<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-23T06:46:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித உரிமைகளை குறுகிய எல்லைக்குள் முடக்கவே கூடாது! எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-rights-not-curtailed-opposition-leader-1784787790"></link>
            <id>https://tamilwin.com/article/human-rights-not-curtailed-opposition-leader-1784787790</id>
            <summary type="text">மனித உரிமைகள் என்பது குறுகிய எல்லைக்குள் வரையறுக்கப்படாமல், சிவில் மற்றும்
அரசியல் உரிமைகளுடன் பொருளாதார, சமூக, மத, கலாசார உரிமைகள், காணிக்கான உரிமை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உரிமைகள் என்பது குறுகிய எல்லைக்குள் வரையறுக்கப்படாமல், சிவில் மற்றும்
அரசியல் உரிமைகளுடன் பொருளாதார, சமூக, மத, கலாசார உரிமைகள், காணிக்கான உரிமை,
கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான உரிமைகளையும் இணைத்து விரிவான பொருள்கோடலுக்கு
உட்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பு JDA Perera கலைக்கூடத்தில் 'Social Justice Commission' அமைப்பினால்
நடத்தப்பட்ட "Act Now" திட்டத்தின் இரண்டாம் கட்டமான "UNCOVER" புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை கதைகள்</h2><p>
</p><p>
இந்த கண்காட்சியானது, இலங்கையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான
முக்கிய பிரச்சினைகளைப் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக் கதைகள்
ஊடாகப் பார்வையாளர்களுக்கு முன்வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3adf64f3-2474-4b83-ab7d-fe430642b810/26-6a61b762e8942.webp' /></p><p> </p><p>பல்வேறு சமூக குழுக்கள்
எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அநீதிகள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்த்து,
உணர்வுபூர்வமான உரையாடலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.இது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>"Act Now திட்டத்தின் மூலம் நமது நாட்டில் வெவ்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்த
சமூகத் துன்பியல் சம்பவங்கள் குறித்தும், பல்வேறு பிரதேசங்களில் உரிமைகளை
இழந்த மக்களுக்காகவும் முக்கியமான முன்வைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>ஒதுக்கப்பட்ட மக்கள், மலையக மக்கள், வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தெற்கில் பல்வேறு துன்பியல்
சம்பவங்களால் அழுத்தங்களுக்கு உள்ளான மக்களின் உரிமைகள் ஆகியவற்றை மீண்டும்
பேசுபொருளுக்கு உட்படுத்தும் இத்தகைய முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்,
அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு புதிய பொருள்கோடல்
வழங்கப்பட்டு இந்தப் பரப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கு
நாட்டின் இளைஞர் சமூகம் கைகோர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elephant-rampage-increases-in-batticaloa-1784788502"></link>
            <id>https://tamilwin.com/article/elephant-rampage-increases-in-batticaloa-1784788502</id>
            <summary type="text">மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம்
கட்டை மற்றும் ஏழாம் கட்டை பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக யானைகளின்
நடமாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம்
கட்டை மற்றும் ஏழாம் கட்டை பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக யானைகளின்
நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சற்று அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

யானை வேலிகள் உடைக்கப்பட்டு, யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய
நிலங்களுக்குள் நுழைவதால் உயிர் மற்றும் சொத்து சேதம் ஏற்படும் அபாயம்
உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><h2>
யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை</h2><p>
இது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச
செயலாளர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கலந்துரையாடியதன்
அடிப்படையில், இன்று(23.07.2026) பிற்பகல் முதல் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து இரண்டு விசேட கண்காணிப்பு அணிகள் நியமிக்கப்பட்டு யானைகளை விரட்டும் தற்காலிக
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24f2385f-0caa-4b8c-a3e5-b7eed6f2226e/26-6a61b658a1931.webp' /></p><p>
</p><p>

இரவு 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை
தவிர்க்குமாறும் யானைகள் தென்பட்டால் அருகில் செல்லாமல் உடனடியாக வனஜீவராசிகள்
அலுவலகத்திற்கு தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், டொர்ச், பட்டாசு போன்றவற்றை தனியாக
பயன்படுத்தி யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
</p><p>
இதேவேளை, இதற்கான நிரந்தர தீர்வாக யானைகளை மாவட்ட எல்லையை கடந்து
அனுப்புவதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-thondaman-meets-british-high-commissioner-1784787606"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-thondaman-meets-british-high-commissioner-1784787606</id>
            <summary type="text">கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய இல்லத்தில், இலங்கைக்கான பிரித்தானிய
உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச்செயலாளரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய இல்லத்தில், இலங்கைக்கான பிரித்தானிய
உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளார்.</p><p>
துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ மஹோனியுடன் இணைந்து நேற்று(22) நடைபெற்ற
இச்சந்திப்பில், மலையகச் சமூகத்தின் முன்னுரிமைகள், டித்வா புயலால் ஏற்பட்ட
தாக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலவிவரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள்
குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ec0675-334c-4d8f-b8b8-89e32affeca4/26-6a61b42b577ce.webp' /></p><p>
இச்சந்திப்புத் குறித்துத் தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான், அவர்களின்
ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இலங்கை மற்றும்
ஐக்கிய இராச்சியம் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் கூட்டாண்மையை மேலும்
வலுப்படுத்தும் வகையில் இந்த உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல
ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்து போக்குவரத்து தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tree-falls-on-hatton-colombo-main-road-1784787584"></link>
            <id>https://tamilwin.com/article/tree-falls-on-hatton-colombo-main-road-1784787584</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பெரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததில், போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பெரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததில், போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவம் இன்று(23.07.2026) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. </p><p>

மரம் வீதியின் குறுக்கே விழுந்த காரணத்தினால் வேலைக்குச் செல்லும்
தொழிலாளர்கள், பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளுக்குச் செல்ல முயன்ற பொதுமக்கள்
உள்ளிட்ட பலர் கடும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.</p><p></p><p> 

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும், பிரதேச மக்கள், தோட்ட நிர்வாகத்தினர்
மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><h2> 


