<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-10T03:48:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை துப்பாக்கிச்சூடு: கைதான 23 வயது இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/23-year-old-arrest-attempted-shooting-in-dehiwala-1786329218"></link>
            <id>https://tamilwin.com/article/23-year-old-arrest-attempted-shooting-in-dehiwala-1786329218</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் துப்பாக்கியால் நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சியில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் துப்பாக்கியால் நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சியில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 

அத்துருகிரிய பொலிஸ் பிரிவின் ஹபரகட பகுதியில் உள்ள ஜெயவர்தனபுர சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால், சந்தேக நபர் நேற்று (10.08.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு</h2><p>

 

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவின் கடவத்த வீதிப் பகுதியில் ஒருவரைச் சுட முயன்ற சம்பவத்தில் சந்தேக நபர் ஈடுபட்டதாகக் கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e8f759-33e8-42c1-9eeb-a2c4d3f40317/26-6a793c9b7eede.webp' /></p><p>சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

பொலிஸாரின் தகவல்படி, சந்தேக நபர் ஹோமாகமவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
 

தெஹிவலா பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T02:52:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு! உண்மையை அம்பலப்படுத்தினால் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630</id>
            <summary type="text">இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடராதிருப்பதற்கு அல்லது வழக்குகளை மீளப் பெறுவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. </p><p>

இந்தத் திருத்தமானது, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 விசாரணை ஆணைக்குழு</b></h2><p>திருத்தங்களுக்கமைய, இதுவரை மேல்நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக மட்டுமே காணப்பட்ட அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04921074-3974-4a86-a40e-d6d45f0e8a31/26-6a7938852d7b5.webp' /></p><p>அத்துடன், ஊழல் மூலம் பெறப்பட்ட அல்லது ஊழல் மூலம் வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பினை அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>

மேலும், ஊழல் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது பிற இலாபங்கள் என்பவற்றை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாக கருதுவதற்கும் இத்திருத்தங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது தவிர, மாகாண அரச சேவையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இத்திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-10T02:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-phone-nos-for-al-exam-students-1786328223"></link>
            <id>https://tamilwin.com/article/special-phone-nos-for-al-exam-students-1786328223</id>
            <summary type="text">&amp;nbsp;கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் சீரற்ற வானிலையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கினால் அறிவிப்பதற்கு அவசர இலக்கங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் சீரற்ற வானிலையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கினால் அறிவிப்பதற்கு அவசர இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
</p><p>தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் தடைகள் அல்லது பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கங்களையோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>சீரற்ற வானிலையால் உயர்தரப் பரீட்சைக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்கும் நோக்கில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் பரீட்சைகள் திணைக்களமும் இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றைச் செயற்படுத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feeb5f11-f67d-49d9-a470-9d70fa9730b4/26-6a7935507f609.webp' /></p><p>பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அனர்த்தங்கள் காரணமாக ஏற்படும் தடைகளை நீக்கி, விரைவாகச் செயற்படுவதற்காக இந்த ஒருங்கிணைப்பு முறைமை பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அவசர இலக்கம்: 117
</p><p>விசேட கூட்டு அவசர செயற்பாட்டு அறை: 0113 668119, 0113 668026, 0113 668032, 0113 668087, 076 3 117 117
</p><p>பரீட்சைகள் திணைக்கள அவசர இலக்கம்: 1911
</p><p>அனர்த்தங்கள் காரணமாகப் பரீட்சைக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் மேற்கண்ட இலக்கங்களுக்கு உடனடியாகத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளையும் ஒருங்கிணைப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T02:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் இன்று முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805"></link>
            <id>https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805</id>
            <summary type="text">பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.</p><p> 

கொழும்பில் நேற்று (09.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். </p><h2>எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவு</h2><p>கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/747f02ad-a45f-4d2f-9929-b5a307fb7dc1/26-6a79334733501.webp' /></p><p>

2024ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. </p><p>

இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T02:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் ஆடம்பர மாளிக்கைக்குள் சிக்கிய இலங்கையில் தேடப்படும் குற்றக்கும்பல் - தப்பியோடிய கஞ்சிபானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-s-friends-coming-to-sri-lanka-today-1786326578"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-s-friends-coming-to-sri-lanka-today-1786326578</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்களான ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலக குற்றவாளிகள் இன்று இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்களான ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலக குற்றவாளிகள் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். </p><p>

மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் ஆகியவற்றின் உதவியுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான பொலிஸ் குழுவினராலே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

சிறப்புப் பாதுகாப்புடன் அழைத்து வரப்படும் இந்த 3 குற்றவாளிகளும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p> </p><h2><b>

கைது செய்யும் நடவடிக்கை</b></h2><p>உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான குழுவினர் கஞ்சிபானி இம்ரானை கைது செய்யும் நடவடிக்கையை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாடு திரும்பியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/916d8c72-2f87-4031-b10b-8cfeb88bad84/26-6a79306ff2b58.webp' /></p><p>இருந்த போதிலும், மலேசிய பொலிஸாரும் இன்டர்போல் அமைப்பும் இக்குற்றவாளியைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் தற்போது மலேசியாவிலிருந்து தப்பியோட முடியாதவாறு முற்றுகையிடப்பட்டுள்ளார்.</p><p> 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. விசாரணை அதிகாரிகளின் தகவலுக்கமைய, மலேசியாவில் கைது செய்யப்பட்ட ரத்மலானை சைமா, கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் பெரும்பாலான பாதாள உலக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார். </p><p>

