<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-17T06:37:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-leave-in-sri-lanka-1786947211"></link>
            <id>https://tamilwin.com/article/school-leave-in-sri-lanka-1786947211</id>
            <summary type="text">பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் பதில் இயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் பதில் இயக்குநர் டாக்டர் பிரதீப் ரத்னசேகர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். </p><p>

பாடசாலை விடுமுறை நாட்களில் பட்டம் விடும் விபத்துகள் அடிக்கடி பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போதெல்லாம் நிலவும் வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, குழந்தைகளிடையே பட்டம் விடுவது பிரபலமாகியுள்ளது. 

கவனக்குறைவாக பட்டம் விடுவது கடுமையான காயங்களையும், உயிருக்கே ஆபத்தான காயங்களையும் கூட ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59137caa-b808-4342-aa34-02253749769c/26-6a82aa5e4e3f1.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும்போது கீழே விழ நேரிடலாம். குழுக்களாகப் பட்டம் விடும்போது மோதல்கள் மற்றும் கீழே விழுவதால் விபத்துகள் ஏற்படலாம். 

உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயல்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>பட்டத்தின் நூல்கள் மின் கம்பிகளுடன் தொடர்பு கொண்டால், அந்த நூல் வழியாக மின்சாரம் நபருக்குப் பாயக்கூடும். 

இத்தகைய மின் அதிர்ச்சிகள், கைகள், புஜங்கள் மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c457d2-384a-494c-a8fe-7a2e2d1af23b/26-6a82aa5f06b23.webp' /></p><p>
</p><p>
சில சமயங்களில், சேதமடைந்த உடல் பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

மேலும், மின் கம்பிகள் உள்ள பகுதிகளில் குழந்தைகள் பட்டம் விடுவதைத் தடுக்க பெற்றோர்களும் பெரியவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

ஏனெனில் மின்சாரத்தைக் கடத்தும் நூல்கள் உடனடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chargesheet-filed-pillaiyan-against-4-people-1786947374"></link>
            <id>https://tamilwin.com/article/chargesheet-filed-pillaiyan-against-4-people-1786947374</id>
            <summary type="text">கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9edf12ea-4af4-4199-99c1-ce805f485e53/26-6a82a9ea4b213.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கஞ்சிபானி இம்ரான்! அநுர அரசு அம்பலப்படுத்தும் இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-s-connection-with-mahinda-government-1786934816"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-s-connection-with-mahinda-government-1786934816</id>
            <summary type="text">இலங்கையை விட்டுத் தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்புப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை விட்டுத் தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது இத்தாலியில் உள்ள அவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இன்டர்போல் பிடியாணை&nbsp;</h2><p>
</p><p>
அதற்கமைய, இன்டர்போல் பிடியாணையின் கீழ் தேடப்பட்டுவரும் 58 குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
“கஞ்சிப்பானி இம்ரான் முந்தைய மகிந்தவின் ஆட்சியின் போது அரசியல் பிரமுகர்கள் ஆபத்தான குற்றவாளிகள் மற்றும் பல நபர்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார். </p><p>இது அந்தக்காலகட்டத்தில் நாட்டின் சட்டத்தின் ஆட்சி குறித்து கேள்விகளை எழுப்புகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/403f5d07-bc81-43bc-b06b-49893e28903f/26-6a82a47b01293.webp' /></p><p>
</p><p>
இன்டர்போல் பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டுவந்த பல முக்கிய பாதாள உலக மற்றும் வர்த்தகக் குற்றவாளிகள் உட்பட 58 ஆபத்தான குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
</p><p>
பெரும் குற்றவியல் வலையமைப்பின் தலைவர்களை அரசாங்கம் தற்போது குறிவைத்து அவற்றை அகற்றி வருகின்றது. </p><p>இந்த முயற்சிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
மிகவும் ஆபத்தான குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாரிய முயற்சி தேவைப்பட்டது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின் மேலாதிக்கத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>
 </p>]]></content>
            <updated>2026-08-17T06:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 ஆண்டுகளில் 1000இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1178-inmates-have-escaped-from-prisons-1786944922"></link>
            <id>https://tamilwin.com/article/1178-inmates-have-escaped-from-prisons-1786944922</id>
            <summary type="text">கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>அறிக்கையின்படி, 2019இல் 153 கைதிகளும், 2020இல் 110 பேரும், 2021இல் 103 பேரும், 2022இல் 231 பேரும், 2023இல் 207 பேரும், 2024இல் 188 பேரும், 2025இல் 186 பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க</h2><p>இன்றுவரை சுமார் 474 கைதிகள் மீண்டும் பிடிபட்டுள்ள நிலையில், 734 பேர் சுதந்திரமாக நடமாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6927a1-3f84-414b-8774-63aee9d65299/26-6a82a483cfc19.webp' /></p><p>சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு உறுதியளித்துள்ளது. </p><p>அதன்படி, 22வது திருத்தம் இயற்றப்பட்ட பிறகு மாகாணங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றம் செயல்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,000 ரூபாவினால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-rate-today-sri-lanka-1786946345"></link>
            <id>https://tamilwin.com/article/gold-rate-today-sri-lanka-1786946345</id>
            <summary type="text">கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
</p><p>
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 351,500.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.</p><h2>தங்க விலை</h2><p> </p><p>இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 382,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01fb80c1-9d83-4ad0-a4be-131ff7c926d3/26-6a82a5a1626f0.webp' /></p><p> 

