<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-16T21:37:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர தலைமையில் செழிப்பான நாடாக முன்னேறும் இலங்கை! இந்திய உயர்ஸ்தானிகர் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-sri-lanka-is-progressing-prosperous-country-1789591942"></link>
            <id>https://tamilwin.com/article/anura-sri-lanka-is-progressing-prosperous-country-1789591942</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை ஒரு செழிப்பான நாடாகவும், சிறந்த வாழ்க்கையை நோக்கியதாகவும் ஒரு மாற்றத்திற்கான பாதையில் பயணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை ஒரு செழிப்பான நாடாகவும், சிறந்த வாழ்க்கையை நோக்கியதாகவும் ஒரு மாற்றத்திற்கான பாதையில் பயணித்து வருவதாக என்று இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா பாராட்டியுள்ளார்.
</p><p>
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசரகாலப் பிரிவு கட்டுமானம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று காலை (16.09.20026) திறந்து வைக்கப்பட்டது. </p><p>இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இந்திய உயர் ஆணையர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வட மாகாணத்தின் அபிவிருத்தி</h2><p>மேலும், இலங்கையின் அனைத்து மாகாணங்கள் மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி காட்டும் அக்கறையை இந்தியா பாராட்டுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a389772a-c2cf-418c-9ea3-9723dc3a313a/26-6aab07ff9383f.webp' /></p><p>
மன்னார் அவசரகாலப் பிரிவுக்கான ஒப்பந்தம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கையெழுத்திடப்பட்டது என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இத்திட்டத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>]</p>]]></content>
            <updated>2026-09-16T21:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலநிலை தாக்கம்: தொடர் வறட்சிக்குப் பின் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-following-a-prolonged-drought-1789594305"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-following-a-prolonged-drought-1789594305</id>
            <summary type="text">நீண்டகாலமாக நிலவிய எல் நினோ கால நிலையின் தாக்கம் காரணமாக கடும் வரட்சிக்கு
பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று(16) கனமழை பெய்துள்ளதால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாக நிலவிய எல் நினோ கால நிலையின் தாக்கம் காரணமாக கடும் வரட்சிக்கு
பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று(16) கனமழை பெய்துள்ளதால் 
பொதுமக்கள் பெரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.</p><p>

முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம் உள்ளிட்ட பல இடங்களிலும் சுமார் இரு
மணித்தியாலங்கள் வரை மழை பெய்துள்ளது.</p><p>

கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் வெப்பம் மற்றும் மழையின்மையால், குடிநீர்
பற்றாக்குறை, கிணறுகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் குறைதல், விவசாயப்
பயிர்கள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.</p><p>

குறிப்பாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் நீரின்றி பெரும்
சிரமங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், தற்போது பெய்துள்ள கனமழை அவர்களுக்கு
ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>
மகிழ்ச்சியில் விவசாயிகள்</h2><p>

மழையினால் வறண்ட நிலையில் காணப்பட்ட குளங்கள், நீர்நிலைகள் மற்றும் வயல்
நிலங்களில் நீர் தேங்கத் தொடங்கியுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும்
அதிகரிக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f79838e3-429a-4113-bb84-ad8b1b97e852/26-6aab0b38ccd39.webp' /></p><p>

நீண்டகால வரட்சியின் பின்னர் கிடைத்துள்ள இந்த மழை தொடர்ச்சியாக கிடைத்தால்
விவசாய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவும், குடிநீர் மற்றும்
கால்நடைகளுக்கான நீர் பிரச்சினையை ஓரளவு சமாளிக்கவும் முடியும் என விவசாயிகள்
தெரிவிக்கின்றனர்.</p><p>

இதனால் நீண்டகால வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் மழையை
மகிழ்ச்சியுடன் வரவேற்று, தொடர்ந்தும் போதிய மழை பெய்ய வேண்டும் என
எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63fb6b54-b8ba-4839-b5d1-ca930f07ff87/26-6aab0b39d85b7.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு 12.50க்கு ஷிரந்தியை கதிகலங்க வைத்த செய்தி! திணறும் நாமல் மற்றும் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-visited-singapore-1789581399"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-visited-singapore-1789581399</id>
            <summary type="text">இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது ராஜபக்சர்கள் மீது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது ராஜபக்சர்கள் மீது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>

இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் எத்தனை முறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டாலும், பிணை கிடைக்காத ஒரு நிலையை குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் உருவாக்கியிருக்கின்றனர்.
</p><p>
நாமலைத் தொடர்ந்து அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவர் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
</p><p>
இவ்வாறு அவசர அவசரமாக ஷிரந்தி விமான நிலையத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, FCID அதிகாரிகளால் 24ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த சம்பவம் ராஜபக்சர்கள் மத்தியிலும், அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இனி வரும் காலங்களில் ராஜபக்சர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் இன்னும் தீவிரமாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ki-Hg_wWbdk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் 'மிக்' விமான கமிஷன் பணத்திற்கு நடந்தது என்ன! அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;மிக்&#039; விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'மிக்' விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பல மணிநேர வொக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.</p><p>இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் மறைந்துள்ள கமிஷன் பணம் யாருடைய கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது? எங்கே சென்றது?
'டி.எஸ். அலையன்ஸ்' (DS Alliance) நிறுவனம் ஒரு போலி நிறுவனமாக உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய 'பெலிமிசா' (Bellimissa) நிறுவனத்திற்கு இலங்கையின் விமானப்படை 15.66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அனுப்பியுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கொடுக்கல் வாங்கல் எப்படி நடந்தது</h2><p>அதில் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கலுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டுள்ளது 7.83 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
அப்படியானால் எஞ்சிய பணம் எங்கே சென்றது? யாருடைய கணக்கில் வைப்பிலிடப்பட்டது?
மேலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் விசாரணைகள் நிறுத்தப்பட்ட விதம் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கொள்முதல் கொடுக்கல் வாங்கலானது குளிர் அறைகளில் இருந்த சில நபர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி அவர்களின் சுகபோகத்திற்காகவே தீர்மானிக்கப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கலா? </p><p>
இந்தக் கொடுக்கல் வாங்கலானது உண்மையிலேயே இலங்கை விமானப்படையின் தாக்குதல் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்திலா செய்யப்பட்டது? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பைகளை நிரப்பும் நோக்கத்திலா செய்யப்பட்டது? எனும் கேள்வி எழுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d646032-44b9-4263-bd4a-e36548308477/26-6aaa830b491f4.webp' /></p><p>2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இந்த மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் விசாரணையை நிறுத்தினார். அவ்வாறு நிறுத்துவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சில முக்கிய தடயங்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
</p><p>இந்த 'டி.எஸ். அலையன்ஸ்' எனும் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தினரால் சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வங்கிப் கணக்கிலிருந்து குறைந்தபட்சம் 4,39,000 டொலர்கள் பணம் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் கம்பஹா கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
</p><p>கம்பஹா கிளையில் லெலும் துமிந்த மான்னப்பெரும எனும் கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் இவ்வளவு பாரிய தொகையா யார் இந்த லெலும் துமிந்த?.
</p><p> சிங்கப்பூர் 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனம் தங்களது கணக்கொன்றின் மூலமாகவே இலங்கையின் கம்பஹா கொமர்ஷல் வங்கி கிளைக்கு இந்தப் பணத்தை அனுப்புகிறது.&nbsp;</p><h2>டுபாயில் வாங்கப்பட்ட சொத்து</h2><p>இந்த லெலும் துமிந்த மான்னப்பெரும என்பவர் உதயங்க வீரதுங்கவின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். உறவுமுறையின் படிஇ இந்தப் பணம் வைப்பிலிடப்பட்ட நபர் உதயங்க வீரதுங்கவின் மைத்துனர் ஆவார்.
</p><p>இந்த மான்னப்பெரும என்பவரின் வங்கிப் கணக்கில் வீழ்ந்த பணத்திற்கும் மிக் கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்களால் முடியாமல் போகிறது.
</p><p>ஆனால் மிக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்கிலிருந்தே பணம் வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இந்த மான்னப்பெரும என்பவர் இந்தப் பணத்திலிருந்து 324,971.6 டொலர்களை
ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாய் நகரில் சொத்து விற்பனை செய்யும் 'டார்கெட் எஸ்டாப்ளிஷ்மென்ட்' (Target Establishment) எனும் நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார். </p><p>
ஐக்கிய அரபு இராஜியத்தின அஜ்மான் நகரில் உள்ள 'கோல்ட் கிரஸ்ட் வியூஸ் 2' (Goldcrest Views 2) எனும் சொகுசு வீட்டுத் தொகுதியின் 'பென்ட் ஹவுஸ்' (Penthouse) அடுக்குமாடி குடியிருப்பு இலக்கம் 3403 ஐக் கொள்முதல் செய்வதற்காகவே இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. </p><p>2018 ஆம் ஆண்டு இந்த வீட்டிலிருந்து டுபாய் பொலிஸாரால் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்படுகிறார்.இந்த பிரம்மாண்டமான கமிஷன் தொகையில் மிகச்சிறிய ஒரு பகுதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களாகவே இவை கிடைத்துள்ளதாக நம்புகின்றனர். </p><p>
இந்த கமிஷன் தொகையில் கணிசமான ஒரு பகுதி லத்வியாவில் (Latvia) உள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விடயமும், அதற்கு மேலதிகமாக நியூசிலாந்து, பனாமா, உக்ரைன், ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands) ஆகிய நாடுகளிலுள்ள பல வங்கிக் கணக்குகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T21:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரித்தபடி நீதிமன்றத்திற்கு வந்த நாமலிற்கு காத்திருந்த அதிர்ச்சி - அர்ச்சுனாவின் முடிவை பகிரங்கப்படுத்திய உதய கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udaya-gammanpila-made-arjuna-s-decision-public-1789592707"></link>
            <id>https://tamilwin.com/article/udaya-gammanpila-made-arjuna-s-decision-public-1789592707</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது அர்ச்சுனா நடந்துகொள்வது போன்றுதான் அன்று சுமந்திரன் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோன்று, சிகிச்சைக்காக ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது, அவருக்கு 24ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்றைய தினம்(16.09.2026) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல், சிரித்த முகத்துடன் சிறைக்குச் சென்றுள்ளார். </p><p>அவருக்கு ஆதரவாக பேசியவர்கள் இன்று, அனுர செய்வது சரி என்பது போன்று பேசி சென்றுள்ளனர்.</p><p>

