<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-19T17:42:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: பரிசீலனை மனுத் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-issued-regarding-imran-khan-1787161004"></link>
            <id>https://tamilwin.com/article/order-issued-regarding-imran-khan-1787161004</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச
நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அரசாங்கம் பரிசீலனை
மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.</p><h2>பரிசீலனை மனு</h2><p>
</p><p>
ராவல்பிண்டியின் அடியாலா சிறையிலுள்ள இம்ரான் கானை இஸ்லாமாபாத்திலுள்ள 'ஷிஃபா
சர்வதேச வைத்தியசாலைக்கு' இரண்டு நாட்களுக்குள் மாற்றுமாறும், ஐந்து
நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அமைத்து அவருக்குச் சிகிச்சை
அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4283983-b09e-4fba-bd49-8114c423497a/26-6a85e9aed18ca.webp' /></p><p>
</p><p>
எனினும், சிறை நடைமுறைகளின்படி தண்டனை பெற்ற கைதியொருவருக்கு அரசாங்கப் பொது
வைத்தியசாலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், சிறை அதிகாரிகளின்
கருத்துக்களைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டி அரசாங்கம் இந்த பரிசீலனை மனுவைத் தாக்கல் செய்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T17:37:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: விமல், திலித் உள்ளிட்ட 6 பேரின் கருத்துக்கள் அடங்கிய சீடிக்கள் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-sumbitted-wimal-udayas-speech-cids-to-court-1787159317"></link>
            <id>https://tamilwin.com/article/cid-sumbitted-wimal-udayas-speech-cids-to-court-1787159317</id>
            <summary type="text">&amp;nbsp;ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேரின் கருத்துக்கள் அடங்கிய சீடிக்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>இதன்போது, குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஆறு பேரின் அறிக்கைகள் அடங்கிய சி.டி.க்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92552229-9101-4bca-92ea-8452766020e0/26-6a85e316a08c5.webp' /></p><p>
</p><p>முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பதிரண ஆகிய ஆறு பேரும் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பான சி.டி.க்களே இவ்வாறு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>
இதேவேளை,, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக வவுனதீவு முகாமில் இருந்த இலங்கை ஆயுதப் படையினரின் புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்புப் புத்தகம் ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
</p><p>குறித்த குறிப்புப் புத்தகத்தை பொறுப்பில் வைத்திருந்த லெப்டினன்ட் கேணலிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T17:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்: மாணவி உயிரிழப்பு- சக மாணவிகள் மருத்துவமனையில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-dies-at-eastern-university-hostel-1787157562"></link>
            <id>https://tamilwin.com/article/student-dies-at-eastern-university-hostel-1787157562</id>
            <summary type="text">கிழக்கு பல்கலைக்கழகத்தின்,&amp;nbsp; கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்
மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதுடன், அதனை கண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு பல்கலைக்கழகத்தின்,&nbsp; கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்
மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதுடன், அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>



இந்த சம்பவம் இன்று(19.08.2026) இடம்பெற்றதாக&nbsp; எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20
வயதுடைய மாணவியான கே. யாழினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><h2>
20 வயது மாணவி உயிரிழப்பு</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு
முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில்
தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
</p><p>
இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்று(19) பிற்பகல் சுமார் 12.00
மணியளவில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9076d30c-53e3-413d-a521-66721f35b611/26-6a85dcf1c159c.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவத்தை பார்த்தவுடன், அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள்
உடனடியாக உயிரை மாய்த்துக் கொண்ட&nbsp; கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும்
மீட்டு மட்டக்களப்பு&nbsp; போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.</p><h2>

இறப்பு வீதம் அதிகரிப்பு</h2><p>
இந்த நிலையில், மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சைப் பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c4ec791-e1b5-4c31-b2af-093c2b1ab373/26-6a85dcf28dd7e.webp' /></p><p> 

