<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-16T17:12:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-rising-inflation-due-to-el-ni-o-impact-1786898400"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-rising-inflation-due-to-el-ni-o-impact-1786898400</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.அத்தோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.</p><p>அத்தோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கடுமையான அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஓகஸ்ட் மாதத்திற்கான பணவியல் கொள்கை அறிக்கையினூடாக மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.</p><h2>வறட்சியான காலநிலை</h2><p>

நீண்டகால வறட்சியான காலநிலை மற்றும் மழைவீழ்ச்சி அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்பன விவசாய உற்பத்தியைப் பாதிப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/948e1817-e132-435d-9087-40a33d1318a7/26-6a81ec78cb556.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பொலன்னறுவை, மிஹிந்தலை, அனுராதபுரம், மொனராகலை உள்ளிட்ட பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p> அத்துடன், ஹிங்குராக்கொட - கிதுல்உத்துவ கிராமத்தின் கிதுல்உத்துவ குளம் வற்றிப்போயுள்ளதால், தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் தீர்மானத்திற்கு பல நாடுகள் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-war-live-talks-on-hormuz-strait-1786898228"></link>
            <id>https://tamilwin.com/article/iran-war-live-talks-on-hormuz-strait-1786898228</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் &#039;சமாதான சபை&#039; முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'சமாதான சபை' முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p><p>
இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமைதிக்கான விரிவான திட்டத்தை நேரடியாக நிராகரிப்பதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d5a264-bfe5-4a5b-b950-d8812275076e/26-6a81e738cd3bc.webp' /></p><p> </p><p>இது அத்திட்டத்தை அமல்படுத்துவதைப் பாதிப்பதோடு, நியாயமான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் கூட்டு முயற்சிகளையும் சீர்குலைக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> 
இத்தகைய நிராகரிப்பு மூலம் காசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் முழுப் பொறுப்பையும் தற்போது இஸ்ரேலே ஏற்கிறது என்பது உறுதி செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
மத்தியஸ்தர்களின் தீவிர முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டல் வரைபடத்தை பாலஸ்தீன அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன. </p><p>
ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலியப் படைகளை வாபஸ் பெறுதல், சர்வதேச நிலைப்படுத்தும் படையை அமைத்தல், காசாவின் நிர்வாக அதிகாரத்தை காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிடம் ஒப்படைத்தல் மற்றும் காசாவை மறுசீரமைத்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களைக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-16T16:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029ம் ஆண்டிலும் அநுரவே நாட்டின் ஜனாதிபதி - ஆளும் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/in-2029-anura-will-be-prisident-says-npp-1786897685"></link>
            <id>https://tamilwin.com/article/in-2029-anura-will-be-prisident-says-npp-1786897685</id>
            <summary type="text">எதிர்வரும் 2029ம் ஆண்டிலும் அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதி என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2029ம் ஆண்டிலும் அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதி என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும் எனத் தொடக்கத்தில் கணித்த எதிர்க்கட்சிகள், இப்போது 2029 ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f693f21-390d-4abc-ba85-393fd9f6bf27/26-6a81e5173b3e4.webp' /></p><p>
