<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-01T09:31:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் மூன்றாவது முறையாக நீர்க் கண்காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-exhibition-held-for-the-third-time-in-nallur-1788251886"></link>
            <id>https://tamilwin.com/article/water-exhibition-held-for-the-third-time-in-nallur-1788251886</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள நிலத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி
மூன்றாவது முறையாக நாளைய தினம் (02.09.2026) நல்லூரில் ஆரம்பமாகிறது.
</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக,
வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம்
நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.
</p><p>நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி
நிறுவன வளாகத்தில், செப்டெம்பர் 2ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு
கண்காட்சி ஆரம்பமாகவுள்ளது.</p><h2>பாரம்பரிய நிகழ்வுகள்</h2><p>
</p><p>தொடர்ந்து செப்டெம்பர் 11ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி
முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஊருணி ஆற்றுகைக் களத்தில் தினமும் மாலை 7 மணி முதல்
கருத்துரைகள், கலை, பண்பாட்டு மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
</p><p>இது தொடர்பாக இன்றைய தினம் (01.09.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த
குறித்த நீர்வளம் பேணும் செயற்றிட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர்
சிறிஸ்கந்தராஜா, கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட நீர் சார்ந்த ஆய்வுச்
செயற்றிட்டங்களின் பெறுபேறுகளும், மக்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம்
கிடைத்த அனுபவங்களும் இந்தக் கண்காட்சியில் தொகுத்து வழங்கப்படுவதாகத்
தெரிவித்தார்.
</p><p>தொடர்ச்சியாக பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீரியல் ஆய்வுகளின்
பெறுபேறுகளுடன், சமூகத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் இதில்
காட்சிப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c87143fa-6f6f-4a70-897c-6c735fd79630/26-6a96958453495.webp' /></p><h2>நீர்வளப் பாதுகாப்பு</h2><p>
</p><p>குறிப்பாக, வழுக்கையாற்றை சமூகத்தின் பேசுபொருளாக மாற்றும் நோக்கில்
முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள், ஊரவர்களின் கற்பனைகள் மற்றும் பிரதேச சபைகளின்
ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நீர்வளப் பாதுகாப்பு
தொடர்பில் மேலதிக தெளிவு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>கிணறுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலில் தங்கியிருக்கும் சமூகமாகிய வடமாகாண
மக்களுக்கு நிலத்தடி நீரைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றும், அதற்காக
கிணறுகளை முறையாகப் பராமரிப்பதுடன், நீர் சேமிப்புக்கு உகந்த ஊர்க் குளங்களைத்
தூர்வாரி பயனுள்ள வகையில் நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்
அவர் வலியுறுத்தினார்.
</p><p>கிராமிய குளங்களை மக்களின் பங்களிப்புடன், தொழில்நுட்ப அறிவு மற்றும் நவீன
கருவிகளைப் பயன்படுத்தி முறையாகத் தூர்வாருவது தொடர்பான அனுபவங்கள் மற்றும்
அதன்மூலம் பெறப்பட்ட பாடங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முப்பரிமாண
வடிவங்கள், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் ஊடாக கண்காட்சியில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>கடந்த ஆண்டுகளை விட இம்முறை நிலத்தடி நீர் தொடர்பான தெளிவை மக்களிடையே
ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு புதிய காட்சிப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன.
நிலத்தடி நீர் மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களின்
கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் பங்களிப்புடன் தீர்மானங்களை
எடுக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் ஆற்றில் இருந்து கைக்குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-recovered-from-river-in-kantale-1788252898"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-recovered-from-river-in-kantale-1788252898</id>
            <summary type="text">கந்தளாய்- யூனிட் 15 வயல் பகுதியில் உள்ள ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள
ஆற்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று(31.8.2026) மாலை 4.00 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய்- யூனிட் 15 வயல் பகுதியில் உள்ள ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள
ஆற்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்று(31.8.2026) மாலை 4.00 மணியளவில், கந்தளாய் புதிய ரஜஎல பாலத்தின் கீழ் ஆற்றில்
கைக்குண்டொன்று கிடப்பதை மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் அவதானித்துள்ளார்.
</p><p>இதனையடுத்து, அவர் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸாருக்கு தகவல்
வழங்கியுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்
நடவடிக்கையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
மீட்கப்பட்ட கைக்குண்டு ஜேயார் (JR) வகையைச் சேர்ந்தது என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a514648c-4119-49df-a5d9-ecb3b9b79020/26-6a9692e3e0ee8.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான விடயங்கள் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில்
அறிக்கையிடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், குறித்த கைக்குண்டு
சர்தாபுர இராணுவத்தினரால் இன்று பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:10:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண கொண்டாட்டத்தில் மணமகளுக்கு அதிர்ச்சி - திடீரென மாயமான தங்க நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wedding-gift-stolen-by-helper-1788242587"></link>
            <id>https://tamilwin.com/article/wedding-gift-stolen-by-helper-1788242587</id>
            <summary type="text">குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் திருமணத்தின் இரண்டாவது நாள் கொண்டாட்டத்தில் மணமகளுக்கு சீதனமாக வழங்கப்பட்ட 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் திருமணத்தின் இரண்டாவது நாள் கொண்டாட்டத்தில் மணமகளுக்கு சீதனமாக வழங்கப்பட்ட 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.</p><p> 

இந்த நிலையில், சந்தேகநபரையும் தங்க நகைகளையும் பொலிஸார் இரண்டு மணித்தியாலங்களுக்குள் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

திருமண நிகழ்விற்கு வந்திருந்த விருந்தினர்கள் கலைந்து செல்லும் நேரத்தில் மணமகளுக்கு பெற்றோரால் சீதனமாக வழங்கப்பட்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p> </p><h2><b>

திடீரென மாயமான தங்க நகைகள்</b></h2><p>இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார், உறவினர்களைத் தவிர வெளியில் இருந்து வந்த சமையற்காரர்கள், இசை மற்றும் ஒலிப்பெருக்கி சேவைக்காக வந்த அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b53fa0f-0c38-4721-a027-bb39fc6b9355/26-6a969553a799e.webp' /></p><p>இறுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> 

சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. </p><p>

சந்தேக நபரின் நடமாட்டங்களை கண்காணித்த பொலிஸார், காணாமல் போன 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை, திருமண நிகழ்விற்கு உதவியாக வந்த நபர் திருடிச் சென்றமை தெரிய வந்துள்ளது. </p><p> 

