<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-03T20:30:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவு நெருங்கிவிட்டது.. விரைவில் வீழ்ச்சியடையவுள்ள ஈரானின் ஆட்சி - நெதன்யாகு அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-says-iran-weaker-than-ever-1788465776"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-says-iran-weaker-than-ever-1788465776</id>
            <summary type="text">ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். </p><p>

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஈரானின் இஸ்லாமிய குடியரசு</h2><p>

இஸ்ரேலிய இராணுவத் தலைவர்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றிய நெதன்யாகு, இந்த ஆட்சி தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக உள்ளது.தனது உயிர்வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.</p><p>
மேலும், இந்த அச்சுறுத்தலை ஒருமுறை மற்றும் நிரந்தரமாக அகற்ற முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதாவது, இந்த ஆட்சியை வீழ்த்த முடியும்.

 அதுதான் எமக்கு இன்னும் முன்னால் இருக்கும் முக்கியப் பணியாகும். ஆனால் அது மிக அருகில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56e4fed-8e0b-4d3e-8254-c03f0fa1dbc7/26-6a99d55e7a213.webp' /></p><p> </p><p>அது சாத்தியமற்றதல் எமது கட்டுக்குள் உள்ளது என அவர் கூறினார்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
</p><p>
தற்போது அமெரிக்கா ஈரான் மீது மேலதிக பொருளாதார அழுத்தங்களை விதித்துள்ளதுடன், இந்த வாரம் மீண்டும் தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.</p><h2>இஸ்ரேல் மீது தாக்குதல்&nbsp;</h2><p> 

இதற்குப் பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகள், ஜோர்தான் மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகளைத் தாக்கியுள்ளது. </p><p>எனினும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் எங்களைத் தாக்கவில்லை என்றால், அது தற்செயலானது அல்ல. அவர்கள் அனைவரையும் தாக்குகிறார்கள், ஆனால் எங்களைத் தாக்கவில்லை என நெதன்யாகு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e62b7932-5b42-4bd0-b9b3-66d946449821/26-6a99d55f2ea98.webp' /></p><p>எமது சக்தியையும், எமது ஆயுதங்களின் வலிமையையும், எமது உறுதியையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நெதன்யாகுவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.</p><p> 

சில கருத்துக்கணிப்புகளில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரான் விவகாரத்தில் நெதன்யாகு தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T20:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூச்செப்பரக் கார்த்திகை திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karthigai-festival-at-nallur-kandaswamy-temple-1788463642"></link>
            <id>https://tamilwin.com/article/karthigai-festival-at-nallur-kandaswamy-temple-1788463642</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், கார்த்திகை திருவிழாவான
18ஆம் திருவிழா நடைபெற்றுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், கார்த்திகை திருவிழாவான
18ஆம் திருவிழா நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>இந்த நிகழ்வானது நேற்றைய தினம்(03.09.2026) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.</p><h2>கார்த்திகை திருவிழா</h2><p>
கார்த்திகை திருவிழாவின் போது , வள்ளி தெய்வானையும், முத்துக்குமார சுவாமி
பூச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் ,
தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f05757b-de8c-499d-bbef-b5e81e4b0c1c/26-6a99ccd730f91.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec81ca1-2256-4602-87f4-6e4735473a3d/26-6a99ccd6181fa.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T20:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[6ஆம் வகுப்பு சேர்க்கை - இணையவழி விண்ணப்பங்கள் குறித்து கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-6-admission-online-applications-open-1788462361"></link>
            <id>https://tamilwin.com/article/grade-6-admission-online-applications-open-1788462361</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு எழுதிய மாணவர்களின்
பெற்றோர், 2027ஆம் ஆண்டிற்கான 6ஆம் வகுப்பு சேர்க்கை தொடர்பான
இணையவழி விண்ணப்பச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு எழுதிய மாணவர்களின்
பெற்றோர், 2027ஆம் ஆண்டிற்கான 6ஆம் வகுப்பு சேர்க்கை தொடர்பான
இணையவழி விண்ணப்பச் செயல்முறை தொடர்பில் அறிவுறுத்தல்கள் வரும்
வரை காத்திருக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

