<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-16T17:31:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கா மீதான தாக்குதலுக்கு கட்டார் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/qatar-condemns-shameful-houthi-attack-1789579110"></link>
            <id>https://tamilwin.com/article/qatar-condemns-shameful-houthi-attack-1789579110</id>
            <summary type="text">&amp;nbsp;இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> 
புனிதத் தலத்தின் மீதான இந்தத் தாக்குதல் முயற்சியை ஒரு வெட்கக்கேடான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என கட்டார் வெளியுறவு அமைச்சு கடுமையாகச் சாடியுள்ளது.
</p><p> இது குறித்துக் கட்டார் அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc48036-b422-4e8e-b337-d817b2728f5f/26-6aaacf67837ac.webp' /></p><p>
</p><p>புனிதத் தலங்களின் பாதுகாப்பு, புனிதத்தன்மை மற்றும் அங்கு வருகை தரும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு ஆகியவை ஒருபோதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படவோ அல்லது பிராந்திய மோதல்களில் பயன்படுத்தப்படவோ கூடாது என கட்டார்ர் வலியுறுத்தியுள்ளது. </p><p>
மேலும், தனது நிலப்பரப்பு, புனிதத் தலங்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சவூதி அரேபியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டார் அரசு முழு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>முன்னதாக, மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பால் ஏவப்பட்ட ட்ரோன் ஒன்றை வான்வெளியிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாகச் சவூதி அரேபிய ராணுவம் அறிவித்திருந்தது.</p><p> 
எனினும், சவூதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், புனிதத் தலத்தை இலக்கு வைத்துத் தாம் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை எனவும், சவூதி சுமத்தும் குற்றச்சாட்டு ஒரு "அருவருப்பான பொய்" எனவும் விளக்கம் அளித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T17:24:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்து : 60இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-mine-collapse-in-sudan-over-60-dead-1789578191"></link>
            <id>https://tamilwin.com/article/gold-mine-collapse-in-sudan-over-60-dead-1789578191</id>
            <summary type="text">சூடானின் மேற்கு கொர்டோஃபான் மாநிலத்தில் அமைந்துள்ள தங்கம் தோண்டும் சுரங்கம்
ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானின் மேற்கு கொர்டோஃபான் மாநிலத்தில் அமைந்துள்ள தங்கம் தோண்டும் சுரங்கம்
ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அல்-நுஹுத் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அல்-ஸாரா தங்கச் சுரங்கத்தில் பல
அண்டைச் சுரங்கப் பாதைகள் அடுத்தடுத்து சரிந்து வீழ்ந்ததில், 70க்கும்
மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல்
போயிருக்கலாம் எனக் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
</p><h2>முறையான பாதுகாப்பு நடைமுறைகள்&nbsp;</h2><p>
இடிபாடுகளுக்குள் சிலர் இன்னும் உயிருடன் சிக்கியிருக்கக்கூடும் என்றும்,
அவர்களை மீட்க அவசர உதவி தேவை என்றும் உள்ளூர் அமைப்புகள் கோரிக்கை
விடுத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2816f59-9ff9-46ee-9a52-efaa6d234d54/26-6aaad02e751fc.webp' /></p><p>இருப்பினும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் இல்லாமை மற்றும்
மணற்பாங்கான நில அமைப்பு காரணமாக மீட்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமையே இந்த பாரிய
உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
</p><p>
ஆபிரிக்காவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றான சூடானில்,
பெரும்பான்மையான தங்கம் இவ்வாறான ஆபத்தான பாரம்பரிய முறைகளிலேயே வெட்டி
எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T17:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் அறிய அரசின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-government-scheme-to-identify-corruption-1789578880"></link>
            <id>https://tamilwin.com/article/new-government-scheme-to-identify-corruption-1789578880</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பணிகளைச் சீரமைப்பதற்காக, நாடு முழுவதும் 23 புதிய பிராந்திய அலுவலகங்களைத் திறப்பதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பணிகளைச் சீரமைப்பதற்காக, நாடு முழுவதும் 23 புதிய பிராந்திய அலுவலகங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த பிராந்திய அலுவலகங்கள் அனைத்தும் இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்பட்டு முடிக்கப்படும் என்று இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். </p><h2>

23 புதிய பிராந்திய அலுவலகங்கள்</h2><p>
தற்போதுள்ள நடைமுறையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இலஞ்சம் அல்லது ஊழல் குறித்துப் புகார் அளிக்கவும், அதற்கான ஆதாரங்களை வழங்கவும் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3d819e8-420d-4e0d-baa3-0fa6aedd29eb/26-6aaacedd3b9f7.webp' /></p><p>
</p><p>
மக்கள் சந்திக்கும் கடுமையான சிரமங்களைக் கருத்தில் கொண்டு புதிய பிராந்திய அலுவலகங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

