<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-06T05:20:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்து இப்போது பயணிகள் சேவையில்..! யாழில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-transport-fish-douglas-now-passenger-service-1788670101"></link>
            <id>https://tamilwin.com/article/bus-transport-fish-douglas-now-passenger-service-1788670101</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில் ஈடுபடுவதாக பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச பேருந்துகள் தொடர்ச்சியாக பழுதடைவதால் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக
கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p> அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.</p><p>காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச
பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து
தள்ளித்திரிந்து ஸ்ராட் பண்ணும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><h2>தொடர் சிரமங்கள்..&nbsp;</h2><p> </p><p>மக்கள் தள்ளியும் பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட்
செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3abe31b-1d72-4ecc-bf4f-0d2d39c6d06f/26-6a9cf3965659a.webp' /></p><p> கடந்த வெள்ளிக்கிழமை காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு
பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.</p><p>
பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து
இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை. </p><p>இதனால் காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலரும் பாதிப்படைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f12ea989-ff01-4bcf-b0cd-175f582b725f/26-6a9cf397cf706.webp' />&nbsp;</p><p>
</p><p>
வடமராட்சி கிழக்கில் சேவையிலீடுபடும் அரச பேருந்துகள் மிக பழமையானது, முன்னாள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் மீனை ஏற்றி செல்வதற்காக
விடப்பட்ட பேருந்துகள் இவை. </p><p>தரமற்ற பேருந்துகளால் வடமராட்சி கிழக்கு மக்கள்
தொடர்ந்தும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்யுமாறுதான் நாம் கேட்கின்றோம்.</p><p> அதனைவிடுத்து மக்கள் விரும்பாத மசாஜ் நிலையங்களை கொண்டுவர துடிக்கிறார்கள்.
சமூகத்தை சீரழிக்கும் மசாஜ் நிலையம் போன்ற அபிவிருத்திகளை செய்வதற்கு ஆர்வம்
காட்டுவதை விடுத்து ரஜீவன் எம்பி போன்றவர்கள் மக்கள் கேட்கும் தரமான பேருந்து
சேவையை வளங்க வழி செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவுக்கு நடந்ததை சிந்தித்து பார்க்கவும்! அநுர தொடர்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைத்த சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-taking-our-deathbed-opposition-leader-1788669549"></link>
            <id>https://tamilwin.com/article/government-taking-our-deathbed-opposition-leader-1788669549</id>
            <summary type="text">திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை தேர்தல் தொகுதி, லுனுகம்வெஹர புதிய நகரில்
விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை
நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,</p><h2>இளைஞர் மன்றத்தேர்தல்</h2><p>

