<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-23T10:25:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முச்சக்கரவண்டி சேவைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-plans-age-of-40-three-wheeler-drivers-1787478719"></link>
            <id>https://tamilwin.com/article/govt-plans-age-of-40-three-wheeler-drivers-1787478719</id>
            <summary type="text">இலங்கையில் முச்சக்கரவண்டி போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுபவர்களின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.

தொழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முச்சக்கரவண்டி போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுபவர்களின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.</p><p>

தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;கல்வியில் மாற்றங்கள்</h2><p> </p><p>

பாடசாலை படிப்பை முடித்தவுடன் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் நுழையக்கூடாது என்றும், அதற்கு பதிலாக அவர்களை கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88e3438-b00a-440a-a56e-c42a45a6b710/26-6a8ac4ec3cde4.webp' /></p><p>
</p><p>
இதன்படி, முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் நுழைவதற்கான வயதை 40 ஆக உயர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இளைஞர்கள் பாடசாலை படிப்பை முடித்தவுடன் உடனடியாக முச்சக்கர வாகனத்தை வீதிக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும், அதனால் கல்வியில் மாற்றங்களை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T10:01:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதி – அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-provide-hostel16-000-uni-students-1787471026"></link>
            <id>https://tamilwin.com/article/government-provide-hostel16-000-uni-students-1787471026</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்வி கலாச்சாரமொன்று நிலவும் சூழலை
உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் முதலீட்டை செய்கின்றோம்
என பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்வி கலாச்சாரமொன்று நிலவும் சூழலை
உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் முதலீட்டை செய்கின்றோம்
என பிரதமர் ஹரிணி
அமரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று (22.08.2026)
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் விடுதிக்காக அடிக்கல் நாட்டும்
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சுதந்திரமான கல்விச் சூழல்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல தசாப்தங்களின் பின்னர் 2026 ஆம் ஆண்டிலேயே அரச பல்கலைக்கழக மாணவர்களின்
நலன்புரித் துறையினை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்ய எம்மால் முடிந்தது.
</p><p>இதன் மூலம் 55 விடுதிகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை நாம் ஆரம்பிக்க
எதிர்பார்க்கின்றோம்.

இந்தத்திட்டத்தின் ஆரம்பம் வவுனியா பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவது குறித்து
நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றேன்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9156da79-6993-4088-b649-5ae0e0b74a5c/26-6a8abb2cf0284.webp' /></p><p>அதுமட்டுமன்றி, மேலும் 03 விடுதிகள் இந்தத்திட்டத்தின்
மூலம் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க இருக்கின்றன. அதனூடாக இந்தப்
பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எதிர்நோக்கிவரும் விடுதிப் பற்றாக்குறை
பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம்
எதிர்பார்க்கின்றோம்.
</p><p>
பல்கலைக்கழகங்களுக்குள் உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்பும் போது,
புதிதாக ஆரம்பித்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரப் பகுதிகளுக்கு வெளியில்
அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றோம்.
</p><p>
அதற்கமைய ரஜரட்ட, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே இந்த
55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் முன்னுரிமையளித்துள்ளோம்.</p><h2>விடுதி வழங்கும் திட்டம்</h2><p>
</p><p>இந்தத்திட்டத்தினூடாக இலங்கையின் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பிலுள்ள
சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க முடியும் என நாம்
எதிர்பார்க்கின்றோம்.</p><p>

இந்த 55 விடுதிகளைக் கட்டியெழுப்பும் திட்டத்தினூடாக, சபரகமுவா
பல்கலைக்கழகத்திற்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கும் தலா 7 விடுதித்
திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9345683a-93be-43fe-8d3d-d317f3c1e607/26-6a8abb2dc1e56.webp' /></p><p>அதேபோன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு
6 விடுதித் திட்டங்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 5 திட்டங்களும், ஊவா
வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு 6 திட்டங்களும் பெற்றுக்கொடுக்க நாம்
திட்டமிட்டிருக்கின்றோம்.
</p><p>
அதேபோல, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் வயம்ப பல்கலைக்கழகத்திற்கும்
தலா 4 திட்டங்கள் வீதம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. </p><p>ருஹுணு பல்கலைக்கழகத்திற்கு
4 திட்டங்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு 2 திட்டங்களும் கிடைக்க
இருக்கின்றன. இறுதியாக, மொறட்டுவை, திருகோணமலை மற்றும் கம்பஹா விக்ரமாரச்சி
ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு தலா 2 விடுதித் திட்டங்கள் வீதம் இந்தத்திட்டத்தின்
மூலம் நாம் ஒதுக்கியுள்ளோம்.</p><h2>எதிர்காலத் தலைமையை உருவாக்கும் இடம்</h2><p>

