<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-01T14:27:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் திடீர் தீ விபத்து..! தெய்வாதீனமாக உயிர்தப்பிய வீட்டார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticalo-fire-accident-today-1785592960"></link>
            <id>https://tamilwin.com/article/batticalo-fire-accident-today-1785592960</id>
            <summary type="text">மட்டக்களப்பு- ஏறாவூர் 5ஆம் குறிச்சிப்
பகுதியில் இன்று(1) காலை வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- ஏறாவூர் 5ஆம் குறிச்சிப்
பகுதியில் இன்று(1) காலை வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
இன்று காலையில் குறித்த வீட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத்
தொடங்கியதை வீட்டிலிருந்தவர்கள் அவதானித்துள்ளனர்.</p><p></p><h2>தீ விபத்து</h2><p> 

தீ விபத்தைக் கண்டு
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அயலவர்களும் இணைந்து கடுமையான
போராட்டத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p>

இருப்பினும் இந்தத் தீ விபத்தில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன்
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பல மின்சார
வீட்டு உபகரணங்கள் கதிரைகள் மேசைகள் மாணவர்களின் அறநெறி பாடசாலை சீருடைகள்
என்பன முற்றாகத் தீயில் கருகி நாசமாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a20e64ac-0ff8-4885-868a-f0949b9b77de/26-6a6e00014dbd5.webp' /></p><p> 

அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள்
எதுவும் இன்றி உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
</p><p>
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. </p><p>

இந்த சம்பவம்
தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தீ
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T14:17:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பொலிஸ் மா அதிபர்களுக்கு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் : பின்னணி என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysteries-behind-igp-s-of-sri-lanka-1785553806"></link>
            <id>https://tamilwin.com/article/mysteries-behind-igp-s-of-sri-lanka-1785553806</id>
            <summary type="text">இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. </p><p>

கடந்த ஆட்சியாளர்களின் கீழ் பணியாற்றிய மூன்று பொலிஸ் மா அதிபர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் நீதித்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. </p><p>

அதற்கமைய முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, சி.டி. விக்கிரமரத்ன, தேசபந்து தென்னகோன் ஆகியோர் அடுத்தடுத்து பொறிக்குள் சிக்கியுள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

மரண தண்டனை</b></h2><p>34ஆவது பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தரவிற்கு நேற்றையதினம் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbe544b-adbc-474a-9e18-e98ee25a80a3/26-6a6d68cc9068f.webp' /></p><p>2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றத்திற்காக பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

35 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த சி.டி. விக்கிரமரத்ன கடந்த வாரம் அவரின் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.</p><p> தனது மெய்பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>

கோட்டாபய ஆட்சிக்காலத்தில் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு ராஜபக்சர்களுக்கு விசுவசமாக செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர் ஆவார். </p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.</p><p></p><p> </p><h3><b>

கடும் அழுத்தம் </b></h3><p>அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், மூன்றாம் தரப்பினால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தம் காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0757b634-3fb3-4c5a-a2a5-0ead195a554e/26-6a6d68cd5db16.webp' /></p><p>36ஆவது பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு வலுகட்டாயமாக அவரின் பதறி பறிக்கப்பட்டது.</p><p>நாடாளுமன்றக் குழுவின் விசாரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

கடந்த ராஜபக்சக்களின் ஆட்சியின் போது போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இவர் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர அடிப்படையில் நல்ல மனிதர் என்ற போதிலும், ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக செயற்பட்டு இன்று சிறைக் கைதியாக மாறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p>பொம்மைகளாக செயற்பட்டவர்கள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளனர். எனினும் பொம்மைகளை ஆட்டுவித்த வித்தைக்காரர்கள் எப்போது தண்டிக்கப்படுவார்கள் என நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> 
 </p>]]></content>
            <updated>2026-08-01T13:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் பதற்றம்! ஒருவர் பலி - சிறைச்சாலைக்குள்ளிருந்து கேட்ட துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-in-mahara-prisons-1785584349"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-in-mahara-prisons-1785584349</id>
            <summary type="text">புதிய இணைப்புமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிலித்துள்ளனர்.மேலும் காயமடைந்த 6 பே...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிலித்துள்ளனர்.</p><p>மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். &nbsp;</p><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் உள்ள ஒரு கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்தச் சம்பவத்தில் கைதிகள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக ராகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;விசேட அதிரடிப்படை</h2><p>

முன்னதாக, மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலைமை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்தவும் விசாரணைகளை முன்னெடுக்கவும் பல சிறப்பு பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

அத்துடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da0b6414-e9dc-4b3d-8e54-b31f51b6ded9/26-6a6df3a9e9c1b.webp' /></p><p>

சிறைச்சாலை திணைக்களத்தின் தகவலின்படி, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

இன்று (01) மாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்த பதற்ற நிலைக்கு காரணமாக இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதனைத் தொடர்ந்து, மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பொலிஸார் மற்றும் STF அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;உத்தியோகபூர்வ அறிக்கை</h2><p>

இதேவேளை, கைதிகள் சிறைச்சாலையின் முதன்மை சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மற்றொரு புறம், இன்று பிற்பகல் கைதிகளைச் சந்திக்க வந்திருந்த உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341b10d6-5610-46e4-b012-2f04563f510a/26-6a6df3a912f9a.webp' /></p><p> </p><p>இதனால் அவர்கள் தற்போது சிறைச்சாலைக்கு வெளியே காத்திருக்கின்றனர்.