அத்துடன், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T17:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரான் பாஷிக்குடன் பணப் பரிமாற்றம் செய்தாரா ! – பிரபல மாடல் அழகி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-any-connection-with-shiran-basik-says-piumi-1787158686"></link>
            <id>https://tamilwin.com/article/no-any-connection-with-shiran-basik-says-piumi-1787158686</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினுர் சிரான் பாஷிக்குடனான தொடர்புகள் குறித்து பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி விளக்கமளித்துள்ளார்.
போதைப்பொருள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினுர் சிரான் பாஷிக்குடனான தொடர்புகள் குறித்து பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி விளக்கமளித்துள்ளார்.
</p><p>போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சிரான் பாஷிக் என்பவருடன் தான் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
</p><p>தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், சிரான் பாஷிக் என்ற நபரை தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c47dfb0-248d-41f7-bb5b-4f6d7f47e477/26-6a85e09f96168.webp' /></p><p>
</p><p>தன்னிடம் இருப்பது தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே எனவும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ சொந்தமான பணம் எதுவும் தன்னிடம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
பியுமி ஹன்சமாலி தொடர்பில் காலத்திற்கு காலம் இவ்வாறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தன்னை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ள பியூமி ஹன்சமாலி, தான் ஒருபோதும் பொய்யான தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>இதனிடையே, பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சிரான் பாஷிக், அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p>
அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>அங்கு சிரான் பாஷிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எனினும், பியூமி ஹன்சமாலி தனது சமூக ஊடகப் பதிவில், சிரான் பாஷிக்குடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அவருடன் பணப் பரிமாற்றம் மேற்கொண்டதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-are-ready-for-referendom-says-nalinda-1787158161"></link>
            <id>https://tamilwin.com/article/we-are-ready-for-referendom-says-nalinda-1787158161</id>
            <summary type="text">&amp;nbsp;22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அரசாங்கம் மதித்து செயற்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>இந்த விவகாரம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் செப்டெம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49baa8ac-1842-4e6a-a8bb-dc272c0c4c99/26-6a85de93104c8.webp' /></p><p>
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் குறிப்பிட்டார்.</p><p> மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என மேலும் கூறினார்.</p><p>நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என தீர்மானிக்கப்பட்டால், அதற்கேற்ப செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம் எனவும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், அதற்கும் நாம் தயாராக உள்ளோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:49:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஆதரவுக்கு ஈராக் பிரதமர் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iraqi-pm-praises-iran-s-supportive-stance-1787157200"></link>
            <id>https://tamilwin.com/article/iraqi-pm-praises-iran-s-supportive-stance-1787157200</id>
            <summary type="text">&amp;nbsp;ஈராக்கிற்கு ஈரான் வழங்கிய ஆதரவையும், குறிப்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புக்கு எதிரான போரின்போது வழங்கிய உதவியையும் ஈராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈராக்கிற்கு ஈரான் வழங்கிய ஆதரவையும், குறிப்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புக்கு எதிரான போரின்போது வழங்கிய உதவியையும் ஈராக் பிரதமர் அலி அல்-சைதி பாராட்டியுள்ளார்.
</p><p>ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் காலிபாப் ஈராக்கிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவருடன் இடம்பெற்ற சந்திப்பில் ஈராக் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துதல், கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d6b097-56ee-4367-b82b-30b10526aa41/26-6a85dad288e02.webp' /></p><p>
</p><p>மேலும், ஈரான்–ஈராக் உறவுகளை மேலும் மேம்படுத்தவும், இரு நாட்டு மக்களின் பொதுவான நலன்களை அடைவதற்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஈராக் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை காலிபாப் பாராட்டியுள்ளார்.</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் பலத்தை பயன்படுத்துவோம் – இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-to-use-force-wherever-and-necessary-1787156545"></link>
            <id>https://tamilwin.com/article/israel-to-use-force-wherever-and-necessary-1787156545</id>
            <summary type="text">இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்கள் உருவாகுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்கள் உருவாகுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயால் சாமிர் தெரிவித்துள்ளார்.</p><p>
சிரியாவில் உள்ள விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பின்னர், இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள முதலாவது கருத்தாக இது அமைந்துள்ளது.</p><p>
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள தெற்கு சிரியா பகுதிகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது எயால் சாமிர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஹீப்ரு மொழி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b1cf81-3ae2-42d8-b704-f3f9254c8895/26-6a85d843268ba.webp' /></p><p>
</p><p>“எமது எல்லைகளுக்கு அருகில் விரோத சக்திகள் தங்களது இருப்பை நிலைநிறுத்துவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் எமது இராணுவ பலத்தை துல்லியமாக பயன்படுத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
</p><p>இதேவேளை, சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகிலுள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.</p><p>
துருக்கி இராணுவத்தினர் குறித்த விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
</p><p>இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையில் பாதுகாப்பு விவகாரங்களில் தற்போதைய நிலையைத் தொடர்வது தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டிருந்ததாகவும், ஆனால் துருக்கி இராணுவத்தினரை விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்துவதற்கு அனுமதிப்பதன் மூலம் டமாஸ்கஸ் அந்த உடன்பாட்டை மீறும் நிலைக்கு சென்றிருந்ததாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
</p><p>எனினும், இஸ்ரேலின் இந்தக் குற்றச்சாட்டுகளை துருக்கி நிராகரித்துள்ளதுடன், அவை “அடிப்படையற்றவை” என தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி கமராக்கள் வழியாக கண்காணிக்கும் மொசாட் - நினைப்பதைவிட அருகில் அவர்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mossad-monitors-via-phone-cameras-1787156092"></link>
            <id>https://tamilwin.com/article/mossad-monitors-via-phone-cameras-1787156092</id>
            <summary type="text">உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் குறிவைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் குறிவைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
நாம் 24 மணி நேரமும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலம் எமது நடவடிக்கைகள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குரல் பதிவுகள் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, எங்கோ இருக்கும் மூன்றாம் தரப்பினருக்கு சென்றடைய வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p>

