<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-24T02:51:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு - சஜித்துடன் முரண்பட்டு கோபமாக வெளியேறிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-left-from-the-sajith-s-meeting-1784860534"></link>
            <id>https://tamilwin.com/article/namal-left-from-the-sajith-s-meeting-1784860534</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் தகவல் வெளியாகி உள்ளது. 

பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்க்கட்சியை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை எடுத்திருந்தார். </p><p>

எனினும் சஜித் பிரேமதாஸவின் தீர்மானங்கள் காரணமாக தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p> </p><h2><b>

கடும் கோபம் அடைந்த நாமல்</b></h2><p>பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f59a7f-5e88-4903-9b55-a8a2ed788ba8/26-6a62d1e05bdd1.webp' /></p><p>இதன்போது கடும் கோபம் அடைந்த நாமல் ராஜபக்ச அங்கிருந்து இடைநடுவில் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.</p><p>

இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.</p><h3><b>

திட்டமிடப்பட்ட நடவடிக்கை</b></h3><p>எனினும், கூட்டத்தின் இடையில் நாமல் ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a71da79-f9c4-4f57-beea-0b259e95081d/26-6a62d1e144944.webp' /></p><p>இது முற்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை என கூறியபடியே நாமல் கோபமாக வெளியேறியதாக கூறப்படுகிறது. </p><p>எனினும் நாமல் அவ்வாறு கூறியதற்கான காரணம் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T02:45:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் 11 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sathosa-11-price-reduction-essential-commodities-1784858388"></link>
            <id>https://tamilwin.com/article/sathosa-11-price-reduction-essential-commodities-1784858388</id>
            <summary type="text">இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

வர்த்தகம், வணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. </p><p>

வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, நுகர்வோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோசா விற்பனை நிலையங்கள் மூலமாக இந்த பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T02:33:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடியால் கதி கலங்கியுள்ள அரசியல்வாதிகள் மற்றம் பணக்காரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unp-shocked-after-police-announcement-1784780191"></link>
            <id>https://tamilwin.com/article/unp-shocked-after-police-announcement-1784780191</id>
            <summary type="text">இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்தவர்கள் மற்றம் திடீர் பணக்காரரானவர்களுக்கு அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

திடீரெனப் பணக்காரர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்தவர்கள் மற்றம் திடீர் பணக்காரரானவர்களுக்கு அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p> 

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை பொலிஸார் அண்மையில் கோரியிருந்த நிலையில் இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>

இதன் காரணமாக அரசியல்வாதிகளின் மட்டுமன்றி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது மக்களுக்கும் சிக்கல் நிலை ஏற்பட்டுளளது.</p><h2><b>ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை</b></h2><p> 

இவ்வாறான நிலையில் பொலிஸார் விடுத்த அறிவித்தலை உடனடியாக மீளப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f33c262d-483d-4402-98d9-cdfc80af6563/26-6a62cd83ba74e.webp' /></p><p>முறையான வழிகாட்டல்கள் இன்றி குறித்த பொலிஸ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், ஐக்கிய இராச்சியத்தின் சுதந்திரமான பரிசோதனைச் சபை ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகளுக்கும் பொலிஸாரின் இத்தகைய அறிவித்தலுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p> 

எப்படியிருப்பினும், அண்மைக்காலங்களில் சொத்துக்களைச் கொண்டவர்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h3><b>கறுப்புப் பொருளாதாரம்</b></h3><p> </p><p>

