<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-24T19:27:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோருக்கு கிடைத்த சலுகை இனி இல்லை! ஜனாதிபதியாக கனவு காண்பவருக்கு தற்போதைய அமைச்சர் அறிவுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/current-minister-s-advice-to-sl-next-president-1787597826"></link>
            <id>https://tamilwin.com/article/current-minister-s-advice-to-sl-next-president-1787597826</id>
            <summary type="text">எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்பவர்கள், தங்களின் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பழைய சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது என்பதை நினைவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்பவர்கள், தங்களின் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பழைய சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். </p><p>

மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

கடந்த காலங்களில் நாட்டில் நிலவி வந்த பண பலத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்திற்குச் சென்ற பழைய அரசியல் கலாசாரம் இனி நடைபெறாது என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><h2>சாதாரண மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..</h2><p> </p><p>

முன்னைய ஆட்சிகளில் குறிப்பிட்ட சில குடும்பங்களும், அவர்களின் நண்பர்களும் அதிகாரத்தையும், சிறப்புச் சலுகைகளையும் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து அனுபவித்து வந்ததோடு தாங்கள் செய்த தவறுகளுக்கு ஒருபோதும் சட்டத்தின் முன் தண்டனை கிடைக்காது என்று நம்பியிருந்தனர். </p><p>ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக மாறியுள்ளது. இதனால் எவ்வித தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள் சட்டத்தைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8121190-50e1-4eaf-97f5-fa5e6f8bad4f/26-6a8c99bccc10d.webp' /></p><p>

 மாறாக கடந்த காலத்தில், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களும், தவறுகளில் ஈடுபட்டவர்களுமே தற்போதைய நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது தவறான கருத்துக்களை வெளியிட்டும், அச்சமடைந்தும் வருகிறார்கள்.</p><p>

தற்போதைய ஆட்சியில் ஜனாதிபதி, அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருக்கும் எந்தவித சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/837144c2-4a4f-4cf3-8b9a-e951f307f52a/26-6a8c99bd8aefb.webp' /></p><p>
</p><p>
ஜனாதிபதி உட்பட அனைவரும் சாதாரண பொதுமக்களைப் போலவே தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

 எனவே மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில், தற்போதைய அரசாங்கத்தை விட மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கக்கூடிய ஒரு அரசியல் தரப்பினால் மட்டுமே இனி இலங்கையில் ஆட்சிக்கு வர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T19:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் இருந்து உணவுப் பொட்டலங்களை கொண்டு வருவதாக கூறிய அநுர தரப்பு! 24 கோடி ரூபாவுக்கு கணக்கு கேட்கும் அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-parliamentary-food-expenditure-1787596137"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-parliamentary-food-expenditure-1787596137</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடந்த காலங்களில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டிலிருந்தே உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து உட்கொள்வோம் என கூறினார்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடந்த காலங்களில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டிலிருந்தே உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து உட்கொள்வோம் என கூறினார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்று ஐ.ம.சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>


கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>அதிகரித்துள்ள உணவு செலவினம்&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவுகளுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தினால் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றது. </p><p>

 நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவுகள் குறித்து பல செய்திகள் கடந்த நாட்களில் ஊடகங்களில் அதிகமாக வெளியிடப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2291498-38cf-4f21-944c-fdb3af98ef6e/26-6a8c8fc7a10e2.webp' /></p><p> </p><p>

2025ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தின் உணவு மற்றம் பானங்களுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தால் அதிகரித்து 24.7 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. </p><p>

தினசரி உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையும், குடிநீர் போத்தல்களுக்கான செலவினமும் கடுமையாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ed99e1f-3707-4837-9c08-2bbf12bfe493/26-6a8c8fc85baa3.webp' /></p><p> 

கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த உறுப்பினர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்ற உணவகத்தை மூடிவிட்டு வீட்டில் இருந்து உணவுப் பொட்டலங்களை கொண்டு வருவோம் என தெரிவித்தனர்.
</p><p>
இதன்மூலம் மக்களின் பணத்தை சேமிக்கப் போவதாகவும் கூறினர். ஆனால், இன்று அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது 24.7 கோடி ரூபாவை நாடாளுமன்ற உ ணவுக்காகச் செலவிட்டிருப்பது விமர்சனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-08-24T18:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் தலைமைத்துவ பலவீனமே கல்முனை வைத்தியசாலை குழப்பத்திற்கு காரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-issue-tamil-muslim-politics-1787589172"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-issue-tamil-muslim-politics-1787589172</id>
            <summary type="text">கல்முனை பிராந்திய கணக்காய்வு மற்றும் வைத்தியசாலை நிர்வாக எல்லைப்பிரிப்பு விவகாரத்தை சரியாக கையாள்வதில் ஏன் தவறு ஏற்பட்டது என்பது குறித்து 6 முஸ்லிம் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை பிராந்திய கணக்காய்வு மற்றும் வைத்தியசாலை நிர்வாக எல்லைப்பிரிப்பு விவகாரத்தை சரியாக கையாள்வதில் ஏன் தவறு ஏற்பட்டது என்பது குறித்து 6 முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி பதில் சொல்ல வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்பதற்கு முடியாத குறித்த அமைப்பினரால் எப்படி ஏனைய விவகாரங்களை கையாள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 6 கட்சிகளின் கூட்டு&nbsp; உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்பட்டு விட்டது.சுமந்திரன் குறித்த கூட்டணியில் இணைந்ததன்&nbsp; நோக்கம் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து ஆட்சியை அமைப்பதாகும்.</p><p>ஆகவே, கிழக்கில் முரண்பாட்டை வளர்த்து விட்டு பிறகு எவ்வாறு இணைந்து ஆட்சியை உருவாக்கப் போகின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணிலும், சுமந்திரனும் கொண்டு வந்த எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் என்கின்ற சட்டவரைபு தான் இன்று வரை மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XFtjdc0Sz_c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T17:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா அழைத்துச் சென்று படுகொலை செய்தாரா.. 39 வருடங்களுக்குப் பின் வெளிவரும் உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/did-karuna-take-him-away-and-murder-him-1787578760"></link>
            <id>https://tamilwin.com/article/did-karuna-take-him-away-and-murder-him-1787578760</id>
            <summary type="text">இலங்கையில் இந்திய இராணுவத்தினருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹொட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த சுபாஷ், கருணாவின் பணிப்புரையின் பேரில் படுகொலை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்திய இராணுவத்தினருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹொட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த சுபாஷ், கருணாவின் பணிப்புரையின் பேரில் படுகொலை செய்யப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு முக்கிய காரணிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடுதலைப்புலிகள் அமைப்பில் மட்டக்களப்பு பிரதேசத்திற்குத் தலைமை தாங்கிய கருணாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யுமாறு சுபாஷ், தனது உறுப்பினர்களுக்கு கட்டளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. எனினும், அந்தத் தாக்குதலை அவர்கள் மேற்கொள்ளவில்லை.</p><p>

இதற்குப் பழிவாங்கும் வகையில், கிரான் சந்தியில் வைத்து புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவருடன் ஹொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>

