<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-03T12:33:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ferry-service-time-table-neduntheevu-kurikatuvan-1788437121"></link>
            <id>https://tamilwin.com/article/ferry-service-time-table-neduntheevu-kurikatuvan-1788437121</id>
            <summary type="text">நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவை நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.குறித்த படகு சேவையில் நாளையதினம் (04.09.2026)
தொடக்கம் குமுதினி படகு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவை நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>குறித்த படகு சேவையில் நாளையதினம் (04.09.2026)
தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக
நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.&nbsp;அதனடிப்படையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98a3803-6bee-4532-95f7-065342dfb793/26-6a996822b285c.webp' /></p><h2>படகு சேவை விபரம்
</h2><p>
குமுதினி

6.15 AM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
</p><p>8.00 AM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
</p><p>2.00 PM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
</p><p>3.30 PM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு&nbsp;</p><p>
நெடுந்தாரகை 7.00 AM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்</p><p>
8.30 AM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
</p><p>
வடதாரகை

3.00 PM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
</p><p>4.30 PM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T12:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் செயற்படும் போதைப்பொருள் கும்பல் - இலங்கையில் சிக்கிய இரண்டு தமிழ் இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/badulla-ice-racket-operated-from-italy-busted-1788418684"></link>
            <id>https://tamilwin.com/article/badulla-ice-racket-operated-from-italy-busted-1788418684</id>
            <summary type="text">இத்தாலியில் இருந்து இயங்கி வந்த போதை பொருள கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் வட்ஸ்அப் மற்றும் ஈசி கே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில் இருந்து இயங்கி வந்த போதை பொருள கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>குறித்த இருவரும் வட்ஸ்அப் மற்றும் ஈசி கேஷ் ஊடாக பதுளை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. </p><p>&nbsp;சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் அம்பகஸ்தோவ பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கெப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2><b>போதைப்பொருள் வர்த்தகம்&nbsp;</b></h2><p> ஊவபரணகம, அம்பகஸ்தோவ பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d83222f-e373-463a-9326-113a2bdd2a0b/26-6a996652afbc4.webp' /></p><p>கெப்பெட்டிபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துசித குமார தலைமையிலான அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> இத்தாலியில் வசிக்கும் நபரொருவரால் இந்த போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>சந்தேக நபர்கள் இருவரும் வாடகை முச்சக்கர வண்டிகளில் சென்று, கையடக்கத் தொலைபேசிக்கு கிடைக்கும் வட்ஸ்அப் குறுஞ்செய்திகளுக்கு அமைய, ஈசி கேஷ் முறையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு போதை பொருள் விற்பனை செய்துள்ளனர். </p><p>பதுளை, பண்டாரவளை, வெலிமடை மற்றும் எல்ல ஆகிய பகுதிகளுக்கு சென்று ஐஸ் போதைப்பொருளை விநியோகிக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-03T12:22:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பதிவான திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788435310"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788435310</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சிப் போக்கு பதிவாகி வந்த நிலையில் இன்று (03.09.2026) தலைகீழ் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரியவருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சிப் போக்கு பதிவாகி வந்த நிலையில் இன்று (03.09.2026) தலைகீழ் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.</p><p>அதன்படி தங்கத்தின் விலை இன்று 4000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>

நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.373,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.377,000 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9e9bf8a-9653-4479-9220-c72397ee22c8/26-6a995f9b2ac91.webp' /></p><p>

