<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-26T08:24:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு பெண்களை காரால் மோதி தப்பிச்சென்ற பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oic-arrested-for-abducting-two-young-women-1785051922"></link>
            <id>https://tamilwin.com/article/oic-arrested-for-abducting-two-young-women-1785051922</id>
            <summary type="text">இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்கள் மீது காரினை செலுத்தி விபத்துக்குள்ளாக்கி தப்பிச்செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்கள் மீது காரினை செலுத்தி விபத்துக்குள்ளாக்கி தப்பிச்செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரியான (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p> </p><p>ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும்&nbsp; விபத்து&nbsp;இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ad9207e-64eb-4e6d-8ceb-7bdc9c6a2622/26-6a65c118684d6.webp' />&nbsp;</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மதுபோதை சோதனையில், சந்தேகநபர் மதுபோதையில் காரை செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T08:11:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/web-editors-makeup-artists-police-offers-383-jobs-1785048273"></link>
            <id>https://tamilwin.com/article/web-editors-makeup-artists-police-offers-383-jobs-1785048273</id>
            <summary type="text">இலங்கை பொலிஸ் துணை சேவையில் நிலவும் 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2026 ஜூலை 10 ஆம் திகதியிடப்பட்ட அரச வர்த்தமானி விசேட அறிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸ் துணை சேவையில் நிலவும் 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
2026 ஜூலை 10 ஆம் திகதியிடப்பட்ட அரச வர்த்தமானி விசேட அறிவித்தல் எண் 2497-ன் படி, 177 துணை பொலிஸ் பரிசோதகர் (Sub-Inspector) பதவிகளுக்கும், 206 பொலிஸ் கான்ஸ்டபிள் (Police Constable) பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>&nbsp;விண்ணப்பங்கள்</h2><p>

</p><p>அதற்கான விண்ணப்பங்கள் 2026 ஒகஸ்ட் 14 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் இணையவழி (Online) முறையில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b22ee3c-7746-4e3c-8956-8ed4408ce525/26-6a65bcd8ca27a.webp' /></p><p>
</p><p>
துணை பொலிஸ் பரிசோதகர் பதவிகளுக்காக இணையத்தள வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, முறைமை பகுப்பாய்வு (Systems Analysis), நிரலாக்கம் (Programming), கணினி வன்பொருள் மற்றும் வலையமைப்பு, கிராபிக் வடிவமைப்பு, அளவையியல் (Quantity Surveying), இயந்திரவியல், உணவு வழங்கல் (Catering) மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், மருந்தாளர், மின்சார வரைதொழில்நுட்ப நிபுணர் (Electrical Draftsman), மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தாதியர் (Nurse) ஆகிய பதவிகளுக்கும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p></p><h2>வேலை வாய்ப்புகள்</h2><p>
</p><p>
அதேவேளை, பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்காக குளிர்சாதன மற்றும் காற்றோட்ட தொழில்நுட்ப நிபுணர், சாரதி, மின்னணு தொழில்நுட்ப நிபுணர், இயந்திர நிபுணர், கணினி இயக்குநர், வெல்டிங் தொழில்நுட்ப நிபுணர், ஒலியமைப்பு இயக்குநர் மற்றும் மேடை ஒளியமைப்பு தொழில்நுட்ப நிபுணர் உள்ளிட்ட பல தொழில்நுட்ப துறைகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca9736e-bbde-42e0-9af7-6607c13def1f/26-6a65bcd97b869.webp' /></p><p>

மேலும், ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் ஒப்பனை கலைஞர் (Makeup Artist) மற்றும் உடற்தகுதி பயிற்றுநர் (Fitness Instructor) பதவிகளுக்கும் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், 2026 ஒகஸ்ட் 14 ஆம் திகதிக்கு முன்னர் இணையவழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:53:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின படுகொலையின் சாட்சியே செம்மணி சமூக புதைகுழி: அருட்தந்தை மா. சத்திவேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-community-burial-witness-to-tamils-1785050280"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-community-burial-witness-to-tamils-1785050280</id>
            <summary type="text">செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இடம்பெற்ற தமிழின படுகொலையின் முக்கிய
சாட்சியாக அமைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வருகை வெறும்
கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இடம்பெற்ற தமிழின படுகொலையின் முக்கிய
சாட்சியாக அமைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வருகை வெறும்
கண்துடைப்பாகவோ அல்லது அரசியல் நாடகமாகவோ அமையக்கூடாது என சமூக நீதிக்கான
செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்
இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவரால் இன்று (26.07.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p></p><h2>தமிழின படுகொலையின் சாட்சி</h2><p>செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் நடந்தேறிய தமிழின படுகொலையின் சாட்சியாகும்.
ஒவ்வொரு நாளும் அங்கு அகழப்படும் போது எம்மவரின் அவல குரல் மட்டுமல்ல நீதிக்கான
குரலும் ஓங்கி ஒலிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1352c7c1-902a-4563-80f7-24c990e1408c/26-6a65b966d6fc9.webp' />&nbsp;</p><p> </p><p>இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின்
வருகை வெறும் கண்துடைப்பானதாகவோ, மேற்குலக நாடுகளின் அரசியல் நாடகத்தின் ஓர்
அங்கமாகவோ, தூது குழுவினரின் சுற்றுலாவாகவோ அமைந்துவிடக்கூடாது.
</p><p>
குழுவினர் கண்ட சாட்சிகள், பெற்றுக்கொண்ட அறிக்கை, மக்களின் நீண்ட கால குரல்
என்பவற்றை ஏற்று இலங்கையில் யுத்த குற்றங்களோடு இனப்படுகொலையும்
நிகழ்ந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதுவே
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கௌரவமாக அமையும்.
</p><p>
இலங்கையில் கடந்த 78 ஆண்டு காலமாக தொடர்ந்த தமிழின அழிப்பு 2009
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையாக உச்சம் தொட்டது என்பதை சர்வதேசம் அறியும்.
ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும், தற்போதை ஆட்சியிலும் இன அழிப்பு
தொடர்கின்றது என்பதுவே உண்மை.</p><p>

