<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-25T08:22:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு இழுத்து வரப்பட்ட ஆபத்தான நபர் - பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-celebrates-the-bus-lalith-s-arrest-1787631988"></link>
            <id>https://tamilwin.com/article/people-celebrates-the-bus-lalith-s-arrest-1787631988</id>
            <summary type="text">ஆபத்தான நபரான லலித் கண்ணங்கர கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபத்தான நபரான லலித் கண்ணங்கர கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
டுபாயில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கண்ணங்கர என்ற பஸ் லலித் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளார்.
</p><p>
இதனை ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.</p><h2><b> 

பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சி</b></h2><p>மேலும், அப்பகுதிகளில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d03d77-9a29-4aed-aed6-0204c9f63f94/26-6a8d1be7d46c2.webp' /></p><p>யாசகர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் பஸ் லலித் லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த நபரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-25T08:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/training-aircraft-accident-at-ratmalana-airport-1787645645"></link>
            <id>https://tamilwin.com/article/training-aircraft-accident-at-ratmalana-airport-1787645645</id>
            <summary type="text">இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கும் விமானப் பயிற்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>
இரத்மலானை விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கும் விமானப் பயிற்சி பாடசாலைக்கு சொந்தமான, 4R-DRA என்ற பதிவு இலக்கத்தை கொண்ட Cessna 152 ரக பயிற்சி விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இன்று இரத்மலானை விமான நிலையத்திற்கு தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c36a45db-eb36-4b0a-a860-f38a62ea8c39/26-6a8d4fc25a9b2.webp' /></p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகி்ன்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T08:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை தமிழ் இனத்தின் பிரச்சினையாகப் பாருங்கள்! காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-community-must-see-this-as-their-problem-1787641528"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-community-must-see-this-as-their-problem-1787641528</id>
            <summary type="text">இதை தமிழ் இனத்தின் பிரச்சினையாகப் பாருங்கள், எங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதை தமிழ் இனத்தின் பிரச்சினையாகப் பாருங்கள், எங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகள் சங்கத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (24.08.2026) 
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்</h2><p>
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின்
ஏற்பாட்டில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவியாகவும் வடக்கு - கிழக்கு இணைந்த உப தலைவியாகவும் இருக்கிறேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f26b1d-f964-40f0-902b-c36cd92bb325/26-6a8d41dd8080e.webp' /></p><p>எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வழக்கம்போல சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
தினத்தை வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் பேரணிகளாக செய்து வருகின்றோம்.</p><p>
</p><p>
இந்தமுறை அதனை ஒரு மாநாடாகச் செய்வதற்காக வடக்கு - கிழக்கு இணைந்த தாய்மார்களாக
நாங்கள் ஒன்றிணைந்து இந்த மாநாட்டிற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.</p><h2>சர்வதேச விசாரணை</h2><p>
</p><p>
எதிர்வரும் 30ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இந்த பேரணியானது
ஆரம்பிக்கப்பட இருக்கிறது. 

காலையில் 9 மணி போல இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
தந்தை செல்வா மண்டபத்திற்கு பேரணியாக வந்த பிற்பாடு, இந்த மாநாட்டிற்கான
நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்பதை ஊடக வாயிலாக
எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283b6a40-c69d-4052-b9f8-729dc97e8171/26-6a8d438e0a42f.webp' /></p><p>அந்த மாநாட்டின் நோக்கம், இவ்வளவு காலமும் உலகப் பொறிமுறையில்
நம்பிக்கையிழந்து, சர்வதேச நீதிப் பொறிமுறையை வேண்டி, பாதிக்கப்பட்ட தரப்பாக
நீண்டகாலமாக நாங்கள் சர்வதேச விசாரணையின் ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன
நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து, அதற்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின்
முன் நிறுத்தி, அவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தி, 2017ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் இதனை முன்னெடுத்து வருகின்றோம்.</p><p>

ஆனால்,
இதுவரைக்கும் எங்களுக்கான எந்தவொரு நீதியும் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இது ஒரு தமிழர்களின் பிரச்சனையாகப் பாருங்கள், எங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம். இனிவரும்
சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:16:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிதிகள் மீது அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது! - சுரேன் ராகவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/defamation-justice-is-condemnable-suren-raghavan-1787644238"></link>
            <id>https://tamilwin.com/article/defamation-justice-is-condemnable-suren-raghavan-1787644238</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன உட்பட சிலர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு, தலைமை நீதியரசர் மற்றும்
நீதிபதிகள் குறித்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன உட்பட சிலர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு, தலைமை நீதியரசர் மற்றும்
நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசுவது முற்றிலும் தவறானது என ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன்
ராகவன் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (24)
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,</p><h2>அதிகபட்ச தண்டனை</h2><p>

