<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-01T22:38:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-tension-sri-lanka-police-curfew-1785608188"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-tension-sri-lanka-police-curfew-1785608188</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை தொடர்ந்து, ராகம பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை தொடர்ந்து, ராகம பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் அங்கு, பெல் 412 ரக விமானத்தையும் ஆளில்லா விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தி&nbsp;நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது 30இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.&nbsp;</p><p>சிறையில் ஏற்பட்ட வன்முறையின் போது&nbsp;பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் நிலைமை கைமீறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், தற்போது&nbsp;மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>இச்சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகு பார்வை நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hkhN7_whyck" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-01T20:32:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் கடலில் சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/horrific-incident-that-took-place-in-mannar-sea-1785606304"></link>
            <id>https://tamilwin.com/article/horrific-incident-that-took-place-in-mannar-sea-1785606304</id>
            <summary type="text">மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி கடற்றொழில் துறையில்
இருந்து கடந்த 30ஆம் திகதி கடலுக்கு சென்ற
கடற்றொழிலாளி ஒருவரின் சடலம் மீட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி கடற்றொழில் துறையில்
இருந்து கடந்த 30ஆம் திகதி கடலுக்கு சென்ற
கடற்றொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
 இந்தச் சடலமானது இன்று (01.08.2026) கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடலில் குதித்த கடற்றொழிலாளி </h2><p>
</p><p>
சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளி காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர்
என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி கடற்றொழில் துறையில் இருந்து
கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி கடற்றொழிலுக்கு கண்ணாடியிழை படகில் சென்ற
இரு கடற்றொழிலாளர்கள் கடலில் வலையை பாய்ச்சி விட்டு கரைக்கு
திரும்பிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4adf648e-cf63-4304-94d0-bced837bbdd0/26-6a6e3ddf44cdb.webp' /></p><p>இதன் போது குறித்த படகில் எரிபொருள் முடிந்ததன் காரணமாக எரிபொருளை
எடுத்து வரலாம் எனும் நோக்கில் குறித்த கடற்றொழிலாளர்கள் கடலில் குதித்து நீந்தி
கரை சேருவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் பலத்த காற்றின் காரணமாக அவர் காணாமல்
போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
குறித்த சம்பவம் 30ஆம் திகதி வியாழன் மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த சந்தர்ப்பத்தில் கட்டாஸ்பத்திரி பகுதியில் இருந்து
தொழிலுக்குச் சென்ற சக கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்து நின்ற 
குறித்த படகையும் கடற்றொழிலாளரையும் மீட்டு கரைக்கு வந்துள்ளனர்.</p><p></p><h2>சடலம் மீட்பு</h2><p>
</p><p>
மேலும் எரிபொருளை பெற்றுக்கொண்டு வருவதாக கூறி கடலில் நீந்திச் சென்ற
நிலையில் காணாமல் போன சக கடற்றொழிலாளரையும் தேடியுள்ளனர்.
</p><p>
குறித்த கடற்றொழிலாளர் தொடர்பாக எவ்வித தகவலும் தெரியாத நிலையில் எருக்கலம்பிட்டி கடற்றொழிலாளர்கள் இன்று
சனிக்கிழமை (1) காலை கடலில் சடலம் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை
அடுத்து காட்டாஸ்பத்திரி கடற்றொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30108ded-adec-49a2-990d-504d20fad339/26-6a6e3f5a0a5ed.webp' /></p><p>குறித்த தகவல்களுக்கு அமைவாக காட்டாஸ்பத்திரி கடற்றொழிலாளர்கள் தேடிச்சென்று
குறித்த சடலத்தை மீட்டதுடன் பேசாலை பொலிசாருக்கு தகவல் வழங்கி குறித்த சடலத்தை
கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
இதையடுத்து மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச்
சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T20:31:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்முறை எத்தனை உயிர்கள்..! சிறைச்சாலை பரபரப்புக்கு மத்தியில் சற்றுமுன் நாமல் வெளியிட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-questions-mahara-prison-unrest-1785611754"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-questions-mahara-prison-unrest-1785611754</id>
            <summary type="text">நாட்டில் மற்றொரு சிறைக் கலவரம், இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் மற்றொரு சிறைக் கலவரம், இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் சற்று முன்னர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சில வாரங்களுக்குள் நடக்கும் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இது. </p><p>இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் பெரும் அழுத்தத்தில் இருக்கும் சிறை அமைப்பின் விளைவாகும்.</p><p>

