<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-02T07:51:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றநிலை! பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curfew-ragama-police-station-area-1785636269"></link>
            <id>https://tamilwin.com/article/curfew-ragama-police-station-area-1785636269</id>
            <summary type="text">புதிய இணைப்புராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையை சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையை சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. </p><p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அமைதியை பேணுவதற்காக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப்பொலிஸ் அத்தியாட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய, மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலை பதற்றநிலை காரணமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p>

மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ராகம பொலிஸ் பிரிவில் நேற்று இரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>மறு அறிவிப்பு வெளியாகும் வரை ஊரடங்கு உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
மறு அறிவிப்பு வெளியாகும் வரையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a62aecf3-f6bd-40a9-adca-9fc0d8455372/26-6a6eac1a4760d.webp' /></p><p>

இதன்படி, மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும் பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே அப்பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அவசர தேவைகள் இருப்பின் அருகிலிருக்கும் பொலிஸ் பிரிவை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>மஹர சிறையில் நிலவிய பதற்றமான சூழல் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், அனைத்து கைதிகளையும் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரமாக இடமாற்றப்படும் மஹர சிறைச்சாலை கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-inmates-from-mahara-prison-sent-to-boossa-1785654819"></link>
            <id>https://tamilwin.com/article/20-inmates-from-mahara-prison-sent-to-boossa-1785654819</id>
            <summary type="text">மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பல கைதிகள் தற்போது ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பல கைதிகள் தற்போது ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கமைய, மஹர சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு&nbsp;</h2><p>நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec1d9b7a-7691-4c72-9d5c-17a7f0c14444/26-6a6ef55489346.webp' /></p><p>இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார். 
&nbsp;&nbsp;</p><p>இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு சிறைச்சாலையினுள் நிலவிய சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸ் ஊரடங்கு உத்தரவு</h2><p>அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன.</p><p>இதன்போது கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பாதுகாப்புத்தரப்பினர் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்திய நிலையில், மஹர பிரதேசத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். 
&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T07:46:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/traffic-disrupted-nuwara-eliya-tree-fell-1785655418"></link>
            <id>https://tamilwin.com/article/traffic-disrupted-nuwara-eliya-tree-fell-1785655418</id>
            <summary type="text">&amp;nbsp;ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய
மரம் ஒன்று முறிந்து பேருந்து மீது விழுந்த சம்பவத்தால் சில மணி நேரம்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய
மரம் ஒன்று முறிந்து பேருந்து மீது விழுந்த சம்பவத்தால் சில மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
</p><p>திம்புல்லபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று(2.8.) காலை சுமார் 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக வீதியோரத்தில்
இருந்த பாரிய மரம் திடீரென முறிந்து, அவ்வழியாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மீது விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>துரித நடவடிக்கை</h2><p>
</p><p>இந்தச் சம்பவத்தால் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து சில மணி
நேரம் முற்றாகத் தடைபட்டது. </p><p>பின்னர், பிரதேச மக்கள் துரிதமாக நடவடிக்கை
எடுத்து மரக்கிளைகளை அகற்றியதைத் தொடர்ந்து ஒரு வழிப் போக்குவரத்து ஏற்பாடு
செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4cc6094-9e7a-44a0-b433-35ffb1851c5c/26-6a6ef4c8774d0.webp' /></p><p>
</p><p>அதன்பின்னர், தோட்ட நிர்வாகத்தினரும் பிரதேச மக்களும் இணைந்து மரத்தை
முழுமையாக வெட்டி அகற்றியதையடுத்து, வீதிப் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு
கொண்டுவரப்பட்டது.
</p><p>சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், மரம் விழுந்ததில் குறித்த
பஸ்ஸிற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள்
தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிக்க கோரி மற்றுமொரு போராட்டம் - 40 ஆண்டு வலியைச் சுமந்து வயாவிளான் மக்கள் வீதியில் குமுறல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-protest-demanding-the-release-of-land-1785655571"></link>
            <id>https://tamilwin.com/article/another-protest-demanding-the-release-of-land-1785655571</id>
            <summary type="text">தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டமொன்றை இன்று(2) ஆரம்பித்துள்ளனர்.

வயாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டமொன்றை இன்று(2) ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
வயாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வயாவிளான் மக்கள்</h2><p>
</p><p>
40 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பால் வெளியேறியிருந்த மக்கள் தமது வலிகளை
சுமந்தவாறு முன்னெடுத்திருந்த இந்த போராட்டத்தில்
அரசே! எங்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், கோவில்கள்,
கைத்தொழில் நிலையங்கள் அனைத்தையும் எமக்கே தந்துவிடு என்ற வலுவான
கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a94cb53-e8cd-4d98-aba4-914e0d0dd6fc/26-6a6ef3eb9513b.webp' /></p><p>

பேரளவில் திரண்டுவந்து தமக்கான நீதியை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டத்தில்
சமூக அமைப்புகள் அரசியல்வாதிகள் என பலதரப்பினரது பிரசன்னத்துடன் விவசாய
நிலங்கள் பேசட்டும், சிதைந்துபோய் கிடக்கும் வீடுகளும் கல்விக் கூடங்களும்
நாம் வாழ்ந்த வரலாற்றைச் சாட்சி சொல்லட்டும், எமது நிலங்கள் எமக்கு
கிடைக்கப்பெற வேண்டும் என்ற கோசங்களுடன் போராட்டத்தை முன்னெடுத்திருந்ததனர்.</p><p>
கடந்த காலங்களில் விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளை இந்த அரசு உடன்
விடுவிக்க வேண்டும் என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியே நாம்
போராடுகின்றோமே தவிர எவருக்கும் எதிராக நாம் இந்த போராட்டத்தை
முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:39:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[டியன்சின் தமிழ் மகா வித்தியாலய மாணவர் நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tientsin-tmv-student-parliament-session-1785654585"></link>
            <id>https://tamilwin.com/article/tientsin-tmv-student-parliament-session-1785654585</id>
            <summary type="text">பொகவந்தலாவ - டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் நாடளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவ - டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் நாடளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது.</p><p> 

கடந்த 31ஆம் திகதி இந்த மாணவர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. </p><p>

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும், ஜனநாயக ஆட்சி செயன்முறை தொடர்பான புரிதலையும் வழங்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>எமது பாடசாலையை கோபுரத்தில் ஏற்றுவோம்</h2><p> 

இந்த அமர்வில் கலந்து கொண்ட மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் தங்களது பாடசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்தும், தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். </p><p>

அத்துடன், எதிர்கால தலைவர்களை உருவாக்கும் செயற்றிட்டத்தில் மாணவர் நாடாளுமன்றத்தின் முக்கிய பங்குகள், நாடாளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் செயல்முறைகள் குறித்து மாணவர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e85883d-6103-4633-bb6f-d20c09632df0/26-6a6ef1339326a.webp' /></p><p> </p><p>

அத்துடன், மாணவர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. </p><p>


இதன்போது, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, பாடசாலை அதிபர் பொன் பிரபாகரன், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b999de8f-389e-4e17-9403-d0a57c0da849/26-6a6ef13568ef0.webp' /></p><p> </p><p>

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, சிறந்த பேச்சாற்றலும், ஆளுமையும் மிக்க சிறந்த மாணவர் நாடாளுமன்றத் தலைவர்களை சந்தித்தமைக் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். </p><p>

கடந்த நான்கு வருடங்களாக பாடசாலை மட்டத்தில் இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்த நிலையில், நோர்வூட் பிரதேச தவிசாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தில் இந்த நாடாளுமன்ற அமர்வினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் டியன்சின் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfefea13-150f-4141-845e-0d6c07a30054/26-6a6ef134872de.webp' /></p><p> </p><p>

