<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-30T23:09:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் விரித்த காபட் விரிப்பில் மிக வேகமாக பயணிக்கும் அநுர!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-wickremesinghe-anura-government-rajitha-1788128918"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-wickremesinghe-anura-government-rajitha-1788128918</id>
            <summary type="text">இலங்கை மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர அரசு,
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரித்த
காபட் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர அரசு,
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரித்த
காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன
தெரிவித்தார்.
</p><p>
காலி நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டு
எதிர்க்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, நீதிபதிகளின்
ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கே அரசு முன்னுரிமை அளிக்கின்றது.</p><h2>நீதிபதிகளின் ஓய்வு வயது..&nbsp;</h2><p> </p><p>இதற்குச்
சட்டத்தரணிகள் சங்கங்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, புத்திஜீவிகள்
மற்றும் அரசின் உள்ளகத் தரப்பினர் கூட எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef4db43-3f4a-4f6b-b082-0be5087d0f1f/26-6a94b07e722f6.webp' /></p><p>
</p><p>
அமைச்சர் லால் காந்த போன்றவர்கள் கூறுவது போல் மாவட்ட செயலாளர்கள், நீதிபதிகள்
மற்றும் ஆளுநர்களை அரசே தேர்ந்தெடுக்கும் கம்யூனிஸ்ட் நாடுகளின் ஆட்சி
முறையைக் கொண்டுவரவே அநுர அரச தரப்பினர் முற்படுகின்றனர். </p><p>இதன் மூலம் காலி
மாநகர மற்றும் பிரதேச சபைகள் பெலவத்தையிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படும்
நிலைக்கு நாடு தள்ளப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றார். </p><p>ரணிலை விட அநுர வேகமாக சர்வதேச
நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நோக்கிச் செல்கின்றார். உலகில் எங்காவது ஒரு
சோசலிச அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இயங்கியது உண்டா?" என்றும்
அவர் கேள்வி எழுப்பினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து சூசகமான முறையில் போதைப்பொருள் விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-sell-drugs-to-students-in-vavuniya-arrested-1788128303"></link>
            <id>https://tamilwin.com/article/man-sell-drugs-to-students-in-vavuniya-arrested-1788128303</id>
            <summary type="text">வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று (30.08.2026)
குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கைது நடவடிக்கை&nbsp;</h2><p>கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள லேகியம்
விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, அங்கு சோதனை
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45346300-5fec-4b20-8348-b046362debe3/26-6a94ad35e3dac.webp' /></p><p>

இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400ற்கும் மேற்ப்பட்ட லேகியப்
பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் வியாபார நிலையத்தில் கடமையாற்றிய 20
வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மேலும், குறித்த லேகியம் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு
விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>இதனை தொடர்ந்து, விற்பனை நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுத் துறையால் மறைக்கப்பட்ட உண்மைகள்.. யாழில் சிறீதரன் எம்பி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-missing-persons-conference-sritharan-speech-1788127925"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-missing-persons-conference-sritharan-speech-1788127925</id>
            <summary type="text">நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது
சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான
நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என்று வலிந்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது
சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான
நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
சர்வதேச மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் நடத்தி வரும்
தொடர் போராட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதியுடன் 10 ஆண்டுகளை நிறைவு
செய்கின்றது. </p><p>இத்தனை ஆண்டு காலப் போராட்டப் பாதையில், "தங்கள் பிள்ளைகள்
நிச்சயம் திரும்பி வருவார்கள்" என்ற பெரும் கனவோடும் நீதிக்கான ஏக்கத்தோடும்
போராடிய 260 இற்கும் மேற்பட்ட தாய்மார்களும் தந்தையர்களும் தம் உயிரைப்
பறிகொடுத்துள்ளனர்.</p><h3>புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்..&nbsp;&nbsp;</h3><p>
</p><p>
நல்லிணக்க ஆணைக்குழு போன்ற அமைப்புகள் மூலமாக உண்மை கண்டறிய முயன்றபோது,
சாட்சியமளிக்கச் சென்ற மக்களை இலங்கை புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a1b843-3584-403b-a3e3-7bf1d132eed6/26-6a94ab9d14d61.webp' /></p><p>
வழியிலேயே கொட்டகைகளை அமைத்து மக்களைத் திசைதிருப்பி, சாட்சியம் அளிப்பதைத்
தடுத்து நிறுத்தினர். இதனால் மக்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாத அச்சச்
சூழ்நிலையிலேயே வாழ நேரிட்டதுடன், முழுமையான சாட்சியங்களை வெளிப்படையாக வழங்க
முடியாமலும் போனது. </p><p>இதன் காரணமாக, உள்நாட்டு விசாரணை மற்றும் நீதி வழங்கும்
முறைகள் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன.

