<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-07T08:10:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெடித்த மோதல்கள்! முக்கிய சிறைச்சாலைகளில் களமிறங்கிய புலனாய்வாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/series-of-prison-clashes-emergency-alert-1786087302"></link>
            <id>https://tamilwin.com/article/series-of-prison-clashes-emergency-alert-1786087302</id>
            <summary type="text">புதிய இணைப்புகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் முக்கிய சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் காரணமாக&amp;nbsp;பதுளை சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் முக்கிய சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் காரணமாக&nbsp;பதுளை சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>சமீபத்தில் மோதல்கள் காரணமாக மஹர சிறையிலிருந்து கொண்டுவரப்பட்ட பத்து கைதிகளும் பதுளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், புலனாய்வு அதிகாரிகள் 24 மணி நேரமும் காவலில் உள்ளனர் என்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"></span></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p>முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>நாட்டில் இடம்பெறும் தொடர் சிறைக்கலவரங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>தொடர் சிறை மோதல்கள்...</h2><p>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில்,&nbsp; மெகசின், குருவிட்ட,&nbsp; பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p>இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/167ad430-63c5-49d3-b485-7dc5de1f7a28/26-6a758a7db81a5.webp' /></p><p>மேலும், கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நீர்கொழும்பு, மஹர உள்ளிட்ட சிறைச்சாலைகளையும் சேர்த்து மொத்தம் 5 சிறைச்சாலைகளில் இதுபோன்ற கலவரங்கள் ஏற்பட்டு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், சிறைச்சாலைகளில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்த ஒரு தரப்பு தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள்&nbsp; கிடைத்துள்ளன என்று&nbsp; நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார அண்மையில் அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed9bc201-50cd-4552-b98c-112d8d0491e4/26-6a758a7e92dd1.webp' /></p><p>இந்தநிலையில், குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில தினங்களுக்குள்ளாக கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் 3 சிறைச்சாலைகளில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.&nbsp;</p><p>இதனை தடுக்கும் நோக்குடன் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளினது பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு முப்படையினருக்கும்,&nbsp; பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T08:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவின் மாபெரும் உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786089280"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786089280</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்று(07.08.2026) கோலாகலமாக ஆரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்று(07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இந்த மாபெரும் உணவுத் திருவிழா இன்று 7ஆம் திகதி ஆரம்பமாகி, 8 ,9 மற்றும் 10ஆம் திகதிகள் உட்பட நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் 10 வரை&nbsp; நடைபெறவுள்ளது.
</p><h2>
நீங்களும் இணைந்து கொள்ளலாம்... </h2><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், 
சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f8dfb9-03c3-46d4-bb86-c007de721666/26-6a758f4295747.webp' /></p><p>அத்துடன், உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>
மேலும், றீச்சாவின் உணவுத் திருவிழாவிற்கு <b>QICK FOOD </b>அனுசரணை வழங்குவதுடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளன.</p><p>உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:56:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் புனர்வாழ்வு நிறுவனங்களை தேசிய திட்டத்தின்கீழ் கொண்டுவர ஜனாதிபதி அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-rehabilitation-centers-national-program-anura-1786087980"></link>
            <id>https://tamilwin.com/article/drug-rehabilitation-centers-national-program-anura-1786087980</id>
            <summary type="text">போதைப்பொருள் புனர்வாழ்வு நிறுவனங்களை ஒருங்கிணைந்த தேசிய
திட்டத்தின்கீழ் கொண்டுவருமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.பொதுமக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் புனர்வாழ்வு நிறுவனங்களை ஒருங்கிணைந்த தேசிய
திட்டத்தின்கீழ் கொண்டுவருமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.</p><p>பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் 2026 ஆம்
ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும்
2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் நேற்று(6.7.2026) ஜனாதிபதி
அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த
அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p>போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்த 'முழு நாடுமே
ஒன்றாக' தேசிய செயற்பாட்டிற்கு மூலதனச் செலவினமாக ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன்
ரூபா ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றமும்
இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.</p><p></p><h2>புனர்வாழ்வு</h2><p>
</p><p>
அதன்படி, 417.48 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் இலங்கை பொலிஸின்
போதைப்பொருள் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும்
போதைப்பொருள் பயன்படுத்துபவர்களைக் கண்டறியும் மற்றும் போதைப்பொருள்
சுற்றிவளைப்புகளுக்கும் தேவையான வசதிகளை வழங்கும் திட்டம், 13.54 மில்லியன்
ரூபா ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da119257-1d5c-4c45-960f-77457ea00f3c/26-6a758ea73873c.webp' /></p><p>சுயமாக புனர்வாழ்வு பெற முன்வருபவர்களுக்காக, புனர்வாழ்வு நடவடிக்கைகளில்
ஈடுபடுவதற்கு முன்னர் 3 மாத குடும்ப ஆலோசனை சேவை
நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தின் வெற்றி காரணமாக
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சுயமாக புனர்வாழ்வு பெற முன்வரும் போக்கு
கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-07T07:53:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறையில் அதிகரிக்கும் பதற்றம்.. அதிகாரிகளை தாக்கும் கைதிகள் - கண்ணீர்ப் புகை பிரயோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-at-pallansena-prison-1786079920"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-at-pallansena-prison-1786079920</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய இணைப்பு&nbsp;</span></p><p>நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
கைதிகள் தற்போது அதிகாரிகள் மீது கற்களை வீசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிற்கதவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு&nbsp;</span></p><p>கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மாவட்டம் தலுபோத்தாவில் உள்ள பல்லன்சேன திறந்தவெளிச் சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பணிக்காக பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மாடியில் கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a5aae64-61a7-4f1f-a445-2a26f2f96f69/26-6a758d346ae30.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் வெடித்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். </p><p>

