<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-03T08:20:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commander-eastern-security-force-meet-governor-1788422115"></link>
            <id>https://tamilwin.com/article/commander-eastern-security-force-meet-governor-1788422115</id>
            <summary type="text">கிழக்கு இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார&amp;nbsp; மாகாண ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.குறித்த கலந்துரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார&nbsp; மாகாண ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்று (02.09.2026) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><h2>எதிர்கால நடவடிக்கைகள்</h2><p>இந்தச் சந்திப்பு ஒரு சுமுகமான கலந்துரையாடலாக அமைந்ததுடன், கிழக்கு
மாகாணத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677c7361-ba23-490d-8008-d357e20afd28/26-6a992ba3009a6.webp' /></p><p>
</p><p>கிழக்கு மாகாண மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, அரசுக்கும்
பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:11:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பியங்கர ஜெயரத்னவின் தற்போதைய நிலை! அரசாங்கம் செலவிடும் பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pratna-riyankara-jayasentencsed-walikada-prison-1788421592"></link>
            <id>https://tamilwin.com/article/pratna-riyankara-jayasentencsed-walikada-prison-1788421592</id>
            <summary type="text">&amp;nbsp;7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் &#039;M&#039; வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் 'M' வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அவர் அந்த வார்டில் மேலும் சுமார் 150 கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

 நீதிமன்றத்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பணிப்பிரிவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அரசாங்கத்திற்கு ஏற்படுத்திய நஷ்டம்&nbsp;</h2><p>தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக 'ஸ்ரீலங்கன் கேட்டரிங்' நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e80178-0d9d-4c94-ac57-e767d0c24579/26-6a992b523f8e5.webp' /></p><p>
</p><p>
அதன்படி, அவர் காலை 6.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை ஒரு பணிப்பிரிவிற்கு அனுப்பப்படுவார் என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 

இதற்கிடையில், சிறையில் உள்ள ஒரு கைதிக்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு ரூ. 1,461 செலவிடுகின்றதாக கூறப்படுகின்றது.
</p><p>
அதன்படியே வெலிக்கடை சிறையிலும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவிற்காக தினமும் அதே தொகையை செலவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

பொதுவாக, சிறைச்சாலை கைதிகளுக்கு காலை உணவாக ரொட்டியும் தேங்காய் சாம்பலும் வழங்கப்படுகிறது.</p><h2>உணவின் அளவு</h2><p> </p><p>

அதன்படி, ஒவ்வொரு கைதிக்கும் 135 கிராம் எடையுள்ள ஒரு துண்டு ரொட்டியும், இரண்டு தேக்கரண்டி தேங்காய் சாம்பலும் வழங்கப்படுவதாக சிறை வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cfa1ec9-8838-4c78-ba0c-2e8a6d05e29e/26-6a992b52e8595.webp' /></p><p>
</p><p>
மேலும், 28 கிராம் சர்க்கரையும் வழங்கப்படுகின்றது. இவை காலை மற்றும் மதியம் தேநீர் அருந்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
</p><p>
மதிய உணவில் மீனுடன் கூடிய சோறு, ஒரு காய்கறி மற்றும் ஒரு பச்சை சாலட் ஆகியவை அடங்கும். அதன்படி, 225 கிராம் அரிசி, 56 கிராம் மீன், 56 கிராம் காய்கறிகள் மற்றும் இறைச்சி, 28 கிராம் பச்சை சாலட் ஆகியவை கிடைப்பதாக அறியமுடிகின்றது.</p><p>

இரவு உணவிற்காக, கைதிகளுக்கு சோறும் வழங்கப்படுகின்றது. அந்த உணவிற்கான அரிசியின் அளவு 170 கிராம் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

இதற்கு கூடுதலாக, 56 கிராம் இறைச்சி அல்லது மீன், 85 கிராம் உருளைக்கிழங்கு, மற்றும் 56 கிராம் காய்கறி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T08:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமாகும் மகிந்தவின் நெருக்கிய சகாக்கள் - மறைக்கப்படும் ரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-deaths-continues-in-sri-lanka-1788408410"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-deaths-continues-in-sri-lanka-1788408410</id>
            <summary type="text">ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் நேற்றையதினம் மர்மான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் நேற்றையதினம் மர்மான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. </p><p>

கடந்த ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்களுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற சர்ச்சைக்குரிய, ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.</p><p> 

57 வயதான எராஜ், கொழும்பு ஹவலொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது தனிப்பட்ட வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b>மறைக்கப்பட்ட இரகசியங்களும் தீர்க்கப்படாத அரசியல் சிக்கல்களும்</b></h2><p> 

மர்மான முறையில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் பல மறைக்கப்பட்ட இரகசியங்களும் தீர்க்கப்படாத அரசியல் சிக்கல்களும் இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1f9ca5-509d-492d-9d38-762e04ad18f4/26-6a98fbef6971b.webp' /></p><p>9 அடி உயரமுள்ள கதவு சட்டகத்தில் பட்டியை போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
சமீபத்தில் கொள்ளுப்பிட்டியில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் மரணத்திலும் இதேபோன்று கதவு சட்டகத்தில் பட்டி மூலம் தூக்கிடப்பட்டிருந்தது. 