104 வருட வரலாற்றைக் கொண்ட பொகவந்தலாவ டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம், இதுவரையான நாட்களில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பட்டதாரிகளையும் கல்விமான்களையும், சிறந்த எதிர்கால பிரஜைகளையும் உருவாக்கிய பெருமைக்குரியது. </p><p>

பொகவந்தலாவ - டியன்சின் நகரத்தை அண்மித்த பல தோட்டங்களிலும் இருக்கும் மாணவர்கள்,&nbsp; ஒரே கூரையின் கீழ் கல்வி கற்கும் பாடசாலையாக டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம் விளங்குவதுடன், கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு உள்ளிட்டத் துறைகளிலும் பாடசாலை சிறந்து விளங்குகின்றது. </p><p>

அகில இலங்கை ரீதியில் நடைபெறும், போட்டிப் பரீட்சைகள், தமிழ்த் தினப் போட்டி உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகளிலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி வரும் பாடசாலை மாணவர்கள், <b>“குன்றின் மேல் அமைந்துள்ள எமது பாடசாலையை கோபுரத்தில் ஏற்றுவோம்”</b> என்ற உயர் குறிக்கோளோடு மேல் நோக்கிப் பயணிக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:33:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் ட்ரம்பின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/america-attack-on-iran-1785653688"></link>
            <id>https://tamilwin.com/article/america-attack-on-iran-1785653688</id>
            <summary type="text">ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சமூக வலைத்தள பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><h2>நிபந்தனைக்கு உட்பட்டு தாக்குதல் ரத்து</h2><p>அதில் மேலும், இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய நான் சம்மதித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> </p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117023461141824050/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டிடம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/officials-ignore-school-building-verge-of-collapse-1785654239"></link>
            <id>https://tamilwin.com/article/officials-ignore-school-building-verge-of-collapse-1785654239</id>
            <summary type="text">திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் காணப்படுவதால் மாணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும்
சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். </p><p>இக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே
குடைசாய்ந்து காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இது குறித்து உரிய கல்வித்துறை சார் உயரதிகாரிகளுக்கு
அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை பழைய மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
</p><p>இந்தக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் அச்சத்துடனேயே
அருகாமையில் உள்ள மாணவர்களும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>குறித்த பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் தரம்
1 தொடக்கம் உயர்தரம் வரை இங்கு காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de8d4bf3-ab2e-4b82-add8-4793af2d4d33/26-6a6eedb76ba62.webp' /></p><p>
</p><p>
எனவே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாடசாலை மாணவர்களின் நலனை கொண்டு
குறித்த கட்டிடத்தை திருத்தியமைத்தாவது தருமாறும் உரிய தரப்புக்களுக்கு பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:12:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் அதிரடியாக களமிறங்கிய அதிரடிப்படையினர்..! 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டில் கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/stf-security-at-mahara-prison-control-1785648919"></link>
            <id>https://tamilwin.com/article/stf-security-at-mahara-prison-control-1785648919</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்து 15 நிமிடங்களுக்குள் கைதிகள் தங்களது அறைகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, மஹர சிறைச்சாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்து 15 நிமிடங்களுக்குள் கைதிகள் தங்களது அறைகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, மஹர சிறைச்சாலை அதன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.</p><p>

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்து இன்று காலை (2) சிறை வளாகத்திற்கு பொலிஸ்,சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் இராணுவ அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த நடவடிக்கையில் தங்களது 300 அதிகாரிகள் இணைந்துள்ளதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>மஹர சிறைச்சாலைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு</h2><p>
</p><p>
இதற்கமைய, மஹர சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ab85ff0-6ce2-4a43-9479-6dea0de5289b/26-6a6eeb1f7468e.webp' /></p><p>
</p><p>
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டுள்ளதாகவும், அனைத்து கைதிகளும் தற்போது அவரவர் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இருப்பினும், சிறையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று மாலை சுமார் 4 மணி முதல் சிறைக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (FTF) மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T07:11:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவிற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த கதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-killed-in-madu-aavani-festival-1785654082"></link>
            <id>https://tamilwin.com/article/youth-killed-in-madu-aavani-festival-1785654082</id>
            <summary type="text">மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர
விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று(01.08.2026) இரவு 7.30 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர
விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

