<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-10T10:22:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-for-students-selected-for-universities-1789032064"></link>
            <id>https://tamilwin.com/article/notice-for-students-selected-for-universities-1789032064</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.</p><h2>செப்டெம்பர் 17ஆம் திகதிக்கு முன்</h2><p> 

இந்தச் சுற்றின் கீழ் பல்கலைக்கழகப் படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 2026 செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f9b8ee5-7aa0-445b-b45e-60adbcd543a9/26-6aa27ce776c1e.webp' /></p><p>

சம்பந்தப்பட்ட பெறுபேறுகள், பல்கலைக்கழக அனுமதி மற்றும் பதிவு செய்வதற்குத் தேவையான மேலதிக விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் <a href="www.ugc.ac.lk" target="_blank">www.ugc.ac.lk</a> ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:50:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajnath-singh-seetha-amman-temple-in-nuwara-eliya-1789032821"></link>
            <id>https://tamilwin.com/article/rajnath-singh-seetha-amman-temple-in-nuwara-eliya-1789032821</id>
            <summary type="text">இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்
ராஜ்நாத் சிங் இன்று(10.9.2026) நுவரெலியாவிற்கு விஜயம் செய்து வரலாற்றுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்
ராஜ்நாத் சிங் இன்று(10.9.2026) நுவரெலியாவிற்கு விஜயம் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க
சீதையம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
</p><p>
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக செப்டம்பர் 8ஆம் திகதி இலங்கைக்கு வருகை
தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அரச தலைவர்களுடன்
இருதரப்பு உறவுகள் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட
பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.</p><p>இந்நிலையில் அவரது இலங்கை விஜயத்தின் இறுதி நாளான இன்றுஇ நுவரெலியா சீதா எலிய
பகுதியில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.</p><h2>இந்தியா – இலங்கை உறவு</h2><p>

இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஆலய
நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்டதுடன்இ ஆலயத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வில்
கலந்துகொண்டு சீதையம்மனை தரிசித்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff81d5a-07fc-49d8-9da5-ab66a9d20f28/26-6aa27ba40ba30.webp' /></p><p>முன்னதாக கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய
உள்ளிட்ட இலங்கை அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் இந்தியா –
இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.
</p><p>
மேலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு கடல்சார்
ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புத் தொடர்புகளை மேலும்
வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:43:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 டொலரை கடந்து செல்லும் மசகு எண்ணெய் விலை! உலக சந்தை ஸ்தம்பிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lubricant-prices-cross-100-1789032774"></link>
            <id>https://tamilwin.com/article/lubricant-prices-cross-100-1789032774</id>
            <summary type="text">ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) வட்டி வீதக் கொள்கை அறிவிப்பு வெளிவரவுள்ள
நிலையில், சர்வதேச நாணயச் சந்தையில் யூரோவின் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) வட்டி வீதக் கொள்கை அறிவிப்பு வெளிவரவுள்ள
நிலையில், சர்வதேச நாணயச் சந்தையில் யூரோவின் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களில்
இல்லாதவாறு உயர்வடைந்து உறுதியான நிலையில் காணப்படுகின்றது.</p><p>

அதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும்
பெரல் ஒன்று 100 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளமையால்
உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பிணைப்பத்திர விளைச்சல்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><h2>தீவிரமடைந்துள்ள போர்ச்சூழல்</h2><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே
தீவிரமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக வளைகுடாப் பகுதிகளூடான எரிபொருள்
விநியோகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633325b2-5a47-4eff-ac93-a7293246c5dd/26-6aa2794863320.webp' /></p><p>
</p><p>
வரவிருக்கும் ஐரோப்பிய குளிர்காலத்தை முன்னிட்டு வெப்பமூட்டும் எண்ணெய்
மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதால், பணவீக்கக்
கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி வீதங்களை மேலும்
உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>
அமெரிக்காவின் மத்திய வங்கியான 'பெடரல் ரிசர்வ்' இந்த மாத இறுதியில் வட்டி
வீதங்களை அதிகரிக்கும் சாத்தியக்கூறு 60 சதவீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>எரிபொருள் விலையேற்றம்</h2><p>ஜப்பானிய யென் நாணயத்தின் மதிப்பும் கடந்த ஜூலை மாத தலையீட்டிற்குப் பின்னர் 6
சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவுசெய்து 7 மாத உயர்வை எட்டியுள்ளது.
</p><p>
எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாகச் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட
வல்லரசு நாடுகளின் பணவீக்கம் மீண்டும் உயர்வடைந்து வருவதால் உலகளாவிய
நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பான சூழல் நிலவுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய முன்னாள் அரச ஜோதிடர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-government-astrologer-ciaboc-investigation-1789023747"></link>
            <id>https://tamilwin.com/article/former-government-astrologer-ciaboc-investigation-1789023747</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன&amp;nbsp;சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன&nbsp;சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளார்.</p><p>இவர் இன்று காலை (10) சுமார் 10.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p>மேலும், தொடர்புடைய விசாரணை சம்பந்தமான சுமனதாஸ அபேகுணவர்தனவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K4kYZlRMH8A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் மனைவி லிமினியின் அரசியல் பயணம் தொடர்பில் திலக் வீரசிங்க வெளியிட்ட பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/limini-weerasinghe-namal-1789019323"></link>
            <id>https://tamilwin.com/article/limini-weerasinghe-namal-1789019323</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை என லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்சவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை என லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்சவின் மாமனாருமான பிரபல தொழிலதிபர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>வலையொளிதளம் ஒன்றுக்கு நேற்று(09.09.2026) வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதில் அவர் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது</p><h2>
</h2><p></p><h2>லிமினி தந்தை பதிலடி</h2><p>நான் லிமினியிடம் கேட்டபோது அவர் அப்படி ஆயத்தமாக இல்லை என்று சொன்னார். இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. எங்கள் நிலைமை என்னவென்றால் இவை்வாறான தகவல் எங்கிருந்து வெளியே வருகின்றது? எனக்கு தெரிந்தவரையில்&nbsp;லிமினி 12ஆம் திகதி அநுராதபுர மேடையில் ஏறமாட்டார்.</p><p>இன்று வரை அவர் மேடை ஏறுவாரா என்று எனக்கு தெரியாது. லிமினி நாமலை விட்டுவிட்டு மேடையில் ஏறி அரசியலில் மேலே வரப்போகிறாரா? என்பது சாத்தியமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9360d246-97a0-48d1-a9ac-0138d2998974/26-6aa244bde0050.webp' /></p><p>இப்போது எங்களது கடமை என்னவென்றால் லிமினியை பார்த்துக் கொள்வதும், அவரது பிள்ளைகளை பார்த்துக்கொள்வதும் தான். தற்போது அவர்கள் அனைவரும் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் இருந்து தான் உணவு அனுப்புகிறோம், வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் தான் சமைக்கிறார்கள்.</p><p> 
2029 ஜனாதிபதி வேட்பாளர் எனது மகள் லிமினி என குறிப்பிடுகிறார்கள். நான் அதனை ஏற்றுக்கொள்வதும் இல்லை. வீட்டில் அப்படி ஒரு உரையாடலும் நடக்கவில்லை. இது எங்கிருந்து இந்த அளவுக்கு வெளியே வந்தது என்பது தான் என்னுடைய கேள்வியாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp;</p><p><b><i>you may like this video&nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DBVX8pLX51w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:16:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-missing-person-recovered-in-puthukkudiyiruppu-1789031100"></link>
            <id>https://tamilwin.com/article/body-missing-person-recovered-in-puthukkudiyiruppu-1789031100</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 7ஆம் திகதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு
இன்று (10) தென்னங்காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு
விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36cde177-04c3-4d1b-8785-0abf498c059c/26-6aa272bf30dab.webp' /></p><p>
</p><p>
மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் நண்பருக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/assets-worth-crores-shiran-basik-s-partner-frozen-1789029355"></link>
            <id>https://tamilwin.com/article/assets-worth-crores-shiran-basik-s-partner-frozen-1789029355</id>
            <summary type="text">தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளியின் சொத்துக்கள்&amp;nbsp;சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளியின் சொத்துக்கள்&nbsp;சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் முடக்கப்பட்டுள்ளது. </p><p>நளின் அர்ஜுன என்பவருக்கு சொந்தமானதாக குறிப்பிடப்படும் இரண்டு வீடுகள் இன்று (10) முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>இரண்டு வீடுகளும் முடக்கம்</h2><p>கடவத்தை மற்றும் களனி பகுதிகளில் அமைந்துள்ள குறித்த இரண்டு வீடுகளும் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdd98835-4d9d-4198-aa8d-7199a09c1e45/26-6aa27094192ea.webp' /></p><p>சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
&nbsp;</p><p>இந்த விசாரணைகளின் போது, ​​சம்பந்தப்பட்ட சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட பின்வரும் சொத்துக்களை, அவை வேறு யாருக்கும் விற்கப்படுவதையோ, மாற்றப்படுவதையோ அல்லது திருத்தப்படுவதையோ தடுப்பதற்காக முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்த சொத்துக்கள் தொடர்பான உண்மைகளை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும், அவற்றை செயலிழக்கச் செய்யும் உத்தரவை நீட்டித்து அவை தொடர்ந்து நடைமுறையில் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T08:59:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மீது சஜித் அணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-faction-allegations-against-npp-government-1789029575"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-faction-allegations-against-npp-government-1789029575</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது
என்று ஐக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது
என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா
குற்றம் சாட்டினார்.</p><p>