இவ்விரு சம்பவங்களுக்கும் இடையிலான தீவிரமான ஒற்றுமைகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p> 

2014 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஹம்பாந்தோட்டை எராஜ் ரவீந்திர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அதன் பின்னர் 2018 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மீண்டும் அப்பதவிக்கு மீண்டும் தெரிவானார். 2022 பெப்ரவரி 10ஆம் திகதி தனிப்பட்ட காரணங்கள் காரணமாக மேயர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.</p><p>
இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச் சென்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p> </p><h3><b>துப்பாக்கி மேயர்</b></h3><p>இதன் காரணமாக இவர் <b>துப்பாக்கி மேயர்</b> என்று பரவலாக அறியப்பட்டார். அச்சுறுத்தும் வகையிலான இந்த செயற்பாட்டுக்கு 2019 இல் இவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0bb3326-940b-42c0-a779-0cc0ace4da03/26-6a98fbf0376a2.webp' /></p><p>சத்தோச நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில், ஊழியர்களை அரசியல் பணிகளுக்கு பயன்படுத்தி அரசுக்கு 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக எராஜ் மீது லஞ்ச ஒழல் ஆணைக்குழுவால் 5 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
</p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையிலேயே மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
</p><p>
பிரேத பரிசோதனை அறிக்கைகள், இரசாயன பகுப்பாய்வு முடிவுகள் மற்றும் ஹவ்லாக் சிட்டியின் CCTV காட்சிகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
</p><h3><b>
ராஜபக்ச குடும்பத்திற்காக&nbsp; மோசடிகள் </b></h3><p>எராஜ் மற்றும் கபில ஆகியோர் ராஜபக்ச குடும்பத்திற்காக பல்வேறு மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தப்படும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுகின்றமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ac5c6f-3223-4ada-9adb-f7db68a79841/26-6a98fbf0ee1c3.webp' /></p><p>அண்மையில் மகிந்த ஆட்சியில் பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட சி.டி.விக்ரமரட்ன துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்திருந்தார். </p><p>குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-03T07:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது குறித்த தகவல் : அநுர தரப்பு வழங்கிய பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-arrest-anura-government-response-1788418909"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-arrest-anura-government-response-1788418909</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு அஞ்சி, தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ள கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு அஞ்சி, தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.</p><p>

இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நளிந்த, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலானவை என்றும், அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது சொந்தச் செயல்களை நன்கு அறிந்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார். </p><h2>சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்காமல்&nbsp;</h2><p>

சிஐடி, எஃப்சிஐடி மற்றும் இலஞ்ச ஆணைக்குழு போன்ற அமைப்புகள் நாமல் ராஜபக்சவின் நடத்தையின் முழு அளவையும் இன்னும் வெளிக்கொணரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11477c3b-3d12-4a74-9e6c-815af6aad599/26-6a9924445f2c3.webp' /></p><p>
ஆதாரங்களின் மூலம் தவறுகளை நிரூபிப்பதே விசாரணைகளின் நோக்கம் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் அச்சம் கொள்வது இயல்பானது என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். </p><p>