சிறைச்சாலைக்கு வெளியே இருந்த கைதிகளின் உறவினர்கள், சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடவில்லை.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
நிலைமையை விசாரிக்க பல சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக&nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;பதற்ற நிலை</h2><p>எனினும், அமைதியின்மைக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6020b5c-ecea-4580-a8ee-f7653beafbd9/26-6a6de7317730d.webp' /></p><p>

நிலைமை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>
 </p>]]></content>
            <updated>2026-08-01T13:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-military-aircraft-crashes-in-california-1785590088"></link>
            <id>https://tamilwin.com/article/us-military-aircraft-crashes-in-california-1785590088</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மிராமர் கடற்படை விமான தளத்திற்கு
அருகே அமெரிக்க மரைன் கோர்ப்பிற்குச் சொந்தமான எஃப்-35பி ரக அதிநவீன ஸ்டெல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மிராமர் கடற்படை விமான தளத்திற்கு
அருகே அமெரிக்க மரைன் கோர்ப்பிற்குச் சொந்தமான எஃப்-35பி ரக அதிநவீன ஸ்டெல்த்
போர் விமானம் விபத்துக்குள்ளானது.
</p><p>
விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, சரியான நேரத்தில் பராசூட் மூலம்
குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.</p><p>காயமடைந்த அவர், உடனடியாக
சிகிச்சைக்காகக் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான
நிலையில் உள்ளார்.</p><p></p><h2>விபத்து</h2><p>

விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அப்பகுதியில் கடும் புகை மூட்டம்
ஏற்பட்டதுடன், அதைச் சுற்றியுள்ள புல்வெளிகளில் தீப்பற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5f7a2f6-bfc7-4e82-a663-c50dd8347b3e/26-6a6df2fd5d2ed.webp' /></p><p> சம்பவ
இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில்
ஈடுபட்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T13:28:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்யை விரைவில் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-with-tamil-nadu-cm-vijay-planned-soon-1785584270"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-with-tamil-nadu-cm-vijay-planned-soon-1785584270</id>
            <summary type="text">தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட பல அரசியல்
தலைவர்களை சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட பல அரசியல்
தலைவர்களை சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், இலங்கையிலுள்ள பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள், தமிழ் பேசும் கட்சிகளின் பேரவையாக இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுச் செயலாளரை விரைவில் சந்திக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.</p><p>
நேற்று திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்த அவர்,
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.</p><p></p><h2>முக்கிய பிரச்சினை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>
"எதிர்வரும் திங்கட்கிழமை அன்று, தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துத் தமது சமூகங்கள் எதிர்நோக்கும் முக்கிய
பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளன. அதேநாளில் எதிர்க்கட்சித்
தலைவரையும் சந்திக்க முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/036c6db6-c4f8-43fb-80b4-317caccede3a/26-6a6dee44cb7d0.webp' /></p><p>

இலங்கைக்கு விரைவில் வருகை தரவுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்தித்து,
13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல் மற்றும் தமிழ் மக்களின் காணிப்
பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்துப் பேசத்
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும்
சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடற்றொழிலாளர் பிரச்சினை</h2><p>
யுத்தக் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை உடனடியாக விடுவிப்பது
தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்வைக்கவுள்ளோம்.</p><p>

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினை இரு நாடுகளின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன்
தொடர்புடைய மனிதாபிமான விடயம் என்பதால், இராஜதந்திரப் பேச்சுகள் மூலம் நிரந்தர
தீர்வு காணப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/160aa7c5-24d2-4201-886b-064d2cc28795/26-6a6dee45b4f2c.webp' /></p><p>
</p><p>
இந்தியாவின் அபிவிருத்தி உதவிகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும்
மக்களுக்கும் உரிய முறையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T13:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிந்தவூரில் வீதிப் பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcycles-involved-in-street-racing-in-ninthavur-1785587508"></link>
            <id>https://tamilwin.com/article/motorcycles-involved-in-street-racing-in-ninthavur-1785587508</id>
            <summary type="text">அம்பாறை- நிந்தவூர் பகுதியில் நேற்று (31) இரவு வீதிகளில்
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்ட இளைஞர்களை இலக்கு
வைத்து நிந்தவூர் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- நிந்தவூர் பகுதியில் நேற்று (31) இரவு வீதிகளில்
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்ட இளைஞர்களை இலக்கு
வைத்து நிந்தவூர் பொலிஸார் அதிரடி சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.</p><p>

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மற்றும் சட்டவிரோதமாக
உருமாற்றம் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகப் பயணித்த
இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்ததுடன், இதுவரை 5 மோட்டார் சைக்கிள்களைத்
தம்வசம் பறிமுதல் செய்துள்ளனர்.
</p><p>சோதனை நடவடிக்கையின் போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர்
பயணித்தமை,தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம்
செலுத்தியமை,வாகன இலக்கத்தகடுகள் இன்றிப் பயணித்தமை,பொலிஸாரின் கட்டளையை
மீறித் தப்பிச் செல்ல முயன்றமை
உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நபர்கள் அடையாளங்காணப்பட்டு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொலிஸார் எச்சரிக்கை</h2><p>
</p><p>
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடும்
முறையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மோட்டார்
சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f45ed901-85ff-4785-878a-a140f29a35ba/26-6a6de9bce6980.webp' /></p><p>
</p><p>
பொது வீதிகளில் பிறருக்கு இடையூறாகவும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும்
மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவோருக்கு எதிராக இத்தகைய அதிரடிச் சோதனைகள்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T13:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-ratmalana-1785586237"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-ratmalana-1785586237</id>
            <summary type="text">இரத்மலானை கந்தவல வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை கந்தவல வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;துப்பாக்கிச் சூடு</h2><p>

சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4527ff-24aa-4589-8a2e-6a758a763d15/26-6a6de41f5f783.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-01T12:18:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீளப் பெறப்பட முடியாத சமஸ்டி தீர்வு வேண்டும்: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-need-an-irreversible-federal-solution-1785584028"></link>
            <id>https://tamilwin.com/article/we-need-an-irreversible-federal-solution-1785584028</id>
            <summary type="text">தமிழ் மக்கள் 13ம் திருத்தத்தின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் வடக்கு
கிழக்கில் கெளரவமான உரிமைகளுடன் வாழக்கூடிய மீலப் பெற முடியாத சமஸ்டி தீர்வை
அனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்கள் 13ம் திருத்தத்தின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் வடக்கு
கிழக்கில் கெளரவமான உரிமைகளுடன் வாழக்கூடிய மீலப் பெற முடியாத சமஸ்டி தீர்வை
அனைத்து தரப்பினரும் ஓரணியிலிருந்து நின்று வலியுறுத்த வேண்டுமென வடக்கு
கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்தது.
</p><p>
வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவினால் 8 மாவட்டங்களிலும் சமஸ்டி
தீர்வை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட 100 நாள் செயற்திட்டத்தின் நான்கு வருட
பூர்த்தியை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.</p><p>

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையை
முன்மொழிந்து இவ்வருடத்துடன் 75 வருடங்கள் ஆகின்றன.

1900களின் ஆரம்ப முதலே சிங்கள பௌத்த அரசியல் தலைமைகளின் தமிழர் எதிர்ப்பு
பரப்புரைகளும் எழுத்துக்களும், தமிழ் மக்களின் அரசியல், சமுதாய நலன்களைக்
காப்பதற்கான தனித்துவமான அரசியல் அமைப்பொன்றின் அவசியத்தை தமிழ் அரசியல்
தலைமைகளுக்கு உணர்த்தியது.</p><h2>நில அபகரிப்புகள்</h2><p>
</p><p>
1921ம் ஆண்டு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை
முன்னெடுப்பதற்காக சேர். பொன். அருணாச்சலம் தலைமையில் “தமிழர் மகாஜன சபா”
உருவாக்கப்பட்டது.</p><p>

சுதந்திரத்தின் பின் ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள தலைமைகள் மேற்கொண்ட திட்டமிட்ட
அரசியல் ஓரங்கட்டல்கள், நில அபகரிப்புகள், வடக்கு கிழக்கில் அபிவிருத்தி எனும்
பெயரில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆகியன தமிழ் மக்களின்
இறைமையை அபகரித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/668f30b7-00b9-4008-9700-4c4e7ac7b98b/26-6a6dddfc6da11.webp' /></p><p> </p><p>இந்த இறைமை மீறலை நிறுத்துவதற்காக அன்றைய தமிழர் தலைமைகள்
சமஷ்டிக் கொள்கையை 1951ம் ஆண்டு முன்வைத்தனர்.

ஒரு மக்கள் சமூகம் தமது வாழ்விடப் பிரதேசத்தில் தமக்கான அரசியல் வாழ்வை தாமே
தீர்மானித்து, தம்மைத் தாமே நிர்வகித்து, கௌரவமாகவும் உரிமைகளுடனும் வாழ்வதே
இறைமையாகும்.</p><p>

ஒற்றை ஆட்சி முறையில் இறைமை பகிர்ந்துகொள்ளப் படுவதில்லை. அதிகாரம் மத்திய
அரசிடம் இருக்கும். மத்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் மாநிலத்துக்கு
வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப்பெற முடியும். 13வது திருத்தச்சட்டம்
இத்தகையாதாகும்.
</p><p>
இதன் மூலம் வடக்கு கிழக்குக்கு இறைமை பகிரப்படவில்லை. அன்று தொட்டு
இன்றுவரையிலும் இலங்கையில் ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள அரசியல் தலைமைகள்
இறைமையைப் பகிர்ந்துகொள்ள முன்வராத நிலையில் கானல் நீர்போன்ற 13வது
திருத்தத்தின் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்.</p><p>
</p><p>
ஒரு நாட்டின் இறைமை என்பது அந்நாட்டு மக்களுக்குள்ள உரிமைகள், மக்கள் தமக்கான
அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அவர்களைக் கொண்டு தமக்கேற்ற அரசியல் சமூக
பொருளாதார கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கி
தமக்கான முன்னேற்றத்தை எட்டுவதாகும்.சுருங்கக் கூறின் தமது அரசியல் தலைவிதியை
தாமே தீர்மானிப்பதற்கு மக்களுக்குள்ள அதிகாரமாகும்.</p><h2>நாட்டின் இறைமை</h2><p>
</p><p>
இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் இறைமையை வெறுமனே
நிலத்துடன் குறுக்கிக்கொண்டுள்ளனர்.

இலங்கையின் நிலத்தொடர்ச்சியை பாதுகாப்பதுதான் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பது
எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.</p><p>

இறைமை என்பது மக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். தமது நாட்டிலோ மாநிலத்திலோ
தமக்கான அரசாங்கத்தை தெரிவுசெய்யவும், தமக்கான வாழ்வியலை தீர்மானிக்கவும்,
உரிமைகைள பிரயோகிக்கவும் மக்கள் கொண்டுள்ள அதிகாரப் பலமே இறைமையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8106b7f-fd66-42db-b04a-d6169f7f0257/26-6a6dddfd3e1e6.webp' /></p><p>

மக்களைத் தவிர்த்துவிட்டு நிலத்தை மாத்திரம் பார்க்க முடியாது. மக்களைப்
பாதுகாப்பதே இறைமையை பாதுகாப்பதாகும். இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த
பெரும்பான்மை அரசுகள், வடக்கு கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளன.

தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் தமக்கான அரசியல் தீர்வை அடைவதற்கு மக்களுக்குள்ள
அதிகாரத்தை புறக்கணித்துள்ளன.</p><p> உரிமைகளை அத்துமீறுகின்றன.

ஆகவே இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கில் மீளப் பெற முடியாத சமஷ்டி தீர்வே
நிலையானது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
</p><p>
குறித்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கை சேர்ந்த எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த
சமூகம் அட்ட அமைப்பினர் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு
இணை இணைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-01T11:52:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயில் வீதி மீண்டும் மூடல் - இளங்குமரன் எம்.பி. வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palali-raja-rajeshwari-amman-temple-road-closed-1785584818"></link>
            <id>https://tamilwin.com/article/palali-raja-rajeshwari-amman-temple-road-closed-1785584818</id>
            <summary type="text">இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ
இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக
திறக்கப்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ
இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக
திறக்கப்பட்ட நிலையில் நேற்று(31.07.2026) மீண்டும் மூடப்பட்டது.</p><p>

ஏற்கனவே கடந்த ஆண்டு, ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் செல்லும் வீதி
 தற்காலிக பாதையூடாக செல்லும் வகையில் திறக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அத்துடன், நிரந்தர பாதை மூடப்பட்டே இருந்தது. எனினும் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் தங்கள் காணியை சுற்றி வேலியை அமைத்த காரணத்தினால் அந்த வழியை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. </p><h2>

பாதை தற்காலிகமாக திறப்பு</h2><p>

இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர், இராணுவத்தினரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்
இளங்குமரனிடமும் கோரிக்கை விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbbc610-9572-43d3-9f4a-9f95a3b2ca98/26-6a6dddd48588f.webp' /></p><p> 

இது தொடர்பில், இராணுவத்தினருடன்
கலந்துரையாடியதையடுத்து, நிரந்தர பாதை தற்காலிகமாக திறக்கப்பட்டது.</p><p> 

அதன்பின்னர், ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்டதன் பின்னர், அந்த வீதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். </p><p>

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம்(30.07.2026) திருவிழா முடிந்த நிலையில்
நிரந்தர பாதை மூடப்பட்டுள்ளது.
</p><h2>
காணிகள் விடுவிப்பதற்கு நடவடிக்கை</h2><p>
இதேவேளை, பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

“ கடந்த காலத்தில் மக்கள் கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக திருவிழாவுக்காக
தற்காலிகமாக அந்த பாதை திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab00502-d439-44e7-98b6-5d2caa15cf52/26-6a6dddd54bbd8.webp' /></p><p> குறித்த பாதையானது நிரந்தரமாக
திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஒரு மாத்திற்குள் அந்த பாதை நிரந்தரமாக திறக்கப்படும்.
</p><p>
மேலும், இரண்டு மாதத்திற்குள் குறித்த வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள
பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன” என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T11:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்ச தனது தம்பியின் சட்டத்தரணிக்கு நீதித்துறையில் வழங்கிய உயர் பதவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-supreme-court-mahinda-rajapaksa-1785583856"></link>
            <id>https://tamilwin.com/article/justice-supreme-court-mahinda-rajapaksa-1785583856</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் சில வெற்றிடங்கள் ஏற்பட்டன. குறித்த வெற்றிடங்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் சில வெற்றிடங்கள் ஏற்பட்டன. குறித்த வெற்றிடங்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டப்பட்டவர்களை நிமித்துள்ளதாக வெளிநாட்டில் இருந்து இயங்கும் புலனாய்வு வலையொளி செய்தித் தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அதில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலதிக தகவல்கள்.. 

அரசு நீதித்துறையில் அதிகாரத்தை பிரயோகிப்பதாகவும் அல்லது தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. </p><p>ஆனால் அரசு நீதித்துறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு தலையீட்டையும் செய்யவில்லை என்பது தெளிவான காரணியாகும். </p><p>ஆனால், இந்த எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, நீதிபதிகளை நியமிப்பதற்கு அல்லது வழக்குத் தீர்ப்புகளுக்கு எவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகித்தது, தலையீடுகளைச் செய்தது என்பது இன்று சாட்சிகளுடன் தெரியவந்துள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>மகிந்த வழங்கிய நியமனம்</h2><p>அந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகளுக்கான வெற்றிடங்களுக்கு மகிந்த ராஜபக்ச பியந்த ஜயவர்தன என்பவரை நீதிபதியாக நியமித்தார். </p><p>உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட பியந்த ஜயவர்தன என்பவர், நீதித்துறை படிநிலைகளான நீதவான், மாவட்ட நீதிபதி, மேல் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியிலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு வந்த ஒருவரல்ல. </p><p>இந்த பியந்த ஜயவர்தன என்பவர் நீதித்துறை சேவைக்கு வெளியே இருந்த ஒரு சட்டத்தரணி ஆவார். அத்துடன், இவர் பசில் ராஜபக்சவின் சட்டத்தரணியாவார்.
</p><p>
தனது சகோதரரின் சட்டத்தரணியை நாட்டின் உயர் நீதித்துறை பீடமான உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் வழங்கியது அரசியல் தலையீடு இல்லையா? </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca88ae3d-0375-4e24-846f-58982657e4a3/26-6a6dd8f2b8add.webp' /></p><p>அதில் ராஜபக்சவினர் நீதித்துறையில் அரசியல் தலையீட்டைச் செய்யவில்லையா?
இந்தச் சந்தர்ப்பங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதைக் காணவில்லையா? </p><p>அவை சட்டத்தின் மேலாதிக்கத்திற்கோ அல்லது சட்டத்தின் சுயாதீனத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தாத விடயங்களா? அவை குறித்து அக்காலத்தில் ஒன்றுமே பேசவில்லை.
</p><p>அத்தோடு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோதும் இதே போன்ற ஒரு நியமனத்தை செய்தார். அதாவது, உயர்நீதிமன்றத்திற்கு பிரசன்ன ஜயவர்தன என்பவரை நியமித்தார். </p><p>
எனவே, பிரசன்ன ஜயவர்தன - பியந்த ஜயவர்தன ஆகிய இருவருமே அரசியல் தேவைகளுக்காக, உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள். ஆனால், அதற்கு எதிராக யாரும் பேசவில்லை. இவ்வாறு ஆர்ப்பாட்டங்களும் செய்யவில்லை.&nbsp; </p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T11:35:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஏற்றுமதி இலக்கு குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-export-target-for-2030-1785580879"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-export-target-for-2030-1785580879</id>
            <summary type="text">2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடப்பதே தமது இலக்கு என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடப்பதே தமது இலக்கு என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக அதிகாரிகளைச் சந்தித்த போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 23 சந்தைகளில் நிறுவப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தக அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர், சர்வதேச சந்தையில் இலங்கையின் வர்த்தகம் மற்றும் பரந்த பொருளாதார நலன்களை முன்னோக்கி கொண்டு செல்வதில் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><h2>ஏற்றுமதி வருமானம்&nbsp;</h2><p>சந்தை அபிவிருத்தி, ஏற்றுமதி ஊக்குவிப்பு, முதலீட்டு வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றினூடாக அளவிடக்கூடிய பெறுபேறுகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206ba744-b080-4b07-b77e-82c86bd64c99/26-6a6dd6f1d7993.webp' /></p><p> </p><p>

