<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-18T08:28:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்புத் துறைமுக பகுதியில் கடலில் விழுந்த மாலுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sailor-fell-into-the-sea-near-colombo-port-1789716869"></link>
            <id>https://tamilwin.com/article/sailor-fell-into-the-sea-near-colombo-port-1789716869</id>
            <summary type="text">கொழும்புத் துறைமுக பகுதியில்&amp;nbsp;கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.&amp;nbsp;குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.09.2026) இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புத் துறைமுக பகுதியில்&nbsp;கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.09.2026) இடம்பெற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கொழும்புத் துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பல் ஒன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முற்பட்ட கப்பல் மாலுமி ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து விபத்துக்குள்ளானார்.</p><h2>பாதுகாப்பாக மீட்கப்பட்ட மாலுமி</h2><p> </p><p>

கொழும்புத் துறைமுகக் கட்டுப்பாட்டு அறையினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர், கொழும்புத் துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த P-163 கரையோர ரோந்துப் படகினைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f078da5-54f8-4779-81ad-b8facb26e978/26-6aacf01fd74fa.webp' /></p><p> </p><p>

அதற்கமைய, குறித்த படகின் மூலம் கடலில் விழுந்த மாலுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T08:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cricketer-dhoni-ordered-madras-high-court-1789717670"></link>
            <id>https://tamilwin.com/article/cricketer-dhoni-ordered-madras-high-court-1789717670</id>
            <summary type="text">சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார்
தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்
மகே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார்
தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்
மகேந்திர சிங் தோனி அக்டோபர் 9 ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று
நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>

முன்னதாக, 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் தோனிக்கு தொடர்பு
இருப்பதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் தனியார்
தொலைக்காட்சி ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார்.</p><h2>100 கோடி ரூபாய் நஷ்டஈடு&nbsp;</h2><p>இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு தனது நற்பெயருக்குக் களங்கம்
விளைவிப்பதாகக் கூறி, சம்பத்குமாருக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி
தோனி 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39981e6-ff01-4c44-ae4b-9bcebda31daa/26-6aacefec99af3.webp' /></p><p>
</p><p>
இதன்போது, வழக்கின் ஆவணங்கள் மற்றும் சிடிகளை (CDs) மொழிபெயர்த்து
நகலெடுப்பதற்கான செலவாக 10 இலட்சம் ரூபாயை செலுத்துமாறு நீதிமன்றம் ஏற்கனவே
தோனிக்கு உத்தரவிட்டிருந்தது.
</p><p>
இதற்கிடையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சார்பில் 3 மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>&nbsp;தோனியின் வாக்குமூல&nbsp;பதிவு </h2><p>அவற்றில், தோனியின் வாக்குமூலத்தை (Deposition) பதிவு செய்யும்போது, அதை
முழுமையாக காணொளியாக பதிவு செய்ய வேண்டும்.


காணொளி பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் எடிட் செய்யப்படாத சான்றளிக்கப்பட்ட
நகலை தனக்கும், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் கண்காணிப்பு அதிகாரிக்கும்
வழங்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8567a142-8280-45d8-a373-b124435752eb/26-6aacefed4cc41.webp' /></p><p>


தோனி ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் என்பதால், அவரது வாக்குமூலப்பதிவை நட்சத்திர
ஹோட்டல்கள் அல்லது தனியார் இடங்களில் நடத்தாமல், நீதிமன்ற வளாகத்திலோ அல்லது
அரசு கட்டடத்திலோ மட்டுமே நடத்த வேண்டும். போன்ற கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டிருந்தன.</p><p>

குறித்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி, இது குறித்து தோனி ஒக்டோபர் 9 ஆம்
திகதிக்குள் பதிலளிக்குமாறு அறிவித்தல் அனுப்பி, வழக்கின் அடுத்த விசாரணையை
ஒத்திவைத்தார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T08:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் கைது இலங்கை இளைஞன் அனோஜனுக்கு வழங்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-worker-anojan-sentenced-death-saudi-1789717588"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-worker-anojan-sentenced-death-saudi-1789717588</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை
இளைஞர் சிவராசா அனோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை
இளைஞர் சிவராசா அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அதனை
இரத்து செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ தேவையான சட்டரீதியான மற்றும்
இராஜதந்திர நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இலங்கையின் வெளிவிவகார,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்
அவர்களிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார்
ஜெயக்குமாரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>அனோஜனின் மரண தண்டனை</h2><p>இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று (18) காலை தொலைபேசி மூலம்
தொடர்புகொண்ட குமார் ஜெயக்குமாரன், அனோஜனின் நிலைமை தொடர்பில் அவசரமாக
தலையிட்டு, சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை
முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார்.</p><p>

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த
சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட பின்னர், ஆரம்பத்தில்
ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும்
விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57ef2c5a-ae58-4ab4-ae73-8ab5407537fe/26-6aaceedb267c1.webp' /></p><p>

 இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட
மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தொடர்பான மிக முக்கியமான
மனிதாபிமான விடயம் என்பதால், காலதாமதமின்றி அனைத்து சாத்தியமான சட்ட மற்றும்
இராஜதந்திர வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை</h2><p>

அனோஜனின் வழக்கின் முழுமையான சட்ட நிலைமை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின்
அடிப்படைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அவருக்கு தேவையான சட்ட உதவி, தூதரக உதவி
மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என குமார் ஜெயக்குமாரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

“ஒரு இலங்கை இளைஞரின் உயிர் தொடர்பான இந்த முக்கியமான விடயத்தில்,
கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளும்
முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>

அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb69c4a8-6472-4ae2-8ce0-71fc758ca92d/26-6aaceedbf060d.webp' /></p><p>
</p><p>
அனோஜனின் வழக்கில் இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதி
அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை
விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குமார் ஜெயக்குமாரன் கோரிக்கை
விடுத்துள்ளார்.</p><p>

