<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-14T05:49:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியாது! சட்டச் சிக்கலுக்குத் தீர்வு கண்டதும் தேர்தல் என தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-jayasinghe-provincial-council-election-1789361311"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-jayasinghe-provincial-council-election-1789361311</id>
            <summary type="text">2017ஆம் ஆண்டில் பழைய தேர்தல் முறைமை குறித்துக் குற்றச்சாட்டுக்களை
முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத்
தேர்தலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2017ஆம் ஆண்டில் பழைய தேர்தல் முறைமை குறித்துக் குற்றச்சாட்டுக்களை
முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத்
தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோருவது முரண்பாடானது என தொழில்
பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும்
சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
கம்பஹா பகுதியில் நேற்று (13.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில்
கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
இவ்வாறு கூறியுள்ளார்.</p><h2>மாகாணசபைத் தேர்தல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர்
கோருகின்றார்கள்.</p><p> ஆனால், 2017ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
அமைச்சுப் பதவி வகித்த நல்லாட்சி அரசுதான் மாகாணசபைத் தேர்தலை
நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a1040c9-3c6e-4f72-94fa-444aa4c7abc8/26-6aa786bd86ab1.webp' /></p><p> </p><p>அன்றைக்கு அந்தப் பழைய
தேர்தல் முறைமை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த
எதிர்க்கட்சியினர், இன்று அதே முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும்
என்கின்றார்கள்.</p><h2>முறையற்றதொரு அரச நிர்வாகம்</h2><p>
</p><p>
முறையற்ற மற்றும் மோசடியான பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை
நடத்தினால், அது முறையற்றதொரு அரச நிர்வாகமே தோற்றம் பெற வழிவகுக்கும். </p><p>எனவே,
தேர்தல் முறைமையில் உள்ள சட்டச் சிக்கல்களுக்கு முரண்பாடற்ற வகையில் முறையான
தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T05:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொன்சேகாவை இராணுவத்தினர் கைது செய்த போது அதே ஹோட்டலில் தங்கியிருந்த அநுர! மேடையில் சம்பவத்தை விபரித்த ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-who-was-present-when-fonseka-was-arrested-1789359287"></link>
            <id>https://tamilwin.com/article/anura-who-was-present-when-fonseka-was-arrested-1789359287</id>
            <summary type="text">
2010 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரே ஹோட்டலில் இருந்து தேர்தல் முடிவுகளை நானும் சரத் பொன்சேகாவும் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த ஹோட்டலை இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2010 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரே ஹோட்டலில் இருந்து தேர்தல் முடிவுகளை நானும் சரத் பொன்சேகாவும் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்து, சரத் பொன்சேகாவை கைது செய்தனர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். </p><p>

நொச்சியாகம பகுதியில் நேற்றையதினம்(13) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

ஊழல்வாதிகளை கைது செய்யும் போது நான் அரசியல் பழிவாங்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். யாரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது..</p><h2>அரசியல் பழிவாங்கல்&nbsp;</h2><p>

2010இல் நானும், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவும் ஒரே ஹோட்டலில் இருந்தவாறு தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.
</p><p>
முடிவுகள் வெளியாகி முடிந்தவுடன் அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். சரத் பொன்சேகாவும் அப்போதே கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be9a3f70-b772-4b47-ac73-7d6be55fdb44/26-6aa7820d4ca79.webp' /></p><p> </p><p>


அப்போதைய அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதற்காக ஊடக நிறுவனம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p> அரச அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றனர். இதுதான் அரசியல் பழிவாங்கல் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-14T05:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடதும்பர பகுதியில் 11 வயது பௌத்த பிக்கு உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-year-old-buddhist-monk-dies-in-udadumbara-area-1789361835"></link>
            <id>https://tamilwin.com/article/11-year-old-buddhist-monk-dies-in-udadumbara-area-1789361835</id>
            <summary type="text">உடதும்பர - கைக்காவலப் பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடதும்பர - கைக்காவலப் பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (13.09.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த பிக்கு மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு விகாரையில் தங்கியிருந்து வந்துள்ளார்.</p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>

இந்த நிலையில் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக உடதும்பர பகுதிக்கு சென்றிருந்த அவர், பின்னர் வேறு சில பௌத்த பிக்குகளுடன் இணைந்து ஹீன் கங்கையில் குளிக்கச் சென்றிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f5c53b-d6e1-42b8-a9c1-89f434126b88/26-6aa7835e7cf6d.webp' /></p><p> </p><p>

