<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-02T15:31:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தரப்பை பழிவாங்கிய அநுர அரசு - ஏமாற்றத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்த பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்த பகுதி மாநகர சபை மறுத்துள்ளது. </p><p>

குறித்த நாட்களில் வேறு தரப்பினரால் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் சல்காது விளையாட்டு மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அன்றைய தினம் அவற்றை வழங்க முடியாது என அனுராதபுரம் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். </p><p>

அத்துடன், இதற்கு பொருத்தமான வேறொரு தினத்தை ஒதுக்கிக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறும் அறிவித்துள்ளார்.</p><h2><b> 

கோரிக்கை நிராகரிப்பு</b></h2><p>எனினும், சல்காது மைதானத்தை பெறுவதற்காக தங்களால் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. </p><p>இருந்த போதிலும், விண்ணப்பித்த வேறு ஒரு தரப்பினருக்கு குறித்த மைதானத்தை வழங்குவதற்கு மாநகர சபை செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SIg-Zv7vr2I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>

அத்துடன் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் மூன்றாவது தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி தங்களுக்கு வழங்குவது மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர். </p><p>

இது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேயரின் அறிவுறுத்தலுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும் மொட்டுக்கட்சியின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T15:01:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் போர் தாக்குதல்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/escalating-hostilities-between-the-us-and-iran-1788358526"></link>
            <id>https://tamilwin.com/article/escalating-hostilities-between-the-us-and-iran-1788358526</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர்
மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர்
மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர்
தீவிரமடைந்துள்ளது.
</p><p>
ஈரானிய புரட்சிகரக் காவல் படையின்(IRGC) வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்
நிலையங்கள், தொடர்பாடல் மையங்கள் மற்றும் கடல்சார் கடற்படை இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
</p><p>
இந்த தாக்குதலில் தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் திருமண நிகழ்வொன்று
இடம்பெற்ற வீடு தாக்கப்பட்டதில் சிறுவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன்,
68 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
</p><h2>
ஈரான் ஏவுகணை தாக்குதல்..</h2><p>
இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்தான், குவைத் மற்றும் ஈராக்கில் உள்ள
அமெரிக்க இராணுவ முகாம்கள் மற்றும் இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும்
ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c39277-2ebb-4594-a963-5a7708f392c1/26-6a98397f405ae.webp' /></p><p>
</p><p>
 அமெரிக்கப் படைகளை பிராந்தியத்தில்
இருந்து முற்றாக வெளியேற்றுவதே தமது முதன்மை நோக்கம் என ஈரானிய இராணுவத் தலைமை அறிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் முடக்கியுள்ள நிலையில்,
அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட இரு எண்ணெய்க் கப்பல்கள் கடலில் வீசப்பட்ட
கண்ணிவெடிகளில் சிக்கி சேதமடைந்துள்ளன.</p><p>

இந்த தீவிரப் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள்
மீண்டும் உச்சமடைந்துள்ளதுடன், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும்
கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>YOU MAY LIKE THID VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HWFRn2b_AbA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:58:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை நிறைவு - உயர் நீதியரசர்கள் குழாம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-concluded-1788360704"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-concluded-1788360704</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) உயர் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

இதனையடுத்து, சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு, அனுப்பி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
</p><h2>
உயர் நீதிமன்றத்தின் முடிவு</h2><p>

