<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-17T17:22:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் புலிதான் ஆனால் விடுதலைப் புலி அல்ல: சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை கிளப்பும் அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-m-a-tiger-but-not-an-ltte-tiger-1789663763"></link>
            <id>https://tamilwin.com/article/i-m-a-tiger-but-not-an-ltte-tiger-1789663763</id>
            <summary type="text">&amp;nbsp;மேடையில்&amp;nbsp; தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி&amp;nbsp; தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேடையில்&nbsp; தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி&nbsp; தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
</p><p>‘புலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியமை மற்றும் புலம்பெயர் மக்கள் தொடர்பான பேச்சு குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
</p><p>தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3889a67-7240-4207-89f1-1dbd9e60eb87/26-6aac1a1537951.webp' /></p><p>
</p><p> சிங்கள மக்கள் தங்களை ‘சிங்கம்’ எனக் கூறிக்கொள்வது போல, தான் ‘புலி’ எனக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை எனவும், அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் குறிக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
</p><p>தாம் 'விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு' என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். </p><p>
நாட்டின் மறுசீரமைப்பிற்கு அவர்கள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் ஒரு மருத்துவராக களுபோவில, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றி, சிங்கள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஆயுதம் ஏந்தும் எண்ணம் கொண்டவன் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கோ அல்லது கைதுக்கோ தான் அஞ்சவில்லை எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தன்னை விசாரிக்க விரும்பினால் ‘வாட்ஸ்அப்’ மூலம் இருப்பிடத்தை அனுப்பினால் போதுமானது எனவும், செருப்பு மற்றும் சாதாரண உடையில் தானாகவே நேரில் வரத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாதாரண மனிதர்களை இலக்கு வைப்பதை விட்டுவிட்டு, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரன் போன்ற பெரிய குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்ததற்காகத் தற்போது வெட்கப்படுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T16:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரச அலுவலக காலதாமதங்களை குறைக்க அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-for-people-of-jaffna-1789663298"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-for-people-of-jaffna-1789663298</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களில் ஏற்படும் காலதாமதங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, இன்று (17.09.2026) முதல் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.</p><h2>

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>

இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b149eb57-6225-4c67-8dab-eadb06dc8a69/26-6aac187425811.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பொதுமக்கள் அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை 076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நேரடி அழைப்பின் ஊடாகப் பதிவு செய்யலாம்.
</p><p>
அத்துடன், WhatsApp அழைப்பு மூலமாகவும் தொடர்புகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு விரைவாக உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0VExnTldYAE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஹோட்டலில் போதைப்பொருளுடன் பிடிபட்ட பிரபல நடிகர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/actor-fined-rs-5-000-over-cocaine-1789661401"></link>
            <id>https://tamilwin.com/article/actor-fined-rs-5-000-over-cocaine-1789661401</id>
            <summary type="text">கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார&amp;nbsp; கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார&nbsp; கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான வழக்கு இன்று(17.09.2026)&nbsp; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கல்கிஸ்ஸ பிரதான நீதவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><h2>போதைப்பொருளுடன் கைது</h2><p>
வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தை கடற்கரை வீதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c819c88d-8d6e-4740-8734-a26cd9a8a0ea/26-6aac152bdb945.webp' /></p><p>
</p><p>கைதான போது விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கோகோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டால், எவ்வித மன்னிப்பும் இன்றி நேரடியாகப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் என நீதவான் சந்தேகநபர்களுக்குப் பகிரங்க நீதிமன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>விஷ்வ கொடிகார பல்வேறு சிங்களத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் என்பனவற்றில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T16:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் சேமிப்பில் கடும் கட்டுப்பாடு - பாகிஸ்தான் மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-government-s-drastic-spending-cuts-1789661242"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-government-s-drastic-spending-cuts-1789661242</id>
            <summary type="text">பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இந்த விடயம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் இன்று(17.09.2026) அமைச்சரவையில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவு 50% குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வரம்பு ஆயுதப் படைகள், சட்ட அமலாக்க முகமைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் மத்திய வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.</p><h2>


இறுக்கமான நடைமுறைகள்</h2><p>
தொடர்புடைய அறிக்கையின்படி, 2026/27 நிதியாண்டிற்கான திரும்பத் திரும்ப வராத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்திலிருந்து மாதத்திற்கு 5% குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bac8803-2aaa-4dba-862a-bd692cb58400/26-6aac13219b0a8.webp' /></p><p>
</p><p>
புதிய வாகனங்கள் மற்றும் சில நீடித்த பொருட்கள் வாங்குவதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுப்பாடுகள் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பொருந்தாது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. </p><p>

வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் தேவைப்பட்டால், அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் விமானங்களில் சாதாரண பயணிகளுடன் ஒரே வகுப்பில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><h2>
மட்டுப்படுத்தப்படும் அரசக் கூட்டங்கள்</h2><p>
அரசு நிறுவனங்களின் கூட்டங்களை முடிந்தவரை காணொளிக் கருத்தரங்குகள் மூலம் நடத்தவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுக்கள் வருகை தரும்போது தவிர, அதிகாரப்பூர்வ அரசு விருந்துகளை நடத்த வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00aa8c1f-f227-4d08-9251-9b7eca7593c8/26-6aac132269084.webp' /></p><p>
</p><p>

அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ மாநாடுகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அரங்குகள், குழு அறைகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ வசதிகளை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கூடுதலாக, திருமணங்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் ஒரே ஒரு வகை உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான கடைகளின் தற்போதைய மூடும் நேரங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><h2>

இரவு 10 மணிக்கு பின்னர் மூடப்படும் சேவைகள்</h2><p>
அதன்படி, பொதுக் கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9 மணி வரையிலும், பொழுதுபோக்கு இடங்கள் இரவு 10 மணி வரையிலும் மூடப்பட வேண்டும்.</p><p>

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம், ஆனால் பார்சல் மற்றும் வீட்டு விநியோக சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e407e2cd-9717-4ea5-9b06-80bd52d86352/26-6aac13231c0e1.webp' /></p><p>
</p><p>
மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள், மருத்துவப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள், மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போது, ​​தேவைப்படும் பட்சத்தில் ஒவ்வொரு வழக்கையும் பொறுத்து விலக்குகள் பரிசீலிக்கப்படலாம் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மோசமாக நடந்துக் கொண்ட கனேடிய பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பயணப் பையுடன் மருத்துவ மையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண் தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார். </p><p>அவர் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் அவசர உதவி எண் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. </p><h2><b>பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணை</b></h2><p>இந்த முறைப்பாட்டிற்கமைய, சுற்றுலாப் பிரிவுப் பொறுப்பதிகாரி மிலன் ராஜபதிரன தலைமையிலான குழுவினர் அந்த மருத்துவ ஆய்வகத்திற்கு சென்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99912ebe-e67a-47aa-a7d4-a88ed96e73f7/26-6aac11a3a15df.webp' /></p><p>கனேடிய பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் செல்லுபடியாகும் விசா அல்லது கடவுச்சீட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது. </p><p>சந்தேக நபர் பல ஆண்டுகளுக்கு முன்பு அஹங்கம பகுதியில் வசித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. </p><p>

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கனேடிய பெண், நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. </p><p>இந்தக் காலப்பகுதியில் அவரை வெலிசர பகுதியில் உள்ள வெளிநாட்டினருக்கான தடுப்பு முகாமிற்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. </p>]]></content>
            <updated>2026-09-17T16:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா- ஈரான் போர் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. கண்டனம் - விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-condemns-us-iran-military-actions-1789660336"></link>
            <id>https://tamilwin.com/article/un-condemns-us-iran-military-actions-1789660336</id>
            <summary type="text">ஈரானில் உள்ள பாடசாலை மற்றும் விளையாட்டு மையமொன்றின் மீது அமெரிக்கா நடத்திய
இராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், அதேவேளை அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள பாடசாலை மற்றும் விளையாட்டு மையமொன்றின் மீது அமெரிக்கா நடத்திய
இராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், அதேவேளை அரச
எதிர்ப்புப் போராட்டங்களை அடக்குவதற்கு ஈரான் மனிதகுலத்திற்கு எதிரான
குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக
ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த பெப்ரவரி மாதம் ஈரானின் மினாப் நகரில் அமைந்திருந்த பாடசாலையொன்றின்
மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 120 பாடசாலை சிறுவர்கள் உட்பட
150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
</p><p>
குறித்த பாடசாலை பொதுமக்கள் பயன்படுத்திய கட்டிடம் என்பதை உறுதிப்படுத்தாமல்
அமெரிக்கா நடத்திய இந்த இலக்குத் தவறான தாக்குதல், சர்வதேசச் சட்டத்தின் கீழ்
போர்க்குற்றமாகும் என ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>