"நீதிபதிகள் மற்றும் தலைமை நீதியரசருக்கு எதிரான இத்தகைய அவதூறுகள் தொடர்பில்,
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுக்களும் உடனடி
விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனையை வழங்க
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68d830aa-c6ed-4936-9ac2-bc18b6f80f61/26-6a8d4dfa3038a.webp' /></p><p>

மேலும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 14 நீதிபதிகளையும்
உள்ளடக்கிய விரிவான நீதிபதி அமர்வு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட
வேண்டும்" என்று வலியுறுத்தினார்.</p><p>

நாட்டில் தற்போதைய நிலவரப்படி உணவுப் பணவீக்கம் 11 வீதமாகவும், பொதுப்
பணவீக்கம் 7 வீதமாகவும் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில்
மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவு மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்
அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்தார்.</p><p>

எல் நினோ காலநிலை மாற்றத்தால் நாட்டின் நெல் விவசாயத்திற்கு
ஏற்படவுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள அரசாங்கம் வைத்துள்ள தீர்வுகள் என்ன
என்றும், நெல் கொள்முதலை அரசாங்கம் எவ்வாறு முன்னெடுக்கப் போகின்றது என்றும்
அவர் கேள்வி எழுப்பினார்.</p><h2>இலங்கையின் ஊடகத்துறை வீழ்ச்சி</h2><p>

மேலும், ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின்
(jVP) தீவிர செயற்பாட்டாளர் என்ற ஒரே காரணத்திற்காக, கணேசன் என்பவர்
சென்னையின் துணை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய
அவர், தகுதியான பல நபர்கள் இருக்கும் நிலையில் இந்த நியமனத்தை மாற்றுமாறும்
கோரிக்கை விடுத்தார்.</p><p>இலங்கையின் ஊடகத்துறை வீழ்ச்சியடைந்து வருவது குறித்தும் கவலை வெளியிட்ட அவர்,
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காட்டுவது
ஏன் என வினவினார்.</p><p>
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியிலேயே தாம் இணைந்த எதிரணியில்
அமர்வதாகவும், தனிப்பட்ட சிலரின் கருத்துக்களுடன் தமக்கு உடன்பாடில்லை எனவும்
குறிப்பிட்ட அவர், முன்னாள் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப்
பதவியிலிருந்து நீக்கப் பாடுபட்ட வழக்கறிஞர்கள் சிலர் அங்கு இருப்பதாகவும்,
அத்தகைய செயற்பாடுகளுடன் தம்மால் ஒருபோதும் உடன்பட முடியாது எனவும் சுரேன்
ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு சுமார் 9 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bottled-water-at-an-exorbitant-price-in-nallur-1787643265"></link>
            <id>https://tamilwin.com/article/bottled-water-at-an-exorbitant-price-in-nallur-1787643265</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
வித...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை
செய்யப்படுவதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப் பெற்ற
தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை
செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><h2>தண்டப்பணம் விதிப்பு</h2><p>

அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக, யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்
நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில், இன்றைய தினம் (25.08.2026) நடைபெற்ற
வழக்கு விசாரணையின் போது உணவாக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
தண்டம் விதித்த மன்று , தண்ட பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை
அனுபவிக்க வேண்டுமென கட்டளையிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b670c766-7909-4c6b-8136-2d4e88bc3145/26-6a8d4cdb7bf09.webp' /></p><p>
</p><p>
இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற
குற்றத்திற்காக மன்றினால் தண்டம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே
குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-bandara-further-remanded-1787644292"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-bandara-further-remanded-1787644292</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, செப்டெம்பர் 09 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, செப்டெம்பர் 09 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25.08.2026) சுகீஸ்வர பண்டாராவின் பிணை மனுவை நிராகரித்து, அவரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.</p><h2>அரசு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாக&nbsp;</h2><p> 