</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குப் போதிய அனுபவம் இல்லை என சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்வைத்த அனைத்து வாதங்களும் தற்போது பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அரசாங்கத்தைக் கவிழ்க்கக் காத்திருந்தவர்கள், இப்போது 2029 ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி மட்டுமே கனவு காண்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எந்தக் பக்கம் திரும்பினாலும் 2029 ஜனாதிபதி வேட்பாளர்கள் உருவாகியுள்ளனர் எனவும் அவர்கள் அனைவரும் ஏற்கனவே பதவிப் பிரமாணம் செய்யத் தயாராக இருப்பது போல் நடந்து கொள்கிறார்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>2024 ஆம் ஆண்டுத் தேர்தலில் தயக்கத்துடனோ அல்லது பயத்துடனோ மாலிமாவிற்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் கூட, தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒன்றிணைந்து வருவதாகவும், அரசு மீதான மக்கள் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சம்பளம் மற்றும் வீடமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் காரணமாக, அந்தப் பிராந்தியங்களிலும் அரசாங்கத்திற்குப் பெருமளவு ஆதரவு கிடைத்து வருகின்றது.
</p><p>மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் மக்கள் ஆதரவுமிக்க அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து பயணிக்கும் எனவும், அதன்படி 2029 ஆம் ஆண்டிலும் அனுர குமார திசாநாயக்க நிச்சயமாக மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் சுசந்த குமார நவரத்ன வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T16:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-approval-of-the-government-declines-1786896997"></link>
            <id>https://tamilwin.com/article/public-approval-of-the-government-declines-1786896997</id>
            <summary type="text">அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் சரிவு பதிவாகியுளள்தாக முன்னணி ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் சரிவு பதிவாகியுளள்தாக முன்னணி ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்த எதிர்மறையான பார்வைகளால், தற்போதைய அரசாங்கத்திற்கான மக்களின் ஆதரவு 50 வீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
‘வெரிடே ரிசர்ச்’ நிறுவனம் நடத்திய ஜூலை 2026 ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p><br></p><p>
</p><p>தேர்தலுக்குப் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் 65 வீதமாக இருந்த அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு, தற்போது 50 வீதமாகச் சரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/553ee9fd-0e69-4d74-b992-1ddf48b64bd5/26-6a81e266cde4e.webp' /></p><p>
</p><p>தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு 50 வீதமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளையில், 31.4 வீதமானவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். 
நாட்டின் பொருளாதாரம் "மேம்பட்டு வருகிறது" என்று கூறுபவர்களின் விகிதம் 64 வீதத்திலிருந்து 41.63 வீதமாக ஆகக் குறைந்துள்ளது. </p><p>அதேவேளை, நிலைமை "மோசமடைந்து வருகிறது" என நம்புபவர்களின் விகிதம் 15 வீதத்திலிருந்து 40.29 வீதமாக உயர்ந்துள்ளது.
</p><p>கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 55.59 வீதமானவர்கள் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை "மோசமானது" என மதிப்பிட்டுள்ளனர்.</p><p> 38 வீதமானவர்கள் மட்டுமே "நல்லது" அல்லது "மிகவும் சிறப்பானது" எனத் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நம்பிக்கைக் குறியீடு மீண்டும் மறை பெறுமதி நிலைக்குச் சென்று 'மைனஸ் 8' ஆகப் பதிவாகியுள்ளது. </p><p>இக்குறியீடு 2024இன் பாதியில் 39 ஆக இருந்தது, பின்னர் 2025 பெப்ரவரிக்குப் பின்னர் நேர்மறை நிலைக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>இந்தக் கருத்துக்கணிப்பு 2026 ஜூலை 11 முதல் 30 வரை நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 2,013 இலங்கை நபர்கள் இடையே நடத்தப்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T16:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-from-canada-drowned-in-the-ocean-1786884513"></link>
            <id>https://tamilwin.com/article/man-from-canada-drowned-in-the-ocean-1786884513</id>
            <summary type="text">கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு
நாயாற்று கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(16.08.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு
நாயாற்று கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த சம்பவம் இன்று(16.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2> 

