<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-09T06:17:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வு : வடக்கு மாகாண ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/graduate-teacher-interview-northern-province-1788932525"></link>
            <id>https://tamilwin.com/article/graduate-teacher-interview-northern-province-1788932525</id>
            <summary type="text">பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத்
தீர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத்
தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத்
தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடலானது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (08.09.2026) ஆளுநர்
செயலகத்தில் நடைபெற்றது.
</p><h2>பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்&nbsp;</h2><p>
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்
வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், இலங்கை ஆசிரியர் சேவைக்கு 23 ஆயிரத்து 344
பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393690cc-231b-4cc0-bb18-367d510b8299/26-6aa0f4f469350.webp' /></p><p>
இதனடிப்படையில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளுக்கான
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் போட்டிப் பரீட்சை
நடத்தப்பட்டிருந்தது.</p><p>அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்
நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறும் பட்டதாரிகளை அழைத்தல், நேர்முகத்
தேர்வுகளை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.</p><p>
இவற்றை காலதாமதமின்றி மேற்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர், ஆளுநரின்
செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின்
செயலாளர், பிரதம செயலாளருக்காக பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், மாகாண
கல்விப் பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், ஆளுநரின் உதவிச்
செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-case-politicians-in-risk-1788929226"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-case-politicians-in-risk-1788929226</id>
            <summary type="text">டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p> 

ஷிரான் பாசிக் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், சிலரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><h2><b>
கறுப்புப் பணம்</b></h2><p>அதற்கமைய, தெஹிவளை, கல்கிஸ்சை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணைக் குழுக்கள் அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c81b70-feeb-45a3-97b1-4fd1f2d1dcfb/26-6aa0e808903fb.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் தனசிறி அமரதுங்க, ஷிரான் பாஸிக்கின் போதைப்பொருள் வர்த்தக மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை சட்டப்பூர்வ சொத்துகளாக மாற்ற உதவி செய்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடற்கரைகளில் ஹோட்டல்களை அமைக்க ஷிரான் பாஸிக்கிற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் அதிகாரிகளால் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.</p><p>
</p><h3><b>
அநுர அரசின் நடவடிக்கை</b></h3><p>ஷிரான் பாஸிக்கின் தொலைபேசி மற்றும் வங்கிப் பரிமாற்றங்களின் தரவுகளும் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/408a329a-07ff-4b2b-bbd4-1c2937549901/26-6aa0e809441cc.webp' /></p><p>பாஸிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மேலும் 3 முன்னணி அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் நாட்களில் நேரடியாக வாக்குமூலம் பெற விசாரணைக் குழுக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.</p><p>வெள்ளவத்தை முதல் தெஹிவளை, கல்கிஸ்ஸ கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத ஹோட்டல்களை நீக்கப் போவதாக சமகால அநுர அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><i><b>you may like this video </b></i></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3P6P7mu8JVo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i></i></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதியின் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை : சுனில் ஹந்துன்நெத்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amentment-1788929705"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amentment-1788929705</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதில் எந்த
முரண்பாடும் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதில் எந்த
முரண்பாடும் இல்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.</p><p>

களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய
விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>22 தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
"உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அரசமைப்புத்
திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
வாக்குகள் அவசியமானவை என்பதால், அதனை நாடாளுமன்றத்தில் விரைவாகச் சமர்ப்பித்து
நிறைவேற்றுவதாகவே ஜனாதிபதி குறிப்பிட்டார்.
</p><p>
ஒருவேளை உயர்நீதிமன்றம் இந்தச் சட்டமூலத்துக்குச் சர்வஜன வாக்கெடுப்பு (மக்கள்
தீர்ப்பு) அவசியம் என உத்தரவிட்டால், அதனை எதிர்கொள்வதிலும் அரசுக்கு எவ்வித
ஆட்சேபனையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea47dfc9-43ea-49ef-9cd9-aec5404ecce2/26-6aa0f3ca511c9.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், அரசின் இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத்
தெரிவித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான
நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகச் சுதந்திர செயற்பாட்டு மையம், இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளது.</p><p>

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசின் சார்பில் திட்டமிட்ட தாமதம்
எதுவும் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறைகளில் ஏற்படும்
இயல்பான நடைமுறைத் தாமதங்களே இதற்குக் காரணம். இது நீண்டகால யுத்தம்,
பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பரந்த விடயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315872ef-7922-430f-a1fa-ff0528e9763a/26-6aa0f3c98296a.webp' /></p><p>
</p><p>
மேலும், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வடக்கு, கிழக்கு
மக்களுக்கு நேரடியாகத் தொடர்புடையது என்பதால், அனைத்துத் தரப்பினரின்
கருத்துகளையும் கேட்டு விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டியுள்ளது.
</p><p>
சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பான பொலிஸாரின் நடைமுறை விளக்கங்களும் சட்ட
வரையறைகளும் சிக்கலானதாக அமைந்திருப்பதும் தாமதத்துக்கு மற்றொரு காரணமாகும்.
</p><p>எவ்வாறாயினும், அரசு அளித்த வாக்குறுதியின்படி, பொதுமக்களின் ஆலோசனைகளைப்
பெற்று நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் வகையில் மிக
விரைவில் இதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா உறுதியாகத் துணை நிற்கும்! பாதுகாப்புத் துறை அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-statement-1788930351"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-statement-1788930351</id>
            <summary type="text">இலங்கை எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். </p><p> 

