்
முகம் வெளிப்பட்டு விடும். வடக்கின் மக்கள் நீதி குரல் எழுப்புவது போல தெற்கின்
மக்களும் நீதி குரல் எழுப்புவர் என தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும்
பயப்படுகின்றது.</p><p></p><h2>முதலாளித்துவ பேரினவாத கட்டமைப்பு&nbsp;</h2><p> </p><p>

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னால் இருக்கின்ற
முதலாளித்துவ பேரினவாத கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்துவதை தடை
செய்வதன் ஓர் அங்கமாகவே தற்போது பல்வேறு மட்டங்களில் விசாரணைகளை முடுக்கி
விடுகின்றனர்.</p><p>இந்நிலையில் தெற்கின் முற்போக்கு சக்திகள் கடந்த கால அரச பயங்கரவாதத்தின்
செயல்பாடுகளுடன் தொடர்புடைய சித்திரவதை முகாம்கள், சமூக புதை குழிகள்
என்பவற்றுக்கான நீதியைத் தேடும் முகமாக மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை
ஆரம்பித்தால் மட்டுமே வடக்கில் அரச பயங்கரவாதத்தின் முகத்தினையும் அது
நிகழ்த்திய கொடூரத்தையும்தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b333a73a-b2c2-4a78-b387-4ac1080e39cf/26-6a70eab043452.webp' /></p><p>

அத்தோடு
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு எதிராகவும் குரல்
கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.</p><p>

இன்று கிறிஸ்தவ ஒத்துழைப்பு
இயக்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எடுக்கும் அடக்குமுறை
செயற்பாடுகள் தெற்கில் ஏனைய அமைப்புக்களுக்கு எதிராகவும் அது விரிவடையும்
என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றோம் என குறிப்பிட்ப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T21:23:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் PickMe கட்டண முறைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-wheeler-drivers-protest-against-pickme-1785782549"></link>
            <id>https://tamilwin.com/article/three-wheeler-drivers-protest-against-pickme-1785782549</id>
            <summary type="text">திருக்கோணமலை பகுதியில் சேவையாற்றும்
முச்சக்கர வண்டி சாரதிகள் பிக்மி(PickMe) செயலியின் கட்டண முரண்பாடுகள்
மற்றும் சேவை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருக்கோணமலை பகுதியில் சேவையாற்றும்
முச்சக்கர வண்டி சாரதிகள் பிக்மி(PickMe) செயலியின் கட்டண முரண்பாடுகள்
மற்றும் சேவை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

அலஸ்தோட்டம் சந்தியில் இருந்து பேரணியாக புறப்பட்ட சாரதிகள், மூன்றாம் கட்டை
வழியாக பிக்மி(PickMe) அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.</p><p></p><h2>வருமான இழப்பு</h2><p>
</p><p>
சாரதிகளின் குற்றச்சாட்டின்படி, திருக்கோணமலை சாரதிகளுக்கு குறைந்த கட்டணங்கள்
நிர்ணயிக்கப்படுவதால் வருமான இழப்பு ஏற்படுவதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>உதாரணமாக
திருக்கோணமலையில் இருந்து சிகிரியா செல்ல ரூ.9,000 கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிரியாவில் இருந்து திருக்கோணமலை வருவதற்கு ரூ.12,000 கட்டணம் அறவிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a210883-5fa3-4b6e-bcc5-c3ead97c6874/26-6a70e2cb1eeb4.webp' /></p><p>இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர்
வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் கலந்துகொண்டு பிக்மி(PickMe) நிறுவன பிரதிநிதிகளுடன்
கலந்துரையாடியுள்ளார். </p><p>இதனையடுத்து குறித்த நிறுவனம்14 நாட்களுக்குள் உரிய தீர்வை வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a805fd5b-0eae-4fd8-9ff5-44468c8cb385/26-6a70e2cbeec74.webp' /></p><p>அதேவேளை, வெளிப்பிரதேச வாகனங்கள் தொடர்பாக பிரதேச சபை முன்னர் நிறைவேற்றிய
தீர்மானம் குறித்து ஏற்பட்ட சர்ச்சை தொடர்பிலும் பொலிஸார் இன்று விசாரணை
மேற்கொண்டதுடன் அதற்கு தவிசாளரும் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T20:51:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[Deal Or Total Surrender..! ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deal-total-surrender-trump-slams-iran-duplicity-1785787435"></link>
            <id>https://tamilwin.com/article/deal-total-surrender-trump-slams-iran-duplicity-1785787435</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு &quot;ஒப்பந்தம் (Deal) அல்லது முழுமையான சரணடைவு (Total Surrender)&quot; என்ற இரண்டு வழிகளே உள்ளதாக கடுமையாக எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு "ஒப்பந்தம் (Deal) அல்லது முழுமையான சரணடைவு (Total Surrender)" என்ற இரண்டு வழிகளே உள்ளதாக கடுமையாக எச்சரித்துள்ளார்.</p><p>

தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், ஈரான் பேச்சுவார்த்தைக்காக மறைமுகமாக முயற்சி செய்தபோதும், பொதுவெளியில் அதை மறுப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
"ஈரான் ஒப்புக்கொண்டாலும் இல்லையென்றாலும், பல தசாப்தங்களாக அவர்கள் உருவாக்கிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/076e0ed4-3128-42b9-904a-e5b25aeb2a0c/26-6a70f77947261.webp' /></p><p>

மேலும், உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீது ஈரான் கட்டுப்பாடு செலுத்துவதாக கூறுவதை ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
</p><p>
"ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே அமெரிக்க கடற்படையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. 

அமெரிக்கா விரும்பினால் மட்டுமே ஈரானுக்குள் எதுவும் செல்லும்; ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைவு ஏற்படும் வரை அதுவே தொடரும்," என்று அவர் கூறினார்.</p><p></p><h2>&nbsp;பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>


இதற்கு முன், ஈரான் மீது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தேன் என்றும், ஆனால் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் வேண்டுகோளையும், ஈரான் தரப்பிலிருந்து வந்த அணுகுமுறையையும் தொடர்ந்து அந்தத் திட்டத்தை ஒத்திவைத்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca70d75-8aad-4a6f-8c4f-a089b3786467/26-6a70f779f408a.webp' /></p><p>

மேலும், திங்கட்கிழமை முதல் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>

அந்நாட்டு வெளியுறவு அமைச்சக பேச்சாளர் எஸ்மாயில் பகாயி, அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என்றும், ஓமனுடன் பாதுகாப்பான கடல் போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T20:26:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணைத் தடுப்புப் பாகங்கள் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா புதிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/america-s-new-deal-1785786784"></link>
            <id>https://tamilwin.com/article/america-s-new-deal-1785786784</id>
            <summary type="text">அமெரிக்க பாதுகாப்புத் துறை, ஏவுகணைத் தடுப்புப் பாகங்களின் உற்பத்தித் திறனை
விரிவாக்குவதற்காக &#039;லொக்ஹீட் மார்ட்டின்&#039; மற்றும் &#039;நோர்த்ரோப் க்ரம்மன்&#039; ஆகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க பாதுகாப்புத் துறை, ஏவுகணைத் தடுப்புப் பாகங்களின் உற்பத்தித் திறனை
விரிவாக்குவதற்காக 'லொக்ஹீட் மார்ட்டின்' மற்றும் 'நோர்த்ரோப் க்ரம்மன்' ஆகிய
முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ளது.</p><p>