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p> 

இன்று உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,398 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-17T06:09:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[படிப்படியாக வழமைக்கு திரும்பும் காலநிலை! நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourists-flocking-to-nuwara-eliya-1786941028"></link>
            <id>https://tamilwin.com/article/tourists-flocking-to-nuwara-eliya-1786941028</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய சீரற்ற காலநிலை
காரணமாக மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீதிகளில்
விழுந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய சீரற்ற காலநிலை
காரணமாக மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீதிகளில்
விழுந்தமை உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டதுடன், மக்களின் அன்றாட
இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது.
</p><p>
இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத்துறையும் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியிருந்த
நிலையில், தற்போது காலநிலை படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவதையடுத்து,
நுவரெலியாவை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை
அதிகரித்துள்ளது.</p><h2>நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள்</h2><p>
</p><p>
குறிப்பாக, டெவோன் மற்றும் சென்கிளயார் நீர்வீழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக
பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அப்பகுதிகளில்
அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaf01730-5f74-4eaf-9a48-b140afb4d4b3/26-6a82a2d491f15.webp' /></p><p>
இந்தியா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இம்முறை அதிகளவான
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக
சுற்றுலா விடுதி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>நடைபாதை வியாபார நடவடிக்கை</h2><p>
</p><p>
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நீண்ட நாட்களாக மந்தநிலையில்
காணப்பட்ட நடைபாதை வியாபார நடவடிக்கைகளும் மீண்டும் சூடுபிடித்துள்ளதாக
வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b06daf37-7452-4700-ab8c-b1959d589f30/26-6a82a2d57868c.webp' /></p><p>

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்படியாக மீண்டு வரும்
நுவரெலியா மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவது
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கும் புதிய நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்! ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctors-leaving-the-country-srilanka-1786942372"></link>
            <id>https://tamilwin.com/article/doctors-leaving-the-country-srilanka-1786942372</id>
            <summary type="text">நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>

வைத்திய நிபுணர்களை உருவாக்குவதில் நிலவும் தனி உரிமையை மாற்றுவதற்கு ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

