<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-02T12:30:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்.. 56,000 மாணவர்களின் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட (Cut-off Mark) அதிக மதிப்பெண்களைப் பெற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p><span style="font-size: 14px;">2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட (Cut-off Mark) அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</span></p><p>மேலும், இப்பரீட்சைக்கு மொத்தம் 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் 289,867 மாணவர்கள் மாத்திரமே பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;&nbsp;<span style="font-size: 14px;"></span></h2><p><span style="color: inherit;">2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</span></p><h2>முதலாம் இணைப்பு&nbsp; &nbsp;</h2><p>2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது</p><h3>



பரீட்சைக்கான முடிவுகள்</h3><p>
இதற்கமைய, <a href="www.doenets.lk" target="_blank"><b>www.doenets.lk</b></a> அல்லது <a href="http://www.results.exams.gov.lk/home.htm" target="_blank"><b>www.results.exams.gov.lk</b></a> ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda0bf8d-2bb9-4d35-8afd-566baf2a7d38/26-6a98015dc06e8.webp' /></p><p> 

இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் தேர்வு ஒகஸ்ட் 9 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 தேர்வு மையங்களில் இடம்பெற்றுள்ளன.</p><p> 

சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் உட்பட மொத்தம் 294,089 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் பங்கேற்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mc60PmHrlxM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:20:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : சாதனை படைத்த 56000 மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-cut-off-mark-above-56000-1788350256"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-cut-off-mark-above-56000-1788350256</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சையில் மொத்தம் 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர், </p><p>இவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சையில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be94974e-cbf4-4af4-afef-17c6029bd243/26-6a9812a7dccb4.webp' /></p><p>
</p><p>
அதன்படி, வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளில், 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட அடையாள கவனயீர்ப்புப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-university-of-jaffna-1788345705"></link>
            <id>https://tamilwin.com/article/protest-university-of-jaffna-1788345705</id>
            <summary type="text">அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்
அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று மதிய உணவு இடைவேளையின்
போது அடையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்
அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று மதிய உணவு இடைவேளையின்
போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>
இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் இன்று(02.09.2026) மதிய
உணவு இடைவேளையில் அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். </p><h2>ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள்&nbsp;</h2><p>பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும்
அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் பல்கலைக்கழக
விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல்
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc4e586-d3e3-4c09-8444-5d85b4f345f8/26-6a980a389a378.webp' /></p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப்
போராட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
</p><p>இதன்போது அரசாங்கத்திற்கு தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான பதாதைகள்
மற்றும் கோச அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்
சங்கத்தின் தலைவர் விக்னேஸ்வரன், தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து
அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை
உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
</p><p>மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள், ஆய்வுகூட வசதிகள்
உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாமல் மேலதிக
மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்</h2><p>எனவே, இந்த விடயங்களில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்தி,
பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c98d8bb-b688-45d9-9b00-30bc8e4f24f6/26-6a980a3986c6c.webp' /></p><p>இதனிடையே, போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சர்வேஸ்வரன், தற்போதைய அரசாங்கம்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும்
அதற்கு ஆதரவு வழங்கியதாகத் தெரிவித்தார்.
</p><p>உயர்கல்வித் துறையை தற்போதைய அரசாங்கம் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு
இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>குறிப்பாக, உயர்கல்வி தொடர்பான பொறுப்புகளைக் கொண்டுள்ள நாட்டின் தற்போதைய
பிரதமர் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்பதால், பல்கலைக்கழகங்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர் நன்கு புரிந்துகொண்டு தீர்வு காண்பார் என்ற
எதிர்பார்ப்பு காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>எனினும், தற்போதைய நிலைமைகளைப் பார்க்கும்போது, தாம் கொண்டிருந்த அந்த
நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்
செயலாளர் சர்வேஸ்வரன் கவலை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/162db934-47ae-4601-bfe7-3a1c5813ef2c/26-6a980ab29f227.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85ddf1e-3625-40cd-ad71-d327f80fbacb/26-6a980ab3ad649.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01db9fdc-3f3b-4640-aad5-47c2cf0e3a43/26-6a980ab48cdc3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e22d616-0e05-4114-b821-021e14d8062b/26-6a980ab56898c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6032faee-a9fa-4196-9d63-e89e132b6327/26-6a980ab654f43.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விழிப்புணர்வுடன் கூட்டுச் செயல்பாடும் அவசியம்..! பூட்டானில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-harini-amarasooriya-in-bhutan-1788348761"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-harini-amarasooriya-in-bhutan-1788348761</id>
            <summary type="text">இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை
எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச்
செயல்பாடாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை
எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச்
செயல்பாடாகவும் அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என்றும் இலங்கைப்
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

பூட்டானில் இடம்பெற்ற "உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின்"
உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><h2>
காலநிலை நிதி உதவி</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p> 

