<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-19T05:23:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-is-seriously-concerned-anojan-issue-1789793038"></link>
            <id>https://tamilwin.com/article/government-is-seriously-concerned-anojan-issue-1789793038</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிவராஜா அனோஜனின் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிவராஜா அனோஜனின் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சவூதி அரேபியாவில் உள்ள அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.</p><h2>சவூதி அரேபிய இராச்சியத்தில் சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
சவூதி அரேபிய இராச்சியத்தில் தற்போது சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து வரும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b87d3dbc-0179-4fe6-9d58-ea0d4ad04adb/26-6aae185565628.webp' /></p><p>

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதரகத்துடனான ஒருங்கிணைப்புடனும் இவ்விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
</p><p>இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவுதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சு தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு, அனோஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
</p><p>வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T05:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/united-states-fraud-1789794096"></link>
            <id>https://tamilwin.com/article/united-states-fraud-1789794096</id>
            <summary type="text">&amp;nbsp;எயார் பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது. சுவீடன் நாட்டிலிருந்தே குறித்த தகவல்கள் கசிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எயார் பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது. சுவீடன் நாட்டிலிருந்தே குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.</p><p>எயார்பஸ் (Airbus) மோசடியில் அமெரிக்க டொலர் இரண்டு மில்லியன். ஆனால் இதன் மதிப்பு அமெரிக்க டொலர் 54 மில்லியன்.</p><p>இலங்கை ரூபாவில் சொல்ல முடியாத தொகையாகும்.இந்த மோசடி தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p></p><h2>ஆரம்பிக்கப்பட்ட காலம்</h2><p>இந்த மோசடியின் ஆரம்பம் 2008 இலிருந்து என்று தான் அறிக்கைகளில் உள்ளது. ஆனால் 2013 இலிருந்து இலங்கையில் உள்ள கணக்குகளுக்கு (Accounts) மில்லியன் கணக்கில் அமெரிக்கப் பணம் அனுப்பப்பட்டுள்ளது .
</p><p>2013ல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலகட்டமாகும். அக்காலத்தில் இலங்கைக்கு வந்த CPCU என்னும் திட்டத்துடன் தொடர்புடைய பணம் என்று தான் சொல்லப்படுகிறது.</p><p>ஆனால் அப்போது இலங்கையில் உள்ளவர்களுக்கு இது குறித்துப் பெரிய அறிவு இருக்கவில்லை.
இது தொடர்பில் 2019-இல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு முறைப்பாட்டை B-அறிக்கையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது, </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d1f0bae-19e2-48c1-8be2-4f6490e28946/26-6aae17322158a.webp' /></p><p>அதாவது FCID-இல் இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார பாரிய அளவிலான ஊழல் ஒன்றைச் செய்துள்ளார் என்று. </p><p>ஆனால் இது தொடர்பாக முதன்முதலில் இலங்கை ஊடகங்களில் வெளிவந்த பெயர் தான் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards,).
இந்த ரியன்ஷி எட்வர்ட் என்பவர் நுவரெலியா ரேஸ்கோர்ஸ் மைதானம், ரோயல் டர்ஃப் கிளப் (Royal Turf Club) 2012-இல் ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளார்.</p><p>அப்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பாக இருந்தார்.
அதாவது அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது 2013-14 காலப்பகுதியில் வந்த இந்தப் பணம், இலங்கையில் உள்ள பலரின் கணக்குகளுக்கு வந்துள்ளது.</p><p>Ascension என்ற கணக்கும், ரெயான் எட்வர்ட்டின் மனைவி புண்யாவின் கணக்கும், அதைத் தொடர்ந்து மேகான்ஃபீல்ட் (Magonfield Construction) என்ற கணக்கும் மற்றும் மேலும் சில கணக்குகளும் வந்துள்ளது.</p><p> இந்தச் சம்பவத்தை அமெரிக்கா இலங்கைக்கு 2016 டிசம்பர் மாதத்தில் அறிவிக்கிறது. ஏன் இந்த ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards பற்றிய விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