இந்த புதிய அலுவலகங்களின் வலையமைப்பு, பிராந்திய அளவில் முறைப்பாடுகளைப் பெறுதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்ய உள்ளது.
</p><p>
இதற்காக, சட்ட அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உட்பட மொத்தம் 971 புதிய அதிகாரிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T17:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் கொழும்பு - மட்டக்குளியில் கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-colombo-1789574054"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-colombo-1789574054</id>
            <summary type="text">புதிய இணைப்புவிபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இருவர் விபத்தில் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இருப்பவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eWo_AvzmHTg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இந்த சம்பவம் இன்று (16.09.2026) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>

இருவர் உயிரிழப்பு</h2><p>
சற்றுமுன்னர், மட்டக்குளி பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d189f63-f5f6-4da3-81c0-322c2c558426/26-6aaabcb30e1cb.webp' /></p><p>
</p><p>
இதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 முச்சக்கர வண்டிகள் மற்றும் கார் ஆகிய வாகனங்களே இவ்வாறு ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F1071684679163794%2F&show_text=true&width=560&t=0" width="560" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11eff0c8-b449-4104-ac9f-00c2bdb953cd/26-6aaabcb41818c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eec64609-4848-44b4-a577-d9f5277a7cd8/26-6aaabcb4df2d5.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T16:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நக்கிள்ஸ் மலைத்தொடரில் இளைஞரின் சடலம் மீட்பு - விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-body-recovered-in-knuckles-mountain-range-1789575993"></link>
            <id>https://tamilwin.com/article/man-body-recovered-in-knuckles-mountain-range-1789575993</id>
            <summary type="text">இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைத்தொடரின் குறுகலான குன்றுப் பிரதேசமொன்றுக்குள் இருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைத்தொடரின் குறுகலான குன்றுப் பிரதேசமொன்றுக்குள் இருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், </p><p>

மெனிக்ஹின்ன, லூனுகெட்டியமடித்த, கந்தேகம்மெத்த பகுதியைச் சேர்ந்த, ரன்ஹோட்டி கெதர செனித் கவீஷ அருண குமார என்ற இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை(11.09.2026) முதல் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார்.
</p><h2>
காணாமல் போன இளைஞர்</h2><p>
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் பொலிஸாரிடம் புகார் அளித்து, தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7dae637-0848-47ac-a77e-83b3238b8b6f/26-6aaac3b890873.webp' /></p><p>
</p><p>
பொலிஸார் நடத்திய அலைபேசி கோபுரத் தரவு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, ​​நக்கிள்ஸ் மலைத் தொடரின் குறுகலான குன்றுகளின் நடுவில் சிக்கிய நிலையில் அந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>
உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியை அணுகுவது கடினமாக இருந்ததால், அதை கீழே இறக்குவதற்கு உடுதும்பறை பொலிஸார் இராணுவ கமாண்டோ படையின் உதவியையும் நாடியுள்ளனர்.
</p><p>
இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. </p><p>

மேலும் சம்பந்தப்பட்ட பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T16:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவை இணைக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plan-canada-as-european-union-associate-member-1789571283"></link>
            <id>https://tamilwin.com/article/plan-canada-as-european-union-associate-member-1789571283</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது &quot;இணை உறுப்பினராக&quot; கனடாவை இணைத்துக்
கொள்வதற்கான கதவுகளைத் திறக்க விரும்புவதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர்
உர்சுலா வொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது "இணை உறுப்பினராக" கனடாவை இணைத்துக்
கொள்வதற்கான கதவுகளைத் திறக்க விரும்புவதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர்
உர்சுலா வொன் டேர் லேயன் தெரிவித்துள்ளார்.</p><p>

ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வருடாந்த உரையிலேயே
அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.</p><p>

உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் பூகோள அரசியல் சவால்கள், அமெரிக்காவின்
வர்த்தகக் கெடுபிடிகள் மற்றும் சீனாவுடனான போட்டித்தன்மை ஆகியவற்றுக்கு
மத்தியில், ஜனநாயக விழுமியங்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளுடனான உறவை
பலப்படுத்துவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>தெளிவான வரையறைகள்</h2><p>
</p><p>
கனடியப் பிரதமர் மார்க் கார்னி கலந்துகொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய உர்சுலா
வொன் டேர் லேயன், செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், பாதுகாப்பு, விநியோகச்
சங்கிலி மற்றும் ஆர்க்டிக் பிராந்தியக் கொள்கைகள் போன்றவற்றில் கனடாவும்
ஐரோப்பாவும் ஒரே அலைவரிசையில் பயணிப்பதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45467f82-1fbc-4175-8ee1-2e33565c0ae4/26-6aaab0d4bac54.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இந்த யோசனை நடைமுறைக்கு வர வேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியத்தின்
உறுப்பு நாடுகள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.</p><p>

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முன்மொழிவு குறித்து உறுப்பு நாடுகளிடையே
இன்னும் தெளிவான வரையறைகள் எட்டப்படவில்லை என்றும், தொலைத்தொடர்பு மற்றும்
பால் பண்ணை போன்ற துறைகளில் நிலவும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் இதற்குச் சவாலாக
அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T15:32:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் புதிய திருப்பம் – புதைந்திருந்த மர்மங்களை கிளறும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-case-updates-1789564821"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-case-updates-1789564821</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

 உயிர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
 உயிர்த்த தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணையில், இராணுவ மற்றும் அரச புலனாய்வுப் பிரிவுகளுக்கு தாக்குதல் தொடர்பான முன் தகவல்கள் கிடைத்திருந்தும், அவை உரிய பாதுகாப்புத் தரப்புகளுடன் பகிரப்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் அலாவுதீன் ஆகியோரின் தொடர்புகள் குறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அலாவுதீன், உயிர்த்த தாக்குதலில் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இன்சாப் அஹமட்டின் மாமனார் என குறிப்பிடப்பட்டுள்ளார்.</p><p> 

அவரது படகுகள் மூலம் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோர் தாக்குதல்களுக்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்றனரா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலாவுதீனின் மகள் பின்னர் விடுவிக்கப்பட்டது தொடர்பிலும் விசாரணையாளர்கள் தகவல்களை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனிடையே, ரிஷாட் பதியுதீன் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கனவே மறுத்துள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.</p><p>

 2022ஆம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக அவர்மீது முன்னெடுக்கப்பட்டிருந்த தனி வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
</p><p>
 இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fw1BpKSyByI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T15:11:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதில் தொடரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-recovered-bodies-1789570703"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-recovered-bodies-1789570703</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் பின்னர் மீட்கப்பட்ட சடலங்களில்
சுமார் 7 சதவீதமான சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக
அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் பின்னர் மீட்கப்பட்ட சடலங்களில்
சுமார் 7 சதவீதமான சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக
அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை
1,399 பேர் உயிரிழந்துள்ளதுடன், 636 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 5,200 பேர்
வரை இன்னமும் காணாமல் போயுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களிடமிருந்து 1,206 டி.என்.ஏ மாதிரிப் பரிசோதனைகளும், காணாமல்
போனவர்களின் உறவினர்களிடமிருந்து 1,889 மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ள
போதிலும், 105 சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><h2>பெரும் சவால்கள்&nbsp;</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட மலைப்பிரதேசங்கள் மற்றும் நீர்மின் நிலையப் பகுதிகளில்
சிக்கியுள்ளவர்களை மீட்க உலங்குவானூர்திகள் மற்றும் அதிநவீன ட்ரோன்கள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/437efcf2-69a6-4f3b-90bd-df65d9d18587/26-6aaaae91711e0.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கடுமையான புவியியல் அமைப்பு மற்றும் மலைப்பகுதிகளில்
குவிந்துள்ள பாறை இடிபாடுகள் காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும்
சவால்கள் நிலவுவதாக நேபாளத் தேசிய பேரிடர் மேலாண்மை முகவரகம்
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T14:58:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகள் குறித்து தென்னாப்பிரிக்கா கவலை வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/south-africa-expresses-deep-concern-over-us-visa-1789569185"></link>
            <id>https://tamilwin.com/article/south-africa-expresses-deep-concern-over-us-visa-1789569185</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்கப் பிரஜைகள் சிலர் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய விசா
கட்டுப்பாடுகள் தொடர்பில் தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு தனது கவலையை
வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்கப் பிரஜைகள் சிலர் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய விசா
கட்டுப்பாடுகள் தொடர்பில் தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு தனது கவலையை
வெளியிட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவினால் அறிவிக்கப்பட்ட இந்தத் தடை
குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு,
தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்துச் சில தீவிரவாதக்
குழுக்களால் பரப்பப்படும் தவறான கருத்துக்களையே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை
பிரதிபலிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.</p><p>