"மாறுபட்ட அரசே இன்று நாட்டை ஆட்சி செய்து வருகின்றது. சர்வாதிகார,
எதேச்சதிகார அரசாகவே இந்த அரசு காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2681219-c899-40a7-8927-5288bb91cebb/26-6a9cf2d2a1413.webp' /></p><p> </p><p>அவ்வாறே ஜனநாயகத்தை மரணப்
படுக்கைக்குக் கொண்டு செல்லும் அரசாகவும் இது திகழ்கின்றது. தற்சமயம் இந்தப்
பிரஜைகளின் பங்களிப்பைக் குறைக்கும் தேசியத் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து,
ஜனநாயகத்துக்கான வெளியைச் சுருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
</p><p>
இதன் ஆரம்பம் இளைஞர் மன்றத் தேர்தல் ஊடாக நடந்து, பின்னர் சிவில் பாதுகாப்பு
குழுக்கள் வரை சென்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது 22 ஆவது அரசமைப்புத்
திருத்தம் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, ஜனநாயகப் பாரம்பரியங்கள் அனைத்தையும்
நாசமாக்கி, தனிவழியில் எல்லா விடயங்களையும் செய்துகொள்ள இந்த அரசு முற்பட்டு
வருகின்றது.
</p><p>
சர்வாதிகாரப் போக்கில், தனிவழியில் செயற்படும் இந்த அரசு எடுக்கும்
தீர்மானங்கள் காரணமாகவே நாடே வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>தனிக்கட்சி நாட்டை ஆட்சி
செய்வதே ஜனாதிபதிக்கு தற்போதுள்ள ஒரே நோக்கமாகக் காணப்படுகின்றது. முழு அரசும்
அரச இயந்திரமும் ஒரு கட்சியினது உத்தரவுகளுக்கு இணங்கச் செயற்பட இந்த அரசு
நடவடிக்கை எடுத்து வருகின்றது. </p><p>இதற்காகவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக்
கொண்டுவந்துள்ளனர்.</p><h2>எரிபொருள் மற்றும் எரிவாயு விலை</h2><p>
</p><p>
எதிர்க்கட்சியாக இருந்தவேளை மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால்
குறைப்பதாகவும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில்
எரிபொருளைப் பெற்றுத் தருவதாகவும், இளைஞர் தலைமுறைக்கு 12 இலட்சத்துக்கு
விட்ஸ் ரக காரைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தித் தருவதாகவும், நெல்
ஒரு கிலோவுக்கு 150 ரூபா நிலையான விலையைச் சட்ட ரீதியாக ஆக்கித் தருவதாகவும்
பிரஸ்தாபித்தனர். ஆனால், இன்று வரை இதில் எதையுமே செய்யவில்லை. நாட்டை
சர்வாதிகார ஆட்சி நோக்கியே அரசு நகர்த்திச் செல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6607421-f4bc-4971-8a52-517ac3d297d3/26-6a9cf32970250.webp' /></p><p>
</p><p>
எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளைச் சொற்ப தொகையில் குறைத்துவிட்டு ஊடகக்
காண்பிப்புகளையே இவர்கள் செய்து வருகின்றனர்.</p><p> தமக்கு வாக்களித்த மக்கள்
துன்பப்பட வேண்டும் என்பதே இந்த மாறுபட்ட அரசின் ஆசையாகக் காணப்படுகின்றது.

விவசாயியின் மகன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க, இன்று சுழற்சி முறை விவசாயத்தைக்கூட தடை செய்து வருகின்றார்.</p><p> இதன்
மூலம் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்செய்கை, தோட்டப்
பயிர்கள், மரக்கறி மற்றும் பழங்கள், ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட
ஒட்டுமொத்த விவசாயமும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><h2>கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன நடந்தது</h2><p>
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களின்
அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஆகியவை இவர்களிடம் இருப்பதால் அரசு
தங்களை அதிகாரம் படைத்தோராக நினைத்துக்கொண்டிருக்கின்றது.</p><p>