காயமடைந்த 11 கைதிகளை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதில் ஒரு கைதி உயிரிழந்தார்.

இன்று காலை (07) குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை நிலவியது. </p><p>

இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் குழு ஒன்று சிறை மருத்துவமனையையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு&nbsp;</span></p><p>நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="font-size: 14px;">சம்பவ இடத்திற்கு பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</span></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மெகசின் மற்றும்&nbsp;&nbsp;குருவிட்ட சிறையிலும் பதற்றம்</span></p><p>இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99e3076-6fae-4b15-8a6e-0a1381b05b1b/26-6a7571ed9c29f.webp' />&nbsp;</p><p>
இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p>

இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T07:41:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பை ஏற்டுத்தும் சிறைக்கலவரங்கள்.. மட்டக்களப்பு சிறையில் தயார்நிலையில் அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/riots-batticaloa-prison-strengthened-security-1786086755"></link>
            <id>https://tamilwin.com/article/riots-batticaloa-prison-strengthened-security-1786086755</id>
            <summary type="text">நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இராணுவத்தினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சிறைச்சாலை பகுதியை சுற்றி பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><h2>சிறைகளில் பதற்றம்..</h2><p>
இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் வெடித்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, அங்கு ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a528609-12aa-4a3f-9be4-e7099767f5ed/26-6a758acc88fc8.webp' /></p><p>

காயமடைந்த 11 கைதிகளை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதில் ஒரு கைதி உயிரிழந்தார்.</p><p> இன்று காலை (07) குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை நிலவியது.

இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கைதிகள் குழு ஒன்று சிறை மருத்துவமனையையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையிலேயே, தற்போது,&nbsp;மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T07:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப புதிய முயற்சி - ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-initiative-to-build-the-country-s-economy-1786088066"></link>
            <id>https://tamilwin.com/article/new-initiative-to-build-the-country-s-economy-1786088066</id>
            <summary type="text">புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்கவும்
மேம்படுத்தவும், தேசிய பொருளாதாரத்தை உயர்த்தவும் நேரடியாகப் பங்களிக்க
வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்கவும்
மேம்படுத்தவும், தேசிய பொருளாதாரத்தை உயர்த்தவும் நேரடியாகப் பங்களிக்க
வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளை
உருவாக்க உதவியதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
மூலமே மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதம் மாறுகிறது என்றும் அதனைச்
சரியாக அடையாளம் காண்பவர்களே எதிர்கால உலகை வெல்ல முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும்
திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு -செலவுத் திட்ட
பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று(05.08.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