அரச சம்பளங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த தொடர் விசாரணையின் தொடர்பில், சுகீஸ்வர பண்டாரா ஜூன் 18 அன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) கைது செய்யப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d73f6dcb-f541-42f4-8c53-8487c2c24736/26-6a8d4c10e54f5.webp' /></p><p>
அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rauff-hakeem-meets-high-commissioner-of-canada-1787643935"></link>
            <id>https://tamilwin.com/article/rauff-hakeem-meets-high-commissioner-of-canada-1787643935</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்
ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை சந்தித்து கலந்துரையாடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்
ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>இந்த சந்திப்பு&nbsp;கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சந்திப்பின் போது, நாட்டின் சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் இரு
தரப்பு உறவுகள் தொடர்பில் இருவரும் சிநேகபூர்வமாக கருத்துக்களை பகிர்ந்து
கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:45:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் புதியவர்கள் களமிறங்குவது ஜனநாயக சூழலை வலுப்படுத்தும் – டக்ளஸ் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-entrants-polls-strengthen-election-1787641736"></link>
            <id>https://tamilwin.com/article/new-entrants-polls-strengthen-election-1787641736</id>
            <summary type="text">மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு புதியவர்கள் பலர் ஆர்வம் காட்டி
வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்
ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு புதியவர்கள் பலர் ஆர்வம் காட்டி
வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்
டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் பல்வேறு தரப்பினரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம்
காட்டி வருவது, மக்கள் மத்தியில் ஜனநாயக ரீதியான அரசியல் பங்களிப்புக்கான
ஆர்வம் அதிகரித்து வருவதையே வெளிப்படுத்துவதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச வட்டார உறுப்பினர்களுடனான
சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>தேர்தலில் போட்டியிடுவதற்கு&nbsp;</h2><p>இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் - மாகாண சபைகளுக்கான தேர்தல்
நடைபெறவுள்ளதாக அடிக்கடி செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், கட்சிகள்
மாத்திரமன்றி சமூகத்தின் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த புதியவர்கள் அரசியல்
களத்தில் களமிறங்குவதற்கு விருப்பம் வெளியிட்டு வருவது வரவேற்கத்தக்க
விடயமாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4256888-4de1-4d17-beba-095d64ecddf5/26-6a8d43457255a.webp' /></p><p>
இதேவேளை அரசியல் என்பது குறிப்பிட்ட சிலருக்கான துறையாக
மட்டுப்படுத்தப்படாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் தமது
பங்களிப்பை வழங்குவதற்கான களமாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும் புதியவர்கள் அரசியலுக்குள் வருவதன் ஊடாக புதிய சிந்தனைகள், புதிய
அணுகுமுறைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதிய
செயற்றிட்டங்கள் முன்வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனவும் டக்ளஸ்
தேவானந்தா சுட்டிக்காட்டினார்.</p><p>அந்தசகையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு தரப்பினரும் ஆர்வம்
செலுத்துவது ஜனநாயக சூழலை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்த அவர்,
மக்கள் தங்களது அரசியல் விருப்பங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும்
தங்களுக்கு பொருத்தமான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் சந்தர்ப்பம்
ஏற்படுத்தப்படுவது அவசியம் எனவும் கூறினார்.</p><h2>அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க</h2><p>

