<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-27T02:27:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிற்பகல் 2மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-changes-after-2-pm-1787795529"></link>
            <id>https://tamilwin.com/article/weather-changes-after-2-pm-1787795529</id>
            <summary type="text">நாட்டில் சில இடங்களில்&amp;nbsp;இன்றும் (27.08.2026) 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சில இடங்களில்&nbsp;இன்றும் (27.08.2026) 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><h2>வறண்ட வானிலை நிலவும்</h2><p>

அம்பாறை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad679883-e05f-4dd4-b1e7-1bb92f87cb07/26-6a8f9acc2dc6d.webp' /></p><p>

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். </p><p>

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T02:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் விடுதலைக்காக 500 கோடி! கசிந்துள்ள தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787791704"></link>
            <id>https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787791704</id>
            <summary type="text">இலங்கைக்கு போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக் அமைத்துள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலங்களின்படி, அவரது விடுதலையை உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக் அமைத்துள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலங்களின்படி, அவரது விடுதலையை உறுதி செய்வதற்கும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்கும் சுமார் 5000 மில்லியன் ரூபாய் (500 கோடி) நிதி தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
இந்த மூலங்களின் தகவல்படி, கொழும்பு தரப்பில் இந்த பணத்தை நிர்வகிப்பதாகவும், புலனாய்வாளர்களை அந்த வலையமைப்புடன் தொடர்புபடுத்தும் துபாயை தளமாகக் கொண்டியங்கும் முகமது சித்தீக்கிற்கு கீழ் செயற்படுவோரே நிதி கையாளுபவர்களாவர்.
</p><p></p><h2>நிதி வழங்கப்படும் மூலங்கள்</h2><p>அடையாளம் கண்டு கொள்வதற்காக அந்த மூலங்கள் குறியீட்டப் பெயரான "சாண்ட்ரா" என்ற ஒரு பெண்ணைப் பற்றி தெரிவித்துள்ளனர். </p><p>அவர் பாசிக்கின் நீண்டகால தொடர்பாளராகவும், இலங்கைக்கு அடிக்கடி பயணம் செய்பவராகவும் விவரிக்கப்படுகிறார். ஆரம்பக்கட்ட மூல தகவல்களின்படி அவரது வயது சுமார் 42 என்றும், அவர் திருமணம் ஆகாதவர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இருப்பினும் அவரது உண்மையான அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 
பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது மற்றும் பாசிக்கின் பொது பிம்பத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது. </p><p>மேலும் மூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் எந்தவொரு கட்டணத்திற்கும் வழக்கை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24092ce1-7a92-4824-955a-68310798e613/26-6a8f895accc96.webp' /></p><p>இதில் "பிடிகல" என அடையாளம் காணப்பட்ட பொலிஸ் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது .தற்போதைய நிதி போதுமானதாக இல்லை என்றால், துபாயில் இருந்து கூடுதல் பணத்தை அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>மேற்கூறிய இலஞ்சக் குற்றச்சாட்டுகள் எதுவும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.இவை எதிர்தரப்பு மூலங்களுக்கு உட்படுத்தப்பட்டவை, மேலும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளாக அல்லாமல்,எதிர்வு கூறப்படும் குற்றச்சாட்டுகளாகவே 
முன்வைக்கப்படுகின்றன.
</p><h2>
பாசிக் ஏற்கனவே ஒப்புக்கொண்டது என்ன</h2><p>
அண்மையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் படி, பாசிக் பொரலஸ்கமுவ பகுதியில் இரண்டு வீடுகளின் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>அதேபோல், தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடலோரப் பகுதிகளில் உள்ள ஐந்து ஹோட்டல்களின் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் அவை அவரது சொந்த பெயரில் இல்லை நண்பர்களின் பெயர்கள் மூலமாகவே முதலீடு செய்ததாக அவர் கூறுகிறார்.
</p><p>கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகம் அவரது முழு சொத்து விவரங்களை தேடுவதை இன்னும் முடிக்கவில்லை. அவர் தற்போது புலனாய்வுக் குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார், மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் அரச புலனாய்வு சேவையும் ஆதரவையும் தகவல்களையும் வழங்கி வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து திணைக்கள ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-officers-banned-social-media-duty-time-1787791533"></link>
            <id>https://tamilwin.com/article/railway-officers-banned-social-media-duty-time-1787791533</id>
            <summary type="text">இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரால் சுற்றுநிருபம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், தொடருந்து செயல்பாடுகள் தொடர்பான முக்கியத் தகவல்களைப் பகிர்வதையும் தடுக்கும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h3>பாதுகாப்பு நடவடிக்கை&nbsp;</h3><p>