சட்டமூலத்திற்கு எதிராகவும், அதற்கு ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களையும், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e52ff3-aa9b-4d59-bb12-cb05cfce5c5c/26-6a98386e12d81.webp' /></p><p>
</p><p>
மேலும், மனுக்கள் தொடர்பில் ஏதேனும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருந்தால், அவற்றை நாளை பிற்பகல் 3 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை, நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, நீதிமன்ற செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்கும் நோக்கிலேயே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், நீதித்துறை அமைப்பு தொடர்பான திருத்தச் சட்டமூலமும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம்</h2><p>
சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயரத்ன இந்த விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d3326fe-3318-48b3-aee3-4572bb05d56a/26-6a98386edca35.webp' /></p><p>
</p><p>
குறித்த சட்டமூலங்கள் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில், இன்று(02) விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
</p><p>
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பவுள்ள இரகசிய வியாக்கியானம், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமையவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:53:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் - சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்க போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/struggle-to-rescue-people-trapped-in-mines-nepal-1788356592"></link>
            <id>https://tamilwin.com/article/struggle-to-rescue-people-trapped-in-mines-nepal-1788356592</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து,
காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து,
காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திபெத்தின் பேரழிவுப் பகுதிக்கு செல்லும் பிரதான பாதையை சீனா மீண்டும்
திறந்துள்ளது.
</p><p>
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு காரணமாக உருவான
வெள்ளப்பெருக்கில் இதுவரை 1,114 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார்
4,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
</p><h2>
தீவிரப்படுத்தப்படும் மீட்பு நடவடிக்கை</h2><p>

எனினும், நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கியுள்ள பல
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில்
மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32614a1-122b-475a-8d1b-e384db973aec/26-6a982865f10f7.webp' />&nbsp;&nbsp;</p><p>

சுரங்கங்களுக்குள் தேவையான காற்று, உணவு மற்றும் நீர் வசதிகள் இருக்கும்
என்பதால் அவர்கள் உயிருடன் மீட்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.</p><p>இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுக்கள் இந்த
அபாயகரமான மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.</p><h2>
 திபெத் பேரழிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்</h2><p>
இதனிடையே, எல்லையோரப் பகுதியான கிராங் கணவாய்க்கான பிரதான வீதியை சீனா
திறந்துள்ளதைத் தொடர்ந்து, கனரக இயந்திரங்கள் மற்றும் உயிர்மீர்ப்பு
சாதனங்களுடன் மீட்புக் படையினர் திபெத் பேரழிவுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.</p><p>

திபெத் பகுதியில் மாத்திரம் 104 இந்தியர்கள், 49 நேபாளிகள் உட்பட
நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக சீன அதிகாரப்பூர்வத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5cd4a08-d9d3-4c72-9051-3c4790044a4f/26-6a982866a5132.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பேரழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், பேரழிவின் நினைவுகளினாலும் இழப்புகளினாலும் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் உளவியல் பாதிப்புகளுக்கு
உள்ளாகியிருப்பதாக சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்.. பெற்றோருக்கு அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-results-dont-punish-ministry-warns-1788354460"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-results-dont-punish-ministry-warns-1788354460</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பிள்ளைகளை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பிள்ளைகளை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
</p><p>
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
பரீட்சைப் பெறுபேறுகளைக் காரணம் காட்டி பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது அவர்களை உளரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதையோ தவிர்க்குமாறு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ea3202-45e6-4406-93da-03711d0bbd70/26-6a98235e497da.webp' /></p><p>
</p><p>
மேலும், பிள்ளைகளுக்குத் அசௌகரியம், மன உளைச்சல் அல்லது அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான செய்திகள் மற்றும் பதிவுகளை வெளியிடுவதையோ அல்லது பரிமாறுவதையோ தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இத்தகைய செயல்கள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களாகக் கருதப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சு, இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சாத்தியமான அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் : அநுர அரசுக்கு எதிராக கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threats-tamil-media-strong-condemnation-anura-govt-1788353381"></link>
            <id>https://tamilwin.com/article/threats-tamil-media-strong-condemnation-anura-govt-1788353381</id>
            <summary type="text">தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும்
அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் ஊட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும்
அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் இன்று(02.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்கள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"தமிழர் தாயகப் பகுதியில் அரச ஊடகமொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவர்,
அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக அவதூறுகள்,
விசாரணைகள் மற்றும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b339ebac-8f3b-4dd3-a5da-74957aa18231/26-6a98231b5f503.webp' /></p><p>
மக்களுடைய ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாகச் சர்வதேசத்துக்குக் கூறும் தற்போதைய
தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் தனது
உண்மையான முகத்தை வெளிப்படுத்துகின்றது.
</p><p>
அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும்
நாம் எப்போதும் அரணாக நிற்போம். </p><h2>வாக்களித்த மக்கள் வெட்கப்பட வேண்டிய நிலை</h2><p>வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் காணி
ஒன்றின் மீது கல்லெறிந்து சிசிரிவி கமரா சேதப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a10e916-3615-406a-96b7-c98f53de2a5a/26-6a98231c18063.webp' /></p><p>சிசிரிவி
காணொளிகள் மற்றும் மேற்படி நபர் ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கிய ஒப்புதல்
வாக்குமூலம் ஆகியவை இருந்த போதிலும், பொலிஸார் அவரை 24 மணி நேரத்துக்குள்
நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் அதிகாலை 3 மணியளவில் விடுவித்துள்ளமை
அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
</p><p>
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் தற்போது வெட்கப்பட வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு, கிழக்கில் தமிழர்களின் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளைத்
தடுப்பதற்குச் சிங்களக் கட்சிகளை வடக்கு, கிழக்கில் இருந்து ஜனநாயக ரீதியாக
வெளியேற்றுவதே தமிழர்களின் இருப்பை நிலைநாட்டுவதற்கான வழி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:24:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடித்து நொறுக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவுத் தூபி - கொந்தளிப்பில் தமிழர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/memorial-obelisk-of-samadhi-of-beaten-father-selva-1788354396"></link>
            <id>https://tamilwin.com/article/memorial-obelisk-of-samadhi-of-beaten-father-selva-1788354396</id>
            <summary type="text">தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின்
நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின்
நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி
அடையாளம் தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. </p><h2>

