<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-03T17:35:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்புத் திருத்தம் செய்யத் தயங்க மாட்டோம்: ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923"></link>
            <id>https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்கம் தயங்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கை பொலிஸ் சேவையின் 160வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>சந்தேகநபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடைமுறையை அரசாங்கம் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும், கைது செய்யப்படுவதற்கும் தண்டனை வழங்கப்படுவதற்கும் இடையிலான காலதாமதம் இருப்பதாக ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/537f0ecd-cdc9-46a5-a6a4-3850801afe26/26-6a99abf8cfc67.webp' /></p><p>
</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் பொலிஸார் சாதனை அளவிலான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எனினும், வழக்கு விசாரணைகளும் தண்டனை வழங்குவதும் நீண்ட காலம் நீடித்தால், இந்தக் கைதுகளால் பெரிய பலன் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தண்டனை கிடைக்கத் தாமதமாகும் என்பது குற்றவாளிகளுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதிச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் மேலும் திறம்படச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இந்த நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஏற்கனவே புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:19:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு இணையான ஆபத்து இலங்கையிலும்.. வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901</id>
            <summary type="text">எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமர்தலிங்கம் தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,</p><p> 


இதனால் உணவு உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். 

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, பாதுகாப்பற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மலைப் பிரதேசங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.
</p><p>
 குளங்கள் புனரமைக்கப்பட்டாலும், முறையான நீர்வள முகாமைத்துவம் இல்லாததால் ஒரே மாவட்டம் வறட்சியையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

கொழும்பு போன்ற நகரங்களில் நீர் வரத்து குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KY07L6-GGow" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T16:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக கொழும்பில் திரண்ட எதிர்க்கட்சியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-protest-government-s-22nd-amendment-1788451207"></link>
            <id>https://tamilwin.com/article/massive-protest-government-s-22nd-amendment-1788451207</id>
            <summary type="text">அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை தொடருந்து&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை தொடருந்து&nbsp; நிலையத்துக்கு முன்பாக இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு
செய்திருந்த இந்தப் போராட்டத்தில், நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் திரண்டு
வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள்
பங்கேற்று அரசுக்கு எதிரான தமது பலமான எதிர்ப்பைக் காட்டினர்.</p><h2>மாபெரும் போராட்டம்</h2><p>
</p><p>
போராட்டத்தின் நடுவே மக்கள் வெள்ளத்தின் மத்தியில் கலந்துகொண்டு உரையாற்றிய
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்களின் அடிப்படை உரிமைகளைப்
பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்துக்கும் நாடா ளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும்
தகுந்த பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/babb0125-2625-42c2-81f9-c5cecf888503/26-6a999b57a2c02.webp' /></p><p>

தலைநகரின் முக்கிய போக்குவரத்து மையமான கோட்டை ரயில் நிலையச் சந்தியை
முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அரசமைப்பைத் துஷ்பிரயோகம் செய்யும் அரசின்
நடவடிக்கையைக் கண்டித்தும், ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும்
கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
</p><p>
மிகக் கச்சிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம்
அந்தப் பகுதியைச் ஸ்தம்பிக்க வைத்தது.

எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடி நகர்வு அரசுக்குப் பாரிய அரசியல் அழுத்தத்தைக்
கொடுத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T16:08:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- புறநகர் பகுதியில் 40 பேருந்துகள் மீது சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/40-buses-failed-fitness-tests-in-petta-ntc-1788447324"></link>
            <id>https://tamilwin.com/article/40-buses-failed-fitness-tests-in-petta-ntc-1788447324</id>
            <summary type="text">கொழும்பு- பெட்டா பாஸ்டியன் மாவத்த பேருந்து நிலையத்தில் தேசிய போக்குவரத்து
ஆணையம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடத்திய
அதிரடி ஆய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- பெட்டா பாஸ்டியன் மாவத்த பேருந்து நிலையத்தில் தேசிய போக்குவரத்து
ஆணையம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடத்திய
அதிரடி ஆய்வில், 40 நீண்ட தூரத் தனியார் மற்றும் அரச பேருந்துகள் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.

​</p><p>நேற்று(2.9.2026) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,
சுமார் 67 பேருந்துகளின் எஞ்சின் நிலை, புகை வெளியேற்றம் மற்றும் பயணிகளின்
பாதுகாப்பு வசதிகள் சோதிக்கப்பட்டன.

