<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-26T05:40:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-26-vehicles-presidential-secretariat-1785033750"></link>
            <id>https://tamilwin.com/article/information-26-vehicles-presidential-secretariat-1785033750</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் இதுவரை சரிபார்க்கவில்லை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் இதுவரை சரிபார்க்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p> தேசிய தணிக்கை அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>வாகனங்களின் உண்மை விபரம்</h2><p>
</p><p>
இந்த வாகனங்கள் காணாமல்போயுள்ளதா அல்லது ஏதேனும் நிறுவனம் அல்லது தனிநபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த எழுத்துப்பூர்வ ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/049b1db3-8e2d-4b45-b79b-ff946ad2ed4d/26-6a659b6df1a3a.webp' /></p><p>

 இந்த 26 வாகனங்களை சரிபார்க்க குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதாக, ஜனாதிபதி செயலகம் 2025, மே 28 அன்று தணிக்கைக்கு தெரிவித்திருந்ததாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
</p><p>
இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நிலவரப்படி, குறிப்பிட்ட வாகனங்கள் உண்மையில் இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க முடியவில்லை என்று கூறப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை - அறிகுறிகளுடன் 18 பேர் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cancer-screening-for-plantation-workers-1785039842"></link>
            <id>https://tamilwin.com/article/cancer-screening-for-plantation-workers-1785039842</id>
            <summary type="text">ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான 8 தோட்டங்களை சேர்ந்த சுமார் 850
தோட்டத்தொழிலாளர்களுக்கு வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப்புற்றுநோய் பரிசோதனைகள் நடத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான 8 தோட்டங்களை சேர்ந்த சுமார் 850
தோட்டத்தொழிலாளர்களுக்கு வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப்புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p>குறித்த பரிசோதனைகள் நேற்றைய தினம் (25.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புற்றுநோய் பரிசோதனை&nbsp;</h2><p>
தோட்டத்தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ஹட்டன்
பிளான்டேசன் நிறுவனமும் இலங்கை புற்றுநோய் சங்கமும் இணைந்து இந்த விசேட
வைத்திய முகாமை ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தன.</p><p>இதன்போது புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த முகாமில் கலந்து கொண்ட 850 பேரில், சுமார் 400 பேருக்கு மார்பகப்
புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொண்ட போது, மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப
அறிகுறிகளுடன் 8 பேரும், வாய்ப்புற்றுநோய்க்கான அறிகுறிகளுடன் 10 பேரும்
அடையாளம் காணப்பட்டதாக ஹட்டன் பிளான்டேசன் மனிதவள முகாமையாளர் டிலான் பத்மசிறி
தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>அடையாளம் காணப்பட்ட அனைவரையும் மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக
அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>மேலும், வைத்திய முகாமில் பங்கேற்ற தொழிலாளர்களின் வசதிக்காக இலவச
போக்குவரத்து, தேநீர் மற்றும் உணவு வசதிகளும் ஹட்டன் பிளான்டேசன் நிறுவனத்தால்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
</p><p>இந்த வைத்திய முகாம், தோட்டத் தொழிலாளர்களிடையே புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே
கண்டறிந்து, துரிதமான சிகிச்சைகளை வழங்க வழிவகுக்கும் முக்கியமான சுகாதார
முயற்சியாகக் கருதப்படுகிறது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T05:14:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த திலித் ஜயவீர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dilith-jayaweera-meets-indian-parliamentarian-1785039411"></link>
            <id>https://tamilwin.com/article/dilith-jayaweera-meets-indian-parliamentarian-1785039411</id>
            <summary type="text">இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சசி தரூருக்கும், சர்வஜன
அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சசி தரூருக்கும், சர்வஜன
அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவுக்கும்
இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சந்திப்பானது நேற்று முன்தினம் (24.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விசேட சந்திப்பு</h2><p>
</p><p>
கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகத்தில்&nbsp; இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac59598b-01e7-49f1-89b3-bf1a7fb4fcca/26-6a658b026909c.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய் கோர விபத்தில் பலி - ஆபத்தான நிலையில் குழந்தைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dampulla-accident-mother-death-children-injury-1785040049"></link>
            <id>https://tamilwin.com/article/dampulla-accident-mother-death-children-injury-1785040049</id>
            <summary type="text">தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று (25) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணின் இரு குழந்தைகளும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பாதசாரி மீது மோதி விபத்து</h2><p>
</p><p>
தம்புள்ளை நோக்கிப்பயணித்த டிப்பர் ரக லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று பாதசாரியான பெண் மற்றும் இரு குழந்தைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a321cc-ef63-4f9f-91d0-df32451f1b8d/26-6a65936d01ede.webp' /></p><p>நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக கதிர்காமம் செல்ல தயாராக ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்காக தம்புள்ளை நகருக்கு சென்றபோது விபத்திற்குள்ளாகியுள்ளனர்.&nbsp;</p><p> 

