<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-21T19:12:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இராணுவ பலம் குறித்து ஆசிய நட்பு நாடுகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asian-allies-us-military-might-middle-east-1787337347"></link>
            <id>https://tamilwin.com/article/asian-allies-us-military-might-middle-east-1787337347</id>
            <summary type="text">ஆசிய பசிபிக்
பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ தளவாடங்கள் மற்றும்
போர்க்கப்பல்கள் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு வருவதால் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிய பசிபிக்
பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ தளவாடங்கள் மற்றும்
போர்க்கப்பல்கள் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு வருவதால் ஆசிய
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மிகுந்த கவலையடைந்துள்ளன.</p><p>

ஜப்பானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் கடைசி விமானம் தாங்கி
போர்க்கப்பலான 'யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வொஷிங்டன்' அங்கிருந்து மத்திய கிழக்கு
பிராந்தியத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், தென் கொரியாவில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ஏவுகணை
அமைப்புகளின் பாகங்களும், அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்புகளும் மத்திய
கிழக்கு போர்த்தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><h2>இராணுவ நடவடிக்கை</h2><p>

அமெரிக்காவின் இந்த நகர்வானது, தென் சீனக் கடல் மற்றும் அதனை ஒட்டிய
பிராந்தியங்களில் சீனாவின் ஆதிக்கத்தையும் இராணுவ நடவடிக்கைகளையும் மேலும்
அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8250a5bb-4c5c-4c46-b2ef-c1cefa02d719/26-6a889f9299d7a.webp' /></p><p>

அமெரிக்காவின் பிராந்தியப் பாதுகாப்பு உத்தரவாதம் பலவீனமடைந்து வருவதாகக்
கருதும் ஜப்பான், தாய்வான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள்,
தங்களது சொந்த பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை கணிசமாக உயர்த்தி வருகின்றன.</p><p>

இருப்பினும், இந்த நகர்வு ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், ஆசிய
பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னமும் பொருளாதார
நலன்களும் தொடர்ந்தும் வலுவாகவே இருக்கும் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T18:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு VIP நுழைவாயில்! நீதிமன்றத்தில் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180"></link>
            <id>https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180</id>
            <summary type="text">முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் சென்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p>பல்லேகம ஹேமரத்தன தேரர் தனது சட்டத்தரணியின் காரில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்தநிலையிலே,&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரர் மாத்திரம் எப்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>அத்தோடு, நீதிபதியின் நுழைவாயில் ஊடாக செல்வதற்கு சந்தேகநபரான&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு யார் சிறப்புரிமை வழங்கியது என்பது தொடர்பில் விசாரிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DbqlkAYMDWI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T18:08:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் மிகத் தீவிர எல் நினோ நிலைமை! பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-most-intense-el-ni-o-event-in-history-1787332077"></link>
            <id>https://tamilwin.com/article/the-most-intense-el-ni-o-event-in-history-1787332077</id>
            <summary type="text">இந்த ஆண்டில் உருவாகிவரும் எல் நினோ காலநிலை மாற்றம், கடந்த ஒரு
நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகத் தீவிரமான நிகழ்வாக அமையும் என
பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் உருவாகிவரும் எல் நினோ காலநிலை மாற்றம், கடந்த ஒரு
நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகத் தீவிரமான நிகழ்வாக அமையும் என
பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p>

வழமையாக எல் நினோ நிகழ்வின் போது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 1
முதல் 2 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.</p><p>எனினும், எதிர்வரும் மாதங்களில் இது
3 பாகை செல்சியஸிற்கும் (5.4°F) அதிகமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.</p><h2>கடுமையான வறட்சி&nbsp;</h2><p>இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள நீண்டகால வானிலை கணிப்புப் பிரிவின்
தலைவர் பேராசிரியர் ஆடம் ஸ்கைஃப், "இது முன்னெப்போதுமில்லாத ஒரு தீவிரமான
காலநிலை நிகழ்வாகும். எனது கணிப்புகளில் இவ்வளவு வலுவான எல் நினோ சமிக்ஞையை
நான் இதுவரை கண்டதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த எல் நினோ தீவிரமடைவதால், தென்னமெரிக்கா, மேற்கு பசிபிக் பிராந்தியம்,
தென்னாப்பிரிக்கா மற்றும் வடகிழக்கு அவுஸ்திரேலியா போன்ற பகுதிகளில் கடுமையான
வறட்சி ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a332cca-6c9f-4fd6-acd0-3826cfe8805e/26-6a8885ef14073.webp' />&nbsp; &nbsp;</p><p>

