<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-24T05:32:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-1784868758"></link>
            <id>https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-1784868758</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் ஒரு வழக்கு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நடைபெற்று வரும் ஒரு வழக்கு தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்&nbsp;அவர் இன்று (24)முன்னிலையாகத் தவறியதையடுத்து, இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p></p><h2>வழக்கு விசாரணைக்கு வந்தபோது</h2><p>நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​அவரது பிணையாளர்களும் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d1648b1-dbf1-4ecc-8735-5d89b9687b2c/26-6a62f344c2d36.webp' /></p><p>கோட்டை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தபோது, ​​அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-24T05:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களுடைய காணிகள் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் - ஆளும் தரப்பு தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-temple-lands-to-be-divided-h-sunil-mp-1784863715"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-temple-lands-to-be-divided-h-sunil-mp-1784863715</id>
            <summary type="text">மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எடுத்து வருகிறோம் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் தையிட்டி காணி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தற்போது விரிவான
பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றதெனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தையிட்டி விவகாரம்</h2><p>
</p><p>


மேலும் தெரிவிக்கையில், </p><p>

அனைத்து தரப்பினரையும் அழைத்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

குறிப்பாக, நீதி அமைச்சர், வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் அமைச்சர், ஆளுநர், மாவட்டச்
செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும்
நாடாளுமன்றத்திற்கும் எமது அமைச்சுக்கும் பலமுறை அழைத்து இந்தப்
பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.</p><p> 

அத்துடன் அந்தப் பகுதியின் காணி உரிமையாளர்களான
மக்களையும் நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காணி
அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து அதிகாரிகளும் வலிகாமம் - தையிட்டி
பகுதிக்குச் சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965d66b6-3830-4898-9117-71c520ff8ff6/26-6a62de918ce31.webp' /></p><p> </p><p>ஆனால் அங்கு ஏற்பட்ட சிறிய சிக்கல் காரணமாக அதை
முழுமையாகச் செய்ய முடியாமல் போனது.

எங்களின் நோக்கம் என்னவென்றால், இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து, காணி
உரிமையாளர்களான எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடம்
ஒப்படைக்க வேண்டும் என்பதே ஆகும்.
</p><p>
அதேநேரம், 1972ஆம் ஆண்டின் காணி அளவீட்டு ஆவணங்களிலேயே இந்த விகாரை பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது. விகாரையின் ஜின்தோட்ட நந்தாராம நாயக்க தேரர் மிகவும்
தெளிவான புரிதலோடு இருக்கிறார்.</p><p></p><h2>அரசியல் சுயநலன்கள்</h2><p> </p><p>அந்தப் பகுதி மக்களோடு இணைந்து, மிகவும்
நல்லிணக்கத்தோடு பணியாற்றக்கூடிய ஒரு மத குருவாக அவர் உள்ளார்.

நாங்கள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. </p><p>மக்களுக்குச் சொந்தமான
நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கும் பிரித்துக்
கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். 

மிக
விரைவில் எமது அதிகாரிகளுடன் மீண்டும் அப்பகுதிக்குச் செல்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c79aea9-79a9-4fbf-8976-e91d8646b420/26-6a62de90ce97d.webp' /></p><p>இரு தரப்பினரிடையேயும்
உண்மையான நல்லிணக்கம் ஏற்கனவே நிலவுகிறது. 

