<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-30T11:02:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் அரசியலை பலவீனப்படுகிறதா கனேடிய நீதிமன்ற தீர்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/does-canadian-court-ruling-weaken-tamil-politics-1788087078"></link>
            <id>https://tamilwin.com/article/does-canadian-court-ruling-weaken-tamil-politics-1788087078</id>
            <summary type="text">கனடா நீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி தமிழர் அரசியல் போராட்டத்தை
பலவீனப்படுத்த முயற்சிக்கக் கூடாது என
சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா நீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி தமிழர் அரசியல் போராட்டத்தை
பலவீனப்படுத்த முயற்சிக்கக் கூடாது என
சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய
அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர், இன்று(30.08.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார். </p><p> 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதிக்கான நீள் பயணம் எனும் தொனிப் பொருளில் இனப்படுகொலையின் ஒர் அங்கமான
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயமாக தமிழர் தாயகத்தில் சர்வதேச மாநாடு நடக்க
இருக்கையில், கனடாவில் நீதிமன்றம் ஒன்றில் இலங்கையில் இனப்படுகொலை நிகழவில்லை
என தீர்ப்பு வழங்கியதாக சமூக ஊடகங்களில் வந்துள்ள செய்தியை தொடர்ந்து பௌத்த
அரசுக்கும் அதன் காவலாளிகளுக்கும் மகிழ்வை கொடுக்கலாம். 

ஆனால் பௌத்த தர்மம் தமது தண்டனை தீர்ப்பை எப்போதோ எழுதிவிட்டது. </p><p>அதனை தெற்கு உணரும் நாளிலேயே நாடு உண்மையான விடுதலை மகிழ்வை காணும் என்பதையும் குறிப்பிடுகின்றோம்.
</p><h2>
கனடா நீதிமன்றத்தின் தீர்ப்பு</h2><p>

கனடா நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வருடம் (2025) மார்ச் மாதம்
வழங்கப்பட்டதாக செய்தி வந்துள்ள நிலையில், அது ஒரு வருடம் கடந்து இலங்கைக்கு
செய்தியானது ஏன்? செய்தியாக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதன் அரசியல் இலக்கு
என்ன? இடங்கையில் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டி கனடாவில் ஆரம்பித்து விட்டதா?
போன்ற கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28e4e5de-c865-44ff-80d8-384a6427bda7/26-6a940b8c5ed86.webp' /></p><p>
</p><p>
இலங்கையில் இடப்படுகொலை நிகழ்ந்தது என்பதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது
தீர்ப்பினை இறுதியாக 2022 ஜெர்மன் நாட்டில் பேர்லினில் கூடிய போது அறிவித்தது.
</p><p>
அதற்கு முன்னர் இது முதலாவதாக 2010 டப்லினிலும் தொடர்ந்து பிரீமனிலும் கூடி
தனது முடிவுகளை அறிவித்த நிலையிலேயே மூன்றாவது தடவையாக ஜெர்மனியில் நடந்த
தீர்ப்பாயத்தின் போது இந்தியா உட்பட மேற்குலக நாடுகளையும் குற்றவாளி நாடுகளாக
அடையாளப்படுத்தியது.</p><p>

இதற்கு முன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2013 மார்ச் 27ஆம் திகதியும், 2015
செப்டம்பர் 16ஆம் திகதியும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என தீர்மானம்
நிறைவேற்றியதை நாம் மறந்து விடக்கூடாது. 

அத்தோடு இலங்கையின் வட மாகாண சபை 2015 பெப்ரவரி 10ஆம் திகதி அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியதையும் நாம் அறிவோம்.
</p><h2>

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை</h2><p>


தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, இலங்கை வடமாகாண சபை என்பன அரசியல் சார்ந்த ஒன்றாக
இருந்தாலும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் உலகில் புகழ்பெற்ற இடதுசாரி சட்ட
வல்லுநர்களால் சாட்சியங்கள் முறையாக ஆராயப்பட்டு விசாரிக்கப்பட்டு வழங்கிய
தீர்ப்பாகும், அது ஒடுக்கப்படும் மக்கள் இனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட
தீர்ப்பாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52c9639c-ece5-47a4-a01f-e1163d6ab4d4/26-6a940b8d245f8.webp' /></p><p>
</p><p>
இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது என ஆணித்தரமாக தெற்கில் கூறும் அரசியல்
செயல்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு
விசாரணை நடாத்த உள்ள நிலையில் அதற்கு முகம் கொடுக்கவும், தமிழர் தாயக மக்களை
தேசிய அரசியலில் ஒருமுகப்படுத்தவும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, வட மாகாண சபை
மற்றும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய முடிவுகளை மக்கள் மையப்படுத்த
வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய அரசியல் களத்தில் இருக்கும் தமிழ் அரசியல்
தலைமைகளுக்கும் சிவில் சமூகத்திற்கும் உள்ளது.</p><p>

கனடா நீதிமன்ற தீர்ப்பினை கையில் எடுத்து இலங்கை சிங்கள பௌத்த பேரனவாதம்
சிலிர்த்துள்ள நிலையில் அதற்கு முகம் கொடுக்கவும் தமிழர் தேசம் தம்மை அரசியல்
ரீதியில் பலப்படுத்தவும் நமது அரசியல் இலக்கை அடைய முடியும் போராட்டத்தை
வலுப்படுத்தவும் வேண்டும்.</p><p>

இல்லையெனின், அடுத்த முள்ளிவாய்க்காலை நோக்கி பயணிப்பவர்களாக இருப்போம் என்பதை மீண்டும் நினைவு கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:53:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வறட்சியால் திருகோணமலையின் தம்பலகாமம் பகுதி மக்கள் கடும் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-in-trincomalee-severely-affected-by-drought-1788083218"></link>
            <id>https://tamilwin.com/article/people-in-trincomalee-severely-affected-by-drought-1788083218</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக,
கல்மெடியாவ பகுதியில் அமைந்துள்ள இரு குளங்கள் வறண்டு காணப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக,
கல்மெடியாவ பகுதியில் அமைந்துள்ள இரு குளங்கள் வறண்டு காணப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>அத்துடன் எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக பிரதேசத்தில்
நீர்நிலைகள் படிப்படியாக வற்றிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள
விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி
வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>கடுமையான வறட்சி</h2><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில், குளங்களில் போதியளவு நீர் இல்லாததால் கால்நடைகளுக்கான குடிநீரைப்
பெற்றுக்கொள்வதிலும், அவற்றை பராமரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb3237bf-8f53-4505-9b46-e666a04f622b/26-6a93ff029af12.webp' /></p><p>குறிப்பாக மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு
தேவையான நீர் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் பற்றாக்குறையாகி வருவதால், கால்நடை
வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வறட்சி நிலை தொடரும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.</p><p>

