<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-28T13:34:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் - சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-that-hit-and-fled-vehicles-1785244178"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-that-hit-and-fled-vehicles-1785244178</id>
            <summary type="text">தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகர் பகுதியில்,&amp;nbsp;வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது கப் வாகனம் ஒன்று மோதிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகர் பகுதியில்,&nbsp;வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது கப் வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது.</p><p>குறித்த சம்பவம் இன்று (28.07.2026)
அதிகாலை சுமார் 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p>இந்த விபத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், சிறிய ரக வான்
மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.</p><h2>சிசிடிவி காட்சிகள் பதிவு</h2><p>
</p><p>விபத்தை ஏற்படுத்திய கப் வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும்
காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்புக்
கமராக்களில் பதிவாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>
இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பிச் சென்ற கப் வாகனத்தையும் அதன்
சாரதியையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளைப் பொலிஸார்
தீவிரப்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T13:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரித் அபேசிங்கவிற்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/charith-abeysinghe-remanded-fail-bail-conditions-1785243664"></link>
            <id>https://tamilwin.com/article/charith-abeysinghe-remanded-fail-bail-conditions-1785243664</id>
            <summary type="text">நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், முன்னாள் தேசிய மக்கள் சக்தி ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், முன்னாள் தேசிய மக்கள் சக்தி ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

முன்னதாக, போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் “ஹரக் கட்டாவின்” மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகிதா ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
</p><p></p><h2>பிணை நிபந்தனை</h2><p>ரகித ராஜபக்சவும் மற்றொரு சந்தேக நபரும் தங்களது பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர், அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c214f3cc-0f2a-46bd-882d-3550810c83b5/26-6a68ac8bbbb9e.webp' /></p><p>
இருப்பினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T13:22:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறித்து ஆளுநர் வெளியிட்ட தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/recruitment-process-for-health-assistants-1785243181"></link>
            <id>https://tamilwin.com/article/recruitment-process-for-health-assistants-1785243181</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும்
சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும்
இடமளிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும்
சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும்
இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன்
நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார்.</p><p>

வடக்கு மாகாண சுகாதார உதவியாளர் நியமனத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நேர்முகத்
தேர்வுக் குழு உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில்
இன்று (28) நடைபெற்றது.</p><p> இதன்போது குழு
உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.</p><p></p><h2>வழக்கு</h2><p>ஆளுநர்
மேலும் குறிப்பிட்டதாவது, 2019ஆம் ஆண்டில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் கடமையைப் பொறுப்பேற்க
அனுமதிக்கப்படாத சுகாதார உதவியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6a403de-79f4-45bb-b1f4-ba34bd6b242b/26-6a68a9c203c93.webp' /></p><p> இந்தப் பின்னணியையும், பொதுமக்களின் தீவிர அவதானிப்பிலும்
இந்த விடயம் இருப்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
</p><p>
300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,550 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் எழுத்துப் பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத் தேர்வில்
வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளியும் இறுதித் தெரிவை நேரடியாகப் பாதிக்கும்.</p><p></p><h2>எழுத்துப் பரீட்சை</h2><p> எனவே,
நீங்கள் வழங்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் தெளிவான, நியாயமான மற்றும்
ஆதாரபூர்வமான காரணம் இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/765bcae2-119b-4c31-a9bc-94e99118ba1d/26-6a68a9c2d3aeb.webp' /></p><p>இதேவேளை, எதிர்காலத்தில் சுகாதார உதவியாளர்களுக்கான சேவைப்பிரமாணக் குறிப்பு
கட்டாயம் மாற்றியமைக்கப்பட்டு, இவ்வாறான ஆட்சேர்ப்புகளின்போது எழுத்துப்
பரீட்சையும் உள்வாங்கப்பட வேண்டும் என ஆளுநர் இதன்போது விசேடமாகக்
குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண அரச சேவையின் நம்பகத்தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும்
வகையில் சகலரும் நேர்மையாகச் செயற்பட வேண்டும் என ஆளுநர் மீளவும்
வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T13:08:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/abandon-plan-to-raise-supreme-court-judge-1785240874"></link>
            <id>https://tamilwin.com/article/abandon-plan-to-raise-supreme-court-judge-1785240874</id>
            <summary type="text">மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை செய்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை செய்து கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
</p><p>
மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><p> இது தொடர்பில் ஜனாதிபதிக்கு, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஒப்பமிட்டு இன்றைய தினம் (28.07.2026) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதித்துறை</h2><p>
</p><p>
கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஒரு விரிவான முயற்சியின் பகுதியாகவும் இருக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு கொள்கை அளவில் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் எதிரப்பைக் கொண்டிருக்கவில்லை என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bef9615d-f03f-4e05-8e10-2309cec78758/26-6a68a24fb8f24.webp' /></p><p>

எனினும், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது, நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகார அமைப்பால் வழங்கப்படும் ஒரு சலுகையாகவோ அல்லது நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடும் நடவடிக்கையாகவோ பார்க்கப்படும் சூழலை உருவாக்கக் கூடாது என்பதில் தாங்கள் தீவிர கவனம் செலுத்துவதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p> நீதித்துறையின் சுயாதீனத்தையும், நீதித்துறை மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் தராமல் இருப்பது இன்றியமையாததாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டத்தின் ஆட்சி</h2><p>

தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக இரத்து செய்து, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முனையும் தருணத்தில் மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் விடயத்தைப் பரிசீலிக்க முடியும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d4e8155-df2e-430b-b2b1-08e14a130304/26-6a68a4298d8ee.webp' /></p><p> </p><p>குறுகிய அல்லது குறிப்பிட்ட நோக்கம் கருதிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், அரசியலமைப்பு வாதத்திற்கான மரியாதையைக் குறைப்பதுடன், மக்களாட்சியின் நல்நெறிப் கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் முயற்சிகளை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிட வேண்டும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு படுகொலை வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mandaithivu-murder-case-adjourned-to-september-22-1785241059"></link>
            <id>https://tamilwin.com/article/mandaithivu-murder-case-adjourned-to-september-22-1785241059</id>
            <summary type="text">மண்டைதீவு படுகொலை&amp;nbsp; மற்றும் புதைகுழி வழக்கு&amp;nbsp;மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று(28.07.2026) ஊர்காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மண்டைதீவு படுகொலை&nbsp; மற்றும் புதைகுழி வழக்கு&nbsp;மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p> இன்று(28.07.2026) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான்
அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>குறித்த காணியின் உரித்து</h2><p>இதன்போது யாழ் மாவட்ட
குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து
கிருஸ்ரபெலினாவுடன்
காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய
இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக
முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச
சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில்
நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28d1231b-6355-4975-bbd9-b4f27aaa679b/26-6a68a200df4da.webp' /></p><p>முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப்
பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.
</p><p>
பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின்
போது வழக்காளிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த விடயம் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து
அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கிராம சேவகர், பிரதேச செயலர்,
பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி,
பொலிசார், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு
நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் விசாரணை</h2><p>அத்துடன் சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான
நிதிதிரட்டலுக்கு துறைசார் அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுக்கொள்ள
ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காடியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83aac83b-b8cf-41cd-a71d-34d7f2eb66b5/26-6a68a201ca592.webp' /></p><p>

முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களை அடுத்து குறித்த வழக்கு வரும் செப்ரெம்பர்
22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><p>

முன்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த
சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான
சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டது.</p><p>

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:42:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பு - பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opportunity-to-study-at-foreign-universities-1785237013"></link>
            <id>https://tamilwin.com/article/opportunity-to-study-at-foreign-universities-1785237013</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கமைய கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் திறமைச் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச தரப்படுத்தலுடன் கூடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கமைய கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் திறமைச் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமது முதலாவது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான அரச புலமைப்பரிசில் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

அதன்கீழ் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு உயர்ந்தபட்சம் 20 மில்லியன் ரூபாய் வீதம், பட்டப்படிப்பின் முழுமையான நான்கு ஆண்டுகளுக்கும் உயர்ந்தபட்சம் 80 மில்லியன் நிதி அரசால் வழங்கப்படவுள்ளது. </p><p></p><h2>வெளிநாட்டு நாணய கொடுப்பனவு</h2><p>

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர (உயர்தரப்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முப்பது மாணவர்கள் இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518f2b0c-94e9-4f0a-8194-5cb8cde83cd7/26-6a689cdd6596c.webp' /></p><p>

எஞ்சிய மாணவர்கள் வெளிநாட்டுக் கல்விக்கு அனுப்புவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

பிரதானமாக வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இலங்கை ரூபாய் எதிர்பாராத வகையில் பணப்பெறுமதி குறைவடைந்தமையால் மாணவர்கள் வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய ஒருசில கொடுப்பனவுகளுக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதியளவாக இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 அதனால், செலாவணி விகிதம் உறுதிப்பாட்டை எட்டும் வரைக்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு 2.5 மில்லியன் ரூபாய்கள் வரை செலாவணி விகிதத்திற்கு சீராக்கல் கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:13:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[A35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் பாலம் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bridge-on-a35-paranthan-mullaitivu-main-road-1785239721"></link>
            <id>https://tamilwin.com/article/bridge-on-a35-paranthan-mullaitivu-main-road-1785239721</id>
            <summary type="text">A- 35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் 12ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள
முதலாவது பாலம் இன்று(28.7.2026) திறந்து வைக்கப்பட்டது.கடந்த 2020
ஆம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>A- 35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் 12ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள
முதலாவது பாலம் இன்று(28.7.2026) திறந்து வைக்கப்பட்டது.</p><p>கடந்த 2020
ஆம் ஆண்டு கடந்த ஆட்சியாளர்களினால் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா
பெருந்தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இடை நடுவே கைவிடப்பட்ட
நிலையில் இருந்த குறித்த பாலம் ஆனது தற்போதைய தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையின் மூலம் நிறைவடைந்தது.</p><p>நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்தப் பாலம் உத்தியோபூர்வமாக கையளிக்கப்பட்டது.</p><p></p><h2>அபிவிருத்தி பணிகள்</h2><p>குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட
அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், கிளிநொச்சி
மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மருங்கன் மோகன் கண்டாவளை பிரதேச செயலாளர்
கிராம சேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a0c1e4-4ffe-46ed-bdd5-9883aa1e4abf/26-6a689b020c637.webp' /></p><p> குறித்த பாலத்தில் அபிவிருத்தி
நடவடிக்கையின் போது பல்வேறு இன்னல்களும் இரண்டு உயிர்கள் பறி கொடுத்ததுடன்
பலர் வீதி விபத்துகளையும் சந்தித்து வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின்
அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த காலத்தில் அபிவிருத்தி
பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e107277-ee67-4b9d-b284-03fe39b9df70/26-6a689b02d3d0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc13243e-e025-4c25-9563-8a6ad57c1ab7/26-6a689b03a978f.webp' /></p><h2>புனரமைப்புப் பணிகள்</h2><p>கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட
இத்தாவில்–கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று (28.07.2026)
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்&nbsp; பிமல்
ரத்நாயக்க அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
</p><p>
அரசாங்கத்தின் பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்
முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஊடாக, நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில்
காணப்பட்ட இத்தாவில்–கோவில்காடு பிரதான வீதி புனரமைக்கப்படவுள்ளதுடன், இதன்
மூலம் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதோடு கல்வி, சுகாதாரம்,
விவசாயம், வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்கும்
குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe0e975c-eba4-4dd5-a806-ec15eaa10a0f/26-6a68ae17defa3.webp' /></p><p>

