<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-30T05:36:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-case-adjourned-1785388747"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-case-adjourned-1785388747</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை</h2><p>
</p><p>


குறித்த இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6987005-81d0-4e2e-8730-e7e044806518/26-6a6ae24e7d3e3.webp' /></p><p>



இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மூன்று மாதங்களுக்கான நீர் விநியோகம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-3-months-water-supply-1785387969"></link>
            <id>https://tamilwin.com/article/next-3-months-water-supply-1785387969</id>
            <summary type="text">மழை இல்லாத போதிலும், நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் கொள்ளளவு அடுத்த 3 மாதங்களுக்குத் தொடர்ச்சியாக நீர் வழங்கப் போதுமானதாக இருக்கும் என்று வீடமைப்பு, நிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மழை இல்லாத போதிலும், நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் கொள்ளளவு அடுத்த 3 மாதங்களுக்குத் தொடர்ச்சியாக நீர் வழங்கப் போதுமானதாக இருக்கும் என்று வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகங்களிடம் பேசியபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c40a95c4-ebe7-4527-8aa9-fb03022de25e/26-6a6ade7f712c0.webp' /></p><p>

இருப்பினும், மாறிவரும் வானிலையால் தற்போது நிலவும் சூழ்நிலைகளில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T05:18:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி.விக்ரமரத்னவின் இறுதி நிமிடங்களில் இடப்பட்ட உத்தரவு.. ஒரு சில நிமிடங்களில் பிரிந்த உயிர்! உணர்ச்சிவசப்பட்ட 16 வருட கால விசுவாசி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cd-wickramaratnes-body-gourd-tells-the-story-1785375186"></link>
            <id>https://tamilwin.com/article/cd-wickramaratnes-body-gourd-tells-the-story-1785375186</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை சாட்சியாளரான மெய்ப்பாதுகாவலர் நீதிமன்றில் வெளியிட்டுள்ளார்.
சி.டி. விக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை சாட்சியாளரான மெய்ப்பாதுகாவலர் நீதிமன்றில் வெளியிட்டுள்ளார்.</p><p>
சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையில், அவரது மெய்ப்பாதுகாவலர் அதிகாரியான பொலிஸ் சார்ஜன்ட் ஆர்.எம். பிரசன்ன கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றில் சாட்சியம்</h2><p>
மேற்கு தெற்கு விசேட விசாரணைப் பிரிவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த பாதுகாப்பு அதிகாரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது துப்பாக்கியை பயன்படுத்தி தானே சுட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.</p><p>தான்,16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b99cedb-8eec-4e36-bbda-3639061e9ed0/26-6a6ab86c1c9c3.webp' />&nbsp; &nbsp; &nbsp;</p><p> இந்த நீண்ட காலத்தில் அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் துப்பாக்கியைக் கேட்டதில்லை. உடற்பயிற்சி செய்யச்செல்லும் போது தண்ணீர் போத்தல் எடுத்துச்செல்வதுமில்லை. என்னை எடுத்து வரச்சொல்வதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆனால், சம்பவம் நடந்த அன்று அவர் உடற்பயிற்சிக்கான ஆடைகளை அணிந்திருந்தார். வழக்கமாக உடற்பயிற்சிக்கு ஆயத்தமாகும் போது காலணி அணிவது வழக்கம், ஆனால் அன்று அவர் காலணி அணிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அப்போது அவர் என்னிடம், 'பிரசன்ன, உனது துப்பாக்கியை பரிசோதித்து பார்க்க வேண்டும், அதைக்கொடு' எனக்கேட்டார். நான் துப்பாக்கியை மட்டும் கொடுத்தேன், தோட்டாக்களைக் கொடுக்கவில்லை. பின்னர், 'பரிசோதிப்பதற்கு தோட்டாக்கள் அடங்கிய மெகசினையும் கொடு' என கேட்டதால், அதையும் வழங்கினேன்.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு&nbsp;</h2><p>துப்பாக்கியையும் மெகசினையும் கையிலெடுத்த அவர், 'பிரசன்ன, உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும், ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வா' என்று கூறியுள்ளார்.</p><p>நான் தண்ணீர் போத்தல் எடுக்கச்சென்ற கணத்தில் துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டது. ஓடிவந்து பார்த்தபோது அவர் துப்பாக்கிச்சூட்டுடன் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை முல்லேரியாவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறியக்கிடைத்தது என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/306bc7f0-2be6-4c26-b043-59df16f9e671/26-6a6aa9d8d0fc9.webp' />&nbsp; &nbsp;</p><p><span style="color: inherit;">இதன்போது சாட்சியமளிக்கும் வேளையில், பொலிஸ் சார்ஜன்ட் பிரசன்ன பலமுறை உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குள்ளானார்.</span></p><p>மேற்கு தெற்கு விசேட விசாரணைப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சாரதி மற்றும் சமையல்காரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.</p><p>மேலும், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மெகசின் மற்றும் வெற்றுத்தோட்டா உறை ஆகியவற்றை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T05:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையின் தலைவர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resign-library-and-documentation-board-chairman-1785386608"></link>
            <id>https://tamilwin.com/article/resign-library-and-documentation-board-chairman-1785386608</id>
            <summary type="text">தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையின் தலைவராக பணியாற்றிய மூத்த இலக்கியவாதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மூத்த இலக்கியவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையின் தலைவராக பணியாற்றிய மூத்த இலக்கியவாதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
</p><p>
மூத்த இலக்கியவாதி, கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, புத்தசாசனம், சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியால் 2024 டிசம்பர் 16 திகதியன்று தேசிய நூலகம் மற்றும் ஆவணச்சேவைகள் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.</p><p></p><h2>அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள&nbsp;பதவி விலகல் கடிதம்</h2><p>
இந்நிலையில் தற்போது அவர் திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78bf616-7a2b-4fe8-9044-be35c215a794/26-6a6ad8fce25e9.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்களின்படி, எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவரது பதவி விலகல் கடிதம் ஏற்கனவே அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
</p><p>
எனினும் இதுவரை அவரது பதவி விலகலுக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே தனது பொறுப்பில் உள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களையும் உடைமைகளையும் சபை அலுவலத்தில் முறைப்படி ஒப்படைப்பதற்காக அவர் இன்று (30) தனது அலுவலகத்திற்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிப்பு : முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muslim-representation-ignored-boundary-commission-1785385358"></link>
            <id>https://tamilwin.com/article/muslim-representation-ignored-boundary-commission-1785385358</id>
            <summary type="text">புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்
முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்
முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது
என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
தெரிவித்துள்ளார்.</p><p>

