<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-05T03:55:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-minister-of-tourism-discussion-governor-1785900972"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-minister-of-tourism-discussion-governor-1785900972</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன்
குணசேகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன்
குணசேகரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.</p><p></p><h2>சுற்றுலா மேம்பாட்டுத்திட்டம்&nbsp;</h2><p>
இக்கூட்டத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை சுற்றுலா மேம்பாட்டுத்
திட்டம் குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387e3681-9fc3-4f03-a954-4ba513abb302/26-6a72b443330a2.webp' /></p><p> அத்துடன், அப்பகுதியில்
அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சின்
ஊடான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்குப் பல
முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருகின்றபோதிலும், வனவளத் திணைக்களம்,
வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்
உள்ளிட்டவர்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் நிலவும் தாமதங்கள் குறித்து
ஆளுநர் எடுத்துரைத்துள்ளார்.
</p><p>
ஆளுநர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் அவதானிப்புகள் குறித்து கவனம்
செலுத்திய சுற்றுலாத்துறை பிரதியமைச்சர், மாகாணத்தில் சுற்றுலாத்துறையை
ஊக்குவிப்பது தொடர்பிலும், மாவட்ட ரீதியிலான ஒருங்கிணைந்த சுற்றுலா
அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு துரிதமாகச் செயற்படுத்துவது என்பது
குறித்தும் ஆளுநருடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.</p><p>

இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், ஆளுநரின்
செயலாளர், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர், ஆளுநரின்
பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின்
இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை சிறைச்சாலையில் தீவிர பாதுகாப்பு - ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tight-security-for-south-prisons-1785893586"></link>
            <id>https://tamilwin.com/article/tight-security-for-south-prisons-1785893586</id>
            <summary type="text">நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

காலி, பூஸ்ஸ, மாத்தறை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் வீரவில சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தப்படவுள்ளது. </p><p>

இது தொடர்பில், தென் மாகாண ஆளுநர் சுசிறிபால மானவடுவின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.</p><p>
</p><h2><b>
அவசர பாதுகாப்புக் குழு</b></h2><p>நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவான அமைதியின்மை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தென்னிலங்கையில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்வதே இந்த அவசர பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b4604bb-afe3-4db4-a0e2-6d8548e9ea9a/26-6a72b333efab8.webp' /></p><p>மக்களின் பாதுகாப்பு, உயிர், உடைமைகள் மற்றும் அமைதியான சூழ்நிலையை தொடர்ந்தும் பேணிச் செல்வது தொடர்பில் எவ்வித தளர்வான கொள்கையும் கடைப்பிடிக்கப்பட மாட்டாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p>

நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, அனைத்துப் பாதுகாப்பு பிரிவுகளும் இணைந்து எத்தகைய அவசர நிலையையும் உடனடியாக எதிர்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-08-05T03:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fever-warning-to-the-srilanka-people-1785900112"></link>
            <id>https://tamilwin.com/article/fever-warning-to-the-srilanka-people-1785900112</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p>

மத்திய, சபரகமுவ, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய நான்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>இலவச மருந்துகளை வழங்க நடவடிக்கை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அசுத்தமான நீரில் விளையாடுவதால் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல், தொற்று மஞ்சள் காமாலை மற்றும் தொழுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமில் முத்துகுட எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f620382-d10f-478b-b069-4a593a6609c3/26-6a72aea40cc0d.webp' /></p><p> </p><p>

அசுத்தமான நீரிலிருந்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால், தடுப்பு சிகிச்சையை நாட வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை கருத்திற்கொண்டு அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து இலவச மருந்துகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>
 இதற்கிடையில், வயிற்றுப்போக்கு, தொற்று மஞ்சள் காமாலை, தொழுநோய், டெங்கு உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை உணர்ந்தால், அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T03:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிவகாரச் செயலர் : தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-foreign-secretary-to-arrive-sri-lanka-today-1785899006"></link>
            <id>https://tamilwin.com/article/indian-foreign-secretary-to-arrive-sri-lanka-today-1785899006</id>
            <summary type="text">இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகாரச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி இன்று(05.08.2026)&amp;nbsp; இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