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன்,
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு. இ.த. ஜெயசீலன், கிளீன் ஸ்ரீலங்கா –
கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு. மருங்கன் மோகன், பச்சிலைப்பள்ளி பிரதேச
சபையின் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச
செயலகங்களின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சபை
உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த
நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்
பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:06:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் முன்னாள் அமைச்சரை கதற விட்ட மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shantha-bandara-about-his-son-1785212806"></link>
            <id>https://tamilwin.com/article/shantha-bandara-about-his-son-1785212806</id>
            <summary type="text">கொழும்பில் சீன நாட்டவர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சீன நாட்டவர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

இந்நிலையில் தனது மகனான அனுத ஜனாதித் பண்டாரவிற்கு எதிராக எந்தவொரு சாட்சிகளும் இல்லை எனத் தனது சட்டத்தரணிகள் தெரிவித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நேற்று நீதிமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.</p><p> </p><h2><b> 

சட்ட நடவடிக்கை</b></h2><p>“என் மகன் மட்டுமல்ல, தவறு யார் செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a44dc7f-8d75-41f0-871b-a86d6c1b7404/26-6a68324f578ba.webp' /></p><p>ஆனால் கடந்த சில நாட்களாக பல பொய்யான செய்திகள் வெளிவருகின்றமை குறித்து மிகவும் வருத்தத்தில் உள்ளேன்.</p><p> 

எனினும் நீதிமன்றம் மீது எங்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. அதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் வந்துள்ளோம்.
</p><p>
எனது மகனுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்துவதற்கு முறையான சாட்சியங்கள் எதுவும் இருக்கவில்லை என எனது சட்டத்தரணிகள் என்னிடம் கூறினார்.
</p><p>
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இந்த வழக்கில் இருந்து நாம் விடுபடுவோம்.</p><p> பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கு எமது கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 
</p>]]></content>
            <updated>2026-07-28T11:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-jailed-for-89-days-in-australia-1785221608"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-jailed-for-89-days-in-australia-1785221608</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் - பிரிஸ்பேன் தொடருந்தில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் - பிரிஸ்பேன் தொடருந்தில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>குழந்தை பருவத்தில் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய சரணீஸ் சிவகுமார் மற்றும் பேட்லி மொஹினி என்பவர்கள் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி Cleveland வழித்தட தொடருந்தில் வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமராக்களில் பதிவாகியிருந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டமைக்காக மொஹினிக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><h2><b>இளைஞனுக்கு சிறைத்தண்டனை</b></h2><p>அத்துடன், குழப்பம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சிவகுமார் நேற்று தடுப்பு காவலில் இருந்தவாறே கிளிவ்லாண்ட் நீதிமன்றத்தில் வீடியோ ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b6ad47-83ca-48c8-bca8-a936b0735a66/26-6a68908900727.webp' /></p><p>தனியாகப் பயணம் செய்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மொஹினியும் நெருங்கிப் பேசியுள்ளனர். </p><p>அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இளைஞர்கள் இருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியுள்ளனர். </p><p>மூடப்படும் தொடருந்தின் கதவுகள் ஊடாக அவரை வெளியே இழுத்துச் சென்று அவர் இறங்குவதைத் தடுத்து, பின்னர் மற்றொரு பெட்டிக்கு சென்றுள்ளனர். </p><h3><b>நபர் மீது தாக்குதல்</b></h3><p>எனினும் அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சிவகுமார் அந்த நபரின் தலையில் கண்ணாடி போத்தலால் தாக்கியதில் இரத்தம் சிந்தத் தொடங்கியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f19b075b-8306-45cc-867a-f4e35de17c15/26-6a689089c65a4.webp' /></p><p>இந்தத் தாக்குதலால் கடும் அதிர்ச்சிக்குள்ளான பாதிக்கப்பட்ட நபர், அதன் பின்னர் குயின்ஸ்லாந்திலிருந்து வெளியேறிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. </p><p>இந்நிலையில், தான் தற்காப்புக்காகவே செயற்பட்டதாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், நீதிபதி டெபோரா வஸ்தா அவரது வாதத்தை நிராகரித்தார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/y-Gw6Xt3L4A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-28T11:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா முழுவதும் அவசர கால எச்சரிக்கை சேவை சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-warning-service-test-across-australia-1785235260"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-warning-service-test-across-australia-1785235260</id>
            <summary type="text">அவுஸ்திரேலியா முழுவதும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘AusAlert’ எனும் புதிய தேசிய எச்சரிக்கை
அமைப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியா முழுவதும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘AusAlert’ எனும் புதிய தேசிய எச்சரிக்கை
அமைப்பின் முதற்கட்டச் சோதனை நேற்று (27) மதியம் 2.00 மணிக்கு
நடைபெற்றது.
</p><p>
இதன் போது நாட்டின் பெரும்பான்மையான தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள்
மற்றும் டெப்ளட்களில் பலத்த சைரன் ஒலியுடன் கூடிய சோதனைச் செய்தி தோன்றியது.
</p><p>
காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது சுகாதார அவசர
நிலைகளின் போது மக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க இந்த புதிய
தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சோதனை</h2><p>
</p><p>
தற்போதைய குறுஞ்செய்தி முறையைப் போலன்றி, தொலைபேசி டவர்கள் மூலமாக நேரடியாகச்
சாதனங்களுக்கு இந்த எச்சரிக்கை ஒளிபரப்பப்படும்.
</p><p>
போன் 'Do Not Disturb' அல்லது 'Silent'&nbsp; இல் இருந்தாலும், சுமார் 10
வினாடிகளுக்கு உரத்த சைரன் ஒலிக்கும்.