 காலநிலை நடவடிக்கைகள், விவசாயத் துறைப் புத்தாக்கம், பொறுப்புமிக்க
நுகர்வு, உணவு விரயத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கான ஆதரவு மற்றும்
ஊட்டச்சத்துக்கான சம வாய்ப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் அனைவரையும்
உள்ளடக்கிய உணவு முறைமையை உருவாக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8b7f7e-9e3d-4c72-b071-76bbf1cf43d2/26-6a98095b5c320.webp' /></p><p> </p><p> 

மேலும் அபிவிருத்தியும் நிலைத்தன்மையும் இணைந்து பயணிக்கக்கூடிய
எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உலகளாவிய ஒத்துழைப்பு, காலநிலை நிதி உதவி மற்றும்
தொழில்நுட்ப அணுகலை வலுப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நிலைப்பாடு குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/current-status-northern-province-irrigation-ponds-1788347342"></link>
            <id>https://tamilwin.com/article/current-status-northern-province-irrigation-ponds-1788347342</id>
            <summary type="text">வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக வடமாகாண
நீர்ப்பாசன பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமாகாண நீர்ப்பாசனக் குளங்களின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக வடமாகாண
நீர்ப்பாசன பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு கருத்து தெரிவித்திருந்தார்.
</p><p>இது தொடர்பில் அவர் வழங்கிய விளக்கத்தில், வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் 5 மாவட்டங்களிலுள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர
நீர்ப்பாசனக் குளங்களைப் பராமரித்து வருகிறது.
</p><p>
நீர்மட்டம்:</p><p>&gt; 50 வீத நீர்: விசுவமடு குளம் உட்பட 3 குளங்களில் மட்டுமே காணப்படுகிறது.</p><p>&gt; 25 வீத நீர்: இரணைமடு குளம் (25 வீத நீர் / 18 அடி ஆழம்) உட்பட 8 குளங்களில்
உள்ளது.</p><h2>காலபோகச் செய்கை</h2><p>
எஞ்சிய 43 குளங்களில் காணப்படுகிறது. பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம்
5வீதத்துக்கும் குறைவாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd25df76-f66b-4f60-84ab-ef7845a5e471/26-6a98068a71d08.webp' /></p><p>

நீர் வற்றுவதற்கான காரணம்: 3 குளங்கள் முற்றிலும் வற்றியுள்ளன.</p><p> </p><p>இதற்கு எல்
நினோ (El Niño) தாக்கம் மட்டுமன்றி, புனரமைப்பு வேலைகளுக்காக நீர் திறந்து
விடப்பட்டதும், அதிக வெப்பம் காரணமாக வாரத்திற்கு 1–2 அங்குல நீர் ஆவியாவதும்
முக்கிய காரணங்களாகும்.
</p><p>


காலபோகச் செய்கையை (Maha Season): செப்டெம்பர்/ஒக்டோபர் தொடக்கத்தில் தொடங்க
அறிவுறுத்தினாலும், குறைந்த நீர்மட்டம் காரணமாக உடனடியாக நீர் வழங்குவது
கடினம். மழைவீழ்ச்சி மற்றும் நீர்மட்டத்தைக் கண்காணித்த பிறகே
தீர்மானிக்கப்படும்.</p><p>
குடிநீர் விநியோகம்: இரணைமடு மற்றும் வவுனிக்குளங்களில் இருந்து செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் குடிநீர் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலைச் செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/v-dharmalingam-s-41st-death-anniversary-1788348034"></link>
            <id>https://tamilwin.com/article/v-dharmalingam-s-41st-death-anniversary-1788348034</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான விஸ்வநாதர்
தர்மலிங்கத்தின் 41ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல்
உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான விஸ்வநாதர்
தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான நிகழ்வுகள் இன்று(02.09.2026) யாழ்ப்பாணம் தாவடியில் இடம்பெற்றுள்ளது. </p><h2>

நினைவு தினம் அனுஷ்டிப்பு</h2><p>
கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி தாவடி பகுதியில்
அடையாளம் தெரியாதவர்களால் வி. தர்மலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரின் நினைவாக 
அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56af8911-f4b3-4bb6-8189-d924b1f6d03c/26-6a9806b60c615.webp' /></p><p> 

