<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-08T01:25:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை நடைபெறவுள்ளது புலமைப்பரிசில் பரீட்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-examinations-to-proceed-as-scheduled-1786150862"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-examinations-to-proceed-as-scheduled-1786150862</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை(9) ஞாயிற்றுக்கிழமை
நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2 ஆயிரத்து 723 பரீட்சை நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை(9) ஞாயிற்றுக்கிழமை
நடைபெறவுள்ளது.
</p><p>
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2 ஆயிரத்து 723 பரீட்சை நிலையங்களில் இந்தப்
பரீட்சை இடம்பெறவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி
லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;புலமைப்பரிசில் பரீட்சை</h2><p>

இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 2
இலட்சத்து 94 ஆயிரத்து 89 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a90b5d31-6e85-47c9-b13e-e3acbb8d348f/26-6a7681410a2c9.webp' /></p><p>இதேவேளை, 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்களுக்கான தடை நேற்று முன்தினம் (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T01:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளை சிறைச்சாலைக்குள் பதற்றத்தை ஏற்படுத்திய கும்பல் யார்...! குற்றப் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-fight-details-about-person-who-died-1786116214"></link>
            <id>https://tamilwin.com/article/prison-fight-details-about-person-who-died-1786116214</id>
            <summary type="text">பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பதறத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பதறத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> 

இந்த பதற்றம் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர். </p><p>

வெளிப்புறத்திலிருந்து ஒரு தரப்பினரால் சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்றமையினால் மோதல் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><h2><b>குற்றக் கும்பல்</b></h2><p>இதன்போது சில கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், பின்னர் சுமார் 45 கைதிகள் கொண்ட குழுவினர் சிறைக் கதவை உடைத்து வெளியே வந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8f69bd9-37d1-4b9a-8dc9-b65d967a3be4/26-6a760b0dbde35.webp' /></p><p>அவர்களில் பெரும்பான்மையினர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கொஸ்மல்லி என்பவரின் ஆதரவாளர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட குழுவினர் சிறைச்சாலை வாயிலின் ஊடாக வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இதன் போது, சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்தக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். </p><p>கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 35 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது. </p><h3><b>உயிரிழந்த கைது</b></h3><p>அவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை, நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டைக் கொலை உள்ளிட்ட பல கொலைகளுடன் தொடர்புடையர் ஆவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06deaf0c-b270-4512-88ca-bea34c24d349/26-6a760aa4089a8.webp' /></p><p>மேலும், ஹோமாகம ஹந்தயா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் ஒப்பந்தத் துப்பாக்கிச் சூடு நடத்துநராகவும் செயற்பட்டுள்ளார். </p><p>குற்றவாளிக்கு எதிராக காலி, அம்பாறை, நீர்கொழும்பு, ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p> அத்துடன், கனேமுல்ல சஞ்சீவ படுகொலையின் துப்பாக்கிச் சூடு நடத்துநராக முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்பட்டவரும் இவராகும். </p><p>சம்பவத்தில் காயமடைந்த மேலும் 10 கைதிகள் சிகிச்சைகளுக்காகச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.<br><br><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZPv5J2v-7J4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 


</p>]]></content>
            <updated>2026-08-08T00:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை! ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prision-attack-news-1786149953"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prision-attack-news-1786149953</id>
            <summary type="text">சிறைச்சாலைக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு தரப்பினர்
திட்டமிட்ட வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது என்று தெரிவித்த
பொதுமக்கள் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு தரப்பினர்
திட்டமிட்ட வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது என்று தெரிவித்த
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால,
ஆயினும் இந்த மோதல்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித
அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் உறுதியளித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(7) நடைபெற்ற அமர்வின்போது,
சிறைச்சாலைகளில் தொடரும் மோதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>[49KQXM9</p><h2>புலனாய்வுத் தகவல்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமான மோதல்கள் தற்போது மஹர, வெலிக்கடை
மகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய சிறைச்சாலைகளுக்கும் கட்டம் கட்டமாக
விரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6b7329-7ea2-43af-807f-c79fb4ab850a/26-6a767e6dc674c.webp' /></p><p> </p><p>கிடைக்கப் பெற்றுள்ள புலனாய்வுத் தகவல்கள் மற்றும்
அறிக்கைகளின்படி, இவை யாவும் திட்டமிட்ட செயற்பாடுகள் என்பதுடன், சிறைச்சாலைக்
கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் சதியோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
</p><p>போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த
மோதல்கள் தோற்றம் பெற்றுள்ளன.

வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் 40 பேர்
ஒன்றிணைந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர். உடனடியாக
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.</p><p></p><h2>கடுமையான நடவடிக்கைகள்&nbsp;</h2><p> </p><p>எனினும்,
இச்சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 13
பேர் காயமடைந்து இரத்தினபுரி சிறைச்சாலை மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febbd868-59dc-4418-8ca8-8d16bf1bb0ba/26-6a767e6e78069.webp' /></p><p> </p><p>சிறைச்சாலைகளில் மோதல்களைக் கட்டுப்படுத்தும்
அதேவேளை, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிய கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.

பல்லன்சேன சிறைச்சாலையில் 30 இற்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவுக்காக
வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டபோது, அவர்கள் கட்டடத்தின் மீது ஏறிப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>

சிறைச்சாலைகளில் தொடரும் இத்தகைய அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்தவும்,
கட்டமைப்பைப் பாதுகாக்கவுமான கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZPv5J2v-7J4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-08T00:55:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து வெடிக்கும் பதற்றம்! அன்றே எச்சரித்த மகிந்த..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-prision-attacks-tamil-videos-1786148605"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-prision-attacks-tamil-videos-1786148605</id>
            <summary type="text">இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள தொடர் கலவரங்கள் மற்றும் பதற்றமான சூழல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நீர்கொழும்பு, மெகசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள தொடர் கலவரங்கள் மற்றும் பதற்றமான சூழல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நீர்கொழும்பு, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லஞ்சேனை போன்ற பல சிறைச்சாலைகளில் கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
கைதிகளின் முக்கிய கோரிக்கையாக இருப்பது, தங்களின் வழக்கு விசாரணைகளுக்கான அரச பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாக தயாரித்து வழங்குவதாகும்.</p><p>இதில் உள்ள தாமதமே இந்த கலவரங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p>

 இது திட்டமிட்ட சூழ்ச்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

கைதிகள் அமைதியாக இருக்குமாறும், அறிக்கைகளை விரைவுபடுத்த தேவையான பணியாளர்கள் மற்றும் புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அரசன் நாணயக்கார உறுதியளித்துள்ளார்.</p><p>

 சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, முப்படையினரின் கண்காணிப்பில் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுப்பப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, 'ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன' என்று குறிப்பிட்டதையே தற்போதைய குழப்பங்களுக்குத் தொடக்கமாகப் பலர் கருதுகின்றனர். </p><p>

மேலும், அரசாங்கத்தின் மீதான சட்ட ஒழுங்கு குறித்து சர்வதேச மட்டத்தில் அவப்பெயரை ஏற்படுத்தவும், தற்போதைய அரசை வீழ்த்தவும் இத்தகைய கலவரங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...&nbsp;&nbsp;</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Tk5kWeUYsfw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைகாலத் தடை நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/stay-extended-on-vavuniya-mayor-s-removal-1786145253"></link>
            <id>https://tamilwin.com/article/stay-extended-on-vavuniya-mayor-s-removal-1786145253</id>
            <summary type="text">வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்தின் மீதான இடைகால
தடைக்கட்டளை எதிர்வரும் செப்ரெம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன்
வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்தின் மீதான இடைகால
தடைக்கட்டளை எதிர்வரும் செப்ரெம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன்
விவாதங்களை எழுத்து மூல சமர்பணமாக வழங்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம்&nbsp; உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த உத்தரவானது நேற்று(07.08.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம்</h2><p>
</p><p>
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
எழுத்தாணை விண்ணப்பம் மீண்டும் ஒரு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இது
தொடர்பாக வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afdf27c9-d529-416b-a25a-bcc029575db0/26-6a766d52d05c7.webp' /></p><p>