அத்துடன், இந்த விடுதியை நிர்மாணிக்கும் திட்டமானது மாணவர்களுக்கு உரிய
நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்
நிறைவுசெய்யப்பட வேண்டும். </p><p>அதேபோன்று, உரிய முறையில் அந்த வளங்களைப்
பாதுகாத்து, பராமரிப்புப் பணிகளைச் சரியாக மேற்கொண்டு அடுத்த தலைமுறையிடம்
கையளிக்கும் பொறுப்பையும் நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67cbc001-44f3-455b-bcec-413eea936955/26-6a8abb2e8eedd.webp' /></p><p>பல்கலைக்கழகங்கள் என்பவை நாட்டின் எதிர்காலத் தலைமையை உருவாக்கும் இடங்கள்
என்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தரமான கற்றல் செயற்பாடுகள், முழுமையான
உட்கட்டமைப்பு வசதிகளைப் போன்றே சரியான அரசியல் மற்றும் கலாச்சார
வாழ்க்கையையும் வழங்க வேண்டியுள்ளது. </p><p>அதனாலேயே பல்கலைக்கழகங்களுக்குள்
சுதந்திரமான கல்விக் கலாச்சாரமொன்று நிலவும் சூழலை உருவாக்குவதற்காக நாம் ஓர்
அரசாங்கம் என்ற வகையில் இந்த முதலீட்டை செய்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.ஷ</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:24:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறிவைக்கப்பட்ட வானாத்தே சத்துவின் நெருங்கிய சகாவின் வீடு..சிசிடிவியில் சிக்கிய மர்ம நபரால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grenade-attack-carried-house-vanath-sathu-disciple-1787476214"></link>
            <id>https://tamilwin.com/article/grenade-attack-carried-house-vanath-sathu-disciple-1787476214</id>
            <summary type="text">பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துபாயில் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>

துபாயில் கைது செய்யப்பட்ட ‘வானாத்தே சத்து’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகா ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இன்று (23) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கைக்குண்டை வீசும் காட்சி அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6347ba3b-6e02-4e7a-993f-9eef66537a1c/26-6a8abbf2e19cc.webp' /></p><p>
</p><p>
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையில் இவ்வாறான கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் புதிய போக்கு தற்போது அதிகரித்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீதும் இதேபோன்ற கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு கைக்குண்டு வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.<br><br><b><i><a href="https://youtu.be/6eC2li0RwTQ" target="_blank">காணொளிக்கு இங்கே அழுத்தவும்..</a></i></b></p>]]></content>
            <updated>2026-08-23T09:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார தொடருந்து திட்டம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electric-trains-to-start-next-year-1787474652"></link>
            <id>https://tamilwin.com/article/electric-trains-to-start-next-year-1787474652</id>
            <summary type="text">கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என மாகாணசபைகள் மற்றும் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். </p><p>

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசாங்கத்தின் நோக்கம்</h2><p>

மேலும் தெரிவிக்கையில், இத்திட்டத்திற்கு தேவையான ஆரம்பத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டன.

இந்த சேவையின் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட போக்குவரத்து வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197b2eb2-c89e-44bd-920e-4b10bd303625/26-6a8ab9b3eea5e.webp' /></p><p>
</p><p>
அதன்படி, பெலியட்டாவிலிருந்து 'ருஹுனு குமாரி' தொடருந்து மூலம் வரும் பயணிகள், பானந்துறையில் இறங்கி மின்சார தொடருந்து மூலம் கொழும்பை சென்றடையும் வாய்ப்பைப் பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைப்பில் தாமதமான பல அபிவிருத்தி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இரவில் நடந்த கோர விபத்து - பறிபோன இரு உயிர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticalo-accident-2-young-boys-death-1787474610"></link>
            <id>https://tamilwin.com/article/batticalo-accident-2-young-boys-death-1787474610</id>
            <summary type="text">மட்டக்களப்பு –&amp;nbsp; கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீதியோரத்தில் இருந்த மாணவர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு –&nbsp; கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீதியோரத்தில் இருந்த மாணவர்கள் குழுவினரையும் மோதியதில் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
நேற்று (22) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>பயங்கர விபத்து&nbsp;</h2><p>
</p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 சிறுமிகளும் 2 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f2f0c74-b2c0-45e1-a7cb-9fc307b86ecd/26-6a8ab79393aa5.webp' /></p><p>
</p><p>நேற்று இரவு சுமார் 9.21 மணியளவில், கோட்டைக்கல்லாற்றில் நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மட்டக்களப்பு – கொட்டக்கார் வீதியில் பயணித்துள்ளனர்.
</p><p>
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை கடப்பதற்காக காத்திருந்த மூன்று மாணவர்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/814ce354-3e8d-49ca-b856-089c03527b7e/26-6a8ab7944337e.webp' /></p><p>
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மூன்று மாணவர்கள், மேலதிக வகுப்புகள் முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த சிறுமி ஒருவரின் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

விபத்தில் 18 வயதான கிஷோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>மேலும் 6 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 17 வயதான கதிர்சன் என்ற சிறுவன் இன்று (22) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தைக்கு வெளியிட தயார் நிலையிலிருந்த குடிநீர் போத்தல்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-bottles-with-fake-sls-standard-logo-seized-1787471639"></link>
            <id>https://tamilwin.com/article/water-bottles-with-fake-sls-standard-logo-seized-1787471639</id>
            <summary type="text">SLS தரநிலை சின்னம் போலியாக பொறிக்கப்பட்ட சுமார் 8500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார ஆணையகம் பறிமுதல் செய்துள்ளது. 