நண்பர்களுடன் கடலுக்கு சென்ற நபர்</h2><p>யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான சதீசன் என்ற நபர், கனடாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளார்.</p><p>
இந்த நிலையில், அவர் தன்னுடைய 5 நண்பர்களுடன் முல்லைத்தீவினை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3ab7b0-4750-4f55-b015-3b53714651ce/26-6a81b25e9e16d.webp' /></p><p>
</p><p>இதன்போது, நண்பகல் அளவில் நாயாற்று பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையில், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>சடலம் மீட்பு</h2><p>அருகில் நின்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவரின் சடலம், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T16:12:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vietnam-flight-makes-emergency-landing-in-germany-1786891455"></link>
            <id>https://tamilwin.com/article/vietnam-flight-makes-emergency-landing-in-germany-1786891455</id>
            <summary type="text">ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலிருந்து ஹனோய் நோக்கிப் புறப்பட்ட
வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானமொன்று சிறிது நேரத்திலேயே
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலிருந்து ஹனோய் நோக்கிப் புறப்பட்ட
வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானமொன்று சிறிது நேரத்திலேயே
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக&nbsp; அவசரமாகத்
திருப்பியனுப்பப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>

போயிங் 787 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் டேக்-ஓஃப் செய்யப்பட்ட போது ரன்வே
எல்லை கடந்து சென்றதால், விமானத்தின் பின்னால் அதிகளவில் தூசிப் படலம்
எழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக காற்றில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமாகச் சுற்றித்
திரிந்து எரிபொருளை வீணடித்த பின்னரே விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><h2>சோதனை</h2><p>

தரையிறங்கிய பின்னர் விமானம் வடக்கு ரன்வேயில் நகர்ந்து செல்ல முடியாமல்
சிக்கியதால், அவ்வழியான விமானப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டு தெற்கு
ரன்வேக்கு மாற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20fa4fa-2898-494d-9178-a5e67f6bda75/26-6a81d10bbab2b.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவத்தின் போது பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழாமினர் அனைவரும்
பாதுகாப்பாக இருந்ததாக அறிவித்துள்ளதுடன், துல்லியமான காரணத்தைக் கண்டறிய உரிய
அதிகாரிகளுடன் இணைந்து சோதனைகளை மேற்கொண்டு வருவதாக வியட்நாம் ஏர்லைன்ஸ்
நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T15:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து சென்றவர் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181"></link>
            <id>https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181</id>
            <summary type="text">இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். 

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான நபரே இவ்வாறு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.</p><p> </p><h2><b>குடிவரவு&nbsp;சோதனை</b></h2><p>விமானத்தில் இருந்து இறங்கியவர் குடிவரவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளை முடித்துவிட்டு, பிராட்வே செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்திற்கு சென்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be94a1e-4545-4af1-847b-5edf6154e5b9/26-6a8124e84e5a8.webp' /></p><p>அங்குள்ள டிக்கெட் கவுண்டர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகளும், மெட்ரோ நிலைய ஊழியர்களும் உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் முதலுதவி வழங்கிய போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p>சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். </p><p>இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T14:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களின் பெருமையை பறைசாற்ற வரும் ஈழத்து நடிகனின் போராட்டம் திரைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-release-date-1786890450"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-release-date-1786890450</id>
            <summary type="text">ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘போராட்டம்’ திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் 2ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘போராட்டம்’ திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p><p>இதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதி தமிழர்களின் கண்களுக்கு விருந்தாக வரவிருகின்றது என்றும் திரைப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p>