குறித்த நகைகளை பிரதான வீதியொன்றின் அருகில் மறைத்து வைத்திருந்த நிலையில், பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T09:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் சிக்கலில் அரச ஊழியர்கள்! 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ள இலங்கையர்களின் வாழ்க்கைச் சுமை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-government-employees-in-trouble-1788244389"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-government-employees-in-trouble-1788244389</id>
            <summary type="text">
அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த மாதாந்தம் 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த மாதாந்தம் 150,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது என ஐ.ம.சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். </p><p>


கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>சிக்கலில் மக்கள் மற்றும் அரச, தனியார் ஊழியர்கள்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p>அரசாங்கம், திறைசேரியில் பணம் நிறைந்து வழிவதாக தெரிவித்தாலும், அவை அனைத்தும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட அநியாய வரியின் ஊடாக ஈட்டப்பட்டதேயாகும். இதனால், மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. </p><p>

 அரச, தனியார் மற்றும் சிறு, நடுத்தர வியாபாரிகள் உள்ளிட்டோர் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b808d736-d6c2-418f-bf3b-39e887b0e7b4/26-6a96935874da4.webp' /></p><p> 

தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் படி நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சாதாரணமாக குடும்பத்தினைக் கொண்டு நடத்த மாதாந்தம் 150,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது. </p><p> 

பால்மா, கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயரும் சாத்தியம் உள்ளது. </p><p> 

பாடசாலை உபகரணங்கள், குடிநீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதியும் சரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89da996-c675-4b76-a2c4-d75721eacb1f/26-6a9693579c40b.webp' /></p><p> </p><p> 

மேலும், சர்வதேச சந்தையில், எரிபொருளின் விலை கணிசமாக சரிந்துள்ள போதிலும், இலங்கையில் வெறும் 15 ரூபாவால் மாத்திரமே பெட்ரோலின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. </p><p> 

ஏனைய, டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட்டவில்லை. மக்களுக்கான சலுகைக் கூட வழங்கப்படவில்லை. </p><p>

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை மிதக்க விட்டு, பொதுமக்கள் பேரழிவைச் சந்திக்க வழிவகை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T08:57:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேருவில மங்கள ராஜமகா விகாரையில் நடைபெற்ற பாரம்பரியத் தேன் பூஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/honey-ceremony-seruvila-mangala-raja-maha-vihara-1788251805"></link>
            <id>https://tamilwin.com/article/honey-ceremony-seruvila-mangala-raja-maha-vihara-1788251805</id>
            <summary type="text">கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ் மொழியைப் பேசும் கடலோர வேடர் சமுதாய
மக்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சேருவில ஸ்ரீ லலாட தாது மகா பெரஹரா விழாவை
முன்னி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ் மொழியைப் பேசும் கடலோர வேடர் சமுதாய
மக்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சேருவில ஸ்ரீ லலாட தாது மகா பெரஹரா விழாவை
முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரியத் தேன் பூஜை சேருவில மங்கள ராஜமகா
விகாரையில் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
</p><p>
கடலோர வேடர்களின் தலைவரான நடராஜா கனகரத்தினம் தலைமையிலான பழங்குடியின மக்கள்
பக்தி சிரத்தையுடன் எடுத்துவந்த தேன் குடம், சேருவில மங்கள ராஜமகா விகாராதிபதி
வணக்கத்திற்குரிய அலுதெனியே சுபோதி நயினாக தேரரிடம் சடங்குபூர்வமாகக்
கையளிக்கப்பட்டது.
</p><p>
பழங்குடியின மக்கள் மங்கள மகா ஸ்தூபியை வலம் வந்து வழிபட்டதைத் தொடர்ந்து தேன்
பூஜை இடம்பெற்றது. இப் பூஜையானது பழங்குடியின மக்களுக்கு இலகுவில் புரியும்
வகையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுவதற்காக
விகாராதிபதி தேரரால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.</p><h2>தேன் பூஜை</h2><p>
</p><p>
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில்,
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு
ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e308f9e8-1810-4038-bdec-c0eb477427fb/26-6a968fa01413b.webp' /></p><p> நிகழ்வின் நிறைவில், விகாராதிபதி தேரர் உள்ளிட்ட
மகா சங்கத்தினர் பிரீத் நூல் வழங்கி கடலோர வேடர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

சாதி, மதம் மற்றும் மொழி காரணங்களால் சமூகங்களால் ஓரங்கட்டப்பட்ட ஒரு
தனித்துவமான குழுவினரான இவர்கள், வெருகல் மற்றும் மூதூர் போன்ற பகுதிகளில்
உள்ள 27 கிராமங்களில் பரந்து வாழ்கின்றனர்.</p><p>

சேருவில பெரஹராவில் தங்களின் பாரம்பரிய நடனங்களையும் கலைகளையும்
வெளிப்படுத்தும் இவர்கள், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கும்
சேருவில விகாராதிபதி தேரருடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதும்
குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-01T08:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஷேசத்திற்கு சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வீட்டில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jewelry-worth-rs-5-lakh-stolen-1788251603"></link>
            <id>https://tamilwin.com/article/jewelry-worth-rs-5-lakh-stolen-1788251603</id>
            <summary type="text">கந்தளாய் - பேராற்றுவெளி பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு, ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள்
திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் - பேராற்றுவெளி பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு, ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள்
திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

இந்த சம்பவம் நேற்று(31.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


5 இலட்சம் பெறுமதியான நகை திருட்டு</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p> 

வீட்டு உரிமையாளர் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வீட்டை விட்டு
வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்தத் திருட்டுச் சம்பவம்
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், வீட்டினுள் இருந்த
அலுமாரியையும் உடைத்து, அதிலிருந்த பெறுமதியான தங்க நகைகளை திருடிச்
சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f516cf-1e82-4d99-b100-e70723a33015/26-6a968eefab28d.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருவதுடன், கைவிரல் அடையாளப் பிரிவு பொலிஸாரும் சம்பவ
இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.</p><h2>


அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம்</h2><p>
இதேவேளை, குறித்த பகுதியில் அண்மைக்காலமாக சந்தேகத்திற்கிடமான நபர்களின்
நடமாட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள வீடொன்றில் சூதாட்ட
நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் தகவல்கள்
கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
இதன் காரணமாக பேராற்றுவெளி பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து
வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறிப்பாக இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் அதிகளவில்
காணப்படுவதாகவும், இதனால் பொலிஸார் இரவு நேரங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலதிக வகுப்பிற்கு சென்று மாயமான மூன்று மாணவிகளும் திருகோணமலையில் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-17-year-old-schoolgirls-missing-1788243589"></link>
            <id>https://tamilwin.com/article/three-17-year-old-schoolgirls-missing-1788243589</id>
            <summary type="text">புதிய இணைப்புபலாங்கொடையில் உள்ள பின்னவலாவில் உள்ள எல்லராவ பகுதியில் இருந்து காணாமல் போன மூன்று பாடசாலை மாணவிகள் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பலாங்கொடையில் உள்ள பின்னவலாவில் உள்ள எல்லராவ பகுதியில் இருந்து காணாமல் போன மூன்று பாடசாலை மாணவிகள் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்நிலையில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்து, அங்குள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
</p><p>மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைத் தாண்டி இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் சென்றதாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை அடையாளரம் கண்ட நபர் ஒருவர் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1761373601568202%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> </p><p>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பலாங்கொடையில் உள்ள பின்னவலா - எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் நேற்று(31.08.2026) இடம்பெற்றுள்ளது.
</p><h2>
மாயமான 3 பாடசாலை மாணவிகள்</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

காணாமல் போன மூன்று மாணவிகளும் பலாங்கொடை பகுதியில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளனர். </p><p>

இவர்கள் நேற்றைய தினம்(31) வழக்கம் போன்று பயிற்சி வகுப்பிற்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4716864-be85-450e-82bd-826f121d7afc/26-6a9676f30f9d6.webp' /></p><p> </p><p> ஆனால் இதுவரையில், அவர்கள் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

காணாமல் போன மாணவிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பலாங்கொடை பொலிஸாருக்கும் பெற்றோரும் உடனடியாக பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர். </p><ul><li>

பலாங்கொடை பொலிஸ் நிலையம்: 045-2287222 </li><li>

பெற்றோரின் தொலைபேசி எண்கள்: 076-7070913 / 077-1658788</li></ul><p> 

இந்த சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-01T08:36:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த முக்கிய சந்தேகநபர் டுபாயில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tehipaley-s-younger-brother-arrested-in-dubai-1788250296"></link>
            <id>https://tamilwin.com/article/tehipaley-s-younger-brother-arrested-in-dubai-1788250296</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற &quot;தெஹிபாலே மல்லி&quot;யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற "தெஹிபாலே மல்லி"யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் சத்சர என்ற "களு மல்லி" என்பவர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சந்தேகநபர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சிவப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>சந்தேகநபருக்கு எதிராக, தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இன்டர்போல் (சர்வதேச பொலிஸ்) மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5920ae4c-51c2-4642-a622-5588ee9513a4/26-6a968dc13b182.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:33:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் தலைமைக்கு ஈடுகொடுக்க எதிர்க்கட்சிகளில் எவருமே இல்லை! பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/there-is-no-one-to-compensate-for-anura-1788251379"></link>
            <id>https://tamilwin.com/article/there-is-no-one-to-compensate-for-anura-1788251379</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வலுவான தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுத்து
அரசியலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகளில் எவரும் இல்லை என்று
பாதுகாப்புப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வலுவான தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுத்து
அரசியலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகளில் எவரும் இல்லை என்று
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
</p><p>
"நாடு கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டபோது,
தைரியமாகப் பொறுப்பேற்று நாட்டை மீட்சிப் பாதையிலும் ஸ்திரத்தன்மையிலும்
வழிநடத்தியவர் தற்போதைய ஜனாதிபதி மட்டுமே.</p><h2>உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கள்</h2><p> </p><p>அவருக்கு அரசியல் ரீதியாகச் சவால்
விடுக்கக்கூடிய தகுதியான தலைவர் எதிர்க்கட்சிகளில் இல்லை என்பதை மக்கள் நன்கு
அறிவர்.</p><p>

22ஆவது அரசமைப்புத் திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்
குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a962b2bf-2fa1-4c3b-9ca3-ced2c6fca4a1/26-6a968cf5ee3d8.webp' /></p><p> இந்தத் திருத்தம் அரசின்
சுயநலத்துக்காகவோ அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காகவோ கொண்டுவரப்படவில்லை.
நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பலப்படுத்தவும் பொதுமக்களின் நலன்களை
உறுதிப்படுத்தவுமே இது கொண்டுவரப்பட்டது.
</p><p>
நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையிலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை
ஏற்படுத்தும் வகையிலும் எதிர்க்கட்சியினர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து
வருகின்றனர்.
</p><p>
அரசு முன்னெடுக்கும் அனைத்துச் சீர்திருத்தங்களும் நாட்டின் எதிர்காலத்தையும்
மக்களின் நலனையுமே மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கணவன் - பரிதவிக்கும் பிள்ளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wife-killed-in-husband-wife-attack-1788249826"></link>
            <id>https://tamilwin.com/article/wife-killed-in-husband-wife-attack-1788249826</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மனைவி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மனைவி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p>

இந்த சம்பவம், நேற்று(31.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 புதுக்குடியிருப்பு பகுதியில் தேவிபுரம் அ. பகுதியில் இரவு வேளையில், கணவன் - மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><h2>

கணவன் செயலால் பரிதவிக்கும் பிள்ளைகள்</h2><p>

இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த மனைவி, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a4a000-d909-4b9b-bf81-e3416641ec60/26-6a968711f0cbc.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், நான்கு பிள்ளைகளின் தாயார் என்றும் தெரிவந்துள்ளது. </p><p>

மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கணவனும் காயங்களுக்குள்ளான நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/w-WqnVZpFk4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-01T08:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் தற்காலிக கடைகளுக்கான ஏல விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/auction-for-temporary-shops-in-nallur-1788249026"></link>
            <id>https://tamilwin.com/article/auction-for-temporary-shops-in-nallur-1788249026</id>
            <summary type="text">நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபையினரால்
தற்காலிக கடைகளுக்கான ஏல விற்பனை இன்றையதினம்(01.09.2026) நடைபெற்றுள்ளது.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபையினரால்
தற்காலிக கடைகளுக்கான ஏல விற்பனை இன்றையதினம்(01.09.2026) நடைபெற்றுள்ளது.
</p><p>
மாநகர சபை கணக்காளர் செ.காண்டீபன் தலமையிலான மாநகர சபையின் ஏல குழுவினர் யாழ்.மாநகர சபை பிரதி முதல்வரின் பிரசன்னத்துடன் ஏலம் விடப்பட்டன. </p><h2>திருவிழாவிற்கான தற்காலிக கடைகள்</h2><p>அதன்போது பலர்
ஆர்வத்துடன் பங்கேற்று தமக்கான கடைகளை பெற்றுக்கொண்டனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e57fa6e-0564-4c04-a98d-67b56734230a/26-6a9685de5a179.webp' /></p><p>
திருவிழாவிற்கான தற்காலிக கடைகள் திருவிழாவின் ஆரம்பத்தில் ஏலம் விடப்பட்ட
நிலையில், அதில் பெற்றுக்கொள்ளப்படாத கடைகள் நேரில் இன்று ஏலம்விடப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T08:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை! உரிமையாளரிடம் ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wallet-found-in-nuwara-eliya-handed-over-owner-1788249210"></link>
            <id>https://tamilwin.com/article/wallet-found-in-nuwara-eliya-handed-over-owner-1788249210</id>
            <summary type="text">நுவரெலியாவில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை பொலிஸ் அதிகாரியொருவர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். நுவரெலியா தொலைத்தொடர்பு அலுவலகத்தின் முன்பாக தரையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை பொலிஸ் அதிகாரியொருவர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். </p><p>நுவரெலியா தொலைத்தொடர்பு அலுவலகத்தின் முன்பாக தரையில் விழுந்திருந்த
பணப்பையை, நுவரெலியா பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஒருவர் (01) இன்று எடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><h2>உரிமையாளரிடம் ஒப்படைப்பு</h2><p>
நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரியான ஆனந்தா (18915),
இரவு ரோந்துப் பணியின்போது தரையில் விழுந்திருந்த பணப்பையை எடுத்து, அதில்
இருந்த தொலைபேசி எண் மூலம் உரிமையாளரை அடையாளம் கண்டு&nbsp;உறுதிப்படுத்தி பணப்பையை ஒப்படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad070e9-a648-429f-a98f-d85577aad6dd/26-6a968579342d9.webp' /></p><p>
</p><p>
யட்டியந்தோட்ட, கோமடுவாவை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயது
சுரங்கா விதரானா, நுவரெலியாவில் உள்ள பெரிய சுற்றுலா விடுதியில் கண்ணாடி
பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். </p><p>அவர் இரவு (31) நுவரெலியா நகருக்கு
வந்தபோது, ​​அவரது கையிலிருந்து பணப்பை நழுவி காணாமல்போயுள்ளது.</p><p> அந்த பணப்பையில் ரூ. 1,500 பணமும், தனது தங்க மோதிரத்தில்
பதிப்பதற்காக ரூ. 15,000க்கு அவர் வாங்கியிருந்த ஒரு இரத்தினக்கல்லும் தேசிய
அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் என்பன இருந்துள்ளன.</p><p>நுவரெலியா பொலிஸ் பிரிவின்
போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதம பொலிஸ் ஆய்வாளர் ரொஷான் கூரே
மற்றும் நுவரெலியா பொலிஸின் நிர்வாகப் பொறுப்பதிகாரியான பிரதம பொலிஸ் ஆய்வாளர்
ராஜபக்ச ஆகியோர் உரிய விசாரணைக்கு பின் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:58:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சீண்டல்: பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில் வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-health-inspector-remanded-sexual-students-1788247108"></link>
            <id>https://tamilwin.com/article/public-health-inspector-remanded-sexual-students-1788247108</id>
            <summary type="text">கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொதுச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொதுச்சுகாதார பரிசோதகர்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31) கல்முனைத் தலைமையக
பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.
சாஜித் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><h2>விளக்கமறியல்&nbsp;</h2><p> இதன்போது இரு தரப்பு
வாதப்பிரதிவாதங்களையும் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும்
செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு
கட்டளையிட்டார்.
</p><p>
குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கான
வழக்கமான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb128e8-552d-4e57-91a2-4f4e085e95bc/26-6a9684f533eac.webp' /></p><p> இதன்போது, பரிசோதனையில்
ஈடுபட்ட அதிகாரி தமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை
கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.</p><h2>தீவிர விசாரணை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக்
கடிதத்தைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c79930d-d915-4061-bdd6-e014e0375235/26-6a9684f5dc1c1.webp' /></p><p> </p><p>மாணவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார்
மேற்கொண்ட தீவிர விசாரணைகளையடுத்தே இந்த அதிரடிக் கைது நடவடிக்கை
இடம்பெற்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தித் திட்டங்கள் - ஆளுநர் தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/integrated-urban-development-projects-in-north-1788248932"></link>
            <id>https://tamilwin.com/article/integrated-urban-development-projects-in-north-1788248932</id>
            <summary type="text">ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன்
திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் திட்டங்களை விரைவாகத் தயாரித்து
முன்வைக்கும் அள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன்
திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் திட்டங்களை விரைவாகத் தயாரித்து
முன்வைக்கும் அளவுக்கேற்ப மேலதிக நிதியையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு
உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
 எனவே, அனைத்து தொடர்புடைய திணைக்களங்களும்
ஒருங்கிணைந்து செயற்பட்டு, திட்டங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு
முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
</p><p>
உலக வங்கியின் நிதியுதவியுடன், மத்திய விவசாய, கால்நடை, நிலம் மற்றும்
நீர்ப்பாசன அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நகர்ப்புற
அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் ஆரம்பக் கூட்டம்
நேற்று(31.08.2026) பிற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் செயலக மாநாட்டு
மண்டபத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.</p><h2>


120 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டம்</h2><p>
இந்த திட்டத்தின் நோக்கம், வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள
செயற்றிட்டங்கள், தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள்
தொடர்பில் இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
</p><p>
கூட்டத்தின் ஆரம்பத்தில் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜி.பாலகுமார்
வரவேற்புரையாற்றியதுடன், திட்டப் பணிப்பாளர் ஆர்.எச்.டபிள்யூ.ஏ.குமாரசிறி
திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள், நிதி அமைப்பு, நடைமுறைப்படுத்தல் அணுகுமுறை
மற்றும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் தொடர்பான விரிவான முன்வைப்பைச்
செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e5823c-75cb-4e0e-a677-a1723a4c4c96/26-6a9683e52b77b.webp' /></p><p> </p><p>

இதன்போது, 120 மில்லியன் அமெரிக்க டொலர் திட்ட நிதிக்கு மேலதிகமாக
67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளதாகவும், திட்டங்களை எவ்வளவு
விரைவாகத் தயாரித்து முன்வைத்து நடைமுறைப்படுத்துகின்றோமோ அதற்கேற்ப மேலதிக
நிதியையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