கறுப்புப் பொருளாதாரம் குறிப்பாக, கடந்த 3 தசாப்தங்களாக இந்நாட்டில் கறுப்புப் பொருளாதாரம் பாரிய அளவில் பரவியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b33411e3-32d5-42e3-bf3e-a7d72edf34f7/26-6a62cd84a6dc5.webp' /></p><p>அதனை அடக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பொலிஸார் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p>]]></content>
            <updated>2026-07-24T02:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3rd-term-in-schools-open-be-announced-1784856507"></link>
            <id>https://tamilwin.com/article/3rd-term-in-schools-open-be-announced-1784856507</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை&nbsp;முடிவடையும் மற்றும் மூன்றாம் தவணை தொடங்கும் திகதிகள் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி, பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் (24) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம்</h2><p>அதன்படி சிங்கள மற்றும் தமிழ் வழி பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7ce25cb-9cc1-4333-8b2a-5d244e2fe9ad/26-6a62caaa201d9.webp' />&nbsp;</p><p>அதேபோல், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் கல்வியாண்டு ஜூலை 31, வெள்ளிக்கிழமை அன்று முடிவடையும் என்றும், மூன்றாம் கல்வியாண்டின் (முதலாம் கட்டம்) ஆகஸ்ட் 03, திங்கட்கிழமை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளிலும் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் குறிப்பிட்ட திகதிகளிலிருந்து செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T02:15:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அரசினால் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-assets-worth-15-billion-rupees-are-frozen-1784857136"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-assets-worth-15-billion-rupees-are-frozen-1784857136</id>
            <summary type="text">தென் மாகாணத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1,500 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று தடை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் மாகாணத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1,500 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளன.
</p><p>
தென் மாகாணத்தின் முன்னணி பாதாள உலகக் குழுத் தலைவனும் போதைப்பொருள் வர்த்தகருமான ரத்கம விதுர என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சொத்துக்கள் ரத்கம விதுரவின் சித்தியின் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டவை என விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
சட்டவிரோதச் செயல்கள்</b></h2><p>போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டிய பணத்திலிருந்தே ரத்கம விதுர இந்தச் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1356b7ae-467b-4afd-9444-8b2314dd85a5/26-6a62c6bf8710b.webp' /></p><p>அதற்கமைய, தடை செய்யப்பட்டுள்ள சொத்துக்களுக்குள் 4 நிலங்கள், 3 மாடிகளைக் கொண்ட 2 வீடுகள் மற்றும் ஒரு மாடி வீடு ஒன்று அடங்குவதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ரத்கம விதுரவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மேலும் பல சொத்துக்கள் எதிர்காலத்தில் தடை செய்யப்படவுள்ளது.
</p><h3><b>
நீதிமன்ற நடவடிக்கை</b></h3><p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ரத்கம விதுரவிற்கு எதிராக 18 கொலைகள் உட்பட 24 குற்றச்சாற்றுகள் உள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b5f7d2-9209-4c27-880a-c80bfe8d36d0/26-6a62c6c03871c.webp' /></p><p>அவர் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தச் சொத்துக்கள் எதிர்காலத்தில் அரசமயமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-24T02:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இரத்தக்கறையுடன் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம்! சீன நாட்டவர் படுகொலையில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chinese-kidnaped-killed-one-jeep-found-police-1784850284"></link>
            <id>https://tamilwin.com/article/chinese-kidnaped-killed-one-jeep-found-police-1784850284</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் ஒரு சீன நாட்டவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு ஜீப், பாதுக்க பகுதியில் கைவிடப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் ஒரு சீன நாட்டவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு ஜீப், பாதுக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

பாதுக்கவில் உள்ள பஹால போப் சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனம், கண்டெடுக்கப்பட்டபோது பின்னோக்கிச் செல்லும் கியரில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மீட்கப்பட்ட ஜீப்பின் உள்ளே, பல இரத்தக் கறைகள் காணப்பட்ட நிலையில், தற்போது அந்த வாகனத்தில் கைரேகை சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தப்பியோட்டம்..</h2><p>

குறித்த ஜீப்பில் வந்த மூன்று சீன நாட்டவர்கள், ஒரு முச்சக்கர வண்டியில் கொழும்புப்பிட்டிய நோக்கி தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f49f00d-724d-448c-8428-4773dec79216/26-6a62a90d954e0.webp' /></p><p>
</p><p>
தப்பிச் சென்ற மூன்று சீன நாட்டவர்களில் இருவர் நேற்று (23) கட்டுநாயக்க விமான நிலையம் அருகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சந்தேக நபர்களை கொழும்புப்பிட்டியவுக்கு ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.</p><p>