அரசியல் காரணங்களுக்காகவும் சுயநல
அரசியல் தேவைகளுக்காகவுமே அங்கு நல்லிணக்கம் இல்லை என்பது போன்ற தோற்றம்
சித்தரிக்கப்படுகிறது.</p><p>
</p><p>அந்த அரசியல் சுயநலன்களுக்குப் பலியாகாமல், எமது மக்களுக்குரிய காணிகளையும்
விகாரைக்குரிய காணிகளையும் சரியாக அளவீடு செய்து, உரிய ஆவணங்களை மக்களிடம்
ஒப்படைப்பதே எமது திட்டமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-restricted-1784869311"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-restricted-1784869311</id>
            <summary type="text">இந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வாகன இறக்குமதி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வாகன இறக்குமதி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகள் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வாகனங்களின் இறக்குமதிக்கான வரி</h2><p>
</p><p>தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாகன வகைகளின் இறக்குமதிக்கான தீர்வை வரிகளை மூன்று மாத காலத்திற்கு அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். அந்த நடவடிக்கையின் பலனாக, இந்த ஜூலை மாதத்தில் வாகன இறக்குமதி வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6469fb49-76b6-4622-8448-2b2dd53be67f/26-6a62f1c09d557.webp' /></p><p>இம்மாதத்தின் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் முறையே 1.81 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 1.19 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்களே வழங்கப்பட்டுள்ளன.
</p><p>இந்த ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில், வாகன இறக்குமதிக்காக நாளொன்றுக்கு வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் சராசரிப் பெறுமதி 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்தில் பேணப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.
</p><p>நிலவும் சூழலில் 7 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் ஆபத்தான நிலைமை..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rat-fever-and-dengu-fever-high-warrning-people-1784860758"></link>
            <id>https://tamilwin.com/article/rat-fever-and-dengu-fever-high-warrning-people-1784860758</id>
            <summary type="text">நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.&amp;nbsp;இலங்கையில் பதிவாகும் தொற்று நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.&nbsp;</p><p>இலங்கையில் பதிவாகும் தொற்று நோய்களினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.</p><p>ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலியின் சிறுநீரில் காணப்படும் பக்றீரியாவினால் இந்த நோய் பரவுவதாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>நோயினால் பாதிக்கப்படக்கூடியவர்கள்</h2><p>குறிப்பாக விவசாயிகள், சேறு நிறைந்த சூழலில் பணிபுரிவோர், வடிகான் சுத்திகரிப்பாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்வெளிகள் அல்லது சதுப்பு நிலங்களில் விளையாடும் சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6021c0b-4b52-4a61-90b4-8cd3bc88c822/26-6a62f06ce0c3a.webp' /></p><p>எலியின் சிறுநீரில் உள்ள லெப்டோஸ்பைரா பக்டீரியா, தோல், கண்கள் அல்லது சளி சவ்வுகளில் உள்ள சிறிய கீறல்கள் வழியாக மனித உடலுக்குள் நுழைகின்றது என்று தெரிவித்துள்ளார்.
</p><p>தேங்கி நிற்கும் நீர் உள்ள இடங்கள், தேங்கி நிற்கும் நீர்நிலைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்கும் போது இந்நோய் பரவும் அபாயம் உள்ளது என்றும், எனவே அத்தகைய சமயங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
சேறு நிறைந்த சூழலில் பணிபுரியும் முன், மருத்துவ ஆலோசனையின் படி டாக்ஸிசைக்ளின் எனப்படும் பொடுகு நீக்கும் மருந்தை பெறுவது மிகவும் முக்கியம் என்றும், அதனை மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களின் அலுவலகங்களிலிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு எச்சரிக்கை</h2><p> </p><p>இருப்பினும், மருத்துவ ஆலோசனையின் பெயரில் உரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/831093e2-a23b-4f59-b37a-12a1cb07af65/26-6a62f06dc7f7c.webp' /></p><p>
டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் மிகவும் ஒத்தவை என்றும், காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண்களில் வலி போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