நாமல் ராஜபக்ச கைது நடவடிக்கையை எதிர்கொள்வதாக நம்பியிருந்தால், அவர் தனது பேரணியை முன்னதாகவே நடத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தவறு செய்தவர் எவராயினும் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்காமல் எதிர்கொள்ளுமாறு நாமல் ராஜபக்சவை அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசு தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-ready-to-face-referendum-1788421012"></link>
            <id>https://tamilwin.com/article/government-ready-to-face-referendum-1788421012</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்மொழியப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் அவசியமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அளவிலான எந்தவொரு மாற்றத்தையும் முன்மொழியப்பட்ட திருத்தத்தில் அரசாங்கம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1843e248-ca09-4fb0-b50e-772a96e71fa0/26-6a9923963cacd.webp' /></p><p>
சர்வஜன வாக்கெடுப்பு அவசியப்படாது என்றே நாங்கள் நம்புகிறோம். </p><p>எனினும், வாக்கெடுப்பு தேவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதை நடத்த நாங்கள் தயராக இருக்கிறோம் என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p>
நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் குறித்த முடிவு இன்னும் மூன்று வாரங்களுக்குள் தெரியவரும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு அபாயம் நீங்கவில்லை: நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-dengue-warning-environment-clean-1788420097"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-dengue-warning-environment-clean-1788420097</id>
            <summary type="text">நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாகப் பதிவான போதிலும்,
டெங்கு பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாகப் பதிவான போதிலும்,
டெங்கு பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்
பிரிவு எச்சரித்துள்ளது.
</p><p>பொதுமக்கள் தங்கள் சுற்றாடலில் நீர் தேங்கும் இடங்களை
உடனுக்குடன் அகற்றித் தூய்மையாகப் பேணுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் மருத்துவர் பிரஷிலா சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இதேவேளை சில மாவட்டங்களில் முதலில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து, அதன்
பின்னரே நோயாளர்களின் எண்ணிக்கை உயரும் போக்கு காணப்படுகிறது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எச்சரிக்கை</span></p><p>
</p><p>
எனவே நுளம்பு பெருக்கம் குறித்து அலட்சியமாக இருந்தால் அது சமுதாயத்தில்
பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1229bb5-607d-44b5-ae63-5afc3d7a4dea/26-6a992315bfd20.webp' /></p><p>
எவ்வாறாயினும் சுற்றாடலைத் தூய்மையாக வைத்துக்கொண்டு நுளம்புகள் பெருகுவதைத்
தடுப்பதே இதற்கான சிறந்த தீர்வாகும் என இதன்போது தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் நம்பிக்கையை பேணும் பொலிஸ் சேவை உருவாக்கப்படும்: பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-make-police-service-with-high-quality-1788420440"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-make-police-service-with-high-quality-1788420440</id>
            <summary type="text">மக்கள் நம்பிக்கையை பேணக்கூடிய வகையில் பொலிஸ் சேவை உருவாக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய&amp;nbsp; உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
பொலிஸ் சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் நம்பிக்கையை பேணக்கூடிய வகையில் பொலிஸ் சேவை உருவாக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய&nbsp; உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
</p><p>பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஊடகங்களுக்கு அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.</p><p>
கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டதை போன்று இந்த ஆண்டிலும் தொடர்ச்சியாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>முறைப்பாடுகள்</h2><p>
</p><p>திட்டமிட்ட குற்ற செயல்களைப் போன்று பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் சிறு முறைப்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தி தீர்வுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/057dbcc8-0f91-4945-84e6-bf73fc3497f1/26-6a992625c2bfa.webp' /></p><p>
மக்கள் நம்பக்கூடிய ஒரு பொலிஸ் சேவையை நாம் உருவாக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காணப்படக்கூடிய சம்பளப் பிரச்சனை உட்கட்டுமான பிரச்சினை போன்றவற்றிற்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நடவடிக்கை&nbsp;</h2><p>
எதிர்வரும் காலங்களில் பொதுமக்கள் உணரக்கூடிய வகையில் சிறந்த சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42fd168a-6172-4fe7-967f-4fb4ce423e97/26-6a99215967f6f.webp' /></p><p>
</p><p>இலங்கை&nbsp; பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு மத வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பௌத்த மத வழிபாடுகள் நடைபெற்றதாகவும் ஏனைய மத வழிபாட்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸ் அதிபர் பிரியந்த விரசூரிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:32:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையலுக்காக குழந்தையை கடத்திய கும்பல்! அடர்ந்த காட்டில் மடக்கிபிடித்த பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-kidnapped-child-for-treasure-sacrifice-1788402757"></link>
            <id>https://tamilwin.com/article/gang-kidnapped-child-for-treasure-sacrifice-1788402757</id>
            <summary type="text">மாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில் புதையல் தோண்டும் நோக்கத்தில் 9 வயது குழந்தையை நான்கு பேர் கொண்ட கும்பலொன்று கடத்திச்சென்றுள்ளது.

இதன்போது குழந்தையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில் புதையல் தோண்டும் நோக்கத்தில் 9 வயது குழந்தையை நான்கு பேர் கொண்ட கும்பலொன்று கடத்திச்சென்றுள்ளது.</p><p>

இதன்போது குழந்தையை கடத்தி கண்களையும், வாயையும் துணி நாடாவினால் கட்டப்பட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் கொண்டுசென்றுள்ளனர்.</p><p>

குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் அவர்களை துரத்திச்சென்று, பொலிஸாரின் உதவியுடன் சந்தேகநபர்களை மடக்கிபிடித்துள்ளனர்.</p><h2>விளக்கமறியல்&nbsp;உத்தரவு</h2><p>

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் மாத்தறை பிரதான நீதிபதி முன் முன்னிலைபடுத்திய போது 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dabc216d-2312-4cab-985d-e01610dba8df/26-6a99212fd7066.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில், ஒரு முச்சக்கர வண்டி சாரதி அவரது நண்பர் மற்றும் இருவர் உள்ளடங்கியுள்ளனர்.</p><p>
இந்நிலையில், நான்கு பேரையும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T07:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளும் கட்சி 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaint-lodged-with-ciaboc-against-all-npp-mps-1788419650"></link>
            <id>https://tamilwin.com/article/complaint-lodged-with-ciaboc-against-all-npp-mps-1788419650</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக சுதந்திரப் போரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட மையத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
லஞ்சம் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு அளிக்கப்பட்டது.</p><p>
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அமைப்பின் சார்பில் தரிஷன தம்திரிகே இம்முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.</p><h2>எரிபொருள் கொடுப்பனவு</h2><p>
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அலுவலக பராமரிப்புக்காக ரூ. 100,000, தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ. 50,000, சாரதி சம்பளம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் அமர்வு ஒன்றுக்கு ரூ. 2,500 வருகைக் கொடுப்பனவாகவும் வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c22cc1a4-144f-4c93-9949-ce6fad7cf087/26-6a9921bfe4c31.webp' /></p><p>
திரட்டப்பட்ட நிதியத்திலிருந்து வழங்கப்படும் இப் பணம், தொகுதிகளில் அலுவலகங்களை அமைத்து மக்களுக்குச் சேவையாற்றவும், தொகுதி மக்களுடன் தொடர்பைப்பேணவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அனைத்துக் கொடுப்பனவுகளும் கட்சியின் கணக்கில் வைப்பிலிடப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>
பொதுப் பணத்தை இவ்வாறான வெளிக்கடந்த கணக்குகளுக்கு மாற்றுவதற்கு சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை.</p><h2>விசாரணை</h2><p> இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியும், ஜே.வி.பியும் முறையற்ற நிதி நன்மையைப் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஆணைக்குழுவுக்கு அழைத்துக் விசாரணை நடத்துமாறும், சட்ட மீறல்கள் குறித்து தீர்மானிக்குமாறும் முறைப்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34b72628-9b55-45a1-a7fd-11ad06afbb9c/26-6a991e4444c4a.webp' /></p><p>
</p><p>தேசிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த நிதிப் பதிவுகளின் பிரதிகளும் சான்றாக கையளிக்கப்பட்டன. </p><p>
அந்த அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வாயிலாக மொத்தம் 21,53,16,076.78 ரூபா தொகையைக் கட்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:14:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் முக்கிய ஆவணங்களுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு விரைந்த நாடாளுமன்ற அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliamentary-officials-appear-before-ciaboc-1788415307"></link>
            <id>https://tamilwin.com/article/parliamentary-officials-appear-before-ciaboc-1788415307</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நாடாளுமன்றத்தின் பல அதிகாரிகள் இன்று(03.09.2026) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நாடாளுமன்றத்தின் பல அதிகாரிகள் இன்று(03.09.2026) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


