<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-23T05:12:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஷேட திறனுடையவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம்! கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-aims-equal-opportunity-for-disablities-1787454203"></link>
            <id>https://tamilwin.com/article/government-aims-equal-opportunity-for-disablities-1787454203</id>
            <summary type="text">மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் வளங்களும் வழங்குவதே ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் இராமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் வளங்களும் வழங்குவதே ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
</p><p>

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(22) நடைபெற்ற,
பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><h2>அரசின் நோக்கம்</h2><p>
</p><p>&nbsp;கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியம் என்பது எம்மை பொறுத்தவரையில்
எட்டாக்கனியாகவே இருந்தது. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி
நிதியத்திற்கு விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே
காணப்பட்டது.</p><p> 

இதன் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகள்
எமது மக்களுக்கு அரிதாகவே இருந்தன.</p><p>

இந்த நிலைமையை ஆழமாக ஆராய்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில் ஜனாதிபதி நிதியத்தை கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு
நிறுவனமாக வைத்திருக்காமல், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களை
சென்றடையும் வகையில் மாற்றியமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5891ccd3-30d4-474d-bd68-f51a4629c690/26-6a8a6a249adbf.webp' /></p><p>
</p><p>
அதன் வெளிப்பாடாகவே இன்று எமது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாகவும்,
எமது பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவித்
திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அதன் ஒரு முக்கியமான வெளிப்பாடாகவே இன்று இங்கு கூடியிருக்கும் எமது மாணவச்
செல்வங்களான மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்த நிகழ்வையும்
நாம் பார்க்க வேண்டும்.
</p><p>
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும்
பார்க்கப்படும் நிலை மாற வேண்டும். உலகை வழிநடத்தும் ஆற்றலும் திறமையும்
அவர்களிடம் உள்ளது.</p><h2>சமூகத்தில் சம உரிமை</h2><p> </p><p>இதற்கு சிறந்த உதாரணமாக ஸ்டீபன் ஹாக்கிங்கை குறிப்பிடலாம்.

உடல் ரீதியான பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தனது அறிவாற்றலால் உலக
விஞ்ஞானத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி, அழியாத தடம் பதித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை போதிய ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
</p><p>ஆனால்
சம வாய்ப்புகளையும் தேவையான வளங்களையும் வழங்கி, அவர்களும் சமூகத்தில் சம
உரிமையுடன் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குவதே ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5d4b380-f20d-43b0-8987-6917202926f4/26-6a8a6a23cd344.webp' /></p><p>


‘மாற்றுத்திறனாளி’ என்ற அடையாளம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்
கூடாது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வளங்களும் சம வாய்ப்புகளும் கிடைக்கச்
செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். </p><p>

எதிர்காலத்திலும் இதற்கான
நடவடிக்கைகள் தொடரும் எனவும்,
கடந்த காலங்களை விட இன்று மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவமும் குரலும்
வலுப்பெற்று வருகின்றன.
</p><p>
இதற்கு எடுத்துக்காட்டாக, மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்
ஆற்றலுடன் இந்த நிகழ்வில் உரையாற்றி, பல்வேறு விடயங்களை ஆதாரபூர்வமாக
எடுத்துரைத்து வருவதை குறிப்பிடலாம்.</p><h2>வெற்றிப் பயணம்</h2><p>
</p><p>
இதுபோன்ற மாற்றுத்திறனாளி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம்,
சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p><p>

