<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-06T20:17:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருளில் நடந்த ரகசிய சந்திப்பு..! சந்தித்தது மொஜ்தபா கமெனிதானா என ஈரான் ஜனாதிபதிக்கு சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-president-met-mojtaba-khamenei-in-darkness-1786046532"></link>
            <id>https://tamilwin.com/article/iran-president-met-mojtaba-khamenei-in-darkness-1786046532</id>
            <summary type="text">ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இருளில் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் சந்தித்ததாக Iran International வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.</p><p>

அந்த சந்திப்பு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், மொஜ்தபா கமெனியின் பாதுகாப்பு அதிகாரிகள் பெசெஷ்கியானுக்கு கை குலுக்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மொஜ்தபா கமெனி</h2><p> 

இருள் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத சூழல் இருந்ததால், பின்னர் "நான் பேசியவர் உண்மையில் மொஜ்தபா கமெனிதானா?" என்று ஜனாதிபதி தனது அலுவலகத்தில் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>
இந்த சந்திப்புக்காக பெசெஷ்கியான் பலமுறை கோரிக்கை வைத்ததுடன், பதவி விலகுவதாக எச்சரித்த பிறகே காமெனியின் அலுவலகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20174468-4839-43f8-b5e5-a87ebfa20c2a/26-6a74e9f81cec9.webp' /></p><p>
</p><p>
 ஆனால் வழக்கம்போல் உச்சத் தலைவரின் இல்லத்தில் அல்லாமல், ரகசிய இடத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், கடந்த மே மாதத்தில் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோது, மொஜ்தபா கமெனியுடன் இரண்டரை மணி நேரம் "நட்பான சூழலில்" பேச்சுவார்த்தை நடத்தியதாக பெசெஷ்கியான் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>இறுதி எச்சரிக்கை</h2><p>

இதற்கிடையில், மொஜ்தபா கமெனியுடன் தொடர்பு கொள்வது தற்போது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இருப்பினும் அவரது இருப்பு நாட்டுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது என்றும் பெசெஷ்கியான் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1970d21-19fc-44be-ae01-0da5c056e3b2/26-6a74e9f8c25c5.webp' /></p><p>
</p><p>
மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான முடிவுகளில் தனது அரசு புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, பெசெஷ்கியான் மே மாதத்தில் பதவி விலக முயன்றதாகவும், அதற்கு பதிலாக மொஜ்தபா கமெனி இறுதி எச்சரிக்கை விடுத்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக, தனது தந்தை அயத்துல்லா அலி கமெனி உயிரிழந்ததைத் தொடர்ந்து பதவியேற்ற மொஜ்தபா காமெனி கடந்த ஐந்து மாதங்களாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை என்றும், எழுத்து மூலமான அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T20:09:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணப் புறக்கணிப்பு தொடரும்: ஃபிஃபா தலைவரின் முடிவை நிராகரித்தது ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-cup-boycott-to-continue-european-football-1786043277"></link>
            <id>https://tamilwin.com/article/world-cup-boycott-to-continue-european-football-1786043277</id>
            <summary type="text">&amp;nbsp;உலகக் கிண்ணப் போட்டிகளின் சிறுபான்மைப் பங்குகளை விற்பனை செய்யும் யோசனையை
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா (FIFA) திரும்பப் பெற்றுக்கொண்ட
போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகக் கிண்ணப் போட்டிகளின் சிறுபான்மைப் பங்குகளை விற்பனை செய்யும் யோசனையை
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா (FIFA) திரும்பப் பெற்றுக்கொண்ட
போதிலும், உலகக் கிண்ணப் போட்டிகளைப் புறக்கணிக்கும் தீர்மானத்தில்
மாற்றமில்லை என ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யுவேஃபா (UEFA) அறிவித்துள்ளது.</p><p>

உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய ஃபிஃபாவின்
தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து,
ஃபிஃபாவின் அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் விலகுவதாக யுவேஃபாவின் 55 உறுப்பு
நாடுகளும் கடந்த வாரம் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தன.</p><p></p><h2>ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்</h2><p>

கடுமையான எதிர்ப்புகள் காரணமாக ஃபிஃபா தலைவர் தனது முன்மொழிவைத் திரும்பப்
பெற்றுக்கொண்ட போதிலும், யுவேஃபா விதித்த நிபந்தனைகள் முழுமையாக
நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed27e8e5-a183-4df5-aa94-2fb9c862fd06/26-6a74e08f73daf.webp' /></p><p>