இந்த மோதல் மற்றும் கடத்தலில் பாதிக்கப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு நாட்கள் இடைநிறுத்தப்படும் சேவைகள்..! EPF நிதி பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspension-employee-savings-fund-services-july-1784857227"></link>
            <id>https://tamilwin.com/article/suspension-employee-savings-fund-services-july-1784857227</id>
            <summary type="text">எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதும...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக&nbsp;இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அத்தியாவசிய பராமரிப்புப்பணிகள்&nbsp;</h2><p>தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் நதீகா வட்டலியத்தவினால் வியாழக்கிழமை (23) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/905487fc-b859-4ce5-a003-478f82356ba8/26-6a62c52e19687.webp' /></p><p>தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.
</p><p>
இத்தற்காலிக சேவை இடைநிறுத்தமானது தொழிற்திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாகாண, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களுக்கும் பொருந்தும்.</p><h2>மாற்றுத்திகதி&nbsp;</h2><p>
</p><p>
இதற்கமைய, குறித்த இரு நாட்களிலும் ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகள் மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட எந்தவொரு சேவையும் வழங்கப்படமாட்டாது.</p><p>

அத்துடன், குறித்த இரு நாட்களிலும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே நேரத்தை ஒதுக்கியுள்ள பொதுமக்கள், எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அமையும் வேறு ஏதேனும் ஒரு வேலை நாளில் சம்பந்தப்பட்ட தொழில் அலுவலகத்துக்கு வருகை தந்து உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:52:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள உயர் வரி.. ட்ரம்பின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-new-tariffs-60-countries-including-sri-lanka-1784855061"></link>
            <id>https://tamilwin.com/article/trump-new-tariffs-60-countries-including-sri-lanka-1784855061</id>
            <summary type="text">இலங்கை உட்பட 60 வர்த்தகப் பங்குதாரர் நாடுகள் மீது 10 வீதம் மற்றும் 12.5 வீதம் ​​என்ற புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உட்பட 60 வர்த்தகப் பங்குதாரர் நாடுகள் மீது 10 வீதம் மற்றும் 12.5 வீதம் ​​என்ற புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.</p><p>அமெரிக்கா தற்போது விதித்துள்ள 10 வீத வரியின் காலம் முடிவடைந்ததை அடுத்து, இந்த தீர்மானத்தை ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது.&nbsp;</p><p></p><h2>கட்டாய உழைப்பு (forced labor)</h2><p> </p><p> 

அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5 வீதம் ​​என்ற உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51fd88b5-330b-4c2f-8972-040744d61ed4/26-6a62bca4da717.webp' /></p><p>

