<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-05T14:35:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதினால் கதிகலங்கியுள்ள தென்னிலங்கை - அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-namal-rajapaksa-s-arrest-1788616644"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-namal-rajapaksa-s-arrest-1788616644</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p> 

நாமலின் கைது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கை, சாதாரண சட்டச் செயல்முறைக்கு அப்பால் ஆழமான அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. </p><p> 

சட்டவாட்சிக்கும் அரசியல் பழிவாங்கல்களுக்கும் இடையிலான ஆழமாக கோடு இந்த கைதின் மூலம் தெளிவாக வெளிப்படுவதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.
</p><h2><b>
எதிர்கால அரசியல் </b></h2><p>எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, நாட்டின் எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக குறிப்பிடப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8505e1-6fc5-463f-9dc7-e73b6e8fbc64/26-6a9c23aceccf8.webp' /></p><p>இது தனிநபருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமல்ல எனவும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் வழங்கப்பட்ட ஒரு தீவிரமான செய்தியாகவும் இதனை பார்க்கப்படுகிறது. </p><p> 

இந்தக் கைது நடவடிக்கையின் முக்கிய அடிப்படை காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் பிரபல வணிகருமான நிமல் பெரேராவினால் வழங்கப்பட்ட சாட்சியமே பிரதான காரணமாக குறிப்பிடப்படுகிறது. </p><p> 

குற்றவியல் முறைப்பாட்டுச் கோவையின் 127 வது பிரிவின் கீழ் நீதவான் முன்னிலையில் இரகசியமாக வழங்கப்பட்ட இந்த வாக்குமூலம் மிகமிக கடுமையானதாகக் கருதப்படுகிறது. </p><h3><b>

 பாரிய நிதிப் பரிமாற்றம்</b></h3><p>சிங்கப்பூரை சேர்ந்த சேப்ரே விஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கு ஊடாக 8 லட்சம் அமெரிக்க டொலர் நாமல் ராஜபக்சவிற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfa6a93b-5c96-4389-940a-68ed9f685567/26-6a9c23adbaa1d.webp' /></p><p>இந்த பாரிய நிதிப் பரிமாற்றம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன், இது நேரடியாக லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாற்றாக ஆணைக்குழுவினால் கருதப்பட்டுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-09-05T14:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள்.. வெளிநாடொன்றில் அவசரநிலை பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-cyclones-in-the-pacific-ocean-1788617731"></link>
            <id>https://tamilwin.com/article/three-cyclones-in-the-pacific-ocean-1788617731</id>
            <summary type="text">எல் நினோ உலகம் முழுவதும் பல நாடுகளைப் பாதித்துள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ உலகம் முழுவதும் பல நாடுகளைப் பாதித்துள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
இந்தச் சூறாவளிகளால் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக ஹவாய் தீவுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>எல் நினோ</h2><p>

எல் நினோ காரணமாக இந்த ஆண்டில் சீனாவைப் பாதிக்கும் ஏழாவது சூறாவளியாகப் பெயரிடப்பட்டுள்ள 'சௌடல்' (Soudal) சூறாவளி, அந்நாட்டைக் கடுமையாகப் பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4ba4e2-e29f-49a4-a49d-efb61e93dc7f/26-6a9c24efdf4c6.webp' /></p><p>
</p><p>
எல் நினோ தாக்கத்தால் கொலம்பியாவில் மழைப்பொழிவு குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள வீடுகளுக்குத் தண்ணீர் லொறிகள் (bowsers) மூலம் நீர் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்தோனேசியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கடந்த சில வாரங்களாக அங்குள்ள காடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவியுள்ளது.

உலகைப் பாதித்துள்ள எல் நினோ நிகழ்வு இலங்கையையும் பாதித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் நாமல்.. அனுராதபுர பேரணி குறித்து மொட்டுக்கட்சி முக்கிய தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-anuradhapura-rally-mottu-party-1788616210"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-anuradhapura-rally-mottu-party-1788616210</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த, மொட்டுக்கட்சியின் அனுராதபுர பேரணி அறிவித்தப்படி இடம்பெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த, மொட்டுக்கட்சியின் அனுராதபுர பேரணி அறிவித்தப்படி இடம்பெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்றும், அவை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.</p><p>