​</p><h2>சோதனைகள்</h2><p>இதில் கடுமையான பழுதுகள் கொண்ட 2 பேருந்துகளுக்கு உடனடியாகத் தடை
விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 38 பேருந்துகளின் குறைபாடுகளை 14
நாட்களுக்குள் சரிசெய்து, வேரஹேரா அலுவலகத்தில் மீண்டும் ஆய்வுக்கு
உட்படுத்துமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/381b3202-3bce-4a1b-accc-5c4e1816230f/26-6a998d0fcb641.webp' /></p><p>
</p><p>
அத்துடன் ​பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு முழுவதும் இத்தகைய சோதனைகள்
தொடரும் என NTC இன் தலைமை இயக்குநர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T15:54:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலியத் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-warns-the-us-against-an-israeli-attack-1788448908"></link>
            <id>https://tamilwin.com/article/iran-warns-the-us-against-an-israeli-attack-1788448908</id>
            <summary type="text">தெற்கு லெபனானில் (ஹிஸ்புல்லா) அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அலி அல்-தாஹிர்
மலைத்தொடர் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தினால், அதற்கு எதிராக கடுமையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானில் (ஹிஸ்புல்லா) அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அலி அல்-தாஹிர்
மலைத்தொடர் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தினால், அதற்கு எதிராக கடுமையான
பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
விடுத்துள்ளது.</p><p>

ஓமான் நாட்டின் ஊடாக கடந்த மாதம் இந்த எச்சரிக்கை செய்தி வொஷிங்டனுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறிப்பிட்ட மலைத்தொடர் பகுதியில் ஹிஸ்புல்லா போராளிகளுடன் இணைந்து ஈரானின்
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட
உறுப்பினர்கள் சிலர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.</p><h2>இஸ்ரேலுக்கு அழுத்தம்</h2><p>
</p><p>
இந்த நிலையில், அங்குள்ள நிலத்தடி கட்டளை மையம் மற்றும் ஆயுதக் கிடங்குகளை
இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியான முற்றுகை நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகிறது.
</p><p>
இருப்பினும், இந்த பகுதி மீது முழு அளவிலான தாக்குதலை நடத்துவது ஜூன் மாதம்
எட்டப்பட்ட உடன்படிக்கையை கடுமையாக மீறும் செயல் என ஹிஸ்புல்லா அமைப்பு
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53177b8e-9dfd-4137-ad80-28372b196b9b/26-6a99973457098.webp' /></p><p>
</p><p>
அத்துடன், அலி அல்-தாஹிர் பகுதியைக் கைப்பற்ற இஸ்ரேல் முயன்றால்
பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் என்றும்
எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போது இஸ்ரேலிய படைகள் அந்தப் பகுதியைச் சுற்றி முற்றுகையிட்டு உணவு மற்றும்
நீர் விநியோகங்களைத் தடுத்து வரும் அதேவேளை, நிலைமையை மேலும் தீவிரமடைய
விடாமல் தவிர்க்க அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T15:50:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபாய களமாக மாறும் நுவரெலியா - ஹக்கலை வீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwara-eliya-road-not-widened-accidents-rise-1788445933"></link>
            <id>https://tamilwin.com/article/nuwara-eliya-road-not-widened-accidents-rise-1788445933</id>
            <summary type="text">நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான
வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான
வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து ஏற்பட்ட இடமானது டித்வா (Ditwah) சூறாவளி காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய
பகுதியாக காணப்படுபடுகிறது என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>தொடர்ச்சியாக இடம்பெறும் விபத்துக்கள்</h2><p>நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக
சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனத்தில் திடீரென்று தடையாழி செயலிழந்து விபத்திற்குள்ளாகியது.</p><p>இதனையடுத்து வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்
தப்பியுள்ளனர்.</p><p> இரண்டாவதாக ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற
ஒருவர் மீது பேருந்து மோதியதில் 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6d0c64-55ea-46ca-88d7-e0531dd0518a/26-6a9988cc362fc.webp' /></p><p>
மூன்றாவாதாக அதே இடத்தில் நேற்று(02) மாலை இ.போ.ச பேருந்து ஒன்றும் கார்
ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விபத்துகளால் சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளனர்.</p><p> எனவே, இனியும்
விபத்துகள் இடம்பெறுவதை தடுப்பதற்காக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள்
சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் வீதியை அகலப்படுத்தி கொடுப்பதற்கும்,
குன்றும், குழியுமாக காணப்படும் பகுதிகளை புனரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட
தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இதற்கு முன்னரும் இந்த வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரியிருந்தோம்
இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எதிர்திசையில் வரும் வாகனத்துக்கு
இடம் கொடுப்பதற்குகூட பெரும் சிரமம் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T14:59:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணை நெகிழ வைத்த பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-women-praise-sri-lankan-police-1788446240"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-women-praise-sri-lankan-police-1788446240</id>
            <summary type="text">
இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் நாட்டு பெண் தனது பையை தொலைத்த நிலையில் அதிகாரிகள் அதனை தேடி உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.