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த பிக்கு நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இச்சம்பவம் குறித்து உடதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T05:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1789359213"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1789359213</id>
            <summary type="text">தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது இனப்படுகொலைக்கான மிகச்சிறந்த
ஆதாரங்களை நாமே இழப்பதற்குச் சமமாகிவிடும் என்று தமிழ்த் தேசியப்
பேரவையின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.</p><p>

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச
நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று (13.09.2026) முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியின்
இறுதியில், நல்லூர் கிட்டு பூங்காவில் 'தமிழ் மக்களின் நீதிக்கான குரல்' எனும்
தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், சர்வதேச
விசாரணையை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரகடனக்
கூட்டம் நடைபெற்றது. </p><p>அதில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளல்</h2><p>அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், போர் முடிந்து 17 வருடங்களுக்குப் பிற்பாடும் கூட, சர்வதேச சமூகம்
தமிழினத்துக்கு நடைபெற்றுள்ள இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்குத்
தயங்குகின்றது. கனடா, பிரித்தானியா போன்ற ஒரு சில நாடுகளின் தலைவர்களைத் தவிர,
ஏனையோர் உத்தியோகபூர்வமாக இந்த இனப்படுகொலை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதைத்
தவிர்த்து வருகின்றனர்.
</p><p>
இத்தகையதொரு சூழலில்தான் செம்மணி படுகொலை சார்ந்த ஆதாரங்களும் சாட்சியங்களும்
வெளிவர ஆரம்பித்துள்ளன. 1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை
வழக்கில், இராணுவச் சிப்பாய்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட
நிலையில்தான், செம்மணியில் கிட்டத்தட்ட 600 இற்கும் அதிகமான உடல்கள்
புதைக்கப்பட்ட உண்மையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.</p><p> ஆனால், அப்போதும் கூட
அந்த உண்மைகளை மூடிமறைப்பதற்கே அரசு முயன்றது.

செம்மணியில் புது மண் கொட்டப்பட்டு, அந்தப் பிரதேசம் பல மாதங்களுக்குச் செல்ல
முடியாதவாறு இரவிரவாகச் சுத்தப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில உடல்கள்
மீட்கப்பட்ட பின்னர் அந்த விசாரணை முடக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் மக்கள் நீதியைக் கோரியும் எவரும் செம்மணி
குறித்துப் பேசத் தயாராக இருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b1cc20b-96e6-4534-b51d-17fb96f36e7a/26-6aa77ad624f62.webp' /></p><p> </p><p>இந்நிலையில், 2009 மே 18 இற்குப் பிறகு
அழிக்கப்பட்ட ஆத்மாக்களின் அநியாயம் மூடிமறைக்கப்பட்டுவிடக் கூடாது
என்பதற்காக, தற்செயலாகச் செம்மணிச் சுடலையில் கட்டுமான வேலைகள் நடைபெற்றபோது
எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இது காலம் காலமாக அரசுகள் மாறி மாறித்
தமிழினத்தைக் குறிவைத்துள்ளன என்பதை நிரூபிக்கும் மிகப்பெரிய சாட்சியமாகும்.</p><h2>செம்மணி விவகாரம்</h2><p>

ஆனால், இந்தச் சூழலில்தான் போர் முடிவதற்குச் சற்றும் நிபந்தனையற்ற ஆதரவைக்
கொடுத்து, 'எந்தவொரு இராணுவச் சிப்பாயும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட
மாட்டார்கள்' என்று பகிரங்கமாகக் கூறிய ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார
திஸாநாயக்கவின் அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. </p><p>அத்தகையதொரு சூழலில்தான்
செம்மணி விவகாரம் வெளிப்பட்டுள்ளது.

சிங்கள மக்களுக்கே நீதித்துறையை அரசியல் மயப்படுத்துவதாக இந்த அரசின் மீது
குற்றச்சாட்டு உள்ள நிலையில், உள்ளக விசாரணை எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நீதியை வழங்காது என 2014 ஆம் ஆண்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள்
ஆணையாளரும் தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
ஆகவே, செம்மணி மனிதப் படுகொலை போன்ற எந்தவொரு குற்றத்துக்கும் எவரையும்
நீதிமன்றத்தின் முன் நிறுத்த மாட்டோம் என்று பகிரங்கமாகச் சொல்லும் அரசின்ன்
கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகளை விட்டால், சாட்சியங்கள் அனைத்தும்
அழிக்கப்படுவதற்கே வழிவகுக்கும்.