முன்னாள் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், விளக்கமளிப்பதற்காக குறித்த அதிகாரிகள் CIABOC முன்னிலையாகியுள்ளனர்.
</p><h2>விசாரணைக்கு தேவையான ஆவணங்கள்</h2><p>குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் நாடாளுமன்ற அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff935f17-7e1e-482d-a511-c8f20f6f45ba/26-6a991e9cca729.webp' /></p><p>


இந்த விவகாரம் தொடர்பில் CIABOC மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:08:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் விடுவிக்கப்பட உள்ள யாழ்.வலி வடக்கு காணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/release-of-land-in-jaffna-valikamam-north-1788418038"></link>
            <id>https://tamilwin.com/article/release-of-land-in-jaffna-valikamam-north-1788418038</id>
            <summary type="text">யாழ்.வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை
இந்த மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை
இந்த மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக
கடற்றொழில் அமைச்சரும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான
இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
</p><p>
அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு
உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம்
தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் எமது அரசாங்கம்
ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில்
தொடர்ந்து பயணித்து வருகிறது.</p><h2> உரிய நடவடிக்கை</h2><p>
</p><p>
அண்மையில் ஜனாதிபதி அனுர தலைமையில் இடம் பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி
வடக்கு பகுதியிலுள்ள விடுதிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு
பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.</p><p>

அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை
படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e360d455-455f-435d-a349-204cca9d2282/26-6a991b638eb0f.webp' /></p><p>
</p><p>
இந்த மாதம் செப்டெம்பர் இறுதி பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி
காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.&nbsp;</p><p>&nbsp;காணி விடுவிப்பு மற்றும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம்
அக்கறையுடன் செயல்பட்டு வரும் நிலையில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை உரிய
முறையில் நிறைவேற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:08:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788415334"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788415334</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில்&amp;nbsp;இன்று (03.09.2026) முதல் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில்&nbsp;இன்று (03.09.2026) முதல் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><h2>அடிக்கடி மழை பெய்யும் சாத்தியம்</h2><p>
</p><p>
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
அத்துடன், ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e37f14d-2dd9-42cc-9d96-fe049cf74cfa/26-6a99190bc912b.webp' /></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 07ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மைய அட்சரேகைகளுக்கு நேர் மேலாக சூரியன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, இன்று (03) நண்பகல் 12.09 மணியளவில் மாதம்பே, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><p></p><p></p><p>மேலதிக தகவல் - அமல்</p>]]></content>
            <updated>2026-09-03T06:53:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் வரலாற்றுச் சாதனை படைத்த தரம் 5 மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kinniya-muslim-collage-scholarship-results-1788417659"></link>
            <id>https://tamilwin.com/article/kinniya-muslim-collage-scholarship-results-1788417659</id>
            <summary type="text">கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில்,
2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 94 சதவீத சித்தியைப் பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில்,
2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 94 சதவீத சித்தியைப் பெற்று
வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.</p><p>

இம்முறை பாடசாலையிலிருந்து 132 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில்,
அவர்களில் 124 மாணவிகள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். மேலும், 28
மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சிறப்பான பெறுபேற்றை
பதிவு செய்துள்ளனர்.</p><p>