இதேவேளை, 
அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும்,
அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும்
உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், யாழ்ப்பாண
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்
அமைச்சர் விஜித ஹேரத்திடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>மேலதிக தகவல்- பவன்</i></b></p>]]></content>
            <updated>2026-09-18T07:59:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த கால ஆட்சியாளர்களால் தான் நாடு வங்குரோத்து அடைந்தது! நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/newly-constructed-main-post-office-in-mullaitivu-1789717392"></link>
            <id>https://tamilwin.com/article/newly-constructed-main-post-office-in-mullaitivu-1789717392</id>
            <summary type="text">கடந்த கால ஆட்சியாளர்கள் அரச நிதிகளை தங்களது நிதி போன்று பயன்படுத்தினார்கள். அதனால் இந்த நாடு வங்குரோத்து அடைந்தது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த கால ஆட்சியாளர்கள் அரச நிதிகளை தங்களது நிதி போன்று பயன்படுத்தினார்கள். அதனால் இந்த நாடு வங்குரோத்து அடைந்தது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முல்லைதீவு பிரதான தபாலக கட்டடத்தினை திறந்து
வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,&nbsp;பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசாங்கம் உதவிகளை செய்திருக்கின்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.</p><h2>தபால் துறை</h2><p>தபால் துறையானது வருமானமற்ற துறையாக இருக்கின்ற போதும் அதற்கான சம்பள உயர்வுகள் மற்றும் ஏனைய இதர தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/591be6d5-a726-454c-ad0e-0f67097864ed/26-6aacedcc88e84.webp' /></p><p>மேலும், இந்தநிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பர்களான துரைராசா ரவிகரன்,
மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு
மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,
வடமாகாண அஞ்சல் அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்
என பலரும் பங்கேற்றிருந்தார்கள்.</p><p><b>மேலதிக தகவல்-சதீசன்</b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:58:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டகலை நகரில் மதுபானக் கடைகளில் இருந்த தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-liquor-shops-in-kotagala-town-lifted-1789717318"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-liquor-shops-in-kotagala-town-lifted-1789717318</id>
            <summary type="text">&amp;nbsp;கொட்டகலை நகரில் உள்ள மதுபான சாலைகளில் மதுபான போத்தல்களை திறந்து அங்கேயே
அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் இடம்பெற்று வந்த
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொட்டகலை நகரில் உள்ள மதுபான சாலைகளில் மதுபான போத்தல்களை திறந்து அங்கேயே
அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் இடம்பெற்று வந்த
பல்வேறு பிரச்சினைகள் தற்போது குறைந்துள்ளதாக கொட்டகலை வர்த்தக சங்கத்தின்
தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.</p><p>

கொட்டகலை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
கொட்டகலை நகரிலுள்ள சில மதுபான சாலைகளில் மதுபான போத்தல்களை திறந்து
சட்டவிரோதமான முறையில் சில்லறையாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாகவும்,
இதனால் நகரின் ஏனைய வர்த்தகர்களும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு
முகங்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர் மற்றும் நாமல் ஒரே சிறையில்..! வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renuka-perera-also-goes-to-namal-s-crp-ward-1789696458"></link>
            <id>https://tamilwin.com/article/renuka-perera-also-goes-to-namal-s-crp-ward-1789696458</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா தற்போது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
</p><p>
இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>'N' வார்டில் 10 கைதிகளுடன்</h2><p>

தற்போது அவர் சிறைச்சாலையின் 'N' வார்டில், மேலும் சுமார் 10 கைதிகளுடன் அவர் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52a1a0ef-8ac5-46d6-810a-ef755b2100fc/26-6aace7be6676a.webp' /></p><p>
</p><p>
அதே வார்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களும் அந்த வார்டில் வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர்.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ரேணுகா பெரேரா, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><h2>சட்டவிரோதமாக சாலை அனுமதிகள்&nbsp;</h2><p>
</p><p>
பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக சாலை அனுமதிகள் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
1991-ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணையச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு சட்ட முறைக்குப் புறம்பாக 56 பயணிகள் சேவை அனுமதிகளை வழங்கியதாகவும், ஆண்டு சுங்கத்தை ஒரே முறையில் வசூலிக்கவில்லை என்றும் ரேணுகா பெரேரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:33:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 புதிய அமெரிக்க சமாதானப் படை தொண்டர்கள் வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-english-education-in-sri-lanka-1789714784"></link>
            <id>https://tamilwin.com/article/support-english-education-in-sri-lanka-1789714784</id>
            <summary type="text">இலங்கையில் இரண்டு ஆண்டுகள் சேவை செய்வதற்கு முன்னதான பயிற்சிகளை
மேற்கொள்வதற்காக, 34 புதிய அமெரிக்க சமாதானப் படை பயிற்சித் தொண்டர்கள்
இலங்கையை வந்தடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இரண்டு ஆண்டுகள் சேவை செய்வதற்கு முன்னதான பயிற்சிகளை
மேற்கொள்வதற்காக, 34 புதிய அமெரிக்க சமாதானப் படை பயிற்சித் தொண்டர்கள்
இலங்கையை வந்தடைந்துள்ளனர்.</p><p>
எதிர்வரும் நவம்பர் மாதம் சேவை உறுதிமொழி ஏற்பதற்கு முன்பாக, இவர்கள் சிங்களம்
அல்லது தமிழ் மொழி, இலங்கைக் கலாச்சாரம் மற்றும் அமெரிக்க ஆங்கிலக் கற்பித்தல்
முறைகள் தொடர்பாகத் தீவிரப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.</p><h2>ஆங்கில கல்வி விரிவுப்படுத்தல்</h2><p>
</p><p>
சத்தியப்பிரமாண நிகழ்வுக்குப் பிறகு, இவர்கள் வட மாகாணம் மற்றும் வடமத்திய
மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன்
இணைந்து ஆங்கிலக் கல்வியை விரிவுபடுத்தப் பணியாற்றுவர்.
</p><p>
இதன் பிரகாரம் இவர்கள் உள்ளூர் குடும்பங்களுடன் இணைந்து வசிக்கவுள்ளதுடன்,
அவர்கள் சேவை செய்யும் சமூகத்தின் ஒரு அங்கமாகவும் மாறுவார்கள் என
கருத்தப்படுகிறது.
</p><p>
கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில், இலங்கைக்கான
அமெரிக்க தூதுவர் எரிக் மயர் இத்தொண்டர்களை வரவேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dfbc53a-81b0-40a0-b383-8b975a680c56/26-6aace68655622.webp' /></p><h2>இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு</h2><p> </p><p>"இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பு மக்கள் சார்ந்த தொடர்புகளாலேயே
கட்டியெழுப்பப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