இதன்படி ​2026 புலமைப்பரிசில் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், பாடசாலை
இடங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி அமைப்பின் மூலமாகவே பெறப்படும்
என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

​</p><h2>இணையவழி அமைப்பு முறை</h2><p>இதன்படி, அடுத்த ஆண்டு 6ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான
விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் இந்த இணையவழி அமைப்பு முறை
மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

​.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af24941-64ff-4e35-a852-5f7403bdeff8/26-6a99c917af90c.webp' /></p><p>அத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப திகதிகள், கடைசி நாள்
மற்றும் அதற்கான விரிவான வழிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T19:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு குறித்து எழுந்த சர்ச்சை: ட்ரம்பின் அதிரடி பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trumps-latest-rant-reports-of-weapons-shortage-1788459354"></link>
            <id>https://tamilwin.com/article/trumps-latest-rant-reports-of-weapons-shortage-1788459354</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போரின் போது அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போரின் போது அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், பெயர் குறிப்பிடாத நபர்கள் மற்றும் அமைப்புகளை துரோகக் கும்பல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரித்த ஊடகங்கள் மற்றும் நபர்களை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.</p><h2>ட்ரம்ப் அதிரடி</h2><p> 

இத்தகைய கூற்றுகள் துரோகத்தனமானவை என்றும், அவை 100 சதவீதம் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>நாங்கள் எளிதாக வெற்றி பெற்று வரும் போரில் அமெரிக்கா தோல்வியடைவதை அவர்கள் விரும்புகிறார்கள். நான் வெற்றி பெறுவதைப் பார்ப்பதைவிட அதையே அவர்கள் விரும்புகிறார்கள் என ட்ரம்ப் Truth Social தளத்தில் பதிவிட்டார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117207687594983323/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>
</p><p>
மற்றொரு பதிவில், துரோகக் கும்பல் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்காவிடம் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்தார்.</p><p>

மேலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை குறித்து சரியாக செய்தி வெளியிடாதவர்களை விமர்சித்த அவர், தங்களிடம் அதிக மற்றும் நடுத்தர தரத்திலான வெடிமருந்துகள் பெருமளவில் இருப்பதாகக் கூறினார்.</p><p>

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நீடித்த போர் தொடங்கியதிலிருந்து, ஆயுதங்கள் குறைவாகக் கிடைப்பது குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.</p><h2>ஆயுதக் கையிருப்பு</h2><p>
</p><p>
வியாழக்கிழமை அவர் மீண்டும், அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வெடிமருந்துகளை உற்பத்தி செய்து வருவதாக தெரிவித்தார்.

“எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் ஆயுதங்களை சேமித்து வருகிறோம். </p><p>அவற்றை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்குப் பதிலாக, அமெரிக்காவுக்காகவே வைத்திருக்கிறோம். எனினும், நட்பு நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கும்” என ட்ரம்ப் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf4742c7-65f0-4c8d-90c7-a08c4fffc28c/26-6a99bda1551f9.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தையும் ட்ரம்ப் விமர்சித்தார். </p><p>தனது நிர்வாகம் ஈரானுடனான போரில் பயன்படுத்தியதைவிட அதிகமான ஆயுதங்களை பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு இலவசமாக வழங்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>
மேலும், நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கும் நேட்டோவுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.</p><p> ஐரோப்பா கேட்டிருந்தால் அதற்கான பணத்தை செலுத்தியிருக்கும். தற்போது அந்தப் பணத்தை நாங்கள் கோரப் போகிறோம், சற்று தாமதமாக இருந்தாலும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T18:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு இணையான ஆபத்து இலங்கையிலும்.. வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901</id>
            <summary type="text">எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமர்தலிங்கம் தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,</p><p> 


இதனால் உணவு உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். 