இதன் காரணமாக, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தொலைபேசி பயன்பாட்டை தவிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதேவேளை, பயனர்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு வரும் ஐபோன்கள் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் கமராக்கள் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
இது போன்ற நாம் அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வருகிறது “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-19T16:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வருடங்களாக போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் மக்கள் - கிளிநொச்சியில் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-demanding-reconstruction-of-kilinochchi-1787153708"></link>
            <id>https://tamilwin.com/article/protest-demanding-reconstruction-of-kilinochchi-1787153708</id>
            <summary type="text">கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(19....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(19.08.2026) வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
விஸ்வமடு சந்தியில் இருந்து பிரமந்தனாறு பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியின் சுமார் இரண்டு கிலோமீட்டர் பகுதி ஏற்கனவே புனரமைக்கப்பட்டு காபெட் வீதியாக காணப்படுகிறது. எனினும், எஞ்சியுள்ள சுமார் மூன்று கிலோமீட்டர் வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
16 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி</h2><p>

குறித்த வீதி புனரமைக்கப்படாத பிரச்சினை சுமார் 16 வருடங்களுக்கும் மேலாக தொடர்வதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் நாளாந்த போக்குவரத்து நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ee1d30-153e-4e75-a419-d9af8395f441/26-6a85cdc667f4a.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதிலும், கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இந்த வீதியின் மோசமான நிலை பாதிப்பை ஏற்படுத்துவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், பிரமந்தனாறு பிரதான வீதியின் எஞ்சிய பகுதியையும் விரைவாக புனரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a21d2f-aedf-4e6d-8827-bac728475daf/26-6a85cdc76f039.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T15:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் 6 பில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு - இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allegations-of-6-billion-rupees-fraud-goverment-1787152842"></link>
            <id>https://tamilwin.com/article/allegations-of-6-billion-rupees-fraud-goverment-1787152842</id>
            <summary type="text">தேசிய மக்கள் கட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட காலி, போப் போத்தல பிரதேச சபையைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, மயானக் கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் கட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட காலி, போப் போத்தல பிரதேச சபையைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, மயானக் கட்டுமானத்தில் முறைகேடுகள் மற்றும் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நடவடிக்கை இன்று(19.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>



மயான கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள மோசடி</h2><p>
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,</p><p>