எதிர்காலத்தில் இவ்வாறான முயற்சிகள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதியான
வாக்குறுதி வழங்கப்படாமை மற்றும் ஃபிஃபா தலைவர் மீதான நம்பிக்கையை யுவேஃபா
இழந்துள்ளமை ஆகிய காரணங்களால் இந்த புறக்கணிப்புத் தீர்மானம் தொடர்வதாக
யுவேஃபா விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T19:29:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொறளை மெகசின் சிறையில் கைதிகள் குழுவால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-inside-magazine-prison-1786040522"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-inside-magazine-prison-1786040522</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு மெகசின் சிறைச்சாலையின் &#039;ஈ&#039; (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் 'ஈ' (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி வன்முறையில் ஈடுபட்டதையடுத்து அங்கு அமைதியின்மை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்</h2><p> 

எவ்வாறாயினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095c926e-3376-4599-ba39-98f00e360b55/26-6a74d22c46b51.webp' /></p><p> </p><p>

தற்போது இந்த அமைதியற்ற நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OuQjIYXGhm4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/danger-sri-lankan-passport-holders-switzerland-1786037862"></link>
            <id>https://tamilwin.com/article/danger-sri-lankan-passport-holders-switzerland-1786037862</id>
            <summary type="text">சமூகப் பாதுகாப்புத் தொடர்பான &#039;ஆகாபா&#039; (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதாக சோசலிச ஜனநாயக கட்சியை சேர்ந்த கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் ஒருவர், சம்பளத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் தொகையில், ஓய்வுபெற்ற பின் 'ஓய்வூதியப் பணம்' (Pension) மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது.</p><p>

 ஆனால், சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளன.
</p><p>

சுவிஸ் குடியுரிமை உள்ளவர்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்கும், ஆனால் வெறும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உரிய ஒப்பந்தம் இல்லாததால், அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டு செல்ல முடியாமல் போகிறது.</p><p>

 இது சுமார் 10,000 முதல் 15,000 பேரைப் பாதிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் சுவிட்சர்லாந்தில் உள்ள சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புகள் முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளன.</p><p>

 பாதிக்கப்பட்டவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும், விபரங்களைப் பகிர்ந்து உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
 இது ஒட்டுமொத்தப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஒரு கூட்டு முயற்சியாக மாறினால் மட்டுமே அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து உரிமையைப் பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LBHRr5sSAt8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T17:50:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக் கட்டுப்பாடு ஈரானுக்கு..! ஓமானுடன் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/control-of-strait-of-hormuz-iran-new-agreement-1786036084"></link>
            <id>https://tamilwin.com/article/control-of-strait-of-hormuz-iran-new-agreement-1786036084</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஐந்து மாத காலப் போரை முடிவுக்குக்
கொண்டுவரும் நோக்கில் ஓமானுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒப்பந்தத்தின் கீழ்,
ஹோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஐந்து மாத காலப் போரை முடிவுக்குக்
கொண்டுவரும் நோக்கில் ஓமானுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒப்பந்தத்தின் கீழ்,
ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் மீதான
கட்டுப்பாட்டை ஈரானுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஈரானுக்கும்
ஓமானுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p>
</p><p>
வணிகக் கப்பல்கள் ஈரானிய பிராந்திய கடற்பரப்பு ஊடாகவே பயணிக்க வேண்டும் என
ஈரான் நிபந்தனை விதித்துள்ளதுடன், இந்த பேச்சுவார்த்தைகளில் கணிசமான
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.</p><p>

இருப்பினும், உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான இந்தப்
பாதையின் கட்டுப்பாட்டை ஈரான் ஏற்றுக்கொள்வதை தாங்கள் ஒருபோதும்
அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5391f2-8b64-4a28-ac83-5c60c57c2be1/26-6a74c0e1c4ece.webp' /></p><p>