மேலும், அத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், தாமதமின்றி மருத்துவரை அணுகி, நோயை சரியாக கண்டறிய தேவையான இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>குறித்த அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக வைத்தியம் செய்வதையோ அல்லது சிகிச்சையைப் தாமதப்படுத்துவதையோ தவிர்த்து, உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:56:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளையாட்டுத்துறை அமைச்சர் மீது குற்றம் சுமத்தும் பிரபல வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yupun-disappointed-by-sports-minister-s-1784868129"></link>
            <id>https://tamilwin.com/article/yupun-disappointed-by-sports-minister-s-1784868129</id>
            <summary type="text">&amp;nbsp;விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மீது பிரபல வீரர் யுபுன் அபேகோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மீது பிரபல வீரர் யுபுன் அபேகோன் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்குத் தான் அரசாங்கத்திடம் 300,000 அமெரிக்க டொலர்களை நிபந்தனையாகக் கேட்டதாக வெளியாகும் செய்திகளை இலங்கை ஓட்டப்பந்தய வீரர் யுபுன் அபேகோன் முற்றாக மறுத்துள்ளார்.</p><p> 
இந்தத் தொகையானது முந்தைய அரசாங்கங்களால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகைகளே தவிர, புதிய கோரிக்கை அல்ல என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e38a59b-d9be-4db9-9f8c-c75cb7f9d540/26-6a62ed2294db9.webp' /></p><p>
</p><p>விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அண்மையில் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p><p>
2021 ஆம் ஆண்டு முதல் எனக்கும் எனது பயிற்சி குழுவினருக்கும் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளே இந்த 300,000 டாலர் எனக் குறிப்பிட்ட யுபுன் அபேகோன், இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>நான் தொடர்ந்து போட்டியிடுவதற்கு 300,000 டொலர்களை நிபந்தனையாகக் கேட்கவில்லை. முந்தைய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகள் மற்றும் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே இந்தத் தொகை அமைந்திருந்தது.
</p><p>இதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மட்டுமே நான் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
</p><p>அண்மையில் தடகள விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அபேகோன், அமைச்சரின் பகிரங்கக் கருத்துக்கள் தனது கோரிக்கையைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கவலை வெளியிட்டார்.
</p><p>'யுபுன் எம்மிடம் 300,000 டொலர் கேட்டார், எங்களால் கொடுக்க முடியாது' என்ற தவறான எண்ணத்தை அமைச்சரின் கூற்று உருவாக்கியுள்ளது.
</p><p>இக்கருத்து தன்னை அரசியல் சேற்றுக்குள் இழுப்பதாகவும், பணத்துக்காக மட்டுமே இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாக மக்கள் மத்தியில் காட்ட முற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டதில்லை என்றும், வேறு ஒரு நாட்டிற்காகப் போட்டியிடும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் இலங்கைக்காக விளையாடுவதற்கே முன்னுரிமை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
"இத்தாலிய குடியுரிமையைப் பெறும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், நான் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையே தேர்ந்தெடுத்தேன். </p><p>இலங்கை தேசியக் கொடியைப் பெருமையுடன் ஏந்திச் சென்றேன். நாட்டிற்காகப் விளையாடிய ஒரு விளையாட்டு வீரனை இவ்வாறு சித்தரிப்பதை நான் வன்மையாக மறுக்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த 300,000 டாலர் தொகையானது தனது பயிற்சிக் கட்டணங்கள் மற்றும் இலங்கைக்காகப் போட்டியிட்டபோது அவரும் அவரது குழுவினரும் செய்த செலவுகளுக்கான நிலுவை மட்டுமே தவிர புதிய நிதியுதவி அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.</p><p>
அரசாங்கம் பணம் தர மறுத்ததால் தான் ஓய்வு பெறவில்லை என்றும், பல வருடங்களாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள அமைப்பின் மீதான விரக்தியினாலேயே தான் தடகளப் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து ஓய்வு பெற்றதாகவும் யுபுன் அபேகோன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T04:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் சோசலிச இளைஞர் சங்கம் சார்பில் கருப்பு ஜூலை நினைவூட்டல் துண்டுபிரசுரம் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-reminder-leaflet-distribution-1784865970"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-reminder-leaflet-distribution-1784865970</id>
            <summary type="text">30 ஆண்டு கால போருக்கு வழி வகுத்த &#039;கருப்பு ஜூலை&#039; இனக்கலவரம் இடம்பெற்று
43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த கால வடுக்களில் இருந்து மீண்டு
நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 ஆண்டு கால போருக்கு வழி வகுத்த 'கருப்பு ஜூலை' இனக்கலவரம் இடம்பெற்று
43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த கால வடுக்களில் இருந்து மீண்டு
நாட்டில் இன நல்லிணக்கத்தை பலப்படுத்தும் நோக்கில் சோசலிச இளைஞர் சங்கத்தின்
மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நேற்று (23.07.2026) மாலை
மன்னார் பேருந்து நிலையப் பகுதியில் விசேட துண்டு பிரசுரம் விநியோகம்
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை இன
கலவரமானது, நாட்டின் வரலாற்றில் அழியாத வடுக்களையும், எண்ணற்ற
உயிரழிவுகளையும், சொத்து நாசங்களையும் ஏற்படுத்தியதுடன், நீண்ட கால
உள்நாட்டுப் போருக்கும் அடித்தளம் அமைத்தது.</p><p></p><h2>மக்கள் ஒற்றுமையாக வாழ முன்வர வேண்டும்</h2><p>
</p><p>
இத்தகைய துயரமான சம்பவங்கள் மீண்டும் இப்பகுதியில் எக்காலத்திலும் தலை தூக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதன்போது, கடந்த காலத்தில் ஏற்பட்ட இன ரீதியான முரண்பாடுகள் மற்றும்
பிளவுகளை களைந்து, அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடனும் சமத்துவத்துடனும்
ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் துண்டுப்பிரசுரங்கள்
பொது மக்களுக்கும் பேருந்து நிலைய பகுதிக்கு வருகை தந்தவர்களுக்கு வழங்கி
வைக்கப்பட்டன.
</p><p>
இனிவரும் காலங்களில் நாட்டில் மக்களுக்கிடையிலும் இனரீதியான மோதல்களோ அல்லது
கலவரங்களோ ஒருபோதும் உருவாகக் கூடாது என்ற வலுவான செய்தியை துண்டுப்பிரசுரம்
ஊடாக
சோசலிச இளைஞர் சங்கம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலிருந்து மாயமான பில்லியன் கணக்கான டொலர்! மோசடி குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-investigation-into-billion-dollar-fraud-1784864807"></link>
            <id>https://tamilwin.com/article/special-investigation-into-billion-dollar-fraud-1784864807</id>
            <summary type="text">மோசடியான முறையில் நாட்டை விட்டு வெளியில் கொண்டு
செல்லப்பட்ட பெருமளவிலான பில்லியன் டொலர் குறித்து விசேட விசாரணைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோசடியான முறையில் நாட்டை விட்டு வெளியில் கொண்டு
செல்லப்பட்ட பெருமளவிலான பில்லியன் டொலர் குறித்து விசேட விசாரணைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.</p><p>சுங்கத்திணைக்களம், வங்கி மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு அதிகாரசபை ஒன்றிணைந்து செயற்படாத காரணத்தால் திருடர்கள் தைரியமாக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
(கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில்
உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும்
உரையாற்றுகையில்,</p><p>&nbsp;</p><h2>மோசடியான இறக்குமதி பரிவர்த்தனைகள் </h2><p>

''மோசடியான இறக்குமதி பரிவர்த்தனைகள் ஊடாக கடந்த நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள்
நாட்டில் இருந்து 715 மில்லின் டொலர் வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக
அரசாங்க நிதி பற்றிய குழுவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436e08f8-e7c3-4170-a6ba-08b0c256fe09/26-6a62e5e821346.webp' /></p><p>

முறையற்ற தந்தி பரிவர்த்தனைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக தற்போது
இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவது பரவலாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.</p><p>
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமையும்
இவ்வாறான தன்மையில் காணப்படுகிறது.</p><h2>சட்டங்கள் மீது குற்றச்சாட்டுக்கள்&nbsp;</h2><p>