நாட்டின் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்காகவே இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு போன்ற சுயாதீன நிறுவனங்கள் நிறுவப்பட்டனவே தவிர, அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக அல்ல என கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><h2>அரசியல் பழிவாங்கல்..&nbsp;</h2><p>
</p><p>சுயாதீன அரச நிறுவனங்களை அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கான கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முற்படுமானால், அது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் தீவிர அச்சுறுத்தலாகும் என்றும், நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் மதிப்பைக் கொண்டுள்ள அனைத்துக் குடிமக்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1224c936-14ca-4a34-b34b-188034401e7f/26-6a9c20275aff8.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டுள்ள மக்களை ஒன்றுதிரட்டுவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி செப்டெம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p>
இந்தப் பேரணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் கிடைத்தமையினால், மக்கள் கிளர்ந்தெழுவதைத் தடுக்கும் நேரடி நோக்கத்துடனேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>இருப்பினும், நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதிலும், 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி எதிர்பார்த்தபடி பாரிய வெற்றியைப் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளத்துக்குள் கவிழ்ந்து உழவு இயந்திரம் விபத்து: இளைஞர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-has-died-after-a-tractor-overturned-1788613374"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-has-died-after-a-tractor-overturned-1788613374</id>
            <summary type="text">அனுராதபுரம்- ரம்பவெல குளக்கட்டில்
பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம்- ரம்பவெல குளக்கட்டில்
பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5.9.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,&nbsp; குளக்கட்டில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது, உழவு இயந்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அது குளக்கட்டிலிருந்து குளத்துக்குள் கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
</p><p>இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த உழவு இயந்திர சாரதி உள்ளிட்ட
மூவர் கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f490ced-e8f8-478c-929b-454dc31eeaa7/26-6a9c18a51a2a3.webp' /></p><p> </p><p>எனினும், அங்கு
சிகிச்சை பெற்று வந்த வெலிகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாகத் திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T13:36:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[300ஆவது நாளை எட்டும் நாட்டு நடப்பு நிகழ்ச்சி.. நேரலையில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nattu-nadappu-lankasri-300-days-passed-1788595513"></link>
            <id>https://tamilwin.com/article/nattu-nadappu-lankasri-300-days-passed-1788595513</id>
            <summary type="text">லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி தனது 300ஆவது நாளில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.&amp;nbsp;இந்த மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, தற்போது சிறப்பு நேரலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி தனது 300ஆவது நாளில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.&nbsp;</p><p>இந்த மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, தற்போது சிறப்பு நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.&nbsp;</p><p>இந்நிகழ்ச்சியில், சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு மற்றும் ஊடகவியலாளர் டில்ஷானுடன் சிறப்பு விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் கலந்து கொண்டுள்ளார்.&nbsp;</p><p>நேரலையாக ஒளிபரப்பாகும் எமது நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள நீங்களும் அழைக்கலாம்.&nbsp;</p><p><b>076 - 8246255 </b>என்ற வட்ஸப் இலக்கத்திற்கு அழைத்து உங்களது கேள்விகளை கேட்கலாம். வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VNz7RtIWc54" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயாவில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-die-by-drowning-in-nanu-oya-1788610138"></link>
            <id>https://tamilwin.com/article/two-die-by-drowning-in-nanu-oya-1788610138</id>
            <summary type="text">நுவரெலியா- நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில்
குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவமானது இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா- நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில்
குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(5.9.2026) இடம்பெற்றது.</p><p>
</p><p>
நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய இளைஞர் ஒருவரும் 23 வயது உடைய ஹப்புத்தளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>உயிரிழப்புகள்</h2><p>குறித்த இருவரும் நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் குளிக்க சென்றபோதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p>

சடலங்களாக மீட்கப்பட்டுள்ளவர்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a64b900d-c245-4545-9425-1fd293219b46/26-6a9c0af8972df.webp' /></p><p>
</p><p>
இந்த உயிரிழப்புகள் தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T12:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் கொல்லப்படலாம்..! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-to-namal-s-life-complaint-filed-with-cid-1788609275"></link>
            <id>https://tamilwin.com/article/threat-to-namal-s-life-complaint-filed-with-cid-1788609275</id>
            <summary type="text">சிறைக்குள் திட்டமிட்டு கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் ராஜபக்ச கொல்லப்படலாமென தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இது தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைக்குள் திட்டமிட்டு கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் ராஜபக்ச கொல்லப்படலாமென தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. </p><p>

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி இன்று (05.09.2026) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌சவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>சமூக வலைத்தள பிரச்சாரம்</h2><p>

சிறைச்சாலைக்குள் திட்டமிட்டுச் சலசலப்பை அல்லது கலவரத்தை உருவாக்கி நாமல் ராஜபக்‌சவைக் கொலை செய்வதற்கும், எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கும் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதற்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் பிரசாரம் செய்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c62d8d-cb52-40e5-a835-9ef6d160b101/26-6a9c07978477b.webp' /></p><p> </p><p>

