<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-14T18:32:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க கனடா பிரதமர் மார்க் கார்னி தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mark-carney-effort-to-attract-global-investors-1789408257"></link>
            <id>https://tamilwin.com/article/mark-carney-effort-to-attract-global-investors-1789408257</id>
            <summary type="text">நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க்
கார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க்
கார்னி டொரான்டோவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
</p><p>
சுமார் 160 க்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்களுக்காக 1 டிரில்லியன் கனடிய
டொலர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் திரட்டுவதை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதில் பிளக்ரொக் தலைமை நிர்வாகி லாரி ஃபிங்க் மற்றும் பிளக்ஸ்டோன் தலைவர் ஜோன்
கிரே உள்ளிட்ட உலகின் முன்னணி நிதி நிறுவனங்களின் தலைவர்கள் பலர்
கலந்து கொண்டுள்ளனர்.</p><h2>வர்த்தக உறவு</h2><p>
</p><p>
சுரங்கம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய
துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதையே கனடா முதன்மையாக நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அல்பர்ட்டா மற்றும் நியூ பிரன்சுவிக் பகுதிகளில் தரவு மையங்கள்,
ஆல்பர்ட்டாவின் ஹைட்ரஜன் திட்டங்கள் மற்றும் கல்கரிக்கும் எட்மண்டனுக்கும்
இடையிலான அதிவேக போக்குவரத்துத் திட்டம் போன்றவை இம்மாநாட்டில் சர்வதேச
முதலீட்டாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1349d293-b5dc-4a33-9b52-d055079278b3/26-6aa8383fd6a6c.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை
ஈடுசெய்யவும், உலகளாவிய முதலீடுகளை அதிகரிக்கவும் மத்திய கிழக்கு, ஆசியா
மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்த கனடிய அரசாங்கம்
நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>
எனினும், இம்மாநாட்டின் மூலம் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும்,
மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் வரை
ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் கைது தாமதம் ஏன்..! 80 இலட்சம் ஊழல் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381"></link>
            <id>https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381</id>
            <summary type="text">தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள் விவகாரத்திலே பிள்ளையானை மட்டும் ஏன் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இவர்கள் ஏன் பிள்ளையானின் தலைவனான கருணாவை கைது செய்யவில்லை. அதாவது தற்பேோது எடுபிடிகளையும் அடியாட்களையும் தான் கைது செய்கின்றார்கள்.</p><p>