</p><h2>
</h2><h2>மோசடி மூடிமறைக்கப்பட்ட விதம்</h2><p>ரவி வைத்தியலங்கார என்ற ஊழல் அதிகாரி கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனியாகக் கம்பனி ஒன்றை ஆரம்பித்து, FCID-இல் இருந்த கொண்டே அதை பணம் சம்பாதிக்கும் ஒரு இடமாக மாற்றியுள்ளார். </p><p>FCID-க்கு இவரை யார் கொண்டுவந்து போட்டது? இவருக்கு இங்கு வர யார் அனுமதி அளித்தது?
அதாவது 54 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பவம் எப்படி மூடிமறைக்கப்பட்டது? இவர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மூடி மறைத்துள்ளார். </p><p>ஏனெனில் இது ரவி வைத்தியலங்காரவால் மட்டும் செய்யக்கூடிய விடயமல்ல. 
நல்லாட்சி அரசாங்கத்தில் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards- ரவி வைத்தியலங்காவைக் காப்பாற்றியது நவீன் திசாநாயக்க.
</p><p>ஏனெனில் இந்த CPCU திட்டத்திற்காக 2016-இல் ரெயான் எட்வர்ட்டுடன் நவீன் திசாநாயக்க ஆகியோர் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72123656-8074-4e2e-abce-a3e6a460023d/26-6aae1732cd8cc.webp' /></p><p>ஏனெனில் 2016-இல் ரியன்ஷி எட்வர்ட்டிற்கு (Rienzie Edwards 30 வருடங்களுக்கு நுவரெலியா ரேஸ்கோர்ஸ் (Racecourse) மைதானத்தைக் குத்தகைக்கு விட திட்டமிட்டதே நவீன் திஸாநாயக்கா தான். </p><p>மேலும் நவீன் திசாநாயக்கதான் இந்த ரியன்ஷி எட்வர்ட்டின் பின்னணியில் இருந்து இவரை அரசியல் ரீதியாகப் பாதுகாத்த நபர்.
இப்போது அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.</p><p>இந்த வழக்குகளுக்கு அடிப்படையாக அமைந்த முக்கிய காரணங்கள்- 
CPCU திட்டத்திற்கு முதலீட்டாளர்களிடம் (Investors) அதாவது அமெரிக்கக் குடிமக்களிடம் இருந்து எனக் கூறப்படுகிறது. </p><p>
உலகத்தில் இல்லாத ஒரு திட்டத்தைக் காட்டி, இதில் முதலீடு செய்யுமாறு அமெரிக்கக் குடிமக்களிடம் பெறப்பட்ட பணம் என்றுதான் அமெரிக்க நீதிமன்றம் கூறுகிறது.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) நிச்சயமாக இதன் தகவல்கள் இருக்க வேண்டும்.</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T05:04:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் பதற்றம்: டோகோ எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தி சிறைபிடித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-us-deal-about-war-1789792209"></link>
            <id>https://tamilwin.com/article/iran-us-deal-about-war-1789792209</id>
            <summary type="text">உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான வழித்தடமான ஹோர்முஸ்
நீரிணையில் சட்டவிரோதமாக பயணிக்க முயன்றதாக கூறி டோகோ (Togo) நாட்டு
கொடியுடன் சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான வழித்தடமான ஹோர்முஸ்
நீரிணையில் சட்டவிரோதமாக பயணிக்க முயன்றதாக கூறி டோகோ (Togo) நாட்டு
கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை
(IRGC) தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>
மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவின் கொடியுடன் பயணித்த 'ட்ரெண்ட்' (Trend) என்ற
எண்ணெய் கப்பல், ஈரானின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ஹோர்முஸ் நீரிணையைக்
கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.</p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
இதன் போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஈரானிய புரட்சிகர காவல்
படையின் கடற்படை, அந்தப் பிராந்தியத்திற்குள் கப்பல் "சட்டவிரோதமாக
நுழைந்ததாக" குற்றம்சாட்டி தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
தாக்குதலின் காரணமாகக் கப்பலில் தீப்பற்றியதையடுத்து கப்பல் உடனடியாக
இயக்கத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, ஈரானிய கடற்படையினர் கப்பலைக்
கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து பிரிட்டனின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பான UKMTO,
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