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் கடப்பது உள்ளிட்ட தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் இலக்குகளுடன் தங்களது நடவடிக்கைகளை சீரமைக்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T11:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரிக்கு நெருக்கமானவரால் ஏழு தடவை மறைக்கப்பட்ட இரகசிய உளவுத்துறை தகவல்..! ஹேமசிறியின் உருக்கமான வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-row-convict-hemasiri-s-confessions-1785576925"></link>
            <id>https://tamilwin.com/article/death-row-convict-hemasiri-s-confessions-1785576925</id>
            <summary type="text">2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p>இதன்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது வாக்குமூலத்தில் முன்வைத்ததாக கூறப்படும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதன்பின்னர் மரண தண்டனை விதிப்பதற்கு முன் பிரதிவாதிக்கு ஏதேனும் கூற உள்ளதா என நீதிமன்றம் வினவிய நிலையில், அதற்கு பதிலளித்த ஹேமசிறி பெர்னாண்டோ பல தகவல்களை&nbsp;வாக்குமூலமாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட கருத்துக்களாவது,&nbsp;</p><p>&nbsp;</p><p> </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வாக்குமூலத்தில் வெளியிட்ட தகவல்</span></p><p>"தலைமை நீதிபதி முன்வைத்த கருத்துக்களை நான் ஏற்கவில்லை. கனம்பொருந்திய நீதிபதி அவர்களே.. பாதுகாப்புச்செயலாளர் என்று ஒரு பதவி இல்லை. நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவே பணியாற்றினேன். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்பது மற்ற அமைச்சுகளின் செயலாளர்களைப் போன்றதே. சிறப்பு அதிகாரங்கள் எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107be1b3-7e3c-449a-9f4a-4183a4286a3c/26-6a6dc4fa2b8e5.webp' /></p><p> </p><p>அமைச்சரின் அறிவறுத்தலின் படியே நான் செயல்பட்டேன். அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றிருந்தார். பதில் அமைச்சராக எவரையும் அவர் நியமிக்கவில்லை. அமைச்சர் இல்லாத போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் செயல்பாடுகள் முடங்கிவிடும். </p><p>நிலந்த ஜயவர்தன ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயல்பட்டார். நான் நியமிக்கப்பட்டதும் புலனாய்வு தகவல்கள் குறித்து எவ்வாறு செயல்படுவது என்று ஜனாதிபதியிடம் கேட்டேன். அதற்கு ஜனாதிபதி, 'புலனாய்வு தகவல்களை நிலந்த எனக்குத் தெரிவிப்பார், நீங்கள் நிர்வாக வேலைகளைக் கவனியுங்கள்' என்றார்.</p><p> நான் அமைச்சின் நிர்வாகக் கடமைகளை மட்டுமே செய்தேன். நான்கு ஆண்டுகளில் புலனாய்வு தகவல்களை ஜனாதிபதியிடம் நிலந்தவே வழங்கி வந்தார். தாக்குதலுக்கு முந்தைய நாள் நிலந்தவிடமிருந்து எந்த ஆவணமும் எனக்கு வரவில்லை. இரண்டு வாட்ஸ்அப் செய்திகள் மட்டுமே வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11173bba-7b7e-4e6d-8d58-1733a4dc9568/26-6a6dc5b60cb51.webp' />&nbsp;</p><p> ஏப்ரல் 9 ஆம் திகதி நடந்த புலனாய்வு ஆய்வுக் கூட்டத்தில் நிலந்த இந்தத் தாக்குதல் பற்றி எதையும் கூறவில்லை. கூறியிருந்தால் அங்கிருந்த இராணுவ, கடற்படை புலனாய்வு பிரதானிகளுக்கும் தெரிந்திருக்கும்.எங்கள் குழுக்களில் ஒன்று கிழக்குப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தும் என்றும் அவர் எங்களுக்குத் தெரிவித்தார்.</p><h2>ஏழு தடவை மறைக்கப்பட்ட தகவல்</h2><p> இந்தத் தகவல் கிடைத்த ஏப்ரல் 1 முதல் 16 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி இலங்கையில் இருந்தார். ஆனால், நிலந்த ஜயவர்தன இந்தத் தகவலை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருக்கலாம். அவர் அதை வேண்டுமென்றே மறைத்தார். இந்தத் தகவலை அவர் ஏழு முறை மறைக்க முயன்றார்.</p><p> அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரே இப்படிச் செயல்பட்டால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலையில், நிலந்த ஜயவர்தன என்னை அழைத்து, நடத்தப்படவிருந்த தாக்குதல்கள் குறித்து எனக்கு தெரிவித்தார். இதை நம்ப முடியுமா என கேட்டேன். இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிப்போம் என்று அவர் கூறினார்.</p><p> நிலந்த ஜயவர்தனவின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1500 புலனாய்வு அதிகாரிகள் உள்ளனர். இதை விசாரித்து உறுதிப்படுத்தும்படி அவர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5625db01-c9b2-4f83-b781-38c2af2a37f6/26-6a6dc4face695.webp' />&nbsp;</p><p>இராணுவத்தை வரவழைக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் கூட எனக்கு இல்லை. தலைமை நீதிபதி அவர்களே, நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால், நீங்களும் அதையே செய்திருப்பீர்கள்.</p><p> 

