<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-12T12:24:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-deployed-in-at-vedukkunaari-malai-1789214874"></link>
            <id>https://tamilwin.com/article/police-deployed-in-at-vedukkunaari-malai-1789214874</id>
            <summary type="text">வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p>இன்று (12.09.2026) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட
பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.</p><p>

அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><h2>மறிக்கப்பட்ட வாகனங்கள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e14b99d8-51b2-4199-a046-5a8c752ea44b/26-6aa542abd7ecf.webp' /></p><p> அதேநேரம் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார்
சைக்கிள்கள் பொலிஸாரால் மறித்து, அவர்களை நீண்ட தூரத்திற்கு
நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.

</p><p>
இந்நிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர்
சட்டத்தரணி ந.காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன்
உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடிய நிலையில் அனுராதபுர பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வருகை தந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த பேரணியானது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் தந்தை தலைமை தாங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று குறித்த பேரணியில் கலந்து கொள்வார் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், மீ்ண்டும் அரசியல் களத்தில் இறங்கும் மகிந்த என்னும் பாணியில் தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/loEKA2X6YC0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T12:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-power-cuts-expected-in-coming-months-1789211312"></link>
            <id>https://tamilwin.com/article/no-power-cuts-expected-in-coming-months-1789211312</id>
            <summary type="text">எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

எல் நினோவின் தாக்கம் ஏற்பட வாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>
எல் நினோவின் தாக்கம் ஏற்பட வாய்ப்பிருந்தாலும், நீர்த்தேக்கங்களில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு திட்டத்தை அரசாங்கம் விரைவுபடுத்தி வருவதாலும் இது தொடர்பில் உறுதியளிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், செப்டம்பர் 10ஆம் திகதி நிலவரப்படி, நீர்த்தேக்கங்களில் சுமார் 750 ஜிகாவாட்-மணிநேர (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு நீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58.7% ஆகும்.</p><h2>மழைப்பொழிவு தொடர்பான கணிப்பு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f6cc5e-3e41-4327-afda-3a742ee14a95/26-6aa53ecb65f51.webp' /></p><p> </p><p>

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் மூலம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் சுமார் 1000 ஜிகாவாட்-மணிநேர நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவையான நீர் இருப்பை அரசால் உருவாக்க முடியும்.</p><p> </p><p>

கணிப்புகளின்படி, ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் 1000 ஜிகாவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போதுமான நீர் இருப்பை வைத்திருப்பது அவசியமாகும்.
</p><p>
தற்போது சுமார் 3000 மெகாவாட்டாக (MW) உள்ள உச்சகட்ட மின்சாரத் தேவை, அதிக வெப்பநிலை காரணமாக ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுமார் 3,350 மெகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individual-arrested-by-special-task-force-ice-drug-1789213335"></link>
            <id>https://tamilwin.com/article/individual-arrested-by-special-task-force-ice-drug-1789213335</id>
            <summary type="text">அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் விசேட
அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் விசேட
அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்
அடிப்படையில், கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் மீது இந்தத் திடீர்
சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (11) மாலை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும்
அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சான்றுப்பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd45e841-5772-47cd-ac62-8e5b2982b442/26-6aa53e8d817c2.webp' /></p><p>
</p><p>சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-commercial-establishment-in-akkaraipattu-1789211771"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-commercial-establishment-in-akkaraipattu-1789211771</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்
ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, அக்கரைப்பற்று மாநகர சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்
ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இதனையடுத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப்
பிரிவினரின் விரைவான நடவடிக்கையினால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டுள்ளது.
</p><p>
அக்கரைப்பற்று பிரதான வீதி, லங்கா ஸ்ரோருக்கு அருகாமையில் இயங்கி வரும் 'LU
LU' நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அதன் மேல்தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><h2>தீ விபத்து</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின்
தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல்
முழுமையாகக் கட்டுப்படுத்தினர். </p><p>இருப்பினும் இத்தீ விபத்தினால் குறித்த
கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a144a6ff-4565-4800-8be0-6cdad286af6b/26-6aa539514d20d.webp' /></p><p>
</p><p>
தீ விபத்தின் போது உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்த மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கும், அச்சேவையை
அக்கரைப்பற்றுக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய
மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கும் அங்கு கூடியிருந்த
வர்த்தகர்களும் பொதுமக்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:37:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து சிக்கலில் ராஜபக்ச குடும்பத்தினர்.. ஷிரந்தி தொடர்பில் புலனாய்வாளர்களிடம் முக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/siriliya-foundation-shirandhi-rajapaksa-cid-1789209243"></link>
            <id>https://tamilwin.com/article/siriliya-foundation-shirandhi-rajapaksa-cid-1789209243</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் பெறப்பட்ட நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் பெறப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக சீன அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட இயந்திரம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>
இந்த விசாரணையானது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட சிரிலிய அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தரப்பினரை மையமாகக் கொண்டுள்ளது.</p><p>