இலங்கைக்கான விஜயத்தின் போது நேற்றைய தினம் (08.09.2026) கொழும்பில் இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி</h2><p>
</p><p>
இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த உறவுகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa4754e-f3d5-475c-b233-bc9c5ad0d998/26-6aa0f1ca0e7fd.webp' /></p><p> </p><p>

இந்தியாவின் வேகமான பொருளாதார மாற்றத்தை எடுத்துரைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர், உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாகவும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.</p><h2>இந்தியாவின் பொருளாதாரம்</h2><p>
</p><p>
2014ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் அது இரட்டிப்பாகி தற்போது சுமார் 4 டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d75d2e0-ca5e-45a5-b7db-733a75454fee/26-6aa0f1cae0864.webp' /></p><p> </p><p>மேலும், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:43:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-progress-violations-armed-conflict-sri-lanka-1788930706"></link>
            <id>https://tamilwin.com/article/no-progress-violations-armed-conflict-sri-lanka-1788930706</id>
            <summary type="text">இலங்கையில் ஆயுத மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஆயுத மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும்
பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், முக்கிய வழக்குகள் குறித்த
குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைந்து வருகின்றன என்றும் ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது
கூட்டத்தொடரில், 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித
உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை பிரதி
உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் நேற்று(08.09.2026) வாசிக்கப்பட்டது.
</p><h2>பொறுப்புக்கூறலில் தாமதம்</h2><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,&nbsp;ஆயுதமோதல் காலத்து மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் இன்னும்
உறுதிப்படுத்தப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bffab68-3030-4cd0-80ce-a36bf2959fc9/26-6aa0ee52b63d0.webp' /></p><p>ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகச்
சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்ட சுயாதீன வழக்குத்தொடுநர்
அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை. </p><p>எனினும், கிழக்கு பல்கலைக்கழக
உபவேந்தர் படுகொலை மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான சில
முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுவதால் நியாயமான வழக்கு
விசாரணை மற்றும் முறையான நீதிமன்ற மேற்பார்வை உள்ளிட்ட நபர்களின் அடிப்படை
உரிமைகள் மீறப்படுகின்றன. </p><p>மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்
பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்துத்
தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>காணாமல்போனோர் அலுவலகம்</h2><p>அண்மைய காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள
நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை
இழந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2a79f81-9f35-4994-a2f2-eddb9c9852fb/26-6aa0ee538f49a.webp' /></p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி
இன்னமும் பதிலின்றித் தொடர்வதால், அந்த அலுவலகத்தின் மீது மக்களின்
நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அதனைப் பலப்படுத்த வேண்டியது
அவசியமாகும்.
</p><p>
போர்க் காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள்
பேரவையின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.</p><h2>மலையக சமூகத்துக்கு நிதி ஒதுக்கீடு</h2><p>2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் பிரகாரம் நாட்டின்
வருமானத்தில் 82 வீதமானவை கடன் மீள்செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள
நிலையில், சுகாதாரம், கல்வி மற்றும் அனர்த்தங்களால் சீர்குலைந்த நாட்டை
மீளக்கட்டியெழுப்புவதற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை தீவிர
கரிசனைக்குரியது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/755702bc-c1ea-4733-ad56-9f375bdc3e91/26-6aa0ee5448ba8.webp' /></p><p>குறிப்பாக மலையகச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நிதி
ஒதுக்கீடு அவசியமாகும்.
</p><p>
நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்
கூற்றுக்கு வரவேற்கத்தக்கது.</p><p>

இலங்கையில் ஆழமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட
வேண்டும்.

இதயசுத்தியுடனான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைக்குத்
தேவையான ஒத்துழைப்பை வழங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தயாராக இருக்கின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:33:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஜெர்மனியில் தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-ul503-diverted-to-frankfurt-1788923147"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-ul503-diverted-to-frankfurt-1788923147</id>
            <summary type="text">பிரித்தானியா சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL503 விமானம் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.  

பிரித்தானியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL503 விமானம் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. </p><p> 

பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.</p><p> 


பிரித்தானிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு வழங்குநரான NATS நிறுவனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.</p><h2><b>விமானப் பயணங்கள் தாமதம்&nbsp;</b></h2><p> 

இதன் காரணமாக நாடு முழுவதும் விமானப் பயணங்கள் தாமதம் அடைந்துள்ளதுடன், பல சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11be3417-dce2-4f26-a373-e09c90d0aa32/26-6aa0ed0506e44.webp' /></p><p>இந்த செயற்பாடு ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் விமானப் போக்குவரத்தை பாதித்துள்ளது.