69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன
நடந்தது என்பதை இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p>மக்கள் வீதியில்
இறங்கியமையாலேயே அவர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. 2019 இலும் 2024 இலும்
மக்கள் ஏமாந்தனர். ஆகவே, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வீதியில்
இறங்கத் தயாராகுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்." - என்றார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[Gov Pay பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraud-through-fake-gov-pay-website-police-warn-1788670106"></link>
            <id>https://tamilwin.com/article/fraud-through-fake-gov-pay-website-police-warn-1788670106</id>
            <summary type="text">&#039;Gov Pay&#039; அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால், இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.</p><h2>புதிய நடைமுறை</h2><p> </p><p>பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும், நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 'Gov Pay' முறைமையின் மூலம் செலுத்தும் நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>இருப்பினும், 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தரவுகளை தந்திரமாகத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e987570-62f6-469f-975f-c9fb50e133cd/26-6a9cf28c7db66.webp' /></p><h2>மோசடி</h2><p> </p><p>இந்த போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links), குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் மூலமாக கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடும் மோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.</p><p> 'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் இல்லாததால், இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:56:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2032ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்! வட மாகாண ஆளுநர் கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-governor-statement-regarding-srilanka-1788669218"></link>
            <id>https://tamilwin.com/article/north-governor-statement-regarding-srilanka-1788669218</id>
            <summary type="text">&#039;கண்ணிவெடிகளற்ற இலங்கை&#039; என்ற இலக்கை அடைவதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி
வருகின்றது, போருக்குப் பின்னரான வட மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>'கண்ணிவெடிகளற்ற இலங்கை' என்ற இலக்கை அடைவதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி
வருகின்றது, போருக்குப் பின்னரான வட மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும்
மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான செயன்முறைகள் விரைவாக
இடம்பெறுவதற்கு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் அர்ப்பணிப்பும் மனிதநேயப்
பணியும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன என வட மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>2032ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய
கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பு
நேற்றுமுன்தினம் (04.09.2026) மாலை கிளிநொச்சி மாவட்ட செயலகக் கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது. </p><p>இதில் வடக்கு மாகாணத்தின் கண்ணிவெடி அகற்றும்
செயற்பாடுகள், இதுவரையான முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில்
கருத்துக்கள் பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f302f55-1da4-4266-9d58-7ed597ac2fce/26-6a9ceef8ce7cd.webp' /></p><h2>கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய இடம்</h2><p>
</p><p>
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர், பொறியியலாளர்
குமுது லால் போகஹவத்த கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது 21 சதுர
கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று
தெரிவித்தார். </p><p>இதுவரையான கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின்போது பல்வேறு
நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 20 பணியாளர்கள் தமது உயிர்களைத் தியாகம்
செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>கண்ணிவெடி அகற்றும் பணியின்
அபாயத்தையும் அதில் பணியாற்றுவோரின் அர்ப்பணிப்பையும் இது
வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e28ade0-01e8-4bc7-8ca0-9f593fb641d4/26-6a9ceef9b69e6.webp' /></p><p>
</p><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின்
மனிதநேயத்தையும் அர்ப்பணிப்பையும் மனமுவந்து பாராட்டினார். போருக்குப்
பின்னரான காலப்பகுதியில் தாம் பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட செயலராகப்
பணியாற்றியபோது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான
மீள்குடியமர்வுச் செயற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதில் கண்ணிவெடி
அகற்றும் நிறுவனங்கள் வழங்கிய ஒத்துழைப்பை நேரடியாகக் கண்டறிந்ததாகவும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான பகுதிகளிலும் தமது உயிரைப் பணயம் வைத்து
கண்ணிவெடிகளை அகற்றி, ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பான
மீள்குடியமர்வுக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும்
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பங்களித்துள்ளனர் என்றும் ஆளுநர் மெச்சினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/864032cc-25cd-41a9-a2d8-3195db045e81/26-6a9ceefaa1f1b.webp' /></p><h2>கண்ணிவெடிகள் இருக்கக்கூடிய வாய்ப்பு குறித்து கவனம்</h2><p>
</p><p>
இதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர் தமது தலைமையில் ஆளுநர் செயலகத்தில்
நடைபெற்ற கலந்துரையாடலில், தற்போது வனவளத் திணைக்களத்தின் எல்லைக்குட்பட்டதாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் காணப்படும் பங்கர்களுடன் தொடர்புடைய
கண்ணிவெடிகள் இருக்கக்கூடிய வாய்ப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது என்றும்
ஆளுநர் குறிப்பிட்டார். </p><p>அவ்வாறான பகுதிகளிலும் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு
கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டம் விரைவில் கண்ணிவெடியற்ற மாவட்டமாக அறிவிக்கப்படும்
நிலைக்கு முன்னேறி வருகின்றது என்று குறிப்பிட்ட ஆளுநர், 2032ஆம் ஆண்டளவில்
இலங்கையை கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும் என
எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d766449-5bff-4604-8458-2ff5e94a46a1/26-6a9ceefb74cd3.webp' /></p><p> இதற்குத் தேவையான முழுமையான அரச ஆதரவு
தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
</p><p>
இதேவேளை, ஊடக சந்திப்பின்போது இலங்கை அரசின் சார்பில் தேசிய கண்ணிவெடி
நடவடிக்கை நிலையத்துக்கும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்துக்கும் இடையில்
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஊடகச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலர்கள், வவுனியா மாவட்ட
மேலதிக மாவட்ட செயலர், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1615a6b8-d689-45d1-9311-ef34bb39b106/26-6a9ceefc485af.webp' /></p>]]></content>
            <updated>2026-09-06T04:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்! மக்கள் போராட்ட முன்னணி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-struggle-front-call-1788667622"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-struggle-front-call-1788667622</id>
            <summary type="text">அரசாங்கத்தின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட
குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றதே தவிர, இதனால் நாட்டுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட
குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றதே தவிர, இதனால் நாட்டுக்கும்
மக்களுக்கும் எவ்வித நன்மையும் பயக்காது என மக்கள் போராட்ட முன்னணி
சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
அந்த முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு விழாக்கள் நடத்தப்படும்
அதேநேரம், தற்போதைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள்
நீடிப்பதற்காகவே இந்த 22ஆவது அரசமைப்புத் திருத்தம் தன்னிச்சையாக கொண்டுவரப்பட்டுள்ளது.</p><h2>மனு தாக்கல்</h2><p> </p><p>மக்கள் பங்கேற்பு ஜனநாயகம் பற்றிப் பேசும் அரசாங்கம், இந்தச்
சட்டமூலம் குறித்து எவ்வித பகிரங்க உரையாடலையும் நடத்தவில்லை.

இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 50 இற்கும் மேற்பட்ட
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய
ஜானக அதிகாரி, லக்ஷ்மன் நிபுணாரச்சி போன்ற தமக்கு நெருக்கமானவர்களைத் தேட
வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23cde69d-6bd8-4384-99d7-ea71551c47fe/26-6a9cec301d5d0.webp' /></p><p>
</p><p>
பொதுமக்களின் சார்பில் ஆதரவாக மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
மாறாக, எதிர்ப்பைத் தெரிவித்து அரசியல் கட்சிகள், வெகுஜன இயக்கங்கள் மற்றும்
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் முன்வந்தனர்.

இந்தத் சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டு செல்ல அரசாங்கம் பயப்படுகின்றது.</p><h2>அரசாங்கத்தின் நடவடிக்கை</h2><p>
</p><p>மக்கள் தீர்ப்புக்குச் சென்றால் நிச்சயமாகத் தோல்வியடைவோம் என்பதை அது
உணர்ந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பி
வைக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்திலுள்ள 159 பெரும்பான்மை உறுப்பினர்களைக்
கொண்டு இதனை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். மேலிடத்தில் இருப்பவர்கள்
கூறுவதை மட்டுமே செய்யும் பெரும்பாலான உறுப்பினர்கள், அடிப்படைச் சட்ட அறிவு
கூட இல்லாமல் இதனை நிறைவேற்றுவார்கள் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf25575-7e67-44ac-8669-5f0eb6a5fd00/26-6a9cec30ca948.webp' /></p><p>இது மக்கள் ஜனநாயகமல்ல, மாறாக அரசாங்கத்தின் தன்னிச்சையான ஜனநாயக விரோதப்
போக்காகும். சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகிய அனைத்துக்கும்
மேலாக மக்களே முதன்மையானவர்கள் என்பதால், தனிநபர்களின் நலனுக்காகக்
கொண்டுவரப்படும் இந்த ஜனநாயக விரோத 22ஆவது அரசமைப்புச் சட்டமூலத்தைத்
தோற்கடிக்க மக்கள் வீதியிலிறங்கிப் போராட வேண்டும் என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defense-minister-arrives-in-colombo-1788668559"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defense-minister-arrives-in-colombo-1788668559</id>
            <summary type="text">இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக
நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக
நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார்.</p><p>

இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு
மற்றும் பரஸ்பர நலன்சார்ந்த விடயங்கள் குறித்து இலங்கைத் தலைவர்களுடன் அவர்
விரிவான கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
வரும் 9ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி
அமரசூரிய ஆகியோரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
சந்திக்கவுள்ளார்.</p><h2>நுவரெலியாவுக்கும் பயணம்</h2><p> </p><p>அத்துடன், இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ்
மார்ஷல் சம்பத் துயகொந்தாவுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.</p><p>
</p><p>
இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த
மீளாய்வும் இந்தப் பேச்சுகளில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/883dbef2-7e17-4b4b-8dd1-b9d911417e71/26-6a9cea90bb7a5.webp' /></p><p>இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துதல், இந்தியப் பெருங்கடலில்
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்
ஆகியவற்றிலும் இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>
கொழும்பில் அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ளும் இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங், நுவரெலியாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:22:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றக்குழு உறுப்பினரின் உறவினரை குறிவைத்த துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kosgama-gun-shooting-today-1788666761"></link>
            <id>https://tamilwin.com/article/kosgama-gun-shooting-today-1788666761</id>
            <summary type="text">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த &#039;கொஸ்கொட தாரக்க&#039; என்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த 'கொஸ்கொட தாரக்க' என்பவரின் உறவினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>