மாகாண சபைகள் மக்களின் அன்றாட வாழ்வுடன் நேரடியாக தொடர்புபட்ட பல்வேறு
விடயங்களில் முக்கிய பங்காற்றக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பாக இருப்பதால்,
அவற்றின் செயற்பாடுகளில் திறமையானதும் மக்கள் சார்ந்ததுமான பிரதிநிதித்துவம்
அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f215f4c3-bb29-4f7b-a51e-181ad083c6df/26-6a8d43464ff8c.webp' /></p><p>அதேவேளை, தொடர்ச்சியாக நாம் எதை வலியுறுத்தி வந்தோமோ அதுவே இன்று
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>அந்தவகையில் எமது பாதையே நன்மைதரும்
ஒன்றாக இருக்கின்றது என்பதை மக்கள் இன்று உணர்ந்துகொண்டுள்ளனர்.</p><p>கட்சியின் வட்டாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி எந்த
தேர்தல்கள் வந்தாலும் கட்சி உறுப்பினர்கள் தமது பிரதேச மக்களின் தேவைகள்
மற்றும் எதிர்பார்ப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு
அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா
அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
குறித்த கூட்டத்தின் போது கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக் செயலாளர்
ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்,தென்மராட்சி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ,
மேலதிக நிர்வாக செயலாளர் தர்சன், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்
செயற்பாட்டாகர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cJ9mSCAjMcY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் மற்றும் அரச பேருந்துகளின் போட்டியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/competition-between-buses-impact-students-1787636838"></link>
            <id>https://tamilwin.com/article/competition-between-buses-impact-students-1787636838</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து, தனியார் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் க.பொ.த. உயர்தர
பரீட்சை எழுதும் மாணவர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து, தனியார் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் க.பொ.த. உயர்தர
பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்வோர் பெரும்
சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (24.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>போட்டியாக பயணித்த பேருந்துக்கள்</h2><p>
</p><p>
பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கோவில்
பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடத்தி
வருகின்றது. இதில் நகர பகுதியில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மற்றும் அரச தனியார்
ஊழியர்கள் செல்வது வழமையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a3a3723-aad0-4ee1-aeab-981844f2c289/26-6a8d3328d2493.webp' /></p><p>
ஆனால் நேற்றைய தினம் குறித்த பேருந்தானது வழமையான நேரமான 5:45 மணிக்கு
செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக, தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு&nbsp; போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு
உள்ளாகியுள்ளனர்.
</p><p>
தொடர்ச்சியாக வடமராட்சி - கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும்
தனியார் பேருந்துகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் </h2><p>குறிப்பாக உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில்
நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு
செய்வது, நாகர்கோவில் - பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை,
பருத்தித்துறை - கொழும்பு, பருத்தித்துறை - வவுனியா சேவை உட்பட அரச தனியார்
போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமை ஆகியவை இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/905422a5-a68e-451b-8d0d-ac0175703cbd/26-6a8d3327f2d10.webp' /></p><p>நேற்றைய தினம் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம்
அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து
முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் பயணம் செய்துள்ளனர்.</p><p> குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை சாலை முகமையாளருடன்
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களை தொடர்புகொள்ள
முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T07:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம் - இன்று பதிவாகியுள்ள புதிய நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787638230"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787638230</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (25.08.2026) சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (25.08.2026) சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>இதேவேளை நேற்றைய தினம் (24.08.2026) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபாயால் குறைந்துள்ளது.</p><h2>தங்கத்தின் விலை நிலவரம்</h2><p>
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/150bfe4a-f89f-4041-b717-667aee73ea67/26-6a8d41427c852.webp' /></p><p>அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 44,163 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T07:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதுளை மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/badulla-hospital-specialist-doctar-death-1787625354"></link>
            <id>https://tamilwin.com/article/badulla-hospital-specialist-doctar-death-1787625354</id>
            <summary type="text">காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p><p>

சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே நேற்று காலை (24) சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>மரணம் தொடர்பில் வெளியான தகவல்</h2><p>
</p><p>
மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியரின் உடலுக்கு அருகில் 3 வகையான மருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88999ad3-b352-413f-be75-ef8ebb3b8c95/26-6a8d3be2829f7.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இதற்கிடையில், பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச வைத்தியரின் மரணம் தொடர்பில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

நேற்று காலை சுமார் 10.00 மணியளவில் பிரபாத்துக்கு அறுவை சிகிச்சை இருந்தது. அதன் பிறகு, அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. என்ன நடந்தது என்பதை எங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.தனது கடமையை முறையாகச் செய்தவர்.
</p><p>
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற சிறப்பு வைத்தியர் பிரபாத் அனுராதா, இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்து உட்கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/e-boarding-pass-introduce-in-indian-airports-1787581732"></link>
            <id>https://tamilwin.com/article/e-boarding-pass-introduce-in-indian-airports-1787581732</id>
            <summary type="text">இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் &#039;ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

இதற்கமைய வெளிநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் 'ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.</p><p> 

இதற்கமைய வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் விமான பயணிகள் குடிவரவு கவுன்ட்டர்களில் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்&nbsp; (Boarding Pass) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகம் விடுத்துள்ளது.</p><h2><b> 

ஈ-போர்டிங் பாஸ்</b></h2><p>புதிய நடைமுறையின் கீழ் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களுக்கு பதிலாக, கையடக்க தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்களில் உள்ள ஈ-போர்டிங் பாஸ்களையும் குடிவரவு கவுண்டர்களில் பயணிகள் பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be7ecb5-9405-4414-b968-f5def711eae7/26-6a8c5d9f0d848.webp' /></p><p>அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ் மூலம் முத்திரை குத்தப்படுவதால் விமான பயணிகளுக்கு நேர விரயம் ஏற்படுவதுடன் தாமதங்களும் ஏற்படுகிறன. </p><p>

இந்நிலையில் ஈ-போர்டிங் பாஸ் நடைமுறையால் அந்த குறைபாடு தீர்த்து வைக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h3><b> 

குடியேற்ற முத்திரை</b></h3><p>அதேவேளை பயணிகள் விரும்பினால் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அவற்றில் குடியேற்ற முத்திரை குத்தப்பட மாட்டாது.
</p><p>
இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qPWROuU1fwc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-25T06:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுடைமையாகும் சொத்துகள்! உள்நாட்டில் - வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் இலங்கை பொலிஸாரின் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nationalize-illegal-assets-worth-rs-3878-million-1787638408"></link>
            <id>https://tamilwin.com/article/nationalize-illegal-assets-worth-rs-3878-million-1787638408</id>
            <summary type="text">உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால் 1818 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால் 1818 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். </p><p>

எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

இன்றைய தினம் (25.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசுடைமையாகும் சொத்துக்கள்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 3878 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்க தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு பின் அவை முழுமையாக அரசுடைமையாக்கப்படவுள்ளன. </p><p>

இதனிடையே, கடந்த 2025 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நாடளாவிய விசேட நடவடிக்கையின் கீழ் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a1f9824-1b02-42d8-919d-6c208b6e8104/26-6a8d3688b4a4b.webp' /></p><h2>பிரத்தியேகத் தொலைபேசி இலக்கம்</h2><p> </p><p>

இதேவேளை, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால், 1818 என்ற பிரத்தியேகத் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். </p><p>

பெறப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை உயர்வு: எதிர்வரும் 8 மாதங்கள் மிக முக்கியமான காலகட்டமென எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-heat-wavw-in-srei-lanka-1787636489"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-heat-wavw-in-srei-lanka-1787636489</id>
            <summary type="text">எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் எல் - நினோ தாக்கத்தின் காரணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

அந்த வகையில் எல் - நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

பசுபிக் பெருங்கடலில் நிலவும் 3°C வெப்பநிலை உயர்வின் பின்னணியிலேயே இந்த மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><h2>மழை பெய்யும் வாய்ப்பில்லை</h2><p> </p><p>

இந்த நிலையில், எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் சில பகுதிகளில் செப்டெம்பர் இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5af5dbcd-6a8a-4c0c-8adf-eb0328a86222/26-6a8d311925a2e.webp' /></p><p> </p><p>

தற்போதைய நிலையில், நாட்டின் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.</p><h2>வறட்சியான வானிலை</h2><p> 

இதேவேளை அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தகவலின் படி, 7 மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 81,605 பேர் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. </p><p>

அதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04010ca6-4263-4033-85ed-8fea6c5b6560/26-6a8d3119d58ac.webp' /></p><p> 

நீடிக்கும் வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக 7 மாவட்டங்களில் நீரை ஆதாரமாகக் கொண்ட வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:07:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு, கம்பஹாவின் குடிநீரில் ஆபத்து - திடீரென விநியோகம் நிறுத்தப்பட்டமைக்கான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-water-supply-disruption-in-colombo-1787636135"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-water-supply-disruption-in-colombo-1787636135</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. </p><p>தனியார் தொழிற்சாலை ஒன்றினால் சுற்றாடலில் இரசாயனம் ஒன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. </p><p>நீர் விநியோகத்தில் எத்தகைய மாசுபடுத்தும் பொருட்களும் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</b></h2><p>அதுவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். </p><p>இச்சம்பவம் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், இச்சம்பவம் தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.</p><p> அத்துடன், உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-25T06:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/other-districts-attend-missing-persons-in-jaffna-1787632989"></link>
            <id>https://tamilwin.com/article/other-districts-attend-missing-persons-in-jaffna-1787632989</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்புகாணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும்
வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய&nbsp;இணைப்பு</h2><p>காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும்
வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன
நடந்தது எனக் கோரி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில்
மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர்
கூடத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
(ஓ.எம்.பி.) ஏற்பாட்டில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. </p><p>இதனைக் கண்டித்தே யாழ்.
மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் அதே நேரத்தில்
முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே இந்தப்
போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(25.08.2026) நடைபெறவுள்ள சர்வதேச காணாமல்
ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம்
சுமார் 400 பேர் அழைத்து வரப்படவுள்ளனர்.</p><p>