இந்த விடயம் தொடர்பில் பல்தரப்பட்ட விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gonNxxDYl88" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரண்டாவது நாளாக அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemoration-day-of-thileepan-1789591392"></link>
            <id>https://tamilwin.com/article/commemoration-day-of-thileepan-1789591392</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் 
39 வது ஆண்டின் நினைவு தினம் இரண்டாம் நாளாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் 
39 வது ஆண்டின் நினைவு தினம் இரண்டாம் நாளாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு நேற்று(16.09.2026) காலை 9 மணியளவில் நடைபெற்றுள்ளது. </p><h2>


மலர் அஞ்சலி</h2><p>
பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு
தூவியில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு, அக வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f18e84e-85cb-42a1-8814-996d11116d70/26-6aaaffa8f0002.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, பருத்தித்துறை நகர சபை
உறுப்பினர் நிரஞ்சன் ஈகைச் சுடரினை ஏற்றிவைக்க, பருத்தித்துறை நகர பிதா
வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.</p><p>

மேலும், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை
உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளதுடன், மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/802cfc6b-b6f2-4993-b6bd-9e1e10680cff/26-6aaaffaa12397.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6375a44-d585-437f-b50c-d33784b9cd0a/26-6aaaffaadedd7.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T20:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pregnant-woman-dies-in-batticaloa-1789590774"></link>
            <id>https://tamilwin.com/article/pregnant-woman-dies-in-batticaloa-1789590774</id>
            <summary type="text">மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை
பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை
பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் நேற்று(16.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், சிலர் படுகாயமடைந்துள்ளனர். </p><h2>

சிலர் படுகாயம்</h2><p>

35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இத்துயரச்
சம்பவத்தில் சிக்கியுள்ளனர். </p><p>

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச்
சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு
திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4404d68d-cfda-44f7-aa7d-a61f2da93307/26-6aaafd83558da.webp' /></p><p> </p><h2>

மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய பெண்</h2><p>

கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக்
கொண்டிருந்தபோது, பாலையடி வட்டை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கனரக டிப்பர்
வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
</p><p>
இந்த விபத்தில் கடுமையாகக் காயமடைந்த பெண், உடனடியாகக் களுவாஞ்சிகுடி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f241acd-e9f5-437c-bc47-aa6e8b20c43e/26-6aaafd8441dee.webp' /></p><p>
</p><p>
அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதுடன்,
முச்சக்கர வண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
</p><p>
விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T20:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடைத்தேர்தல் களத்தில் ட்ரம்ப்: கருத்துக்கணிப்பில் பின்னடைவை சந்திக்கும் மைக்கேல் வொட்லி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-in-the-midterm-elections-1789590201"></link>
            <id>https://tamilwin.com/article/trump-in-the-midterm-elections-1789590201</id>
            <summary type="text">அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை
முன்னிட்டு, வட கரோலினா மாநிலத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக்கேல்
வொட்லிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை
முன்னிட்டு, வட கரோலினா மாநிலத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக்கேல்
வொட்லிக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிர பிரச்சார
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
</p><p>
குடியரசுக் கட்சியின் தேசிய இடைத்தேர்தல் மாநாட்டிற்குப் பின்னர் ட்ரம்ப் பிரசாரம் செய்யும் முதல் நபர் இவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


வட கரோலினா செனட் சபைக்கான போட்டியில், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஆளுநர்
ரோய் கூப்பருக்கு எதிராகப் போட்டியிடும் மைக்கேல் வொட்லி,
கருத்துக்கணிப்புகளில் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையிலேயே ட்ரம்ப்
அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார்.
</p><h2>
இடைதேர்தலுக்காக களம் இறங்கிய ட்ரம்ப்</h2><p>

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகக் கட்சிசாரா
வாக்காளர்களின் ஆதரவு சரிவடைந்து வருவதாகக் சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79e585e7-0e74-4e50-90d9-f32a21cb429c/26-6aaafb0382134.webp' /></p><p>
</p><p>
இந்த மாநிலத்தில் சுமார் 40 சதவீதமான வாக்காளர்கள் எந்தவொரு கட்சியையும்
சாராதவர்களாக உள்ள நிலையில், அவர்களின் ஆதரவைப் பெறுவதே தேர்தலில் வெற்றி
பெறுவதற்குத் தீர்மானமிக்க காரணியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p>

