<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-24T23:22:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் : நாமல் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/to-protect-the-independence-of-the-judiciary-1787612661"></link>
            <id>https://tamilwin.com/article/to-protect-the-independence-of-the-judiciary-1787612661</id>
            <summary type="text">சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதைத் தடுத்து,
நீதித்துறைக்கான கௌரவத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக
நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதைத் தடுத்து,
நீதித்துறைக்கான கௌரவத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுனவின் நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்
தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நீதித்துறையின் கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>&nbsp;"அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதும்,
குறிப்பிட்ட சிலரைக் கைது செய்யப்போவதாகக் கூறுவதும் நீதித்துறையின்
சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே, நீதித்துறையின்
கௌரவத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர்,
வாக்குறுதியளித்தபடி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்களை விநியோகிக்கவோ,
நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கவோ அரசாங்கத்தால் முடியவில்லை
எனத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/204bea86-36e1-4457-9bd9-810c9644f914/26-6a8ccdf782ba9.webp' /></p><p>
</p><p>
மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணம் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத்
திட்டங்களை முறையான திட்டமிடலின்றிச் செயற்படுத்துவதில் அரசாங்கம்
தோல்வியடைந்துள்ளதாகவும், நாடாளுமன்ற விசாரணைகள் குறிப்பிட்ட நபர்களை
இலக்குவைத்து பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்
சாட்டினார்.
</p><p>
நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் வறட்சி
நிலைமை குறித்துப் பேசிய அவர், குடிநீர்த் பற்றாக்குறை மற்றும் விவசாய
நிலங்களுக்கான நீர் மேலாண்மை தொடர்பில் அரசாங்கம் அலட்சியப் போக்குடன்
செயற்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.</p><p>

அரசாங்கம் தனது தவறுகளை மறைக்க முற்படுவதை நிறுத்திவிட்டு, மக்களின் அன்றாடப்
பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் நாமல்
ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T23:04:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள்! சலேவின் தாயார் முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/verdict-in-the-easter-attacks-case-on-september-22-1787594002"></link>
            <id>https://tamilwin.com/article/verdict-in-the-easter-attacks-case-on-september-22-1787594002</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலத்தில் தனது மகன் சுரேஷ் சலேவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலத்தில் தனது மகன் சுரேஷ் சலேவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் எனக் கோரி, அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p>அத்தோடு, தனது மகன் தொடர்பான எந்தவொரு விசாரணைணையும் நிறுத்துமாறு தான் கோரவில்லை எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சுரேஷ் சலே மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவை முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.ஆதாரங்கள் இருந்தால் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.</p><p>மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்திப்பதற்கான அனுமதியினை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>&nbsp;இந்தக் கடிதத்தின் பின்னணி என்ன, சுரேஷ் சலேவின் தாயார் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் என்ன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZJlN94HPz_M" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T22:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-visits-jaffna-today-1787604357"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-visits-jaffna-today-1787604357</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,
யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.யாழ். மாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,
யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.</p><p>யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் காணாமற்போனோர் பற்றிய
அலுவலகம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நீதி அமைச்சர், அந்த நிகழ்வு
நிறைவுற்றதும் யாழ். சிறைச்சாலையைப் பார்வையிடவுள்ளார்.</p><h2>வன்முறைகள்&nbsp; &nbsp;&nbsp;</h2><p>
நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்துப் பலர்
உயிரிழந்தனர்.</p><p> இதனையடுத்துச் சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்ட நிலையில், நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையைப்
பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7676931a-0b2c-438a-a728-a4709c183f03/26-6a8cad86df293.webp' /></p>]]></content>
            <updated>2026-08-24T22:20:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க கிரிக்கெட் முன்னோடிகள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787604095"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787604095</id>
            <summary type="text">பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான
இம்ரான் கானிற்கு மனிதநேய அடிப்படையிலான சிகிச்சையும் முறையான மருத்துவப்
பரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான
இம்ரான் கானிற்கு மனிதநேய அடிப்படையிலான சிகிச்சையும் முறையான மருத்துவப்
பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள்
தலைவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்
கையொப்பமிட்டு பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சிறையிலுள்ள
73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>கடிதத்தில் கையெழுத்திட்ட முன்னாள் வீரர்கள்&nbsp;</h2><p>