அமெரிக்கர்களை அந்தப் பணியின் மையத்தில் நிறுத்துகிறது," எனவும் அவர்
குறிப்பிட்டார்.
</p><p>
இலங்கையில் Peace Corps சேவை 1962 ஆம் ஆண்டு தொடங்​கியது. இதுவரை 500-க்கும்
மேற்பட்ட அமெரிக்கத் தொண்டர்கள் கல்வி, சுகாதாரம், விவசாயம், சமூக மேம்பாடு
மற்றும் சுனாமி மறுவாழ்வுப் பணிகளில் இங்கு பணியாற்றியுள்ளனர்.
</p><p>
முன்னதாக 2018 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கத்துடன்
இத்திட்டம் மீண்டும் முறையாக ஆரம்பிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் 125 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/125-million-worth-of-assets-frozen-1789713921"></link>
            <id>https://tamilwin.com/article/125-million-worth-of-assets-frozen-1789713921</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.12.5 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.12.5 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இதன்படி, விசாரணைகள் தொடரும் நிலையில் குறித்த சொத்துக்களை 14 நாட்களுக்கு விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்&nbsp;</h2><p>

வத்தளையைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி பல சொத்துக்களையும் வாகனமொன்றையும் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

ரூ.9 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடையதாக மதிப்பிடப்பட்டுள்ள குறித்த சொத்துக்கள் செப்டெம்பர் 17, 2026 முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d808155-559d-479a-995a-1c5279bcf26d/26-6aace593379b8.webp' /></p><p>



ஹுனுப்பிட்டிய பகுதியில் 7 பேர்ச்சஸ் காணியும் இரண்டு மாடி வீடும் – ரூ.4 கோடி,
ஹுனுப்பிட்டிய, சட்டல பகுதியில் 17 பேர்ச்சஸ் காணியும் இரண்டு வீடுகளும் – ரூ.3 கோடி,
ஹுனுப்பிட்டிய, வத்தளை பகுதியில் 5 பேர்ச்சஸ் காணியும் கட்டடமொன்றும் – ரூ.50 இலட்சம்,
ஹுனுப்பிட்டிய, காந்தி மாவத்தையில் 3 பேர்ச்சஸ் காணியும் கட்டடமொன்றும் – ரூ.70 இலட்சம்,
விசேட வகை கார் – ரூ.80 இலட்சம் என்பவையே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசாரணையில், தணமல்வில பகுதியைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி ரூ.3.5 கோடி பெறுமதியான டொயோட்டா ரக ஜீப் வாகனமொன்றைக் கொள்வனவு செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4946786-96f2-4f65-a87f-6c57e6dd9bb4/26-6aace5926948e.webp' /></p><p>

இதன்படி, குறித்த வாகனத்தை 2026 செப்டெம்பர் 16ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால் வாகனத்தை விற்பனை செய்யவோ, உரிமையை மாற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது.

இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:21:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முக்கிய ஆதாரம்.. திட்டவட்டமாக மறுக்கும் மொட்டுதரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-email-shared-1789713323"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-email-shared-1789713323</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவிற்கும் அந்நிறுவனத்திற்கும் இடையே எந்தவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவிற்கும் அந்நிறுவனத்திற்கும் இடையே எந்தவித மின்னஞ்சல் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
</p><p>
நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு மின்னஞ்சலிலும் நமல் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
சமீபத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த மின்னஞ்சல்கள் நிறுவனத்தின் சில உள்நிலை அதிகாரிகளுக்கு இடையே மட்டுமே பரிமாறப்பட்டவை என்றும், அவற்றில் நமல் ராஜபக்சவின் ஈடுபாடு அல்லது அவர் இலஞ்சம் பெற்றது குறித்த எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்..&nbsp;</h2><p>
ஷசீந்திர ராஜபக்சவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் பணம் வைப்பீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9815bbeb-a54a-42dd-a618-8510c3b51135/26-6aace22346a76.webp' /></p><p>
</p><p>
இவ்வழக்கு தொடர்பாக இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஒரே முக்கிய ஆதாரம், நிமல் பெரேரா என்ற நபர் அரசாங்கத்திற்கு அளித்த வாக்குமூலம் மட்டுமே என்று சட்டத்தரணி தெரிவித்துள்ளார். </p><p>மேலும், சாட்சியச் சட்டத்தின் (Evidence Ordinance) கீழ், ஒரு குற்றத்தில் உடந்தையாக இருந்தவரின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரைத் தண்டிக்க முடியாது என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், அரசியல் ரீதியாக ஒடுக்கும் நோக்கத்துடன், பொதுச் சொத்துச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி நாமல் ராஜபக்சவைச் சிறையிலடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-gemstone-mining-operation-thwarted-1789714831"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-gemstone-mining-operation-thwarted-1789714831</id>
            <summary type="text">நோர்வூட் வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான
முறையில் மேற்கொள்ளப்பட்ட இரத்தினக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான
முறையில் மேற்கொள்ளப்பட்ட இரத்தினக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் பொலிஸாரால்
தீவிரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த நடவடிக்கை நேற்றுமுன்தினம் (16.09.2026) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

ஹட்டன் மூத்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் மண்டல ஊழல் தடுப்புப் பிரிவைச்
சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று நோர்வூட் மற்றும்
NC தேயிலைத் தோட்டப் பகுதிகள் மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்
வழங்கும் பிரதான நீர் ஆதாரமான கெசல்கமு ஓயாவை அண்மித்த போர்ட்ரீ (Portree)
தோட்டப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தேயிலைச் செடிகளை அழித்து இந்த
அகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தன.</p><h2>&nbsp;மாணிக்கக் கல் அகழ்வு</h2><p>

குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு
பெரும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a70886c-531b-4e28-8eda-c16509408737/26-6aace46f8275f.webp' /></p><p> எனினும் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள்
அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பியோடியுள்ளனர்.

அவர்கள் மறைத்து வைத்திருந்த மாணிக்கக் கற்களை அகழ்வதற்கும், சுத்தம்
செய்வதற்கும் மற்றும் பிரித்தெடுப்பதற்கும் பயன்படுத்தும் 6 நீர் பம்பிகள்
மற்றும் மாணிக்கக் கல் அகழ்வு பணிக்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான உபகரணங்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ஹட்டன் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்,
பேக்ஹோ இயந்திரங்களைப் பயன்படுத்தி முழுமையாக மூடப்பட்டிருந்த இந்தப் பகுதி,
மீண்டும் இரவும் பகலில் கிட்டத்தட்ட 100 பேரை வேலைக்கு அமர்த்தி இந்த
முறைகேட்டைச் செய்து வருவதாகவும், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட
குழிகள் இதுவரையிலும் மீள மூடப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> எனினும், அகழ்வு பணிகளின் பின்னர் குறித்த தோண்டப்பட்ட
குழிகள் மூடப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f29851-ab68-48c9-958b-e33daf596d4b/26-6aace47068dd4.webp' /></p><p> </p><p>இதனால்
மழைக்காலங்களில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தப்பி ஓடிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:13:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்! சற்றுமுன்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-returns-to-court-today-1789702379"></link>
            <id>https://tamilwin.com/article/namal-returns-to-court-today-1789702379</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இதற்கமைய, அவரது பிணை மனு மீதான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஷவிந்திர பெர்னாண்டோ ஆகியோரின் வாதங்களை கருத்தில்கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8kUPVxfzARs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச சற்றுமுன்னர் (18) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.</p><h2>எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்</h2><p>