மக்கள் மீதான சித்திரவதை</h2><p>

இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் ஈரானில் வெடித்த அரச எதிர்ப்புப்
போராட்டங்களின் போது, பொதுமக்கள் மீது ஈரான் அரசாங்கம் மேற்கொண்ட
அடக்குமுறைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27df25f9-cd13-402f-aac3-b45eba15a574/26-6aac0dc132ad0.webp' /></p><p>
</p><p>
இதில் சட்டவிரோதப் படுகொலைகள், சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும்
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் போன்றவை உள்ளடங்குவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஈரான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விடவும், இந்த
அடக்குமுறைகளில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக
இருக்கும் என ஐ.நா குழு கவலை வெளியிட்டுள்ளது.</p><p>

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்
சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T15:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணாமல் போன மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-missing-in-katunayake-airport-1789620426"></link>
            <id>https://tamilwin.com/article/women-missing-in-katunayake-airport-1789620426</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். பிங்கிரிய பகுதியின் வீரபோகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். </p><p>காணாமல் போன அப்பெண் தமரி செவ்வந்திகா விஜேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> முறைப்பாட்டிற்கமைய, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5.12 மணியளவில் அவர் தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.</p><p> </p><h2><b>பெண்ணின் உடைமைகள்</b></h2><p>வீடு திரும்பும்போது தங்கள் ஐந்து பிள்ளைகளுக்கும் சொக்லட் வாங்கி வருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5777e0a-d409-4d34-b288-217120fe2ccd/26-6aab74a31c8c7.webp' /></p><p>குறித்த பெண்ணின் உடைமைகள் காணாமல் போனமை குறித்தும் விமான நிலையப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். </p><p>ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக நாடு திரும்பியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>தனது மனைவியை கண்டுபிடிப்பதில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுத்து உதவுமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


</p>]]></content>
            <updated>2026-09-17T15:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபா ஒப்பந்தம்! இரு சிறுவர்களை பலியெடுத்த தெஹிவளை குண்டுவீச்சின் பின்னணி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwalla-crime-1789655015"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwalla-crime-1789655015</id>
            <summary type="text">தெஹிவளையில் அண்மையில் இரண்டு அப்பாவிச் சிறுவர்களைப் பலியெடுத்த கைக்குண்டுத் தாக்குதல் விவகாரம் வெறும் ஒரு லட்சத்தி இருபதினாயிரம் ரூபா ஒப்பந்தத்துக்காக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளையில் அண்மையில் இரண்டு அப்பாவிச் சிறுவர்களைப் பலியெடுத்த கைக்குண்டுத் தாக்குதல் விவகாரம் வெறும் ஒரு லட்சத்தி இருபதினாயிரம் ரூபா ஒப்பந்தத்துக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p>

குறித்த குண்டுவீச்சுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விபரம் வெளிப்பட்டுள்ளது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>

தெஹிவளையில் கடந்த 11ஆம் திகதி ஒரு வீட்டின் மீது கையெறி குண்டை வீசிய நபர், பொலிசாருக்கு பல தகவல்களை அளித்துள்ளார்.
</p><p>
இந்தக் கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு அப்பாவிச் சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களது தந்தை படுகாயம் அடைந்தார்.

பொலிஸ் மா அதிபரின் (IGP) அறிவுறுத்தலின் பேரில், இந்தச் சம்பவம் குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு அனுப்பப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/872fa23f-44f1-4979-9329-a87ab1fb9c21/26-6aabff2406f86.webp' /></p><p>

இத்தகைய சூழலில், குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p>
விசாரணையின் போது, ​​2025ஆம் ஆண்டு நெதிமாலை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததும், ஜூலை 19ஆம் திகதி பிணையில்&nbsp; செல்ல அனுமதிக்கப்பட்டமை தெரியவந்தது.</p><p>

பின்னர், ஒகஸ்ட் 1ஆம் திகதி, ரத்மலானையில் குடு அஞ்சுவின் நெருங்கிய கூட்டாளியை அவர் சுட்டுக் கொன்றுள்ளார்.</p><h2>தெஹிவளை குண்டுத் தாக்குதல்&nbsp;</h2><p>

போதியாவத்தே அவிஷ்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோர் தனக்கு ஐந்து லட்சம் ரூபா பணமும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தெஹிவளை வீட்டில் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான ஒப்பந்தத்தை போதியாவத்தே அவிஷ்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோர் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce61ef7-3112-40e0-b666-009cce761cd8/26-6aabff24d1342.webp' /></p><p>

அதன்படி, தாக்குதல் நடத்தச் சென்ற முச்சக்கர வண்டியிலும் கையெறி குண்டுகள் ஏற்றப்பட்டிருந்தன.</p><p> மேலும், தாக்குதலுக்குத் தொடர்புடைய வீட்டைக் காட்டுவதற்காக மற்றொரு நபர் அங்கு இருந்ததாகவும் சந்தேக நபர் கூறியதாகத் தெரிகிறது.