 அபிவிருத்தி மத்திய நிலையத்தின் கீழ் விசேட திட்டம்</h2><p>
மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வருமானத்தை
அதிகரிப்பதற்கும் தேவையான தகவல்கள் மற்றும் தரவுகளை வழங்குவதற்கான முறைமையின்
அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமைச்சரவை மட்டத்தில் ஏற்கனவே இது
தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f06fbbd7-3272-4f1d-823a-7cac3b039441/26-6a758b2f21663.webp' /></p><p>
</p><p>
வெவ்வேறு அமைச்சுக்களின் கீழ் உள்ள ஆராய்ச்சிப் பிரிவுகளுக்குத் தேவையான நிதி
ஒதுக்கீட்டை வழங்கும்போது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் விசேட
பிரிவு ஒன்றை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p><h2>

ணிகமயமாக்கலுக்கான
தேசிய அணுகுமுறை&nbsp;</h2><p>
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள 14 நிறுவனங்களால் உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டு உதவிகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி
முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கை தேசிய
பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் கீழ்
செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f74cb2f1-82a3-4f40-b5b9-bb8f8ce09b9b/26-6a758b3004fc8.webp' /></p><p>
</p><p>
இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் யானை
வேலி அமைத்தல் மற்றும் குறைந்த செலவிலான சுற்றாடல் நேய கட்டிடங்களை அமைத்தல்
போன்ற ஆராய்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கவனம்
செலுத்தப்பட்டது.</p><p>

அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விஞ்ஞானக்
கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும்
இங்கு ஆராயப்பட்டதுடன், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான
தேசிய அணுகுமுறை போன்ற நிறுவனங்களால் வழங்கப்படக்கூடிய பங்களிப்பும்
ஆராயப்பட்டது. </p><h2>


கொள்முதல் செயல்முறை தொடர்பான சிக்கல்கள்</h2><p>

விவசாய அமைச்சு போன்ற பல்வேறு அமைச்சுக்களின் கீழ்
மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பாடலுடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
</p><p>
ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் கருவா சார்ந்த
தயாரிப்புகள் குறித்த ஆராய்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும்
ஆராயப்பட்டதோடு ஆயுர்வேத தயாரிப்புகள் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களில்
எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் தடைகள் குறித்தும் இதன் போது கவனம்
செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a732f9-591e-4e20-81c8-65283928b098/26-6a758b30d0895.webp' /></p><p>
</p><p>
தேசிய விஞ்ஞான மன்றத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும்
ஆராயப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்போது
கொள்முதல் செயல்முறை தொடர்பான சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>


தேசிய விஞ்ஞான ஆணைக்குழு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை
அபிவிருத்தி அமைச்சிற்கு பொருத்தமான ஒரு கொள்கையை தயாரித்து
சமர்ப்பித்துள்ளதாகவும், புலமைச் சொத்து தொடர்பான கொள்கையைத் தயாரிக்கும்
பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38db78d5-3ec2-4d06-aaa3-5de3169ea3e8/26-6a758b31a743b.webp' /></p><p>

அனர்த்தங்களுக்கு முன்கூட்டியே தயாராவதற்கான விஞ்ஞானபூர்வமான வரைபடம் வரும்
ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளதாகவும், பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையில்
தொழில்நுட்பப் பரிமாற்றத் திட்டம் ஒன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்
இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
</p><p>
காட்டு யானைகள் ரயிலில் மோதுவதைத் தடுப்பதற்காக ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம்
ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ள வெப்ப உணர் கெமரா
கட்டமைப்பை பொருத்தும் திட்டம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T07:37:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 2112 குடும்பங்களைச் சேர்ந்த 8191 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwara-eliya-flood-effect-1786082335"></link>
            <id>https://tamilwin.com/article/nuwara-eliya-flood-effect-1786082335</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் நேற்று (06) மாலை நேர புதுப்பிக்கப்பட்ட அறிக்கைகளின்படி 2112 குடும்பங்களைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் நேற்று (06) மாலை நேர புதுப்பிக்கப்பட்ட அறிக்கைகளின்படி 2112 குடும்பங்களைச் சேர்ந்த 8191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 06 பேர்
உயிரிழந்துள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி துஷாரி தென்னக்கோன்
தெரிவித்துள்ளார்,
</p><p>
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.</p><h2>தற்போதும் தொடர்ச்சியான மழை&nbsp;</h2><p>