கண்டி பூங்காவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் நாட்டு பெண் தனது பையை தொலைத்த நிலையில் அதிகாரிகள் அதனை தேடி உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
</p><p>
கண்டி பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ள பகுதியில் மறந்துவிட்டுச் சென்ற, பையில் சுமார் இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணம் அடங்கிய பையை, பொலிஸ் அதிகாரி இந்திரஜித் மீட்டு மீண்டும் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
</p><p>
பை தொலைந்து போனது குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த குறித்த பெண், பங்களாதேஷ் தூதரகத்திற்கும் அறிவித்துள்ளார்.</p><p>
</p><h2><b>
 பொலிஸில் முறைப்பாடு</b></h2><p>கடந்த 31ஆம் திகதி அதிகாலை 4.40 மணிக்கு பங்களாதேஷ் செல்லவிருந்த நிலையில் பை தொலைந்து போயுள்ளது.

பயணப் பையில் அவரது கடவுச்சீட்டும் இருந்ததால் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e3fcc0d-1059-42e5-a451-3dbe7307850d/26-6a9988938cac1.webp' /></p><p>இந்த பொலிஸ் அதிகாரியின் தலையீட்டால் பை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணம் மற்றும் ஏனைய பொருட்கள் குறையாமல் பை மீண்டும் கிடைத்ததை நம்ப முடியவில்லை என அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
வெளிநாட்டில் வசித்து விட்டு கண்டிக்கு தனது வீட்டிற்கு வந்துள்ள, ஒரு காலத்தில் கண்டி சுற்றுலாப் பொலிஸில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் இந்திரஜித் கடந்த 30ஆம் திகதி கண்டி வேல்ஸ் பார்க் பூங்காவைத் தாண்டி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கைப்பை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. </p><p>

அதனை பரிசோதித்த போது வெளிநாட்டுப் பெண்ணுக்கு சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அந்தப் பையில் பணமும் கடவுச்சீட்டும் இருந்தபோதிலும், அதன் உரிமையாளரை தொடர்பு கொள்வது பெரும் சிக்கலாக மாறியிருந்தது. </p><p>பையில் இருந்த பங்களாதேஷ் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, அதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை பெற்று பொலிஸ் சார்ஜன்ட் அவரை தொடர்பு கொண்டுள்ளார்.</p><p>

வட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டு பையும் பணமும் பாதுகாப்பாக இருப்பதாக காணொளி மூலம் காட்டிய பின்னர் பையை பெற்றுக்கொள்ள கண்டிக்கு வந்தால் தனது விமானம் தவறவிடப்படும் என்று அவர் கூறியுள்ளார். </p><p>