9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/842e13b1-810e-48c9-bf77-95bd596cdc42/26-6a9ce8d702d8a.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் : பிரித்தானிய எம்.பி. வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-manitha-puthaikuli-1788667910"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-manitha-puthaikuli-1788667910</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் போதிய நிதியுதவியுடன் கூடிய
முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட
வேண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் போதிய நிதியுதவியுடன் கூடிய
முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட
வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மென்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளை
திங்கட்கிழமையுடன் 30 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் அவர் இந்தக் கோரிக்கையை
விடுத்துள்ளார்.</p><h2>மிகப்பெரிய மனிதப் புதைகுழி</h2><p>

சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமியின்
சோகமான படுகொலையே செம்மணி மனிதப் புதைகுழி கண்டறியப்படுவதற்கு அடிப்படைக்
காரணமாக அமைந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

செம்மணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 600 இற்கும்
மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில்
இதுவரை அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி
மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153e2852-67e7-45b7-88e5-f96d86bd7007/26-6a9ce8088356e.webp' /></p><p>
"இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல்
முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். </p><p>செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான
அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக, போதிய நிதியுதவியுடன் கூடிய
சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மென் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T04:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-remand-valikada-prisons-1788660520"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-remand-valikada-prisons-1788660520</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலை வைத்தியரால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினரின் உடல்நலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. </p><p>

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு காவல் சிறைச்சாலையில் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்&nbsp;</h2><p>
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/255c5a9e-4b1f-4075-8e8a-a95a01216689/26-6a9cd748660f0.webp' /></p><p>

இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

இதற்கமைய, கொழும்பு காவல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச ஒரு சிறப்புப்பிரிவில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அவரது பாதுகாப்பை கருத்தில்கொண்டு செய்யப்பட்டுள்ளது.</p><h2>கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்</h2><p>

இத்தகைய சூழலில், சுமார் பத்து கைதிகள் வைக்கப்பட்டுள்ள காவலில் நாடாளுமன்ற உறுப்பினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p>நாமல் &nbsp;ராஜபக்ச சிறையில் தனது நேரத்தை மகிழ்ச்சியாக கழித்து வருவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1458bc-2d42-4eb4-b53d-c9b3624876a1/26-6a9ce2e702955.webp' /></p><p>மேலும் அவருடன் உள்ள ஏனைய 10 கைதிகள், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அரசாங்க ஊழியர்கள் என்றும், அவர்களில் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எந்தவொரு சிறப்புரிமைகளையும் கோரவில்லை என்றும், சிறை அதிகாரிகளுடன் நல்லுறவில் இருப்பதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>இதற்கிடையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறையில் உள்ள எந்தவொரு கைதியையும் வெளியிலிருந்து யாரும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T03:28:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாருக்கு வந்த இரகசிய தகவல்! இளம் பெண்கள் உட்பட 41 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-party-bust-41-people-arrested-1788663997"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-party-bust-41-people-arrested-1788663997</id>
            <summary type="text">தெல்தெனிய - விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்பு விருந்துபசாரம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்தெனிய - விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்பு விருந்துபசாரம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>விசாரணையில் வெளியான தகவல்</h2><p> 

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், 21 சட்டவிரோத சிகரெட்டுகள், 500 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 35 பியர் கேன்கள் மற்றும் 750 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 13 மதுபான போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c6d3d95-31da-4fb1-9ca9-aeaa70a1829a/26-6a9cdbc66213b.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
அவர்கள் கெலியோய, அலுத்வத்தை, வரகாபொல, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
</p><p>
 அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 22 முதல் 43 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T03:19:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் சிக்கிய முக்கிய சாட்சியங்களின் வாக்குமூலங்கள்! நாமலின் கைதி பின்னணியில் ஏமாற்றப்படும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-ground-provided-in-anuradhapuranamal-prisoner-1788662118"></link>
            <id>https://tamilwin.com/article/no-ground-provided-in-anuradhapuranamal-prisoner-1788662118</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும்
அடிப்படையற்றவை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு
அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அனுராதபுரம் - நாச்சாதூவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><h2>மைதானம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு&nbsp;</h2><p>