இதன்போது, அவரின் மகனான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் இணைந்து நினைவுத் தூபிக்கு
மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதனைத் தொடர்ந்து, சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T11:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - அமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-permanent-solution-water-problem-batti-1788342558"></link>
            <id>https://tamilwin.com/article/minister-permanent-solution-water-problem-batti-1788342558</id>
            <summary type="text">தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர்
பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி
செய்வதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர்
பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி
செய்வதற்கான முழு நடவடிக்கையும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல்
அமைச்சர் சுசில் ரணசிங்க எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவருமான கந்தசாமி பிரபு அழைப்பின் பேரில், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும்
நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு
பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(01)
இடம்பெற்றது. </p><p>இதன்போது குடிநீர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு
ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நீர் தேவைகளை பூர்த்தி செய்ய</h2><p>
தற்போது ஏற்பட்டுள்ள எல் நினோ தாக்கத்தினால் வறட்சி நிலையால் ஏற்பட்டுள்ள
குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக விசாரிப்பதற்கு நீர் தேவைகளை பூர்த்தி
செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காகன கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47408e9a-872f-4c08-b9ae-1d73dc1121c3/26-6a97f6f4cb8a6.webp' /></p><p>இந்த எல் நினோ தாக்கத்தினால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு
மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்
வழங்கும் பிரதானமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வருகின்ற நீர் படிப்படியாக
குறைந்து வருகிறது.</p><h2>வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை</h2><p>
</p><p>
இந்த நிலையில் மழைவீழ்ச்சி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என வானிலை அவதான
நிலையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த குடிநீர் பற்றாக்குறையை
எதிர் காலத்தில் தடுத்துக் கொள்வதற்காகவும் மக்களின் குடிநீர் பிரச்சனையை
பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f63b21a-bb36-4661-bf0a-c82e0e55a4d2/26-6a97f6f58ff33.webp' /></p><p>அதேவேளை எதிர் காலத்தில் மட்டு மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள்
இடம்பெறாமல் இருப்பதற்கு ஏனைய குளங்களை புனரமைப்பது தொடர்பாகவும் வளங்களை
தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான வாகன வசதிகள், இயந்திர வசதிகள் உட்பட அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு
அமைச்சர் பணித்துள்ளார்.</p><p>இந்த கலந்துரையாடல் மூலம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினைக்கான
நிரந்தர தீர்வையும் தற்போது வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய பிரதேச சபை உறுப்பினரின் பதவி விலகல்.. வெளியான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-saba-member-ganesharuban-resigned-1788343626"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-saba-member-ganesharuban-resigned-1788343626</id>
            <summary type="text">அண்மையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன்&nbsp;கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp;</p><p>யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp; &nbsp;</p><p>கைதினை தொடர்ந்து, தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் விலகினார்.&nbsp;</p><p>நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவாகியிருந்தது.&nbsp;</p><p>


இந்த தாக்குதல் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றதாகவும் உறுப்பினர் தலைமையிலான கும்பல் ஒன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில்&nbsp;பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் பின்வரும் காணொளியில் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F27977807035179367%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:16:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் தற்போதைய உடல்நிலை! கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/report-saleh-s-health-order-colombo-hospital-1788341817"></link>
            <id>https://tamilwin.com/article/report-saleh-s-health-order-colombo-hospital-1788341817</id>
            <summary type="text">
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின்&amp;nbsp; தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>
</p><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின்&nbsp; தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>


சுரேஷ் சலேக்கு மேலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறதா என்பது தொடர்பான தகவல்களையும் அறிக்கையில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>ஈஸ்டர் தாக்குதல்கள்&nbsp;</h2><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02d33567-ed39-46a1-9072-83bdd20cdd93/26-6a97f3075540f.webp' /></p><p>இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றார்.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி , தாயார் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம். கே. சிவாஜிலிங்கம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mk-sivajilingam-admitted-in-icu-colombo-hospital-1788342453"></link>
            <id>https://tamilwin.com/article/mk-sivajilingam-admitted-in-icu-colombo-hospital-1788342453</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அவர் நீண்டகாலமாக உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-appear-in-bribery-commision-friday-1788340632"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-appear-in-bribery-commision-friday-1788340632</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாக உள்ளார் என அவரது சட்டத்தரணி முதிதா ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பிட்ட திகதியில் காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இலஞ்ச -&nbsp;ஊழல் விசாரணை ஆணைக்குழு நாமலுக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்படி அறிவித்துள்ளது என்று சட்டத்தரணி கூறியுள்ளார்.</p><h2>நாமலின் கோரிக்கை..&nbsp;</h2><p> </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வெள்ளிக்கிழமை (4) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை முதலில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba55a75-bbb9-4878-aa96-2a23f658e670/26-6a97ef7daa16b.webp' /></p><p>