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்படும் சவால்களைத்
தன்னிச்சையான நடவடிக்கைகளால் அன்றி, இராஜதந்திர ரீதியிலான சுமுகமான
பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>விசா கட்டுப்பாடுகள்</h2><p>
</p><p>
தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட இனச்
சமத்துவச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி, அங்குள்ள வெள்ளைப்பினச்
சிறுபான்மையினருக்கு எதிராக இனரீதியான அடக்குமுறைகள் இடம்பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/400b89a2-34d4-48f3-aef8-425a4ebd03ce/26-6aaaabfc4698d.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தற்போதைய விசா கட்டுப்பாடுகள் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே என்றும்,
அடுத்துவரும் நாட்களில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும்
தென்னாப்பிரிக்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T14:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருதங்கேணி ஏரியில் இறந்து கிடக்கும் நன்னீர் மீன்கள் – கடற்றொழிலாளர்களுக்கு பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fish-are-dying-and-floating-on-the-surface-1789568748"></link>
            <id>https://tamilwin.com/article/fish-are-dying-and-floating-on-the-surface-1789568748</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடல் நீர் ஏரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்து நீரில் மிதப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடல் நீர் ஏரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்து நீரில் மிதப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

இதனால், குறித்த பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>

வடமராட்சி கிழக்கு பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தற்போது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fcc12da-c1c2-4360-939b-7b657ca53238/26-6aaaaa07cab4a.webp' /></p><p>
</p><p>
அண்மைக்காலமாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நன்னீர் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், இதற்கான காரணம் தொடர்பில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் நன்னீர் மீனினங்கள் உயிரிழந்து நீரில் மிதக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T14:39:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள்..ஜெனீவாவில் திரண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamils-protest-in-switzerland-1789562593"></link>
            <id>https://tamilwin.com/article/tamils-protest-in-switzerland-1789562593</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் காலத்தை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கவனயீர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் காலத்தை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
“எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்து, ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.</p><h2>நூற்றுக்கணக்கான தமிழர்கள்&nbsp;</h2><p> </p><p>

இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.</p><p>

2026 செப்டெம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பூங்காவில் இருந்து கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமானது.

பேரணியில் பங்கேற்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தையும் பல்வேறு பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றனர்.</p><p> 

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான காட்சிப்படுத்தலும் பேரணியில் இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/559238d5-c8a7-47cb-a5b8-0e75276c3e64/26-6aaa9c0b39e34.webp' /></p><p>
</p><p>
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.</p><p>

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை சென்றடைந்தனர்.

அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், தேசியக் கொடியேற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. </p><p>

தொடர்ந்து தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் மற்றும் ஈகைப்பேரொளிகளின் நினைவாக ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன.</p><h2>ஈழத்தமிழர்களின் வரலாறு</h2><p>
</p><p>
இதன்போது மலர்மாலை அணிவித்தல், அகவணக்கம் மற்றும் மலர்வணக்கம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், பங்கேற்பாளர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த தமிழ் இளையோர்களும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்றனர்.</p><p> அவர்கள் தங்களது வாழிட நாடுகளின் மொழிகளில் உரையாற்றியதுடன், ஒன்றுகூடலுக்கான பிரகடனத்தையும் வாசித்தனர்.

இதனிடையே, பிரித்தானிய பிரதமரின் இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஊடாக ஐக்கிய நாடுகள் சபை நோக்கி முன்னெடுக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணத்தில் பங்கேற்ற செயற்பாட்டாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d7cea2-21a6-4d4b-ab30-70fbbf6d9e2b/26-6aaa9c0bf0cdd.webp' /></p><p>
</p><p>
தாங்கள் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரதிநிதிகளிடம் ஈழத்தமிழர்களின் வரலாறு, தற்போதைய நிலைமை மற்றும் தமிழர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
தமிழ் மக்களுக்கு நீதியும் அரசியல் இறைமையும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பாடல்கள் மற்றும் கோஷங்களுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களை போலி வாக்குறுதிகளால் ஏமாற்றும் அரசாங்கம்! துமிந்த திசாநாயக்க விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-public-false-promises-duminda-1789564122"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-public-false-promises-duminda-1789564122</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக பொதுமக்களை போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றி, ஒருபோதும் நனவாகாத கனவுலகில் மிதக்க வைத்திருப்பதாக துமிந்த திசாநாயக்க விமர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக பொதுமக்களை போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றி, ஒருபோதும் நனவாகாத கனவுலகில் மிதக்க வைத்திருப்பதாக துமிந்த திசாநாயக்க விமர்சித்துள்ளார்.
</p><p>
முன்னாள் அமைச்சரும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தருமான துமிந்த திசாநாயக்க, இன்று(16.9.2026) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.</p><p>

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைக்கு அரசாங்கம் இரண்டு வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் பேரணிகளை நடத்தி வருகின்றது.