கொழும்பில் நேற்றைய தினம் (16.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>வருடாந்திர இடமாற்ற இறுதிப் பட்டியல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் நிபுணத்துவ வைத்தியர்களுக்கான வருடாந்திர இடமாற்ற இறுதிப் பட்டியலைச் சுகாதார அமைச்சு வெளியிடத் தவறியுள்ளமையால், நிபுணத்துவ வைத்தியர்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425f408d-5573-4a4c-905c-2a94fff2df05/26-6a82a18dc21d1.webp' /></p><p> 

வெளிப்புறத் தலையீடுகள் இன்றி டிஜிட்டல் முறையில் தானாகவே இந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வழியிருந்தும், பல்வேறு தரப்பினரின் செல்வாக்கால் இது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது.
</p><p>
அத்துடன், வைத்திய நிபுணர்களை உருவாக்குவதில் நிலவும் தனி உரிமையை மாற்றுவதற்கு ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என கோரியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T05:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை பிடிப்பதற்காக நீதியரசர்களின் வயதெல்லை அதிகரிக்கப்படவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fsp-slams-npp-govt-1786944171"></link>
            <id>https://tamilwin.com/article/fsp-slams-npp-govt-1786944171</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் வாதம் ஏற்புடையதல்ல என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் புபு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் வாதம் ஏற்புடையதல்ல என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் புபுது ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் எவ்வித வழக்குகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>கள்வர்களை பிடிப்பதற்காக இந்த சட்டத்தை சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக அரசாங்க தரப்பு கூறி வருகின்றது என்ற போதிலும் உண்மையில் ராஜபக்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எவ்வித வழக்குகளும் கிடையாது எனவும் எனவே அரசாங்கத்தின் வாதம் பிழையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/406cbfb9-d878-4063-97e4-b12af2695d71/26-6a829aad52398.webp' /></p><p>
</p><p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் காரணிகள் முன்னுக்குப் பின் முரணானவை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>நீதிமன்ற வழக்குகளின் நிலுவை எண்ணிக்கையை குறைப்பதற்காக ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுவதாக கூறும் அரசாங்கத்தின் வாதமும் பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> வழக்கு நிலுவை எண்ணிக்கையை குறைக்க வேண்டுமானால் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்ப வேண்டுமே தவிர ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தற்பொழுது நீதவான் மற்றும் மேல் நீதிமன்றங்களில் கடமையாற்றும் நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் 80 வீதமானவர்கள் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p>
எனவே வயதெல்லையை நீடிக்க வேண்டிய அவசரமான அவசியம் கிடையாது என சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வரும் நீதவான்&nbsp; நீதிமன்றங்களின் நீதவான்களது ஓய்வு பெறும் வயது தொடர்பில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
குறிப்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பனவற்றில் தலா நான்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>உச்ச நீதிமன்றத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்த போதும் இதுவரையில் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சுமார் 200 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
நீதவான் நீதிமன்றங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட நீதவான்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>எனவே அரசாங்கம் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து பதவி வெற்றிகளை நிரப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>மாறாக நீதி அரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிக்க அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்வது பயனற்றது என புபுது ஜாகொட சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T05:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம்! 7 பேர் பலி - பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bihar-temple-stampede-death-1786942813"></link>
            <id>https://tamilwin.com/article/bihar-temple-stampede-death-1786942813</id>
            <summary type="text">இந்தியாவின் -&amp;nbsp;பீகாரில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று அதிகாலை (17) சுமார் 50,000 பக்தர்கள் கோவிலில் திரண்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் -&nbsp;பீகாரில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இன்று அதிகாலை (17) சுமார் 50,000 பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்த நிலையில், கோவில் வளாகத்தில் மின்சார கம்பியொன்று அறுந்து விழுந்ததால், மக்கள் அச்சத்தில் ஓடியபோது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><h2>கூட்ட நெரிசல்&nbsp;</h2><p>இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/348064fd-6430-44eb-ba34-38fad31f6f32/26-6a829846e9190.webp' /></p><p>
இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>உயிரிழந்தவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 3 பேரை&nbsp;அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக சிலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், பீகார் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:13:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தனுக்கு இன்று கொடியேற்றம் - LIVE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-flag-hoisting-1786942777"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-flag-hoisting-1786942777</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று(17.08.2026) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று(17.08.2026) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.</p><p>இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10
மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.</p><p>
</p><p>கொடியேற்ற நாளான இன்று முதல் நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆன்மீக பக்திப் பெருக்குடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HJtV8sHdAL0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T05:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் - விலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1786938878"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1786938878</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 