சுயாதீன மருத்துவக் குழு மூலம் அவரது உடல்நிலையை பரிசோதிக்க அனுமதிப்பதுடன்,
அவரது குடும்பத்தினர் அவரை வாராந்தம் சந்திப்பதற்கான வாய்ப்பை தடையின்றி வழங்க
வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ்,
திலீப் வெங்சர்க்கார் மற்றும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க
உட்பட பல முன்னணி சர்வதேச வீரர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13e77c0d-046a-4d2d-b4b5-ca1d09fe7005/26-6a8cac815556d.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எவரும் இதில்
கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மூன்று வருடங்களாக சிறை
வைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை, இஸ்லாமாபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலை
ஒன்றிற்கு மாற்றுமாறு அந்நாட்டு உயர் நீதிமன்றம் அண்மையில்
உத்தரவிட்டிருந்தது.
</p><p>
எனினும், அவர் அரசு வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும்
சிறைக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T21:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு சமூக மறுவாழ்வுத்திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/social-rehabilitation-program-for-drug-users-1787604941"></link>
            <id>https://tamilwin.com/article/social-rehabilitation-program-for-drug-users-1787604941</id>
            <summary type="text">போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்குப்பதில் அவர்களுக்கு சமூக மறுவாழ்வுத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்குப்பதில் அவர்களுக்கு சமூக மறுவாழ்வுத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையின் சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் நெரிசலைக் குறைப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெறுவதற்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், போதைப்பொருள் தொடர்பான கைது முதல் வழக்குத் தாக்கல் செய்வது வரையிலான செயல்முறைகளில் காணப்படும் தாமதங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><h2>மறுவாழ்வுத்திட்டம்</h2><p>

குறிப்பாக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக சந்தேகநபர்கள் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்படுவதும், இதனால் சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7610d812-0422-4f2d-b88e-e336d7d7c1a4/26-6a8cb10cddda4.webp' /></p><p>

போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்வதுடன் மட்டுப்படாமல், கடத்தல் வலைப்பின்னல்கள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T21:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plan-to-develop-colombo-fort-as-a-tourism-zone-1787603403"></link>
            <id>https://tamilwin.com/article/plan-to-develop-colombo-fort-as-a-tourism-zone-1787603403</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டின் ஒரு அம்சமாக கொழும்பு கோட்டையை புதிய சுற்றுலா வலயமொன்றாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டின் ஒரு அம்சமாக கொழும்பு கோட்டையை புதிய சுற்றுலா வலயமொன்றாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
</p><p>
இந்நிலையில், கொழும்பு கோட்டை சுற்றுலா வலய அபிவிருத்தி மற்றும் இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் ஆகியவை தொடர்பாக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் முகாமையாளர் Gevorg Sargsyan உட்பட தூதுக்குழுவினருக்கும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><h2>சுற்றுலாத் துறை</h2><p>