அரசின் முக்கிய பதவிகளுக்கு முஸ்லிம்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டு வருவது
கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>அரசமைப்புப் பேரவையினால் தெரிவு</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;"புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான மூன்று உறுப்பினர்கள் அரசமைப்புப்
பேரவையினால் கடந்த 24 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டு பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>எனினும், இதில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்
ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் தேர்தல் ஆணைக்குழுவின்
முன்னாள் தலைவர் சமன்சிறி ரத்நாயக்க, எம்.பி. ரோஹன புஷ்பகுமார மற்றும் கே.
தவலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1192eed-9171-42d3-abe5-0f9499461e85/26-6a6ad78553eab.webp' /></p><p>இக்குழுவில் பெரும்பான்மைச் சமூகத்தைச்
சேர்ந்த இருவரும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தமிழரும்
நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>ஆனால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த யாரும் இதில்
உள்வாங்கப்படவில்லை.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூன்று பிரதான இனங்கள் வாழும் இந்நாட்டில்,
இத்தகைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்குச் சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில்
முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஓர் உறுப்பினரை நியமித்திருக்க
வேண்டும். அதுவே முறையானதாகும்.</p><p>குறிப்பாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் போது எல்லை
நிர்ணயம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. </p><h2>செயலாளர்கள் நியமனத்தின் போதும்</h2><p>சில பிரதேச எல்லைகளில் இருந்து பல
உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை காணப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களில்,
தான் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதித்துவம் தொடர்பில் எடுத்துரைப்பதற்கு அந்தச்
சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆணைக்குழுவில் இருப்பது கட்டாயமாகும். </p><p>எனவே, எல்லை
நிர்ணய ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள இந்தக் குறையை அரசு உடனடியாக நிவர்த்தி
செய்ய வேண்டும்.

அத்துடன், தற்போதைய அரசில் முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களின் போதும்
முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4930e284-b612-4281-a0bf-102ff0421b9a/26-6a6ad78618442.webp' /></p><p> அரசின்
அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் நியமிக்கப்படவில்லை. இது
தொடர்பில் பலரும் சுட்டிக்காட்டிய போதிலும், அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை.&nbsp;</p><p>இதேபோன்று, அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் போதும் முஸ்லிம்கள்
யாரும் ஆரம்பத்தில் நியமிக்கப்படவில்லை. பின்னர் அது குறித்துக் கடுமையான
விமர்சனங்கள் எழுந்த பின்னரே, முஸ்லிம் ஒருவர் அமைச்சின் செயலாளராக
நியமிக்கப்பட்டார்.
</p><p>
இவ்வாறு முஸ்லிம் சமூகத்துக்கான அனைத்து உரிமைகளையும் தற்போதைய அரசிடம்
போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.</p><p> இதற்கு முன்னர்
எந்தவொரு அரசிலும் முஸ்லிம்கள் இவ்வாறாகப் புறக்கணிக்கப்பட்டதில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு: அரசின் தீர்மானத்தை முற்றாக எதிர்க்க சட்டத்தரணிகள் சங்கம் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extension-of-retirement-age-of-judges-1785385919"></link>
            <id>https://tamilwin.com/article/extension-of-retirement-age-of-judges-1785385919</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை
இரண்டு வருடங்களால் நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள
தீர்மானத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை
இரண்டு வருடங்களால் நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள
தீர்மானத்தை முற்றாக எதிர்க்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்
விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை
உறுதிப்படுத்தும் மிக முக்கிய விடயமாகும் என்றும், நீதித்துறை சார்ந்த பதவிகள்
தொடர்பான அரசமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு
மற்றும் வெளிப்படைத்தன்மை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மேற்படி
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமைச்சரவை ஒப்புதல்</h2><p>

