<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-03T05:31:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/burnt-body-identified-in-kilinochchi-forest-1785733569"></link>
            <id>https://tamilwin.com/article/burnt-body-identified-in-kilinochchi-forest-1785733569</id>
            <summary type="text">கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அன்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண்
ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

குறித்து சடலம் இன்றைய தினம் (0...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அன்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண்
ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது
</p><p>
குறித்து சடலம் இன்றைய தினம் (03)&nbsp; அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> சம்பவம் தொடர்பில் அப்பகுதி கிராம அலுவலரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c988342-0ac6-4fa2-87bd-8ddbb2c66f58/26-6a702698e5547.webp' />&nbsp;</p><p>இச்சம்பவம்
தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T05:26:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறப்பாக இடம்பெற்ற பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pongal-festival-old-chemmalai-neeraviyadi-pillaya-1785733406"></link>
            <id>https://tamilwin.com/article/pongal-festival-old-chemmalai-neeraviyadi-pillaya-1785733406</id>
            <summary type="text">முல்லைத்தீவு பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான
வருடாந்த பொங்கல்விழா நேற்று(02.08.2026) இடம்பெற்றது.


பல்வேறு சர்ச்சைகளின...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான
வருடாந்த பொங்கல்விழா நேற்று(02.08.2026) இடம்பெற்றது.
</p><p>

பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் இவ் ஆலயத்தில் நெருக்கடிகள்
இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆலய வழிபாடுகள் இடம்பெற்று வருகிறது.</p><p></p><h2>பூசைவழிபாடுகள்</h2><p>நேற்று காலை விசேட அபிசேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மதிய பூசை
வழிபாடுகளின் பின்னர் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615c95ae-f0ca-4141-84f6-f6ec6b2128a9/26-6a7025420865a.webp' /></p><p>

குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்விழா பூசைவழிபாடுகளில்
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பெருந்திரளான
அடியவர்களும் பங்கேற்றனர்.</p><p>தொடர்ந்து மாலை வேளையிலே நாயாறு முனியப்பர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம்
எடுத்து வரப்பட்டு கச்சை நேர்ந்து மடைபரவி வளர்ந்து நேர்ந்து பொங்கல்
இடம்பெற்று அதனை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று பரிகளம் வழிவிடுதலோடு இன்று
(03) அதிகாலை வருடாந்த பொங்கல் நிறைவடைந்தது.</p><p>
குறித்த பொங்கல் நிகழ்விற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை அங்கு
காட்சிப்படுத்திய கொக்கிளாய் பொலிசார் அங்கு கடமையிலும் ஈடுபட்டிருந்தனர்.</p><p>எனினும் எவ்வித இடையூறும் இன்றி 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா சிறப்பாக இடப்பெற்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T05:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பால் பொலிஸில் ஏற்பட்டுள்ள குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785720296"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785720296</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர், பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஷ்ட பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர், பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்களுக்கும் இடையே “WhatsApp” குழு தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>அதில், இந்தத் தீர்ப்பு நாட்டின் பொலிஸ் அதிகாரிகள் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தே விவாதிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>“WhatsApp” குழுவில் பேசப்பட்ட விடயங்கள்</h2><p>அங்கு ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகையில், நபர் ஒருவர் தனக்கு மற்றொரு நபரால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அவ்வாறு முறைப்பாடு செய்த நபர், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய நபராலேயே கொல்லப்பட்டால், பொலிஸ் அதிகாரிக்கே மரண தண்டனை கிடைக்கும் நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b37ca01e-abd3-4641-b6a7-54691d5522b0/26-6a6fede9df508.webp' /></p><p> </p><p>இவ்வாறானதொரு சூழ்நிலையில் பொலிஸில் கடமையாற்றுவது ஆபத்தான நிலைமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்ட கருத்து, </p><p>பொலிஸ் மா அதிபராக பதவி வகிப்பது இதன் மூலம் பாரிய அபாயத்தைப் பொறுப்பேற்பதாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த குழு விவாதத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் முன்வைத்த கருத்துக்களுடன் உடன்பட்ட பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதியுடன் இந்த நிலைமை குறித்து விவாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>