யாழ்ப்பாணத்தில் பல கடத்தல்களையும் கொலையையும் செய்த டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zJao2wvCNU4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி ராஜபக்ச பொய் சொல்லி பெற்ற 1 கோடி! நாமலுக்கு ஏற்படவுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-admit-hospital-cid-namal-1789406625"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-admit-hospital-cid-namal-1789406625</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வைத்தியசாலைக்கு சென்றாரா என்கின்ற கேள்வி எழுகின்றது.</p><p>கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>இந்த விசாரணை&nbsp;ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தரப்பினரை மையப்படுத்தியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p>மேலும்,&nbsp;CT ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக&nbsp;தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து பெறப்பட்ட ஒருகோடி ரூபாய் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9Poe2i6CulQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T17:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaint-lodged-against-chairman-police-station-1789401167"></link>
            <id>https://tamilwin.com/article/complaint-lodged-against-chairman-police-station-1789401167</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மீது பிரதேச சபை
உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்,
புதுக்குடியிருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மீது பிரதேச சபை
உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்,
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சருடன் இணைந்து பிரதேச சபையின்
உறுப்பினர்கள் இருவர் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவத்தை, பிரதேச சபை
தவிசாளர் வெளியில் கூறி செல்வதாக தெரிவித்து NPP பிரதேச சபை உறுப்பினர்
ஒருவரால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><h2>அதற்கான போதுமான ஆதாரங்கள்</h2><p>
இதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நேற்றையதினம் (13.09.2026)
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d312cdb3-4fb9-46e3-9dda-11180068e4ed/26-6aa81b541433d.webp' /></p><p>
இதன்போது, தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்து கொண்டதனை வெளியே கூறி செல்வதான
குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு
பொலிஸார் முறைப்பாட்டாளர் தரப்பினரிடம் கோரியுள்ளனர். </p><p>எனினும், அதற்கான
போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதனையடுத்து, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பினருக்கு பொலிஸாரால்
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்
இடம்பெறாத வகையில் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டு அவர்கள்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
</p><h2>சட்டரீதியான நடவடிக்கை</h2><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் வே.கரிகாலன், தாம் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட தவிசாளராக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அமைவாக
பிரதேச சபையின் அபிவிருத்திப் பணிகளையும் மக்கள் சேவையையும் முன்னெடுத்து
வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe863e7-b09b-4c00-93ab-09c112770b72/26-6aa81b552d0a4.webp' />]</p><p>ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தமது கௌரவத்தையும் நற்பெயரையும்
பாதிப்பதுடன் பிரதேச சபையின் மக்கள் சேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்
எனவும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் சட்டரீதியான
நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்.
</p><p>நாங்கள் அரசியலுக்காக அல்ல, மக்களுக்காகவே பணியாற்றுகின்றோம். மக்களின்
தேவைகளும் பிரதேசத்தின் அபிவிருத்தியுமே எமது முதன்மையான நோக்கங்கள் என
தவிசாளர் வே.கரிகாலன் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T16:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் பெண்ணை கொடூரமாக தாக்கிய இலங்கை இளைஞனை துரத்தி பிடித்த பொலிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538</id>