எங்களின் வாழ்வாதாரம் கால் நடை வளர்ப்பே காணப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அவசரமாக குடிநீர் வசதி
மற்றும் கால்நடைகளுக்கான நீர், உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்க
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது..! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-action-regard-disappeared-s-relatives-1788083709"></link>
            <id>https://tamilwin.com/article/government-action-regard-disappeared-s-relatives-1788083709</id>
            <summary type="text">காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சறோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சறோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். </p><p>

தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேசத்திற்கான மக்கள் அலுவலகம் திறப்பு விழா இன்று (30.08.2026) நடைபெற்றது. </p><p>

இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், நாங்கள் உண்மையாகவே இந்த மக்களுக்கான எங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb61529-d380-43c7-9598-5baa21599b39/26-6a9405f07f855.webp' /></p><h2>தொடர்ந்து போராடும் உறவுகள்</h2><p>

நடந்திருக்கின்ற இந்த அசௌகரியங்கள் அனைத்துக்கும் மத்தியிலும் தங்களுடைய உயிர் உறவுகளைத் தேடி பெண்கள், தாய்மார் மற்றும் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
</p><p>
அவர்களை வலுப்படுத்துவதற்கும், அவர்களுக்கான உண்மை நீதி என்ன, என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கும் எங்கள் அரசாங்கம் எப்போதுமே இங்கு மட்டுமல்லாமல் இலங்கை முழுவதும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf5f907-250e-4210-beb4-64d4d3e5b9cb/26-6a9405f192bb7.webp' /></p><h2>சட்டத்துறை அமைச்சரின் விஜயம்</h2><p> </p><p>

சட்டத்துறை அமைச்சரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து அவர்களைக் கண்டு அவர்களுடன் ஆலோசித்திருந்தார். </p><p>

உண்மையாகவே எங்கள் அரசாங்கம் இவ்வாறான நிலைகளைக் கண்டறிந்து, நடந்திருக்கின்ற விடயங்களைப் பற்றி தேவையான பரிசோதனைகளையும் விசாரணைகளையும் நடத்திக் கொண்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcc15d8e-2973-43b0-8a67-3a1a07a65ede/26-6a9405f2697a6.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T10:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயன்படுத்த முடியாத நிலைக்கு சிதைந்துள்ள வாகனங்கள்! வெளியான முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicles-held-in-customs-custody-for-8-years-1788074369"></link>
            <id>https://tamilwin.com/article/vehicles-held-in-customs-custody-for-8-years-1788074369</id>
            <summary type="text">கடந்த 8 ஆண்டுகளாக சுங்கத்துறையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வாகனங்கள் தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு சிதைந்துள்ளதாக தணிக்கை அறிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 8 ஆண்டுகளாக சுங்கத்துறையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வாகனங்கள் தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு சிதைந்துள்ளதாக தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

2025 ஆம் ஆண்டுக்கான சுங்கத்துறையின் வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. </p><p>

மட்டக்குளி மற்றும் ருஹுனுபுர துறைமுக பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சிதைந்து அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>சிதைந்துள்ள வாகனங்கள்</h2><p>

அதன்படி, சுங்கத்துறையால் காவலில் எடுக்கப்பட்ட 329 வாகனங்கள் மட்டக்குளி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட நிலத்திலும், மேலும் 108 வாகனங்கள் ருஹுனுபுர துறைமுகப் பகுதியிலும் வைக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4fa3e69-a4ba-4a12-8cdc-6732a11aac18/26-6a9402a21acca.webp' /></p><p>

மேலும், இந்த வாகனங்களில் பெரும்பாலானவை முற்றங்களில் நிறுத்தப்பட்டிருந்ததால் தற்போது சிதைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
</p><p>
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட வாகனங்களை ஏலம் விடுவதன் மூலம் கூட நியாயமான தொகையை ஈட்டுவது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளது.</p><p>

சுங்கத்துறை அவசரச் சட்டத்தின் 109 ஆம் பிரிவின்படி சுங்கத்துறை செயல்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T10:15:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் கைது: பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-men-arrested-in-kandalaksha-1788082353"></link>
            <id>https://tamilwin.com/article/2-men-arrested-in-kandalaksha-1788082353</id>
            <summary type="text">கந்தளாயில் - அக்போபுர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாயில் - அக்போபுர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (29.08.2026) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>போதைப்பொருள் கைப்பற்றல்</h2><p>

கந்தளாயிலிருந்து கபரணைக்கு கொண்டு செல்லத்தயாராக இருந்த நிலையில் சுமார் 60 கிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீனிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர்
எனவும், மற்றையவர் கபரண திகம்பத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும்
அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7126373b-4f53-4ef7-9da6-fbc90b07868d/26-6a93faf882377.webp' /></p><p>குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும்
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (30) நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் வழங்க முடியாது! சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cannot-provide-all-requested-medicines-1788076894"></link>
            <id>https://tamilwin.com/article/cannot-provide-all-requested-medicines-1788076894</id>
            <summary type="text">வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><h2>நிதி மோசடியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு</h2><p>
</p><p>பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மருந்துகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கும். அதே போன்று நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றவுடன் வைத்தியர்களால் கோரப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728ba637-63c0-498d-b356-f4455df7531c/26-6a93f48296d33.webp' /></p><p>மருந்துகள் வழங்குவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பிராந்திய நிறுவனங்களின் பிரதானிகள் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒரு முறை உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பந்தப்பட்ட நிபுணர் கோரிக்கை விடுத்த பிறகு, மருந்து கலவையாளரின் ஒப்புதலுடன் வைத்தியசாலை பணிப்பாளர் அதை மருந்து வழங்கல் பிரிவிடம் சமர்ப்பிக்கலாம்.</p><p>

முந்தைய சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் செய்யப்பட்ட கடுமையான நிதி மோசடியால் சுகாதார அமைச்சு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘போராட்டம்’ – Trailer வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.


இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>
</p><p>

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். 

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>

போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01dbd2e7-0591-45bf-88aa-2bb00e835aa3/26-6a93f9dcab12a.webp' /></p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p>

ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

‘போராட்டம்’ திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் குதித்த மக்கள் - அடையாளம் தெரியாத நபரால் ஏற்பட்ட குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788073852"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788073852</id>
            <summary type="text">புதிய இணைப்புசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டமான...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டமானது, பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமாகி,&nbsp; காளி கோவில் வரை சென்று நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதற்கிடையில், போராட்டத்தின் நடுவில் ஒருவர் போராட்டத்தை குழப்பும் வகையில் நடந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><b><i>மேலதிக தகவல்&nbsp; - எரிமலை</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டத்தை தொடர்ந்து, ஆவண நூல் வெளியீடும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான அனுஷ்டிக்கப்படும் இன்றைய நாளில் கிளிநொச்சி 
155ஆம் கட்டை காளி கோயில் முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. </p><h2>

 தீச்சட்டியை ஏந்தியவாறு போராட்டம்</h2><p>இதன்போது, இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கையளிக்கப்பட்ட மனுக்கள் 
உள்ளடங்கிய ஆவண நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b89685e-1e53-4298-be87-1a88b7418a21/26-6a93d7ed77f88.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, தீச்சட்டிகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்களத்தில், ஓ எம் பி அலுவலகம் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் காணாமல்
ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், சர்வதேசமே நீதியை பெற்றுத்தா உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டிருந்தன.</p><p>

இந்த நிலையில், போராட்டத்தில் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதி,
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e4faf7-1a7c-4127-8270-3136f9720ee6/26-6a93d7ee4f516.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7032f05-4814-4444-9775-9cb8c0f50c68/26-6a93d7ef27c24.webp' /></p><p></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UU565u-hlBQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடம் - தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/building-being-without-permission-in-the-north-1788081698"></link>
            <id>https://tamilwin.com/article/building-being-without-permission-in-the-north-1788081698</id>
            <summary type="text">வலி. தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக்
காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வருவதாக
குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக்
காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வருவதாக
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>

சுமார் 4 பரப்பு விஸ்தீரனம் உள்ள கந்தரோடை விகாரை காணியில் இரண்டு
வருடங்களுக்கு முன்பு குறித்த பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள்
இடம்பெற்றது.
</p><h2>



சட்டவிரோதமாக அமைக்கப்படும் மண்டபம்</h2><p>
அந்த காலப்பகுதியில் பிரதேச சபை அனுமதியின்றி கட்டப்படும் கட்டடத்தை
நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டியிருந்த நிலையில் குறித்த கட்டுமானங்கள்
நிறுத்தப்பட்டிருந்தது.
</p><p>
இந்த நிலையில் மீண்டும் குறித்த பௌத்த மத்திய நிலையக் கட்டுமானம் வெளியார்
பார்க்காத வகையில் உயரமாக மறைப்புச் செய்யப்பட்டு மீண்டும் கட்டுமான
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74ff103-60c0-4c13-87f2-ca0a84f36c55/26-6a93f66eaa96f.webp' /></p><p>
சாதாரண மக்களின் கட்டுமானங்கள் அனுமதியின்றி அமைக்கப்படும் போது அதனை
நீதிமன்றம் மூலம் அகற்றும் பிரதேச சபைகள் இந்த தியான மண்டபம் உரிய
அனுமதிகள் பெறப்படாது அமைக்கப்பட்டு வருவதை கண்டும் காணாமல் இருக்கின்றதா என்ற
கேள்வியும் எழுந்துள்ளது. </p><h2>

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் விசனம்</h2><p>
உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை
சவாலுக்கு உட்படுத்தும் வகையில் குறித்த பௌத்த கட்டுமானம் அமைக்கப்பட்டு
வருகின்ற நிலையில், வடமாகாண ஆளுநர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த
வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயம் தொடர்பில் பிரதேச சபையை தவிசாளரை தொடர்பு கொள்ள
முயற்சித்தபோது, தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உறுப்பினர் ச ஒருவரை தொடர்பு
கொண்டு கேட்ட போது, </p><p>

“ குறித்த சட்ட விரோத கட்டுமானம் தொடர்பில் ஏற்கனவே சபை நிறுத்துமாறு
அறிவுறுத்தல் ஒட்டிய நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் மீண்டும் குறித்த கட்டுமானம் இடம்பெற்று வருகின்ற நிலையில் சபையில் இது
தொடர்பில் பேசி இருக்கிறோம்.

உள்ளூராட்சி சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு கட்டுமானம் தொடர்பில் உரிய
நடைமுறைகளை பின்பற்றி அனுமதிக்கு சமர்ப்பிக்காமல் கட்டுமானம் தொடருமானால்
நீதிமன்றத்தை நாடுவதற்கு சபை தீர்மானித்துள்ளது" என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/66-suspects-involved-in-organized-crime-1788076816"></link>
            <id>https://tamilwin.com/article/66-suspects-involved-in-organized-crime-1788076816</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் 2024 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி முதல் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான 113 விசாரணைகளுடன் தொடர்புடைய சுமார் 6,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இந்தக் காலப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளன.</p><h2>சிவப்பு அறிவித்தல்கள்</h2><p>
</p><p>
இதன்படி, 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 5,423 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை எனவும், மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான 209 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பிரமிட் மோசடி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 367 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/906fc762-a5a2-4671-9c2c-de2ba6b09781/26-6a93f53ac4a8a.webp' /></p><p>
</p><p>
முடக்கப்பட்ட சொத்துக்களில் 2 கிலோ 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணிகள், 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
</p><p>
2024 செப்டெம்பர் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில் 28 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஏனைய 38 சந்தேகநபர்கள் சிவப்பு அறிவித்தல்கள் இன்றி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;பொலிஸ் அறிக்கைகள்</h2><p>
</p><p>
இதேவேளை, 2024 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக 110 புதிய சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி வரையில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டு நடைமுறையில் உள்ள மொத்த சிவப்பு அறிவித்தல்களின் எண்ணிக்கை 236 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ea3074-906a-4c7e-a0ff-4d8e3ec62645/26-6a93f53b8bffb.webp' /></p><p>
</p><p>
 அவற்றில் 96 சிவப்பு அறிவித்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்காக பெறப்பட்டுள்ளன.</p><p>