இதன்போது மூவரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் உயிரிழந்துள்ளார்.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் கபுவத்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான டி.எம். திலானி அரோஷா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய்</h2><p>

அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகன்களும் இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8266f406-ffcf-47d1-a937-56a5f3a6ad49/26-6a65936da806d.webp' /></p><p>இதேவேளை, 19 வயதான மூத்த மகன் தம்புள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>இவர் பிரபல கல்லூரியில் பயிலும் ஒரு திறமையான தடகள வீரர் என்றும், இந்த ஆண்டு நடைபெறும் உயர்தர பரீட்சைக்கு தயாராகி வருவதாகவும்&nbsp;பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>
குறித்த பெண் குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர், எட்டு நாட்களுக்கு முன்பு இலங்கை திரும்பியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்த விபத்து தொடர்பாக டிப்பர் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> </p><p></p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T04:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் - அலங்கார வளைவு - புதிய மணிக்கோபுரம் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-life-pathar-kandal-holy-neekilaar-temple-1785039116"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-life-pathar-kandal-holy-neekilaar-temple-1785039116</id>
            <summary type="text">மன்னார் மறைமாவட்டம் அளவக்கை பங்கின் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித
நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை
நேற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மறைமாவட்டம் அளவக்கை பங்கின் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித
நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை
நேற்றுமுன் தினம் (24.07.2026) திறந்து வைக்கப்பட்டன.
</p><p>புதிதாக அமைக்கப்பட்ட ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய
மணிக்கோபுரம் ஆகியவை மன்னார் மறை மாவட்ட
ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.</p><p></p><h2>திருப்பலி ஒப்புக்கொடுப்பு</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து ஆயரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.</p><p>

இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்து நேச ரட்னம் அடிகளார்
இ ஆயரின் செயலர் அருட்தந்தை அன்ரனி அடிகளாரும் கலந்து கொண்டிருந்தனர்.
</p><p>
அளவக்கை பங்குத்தந்தை அருட்பணி. யேசுபரநாதன் (டிக்சன்) அடிகளார் மற்றும் ஆலய
பங்கு மக்களின் பூரண ஒத்துழைப்பாலும் குறித்த நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கு
செய்யப்பட்டு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T04:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் - முஸ்லிம் பேரவையின் கூட்டணியின் பிரதிநிதியாக பெயரிடப்பட்டுள்ள இராதாகிருஷ்ணன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/radhakrishnan-representative-tamil-muslim-alliance-1785038375"></link>
            <id>https://tamilwin.com/article/radhakrishnan-representative-tamil-muslim-alliance-1785038375</id>
            <summary type="text">தமிழ் - முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில்
நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ்
முற்போக்குக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் - முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில்
நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ்
முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(25.07.2025) நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுக்
கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தமிழ் முற்போக்குக் கூட்டணி</h2><p> தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ் பேசும் மக்களின் அரசியல்
பேரவையில் கூட்டணியின் பிரதிநிதியாக, அதன் பிரதித் தலைவரும் மலையக மக்கள்
முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் பெயரிடப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c27ad58c-7047-442b-bcee-1198fefb2a3a/26-6a65888178396.webp' /></p><p>

மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினரான பரத்
அருள்சாமியும் இந்தப் ப்பேரவையில் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன்,
இராதாகிருஷ்ணன் எம்.பி.க்குத் துணையாகச் செயற்படுவார் என்றும் கூட்டணியின்
தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>[BGUOTJ1</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T04:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் - பயணப்பொதிகளில் சிக்கிய பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chinese-national-was-arrested-srilanka-airport-1785038140"></link>
            <id>https://tamilwin.com/article/chinese-national-was-arrested-srilanka-airport-1785038140</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர்&amp;nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.மலேசியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் AK-047 மூலம் இன்று காலை (26) வருகை தந்தபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பயணப்பொதிகளில் சிக்கிய பொருள்</h2><p>40 வயதான அந்த சந்தேகநபர், தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகளைக் கொண்ட 201 சிகரெட் கார்ட்டூன்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad261fb7-cb69-488e-ba7b-855e2a4f9d9e/26-6a658a67f0305.webp' /></p><p>இதனையடுத்து சந்தேகநபர் இந்த சிகரெட் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் "பச்சை வழி" ஊடாக எடுத்துச் செல்ல முயன்ற போது&nbsp;விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 630,000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p>சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T04:17:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individual-who-defrauded-sri-lanka-of-700m-usd-1785028322"></link>
            <id>https://tamilwin.com/article/individual-who-defrauded-sri-lanka-of-700m-usd-1785028322</id>
            <summary type="text">இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. </p><p>

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி இந்த பாரிய மோசடி நடவடிக்கையில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மீட்கப்பட்ட&nbsp; பணம் மற்றும் கார்&nbsp;</h2><p> </p><p>

இந்த பாரிய அளவிலான நிதி மோசடியின் ஊடாக, நாட்டின் 21 முன்னணி நிறுவனங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றில் 6 நிறுவனங்களின் தொடர்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் இயக்குநராக நடித்து இந்த மோசடியை வழிநடத்தியதாக தெரிவித்து பெஸ்ஸி முகமது என்ற சந்தேக நபர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/113d312f-70d6-47b1-8e6f-1bdef142ea2c/26-6a65620200cda.webp' /></p><p> </p><p>

குறித்த நபரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு பணம் மற்றும், 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார், தங்கப் பொருட்கள் ஆகியவற்றை குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள 36 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகளில் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

எனினும், அந்த பணத்தை கொண்டு நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட எந்தபொருட்களும் சுங்கப்பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் இலங்கையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-month-hotter-meteorological-department-1785036732"></link>
            <id>https://tamilwin.com/article/next-month-hotter-meteorological-department-1785036732</id>
            <summary type="text">அடுத்த மாதம் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின்&amp;nbsp;பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.&amp;nbsp;இது தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின்&nbsp;பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>எல் நினோ நிலை பலவீனமான நிலையிலிருந்து மிதமான நிலைக்கு வளர்ந்து வருகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>கவனம் தேவைப்படும் அளவில்&nbsp;வெப்பக் குறியீடு</h2><p>

இதேவேளை, இன்றைய தினம் (26.07.2026) கிழக்கு மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பக் குறியீடு கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p> இந்த நிலையில் குறித்த நிலைமை தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்சியை தக்கவைக்க தினந்தோறும் மக்களை ஏமாற்றும் திசைகாட்டி அரசு - சஜித் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-accuses-npp-government-deceiving-people-1785037013"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-accuses-npp-government-deceiving-people-1785037013</id>
            <summary type="text">திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத்
தக்கவைக்கத் தினமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்றும்
எதிர்க்கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத்
தக்கவைக்கத் தினமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்றும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(25.07.2026) ஹொரவ்பொத்தானை, வகொல்லாகொட போதிரூக்காராம மகா விகாரையில் நடைப்பெற்ற தர்ம போதனை
மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்
இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