ஐபிசி தமிழின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

ராஜ் சிவராஜ் இயக்கும் ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
</p><p>
மேலும், ஈழத் திரையுலகில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் மிக நீளமான திரைப்படமாக போராட்டம் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T14:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-traveling-from-kurikadduvan-accident-1786889069"></link>
            <id>https://tamilwin.com/article/boat-traveling-from-kurikadduvan-accident-1786889069</id>
            <summary type="text">குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த படகானது இன்று(16.8.2026) பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகட்டுவான்
பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது.
</p><p>
இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு
என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு
இருந்தவேளை நயினாதீவு தொடருந்தில் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c265d569-8378-48a1-b09f-dd455e000ae0/26-6a81c94b5f4ca.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் தெரியவரவில்லை.
இந்நிலையில் யாராவது காணாமல் போயுள்ளார்களா என்ற கோணத்தில் தேடுதல்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T14:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து - இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-during-motorcycle-race-in-nuwara-eliya-1786888443"></link>
            <id>https://tamilwin.com/article/accident-during-motorcycle-race-in-nuwara-eliya-1786888443</id>
            <summary type="text">நுவரெலியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு போட்டியாளர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று(16.08....</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு போட்டியாளர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விபத்து இன்று(16.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
போட்டியின் போது நேர்ந்த விபத்து</h2><p>
நுவரெலியா, பிளாக்பூல் மற்றும் மகஸ்தோட்டம் இடையே
நடைபெற்ற 400சிசி மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில்
இரண்டு மோட்டார் சைக்கிள் சாரதிகள் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/909af4c7-c155-4981-95c1-fd4d1f6eaabd/26-6a81c152769ee.webp' /></p><p>
</p><p>
நுவரெலியா மாநகர சபையும், கொழும்பில் உள்ள ஒரு தனியார் சங்கமும் இணைந்து(16)
மற்றும் (17) ஆம் திகதிகளில் நுவரெலியா - அம்பேவளை பிரதான வீதியில்
பிளாக்பூல் பாலத்தில் இருந்து தொடங்கி, செங்குத்தான மலைகள் மற்றும் வளைந்து
செல்லும் தேயிலைத் தோட்டங்கள் வழியாக மகஸ்தோட்டமம் வரை அடையும் ஒரு நேரக்
கணக்கீட்டுப் பந்தயத்தை(TIMING RACE) நடத்தி வருகின்றனர்.
</p><p>
இதில் (16)ஆம் திகதி இடம்பெற்ற பந்தயத்தில் பல போட்டியாளர்கள் பங்கேற்ற
நிலையில், நுவரெலியா பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இரண்டு மோட்டார்
சைக்கிள்கள் சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் விழுந்ததால் இந்த
விபத்து நிகழ்ந்ததாக நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d3c53c7-d354-440f-8d82-06d93320d514/26-6a81c1538c4f2.webp' /></p><p>


</p>]]></content>
            <updated>2026-08-16T13:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டகலை தொடருந்து வீதியின் புனர்நிர்மாண பணிகள் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-track-reconstruction-work-completed-1786885689"></link>
            <id>https://tamilwin.com/article/railway-track-reconstruction-work-completed-1786885689</id>
            <summary type="text">கொட்டகலையில் சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி
தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழிநுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலையில் சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி
தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழிநுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்தார். </p><p>சீரான காலநிலை தொடருமானால், எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதியளவில் பணிகளை
முழுமையாக நிறைவு செய்து ஒப்படைக்க எதிர்பார்ப்பதாக அவர் இதன் போது மேலும்
தெரிவித்தார்.
</p><p>
மலையக தொடருந்து சேவையை மீண்டும் முழுமையாக வழமைக்கு கொண்டு வருவதற்கான
புனரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>சீரற்ற காலநிலை</h2><p>
</p><p>சீரற்ற காலநிலை மற்றும்
மண்சரிவு காரணமாக சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த மே
மாதம் ஆரம்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/618b747e-b49f-4196-a7a7-8ebd6591bcfe/26-6a81bbcf4b2b2.webp' /></p><p>
</p><p>
எனினும், ஜூலை மாதம் முதல் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும்
மழை காரணமாக பணிகளை திட்டமிட்ட வேகத்தில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
</p><p>
தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால், புனரமைப்பு பணிகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T13:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 ஆயிரம் பேர் இடம்பெயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-earthquake-recorded-in-indonesia-1786886296"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-earthquake-recorded-in-indonesia-1786886296</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்
காரணமாக இதுவரை குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் வரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்
காரணமாக இதுவரை குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் வரை
இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் தீவில் நேற்று(16.08.2026) அதிகாலை
7.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><h2>