செல்வந்தராகக் கூறப்படும் ரத்மலானை சைமாவுக்கு தாய்லாந்தில் ஐந்து மாடி ஆடம்பர ஹோட்டல் உட்பட பல வணிக நிறுவனங்கள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p> </p><h3><b>போதைப்பொருள் வலையமைப்பு</b></h3><p>இந்த சொத்துக்கள் அனைத்தும் சைமாவினால் கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கியதன் மூலமே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f774d04-9f0b-4207-a6dc-a6ebb3c147b2/26-6a79315728cb7.webp' /></p><p>சைமா கைது செய்யப்பட்டுள்ளமை கஞ்சிபானி இம்ரானுக்கு பெரிய அடியாகக் கருதப்படுவதோடு, மலேசியாவில் அவரது நடவடிக்கைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மலேசியாவில் பதுங்கியிருக்கும் கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்காக ரோஹன் ஒலுகல மற்றும் சட்டப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி வசந்த பிட்டியகும்புற ஆகிய இருவரும் சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவுக்குச் சென்றிருந்தனர்.</p><p> 

மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு பொலிஸார் மற்றும் இன்டர்போல் அமைப்பினது உதவியைப் பெற்ற உதவி ரோஹன் ஒலுகல, கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்கான பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார். </p><p>

கஞ்சிபானி கைது செய்யப்படுவதற்கு முன்னர், ரத்மலானை சைமாவைக் பிடிக்க விசாரணை அதிகாரிகள் வெற்றிகரமாகச் செயற்பட்டனர். </p><p>சைமா சிக்கிய செய்தி கசிந்தவுடன், கஞ்சிபானி இம்ரான் தான் பதுங்கியிருந்த இடங்களை மாற்றிக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்று இரகசியமாகத் தலைமறைவாகியுள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-10T02:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scanners-will-be-fixed-for-jails-1786326416"></link>
            <id>https://tamilwin.com/article/scanners-will-be-fixed-for-jails-1786326416</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
இதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த இயந்திரங்கள் சிறைச்சாலைகளில் நிறுவப்பட்டதன் பின்னர், கைதிகளுக்குக் கொண்டு வரப்படும் உணவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலமாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9936cef3-5f2d-4bfe-b807-591b87afb199/26-6a792d91aec31.webp' /></p><p>
</p><p>இந்த ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்படுவதன் மூலம், தற்போது முன்னெடுக்கப்படும் உடற்பரிசோதனைகளை நவீன முறையில் செய்ய முடியும் எனவும், இதன் மூலம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சிறைச்சாலைச் சுவர்களுக்கு வெளியே இருந்து உள்ளே எறியப்படும் சட்டவிரோதப் பொதிகளைத் தடுப்பதற்கு, சிறைச்சாலை நிர்வாகத்துடன் இணைந்து புதிய பாதுகாப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷண மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T01:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஹண விஜேவீரவின் குடும்பத்திற்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச செய்த அநியாயங்கள் : மகன் வெளியிட்ட தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rohana-wijeweera-ranasinghe-premadasa-1786325377"></link>
            <id>https://tamilwin.com/article/rohana-wijeweera-ranasinghe-premadasa-1786325377</id>
            <summary type="text">ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் குடும்பத்தினரை 48 நாடுகள் அழைத்துச் சென்று சகல வசதிகளையும் வழங்க முன்வந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி பிரேமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் குடும்பத்தினரை 48 நாடுகள் அழைத்துச் சென்று சகல வசதிகளையும் வழங்க முன்வந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச தனது நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி அவை அனைத்தையும் தடுத்ததாக ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.
</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர், நாங்கள் கணேமுல்ல முகாமில் இருந்தபோது அம்மாவும் எம்மீது அன்புகாட்டியவர்களும் அப்பாவின் ஆதரவாளர்களும் எங்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல நிறைய முயற்சி செய்தார்கள். </p><p>பல வெளிநாட்டுத் தூதரகங்கள் இதில் தலையிட்டன. எனக்குத் தெரிந்தவரையில் 13 நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் எங்களை ஒப்படைக்குமாறு கேட்டிருந்ததாகப் பின்னர் எங்களுக்குத் தெரியவந்தது.</p><h2>பிரேமதாசவின் அதிகார அழுத்தம்</h2><p>எங்களுக்கு முழுப் பாதுகாப்பையும் கல்வியையும் வழங்குவதாக தெரிவித்திருந்தனர். அரசியல் புகலிடம் வழங்கப்பட்டால் ஓய்வூதியம் கூட வழங்குவார்கள். </p><p>அப்படி முழுமையான பாதுகாப்புடன் 13 நாடுகள் எங்களைக் கேட்டிருந்தன. 43க்கும் மேற்பட்ட நாடுகள் விசாரித்திருந்ததாகவும் சுமார் 48 நாடுகள் வரை விசாரித்து 13 நாடுகள் எங்களை ஏற்றுக் கொள்ளச் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்பட்டது. </p><p>ஆனால் ஜனாதிபதி பிரேமதாச எங்களைப்போக அனுமதிக்கவில்லை. தனது அதிகாரமிக்க தன்னிச்சையான முடிவினால் எங்களைத் தடுத்து வைத்திருந்தார்.
அந்த நேரத்தில் அம்மாவின் அண்ணன் ஒருவர் இருந்தார். டாக்டர் சந்திராபானு என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e89765-091e-497e-9fd6-dcda8a36eb3f/26-6a792983e84f0.webp' /></p><p>அவரும் ஒரு சர்ச்சைக்குரிய நபர். அவரும் எங்களை விடுவிப்பதற்காக வந்தார். அந்த நேரத்தில் சர்வதேச அளவில் அரசாங்கத்திற்கு வந்த முக்கிய அழுத்தம் கல்வி தொடர்பானது. </p><p>அதாவது கல்வி என்பது எவராலும் மறுக்க முடியாத அடிப்படை உரிமை. அதனால் இந்த குடும்பத்தின் குழந்தைகளுக்குக் கல்வி இல்லை என்பதால் இவர்களை முகாமில் இருந்து விடுவித்து வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கேட்டார்கள். </p><p>அதற்கு ஜனாதிபதி பிரேமதாச சம்மதிக்கவில்லை.
அப்போது கணேமுல்ல என்பது கொழும்புக்கு மிக அருகில் உள்ளது. அதனால் கணேமுல்ல முகாமிற்கு முன்னால் மனித உரிமைகள் அமைப்புகள் அடிக்கடி வரும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd946995-f1ca-46b9-9779-c33423adf0c3/26-6a7929849c97d.webp' /></p><p>தூதரக அதிகாரிகள் வருவார்கள். அப்பாவின் ஆதரவாளர்கள் வருவார்கள். அதுவும் அவர்களுக்கு ஒரு தொல்லையாக மாறியது. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மோதல்கள் நிலவிய திருகோணமலைப் பகுதிக்கு எங்களை அனுப்ப ஜனாதிபதி தீர்மானித்தார். </p><p>அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு அப்போது இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று ஆரம்பமாகும் 2026 உயர்தரப் பரீட்சை..! மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2026-advanced-level-examination-1786324043"></link>
            <id>https://tamilwin.com/article/2026-advanced-level-examination-1786324043</id>
            <summary type="text">2026 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) இன்று (10) ஆரம்பமாகிறது. 