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள்
உள்ளடங்கலாக நாட்டின் சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை உயர்த்துவதற்கான அரசின் யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40064673-a8b8-4748-a9ee-66dee0c8aebf/26-6a6ad3c1bb3dd.webp' /></p><p> இந்த விவகாரம் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள
பின்னணியில், இது பற்றி ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட
பொதுச்சபைக் கூட்டம் நேற்று முற்பகல் 11 மணிக்குக் கொழும்பில் உள்ள
சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.
</p><p>
இதன்போதே நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை
முற்றாக எதிர்க்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><h2>தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்</h2><p> 01. நீதித்துறையின் சுயாதீனத்தன்மை: இலங்கையில் நீதித்துறையின்
சுயாதீனத்தன்மையானது அரசமைப்பின் அடிப்படைத் தூணாகும். அத்தோடு, சட்டத்தின்
ஆட்சி, அரசமைப்பு அடிப்படையிலான ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை
உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இது இன்றியமையாததாகும்.
</p><p>
02. கலந்தாலோசனையின்மை:இந்த யோசனை நீதித்துறை, சட்டத்தரணிகள் சமூகம்,
கல்வியியலாளர்கள், சிவில் சமூகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருடன்
விரிவான கலந்தாலோசனைகள் இன்றியும், சுயாதீன மற்றும் அரசமைப்பு ரீதியிலான
பரிசீலனைகள் இன்றியும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328cb271-e63c-4353-815d-bef20e54aa22/26-6a6ad3c26f464.webp' /></p><p>
</p><p>
03. பரிந்துரைக்கப்படாத திருத்தம்: நீதி அமைச்சால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின்
நீதித்துறை பற்றிய மதிப்பீடு மற்றும் மூலோபாய நடவடிக்கைத் திட்டம்' ஊடாக
பல்வேறு கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் அடையாளங்காணப்பட்டிருந்த போதிலும்,
அதில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்தல் ஒரு முக்கிய
திருத்தமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை.</p><p>
</p><p>
04. உண்மையான பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்துதல்: நீதிபதிகளின்
பதவிக்காலத்தை மாற்றுவதை விடுத்து, நீதிபதி வெற்றிடங்கள், வழக்கு விசாரணைகளில்
தாமதம், போதிய வளமின்மை, தொழில்நுட்ப நவீனமயமாக்கல் இன்மை போன்ற உண்மையான
பிரச்சினைகளுக்கே விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்தோடு, தற்போது நிலவும்
நீதிபதி வெற்றிடங்கள் அரசமைப்புக்கு அமைவாக விரைவாக நிரப்பப்பட வேண்டும்.</p><p>

05. வெளிப்படைத்தன்மையின் அவசியம்: நீதி நிலைநாட்டப்படல் தொடர்பான
பொதுமக்களின் நம்பிக்கையானது நீதித்துறையின் உண்மையான சுயாதீனத்துவத்தில்
மாத்திரமன்றி, அந்த சுயாதீனத்துவம் வெளிப்படையாகப் புலப்படுவதிலும்
தங்கியுள்ளது என்று அந்தத் தீர்மானத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை - மனித மோதலுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-project-aims-to-solve-human-elephant-conflict-1785385507"></link>
            <id>https://tamilwin.com/article/new-project-aims-to-solve-human-elephant-conflict-1785385507</id>
            <summary type="text">இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு ஒரு நிலையான தீர்வாக மூங்கில் &#039;உயிரியல் வேலி&#039; (bio-fences) அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு ஒரு நிலையான தீர்வாக மூங்கில் 'உயிரியல் வேலி' (bio-fences) அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.</p><p>

சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையத்திற்கு (ICBR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆராயப்பட்டுள்ள விடயம்</h2><p>
</p><p>
இந்தச் சந்திப்பின் போது, மூங்கில் பயிர்ச்செய்கை, நவீன பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகள் குறித்து இலங்கைத் தூதுக்குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08fe35af-951c-4a12-8c52-8e2c4405acbf/26-6a6ad3549c3fb.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
யானை - மனித மோதலைக் குறைப்பதற்கு மூங்கில் உயிரியல் வேலிகளை உருவாக்க சீனாவின் உதவியை இலங்கை கோரியிருந்தது.</p><p>இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் ஆதரவளிக்க சீனத் தரப்பு உறுதியளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213</id>
            <summary type="text">கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