சர்வதேச சந்தையில் எர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p> 

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, காப்புறுதி, போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தற்போதைய செலவுகளை ஆய்வு செய்த பின், அரசாங்கத்திடம் புதிய மானியத்தை கோருவதற்கோ அல்லது எரிபொருள் விலையை திருத்துவது உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41a682ff-9014-4020-b33f-ae94e7969e0e/26-6a828b3b84ee1.webp' /></p><h2>முழுமையான மீளாய்வு</h2><p> </p><p>

இது தொடர்பான முழுமையான மீளாய்வு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளது. முன்னர் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் பெற்றுக் கொள்வது அல்லது நஷ்டத்தை ஈடுசெய்ய விலையை திருத்துவது குறித்து இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளது. </p><p>

கடைசியாக ஜூன் மாதத்தில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு ஜூலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2faee7-0a9e-403d-8db1-05c4525f1b3c/26-6a828b3c7a51c.webp' /></p><h2>எரிபொருள் விலைகள் அதிகரிப்பு</h2><p> </p><p>

இதேவேளை, மேற்கு ஆசியப் போர் தொடங்கிய பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் விலைகள் தற்போது 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார். </p><p>

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டாலும், சர்வதேச சந்தையில் நிலவும் விலை உயர்வு மற்றும் அதிகரித்துள்ள காப்புறுதி மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் பாரிய சவாலாக மாறியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T04:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-prices-of-vehicles-1786937857"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-prices-of-vehicles-1786937857</id>
            <summary type="text">வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்படி, வாகனங்களின் விலை ரூ. 1.5 முதல் 5 மில்லியன் வரை அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>
வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 50 சதவீத கூடுதல் கட்டணம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>வாகனங்களின் விலை அதிகரிக்கும் அபாயம்</h2><p>
</p><p>
1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ பிரிவின் கீழ் ஜனாதிபதிக்களிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>வாகனங்கள் மீதான கூடுதல் கட்டணத்தை நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், டிசம்பர் 31 வரையிலான நீட்டிப்பு வாகனங்களின் விலையை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15dfbb5a-6345-4b47-8c63-c642ee7cc855/26-6a828c2fa90de.webp' />&nbsp; &nbsp;</p><p>
அதன்படி, மே 15 ஆம் திகதிக்குப் பிறகு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்தார்.
</p><p>
வாகன இறக்குமதிக்காக மே 15 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களில் மேலிருப்பு (overdraft) வசதி சேர்க்கப்படவில்லை என்றும், பல வாகன விற்பனை நிலையங்கள் தற்போது மேற்கூறிய திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருவதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.</p><p>இதற்கமைய, மே 15 ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் ஒரு வெகன் ஆர் (Wagon R) வகை காரின் விலை 5 இலட்சமும், ஒரு டொயோட்டா ரெய்ஸ் (Toyota RAIZE) காரின் விலை 10 இலட்சத்திலும், வெசல் (Vessel) வகை காரின் விலை 15 முதல் 20 இலட்சம் வரையிலும், ஒரு பிராடோ (Prado) ஜீப்பின் விலை 30 இலட்சத்திலும்,ஒரு லேண்ட் குரூசரின் (Land Cruiser) விலை சுமார் 50 இலட்சத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