கொழும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகாரச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி இன்று(05.08.2026)&nbsp; இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
</p><p>
கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில்
நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு,
உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள்
குறித்துக் கலந்துரையாடுவதே அவரின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது.
</p><p></p><h2>விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக</h2><p>
தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய
மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து விரிவான
பேச்சுகளை நடத்தவுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/288d2666-9b3a-44fc-84ad-fc4a463ee813/26-6a72ac164dd6a.webp' /></p><p>
இந்தியாவின் 'அண்டைய நாடுகளுக்கு முதலுரிமை' கொள்கையின் அடிப்படையில்,
இலங்கையுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த
புதுடில்லி தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.</p><p>இந்த விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக, வடக்கு - கிழக்கு மற்றும்
மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுடனான விக்ரம்
மிஸ்ரியின் தனித்தனிச் சந்திப்புகள் அமைகின்றன.
</p><p>
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன், காணி மற்றும்
பொலிஸ் அதிகாரங்களுடன் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த இந்தியத் தரப்பு
கொழும்பு அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனத் தமிழ் தலைமைகள் வலியுறுத்தவுள்ளன.</p><h2>வழக்கமான இராஜதந்திரச் சந்திப்பாக</h2><p>முன்னர் கைவிடப்பட்ட சம்பூர் திட்டம், தற்போது இலங்கை மின்சார சபை மற்றும்
இந்திய நிறுவனத்துடன் இணைந்து 120 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டமாக
மாற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b831d17-2a40-4c7b-b5bf-010a07ba0932/26-6a72ac1704668.webp' /></p><p>மின் உற்பத்தி இணைப்பு, எரிபொருள் குழாய் இணைப்பு மற்றும் கடல்வழி
போக்குவரத்து போன்ற உத்திசார் இணைப்புத் திட்டங்களின் தாமதங்கள் குறித்து
இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>இந்தியாவின் 450 மில்லியன் டொலர் உதவித் திட்டத்தில் (350 மில்லியன் டொலர்
கடன் உதவி மற்றும் 100 மில்லியன் டொலர் மானியம்), இலங்கை அரசு அதனை முறையாகப்
பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது.</p><p>மேலும், 22 டீசல்
எஞ்சின்களை மானியமாக வழங்க இந்தியா முன்வந்த போதிலும், அதற்குரிய கோரிக்கைப்
பத்திரங்களை இலங்கை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.</p><p> இலவச
வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் தடைகள் குறித்தும் இந்தியா கவலை கொண்டுள்ளது.
</p><p>
விக்ரம் மிஸ்ரியின் இந்த விஜயமானது வழக்கமான இராஜதந்திரச் சந்திப்பாக
மட்டுமில்லாமல், பிராந்திய மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான
நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், தேங்கிக் கிடக்கும் திட்டங்களை
விரைவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய பரீட்சார்த்தக் களமாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T03:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை: அரசாங்கத்தின் தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/service-extension-for-police-officers-1785895053"></link>
            <id>https://tamilwin.com/article/service-extension-for-police-officers-1785895053</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு வயதெல்லையை அடைந்த அதிகாரிகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு வயதெல்லையை அடைந்த அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
60 வயதை பூர்த்தி செய்த குறைந்த தர பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p>பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி நிலை முதல் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவி வரை கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இச்சேவை நீடிப்புக்காக விண்ணப்பிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b8d99a-79d1-4053-9a80-d3efa09e8c1d/26-6a729893293a6.webp' /></p><p>
</p><p>இதற்கமைய நல்ல உடல் தகுதியுடனும், நன்நடத்தையுடனும், களங்கமற்ற சேவையாற்றி 60 வயதை பூர்த்தி செய்த அதிகாரிகள் இந்த சேவை நீடிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, மிக விரைவில் இந்த சேவை நீடிப்புகள் வழங்கப்படவுள்ளன.
பொலிஸ் திணைக்களத்தில் பெருமளவிலான வெற்றிடங்கள் நிலவுவதாகவும், ஒரே தடவையில் அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வது கடினம் என்பதாலும், அதற்கு தற்காலிக தீர்வாகவே இந்த சேவை நீடிப்பு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>பொலிஸ் திணைக்களத்தில் 84,000 அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய போதிலும், தற்போது 50,000க்கும் குறைவான அதிகாரிகளே கடமையாற்றி வருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T03:17:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ்மா அதிபர் குறித்த சாகரவின் சர்ச்சையான கருத்து: அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-controversial-comment-igp-minister-order-1785898126"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-controversial-comment-igp-minister-order-1785898126</id>
            <summary type="text">பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய
கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய
கருத்துக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு
அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சாகர காரியவசம்,
நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபரிடம் அரசுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுமாறு
கோரியதுடன், அவர் வீதியில் பொதுமக்களிடம் அடிவாங்கும் பொலிஸ்மா அதிபராக
வரலாற்றில் இணைவதைத் தான் காண விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.</p><p>
சாகர காரியவசத்தின் இந்த கருத்து குறித்து ஊடகங்களிடம் கருத்துததெரிவித்த
அமைச்சர் ஆனந்த விஜேபால,</p><p>&nbsp;</p><h2>விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப சட்ட நடவடிக்கைகள்&nbsp;</h2><p> அரசு இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை இலகுவாக
எடுத்துக்கொள்ளாது. அரசியல் அதிகாரத்துக்காக கடந்த காலங்களில்
மக்களைப் பலி கொடுத்த ஓர் அரசியல் இயக்கத்தின் மனநிலையே இத்தகைய கூற்றுகளில்
பிரதிபலிக்கின்றது என்றும் அவர் விமர்சித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8bf8dc2-125e-4872-b22c-9fef8ab248a8/26-6a72aaab0e1e7.webp' /></p><p>
தற்போதைய பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை மிகவும் திறம்பட ஆற்றி வருகின்றமையைச்
சுட்டிக்காட்டிய அமைச்சர், ஊழல், இலஞ்சம் மற்றும் அரச சொத்துக்கள்
துஷ்பிரயோகம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர விசாரணைகள்
காரணமாக அச்சமடைந்துள்ள நபர்களே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
என்றும் சந்தேகம் வெளியிட்டார்.</p><p>

விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் எச்சரித்தார்.</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:14:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழப்பு! ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-people-died-inclement-weather-9-districts-1785897242"></link>
            <id>https://tamilwin.com/article/8-people-died-inclement-weather-9-districts-1785897242</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8
பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து
8...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8
பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து
832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
அறிவித்துள்ளது.
</p><p>
9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;</p><h2>ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு</h2><p>

நாடு முழுவதும் அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள்
பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec127e72-cedd-4bbb-8237-baef7522ff10/26-6a72a34e5485e.webp' />&nbsp;</p><p>நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>நுவரெலியா மாவட்டத்தில் 1,091 குடும்பங்களைச்
சேர்ந்த 3 ஆயிரத்து 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள 20
நிவாரண முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 195 பேரும்,
உறவினர் வீடுகளில் 224 பேரும் தங்கியுள்ளனர்.</p><p>
மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பிரதான வீதிகளில் ஏற்பட்ட தடங்கல்கள்,
மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் மண்மேடுகள் சரிந்தமை போன்ற
காரணங்களால் தடைப்பட்டிருந்த முக்கிய போக்குவரத்துப் பாதைகள் சீரமைக்கப்பட்டு
மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p> குறிப்பாக, கடுகண்ணாவ பகுதியில்
மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி வீதி மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்து
முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.
</p><p>
எனினும், நுவரெலியா - பதுளை, நுவரெலியா - ஹட்டன் மற்றும் நுவரெலியா - கண்டி
(டொப்பாஸ் முதல் லபுக்கலை வரை) பிரதான வீதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால்,
சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார்
கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
களனி மற்றும் களு கங்கை ஆற்றுப் படுகைகளுக்காக விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய
எச்சரிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்
அறிவித்துள்ளது.</p><h2>மண்சரிவு அபாயம்</h2><p>இந்த ஆறுகளின் நீர்மட்டம் சீரான நிலையை எட்டியுள்ளமையால் இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> எவ்வாறாயினும், நீரியல் மற்றும் இடர்
முகாமைத்துவப் பிரிவு தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றது என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரிய பண்டார
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fed55a3-4bc3-41ba-a47f-af0832ff32cf/26-6a72a34da260f.webp' />&nbsp; &nbsp;</p><p>
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை
பெய்யக்கூடும். சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில
இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி
எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>மேலும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள்
குறித்து பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நாட்டின் மலைப்பாங்கான பிராந்தியங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்
நிலவுகின்றது. </p><p>அதற்கமைய, கண்டி (கங்கா இஹல கோரளை, உடுதும்பர, பச்பாகே கோரளை),
கேகாலை (எட்டியாந்தோட்டை), நுவரெலியா (அம்பகமுவ, நோர்வூட்) ஆகிய பிரதேச
செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலைச் சிவப்பு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T02:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-bomb-attack-in-ratmalana-house-1785896396"></link>
            <id>https://tamilwin.com/article/hand-bomb-attack-in-ratmalana-house-1785896396</id>
            <summary type="text">இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்று மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டின் மீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்று மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதுடன், அவற்றில் ஒன்று வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> எனினும் இந்த வெடிப்பினால் எவருக்கும் எந்தவிதமான காயங்களும் அல்லது சேதங்களும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>பொலிஸார் மேலதிக விசாரணை</b></h2><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008c5d70-97b4-4d1a-9b3b-dcedcbdd8426/26-6a72a22643b7e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-05T02:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-the-employees-provident-fund-1785895897"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-the-employees-provident-fund-1785895897</id>
            <summary type="text">ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>
தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப்பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>சட்ட வரைஞருக்கு ஆலோசனை</h2><p>
1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316e685a-cfa1-4f8a-a5ce-c8502bb5aa6d/26-6a729f20998e7.webp' /></p><p>
இலங்கை மத்திய வங்கி இதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், தொழில் திணைக்களம் ஆரம்ப வரைவை தயாரித்துள்ளது.</p><p>
இதற்கமைய, ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குமாறு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T02:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் விடயத்தில் சிக்கிய பிரபல நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/famous-actress-in-struggle-sri-lanka-1785842640"></link>
            <id>https://tamilwin.com/article/famous-actress-in-struggle-sri-lanka-1785842640</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிரான சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிரான சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நடிகை ரிது ஆகர்ஷா முற்றாக மறுத்துள்ளார். </p><p>