ஓமன் நாட்டின் கசாப் (Khasab) பகுதிக்கு வடகிழக்கே சுமார் 16 நவாடிகல் மைல்
தொலைவில், அடையாளம் தெரியாத எறிபொருள் (Projectile) தாக்கி ஒரு வணிகக்
கப்பலில் பாதுகாப்பு சம்பவம் நிகழ்ந்ததை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9792588-a778-43e8-bc9a-ef746f184ee6/26-6aae13cb411b9.webp' /></p><h2>பாதுகாப்பாக உள்ள மாலுமிகள்</h2><p>
</p><p>
கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், மாலுமிகள் பாதுகாப்பாக
உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஈரானிய கடற்படை தளபதி கூறுகையில் "அமெரிக்க
இராணுவத்தின் தூண்டுதலின் பேரிலேயே இந்தக் கப்பல் தங்களது கடல் எல்லை விதிகளை
மீற முயன்றதாகவும், அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு
கப்பலும் அழிவையே சந்திக்கும்" எனக் கூறினார்.
</p><p>
பிராந்திய மோதல்களுக்கு மத்தியிலும், ஈரானின் கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும்
கப்பல்களை ஈரான் தொடர்ந்து இலக்கு வைத்து வருகிறது.
</p><p>
தற்போது நடந்துள்ள இந்தத் தாக்குதல் சம்பவத்தால், சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விநியோகத்தில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும், கப்பல்
போக்குவரத்துக்கான காப்பீட்டுச் செலவுகள் உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T04:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-dies-in-an-accident-1789792014"></link>
            <id>https://tamilwin.com/article/women-dies-in-an-accident-1789792014</id>
            <summary type="text">குருநாகல் - நீர்கொழும்பு வீதியில் மெட்டியகான, தும்மலெவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் சிறிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - நீர்கொழும்பு வீதியில் மெட்டியகான, தும்மலெவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

மோட்டார் சைக்கிளும் சிறிய பாரவூர்தியும் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><h2><b>
பெண் உயிரிழப்பு</b></h2><p>உயிரிழந்தவர் தம்பதெனிய மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து கரப்பந்து விளையாட்டுத் துறையை சேர்ந்த சாகரிகா லக்மாலி ஹேவகே என்பவராகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa9e00d-699b-461a-ab94-d6dae5ba1585/26-6aae105b25a87.webp' /></p><p>

மேலும் அவர் வடமேல் மாகாண விளையாட்டு அதிகாரியும், தேசிய கரப்பந்து மற்றும் கடற்கரை கரப்பந்து நடுவராகவும் செயற்பட்டு வந்துள்ளார். </p><p> 

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T04:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள முக்கிய பரீட்சை பெறுபேறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plans-to-recruit-23-000-graduate-teachers-1789789872"></link>
            <id>https://tamilwin.com/article/plans-to-recruit-23-000-graduate-teachers-1789789872</id>
            <summary type="text">பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டி பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அதன் முடிவுகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டி பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>அதன் முடிவுகளின் அடிப்படையில், 23,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.</p><h2>ஆட்சேர்ப்பு நடத்த&nbsp;திட்டம்</h2><p>