பொலிஸ் அதிகாரி பையைக் கொண்டு கொழும்புக்கு சென்று அதனை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
</p><p>
மொனோவரா அக்தர் சௌத்ரி என்ற பெண், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சேவையை பாராட்டியவாறு கடந்த 31ஆம் திகதி அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-03T14:47:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்‌சக்களை ஆதரிப்பவர்கள் முட்டாள்கள்! தனது கைது செய்தி குறித்து அசாத் சாலி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-arrest-corrupt-fraudulent-people-rajapaksa-1788441054"></link>
            <id>https://tamilwin.com/article/support-arrest-corrupt-fraudulent-people-rajapaksa-1788441054</id>
            <summary type="text">முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அண்மையில் ஜனாதிபதி தொடர்பில் வெளியிட்ட கருத்து இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாகியது.&amp;nbsp;இந்நிலையில், அது த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, அண்மையில் ஜனாதிபதி தொடர்பில் வெளியிட்ட கருத்து இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாகியது.&nbsp;</p><p>இந்நிலையில், அது தொடர்பில் தேசிய மக்கள் ஆதரவாளர்களால் கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டன.&nbsp;</p><p>இதற்கிடையில், விரைவில்&nbsp;அசாத் சாலி கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டது.&nbsp;</p><p>இவை குறித்து கருத்து தெரிவித்த அசாத் சாலி,&nbsp;ராஜபக்‌சக்களை ஆதரிப்பவர்கள் முட்டாள்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் தான் கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட விடயம் தொர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p>இவ்விடயம் குறித்து லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CpM6GPCcnTQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T14:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து கடவை ஊழியர்களுக்கான கொடுப்பனவு விவகாரம்! மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monthly-allowance-railway-crossing-staff-mannar-1788440106"></link>
            <id>https://tamilwin.com/article/monthly-allowance-railway-crossing-staff-mannar-1788440106</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் தொடருந்து கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக்
கொடுப்பனவு உயர்த்தப்பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தொடரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் தொடருந்து கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக்
கொடுப்பனவு உயர்த்தப்பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தொடருந்து கடவை பணியாளர்கள் இன்றையதினம் (3.9.2026)&nbsp; மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மனுவை கையளித்துள்ளனர்.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக தலைமன்னார் வரையிலான தொடருந்து கடவையில் கடமை பொறுப்பினை குறித்த பணியாளர்கள் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p>

ஆரம்பத்தில் குறித்த பணியாளர்களுக்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்கள் ஊடாக
மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா 7,500 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது.</p><h2>மாதாந்தக் கொடுப்பனவு</h2><p> </p><p>தற்போது
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவாக (01-01-2026) முதல் மாதாந்தக் கொடுப்பனவு ரூபா
15,000 ஆக அதிகாரப்பூர்வமாக உயர்த்தப் பட்டதாக குறித்த பணியாளர்கள்
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8086df45-5b70-40b0-bd9e-74659a776115/26-6a997157ed6c6.webp' /></p><p>

குறித்த பணியாளர்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளினால் கடவை ஊழியர்களின்
அனைத்து விபரங்களும் தொடருந்து திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p> ஏனைய
பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உயர்வு பெற்ற கொடுப்பனவு வழங்கப்
பட்டுள்ள போதும் எங்களுக்கு இதுவரை கொடுப்பனவு எதுவுமே கிடைக்கப்பெறவில்லை என
பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட&nbsp; தொடருந்து கடவை பணியாளர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.</p><h2>துரித நடவடிக்கை</h2><p>
</p><p>
ஜனவரி மாதம் முதல் தமக்கு எவ்வித கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும்
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் அரச அதிபரிடம் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab817cb-572c-49e1-8ba4-10604c17805a/26-6a997158c4e84.webp' /></p><p>பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து தொடருந்து கடவை
பணியாளர்களின் கொடுப் பணவையும் குறிப்பாக அதிகரிக்கப்பட்ட நிலுவையில் உள்ள
கொடுப்பனவை பெற்றுத் தருமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று துரித
நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T13:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரபல அரசியல்வாதியின் மகனுக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muzammil-s-son-jamaldeen-arrested-at-the-airport-1788406442"></link>
            <id>https://tamilwin.com/article/muzammil-s-son-jamaldeen-arrested-at-the-airport-1788406442</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீன் நீதிமன்றத்தால் விடுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p>

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p> 

இதன்போது 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. </p><p>

எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2><b>முதலாம் இணைப்பு</b></h2><p>முன்னாள் ஆளுநரும் கொழும்பின் மாநகர சபையின் முன்னாள் மேயருமான ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகனான மொஹமட் இஷாம் ஜமால்தீன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
நேற்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற விமானத்தில் லண்டன் செல்வதற்காக நேற்று பிற்பகல் 1.45 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த ஜமால்தீன் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><h2><b>
நிதி மோசடி </b></h2><p>47 வயதுடைய ஜமால்தீன், கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பயணத் தடை பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8197c097-fed9-4ccf-aef8-60cb0b246072/26-6a98efe1dacbe.webp' /></p><p>இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு அவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பிற்பகல் 4.30 மணியளவில் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>