ஆரம்ப கட்டத்தில் நாங்கள் எடுத்திருந்த இடைக்கால தடையினை நீக்குமாறு
பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனை அணைக்கப்பட்டிருந்தது. </p><p>அந்த ஆட்சேபனைக்கு
நாங்கள் மறு ஆட்சேபனையினை&nbsp; ஓகஸ்ட் 6ஆம் திகதி அணைத்திருந்தோம். அந்த விடயம்
தொடர்பாக மன்றில் விசாரணை நடைபெற்றது.</p><p></p><h2>இடைக்காலத் தடை</h2><p>
</p><p>
இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது சம்பந்தமாக மட்டுமே
விவாதம் இடம்பெற்றிருக்கிறது. நாள் முழுவதும் இந்த விவாதம் இடம்பெற்று,
இறுதியில் எங்களுடைய விவாதங்களினை எழுத்து மூல சமர்ப்பணமாக, மன்றுக்கு
வழங்குமாறு மன்று பணித்திருக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfd1b1e-07af-455f-8192-0b4c4e9a2532/26-6a766d5382798.webp' /></p><p>அதனை இந்த மாதம் 28 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நாங்கள்
அலுவலகத்திலே தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு செப்டம்பர் மாதம் 9 ஆம்
திகதி இடைக்கால தடை தொடர்பான உத்தரவை நீதிமன்றம் வழங்கும். </p><p>அதன் பின்னர் தான்
பிரதான வழக்கு இடம்பெறும். அத்துடன் செப்டம்பர் 9 ஆம் திகதி வரைக்கும் ஏற்கனவே
வழங்கப்பட்டிருக்கின்ற இடைக்காலத் தடைக்கட்டளை மன்றால்
நீடிக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:17:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிளாஸ்டிக் உணவுப் பொதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pudukudiyirupu-end-plastic-food-package-1786142071"></link>
            <id>https://tamilwin.com/article/pudukudiyirupu-end-plastic-food-package-1786142071</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பில் அனைத்து உணவகங்களிலும் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்து, இயற்கையான பொருட்களின் பாவணையை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பில் அனைத்து உணவகங்களிலும் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்து, இயற்கையான பொருட்களின் பாவணையை அறிமுகப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.</p><p>

இந்தக் கலந்துரையாடலானது நேற்றைய தினம்(07.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>இயற்கையான பொருட்களின் பாவணை</h2><p> </p><p>

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பரிமாறல் முறைகளின் அவசியம் குறித்து உணவக உரிமையாளர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது, அடுத்த ஒரு மாத காலத்திற்குள் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57dd30af-940a-4b0a-a927-a13437cc6776/26-6a76635ab2a7f.webp' /></p><p> </p><p>இந்த முயற்சிக்கு உணவக உரிமையாளர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பசுமையான புதுக்குடியிருப்பை உருவாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து இயற்கை நட்பு நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், வருமானப் பரிசோதகர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b076cd01-339d-49ef-9e9c-032661a9cc3c/26-6a76635b7e284.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சிறைகளையே நிர்வகிக்க முடியாத அரசால் ஒட்டுமொத்த நாட்டை எவ்வாறு நிர்வகிக்க முடியும் - சுஜீவ சேனசிங்க எம்.பி. கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/how-can-a-government-manage-the-country-prisons-1786145568"></link>
            <id>https://tamilwin.com/article/how-can-a-government-manage-the-country-prisons-1786145568</id>
            <summary type="text">தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர், குறைந்தது நாட்டின்
சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் என்று
ஐக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர், குறைந்தது நாட்டின்
சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று(7) வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி தலைமைச் செயலகத்தில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசின் மறைமுகச் சதித்திட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"சிறைக்குள் இருக்கும் கைதிகளையோ அல்லது சிறைச்சாலை அமைப்பைக் கூட முறையாக
நிர்வாகிக்க முடியாத தற்போதைய அரசால், ஒட்டுமொத்த நாட்டையும் அதன் மக்களையும்
எவ்வாறு பாதுகாத்துச் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என்பதை மக்கள் இப்போதாவது
புரிந்துகொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d8c19c-9ce8-4f43-a53f-36a93847c5ed/26-6a766e24098d5.webp' /></p><p>