இலங்கை சுங்கத் திணைக்களம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
அதிகாரசபை ஒன்றிணைந்து செயற்படுவதில்லை. இந்த மூன்று பிரதான தரப்பிடம் முறையான
தொடர்பாடல் இல்லாத காரணத்தால் திருடர்கள் தைரியமாக செயற்படுகிறார்கள்.</p><p>

நிறுவன கட்டமைப்புக்கள் சிறந்த முறையில் செயற்படாத பின்னணியில் சட்டங்கள்
மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.</p><p> புதிய
சட்டங்களை இயற்றும் போது வரி செலுத்தி சட்டத்தின் பிரகாரம் செயற்படும்
இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். </p><p>
இந்த வாக்குமூலத்தில் அடங்கியுள்ள தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரியவந்துள்ளது.
</p><p>கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார். </p><p>அதுமட்டுமன்றி, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>கோட்டாபயவின் இரு வாக்குமூலங்கள்</h2><p>இந்தச் சம்பவம் தொடர்பிலும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடமும் வாக்குமூலம் பெற்றிருந்தது. </p><p>தற்போது சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
இது தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடம் இரண்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. </p><p>முதல் வாக்குமூலத்தில், சுகீஸ்வர பண்டாரவிற்குத் தனிப்பட்ட செயலாளர் என்ற முறையில் இந்தச் சம்பளம் வழங்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். </p><p>ஆனால், இரண்டாவது வாக்குமூலத்தில், அந்தச் சம்பளம் சுகீஸ்வரவிற்கு வழங்கப்படவில்லை என்றும், தவறுதலாக வேறு ஒரு செயலாளருக்கு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df624e24-2ddf-4df3-9a16-2bd553354c65/26-6a62e26654f56.webp' /></p><p>அவர் குறிப்பிட்ட அந்த செயலாளர் நந்தசேன மற்றும் மஹிந்த ஆகியோரின் இளைய சகோதரியான பிரீதி ராஜபக்சவின் மூத்த மகன், முன்னாள் கடற்படை அதிகாரியான மாலக சந்திரதாச. அவருடைய தந்தை வைத்தியர் லலித் பிரியலால் சந்திரதாச.</p><p> மாலக சந்திரதாச, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது செயலாளராகப் பணியாற்றியதாகவும், அந்தச் சம்பளம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது என்றும் இரண்டாவது வாக்குமூலத்தில் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
</p><p>முதலில் சுகீஸ்வர பண்டாரவிற்கு சம்பளம் கொடுத்ததாகச் சொல்கிறார், இரண்டாவது வாக்குமூலத்தில் "இல்லை, அவருக்குக் கொடுக்கவில்லை, தவறுதலாக எனது செயலாளராக இருந்த மாலக சந்திரதாசவிற்குத்தான் கொடுத்தேன்" என்கிறார்.
</p><h2>மாலக சந்திரதாச வழங்கிய வாக்குமூலம்</h2><p>இதனைத் தொடர்ந்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாலக சந்திரதாசவை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது. </p><p>ஆனால் மாலக சந்திரதாச வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"நான் ஒரு சதம் கூட வாங்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்!" என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
</p><p>"நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. வேறு எந்தவொரு பதவியிலோ பணியாற்றவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a7f3e78-60ea-45e3-b5a6-3c55e9c862e3/26-6a62e26704bfc.webp' /></p><p>எந்தவொரு சம்பளமோ, பணமோ, கொடுப்பனவோ, வாகனமோ அல்லது வேறு எதுவும் நான் பெறவில்லை. அப்படி ஏதேனும் சொல்லியிருந்தால், கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்" என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.</p><p>அதனால் இது குறித்துத் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தான் இந்த விசாரணைகள் நடைபெறுகின்றன. </p><p>இதன் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டது போலவே கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்ய வாய்ப்புள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T03:58:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறையில் அநுர அரசின் தலையீட்டைத் தோற்கடிப்போம் - எதிர்க்கட்சிகள் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-defeat-anura-government-interference-judiciary-1784864385"></link>
            <id>https://tamilwin.com/article/we-defeat-anura-government-interference-judiciary-1784864385</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,
நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து
தோற்கடிப்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,
நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து
தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.</p><p>

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப்
பாதுகாப்பதற்காகப் பிரதான எதிர்க்கட்சிகள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்
தலைவர் அலுவலகத்தில் நேற்று(23.07.2026) விசேட கூட்டம் ஒன்றை நடத்தின.</p><p>
இதன்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p></p><h2>நீதித்துறையின் சுயாதீனம்</h2><p>“ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே எதிரணிகள்
அனைத்தும் இன்று ஒன்றுபட்டுள்ளன. இதுவே எமது பிரதான பொது நோக்கமாகும். </p><p>இந்த
அடிப்படை விடயங்களுக்காக நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்” என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69bab7af-e578-4d32-ae76-22d2e5698503/26-6a62e0814adc0.webp' /></p><p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ்
குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>
மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்
ராஜபக்ச உட்பட எதிரணியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும்
இதில் பங்கேற்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T03:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு&amp;nbsp;சம்பவம் தொடர்பாக பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு&nbsp;சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். </p><p>குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>விசாரணையில் வெளியான தகவல்</h2><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 'மட்டக்குளிய குடு ரொஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e836449-438e-4cdb-9f75-1fce1e8c67c6/26-6a62d844db0e8.webp' /></p><p>