தொடருந்து ஊழியர்களும் சில அதிகாரிகளும் கடமை நேரத்தில் மற்றும் தங்கள் கடமைகள் தொடர்பாக முக்கியத் தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவது குறித்த அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac033207-bd4c-4853-a1c9-317af6b460b1/26-6a8f89aaafbe2.webp' /></p><p>
</p><p>
சமூக ஊடகங்கள் மூலம் இத்தகைய தகவல்களைப் பகிரங்கப்படுத்துவது, தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவற்றைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று தொடருந்து திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
</p><p>
புதிய சுற்றறிக்கையின்படி, தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளித் தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

தொடருந்து பொது மேலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அந்த சுற்றறிக்கையில், உள்ள அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துச் செயல்படும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஒரு இலட்சத்தை அண்மித்த டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-dengue-patients-approached-one-lakh-1787791021"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-dengue-patients-approached-one-lakh-1787791021</id>
            <summary type="text">நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் வரையில் நாட்டில் பதிவான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த வாரம் வரையில் நாட்டில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்திருந்ததாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த ஆண்டு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 29,962 டெங்கு பாதிப்புகள் கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளன. ஜூன் மாதத்தில் 21,533 பாதிப்புகளும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>

ஜனவரியில் 7,866 டெங்கு பாதிப்புகளும், பெப்ரவரியில் 5,721 பாதிப்புகளும், மார்ச்சில் 6,013 பாதிப்புகளும், ஏப்ரலில் 5,651 பாதிப்புகளும், மே மாதத்தில் 8,590 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.</p><h2>டெங்கு பாதிப்புகள்&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையே நாட்டில் உள்ள மொத்த டெங்கு பாதிப்புகளில், 52.93 சதவீதம், அதாவது 49,771 பாதிப்புகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன.

தென் மாகாணத்தில் 13,763 பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 8,519 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57a65782-7f39-48c5-aec6-18b863ff984a/26-6a8f87a663704.webp' /></p><p>
மாவட்ட அளவில் அதிகபட்சமாக 20,034 டெங்கு பாதிப்புகள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 18,652 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. </p><p>அவற்றில் 3,787 கொழும்பு மாநகர சபை பகுதியைச் சேர்ந்தவை.

கண்டி மாவட்டத்தில் 6,818, களுத்துறையிலிருந்து 6,093, காலியிலிருந்து 6,079, இரத்தினபுரியிலலிருந்து 5,160, மாத்தறையிலிருந்து 5,003, கேகாலையிலிருந்து 2,713, குருநாகலையிலிருந்து 2,651 மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து 2,510 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
இதற்கிடையே நாடு முழுவதும் 76 டெங்கு நோய் உயர் அபாய சுகாதார அலுவலர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை தவறாமல் சுத்தம் செய்து அழிக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சை பெறுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-1787790601"></link>
            <id>https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-1787790601</id>
            <summary type="text">நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு. நீதி
கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் என அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு. நீதி
கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் என அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி
திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><p>
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் நேற்று (26) நடைபெற்ற விசேட
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும்,"ஒரு சரியான தீர்வை நோக்கியே நாங்கள் தொடர்ச்சியாகப் போராடிக்
கொண்டிருக்கிறோம். நீதி என்பது கடையில் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல.</p><h2>பல போராட்டங்கள்</h2><p>
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் எமக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும்
நிதித் தேவைகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீதிக்கு
முன்னால் அந்த நிதி எமக்கு பெரிதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024647b0-a872-430d-8f5c-b65fafa4961c/26-6a8f855eb9f5d.webp' /></p><p> </p><p>இலங்கை அரசாங்கமானது எங்களை எவ்வாறாவது
தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் தள்ளி, வழக்கை முடிக்கப் பார்க்கிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.</p><p> சில நாடுகளுக்கு
30, 40 வருடங்களுக்குப் பிறகே தீர்வுகள் கிடைத்துள்ளன. நாங்களும் கடந்த 17
வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகின்றோம்.</p><p> எமது இலக்கை அடைய 15
முதல் 17 வருடங்கள் வரை ஆகலாம். ஆனால், எனது உறவுகளுக்கு நீதி கிடைக்கும்
என்றால் நான் செத்தாவது நீதியைப் பெற்றுத் தருவேன்” என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடை விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பார்த்தவர்களின் நிலை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-sri-lanka-political-condition-1787789112"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-sri-lanka-political-condition-1787789112</id>
            <summary type="text">கல்முனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான பிரச்சினையானது நாட்டில் அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.இந்நிலையில், தற்போதைய அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான பிரச்சினையானது நாட்டில் அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><p>இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் இப்பிரச்சினையை திட்டமிட்டு தூண்டி விட்டிருக்கலாம் என சிலர் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.&nbsp;</p><p>இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளிவாசல்களுக்கான புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.&nbsp;</p><p>இருப்பினும், இவ்விடயம் அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும்பான்மையினத்தவர்கள், பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அரசாங்கத்தில் ஏன் முஸ்லிம்களின்&nbsp;பள்ளிவாசல்களுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள் என சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றனர்.&nbsp;</p><p>இவ்விவகாரம் தொடர்பில் லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி ஆராய்கின்றது..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/s_GlV6JN6zs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திருவிழாவில் நடந்தது என்ன! ஆலயங்கள் மீது விரைவில் அரசின் அதிரடி சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873</id>
            <summary type="text">அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&amp;nbsp;தமிழ் கலாசாரத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கடும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இலங்கை தமிழ் மக்களின் மற்றும் இந்து மதத்தின் மகத்துவத்தை கெடுக்கும் வகையில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், இலங்கையில் உள்ள ஆலயங்களில் முக்கிய சட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக அரச தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jfUbfFv5RGU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T23:53:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் மகனுக்கு ஈரானால் ஏற்பட்டுள்ள ஆபத்து.. அதிரடியாக களமிறங்கிய இரகசிய புலனாய்வாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-posed-by-iran-trump-younger-son-1787771965"></link>
            <id>https://tamilwin.com/article/threat-posed-by-iran-trump-younger-son-1787771965</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான 20 வயதுடைய பரோன்
ட்ரம்பை இலக்குவைத்து படுகொலைச் சதித்திட்டம் ஒன்று குறித்து ஈரானிய
அரசுக்கு சொந்தமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான 20 வயதுடைய பரோன்
ட்ரம்பை இலக்குவைத்து படுகொலைச் சதித்திட்டம் ஒன்று குறித்து ஈரானிய
அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் காணொளி ஒளிபரப்பப்பட்டமை தொடர்பில்
அமெரிக்க இரகசிய புலனாய்வு துறை தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றது.</p><h2>படுகொலை திட்டம்..&nbsp;</h2><p>