இருப்பினும், அந்த நபர் தனக்குத் தவறான வீட்டைக் காட்டியதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.</p><p>

தாக்குதலுக்குப் பிறகு, போதியாவத்தேஅவிஷ்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோர் தனக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து, பிபிலே பகுதிக்குத் தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
பிபிலேயில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.</p><p>

இதற்கிடையில், தாக்குதலுக்காக வீட்டைக் காட்டிய நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2936695-bcfe-4d35-bd16-e761af1c9087/26-6aabff233ae7e.webp' /></p><p>
</p><p>
விசாரணையின் போது, ​​அவிஷ்கவும் கொஸ்மல்லியும் அதற்காக அவருக்கு 20,000 ரூபா கொடுத்தது தெரியவந்தது.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவால் நடத்தப்பட்டு வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T14:55:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் உல்லாசம் - ஒரே நாளில் குணமடைந்த ஷிரந்தி! அம்பலமான ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-enjoying-in-singapore-1789650949"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-enjoying-in-singapore-1789650949</id>
            <summary type="text">சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. </p><p>

கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றையதினம் நாட்டில் இருந்து சிங்கபூருக்கு சென்றிருந்தார். </p><p>

இந்நிலையில் இதயம் தொடர்பான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சிங்கபூரில் மிகவும் பிரபல்யம் பெற்ற மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h2>

கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி</h2><p>ஆனால் மிகவும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7U6bvzOx1AE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

நோயாளியாக சென்ற ஒரே நாளில் குணமடைந்து பொருட்களை கொள்வனவு செய்யும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.</p><p> </p><h3><b>

புதிய புகைப்படங்கள்</b></h3><p>ஏற்கனவே நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே ஷிரந்தி சிங்கப்பூர் சென்றுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f8ef4d-5d63-49fd-889d-69f3cde1e3e7/26-6aabf2da4ea2e.webp' /></p><p>இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஷிரந்தியின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. </p><p>

நிதி மோசடி குற்றச்சாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3087eea-7ff8-431e-9cdc-de9a87d5a283/26-6aabf2d99a43e.webp' />&nbsp;&nbsp;</p><p> </p>]]></content>
            <updated>2026-09-17T14:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் துறைமுகத்தால் வீழ்ந்த இலங்கை - சிக்கலில் அநுர..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற ஏற்கனவே இருந்த முக்கிய உட்கட்டமைப்புகள் முழுமையான திறனை எட்டுவதற்கு முன்னதாகவே அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்ற பாரிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>

அத்தகைய திட்டங்களுக்காக வர்த்தகக் கடன்களைப் பெற்றுக்கொண்டு முதலீடு செய்தமை நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்பார்த்த அளவில் வருமானத்தை ஈட்டாத நிலையில், அதனை 99 வருட குத்தகைக்கு வழங்கியமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

ஒரு திட்டத்தை அமைப்பதற்காக கடன் பெற்று, பின்னர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்தச் சொத்தையே குத்தகைக்கு வழங்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
குறிப்பாக, ஊழலை கட்டுப்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vV22r-uibKE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T14:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார அமைச்சரால் வவுனியாவில் தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foundation-stone-nurses-hostel-vavuniya-1789650321"></link>
            <id>https://tamilwin.com/article/foundation-stone-nurses-hostel-vavuniya-1789650321</id>
            <summary type="text">வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இன்று (17.09)
இடம்பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இன்று (17.09)
இடம்பெற்றது.
</p><p>
வவுனியா வைத்தியசாலையின் நான்கு மாடிகளை கொண்ட குறித்த விடுதிக்காக மாகாண
குறித்து ஒதுக்கப்பட்ட நிதியாக 114.9 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி நிகழ்வை
ஆரம்பித்து வைத்தார்.
</p><p>
அதனைத்தொடர்ந்து சிறுவர் மருத்துவ விடுதிக்கான பூங்கா ஒன்றையும் அவர் திறந்து
வைத்திருந்தார்.
</p><p>
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான்,
மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, பல்கலைக் கழக துணைவேந்தர் அற்புதராஜா,
வைத்தியசாலை பணிப்பாளர் நிலக்சன், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை
சமூகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T13:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காட்டிக்கொடுத்த கோடீஸ்வர வர்த்தகரை பழிவாங்க ராஜபக்சர்கள் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawsuit-in-australia-against-nimal-pererah-1789648782"></link>
            <id>https://tamilwin.com/article/lawsuit-in-australia-against-nimal-pererah-1789648782</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற லஞ்ச விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற லஞ்ச விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வழக்குத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவினர் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2><b>நிதி மோசடி</b></h2><p> 