அதன்படி, ஒரு யாரிஸ் எக்ஸ் கிரேடு (YARIs X GRADE) காரின் விலை எதிர்காலத்தில் ரூ. 10.5 மில்லியனாகவும், ஒரு டொயோட்டா ரெய்ஸ் ஹைப்ரிட் (Toyota RAIZE hybrid) காரின் விலை ரூ. 15.5 மில்லியனாகவும் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>வாகன விலைகளை அடிக்கடி மாற்றாமல், பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டால், வாகன விலை ஏற்ற இறக்கங்களை தடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T04:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-and-son-dies-in-an-accident-1786938871"></link>
            <id>https://tamilwin.com/article/father-and-son-dies-in-an-accident-1786938871</id>
            <summary type="text">புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தனது மகனுடன் வீட்டிற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சந்தைக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. </p><h2><b>

மரணத்திற்கான காரணம்</b></h2><p>மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c56e340-2bc1-4093-8fb7-50499f65ea28/26-6a82874b3e827.webp' /></p><p>இதனால் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்கான காரணம் என வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>உயிரிழந்தவர்கள் துஸ்மந்த ரோஹண என்ற மீனவரும், அவரது மகனான ரவீன் கனிஷ்க என்ற 6 வயது பாடசாலை மாணவனும் என தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த சிறுவன் கந்தக்குளிய குடாவ புனித செபஸ்தியார் பாடசாலையில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-17T04:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earthquake-in-indoneshia-1786937882"></link>
            <id>https://tamilwin.com/article/earthquake-in-indoneshia-1786937882</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் 5.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று (17.08.2026) அதிகாலை 12:46 அளவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் 5.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
</p><p>
குறித்த நிலநடுக்கம் இன்று (17.08.2026) அதிகாலை 12:46 அளவில் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p> </p><p>

நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ஆரம்பத்தில் தெற்கு அட்சரேகை 8.57 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 121.55 ஆகிய ஆள்கூறுகளில் அடையாளம் காணப்பட்டது.</p><h2>சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு</h2><p> 

இதேவேளை கடந்த 15ஆம் திகதி இந்தோனேசியாவில் 7.7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f09fbe8-1243-46fc-afab-ea46e679a3f9/26-6a828447a87a9.webp' /></p><p> </p><p>

அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல அதிர்வுகள் பதிவாகியதுடன், இதில் 47 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T03:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-imran-will-soon-be-brought-to-sri-lanka-1786929568"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-imran-will-soon-be-brought-to-sri-lanka-1786929568</id>
            <summary type="text">வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஸிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபருக்கு சொந்தமான சொத்துக்கள் உட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஸிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபருக்கு சொந்தமான சொத்துக்கள் உட்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஐந்து விடுதிகள் தனக்கு சொந்தமானவை என அவர் விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

ஷிரானுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணைக்குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> </p><h2><b>

புலனாய்வுப் பிரிவினர் விசாரணை</b></h2><p>ஷிரானை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ea9c9ab-ed66-4790-868a-38c18d6686e1/26-6a826d701300b.webp' /></p><p>சந்தேக நபர் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>

நாட்டை விட்டுத் தப்பியோடி டுபாயில் தலைமறைவாகியிருந்த ஷிரான் பாஸிக், அங்கு கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளார். 