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இத்தகைய வன்முறைகளும் மோதல்களும் இடம்பெறுவது
வெறும் நிர்வாகத் திறமையின்மையா அல்லது இதன் பின்னணியில் அரசின் மறைமுகச்
சதித்திட்டம் எதுவும் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
</p><p>
நாட்டில் நிலையற்ற சூழலை உருவாக்கி, அதைக் காரணம் காட்டி அவசரகாலச் சட்டத்தை
நீட்டிப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டுவதற்கும் அரசே
இவ்வாறான சூழல்களைப் பயன்படுத்துகின்றதா என்ற கோணத்திலும் கேள்விகள்
எழுகின்றன.</p><p></p><h2>சட்ட ஒழுங்கு மீறல்கள்</h2><p>
</p><p>
சிறைச்சாலைகளில் இத்தனை சட்ட ஒழுங்கு மீறல்களும் அசம்பாவிதங்களும் நடந்தேறிய
பின்னரும், அதற்குப் பொறுப்பான துறைசார் அமைச்சர் தனது பதவியை&nbsp; விலகல் செய்யாமல் தொடர்ந்து நீடிப்பது பெரும் கேள்வியை எழுப்புகின்றது.
</p><p>
அமைச்சர் பதவி விலகாமல் இருப்பதன் மூலம், சிறைச்சாலைக்குள் நடக்கும் இத்தகைய
மோதல்கள் அவருடைய முழு அறிவோடும் விருப்பத்தோடும் தான் நடக்கின்றனவோ என்ற
எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b8e956-66bf-4dcd-8c34-d14b6789f12e/26-6a766e24ae659.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களோ அல்லது வழக்கு விசாரணை முடிவடையாமல் பிணை
மறுக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களோ, சிறை வளாகத்துக்குள்ளேயே
மரணமடையும் அல்லது கொல்லப்படும் ஆபத்தான சூழல் நிலவுவது நாட்டின் சட்டத்தின்
ஆட்சிக்கும் நீதித்துறைக்கும் விழுந்த பேரிடியாகும்.
</p><p>
தவறு செய்தவர்களுக்குச் சட்டப்படி நீதிமன்றமே தண்டனை வழங்க வேண்டுமே தவிர,
சிறைச்சாலைகளுக்குள்ளேயே அவர்களுக்கு மறைமுக மரண தண்டனை கிடைக்கும் நிலைமை
உருவாகக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு தனது உண்மையான நிலையை நாட்டுக்குத்
தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p><br></p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZPv5J2v-7J4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-07T23:45:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அரசை கடுமையாக சாடிய எதிர்கட்சித் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-national-security-sajith-criticize-1786143879"></link>
            <id>https://tamilwin.com/article/threat-national-security-sajith-criticize-1786143879</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாதுகாப்பற்ற
சூழ்நிலைகள் மற்றும் கலவரங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு
விடுக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாதுகாப்பற்ற
சூழ்நிலைகள் மற்றும் கலவரங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு
விடுக்கப்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று(07.08.2026) நடைபெற்ற விசேட கூற்றொன்றை முன்வைத்து
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தேசிய பாதுகாப்புக்கு&nbsp;அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கயைில், "யார் எவ்வாறான கருத்துகளைத் தெரிவித்தாலும், தற்போதைய சிறைச்சாலை மோதல்களும்
அசம்பாவிதங்களும் தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.</p><p>

சிறைச்சாலைகளில் இடம்பெறும் தொடர் அசம்பாவிதங்களைக் அடிப்படையாகக் கொண்டே நீதி
மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நாங்கள்
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7672ad0e-ca8d-42bf-aeb4-c9acd8fdbd39/26-6a7667c857c1f.webp' /></p><p> </p><p>எனினும், அந்த வாக்கெடுப்பில்
அமைச்சருக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டு
அரசு தன் வெற்றியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடியது.
</p><p>
ஆனால், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் மஹர
சிறைச்சாலையிலும், தொடர்ந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையிலும், தற்போது
குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளிலும் அடுத்தடுத்துப் பிரச்சினைகள்
வெடித்துள்ளன.
</p><p>
எனவே, இந்த விவகாரத்தில் அரசு எவ்வித அலட்சியமுமின்றி உடனடியாகக் கடுமையான
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:33:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறை தகர்பின் பின்னணியில் பிரான்சில் தீட்டப்பட்ட சதி! திடுக்கிடும் இரகசியம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisoners-riot-prison-attack-sri-lanka-1786127991"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisoners-riot-prison-attack-sri-lanka-1786127991</id>
            <summary type="text">அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்கள் மற்றும் சிறை உடைப்பு முயற்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
சிறைச்சாலைகளில் நடக்கும் இந்தக் கலவரங்கள் தற்செயலானவை அல்ல; இவை வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக பிரான்சில் மறைந்திருக்கும் குடு சலிது (Kudu Salidu) என்பவரால் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் உறவினருடன் இணைந்து திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இலங்கையிலிருந்து தப்பியோடிய இவர், பிரான்சில் இருந்தபடியே இக்கலவரங்களை இயக்கி வருவதாகவும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை அவரது குடும்பத்தினருக்கு வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிற அரசியல் பிரமுகர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதே இந்தச் சூழ்ச்சிகளின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
</p><p>
 சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினர், அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்தக் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.
</p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இந்தச் சூழலைச் சீர்குலைவு முயற்சிகளாகக் குறிப்பிடுகிறார். </p><p>

 இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YuCqi6-ulDM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை கலவரங்களால் நடுங்கும் அரசியல்வாதிகள்! அடுத்தடுத்து காத்திருக்கும் காட்சிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisons-attack-updates-naatu-nadappu-1786132857"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisons-attack-updates-naatu-nadappu-1786132857</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சமீபகாலமாக இடம்பெறும் கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நிலுவையில் உள்ள வழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சமீபகாலமாக இடம்பெறும் கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.</p><p>

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது மற்றும் நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புகள் சிறைச்சாலைச் சூழலில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
</p><p>
ஒகஸ்ட் 2, 2026 அன்று அனைத்து சிறைச்சாலைகளிலும் உடனடிச் சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் உத்தரவிட்டது. 

மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திற்குப் பிறகு, சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
 இது கைதிகள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம்

 சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் வெளியில் இருக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள், சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆகியவை சிறைச்சாலைகளில் அசாதாரணமான சூழலை உருவாக்கியுள்ளன.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gJYEZdz4PfI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T22:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் - பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegally-cut-trees-allegations-made-by-the-public-1786132734"></link>
            <id>https://tamilwin.com/article/illegally-cut-trees-allegations-made-by-the-public-1786132734</id>
            <summary type="text">கிளிநொச்சி - கரைச்சி பகுதியில் அரச
காணியில் உள்ள பெறுமதியான தேக்கு மரங்கள் அனுமதியின்றி
வெட்டப்பட்ட சம்பவத்தை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கரைச்சி பகுதியில் அரச
காணியில் உள்ள பெறுமதியான தேக்கு மரங்கள் அனுமதியின்றி
வெட்டப்பட்ட சம்பவத்தை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்களால்
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தச்
சம்பவம் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>திருடப்பட்ட தேக்கு மரங்கள்</h2><p> </p><p>நீண்டகாலமாக தென்னிந்திய திருச்சபையின் பயன்பாட்டில்
இருந்து வந்ததாக கூறப்படும் அந்தக் காணியில் சுமார் இரண்டு இலட்சம்
ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய மூன்று தேக்கு மரங்கள் அடியோடு
வெட்டப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் தடயங்களை அழிக்கவும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார், கரைச்சி பிரதேச செயலாளர், கிராம
உத்தியோகத்தர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e81f919-6bc4-4254-8603-0599a193ebb7/26-6a763bb78f361.webp' /></p><p>மேலும், தென்னிந்திய திருச்சபையின் பேராயரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த
மரங்கள் வெட்டப்பட்டு, அவற்றை விற்பனை செய்வதற்காக தரகர்களுடன்
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>அதேவேளை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய மரங்கள், விற்பனை செய்யவதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.</p><p></p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் திருச்சபையுடன் தொடர்புடைய ஒருவரிடம் வினவியபோது,
மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்திய அவர், இது
தொடர்பில் திருச்சபையின் செயற்குழு உறுப்பினர் ஒருவரால் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, குறித்த திருச்சபையின் நிர்வாகம் மற்றும் நிதிப் பயன்பாடு
தொடர்பிலும் உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் நிலவி வருகின்றன.