அதேவேளை, பிரித்தானியா உள்ளிட்ட வடமேற்கு ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும்
இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் அதிக மழையும் புயல் சூழலும் உருவாகும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமடைதலுடன் இந்த எல் நினோ நிகழ்வும்
சேர்வதால், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டானது உலக வரலாற்றிலேயே மிக அதிக வெப்பமான
ஆண்டாகப் பதிவாக அதிக வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் சந்திப்பு அழைப்பிற்கு வடகொரியா அமைதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-korea-silent-on-trump-s-meeting-invitation-1787330423"></link>
            <id>https://tamilwin.com/article/north-korea-silent-on-trump-s-meeting-invitation-1787330423</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை
மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கு வடகொரியா உடனடி
ஆர்வம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை
மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கு வடகொரியா உடனடி
ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இரு தலைவர்களுக்கும் இடையே சிறந்த தனிப்பட்ட உறவு நிலவியபோதிலும்,
பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை வடகொரியா கடினமாக்கும் என்பதை இது
உணர்த்துகின்றது.
</p><p>
தென்கொரியாவுடனான கூட்டுப் இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா திடீரெனக்
குறைத்ததுடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க
எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

இருப்பினும், அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவரை இவ்வாறான
சந்திப்புகள் நன்மையளிக்காது என வடகொரியத் தலைவரின் சகோதரியான கிம் யோ ஜாங்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1bd0b85-259c-4310-8e40-f76d0ffe00f8/26-6a88847931940.webp' /></p><p>
</p><p>
இரு தலைவர்களுக்கும் இடையிலான நல்உறவு நாட்டின் பாதுகாப்பு நலன்களிலோ அல்லது
இராணுவத் திறன்களை வலுப்படுத்தும் முயற்சிகளிலோ எந்தவொரு தாக்கத்தையும்
ஏற்படுத்தாது என வடகொரியா தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
மேலும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு அமெரிக்கா தன் மீதான விரோதப்
போக்கைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளை வடகொரியா
முன்வைத்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:01:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143"></link>
            <id>https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143</id>
            <summary type="text">புதிய இணைப்புபண்டத்தரிப்பு- பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண்
பாதிப்பு சம்பவத்தையடுத்து, இந்த நேரம் வரை 385 பேர் பாதிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு- பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண்
பாதிப்பு சம்பவத்தையடுத்து, இந்த நேரம் வரை 385 பேர் பாதிக்கப்பட்டு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><h2>ஆறாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த ஒளிக்கு காரணமான மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர்
இளவாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம்(21) மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><p> அந்தவகையில் அவரை எதிர்வரும் மூன்றாம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>ஐந்தாவது இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் தற்போதுவரை 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.<br><br>பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்து ஒன்றும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நான்காவது இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது
நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய
வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின்
விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WQ7bM1YT4SA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது
தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற
திருவிழாவில் அதிகளவு ஒலி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும்
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை
மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c9126fe-085d-4814-86c6-16b9041742f6/26-6a8843de7f133.webp' /></p><p>
</p><p>கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு
மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள்
தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று
ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள்
மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55
பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84d11e32-fddd-485e-bc99-2487af8f2a96/26-6a8843df65f63.webp' /></p><p>
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக
வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>
மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும்
தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>இரண்டாவது இணைப்பு&nbsp;</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு
காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
</p><p>இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர்&nbsp; எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.</p><p>
️ கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf0db8c-637c-4ee7-a408-b2a7e2bc8c8e/26-6a880a998b5a2.webp' /></p><p>
</p><p>உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து
கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்
சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களை தேய்க்க வேண்டாம்.
</p><p>சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
</p><p>“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன்
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக
வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை&nbsp;</h2><p>