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை அமெரிக்க அரசு
வெளியிடவில்லை.</p><p></p><h2>அமெரிக்க இராணுவம்</h2><p>
</p><p>
உக்ரைன் மற்றும் ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்க இராணுவத்தின்
ஆயுதக் கையிருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும்
செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b288b2e7-7a45-4fab-934b-e70581806965/26-6a70f34fa52d4.webp' /></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T20:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[யென் மதிப்பை உயர்த்த அமெரிக்காவுடன் கைகோர்த்த ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/japan-joins-hands-with-us-to-boost-yen-value-1785785624"></link>
            <id>https://tamilwin.com/article/japan-joins-hands-with-us-to-boost-yen-value-1785785624</id>
            <summary type="text">ஜப்பானிய நாணயமான &#039;யென்&#039; மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக்
சரிந்ததைத் தொடர்ந்து, அதன் மதிப்பை உயர்த்த ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து
கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானிய நாணயமான 'யென்' மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக்
சரிந்ததைத் தொடர்ந்து, அதன் மதிப்பை உயர்த்த ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து
கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
</p><p>
சந்தையில் யென் நாணயங்களை வாங்கும் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாக இரு
நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>யென் நாணய மதிப்பு&nbsp;</h2><p>

ஜப்பானுக்கு உதவும் வகையிலும் உலகப் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க டொலருக்கு எதிரான யென் மதிப்பு 1.4
சதவீதம் வரை உயர்ந்து, 155.20 நிலையை எட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d1a2182-5d6a-42ad-a21d-85c8afd02bdf/26-6a70f03f8906b.webp' /></p><p>ஜப்பானில் அதிகரித்து வரும் இறக்குமதி விலைகள் மற்றும் பணவீக்கத்தைக்
கட்டுப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

தேவைப்பட்டால் மேலும் இதுபோன்ற கூட்டு தலையீடுகளை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம்
என்று ஜப்பான் நிதியமைச்சகம் மற்றும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கட்
பெசென்ட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, அமெரிக்காவும்
ஜப்பானும் இணைந்து இத்தகைய கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது இதுவே முதல்
முறையாகும். அதேநேரம், யென் மதிப்பு உயர்ந்ததால் ஜப்பானின் பங்குச்சந்தையான 'நிக்கெய்'
சரிவைச் சந்தித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T20:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக M. T. M. தாஹிஸ் தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dahis-elected-as-new-chairman-1785787472"></link>
            <id>https://tamilwin.com/article/dahis-elected-as-new-chairman-1785787472</id>
            <summary type="text">மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் M. T. M.
தாஹிஸ் நேற்று(03.08.2026) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் மூதூர் பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் M. T. M.
தாஹிஸ் நேற்று(03.08.2026) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதன் மூலம் மூதூர் பிரதேச சபையின் ஆட்சி பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்தி
வசமாகியுள்ளது.</p><h2>புதிய தவிசாளர்</h2><p>
புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு,
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் A. T. M. ராபி தலைமையில் நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/154b0371-9809-4a89-9ec2-a744a7c16721/26-6a70f7ae2d38f.webp' /></p><p>இந்தக் கூட்டத்தின் போது புதிய தவிசாளரின் பெயரை இலங்கை தமிழரசு கட்சியின்
உறுப்பினர்கள் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.
</p><p>
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கிடையே
எட்டப்பட்ட ஒரு வருட கால தவிசாளர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், பதவி வகித்த
முந்தைய தவிசாளர் கடந்த 10 ஆம் திகதி தனது பதவியை பதவி விலகல் செய்தார்.</p><h2>மூதூர் பிரதேச சபை</h2><p> அதனைத்
தொடர்ந்து, காலியான தவிசாளர் பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு
மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் முன்னெடுத்திருந்தார். மூதூர் பிரதேச சபையானது மொத்தம் 22 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a72b7e5e-257e-49a8-bae2-0e8a19e5ba47/26-6a70f7af0f340.webp' /></p><p>இலங்கை தமிழரசு கட்சி 05 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 04
உறுப்பினர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 03 உறுப்பினர்களையும் தேசிய
மக்கள் சக்தி 03 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்களையும்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 02 இரு உறுப்பினர்களையும், தேசிய காங்கிரஸ் 01
உறுப்பினரையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 01
உறுப்பினரை சுயேச்சைக் குழு 01 உறுப்பினரையும் கொண்டுள்ளது.</p><p>
தவிசாளர் தெரிவின் போது, புதிய தவசாளர் பதவிக்காக, வேறு எவரும் பிரதிக்கப்படாத
நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் M. T. M. தாஹிஸ் தெரிவு செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-03T20:20:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் - தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-found-in-iranamadu-police-investigating-1785781102"></link>
            <id>https://tamilwin.com/article/body-found-in-iranamadu-police-investigating-1785781102</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்திற்கு அருகில் எரிந்த
நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்று(03...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்திற்கு அருகில் எரிந்த
நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>குறித்த சடலமானது இன்று(03.08.2026) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்தவரின் சடலம்&nbsp;</h2><p>
இரணைமடு குளத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேட்கொண்டவர்களினால் வழங்கப்பட்ட
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி தடயவியல் ஆய்வு நிபுணர்கள் சான்றுகளை
சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d73bd5-48a3-4755-a5b5-19c1b38e914f/26-6a70de79c36e0.webp' /></p><p>