மேலும், நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படும் விசாரணையில் அவர் நான்காவது சந்தேக நபராகவும் பெயரிடப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d685ff8-dfca-4b49-b13c-755dac402ce9/26-6aabe1c21fd02.webp' /></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனாவின் மனைவிக்கு எயார்பஸ் நிறுவனம் வழங்கிய இலஞ்ச&nbsp; பணத்தில் ஒரு பகுதியான 800,000 அமெரிக்க டொலர்கள், தனது நிறுவனத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதை நிமல் பெரேரா தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார்.</p><p>

அத்துடன், அதற்கு இணையான தொகையான 100 மில்லியன் ரூபாயை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார். </p><p>

சர்வதேச இலஞ்ச பரிவர்த்தனை மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை தனது சொந்தக் கணக்கில் வைப்பிலிட்டதன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டதை நிமல் பெரேரா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
இதற்கு பழிவாங்கும் நோக்கில் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-17T12:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா இராமநாதன் எம்.பிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-mp-archuna-1789647952"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-mp-archuna-1789647952</id>
            <summary type="text">பேஸ்லைன் வீதியில் கார் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி, ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்லைன் வீதியில் கார் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி, ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வழக்கின் பிரதிவாதித் தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கார் விபத்து</h2><p>

2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி லசந்த அபேவர்தன என்பவர் பேஸ்லைன் வீதியில் காரை செலுத்திச் சென்றபோது, அவரது காரை விபத்துக்குள்ளாக்கி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602c5feb-8cd1-4399-a362-d3a134edc242/26-6aabe0fb7d40e.webp' /></p><p>
</p><p>
கிராண்ட்பாஸ் பொலிஸார் இந்த வழக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று (17) முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவடைந்தது.</p><p>

இதனையடுத்து, பிரதிவாதித் தரப்பு சாட்சிய விசாரணைக்காக வழக்கு நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:45:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர் - இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-chinese-ambassador-meets-prime-minister-harini-1789647512"></link>
            <id>https://tamilwin.com/article/new-chinese-ambassador-meets-prime-minister-harini-1789647512</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16.09.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16.09.2026) அலரி மாளிகையில் நடைபெற்றது.
</p><p>
2027ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள இலங்கை - சீன இருதரப்பு இராஜதந்திர
உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்வி, டிஜிட்டல்மயமாக்கல்
மற்றும் அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து
இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.</p><h2>உதவியை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p>
</p><p>
பாடசாலை மாணவர்களுக்காகச் சீன அரசு வழங்கும் சீருடை உதவி தொடர்பில் விசேடமாகக்
கலந்துரையாடப்பட்டது. வருடாந்த தற்காலிக ஏற்பாட்டுக்குப் பதிலாக, கல்வி
ஆண்டின் ஆரம்பத்தில் உரிய நேரத்தில் சீருடைகளை வழங்கும் வகையில், 3 முதல் 5
வருடங்கள் வரையான நீண்டகாலக் கட்டமைப்பின் ஊடாக இந்த உதவியை
நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e1205af-d0c4-448e-8eb8-e2cd22503d68/26-6aabdced4bd6c.webp' /></p><p>
</p><p>
கல்வித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கையாக, சீனாவின் உதவியுடன்
நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் முன்னேற்றம் மீளாய்வு
செய்யப்பட்டது.</p><p> இதன் கீழ், நாடளாவிய ரீதியிலுள்ள 500 டிஜிட்டல்
வகுப்பறைகளுக்காக 900 ஸ்மார்ட் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. </p><p>அத்துடன், கல்வி
டிஜிட்டல்மயமாக்கல் கொள்கைகளைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல்
செயலணிக்குழு குறித்துப் பிரதமர் தூதுவருக்கு விளக்கமளித்ததுடன், சீன அரசின்
முழுமையான ஆதரவையும் தூதுவர் உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d86cc73-b1e1-4c24-ab4d-b2ae13ec7d41/26-6aabdcee61f10.webp' /></p><h2>இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு</h2><p>
</p><p>
சீன அரசின் புலமைப்பரிசில் திட்டம் மற்றும் சீனத் தூதுவர் புலமைப்பரிசில்
திட்டம் மூலம் இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்
குறித்தும், பிள்ளைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பிராந்திய மற்றும்
சர்வதேச மட்டங்களில் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும்
பேசப்பட்டது.
</p><p>
'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது சீனா வழங்கிய ஒத்துழைப்பைப்
பிரதமர் பாராட்டியதுடன், திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள்
மற்றும் வெள்ள நிலைமையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச்
சேதங்களுக்குத் தனது கவலையையும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் திறனை மேம்படுத்த இரு
நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3be3413-70c2-4028-9acd-e02aca0a01ff/26-6aabdcef369da.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95940024-be8b-457f-b3ac-03b6b2661c07/26-6aabdcf00abc0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடும் மகிந்தவின் சாம்ராஜ்ஜியம்.. பரிதாப நிலையில் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-family-podujana-peramuna-politics-1789643633"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-family-podujana-peramuna-politics-1789643633</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய பொதுக்கூட்டம் இறுதியில் அக்கட்சிக்கு குழப்பம், முரண்பாடுகள் மற்றும் ஒழுக்கமின்மை நிறைந்த ஒரு அரசியல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய பொதுக்கூட்டம் இறுதியில் அக்கட்சிக்கு குழப்பம், முரண்பாடுகள் மற்றும் ஒழுக்கமின்மை நிறைந்த ஒரு அரசியல் பேரழிவாக மாறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த கட்டுரையில், கூட்டத்தை தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், மதுபோதையில் இருந்த கட்சி ஆதரவாளர்கள் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதும், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை வெளிப்படையாக 'திருடன்' என்று முழக்கமிட்டதும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p> </p><p>மேலும், பலர் வரவிருக்கும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்றும் வெளிப்படையாகக் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>நாமலின் கைது..&nbsp;</h2><p>எயார்பஸ் (Airbus) கொள்முதல் மோசடி தொடர்பாக செப்டெம்பர் 4ஆம் திகதியன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது; எனவே, இந்தக் கைது நடவடிக்கையை மக்கள் அனுதாபத்தைப் பெறுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த SLPP முயன்றதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a97d11-e786-409d-99b3-1daba4793b64/26-6aabd67403c22.webp' /></p><p>அவர் இல்லாத நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை கட்சி மேடைக்குக் கொண்டு வந்தமை பரவலான பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.&nbsp;</p><p>அரசியல் பிழைப்புக்காக உடல்நலம் குன்றிய ஒரு தலைவரைப் பயன்படுத்திக் கொண்டதாக இது விமர்சிக்கப்படுவதாக குறித்த கட்டுரை தெரிவிக்கின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b3513a-e265-464e-9bbb-e8e57fadef05/26-6aabd671c0098.webp' /></p><p>மேலும், இக்கூட்டம் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிக்குள் நிலவும் ஆழமான கொள்கை ரீதியான குறைபாடுகள், இரட்டை வேடம் மற்றும் பிளவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.</p><p>