அவிசாவளை பகுதியில் நடத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>SLS தரநிலை சின்னம் போலியாக பொறிக்கப்பட்ட சுமார் 8500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார ஆணையகம் பறிமுதல் செய்துள்ளது.</p><p> 

அவிசாவளை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>

குறித்த குடிநீர், அமித்திரிகல, ருவன்வெல்லவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டு, அவிசாவளை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.</p><h2>போலி சின்னம் மற்றும் சான்றிதழ் எண்</h2><p> 

குடிநீர் போத்தல்களில் SLS தரநிலை சின்னமும், 894 என்ற சான்றிதழ் எண்ணும் போலியாக குறிப்பிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d24dbd2e-025b-48e5-98d4-740f1d7a33d3/26-6a8ab0e83dc1d.webp' /></p><p>

இவை சந்தைக்கு வெளியிடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

இதனை தொடர்ந்து சுமார் 8500 போத்தல்கள் சீல் வைக்கப்பட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் ஆணையகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2028 ஆம் ஆண்டு முதல் வாகன புகை வெளியேற்ற சோதனையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/roadworthiness-tests-to-replace-emission-tests-1787471929"></link>
            <id>https://tamilwin.com/article/roadworthiness-tests-to-replace-emission-tests-1787471929</id>
            <summary type="text">2028 ஆம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களுக்கும் தற்போதைய புகை சோதனைக்குப் பதிலாக &#039;விரிவான சாலை தகுதி சான்றிதழை&#039; (Road Fitness Certificate) அறிமுகப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2028 ஆம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களுக்கும் தற்போதைய புகை சோதனைக்குப் பதிலாக 'விரிவான சாலை தகுதி சான்றிதழை' (Road Fitness Certificate) அறிமுகப்படுத்த மோட்டார் வாகனப்போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
</p><p>
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப்புகை வெளியேற்ற சோதனைப்பிரிவின் பணிப்பாளர் தசுன் கமகே இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>300 தகுதிவாய்ந்த பணியாளர்கள் ஆட்சேர்ப்பு </h2><p>

 இந்த புதிய அமைப்பு வாகனப்புகை வெளியேற்றத்தை மட்டுமல்லாமல், பிரேக்கிங் அமைப்புகள், முகப்பு விளக்குகள், டயர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப நிலைகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு கூறுகளையும் மதிப்பிடும் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff9dcc1-362f-41a8-9d85-3a2179fc9b41/26-6a8aae8e47499.webp' />&nbsp;</p><p>
</p><p>
திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், பாடசாலைப் போக்குவரத்து வாகனங்கள், அலுவலகப் போக்குவரத்து வான்கள் மற்றும் சிறப்பு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் சோதனை விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான சுமார் 300 தகுதிவாய்ந்த பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை இத்துறை ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்ய தொடங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு கடலில் காத்திருக்கும் பாரிய ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sixteen-iranian-oil-tankers-positioned-sri-lanka-1787470651"></link>
            <id>https://tamilwin.com/article/sixteen-iranian-oil-tankers-positioned-sri-lanka-1787470651</id>
            <summary type="text">ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் தனியார் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2> ஈரானிய எண்ணெய் கப்பல்கள்</h2><p>

காலி துறைமுகத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு அருகே இந்தக் கப்பல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) விதித்துள்ள தடைகளுக்கு உட்பட்ட ஈரானின் ‘Dark Fleet’ உடன் தொடர்புடைய இந்தக் கப்பல்கள், அமெரிக்காவின் சர்வதேச தடைகளை மீறி எண்ணெயை ஏற்றிச் செல்வதாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7187a046-e3c8-4bd5-ad6c-ed61cdc0b34f/26-6a8aa92b6a806.webp' /></p><p>
</p><p>
குறித்த பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் டொக்டர் ஜனித ருவன் கொடிதுவக்கு, குறித்த கப்பல்கள் தற்போது இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு வெளியே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், இந்த எண்ணெய் கப்பல்களுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கும் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் அல்லது அவற்றுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா தடை</h2><p>

“அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட கப்பல்கள் எவை என்பதை அடையாளம் காண எங்களிடம் நேரடி வழிமுறை இல்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் பட்டியல் மட்டுமே எங்களுக்குக் கிடைக்கிறது.</p><p>
</p><p>
 அமெரிக்கத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அதிகாரப்பூர்வமாக எங்களுக்குத் தகவல் வழங்கினால், அந்தக் கப்பல்கள் தொடர்பில் உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும்” என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b355a6c0-b124-406b-81a1-8a24c28625dd/26-6a8aa92ab7573.webp' /></p><p>

இதற்கிடையில், இலங்கை கடற்படை இந்தக் கப்பல்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை இவ்வாறான கப்பல்களை இடைமறிக்க முயற்சித்தால், இலங்கையின் கடற்கரைக்கு அருகில் மோதல் நிலைமை ஏற்படக்கூடும் எனவும், இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்ற பாரிய கடல் மாசுபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><h2>காலி கடற்பரப்பு</h2><p>
</p><p>
நிபுணர்களின் கருத்துப்படி, மலேசியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தக் கப்பல்கள், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் அமெரிக்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் தங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91f47919-9636-4f97-8951-3426c3034cb5/26-6a8aa929e2f78.webp' /></p><p>
</p><p>
‘MT Amber’ உள்ளிட்ட சில கப்பல்கள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியிலிருந்தே காலி கடற்பரப்புக்கு அருகில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தீவிரமான நிலைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அல்லது துறைமுக அதிகார சபையின் உயர்மட்ட அதிகாரிகளிடம் கருத்துகளைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/growth-in-remittances-sri-lankans-working-abroad-1787468318"></link>
            <id>https://tamilwin.com/article/growth-in-remittances-sri-lankans-working-abroad-1787468318</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றம் கணிசமான வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;எனின...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றம் கணிசமான வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>எனினும்&nbsp;நாட்டின் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>சுற்றுலா வருமானம்</h2><p>இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் மேலும், சுற்றுலாத்துறை மூலம் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.5% குறைவடைவு ஆகும்.</p><p>