</p><p></p><h2>விவசாயிகளை அவமதிக்கும் அரசு</h2><p><span style="font-size: 14px;">டித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதாகக் கூறிவிட்டு, அரசினர் நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூக வலைத்தளங்களில் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.</span></p><p>
விவசாயிகளை "கடவுள்" என்றும், நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை
தருவதாகக் கூறியவர்கள், இன்று விவசாயிகளைப் பார்த்து "கசிப்புக்காரன்" என்று
அவமதிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c79be60-3b10-4447-af7c-a32ae19ba64c/26-6a6583428b59b.webp' /></p><p>
நெல் கிலோ ஒன்றுக்கு 137 ரூபா செலவாகும் என விவசாய அமைச்சரே கூறிய போதிலும்,
120 ரூபா விலையே வழங்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 17 ரூபா
நட்டம் ஏற்படுகின்றது.</p><p>மேலும், அரசுக்குச்
சொந்தமான நெல் களஞ்சியங்கள் வெளிநாட்டு அரிசியால் நிரப்பப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p>நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வின்போது ரூபா 2 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான 100 சீமெந்து பொதிகளையும் அவர் அன்பளிப்பாக வழங்கியள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் இரகசியமாக சுற்றிவளைக்கப்பட்ட விடுதி : பெண் உட்பட இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotel-surrounded-in-amparai-two-arrested-1785037391"></link>
            <id>https://tamilwin.com/article/hotel-surrounded-in-amparai-two-arrested-1785037391</id>
            <summary type="text">அம்பாறை நகரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விடுதியொன்றை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, அங்கு முகாமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை நகரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விடுதியொன்றை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். </p><p>இதன்போது, அங்கு முகாமையாளராக பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>உளவாளி ஒருவரை பயன்படுத்தி&nbsp;திட்டமிட்ட&nbsp;கைது</h2><p>
</p><p>
 

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, உளவாளி ஒருவரை பயன்படுத்தி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca33856f-20ef-43fc-af3a-a9e5edf0c2cf/26-6a658250bfb74.webp' /></p><p>

 

கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
 

சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின்
நேரடி வழிகாட்டலில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி,
அம்பாறை பிரிவு 1 உதவி பொலிஸ் அதிகாரி சம்பத் விக்கிரமரத்ன, அம்பாறை தலைமையக
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் அம்பாறை குற்றப் புலனாய்வுப் பிரிவின்
பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ்.டி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர்
இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:44:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-drop-in-passport-supply-srilanka-1785035391"></link>
            <id>https://tamilwin.com/article/massive-drop-in-passport-supply-srilanka-1785035391</id>
            <summary type="text">கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன....</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டுகள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>விநியோகிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுகள்</h2><p> கடந்த ஜனவரியில் 65,351 கடவுச்சீட்டுகளும், பெப்ரவரியில் 54,161 கடவுச்சீட்டுகளும், மார்ச்சில் 50,356 கடவுச்சீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4056a50-1e9c-4cea-9630-efabe38dad6a/26-6a657a8244aff.webp' /></p><p>

அதன்படி, இந்த காலாண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 169,868 ஆகும்.

எனினும், 2025 ஜனவரியில் 53,216, பெப்ரவரயில் 74,402 மற்றும் மார்ச்சில் 77,128 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, குறித்த காலாண்டில் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 204,746 ஆகும்.</p><p>

அதன்படி, முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டு விநியோகம் சுமார் 34,878 அளவில் குறைந்துள்ளது.</p><p>