குறித்த 60 நாடுகளில், கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்யும் சட்டங்களை முறையாகச் செயல்படுத்தத் தவறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.&nbsp;</p><p>மேலும், இந்நாடுகளின் இது தொடர்பான மெத்தனமான கொள்கையே இந்தப் புதிய வரிகள் விதிக்கப்படுவதற்கான முதன்மைக் காரணம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:10:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு உதவ சஜித்திடம் ரணில் முன்வைக்கும் கோரிக்கை.. உருவாகும் புதியக் குழு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-wickremesinghe-sajith-premadasa-npp-govt-1784851515"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-wickremesinghe-sajith-premadasa-npp-govt-1784851515</id>
            <summary type="text">நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதன் மூலம் ஆராயலாம் என்று முன்னாள் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதன் மூலம் ஆராயலாம் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
நேற்றையதினம் (23) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இடம்பெற்ற கூட்டத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>1.1 மில்லி<span style="color: inherit; font-size: 1.75rem;">யன் வழக்குகள்..&nbsp;</span></h2><p>இதன்போது, "நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை முன்வைத்து, அதை அடுத்த சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் நான் கூறுகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a363c389-c6bd-4813-b225-ac4bd63bab7e/26-6a62ad612508b.webp' /></p><p> இந்த நாட்டில் உள்ள இந்த 1.1 மில்லியன் வழக்குகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்கவும். </p><p>இது பிரித்தானியாவில் எப்படி நடந்தது, மற்ற நாடுகளில் எப்படி நடந்தது, நமக்கு ஒரு டிஜிட்டல் முறை தேவையா, அதை இன்றோ நாளையோ உடனடியாகச் செய்தால், திங்கட்கிழமை ஒப்படைக்கலாம்" என்று அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T00:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் டெங்கு பரிசோதனைக்காக சென்ற அதிகாரிகளிடம் சிக்கிய துப்பாக்கி - பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-recoverd-by-police-dengue-searching-1784848679"></link>
            <id>https://tamilwin.com/article/gun-recoverd-by-police-dengue-searching-1784848679</id>
            <summary type="text">பத்தரமுல்லலையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட சோதனை மற்றும் கள ஆய்வின்போது துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பத்தரமுல்லலையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட சோதனை மற்றும் கள ஆய்வின்போது துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. </p><p>தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்து பத்தரமுல்லை, பெலவத்தவில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, ​​அசுத்தமான நிலையில் இருந்த ஒரு வீட்டில், உயிருள்ள கொசுப் புழுக்களுடன் ஒரு செயல்படும் துப்பாக்கியையும் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
</p><p>
இந்த சோதனை நடவடிக்கையானது, பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார ஆய்வாளர்களால், பொலிசார், இராணுவம், விமானப்படை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>அதிகாரிகளுடன் வாக்குவாதம்..&nbsp;</h2><p>
</p><p>
அதிக எண்ணிக்கையிலான நாய்களுடன் மிகவும் அசுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பொலிசார் அதனைப் பறிமுதல் செய்து, அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21791583-7c5e-41e7-8074-5dd3b4632fdd/26-6a62a3dde1404.webp' /></p><p>
</p><p>
மேலும், உயிருள்ள கொசுப் புழுக்கள் இருந்த மற்றொரு வளாகத்தை ஆய்வு செய்தபோது, ​​அதன் உரிமையாளர் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
கொசுப்புழுக்கள் உள்ள இடங்களைப் பராமரித்து வந்த 13 நபர்கள் மீது கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை உடனடியாக அழிக்குமாறும், கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தேவையான உதவியை வழங்குமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T23:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் கறுப்பு ஜீலை நினைவேந்தல் - போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/83-black-july-protest-in-london-for-tamils-1784845487"></link>
            <id>https://tamilwin.com/article/83-black-july-protest-in-london-for-tamils-1784845487</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில்
உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை
நினைவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில்
உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை
நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு
போராட்டம்&nbsp;லண்டனில் முன்னெடுக்கப்பட்டன.&nbsp;</p><p>நேற்று (23.07.2026) லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம்
(TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>பலரின் பங்கேற்பு&nbsp;</h2><p>
1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி இலங்கையில் தமிழர்கள் மீது
மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர்
மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68607015-7092-4b7b-9bd9-769ab592202c/26-6a6295d3b5bf0.webp' /></p><p>
</p><p>
குறித்த போராட்டத்தில் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழதமிழ்மக்கள், மனித உரிமை
செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்
இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.&nbsp;</p><p>அத்துடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும்
பதாகைகளை ஏந்தி,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும்
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தனர்.&nbsp;</p><p><b>மேலதிக தகவல் -&nbsp;சண்முகம் தவசீலன்
</b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T22:29:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவை காப்பாற்றுவாரா நாமல்..! அடுத்தடுத்து காத்திருக்கும் அதிர்ச்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-namal-as-lawyer-fcid-1784838013"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-namal-as-lawyer-fcid-1784838013</id>
            <summary type="text">மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்னிலையாகினார்.&amp;nbsp;ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்னிலையாகினார்.&nbsp;</p><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணைக்கே அவர் முன்னிலையாகினார்.&nbsp;</p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், பல முக்கிய உயர் பதவியில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக ராஜபக்சக்கள் தொடர்பில்&nbsp;ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.</p><p>இந்நிலையிலேயே,&nbsp;பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி கோட்டாபய மனு தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b1i-2afGQoM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T21:55:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-one-death-1784826853"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-one-death-1784826853</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவு, பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே உள்ள ஒரு விழா மண்டபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவு, பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே உள்ள ஒரு விழா மண்டபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p>
ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa34ac4c-d268-4830-9769-cc55ec6cb392/26-6a624fe01b913.webp' /></p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>
இச்சம்பவம் தொடர்பாக வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T21:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணை பாகங்களை அனுப்பிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-sent-missile-parts-to-yemen-s-houthi-rebels-1784840889"></link>
            <id>https://tamilwin.com/article/iran-sent-missile-parts-to-yemen-s-houthi-rebels-1784840889</id>
            <summary type="text">ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவ, ஈரான் தன் நாட்டின்
&#039;இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை&#039; தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் மற்றும்
ஏவுகணை-டிரோன் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவ, ஈரான் தன் நாட்டின்
'இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை' தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் மற்றும்
ஏவுகணை-டிரோன் பாகங்களை இரகசிய விமானம் மூலம் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள்
வெளியாகியுள்ளன.</p><p>கடந்த ஜூலை 13 அன்று ஈரானின் 'மஹான் ஏர்' நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம்
ஒன்று தெஹ்ரானில் இருந்து ஏமன் நோக்கிக் கிளம்பியது.
</p><p>
இதில் 10 முதல் 21 வரையிலான ஐ.ஆர்.ஜி.சி இராணுவத் தளபதிகள், நிபுணர்கள்
மற்றும் குறுகிய, நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் உதிரிப்பாகங்கள்
கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஏமன் படைகள் தாக்குதல்&nbsp;</h2><p>
</p><p>
முதலில் ஏமன் தலைநகர் சனாவுக்குச் செல்லவிருந்த இந்த விமானம், சனா விமான
நிலையத்தின் மீது சவூதி ஆதரவு ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியதால், ஹூதிகளின்
கட்டுப்பாட்டில் உள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹோடைடாவிற்கு திருப்பி
விடப்பட்டது.</p><p>