இதனிடையே, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப்
பேணுதல் ஆகிய விவகாரங்களை மையப்படுத்தியே ட்ரம்ப் மற்றும் வொட்லி ஆகியோர் தமது
தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T20:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வீரர் ருமேஷ் தரங்காவின் தங்கப் பதக்க கனவு - உதவி கரம் நீட்டும் டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-athlete-rumesh-tharanga-dream-1789588415"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-athlete-rumesh-tharanga-dream-1789588415</id>
            <summary type="text">இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா இலங்கைக்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்லும் தனது இலக்கை அடையும் வரை, அவருக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் உல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா இலங்கைக்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்லும் தனது இலக்கை அடையும் வரை, அவருக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் உலகத் தரம் வாய்ந்த ஈட்டிகளை வழங்குவதாக டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேன உறுதியளித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் அவருடைய அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கிலேயே குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

ருமேஷ் தரங்காவின் பயிற்சியாளர் டோனி பிரசன்னாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><h2>


தங்கப் பதக்கம் பெறும் கனவு</h2><p>
மேற்படி பதிவின் படி, டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேன, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்து, அரசாங்கத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட ஈட்டியுடன் கூடுதலாகத் தேவையான உபகரணங்களையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de4e9ccd-e53f-4ed0-98d3-66114802bc3b/26-6aaaf458a0eee.webp' /></p><p>

இந்த உதவிக்கு ஈடாகத் தானோ அல்லது தனது டெம்பிள் குழும நிறுவனங்களோ எந்தவொரு விளம்பர ஆதரவையோ அல்லது வேறு எந்த வணிகப் பலனையோ எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
சமீப காலங்களில் இலங்கை தடகளக் களத்தில் இருந்து வெளிவந்த மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராக ருமேஷ் தரங்காவை வர்ணித்த அவர், திறமையான விளையாட்டு வீரர்களை வளர்ப்பதும், சர்வதேச அளவில் அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதும் உள்ளூர் வணிகர்களின் பொறுப்பாகும் என்றார்.</p><p> 

ரூமேஷின் ஒலிம்பிக் தங்கப் பதக்கக் கனவு நனவாகும் வரை தனது உறுதிப்பாடு மாறாது என்று கூறிய சிறிசேன, அந்த ஒலிம்பிக் கனவு நிறைவேறும் வரை ஒரு தேசமாக ரூமேஷுக்குப் பின்னால் நின்று அவருக்கு முழு ஆதரவையும் வழங்குவது அனைவரின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.&nbsp; &nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FconnectwithDudley%2Fposts%2Fpfbid0ya5BACGKABtamZrK4roJTWb2ea6nM5ddZqLABSBAWmvdQsFmwD24qqcXUFpeGGtel&show_text=true&width=500" width="500" height="751" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T19:56:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாடு: இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-on-the-disappeared-1789587647"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-on-the-disappeared-1789587647</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு சிறீ லங்காவில்
இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம். 

அத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு சிறீ லங்காவில்
இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம்.</p><p> 

அத்துடன், தமிழ் சமூகத்தை அழித்துவிட்டோம், தம் பிள்ளைகளைத் தேடியலையும் தாய்மார்களுக்குப்
பதில் சொல்லாமல் மெல்லமெல்ல சாட்சிய அழிப்பை செய்துவருகின்றோம் என
நினைத்துக்கொண்டிருந்த தரப்பினரின் முகத்தில் கரியைப் பூசியிருக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(16.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள். </p><h2>

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி</h2><p>
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், </p><p>

இறுதிப் போர் வேளையிலும், அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் எமது பிள்ளைகள்
இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால்
கைதுசெய்யப்பட்டநிலையிலும், இராணுவத்தாலும், அவர்களோடு சேர்ந்தியங்கிய துணை
ஆயுதக்குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dfbd2a6-7c42-4d2b-9342-9f025c08ed2f/26-6aaaf0e47e60e.webp' /></p><p>
</p><p>
அவ்வாறு காணாமலாக்கப்பட்ட நாள் தொட்டு தமது உறவுகளைத் தேடி வீதியில் இறங்கிய
ஒவ்வொரு தமிழ் தாய்மாரும், ஒவ்வொரு தமிழ் தந்தைமாரும், உறவினர்களும் இணைந்து,
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினை
ஆரம்பித்தோம்.
</p><p>
கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு
மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
</p><h2>
இராணுவத்தினரின் அட்டகாசங்கள்</h2><p>
இந்த போராட்டங்களில், இராணுவத்திடம் கையளித்த எமது பிள்ளைகள் எங்கே? கடத்திச்
செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? சிறீலங்காவின் நீதித் துறையில் எமக்கு
நம்பிக்கையில்லை, சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை, மீளநிகழாமையை
உறுதிப்படுத்த வேண்டும்.
</p><p>
மேலும், சிறீலங்காவை பொறுப்புக்கூறலை நோக்கி சர்வதேச நாடுகள்
அழுத்தம் பிரயோகிக்க வேண்டும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைத்
தேடியறிவதற்கென சிறீலங்கா அரசு அமைக்கும் ஆணைக்குழுக்கள், நிறுவனங்கள் ஏமாற்று
நாடகங்கள் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f869632-b837-4165-966b-113c19df8bed/26-6aaaf0e54ee54.webp' /></p><p>
</p><p>

இராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல்கள், விசாரணைகள், கண்காணிப்புகள், வயது முதிர்வு, நோய், வறுமை
போன்ற துயரங்களால் பாதிக்கப்பட்டபோதிலும் துவண்டுபோகாது - விட்டு விலகிவிடாது
எமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். </p><p>

இந்த போராட்டமானது எமது
பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு மட்டுமானதல்ல, இனிவரும்
காலங்களில் எமது பிள்ளைகளைப் போல இன்னொரு மகளோ, மகனோ கடத்திக்
காணாமலாக்கப்படக்கூடாது என்பதற்கான ஓர் அரணாகவே நாம் எல்லாத் துயரங்களையும்
தாங்கித் தெருவில் நிற்கின்றோம். </p><p>

இந்த மண்ணில் எம்மைப் போல இன்னொரு தாய் கலங்கி
நிற்கக்கூடாது என்பதற்காகவே மனவுறுதியோடு தொடர்ந்து போராடுகின்றோம் என்றார்கள்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் செல்வந்தரான டிக்டொக் நிறுவுனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tiktok-founder-overtakes-adani-richest-people-1789585049"></link>
            <id>https://tamilwin.com/article/tiktok-founder-overtakes-adani-richest-people-1789585049</id>
            <summary type="text">டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதன்மை செல்வந்தராக உருவெடுத்துள்ளார்.

</p><p>ங் யிமிங்கின் சொத்து மதிப்பு 105 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதைத் தொடர்ந்து அவர் இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
</p><h2>அமெரிக்காவில் டிக்டொக் செயலி&nbsp;</h2><p>
மார்ச் 2019 இல் ப்ளூம்பெர்க் இவரது சொத்துக்களைக் கணக்கிடத் தொடங்கிய போது 13 பில்லியன் டொலர்களாக இருந்த இவரது சொத்து மதிப்பு, தற்போது 8 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
</p><p></p><p>
</p><p>

அமெரிக்காவில் டிக்டொக் செயலி தீவிர சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்ட போதிலும், ஸாங் யிமிங் செயற்கை நுண்ணறிவுத் துறையிலான தனது முதலீடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்.</p><p>

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிக்டொக்கின் அமெரிக்க செயல்பாடுகளின் சில பகுதிகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பைட்டான்ஸ் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, அந்தச் செயலியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையும் தணிந்தது.
</p><p>
முன்னதாகச் சீனாவில் முதன்மை செல்வந்தராக திகழ்ந்த ஸாங் யிமிங், தற்போது ஆசியாவின் முன்னணி செல்வந்தராக மாறியுள்ளதுடன், ஆசிய செல்வந்தர்களின் சொத்து மதிப்பிலும் தரவரிசையிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பத் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை இந்த மாற்றம் வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T19:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொஸ் மல்லியின் மைத்துனர் கொலை வழக்கில் நால்வர் அதிரடி கைது - சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-arrested-in-murder-case-of-kos-malli-relative-1789585953"></link>
            <id>https://tamilwin.com/article/four-arrested-in-murder-case-of-kos-malli-relative-1789585953</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்மல்லியின் நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற “பூத கலுவா” வின் கொலை சம்பவம் தொடர்பாக மவுண்ட் லவினியா பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்மல்லியின் நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற “பூத கலுவா” வின் கொலை சம்பவம் தொடர்பாக மவுண்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 மவுண்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் இருந்து, ​​21 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள், 4 வாள்கள் உள்ளிட்ட பல கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 4 தொலைபேசிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த 7ஆம் திகதி அதிகாலை சுமார் 1.45 மணியளவில், தெஹிவளை- ஓபன் பிளேஸைச் சேர்ந்த 46 வயதான தமித் பிரசாத் பொன்சேகாவின் வீட்டிற்கு, முச்சக்கர வண்டியில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்துள்ளது.</p><p> 

அதன் பின்னர், படுக்கையறையில், உறங்கிக் கொண்டிருந்த அவரை, கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொலைச் செய்த நிலையில், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41aadfe6-5335-4c9c-81c3-11b4aca64cd9/26-6aaaeaa1e007f.webp' /></p><p> </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர், பல ஆண்டுகளாக கொஸ் மல்லியுடன் துபாயில் தங்கியிருந்ததாகவும், அங்கு பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு திரும்பியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2> 

பிரதான சந்தேக நபர்கள் கைது</h2><p>
சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் புகைப்படம், பாதுகாப்பு கேமரா காட்சிகளைப் பயன்படுத்திப் பெறப்பட்டு, மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப் பதிவேடுகள் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><p>

புகைப்படத்தில் உள்ள நபர், பல குற்றங்களில் ஈடுபட்டு வரும் அங்கலானா பகுதியைச் சேர்ந்த ஒருவரை 65 சதவீதம் ஒத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2033a0f-59bd-42a4-bbdd-71c8472d70d1/26-6aaaeaa2970eb.webp' /></p><p>
</p><p>
 அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இந்தக் கொலையில் மேலும் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருந்ததாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