 இந்த நிலையில் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL503 விமானம் பாதிக்கப்பட்ட விமானங்களில் ஒன்றாகும்.
</p><p>
 இந்த இடையூறுகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஜெர்மனியின் பிராங்க்போர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. </p>]]></content>
            <updated>2026-09-09T05:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பில் காணாமல்போன கைதி வெலிக்கடையில் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-negombo-prisoner-found-in-welikada-1788929800"></link>
            <id>https://tamilwin.com/article/missing-negombo-prisoner-found-in-welikada-1788929800</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயிருந்த கைதியொருவர் நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயிருந்த கைதியொருவர் நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த ஜுலை 05,06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது 26 வயதுடைய கைதியொருவர் காணாமல்போயிருந்தார்.</p><p>

சிறைச்சாலை ஆவணங்களின் பிரகாரம் மட்டுமன்றி நீர்கொழும்பு சிறைச்சாலையின் பதிவேடுகளின் பிரகாரம் அவர் தொடர்ந்தும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கைதிக்கு என்ன நடந்தது</h2><p> </p><p>எனினும் அவரது பெற்றோர் பல தடவைகள் தமது புதல்வனை பார்வையிட நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு சென்றபோதும் அவர் அங்கில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af936130-6da8-4706-b348-890dcb8b8a00/26-6aa0edef8ed7a.webp' /></p><p>

அத்துடன் குறித்த கைதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய மேலதிக தகவல்களை வழங்கவும் சிறைச்சாலை நிர்வாகம் தவறியுள்ளது.</p><p>

இதனையடுத்து குறித்த கைதியின் பெற்றோர் காணாமல்போனோருக்கான அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றின் ஊடாக மேற்கொண்ட முயற்சியின் பிரகாரம் அவர்களது புதல்வன் தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.</p><p>

சிறைச்சாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கு காரணமாக வயோதிப பெற்றோர் சுமார் இரண்டு மாதங்கள் அநாவசிய மன உளைச்சல் மற்றும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாக சிறைச்சாலைக் கைதிகளின் உரிமைகளுக்கான அமைப்பு கண்ட்னம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களுக்கு நெருக்கமான மற்றுமொரு நபருக்கும் சிக்கல் - விசாரணைக்காக துரத்தும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tissa-kuttiarachchi-investigation-ccib-1788921555"></link>
            <id>https://tamilwin.com/article/tissa-kuttiarachchi-investigation-ccib-1788921555</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி விசாரணையொன்றிற்காக நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி விசாரணையொன்றிற்காக நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>ஊவா கேப்பிட்டல் கூட்டுறவு வங்கியில் (Uva Capital Co-operative Bank) நிகழ்ந்த சில முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.</p><h2>வாக்குமூலம் அளிக்கத்தவறினால் சட்ட நடவடிக்கை</h2><p>இருப்பினும், நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b493b23-2fc2-4a5f-9aed-e1b121ab73e6/26-6aa0cc527e26b.webp' /></p><p>இதற்கமைய, அவரை மற்றொரு திகதியில் மீண்டும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்&nbsp;சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.</p><p>அவர் தொடர்ந்து வாக்குமூலம் அளிக்கத்தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T05:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கோரி துண்டுபிரசுரம் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seeking-support-for-the-protest-against-the-army-1788928763"></link>
            <id>https://tamilwin.com/article/seeking-support-for-the-protest-against-the-army-1788928763</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரிலுள்ள நீதிமன்றம், தபாலகம்
ஆகியவற்றிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை நகரிலுள்ள நீதிமன்றம், தபாலகம்
ஆகியவற்றிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையில் எதிர்வரும் 11.09.2026
அன்று இடம்பெறவுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கோரும் நடவடிக்கையில் பருத்தித்துறை நகர பிதா
விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.&nbsp;</p><h2>துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை</h2><p>அதன்படி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கோரி&nbsp;பருத்தித்துறை நகரில் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a57f79ac-dd1d-4579-bc79-42e23d2969c2/26-6aa0e8510c271.webp' /></p><p>துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கையில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் இணைந்திருந்தனர்.</p><p>யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கழிந்தும் இதுவரை பருத்தித்துறை பிரதான
தபாலகம், மற்றும் பருத்தித்துறை நீதிமன்றம் ஆகியவற்றிற்கான காணிகள்
விடுவிக்கப்படாமையினாலேயே குறித்த மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:02:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச கைது விவகாரம்! மக்களை திசை திருப்பும் நடவடிக்கை - ரோஹித விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapksa-arrested-latest-update-1788928170"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapksa-arrested-latest-update-1788928170</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள
நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று
எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள
நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், </p><p>"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தே தற்போதைய
அரசு ஆட்சிக்கு வந்தது. எனினும், கடந்த இரண்டு வருடங்களில் மக்களின்
எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>நாமல் ராஜபக்சவின் கைது&nbsp; நடவடிக்கை&nbsp;</h2><p>

டீசல், பெட்ரோல் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசு வாக்குறுதி
அளித்திருந்த போதிலும், தற்போது அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>எரிபொருள் விலை உயர்வின் காரணமாகப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன.
தேநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abe3901a-2c56-4689-842c-225d9f4dcc80/26-6aa0e1ea1b17a.webp' /></p><p>
</p><p>
வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் விவசாயிகளுக்காக ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியைத் தடுக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசு
முயற்சிக்கிறது.</p><p> எனினும், இத்தகைய நடவடிக்கைகளால் திட்டமிட்டபடி மக்கள்
பேரணியைத் தடுத்துவிட முடியாது.