சட்டமா அதிபர் சார்பில் இவ்வழக்கை மேற்பார்வையிடும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலிப பீரிஸின் வழிகாட்டுதலின் கீழ், சிஐடியின் நிதி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h3>விரைவில் சிஐடி செல்லும்&nbsp;ஷிரந்தி</h3><p> </p><p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவியாக இருந்த ஷிரந்தி ராஜபக்ச, குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை நன்கொடையாக வழங்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு, தேசிய சேமிப்பு வங்கியிடம் கடிதம் மூலம் நிதி கோரியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14bebdda-efa5-4bc2-bdfc-65482c8364f4/26-6aa5358e17f2b.webp' /></p><p> </p><p>அந்தக் கடிதத்தின் அடிப்படையிலும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் வழங்கிய வாய்மொழி உத்தரவின் பேரிலும், 10 மில்லியன் ரூபாய் தொகை சிரிலிய அறக்கட்டளைக்கு விடுவிக்கப்பட்டது. </p><p>இருப்பினும், வங்கியிலிருந்து பெறப்பட்ட அந்த 10 மில்லியன் ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>அந்த நிதியைக் கொண்டு குறிப்பிட்ட இயந்திரத்தை வாங்குவதற்குப் பதிலாக, சீன அரசாங்கத்தால் கடன் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த CT ஸ்கேன் இயந்திரமே மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d0fb50-00ab-4143-bd1f-a5a3025d9825/26-6aa5358f09e04.webp' /></p><p>
</p><p>
மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் அறிவுறுத்தலின் பேரில், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உட்படப் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏற்கனவே இது தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். </p><p>இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவி ஷிரந்தி ராஜபக்ச, அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிற பொறுப்புள்ள அதிகாரிகள் ஆகியோரை நிதி விசாரணைப் பிரிவுக்கு வரவழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/incentive-payments-for-university-students-pm-1789211125"></link>
            <id>https://tamilwin.com/article/incentive-payments-for-university-students-pm-1789211125</id>
            <summary type="text">மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது பிரதமரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு இடம்பெற்றது.</p><p>குறித்த நிகழ்வானது பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (12 ) நடைபெற்றது.
</p><p>
ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) ராஜதுரை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் அவர்களால் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.</p><h2>பாராட்டு நிகழ்வு</h2><p>
</p><p>
இதன்போது 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 மாணவர்களின் கல்வி சாதனைகள் மற்றும் திறமைகளை ஊக்குவிப்பதுடன், சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35be4fb9-3f38-4906-8bcc-a360779eaa3f/26-6aa533d0b6fad.webp' /></p><p>
</p><p>
மேலும் ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்த பிரதேச செயலகங்களைப் பாராட்டும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
</p><p>
இந்நிகழ்வில் சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்தின, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோசான் கமகே, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் என உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:13:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mubarak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலமுனைப் பிரதான வீதியில் கோர விபத்து! குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-on-balamunai-main-road-family-man-dies-1789210615"></link>
            <id>https://tamilwin.com/article/accident-on-balamunai-main-road-family-man-dies-1789210615</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது இன்று(12.9.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>விபத்தில் பாலமுனையை பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை - 08 அக்கரையை
வசிப்பிடமாகவும் கொண்ட&nbsp; 4 பிள்ளைகளின் தந்தையே
சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3938e2e-cace-4eb5-ab26-5b6c57d30573/26-6aa5315ab9115.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் அக்கரைப்பற்று பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:03:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் சோதனை - வசமாக சிக்கிய மத்தள விமான நிலைய விமானப்படை அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/air-force-officers-arrested-at-mattala-airport-1789209103"></link>
            <id>https://tamilwin.com/article/air-force-officers-arrested-at-mattala-airport-1789209103</id>
            <summary type="text">

