<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-24T23:42:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கிய 100 வழக்குகளின் முழுப் பட்டியல்.. திடீரென ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-sri-lanka-politics-ranil-sajith-1784922155"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-sri-lanka-politics-ranil-sajith-1784922155</id>
            <summary type="text">புதிய ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். 

நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். </p><p>

நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை எடுக்கவே இந்த குழு என தெரிவிக்கப்பட்டது. </p><p>

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், ஒன்றுகூடிய எதிர்க்கட்சியினருடனான கூட்டத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.&nbsp;</p><p>இந்த திடீர் கூட்டம் தொடர்பிலும் அதன்போது முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>கூட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்க, "நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை முன்வைத்து, அதை அடுத்த சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் நான் கூறுகிறேன்.
</p><p>
இந்த நாட்டில் உள்ள இந்த 1.1 மில்லியன் வழக்குகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்கவும்” என எதிர்க்கட்சி தலைவரிடம் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AcM1A-O8k4Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருமகனால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் பேரிடி - சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>

இந்த வாக்குமூலத்தின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார்.</p><p>
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மருமகன் தொடர்பில் வெளியிட்ட தகவல், அவரின் மருமகன் வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாகவுள்ளது. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RdSZsItywV0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/annual-pongal-festival-chemmalai-pillayar-temple-1784930552"></link>
            <id>https://tamilwin.com/article/annual-pongal-festival-chemmalai-pillayar-temple-1784930552</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச்
சிறப்புமிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச்
சிறப்புமிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளது.&nbsp;</p><p>எதிர்வரும் ஆடி மாதம் 17ஆம் நாள் (02.08.2026), சங்கடஹர
சதுர்த்தி திதியை முன்னிட்டு மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபை
அறிவித்துள்ளது.</p><p>

திருவிழா நாளான 02ஆம் திகதி காலை 7.00 மணிக்கு விசேட அபிஷேகத்துடன் உற்சவ
நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.</p><p> </p><p>தொடர்ந்து காலை மற்றும் நண்பகல் நேரங்களில்
விநாயகப் பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று,
விபூதிப் பிரசாதம் மற்றும் காழாஞ்சிப் பிரசாதம் வழங்கப்படுவதுடன், மதியம்
11.30 மணியளவில் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
</p><p>
மாலை 3.30 மணிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய பிரதம பூசகரால் பாரம்பரிய
முறைப்படி, நீராவியடிப் பிள்ளையாரின் அருளனுமதியுடன் நாயாறு முனியப்பர்
ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்படும்.</p><p></p><h2>இடம்பெறவுள்ள பூஜைகள்..&nbsp;</h2><p> </p><p>பின்னர் மாலை 6.00 மணிக்கு
கச்சை நேருதல், இரவு 7.00 மணிக்கு மடை பரவுதல், இரவு 8.00 மணிக்கு வளந்துக்கு
நூல் சுற்றுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு வளந்து நேர்ந்து பொங்கல் நிகழ்வு
இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16d1292f-1295-45e4-90dc-7879f264cd60/26-6a63e4134e786.webp' /></p><p> </p><p>பின்னர் 03.08.2026 அதிகாலை 12.30 மணிக்கு சிறப்பு பூஜை
வழிபாடுகளும், அதிகாலை 2.00 மணிக்கு பரிகலம் வழிவிடுதல் நிகழ்வும் நடைபெற்று
வருடாந்த பொங்கல் உற்சவம் நிறைவடையவுள்ளது.</p><p>

இவ்வுற்சவத்தில் பிரதம குருவாக "சிவாகம கிரியா கிராமஜோதி" சிவசிறி
திருஞானசுந்தர திருஞானசம்பந்தக் குருக்கள் (ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம் –
குழுழமுனை) தலைமையேற்கவுள்ளதுடன், ஆலய பூசகராக சிவபாதம் கணேசபுவன்
(நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் – பழைய செம்மலை) வழிபாடுகளை முன்னின்று
நடத்தவுள்ளார்.
</p><p>பொங்கல் தினத்தன்று ஆலயத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும்
அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

மேலும், பக்தர்கள் பால், தயிர், இளநீர், பூக்கள், பூமாலைகள் மற்றும் பழவகைகள்
உள்ளிட்ட உபயங்களை வழங்கி இறைபணியில் பங்கேற்று விநாயகப் பெருமானின்
திருவருளைப் பெற்றிடுமாறு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன
சபை அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:15:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை அங்கியுடன் மீட்கப்பட்ட என்புக்கூடு: ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்பே அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-grave-raincoat-boy-skeleton-1784929544"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-grave-raincoat-boy-skeleton-1784929544</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம்
காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட்
4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம்
காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட்
4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.</p><p>