341 தொடர் அதிர்வுகள்</h2><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுமார் 341 தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளதால்,
மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சமடைந்து தற்காலிக கூடாரங்களிலும்
திறந்தவெளிகளிலும் தங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49f6c8d7-0095-4d1e-9ab5-fba3b7e6760e/26-6a81b94b1f743.webp' /></p><p>

இந்த இயற்கை அனர்த்தத்தினால் 1,300க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த
சேதமடைந்துள்ளதுடன், நிலச்சரிவு காரணமாகப் பல முக்கிய வீதிகள் தடை செய்யப்பட்டன.
</p><p>
இதனால் பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில்
பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><h2>
அவசர நிலைப் பிரகடனம்</h2><p>
தற்போது வரை 36 பேர் தீவிர காயங்களுக்கும், 77 பேர் இலேசான காயங்களுக்கும்
உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07c19760-f9bf-4613-a681-82ca06d20797/26-6a81b94c118f3.webp' /></p><p>
</p><p>
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள்
மூலம் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அத்துடன் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும்
சுமார் 3,500 இராணுவ மற்றும் பொலிஸ் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள்
ஆராய்ந்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T13:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயிலிருந்து வரும் உத்தரவில் போதைப்பொருள் கடத்தல் - இரகசிய தகவலில் சிக்கிய கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-vehicle-number-plates-arrested-with-crime-1786866895"></link>
            <id>https://tamilwin.com/article/fake-vehicle-number-plates-arrested-with-crime-1786866895</id>
            <summary type="text">&amp;nbsp;கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு வாகனங்களின் போலி ஆவணங்களுடன் குற்றக்கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலிப்பதிவுத்தகடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு வாகனங்களின் போலி ஆவணங்களுடன் குற்றக்கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

போலிப்பதிவுத்தகடுகள், காப்பீட்டுச்சான்றிதழ்கள் மற்றும் வருமான சான்றிதழ்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>போதைப்பொருள் கடத்தல்&nbsp;</h2><p>
</p><p>
சந்தேகநபருடன், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள், 5 லொரிகள் மற்றும் 2 முச்சக்கர வண்டிகளுக்குச் சொந்தமான போலிப் பதிவுத் தகடுகள், பதிவு எண்களை போல இருக்கும் போலி வருமான சான்றிதழ்கள் மற்றும் காப்பீட்டுச்சான்றிதழ் அட்டைகள், அத்துடன் 5400 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c502b117-0a5a-4306-b7f5-49123013ceae/26-6a81751a28f01.webp' /></p><p>
</p><p>
டுபாயிலிருந்து நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வரும் டுபாய் சுத்தா மற்றும் அவரது சகோதரர் தங்களது வீட்டில் 'ஐஸ்' போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் நடத்திய சோதனையில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர் வசித்து வந்த வீட்டில் பொலிஸார் நடத்திய முழுமையான சோதனையின் போது, ​​கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத போலி வாகன பதிவுத்தகடுகளையும் பிற ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
சந்தேகநபரிடம் விசாரணை நடத்தியபோது, ​​தேவைப்படும்போது பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி, டுபாய் சுத்தா இந்த ஆவணங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T12:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானத்துடன் செயற்படவும்! சூரிய வெப்பத்தில் நேரடியாகச் செயற்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extreme-heat-can-cause-accidents-urgent-warning-1786882178"></link>
            <id>https://tamilwin.com/article/extreme-heat-can-cause-accidents-urgent-warning-1786882178</id>
            <summary type="text">அதிக வெப்பநிலை நிலவும் இடங்களுக்கு பயணம் செய்யும் போதும், சூரிய வெப்பத்தில் நேரடியாகச் செயற்படும் போதும் மயக்கம், தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, தலைவலி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிக வெப்பநிலை நிலவும் இடங்களுக்கு பயணம் செய்யும் போதும், சூரிய வெப்பத்தில் நேரடியாகச் செயற்படும் போதும் மயக்கம், தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, தலைவலி மற்றும் பார்வைக் கோளாறுகள் ஏற்படக்கூடும் என விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