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை செய்யப்பட முன்னரும் இவ்வாறானதொரு பின்னணியே நிலவியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை</h2><p>
</p><p>
மேலும் இச்சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
மேலும், இந்த சதித்திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T12:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-year-old-child-died-in-kilonochchi-1788609583"></link>
            <id>https://tamilwin.com/article/one-year-old-child-died-in-kilonochchi-1788609583</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.&amp;nbsp; வீட்டு
முற்றத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.&nbsp;<br></p><p> வீட்டு
முற்றத்தில் நின்ற கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்திய நேரம்
வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை வாகன சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.</p><h3>பொலிஸ் விசாரணை&nbsp;</h3><p>
குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9c2a23-f51d-4a33-b38a-cae43bcb7ba6/26-6a9c060634fc4.webp' /></p><p>ரூபன் அனாமிகா என்ற
ஒன்றரை வயதுடைய குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. </p><p>உயிரிழந்த குழந்தையின் சடலம்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவ இடத்திற்கு
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் வருகை
தந்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T12:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி- பலர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-in-china-11-missing-1788608121"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-in-china-11-missing-1788608121</id>
            <summary type="text">சீனாவின்- ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர
நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின்- ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர
நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சௌடெல் சூறாவளி காரணமாகப் பெய்த கடும் மழை வீழ்ச்சியினைத் தொடர்ந்து, ஜியாங்சி
மாகாணத்தின் சுய்ச்சுவான் கவுண்டிக்கு உட்பட்ட கோபிங் நகரத்தில் இன்று(5.9.2026) அதிகாலை 4.00 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p>

இந்த இயற்கை அசம்பாவிதத்தினால் அப்பகுதியிலுள்ள 12 வீடுகள் கடுமையான
சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், நிலச்சரிவுப் பாறைகள் மற்றும் மண்ணுக்குள்
10-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd30cd0-68a7-4280-b402-f8f375bf0478/26-6a9c0273defb8.webp' /></p><p>
சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதுடன், காணாமல் போனவர்களைக்
கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசியாவில் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடாக இலங்கை! சிறைச்சாலைகளில் உள்ள சிக்கல்நிலை - அஜித் பி பெரேரா தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-p-perera-statement-about-namal-1788608102"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-p-perera-statement-about-namal-1788608102</id>
            <summary type="text">இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலமாகவோ அல்லது
புதிய சட்டமூலங்கள் மூலமாகவோ நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எவையும்
விரைவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலமாகவோ அல்லது
புதிய சட்டமூலங்கள் மூலமாகவோ நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எவையும்
விரைவுபடுத்தப்பட மாட்டாது எனவும், ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் உண்மையான
நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி
பெரேரா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணைகள்</h2><p>அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் நீதித்துறையில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்திருப்பதாகக் கூறுவது
முற்றிலும் பொய்யானது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ அல்லது நீதிமன்ற
அமைப்புக் சட்டத்திலோ வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தக்கூடிய எந்தவொரு
திருத்தமும் செய்யப்படவில்லை.</p><p> நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதை உயர்த்தியதால் வழக்குகள் விரைவாக முடியப் போவதில்லை.

உயர்நீதிமன்றத்தில் பதவி வெற்றிடங்கள் இருந்தபோதிலும், அனுபவமிக்க
மேன்முறையீட்டு நீதிமன்றச் சிரேஷ்ட நீதியரசர்களுக்கு உயர்நீதிமன்ற நியமனங்கள்
வழங்கப்படாமல் அவர்கள் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

பாதுகாப்புத் துறையின் திறனை மேம்படுத்துவதற்கோ குற்றத் தடுப்புக்கோ அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசியாவிலேயே பாதுகாப்புத்
தரப்பிடம் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடுகளாக இலங்கையும்
ஆப்கானிஸ்தானும் மட்டுமே உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/491e0624-e714-404b-afee-ac98ab5f5397/26-6a9c013bd2d4a.webp' /></p><h2>சிறைச்சாலைகளில் முறையான மறுவாழ்வு நடவடிக்கைகள்</h2><p> பாதுகாப்புத் துறையிலுள்ள ஆயிரக்கணக்கான பதவி
வெற்றிடங்களை நிரப்பவும், அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை
உயர்த்தவும் அரசாங்கம் தவறிவிட்டதுடன், சிறைச்சாலைகளில் முறையான மறுவாழ்வு
நடவடிக்கைகள் இல்லாததால் தண்டனை முடிந்து வருபவர்கள் மீண்டும் குற்றச்
செயல்களில் ஈடுபடும் சூழலே நிலவுகின்றது.
</p><p>
எளியவர்களாகக் காட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரச பிரதானிகளின் மாளிகைகள்
மற்றும் பெரும் சொத்து விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும்
ஊடகங்கள் அந்தத் தகவல்களைப் பெறுவதைக் கட்டுப்படுத்தவே புதிய ஊழல் ஒழிப்புச்
சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>

வாக்குறுதியளித்தபடி அந்தச் சட்ட மூலத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாமல்
அப்படியே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊழலைத் தடுப்பதற்குப்
பதிலாக ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் இந்தச் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தி
முழுமையாக எதிர்க்கின்றது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நாமலுக்குப் பிணை..! மகனை சிறையில் சந்தித்த பின் மகிந்த வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-visited-in-prison-1788604228"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-visited-in-prison-1788604228</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம், இச்சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம்.</p><p>

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌சவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.&nbsp;</p><p>
ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ச இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளார், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல.</p><p>