தமிழர்கள் முகம் கொடுத்தது மனித உரிமை மீறல்களுக்கு மட்டுமல்ல. இங்கு நன்கு
திட்டமிட்ட இனப்படுகொலையே நிகழ்ந்தது. இது பிராந்திய அரசியலுக்காகவும்,
சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கத்திற்காகவும் அவர்களின் ஆயுத மற்றும் வழிகாட்டல்
பங்களிப்புடனும் அவர்களின் மேற்பார்வையுடனுமே நிகழ்ந்தன என்பது ஐரோப்பிய
ஒன்றியத்திற்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.</p><p>

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாகவே ஐ.நா பொதுச் செயலாளர்
பாங்யூ மூன் இலங்கைக்கு வந்தது மட்டுமல்ல. யுத்தம் தொடர்பான கருத்தாடல்கள்
ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்றைய நாள் வரை தொடர்ந்து நடைபெறுகின்றன.</p><p></p><h2>நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள் </h2><p> மனித உரிமை
பேரவையால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் ஆலோசனைகள் என்பவற்றை இலங்கை
ஆட்சியாளர்கள் திரும்பியும் பார்க்காத நிலை தொடர்கின்றது. இதனால் இலங்கை அரசு
மீதும் ஆட்சியாளர்கள் மீதும் தமிழர்கள் நம்பிக்கை இழந்த நிலையிலேயே ஐரோப்பிய
ஒன்றிய தூத்துக்குழுவினரின் வருகை நிகழ்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f67ba8a3-8742-4f3e-a7d5-e2a7c47d4ef2/26-6a65b96796501.webp' /></p><p> கடந்த வருடம் ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க செம்மணிக்கு வருகை தந்த போதும் அதனால்
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நன்மையும் இதுவரை கிட்டவில்லை என்பதையும்
வெளிப்படுத்துகின்றோம்.</p><p>

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பேரினவாத அரசு முன்னெடுத்த கொடிய யுத்தத்தின்
போது யுத்தக்குற்றங்களோடு திட்டமிட்ட இனப்படுகொலையே நிகழ்ந்தது என்பதற்கு
தமிழர் தாயகத்தில் இதுவரை அகழப்பட்டதும் தற்போது அகழப்பட்டு கொண்டிருக்கின்ற
செம்மணி சமூக புதைகுழியும் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பாரிய
இனப்படுகொலையும் போதுமான சாட்சி.</p><p> சர்வதேச தயவோடு இயங்கும் ஐ.நா
மனித உரிமை பேரவை உட்பட அனைத்து அமைப்புகளும் "யுத்தக்குற்றம், இனப்படுகொலை"
எனும் சொற்களை வேண்டுமென்றே தவிர்த்து இலங்கை தொடர்பில் கடந்த 17
வருடங்களாக உரையாடல்கள் நிகழ்வதை நாம் அறிவோம். </p><p>இச்சந்தர்ப்பத்தில் மானிட
கௌரவம் கருதியும் தமிழ் மக்களின் எதிர்பார்க்கும் நீதியை
முன்னிலைப்படுத்தியும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் யுத்த குற்றங்களோடு,
இனப்படுகலையும் நிகழ்ந்தது என்பதை உடனடியாக சர்வதேசத்திற்கு தெரிவித்து இது
தொடர்பில் விசேட கவனம் செலுத்த அழுத்தம் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.</p><p>