</p><p>இந்த அரசாங்கம் தோல்வியடைந்து வேறு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விதி தனக்கும் வரக்கூடும் என்ற பயம் பொலிஸ் மா அதிபருக்கும், பெரும்பாலான பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.</p><h2>அரசாங்கத்திற்கு ஆதரவான பொலிஸ் அதிகாரிகள்</h2><p> "இந்த வழியில் பொலிஸைக் கொண்டு செல்ல முடியாது. பொலிஸை விட்டு விலகிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a994876-c3de-4934-a169-1f97b027000f/26-6a70225e9e3ae.webp' />&nbsp;</p><p>
</p><p>
அரசாங்கத்திற்கு ஆதரவான பொலிஸ் அதிகாரிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழுவினரும் இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p><p> "அரசியல்வாதிகள் சொல்வதைக் கேட்டு வேலை செய்து, இறுதியில் பூஜித்விற்கு நடந்ததே நடக்கும்" என்ற கருத்து பொலிஸாருக்குள் பலமாக உருவெடுத்துள்ளதால், பொலிஸ் துறை பெரும் சரிவைச் சந்திக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது. </p><p>மேலும், அரசாங்கத்தின் மீது பொலிஸாருக்குள் இருந்த கடும் அதிருப்தி இதன் மூலம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T05:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசாங்கம்! கேள்வியெழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-attack-sajith-against-goverment-1785731564"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-attack-sajith-against-goverment-1785731564</id>
            <summary type="text">சிறைச்சாலை அமைப்பை சரியாக நிர்வகிக்க முடியாத தற்போதைய அரசால், 22
மில்லியன் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதே இன்று
கேள்விகுறியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை அமைப்பை சரியாக நிர்வகிக்க முடியாத தற்போதைய அரசால், 22
மில்லியன் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதே இன்று
கேள்விகுறியாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,</p><p>&nbsp;</p><h2>திணறும் அரசாங்கம்</h2><p>
</p><p>
"நடமாடும் நூலகம் என்று அழைக்கப்படும் அறிஞர்கள் நிறைந்த அரசை
உருவாக்குவதாகக் கூறிய தற்போதைய அரசு, வெளிநாட்டுக் கடன்களை முறையாகத்
திருப்பிச் செலுத்த முடியாமலும், சிறைச்சாலைகளைக் கட்டுப்படுத்த முடியாமலும்
திணறுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9662a4d1-f8f7-419e-aae1-b3c980c079d6/26-6a701f6d0c4de.webp' /></p><p>இவ்வாறானதொரு அரசால் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க
முடியும்?

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது நீதி மற்றும் சிறைச்சாலைகள்
அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்
பிரேரணைக்கு அரசு ஆதரவாக வாக்களித்தது.</p><p> இருப்பினும், சில நாட்களுக்குப் பின்
மீண்டும் மஹர சிறைச்சாலையில் மோதல் வெடித்துள்ளது.</p><h2>&nbsp;நிலவும் குழப்பமான சூழ்நிலை</h2><p> </p><p>நீதி அமைச்சரைப் பாதுகாத்த
அரசாங்கம், தற்போது அங்கே நிலவும் குழப்பமான சூழ்நிலையைச் சரிசெய்ய வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.</p><p>

ஒரு சிறைச்சாலையைக் கூடக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத இந்த அரசால்
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. மாறாக, நாட்டை அழிக்கும் ஓர் அரசே
தற்போது செயற்படுகின்றது.</p><p> இன்று நாட்டின் 30 முதல் 40 சதவீத மக்கள்
வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளதுடன், நகர்ப்புற, கிராமப்புற மற்றும்
தோட்டப் பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த சமூகமும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு
வருகின்றன என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T04:54:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசை கவிழ்க்கும் சதியில் ரணில்! நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-secrete-plan-mystery-photo-released-1785725070"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-secrete-plan-mystery-photo-released-1785725070</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

இந்த பின்னணி குறித்து இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால அம்பலப்படுத்தியுள்ளார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜு அமரசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்ட இரகசியச் சந்திப்பு தொடர்பான புகைப்படம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.</p><p> </p><h2><b>

மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு</b></h2><p>இந்த புகைப்படம் மூலம் நாட்டின் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக அஜித் தர்மபால சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22e4cb3f-33db-43e3-8ead-c3ec497062d6/26-6a70189894fc2.webp' /></p><p>சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அந்தப் புகைப்படத்தில், ரணில் விக்ரமசிங்க மதுக் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டும், சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறார். </p><p>

அவருடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜு அமரசூரிய உள்ளிட்ட உயர் தரப்பினர் கலந்துரையாடும் காட்சி பதிவாகியுள்ளது.</p><p> 