அதன்படி, ஆசிரியர் தேர்வு பரீட்சையில் பங்கேற்ற 15,000 பட்டதாரிகளும், பொதுத் தேர்வில் பங்கேற்ற 8,000 பேரும் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/977d06b8-56f9-4f04-9fe0-bd5742f51b8f/26-6aae0e4aa8a01.webp' /></p><p>
</p><p>
அக்டோபர் மாதத்தில் நேர்காணல்கள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், டிசம்பர் மாதத்திலும் ஆட்சேர்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக&nbsp; கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T04:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interpol-notice-issued-for-basil-rajapaksa-1789789756"></link>
            <id>https://tamilwin.com/article/interpol-notice-issued-for-basil-rajapaksa-1789789756</id>
            <summary type="text">மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவித்தல் (Blue Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><h2>கைது உத்தரவு..&nbsp;</h2><p>இதனை&nbsp;பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3694b67-624d-4f00-9dfd-066cacec12ba/26-6aae0ac91dd09.webp' /></p><p> </p><p>வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் உட்பட தேடப்படும் நபர்களின் அடையாளம், இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளைக் கண்டறிந்து அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச சட்ட அமலாக்க வழிமுறைகளை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.</p><p>சந்தேகநபர் ஒருவர் இருக்கும் நாடு அல்லது முகவரி தொடர்பில் தகவல்கள் அறியப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் திரட்டுவதற்காகவே இந்த நீல நிற அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும், எவ்வித அரசியல் தராதரமும் பாராது குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T04:08:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாந்தோட்டத்திற்குள் சிக்கிய ஆடம்பர மாளிகை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் - அடுத்தடுத்து பல வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றுமொரு மாந்தோப்பு மற்றும் ஆடம்பர வீடு ஒன்றை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. </p><p>

இந்த சொத்துக்கள் பிரபலமான தனியார் கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு நபரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த சொத்துக்கள் தம்புள்ளை நகருக்கு அருகில் மாந்தோட்டம் அடங்கிய மூன்று காணிப்பகுதிகளில் உள்ளது.</p><h2><b> 

பினாமி பெயரில் கொள்வனவு </b></h2><p>இவற்றில் ஒரு காணிப்பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சொத்துக்களுக்காக 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஷிரான் பாசிக் செலவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0871032-92f8-4b6c-8c0f-4f64fcdd5803/26-6aae017a78504.webp' /></p><p>பினாமி பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தோட்டம் மற்றும் காணிகளை விசாரணை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.</p><p> 

அத்துடன், அந்த காணிகளை பராமரித்து வரும் நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ஷிரான் பாசிக் கொள்வனவு செய்த 150 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றொரு ஆடம்பர வீட்டையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாவரமண்டிய பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

இந்த ஆடம்பர வீடு தனியார் கல்வி ஆசிரியரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அந்த வீட்டில் ஆசிரியரின் தாயார் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.</p><p> </p><h3><b>போதைப்பொருள் கடத்தல்காரர் </b></h3><p>ஷிரான் பாசிக்கும் அந்தத் தனியார் கல்வி ஆசிரியருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கண்டறிந்துள்ள பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இது தொடர்பான வேறு பல சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a1401d-930e-4f55-a585-93ab83425fd8/26-6aae017b2dadd.webp' /></p><p>அந்த ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இலங்கை திரும்பியவுடன் விசாரணைக்காக உடனடியாக அழைக்கப்படுவார் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கை திரும்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. .</p>]]></content>
            <updated>2026-09-19T03:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையவழி வணிகம் மூலம் பெருந்தொகை பணமோசடி! இரண்டு வருடங்களின் பின்னர் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-in-online-money-laundering-case-1789784697"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-in-online-money-laundering-case-1789784697</id>
            <summary type="text">பெருந்தொகை&amp;nbsp;இணையவழி&amp;nbsp;பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர்&amp;nbsp;கைது செய்யப்பட்டுள்ளார்.இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருந்தொகை&nbsp;இணையவழி&nbsp;பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கம்பஹா, படுவத்த பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சந்தேகநபர், ஒரு டெலிகிராம் குழுவின் மூலம் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுளளது.&nbsp;&nbsp;</p><h2>இணையவழி பணமோசடி </h2><p>மேலும், இணையவழி வணிகம் மூலம் பணம் சம்பாதித்துத்தருவதாக வாக்குறுதியளித்து, அவர் பெற்ற&nbsp; 542,877 ரூபாவிலிருந்து&nbsp; 66,999 ரூபாவை மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38333686-b09c-4552-9569-da9c43f3b6a9/26-6aadfcde57a0e.webp' /></p><p>இணையவழி பணமோசடி சம்பவம் தொடர்பாக 2024.02.10 அன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப்புலனாய்வுப்பிரிவின் வடமேற்கு மாகாணப்பிரிவு இந்த விசாரணையை தொடங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>