மாநிலங்களுக்கு ஏற்ப மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தச் சோதனை
நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7168caae-e3a6-455b-9bf0-758f5bbd3ee6/26-6a6893d19c877.webp' /></p><p>
</p><p>
இது ஒரு சோதனையே என்பதால் பொதுமக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை,
திரையில் தோன்றும் செய்தியைப் படித்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டது.
</p><p>
குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டு இரகசியமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்கள், சைரன் ஒலியால் போன் இருப்பது வெளிப்படாமல் இருக்க சோதனை
நேரத்திற்கு முன்னதாகவே போனை அணைத்து வைக்குமாறு அல்லது 'Airplane Mode'-க்கு
மாற்றுமாறு தேசிய அவசர முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T11:35:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி : ஒருவர் உயிரிழப்பு - நால்வர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampara-three-wheel-accident-women-death-1785231947"></link>
            <id>https://tamilwin.com/article/ampara-three-wheel-accident-women-death-1785231947</id>
            <summary type="text">திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர
வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்திறகு உள்ளானதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர
வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்திறகு உள்ளானதில் ஒருவர்
உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் நேற்று(27.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்
</p><p>விபத்தில் மட்டக்களப்பு வவுணதீவு ச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சாரதி மற்றும் இரு சிறுவர்
உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a52e04e6-9e87-4786-aebd-6ac1aee1bff2/26-6a6885ff4c569.webp' /></p><p>
இதில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c678250-b322-43f3-b9a8-110dc6d36281/26-6a6886006589d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T10:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபைக்கு புதிய உபதவிசாளர் தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-chairman-of-chavakachcheri-urban-council-1785232666"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-chairman-of-chavakachcheri-urban-council-1785232666</id>
            <summary type="text">சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு
மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு
மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம்(28.7.2026) காலை
நடைபெற்ற போதே கோகுல்ராஜ் தெரிவானார்.
</p><p>
சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் , உள்ளூராட்சி
ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி
வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால்
நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின்
பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும்
கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக
வறிதாக்கப்பட்டது.</p><p></p><h2>புதிய உப தவிசாளர்&nbsp;</h2><p>
</p><p>
அதன் அடிப்படையில் , இன்றைய தினம் புதிய உப தவிசாளர்
தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.</p><p>

அதன் போது தமிழரசு கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்தேசிய கட்சி சார்பிலும்
இருவர் போட்டியிட்டனர்.

அதில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு, தமிழரசு கட்சியின் 6
உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1cb3f55-bddd-4ed3-9c4b-4e69720fc8f5/26-6a687fb845ebf.webp' /></p><p>
</p><p>
ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு, அகில இலங்கை தமிழ்
காங்கிரஸின் 06 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு
உறுப்பினரும் வாக்களித்தனர்.</p><p>

தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை
வகித்தனர்.சாவகச்சேரி நகர சபையானது, 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும்.</p><p></p><h2>கோரிக்கை</h2><p> </p><p>அதில் தமிழரசுக்
கட்சியின் 06 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 06
உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்கள்,
அதில் ஞா. கிசோரின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளது. </p><p>அதன் அடிப்படையில்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவரை உறுப்பினர் , தேசிய மக்கள் சக்தியின்
மூன்று உறுப்பினர்கள், அதில் ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f587bf5f-cd53-4543-aede-c7d04d1990f2/26-6a687fb92ab9b.webp' /></p><p> </p><p>அதன்
அடிப்படையில் அவர்களில் இரு உறுப்பினர்கள். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு
உறுப்பினர் என சபையில் தற்போது 16 உறுப்பினர்கள் உள்ளனர்.
</p><p>
இந்நிலையில் இன்றைய தினம் , உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்திற்கு , 16
உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அதேவேளை குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு
மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில்
முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்து இருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T10:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றின் இன்றைய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-s-court-order-regarding-suresh-saleh-1785230647"></link>
            <id>https://tamilwin.com/article/today-s-court-order-regarding-suresh-saleh-1785230647</id>
            <summary type="text">தடுப்புக் காவலில்&amp;nbsp; வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனு ஆகஸ்ட் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவலில்&nbsp; வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனு ஆகஸ்ட் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில்,&nbsp; சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மனு விசாரணைக்கு</h2><p>இந்த நிலையில், பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து சுரேஷ் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1264e1d8-45ee-45d4-987c-4b11f99e4b47/26-6a687b14ee9c5.webp' /></p><p>குறித்த மனு இன்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மன்று தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p>அன்றையதினத்தில்,&nbsp; குறித்த மனு தொடர்பான மேலதிக விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><b><i>&nbsp;you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4sS9jwu2q6A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-28T09:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/south-eastern-university-convocation-1785229428"></link>
            <id>https://tamilwin.com/article/south-eastern-university-convocation-1785229428</id>
            <summary type="text">தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில்
வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில்
வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக
நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.</p><p>பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டங்களைப்
பெற்றுக்கொண்டதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஜே. நௌபர்
தெரிவித்தார்.
</p><p></p><h2>01 முதல் 06 வரையிலான அமர்வுகள்</h2><p>
பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி பாயிஸ் முஸ்தபா
தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34136629-14ff-4ab6-9d1f-b02321955823/26-6a687568a1482.webp' /></p><p>பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்
எஸ்.எம். ஜனைடீன் கலந்துகொண்டதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள்
உபவேந்தரும் மத்திய மாகாண ஆளுநருமான பேராசிரியர் சரத் அபயகோன் தொடக்க
உரையாற்றினார்.</p><p>திங்கட்கிழமை (27) இறுதி நாளில் 07, 08 மற்றும் 09 ஆகிய அமர்வுகளில் மொத்தம்
1,010 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. </p><p>இதில் 07 ஆவது அமர்வில்
வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 272 பட்டதாரிகளும், 08 ஆவது அமர்வில்
அதே பீடத்தைச் சேர்ந்த 474 பட்டதாரிகளும், 09 ஆவது அமர்வில் 264 வெளிவாரிப்
பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.</p><p>