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ஊடாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையாகும். அவை திசைதிருப்பக்கூடியவையாகும். அவ்வாறான தகவல்கள் எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
வழக்கு தாக்கல்</b></h2><p>600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை குறுகிய காலத்திற்குள் குவித்துள்ளதாகக் மெமர்வின் சில்வாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79afb64-0366-45db-bf49-da4a63be9415/26-6a729b5b80f9f.webp' /></p><p>வழக்கின் நீதிமன்ற அறிக்கைகளில், ரிது ஆகர்ஷா என்ற பெயரில் DFCC வங்கி கணக்கு ஒன்றிற்கு பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் DFCC வங்கியில் கணக்கு ஒன்றைப் பராமரிக்கவில்லை. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கிலக்கம் எனக்குச் சொந்தமானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
</p><h3><b>
சட்டவிரோத சொத்து</b></h3><p>அதை உறுதிப்படுத்தும் வகையில் DFCC வங்கியினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றையும் அவர் தனது அறிக்கையுடன் இணைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9feb382a-c28d-4ce3-b070-a455ad1bb32c/26-6a729b5c33a31.webp' /></p><p>மேலும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தான் பாடசாலை மாணவியாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இந்தச் குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை ரிது ஆகர்ஷா வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T02:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை! பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-tuition-classes-banned-from-midnight-1785894513"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-tuition-classes-banned-from-midnight-1785894513</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயா்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயா்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் இன்று (05) நள்ளிரவுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.</p><p>
புலமைப்பரிசில் பரீட்சை முடியும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தடை செய்யப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>இந்த காலகட்டத்தில், புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கேள்விகளை கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவது, விநியோகிப்பது அல்லது விளம்பரப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a368c5-40a2-47bc-aa52-1c1d744e0149/26-6a729ac58d4f6.webp' /></p><p>பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், அத்துடன் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் விளம்பரங்களை செய்வது அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பதும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் ஆகஸ்ட் 09 அன்று நடைபெற உள்ளது.</p><p>