இக்கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது, இச்சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.&nbsp;</p><p>நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.</p><p>அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த அவர், சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><h2>கைது செய்யப்பட்ட நாமல்..&nbsp;</h2><p>நாமல் ராஜபக்ச,&nbsp;நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4a1415-bb2c-439c-ae1a-af4ee6ce6d9d/26-6a9bf343325a2.webp' /></p><p>இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUiT2q5TrrU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:40:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் குளமொன்றில் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/guns-bullets-recovered-from-pond-in-anuradhapura-1788607102"></link>
            <id>https://tamilwin.com/article/guns-bullets-recovered-from-pond-in-anuradhapura-1788607102</id>
            <summary type="text">அநுராதபுரம் அருகே குளமொன்றின் கரைப்பகுதியில் இருந்து துப்பாக்கியொன்றும் பெருமளவு ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மிஹிந்தலை, மஹா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் அருகே குளமொன்றின் கரைப்பகுதியில் இருந்து துப்பாக்கியொன்றும் பெருமளவு ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>மிஹிந்தலை, மஹா கனதராவ குளத்தின் அருகில் இருந்தே குறித்த துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>சந்தேகத்திற்கிடமான பொதி</h2><p>
</p><p>
அநுராதபுரம் - திருகோணமலை வீதியில் உள்ள மிஹிந்தலையில், மஹா கனதராவ குளத்திற்கு அருகே தற்போது நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவர், கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை அவதானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26e0e8e8-c272-43c4-ae68-3f05f70b2283/26-6a9bfc88b6a62.webp' /></p><p>
</p><p>
இது குறித்து மிஹிந்தலை பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் அந்த சந்தேகத்திற்கிடமான பொதியைச் சோதனையிட்டுள்ளனர்.&nbsp;</p><h2>விசாரணை</h2><p>
அதன்போது குறித்த பொதியில் இருந்து ஒரு டி 56 ரக துப்பாக்கியும், 4 தோட்டாக்கூடுகள் மற்றும் 25 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விவகாரம் குறித்து மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:27:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- கண்டி இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-kandy-train-services-to-resume-1788604934"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-kandy-train-services-to-resume-1788604934</id>
            <summary type="text">கொழும்பு- கோட்டையிலிருந்து பேராதெனிய ஊடாக கண்டி வரையிலான தொடருந்து சேவைகள்
அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக திணைக்களத்தின் பிரதம பொறியாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- கோட்டையிலிருந்து பேராதெனிய ஊடாக கண்டி வரையிலான தொடருந்து சேவைகள்
அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக திணைக்களத்தின் பிரதம பொறியாளர் பிரியந்த திகலா தெரிவித்துள்ளார்.</p><p>

இந்தநிலையில் ரம்புக்கானைக்கும் கடுங்கன்னாவைக்கும் இடையிலான தொடருந்து பாதையில்
மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயை
எட்டியுள்ளன. </p><p>இதனையடுத்து, குறித்த வழித்தடத்தில் தொடருந்து போக்குவரத்தை மீண்டும்
ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><h2>புனரமைப்புப் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதம பொறியாளர் பிரியந்த திகலா, தொடருந்து ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையினாலேயே இந்த புனரமைப்புப்
பணிகள் விரைவாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்கப்பட்டு முடிவடையும் கட்டத்தை
எட்டியுள்ளதாகப் பாராட்டினார்.
</p><p>
அத்துடன் எஞ்சியுள்ள சிறு புனரமைப்புப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு,
எதிர்வரும் மாதத்தில் கொழும்பு - கண்டி இடையிலான தொடருந்து சேவைகள் மக்களின்
பயன்பாட்டிற்காக மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக
அவர் இதன்போது தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-regarding-the-boralesgamuwa-shooting-1788606245"></link>
            <id>https://tamilwin.com/article/information-regarding-the-boralesgamuwa-shooting-1788606245</id>
            <summary type="text">பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு
துப்பாக்கிதாரிகள், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "கோஸ் மல்லி" என்பவரிடம்
வசூல் அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறப்படும் உயிரிழந்தவரின் மகனையே
குறிவைத்துச் சுட முற்பட்டுள்ளனர்.</p><h2>தவறான இலக்கு</h2><p>
</p><p>
இருப்பினும், துப்பாக்கிதாரிகள் தவறான இலக்கைச் சுட்டதில், பக்கவாத நோயினால்
பாதிக்கப்பட்டிருந்த 74 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே கைத்துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9748e7e2-35b4-4644-a9e5-7215c61c4832/26-6a9bf829b71ba.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய "தெஹிவல சண்டோ" எனப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவராலேயே இந்தத்
துப்பாக்கிச்சூடு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><h2>தப்பிச்சென்ற துப்பாக்கிதாரிகள்</h2><p>
</p><p>
அத்துடன் இந்தத் தாக்குதலை நடத்திய இரு நபர்களும் கைத்துப்பாக்கியால்
சுட்டுவிட்டு உடனடியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதிய வசதிகள் இன்றி தவிக்கும் கிண்ணியா மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kinniya-school-students-struggle-1788606222"></link>
            <id>https://tamilwin.com/article/kinniya-school-students-struggle-1788606222</id>
            <summary type="text">கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர்
முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால்,
மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர்
முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால்,
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளன.</p><p>