ஐந்து ஆண்டுக் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் 2030ஆம்
ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட 12 மாவட்டங்களில்
நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் பிரதான நோக்கம், விவசாய - உணவு
உற்பத்தியாளர்களின் உற்பத்தித்திறன், சந்தை அணுகல் மற்றும் காலநிலைத்
தாங்குதிறனை அதிகரிப்பதாகும்.
</p><h2>
சிறு நீர்ப்பாசனக் குளங்கள் புனரமைப்பு நடவடிக்கை</h2><p>
திட்டத்தின் கீழ் காலநிலைக்கேற்ற விவசாய நுட்பங்கள், உற்பத்திப் பொருட்களுக்கு
பெறுமதி சேர்த்தல், சந்தை ஒருங்கிணைப்பு, இளைஞர் மற்றும் பெண்களின் தொழில்
முயற்சிகளை ஊக்குவித்தல், நீர்வள முகாமைத்துவம், நீர்ப்பாசனம், இயற்கை வளப்
பாதுகாப்பு, விவசாயத் தரவுகள், அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் பயிர்க்
காப்பீடு உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திட்டப்
பணிப்பாளரின் முன்வைப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca90b348-2189-4551-8865-506f051f747f/26-6a9683e60d3f3.webp' /></p><p>

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப விவசாய உற்பத்தியைப் பாதுகாப்பதுடன்,
உற்பத்தியாளர்களைச் சந்தையுடன் வலுவாக இணைத்து அவர்களின் வருமானத்தை
அதிகரிப்பதற்கும், நீர்ப்பாசன மற்றும் வடிகால் வசதிகளை மேம்படுத்துவதற்கும்
திட்டத்தில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p>

இதேவேளை, உற்பத்திப் பங்காளித்துவத்தின் ஊடாக விவசாயிகளுக்கும் தொழில்
முயற்சியாளர்களுக்கும் நிதி மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
தயாரிப்பாளர் அமைப்புகளிடமிருந்தும் இளைஞர் மற்றும் பெண்கள் தொழில்
முயற்சியாளர்களிடமிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள்
கிடைக்கப்பெற்றுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட முன்மொழிவுகளை அடுத்த
கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூட்டத்தில்
தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் சேதமடைந்துள்ள சிறு நீர்ப்பாசனக்
குளங்கள் மற்றும் கால்வாய்களைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 74 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு
மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அவற்றை கேள்விக்கோரலுக்கு உட்படுத்துவதற்கான
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><h2>

விவசாயிகள் வங்கிக் கடன்</h2><p>
இதன்போது நடைபெற்ற பங்குதாரர் கலந்துரையாடலில், விவசாயிகள் வங்கிக் கடன்களைப்
பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டன. </p><p>கடன் பெறுவதற்கான நடைமுறைகள், விவசாயிகளின் அணுகல் மற்றும்
திட்டத்தின் நிதியுதவி பொறிமுறையுடன் அவற்றை இணைக்கும் வழிமுறைகள் தொடர்பில்
விரிவாகப் பதிலளிக்கப்பட்டு, நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள்
குறித்தும் ஆராயப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், திட்டத்தின் ஆரம்பக்
கூட்டத்துக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த திட்டப் பணிப்பாளர் மற்றும்
அவரது குழுவினரை வரவேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05bba503-dfd1-4e0e-a80e-2d911167f642/26-6a9683e6d4cd5.webp' /></p><p> 

வடக்கு மாகாணத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக
நடைமுறைப்படுத்தப்படுவதற்கு தொடர்புடைய அனைத்து திணைக்களங்களினதும்
ஒருங்கிணைந்த செயற்பாடும் துரிதமான நிர்வாக நடவடிக்கைகளும் அவசியம் என்றும்
அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, வனவளத் திணைக்களத்தின் ஒத்துழைப்பு இத்திட்டத்தின்
நடைமுறைப்படுத்தலில் கூடுதலாகத் தேவைப்படுகின்றது என்றும் ஆளுநர்
சுட்டிக்காட்டினார்.</p><p> திட்டங்களுக்குத் தேவையான அனுமதிகள் மற்றும் தொடர்புடைய
செயற்பாடுகள் தேவையற்ற காலதாமதமின்றி முன்னெடுக்கப்படுவதற்காக நிறுவனங்களுக்கு
இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்
தெரிவித்தார்.
</p><h2>
காலாண்டுக்கு ஒருமுறை மீளாய்வுக் கலந்துரையாடல்</h2><p>

இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து காலாண்டுக்கு ஒருமுறை மீளாய்வுக்
கலந்துரையாடல் நடத்துவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம்
திட்டங்களின் முன்னேற்றம், எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் அவற்றைத்
தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3031af6-c6f7-457d-87cd-ffc1746a36cb/26-6a9683e7a8792.webp' /></p><p>
</p><p>
மேலும், வடக்கு மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக்
குறைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், நீர்வளங்களைச் சிறந்த
முறையில் முகாமைத்துவம் செய்து நீண்டகால பொருளாதார முன்னேற்றத்தை
ஏற்படுத்துவதற்கு இந்த திட்டம் முக்கிய வாய்ப்பாக அமையும் எனக் கலந்துரையாடலில்
வலியுறுத்தப்பட்டது.
</p><p>
இந்த நிலையில், கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட செயலர், வடக்கு
மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல், விவசாய அமைச்சின் செயலாளர்,
வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத்
திணைக்களப் பணிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், தொடர்புடைய
பிரதேச செயலர்கள், மாவட்ட விவசாய அதிகாரிகள், நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும்
ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன்
திட்டத்தின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட
அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c82bd3da-cb07-4eb8-9fad-9f34ab9f16f3/26-6a9683e87aab6.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:51:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா - ஹக்கலை விபத்தில் சிக்கிய பேருந்து சேவையிலிருந்து நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-nuwaraeliya-hakkala-prohibition-imposed-1788247609"></link>
            <id>https://tamilwin.com/article/accident-nuwaraeliya-hakkala-prohibition-imposed-1788247609</id>
            <summary type="text">பல குறைபாடுகள் மற்றும் நீண்ட காலமாக முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால்
கடந்த 23 ஆம் நுவரெலியா, ஹக்கலை வீதியில் ஒருவர் மீது மோதிய பேருந்து
சேவையிலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல குறைபாடுகள் மற்றும் நீண்ட காலமாக முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால்
கடந்த 23 ஆம் நுவரெலியா, ஹக்கலை வீதியில் ஒருவர் மீது மோதிய பேருந்து
சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்
ஜாலிய பண்டார தெரிவித்தார்.
</p><p>
கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து அன்று
ஹக்கலை தாவரவியல் பூங்காவிற்குச் சுற்றுலா சென்ற பாடசாலைக் குழந்தைகள் குழுவை
ஏற்றிச் சென்றது. </p><p>ஹக்கலை வெலிமடை வீதியின் சரிவில் பேருந்து சென்று
கொண்டிருந்தபோது, ​​இரத்தினபுரி பகுதியிலிருந்து இதே போன்று சுற்றுலா
பயணத்தில் வந்த ஒருவர் மீது பேருந்து மோதி, அவர் பலத்த காயங்களுடன்
உயிரிழந்தார்.
</p><h2>தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்</h2><p>
பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பேருந்து நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப்
பிரிவினரால் கைது செய்யப்பட்டு, சந்தேக நபர் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டார். மேலும், பேருந்து நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன
ஆய்வாளரின் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9308905e-2331-4a99-bd1c-0cde2f793c69/26-6a9682bdccda1.webp' /></p><p>பேருந்தை ஆய்வு செய்தபோது தரமற்ற மற்றும் அபாயகரமான வாகன உதிரி பாகங்கள்
கொண்டு அது மாணவர் பேருந்தாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததும்,
பேருந்தில் பிரேக்குகளுடன் மூன்று சக்கரங்கள் மட்டுமே இருந்ததும், கை பிரேக்
அமைப்பு செயல்படாமல் இருந்ததும், பேருந்தின் டயர்கள் தேய்ந்திருந்ததும் தெரியவந்தது.</p><p>மேலும் ஒவ்வொரு சக்கரத்திலிருந்தும் ஒரு நட்டு அகற்றப்பட்டிருந்ததும், பிரேக் பூஸ்டர்
செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததும், கால் வைக்கும் பலகைகள் கத்தி போல தேய்ந்து
சேதமடைந்திருந்ததும், கேபினட் கண்ணாடி மாற்றியமைக்கப்பட்டிருந்ததால் விபத்தில்
கண்ணாடி உடைந்ததும் தெரியவந்தது.</p><p> பேருந்து தற்காலிகமாக சேவையிலிருந்து
நீக்கப்பட்டதுடன், பேருந்தில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்து
மற்றொரு ஆய்வுக்கு உட்படுத்துமாறு அதன் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதாக
நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:46:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/priyankara-jayaratna-sentencsed-1788248507"></link>
            <id>https://tamilwin.com/article/priyankara-jayaratna-sentencsed-1788248507</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இன்று&amp;nbsp; தீர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இன்று&nbsp; தீர்ப்பளித்துள்ளார்.&nbsp;</p><p>தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக 'ஸ்ரீலங்கன் கேட்டரிங்'&nbsp; நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>14 ஆண்டுகள் சிறைத்தண்டனை&nbsp;</h2><p>
பிரதிவாதிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 7 ஆண்டுகள் வீதம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தண்டனையை ஏக காலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e639631-6ae0-4126-b2f4-7b6370005478/26-6a968bdb0bc6e.webp' /></p><p>
</p><p>மேலும், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p> அபராதத்தை செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மேலதிகமாக 6 மாதங்கள் வீதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.</p><h2>&nbsp;தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை</h2><p>2014ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தை மாறவில பகுதியிலுள்ள 'கம்பட கேட்டரர்ஸ்' எனும் தனியார் நிறுவனத்திற்கு செலுத்துமாறு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df863170-484d-48b8-a078-8d9ef6575847/26-6a9682c7728ab.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த வழக்கில் எதிர்த்தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ, தனது கட்சிக்காரர் மற்றும் அவரது மனைவி நோயுற்றிருப்பதாகவும், பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரிவித்து தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>எனினும், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதியினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T07:46:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல் - இன்று பதிவாகியுள்ள நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788239934"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788239934</id>
            <summary type="text">நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று இதுவரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று இதுவரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01.09.2026) சற்று சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இவ்வாரம் வெளியிடப்படவுள்ள முக்கிய அமெரிக்க தொழிலாளர் சந்தை தரவுகள் மீது வர்த்தகர்கள் கவனம் செலுத்துவது இதற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6fb3d68-52d0-4c57-a3ae-d76e8b003bd9/26-6a96682620ec9.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
அதன்படி, ஒரு அவுன்ஸ் உடனடி தங்கத்தின் விலை 0.3% குறைந்து, 4,437.10 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><h2>தங்க விலையின் மீதான அழுத்தம்</h2><p>
</p><p>இதற்கிடையில், ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>இதன் விளைவாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்து இரண்டாவது நாளாக எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
குறிப்பாக, அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WOyADF1TYBM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-01T07:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைக்கவசமின்றி பயணித்தவர்களுக்கு எதிராக வழக்கு; போக்குவரத்து பிரிவினர் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-those-travelling-without-helmets-1788246680"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-those-travelling-without-helmets-1788246680</id>
            <summary type="text">சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை
மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல்
மோட்டார் சைக்கிள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை
மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல்
மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட
திடீர் சுற்றிவளைப்பின் போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரினால் நேற்று (31.08.2026)
இத்திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><h2>சோதனை</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின்
மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின்
ஆலோசனைக்கு அமைவாக இச்சோதனை நடத்தப்பட்டது. </p><p>மேலும் கல்முனை பிராந்திய உதவிப்
பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி
வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இக்கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b3cbbac-9b35-4659-a8f0-0c2ec95ec060/26-6a96805b64d51.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>

இதன்போது, பிரதான வீதிகளில் ஹெல்மட் அணியாமல் அபாயகரமாக வாகனங்களைச்
செலுத்தியவர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைப் பேணாத சாரதிகள்
அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டதுடன், 10 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>
பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர்
சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட சம்மாந்துறை
பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிச் செல்பவர்கள் மற்றும் தலைக்கவசமின்றி
வாகனம் செலுத்துவோருக்கு எதிராகத் தட்டச்சு முறையில் நீதிமன்ற நடவடிக்கைகள்
கடுமையாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்த தாய்! வீடொன்றில் பல நாட்களாக சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - சிக்கிய இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-year-old-man-arrested-abusing-13-year-old-girl-1788245653"></link>
            <id>https://tamilwin.com/article/20-year-old-man-arrested-abusing-13-year-old-girl-1788245653</id>
            <summary type="text">புத்தளத்தில் 13 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்கிரிய, ஹிருவெல்பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளத்தில் 13 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
பிங்கிரிய, ஹிருவெல்பொல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த சிறுமியின் தாய் கடந்த மாதம் 01 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், அவர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><h2>சிறுமிக்கு மேலதிக வைத்திய பரிசோதனை</h2><p>