இது தொடர்பில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர்
சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,</p><p>
</p><p>
"செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட மேற்படி சிறுவரின்
என்புக்கூடு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உடனடியாக அகழ்ந்து
எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>அகழ்வதற்கான நடவடிக்கை</h2><p> </p><p>இது தொடர்பாகத் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற
பின்னரே அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38218ea-4216-4323-b9ac-bbc8c5ba0be7/26-6a63df2bb33b0.webp' /></p><p>

இந்த என்புக்கூடு சட்ட ரீதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம்
காணப்படுவதால், அது தொடர்பான விவரங்கள் அல்லது தகவல்கள் எவருக்கேனும்
தெரிந்திருந்தால், உடனடியாக நீதிமன்றப் பதிவாளருக்காவோ, சட்டத்தரணி ஊடாக
நீதிமன்றத்துக்கோ அல்லது காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான உண்மையான தகவல்கள் ஏதேனும் வெளிச்சத்துக்கு வந்தால்,
அது செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பான பல முக்கிய உண்மைகளைக் கண்டறிய உதவும்" என்றார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T21:54:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட குழு - ரெலோ தலைமையுடனான சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-level-delegation-japanese-embassy-meets-relo-1784928098"></link>
            <id>https://tamilwin.com/article/high-level-delegation-japanese-embassy-meets-relo-1784928098</id>
            <summary type="text">தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைமையுடனான கலந்துரையாடல் ஒன்றை இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர்
மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைமையுடனான கலந்துரையாடல் ஒன்றை இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர்
மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
மேற்படி சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோ கட்சியின் தேசிய
அமைப்பாளரும் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் சமகால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் உரிமை
சார்ந்த விடயங்களில் அரசின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாகவும் மற்றும்
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் பலதரப்பட்ட
கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e6573f4-b0f0-4fb7-840e-826e34494637/26-6a63da41b28bc.webp' /></p><p>

மேலும், இச்சந்திப்பில் சமகாலத்தில் தமிழர் நலன் மற்றும் உரிமை
விடயங்களுக்காக தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒண்றிணைவு தொடர்பாகவும்,
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மக்களுக்கு நடந்தேறிய அநீதிகளை
முன்னிலைப்படுத்தி அவற்றுக்கான நீதி நிலைநாட்டப்பட கோரிய கலந்துரையாடல்
இடம்பெற்றது.&nbsp;</p><p>அத்துடன், போர்க்காலங்களில் ஐப்பான் அரசு மற்றும் இலங்கைக்கான ஐப்பானிய தூதரகம் எமது
தமிழ் மக்களுக்கு பலதரப்பட்ட உதவிகளை, நிவாரணங்களாக வழங்கியதை
சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களுக்கு ஐப்பானிய அரசின் உதவி பணிகள் தொடர
வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T21:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த வாரம் வொஷிங்டனில் ட்ரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-zelenskyy-meeting-in-washington-white-house-1784927700"></link>
            <id>https://tamilwin.com/article/trump-zelenskyy-meeting-in-washington-white-house-1784927700</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அடுத்த வாரம்&amp;nbsp; நேரில்
சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அடுத்த வாரம்&nbsp; நேரில்
சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(28.7.2026) வொஷிங்டனில் இடம்பெறவுள்ளது.</p><p>

அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்வதில் ஜெலன்ஸ்கி ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால்
வெள்ளை மாளிகையிடமிருந்து ட்ரம்பின் அதிகாரப்பூர்வ நேர அட்டவணை
உறுதிப்படுத்தப்படுவதற்காக அவரது குழு காத்திருப்பதாகவும் உக்ரைன் தரப்பு
தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>சந்திப்பு</h2><p>
</p><p>முன்னதாக, வலதுசாரி ஆர்வலரான லாரா லூமருக்கு அளித்த நேர்காணலில், தான் அடுத்த
வாரம் அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாகவும், அங்கு ட்ரம்பைச் சந்திப்பேன்
என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e93286d-6f89-4a44-885e-a21e7f1d0404/26-6a63d746e0364.webp' /></p><p>