குறித்த சம்பவத்தை மாவட்ட நீதிபதி பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று
பரிசோதனைக்காகவும், உயிரிழந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவும்
சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
</p><p>இது திட்டமிட்ட கொலையா அல்லது தவறான முயற்சியால் ஏற்பட்ட உயிர்மாய்ப்பா என்ற ரீதியில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T19:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் 4 மாதங்களுக்குப் பின்னர் பெய்த கனமழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rains-in-batticaloa-after-4-months-1785779393"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rains-in-batticaloa-after-4-months-1785779393</id>
            <summary type="text">கடந்த 4 மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில்
நேற்று(02.08.2026) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
நேற்றைய தினம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 4 மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில்
நேற்று(02.08.2026) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
</p><p>நேற்றைய தினம் 47.8
மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><h2>கடும் மழை</h2><p>

இதனையடுத்து மட்டக்களப்பில் 47.8 மில்லி மீற்றரும்,
உறுகாமத்தில் 71.0 மில்லி மீற்றரும், நவகிரி பிரதேசத்தில் 62.0 மில்லி மீற்றரும்,
உன்னிச்சையில் 50.8 மில்லி மீற்றருயும், தும்பங்கேணியில் 40.0 மில்லி மீற்றரும்,
பாசிக்குடாவில் 14.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
</p><p>
குறைந்த
மழைவீழ்ச்சியாக கட்டுமுறிவு பிரதேசத்தில் 3.0 மில்லி மீற்றர் மழை
வீழ்ச்சியும், வாகனேரியில் 7.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும்
பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b026809-586b-4259-993e-bddf2fc8d5ef/26-6a70d5b125bfc.webp' /></p><p>

இதேவேளை மழை பெய்யத் துவங்கிய அன்று மாலை 5 மணிவரை மட்டக்களப்பில் 37.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
</p><p>
சுமார் 2 மணித்தியாலங்கள் பெய்த மழையின் காரணமாக மட்டக்களப்பில் உணரப்பட்ட உஷ்ணம்
தணிந்துள்ளது.
அத்துடன் கிணறுகள், குளங்கள், ஆறுகள், வாவிகள் மற்றும் ஏனைய நீர்
நிலைகளிலும் ஓரளவுக்கு நீர் தேங்கியுள்ளது.</p><p></p><h2>வெப்பமான காலநிலை</h2><p>
</p><p>