அண்மையில், திருச்சபை மக்களின் காணிக்கை நிதியில் சொகுசு வாகனம் ஒன்று
கொள்வனவு செய்யப்பட்டதாகவும், அதற்கான நிதி உரிய நிதிக்குழுவின் அனுமதியின்றி
பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265ed449-b292-4c22-aee6-3671180c2344/26-6a763bb869201.webp' /></p><p>
</p><p>
மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில் தென்னிந்திய திருச்சபையின் பேராயரின்
பதிலைப் பெற முயற்சிக்கப்பட்ட போதிலும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதேவேளை, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் கைவிடுமாறு சில தரப்பினரால்
பொலிஸாருக்கு அழுத்தம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள்
நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும், சட்டவிரோதம்
இடம்பெற்றிருந்தால் அதில் தொடர்புடையவர்கள் மீது சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T22:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-a-man-recovered-from-a-scrub-jungle-area-1786139081"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-a-man-recovered-from-a-scrub-jungle-area-1786139081</id>
            <summary type="text">மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து நேற்று(07.08.2026) மதியம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து நேற்று(07.08.2026) மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த பகுதியில் சடலம் கிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், கிராம சேவையாளர் ஊடாக உடனடியாக பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p></p><h2>சடலம் மீட்பு</h2><p> தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16f26d41-5981-4fec-8831-a0f618da970c/26-6a76556334888.webp' /></p><p>

விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன்,கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், அவரது வீடு சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>&nbsp;தீவிர விசாரணை</h2><p>

சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றத்தடுப்பு மற்றும் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/683fd824-28bd-4036-86ad-d7da8bc86bd5/26-6a765564188f8.webp' /></p><p>

மேலும், உயிரிழந்தவரின் கைப்பேசி நேற்று வியாழக்கிழமை (6) காலை 7.30 மணிக்குப் பின்னர் தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த மரணம் தொடர்பாக பேசாலை பொலிஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T22:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ நாடுகளை புடின் குறிவைக்கலாம் – அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/putin-could-strike-nato-allies-to-test-1786136185"></link>
            <id>https://tamilwin.com/article/putin-could-strike-nato-allies-to-test-1786136185</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் புதிய உளவுத்துறை மதிப்பீட்டின்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த சில ஆண்டுகளில் நேட்டோ (NATO) கூட்டணியின் ஒற்றுமையை சோதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் புதிய உளவுத்துறை மதிப்பீட்டின்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த சில ஆண்டுகளில் நேட்டோ (NATO) கூட்டணியின் ஒற்றுமையை சோதிக்கும் நோக்கில் அதன் உறுப்பினர் நாடுகளில் ஒன்றின் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.</p><p>

முன்னதாக, உக்ரைன் போரில் ரஷ்யா முழுமையாக ஈடுபட்டிருப்பதால் நேட்டோவுடன் நேரடி மோதலை புதின் தவிர்ப்பார் என அமெரிக்க அதிகாரிகள் கருதினர்.</p><p></p><h2>ரஷ்யாவின் நோக்கம்</h2><p> ஆனால் தற்போது அந்த மதிப்பீடு மாறியுள்ளது.


அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யாவின் நோக்கம் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது அல்ல; மாறாக, நேட்டோ கூட்டணியின் ஒற்றுமையிலும், அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதியிலும் பிளவை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருக்கலாம்.</p><p>

அமெரிக்காவின் American Enterprise Institute-இன் மூத்த ஆய்வாளர் ஹெதர் கான்லி கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34c9763-6176-4e8a-9980-2c13a3033f89/26-6a764a0a3726f.webp' /></p><p>
"அப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்கா எப்படி பதிலளிக்கும் என்பதே மிகப்பெரிய கேள்வி. நேட்டோவின் நம்பகத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தி, அமெரிக்காவை அதன் கூட்டாளிகளிடமிருந்து பிரிப்பது ரஷ்யாவின் நீண்டகால இலக்காக இருந்து வருகிறது.</p><p>"




நேட்டோ நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள்
அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்கள் மூலம் சிறிய எல்லைப் பகுதிகளை கைப்பற்றும் ரகசிய நடவடிக்கைகள்
நேட்டோவின் கிழக்கு எல்லையில் வரையறுக்கப்பட்ட இராணுவ ஊடுருவல்

இந்த வகை தாக்குதல்கள் 2026 இலையுதிர் காலம் முதல் 2029 வரை எந்த நேரத்திலும் நடைபெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>நேட்டோவின் பதில்&nbsp; எச்சரிக்கைகள்&nbsp;</h2><p>

Article 5 காரணமாக நேரடி போர் சாத்தியம் குறைவு

நேட்டோ ஒப்பந்தத்தின் Article 5-இன்படி, ஒரு உறுப்பினர் நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது அனைத்து உறுப்பினர்களின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.</p><p>