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 318.5 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட சுற்றுலா வருமானம், இந்த ஆண்டு ஜூலையில் 285.5 மில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41bf91bf-59af-49f9-b864-7ae486fa2ba2/26-6a8aa9a916cf5.webp' /></p><h2>வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் வளர்ச்சி</h2><p>
</p><p>
கடந்த ஆண்டு 4,435.2 மில்லியன் டொலர்களாக இருந்த வருமானம், இந்த ஆண்டு 8,382.4 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் பெறப்பட்ட 697.3 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் டொலர்கள் வருமானமாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
சுற்றுலாத்துறை வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 25ஆம் திகதிக்கு பின் காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787468478"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787468478</id>
            <summary type="text">இலங்கையில் தென்மேற்குப் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தென்மேற்குப் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறைப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என கடமையில் இருக்கும் வானிலை ஆய்வாளர் சச்சித் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.</p><h2>மழை பெய்யும் வாய்ப்பு</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் (23.08.2026) மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல முறை மழை பெய்யக்கூடும். வடமேற்கு மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. </p><p>

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகல மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இலங்கையின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
</p><p>
அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் உடல் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும். 

பொலன்னறுவை போன்ற பகுதிகளில் காலை 8:30 மணிக்கெல்லாம் வெப்பநிலை 32 பாகை செல்சியஸை தாண்டுவதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் நேரத்தைச் செலவிடுவது அபாயகரமானது என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de7810d-34ee-46d4-a904-59b3f1f20928/26-6a8aa5f3e89d3.webp' /></p><h2>பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
எனவே, பிற்பகலில் வெளியில் செலவிடும் நேரத்தைக் குறைக்குமாறும், அதிகளவில் தண்ணீர் அருந்துவதுடன், குளிர்ச்சியான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அதனால் அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T07:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகம விபத்தில் சிறுமி உயிரிழப்பு! தாயும் சகோதரரும் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/girl-dies-in-ragama-accident-1787468881"></link>
            <id>https://tamilwin.com/article/girl-dies-in-ragama-accident-1787468881</id>
            <summary type="text">கம்பஹா - ராகம, வல்பொல தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயும் சகோதரரும் காயமடைந்து வைத்தியச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - ராகம, வல்பொல தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயும் சகோதரரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்று (22) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>சாரதிகள் இருவரும் கைது&nbsp;</h2><p>
</p><p>
ராகமவிலிருந்து வல்பொல நோக்கி கழிவுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார் மற்றும் லொறியுடன் மோதி பின்னர், வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாயும் அவரது இரண்டு குழந்தைகள் மீதும் மோதியுள்ளது.</p><p>இதன்போது, தொடருந்து மார்க்கத்தில் பாதுகாப்பு வாயில் மூடப்பட்டிருந்த நிலையில், அங்கு வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் மற்றும் ஒரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4028b7c8-7961-4574-82d0-db10ae802bd5/26-6a8aa4ec16307.webp' /></p><p>
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளும், தாயும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><p> 

ராகம பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். </p><p>

இந்த விபத்து தொடர்பில் லொறி சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>கழிவுகளை ஏற்றி வந்த லொறியின் சாரதிக்குத் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T07:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பரபரப்பு நிலையில் வங்கிகள்! அடுத்தடுத்து சிக்கப்போகும் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-to-arrest-bank-bosses-1787453541"></link>
            <id>https://tamilwin.com/article/cid-to-arrest-bank-bosses-1787453541</id>
            <summary type="text">
இலங்கையின் முன்னணி வங்கிகள் சிலவற்றின் முக்கிய அதிகாரிகளை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கையின் முன்னணி வங்கிகள் சிலவற்றின் முக்கிய அதிகாரிகளை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணப்பரிவர்த்தனைகளை வங்கிகள் ஊடாக மேற்கொள்ள வசதிகளை வழங்கியதாகக் கூறப்படும் அதிகாரிகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p>
</p><h2><b>
வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் </b></h2><p>இந்த விசாரணைகளின்போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52ab341c-79fb-46c2-9154-adc4f55c9d25/26-6a8a6879190eb.webp' /></p><p>இந்த விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு அறிவித்தல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரிடம், பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட விதம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>“குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பணப் பரிவர்த்தனைகளை சில வங்கிகளின் ஊடாக மேற்கொள்வதற்கு அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தேவையான வசதிகளை வழங்கியுள்ளனர்.</p><p> </p><h3><b>

பணப் பரிவர்த்தனை</b></h3><p>பொதுவாக ஒருவர் வங்கியின் ஊடாக ஒரு கணக்கிற்கு அதிகளவிலான பணத்தை மாற்றும் போது, அதற்கான காரணங்களை விளக்கும் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சில வங்கிகளின் ஊடாக பரிமாற்றம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ab83438-e7be-4b9f-8972-c67dd670d0af/26-6a8a6879bf6ce.webp' /></p><p>இந்த விடயங்களின் அடிப்படையில், வங்கிகளின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. </p><p>