பொதுமக்கள் சிரமம்</h2><p>
இயந்திரங்களின் உதவியுடன் மரம் வெட்டப்பட்டு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சில
மணிநேரங்களுக்குப் பின்னர் போக்குவரத்து மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78441b8e-a634-49c5-8fdd-6dfbe7b0f021/26-6a61b31e400e2.webp' /></p><p> </p><p>

மரம் அகற்றப்படும் வரை, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு
பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசலைக்
கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தச் சம்பவத்தில் உயிர்ச் சேதமோ காயமோ எதுவும் ஏற்படவில்லை என
தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அண்மைக்காலமாக நிலவும் மழை மற்றும் பலத்த
காற்று காரணமாக வீதியோரங்களில் உள்ள பழமையான மரங்கள் ஆபத்தான நிலையில்
காணப்படுவதால், அவற்றை உடனடியாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a53d7f9-27c4-46b2-98a8-ed605d76fc29/26-6a61b31f3c325.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5550736f-3d39-43b7-80a5-2d5ea604175e/26-6a61b32014da9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0a8715-7602-4ffe-bb56-b6f50196436a/26-6a61b320e280a.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:24:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டம்: இன்று கூட்டு எதிர்க்கட்சிகள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/joint-opposition-meeting-today-1784787048"></link>
            <id>https://tamilwin.com/article/joint-opposition-meeting-today-1784787048</id>
            <summary type="text">நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு
வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராகப் பாரிய
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு
வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராகப் பாரிய
அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டமொன்று
இன்று (23.07.2026) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்
அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.</p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இக்கூட்டத்தில் கலந்துகொள்வதை
உறுதிப்படுத்தியுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ
அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு</h2><p> </p><p>அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும்
இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதுடன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்
கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும்
பிரதிநிதித்துவப்படுத்தாத சகல எதிர்க்கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில்
கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு
வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையானது நாட்டின்
நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் எனச்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f17330e-5243-4674-906a-612f6e4db6fe/26-6a61b20b1b30f.webp' /></p><h2>அவதானம் செலுத்தப்படவுள்ள விடயம்</h2><p> இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் சிவில் மற்றும்
அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களை உருவாக்குவது தொடர்பில் கூட்டத்தில்
அவதானம் செலுத்தப்படவுள்ளது.
</p><p>
அரசின் இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும்
ஒன்றிணைத்துச் செயற்படுவது குறித்துக் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தொலைபேசி வாயிலாகத்
தனித்தனியாகக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/devendramunai-vihara-perahara-procession-safety-1784785661"></link>
            <id>https://tamilwin.com/article/devendramunai-vihara-perahara-procession-safety-1784785661</id>
            <summary type="text">மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையின் 769வது பெரஹர ஊர்வலம் இன்று (23) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகவுள்ளது. 

இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையின் 769வது பெரஹர ஊர்வலம் இன்று (23) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகவுள்ளது. </p><p>

இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>தேவேந்திரமுனை துப்பாக்கிச்சூடு</h2><p> </p><p>

குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்றுமுன் தினம் (21) இரவு துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிசென்ற நிலையில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0b4969-12c3-4322-a52f-49e7a068783c/26-6a61af2babcc6.webp' /></p><p>
</p><p>
கடற்தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த துப்பாக்கிச்சூடானது 'தெஹிபாலே மல்லி' எனும் நபரின் தரப்பினரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
</p><p>
தெஹிபாலே மல்லி' மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய திட்டமிட்ட பாதாள உலகக்குழுக்கள் இம்மோதலுக்குப் பின்னணியில் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

தேவேந்திரமுனை விகாரை பெரஹரவில் கலந்துகொள்ளும் காவடி நடனக்குழுக்களை குறைப்பது தொடர்பாக கஞ்சிபானை இம்ரானால் பயன்படுத்தப்படும் 'KPI' என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவியிருந்தது.</p><h2>சந்தேகநபர் வந்த கார் மீட்பு</h2><p>
</p><p>
இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றிற்கு காரில் வந்து நபர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச்சென்றமை அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கமராவிலும் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e01d340-a89d-437d-8de3-00f6b42f4990/26-6a61af2c5947d.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து துப்பாக்கிதாரி தப்பிச்சென்ற கார் திக்வெல்ல பகுதியில் வைத்து நேற்று (22) இரவு கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள தேவேந்திரமுனை விகாரை பெரஹரவிற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இன்று (23) ஆரம்பமாகும் பெரஹர நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 05 திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:05:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-arrested-in-bia-1784786030"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-arrested-in-bia-1784786030</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையொன்றை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையொன்றை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து, அவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற விமானப் பயணியே கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இன்று அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>வெளிநாட்டு பயணி கைது</b></h2><p>வெளிநாட்டவர் கொண்டு சென்ற பயணப் பொதிகளுக்குள், சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 33,000 சிகரெட்டுகள் அடங்கிய 165 சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43882ed2-bc34-4476-86c6-9feece92a515/26-6a61ae8797897.webp' /></p><p>இவற்றின் மதிப்பு சுமார் 49 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாரதியாக பணியாற்றும் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. </p><p>சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-23T06:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் ராணி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடம் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-years-since-yarl-rani-train-service-began-1784785092"></link>
            <id>https://tamilwin.com/article/four-years-since-yarl-rani-train-service-began-1784785092</id>
            <summary type="text">யாழ் ராணி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு நேற்று (22) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அந்தப் தொடருந்தில் தினந்தோறும் பயணம் செய்யும் அரச உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் ராணி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு நேற்று (22) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அந்தப் தொடருந்தில் தினந்தோறும் பயணம் செய்யும் அரச உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் 4ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.</p><p>குறித்த நிகழ்வானது கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் நேற்று பி.ப
4.00மணிக்கு இடம்பெற்றது. </p><p></p><h2>பல அரச உத்தியோகத்தர்கள்</h2><p>குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர்
எஸ்.முரளிதரன், தொடருந்து திணைக்களத்தின் வடமார்க்கத்திற்கான மேற்பார்வையாளர்
வி.எம்.என். நிரந்த விசுந்தர ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a8063aa-188e-468c-bb2f-3a9ddfd40de0/26-6a61acb3d95af.webp' /></p><p>யாழ்.மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கடமைகளுக்காக செல்லும் பல அரச
உத்தியோகத்தர்களுக்கு பொருளாதார நிலைமையில் பிரயாண செலவை குறித்த தொடருந்து சேவையில் ஈடுபடுவதன் மூலம் குறைக்கின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:57:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் களத்தில் ரணில்! அடுத்த ஜனாதிபதி வேட்பாளராம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-to-contest-as-presidential-candidate-1784784051"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-to-contest-as-presidential-candidate-1784784051</id>
            <summary type="text">எதிர்வரும் 2029ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடலாம் என்று ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2029ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடலாம் என்று ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 3 வருடங்கள் இருக்கின்றன. எனவே அது தொடர்பான தீர்மானங்கள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>சஜித்தா.. ரணிலா..!!</h2><p>

அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு நாங்கள் முகம்கொடுக்க வேண்டும். நான் நினைக்கின்றேன் மிக விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறலாம் என்று. </p><p>எனவே அந்த தேர்தலுக்கு நாங்கள் தயாராக வேண்டும். 

2029ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ஐக்கியத் தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1404a05-0804-4a7f-925f-6085a279da8c/26-6a61aa204c973.webp' /></p><p> </p><p>

ஒன்றாக இணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும். அதற்கு பிறகே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியும்.</p><p> 

தற்போதைய நிலவரத்தின்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் முன்னிலையில் இருக்கின்றனர். 

எனவே, இவர்களுள் இருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க கோரும் மனு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-rejects-bid-to-postpone-sri-lanka-s-a-l-exam-1784784830"></link>
            <id>https://tamilwin.com/article/court-rejects-bid-to-postpone-sri-lanka-s-a-l-exam-1784784830</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி ஒரு மாணவர் குழு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp; 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி ஒரு மாணவர் குழு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> 

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (23.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கை மேற்கொண்டு நடத்த அனுமதி மறுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது.&nbsp;</p><p></p><h2>வழங்கப்பட்ட உத்தரவு</h2><p>
</p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85963500-6378-4089-813f-b1487918bd8b/26-6a61aae53c0aa.webp' /></p><p>
</p><p>
நீதிபதி பெர்னாண்டோவின் ஒப்புதலுடன் நீதிபதி அபேசூரிய இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:41:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: முன்னாள் கடற்படை தளபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravindra-granted-bail-1784770560"></link>
            <id>https://tamilwin.com/article/ravindra-granted-bail-1784770560</id>
            <summary type="text">கடந்த 2008 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபருக்கு தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2008 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபருக்கு தலைமறைவாக இருக்க உதவினார் எனக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
முன்னதாக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையிலேயே அவருக்கு இந்த பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது.
</p><p>தமது கட்சிக்காரர் முன்னர் இவ்வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு, பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டவர் என முன்னாள் கடற்படை தளபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c61d22e5-ad42-4637-8ee7-044f40adfdc5/26-6a617002315c5.webp' /></p><p>
</p><p> எனினும், நீதிமன்ற அழைப்பாணையை மதித்து அவர் மீண்டும் முன்னிலையாகியுள்ளார் எனவும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டத்திற்குப் புறம்பானவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம்&nbsp; மேற்கொண்ட முறையான விசாரணைகளுக்குப் பின்னரே இந்த புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, தெரிவித்துள்ளார்.</p><p>தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன, தான் நிரபராதி எனத் தெரிவித்துள்ளார்.</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, சந்தேகநபரான ரவீந்திர விஜேகுணரத்னவை தலா 10 இலட்சம் ரூபா மதிப்பிலான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
</p><p>இவ்வழக்கின் பிரதான சாட்சி அரசியல் புகலிடம் பெற்று சுவிட்சர்லாந்தில் வசிப்பதாக தெரிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், சுவிட்சர்லாந்து தூதரகம் மூலம் அவருக்கு சான்றழைப்பாணை அனுப்ப உத்தரவிடுமாறு கோரியுள்ளனர்.</p><p> அதனடிப்படையில், ஆங்கில மொழியில் சான்றழைப்பாணையை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T05:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் காலநிலையில் ஏற்படவுள்ள சடுதியான மாற்றம் - எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1784781472"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1784781472</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றமானது முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை மாற்றமானது முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக பட்டபெந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,'எல் நினோ'வின் உச்சகட்ட தாக்கம் நவம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும்.</p><h2>காலநிலை மாற்றங்கள்</h2><p>
</p><p>
இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கும் வகையில், அரச நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0995cd60-a0e8-4016-ae4f-b2b4f537a8fb/26-6a61a6f28df79.webp' /></p><p>

'எல் நினோ' என்பது ஒரு உலகளாவிய மோசமான காலநிலை தாக்கமாகும். அதன் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:30:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் யுவதி உட்பட ஐவர்..! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/homagama-fire-accident-death-details-1784770563"></link>
            <id>https://tamilwin.com/article/homagama-fire-accident-death-details-1784770563</id>
            <summary type="text">ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>குறித்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (21) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலங்கள் மீதான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மரபணு பரிசோதனை</h2><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால், அவை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு&nbsp; மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a5bfbb-1cf4-4538-9088-c8ba66a53387/26-6a6187a2ef917.webp' /></p><p>
</p><p>
இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த, மரியோ எட்வர்ட் என்ற, சுமார் 15 வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த ஒருவரும் அடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்த தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு பணிக்கு சேர்ந்துள்ளதுடன், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19) என்பவர் 4 நாட்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>