மயானக் கட்டுமானங்கள் திட்டம் கொள்முதல் நடைமுறையின்படியும், முறையான ஒப்புதல் இல்லாமலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f6b107-b743-494f-a8b6-7fbc35a40cb3/26-6a85ca1f84f65.webp' /></p><p>
</p><p>
இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப ஒப்பந்தத் தொகை சுமார் ரூ. 3.5 மில்லியனாக இருந்தபோதிலும், ரூ. 6 பில்லியனுக்கும் அதிகமான புதிய மதிப்பீடு சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது பொதுமக்களின் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்பதால், கொள்முதல் நடைமுறையும் முறையான ஒப்புதலும் புறக்கணிக்கப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T15:22:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாராதிபதி ஒருவரின் இரட்டை வேடம் அம்பலம்: மனைவிக்கு சொகுசு காரும் இருமாடி வீடும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778"></link>
            <id>https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778</id>
            <summary type="text">கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் தேடிப்பார்த்ததில் இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது.
ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் நல்ல கணவராகவும் இருந்துள்ளார். </p><p>தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு விசித்திரமான இரட்டை வேடம் தரித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>விகாராதிபதி போட்ட இரட்டை வேடம்</h2><p>சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில் இருந்துள்ளார். இவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
</p><p>குருநாகலையில் அமைந்துள்ள மணமகளின் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது. 
தான் திருமணம் செய்தது ஒரு பௌத்த துறவியை என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்தே இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb84cbb-d298-47cf-8a06-5c19944c3a63/26-6a857fa964808.webp' /></p><p>அனைத்தும் தெரிந்தே இந்த காரியத்தை செய்துள்ளனர். பின்னர் குருநாகலை பகுதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டில் அப்பெண்ணை அவரது பெற்றோருடனும் தனது குழந்தையுடன் குடியமர்த்தியுள்ளார்.
</p><p>ஊர் மக்களுக்குச் சந்தேகம் வராதிருக்க விக் அணிந்து கொண்டு பிரதேச செயலகத்தின் அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என்று அப்பெண்ணின் வீட்டாரிடமும் ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.</p><h2>நான்கு இலட்சம் ரூபா</h2><p>
</p><p>மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விகாரையிலிருந்தும் தான தர்மங்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று 5-6 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.</p><p>பின்னர் விகாரையிலிருந்து கொண்டு வந்த உணவை ஊர் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f939cb-0b09-4af8-a318-2a1feaf9251d/26-6a857faa1a28f.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டில் இருக்கும் பரோபகாரிகளிடம் விகாரையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி 2-3 இலட்சம் ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார். </p><p>அந்தப் பணத்தையே இந்தப் பெண்ணுக்குச் செலவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி விகாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார். </p><p>இவை தெரியவந்ததை அடுத்து குறித்த தேரர் விகாரைக்கு வந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/O8f4RVu6rWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-19T14:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fundamental-responsibility-constitution-democrati-1787148950"></link>
            <id>https://tamilwin.com/article/fundamental-responsibility-constitution-democrati-1787148950</id>
            <summary type="text">இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அரச
நிறுவனங்களினதும் சுயாதீன ஆணைக்குழுக்களினதும் நியமனங்களில் அனைத்து
சமூகங்களினதும் நியாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அரச
நிறுவனங்களினதும் சுயாதீன ஆணைக்குழுக்களினதும் நியமனங்களில் அனைத்து
சமூகங்களினதும் நியாயமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டியது
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் அடிப்படைப் பொறுப்பாகும்.</p><p>

இருப்பினும், அண்மையில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம்
சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நியமிக்கப்படாமை மிகுந்த கவலையையும்
அதிர்ச்சியையும் அளிக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;விகிதாசார அடிப்படை</h2><p>
</p><p>ஊடகங்களுக்கு இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>


கடந்த காலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்கள் இவ்வாறான
ஆணைக்குழுக்களை நியமிக்கும் போது, நாட்டின் மூவின சமூகங்களினதும்
பிரதிநிதித்துவத்தை விகிதாசார அடிப்படையில் பேணி வந்த வரலாறு இங்கு
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b047430-9ab3-4c58-ab1e-b0f0b89d6e77/26-6a85bbf6b73c8.webp' /></p><p>

"இன, மத பாகுபாடற்ற ஆட்சி மாற்றம்", "வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற
முழக்கங்களுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், எல்லை நிர்ணய ஆணைக்குழு
நியமனத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டமை குறித்து வினவியபோது
வழங்கிய விளக்கம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p> "துறை சார்ந்த
தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களே நியமிக்கப்பட வேண்டும்; அதற்கான தகுதி
தராதரங்கள் புள்ளி அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு முறையான வழிமுறையிலேயே
நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் தரப்பில் கூறப்படும் பதிலானது,
மறைமுகமாக "முஸ்லிம் சமூகத்தில் இப்பதவிக்குத் தகுதியானவர்கள் இல்லை" என்று
சொல்வது போல் அமைந்துள்ளது.</p><h2>சிறுபான்மைச் சமூகம்</h2><p>

அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான
நியமனங்களுக்கும் — அனைத்து மட்டங்களிலும் "தகுதி" மற்றும் "துறை சார்
தொழில்நுட்ப அறிவு" என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு
வருவது நியாயமான ஒன்றா? அரச உயர் பதவிகளுக்கும் தொழில்நுட்பக் குழுக்களுக்கும்
பங்களிப்பு செய்யக்கூடிய தகுதியும் ஆளுமையும் மிக்க பல புத்திஜீவிகளும்
நிபுணர்களும் முஸ்லிம் சமூகத்தில் அங்கம் வகிக்கும் சூழலில், இத்தகைய
நியாயங்கள் முன்வைக்கப்படுவது எமது பிரதிநிதித்துவ உரிமையை அப்பட்டமாக
மறுக்கும் செயலாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a7960e-5879-46d8-b8dd-40be7145aa4a/26-6a85bbf60e9b4.webp' /></p><p>

பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளையும்
பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய அரசு, தகுதி என்ற காரணியைச் சாட்டாக
வைத்து எமது சமூகத்தைப் புறக்கணிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
</p><p>
இக்கட்டான இந்த வரலாற்றுச் சூழலில், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், சமூகச்
சிந்தனையாளர்களும், புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து, எமது சமூகத்தின் நியாயமான
பிரதிநிதித்துவ உரிமைகளை வென்றெடுக்கச் சாதுரியமாகவும் தீவிரமாகவும்
சிந்தித்துச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-19T14:21:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/food-prices-up-25-due-to-el-nino-1787144284"></link>
            <id>https://tamilwin.com/article/food-prices-up-25-due-to-el-nino-1787144284</id>
            <summary type="text">உலகளாவிய விவசாயத் துறையை பாதித்துள்ள எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, எதிர்வரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய விவசாயத் துறையை பாதித்துள்ள எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
கடல் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள், அத்துடன் முக்கிய உணவு உற்பத்தி நாடுகள் தமது உள்நாட்டு நுகர்வை உறுதி செய்வதற்காக ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகியவை விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.</p><h2>ஏற்றுமதிக்கு தடை&nbsp;</h2><p>
</p><p>
தற்போது இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், இதன் காரணமாக பிரேசில் போன்ற தொலைதூர நாடுகளிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p> இதனால் போக்குவரத்து செலவும், இறக்குமதிக்கான கால அவகாசமும் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dd03e1d-bd0a-43ca-bafa-a0de74697b57/26-6a85b6a64e302.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு அறிவித்துள்ளனர்.
</p><p>
இந்தியாவும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகி வருவதாக அந்தச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><h2>உலகளாவிய நிலைமை&nbsp;</h2><p>

அவ்வாறான நிலை ஏற்பட்டால், நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும், அதன் காரணமாக அதிகரிக்கும் கடல் போக்குவரத்து கட்டணங்களால் விலைகள் மேலும் உயரக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13623a51-1b7b-4547-afda-7b2ac703bb56/26-6a85b6a581db4.webp' /></p><p> </p><p>ஏற்கனவே கடல் போக்குவரத்து கட்டணங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை பருப்பு, சர்க்கரை, கோதுமை, சில வகையான அரிசி மற்றும் டின் மீன் உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வருவதால், இந்த உலகளாவிய நிலைமை இலங்கையின் உள்நாட்டு சந்தையிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T14:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பில் பரபரப்பு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrest-spread-false-inform-l-t-t-e-training-camp-1787109879"></link>
            <id>https://tamilwin.com/article/arrest-spread-false-inform-l-t-t-e-training-camp-1787109879</id>
            <summary type="text">புதிய இணைப்புசமூக வலைத்தளங்களில் காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சரிபார்க்கப்படாத தவறான தகவல்களை வழங்கிய நபரை, எதிர்வரும் செப்டம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சமூக வலைத்தளங்களில் காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சரிபார்க்கப்படாத தவறான தகவல்களை வழங்கிய நபரை, எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>மு<span style="color: inherit; font-size: 1.75rem;">தலாம் இணைப்பு</span></h2><p>சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சரிபார்க்கப்படாத தவறான தகவல்களை வழங்கிய ஒருவரை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.</p><p>