இவ்வாறு கருணா - சுபாஷ் ஆகியோர் அக்காலகட்டத்தில் எவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்டனர் என்பது தொடர்பான பல்வேறு விடயங்களை “உண்மைகள்” நிகழ்ச்சி ஆராய்கிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fzi0rELjLX4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T16:54:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் உட்பட அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது – ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-says-we-re-winning-against-everyone-1787590295"></link>
            <id>https://tamilwin.com/article/trump-says-we-re-winning-against-everyone-1787590295</id>
            <summary type="text">ஈரான் உட்பட தனக்கு எதிரான அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா தீர்க்கமான வெற்றியைப் பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் உட்பட தனக்கு எதிரான அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா தீர்க்கமான வெற்றியைப் பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
தனது சமூக வலைத்தள பக்கமான 'ட்ரூத் சோஷியல்' இல் இது குறித்துப் அவர் பதிவிட்டுள்ளார்.</p><h2>போலி கருத்துக்கணிப்பு</h2><p>
</p><p>சர்வதேச அரங்கிலான அமெரிக்காவின் இந்த வெற்றிகரமான நிலையை மறைக்கவும், குடியரசுக் கட்சியினரின் உத்வேகத்தைச் சீர்குலைக்கவும் எதிர்க்கட்சியான டெமோக்ராட்டுகள் போலி கருத்துக்கணிப்புகளைப் பயன்படுத்தி வருவதாகச் சாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64074172-1557-4476-8fcb-149cb436ebce/26-6a8c7698d8569.webp' /></p><p>
தீவிர இடதுசாரி டெமோக்ராட்டுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் போலி கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுப் பித்தலாட்டம் செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, அவர்களின் மனஉறுதியைக் குலைக்கும் நோக்கிலேயே இத்தகைய 'மனஉறுதி சீர்குலைப்பு நடவடிக்கைகள்' முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117151357800143501/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>
</p><p>ஆனால், கள நிலவரப்படி உண்மையான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாகவும் அபாரமாகவும் அமைந்துள்ளன. நமது நாட்டின் எழுச்சியும் உத்வேகமும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக மீள முடியாத வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஈரான் உட்பட, நமக்கு எதிரான அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா முழுமையான வெற்றியைப் பெற்று வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது என ட்ரம்ப்&nbsp; தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T16:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanchana-panagoda-appointed-new-president-of-aasl-1787586814"></link>
            <id>https://tamilwin.com/article/kanchana-panagoda-appointed-new-president-of-aasl-1787586814</id>
            <summary type="text"> விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் புதிய தலைவராக&amp;nbsp;அட்மிரல் காஞ்சன பாகொட&amp;nbsp; நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அவர் 2026 செப்...</summary>
            <content type="html"><![CDATA[<p> விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் புதிய தலைவராக&nbsp;அட்மிரல் காஞ்சன பாகொட&nbsp; நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

அவர் 2026 செப்டம்பர் 1ஆம் திகதி தனது பதவிக் பொறுப்புகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
 

இலங்கை கடற்படையின் 26வது கடற்படை தளபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலம் நாட்டிற்காகச் விசேட மற்றும் சிறந்த சேவையாற்றிய ஒரு மூத்த முப்படை அதிகாரியாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313d60d6-446a-46dc-afe0-f90b5bfb69b0/26-6a8c6cb68910f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T16:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: பாப்பரசர் லியோ விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-intensifies-in-congo-pope-leo-1787586711"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-intensifies-in-congo-pope-leo-1787586711</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 5,515 ஆக உயர்ந்துள்ள உருத்தூக்கும் நிலையில், சர்வதேச சமூகம்
உடனடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 5,515 ஆக உயர்ந்துள்ள உருத்தூக்கும் நிலையில், சர்வதேச சமூகம்
உடனடியாக தலையிட்டு உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பாப்பரசர் லியோ கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய தகவல்களின்படி, இத்துரி மற்றும் வட
கிவு மாகாணங்களில் புதிதாக 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,
இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
கொங்கோவின் வரலாற்றில் மிக மோசமான எபோலா பரவலாக இது பதிவாகியுள்ளதுடன்,
பாதிப்புக்குள்ளானவர்களில் சுமார் 48 சதவீதம் பேர் உயிரிழப்பதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தடுப்பு நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த மே மாதம் மத்தியில் ஆரம்பமான இந்த 17 ஆவது எபோலா பரவலை உலக சுகாதார
நிறுவனம் சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது.
</p><p>
தற்பொழுது பரவி வரும் 'புண்டிக்புகியோ' எனும் அரிதான எபோலா வைரஸ் வகைக்கு
இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ
கண்டுபிடிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13b7119f-cd92-4522-832d-1ef00f619135/26-6a8c6899cdd48.webp' /></p><p>
</p><p>இருப்பினும், கடந்த காலத்தில் பயன்பாட்டிலிருந்த 16,250 தடுப்பூசி டோஸ்கள்
முதற்கட்டமாக கொங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;நிலவும் தீவிர நிலையைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட
சமூகங்களை உள்ளடக்கிய வகையில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிகளவிலான
உயிர்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என வத்திக்கானில்
உரையாற்றிய பாப்பரசர் லியோ வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T15:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கம்: குறைவடைந்து செல்லும் குளங்களின் நீர்மட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranamadu-tank-tanks-at-20-percent-total-water-1787584391"></link>
            <id>https://tamilwin.com/article/iranamadu-tank-tanks-at-20-percent-total-water-1787584391</id>
            <summary type="text">நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக
கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம்
மற்றும் ஏனைய குளங்களும் மொத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக
கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம்
மற்றும் ஏனைய குளங்களும் மொத்த நீர்க்கொள்ளவாக 20 வீதத்தில் காணப்படுவதாக பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கைலாயபிள்ளை
பிரகாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