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள்
என்றால், இயற்கையாக மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, கடந்த
காலங்களில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் காரணமாக உடல் ரீதியாக
பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாகியவர்களும் அதிகளவில் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b17f38cd-bca6-4220-964e-bb365b5acfff/26-6a8a6a23033f8.webp' /></p><p>
</p><p>
அவர்களையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்களுக்குத் தேவையான வளங்களையும்
வாய்ப்புகளையும் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த நோக்கத்தின்
அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மேலும், யாரும் மனம் தளராமல் தமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
உங்களின் வெற்றிப் பயணத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம்
அர்ப்பணிப்புடன் செயற்படும்.
</p><p>
மாற்றுத்திறனாளி என்ற காரணத்தினால் எவரும் பாகுபடுத்தப்படக் கூடாது. ஏழை,
பணக்காரர்,சாதி,மதம் என எந்த வேறுபாடுமின்றி அனைவரும் சமமான மனிதர்கள்
எனவும், மாற்றுத்திறன் ஒருபோதும் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆபத்தான மின்குமிழ்களை வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-possessing-dangerous-light-bulbs-1787458611"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-possessing-dangerous-light-bulbs-1787458611</id>
            <summary type="text">யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த
திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட அதி தீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும்
மேற்பட்ட பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த
திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட அதி தீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும்
மேற்பட்ட பக்தர்களின் கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மின்குமிழ்களை தம்வசம்
வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>400 இற்கும் மேற்பட்டோரின் கண்களில் பாதிப்பு&nbsp;</h2><p>

பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவின்போது, பொதுமக்களுக்குப் பாதகமான முறையில்
அதிக ஒளியை வெளியிடக்கூடிய மின்குமிழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/803e4e3d-d554-4a8a-af41-4211b6ff63e8/26-6a8a79535af1b.webp' /></p><p> </p><p>இதனால்
திருவிழாவிக்கு வருகை தந்திருந்த 400 இற்கும் மேற்பட்டோரின் கண்களில் கடுமையான
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த இளவாலைப் பொலிஸார், தீவிர விசாரணைகளை
முன்னெடுத்தனர். </p><p>இந்த விசாரணைகளின் அடிப்படையில், அதிக ஒளியை ஏற்படுத்திய
மின்குமிழ்களை விற்பனைக்காகவோ அல்லது பயன்பாட்டுக்காகவோ தம்வசம் வைத்திருந்த
குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கைது செய்தனர்.</p><h2>விளக்கமறியல் உத்தரவு </h2><p>
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலத்த பாதுகாபுக்கு மத்தியில் நேற்று மல்லாகம்
நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.</p><p>குறித்த வழக்கை விசாரித்த நீதிவான்,
சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>

பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும்
இவ்வாறான முறையற்ற ஒளிப் பயன்பாடுகள் குறித்துப் பொலிஸார் தொடர்ந்தும்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலம் தொடர்பில் செய்யப்பட்டுள்ள பரிந்துரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-penatly-period-for-life-sentence-1787458933"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-penatly-period-for-life-sentence-1787458933</id>
            <summary type="text">மரண மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலம் தொடர்பில் ஜனாதிபதியிடம் விசேட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலம் தொடர்பில் ஜனாதிபதியிடம் விசேட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைப்பதற்கும், அவர்களுக்கு வீட்டு விடுமுறை வழங்குவதற்கும் பரிந்துரை செய்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் விசேட குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.</p><h2>மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு</h2><p>
</p><p>மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான முறையான வழிமுறையொன்றை தயாரிப்பதற்காக இந்த விசேட குழு நியமிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffcf6b69-b583-4253-9661-8d9221c9fe05/26-6a8a75767e34c.webp' /></p><p>
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால், 10 மாதகால தீவிர ஆய்வுக்குப் பின்னர் இந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப் பட்டுள்ளது.</p><p>
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிப்பதற்கான கிரமமான திட்டம் குறித்து இதில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><h2>விரைவில் அமைச்சரவையின் ஒப்புதல்</h2><p>
இந்த யோசனைகள் விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb8a8e2-f511-4d24-8448-18ed2c8a874a/26-6a8a7dbc0e2a4.webp' /></p><p>
</p><p>வழக்குத் தாமதங்களுக்கு முக்கிய காரணமாக அமையும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெறுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>இதற்கமைய, மாதத்திற்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளைப் பெறுவதற்கான புதிய நடைமுறை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர! சிறைக்குள் செய்யும் வித்தியாசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-doing-meditation-in-the-prison-1787455298"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-doing-meditation-in-the-prison-1787455298</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
சிறைச்சாலை வளாகத்தில் அநேகமான நேரங்களில் 'சக்மன் பாவனா' தியான நடையில் ஈடுபடுவதனை காண முடிவதாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சிறையில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு</h2><p>
</p><p>காலை வேளையில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்திக்கும் போது, அவர் புன்னகையுடன் காலை வணக்கம் கூறி வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda7d54a-8821-4957-b5cd-7f21116d1062/26-6a8a6743e916e.webp' /></p><p>
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தவறியமை குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு , முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும்&nbsp; இருவருக்கும் சிறையில் புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:21:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுவாஞ்சிக்குடியில் விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு! 4 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-boy-killed-when-his-motorcycle-hit-the-children-1787456240"></link>
            <id>https://tamilwin.com/article/a-boy-killed-when-his-motorcycle-hit-the-children-1787456240</id>
            <summary type="text">களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பயணித்த மோட்டார்
சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பயணித்த மோட்டார்
சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>இந்த சம்பவம் நேற்று (22.08.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மோட்டார் சைக்கிள் விபத்து&nbsp;</h2><p>
</p><p>
கோட்டை கல்லாறைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் என்ற சிறுவனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். </p><p>குறித்த பகுதியில் வீதியை கடப்பதற்காக சம்பவ தினமான நேற்று இரவு 9.30
மணியளவில் 3 சிறுவர்கள் பாதை ஓரத்தில் நின்று கொண்டிருந்த போது வீதியில் வேகமாக வந்த
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரமாக நின்ற
சிறுவர்கள் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50660089-3973-40b4-ac08-1d54713dbfac/26-6a8a6f78090ee.webp' /></p><p>
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சிறுவன் சம்பவ இடத்திலே
உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்தவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற 3
சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சமயமாகிய ஐக்கிய தேசியக்கட்சி! சர்ச்சைக்குரிய பல தகவல்களை அம்பலப்படுத்திய ஆசு மாரசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ashu-marasinghe-ranilmahinda-rajapaksa-1787445627"></link>