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:55:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரைச்சியில் முறைப்படுத்தப்பட்ட மணல் விநியோகம் - தவிசாளர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/soil-distribution-by-karaichi-pradeshiya-sabha-1788433262"></link>
            <id>https://tamilwin.com/article/soil-distribution-by-karaichi-pradeshiya-sabha-1788433262</id>
            <summary type="text">கரைச்சி பிரதேச சபையினரால் மாவட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த
முயற்சிகளின் பலனாக, மணல் விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக கரைச்சி
பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரைச்சி பிரதேச சபையினரால் மாவட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த
முயற்சிகளின் பலனாக, மணல் விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக கரைச்சி
பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, மாவட்ட அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச சபை
மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து மணல் விநியோகத்தை
முறைப்படுத்தியுள்ளன.
</p><p>
எதிர் கொண்ட சவால்கள்: கடந்த 10-15 வருடங்களாக முறைசாராமல் இருந்த வியாபாரத்தை
ஒழுங்குபடுத்தும்போது, தனிநபர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சிகள்
உட்பட பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><h2>
மணல் வகைகள் மற்றும் விலைகள்</h2><p>கழுவப்படாத மண்: களஞ்சியசாலையிலிருந்து ஏற்றி விடுவதற்கு 40,000 ரூபாய்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதிகளில்
10,000 ரூபாயும், ஏனைய பிரிவுகளுக்கு அதற்கு ஏற்ற தொகையையும் டிப்பர்
உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b081202a-1ae7-461b-a846-68743445e7a7/26-6a995bdf658d4.webp' /></p><p> கிளிநொச்சிக்குள் 50,000 முதல் 55,000
ரூபாய்க்குள் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>
கழுவப்பட்ட மண்: 1,000இற்கும் மேற்பட்ட டிப்பர்கள் அளவிலான மண் தொடர்ச்சியாகக்
கழுவப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது.</p><p> இதற்கான இறுதி விலை நிர்ணயம் இன்னும்
செய்யப்படவில்லை; அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, செலவுகளைக் கணித்து
விரைவில் குறைந்தபட்ச விலை அறிவிக்கப்படும்.</p><h2>தவறான விலை அறிவிப்பு</h2><p>பொதுமக்கள் கிராம நிலாதாரி மற்றும் பிரதேச
செயலாளரின் சிபாரிசுக் கடிதத்துடன் பிரதேச சபை அலுவலகத்தை அணுகி மணலை பெற
முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cc0953-e4dc-4796-9698-ee0023ef24ca/26-6a995be05551a.webp' /></p><p>
</p><p>மேலும் இந்திய வீட்டுத் திட்டம், அரச மானிய வேலைகள், பாடசாலைகள் மற்றும்
வைத்தியசாலைகள் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.</p><p>இதேவேளை இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களில் வலம்வரும்
உத்தியோகபூர்வமற்ற தகவல்களையும், தவறான விலை அறிவிப்புகளையும் நம்பி
குழப்பமடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:47:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-clarification-on-digital-insurance-card-1788432682"></link>
            <id>https://tamilwin.com/article/police-clarification-on-digital-insurance-card-1788432682</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை (Digital Insurance Cards) சரிபார்ப்பது தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறி, வாகன செலுத்துன...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை (Digital Insurance Cards) சரிபார்ப்பது தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறி, வாகன செலுத்துனர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை தவறு என வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு பொறுப்பு துணை பொலிஸ் தலைவர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்றைய தினம் (03.09.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுக்க மற்றும் கம்பஹா பொலிஸ் நிலையங்களில் உள்ள சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்க மறுத்து பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கியதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன.
</p><p>
அதன்படி, ஆர்.டி.எம். 93 சட்டத்தின் கீழ் 2026 மே 05 ஆம் திகதி வெளியிடப்பட்ட கூடுதல் அறிவிப்பின் மூலம், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, நாட்டின் முன்னணி 14 காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் தலைவர் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f3975aa-86c1-4712-932b-36a876722af5/26-6a9959986ff92.webp' /></p><h2>டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம்</h2><p>
</p><p>
2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின்படி டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் உள்ளது.

ஒரு ஓட்டுநரிடம் டிஜிட்டல் காப்பீட்டு அட்டை இல்லாத சந்தர்ப்பத்திலும் கூட, கீழ்கண்ட இலவச முறைகள் மூலம் காப்பீட்டு பாதுகாப்பு செயலில் உள்ளதா இல்லையா என்பதை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்:</p><ul><li>

*1338# என்ற எண்ணை அழைத்து காப்பீட்டு எண் அல்லது வாகன எண்ணை உள்ளிட்டு உடனடி தகவலைப் பெறுதல் </li><li> 
1338 எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புதல்</li><li> 
1338 உடனடி அழைப்பு மையத்தை (Call Center) தொடர்புகொள்ளுதல் </li></ul><p> 

இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களின் நிலையத் தலைவர்கள் வழியாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஏதேனும் ஒரு பொலிஸ் அதிகாரி டிஜிட்டல் காப்பீட்டு அட்டையை ஏற்க மறுத்தால், அதை அருகிலுள்ள பொலிஸ் நிலையத் தலைவரிடம் அல்லது வாகனப் போக்குவரத்து தலைமையகத்தின் சிறப்பு தொலைபேசி எண்ணான 0704755600 என்ற எண்ணுக்கு புகார் செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு:நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bribery-case-against-wimal-weerawansa-adjourned-1788431772"></link>
            <id>https://tamilwin.com/article/bribery-case-against-wimal-weerawansa-adjourned-1788431772</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதன்படி, குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, குறித்த வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்திற்கு அதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான இந்த வழக்கு இன்று (03.9.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><h2>ஒத்திவைப்பு</h2><p> 

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார். </p><p>

அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை விடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3fc79b3-8626-4a23-8c4b-8a5c62f31390/26-6a99557745f39.webp' /></p><p> </p><p>

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதன் மூலம் இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:09:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-minister-rajitha-senaratne-released-on-bail-1788431250"></link>
            <id>https://tamilwin.com/article/former-minister-rajitha-senaratne-released-on-bail-1788431250</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கிரிந்த மீன்பிடித் துறைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை தன்னிச்சையாகவும் சட்டவிரோதமான முறையிலும், உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் கொரிய நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கி அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று(03.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><h2>வெளிநாடு செல்ல</h2><p>



இதன்போது, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d731e51-aa43-486f-b5aa-e3ef4e6b9ca6/26-6a9951772b410.webp' /></p><p>