கொழும்பு கோட்டையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக, இதற்கு முன்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராய்ந்த விடயங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e5c1bc-f5ba-47fb-9c8c-30dd0e35b424/26-6a8cad60999c8.webp' /></p><p>
</p><p>
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் விவசாயம், துறைமுகங்கள், விநியோக சேவைகள் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கும் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.
</p><p>
மேலும், கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் குறித்தும், இயற்கை அழகை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறையை பிரபல்யப்படுத்துவதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கும் வழங்கக்கூடிய பங்களிப்பு குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T20:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட பலவீனமே கல்முனை வைத்தியசாலை குழப்பத்திற்கு காரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-issue-tamil-muslim-politics-1787589172"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-issue-tamil-muslim-politics-1787589172</id>
            <summary type="text">கல்முனை பிராந்திய கணக்காய்வு மற்றும் வைத்தியசாலை நிர்வாக எல்லைப்பிரிப்பு விவகாரத்தை சரியாக கையாள்வதில் ஏன் தவறு ஏற்பட்டது என்பது குறித்து 6 முஸ்லிம் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை பிராந்திய கணக்காய்வு மற்றும் வைத்தியசாலை நிர்வாக எல்லைப்பிரிப்பு விவகாரத்தை சரியாக கையாள்வதில் ஏன் தவறு ஏற்பட்டது என்பது குறித்து 6 முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி பதில் சொல்ல வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்பதற்கு முடியாத குறித்த அமைப்பினரால் எப்படி ஏனைய விவகாரங்களை கையாள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 6 கட்சிகளின் கூட்டு&nbsp; உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்பட்டு விட்டது.சுமந்திரன் குறித்த கூட்டணியில் இணைந்ததன்&nbsp; நோக்கம் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து ஆட்சியை அமைப்பதாகும்.</p><p>ஆகவே, கிழக்கில் முரண்பாட்டை வளர்த்து விட்டு பிறகு எவ்வாறு இணைந்து ஆட்சியை உருவாக்கப் போகின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணிலும், சுமந்திரனும் கொண்டு வந்த எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் என்கின்ற சட்டவரைபு தான் இன்று வரை மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XFtjdc0Sz_c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T20:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்பின் புதிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/donald-trump-s-new-order-1787599636"></link>
            <id>https://tamilwin.com/article/donald-trump-s-new-order-1787599636</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிறுவர்களுக்கான தடுப்பூசி எண்ணிக்கையைக்
குறைக்கும் வகையில் இந்த மாதம் புதிய நிர்வாக உத்தரவு ஒன்றைப்
பிறப்பித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிறுவர்களுக்கான தடுப்பூசி எண்ணிக்கையைக்
குறைக்கும் வகையில் இந்த மாதம் புதிய நிர்வாக உத்தரவு ஒன்றைப்
பிறப்பித்துள்ளார்.
</p><p>
ஒட்டிசம் குறைபாட்டிற்கு தடுப்பூசிகளே சாத்தியமான காரணி என்ற தமது
எண்ணத்திற்கு நிர்வாகம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ட்ரம்பின்
அதிருப்தியே இந்த உத்தரவுக்கு பிரதான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இருப்பினும், இந்த ஒரு உத்தரவு மட்டும் அமெரிக்காவின் தடுப்பூசிக் கொள்கையில்
பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும், சுகாதாரச் செயலாளர் ரோபர்ட் எஃப்.
கென்னடி ஜூனியரின் 'அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக்குவோம்' (MAHA) அரசியல்
ஆதரவாளர்களை திருப்திப்படுத்தாது என்றும் தற்போதைய மற்றும் முன்னாள்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான
சிறுவர்களை ஆய்வு செய்து, தடுப்பூசிகளுக்கும் ஒட்டிசத்திற்கும் எந்தத்
தொடர்பும் இல்லை என நிரூபித்துள்ளனர்.</p><h2>புதிய உத்தரவு</h2><p>

இருப்பினும், கென்னடியும் அவரது ஆதரவாளர்களும் தடுப்பூசிகளின் ஆபத்துகள்
மற்றும் ஒட்டிசம் உடனான தொடர்புகள் குறித்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட
ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.</p><p>
ட்ரம்பின் இந்த புதிய உத்தரவு, மத்திய அரசின் சிறுவர்களுக்கான தடுப்பூசி
அட்டவணையில் உள்ள 17 தடுப்பூசிகளை 11 ஆகக் குறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/029afcd6-1624-4b0e-b437-db49eaffa1fd/26-6a8ca89fa9dbf.webp' /></p><p>
</p><p>
மேலும், தட்டம்மை, அம்மைக்கட்டு மற்றும் ருபெல்லா (MMR) ஆகிய மூன்றிற்குமான
ஒரே தடுப்பூசியைப் பிரித்து மூன்று தனித்தனி ஊசிகளாக வழங்குமாறும்
உத்தரவிடுகிறது.</p><p>

அத்துடன், பாடசாலைகளுக்குச் செல்லும் சிறுவர்களுக்கான மாநில அளவிலான கட்டாயத்
தடுப்பூசி விதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதித்
திணைக்களத்திற்கு ட்ரம்ப் பணித்துள்ளார்.
</p><p>
மருத்துவ அமைப்புகள் பலவும் ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புத்
தெரிவித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் பெற்றோரிடையே பெரும் குழப்பத்தையும்
தடுப்பூசி தயக்கத்தையும் அதிகரித்து, தடுப்பூசிகள் மூலம் தடுக்கக்கூடிய
நோய்களால் சிறுவர்கள் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6be19ed4-3dbb-4c45-a68a-5de480e8bb0a/26-6a8ca8a05fb23.webp' /></p><p>
</p><p>
நீண்டகாலமாக தடுப்பூசி எதிர்ப்பு கருத்துக்களைத் தெரிவித்து வரும் கென்னடி,
ஒட்டிசம் குறைபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிவதாக உறுதியளித்திருந்தார்.