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(9.9.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, தேசிய மக்கள் சக்தி அரசு நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றது.
இருப்பினும், இந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் நன்மை ஏற்பட்டுள்ளதே தவிர, நாட்டுக்கு எந்த நன்மையும்
கிடைக்கவில்லை.</p><h2>அரிசி இறக்குமதி</h2><p>

ஆட்சிக்கு வருவதற்கு முன் நெல்லுக்கு 152 ரூபா சான்றிதழ் விலை வழங்கப்பட
வேண்டும் எனப் போராடிய ஜே.வி.பி., ஆட்சிக்கு வந்தபின் 120 ரூபா விலையை
நிர்ணயித்ததுடன், அந்த விலையில்கூட நெல்லைக் கொள்முதல் செய்ய எவ்விதத்
திட்டமும் வைத்திருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e723ec19-c555-42af-9b56-76dfa2079477/26-6aa26f09655dd.webp' /></p><p> </p><p>அரிசி மாஃபியாவை ஒழிப்பதாகக் கூறியும், அரிசியை
இறக்குமதி செய்ய மாட்டோம் என உறுதியளித்தும் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
</p><p>
அத்தியாவசிய உணவுகளுக்கான வற் வரியை நீக்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை 30
முதல் 35 சதவீதம் வரை குறைப்பதாகவும், எரிபொருளுக்கான வற் வரியை நீக்கிக்
குறைந்த விலையில் வழங்குவதாகவும் கூறினர்.ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும்
அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் குறைக்கப்படவில்லை.</p><h2>வாகன இறக்குமதி</h2><p>
</p><p>இளைஞர்களுக்கு ஜப்பானிய மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுத் தருவதாகக் கனவு
காட்டிய ஜனாதிபதி, இன்று ஒரு சைக்கிளைக்கூட வாங்க முடியாத நிலையையே
உருவாக்கியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், அதன் பலன் பணக்காரர்களுக்கே
சென்று சேர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2984e0e-c9e3-4353-8e30-1e15aab8cc71/26-6aa26f0a1e526.webp' /></p><p> புதிய 50 சதவீத குத்தகை கட்டுப்பாட்டு விதிமுறை காரணமாக,
சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் ஒரு சிறிய கார், த்ரீவீலர் அல்லது மோட்டார்
சைக்கிளைக்கூட தவணை முறையில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு அபிவிருத்தியும் நடக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T08:49:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகதிகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலைக் கொடுத்தாரா அநுர..! எதிர்த்தரப்பு கேள்விகளுக்கு சமந்த வித்யாரத்ன பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-who-gave-land-and-houses-to-50-families-1789029777"></link>
            <id>https://tamilwin.com/article/anura-who-gave-land-and-houses-to-50-families-1789029777</id>
            <summary type="text">&amp;nbsp;நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு
சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு
சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும்
அரசாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது என கைத்தொழில் மற்றும்
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(09.09.2026) புதன்கிழமை இடம்பெற்ற பிரதமருடமான கேள்வி நேரத்தில்
மனோ கணேசன் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பிரதமர் தரப்பில் பதிலளித்து
உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