அந்த அறிவிப்புக்கு பதிலளித்த ராஜபக்ச, அறிவிப்பு விடுக்கப்பட்ட மறுநாள் தன்னால் முன்னிலையாக முடியும் என்று ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>இந்நிலையில், இலஞ்ச ஆணைக்குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்ததோடு, அதனைத் தொடர்ந்து வட்ஸ்அப் வழியாக அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வத் தகவல் மூலம், அவர் முதலில் திட்டமிடப்பட்ட திகதியில் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று அவருக்குத் தெரிவித்துள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்காகப் பெரிய ரக விமானக் குழுமத்தைக் கையகப்படுத்தியது தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷம்மி சில்வாவுக்கு விசாரணை அழைப்பு விடுத்துள்ள புலனாய்வுப் பிரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shammi-silva-krishantha-kapuwatte-summoned-1788335067"></link>
            <id>https://tamilwin.com/article/shammi-silva-krishantha-kapuwatte-summoned-1788335067</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.</p><p>தற்போது நடைபெற்று வரும் ஒரு விசாரணையின் ஒரு பகுதியாக, இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>திடீர் பதவி விலகல்கள்..</h2><p>
</p><p>
அதிகாரிகளின் கூற்றுப்படி, விசாரணையில் உள்ள விடயங்கள் தொடர்பான 36 அம்சங்களைக் கொண்ட ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளிக்குமாறு குறித்த இரண்டு முன்னாள் பதவியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/182f87f7-1e6e-4fb2-8cf3-b4ebdd0b4414/26-6a97e7940cf3e.webp' /></p><p>
நாட்டின் விளையாட்டு நிர்வாக அமைப்பிற்குள் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ஆளுகை தொடர்பான பிரச்சினைகள் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இருவரும் தங்கள் பதவிகளிலிருந்து விலகியிருந்தனர்.&nbsp;</p><p>இந்நிலையில், அவர்கள் பதவி விலகி சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:08:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள்! பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110"></link>
            <id>https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110</id>
            <summary type="text">&amp;nbsp;புதிய இணைப்புகொழும்பு - தலவத்துகொட பகுதியில் உள்ள விமான டிக்கெட் மற்றும் விசா வழங்கும் நிறுவனத்திலிருந்து 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;புதிய இணைப்பு</h2><p>கொழும்பு - தலவத்துகொட பகுதியில் உள்ள விமான டிக்கெட் மற்றும் விசா வழங்கும் நிறுவனத்திலிருந்து 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
</p><p>
நேற்று மதியம் நிறுவனத்திற்குள் புகுந்த நான்கு பேர் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களைக் கூர்மையான ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>சிசிடிவியில் பதிவான காட்சி</h2><p>

முகத்தை மூடியிருந்த சந்தேகநபர்கள், வெள்ளை நிற காரில் கொள்ளையடித்த பின்னர் தப்பிச்சென்றுள்ளதாக சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a2a2f53-de39-4087-b5b7-db7f7126d756/26-6a97e6f5547f6.webp' /></p><p>
</p><p>
சிசிடிவி காட்சிகளில் பதிவான படி, சந்தேகநபர்கள் முதலில் ஒரு ஊழியரை தாக்கிவிட்டு, பின்னர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
கொள்ளையர்கள் சுமார் 6 கோடி ரூபாய் பணத்தையும், உரிமையாளர் அணிந்திருந்த 4 தங்க நெக்லஸ்கள் மற்றும் 3 தங்க மோதிரங்களையும் கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>கொழும்பு&nbsp; - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில்&nbsp;சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்தவர்களே இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>குறித்த&nbsp;முகவர் நிலையத்திற்கு 4 பேர் வந்திருந்த நிலையில் பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1721cacd-d25b-4765-b29f-9c9701cdfdd0/26-6a97817496446.webp' /></p><p>சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/02tgeSpE-Qs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-02T09:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-stance-on-day-of-the-disappeared-1788336535"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-stance-on-day-of-the-disappeared-1788336535</id>
            <summary type="text">இறந்து விட்டார்கள் என்றால் ஒரேயடியாக அழுது தீர்த்து விதியைத் திட்டி
கண்ணீரால் காயம் ஆற்றிவிடலாம். ஆனால் நம் உறவுகளுக்கு என்ன நடந்தது, உயிரோடு
இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறந்து விட்டார்கள் என்றால் ஒரேயடியாக அழுது தீர்த்து விதியைத் திட்டி
கண்ணீரால் காயம் ஆற்றிவிடலாம். ஆனால் நம் உறவுகளுக்கு என்ன நடந்தது, உயிரோடு
இருக்கிறார்களா, இல்லையா, இன்று வருவார்களா, நாளை வருவார்களா? என தினம் தினம்எதிர்பார்ப்போடு செத்துப் பிழைப்பது எத்தனை கொடுமையானது.
</p><p>
இந்த நிலைமை வார்த்தைகளுக்குக் கட்டுப்படாதது. அனுபவிப்பர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய துயரத்தின் உச்சம் அது. 

அத்தகையோரை நினைவு கூரும் நாளே அனைத்துலக
காணாமல் போனோர் நாள். </p><p>கொஸ்டரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட “கைதாகிக்
காணாமல் போனோரின் உறவினர்களின் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. </p><p>

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள்
குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள்
அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இவ்வாறான இரகசியக் கைதுகளுக்கு
எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன.</p><h2> 

காணாமல் போனோர் நாள்</h2><p>

இவ்வாறு ஆரம்பமாகிய “காணாமல் போனோர் நாள்” இன்று உலகின் பல நாடுகளிலும் மறைந்து போக, இலங்கையில் யுத்தம்
முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அது தொடர்ச்சியாக நினைவு
கூறப்படுகின்றது. தொடர்ந்தும் நினைவு கூற வேண்டியுள்ளது.