ரொஷனின் சகோதரர்களில் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவின்போதே ​​நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் தலையில் முக்காடு அணிந்த ஒருவர் காரில் வந்து மண்டபத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இருப்பினும், குறி தவறியதால் ரொஷனுக்கு அருகில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்</h2><p>இதன்போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொரள்ளையை சேர்ந்த 39 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ff3d35-e313-4f6c-85f3-a9e154de2e22/26-6a62d9a86af72.webp' /></p><p>கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியை கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p>இச்சம்பவம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T03:43:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-reports-shows-prison-officers-ill-1784863282"></link>
            <id>https://tamilwin.com/article/medical-reports-shows-prison-officers-ill-1784863282</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் பணியாற்றி வரும் ஆண், பெண் அதிகாரிகள் பலருக்கு உடல்நலக் குறைபாடுகள் காணப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலை திண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் பணியாற்றி வரும் ஆண், பெண் அதிகாரிகள் பலருக்கு உடல்நலக் குறைபாடுகள் காணப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>சிறைச்சாலை திணைக்களத்தின் ஆண் அதிகாரிகளில் 77 வீதமானோருக்கும், பெண் அதிகாரிகளில் 56 வீதமானோருக்கும் உடலியல் பலவீனங்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>2025 ஆம் ஆண்டிற்கான&nbsp;அறிக்கை</h2><p>
</p><p>சிறைச்சாலை திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p>தொற்றா நோய்கள் பரவல் குறித்து நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் கண்டறியப்பட்ட இந்த நிலைமை, ஒரு தீர்மானமிக்க அபாயகரமான சூழல் என தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcd7817f-f223-412d-a94d-f05a799046d3/26-6a62da33d395e.webp' /></p><p>
</p><p>ஆண் சிறைச்சாலை அதிகாரிகளில் சுமார் 29% பேர் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவும், 26% பேர் வெற்றிலை/பாக்கு உபயோகிப்பவர்களாகவும் உள்ளனர். பெண் அதிகாரிகளில் 5% பேர் பாக்கு உபயோகிக்கின்றனர்.</p><p>
ஆண் அதிகாரிகளிடையே மது அருந்தும் பழக்கம் மிக அதிகளவில் காணப்படுகிறது.</p><p></p><h2>தொற்றா நோய்கள் பரவல்&nbsp;</h2><p> இத்தகைய பழக்கவழக்கங்கள் காரணமாக இதய நோய்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் வாய் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
ஆண் அதிகாரிகளில் 28% பேருக்கும், பெண் அதிகாரிகளில் 16% பேருக்கும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது.
</p><p>ஆண் மற்றும் பெண் அதிகாரிகளில் தலா 14% பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd06efee-a604-40ee-8760-821fea8e2a56/26-6a62eaf0d8887.webp' /></p><p>
</p><p>ஆண் அதிகாரிகளில் 13% பேருக்கு கொலஸ்ட்ரால் பாதிப்பு இருப்பதுடன், சிலருக்கு சிறுநீரகச் செயலிழப்பு நிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>
சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டின் (2024) ஆகஸ்ட் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தொற்றா நோய்கள் தொடர்பான இந்தச் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T03:21:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை! உடனடியாக பணத்தை மீளப் பெறுமாறு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-warns-sri-lankans-1784862090"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-warns-sri-lankans-1784862090</id>
            <summary type="text">இலங்கையில் பல்வேறு பயிர்ச்செய்கை முறைகளுக்காக முதலீடு செய்வதாக கூறி மக்களிடமிருந்து வைப்புக்களை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயலாகும் என மத்திய வங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பல்வேறு பயிர்ச்செய்கை முறைகளுக்காக முதலீடு செய்வதாக கூறி மக்களிடமிருந்து வைப்புக்களை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயலாகும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தகைய நபர்களிடம் ஏமாற வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p></p><h2><b>பணம் வைப்புச் செய்யும் நடவடிக்கை</b></h2><p>பயிர்ச்செய்கை நிறுவனங்களின் பெயரில் மக்களிடமிருந்து பணம் வைப்புச் செய்யும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் அதிகரித்து வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5010ad4f-dffd-4ee7-afe7-750ac7250019/26-6a62d83959517.webp' /></p><p>வங்கி அல்லாத நிதி நிறுவன மேற்பார்வை பிரிவினால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. </p><p>யாராவது ஒருவர் மக்களிடம் பணம் கேட்டு, ஏதாவது பயிர்ச்செய்கைத் திட்டத்தை மேற்கொண்டு மாதாந்தம் ஒரு தொகையையோ அல்லது இறுதியில் ஒரு பெரிய தொகையையோ தருவதாகக் கூறினால், அது வெளிப்படையாக மக்களின் வைப்புக்களைப் பெற்றுக்கொள்வதாகும். 