நாளை ஜெனிவாவில் ஐ.நா. அமர்வுகள் நடைபெறும் சூழலில், தாய்மண்ணில் வாழும்
பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் உள்ளக விசாரணைகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.</p><p>

தமிழினப் படுகொலை என்பது இலங்கை அரசால்தான் செய்யப்பட்டது என்பதை உலகுக்கு
உணர்த்தி, எமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எங்களை நாமே ஆளக்கூடிய சூழலை
ஏற்படுத்துவதன் மூலமே பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அதற்கான ஒரே தீர்வு
நம்பகத்தன்மையான சர்வதேச குற்றவியல் விசாரணை மட்டுமே என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T04:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் வயிற்றுக்குள் சிக்கிய பல கோடி ரூபா மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uganda-man-arrested-at-katunayake-with-cocaine-1789357941"></link>
            <id>https://tamilwin.com/article/uganda-man-arrested-at-katunayake-with-cocaine-1789357941</id>
            <summary type="text">இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 கோடிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
5 கோடிக்கும் அதிகமான பெறுமதியான 90க்கும் மேற்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கிவிட்டு நாட்டுக்கு வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

குறித்த நபர் 43 வயதுடைய உகண்டா நாட்டைச் சேர்ந்த விவசாயி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>வயிற்றுக்குள் சிக்கிய பல கோடி ரூபா</b></h2><p>சந்தேக நபர் உகண்டாவின் என்டபே நகரிலிருந்து இந்த கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிவிட்ட கட்டாரின் தோஹா நகருக்கு வந்துள்ளார்.
</p><p>கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-664 விமானம் மூலம் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபர் மதியம் வரை விமான நிலையத்தின் முதலாவது மாடியில் தங்கியிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20aba6c7-310a-4c35-9137-45ec07ed15b4/26-6aa779a7478b9.webp' />&nbsp;&nbsp;</p><p>

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், விமான நிலையத்தின் உள்ளே சந்தேக நபர் தான் விழுங்கியிருந்த 13 கொக்கெய்ன் உருண்டைகளை வெளியில் வெளியேற்றியுள்ளார். </p><p>

இந்த நபர் விழுங்கியுள்ள மீதமுள்ள கொக்கெய்ன் உருண்டைகளை வெளியில் எடுப்பதற்காக அவரை நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம்&nbsp; அவரை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T04:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் நோக்கங்களுக்காக நினைவுகூரப்படும் போராளிகளின் நினைவு நாட்கள்! ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thileepan-commemoration-1789357431"></link>
            <id>https://tamilwin.com/article/thileepan-commemoration-1789357431</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அரசியல் கட்சிகள் எந்தவிதமான
இடையூறுகளும் கொடுக்காது, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து,
பொதுமக்களும் ஒன்றிண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அரசியல் கட்சிகள் எந்தவிதமான
இடையூறுகளும் கொடுக்காது, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து,
பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே
உருவாக்க வேண்டும் என&nbsp;ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p> நினைவேந்தல் தினங்களில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்
எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (13.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபன் அண்ணனுடைய 39வது நினைவு நாளை நாங்கள் அண்மித்துக்
கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலே 1987ஆம் ஆண்டு திலீபன் அண்ணன் மேற்கொண்ட
இந்த அகிம்சை வழி போராட்டத்திலே அவர் தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

எமது விடுதலைப் போராட்டம் இந்த மண்ணிலே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த
காலத்திலே அமைதிப் படையாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது தாயக
நிலப்பரப்புக்கு இந்திய இராணுவம் வந்தது.</p><h2>உண்ணாவிரத போராட்டம்</h2><p>
</p><p>
அந்த காலப்பகுதியிலே தான் எங்களுக்கான ஒரு மிக மோசமான ஒரு நிலைமை இங்கே
ஏற்பட்டது.
அமைதி காக்க வந்த அந்த இந்திய இராணுவத்தினர் மாறாக அடக்குமுறைகளை இங்கே எமது
மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டபோதுதான் திலீபன் அண்ணன் அவர்கள் ஐந்து அம்ச
கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். </p><p>12 நாட்கள்
உணவின்றி, நீரின்றி அவருடைய போராட்டம் தொடர்ந்தது.