"தாக்குதலுக்குப் பிறகு ஜனாதிபதி விஜித் மலல்கொட குழுவை நியமித்தார். அந்த குழு 14 அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியது. ஆனால் மற்றவர்களை விட்டுவிட்டு எனக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி கூறினார்.</p><p> ஏப்ரல் 22 இல் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் நானும் பொலிஸ் மா அதிபருமே பொறுப்பு என்றும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார். அந்த முடிவின் இறுதி விளைவே இந்தத் தீர்ப்பு.</p><p> இந்த தீர்ப்பைக் கேட்டு இருவர் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவர் நிலந்த ஜயவர்தன, மற்றையவர் மைத்திரிபால சிறிசேன. சட்டமா அதிபர் திணைக்களம் ஆரம்பத்திலிருந்தே நிலந்த ஜயவர்தனவைப் பாதுகாத்தது. சாதாரண அறிவு கூட இல்லாத ஒருவனால் மட்டுமே இதில் மகிழ்ச்சியடைய முடியும்.</p><p>"எனக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. காயம் இன்னும் ஆறவில்லை. எனக்கு 76 வயதாகிறது. சிறையிலடைத்தாலும் தேவையான சிகிச்சைகளை வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தூக்கிலிடப்படுவதற்காவது நான் உயிரோடு இருக்க வேண்டுமே. வரலாறு என்றாவது ஒரு நாள் என்னை விடுவிக்கும்" எனக் கூறி குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>&nbsp;</p><p><b>இதன்பின்னர் தீர்ப்பை அறிவித்த தலைமை நீதிபதி பிரியந்த லியனகே,</b></p><p>"குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உள்ளது. இந்த பிரதிவாதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆவார். எனவே அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T11:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் இடைநிறுத்தப்பட்ட விசாரணை..! அடுத்து தண்டனை கைதியாகும் முக்கிய பிரமுகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-calls-for-probe-into-shani-abeysekara-1785578995"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-calls-for-probe-into-shani-abeysekara-1785578995</id>
            <summary type="text">குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக நேற்றைய தினம்(31) நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பில் இன்று(01.08.2026) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர குற்றவியல் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால், ஷானி அபேசேகர மற்றும் ரவி சேனவிரத்ன ஆகியோருக்கும் அதேபோன்ற அல்லது அதனை விட வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம்.</p><h2>
அடுத்தடுத்து சிக்கப்போகும் NPP ஆட்சியில் உள்ள அதிகாரிகள்</h2><p>
மேலும், தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மேற்குறிப்பிட்ட&nbsp; இரு அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec860ae-d7c3-4ab0-a287-4444fd476f1e/26-6a6dd6430ca83.webp' /></p><p> அதே சமயம், உளவுத்துறை மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் பல்வேறு தவறுகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>


ஷானி அபேசேகர மற்றும் ரவி சேனவிரத்ன ஆகியோரின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த விசாரணை, ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட நிலையில், அந்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும்.</p><p>
அத்துடன், விசாரணை நடைபெறும் காலப்பகுதியில் ஷானி அபேசேகரை CID பணிப்பாளர் பதவியிலிருந்தும், ரவி சேனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்குமாறும் கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-01T11:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-arrested-in-vavuniya-with-100g-of-ice-drug-1785582373"></link>
            <id>https://tamilwin.com/article/2-arrested-in-vavuniya-with-100g-of-ice-drug-1785582373</id>
            <summary type="text">வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் கிராமத்தில்
100 கிராம் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது
செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் கிராமத்தில்
100 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று(1) தெரிவித்தனர்.</p><p>

பூவரசன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்
முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும்
கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p> </p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20771d26-9148-4095-895b-86293b4d7893/26-6a6dd52db5af4.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவம் குறித்து பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T11:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயலில் பட்டம் விட்ட 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி - பொலிஸ் உத்தியோகத்தர் மகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-dead-two-missing-as-fishing-boat-negombo-1785576136"></link>
            <id>https://tamilwin.com/article/one-dead-two-missing-as-fishing-boat-negombo-1785576136</id>
            <summary type="text">கடவத்தை பகுதியில் தனது வீட்டின் பின்புறமாக உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களால் தாக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடவத்தை பகுதியில் தனது வீட்டின் பின்புறமாக உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கடவத்தை பகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறமாக உள்ள நெல் வயலில் பட்டம் கொண்டிருந்த 17 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.</p><p></p><p> </p><h2>