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
</p><p>அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஆலயத் திருவிழா</h2><p>
</p><p>
மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4f5d61-1510-4a3f-bdb4-a5434702ed78/26-6a87f1b62cc5d.webp' /></p><p>
</p><p>இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>&nbsp;மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
</p><h2>பார்வை பிரச்சினை</h2><p>
இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96d6b16-a4d5-4f7b-9533-87ec33cef535/26-6a87f1b55bdf5.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CFWVi5B8mkE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T16:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-broke-kathirippai-area-of-achchuveli-1787328049"></link>
            <id>https://tamilwin.com/article/fire-broke-kathirippai-area-of-achchuveli-1787328049</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்
ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது&amp;nbsp; இன்று(21.8.2026) மதியம் இடம்பெற்றள்ளது.

தரிசு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்
ஏற்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவமானது&nbsp; இன்று(21.8.2026) மதியம் இடம்பெற்றள்ளது.</p><p>
</p><p>
தரிசு நிலமாக காணப்படும் பல ஏக்கர் புற்களைக் கொண்ட சமவெளியில் ஏற்பட்ட தீயில்
பல ஏக்கர் நிலத்தில் தீ பரவியது.</p><h2>தீ பரவல்</h2><p>
</p><p>இதனால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் வயல் நிலங்கள் பகுதிளவில் பாதிப்படைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e193262d-7144-4943-a0d2-7487be5da469/26-6a88763415594.webp' /></p><p>

யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் பல மணி நேர போராட்டத்தின்
பின்னர் தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T16:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பாடசாலை மீது வாள் வீச்சுத் தாக்குதல்: பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sword-attack-at-sweden-school-several-injured-1787326441"></link>
            <id>https://tamilwin.com/article/sword-attack-at-sweden-school-several-injured-1787326441</id>
            <summary type="text">ஸ்வீடனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வாள் ஏந்திய நபர்
ஒருவர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், சந்தேகநபர்
பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்வீடனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வாள் ஏந்திய நபர்
ஒருவர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், சந்தேகநபர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

பாகெர்ஸ்டா பகுதியில் அமைந்துள்ள பிரினெல்ஸ்கோலன் என்ற உயர் பாடசாலைக்கே இன்று(21.8.2026) பிற்பகல் வேளையில் புகுந்த தாக்குதல்தாரி, அங்கிருந்தவர்கள் மீது இந்த வாள்
வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், சந்தேகநபரை சுட்டு வீழ்த்தித்
தடுத்து நிறுத்தியதுடன் அவரைக் கைது செய்துள்ளனர்.</p><h2>தீவிர சோதனைகள்</h2><p>

தாக்குதலில் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf8a1a0-1205-48f8-aebd-5afd46f68513/26-6a886fec259bc.webp' /></p><p> </p><p>எனினும், பாதுகாப்பு நிமித்தம் அப்பகுதியிலுள்ள ஏனைய
பாடசாலைகளும் உடனடியாக பூட்டப்பட்டு தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p>