தெலவல வீட்டுவசதி வளாகத்தைச் சேர்ந்த “சஞ்சு” என்பவரும் இந்தக் குழுவில் அடங்குவதாகவும், இவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் “சாண்டோ” என்ற பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் பிரதான அடியாள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. </p><h2>

வாகனங்கள் மற்றும் வாள்கள் பறிமுதல்</h2><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிற்குப் பின்னாலுள்ள காட்டில், குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களால் செய்யப்பட்ட மூன்று பெரிய வாள்கள், ஒரு மிதிவண்டி கரப்பான் பூச்சி மற்றும் ஒரு கூர்மையான ஆயுதம் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன. </p><p>

மேலும், கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ. 100 கோடிக்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு முச்சக்கர வண்டியில் போலி எண் தகடு பொருத்தப்பட்டிருந்ததும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7379fa03-46ba-41f0-8d4c-bec564facc70/26-6aaaeaa34afc9.webp' /></p><p> </p><p>

50,000 ரூபாய் மதிப்புள்ள முச்சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற தெலவாலா பகுதியைச் சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குற்றச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்கும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்ற இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

இந்த முழுமையான விசாரணை நடவடிக்கையையும், மவுண்ட் லவினியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியான தலைமை ஆய்வாளர் நிலந்த கமகே மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T19:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் சூடான் தேர்தலில் புதிய மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-change-in-south-sudan-election-1789581895"></link>
            <id>https://tamilwin.com/article/new-change-in-south-sudan-election-1789581895</id>
            <summary type="text">தென் சூடானில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்நாட்டின்
தேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சூடானில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்நாட்டின்
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த நாட்டின் ஜனாதிபதி சல்வா கீர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த
அபேத்னெகோ அகோக் கச்சுவோலை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கி, அவருக்குப்
பதிலாக ஆணைக்குழுவின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய கேப்ரியல் போல் டெங்கை
புதிய தலைவராக நியமித்துள்ளார்.
</p><h2>
தலைவர் பதவியிலிருந்து நீக்கம்</h2><p>

இதற்கான அறிவிப்பு அரசாங்கத் தொலைக்காட்சி ஊடாக வெளியிடப்பட்ட போதிலும்,
இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8cf44c0-709c-4ede-bb1f-c663b2490d83/26-6aaae42f973c9.webp' /></p><p>
</p><p>
2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் தென் சூடானில் நடத்தப்படும் முதலாவது
பொதுத் தேர்தல் இதுவாகும்.

டிசம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள
நிலையில், கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனம் வாக்காளர்களின்
நம்பிக்கையைக் குறைக்கக்கூடும் எனச் சிவில் சமூக அமைப்புகள் அச்சம்
வெளியிட்டுள்ளன.
</p><p>
அத்துடன், நியாயமான மற்றும் அமைதியான முறையிலான தேர்தலை நடத்துவதற்கான போதிய
சூழல் இன்னும் அங்கு உருவாகவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
ஆணைக்குழுவும் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T18:47:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க் குற்ற வழக்கில் கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-kosovo-sentenced-25-years-1789579855"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-kosovo-sentenced-25-years-1789579855</id>
            <summary type="text">கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசிக்கு கொலை, சித்திரவதை மற்றும்
சட்டவிரோத தடுப்புக் காவல் உள்ளிட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள்
நிரூபிக்கப்பட்டதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசிக்கு கொலை, சித்திரவதை மற்றும்
சட்டவிரோத தடுப்புக் காவல் உள்ளிட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள்
நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து
நெதர்லாந்தின் தி ஹேக் போர்க் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

1990களின் பிற்பகுதியில் செர்பியாவிடமிருந்து கொசோவோ பிரிவதற்காக இடம்பெற்ற
மோதல்களின் போது, கொசோவோ விடுதலை இராணுவத்தின் (KLA) உயர் தளபதியாகச்
செயற்பட்ட போதே இவர் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
</p><h2>தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய</h2><p>
அரசியல் எதிராளிகள் மற்றும் செர்பிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாகச்
செயற்பட்டதாகக் சந்தேகிக்கப்பட்ட 96 பேரை கொலை செய்தமை, 385 பேரை
சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்திருந்தமை மற்றும் நூற்றுக்கணக்கானோரை
சித்திரவதைக்கு உட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது
சுமத்தப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/296d3dce-25eb-4051-ae40-17560d06c2cb/26-6aaadd23de086.webp' /></p><p>நீதிமன்றத் தீர்ப்பின் போது குற்றச்சாட்டுகளை மறுத்த 58 வயதான ஹாஷிம் தாசி,
இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியும் எனக்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இத்தீர்ப்பை அடுத்து கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில் கூடியிருந்த அவரது
ஆதரவாளர்கள் கவலையையும் எதிர்ப்பையும் வெளியிட்டதோடு, அமைதியின்மை ஏற்படுவதைத்
தடுக்கும் பொருட்டு பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T18:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் கோர விபத்து: இருவர் பலி - வெளியான சிசிடிவி காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-colombo-1789574054"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-colombo-1789574054</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு மக்களைத் துக்கத்தில் ஆழ்த்திய மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில், கார் எவ்வாறு மற்ற வாகனங்கள் மீது மோதியது என்பதைக் காட்டும் சிச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு மக்களைத் துக்கத்தில் ஆழ்த்திய மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில், கார் எவ்வாறு மற்ற வாகனங்கள் மீது மோதியது என்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>விபத்தை பார்வையிட வந்தவர்களை விலக்கி விட்டு சம்பவ இடத்தை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=316&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2119787948662021%2F&show_text=true&width=560&t=0" width="560" height="431" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> 