வங்கி அதிகாரிகள் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளோம்” என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஒருவர் வார இறுதி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறான குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் ஏற்கனவே மூன்று தனியார் வங்கிகளுக்கு அதிடியாக புகுந்த அதிகார்கள், முகாமையாளர்களை கைது செய்திருந்தனர்.
</p><p>
இவ்வாறான நிலையில் எந்த நேரத்தில் யார் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்ச நிலையில் வங்கி அதிகாரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mEw1q7y4zco" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-23T07:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் வற்றும் சேனாவெளி குளம் – நீரின்றி தவிக்கும் தம்பலகாமம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-drought-and-el-ni-o-weather-conditions-1787469208"></link>
            <id>https://tamilwin.com/article/severe-drought-and-el-ni-o-weather-conditions-1787469208</id>
            <summary type="text">தொடர்ச்சியாக நிலவும் கடும் வறட்சி மற்றும் எல்நினோ காலநிலை தாக்கத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சேனாவெளி குளம்
நீர் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக நிலவும் கடும் வறட்சி மற்றும் எல்நினோ காலநிலை தாக்கத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சேனாவெளி குளம்
நீர் மட்டத்தின் அளவு வற்றி வரண்டு காணப்படுகின்றது.
</p><p>
நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் குளத்தின் பெரும்பகுதி தற்போது வறண்ட நிலையில் காணப்படுவதுடன், இதனை நம்பியுள்ள விவசாய நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>எல்நினோ காலநிலை</h2><p>
</p><p>
குறிப்பாக, குளத்தின் நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்வரும் காலங்களில் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11e299e2-16d8-4b72-b4e6-3bbb970da7d0/26-6a8a9fe198200.webp' /></p><p>

தொடர்ந்து மழை பெய்யாத பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலைமையை மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கான மாற்று
நீர்வழங்கல் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

கடுமையான வெப்பநிலையும் நிலவுவதுடன் நெற் செய்கை விவசாயத்தை நம்பியே குறித்த
குளத்தை அண்டிய விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.</p><p> 

இவ்வாறாக எதிர்வரும்
மாதங்களில் எல்நினோவின் தாக்கம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T07:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் பாலநகர் மைதானத்தை கழிவுக்கூளங்களால் ஆக்கிரமிக்கும் பிரதேச சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-sabha-occupies-balanagar-with-garbage-1787465286"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-sabha-occupies-balanagar-with-garbage-1787465286</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பாலநகர் கிராமத்தில்
அமைந்துள்ள பொது மைதானத்தை மூதூர் பிரதேச சபை கழிவுகளைக் கொட்டும் இடமாகப்
பயன்படுத்தி ஆக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பாலநகர் கிராமத்தில்
அமைந்துள்ள பொது மைதானத்தை மூதூர் பிரதேச சபை கழிவுகளைக் கொட்டும் இடமாகப்
பயன்படுத்தி ஆக்கிரமித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும் பாலநகர் மைதானமானது எமது முன்னோர்களின் காலத்தில் இருந்தே ஊர்
மக்களின் பொதுப் பயன்பாட்டிலும், விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகளுக்காகவும்
பயன்படுத்தப்பட்டு வந்த முக்கியமானதொரு இடம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>கழிவுகளை கொட்டுதல்</h2><p>மேலும் தெரிவிக்கையில், 2007ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு
இந்த மைதானத்தை சுத்தப்படுத்தி பராமரித்து வந்தனர்.</p><p>
இருப்பினும், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் மற்றும் வெள்ளப் பெருக்கின்
காரணமாக இந்த மைதானம் கடுமையாக பாதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c16ce2df-5156-4c9e-9e01-2acb5fdc0241/26-6a8a9aa622c40.webp' /></p><p>இதனைச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொண்ட மூதூர் பிரதேச சபை, பிற பகுதிகளுக்கு கழிவுகளைக் கொண்டு
செல்வதில் உள்ள சிரமங்களைக் காரணம் காட்டி, இந்த மைதானத்திற்குள் கழிவுகளைக்
கொட்டி ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p>ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் இந்தப் பகுதியில், தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்றும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>

பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள்</h2><p>இந்த மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரதான வீதி
வழியாகவே தினசரி பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயணித்து வருகின்றனர்.
</p><p>கழிவுகளின் துர்நாற்றம் மற்றும் சுகாதாரச் சீர்கேடு காரணமாக இந்த வீதியை பயன்படுத்தும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் கடும் அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193263a5-a07d-4060-a0cc-e82e32a696f8/26-6a8a9aa572d35.webp' /></p><p>தலைமுறைகள் கடந்து பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பொது மைதானத்தை கழிவு மேடாக மாற்றுவதை பிரதேச சபை உடனடியாக
நிறுத்த வேண்டும்.</p><p>&nbsp;மைதானத்தைச் சுத்திகரித்து மீண்டும் மக்களின்
பயன்பாட்டிற்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-23T07:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வாகன விற்பனை போர்வையில் கோடிக்கணக்கான பணமோசடி - சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-sales-fraud-businessman-remanded-1787466344"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-sales-fraud-businessman-remanded-1787466344</id>
            <summary type="text">கொழும்பு - ஹோமாகம, கொடகம பகுதியில் வாகனங்களை விற்பனை செய்வதாகக்கூறி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - ஹோமாகம, கொடகம பகுதியில் வாகனங்களை விற்பனை செய்வதாகக்கூறி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, வாகன விற்பனை நிலைய உரிமையாளரை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமகம பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கொலை முயற்சி குற்றச்சாட்டு</h2><p>

சந்தேகநபர் வாகனங்களை விற்பனை செய்வதாகக்கூறி வாங்குபவர்களையும், விற்பவர்களையும் ஏமாற்றி சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae98a023-7d00-4839-b51a-8d26f0caffb6/26-6a8a9a8313616.webp' />&nbsp;</p><p>பணமோசடியில் ஏமாற்றப்பட்ட சுமார் 15 பேர் மீகொடா பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.</p><p>

ஹோமாகம, கொடகம பகுதியில் வாகன விற்பனை நிலையம் நடத்தி வந்த சமர பவந்தா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