நேற்று(01.08.2026) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
எதிர்வரும் 06ஆம் திகதி மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா கொடி ஏற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தற்போது மடு திருத்தலத்தில்
வந்து தங்கியுள்ளனர்.</p><p></p><h2>

தலைகவசம் அணியாமல் சென்ற இளைஞர்</h2><p>


அந்த வகையில் மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த
முத்தரிப்புத்துறையை சேர்ந்த 18 வயதுடைய அந்தோனி ஜெரோம் என்ற இளைஞனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33ca0033-2b16-4a95-8e12-d3034da60f66/26-6a6eebdc0f837.webp' /></p><p>
</p><p>
மடு ரோட் சந்தி - பள்ளமடு சந்தி வீதியில் மடுத்திருத்தல பகுதியில் மோட்டார்
சைக்கிளை தலைக்கவசம் அணியாமல் செலுத்தி சென்று கொண்டிருந்த போது வீதி தடையை
கடக்க முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி
எறிந்ததில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1685fd9-a733-486b-9b0a-66079fde7245/26-6a6eebdd0527a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9a3221-ea7b-4bec-8f51-2315c9f22c91/26-6a6eebddc9186.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T07:05:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதல் வரிசையின் பின்னணி அடுத்து கோட்டாபய ராஜபக்ச! சிக்கவுள்ள பல சூத்திரதாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்&nbsp;</h2><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b471b052-5321-4125-b43d-b5872692edeb/26-6a6ec0bab42e6.webp' /></p><p>
</p><p>
நேற்றிரவு ஆரம்பமான தொடர் கைது நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் சிக்க இன்னும் பலர் வரிசையில் இருப்பதாகவும், இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகத் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

கடமை தவறியமை மற்றும் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் பிரதானிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொறுப்புக்கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, பிரதான புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே, தேசபந்து தென்னகோன் மற்றும் அசாத் மௌலானா உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் ஆட்சியைத் தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலேவை அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக்கி, அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17ddcbb-c6dd-45f8-bfa0-58241f14dc51/26-6a6ec0bb628bc.webp' /></p><p> </p><p>

இதன் மூலம் ஆதாரங்களை அழிப்பதற்கும், ஷானி அபேசேகர போன்ற நேர்மையான புலனாய்வு அதிகாரிகளைப் பழிவாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>கடந்த வாரம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், சதித்திட்டம் ஒன்றுக்கு துணையாகச் செயற்படும் எந்தவொரு அரச அதிகாரிக்கும் கிடைக்கும் அதிகபட்ச தண்டனை என்னவென்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் கௌரவிக்கின்றோம்.&nbsp;&nbsp;</p><p> </p><p>

இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்த இராணுவ மற்றும் அரசியல் சூத்திரதாரிகள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் சட்டத்தின் முன் தண்டனையைப் பெறுவது உறுதி. அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது என்றும், அநுர குமார தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.</p><p>புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி&nbsp;கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T06:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிலையத்தில் நின்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..! சோகத்தில் குடும்பத்தினர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-killed-in-accident-in-vavuniya-1785652794"></link>
            <id>https://tamilwin.com/article/one-killed-in-accident-in-vavuniya-1785652794</id>
            <summary type="text">வவுனியா - ஓமந்தை - ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(01.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - ஓமந்தை - ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(01.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