இவ்வாறான நிகழ்வுகளின் போது போதை மாத்திரைகளை விநியோகிக்கும் இளம் கடத்தல்காரர் ஒருவர், 23,000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் தொகையுடன் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஷாந்த டி சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>போதை மாத்திரை விநியோகம்</b></h2><p>கைதான இளைஞரிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய, இந்த போதை மாத்திரைகளும் ஹெரோயினும் நாளாந்தம் இளைஞர், யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக இரகசியமாக வரவழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6026ede3-5dd9-4a15-a76d-b04996354a8f/26-6a6acf0c9c639.webp' /></p><p>இசை நிகழ்ச்சிகளில் நடனமாடும் இளைஞர் யுவதிகளை இலக்காக கொண்டு இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த போதை மாத்திரைகள் கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் பல மாகாணங்களுக்கும் விநியோகிப்பதற்காக கடத்தல்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>ஒரு போதை மாத்திரையின் மதிப்பு 100 ரூபாவாகும், எனினும் இக்கூட்டத்தினர் அந்தப் போதை மாத்திரைகளை 200 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்றுள்ளனர். </p><p>இந்த போதை மாத்திரைகளுக்கு மேலதிகமாக, சந்தேக நபரிடமிருந்த சுமார் 800 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T04:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் கைக்குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-to-be-from-colonial-era-recovered-1785381944"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-to-be-from-colonial-era-recovered-1785381944</id>
            <summary type="text">கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கழ்மலை பன்சலைக்கு
அருகிலுள்ள பாறைக் குன்றுப் பகுதியில், காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக
நம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கழ்மலை பன்சலைக்கு
அருகிலுள்ள பாறைக் குன்றுப் பகுதியில், காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக
நம்பப்படும் கைக் குண்டு ஒன்று நேற்று (28) கந்தளாய் பொலிஸாரால்
கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ
இடத்துக்குச் சென்ற கந்தளாய் பொலிஸார், குறித்த கைக்குண்டை பாதுகாப்பாக
மீட்க, அப்பகுதியில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
</p><p></p><h2>நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து</h2><p>
சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வது தற்காலிகமாகத்
தடைசெய்யப்பட்டதுடன், சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d1544a9-007a-4b65-90cf-8042b7791a1c/26-6a6aca76d286e.webp' /></p><p>மேலும், கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, விசேட
அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு அகற்றும் மற்றும் ஆய்வுப் பிரிவினரின்
உதவியுடன் குறித்த கைக் குண்டு பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில்
செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைக் குண்டு மீட்கப்பட்ட பாறைக் குன்றுப் பகுதியில் காலனித்துவ ஆட்சிக்
காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் பழமையான கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன.</p><p>
மேலும், கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் காலனித்துவ
ஆட்சிக் காலத்தில் சிறிய விமான தரையிறக்குத் தளம் ஒன்று இயங்கியிருந்ததாக
உள்ளூர் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், மீட்கப்பட்ட கைக் குண்டு உண்மையில் காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததா,
அதன் வகை மற்றும் செயல்பாட்டு நிலை என்ன என்பது தொடர்பான இறுதி
உறுதிப்படுத்தல், விசேட தொழில்நுட்ப ஆய்வுகளின் பின்னரே அறிவிக்கப்படும் என
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T03:52:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தீர்மானம்: ஜனாதிபதியை சந்திக்கவும் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judges-retirement-age-extension-meet-president-1785382256"></link>
            <id>https://tamilwin.com/article/judges-retirement-age-extension-meet-president-1785382256</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசு
முன்மொழிந்துள்ள தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசு
முன்மொழிந்துள்ள தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
நேரடியாக தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன், இந்த விடயம் குறித்து ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச்
செய்து தருமாறும் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>30000 மேற்பட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்பு</h2><p>
</p><p>
நாடளாவிய ரீதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்புடன்
நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட
பொதுச்சபை கூட்டத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும்
அரசின் தீர்மானம் தூரநோக்கற்றது என்றும், அதனை முற்றாக எதிர்ப்பது என்றும்
ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0eec53d-818b-4592-a6c4-dfc1d623ee59/26-6a6ac9bf238b3.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணிக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்காரவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ்
அமரசூரிய தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.</p><p>