மேலும், இதற்கு முன்னர் கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் மீகொட பொலிஸ் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T07:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர் மின்னுற்பத்திக்கான போதுமான நீர் உள்ளதா..! தீர்மானங்கள் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-sufficient-for-electricity-until-october-1787466752"></link>
            <id>https://tamilwin.com/article/water-sufficient-for-electricity-until-october-1787466752</id>
            <summary type="text">எதிர்கால மழை நிலைமையை கருத்திற்கொண்டு நீர் மின்னுற்பத்தி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தேசிய முறைமைகள் செயற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்கால மழை நிலைமையை கருத்திற்கொண்டு நீர் மின்னுற்பத்தி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தேசிய முறைமைகள் செயற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>இது தொடர்பான அறிவிப்பில் மேலும், எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை நீர் மின்னுற்பத்திக்கான போதுமான நீர் கொள்ளளவு காணப்படுகிறது.
</p><p>
நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 67 சதவீதமாக காணப்படுகிறது.
</p><p>
எதிர்கால மழை நிலைமையை கருத்திற்கொண்டு நீர் மின்னுற்பத்தி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cad3cd2-c9d9-411f-ac8d-04b021713668/26-6a8a97f95349d.webp' /></p><h2>நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு</h2><p>
</p><p>
இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 50 சதவீதமாக காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

எனினும், நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நீர்த்தேக்கங்களில் சேமிக்கக்கூடிய அளவு தற்போது 35 வீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் H.M.P.S.D ஹேரத் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:49:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசே மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே.. பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palaly-residents-protest-for-10th-consecutive-week-1787467101"></link>
            <id>https://tamilwin.com/article/palaly-residents-protest-for-10th-consecutive-week-1787467101</id>
            <summary type="text">பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது
இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று(23) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது
இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று(23) 10ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

பலாலிச் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அநுர அரசே, மக்களின் இயல்பு
வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே, எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் மீளக்
கையளி, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும், இராணுவப் பிடியிலிருந்து எங்கள்
காணிகளை விடுவி உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு தமது கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.</p><h2>பலாலி மக்கள்&nbsp;</h2><p>
</p><p>
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பில்
வெளியிட்டுள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை
அவர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.</p><p>

இதேவேளை, கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், பலாலி
செபஸ்ரியார் ஆலயம் அமைந்திருந்த இடத்திலிருந்து கறுப்பு உடை அணிந்து,
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக பலாலிச் சந்தி வரை சென்று,
பலாலிச் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச் சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடிய
போராட்டக்காரர்கள், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி பல்வேறு
கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/629fe173-6ac1-4ea9-939f-e204003e2564/26-6a8a96f4169f7.webp' /></p><p>

இந்நிலையில், காணி விடுவிப்பைக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது
பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை
உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், ஜனநாயகக் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்ட
ஐந்து பேருக்கு எதிராக பலாலி பொலிஸாரும் உதவி பொலிஸ் அத்தியட்சகரும் இணைந்து
மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.</p><p>

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் பொலிஸார் வாக்குமூலமும்
பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், தமது பூர்வீக நிலங்களை மீட்டு, இயல்பு வாழ்க்கையை மீளப்
பெற்றுக்கொள்ளும் வரையில் தமது போராட்டம் தொடரும் என பலாலி நிலமிழந்த மக்கள்
தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:45:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பநிலை! வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1787465874"></link>
            <id>https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1787465874</id>
            <summary type="text">நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில்&amp;nbsp;அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;எல் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில்&nbsp;அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை பதிவாகி வருவதுடன், வறட்சி நிலைமையும் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறான சூழலிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலில் மேலும், நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.</p><h2>நாட்டின் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலை</h2><p>
அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/502c4bd4-5e55-403a-a484-0fd64570d3de/26-6a8a9191317a7.webp' /></p><p>
</p><p>
நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
</p><p>
பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:22:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வென்னப்புவ பகுதியில் இரகசியத்தகவலில் சிக்கிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrest-with-67-liters-illicit-in-wennappuwa-1787459862"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrest-with-67-liters-illicit-in-wennappuwa-1787459862</id>
            <summary type="text">புத்தளம் - வென்னப்புவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது&amp;nbsp;சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் - வென்னப்புவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது&nbsp;சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>​​67 லீட்டர் மற்றும் 500 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த கைது நடவடிக்கையானது நேற்று (22.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சட்டவிரோத மதுபானம்</h2><p>
</p><p>
சட்டவிரோத மதுபானக்கும்பல் குறித்த இரகசியத்தகவலின் அடிப்படையில், வென்னப்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f88f5d0-27df-472c-bb6e-5a04653f4bb7/26-6a8a7f7e4fb96.webp' /></p><p>அதன்படி, நைனமடமாவை சேர்ந்த சந்தேகநபரிடமிருந்து மொத்தம் 67.5 லீட்டர் சட்டவிரோத மதுபானம் அடங்கிய 90 போத்தல்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் வீதி சமிக்ஞை விளக்குகள் இல்லாமை – பொதுமக்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lack-street-lights-in-trincomalee-public-concern-1787458143"></link>
            <id>https://tamilwin.com/article/lack-street-lights-in-trincomalee-public-concern-1787458143</id>
            <summary type="text">
திருகோணமலை நகரில் வீதி சமிக்ஞை விளக்குகள் இல்லாததனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதாக வீதிப் பயணிகள்&amp;nbsp; கவலை வெளியிட்டுள்ளதாக தமிழர் சமூக ஜனநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>
திருகோணமலை நகரில் வீதி சமிக்ஞை விளக்குகள் இல்லாததனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதாக வீதிப் பயணிகள்&nbsp; கவலை வெளியிட்டுள்ளதாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன்
தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று(22.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கடும் போக்குவரத்து நெரிசல்</h2><p> </p><p>அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாணத்தின் தலைநகரமாக விளங்கும் திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு
மாகாண சபை உள்ளிட்ட பல முக்கிய அரச அலுவலகங்கள் அமைந்துள்ளன. </p><p>இதனால்
மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்து தினசரி அரச அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும்
பொதுமக்கள் அதிக அளவில் நகரத்திற்குள் வருகை தருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62fad4fa-b1c2-4a21-a25c-6ed442d9a482/26-6a8a88ee58880.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக காலை அலுவலக நேரம், மாலை பணிநிறைவு நேரம் மற்றும் பாடசாலை
ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் நகரின் முக்கிய வீதிகளில் கடும்
போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.</p><p>இந்த சூழலில் போக்குவரத்தை கட்டுப்படுத்த
பொலிசார் கடுமையாக முயற்சித்தாலும், போக்குவரத்து அழுத்தம் அதிகமாக இருப்பதால்
அதை முழுமையாக சமாளிப்பது சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>வீதி சமிக்ஞை விளக்குகள்&nbsp;</h2><p>
மேலும், கிழக்கு மாகாணத்தின் பல சிறிய நகரங்களில்கூட வீதி சமிக்ஞை விளக்குகள்
அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணத்தின் தலைநகரமாகவும் மாநகர சபையாகவும்
தரமுயர்த்தப்பட்ட திருகோணமலையில் இந்த வசதி இல்லாதது மக்கள் மத்தியில் கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11a9fd0f-bfc3-483c-9b2f-65a29a07890b/26-6a8a88ef0a998.webp' /></p><p>இதனை கருத்தில் கொண்டு, திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகரின் முக்கிய
சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகள் நிறுவ வேண்டும்.</p><p>
பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் இந்த
அடிப்படை வசதி அவசரமாக ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என அவர் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T06:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீடொன்றில் திடீர் சோதனை! பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்ளிட்ட மூவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officers-injuring-arrested-three-people-1787462416"></link>
            <id>https://tamilwin.com/article/police-officers-injuring-arrested-three-people-1787462416</id>
            <summary type="text">கொழும்பு , ஹங்வெல்ல, பன்சல வீதி பகுதியில் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளை தடுத்தமை மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு , ஹங்வெல்ல, பன்சல வீதி பகுதியில் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளை தடுத்தமை மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