நேற்று(01) அதிகாலை ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து
தரிப்பிடத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் மீது, வாகனம் ஒன்று
மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
ஒருவர் உயிரிழப்பு</h2><p>
இந்த விபத்தில், பனிக்கன் நீராவி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/437ea254-bb43-40eb-8189-5f6aae4b09b6/26-6a6ee67dc7e30.webp' /></p><p>
</p><p>
ஏ9 வீதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களும்
உயிரிழப்புகளும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T06:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் சுகாதார துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interviews-for-300-people-vacancies-health-sector-1785651764"></link>
            <id>https://tamilwin.com/article/interviews-for-300-people-vacancies-health-sector-1785651764</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும்
நிறுவனங்களில் வெற்றிடமாக காணப்படும் சுகாதாரப்பணி உதவியாளர் (தரம் III)
பதவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும்
நிறுவனங்களில் வெற்றிடமாக காணப்படும் சுகாதாரப்பணி உதவியாளர் (தரம் III)
பதவிக்கான 852 வெற்றிடங்களுக்கான&nbsp;நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளன.</p><p>முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின்
அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வுகள் நாளை (03.08.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார
அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார்.</p><p>
கட்டமைக்கப்பட்ட இந்த நேர்முகத்தேர்வுகள் நாளை திங்கட்கிழமை
(03.08.2026) முதல் 21.08.2026 ஆம் திகதி வரை பண்ணையில் அமைந்துள்ள சுகாதார
கிராமத்தில் நடைபெறவுள்ளன.</p><p>&nbsp;</p><h2>ஆறு விசேட குழுக்கள் நியமனம்</h2><p> </p><p>இதற்கென ஆறு விசேட குழுக்கள்
நியமிக்கப்பட்டுள்ளதுடன், தினமும் மூன்று நேரப்பிரிவுகளாக இந்த மதிப்பீட்டு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70da6b03-2df6-498a-8c24-47b69db64704/26-6a6ee35a98aa0.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதுவரை நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத
விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 05.08.2026 இன் பின்னர் 021 222 0807 என்ற
தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு, தமது தேசிய அடையாள அட்டை
இலக்கத்தை சமர்ப்பித்து உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்த 300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,548 விண்ணப்பதாரிகள்
அழைக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர்
நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் இந்த ஆட்சேர்ப்பு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் நேர்முகத்தேர்வு குழுவினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இதில் எழுத்துப்பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத்தேர்வில்
வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளிக்கும் நியாயமான மற்றும் ஆதாரபூர்வமான காரணங்கள்
இருக்க வேண்டும் எனவும், நியமிக்கப்பட்டுள்ள ஆறு குழுக்களும் எந்தவிதப்
பாரபட்சமுமின்றி ஒரே மதிப்பீட்டு அளவு கோல்களையே பின்பற்ற வேண்டும் எனவும்
ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். </p><p>நேர்முகத் தேர்வின்போது அரசியல், நிர்வாக அல்லது
வெளிப்புறத் தலையீடுகளுக்குத் துளியளவும் இடமளிக்கக் கூடாது எனவும், முறைகேடு
அல்லது அதிகார துஷ்பிரயோகம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T06:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் பிரஜாசக்தி திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் களஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praja-shakti-project-in-sainthamaruthu-1785648560"></link>
            <id>https://tamilwin.com/article/praja-shakti-project-in-sainthamaruthu-1785648560</id>
            <summary type="text">2026 பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் &quot;தனக்கான ஓர் இடம்; அழகான
வாழ்க்கை&quot; எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
17...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "தனக்கான ஓர் இடம்; அழகான
வாழ்க்கை" எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தலா 10 இலட்சம் ரூபா மதிப்பீட்டில் 17
பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன.
</p><p>
இவ்வீட்டு நிர்மாணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நேற்றுமுன் தினம் (31.07.2026) நேரடியாகச் சென்று களஆய்வு செய்ததுடன், உரிய பயனாளிகளுடன்
கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.</p><p></p><h2>அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த
விஜயத்தின் போது, வீடுகளின் கட்டுமான நிலவரங்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற
உறுப்பினர், நிர்மாணப் பணிகளை எவ்வித தாமதமுமின்றி விரைவாகப் பூர்த்தி
செய்வதற்கு தேவையான பொறிமுறைகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p><p>