            <summary type="text">இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்தச் சம்பவம்&nbsp; Vicolo Fossetto பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த இலங்கையர் அலுமாரிகளில் இருந்த பல மதுபானப் போத்தல்களை எடுத்து தனது பைக்குள் மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><h2><b>பெண் மீது தாக்குதல்</b></h2><p>பணம் செலுத்தாமல் காசாளர் பகுதியைக் கடந்து வெளியேறும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார். ஊழியர் ஒருவர் அவரை அணுகி திருடப்பட்ட பொருட்களைத் திருப்பி தருமாறு கோரியுள்ளார். எனினும் அவர் ஊழியரை உடல் ரீதியாக தாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a03fafc-08cd-4e3e-aa39-7d9d716c3277/26-6aa81c6181bf1.webp' /></p><p>ஊழியரை கீழே தள்ளியதோடு, திருடப்பட்ட பொருட்களுடன் இலங்கையர் தப்பியோடியுள்ளார். </p><p> கீழே விழுந்த பெண் எழுந்து, தனக்கு உதவ நின்ற வாடிக்கையாளர் ஒருவரின் காரில் இலங்கையரை துரத்தத் தொடங்கினார். </p><p>அங்கு வசிப்பவர் ஒருவர் சந்தேக நபரை அடையாளம் கண்டு, சந்தேக நபர் எங்கு பதுங்கியிருக்கின்றார் என்பதை அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h3><b>சட்டவிரோத குடியேற்றவாசி</b></h3><p>சோதனையின் போது, பையில் திருடப்பட்ட இரண்டு மதுபானப் போத்தல்களைக் கண்டெடுத்தனர். தப்பியோடும்போது கைவிடப்பட்ட மூன்றாவது மதுபான போத்தல் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef89cfd9-9a3d-4d28-976c-4469b8d7f026/26-6aa81c6272d81.webp' /></p><p>இந்நிலையில் விற்பனை செய்யக்கூடிய நிலையில் இருந்த அனைத்துப் பொருட்களும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. </p><p>விசாரணையை தொடர்ந்து பல குற்றப் பின்னணியை கொண்டவரும் சட்டவிரோதமான குடியேற்றவாசியுமான இலங்கையர் கைது செய்யப்பட்டார். </p>]]></content>
            <updated>2026-09-14T16:10:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுர தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gove-accepted-their-loss-1789401651"></link>
            <id>https://tamilwin.com/article/gove-accepted-their-loss-1789401651</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆட்சி பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விமர்சிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியையும் அதன் தலைவர்களையும் ஜனாதிபதி விமர்சனம் செய்வது குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41c91748-caa6-4512-a337-4168e2e6f89e/26-6aa81a34d9d9e.webp' /></p><p>
நாடு முழுவதும் பிரசார கூட்டங்களை நடத்தி பொதுஜன முன்னணியை விமர்சனம் செய்வதன் ஊடாக ஜனாதிபதி தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>இந்த விடயம் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அநுரவின் கூட்டங்களில் பங்கேற்ற மக்கள் அவரது உரை தொடர்பில் எவ்வித துலங்களையும் மேற்கொளள்வில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்து செல்வதன் வெளிப்பாடேயாகும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T16:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-department-officials-bribe-1789398247"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-department-officials-bribe-1789398247</id>
            <summary type="text">மட்டக்களப்பில் கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல்
வள திணைக்கள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் மோசடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல்
வள திணைக்கள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடக
பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.</p><p>மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான
அனுமதி பத்திரம் வழங்குவதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 35 ஆயிரம் ரூபா
வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக
கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் வாங்கியுள்ளனர். </p><p>எனவே கடற்றொழில் அமைச்சர் உடன் விசாரணை செய்து அந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்குமாறு&nbsp; அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழிலாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் தமது
வாழ்வாதாரத்துக்காக எரிபொருள் விலை ஏற்றத்தின் மத்தியில் கடற்தொழிலை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77939ad8-9a04-43ee-8a67-8bc8368562a1/26-6aa817fa485f6.webp' /></p><p> இவ்வாறான நிலையில் அனுமதி பத்திரம் வழங்க பெரும் தொகை
இலஞ்சமாக பணம் வாங்கிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
</p><p>கடற்றொழிலாளர்களின் நலன் கருதி அவர்களிடம் இலஞ்சப்
பணம் வாங்கிய உத்தியோகத்தர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கடற்றொழிலாளர்களின் பணத்தை மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும்.</p><p> அத்துடன் பணம் இல்லாது அனுமதி பத்திரம் பெறமுடியாது உள்ள ஒரு சில கடற்றொழிலாளர்களுக்கும் இந்த அனுமதி பத்திரத்தை வழங்க வேண்டும் என்பதுடன் 70 ஆயிரம்
கொடுத்து இதுவரை அனுமதி பத்திரம் வழங்காத அவருக்கு அனுமதி பத்திரத்தை வழங்கி
அந்த பணத்தை மீள பெற்றுக் கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக்
கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T15:51:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்திற்குள்ளேயே நடந்த சதியால் துரோகத்தில் சிக்கிய கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> 