ஏனெனின், கோபத்தில் சிலர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை உடைத்து எரிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.</p><p> 

இதனை தடுக்கும் வகையில் பொலிஸார், பொது மக்கள் அனைவரையும் அந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9a5590b-37b9-4b13-bf13-aaef0a3ded18/26-6aaadb33ab910.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இருப்பவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=316&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2119787948662021%2F&show_text=true&width=560&t=0" width="560" height="431" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eWo_AvzmHTg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இந்த சம்பவம் இன்று (16.09.2026) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>

இருவர் உயிரிழப்பு</h2><p>
சற்றுமுன்னர், மட்டக்குளி பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d189f63-f5f6-4da3-81c0-322c2c558426/26-6aaabcb30e1cb.webp' /></p><p>
</p><p>
இதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 முச்சக்கர வண்டிகள் மற்றும் கார் ஆகிய வாகனங்களே இவ்வாறு ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F1071684679163794%2F&show_text=true&width=560&t=0" width="560" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d02315-7173-4749-a061-463da4fdffc2/26-6aaadb3549c1a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7efe0220-6f15-4afe-9166-36cc802fe4d1/26-6aaadb347dece.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11eff0c8-b449-4104-ac9f-00c2bdb953cd/26-6aaabcb41818c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eec64609-4848-44b4-a577-d9f5277a7cd8/26-6aaabcb4df2d5.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T18:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கா மீது தாக்குதலா..! சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் ஹவுதி அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/qatar-condemns-shameful-houthi-attack-1789579110"></link>
            <id>https://tamilwin.com/article/qatar-condemns-shameful-houthi-attack-1789579110</id>
            <summary type="text">இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> 
புனிதத் தலத்தின் மீதான இந்தத் தாக்குதல் முயற்சியை ஒரு வெட்கக்கேடான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என கட்டார் வெளியுறவு அமைச்சு கடுமையாகச் சாடியுள்ளது.
</p><p> இது குறித்துக் கட்டார் அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc48036-b422-4e8e-b337-d817b2728f5f/26-6aaacf67837ac.webp' /></p><p>
</p><p>புனிதத் தலங்களின் பாதுகாப்பு, புனிதத்தன்மை மற்றும் அங்கு வருகை தரும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு ஆகியவை ஒருபோதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படவோ அல்லது பிராந்திய மோதல்களில் பயன்படுத்தப்படவோ கூடாது என கட்டார்ர் வலியுறுத்தியுள்ளது. </p><p>
மேலும், தனது நிலப்பரப்பு, புனிதத் தலங்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சவூதி அரேபியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டார் அரசு முழு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>முன்னதாக, மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பால் ஏவப்பட்ட ட்ரோன் ஒன்றை வான்வெளியிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாகச் சவூதி அரேபிய இராணுவம் அறிவித்திருந்தது.</p><p> 
எனினும், சவூதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், புனிதத் தலத்தை இலக்கு வைத்துத் தாம் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை எனவும், சவூதி சுமத்தும் குற்றச்சாட்டு ஒரு "அருவருப்பான பொய்" எனவும் விளக்கம் அளித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T17:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்காவில் வான்வழித் தாக்குதல் - குடியிருப்பாளர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airstrike-in-mecca-1789580111"></link>
            <id>https://tamilwin.com/article/airstrike-in-mecca-1789580111</id>
            <summary type="text">இஸ்லாமியப் புனித நகரமான மக்காவில் வான்வழித் தாக்குதல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்து, சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு அவசரகால எச்சரிக்கை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமியப் புனித நகரமான மக்காவில் வான்வழித் தாக்குதல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்து, சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இதுபோன்ற ஒரு சம்பவம் வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெறுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

ஆபத்து நீங்கும் வரை, குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான வீடுகளின் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், கதவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>

ஜித்தா மற்றும் தாயிஃப் ஆளுநரகங்களுக்கும் இதேபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