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ள நிலையில்,
நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டின் நீதி
அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T15:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிகளின் கணக்குகளை தானியங்கி முறையில் முடக்கம்: Uber நிறுவனத்திற்கு 966 மில்லியன் டொலர் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/automatic-suspension-of-driver-accounts-1787323508"></link>
            <id>https://tamilwin.com/article/automatic-suspension-of-driver-accounts-1787323508</id>
            <summary type="text">சாரதிகளின் கணக்குகளை அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்காமல் தானியங்கி
அமைப்புகள் மூலம் முடக்கியமைக்காக, uber நிறுவனத்திற்கு ஐரோப்பிய தரவுப்
பாதுகாப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாரதிகளின் கணக்குகளை அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்காமல் தானியங்கி
அமைப்புகள் மூலம் முடக்கியமைக்காக, uber நிறுவனத்திற்கு ஐரோப்பிய தரவுப்
பாதுகாப்பு விதிகளின் கீழ் 825 மில்லியன் யூரோ (சுமார் 966 மில்லியன் அமெரிக்க
டொலர்கள்) அபராதம் விதிக்க டச்சு தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை (AP)
தீர்மானித்துள்ளது.
</p><p>
ஐரோப்பிய பொதுத் தரவுப் பாதுகாப்பு விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட இரண்டாவது
மிகப்பெரிய அபராதத் தொகையாக இது கருதப்படுகின்றது.
</p><p>
2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில், மோசடிகளில் ஈடுபட்டதாக
சந்தேகிக்கப்பட்ட சாரதிகளின் கணக்குகளை போதிய மனித தலையீடுகள் இன்றியும்,
தெளிவான விளக்கமளிப்புகள் இன்றியும் கணினி அமைப்புகள் மூலம் Uber நிறுவனம்
தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் முடக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><h2>
விதிமீறல்களுக்கான அபாராதம்</h2><p>

நபர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை கணினி
வழிமுறைகள் மூலம் மட்டுமே எடுப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுப் பாதுகாப்பு
விதிகள் தடை செய்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56657479-a7ea-4b54-a7da-d73656b3aa3b/26-6a8864cb31768.webp' /></p><p>
</p><p>
மனித பரிசீலனை மற்றும் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இன்றி இவ்வாறான
முடிவுகள் எடுக்கப்பட்டமை கடுமையான விதிமீறல் என டச்சு கட்டுப்பாட்டகம்
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

இருப்பினும், இந்தத் தீர்மானத்தையும் விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும்
கடுமையாக மறுத்துள்ள Uber நிறுவனம், இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக
அறிவித்துள்ளது.</p><p>

சாரதிகளின் உரிமைகளைத் தாம் மதிப்பதாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான
சாரதிகளே இதனால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த அபராதத் தொகை மிகவும் அதிகமானது
என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகக் கட்டமைப்பு நெருக்கடி: வெனிசுலாவில் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-delay-in-venezuela-s-lubricant-exports-1787322301"></link>
            <id>https://tamilwin.com/article/major-delay-in-venezuela-s-lubricant-exports-1787322301</id>
            <summary type="text">&amp;nbsp;வெனிசுலா நாட்டின் சீரழிந்த எண்ணெய் துறைமுக முனையங்கள் காரணமாக, அந்நாட்டின்
மீளெழுச்சி பெற்றுவரும் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடுமையான பாதிப்புகளை
எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெனிசுலா நாட்டின் சீரழிந்த எண்ணெய் துறைமுக முனையங்கள் காரணமாக, அந்நாட்டின்
மீளெழுச்சி பெற்றுவரும் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடுமையான பாதிப்புகளை
எதிர்நோக்கியுள்ளது.
</p><p>
பழமையான உட்கட்டமைப்புகள், மின்சாரத் தடை மற்றும் தரப் பிரச்சினைகள் காரணமாக
கப்பல்களில் எண்ணெயை ஏற்றுவதற்கு சுமார் 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் துறைசார்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><h2>
உள்கட்டமைப்புச் சிக்கல்கள்</h2><p>
அமெரிக்காவுடனான உடன்படிக்கையைத் தொடர்ந்து வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை
விரைவாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இவ்வாறான உள்கட்டமைப்புச்
சிக்கல்கள் பெரும் தடையாக உருவெடுத்துள்ளன.
</p><p>
மசகு எண்ணெய் உற்பத்தி உயர்வடைந்துள்ள போதிலும், துறைமுகங்களின் பலவீனமான
நிலைமை காரணமாக அண்மைக்காலமாக நாளொன்றிற்கு 1.25 மில்லியன் பீப்பாய்களுக்கு
மேல் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/164bf949-9cd8-4048-ba49-f92a924f1cd4/26-6a8860555f576.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதத்தைக் கையாளும் ஹோசே துறைமுகப்
பகுதியில் எண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான கப்பல்கள் நங்கூரமிட்டு பல
நாட்கள் காத்திருக்கின்றன.
</p><h2>

