<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-19T01:37:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மேலும் பல மர்ம மரணங்கள் நிகழும்! பின்னணி குறித்து எச்சரித்துள்ள அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-deaths-to-be-continues-1784383388"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-deaths-to-be-continues-1784383388</id>
            <summary type="text">இலங்கையில் எதிர்காலத்தில் முக்கிய சாட்சியங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் மேலும் இடம்பெறக்கூடும் என விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எதிர்காலத்தில் முக்கிய சாட்சியங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் மேலும் இடம்பெறக்கூடும் என விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
 எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் தற்போது நீதிமன்ற பிணையில் இருப்பதாகவும், இவ்வாறு உயிரை மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>பிங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p> </p><h2><b>உயிரை மாய்க்கும் சம்பவங்கள்</b></h2><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவின் மரணம் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed11265d-e94f-45ed-8b06-93369726b166/26-6a5ba6fae62f4.webp' /></p><p>“கடந்த சில நாட்களில் பல உயிரை மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றன. அண்மையில் ஒரு நபர் உயிரை மாய்த்துக் கொண்டார்.</p><p> முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம், தான் கார்ல்டன் இல்லத்தில் வைத்து எவ்வளவு இலஞ்சம் கொடுத்தேன் என்பது குறித்து அந்த நபரே தனது கைப்பட கடிதங்களை எழுதியிருந்தார்.</p><p> எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எவ்வளவு இலஞ்சம் கொடுத்தேன் என்பது குறித்தும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.</p><h3><b> 20 வருட சிறைத்தண்டனை</b></h3><p>இறுதியில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். தற்போது ஒரு முன்னாள் பொலிஸ் மா அதிபரும் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab5c819-dad9-4488-bf97-05771666d3c5/26-6a5ba6fb99c1c.webp' /></p><p>இன்னும் எத்தனை பேருக்கு இவ்வாறான நிலை ஏற்படும் என்று எனக்குத் தெரியவில்லை. எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிணையில் வெளியே இருப்பவர்கள், அவர்களுக்கு எதிராகப் பல வழக்குகள் உள்ளன. </p><p>மகிந்தானந்த அளுத்கமகே ஒரு வழக்கிற்காக 20 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். முன்னாள் வர்த்தக அமைச்சர் 25 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். </p><p>சரண குணவர்தன 16 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இவை ஒரு சில வழக்குகளின் தீர்ப்புகள் மட்டுமே, அவர்களுக்கு எதிராக இன்னமும் பல வழக்குகள் வரிசையாக உள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-19T00:14:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தரப்பு வாதத்தால் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-case-investigation-cid-new-update-1784417396"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-case-investigation-cid-new-update-1784417396</id>
            <summary type="text"> குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் நாளுக்கு நாள் புதிய தகவல...</summary>
            <content type="html"><![CDATA[<p> குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.&nbsp;</p><p>இந்நிலையில், தன்னைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>குறித்த மனுவில், தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொண்டு கருத்துகளை முன்வைக்க அனுமதிக்குமாறு கோரப்பட்டது.&nbsp;</p><p>இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்கள் மீதான பரிசீலனை மீதான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
</p><p>
இதற்கமைய, இது தொடர்பான வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.</p><p>அதேநேரம், இந்த விசாரணைகளின் போது நீதிமன்றில் சுரேஷ் சலே தொடர்பில் பல முக்கிய தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/S0YACCeB7B0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T23:47:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பூட்டிய வீடொன்றிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-death-body-found-in-house-jaffna-1784413152"></link>
            <id>https://tamilwin.com/article/man-death-body-found-in-house-jaffna-1784413152</id>
            <summary type="text">யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு
ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம
உத்தியோகத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு
ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம
உத்தியோகத்தர் இணைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார், பூட்டப்பட்டிருந்த
வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்..&nbsp;</h2><p> </p><p>இதன்போது, இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். சடலத்திற்கு அருகில் பியர் போத்தலும், ஊசி செலுத்த பயன்படுத்தப்படும்