இது இனி ஒரு தனிப்பட்ட நிகழ்வைப் பற்றியது அல்ல. இது மோசமான நிர்வாகம், தலைமைத்துவமின்மை மற்றும் சீரழிய அனுமதிக்கப்பட்ட சிறை அமைப்பைப் பற்றியது.</p><p></p><h2>முக்கிய பதவி&nbsp;</h2><p> </p><p>கண்முன்னே நெருக்கடி நிகழும் போதிலும், சிறைத்துறை இன்றும் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஆணையர் ஜெனரல் இல்லாமல் தொடர்கிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Another prison unrest. how many lives this time?<br><br>This is the second major prison disturbance in a matter of weeks. It is no longer an isolated incident. It is the result of poor management, neglegence, and a prison system that is under immense strain.<br><br>This is no longer about…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2083608646362296478?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இந்த முக்கியமான பதவி ஏன் இன்னும் முறையாக நிரப்பப்படவில்லை?

கூடுதல் பாதுகாப்பைப் பணியமர்த்துவது ஒரு நாளுக்கு நிலைமையைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அது சிக்கலைத் தீர்க்காது. </p><p>நெரிசல், போதுமான வசதியின்மை, மோசமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அர்த்தமுள்ள மறுவாழ்வு இல்லாமை ஆகியவை அவசரக் கவனத்தைக் கோருகின்றன.</p><p>

சிறைத் தண்டனை ஒருவரின் சுதந்திரத்தைப் பறிக்கிறது, அவரது கண்ணியத்தை அல்ல. அரசாங்கம் தற்காலிகத் தீர்வுகளைக் கைவிட்டு, நிறுவன ரீதியான தோல்வியின் தெளிவான அறிகுறிகளைக் காட்டும் சிறை அமைப்பைச் சரிசெய்யத் தொடங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T19:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்கு முன் குவிந்த கைதிகளின் பெற்றோர் - பாதுகாப்பு அதிகாரிகளிடம் மன்றாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-riot-prisoners-parents-reguest-1785610803"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-riot-prisoners-parents-reguest-1785610803</id>
            <summary type="text">பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மஹர சிறை வளாகத்திற்கு வெளியே கைதிகளின் பெற்றோர் கூடியுள்ளனர்.&amp;nbsp;முன்வைக்கும் கோரிக்கை..வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மஹர சிறை வளாகத்திற்கு வெளியே கைதிகளின் பெற்றோர் கூடியுள்ளனர்.&nbsp;</p><h2>முன்வைக்கும் கோரிக்கை..</h2><p>விரக்தியடைந்த பெற்றோர்கள் பாதுகாப்புப் படையினரிடம் தங்களது பிள்ளைகளை காப்பாற்றுமாறு மன்றாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>

சிறைக்கு வெளியே நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், "ஐயா, தயவுசெய்து எங்கள் பிள்ளைகளை அவர்கள் கொன்றுவிட அனுமதிக்காதீர்கள்" என்று உணர்ச்சிவசப்பட்ட பெற்றோர்கள் பாதுகாப்புப் படையினரிடம் மன்றாடியுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0OZU82G3o28" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T19:05:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக்கு விரைந்த பாதுகாப்பு செயலாளர்.. கண்ணீர்ப்புகை வாகனங்களும் வரவழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-issue-high-security-stf-police-1785610250"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-issue-high-security-stf-police-1785610250</id>
            <summary type="text">மஹர சிறை வளாகத்தில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.&amp;nbsp;கண்ணீர்ப்புகை வாகனங்கள்மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறை வளாகத்தில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2>&nbsp;கண்ணீர்ப்புகை வாகனங்கள்</h2><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6702e762-fe28-4b78-a319-c080d3872467/26-6a6e4eb1b624d.webp' /></p><p>
</p><p>அதே நேரத்தில், மீட்பு நடவடிக்கை தொடர்வதால், அதிக கவசங்கள் கொண்ட கண்ணீர்ப்புகை வாகனங்கள் சிறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><p>தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகள் இன்னும் மேலதிக விபரங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T18:54:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அதிரடி போக்குவரத்துச் சோதனை - 187 வழக்குகள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/akkaraipattu-traffic-crackdown-187-cases-filed-1785599535"></link>
            <id>https://tamilwin.com/article/akkaraipattu-traffic-crackdown-187-cases-filed-1785599535</id>
            <summary type="text">அக்கரைப்பற்று பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது 187 போக்குவரத்து வழக்குகள்
பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 23 மோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது 187 போக்குவரத்து வழக்குகள்
பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 23 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன.
</p><p>இந்த அதிரடி போக்குவரத்து சோதனை நடவடிக்கையானது நேற்றைய தினம்(31.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>போக்குவரத்து சோதனை நடவடிக்கை</h2><p>
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் வழிகாட்டலில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் தந்தநாராயணவின்
நெறிப்படுத்தலிலும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில்
திசாநாயக்க ஒத்துழைப்பிலும் "போக்குவரத்துச் சட்டத்தை வலுப்படுத்தும் விசேட
பணி" என்ற பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d487d45-6bc8-48c9-b629-1284700d5e0d/26-6a6e1d711bc75.webp' /></p><p>நேற்று மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்திட்டத்தில், அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
அக்கரைப்பற்று, இறக்காமம், சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், கல்முனை,
சாய்ந்தமருது, பெரியநீலாவணை மற்றும் சவளக்கடை ஆகிய பொலிஸ் நிலையங்களைச்
சேர்ந்த 82 போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேசங்களை மையப்படுத்திய இந்தச் சோதனையின் போது தலைக்கவசம் அணியாமை, மதுபோதையில் வாகனம்
செலுத்துதல், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல், சாரதி
அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், வீதி ஒழுங்கு மீறல், சமிக்ஞை
விளக்குகள் இன்றிப் பயணித்தல், வீதிச் சமிக்ஞைகளைப் பின்பற்றாமை, ஏனைய
போக்குவரத்து மீறல்கள் போன்றவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p></p><h2>போக்குவரத்து விதிமீறல்</h2><p>