இந்தச் சந்திப்பின்போது, அரசின் இந்த யோசனை நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக்
கடுமையாகப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் சங்கப்
பிரதிநிதிகள், நீதி அமைச்சரிடம் பின்வரும் முக்கிய கேள்விகளை முன்வைத்தனர்.</p><h2>அவசரப்படுத்துவது ஏன்? </h2><p>இது குறித்துக் கலந்தாலோசிக்க முன்னரே சந்திப்பொன்றைக் கோரியிருந்த நிலையில்,
அதற்கு இடமளிக்காமல் அவசரமாக இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி
பெறவேண்டிய அவசியம் என்ன?</p><h2>ஆலோசனையின்மை</h2><p> இதுவரை காலமும் புதிய சட்டங்கள் அல்லது திருத்தங்களைக் கொண்டுவரும்போது
சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனை பெறப்படுவது வழக்கம். ஆனால், இந்த முக்கிய
விடயத்தில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை?&nbsp;</p><p>தனிநபரை பாதுகாக்கும் நடவடிக்கையா?&nbsp;</p><p> ஏற்கனவே ஓய்வுபெறும் வயதை எட்டிய நீதியரசர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில்,
தற்போது அவசரமாக இத்திருத்த யோசனை முன்வைக்கப்படுவதானது, குறிப்பிட்ட ஒரு
நீதிபதியை மாத்திரம் இலக்குவைத்து (அல்லது பாதுகாப்பதற்காக)
மேற்கொள்ளப்படுகின்றதா என்ற நியாயமான சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.</p><h2>அமைச்சரின் விளக்கமும் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான கோரிக்கையும்</h2><p> சட்டத்தரணிகள் சங்கத்தின் கடுமையான கேள்விகளுக்குப் பதிலளித்த நீதி அமைச்சர்
ஹர்ஷன நாணயக்கார, "இந்தச் சட்டத் திருத்த யோசனை தனிப்பட்ட ஒருவருக்கானதல்ல.
அனைத்து நீதிபதிகளுக்கும் பொதுவானதாகவே கொண்டுவரப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c950149-3a6d-4497-8feb-b9e838957929/26-6a6ac9c00daef.webp' /></p><p> கட்சி மற்றும்
அமைச்சரவையின் தீர்மானங்கள் உள்ளிட்ட கூட்டுப் பொறுப்புக்குக் கட்டுப்பட்டே
நான் செயற்படுகின்றேன்" என்று தெரிவித்தார்.

மேலும், சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம்
எடுத்துரைப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.</p><p>

இதற்குப் பதிலளித்த சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள், தமது நிலைப்பாட்டைத்
தாமே நேரடியாக ஜனாதிபதியிடம் விளக்க விரும்புவதாகவும், அதற்காக அவருடனான
சந்திப்பொன்றுக்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.</p><p>

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதி அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதியுடன்
பேசி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T03:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கர்தினால் கடும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/technology-addiction-eroding-family-values-1785382822"></link>
            <id>https://tamilwin.com/article/technology-addiction-eroding-family-values-1785382822</id>
            <summary type="text">&amp;nbsp;மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
அளவுக்கு அதிகமான அலைபேசி பயன்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>அளவுக்கு அதிகமான அலைபேசி பயன்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக சமூகத்தில் மனித உறவுகளும் குடும்ப பிணைப்புகளும் சீர்குலைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சீதுவையில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01e7220a-52c5-42fa-a7cb-09d674622805/26-6a6ac7a7c0d48.webp' /></p><p>
</p><p>தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து வளர்ந்துள்ள நுகர்வோர் கலாச்சாரம், மக்களிடையே தேவையற்ற ஆசைகளை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p>
பணத்தின் பின்னால் ஓடுவதே நவீன சமூகத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.</p><p> சந்தை சார்ந்த இக்கலாச்சாரம், மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் நற்பண்புகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவசியமற்ற ஆடம்பரப் பொருட்களைத் தேடி ஓடத் தூண்டுகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
ஆரம்பத்தில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட்ட சாதனங்கள், இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குக் கட்டுப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இரவு நேரங்களில் நீண்ட நேரம் கைபேசிகளைப் பயன்படுத்துவது உட்பட அளவுக்கு அதிகமான பயன்பாட்டினால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான ஆரோக்கியமான உரையாடல்கள் குறைந்து, குடும்ப பிணைப்புகளும் பாரம்பரிய விழுமியங்களும் பலவீனமடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மேலும், சமூக முன்னேற்றமும் உயர்கல்வியும் மனிதனிடம் அகந்தையை ஏற்படுத்திவிடக் கூடாது எனவும், அதிவேகமாக மாற்றமடைந்து வரும் இந்த உலகளாவிய சூழலில் பணிவையும் மனிதநேயத்தையும் பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியம் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T03:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் காதலால் பொலிஸ் காவலருக்கு ஏற்பட்ட விபரீதம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-love-police-officer-dead-1785381905"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-love-police-officer-dead-1785381905</id>
            <summary type="text">வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் காவலர் தனது சேவை துப்பாக்கியால் நேற்று அதிகாலை சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணத்தை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் காவலர் தனது சேவை துப்பாக்கியால் நேற்று அதிகாலை சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். </p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் பேராதனை முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் நேற்று பிரதான வாயில் கடமைக்காக மற்றுமொரு அதிகாரியுடன் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.</p><p>
</p><h2><b>
விபரீத முடிவு</b></h2><p>இந்த நிலையில் இயற்கை உபாதையை கவனிப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் வந்து, அதிகாலை 4.05 மணியளவில் T56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cbd151-be9c-437c-b338-95bfab253fb9/26-6a6ac67a15beb.webp' /></p><p>குறித்த பொலிஸ் காவலர் உடனடியாக பாணந்துரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