மேலும், பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் நீதிபதி விதித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:57:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர வானிலையின் அபாய மண்டலத்தில் உலகம்! இவ்வாண்டின் இறுதியில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வெளிவந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-strong-raising-risks-extreme-weather-2027-1788429711"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-strong-raising-risks-extreme-weather-2027-1788429711</id>
            <summary type="text">எல் நினோ உறுதியாக நிலைபெற்றுள்ளதுடன், எதிர்வரும் மாதங்களில் மிகவும் வலுவான நிகழ்வாக தீவிரமடையும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் (World Meteorological Or...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ உறுதியாக நிலைபெற்றுள்ளதுடன், எதிர்வரும் மாதங்களில் மிகவும் வலுவான நிகழ்வாக தீவிரமடையும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் (World Meteorological Organization - WMO) அறிவித்துள்ளது.</p><p> 

இது மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளில் பெரும் தாக்கங்களையும், அதனுடன் தொடர்புடைய வெள்ளம், வறட்சி மற்றும் கடும் வெப்பம் போன்ற அபாயங்களையும் ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விடயம் தொடர்பான அறிவிப்பில் மேலும், எல் - நினோ எதிர்வரும் பெப்ரவரி வரை நீடிப்பதற்கு கிட்டத்தட்ட 100% அசாதாரணமான உயர் நிகழ்தகவு இருப்பதைக் குறிப்பிடுகின்றன. எல் - நினோ அறிவிப்பு இவ்வளவு சந்தேகத்திற்கு இடமின்றி இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><h2>அசாதாரணமான வெப்பம்</h2><p>

வெப்பமண்டல பசிபிக் பகுதியில் நிலவும் அசாதாரணமான வெப்பமான கடல் சூழல்களால் உந்தப்பட்டு, எல் - நினோ வரும் மாதங்களில் மேலும் வலுப்பெற்று, இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80bd6dc9-072e-4e98-b380-74d188bd7070/26-6a994ef6edf1f.webp' /></p><p> </p><p>

இதன் காலநிலை தாக்கங்கள் 2027ஆம் ஆண்டு வரையிலும் தொடரும். எல் நினோ நம் கண் முன்னே பிரம்மாண்டமாகி வருகிறது. </p><p>இந்த பூமி இதுவரை கண்டிராத ஒரு சூழலில் உள்ளது, மேலும் நீர்நிலைகள் வெப்பமடைந்து வருகின்றன. 

கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்து வருகிறது, வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் தீவிர வானிலையின் அபாய மண்டலத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p>மேலதிக தகவல் - அமல்</p>]]></content>
            <updated>2026-09-03T10:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-customs-department-1788429810"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-customs-department-1788429810</id>
            <summary type="text">இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>ஒகஸ்ட் மாதத்திற்கான சுங்க வருமான இலக்கு 190.3 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாதத்தில் 219.3 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><h2>வருமான இலக்கு</h2><p>
</p><p>
அத்துடன், முதல் எட்டு மாதங்களுக்கான ஒட்டுமொத்த வருமான இலக்கை விட 28.5 சதவீதம் அதிகமாக, மொத்தம் 1,852.5 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85e2477-b6ad-4128-b602-e885b2281765/26-6a994a9f02ee3.webp' /></p><p>
</p><p>
2025ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களம் சாதனை அளவாக 2,551 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியிருந்தது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான வருமான இலக்கு 2,207 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு.. கொட்டகலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/floods-every-year-during-inclement-weather-1788430342"></link>
            <id>https://tamilwin.com/article/floods-every-year-during-inclement-weather-1788430342</id>
            <summary type="text">சீரற்ற காலநிலையின் போது ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்த கொட்டகலை மேபீல்ட் மற்றும் சாமஸ்ட்டன் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்டகால பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற காலநிலையின் போது ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்த கொட்டகலை மேபீல்ட் மற்றும் சாமஸ்ட்டன் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மழைக்காலங்களில் குறித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>குறிப்பாக, மேபீல்ட் மற்றும் சாமஸ்ட்டன் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளநீரில் மூழ்குவதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வந்துள்ளன. </p><p>அத்துடன், வெள்ளப்பெருக்கு காரணமாக மேபீல்ட் தமிழ் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகளும் பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி யேசுதாசன் யாகுலமேரி மற்றும் பிரதேச சபை உறுப்பினர் கணேசன் ராஜேந்திரன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>வெள்ள அச்சம்..&nbsp;</h2><p> </p><p>இதற்கமைய, மத்திய மாகாண சபை நிதியிலிருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேபீல்ட் பகுதியில் அமைந்துள்ள ஆற்றை அகலப்படுத்தி, ஆழப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5edcfd08-3db4-4156-9855-4acb5c2e31d3/26-6a994bbe626a4.webp' /></p><p> </p><p>கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில், நேற்று இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தற்போது ஆற்றை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இதன் மூலம் மழைக்காலங்களில் ஆற்றில் நீரின் ஓட்டம் அதிகரிக்கும் போது ஏற்படும் நீர்த்தேக்கம் குறைக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63c0980d-e35b-4050-8363-52d898d93636/26-6a994bbf7234d.webp' /></p><p> </p><p>கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரிடமும் ஆற்றை அகலப்படுத்தி வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
எனினும், தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தமது நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46d178c5-169f-4c3d-9ba4-3710b39be80d/26-6a994bc030ea9.webp' /></p><p> மேலும், தமது பிரச்சினையை கருத்திற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்து வேலைத்திட்டத்தை முன்னெடுத்த கொட்டகலை பிரதேச சபையின் தலைவர், உப தலைவி மற்றும் உறுப்பினருக்கு மக்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர். </p><p>பல ஆண்டுகளாக மழை பெய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெள்ள அச்சத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கு, ஆற்றை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் இந்த வேலைத்திட்டம் நீண்டகால நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:31:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி பதுவத்த சாமரவின் சொகுசு வீடு மற்றும் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batuwatte-chamaras-property-assets-seized-1788429792"></link>
            <id>https://tamilwin.com/article/batuwatte-chamaras-property-assets-seized-1788429792</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என கருதப்படும் மனோஜ் சுரங்க லியனகே என்ற பதுவத்த சாமர என்பவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என கருதப்படும் மனோஜ் சுரங்க லியனகே என்ற பதுவத்த சாமர என்பவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பணியகம், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகமவிடம் இன்று (3) இதனை தெரிவித்துள்ளது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்&nbsp;மோசடி</h2><p>இதற்கமைய, 40 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வாகனம் மற்றும் மூன்று மாடி வீடு உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03bf3d00-3cb2-4eaf-8c1a-629498dd1a56/26-6a9949b65d9be.webp' /></p><p>சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பணத்தை மோசடியாக பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறிய அருந்திக பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ccib-investigation-arundika-fernando-1788412093"></link>
            <id>https://tamilwin.com/article/ccib-investigation-arundika-fernando-1788412093</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து (CCIB) வெளியேறியுள்ளார்.போதைப்பொருள் கடத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து (CCIB) வெளியேறியுள்ளார்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை வருகை தந்த நிலையில், பல மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறியுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>&nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB)தற்போது முன்னிலையாகியுள்ளது.
</p><p>
டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் பகுதியாகவே அவர் இன்று (03) அழைக்கப்பட்டுள்ளார்.</p><h2>&nbsp;சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் வாக்குமூலம்&nbsp;</h2><p>