அதிலும் குறிப்பாக ஜனவரி மாதத்தைத் தவிர, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த கடவுச்சீட்டு வழங்கல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.</p><p> பெப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்ட ஸ்திரத்தன்மையே கடவுச்சீட்டு வழங்கல்களில் குறைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.</p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>
அதே போன்று 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவது, நாட்டிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு வழிவகுத்துள்ளது என்றும் நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/703d4886-01e7-4d3c-bff3-90e8d479e063/26-6a657a82edf89.webp' /></p><p>
</p><p>
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவுகளின்படி, ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரை 609,446 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>சமீபத்திய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட ஆண்டுகள் 2022 மற்றும் 2023 ஆகும். </p><p>இந்த ஆண்டுகளில், முறையே 911,757 மற்றும் 908,722 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இருப்பினும், 2024-ல் இது 586,970 ஆகக் குறைந்திருந்தது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்லன்வில துப்பாக்கிச்சூடு! பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-1785032477"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-1785032477</id>
            <summary type="text">கொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.மோட்டார் சைக்கிளில் வந்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உணவகமொன்றின் முன்னால் நின்றிருந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">திட்டமிட்ட கும்பல் மோதல்&nbsp;</span></p><p>துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 55 வயதுடைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f427b786-8cb4-46bd-9732-357602b8eaca/26-6a6573a616a49.webp' />&nbsp;&nbsp;</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட கும்பல் மோதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனவும் அவரது எதிர்த்தரப்பினரால் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>இரண்டு சந்தேகநபர்களும் கைது&nbsp;</h2><p>கடந்த சில காலமாக கொஸ் மல்லி எனப்படும் பிரிவினருடன் மோதலில் ஈடுபட்டுள்ள படோவிட்ட அசங்க மற்றும் சண்டோ பிரிவினரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a576dabb-424f-46d0-a58c-304d03f60d6e/26-6a6573a6bae40.webp' /></p><p>இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், நவகமுவவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளை கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது.</p><p>சம்பவத்தையடுத்து பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல விசாரணைப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில்,இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T02:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலைமை மோசமடையலாம்..! காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-warning-issued-regarding-the-dengu-fever-1785030287"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-warning-issued-regarding-the-dengu-fever-1785030287</id>
            <summary type="text">காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் பெற்றோரை வலியுறுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளனர்.</p><p>கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோரிடம் கோரிக்கை இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp; அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>டெங்கு காய்ச்சல் பாதித்த 50 குழந்தைகள்</h2><p>குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக ஆபத்தில் அழுத்த வேண்டாம் என்று பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adddc8e8-cb7d-4fe1-9d2a-784a3f89b538/26-6a656e7a65e75.webp' /></p><p>
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது சுமார் 50 டெங்கு காய்ச்சல் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்களில் சுமார் கால் பகுதியினர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும், நிலைமை மோசமடைந்தால், வைத்தியசாலையின் கொள்ளளவுப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.
</p><p>
எனவே, தங்கள் பிள்ளைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், தாமதமின்றி அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெறுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், வீட்டில் தங்கி சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான நேரத்தை வீணடிப்பதாகும் , சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>இந்த நிலைமை மேலும் மோசமடைந்தால், எங்களுக்கு இடவசதிப் பற்றாக்குறை ஏற்படலாம். தூர பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வருவதில் ஏற்படும் தாமதங்களால் பல மரணங்கள் நிகழ்கின்றன.</p><h2>டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை</h2><p>24 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a38443-8f88-4345-8641-74f9f55edfe5/26-6a656e7b16f52.webp' /></p><p>இதற்கிடையில், நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினசரி கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கிறது.</p><p>
மேலும், இதுவரை நிகழ்ந்துள்ள 61 டெங்கு மரணங்களில், 47 பேர் பெண்கள் என்றும் வைத்திய நிபுணர் பிரஷில சமரவீர தெரிவித்துள்ளார்.
</p><p>கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுர, காலி, குருநாகல், கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். </p><p>எனவே, சிக்கல்களின்றி நோயை குணப்படுத்த, பொதுமக்கள் மருத்துவ ஆலோசனையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என&nbsp;அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T02:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதா திங்கட்கிழமை அமைச்சரவையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/retirement-age-of-judges-1785021767"></link>
            <id>https://tamilwin.com/article/retirement-age-of-judges-1785021767</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
</p><p>
குறித்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவை, திங்கட்கிழமை (27) அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கான இறுதி முடிவு நேற்று முன்தினம் இரவு (24) எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொதுமக்கள் கருத்துக் கணிப்பு</h2><p>
</p><p>
இது தொடர்பில் நேற்று முன்தினம் இரவு (24) பெலவத்தை ஜே.வி.பி. தலைமையகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.</p><p>

ஜேவிபி-யின் உயர்மட்டத் தலைவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலில், எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம் கொடுக்கத் தயார் நிலையுடன், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை மேலும் தாமதமின்றி கொண்டுவர வேண்டும் என்று இறுதியாக முடிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36db0c52-ca3a-4ccf-8652-af8d62f51670/26-6a6568c68aa45.webp' /></p><p>அப்போது, ​​அடுத்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் குறித்த திருத்த மசோதாவைக் கொண்டுவருவது பொருத்தமாக இருக்காதா என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>பிரதம நீதியரசர் ​​ஓய்வுபெற்ற பிறகு யாரையும் நம்ப முடியாது என்று அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>