இதற்கு முன்னர் கடந்த இரு நாட்களில் நடைபெற்ற 01 முதல் 06 வரையிலான
அமர்வுகளில் மொத்தம் 2,388 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றிருந்தனர்.</p><h2>மூன்று நாட்கள் நடைபெற்ற</h2><p>முதல் நாளான சனிக்கிழமை (25) நடைபெற்ற 01 ஆவது அமர்வில் பொறியியல் பீடத்தைச்
சேர்ந்த 187 பட்டதாரிகளுக்கும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 285
பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3588b066-dd35-4165-915a-80d9c840ab00/26-6a68756999a30.webp' /></p><p>தொடரந்து நடைபெற்ற 02 ஆவது
அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 368
பட்டதாரிகளும், 03 ஆவது அமர்வில் அதே பீடத்தைச் சேர்ந்த 414 பட்டதாரிகளும்
பட்டங்களைப் பெற்றனர்.
</p><p>
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற 04 ஆவது அமர்வில் பிரயோக
விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 418 பட்டதாரிகளுக்கும், 05 ஆவது அமர்வில் கலை
கலாசார பீடத்தைச் சேர்ந்த 373 பட்டதாரிகளுக்கும், 06 ஆவது அமர்வில் அதே
பீடத்தைச் சேர்ந்த 343 பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
</p><p>
மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த 09 அமர்வுகளின் ஊடாக 3,134 உள்வாரிப்
பட்டதாரிகளும், 264 வெளிவாரிப் பட்டதாரிகளுமாக மொத்தம் 3,398 பேர் பட்டங்களைச்
சூடிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T09:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தில் சிசு செரிய பேருந்து சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sisu-sariya-bus-service-launched-in-mannar-1785230422"></link>
            <id>https://tamilwin.com/article/sisu-sariya-bus-service-launched-in-mannar-1785230422</id>
            <summary type="text">பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும்
நோக்கில், மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை
இன்று (28) கூட்டுறவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும்
நோக்கில், மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை
இன்று (28) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
</p><p>
மன்னார் மாவட்டத்திற்காக முதன்முறையாக இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
மன்னாரிலிருந்து தலைமன்னார் வரை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக
முதலாவது ‘சிசு செரிய’ பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>
2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ திட்டத்தின் கீழ், வடக்கு
மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை.</p><h2>பேருந்து சேவை</h2><p>
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தலையீட்டின்
பேரில், 20 பேருந்துகளை ஈடுபடுத்தி ‘சிசு செரிய’ திட்டத்தின் முதற்கட்டத்தை
ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9395f8f-e755-4132-be2a-2facf2a45f21/26-6a68769f6d055.webp' /></p><p>


மன்னாரில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவைக்கு
மன்னார் மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் பேருந்து ஒன்றே
பயன்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,

‘சிசு செரிய’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,
மன்னார் மாவட்ட மாணவர்கள் பல வருடங்களாக பாடசாலைக்குச் செல்வதற்கான
போக்குவரத்து சேவைகள் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.</p><h2>நிவாரணம்</h2><p>
</p><p>
அத்துடன், கடந்த கால அரசாங்கங்கள் வடபகுதி மாணவர்களைப் புறக்கணித்துச்
செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.