இந்தச் சந்திப்பானது சாதாரண பாமர மக்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. தங்களைச் சேர்ந்த உயர் வர்க்கத்தினருக்கு ஏதேனும் அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படும்போது, இவ்வாறான கூட்டத்தினர் உடனடியாக ஒன்றிணைந்து அதைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படும் ஒன்றாகும்.</p><p>
</p><h2><b>
அரங்கேறும் குழப்பங்கள்</b></h2><p>மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று நாட்டில் இயங்கிக் கொண்டிருந்தாலும், அதற்குள் அரச அதிகாரிகள், உயர்மட்ட பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களை உள்ளடக்கிய ஒரு மறைமுக சக்தியாக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2061f02-3f3d-4f7e-a275-d987ddc7e2fc/26-6a701abbd3bc0.webp' /></p><p>மஹர மற்றும் நீர்கொழும்பு போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அரங்கேறும் குழப்பங்கள் மற்றும் அசம்பாவிதங்களுக்குப் பின்னால் இந்த மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பின் சூழ்ச்சிகள் உள்ளது. </p><p>

அரசாங்கம் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சமகால அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்தாலும், இந்த உயர்மட்டக் குழாமினர் தங்களது வர்க்கத்தினரை பாதுகாப்பதற்காகவும், வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகவும் தொடர்ந்தும் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றது. </p>]]></content>
            <updated>2026-08-03T04:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/civil-defence-officer-tragically-dies-1785730631"></link>
            <id>https://tamilwin.com/article/civil-defence-officer-tragically-dies-1785730631</id>
            <summary type="text">திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் யானையின்
தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த&amp;nbsp;சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் யானையின்
தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த&nbsp;சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்து திருகோணமலை பொது
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தீவிர சிகிச்சைகள்</h2><p>
</p><p>
சேருநுவர - சோமபுர பகுதியிலுள்ள வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து
கடமையில் ஈடுபட்டுவந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர், கடந்த வியாழக்கிழமை
யானை மின்வேலி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதலுக்கு
முகங்கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5310f012-50ef-4b0e-92df-7d0d4ff009fd/26-6a7017da754d1.webp' /></p><p>
</p><p>
யானையின் திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர
சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சேருநுவர - சோமபுர எல்.பி. - 01 பகுதியைச்
சேர்ந்த எம்.எம். டில்சான் (வயது 38) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைப் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்படும் என தெரிவித்த சேருநுவரப் பொலிஸார், சம்பவம் குறித்து
மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T04:24:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரத்தை வழிநடத்திய பின்னணியில் 4 கைதிகள் - ஆய்விற்காக களமிறங்கும் முக்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-attack-issue-investigation-1785727305"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-attack-issue-investigation-1785727305</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர சம்பவம் தொடர்பாக இன்று (03)&amp;nbsp;இலங்கை பொலிஸ் தலைமையகம் ஆய்வு நடத்தும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர சம்பவம் தொடர்பாக இன்று (03)&nbsp;இலங்கை பொலிஸ் தலைமையகம் ஆய்வு நடத்தும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், நேற்று (02) நீதவான் விசாரணை நடத்தப்பட்டதாகவும், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, 104 கைதிகளை மற்ற சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம்&nbsp;</h2><p>

அதன்படி, அவர்கள் தும்பறை, வெலிக்கடை, புஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ddcb3ed-d671-424b-b9d6-6cc38a1649d5/26-6a700f420d41b.webp' /></p><p>

கடந்த சனிக்கிழமை சிறையில் நடந்த கலவரத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்து தற்போது ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p>இந்த மோதல் தொடர்பாக பல்வேறு திணைக்களங்களால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p>

அதன்படி, மஹர சிறையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு கைதிகளைச் சந்திக்க பார்வையாளர்களை அனுமதிப்பதை நிறுத்த சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.</p><h2>பதற்றமான சூழ்நிலையை வழிநடத்தியுள்ள&nbsp;கைதிகள்</h2><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், 'சாத்தான்', 'அசார்', 'பட்டா' மற்றும் மற்றொரு கைதியும் இணைந்தே இந்த பதற்றமான சூழ்நிலையை வழிநடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48e684af-eaac-4a2e-b490-0eaa34c793c4/26-6a700f42bbe5a.webp' /></p><p>பதற்றநிலையின் போது வன்முறையில் ஈடுபட்ட கைதிகளை அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரைப் பூசா உள்ளிட்ட மேலும் 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யச் சிறைச்சாலைகள் திணைக்களம் நேற்று பிற்பகல் நடவடிக்கை எடுத்தது. 