திலீபன் அண்ணனுடைய வீர வரலாறுகள் தொடர்ச்சியாக இங்கே
மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் காண்கின்றோம்.
ஏனென்றால் இந்த விடயங்கள் அனைத்துமே நாங்கள் ஒரு இந்திய அரசாங்கத்துக்கு
எதிராகவோ இந்த கருத்துக்களை நாங்கள் முன்வைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cba73ef6-018b-4b92-b6fd-d676f75a191b/26-6aa773157e7c7.webp' /></p><p> </p><p>எமது விடுதலைப்
போராட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றின் ஒரு பகுதி. அந்த பகுதியை வந்து
எதிர்கால சமூக சந்ததியினருக்கு நாங்கள் கொண்டு செல்ல வேண்டும், அவர்கள் இதை
புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் எதிர்காலத்தில் இந்த மண்ணை
ஆளப்போகின்றார்கள். அப்ப அவர்களுக்கு அந்த விடயங்கள் அனைத்தும் தெரிந்திருக்க
வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த கருத்துக்களை இந்த இடத்தில் நாங்கள்
முன்வைக்கின்றோம்.</p><h2>வரலாற்று நிகழ்வுகள்</h2><p>
</p><p>
எதிர்வருகின்ற 39வது நினைவு நாளை கட்சி பேதமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றாக
இணைந்து, பெரும் எழுச்சியோடு நாங்கள் இந்த நினைவு நாளை நாங்கள் நினைவு கூர
வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது.

ஏனென்றால் இந்த வரலாற்று நிகழ்வுகள் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள், ஒரு
அரசியல் நோக்கங்களுக்காக செய்ய முடியாது. நாங்கள் அதனை அனுமதிக்கவும் முடியாது.
</p><p>
இன்றைக்கு பார்க்கப்போனால் தொடர்ச்சியாக ஒரு அரசியல் கட்சிகளுடைய தனிப்பட்ட
அரசியல் நோக்கங்களுக்காக இந்த போராளிகளுடைய நினைவு நாட்களை நினைவு கூருவது
இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p> மாவீரர் துயிலுமில்லங்களாக இருந்தாலும்
சரி, போராளிகளுடைய வீரமரணம் அடைந்த எமது மாவீரர்களுடைய நினைவாலயங்கள்
இருந்தாலும் சரி, அந்த நினைவு நாட்கள் என்பது அரசியல் சார்ந்த விடயங்களாகவே
இங்கே நினைவு கூரப்படுவதை அதிகமாக எங்களால் பார்க்கக்கூடியவாறு இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T04:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-murder-case-1789357117"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-murder-case-1789357117</id>
            <summary type="text">அநுராதபுரம், பரசன்கஸ்வெவ - வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கு இடையில்
ஏற்பட்ட கைகலப்பின்போது, 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம், பரசன்கஸ்வெவ - வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கு இடையில்
ஏற்பட்ட கைகலப்பின்போது, 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப்
படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று
பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

கம்பிரிகஸ்வெவ, வன்னி பளுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
உயிரிழந்த இளைஞருக்கும் மற்றுமொரு இளைஞருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி
வந்த தனிப்பட்ட பகைமை காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்
என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர்
குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bae82e7-d9fe-4290-9640-67dc715ff86b/26-6aa76c3f28978.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்ற
அநுராதபுரம் இலக்கம் 02 நீதிமன்ற நீதிவான் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.</p><p>
அத்துடன் உயிரிழந்த இளைஞரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T03:39:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஷிரந்திக்கு அதிர்ச்சி - மற்றுமொரு மோசடி விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fcid-waiting-for-shiranthi-to-recover-1789353362"></link>
            <id>https://tamilwin.com/article/fcid-waiting-for-shiranthi-to-recover-1789353362</id>
            <summary type="text">தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அந்த நிதி முறைகேடு செய்யப்பட்டது தொடர்பிலான வழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அந்த நிதி முறைகேடு செய்யப்பட்டது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச சிரிலிய சவிய கணக்கிற்கு தலைமை தாங்குகின்றார்.</p><h2><b>

CT ஸ்கேன் இயந்திரம்</b></h2><p>கணக்கிற்கு வந்த நிதி, கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே வரவு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40a54e4f-31a2-4201-91e7-9ff8b73a9b6c/26-6aa76b8566580.webp' /></p><p>CT ஸ்கேனுக்காக நிதி திரட்டப்பட்ட போதிலும், ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது, சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைத்த ஸ்கேன் இயந்திரம் என்பது தெரியவந்துள்ளமையே இந்த விசாரணைக்கான அடிப்படை காரணமாகும். </p><p>