அதன்படி, படுவத்த பகுதியை சேர்ந்த 38 வயதான சந்தேகநபர் நேற்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T03:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் அவசரமாக நாடு திரும்பும் ஷிரந்தி ராஜபக்ச! அறுவை சிகிச்சையிலும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-singapore-return-to-sri-lanka-1789723079"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-singapore-return-to-sri-lanka-1789723079</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் நாடு&amp;nbsp;திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் உடல்நலக்குறைவால...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீண்டும் நாடு&nbsp;திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p>இருப்பினும், ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளாமல், இலங்கையிலேயே செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>நாட்டிலிருந்து தப்பியோட்டம்</h2><p>அவரது மருத்துவ நிலை குறித்து அறிந்துக்கொள்ள பொதுமக்களுக்கு ஆர்வம் இருந்தபோதிலும், ஒருவரின் நோய் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், அதை நாடு முழுவதற்கும் கட்டாயம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.</p><p>இதன் விளைவாக, அவரது உடல்நிலை தொடர்பான விபரங்களை வெளியிட குடும்பத்தினர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2321a1f4-569c-4900-a48d-cfb51af38742/26-6aad0b6692e4b.webp' />&nbsp;&nbsp;</p><p>தேவையான வைத்திய சிகிச்சையைப் பெற்ற பிறகு அவர் இலங்கைக்கு திரும்புவார் என்றும், இருப்பினும் அதற்கான சரியான நேரத்தை வைத்திய ஆலோசனையைப் பொறுத்து நிர்ணயிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>வெளியான சர்ச்சை</h2><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (16) திகதி அதிகாலை சுமார் 1:10 மணியளவில் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/591fa84a-90a2-45bf-b7ba-0fff0cff81f1/26-6aadf73fd3609.webp' /></p><p>அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச்சென்றிருந்தார்.</p><p>இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்‌சவை நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இதனையடுத்து ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D0Hs4lADBiM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T02:45:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-in-saudi-arabia-case-alisabry-1789784498"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-in-saudi-arabia-case-alisabry-1789784498</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்துக்காக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அது மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இலங்கை அரசாங்கம் சட்ட உதவி</h2><p>குறித்த இளைஞன் சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்தை நீக்கி பகிரங்கமாக மன்னிப்புக்கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2cf8d77-b3a9-41f4-b116-52d9086726f7/26-6aadf1b4b2fc9.webp' /></p><p>இந்நிலையில், அனோஜனுக்கு மனந்திரும்பி தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.</p><p>மேலும், இலங்கை அரசாங்கம் அவருக்கு உரிய சட்ட உதவியை வழங்கி, உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T02:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகனங்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி - வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-for-vehicle-price-down-1789782331"></link>
            <id>https://tamilwin.com/article/reason-for-vehicle-price-down-1789782331</id>
            <summary type="text">இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்து வைக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. </p><p>

இதுவரை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த, பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்யும் போது சுங்க மதிப்பீட்டிற்காக வழங்கப்படும் 15 சதவீத தேய்மானக் கழிவு தொடர்பான விடயம் வெளிச்சத்திற்கு வந்தமையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 இந்தப் விலை சரிவு புதிய வாகனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> </p><h2><b>வாகனங்களின் விலை</b></h2><p>300,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை அமைந்துள்ள இந்தத் திடீர் விலை சரிவு குறித்த விவரங்களை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிஹே வெளியிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92421cfa-0ad5-4a8e-8907-58628e8cf2f3/26-6aadf0f85bd6d.webp' /></p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். </p><p>