இந்தப் பரீட்சை செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) இன்று (10) ஆரம்பமாகிறது. </p><p>

இந்தப் பரீட்சை செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>&nbsp;உயர்தரப் பரீட்சை</h2><p>

இம்முறை பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 264,496 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 107,814 பேரும் உள்ளடங்கலாக மொத்தம் 372,310 பேர் தோற்றவுள்ளனர்.</p><p>

பரீட்சை ஆரம்பிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c36e97-7fae-4c0c-a962-89a18e74f175/26-6a7925aa88959.webp' /></p><p>

அதேவேளை, கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள், புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரீட்சை மோசடி</h2><p>
</p><p>
பரீட்சை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66601b92-1488-439c-bffd-38e7e503af0d/26-6a7925ab4625d.webp' /></p><p> </p><p>

கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த - கோட்டாபய - பசிலுக்கு பெரும் அதிர்ச்சி..! நீதிமன்றத்தின் ஆபத்தான தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-brothers-trouble-dangerous-court-verdict-1786309718"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-brothers-trouble-dangerous-court-verdict-1786309718</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இவர்கள் தான் காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உயர்மட்ட அரசியல்வாதிகள் சட்ட ரீதியான சிக்கல்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
</p><p>
இவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக, 'வீட்டுக்காவலில்' வைப்பதற்கான சட்ட நடைமுறைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
</p><p>
 இது இத்தகைய உயர் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dhCViA6wjKI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:18:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து! விசாரணைக்காக அழைக்கப்பட்ட சாகர காரியவசம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-comment-regarding-igp-priyantha-1786322225"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-comment-regarding-igp-priyantha-1786322225</id>
            <summary type="text">பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

இந்த அழைப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம், தான் தெரிவிக்காத விடயங்களைத் திரித்து தவறான அர்த்தங்களை வழங்கி, அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
தான் கூறிய கருத்துகளைத் திரிபுபடுத்தி காண்பிப்பதன் மூலம் எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
கடந்த காலங்களில் இதுபோன்ற அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்ட உலகத் தலைவர்களுக்கு இறுதியில் துரதிர்ஷ்டவசமான நிலையே ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அதே பாதையில் பயணிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f431daf-1d10-4335-bcb9-d0670ae482c6/26-6a791eb4ee185.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்ததும் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு எதேச்சதிகாரமாக செயற்பட்டதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் சரியான புரிதலுடன் இருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்கள் இதற்கு உரிய பதிலை வழங்குவார்கள் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல திடுக்கிடும் தகவல்கள்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/who-killed-wasim-thajudeen-namal-rajapaksa-1786321340"></link>
            <id>https://tamilwin.com/article/who-killed-wasim-thajudeen-namal-rajapaksa-1786321340</id>
            <summary type="text">ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல தகவல்களை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.குறித்த தகவல்களை தர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல தகவல்களை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த தகவல்களை தர்க்க ரீதியாக ஒப்புவித்து தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல கருத்துக்கள்...
</p><p>தாஜுதீன் கொலை யோஷிதவில் தொடங்கியது. ஆனால், அந்த நேரத்தில் யோஷித இலங்கையில் இல்லை. பின்னர் அம்மா ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுத்ததாக குறிப்பிட்டனர். </p><p>அவரும் கொழும்பில் இருக்கவில்லை. 
அதற்குப் பிறகு கொழும்பில் இருக்கும் குடும்பத்தினர் யார் என்று பார்த்தார்கள். மஹிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிட முடியாது. அதனால் என் பெயரைப் போட்டார்கள்.</p><h2>