இந்த சந்தேக நபர் நேற்று (18.08.2026) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><h2>இன்று நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படுவதாக, சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு மூலம் சரிபார்க்கப்படாத பொய்த் தகவலைப் பரப்பிய குற்றத்திற்காக இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d596dd-6c85-4b06-86d0-59e3afe82e59/26-6a85262a1b8ae.webp' /></p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பெல்லன்விலவில் உள்ள பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் ஆவார்.
</p><p>
இந்தச் சந்தேக நபர் இன்று(19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p><p>மேலும், இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்படி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T13:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றுடன் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-of-chemmani-human-grave-completed-1787145783"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-of-chemmani-human-grave-completed-1787145783</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்று(19.08.2026)
புதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான இன்று(19.08.2026)
புதன்கிழமை இறுதிநாள் அகழ்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது.
</p><p>
செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட
அகழ்வு பணிக்காக 54 நாட்களும், மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும்
நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11f977c2-d419-420a-b91f-f3b1700852e5/26-6a85aed4e28ad.webp' /></p><p>
</p><p>
இதன் அடிப்படையில், இதுவரை செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு
பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை
அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T13:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் ஆட்சியில் நடந்த மோசடி - குற்றத்தை ஒப்புக் கொண்ட முக்கிய அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-trump-adviser-pleads-guilty-1787142654"></link>
            <id>https://tamilwin.com/article/former-trump-adviser-pleads-guilty-1787142654</id>
            <summary type="text">அமெரிக்காவின் தொற்றா நோய் தொடர்பான மூத்த நிபுணரான அந்தோனி பௌசியின் முன்னாள்
ஆலோசகர் ஒருவர், கோவிட்-19 தொற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிதியுதவிகள் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தொற்றா நோய் தொடர்பான மூத்த நிபுணரான அந்தோனி பௌசியின் முன்னாள்
ஆலோசகர் ஒருவர், கோவிட்-19 தொற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிதியுதவிகள் மற்றும்
அது தொடர்பான அரசாங்கப் பகிரங்க ஆவணங்களை மறைப்பதற்குச் சதி செய்தார் என்ற
குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் அலர்ஜி மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் மூத்த
அதிகாரியாகப் பணியாற்றிய 78 வயதான டேவிட் மோரன்ஸ் என்பவரே, மேரிலாந்திலுள்ள
கூட்டாட்சி நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஐந்து வருட சிறைத்தண்டனை</span></p><p>
பொதுத்தகவல் சட்டங்களின் கீழ் கோரப்படும் ஆவணங்களை வழங்குவதைத் தவிர்க்கும்
வகையில், அரசாங்க உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகளுக்குப் பதிலாகத் தனது
தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறியதாக இவர்
மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdd417fc-ba25-4921-b0a6-9eedcdab90d1/26-6a85a5b626db2.webp' /></p><p>

இந்தச் சதித்திட்டக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிர்வரும் நவம்பர் மாதம்
தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்படவுள்ளதுடன், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை
சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T12:46:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதாரப் பரிசோதனை என்ற பெயரில் மாணவர்களிடம் தகாத செயல்: பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/phi-who-was-involved-in-inappropriate-activities-1787142370"></link>
            <id>https://tamilwin.com/article/phi-who-was-involved-in-inappropriate-activities-1787142370</id>
            <summary type="text">கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப்
பரிசோதனைகள் இடம்பெற்றபோதே இந்த தகாத சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h2>சுகாதாரப் பரிசோதனை</h2><p>
சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த அதிகாரி தங்களுக்கு உடல ரீதியாகவும் மன
ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 20ற்கும் மேற்பட்ட மாணவர்களின்
பெற்றோர்கள் ஒன்றிணைந்து, கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைப் பாடசாலை
அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56333a3b-3d2b-4597-82fe-2bc27a0b0a17/26-6a85a52abeed8.webp' /></p><p>
</p><p>
முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்றையதினம் (19) பாடசாலை அதிபர், பாதிக்கப்பட்ட
மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வாக்குமூலம் வழங்குவதற்காகக்
கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.</p><p>