இதற்கமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தற்போது வாக்குமூலங்களை பதிவுசெய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec17e08f-363d-46ab-ae0b-2eadd881e1f6/26-6a99037734045.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவரது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கப்பல் ஏற்றுமதிக்கு பிரதான இலக்காகும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-major-destination-indian-ship-exports-1788427768"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-major-destination-indian-ship-exports-1788427768</id>
            <summary type="text">இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் தொழில்துறை தொடர்புகள் பலப்படுவதைச் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் கப்பல் ஏற்றுமதி சுமார் 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக 6 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.</p><h2>இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள்</h2><p> 

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள் அதிக மதிப்புள்ள கடல்சார் சொத்துக்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியதே இதற்குக் காரணமாகும். </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India’s tanker exports are reaching a wider set of markets across Asia, Africa and the Indian Ocean region.<br><br>The emergence of new destinations, along with higher shipments to Sri Lanka, reflects the growing acceptance of Indian-built tankers across diverse maritime markets.… <a href="https://t.co/vLHLhyNz36">pic.twitter.com/vLHLhyNz36</a></p>&mdash; Dept of Commerce, GoI (@DoC_GoI) <a href="https://x.com/DoC_GoI/status/2095400539756638518?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்தியாவின் வழக்கமான ஏற்றுமதி இலக்குகளில் இலங்கை மிகக் கூர்மையான உயர்வைப் பதிவு செய்துள்ளது. </p><p>

இதன்படி, இலங்கைகான கப்பல் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், தற்போது 56.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.&nbsp;</p><p>எகிப்து, தென்னாப்பிரிக்கா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மொசாம்பிக் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட நாடுகளில் புதிய கப்பல் ஏற்றுமதி இலக்குகள் உருவாகி வருவதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் கப்பல்கள் பரந்த சர்வதேச சந்தையைப் பெற்று வருகின்றன. </p><h2>இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் பாதை</h2><p>

இந்த மாற்றம் இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள் பிராந்திய வர்த்தகக் கப்பல் போக்குவரத்தில் விரிவான இருப்பை நிறுவத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a4568d6-0c89-48d5-b70e-658776a49139/26-6a9946f91e284.webp' /></p><p>

இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் பாதைகளில் இலங்கையின் அமைவிடம் மற்றும் இந்தியாவுடனான அதன் நீண்டகால கடல்சார் தொடர்புகள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளும்போது, இலங்கைக்கு இந்தப் போக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.&nbsp;</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த வர்த்தக உறவுகளின் பலப்படுத்தலுக்கு மத்தியிலேயே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. </p><p>