இதுவரைக்கும் இந்த அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.</p><h2>அரசாங்கத்தின் பேரணி</h2><p> </p><p>இனியாவது ஏதாவது செய்யுமா என்ற எதிர்பார்ப்புடனேயே அரசாங்கத்தின் பேரணிகளுக்கு பொதுமக்கள் வருகை தருகின்றனர். எனினும் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.

இந்த அரசாங்கம் இதுவரை பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.இனியும் செய்யப்போவதில்லை.
</p><p>
வெறுமனே போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி, பொதுமக்களை ஒருபோதும் நனவாகாத கனவுலகில் சஞ்சரிக்க வைப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் செயற்பாடாகும்.</p><p>

ஜனாதிபதியாக முன்னர் பொய் கூறியது பரவாயில்லை. ஆனால் இப்போது ஜனாதிபதியான பின்னரும் பொய் கூறிக் கொண்டிருப்பதுதான் தவறானது.</p><h2>மொட்டுக் கட்சி</h2><p>
</p><p>
அதே போன்று அநுராதபுரத்தில் மொட்டுக் கட்சி நடத்திய கூட்டத்தைக் கொண்டு அக்கட்சி தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அநுராதபுரத்துக்கு எவரும் வரலாம், போகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/933fe539-8802-4308-aec7-0d62ce98ae38/26-6aaa98961ca6a.webp' /></p><p> </p><p>ஆனால் பொதுமக்கள் சிந்தித்தே வாக்களிப்பார்கள்.

இன்றைக்கு மொட்டுக் கட்சியில் வீரர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிப்பவர்கள், மஹிந்தவுக்கு ஜனாதிபதியாக ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் யார் என்பதை சற்று பின்னோக்கிப் பார்த்து அறிந்து கொள்வது நன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வங்கிக் கணக்குகளை தாண்டி நாமலை சென்றடைந்த பெருமளவு பணம்.. அச்சத்தில் சாட்சியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-remanded-airbus-case-1789562638"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-remanded-airbus-case-1789562638</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை வரும் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. </p><p>இதே பரிவர்த்தனை தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கின் கீழ் அவர் ஏற்கனவே செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p>

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நாமல் ராஜபக்ச மற்றும் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கு கோட்டை நீதவான் பிரசன்ன அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ச சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.</p><p></p><h2>சத்தியக் கடதாசி..&nbsp;</h2><p> </p><p>இதன்போது, விசாரணைகளின் அறிக்கைகள் ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/077d94d1-d9ba-4931-9f6e-7913f346cf8d/26-6aaa96529e7dc.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டார சமர்ப்பித்த அறிக்கையின்படி, பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடையே 16 விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் சிறையில் வைத்து சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தனி விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போதைய வழக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் பணமோசடி குறித்து விசாரிக்க அதிகாரம் கிடைத்துள்ளதால், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இணைந்து இந்த விசாரணையை நடத்தி வருகின்றன.
</p><p>தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கிய சத்தியக்கடதாசியின் மூலம், இந்த பரிவர்த்தனைக்காக நாமல் ராஜபக்ச 800,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 100 மில்லியன் ரூபா) இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பல வங்கிக் கணக்குகள்..&nbsp;</h2><p> </p><p>எயார்பஸ் நிறுவனம் வழங்கிய 1.454 மில்லியன் யூரோ இலஞ்சப் பணம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலியின் சிங்கப்பூர் கணக்கிற்கு மாற்றப்பட்டு, பின்னர் நிமல் பெரேராவின் நிறுவன கணக்கிற்கு அனுப்பப்பட்டு, இறுதியாக நாமல் ராஜபக்சவைச் சென்றடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03df8a6-46e1-4ed1-9d7e-058e6f382605/26-6aaa96537a237.webp' /></p><p> </p><p>மேலும், பிரியங்காவின் கணக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கிற்கு 160,400 யூரோ அனுப்பப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