அதன்படி, அரசியலமைப்பின் 22வது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும். </p><p>வர்த்தமானி வெளியிடப்பட்டு குறைந்தபட்சம் 14 நாட்கள் கடந்த பிறகு, அரசியலமைப்பின் 22வது திருத்தம் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e00fd709-ada3-4a12-b514-4f14251d38b8/26-6a6568c5d219b.webp' />&nbsp; &nbsp;</p><p> </p><p>நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 7 நாட்களுக்குள், எந்தவொரு பிரஜைக்கும் தொடர்புடைய வரைவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். </p><p>உச்ச நீதிமன்றம் அந்த மனு மீதான தனது கருத்தை 14 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் வழங்க வேண்டும்.</p><p>

அதன்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடரவும், அது குறித்த அறிவிப்பை வெளியிடவும் சுமார் 35 நாட்கள் ஆகும் என்று கருதப்படுகின்றது. </p><p>அதன் பிறகு, அது குறித்த நாடாளுமன்ற விவாதமும், தேவைப்பட்டால் பொதுமக்கள் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்படும்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:54:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreigner-arrested-in-colombo-1785029475"></link>
            <id>https://tamilwin.com/article/foreigner-arrested-in-colombo-1785029475</id>
            <summary type="text">கொழும்பு - கொம்பனி வீதியில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் குறித்த நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொம்பனி வீதியில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் குறித்த நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,&nbsp; கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட&nbsp; ஒரு உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3a882c3-aea2-4b84-9616-d3441a030bc1/26-6a656693b94d7.webp' /></p><p>அவரிடம் இருந்து, 36,200 சட்டவிரோத சிகரெட்டுக்கள் மற்றும் ஒரு வாடகைக் கார் உள்ளிட்டவற்றை பொலிஸார்&nbsp; பறிமுதல் செய்துள்ளனர்.&nbsp;</p><p>30 வயதுடைய மலேசிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:45:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரிந்தது ராஜபக்ச இராச்சியம்! கண்ணாடி முன்னால் நின்று மகிந்த கேட்க வேண்டிய ஒரே கேள்வி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rajapaksa-kingdom-has-collapsed-1785026442"></link>
            <id>https://tamilwin.com/article/the-rajapaksa-kingdom-has-collapsed-1785026442</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து &#039;&#039;தெங் செபத&#039;&#039;(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து ''தெங் செபத''(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தயாராக இருங்கள்..</h2><p>

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், </p><p>

மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் குடும்பத்தார் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த நாட்டில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ab1e82-725f-472d-8c30-7c93d572cd2e/26-6a65593936de4.webp' /></p><p> </p><p>

கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அரசாங்கங்கள் நாட்டை சீரழித்தனர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>பல அக்கிரமங்களை செய்தமை, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியமை, நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கோடீஸ்வரர்களானமை உள்ளிட்ட செயல்களை மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>

எனவே, உங்களுடைய அக்கிரமங்களின் காலம் முடிவடைந்து விட்டது. மக்களுக்கான காலம் உருவாகியிருக்கின்றது. 

இன்னும் சிறிது காலத்திற்கு நீங்கள் சந்தோஷமாக இருந்து கொள்ள முடியும். எனினும், மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edfd4fc1-3a36-4cfe-a4d0-04dd6c48f848/26-6a655939db153.webp' /></p><p> </p><p>ராஜபக்ச குடும்பத்தில் மேலிருந்து கீழ் வரை, குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

இதனால்தான் மக்கள் உங்கள் ஆட்சியை வீழ்த்தி, புதிய அரசாங்கம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளனர்.
</p><p>
மக்களின் பக்கமே எமது ஆதரவு இருக்கும். எனவே, உங்களுடைய பொருட்களெல்லாம் எடுத்துக் கொண்டு தயாராக இருங்கள்.</p><p> எப்போதும் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே யதார்த்தத்திற்கு முகம்கொடுக்க தயாராக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T00:49:38+00:00</updated>
        </entry>
    </feed>