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களில் 35 பேர் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p> 

அதன்படி, 18 சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், 11 பேர் இந்தியாவிலும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒரு சந்தேகநபர் வீதம் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மின்சார தொடருந்து போக்குவரத்து! 80 பில்லியன் ரூபா ஒதுக்கீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electric-train-service-sri-lanka-80-billion-1788078791"></link>
            <id>https://tamilwin.com/article/electric-train-service-sri-lanka-80-billion-1788078791</id>
            <summary type="text">இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மின்சார தொடருந்து போக்குவரத்தை அறிமுகப்படுத்த 80 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைப் புகையிரத திண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மின்சார தொடருந்து போக்குவரத்தை அறிமுகப்படுத்த 80 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>80 பில்லியன்</h2><p>
</p><p>
அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், 80 பில்லியன் ரூபா மதிப்பீட்டில் மின்சார தொடருந்து சேவைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a41d43af-b5cd-46f1-9c2c-400c6b55814b/26-6a93ed2e3fb5f.webp' /></p><p>
</p><p>
திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் கொழும்பு மருதானை தொடருந்து&nbsp; நிலையத்திலிருந்து ராகம, பாணந்துறை மற்றும் மலவத்த உள்ளிட்ட முக்கிய புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான பாதைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, திட்டம் நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.</p><p>

மின்சார தொடருந்து சேவை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், பயணிகளுக்கு விரைவான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து வசதியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-arrested-with-drugs-1788078028"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-arrested-with-drugs-1788078028</id>
            <summary type="text">கந்தளாயில் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிபுர முதலாம் பிரிவுக்கு
அண்மித்த பகுதியில் நேற்று (29.08.2026) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாயில் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிபுர முதலாம் பிரிவுக்கு
அண்மித்த பகுதியில் நேற்று (29.08.2026) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சுமார் 60 கிராம்
போதைப்பொருளுடன் இருவர் அக்போபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கந்தளாயிலிருந்து கபரணைக்கு கொண்டு செல்லத் தயாராக இருந்த நிலையில் குறித்த
போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>கைதானவர்கள்</h2><p>

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீனிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர்
எனவும், மற்றையவர் கபரண திகம்பத்த பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும்
அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a42a3d-4052-4f00-bed5-19a7fdbe7435/26-6a93eda908cc9.webp' /></p><p>
</p><p>
மேலும், குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும்
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துண்டிக்கப்பட்ட மனிதத்தலை..! பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-head-has-been-found-1788074504"></link>
            <id>https://tamilwin.com/article/human-head-has-been-found-1788074504</id>
            <summary type="text">கொழும்பு - மொரட்டுமுல்ல, இஹல இண்டிபெத்த பகுதியில் உடலிலிருந்து அகற்றப்பட்ட மனித தலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு 119 என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மொரட்டுமுல்ல, இஹல இண்டிபெத்த பகுதியில் உடலிலிருந்து அகற்றப்பட்ட மனித தலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு 119 என்ற அவசர எண்ணுக்கு இன்று (30) காலை சுமார் 8 மணியளவில் வந்த அழைப்பினையடுத்து சம்பந்தப்பட்ட தலை, உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் கொட்டகையொன்றிற்கு பின்னால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சிதைந்த நிலையில் காணப்பட்ட மனித தலை</h2><p>
</p><p>
குறித்த கொட்டகையின் உரிமையாளரே இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a10ddd30-0eb2-434f-9431-d3bc280c8091/26-6a93e6273362d.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து,&nbsp; மொரட்டுமுல்ல பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஆய்வு நடத்தியுள்ளார்.</p><p>

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட மனிதத்தலை, விலங்குகளால் உண்ணப்பட்டு மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து மொரட்டுமுல்ல பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l41N3HfvN5k" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-30T08:29:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் போராட்டங்களை தொடர்வோம் - அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-official-vow-protests-if-rights-denied-1788074704"></link>
            <id>https://tamilwin.com/article/development-official-vow-protests-if-rights-denied-1788074704</id>
            <summary type="text">எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் எதிர்ப்பு
போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் எதிர்ப்பு
போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் இணைத் தலைவர் லோ.தீபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (30.08.2026) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கவனயீர்ப்பு போராட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பூராகவும் கிட்டத்தட்ட 1,20,000 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை
வென்றெடுப்பதற்காக நாடு பூராகவும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள்.
</p><p>
அந்த போராட்டமானது எதிர்வரும் 31ஆம் திகதி சரியாக 12 மணி அளவில் நாடு பூராகவும் தங்கள் கடமை புரியும் அலுவலகங்களுக்கு
முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளார்கள்.</p><p>

இந்த போராட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின்
கூட்டமைப்பாக அரச மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்ததாக
போராட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdf0200e-d804-4b9a-917f-bdc741fd7f92/26-6a93e0384dbf7.webp' /></p><p>இந்த போராட்டத்தில் எமது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும்
முக்கியமான பிரச்சினைகளாக சம்பள உயர்வு பிரச்சினை, முறையான சேவைப்பிரமாணக்
குறிப்பு இல்லாமை உட்பட 
பல அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைக்க உள்ளோம்.</p><p>

அன்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்களே! அதிகரித்த
வாழ்க்கைச் செலவில் இருந்து நாம் விடுபடுவதற்காகவும், இந்த கால ஓட்டத்திற்கு
ஏற்ப எமது வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் சந்தோஷமானதாகவும் வாழ்வதற்காகவும் நாம் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.</p><p>