சர்வதேச உதவிகளுடன் நடத்தப்பட்ட தடயவியல் விசாரணையின் போது, நாமல் ராஜபக்சவிற்கும் எயார்பஸ் அதிகாரிகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களும் மீட்கப்பட்டுள்ளன. </p><p>முதலாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டாவது சந்தேகநபர் அவுஸ்திரேலியாவிலும், மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவிலும் தலைமறைவாக உள்ளனர். </p><p>மேலும், சாட்சிகள் உயிருக்கு பயந்து சாட்சியமளிக்க அஞ்சுகின்றனர் என்பதால் நாமலுக்கு பிணை வழங்க அரசு தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:20:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-suspects-arrested-fish-caught-using-explosives-1789559770"></link>
            <id>https://tamilwin.com/article/2-suspects-arrested-fish-caught-using-explosives-1789559770</id>
            <summary type="text">மன்னார்- முழங்காவில் கடற்கரை பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார்- முழங்காவில் கடற்கரை பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இலங்கை கடற்படையினரால் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கெப் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனேக நிறுவனத்திற்கு
கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல்
நடவடிக்கையின் போது, முழங்காவில் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான கெப்
ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>

இதன்போது, வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்
370 கிலோ கிராமிற்கும் அதிகமான மீன்களை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த,
மன்னார் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 48 வயதுடைய இரண்டு (02) சந்தேக
நபர்களுடன் அந்த கெப் வாகனமும் கைது செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/885439d4-e0b7-41db-9a1e-933367e31c16/26-6aaa8bd320d1f.webp' /></p><p>


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கெப்
மற்றும் மீன் தொகை என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி
திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T12:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் 'மிக்' விமான கமிஷன் பணத்திற்கு நடந்தது என்ன! அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;மிக்&#039; விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'மிக்' விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பல மணிநேர வொக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.</p><p>இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் மறைந்துள்ள கமிஷன் பணம் யாருடைய கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது? எங்கே சென்றது?
'டி.எஸ். அலையன்ஸ்' (DS Alliance) நிறுவனம் ஒரு போலி நிறுவனமாக உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய 'பெலிமிசா' (Bellimissa) நிறுவனத்திற்கு இலங்கையின் விமானப்படை 15.66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அனுப்பியுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கொடுக்கல் வாங்கல் எப்படி நடந்தது</h2><p>அதில் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கலுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டுள்ளது 7.83 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
அப்படியானால் எஞ்சிய பணம் எங்கே சென்றது? யாருடைய கணக்கில் வைப்பிலிடப்பட்டது?
மேலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் விசாரணைகள் நிறுத்தப்பட்ட விதம் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கொள்முதல் கொடுக்கல் வாங்கலானது குளிர் அறைகளில் இருந்த சில நபர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி அவர்களின் சுகபோகத்திற்காகவே தீர்மானிக்கப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கலா? </p><p>
இந்தக் கொடுக்கல் வாங்கலானது உண்மையிலேயே இலங்கை விமானப்படையின் தாக்குதல் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்திலா செய்யப்பட்டது? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பைகளை நிரப்பும் நோக்கத்திலா செய்யப்பட்டது? எனும் கேள்வி எழுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d646032-44b9-4263-bd4a-e36548308477/26-6aaa830b491f4.webp' /></p><p>2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இந்த மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் விசாரணையை நிறுத்தினார். அவ்வாறு நிறுத்துவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சில முக்கிய தடயங்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
</p><p>இந்த 'டி.எஸ். அலையன்ஸ்' எனும் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தினரால் சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வங்கிப் கணக்கிலிருந்து குறைந்தபட்சம் 4,39,000 டொலர்கள் பணம் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் கம்பஹா கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
</p><p>கம்பஹா கிளையில் லெலும் துமிந்த மான்னப்பெரும எனும் கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் இவ்வளவு பாரிய தொகையா யார் இந்த லெலும் துமிந்த?.
</p><p> சிங்கப்பூர் 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனம் தங்களது கணக்கொன்றின் மூலமாகவே இலங்கையின் கம்பஹா கொமர்ஷல் வங்கி கிளைக்கு இந்தப் பணத்தை அனுப்புகிறது.&nbsp;</p><h2>டுபாயில் வாங்கப்பட்ட சொத்து</h2><p>இந்த லெலும் துமிந்த மான்னப்பெரும என்பவர் உதயங்க வீரதுங்கவின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். உறவுமுறையின் படிஇ இந்தப் பணம் வைப்பிலிடப்பட்ட நபர் உதயங்க வீரதுங்கவின் மைத்துனர் ஆவார்.
</p><p>இந்த மான்னப்பெரும என்பவரின் வங்கிப் கணக்கில் வீழ்ந்த பணத்திற்கும் மிக் கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்களால் முடியாமல் போகிறது.
</p><p>ஆனால் மிக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்கிலிருந்தே பணம் வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இந்த மான்னப்பெரும என்பவர் இந்தப் பணத்திலிருந்து 324,971.6 டொலர்களை
ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாய் நகரில் சொத்து விற்பனை செய்யும் 'டார்கெட் எஸ்டாப்ளிஷ்மென்ட்' (Target Establishment) எனும் நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார். </p><p>
ஐக்கிய அரபு இராஜியத்தின அஜ்மான் நகரில் உள்ள 'கோல்ட் கிரஸ்ட் வியூஸ் 2' (Goldcrest Views 2) எனும் சொகுசு வீட்டுத் தொகுதியின் 'பென்ட் ஹவுஸ்' (Penthouse) அடுக்குமாடி குடியிருப்பு இலக்கம் 3403 ஐக் கொள்முதல் செய்வதற்காகவே இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. </p><p>2018 ஆம் ஆண்டு இந்த வீட்டிலிருந்து டுபாய் பொலிஸாரால் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்படுகிறார்.இந்த பிரம்மாண்டமான கமிஷன் தொகையில் மிகச்சிறிய ஒரு பகுதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களாகவே இவை கிடைத்துள்ளதாக நம்புகின்றனர். </p><p>
இந்த கமிஷன் தொகையில் கணிசமான ஒரு பகுதி லத்வியாவில் (Latvia) உள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விடயமும், அதற்கு மேலதிகமாக நியூசிலாந்து, பனாமா, உக்ரைன், ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands) ஆகிய நாடுகளிலுள்ள பல வங்கிக் கணக்குகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இயக்கப்படவிருந்த ஏழு தொடருந்து சேவைகள் இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seven-train-services-cancelled-tonight-1789560437"></link>
            <id>https://tamilwin.com/article/seven-train-services-cancelled-tonight-1789560437</id>
            <summary type="text">இன்று இரவு சேவையில் ஈடுபடுத்தப்படவிருந்த இரவுநேர ஏழு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இன்று (16) இயக்கப்படவிருந்த 6 இரவு அஞ்சல் தொடருந்துகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று இரவு சேவையில் ஈடுபடுத்தப்படவிருந்த இரவுநேர ஏழு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>இன்று (16) இயக்கப்படவிருந்த 6 இரவு அஞ்சல் தொடருந்துகள் உட்பட 7 தொடருந்து சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>இந்த தொடருந்து சேவைகளை தொடருந்து பொது முகாமையாளர் இரத்து செய்துள்ளதாக தொடருந்துகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>வெளியான அறிவிப்பு&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த மூன்று இரவு அஞ்சல் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccd03a5-e966-47a7-88f3-be4d23107172/26-6aaa886f9a301.webp' /></p><p>