உயிரிழந்தவர்களில் நால்வர் அங்கு, பணிக்கு சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h2>உயிரிழந்தவர்களின் விபரம்&nbsp;</h2><p>
</p><p>இந்த சம்பவத்தில் ஹட்டன் - மஸ்கெலியாவைச் சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி என்ற யுவதியும்&nbsp; உயிரிழந்துள்ளதுடன், இவர் குறித்த தொழிற்சாலையில், 6 மாதங்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றையவர் அட்டகலம்பன்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான் என்பவரென கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193e67e8-3d5b-4cd7-80c3-d100831fff0f/26-6a6187a39dbf9.webp' /></p><p>

இவர் ருமேனியா நாட்டுக்கு தொழிலுக்காக செல்வதற்கு விசா கிடைக்கும் வரை தற்காலிகமாக அங்கு பணிபுரிந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p>

வேலைவாய்ப்பு பணியகத்தில் இரண்டு நாட்கள் பயிற்சியை நிறைவுசெய்துள்ள இவர், பணியில் இணைந்து இரண்டு வாரங்களேயாவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இந்த தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையின்போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அங்குள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
குறிப்பாக, தொழிற்சாலையில் முறையான தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பு இன்மையை பிரதானமாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.</p><h2>அதிகாரிகள் வழங்கிய கால அவகாசம்</h2><p>
</p><p>
அத்துடன், 20 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள், கடந்த மாதம் 2 ஆம் திகதியன்று எழுத்துமூலம் குறித்த தொழிற்சாலையில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87577604-9dcd-4293-9726-9ec68de707ab/26-6a6187a44e0d2.webp' /></p><p>
இந்த கால அவகாசம் முடிவடைவதற்கு ஒரு நாள் மாத்திரமே இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>

இதேவேளை,&nbsp; மின்சாரக் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>தொழிற்சாலைகளில் 80 முதல் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த போதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போதிய பாதுகாப்பு வழிமுறைகளும் அவசரகாலத் திட்டங்களும் அங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்காசிய கராத்தே போட்டியில் இலங்கை கடற்படையினருக்கு 5 பதக்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-navy-wins-5-medals-at-south-asian-karate-1784783290"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-navy-wins-5-medals-at-south-asian-karate-1784783290</id>
            <summary type="text">பங்களாதேஷில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில்,
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படை வீரர்கள் 5 வெண்கலப்
பதக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில்,
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படை வீரர்கள் 5 வெண்கலப்
பதக்கங்களை வென்று நாட்டிற்கும் கடற்படைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.</p><p>

பங்களாதேஷ் கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிரேஷ்ட மற்றும்
கனிஷ்ட தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டிகள், டாக்கா நகரில் அமைந்துள்ள
‘Shaheed Shorawardi’ உள்ளக விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
</p><p></p><h2>கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி</h2><p>
தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த ஏழு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி
பெருமளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கை கடற்படையைப்
பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று ஆண் மற்றும் பெண் வீரர்கள் வெற்றி பெற்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f96c6cfb-2d72-47e6-a803-4ff352ea4d49/26-6a61a4a5d4786.webp' /></p><p>
இந்தப் போட்டியில், ஆண்களுக்கான 50 கிலோ கிராமிற்கு உட்பட்ட தனிநபர் குமிதே பிரிவில்
போட்டியிட்ட லீடிங் சீமன் ஏடிஎன்எஸ் ஆரியரத்ன வெண்கலப் பதக்கமொன்றை வென்றார்.
</p><p>
அத்துடன், பெண்களுக்கான 61 கிலோ கிராமிற்கு உட்பட்ட தனிநபர் குமிதே மற்றும்
குழு குமிதே நிகழ்வுகளில் போட்டியிட்ட ஏபல் சீமன் பி.எல்.எம். நெத்மினி இரண்டு
வெண்கலப் பதக்கங்களைத் தனதாக்கினார்.</p><h2>விளையாட்டுத் திறமைகள்&nbsp;</h2><p>மேலும், பெண்களுக்கான 68 கிலோகிராமிற்கு உட்பட்ட தனிநபர் குமிதே மற்றும் குழு
குமிதே நிகழ்வுகளில் போட்டியிட்ட லீடிங் சீமன் கேஏசி துலாஞ்சலி இரண்டு
வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a56379a5-b1b0-4bee-b6b3-0b4a4b7a4e24/26-6a61a4a68d2d8.webp' /></p><p>
இந்த வெற்றிகளின் மூலம் இலங்கை கடற்படையினரின் விளையாட்டுத் திறமைகள்
சர்வதேசப் போட்டித் களத்தில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், கடற்படையில் கராத்தே விளையாட்டை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச
மட்டத்திலான திறமைமிக்க வீரர்களை உருவாக்குவதற்கும் முன்னெடுக்கப்படும்
தொடர்ச்சியான திட்டங்களின் வெற்றியை இந்தச் சாதனை தெளிவாகப்
பிரதிபலிக்கின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:20:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணியப் போவதில்லை - ஈ.பி.டி.பி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threats-mistakes-of-batticaloa-municipal-council-1784779105"></link>
            <id>https://tamilwin.com/article/threats-mistakes-of-batticaloa-municipal-council-1784779105</id>
            <summary type="text">கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை ஏற்றிச் சென்றதை
சுட்டிக்காட்டியதற்கு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் பல விதத்தில் அச்சுறுத்தி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை ஏற்றிச் சென்றதை
சுட்டிக்காட்டியதற்கு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் பல விதத்தில் அச்சுறுத்தி
வருகின்றார். எனவே எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணிய போவதில்லை என ஈ.பி.டி.பி மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>மட்டக்களப்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஈ.பி.டி.பி மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்</p><p></p><h2>தவறை சுட்டிக் காட்டியதற்காக&nbsp;</h2><p>மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் கதிர்காமம் பாதை யாத்திரை செல்பவர்களுக்கு
உணவு வழங்க உணவு பொருட்களை கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் ஏற்றிச்
சென்ற சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் சுட்டிக் காட்டினேன்.</p><p>
அதற்காக என்னை பழிவாங்க எனக்கு எங்கு காணி இருக்கிறது வீடு இருக்கிறது சொத்து
இருக்கிறது என்ன வியாபாரம் செய்கின்றேன் என என்னை அச்சுறுத்தும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்
தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் எனது வியாபார நிலையத்திற்கு என்னை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04fb590-74a9-439f-84a2-a6488c6c7d30/26-6a6197f543fab.webp' /></p><p>தவறை சுட்டிக் காட்டியதற்காக என்னை அச்சுறுத்தி வீடு, வர்த்தக நிலையங்களின்
ஆவணங்களை எடுத்துக்கொண்டு மாநகரசபைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக
அழைத்தார்கள் அப்போது நான் எழுத்து மூலமாக தருமாறு கோரினால் அதை தருகின்றேன்
என்று தெரிவித்தேன்.</p><p>எத்தனை இடங்களில் வீதி மின்விளக்குகள் இல்லாமல் இருக்கிறது என்னை பழிவாங்க
செலவு செய்த 10 ஆயிரம் ரூபாவுக்கு இந்த வீதி மின்விளக்கு இல்லாததற்கு செலவு
செய்திருக்கலாம்.</p><p>கல்லடி பாலத்தில் பல தடவைகள் மின்சார விளக்குகள் ஒளிராமல் இருந்துள்ளது. இது
தொடர்பாக முகநூல்களிலும் தொலைபேசி ஊடாகவும் ஊடகங்கள் ஊடாகவும் மக்கள், மாநகர
சபை முதல்வரிடம் பல கோரிக்கைகள் முன்வைத்தும் அதற்கான செயற்பாட்டைச் செய்யாமல்
தவறை சுட்டிக் காட்டுபவர்களை பழிவாங்கும் நோக்கோடு தான் மாநகரசபை முதல்வர்
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து கொண்டு இருக்கிறார்.</p><h2>தொடர்ச்சியாக தவறுகள் இடம்பெறும்போது</h2><p>போலி தேசியத்தை பேசிக் கொண்டு பிழைகளை சுட்டிக்காட்டினால் தங்கள்
அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு எதிராக செயற்படாமல் தடுக்க இவ்வாறு
அச்சுறுத்துகின்றனர்.</p><p>இவ்வாறுதான் நான் இன்று கழிவு அகற்றும் உழவு இயந்திர
பெட்டியில் உழவு பொருட்களை ஏற்றிச் சென்றதை சுட்டிக்காட்டியதற்கு பல விதத்தில்
அச்சுறுத்தி பொய்யான வழக்குகள் போட முடியுமா என பார்க்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb62e47-07d4-48c2-868e-c926c662d63e/26-6a6197f63847b.webp' /></p><p>
எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணிய போவதில்லை. இவர்களுக்காக மட்டும் அல்ல
வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும் போது அவர்களுக்காக
எந்த நேரத்திலும் குரல் கொடுப்பேன்.</p><p>எனக்கு எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும்
அதனை எதிர்கொண்டு எங்கு தமிழ் மக்களுக்கு எதிராக தவறு நடக்கின்றதோ தொடர்ச்சியாக தவறுகள் இடம்பெறும் போது அதனை சுட்டிக்காட்டுவேன் என்றும் குறிப்பிட்டு்ள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் ஆட்சியில் ஜனாதிபதி மாளிகைக்குள் நடந்தது என்ன...! அம்பலப்படுத்தும் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/35-crore-rs-spent-on-the-maintenance-1784781382"></link>
            <id>https://tamilwin.com/article/35-crore-rs-spent-on-the-maintenance-1784781382</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். </p><p>