உள்நாட்டில் நீதி மறுக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றம் மூலமாக மட்டுமே
தங்களுக்குப் பூரண நீதி கிடைக்க முடியும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி
வருகின்றனர்.</p><p>

2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
முதன்முதலில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டபோது, அமெரிக்கா
மிகப்பெரிய அளவில் ஆதரவளித்து உதவியது. </p><p>அன்றுமுதல் இன்றுவரை அப்பிரேரணைகள்
வீணாகிவிடாமல், நீதியைப் பெறுவதற்கான முயற்சியில் அமெரிக்க நாடு காட்டிவரும்
கரிசனையையும் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன்
நினைவு கூருகின்றோம்." என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:16:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற இரு கொடூர கொலைகள்.. பல வருடங்களுக்கு பிறகு இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்டனை விதித்துள்ளார்.
</p><p>
திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை
மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்.</p><h2>குற்றச்சாட்டு நிரூபிப்பு&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
குறித்த 09 நபர்களையும் சந்தேகநபர்களாக பெயர் குறிக்கப்பட்டு, மேல் நீதிமன்றில்
சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள்
இடம்பெற்று வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ef98676-cc5a-4e82-9101-b326019060e9/26-6a94598800977.webp' /></p><p> </p><p>இந்நிலையில், குறித்த வழக்கு நேற்றைய வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்து
கொள்ளப்பட்ட வேளை, 09ஆம் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபிக்கப்பட்டமையால், அவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, ஏனைய 08
சந்தேகநபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், 08 பேரையும் மன்று விடுவித்தது.</p><p>

அதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை
கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இளைஞன்
மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால்,
இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து, மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:03:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-mortar-shells-recovered-private-land-kinniya-1788125814"></link>
            <id>https://tamilwin.com/article/two-mortar-shells-recovered-private-land-kinniya-1788125814</id>
            <summary type="text">கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார்
காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

ஆலிம் வீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார்
காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
ஆலிம் வீதியில் அமைந்துள்ள குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக
அத்திவாரத்திற்கான நிலத்தைத் தோண்டியபோதே, இந்த இரு மோட்டார் குண்டுகளும்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
கிண்ணியா ஆலிம் வீதியைச் சேர்ந்த முகம்மட் ராபிக் முகம்மட் ரிபாஸ்
என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/227159bf-87bc-45de-bfb8-beaf12603ba4/26-6a94a3d3860c4.webp' /></p><p>

இதனையடுத்து, காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு
விரைந்த கிண்ணியா பொலிஸார், குண்டுகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (31)
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T21:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தையின் மோசமான செயல் - 8 வருடங்களாக போராடிய மகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-sexually-abused-his-daughter-1788102709"></link>
            <id>https://tamilwin.com/article/father-sexually-abused-his-daughter-1788102709</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. </p><p>

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>

தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeac3f49-1434-44a3-952f-15194a375326/26-6a94492793d0f.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய்
இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T20:41:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட நெதன்யாகுவின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-son-urgently-evacuated-from-the-us-1788102510"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-son-urgently-evacuated-from-the-us-1788102510</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு
விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு
விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக
இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பான
ஷின் பெட் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுந்த கணிசமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை
மதிப்பீடு செய்த பின்னரே, அவரது பாதுகாப்புப் படையினருடன் அவரை உடனடியாக
தாயகம் திருப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவசரமாக வெளியேற்றம்</h2><p>
</p><p>
கடந்த டிசம்பர் மாதம் புளோரிடாவில் வசித்து வந்த யாயிர் நெதன்யாகுவைக் இலக்கு
வைத்து ஈரானிய சதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டதாக முன்னதாக அமெரிக்க ஊடகங்கள்
செய்தி வெளியிட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cba172-73a7-4d0b-8d2f-4b020c92aa4a/26-6a94487b39e52.webp' /></p><p>