பிள்ளைகளும் ஏனைய பாடசாலை மாணவர்களைப் போலவே சிறந்த கல்வியைப் பெறுவதற்கான
உரிமை கொண்டவர்கள். அவர்களுக்கு தேவையான கற்றல் சூழலை உருவாக்குவது காலத்தின்
கட்டாயமாகும்.
</p><p>
எனவே, பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வளங்கள் மற்றும் கட்டிட வசதிகளை
சரியான முறையில் பங்கீடு செய்து வழங்குவதுடன், இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சி
மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி
அமைச்சு மற்றும் கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் விசேட கவனம் செலுத்துமாறு
பெற்றோர்கள் சார்பாக மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றனர்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T11:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா விரையும் குழு! இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதம் வேண்டுமென கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-fishermen-continue-to-violate-1788605150"></link>
            <id>https://tamilwin.com/article/indian-fishermen-continue-to-violate-1788605150</id>
            <summary type="text">இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்தியா செல்லும் குழுவினர் இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய கடற்தொழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்தியா செல்லும் குழுவினர் இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய கடற்தொழிலாளர்கள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான என்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (05.09.2026) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்தியா செல்லவிருக்கும் மீன்பிடி தொடர்பான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் அவர்கள் தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கின்றார்.</p><h2>நீண்டகாலமாக பேசப்பட்ட விடயம்</h2><p> </p><p>

இந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் எதிர்பார்க்கும் விடயம் அதில் உள்வாங்கப்படுமா? குறிப்பாக, இந்திய - இலங்கை கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக நீண்டகாலமாக எங்களால் பேசப்பட்ட விடயம்.</p><p>அது தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்தி இருந்த நிலையில் தான், தற்போது இருக்கின்ற அரசாங்கம் இரண்டு வருடங்கள் நெருங்கியிருக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம் என்ற கருத்தை, அமைச்சரின் கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.</p><p> அந்த வகையிலே, அதிகாரிகள் மட்டத்தில் பேசுவதற்கு செல்லுகின்ற அந்த குழுவானது, இலங்கையில் இருக்கின்ற குறிப்பாக வடக்கிலிருக்கின்ற கடற்தொழிலாளர்களின் பிரச்சினை எந்த அளவுக்கு புரிந்திருக்கிறது, அவர்களிடம் இது தொடர்பாக கருத்துக்கள் பெறப்பட்டதா என்பது கேள்வியாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/022350c3-c771-4a42-aea3-5084d780d5c3/26-6a9bf60f22123.webp' /></p><p> </p><p>ஒட்டுமொத்தமாக வடக்கிலிருக்கின்ற கடற்தொழிலாளர்களின் ஒரே குரலாக, இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அந்த கடற்தொழிலாளர்கள் எங்களது கடல் எல்லைக்குள் இந்திய படகுகள் அல்லது வெளிநாட்டு படகுகள் எங்களது கடலிலே தொழில் செய்வதை தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டுமொத்த குரலாக எழுப்பி வருகிறார்கள்.</p><h2>வழங்கவேண்டிய உத்தரவாதம்</h2><p> கடற்றொழில் அமைச்சரின் தற்போதைய நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம். இருந்த போதிலும், இங்கு பேச சொல்கின்ற அதிகாரிகள் மட்ட குழுவானது, இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அவர்களால் வழங்கக்கூடிய அல்லது இந்தியாவால் பெறக்கூடிய நிலையில் அவர்களின் பேச்சு வார்த்தை அமையுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. </p><p>இந்த பேச்சுவார்த்தைக்கு அப்பால், கடற்தொழிலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறும் என்று அமைச்சர் தெரிவிக்கின்றார். இருந்த போதிலும் நாங்கள் இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பத்திலிருந்தே குறிப்பிடுகின்றோம், இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய குறிப்பாக தமிழக, பாண்டிசேரி சார்ந்த கடற்தொழிலாளர்கள் எங்களது கடல் எல்லைக்குள் வந்து எமது அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டிருக்கின்ற இழுவை மடியைக் கொண்டு தொழில் செய்வது தடுக்கப்பட வேண்டும். </p><p>அவ்வாறு தடுக்கப்படும் பட்சத்தில் தான் அவர்களோடு நாங்கள் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியும் என்ற கருத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T10:59:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodyrecovered-house-in-the-kondavil-jaffna-1788602439"></link>
            <id>https://tamilwin.com/article/bodyrecovered-house-in-the-kondavil-jaffna-1788602439</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம்
மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம்
மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் கோப்பாய்
பொலிஸாருக்கு அறிவித்தனர்.</p><p>இதனையடுத்து, பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>சடலமாக காணப்படுபவர் ஓரிரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2737c4f1-29d3-4150-b501-f564091edcec/26-6a9beea6854b5.webp' /></p><p>உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவை
தொடர்பில் தெரிவிக்க முடியும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T10:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அதிகாரிகளில் பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. பதவியில் இருந்து விலகும் நிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-employees-resigned-due-no-privileges-1788601453"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-employees-resigned-due-no-privileges-1788601453</id>
            <summary type="text">இலங்கை நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சுமார் முப்பது பெண் அதிகாரிகள் அண்மையில் தமது பதவிகளில் இருந்து விலகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சுமார் முப்பது பெண் அதிகாரிகள் அண்மையில் தமது பதவிகளில் இருந்து விலகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நாடாளுமன்றத்தின் நிர்வாகம், விநியோகம், நிதி மற்றும் ஹன்சார்ட்&nbsp; உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் பணியாற்றிய அதிகாரிகள் குழுவொன்றே இவ்வாறு சேவையிலிருந்து விலகியுள்ளது.</p><p>