இந்த வழக்கில், கையூட்டலாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf784c4-ff8d-40ea-ae91-9591867a8b4c/26-6aacb36a54723.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பாக நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.</p><p>இச்த வழக்கில் நேற்று முன்தினம் (16) நீதிமன்றில் முன்னிலையான போது அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முன்னணியின் கூட்டறிக்கை! கையெழுத்திட மறுத்த தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-to-the-constitution-1789712753"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-to-the-constitution-1789712753</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை ஆட்சேபித்து, மக்களைத் திரட்டி எதிர்ப்பை
காட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் நேற்று(17)
கொழும்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை ஆட்சேபித்து, மக்களைத் திரட்டி எதிர்ப்பை
காட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் நேற்று(17)
கொழும்பில் 'ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சுதந்திரப்
போராட்ட முன்னணி' என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள்,
சிவில் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆராய்ந்த பின்னர்
கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
</p><p>
அந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பங்குபற்றினார்.

 22 ஆவது அரசமைப்புத்
திருத்தத்துக்குத் தாமும் தமது கட்சியினரும் முழுமையாக எதிர்ப்பைத்
தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;22 ஆவது திருத்தம்</span></p><p> </p><p>ஆயினும் அந்தக் கூட்ட அறிக்கையில்
கையெழுத்திட அவர் மறுத்து விட்டார்.

ஏற்கனவே இலங்கையின் நீதித்துறையில் மோசமான முறையில் தலையீடு செய்து அதன்
சுதந்திரத்தைப் பாதிக்கச் செய்த தரப்புக்கள் அந்தக் கூட்டறிக்கையில்
ஒப்பமிடுகின்றன என்றும், அவற்றுடன் சேர்ந்து நீதிச் சுதந்திரத்தை காப்பாற்ற
போராடுவது என்ற பெயரில் நடிப்பதற்குத் தான் தயார் இல்லை என்றும் அவர்
கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37df4f42-2bd3-4d68-9e6c-cf7cb9454380/26-6aacdb7e19e05.webp' /></p><p>
</p><p>
முன்னர் பிரதம நீதியரசர்களாக இருந்த நெவில் சமரக்கோனையும், ஷிராணி
பண்டாரநாயக்காவையும் பதவியிலிருந்து முறையற்ற விதத்தில் அகற்றியமை மூலம்
நீதித்துறை சுதந்திரத்தில் மோசமாக தலையிட்ட தரப்புகளோடு சேர்ந்து நீதித்துறை
சுதந்திரத்தை பேணுதல் என்ற போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்றார்.</p><p>


அத்தகைய தரப்புகளோடு சேர்ந்து இந்த விடயத்தில் கூட்டறிக்கையில் ஒப்பமிடுவது
குறித்து தமது கட்சியின் அனுமதியைத் தான் பெற வேண்டி இருக்கும் என்றும் அவர்
அங்கு தெரிவித்தார்.

''22 ஆவது திருத்தத்துக்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பை காட்டுகின்றோம்.</p><h2>முன்னெடுக்கப்படவிருக்கும் போராட்டம்</h2><p>நாடாளுமன்றத்திலும் அதனை வெளிப்படுத்தி வாக்களிப்பிலும் காட்டுவோம். ஆனால்
அதற்காக நீதித்துறையில் மோசமான முறையில் தலையிட்டு, அதன் சுதந்திரத்தைப்
பாதிக்கச் செய்த தரப்புகளோடு சேர்ந்து நீதித்துறை சுதந்திரத்திற்காகப்
போராடுகின்றோம் என்று பாவனை பண்ண நாங்கள் தயார் இல்லை என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f91aa40-451c-4ab5-9c15-8599f362f0c4/26-6aacdb7ec257c.webp' /></p><p>

வரும் 24ஆம் திகதி கொழும்பில் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக
முன்னெடுக்கப்படவிருக்கும் போராட்டத்துக்குக் கட்சி பேதமின்றி ஆதரவு திரட்டும்
விதத்தில் நேற்று மாலை இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
</p><p>
இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கின் பிற தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம்
கட்சிகளும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[ </p>]]></content>
            <updated>2026-09-18T06:34:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றாப்பளையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-assistance-sought-to-identify-the-thief-1789711257"></link>
            <id>https://tamilwin.com/article/public-assistance-sought-to-identify-the-thief-1789711257</id>
            <summary type="text">முல்லைத்தீவு - வற்றாப்பளை பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில்
இருந்த வேளையில், மதிலேறி வீட்டின் வளவுக்குள் புகுந்த நபரொருவர் வீட்டின் யன்னலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - வற்றாப்பளை பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில்
இருந்த வேளையில், மதிலேறி வீட்டின் வளவுக்குள் புகுந்த நபரொருவர் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச்
சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் கடந்த 16.09.2026 அன்று நள்ளிரவு 11.50 மணியளவில்
இடம்பெற்றுள்ளது.</p><h2>சிசிடிவி காட்சி பதிவு</h2><p>
</p><p>
வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த நிலையில், மதிலேறி வீட்டின்
வளவுக்குள் நுழைந்த நபர், அதிகாலை 2.20 மணிவரை வீட்டுக்குள் நுழைவதற்கு
முயற்சி மேற்கொண்டுள்ளமை சிசிடிவி காட்சிகள் மூலம் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7752ab45-00a7-4ba7-a21d-9a94a6d2448e/26-6aacd60f419b0.webp' /></p><p>இதனையடுத்து வீட்டின் யன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த குறித்த நபர்,
சாமியறையில் வைக்கப்பட்டிருந்த 51,000 ரூபா பணத்தையும் இரண்டு பவுண் தங்க
நகைகளையும் கொள்ளையிட்டுள்ளார். வீட்டில் இருந்தவர்கள்
கூச்சலிட்டதையடுத்து, குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>சம்பவம் தொடர்பில் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல்
வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/375b2d64-3438-4df1-b33c-35ec06f251a3/26-6aacd61060893.webp' /></p><p>
</p><p>மேலும், குறித்த திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியும்
கோரப்பட்டுள்ளது. சந்தேகநபரை அடையாளம் காணும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ்
நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T06:11:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் பரிதாப நிலை - அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதி உட்பட ராஜபக்ச கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-s-worst-condition-1789698608"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-s-worst-condition-1789698608</id>
            <summary type="text">இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்ற கனவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தீவிரமாக செயற்பட்டு வருகிறார். 