            <id>https://tamilwin.com/article/ashu-marasinghe-ranilmahinda-rajapaksa-1787445627</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக்கட்சி இன்று ராஜபக்ச மயமாகிவிட்டதோடு மொட்டுக்கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பினரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக்கட்சி இன்று ராஜபக்ச மயமாகிவிட்டதோடு மொட்டுக்கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்த கருத்துகள்..,</p><p>ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று நான் இல்லை. ஆனால் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் நான் ஈடுபடப்போவதில்லை.&nbsp;ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது, ஐக்கிய தேசியக் கட்சி இப்போது உடைந்து சிதறிப்போயிருப்பது போல் தெரிகிறது. </p><p></p><h2>கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>எனவே, எனக்கு ஆரம்பத்திலிருந்தே இதில் விருப்பம் இல்லாத நபர் என்பதால் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.</p><p>அதனால் தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எங்களால் அரசியல் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. அந்த காரணத்தினால் தான் அமைதியாக இருக்கிறேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e6464a2-a421-48ed-856d-a18e36d32ba8/26-6a8a417d212f3.webp' /></p><p>வேறு அரசியல் கட்சிக்குச் செல்லவும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ராஜபக்சக்கள் அன்று ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு இரண்டு காரணங்கள் வலுவடைந்திருந்தன.
</p><p>அது தொடர்பில் அண்மையில் ரணில் விக்ரமசிங்க ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.</p><h2>ஒன்றரை வருட காலத்தில் 104 சட்டமூலங்கள்</h2><p>
</p><p>அனைவரிடமும் பேசி முடியாது என்று கூறிய பிறகு, இறுதியில் ரணில் விக்ரமசிங்கவிடம் வந்தார்கள். அந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த சூழ்நிலையில், ராஜபக்ச குழுவினருக்கு அல்லது கோட்டாபய ராஜபக்ச ஓடிப்போன பிறகு ரணிலைத் தவிர வேறு புகலிடம் இருக்கவில்லை
அவருக்கு அதை பொறுப்பேற்க வேண்டியதாயிற்று.</p><p>அவர் அதை பொறுப்பேற்றார். அவர் அந்த சவாலை எதிர்கொண்டார். அவர் இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் இருந்த சூழ்நிலையை முற்றிலும் மாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900b9a18-2a01-482d-8610-1d9ab2714a6a/26-6a8a6cb16c847.webp' /></p><p> </p><p>வீழ்ச்சியை நோக்கி சென்ற பொருளாதாரத்தை 5.2 வீதமாக ஒரு வருடத்தில் மாற்றினார்.
அவருடன் தோளோடு தோள் நின்று நாங்கள் வேலை செய்தோம். </p><p>அதற்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகார ஆலோசகராக அந்த ஒன்றரை வருட காலத்தில் 104 சட்டமூலங்களை உருவாக்க நாங்கள் செயற்பட்டோம் என குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T03:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 ஆண்டுகால பொலிஸ் சீருடையில் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-dress-code-for-police-1787455703"></link>
            <id>https://tamilwin.com/article/new-dress-code-for-police-1787455703</id>
            <summary type="text">கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பொலிஸாரின் காக்கி நிற சீருடையில் மாற்றங்களை மேற்கொண்டு, புதிய சீருடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பொலிஸாரின் காக்கி நிற சீருடையில் மாற்றங்களை மேற்கொண்டு, புதிய சீருடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p> 
இதன்படி, எதிர் வரும் ஆண்டில் பொலிஸ் திணைக்களத்திற்கு புதிய சீருடை வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான நிறம் மற்றும் வடிவமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
காக்கி நிறத்திற்கு பதிலாக நீல நிற சீருடையை அறிமுகப்படுத்த முதலில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a9156cc-e00c-412a-b29f-30cf3dbd5ab6/26-6a8a68d92c9d4.webp' /></p><p> </p><p>எனினும், இலங்கை விமானப்படை ஏற்கனவே நீல நிற சீருடையைப் பயன்படுத்தி வருவதால், வேறு நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>ஒரே நிறத்திலான சீருடையை நீண்ட காலம் பயன்படுத்துவதால் ஏற்படும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தற்போதைய காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>சீருடை மாற்றத்திற்கு இணையான நடவடிக்கையாக, பொலிஸ் அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கும், அவர்களுக்கான விசேட அபாயக் கொடுப்பனவை வழங்குவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><p>
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பொலிஸாரின் காக்கி நிற சீருடை கடந்த 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T03:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பரபரப்பு நிலையில் வங்கிகள் - அடுத்தடுத்து சிக்கப் போகும் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-to-arrest-bank-bosses-1787453541"></link>
            <id>https://tamilwin.com/article/cid-to-arrest-bank-bosses-1787453541</id>
            <summary type="text">
இலங்கையின் முன்னணி வங்கிகள் சிலவற்றின் முக்கிய அதிகாரிகளை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கையின் முன்னணி வங்கிகள் சிலவற்றின் முக்கிய அதிகாரிகளை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணப் பரிவர்த்தனைகளை வங்கிகள் ஊடாக மேற்கொள்ள வசதிகளை வழங்கியதாகக் கூறப்படும் அதிகாரிகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p>
</p><h2><b>
வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் </b></h2><p>இந்த விசாரணைகளின்போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52ab341c-79fb-46c2-9154-adc4f55c9d25/26-6a8a6879190eb.webp' /></p><p>இந்த விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு அறிவித்தல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரிடம், பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட விதம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
“குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பணப் பரிவர்த்தனைகளை சில வங்கிகளின் ஊடாக மேற்கொள்வதற்கு அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தேவையான வசதிகளை வழங்கியுள்ளனர்.</p><p> </p><h3><b>

