<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-23T22:07:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகரிகா தொடருந்து மோதி முச்சக்கரவண்டி சாரதி மரணம்! மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagarika-train-accident-1787520522"></link>
            <id>https://tamilwin.com/article/sagarika-train-accident-1787520522</id>
            <summary type="text">கடற்கரை வீதி தொடருந்து பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்கரை வீதி தொடருந்து பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><p> அத்துடன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
</p><p>
மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட 'சாகரிகா' தொடருந்துடன்,&nbsp; முச்சக்கரவண்டி ஒன்று
மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><h2>பாதுகாப்பு கடவை</h2><p>

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர்
சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
</p><p>
தொடருந்து கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும்,
பாதுகாப்புக் கடவை இல்லாத காரணத்தினாலேயே தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துகள்
இடம்பெறுகின்றன என்றும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை
என்றும் குற்றம் சாட்டிப் பிரதேச மக்கள் தொடருந்து பாதையை மறித்து நேற்றுப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3300db9-d749-4cfd-aa87-7920f71f329d/26-6a8b660c385fd.webp' /></p><p>
</p><p>
இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதி தொடருந்து பாதையின்
போக்குவரத்தில் பாரிய இடையூறு ஏற்பட்டது.</p><p> பின்னர் பொலிஸார் தலையிட்டு, தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த
வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
</p><p>
அதன்பின்னர் அந்தப் பாதையில் தொடருந்து போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.&nbsp;</p><p> </p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T21:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு: வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான கார் பந்தயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/freedom-250-grand-prix-us-1787511383"></link>
            <id>https://tamilwin.com/article/freedom-250-grand-prix-us-1787511383</id>
            <summary type="text">அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,
அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான அதிவேக
கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,
அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான அதிவேக
கார் பந்தயம் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ஏற்பாடு செய்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய நினைவிடங்கள் மற்றும் வீதிகளை உள்ளடக்கி
நடத்தப்படும் இந்த 'Freedom 250 Grand Prix' கார் பந்தயத்தை சுமார் இரண்டு
இலட்சம் பார்வையாளர்கள் வரை நேரில் பார்வையிடுவார்கள் என
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

வொஷிங்டனின் புகழ்பெற்ற 'பென்சில்வேனியா' வீதியில் கார்கள் மணிக்கு 185 மைல்
வேகத்தில் செல்லும் வகையில் போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><h2>போட்டி ஆரம்பம்&nbsp;</h2><p>
</p><p>
இப்போட்டியை முன்னிட்டு இராணுவ விமானங்களின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதால்,
அங்குள்ள 'ரொனால்ட் ரீகன்' சர்வதேச விமான நிலையத்தின் வான்வழிப் போக்குவரத்து
மூன்று மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8558e92-190c-4077-b74e-7b35a7495c56/26-6a8b60d092f6c.webp' /></p><p>
</p><p>
இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில்
ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொண்டு போட்டியை முறைப்படி கொடியசைத்து ஆரம்பித்து
வைக்கவுள்ளார்.
</p><p>
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் டிரம்பின் ஆதரவு நிலை குறைந்துள்ள
நிலையிலும், ஈரான் போர் சூழலுக்கு மத்தியிலும், தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தை
பிரம்மாண்டமாக வெளிப்படுத்தும் நோக்கில் அவர் தொடர்ச்சியாக இவ்வாறான
விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T21:06:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு! நாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய பகிரங்க உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-court-s-announcement-against-rajapaksa-family-1787509091"></link>
            <id>https://tamilwin.com/article/high-court-s-announcement-against-rajapaksa-family-1787509091</id>
            <summary type="text">பொருளாதார மீளெழுச்சி தொடர்பில் ஆலோசனை வழங்கும் நாமல் ராஜபக்ச, தனது குடும்பம்தான் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதார மீளெழுச்சி தொடர்பில் ஆலோசனை வழங்கும் நாமல் ராஜபக்ச, தனது குடும்பம்தான் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p> 

பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. நாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்று நாமல் ராஜபக்ச தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்.</p><h2>நாமலின் ஆலோசனை&nbsp;</h2><p> </p><p> ஆனால், பொருளாதார பாதிப்புக்கான அடிப்படைக் காரணத்தை அவர் எவ்விடத்திலும் குறிப்பிடுவதில்லை. </p><p>

2022ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பம் பொருளாதார ரீதியாக எடுத்த தவறான தீர்மானங்களினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் ஏக மனதாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a62f03c-368e-4906-a574-dfbc4697a60c/26-6a8b3a31d60c8.webp' /></p><p> </p><p>

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்குதான் சர்வதே நாணய நிதியத்தின் ஆதரவு பெற்றுக் கொள்ளப்பட்டது. </p><p> 

பொருளாதார மீட்சி குறித்து ஆலோசனை கூறும் நாமல் ராஜபக்ச அதற்கு காரணம் தனது குடும்பம் தான் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
</p><p>
அரசாங்கத்தை வீழ்த்துவோம், மக்களை ஒன்றிணைப்போம் என்று ஜீ.எல்.பீரிஸ் வீட்டில் இரவிரவாக கூட்டம் நடத்தாமல் மக்களுக்கு மத்தியில் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T21:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் பதற்றம்! வளைகுடா நாடுகளுக்கு ஈரானின் உச்சக்கட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-war-new-updates-1787510409"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-war-new-updates-1787510409</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கு உதவக் கூடாது என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கு உதவக் கூடாது என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. </p><p>

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்த அறிவிப்பின் எதிரொலியாக ஈரானிடம் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்த நிலையில், அதற்கு பதிலடியை வழங்கும் பொருட்டு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.</p><h2>ட்ரம்பின் அறிவிப்பு&nbsp;</h2><p> 

இந்தநிலையில், தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.</p><p> 

இதற்கிடையே ஈரான் மீது இதுவரை இல்லாத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f52d585f-48b1-4bad-be6a-876b353c0a8f/26-6a8b401223363.webp' /></p><p>

இந்தநிலையில், ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாபி தெரிவிக்கையில்,</p><p> 

“அமெரிக்காவின் பொருளாதார அழுத்த தந்திரங்களுக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளிக்க வேண்டாம்.</p><p> ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் அறிவித்துள்ள பொருளாதாரப் போர் நடவடிக்கையில் அண்டை நாடுகள் இணைந்தால், ஹோர்முஸ் நீரிணைக்கு வெளியே உள்ள எண்ணை கப்பல் வழித்தடங்களை ஈரான் குறிவைக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbde78ce-4606-4cd1-8171-5b517a3428f4/26-6a8b4012cac24.webp' /></p><p>


ட்ரம்ப் ஏதாவது செய்ய விரும்பினால், நாங்கள் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுப்போம்.</p><p>

ட்ரம்ப்பின் பொறுப்பற்ற செயல்பாடுகளும் ஈரான் மீதான தாக்குதல்களும் பல நாடுகளிடையே அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான விருப்பத்தை அதிகரித்துள்ளன.
</p><p>
ட்ரம்ப் அணுசக்தி பாதுகாப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அணு சக்தி பாதுகாப்பின்மையையே உருவாக்கி உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T20:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசாங்கமே பொறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-responsible-if-suresh-sallay-is-harmed-1787503768"></link>
            <id>https://tamilwin.com/article/president-responsible-if-suresh-sallay-is-harmed-1787503768</id>
            <summary type="text">தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தினால் இந்த பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சலேவுக்கான நீதி</h2><p>
</p><p>மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை மூன்றாவது முறையாகத் தடுத்து வைக்கும் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்த்து, அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அந்த அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>கொழும்பில் நடைபெற்ற “சலேவுக்கான நீதி - உரையாடல் அரங்கம்” என்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் அவ்வமைப்பின் பிரதிநிதிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec69a46-c306-4f65-a9d7-33a68fa274b1/26-6a8b2499be26d.webp' />&nbsp; &nbsp;</p><p>
மேலும் தாமதிக்காமல் அவரை உடனடியாக சட்டத்தின் முன், அதாவது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் இந்த அரசாங்கத்தினை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T19:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமாக மறைந்த மகிந்தவுக்கு எதிரான 450 கோப்புகள்! 2 வருடங்களில் என்ன ஆனது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/450-files-against-mahinda-missing-1787506237"></link>
            <id>https://tamilwin.com/article/450-files-against-mahinda-missing-1787506237</id>
            <summary type="text">கடந்த தேர்தல் காலத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து பிரசாரம் செய்த அரசாங்கம் தற்போது அதனை மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த தேர்தல் காலத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து பிரசாரம் செய்த அரசாங்கம் தற்போது அதனை மறந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.</p><p> 

மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எங்கே மகிந்தவுக்கு எதிரான ஆதாரங்கள்&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெருந்தொகை இலஞ்சப் பணம் பெற்றதாகவும், அதனுடன் தொடர்புடைய காசோலைகளின் இலக்கங்கள் மற்றும் மகிந்தவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து கடந்த தேர்தல் காலத்தில் இந்த அரசாங்கம் பிரசாரங்களை முன்வைத்து வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/702baed3-3a69-491c-87d0-bc1f80ea1fed/26-6a8b3389bbbeb.webp' /></p><p> </p><p>

எனினும், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகியுள்ள நிலையில் தற்போது அந்தப் போலி பிரசாரங்களையெல்லாம் இந்த அரசாங்கம் மறந்து விட்டது.
</p><p>
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிவிப்பையும் வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
</p><p>
விவசாயிகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தற்போது விவசாயிகளை கசிப்பு குடிப்பவர்கள் என் கூறி அவமானப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-23T18:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடியில் தொடர்ந்து சிக்கும் நாமல் - 6 மணிநேரம் சி.ஐ.டி விசாரணையில் நடந்தது என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p> கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தங்காலை பே ஹோட்டல் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக நாமல் அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய CSN தொலைக்காட்சி ஊடாகப் ஈட்டப்பட்ட பணத்தை கொண்டே இந்த ஹோட்டல் வர்த்தகப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><h2><b>

வாக்குமூலம் பதிவு </b></h2><p>இதனடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றுள்ளார். </p><p>அத்துடன் நாமலுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74269162-f58b-44a6-9f60-c9ec104d4e02/26-6a8b2bf985a63.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச, இதற்கு முன்பும் பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

Krish Lanka நிறுவனத்தால் ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது. </p><p>

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>மேலும் NR Consultancy நிறுவனத்துடன் தொடர்புடைய 15 மில்லியன் ரூபாய் பணமோசடி பரிமாற்றம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. </p><p>எவ்வாறாயினும், Gowers Corporation நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். </p><p>அவரது சட்டத் தகுதிகள் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கொள்வது தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்தது. </p><p> எனினும் அந்த குற்றச்சாட்டுகளை நாமல் வன்மையாக மறுத்துள்ளார். இந்த புதிய அழைப்பு முற்றிலும் தங்காலை பே ஹோட்டல் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு மட்டுமே என தகவல்கள் வெளியாகி உள்ளன. </p>]]></content>
            <updated>2026-08-23T17:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/phis-strike-tommorow-1787504864"></link>
            <id>https://tamilwin.com/article/phis-strike-tommorow-1787504864</id>
            <summary type="text">&amp;nbsp;பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாளைய தினம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாளைய தினம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
</p><p>கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, பொது சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டதனை எதிர்த்துத்து, நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் தீவிர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p> இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bed6a7f-50a6-4870-a471-2e68c89f158e/26-6a8b28e29116a.webp' /></p><p>
இப்பிரச்சனை குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவித்தும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கவில்லை என அச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>
நாட்டின் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்திற்கு வழங்கும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எந்தவொரு தரவு அமைப்பையும் (Data systems updating) புதுப்பிக்கும் பணிகள் இடைநிறுத்தப்படும். இந்தப் போராட்டக் காலத்தில் விடுபடும் எந்தவொரு தரவுகளும் மீண்டும் ஒருபோதும் அமைப்புகளில் சேர்க்கப்படாது எனச் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
</p><p>அதிகாரி பி.எச். மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
</p><p>கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>எனினும், இப் பிரச்சினைகள் குறித்து நியாயமான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T17:08:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர குற்றம் சாட்டப்பட்டுள்ள மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை - உடனடியாக விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-consideration-for-pallegama-thero-1787491679"></link>
            <id>https://tamilwin.com/article/special-consideration-for-pallegama-thero-1787491679</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. </p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு அங்கு வந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி. தர்மசிறிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