எனவே அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களது
நேரத்தை ஒதுக்கி ஆதரவு தருமாறு எமது தொழிற்சங்கம் சார்பாக உங்களை கேட்டுக்கொள்கின்றோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:25:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலம்! போதைப்பொருட்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strict-measures-to-control-drugs-goverment-1788076006"></link>
            <id>https://tamilwin.com/article/strict-measures-to-control-drugs-goverment-1788076006</id>
            <summary type="text">பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய சட்டமூலத்தில், போதைப்பொருட்களுக்கு எதிரான கடுமையான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய சட்டமூலத்தில், போதைப்பொருட்களுக்கு எதிரான கடுமையான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
தற்போதைக்கு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச்செய்துவிட்டு,அதற்குப் பதிலாக புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><h2>போதைப்பொருள் வர்த்தகம்&nbsp;</h2><p>
</p><p>
எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்த கூடும் என்று அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7117f5a-dd51-4877-9cd8-c37238513789/26-6a93e8da00fa5.webp' /></p><p>

இதற்கிடையே குறித்த சட்டமூலத்தில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
</p><p>
அவ்வாறான குற்றச்செயல்களுக்கு நடைமுறையில் உள்ள தண்டணைகளை விடவும் கடுமையான தண்டணைகளையும், சட்ட ஏற்பாடுகளைகயும் அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
</p><p>
அதற்காக புதிய சட்டமூலத்தின் ஒரு துணைப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதார வீழ்ச்சிக்கு இனவாத அரசியலா காரணம்..! அருண் ஹேமச்சந்திரா விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economic-devastation-caused-politics-of-racism-1788077357"></link>
            <id>https://tamilwin.com/article/economic-devastation-caused-politics-of-racism-1788077357</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இன, மத உணர்வுகளை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தியதன்
விளைவாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டதாகவும்,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இன, மத உணர்வுகளை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தியதன்
விளைவாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டதாகவும்,
அவ்வாறான அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும்
இடமளிக்காது எனவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி
அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். </p><p>

நாட்டில் ஏற்பட்ட இன முரண்பாடுகள் மற்றும் அவற்றை மையப்படுத்திய அரசியல்
செயற்பாடுகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை பல தசாப்தங்களாக பின்னடையச்
செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாத
வகையில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

டித்வா புயல் காரணமாக மூதூரில் வீடுகளை முழுமையாக இழந்த பயனாளிகளுக்கு, புதிய
வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி 
இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு, காசோலைகளை வழங்கி
வைத்த பின்னர், உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பொருளாதார ரீதியில் முடங்கிய இலங்கை</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களில் இருந்து மீண்டு, ஸ்திரமான
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை
முன்னெடுத்து வருகின்றது. 

இன, மத அல்லது பிரதேச பேதங்களுக்கு அப்பால் அனைத்து
மக்களையும் ஒன்றிணைத்தே இந்தப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இன மற்றும் மத
உணர்வுகள் தூண்டிவிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/660e7c3c-49a4-49bc-a749-8443310d4a50/26-6a93e75592be6.webp' /></p><p> இதன் விளைவாக சமூகங்களுக்கிடையில் சந்தேகமும்
முரண்பாடுகளும் தோற்றுவிக்கப்பட்டதுடன், அதன் தாக்கம் நாட்டின்
பொருளாதாரத்திலும் நேரடியாகப் பிரதிபலித்தது.</p><p>

நீண்டகாலமாக இடம்பெற்ற மோதல்கள் காரணமாக நாட்டின் மனித வளமும் பொருளாதார
வளமும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. </p><p>முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்
பாதிக்கப்பட்டதுடன், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல முக்கிய பொருளாதாரத்
துறைகளும் பின்னடைவைச் சந்தித்தன.
</p><h2>

அரசாங்கத்தை குழப்பும் எதிர்க்கட்சிகள்</h2><p>
அதுமட்டுமன்றி, நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டிய பெருமளவான
வளங்கள் மோதல்களை சமாளிப்பதற்காக செலவிடப்பட்டன. இதன் ஒட்டுமொத்த விளைவாக
பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பல சந்தர்ப்பங்களில் தடைப்பட்டன.

இவ்வாறான வரலாற்றுத் தவறுகளை மீண்டும் செய்வதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது.</p><p>
குறிப்பாக, தற்போதைய பொருளாதார மீட்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய
முக்கியமான காலகட்டத்தில், இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் எந்தவொரு
அரசியல் நடவடிக்கையும் நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

அரசாங்கம் தற்போது எந்தவொரு இடைத்தரகரின் ஊடாகவும் அல்லாமல், நேரடியாக
மக்களுடன் தொடர்பு கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aea01f4-6c16-43c0-a739-89e1dd37369d/26-6a93e7564e340.webp' /></p><p>
</p><p>மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து
அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
</p><p>
எனினும், நாட்டின் முன்னோக்கிய அபிவிருத்திப் பயணத்தை குழப்பும் நோக்கில் சில
தீய சக்திகள் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. மக்களிடையே தேவையற்ற
முரண்பாடுகளை உருவாக்கி, அதன் ஊடாக அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையை
ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
</p><h2>

இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள்</h2><p>
குறிப்பாக, சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கி, அதனை
அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்பது
தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
</p><p>
இனவாதம், மதவாதம் மற்றும் பிரதேசவாதம் போன்ற பிரிவினை அரசியலிலிருந்து நாடு
படிப்படியாக விடுபட்டு வருகின்றது. </p><p>இந்த மாற்றத்தை மீண்டும் பின்னோக்கி கொண்டு
செல்லும் எந்தவொரு முயற்சிக்கும் அரசாங்கம் இடமளிக்காது.

கடந்த காலங்களில் இன முரண்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்னும்
முழுமையாக மீண்டிராத நிலையில், மீண்டும் அதே பாதையில் செல்வது நாட்டின்
பொருளாதாரத்தையும் சமூக ஸ்திரத்தன்மையையும் கடுமையாக பாதிக்கும்.

பொருளாதார நெருக்கடி என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, மதத்தையோ அல்லது
பிரதேசத்தையோ மட்டும் பாதிப்பதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3760618-b0cb-4b74-a1a1-b0d45429bdb1/26-6a93e75702ab1.webp' /></p><p> நாட்டில் ஏற்பட்ட பொருளாதார
நெருக்கடியின் சுமையை அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களே எதிர்கொண்டனர்.