தற்போது நிலவி வரும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை காரணமாக பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>போதுமான அளவு நீர் அருந்துதல்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பெற்றோர் போதுமான அளவு சுத்தமான குடிநீரைக் கொடுத்து அனுப்ப வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e96037f0-6d0c-4a19-bcab-7462b90c3cdf/26-6a81af115a066.webp' /></p><p> </p><p>

அதிக வெப்பநிலை காரணமாக பரீட்சை மண்டபங்களில் மாணவர்களுக்கு அதிகளவிலான வியர்வை, மயக்கம், தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, கடுமையான தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. </p><p>

எனவே, பரீட்சை நிலையங்களில் மாணவர்களுக்குக் காற்றோட்டமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும்.</p><h2>ஏற்படக்கூடிய பாதிப்புகள்</h2><p>
</p><p>
அதிக வெப்பநிலை நிலவும் இடங்களுக்கு பயணம் செய்யும் போதும், சூரிய வெப்பத்தில் நேரடியாகச் செயற்படும் போதும் மயக்கம், தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, தலைவலி மற்றும் பார்வைக் கோளாறுகள் ஏற்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81ed886-3b5e-4bef-a0de-268a20d6b47d/26-6a81af122039f.webp' /></p><p> 

வெயிலில் நீண்டநேரம் நேரடியாக இருப்பதைத் தவிர்ப்பது நல்லது; அவ்வாறு செய்யாத பட்சத்தில் இதய நோய் தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
</p><p>
மேலும், அதிக வெப்பநிலை காரணமாக மன அழுத்தம், அதிக கோபம் மற்றும் வன்முறை எண்ணங்கள் ஏற்படக்கூடும்.

வாகனம் செலுத்துபவர்களுக்கு விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகம் என்பதால் கவனமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T12:46:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைதியை இழந்த பலாலி மக்கள் - வீதிக்கிறங்கி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palali-residents-protest-over-loss-of-peace-1786881027"></link>
            <id>https://tamilwin.com/article/palali-residents-protest-over-loss-of-peace-1786881027</id>
            <summary type="text">தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் தொடர்ந்து
போராடி வரும் வலி. வடக்கு - பலாலி மக்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி
வீதிக்கிறங்கியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் தொடர்ந்து
போராடி வரும் வலி. வடக்கு - பலாலி மக்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி
வீதிக்கிறங்கியுள்ளனர்.</p><p>

 குறித்த பகுதி மக்கள் இன்று(16.08.2026) வீதிக்கிறங்கி தமது வலிகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தி இருந்தனர்.</p><h2>வீதிக்கிறங்கி&nbsp;போராட்டம் </h2><p>
</p><p>


உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்ட தமது பூர்வீக நிலங்கள் இதுவரை முழுமையாக மீள வழங்கப்படவில்லை என தெரிவித்து, பலாலி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18db5d6b-f09a-4667-ab32-678af14e0082/26-6a81a8d474110.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், இன்று 9ஆவது வாரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கடந்த
வாரம் அறிவித்திருந்தபடி மக்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி வீதிக்கு
இறங்கியுள்ளனர்.
</p><p>
பலாலி - செபஸ்தியர் ஆலயம் அமைந்துள்ள பகுதியிலிருந்து கறுப்பு உடையணிந்து,
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்ட போராட்டக்காரர்கள், பலாலி
சந்தியை சென்றடைந்துள்ளனர். 