"நகர சபைக்குச் சொந்தமான மைதானங்களில் ஒன்று பொலிஸ் அணிவகுப்புப்
பயிற்சிக்காகவும், மற்றொன்று வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் முன்னரே பதிவு
செய்யப்பட்டிருந்ததாலுமே நாமல் தரப்புக்கு உடனடியாக வழங்க முடியாமல்போனது.</p><p></p><p>
முன் அனுமதி இன்றி மைதானங்களை ஒதுக்க முடியாது என்ற போதிலும், வெறுமையாக
இருக்கும் வேறு எந்தவொரு மைதானத்தையும் வழங்குவதற்கு நகர சபை தயாராகவே உள்ளது. எனவே, மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.</p><p>

நாமல் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம். நாமல் உள்ளிட்டோர்
எதிர்நோக்கும் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் அல்ல.</p><p>நீதிமன்றத்தில்
சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன. </p><p>முன்பு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படும் போது
பாம்பு கடித்துவிட்டதாகக் கூறித் தப்பித்த கதைகள் இனி செல்லுபடியாகாது.</p><h2>சட்டவிரோத&nbsp; சொத்துகள் அரசுடைமை&nbsp;</h2><p>

கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி,
சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துகளை அரசுடைமையாக்குமாறு மக்கள் வழங்கிய
அதிகாரத்தின் அடிப்படையில், இதுவரை 4 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான
சொத்துகள் அரசுக்குக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca03ec4-89e8-4f55-9244-d0b832497884/26-6a9cd168d18fa.webp' /></p><p>

2011, 2012ஆம் ஆண்டுகளின் பழைய முறைப்பாடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத்
திணைக்களம் வெளிநாடுகளுக்குச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்து,
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள்
எடுக்கப்படுகின்றன.</p><p>

22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் சேவைக் காலத்தை இரண்டு
ஆண்டுகள் நீடித்து, நீதித்துறையின் சுயாதீனத்தையும் திறனையும் உறுதிப்படுத்தவே
அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T02:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் தீவிரமடைந்த மூன்று சூறாவளிகள் - இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-cyclones-pacific-ocean-danger-to-sri-lanka-1788660029"></link>
            <id>https://tamilwin.com/article/three-cyclones-pacific-ocean-danger-to-sri-lanka-1788660029</id>
            <summary type="text">உலக நாடுகள் பலவற்றை எல் நினோ தாக்கம் பாதித்துள்ள பின்னணியில் பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் உருவான மூன்று சூறாவளிகள் தீவிரமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக நாடுகள் பலவற்றை எல் நினோ தாக்கம் பாதித்துள்ள பின்னணியில் பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் உருவான மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன.&nbsp;&nbsp;</p><p>இந்த சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய் தீவுகளுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>இது நேரடியாக நிலப்பரப்பை தாக்காமல், முக்கியமாக ஹவாய் தீவுகளுக்கு மேற்கே நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது பல நாடுகளையும் பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதுடன், இது மணிக்கு 150 மைல் வேகத்தில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><h2>இலங்கையின்&nbsp;&nbsp;பல மாவட்டங்களில் வறட்சி</h2><p>இந்த எல் நினோ நிலைமை, இலங்கையின் பல மாவட்டங்களில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74700723-50b0-41ca-ae79-17d318b004ba/26-6a9cc9402b86e.webp' />&nbsp; &nbsp;</p><p>இதன் காரணமாக, நாட்டின் 7 மாவட்டங்களில் கடுமையான வறட்சியான வானிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த தாக்கம் காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>சூரியனின் நகர்வு</h2><p>இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ba7e76-a73a-430f-9384-73f3dfc342a8/26-6a9cc93f76a24.webp' />&nbsp;</p><p> 