அதேவேளை,
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான பொதுச்சுகாதார பரிசோதகரையும் வாக்குமூலம்
அளிப்பதற்காக உடனடியாகச் சமூகமளிக்குமாறு பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.</p><h2>உடனடி நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தேசிய சிறுவர் பாதுகாப்பு
அதிகார சபையின் 1929 என்ற அவசர அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0773067a-4a57-40d6-9240-7bdee475f95a/26-6a85a529cdfac.webp' /></p><p>

அதனடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட அதிகார சபை, கல்முனைத் தலைமையகப்
பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்டச் சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவினருக்கு
உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின்
வழிகாட்டலில், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த
களுவாராய்ச்சி தலைமையில், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி
திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இச்சம்பவம்
தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T12:46:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வருடங்களாக இலங்கை மக்களை மகிழ்வித்த ஒட்டகசிவிங்கி உயிரிழப்பு - இறக்கும் தருவாயில் செய்த சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/giraffe-dies-in-dehiwala-1787141618"></link>
            <id>https://tamilwin.com/article/giraffe-dies-in-dehiwala-1787141618</id>
            <summary type="text">தெஹிவளை விலங்கியல் பூங்காவில் வசித்து வந்த வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று நேற்று(18.08.2026) இரவு உயிரிழந்ததாக இலங்கையின் தேசிய விலங்கியல் பூங்காக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை விலங்கியல் பூங்காவில் வசித்து வந்த வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று நேற்று(18.08.2026) இரவு உயிரிழந்ததாக இலங்கையின் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
</p><h2>
ஆயுட்காலத்தை தாண்டி வாழ்ந்த ஒட்டகசிவிங்கி</h2><p>
மேற்படி அறிக்கையில், </p><p>

இறக்கும் தருவாயில் அந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ஏறக்குறைய முப்பது வயது இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
காடுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 20-25 ஆண்டுகள் ஆகும், மேலும் நன்கு நிர்வகிக்கப்படும் விலங்கியல் பூங்கா சூழலில் அவை நீண்ட காலம் வாழக்கூடும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dece6196-d2c8-432b-a717-7b6de3ea65ac/26-6a859ecf05e68.webp' /></p><p>

அதன்படி, இந்த ஒட்டகச்சிவிங்கி நீண்ட காலம் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இறப்பதற்கு முன்பு இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு எந்தவொரு சிறப்பு மருத்துவ நிலையும் இருந்ததாகத் தெரிவிக்கப்படவில்லை. </p><h2>