உயிரிழப்புக்கான காரணம்</b></h3><p>நான்கரை வருட சேவைப் காலத்தைக் கொண்டுள்ள காவலர், பேஸ்புக் ஊடாக அறிமுகமான யுவதி ஒருவருடன் உறவில் இருந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/560467da-aa19-409b-843d-09a1eb9f733f/26-6a6ac67abee6c.webp' /></p><p>இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே இவ்வாறு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

</p>]]></content>
            <updated>2026-07-30T03:35:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் கைதான பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மூவர் குறித்த தகவல்கள் விரைவில்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrest-underworld-1785381814"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrest-underworld-1785381814</id>
            <summary type="text">&amp;nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் மூவர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் மூவர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>கைது செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நபர்களில், பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரான 'கஞ்ச்பானி இம்ரானின்' நெருங்கிய சகா ஒருவரும் அடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b197a8c0-9064-4fe3-83ad-b31e6aa3c1d5/26-6a6ac3b847f32.webp' /></p><p>
</p><p>மேலும், இவர்கள் மலேசியாவில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்தான தெளிவான தகவல்கள் இன்று அல்லது நாளைக்குள் வெளிவரக்கூடும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T03:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drinking-alcohol-during-el-nino-heatwave-is-deadly-1785379299"></link>
            <id>https://tamilwin.com/article/drinking-alcohol-during-el-nino-heatwave-is-deadly-1785379299</id>
            <summary type="text">எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்சார் சுகாதாரப்பிரிவு எச்சரித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் இந்த பிரிவின் வைத்திய நிபுணர் இனோகா சுரவீர மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>உயர்ந்த நிலையை எட்டியுள்ள&nbsp;வெப்பநிலை </h2><p>
</p><p>
இந்த நாட்களில் சுற்றுப்புற வெப்பநிலை உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகவும், மது அருந்துவது நீரிழப்பு மற்றும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d17fe01b-2604-4eab-97cd-a7f977070a81/26-6a6ac0c2b709a.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் நாட்களில் இந்த வெப்பமான சூழல் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும், உடல் நீரிழப்புக்கு உள்ளாவதை தடுக்க சுத்தமான தண்ணீர், ஆரஞ்சு, தர்பூசணி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
எல் நினோவால் வளிமண்டல வெப்பநிலை அதிகரித்துள்ளதால், சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>சுகாதார அமைச்சின் முக்கிய அறிவுறுத்தல்கள்</h2><p>
</p><p>
மேலும், சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், பக்கவாத நோயாளிகள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருந்துகளை முறையாக எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், வெப்பத்தாக்கம் உயிரிழப்புக்குக்கூட வழிவகுக்கக்கூடும் என்பதால், சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T03:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை சிறையில் அடைப்பது சுலபமானதல்ல! வகுக்கப்பட்டுள்ள அரசியல் திட்டங்கள்: சவால் விடும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-challanges-to-npp-1785380382"></link>
            <id>https://tamilwin.com/article/namal-challanges-to-npp-1785380382</id>
            <summary type="text">தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வகுக்கப்பட்ட திட்டங்கள்</span></p><p> </p><p>தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவேளை அப்படி நடந்தாலும் கூட கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எந்தவித தடங்கலும் இன்றி முன்னெடுத்துச்செல்வதற்கான அனைத்து திட்டங்களும் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbd2b5e8-6101-4db8-8778-591275e903ad/26-6a6abe1fc5cc6.webp' />&nbsp;&nbsp;</p><p>எந்தவொரு சவாலான சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்குக் கட்சி கிராம அளவிலும் மாவட்ட அளவிலும் பலமாக அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T02:59:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஆபத்தான பொருள்..! பொலிஸ் பரிசோதகர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-police-si-arrested-with-drugs-1785377471"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-police-si-arrested-with-drugs-1785377471</id>
            <summary type="text">தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p> </p><p>

இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aabf885d-328a-4a56-85fa-d275daa232cf/26-6a6ab4475e97d.webp' /></p><p> </p><p>