 பதவிகளில் இருந்து விலகுபவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் என்றும், கடந்த வாரமும் பல அதிகாரிகள் நாடாளுமன்றச் சேவையிலிருந்து விடைபெற்று ஏனைய துறைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.</p><h2>நிறுத்தப்பட்ட சலுகைகள்..&nbsp;</h2><p>
</p><p>
பதவி விலகிய அதிகாரிகளில் பெரும்பாலானோர் தனியார் துறையில் உயர் பதவிகளுக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6ed9eca-a25b-4303-9a51-7b67d22ed92b/26-6a9be9c2a5837.webp' /></p><p> </p><p>குறுகிய காலத்திற்குள் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் நாடாளுமன்றச் சேவையிலிருந்து விலகுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.</p><p>
</p><p>
பெண் நாடாளுமன்ற ஊழியர்கள் அனுபவித்து வந்த விடுமுறை கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் இரத்து செய்யப்பட்டமையே சேவையிலிருந்து விலகுவதற்கான முக்கிய காரணமாகும்.
</p><p>
அனுபவம் வாய்ந்த ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நிர்வாகம் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
</p><p>
இந்த நிலைமை குறித்து நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர், அரசாங்கம் எடுத்த பொதுக் கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவாக, உரிய விடுமுறைக் கொடுப்பனவை வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T10:09:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-director-of-fisheries-transferred-colombo-1788599293"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-director-of-fisheries-transferred-colombo-1788599293</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் நேற்றைய தினம்(4.9.2026) கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்
வழங்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் நேற்றைய தினம்(4.9.2026) கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்
வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
</p><p>
கடந்த யூலை மாதம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பல இலட்சம் ரூபாய்
பெறுமதியான கடல் அட்டைகளை முறையற்ற விதத்தில் ஏலமிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p><h2>இடமாற்றம்</h2><p>மற்றும் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்
பட்டமை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளருக்கு கட்டாய
இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f038b7-4624-473f-aca6-cae384a65377/26-6a9be5c6d1196.webp' /></p><p>
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் தள்ளிய வாக்குமூலம்! புலனாய்வாளர்களிடம் தொழிலதிபர் குறித்த ஆதாரம் - அம்பலப்படுத்தும் கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-comes-to-namal-s-defence-1788597234"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-comes-to-namal-s-defence-1788597234</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக நாமல் ராஜபக்ச 800,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றார் என்பதை நிலைநாட்ட போதுமான ஆதாரம் உள்ளதா எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக நாமல் ராஜபக்ச 800,000 அமெரிக்க டொலர்களைப் பெற்றார் என்பதை நிலைநாட்ட போதுமான ஆதாரம் உள்ளதா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, தொழிலதிபர் நிமல் பெரேரா கூறியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது.</p><h2>பணம் வழங்கல்</h2><p> </p><p>அந்த வாக்குமூலத்தில், அவர் நாமல் ராஜபக்சவிடம் 800,000 அமெரிக்க டொலர்களைக் கொடுத்ததாகக் கூறியிருந்தார். 

எயார்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக பிரியங்கா விஜேநாயக்க பெற்ற பணம் நிமல் பெரேராவுக்கு மாற்றப்பட்டதற்கான ஆதாரம் புலனாய்வாளர்களிடம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24dfd395-b3a4-4109-91df-c0fea182d1c6/26-6a9be1d725e33.webp' /></p><p> </p><p>ஆனால் பெரேரா பின்னர் அந்தப் பணத்தை ராஜபக்சவிடம் கொடுத்தார் என்பதை நிலைநாட்ட என்ன ஆதாரம் உள்ளது.

வேறு யாரும் இல்லாதபோது ராஜபக்சவின் மேசையில் 800,000 அமெரிக்க டொலர்களை வைத்ததாக பெரேரா கூறியிருந்தார்.</p><p> அந்தக் கூற்றைத் தவிர, 800,000 அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவுக்குக் கொடுக்கப்பட்டது என்பதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை. 