இதற்கிடையில், மோசமான வானிலை நிலவுவதை கருத்தில் கொண்டு, 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பான&nbsp; சிறப்பு கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T02:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித ராஜபக்சவுக்கு தொடரும் ஏமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-reject-yositha-s-request-1785894372"></link>
            <id>https://tamilwin.com/article/court-reject-yositha-s-request-1785894372</id>
            <summary type="text">வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விடுத்த கோரிக்கை தொடர்பில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விடுத்த கோரிக்கை தொடர்பில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று அறிவித்துள்ளார். </p><p>அது தொடர்பான உத்தரவை உயர் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் அறிவுறுத்தினார். </p><p>மேலும் அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யோசித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகிய இருவருக்கும் நீதவான் உத்தரவிட்டார்.</p><p> </p><h2><b>வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு</b></h2><p>இந்த நிலையில் சந்தேக நபரான யோசித ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, யோசித ராஜபக்ச, வர்த்தக உச்சி மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கோரிக்கை விடுத்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fb08448-1e94-42b6-aa4e-892dd2216a4d/26-6a7297ab2f324.webp' /></p><p>இதன்போது நீதவான், சந்தேக நபருக்கு எதிராக லஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>இதனால் இந்த கோரிக்கைக்கான உத்தரவை வழங்க முடியாது என்றும், அது தொடர்பான உத்தரவை மேல் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். </p><p>நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் நீதவான் தெரிவித்தார்.
</p>]]></content>
            <updated>2026-08-05T01:53:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை மோதல்கள் அலையாக மாறுமா..! நீதி அமைச்சர் ஹர்ஷன அதிர்ச்சித் தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisons-attacks-harshna-nanayakara-1785891790"></link>
            <id>https://tamilwin.com/article/prisons-attacks-harshna-nanayakara-1785891790</id>
            <summary type="text">சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து விசேட அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிறைச்சாலை கட்டமைப்பைத் திட்டமிட்ட வகையில்
பலவீன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து விசேட அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிறைச்சாலை கட்டமைப்பைத் திட்டமிட்ட வகையில்
பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது
என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில்&nbsp; நடைபெற்ற அமர்வில் மஹர சிறைச்சாலை
மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p></p><h2>மஹர சிறைச்சாலை</h2><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,
</p><p>
"மஹர சிறைச்சாலையில் கடந்த 1 ஆம் திகதி மாலை 3.45 மணியளவில் மூன்று கைதிகள்
சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி கூச்சலிட்டுப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e96f012-262e-4b23-9dc2-cc6dbaffe304/26-6a728e105b1bc.webp' /></p><p> </p><p>சிறைச்சாலை அதிகாரி அங்கு சென்று அவர்களுடன் பேச்சு நடத்திய
போதிலும், ஒரே நேரத்தில் சுமாராக ஆயிரம் கைதிகள் ஒன்றுகூடி கலகம் ஏற்படுத்தும்
வகையில் செயற்பட்டுள்ளனர்.
</p><p>
இதனைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆயுதங்களைப் பாதுகாப்பாக
மறைத்துவிட்டு பிரதான இரும்பு வாசல்களை மூடியுள்ளனர். எனினும், கைதிகள்
கதவுகள் மீது கற்களால் தாக்குதல் நடத்தியதுடன், சமையலறை, உணவு உண்ணும் இடம்,
வைத்தியசாலை, பதிவுப் பிரிவு மற்றும் அலுவலகப் பகுதிகளைச் சேதப்படுத்தியும் தீ
வைத்தும் அழித்துள்ளனர். </p><p>பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும்
இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை</h2><p>
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் கைதிகளுக்கு இடையிலான முரண்பாடாக
இருந்தபோதிலும், மஹர சிறைச்சாலையில் அவ்வாறான தன்மை காணப்படவில்லை. ஒரே
கட்டத்தில் ஆயிரம் பேர் ஒன்றுகூடியமை சந்தேகத்துக்குரியது.
</p><p>
கைதிகள் கூண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக,
சமையலறை, உணவு உண்ணும் இடம் மற்றும் வைத்தியசாலை போன்றவையே திட்டமிட்டுத்
தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6a0b578-0d18-40a3-b784-997e8b4e5bd6/26-6a728e0fa6895.webp' /></p><p>
</p><p>
மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாள்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா
என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. </p><p>தற்காலிக ஏற்பாடாக வேறு சிறைச்சாலைகளில் உணவு சமைக்கப்பட்டு மஹர
சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>
</p><h2>நெருக்கடிகளுக்குத் தீர்வு&nbsp;</h2><p>
சிறைச்சாலையின் சொத்துகளுக்குத் தீ வைத்து அழிக்கப்பட்டமை மக்களின்
வரிப்பணத்தையே பாதிக்கின்றது என்பதைக் கைதிகளின் உறவினர்கள் புரிந்துகொள்ள
வேண்டும்.

சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண எனது
தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e0a892e-6c3c-4187-9f41-1b1fa527f30e/26-6a728e110e1ce.webp' /></p><p>
</p><p>
மேலும், சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது.</p><p> மூன்று சிறைச்சாலைகள் தொடர்பில் விசேட தகவல்கள்
கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய சிறைச்சாலைகளில் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T01:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்ய வெளிநாடொன்றில் விசேட நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mission-to-arrest-kpi-1785891497"></link>
            <id>https://tamilwin.com/article/mission-to-arrest-kpi-1785891497</id>
            <summary type="text">&amp;nbsp;மலேசியாவில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான &#039;கஞ்சிபானி இம்ரான்&#039; என்பவரைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மலேசியாவில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான 'கஞ்சிபானி இம்ரான்' என்பவரைக் கைது செய்வதற்காக, உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹான் ஓலுகல தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று பாரிய கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
</p><p>மலேசிய பொலிஸாரால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரான் ஒளிந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களை இலக்கு வைத்து அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>பொலிஸார் விசேட நடவடிக்கை</h2><p>
</p><p>கஞ்சிபானி இம்ரான் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், சர்வதேச பொலிஸாருடன் இணைந்து நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல்வழிப் பாதைகளில் மலேசிய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe9f39d3-9bfa-425c-8364-45086caa9019/26-6a728aab6a47c.webp' /></p><p>மலேசியாவில் அவருக்கு உள்ள தொடர்புகள் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
</p><p>தற்போது மலேசிய பொலிஸாரின் காவலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியான 'ரத்மலானே சீமா' உட்பட மூன்று குற்றவாளிகளிடம் பொலிஸ் உதவி ஆணையர் ரோஹான் ஓலுகல மற்றும் மலேசிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இதன் மூலம் கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது பின்னணி குறித்த பல முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.</p><p></p><h2>&nbsp;பாதாள உலகக் தலைவர்</h2><p>
இந்த பாதாள உலகக் குழுத் தலைவரைக் கைது செய்யும் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.
</p><p>பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரும் இந்த நடவடிக்கையில் நேரடியாகப் பங்களித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85877dc2-b424-41d7-b9d5-bf0b00e20ada/26-6a728f841575d.webp' /></p><p>
</p><p>கஞ்சிபானி இம்ரானின் பிரதான சகாவான ரத்மலானே சீமா மலேசியாவில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கஞ்சிபானி இம்ரான் தனது மறைவிடத்தை மாற்றி வேறு பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
எப்படியாவது இந்த பாதாள உலகக் தலைவரைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னேற்றங்களை ஆய்வு செய்து தேவையான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வந்தடைந்த இந்திய அணி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/team-india-have-arrived-in-sri-lanka-1785890470"></link>
            <id>https://tamilwin.com/article/team-india-have-arrived-in-sri-lanka-1785890470</id>
            <summary type="text">2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது.
</p><p>
 
இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>இலங்கை கிரிக்கெட்</h2><p>
</p><p>
 இரண்டாவது போட்டி வரும் ஓகஸ்ட் 23 முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (S.S.C.) மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11998204-820f-4ecc-b6a8-849aa6dc7216/26-6a72886452b57.webp' /></p><p>
</p><p>
 உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 5ஆவது இடத்திலும், இலங்கை 6ஆவது இடத்திலும் உள்ளதால், இரு அணிகளுக்கும் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மிகவும் முக்கியமானவை ஆகும்.
</p><p>
 
இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு ஆயத்தமாகும் வகையில், ஆகஸ்ட் 07 முதல் 10 ஆம் திகதி வரை கொழும்பு என்.சி.சி (N.C.C.) மைதானத்தில் பயிற்சிப் போட்டியொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-son-fled-the-country-and-his-wife-1785873297"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-son-fled-the-country-and-his-wife-1785873297</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த நாட்களில் அவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
</p><p>
கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
</p><p>
இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் மற்றும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
தஹாம் திருமணம் செய்துகொண்ட குடும்பத்தின் வணிக நிறுவனமான எல்காடோ (Elcardo), ஆரம்பத்தில் நுழைவாயில்கள் (gates) தயாரிக்கும் நிறுவனமாக இருந்து, பின்னர் வாகன இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அகில ரவிநக வீரரத்ன மற்றும் அஸ்வினி டயஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BCAwXNr7v-g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:41:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடமராட்சியில் சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/privat-bus-conductor-suspended-1-week-overcharging-1785889547"></link>
            <id>https://tamilwin.com/article/privat-bus-conductor-suspended-1-week-overcharging-1785889547</id>
            <summary type="text">வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ஒருவருக்கு ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

10 வயதிற்கு உட்பட்ட ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ஒருவருக்கு ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
10 வயதிற்கு உட்பட்ட சிறுவனிடம் முழு பயணக் கட்டணம் அறவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஒரு வார பணித்தடை</h2><p>

குடத்தனையிலிருந்து மருதங்கேணி சென்ற சிறுவனிடம் வயது வந்தோருக்கான முழு கட்டணம் அறவிடப்பட்டதாக அவரது தந்தை சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நடத்துனர் விதிமுறைகளை மீறி முழு கட்டணம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0a7f42-1b4b-4c5e-a1d8-61960f820eb0/26-6a7283f769a5e.webp' /></p><p>

இதனையடுத்து குறித்த நடத்துனருக்கு ஒரு வாரம் பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் மருதங்கேணியிலிருந்து குடத்தனை வரையான பயணத்திற்கு பெரியவர்களுக்கு 108 ரூபாயும், சிறுவர்களுக்கு 54 ரூபாயும் அறவிடப்படுகிறது.</p><p>

ஆனால் தனியார் பேருந்துகளில் இதே தூரத்திற்காக 140 ரூபாய் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைநிரப்பு மதிப்பீடுகள் தொடர்பில் சண்முகம் குகதாசன் எம்.பி நாடாளுமன்றில் முன்வைத்த முக்கிய பரிந்துரைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kugathasan-mp-supplementary-assessment-proposals-1785883314"></link>
            <id>https://tamilwin.com/article/kugathasan-mp-supplementary-assessment-proposals-1785883314</id>
            <summary type="text">எதிர்பாராத அரச கடப்பாடுகள், பேரிடர் சார்ந்த செலவுகள் மற்றும் ஒப்பந்தக் கடன்களைச் சரிசெய்தல் ஆகியன ஆண்டின் இடையில் குறைநிரப்பு ஒதுக்கீடுகளை கோரவைக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்பாராத அரச கடப்பாடுகள், பேரிடர் சார்ந்த செலவுகள் மற்றும் ஒப்பந்தக் கடன்களைச் சரிசெய்தல் ஆகியன ஆண்டின் இடையில் குறைநிரப்பு ஒதுக்கீடுகளை கோரவைக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்வேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(04.08.2026) நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அரசின் நிதி ஆளுமை</h2><p>
</p><p>