கடந்த 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையின் சித்தி
வீதம் 86 சதவீதமாக காணப்பட்ட நிலையில், இம்முறை அது 94 சதவீதமாக உயர்ந்துள்ளது.</p><h2>வரலாற்றுச் சாதனை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இதற்கு முன்னர் பாடசாலை வரலாற்றில் இத்தகைய உயர்ந்த சித்தி வீதம்
பதிவாகியிருக்காத நிலையில், 2026ஆம் ஆண்டில் 94 சதவீத சித்தி பெறப்பட்டுள்ளமை
பாடசாலையின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c43863a2-8d16-4f20-b176-968aa79f1a1a/26-6a9917a25ed1b.webp' /></p><p>
</p><p>
மாணவிகளின் அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் அயராத உழைப்பு, பெற்றோரின்
ஒத்துழைப்பு மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் வழிகாட்டல் ஆகியவற்றின்
ஒருங்கிணைந்த பெறுபேறாக இந்த வரலாற்றுச் சாதனை அமைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.எம். ரஹீம் தெரிவித்துள்ளார்.
</p><p>
பல தியாகங்களை மேற்கொண்டு இரவு பகல் பாராது கல்வி கற்று, பரீட்சைக்குத் தோற்றி
சிறந்த பெறுபேற்றை பெற்ற சாதனை மாணவிகளுக்கு அதிபர் தனது மனமார்ந்த
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மாணவிகளுக்கு சிறப்பாகக் கற்பித்து, ஆலோசனைகள் வழங்கி, அவர்களை நெறிப்படுத்தி
பரீட்சைக்குத் தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் அவர் பாராட்டுக்களைத்
தெரிவித்துள்ளார்.
</p><p>
மாணவிகளின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து பல்வேறு உதவிகளையும்
ஒத்துழைப்புகளையும் வழங்கிய பெற்றோர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர்,
பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆலோசகர்கள்,
வளவாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க
உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அதிபர் நன்றி
தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T06:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள குழுவினருடன் தொடர்பு - போம்புவல சுத்தா குற்றத்தடுப்புப்பிரிவினரால் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bombuwala-suddha-arrested-links-underworld-gangs-1788414337"></link>
            <id>https://tamilwin.com/article/bombuwala-suddha-arrested-links-underworld-gangs-1788414337</id>
            <summary type="text">பாதாள உலகச்செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் &quot;போம்புவல சுத்தா&quot; என்ற புனைப்பெயரில் அழை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகச்செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் "போம்புவல சுத்தா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட சந்திப்பகுதியில் உள்ள கடையொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளன.</p><h2>சிசிடிவி காணொளிகள் மூலம் சந்தேகநபர் அடையாளம்&nbsp;</h2><p>இதற்கமைய, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளிகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்யதுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c96696c9-b54b-4f99-978b-4000d2f41c11/26-6a991463d0751.webp' />&nbsp;</p><p>களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், போம்புவல பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நிலையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். </p><p>

கைது செய்யப்படும் போது, மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டில் பதிவு இலக்கங்கள் மாறுபடும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><h2>&nbsp;நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்குவதற்கு இவர் செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p>சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T06:32:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மோட்டார் குண்டுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mortar-shells-recovered-in-jaffna-1788416024"></link>
            <id>https://tamilwin.com/article/mortar-shells-recovered-in-jaffna-1788416024</id>
            <summary type="text">யாழ். மண்கும்பான் பகுதியிலிருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (03) மோட்டார் குண்டுகள் கண்டெடுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மண்கும்பான் பகுதியிலிருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
நேற்றைய தினம் (03) மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு&nbsp;</h2><p>
</p><p>
மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் மேற்படி மோட்டார் குண்டுகள் இருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.</p><p>இந்த விடயம் ஊர்காவற்துறை பொலிஸாரால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><p>
அதன்படி அங்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவற்றை மீட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T06:13:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் - நினோ காலநிலை மாற்றம்! மக்கள் தொழில்களை இழக்கும் அபாயம் - அமைச்சர் தலைமையில் விசேட கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/relief-measures-for-those-affected-by-el-nino-1788413949"></link>
            <id>https://tamilwin.com/article/relief-measures-for-those-affected-by-el-nino-1788413949</id>
            <summary type="text">​எல் - நினோ காலநிலை மாற்றத்தினால் தொழில்களை இழக்கும் அபாயத்திலுள்ள மக்களுக்கு
நிவாரணம் வழங்குவது குறித்து சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>​எல் - நினோ காலநிலை மாற்றத்தினால் தொழில்களை இழக்கும் அபாயத்திலுள்ள மக்களுக்கு
நிவாரணம் வழங்குவது குறித்து சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி
தலைமையிலான விசேட அமைச்சரவை உபகுழுவின் 4ஆவது கூட்டத்தில் விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில், ​ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
​ எல் - நினோவினால் காய்கறி மற்றும் பழச் செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக்
குறைத்து, நாட்டில் காய்கறித் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வழிமுறைகள்
குறித்து ஆராயப்பட்டது.</p><h2>குடிநீர் விநியோகத் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு</h2><p>
​
அத்துடன் இதுவரை பாதிப்புக்குள்ளாகியுள்ள 6 மாவட்ட மக்களுக்கான தடையற்ற
குடிநீர் விநியோகத் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e94833-1ca6-4d8f-b9ff-5239f7bc7090/26-6a990c5714957.webp' /></p><p>
எனவே ​பெரும்போகம் தொடர்பில் தெளிவுபடுத்த நாளைய தினம் (04.09.2026) ஊடகவியலாளர்
சந்திப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில்,​ பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் 'சூம்' வழியே கலந்துரையாடல்
மேற்கொள்ளப்படும்.</p><p>
எனவே அமைச்சரவை உபகுழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 14ஆம் திகதி மீண்டும்
கூடவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக கற்கை பீடத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியை பார்வையிட்ட பிரதியமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-allocated-jaffna-university-in-mullivaikkal-1788411825"></link>
            <id>https://tamilwin.com/article/land-allocated-jaffna-university-in-mullivaikkal-1788411825</id>
            <summary type="text">&amp;nbsp;முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மீன்பிடிக்கற்கைப் பீடத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மீன்பிடிக்கற்கைப் பீடத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தின பார்வையிட்டுள்ளார்.</p><p>