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்த ஜனாதிபதி மாளிகைகள் அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p> </p><h2><b>ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு</b></h2><p>ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு, பூங்காப் பராமரிப்பு, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகபூர்வ தங்குமிடக் கட்டடப் பராமரிப்பு என்பவற்றுக்காகவே இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89be99e2-3847-4e49-a419-840d922c4c2b/26-6a619cc4ef926.webp' /></p><p>ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் 15 மில்லியன் ரூபாவும், கட்டடத் திருத்தச் செலவுகளாக 110 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், 2019 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவாக 15 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 62 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.</p><p> கடந்த 2020 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 12 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 22.7 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது. </p><h3><b>உத்தியோகபூர்வ இல்லங்கள்</b></h3><p>கடந்த 2021 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 10 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 18.8 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05eb846e-f686-4a5d-91b6-a24bb0e198b4/26-6a619cc5b0659.webp' /></p><p>2022 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவாக 12 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 13 மில்லியன் ரூபாவும், செலவிடப்பட்டுள்ளது. </p><p>கடந்த 2023 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 26.04 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 11 மில்லியன் ரூபாவாகவும் இருந்ததாக பிரதமர் கூறினார். </p><p>கடந்த 2024 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 13.09 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 10.05 மில்லியன் ரூபாவாகவும், 2025 ஆம் ஆண்டில் பராமரிப்பு செலவு 7.05 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 3 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளன. </p><p>நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பராமரிப்புச் செலவாக 3 மில்லியன் ரூபாவம், திருத்தச் செலவாக 0.4 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
இதேவேளை சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மக்களின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடதக்கது. 
</p>]]></content>
            <updated>2026-07-23T04:48:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் கைதிகள் தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-information-regarding-political-prisoners-1784780277"></link>
            <id>https://tamilwin.com/article/minister-information-regarding-political-prisoners-1784780277</id>
            <summary type="text">சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் &#039;அரசியல் கைதி&#039; என்ற பதத்துக்கு எத்தகைய
பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல்
கைதிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய
பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல்
கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான
வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்
பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>சிறைச்சாலை கட்டளை சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள்</h2><p>
</p><p>
"சிறைச்சாலை கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய ஒழுங்குவிதிகளில் 'அரசியல் கைதிகள்'
என எந்தவொரு தனிக் குழுவும் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்றங்களின் ஊடாக கைதிகள் சந்தேகநபர்களாகவோ அல்லது குற்றவாளிகளாகவோ அடையாளப்படுத்தப்பட்டு
விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக்காவலிலோ வைக்கப்படுகின்றார்களே தவிர, அரசியல்
கைதிகள் என எவரும் நீதிமன்றத்தால் சிறைப்படுத்தப்படவில்லை.சர்வதேச
மட்டத்திலான பொருள் கோடல்களையே நாம் ஏற்கின்றோம் என்றும்&nbsp;தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/006c45ae-c352-4d18-983d-aaf64c0a1ff3/26-6a619b6d808f0.webp' /></p><p>இதன்போது தேர்தல் காலத்தில் வடக்கு -
கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதாக உறுதியளித்தாரே, அந்த நிலைப்பாட்டில் அரசு இன்றும் உள்ளதா என
அஜித் பி. பெரேரா எம்.பி. மேலதிக கேள்வியாக எழுப்பியுள்ளார்.</p><h2>கைதிகளின் பட்டியல்</h2><p>