சிரிஞ்சும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ee31142-93a3-46ff-a8d5-5a16856eb40f/26-6a5bfe97ecd3d.webp' /></p><p>
</p><p>உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே
உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மானிப்பாய் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அவர்
சங்கானையில் தனியாகவே வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் தொடர்ந்து
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T23:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protests-in-the-us-against-artificial-data-centers-1784409803"></link>
            <id>https://tamilwin.com/article/protests-in-the-us-against-artificial-data-centers-1784409803</id>
            <summary type="text">அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்காக
அதிவேகமாக அமைக்கப்பட்டு வரும் தரவு மையங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்காக
அதிவேகமாக அமைக்கப்பட்டு வரும் தரவு மையங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள்
தீவிரமடைந்துள்ளன.</p><p>

இதன் முதற்கட்டமாக, சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள
சுமார் 125 இற்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த முறையில் பிரம்மாண்ட
போராட்டங்களை நடத்த எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச்
சேவை தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த ஓராண்டில் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது செயற்கை
நுண்ணறிவுத் திட்டங்களுக்காகத் தரவு மையங்களை மிகத் தீவிரமாக விரிவுபடுத்தி
வருகின்றன.</p><p></p><h2>போராட்டம்</h2><p>
</p><p>
இதனால் உள்ளூர் மக்களின் மின்கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம்
ஏற்பட்டுள்ளதோடு, இந்த மையங்களின் குளிர்விப்புத் தேவைகளுக்காகப் பெருமளவிலான
நன்னீர் வளங்கள் உறிஞ்சப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும்
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eea85b2f-4b98-40c3-b423-d59e62795a0e/26-6a5bf04be4803.webp' /></p><p>

'ஹியுமன்ஸ்ஃபர்ஸ்ட்' என்ற மக்கள் நல அமைப்பினால் இந்த நாடு தழுவிய
போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் அமெரிக்காவின் அரசியல் கொள்கைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு
மக்களையும் ஒன்றிணைத்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T21:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் மர்ம நபர்கள்! சிக்கிய CCTV காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-wickramaratne-house-cid-cctv-footage-1784392455"></link>
            <id>https://tamilwin.com/article/igp-wickramaratne-house-cid-cctv-footage-1784392455</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையிலே, சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்தநிலையிலே, சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது இல்லத்திற்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும் சிசிரிவி காணொளிகளை மீட்டு விசாரணைகளை மேற்கொள்வது என்று ஒரு கருத்து கூறப்படுகின்றது.அதில் எந்த அளவிற்கு உண்மை தன்மை இருக்கின்றது என்று தெரியவில்லை.</p><p>ஏனென்றால் அவர் நாளாந்த வாழ்க்கை செயற்பாடுகளை சாதாரணமாகத் தான் ஆரம்பித்து இருக்கின்றார்.ஏன் இந்தத் தவறான முடிவை அவர் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்தார் என்கின்ற சந்தேகம் எழுகின்றது.</p><p>வீட்டிலுள்ள சிசிரிவி காட்சிகளை மையப்படுத்தி பொலிஸார் விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>மேலும், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலரின் வாக்குமூலத்தில் சந்தேகங்கள் எழுவதாகக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/01_b2ALaeiI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T19:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்.. வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-us-troops-killed-one-missing-iranian-attack-1784403160"></link>
            <id>https://tamilwin.com/article/two-us-troops-killed-one-missing-iranian-attack-1784403160</id>
            <summary type="text">ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்&amp;nbsp; தாக்குதல்களில்&amp;nbsp;இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் மாயமாகியுள்ளார்.&amp;nbsp;10 ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்&nbsp; தாக்குதல்களில்&nbsp;இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் மாயமாகியுள்ளார்.&nbsp;</p><h2>10 ஈரானிய ஏவுகணைகள்&nbsp;</h2><p>ஜோர்டானில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a95546-3172-4dbe-961f-00e600c59e09/26-6a5bdae8aa0ab.webp' /></p><p>இந்தத் தாக்குதலின் போது ஜோர்டான் வான்பரப்பில் நுழைந்த 10 ஈரானிய ஏவுகணைகளைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்டான் இராணுவம் கூறியுள்ளது.</p><p> இதற்கிடையில், அல்-அஸ்ராக் (Al-Azraq) தளத்திலிருந்த இரண்டு அமெரிக்க போர் விமானங்களை அழித்துவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உரிமை கோரியுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T19:58:36+00:00</updated>
        </entry>
    </feed>