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, பாதுகாப்பற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மலைப் பிரதேசங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.
</p><p>
 குளங்கள் புனரமைக்கப்பட்டாலும், முறையான நீர்வள முகாமைத்துவம் இல்லாததால் ஒரே மாவட்டம் வறட்சியையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

கொழும்பு போன்ற நகரங்களில் நீர் வரத்து குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KY07L6-GGow" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T18:13:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள்: கடும் நெருக்கடியில் ஈரான் பொருளாதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-us-economic-sanctions-iran-s-economy-crisis-1788456156"></link>
            <id>https://tamilwin.com/article/severe-us-economic-sanctions-iran-s-economy-crisis-1788456156</id>
            <summary type="text">அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்
காரணமாக ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான
நெருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்
காரணமாக ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான
நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.</p><p>

அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதி
நாளொன்றுக்கு 1.7 மில்லியன் பீப்பாய்கள் இருந்து வெறும் 2.6 லட்சம்
பீப்பாய்கள் குறைந்துள்ளது.</p><h2>கடும் நெருக்கடி</h2><p>
</p><p>
மேலும், ஈரானுக்கு முக்கிய வர்த்தக மற்றும் நிதி மையமாக இருந்த ஐக்கிய அரபு
இராச்சியம் அனைத்து வணிகத் தொடர்புகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது அந்த
நாட்டிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/995054cb-11c7-4392-ba52-6d5919eebf60/26-6a99b37e3e82c.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க டொலருக்கு எதிரான ஈரானிய ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச்
சரிந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்து பணவீக்கம்
69.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
</p><p>
ஒரு குடும்பத்தின் குறைந்தபட்ச மாதச் செலவு 450 டொலராக இருக்கும் நிலையில்,
சராசரி மாதச் சம்பளம் 125 டொலராக மட்டுமே உள்ளதால் மக்கள் அன்றாடத்
தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
</p><p>
சொந்தமாகச் சுத்திகரிப்புத் திறன் குறைவாக இருப்பதால், பெட்ரோலை இறக்குமதி
செய்யும் ஈரானிடம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பெட்ரோல் கையிருப்பு
உள்ளது.</p><p>