அது சட்டவிரோதமானது. </p><p>அது தொடர்பில் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்ததும், நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானித்து, அதற்கேற்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.
</p><p>
பயிர்ச்செய்கைத் திட்டங்களைச் செய்வது நல்லது. அது எவருடைய சொந்தப் பணத்தில் செய்யப்பட்டு வளர்ச்சியடைகிறது என்றால் அதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.</p><p></p><p> </p><h3><b>சுப்பர் மார்க்கெட்கள்</b></h3><p>அந்தத் திட்டங்கள் மூலம் பணம் ஈட்டி, மேலும் பல திட்டங்களை, சுப்பர் மார்க்கெட்கள் போன்றவற்றை ஆரம்பித்தாலும் பரவாயில்லை. 

ஆனால், அவர்கள் மக்களிடம் சென்று இவற்றில் முதலீடு செய்யுங்கள், நாங்கள் மாதாந்தம் பணம் தருகிறோம், இறுதியில் பெரிய பணம் தருகிறோம் கூறினால் அதில் சிக்கல் உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2133e6c8-4353-4598-9eba-fc3cc6eb1f78/26-6a62d8f08f568.webp' /></p><p>எனவே, இவ்வாறானவர்கள் மக்களிடம் பணம் கேட்டால், அது ஒருவித அதிகாரப்பூர்வமற்ற முறையில் வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். </p><p>

எனவே, குறிப்பாக இவ்வாறான விடயங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>
ஏற்கனவே பணம் வழங்கியவர்கள் இருந்தால், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின், முதலீடு செய்த பணத்தை உடனடியாக மீளக் கோருவதே சிறந்த வழியாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T03:16:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரிகளின் பெயரில் மோசடி: முறைப்பாடு அளிக்க விசேட எண்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-alert-about-scam-1784861797"></link>
            <id>https://tamilwin.com/article/police-alert-about-scam-1784861797</id>
            <summary type="text">&amp;nbsp;பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, போலி பொலிஸ் அதிகாரிகளாக நடித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடிகள் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, போலி பொலிஸ் அதிகாரிகளாக நடித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குப் பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
</p><p>அதன்படி, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பு அதிகாரிகளின் பின்வரும் எண்களுக்குத் தொடர்புகொண்டு இது தொடர்பான முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>
•	071 - 8592918
</p><p>•	071 - 8591765</p><p>
•	011 - 2300756</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f99b6991-042e-4d7f-a644-ebf9457555fc/26-6a62d467eac66.webp' /></p><p>
இவ்வாறான மோசடிகள் குறித்து ஏற்கனவே பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், பொதுமக்கள் மீண்டும் மீண்டும் இந்த மோசடிகளில் சிக்கி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>கணினிகள் அல்லது கைபேசிகளைப் பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகளின் படங்களுடன் போலி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளை உருவாக்கி இந்த மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்காகவும் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதில்லை எனவும், இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து மேற்கண்ட தொலைபேசி எண்களுக்கு மேலதிகமாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T02:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு - சஜித்துடன் முரண்பட்டு கோபமாக வெளியேறிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-left-from-the-sajith-s-meeting-1784860534"></link>
            <id>https://tamilwin.com/article/namal-left-from-the-sajith-s-meeting-1784860534</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் தகவல் வெளியாகி உள்ளது. 

பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்க்கட்சியை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை எடுத்திருந்தார். </p><p>

எனினும் சஜித் பிரேமதாஸவின் தீர்மானங்கள் காரணமாக தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p> </p><h2><b>

கடும் கோபம் அடைந்த நாமல்</b></h2><p>பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f59a7f-5e88-4903-9b55-a8a2ed788ba8/26-6a62d1e05bdd1.webp' /></p><p>இதன்போது கடும் கோபம் அடைந்த நாமல் ராஜபக்ச அங்கிருந்து இடைநடுவில் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.</p><p>

இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.</p><h3><b>

திட்டமிடப்பட்ட நடவடிக்கை</b></h3><p>எனினும், கூட்டத்தின் இடையில் நாமல் ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a71da79-f9c4-4f57-beea-0b259e95081d/26-6a62d1e144944.webp' /></p><p>இது முற்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை என கூறியபடியே நாமல் கோபமாக வெளியேறியதாக கூறப்படுகிறது. </p><p>எனினும் நாமல் அவ்வாறு கூறியதற்கான காரணம் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T02:45:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் 11 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sathosa-11-price-reduction-essential-commodities-1784858388"></link>
            <id>https://tamilwin.com/article/sathosa-11-price-reduction-essential-commodities-1784858388</id>
            <summary type="text">இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

வர்த்தகம், வணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. </p><p>

வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, நுகர்வோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோசா விற்பனை நிலையங்கள் மூலமாக இந்த பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T02:33:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடியால் கதி கலங்கியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பணக்காரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unp-shocked-after-police-announcement-1784780191"></link>
            <id>https://tamilwin.com/article/unp-shocked-after-police-announcement-1784780191</id>
            <summary type="text">இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்தவர்கள் மற்றம் திடீர் பணக்காரரானவர்களுக்கு அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

திடீரெனப் பணக்காரர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்தவர்கள் மற்றம் திடீர் பணக்காரரானவர்களுக்கு அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p> 