இவர் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p> 

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் என்பதுடன், சந்தேகநபரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T02:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பிறந்த நாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! வங்கி கணக்கிலிருந்து கைமாற்றப்பட்ட பணம் - சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vatala-shooting-suspect-arrested-1785376265"></link>
            <id>https://tamilwin.com/article/vatala-shooting-suspect-arrested-1785376265</id>
            <summary type="text">வத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு&amp;nbsp;உடந்தையாக&amp;nbsp;இருந்த&amp;nbsp;சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு&nbsp;உடந்தையாக&nbsp;இருந்த&nbsp;சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் (23) திகதி இரவு குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல் மோதல்</h2><p>
</p><p>
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a715c1d7-1f6d-4c4d-9ff7-1f51f347ac91/26-6a6ab1c17820c.webp' /></p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 'மட்டக்குளிய குடு ரொஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>ரொஷனின் சகோதரர்களில் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவின்போதே ​ தலையில் முக்காடு அணிந்த ஒருவர் காரில் வந்து மண்டபத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><h2>சிறப்பு விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஒரு சிறப்பு விசாரணையை தொடங்கியிருந்தது. </p><p>அதன் தொடர்ச்சியாக, நேற்று (29) மாலை, சீதுவ பொலிஸ் பிரிவின் முக்கலங்கமுவ பகுதியில், சந்தேகநபர்கள் வாடகை அடிப்படையில் காரை பெறுவதற்காக தனது கணக்கிலிருந்து பணம் செலுத்திய குற்றத்திற்கு உதவிய ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சீதுவ, பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஆவார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T02:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/singer-attacks-police-flees-operation-catch-him-1785371825"></link>
            <id>https://tamilwin.com/article/singer-attacks-police-flees-operation-catch-him-1785371825</id>
            <summary type="text">ஹொரணை ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்தில்&amp;nbsp;பிரபல பாடகர் ஒருவரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்தில்&nbsp;பிரபல பாடகர் ஒருவரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>பொலிஸாரின் தகவல்களின்படி, குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையைப் பார்ப்பதற்காக, சந்தேகநபரான பாடகர் மதுபோதையில் சென்றுள்ளார்.</p><p>இதன்போது, அவர் வைத்தியசாலை ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதுடன், ஒழுங்கீனமாகச் செயற்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>அதிகாரியுடன் முரண்பாடு&nbsp;</h2><p>அதன் காரணமாக, அவரை வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேற்ற பாதுகாப்பு ஊழியர் ஒருவர் முயன்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0682f937-20da-424b-aa4b-946374290897/26-6a6a9fd80fad4.webp' /></p><p>இதன்போது, ஏற்பட்ட பதற்ற நிலைமையைக் கட்டுப்படுத்த முற்பட்ட வைத்தியசாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது சந்தேகநபர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இச்சம்பவத்திற்கு முன்னர் குறித்த சந்தேகநபர் வைத்தியசாலை வைத்தியர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>இந்நிலையில், தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்காக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T01:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமிந்த விஜேசிறி தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chaminda-wijesiri-appeals-1785373275"></link>
            <id>https://tamilwin.com/article/chaminda-wijesiri-appeals-1785373275</id>
            <summary type="text">ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தண்டனைக்கு எதிராக பதுளை மேல்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தண்டனைக்கு எதிராக பதுளை மேல்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னை குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்யுமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
</p><p>மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ள அவர், அது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, தன்னை பிணையில் விடுவிக்குமாறும் பதுளை மேல்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657cc45a-e6cc-4156-beb0-bb2345e17ab3/26-6a6aa25c9006f.webp' /></p><p>
</p><p>சட்டவிரோதமான முறையில் வீதியை மறித்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி, அவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளுக்காக, சமிந்த விஜேசிறிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பதுளை மேல்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.</p><p>
2019ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதியை ஒட்டிய ஒரு நாளில், பண்டாரவளை நகரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் வண்டியைச் சட்டவிரோதமாக மறித்து, அவர்களைத் தாக்கி, திட்டி, மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டி சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p>
இத்தீர்ப்புக்கு எதிராக, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் சமிந்த விஜேசிறி சார்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டைச் சமர்ப்பித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T01:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 12 பேர் - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/12-people-arrested-by-police-in-mannar-area-1785367453"></link>
            <id>https://tamilwin.com/article/12-people-arrested-by-police-in-mannar-area-1785367453</id>
            <summary type="text">மன்னார் - சவுத்பார் கடற்கரை பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 14,072...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - சவுத்பார் கடற்கரை பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், 3 டிங்கி படகுகளும் 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>12 சந்தேக நபர்கள் கைது</h2><p>

சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்டு, அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாக கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397d7fd5-ead8-4754-abd3-f097f44f2d0f/26-6a6a8d998737b.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த சந்தேகநபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 36ஆவது நாளாக தொடரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keppapilavu-land-protest-enters-36th-day-1785362646"></link>
            <id>https://tamilwin.com/article/keppapilavu-land-protest-enters-36th-day-1785362646</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

இன்று (29.07.2026) அந்தப் போராட்டம் இரண்டாவது கட்டத்தின் 36ஆவது நாளை எட்டியுள்ளது.</p><p></p><h2>36ஆவது நாளாக தொடரும் போராட்டம்</h2><p>கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக
வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய
வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.
</p><p>
தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி
உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2bbc1d-9926-4d84-801d-909dd8bf7d1f/26-6a6a7ac249b32.webp' /></p><p>தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை
உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான
கோரிக்கையாகும்.
</p><p>
இந்த நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை
அதிகாரிகளிடமிருந்து எந்தவித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில்,
போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>காணிவிடுவிப்பு</h2><p>
</p><p>
இதன்போது போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ”இன்று
இரண்டாம் கட்டத்தின் 36 வது நாளாக போராடிக்கொண்டு இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eac4205-48a9-48fa-8482-41453d9af538/26-6a6a7ac199615.webp' /></p><p> 