2015ஆம் ஆண்டிலும் அரச பலத்தை வெளிப்படுத்தித் தமக்கு மக்கள் ஆதரவு
இருப்பதாகக் காட்டிய அரசு இறுதியில் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தற்போதைய அரசு
நினைவில் கொள்ள வேண்டும்.
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் ஊடாக
எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிப்பது தற்காலிகமான நடவடிக்கையாகவே அமையும். அது
நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-sri-lankans-arrested-in-kuwait-1788928345"></link>
            <id>https://tamilwin.com/article/two-sri-lankans-arrested-in-kuwait-1788928345</id>
            <summary type="text">குவைத் நாட்டின் சல்மியா நகரில் போதைப் பொருட்களைத் தம் வசம் வைத்திருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் நாட்டின் சல்மியா நகரில் போதைப் பொருட்களைத் தம் வசம் வைத்திருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 37 போதைப் பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>சந்தேகநபர்களில் ஒருவர் தப்பியோட முயற்சி</h2><p>
சம்பவம் தொடர்பில் குவைத் உ‌ள்துறை நேற்று (08|09|26) வெளியிட்டுள்ள செய்தியில், ஹவாலி ஆளுநரக பாதுகாப்பு பணியகத்தின் ரோந்துப்படை சார்பில், அப்பகுதியில் வழக்கமான சோதனை பணிகளை மேற்கொண்டிருந்த போது இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b47fabec-03fc-4af2-8801-1af0ae5b3a2d/26-6aa0e15b8eb84.webp' /></p><p>

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இந்த இருவரையும் ஒரு திறந்த வெளியில் எதையோ தேண்டிக்கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.</p><p>இந்த விசாரணைக்காக பொலிஸார் அவர்களை அணுகியபோது ​​சந்தேகநபர்களில் ஒருவர் தப்பியோட முயன்ற போது பொலிஸார் துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர்.</p><h2>&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>இதனைத்தொடர்ந்து இரு நபர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 37 பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>இவற்றில், முதல் நபரிடமிருந்து 27 பொதிகளும், இரண்டாவது நபரிடமிருந்து 10 பொதிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கூடுதல் சட்ட நடவடிக்கைக்காக இருவரும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏ9 வீதியில் வீதியை விட்டு விலகி கார் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-veered-off-the-a9-road-1788926356"></link>
            <id>https://tamilwin.com/article/car-veered-off-the-a9-road-1788926356</id>
            <summary type="text">முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. 

குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. </p><p>

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (09.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

விபத்தின் போது கார் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.</p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p> </p><p>

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da42966f-f5b9-47d1-892a-7cd198301bfd/26-6aa0e13cb2528.webp' /></p><p> </p><p>

ஏ9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் முன்னரும் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கு சென்றால் வெட்கத்தால் வெளியில் வரமாட்டார்கள்! நாமலை கடுமையாக விமர்சித்த ஆளுங்கட்சி எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ruling-party-mp-strongly-criticizes-namala-1788926009"></link>
            <id>https://tamilwin.com/article/ruling-party-mp-strongly-criticizes-namala-1788926009</id>
            <summary type="text">மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சிறையில் உள்ளவர்கள் இன்று
நாடாளுமன்றத்துக்கு வந்து அரசுக்குப் பொருளாதார மேம்பாடு பற்றி ஆலோசனை
வழங்குவது வேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சிறையில் உள்ளவர்கள் இன்று
நாடாளுமன்றத்துக்கு வந்து அரசுக்குப் பொருளாதார மேம்பாடு பற்றி ஆலோசனை
வழங்குவது வேடிக்கையாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தருவன் மதரசிங்ஹ தெரிவித்தார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோட்டார் வாகனக் கட்டளைச்
சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஊழல், மோசடி சம்பவங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள்</h2><p>
</p><p>
"ஊரில் உள்ளவர்கள் ஏதாவது குற்றச்செயலுக்காக சிறைக்குச்சென்றால்
வெட்கத்தால் வெளியில் வரமாட்டார்கள். பிறருடன் கதைக்கக்கூட மாட்டார்கள்.
ஆனால், நாடாளுமன்றத்தில் அவ்வாறான நிலைமையைக் காண முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33af6d67-ea48-446b-aa20-588d036a9ffb/26-6aa0dcb3eede1.webp' /></p><p>