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை பொலிஸார் அண்மையில் கோரியிருந்த நிலையில் இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>

இதன் காரணமாக அரசியல்வாதிகளின் மட்டுமன்றி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது மக்களுக்கும் சிக்கல் நிலை ஏற்பட்டுளளது.</p><h2><b>ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை</b></h2><p> 

இவ்வாறான நிலையில் பொலிஸார் விடுத்த அறிவித்தலை உடனடியாக மீளப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f33c262d-483d-4402-98d9-cdfc80af6563/26-6a62cd83ba74e.webp' /></p><p>முறையான வழிகாட்டல்கள் இன்றி குறித்த பொலிஸ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், ஐக்கிய இராச்சியத்தின் சுதந்திரமான பரிசோதனைச் சபை ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகளுக்கும் பொலிஸாரின் இத்தகைய அறிவித்தலுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p> 

எப்படியிருப்பினும், அண்மைக்காலங்களில் சொத்துக்களைச் கொண்டவர்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h3><b>கறுப்புப் பொருளாதாரம்</b></h3><p> </p><p>

கறுப்புப் பொருளாதாரம் குறிப்பாக, கடந்த 3 தசாப்தங்களாக இந்நாட்டில் கறுப்புப் பொருளாதாரம் பாரிய அளவில் பரவியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b33411e3-32d5-42e3-bf3e-a7d72edf34f7/26-6a62cd84a6dc5.webp' /></p><p>அதனை அடக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பொலிஸார் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p>]]></content>
            <updated>2026-07-24T02:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3rd-term-in-schools-open-be-announced-1784856507"></link>
            <id>https://tamilwin.com/article/3rd-term-in-schools-open-be-announced-1784856507</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை&nbsp;முடிவடையும் மற்றும் மூன்றாம் தவணை தொடங்கும் திகதிகள் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி, பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் (24) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம்</h2><p>அதன்படி சிங்கள மற்றும் தமிழ் வழி பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7ce25cb-9cc1-4333-8b2a-5d244e2fe9ad/26-6a62caaa201d9.webp' />&nbsp;</p><p>அதேபோல், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் கல்வியாண்டு ஜூலை 31, வெள்ளிக்கிழமை அன்று முடிவடையும் என்றும், மூன்றாம் கல்வியாண்டின் (முதலாம் கட்டம்) ஆகஸ்ட் 03, திங்கட்கிழமை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளிலும் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் குறிப்பிட்ட திகதிகளிலிருந்து செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T02:15:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அரசினால் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-assets-worth-15-billion-rupees-are-frozen-1784857136"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-assets-worth-15-billion-rupees-are-frozen-1784857136</id>
            <summary type="text">தென் மாகாணத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1,500 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று தடை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் மாகாணத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1,500 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளன.
</p><p>
தென் மாகாணத்தின் முன்னணி பாதாள உலகக் குழுத் தலைவனும் போதைப்பொருள் வர்த்தகருமான ரத்கம விதுர என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சொத்துக்கள் ரத்கம விதுரவின் சித்தியின் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டவை என விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
சட்டவிரோதச் செயல்கள்</b></h2><p>போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டிய பணத்திலிருந்தே ரத்கம விதுர இந்தச் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1356b7ae-467b-4afd-9444-8b2314dd85a5/26-6a62c6bf8710b.webp' /></p><p>அதற்கமைய, தடை செய்யப்பட்டுள்ள சொத்துக்களுக்குள் 4 நிலங்கள், 3 மாடிகளைக் கொண்ட 2 வீடுகள் மற்றும் ஒரு மாடி வீடு ஒன்று அடங்குவதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ரத்கம விதுரவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மேலும் பல சொத்துக்கள் எதிர்காலத்தில் தடை செய்யப்படவுள்ளது.
</p><h3><b>
நீதிமன்ற நடவடிக்கை</b></h3><p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ரத்கம விதுரவிற்கு எதிராக 18 கொலைகள் உட்பட 24 குற்றச்சாற்றுகள் உள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b5f7d2-9209-4c27-880a-c80bfe8d36d0/26-6a62c6c03871c.webp' /></p><p>அவர் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தச் சொத்துக்கள் எதிர்காலத்தில் அரசமயமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-24T02:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இரத்தக்கறையுடன் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம்! சீன நாட்டவர் படுகொலையில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chinese-kidnaped-killed-one-jeep-found-police-1784850284"></link>
            <id>https://tamilwin.com/article/chinese-kidnaped-killed-one-jeep-found-police-1784850284</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் ஒரு சீன நாட்டவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு ஜீப், பாதுக்க பகுதியில் கைவிடப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் ஒரு சீன நாட்டவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு ஜீப், பாதுக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

பாதுக்கவில் உள்ள பஹால போப் சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனம், கண்டெடுக்கப்பட்டபோது பின்னோக்கிச் செல்லும் கியரில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மீட்கப்பட்ட ஜீப்பின் உள்ளே, பல இரத்தக் கறைகள் காணப்பட்ட நிலையில், தற்போது அந்த வாகனத்தில் கைரேகை சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தப்பியோட்டம்..</h2><p>