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இந்நிகழ்வு நீதி
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இடம்பெறவுள்ளது. </p><p>இதற்கான ஏற்பாடுகள்
அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><h2>450இற்கும் மேற்பட்டோர்</h2><p>
இதன்போது மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளிலிருந்து இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபா பெற்றவர்களிலிருந்து இந்த
400 பேரும் பேருந்துகள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3049ccc6-234b-4dd3-81a3-569494cc2413/26-6a8d1f67e7931.webp' /></p><p>இவர்களுடன் சேர்த்து இந்த
நிகழ்வில் 450 இற்கும் மேற்பட்டோர் பங்குகொள்வர் என மண்டப ஏற்பாட்டுத்
தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PBeQGqlcwCw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓ.எம்.பி அலுவலகத்திடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விடுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/relatives-of-the-disappeared-request-to-the-omp-1787634240"></link>
            <id>https://tamilwin.com/article/relatives-of-the-disappeared-request-to-the-omp-1787634240</id>
            <summary type="text">சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொறிமுறையை நடைமுறைப்படுத்தி விட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன
நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்றையதினம்(25) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள ' வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு குறித்து வடக்கில் உள்ள வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக
அமைப்புகள் இணைந்து நேற்று (24) மாலை ஊடக சந்திப்பு ஒன்றை
ஏற்பாடு செய்தனர்.</p><p>குறித்த ஊடக சந்திப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின்
தற்போதைய நிலை, எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் தங்களது
கருத்துக்களை வெளிப்படுத்தினர்.</p><h2>பிரச்சினையை முடிக்கப் பார்க்கிறீர்கள்</h2><p>இதன் போது கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து
தெரிவிக்கையில், ஒரு நாட்டில் சர்வதேச நெறிமுறைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்கிற ஒரு
அரசாங்கம், சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை ஏன் நடத்துகிறது? </p><p>இங்கே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. எல்லாம்
தீர்க்கப்பட்டு விட்டது என்பதை அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கொண்டாடுவதற்கு
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/847ed02b-371a-4759-afae-775bf2ad617a/26-6a8d25a425d97.webp' /></p><p>
</p><p>
இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தக்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஒவ்வொரு வருடத்திலாவது குறிப்பிட்ட தொகையில்
விடுவித்திருக்க வேண்டும்.</p><p>

அவர்களை வெளிப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதற்காகப் போராடிக்
கொண்டிருக்கின்ற அம்மாமார்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை திரும்ப
கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எதையும் செய்யாமல், கண் துடைப்பிற்காக இந்த
நிகழ்வை நீங்கள் அனுஷ்டிக்கிறீர்கள்.</p><p>நீங்கள் வலிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஒரு அமைப்பைக் கொண்டு வந்து,
நஷ்டஈடு தருகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்குக் கொடுத்து
பிரச்சினையை நீங்கள் முடிக்கப் பார்க்கிறீர்கள்.
</p><p>
எங்களுடைய உறவுகள் கேட்பது அந்த நஷ்டஈடு அல்ல. எங்கள் பிள்ளைகளை. நீங்கள்
எங்களிடம் ஒப்படையுங்கள்! அல்லாவிட்டால் அவர்களை நாங்கள் கடத்தி காணாமல்
ஆக்கி, படுகொலை செய்து விட்டோம் என்பதை நீங்கள் சர்வதேசத்தில் ஒத்துக்
கொள்ளுங்கள்.&nbsp;</p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது</h2><p>இந்தத் தினங்களை அல்லது எங்களுடைய
அம்மாமார்களை கூப்பிட்டு வைத்து கண் துடைப்பிற்காக நீங்கள் செய்கின்ற
விடயங்களையோ நாங்கள் ஒருநாளும் சம்மதிக்க இயலாது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50c5d217-c5fe-4bde-aabb-7168ee32b362/26-6a8d25a547fbf.webp' /></p><p>
சர்வதேச நியமங்களை மதித்து அந்த நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம், உள்நாட்டு
மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நீங்கள் நடைமுறைப்படுத்தி விட்டு,
நீங்கள் வெளிப்படுத்துங்கள்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை
வெளிப்படுத்துங்கள். </p><p>நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள்.

அது தான் ஒரு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளுக்கு நீங்கள் செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் என்பதை நாங்கள்
உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T05:40:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பெரும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் - அதிரடியாக முடக்கப்படும் சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-lalit-police-investigation-1787633868"></link>
            <id>https://tamilwin.com/article/bus-lalit-police-investigation-1787633868</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவின் சட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p> 

டுபாயிலிருந்து இன்று (25) நாட்டிற்கு லலித் கண்ணங்கரா தொடர்பாக பொலிஸ் பிரிவினால் இன்று நடத்தப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>கடுமையான குற்றச்சாட்டுகள்</h2><p>
</p><p>
அக்டோபர் 25, 2025 அன்று பொலிஸ் தலைமை அதிகாரிக்கு (IGP) கிடைத்த ஒரு சிறப்பு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fb55b1f-710a-49af-a3a3-3dcc2b765710/26-6a8d29b983f9d.webp' />&nbsp;</p><p>
</p><p>
போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் கொலை முயற்சி, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்துதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் மத்திய குற்றப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சட்டவிரோத சொத்துக்கள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவும் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>