இதேவேளை, தமது நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்தால்,
வளைகுடா பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் முக்கிய எரிபொருள்
உள்கட்டமைப்புகள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர தூதரக
வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்த முன்மொழிவு
வளைகுடா பிராந்தியத்தின் அதிகார சமநிலையை ஈரானுக்கு சாதகமாக மாற்றக்கூடும் என
பிராந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T17:14:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு பற்றாக்குறையா! டிரம்ப் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-has-massive-amounts-1786035971"></link>
            <id>https://tamilwin.com/article/us-has-massive-amounts-1786035971</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் கிடையாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பாதுகாப்பு தலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் கிடையாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>அமெரிக்கப் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் ஆயுதக் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊகடங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
</p><p> அமெரிக்காவிடம் பாரிய அளவில் போர்க்கருவிகள் மற்றும் வெடிமருந்துகள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0a67dd-8055-4bd8-b89e-fe739029f884/26-6a74bf06108ef.webp' /></p><p>அமெரிக்காவிடம் குறிப்பாக குறிப்பிட்ட வகையான ஆயுதங்கள் போதியளவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தேவைக்கேற்ப பெருமளவிலான போர்க்கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>நமது நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளை ட்டியெழுப்பி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், எந்த வகையான போர்க்கருவிகளைக் குறிப்பிடுகிறார் என்பதை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
</p><p>அமெரிக்க இராணுவத்தின் முக்கிய வான் பாதுகாப்பு அமைப்பான தாட் (THAAD) ஏவுகணைத் தடுப்பு அமைப்பிற்கான இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை தீர்ந்துவிட்டது என ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஜனாதிபதி டிரம்ப் போலி தகவல்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T17:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை - உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிக முக்கிய ஆவணங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-dismissed-yoshida-request-1786013392"></link>
            <id>https://tamilwin.com/article/court-dismissed-yoshida-request-1786013392</id>
            <summary type="text">வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச விடுத்த கோரிக்கையை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.&nbsp;</p><p>முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகிய இருவரும்&nbsp;அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் ஊழல் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் இது தொடர்பில் உரிய அறிவிப்புகளைப் பெற்ற பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னதாக உத்தரவிட்டார்.&nbsp;</p><h2>அரசாங்கத்திற்கு இழப்பு&nbsp;</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாடு, நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இருவருக்கும் எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce5aea9-e9cb-47ce-83d0-e72134a16143/26-6a7473eb6b28d.webp' /></p><p> அதன்படி, உரிய அறிவிப்புகளைப் பெற்ற பின்னர் சந்தேக நபர்களான இருவரையும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கும்படி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கோரியது, மேலும் முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
</p><p>
2006 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2007 ஜூன் 8ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், யோஷித ராஜபக்ச முறையான கல்வித் தகுதிகள் இன்றி கடற்படையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு பிரித்தானிய அரச இராணுவப் பயிற்சியும் வழங்கப்பட்டதாகவும், அதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, அவருக்கு முறையற்ற ஆதாயத்தை வழங்கியதாகவும் இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.&nbsp;</p><p></p><h2>வெளிநாட்டுப் பயணம்..</h2><p>கடந்த 31ஆம் திகதியன்று, இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் எட்டு குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல் பிரதிவாதி வசந்த கரன்னாகொட மற்றும் இரண்டாவது பிரதிவாதி யோஷித கனிஷ்க ராஜபக்ச ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a04a75b-8675-4f64-bd2c-55f192773aa4/26-6a7473ec32bd1.webp' /></p><p> </p><p>இதன்போது, இவ்வழக்கு தொடர்பாக 25 சாட்சிகளின் பெயர்களும் 47 ஆவணச் சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், சந்தேக நபரான யோஷித ராஜபக்சவுக்காக முன்னிலையான சட்டத்தரணி ரவின் நுவரபக்ச, தனது கட்சிக்காரர் ஒரு வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதால், அவர் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சிறப்பு மனுவின் மூலம் கோரியிருந்ததாகத் தெரிவித்தார்.</p><p>இருப்பினும், உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க இயலாது எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p></p><p><b><i>You May Like This..</i></b></p><p><b><i><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2eh90AvrUac" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-06T15:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த சினோபெக் நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sinopec-increased-russian-crude-oil-imports-1786028601"></link>
            <id>https://tamilwin.com/article/sinopec-increased-russian-crude-oil-imports-1786028601</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ள மசகு எண்ணெய்
விநியோகத்தை ஈடுசெய்யும் பொருட்டு,&amp;nbsp; சீன அரசுக்குச் சொந்தமான சினோபெக் ரஷ்யா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ள மசகு எண்ணெய்
விநியோகத்தை ஈடுசெய்யும் பொருட்டு,&nbsp; சீன அரசுக்குச் சொந்தமான சினோபெக் ரஷ்யாவின் தொலைகிழக்குப்
பகுதியிலிருந்து மசகு எண்ணெய் கொள்முதலைக் கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து பெறப்படும் மசகு
எண்ணெயை விட ரஷ்யாவின் எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதே இதற்கு முக்கிய
காரணமாகும்.</p><p>

இதன் மூலம் சீனாவில் உள்நாட்டு எரிபொருள் விநியோகம் சீராகப் பேணப்பட்டு
வருவதாக வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மசகு எண்ணெய்&nbsp; இறக்குமதி</h2><p>

அதற்கமைய, ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்கு ரஷ்யாவின் 'இஎஸ் பி
ஓ' (ESPO) ரக மசகு எண்ணெயின் 30 முதல் 40 வரையிலான கப்பல் சரக்குகளை சினோபெக்
நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12a13652-2300-403a-b550-788233721835/26-6a74a459903ed.webp' /></p><p>
</p><p>
இது அந்நிறுவனத்தின் மொத்தச் சுத்திகரிப்புத் திறனில் 5 முதல் 6 சதவீதமாகும்.