இந்த விசேட நடவடிக்கையின் போது பொதுமக்கள் பலரும் பொலிஸ் உத்தியோகத்தர்களை
நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்ததுடன், விபத்துகளைத் தடுக்கும்
பொருட்டு இவ்வாறான விசேட சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்
கோரிக்கை விடுத்துள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் தந்தநாராயண
தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7445ac0-ee14-46ff-bd22-28dbcc6fa2b9/26-6a6e1d70659ea.webp' /></p><p>அத்துடன், பொதுமக்கள் அனைவரும் வீதிப் போக்குவரத்துச் சட்டங்களைச் சரியாகப்
பின்பற்றி நடப்பதன் மூலம் சட்டம், ஒழுங்கு, உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து, அனைவருக்கும் பாதுகாப்பான வீதிச் சூழலை உருவாக்க ஒத்துழைக்க
வேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வேண்டுகோள்
விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T17:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.. மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-taken-curfew-ragama-police-station-area-1785601257"></link>
            <id>https://tamilwin.com/article/police-taken-curfew-ragama-police-station-area-1785601257</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் கோட்டங்களில் மறு அறிவிப்பு வரும் வரை உடனடி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் கோட்டங்களில் மறு அறிவிப்பு வரும் வரை உடனடி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் அறிவித்தார்.</p><p>அதன்படி,&nbsp;பின்வரும் கிராம அலுவலர் கோட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது,&nbsp;</p><p>246 கெண்டலியத்த வீதி மேற்கு</p><p>
246 சி கெண்டலியத்த வீதி வடக்கு
</p><p>181 ஜி தம்புவ</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0OZU82G3o28" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>மறு அறிவிப்பு வரும் வரை ராகம பொலிஸ் எல்லைக்குள் பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.</p><p>
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்த பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T17:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மை.. அதிரடியாக களமிறக்கப்பட்ட பெல் 412 ரக விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-incident-1785602239"></link>
            <id>https://tamilwin.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-incident-1785602239</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நிலவும் அமைதியின்மையைக் கண்காணிக்க, பெல் 412 ரக விமானத்தையும் ஆளில்லா விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக விமானப்படை தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நிலவும் அமைதியின்மையைக் கண்காணிக்க, பெல் 412 ரக விமானத்தையும் ஆளில்லா விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று பிற்பகல் (01) மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் ஏழு கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்தார்.</p><p></p><h2>ஒருவர் உயிரிழப்பு&nbsp;</h2><p>

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bdcf300-bbb3-4e82-86b8-2e3db878c28c/26-6a6e24fd20c13.webp' /></p><p>

கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றித் திரண்டுள்ளதாகவும், அவர்களிடையே சில அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போதைய சூழ்நிலைகளில் சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிப்பதற்காக, ஒரு விமானத்தையும் ஒரு ட்ரோனையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0OZU82G3o28" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-01T16:55:38+00:00</updated>
        </entry>
    </feed>