பாதிப்புகள் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 152 குடும்பங்களைச்
சேர்ந்த 504 நபர்கள் இன்னும் 18 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கத்
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f39139db-444c-452a-b921-c14b4c146df6/26-6a7578170186f.webp' /></p><p>இதில் 11 வீடுகள் முழுமையாகவும், 246 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த
வெள்ளம் நுவரெலியா மாவட்டத்தில் பெரும் பகுதியைச் சூறையாடி பொருளாதார
இழப்பையும் ஏற்படுத்தி, மக்களை மீளாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இவ்வாறான நிலையில் தற்போதும் தொடர்ச்சியான மழை பெய்து கொண்டிருக்கின்ற
நிலைமையில் தொடர்ந்து அதிகளவிலான பாதிப்பை நுவரெலியா மாவட்டம் சந்திக்க
வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T07:28:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக ஒப்படைக்க கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attention-grabbing-protest-in-mannar-1786087148"></link>
            <id>https://tamilwin.com/article/attention-grabbing-protest-in-mannar-1786087148</id>
            <summary type="text">தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந்து போராடி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(07.08.2026) மன்னார் நகர
சுற்றுவட்டத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
</p><p>
காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் இந்த போராட்டம்
நடைபெற்றுள்ளது. </p><h2>

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் கோரிக்கைகள்</h2><p>
குறித்த போராட்டமானது, யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு
மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை
மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் நியாயமான
கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b35e5c-2217-48cf-89e8-bcd3b759f973/26-6a75873f8213d.webp' /></p><p> 

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளின்
உரிமையாளர்களும், கிராம மக்களும் ஈடுப்பட்டுள்ளனர். </p><p>

அத்துடன், மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள்
 உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.</p><p> 

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6273fb8-7938-47fc-81ee-77eceaf70418/26-6a75874065828.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e3a3c7b-4943-4e2f-88e1-57cd4000d22c/26-6a7587413565a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ec2e31b-acf9-4184-874e-911088c941e9/26-6a75874205609.webp' /></p><p></p><p>[PIXRDD2[</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/peradeniya-university-students-flood-weather-1786085184"></link>
            <id>https://tamilwin.com/article/peradeniya-university-students-flood-weather-1786085184</id>
            <summary type="text">பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>சீரற்ற வானிலை காரணமாக கல்வி நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

அதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் வழமை போன்று பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தற்போது அனைத்துக் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அனுமதி</h2><p> 

இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விடுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eee51627-0505-40ae-9323-577b860aac76/26-6a75835856907.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T07:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா - தலவாக்கலை வீதி தாழிறக்கம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwara-eliya-thalawakkala-road-derailment-1786086437"></link>
            <id>https://tamilwin.com/article/nuwara-eliya-thalawakkala-road-derailment-1786086437</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து, தலவாக்கலை (ஏ7) பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு சந்திக்கு அரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து, தலவாக்கலை (ஏ7) பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு சந்திக்கு அருகில் வீதி நடுவில் தாழிறங்கியுள்ளது.
</p><p>
இதன் காரணமாக அந்த பகுதியில் வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இதேவேளை, இதற்கு முன்னரும் அதே இடத்தில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2>

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
மலையகத்தில் தொடர் சீரற்ற காலநிலையால் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களிலும் சிறிய
மண்சரிவுகள், பிரதான வீதியில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7c70f89-b61c-4746-908c-d3cab29d618c/26-6a7584aa1e2ae.webp' /></p><p>