ஏற்றுமதியை அதிகரிக்கத் திட்டம்</h2><p>பழமையான உள்கட்டமைப்புகளைப் புதுப்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படாத
நிலையில், ஏற்றுமதி அதிகரிக்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்
துறைமுகங்கள் திணறி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee7e2bee-6869-4a5b-91a0-fc16004b94e2/26-6a8860562c5c7.webp' /></p><p>
</p><p>
அத்துடன், காத்துக்கிடக்கும் கப்பல்களுக்கான தாமதக் கட்டணங்கள் மற்றும் தரப்
பிரச்சினைகள் தொடர்பில் பிணக்குகள் எழுந்துள்ளது.</p><p>

இந்த நிலையில், துறைமுகங்களின்
கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தங்கள் வசமே வைத்திருக்க அரசுக்குச் சொந்தமான
பி.டி.வி.எஸ்.ஏ நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஞ்சி பயன்படுத்துவோருக்கு விவசாயத் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-of-ginger-rot-disease-issues-warning-1787322077"></link>
            <id>https://tamilwin.com/article/threat-of-ginger-rot-disease-issues-warning-1787322077</id>
            <summary type="text">இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.</p><p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>எச்சரிக்கை</h2><p>

தற்போது வர்த்தகப் பயிரான இஞ்சி, குருணாகல், கண்டி, மாத்தளை, அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 2,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தமயந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1139422-8434-4bac-bd7e-d3434a8bd7c1/26-6a88625896673.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே இந்த நோய் தொற்றியிருந்தால், அதுபோன்ற புதர்களை எரித்து அழிக்குமாறு அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T14:36:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் அரசியலுக்கு வருகின்றாரா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/is-kandiah-bhaskaran-entering-politics-1787320749"></link>
            <id>https://tamilwin.com/article/is-kandiah-bhaskaran-entering-politics-1787320749</id>
            <summary type="text">தான் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தான் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.</p><p>

தற்போதைய அரசியல் சூழலும் சில அரசியல்வாதிகளின் விமர்சனங்களுமே தன்னை அரசியல் களத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் குறிப்பிட்ட அவர், </p><p>

தான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணையவில்லை என்றும், தற்போதைக்கு தனது சமூகப் பணிகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தனது சொந்த முயற்சியில் ‘ரீச்சா’ (REECHA) உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருவது சில அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தான் வளர்வது தங்களது அரசியலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என சில அரசியல்வாதிகள் கருதுவதாகவும், இதன் காரணமாகவே தன்னை அரசியல்வாதியாக சித்தரித்து விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் கந்தையா பாஸ்கரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் இருப்பதைவிட, தன்னைச் சுற்றியுள்ள அரசியல்வாதிகளே தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து அரசியல் களத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா அல்லது தனது தொழில் மற்றும் சமூகப் பணிகளில் தொடர்ந்து பயணிப்பாரா என்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6A0I_zgeOSg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T14:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்பு: ஆயிரக்கணக்கானோர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/751-suspects-arrested-sri-lanka-1787320068"></link>
            <id>https://tamilwin.com/article/751-suspects-arrested-sri-lanka-1787320068</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்தோடு, அவர்களில் நான்கு பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அத்தோடு, அவர்களில் நான்கு பேருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளதுடன் மேலும் மூவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

நேற்று (20) மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட முழுமையான சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை 753 ஆகும்.</p><p></p><h2>தேசிய நடவடிக்கை</h2><p> 