48 வயதான ஷிரான் பாஸிக் தெஹிவளையைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. </p><p>கடந்த நாட்களில் நாட்டின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களுடன் ஷிரானுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலுடனும் ஷிரானுக்கு தொடர்பு உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VfItXARcOtE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-17T03:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிகளை கையாளத் தெரியாத ஆயிரக்கணக்கான சிறை அதிகாரிகள்! வெளிவரும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-officers-who-don-t-know-how-to-handle-guns-1786935679"></link>
            <id>https://tamilwin.com/article/prison-officers-who-don-t-know-how-to-handle-guns-1786935679</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் பணியாற்றும் சுமார் 3069 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துப்பாக்கியை ஒருபோதும் தொட்டது கூட இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் பணியாற்றும் சுமார் 3069 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துப்பாக்கியை ஒருபோதும் தொட்டது கூட இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>துப்பாக்கிப் பயிற்சி</h2><p>
</p><p>
தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025 ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையின்படி, கைதிகளுடன் தொடர்பில் இருக்கும் 3,069 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை எதுவிதமான துப்பாக்கிப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3443fe11-d062-414b-b7dd-707d6ac3dd02/26-6a827b45c958d.webp' /></p><p>
</p><p>
கைதிகளை நிர்வகிப்பதற்கும் மற்ற முக்கிய நோக்கங்களை அடைவதற்கும் சிறைச்சாலை உத்தியோத்தர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிப்பது அவசியம் என்று தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகம் கூறுகிறது.
</p><p>
2018 முதல் 2025 வரை, கைதிகளுடன் தொடர்பில் இருக்கும் 2389 அதிகாரிகளுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை காட்டுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T03:09:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சி குறித்து ட்ரம்பின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-instructs-pentagon-reduce-military-exercises-1786934718"></link>
            <id>https://tamilwin.com/article/trump-instructs-pentagon-reduce-military-exercises-1786934718</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு இடையே நடைபெறவிருந்த 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைக் &quot;குறிப்பிடத்தக்க அளவில் குறைக்குமாறு&quot; அமெரிக்க ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு இடையே நடைபெறவிருந்த 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைக் "குறிப்பிடத்தக்க அளவில் குறைக்குமாறு" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>இப்பயிற்சிக்கான அதிகச் செலவு மற்றும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க தென்கொரியா மறுத்தமை ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
</p><p>கூட்டுப் பயிற்சிகள் தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், இந்தப் பயிற்சிகளை முழுமையாக ரத்து செய்ய முடியாத நிலை உள்ளபோதிலும், இதில் அமெரிக்கா பங்கேற்பது குறித்துத் தாம் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>சர்வதேச அளவில் கவனம்&nbsp;</h2><p>மேலும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் தனக்கு உள்ள "மிகச் சிறந்த உறவை" அவர் சுட்டிக்காட்டியதுடன், இந்தப் பயிற்சிகள் வடகொரியாவிற்குத் தேவையற்ற அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆகஸ்ட் 17 முதல் 27 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்த 'உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்' பயிற்சியில் சுமார் 18,000 தென்கொரிய இராணுவ வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
</p><p>வடகொரியாவின் இணையத் தாக்குதல்கள், ட்ரோன்கள் மற்றும் ஜிபிஎஸ் சிக்னல் தடைகளை எதிர்கொள்ளும் வகையில் கணினி அடிப்படையிலான உருவகப்படுத்துதல் மூலம் இப்பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a0f2cc6-8549-4200-9445-e6420f786ac4/26-6a8275c06eea1.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>பயிற்சிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை தொடங்கப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், ட்ரம்ப்பின் கருத்துக்கள் குறித்து உடனடி விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
தென்கொரியாவுடனான இராணுவப் பயிற்சிக் குறைப்பிற்கு வடகொரியாவுடனான ராஜதந்திர உறவு மட்டுமல்லாது, ஈரானின் அணுஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் இணைய தென்கொரியா மறுத்ததும் ஒரு காரணம் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>வடகொரியா தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சோதித்து வரும் வேளையிலும், ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலிலும் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T02:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-percent-of-the-drivers-drug-addicted-1786934065"></link>