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்து சென்ற நிலையில் இலங்கை இராணுவத்திடம்
ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம்
பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது. </p><p>

தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட
வாழ்வியலுடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சனைகள்
இருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fedb66bc-2f79-416a-b5c3-6f89251907a4/26-6a97e57233afa.webp' /></p><p> </p><p>

இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலத்தை விடுவித்தல்,
சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், பௌத்தமயமாக்கலை தடுத்தல், தமிழர் நிலப் பரப்பில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்தல், யுத்த
காலத்தின் போதும், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவும்
இராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுதல் என பல
பிரச்சனைகள் உள்ளன.</p><p> 

இவை அன்றாடம் அவர்களது வாழ்வியலில் தாக்கத்தினை ஏற்படுத்தி
வருகின்றன. இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது ஏனையவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதும் ஆகும்.</p><h2>

20 ஆயிரம் வரையிலானோர் காணாமலாக்கப்பட்டார்களா..</h2><p>

இலங்கை நாட்டைப் பொறுத்தவரை யுத்த காலத்தின் போது முப்படைகள், பொலிஸார்
மற்றும் புலனாய்வுத் துறையினரால் சந்தேகத்தின் பேரிலும், சுற்றி
வளைப்புக்களின் போதும் கைது செய்யப்பட்டவர்களும், இறுதி யுத்தத்தின் போது
அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் அறிவிப்புக்கமைய பலர் முன்னிலையில்
ஒப்படைக்கப்பட்டோருமே காணாமல் ஆக்கப்பட்டோராகவுள்ளனர்.</p><p> 


சுமார் 17 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச
நிறுவனங்களினதும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களினதும் அறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666cad38-54b3-4f44-94ef-0c26ba73c986/26-6a97e572ecd0f.webp' /></p><p> </p><p>

இதன் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இவர்களுக்கான தீர்வு என்பது தமிழ் மக்களின் மத்தியில் பதற்றத்தினையும்,
ஏமாற்றத்தினையும் கொடுத்து இன்று வரை அவை கானல் நீராகவே உள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்படுவோர் குறித்து காத்திரமான
நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய அரசியல் புறச் சூழல் எதுவும் காணப்படவில்லை.
</p><p>

ஆனால் இன்று யுத்தம் முடிந்து 17 வருடங்கள் கடந்து விட்ட போதும் அதில் உள்ள
முன்னேற்றம் என்பது கண் துடைப்புக்களுடனேயே உள்ளது. தற்போதைய அநுரகுமார
திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமானது தேர்தலின் போது காணாமல்
ஆக்கப்பட்டோருக்கான நீதி வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில் இன்று ஆட்சி
பீடம் ஏறி மாதங்கள் பல கடந்த நிலையிலும் அது குறித்து காத்திரமான நடவடிக்கை
எடுக்கவில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டாகும்.
</p><h2>

உறவுகளின் நிலையை அறிய நடத்தப்படும் போராட்டங்கள்</h2><p>

 கடந்த ரணில் மற்றும் மைத்திரி கூட்டரசாங்கமானது பொறுப்பு கூறுவதற்கான ஐ.நா மனித உரிமைப்
பேரவையின் இரண்டு பிரேரணைகளை ஏற்று அவற்றை நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணையும்
வழங்கியிருந்தது. 

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றினையும்
நிறுவியுள்ளது. </p><p>ஆயினும் சர்வதேச அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும், கால
நீடிப்புக்கள் ஊடாக அதனை நீர்த்துப் போகச் செய்யவதற்காகவும் இவற்றின் மூலம்
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதே தவிர, அதில் எந்த முன்னேற்றத்தையும்
அவதானிக்க முடியவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.</p><p>


தமக்கு தேவை மரண சான்றிதழோ அல்லது இழப்பீடோ அல்ல. நம்மவர்களுக்கு என்ன நடந்தது என்ற நீதியே தேவை என அவர்கள் போராடி வருவதுடன் ஓ.எம்.பி அலுவலகத்தையும் எதிர்த்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f253e2f-3226-4ce0-9031-c47d74bec867/26-6a97e573a43ee.webp' /></p><p>
</p><p>
அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அவர்களுக்குரிய கிரியைகளை நடத்தி ஆத்ம
சாந்திக்காக வழிபடலாம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகள், தமது கணவன்மார், மனைவிமார், உறவுகள் மீள வருவார்கள் என்ற நம்பிக்கையோடு
காத்திருக்கின்றனர்.
</p><p>
 அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை எண்ணி தினம்
தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். கால நீடிப்புக்களும்,
இழுத்தடிப்புக்களும் செய்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம்
யாருக்கு பொறுப்புக் கூற போகின்றது. </p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைத்து
திரிந்து நாளாந்தம் போராட்டம் நடத்திய தாய்மார்கள் மரணித்திருக்கின்றார்கள்.
அவர்கள் தமது பிள்ளைகளின் முடிவு தெரியாமலேயே தமது உயிரையும் மாய்த்து
விட்டார்கள்.</p><p> இந்த நிலையை நீடிக்க விடுவதா அல்லது அந்த மக்களுக்கு நீதியைப்
பெற்றுக் கொடுப்பதா என்பதை தமிழ் தலைமைகளும் உணரவேண்டும்.