நேற்று (02.09.2026) அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 39 ஏக்கர் பரப்பளவுடைய காணியே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;காணி தொடர்பான விளக்கங்கள்&nbsp;</h2><p>
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்ற இக்களப்பார்வையின்போது, மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் காணி தொடர்பான விளக்கங்களை பிரதியமைச்சருக்கு வழங்கியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6588e4cd-1ce4-4cbe-8556-6ed559a60b08/26-6a99073aa902b.webp' /></p><p>
இதன்போது, காணியின் தற்போதைய நிலை, உத்தேச மீன்பிடிக் கற்கைப் பீடத்தை அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக களத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
இக்களப் பார்வையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலகநாதன் அவர்களும் மேலும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:37:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்வெட்டு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-need-for-power-cuts-energy-minister-1788411346"></link>
            <id>https://tamilwin.com/article/no-need-for-power-cuts-energy-minister-1788411346</id>
            <summary type="text">போதுமான நீர்மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்படுவதால், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைந்தபோதிலும் மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதுமான நீர்மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்படுவதால், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைந்தபோதிலும் மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) கோரிக்கை சமர்ப்பித்த பின்னர், ஊடகங்களிடம் பேசியபோது எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><h2>மின்சார உற்பத்திக்கு கடுமையான சவால்</h2><p>
</p><p>
 

நிலக்கரி கையிருப்பு குறைந்ததால், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a88909db-f646-4ec7-b34f-0d0362a033ac/26-6a99073fdb9c5.webp' /></p><p>
 

இரண்டு நிலக்கரி சரக்குகள் விரைவில் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கப்பல் நாளை (04) மற்றும் இரண்டாவது செப்டெம்பர் 12 அன்று வந்து சேரும்.</p><p>

 

இரு சரக்குக் கப்பல்களில் இருந்தும் நிலக்கரி இறக்கப்பட்டவுடன், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அமைச்சர் தெரிவித்தார்.</p><p>தற்போது மின்வெட்டுக்குத் தேவை இல்லை என்றும், இந்த நிலைமை குறித்துப் பொதுமக்கள் தேவையற்ற கவலை கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.</p><p>

 

இருப்பினும், நிலக்கரி கையிருப்புப் பற்றாக்குறை மின்சார உற்பத்திக்கு ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது என்று&nbsp;முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜகோடா கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளர் ஆலால சுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/41st-death-anniversary-alala-sundaram-observed-1788413383"></link>
            <id>https://tamilwin.com/article/41st-death-anniversary-alala-sundaram-observed-1788413383</id>
            <summary type="text">இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் அடலேறு ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு
தினம் இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் அடலேறு ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு
தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளையினரால் நல்லூர்
சங்கியன் மன்றத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
</p><p>
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்றுப்
புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ். மாநகர சபை மேயர் திருமதி மதிவதனி
விவேகானந்தராசா, பிரதி முதல்வர் இ.தயாளன், சபை உறுப்பினர்கள், கட்சியின் ஏனைய
உறுப்பினர்கள் மற்றும் அன்னாரது உறவினர்கள் கலந்துகொண்டனர்.
</p><p>
அமரரின் திருவுருவப் படத்துக்கு விளக்கேற்றி, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி
செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
நினைவுரையாற்றினார்.</p>]]></content>
            <updated>2026-09-03T05:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் CCIB விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ccib-investigation-arundika-fernando-1788412093"></link>
            <id>https://tamilwin.com/article/ccib-investigation-arundika-fernando-1788412093</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB)தற்போது முன்னிலையாகியுள்ளது.

டுபாயிலிருந்து இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB)தற்போது முன்னிலையாகியுள்ளது.
</p><p>
டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் பகுதியாகவே அவர் இன்று (03) அழைக்கப்பட்டுள்ளார்.</p><h2>&nbsp;சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் வாக்குமூலம்&nbsp;</h2><p>

இதற்கமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தற்போது வாக்குமூலங்களை பதிவுசெய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec17e08f-363d-46ab-ae0b-2eadd881e1f6/26-6a99037734045.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவரது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:19:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரியாவைப் போல் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க முயற்சிக்கும் அரசாங்கம்! ஹர்ஷன ராஜகருணா எம்.பி. குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-election-harshana-rajakaruna-1788411008"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-election-harshana-rajakaruna-1788411008</id>
            <summary type="text">மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாகச்
சுமார் 20 ஆண்டுகள் தேர்தல்களின்றி வடகொரியாவைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை
முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாகச்
சுமார் 20 ஆண்டுகள் தேர்தல்களின்றி வடகொரியாவைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை
முன்னெடுக்க அரசாங்கம் முயன்று வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்றைய தினம் (02.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர்
மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு மக்களும் சர்வதேச சமூகமும்
வலியுறுத்தி வரும் நிலையில், அதனைப் புறக்கணித்துவிட்டு முழு உலகமும்
எதிர்க்கும் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d5934f4-ae81-4570-80be-7101c4024068/26-6a99026ecb608.webp' /></p><p> </p><p>ஒரேயொரு அரசியல் கட்சி மட்டுமே நாட்டை ஆட்சி செய்யும் ஒரு கட்சி
ஆட்சி முறையை அமைத்து, தேர்தல்கள் இன்றி நீண்ட காலம் ஆட்சியைத் தொடரவே அரசாங்கம் திட்டமிடுகின்றது.
</p><p>
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகக் கட்டமைப்புகள்
அழிக்கப்பட்டதாலேயே ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை பறிபோனது.</p><h2>சர்வாதிகாரப் பாதையை நோக்கி செல்லும் அரசாங்கம்</h2><p>
</p><p>
தற்போதைய அரசாங்கம் சட்டபூர்வமான முறையில் சர்வாதிகாரப் பாதையை நோக்கிச்
செல்வதாலேயே ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச அமைப்புகளும் இந்தத்
திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfce27cb-2836-43dc-8927-82eb08348d77/26-6a99026f7f285.webp' /></p><p>