வாழ்வாதாரங்களை இழந்த மலையக மக்கள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாம் 6 ஆயிரம் வீடுகளை மலையக மக்களுக்காக வழங்குவோம் எனத்
தெரிவித்திருந்தோம். எனினும் அது இடம்பெறவில்லை என மனோ கணேசன் எம்.பி.
தெரிவிக்கின்றார்.</p><p> உண்மையில் அது அவ்வாறில்லை. அதைவிட அதிகமான வீடுகளை நாம்
மலையக மக்களுக்காக வழங்கவுள்ளோம்.

வீடு ஒன்றை நிர்மாணிப்பது என்றால் அது ஒரு நாள், இரண்டு நாட்களில் முடியாத
காரியம். ஹப்புத்தளையில் ஹல்துமுல்ல, கபரகலை பகுதிகளில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி
அதனை அந்த மக்களுக்குக் கையளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/555f112b-38b6-41ff-8e81-39df2dabe7c7/26-6aa26d93b5b71.webp' /></p><p>
</p><p>
2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடும் மழை, வெள்ளம் காரணமாக ஒரு லயன் தொகுதி
முற்றாக அழிந்தது. அதில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள். </p><p>அப்போதைய அரசின்
காலத்தில் அதற்கு மாற்றீடாக மூடப்பட்டு மிக மோசமான நிலையிலிருந்த தேயிலைத்
தொழிற்சாலையில் அந்த மக்களைத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
</p><p>

பிள்ளைகளுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
உண்மையில் அந்த மக்களின் மொழியில் கூறுவதானால் அது ஒரு அகதிகள் முகாமே.
</p><h2>
அகதி முகாமில் வாழ்ந்தவர்களுக்கு விடுதலை</h2><p>
இதுவரை காலமும் அந்த மக்கள் அந்த முகாமில் தான் வாழ்ந்து வந்தனர். ஏதோ
காரணங்களால் அப்போதைய அரசால் அவர்களுக்கு வீடு வழங்க முடியாமல் போனது.
</p><p>
எமது அரசு 2025 மார்ச் மாதம் 15ஆம் திகதி அந்த வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி,
இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு மூன்றரை வருடங்களாக அகதி
முகாமில் வாழ்ந்த மக்களுக்கு 50 வீடுகள் வழங்கப்பட்டன.