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தல், போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf761a87-c63b-4a4b-ba3a-c42b92876e22/26-6a885b6f1200f.webp' /></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:13:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஆபத்தான நிலையில் மீன்வளம் - விசாரணை துரிதப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-launches-detailed-investigation-1787320457"></link>
            <id>https://tamilwin.com/article/government-launches-detailed-investigation-1787320457</id>
            <summary type="text">நாட்டில் மீன்வளம் குறைந்து வருவதாக இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு இலங்கையின் கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் மீன்வளம் குறைந்து வருவதாக இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் துணை அமைச்சராக தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ரத்ன கமகே தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பில் இன்று(21.08.2026) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

நாட்டில் குறைந்து வரும் மீன்வளம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டில் மீன்வளம் குறைந்து வருவதாக செய்தித்தாள் அறிக்கைகளை நான் பார்த்திருக்கிறேன். </p><p>அதில் ஓரளவு உண்மை இருப்பதாகத் தெரிகிறது.


கடல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கடல் மாசுபாடு மற்றும் அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மீன் இருப்பு குறைவதற்கு பங்களிக்கக்கூடும்.
</p><p>
உலகின் பல்வேறு கடல் பகுதிகளிலும் இதேபோன்ற மாற்றங்கள் காணப்படுவதால், இந்த நிலைமை எல் நினோ நிகழ்வுகளுடன் தொடர்புடையதா என்பதை விசாரிக்க வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d1600b-76ff-449c-b75c-602250656646/26-6a885ca34b0ae.webp' /></p><p>
</p><p>
 கடலில் பாசிகளின் அளவு குறைவது ஒளிச்சேர்க்கை செயல்முறையைத் தடுக்கின்றதால், மீன் இனங்களின் வளர்ச்சிக்கும் உயிர்வாழ்விற்கும் தேவையான கடல் சூழலையும் பாதிக்கக்கூடும்.</p><h2>

காலநிலை மாற்றம்..</h2><p>
மேலும், கடல் வெப்பநிலை அதிகரிப்பால், சில மீன் இனங்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு இடம்பெயர வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமையால் நாட்டில் ஆங்காங்கே பாரம்பரியமாக மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் மீன்வளம் குறைவதற்கு வழிவகுக்கலாம்.</p><p>

சட்டவிரோத மற்றும் அழிவுகரமான மீன்பிடி முறைகளால் மீன்வளத்திற்கு ஏற்படக்கூடிய சேதத்தால், ஒழுங்குபடுத்தப்படாத இதுபோன்ற மீன்பிடி முறைகள் மீன்வளத்தைப் பாதிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/999a3619-5378-45f7-98e8-65cfbca61776/26-6a885ca43b393.webp' /></p><p>

மேலும், மீன்வளத்தின் தற்போதைய நிலை, மீன் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றின் வாழ்விடங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றைப் பாதிக்கும் காரணிகள் குறித்து ஒரு விரிவான ஆய்வை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு NARA-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், கண்டறியப்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், மீன்வளத்தைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு NARA-விடம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த ஆய்வறிக்கை மீன்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.</p><p><b>YOU MAY&nbsp; LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ok1iskLKzWo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-08-21T14:11:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்..! கொழும்பில் பட்டப்பகலில் கைவரிசையை காட்டிய போலி வங்கி அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-escapes-from-colombo-hotel-1787312729"></link>
            <id>https://tamilwin.com/article/man-escapes-from-colombo-hotel-1787312729</id>
            <summary type="text">

கொழும்பு - கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வந்த நபர், ஒருவர் ஹோட்டலில் உள்ள பொருட்களை திருடிய சென்றதாக தெரிவிக்கப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பு - கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வந்த நபர், ஒருவர் ஹோட்டலில் உள்ள பொருட்களை திருடிய சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இந்த சம்பவம் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
ஹோட்டலில் நடந்த சம்பவம்</h2><p>
மேலும் தெரியவருகையில், </p><p> 

கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வந்த நபர்
தன்னை ஒரு தனியார் வங்கியின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளதுடன், இரவு உணவிற்காக ஒரு குழுவினர் வரவுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார். </p><p>இதன்போது, ஹோட்டலில் இருந்து அதிக அளவு உணவு மற்றும் பானங்களை ஆர்டர் செய்துள்ளார். 