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலைய 5 விமானப்படை அதிகாரிகள் வசமாக சிக்கியுள்ளனர். 

வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று,...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலைய 5 விமானப்படை அதிகாரிகள் வசமாக சிக்கியுள்ளனர். </p><p>

வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று, அந்த இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பில் 5 விமானப்படை அதிகாரிகள் மற்றும் இரண்டு சிவில் பிரஜைகள் ஆகியோரை மத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2>விசேட சோதனை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c8673d8-8c8c-48f2-8177-d8f333148657/26-6aa52f94d9b3e.webp' />&nbsp; &nbsp;</p><p> </p><p>

குறித்த விமானப்படை அதிகாரிகளால் விமான நிலைய நிலப்பரப்பினுள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை, வளாகத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற வேளையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது சந்தேகநபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த கைதை தொடர்ந்து, வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:55:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் கொலைக்களமாகும் பாதசாரிகள் கடவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seetha-amman-temple-pedestrian-crossing-death-1789208093"></link>
            <id>https://tamilwin.com/article/seetha-amman-temple-pedestrian-crossing-death-1789208093</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் இராமாயணத்துடன் தொடர்புபட்ட வரலாற்று
சிறப்புமிக்க சீதாஎலிய பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ள நுவரெலியா -
பதுளை பிரதான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் இராமாயணத்துடன் தொடர்புபட்ட வரலாற்று
சிறப்புமிக்க சீதாஎலிய பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ள நுவரெலியா -
பதுளை பிரதான வீதியில்
வாகனங்களின் பாவனையும், போக்குவரத்து நெரிசலும் தொடர்ச்சியாக
அதிகரித்துக்கொண்டே செல்கிறது.</p><p> அதற்கு ஏற்றால்போல் ஆலயதிக்கு முன் காணப்படும்
பாதசாரிகள் கடவையில் விதிமுறைகளை மீறுதலும், வாகன விபத்துக்களின்
எண்ணிக்கையும் கூட அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த வீதியில்
பயணிக்கும் வாகனங்கள் மட்டும் விபத்துக்குள்ளாவதில்லை, மாறாக நடைபாதையை
பயன்படுத்தும் பாதசாரிகளும், பாதசாரி கடவையை முறையாக பயன்படுத்தும் அப்பாவி
மக்களும் கூட விபத்தில் சிக்குகிறார்கள்.சில சமயங்களில் உயிரிழக்கவும்
செய்கிறார்கள்.</p><h2>விபத்து</h2><p> தற்போதைய நிலையில், வீதிகளில் நாம் மட்டும் விதிகளை பின்பற்றி
பயணிப்பதால் மாத்திரம் விபத்துக்களை தடுத்துவிட முடியாது என்கிற நிலை
உருவாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a40399dc-0933-4b63-b4ac-64331670bc71/26-6aa52c524f6a7.webp' /></p><p>
</p><p>
இறுதியாக வெள்ளிக்கிழமை (11) மாலை வரலாற்று சிறப்புமிக்க சீதாஎலிய
பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக காணப்படும் பாதசாரிகள் கடவையை
கடக்க முயன்ற ஒருவர் மீது முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் பலத்த காயம்
அடைந்துள்ளார்.</p><p> எனினும் முச்சக்கர வண்டி சாரதி கண்டுகொள்ளாமல் சென்று விட்டதாக
பிரதேச மக்கள் தெரிவித்தனர்.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
குறித்த ஆலயத்திற்கு முன்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள்
அதிகம் வந்து செல்லும் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். அது போலவே வீதி
விபத்துகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33ca4192-492e-451c-9516-c526ba4bf294/26-6aa52c5177d1a.webp' /></p><p> எனவே நுவரெலியா வீதி
போக்குவரத்து பொலிசாரும், வீதிகள் தொடர்பான அமைச்சும் இது தொடர்பில் அதீத
கவனத்தை செலுத்தி இது தொடர்பிலான நடைமுறைக்கு பொருத்தமான திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்! கரைச்சி பிரதேசசபை தவிசாளர் பொதுமக்களுக்கு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-sand-distribution-operations-1789205712"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-sand-distribution-operations-1789205712</id>
            <summary type="text">கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் பொது மக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் பொது மக்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>மணல் விநியோகம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஒரு சீரான ஒழுங்குமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை வட்டக்கச்சி, திருவையாறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட மணல், வரும் திங்கட்கிழமை முதல் இரணைமடுக் குளத்தின் உட்பகுதியிலிருந்து விநியோகிக்கப்படவுள்ளது.</p><p> 