தேசிய சேமிப்பு வங்கியின் நிதி நன்கொடையாக சிரிலிய சவிய கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. </p><p>இது குறித்து வங்கி அதிகாரிகளிடமும், அப்போதைய பணிப்பாளர் சபையிடமும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. </p><p>

சிரிலிய சவிய அமைப்பினால் எழுத்துமூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய குறித்த நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.</p><h3><b> 

நிதி மோசடி விசாரணை</b></h3><p>சிரிலிய சவிய அமைப்பால் பேணப்பட்டு வரும் சிதுவெல்லவில் அமைந்துள்ள வங்கிக் கணக்கிற்கே குறித்த நிதி வரவு வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3a91214-05bc-436f-9631-79d0bad875a4/26-6aa76b84b06f8.webp' /></p><p>இதனிடையே, ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. </p><p>

அந்த நிதி குறித்த பணிக்காக பயன்படுத்தப்படாததால், அந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

தற்போது ஷிராந்தி ராஜபக்ச சுகயீனமுற்றுள்ள மருத்துவமனையில் இருப்பதால் இது தொடர்பான நிலைமைகள் குறித்த விசாரணைகள் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. </p><p>சிரிலிய சவிய கணக்கு தொடர்பில் பல கேள்விக்குரிய நிலைமைகள் காணப்படுகின்றது. 

அது குறித்தும் விசாரணைகள் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>குறித்த கணக்கு தொடர்பாக கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவு அவரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-14T03:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு செல்லும் பயணிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அச்சுறுத்தும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/intend-to-return-no-right-to-ask-air-passengers-1789350779"></link>
            <id>https://tamilwin.com/article/intend-to-return-no-right-to-ask-air-passengers-1789350779</id>
            <summary type="text">இலங்கை விமானப் பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மீண்டும் நாட்டுக்குத் திரும்புவார்களா இல்லையா என்பது குறித்து விசாரிப்பதற்கும் அல்லது பயணிகளிடம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை விமானப் பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மீண்டும் நாட்டுக்குத் திரும்புவார்களா இல்லையா என்பது குறித்து விசாரிப்பதற்கும் அல்லது பயணிகளிடம் அவ்வாறு கடிதங்களை எழுதிப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு எத்தகைய அதிகாரமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், விமானச் சேவைப் பேராசிரியரும், விமானியுமான சோனால் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். </p><p>

நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானப் பயணி ஒருவர் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவாரா இல்லையா என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசாரிக்க முடியாது. 

அவ்வாறு விசாரிப்பது அந்தப் பயணியின் மனித உரிமைகளை மீறும் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p> </p><h2><b>

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்</b></h2><p>மேலும், “விமானப் பயணியின் ஆவணங்களின் துல்லியத்தன்மையை சரிபார்ப்பதே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செய்ய வேண்டியதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff9db189-2ecc-4361-aabe-e4b3db7c5795/26-6aa75ca939114.webp' /></p><p>அந்த ஆவணங்கள் சட்டப்பூர்வமானவையாக இருப்பின் பயணி விமானத்தில் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் கொடுக்க வேண்டும்.</p><p> 

குறித்த பணியகத்தின் சில அதிகாரிகள், தற்போது விமானப் பயணிகள் வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இலங்கை திரும்பாவிட்டாலும் பரவாயில்லை என்பது போன்று அந்தப் பயணிகளிடம் கடிதங்கள் மற்றும் கைவிரல் அடையாளங்களைப் பெற்று வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.</p><p> </p><h3><b>

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</b></h3><p>அத்தகைய சூழ்நிலைக்கு முகம் கொடுக்க நேரிட்டால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு தான் அந்தப் பயணிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f801c0c-d7e8-419f-8fe0-b53ef451556b/26-6aa75caa2249d.webp' /></p><p>தான் கடமையாற்றிய காலத்தில் இவ்வாறான விடயங்களைச் செய்வதற்கு அனுமதியளித்ததில்லை. </p><p>இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதால் சர்வதேச அரங்கில் சிவில் விமான நிலையத்திற்கு கிடைக்கும் நற்பெயர் பறிபோய்விடும் என” சோனால் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-14T03:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மகிந்தவிடம் தஞ்சம் அடைந்த விமல் மற்றும் கம்மன்பில! கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimal-gammanpila-seek-asylum-from-mahinda-again-1789351932"></link>
            <id>https://tamilwin.com/article/wimal-gammanpila-seek-asylum-from-mahinda-again-1789351932</id>
            <summary type="text">கடந்த காலங்களில் ராஜபக்சக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச,
உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மகிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் ராஜபக்சக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச,
உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மகிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாசாரம் இதுவேயாகும் என்று தொழில் பிரதி அமைச்சர் மகிந்த
ஜயசிங்க தெரிவித்தார்.</p><p>