அதன் பின்னர், ஹோட்டல் பரபரப்பாக இருந்தபோது அந்த நபர் ஹோட்டலில் இருந்து பொருட்களைத் திருடிவிட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9abd0e53-a5cc-4751-8603-620bfd067e79/26-6a88417e73e4b.webp' /></p><p> 

 இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் கம்பெனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளது. 

பொலிஸார் நடத்திய விசாரணையில், இந்த சந்தேக நபர் இதற்கு முன்னர் குருந்துவத்த, பெலியகொட மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் இதேபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. </p><p>

அவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி வருகின்றனர். </p><h2>

பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்</h2><p>
பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன், இந்த சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ee54e89-23ac-416e-9ae0-e7e28234b953/26-6a88417f4978c.webp' /></p><p> </p><p>பல்வேறு சமயங்களில் சில தனிநபர்களால் செய்யப்படும் இதுபோன்ற மோசடிச் செயல்கள் பொலிஸ் நிலையங்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.</p><p> 

மேலும், கடைகள் மற்றும் பிற ஸ்தாபனங்களுக்கு வருகை தரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் முடிந்தவரை கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு இலங்கை பொலிஸ் அறிவுறுத்துகிறது.</p><p></p><p></p><p><b><i>You may like this..</i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VqzXPZK5BHs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-21T13:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலைக்குள் நுழையுமா CID! அமைச்சரின் அதிரடியால் ஆட்டம் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-enter-kalmunai-base-hospital-health-ministry-1787249944"></link>
            <id>https://tamilwin.com/article/cid-enter-kalmunai-base-hospital-health-ministry-1787249944</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர குற்றப்புலனாய்வுத்துறையினர் இந்த விடயத்திலே தலையிட வேண்டும் என தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர குற்றப்புலனாய்வுத்துறையினர் இந்த விடயத்திலே தலையிட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களை இழிவுபடுத்தி&nbsp;சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்து வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.</p><p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலை ஊழியர்கள், ஏனைய பணியாளர்களையும் இலக்கு வைத்து பதிவுகள் இடுவதால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்தோடு, ஆடை விவகாரம் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.</p><p>மேலும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்காமல் இரு தரப்பினருக்கும் சமமான நீதியினை வழங்குமாறும், இனங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RkNsFChSL3w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T13:43:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி வடக்கு காணி விடுவிப்பு போராட்டம் - ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valikamam-land-release-protest-statement-police-1787317932"></link>
            <id>https://tamilwin.com/article/valikamam-land-release-protest-statement-police-1787317932</id>
            <summary type="text">​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி
கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார்
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி
கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார்
வாக்குமூலம் பெற்றுள்ளனர்.</p><p>

​வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிக்குமாறு
கோரி, பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்களால் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு ஈ.பி.டி.பி கட்சியினர் தொடர்ந்தும்
ஆதரவு வழங்கி வருகின்றனர்.

​</p><p>இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16.08.2026) பலாலியில் இடம்பெற்ற
போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதாகக்
குற்றஞ்சாட்டப்பட்டு, அனுஷியா ஜெயகாந்த் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக பலாலி
பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

​</p><h2>வாக்குமூலம்</h2><p>இதன் தொடர்ச்சியாக, பலாலி பொலிஸ் நிலையத்திற்கு இன்று (21) அழைக்கபட்ட
அனுஷியா ஜெயகாந்திடம் பொலிஸார் முறையான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1156ee01-6383-44dd-82c9-ef437546f76f/26-6a885008b62f9.webp' /></p><p>இந்த விசாரணையின் போது, சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் ஈ.பி.டி.பி
கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் வலி
வடக்கு நிர்வாக செயலாளர் இ. ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோரும் அவருடன்
சென்றிருந்தனர்.

​</p><p>இதேநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்திலிருந்து
வெளியேறிய ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், உடனடியாகவே மயிலிட்டியில் இடம்பெற்ற
மக்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

​</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T13:18:26+00:00</updated>
        </entry>
    </feed>