எதிர்க்கட்சியினரே சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதாக
அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையானது. </p><p>மகாநாயக்க தேரர்கள், கத்தோலிக்க திருச்சபை
மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற முதன்மையான அமைப்புகள் ஏமாறும்
அளவுக்கு அறிவில்லாதவர்கள் அல்லர்.

அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் நாடு பாரிய சர்வதேச நெருக்கடிகளை
எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர் இடத்தில் பேரணி நிச்சயம்! பொதுஜன பெரமுன திட்டவட்டமாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-rally-in-anuradhapura-certain-minister-1788408608"></link>
            <id>https://tamilwin.com/article/protest-rally-in-anuradhapura-certain-minister-1788408608</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு அரசு பல்வேறு
நடவடிக்கைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு அரசு பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், அனுராதபுரத்தின் ஏதேனும்
ஓர் இடத்தில் இந்த போராட்டத்தை நடத்துவதை எவராலும் தடுக்க முடியாது என்றும்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித்
தலைமையகத்தில் நேற்றுப் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>தொழிலாளர்களின் குரலாக போராட்டம்&nbsp;</h2><p>

"கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் குரலாகவே
இந்த போராட்டம் அனுராதபுரத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. அனுராதபுர மாவட்ட
விவசாயிகளுக்குத் தேவையான உரம் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18b07b98-97cc-474c-bea2-ba1126ad27b0/26-6a98fc12e762d.webp' />&nbsp;</p><p> </p><p>வறட்சியான காலநிலையால் மக்கள்
சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். அரசின் மீதான மக்களின் எதிர்ப்பைக்
காட்டுவதற்காக 'சல் காது' அரங்கைக் கோரிய போதிலும், அரசு சட்டதிட்டங்களைச்
சுட்டிக்காட்டி மைதானத்தை வழங்க மறுத்துள்ளது.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வளர்ச்சி குறித்து
அரசுக்குச் பேரச்சம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே எங்களைத் தினமும் குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து அடக்குமுறைகளைப் பிரயோகிக்க
முயல்கின்றனர். </p><p>அரங்கம் மறுக்கப்பட்டாலும் அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர்
இடத்தில் போராட்டம் நிச்சயமாக நடைபெறும்." - என்றார்.
</p><h2>22ஆவது அரசமைப்பு திருத்தம்</h2><p>
22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் நீதிமன்றில்
இடம்பெற்றுவரும் நிலையில், இது நீதித்துறையின் சுயாதீனத்துக்கு
விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதை
அவர் ஆமோதித்துள்ளார்.</p><p>

நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது குறித்து மக்களுக்கு ஆட்சேபனை இல்லை
என்றாலும், நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் நிலவும் போது குறுக்கு வழியில் அரசு
தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வதையே மக்கள் எதிர்க்கின்றார்கள் என்று
குறிப்பிட்ட அவர், நாட்டின் உயர்ந்த நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும்
களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முறையற்ற குழாய்க் கிணறு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-governor-vedanayagan-s-announcement-1788409251"></link>
            <id>https://tamilwin.com/article/northern-governor-vedanayagan-s-announcement-1788409251</id>
            <summary type="text">எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில்,
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட
நடவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில்,
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
</p><p>
யாழ். பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம்
மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் ஆகியன இணைந்து ஏற்பாடு
செய்துள்ள 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப்பொருளிலான நிலத்தடி
நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி, நேற்று (02.09.2026) மாலை
நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகிலுள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன
வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. </p><p>இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக்
கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8acf25eb-405c-4565-b62d-fb3767d6b3e1/26-6a98f9c54ef11.webp' /></p><h2>யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர்&nbsp;</h2><p>அவர் மேலும் உரையாற்றுகையில், முந்தைய காலங்களில் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் மிகவும் தூய்மையாகக்
காணப்பட்டதுடன், மக்கள் கிணற்று நீரை நேரடியாகவே பருகி வந்தனர். ஆனால்
தற்போது, குடிதண்ணீருக்காக போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரை அதிக
விலைகொடுத்து வாங்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு மக்கள்
தள்ளப்பட்டுள்ளனர். </p><p>1950 களுக்குப் பின்னர் நிலத்தடி நீரை உறிஞ்சும் குழாய்க்
கிணறுகளின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளமை, முறையற்ற விதத்தில்
அதிகளவான குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டமை மற்றும் கழிவுநீர் நிலத்தடி
நீருடன் கலக்கின்றமை போன்ற காரணங்களால் நீரின் தரமும் அளவும் வெகுவாகப்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8feced75-8b98-47c7-9e19-523e29db885c/26-6a98f9c63547a.webp' /></p><p>