ஹங்வெல்ல, பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று, சட்டவிரோத மதுபானக் கும்பலை சோதனை செய்வதற்காக குறிப்பிட்ட வீட்டிற்கு சென்றுள்ளது.</p><h2>அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு</h2><p> 

இதன்போது அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fef4139-329c-404f-ac9f-bf53d89ca972/26-6a8a89358520c.webp' /></p><p>
</p><p>
இதன்போது அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தல், அரசாங்க அதிகாரியின் உத்தரவுகளை மீறுதல் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் காயப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், பொலிஸ் அதிகாரிகளால் தான் தாக்கப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணைகள் </h2><p>

அதன்படி, தனக்கும் சிகிச்சை தேவை என்று கூறியுள்ளதால், சந்தேகநபர் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p><p>

இந்த நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:46:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/21-former-mps-have-not-paid-rent-on-houses-1787450229"></link>
            <id>https://tamilwin.com/article/21-former-mps-have-not-paid-rent-on-houses-1787450229</id>
            <summary type="text">21 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து (1,793,480) ரூபாய் வாடகை பணம் இதுவரை வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>21 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து (1,793,480) ரூபாய் வாடகை பணம் இதுவரை வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இந்த நிலுவை வாடகைகள் 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்திற்குரியவை என்பதும் தெரியவந்துள்ளது.</p><h2>வாடகை நிலுவைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதேபோல், 2009-2016 காலகட்டத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட, கொழும்பு 05 உள்ள 08 வீடுகளிலிருந்து உரிய வாடகையை வசூலிக்க ஜனாதிபதி செயலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e29e242c-d7d3-4fdd-a900-fb02b3d6b3c1/26-6a8a8161c40ac.webp' /></p><p>
</p><p>
2012 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்திற்கு, 22 வீடுகளிலிருந்து சேர வேண்டிய நிலுவை வாடகை 1,73,190 ரூபாய் ஆகும். </p><p>

ஜெயவர்த்தனபுரவில் உள்ள 15 வீடுகளுக்கு, 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வாடகை 84,49,265 ரூபாய் ஆகும்.</p><p>

பொது நிர்வாகம் தொடர்பான 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T05:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஷேட திறனுடையவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம்! கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-aims-equal-opportunity-for-disablities-1787454203"></link>
            <id>https://tamilwin.com/article/government-aims-equal-opportunity-for-disablities-1787454203</id>
            <summary type="text">மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் வளங்களும் வழங்குவதே ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் இராமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் வளங்களும் வழங்குவதே ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
</p><p>

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(22) நடைபெற்ற,
பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><h2>அரசின் நோக்கம்</h2><p>
</p><p>&nbsp;கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியம் என்பது எம்மை பொறுத்தவரையில்
எட்டாக்கனியாகவே இருந்தது. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி
நிதியத்திற்கு விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே
காணப்பட்டது.</p><p> 

இதன் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகள்
எமது மக்களுக்கு அரிதாகவே இருந்தன.</p><p>