குறித்த காணொளியில் பரோன் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு
வருவதாகவும், அவரைக் கொல்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி
அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b050b82e-b986-47d9-b1b4-333d59f7625f/26-6a8f3cdc26620.webp' /></p><p>
</p><p>
பாதுகாக்கப்பட வேண்டிய நபர்களுக்கு விடுக்கப்படும் அனைத்து அச்சுறுத்தல்கள்
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த இரகசிய புலனாய்வு துறையின்
பேச்சாளர் நெய்ட் ஹெரிங், பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப்
பகிரங்கப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போர் ஆறு
மாதங்களாகத் தொடரும் நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்
நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T22:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் பொய் கூறும் சலே! நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salley-easter-attacks-investigation-cid-1787769941"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salley-easter-attacks-investigation-cid-1787769941</id>
            <summary type="text">அரசு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.&nbsp;</p><p>இந்நிலையில், அவர் நீதிமன்றத்தில் விசாரணையின் போது பொய்க் கூறியதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், சுரேஷ் சலே, வழக்கை திசை திருப்பும் வகையில் செயற்படுவதாகவும்&nbsp;சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p>சலே, விசாரணைகளுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்றும், தனது இலத்திரனியல் சாதனங்களின் கடவுச்சொற்களை வழங்க மறுப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.&nbsp;</p><p>இவ்விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றில் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WeSldGG7Nfs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T21:42:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவகத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பி. வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electricity-rates-theevagam-epdp-insists-1787760961"></link>
            <id>https://tamilwin.com/article/electricity-rates-theevagam-epdp-insists-1787760961</id>
            <summary type="text">தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
வலியுறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
வலியுறுத்தியுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் இன்று (26.08.2026)
முன்னெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை&nbsp; தெரிவித்தார்.</p><p>

இதன்போது அவர், "நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு உள்ளிட்ட தீவுகளில் இந்திய அரசாங்கத்தின்
உதவியுடன் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள்
கடந்த அரசாங்க காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.</p><p>