பணப் பரிவர்த்தனை</b></h3><p>பொதுவாக ஒருவர் வங்கியின் ஊடாக ஒரு கணக்கிற்கு அதிகளவிலான பணத்தை மாற்றும் போது, அதற்கான காரணங்களை விளக்கும் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சில வங்கிகளின் ஊடாக பரிமாற்றம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ab83438-e7be-4b9f-8972-c67dd670d0af/26-6a8a6879bf6ce.webp' /></p><p>இந்த விடயங்களின் அடிப்படையில், வங்கிகளின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. </p><p>

வங்கி அதிகாரிகள் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளோம்” என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஒருவர் வார இறுதி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.</p><p>இவ்வாறான குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் ஏற்கனவே மூன்று தனியார் வங்கிகளுக்கு அதிடியாக புகுந்த அதிகார்கள், முகாமையாளர்களை கைது செய்திருந்தனர்.
</p><p>
இவ்வாறான நிலையில் எந்த நேரத்தில் யார் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்ச நிலையில் வங்கி அதிகாரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-08-23T03:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்திற்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/qr-barrier-for-the-health-minister-s-office-1787454707"></link>
            <id>https://tamilwin.com/article/qr-barrier-for-the-health-minister-s-office-1787454707</id>
            <summary type="text">சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைவதற்கு QR குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அலுவலகத்திற்கு வருபவர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைவதற்கு QR குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, அலுவலகத்திற்கு வருபவர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து தங்கள் தகவல்களை உள்ளிட வேண்டும் என்று அறிவிப்பு பலகையொன்றும் அமைச்சக அலுவலகத்தில் முன்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது.</p><h2>உள்ளிட வேண்டிய அறிவுறுத்தல்கள்</h2><p>

இந்த அறிவிப்பு பலகையில், ‘மாண்புமிகு அமைச்சரை சந்திப்பதற்கு முன்பும், அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பும், மேலே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து உங்கள் தகவல்களை உள்ளிடவும்’ என்று எழுதப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6c02cc-561e-4196-941f-07c6eb7c00fb/26-6a8a6872d9dc2.webp' /></p><p>
</p><p>
QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி, வருகை நேரம், பெயர், மாவட்டம், பதவி, தொலைபேசி எண், விவகாரம், சந்திக்க வேண்டிய அதிகாரி மற்றும் புறப்படும் நேரம் ஆகிய தகவல்களை ஒரு தாளில் உள்ளிட வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T03:25:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்: பெரும் கலக்கத்தில் பாதாள உலகக்குழுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-law-to-control-underworld-1787454541"></link>
            <id>https://tamilwin.com/article/new-law-to-control-underworld-1787454541</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக விரிவான அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக விரிவான அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>
இந்த சட்டமூலம் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கான சட்டமூலம்' என பெயரிடப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள்</h2><p>
இதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக இது சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d4d608-a08f-4a18-bee6-95686bd320c6/26-6a8a644e6aed6.webp' /></p><p>
</p><p>தண்டனை பெற்று சிறையில் இருக்கும் குற்றவாளிகள், சிறைக்குள் இருந்தவாறே குற்றச் செயல்களை மேற்கொள்வது தொடர்பாக விசாரணை நடத்த அவர்களை மீண்டும் பொலிஸ் காவலில் எடுக்க முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தேகநபர்களை நீண்ட காலம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர விசேட நீதிமன்ற நடைமுறை உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.</p><h2>கடுமையான தண்டனைகள்</h2><p>
</p><p>தற்போதைய சாதாரண தண்டனைகள் மற்றும் சட்டங்களை விட, அதிக தண்டனைகளும் அதிக அபராதத்தொகைகளும் விதிக்கப்படும் வகையில் புதிய சட்ட சட்ட மூலத்தில பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cd890af-383f-45c1-9383-e3410ed0d64c/26-6a8a69f9aa653.webp' />&nbsp;</p><p>
குற்றவாளிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி புரிபவர்களுக்கு எதிராக தற்போதிருப்பதை விடக் கடுமையான தண்டனைகளை வழங்க பரந்த அதிகாரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் சலுகைகள் கிடைப்பதைத் தடுக்கவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுமே இந்த புதிய சட்டமூலம் முன்வைக்கப்படுவதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T03:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாறையொன்றில் சிக்கியிருந்த ஆணின் சடலம்! உடலில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dead-body-found-stuck-wennappuwa-sea-1787453060"></link>
            <id>https://tamilwin.com/article/dead-body-found-stuck-wennappuwa-sea-1787453060</id>
            <summary type="text">புத்தளம் - வென்னப்புவ மேற்கு கடற்பகுதியில் கடலில் பாறையொன்றில் சிக்கியிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலத்தினை நேற்று காலை (22) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் - வென்னப்புவ மேற்கு கடற்பகுதியில் கடலில் பாறையொன்றில் சிக்கியிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சடலத்தினை நேற்று காலை (22) கடற்படை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