சர்வதேச வல்லரசுகளின் அரசியல் நலன் சார்ந்தும், பிராந்திய நாடுகளின் நலன்
காரணமாகவுமே "யுத்த குற்றம்", "இனப்படுகொலை" எனும் சொற்கள் வேண்டும் என்று
தவிர்க்கப்படுவதன் காரணமாக தமிழர்களுக்கான நீதி செயற்பாடுகள் ஐ.நா மனித உரிமை
பேரவைக்குள் மட்டும் முடங்கியுள்ளது.</p><p> ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் அதற்கு
சவால் விடுத்து ஐ.நா மனிதர்கள் பேரவைக்கு வெளியில் தமிழர்களுக்கான நீதி
செயற்பாடுகள் தொடர வழி திறக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களின் குரலுக்கு செவிமடுக்காது வல்லரசுகளின் அரசியல்
தேவையை கருத்தில் கொண்டு இலங்கை அரசினை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினை
தொடர்ந்தால் தமிழர்கள் தமது நீதிக்கான செயற்பாட்டிற்கு மாற்று வழிகளையும்,
மாற்று சக்திகளையும் அணுக வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர் என்பதையும்
கூற விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் ஆறாவது வாரமாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-palali-junction-for-release-lands-1785051166"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-palali-junction-for-release-lands-1785051166</id>
            <summary type="text">வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய
தினம் (26.07.2026) ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 36...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய
தினம் (26.07.2026) ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை
விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.</p><h2>போராட்டக்காரர்கள் அனுபவிக்கும் துன்பநிலை</h2><p>
அதேவேளை கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்தினார்கள் என பலாலி பொது
நோக்கு மண்டபத்தில் காணப்பட்ட வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான குடிநீர்
தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அவ்விடத்தில்
இருந்து எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்திருப்பதனால், இன்றைய தினம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் மற்றும் மலசலகூடங்கள் இன்றி பல்வேறு
இன்னல்களையும் அனுபவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p></p><p>
அத்துடன், தற்காலிக கொட்டகை அமைக்கவும், தரப்பாள் கட்ட இரண்டு தடிகளை நாட்ட
கூட பொலிஸார் அனுமதிக்காததால், கைகளினால் தரப்பாளை பிடித்தவாறு வெயிலின்
கொடுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு முதியவர்கள் உள்ளிட்டவர்களும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய் கோர விபத்தில் பலி - ஆபத்தான நிலையில் குழந்தைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dampulla-accident-mother-death-children-injury-1785040049"></link>
            <id>https://tamilwin.com/article/dampulla-accident-mother-death-children-injury-1785040049</id>
            <summary type="text">தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று (25) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணின் இரு குழந்தைகளும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பாதசாரி மீது மோதி விபத்து</h2><p>
</p><p>
தம்புள்ளை நோக்கிப்பயணித்த டிப்பர் ரக லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று பாதசாரியான பெண் மற்றும் இரு குழந்தைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a321cc-ef63-4f9f-91d0-df32451f1b8d/26-6a65936d01ede.webp' /></p><p>நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக கதிர்காமம் செல்ல தயாராக ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்காக தம்புள்ளை நகருக்கு சென்றபோது விபத்திற்குள்ளாகியுள்ளனர்.&nbsp;</p><p> 

இதன்போது மூவரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் உயிரிழந்துள்ளார்.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் கபுவத்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான டி.எம். திலானி அரோஷா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய்</h2><p>

அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகன்களும் இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8266f406-ffcf-47d1-a937-56a5f3a6ad49/26-6a65936da806d.webp' /></p><p>இதேவேளை, 19 வயதான மூத்த மகன் தம்புள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>இவர் பிரபல கல்லூரியில் பயிலும் ஒரு திறமையான தடகள வீரர் என்றும், இந்த ஆண்டு நடைபெறும் உயர்தர பரீட்சைக்கு தயாராகி வருவதாகவும்&nbsp;பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>
குறித்த பெண் குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர், எட்டு நாட்களுக்கு முன்பு இலங்கை திரும்பியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்த விபத்து தொடர்பாக டிப்பர் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> </p><p></p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T07:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன..! திருகோணமலையில் அடையாள உண்ணாவிரத போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-has-this-government-said-in-the-past-1785048802"></link>
            <id>https://tamilwin.com/article/what-has-this-government-said-in-the-past-1785048802</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன? ஜனாதிபதி தேர்தலில் சொன்னபடி
செய்தார்களா என்ற அடிப்படையில் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் அடையாள
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன? ஜனாதிபதி தேர்தலில் சொன்னபடி
செய்தார்களா என்ற அடிப்படையில் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் அடையாள
உண்ணாவிரத போராட்டம் இன்று (26) இடம்பெற்றது.
</p><p>
திருகோணமலை மக்கள் சமூக செயற்பாட்டாளர் உண்ணாவிரத வேந்தன் இதனை ஏற்பாடு
செய்தார்.</p><h2>ஏழு கோரிக்கைகள்</h2><p>

இதில் பிரதானமாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு தீர்வு கோரியும்
உண்ணாவிரதம் இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54827cf6-db1c-4419-8042-4c87593ddd8c/26-6a65b0381010e.webp' /></p><p>
</p><p>
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வெடி
மருந்து மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர் இதனை தடை
செய்ய வேண்டும், அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், செம்மனி
மனித புதை குழியில் 500 க்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் எடுக்கப்பட்டன உரிய
விசாரணை இதற்காக தேவை இதனை செய்தீர்களா?,</p><p>

மந்த கதியில் இடம் பெறும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை துரித விசாரணை இடம் பெற வேண்டும், வடகிழக்கு உட்பட நாட்டின்
அனைத்து மாகாண சபை தேர்தல்களும் இடம் பெற வேண்டும், நாட்டின் அனைத்து
பிரதேசத்தையும் போதையற்ற நாடாக மாற்ற வேண்டும் இதனை செய்தீர்களா என பல்வேறு
தரப்பட்ட கேள்விகளை முன்வைத்து அரசாங்கத்திடம் கோரிக்கையாக முன்வைத்து
 என்றும் தெரிவித்திருந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T06:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை திருகோணமலையிலிருந்து உருவாக்க வேண்டும் - இம்ரான் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-mp-statement-about-cricket-players-1785047132"></link>
            <id>https://tamilwin.com/article/imran-mp-statement-about-cricket-players-1785047132</id>
            <summary type="text">எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட்
அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து
உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட்
அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து
உருவாக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்
மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
</p><p>
திருகோணமலையின் அடுத்த கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் புதிய
அத்தியாயமாக உள்ளதாக நேற்று (25.07.2026) கிண்ணியாவில் இடம்பெற்ற கடினப் பந்து
போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.</p><p></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் கடினப்பந்து கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்தி,
திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை உயர்மட்ட போட்டிகளுக்கு
தயார்படுத்துவதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.</p><h2>உயரிய இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயணம்</h2><p>

எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட்
அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து
உருவாக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இது ஒரு கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல திருகோணமலை மாவட்ட விளையாட்டின்
எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு புதிய பயணமாகும்.
</p><p>
இந்த சிறப்புமிக்க நிகழ்வை மிக நேர்த்தியாகவும், வெற்றிகரமாகவும் ஏற்பாடு
செய்த கிண்ணியா பிரீமியர் லீக் (KPL) ஏற்பாட்டுக் குழுவினருக்கும், இதற்கு
பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த
நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T06:50:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் - வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allegations-against-the-president-bar-association-1785047381"></link>
            <id>https://tamilwin.com/article/allegations-against-the-president-bar-association-1785047381</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை
என்று தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை
என்று தெரிவித்துள்ள அச்சங்கம், நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி
மேற்கொள்ளப்படும் இத்தகைய அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறுகளை வன்மையாகக்
கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
</p><p>
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொட விதாரணவினால்
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்
வகையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p>குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p>&nbsp;</p><h2>பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கம்</h2><p> "பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில், நாடாளுமன்ற சிறப்புரிமைகளைத்
துஷ்பிரயோகம் செய்து இத்தகைய பொய்யான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது
கவலைக்குரியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d664e20-3683-434c-a1c1-2b00777f21fe/26-6a65ada6924d8.webp' /></p><p>
</p><p>
நீதித்துறையின் சுதந்திரத்தையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்
கௌரவத்தையும் பாதுகாப்பதில் நாட்டின் சட்டச் சமூகம் என்றும் உறுதியுடன்
ஒன்றுபட்டு நிற்கும்.
</p><p>
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை அதிகரிப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள், முறையான
நிறுவனத் தேவை மற்றும் அனைத்துப் பங்குதாரர்களின் பரந்த
கலந்தாய்வுகளுக்கேற்பவே கொண்டுவரப்பட வேண்டுமே தவிர, தற்காலிக
சூழ்நிலைகளுக்காகவோ அல்லது அவசர கோலத்திலோ மேற்கொள்ளப்படக் கூடாது.</p><h2>நாடாளுமன்ற சிறப்புரிமை</h2><p>எந்தவொரு அரசு ஆட்சியில் இருந்தாலும், ஜனநாயகம், நீதித்துறைச் சுதந்திரம்
மற்றும் மனித உரிமைகளுக்காக சங்கம் தொடர்ந்தும் குரல்கொடுத்து
வந்துள்ளதுடன், நாம் எப்போதுமே அரசியல் செய்ததில்லை. இனிமேலும்
செய்யப்போவதில்லை.</p><p>
நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற பாதுகாப்புக் கவசத்தைத் தவிர்த்து,
இக்குற்றச்சாட்டுகளைப் நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாக கூறுமாறு
நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொட விதாரணவுக்குச் சவால்
விடுக்கின்றோம். அவ்வாறு கூறும் பட்சத்தில் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T06:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதால் ஜப்னா கிங்ஸ் கழகத்தின் ஒப்பந்தம் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-kings-club-contract-cancelled-1785047422"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-kings-club-contract-cancelled-1785047422</id>
            <summary type="text">இலங்கை பிரீமியர் லீக்கில் ஜப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பிரீமியர் லீக்கில் ஜப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
</p><p>
ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதன்படி, வீரர்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவது உட்பட, அனைத்துப் பொறுப்புகளையும் ஜப்னா கிங்ஸ் அணிக்குச் சொந்தமான நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர் அண்மையில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f0cd39f-8d2d-4d0c-bd8c-723dbb563eaa/26-6a65a9c7b73cf.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகத்தில் சிக்கியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1025-imported-vehicles-stuck-at-hambantota-port-1785041921"></link>
            <id>https://tamilwin.com/article/1025-imported-vehicles-stuck-at-hambantota-port-1785041921</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவிக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவிக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சுங்க விதிமீறல்கள்</h2><p>இந்த வாகனங்களில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாகியுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக எந்தவித சுங்க விதிமீறல்களும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03e5ccaa-3ce2-455a-ab0d-7b8852672a3f/26-6a65a61ad642e.webp' /></p><p>சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ், உரிய காலத்திற்குள் விடுவிக்கப்படாத வாகனங்களை ஏலம் விடவோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்யவோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாதத்திற்குள் உரிய வரிகளை செலுத்தி விடுவித்துக்கொள்ள வேண்டும்.</p><p> அவ்வாறு செய்யத்தவறினால், அந்த பொருட்களை விற்பனை செய்து அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலை&nbsp;</h2><p>சம்பந்தப்பட்ட வரிகளைச் செலுத்திய பிறகு மீதமுள்ள பணத்தை துறைமுகம் மற்றும் களஞ்சிய கட்டணங்களை செலுத்த பயன்படுத்தலாம்.

