<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-05T20:43:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து வெடிப்பு சத்தங்கள்..! துபாயில் பெரும் பரபரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-blasts-in-20-minutes-explosion-dubai-amid-iran-1785959123"></link>
            <id>https://tamilwin.com/article/7-blasts-in-20-minutes-explosion-dubai-amid-iran-1785959123</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபெல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபெல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
 சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், இரவு வானத்தை மூடும் அளவுக்கு கரும்புகை எழுவது போல் உள்ளது.</p><p></p><h2>ஏழு வெடிப்புகள்&nbsp;</h2><p>

ஈரானின் Mehr செய்தி நிறுவனம், எமிரேட்ஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்ட தகவலின்படி, சுமார் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது ஏழு வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ததாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த வெடிப்புகள் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது தொழிற்சாலை விபத்தா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f332434-84ce-4f7f-bd22-eb934c1aa03e/26-6a7396f5734b0.webp' /></p><p>

ஈராக் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில், யேமனிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.</p><p> 

இருப்பினும், இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் எமிரேட்ஸ் அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.</p><p>மேலும், NASA-வின் வெப்பப் படிம (Thermal Imagery) தகவல்களை மேற்கோள்காட்டிய Mehr செய்தியின்படி, ஜெபெல் அலி துறைமுகத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் சேமிப்பு மற்றும் பரிமாற்றக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு எச்சரிக்கை</h2><p>

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகளில், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே கரும்புகை அடர்த்தியாக எழுவது காணப்படுகிறது.</p><p> எனினும், அந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

அருகிலுள்ள அல் ஃபுர்ஜான் (Al Furjan) பகுதியில் வசிப்பவர்களும், வெடிப்புகள் பதிவான அதே நேரத்தில் பலத்த அதிர்வு மற்றும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="tr" dir="ltr">BAE Dubai Cebel Ali Sanayi Bölgesi&#39;nde bir sanayi kazası meydana geldi ve 20 dakika içinde 7 patlama gerçekleşti. <a href="https://t.co/fptaxokRqy">pic.twitter.com/fptaxokRqy</a></p>&mdash; Ruslan (روسلان ﻡ) (@93Rsln) <a href="https://x.com/93Rsln/status/2084974452895252664?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

துபாய் நகர மையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள ஜெபெல் அலி, உலகின் மிகப்பெரிய செயற்கை துறைமுகங்களில் ஒன்றையும், முக்கிய சுதந்திர வர்த்தக மண்டலத்தையும் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக மையமாகும்.
</p><p>
அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக, பிராந்தியத்தில் அமெரிக்காவின் கூட்டாளி நாடாக உள்ள ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில மாதங்களாக உயர்மட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில் இருந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T20:03:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காற்றில் பறந்தபோது மர்மப் பொருளுடன் மோதிய DHL சரக்கு விமானம் – அவசர தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drone-with-explosives-found-at-german-airport-1785956426"></link>
            <id>https://tamilwin.com/article/drone-with-explosives-found-at-german-airport-1785956426</id>
            <summary type="text">ஜெர்மனியின் லைப்ஸிக்/ஹலே விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட டிஎச்எல் (DHL)
நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, காற்றில் பறந்து கொண்டிருந்தபோது
அறியப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் லைப்ஸிக்/ஹலே விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட டிஎச்எல் (DHL)
நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, காற்றில் பறந்து கொண்டிருந்தபோது
அறியப்படாத பொருள் மீது மோதியதால் ஹேனோவர் நகரில் திட்டமிடப்படாத அவசர
தரையிறக்கம் செய்யப்பட்டது.
</p><p>
விமானத்தின் முன்பகுதியில் இலேசான சேதம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்தச் சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>
</p><h2>விமான நிலைய ஓடுபாதை</h2><p>
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விமான நிலைய ஓடுபாதை
அருகே வெடிபொருளுடன் கூடிய ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
</p><p>
அந்த ட்ரோனுக்குள் வெடிபொருளை வெடிக்கச் செய்யும் சாதனம் இருந்ததையும், ஆனால்
அது செயலிழந்த நிலையில் இருந்ததையும் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb9fd763-1056-4f45-8e1b-0b424b0b5615/26-6a738d118266d.webp' /></p><p>
</p><p>
உக்ரைனின் அண்டனோவ் சரக்கு விமானத்திற்கு மிக அருகில் இந்த ட்ரோன்
கண்டெடுக்கப்பட்டதால், வெடிபொருள் நிபுணர்கள் அங்கு தீவிர சோதனையில்
ஈடுபட்டனர்.
</p><p>
இதன் காரணமாக ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டு பல விமானங்கள் திருப்பி
விடப்பட்டன.</p><p></p><h2>அவசர நிலை பிரகடனம்</h2><p>
சமீபகாலமாக ஜெர்மனியின் இராணுவ மையங்கள், துறைமுகங்கள் மற்றும் தளவாட
நிறுவனங்களின் வான்வெளியில் அனுமதியின்றி பறக்கும் ட்ரோன்களின் நடமாட்டம்
அதிகரித்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab300d2-5c49-4926-862c-c90bea7e0e21/26-6a738d123670c.webp' /></p><p>

இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ரஷ்ய முகவர்கள் இருக்கலாம் என ஜெர்மன்
கூட்டாட்சி காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.</p><p>

எனினும், கண்டெடுக்கப்பட்ட ட்ரோன் குறித்து ஜெர்மன் உள்துறை அமைச்சகம் விசாரணை
நடத்தி வரும் வேளையில், இந்தச் சம்பவத்துக்கும் கடந்த கால வெடிப்புச்
சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை
என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T19:20:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் இல்லம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bomb-attack-at-shakib-al-hasan-s-house-1785954331"></link>
            <id>https://tamilwin.com/article/bomb-attack-at-shakib-al-hasan-s-house-1785954331</id>
            <summary type="text">இந்தியாவில் தங்கியுள்ள பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உடன் இணையவழி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, பங்களாதேஸ் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் தங்கியுள்ள பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உடன் இணையவழி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் பூர்வீக இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்த தாக்குதல் இரவு சுமார் 8.45 மணியளவில், பங்களாதேஷின் மகுரா நகரிலுள்ள கேஷாப்மோர் பகுதியில் அமைந்துள்ள ஷகிப் அல் ஹசனின் பூர்வீக இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>பெட்ரோல் குண்டுத் தாக்குதல்</h2><p> 

தாக்குதலின் போது வீடு சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம், இந்தியாவின் நியூ டெல்லியில் நடைபெற்ற வெளிநாட்டு செய்தியாளர்கள் கழகத்தின் (Foreign Correspondents' Club) ஏற்பாட்டில் ஷேக் ஹசீனா இணையவழியாக உரையாற்றியதையடுத்து இடம்பெற்றுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Torching residences : the cost of attending Awami League press conference <br>Neo fascism engulfs Bangladesh <br><br>A grisly petrol bomb attack took place at the residence of Bangladesh’s celebrated cricket icon Sakib Al hasan, hours after the world famous star cricketer appeared at a… <a href="https://t.co/Uqmwwih3XG">pic.twitter.com/Uqmwwih3XG</a></p>&mdash; Bangladesh Awami League (@albd1971) <a href="https://x.com/albd1971/status/2085037084403011654?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதுகுறித்து அவாமி லீக் வெளியிட்ட அறிக்கையில், "அவாமி லீக் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றதற்கான விலையாக வீடுகள் தீவைக்கப்படுகின்றன. புதிய பாசிசம் பங்களாதேஷை ஆட்கொண்டுள்ளது" எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், "ஷகிப் அல் ஹசனின் இல்லம் மீது நடத்தப்பட்ட இந்த பெட்ரோல் குண்டுத் தாக்குதல், ஜனநாயகத்தை உருவாக்குவதாகக் கூறி அவாமி லீக் ஆதரவாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட வன்முறையின் மற்றொரு எடுத்துக்காட்டாகும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஷேக் ஹசீனா</h2><p>
</p><p>

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஷேக் ஹசீனா, இந்த ஆண்டு டிசம்பரில் பங்களாதேஷ் திரும்புவேன் என்றும், கைது செய்யப்படவோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலும்கூட அதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
</p><p>
"எனது திரும்புவது அதிகாரத்திற்காக அல்ல. பங்களாதேஷை மீண்டும் வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் வளமான பாதைக்கு கொண்டு செல்வதற்காகவே."என்று அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd1b71d-0c80-4e4d-8896-0c5f72f994de/26-6a7382b865de6.webp' /></p><p>

மேலும்,

"என்னை சிறையில் அடைக்கலாம், கொல்லவும் கூட முடியும். ஆனால் நான் என் மக்களுடன் இருப்பதற்காக நாடு திரும்புவேன். நான் முடிவு செய்துவிட்டேன்."