            <id>https://tamilwin.com/article/10-percent-of-the-drivers-drug-addicted-1786934065</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் சுமார் 10 சதவீதமானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் சுமார் 10 சதவீதமானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மேல், தென், வடமேல் மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்தார்.</p><h2>போதைப்பொருள் தொடர்பான சோதனை&nbsp;</h2><p>
பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களை இலக்காகக் கொண்டு இதுவரை 7,602 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு நடத்தப்பட்ட சோதனைகளில் 5 முதல் 10 சதவீதமானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தலைவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0daf40b-0c6e-49d7-991d-724755945235/26-6a82733293d48.webp' />&nbsp; &nbsp;</p><p>நான்கு வகையான போதைப்பொருட்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதில் பரிசோதிக்கப்பட்ட நபர் ஒருவர் இந்த போதைப்பொருட்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T02:40:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 லட்சம் ரூபாவிற்கு கார் எங்கே: சஜித் அரசாங்கத்திடம் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-qustions-about-vits-car-1786933554"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-qustions-about-vits-car-1786933554</id>
            <summary type="text">தேர்தல் காலத்தில் 12 இலட்சம் ரூபாவிற்கு &#039;விட்ஸ்&#039; ரக மோட்டார் வாகனங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், இன்று வாகன இறக்குமதி மீது 50% கூடுதல் வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்தில் 12 இலட்சம் ரூபாவிற்கு 'விட்ஸ்' ரக மோட்டார் வாகனங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், இன்று வாகன இறக்குமதி மீது 50% கூடுதல் வரியை விதித்து நுகர்வோர் உரிமைகளை முற்றாக அழித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><h2>அக்கறை இல்லை..</h2><p>
அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து அரசாங்கத்திற்கு எந்தவொரு அக்கறையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a200f2-3f25-4058-8e7a-f802810a6471/26-6a82713430edc.webp' /></p><p>
2024 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 'வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதாக மக்களுக்கு உறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
குறிப்பாக மின் கட்டணத்தை 33 வீதத்தினால் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குதல் மற்றும் இளைஞர் சமுதாயத்திற்கு சலுகை விலையில் வாகனங்களை வழங்குதல் போன்ற பிரதான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டதாக சஜித் பிரேமதாச மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T02:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் சர்வாதிகார ஆட்சியின் பண்புகள் வெளிப்படுவதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-trying-suppress-the-law-1786930754"></link>
            <id>https://tamilwin.com/article/govt-trying-suppress-the-law-1786930754</id>
            <summary type="text">&amp;nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அல்லது பணிக்காலத்தை நீட்டிக்க முயற்சிப்பது சர்வாதிகார ஆட்சியின் அறிகுறியாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அல்லது பணிக்காலத்தை நீட்டிக்க முயற்சிப்பது சர்வாதிகார ஆட்சியின் அறிகுறியாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.</p><p> 
என்.எம். பெரேரா நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p>
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் அன்றைய நீதிபதிகளை நீக்கி, தனக்கு வேண்டியவர்களை நியமிக்க ஜே.ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்த முறையை நினைவுகூர்ந்த அவர், தற்போதும் நீதிபதிகளின் பணிக்காலத்தை நீடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவது கவலைக்குரிய நிலைமையாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eae6be0-8ad9-46d2-949a-6b568c437ec4/26-6a8266445b744.webp' /></p><p>
சாதாரண மரபுகளின்படி நீதிபதிகள் உரிய வயதில் ஓய்வுபெற வேண்டும் எனவும், அவர்களின் பணிக்காலத்தை நீடிக்கும் இத்தகைய முன்னுதாரணங்களை உலகின் பிற ஜனநாயக நாடுகளில் காண முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>இதுபோன்ற நடவடிக்கைகள் ஜிம்பாப்வே போன்ற சர்வாதிகார நாடுகளிலேயே காணப்படக்கூடிய அம்சங்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன மேலும் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T01:39:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுவன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/children-die-after-falling-from-apartment-building-1786930063"></link>
            <id>https://tamilwin.com/article/children-die-after-falling-from-apartment-building-1786930063</id>