அந்த பணம் செலுத்துதல்களுக்கு பிறகு ஏதேனும் பணம் மீதமிருந்தால், அவை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>இருப்பினும், நியாயமான காரணங்களால் சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் அறிவித்தால், அவை தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-commemoration-event-jaffna-initiative-1785044002"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-commemoration-event-jaffna-initiative-1785044002</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில்&amp;nbsp; தமிழ் சிறைக் கைதிகளின் சிறைப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வும், கறுப்பு ஜூலை
சமூகப்படுகொலை நினைவேந்தலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில்&nbsp; தமிழ் சிறைக் கைதிகளின் சிறைப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வும், கறுப்பு ஜூலை
சமூகப்படுகொலை நினைவேந்தலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நினைவேந்தல் நிகழ்வானது, நேற்று(25.07.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p>இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின்
நினைவாக சுடர்களும் ஏற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a5b0a1-3921-47ac-be72-d3d1b795a4b6/26-6a659f49c075b.webp' /></p><p>நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக
செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp;</p><p>இந்த நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:20:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்தை மிரள வைத்த ஈழத்தமிழர் அமைச்சர்களான கரி - உமா குமரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eelam-tamil-ministers-draw-global-attention-1785035366"></link>
            <id>https://tamilwin.com/article/eelam-tamil-ministers-draw-global-attention-1785035366</id>
            <summary type="text">இசுட்ராட்ஃபோர்டு-போ (Stratford and Bow) தொகுதியின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன், வெளியுறவுத் துறையின் இராஜாங்க அமைச்சராகவும் உதவி கொற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இசுட்ராட்ஃபோர்டு-போ (Stratford and Bow) தொகுதியின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன், வெளியுறவுத் துறையின் இராஜாங்க அமைச்சராகவும் உதவி கொறடாவாகவும் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

அவர் தொடர்ந்து Stratford and Bow தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார். எனினும்,, வெளியுறவு விவகாரக் குழுவிலிருந்து விலகுவதோடு, எழுத்துப்பூர்வ நாடாளுமன்றக் கேள்விகளைக் கேட்கும் உரிமையையும் இழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உமா குமரனின் இந்த நியமனம், வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) நாடாளுமன்ற கீழ் செயலாளராகவும் பணியாற்றும் வகையில் அமைந்துள்ளது. </p><p>

இதற்கான ஒப்புதலை மன்னர் வழங்கியதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரிவான அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் பார்க்கப்படுகின்றது. </p><p>

போரால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து, பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிட்டுள்ளது. 

இதனால், இவர் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பெண்ணாகவும், ஈழத் தமிழர்களின் சர்வதேசக் குரலாக பார்க்கப்படுகின்றார். </p><p>இது போன்ற பல தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/k7lBZ1lnYto" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T06:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கத்தலைவருக்கு எதிரான ஆளும் கட்சியின் குற்றச்சாட்டுகள்! அரசுக்கு விடுத்துள்ள சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bud-challenges-govt-prove-it-in-parliament-1785042354"></link>
            <id>https://tamilwin.com/article/bud-challenges-govt-prove-it-in-parliament-1785042354</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் தைரியம் இருந்தால் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் தைரியம் இருந்தால் அவற்றை நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாக கூறுமாறும் முன்னாள் எம்.பி. பிரேம்நாத் சி. தொலவத்த&nbsp;சவால் விடுத்துள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்று (25.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

</p><p></p><h2>சட்டத்தரணிகள் சங்கத்தின் எதிர்ப்பு</h2><p>
</p><p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் முன்மொழிவுக்கு இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d0e873-17f8-4b13-b075-3407074cfb78/26-6a659a1f6350f.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் ஒன்றைப்
போட்டுக்கொண்டு, மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப்
போட்டியிடுவதற்காகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இவ்வாறு
செயற்படுகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரால் நாடாளுமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.</p><p>இத்தகையக் கூற்றுக்கள் மிகவும் வேடிக்கையானவை. நீதியரசர்களின் பதவிக் காலத்தை
அதிகரிக்கும் நடவடிக்கைக்கான எதிர்ப்பானது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்
தலைவரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல.</p><p>மாறாக, களுத்துறை, கொழும்பு உள்ளிட்ட
பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சட்டச் சமூகமும்
ஒன்றிணைந்தே இதற்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.</p><p></p><h2>அரசியல் உள்நோக்கம்</h2><p>
</p><p>
அத்துடன், அரசின் இந்தத் தீர்மானத்துக்கு நீதிபதிகள் சங்கமும்
உத்தியோகபூர்வமாக எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்
தலைவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவே எதிர்ப்பை வெளியிடுகின்றார்
என்றால், நீதிபதிகள் சங்கத்தில் உள்ள எந்த நீதிபதி பதவி விலகி மாகாண சபைத்
தேர்தலில் போட்டியிடப் போகின்றார்?</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654cfae0-fbe0-47ac-a390-0d500888b939/26-6a659a20124b1.webp' /></p><p>நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்களைப் பரப்பாமல்,
இந்தக் குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாகக் கூறுமாறு நான்
சவால் விடுக்கின்றேன். </p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிராந்திய சட்டத்தரணிகள்
சங்கங்கள் மற்றும் சர்வதேச சுயாதீன அமைப்புகள் அனைத்தும் அரசியல்
உள்நோக்கத்துக்காக அன்றி, நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறைச்
சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவே குரல் கொடுத்து வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T06:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pralhad-joshi-named-india-s-education-minister-1785041380"></link>
            <id>https://tamilwin.com/article/pralhad-joshi-named-india-s-education-minister-1785041380</id>
            <summary type="text">மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக உள்ள
பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக கூடுதல்
பொறுப்பேற்றுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக உள்ள
பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக கூடுதல்
பொறுப்பேற்றுள்ளார்.
</p><p>இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசு தலைவர் திரௌபதி
முர்மு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>இந்தியாவின் புதிய கல்வி அமைச்சர்</h2><p>