அதேபோல், காங்கேசன்துறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த மூன்று இரவு அஞ்சல் தொடருந்துகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், இன்று இரவு 11.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனைக்கு இயக்கப்படவிருந்த தொடருந்து சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, 6 இரவு அஞ்சல் தொடருந்து பயணங்கள் மற்றும் ரம்புக்கனைக்கு இயக்கப்படவிருந்த ஒரு தொடருந்து பயணம் உட்பட, இன்று 7 தொடருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T12:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் போது நாமல் வெளியிட்ட விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-namal-said-while-leaving-the-court-1789551409"></link>
            <id>https://tamilwin.com/article/what-namal-said-while-leaving-the-court-1789551409</id>
            <summary type="text">அதிகாரிகளுக்கு பிரச்சினை வரும் என்பதால், உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரிகளுக்கு பிரச்சினை வரும் என்பதால், உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை&nbsp; பேருந்தில் திரும்பிச் செல்லும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொள்முதல் வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p>இதனையடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40a430a5-2c16-4b0b-8727-3bd36e538eed/26-6aaa69d81503e.webp' /></p><p>நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்துச் செல்லப்படும்போது ஊடகவியலாளர்கள்&nbsp; நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.</p><p>இதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச, “உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும், ஆனால், அதிகாரிகளுக்கு(சிறைக்கு அழைத்து வந்த அதிகாரிகள்) பிரச்சினை வரும் என்பதால் பதிலளிக்க முடியவில்லை” என தெரிவித்துச் சென்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T12:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரிலிய சவிய கணக்கு சர்ச்சை - ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லையாம்! மொட்டுக்கட்சி அம்பலப்படுத்திய உண்மை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-siriliya-case-1789558102"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-siriliya-case-1789558102</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி நடத்திச் சென்ற சிரிலிய சவிய அமைப்பின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி நடத்திச் சென்ற சிரிலிய சவிய அமைப்பின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் கொழும்பில் இன்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.</p><h2>சிரிலிய சவிய அமைப்பு</h2><p>
</p><p>
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p>