எமது
நியாயமான கோரிக்கைகளை ஏற்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் இவ்விடத்திற்கு வருகை
தருவதாக உறுதியளித்திருக்கின்றார். அவரின் வருகைக்காக நாம்
காத்திருக்கின்றோம்.</p><p> 

அவர் எமது காணிவிடுவிப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான
செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எனவே எமது
சாத்வீகமான போராட்டத்திற்கு செவிசாய்த்தமைக்கு அவருக்கு நன்றிகளை தெரிவித்து
கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமடையும் டெங்கு தொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-dengue-cases-rise-to-83-000-1785360795"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-dengue-cases-rise-to-83-000-1785360795</id>
            <summary type="text">இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
மேலும் அதிகரித்து வருகின்றது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை
வெளியிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
மேலும் அதிகரித்து வருகின்றது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை
வெளியிட்டுள்ளது.</p><p>

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும்
இருந்து இதுவரை 83 ஆயிரத்து 661 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>வேகமாகப் பரவி வரும்&nbsp;டெங்கு</h2><p>டெங்குக் காய்ச்சலின் தீவிர தாக்கத்தினால் இதுவரை 61 பேர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21efa92d-72cb-45a3-8a45-cf8fbc8cc644/26-6a6a746921803.webp' /></p><p>கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை
17 ஆயிரத்து 779 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p> இதற்கு
அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 665 நோயாளர்கள்
கண்டறியப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. டெங்கு நோயால் மேல் மாகாணம் தொடர்ந்து பெரும் பாதிப்பைச் சந்தித்து
வருகின்றது.</p><p></p><h2>பொதுமக்களுக்கு எச்சரிக்கை</h2><p>மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 44 ஆயிரத்து 359 டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 12
ஆயிரத்து 586 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ef20bf2-91ba-45f9-9bba-5d5f3cf4ac9b/26-6a6a7469ca5ff.webp' /></p><p>இலங்கை முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் தற்போதைய சூழ்நிலையைக்
கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் 175 பகுதிகள் 'அதிஅபாய மண்டலங்களாக'
சுகாதாரத் துறையினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றாடலையும் சுத்தமாகப் பேணுவதுடன்,
நீர் தேங்கும் இடங்களை அகற்றி நுளம்ப பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-indian-deputy-high-commissioner-meet-sajith-1785359645"></link>
            <id>https://tamilwin.com/article/new-indian-deputy-high-commissioner-meet-sajith-1785359645</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(29.07.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(29.07.2026) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும்
வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆழமான
கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>இருதரப்பு உறவு</h2><p>
</p><p>
கடந்த வருட இறுதியில் இலங்கைக்கு ஏற்பட்ட 'டித்வா' அனர்த்த நிலைமையின் போது,
அயல் நாடு என்ற முறையில் இந்தியா பெற்றுத் தந்த துரிதமான மற்றும் மனிதாபிமான
உதவிக்கு 220 இலட்சம் மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தனது நன்றியையும் பாராட்டுக்களையும் இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகரிடம்
குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b940b1-f7e1-4534-9ab7-be26bc2a0838/26-6a6a6ddc33335.webp' /></p><p>அத்துடன், கொவிட்-19 தொற்றுநோய் பரவற் காலத்திலும், கடுமையான பொருளாதார
நெருக்கடியின் பொழுதும் நெருங்கிய அயல் நாடொன்றாக இந்தியா இலங்கைக்கு நல்கிய
பெறுமதியான ஆதரவுக்கும் அவர் விசேடமாகப் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், பரஸ்பர நம்பிக்கையையும்
மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்திலும் அபிவிருத்தி, பொருளாதாரம் மற்றும்
மக்கள் நலன்புரித் துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதன்
முக்கியத்துவம் தொடர்பிலும் இரு தரப்பினரும் இதன்போது விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:46:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பியோடிய வாகனம்.. பலியான முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-thandikulam-accident-old-man-died-1785368184"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-thandikulam-accident-old-man-died-1785368184</id>
            <summary type="text">வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;அதேநேரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம், விபத்தை
ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>உயிரிழந்தவர், கனகராயன் குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><h2>பொலிஸார் நடவடிக்கை..&nbsp;</h2><p>
</p><p>சம்பவத்தின் போது, மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் இருந்து பின்னால் வந்த கப் ரக வாகனம்,
மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4d48434-039a-45d5-81e1-e4c9186263d4/26-6a6a90b33ce0a.webp' /></p><p>

இவ்விபத்தில் கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும்
அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:45:11+00:00</updated>
        </entry>
    </feed>