சில நிமிடங்களிலேயே இந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bd2e2b-058f-4217-8ddb-9608b2e42e70/26-6aaad3c9a328f.webp' /></p><p> </p><p>ஆனால், ஈரான் ஆதரவு ஹூதி குழுவிடமிருந்து சவூதி அரேபியா ஒரு விரிவான பாதுகாப்புச் சவாலை எதிர்கொண்டுள்ள வேளையில் இது நிகழ்ந்துள்ளது.
</p><p>
அந்தக் குழு, சவூதி அரேபியா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதோடு, யேமனின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் கடற்கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T17:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்து : 60இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-mine-collapse-in-sudan-over-60-dead-1789578191"></link>
            <id>https://tamilwin.com/article/gold-mine-collapse-in-sudan-over-60-dead-1789578191</id>
            <summary type="text">சூடானின் மேற்கு கொர்டோஃபான் மாநிலத்தில் அமைந்துள்ள தங்கம் தோண்டும் சுரங்கம்
ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானின் மேற்கு கொர்டோஃபான் மாநிலத்தில் அமைந்துள்ள தங்கம் தோண்டும் சுரங்கம்
ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அல்-நுஹுத் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அல்-ஸாரா தங்கச் சுரங்கத்தில் பல
அண்டைச் சுரங்கப் பாதைகள் அடுத்தடுத்து சரிந்து வீழ்ந்ததில், 70க்கும்
மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல்
போயிருக்கலாம் எனக் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
</p><h2>முறையான பாதுகாப்பு நடைமுறைகள்&nbsp;</h2><p>
இடிபாடுகளுக்குள் சிலர் இன்னும் உயிருடன் சிக்கியிருக்கக்கூடும் என்றும்,
அவர்களை மீட்க அவசர உதவி தேவை என்றும் உள்ளூர் அமைப்புகள் கோரிக்கை
விடுத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2816f59-9ff9-46ee-9a52-efaa6d234d54/26-6aaad02e751fc.webp' /></p><p>இருப்பினும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் இல்லாமை மற்றும்
மணற்பாங்கான நில அமைப்பு காரணமாக மீட்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமையே இந்த பாரிய
உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
</p><p>
ஆபிரிக்காவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றான சூடானில்,
பெரும்பான்மையான தங்கம் இவ்வாறான ஆபத்தான பாரம்பரிய முறைகளிலேயே வெட்டி
எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T17:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் அறிய அரசின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-government-scheme-to-identify-corruption-1789578880"></link>
            <id>https://tamilwin.com/article/new-government-scheme-to-identify-corruption-1789578880</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பணிகளைச் சீரமைப்பதற்காக, நாடு முழுவதும் 23 புதிய பிராந்திய அலுவலகங்களைத் திறப்பதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பணிகளைச் சீரமைப்பதற்காக, நாடு முழுவதும் 23 புதிய பிராந்திய அலுவலகங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த பிராந்திய அலுவலகங்கள் அனைத்தும் இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்பட்டு முடிக்கப்படும் என்று இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். </p><h2>

23 புதிய பிராந்திய அலுவலகங்கள்</h2><p>
தற்போதுள்ள நடைமுறையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இலஞ்சம் அல்லது ஊழல் குறித்துப் புகார் அளிக்கவும், அதற்கான ஆதாரங்களை வழங்கவும் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3d819e8-420d-4e0d-baa3-0fa6aedd29eb/26-6aaacedd3b9f7.webp' /></p><p>
</p><p>
மக்கள் சந்திக்கும் கடுமையான சிரமங்களைக் கருத்தில் கொண்டு புதிய பிராந்திய அலுவலகங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

இந்த புதிய அலுவலகங்களின் வலையமைப்பு, பிராந்திய அளவில் முறைப்பாடுகளைப் பெறுதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்ய உள்ளது.
</p><p>
இதற்காக, சட்ட அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உட்பட மொத்தம் 971 புதிய அதிகாரிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T17:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நக்கிள்ஸ் மலைத்தொடரில் இளைஞரின் சடலம் மீட்பு - விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-body-recovered-in-knuckles-mountain-range-1789575993"></link>
            <id>https://tamilwin.com/article/man-body-recovered-in-knuckles-mountain-range-1789575993</id>
            <summary type="text">இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைத்தொடரின் குறுகலான குன்றுப் பிரதேசமொன்றுக்குள் இருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைத்தொடரின் குறுகலான குன்றுப் பிரதேசமொன்றுக்குள் இருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், </p><p>

மெனிக்ஹின்ன, லூனுகெட்டியமடித்த, கந்தேகம்மெத்த பகுதியைச் சேர்ந்த, ரன்ஹோட்டி கெதர செனித் கவீஷ அருண குமார என்ற இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை(11.09.2026) முதல் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார்.
</p><h2>
காணாமல் போன இளைஞர்</h2><p>
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் பொலிஸாரிடம் புகார் அளித்து, தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7dae637-0848-47ac-a77e-83b3238b8b6f/26-6aaac3b890873.webp' /></p><p>
</p><p>
பொலிஸார் நடத்திய அலைபேசி கோபுரத் தரவு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, ​​நக்கிள்ஸ் மலைத் தொடரின் குறுகலான குன்றுகளின் நடுவில் சிக்கிய நிலையில் அந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>
உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியை அணுகுவது கடினமாக இருந்ததால், அதை கீழே இறக்குவதற்கு உடுதும்பறை பொலிஸார் இராணுவ கமாண்டோ படையின் உதவியையும் நாடியுள்ளனர்.
</p><p>
இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. </p><p>

மேலும் சம்பந்தப்பட்ட பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T16:29:05+00:00</updated>
        </entry>
    </feed>