இந்த நிலைமையை ஆழமாக ஆராய்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில் ஜனாதிபதி நிதியத்தை கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு
நிறுவனமாக வைத்திருக்காமல், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களை
சென்றடையும் வகையில் மாற்றியமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5891ccd3-30d4-474d-bd68-f51a4629c690/26-6a8a6a249adbf.webp' /></p><p>
</p><p>
அதன் வெளிப்பாடாகவே இன்று எமது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாகவும்,
எமது பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவித்
திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அதன் ஒரு முக்கியமான வெளிப்பாடாகவே இன்று இங்கு கூடியிருக்கும் எமது மாணவச்
செல்வங்களான மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்த நிகழ்வையும்
நாம் பார்க்க வேண்டும்.
</p><p>
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும்
பார்க்கப்படும் நிலை மாற வேண்டும். உலகை வழிநடத்தும் ஆற்றலும் திறமையும்
அவர்களிடம் உள்ளது.</p><h2>சமூகத்தில் சம உரிமை</h2><p> </p><p>இதற்கு சிறந்த உதாரணமாக ஸ்டீபன் ஹாக்கிங்கை குறிப்பிடலாம்.

உடல் ரீதியான பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தனது அறிவாற்றலால் உலக
விஞ்ஞானத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி, அழியாத தடம் பதித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை போதிய ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
</p><p>ஆனால்
சம வாய்ப்புகளையும் தேவையான வளங்களையும் வழங்கி, அவர்களும் சமூகத்தில் சம
உரிமையுடன் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குவதே ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5d4b380-f20d-43b0-8987-6917202926f4/26-6a8a6a23cd344.webp' /></p><p>


‘மாற்றுத்திறனாளி’ என்ற அடையாளம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்
கூடாது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வளங்களும் சம வாய்ப்புகளும் கிடைக்கச்
செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். </p><p>

எதிர்காலத்திலும் இதற்கான
நடவடிக்கைகள் தொடரும் எனவும்,
கடந்த காலங்களை விட இன்று மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவமும் குரலும்
வலுப்பெற்று வருகின்றன.
</p><p>
இதற்கு எடுத்துக்காட்டாக, மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்
ஆற்றலுடன் இந்த நிகழ்வில் உரையாற்றி, பல்வேறு விடயங்களை ஆதாரபூர்வமாக
எடுத்துரைத்து வருவதை குறிப்பிடலாம்.</p><h2>வெற்றிப் பயணம்</h2><p>
</p><p>
இதுபோன்ற மாற்றுத்திறனாளி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம்,
சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p><p>

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள்
என்றால், இயற்கையாக மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, கடந்த
காலங்களில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் காரணமாக உடல் ரீதியாக
பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாகியவர்களும் அதிகளவில் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b17f38cd-bca6-4220-964e-bb365b5acfff/26-6a8a6a23033f8.webp' /></p><p>
</p><p>
அவர்களையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்களுக்குத் தேவையான வளங்களையும்
வாய்ப்புகளையும் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த நோக்கத்தின்
அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மேலும், யாரும் மனம் தளராமல் தமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
உங்களின் வெற்றிப் பயணத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம்
அர்ப்பணிப்புடன் செயற்படும்.
</p><p>
மாற்றுத்திறனாளி என்ற காரணத்தினால் எவரும் பாகுபடுத்தப்படக் கூடாது. ஏழை,
பணக்காரர்,சாதி,மதம் என எந்த வேறுபாடுமின்றி அனைவரும் சமமான மனிதர்கள்
எனவும், மாற்றுத்திறன் ஒருபோதும் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆபத்தான மின்குமிழ்களை வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-possessing-dangerous-light-bulbs-1787458611"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-possessing-dangerous-light-bulbs-1787458611</id>
            <summary type="text">யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த
திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட அதி தீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும்
மேற்பட்ட பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த
திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட அதி தீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும்
மேற்பட்ட பக்தர்களின் கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மின்குமிழ்களை தம்வசம்
வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>400 இற்கும் மேற்பட்டோரின் கண்களில் பாதிப்பு&nbsp;</h2><p>

பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவின்போது, பொதுமக்களுக்குப் பாதகமான முறையில்
அதிக ஒளியை வெளியிடக்கூடிய மின்குமிழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/803e4e3d-d554-4a8a-af41-4211b6ff63e8/26-6a8a79535af1b.webp' /></p><p> </p><p>இதனால்
திருவிழாவிக்கு வருகை தந்திருந்த 400 இற்கும் மேற்பட்டோரின் கண்களில் கடுமையான
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த இளவாலைப் பொலிஸார், தீவிர விசாரணைகளை
முன்னெடுத்தனர். </p><p>இந்த விசாரணைகளின் அடிப்படையில், அதிக ஒளியை ஏற்படுத்திய
மின்குமிழ்களை விற்பனைக்காகவோ அல்லது பயன்பாட்டுக்காகவோ தம்வசம் வைத்திருந்த
குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கைது செய்தனர்.</p><h2>விளக்கமறியல் உத்தரவு </h2><p>
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலத்த பாதுகாபுக்கு மத்தியில் நேற்று மல்லாகம்
நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.</p><p>குறித்த வழக்கை விசாரித்த நீதிவான்,
சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>

பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும்
இவ்வாறான முறையற்ற ஒளிப் பயன்பாடுகள் குறித்துப் பொலிஸார் தொடர்ந்தும்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:38:47+00:00</updated>
        </entry>
    </feed>