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைத்
தொடர்ந்து, முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab031950-09fc-4e50-8ef7-56d80b31cc32/26-6a6594ae59295.webp' />&nbsp;&nbsp;</p><p>'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் தலைமையில் 'ஜென் ஜி' (Gen Z) இளைஞர்கள்
நடத்திய தீவிரமான போராட்டங்களின் அழுத்தத்தாலேயே இந்த திடீர் முடிவு
எட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களின்
தொடர் எதிர்ப்பால், 36 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு
வந்துள்ளது.</p><p>
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவரான பிரல்ஹாத் ஜோஷி, இதற்கு
முன்னதாக நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப்
பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார். </p><p>தற்போது உணவு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளுடன் சேர்த்து கல்வித்
துறையையும் இவர் கவனித்துக் கொள்கிறார்.</p><p>
பரீட்சை முகமைகளின் செயல்பாடுகளைச் சீரமைப்பது, கசிவு விவகாரங்களால்
பாதிக்கப்பட்ட மாணவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது மற்றும் வரவிருக்கும்
மாநிலத் தேர்தல்களுக்கு முன் இளைஞர்களின் கொந்தளிப்பைத் தணிப்பது ஆகியவையே
புதிய கல்வி அமைச்சரின் முதன்மைப் பணிகளாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-26-vehicles-presidential-secretariat-1785033750"></link>
            <id>https://tamilwin.com/article/information-26-vehicles-presidential-secretariat-1785033750</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் இதுவரை சரிபார்க்கவில்லை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் இதுவரை சரிபார்க்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p> தேசிய தணிக்கை அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>வாகனங்களின் உண்மை விபரம்</h2><p>
</p><p>
இந்த வாகனங்கள் காணாமல்போயுள்ளதா அல்லது ஏதேனும் நிறுவனம் அல்லது தனிநபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த எழுத்துப்பூர்வ ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/049b1db3-8e2d-4b45-b79b-ff946ad2ed4d/26-6a659b6df1a3a.webp' /></p><p>

 இந்த 26 வாகனங்களை சரிபார்க்க குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதாக, ஜனாதிபதி செயலகம் 2025, மே 28 அன்று தணிக்கைக்கு தெரிவித்திருந்ததாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
</p><p>
இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நிலவரப்படி, குறிப்பிட்ட வாகனங்கள் உண்மையில் இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க முடியவில்லை என்று கூறப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை - அறிகுறிகளுடன் 18 பேர் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cancer-screening-for-plantation-workers-1785039842"></link>
            <id>https://tamilwin.com/article/cancer-screening-for-plantation-workers-1785039842</id>
            <summary type="text">ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான 8 தோட்டங்களை சேர்ந்த சுமார் 850
தோட்டத்தொழிலாளர்களுக்கு வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப்புற்றுநோய் பரிசோதனைகள் நடத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான 8 தோட்டங்களை சேர்ந்த சுமார் 850
தோட்டத்தொழிலாளர்களுக்கு வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப்புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p>குறித்த பரிசோதனைகள் நேற்றைய தினம் (25.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புற்றுநோய் பரிசோதனை&nbsp;</h2><p>
தோட்டத்தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ஹட்டன்
பிளான்டேசன் நிறுவனமும் இலங்கை புற்றுநோய் சங்கமும் இணைந்து இந்த விசேட
வைத்திய முகாமை ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தன.</p><p>இதன்போது புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த முகாமில் கலந்து கொண்ட 850 பேரில், சுமார் 400 பேருக்கு மார்பகப்
புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொண்ட போது, மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப
அறிகுறிகளுடன் 8 பேரும், வாய்ப்புற்றுநோய்க்கான அறிகுறிகளுடன் 10 பேரும்
அடையாளம் காணப்பட்டதாக ஹட்டன் பிளான்டேசன் மனிதவள முகாமையாளர் டிலான் பத்மசிறி
தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>அடையாளம் காணப்பட்ட அனைவரையும் மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக
அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>மேலும், வைத்திய முகாமில் பங்கேற்ற தொழிலாளர்களின் வசதிக்காக இலவச
போக்குவரத்து, தேநீர் மற்றும் உணவு வசதிகளும் ஹட்டன் பிளான்டேசன் நிறுவனத்தால்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
</p><p>இந்த வைத்திய முகாம், தோட்டத் தொழிலாளர்களிடையே புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே
கண்டறிந்து, துரிதமான சிகிச்சைகளை வழங்க வழிவகுக்கும் முக்கியமான சுகாதார
முயற்சியாகக் கருதப்படுகிறது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T05:14:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த திலித் ஜயவீர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dilith-jayaweera-meets-indian-parliamentarian-1785039411"></link>
            <id>https://tamilwin.com/article/dilith-jayaweera-meets-indian-parliamentarian-1785039411</id>
            <summary type="text">இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சசி தரூருக்கும், சர்வஜன
அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சசி தரூருக்கும், சர்வஜன
அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவுக்கும்
இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சந்திப்பானது நேற்று முன்தினம் (24.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விசேட சந்திப்பு</h2><p>
</p><p>
கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகத்தில்&nbsp; இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac59598b-01e7-49f1-89b3-bf1a7fb4fcca/26-6a658b026909c.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் - அலங்கார வளைவு - புதிய மணிக்கோபுரம் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-life-pathar-kandal-holy-neekilaar-temple-1785039116"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-life-pathar-kandal-holy-neekilaar-temple-1785039116</id>
            <summary type="text">மன்னார் மறைமாவட்டம் அளவக்கை பங்கின் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித
நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை
நேற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மறைமாவட்டம் அளவக்கை பங்கின் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித
நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை
நேற்றுமுன் தினம் (24.07.2026) திறந்து வைக்கப்பட்டன.
</p><p>புதிதாக அமைக்கப்பட்ட ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய
மணிக்கோபுரம் ஆகியவை மன்னார் மறை மாவட்ட
ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.</p><p></p><h2>திருப்பலி ஒப்புக்கொடுப்பு</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து ஆயரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.</p><p>

இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்து நேச ரட்னம் அடிகளார்
இ ஆயரின் செயலர் அருட்தந்தை அன்ரனி அடிகளாரும் கலந்து கொண்டிருந்தனர்.
</p><p>
அளவக்கை பங்குத்தந்தை அருட்பணி. யேசுபரநாதன் (டிக்சன்) அடிகளார் மற்றும் ஆலய
பங்கு மக்களின் பூரண ஒத்துழைப்பாலும் குறித்த நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கு
செய்யப்பட்டு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T04:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் - முஸ்லிம் பேரவையின் கூட்டணியின் பிரதிநிதியாக பெயரிடப்பட்டுள்ள இராதாகிருஷ்ணன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/radhakrishnan-representative-tamil-muslim-alliance-1785038375"></link>
            <id>https://tamilwin.com/article/radhakrishnan-representative-tamil-muslim-alliance-1785038375</id>
            <summary type="text">தமிழ் - முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில்
நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ்
முற்போக்குக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் - முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில்
நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ்
முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(25.07.2025) நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுக்
கூட்டத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தமிழ் முற்போக்குக் கூட்டணி</h2><p> தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ் பேசும் மக்களின் அரசியல்
பேரவையில் கூட்டணியின் பிரதிநிதியாக, அதன் பிரதித் தலைவரும் மலையக மக்கள்
முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் பெயரிடப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c27ad58c-7047-442b-bcee-1198fefb2a3a/26-6a65888178396.webp' /></p><p>

மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினரான பரத்
அருள்சாமியும் இந்தப் ப்பேரவையில் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன்,
இராதாகிருஷ்ணன் எம்.பி.க்குத் துணையாகச் செயற்படுவார் என்றும் கூட்டணியின்
தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>[BGUOTJ1</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T04:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் - பயணப்பொதிகளில் சிக்கிய பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chinese-national-was-arrested-srilanka-airport-1785038140"></link>
            <id>https://tamilwin.com/article/chinese-national-was-arrested-srilanka-airport-1785038140</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர்&amp;nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.மலேசியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் AK-047 மூலம் இன்று காலை (26) வருகை தந்தபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பயணப்பொதிகளில் சிக்கிய பொருள்</h2><p>40 வயதான அந்த சந்தேகநபர், தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகளைக் கொண்ட 201 சிகரெட் கார்ட்டூன்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad261fb7-cb69-488e-ba7b-855e2a4f9d9e/26-6a658a67f0305.webp' /></p><p>இதனையடுத்து சந்தேகநபர் இந்த சிகரெட் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் "பச்சை வழி" ஊடாக எடுத்துச் செல்ல முயன்ற போது&nbsp;விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 630,000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p>சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T04:17:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individual-who-defrauded-sri-lanka-of-700m-usd-1785028322"></link>
            <id>https://tamilwin.com/article/individual-who-defrauded-sri-lanka-of-700m-usd-1785028322</id>
            <summary type="text">இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. </p><p>

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி இந்த பாரிய மோசடி நடவடிக்கையில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மீட்கப்பட்ட&nbsp; பணம் மற்றும் கார்&nbsp;</h2><p> </p><p>

இந்த பாரிய அளவிலான நிதி மோசடியின் ஊடாக, நாட்டின் 21 முன்னணி நிறுவனங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றில் 6 நிறுவனங்களின் தொடர்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் இயக்குநராக நடித்து இந்த மோசடியை வழிநடத்தியதாக தெரிவித்து பெஸ்ஸி முகமது என்ற சந்தேக நபர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/113d312f-70d6-47b1-8e6f-1bdef142ea2c/26-6a65620200cda.webp' /></p><p> </p><p>

குறித்த நபரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு பணம் மற்றும், 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார், தங்கப் பொருட்கள் ஆகியவற்றை குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள 36 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகளில் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

எனினும், அந்த பணத்தை கொண்டு நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட எந்தபொருட்களும் சுங்கப்பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் இலங்கையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-month-hotter-meteorological-department-1785036732"></link>
            <id>https://tamilwin.com/article/next-month-hotter-meteorological-department-1785036732</id>
            <summary type="text">அடுத்த மாதம் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின்&amp;nbsp;பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.&amp;nbsp;இது தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின்&nbsp;பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>எல் நினோ நிலை பலவீனமான நிலையிலிருந்து மிதமான நிலைக்கு வளர்ந்து வருகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>கவனம் தேவைப்படும் அளவில்&nbsp;வெப்பக் குறியீடு</h2><p>