</h2><p></p><h2>சோடிக்கப்பட்ட சிசிரிவி (CCTV) காட்சிகள்&nbsp;</h2><p>
2015 ஆம் ஆண்டில் எனக்கு நினைவிருக்கும் வகையில் ஊடகங்களில் பெரியளவில் பேசப்பட்ட ஒரு விடயம் தான் அம்மாவின் 'சிரிலிய சவிய' சமூக சேவை அமைப்பிற்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டி ஒன்று தாஜுதீனின் காரை பின்தொடர்ந்ததாக வெளியான சிசிரிவி (CCTV) காட்சிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். </p><p>பின்னர் அந்த ஜீப் வண்டி கைப்பற்றப்பட்டதாகவும் அந்த ஜீப் வண்டியின் நிறம் பலமுறை மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நாட்டின் ஒவ்வொரு சம்பவம் தொடர்பாகவும் சிசிரிவி காட்சிகள் குறித்து பல நாடுகளிடம் அறிக்கை கோரப்பட்டது.</p><p>சமீபத்திய வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து சம்பவங்களின் சிசிரிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
இப்போது இந்தக் காட்சிகள் இருந்தால், யாரோ ஒருவர் பின்னால் துரத்திச் சென்றார் என்று தெளிவாக சிசிரிவி இருந்தால், அரசாங்கத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ இந்தக் காட்சிகளைத் தெளிவாக ஊடகங்களுக்கு முன்வைக்க முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e21a122-f33c-437a-8bba-6a06897c0013/26-6a7919bf0f102.webp' /></p><p>ஏன் செய்யவில்லை?
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதைச் செய்யவில்லை. சமூக ஊடகங்களில் இந்த விடயத்தைப் பேசும்போதும் கூட இந்த சிசிரிவி காட்சிகள் குறித்துக் குறிப்பிடப்படுவதில்லை.
</p><p>ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இறுதியில் தாஜுதீன் மோதிய வாகனம் வேறு ஒன்று என்றார்கள். ஆனால் இப்போது பின்னால் சென்ற வாகனம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படியானால் பின்னால் சென்ற வாகனத்தைத் தேடும்போது இது சிக்கவில்லையா?
</p><p>ஆனால் அன்று அந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய நபர் இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார். அதாவது முதலில் குற்றச்சாட்டு சுமத்தியவர் இப்போது தான் சொன்னது பொய் என்று சொல்கிறார்.
</p><p>அந்த காலத்தில் அரசியல் மேடைகளில் குற்றச்சாட்டு சுமத்தியவர்கள் இன்று ஊடகச் சந்திப்புகளில் சொல்கிறார்கள், அவை அந்த காலத்தில் அரசியல் மேடைகளில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்று. </p><p>ஏனென்றால் அவர்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள்.
இதெல்லாம் அரசியலுக்காக சோடிக்கப்பட்ட காரணங்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது பதவி விலகல் தொடர்பில் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க வெளியிட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-samarasinghe-posts-about-his-resignation-1786316583"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-samarasinghe-posts-about-his-resignation-1786316583</id>
            <summary type="text">பதவி விலகுமாறு அரசாங்கம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட காரணிகளுக்காக பதவி விலகியுள்ளேன் என அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதவி விலகுமாறு அரசாங்கம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட காரணிகளுக்காக பதவி விலகியுள்ளேன் என அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

தனது பதவி விலகல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பதவி விலகிய மகிந்த சமரசிங்க</h2><p> </p><p> 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் 31 ஆம் திகதி தூதுவர் பதவியில் இருந்து விலகி, நாட்டுக்கு வந்துள்ளேன். பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை.
</p><p>
சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தனிப்பட்ட காரணங்களினாலேயே பதவி விலகினேன். ஐந்து ஆண்டுகாலத்தில் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் சேவையாற்றியுள்ளேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328fda07-c371-47b8-9f7b-dc4224db5bc4/26-6a79091229703.webp' /></p><p>சிறந்த முறையில் செயற்படுவதால் எவரும் என்னுடன் முரண்படவில்லை.

பதவிக்காலத்தில் இலங்கை-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறவும்&nbsp;அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.</p><p>மேலும் அமெரிக்காவால் விதிக்கப்படும் வரிகளை 10 சதவீதமாக கட்டுப்படுத்தவும் அமெரிக்காவிடமிருந்து ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பல ஹெலிகொப்டர்களைப் பெற்றுக்கொடுக்கவும் பெரிதும் துணை புரிந்தேன்.</p><p>
 27 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். அரசியலில் முக்கிய பதவிகளை வகித்துள்ளேன். 

இனி அரசியலில் ஈடுபடும் நோக்கம் கிடையாது. இருப்பினும், சர்வதேச விவகாரங்களில் ஆதரவளிக்குமாறு கோரப்பட்டால் அரசாங்கத்திற்கு உதவத் தயாராகவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் சிறுவன் ஒருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-boy-was-arrested-without-permission-in-mannar-1786304714"></link>
            <id>https://tamilwin.com/article/a-boy-was-arrested-without-permission-in-mannar-1786304714</id>
            <summary type="text">&amp;nbsp;மன்னார் - சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து புகைப் படங்களையும்
காணொளிகளையும் எடுக்க உதவும் கருவியான ட்ரோன் கேமராவை அனுமதியின்றி
பறக்க விட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மன்னார் - சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து புகைப் படங்களையும்
காணொளிகளையும் எடுக்க உதவும் கருவியான ட்ரோன் கேமராவை அனுமதியின்றி
பறக்க விட்ட சிறுவன் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(09.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>கைது செய்யப்பட்ட சிறுவன்</h2><p>
</p><p>
பாதுகாப்பு அமைச்சினால் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி பறக்க
விட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார்
பொலிஸ் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே
மன்னார் - சௌத்பார், பனங்கட்டுகொட்டு பகுதியில் குறித்த சிறுவன் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72be78ac-22f5-4376-a55c-1faa3ecbde7c/26-6a78dc2f76932.webp' /></p><p>