வழக்கின் மையமாக உள்ள இந்தக் கொடுப்பனவுகள், ஏர்பஸ் சம்பந்தப்பட்ட ஐக்கிய இராச்சிய நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னரே ஆராயப்பட்டுள்ளன.</p><h2>எழுப்பப்பட்டுள்ள கேள்வி</h2><p> </p><p>

அந்த நடவடிக்கைகள், விமானக் கொள்முதலில் முறையற்ற வகையில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட கொடுப்பனவுகளை முறையான தரகுத்தொகையாகக் கருதாமல், இலஞ்சமாகவே வகைப்படுத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a05d59d8-3e09-48a0-8c16-6464a2fb7dfc/26-6a9be1d7f0c9b.webp' /></p><p> </p><p>

மேலும், பெரேரா பின்னர் அந்தப் பணத்தில் ஒரு பகுதியை ராஜபக்சவுக்குக் கொடுத்தார் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அது மட்டுமே ராஜபக்ச இலஞ்சம் பெற்றார் என்பதை நிலைநாட்டுமா? என வினவியுள்ளார்.
</p><p>
அத்துடன் ராஜபக்சவின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், செப்டம்பர் 12 அன்று அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி திட்டமிட்டிருந்த பேரணியுடன் அது தொடர்புபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் அரச தரப்பிலுள்ள அமைச்சர் ஒருவரின் நண்பர்! டி.வி.சானக வெளிப்படுத்திய பரபரப்பான தகவல்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788600469"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788600469</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சமாக வழங்கியதாக சாட்சியமளித்த நிமல் பெரேரா அடிக்கடி தனது சாட்சியத்தை மாற்றிப் பேசும் ஊழல்மிக்க தொழிலத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சமாக வழங்கியதாக சாட்சியமளித்த நிமல் பெரேரா அடிக்கடி தனது சாட்சியத்தை மாற்றிப் பேசும் ஊழல்மிக்க தொழிலதிபர்.</p><p>அநுர குமார திசாநாயக்கவின் வலது கை போன்ற ஒரு பலமிக்க அமைச்சரின் வியாபார நண்பராவார் என மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மொட்டு கட்சியின் தலைமையகத்தில் இன்று (05.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவித்த கருத்து
</p><h2>

</h2><p></p><h2>அடிக்கடி சாட்சியங்களை மாற்றும் நிமல் பெரேரா</h2><p>2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு விசாரணை என்று நான் நினைக்கிறேன். இதிலுள்ள ஒரே சாட்சி நிமல் பெரேரா என்ற ஊழல்மிக்க தொழிலதிபர் மட்டுமே. </p><p>இவருக்கு ஒன்று மட்டுமல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த ஊழல் தொழிலதிபர் வாக்குமூலத்தை அடிக்கடி மாற்றிப் பேசுகின்றார்.
</p><p>இந்த தொழிலதிபருடன் இணைந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர் இந்த அரசாங்கத்தின் ஒரு அமைச்சராவார். அந்த அமைச்சரும் இந்த நிமல் பெரேராவும் இணைந்து மூன்று சந்தர்ப்பங்களில் மூன்று விதமான சாட்சியங்களை அளித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0cbc42a-804b-4a53-99da-42cb2f36bac2/26-6a9be0981dbc0.webp' /></p><p>முதல் தடவை, நாமல் ராஜபக்சவுக்கு 50 மில்லியன் கொடுத்ததாகக் கூறுகிறார். ஆனால் கொடுத்த இடம் இல்லை, கொடுத்த திகதி இல்லை, கொடுத்த விதம் எதுவுமில்லை. </p><p>அதற்குப் பிறகு இரண்டாவது தடவை, 'இல்லை, நான் ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை' என்கிறார்.
அதன்பிறகு மூன்றாவது தடவையாக இப்போது 100 மில்லியன் கொடுத்ததாகக் கூறுகிறார். </p><p>ஆனால் எப்போது கொடுத்தார் என்று கேட்டால் திகதி இல்லை. இலங்கைக்கு பணம் வந்த விதம் பற்றி கேட்டால் அதுவும் இல்லை. எந்தக் காலப்பகுதியில் என்று கேட்டால் அது குறித்தும் எதுவும் இல்லை.
</p><p>இந்த அரசாங்கத்தின் பலமிக்க அமைச்சரின் வியாபார நண்பரின் சாட்சியத்தைப் பயன்படுத்தி நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவரின் புதைகுழி அகழ்வு! விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ganemulla-sanjeewa-case-dead-body-inquiry-1788597659"></link>
            <id>https://tamilwin.com/article/ganemulla-sanjeewa-case-dead-body-inquiry-1788597659</id>
            <summary type="text">கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவரின் புதைகுழி தோண்டப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவரின் புதைகுழி தோண்டப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>

மெகசின் சிறையில் நடந்த மோதலில் உயிரிழந்த, பாதாள உலகக் கும்பலின் உறுப்பினர்களில் ஒருவரும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருமான முகமது அஸ்மான் செராஃப்தீன் என்பவரின் உடல் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டுள்ளது.</p><p>

அஸ்மான் செராப்தீன் உடல் புதைக்கப்பட்ட மயானத்தில், ஒரு கும்பல் குழி தோண்டியதாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து, மத்தேகொட பொலிசார் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

அஸ்மான் செராப்தீனின் உறவினர்கள் மத்தேகொட பொலிஸில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.