அதற்கு சில தமிழ் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்ற கனவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தீவிரமாக செயற்பட்டு வருகிறார். </p><p>

அதற்கு சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுஜன பெரமுன 
கட்சியினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

இந்நிலையில் தற்போதைய கள நிலவரம் அந்த தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> </p><h2><b>

பாரிய கூட்டம்</b></h2><p>கடந்த 12ஆம் திகதி அனுராதபுரத்தில் அநுர அரசாங்கத்திக்கு எதிராகவும், நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் பாரிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b576f6f-d86d-4615-93ea-4658c145e233/26-6aaca8b8617cc.webp' /></p><p>இந்த கூட்டத்தின் பின்னர் நாமல் ராஜபக்ச முற்றிலும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். </p><p>

அவரது நிலைமை நேற்று முன்தினம் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. </p><p>

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, கடந்த 04 ஆம் திகதி ஊழல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.</p><p> </p><h3><b>

ஏமாற்றத்தில் நாமல்</b></h3><p>அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது திரண்டிருந்த ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் அங்கு இருக்கவில்லை. </p><p>

ஆதரவாளர்களுக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிணையில் வெளிவந்துள்ள ஒரு சிலர் மட்டுமே வருகை தந்திருந்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8743562-403c-40f5-a2f1-896ebe2f2455/26-6aaca8b919bdb.webp' /></p><p>பாரிய மக்கள் ஆதரவு உள்ளதாக காட்டிக்கொண்ட ராஜபக்ச தரப்பினருக்கு, இந்த செயற்பாடு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. </p><p>

அதேவேளை, நாமலை அடுத்த ஜனாதியாக மாற்றப் போவதாக சூளுரைத்துள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் பெரும் அதிருப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-18T06:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி தொடர்பில் தகவல் வழங்க மறுத்த மகிந்தவின் ஊடகப் பிரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cannot-reveal-about-shiranthi-s-place-1789700661"></link>
            <id>https://tamilwin.com/article/cannot-reveal-about-shiranthi-s-place-1789700661</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது எங்கு இருக்கிறார் என கூற முடியதென மகிந்தவின் ஊடகப் பேச்சாளரான மனோஜ் கமகே தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது எங்கு இருக்கிறார் என கூற முடியதென மகிந்தவின் ஊடகப் பேச்சாளரான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.</p><p>

 ஷிரந்தி தொடர்பான தகவலை வெளியிட அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

எனினும் மகிந்த ராஜபக்சவை கவனித்துக் கொள்ளும் நோக்கில் விரைவில் அவர் நாடு திரும்புவார் என குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>

அழைப்பாணை </b></h2><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d38074d-e816-4939-a9dd-b6b03b9fa763/26-6aacd38d504f2.webp' /></p><p>அவர் நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். </p><p>நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக மனோஜ் கமகே தெரிவித்தார். </p><p>நேற்று முன்தினம் அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணையை அவர் பெற்றுக்கொண்டதாகவும் கமகே குறிப்பிட்டார்.
</p><p>
இதேவேளை சிங்கப்பூரில் நேற்றையதினம் ஆடம்பர ஆடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-09-18T06:01:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றவாளிகளை பிடிக்க அதிரடியாக தயாராகும் பாதுகாப்பு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-martial-arts-training-for-sri-lankan-police-1789709723"></link>
            <id>https://tamilwin.com/article/new-martial-arts-training-for-sri-lankan-police-1789709723</id>
            <summary type="text">இலங்கைப் பொலிஸாருக்கு சந்தேக நபர்களைக் கைது செய்யும்போதும், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவும் புதியதொரு தற்காப்பு சண்டைப் பயிற்சி கற்பிக்கப்படுகின்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பொலிஸாருக்கு சந்தேக நபர்களைக் கைது செய்யும்போதும், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவும் புதியதொரு தற்காப்பு சண்டைப் பயிற்சி கற்பிக்கப்படுகின்றது.</p><p>

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களின் தற்காப்புத் திறனை மேம்படுத்தவும், தேவையற்ற உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தாமல் வன்முறையாளர்களை சட்டப்பூர்வமாகக் கைது செய்யும் திறனை அதிகரிக்கவும், கிராவ் மகா (Krav Maga) தற்காப்பு சண்டை முறை பொலிஸ் பயிற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>தீவிர பயிற்சி..&nbsp;</h2><p>

எதிர்வரும் நாட்களில் குறித்த கிராவ் மகா (Krav Maga) பயிற்சியானது சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7bc4f4a-2f15-469b-a0dc-91a2599e7bb1/26-6aacce6daad67.webp' /></p><p>
</p><p>
பொலிஸ் கல்லூரியின் பயிலுனர் பயிற்றுவிப்பாளர்களுக்காக முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த நான்கு நாள் பயிற்சித் திட்டம், 2026 செப்டெம்பர் 10 முதல் 15 வரை களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.</p><p>

33 பயிலுனர் பயிற்றுவிப்பாளர்கள் உட்பட அதிகாரிகள் இந்தப் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். மேலும், இறுதி நாளில் கிராவ் மகா (Krav Maga) தற்காப்புக் கலையின் கூறுகளைக் கொண்ட ஒரு சிறப்பு செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.
</p><p>
இந்தப் பயிற்சியின் மூலம், பொலிஸ் கல்லூரியின் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கும், எதிர்காலத்தில் பல்வேறு மேம்பட்ட பயிற்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கும் கிராவ் மகா (Krav Maga) பயிற்சியை வழங்க இயலும்.
</p><p>
அதன் ஊடாக பொலிஸாரின் தற்காப்புத்திறன், உடல் வலிமை மேம்படுவதுடன் சட்டரீதியான கைது நடவடிக்கைகளும் இலகுவமாக மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T05:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seizure-of-expired-food-items-legal-action-1789708662"></link>
            <id>https://tamilwin.com/article/seizure-of-expired-food-items-legal-action-1789708662</id>
            <summary type="text">கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட
உணவக /வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான
பெருந்தொகையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட
உணவக /வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான
பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

குறித்த வர்த்தக நிலையத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும்
காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து
நேற்று முன்தினம் (16.09.2026) முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.</p><h2>திடீர் சோதனை</h2><p>