ஹூதிகளின் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்காக விமானத்தில் தங்கமும் கொண்டு
செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b353790-366d-47a7-8d49-0fb5ec220edf/26-6a62849bac205.webp' /></p><p>

தளபதிகள் ஏமன் வந்தடைந்த சில நாட்களில், செங்கடல் பகுதியில் சவூதி
அரேபியாவிற்கு எதிராகக் கடல்சார் முற்றுகையை ஹூதி அமைப்பு அறிவித்தது.</p><p></p><h2>பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், வியாழக்கிழமை அன்று சவூதியின் இரு மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்
மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அறிவித்துள்ளனர்.
</p><p>
ஏமன் தகவல் தொடர்பு அமைச்சர் முஅம்மர் அல்-இர்யானி கருத்து:

"ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ பலத்தைப் பெருக்கவும், செங்கடல் மற்றும்
பாப் அல்-மந்தேப் ஜலசந்தியில் சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
ஏற்படுத்தவுமே ஈரானியத் தளபதிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824f7fb8-002d-42e5-9d0e-81956abb7e1a/26-6a62849c5b688.webp' /></p><p>"

ஈரான் வழக்கம்போல் ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இருப்பினும், இந்த புதிய நடவடிக்கை சவூதி அரேபியா மற்றும் ஹூதி அமைப்பினரிடையே
நான்கு ஆண்டுகளாக நிலவி வந்த அமைதியை சீர்குலைத்து, உலகளாவிய மசகு எண்ணெய்
விநியோகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T21:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அனுசரணையில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் - நீதி கிடைக்க கொஞ்சம் காலம் செல்லும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-chemmani-npp-government-1784825970"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-chemmani-npp-government-1784825970</id>
            <summary type="text">தமிழின வரலாற்றில் முந்தைய அரச கட்டமைப்பு ரீதியாகவும் நடந்தேறிய அநீதிகளும் வன்முறைகளும் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல. தலைமுறை தலைமுறையாகச் சுமக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின வரலாற்றில் முந்தைய அரச கட்டமைப்பு ரீதியாகவும் நடந்தேறிய அநீதிகளும் வன்முறைகளும் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல.</p><p> தலைமுறை தலைமுறையாகச் சுமக்கப்படும் இந்த வலியும் இழப்பும், நீதிக்கான எதிர்பார்ப்பை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.</p><p>வரலாற்று ரீதியான இந்த நீதிக்கான பயணத்தில், சர்வதேச அமைப்புகளின் பங்கு, வரலாற்று நிகழ்வுகளின் ஆவணப்படுத்தல் அல்லது அரசியல் தீர்வுகள் குறித்து தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>இந்நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையால் தான் இன்னமும் லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்த வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் உட்பட பல தகவல்கள் குறித்து கலந்துரையாடுகின்றது நேருக்கு நேர் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PuqfCeSztBs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T21:12:29+00:00</updated>
        </entry>
    </feed>