இதேவேளை, இன்றைய தினம் (26.07.2026) கிழக்கு மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பக் குறியீடு கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p> இந்த நிலையில் குறித்த நிலைமை தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்சியை தக்கவைக்க தினந்தோறும் மக்களை ஏமாற்றும் திசைகாட்டி அரசு - சஜித் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-accuses-npp-government-deceiving-people-1785037013"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-accuses-npp-government-deceiving-people-1785037013</id>
            <summary type="text">திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத்
தக்கவைக்கத் தினமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்றும்
எதிர்க்கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத்
தக்கவைக்கத் தினமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்றும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(25.07.2026) ஹொரவ்பொத்தானை, வகொல்லாகொட போதிரூக்காராம மகா விகாரையில் நடைப்பெற்ற தர்ம போதனை
மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்
இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

</p><p></p><h2>விவசாயிகளை அவமதிக்கும் அரசு</h2><p><span style="font-size: 14px;">டித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதாகக் கூறிவிட்டு, அரசினர் நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூக வலைத்தளங்களில் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.</span></p><p>
விவசாயிகளை "கடவுள்" என்றும், நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை
தருவதாகக் கூறியவர்கள், இன்று விவசாயிகளைப் பார்த்து "கசிப்புக்காரன்" என்று
அவமதிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c79be60-3b10-4447-af7c-a32ae19ba64c/26-6a6583428b59b.webp' /></p><p>
நெல் கிலோ ஒன்றுக்கு 137 ரூபா செலவாகும் என விவசாய அமைச்சரே கூறிய போதிலும்,
120 ரூபா விலையே வழங்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 17 ரூபா
நட்டம் ஏற்படுகின்றது.</p><p>மேலும், அரசுக்குச்
சொந்தமான நெல் களஞ்சியங்கள் வெளிநாட்டு அரிசியால் நிரப்பப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p>நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வின்போது ரூபா 2 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான 100 சீமெந்து பொதிகளையும் அவர் அன்பளிப்பாக வழங்கியள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் இரகசியமாக சுற்றிவளைக்கப்பட்ட விடுதி : பெண் உட்பட இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotel-surrounded-in-amparai-two-arrested-1785037391"></link>
            <id>https://tamilwin.com/article/hotel-surrounded-in-amparai-two-arrested-1785037391</id>
            <summary type="text">அம்பாறை நகரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விடுதியொன்றை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, அங்கு முகாமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை நகரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விடுதியொன்றை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். </p><p>இதன்போது, அங்கு முகாமையாளராக பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>உளவாளி ஒருவரை பயன்படுத்தி&nbsp;திட்டமிட்ட&nbsp;கைது</h2><p>
</p><p>
 

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, உளவாளி ஒருவரை பயன்படுத்தி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca33856f-20ef-43fc-af3a-a9e5edf0c2cf/26-6a658250bfb74.webp' /></p><p>

 

கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
 

சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின்
நேரடி வழிகாட்டலில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி,
அம்பாறை பிரிவு 1 உதவி பொலிஸ் அதிகாரி சம்பத் விக்கிரமரத்ன, அம்பாறை தலைமையக
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் அம்பாறை குற்றப் புலனாய்வுப் பிரிவின்
பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ்.டி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர்
இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:44:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-drop-in-passport-supply-srilanka-1785035391"></link>
            <id>https://tamilwin.com/article/massive-drop-in-passport-supply-srilanka-1785035391</id>
            <summary type="text">கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன....</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டுகள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>விநியோகிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுகள்</h2><p> கடந்த ஜனவரியில் 65,351 கடவுச்சீட்டுகளும், பெப்ரவரியில் 54,161 கடவுச்சீட்டுகளும், மார்ச்சில் 50,356 கடவுச்சீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4056a50-1e9c-4cea-9630-efabe38dad6a/26-6a657a8244aff.webp' /></p><p>

அதன்படி, இந்த காலாண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 169,868 ஆகும்.

எனினும், 2025 ஜனவரியில் 53,216, பெப்ரவரயில் 74,402 மற்றும் மார்ச்சில் 77,128 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, குறித்த காலாண்டில் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 204,746 ஆகும்.</p><p>

அதன்படி, முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டு விநியோகம் சுமார் 34,878 அளவில் குறைந்துள்ளது.</p><p>

அதிலும் குறிப்பாக ஜனவரி மாதத்தைத் தவிர, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த கடவுச்சீட்டு வழங்கல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.</p><p> பெப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்ட ஸ்திரத்தன்மையே கடவுச்சீட்டு வழங்கல்களில் குறைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.</p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>
அதே போன்று 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவது, நாட்டிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு வழிவகுத்துள்ளது என்றும் நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/703d4886-01e7-4d3c-bff3-90e8d479e063/26-6a657a82edf89.webp' /></p><p>
</p><p>
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவுகளின்படி, ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரை 609,446 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>சமீபத்திய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட ஆண்டுகள் 2022 மற்றும் 2023 ஆகும். </p><p>இந்த ஆண்டுகளில், முறையே 911,757 மற்றும் 908,722 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இருப்பினும், 2024-ல் இது 586,970 ஆகக் குறைந்திருந்தது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T03:10:36+00:00</updated>
        </entry>
    </feed>