குறித்த ஜீப்பில் வந்த மூன்று சீன நாட்டவர்கள், ஒரு முச்சக்கர வண்டியில் கொள்ளுப்பிட்டி நோக்கி தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f49f00d-724d-448c-8428-4773dec79216/26-6a62a90d954e0.webp' /></p><p>
</p><p>
தப்பிச் சென்ற மூன்று சீன நாட்டவர்களில் இருவர் நேற்று (23) கட்டுநாயக்க விமான நிலையம் அருகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சந்தேக நபர்களை கொள்ளுப்பிட்டிக்கு ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.</p><p>

இந்த மோதல் மற்றும் கடத்தலில் பாதிக்கப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறும், இலங்கையில் வசிக்கும்
சீனக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சீனத் தூதரகம் இலங்கைப்
பொலிஸாருக்குக் கோரிக்கை விடுத்துள்ளதுடன், சீனக் குடிமக்களையும் அவதானமாக
இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு நாட்கள் இடைநிறுத்தப்படும் சேவைகள்..! EPF நிதி பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspension-employee-savings-fund-services-july-1784857227"></link>
            <id>https://tamilwin.com/article/suspension-employee-savings-fund-services-july-1784857227</id>
            <summary type="text">எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதும...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக&nbsp;இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அத்தியாவசிய பராமரிப்புப்பணிகள்&nbsp;</h2><p>தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் நதீகா வட்டலியத்தவினால் வியாழக்கிழமை (23) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/905487fc-b859-4ce5-a003-478f82356ba8/26-6a62c52e19687.webp' /></p><p>தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.
</p><p>
இத்தற்காலிக சேவை இடைநிறுத்தமானது தொழிற்திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாகாண, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களுக்கும் பொருந்தும்.</p><h2>மாற்றுத்திகதி&nbsp;</h2><p>
</p><p>
இதற்கமைய, குறித்த இரு நாட்களிலும் ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகள் மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட எந்தவொரு சேவையும் வழங்கப்படமாட்டாது.</p><p>

அத்துடன், குறித்த இரு நாட்களிலும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே நேரத்தை ஒதுக்கியுள்ள பொதுமக்கள், எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அமையும் வேறு ஏதேனும் ஒரு வேலை நாளில் சம்பந்தப்பட்ட தொழில் அலுவலகத்துக்கு வருகை தந்து உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:52:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள உயர் வரி.. ட்ரம்பின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-new-tariffs-60-countries-including-sri-lanka-1784855061"></link>
            <id>https://tamilwin.com/article/trump-new-tariffs-60-countries-including-sri-lanka-1784855061</id>
            <summary type="text">இலங்கை உட்பட 60 வர்த்தகப் பங்குதாரர் நாடுகள் மீது 10 வீதம் மற்றும் 12.5 வீதம் ​​என்ற புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உட்பட 60 வர்த்தகப் பங்குதாரர் நாடுகள் மீது 10 வீதம் மற்றும் 12.5 வீதம் ​​என்ற புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.</p><p>அமெரிக்கா தற்போது விதித்துள்ள 10 வீத வரியின் காலம் முடிவடைந்ததை அடுத்து, இந்த தீர்மானத்தை ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது.&nbsp;</p><p></p><h2>கட்டாய உழைப்பு (forced labor)</h2><p> </p><p> 

அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5 வீதம் ​​என்ற உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51fd88b5-330b-4c2f-8972-040744d61ed4/26-6a62bca4da717.webp' /></p><p>

குறித்த 60 நாடுகளில், கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்யும் சட்டங்களை முறையாகச் செயல்படுத்தத் தவறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.&nbsp;</p><p>மேலும், இந்நாடுகளின் இது தொடர்பான மெத்தனமான கொள்கையே இந்தப் புதிய வரிகள் விதிக்கப்படுவதற்கான முதன்மைக் காரணம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T01:10:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு உதவ சஜித்திடம் ரணில் முன்வைக்கும் கோரிக்கை.. உருவாகும் புதிய குழு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-wickremesinghe-sajith-premadasa-npp-govt-1784851515"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-wickremesinghe-sajith-premadasa-npp-govt-1784851515</id>
            <summary type="text">நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதன் மூலம் ஆராயலாம் என்று முன்னாள் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதன் மூலம் ஆராயலாம் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
நேற்றையதினம் (23) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இடம்பெற்ற கூட்டத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>1.1 மில்லி<span style="color: inherit; font-size: 1.75rem;">யன் வழக்குகள்..&nbsp;</span></h2><p>இதன்போது, "நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை முன்வைத்து, அதை அடுத்த சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் நான் கூறுகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a363c389-c6bd-4813-b225-ac4bd63bab7e/26-6a62ad612508b.webp' /></p><p> இந்த நாட்டில் உள்ள இந்த 1.1 மில்லியன் வழக்குகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்கவும். </p><p>இது பிரித்தானியாவில் எப்படி நடந்தது, மற்ற நாடுகளில் எப்படி நடந்தது, நமக்கு ஒரு டிஜிட்டல் முறை தேவையா, அதை இன்றோ நாளையோ உடனடியாகச் செய்தால், திங்கட்கிழமை ஒப்படைக்கலாம்" என்று அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T00:11:04+00:00</updated>
        </entry>
    </feed>