இக்கூட்டம் எதிர்க்கட்சிப் பிரிவுகளுக்கு இடையிலான கடுமையான உட்கட்சி மோதல்களையும் முரண்பாடான கூட்டணிகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p></p><h2>தள்ளாடிய நிலையில் மகிந்த..&nbsp;</h2><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் மாறிய முன்னாள் கூட்டாளிகளைப் பேச்சாளர்கள் கடுமையாகச் சாடினர்; அதே நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், இயற்கை உரம் தொடர்பான நெருக்கடி போன்ற கடந்தகால நிர்வாகத் தோல்விகளுக்கு அவர்கள் மீது குற்றம் சாட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3b86bc8-f6c3-4cb9-887b-a5d7e3a87fe3/26-6aabd67343461.webp' /></p><p> குறிப்பாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மேடையில் தன்னை பற்றி வெளிப்படையாக கருத்து ஒன்றை முன்வைத்த போது, ​​விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற முக்கிய தேசியவாதத் தலைவர்கள் கூட்டத்தினருடன் இணைந்து ஆரவாரம் செய்தனர்; </p><p>இது அவர்களின் தீவிர தேசபக்தி ஒரு அரசியல் நாடகம் என்பதையும், கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் அவர்களுக்கு இருந்த பற்றாக்குறையையும் வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87f762ed-3180-4439-b594-0a3f05fd552b/26-6aabd67286cd9.webp' /></p><p>இந்தக் குழப்பநிலை முக்கிய எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் காணப்படும் ஒரு பரந்த போக்கை பிரதிபலிக்கிறது; நீண்ட காலத் திட்டம் ஏதுமின்றி, உடனடி எதிர்வினைகளைச் சார்ந்த குறுகிய கால உத்திகளிலேயே அவர்கள் சிக்கியுள்ளதாக அந்த கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது.&nbsp;</p><p>இதன் காரணமாக, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் அரசியல் வியூகங்களுக்கு தானே வழிவகுத்து கொடுத்தது போல் ஒருநிலையில் மொட்டுக் கட்சி தற்போது இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qq-62n-HLu8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-17T12:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை தாக்கிப் பெண் ஒருவர் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-in-elephant-attack-1789643602"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-in-elephant-attack-1789643602</id>
            <summary type="text">பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரலகங்வில, ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><h2>காட்டு யானை தாக்குதல்</h2><p>
</p><p>
மேற்படி பெண் இன்று அதிகாலை தனது வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த
வேளையிலேயே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்று பொலிஸாரின்
முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a81482-c4af-4f3d-a55b-b87b4f0fade2/26-6aabd8ff62b94.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:12:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது! என்பிபி அமைச்சர் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-will-not-be-intimidated-by-anything-1789646655"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-will-not-be-intimidated-by-anything-1789646655</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை
அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல்
நகர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை
அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல்
நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள் எனவும்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
தெரிவித்தார்.</p><p>