இம்முறைப்பாட்டையடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீனின் அவசர உத்தரவிற்கமைய,
பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையிலான
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக செயற்பட்டு குறித்த கடையில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d5c1756-bf00-4180-91f9-fb148578f5bb/26-6aaccc0b5a03b.webp' /></p><p>

இதன்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்குத் தீவிர அச்சுறுத்தலை
ஏற்படுத்தக்கூடிய வகையில் காலாவதி திகதி முடிவடைந்த பல்வேறு உணவுப் பொருட்கள்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல்
செய்யப்பட்டன.</p><p>

உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டமைக்காகச் சம்பந்தப்பட்ட
வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை
எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் திணைக்கள
அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T05:29:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-bank-officials-fraud-bail-ban-enter-bank-1789706580"></link>
            <id>https://tamilwin.com/article/four-bank-officials-fraud-bail-ban-enter-bank-1789706580</id>
            <summary type="text">நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களும்&nbsp;பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து&nbsp;பிணையில்&nbsp;செல்ல கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>அதன்படி, ஒவ்வொரு சந்தேகநபரையும் ரூ. 25,000 ரொக்க பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைதாரர்களுடனும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8065d49-d488-44e5-9f11-3408a46d74f1/26-6aacca25d5f7b.webp' /></p><p>
</p><p>
மேலும், சந்தேகிக்கப்படும் வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குள் நுழைவதற்கும் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான ஜெஃப்ரி முகமது மற்றும் முக்கிய தொழிலதிபராகிய முகமது இன்ஃபார்ட் ஆகியோரை அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை மேலும் காவலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவத்தில் முதல் சந்தேகநபர் மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் போதைப்பொருள் சட்டம் மற்றும் பணச்சலவைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் 6.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வங்கியில் வைப்பு செய்துள்ளதாகவும் அரச சட்ட ஆலோசகர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.</p><h2>அம்பலமாகியுள்ள மாபெரும்&nbsp;&nbsp;மோசடி </h2><p>
</p><p>நாட்டிலிருந்து 190 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாடல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளின் போது இந்த மாபெரும் மோசடி அம்பலமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97326fbb-a613-4037-9b0b-a1c7757443ff/26-6aacca268891f.webp' /></p><p> </p><p>இந்த வழக்கில் முதல் சந்தேகநபர் ஜெஃப்ரி முகமது ஆவார். அவர் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய மேலும் 5 நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் சந்தேகிக்கப்படும் வங்கி அதிகாரிகளுக்குப் பிணை வழங்கியுள்ளதுடன், இரண்டு முக்கிய சந்தேகநபர்களையும் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது.</p><p></p><p><br><br><i style="font-weight: bold;">You May Like This..</i></p><p><i style="font-weight: bold;"><br></i><br><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1343734677584395%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-18T05:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கு பகுதிகளில் மாவட்டப் பொது வைத்தியசாலையில் புதிய விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/district-general-hospital-hostel-northern-eastern-1789708641"></link>
            <id>https://tamilwin.com/article/district-general-hospital-hostel-northern-eastern-1789708641</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான
புதிய விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை
நடைபெற்றது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான
புதிய விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை
நடைபெற்றது.
</p><p>
185 மில்லியன் ரூபா செலவில் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை
நிதியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விடுதி, மருத்துவ உத்தியோகத்தர்கள்
தாங்கள் பணியாற்றும் மருத்துவமனைக்கு அருகிலேயே பாதுகாப்பானதும் வசதியானதுமான
தங்குமிட வசதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்படவுள்ளது.</p><p>அதேவேளை, "சுகாதார சேவைக்குத் தேவையான கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும்
மருந்துகள் அவசியமானவை. ஆனால், அவற்றை இயக்குகின்ற மனித வளமே சுகாதார சேவையின்
உயிர்நாடியாகும். </p><p>குறிப்பாக நோயாளிகளுடன் மிக நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும்
பணியாற்றும் தாதியர் உத்தியோகத்தர்களுக்குச் சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்துவது,
தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது." என்று வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-18T05:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் இந்த ஆட்சியில் புதிய அரசமைப்பு நிச்சயம் - அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-chandhana-aberathna-1789706496"></link>
            <id>https://tamilwin.com/article/minister-chandhana-aberathna-1789706496</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில்
புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என்று அரச நிர்வாகம்,
மாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில்
புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என்று அரச நிர்வாகம்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன
தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று (17.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனை
உறுதிப்படுத்தினார்.</p><h2>அரசமைப்பின் 20ஆவது திருத்தம்</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

"அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்
சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அது நாடாளுமன்றத்துக்குக்
கொண்டுவரப்படும். உயர்நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டல்களுக்கு அமையவே அரசு
தொடர்ந்தும் செயற்படும்.</p><p> இந்த 20 ஆவது திருத்தமானது தற்போதைய அவசர தேவையை
நிவர்த்தி செய்வதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது.

புதிய அரசமைப்பு ஒன்றை நாட்டில் உருவாக்குவது அரசின் கொள்கைப் பிரகடனத்தில்
இடம்பெற்ற பிரதான வாக்குறுதியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c2aeac-bb6a-4bb7-bc6d-b89ab9682d42/26-6aacc2d80d5a1.webp' /></p><h2>கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள்</h2><p> </p><p>இதில் அரசு மிக உறுதியாக உள்ளது. இந்தப் புதிய அரசமைப்பை அரசு தனித்து உருவாக்கப் போவதில்லை. </p><p>நாட்டின்
பொதுமக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பரந்த அளவிலான கலந்துரையாடல்கள்
மற்றும் விவாதங்களை முன்னெடுத்து, அவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியே
புதிய அரசமைப்பு தயாரிக்கப்படும்.</p><p>அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து
முன்னெடுக்கப்படும்." - என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T05:13:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/goal-steer-country-era-transformation-anura-states-1789707056"></link>
            <id>https://tamilwin.com/article/goal-steer-country-era-transformation-anura-states-1789707056</id>
            <summary type="text">இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய
பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளது, அந்த ஸ்திரத்தன்மையின்
அடிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய
பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளது, அந்த ஸ்திரத்தன்மையின்
அடிப்படையில் நாட்டை மாற்றத்துக்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே
அரசின் நோக்கம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
</p><p>
அதேபோல், நாடு அடைந்துள்ள இந்த பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத்
தரத்தை இலகுபடுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் பயன்படுத்துவதே அரசின்
இலக்காகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டு பிரதானி எவன் பபகோர்ஜியோ உள்ளிட்ட
பிரதிநிதிகளுடன் நேற்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற
சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;முக்கிய கலந்துரையாடல்..&nbsp;</h2><p>
</p><p>
இந்தப் பிரதிநிதிகள் குழுவானது, இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி
வேலைத்திட்டத்தின் ஏழாவது மீளாய்வு மற்றும் '2026 4' பிரிவுக்குட்பட்டு
ஆலோசனை வழங்குவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதோடு, அவர்கள் எதிர்வரும் 23
ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருப்பர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fceacb2-62be-4f24-9196-e8bd1bab3eb3/26-6aacc47111ec8.webp' /></p><p>
</p><p>
இலங்கை தற்போது அடைந்துள்ள சிறப்பான பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் எவன்
பபகோர்ஜியோ பாராட்டுத் தெரிவித்ததோடு, விசேடமாக அரச வருமானத்தை அதிகரித்துக்
கொள்ளுதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட நிதி
ஒழுங்கைப் பேணுவதற்காக கடந்த காலங்களில் இலங்கை பின்பற்றிய நடவடிக்கைகள்
தொடர்பிலும் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
</p><p>
எட்டியுள்ள இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதன்
முக்கியத்துவம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பொருளாதார
ஸ்திரத்தன்மையை அடைவதில் அரசுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையே
நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் ஒரு முக்கியமான அடித்தளத்தை
வழங்கியதாகவும் கூறினார்.</p><p>