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக இந்த சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட, ஷிராந்தி, மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 துரோகத்தில் சிக்கிய கோட்டாபய </b></h2><p> அதற்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் அவர்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd68079-94c4-423f-b672-9bfcb0d30177/26-6aa7e23d370c4.webp' /></p><p>எனினும், வியத்மக அமைப்பை நிறுவி, அரசியல் களத்தை அமைத்துக்கொண்டு முன்னோக்கி வந்த கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தனது வேட்புமனுவை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று கோட்டாபய ராஜபகச் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
இந்த நிலையில் கோட்டாபயவிற்கு எதிராக, நாமல் ராஜபக்சவின் அரசியல் பெரிய அண்ணா என்று வர்ணிக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் அரசாங்கத்திற்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.</p><h3><b>

ராஜபக்சவின் அரசியல்</b></h3><p>இதனால், 2022ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431da20b-02c7-4d83-b5dd-592b770adb59/26-6aa7e23ded411.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்கள் இருவரும் இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் அரசியல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
</p><p>
ஆனால், தற்போது கோட்டாபய ராஜபக்சவை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவர்கள் இருவரும் உள்ளிட்ட தரப்பினர் தற்பொழுது நாமல் ராஜபக்சவுடன் கைகோர்த்து கொண்டதன் ஊடாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T15:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு சிறை ஒன்றும் புதிதல்ல..! நாட்களை எண்ணிக் காத்திருக்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/for-namal-prison-is-not-new-place-1789396666"></link>
            <id>https://tamilwin.com/article/for-namal-prison-is-not-new-place-1789396666</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவிற்கு சிறை ஒன்றும் புதிய இடம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்கள் நாமல் தொடர்பில் எழுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவிற்கு சிறை ஒன்றும் புதிய இடம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.</p><p>ஊடகவியலாளர்கள் நாமல் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நாமல் ராஜபக்ச மூன்று தடவைகள் விளக்கமறையில் அடைக்கப்பட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>எனவே அரசியல் செய்யும்போது இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்சவிற்கு பிணை</h2><p>நாமல் ராஜபக்ச நல்ல தேக ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று இயங்கி வருவதாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc3b762-98b0-4c93-a161-d436c9615d80/26-6aa806bc62f27.webp' />&nbsp;&nbsp;</p><p>
எனவே எதிர்வரும் 18 ஆம் திகதி நாமல் ராஜபக்சவிற்கு பிணை கிடைக்கும் என நம்புவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>
நாமலின் சட்டத்தரணிகள் பிணை பெற்றுக் கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T14:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: சஜித் அறைகூவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-sajith-1789394114"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-sajith-1789394114</id>
            <summary type="text">இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால்,
அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக்
கோரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால்,
அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக்
கோரமான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.</p><p>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம
ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று(14.9.2026) நடைபெற்ற இலங்கைக் காலநிலை பற்றிய நாடாளுமன்ற
ஒன்றியக் கூட்ட அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"மனித வளம், விலங்குகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலைப் பாதுகாப்பது மிக
முக்கியமான தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளாகும்.</p><h2>அனர்த்த அபாயங்கள்</h2><p> </p><p>பேதங்களின்றி,
வெளிப்படைத்தன்மையுடன் தேசிய உரையாடல் திட்டமொன்றை இலங்கைக் காலநிலை பற்றிய
நாடாளுமன்ற ஒன்றியம் முன்னின்று ஆரம்பிக்கும்.

மக்கள் மாத்திரமன்றி, வாக்களிக்கும் உரிமை இல்லாத விலங்குகளையும், வன
வளங்களையும் பாதுகாப்பது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு
இன்றியமையாதது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/046c97e6-5bab-488f-a3f2-c9ff53beba0c/26-6aa80566571b6.webp' /></p><p>

அனர்த்தங்கள் ஏற்படும்போது நாட்டின் முகாமைத்துவப் பொறிமுறை சிறப்பான
சேவையாற்றும் போதிலும், உலகளாவிய அனர்த்த அபாயங்கள் கிடைத்தவுடன் முன்கூட்டியே
பதிலளிக்கும் முறையும், துரிதமான வெளியேற்றத் திட்டமும் அவசியமாகும்.</p><p>

அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் நிவாரணம் வழங்கும் வழமை மாறி, மனிதர்கள்,
காடுகள், குடிதண்ணீர், நீர்ப்பாசனம், உணவு மற்றும் வலுச்சக்திப்
பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்கூட்டியே எதிர்கொள்ளும் முறையான
எதிர்வினைத் திட்டம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T14:36:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எம்.பி பதவியைத் துறந்து போட்டியிடத் தயார்..! நளின் பண்டார அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalin-bandara-on-the-provincial-council-election-1789394352"></link>
            <id>https://tamilwin.com/article/nalin-bandara-on-the-provincial-council-election-1789394352</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய
அனுபவம் தனக்கு இருப்பினும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய
அனுபவம் தனக்கு இருப்பினும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான
பணிகளைத் திறம்படச் செய்ய முடியாது என்றும், அதற்கு ஆட்சி அதிகாரமே அவசியம்
என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
முதலமைச்சர் பதவி</h2><p>
நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு மண்டலமான பிங்கிரிய பகுதியில் 1,000 ஏக்கரில்
மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பிரதி அமைச்சராகத் தான் ஆற்றிய
பங்களிப்பை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1af333b0-1463-4648-bf39-c651bc635e09/26-6aa7fe000c73d.webp' /></p><p>
</p><p>
தம்மிடம் வேலை செய்யக்கூடிய உண்மையான திறன் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியில்
இருக்கும்போது அதிகார வரம்புகள் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன என்று
குறிப்பிட்ட அவர், அரசில் அதிகாரம் இருந்தால் மட்டுமே மக்களுக்கு முழுமையாகப்
பணியாற்ற முடியும் என்றார்.</p><p>