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,</p><p> கைதிகளின் பட்டியலை தான்
பலமுறை ஆராய்ந்துள்ளதாகவும், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் நீதிமன்றங்களில்
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பலர் குற்றவாளிகளாகவும்
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

"நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்துக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அப்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு சிறைச்சாலைகளில்
நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்துள்ள
அறிக்கைக்கு அமைய, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவும் பொதுமன்னிப்பு
வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு என முழு நாடும்
உள்ளடக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:41:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூர்மையான ஆயுதத்தினால் தாக்கி நபரொருவர் பலி - மற்றொருவர் பலத்த காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-died-after-being-attacked-sharp-weapon-1784778545"></link>
            <id>https://tamilwin.com/article/person-died-after-being-attacked-sharp-weapon-1784778545</id>
            <summary type="text">அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதாக&nbsp;பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>சந்தேகநபரை கைது செய்வதற்காக விசாரணை</h2><p>இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் லாதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/218626ce-a12e-4814-9fb2-4942c34b62c9/26-6a6194851b922.webp' /></p><p>சந்தேகநபருக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்த கொலையை செய்துள்ளமை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>

தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக உஹன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T04:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renewable-energy-sajith-premadasa-1784779317"></link>
            <id>https://tamilwin.com/article/renewable-energy-sajith-premadasa-1784779317</id>
            <summary type="text">பேச்சை செயலுக்குக் கொண்டு வந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தி
வலுப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேச்சை செயலுக்குக் கொண்டு வந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தி
வலுப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பந்தாரநாயக்க சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22.07.2026) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நிறுவனங்களுக்கு இடையே பாரபட்சம்</h2><p></p><p>அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மின்சாரத் தீர்வை விகிதத்தைக் கணக்கிடும்போது மூலதனச் செலவினங்களில் பாரிய
மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுகின்றது.
பெரிய நிறுவனங்கள் வரிச் சலுகைகளைப் பெறும் நிலையில், நுண், சிறிய மற்றும்
நடுத்தர அளவிலான சூரிய சக்தி உற்பத்தியாளர்களும் முயற்சியாளர்களும்
பாதுகாக்கப்பட வேண்டும்.
</p><p>
சூரிய பலகைகள் மற்றும் பேட்டரி சேமிப்பு உபகரணங்களில் பெரிய நிறுவனங்களுக்குச்
சாதகமான சூழல் காணப்பட்டாலும், சிறிய நிறுவனங்களுக்கு அது பாதகமாக அமைகின்றது.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிக் கடன்களை நம்பியுள்ள நிலையில்,
பெரிய நிறுவனங்களுக்குப் பசுமை நிதிகளுக்கான எளிதான அணுகல் கிடைப்பதையும்,
நாணய மாற்று வீதங்களைப் பயன்படுத்தி அவை சாதகமான பலன்களைப் பெறுவதையும்
சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p>
அதிகப்படியான எரிசக்தி உற்பத்தி இல்லாத பகுதிகளில் பேட்டரி முறைமைகள்
நிறுவப்படாமல், தேவை உள்ள பகுதிகளில் சமூக பேட்டரி முறைமைகள் மற்றும்
மெய்நிகர் மின் நிலையக் கருத்துருவைக் கொண்டு விநியோக துணை நிலையம் மட்டத்தில்
அவற்றை இணைக்க வேண்டும்.</p><h2>சூரிய சக்தித் துறையில் கடுமையான வீழ்ச்சி</h2><p>

முறையற்ற விலை நிர்ணயம் மற்றும் கட்டணக் கொள்கைகளால் சூரிய சக்தித் துறையில்
கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் நேரடியாக 1 இலட்சம் வேலைவாய்ப்புகள்
இழக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனங்களின் எண்ணிக்கை 1,150 இல் இருந்து 560 ஆகக்
குறைந்து, மறைமுகமாக 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சூழலுக்கு உகந்த எரிசக்தியை மேம்படுத்துவதற்குப் பதிலாகத் தடைகளை ஏற்படுத்தி,
எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களை வெற்றிபெற அனுமதிக்கக் கூடாது.</p><p></p><p>
</p><p>எந்த அரசியல் கொள்கை சார்ந்தவராகவும் இருந்தாலும், தேசிய நலனைக்
கருத்திற்கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பாதுகாப்பதற்கான முதலீட்டாளர்
உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:10:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஹர்ஷ டி சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harsha-de-silva-escaped-from-an-accident-1784777682"></link>
            <id>https://tamilwin.com/article/harsha-de-silva-escaped-from-an-accident-1784777682</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நூலிழையில் உயிர்தப்பியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
</p><p>
தான் முகம் கொடுத்த அவசர ஆபத்தான சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட 1969 என்ற வீதி அவசர உதவிக்குழுவினரின் சிறப்பான சேவையை பாராட்டி, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். </p><p>

தனது X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா&nbsp; இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>வீதி விபத்து</b></h2><p>

கடந்த 20ஆம் திகதி மாலை தனது மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த பயங்கரமான அனுபவத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்ததாக குறிப்பிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ff4324-d95d-4225-87e0-49edcaefaa3c/26-6a618f8f2ae88.webp' /></p><p>மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் என்ற அளவில் அதிக வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் பின் சக்கரத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தான் நூலிழையில் தப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்நேரத்தில் 1969 என்ற உடனடி அழைப்பு இலக்கம் ஊடாக விடுக்கப்பட்ட ஒரே ஒரு அறிவித்தலை அடுத்து, சில நிமிடங்களுக்குள் குறித்த இடத்திற்கு வந்த உதவிக்குழுவினர் சம்பந்தப்பட்ட சிக்கலை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h3><b>