2024-ஆம் ஆண்டு முதல் இன்டர்போலால் ரெட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை பொலிஸாரால் திரும்ப அழைத்து வர முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிவப்பு அறிவித்தல்</span></p><p>
இதற்கிடையில், ரெட் நோட்டீஸ் பெற்ற மேலும் 109 சந்தேகநபர்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>

ரெட் நோட்டீஸ் இல்லாத 38 சந்தேகநபர்கள் ஏற்கனவே நாட்டிற்கு திரும்ப அழைத்து வர முடிந்துள்ளது என்றும், வரும் நாட்களில் மேலும் பல சந்தேகநபர்களைத் திரும்ப அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a839f3-63ba-45ff-86e1-69785a8a1303/26-6a8d29ba32ab6.webp' /></p><p>
கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ள ரூ. 3,878 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.
</p><p>
2025-ஆம் ஆண்டில் மேலும் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைக் கையகப்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
 உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, இந்த சொத்துக்கள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டு, அரசாங்கத்தால் முழுமையாக கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/URucxM82z-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:39:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-arrivals-near-1-5-million-1787631649"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-arrivals-near-1-5-million-1787631649</id>
            <summary type="text">நடப்பு ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>
இதற்கமைய இவ்வருடம் ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி வரையான காலப்பகுதியில் 1,468,980 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக குறித்த புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.</p><h2>அரசாங்கத்தின் இலக்கு</h2><p>
</p><p>
இதேவேளை ஓகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 125,562 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47e6af1d-bc0e-48d8-b302-6c9da46bae2c/26-6a8d1abcded28.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 25 லட்சம் (2.5 மில்லியன்) சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் அரசாங்கத்தின் இலக்கு எதிர்பார்க்கப்பட்ட காலத்துக்கு முன்னரே பூர்த்தி செய்யப்படும் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T04:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இலங்கைப் படகு - இந்தியப் பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boat-that-behaved-suspiciously-1787630035"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boat-that-behaved-suspiciously-1787630035</id>
            <summary type="text">இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல்
(நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால்
அப்பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல்
(நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால்
அப்பகுதியில் நேற்று(24.08.2026) காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
</p><p>
கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நீண்ட
நேரம் நடமாடிய இலங்கைப் படகை மடக்க இந்தியப் பொலிஸார் முற்பட்டுள்ளனர்.
</p><h2>கடத்தல் நடவடிக்கை தொடர்பான படகு</h2><p>
பொலிஸார் படகில் சென்று இலங்கைப் படகைச் சுற்றி வளைக்க முயன்ற போதிலும்,
அந்தப் படகு அவர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e8f6562-77d6-49b6-acd9-2d00ad052ee4/26-6a8d15dbe6884.webp' /></p><p>
தப்பிச் சென்ற இலங்கைப் படகில் இருவர் காணப்பட்டனர் என்றும், அதில் பல மூடைகள்
இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது ஒரு கடத்தல் நடவடிக்கை தொடர்பான படகாக இருக்கலாம் என இந்தியப் பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T04:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலையில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-died-in-prison-is-back-to-family-turmoil-1787626701"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-died-in-prison-is-back-to-family-turmoil-1787626701</id>
            <summary type="text">வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உயிருடன் வீட்டிற்கு வந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
</p><p>
குருநாகல் – கல்கமுவ, கோகோபன்குளம் கிராமத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸாரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிக்கிரியைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம்</span></p><p>

இந்த நிலையில், இறந்ததாக கூறப்பட்டவர் தனது இறுதிக்கிரியைக்கு உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08494541-c85f-401c-8fd5-7079137dd622/26-6a8d107bcbf81.webp' />&nbsp;</p><p>
</p><p>
கோகோபன்குளம், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர் நேற்று (24) திடீரென தனது வீட்டிற்கு வந்துள்ளார். </p><p>

கிராமம் முழுவதும் இறுதிக்கிரியைக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, இறுதிச்சடங்கு மற்றும் தகனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில், கீர்த்திசேன உயிருடன் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளமை குழப்பத்தினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
சிறைச்சாலை மற்றும் அதிகாரிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T03:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு சுற்றுலா சென்ற சிறுமி பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-year-old-girl-dies-in-relative-s-house-1787628706"></link>
            <id>https://tamilwin.com/article/3-year-old-girl-dies-in-relative-s-house-1787628706</id>
            <summary type="text">கம்பளை, புப்புரெஸ்ஸ - டெல்டாவத்தை பகுதியில் உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற மூன்று வயது சிறுமி உயிரழந்துள்ளார்.