கம்பஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில்
கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>ஒன்றிணைந்த ஊழல்வாதிகள்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டுவதாகக் கூறிக்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவினர் அநுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்தினார்கள். அந்த மேடையில் சகல
ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddbc65eb-79a9-4df7-9dde-4f210af141a3/26-6aa75aa9b13ce.webp' /></p><p>
</p><p>
கடந்த காலங்களில் ராஜபக்சர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச,
உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மகிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாசாரம் இதுவேயாகும்.</p><p> இவர்கள் எப்போதுமே சந்தர்ப்பவாத
அரசியலில்தான் ஈடுபடுவார்கள்.

கடந்த காலங்களில் இவர்கள் தமது சுயநல தேவைகளுக்காகவே அரசியல் செய்தனர். தற்போது தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்"&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T02:23:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபத்தான நபர் - பேருந்து முன்னால் பாய்ந்து உயிர் மாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-dies-jumping-in-front-of-a-bus-1789351886"></link>
            <id>https://tamilwin.com/article/man-dies-jumping-in-front-of-a-bus-1789351886</id>
            <summary type="text">காலி, பூஸ்ஸ சந்தியில் பேருந்து ஒன்றில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, பூஸ்ஸ சந்தியில் பேருந்து ஒன்றில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நபர் ஒருவர், முன்தினம் மதியம் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.</p><p>

இவ்வாறு உயிரிழந்தவர் பூஸ்ஸ ருபில்வத்தையை சேர்ந்த 44 வயதுடைய தியாதுர பிரசன்ன என்ற வெவதெணியே சுட்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
போதைப்பொருள் கடத்தல்காரர் </b></h2><p>பொலிஸ் விசாரணைகளுக்கமைய, இவர் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என தெரியவந்துள்ளது.

அத்துடன், அவருக்கு எதிராக இராணுவ வீரர் ஒருவரை கொலை செய்தமை, இரட்டைக் கொலைக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66109294-b142-4ad1-98fc-8f4f02ae32cb/26-6aa759187f56f.webp' /></p><p>குறித்த கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொலைக் குற்றச்சாட்டுக்கு தான் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படலாம் என்ற மனவேதனையின் காரணமாகவே இவர் இவ்வாறு பேருந்தில் பாய்ந்து உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்திக்கின்றனர்.
</p><p>
இவர் முதலில் முச்சக்கர வண்டியில் பூஸ்ஸ ரயில் நிலையத்திற்கு வந்து, ரயில் வருகிறதா என பதற்றத்துடன் விசாரித்துள்ளார். 