அடித்து நொறுக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவுத்தூபி</h2><p>

வல்லை - அராலி வீதியில் அமைந்துள்ள தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில்,
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

போருக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை ஒத்த வடிவில்,
போர் முடிவடைந்த பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து
கடந்த 2012ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb980c4-144e-411c-b21b-6cafd38d2e26/26-6a981fb795d91.webp' /></p><p>
</p><p>
தந்தை செல்வாவின் சமாதியில் அவரது நினைவாக அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகப்
பாதுகாக்கப்பட்டு வந்த அந்த நினைவுத் தூபியே அடையாளம் தெரியாத நபர்களால் திட்டமிட்டு இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.</p><h2> 


மக்களின் கோரிக்கை</h2><p>
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஒரு
தலைவரின் நினைவுச் சின்னம் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளமை பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b7bb2a-47f9-49e4-b747-1a17c17ce0a9/26-6a981fb87f9d6.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களும் அயலவர்களும் வலி.வடக்கு பிரதேச சபையின்
கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக அடையாளம் கண்டு
சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், நினைவுத் தூபியை மீளப் புனரமைக்க நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6c974b-b30d-40ff-a1b9-aa2d3e26ad39/26-6a981fb95cdcb.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f010d42f-984e-4a2a-913b-9d212e50f183/26-6a981fba3513e.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:09:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவை தேடிய அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம் - ஷிரான் பாசிக்குடன் தொடர்பா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/azad-sali-may-be-arrested-soon-shiran-basik-1788349236"></link>
            <id>https://tamilwin.com/article/azad-sali-may-be-arrested-soon-shiran-basik-1788349236</id>
            <summary type="text">அண்மையில், மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்&amp;nbsp;அசாத் சாலி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து பேசுபொருளானது.&amp;nbsp;&quot;இப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில், மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்&nbsp;அசாத் சாலி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து பேசுபொருளானது.&nbsp;</p><p>"இப்போது அநுர எங்கே? அநுர காணாமல் போய் விட்டார்." என இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>இந்த விமர்சனம் பேசுபொருளாகிய அதேவேளை, கண்டனத்திற்கும் உள்ளாகியிருந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சமூகச் செயற்பாட்டாளர் தாஹா ஐன்ஸ்டீன், அவர் கைது செய்யப்படுவாரா என்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம், இச்சம்பவத்தை தொடர்ந்து, அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர்&nbsp;ஷிரான் பாசிக் தொடர்பிலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு&nbsp;ஐன்ஸ்டீன் வெளியிட்ட கருத்துக்கள் பின்வரும் காணொளியில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WfPcy3u9XX0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் - காணி உரிமையாளர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/14-year-old-boy-dies-1788353644"></link>
            <id>https://tamilwin.com/article/14-year-old-boy-dies-1788353644</id>
            <summary type="text">பொலன்னறுவை - சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் காட்டு
யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில்
அமைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை - சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் காட்டு
யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில்
அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(01.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