வடக்கு - கிழக்கு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என
வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் ஆண்டுகள் பல கடந்தும்
நீண்டுகொண்டிருக்கிறது.
</p><h2>
தமிழ் தேசத்தின் வலிகளை புரிந்த கொண்ட NPP அரசாங்கம்</h2><p>

 அவ்வப்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தமிழர்
தாயகப் பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும போராட்டங்களும், ஊர்வலங்களும்
நடைபெற்றும் வருகின்றன. மக்களின் கண்ணீரால் அந்த பிரதேசங்கள் தினமும் நனைந்து
கொண்டிருக்கின்றன.</p><p> 

போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தால்
வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், தமிழ் தேசியக் கட்சிகளால் கடந்த காலங்களில்
வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. </p><p>

அந்த மக்கள் அரசாங்கம் மீதும், தமிழ் தலைமைகள் மீதும் அதிருப்தி கொண்டவர்களாக
மாறியிருக்கின்றார்கள்.

 தொடர் போராட்டங்களால் உடல், உள ரீதியாகவும் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றார்கள்.</p><p>

காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் சிறைச்சாலைகளிலும், இராணுவ தடுப்பு முகாம்களிலும்
மற்றும் சித்திரவதைக் கூடங்களிலும் இருப்பதாக ஆதாரங்கள் பலவும், தகவல்களும்
வெளியாகியிருந்த நிலையில் கூட அவர்களை விடுவிப்பதற்கும் அல்லது அவர்களுக்கு
என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் சர்வதேச அழுத்தத்தின் ஊடாக இலங்கை
அரசாங்கத்தை பதில் அளிக்க வலியுறுத்தும் நிலையில் தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக செயற்படாமை என்பது நம்பிக்கையோடு இருக்கும் அந்த மக்களின் மனங்களில் பலத்த சலனங்களை உருவாக்கியிருக்கின்றது.

காணாமல் போனோருக்கான செயலகம் தொடர்பில் ஐ.நா பரிந்துரையை ஏற்று கடந்த கால
அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd29e8d-4d2c-4d30-9491-454d63d4edc9/26-6a97e5745cf2a.webp' /></p><p> </p><p>காணாமல் போனோருக்கான
செயலகம் உருவாக்குதல் மற்றும் நிர்வாகமும் கடமைகளை நிறைவேற்றலும் என்ற
பெயரிலான அந்த சட்டம் நடைமுறைக்கும் வந்துள்ளது. 

இருப்பினும் அந்த அலுவலகம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், மனிதவுரிமையாளர்களும், சிவில்
சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.
</p><p>
ஆனால், தற்போதைய அநுர அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு
அமைச்சர் சட்டத்தரணி ஹர்சண நாணயக்கார, காணாமல் ஆக்கப்பட்ட
குடும்பங்கள் அனுபவிக்கும் வேதனையையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
</p><h2>


 ஓய்வூதியத் திட்டங்கள்</h2><p>இவ்வாறான
சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம். தமது
அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு
குடும்பத்தின் உரிமை அரசியல் கோரிக்கையல்ல.

 அது ஓர் அடிப்படை மனித உரிமையாகும். அது நீதியுடன் தொடர்புடைய ஒரு விடயமாகும். </p><p>

அதேபோன்று, இது ஒரு
குறிப்பிட்ட இனக்குழுவுக்கு மாத்திரம் உரித்தான பிரச்சினையல்ல. இலங்கையில்
வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு இன மற்றும் அரசியல் பின்னணிகளைக் கொண்ட
நபர்கள் காணாமல் போயுள்ளனர். 

எனவே, இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காண்பது ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தின் பொறுப்பாகும் என அண்மையில் யாழில் இடம்பெற்ற ஓஎம்பி அலுவலக நிகழ்வில் தெரிவித்துள்ளார். </p><p>

அவர் கூறிய படி நீதியான விசாரணை இடம்பெறுமா என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கேள்வியாகும்.