கடற்றொழிலாளர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் பாறைச்சுவரில் சடலம் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p> 

25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர் என சந்தேகிக்கப்படும் சடலத்தின் உடலில் ஒரு பெல்ட் கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a6e564-b08f-44ad-b9b2-6d2ed2054895/26-6a8a642715e6a.webp' /></p><p> 

சமீபத்தில் அங்குலான கடற்பகுதியில் கவிழ்ந்த கடற்படை கப்பலில் இருந்து காணாமல்போன மாலுமியின் சடலம் இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இது குறித்து கடற்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் கூறியுள்ளது. </p><p>

இதற்கமைய, நீதிபதி விசாரணைக்கு பிறகு, பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு சடலம் அனுப்பப்பட உள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
 இது தொடர்பாக கடற்படையும் வென்னப்புவ பொலிஸாரும் விசாரணை நடத்தி வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T03:08:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருந்தில் ஏற்பட்ட விபரீதம் - கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-in-a-party-1787451719"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-in-a-party-1787451719</id>
            <summary type="text">அனுராதபுரம், கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அங்கு உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம், கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

அங்கு உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 56 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது. </p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">கொலை செய்யப்பட்ட நபர்</b></p><p>குறித்த நபரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின் போது, அயல்வீட்டில் வசிக்கும் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;"></b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d932d9-a2ae-43a2-8f74-3222028b49a3/26-6a8a5bb4381c7.webp' />
</p><p>
இந்த நிலையில், இன்று அதிகாலை அயல்வீட்டு நபர் கூரிய ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கவலைக்கிடமான நிலையில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவத்தை மேற்கொண்ட சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சந்தேகநபரை கைது செய்வதற்காக கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T02:32:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த போலி பெண் விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-fake-pilot-arrested-colombo-1787451325"></link>
            <id>https://tamilwin.com/article/the-fake-pilot-arrested-colombo-1787451325</id>
            <summary type="text">விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தால் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இதனையடுத்து அவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>.அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>போலியான விமானப்படை சீருடை</h2><p>பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணை பணியகம் சந்தேகநபரை கைது செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae47b49e-73b5-49eb-ab5c-e3223dd1ee51/26-6a8a5b426fe43.webp' />&nbsp; &nbsp;</p><p>சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.</p><p>தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் கூறி அவரிடம் பணமோசடி செய்துள்ளார்.</p><h2>15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள்</h2><p>வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெண் மோசடி செய்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8169e54-3d4b-4a05-badd-0715b18b7524/26-6a8a59009a471.webp' />&nbsp;&nbsp;</p><p>சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடையில் வந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>இதனையடுத்து, குருணாகல் பகுதியில் வைத்து சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி, உட்பட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T02:20:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றில் தண்டனைப் பெறப் போகும் முதலாவது முன்னாள் ஜனாதிபதி ரணிலாம்.. தப்பிப்பதற்கு பெரும் சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-conspiracy-to-escape-punishment-1787445108"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-conspiracy-to-escape-punishment-1787445108</id>
            <summary type="text">நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் என்று ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்க்கட்சியினரின் சதிகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் என்று ஜனநாயக தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார்.</p><p> 


ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>ரணிலின் சதி&nbsp;</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> ரணில் விக்ரமசிங்க மீது நிதி முறைகேடு தொடர்பான பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20af5013-6860-4a5d-b5dc-6bf6ec24fe71/26-6a8a3f770fe3a.webp' /></p><p> </p><p>

நீதிமன்ற விசாரணைகளின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் இலங்கை வரலாற்றிலேயே தண்டனை பெற்ற முதல் முன்னாள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மாறுவார்.</p><p> 