பல்லேகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன், இரவு
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கிய
நிலையில் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><h2>
சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சிய நபர்</h2><p>

காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்த நபர், தனது வீட்டிலிருந்தே அதற்குச்
சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9c5d05a-5036-4dde-8ab2-236640a390ab/26-6a981d0a4cb1a.webp' /></p><p>
</p><p>
அந்த வேலிக்கு அருகில் சென்ற வேளையிலேயே குறித்த சிறுவன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத மின்சார வேலியை அமைத்த நபர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சிரிபுர பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த Trailer - இன்று வெளியானது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/poraattam-movie-trailer-released-1788352535"></link>
            <id>https://tamilwin.com/article/poraattam-movie-trailer-released-1788352535</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) இன்று(02.09.2026) வெளியாகவுள்ளது.

ஈழத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) இன்று(02.09.2026) வெளியாகவுள்ளது.</p><p>

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
</p><h2>
போராட்டம் திரைப்படம்</h2><p>

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். 

“போராட்டம்” திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
</p><p>
போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de57758-5d90-4ccc-a34f-47219cdd1b62/26-6a98185641a93.webp' /></p><p> 

ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக “போராட்டம்” உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><h2>
புலம்பெயர் தமிழர்களின் எதிர்பார்ப்பபு</h2><p>
ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
“போராட்டம்” திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p> 

ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IcgPF0UtlUc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:36:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது - சாதனை படைத்த 56 000 மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட (Cut-off Mark) அதிக மதிப்பெண்களைப் பெற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p><span style="font-size: 14px;">2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட (Cut-off Mark) அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</span></p><p>மேலும், இப்பரீட்சைக்கு மொத்தம் 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் 289,867 மாணவர்கள் மாத்திரமே பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;&nbsp;<span style="font-size: 14px;"></span></h2><p><span style="color: inherit;">2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</span></p><h2>முதலாம் இணைப்பு&nbsp; &nbsp;</h2><p>2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது</p><h3>



பரீட்சைக்கான முடிவுகள்</h3><p>
இதற்கமைய, <a href="www.doenets.lk" target="_blank"><b>www.doenets.lk</b></a> அல்லது <a href="http://www.results.exams.gov.lk/home.htm" target="_blank"><b>www.results.exams.gov.lk</b></a> ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda0bf8d-2bb9-4d35-8afd-566baf2a7d38/26-6a98015dc06e8.webp' /></p><p> 

இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் தேர்வு ஒகஸ்ட் 9 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 தேர்வு மையங்களில் இடம்பெற்றுள்ளன.</p><p> 

சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் உட்பட மொத்தம் 294,089 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் பங்கேற்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mc60PmHrlxM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:20:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : சாதனை படைத்த 56000 மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-cut-off-mark-above-56000-1788350256"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-cut-off-mark-above-56000-1788350256</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சையில் மொத்தம் 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர், </p><p>இவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சையில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be94974e-cbf4-4af4-afef-17c6029bd243/26-6a9812a7dccb4.webp' /></p><p>
</p><p>
அதன்படி, வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளில், 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட அடையாள கவனயீர்ப்புப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-university-of-jaffna-1788345705"></link>
            <id>https://tamilwin.com/article/protest-university-of-jaffna-1788345705</id>
            <summary type="text">அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்
அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று மதிய உணவு இடைவேளையின்
போது அடையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்
அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று மதிய உணவு இடைவேளையின்
போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>
இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் இன்று(02.09.2026) மதிய
உணவு இடைவேளையில் அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். </p><h2>ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள்&nbsp;</h2><p>பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும்
அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் பல்கலைக்கழக
விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல்
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc4e586-d3e3-4c09-8444-5d85b4f345f8/26-6a980a389a378.webp' /></p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப்
போராட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
</p><p>இதன்போது அரசாங்கத்திற்கு தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான பதாதைகள்
மற்றும் கோச அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்
சங்கத்தின் தலைவர் விக்னேஸ்வரன், தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து
அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை
உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
</p><p>மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள், ஆய்வுகூட வசதிகள்
உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாமல் மேலதிக
மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்</h2><p>எனவே, இந்த விடயங்களில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்தி,
பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c98d8bb-b688-45d9-9b00-30bc8e4f24f6/26-6a980a3986c6c.webp' /></p><p>இதனிடையே, போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சர்வேஸ்வரன், தற்போதைய அரசாங்கம்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும்
அதற்கு ஆதரவு வழங்கியதாகத் தெரிவித்தார்.
</p><p>உயர்கல்வித் துறையை தற்போதைய அரசாங்கம் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு
இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>குறிப்பாக, உயர்கல்வி தொடர்பான பொறுப்புகளைக் கொண்டுள்ள நாட்டின் தற்போதைய
பிரதமர் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்பதால், பல்கலைக்கழகங்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர் நன்கு புரிந்துகொண்டு தீர்வு காண்பார் என்ற
எதிர்பார்ப்பு காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>எனினும், தற்போதைய நிலைமைகளைப் பார்க்கும்போது, தாம் கொண்டிருந்த அந்த
நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்
செயலாளர் சர்வேஸ்வரன் கவலை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/162db934-47ae-4601-bfe7-3a1c5813ef2c/26-6a980ab29f227.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85ddf1e-3625-40cd-ad71-d327f80fbacb/26-6a980ab3ad649.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01db9fdc-3f3b-4640-aad5-47c2cf0e3a43/26-6a980ab48cdc3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e22d616-0e05-4114-b821-021e14d8062b/26-6a980ab56898c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6032faee-a9fa-4196-9d63-e89e132b6327/26-6a980ab654f43.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விழிப்புணர்வுடன் கூட்டுச் செயல்பாடும் அவசியம்..! பூட்டானில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-harini-amarasooriya-in-bhutan-1788348761"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-harini-amarasooriya-in-bhutan-1788348761</id>
            <summary type="text">இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை
எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச்
செயல்பாடாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை
எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச்
செயல்பாடாகவும் அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என்றும் இலங்கைப்
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

பூட்டானில் இடம்பெற்ற "உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின்"
உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><h2>
காலநிலை நிதி உதவி</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p> 

 காலநிலை நடவடிக்கைகள், விவசாயத் துறைப் புத்தாக்கம், பொறுப்புமிக்க
நுகர்வு, உணவு விரயத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கான ஆதரவு மற்றும்
ஊட்டச்சத்துக்கான சம வாய்ப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் அனைவரையும்
உள்ளடக்கிய உணவு முறைமையை உருவாக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8b7f7e-9e3d-4c72-b071-76bbf1cf43d2/26-6a98095b5c320.webp' /></p><p> </p><p> 

மேலும் அபிவிருத்தியும் நிலைத்தன்மையும் இணைந்து பயணிக்கக்கூடிய
எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உலகளாவிய ஒத்துழைப்பு, காலநிலை நிதி உதவி மற்றும்
தொழில்நுட்ப அணுகலை வலுப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/current-status-northern-province-irrigation-ponds-1788347342"></link>
            <id>https://tamilwin.com/article/current-status-northern-province-irrigation-ponds-1788347342</id>
            <summary type="text">வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக வடமாகாண
நீர்ப்பாசன பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக வடமாகாண
நீர்ப்பாசன பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு கருத்து தெரிவித்திருந்தார்.
</p><p>இது தொடர்பில் அவர் வழங்கிய விளக்கத்தில், வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 5 மாவட்டங்களிலுள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர
நீர்ப்பாசனக் குளங்களைப் பராமரித்து வருகிறது.
</p><p>
நீர்மட்டம்:</p><p>&gt; 50 வீத நீர்: விசுவமடு குளம் உட்பட 3 குளங்களில் மட்டுமே காணப்படுகிறது.</p><p>&gt; 25 வீத நீர்: இரணைமடு குளம் (25 வீத நீர் / 18 அடி ஆழம்) உட்பட 8 குளங்களில்
உள்ளது.</p><h2>காலபோகச் செய்கை</h2><p>
எஞ்சிய 43 குளங்களில் காணப்படுகிறது. பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம்
5வீதத்துக்கும் குறைவாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd25df76-f66b-4f60-84ab-ef7845a5e471/26-6a98068a71d08.webp' /></p><p>