சாரதிகளிடம் கோரிக்கை </b></h3><p>அக்குழுவினரின் தொழில்சார் நிபுணத்துவத்தையும் கனிவான சேவையையும் பாராட்டுக்குரியது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/811d5dac-e200-44c6-ba91-a440d6c92697/26-6a618f8fd56eb.webp' /></p><p>சக்கரத்தை மாற்றுவது அவர்களின் உத்தியோகபூர்வ பொறுப்பிற்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்த போதிலும்,&nbsp; அதற்கு இடமளிக்காது அக்காரியத்தையும் அவர்களே செய்து முடித்ததாக பதிவிட்டுள்ளார். </p><p>

இச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு முன்னர் தமது வாகனங்களின் சக்கரங்களின் நிலை குறித்து முற்கூட்டியே பரிசோதனையில் ஈடுபடுமாறு அவர் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-23T03:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : சாரதி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-motorcycle-head-on-collision-driver-injured-1784776741"></link>
            <id>https://tamilwin.com/article/car-motorcycle-head-on-collision-driver-injured-1784776741</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் நுவரெலியா வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் நுவரெலியா வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>குறி்த்த விபத்தானது&nbsp;நேற்று(22.07.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி கடுமையாக காயமடைந்து டிக்கோயா கிளங்கன்
ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>குறித்த விபத்து கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார்
சைக்கிளும், நுவரெலியா நோக்கி பயணித்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை ஏற்றிச் சென்ற
காரும் நேருக்கு நேர் மோதியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/216563e3-4ed4-40a6-a184-2176eea0cc13/26-6a618dd8b81bb.webp' /></p><p>கார் சாரதி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த
மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகக் சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
</p><p>விபத்து ஏற்பட்டவுடன் 1990 'சுவசெரிய' அவசர மருத்துவ சேவைக்கு
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு முதலுதவி வழங்கி,
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T03:48:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை விவாதத்துக்கு அரசு அனுமதி மறுப்பு: கொழும்பில் அவசர கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-in-colombo-chaired-by-opposition-leader-1784777272"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-in-colombo-chaired-by-opposition-leader-1784777272</id>
            <summary type="text">நீதித்துறை தொடர்பான விடயங்களை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளச்
சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை தொடர்பான விடயங்களை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளச்
சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள்&nbsp; தொடர்பில் கொழும்பில் அவசர கூட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின்
தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் விடயங்கள்</h2><p>
</p><p>
இதன்போது ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படையான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம்
மற்றும் நீதித்துறைக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் 'தடைகள் மற்றும்
சமன்பாடுகள்' ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6012c947-3688-43f8-b4b2-5747e0ea40a6/26-6a618dfb5b703.webp' /></p><p>

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் விடயங்கள் வெளிப்படையாக நாடாளுமன்ற
விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுப்பினர்கள் கவனம்
செலுத்தினர்.
</p><p>
நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்தச்
சந்தர்ப்பம் வழங்காமை ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளைப் பாதிக்கும் செயலாகும் எனக்
குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இது தொடர்பாக
எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நாடாளுமன்ற மற்றும் அரசியல் ரீதியான
நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
</p><p>
இந்த அவசரக் கூட்டத்தில் ரோஹினி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, வி.
இராதாகிருஷ்ணன், சமிந்த விஜேசிறி, கயந்த கருணாதிலக, ஜே. சி. அலவத்துவல, சுஜித்
சஞ்சய பெரேரா, காவிந்த ஜயவர்தன, சதுர கலப்பத்தி, கபீர் ஹாஷீம், ரவி
கருணாநாயக்க, எம். எஸ். ஏ. வாசித், ரோஹண பண்டார, டபிள்யூ. எச். எம். தர்மசேன,
பி. ஆரியவங்ச, தயாசிறி ஜயசேகர, அனுராத ஜயரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ரிஷாத்
பதியுதீன், ரவூப் ஹகீம், இராமநாதன் அர்ச்சுனா, நிசாம் காரியப்பர், எம். எஸ்.
உதுமாலெப்பே, சானக மதுகொட, சுரங்க ரத்நாயக்க மற்றும் செல்வம் அடைக்கலநாதன்
உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T03:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மோசடியில் ஈடுபட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraudster-arrested-over-hanuman-statue-scam-1784773195"></link>
            <id>https://tamilwin.com/article/fraudster-arrested-over-hanuman-statue-scam-1784773195</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழிபாடு செய்யப்பட்டதாக கூறப்படும், தங்க முலாம் பூசப்பட்ட கதாயுதத்துடன் கூடிய அனுமன் சிலை ஒன்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழிபாடு செய்யப்பட்டதாக கூறப்படும், தங்க முலாம் பூசப்பட்ட கதாயுதத்துடன் கூடிய அனுமன் சிலை ஒன்றை தோண்டி எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, </p><p>தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழிபாடு செய்த அனுமன் சிலை 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜா-எல, மெல்வத்தை பகுதிக்கு இரகசியமாக கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மோசடி கும்பல் ஒன்று பணம் பறிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>ஜா-எலயில் புதைக்கப்பட்டுள்ள சிலை</h2><p>அவ்வாறு புதைக்கப்பட்டுள்ள அந்த சிலையை இந்தியாவில் உள்ள பூசகர் ஒருவருக்கு 2 கோடிக்கும் அதிகமான ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அந்த கொடுக்கல் வாங்கல் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் பங்களிப்புடனேயே நடப்பதாகவும் மோசடிக்காரர்கள் தெரிவித்திருக்கிறார்கள். </p><p>சிலையை தோண்டி எடுத்து இந்தியாவிற்கு அனுப்பும் வரை தேவைப்படும் பல்வேறு செலவுகளுக்கு சுமார் இரண்டு கோடி ரூபா பணம் செலவாகும் என்பதால், பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பணக்கார வர்த்தகர்களின் வாட்ஸ்அப் இலக்கங்களுக்கு தகவல்களை அனுப்பி செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
இது குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸ் மா அதிபரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdd4084-c44f-491b-9c6e-0ba28bfed3a5/26-6a617a4d236c6.webp' /></p><p>இவ்வாறானதொரு பின்னணியில், இந்த பிரதான நபர் கொழும்பு பகுதியில் வைத்து கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>
சந்தேகநபரின் தொலைபேசியை பரிசோதித்த போது, மேலும் பெருமளவானோருக்கு வாட்ஸ்அப் ஊடாக இந்த மோசடி தொடர்பான காட்சிகளை அனுப்பியுள்ளமை தெரியவந்தது. </p><p>கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேக
நபர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T02:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டலொன்றில் 500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர் - பின்னணியில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-people-arrested-with-500-pounds-of-gold-1784773812"></link>
            <id>https://tamilwin.com/article/10-people-arrested-with-500-pounds-of-gold-1784773812</id>
            <summary type="text">கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் பெருந்தொகை பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் பெருந்தொகை பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்துள்ள சந்தேகநபர்கள், வத்தேகமவிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோதே நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை</h2><p>
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 930 கிராம் மொத்த எடையுடைய கொண்ட 4 தங்கம் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4711aa3c-7ad4-4c86-903d-e6362032c3e3/26-6a617fcf9efa8.webp' /></p><p>