இதற்காக முதற்கட்டமாக சுமார் 3000 கியூப் மணல் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் தங்களது சொந்த வீடமைப்பு, மலசலக்கூடங்கள் மற்றும் கிணறுகள் போன்ற தேவைகளுக்கும், அரச கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் தங்களது திணைக்களங்கள் மூலமாகவும் மணலைப் பெற்றுக்கொள்ள முடியும். (வீட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே மணல் வழங்கப்படும் என்ற செய்தி தவறானது). </p><h2>

தேவையான ஆவணங்கள்</h2><p> மணல் முறைகேடாக வெளியில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மணல் குறிப்பிட்ட இடத்திற்கு தான் கொண்டு செல்லப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரின் ஒப்புதல் கடிதம் அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c48f92a1-425e-4821-b152-68e620383268/26-6aa528b23579d.webp' /></p><p> </p><h2>

விலை விவரம் </h2><p>குறைந்தபட்சம் 40,000 முதல் அதிகபட்சம் 45,000 வரையிலான விலையில் மணலைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. களஞ்சியத்திலிருந்து மணலை ஏற்றிவிடும் பொறுப்பு பிரதேச சபையைச் சார்ந்தது. அங்கிருந்து எடுத்துச் செல்லும் பொறுப்பு விண்ணப்பதாரரைச் சார்ந்தது.</p><p> பாரவூர்தி சங்கத்தினர் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுக்கும் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியாரும் வாகனங்களை ஒழுங்கு செய்ய முடியும்.
</p><p>
ஜனவரி மாதம் முதல் ‘மணல் யாட்’ (Sand Yard) அமைத்து, உழவியந்திரம் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்கள் எளிதாக மணல் பெற புதிய நடைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது.</p><p> 

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகங்கள் இருப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:26:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் கும்பல்களின் புதிய உத்தி! தெஹிவளை குற்றச்செயல்களின் சூத்திரதாரிகள் அடையாளம் - பொலிஸாரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sdig-sajeeva-medhawaththa-statment-1789205044"></link>
            <id>https://tamilwin.com/article/sdig-sajeeva-medhawaththa-statment-1789205044</id>
            <summary type="text">எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவ - கட்டுபெத்த பகுதியில் இன்றைய தினம் (12) நடைபெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>புதிய உத்தி</h2><p>
</p><p>
மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக் கும்பல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக கைக்குண்டுத் தாக்குதல்களை ஒரு புதிய உத்தியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a604a9-f1f3-4bfc-84e1-8e9162456b04/26-6aa523bc5ffd5.webp' /></p><p> </p><p>

அத்துடன், தெஹிவளை-மவுண்ட் லாவினியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையை உலுக்கிய வன்முறைகளின் பின்னணியில் யார்.....! மூளையாக செற்பட்ட நபர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099"></link>
            <id>https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

குற்ற செயல்களில் மூளையாகச் செயற்பட்டவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதிவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><h2><b>தெஹிவளை தாக்குதல்</b></h2><p> 