இதுவரை நாட்களும் மட்டக்களப்பில் நிலவிய வெப்பமான காலநிலையால்
மக்களின் நடமாட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0a9f4d-60f6-468f-b035-a61e21e10cb3/26-6a70d5f1af152.webp' /></p><p>கட்டிட நிருமாணத்
தொழில் செய்வோர், திறந்த வெளிகளில் தொழில்களில் ஈடுபடுவோர், விவசாயிகள்,
கடற்றொழிலாளர்கள், மைதான விளையாட்டில் ஈடுபடுவோர் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

மேலும், பலமாக வீசிய வெப்பக் காற்று குப்பை மேடுகளைப் புரட்டிப்
போட்டதோடு விவசாயப் பயிர்கள், மரங்களின் இலைகள் மற்றும் கிளைகளையும் பெயர்த்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T19:09:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவில் நாமல் - ரோஹித ராஜபக்சவின் பெயர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harak-katta-audio-leak-namal-rohitha-rajapaksha-1785782930"></link>
            <id>https://tamilwin.com/article/harak-katta-audio-leak-namal-rohitha-rajapaksha-1785782930</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. 

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக்கட்டா தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவொன்று (Audio Leak) சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. </p><p>

இதில் நாமல் ராஜபக்ச, ரோஹித ராஜபக்ச, சாகல ரத்நாயக்க மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
ஹரக்கட்டாவைச் சிறையிலிருந்து விடுவிக்கவும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கவும் சுமார் ரூ. 20 கோடி லஞ்சம் கோரப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
இந்த டீலில் சரித் அபேசிங்க, முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
 ஹரக்கட்டாவை (நதுன் சிந்தக) சிறையிலிருந்து விடுவிப்பதற்கும் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் ரூ. 20 கோடி (2000 லட்சம் ரூபா) லஞ்சமாகப் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>

இதில் சுமார் ரூ. 12 கோடி (1200 லட்சம் ரூபா) ஏற்கனவே ஹவாலா (உண்டியல்) முறை மூலம் துபாயில் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUvKma_B1SM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T19:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிட்னியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-people-injured-in-sydney-building-collapse-1785771570"></link>
            <id>https://tamilwin.com/article/2-people-injured-in-sydney-building-collapse-1785771570</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த சம்பவமானது இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முதலுதவி சிகிச்சை</h2><p>
</p><p>
சிட்னியின் மத்திய வணிகப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள அல்டிமோ என்ற பகுதியில் காலை 11 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புப் படையினர், அங்கிருந்த 7
பேருக்கு முதலுதவி சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b006bc4e-7944-4b5f-afc3-fcca882c38c3/26-6a70b792ebc95.webp' /></p><p>
</p><p>
அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக்
கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>அத்துடன் கட்டுமானப் பணி நடப்பெற்று வந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தின்
சுவர்ப் பகுதி இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீஃபா தலைவருக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/english-football-association-withdraw-support-1785779402"></link>
            <id>https://tamilwin.com/article/english-football-association-withdraw-support-1785779402</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து
கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து
கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ மீண்டும் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஆதரவைத் திரும்பப் பெற&nbsp; இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு செய்துள்ளது.
</p><p>
உலகக் கிண்ணப் போட்டிகள் உள்ளிட்ட தொடர்களை நிர்வகிக்கும் புதிய அமைப்பில் 20
சதவீத பங்குகளை விற்று 4.2 பில்லியன் டொலர் நிதி திரட்ட ஃபீஃபா
திட்டமிட்டிருந்தது.</p><p></p><h2>பீஃபா தலைவர்</h2><p>

ஆனால், பல்வேறு கால்பந்து அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் இத்திட்டம்
அண்மையில் கைவிடப்பட்டது.</p><p>

முன்னதாக, இன்பான்டினோவிற்கு அளித்து வந்த ஆதரவை முறைப்படி திரும்பப் பெறுவதாக
வேல்ஸ் நாட்டின் கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3487379d-310c-468f-a6bf-b2b1299b49b7/26-6a70d6a100212.webp' /></p><p>
</p><p>
சிறந்த நிர்வாகமின்மை, தவறான தலைமைத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை
ஆகிய காரணங்களால் இன்பான்டினோ மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக வேல்ஸ்
கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
2016-ஆம் ஆண்டு முதல் ஃபீஃபா தலைவராக இருக்கும் இன்பான்டினோ, 2027 முதல் 2031
வரையிலான அடுத்த தவணைக்கும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.</p><p>