17 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
இந்த தாக்குதலின் போது கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன்,&nbsp; தாக்குதலில் கழுத்தில் காயமடைந்த சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக இராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c943ccfe-faa4-4452-aa82-5647b4aa8daa/26-6a6dd224195ff.webp' /></p><p> 

காதல் விவகாரம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
 இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். </p><h2>

மூன்று இளைஞர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
தப்பியோடிய மற்ற இரண்டு சந்தேக நபர்கள் பின்னர் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d28cb74-33d5-4f47-95f7-f481871cd23b/26-6a6dd224dae0e.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரின் தந்தை தற்போது பணியில் இருக்கும் பொலிஸ் அதிகாரி என்றும் பொலிஸார் விசாணையில் தெரியவந்துள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் நேற்று(31.07.2026) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-01T11:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளியங்குளம் சந்தியில் பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-motorcycle-collision-at-puliyankulam-1785579044"></link>
            <id>https://tamilwin.com/article/bus-motorcycle-collision-at-puliyankulam-1785579044</id>
            <summary type="text">வவுனியா- புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக&amp;nbsp; பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தானது நேற்று(31) மாலை இடம்பெற்றுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா- புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக&nbsp; பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த விபத்தானது நேற்று(31) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் நேற்று மாலை பயணித்த சொகுசு
பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார்
சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில்,
புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d149d710-35d3-4389-a2d2-45c68c2a0743/26-6a6dc626851a3.webp' /></p><p>
</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T10:11:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் பிரபல உணவகத்தில் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-restaurant-in-sainthamaruthu-1785576515"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-restaurant-in-sainthamaruthu-1785576515</id>
            <summary type="text">சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள்,
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் மற்றும்
பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் தீவிரமாக
ஈடுபட்டனர்.
</p><p>
இந்தத் தீ விபத்துக்கான பின்னணி மற்றும் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள்
இதுவரை வெளியாகவில்லை.</p><p>இதேவேளை, தீ விபத்து இடம்பெற்று அனைத்தும் எரிந்து சாம்பலான பின்னரே கல்முனை
மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக அப்பகுதி
மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p></p><h2>தீ விபத்து</h2><p> </p><p>கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப்
பிரிவினரின் இத்தகைய மந்தமான செயற்பாடு தொடர்கதையாகி வருவதாக மக்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89e63cd-54f3-42e5-b59a-75a45d45a81b/26-6a6dc275c4b28.webp' /></p><p>
</p><p>
பாரிய வர்த்தக நகரமாக விளங்கும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதி மக்களின்
பாதுகாப்பு கருதி, மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினை வினைத்திறன் மிக்கதாக
மாற்றியமைக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச
மக்களும் வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீகவாபியில் பயிர்ச்செய்கைகள் நாசம்: நெல் வயல்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crops-destroyed-in-deegavapi-wild-elephants-1785575707"></link>
            <id>https://tamilwin.com/article/crops-destroyed-in-deegavapi-wild-elephants-1785575707</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில்
காணப்பட்ட பல ஏக்கர் நெல் வயல்கள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாகச்
சேத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில்
காணப்பட்ட பல ஏக்கர் நெல் வயல்கள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாகச்
சேதமடைந்துள்ளன.</p><p>

இரவு வேளையில் காட்டுப் பகுதியிலிருந்து கிராமத்திற்குள் புகும் காட்டு யானைக்
கூட்டங்கள், அறுவடைக்குத் தயாராகவுள்ள பயிர்ச் செய்கைகளுக்குள் புகுந்து
நெற்பயிர்களை உட்கொண்டதுடன், அவற்றை மிதித்து நாசப்படுத்தியுள்ளதாகப்
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>உடனடியாக நடவடிக்கை</h2><p>
</p><p>
வங்கிக் கடன்களைப் பெற்றுப் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட
பயிர்ச்செய்கைகள், அறுவடைக்குச் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறு
நாசமாகியுள்ளமையினால் தம்மைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு
உள்ளாக்கியுள்ளதாக விவசாய சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d777246a-5677-4967-ae8a-d73ed8623f11/26-6a6dba91afe9b.webp' /></p><p>

இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக்
கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர
அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:21:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியர்கள் மூவர் கைது..! 292 கிலோகிராம் கஞ்சா மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-arrested-for-trying-to-illegally-kerala-1785575198"></link>
            <id>https://tamilwin.com/article/indian-arrested-for-trying-to-illegally-kerala-1785575198</id>
            <summary type="text">



இலங்கைக்கு சட்டவிரோதமாக கேரள கஞ்சாவை கொண்டு வர முயற்சித்த மூவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இந்தியாவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



இலங்கைக்கு சட்டவிரோதமாக கேரள கஞ்சாவை கொண்டு வர முயற்சித்த மூவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த கைது நடவடிக்கை இந்தியாவில் உள்ள இராமநாதபுரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

மூவர் கைது</h2><p>

இலங்கைக்கு, கடல் வழியாக கடத்த திட்டமிடப்பட்டிருந்த 292 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b711b5-1abf-43a4-b48b-812760856d60/26-6a6db9a542635.webp' /></p><p>
</p><p>
கடற்கரைக்கு கொண்டு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​ரகசியத் தகவலின் பேரில் இந்திய பொலிஸார் நடத்திய சோதனையில் கஞ்சா கடத்தல் இடம்பெறுவது தெரியவந்துள்ளது.</p><p> 

இதற்கமைய, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p> 



</p>]]></content>
            <updated>2026-08-01T09:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் தாக்குதல்! ட்ரம்ப்பின் புதிய எச்சரிக்கையால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-to-bomb-iran-this-weekend-trump-gives-hit-1785574113"></link>
            <id>https://tamilwin.com/article/us-to-bomb-iran-this-weekend-trump-gives-hit-1785574113</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சில ஊடக அறிக்கைகளின்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p> 