எரிபொருள், எரிவாயு, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக
மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்த காலத்தை நாம் மறந்துவிட முடியாது. </p><p>அந்த
நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பது
அனைவரினதும் பொறுப்பாகும்.
</p><p>
எனவே, பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில்,
மக்களிடையே இன, மத மற்றும் பிரதேச அடிப்படையிலான பிரிவினைகளை ஏற்படுத்தும்
அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் என்ற வகையில் எத்தகைய தடைகள் அல்லது சவால்கள் ஏற்பட்டாலும்
அபிவிருத்திப் பணிகளை கைவிடப் போவதில்லை.</p><p> அதேபோன்று இனவாதமும் மதவாதமும்
மீண்டும் நாட்டில் துளிர்விடுவதற்கும் அனுமதிக்கப் போவதில்லை.

அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கக்கூடிய சூழலை
உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
</p><h2>


அரசியல் சிக்கல்கள்</h2><p>அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தில் இயல்பான விடயமாகும். ஆனால்
அரசியல் இலாபங்களுக்காக இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை
உருவாக்கும் செயற்பாடுகள் நாட்டின் நலனுக்கு எதிரானவை.
</p><p>
கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, புதிய அரசியல் கலாசாரத்தை
உருவாக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும்.</p><p> நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக
ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட
வேண்டும்.

எத்தகைய சதிகளும் சவால்களும் எதிர்கொண்டாலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
தலைமையிலான அரசாங்கம் தனது அபிவிருத்திப் பயணத்தை கைவிடாது.</p><p>
</p><p>
நாட்டை வளமான நாடாகவும், அனைத்து மக்களுக்கும் கண்ணியமானதும் சிறந்ததுமான
வாழ்க்கையை உறுதிப்படுத்தக்கூடிய நாடாகவும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின்
இலக்காகும். அந்த இலக்கை அடையும் வரை எந்தவொரு தடையும் அரசாங்கத்தின் பயணத்தை
தடுத்து நிறுத்த முடியாது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:18:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றமே தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்! நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harshana-nanayakkara-statement-1788074203"></link>
            <id>https://tamilwin.com/article/harshana-nanayakkara-statement-1788074203</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால்
குறிப்பிட முடியாது என&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால்
குறிப்பிட முடியாது என&nbsp;நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க
வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று (29.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>எதிர்க்கட்சியின் நிலைப்பாடு</h2><p>
அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தின் சகல தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே
எதிர்க்கட்சியினர் உள்ளனர். சகலதையும் எதிர்க்கும் அவர்களின் நோக்கத்துக்கு
ஏற்ப அரசால் செயற்பட முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c87fd032-3b4d-4223-b0ce-18cefd8feef0/26-6a93e4198a44c.webp' /></p><p>
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தமானது மக்களின் நலனுக்காகவும் நீதிமன்றக்
கட்டமைப்பு மறுசீரமைப்புக்காகவுமே கொண்டுவரப்பட்டது என்பதால், இதனால்
நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கும் பாதுகாப்புக்கும் எவ்வித பாதிப்பும்
ஏற்படாது.</p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>
</p><p>
பிரதம நீதியரசர் மீது எதிர்க்கட்சியினர் கொண்டுள்ள வெறுப்பு காரணமாகவே இதற்கு
எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல
வேண்டுமா, இல்லையா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்பதால், இது
தொடர்பில் அரசால் எதனையும் தீர்மானிக்க முடியாது.
</p><p>
நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்
என்று உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்குச் செல்ல நாம் தயார். நீதிமன்றத்
தீர்ப்புக்கு அப்பால் எம்மால் செயற்பட முடியாது என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/113-birth-anniversary-late-soumyamurthy-thondaman-1788075022"></link>
            <id>https://tamilwin.com/article/113-birth-anniversary-late-soumyamurthy-thondaman-1788075022</id>
            <summary type="text">அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று (30) கொழும்பிலும், மலையகத்தின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.&amp;nbsp;

இதனையொட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று (30) கொழும்பிலும், மலையகத்தின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>
</p><p>
இதனையொட்டி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.</p><h2>சௌமியமூர்த்தி தொண்டமானின்&nbsp;ஜனன தினம்</h2><p>
</p><p>
இந்த நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7526b371-5c40-4abf-b06f-0e2f3c65810b/26-6a93de7d28f92.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:01:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலையில் முன்னணி ஊடகவியலாளர் மீது கடுமையான தாக்குதல்! தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalutara-prison-dispute-inmate-s-ear-cut-off-1788066604"></link>
            <id>https://tamilwin.com/article/kalutara-prison-dispute-inmate-s-ear-cut-off-1788066604</id>
            <summary type="text">இலங்கையின் முன்னணி தனியார் வானொலிச் சேவையொன்றின் ஊடகவியலாளர் ஒருவருக்கு சிறைச்சாலைக்குள் வைத்து கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னணி தனியார் வானொலிச் சேவையொன்றின் ஊடகவியலாளர் ஒருவருக்கு சிறைச்சாலைக்குள் வைத்து கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>தற்பொழுது அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி</h2><p>இலங்கையின் முன்னணி தனியார் வானொலி அலைவரிசையொன்றில் ஒளிபரப்பாகும் பிரபலமான புலனாய்வு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஊடகவியலாளர் ஒருவர், போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
தனக்கு எதிரான வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ள சமீபத்தில் டுபாயிலிருந்து திரும்பியபோது கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bfa513-ff75-4566-b2f7-735f1fa3b9f1/26-6a93bf0e7e79f.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர் பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், திடீரென களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் அவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ள்ப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>களுத்துறை சிறைக்கு அவர் கொண்டுவரப்பட்ட பின்னர், அங்கு அவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த மற்றொரு கைதி, கூர்மையான ஆயுதத்தால் ஊடகவியலாளரது காதையும் வாயையும் வெட்டி துண்டித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அத்துடன் களுத்துறை சிறைச்சாலைக் கைதிகள் குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த நிலையில், குறித்த ஊடகவியலாளர் நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
</p><h2><br></h2>]]></content>
            <updated>2026-08-30T07:35:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரச உத்தியோகஸ்தர் வீடொன்றின் மீது தாக்குதல் - தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-a-house-in-jaffna-npp-member-arrested-1788073450"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-a-house-in-jaffna-npp-member-arrested-1788073450</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
மேலும் அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கெமராக்களை சேதமாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><h2>அரசியல் அழுத்தம்</h2><p>
நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் , நடாத்தி , வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் தலைமையிலான கும்பல் சேதப்படுத்தி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22597cfb-300f-4a87-87bc-48f35b357d70/26-6a93dc6f7941a.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.</p><p>