பதுளை - ஹெலிஎல பிரதேசத்தில் இன்று(17)&nbsp; ஊடகங்களுக்குக் கருத்து
வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>அரசு கிராமம் கிராமமாக மக்கள் சந்திப்புகளை நடத்துவது எதிர்க்கட்சியினரின்
நடவடிக்கைகளுக்குப் பயந்து அல்ல. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்தக்
கூட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்
சூழ்நிலைகள் காரணமாகவே அவை தாமதமாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09bc28dd-d18e-43ef-a055-76250b8404ed/26-6aabd91598d0e.webp' /></p><p> </p><p>மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு
அமைய, அபிவிருத்திப் பணிகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளும்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.</p><h2>மோசடிகள் அம்பலம்</h2><p>
</p><p>
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் அம்பலமாகி வரும் நிலையில்,
முந்தைய ஆட்சியாளர்களே மக்களிடம் பழிவாங்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
</p><p>நீதித்துறையின் செயற்பாடுகளில் அரசு எந்தவித தலையீடும் செய்யவில்லை.
விசாரணைகளை முறையான மற்றும் விரைவான வழியில் நடத்துவதற்குத் தேவையான வசதிகளை
மட்டுமே செய்து கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d72cac-77d1-4368-a5a7-4c0f39a295af/26-6aabd9164c691.webp' /></p><p>

குற்றப் புலனாய்வு விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்படும்போது,
சிதைந்துபோன எதிர்க்கட்சிக் குழுக்கள் அச்சம் காரணமாக ஒன்றிணைய முற்படுவது
இயல்பான ஒரு விடயமே தவிர, அதில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை.</p><p>

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களோ அல்லது
எதிர்க்கட்சியினரோ என்ற பாகுபாடின்றி சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே
கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T12:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெமட்டகொடவில் பரபரப்பு! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shot-at-dematagoda-black-bridge-1789644659"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shot-at-dematagoda-black-bridge-1789644659</id>
            <summary type="text">தெமட்டகொட களுபாலம் பகுதியில் இன்று(17) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெமட்டகொட களுபாலம் பகுதியில் இன்று(17) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.</p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;ஒருவர் பலி</h2><p>

குறித்த நபர் தனது முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LkJmXvR9a1Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் அல்லது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.</p><p>

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கு செல்லும் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்.. நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renuka-perera-arrested-bribery-inquiry-comission-1789626591"></link>
            <id>https://tamilwin.com/article/renuka-perera-arrested-bribery-inquiry-comission-1789626591</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரே...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>56 அனுமதிப்பத்திரங்கள்&nbsp;&nbsp;</h2><p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/667a4d71-873e-443e-bc09-642c31994fdd/26-6aab8b48b898a.webp' /></p><p>

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட நடைமுறை தொடர்பானவையே இக்குற்றச்சாட்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>

விசாரணை மற்றும் அதனைத் தொடரும் சட்ட நடவடிக்கைகள் குறித்த மேலதிக விவரங்கள் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாகவும் பெரேரா மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6n0dAt4jQ1s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:31:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் விமானக் கொள்முதல் சர்ச்சை! நாமல் தொடர்பில் நீதிமன்றில் அம்பலமான உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-emails-reveal-communications-with-namal-1789627963"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-emails-reveal-communications-with-namal-1789627963</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணையின்போது மீட்கப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணையின்போது மீட்கப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கும் ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளன என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று(16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச நேற்றையதினம்(16) நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.</p><h2>ஏர்பஸ் பரிவர்த்தனை&nbsp;</h2><p>
</p><p>
 ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக ராஜபக்சவிற்கும் ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களை தடயவியல் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக அரசுத் தரப்புக்காக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்தார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a96db4-0f75-46f8-810d-70fcf20de11f/26-6aab968274fe9.webp' /></p><p> </p><p> தடயவியல் விசாரணையின் போது, ​​ஏர்பஸ் அதிகாரிகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல் தகவல்களை எங்களால் மீட்க முடிந்தது.</p><p> 