இருதரப்பு சுதந்திர வர்த்தக கட்டமைப்பின் கீழ் விரிவடையும் வர்த்தகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரித்து வருவதாக அந்தத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியக் கப்பல் கட்டுபவர்களுடனான வலுவான தொடர்புகள் புதிய முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் அதன் கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கப்பல் கட்டும் துறைக்கான வாய்ப்புகளைக் கொண்டுவரக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களின் இறக்குமதியினால் கிடைத்துள்ள பெருந்தொகை பணம்! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicles-are-imported-srilanka-1788420611"></link>
            <id>https://tamilwin.com/article/vehicles-are-imported-srilanka-1788420611</id>
            <summary type="text">2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் 316, 000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக&amp;nbsp;அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் 512,547 மில்லியன...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் 316, 000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக&nbsp;அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதன் மூலம் 512,547 மில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பான விடயங்களை முன்வைத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2>அதிகூடிய வரி வருவாய்</h2><p>நாடாளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்த பின்னர் அதிகாரிகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec27606-1f5e-4831-8a0d-23159a80c92a/26-6a9944d9afe44.webp' /></p><p>இந்த தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான 386,726 மில்லியன் ரூபாய் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது.</p><p>அத்துடன்,அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை' 1,000சிசி 'இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளது.</p><p>அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96 சதவீதம் ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெல்பத்தர பத்மேவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kehelpatara-padme-s-remand-extended-1788427904"></link>
            <id>https://tamilwin.com/article/kehelpatara-padme-s-remand-extended-1788427904</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை விளக்கமறியலில் வைக்குமாறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படி அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>விளக்கமறியலை நீடிக்குமாறு கோரிக்கை</h2><p>
</p><p>
பூசா சிறைச்சாலையிலிருந்து காணொளி ஊடாக சந்தேகநபர் நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் தொடர்வதால் விளக்கமறியலை நீடிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e240ef-dd89-4a89-a398-1a60a66d2642/26-6a994333a7bd2.webp' /></p><p>
</p><p>
இதனை ஏற்றுக் கொண்ட நீதவான், பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்கு மற்றும் கனேமுல்ல சஞ்சீவ தொடர்பான வழக்கை மாத்திரம் இந்த நீதிமன்றத்தில் தொடருமாறு உத்தரவிட்டார்.</p><p>
அத்தோடு, சந்தேகநபர் மீதான ஏனைய வழக்குகளை உரிய நீதிமன்றங்களுக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:52:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் மகிந்தவின் நெருங்கிய சகாக்கள் - மறைக்கப்படும் இரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-deaths-continues-in-sri-lanka-1788408410"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-deaths-continues-in-sri-lanka-1788408410</id>
            <summary type="text">ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. </p><p>

கடந்த ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்களுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற சர்ச்சைக்குரிய, ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.</p><p> 

57 வயதான எராஜ், கொழும்பு ஹவலொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது தனிப்பட்ட வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2><b>மறைக்கப்பட்ட இரகசியங்களும் தீர்க்கப்படாத அரசியல் சிக்கல்களும்</b></h2><p> 

மர்மமான முறையில் உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் பல மறைக்கப்பட்ட இரகசியங்களும் தீர்க்கப்படாத அரசியல் சிக்கல்களும் இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1f9ca5-509d-492d-9d38-762e04ad18f4/26-6a98fbef6971b.webp' /></p><p>9 அடி உயரமுள்ள கதவு சட்டகத்தில் பட்டியை போன்ற ஒரு பொருளை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
சமீபத்தில் கொள்ளுப்பிட்டியில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் மரணத்திலும் இதேபோன்று கதவு சட்டகத்தில் பட்டி மூலம் தூக்கிடப்பட்டிருந்தது. </p><p>

இவ்விரு சம்பவங்களுக்கும் இடையிலான தீவிரமான ஒற்றுமைகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p> 

2014 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஹம்பாந்தோட்டை எராஜ் ரவீந்திர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். </p><p>