பொலிஸார் பொலிஸ் பிணையில் விடுவிக்க அரசியல் அழுத்தங்களும், பொலிஸ் உயர் அதிகாரிகளின் அழுத்தங்களும் தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>எதிர்வரும் 01/09/2026 அன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறே பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வீடு புகுந்து அச்சுறுத்தி பொருட்களுக்கு சேதம்
விழைவித்த ஒருவருக்கு பொலிஸாரால் பிணை வழங்க முடியாது என்றும் பொலிஸ் பிணை
வழங்கியது அரசியல் அழுத்தம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-30T07:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா - பாவற்குளம் காட்டுப் பகுதியில் திடீர் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-fire-in-vavuniya-pavakulam-forest-area-1788070245"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-fire-in-vavuniya-pavakulam-forest-area-1788070245</id>
            <summary type="text">வவுனியா - பாவற்குளம் காட்டுப் பகுதியில் இன்று (29.08.2026) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - பாவற்குளம் காட்டுப் பகுதியில் இன்று (29.08.2026) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><h2 style="text-align: justify; ">திடீர் தீப்பரவல்</h2><p>இதனையடுத்து தீயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர்
மற்றும் இராணுவத்தினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். </p><p>இதன்மூலம் மக்கள் குடிமனைகளுக்குள் தீ பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ac101b4-1112-4eaa-a72b-91c72718df48/26-6a93cf585df6f.webp' /></p><p> வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்படும்
நிலையில் பல்வேறு காட்டுப் பகுதிகளிலும் தீப்பரவல் ஏற்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T07:08:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை! சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/referendum-on-the-22nd-amendment-to-constitution-1788068782"></link>
            <id>https://tamilwin.com/article/referendum-on-the-22nd-amendment-to-constitution-1788068782</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த
வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என சட்டமா அதிபர் திணைக்களம் அரசுக்கு தெரியப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த
வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என சட்டமா அதிபர் திணைக்களம் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
</p><p>
இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான
சுனில் வட்டகல ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்டுள்ளார்.</p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>
"22ஆவது திருத்த சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது என்றே அரசு
உறுதியாக நம்புகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7751f446-8cff-4e9f-add2-a8ff260b5152/26-6a93d2f3279ad.webp' /></p><p> சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என்ற சட்ட
விளக்கத்தையே சட்டமா அதிபர் திணைக்களம் எமக்கு வழங்கியுள்ளது என்றும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு
உயர்நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அரசு என்ன செய்யும் என எழுப்பப்பட்ட
கேள்விக்குப் பதிலளித்த அவர், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு அமையவே
அரசின் இறுதி முடிவுகள் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T06:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை - வணிகத்தரப்பினர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-relief-yet-for-ditwa-hit-traders-govt-blamed-1788065614"></link>
            <id>https://tamilwin.com/article/no-relief-yet-for-ditwa-hit-traders-govt-blamed-1788065614</id>
            <summary type="text">டித்வா புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகர்களுக்கு இதுவரை காலமும் நிவாரணம் வழங்கப்படவில்லை என தேசிய வணிகர்களை வலுவூட்டுவதற்கான அமைப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டித்வா புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகர்களுக்கு இதுவரை காலமும் நிவாரணம் வழங்கப்படவில்லை என தேசிய வணிகர்களை வலுவூட்டுவதற்கான அமைப்பின் செயலாளர் புஷ்பகுமார கருணாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>அத்துடன் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகர்களுக்கான இழப்பீடு தொடர்பாக அதே நாளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை அரசாங்கம் இரத்து செய்துவிட்டு, மற்றொரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><h2>இழப்பீடு வழங்காமை&nbsp;</h2><p>அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அவர்களின் திறமையின்மையையும் தகுதியின்மையையும் தெளிவாகக் காட்டுகிறது.
</p><p>
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட தேசிய வணிகர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பரிந்துரைத்து 2026 ஜூன் 3ஆம் திகதி அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், அதே நாளில் மற்றொரு சுற்றறிக்கை மூலம் அதை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2fae86a-5cbb-4fe3-ae66-32619593c943/26-6a93c8940afdd.webp' /></p><p>ஆட்சியாளர்கள் பின்பற்றும் இதுபோன்ற இரட்டைக் கொள்கைகளால் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள உள்ளூர் வணிக சமூகம் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
</p><p>
தற்போதைய சூழ்நிலையில் வணிகர்கள் மிகவும் நெசருக்கடியான நிலையில் உள்ளனர். பொறுப்பற்ற முறையில் சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காதது ஏன்?</p><p> அதிகாரப்பூர்வ அரசு நிறுவனமான சமாகம்மெதுர அலுவலகத்தில் முறையாகப் பதிவுசெய்யப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவதைத் தவிர்ப்பதற்காக அதிகாரிகள் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T06:46:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமரை மலர் பறிக்கச்சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pick-lotus-flowers-was-attacked-by-a-crocodile-1788070522"></link>
            <id>https://tamilwin.com/article/pick-lotus-flowers-was-attacked-by-a-crocodile-1788070522</id>