​</p><p>சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இந்நாட்களில் நிலவும் போதைப்பொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

​</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T03:47:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 பேருக்கு சர்ச்சைக்குரிய விசா வழங்கியது யார்....! பின்னணியில் செயற்பட்ட மறைகரம்! ஆபத்தாக மாறும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/visas-for-60-suspicious-chinese-were-obtained-1785723755"></link>
            <id>https://tamilwin.com/article/visas-for-60-suspicious-chinese-were-obtained-1785723755</id>
            <summary type="text">இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. </p><p>இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வணிக விசா மட்டுமே காணப்பட்டுள்ளது. </p><p>சந்தேகம் எழுந்தமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினால் இந்த விசாக்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அந்த அனுமதிப்பத்திரங்கள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2><b>வதிவிட விசா</b></h2><p> அதன்பின்னர், அவசரமாக சீன பிரஜைகள் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, அத்தகைய விசாக்களை வழங்குவதற்கான நீண்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7eb652-1bf3-4a9c-a087-afc28ca70964/26-6a70051b69747.webp' /></p><p>இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>இந்த நிலையில், எதிர்காலத்தில் இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் ஊடாக விசாரணையொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><h3><b>சீன கும்பல்</b></h3><p>இலங்கையில் செயற்படும் சீன மாபியா குழுக்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இவ்வாறு செயற்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0facd9b4-7fdf-4357-9917-e97247cbfb94/26-6a700590879cc.webp' /></p><p>கடந்த வாரம் கொழும்பில் சீன கும்பல் ஒன்று ஆயுதமுனையில் சீன பிரஜையான கோடீஸ்வரரை கடத்தி கொலை செய்திருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-08-03T03:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள வாகனங்கள் - வெளியான புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-in-sril-anka-1785724338"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-in-sril-anka-1785724338</id>
            <summary type="text">இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p>

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>வாகன இறக்குமதி செலவினம்</h2><p>

மேலும், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வாகன இறக்குமதி செலவினம் 318 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 10,645 மில்லியன் இலங்கை ரூபாய்) குறைந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feb600c2-fc95-4a52-b6cf-920cfff0fdeb/26-6a70026989170.webp' /></p><p>

இதேவேளை, மத்திய வங்கியின் தரவு அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 182 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 6,093 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இது, இந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் வாகன இறக்குமதி செலவினத்தில் 27.1 சதவீதம் அல்லது 2,276 மில்லியன் ரூபாய் குறைவாகும்.</p><p>

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 163 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 5,455 கோடி) மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p>

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டின் வாகன இறக்குமதிச் செலவு ரூ. 638 கோடி அதிகரித்துள்ளது.</p><p>
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 157 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 52,614 கோடி) மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T02:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமடையும் வானிலை! ஆற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949"></link>
            <id>https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளராக பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிகமான மழையும் பதிவு</h2><p>
அதன்படி, மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் அமைந்துள்ள நாவலப்பிட்டிய, நானுஓயா மற்றும் வத்தளை போன்ற பகுதிகளில் சுமார் 200 மி.மீ மழையும், சில இடங்களில் 200 மி.மீ-க்கு அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a4d9a8-60a2-4665-af65-6bc89e790b1d/26-6a6ffd2f897aa.webp' /></p><p>

இதன் காரணமாக, நாவலப்பிட்டிய மற்றும் பேராதெனியாவிற்கு இடையே மகாவலி ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;தற்போது நீர்மட்டம் வேகமாக உயராவிட்டாலும், இயல்பான உயர்வையே கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
வெள்ள நிலைமை பேரிடர் நிலை வரை மோசமடையாது என்று எதிர்பார்ப்பதாகவும், நேற்று இரவு சில இடங்களில் 70 மி.மீ-க்கு மேல் மழை பெய்ததால் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததில் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், சில தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும், கலா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா&nbsp; பகுதிகளில் அதிக மழை பெய்யாததால், அப்பகுதிகளில் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T02:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 20 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-20-injured-1785722481"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-20-injured-1785722481</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;

இந்த விபத்தில் ரம்புக்கனையில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>