36அடி நீர்கொள்ளவைக்கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர் மட்டமானது தற்போது
19அடியாக காணப்படுகின்றது. </p><p>ஏனைய குளங்களின் நீர்மட்டங்களும் குறைவடைந்து
காணப்படுகின்றன.</p><h2>வறட்சியான காலநிலை</h2><p>
</p><p>
கிளிநொச்சி மாவட்டத்தின் பல குளங்கள் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை
காரணமாக சிறிய குளங்களில் நீர் முற்று முழுதாக வற்றிய நிலையில் காணப்படுவதன்
காரணமாக கால்நடைகள் நீரின்றி அல்லலுறும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af2746ee-0667-4cb9-a83c-8d9e9e263fae/26-6a8c63296bac9.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T15:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான தடைகளை விரிவுபடுத்த அமெரிக்க நிதித் திணைக்களம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-treasury-department-expand-sanctions-iran-1787583558"></link>
            <id>https://tamilwin.com/article/us-treasury-department-expand-sanctions-iran-1787583558</id>
            <summary type="text">ஈரானுடன் வணிகத் தொடர்புகளைப் பேணி வரும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது
விதிக்கப்படும் இரண்டாம் நிலைத் தடைகளின் வரம்பை விரிவுபடுத்த அமெரிக்க நிதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் வணிகத் தொடர்புகளைப் பேணி வரும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது
விதிக்கப்படும் இரண்டாம் நிலைத் தடைகளின் வரம்பை விரிவுபடுத்த அமெரிக்க நிதித்
திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
</p><p>
ஈரானியத் தலைநகர் தஹ்ரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில்
டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை வழியிலான வளைகுடா நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதியைப்
பாதித்துள்ள 6 மாத கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, ஈரானுடனான
வர்த்தகத் தொடர்புகளை உடனடியாகத் துண்டிக்குமாறு ஏனைய நாடுகளுக்கு எச்சரிக்கை
விடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.</p><h2>அழுத்தமான நடவடிக்கை</h2><p>
</p><p>
அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இந்தத் தடைகள் குறித்த மேலதிக
விபரங்களை செய்தியாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01d0e117-5cc4-438c-9fa4-f301e422351a/26-6a8c5d9ed5a0d.webp' /></p><p>
</p><p>
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்கொட் பெசென்ட் ஆகியோரால் 'பொருளாதார D-Day' என
வர்ணிக்கப்படும் இந்த அழுத்தமான நடவடிக்கை குறித்தும் இதன்போது
தெளிவுபடுத்தப்படவுள்ளது.
</p><p>
இதன்படி, உலகின் ஏனைய நாடுகள் அமெரிக்காவின் பக்கமா அல்லது ஈரானின் பக்கமா
என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும், மீறும் பட்சத்தில் டொலர்
அடிப்படையிலான சர்வதேச நிதி அமைப்பில் இருந்து குறிப்பிட்ட நாடுகளின் பிரதான
நிறுவனங்கள் துண்டிக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்கா
வெளிப்படையாக எச்சரிக்கவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T15:05:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு – கிழக்கில் புறக்கணிக்கப்படும் முஸ்லிம் சமூகம்: முன்னாள் போராளி ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/marginalizing-the-north-east-muslim-community-1787581584"></link>
            <id>https://tamilwin.com/article/marginalizing-the-north-east-muslim-community-1787581584</id>
            <summary type="text">வடக்கு – கிழக்கு பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி நகரும் போது முஸ்லிம் சமூகத்தின் அரசியல், சமூக மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு – கிழக்கு பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி நகரும் போது முஸ்லிம் சமூகத்தின் அரசியல், சமூக மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஈரோஸ் முன்னாள் போராளி மொகமட் ஹுசைன் தெரிவித்துள்ளார்.</p><p>

வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம் சமூகத்தை புறக்கணிப்பது சாத்தியமற்றது என்றும், அனைத்து சமூகங்களின் உரிமைகளும் சமமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
தமிழர் – முஸ்லிம் உறவு, வடக்கு – கிழக்கு அரசியல் நிலவரம், முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால அரசியல் தீர்வு தொடர்பான முக்கிய கருத்துக்களை இந்த நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/inhdnMV3aNw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையை காணாது தேடிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-two-year-old-child-recovered-from-canal-1787573403"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-two-year-old-child-recovered-from-canal-1787573403</id>
            <summary type="text">அநுராதபுரம், கல்னேவ - கலேவெவ வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் தந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம், கல்னேவ - கலேவெவ வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.</p><p>குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் தந்தை நேற்றைய தினம் (23.08.2026) கல்னேவ பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.</p><p>இதனடிப்படையில், அப்பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்னர்.
</p><p>
இதன்போது, வீட்டின் அருகில் கால்வாயொன்றின் பாலத்தின் அடியில் குழந்தை சிக்குண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/647a814e-e3fb-4624-abb8-0d211b4bc7a5/26-6a8c39794e6c3.webp' /></p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>

பின்னர் உடனடியாக கல்னேவ மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட போதிலும், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
குழந்தையின் சடலம் உடற்கூறாய்வு பரிசோதனைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கல்னேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:51:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் நுணுக்கமான முறையில் திருடப்பட்ட பை - சிசிடிவியில் சிக்கிய சில நிமிடங்களில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-s-bag-at-the-pettha-bus-station-1787574299"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-s-bag-at-the-pettha-bus-station-1787574299</id>
            <summary type="text">கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணியின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு வலையமைப்பின் உதவியுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணியின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு வலையமைப்பின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று (23.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் கையில் தடியுடன் அங்கும் இங்கும் நடமாடியுள்ளார். பின்னர், அங்கிருந்த கதிரையொன்றில் அமர்ந்த குறித்த நபர், பயணி ஒருவரின் பையை எடுத்துக்கொண்டு மெதுவாக அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
</p><p>
குறித்த நபரின் நடவடிக்கைகள் அனைத்தும் பெட்டா பேருந்து நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள செயல்பாட்டு மையத்திலிருந்து இயக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் ஊடாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
</p><h2>
விரைந்து செயற்பட்ட அதிகாரிகள்</h2><p>
இதனையடுத்து, பையை எடுத்துக்கொண்டு நகர்ந்த சந்தேக நபரை, பணியில் இருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பின்தொடர்ந்து சென்று சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1103837022210683%2F&show_text=true&width=380&t=0" width="380" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் உடனடியாக அவதானிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபர் விரைவாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் மிகவும் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றான புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 'தூய்மையான இலங்கை' முன்முயற்சியின் கீழ் புதிதாக நவீனமயமாக்கப்பட்ட செயல்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக இந்த சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.</p><h2>

24 மணிநேரமும் இயங்கும் கமராக்கள்</h2><p>

இந்தக் கண்காணிப்பு வலையமைப்பு 24 மணி நேரமும் இயங்குவதுடன், பேருந்து நிலையத்திற்குள் இடம்பெறும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a51bddc0-12fd-409c-a4c5-e819d6e0aa69/26-6a8c3bf252756.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
திருட்டு மற்றும் பிக்பாக்கெட் போன்ற குற்றச் செயல்களைக் கண்டறிவது மட்டுமன்றி, பயணிகளுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவு, விபத்துகள் மற்றும் உடனடி உதவி தேவைப்படும் அவசரநிலைகளில் விரைவாக நடவடிக்கை எடுக்கவும் இந்தக் கண்காணிப்பு அமைப்பு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் நிலையங்களில் பல கோடி ரூபாய் மோசடி - பொறுப்பின்றி செயற்பட்ட பணிப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraud-of-crores-of-rupees-at-fuel-stations-1787581165"></link>
            <id>https://tamilwin.com/article/fraud-of-crores-of-rupees-at-fuel-stations-1787581165</id>
            <summary type="text">மட்டக்களப்பு மற்றும் கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்
திணைக்களங்களின் கீழ் உள்ள நான்கு மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்து அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மற்றும் கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்
திணைக்களங்களின் கீழ் உள்ள நான்கு மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்து அதன் பொருட்கள் திருடப்பட்டு பல கோடி ரூபா அரச சொத்தை பராமரிக்க
தவறிய வீணடித்த அந்த இரு திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்க கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி குற்ற பிரிவு, மனித உரிமை
ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக ஈ.பி.டி.பி.கட்சி மட்டு மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
</p><p>
மட்டக்களப்பு ஈ.பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாடு இன்று(24.08.2026)
பாலமீன்மடு காரியாலயத்தில் இடம்பெற்றது.</p><p>