ஊழல், மோசடி சம்பவங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் இன்று
நாடாளுமன்றத்துக்குள் வந்து பொருளாதார மேம்பாடு பற்றிக் கருத்துத்
தெரிவிக்கின்றார்கள்.</p><p> விவசாயிகளுக்கு உரம் இல்லை என்று கூறும் நாமல்
ராஜபக்ச தான், அன்று கழிவு உரத்தை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை
அழிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கையுயர்த்தினார்.</p><h2>எயார்பஸ் கொள்வனவு விவகாரம்</h2><p>
</p><p>
அரசியல் பழிவாங்கலுக்காகவே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார் என்று
எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிடுகின்றார்.</p><p>

எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆஸ்திரேலியா,
பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்து
நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2c5ef24-e3a1-4be5-b671-63ad57ade278/26-6aa0dcb4a185a.webp' />&nbsp;</p><p> </p><p>100 மில்லியன் ரூபா இலஞ்சம்
பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படும் போதெல்லாம் அவர்களின் உடல்நலம் குறித்து வெளிநாட்டு
மருத்துவமனைகளே அறிக்கை சமர்ப்பிக்கின்றன.</p><p> நாட்டில் உள்ள அரச மருத்துவக்
கட்டமைப்பை வினைத்திறனாக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும்போது இவர்கள்
அதற்கு எதிராகச் செயற்படுகின்றார்கள் என்றார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் ஜனநாயக அழிப்பு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும் : சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-government-s-destruction-of-democracy-1788926422"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-government-s-destruction-of-democracy-1788926422</id>
            <summary type="text">அரசு விரைவாக ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தை
மிக மோசமாகப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
எச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு விரைவாக ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தை
மிக மோசமாகப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
எச்சரித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"காலையில் நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசமைப்பின் 121ஆவது
பிரிவின் கீழ் கேள்வியொன்றை முன்வைத்த போதிலும், அது தொடர்பாகக் கருத்துக்களை
முன்வைக்க எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.</p><h2>அரசாங்கத்தின் மீது கடுமையான சாடல்&nbsp;</h2><p>
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின்
எண்ணிக்கை தொடர்பாகச் சபாநாயகர் தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.</p><p> துலார
குணதிலக்க, சாந்த ஜயதிலக்க உள்ளிட்டோரும் இதற்கு எதிராக மனுத் தாக்கல்
செய்திருந்த போதிலும், திறந்த நீதிமன்றத்தில் அழைப்பு விடுக்கப்படாததால்
அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. </p><p>மனித உரிமைகளை மீறுவதற்காக
அல்லாமல், அவற்றைப் பாதுகாப்பதற்காகவே அரசு ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த மனுக்களுக்குச் செவிசாய்க்காமல் மனு நடைமுறை முழுமையடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6e0ed2-9da7-47a7-8453-f81ed1173240/26-6aa0d9d81e133.webp' /></p><p> </p><p>அதனைப்
பூர்த்தி செய்தே 22ஆவது திருத்தம் தொடர்பான அபிப்பிராயத்தை
நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

'அனைவரின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும்' என்ற கோட்பாட்டைப் பின்பற்ற
வேண்டும். </p><p>நெடுஞ்சாலைகளை அமைப்பது போல், அரசு அதிவேகமாக ஜனநாயகத்தை அழிக்கும்
நிலைக்கு நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது.

சுதந்திரமான நீதித்துறை மற்றும் நீதிமன்றத்தின் மீது வெளிநாட்டு
முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நேரடி வெளிநாட்டு முதலீடுகள்
நாட்டைவிட்டு வெளியேறிவிடும்.
</p><p>
நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்குச் சர்வதேச நம்பிக்கை அவசியம். அந்த
நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காகப் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின்
தலைவர் ஸ்டீபன் திரூ இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, நீதி அமைச்சரையும்
செயலாளரையும் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த போதிலும் அது வழங்கப்படவில்லை. பொதுநலவாய நாடுகள் மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து இந்த அரசுக்கு எந்த
அறிவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d55e0ff3-56d7-4128-a5a8-7e8bb7b13259/26-6aa0d9d7699b5.webp' /></p><p>

22ஆவது திருத்தம் பரிசீலிக்கப்பட்டபோது அனைத்து மனுக்களுக்கும்
செவிசாய்க்கப்படவில்லை. ஒருவர் தனது சொந்த வழக்குக்குத் தானே அமர்ந்து முன்னிலையாக முடியாது என்பதால், இதற்கு முழுமையான அமர்வு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
</p><p>கௌரவமிக்க நீதிமன்றத்துக்கு இழைக்கப்படும் இந்த அவமதிப்புகளை நாம்
எதிர்க்கின்றோம்.