அத்துடன் கடந்த அரச காலத்தில் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியே
வழங்கப்பட்டது. எனினும் எமது அரசு அதனை மேலும் அதிகரித்து 10 பேர்ச் காணியை
அந்த மக்களுக்கு வழங்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c50021-eaf4-452a-aee3-c4a1c7a0eff0/26-6aa26d947a57e.webp' /></p><p>
</p><p>
நாம் பூணாகலை பகுதியில் நிர்மாணித்துள்ள வீடுகளின் பெறுமதி காணியுடன் சேர்த்து
83 இலட்சமாகும். அதில் காணிக்கு 5 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் அந்த நிகழ்வின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம்
ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல, அது வெறும் காகிதம் மட்டுமே என மனோ கணேசன் எம்.பி.
கூறினார். அந்தக் கூற்றை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
</p><h2>

காணி உரிமம் வழங்க நடவடிக்கை</h2><p>

 நாம் அந்த
மக்களுக்கு நிரந்தர காணி உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் அன்று பூணாகலை நிகழ்வில் வைத்து அவ்வாறான 168 காணி உறுதிப்
பத்திரங்களையும் வழங்கியுள்ளோம்.</p><p>

மேற்படி காணிகள் தோட்ட நிறுவனங்களின் கீழ் உள்ளமையால் அதற்கான விதிமுறைகள்
பின்பற்றப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காணி சீர்திருத்த ஆணைக்குழு எமது விவசாய அமைச்சின் கீழ் உள்ளது. </p><p>அந்த
நிறுவனத்துடன் கலந்துரையாடி தொடர்ச்சியாக காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் சாதாரண உறுதிப் பத்திரமே
வழங்கப்படும். எனினும் பின்னர் நிரந்தர காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும்
என்பதைக் குறிப்பிட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c7e9c4-df85-41cc-931f-3cb21c4c276d/26-6aa26d95300da.webp' /></p><p>
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே மலையக மக்களுக்கு அனைத்து
உரிமைகளும் நலன்களும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன என்பதால் அந்த மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு வேதனையாக இருக்கலாம்.

மலையக மக்களுக்கு எமது அரசு உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதை நாம்
குறிப்பிட வேண்டும்.</p><p> அதிகமான வீடுகள் எமது அரசின் காலத்திலேயே
நிர்மாணிக்கப்படுகின்றன. அந்த மக்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுத்ததும்
எமது அரசாகும்.</p><p>

எவ்வாறாயினும் நாம் மலையக மக்களுக்குக் காணி வழங்குவோம், வீடுகளையும்
வழங்குவோம். சம்பளத்தையும் அதிகரிப்போம். அனைத்து உரிமைகளையும்
பெற்றுக்கொடுப்போம் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி விவகாரம்: ஐ.நா. விசாரணையை தீவிரப்படுத்தக் கோரி பேரணிக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-burial-ground-issue-1789028276"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-burial-ground-issue-1789028276</id>
            <summary type="text">செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் பேரணியொன்றுக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>

தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று (09.09.2026) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><h2>
சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் மீட்பு</h2><p>

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன.

இவ்வாறான முக்கியமான சான்றுப் பொருட்கள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது, அவை சேதப்படுத்தப்பட்டு குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e15f24e9-8eea-4232-bd26-e15c369720ef/26-6aa2689d04ec0.webp' /></p><p>
</p><p>
எனவே, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை அரசின் தலையீடுகள் எதுவுமின்றி, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளிலும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், சர்வதேச தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார் நிபுணர்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது கட்டாயமாகும்.
</p><h2>
ஐ.நா.வின் முழுமையான பொறுப்பின் கீழ் விசாரணை</h2><p>

இதனைத் தொடர்ந்து, தடயங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த உடனடியானதும் அவசரமானதுமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5200d0-f2f4-4733-af39-4cbdf5e8f5ea/26-6aa2689dd2978.webp' /></p><p>

தமிழ் தேசியப் பேரவையும் குடிசார் அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்தப் பேரணியில், அனைத்து குடிசார் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், கல்வி மற்றும் உயர் கல்விச் சமூகத்தினர், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h2>
செப்டெம்பர் 13ஆம் திகதி பேரணி</h2><p>
எதிர்வரும் 2026 செப்டெம்பர் 13ஆம் திகதி காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
அங்கிருந்து கோவில் வீதி ஊடாக பேரணி சென்று, முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.</p><p>