இதற்காக அவர் அளித்த கெடு காலங்கள் முடிவடைந்த நிலையிலும் புதிய முடிவுகள்
எதுவும் வெளியாகாததால், ஓவல் அலுவலக சந்திப்புகளிலும் தொலைபேசி அழைப்புகளிலும்
ட்ரம்ப் கென்னடிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
</p><p>
அமெரிக்க சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வுகள் நிறைவடைய
பல மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்த
மெதுவான போக்கு ட்ரம்பின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T20:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோருக்கு கிடைத்த சலுகை இனி இல்லை! ஜனாதிபதியாக கனவு காண்பவருக்கு தற்போதைய அமைச்சர் அறிவுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/current-minister-s-advice-to-sl-next-president-1787597826"></link>
            <id>https://tamilwin.com/article/current-minister-s-advice-to-sl-next-president-1787597826</id>
            <summary type="text">எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்பவர்கள், தங்களின் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பழைய சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது என்பதை நினைவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்பவர்கள், தங்களின் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பழைய சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். </p><p>

மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

கடந்த காலங்களில் நாட்டில் நிலவி வந்த பண பலத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்திற்குச் சென்ற பழைய அரசியல் கலாசாரம் இனி நடைபெறாது என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><h2>சாதாரண மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..</h2><p> </p><p>

முன்னைய ஆட்சிகளில் குறிப்பிட்ட சில குடும்பங்களும், அவர்களின் நண்பர்களும் அதிகாரத்தையும், சிறப்புச் சலுகைகளையும் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து அனுபவித்து வந்ததோடு தாங்கள் செய்த தவறுகளுக்கு ஒருபோதும் சட்டத்தின் முன் தண்டனை கிடைக்காது என்று நம்பியிருந்தனர். </p><p>ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக மாறியுள்ளது. இதனால் எவ்வித தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள் சட்டத்தைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8121190-50e1-4eaf-97f5-fa5e6f8bad4f/26-6a8c99bccc10d.webp' /></p><p>

 மாறாக கடந்த காலத்தில், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களும், தவறுகளில் ஈடுபட்டவர்களுமே தற்போதைய நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது தவறான கருத்துக்களை வெளியிட்டும், அச்சமடைந்தும் வருகிறார்கள்.</p><p>

தற்போதைய ஆட்சியில் ஜனாதிபதி, அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருக்கும் எந்தவித சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/837144c2-4a4f-4cf3-8b9a-e951f307f52a/26-6a8c99bd8aefb.webp' /></p><p>
</p><p>
ஜனாதிபதி உட்பட அனைவரும் சாதாரண பொதுமக்களைப் போலவே தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

 எனவே மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில், தற்போதைய அரசாங்கத்தை விட மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கக்கூடிய ஒரு அரசியல் தரப்பினால் மட்டுமே இனி இலங்கையில் ஆட்சிக்கு வர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T19:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் இருந்து உணவுப் பொட்டலங்களை கொண்டு வருவதாக கூறிய அநுர தரப்பு! 24 கோடி ரூபாவுக்கு கணக்கு கேட்கும் அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-parliamentary-food-expenditure-1787596137"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-parliamentary-food-expenditure-1787596137</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடந்த காலங்களில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டிலிருந்தே உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து உட்கொள்வோம் என கூறினார்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கடந்த காலங்களில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டிலிருந்தே உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து உட்கொள்வோம் என கூறினார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்று ஐ.ம.சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>


கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>அதிகரித்துள்ள உணவு செலவினம்&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவுகளுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தினால் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றது. </p><p>

 நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவுகள் குறித்து பல செய்திகள் கடந்த நாட்களில் ஊடகங்களில் அதிகமாக வெளியிடப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2291498-38cf-4f21-944c-fdb3af98ef6e/26-6a8c8fc7a10e2.webp' /></p><p> </p><p>

2025ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தின் உணவு மற்றம் பானங்களுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தால் அதிகரித்து 24.7 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. </p><p>

தினசரி உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையும், குடிநீர் போத்தல்களுக்கான செலவினமும் கடுமையாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ed99e1f-3707-4837-9c08-2bbf12bfe493/26-6a8c8fc85baa3.webp' /></p><p> 

கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த உறுப்பினர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்ற உணவகத்தை மூடிவிட்டு வீட்டில் இருந்து உணவுப் பொட்டலங்களை கொண்டு வருவோம் என தெரிவித்தனர்.
</p><p>
இதன்மூலம் மக்களின் பணத்தை சேமிக்கப் போவதாகவும் கூறினர். ஆனால், இன்று அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது 24.7 கோடி ரூபாவை நாடாளுமன்ற உ ணவுக்காகச் செலவிட்டிருப்பது விமர்சனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-08-24T18:39:14+00:00</updated>
        </entry>
    </feed>