எனவும் அவர் தெரிவித்தார்.

2024 ஒகஸ்ட் 5ஆம் திகதி அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்த பின்னர், ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார்.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பரில், 2024 மாணவர் போராட்டங்களை ஒடுக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்" என்ற குற்றச்சாட்டில் டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆஜராகாத நிலையில் மரண தண்டனை விதித்தது.</p><p></p><h2>&nbsp;பலமுறை கோரிக்கை</h2><p> 

அதன் பின்னர், அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்தி ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் அரசு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அதேவேளை,

"பங்களாதேஷில் வீடுகள், பணியிடங்கள், கல்வி நிலையங்கள் அனைத்திலும் அச்சம் நிலவுகிறது. ஜனநாயகத்திற்கும் நீதிக்கும் போராடும் மக்களுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு அளிக்க வேண்டும்"

என ஷேக் ஹசீனா சர்வதேச சமூகத்திற்கும் அழைப்பு விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9058e51-ba9f-4732-9eb1-812afc230b55/26-6a7382b96ee4f.webp' /></p><p>
</p><p>
இந்த இணையவழி செய்தியாளர் சந்திப்பில், அவரது மகன் Sajeeb Wazed Joy மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் Mohibul Hasan Chowdhury Nowfel உள்ளிட்ட அவாமி லீக் தலைவர்களும் பங்கேற்றனர்.
</p><p>
இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றது தொடர்பாக, அதற்கு விளக்கம் கோரி பங்களாதேஷ் அரசு இந்தியாவிடம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T18:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு வழக்கில் திருப்பம்: சாரா ஜஸ்மினின் உடல் தொடர்பில் நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-sunday-attacks-sara-jesmin-alive-1785951605"></link>
            <id>https://tamilwin.com/article/easter-sunday-attacks-sara-jesmin-alive-1785951605</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின் உடல் இடம்பெறவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
</p><p>
மேலும், சாரா ஜஸ்மின் விசாரணையாளர்களைத் தவறாக வழிநடத்த முயன்றமை விமான நிலைய சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சாரா ஜஸ்மினின் உடல் சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்டதாகக் காட்டும் நோக்கில் மூன்றாவது முறையாக DNA பரிசோதனை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரி விரிவான சாட்சியங்களையும் வழங்கியுள்ளார்.

சாரா ஜஸ்மின் தற்போது எங்கு சென்றார் என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை இல்லை. </p><p>எனினும், அவர் சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சஹ்ரானின் குடும்பத்தினர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேனில் வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> ஆனால், வெடிப்புக்குப் பின்னர் தீக்கிரையான நிலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

இதனால், மற்றொரு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி சாரா ஜஸ்மின் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணையாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JWvv8rw3YDg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T17:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமனுடான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-s-deputy-foreign-minister-kazem-gharibabadi-1785950676"></link>
            <id>https://tamilwin.com/article/iran-s-deputy-foreign-minister-kazem-gharibabadi-1785950676</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
கடல்சார் கப்பல்கள் நுழைவது மற்றும் வெளியேறுவதற்கான வழிகள் உட்பட பெரும்பாலான முக்கிய அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி தெரிவித்துள்ளார்.
</p><p>ஈரானின் அதிகாரப்பூர்வ 'இர்னா' செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் "நிறைவடையும் தருவாயில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dff3dfc2-9171-4ac0-9f2e-1f58c7d56ec3/26-6a7371d5aab91.webp' /></p><p>
இது தொடர்பான அவரது கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p>எவ்வாறெனினும் இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா தனது அதிகாரபூர்வ நிலைப்பாடை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-05T17:24:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானின் பாதுகாப்பு வெள்ளை அறிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-strongly-opposes-japan-s-defense-white-paper-1785949063"></link>
            <id>https://tamilwin.com/article/china-strongly-opposes-japan-s-defense-white-paper-1785949063</id>
            <summary type="text">ஜப்பான் வெளியிட்ட புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் (Defence White Paper)
சீனாவை அச்சுறுத்தலாகச் சித்தரித்துள்ளதாகவும் தாய்வான் விவகாரம் தொடர்பாகத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் வெளியிட்ட புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் (Defence White Paper)
சீனாவை அச்சுறுத்தலாகச் சித்தரித்துள்ளதாகவும் தாய்வான் விவகாரம் தொடர்பாகத்
தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகவும் கூறி, ஜப்பானிய அரசாங்கத்திடம்
சீனா உத்தியோகபூர்வமாகத் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது.
</p><p>
ஜப்பான் ஆண்டுதோறும் வெளியிடும் இந்தப் பாதுகாப்பு அறிக்கையில், தாய்வானைச்
சுற்றி சீனா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இதனால்
இரு தரப்பிற்கும் இடையிலான இராணுவச் சமநிலை சீனாவுக்குச் சாதகமாக விரைவாக
மாறிவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p></p><h2>சீனா கடும் எதிர்ப்பு</h2><p>
</p><p>
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சு, தாய்வான் விவகாரம்
சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் தலையிட ஜப்பானுக்கு எவ்வித
உரிமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c148219c-c502-454c-bcdc-d5dd734ffc27/26-6a736d1352a36.webp' /></p><p>
</p><p>
ஜப்பான் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, ஆயுத உற்பத்தியின் மூலம்
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் தனது இராணுவ பலத்தை
அதிகரித்து வருகின்றது.</p><p>