வலதுசாரி செயற்பாட்டாளரும் பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடத்துனருமான யாயிர்
நெதன்யாகு, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் புளோரிடாவில் சொகுசு வாழ்க்கை
வாழ்ந்து வந்தமை இஸ்ரேலில் பலத்த விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.
</p><p>
குறிப்பாக காசா போர் தீவிரமடைந்த வேளையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய
இராணுவத்தினர் போருக்கு அழைக்கப்பட்ட நிலையில் இவர் வெளிநாட்டில்
தங்கியிருந்தமை அரசாங்க எதிர்ப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
</p><p>
இதேவேளை, தமது மகன்களில் ஒருவரைக் கொல்ல ஈரான் முயற்சிப்பதாக பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் தெரிவித்திருந்த கூற்றை உறுதிப்படுத்தும்
வகையில் இந்த அவசர வெளியேற்ற நடவடிக்கை அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T20:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசிற்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்! தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரன் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187"></link>
            <id>https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187</id>
            <summary type="text">&amp;nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தினை ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
தான் சட்டப்பூர்வமாக பெயரை மாற்றிக்கொண்டதாக அரசாங்க அமைச்சர் வெளியிட்ட கூற்றை "முற்றிலும் பொய்" என நிராகரித்து, அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.</p><h2>புலனாய்வுத் தகவல்..&nbsp;</h2><p>
</p><p>ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தன் மீதான இந்த குற்றச்சாட்டை உறுதியாக மறுத்துள்ள அவர், அந்த மறுப்பு அறிக்கையை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f239d7-e8c4-4b65-b228-f2bad936715b/26-6a9455ccc92ab.webp' /></p><p>
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கில் தேடப்படும் அர்ஜுன் மகேந்திரன், 'ஹர்ஜன் அலெக்சாண்டர்' (Harjan Alexander) என தனது பெயரை மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
</p><p>நான் பெயரை மாற்றியுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பகிரங்கக் கூற்று வெளியிட்டுள்ளமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பதை உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் அறியத் தருகிறேன்" என மகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சிங்கப்பூர் முகவரியைக் குறிப்பிட்டுள்ள அவர், "லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன்" (Lakshman Arjuna Mahendran) என்ற தனது அதிகாரப்பூர்வ பெயரிலேயே இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என குறித்த ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு பகிரங்க சவால்&nbsp;</h2><p>
</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பாக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான தடைகள் நிலவி வருகின்றன.</p><p>
</p><p>இந்த நிலையில், அவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான மாற்று வழிகளை இலங்கை அதிகாரிகள் ஆராய்ந்து வரும் வேளையில், அவரது அடையாளத்தை மையப்படுத்தி அரசாங்கம் முன்வைத்த கூற்றை அர்ஜுன் மகேந்திரன் நேரடியாக மறுத்துள்ளார்.
</p><p>சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அமைச்சரின் கருத்தை நிராகரித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பின் நிலைப்பாடு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இந்த மறுப்பு அறிக்கையை அர்ஜூன் மகேந்திரன் வெளியிட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதனையும் குறித்த ஊடகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T19:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் பேரழிவில் சிக்கிய நேபாளம் - 750 பேர் பலி: உதவிக்கரம் நீட்டும் நட்பு நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-is-caught-in-a-major-disaster-1788100169"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-is-caught-in-a-major-disaster-1788100169</id>
            <summary type="text">நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறை சரிவு
காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளில் சிக்கி
உயிரிழந்தவர்களின் எண்ணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறை சரிவு
காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளில் சிக்கி
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750ஆக அதிகரித்துள்ளதுடன், 3 000
மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இமாலயப் பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த கோர விபத்தினால்
சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம்
மதிப்பிட்டுள்ளது.
</p><p>
நேபாளப் பகுதியில் 734 பேரும், சீனப் பகுதியில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும்
பல்லாயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளனர்.</p><h2>