அதன் பின்னர் 2018 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மீண்டும் அப்பதவிக்கு மீண்டும் தெரிவானார். 2022 பெப்ரவரி 10ஆம் திகதி தனிப்பட்ட காரணங்கள் காரணமாக மேயர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.</p><p>
இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச்சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p> </p><h3><b>துப்பாக்கி மேயர்</b></h3><p>இதன் காரணமாக இவர் <b>துப்பாக்கி மேயர்</b> என்று பரவலாக அறியப்பட்டார். அச்சுறுத்தும் வகையிலான இந்த செயற்பாட்டுக்கு 2019 இல் இவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0bb3326-940b-42c0-a779-0cc0ace4da03/26-6a98fbf0376a2.webp' /></p><p>சதோச நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில், ஊழியர்களை அரசியல் பணிகளுக்கு பயன்படுத்தி அரசுக்கு 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக எராஜ் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 5 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
</p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையிலேயே மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
</p><p>
பிரேத பரிசோதனை அறிக்கைகள், இரசாயன பகுப்பாய்வு முடிவுகள் மற்றும் ஹவ்லாக் சிட்டியின் CCTV காட்சிகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
</p><h3><b>
ராஜபக்ச குடும்பத்திற்காக&nbsp; மோசடிகள் </b></h3><p>எராஜ் மற்றும் கபில ஆகியோர் ராஜபக்ச குடும்பத்திற்காக பல்வேறு மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தப்படும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுகின்றமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ac5c6f-3223-4ada-9adb-f7db68a79841/26-6a98fbf0ee1c3.webp' /></p><p>அண்மையில் மகிந்த ஆட்சியில் பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட சி.டி.விக்ரமரட்ன துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்திருந்தார். </p><p>குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-03T09:41:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புவோருக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-issued-those-wishing-work-abroad-1788427383"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-issued-those-wishing-work-abroad-1788427383</id>
            <summary type="text">இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையானது, தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்புகளுக்குக் கூடுதலாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையானது, தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்புகளுக்குக் கூடுதலாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சலுகைத் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.
</p><p>
துபாயில் உள்ள விமான நிலைய கட்டுமானத் திட்டங்களில் தற்போது 2,000 வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக ரூபா1,50,000 செலவில் விரைவாக வேலைவாய்ப்பைப் பெறலாம் என்றும் முகமையின் தலைவர் ஆனந்தலால் ஹெட்டியாராச்சி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

மேலும், 800 மேற்பார்வைப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதற்கான செலவினங்கள் ரூபா 1,80,000ஆக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகைகள் அனைத்தும் உள்ளடக்கியவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.&nbsp;</p><p>

மேலும், இலங்கை பட்டதாரிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நலவாழ்வு மையத்தில் கட்டணமில்லா வேலைக்கு விண்ணப்பிக்கலாம், அதற்கான அனைத்து செலவுகளையும் அந்த நிறுவனமே ஏற்கும்.</p><p>

ஜப்பானில் உள்ள மூன்று நிறுவனங்களுடன் தங்கள் முகமை இணைந்து செயல்படுவதாக ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்..&nbsp;</h2><p> </p><p>ஒரு ஜப்பானிய கட்டுமான நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ் 23 மாணவர்கள் சபுகஸ்கந்தா மொழியில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5034d161-4bd2-47b0-ac18-290a1b76ba50/26-6a993df869737.webp' /></p><p> </p><p>அந்நிறுவனம், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் ஜப்பானிய மொழி ஆகிய இரண்டிற்குமான பயிற்சிக்கு நிதியுதவி அளிப்பதுடன், வேலை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
</p><p>
அந்த முகமை, ஜப்பானிய நிறுவனமான மெட்டா டெக்னோவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், அடிப்படை ஜப்பானிய மொழிப் புலமை கொண்ட தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. </p><p>

இதற்கிடையில், மற்றொரு ஜப்பானிய நிறுவனம், பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு லாரி ஓட்டுநர்களாக 1,000 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன உரிமம் மற்றும் ஜப்பானிய மொழித் திறனைக் கொண்டிருக்க வேண்டும். </p><p>தேவைப்பட்டால், இந்தத் தகுதிகளைப் பெற விண்ணப்பதாரர்களுக்கு நிறுவனம் உதவும் என்று கூறியுள்ளது.

இந்த வாய்ப்புகள் குறித்த விவரங்கள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் முகநூல் பக்கத்திலும் கிடைக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:34:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன் கைதாவாரா நாமல்..! நளிந்த ஜயதிஸ்ஸ கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-jayatissa-s-opinion-on-namal-rajapaksa-1788426084"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-jayatissa-s-opinion-on-namal-rajapaksa-1788426084</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நாமல் ராஜபக்சவுக்கு இருக்குமாயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களைத் திரட்டி அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நாமல் ராஜபக்சவுக்கு இருக்குமாயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களைத் திரட்டி அவர் கூட்டங்களை நடத்திக் கொள்ளட்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராமய புராண விஹாரையில் நடைபெற்ற 'வேஹி பிரித்' வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்சவுக்கு அச்சம்</h2><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நாமல் ராஜபக்சவுக்கு இருக்குமாயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களைத் திரட்டி அவர் கூட்டங்களை நடத்திக் கொள்ளட்டும்.
</p><p>
அத்துடன் குற்றம் செய்தவர் தான் செய்த தவறுகளை நன்கு அறிந்திருப்பதாலேயே, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாழ்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44668f62-9bf2-4600-bc83-bb9a778fde94/26-6a993d7b8efd6.webp' /></p><h2>பொது வாக்கெடுப்பு</h2><p> </p><p>

இதேவேளை, அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டால், அதனைச் சந்திக்க அரசாங்கம் முழுமையாகத் தயாராகவே உள்ளது.
</p><p>
இருப்பினும், இந்த சீர்திருத்தத்திற்கு பொது வாக்கெடுப்பு அவசியமாகாது என்பதே அரசாங்கத்தின் கணிப்பு.