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

எரிபொருள் நிலைய பொருட்கள் திருட்டு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வளர்ச்சிக்காக (IFAD) சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியம் அமைப்பின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 9 மண்ணெண்ணெய் எரிபொருள்
நிரப்பு நிலையங்கள் பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு, தேசத்துக்கு மகுடம்
திட்டத்தின் கீழ் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம்
வழங்கப்பட்டன.</p><p>

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் 7 மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்கள்
செயலிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a813692-7112-48f2-a562-06dec44d8551/26-6a8c537c68eff.webp' /></p><p> </p><p>இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லாறு, காத்தான்குடி,
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், பாலமுனை ஆகிய
பிரதேசங்களில் அமைக்கப்பட்ட 4 எரிபொருள் நிலையங்களும் செயலிழந்துள்ளதுடன்,
அதில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் கட்டிட கதவுகள் உட்பட பல இலட்சம் ரூபா
பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளது.
</p><p>

இவ்வாறு செயலிழந்த நிலையில் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பாக, அப்போது முதல் தற்போது வரை கல்முனை பிராந்திய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளராக இருந்தவர், இது குறித்து திணைக்களத்தின் மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.
</p><h2>
முறைப்பாட்டை பதிவுச் செய்யாத அதிகாரி</h2><p>
அத்துடன், அங்கு இடம்பெற்ற திருட்டு தொடர்பாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யாமல், தனது கடமையை முறையாக நிறைவேற்றத் தவறியதுடன், பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்களை முறையாகப் பராமரிக்கவும் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>


அவ்வாறே, அப்போது கல்முனை பிராந்திய பணிப்பாளராகவும், தற்போது மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளராகவும் இருந்து வரும் அவர், கல்முனை மற்றும் நிந்தவூர் மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்துள்ளதுடன், அங்கு திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83f6de6-15d1-441c-93d4-7a8dbbe7a1ce/26-6a8c537d32ee8.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் தனது கடமையை முறையாக நிறைவேற்றத் தவறியதுடன், பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்களை முறையாகப் பராமரிக்கவும் அவர் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மீனவர் சங்கங்களிடம் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதுடன், மாதாந்தம் தலா 30,000 ரூபாய் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
</p><p>
அத்துடன், மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து 10,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கி வருகின்றது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T14:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/measures-procure-2-000-metric-tonnes-of-paddy-1787581139"></link>
            <id>https://tamilwin.com/article/measures-procure-2-000-metric-tonnes-of-paddy-1787581139</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக்
தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக்
தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் க.
கனகேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (24.8.2026) மாலை இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக, நாட்டு அரிசியின்(நெல்) விலை 120
ரூபாய், சம்பா அரிசியின்(நெல்) விலை 130 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு உரிய
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.</p><h2>உரிய நடவடிக்கைகள்&nbsp;</h2><p>
</p><p>
அதேபோல் கீரிச் சம்பாவாக (நெல்) இருந்தால் 140 ரூபாய்க்கு கொள்வனவு
செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80c220f2-c043-4886-a0a3-60bb151cbaa4/26-6a8c52d664fee.webp' /></p><p>
</p><p>
தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2,000 மெட்ரிக் தொன் அளவிலான
நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இதனைவிட, தற்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், அதேபோன்று
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மில் உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 25
மில்லியன் ரூபாய் நிதி வழங்கி, அவர்கள் ஊடாகவும் விவசாயிகளிடம் உள்ள நெல்லைக்
கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T14:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attakc-case-verdict-on-22-sep-1787579783"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attakc-case-verdict-on-22-sep-1787579783</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ம் திகதி வழங்கப்பட உள்ளது.உயிர்த்த ஞாயிறு தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கான சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை செய்யப்பட்டது.</p><p>இந்த வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நிரந்தர மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6110a764-4fa0-4c6e-9765-13467eeb3252/26-6a8c4ecd92aa1.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு சிறப்பு மூவர் கொண்ட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
</p><p>உயிர்த்த ஞாயிறு வழக்கின் பிரதிவாதிகள் தரப்பு வாய்மொழிச் சமர்ப்பணங்கள் இன்று மாலை 6.00 மணியளவில் நிறைவடைந்த நிலையில், இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை வரும் செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.
</p><p>கொழும்பு சிறப்பு மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதியரசர்களான நவரத்ன மாரசிங்க (தலைமை நீதியரசர்), சுஜீவ நிஸ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தகவல் வெளியானது.</p><p>
இவ்வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியப் பதிவுகள் கடந்த (13) ஆம் திகதி பிற்பகலுடன் நிறைவடைந்தன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் சுமத்தப்பட்டிருந்தன.
</p><p>இவ்வழக்கில் பிரதிவாதிகளின் 10 வாக்குமூலங்களை நீதிமன்றம் சாட்சியங்களாக ஏற்றுக்கொண்டுள்ளதோடு, மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள், வெடிபொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உட்பட 2,076 வழக்குப்பொருட்கள் விசாரணையின் போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.
</p><p>அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் பலவும், அதிகளவிலான டி.என்.ஏ அறிக்கைகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மரண பரிசோதனை அறிக்கைகளும் சான்றுகளாகப் பதிவேற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>
நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராகவே சட்டமா அதிபரால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட 25 பிரதிவாதிகளில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற இந்த தொடர் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 270க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வழக்குகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-24T14:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் 45 கப்பல்களுக்கு ஈரான் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-bans-45-ships-in-the-strait-of-hormuz-1787579287"></link>
            <id>https://tamilwin.com/article/iran-bans-45-ships-in-the-strait-of-hormuz-1787579287</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான புதிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 45
எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் கருப்புப்
பட்டியலில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான புதிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 45
எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் கருப்புப்
பட்டியலில் சேர்த்துள்ளதுடன், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் எச்சரித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும்
சூழ்நிலையில், ஈரான் தனது கடல்சார் எல்லைக் கட்டுப்பாடுகளை
தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>இதன் ஒரு பகுதியாக, ஈரானால் புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள 'பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரசபையினால்' இந்த அதிரடி
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>ஈரான் தடை</h2><p>