மரணத்திற்கான காரணம்</h2><p>
மேலும் விலங்கின் வயதாவதால் ஏற்பட்ட ஒரு இயற்கையான நிலையால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், பிரேத பரிசோதனைகள் இன்று(19) நடத்தப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f005228-99ff-4908-9d85-963ef8b9c54c/26-6a859ecfaf36e.webp' /></p><p>
</p><p>
விலங்கு நலன், மரபணுப் பன்மையை பேணுதல் மற்றும் விலங்குப் பாதுகாப்பு ஆகிய நோக்கங்களுடன் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் விலங்குப் பரிமாற்றத் திட்டங்களின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு புதிய ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள் தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.&nbsp;</p><p></p><p><br><br><b><i>YOU MAY LIKE THIS..</i></b></p><hr><p><b><i><br></i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8FJx6wmoAJU" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T12:18:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்த மாதம் பயணிகள் ட்ரோன் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-test-passenger-drone-pilot-september-1787139054"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-test-passenger-drone-pilot-september-1787139054</id>
            <summary type="text">பயணிகள் ட்ரோன் சேவையை அடுத்த மாதம் சோதனை செய்ய இலங்கை தயாராகி வருகின்றது என்றும், ஆறு மாதங்களுக்குள் வணிகச் செயல்பாடுகளை நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணிகள் ட்ரோன் சேவையை அடுத்த மாதம் சோதனை செய்ய இலங்கை தயாராகி வருகின்றது என்றும், ஆறு மாதங்களுக்குள் வணிகச் செயல்பாடுகளை நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.
</p><p>
ஆரம்பத் திட்டத்தின்படி, பயணிகள் ட்ரோன்கள் 25 கிலோமீட்டர் வரையிலான தூரத்திற்கு இயக்கப்படும், அதே நேரத்தில் சுற்றுலாத் தலங்களை நோக்கிய இரண்டு பறக்கும் பாதைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
</p><h2>ஆறு மாதங்களுக்குள் இலங்கையில்</h2><p>
முன்னோடித் திட்டத்தின் முதல் கட்டம், கொழும்பிலிருந்து தென்கடற்கரை நோக்கிய வழித்தடங்களிலும், கட்டுநாயக்க மற்றும் துறைமுக நகரத்திற்கு இடையேயான வழித்தடங்களிலும் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57d28b0d-45cd-4804-8314-1cc3fa04f9ae/26-6a859bbe98ce4.webp' /></p><p>
செப்டெம்பர் மாதத்தில் இரண்டு விமானங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என்றும், முன்னோட்டத் திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களில் வழித்தடத் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் கொடிதுவக்கு தெரிவித்தார்.</p><p>சுற்றுலா மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் ஒரு வழிமுறையாக இந்த முன்னெடுப்பு ஆராயப்பட்டு வரும் நிலையில், அவசரகால மற்றும் பேரிடர் மீட்புப் பணிகள் அத்துடன் கடல்சார் மற்றும் கடற்படைத் தேவைகளுக்கான சாத்தியமான பயன்பாடுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஒப்பீட்டளவில் குறைந்த இடமே தேவைப்படுகிறது என்பது அவற்றின் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும் என்று பிரதி அமைச்சர் கூறினார்.
</p><p>
ஆரம்பகட்ட சோதனைகளைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் வணிக ரீதியான பயணிகள் ட்ரோன் சேவையை நிறுவ அரசாங்கம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T12:09:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதியிடம் இலஞ்சம் கேட்ட பொலிஸ் அதிகாரிகள் கைது- பணத்தை தேடிச் சென்ற இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officers-arrested-bribe-from-prisoner-1787139735"></link>
            <id>https://tamilwin.com/article/police-officers-arrested-bribe-from-prisoner-1787139735</id>
            <summary type="text">ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக
ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக
ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ்
அதிகாரிகளுக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(19.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்ட
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் பிரகலதன்
மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் (91775) ஹசன் மௌலானா அனுஹர் ஆகிய இரு பொலிஸ்
அதிகாரிகளுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைதியிடம் இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது</span></p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி, 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை
வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரைச் சாய்ந்தமருது பொலிஸார் கைது
செய்தனர்.

 குறித்த சந்தேகநபர் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb17d287-040c-4992-b3d0-76e87454d3a2/26-6a85980214b04.webp' /></p><p>
</p><p>
இதன்போது, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகக்
கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் பிரகலதன், போதைப்பொருள் வழக்கு தொடர்பில்
நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை (B-Report) மூலம் உண்மைகளைத் தெரிவிக்காமல்,
முறையான குற்றப்பத்திரிகை (Charge Sheet) மூலமாக மட்டுமே வழக்கைத் தாக்கல்
செய்வதற்கு ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலாகச் சந்தேகநபரிடம் ரூ. 20,000
இலஞ்சமாகக் கேட்டுள்ளார்.
</p><p>
இந்த தொகையைச் செலுத்தச் சந்தேகநபர் சம்மதித்ததுடன், ஆகஸ்ட் 17 ஆம் திகதி பணத்தை
வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
</p><h2>
கையும் களவுமாக சிக்கிய பணம்</h2><p>
பணத்தைப் பெற்றுக்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், பொலிஸ் பரிசோதகர்
பிரகலதன் பெரியநிலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகப் பணி
நிமித்தம் சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0545309f-d845-4c3d-9fff-10f010ec93cc/26-6a859802c6872.webp' /></p><p> </p><p>இதனால், அவரது அறிவுறுத்தலின் பேரில் பணத்தைப்
பெற்றுக்கொள்வதற்காகப் பொலிஸ் கொன்ஸ்டபிள் அனுஹார் அனுப்பப்பட்டார்.</p><p>

அப்போது அங்குத் தயாராக இருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பணத்தைப்
பெற்றுக் கொண்ட கொன்ஸ்டபிளைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். அவரிடம்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகரும் கைது
செய்யப்பட்டார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட இவ்விரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இருவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T11:48:22+00:00</updated>
        </entry>
    </feed>