எனினும், ஐரோப்பிய கால்பந்து அமைப்பான UEFA உள்ளிட்ட முக்கிய அமைப்புகள்
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மீண்டும் தலைவராவதில் அவருக்கு
பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் கனமழை..! மண் சரிந்து விழுந்ததில் பலியான 4 உயிர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodies-4-people-trapped-buried-in-the-landslide-1785776127"></link>
            <id>https://tamilwin.com/article/bodies-4-people-trapped-buried-in-the-landslide-1785776127</id>
            <summary type="text">ஹட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.</p><p></p><h2>சீரற்ற காலநிலை</h2><p> </p><p>

அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b402435-31a9-4eb6-9b37-41ed5ae708fe/26-6a70cae9de4d2.webp' /></p><p> </p><p>

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை: ஈரான் அதிரடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-says-no-talks-are-under-way-1785777226"></link>
            <id>https://tamilwin.com/article/iran-says-no-talks-are-under-way-1785777226</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான்&amp;nbsp; அதிரடியாக அறிவித்துள்ளது.
அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான்&nbsp; அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>தாக்குதல்களைத் ஒத்தி வைப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறிவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கூற்றுக்கு முற்றிலும் மாறாக ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>மிகப்பெரிய தாக்குதல்</h2><p>
</p><p>கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து வரும் போக்கைப் போலவே, ஈரானின் மீது "மிகப்பெரிய தாக்குதல்களை" நடத்தத் திட்டமிடுவதாக அறிவிப்பதும், பின்னர் கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்வதும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் வாடிக்கையாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fde1b28-ef8a-44ed-95cf-7a0889a25bd3/26-6a70cc4c51289.webp' /></p><p>
நான் மக்களைக் கொல்வதை விரும்பவில்லை; மாறாக ஒப்பந்தம் செய்வதையே விரும்புகிறேன். தற்போது நாங்கள இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.</p><p> திங்கள்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும்" என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த அறிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சு பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக நிராகரித்தார்.
</p><p>அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தச் சந்திப்புகளும் அட்டவணைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கவோ அல்லது தூதுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவோ ஈரானுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை.
ஈரானியப் பிரதிநிதிகள் அனைவரும் நாட்டிற்குள்ளேயே உள்ளனர்; </p><p>வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மட்டும் ஈராக்கிற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில், ஹோர்முஸ் நீரிணை மேலாண்மை குறித்து 'ஓமன்' நாட்டுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பாகேய் தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d75ae0a2-613a-4864-90c3-d9e7a257977b/26-6a70d8abe467e.webp' /></p><p>
</p><p>ஈரானின் மறுப்பைத் தொடர்ந்து, தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஈரானியத் தலைமையை "நம்பமுடியாத வஞ்சகம் நிறைந்தது" என்று கடுமையாகச் சாடினார். 
ஈரான் தரப்பிலிருந்து தான் சந்திப்பு கேட்கப்பட்டதாகவும், மிக விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.</p><p>
மேலும், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கக் கடற்படை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ட்ரம்ப் கூறினார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-woman-died-in-the-kilinochchi-area-1785770016"></link>
            <id>https://tamilwin.com/article/a-woman-died-in-the-kilinochchi-area-1785770016</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று(03.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விபத்தில்&nbsp;உயிரிழந்தவர்</h2><p>
</p><p>

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி - பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/284edddd-e1b8-4a5c-8917-f5145ae0d432/26-6a70b147297ad.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:14:07+00:00</updated>
        </entry>
    </feed>