குறிப்பிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள கப்பல்கள் ஈரானியப் பிராந்தியத்திற்குள்
நுழையும் பட்சத்தில், அவை தடுத்து வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதுடன்,
அவற்றில் உள்ள சரக்குகளும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், இந்த தடை விதிக்கப்பட்ட கப்பல்களுடன் கடலில் வைத்து சரக்குகளைப்
பரிமாறிக்கொள்ளும் ஏனைய பிற கப்பல்களும் உடனடியாகக் கருப்புப் பட்டியலில்
சேர்க்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/045c942f-7439-4e85-b2c5-d0f508f64444/26-6a8c4d321ad3d.webp' /></p><p>
</p><p>
</p><p>மற்றும் தென்கொரியா, நோர்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின்
கப்பல்களும் அடங்குகின்றன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கு ஈரானிய கடற்படை அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற
வேண்டும் என்றும், பாதுகாப்பு சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்
என்றும் ஈரான் வலியுறுத்தி வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் : ஆளுநர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/progress-in-police-operations-northern-province-1787575007"></link>
            <id>https://tamilwin.com/article/progress-in-police-operations-northern-province-1787575007</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச்
சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி
போதைப்பொருள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச்
சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய
வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது
தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
</p><p>
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் புதிதாக வடக்கு மாகாண
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ் கருணாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24.08.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த</h2><p>இதன்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு
ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், வடக்கு மாகாணத்தில் சட்டம்,
ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறந்த
சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc31556a-2c53-4f39-b477-a1bf36c1f95f/26-6a8c4156ae1a7.webp' /></p><p>இதன்போது வடக்கு
மாகாணத்தின் நிலைமை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களும்
பரிமாறிக்கொள்ளப்பட்டன.</p><p>

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம்
காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின்
பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார்.</p><p>மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல்
மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, அத்துடன் வீதிகளில் அதிவேகமாக
மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்
இளையோரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம்
செலுத்தப்பட்டது.
</p><p>
இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு,
பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில்
தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும்
கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:33:50+00:00</updated>
        </entry>
    </feed>