தாய் வெளிநாட்டில் இருந்த காலத்தில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1cecb61-6b68-4eb4-aa9a-924ccddaaf5e/26-6a967ffeef5e5.webp' /></p><p>
</p><p>
இதன்போது அதே வீட்டில் வசித்து வந்த குறித்த இளைஞன், யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சிறுமியை தொடர்ச்சியாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக சிறுமி, நாடு திரும்பிய தனது தாயிடம் தெரிவித்த நிலையில், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக வைத்தியப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:34:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்கலனில் பிடிப்பட்ட ஐஸ்: திடுக்கிட வைக்கும் பல தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drugs-1788244147"></link>
            <id>https://tamilwin.com/article/drugs-1788244147</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 463 கிலோகிராம் &#039;ஐஸ்&#039; போதைப்பொருள் இலங்கையை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 463 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் இலங்கையை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குத் துவாய்களுக்கு நடுவே மறைத்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையில் இவற்றை வெளியிலெடுக்க முயன்றபோது சுங்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் கடும் கண்காணிப்பு காரணமாக வெளியிலெடுக்க முடியாமல் போயிருக்கலாம். </p><p>இதனால் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவசர அவசரமாக நிறுவனங்களின் பெயர்களை மாற்றி கெமரூன் நாட்டிற்கு மறு ஏற்றுமதி செய்வது போல ஆவணங்களைத் தயாரித்திருக்கலாம்.</p><h2>பொலிஸார் சந்தேகம்</h2><p>
</p><p>எனவே இது பாகிஸ்தானிலிருந்து கெமரூன் செல்ல வந்த சரக்கு என்பதை நம்ப முடியாது. இது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளாகவே இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>பாகிஸ்தானில் சமர்ப்பிக்கப்பட்ட மூல ஆவணங்களை பரிசீலித்தால் மட்டுமே இதன் பின்னணியில் உள்ள உண்மையான கடத்தல்காரர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியும்.
இன்னமும் இதன் எடையை அளவிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc9e6b56-eded-40cc-8102-79e3c9a658c1/26-6a96829d50ce3.webp' /></p><p> </p><p>சுமார் 463 கிலோகிராம் எடைகொண்ட 46 பொதிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் முழுமையாக அளவிட்ட பின்னரே இறுதி எடை தெரியவரும்.
எது எப்படியிருப்பினும்இ இது மிகவும் பாரதூரமான சம்பவமாகும். </p><p>காரணம் கடந்த காலத்தில் கடல் வழியாக இலங்கைக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் பெருமளவில் கொண்டுவரப்படுவது தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. </p><p>அமெரிக்கா-ஈரான் பதற்றநிலை மற்றும் வெளிநாடுகளில் இருந்த முக்கிய குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டமை போன்ற காரணங்களால் தெற்கு பகுதி ஊடாக இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்கள் வருவது நிறுத்தப்பட்டிருந்தது.</p><h2>இரகசியத் தகவல்</h2><p> </p><p>
ஆனால் மீண்டும் பழையபடி கொள்கலன்கள் மூலமாக நாட்டிற்குள் போதைப்பொருள் வருகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கமையவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்து இரகசியத் தகவல் கிடைத்தது.</p><p> பின்னர் கடந்த ஜூன் மாதமளவில் இந்தத் தகவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த இரண்டு கொள்கலன்களும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc54570a-5e07-4768-ad01-75eeda34b866/26-6a9670b626d1e.webp' /></p><p>நீதிமன்ற உத்தரவைப் பெற்றே இவை திறக்கப்படவிருந்தன.
நீதிமன்றத்திற்கு விபரங்கள் அறிக்கையிடப்பட்டு பௌர்ணமி தினத்தை ஒட்டிய காலப்பகுதியில் இவற்றைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>இதனிடையே பொலிஸ் விசாரணைகளின் போது ஒருங்கிணைந்து செயல்படாமையின் விளைவுகளைச் சில நேரங்களில் சந்திக்க வேண்டியேற்படுகிறது. இந்த நிலையில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மீண்டும் ஒரு தகவல் கிடைக்கிறது. </p><p>அவர் உடனடியாகச் செயற்பட்டு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்குத் தெரிவித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று இந்த இரண்டு கொள்கலன்களையும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>ஆவணங்களைப் பரிசீலித்தபோது இந்தச் சரக்கு பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்து இங்கிருந்து கெமரூன் (Cameroon) நாட்டிற்கு (மத்திய ஆப்பிரிக்க நாடு) மறு ஏற்றுமதி (Re-export) செய்யப்படவிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>ஆனால் பாகிஸ்தானிலிருந்து கெமரூன் செல்வதற்கு இலங்கையினூடாக இவ்வளவு நீண்ட தூரம் சுற்றி அனுப்ப வேண்டிய&nbsp; அவசியம் என்ன, கெமரூன் நாட்டிற்கு தெற்காசியாவிலிருந்தா அல்லது பாகிஸ்தானிலிருந்தா ஐஸ் போதைப்பொருள் விநியோகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e342eaf-707d-43cc-b60f-2945af6e733a/26-6a96829e19443.webp' /></p><p>இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தபோது கெமரூன் நாட்டிற்கு 'மெத்தாம்பெட்டமைன்' (ஐஸ்) போதைப்பொருள் முக்கியமாக அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. </p><p>மேலும் கெமரூன் நாட்டிற்குள் இருக்கும் இரசாயனக் கூடங்களிலேயே ஐஸ் தயாரிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக கெமரூனில் ஐஸ் போதைப்பொருளை விட 'கொக்கைன்' பயன்பாடே அதிகம். </p><p>அது கொலம்பியா - பெரு - பொலிவியா போன்ற நாடுகளிலிருந்து வருகிறது. ஆவணங்கள் தொடர்பான ஆழமான விசாரணையின் போதே முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:18:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/roshan-amarasinghe-new-director-of-the-cid-1788245795"></link>
            <id>https://tamilwin.com/article/roshan-amarasinghe-new-director-of-the-cid-1788245795</id>
            <summary type="text">குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு (CID) புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு (CID) புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க&nbsp; நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சேவைத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநராகக் கடமையாற்றிய ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e06c206-2aae-4eb2-810b-4b670da584b3/26-6a967b5f0f50a.webp' /></p><p>&nbsp;இருப்பினும், ஷானி அபேசேகர தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:14:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/newzealand-commissioner-sports-minister-meeting-1788245148"></link>
            <id>https://tamilwin.com/article/newzealand-commissioner-sports-minister-meeting-1788245148</id>
            <summary type="text">இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைனுக்கும், இளைஞர் விவகார
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கும் இடையிலான விசேட
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைனுக்கும், இளைஞர் விவகார
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கும் இடையிலான விசேட
இருதரப்பு சந்திப்பொன்று நேற்று(31) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.</p><p>

இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க
கிரிக்கெட் போட்டி 1937 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி நடத்தப்பட்ட
நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு 100 ஆண்டுகளை
எட்டியுள்ளதை முன்னிட்டு, 2027 ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள விசேட
நினைவுச் சின்ன கிரிக்கெட் தொடரை ஒழுங்கமைப்பது குறித்து விரிவாகக்
கலந்துரையாடப்பட்டது.
</p><h2>அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டித் தொடரைப் பார்வையிடுவதற்கும் அதில்
கலந்து கொள்வதற்கும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகரினால் அமைச்சர் சுனில் குமார
கமகேவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b2bfc9-bfdc-43b9-8c17-a8697b416a62/26-6a967a807b8cd.webp' /></p><p>
இலங்கையின் ரக்பி விளையாட்டு வளர்ச்சி, இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும்
இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நியூசிலாந்து
அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உயர்ஸ்தானிகர் இதன்போது
உறுதியளித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகரிக்க போகிறதா மின் கட்டணங்கள்..! வெளிவந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/insufficient-rainfall-lead-electricity-tariffs-1788242513"></link>
            <id>https://tamilwin.com/article/insufficient-rainfall-lead-electricity-tariffs-1788242513</id>
            <summary type="text">எதிர்வரும் நாட்களில் இலங்கையில் போதுமான மழை பெய்யாவிட்டால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக எச்சரிக்கை விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நாட்களில் இலங்கையில் போதுமான மழை பெய்யாவிட்டால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

குறைக்கப்பட்ட நீர்மின் உற்பத்தி மற்றும் பிற மின் ஆதாரங்களைச் சார்ந்திருக்கும் நிலையை அதிகரித்து, மின்சார உற்பத்திச் செலவுகளைக் கூட்டக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கட்டண உயர்வால் பாதிப்பு</h2><p> </p><p>

கூடுதலாக விதிக்கப்படும் எந்தவொரு கட்டண உயர்வும் பொதுமக்களையும், சுற்றுலாத்துறையையும் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

தற்போது இலங்கையில் எல் நினோ தாக்கத்தால் வறண்ட வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42719194-6341-4620-a138-93aea6070711/26-6a9677588196e.webp' /></p><p> </p><p>இது நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை, விவசாய பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
எனினும் அக்டோபர் முதல் இரண்டாவது இடைப்பருவ மழைக்காலத்தில் சாதாரண அளவை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர அவசரமாக பெலவத்தை தலைமையகத்துக்குள் முடக்கப்படும் அதிகாரங்கள்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powers-frozen-within-the-pelawatte-headquarters-1788244417"></link>
            <id>https://tamilwin.com/article/powers-frozen-within-the-pelawatte-headquarters-1788244417</id>
            <summary type="text">அவசர அவசரமாக அரசமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவந்து நாட்டின் அனைத்து
அதிகாரங்களையும் தனது தலைமையகத்துக்குள் முடக்கி, ஏனைய அரசியல் கட்சிகளை
அழித்துச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர அவசரமாக அரசமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவந்து நாட்டின் அனைத்து
அதிகாரங்களையும் தனது தலைமையகத்துக்குள் முடக்கி, ஏனைய அரசியல் கட்சிகளை
அழித்துச் சர்வாதிகாரப் பாதையில் செல்ல ஜே.வி.பி. அரசு முற்படுகின்றது என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,</p><h2>ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p>

"ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், மகாநாயக்க தேரர்கள் மற்றும் சிவில்
அமைப்புகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று
எச்சரித்துள்ள நிலையில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற
முற்படாத அரசு, அரசமைப்புச் சீர்திருத்தம் மூலம் அனைத்து அதிகாரங்களையும்
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்துக்குள் முடக்கி ஏனைய கட்சிகளை அழிக்க
முயல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd292be-1031-4d7b-bf94-d33947db7d90/26-6a96751c5e675.webp' /></p><p>
</p><p>
பொருளாதாரம் சீரடைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அத்தியாவசியப் பொருள்களின்
விலைகள் 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளன. </p><p>எரிபொருள் விலையைக் குறைப்பதாகக்
கூறிவிட்டு இன்று லீற்றருக்கு 100 ரூபாவுக்கும் அதிகமாக அரசு உயர்த்தியுள்ளது.</p><h2>&nbsp;வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொய் வாக்குறுதி</h2><p>

கடந்த காலத்தில் ராஜபக்சக்களைப் பற்றியிருந்த 'அதிகார போதை' நோயே இன்று
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசையும் பற்றியுள்ளது.
</p><p>
அமைச்சர்கள் வீதிச் சந்தைகளுக்குச் சென்று மக்களிடம் பேசிப் பார்த்தால் உண்மை
நிலை புரியும்.

வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெற்ற
அரசு, ஜனநாயகத்தின் பிரதான அங்கமான மாகாண சபைத் தேர்தலை நடத்த எந்தவொரு
விருப்பமும் இன்றி மக்களை ஏமாற்றி வருகின்றது.</p><p> மன்னார் எண்ணெய் அகழ்வு போன்ற
கதைகளைப் பரப்புவது தேர்தல்களைக் காலந்தாழ்த்தும் ஒரு முயற்சியே.

எது எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி கிராம மட்டத்தில் அமைதியான முறையில்
மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுத்து, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக
மக்களை அணிதிரட்டும் என்றார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T06:48:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788243401"></link>
            <id>https://tamilwin.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788243401</id>
            <summary type="text">ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் தினசரி வருகையாளர் வரம்புகளுக்கு இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சுற்றாடல் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் தினசரி வருகையாளர் வரம்புகளுக்கு இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி தலைமையில் அண்மையில் ஹோர்ட்டன் சமவெளி பூங்காவில் நடைபெற்ற விசேட களப் பரிசோதனை மற்றும் முன்னேற்ற ஆய்வுச் சந்திப்பின்போதே இந்த யோசனைகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
</p><h2>கட்டண முறையை மாற்றியமைக்க</h2><p>
இதன்படி, இணையவழி நேர முன்பதிவு முறைமைமூலம் பூங்காவுக்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், முகாமையை மேம்படுத்தவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43bdf43b-c181-4c2a-8515-2d5061f76e6d/26-6a96726662028.webp' /></p><p>
அத்துடன், சுற்றாடல் பொறுப்புமிக்க சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கட்டண முறையை மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான இந்தப் பூங்காவின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:42:47+00:00</updated>
        </entry>
    </feed>