நீர் வற்றுவதற்கான காரணம்: 3 குளங்கள் முற்றிலும் வற்றியுள்ளன.</p><p> </p><p>இதற்கு எல்
நினோ (El Niño) தாக்கம் மட்டுமன்றி, புனரமைப்பு வேலைகளுக்காக நீர் திறந்து
விடப்பட்டதும், அதிக வெப்பம் காரணமாக வாரத்திற்கு 1–2 அங்குல நீர் ஆவியாவதும்
முக்கிய காரணங்களாகும்.
</p><p>


காலபோகச் செய்கையை (Maha Season): செப்டெம்பர்/ஒக்டோபர் தொடக்கத்தில் தொடங்க
அறிவுறுத்தினாலும், குறைந்த நீர்மட்டம் காரணமாக உடனடியாக நீர் வழங்குவது
கடினம். மழைவீழ்ச்சி மற்றும் நீர்மட்டத்தைக் கண்காணித்த பிறகே
தீர்மானிக்கப்படும்.</p><p>
குடிநீர் விநியோகம்: இரணைமடு மற்றும் வவுனிக்குளங்களில் இருந்து செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் குடிநீர் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலைச் செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/v-dharmalingam-s-41st-death-anniversary-1788348034"></link>
            <id>https://tamilwin.com/article/v-dharmalingam-s-41st-death-anniversary-1788348034</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான விஸ்வநாதர்
தர்மலிங்கத்தின் 41ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான விஸ்வநாதர்
தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான நிகழ்வுகள் இன்று(02.09.2026) யாழ்ப்பாணம் தாவடியில் இடம்பெற்றுள்ளது. </p><h2>

நினைவு தினம் அனுஷ்டிப்பு</h2><p>
கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி தாவடி பகுதியில்
அடையாளம் தெரியாதவர்களால் வி. தர்மலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரின் நினைவாக 
அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56af8911-f4b3-4bb6-8189-d924b1f6d03c/26-6a9806b60c615.webp' /></p><p> 

இதன்போது, அவரின் மகனான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் இணைந்து நினைவுத் தூபிக்கு
மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதனைத் தொடர்ந்து, சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T11:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - அமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-permanent-solution-water-problem-batti-1788342558"></link>
            <id>https://tamilwin.com/article/minister-permanent-solution-water-problem-batti-1788342558</id>
            <summary type="text">தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர்
பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி
செய்வதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர்
பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி
செய்வதற்கான முழு நடவடிக்கையும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல்
அமைச்சர் சுசில் ரணசிங்க எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவருமான கந்தசாமி பிரபு அழைப்பின் பேரில், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும்
நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு
பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(01)
இடம்பெற்றது. </p><p>இதன்போது குடிநீர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு
ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நீர் தேவைகளை பூர்த்தி செய்ய</h2><p>
தற்போது ஏற்பட்டுள்ள எல் நினோ தாக்கத்தினால் வறட்சி நிலையால் ஏற்பட்டுள்ள
குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக விசாரிப்பதற்கு நீர் தேவைகளை பூர்த்தி
செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காகன கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47408e9a-872f-4c08-b9ae-1d73dc1121c3/26-6a97f6f4cb8a6.webp' /></p><p>இந்த எல் நினோ தாக்கத்தினால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு
மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்
வழங்கும் பிரதானமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வருகின்ற நீர் படிப்படியாக
குறைந்து வருகிறது.</p><h2>வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை</h2><p>
</p><p>
இந்த நிலையில் மழைவீழ்ச்சி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என வானிலை அவதான
நிலையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த குடிநீர் பற்றாக்குறையை
எதிர் காலத்தில் தடுத்துக் கொள்வதற்காகவும் மக்களின் குடிநீர் பிரச்சனையை
பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f63b21a-bb36-4661-bf0a-c82e0e55a4d2/26-6a97f6f58ff33.webp' /></p><p>அதேவேளை எதிர் காலத்தில் மட்டு மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள்
இடம்பெறாமல் இருப்பதற்கு ஏனைய குளங்களை புனரமைப்பது தொடர்பாகவும் வளங்களை
தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான வாகன வசதிகள், இயந்திர வசதிகள் உட்பட அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு
அமைச்சர் பணித்துள்ளார்.</p><p>இந்த கலந்துரையாடல் மூலம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினைக்கான
நிரந்தர தீர்வையும் தற்போது வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய பிரதேச சபை உறுப்பினரின் பதவி விலகல்.. வெளியான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-saba-member-ganesharuban-resigned-1788343626"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-saba-member-ganesharuban-resigned-1788343626</id>
            <summary type="text">அண்மையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன்&nbsp;கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp;</p><p>யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp; &nbsp;</p><p>கைதினை தொடர்ந்து, தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் விலகினார்.&nbsp;</p><p>நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவாகியிருந்தது.&nbsp;</p><p>