இந்தத் தீவிரப் பொருளாதார நெருக்கடி ஈரானில் மீண்டும் பெரிய அளவிலான மக்கள்
போராட்டத்தை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T17:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவிற்கு எதிராகக் கருணா வாக்குமூலம்: நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா அம்மான் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா அம்மான் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஓருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சிஐடியினருக்கு வழங்கிய மிக உணர்வுபூர்வமான வாக்குமூலத்தின் விபரங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0707941-ee83-4b2a-92aa-c5d979e04cfe/26-6a99b11aacf4d.webp' /></p><p>
</p><p>
அதில், சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இல்லாத நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாகக் காட்டிப் பாரிய நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
</p><p>
கருணா அம்மான் லண்டனுக்குச் செல்வதற்காகச் சிங்களப் பெயர் கொண்ட போலி கடவுச்சீட்டையும், அதற்கான விசா வசதிகளையும் சுரேஷ் சலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 கருணா லண்டன் சென்றடைந்த பின்னர், சுரேஷ் சலேயும் அங்கு சென்று, கருணாவின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், லண்டன் பொலிஸாருக்குக் கருணாவின் போலி கடவுச்சீட்டு விபரங்களை வழங்கி, அவரை அங்கு கைது செய்து சிறையிலடைக்க சுரேஷ் சலே திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருணா அம்மான் தனது வாக்குமூலத்தின் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் சட்டமா அதிபர் திணைக்களk; நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 5 ஆம் திகதி முதல் அவர் உணவை உட்கொள்ள மறுத்து, தனது உடல்நிலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுபோயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.
</p><p>
தற்போது விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை, மேலும் அங்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், சுரேஷ் சலே தனது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளின் கடவுச்சொற்களை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தடுப்புக் காவல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சலே தொடர்பில் கருணா அம்மான் நீதிமன்றில் குற்றம் சுமத்தியதாக சிங்கள இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருணா தரப்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MGfXDBgbP70" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-03T17:40:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்புத் திருத்தம் செய்யத் தயங்க மாட்டோம்: ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923"></link>
            <id>https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்கம் தயங்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கை பொலிஸ் சேவையின் 160வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>போதைப்பொருள் சோதனை</h2><p>
</p><p>சந்தேகநபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடைமுறையை அரசாங்கம் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும், கைது செய்யப்படுவதற்கும் தண்டனை வழங்கப்படுவதற்கும் இடையிலான காலதாமதம் இருப்பதாக ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>
</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் பொலிஸார் சாதனை அளவிலான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/537f0ecd-cdc9-46a5-a6a4-3850801afe26/26-6a99abf8cfc67.webp' /></p><p>எனினும், வழக்கு விசாரணைகளும் தண்டனை வழங்குவதும் நீண்ட காலம் நீடித்தால், இந்தக் கைதுகளால் பெரிய பலன் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தண்டனை கிடைக்கத் தாமதமாகும் என்பது குற்றவாளிகளுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதிச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் மேலும் திறம்படச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இந்த நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஏற்கனவே புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T17:19:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக கொழும்பில் திரண்ட எதிர்க்கட்சியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-protest-government-s-22nd-amendment-1788451207"></link>
            <id>https://tamilwin.com/article/massive-protest-government-s-22nd-amendment-1788451207</id>
            <summary type="text">அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை தொடருந்து&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை தொடருந்து&nbsp; நிலையத்துக்கு முன்பாக இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு
செய்திருந்த இந்தப் போராட்டத்தில், நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் திரண்டு
வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள்
பங்கேற்று அரசுக்கு எதிரான தமது பலமான எதிர்ப்பைக் காட்டினர்.</p><h2>மாபெரும் போராட்டம்</h2><p>
</p><p>
போராட்டத்தின் நடுவே மக்கள் வெள்ளத்தின் மத்தியில் கலந்துகொண்டு உரையாற்றிய
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்களின் அடிப்படை உரிமைகளைப்
பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்துக்கும் நாடா ளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும்
தகுந்த பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/babb0125-2625-42c2-81f9-c5cecf888503/26-6a999b57a2c02.webp' /></p><p>

தலைநகரின் முக்கிய போக்குவரத்து மையமான கோட்டை ரயில் நிலையச் சந்தியை
முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அரசமைப்பைத் துஷ்பிரயோகம் செய்யும் அரசின்
நடவடிக்கையைக் கண்டித்தும், ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும்
கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
</p><p>
மிகக் கச்சிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம்
அந்தப் பகுதியைச் ஸ்தம்பிக்க வைத்தது.

எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடி நகர்வு அரசுக்குப் பாரிய அரசியல் அழுத்தத்தைக்
கொடுத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T16:08:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- புறநகர் பகுதியில் 40 பேருந்துகள் மீது சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/40-buses-failed-fitness-tests-in-petta-ntc-1788447324"></link>
            <id>https://tamilwin.com/article/40-buses-failed-fitness-tests-in-petta-ntc-1788447324</id>
            <summary type="text">கொழும்பு- பெட்டா பாஸ்டியன் மாவத்த பேருந்து நிலையத்தில் தேசிய போக்குவரத்து
ஆணையம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடத்திய
அதிரடி ஆய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- பெட்டா பாஸ்டியன் மாவத்த பேருந்து நிலையத்தில் தேசிய போக்குவரத்து
ஆணையம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடத்திய
அதிரடி ஆய்வில், 40 நீண்ட தூரத் தனியார் மற்றும் அரச பேருந்துகள் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.

​</p><p>நேற்று(2.9.2026) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,
சுமார் 67 பேருந்துகளின் எஞ்சின் நிலை, புகை வெளியேற்றம் மற்றும் பயணிகளின்
பாதுகாப்பு வசதிகள் சோதிக்கப்பட்டன.