கைது செய்யப்பட்டவர் சிறுவனிடமிருந்து DJI Mini 4 Pro ரகத்தைச் சேர்ந்த ஒரு ட்ரோன்
கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-kuma-invite-people-namal-political-culture-1786298275"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-kuma-invite-people-namal-political-culture-1786298275</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை
உருவாக்க மட்டக்களப்பு மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை
உருவாக்க மட்டக்களப்பு மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்
சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மட்டக்களப்பில் நேற்று(08.08.2026) இடம்பெற்ற
ஊடக மாநாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளராக பதவி
ஏற்றுக் கொண்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவின் அரசியல் பணி&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், 
அமைப்பாளர் பதவி என்பது ஒரு அதிகாரமிக்க பதவி அல்ல இது மக்களுக்கான
பொறுப்பாகவே நான் கருதுகின்றேன். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டமானது
பல சமூக, இன, மதம் சார்ந்த ஒரு கட்டமைப்பைக் கொண்ட மக்கள் வாழும் பிரதேசமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe7bb53f-6087-4c45-92e2-86fb4f296e12/26-6a78c60550617.webp' /></p><p>நாமல் ராஜபக்சவின் அரசியல் பணி எந்தவித சமூகத்துக்கும் முரண்பாடு இல்லாமல்
அனைத்து சமூகத்தையும் இணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டது. </p><p>

அதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு உலகளாவிய ரீதியில் தொழிநுட்பம் சார்ந்த பல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.
</p><p>
அது மட்டுமல்லாது
கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வு இல்லாமல்
நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் தயாராகவுள்ளோம்.</p><p></p><h2>அபிவிருத்தித் திட்டங்கள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன் கல்வி , அடிப்படை வசதி, உட்கட்டமைப்பு போன்ற பல அபிவிருத்தி
விடயங்களை சரியாக கொண்டு செல்வதற்கு இலகுவான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவுள்ளோம்.
</p><p>
அதேவேளை எதிர்கால நாட்டின் வளர்சிக்காகவும் இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும்
மட்டக்களப்பின் வளர்ச்சிக்காகவும் புதியதொரு சூழலை உருவாக்கும் பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb2ac4b-841e-42b0-a8ea-c682834b893d/26-6a78c604a04d6.webp' /></p><p>எனவே கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து
அதற்குரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவே நான் இந்த
பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
</p><p>
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அந்த கருத்து வேறுபாடு எந்தவொரு
சமூகத்தையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுடன் வார்த்தைகளால் மட்டும்
அல்லாது செயல்கள் மூலமாக மக்களுக்கு சேவை செய்யவே இந்த அரசியல் பயணத்தை நான்
ஆரம்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T23:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பரபரப்பு: ஈரான் ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mojtaba-khameneis-iran-president-meet-1786314865"></link>
            <id>https://tamilwin.com/article/mojtaba-khameneis-iran-president-meet-1786314865</id>
            <summary type="text">ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சமீபத்தில் சந்தித்ததாக உச்சத் தலைவரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சமீபத்தில் சந்தித்ததாக உச்சத் தலைவரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு போர் தொடங்கிய பின்னர், உச்சத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாத நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அயத்துல்லா மொஜ்தபா கமேனி</h2><p>
</p><p>
“ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தனது பதவிக்காலத்தின் மூன்றாவது ஆண்டின் தொடக்கத்தில் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்” என உச்சத் தலைவரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7995fb4-e060-440e-a2dd-abc4c595fc21/26-6a79028fc5f6a.webp' /></p><p> </p><p>

எனினும், இந்த சந்திப்பு எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

2024 ஜூலை மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற பெசெஷ்கியான், கடந்த மே மாத தொடக்கத்தில் கமேனியை சந்தித்ததாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். </p><p>

ஆனால், அப்போது உச்சத் தலைவரின் அலுவலகம் இதுகுறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கடந்த புதன்கிழமை, கமேனியுடன் தற்போது தொடர்புகொள்வது “மிகவும் கடினமாக உள்ளது” என பெசெஷ்கியான் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>ஈரான் போர்</h2><p> 

இதற்கிடையில், அவரது தந்தையை கொன்ற தாக்குதல்களில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd633211-60ae-4f3e-b18f-67a406c0f330/26-6a7902907856c.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஜனாதிபதியும் உச்சத் தலைவரும் நாட்டின் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாகவும், குறிப்பாக தற்போதைய இராணுவ நிலைமை மற்றும் எதிர்கால நிலவரங்கள் குறித்து பேசியதாகவும் உச்சத் தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான், போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது.</p><p></p><h2>உச்சத் தலைவர் சந்திப்பு</h2><p>

 ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போருக்குப் பின்னர், ஆரம்பகட்ட ஒப்பந்தம் ஒன்று தோல்வியடைந்தது. தற்போது மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகளை பரிமாறிக்கொள்வது மட்டுமே நடைபெற்று வருவதாக ஈரானின் உயர்மட்ட தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec2e4c83-e279-479d-b6e0-ae5bd52b5275/26-6a790291289b2.webp' /></p><p>
</p><p>
மேலும், ஞாயிற்றுக்கிழமை ஈரானின் தஸ்னீம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கமேனி மக்களுடன் இருக்கும் காட்சிகள் மற்றும் அவர் பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்கும் காட்சிகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என புரட்சிகர காவல்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