 தண்ணீர் என நினைத்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை, புப்புரெஸ்ஸ - டெல்டாவத்தை பகுதியில் உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற மூன்று வயது சிறுமி உயிரழந்துள்ளார்.
</p><p>
 தண்ணீர் என நினைத்து வீட்டில் இருந்த பசுப்பால் பதப்படுத்தப் பயன்படும் இரசாயன திரவத்தை பருகியதால் சிறுமி உயிரிழந்துள்ளார். </p><p> 

கம்பளை, வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>சிறுமி பரிதாபமாக பலி</b></h2><p>வவுனியா, செட்டிக்குளம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட தினேஷ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e1345cf-06b7-4566-a621-7433b18cec3b/26-6a8d0f742c978.webp' /></p><p>சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட பலர் டெல்டாவத்தையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். </p><p>வவுனியாவிலிருந்து சென்ற&nbsp; குழுவினர் நேற்று பகல் குளித்துவிட்டு, மாலையில் வீட்டின் வெளிப்பகுதியில் நின்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்துள்ளனர்.
</p><p>
இதன் போதே இந்தச் சிறுமி வீட்டுக்குள் சென்று ஜன்னல் மீது வைக்கப்பட்டிருந்த குறித்த திரவத்தை குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-25T03:47:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆபத்தான நபர்..! பல மணிநேரம் வாக்குமூலமும் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-lalith-arrested-dubai-back-to-sri-lanka-1787621689"></link>
            <id>https://tamilwin.com/article/bus-lalith-arrested-dubai-back-to-sri-lanka-1787621689</id>
            <summary type="text">இரண்டாம் இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு&amp;nbsp; இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இரண்டாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு&nbsp; இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a308715-8608-40cc-9d1a-30e14ad34a72/26-6a8d0d80e07ee.webp' />&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கமைய, இன்று காலை சுமார் 5:20 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 226 மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><h2>சர்வதேச சிவப்பு எச்சரிக்கை</h2><p>
 

கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்'&nbsp; சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின்&nbsp; (Red Notice)&nbsp;கீழ் அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2d9aad6-3b14-4d61-9e24-fc79b8557ae1/26-6a8cf56936664.webp' /></p><p>தற்போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதன்பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளார்.</p><p>களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பிடியாணை உத்தரவு</span></p><p>
</p><p>
 

 சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) கீழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0721702-a7f6-4ea4-a304-7d6a2f978ef7/26-6a8cfd7e8f94c.webp' /></p><p>
</p><p>
 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கையும் பெறப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/URucxM82z-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T03:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/killed-prisoners-family-will-get-compensation-1787627733"></link>
            <id>https://tamilwin.com/article/killed-prisoners-family-will-get-compensation-1787627733</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>10 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்த இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சமர்ப்பிக்கப்பட்டுள்ள&nbsp;கோரிக்கை </h2><p>
உயிரிழந்த கைதிகளுக்கும் நஷ்டஈடு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும், இது தொடர்பான கோரிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84f14a6-2838-4fcf-850f-25c001544b21/26-6a8d08db6c920.webp' /></p><p>
இந்த சம்பவம் சிறைச்சாலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், நெரிசல், உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற சிறைச்சாலை அமைப்பில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. </p><p>
இதனைத் தொடர்ந்து மஹர, கொழும்பு நியூ மெகசின், குருவிற்ற மற்றும் பள்ளன்சேனை ஆகிய சிறைச்சாலைகளிலும் அசம்பாவிதங்கள் பதிவாகியிருந்தன.</p><h2>சிறைச்சாலைகளில் நெரிசல்</h2><p>
</p><p>சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெறுவதில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.</p><p>
மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலனை மேம்படுத்துதல், அவர்களின் தொழில்முறை பயிற்சி மற்றும் புலனாய்வுத் திறன்களை அதிகரித்தல் மற்றும் பொலிஸ் செயல்திறனை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியன தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T03:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் கடும் வெப்பநிலை! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mber-coloured-heat-weather-warning-for-country-1787627461"></link>
            <id>https://tamilwin.com/article/mber-coloured-heat-weather-warning-for-country-1787627461</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் (25) செம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
</p><p>
இதன்படி இன்றைய தினம் (25) செம்மஞ்சள் மட்டத்திலான அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><h2>எச்சரிக்கை மட்டத்தில் வெப்பம்</h2><p>இதற்கமைய, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0504e2b-8e29-4ab7-aa26-21735394c08b/26-6a8d07c7115f8.webp' /></p><p>இதேவேளை, பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில இடங்களில் எச்சரிக்கை மட்டம் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T03:11:12+00:00</updated>
        </entry>
    </feed>