இதன் காரணமாக, மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக
இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், வெறும் மாகாண சபை உறுப்பினராக இல்லாமல், முழுமையான அதிகாரமிக்க மாகாண
முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றி மக்களுக்குச் சேவையாற்றுவதே தனது பிரதான
இலக்கு என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/w7aPcSr_N0Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் நிறுவன மின்னஞ்சலால் ஆபத்தில் நாமல் ராஜபக்ச! முக்கிய பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769</id>
            <summary type="text">எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் 
ராஜபக்ச இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூற முனைந்தாலும்
சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 
2013 மார்ச் 23 ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் (Email) ஒன்றின் மூலம் பல கதைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச விமானங்களை கொள்வனவு செய்யும் யோசனையை ஜனாதிபதி மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து விடயத்தை முடித்து தருவதாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
அது தொடர்பில் எயார்பஸ் (Airbus) நிறுவனம் அனைத்து மின்னஞ்சல்களையும் வழங்கியுள்ளது. எயார்பஸ் கொள்வனவு தொடர்பான வேலையை நான் தந்தைக்குச் சொல்லி செய்து தருகிறேன் தந்தை மூலமாக அல்லது ஜனாதிபதி மூலமாக இதற்குத் தேவையான அமைச்சரவை அனுதியை பெற்று தருவதாக கூறியுள்ளார்.
</p><h2>நாமலின் பங்களிப்பு</h2><p>இதற்கு இணையாக 2013 மார்ச் 27 ஆம் திகதி அன்றைய சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இக்கொள்வனவுக்கான அனுமதியைக் கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பpத்துள்ளார். </p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 13 ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. என்னவென்றால் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாதீன பணிப்பாளர் சபையைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல் இலங்கைக்கு வந்த எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் இந்த பாரிய அளவிலான விமானக் கொள்வனவின் போது விமான ஓட்டும் பயிற்சி மையம் (Pilot Training Centre) ஒன்றும் பெருந்தொகை செலவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>
ஹம்பாந்தோட்டையில் விமான ஓட்டும் பயிற்சி</h2><p>அந்தப் பயிற்சி மையத்தை தனது சொந்த தேர்தல் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் நிறுவுமாறு எயார்பஸ் நிறுவன பிரதிநிதிகளிடம் நாமல் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>மின்னஞ்சல் சான்றுகள் மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளதாகவே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நிமல் பெரேரா அளித்துள்ள வாக்குமூலம் தனக்கு எயார்பஸ் நிறுவனத்துடனோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனோ எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f8eb70-d0ad-4b6a-a54c-4d4f3d98ea46/26-6aa7f39bafd6d.webp' /></p><p>ஆனாலும் நாமல் ராஜபக்ச வெளிநாட்டு ஆலோசனைச் சேவை ஒன்றின் மூலம் பணம் கிடைக்கவுள்ளதாகவும் அப்பணத்தை வைப்பு செய்வதற்கு வெளிநாட்டு கணக்கு ஒன்றைத் தருமாறும் கோரியுள்ளார்.</p><p>தனக்கு வெளிநாட்டு ஆலோசனை சேவை மூலம் பணம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே நிமல் பெரேரா தனக்குச் சொந்தமான 'SABREVISION' என்ற நிறுவனத்தின் கணக்கு இலக்கத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>
இந்தக் கணக்கிற்கு 'Biz Solutions' எனும் நிறுவனம் மூலம் அதாவது அப்போதைய கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க பணிப்பாளராக இருந்த புரூணையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் நிமல் பெரேராவின் வெளிநாட்டு கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளது. </p><p>பின்னர் அந்த பணத்தை இலங்கையில் 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jpF2dBCZozI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-14T13:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகலை அறிவித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789391035"></link>
            <id>https://tamilwin.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789391035</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய
பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித், இன்று (14) முதல் நடைமுறைக்கு வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய
பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித், இன்று (14) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.</p><p>
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச
அபேரத்னவிடம் முறைப்படி கையளித்துள்ளார்.</p><p>