மேலும், சமீபத்தில் காலமான அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இறுதிச்
சடங்கிலும் ஜெலன்ஸ்கி கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
</p><p>
ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு 10 முறை உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டு,
உக்ரைனுக்கு அமெரிக்க ஆதரவையும் ரஷ்யா மீதான தடைகளையும் தீவிரமாக வலியுறுத்திய
லிண்ட்சே கிரஹாம், உக்ரைனின் முக்கிய ஆதரவாளராகத் திகழ்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T21:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பயங்கர உயிர்மாய்ப்பு படை தாக்குதல்: 12 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deadly-attack-pakistan-15-people-1784927470"></link>
            <id>https://tamilwin.com/article/deadly-attack-pakistan-15-people-1784927470</id>
            <summary type="text">பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலை
படைத் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலை
படைத் தாக்குதலில் 12 இராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 15 பேர்
உயிரிழந்துள்ளனர்.
</p><p>
மேலும் பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடி மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தைக்
குறிவைத்துத் தற்கொலைப்படை உறுப்பினர் ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட
வாகனத்தை மோதி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.</p><p></p><h2>தீவிரத் தேடுதல் வேட்டை</h2><p> வெடிவிபத்தின் வீரியத்தால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்களும் பலத்த
சேதமடைந்தன. ஆஃப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாகத்
தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc138eca-7bbe-4131-9eb4-32e0152cabe3/26-6a63d5a55e12b.webp' /></p><p>

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை
என்றாலும், பாகிஸ்தான் தலிபான் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான்
பாகிஸ்தான் அமைப்பு அல்லது அதன் ஆதரவுப் பிரிவினர் இதில் ஈடுபட்டிருக்கலாம்
எனச் சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, எல்லைப்
பகுதிகளில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் தீவிரமடைந்துள்ளதாகக்
கூறப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினர் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
</p><p>
தப்பிச் சென்ற பயங்கரவாதிகளைத் தேடும் நோக்கில் தீவிரத் தேடுதல் வேட்டை
தொடங்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிவு
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T21:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவை திணறடித்த நீதிமன்றம் - தமிழ் எம்பிக்களுக்கு அநுர அரசு விடுக்கும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-mp-court-tamil-mps-anura-govnt-1784916092"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-mp-court-tamil-mps-anura-govnt-1784916092</id>
            <summary type="text">நீதிமன்றத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.&amp;nbsp;இந்நிலையில், இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p>இந்நிலையில், இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.</p><p> </p><p> 

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.</p><p>ஆனால், இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சபை அமர்வின்போது அர்ச்சுனா இராமநாதன் கூறினார்.&nbsp;</p><p>எனவே, அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் இருந்தபோது, ​​அவரை கைது செய்ய நீதிமன்றம் எவ்வாறு பிடியாணை பிறப்பித்தது என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0SEwM9rO9g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T19:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற 317 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பெருள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cocaine-worth-317-million-smuggled-to-europe-1784918535"></link>
            <id>https://tamilwin.com/article/cocaine-worth-317-million-smuggled-to-europe-1784918535</id>
            <summary type="text">மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில், ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார்
$317 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல்
செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில், ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார்
$317 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல்
செய்துள்ளனர்.
</p><p>
இது அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாகும்.</p><p>

தலைநகர் மன்ரோவியாவிற்கு கிழக்கே உள்ள டுவாசோன் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில்
சோதனை நடத்திய காவல்துறையினர், 3,971 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளைக்
கைப்பற்றினர்.</p><p></p><h2>இருவர் கைது&nbsp;</h2><p>