இந்த தாக்குதல் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றதாகவும் உறுப்பினர் தலைமையிலான கும்பல் ஒன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில்&nbsp;பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் பின்வரும் காணொளியில் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F27977807035179367%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:16:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் தற்போதைய உடல்நிலை! கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/report-saleh-s-health-order-colombo-hospital-1788341817"></link>
            <id>https://tamilwin.com/article/report-saleh-s-health-order-colombo-hospital-1788341817</id>
            <summary type="text">
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின்&amp;nbsp; தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>
</p><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின்&nbsp; தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>


சுரேஷ் சலேக்கு மேலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறதா என்பது தொடர்பான தகவல்களையும் அறிக்கையில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>ஈஸ்டர் தாக்குதல்கள்&nbsp;</h2><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02d33567-ed39-46a1-9072-83bdd20cdd93/26-6a97f3075540f.webp' /></p><p>இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றார்.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி , தாயார் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம். கே. சிவாஜிலிங்கம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mk-sivajilingam-admitted-in-icu-colombo-hospital-1788342453"></link>
            <id>https://tamilwin.com/article/mk-sivajilingam-admitted-in-icu-colombo-hospital-1788342453</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அவர் நீண்டகாலமாக உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-appear-in-bribery-commision-friday-1788340632"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-appear-in-bribery-commision-friday-1788340632</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாக உள்ளார் என அவரது சட்டத்தரணி முதிதா ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பிட்ட திகதியில் காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இலஞ்ச -&nbsp;ஊழல் விசாரணை ஆணைக்குழு நாமலுக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்படி அறிவித்துள்ளது என்று சட்டத்தரணி கூறியுள்ளார்.</p><h2>நாமலின் கோரிக்கை..&nbsp;</h2><p> </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வெள்ளிக்கிழமை (4) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை முதலில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba55a75-bbb9-4878-aa96-2a23f658e670/26-6a97ef7daa16b.webp' /></p><p>

அந்த அறிவிப்புக்கு பதிலளித்த ராஜபக்ச, அறிவிப்பு விடுக்கப்பட்ட மறுநாள் தன்னால் முன்னிலையாக முடியும் என்று ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>இந்நிலையில், இலஞ்ச ஆணைக்குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்ததோடு, அதனைத் தொடர்ந்து வட்ஸ்அப் வழியாக அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வத் தகவல் மூலம், அவர் முதலில் திட்டமிடப்பட்ட திகதியில் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று அவருக்குத் தெரிவித்துள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்காகப் பெரிய ரக விமானக் குழுமத்தைக் கையகப்படுத்தியது தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VtSsJttAUgY" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-02T09:45:18+00:00</updated>
        </entry>
    </feed>