குறிப்பாக அதற்கான நடவடிக்கைகளில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தாவும் முக்கிய பங்காற்றியிருந்தார்.</p><h2>உரிய நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில்
இந்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்த டக்ளஸ் தேவானந்தா, தீவகங்களில்
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் இணைப்புக் கட்டமைப்புடன்
இணைக்க வேண்டிய அவசியம் இல்லாமையால் அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் அந்தந்த
தீவுகளின் மக்களுக்கே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுவகவும்,
சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e176ab1-ab96-4e1b-8034-b360f9cf9b3f/26-6a8f12eed5839.webp' /></p><p>
</p><p>
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தீவக மக்கள் பொருளாதார
ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் வாழ்வதை கருத்தில்
கொண்டு, இந்திய உதவியுடன் அமைக்கப்படும் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளில்
இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு,
சம்பந்தப்பட்ட தீவக மக்களுக்கான மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற
கோரிக்கையையும் அவர் முன்வைத்திருந்தார்.</p><p>

இந்தக் கோரிக்கைக்கு அப்போதைய அமைச்சரவையும் சாதகமான இணக்கத்தை
வெளிப்படுத்தியிருந்ததாக சுட்டிக்காடிய ஸ்ரீகாந், கடந்த அரசாங்க காலத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை தற்போதைய ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து,
நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்" எனவும்
வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T21:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்தை உலுக்கிய திடீர் வெள்ளப்பெருக்கு.. இலங்கையர்களின் நிலை குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-flood-in-nepal-sri-lankans-in-nepal-1787759223"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-flood-in-nepal-sri-lankans-in-nepal-1787759223</id>
            <summary type="text">சீனா மற்றும் திபெத் எல்லைகளுக்கு அருகிலுள்ள நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா மற்றும் திபெத் எல்லைகளுக்கு அருகிலுள்ள நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

இதுவரை இலங்கையர்கள் பாதிக்கப்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று அதன் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் 85 முதல் 100 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எல்லைக்கு அருகில் பாயும் போட்கோஷி ஆற்றில் பனி உருகியதன் காரணமாக ஒரே நேரத்தில் அதிகளவு நீர் பாய்ந்ததால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>85 முதல் 100 இலங்கையர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே பனி திடீரென உருகுவதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.

இந்த வெள்ளப்பெருக்கினால் போட் கோஷி ஆற்றுக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை முற்றிலும் நீரில் மூழ்கியதுடன், சீன எல்லையில் அமைந்திருந்த சீன அரசாங்கக் கட்டிடம் ஒன்றும் முற்றாக அழிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a41095a-4c40-4f2a-a623-f15d84ea0839/26-6a8f0c6f31c49.webp' /></p><p>

நேபாள எல்லையிலுள்ள பனிப்பாறையிலிருந்து பனிக்கட்டிகளும் பாறைகளும் சரிந்து விழுந்து, போட் கோஷி ஆற்றின் கிளையாறான லெண்டே கோலா ஆற்றை அடைத்ததால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கீழ்நோக்கி நீர் சீறிப் பாய்ந்தது.
</p><p>
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு உள்கட்டமைப்புகள், வீதிகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்களை அழித்துள்ளது.
</p><p>
கூடுதலாக, பக்கத்திலுள்ள திபெத்தின் கிராங் மாகாணத்தில் கடுமையான சேறு சரிவுகளும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இருப்பினும், இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T20:54:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economy-is-getting-good-track-says-cb-1787764996"></link>
            <id>https://tamilwin.com/article/economy-is-getting-good-track-says-cb-1787764996</id>
            <summary type="text">நாட்டின் பொருளாதாரம் சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார மற்றும் செலுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பொருளாதாரம் சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
கடுமையான பொருளாதார மற்றும் செலுத்துகைச் சமநிலை நெருக்கடிக்குப் பின்னர், இலங்கை பொருளாதாரம் மிக வேகமாக மீட்சியடைந்து நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டும் நிலைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c541d0fb-0d70-4f66-b75d-5e085ae26ecc/26-6a8f2105a862e.webp' /></p><p>
குறுகிய காலத்தில் இத்தகைய வேகமான பொருளாதார நிலையை அடைய முடிந்தது ஒரு சிறப்பான சாதனையாகும் எனவும், இத்தகைய நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்ட நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியமை, அந்நியச் செலாவணி இருப்பை மீளக் கட்டியெழுப்பியமை மற்றும் அரசாங்கக் கடன்களை மறுசீரமைத்தமை ஆகியவற்றின் மூலம் நாட்டின் பேரியல் பொருளாதார உறுதித்தன்மை தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் இறையாண்மை கடனளவீட்டை மேலும் உயர்த்தும் நோக்கில், உலகின் மூன்று பிரதான சர்வதேச கடன் தரநிர்ணய நிறுவனங்களுடனும் தற்போது தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T20:37:41+00:00</updated>
        </entry>
    </feed>