இப்பயணத்தின் போது, சாய்ந்தமருது பிரதேசத்தின் 17 கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளையும் சேர்ந்த பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் சமூக
வலுவூட்டல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலையினால் தலவாக்கலையில் மரம் முறிவு - போக்குவரத்து பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tree-breaks-in-thalawakkala-traffic-affected-1785650118"></link>
            <id>https://tamilwin.com/article/tree-breaks-in-thalawakkala-traffic-affected-1785650118</id>
            <summary type="text">மலையக பகுதிகளில் தொடர் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம்
காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும்
ஏற்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையக பகுதிகளில் தொடர் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம்
காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும்
ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று (02) காலை முதல் கடும் மழை மற்றும் காற்று காரணமாக நுவரெலியா -
ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில் மரம்
ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>மண்சரிவு அபாயம்</h2><p>

இந்நிலையில் பிரதேசவாசிகளுடன் இணைந்து முறிந்து வீழ்ந்துள்ள மரத்தினை
அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a38ed075-6f72-4b7b-bf65-58ac406691bd/26-6a6edbcc7c7b0.webp' /></p><p>மேலும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் முதல் நுவரெலியா மற்றும் ஹட்டன் -
கொழும்பு வரையிலான பிரதான வீதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் மலைப்பிரதேசங்கள் மற்றும் பிரதான வீதிகளில்
பயணம் செய்யும் போது சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும்
பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/festival-mass-at-st-annamal-church-thalawila-1785648358"></link>
            <id>https://tamilwin.com/article/festival-mass-at-st-annamal-church-thalawila-1785648358</id>
            <summary type="text">புத்தளம் - தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. 

தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் இலங்கையின் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் - தலவில புனித அன்னமாள் தேவாலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>

தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் இலங்கையின் புத்தளம் மாவட்டம், கல்பிட்டிய தீபகற்பத்தில் உள்ள பிரபல கத்தோலிக்க திருத்தலம். </p><p>

இது புனித அன்னம்மாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும்.</p><p></p><h2>பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு</h2><p> </p><p>

பொதுவாக இந்த திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழமை.</p><p> 

இந்த நிலையில் இம்முறையும் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fweb.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F2291980718280123%2F&show_text=true&width=560&t=0" width="560" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரத்திற்கான காரணம்..! கைதிகளால் ஏற்பட்ட சேதவிபரம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-attack-explanation-of-the-damage-1785644427"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-attack-explanation-of-the-damage-1785644427</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சம்பவத்துக்கான காரணம்&nbsp;</h2><p>

இதேவேளை, சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், காரணத்தை கண்டறிந்து பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d939bce-58ed-4ab3-a0ac-28bc8320617c/26-6a6ed257686d9.webp' />&nbsp;</p><p>

மேலும், கைதிகளால் சிறைச்சாலைக்குள் பல்வேறு கட்டடங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டடம், அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகியன சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அதன்படி, நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாகவும், கைதிகளின் உறவினர்கள் அமைதியாக குறித்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T05:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம்! பிரதியமைச்சர் வழங்கியுள்ள உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-to-vacate-the-pedro-post-office-building-1785646215"></link>
            <id>https://tamilwin.com/article/action-to-vacate-the-pedro-post-office-building-1785646215</id>
            <summary type="text">பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன
ஊடக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன
ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உறுதியளித்துள்ளார்.</p><p>