மேலும், இவர்களிடமிருந்து 1 கோடியே 69 இலட்சம் ரூபா ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>சந்தேகநபர்கள் தங்க தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளனர்.
</p><p>
எனினும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்துக்கான முறையான உரிமையை நிரூபிக்கும் எந்தவிதமான ஆவணங்களும் அவர்களிடம் இல்லையென்பதும் தெரியவந்துள்ளது.</p><p>இதற்கமைய, வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை இன்று (23) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T02:46:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nimalka-fernando-missing-persons-1784769676"></link>
            <id>https://tamilwin.com/article/nimalka-fernando-missing-persons-1784769676</id>
            <summary type="text">தமிழீழத்திற்கான இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. இவ்வாறு காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கேட்பது &quot;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழத்திற்கான இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. இவ்வாறு காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கேட்பது "என் பிள்ளைக்கு என்ன நடந்தது?" என்றுதான். </p><p>500 பேரை நாங்கள் இராணுவத்தி்டமே ஒப்படைத்தோம். 
அப்படியென்றால் ஒரு நாடாக அந்தத் தாய்மார்களுக்கு நாம் அளிக்கும் பதில் என்ன? எனவே இந்த விடயங்கள் குறித்தும், பொறுப்புக்கூறல் குறித்தான பொறிமுறைகள் (Mechanisms), சட்டக் கட்டமைப்புகள் மற்றும் அரசியல் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல விடயங்களை தெரிவித்திருந்தார்.அது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள்,</p><h2>
 </h2><p></p><h2>இராணுவத்தால்&nbsp; பஸ்களில் ஏற்றப்பட்ட பிள்ளைகள்</h2><p>
இந்த விடயம் ஒட்டுமொத்தமாக சமாதானம் பற்றிய ஒரு விடயம். உதாரணமாக, இப்போது என் மகன் காணாமல் போயிருந்தால் எனக்கு இருக்கும் வேதனை சமாதானத்தைப் பாதிக்கும். </p><p>உங்களால் அதை சாதாரண விடயமெனக் கடந்துபோக முடியாது.
தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக நீதிமன்றத்திலும் கூறியிருக்கிறார்கள். வவுனியா நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று நடக்கிறது.</p><p>
சீ.டீ.பி பஸ்களில் இராணுவத்தினரின் உதவியுடன் ஏற்றினார்கள். நான் இராணுவத்திடம் கேட்கவில்லை. நீதிமன்றத்திலும் பெயர் பட்டியல் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.
</p><p>போர் ஒன்று இருந்ததை நாம் ஏற்றுக்கொண்டோம் தானே, அப்படியென்றால் போர்க் குற்றங்களும் நடந்திருக்கும்.
இப்போது சிலர் சொல்லலாம், இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், ஆனால் சரணடையவில்லை என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a105268-7bfe-4112-9ae2-9a586d3d51dc/26-6a616c8ec580a.webp' /></p><p>அப்போது கைது செய்யப்படும் போது ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை புரிந்து கொண்டுதான் மதகுரு ஒருவர் அனைவரிடமும் கலந்துரையாடி சரணடையுங்கள், கடவுள் பார்த்துக்கொள்வார் என்று பெயர் பட்டியல் ஒன்றையும் எடுத்துள்ளார். அந்த மதகுருவும் இன்றில்லை.
</p><p>எனவே, பயங்கரவாதத்தை அடக்கும் விடயத்திலும் ஒரு குற்றம் நடந்திருந்தால், அந்த குற்றம் குறித்து நாம் விசாரணை செய்ய வேண்டும். போர்க் குற்றம் என்பதற்கு வரும்போது அதில் சில வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. </p><p>போர் செய்வதற்கும் ஒரு சட்டக் கட்டமைப்புக்குள் பரஸ்பரம் இருக்க முடியும் என்ற ஒரு கதை இருக்கிறது. அது எல்.எல்.ஆர்.சி (LLRC) அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
இது குறித்து ஆராய்ந்து பார்த்து, இதன் தகவல்களை வெளிக்கொணர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதும், என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவதும் அவசியம்.
</p><p>அப்படியென்றால் ஒரு நாடாக அந்தத் தாய்மாருக்கு அளிக்கும் பதில் என்ன? எனவே இந்த விடயங்கள் குறித்தும், பொறுப்புக்கூறல் குறித்தான பொறிமுறைகள் (Mechanisms), சட்டக் கட்டமைப்புகள் மற்றும் அரசியல் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mpHiTa2Sed8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-23T02:13:05+00:00</updated>
        </entry>
    </feed>