இதன் காரணமாக யாரிஸ், ரெய்ஸ், வெசல், வேகன் ஆர், டைகட்சு மீரா மற்றும் சுஸுகி வேன்கள் உள்ளிட்ட பல பிரபலமான வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>

தற்போதைய சந்தை நிலவரம் காரணமாக, சில விற்பனையாளர்கள் வாகனங்களை நஷ்டத்தில் கூட விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p>

சுங்க மதிப்பீட்டு முறை, குறிப்பாக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பான மதிப்பீட்டு முறை குறித்து, சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. </p><p>


இந்த நடைமுறை அரசாங்கத்தின் வரி வருவாயை கணிசமாக பாதிக்கிறது என்று சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.</p><p> </p><h3><b>

வரி இழப்பு </b></h3><p>அதேவேளையில், இந்த மதிப்பீட்டு முறை பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உண்மையான பரிவர்த்தனை மதிப்பைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது என்று இறக்குமதியாளர்கள் வாதிடுகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a29626d-77a1-4b2a-bb62-df00f00b263c/26-6aadf2cb618c6.webp' /></p><p>இதற்கிடையில், 2019ஆம் ஆண்டில் 2,000cc திறன் கொண்ட 13 Audi A5 வாகனங்கள் 1,400cc திறன் கொண்டவையாக அறிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வரி இழப்பு 160 மில்லியன் ரூபாய் என்று சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியது.</p><p><span style="color: inherit;">வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வுக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது.</span></p><p>

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், சில பிரபலமான மாடல்களின் விலைகள் 500,000 ரூபாய் முதல் 900,000 ரூபாய் வரை உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-19T02:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து வரும் சில நாட்களில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rainfall-will-intensify-further-starting-today-1789779850"></link>
            <id>https://tamilwin.com/article/rainfall-will-intensify-further-starting-today-1789779850</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19.09.2026) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19.09.2026) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88235475-0494-4491-bd28-29b1d20ce213/26-6aade2c7d5510.webp' /></p><p> 

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T01:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் கார் - என் பெட்ரோல் எனக் கூறி விதிகளை மீற முடியாது : அமைச்சர் பிமல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/my-car-my-petrol-only-at-home-1789778300"></link>
            <id>https://tamilwin.com/article/my-car-my-petrol-only-at-home-1789778300</id>
            <summary type="text">வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களும் எரிபொருளும் தங்களது தனிப்பட்ட சொத்து என்று கூறி, வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணிக்க முடியாது என்றும், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களும் எரிபொருளும் தங்களது தனிப்பட்ட சொத்து என்று கூறி, வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணிக்க முடியாது என்றும், பொதுவான வீதிகளைப் பயன்படுத்தும்போது அனைத்து வாகன சாரதிகளும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
</p><p>
ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தனிநபர்கள் தங்கள் சொந்த வளாகத்திற்குள் தங்களது வாகனங்கள் குறித்துத் தாங்களே முடிவெடுக்க சுதந்திரம் பெற்றிருந்தாலும், மற்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய வீதிகளுக்கு அத்தகைய சுதந்திரம் பொருந்தாது என்று கூறியுள்ளார்.</p><h2>இயந்திர ரீதியாகத் தகுதியான நிலையில்</h2><p>