எனினும், அந்தக் காட்சிகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அவர் எந்த காலக்கெடுவையும் தெரிவிக்கவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-09T23:14:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: இணையத்தில் துப்பாக்கிகளை கையாள கற்ற 14 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thailand-school-shooting-police-report-attacker-1786313183"></link>
            <id>https://tamilwin.com/article/thailand-school-shooting-police-report-attacker-1786313183</id>
            <summary type="text">​பேங்கொக் நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய 14
வயது சிறுவன், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப்
பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பேங்கொக் நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய 14
வயது சிறுவன், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப்
பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன் வன்முறை சார்ந்த உள்ளடக்கங்களை அதிகமாகப்
பார்த்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​</p><p>கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், குறித்த சிறுவன்
முதலில் வீட்டில் இருந்த தனது தாய் வழி தாத்தா, பாட்டியைச் சுட்டுக் கொன்ற
பின்னர், பாடசாலைக்குச் சென்று மேலும் அறுவரைக் சுட்டுக் கொன்றுவிட்டுத்
தவறான முடிவெடுத்துகொண்டான்.</p><p></p><h2>பொலிஸார் தகவல்</h2><p>

​சம்பவம் தொடர்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த
பிராந்திய பொலிஸ் துணை ஆணையாளர் அத்தாபோல் அனுசித், அந்த சிறுவன் கடந்த ஒரு
வருடத்திற்கும் மேலாகத் துப்பாக்கிகள் மீது ஆர்வம் காட்டி வந்துள்ளதை
உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>
மேலும், கடந்த வருடம் அந்த சிறுவன் பாடசாலைக்குக் கொண்டு வந்த ஏர்-கன் (BB
gun) ரகத் துப்பாக்கியை ஆசிரியர் ஒருவர் பறிமுதல் செய்திருந்ததாகவும் அவர்
குறிப்பிட்டார்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1709d6f8-06cc-4986-9246-4cc54483e8a0/26-6a78fe19df9cf.webp' /></p><p>இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களைத் தவிர 20க்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு தாய்லாந்தில் இடம்பெற்ற மிக மோசமான
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாக இது கருதப்படுகின்றது.

​</p><p>இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்தத்
தாய்லாந்து கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், மாணவர்களின் மனநலப் பரிசோதனை,
அவசர காலப் பயிற்சிகள் மற்றும் ஆபத்தான பொருட்களைப் பாடசாலைக்குக்
கொண்டுவருவதைத் தடுக்கும் சோதனைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள்
தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:54:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது அரகலய போராட்டம் சிறைச்சாலைகளில் வெடிக்கும் அபாயம்! வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2nd-aragaliya-may-start-from-prisons-1786295777"></link>
            <id>https://tamilwin.com/article/2nd-aragaliya-may-start-from-prisons-1786295777</id>
            <summary type="text">இலங்கையின் அடுத்தகட்ட அரகலய அல்லது மக்கள் போராட்டம் சிறைச்சாலை அமைப்பை மையமாகக் கொண்டு தொடங்குவதற்கான தீவிர அபாயம் நிலவுவதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அடுத்தகட்ட அரகலய அல்லது மக்கள் போராட்டம் சிறைச்சாலை அமைப்பை மையமாகக் கொண்டு தொடங்குவதற்கான தீவிர அபாயம் நிலவுவதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக கண்டிக்கு விஜயம் செய்திருந்தபோதே, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அரசியலமைப்பு திருத்தம்</h2><p>சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி மற்றும் அங்குள்ள சீர்கேடுகள் குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் தீர்வு காணத் தவறினால், நாட்டின் அடுத்தகட்ட மக்கள் போராட்டத்தின் (அரகலய) ஆரம்பப் புள்ளியாக அதுவே அமையும் என தெரிவித்துள்ளார்.</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்த மைத்திரி குணரத்ன, ஏனைய அரசு ஊழியர்களுக்கு இல்லாத ஒரு சிறப்புச் சலுகையை நீதிபதிகளுக்கு மட்டும் வழங்குவது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42870385-b039-498e-a5c6-87db8e93820e/26-6a78b5e331cd1.webp' /></p><p>
</p><p>இராணுவ அதிகாரிகள் 55 வயதிலும், ஏனைய சிவில் அரசு ஊழியர்கள் 60 வயதிலும் ஓய்வுபெறும்போது, நீதிபதிகளுக்கு மட்டும் சேவைக்காலத்தை நீடிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>ஒரு குறிப்பிட்ட நபரின் சேவைக்காலத்தை அரசாங்கம் நீட்டித்தால், அந்தத் தீர்மானத்தை எடுத்த தரப்பிற்கு அவர் நன்றியுடையவராகச் செயல்படக்கூடும். இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
இந்த அரசியலமைப்பு திருத்தம் 2028-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், தற்போதைய அரசியல் சூழலில் இத்தகைய அவசரத் தீர்மானங்களை எடுப்பதற்குப் பின்னால் மறைமுக நோக்கங்கள் இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் படைகள் ஈரானில் கால்பதித்தால் கடும் பதிலடி – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-cut-them-off-iran-general-warns-us-ground-1786310871"></link>
            <id>https://tamilwin.com/article/will-cut-them-off-iran-general-warns-us-ground-1786310871</id>
            <summary type="text">ஈரான் இராணுவத்தின் தரைப்படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் இராணுவத்தின் தரைப்படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட எச்சரிக்கையில், </p><p>ஈரானுக்குள் எந்தவொரு வெளிநாட்டு தரைப்படை தலையீடும் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு உடனடியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>இராணுவத் தளபதி எச்சரிக்கை</h2><p>