நாடாளுமன்றம் மேற்பார்வையை வலுப்படுத்தவும், அரசின் நிதி ஆளுமையில்
பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணவும் அவர் பல முக்கிய பரிந்துரைகளை 
முன்வைத்துள்ளார்.
</p><p>
அவர் முன்வைத்த பரிந்துரைகளாக, அனைத்து குறைநிரப்பு மதிப்பீடுகளும் அரசியலமைப்புத்
தீர்மானங்களும் விவாதத்துக்கு எடுக்கப்படுவதற்கு 14
நாட்களுக்கு முன்னர் விரிவான நிதியியல் அறிக்கைகளோடு பொது நிதி பற்றிய
குழுவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f877aabe-6aa7-4da1-bec8-e5f346f7bad4/26-6a726ebb84fe0.webp' /></p><p>தேசிய பாதீட்டுத் திணைக்களமானது ஒவ்வொரு குறைநிரப்பு
கோரிக்கையோடும் சரியாக ஈடுசெய்யும் சேமிப்புகளை அடையாளம் காட்டும் ‘நிதி
நடுநிலைமை அறிக்கையை’ இணைக்க வேண்டும்.
</p><p>
நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக ஒவ்வொரு இடைக்கால நிதித்
தீர்மானம் குறித்தும், தேசிய கடன் போக்குகள் மற்றும் பணவீக்கத்தின் மீதான அதன்
தாக்கத்தை மாதிரியாகக் கொண்ட, ஒரு சுதந்திரமான, பக்கச் சார்பற்ற பொருண்மிய
மதிப்பீட்டை வெளியிடும் பொறுப்பை நாடளுமன்றப் பாதீட்டு அலுவலகத்திடம்
ஒப்படைக்க வேண்டும்.</p><p>

ஒப்புதல் அளிக்கப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகளின் வழங்கல்
மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க, பொதுமக்கள் அணுகக்கூடிய வெளிப்படைத்தன்மையை
உறுதிசெய்யும் மற்றும் தலைமைத் தணிக்கையாளரால் ஒரே நேரத்தில் தணிக்கை செய்ய
வழிவகை செய்யும் ஒரு நிகழ்நேர எண்மிய கண்காணிப்பு வலைதளத்தை (Portal) நிதி
அமைச்சு நிறுவ வேண்டும் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T23:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் வெள்ளப்பெருக்குக்கு நிரந்தர தீர்வு காண சிறப்புக் குழு நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/permanent-flood-solution-planned-for-nuwara-eliya-1785876234"></link>
            <id>https://tamilwin.com/article/permanent-flood-solution-planned-for-nuwara-eliya-1785876234</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு
நிரந்தர தீர்வு காண்பதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என நுவரெலியா
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு
நிரந்தர தீர்வு காண்பதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என நுவரெலியா
மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(04.08.2026) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா
மாவட்ட சிறப்புப் பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நிரந்தர தீர்வு</h2><p>
</p><p>
நுவரெலியா
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள
சுரவீர ஆரச்சி, இதுவரை பெய்த ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் ஒரே இடங்களாகவே உள்ளன என்றும், இந்தப்
பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகள் குறித்த அறிக்கை தயாரிப்பது அவசியம்
என்றும் கூறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc222759-5b44-4d52-aab8-5a35f5145efb/26-6a7255bf06387.webp' /></p><p>இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்
தலைவர், வானிலை முன்னறிவிப்பின்படி வரும் நாட்களில் அனைவரும் மிகுந்த
எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>இந்தக் கூட்டத்தில் நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர, கூடுதல் மாவட்ட செயலாளர்கள்
தினிகா கவிசேகர மற்றும் ஷாலிகா லிடகும்புர, நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும்
பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T23:20:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசத்தின் கருத்தால் அரசியல் அரங்கில் புதிய சர்ச்சை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagala-kariyawasam-controvercy-speech-1785884751"></link>
            <id>https://tamilwin.com/article/sagala-kariyawasam-controvercy-speech-1785884751</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
பொலிஸ்மாதிபரை (Police Chief) மக்கள் வீதியில் வைத்து அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று எச்சரிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.</p><p>

இது ஒரு கடுமையான அச்சுறுத்தலாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.</p><p>

ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் சவாலாக இது பார்க்கப்படுகிறது. </p><p>

இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இத்தகைய கருத்துக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/h6wIGdxbvug" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T23:18:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலவாக்கலையில் வெள்ள அனர்த்தம் - பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thalawakkala-flood-victims-moved-to-safety-1785874547"></link>
            <id>https://tamilwin.com/article/thalawakkala-flood-victims-moved-to-safety-1785874547</id>
            <summary type="text">தலவாக்கலை
பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல தோட்டப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ளதன் காரணமாக பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு
இடம்பெயர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை
பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல தோட்டப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ளதன் காரணமாக பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு
இடம்பெயர்த்தப்பட்டுள்ளன.
</p><p>
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரஸ்டன் தோட்டத்தில் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கால் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>இடம்பெயர்த்தப்பட்ட மக்கள்</h2><p> </p><p>

வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததையடுத்து, அவர்களை
உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றிய அதிகாரிகள், பிரஸ்டன் தமிழ்
வித்தியாலயத்தில் தற்காலிக நிவாரண முகாமொன்றை அமைத்து தங்கவைத்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, ஆட்லோ தோட்டத்திலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக
பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94fdec5b-dec7-4ab4-a67b-34052707554d/26-6a724b060eefa.webp' /></p><p>அங்கு 94 பேர் தங்களது வீடுகளை விட்டு
வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது தோட்டத்தில் அமைந்துள்ள
கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், சமைத்த உணவு
மற்றும் அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தலவாக்கலை பிரதேச
செயலகம், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், தோட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார
அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>நீர்மட்டம் உயர்வு</h2><p>
</p><p>

இதற்கிடையில், தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள
ஆறுகள் மற்றும் நீர்வழித்தடங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதால்,
தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு
அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15716cff-6a84-41e5-bf5b-a9b4768de140/26-6a724b0557b67.webp' /></p><p>மேலும், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளுக்குள்
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், சிறுவர்களை ஆறுகள் மற்றும் வெள்ளநீர்
தேங்கியுள்ள இடங்களுக்கு அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாமென்றும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
காலநிலை தொடர்ந்து சீரற்ற நிலையில் காணப்படுவதால், பாதிக்கப்படக்கூடிய
பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவையெனில் மேலதிக மக்களை
பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான அனைத்து
ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T23:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வருகை தரவுள்ள தமிழ்நாட்டின் தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/industrialists-and-business-leaders-tamil-nadu-1785881891"></link>
            <id>https://tamilwin.com/article/industrialists-and-business-leaders-tamil-nadu-1785881891</id>
            <summary type="text">தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

சுமார் 20 பேர் கொண்ட இந்தக் குழு, எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
</p><p>
சுமார் 20 பேர் கொண்ட இந்தக் குழு, எதிர்வரும் செப்டம்பர் 16 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>இலங்கைக்கு விஜயம்</h2><p>
</p><p>
வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.
</p><p>
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களுடன் கடந்த மாதம் 29 ஆம் திகதி கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e563b5b9-c9a0-4767-8aad-aad4573d525a/26-6a7268894f2bd.webp' /></p><p>
</p><p>
கோயம்புத்தூரில் உள்ள மில்லட் ஃபவுண்டேஷன் மற்றும் பிஸ்நெட் சொல்யூஷன் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவினரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
</p><p>
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஜே.சி.ஐ. நிர்வாக உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.</p><p>

இந்த விஜயத்தின் போது வர்த்தகம், முதலீடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆராயப்படவுள்ளன.
</p><p>
மேலும், சுற்றுலா, விவசாயம், உணவு பதப்படுத்தல், உற்பத்தி மற்றும் தொழில்முனைவு துறைகளிலும் புதிய வாய்ப்புகளை கண்டறிவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T22:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை அச்சுறுத்தும் டொல்பின் சூறாவளி: தீவிரமடையும் கனமழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-dolphin-threaten-japan-heavy-rains-1785872197"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-dolphin-threaten-japan-heavy-rains-1785872197</id>
            <summary type="text">​பசிபிக் பெருங்கடலில் உருவான &#039;டொல்பின்&#039; தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி
அதிவேகமாக நகர்ந்து வருவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் உடனடியாகப்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பசிபிக் பெருங்கடலில் உருவான 'டொல்பின்' தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி
அதிவேகமாக நகர்ந்து வருவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் உடனடியாகப்
பாதுகாப்பு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

​</p><p> இந்த சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடியதென ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல்&nbsp;வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>ஜப்பான் வானிலை ஆய்வு மையம்</h2><p>ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பொனின் தீவுகளை
ஏற்கனவே கடந்துள்ள இந்த சூறாவளி, வார இறுதியில் ஒகினாவா தீவில் முழுமையாகக்
கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
இதனால் ஏற்படும் கடல் அலை சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக விமானம்
மற்றும் படகுப் போக்குவரத்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60299677-155f-45e6-9036-327682f07864/26-6a7243e3adced.webp' /></p><p>

​அத்துடன், இந்த சூறாவளியின் தாக்கம் காரணமாக தாய்வானின் வடக்கு மற்றும்
கிழக்கு பகுதிகள், சீனா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை மற்றும் காற்று
வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆங்காங்கே மின் தடை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
உள்ளதால், கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்ளூர்
நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T22:30:09+00:00</updated>
        </entry>
    </feed>