​</p><h2>சோதனைகள்</h2><p>இதில் கடுமையான பழுதுகள் கொண்ட 2 பேருந்துகளுக்கு உடனடியாகத் தடை
விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 38 பேருந்துகளின் குறைபாடுகளை 14
நாட்களுக்குள் சரிசெய்து, வேரஹேரா அலுவலகத்தில் மீண்டும் ஆய்வுக்கு
உட்படுத்துமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/381b3202-3bce-4a1b-accc-5c4e1816230f/26-6a998d0fcb641.webp' /></p><p>
</p><p>
அத்துடன் ​பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு முழுவதும் இத்தகைய சோதனைகள்
தொடரும் என NTC இன் தலைமை இயக்குநர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T15:54:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலியத் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-warns-the-us-against-an-israeli-attack-1788448908"></link>
            <id>https://tamilwin.com/article/iran-warns-the-us-against-an-israeli-attack-1788448908</id>
            <summary type="text">தெற்கு லெபனானில் (ஹிஸ்புல்லா) அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அலி அல்-தாஹிர்
மலைத்தொடர் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தினால், அதற்கு எதிராக கடுமையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானில் (ஹிஸ்புல்லா) அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அலி அல்-தாஹிர்
மலைத்தொடர் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தினால், அதற்கு எதிராக கடுமையான
பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
விடுத்துள்ளது.</p><p>

ஓமான் நாட்டின் ஊடாக கடந்த மாதம் இந்த எச்சரிக்கை செய்தி வொஷிங்டனுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறிப்பிட்ட மலைத்தொடர் பகுதியில் ஹிஸ்புல்லா போராளிகளுடன் இணைந்து ஈரானின்
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட
உறுப்பினர்கள் சிலர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.</p><h2>இஸ்ரேலுக்கு அழுத்தம்</h2><p>
</p><p>
இந்த நிலையில், அங்குள்ள நிலத்தடி கட்டளை மையம் மற்றும் ஆயுதக் கிடங்குகளை
இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியான முற்றுகை நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகிறது.
</p><p>
இருப்பினும், இந்த பகுதி மீது முழு அளவிலான தாக்குதலை நடத்துவது ஜூன் மாதம்
எட்டப்பட்ட உடன்படிக்கையை கடுமையாக மீறும் செயல் என ஹிஸ்புல்லா அமைப்பு
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53177b8e-9dfd-4137-ad80-28372b196b9b/26-6a99973457098.webp' /></p><p>
</p><p>
அத்துடன், அலி அல்-தாஹிர் பகுதியைக் கைப்பற்ற இஸ்ரேல் முயன்றால்
பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் என்றும்
எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போது இஸ்ரேலிய படைகள் அந்தப் பகுதியைச் சுற்றி முற்றுகையிட்டு உணவு மற்றும்
நீர் விநியோகங்களைத் தடுத்து வரும் அதேவேளை, நிலைமையை மேலும் தீவிரமடைய
விடாமல் தவிர்க்க அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T15:50:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபாய களமாக மாறும் நுவரெலியா - ஹக்கலை வீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwara-eliya-road-not-widened-accidents-rise-1788445933"></link>
            <id>https://tamilwin.com/article/nuwara-eliya-road-not-widened-accidents-rise-1788445933</id>
            <summary type="text">நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான
வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான
வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து ஏற்பட்ட இடமானது டித்வா (Ditwah) சூறாவளி காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய
பகுதியாக காணப்படுபடுகிறது என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>தொடர்ச்சியாக இடம்பெறும் விபத்துக்கள்</h2><p>நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக
சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனத்தில் திடீரென்று தடையாழி செயலிழந்து விபத்திற்குள்ளாகியது.</p><p>இதனையடுத்து வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்
தப்பியுள்ளனர்.</p><p> இரண்டாவதாக ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற
ஒருவர் மீது பேருந்து மோதியதில் 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6d0c64-55ea-46ca-88d7-e0531dd0518a/26-6a9988cc362fc.webp' /></p><p>
மூன்றாவாதாக அதே இடத்தில் நேற்று(02) மாலை இ.போ.ச பேருந்து ஒன்றும் கார்
ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விபத்துகளால் சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளனர்.</p><p> எனவே, இனியும்
விபத்துகள் இடம்பெறுவதை தடுப்பதற்காக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள்
சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் வீதியை அகலப்படுத்தி கொடுப்பதற்கும்,
குன்றும், குழியுமாக காணப்படும் பகுதிகளை புனரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட
தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இதற்கு முன்னரும் இந்த வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரியிருந்தோம்
இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எதிர்திசையில் வரும் வாகனத்துக்கு
இடம் கொடுப்பதற்குகூட பெரும் சிரமம் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T14:59:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணை நெகிழ வைத்த பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-women-praise-sri-lankan-police-1788446240"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-women-praise-sri-lankan-police-1788446240</id>
            <summary type="text">
இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் நாட்டு பெண் தனது பையை தொலைத்த நிலையில் அதிகாரிகள் அதனை தேடி உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.