எனினும், ஜப்பான் தனது வரலாற்றுப் பிழைகளிலிருந்து பாடங்கற்காமல் மீண்டும்
இராணுவமயமாக்கலை நோக்கிச் செல்வதாகச் சீனா குற்றம் சாட்டியுள்ளதுடன்,
ஜப்பானின் இந்த நகர்வுகளைக் கட்டுப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை
விடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T17:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்மன்பில, விமல் உள்ளிட்ட சிலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-seeks-contempt-proceedings-against-wimal-1785949079"></link>
            <id>https://tamilwin.com/article/court-seeks-contempt-proceedings-against-wimal-1785949079</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக, அரசியல் பிரமுகர்கள் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

கோட்டை நீதவான் பசன் அமரசிங்க முன்னிலையில் இன்று இந்தத் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜகச்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரஅஸங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண,&nbsp; உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/761ce0d8-bc55-42e9-81e8-a02317c41d93/26-6a736c32eb2cd.webp' /></p><p>
</p><p>குறித்த நபர்கள் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நடத்திய ஊடக சந்திப்புகள் மற்றும் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை ஆய்வு செய்த நீதவான், அவர்கள் "வெளிப்படையாகவே நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே உள்ளதால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அங்கு சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்கு, நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p>

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போது மூன்று பிரதான சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
சுரேஷ் சலே (முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர்), சரத் சமந்த (மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி), ஜெக்கில் பாஸ் (தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் அதிகாரி) ஆகியோர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பலருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் மீதான விசாரணைகளும் தொடர்கின்றன.</p><p> 
இவ்வாறான ஒரு பின்னணியில், விசாரணைகளைத் திசைதிருப்பும் வகையிலும் நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையிலும் கருத்து வெளியிட்டதாக கம்மன்பில, வீமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T17:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த இலக்கு மைத்திரி! அரசாங்கத்தை உசுப்பேற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-gets-caught-in-easter-attack-case-1785907068"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-gets-caught-in-easter-attack-case-1785907068</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><h2>வழக்குத் தொடர பரிந்துரை</h2><p>2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விஜித மலல்கொட அறிக்கைக்கு அமைவாகவே இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனினும், அந்த அறிக்கையில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. </p><p>

மேலும், 2019ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று, 2022இல் நிறைவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd226b0d-82ef-44a8-bdb1-9ccb1e69b84b/26-6a72db6349d17.webp' /></p><p> </p><p> அந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர். </p><p>

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றப் போது, பூஜித் மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கு நட்டஈடு செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. </p><p>

ஆனால் அப்போது உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் இணைக்கவில்லை.</p><p> 

இதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது. தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010a33fa-478c-4295-9cfa-57f818b09e22/26-6a72db64037a2.webp' /></p><p> </p><p>அவ்வாறு எப்படி நடக்க முடியும்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் நிலந்த ஜயவர்தன மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. </p><p>