மல்பெரி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் என தம்மைக் காட்டிக்கொண்டு, 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>&nbsp;</p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-03T13:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம் - ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nachikuda-school-name-change-issue-1788439255"></link>
            <id>https://tamilwin.com/article/nachikuda-school-name-change-issue-1788439255</id>
            <summary type="text">நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில்
முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கோரிக்கைகள் குறித்து உரிய அரச ஆவணங்களின்
அடிப்படையில் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில்
முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கோரிக்கைகள் குறித்து உரிய அரச ஆவணங்களின்
அடிப்படையில் விடயத்தைத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p> இதற்கமைய, பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்த
பெயர் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இரு
வார கால அவகாசம் வழங்கியுள்ளார்.</p><h2>பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில்</h2><p>

கிளிநொச்சி, நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் மற்றும்
அது சார்ந்த நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03.09.2026) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd2f10d7-7627-42ea-b1cb-e717fd1add1d/26-6a9971401274d.webp' /></p><p>இவ்விடயம் தொடர்பில்
பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைக்கு
அமைவாக உரிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காகவே இக்கலந்துரையாடல் நடத்தப்படுவதாக
ஆளுநர் ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயரே தொடர்வது
பொருத்தமானதாக இருக்கும் என ஆளுநர் தனது ஆரம்பக் கருத்தில் குறிப்பிட்டார்.
</p><p>அதேவேளை, இது இரு சமூகங்களைச் சார்ந்த உணர்வுபூர்வமான விடயம் என்பதால்,
கிடைக்கப்பெறும் அரச ஆவணங்கள் மற்றும் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில்
நிதானமாகவும் நியாயமாகவும் அணுகப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
</p><p>
இதன்பின்னர், தொடர்புடைய இரு தரப்புக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின்
பிரதிநிதிகளுக்கும் தமது நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம்
வழங்கப்பட்டது.</p><p>ஒரு தரப்பினர், பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே 'தமிழ் அரசினர் கலவன்
பாடசாலை' என்ற பெயரிலேயே இயங்கி வந்ததாகவும், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னரே
பெயர் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.</p><p> மறுதரப்பினர், குறித்த பாடசாலை
ஆரம்பத்திலிருந்தே 'முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலை' என்ற பெயரிலேயே இயங்கி
வந்ததாகவும், 1990ஆம் ஆண்டு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர், குறிப்பாக
2002ஆம் ஆண்டு முதல் சமாதான காலப்பகுதியில் மீண்டும் 'முஸ்லிம் அரசினர் கலவன்
பாடசாலை' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகவும் தமது நிலைப்பாட்டை முன்வைத்தனர்.&nbsp;</p><h2>இரு வார கால அவகாசம்</h2><p>இதன்பின்னர், வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலாளர் மற்றும் வடக்கு மாகாண
கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் தங்களிடம் காணப்படும் அரச ஆவணங்களின்
பிரதிகளை முன்வைத்து விளக்கமளித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a17bcbd2-3689-4a96-a92c-9a837f248411/26-6a99713f1f998.webp' /></p><p>அந்த ஆவணங்களில் 'முஸ்லிம் அரசினர்
கலவன் பாடசாலை' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டமைக்கான பதிவுகள் காணப்படுவதாக
அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
இதேவேளை, 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த பாடசாலை 'தமிழ் அரசினர் கலவன்
பாடசாலை' என்ற பெயரில் இயங்கியமைக்கான ஆவணம் தங்களிடம் இருப்பதாக ஒரு
தரப்பினர் தெரிவித்தனர். </p><p>அதற்கான ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பிப்பதற்காக
இரு வார கால அவகாசத்தை ஆளுநர் வழங்கினார்.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண
கல்விப் பணிப்பாளர், பூநகரி பிரதேச செயலர், வலயக் கல்விப் பணிப்பாளர்,
ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், நாச்சிக்குடா
கிழக்கு, நாச்சிக்குடா மத்திய ஆகிய இரு கிராம அபிவிருத்திச் சங்கத்தின்
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T13:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட சங்கட நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/france-women-shocked-in-sri-lanka-1788438554"></link>
            <id>https://tamilwin.com/article/france-women-shocked-in-sri-lanka-1788438554</id>
            <summary type="text">களுத்துறையில் ஆயுர்வேத மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம் தகாத முறையில் செயற்பட்ட சிகிச்சையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு பொலிஸாரால...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறையில் ஆயுர்வேத மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம் தகாத முறையில் செயற்பட்ட சிகிச்சையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
களுத்துறை வடக்கு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வஸ்கடுவ பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்தில் பணியாற்றும் 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><h2><b>
மசாஜ் சிகிச்சை</b></h2><p>பிரெஞ்சு பெண் ஒருவர் ஏனைய சிலருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3d1637a-ef72-45e9-b896-09e0ca7697fc/26-6a996fa05b2c4.webp' /></p><p>அவர் வஸ்கடுவ பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வேளையில், மசாஜ் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வந்துள்ளார்.
</p><p>
மசாஜ் செய்து முடித்ததும் உறங்கி விட்டதாகவும், இதன்போது சந்தேக நபர் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வாவின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-03T13:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன் நாமல் கைதாவாரா..! அநுர தரப்பு வழங்கிய பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-arrest-anura-government-response-1788418909"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-arrest-anura-government-response-1788418909</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு அஞ்சி, தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ள கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு அஞ்சி, தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.</p><p>

இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நளிந்த, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலானவை என்றும், அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது சொந்தச் செயல்களை நன்கு அறிந்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார். </p><h2>சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்காமல்&nbsp;</h2><p>

சிஐடி, எஃப்சிஐடி மற்றும் இலஞ்ச ஆணைக்குழு போன்ற அமைப்புகள் நாமல் ராஜபக்சவின் நடத்தையின் முழு அளவையும் இன்னும் வெளிக்கொணரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11477c3b-3d12-4a74-9e6c-815af6aad599/26-6a9924445f2c3.webp' /></p><p>
ஆதாரங்களின் மூலம் தவறுகளை நிரூபிப்பதே விசாரணைகளின் நோக்கம் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் அச்சம் கொள்வது இயல்பானது என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். </p><p>

நாமல் ராஜபக்ச கைது நடவடிக்கையை எதிர்கொள்வதாக நம்பியிருந்தால், அவர் தனது பேரணியை முன்னதாகவே நடத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தவறு செய்தவர் எவராயினும் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்காமல் எதிர்கொள்ளுமாறு நாமல் ராஜபக்சவை அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T12:45:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பு நகரில் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை உறுதி செய்ய தொடர் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/measures-to-ensure-environmental-puthukkudiyiruppu-1788438761"></link>
            <id>https://tamilwin.com/article/measures-to-ensure-environmental-puthukkudiyiruppu-1788438761</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு நகரில் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை உறுதி செய்யும்
நோக்கில், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்
இணைந்து சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு நகரில் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை உறுதி செய்யும்
நோக்கில், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்
இணைந்து சுற்றுச்சூழல் சுகாதார பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
புதுக்குடியிருப்பு நகரிலுள்ள புடவையகங்கள், அழகு சாதன விற்பனை நிலையங்கள்
உள்ளிட்ட ஏனைய வியாபார நிலையங்களிலும், அவற்றைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடந்த
24ஆம் திகதி சுற்றுச்சூழல் சுகாதாரம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>

இதன்போது, வீதியோரங்களிலும் வியாபார நிலையங்களின் சுற்றுப்புறங்களிலும்
பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள், பியர் போத்தல்கள் மற்றும் பியர் ரின்கள்
உள்ளிட்ட கழிவுகளை சுகாதாரமற்ற முறையில் வீசியிருந்த இரண்டு வியாபார
நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த இரண்டு வியாபார நிலையங்களுக்கு எதிராக கோம்பாவில்
பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தனால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f80172-fa2b-4f19-b288-0bfb1848062f/26-6a996b5ff4234.webp' /></p><p>

குறித்த வழக்குகள் நேற்றையதினம்(2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,
ஒரு வியாபார நிலையத்திற்கு 10,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
மற்றைய வியாபார நிலையத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காத
காரணத்தால், அவரை எதிர்வரும் 02.10.2026 அன்று நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
இதேவேளை புதுக்குடியிருப்பு நகரின் சுற்றுச்சூழல் சுகாதாரத்தைப் பேணும்
வகையில், பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சட்ட
நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31a6b5cd-605a-4cab-8106-e24523a2a805/26-6a996b60ac52b.webp' /></p><p>