ஆக, இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இந்த அரசாங்கம்
சிரத்தையுடன் கையாள வேண்டும்.</p><p> இரகசிய தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள் என
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களை அவர்களது
குடும்பத்துடன் இணைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b3079e-df16-4352-a549-30ed00ae7cde/26-6a97e57516c3e.webp' /></p><p> </p><p>

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர்
கொல்லப்பட்டிருந்தால் அவர்களுக்கான இழப்பீடு சர்வதேச சட்ட நியாயங்களுக்கு
ஏதுவான நிலையில் வழங்கப்பட வேண்டும்.
</p><p>

அவர்கள் உயிருடன் இந்த காலப்பகுதியில்
உழைத்திருக்க கூடிய பணத்தை வழங்குவதன் மூலமும் அவர்கள் கொல்லப்பட்ட
காலப்பகுதியில் இருந்து அவர்களுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதன் மூலமும் அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை
என்றாலும் குறைந்த பட்சம் தீர்க்க முடியும். </p><p>

ஒரு உயிருக்கான விலை பணம் என்பது
அல்ல. ஆனால் கொல்லப்பட்டிருந்தால் அதற்குரிய பரிகாரமாக இழப்பீடு
வழங்கப்படுவதும் அந்த கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும் கட்டாயமானதே.

இதுவே காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் பாதிக்கப்பட்ட மக்களின்
எதிர்பார்ப்பாகவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T08:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/24-hour-water-cut-for-several-colombo-1788337365"></link>
            <id>https://tamilwin.com/article/24-hour-water-cut-for-several-colombo-1788337365</id>
            <summary type="text">அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்களில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.
</p><p>இந்தத் தடை&nbsp; செப்டெம்பர் 3, இரவு 8.00 மணி முதல் செப்டெம்பர் 4, இரவு 8.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
</p><h2>பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்</h2><p>
நுகேகொடை, கொஹுவல, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர, அங்குலான, இண்டிபெத்திய , கட்டுபெத்த, கல்தெமுல்ல, மோதர, கொரலவெல்ல, எகொட உயன மற்றும் கடுகுருண்டா ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a98aace-d300-4479-9ff0-684e524d50fb/26-6a97e03a80342.webp' /></p><p>
செத்சிறிபாய, ஹிம்புட்டான, உடுமுல்ல வீதி, மாளிகைகொடெல்ல, வங்கி சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹேவ்லாக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை சுற்றுவட்டார வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைபடும்.
</p><p>
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை, நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் வணிக நிறுவனங்களும் முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும், நீர் விநியோகத் தடைக்காலத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கை செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்! அரசிடம் இம்ரான் எம். பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/living-cost-of-people-imran-mp-request-1788337659"></link>
            <id>https://tamilwin.com/article/living-cost-of-people-imran-mp-request-1788337659</id>
            <summary type="text">வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து
வருகின்றனர். எனவே வாழ்க்கை செலவை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க
வேண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து
வருகின்றனர். எனவே வாழ்க்கை செலவை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்
கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. </p><p>எனினும்
மக்களின் வருமானம் அதிகரிக்க வில்லை. இதனால் மூன்று வேளை உணவு உண்பதில் பல
குடும்பத்தினர் சிரமப் படுகின்றனர்.

நாட்டில் அதிகமான அரச உத்தியோகத்தர்கள் குறைந்த சம்பளம் பெறுவோராவர்.
</p><p>பிள்ளைகளின் கல்விச் செலவு, உணவுச் செலவு என்பவற்றை சமாளிக்க முடியாமல்
இவர்கள் கஷ்டப் படுகின்றனர்.

இந்த நிலைமையினால் பிள்ளைகளின் உணவுத்தேவையை சரியாகப் பூர்த்தி செய்ய முடியாத
நிலை பெற்றோருக்கு ஏற்படுகின்றது.</p><p> இதனால் போசாக்கு குறைந்த பிள்ளைகளின்
எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

மக்களின் வாழ்க்கை தரத்தைப் பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தப்
பொறுப்பை அரசாங்கம் சரிவர நிறைவேற்ற வேண்டும்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும்</p>]]></content>
            <updated>2026-09-02T08:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக்விமான இறக்குமதியில் நிதி மோசடி : உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udayanga-weeratunga-s-foreign-travel-ban-1788335693"></link>
            <id>https://tamilwin.com/article/udayanga-weeratunga-s-foreign-travel-ban-1788335693</id>
            <summary type="text">மிக்விமான இறக்குமதியில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் ஒரு குழுவினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிக்விமான இறக்குமதியில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக்குற்றப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை&nbsp;ஜனவரி 6 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இவ்விவகாரத்தில் சந்தேக நபர் இன்று (02.09.2026) நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவு</h2><p>

சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர், அவர் ஒரு வணிகத்தில் ஈடுபட்டுள்ள நபர் என்பதால், தனது கட்சிக்காரர் அவசியமான பணிக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d7c3421-6150-4578-a393-5958eef14cdd/26-6a97d9d622fa4.webp' /></p><p>
அதன்படி, சந்தேக நபரின் பயணத் தடையை அடுத்த நீதிமன்றத் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் மேயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-hambantota-mayor-eraj-fernando-death-1788331611"></link>
            <id>https://tamilwin.com/article/former-hambantota-mayor-eraj-fernando-death-1788331611</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>அவரது சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயது என்றும் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d13ed191-25d2-4bed-b17d-f4a4dfd84965/26-6a97cf1f09b42.webp' /></p><p>இவர் 2014 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xv3HrOfRynA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இதனையடுத்து 2018 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T07:24:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலவாக்கலையில் இறைச்சிக் கடை ஊழியர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-butcher-shop-employees-arrested-1788331769"></link>
            <id>https://tamilwin.com/article/two-butcher-shop-employees-arrested-1788331769</id>
            <summary type="text">தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி
எலும்புகள் மற்றும் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த இறைச்சிக் கடை ஊழியர்கள்
இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி
எலும்புகள் மற்றும் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த இறைச்சிக் கடை ஊழியர்கள்
இருவர் நேற்று (01.09.2026) கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>இதன்போது கழிவுகளை ஏற்றிச்சென்ற ஆட்டோவும்
அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை&nbsp;</h2><p>
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழுள்ள பொது சுகாதார
பரிசோதகர்களால்
இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b72ffccf-259b-4806-b3f0-91eeca11a6a8/26-6a97cbce87729.webp' /></p><p>
சந்தேக நபர்கள் இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று
முற்படுத்தப்பட்டனர்.
</p><p>
இதன்போது சந்தேக நபர்கள் இருவருக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணை
வழங்கி நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p>ஹட்டன் - கொட்டகலை நகரில் மாட்டிறைச்சி கடை நடத்தும் உரிமையாளர், கழிவுகளை
அகற்றுவதற்குச் சரியான முறைமை ஒன்றைக் கையாளாமல், நாளாந்தம் சேரும்
மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் ஏனைய கழிவுகளைத் தனது கடையில் பணிபுரியும்
இரு ஊழியர்கள் மூலம் ஆட்டோவில் ஏற்றிச் சென்று டெவோன் ஓடையில் கொட்டி
வந்துள்ளார்.
</p><p>
இது குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொட்டகலை சுகாதார
வைத்திய அதிகாரி கே. சுதர்சனின் ஆலோசனையின் பேரில், சுகாதார பணிமனையின் ஏனைய
பொது சுகாதார பரிசோதகர்களுடன் சென்று, சந்தேகநபர்கள் இருவரும் கழிவுகளை
ஓடையில் கொட்டிய போதே கையும் மெய்யுமாகப் பிடித்ததாகக் கொட்டகலை சுகாதார
மருத்துவ அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் தேவன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>பல தோட்டங்களுக்கான பாதைகள்</h2><p>சந்தேகநபர்கள் இருவரும் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் உள்ள 60 அடி தொடருந்து இரும்புப் பாலத்திற்கு அருகில் இக்கழிவுகளைக் கொட்டி வந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/271ced87-fe83-4d12-8592-d97433ada920/26-6a97cea896863.webp' /></p><p>
இந்தக் கழிவுகள் கொட்டப்படும் ஓடைப் பகுதிக்கு மிக அருகில் கிறிஸ்டஸ் பார்ம்
(Christas Farm) உள்ளிட்ட பல தோட்டங்களுக்கான பாதைகள் அமைந்துள்ளன. </p><p>இந்த
சட்டவிரோத நடவடிக்கையால், அப்பாதையைப் தினசரி பயன்படுத்தும் பெருமளவிலான
தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்ததாக பொது சுகாதார
பரிசோதகர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
கொட்டகலை நகரில் கோழி இறைச்சி கடைகளின் கழிவுகளும் இதேபோன்று எடுத்துவரப்பட்டு
டெவோன் ஓடையில் கொட்டப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களையும்
சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T07:22:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளும் கட்சியின் 159 எம்.பிக்களை உடனடியாக விசாரிக்குமாறு அவசர முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaints-corruption-commission-159-jvp-mps-1788328199"></link>
            <id>https://tamilwin.com/article/complaints-corruption-commission-159-jvp-mps-1788328199</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>இந்த முறைப்பாடு வெல்லும் தெற்கு அமைப்பொன்றினால் இன்று (02) காலை இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டது. 

</p><h2>ஐந்து காரணங்களின் கீழ் முறைப்பாடு&nbsp;</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை, பொதுமக்களின் நன்மைக்காக பயன்படுத்தாமல், ஜே.வி.பி (JVP) கட்சியின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்வதன் மூலம், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைத்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a00c97-9483-4bf1-bbcb-8741f319a48e/26-6a97c9fa13736.webp' />&nbsp;</p><p>
 2023-ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் எண் 09-இன் கீழ் இந்த விவகாரம் குறித்து அவசர விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஆணையத்தை கோரியுள்ளது.
</p><p>
குறித்த முறைப்பாட்டில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் 159 உறுப்பினர்களையும் வரவழைத்தல், அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல், விசாரணை நடத்துதல் மற்றும் கட்சியின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தல் ஆகிய ஐந்து காரணங்களின் கீழ் முறைப்பாடு தாக்கல் செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T06:34:01+00:00</updated>
        </entry>
    </feed>