நேபாளத்தில் உயர்வடையும் ஆற்று நீர்மட்டம்</h2><p>
தொடர்ச்சியான மோசமான வானிலை மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால்
மீட்புப் பணிகளில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9db217c-d5f1-430c-823e-e1c19b719652/26-6a943e9caeca4.webp' /></p><p>
</p><p>
வெள்ளத்தால் சேதமடைந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளில்
நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை மீட்கும்
பணிகளுக்கு சர்வதேச உதவிகள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
இதனிடையே, மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பான்மையானவை அடையாளம் காண முடியாத
அளவிற்கு சிதைவடைந்துள்ளதால், அவற்றின் டி.என்.ஏ மாதிரிகள் மற்றும்
புகைப்படங்களை சேகரித்த பின்னர் நேபாளத்தில் உடல்களை நல்லடக்கம் செய்யும்
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
உலக வெப்பமயமாதல் காரணமாகவே இமயமலையில் பனிப்பாறை உறுதியிழந்து இந்த பேரழிவு
ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9859dfae-2932-4d1f-b63d-a145a166a184/26-6a943e9d7f5f9.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T18:42:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெளிவான போர்த் திட்டங்களை சமர்ப்பிக்க உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukraine-defense-minister-vows-submit-war-plans-1788113832"></link>
            <id>https://tamilwin.com/article/ukraine-defense-minister-vows-submit-war-plans-1788113832</id>
            <summary type="text">உக்ரைனின் 27 பில்லியன் டொலர் இராணுவ பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கும்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிதியை முன்னதாகவே பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் 27 பில்லியன் டொலர் இராணுவ பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கும்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிதியை முன்னதாகவே பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக
சர்வதேச பங்காளிகளுக்கு தெளிவான போர் மூலோபாய திட்டங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக
உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ஏவ்ஹேனி க்மாரா தெரிவித்துள்ளார்.
</p><p>
ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டாக தொடரும் நிலையில், உக்ரைன் சர்வதேச
நிதியுதவிகளிலேயே பெருமளவில் தங்கியுள்ளது.</p><h2>உக்ரைனின் கோரிக்கை</h2><p>
</p><p>
அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியம் 2027ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கு 90
பில்லியன் யூரோ நிதியுதவியை வழங்க உறுதியளித்துள்ள போதிலும், அடுத்த
ஆண்டிற்காக திட்டமிடப்பட்டுள்ள 45 பில்லியன் யூரோ கடனின் ஒரு பகுதியை விரைவாக
விடுவிக்குமாறு உக்ரைன் கோரிக்கை விடுக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2378a0fb-08d8-471e-aa06-dc805cac2cea/26-6a94752fae018.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்புப் படைகள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவையான திட்டங்கள் மற்றும்
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய எதிர்பார்க்கும் இலக்குகள் தொடர்பான
தெளிவான பார்வையை பங்காளிகளுக்கு முன்வைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன் புதிய இராணுவ தலைமை தளபதி மைக்கைலோ டிராபதியுடன் இணைந்து உக்ரைனின்
பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் வீச்சுகளுக்கு
மத்தியில், மனிதவள பற்றாக்குறை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் தேவையை
நிவர்த்தி செய்வதுடன், உக்ரைனிய படைவீரர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான
சரியான தீர்மானங்களை எடுப்பதே தமது முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர்
வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T18:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் அதிநவீன ரோமன் தொலைநோக்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nasa-state-art-roman-telescope-launched-into-space-1788112203"></link>
            <id>https://tamilwin.com/article/nasa-state-art-roman-telescope-launched-into-space-1788112203</id>
            <summary type="text">நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான நான்சி கிரேஸ் ரோமன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி
மையத்திலிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான நான்சி கிரேஸ் ரோமன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி
மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம்
ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.</p><p>

சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன
தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இரகசியங்களான இருண்ட ஆற்றல், இருண்ட பருப்பொருள்
மற்றும் புதிய கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>சுற்றுவட்டப் பாதை</h2><p>
</p><p>
புவியிலிருந்து சுமார் 16 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச்
பொயின்ட் 2 எனும் சுற்றுவட்டப் பாதையை நோக்கி இது பயணிக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4278ce-f323-42a4-84c7-9d64f493c781/26-6a947118b6143.webp' /></p><p>

ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகளின் ஆற்றலை விடவும் அதிக பரந்த
பார்வைத்திறன் கொண்ட இந்தத் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் விரிவான முப்பரிமாண
வரைபடத்தை (3D Map) உருவாக்கவுள்ளது.
</p><p>
ஹப்பிள் தொலைநோக்கி நூறாண்டுகளில் செய்யக்கூடிய விண்மீன் மண்டல ஆய்வுகளை
ரோமன் தொலைநோக்கியால் ஒரே மாதத்தில் செய்து முடிக்க முடியும் என விண்வெளி
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த
விண்வெளி ஆராய்ச்சி மையம், திட்டமிட்ட நேரத்திற்கு ஒன்பது மாதங்களுக்கு
முன்னதாகவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T18:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-swiss-music-concert-woman-killed-1788111041"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-swiss-music-concert-woman-killed-1788111041</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை விருந்து நிகழ்ச்சியொன்றில்
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளம் பெண்
ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை விருந்து நிகழ்ச்சியொன்றில்
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளம் பெண்
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட டெக்னோ இசை நிகழ்ச்சி அதிகாலை வேளையில்
நிறைவடைந்த தருணத்திலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>

சம்பவத்தில் காயமடைந்தவர்களும் உயிரிழந்த பெண்ணும் 20 முதல் 27 வயதிற்குட்பட்ட
சுவிட்சர்லாந்து வாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் நகரின்
பல பகுதிகளை முடக்கி தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c05dd1bf-bef1-464e-888d-e6436956c31b/26-6a946a0816222.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சம்பவம் தொடர்பிலான ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள் ஏதேனும்
இருப்பின் அதனை வழங்கி உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிப் பயன்பாட்டு உரிமங்கள் பரவலாக காணப்படுகின்ற
போதிலும், இவ்வாறான கொடூரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அரிதாகவே
இடம்பெறுகின்றன.
</p><p>
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T17:36:16+00:00</updated>
        </entry>
    </feed>