எனினும் இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ விளக்கம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ். மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-1st-place-scholarship-exam-tamil-language-1788419017"></link>
            <id>https://tamilwin.com/article/national-1st-place-scholarship-exam-tamil-language-1788419017</id>
            <summary type="text">நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் 188
புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த
யாழ்ப்பாண மாணவன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் 188
புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த
யாழ்ப்பாண மாணவன் சு. சபின் பெருமையுடன் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>யாழ்ப்பாணம் - மல்லாகம், தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில்
கல்வி கற்கும் மாணவனான சு. சபின், அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம்
முதலிடத்தைப் பெற்று தனது பாடசாலைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை
சேர்த்துள்ளார்.</p><h2>குவியும் வாழ்த்துக்கள்..&nbsp;</h2><p>
</p><p>சிறுவயதிலேயே தேசிய மட்டத்தில் உயரிய சாதனையைப் பதிவு செய்துள்ள மாணவனை
வாழ்த்தும் வகையில், தெல்லிப்பளை துர்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையிலானோர் பாடசாலைக்கு நேரில் சென்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iauzAEjbBVM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இதன்போது இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி
அதிகாரிகளும் இணைந்து மாணவனை வாழ்த்தி கெளரவித்தனர்.</p><p>தமிழ்மொழி மூலம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணத்தின்
கல்வித் துறைக்கு புதிய பெருமை சேர்த்துள்ள மாணவன் சு. சபினுக்கு பல்வேறு
தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:57:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் பேருந்து மீது காட்டு யானை தாக்குதல்: 10 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-injured-after-elephant-attacks-bus-1788424246"></link>
            <id>https://tamilwin.com/article/10-injured-after-elephant-attacks-bus-1788424246</id>
            <summary type="text">கதிர்காமம் - புத்தல வீதியில் தனியார் பேருந்து ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கதிர்காமம் - புத்தல வீதியில் தனியார் பேருந்து ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த சம்பவமானது&nbsp;இன்று(3.9.2026) காலை கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிர்காமம் - புத்தல வீதியின் மின்சார வேலி காவல் அரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.</p><h2>10 பேர் காயம்</h2><p> </p><p>சிலாபத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, புத்தல - கதிர்காமம் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போதே வீதியிலிருந்த காட்டு யானை அதனை தாக்கியுள்ளது. </p><p>

யானையின் தாக்குதலால் பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது அதில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08abd9b5-1eb4-4625-9bf3-20e97e38abb8/26-6a99347be1a9e.webp' /></p><p> </p><p>

விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l1gmTSKvKsU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடனடி நிரந்தர தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்! கடற்தொழிலாளர்களின் அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/problems-faced-by-fish-farmers-1788422865"></link>
            <id>https://tamilwin.com/article/problems-faced-by-fish-farmers-1788422865</id>
            <summary type="text">வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் உடனடி நிரந்தர தீர்வுகள் எடுக்கப்பட வேண்டுமென வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் உடனடி நிரந்தர தீர்வுகள் எடுக்கப்பட வேண்டுமென வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த ஊடக சந்திப்பில் இணையத்தின் பிரதிநிதிகளான அன்னலிங்கம், அன்னராசா, நாகராசா மற்றும் வர்ணகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><h2>பிரச்சினைகள் தொடர்பில் விரிவான விளக்கம்</h2><p> 

இதன்போது அவர்கள், குறிப்பாக கடலட்டைத் தொழில் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f9fb56-9ef4-4142-85cf-960ccf150131/26-6a992da97c927.webp' /></p><p>
</p><p>
அத்துடன், இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மேற்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கைகளால் உள்ளூர் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில் முறைகளால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. </p><p>

மேலும், வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி மற்றும் நிரந்தரமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commander-eastern-security-force-meet-governor-1788422115"></link>
            <id>https://tamilwin.com/article/commander-eastern-security-force-meet-governor-1788422115</id>
            <summary type="text">கிழக்கு இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார&amp;nbsp; மாகாண ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.குறித்த கலந்துரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு இராணுவ பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார&nbsp; மாகாண ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்று (02.09.2026) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><h2>எதிர்கால நடவடிக்கைகள்</h2><p>இந்தச் சந்திப்பு ஒரு சுமுகமான கலந்துரையாடலாக அமைந்ததுடன், கிழக்கு
மாகாணத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677c7361-ba23-490d-8008-d357e20afd28/26-6a992ba3009a6.webp' /></p><p>
</p><p>கிழக்கு மாகாண மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நலனுக்காக, அரசுக்கும்
பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T08:11:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பியங்கர ஜெயரத்னவின் தற்போதைய நிலை! அரசாங்கம் செலவிடும் பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pratna-riyankara-jayasentencsed-walikada-prison-1788421592"></link>
            <id>https://tamilwin.com/article/pratna-riyankara-jayasentencsed-walikada-prison-1788421592</id>
            <summary type="text">&amp;nbsp;7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் &#039;M&#039; வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் 'M' வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அவர் அந்த வார்டில் மேலும் சுமார் 150 கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