அப்துல் வாஹித் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் எம்.பி பதவியிலிருந்து
விலகியுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின்
தவிசாளருக்கு கடிதம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>நாடாளுமன்றத் தேர்தல்கள்&nbsp;</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பத்தாவது நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக
பதில் செயலாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffaafed3-4fc7-4427-90b2-552c3b22e2a1/26-6aa7f3da1b01a.webp' /></p><p>
</p><p>
1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம்
பிரிவின் விதிகளுக்கமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெற்றிடமாகவுள்ள தேசிய பட்டியல் அமைச்சர் இடத்தை நிரப்ப தேர்தல் ஆணைக்குழு
சட்ட விதிகளின்படி தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T13:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு சாரதியாகக் கூட செல்வேன்..! ராஜபக்சர்களுக்காக குரல் கொடுத்த அர்ச்சுனா எம்.பியால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strong-condemnation-of-arjuna-s-remarks-1789391886"></link>
            <id>https://tamilwin.com/article/strong-condemnation-of-arjuna-s-remarks-1789391886</id>
            <summary type="text">தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்று, தற்போது அவர்களையே ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “நாமல் ராஜபக்சவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்று, தற்போது அவர்களையே ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “நாமல் ராஜபக்சவிற்கு கார் சாரதியாகக் கூட இருப்பேன்” என மேடையில் பேசியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, காணி சுவீகரிப்பு , காணால் ஆக்கப்பட்டோர் போன்ற தமிழர்களின் வரலாற்றில் மோசமான நிலையை ஏற்படுத்தியவர்களாக கருதப்படும் ராஜபக்சர்களைப் போற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனா செயற்படுகிறார். </p><p>

இந்த செயற்பாடு, தமிழ் மக்களுக்காக இதுவரை காலமும் போராடி வரும் தலைவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பணத்திற்காகவும் பதவிக்காகவும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களால் தமிழ் மக்களுக்கான நீதி எவ்வளவு காலம் கடந்தாலும் கிடைக்காது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாக இருக்கின்றது. </p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல வருடங்கள் கடந்தும் தங்களது உறவுகளின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர்.

எனினும், இதுபோன்ற அரசியல் தலைவர்கள் மக்களுக்காக செயற்படுவதாகக் கூறிக்கொண்டு, சுயலாபம் அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இவ்வாறான பல்வேறு விடயங்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகளையும் உங்கள் கண்முன் கொண்டுவருகிறது அதிர்வு நிகழ்ச்சி.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nBnFADoN9QE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T13:19:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருநாகலில் திடீர் விபத்து - விரைந்து செயற்பட்ட பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-accident-in-kurunegala-1789390322"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-accident-in-kurunegala-1789390322</id>
            <summary type="text">குருநாகல் - மஹாவா நகரில் உள்ள மூன்று கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இன்று(14.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - மஹாவா நகரில் உள்ள மூன்று கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் இன்று(14.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

தீ விபத்து</h2><p>
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், மஹாவா பிரதேச சபைக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff9418c6-0c9e-4b8e-bd48-5c075834df71/26-6aa7ee24d116e.webp' /></p><p> 

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக குருநாகல் மாநகர சபையிலிருந்து தீயணைப்பு வாகனங்களும் மஹாவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக எந்தவித தகவலும் உறுதிச் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன அழிப்பை மேற்கொண்டவர்களுடன் சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர்: சிறீதரன் எம்.பி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/genocide-speech-shritharan-mp-1789388877"></link>
            <id>https://tamilwin.com/article/genocide-speech-shritharan-mp-1789388877</id>
            <summary type="text">எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும்
நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல்
ஆக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும்
நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல்
ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே
மேடையில் ஏறி நிற்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் விசனம்
தெரிவித்தார்.
</p><p>
கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்துக்கான மக்கள் சந்திப்பு பொதுநோக்கு மண்டபத்தில்
நேற்று(13.9.2026) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ,

"மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றும்
நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 இலிருந்து 67 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம்
முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>கடுமையான எதிர்ப்பு</h2><p> இதற்குப் பல்வேறு தரப்பினரும், வழக்கறிஞர்கள் சங்கமும்
கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த விடயம் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம்
திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வருகின்றது. </p><p>இதன்போது அந்தத்
திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதற்கு எமது
ஆதரவு எப்போதுமே இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661f3978-b0bf-41b2-9973-2b6e7ed65542/26-6aa7eb1811946.webp' /></p><p>தேர்தல் காலங்களில் மக்கள் சில நேரங்களில் ஆராயாமல் அல்லது கோபத்தின்
அடிப்படையில் சிலரைத் தெரிவு செய்கின்றனர். ஆனால், பின்னர் அவர்கள் எவ்வாறான
நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள் என்பதை மக்கள் கவனமாக உன்னிப்பாகக் கவனிக்க
வேண்டும்.
</p><p>
எங்களை அழித்தவர்களுடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்ற இவ்வாறானதொரு
கடினமான அரசியல் சூழலில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:47:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[15ஆம் திகதி முதல் தொடர்ச்சியான சுகயீன விடுமுறையில் வட மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-veterinary-surgeons-sick-leave-protest-1789388468"></link>
            <id>https://tamilwin.com/article/northern-veterinary-surgeons-sick-leave-protest-1789388468</id>
            <summary type="text">வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்


வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும்
நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்


வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும்
நிர்வாக மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத
நிலையில், 2026 செப்டம்பர் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியான சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இன்றையதினம் (14.09.2026) வடக்கு
மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள
அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>
எமது முக்கிய கோரிக்கைகள்:
</h2><p>
* வடக்கு மாகாணத்தின் புவியியல் நிலைமை, நீண்ட தூரக் களப்பணிகள்,
பண்ணையாளர்களின் தேவைகள் மற்றும் சேவையின் தன்மைக்கு ஏற்ற பொருத்தமான கடமைப்
பட்டியலை வழங்குதல்.
</p><p>* அரச கால்நடை வைத்திய அலுவலகங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைத்
தீர்த்தல்.
</p><p>* பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்குவதற்கான
பொருத்தமான மருந்துப்பொறிமுறையை ஏற்படுத்துதல்.
</p><p>* களப்பணிகளுக்கு போதுமான பொருத்தமான வாகனங்களை வழங்குதல். தற்போது
பயன்படுத்தப்படும் வாகனங்கள் பழையதாகவும் அடிக்கடி பழுதடைவதாகவும் இருப்பதால்,
அதற்குத் தீர்வு காணுதல்.</p><p>
* கால்நடை வைத்தியர்களின் உயர் பதவிகளை நிரப்புவதற்கான நேர்முகத்
தேர்வுக்குரிய புள்ளியிடல் நடைமுறைகள் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணாக
அடிக்கடி மாற்றப்படுவதைத் தடுத்து, உயர் பதவிகளை உரிய முறையில் நிரப்புதல்.
அத்துடன் தற்போது வெற்றிடமாகவுள்ள பதவிகளை காலம் தாழ்த்தாது நிரப்புதல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd8c4b9-b76f-4362-bcc8-830c4136c86a/26-6aa7ea7ec62d9.webp' /></p><p>
* 2026 ஜூலை 1ஆம் தேதி இடம்பெற்ற சுகயீனப் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதம
செயலாளர் அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
மற்றும் இணக்கப்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல்.
</p><p>* எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி தன்னிச்சையாக எமது சம்பளங்களை குறைத்தலை
நிறுத்துதல்.</p><p>
* விரல் அடையாளப் பதிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்.

நாம் விரல் அடையாளப் பதிவு முறைக்கு எதிரானவர்கள் அல்லர். 2019ஆம் ஆண்டு
அன்றைய வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதனுடன் இடம்பெற்ற
கலந்துரையாடல்களின் பின்னர், கால்நடை வைத்தியர்களின் களப்பணியின் தன்மையை
கருத்திற்கொண்டு திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் விரல்
அடையாளப் பதிவு மேற்கொள்ளும் நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது இன்றுவரை
பின்பற்றப்பட்டு வருகின்றது.</p><p>