பாதிப்புக்குள்ளான வீதியினை சீரமைக்கும் வரை அந்த வழியில் செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கனரக வாகனங்கள் அந்த வீதியின் வழியாக செலுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும்
எச்சரிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து, பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிவுகள், நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.</p><p>இதனால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னால் வீதி தாழிறக்கம் அல்லது குழிவான பள்ளம் உள்ளதை
எச்சரிக்கும் அபாய எச்சரிக்கை வீதிச் சமிக்ஞைகள் ஏதும் இல்லாததால் குறித்த
வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வேகத்தை கட்டுபடுத்துவது அவசியமாகும். இல்லையெனின், வாகனம் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e12513-bb62-44dd-b220-5175b61d1c6f/26-6a7584ab063f6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beb8c38a-e0e0-406a-92ce-6a83811eef20/26-6a7584abd1865.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:09:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அலையாக பரவும் சிறை மோதல்கள்.. கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-riots-in-sri-lanka-ananda-wijepala-speech-1786085675"></link>
            <id>https://tamilwin.com/article/prison-riots-in-sri-lanka-ananda-wijepala-speech-1786085675</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பித்த சிறை மோதல் இன்று பல்ல சேன சிறைச்சாலை வரை நீண்டுள்ளமை குறித்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பித்த சிறை மோதல் இன்று பல்ல சேன சிறைச்சாலை வரை நீண்டுள்ளமை குறித்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பிய நிலையில், பதில் வழங்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>மேலும் அவர், போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள நபர்களின் சதி இதன் பின்னணி என புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><h2>தீவிர பாதுகாப்பு&nbsp;</h2><p>"குறிப்பாக மெகஸின் சிறையில் நேற்று கலவரம் இடம்பெற்றது. அதில் ஒருவர் பலியாகினார் 

குருவிட்ட சிறை மோதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74413f8-e5a6-4dfe-b8d4-5ca5f93a1154/26-6a7583953267d.webp' /></p><p> தற்போது பல்ல சேனயில் மோதல் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

இதனை மையப்படுத்தி அனைத்து சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனை ஒன்றிணைக்கும் போது திட்டமிட்ட சதி பின்புலமாக இருப்பது தெளிவாகியுள்ளது" என அமைச்சர் விளக்கமளித்தார். </p><p>

இந்நிலையில், இது தொடர்பில் அந்த சந்தர்ப்பத்தில் தனது கருத்துக்களை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர், 

''இது ஒரு பாரதூரமான நிலை என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.</p><p>

முன்னதாக இந்த சிறை மோதலை மையப்படுத்தியே நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இது தேசிய பாதுகாப்புக்கு சவால் விடும் செயற்பாடு. </p><p>நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் நீங்கள் வெற்றி பெற்றதும் மகர உள்ளிட்ட சிறைகளில் மோதல்கள் வெடிக்க ஆரம்பித்தன.

இது குறித்து கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்'' என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T07:08:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[லலித் - குகன் வழக்கு : கோட்டாபயவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gota-online-in-lalith-kugan-case-1786083519"></link>
            <id>https://tamilwin.com/article/gota-online-in-lalith-kugan-case-1786083519</id>
            <summary type="text">லலித் - குகன் வழக்கில் தொடர்புடையவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த மாதம் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாண நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>லலித் - குகன் வழக்கில் தொடர்புடையவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த மாதம் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இணையவழியாகச் சாட்சியமளிக்க வேண்டும் என யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இணையவழி(Online) ஊடாக சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><h2>பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச</h2><p>

லலித் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த அனுமதி முன்னதாக வழங்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49a2735d-c969-4608-bd44-3a5f8af57a0c/26-6a75811983767.webp' /></p><p>கடந்த 2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவர்களது உறவினர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
இந்த வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்சவிற்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் 2019ஆம் ஆண்டு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T06:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறையில் பேருந்து விபத்து - 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bulathsinhala-accident-1786084128"></link>
            <id>https://tamilwin.com/article/bulathsinhala-accident-1786084128</id>
            <summary type="text">
களுத்துறை, புளத்சிங்கள – அமரேகெதர வளைவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>
களுத்துறை, புளத்சிங்கள – அமரேகெதர வளைவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இன்று காலை (7) சிறிய பேருந்தொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>விபத்துக்கான காரணம்</h2><p>