சில ஊடக அறிக்கைகளின்படி, இந்த தாக்குதல் இந்த வார இறுதியிலேயே நடைபெறக்கூடும் என கூறப்படுகிறது.</p><p></p><h2>அமெரிக்க இராணுவம்</h2><p>
</p><p>
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலின்படி, ஈரானை சரணடைய வற்புறுத்தும் நோக்கில் புதிய தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்க இராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மெரிலாந்தில் உள்ள கேம்ப் டேவிட் ஜனாதிபதி ஓய்வு மையத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ட்ரம்ப்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bff930ad-9abc-4a6a-a8e6-328869255be7/26-6a6db7b4887ee.webp' /></p><p>நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம். ஒரு கட்டத்தில் அவர்கள் இனிமேல் இதைத் தாங்க முடியாது என்று கூறுவார்கள். எங்களின் நோக்கம் வெற்றி பெறுவதுதான் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், "ஈரான் தொடர்ந்து பொய் கூறி உண்மைகளைத் திரித்துக் கூறுவதால், அவர்கள் மீது நான் நம்பிக்கையை இழந்து வருகிறேன் என்றும் தெரிவித்தார்.</p><p></p><h2>நேரடி தாக்குதல்</h2><p>


CBS News வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இதுவரை இல்லாத அளவிலான கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதலை திட்டமிட்டு வருகின்றன.</p><p>
</p><p>
இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அமெரிக்கா–ஈரான் இடையிலான மென்மையான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் மீண்டும் நேரடி தாக்குதலில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74a7c302-747a-4456-9fdf-8f71471f7a37/26-6a6db7b537de6.webp' /></p><p>
</p><p>
உலகளாவிய மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படாத வகையில், திங்கட்கிழமை நிதிச் சந்தைகள் திறக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கைகளை நிறைவு செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், எனினும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>&nbsp;ஈரான் மீது நடத்திய தாக்குதல்</h2><p>


தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனினும், தாக்குதலை தொடங்குவதற்கான இறுதி அனுமதி (Go Order) யை ட்ரம்ப் இதுவரை வழங்கவில்லை.
</p><p>
இதற்கிடையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலைன் லெவிட், அமெரிக்கா வெற்றி பெறும்; ட்ரம்ப் பதவியில் இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாது" என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890bd9e6-8e8b-431b-8ec6-64369a555e2a/26-6a6db7b5dd39a.webp' /></p><p>
</p><p>
அதேபோல், பென்டகனின் தலைமை பேச்சாளர் ஷான் பார்னெல், அமெரிக்க பாதுகாப்புத் துறை முழுமையாகத் தயாராக உள்ளது என கூறினார்.
</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னரும் இரு தரப்பும் தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டதால் பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T09:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் நேற்றிரவு நடந்த இரகசிய கலந்துரையாடல்: நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என அச்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tiran-alas-secret-meeting-1785574423"></link>
            <id>https://tamilwin.com/article/tiran-alas-secret-meeting-1785574423</id>
            <summary type="text">கொழும்பு 07லில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் இரசிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இரவு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
டிரான் அலஸின் அலுவலகத்திலே இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 07லில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் இரசிய பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இரவு நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
டிரான் அலஸின் அலுவலகத்திலே இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. </p><p>அதில் கம்மன்பில- விமல் வீரவன்ச- தயாசிறி ஜயசேகர மற்றும் மேலும் நான்கு அல்லது ஐந்து பேர் இருந்துள்ளனர். சிலர் வெளிச்சத்தில் தங்களின் முகம் தெரியாமல் இருக்க இருள் சூழ்ந்த பகுதியில் தங்களின் காரை நிறுத்தி இறங்கிச் சென்றுள்ளனர். அதனால் அவர்களைச் சரியாக அடையாளம் காண முடியாமலிருந்துள்ளது.</p><h2>

</h2><p></p><h2>சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்</h2><p>இவர்கள் எதற்காக இச்சந்திப்பை நடத்தினார்கள் என இன்னும் தெரியவரவில்லை. டிரான் அலஸ் என்பவர் எதற்கும் தயாரான பிரதான தரகர். அரசில் அல்லது எதிர்க்கட்சியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழும் ஒரு நபர். </p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வந்ததும் இவை அனைத்தும் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. </p><p>

குறிப்பாக டிரான் அலஸ் என்பவர் நாட்டிற்குப் பல மில்லியன் டொலர்களை நட்டப்படுத்திய ஒரு பாரிய மோசடிக்காரர். பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களான கொஸ்கொட சுஜீ- கரந்தெனிய சுதா போன்றவர்களுடன் நேரடியாகத் தொடர்பிலிருந்தவர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8bca9c-8be0-4c45-b886-ee7c6d7456dc/26-6a6db41927b6d.webp' /></p><p>டிரான் அலஸின் பத்திரிகை அலுவலகத்தில் மாலை 6:43 மணிக்கே இச்சந்திப்பு நடந்துள்ளது. 17 பேர் வரை அங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>டிரான் அலஸ் ஒரு நேரத்தில் ஜனாதிபதி அநுர திசாநாயக்கவுடன் இருக்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்சவுடன் இருக்கிறார். இது அரசியலை விட ஒரு மோசடி. ஏனெனில் அவருக்குத் தேவை இவர்கள் அனைவரையும் அருகில் வைத்துக் கொண்டு தனது காரியங்களைச் சாதிப்பதுதான்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T09:00:55+00:00</updated>
        </entry>
    </feed>