கண்டி பூங்காவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் நாட்டு பெண் தனது பையை தொலைத்த நிலையில் அதிகாரிகள் அதனை தேடி உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
</p><p>
கண்டி பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ள பகுதியில் மறந்துவிட்டுச் சென்ற, பையில் சுமார் இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணம் அடங்கிய பையை, பொலிஸ் அதிகாரி இந்திரஜித் மீட்டு மீண்டும் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
</p><p>
பை தொலைந்து போனது குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த குறித்த பெண், பங்களாதேஷ் தூதரகத்திற்கும் அறிவித்துள்ளார்.</p><p>
</p><h2><b>
 பொலிஸில் முறைப்பாடு</b></h2><p>கடந்த 31ஆம் திகதி அதிகாலை 4.40 மணிக்கு பங்களாதேஷ் செல்லவிருந்த நிலையில் பை தொலைந்து போயுள்ளது.

பயணப் பையில் அவரது கடவுச்சீட்டும் இருந்ததால் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e3fcc0d-1059-42e5-a451-3dbe7307850d/26-6a9988938cac1.webp' /></p><p>இந்த பொலிஸ் அதிகாரியின் தலையீட்டால் பை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணம் மற்றும் ஏனைய பொருட்கள் குறையாமல் பை மீண்டும் கிடைத்ததை நம்ப முடியவில்லை என அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
வெளிநாட்டில் வசித்து விட்டு கண்டிக்கு தனது வீட்டிற்கு வந்துள்ள, ஒரு காலத்தில் கண்டி சுற்றுலாப் பொலிஸில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் இந்திரஜித் கடந்த 30ஆம் திகதி கண்டி வேல்ஸ் பார்க் பூங்காவைத் தாண்டி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கைப்பை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. </p><p>

அதனை பரிசோதித்த போது வெளிநாட்டுப் பெண்ணுக்கு சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அந்தப் பையில் பணமும் கடவுச்சீட்டும் இருந்தபோதிலும், அதன் உரிமையாளரை தொடர்பு கொள்வது பெரும் சிக்கலாக மாறியிருந்தது. </p><p>பையில் இருந்த பங்களாதேஷ் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, அதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை பெற்று பொலிஸ் சார்ஜன்ட் அவரை தொடர்பு கொண்டுள்ளார்.</p><p>

வட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டு பையும் பணமும் பாதுகாப்பாக இருப்பதாக காணொளி மூலம் காட்டிய பின்னர் பையை பெற்றுக்கொள்ள கண்டிக்கு வந்தால் தனது விமானம் தவறவிடப்படும் என்று அவர் கூறியுள்ளார். </p><p>

பொலிஸ் அதிகாரி பையைக் கொண்டு கொழும்புக்கு சென்று அதனை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
</p><p>
மொனோவரா அக்தர் சௌத்ரி என்ற பெண், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சேவையை பாராட்டியவாறு கடந்த 31ஆம் திகதி அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-03T14:47:52+00:00</updated>
        </entry>
    </feed>