இன்று இந்த விபத்தில் சிறிய பேருந்தில் பயணித்த 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a55128b-75d9-4987-a526-4ae84d250dca/26-6a757eb85a0cd.webp' /></p><p>இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T06:42:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய கும்பல் - முற்றுகையிட சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-attacks-police-1786083925"></link>
            <id>https://tamilwin.com/article/gang-attacks-police-1786083925</id>
            <summary type="text">மட்டக்களப்பு - வெல்லாவெளி 35ஆம் கொலனியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட சென்ற வேளையில், பெண் உட்பட 25 பேர் குழுவினர் பொலிஸாரை தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - வெல்லாவெளி 35ஆம் கொலனியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட சென்ற வேளையில், பெண் உட்பட 25 பேர் குழுவினர் பொலிஸாரை தாக்கியதில் பொலிஸ் அதிகாரி இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் நேற்று(06.08.2026) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. </p><p>


அத்துடன், குறித்த குழுவினரின் தாக்குதலின் பின்னர், பொலிஸார் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><h2>


பொலிஸ் அதிகாரி இருவர் படுகாயம்</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
 வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்பட்டு வருவதாக பொலிஸாருக்கு
கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தலைமையில் ஜீப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் 7 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர், சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் 35ஆம் கொலனியில் உள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd703137-2a31-46a6-8b5a-856ecb552b01/26-6a757a9cf0292.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து, அங்கிருந்த பெண் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடாமல் தடுத்துள்ளனர்.</p><p>

இதன்போது, படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

இதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும், பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதேவேளை, தாக்குதலை நடத்தி விட்டு தப்பியோடியவர்களை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T06:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிர்ணய விலையை விட அதிகமாக விற்பனை செய்தவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-issued-to-person-who-sold-more-than-rs-100-1786082164"></link>
            <id>https://tamilwin.com/article/order-issued-to-person-who-sold-more-than-rs-100-1786082164</id>
            <summary type="text">நிர்ணய விலையை விட 100 ரூபாய் அதிகரித்து அரிசி விற்றவருக்கு ஒரு இலட்சம்
ரூபாய் அபாரதம் விதித்து வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த வழக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிர்ணய விலையை விட 100 ரூபாய் அதிகரித்து அரிசி விற்றவருக்கு ஒரு இலட்சம்
ரூபாய் அபாரதம் விதித்து வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p> 

இந்த வழக்கு விசாரணை நேற்று(06.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>

ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்</h2><p>
வவுனியாவில் பாவனையாளர் அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது நகரப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் அரச நிர்ணய விலையான 265
ருபாய் பெறுமதியான அரிசியை, 365 ரூபாய்க்கு விற்பனை செய்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e796fc9-de80-435c-a5b0-c145506f049a/26-6a7573c3dd5df.webp' /></p><p> </p><p>


இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக பாவனையானர் அதிகார சபையால் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:57:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி - சித்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-work-continues-outside-the-sindhupathi-1786079191"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-work-continues-outside-the-sindhupathi-1786079191</id>
            <summary type="text">செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய
இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை அண்மித்த
பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய
இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை அண்மித்த
பகுதிகளில் இரு இடங்களில் எழுமாற்றாக அகழ்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக
சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேலதிகமாக மேலும்
புதைகுழிகள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் எழுமாற்றாக இரு இடங்களில்
தொல்பொருள் பேராசிரியர் ராஜ் செமதவாவினால் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><h2>இது&nbsp;தொடர்பிலான இறுதித் தீர்மானங்கள்</h2><p>
அதில் என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டால் நிலத்தை ஊடுருவி பரிசோதிக்கும்
"GPR" (Ground-penetrating radar) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அகழ்வு பணிகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமா எனும் முடிவுக்கு வருவதற்காகவே இரு
இடங்களில் எழுமாற்றாக அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c8cea9d-2b2b-4371-baee-ecdae1eaf84c/26-6a756bfd76da8.webp' /></p><p>அதேவேளை தற்போது அகழ்வு பணிகள் இடம்பெறும் சித்துபாத்தி மயானத்தின்
சுற்றுமதில்கள் அண்மைய காலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. </p><p>ஆரம்ப காலத்தில்
இது ஒரு வெட்ட வெளியாக இருந்தமையால், அகழ்வு பணிகள் நான்கு சுற்று மதில்களுக்கு
இடையில் நடைபெறாது, அதன் வெளியேயும் நடைபெற வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டது.</p><p>