அட்டைப்பெட்டிகள் மற்றும் பயணப் பைகளில் 'கோகோ' மற்றும் 'போஸைடான்' எனக்
குறியிடப்பட்டு இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர்
ஸ்பெயின் மற்றும் கொலம்பியா நாடுகளின் கடவுச்சீட்டுகளையும், மற்றொருவர்
செர்பிய நாட்டின் கடவுச்சீட்டையும் வைத்துள்ளனர்.</p><p>
</p><p>
தென் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு கொக்கைன் கடத்துவதற்குப்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை ஒரு முக்கிய
இடைத்தாவளமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5710e7ca-ee91-46e9-bcd8-93bf8de3623f/26-6a63bf4fe60a7.webp' /></p><p>
</p><p>
கடந்த மாதமும் மன்ரோவியா விமான நிலையத்தில் $19 மில்லியன் மதிப்பிலான கொக்கைன்
பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்போது உலக அளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களின் பாதைகளை மாற்றி,
பெருமளவிலான போதைப்பொருட்களை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சேமித்து வைத்து
கடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு
அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T19:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் தாயகத்தில் 200 உயிர்களை காப்பாற்றிய கனேடிய தொண்டு நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/quality-baker-in-canada-batticaloa-lady-operation-1784912299"></link>
            <id>https://tamilwin.com/article/quality-baker-in-canada-batticaloa-lady-operation-1784912299</id>
            <summary type="text">கனடாவை வாழ்விடமாக கொண்ட பாடகர் செந்தில் குமரன் தனது நிவாரண அமைப்பின் ஊடாக பாடல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து, அதன் ஊடாகவும், அங்குள்ள கனடா கந்தசுவாமி ஆலய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவை வாழ்விடமாக கொண்ட பாடகர் செந்தில் குமரன் தனது நிவாரண அமைப்பின் ஊடாக பாடல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து, அதன் ஊடாகவும், அங்குள்ள கனடா கந்தசுவாமி ஆலயத்தில் பக்தர்கள் வழுங்கும் நிதியூடாகவும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்து வருகின்றார்.</p><p>அதன்படி, இலங்கையில் தமிழர் தாயகமெங்கும் அரசாங்க மருத்துவமனைகளின் பணி புரியும் இதயநோய் நிபுணர்களான வைத்தியர்கள் லஷ்மன், குருபரன், அருள்நிதி, ரகுநாதன், அரவிந்தன், ஜெரால்டு, ஜெயகாந்தன், விநோதன், ஹார்திக், போன்றோர் ஊடாக அவசரமாக சிகிச்சை செய்ய வேண்டும் என்று அடையாளபடுத்துகின்ற நோயாளிகளுக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து அவர்களின் உயிர்களை காப்பாற்றி வருகிறார்.</p><p></p><h2>200ஆவது சத்திர சிகிச்சை</h2><p> இந்த உதவியில் பயனடைந்தோர் முழுவதும் சிறு பிள்ளைகள் மற்றும் இளம் குடும்பஸ்தர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 200ஆவது சத்திர சிகிச்சை, மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த வசந்தி அமல்ராஜுக்கு நடைபெற்று முடிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16c5a763-17d2-48fc-959b-386ef6165eb2/26-6a63aef7a6d50.webp' /></p><p>
</p><p>இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இலங்கையில் உள்ள பிரபலமான சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் காந்திஜி, மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் லுஷாந்த இருதய நோய் நிபுணர்கள் மற்றும் அவர்களுடன் இயங்கும் வைத்திய குழு, செந்தில் குமரனின் வேண்டுகோளை ஏற்று, தங்கள் நேரத்தை இலவசமாக வழங்கிட்டு இப்பணியில் அவருடன் சேர்ந்து உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள். </p><p>கொழும்பிலுள்ள லங்கா மருத்துவமனையும் இவர் ஊடாக வரும் அனைத்து சிகிச்சைகளுக்கும் சிறப்பு கட்டணத்தை வழங்கி உதவி புரிகின்றனர்.
</p><p>இதய சத்திர சிகிச்சைகள் மட்டுமல்லாது யாழ் போதனா வைத்தியசாலையின் இதய சத்திர சிகிச்சை பிரிவிற்கு தேவைப்பட்ட நான்கு கோடி மதிப்புள்ள இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம், மூன்று கோடி செலவில் மல்லாவி மற்றும் முல்லைத்தீவில் குருதி&nbsp;சுத்திகரிப்பு நிலையங்கள், அவரச இதய நோய் பிரிவு என்று மக்களுக்கு அவசியம் தேவைப்படும் மருத்துவ கட்டுமானங்களையும் கருவிகளையும் ஸ்தாபித்து இந்த நிறுவனம் பெரும் சேவையாற்றி வருகிறது.&nbsp;</p><p> செந்தில் குமரன், தான் சேர்க்கும் நூறு வீதமான நிதியினை இச்சேவைகளுக்கு வழங்கி, முழு நிதி விவரங்களை ஆண்டு தோறும் வெளியிட்டு வெளிப்படை தன்மையுடன் இயங்குவதால் அவருக்கு கனடா மட்டுமல்லாது புலம் பெயர் மக்களின் பெரும் ஆதரவு இருப்பதனை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T18:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு: தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/skeleton-wearing-a-raincoat-semmani-request-1784912174"></link>
            <id>https://tamilwin.com/article/skeleton-wearing-a-raincoat-semmani-request-1784912174</id>
            <summary type="text">செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம்(23.7.2026) அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஓகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம்(23.7.2026) அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஓகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக்கப்படவுள்ளது.
</p><p>
அதேவேளை குறித்த என்பு கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள்
தெரிந்திருந்தால், அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணி
வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு இன்றைய தினம்
அகழ்ந்து எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p> </p><p>அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற
பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/502298fe-4c24-441d-a4da-ff96650935f8/26-6a63993068598.webp' /></p><p>குறித்த என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் ,
அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் , நீதிமன்ற பதிவாளருக்கோ , சட்டத்தரணி
ஊடாக நீதிமன்றுக்கோ , காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு
கேட்டுக்கொள்கிறோம்.</p><p>அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள்
சில வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T17:53:38+00:00</updated>
        </entry>
    </feed>