எனினும், தற்போது அந்த நடைமுறையைப் புறந்தள்ளி அனைத்து நாட்களிலும் விரல்
அடையாளப் பதிவு செய்ய வேண்டும் என நிர்வாக அழுத்தம் வழங்கப்படுவதுடன்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்நடை வைத்தியர்கள் உண்மையாகக் கடமையாற்றியிருந்த
போதிலும், விரல் அடையாளப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படவில்லை என்ற
காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலிருந்து பல
மாதங்களுக்கான நாட்கள் விடுமுறையாகக் கணிக்கப்பட்டுள்ளன.</p><h2>உத்தியோகபூர்வ பதிவுகள்</h2><p>
</p><p>
கால்நடை வைத்தியர்கள் கடமையாற்றியமைக்கான தினக்குறிப்பு பதிவேடு (Diary),
எதிர்கால நிகழ்ச்சி திட்டம் (Advance Programme), விலகல் பதிவுகள்
(Deviation), வாகனப் பதிவுகள் (Running Chart), அலுவலக வரவுப் பதிவுகள்
(Attendance), திட்டங்களுக்குரிய கொடுப்பனவுச் சீட்டுகள், ஆவணங்கள் மற்றும்
வவுச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு உத்தியோகபூர்வ பதிவுகள் உள்ளன.
</p><p>
மேலும், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களால் சமர்ப்பிக்கப்படும்
சான்றுப் பொருட்கள் தொடர்பான அறிக்கைகள், DCC கூட்டங்கள், பிரதேச
ஒருங்கிணைப்புக் கூட்டங்கள், பல்வேறு திணைக்களங்களின் கூட்டங்கள் மற்றும்
செயற்பாடுகளில் பங்கேற்று மேற்கொண்ட பணிகள், எமது திணைக்களத்தின் திட்டங்கள்
மற்றும் ஏனைய திணைக்களங்களின் திட்டங்களுடன் இணைந்து மேற்கொண்ட பணிகள்,
அத்துடன் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தமை தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகள்
உள்ளிட்ட ஏராளமான பணிச்சான்றுகள் எம்மிடம் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ade30bc-9e0b-4beb-9220-be24a7506d73/26-6aa7ea7f93f69.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான உத்தியோகபூர்வ பதிவுகள் மற்றும் பணிச்சான்றுகள் மூலம் உண்மையில்
கடமையாற்றியமை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில், விரல் அடையாளப் பதிவு
செய்யப்படவில்லை என்ற ஒரே காரணத்தை அடிப்படையாகக் கொண்டு உண்மையில் பணியாற்றிய
நாட்களை பல மாதங்களுக்கான விடுமுறையாகக் கணிப்பது நிர்வாக ரீதியாக முரணானதும்
முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.
</p><p>
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் உள்ள பல துறைகளில், குறிப்பாக மேலதிக
கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்குக் கூட, அவர்களது
பணியின் தன்மைக்கு ஏற்ப விரல் அடையாளப் பதிவு தொடர்பில் பொருத்தமான மாற்று
நடைமுறைகள் அல்லது விலக்குகள் நடைமுறையில் உள்ளன. இத்தகைய நிலையில், மேலதிக
கொடுப்பனவு எதுவும் பெறாமல், அலுவலக நேரத்திற்கு அப்பாலும் தொடர்ந்து
அதிகளவில் களப்பணிகளில் ஈடுபடும் கால்நடை வைத்தியர்களுக்கு மட்டும் அனைத்து
நாட்களிலும் விரல் அடையாளப் பதிவு செய்ய வேண்டும் என இந்நடைமுறையைத் திணிப்பது
நியாயமானதல்ல. </p><p>இது கால்நடை வைத்தியர்களின் தொழில் உரிமை மற்றும் பணியுரிமை
சார்ந்த முக்கியமான பிரச்சினையாகும்.

எமது போராட்டம் பண்ணையாளர்களுக்கு எதிரானது அல்ல. பண்ணையாளர்களுக்கு
தொடர்ச்சியான, விரைவான மற்றும் தரமான கால்நடைச் சேவையை வழங்குவதற்குத் தேவையான
சரியான நிர்வாக மற்றும் சேவை ஏற்பாடுகளை உறுதி செய்வதே எமது நோக்கமாகும்.

எமது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டால், பண்ணையாளர்களின் நலனை
முன்னிறுத்தி எமது தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர நாம் தயாராக
உள்ளோம் என அறியத்தருகிறோம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:37:57+00:00</updated>
        </entry>
    </feed>