அண்மையில் இலங்கை முகம்கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தமான 'டித்வா' அனர்த்த
நிலைமைக்கும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக நாட்டின்
பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட தாக்கத்துக்கும் பலமாக முகம்கொடுப்பதற்கு அந்த
பொருளாதார ஸ்திரத்தன்மை முக்கிய காரணியாக அமைந்தது என்றும் ஜனாதிபதி
சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>அரசாங்கம் புறம் வருமானங்கள்..&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அதேபோல், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி
வீதத்தை 4.2 சதவீத மட்டத்தில் பேணிக் கொள்ள முடிந்துள்ளமையும், பொருளாதாரம்
வழமைக்குத் திரும்பி வருகின்றமைக்கான முக்கியமான சமிக்ஞையாகும் எனவும்
ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், கடந்த இரு வருடங்களாக அரசாங்கம் வரி வருமானங்களைச்
சேகரிப்பதில் காட்டிய செயற்றிறனையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f53f886a-ffa2-48bf-b473-ecde8cce41b2/26-6aacc471f1f9d.webp' /></p><p>
</p><p>
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முக்கியமான காரணியாக விளங்கும்
சமூக நலன்புரி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றம்
குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள
நிலைமை காரணமாக எரிசக்தி செலவுகள் தொடர்பில் மக்கள் முகம்கொடுக்க நேர்ந்துள்ள
சிரமங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p>

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும,
ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின்
சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு உள்ளிட்ட பலரும் இந்தச் சந்திப்பில்
பங்கேற்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T04:57:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்றாக இணையும் ரணில் மற்றும் சஜித் தலைமையிலான கூட்டணிகள்..! வெளியிடப்பட்ட பகிரங்க அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-makes-announcement-in-ranil-s-presence-1789704866"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-makes-announcement-in-ranil-s-presence-1789704866</id>
            <summary type="text">&quot;நாட்டில் சர்வாதிகாரப் போக்குடன் முழு அதிகாரத்தையும் தனிக்கட்சி
தன்வசப்படுத்த முனையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு
எதிராக, ஐக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>"நாட்டில் சர்வாதிகாரப் போக்குடன் முழு அதிகாரத்தையும் தனிக்கட்சி
தன்வசப்படுத்த முனையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு
எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாக
இணைகின்றன" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

'ஜே.ஆரின் அரசாளுகையும் நடுத்தர பாதையும்' எனும் கருப்பொருளின் கீழ், ஐக்கிய
மக்கள் சக்தியுடன் இணைந்து மகாமான்ய டி.எஸ்.சேனநாயக்க அரசியல் பீடத்தின் பழைய
மாணவர் சங்கத்தால் தேசிய நூலக மற்றும் ஆவண சேவைகள் சபைக் கேட்போர் கூடத்தில்
நேற்று (17.09.2026) ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a981e9d5-8333-4f8f-a19c-afff1a4b39aa/26-6aacbf2cac3bf.webp' /></p><p>

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல்
பிரமுகர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.</p><h2>கீழ்த்தரமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி</h2><p>
</p><p>
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் உரையாற்றுகையில், பதவிகளைப் பகிர்ந்துகொள்ளும் அல்லது அரசியல் சலுகைகளை அடிப்படையாகக் கொண்ட
கீழ்த்தரமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் சார்பான முற்போக்கான
கொள்கைச் சட்டகத்தின் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும்
ஒன்றிணைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c32d1b43-e61d-457a-b356-0f3e8b75e1bf/26-6aacbf2d93e62.webp' /></p><p>

நாட்டுக்குரிய ஒரே எதிர்காலப் பயணம் வலதுசாரியோ இடதுசாரியோ அல்ல, மாறாக
ஜே.ஆர். ஜயவர்தனவின் நடுத்தரப் பாதையாகும். சந்தைப் பொருளாதாரத்தை மனிதநேய
முதலாளித்துவத்துடன் இணைத்து, சமூக ஜனநாயகத்தை உள்வாங்கும் சமூக நலன்புரி அரச
எண்ணக்கருவையே நாம் பின்பற்றுகின்றோம்.</p><h2>மாற்றீடு தேடும் நிலைமை</h2><p>
</p><p>
ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிக் கொள்கைகளுக்குச் சிக்னல் காட்டிவிட்டு
ஆட்சிக்கு வந்த அநுர அரசு, தற்போது வலதுசாரிப் பக்கம் சாய்ந்து வருவதுடன்
சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கின்றது. இவர்களை ஆட்சிக்குக் கொண்டுவந்த 220
இலட்சம் மக்களும் தற்போது பரிதவித்துப்போய் மாற்றீட்டைத் தேடிக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689222ef-7847-4069-bba4-3962d9a9e181/26-6aacbf2e68ac6.webp' /></p><p>
</p><p>
நாட்டில் தற்போது 30 முதல் 40 சதவீதமானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் வீழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசியல்
பொருளாதார ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a67ced1a-edeb-4d9a-a770-1cfb80868844/26-6aacbf2f41452.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c72f5735-8ca2-426b-b916-6e71d4555905/26-6aacbf301b94a.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2697f11b-1724-47b3-8d8a-8e43a4b69c46/26-6aacbf30e5237.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T04:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிவரவு,குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/assistant-controller-immigration-department-arrest-1789705037"></link>
            <id>https://tamilwin.com/article/assistant-controller-immigration-department-arrest-1789705037</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>சந்தேகநபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சிறப்பு புலனாய்வுப்பிரிவு விசாரணை</h2><p> 



திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54cbc0b9-292d-4961-aae5-5a77d8cde093/26-6aacbe6e515be.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கம்பஹாவைச் சேர்ந்த 42 வயதுடையவர் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T04:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/matakuli-road-accident-car-driver-confession-1789695255"></link>
            <id>https://tamilwin.com/article/matakuli-road-accident-car-driver-confession-1789695255</id>
            <summary type="text">கொழும்பு- மட்டக்குளியில் பல வாகனங்கள் நேற்று முன்தினம் மோதிய சம்பவம் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- மட்டக்குளியில் பல வாகனங்கள் நேற்று முன்தினம் மோதிய சம்பவம் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.&nbsp;</p><p>இந்த விபத்தினை ஏற்படுத்திய 52 வயதான சாரதி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர் மீது கொலை உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.&nbsp;&nbsp;</p><p>இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்தனர்.</p><h2>சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்</h2><p>தனது மகளை மேலதிக வகுப்பிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரச்சென்றுகொண்டிருந்த போது தான் செலுத்திச்சென்ற மின்சார வாகனத்தின் வேகம் தானாகவே அதிகரித்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb94e8bc-b8a8-4513-bd72-ee3927e6da12/26-6aaca08a5e102.webp' />&nbsp;</p><p>மேலும், தான்&nbsp; செலுத்திச்சென்ற கார் திடீரென அதிவேகமாக சென்று, வீதியின் இருபுறமும் இருந்த மக்கள் மற்றும் வாகனங்கள் மீது ஏறிச் சென்றதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
</p><p>குறித்த விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p> விபத்துக்கு காரணமான காரில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த கார் தொடர்பாக மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் இருந்து அறிக்கை கோருமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2dd37c9-7d85-44d7-8a80-cb9e45c9b8e3/26-6aaca08b12a1c.webp' /></p><p>

கொலை, விபத்தைத் தடுக்கத்தவறுதல், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்தல், நபர்களுக்கு மரணம் மற்றும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

அதிவேகமாக சென்ற கார், நெடுஞ்சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 முச்சக்கர வண்டிகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் உட்பட 7 வாகனங்கள் மீது மோதியதில், அவை பலத்த சேதமடைந்தன.</p><p>

விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபரான தொழிலதிபர், தனது காரை அதிவேகமாக செலுத்திச்சென்ற, ​​சாலையின் இருபுறமும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.</p><h2>சாரதியின் இரத்த மாதிரிகள் மருத்துவப்பரிசோதனை</h2><p>இது குறித்து ​​கொழும்பு வடக்குப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் எரிக் பெரேரா தெரிவிக்கையில், மட்டக்குளிய பெர்குசன் சந்திப்பு மிகவும் குறுகலான சாலையாகவும், அடிக்கடி நெரிசலாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f56a345-9060-4518-bc62-a290a780e4f2/26-6aaca089a8d9f.webp' />&nbsp;</p><p>
மேலும், அத்தகைய குறுகலான சாலையில் மின்னல் வேகத்தில் வாகனம் செலுத்தியதாலேயே இந்த கோரமான விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விபத்து நடந்த நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விபத்து நடந்த இடத்தில் கூடியிருந்ததாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்கவும் பொலிஸ் நடவடிக்கை எடுத்ததாகவும் மட்டக்குளிய பொலிஸ் பொறுப்பதிகாரி அஜந்த புஷ்பகுமாரா தெரிவித்தார்.</p><p>மேலும், நீதிமன்ற உத்தரவுகளின்படி, விபத்தை ஏற்படுத்திய சாரதியின் இரத்த மாதிரிகள் மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும், விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகத்திலிருந்து அறிக்கை கோரப்படும் என்றும், காரைப் பெறுவதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிபுணர் அறிக்கை மற்றும் ஒரு பொறியியல் அறிக்கை அனுப்பப்படும் என்றும் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>

கோர விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுக்கள், பதற்ற நிலை ஏற்படுவதற்கு முன்பே சந்தேகத்திற்குரிய சாரதியை கைது செய்து்ளளனர். இல்லையெனில், கோபமடைந்த அப்பகுதி மக்கள் காரைத் தீயிட்டுக் கொளுத்தி, சாரதியை தாக்கியிருக்கக்கூடும் என்று பொலிஸ் கூறுகின்றது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T02:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளை முதல் கடுமையாகும் நடைமுறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seat-belt-regulations-on-highways-to-be-tightened-1789698511"></link>
            <id>https://tamilwin.com/article/seat-belt-regulations-on-highways-to-be-tightened-1789698511</id>
            <summary type="text">இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் (Seat Belt) அணிவது கட்டாயமாக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் (Seat Belt) அணிவது கட்டாயமாக்கும் சட்டம் செப்டம்பர் 19 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கான ஓராண்டு கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலையில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது</h2><p>

அதன்படி, நாளை முதல் சீட் பெல்ட் இல்லாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6aadaaa-9084-45ba-89bf-48e7f0a87807/26-6aaca86bb7426.webp' /></p><p>

அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பொலிஸ் வலியுறுத்துகின்றது.
</p><p>
சீட் பெல்ட் அணியாமையினால் விபத்துகள் மற்றும் சம்பவங்களின் அபாயம் அதிகரிப்பதால், இந்த சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்று சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்த சட்டம் அபராதம் விதிப்பது அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பது என்ற ஒரே நோக்கத்திற்காக செயல்படுத்தப்படவில்லை என்றும், மாறாக சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் இருக்கைப் பட்டைகளை அணிய வேண்டும் என்றும், இருக்கைப் பட்டைகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய முயற்சிக்கக் கூடாது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/797835a0-9118-4aab-a4bf-11836cf9b5db/26-6aaca86c702b7.webp' /></p><p>

இதற்கிடையில், இருக்கைப் பட்டைகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களின் உற்பத்தியாளர்கள் இருக்கைப் பட்டைகளைப் பொருத்தாத காரணத்தால், அதை முழுமையாக செயல்படுத்த சிறிது காலம் தேவைப்பட்டது என்று தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுலா குலரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த வாகனங்களில் இருக்கைப் பட்டைகளைப் பொருத்துவதற்காகப் பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், கடைசி கால அவகாசமும் இன்றுடன் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதன்படி, நாளை முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டைகளை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T02:56:53+00:00</updated>
        </entry>
    </feed>