வியாபார நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றுச்சூழலை
மாசுபடுத்தாமல், கழிவுகளை உரிய முறையில் அகற்றி நகரின் சுகாதாரத்தைப்
பேணுவதற்கு ஒத்துழைக்குமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-03T12:43:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை கல்வியை பாதியில் நிறுத்தியவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி - வெளிநாடு செல்லும் வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-dropouts-eligible-driving-jobs-in-japan-1788437486"></link>
            <id>https://tamilwin.com/article/school-dropouts-eligible-driving-jobs-in-japan-1788437486</id>
            <summary type="text">தேவையான ஜப்பானிய மொழித் தேர்ச்சி பெற்றிருந்தால், பாடசாலை கல்வியை பாதியில் நிறுத்தியவர்களும், கனரக வாகன ஓட்டுநர் பதவிகள் உட்பட ஜப்பானில் உள்ள சில வேலைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவையான ஜப்பானிய மொழித் தேர்ச்சி பெற்றிருந்தால், பாடசாலை கல்வியை பாதியில் நிறுத்தியவர்களும், கனரக வாகன ஓட்டுநர் பதவிகள் உட்பட ஜப்பானில் உள்ள சில வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையின் (SLFEA) தலைவர் லால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு</h2><p>
</p><p>
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைந்த ஒரே வேலைவாய்ப்பு முகமையான SLFEA, இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
</p><p>
ஜப்பான், தென்கொரியா, இஸ்ரேல் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது.</p><p> 

கிடைக்கக்கூடிய வேலைகளில் கட்டுமானம், தொழிற்துறை, திறன்மிகு வர்த்தகங்கள், சுகாதாரம், தகவல் தொழிநுட்பம், பொறியியல், போக்குவரத்து, விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட துறைகள் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76d5f5ad-d0da-4138-a3ff-4a2d6404aa85/26-6a9969c387fca.webp' /></p><h2>குறைந்த செலவில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு</h2><p> 

திறமையான, ஓரளவு திறமையான மற்றும் தொழில்முறைப் பணியாளர்களை இந்த முகமை தேடுகிறது. விண்ணப்பதாரர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.</p><p>

சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் இருப்பை வலுப்படுத்துவதையும், திறமையான இலங்கைத் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T12:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ferry-service-time-table-neduntheevu-kurikatuvan-1788437121"></link>
            <id>https://tamilwin.com/article/ferry-service-time-table-neduntheevu-kurikatuvan-1788437121</id>
            <summary type="text">நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவை நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.குறித்த படகு சேவையில் நாளையதினம் (04.09.2026)
தொடக்கம் குமுதினி படகு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவை நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>குறித்த படகு சேவையில் நாளையதினம் (04.09.2026)
தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக
நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.&nbsp;அதனடிப்படையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98a3803-6bee-4532-95f7-065342dfb793/26-6a996822b285c.webp' /></p><h2>படகு சேவை விபரம்
</h2><p>
குமுதினி

6.15 AM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
</p><p>8.00 AM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
</p><p>2.00 PM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
</p><p>3.30 PM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு&nbsp;</p><p>
நெடுந்தாரகை 7.00 AM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்</p><p>
8.30 AM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
</p><p>
வடதாரகை

3.00 PM - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
</p><p>4.30 PM - குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T12:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் செயற்படும் போதைப்பொருள் கும்பல் - இலங்கையில் சிக்கிய இரண்டு தமிழ் இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/badulla-ice-racket-operated-from-italy-busted-1788418684"></link>
            <id>https://tamilwin.com/article/badulla-ice-racket-operated-from-italy-busted-1788418684</id>
            <summary type="text">இத்தாலியில் இருந்து இயங்கி வந்த போதை பொருள கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் வட்ஸ்அப் மற்றும் ஈசி கே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில் இருந்து இயங்கி வந்த போதை பொருள கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>குறித்த இருவரும் வட்ஸ்அப் மற்றும் ஈசி கேஷ் ஊடாக பதுளை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. </p><p>&nbsp;சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் அம்பகஸ்தோவ பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கெப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2><b>போதைப்பொருள் வர்த்தகம்&nbsp;</b></h2><p> ஊவபரணகம, அம்பகஸ்தோவ பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d83222f-e373-463a-9326-113a2bdd2a0b/26-6a996652afbc4.webp' /></p><p>கெப்பெட்டிபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துசித குமார தலைமையிலான அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> இத்தாலியில் வசிக்கும் நபரொருவரால் இந்த போதைப்பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>சந்தேக நபர்கள் இருவரும் வாடகை முச்சக்கர வண்டிகளில் சென்று, கையடக்கத் தொலைபேசிக்கு கிடைக்கும் வட்ஸ்அப் குறுஞ்செய்திகளுக்கு அமைய, ஈசி கேஷ் முறையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு போதை பொருள் விற்பனை செய்துள்ளனர். </p><p>பதுளை, பண்டாரவளை, வெலிமடை மற்றும் எல்ல ஆகிய பகுதிகளுக்கு சென்று ஐஸ் போதைப்பொருளை விநியோகிக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-03T12:22:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் பதிவான திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788435310"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788435310</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சிப் போக்கு பதிவாகி வந்த நிலையில் இன்று (03.09.2026) தலைகீழ் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரியவருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சிப் போக்கு பதிவாகி வந்த நிலையில் இன்று (03.09.2026) தலைகீழ் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.</p><p>அதன்படி தங்கத்தின் விலை இன்று 4000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>

நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.373,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.377,000 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9e9bf8a-9653-4479-9220-c72397ee22c8/26-6a995f9b2ac91.webp' /></p><p>

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:55:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரைச்சியில் முறைப்படுத்தப்பட்ட மணல் விநியோகம் - தவிசாளர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/soil-distribution-by-karaichi-pradeshiya-sabha-1788433262"></link>
            <id>https://tamilwin.com/article/soil-distribution-by-karaichi-pradeshiya-sabha-1788433262</id>
            <summary type="text">கரைச்சி பிரதேச சபையினரால் மாவட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த
முயற்சிகளின் பலனாக, மணல் விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக கரைச்சி
பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரைச்சி பிரதேச சபையினரால் மாவட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த
முயற்சிகளின் பலனாக, மணல் விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக கரைச்சி
பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, மாவட்ட அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச சபை
மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து மணல் விநியோகத்தை
முறைப்படுத்தியுள்ளன.
</p><p>
எதிர் கொண்ட சவால்கள்: கடந்த 10-15 வருடங்களாக முறைசாராமல் இருந்த வியாபாரத்தை
ஒழுங்குபடுத்தும்போது, தனிநபர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சிகள்
உட்பட பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><h2>
மணல் வகைகள் மற்றும் விலைகள்</h2><p>கழுவப்படாத மண்: களஞ்சியசாலையிலிருந்து ஏற்றி விடுவதற்கு 40,000 ரூபாய்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதிகளில்
10,000 ரூபாயும், ஏனைய பிரிவுகளுக்கு அதற்கு ஏற்ற தொகையையும் டிப்பர்
உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b081202a-1ae7-461b-a846-68743445e7a7/26-6a995bdf658d4.webp' /></p><p> கிளிநொச்சிக்குள் 50,000 முதல் 55,000
ரூபாய்க்குள் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>
கழுவப்பட்ட மண்: 1,000இற்கும் மேற்பட்ட டிப்பர்கள் அளவிலான மண் தொடர்ச்சியாகக்
கழுவப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது.</p><p> இதற்கான இறுதி விலை நிர்ணயம் இன்னும்
செய்யப்படவில்லை; அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, செலவுகளைக் கணித்து
விரைவில் குறைந்தபட்ச விலை அறிவிக்கப்படும்.</p><h2>தவறான விலை அறிவிப்பு</h2><p>பொதுமக்கள் கிராம நிலாதாரி மற்றும் பிரதேச
செயலாளரின் சிபாரிசுக் கடிதத்துடன் பிரதேச சபை அலுவலகத்தை அணுகி மணலை பெற
முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cc0953-e4dc-4796-9698-ee0023ef24ca/26-6a995be05551a.webp' /></p><p>
</p><p>மேலும் இந்திய வீட்டுத் திட்டம், அரச மானிய வேலைகள், பாடசாலைகள் மற்றும்
வைத்தியசாலைகள் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.</p><p>இதேவேளை இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களில் வலம்வரும்
உத்தியோகபூர்வமற்ற தகவல்களையும், தவறான விலை அறிவிப்புகளையும் நம்பி
குழப்பமடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T11:47:15+00:00</updated>
        </entry>
    </feed>