அந்த மின்னஞ்சல்கள், இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக சந்தேக நபர் செயல்பட்ட விதத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் குறிப்பிட்டார்.</p><p>

ஏர்பஸ் அதிகாரிகள் இலங்கைக்குப் பயணம் செய்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடமும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மேலும் தெரிவித்தனர்.</p><h2>ஜனாதிபதியின் மகன்</h2><p>
</p><p>
அந்தப் பரிவர்த்தனை தொடர்பான வெளிநாட்டு தடயவியல் தணிக்கை ஆவணங்களையும் புலனாய்வாளர்கள் பெற்றிருந்தனர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

புலனாய்வாளர்களால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், மார்ச் 23, 2013 திகதியிட்ட ஏர்பஸ் மின்னஞ்சல் ஒன்றும் அடங்கும்.</p><p> 

அதில், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான நிறுவனத்தின் தரப்பை "ஜனாதிபதியின் மூலமாக" அமைச்சரவையிடம் முன்வைப்பதாக "ஜனாதிபதியின் மகன்" உறுதியளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db0c5a1b-3221-47d6-a552-2797f3be6457/26-6aab96832c40c.webp' /></p><p>
</p><p>
ஏர்பஸ் விமானக் கொள்முதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிகள் தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான விசாரணை நடவடிக்கைகளின் போது இந்த சமர்ப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

இந்த வழக்கில் மற்றொரு சந்தேக நபராக உள்ள பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான பிஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;23ஆம் திகதி வரை விளக்கமறியல்</h2><p>

அந்த நிதிகளில் இருந்து 800,000 அமெரிக்க டொலர்கள், தொழிலதிபர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் கணக்கிற்குப் பின்னர் மாற்றப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>

சுமார் 100 மில்லியன் ரூபாய்க்கு சமமான தொகை பின்னர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, பெரேரா இலஞ்ச ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த சாட்சியத்திலும் பிரமாணப் பத்திரத்திலும் கூறியிருந்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896d6c29-a9e1-4082-864e-fd4e27aa9a15/26-6aab9683d640e.webp' /></p><p>
</p><p>
ராஜபக்சவின் வழக்கறிஞர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.

ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் அனில் சில்வா, அப்பணம் பெரேராவுக்குச் சொந்தமான கணக்கில் பெறப்பட்டதாக வாதிட்டதோடு, தனது கட்சிக்காரருக்கு எதிரான அரசுத் தரப்பின் வழக்கையும் மறுத்து, பணம் செலுத்தியது தொடர்பான குற்றச்சாட்டைக் கேள்விக்குள்ளாக்கினார்.
</p><p>
பணச்சலவை விசாரணையில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, ராஜபக்சவின் பிணை மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவிருக்கும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may Like this..<br><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2sl4gFFV-FM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-17T11:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ordered-immediate-remove-waste-dumped-1789643422"></link>
            <id>https://tamilwin.com/article/ordered-immediate-remove-waste-dumped-1789643422</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அள்ளுவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

கீரிமலை பகுதியில் சுமார் 300 டிப்பர் அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவற்றை மீள அள்ளுமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><h2>&nbsp;விசேட கூட்டம்</h2><p>

கழிவுகளை மீள அள்ளுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து, வலி. வடக்கு பிரதேச சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று(17) வியாழக்கிழமை நடைபெற்றிருக்க வேண்டிய சபை அமர்வை புறக்கணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/695af07e-2409-48c7-b9a8-9d2bd7203577/26-6aabccd3a0951.webp' /></p><p>
</p><p>
கடந்த 14ஆம் திகதி கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கூட்டம் நடத்துவதற்கு சபையில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கூட்டம் நடைபெறவில்லை எனவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.</p><p>

இதனையடுத்து, சபை அமர்வு நடைபெறாதமை தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் வலி. வடக்கு பிரதேச சபையினருடன் இணைந்து கீரிமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டனர்.</p><h2>&nbsp;கீரிமலை பகுதியில் கழிவுகள்</h2><p>

இதன் பின்னர், கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், குறித்த இடம் கழிவுகளை கொட்டுவதற்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது மற்றும் கொட்டப்பட்ட கழிவுகளை எவ்வாறு மீள அகற்றுவது என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நாளை வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறும் உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c68197-b6bc-4324-99b6-b11984d24b46/26-6aabccd4762b1.webp' /></p><p>

இதேவேளை, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்து, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
தெல்லிப்பழை பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த விவகாரம் தொடர்பில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.</p><p>

கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T11:19:56+00:00</updated>
        </entry>
    </feed>