இதனால் நேரடி தரைப்படை தாக்குதல் நிகழும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், சைபர் தாக்குதல் அல்லது மறைமுக (Hybrid) தாக்குதல்கள் சட்ட ரீதியாக சிக்கலான பகுதியாக இருப்பதால் அவை அதிகம் கவலை அளிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a031a9-d399-4a93-ac9f-995af39295ed/26-6a764a0adc4df.webp' /></p><p>
</p><p>
நேட்டோவின் பதில்

இந்த எச்சரிக்கைகள் குறித்து நேட்டோ செய்தித் தொடர்பாளர் கர்னல் மார்ட்டின் ஓ'டொனல் கூறியதாவது:

"எந்தவிதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள நேட்டோ எப்போதும் தயாராக உள்ளது. </p><p>தேவையான நேரத்தில் தடுக்கவும், பாதுகாக்கவும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்."

இந்த உளவுத்துறை அறிக்கை வெளியாகும் நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட இராணுவ உதவி மற்றும் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவின் சில முக்கிய ஏவுகணை கையிருப்புகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>பற்றாக்குறையாக கூறப்படும் ஆயுதங்கள்</h2><p>

Precision Strike Missiles (PrSM)
ATACMS ஏவுகணைகள்
Stinger ஏவுகணைகள்
Patriot ஏவுகணை தடுப்பு அமைப்புகள்
SM-3
THAAD தடுப்பு அமைப்புகள்

ஆனால், அமெரிக்க பாதுகாப்புத் துறை (Pentagon) இந்த தகவல்களை மறுத்துள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் கூறுகையில்,

"அமெரிக்க இராணுவத்திடம் தேவையான அனைத்து ஆயுதங்களும் போதுமான அளவில் உள்ளன. எங்கள் திறனை குறைத்து மதிப்பிடும் எந்த எதிரியும் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eda1b77-df78-4c8b-aee3-1c2e56f17545/26-6a764a0b8d658.webp' /></p><p>"

வாஷிங்டனில் அதிகரிக்கும் விவாதம்

இராணுவ நிபுணர்கள் கூறுவதாவது, தற்போது கையிருப்பு குறைந்துள்ளதாக கூறப்படும் இந்த ஏவுகணைகள், எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் மிகவும் அவசியமானவை.
</p><p>
மேலும், சீனாவுடனான சாத்தியமான மோதலையும் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பை பாதுகாப்பது குறித்து வாஷிங்டனில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-07T21:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயற்றிட்டங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தது - முல்லைத்தீவு அதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mullaitivu-chief-plantation-ministry-projects-1786130209"></link>
            <id>https://tamilwin.com/article/mullaitivu-chief-plantation-ministry-projects-1786130209</id>
            <summary type="text">தெங்கு உற்பத்தியாளர்களுக்கு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னெடுப்பு
நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்தியுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெங்கு உற்பத்தியாளர்களுக்கு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னெடுப்பு
நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்தியுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட
அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(07.08.2026) முல்லைத்தீவில் நடைபெற்ற தெங்கு உற்பத்தியாளர்களுக்கான மானியம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தென்னை உற்பத்தியாளர்கள்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இந்த தென்னை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் உள்ளன.

மக்களின் காணிகள் வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கும் காலம்
கிட்டியுள்ளது.</p><p>

குரங்கு, யானைகளால் ஏற்படும் தாக்கம் தெங்கு செய்கை விவசாயிகளை பாதிக்கின்றது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நோய்தாக்கம், வெள்ளை ஈ தாக்கம் என்பன தெங்கு
விவசாயிகளையும் தாக்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea9cbcbf-bfd0-43d9-a157-df77421a6661/26-6a76301deb88c.webp' /></p><p>இவ்வாறான தாக்கங்கள் இருந்தாலும் இன்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின்
முன்னெடுப்பு நம்பிக்கையான எதிர்காலத்தினை காட்டுகின்றது.

அரசாங்கம் மக்கள் மீதுகொண்டுள்ள அக்கறை ஈடுபாட்டிற்கு முன்னுதாரணமாக இந்த
நிகழ்வு அமைந்துள்ளது.
</p><p>

மாவட்டத்தில் சி.டி.ஓ மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை
காணப்படுகின்றது.