இந்த விபத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும், திகணையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>&nbsp;</p><p>
</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">மருத்துவமனையில் அனுமதி</b></p><p>இன்று காலை 6:15 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eba09596-aac5-41dc-a08e-94990821c452/26-6a6ff880ef94d.webp' />&nbsp;&nbsp;<b style="color: inherit; font-size: 1.75rem;"></b></p><p>காயமடைந்தவர்கள் கேகாலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T02:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை! அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/holidays-for-central-province-schools-1785721272"></link>
            <id>https://tamilwin.com/article/holidays-for-central-province-schools-1785721272</id>
            <summary type="text">மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​ நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​</p><p> </p><p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>பாடசாலைகளுக்கான விடுமுறை</h2><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f46d3b6-986d-4567-9c08-4e393c93cc7a/26-6a6ff501880ff.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.</p><p>நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T01:55:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earth-slip-warning-for-4-districts-1785719045"></link>
            <id>https://tamilwin.com/article/earth-slip-warning-for-4-districts-1785719045</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
தேசிய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. </p><p>
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>இந்த அறிவிப்பு நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இன்று (03) இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84750fd-a997-457e-be4c-07f56d5bbc4d/26-6a6fef15992cf.webp' /></p><p>
</p><p>சில பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>கண்டி மாவட்டத்தில் பச்பாகே கோரளே மற்றும் கங்க இஹள கோரளே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல்</h2><p>
கீழ்கண்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிற்ற&nbsp; பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின்&nbsp; நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மேற்கு
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T01:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tea-export-tea-eatate-1785717519"></link>
            <id>https://tamilwin.com/article/tea-export-tea-eatate-1785717519</id>
            <summary type="text">பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கொழுந்து பற்றாக்குறையினால் தேயிலை தூள் உற்பத்தியும் பாதியளவால் குறைவடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கொழுந்து பற்றாக்குறையினால் தேயிலை தூள் உற்பத்தியும் பாதியளவால் குறைவடைந்துள்ளதால் அந்நியச் செலாவணி சுமார் 40 சதவீதம் நாட்டிற்கு இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>

</h2><p></p><h2>மாதாந்த ஏற்றுமதி</h2><p>மாதாந்தம் தேயிலை ஏற்றுமதி மூலம் 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்ட போதிலும் ஏற்பட்டுள்ள கொழுந்து பற்றாக்குறையினால் 50 மில்லியன் டொலர் வரை நாட்டிற்கு இழக்கப்படும் அபாயம் உள்ளதாக சிரேஷ்ட தேயிலை ஆலோசகரும் தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவருமான சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.
</p><p>
கடுமையான வறட்சி மற்றும் உரப் பற்றாக்குறை காரணமாக பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5666a7c-ffde-4cbf-8448-3a279aff2eb9/26-6a6fe3118000b.webp' /></p><p>ஒரு பருவத்தில் ஒரு மரத்தில் இருந்து 03 கிலோகிராம் தேயிலைக் கொழுந்து அறுவடை பெறப்பட்ட போதிலும் அந்த அளவு பாதியளவாகக் குறைந்துள்ளதாகவும் ஒரு ஏக்கரில் இருந்து கிடைக்கப்பெறும் 400 கிலோகிராம் பச்சைத் தேயிலைக் கொழுந்து அறுவடை 200 கிலோகிராம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T00:41:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென அதிகரித்த மகாவலி கங்கையின் நீர்மட்டம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-level-mahaweli-ganga-increased-flood-warning-1785713431"></link>
            <id>https://tamilwin.com/article/water-level-mahaweli-ganga-increased-flood-warning-1785713431</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் ஒரு அறி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை அறிக்கை இன்று (03) முதல் நாளை (04) நள்ளிரவு 12.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, இந்த அறிக்கையில் மகாவலி ஆற்றுப் படுகையில் உள்ள உடுநுவர, உடபாலத்த, யதிநுவர, கங்கைஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்காவத்த கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குச் சொந்தமான தாழ்வான பகுதிகளுக்குப் பொருந்தும்.
</p><p>
எனவே, மகாவலி ஆற்றங்கரையோரம் மற்றும் அப்பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.</p><p>