அங்கு ரயில் தாமதமாகும் என்பதை அறிந்துள்ளார். </p><p>அதன் பின்னர் முச்சக்கர வண்டியில் காலி வீதிக்கு வந்து, தனது கையடக்கத் தொலைபேசியை முச்சக்கர வண்டி ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு, திடீரென கொழும்பில் இருந்து காலி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றின் பாய்ந்துள்ளார்.
</p><p>
பொலிஸாரால் பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் கராப்பிட்டிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
 பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-14T02:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட தூர ஜெட் விமானத்திற்கு உரிமையாளரான முதல் இலங்கையர்- தாய்நாட்டுக்கு விஜயம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gulfstream-g-v-jet-plane-lankan-owner-visited-1789348561"></link>
            <id>https://tamilwin.com/article/gulfstream-g-v-jet-plane-lankan-owner-visited-1789348561</id>
            <summary type="text">சொந்தமாக நீண்ட தூர சொகுசு ஜெட் விமானத்திற்கு உரிமையாளரான முதல் இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே தாய்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர், தனது சொந்த ஜெட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொந்தமாக நீண்ட தூர சொகுசு ஜெட் விமானத்திற்கு உரிமையாளரான முதல் இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே தாய்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
</p><p>அவர், தனது சொந்த ஜெட் விமானத்தில் இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கல்கிஸை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் சுகாதாரத் துறை சார்ந்த பல வணிகங்களை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73e3a46d-8121-4c3b-9226-1f260f856f45/26-6aa74ad378530.webp' /></p><p>
</p><p>இவர் இலங்கையைச் சேர்ந்த பில்லியனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கைக்கு வருகை தந்த 'Gulfstream G-V' ரக ஜெட் விமானமானது 12,000 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாகப் பறக்கும் திறன் கொண்டதாகும்.</p><p>
இலங்கையின் முதலாவது தனியார் ஜெட் விமானமான, 1980களில் தொழிலதிபர் உப்பாலி விஜேவர்தனவினால் கொள்வனவு செய்யப்பட்ட 'Learjet 35 A' விமானத்தால் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பறக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள் பலர் இவ்வாறு சொந்தமாக ஜெட் விமானங்களை வைத்துள்ளார்கள் என்பதுடன் அவர்கள் அந்த ஜெட்களிலேயே தங்களது பயணங்களை மேற்கொள்கின்றார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T01:16:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கண்ணீர் புகைக் குண்டுகளைக் கொள்வனவு செய்யும் பொலிஸார் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-tear-gas-will-be-purchased-soon-says-police-1789347928"></link>
            <id>https://tamilwin.com/article/new-tear-gas-will-be-purchased-soon-says-police-1789347928</id>
            <summary type="text">புதிய கண்ணீர் புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
தற்போது கையிருப்பில் உள்ள கண்ணீர் புகைக் குண்டுகளைப் பரிசோதிக்க உள்ளதாகத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய கண்ணீர் புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
தற்போது கையிருப்பில் உள்ள கண்ணீர் புகைக் குண்டுகளைப் பரிசோதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
இவ்வாறு பரிசோதித்து பயன்பாட்டிற்கு உதவாத குண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடுத்த ஆண்டிற்காகப் புதிய கண்ணீர் புகைக் குண்டுகளை இறக்குமதி செய்ய விலை மனுக்கள் கோரப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>
கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்படாமல் நீண்ட காலம் சேமித்து வைக்கப்பட்டால், அவை காலாவதியாகிச் செயலிழந்துவிடும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ee8fee-3f94-4d40-bf18-14cbb9270a22/26-6aa74859d78ef.webp' /></p><p>
இதன் காரணமாகவே தற்போது கையிருப்பில் உள்ள கண்ணீர் புகைக் குண்டுகள் இவ்வாறு பரிசோதிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T01:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரணி ஒருபக்கம்… நீதிமன்ற திகதி மறுபக்கம்! கிண்டல் செய்த நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-about-slpf-1789345669"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-about-slpf-1789345669</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள்
பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ
எந்தவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள்
பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ
எந்தவிதமான அரசியல் சவாலையும் ஏற்படுத்தாது&nbsp;என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் .</p><p>அதேவேளை, கூட்டங்களுக்கான
திகதிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் விரைவில் குறித்து கொள்வது நல்லது.
ஏனெனில் அக்கட்சியினரில் பல பேருக்கு நீதிமன்றத்தில் திகதி வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;அரசியல் நகர்வுகள்</h2><p>

அரசின் ஆரோக்கியமான இலங்கை என்ற திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மையத்துக்கான ஆரம்ப
நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய
அரசியல் நகர்வுகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு
பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3321af79-037a-4e7d-b13c-12d503a43a7c/26-6aa7444161764.webp' /></p><p>
</p><p>
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த காலங்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் வெவ்வேறு கட்சிகளாகவும்
குழுக்களாகவும் பிரிந்து அரசியல் செய்து வந்தவர்கள், தற்போது தங்களின்
இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஒரே மேடையில் ஒன்று கூடி வருகின்றார்கள்.</p><p>
இத்தகைய பேரணிகள் நடப்பதன் மூலம், இந்தப் பழைய அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே
கொள்கைகளை உடையவர்கள் என்பதை நாட்டு மக்கள் மிகத் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள
ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.</p><h2>நளிந்த கிண்டல்</h2><p>