 தற்போதைய அரசாங்கம் ஆளணியினரை மீள சேர்க்கின்ற நடவடிக்கை
எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.</p><p> எதிர்காலத்தில் இந்த வெற்றிடங்கள்
நிரப்பப்படும் என்ற நம்பிகை இருக்கின்றது.


இந்த மக்கள் கடின உழைப்பாளிகள்
சிறந்த முறையில் அவர்களின் உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
அரசாங்கத்தினால் செய்கின்ற இந்த உதவிகளை சிறந்த முறையில் நீங்கள் பயன்படுத்தி
எதிர்காலத்தினை சுவீட்சமாக மாற்றி அமைக்க வேண்டும் என 
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T21:18:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு அளிக்கப்பட்டால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: சாகிப் அல் ஹசன் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shakib-ready-for-trial-if-security-assured-1786125650"></link>
            <id>https://tamilwin.com/article/shakib-ready-for-trial-if-security-assured-1786125650</id>
            <summary type="text">தனது உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டால், பங்களாதேஷிற்கு திரும்பி நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டால், பங்களாதேஷிற்கு திரும்பி நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிரிக்கெட் வீரருமான சாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். </p><p>2024 ஆகஸ்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><h2>வழக்கு நிலுவை</h2><p>
ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாகிப் அல்
ஹசன், அதன்பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாகக் கடந்த
இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார்.
</p><p>
அவர் மீது கொலை வழக்கும், ஊழல் தடுப்புப் பிரிவினரின் வழக்கும் நிலுவையில்
உள்ளன. இது குறித்து இலங்கையில் வைத்து சர்வதேச செய்திச் சேவையொன்றுக்குக்
கருத்துத் தெரிவித்துள்ள சாகிப், "நான் எந்தத் தவறும் செய்யவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baedbafb-779d-4da0-b0af-0e918b3ab3cd/26-6a761f7491d9a.webp' /></p><p>அரசாங்கம் எனது பாதுகாப்பை உறுதி செய்தால், நான் நாடு திரும்பி நீதிமன்ற
விசாரணையை எதிர்கொள்ளத் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நாட்டின் தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
பெறுவதற்கு முன்பாக தாய்நாட்டில் தனது விடைபெறும் போட்டியில் விளையாடவும்,
2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவும் விருப்பம் கொண்டுள்ளதாகவும்
சாகிப் அல் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T20:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் மாற்று எரிபொருள்- வாகன விற்பனை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alternative-fuel-vehicle-sales-surge-in-india-1786120282"></link>
            <id>https://tamilwin.com/article/alternative-fuel-vehicle-sales-surge-in-india-1786120282</id>
            <summary type="text">இந்தியாவில் 20% எத்தனோல் கலந்த E20 பெட்ரோல் அறிமுகமானதைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மின்சார, ஹைபிரிட் மற்றும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் 20% எத்தனோல் கலந்த E20 பெட்ரோல் அறிமுகமானதைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மின்சார, ஹைபிரிட் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. </p><p>

இந்திய வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் விற்பனையான மொத்த பயணிகள் வாகனங்களில் 40.59% மாற்று எரிபொருள் வாகனங்களாக பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p><h2>E20 பெட்ரோல் அறிமுகம்</h2><p>
இது பெட்ரோல் வாகனங்களின் விற்பனைப் பங்கான 41.68 சதவீதத்திற்கு மிகவும்
நெருக்கமான அளவாகும்.

முந்தைய E10 பெட்ரோலுக்குப் பதிலாக E20 பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள
நிலையில், பழைய ரக வாகனங்களின் எஞ்சின் செயற்பாடு மற்றும் எரிபொருள் சிக்கனம்
பாதிக்கப்படுவதாகப் பயனாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f854f0-6547-41e1-b5cc-bc58594c36ae/26-6a7618da5221f.webp' /></p><p>இதன் காரணமாகப் புதிய பெட்ரோல் வாகனங்களை வாங்குவதைத் தவிர்க்கும் நுகர்வோர்,
மாற்று எரிபொருள் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
</p><p>
இருப்பினும், E20 பெட்ரோல் தொடர்பாகப் பரவும் தவறான தகவல்களே இந்த
அச்சத்திற்குக் காரணம் என்றும், இது தொடர்பில் வாகன உற்பத்தியாளர்களும்
விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும் என்றும் வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T19:43:00+00:00</updated>
        </entry>
    </feed>