எனவே, குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட
நடவடிக்கைகளும், முறையான கண்காணிப்பு வழிமுறைகளும் உடனடியாக
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனைச் சாத்தியமாக்க உரிய தரப்பினருக்கு
அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.</p><h2>முறையான முகாமைத்துவ நடவடிக்கை</h2><p>
</p><p>
மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் திட்டங்களை விரிவுபடுத்துவதுடன், கழிவுநீர்
மற்றும் உவர் நீர் நன்னீருடன் கலப்பதைத் தடுக்க முறையான முகாமைத்துவ
நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05cf5768-3985-4677-abc2-b7bc12e6705b/26-6a98f9c70c598.webp' /></p><p>

நிலத்தடி நீரைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிநபரின் கூட்டுப் பொறுப்பாகும்.
விழிப்புணர்வுடன் செயற்பட்டு, எதிர்காலச் சந்ததியினருக்காக நமது நீர்
வளங்களைப் பாதுகாக்கும் இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு அனைவரும் முழுமையான
ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு! வாள்களும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-open-fire-on-three-wheeler-in-borella-1788409241"></link>
            <id>https://tamilwin.com/article/police-open-fire-on-three-wheeler-in-borella-1788409241</id>
            <summary type="text">பொரளை ,சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை பொருட்படுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.



அத்துடன் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை ,சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை பொருட்படுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p>



அத்துடன் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த ஐந்து சந்தேகநபர்களை&nbsp;பொலிஸார் உடனடியாக கைது தெரிவித்துள்ளனர்.</p><h2>வாள்களும் மீட்பு&nbsp;</h2><p>இதனையடுத்து முச்சக்கரவண்டியை சோதைனை நடத்தியதில் மூன்று வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7a0be85-9b65-4a29-8614-b8ed7c1af95a/26-6a98fa2faffaa.webp' />&nbsp;</p><p>இதற்கமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவு சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த மர்ம நபர்களால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-investigation-into-2-people-who-sought-bail-1788408708"></link>
            <id>https://tamilwin.com/article/cid-investigation-into-2-people-who-sought-bail-1788408708</id>
            <summary type="text">போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த இருவர் தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேல் நீதிமன்றத்தில் பிணை மனுக்களை தாக்கல் செய்ததாக கூறப்படும் இருவர் தொடர்பில் உடனடியாக விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

விசாரணையையடுத்து விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 மர்ம நபர்களால் சர்ச்சை</b></h2><p>வெல்லம்பிட்டியை சேர்ந்த நிமல் கருணாதிலக மற்றும் கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி அலெக்சாண்டர் ஆகிய இருவர் தொடர்பிலேயே விசாரணைகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be442de1-af60-4218-a5f1-6a3d0e5000da/26-6a98f61d765ef.webp' /></p><p>போதைப்பொருள் வர்த்தகர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக குறித்த இருவரும் தொழிலாகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பில் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கைகளை பரிசீலித்ததனை தொடர்ந்து நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45 சந்தேகநபர்கள் சார்பில் ஒரே வழக்கறிஞரின் ஊடாக பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு தொடர்பில் நீதிமன்றத்தில் வெளிவந்த தகவல்களையடுத்தே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p><p>

பிணை மனுதாரர் யார் என்பதை உறுதியாக உறுதிப்படுத்துவதற்காக அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><h3><b>
பிணை மனு</b></h3><p>இதன்போது, குறித்த பிணை மனுவைத் திரும்பப் பெற வழக்கறிஞர் அனுமதி கோரிய போதிலும், அதற்கு அனுமதி மறுத்த நீதிபதி, சந்தேகநபரையும் அவரது நெருங்கிய உறவினர்கள் இருவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து விடயங்களைக் விசாரித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da9d1e88-f6e3-4839-ac28-5413299d7f6a/26-6a98f61e27481.webp' /></p><p>பிணை மனுவை சமர்ப்பிப்பதற்காக நிமல் கருணாதிலக என்பவருக்குத் தாங்கள் எந்தவித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை எனவும், அத்தகைய நபர் எவரென்றும் தனக்குத் தெரியாது எனவும் சந்தேகநபரின் நெருங்கிய உறவினர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
</p><p>
இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பிணை மனுவை நிராகரிக்க நீதிபதி நடவடிக்கை எடுத்தார்.

மற்றொரு பிணை மனு வழக்கறிஞர் பிரபாஸ்வர பீரிஸ் ஊடாகச் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் இது போன்றதொரு விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>
இதன்போது, குறித்த போதைப்பொருள் வழக்கின் சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு அழைத்து, அவருக்காக பிணை மனுவை சமர்ப்பித்த நபர் தனக்குத் தெரிந்தவரா என நீதிபதி வினவியுள்ளார்.
</p><p>
அதற்குப் பதிலளித்த சந்தேகநபர், தனக்காக பிணை மனுவைச் சமர்ப்பித்த நபர் யார் என்பது தனக்குத் தெரியாது என தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:23:09+00:00</updated>
        </entry>
    </feed>