அதன் அடிப்படையில் செய்மதி படங்களின் அடிப்படையில் ஏதேனும் சந்தேகமான இடங்கள்
அடையாளம் காணப்பட்டால், அந்த இடங்களிலும் எழுமாற்றாக அகழ்வு பணிகளை மேற்கொள்ள
வேண்டும் என பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.</p><p>இவை தொடர்பிலான இறுதி தீர்மானங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி
நடைபெறவுள்ள வழக்கின் பின்னர் தீர்மானிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T05:24:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றநிலை..! சிக்கிய மர்மப்பொதி - பின்னணியில் வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-unrest-at-borella-magazine-prison-1786066494"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-unrest-at-borella-magazine-prison-1786066494</id>
            <summary type="text">புதிய இணைப்புபொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த கலவரத்தில் 11 கைதிகள் காயமடைந்து சிறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 9 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து, சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட ஒரு சிறிய பொதியை சிறை அதிகாரி ஒருவர் கைப்பற்றிய பின்னர், கைதிகள் குழுவொன்று அமைதியின்மையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>வெளியான காரணம்</h2><p>

சிறைச்சாலையின் 'ஈ' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று, இரவு 10:20 மணியளவில் திடீரென அந்தப்பிரவில் இருந்து வெளியேறி, கலவரத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80acada-cac4-41c0-9327-f3faebb4f966/26-6a7543527fbd9.webp' /></p><p>
</p><p>
இதனைத்தொடர்ந்து, 40க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு சிறை அறையின் பூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

இதனையடுத்து சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி, அவர்களை மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சுமார் பத்து கைதிகளை ஏனைய சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த கலவரத்தில் 11 கைதிகள் காயமடைந்து சிறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 9 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><h2>பலப்படுத்தப்பட்டுள்ள&nbsp;பாதுகாப்பு </h2><p>

இதற்கிடையில், சிறை வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படைகளின் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e1d56ac-1341-4129-a80a-6096e982b70a/26-6a754353317cb.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், சிறையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>










சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே இந்த மோதலுக்கும் பதற்ற நிலைமைக்கும் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இதற்கிடையில், ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று சிறைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:17:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு.. நிலைமை தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-at-kuruwita-prison-1786076790"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-at-kuruwita-prison-1786076790</id>
            <summary type="text">குருவிட்ட சிறைச்சாலையில் பொலிஸாரால் தற்போது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;&amp;nbsp;குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட சிறைச்சாலையில் பொலிஸாரால் தற்போது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவ்வாறு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>கைதிகளுக்கு இடையிலான மோதல்&nbsp;</h2><p>கைதிகளுள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட&nbsp; மோதல் நிலை தீவிரமடைந்ததாகவும், இதனைக் கட்டுப்படுத்துதவற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0H3-u-YnVE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>இதேவேளை, இந்தக் கலவரத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T04:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் தீவிரமடையும் பதற்றநிலை! அவசரமாக விரையும் முக்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuruwita-prison-attack-investigation-special-team-1786076665"></link>
            <id>https://tamilwin.com/article/kuruwita-prison-attack-investigation-special-team-1786076665</id>
            <summary type="text">இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையை கட்டுப்படுத்த சிறைத்துறையின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று தற்போது க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையை கட்டுப்படுத்த சிறைத்துறையின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று தற்போது குருவிட்ட சிறைக்குப் புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இதற்கிடையில், கலவரம் காரணமாக குருவிட்ட சிறைச்சாலையை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று (7) காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம்</h2><p>குறித்த சம்பவத்தில் 2 கைதிகள் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/072c4d79-cec1-42eb-b19d-915edac348b7/26-6a75616deb907.webp' /></p><p>இந்நிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதற்கமைய, சிறைக்கு வெளியே பாதுகாப்பிற்காக பொலிஸ் குழுக்கள், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0H3-u-YnVE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சிறைத்துறையின் மூத்த அதிகாரிகள் குழு ஒன்று தற்போது குருவிட்ட சிறைக்குப் புறப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T04:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை! இருவர் உயிரிழப்பு - நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tense-situation-in-kuruwita-prison-1786069801"></link>
            <id>https://tamilwin.com/article/tense-situation-in-kuruwita-prison-1786069801</id>
            <summary type="text">
புதிய இணைப்புஇரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (7) காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 12 கைதிகள் காயமடைந்துள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
</p><h2>புதிய இணைப்பு</h2><p>இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (7) காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 12 கைதிகள் காயமடைந்துள்ளனர். 
</p><p>இந்த நிலையில் காயமடைந்த 12 கைதிகளும் வைத்தியசாலையில்&nbsp;சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>நேற்றிரவு சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