            <summary type="text">கொழும்பு, தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்த சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் தெமட்டகொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்த சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p>குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், வேறு சில சிறுவர்களுடன் சேர்ந்து சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது இவ்வாறு கீழே விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>மேலதிக விசாரணை</b></h2><p>இந்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ae5adbd-201e-4ab8-872e-ee4b060c40a9/26-6a8265635082a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-17T01:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: பிரதமரின் மௌனம் ஏற்படுத்தியுள்ள சந்தேகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-amarasuriya-22nd-constitutional-amendment-1786929523"></link>
            <id>https://tamilwin.com/article/harini-amarasuriya-22nd-constitutional-amendment-1786929523</id>
            <summary type="text">பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காதது அரசியல் களத்தில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காதது அரசியல் களத்தில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக எதிரணி அரசியல் அவதானிகள் சுட்டுக்காட்டியுள்ளனர்.</p><p>இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்: ஆனால் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவை அதற்குத் தூண்டியவர் அவரா என்ற சந்தேகம் பெலவத்தை தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பில் பெலவத்தையின் தலைவர்கள் பெரும் கவலையடைந்துள்ளதாக குறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p></p><h2>ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்</h2><p>தேசிய மக்கள் சக்தியிலிருந்து மாத்தறை மாவட்டத்திற்காகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவரும், ஜனாதிபதியின் நெருங்கிய சட்டத்தரணிகள் வட்டத்தில் உள்ளவருமான சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும 22க்கு ஆதரவாகப் பேசாமல் இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>ஜனாதிபதிக்கு, தினசரி புலனாய்வு அறிக்கைகள் மூலம் இது தொடர்பான சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e9c20a0-bd86-4775-bb53-3aabccc7e2dd/26-6a826175c377b.webp' /></p><p>எவ்வித அழுத்தத்தைப் பிரயோகித்தாவது எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்திற்குள் பிரதமரைக் கொண்டு 22வது திருத்தத்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிடச் செய்வதே இதற்குச் சிறந்த தீர்வாகும் என பெலவத்தை தீர்மானித்துள்ளது. </p><p>அதற்கமைய, எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்திற்குள் பிரதமரைக் கொண்டு குறித்த அறிக்கையை வெளியிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T01:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்ட11 இளைஞர்கள் வழக்கில் அதிரடி திருப்பம்.. சிஐடி வெளிக்கொணர்ந்த அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-youngsters-kidnapped-case-trincomalee-gun-site-1786926986"></link>
            <id>https://tamilwin.com/article/11-youngsters-kidnapped-case-trincomalee-gun-site-1786926986</id>
            <summary type="text">2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்கள்&amp;nbsp;வெளிக்கொணரப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்கள்&nbsp;வெளிக்கொணரப்பட்டுள்ளன.&nbsp;</p><p> குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளில், கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலை கடற்படையின் கன்சைட் (Gunsite) முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை நீதிமன்றத்தில் உறுதி&nbsp;செய்யப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், அங்குள்ள சுவரொன்றில் எழுதப்பட்டிருந்த முகவரி கடத்தப்பட்ட சாந்த சமரவீர என்பவரின் கையெழுத்து என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
இந்த விசாரணைகளின் போது, குறித்த முகாமில் ஆறு பெண்களும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>கொடூரக் கொலைகள்..&nbsp;</h2><p>தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவர் விடுவிக்கப்பட்டால் கடற்படை மீது குற்றம் சுமத்தப்படும் என்ற அச்சத்தினால் கொலை செய்யப்பட்டதாகவும்&nbsp;குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a94f0d1-f7f4-4de6-b2a4-491a8184eeb3/26-6a825a4d09349.webp' /></p><p>போதிய ஆதாரங்கள் இன்மையால் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த வழக்குகள், இந்தத் தகவல்கள் வெளிவந்ததையடுத்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
கடற்படைக்குள் இயங்கிய கப்பம் பெறும் கும்பலினால் இழைக்கப்பட்ட இந்தக் கொடூரக் குற்றம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதிகளான வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் நிஷாந்த உலுகேதென்ன ஆகிய மூவருக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>சட்டமா அதிபரினால் 667 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு இந்தக் கடத்தல்கள் பற்றித் தெரிந்திருந்ததாகவும், தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T00:57:58+00:00</updated>
        </entry>
    </feed>