தற்போது வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825c92c3-b244-4e18-82d4-15bab348c8f8/26-6aa51f4f8e104.webp' /></p><p>நேற்று அதிகாலை தெஹிவளை - கௌடான, சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், இரு மாணவர்கள் குறித்த வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் தந்தையின் கால்கள் காயமடைந்தன.</p><p>காயமடைந்தவரின் சகோதரன், படோவிட்ட அஸங்க என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h3><b>
கைக்குண்டுத் தாக்குதல்</b></h3><p>அதற்கமைய, இந்த கைக்குண்டுத் தாக்குதலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்மள்ளி என்பவர் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1318c143-7470-43a0-82cf-97f65e7fc22a/26-6aa522f512073.webp' /></p><p>கடத்தலுடன் தொடர்புடைய குறித்த நபரின் வீடு மீதே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வீடு மாறியமையால் அதற்கு அருகில் இருந்த சகோதரரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபருக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-12T09:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1789204321"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1789204321</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (12.9.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று (12.9.2026) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (13) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும். </p><p>

குறித்த அறிவிப்பின்படி, அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

அதேபோல், சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69b2df4-f3bd-443a-bb48-b008b7732b7d/26-6aa51b186b124.webp' /></p><p> </p><p>

இதன் காரணமாக, பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கம்! முள்ளிப்பொத்தானையில் கடும் வறட்சி - முற்றாக வற்றிய கிணறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789202092"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789202092</id>
            <summary type="text">எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை
மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை
மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையில் காணப்படுவதா எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
</p><p>நீண்ட காலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாததன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல
கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.</p><p>இதன் காரணமாக சில கிணறுகள் முற்றாக வற்றிய
நிலையில் காணப்படுகின்றன.</p><h2>குழாய் நீர் விநியோகம்</h2><p>
</p><p>
அதேவேளை, குழாய் நீர் விநியோகமும் தொடர்ச்சியாக இடம்பெறாமல், குறிப்பிட்ட
நேரங்களில் மாத்திரமே விநியோகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b5a894-0318-4cb6-9017-a2870d96150b/26-6aa51bafb7c04.webp' /></p><p>இதன் காரணமாக மக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, குடிநீர் தேவைக்காக கிணறுகளை நம்பியுள்ள குடும்பங்கள் வறட்சியால்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களிலும் மழை பெய்யாத
பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-vacancies-chancellars-edu-ministry-1789204352"></link>
            <id>https://tamilwin.com/article/university-vacancies-chancellars-edu-ministry-1789204352</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>பல வெற்றிடங்கள்..&nbsp;</h2><p>
</p><p>உயர்கல்வி தொடர்பான ஆலோசனைக் குழுவின் முன், துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebf8c250-bbf8-428e-9d4f-788720598821/26-6aa519e0bc431.webp' /></p><p>
</p><p>அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>இருப்பினும், சில பல்கலைக்கழகங்களில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் உள்ளமை இதன்போது சுட்டிக்காட்டத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் விருந்து என்ற பெயரில் இளைஞர், யுவதிகளின் வெறியாட்டம் - பின்னணியில் ஆபத்தான மர்மநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627"></link>
            <id>https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627</id>
            <summary type="text">பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்குவதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>பொலிஸாரின் கவனம்</b></h2><p>

இது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9d4d8a-fbe6-4315-9bf1-a1c33ff7a876/26-6aa519f58eb59.webp' /></p><p>இந்த வேலைத்திட்டத்தின் பலனாக தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எதிர்காலத்திலும் இது போன்ற இடங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுபோன்ற விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. </p><p>அவை வலையமைப்புக் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வணிகங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-12T09:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 மில்லியன் ரூபாய்க்கு சொகுசு பங்களா - ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-issued-to-shiran-basik-s-father-1789204698"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-issued-to-shiran-basik-s-father-1789204698</id>
            <summary type="text">ரூ. 30 மில்லியன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொகுசு வீடு வாங்கிய ஷிரான் பாசிக்கின் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மத்திய கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரூ. 30 மில்லியன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொகுசு வீடு வாங்கிய ஷிரான் பாசிக்கின் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பா வழக்கு இன்று(12.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2> 