எனினும் இன்று (7) காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்றநிலை உருவான நிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0H3-u-YnVE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>இரத்தினபுரி, குருவிட்ட சிறைச்சாலையில் அமைதியற்ற பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. </p><p>சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>நேற்று இரவிலும் இந்த அமைதியின்மை ஏற்பட்டுப் பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><p> </p><h2><b>மீண்டும் அமைதியின்மை</b></h2><p>இன்று காலையில் கைதிகளுக்கு இடையே மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை மருத்துவமனைக்கும் சேதம் விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1d4c23-1940-4bb0-8e75-2ea4a6f9ee1e/26-6a754457e5991.webp' /></p><p>குருவிட்ட சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார அறிவித்துள்ளார்.
</p><p>
நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-08-07T03:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிராபத்து ஏற்படலாம்..! சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dont-watch-videos-driving-police-warnning-1786072377"></link>
            <id>https://tamilwin.com/article/dont-watch-videos-driving-police-warnning-1786072377</id>
            <summary type="text">வாகனங்களை செலுத்தும் போது சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாகனங்களை செலுத்தும் போது காணொளிகளை பார்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகனங்களை செலுத்தும் போது சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
வாகனங்களை செலுத்தும் போது காணொளிகளை பார்ப்பதை தவிர்க்குமாறும், சில வினாடி கவனச்சிதறல் கூட பாரிய உயிராபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது. </p><p>

பொது பாதுகாப்பு தொடர்பான விசேட செய்தியொன்றை வெளியிட்டு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
காணொளியினால் சில வினாடிகள் வீதியிலிருந்து கவனம் திசை திருப்பப்படுவதனால் ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து தப்பிப்பதற்கான நேரத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d01a7dde-8e37-4064-8cef-b46f174a322a/26-6a755114435a5.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சாரதிகள் தங்களது உயிரை மட்டுமன்றி பயணிகள், பாதசாரிகளின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
 "இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது" என்றும் வீதியை பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T03:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-kills-wife-brutally-1786069383"></link>
            <id>https://tamilwin.com/article/husband-kills-wife-brutally-1786069383</id>
            <summary type="text">குருணாகல், வெலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில் மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாக கணவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல், வெலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில் மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாக கணவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதில் 48 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். </p><p>கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் ஒருவர் நேற்று மாவத்தகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p> </p><h2><b>குடும்பத் தகராறு</b></h2><p>இது தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/771bc617-b3b3-4eca-8cdd-d819c783a5b4/26-6a754fe3d020a.webp' /></p><p>உயிரிழந்தவர் அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> உயிரிழந்த பெண்ணின் கணவன் குடும்பத் தகராறு காரணமாக அவரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>இந்த நிலையில் 50 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-07T03:25:13+00:00</updated>
        </entry>
    </feed>