 நீதிமன்றத்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பணிப்பிரிவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அரசாங்கத்திற்கு ஏற்படுத்திய நஷ்டம்&nbsp;</h2><p>தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக 'ஸ்ரீலங்கன் கேட்டரிங்' நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e80178-0d9d-4c94-ac57-e767d0c24579/26-6a992b523f8e5.webp' /></p><p>
</p><p>
அதன்படி, அவர் காலை 6.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை ஒரு பணிப்பிரிவிற்கு அனுப்பப்படுவார் என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 

இதற்கிடையில், சிறையில் உள்ள ஒரு கைதிக்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு ரூ. 1,461 செலவிடுகின்றதாக கூறப்படுகின்றது.
</p><p>
அதன்படியே வெலிக்கடை சிறையிலும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவிற்காக தினமும் அதே தொகையை செலவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

பொதுவாக, சிறைச்சாலை கைதிகளுக்கு காலை உணவாக ரொட்டியும் தேங்காய் சாம்பலும் வழங்கப்படுகிறது.</p><h2>உணவின் அளவு</h2><p> </p><p>

அதன்படி, ஒவ்வொரு கைதிக்கும் 135 கிராம் எடையுள்ள ஒரு துண்டு ரொட்டியும், இரண்டு தேக்கரண்டி தேங்காய் சாம்பலும் வழங்கப்படுவதாக சிறை வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cfa1ec9-8838-4c78-ba0c-2e8a6d05e29e/26-6a992b52e8595.webp' /></p><p>
</p><p>
மேலும், 28 கிராம் சர்க்கரையும் வழங்கப்படுகின்றது. இவை காலை மற்றும் மதியம் தேநீர் அருந்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
</p><p>
மதிய உணவில் மீனுடன் கூடிய சோறு, ஒரு காய்கறி மற்றும் ஒரு பச்சை சாலட் ஆகியவை அடங்கும். அதன்படி, 225 கிராம் அரிசி, 56 கிராம் மீன், 56 கிராம் காய்கறிகள் மற்றும் இறைச்சி, 28 கிராம் பச்சை சாலட் ஆகியவை கிடைப்பதாக அறியமுடிகின்றது.</p><p>

இரவு உணவிற்காக, கைதிகளுக்கு சோறும் வழங்கப்படுகின்றது. அந்த உணவிற்கான அரிசியின் அளவு 170 கிராம் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

இதற்கு கூடுதலாக, 56 கிராம் இறைச்சி அல்லது மீன், 85 கிராம் உருளைக்கிழங்கு, மற்றும் 56 கிராம் காய்கறி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T08:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது குறித்த தகவல் : அநுர தரப்பு வழங்கிய பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-arrest-anura-government-response-1788418909"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-arrest-anura-government-response-1788418909</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு அஞ்சி, தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ள கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு அஞ்சி, தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.</p><p>

இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நளிந்த, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலானவை என்றும், அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது சொந்தச் செயல்களை நன்கு அறிந்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார். </p><h2>சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்காமல்&nbsp;</h2><p>

சிஐடி, எஃப்சிஐடி மற்றும் இலஞ்ச ஆணைக்குழு போன்ற அமைப்புகள் நாமல் ராஜபக்சவின் நடத்தையின் முழு அளவையும் இன்னும் வெளிக்கொணரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11477c3b-3d12-4a74-9e6c-815af6aad599/26-6a9924445f2c3.webp' /></p><p>
ஆதாரங்களின் மூலம் தவறுகளை நிரூபிப்பதே விசாரணைகளின் நோக்கம் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் அச்சம் கொள்வது இயல்பானது என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். </p><p>

நாமல் ராஜபக்ச கைது நடவடிக்கையை எதிர்கொள்வதாக நம்பியிருந்தால், அவர் தனது பேரணியை முன்னதாகவே நடத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தவறு செய்தவர் எவராயினும் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்காமல் எதிர்கொள்ளுமாறு நாமல் ராஜபக்சவை அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T07:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசு தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-ready-to-face-referendum-1788421012"></link>
            <id>https://tamilwin.com/article/government-ready-to-face-referendum-1788421012</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்மொழியப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் அவசியமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அளவிலான எந்தவொரு மாற்றத்தையும் முன்மொழியப்பட்ட திருத்தத்தில் அரசாங்கம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1843e248-ca09-4fb0-b50e-772a96e71fa0/26-6a9923963cacd.webp' /></p><p>
சர்வஜன வாக்கெடுப்பு அவசியப்படாது என்றே நாங்கள் நம்புகிறோம். </p><p>எனினும், வாக்கெடுப்பு தேவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதை நடத்த நாங்கள் தயராக இருக்கிறோம் என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p>
நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் குறித்த முடிவு இன்னும் மூன்று வாரங்களுக்குள் தெரியவரும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:37:04+00:00</updated>
        </entry>
    </feed>