அஸ்மான் செராப்தீன் என்பவர் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகத்தில் ஒரு துப்பாக்கி சுடும் வீரராகக் கருதப்படுகிறார்.</p><h2>பதற்றமான சூழ்நிலை</h2><p> </p><p>மேலும் கணேமுல்லா சஞ்சீவ கொலைச் சம்பவத்திலும் அ வர் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த. ஒகஸ்ட் 6 ஆம் திகதி இரவு சுமார் 10.20 மணியளவில் மெகசின் சிறையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையின் போது நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa80659d-78b5-44ff-af95-fb3ba764c0f0/26-6a9bdcb20444c.webp' /></p><p>

இறந்தவரின் உடல் மத்தேகொடவில் உள்ள ஒரு உறவினரின் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் மத்தேகொட முஸ்லிம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும், உடல் புதைக்கப்பட்ட குழியின் அடிவாரத்திலிருந்து சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு யாரோ ஒருவர் குழி தோண்டியிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p> பொலிசாருக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரிவிக்காமல், மயான ஊழியர்கள் மீண்டும் குழியை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மத்தேகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T09:11:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலின் தற்போதைய நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-in-saftey-place-1788573307"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-in-saftey-place-1788573307</id>
            <summary type="text">
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாமலின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>
சிறைச்சாலை வட்டாரங்கள் </b></h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் மேலும் 10 கைதிகள் வரை குறித்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e9f94f8-dc29-46ac-a8de-7b29aedbb92a/26-6a9b7927e0c9f.webp' /></p><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து வழங்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

நாமல் ராஜபக்ச கைது</b></h3><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9161d163-10dc-43ec-a023-590092d8f633/26-6a9b792895028.webp' /></p><p>பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது 8 லட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-05T09:04:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வந்தாறுமூலை- கிழக்கு பல்கலைக்கழக இனப்படுகொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vantharumulai-eastern-university-massacre-1788597268"></link>
            <id>https://tamilwin.com/article/vantharumulai-eastern-university-massacre-1788597268</id>
            <summary type="text">வந்தாறுமூலை- கிழக்குபல்கலைக்கழக இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன்&amp;nbsp; 36 ஆண்டுகள் ஆகின்றன.கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வந்தாறுமூலை- கிழக்குபல்கலைக்கழக இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன்&nbsp; 36 ஆண்டுகள் ஆகின்றன.</p><p>கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என்பது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ் மக்கள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டு அவர்களை வாகனங்களில் ஏற்றிச்சென்று பின்னர் படுகொலை செய்யப்பட்ட கொடுரம் ஜனாதிபதி ஆர் பிரமதாசா ஆட்சிக்காலம் நடந்தது.
</p><p>
அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>படுகொலைகள்</h2><p> இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தது. விசாரணை முடிவுகள் சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது. </p><p>அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனங்கண்டிருந்தது, ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d144f20-0788-4cd2-9941-7965f2d2059d/26-6a9bd9a49d0c4.webp' /></p><p> 1990, ல் நடந்த தமிழினப்படுகொலைகள் இலங்கை இராணுவத்துடன் முஷ்லிம் ஊர்காவல் படையினரும் சம்மந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
இன்று 05/09/2026, 36, ஆண்டுகள் இந்த இனப்படுகொலை நடந்தும் இதுவரை அந்த கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை.</p><p> அந்த 158, தமிழர்களும் எங்கு புதைக்கப்பட்டார்கள் என்பது கூட இதுவரை தெரியாத நிலையில் அந்த நினைவு நாள் மட்டும் நினைவு கூரப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T08:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்திருந்த பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegally-stockpiled-liquor-seized-woman-arrested-1788596276"></link>
            <id>https://tamilwin.com/article/illegally-stockpiled-liquor-seized-woman-arrested-1788596276</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில்
சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான மதுபானங்களை
சூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில்
சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான மதுபானங்களை
சூரியபுர விசேட அதிரடிப்படையினர் நேற்று (4.9.2026) இரவு கைப்பற்றியுள்ளனர்.</p><p>

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கையின்போது, ஆலங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்டபோது இந்த
மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது, சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 50
வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

கைப்பற்றப்பட்ட பொருட்களில் 42 பியர் போத்தல்கள், 50 கால் போத்தல் சாராயம்
மற்றும் 15 அரை போத்தல் சாராயம் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட பெண்ணும் கைப்பற்றப்பட்ட மதுபானங்களும் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2e0af54-35b9-4444-9428-8e9da6be7541/26-6a9bd370f2542.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று (5) நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T08:31:55+00:00</updated>
        </entry>
    </feed>