இது தொடர்பாகத் தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பேரிடர் மேலாண்மைத் திணைக்களங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
வரும் காலத்தில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் அதீத எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a54b07a2-8451-4809-a4ce-921a7ddae7b8/26-6a6fded586e75.webp' /></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாவலபிட்டி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை&nbsp;பெய்து வருகின்றது.&nbsp;</p><p>இதன் காரணமாக, மகாவலி கங்கையின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்திற்கு மேல் தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மக்கள் அவதானம்..&nbsp;</h2><p>எனவே, தாழ்நிலப் பகுதிகள் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2baae454-a126-4c46-b8fa-4e389f0c4244/26-6a6fd4306153a.webp' /></p><p>அத்துடன், தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அதிகாரிகளால் வெளியிடப்படும் அவசரகால அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T00:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச தரப்பில் நிலவும் நீண்ட தாமதங்கள்.. 15,000 கைதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-15-000-drug-test-reports-prison-overcrowding-1785714812"></link>
            <id>https://tamilwin.com/article/delay-15-000-drug-test-reports-prison-overcrowding-1785714812</id>
            <summary type="text">நாடு முழுவதும் உள்ள 22 சிறைகளில், போதைப்பொருள் சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதங்கள் காரணமாக 15,117 சந்தேக நபர்கள் விடுதலை பெற முடியவில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் உள்ள 22 சிறைகளில், போதைப்பொருள் சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதங்கள் காரணமாக 15,117 சந்தேக நபர்கள் விடுதலை பெற முடியவில்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p> மேலும், நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட சிறிய அபராதங்களைக் கூட செலுத்த முடியாததால், 28 சிறைகளில் உள்ள 1,940 கைதிகள் மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடரும் சிக்கல்..&nbsp;</h2><p>
</p><p>
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் கடுமையான நெரிசலுக்கு இந்தப் பிரச்சினைகளே முக்கிய காரணங்கள் என்று தேசிய தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6ff58dc-0d06-41fe-af50-72723c296eea/26-6a6fdae5da302.webp' /></p><p> போதைப்பொருள் பயன்பாடு, வைத்திருத்தல் மற்றும் விற்பனைக்காகக் கைது செய்யப்பட்ட கைதிகளை மற்ற கைதிகளிடமிருந்து பிரிக்கத் தவறியதையும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
</p><p>
போதைப்பொருள் குற்றவாளிகள் பாதாள உலகச் செயல்பாட்டாளர்களுடன் ஒன்றாகத் தடுத்து வைக்கப்படுவதால், சிறைகளுக்குள் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்து, இது சமூகத்தில் ஒரு கடுமையான நெருக்கடியை உருவாக்க வழிவகுத்துள்ளது என்றும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T00:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் வழங்கிய விளக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attorney-general-department-1785714446"></link>
            <id>https://tamilwin.com/article/attorney-general-department-1785714446</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரித்தல் மற்றும் அது தொடர்பான திருத்த மசோதா அரசியலமைப்புக்கு அமைவானது என சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரித்தல் மற்றும் அது தொடர்பான திருத்த மசோதா அரசியலமைப்புக்கு அமைவானது என சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
</p><p>
அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் கட்டமைப்புச் சட்டம், அரசாங்க மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வூதியக் கட்டளைச் சட்டம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
இத்திருத்தங்களின் மூலம் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல்நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆகவும், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆகவும் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்</h2><p>அத்துடன், நீதித்துறை கட்டமைப்பில் பெரும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பதிலாக அத்தகைய இரு மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. </p><p>மேலும், மூன்று வணிக மேல்நீதிமன்றங்கள் ஐந்து வணிக மேல்நீதிமன்றங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்காக எட்டு மேல்நீதிமன்றங்கள் பதினொன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், கொழும்பு மேல்நீதிமன்றத்தின் இலக்கம் 06, 10, 11 ஆகிய அறைகளில் லஞ்ச ஊழல் வழக்குகள் தினமும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ede323-5787-47ef-9433-4bff593a0715/26-6a6fd710ca31d.webp' /></p><p>இதற்கு முன்னர் லஞ்ச ஊழல் வழக்குகள் ஒரேயொரு நீதிமன்றத்திலேயே விசாரணை செய்யப்பட்டு வந்தன.

தெய்யந்தர, அங்குணுகொலபெலஸ்ஸ, பிபில, கல்கமுவ போன்ற 08 நீதவான் நீதிமன்றங்களுக்கு மாவட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், </p><p>உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டிருந்த இரத்தினபுரி, கம்பஹா, அனுராதபுரம், அம்பாறை நீதிமன்றங்கள் மீள செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. </p><p>புத்தளம், வெல்லவாய, ஹட்டன் மற்றும் வெலிசர ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தற்போது அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T23:52:30+00:00</updated>
        </entry>
    </feed>