            <summary type="text">கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில்
ஆண் ஒருவரின் சடலம் நேற்று (29.08.2026) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என பொரல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில்
ஆண் ஒருவரின் சடலம் நேற்று (29.08.2026) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக்
கால்வாயில் இறங்கிய போதே ஹொரண, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு
பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.</p><h2>சடலம் மீட்பு</h2><p>
</p><p>
பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும்
தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து
சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை
அடுத்துப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0716c862-43b8-44f2-a55f-5b4ba8262c6c/26-6a93cda5bfae3.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான
காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை
மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T06:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றம் எங்களுக்குள் இருந்து வர வேண்டும்! சிறிநாத் எம்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srinath-mp-statement-about-economy-1788068461"></link>
            <id>https://tamilwin.com/article/srinath-mp-statement-about-economy-1788068461</id>
            <summary type="text">பொருளாதாரமாக இருந்தாலும் சரிதான், தொழில் துறையில்
இருந்தாலும் சரிதான், அரசியலில் இருந்தாலும் சரிதான் மற்றவர்களைக் குற்றம்
சாட்டுவதை அல்லது மற்றவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதாரமாக இருந்தாலும் சரிதான், தொழில் துறையில்
இருந்தாலும் சரிதான், அரசியலில் இருந்தாலும் சரிதான் மற்றவர்களைக் குற்றம்
சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து
எங்களுக்குள் இருந்து மாற்றம் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
</p><p>மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
இடையிலான “குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல்” என்ற விசேட கலந்துரையாடல் நேற்று (29.08.2026) மட்டக்களப்பில் நடைபெற்றது.
</p><p>இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>பொருளாதார பிரச்சினை</h2><p>மேலும் தெரிவிக்கையில், மிக முக்கியமாக இந்த அரசியல் உரிமையும், பொருளாதார உரிமையும் ஒன்றோடொன்று
பின்னிப் பிணைந்தவை. இந்த அரசியல் உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுது, அதாவது
அதிகாரப் பரவலாக்கம் - நீங்கள் மாகாண சபை என்று கேட்ட விடயம் - பொதுவாக அதிகாரப்
பரவலாக்கம், ஏனென்றால் எங்களுடைய அதிகாரத்தை எல்லா மட்டங்களுக்கும் கொண்டு
செல்கின்ற பொழுது, இந்த பொருளாதாரப் பிரச்சினைகளை மிக இலகுவாக முன்னெடுத்துத்
தீர்க்கக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d45354-854d-467f-9a69-020f7bd2eadb/26-6a93c7fdc431a.webp' /></p><p>
</p><p>ஒரு நாட்டில் வந்து பல அபிவிருத்தி அடைந்த நாடுகளிலே இந்த பொருளாதாரப்
பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்பட்டிருக்கின்றன என்றால், அங்கு அரசியல்
பிரச்சினைகள், அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கின்ற பொழுதுதான் அங்கு பொருளாதார
ஸ்திரத்தன்மை இருக்கும்.
</p><p>முக்கியமாக எங்களது நாட்டில் வந்து மிக முக்கியமாகத் தேவையாக இருக்கின்ற இந்த நாடாளுமன்றத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட வேண்டிய, கடந்த காலங்களிலே பொருளாதார
நெருக்கடியிலே சிக்கித் தவித்த நாடு இப்போது தற்காலிகமாக ஒரு நிலைக்கு
வந்திருக்கின்றது என்றாலும் கூட, அது நிரந்தரமாக உங்களுடைய இந்த நீங்கள்
முன்னிலைப்படுத்திய அல்லது முகவரியிட்ட விடயங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்
என்றால், மிக முக்கியமாக அந்தச் சமத்துவமும் எல்லாரும் இங்கு பல்லினம்
வாழுகின்ற சமூகச் சமத்துவம் அது பெரும்பான்மையாக இருந்தாலும் சரிதான்,
சிறுபான்மையாக இருந்தாலும் சரிதான் எல்லோருக்கும் உரிய சமத்துவம் இருக்க
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a04d7c-9d81-447b-8c64-a85ce263438f/26-6a93c7febd4bd.webp' /></p><h2>பொருளாதார ஸ்திரத்தன்மை</h2><p>
</p><p>இளைஞர், யுவதிகளுக்கான சமத்துவம், மதங்களுக்கான சமத்துவம், இன்னும் எல்லா
வகையிலும் அந்தச் சமத்துவம் ஆண், பெண் சமத்துவம் இருக்க வேண்டும் என்ற
அடிப்படையிலே இந்த அரசியல் உரிமைகள் வந்து உண்மையாக அதிகாரப் பரவலாக்கங்கள்
மூலம் கொண்டு செல்லப்படுகின்ற பொழுது, பொருளாதார ஒரு ஸ்திரத்தன்மை அங்கு
அடையப்படும்.</p><p>
பல விடயங்கள் வேலைவாய்ப்பு அல்லது போதைப்பொருள் கட்டுப்பாடு, மற்றது
விளையாட்டு இந்த விடயங்களெல்லாம் நீங்கள் சொன்னதில் எனக்கு நிறைய உடன்பாடு
இருக்கின்றது. மாகாண சபைகள் பலப்படுத்தப்படுகின்ற பொழுது, அந்த விடயங்களை
ஒவ்வொன்றும் ஒரு கள நிலைகளிலும் பிரதேச சபை என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட
அதிகாரம், மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட அதிகாரம், மாகாணங்களின் ஊடாக இந்த
அடிப்படை விடயங்கள் உண்மையாக உங்களுடைய குரலாக வருகின்ற பொழுது நிச்சயமாக
வரவேற்கப்பட வேண்டிய விடயம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/512540bd-156b-4a2e-9f8f-fa8a8b3be9de/26-6a93c7ff946a6.webp' /></p><p>
இந்த எண்ணக்கருக்கள் பலப்படுத்தப்படுகின்ற பொழுது, அந்த நாட்டில அந்த
மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் ஊடாக குரலாக இந்த
எண்ணப்பாடுகளை நாங்களும் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது,
வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
</p><p>ஆகவே, உண்மையாக ஒரு வலுவான நிலையில் இருக்கின்ற அரசு நான் அரசாங்கக் கட்சியைப்
பற்றிச் சொல்லவில்லை, அரசாங்கம் இந்த இளைஞர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வருடமும்
நீங்கள் தான் அந்த வாக்குகளைச் செலுத்துகின்ற தீர்மானிக்கின்ற சக்திகளாக
வருகின்றீர்கள். உங்களுடைய எண்ணப்போக்கு எவ்வாறு இருக்கின்றதோ அதைச் சார்ந்து
செயல்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c07b43-0970-4c16-ace4-2f5a1c73f6a5/26-6a93c8006ae1f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T06:06:05+00:00</updated>
        </entry>
    </feed>