நேற்று யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.</p><p> இதன்போது யாழ்.
அஞ்சல் வளாகத்தில் வடமாகாண அஞ்சல் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள்</h2><p> </p><p>இதனையடுத்து யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்தினை பார்வையிட்டதுடன் வடமாண பிரதி
அஞ்சல்மா அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதுடன், வடமாகாண அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள் குறித்தும்
கேட்டறிந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d57dec0-45a2-4e69-9f07-9e8b3889279b/26-6a6ecc89199b3.webp' />&nbsp;</p><p>இதன்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள
பருத்தித்துறை அஞ்சலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில், இதற்கு பிரதியமைச்சர் பதிலளித்துள்ளார்.</p><p>

பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடிதம் ஒன்று
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;விடுவிக்க நடவடிக்கை</h2><p> </p><p>இது தொடர்பில் நாம் கரிசனை கொண்டுள்ளோம்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து
அதன் பின்பு எமது அரசாங்க உயர்மட்ட அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்படும். அதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eb3d415-6662-4672-9c56-71e29ec7cecf/26-6a6ecc89cc650.webp' /></p><p>
</p><p>
1971ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் செயற்படாமல் போன நிலையில், இன்று வரை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
</p><p>
இதேவேளை நேற்றைய கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர்,
பிராந்திய கணக்காளர், வவுனியா அஞ்சல் அத்தியட்சகர் யாழ் தபால்நிலைய பிரதம
தபாலதிபர், பருத்தித்துறை அஞ்சலதிபர் மற்றும் அஞ்சல் பயிற்சிக்கல்லூரியின்
பிரதம போதனாசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:50:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை! பல பகுதிகளில் பலத்த மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785643403"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785643403</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;

வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலத்த மழை பெய்ய வாய்ப்பு</h2><p></p><p>
</p><p>
இதன்படி இன்று (02.08.2026) சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
</p><p>
மேலும் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:39:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நடைமுறைக்கு வரும் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-exam-tution-classes-banned-1785643860"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-exam-tution-classes-banned-1785643860</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுக்குள் முதல் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுக்குள் முதல் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களு 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>நடைமுறைக்கு வரும் தடை&nbsp;</h2><p>இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள், விரிவுரைகள் உள்ளிட்டவை 5ஆம் திகதி நள்ளிரவுக்கு முதல் முடிவுறுத்தப்பட&nbsp; வேண்டும்.&nbsp;</p><p>குறிப்பிட்ட காலத்தில்,&nbsp; புலமைப்பரிசில் பரீட்சைக்கான&nbsp; மாதிரி வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவதும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bba90d4d-f858-4665-a3fd-52b0ee61bf67/26-6a6ec8457e1b6.webp' />&nbsp;&nbsp;</p><p>அத்துடன், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இணைய இணைப்புக்களின் ஊடான கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,&nbsp;</p><p>எதிர்வரும் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:32:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785643314"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785643314</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>மடுமாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்க செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/944c6d32-f82a-4633-a32b-df4e022e6973/26-6a6ec3481a7d2.webp' /></p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T04:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-misniter-explains-about-mahara-prison-1785643810"></link>
            <id>https://tamilwin.com/article/justice-misniter-explains-about-mahara-prison-1785643810</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப்பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப்பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையானது, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்</h2><p>
</p><p>நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவம் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாகும். ஆனால், நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலாகும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/decfda42-e872-4c5e-afbc-a95e85df3a44/26-6a6ec323ed054.webp' /></p><p>
</p><p>சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதை முற்றாகக் கட்டுப்படுத்தியமையே நேற்றைய மோதலுக்கு பிரதான காரணமாகும். போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளே இந்த மோதலைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் சதிமுயற்சி நடவடிக்கைகள் சில இடம்பெற்றுள்ளன. நேற்று இரவு கைதிகள் சிலர் பல இடங்களில் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியோட முயற்சித்துள்ளனர். எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய விலங்கு நலச் சட்டம் அறிமுகம்: தண்டனைகள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-animal-welfare-law-1785642613"></link>
            <id>https://tamilwin.com/article/new-animal-welfare-law-1785642613</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் வழிகாட்டலின் கீழ், விலங்குகள் மீதான கருணை, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அவற்றின் நல்வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் இப்புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>
மத அல்லது கலாச்சார நிகழ்வுகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும், விலங்கின் கால்களில் முள் வளையங்கள் அணிவிப்பது, சங்கிலியால் கால்களை கட்டுவது மற்றும் கம்பிகளால் கட்டுவது போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><p>
விலங்குகளை மிதமிஞ்சி நடக்க வைப்பது, அதிக சுமை ஏற்றுவது, சித்திரவதை செய்வது, வேதனையை ஏற்படுத்தும் வகையில் கயிறு அல்லது சங்கிலியால் கட்டிப்போடுவது ஆகியவை குற்றமாகும்.
</p><p>விலங்குகளை கொண்டு செல்லுதல், அடைத்து வைத்தல், விற்பனை செய்தல், குட்டிகளைப் பெருக்குதல், அவற்றுக்கான உணவு மற்றும் பாதுகாப்பு அளித்தல் போன்ற விவகாரங்களில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
</p><p>விலங்குகளை கொடூரமாக நடத்துதல் அல்லது கொடூரமாகக் கொல்லுதல், கர்ப்பிணி விலங்குகளைக் கொல்லுதல், பொறிகளை வைத்து விலங்குகளைப் பிடித்தல், பறவைகளை சட்டவிரோதமாக கூண்டில் அடைத்து வைத்தல், நோயுற்ற விலங்குகளை பொது இடங்களில் இறக்க விடுதல், தகுதியற்ற நபர்கள் விலங்குகளுக்குச் சிகிச்சை அளித்தல், சட்டவிரோத வேட்டையாடுதல், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விலங்குகளை விற்பனை செய்தல் மற்றும் பொது இடங்களில் விலங்குகளை விற்பனை செய்தல் போன்றன சட்டவிரோதமான செயல்கள் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இப்புதிய சட்ட விதிகளை மீறுவோருக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>
மேலும், விலங்குகளின் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காக விலங்கு நல ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. 
இதில் உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் 11 பேருடன், அமைச்சரினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளும் இடம்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T03:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் பெயரில் பெரும் பணமோசடி - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scammers-deputy-minister-target-public-fake-calls-1785634276"></link>
            <id>https://tamilwin.com/article/scammers-deputy-minister-target-public-fake-calls-1785634276</id>
            <summary type="text">கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் விளிப்புடன் இருக்குமாறு பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தல்</h2><p>
இந்த அறிவிப்பின்படி, ஒரு தனிநபர் அல்லது குழு, பிரதி அமைச்சராக நடித்து தொலைபேசி அழைப்புகள் செய்து பணம் கோருவதோடு, பிற மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/852165c4-1c4f-4565-82e0-dba23e2d5d61/26-6a6eafb08a3c5.webp' /></p><p>

அத்தகைய நபர்களுக்கு எந்த பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும், ஆவணங்களையும் வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளை பெறுபவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T02:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல்! சிறையிலிருந்து தப்பிக்க கைதிகள் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-attempt-to-escape-from-mahara-jail-1785635556"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-attempt-to-escape-from-mahara-jail-1785635556</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

சிறைச்சாலைக்குள் கைதிகள் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொள்வதாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சுவரை உடைக்க கைதிகள் முயற்சிப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;</p><h2>சிறையிலிருந்து தப்பிக்க&nbsp;முயற்சி </h2><p>
</p><p>
இதற்கிடையில், கைதிகள் அடங்கிய மற்றொரு குழுவினர் 15 அடி உயரத்தகட்டை அகற்றிவிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cd280f4-5bb5-402f-ad82-f51fe915516c/26-6a6ea3bfd32a2.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் பதற்றகரமான நிலைமையால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> அத்துடன் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இவ்வாறான பின்னணியில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் சிறைச்சாலை முன்பாகவும், சிறைச்சாலையை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T01:56:20+00:00</updated>
        </entry>
    </feed>