அதற்கமைய இன்றைய தினம் (06) நண்பகல் 12:08 மணிக்கு பெந்தோட்டை, தினியாவல, இத்தக்கந்த, உடவலவை மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.&nbsp;</p><p>எனவே ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T02:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை நிகழ்வுகளில் நடைமுறைக்கு வரும் தடை: அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alcohol-to-be-banned-from-school-big-matches-1788659817"></link>
            <id>https://tamilwin.com/article/alcohol-to-be-banned-from-school-big-matches-1788659817</id>
            <summary type="text">பாடசாலையின் பெயர் அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் விளம்பரங்களுக்கு அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலையின் பெயர் அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் விளம்பரங்களுக்கு அரசாங்கம் முழுமையான தடை விதித்துள்ளது.</p><p>
பாடசாலையின் பெயர் அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் அதிகாரப்பூர்வ பாடசாலை நிகழ்வாகவே கருதப்பட்டு இத்தடைக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;உடனடியாக தடை&nbsp;</h2><p>
இந்த விதியை மீறும் நிகழ்வுகளை உடனடியாகத் தடை செய்வதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு '2026/10' இலக்க சுற்றறிக்கை மூலம் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9673ee-cdb8-41e4-a88b-2ed823ffd72a/26-6a9cc86b54f3e.webp' /></p><p>
</p><p>முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் ('பிக் மெட்ச்') போது மாணவர்கள் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு பயன்படுத்துவதாக பெற்றோர் தெரிவித்த தொடர் முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>பாடசாலைகளுக்கு இடையிலான முக்கிய கிரிக்கெட் போட்டிகள் உட்பட பாடசாலை தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் கல்வி அமைச்சினால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது அதன் சின்னத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்தவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மஹேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் நேட்டோவுடனான உறவுகள் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/comunist-party-agaist-nato-1788658367"></link>
            <id>https://tamilwin.com/article/comunist-party-agaist-nato-1788658367</id>
            <summary type="text">இலங்கை இராணுவம் நேட்டோ அமைப்புடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத் தயாராகி வருவதாகவும், அதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதகாவும் இலங்கை கம்யூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இராணுவம் நேட்டோ அமைப்புடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத் தயாராகி வருவதாகவும், அதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதகாவும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>
நேட்டோ அமைப்புடன் இலங்கை இராணுவம் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
</p><p>நேட்டோ என்பது காலணித்துவ நோக்கங்களைக் கொண்ட ஒரு அமைப்பு என்றும், இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை உலகிற்கு அம்பலமாகிவிட்டதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14a918e-a2b3-4c46-a64e-00d1a4e3337b/26-6a9cc2c20c4db.webp' /></p><p>
</p><p>பாதுகாப்பு அமைச்சு நேட்டோவுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம் குறித்த விவரங்களை உடனடியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இலங்கையுடன் இணைந்து பணியாற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்த, நேட்டோ அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக, செப்டம்பர் 01 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T01:34:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/15-mn-worth-properties-seized-1788620097"></link>
            <id>https://tamilwin.com/article/15-mn-worth-properties-seized-1788620097</id>
            <summary type="text">வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்டதாக கூறப்படும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 

சட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்டதாக கூறப்படும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. </p><p>

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.. </p><p>வெலிகம, பதேகம் பகுதியில் வசிக்கும் நபரொருவர் ஈஷி கேஷ் தளத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.</p><p> </p><h2><b>

சட்டவிரோத சொத்துக்கள்</b></h2><p>இதனை தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் கீழ் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9b8e22c-1145-4fc2-8f33-8af30924c6bd/26-6a9c39461635c.webp' /></p><p>விசாரணைக்கமைய, வெலிகம, பதேகம் பகுதியில் அமைந்துள்ள 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள வீடு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக பெற்ற பணத்தில் கொள்வனவு என்பது தெரியவந்துள்ளது. </p><p>

இதன் காரணமாக நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 14 நாட்களுக்கு அந்தச் சொத்தை முடக்குமாறு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. </p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-06T00:46:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காட்டிக்கொடுத்த நபருக்கு உயிரச்சுறுத்தல் - வெளிநாடுகளில் இருந்து தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788651523"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788651523</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏர்பஸ் (Ai...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு நிமல் பெரேரா என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
</p><p>
அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சி அவுஸ்திரேலியாவிலிருந்து விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலிய சட்டத்தின் கீழ் சத்தியப் பிரமாண அறிக்கையையும் வழங்கியுள்ளார்.</p><p>

இந்த விசாரணை இலங்கை அதிகாரிகளால் மட்டுமல்லாது, பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>


சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்த பணத்தில் இருந்து, 100 மில்லியன் ரூபாய் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த பிறகு, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அஞ்சுவதால் தான் இலங்கை வரத் தயங்குகிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RFwKvZNB2Yo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணல் திட்டில் சிக்கித் தவித்த 11 இலங்கை ஏதிலிகள் - அதிரடியாக மீட்ட கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-navy-rescues-11-people-including-1788652927"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-navy-rescues-11-people-including-1788652927</id>
            <summary type="text">தலைமன்னார் அருகே உள்ள தொலைதூர மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 5
குழந்தைகள் உட்பட 11 இலங்கை ஏதிலிகளை கடற்படையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 5)
மீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் அருகே உள்ள தொலைதூர மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 5
குழந்தைகள் உட்பட 11 இலங்கை ஏதிலிகளை கடற்படையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 5)
மீட்டு மனிதாபிமான உதவி வழங்கியுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் ​அதிகாலை வழக்கமான கடல் ரோந்துப் பணியின் போது, முதற்கட்டமாக
நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்கிய 8 பேர் கொண்ட
குழுவை கடற்படையினர் கண்டறிந்த நிலையில்
அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக இருப்பிட வசதிகள்
உடனடியாக வழங்கப்பட்டன.

​</p><h2>மனிதக் கடத்தல்</h2><p>அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அடுத்தகட்ட ரோந்துப் பணியில், அதே பகுதியில்
தவித்துக் கொண்டிருந்த ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் என மேலும்
மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதன் மூலம் மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக (5 குழந்தைகள், 4
பெண்கள், 2 ஆண்கள்) உயர்ந்துள்ளது.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/590e093a-fbaa-478d-8106-1576f4836e81/26-6a9cb089b516d.webp' /></p><p>
மேலும் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து
கடல் வழியே பயணம் செய்ததும், சந்தேகத்திற்கிடமான மனிதக் கடத்தல் கும்பலால்
மணல் திட்டில் கைவிடப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

அத்துடன், இவர்கள் தென்னிந்தியாவில் உள்ள அனயூர் மற்றும் ஒக்கூர் அகதிகள்
முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் என நம்பப்படுகிறது.</p><p>

​மீட்கப்பட்ட 11 பேரும் மேலதிக சட்டப்பூர்வ விசாரணைகள் மற்றும்
நடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக
கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காப்பாற்ற சென்று சிக்கலில் மாட்டிய உதய கம்மன்பில! மகனை சந்தித்த பின் தடுமாறிய மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276</id>
            <summary type="text">ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவை பாதுகாப்பதற்காகப் பேசிய உதய கம்மன்பில, அந்தப் பணம் அலுவலக மேசையில் வைக்கப்பட்டதாகக் கூறியது, அவர் மீதுள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. </p><p>8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அவர் அங்கு இல்லாதபோது மேசையில் வைக்கப்பட்டதாகவும் உதய கம்மன்பில வெளிப்படையாகக் கூறியது, பணம் நாமல் ராஜபக்சவின் வசம் சென்றதை உறுதிப்படுத்தும் ஆதாரமாக மாறிவிட்டது.</p><p>

இந்த வழக்கில் உதய கம்மன்பிலவின் இந்த கூற்று முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

ஒரு வழக்கறிஞராக உதய கம்மன்பில இவ்வாறான வாக்குமூலங்களை வழங்குவது, நாமல் ராஜபக்சவின் தரப்பு வாதத்தையே பலவீனப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.&nbsp; &nbsp; </p><p>மேலும், நாமல் ராஜபக்சவின் கைதுக்கு எதிராக ஊடக சந்திப்புகளை நடத்தி, சட்டவிரோதமான முறையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.</p><p>


அத்துடன் ஆதாரங்கள் இல்லாமல் பெயர்களைக் குறிப்பிட்டு கைது செய்யும் தற்போதைய முறையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
</p><p>

இந்தநிலையில், சிறையில் உள்ள தனது மகனைச் சந்தித்த பிறகு மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, அவர் மிகுந்த மன உளைச்சலுடனும், பதற்றத்துடனும் காணப்பட்டார். </p><p>பேசும்போது அவரது வார்த்தைகள் தடுமாறியதாகவும், சொற்கள் வெளிப்பட சிரமப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
</p><p>
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aUuUMhWwpcs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:25:17+00:00</updated>
        </entry>
    </feed>