இச் சேவையின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக
மாணவர்களிடமிருந்து சாதாரண கட்டணத்தில் பாதி மட்டுமே அறவிடப்படும் என்பதுடன்,
மீதித் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7acf4c5-5b8b-475a-a3be-94148a3d990d/26-6a687780c680f.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் கல்விக்காக பயணிப்போருக்கு கணிசமான நிவாரணம் கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.
ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரச அதிபர் கே. கனகேஸ்வரன், வடமாகாண வீதிப்
பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன், மன்னார் மாவட்ட
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஷ் உட்பட
உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும்
பிரதேசவாசிகள்,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T09:35:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹொரணை பகுதியில் பாரியளவிலான இரத்தினக்கல் கடத்தல் முறியடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/large-scale-gemstone-smuggling-attempt-walana-1785228835"></link>
            <id>https://tamilwin.com/article/large-scale-gemstone-smuggling-attempt-walana-1785228835</id>
            <summary type="text">ஹொரணை- களுகே மோதர பிரதேசத்தில் பாரியளவிலான சட்டவிரோத மாணிக்கக் கல் கடத்தல் நடவடிக்கையை வலான பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவினர் முறியடித்துள்ளனர்.அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை- களுகே மோதர பிரதேசத்தில் பாரியளவிலான சட்டவிரோத மாணிக்கக் கல் கடத்தல் நடவடிக்கையை வலான பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவினர் முறியடித்துள்ளனர்.</p><p>அத்தோடு, மூன்று இரத்தினக்கல் வணிகர்கள் உட்பட 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு நடத்திய சோதனையின்போது, ​​11 படகுகள், 5 மோட்டார் பைக்குகள் மற்றும் இரத்தினக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்படும் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68f1e088-7008-42a3-b215-1b872f25c590/26-6a6871a2918b6.webp' /></p><p>மேலும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை&nbsp;வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T09:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கவே 22ஆவது திருத்தம்! கம்மன்பில குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extending-the-term-of-office-of-the-chief-justice-1785228009"></link>
            <id>https://tamilwin.com/article/extending-the-term-of-office-of-the-chief-justice-1785228009</id>
            <summary type="text">பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கும் உள்நோக்கத்துடன், ஒட்டுமொத்த
நீதியரசர்களின் பதவிக்காலத்தையும் நீடிக்கும் வகையில் அரசமைப்பின் 22 ஆவது
திருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கும் உள்நோக்கத்துடன், ஒட்டுமொத்த
நீதியரசர்களின் பதவிக்காலத்தையும் நீடிக்கும் வகையில் அரசமைப்பின் 22 ஆவது
திருத்தத்தைக் கொண்டுவர அரசு உத்தேசித்துள்ளது என்று பிவிதுறு ஹெல உறுமய
கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் நேற்று(27.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>மக்களின் அபிப்பிராயத்தைக் கோருவதற்கு&nbsp;</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன்
சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில், ஆரம்பத்தில் அவரது சேவைக்காலத்தை
நீடிக்க முயன்ற அரசு, எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மற்றும்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உட்பட சகல நீதிபதிகளின்
பதவிக்காலத்தையும் நீடிக்க உத்தேசித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90aec519-371d-4023-8082-050a5df6b6b6/26-6a686e106756f.webp' /></p><p>இதன் ஊடாக பிரதம நீதியரசர் என்ற
தனிநபரை இலக்காகக் கொண்டே இந்த 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
</p><p>அரசிடம் குறுகிய நோக்கங்கள் இல்லாவிடின், பிரதம நீதியரசர் ஓய்வுபெற்றதன்
பின்னர் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கலாம்.</p><p>இந்தத் திருத்தத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரும் பயனாளிகளாக
மாறுவதால், இந்தச் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது.
</p><p>
எனவே, இது தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தைக் கோருவதற்கு ஜனாதிபதி
உடனடியாகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்போது மக்களே இதற்குச்
சிறந்ததொரு தீர்ப்பை வழங்குவார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் குழந்தை பிறந்தால் தந்தையருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paid-leave-scheme-fathers-upon-birth-of-a-child-1785227839"></link>
            <id>https://tamilwin.com/article/paid-leave-scheme-fathers-upon-birth-of-a-child-1785227839</id>
            <summary type="text">அமெரிக்காவின் மின்னிசோட்டா மாநிலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
&#039;சம்பளத்துடன் கூடிய குடும்ப விடுப்புத் திட்டம்&#039; பெரும் வரவேற்பைப்
பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மின்னிசோட்டா மாநிலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
'சம்பளத்துடன் கூடிய குடும்ப விடுப்புத் திட்டம்' பெரும் வரவேற்பைப்
பெற்றுள்ளது.
</p><p>
இதுவரை சுமார் 75,000 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஒப்புதல் பெற்றுள்ள
நிலையில், இந்நடவடிக்கை பணிபுரியும் குடும்பங்களுக்கும், குறிப்பாகப் புதிய
தந்தையர்களுக்கும் பெரும் நன்மையை அளிப்பதாக 'பொருளாதார மற்றும் கொள்கை
ஆராய்ச்சி மையம்' (CEPR) தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த விடுப்புச் சட்டம் இல்லாத சூழலில்,
கலிஃபோர்னியாவைத் தொடர்ந்து மின்னிசோட்டா உட்பட 15 மாநிலங்கள் இத்தகைய
திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.</p><p></p><h2>விடுப்புத் திட்டம்</h2><p>
</p><p>
இத்திட்டத்தின் மூலம் புதிய தந்தையர் தங்கள் குழந்தைகளுடன் தொடக்கக் காலத்தில்
நேரத்தைச் செலவிட முடிகிறது.

இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், மனநல ஆரோக்கியத்திற்கும் மிகவும்
பயனுள்ளதாக அமைகிறது.
</p><p>
மின்னிசோட்டாவில் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 36% பேர் ஆண்கள்
என்பதும், பாதிக்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு 78,000 டொலருக்கும் குறைவாகச்
சம்பாதிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24ab434d-58b5-49a5-acbf-b87aaeb24f0a/26-6a686cdf3c154.webp' /></p><p>
</p><p>
இக்கொள்கை வேலைத்தளங்களில் ஊழியர்களின் உற்பத்தித்திறனையும் மனஉறுதியையும்
அதிகரிப்பதோடு, பாலினச் சமத்துவத்தையும் ஊக்குவிக்கிறது.
</p><p>
அமெரிக்க மக்களில் 76% பேர் இத்தகைய விடுப்புத் திட்டங்களுக்குத் தங்கள்
ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி ரூபாவில் சிக்கிய மகிந்த! சாட்சியாக மாறிய முக்கிய பிரமுகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajin-vaas-give-statement-against-mahinda-1785198091"></link>
            <id>https://tamilwin.com/article/sajin-vaas-give-statement-against-mahinda-1785198091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சாட்சியமளித்துள்ளார்.
</p><p>இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் அவர் மூன்று மணித்தியாலங்கள் சாட்சியமளித்துள்ளார்.</p><p>
இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையின் போது, சுமார் 100 கோடி ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நேற்றைய தினம்(27) லஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0b1143c-9846-4636-a8e5-c671b163f834/26-6a682443ee9c6.webp' />&nbsp;&nbsp;</p><p>
ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அங்கு சென்ற அவர், சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p>
குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவே ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>“இலஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி“ அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.</p><h2>வெளிநாட்டில் உள்ள தொடர்புகள்</h2><p>
சிங்கப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியின் படி, TPL Itma நிறுவனம் மற்றும் Heliat எனும் ஆலோசனை நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7a8c2ff-670c-495c-aa96-dfacc0c0e563/26-6a6824449d8a4.webp' /></p><p>
</p><p>சஜின் வாஸ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>
மேலும், அந்த பணம் தங்கல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் சீ.எஸ்.என். ஊடக வலைப்பின்னலுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை அழைத்திருந்தது.</p><p>
வாக்கு மூலத்தில் எவ்வாறான விடயங்களை சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QT2SMoLBth8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T08:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சுற்றுலாப் பாதையை அறிமுகப்படுத்தி நடைபயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/walk-from-point-pedro-to-dondra-head-tourist-trail-1785225017"></link>
            <id>https://tamilwin.com/article/walk-from-point-pedro-to-dondra-head-tourist-trail-1785225017</id>
            <summary type="text">இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், புதிய சுற்றுலாப் பாதை
(Trail) ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், உள் வீதிகள் வழியாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், புதிய சுற்றுலாப் பாதை
(Trail) ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், உள் வீதிகள் வழியாக
பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட
நடைபயணத்தின் அடுத்த கட்டம் நேற்யை தினம் ஹற்றன், கொட்டகலை பகுதியிலிருந்து
ஆரம்பமானது.
</p><p>
இதுவரை சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்காத, மறைந்துள்ள அழகிய இடங்கள்,
கடற்கரை பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை உள்ளடக்கி இந்த புதிய பாதையை உலகிற்கு
அறிமுகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2115914356003101%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>