அங்கு வீதிச் சோதனை சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடி,
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை
வலுப்படுத்தியுள்ளனர்.</p><h2>போராட்டக் களத்தில் சற்று பதற்றம்</h2><p>
</p><p>
இதன்போது, தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டக்காரர்கள் பொலிஸாருடன்
சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போராட்டக் களத்தில் சற்று பதற்றமான
சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36aec62b-fde8-4d86-b2b4-7a01bcdeb17f/26-6a81a8d54b719.webp' /></p><p>
எனினும், போராட்டக்காரர்கள் அமைதியை கடைப்பிடித்து தமது போராட்டத்தை தொடர்ந்து
முன்னெடுத்துள்ளதுடன், வழமையான நேரம் வரை போராட்டக் களத்தில் நிலைத்திருந்தனர்.
</p><p>
பல ஆண்டுகளாக அமைதிவழியில் போராடி வரும் பலாலி மக்களின் போராட்ட வடிவம்
தற்போது படிப்படியாக மாறி வருகின்றது. தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறும் வரை
போராட்டத்தை தொடரப் போவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T12:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம் - சர்வதேச விசாரணையை வலியுறுத்திய போராட்டம் நாளையுடன் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-cry-protest-ends-tomorrow-1786871543"></link>
            <id>https://tamilwin.com/article/justice-cry-protest-ends-tomorrow-1786871543</id>
            <summary type="text">தாயகச் செயல் அணியின் ஏற்பாட்டில், செம்மணி பகுதியில் கடந்த 14ஆம் திகதி
ஆரம்பிக்கப்பட்ட&amp;nbsp; “நீதியின் ஓலம்” போராட்டம் நாளையுடன் (17.08.2026) முடிவடைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாயகச் செயல் அணியின் ஏற்பாட்டில், செம்மணி பகுதியில் கடந்த 14ஆம் திகதி
ஆரம்பிக்கப்பட்ட&nbsp; “நீதியின் ஓலம்” போராட்டம் நாளையுடன் (17.08.2026) முடிவடைகிறது.</p><p>இந்தப் போராட்டமானது சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்று
வருகின்றது.</p><h2>நீதியின் ஓலம்&nbsp;போராட்டம்</h2><p>
போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, வடக்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து
வருகை தந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்கேற்புடன் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
இந்த நிலையில், போராட்டத்தின் இறுதி நாளான நாளை 17ஆம் திகதி காலை 10.30 மணிக்கு
யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdca9b81-c0c6-4110-99bf-93813c490ef1/26-6a818442814a7.webp' /></p><p> </p><p>பேரணி யாழ்ப்பாணம்
கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அலுவலகத்தை
சென்றடைந்து, அங்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் மகஜர் ஒன்றும்
கையளிக்கப்படவுள்ளது.
</p><p>கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் மற்றும் காணாமல்
ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கிடைக்க வேண்டும்
என்பதுடன், உள்நாட்டு விசாரணைகளுக்கு அப்பால் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.
</p><p>இறுதி நாள் பேரணியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, நீதிக்கான
குரலை வலுப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T11:59:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசா பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் தலைவர் கெய்ரோ பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hamas-leader-travels-to-cairo-for-gaza-talks-1786870506"></link>
            <id>https://tamilwin.com/article/hamas-leader-travels-to-cairo-for-gaza-talks-1786870506</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜாரெட் குஷ்னரின் மத்திய
கிழக்கு விஜயத்திற்கு முன்னதாக, எகிப்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜாரெட் குஷ்னரின் மத்திய
கிழக்கு விஜயத்திற்கு முன்னதாக, எகிப்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர்
கலீல் அல்-ஹய்யா கெய்ரோ சென்றுள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாத பிற்பகுதியில் ஹமாஸ் அமைப்பின் தலைமை பொறுப்பை
ஏற்றுக்கொண்டதன் பின்னர், கலீல் அல்-ஹய்யா எகிப்திற்கு மேற்கொள்ளும் முதலாவது
விஜயம் இதுவாகும்.</p><h2>15 அம்ச அமைதித் திட்டம்</h2><p>
இதன்போது அவர் எகிப்திய உளவுத்துறைத் தலைவர் ஹசன் ரஷாத்தை சந்தித்துப்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6853c583-5847-4813-910e-c57765d24efa/26-6a817d66d8a6b.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாஹு பகிரங்கமாக நிராகரித்துள்ள நிலையிலேயே இந்த இராஜதந்திர
நகர்வுகள் இடம்பெறுகின்றன.
</p><p>
அதேவேளை, காசாவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்களில்
உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதுடன், ஹமாஸ் அமைப்பு பூரணமாக ஆயுதங்களைக் களையும் வரை காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் விலகாது என நெதன்யாஹு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T11:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதியின் புனரமைப்பு பணிகள் 60 சதவீதம் பூர்த்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-reconstruction-works-60-percent-complete-1786877572"></link>
            <id>https://tamilwin.com/article/railway-reconstruction-works-60-percent-complete-1786877572</id>
            <summary type="text">கொட்டகலை சுரங்க பாதைக்கு சமீபமாக சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி
தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை புனரமைப்பு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை சுரங்க பாதைக்கு சமீபமாக சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி
தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை புனரமைப்பு
பணிகளை மேற்பார்வை செய்யும் தொழிநுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சீரான காலநிலை தொடருமானால், எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதியளவில் பணிகளை
முழுமையாக நிறைவு செய்து ஒப்படைக்க எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மலையக தொடருந்து சேவையை மீண்டும் முழுமையாக வழமைக்கு கொண்டு வருவதற்கான
புனரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள்</h2><p>
</p><p>
கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அண்மித்த பகுதியில் சீரற்ற காலநிலை மற்றும்
மண்சரிவு காரணமாக சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த மே
மாதம் ஆரம்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bfef288-29b3-4a7a-9797-3568445f283b/26-6a81a1cf862d4.webp' /></p><p>
</p><p>
எனினும், ஜூலை மாதம் முதல் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும்
மழை காரணமாக பணிகளை திட்டமிட்ட வேகத்தில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.</p><p>

தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால், புனரமைப்பு பணிகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து சீரான காலநிலை நிலவினால் எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியளவில் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்து ஒப்படைக்க
எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p>
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து நாட்டின் பல
பகுதிகளிலுள்ள தொடருந்து பாதைகள் கடுமையாக சேதமடைந்தன.

குறிப்பாக மலையக தொடருந்து பாதைகளில் பல இடங்களில் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு
உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாரிய சேதங்கள் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ff7978-7964-41f0-a931-17f6614ff3cc/26-6a81a1d0a4c03.webp' /></p><h2>மீள ஆரம்பிப்பு</h2><p>
</p><p>
இதனையடுத்து, சேதமடைந்த பகுதிகள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்பட்டு, சில
பகுதிகளில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


தற்போது மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பதுளை முதல் நானுஓயா வரையிலும்,
நாவலப்பிட்டி முதல் வட்டவளை வரையிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p>
எனினும், கொட்டகலை மற்றும் கிரேட்வெஸ்டன் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக
தொடருந்து பாதைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக மலையகத்திற்கான முழுமையான தொடருந்து சேவையை தொடர்ச்சியாக
முன்னெடுப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24ba2916-4cbb-4852-9783-3436e3360dac/26-6a81a1d17ddc9.webp' /></p><p>

குறிப்பாக கொட்டகலை மற்றும் கிரேட்வெஸ்டன் ஆகிய இரண்டு பகுதிகளிலும்
புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தால், பதுளையிலிருந்து நாவலப்பிட்டி வரையான
தொடருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க முடியும் என தொடருந்து திணைக்கள
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>மலையகத்தின் பொருளாதாரம், கல்வி, தொழில் மற்றும் அன்றாட போக்குவரத்துடன்
நெருங்கிய தொடர்புடையதாக காணப்படும் தொடருந்து சேவை, நீண்டகாலமாக ஏற்பட்டுள்ள
இந்த தடையால் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18fa6570-cc30-4e90-bc74-abe6483bfd53/26-6a81a1d259570.webp' /></p>]]></content>
            <updated>2026-08-16T11:43:41+00:00</updated>
        </entry>
    </feed>