“உங்கள் சொந்த வளாகத்திற்குள் ‘என் கார், என் பெட்ரோல்’ என்று நீங்கள் கூறலாம், ஆனால் அந்த மனப்பான்மையைப் பொது மக்கள் பயன்படுத்தும் வதகளுக்குக் கொண்டு வர முடியாது. சட்டம் அனைவருக்கும் பொருந்தும்,” என்று ரத்நாயக்க கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f12bb695-4182-40b4-9a09-08cd48e156cb/26-6aadde1f07bf6.webp' /></p><p>
வீதி விபத்துக்களால், அதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல், அதைத் தாண்டியும் பின்விளைவுகள் ஏற்படுவதாகவும், அதனால் மருத்துவப் பணியாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிற பொது அதிகாரிகள் பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
</p><p>
வீதி விபத்துக்களைத் தனித்தனிச் சம்பவங்களாகக் கருதாமல், அவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய அவற்றை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.</p><p>அமைச்சரால் கோடிட்டுக் காட்டப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, பயணங்கள் மற்றும் புனித யாத்திரைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட, 5,000 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் வீதிப் பாதுகாப்பு தகுதி ஆய்வுகளுக்கு உட்பட்டு சான்றிதழ் பெற வேண்டும்.
</p><p>
பயணிகள் போக்குவரத்திற்கு வாகனங்கள் இயந்திர ரீதியாகத் தகுதியான நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் இந்த ஆய்வுகள் தேவைப்படும் என்று ரத்நாயக்க தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T01:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக் கட்சியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பெண்ணிடம் கேட்ட மோசமான இலஞ்சம்! பகிரங்கப்படுத்திய பெண்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/podujana-peramuna-mahinda-rajapaksa-1789736720"></link>
            <id>https://tamilwin.com/article/podujana-peramuna-mahinda-rajapaksa-1789736720</id>
            <summary type="text">&amp;nbsp;உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து போட்டியிடத் தயாரான நிலையில்&amp;nbsp; வேட்புமனு வழங்குவதற்காகத் தன்னிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து போட்டியிடத் தயாரான நிலையில்&nbsp; வேட்புமனு வழங்குவதற்காகத் தன்னிடம் 'பாலியல் இலஞ்சம்' கேட்டதாக ''லக்மவட்ட ஹடக்' அமைப்பின் தலைவியும் நடிகையுமான மதுஷா ராமசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
தென்னிலங்கை வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்து
எந்த ஊடகத்திலும் நான் இதைச் சொல்வேன்.மஹிந்த ராஜபக்சவுடன் மிக நெருக்கமாகச் செயல்படும் அவரது தனிப்பட்ட செயலாளர்களில் ஒருவர் இவர்.அதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.</p><h2>வேட்பு மனுத் தாக்கலின் போது நடந்த சம்பவம்</h2><p>பெயர்களைக் கூறுவது எனக்குப் பிரச்சினையில்லை. நான் பெயர்களைக் கூறுவேன். ஆனால் சிக்கல் என்னவென்றால் நான் பொலிஸுக்குச் சென்றபோது 'வீடியோக்கள் இருக்கிறதா?' என்று கேட்கிறார்கள். </p><p>நாம் ஒரு கட்சி அலுவலகத்திற்கோ அல்லது நாட்டின் தலைவரைச் சந்திக்கவோ செல்லும்போது காணொளி எடுத்தா செல்கிறோம்?
'ஆடை களையாவிட்டால் வேட்புமனு இல்லை' என்று கூறினார்கள். </p><p>வேட்புமனுத் தாக்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு கூறினார்கள். அவர் தனது வாயால் மூன்று முறை கூறினார். 
அண்ணே நான் எத்தனை வருடங்களாகப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் பணியாற்றியுள்ளேன் என்று பார்க்கிறீர்களா?' எனக் கேட்டேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d40d23d-ce08-409d-b8c5-4229e7ad0d45/26-6aad37131f72b.webp' /></p><p>நீங்கள் நீண்டகாலமாக அரசியலில் இருக்கிறீர்கள் தானே என்றார்.
நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைப்பாளர் பதவியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு முதன்முதலில் வெளியே வந்த நபர். </p><p>சோபித்த தேரர் நல்லாட்சியின் முதல் நிறைவு விழாவை நடாத்தும்போது அவர் இயற்கை எய்தினாரா அல்லது படுகொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தவேளையில் முதுகெலும்புடன் வெளியே வந்த ஒரே ஆள் நான் மட்டும்தான்.
</p><p>கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் சொல்வதானால் இவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நான் மதிக்கிறேன். அவருக்கு இந்தச் சம்பவம் முழுமையாகத் தெரியாது. </p><p>ஆனால் அந்த நேரத்தில் அவராலும் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் 'இவரைச் சேர்த்துக் கொண்டால் நாங்கள் விலகுவோம்' என்று அங்கிருக்கும் குழுக்கள் அச்சுறுத்துகின்றன. இதனாலே நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T00:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seat-belts-mandatory-rear-seat-passengers-1789776072"></link>