விளக்கமறியல் உத்தரவு</h2><p>
ஷிரான் பாசிக்போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த , ரூ. 30 மில்லியன் பணத்தைக் கொண்டு, கம்பஹாவில் உள்ள பிரைம் ரெசிடென்சியில் தனது தந்தை அப்துல் ரசாக் ஹென்றி பாசிக் பெயரில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8de6a06-33ba-4bd8-b637-6befccb36d52/26-6aa5191b277c2.webp' /></p><p> </p><p>

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், பணச்சலவைச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) அப்துல் ரசாக் ஹென்றி பாசிக் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதனைத் தொடர்ந்து, இன்று(12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:19:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு: பெண்ணொருவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jewelry-stolen-in-nallur-woman-remande-1789203747"></link>
            <id>https://tamilwin.com/article/jewelry-stolen-in-nallur-woman-remande-1789203747</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி
அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு
முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து , துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய
சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி
அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.</p><h2>கைது</h2><p>&nbsp;கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
,பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd9ca202-dc0a-45aa-ad31-cec49db667c5/26-6aa51673ba807.webp' /></p><p>
</p><p>
அதனை அடுத்து குறித்த பெண்ணை யாழ்,நீதவான் நீதிமன்றில் பொலிஸார்
முற்படுத்திய நிலையில் ,அப்பெண்ணை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
</p><p>
அதேவேளை நல்லூர் ஆலய தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது, சுமார் 45
பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இந்தநிலையில் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள
நிலையில் , சில சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21323d9a-0990-49a2-93f7-9e26e74247fe/26-6aa5167470ec5.webp' /></p><p>அத்தோடு, அவர்களை கைது
செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்.. மூவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-in-jafnna-three-arrested-by-police-1789202908"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-in-jafnna-three-arrested-by-police-1789202908</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில்
சம்பவத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில்
சம்பவத்துடன் நொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வடமராட்சி - கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற
குறித்த சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p> </p><p>துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில், நபர் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர்
அடங்கிய குழு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c08c1965-06d3-4dea-b770-969ea59a0636/26-6aa5133f3f236.webp' /></p><p>


சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.</p><p>சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள
நிலையில், அவரை கைது செய்வதற்காக தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில்,
கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:56:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வரலாறு படைக்க வரும் போராட்டம் திரைப்படம் - யாழில் இன்று இசை வெளியீட்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056"></link>
            <id>https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. 

இந்த நிகழ்வு, இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு, இன்று(12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>இசை வெளியீட்டு விழா</h2><p>

இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் 070 341 4565 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவுச் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03754d7-ee3e-493a-85e7-43abd9f3eda2/26-6aa5128d83584.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், தாங்களும் கலந்து கொண்டு “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்க முடியும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதேவேளை, ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T08:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வுபெற்ற சுங்க அதிகாரிக்கு அரச உயர் பதவி - சூடுபிடிக்கும் 323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/323-containers-released-without-inspection-1789200886"></link>
            <id>https://tamilwin.com/article/323-containers-released-without-inspection-1789200886</id>
            <summary type="text">கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர், ஓய்வுபெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர், ஓய்வுபெற்ற பின்னர் அரசாங்கத்தில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அரசாங்கம் நல்லாட்சி கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>
நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்</h2><p>
இதற்கிடையில், கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21c0a94f-9f71-4386-b7a8-0154c27e4312/26-6aa50eaf247fe.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா, “தாமதமாவது சிக்கலானது” எனத் தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நியமிக்கப்பட்டிருந்தார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தனது இறுதி அறிக்கையில் கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கொள்கலன்களை அரசாங்கம் விடுவித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:36:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்திலுள்ள மிகப்பெரும் பிரச்சினைக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-chandhana-abayarathna-statement-1789201098"></link>
            <id>https://tamilwin.com/article/minister-chandhana-abayarathna-statement-1789201098</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார். </p><p>