மத்திய கிழக்குப் போருக்கு முன்னர், சினோபெக் நிறுவனம் தனது மசகு எண்ணெய்
தேவையில் பாதியை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே, குறிப்பாகச் சவூதி
அரேபியாவிடமிருந்தே இறக்குமதி செய்து வந்தது.
</p><p>
எனினும், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சவூதியிடமிருந்து எவ்வித மசகு
எண்ணெயையும் கொள்முதல் செய்யாத இந்நிறுவனம், ஓகஸ்ட் மாதத்தில் மிகக் குறைந்த
அளவிலான எண்ணெயையே இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T15:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கத்துரை சிலை அமைப்பு விவகாரம்: ஏற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவு 5 மணிநேரம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuttimani-thangathurai-case-issus-1785999231"></link>
            <id>https://tamilwin.com/article/kuttimani-thangathurai-case-issus-1785999231</id>
            <summary type="text">புதிய இணைப்புவெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலை
நிறுவுதல் ஏற்பாட்டாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலை
நிறுவுதல் ஏற்பாட்டாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான
கந்தசாமி சதீசிடம் இன்றைய தினம்(06)&nbsp; கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினர்
5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
</p><p>
நேற்றைய தினம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற
பிரிவு அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று
காலை 10 மணிக்கு ஆரம்பமான விசாரணை பிற்பகல் 3 மணி வரை இடம்பெற்றுள்ளது.</p><h2>அழைப்பாணை</h2><p>இதேவேளை குறித்த கந்தசாமி சதீஷ் அவர்கள் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது
சிலைகளை கிளிநொச்சியில் உள்ள சிற்ப ஆச்சாரி ஒருவர் மூலம் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea6da74-0082-40f2-80f2-c5035454999e/26-6a74a1e73c9cd.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் குறித்த குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலைகளை 14 நாட்கள்
கிளிநொச்சி சிற்பக்கூடத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு கிளிநொச்சி
நீதவான் நீதிமன்றம் ஊடான தடை உத்தரவை வழங்கியுள்ளதுடன் நாளைய தினம் கந்தசாமி
சதீஸ் அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும்&nbsp;அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இவர் இன்று(6.8.2026) காலை முதல் தற்போது வரை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் நேற்றைய தினம்(5.8) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f280e72e-1e38-4a52-81c4-2fc6568f3eee/26-6a74379c1a7d8.webp' /></p><p>

இந்நிலையில் நேற்று பிற்பகல் வல்வெட்டித்துறை பொலிஸ் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக இன்று அழைப்பதற்கான அழைப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cNHc4rtOBGE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T15:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம் கார்ட்டிற்காக பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் - தாயார் கூறியது இதுதான்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/24-year-old-youth-dies-in-jaffna-1786026544"></link>
            <id>https://tamilwin.com/article/24-year-old-youth-dies-in-jaffna-1786026544</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் சிம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று(06.08.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் சிம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.</p><p>

இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><h2>
தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதம்</h2><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞர் தாயாரிடம் கோரிய நிலையில், வாக்குவாதமாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/021ddea8-4c3a-4861-9c54-aeb8defd17c0/26-6a749ab4987a6.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், குறித்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள்
பாய்ந்து உயிர்மாய்த்து கொண்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UU-j4Qh1S0U" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T14:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு றீச்சா புதிய வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cooking-and-vegetable-carving-workshop-1786025826"></link>
            <id>https://tamilwin.com/article/cooking-and-vegetable-carving-workshop-1786025826</id>
            <summary type="text">இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கும் நோக்கில், றீச்சாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

கிளிநொச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கும் நோக்கில், றீச்சாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
</p><p>
கிளிநொச்சி - இயகச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பு, கடந்த 05.08.2026 அன்று நிறைவடைந்துள்ளது.
</p><p>
சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு பல்வேறு நடைமுறை சார்ந்த திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.</p><h2>
இளைஞர்களின் திறனை வளர்க்கும் முயற்சி</h2><p>

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டு, அவர்களின் திறமைகள் மற்றும் முயற்சிகள் கௌரவிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0399d7d0-1291-479d-870c-2a566658665c/26-6a7497e378c3e.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கந்தையா பாஸ்கரன், பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கியதுடன், அவர்களின் உழைப்பு, விடாமுயற்சி மற்றும் திறமைகளைப் பாராட்டியுள்ளார்.</p><p>

இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய முயற்சிகள், அடுத்த தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.
</p><p>
இது போன்று, கந்தையா பாஸ்கரன் முன்னெடுத்து வரும் இவ்வாறான திட்டங்கள், “வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் உழைப்பே வழி” என்ற உண்மையை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T14:19:44+00:00</updated>
        </entry>
    </feed>