“அமெரிக்க இராணுவ வீரர்கள் யாரேனும் ஈரானில் கால்பதித்தால், அவர்களைத் தடுத்து நிறுத்துவோம்” என ஜஹான்ஷாஹி கூறியதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
எதிரிகளின் எந்தவொரு நடவடிக்கைக்கும் உறுதியான மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அமையும் வகையில் பதிலளிக்க ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c355fa0b-c632-499b-98c2-6a50d8a333f7/26-6a78f3f775469.webp' /></p><p>
</p><p>
மேலும், நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஈரான் இராணுவ தரைப்படைகள் முழுமையான போர்த்தயார் நிலையில் இருப்பதாகவும், எதிரிகளின் நடமாட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டின் எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து வருவதாகவும் ஜஹான்ஷாஹி தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகள் நேரடியாக இடம்பெறாமல், இடைத்தரகர்கள் மூலம் தொடர்வதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p>[MORWWCE</p><h2>அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
“தற்போது அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இடைத்தரகர்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன” என அவர் அரச ஊடகமான IRIB-க்கு தெரிவித்துள்ளார்.</p><p>

பல நாடுகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாகவும், அமெரிக்கா முன்னர் செய்த ஒப்பந்த மீறல்களுக்கு தீர்வு காணும் வரை நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் திரும்பாது என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7e0511a-8446-4f8f-828a-c25b07c21ffb/26-6a78f3f61ec69.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்லும் பாதை மற்றும் அதற்கான சட்டரீதியான நடைமுறைகள் தொடர்பாக ஓமானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அராக்சி கூறியுள்ளார்.</p><p>

எனினும், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது அமெரிக்காவிடமிருந்து இழப்பீடு உள்ளிட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு உட்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னர் பயன்படுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து பிரிப்பு திட்டம் (TSS) இனி ஏற்றுக்கொள்ள முடியாது என ஈரான் தெரிவித்துள்ளதாகவும், புதிய பாதை ஒன்றை உருவாக்க வேண்டியிருப்பதாகவும் அராக்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இதற்கு பல்வேறு தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da3d7d3-b568-4466-8a94-5322b5cd8b65/26-6a78f3f6c436e.webp' /></p><p>

மறுபுறம், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உடன்பாடு விரைவில் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும், தடையின்றி வர்த்தகக் கப்பல்கள் மீண்டும் செல்லும் வகையில் உடன்பாடு அறிவிக்கப்பட்டவுடன், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து மடு அன்னை திருத்தலத்திற்கு பாத யாத்திரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pilgrimage-from-manalkadu-to-madhu-shrine-1786299433"></link>
            <id>https://tamilwin.com/article/pilgrimage-from-manalkadu-to-madhu-shrine-1786299433</id>
            <summary type="text">மன்னார் - மருதமடு அன்னையின் பெரும் திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி, கிழக்கு மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திதிலிருந்து மணல்காடு
பக்தர்கள் 100 க்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - மருதமடு அன்னையின் பெரும் திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி, கிழக்கு மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திதிலிருந்து மணல்காடு
பக்தர்கள் 100 க்கு மேற்பட்டோர் நேற்று(09.08.2026) பிற்பகல் 3:00 மணியளவில் பாத யாத்திரை
பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

மணல்காடு பங்கு தந்தையின் ஆசீர்வாத வாழிபாட்டுடன் ஆரம்பமான பாதயாத்திரை நேற்று
இரவு மணல்காடு சந்தி மருதங்கேணி புதுக்காடு ஊடக இயக்கச்சி தேவாலயத்தை
சென்றடைந்த அங்கிருந்து இன்று(10) காலை மீண்டும் பாத யாத்திரை
ஆரம்பமாகவுள்ளது.</p><h2>பெரும் திருவிழா</h2><p>இதேவேளை மணல்காடு கிராமத்திலிருந்து மருத மடு அன்னை தேவாலயம்
செல்லும் யாத்திரிகர்களுடன் பயண பாதையிலுள்ள கிறிஸ்தவ மக்கள் பலரும் இணைந்து
மடு அன்னை தேவாலயம் வரை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554fc718-1fae-4d70-bed2-8868d75cc08f/26-6a78cd53113cf.webp' /></p>]]></content>
            <updated>2026-08-09T22:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-war-strait-hormuz-trump-started-iran-war-1786297850"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-war-strait-hormuz-trump-started-iran-war-1786297850</id>
            <summary type="text">ஈரான் முற்றிலுமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறும் முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிடத் தயாரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் முற்றிலுமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறும் முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிடத் தயாராக இருக்கலாம் என The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
முழுமையான மற்றும் இறுதியான அணுசக்தி ஒப்பந்தத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, முக்கிய எண்ணெய் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதை அடிப்படையாகக் கொண்டு, பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், தற்போதுள்ள போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டிய The Wall Street Journal, ட்ரம்ப் கடந்த சில வாரங்களாக இதற்கான சூழலை உருவாக்கி வருவதாகவும், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றைப் பெற முடியாவிட்டாலும் அதிலிருந்து விலகிச் செல்லலாம் என அவர் தனது மூத்த ஆலோசகர்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p>

எனினும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a5fd276-8df1-4025-befb-8a2267fae56e/26-6a78c2c00945b.webp' /></p><p> 

இதில் பல பில்லியன் டொலர் நிதி வழங்கல், அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருதல், பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுதல், பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகியவை அடங்குகின்றன.
</p><p>
இந்தக் கோரிக்கைகள் காரணமாக வாஷிங்டனின் இராஜதந்திரத் தெரிவுகள் குறைந்துள்ளதாகவும், விரைவான உடன்பாட்டை எட்டுவதற்குப் பதிலாக நீண்டகால மோதலுக்கு ஈரான் தயாராகி வருவதற்கான அறிகுறிகளாக இவை இருப்பதாகவும் The Wall Street Journal தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்க போர்க்கப்பல்கள்</h2><p>
</p><p>
ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள குறுகிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை, ஈரானின் முக்கியமான அழுத்தக் கருவிகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p><p>

 ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை ஈரான் பாதித்துள்ளதாகவும், இதனால் கப்பல் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்பட்டு உலக சந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74d432b0-19ec-48fe-bd37-2c8b08f6e1e6/26-6a78c2c0ba371.webp' /></p><p>

போர் தொடங்கிய பின்னர் பெப்ரவரி மாதத்தில் ஈரான் இந்த நீர்வழிப் பாதையை மூடியதாகவும், அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படக்கூடாது என ஈரான் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அதேவேளை, இந்த நீர்வழிப் பாதையைப் பயன்படுத்தும் வர்த்தகக் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும் ஈரான் முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><h2>&nbsp;பெட்ரோல் விலைகள்&nbsp;</h2><p>

எனினும், இந்தக் கட்டுப்பாடுகளையும் ஈரான் விதிக்க முயலும் கட்டண முறையையும் அமெரிக்கா நிராகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி The Wall Street Journal தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் சமீப காலங்களில் பலமுறை கூறியிருந்தாலும், அந்தக் கூற்றுகள் தொடர்ந்து முன்கூட்டியதாகவே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef4bf2c1-d446-4b03-9636-d7d612f9a91a/26-6a78c2c16fbdf.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், பெப்ரவரி இறுதியில் மோதல் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலையை விட அமெரிக்காவில் பெட்ரோல் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.</p><p>

மேலும், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இராணுவ நடவடிக்கை தனது இலக்குகளை அடைந்தது என்பதை அமெரிக்க வாக்காளர்களிடம் நிரூபிக்க வேண்டிய அரசியல் அழுத்தத்திலும் ட்ரம்ப் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T22:16:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடைமழை, பலத்த காற்று: சாமிமலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-winds-affect-9-families-in-samimale-1786302039"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-winds-affect-9-families-in-samimale-1786302039</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம் - சாமிமலை, ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் அண்மையில் பெய்துவரும் அடைமழை மற்றும் பலத்த காற்றினால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம் - சாமிமலை, ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் அண்மையில் பெய்துவரும் அடைமழை மற்றும் பலத்த காற்றினால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>&nbsp;குறித்த லயன் குடியிருப்பில் உள்ள சில வீடுகளுக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பலத்த காற்றின் காரணமாக வீடுகளின் கூரைத் தகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.</p><p></p><h2>சேதமடைந்த கூரைகள்&nbsp;</h2><p> </p><p>

அத்துடன், இந்தக் குடியிருப்பில் வசிக்கும் 13 பாடசாலை மாணவர்களும், தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களும் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். </p><p>

மழை தொடர்ச்சியாக பெய்துவரும் நிலையில், சேதமடைந்த கூரைகள் ஊடாக மழைநீர் வீடுகளுக்குள் கசிவதால், தங்களது பிள்ளைகளுடன் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15be9848-4353-4403-8b47-3cb5f99a8d1e/26-6a78d7bd2130e.webp' /></p><p>
குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 

இந்த நிலையில், தங்களது வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும், இதுவரை தங்களுக்கு நிரந்தரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p></p><h2>தொழிலாளர்கள் இடையேயான பிரிவினை</h2><p> </p><p>

கூரைத் தகரங்கள் சேதமடைந்த குடும்பங்களுக்கு உடனடியாக புதிய கூரைத் தகரங்களை வழங்குவதுடன், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
</p><p>
இதேவேளை, கடந்த பல வருடங்களாக ஸ்டொக்ஹோம் தோட்ட நிர்வாகம் மற்றும் சில அதிகாரிகளினால் தொழிலாளர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa58d509-bfa1-4024-81d1-df3a71fc9a18/26-6a78d7bc3d047.webp' /></p><p>
</p><p>
 தோட்டத்தில் தொழில் புரிபவர்கள் மற்றும் தற்போது தொழில் வாய்ப்பு இல்லாதவர்கள் என பிரிக்கப்பட்டுவதுடன் நிர்வாகத்திற்கு சார்பானவர்கள் மற்றும் சார்பற்றவர்கள் என தொழிலாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
 இதன் காரணமாக சில தொழிலாளர்கள் தொழிலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், மேலும் சில தொழிலாளர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தோட்ட நிர்வாகத்தின் தரப்பிலான பதில் இதுவரை கிடைக்கவில்லை.</p><p></p><h2>அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள்</h2><p> </p><p>

அண்மைய சீரற்ற காலநிலையினால் வீடுகளின் கூரைத் தகரங்கள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கூரைத் தகரங்களை வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p> 

இதன்போது, தோட்டத்தில் தற்போது தொழில் புரியும் குடும்பங்களுக்கு தலா 8 பழைய கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டதாகவும் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற குடும்பங்களுக்கு கூரைத் தகரங்களை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ae7a9f-43ed-483f-9af4-a19f7869acd8/26-6a78d7bb34621.webp' /></p><p>
</p><p>
மேலும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, தோட்ட நலன்புரி மற்றும் வெளிக்கள அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டு தங்களுக்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். </p><p>இதனடிப்படையில் தோட்ட நிர்வாகத்தினரை உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடியிருப்புகள் மேலும் சேதமடைவதற்கு முன்னர், அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T22:01:35+00:00</updated>
        </entry>
    </feed>