குறிப்பாக, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் உத்தியோகத்தர்களை குறுகிய காலத்துக்கு குறித்த மாவட்டங்களுக்கு இணைத்து சேவையாற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>விசேட கலந்துரையாடல்</h2><p> </p><p>

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (12.09.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc5cbf10-57d6-4f81-b732-071b6339bf04/26-6aa50d950f292.webp' /></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் அளவுக்கு ஏற்ப பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரின் பற்றாக்குறை காணப்படுவது எமக்குத் தெரியும்.</p><h2>ஆட்சேர்ப்பு நடவடிக்கை</h2><p>
</p><p>
இதனை நிவர்த்தி செய்வதற்காக ஆட்சேர்ப்புகளுக்கு தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டு வருவதுடன், அரசாங்கமும் தேவையான ஆட்சேர்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a33dd9-00aa-491e-8541-5be27c8d121f/26-6aa50d9619cc9.webp' /></p><p>
</p><p>
ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதற்காக வட மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதியை குறைக்க முடியாது.

கடந்த காலங்களில் 'வடக்கின் வசந்தம்' போன்ற திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகளவான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p> 

எதிர்வரும் காலங்களிலும் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-sri-lanka-today-1789200376"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-sri-lanka-today-1789200376</id>
            <summary type="text">நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, கொழும்பு செட்டித்தெரு தங்க ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p> இதற்கமைய, கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தையில் இன்று (12) காலை ஒரு பவுண்&nbsp;தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.</p><h2>சந்தை நிலவரம்..&nbsp;</h2><p>நேற்றைய தினம் இதன் விலை 343,200 ரூபாவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991ac672-0dc8-4e39-9d4b-1e188fc80650/26-6aa50af8145f5.webp' /></p><p> </p><p>மேலும், கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, 24 கரட் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 373,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 375,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. </p><p>இருப்பினும், இந்த விலைகள் அடிக்கடி மாறுபடக்கூடியவை என்பதால், கொள்முதல் செய்வதற்கு முன்னர் தற்போதைய சந்தை விலைகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகச் சந்தையில் திடீர் சரிவை கண்ட கச்சா எண்ணெய் விலை - ஈரானின் அதிரடி முடிவால் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-prices-following-iran-s-decision-1789199433"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-prices-following-iran-s-decision-1789199433</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகச் சந்தையில் தொடர் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய் விலை தற்போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகச் சந்தையில் தொடர் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய் விலை தற்போது சரிவை கண்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பானது, நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டு இன்று(12.09.2026) வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் விலைக் குறியீடான ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை, நேற்றைய நிலவரப்படி, 108 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியிருந்தது.</p><p>

இந்த நிலையில், தற்போது 104.61 அமெரிக்க டொலாராக குறைந்துள்ளது.

இதேவேளை, ஒரு பீப்பாய் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெயின் விலையும், நேற்றைய தினம் 103.34 அமெரிக்க டொலராகப் பதிவான நிலையில் இருந்து, இன்று(12) 100.05 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.</p><h2>

உலகச் சந்தையில் குறைந்த கச்சா எண்ணெய் விலை</h2><p>
 மேலும், ஒரு பீப்பாய் முர்பான் கச்சா எண்ணெயின் விலையும், நேற்று 122.48 அமெரிக்க டொலராக இருந்த நிலையில் இருந்து, இன்று 119.46 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee3431d5-a9a6-4598-b846-8c1d81094ffe/26-6aa507e1101c6.webp' /></p><p> </p><p>

கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்துவரும் இராணுவச் சூழல் தீவிரமடைந்து வந்தபோதிலும், ஹோர்முஸ் நீரிணை குறித்து விவாதிப்பதற்காக ஈரானிய அதிகாரிகள் குழு ஒன்று ஓமானுக்குப் புறப்படுவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>

 பல வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த முக்கிய விவாதங்களில் கலந்துகொள்ள உள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:07:51+00:00</updated>
        </entry>
    </feed>