பிரித்தானிய சுற்றாடல் ஆர்வலரான ஆரோன் மூர் (Aaron Moore), பிரெஞ்சுக்
குடிமகனான ஜேம்ஸ் மற்றும் இலங்கை இயற்கை வழிகாட்டியான சரத் விஜேவர்தன
ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p></p><h2>நடைபயணம்</h2><p>

கடந்த (01) ஆம் திகதி பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம்,
கடற்கரையோரமாக குச்சவெளி, ரிடிகல, சீகிரியா மற்றும் நக்கில்ஸ் (Knuckles)
வழியாக 456 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து அண்மையில் கண்டியை சென்றடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0455b272-0d0b-4969-bb92-14bde1d90299/26-6a6868763e463.webp' /></p><p>

அங்கு அவர்களை வரவேற்பதற்காக கண்டி மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு, கண்டி
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஏற்பாட்டில் விசேட
நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
</p><p>
06 வாரங்களுக்குள் மொத்தம் 750 கிலோமீற்றர் தூரத்தைக் கடப்பதே இந்த பயணத்தின்
இலக்காகும்.</p><p></p><h2>கலாச்சார பன்முகத்தன்மை</h2><p>

இதற்கமைய, (27) ஆம் திகதி கொட்டகலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணம்,
இனிவரும் நாட்களில் பொகவந்தலாவ, சிங்கராஜ வன வழியாக சென்று தெற்கு கடற்கரையான
தேவேந்திரமுனையை அடைந்து நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/713bc492-f226-4366-8f71-eb5640131d42/26-6a686876e4000.webp' /></p><p>

இதுவரை வந்த பயணத்தில் இலங்கையின் இயற்கை அழகையும், சிங்கள, தமிழ் மற்றும்
முஸ்லிம் மக்களின் கலாச்சார பன்முகத்தன்மையையும், அவர்களின் சிறந்த மனிதநேயப்
பண்புகளையும் தம்மால் சிறப்பாக அனுபவிக்க முடிந்ததாக பிரித்தானியாவைச் சேர்ந்த
ஆரோன் மூர் தெரிவித்தார்.
</p><p>
குறிப்பாக கிராமமக்களிடமிருந்து கிடைத்த அரிய விருந்தோம்பலை தம்மால் ஒருபோதும்
மறக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magnitude-7-1-earthquake-hits-japan-1785225565"></link>
            <id>https://tamilwin.com/article/magnitude-7-1-earthquake-hits-japan-1785225565</id>
            <summary type="text">ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;அதன்படி இன்றைய தினம் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>அதன்படி இன்றைய தினம் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>
</p><p>
நிலநடுக்கத்திற்குப் பிறகு, 1 மீட்டர் (3.28 அடி) உயர அலைக்கான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c94cdec3-20e2-47a1-ab7a-78c92fb55157/26-6a68659941085.webp' /></p><p>
ஜப்பானின் தெற்கு கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:21:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை சிறைக்கு அனுப்ப இரகசியத் திட்டம்! நாமல் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/secret-plan-to-send-the-rajapaksas-to-prison-1785224991"></link>
            <id>https://tamilwin.com/article/secret-plan-to-send-the-rajapaksas-to-prison-1785224991</id>
            <summary type="text">ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதற்கே அரசு
முயற்சிக்கின்றது என்றும், அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின்
பதவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதற்கே அரசு
முயற்சிக்கின்றது என்றும், அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின்
பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்குக் கிடையாது என்றும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்புகளின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>மக்களின் தீர்மானம்&nbsp;</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும்,
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு எவ்வித நடவடிக்கைகளையும்
இதுவரை முன்னெடுக்கவில்லை. </p><p>மாறாக அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே
செயற்படுகின்றது. நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி
குறிப்பிட்டாலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றமும்
ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3af01ece-f975-4f4b-a750-e1bc26bfa920/26-6a686164c3810.webp' /></p><p> </p><p>விவசாயிகளின் போராட்டங்களுக்கும் இன்றுவரை நியாயமான தீர்வு
கிடைக்கவில்லை.

நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த
அரசு, தற்போது நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றது.
</p><p>
ராஜபக்சக்களைச் சிறைக்கு அனுப்புவதற்காகவே நீதியரசர்களின் பதவிக்காலம்
நீடிக்கப்படுகின்றது என்று ஆளும் தரப்பு உறுப்பினர் பகிரங்கமாகக்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக
உரிமை அரசுக்கு இல்லை. நீதியரசர்களின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின்,
அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களே அதனைத் தீர்மானிக்க
வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி: எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தீவிர நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approve-extension-of-retirement-age-judges-1785220894"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approve-extension-of-retirement-age-judges-1785220894</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை இரண்டு வருடங்கள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை இரண்டு வருடங்கள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
தலைமையில் நேற்று (27.07.2026) நடைபெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உயர்நீதிமன்ற நீதியரசரின் ஓய்வு வயது</h2><p>
</p><p>
அரசமைப்பின் 107 (5) பிரிவின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் தற்போதைய ஓய்வு
வயது 65 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய முன்மொழிவின் படி அது
67 ஆண்டுகளாக நீடிக்கப்படவுள்ளது. </p><p>அதே பிரிவின் கீழ், மேன்முறையீட்டு நீதிமன்ற
நீதியரசர்களின் ஓய்வு வயது 63 ஆண்டுகளில் இருந்து 65 ஆண்டுகளாகவும்
உயர்த்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7859a38-a2d3-40f0-824c-8bbfedc30a4d/26-6a6860305d637.webp' /></p><p>

எதிர்க்கட்சிகளும் சட்டத்துறை சார் அமைப்புகளும் இதற்குைக் கடும் எதிர்ப்புத்
தெரிவித்து வருகின்ற போதிலும், அரசு நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும்
திட்டத்தில் தீவிரமாக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T07:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிர்வாக ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-thiruvalluvar-cultural-centre-agreement-1785224168"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-thiruvalluvar-cultural-centre-agreement-1785224168</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை
நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுவதற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை
நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, 'கூட்டு முகாமைத்துவக் குழு'
கூட்டத்தில் நேற்று(27.7.2026) எட்டப்பட்டுள்ளது.
</p><p>
இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக்
கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு
கலந்து கொண்டனர்.
</p><p>
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநர்
செயலகத்திலிருந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர்
மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரும் இணைந்திருந்தனர்.</p><p></p><h2>நிதியப் பொறுப்பு</h2><p> அத்துடன்,
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம் மாநகர
சபையின் மேயர் மதிவதனி விவேகானந்தராஜா மற்றும் கொன்சியூலர் ஜெனரல்
ஸ்ரீ சாய் முரளி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c25601bd-c0ae-4308-8145-2d0aa49a2860/26-6a685e31e7029.webp' /></p><p>
</p><p>
இந்த நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையானது பதவி வழி உறுப்பினர்கள் 3 பேரும்,
துறைசார் உறுப்பினர்கள் 4 பேருமாக மொத்தம் 7 பேர் கொண்டதாக அமைக்கப்படுவதற்கு
முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. </p><p>எனினும், இக்கூட்டத்தில் பதவி வழி
உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உடன்படிக்கை</h2><p>

அதன்படி, மாகாண உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் (மாகாண சபை இல்லாத
சந்தர்ப்பத்தில் ஆளுநர்), புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்
செயலாளர், யாழ். மாநகர சபையின் மேயர், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகிய 4 பதவி
வழி உறுப்பினர்களும், துறை ரீதியான 5 உறுப்பினர்களுமாக மொத்தம் 9 பேர்
இச்சபைக்கு நியமிக்கப்படவுள்ளனர்.</p><p>

துறைரீதியாக 5 பேரையும் பெயர் குறித்து நியமிப்பதற்கும் யாழ். மாநகர சபை உட்பட
அனைத்துத் தரப்புக்களும் இக்கூட்டத்தில் இணக்கம் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10a598c0-3342-416c-840c-555028ec3b73/26-6a685e32bd48c.webp' /></p><p>
</p><p>
மேலும், யாழ். மாநகர சபையால் சுட்டிக்காட்டப்பட்ட, ஏற்கனவே
தயாரிக்கப்பட்டிருந்த நம்பிக்கை நிதியப் பொறுப்பு உடன்படிக்கையிலுள்ள 12ஆவது
சரத்தை நீக்குவதற்கும் அனைத்துத் தரப்புக்களும் இணக்கம் வெளியிட்டன.
</p><p>
இந்தச் சுமுகமான இணக்கப்பாடுகளையடுத்து, திருத்தப்பட்ட உடன்படிக்கையில்
அனைத்துத் தரப்புக்களும் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடுவதற்கான திகதியை மிக
விரைவில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T07:47:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வர்த்தகர் உட்பட தமிழர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-business-man-and-two-arrested-1785217080"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-business-man-and-two-arrested-1785217080</id>
            <summary type="text">பல இலட்சம் ரூபாவினை இலஞ்சம் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல இலட்சம் ரூபாவினை இலஞ்சம் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

பேராதனை வைத்தியசாலையின் 2027 ஆம் ஆண்டுக்கான சமையலறைக்கு தேவையான உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான விலை மனுக்கோரல் தொடர்பிலேய இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக&nbsp; ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><h2><b>விலை மனுக்கோரல்</b></h2><p> 

முறையீட்டாளருக்கு தொடர்பான விலை மனுக்கோரலை பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபரால் தனது தந்தையின் மற்றும் மாமாவின் பெயரில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த விலை மனுக்கோரல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு ஆரம்பத்தில் 30 லட்சம் ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டிருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8902866e-20d2-489e-9cde-7695bfdedbe4/26-6a685dfaf2569.webp' /></p><p>அது பின்னர் 25 லட்சம் ரூபாவாகவும், இறுதியில் 20 இலட்சம் ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>அதற்கமைய, 20 லட்சம் ரூபாய் இலஞ்சத்தை பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டுகளின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>கம்பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த அருணகிரிநாத் லோகேந்திரன் மற்றும் லோகேந்திரன் சிவராஜி ஆகிய இருவரும் நேற்று இரவு கம்பளை தபாலகத்திற்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களைக் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-07-28T07:45:13+00:00</updated>
        </entry>
    </feed>