சர்ச்சைக்குரிய 'சிரிலிய சவிய' கணக்கில் உள்ள பணம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. அது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவாலோ அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராலோ பயன்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce045c5f-5334-48c3-9bd2-3e5257e84cf0/26-6aaa81a1c82e9.webp' /></p><p>
</p><p>
சர்ச்சைக்குட்படுத்தப்பட்ட பணம் இன்னும் கணக்கில் பாதுகாப்பாக இருக்கின்றது. இது தொடர்பாக அரசாங்கம் ஒரு தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றது.

ஸ்கேனரை வாங்குவதற்காகச் சேகரிக்கப்பட்ட இந்த சிரிலிய கணக்கிலிருந்து ஷிரந்தி ராஜபக்ச ஒரு ரூபாயைக் கூட தனது சொந்தப் பயன்பாட்டிற்கோ அல்லது வேறு எந்தப் பயன்பாட்டிற்கோ எடுக்கவில்லை. </p><p>மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாய் உட்பட, சேகரிக்கப்பட்ட அனைத்துப் பணமும் இன்றும் அந்தக் கணக்கில் பாதுகாப்பாக உள்ளது.</p><h2>ராஜபக்சகுடும்பத்தினர்&nbsp;</h2><p>&nbsp;''உதாரணமாக, கிராமக் கோயிலில் ஒரு கோபுரம் கட்டுவதற்காக நன்கொடையாளர்களிடமிருந்து சிறிது பணம் சேகரிக்கப்படுகிறது.</p><p> </p><p>ஆனால், யாராவது வந்து ஒரு கோபுரத்தைக் கட்டியவுடன், அந்தக் கோயிலில் சேகரிக்கப்பட்ட பணம் மீண்டும் நன்கொடையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை. அந்தப் பணம் கோயிலின் அறப்பணிகளுக்காக வைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.''</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0f7d80-070e-4575-aee2-75c1aef3145e/26-6aaa81a27f566.webp' /></p><p>

அதுபோலவே, நன்கொடையாளர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாததால், வசூலிக்கப்பட்ட இந்தப் பணம் புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஒரு வார்டைக் கட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்சஅதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை. </p><p>அந்தப் பணம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. ராஜபக்சகுடும்பத்தினர் இந்தப் பணத்தை உண்பதற்கோ குடிப்பதற்கோ எடுக்கவில்லை.</p><h2>&nbsp;ஷிரந்தி ராஜபக்ச&nbsp;</h2><p>
</p><p>
அதே போன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும் ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற ஊடக அறிக்கைகள் பொய்யானவையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c281d5-b311-4d6c-987c-c548e7e86512/26-6aaa81a337f3d.webp' /></p><p>
</p><p>சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றுவிட்டார் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. ஷிரந்தி ராஜபக்ச சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
</p><p>
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், முன்னாள் முதல் பெண்மணி தனது விமானத்தில் புறப்படுவதற்கு சில கணங்களுக்கு முன்புதான் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அவருக்கு எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வழங்கியது என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2oosx-SVZ_o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T11:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-found-wounds-in-kotmale-passes-away-1789558039"></link>
            <id>https://tamilwin.com/article/youth-found-wounds-in-kotmale-passes-away-1789558039</id>
            <summary type="text">கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

குறித்த இளைஞர் நேற்று (15) வெதமுல்ல சந்திக்கு அருகில், மதுபான விற்பனை நிலையத்தை அண்மித்த பகுதியில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.</p><p>அதனையடுத்து கொத்மலை 1990 அவசர நோயாளர் காவுவண்டி மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்தநிலையில், குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மருத்துவமனை பொலிஸார் இன்று (16) கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06196fc6-6e0b-4ce1-b4dc-523baf1b5726/26-6aaa811ddde68.webp' /></p><p>

வெததமுல்ல தோட்டம், ரம்பட பகுதி, லிலீஸ் லேன் பிரதேசத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயகிருஷ்ணா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T11:47:36+00:00</updated>
        </entry>
    </feed>