அந்தத் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகவே சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச மற்றும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆகியோரை பகடைக் காயாக ரணில் பயன்படுத்தி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T00:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்புக்கு மட்டும் ஐந்து புதிய நீதிமன்றங்கள்! அரசாங்கத்தின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-new-courts-for-colombo-alone-1787441800"></link>
            <id>https://tamilwin.com/article/five-new-courts-for-colombo-alone-1787441800</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் பிரதிபலனை ஆறு மாதங்களின் பின்னர் காணக்கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் பிரதிபலனை ஆறு மாதங்களின் பின்னர் காணக்கூடியதாக இருக்கும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
</p><p>
</p><p>

மத்தியஸ்த சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இச் சபையின் செயற்பாடுகள் காரணமாக இரண்டு இலட்சம் வழக்குகள் நீதிமன்றம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய நீதிமன்றங்கள்..</h2><p> </p><p>நாடெங்கிலுமுள்ள நீதிமன்றங்களில் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வளர்ந்த நாடுகளில் பத்து இலட்சம் பேருக்கு 40 முதல் 60 நீதிபதிகள் கடமையில் இருக்கும் அதேசமயம் இலங்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு இருபது நீதிபதிகளே கடமையில் இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87680c79-ec89-4f54-a7db-333826d87855/26-6a8a37929a2a9.webp' /></p><p>நீதிமன்றத்தில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளின்

அடுத்த தவணை ஜூன் மற்றும் ஜூலை வரை தள்ளிவைக்கப்படுகிறது. </p><p>எனவே கொழும்புக்கு மட்டும் ஐந்து புதிய நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளோம். மேலும் கொழும்புக்கு வெளியே புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. புதிதாக 11 நீதிமன்றங்கள் உருவாக்கப்படவுள்ளன. </p><p>மத்தியஸ்தசபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் போது சில குற்றங்களின் கீழ் தண்டனை பெற்றவர்கள் தண்டனை காலத்தின் இறுதி ஆறுமாத காலத்தில் வெளியே வந்து மத்தியஸ்த சபையிடம் முறையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T23:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு மீது கடும் கோபத்தில் மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427"></link>
            <id>https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. </p><p>இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2><b>
அதிருப்தியில் மகிந்த </b></h2><p>நாட்டில், 22ஆவது திருத்தத்தை கொண்டு வருவதை விட, அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல பணிகள் இருக்கின்றன.</p><p>அவற்றை செய்து முடித்த பின்னர் தேவையான எந்தவொரு சட்டப்பிரிவையும் கொண்டு வருவதில் பிரச்சினையில்லை என அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Lw4oajXmncE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு பதிலாக வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
 அதற்கு பதிலளித்த அவர், “அதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. தேவையற்ற விடயங்களே முன்னிலைக்கு கொண்டு வரப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27909829-c702-4572-9af6-6f5c0ccbffd7/26-6a894624c29b1.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><h3><b>

அரசியலமைப்பு திருத்தம்</b></h3><p>மேலும், நாட்டின் பொதுமக்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை விட முக்கியமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விட வேறு பல பிரச்சினைகள் உள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42bfb3e-b898-4141-a03a-deba8e47a424/26-6a894625754d6.webp' /></p><p>சிலர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுகின்றனர். 

அந்தப் பிரச்சினைகளை தீர்க்காமல் தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. </p><p>மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-22T23:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை விளக்கமறியலில் வையுங்கள்! மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944</id>
            <summary type="text">குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அநுரகுமார திசாநாயக்கவிடம் அவசர எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p>அத்தோடு, தனது கணவரை&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பாமல் சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>விசாரணை என்ற பெயரில் சிஐடியினர்&nbsp;சுரேஷ் சலேவை கொடுமைப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும்&nbsp;மனோரி சலே சுட்டிக்காட்டினார்.</p><p>எனவே சுரேஷ் சலேவின் உடல்நிலைநிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்&nbsp;மனோரி குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp; நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Na6vJ8cRq8s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T23:20:13+00:00</updated>
        </entry>
    </feed>