மேலும், சுகாதாரம் என்பது ஓர் அடிப்படை உரிமை என்றும், அதனைப் பலப்படுத்த
வேண்டும் என்றும் எதிர்க்கட்சியில் இருந்தபோது பிரஸ்தாபித்த தற்போதைய
ஜனாதிபதி, இப்போது தமக்குத் தோன்றியபடி மருத்துவமனைக்குச் செல்ல முடியாது
என்று கூறுகின்றார். மருந்துகள் மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடுகளே இதற்கு
முக்கியக் காரணமாகும்.</p><p>

'அஸ்வெசும' நிவாரணம் வெட்டப்படுவதுடன், நெல்லுக்குத் தருவதாகக் கூறிய 150
ரூபாய் உத்தரவாத விலையும் வழங்கப்படவில்லை. மாறாக 120 ரூபாவே வழங்கப்பட்டு
விவசாயிகளுக்கு 17 ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><p>பொய்களைக் கூறிக்கொண்டு
நாடு முழுவதும் செல்வதற்குப் பதிலாக, 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' கொள்கைப்
பிரகடனத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T04:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farewell-to-senior-dig-of-police-ajith-rohana-1788925754"></link>
            <id>https://tamilwin.com/article/farewell-to-senior-dig-of-police-ajith-rohana-1788925754</id>
            <summary type="text">வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கைப் பொலிஸ் சேவையில் 38 ஆண்டுகள் பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டாக்டர் அஜித் ரோஹண, தனது நீண்டகால சேவையை நிறைவு செய்யவுள்ளார்.
</p><p>
அவரது ஓய்வை முன்னிட்டு செப்டம்பர் 8ஆம் திகதி குருநாகல் வெலகெதர மைதானத்தில் பொலிஸ் மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.</p><h2>&nbsp;கௌரவ கலாநிதிப் பட்டம்</h2><p> </p><p>அவரது அதிகாரப்பூர்வ ஓய்வு திகதி செப்டம்பர் 11,&nbsp; 2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
38 ஆண்டுகால சேவையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர் இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் DIG பதவிக்கு உயர்ந்த அதிகாரி என்ற சிறப்பையும் பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b34804-1efd-4901-9a70-559cb8458b22/26-6aa0d73b8f6e9.webp' /></p><p>
</p><p>கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கியதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானார். </p><p>ஊரடங்கு,&nbsp; பயணக் கட்டுப்பாடுகள், பொலிஸ் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவர் வழங்கிய விளக்கங்கள் மூலம் பொதுமக்களிடம் பரவலாக அறிமுகமானார்.
</p><p>
2020ஆம் ஆண்டு, பொதுச் சேவைக்கான அவரது பங்களிப்பை பாராட்டி கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T03:49:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-arrest-is-vasudeva-nanayakkara-statement-1788925213"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-arrest-is-vasudeva-nanayakkara-statement-1788925213</id>
            <summary type="text">&quot;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல்
பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை. அவரது கைது இளைஞர்கள் மத்தியில்
எவ்வித...</summary>
            <content type="html"><![CDATA[<p>"நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல்
பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை. அவரது கைது இளைஞர்கள் மத்தியில்
எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின்
தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசு சிறப்பாகச் செயற்பட்டு வருவதால் எதிர்க்கட்சிகளின்
இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் போலிப்பிரசாரங்கள்
பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,</p><h2>பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தல்</h2><p> "ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தாமல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற
முடியும். மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவது சாதாரண சட்ட
நடைமுறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12f65a37-baaa-4702-a260-f47939f3b7dc/26-6aa0d5e7f221b.webp' /></p><p> </p><p>எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை.

அந்தவகையில், நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும்
காணவில்லை.</p><p> சட்டத்தை நடைமுறைபடுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன்
கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும்." - என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T03:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-regulations-for-passanger-vehicles-1788923865"></link>
            <id>https://tamilwin.com/article/new-regulations-for-passanger-vehicles-1788923865</id>
            <summary type="text">&amp;nbsp;பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் கட்டாயமாக்க உள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் கட்டாயமாக்க உள்ளது.
</p><p>பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் ஒவ்வொரு 5,000 கிலோமீற்றருக்கு ஒருமுறையோ அல்லது 3 மாதங்களுக்குள்ளோ அடிப்படை வாகன தகுதிப் பரிசோதனை சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>விரைவில் வர்த்தமானி அறிவித்தல்</h2><p>இதற்கமைய, 3 மாதங்களுக்கு ஒருமுறை வாகனத்தின் அடிப்படைப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் அங்கீகரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99ff6331-191b-46b2-a324-63cf2bf717da/26-6aa0cfdad1ce3.webp' /></p><p>
பயணிகள் பேருந்துகள், வேன்கள், பாடசாலை வேன்கள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் உட்பட பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், சொந்த பயன்பாட்டுக்கான தனிநபர் (தனியார்) வாகன உரிமையாளர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
இந்த வாகனப் பரிசோதனையை பொதுவாக 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரையிலான கட்டணத்தில் செய்ய முடியும். </p><p>அண்மைக்காலமாக இடம்பெற்ற பல வீதி விபத்துக்களில் பயணிகள் பேருந்துகளின் பிரேக் (Brake) அமைப்பு முறையாகப் பராமரிக்கப்படாமையே காரணம் என்பது தெரியவந்துள்ளது.</p><h2>வாகன பரிசோதனை</h2><p> </p><p>
கடந்த கால விபத்து அறிக்கையொன்றில், பேருந்தின் ஒரு பக்க பிரேக் ஒரு வருடம் முழுமையாகச் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
</p><p>மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவே சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் இத்தகைய கவனக்குறைவுகளால் பலரின் உயிர்கள் விபத்துக்களில் பறிபோகின்றன என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மேலும், என்.வீ.க்யூ தகுதி பெற்ற தொழில்வல்லுநர்கள் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட வாகன பராமரிப்பு நிலையங்களில் இந்த வாகனப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் அத்தகைய தொழில்வல்லுநர்கள் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T03:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியினரால் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி' டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