மேலும், ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சுதந்திரமாக
கூட்டங்களை நடத்தவும், பிரசாரங்களை முன்னெடுக்கவும் முழு உரிமையுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச சபைகளுக்குச் சொந்தமான மைதானங்களை
ஒதுக்கிக் கொடுப்பதுடன், அவர்களுக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பையும் அரசு
எவ்வித பாகுபாடுமின்றி வழங்கி வருகின்றது.
</p><p>
எதிர்க்கட்சியினர் தங்களின் அரசியல் சுறுசுறுப்பைக் காட்டுவதற்காக
நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ இவ்வாறான கூட்டங்களை நடத்துவது இயல்பான ஒரு
விடயம் மட்டுமே.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49075537-b1e2-4f03-9538-146f2cd80a16/26-6aa744424e89f.webp' /></p><p>
</p><p>கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாட்டு மக்கள் இந்த பழைய அரசியல்
சக்திகளை முற்றாக நிராகரித்து, தேசிய மக்கள் சக்திக்கு மிக வலுவான மக்கள்
ஆணையை வழங்கியுள்ளனர்.</p><p> எனவே இவ்வாறான பேரணிகள் மக்கள் மத்தியில் எந்த
மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில்
சுகாதாரத்துறை, கல்வி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத்
துறைகளிலும் அரசின் அபிவிருத்திப் பணிகள் தடங்கலின்றி மிக தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T00:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர பேரணியில் சிக்கிய இரகசிய காணொளிகள்! மகிந்தவை காப்பாற்றும் மர்ம தாயத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-mahinda-1789333208"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-mahinda-1789333208</id>
            <summary type="text">அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் மது வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
மேலும், பேரணி முடிந்த பின்னர் பலர் மதுபோதையில் இருக்கும் விதத்தில் பல காணொளிகள் வெளியாகியுள்ளன.</p><p>


இந்தநிலையில்,
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட நிலையில், அவர் கையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் மர்மமான கோல் தொடர்பில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.
</p><p>
பொது நிகழ்வுகளில் மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருக்கும் இந்தப் பொருள், தங்க முலாம் பூசப்பட்ட கோல் அல்லது செங்கோல் போன்ற வடிவத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பொருள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. </p><p>

குறிப்பாக, இது அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் பொருளாகவும், ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும் சில தரப்பினரால் கூறப்படுகிறது.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்ச ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அரசியல் முடிவுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்றதாகவும் பல ஆண்டுகளாக செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>
அவரது கைகளில் காணப்படும் பல்வேறு மோதிரங்கள், தாயத்துக்கள் உள்ளிட்டவையும் இதனுடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி&nbsp; ...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3crJrhXAriQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T00:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அதே சம்பவம்! ஆசியக் கிண்ணத்தை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-win-women-s-asia-cup-do-not-accept-trophy-1789344101"></link>
            <id>https://tamilwin.com/article/india-win-women-s-asia-cup-do-not-accept-trophy-1789344101</id>
            <summary type="text">துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

எனினும், வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
</p><p>
எனினும், வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கிண்ணத்தைப் பெற இந்திய வீராங்கனைகள் முன்வரவில்லை.</p><p></p><h2>மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி</h2><p>
</p><p>
இந்திய வீராங்கனைகள் மேடைக்கு வராத நிலையில், ACC தலைவர் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகள் சாம்பியன் அணியை எதிர்பார்த்து மேடையில் காத்திருந்தனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">📸📸<br><br>A picture-perfect moment to cap off a successful and unbeaten <a href="https://x.com/hashtag/WomensAsiaCup?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WomensAsiaCup</a> campaign 🏆<a href="https://x.com/hashtag/TeamIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> | <a href="https://x.com/hashtag/INDvSL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDvSL</a> <a href="https://t.co/gzmoDKtUL9">pic.twitter.com/gzmoDKtUL9</a></p>&mdash; BCCI Women (@BCCIWomen) <a href="https://x.com/BCCIWomen/status/2099228570799513701?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மறுபுறம், இலங்கை வீராங்கனைகள் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டனர்.</p><p>
இந்த சம்பவம் கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியுள்ளது.</p><h2>இந்தியா–பாகிஸ்தான்&nbsp;</h2><p> </p><p>

அப்போதும் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணியினர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கிண்ணத்தைப் பெற மறுத்திருந்தனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Indian Women&#39;s Team refused to take Asia Cup Trophy from Mohsin Naqvi<br><br>Look at Mohsin Naqvi face 🤣🤡 <a href="https://t.co/zxAOnLxc6J">https://t.co/zxAOnLxc6J</a> <a href="https://t.co/SyaGMYMBzm">pic.twitter.com/SyaGMYMBzm</a></p>&mdash; Nafees (@Nafees_22) <a href="https://x.com/Nafees_22/status/2099218969647604176?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
மொஹ்சின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராகவும் இருப்பதுடன், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
</p><p>
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தொடர்ச்சியான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருக்கும் நக்வியிடம் இருந்து கிண்ணத்தைப் பெற இந்திய அணி விரும்பாததே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T00:10:52+00:00</updated>
        </entry>
    </feed>