மீண்டும் விசாரணை</b></h2><p>தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e075c43e-aec1-47f1-b811-efd9a182de07/26-6a8afc6b4e102.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.<br><br><b><i>you may like this..<br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HLy_ny-xG4I" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-23T16:46:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்கைத் துரிதப்படுத்தும் அநுர தரப்பு! விபரங்களை வெளியிட்டு வரும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-mps-case-to-be-heard-1787503492"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-mps-case-to-be-heard-1787503492</id>
            <summary type="text">தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம் செலுத்தி வருகின்றது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>மக்களின் வாழ்க்கைத் தரம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மக்களுக்கு வளமான வாழ்க்கையை வழங்குவதாக வாக்குறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதியினதும், 159 ஆளும் தரப்பு உறுப்பினர்களது வாழ்க்கை தான் வளமாகியுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கை ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a1453f6-4982-4778-a06f-f3ffc6b12e4e/26-6a8b2385b0812.webp' /></p><p> 

திறைசேரி நிரம்பிவழிகின்றது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால், மக்கள் வாழ்க்கைத் தரம் வறுமையால் நிரம்பி வழிகின்றது. </p><p>

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவுப்படுத்தவும், தண்டனைப் பெற்றுக் கொடுக்கவும் மாத்திரமே இந்த அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:45:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/born-in-1909-worlds-oldest-living-person-1787503011"></link>
            <id>https://tamilwin.com/article/born-in-1909-worlds-oldest-living-person-1787503011</id>
            <summary type="text">&amp;nbsp;உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.</p><p> 
இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் ஆகஸ்ட் 21 அன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இவர் இந்த வரலாற்றுச் சாதனையை மகிழ்வோடு கொண்டாடினார்.</p><p> 
ஆகஸ்ட் 21, 1909 அன்று ஹாம்ப்ஷயரில் பிறந்த இவர், 117 வயதை எட்டிய முதல் பிரித்தானிய நபர் என்ற புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e866399-a42c-4f55-ba4e-788ad57531a1/26-6a8b21a5089b9.webp' /></p><p> </p><p>
ஏப்ரல் 2025-இல் பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபாரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானதைத் தொடர்ந்து, எதேல் கேட்டர்ஹாம் உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக மாறினார்.</p><p> 
இரண்டு உலகப் போர்களையும் கடந்து வாழ்ந்துள்ள இவர், தனது 110-வது வயதில் கொரோனா தொற்றிலிருந்தும் மீண்டு வந்தார். </p><p>
1927-ஆம் ஆண்டு, தனது 18-வது வயதில் தனியாக இந்தியாவிற்குப் பயணம் செய்து, ஒரு பிரித்தானியக் குடும்பத்திற்குப் பராமரிப்பாளராக வேலை பார்த்துள்ளார். </p><p>
தற்போது இவர் 117 வயதை எட்டியிருந்தாலும், வரலாற்றிலேயே மிக அதிக காலம் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டின் ஜீன் கால்மென்ட் என்பவரின் 122 ஆண்டுகள் 164 நாட்கள் என்ற சாதனையை விட இவர் சில ஆண்டுகள் குறைவாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:37:05+00:00</updated>
        </entry>
    </feed>