தாக்குதல் சம்பவம் நடக்கும் போது பாதுகாப்பு அமைச்சு, முப்படைகளும் மைத்திரிபால சிறிசேனவிடமே இருந்தது. அவர் எப்படி பொறுப்பில் இருந்து விலக முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும்.</p><p> அந்த விசாரணைகள் நடக்கும் போதே 2022இல் தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் எப்படி விடுவிக்கப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் தெளிவாக தனது கடமைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T15:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-foreign-secretary-vikram-misri-sri-lanka-1785938996"></link>
            <id>https://tamilwin.com/article/indian-foreign-secretary-vikram-misri-sri-lanka-1785938996</id>
            <summary type="text">மாகாண
சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று, பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின்
தலைவர்களிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண
சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று, பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின்
தலைவர்களிடம் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இதன்போது, தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் கைவிடப்படாமல் படையினரின் ஆக்கிரமிப்பில்
இருக்கும் நிலங்கள் பற்றிய விபரங்களை அவர் தமிழ்த் தேசியக் கட்சிகளின்
தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
</p><p>
இன்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
</p><p>
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் பதில் பொதுச்செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவர் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப.சத்தியலிங்கம், கவீந்திரன் கோடீஸ்வரன்
ஆகியோர் பங்குபற்றினர்.</p><h2>தமிழ்க் கட்சிகள்&nbsp;</h2><p>
</p><p>
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
எம்.பியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன்
எம்.பி., தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் பங்குபற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6c3ba6-3940-47c8-96d6-69f456c9873f/26-6a734d610dd7e.webp' /></p><p>

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய வெளியுறவுச்
செயலாளர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.</p><p>
</p><p>
தேர்தலை இப்போதைக்கு நடத்தும் எண்ணம் அரசுக்கோ அரசு தலைவருக்கோ இல்லை என்பதைத்
தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மக்களால் கைவிடப்பட்டவை என்ற
சாரப்பட கருத்துக் கூறப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ்த்
தலைவர்களிடம் கேட்டார்.</p><p>

"ஜனாதிபதியினாலும் பிற தென்னிலங்கைத் தலைவர்களாலும் அத்தகைய கருத்து
கூறப்படுவதாக அறிகின்றோம். ஆனால் அது தப்பு. சம்பந்தப்பட்ட காணிகளை இராணுவம்
ஆக்கிரமித்து நீண்ட காலமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அந்த மக்கள்
வேறு இடமில்லாமல் இடம்பெயர்ந்து இருக்கின்றார்கள்.</p><h2>காணி விடுவிப்பு&nbsp;</h2><p> </p><p>சில சமயங்களில்
வெளிநாட்டில் இருக்கின்றார்கள். அதன் காரணமாக அவை கைவிடப்பட்ட காணிகள் என்று
கூறுவது அர்த்தமற்றது." என்று தமிழ்த் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c67e78a-bb1e-4a3f-b8e0-62f173484adf/26-6a734d61beb4f.webp' /></p><p>
</p><p>
மக்கள் குடியிருக்காத தமிழர் தாயக நிலங்களைக் கபளீகரம் செய்ய கொழும்பு
ஆட்சிப்பீடம் முனைகின்றது என்று சுட்டிக் காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
எம்.பி., ஏற்கனவே அரசு அப்படி ஒரு முயற்சியை எடுத்தது, அதை மேற்கொள்ள மாட்டோம்
என்று பிரதமர் கூட எமக்கு வாக்குறுதி தந்தார், ஆனால் அதையும் மீறி அப்படி
நிலத்தை சுவீகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது, சந்தர்ப்பவசமாக
சுமந்திரன் வழக்குப் போட்டு அந்த முயற்சியை முறியடித்தார் என்று மேலும்
சுட்டிக்காட்டினார்.</p><p>

"மக்களின் காணிகளை அவர்களிடமே விடுவிக்க வேண்டும் என்பது தங்களுடைய அரசின்
தேசிய கொள்கை என்று அறிவிக்கின்றார் ஜனாதிபதி. ஆனால் மறுநாள் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதிப் பாதுகாப்பு
அமைச்சர் அந்தக் காணிகளை விடுவிக்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்துகின்றார்." என்று சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இன்றைய கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், போன்றோரும் கருத்துக்களை வெளியிட்டனர்.

கொழும்புக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவும் இந்தச் சந்திப்பில்
பங்குபற்றினார்.</p>]]></content>
            <updated>2026-08-05T14:56:31+00:00</updated>
        </entry>
    </feed>