            <id>https://tamilwin.com/article/seat-belts-mandatory-rear-seat-passengers-1789776072</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் நேற்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் நேற்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விதிமுறையை மீறி ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகள்</h2><p>
வாகனங்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed50409d-a728-40e0-b315-0508bf71490d/26-6aadd58c67da0.webp' /></p><p>
எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிந்துள்ளதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T00:21:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 24 இல் கதி கலங்கப்போகும் கொழும்பு : 159 எம்பிக்களையும் மிரட்டும் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-set-to-be-shaken-on-september-24-1789764037"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-set-to-be-shaken-on-september-24-1789764037</id>
            <summary type="text">செப்டெம்பர் 24 ஆம் திகதி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த பேரணியைப்பார்த்து 159 எம்பிக்களும் கதிகலங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் 24 ஆம் திகதி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த பேரணியைப்பார்த்து 159 எம்பிக்களும் கதிகலங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி ஆட்சியைக் கொண்டுவந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.</p><p>மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. </p><p>இதற்கு எதிராகப் பெரும் மக்கள் பலத்தைத் திரட்டுவோம் என்றும்&nbsp;சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயங்களுடன் மேலும் பல விடயங்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pKw5uBl22W0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T23:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற அவமதிப்பு - திலித் ஜயவீர தாக்கல் செய்த ரிட் மனு பரிசீலனைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/contempt-of-court-writ-petition-filed-by-dilith-1789770496"></link>
            <id>https://tamilwin.com/article/contempt-of-court-writ-petition-filed-by-dilith-1789770496</id>
            <summary type="text">நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை வலுவிழக்கச் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்க உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.
</p><p>
குறித்த ரிட் மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய பட்டபெதிகே ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் (18) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>இதன்போது வழக்குக்குக் காரணமான, திலித் ஜயவீர பங்கேற்ற தொலைக்காட்சி நேர்காணலின் காணொளிப் பதிவை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி திறந்த நீதிமன்றத்தில் திரையிட்டுக் காண்பித்தார்.</p><h2>முழுமையான தகவல்களை ஆராயாமல்</h2><p>அதன்பின்னர், அக்காணொளித் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,&nbsp; இந்தக் காணொளியின் மூலம், அவர் வெளியிட்ட கருத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b6f1b91-c06b-422f-879f-298ea0e4901a/26-6aadcc7b00fcc.webp' /></p><p>தாம் நீதிமன்றத்தைக் மதிப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த கூற்றின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்குவந்ததாக நீதிவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் முழு விடயத்தையும் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்காமல், விசாரணை அதிகாரிகள் தேர்ந்தெடுத்த பகுதியை மாத்திரமே மன்றுக்கு சமர்ப்பித்துள்ளனர்.</p><p> ஆகையால் நீதிவான் முழுமையான தகவல்களை ஆராயாமல், குறிப்பிட்ட விடயங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே எனது சேவைபெறுனருக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.</p><p>2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்துக்கமைய, இவ்வாறானதொரு முறைப்பாடு கிடைக்கும் போது அச்சட்டத்திற்கு இணங்கச் செயற்பட வேண்டிய பொறுப்பு நீதிவானுக்கு உள்ளது. அதற்கமையவே நீதிவான் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்&nbsp;சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T23:43:34+00:00</updated>
        </entry>
    </feed>