</p><p>இன்று (09) காலை 8.00 மணிக்கு அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயற்சி</h2><p>'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f3d237-d22b-4484-83e9-bfe334436d18/26-6aa0c473cf192.webp' /></p><p>
</p><p>இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கொண்டா ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T03:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் அழகனவன் தேரேறி அருள்பாலிக்கும் ஆனந்தக் காட்சி - LIVE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-festival-2026-1788923115"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-festival-2026-1788923115</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்றாகும்.

கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்றாகும்.</p><p>

கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் திருவிழா நாளையதினம்(10) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வருகின்றது. </p><p>

இந்த நிலையில், இன்று காலை வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் தேர் ஏறி ஊர்வலம் வரும் நல்லூர் அழகனவன் அலங்காரக் கந்தனாய் புறப்பட்டு மக்களுக்கு காட்சியளித்துள்ளார். </p><p>

நேற்றையதினம் சப்பரத் திருவிழா நிறைவுற்ற நிலையில், இன்றையத் தேர்த்திருவிழாவின் பின்னர் நாளையதினம் தீர்த்தத் திருவிழாவும், கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.
</p><p>
நாடளாவிய ரீதியில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்துள்ள நிலையில், புலம்பெயர் மக்களும் நல்லூரானை தரிசிக்க படையெடுத்துள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6F36aLxtwjU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T03:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/futa-strike-on-today-1788922960"></link>
            <id>https://tamilwin.com/article/futa-strike-on-today-1788922960</id>
            <summary type="text">பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.இலங்கையில் அரச பல்கலைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.</p><p>இலங்கையில் அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் தீவிர பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
நிலவும் நெருக்கடிகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை உரிய தீர்வை வழங்காத காரணத்தினால், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்ததாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>புதிதாக 50 பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை குறித்தும் அவர் இங்கு கருத்து தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4e0472-5576-438e-a34b-64a261f9143c/26-6aa0cc523b368.webp' /></p><p> </p><p>
கல்வியை விரிவுபடுத்துவது ஒரு நேர்மறையான விடயம் என்ற போதிலும், தற்போதுள்ள 17 அரசு பல்கலைக்கழகங்களைக் கூட சீராகப் பராமரிக்க முடியாத சூழலில், புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>
எனவே, தற்போதைய பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பாதுகாப்பதற்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>கடந்த வாரம் மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும், அரசாங்கத்தின் மௌனப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சாருதத்த இலங்கசிங்க மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T03:03:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலுள்ள நாமலை பார்க்க சென்று சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் நேற்று ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>

அதற்கு பதிலளித்தவர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இருப்பதனால் ஷிரந்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி</b></h2><p><i>“நாமல் ராஜபக்சவை பார்க்க ஷிராந்தி ராஜபக்ச தனது வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்வதை நாங்கள் கண்டோம். அது எப்படி சாத்தியம்? இப்போது ஏனைய கைதிகளையும் அவ்வாறே வாகனத்தில் சென்று பார்க்க முடியுமா..! அல்லது இது நாமலுக்கு மட்டும் கிடைக்கும் விசேட சலுகையா</i>..! என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc742a5-fa7d-4a50-9aef-2c48b5106ee2/26-6aa0c09b01f70.webp' /></p><p>“<i>சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் உள்ளனர். அத்தகையவர்களைப் பார்ப்பதற்காக சிறைச்சாலை திணைக்களத்தின் முறையொன்று உள்ளது. அந்த முறையின் அடிப்படையில்தான் அது நடந்திருக்க வேண்டும், எனக்கு அது குறித்து சரியாகத் தெரியாது</i>” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><i>

வாகனத்தை உள்ளே கொண்டு செல்வது இருக்கட்டும், ஒரு சாதாரண நபர் அங்கு வாகனத்தை நிறுத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லையே </i>என ஊடகவிலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். சரியான காரணத்தை விசாரித்துவிட்டு தகவல்களை வெளிப்படுத்துகிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-09T02:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு புதல்வர்களின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-s-sons-in-risk-1788916471"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-s-sons-in-risk-1788916471</id>
            <summary type="text">தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு தீர்மானித்துள்ளது. </p><p>

குறித்த இருவரும் மூன்று வர்த்தகர்களை பயன்படுத்தி 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p> </p><h2><b>

 ஊழல், மோசடி</b></h2><p>இந்த மோசடி தொடர்பில் ஊழல், மோசடி மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி சமந்த துஷார என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4ce03ee-f5b5-4aa1-b6d8-09df23d45259/26-6aa0b586b8501.webp' /></p><p> 

முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்தப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஜாமுனி சமந்த துஷாரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-09T02:02:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் டீசல் நெருக்கடி! பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமென அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diesel-crisis-srilanka-1788917242"></link>
            <id>https://tamilwin.com/article/diesel-crisis-srilanka-1788917242</id>
            <summary type="text">லங்கா ஐஓசி நிறுவனம், ஆர்.எம். பார்க் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனம் ஆகியவற்றால் டீசல் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா ஐஓசி நிறுவனம், ஆர்.எம். பார்க் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனம் ஆகியவற்றால் டீசல் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
</p><p>
தற்போது, ​​பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 650 எரிபொருள் நிலையங்களில் மட்டுமே டீசல் விநியோகிக்கப்பட்டு வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.</p><h2>அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலைய விலைகள்&nbsp;</h2><p>அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் விலைகள் குறைக்கப்படும்போது, ​​சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதே அளவிற்கு எரிபொருள் விலையை குறைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a349f9f7-11f9-45dc-ba26-6668951a77f1/26-6aa0bd9a74870.webp' /></p><p> </p><p>தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை ஈடுகட்ட அந்த தொகையை வழங்குவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டு, நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. </p><p>இருப்பினும், ஒப்புக்கொண்டபடி அரசாங்கம் அந்த தொகையை வழங்கத்தவறியதே எரிபொருள் விநியோகக் கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது என்று நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான 250 எரிபொருள் நிலையங்கள், சினோபெக் நிறுவனத்திற்குச் சொந்தமான 150 எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனத்திற்குச் சொந்தமான 100 எரிபொருள் நிலையங்கள் டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை தொடர்ந்து கட்டுப்படுத்தினால், எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பாக பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h2>லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம் கடிதம்</h2><p>
</p><p>
இதற்கிடையில், லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம், லங்கா ஐஓசியின் நிர்வாக பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில்,</p><p>செப்டம்பர் 3 ஆம் திகதி முதல் விநியோகஸ்தர்களுக்கு ஆட்டோ டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சமீபத்திய முடிவு, போக்குவரத்து, தொழில்துறை, நகர கட்டுமானம் மற்றும் பிற அத்தியாவசிய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாததால், விநியோகஸ்தர்களுக்கு ஏற்கனவே கடுமையான சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e783bb10-192b-4577-b65e-2130d228fd12/26-6aa0bd9b2931b.webp' /></p><p>
</p><p>
வாடிக்கையாளர்கள் ஏனைய விநியோகஸ்தர்களுக்கு மாறிவிட்டால், அவர்களின் வணிகத்தை மீண்டும் பெறுவது மிகவும் கடினமாகிவிடும் என்றும், இவை விநியோக வலையமைப்பு மற்றும் டீசல் விற்பனையில் நீண்டகால பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p><p>

எனவே, இது தொடர்பாக பொருத்தமான வழிமுறையை வகுக்குமாறு லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T02:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-not-planning-to-get-dollar-1788916460"></link>
            <id>https://tamilwin.com/article/govt-not-planning-to-get-dollar-1788916460</id>
            <summary type="text">அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக &#039;சர்வஜன பலய&#039; கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக 'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
</p><p>நாட்டின் டாலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்குப் பேரணிகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b3ed18-a99b-4c83-ac83-35cb07580736/26-6aa0b2ed679b3.webp' /></p><p>
நாடாளுமன்றத்தின் 1,500 ஊழியர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினாலே நாட்டின் பொதுமக்களின் அபிப்பிராயத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>பேரணிகளுக்கு யாரைக் கொண்டு வந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை எனவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நீண்டகால, நடுத்தரகால மற்றும் குறுகியகால முறையான வேலைத்திட்டங்களே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>நாட்டின் டொலர்களைச் செலவழித்துப் பேருந்துகள் மூலம் ஆட்களைத் திரட்டி அரசாங்கம் பேரணிகளை நடத்தி வருகின்ற போதிலும், பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பட்டினியால் தவித்து வருவதாக திலித் ஜயவீர மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற துடிக்கும் ரணில்! நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்சர்களுடன் நடந்துள்ள டீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரைமறைவு அரசியல் நகரவுகளும் அம்பலமாகின்றன.</p><p>
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் தற்போது கருத்துக்கள் வெளியாகின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு ஒரு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தநிலையில்,அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மக்கள் கூட்டத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>

நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை,
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய 22 மில்லியன் அமெரிக்க டொலர் ஹொங்காங் வங்கி கணக்கு விவகாரத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க அம்பலப்டுத்தியுள்ளார்</p><p>.

 நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் இந்த ஹாங்காங் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தில் இருந்த சிலர் தலையிட்டு அந்த நடவடிக்கைகளைத் தடுத்ததாக ஆசு மாரசிங்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

 இந்தத் தகவல்கள் மூலம், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் 'டீலிங்' (Deal) குறித்த விடயங்களை ஆசு மாரசிங்க வெளிப்படுத்தியுள்ளார் .</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/twa6VY8TL_U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T01:02:16+00:00</updated>
        </entry>
    </feed>