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T08:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.வடமராட்சியில் 33 வயது இளைஞன் வெட்டிக்கொலை - தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/33-year-old-man-hacked-death-vadamarachchi-jaffna-1789027407"></link>
            <id>https://tamilwin.com/article/33-year-old-man-hacked-death-vadamarachchi-jaffna-1789027407</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிராம கோடு பகுதியில் 33 வயது இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்
நேற்று(09.09...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிராம கோடு பகுதியில் 33 வயது இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த சம்பவம்
நேற்று(09.09.2026) இரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
</p><h2>பொலிஸார் தீவிர விசாரணை</h2><p>
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,&nbsp; கொலை செய்யப்பட்ட நபர் கடைக்கு வெற்றிலை வாங்கிக்கொண்டு வெளியே மோட்டார்
சைக்கிளில் ஏறிப் புறப்பட முற்பட்ட போது எதிரே வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை
வழிமறித்து வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad3956ff-e3ad-4805-af30-9a62a149e0fe/26-6aa265e782e96.webp' /></p><p>குறித்த சம்பவம்
பருத்தித்துறை பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சம்பவம் நடந்த இடத்திற்கு காலை 11:00 மணியளவில் சென்ற பருத்தித்துறை
நீதாவான் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார்.
</p><p>
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டு வருவதுடன் தடயவியல் ஆய்வு பொலிஸாரும் சம்பவ இடத்தை ஆய்விற்கு
உட்படுத்தி வருவதுடன் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் தீவிர
விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T08:13:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுக! அரசிடம் மனோ வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-fulfill-promises-up-country-people-1789026017"></link>
            <id>https://tamilwin.com/article/government-fulfill-promises-up-country-people-1789026017</id>
            <summary type="text">கடந்த காலங்களில் மலையக அரசியல் பிரதிநிதிகள் மலையகத்துக்கு ஏதும்
செய்யவில்லை என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. அது
முற்றிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் மலையக அரசியல் பிரதிநிதிகள் மலையகத்துக்கு ஏதும்
செய்யவில்லை என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. அது
முற்றிலும் தவறானது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று(09.09.2026) நடைபெற்ற அமர்வில் பிரதமருடனான கேள்வி
வேளையின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள வீடுகள்</h2><p>மேலும் உரையாற்றுகையில்,

"தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்
நிறைவடையவுள்ளது. </p><p>இந்த நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள எமது மலையக
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் கேள்விகளை முன்வைக்கின்றேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fbb04bc-a87b-4862-b3ce-2bfb2ca535e2/26-6aa2627394bbd.webp' /></p><p>
கடந்த அரசுகளால் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுப்படுத்தாத வீடுகள்
இந்தக் காலப்பகுதிக்குள் முழுமையாக புனரமைக்கப்பட்டு,பயனாளர்களுக்கு
கையளிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அதன் எண்ணிக்கை எத்தனை?

அரசால் காணிகள் வழங்கப்பட்டு, நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு
கையளிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனை? </p><p>தேசிய மக்கள் சக்தியின்
ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி ஒதுக்கீட்டு பயனாளிகளின்
எண்ணிக்கை எத்தனை ?</p><h2>ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்</h2><p>டித்வா புயல் தாக்கத்தைத் தொடர்ந்து மலையகத்தில் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை
அமைக்க அரசு அனுமதியளித்துள்ளதா? 2025 ஆம் ஆண்டுக்குள் 6 ஆயிரம் வீடுகளை
நிர்மாணிப்பதாகப் பெருந்தோட்டத்துறை அமைச்சர் கடந்த ஆண்டு குறிப்பிட்டார்.</p><p>
ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4082fd3e-c0f7-4aed-b1ab-216a62213167/26-6aa262744b2f9.webp' /></p><p>கடந்த காலங்களில் மலையக அரசியல் பிரதிநிதிகள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை
என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. அது முற்றிலும்
தவறானது. </p><p>கடந்த காலங்களில் இந்திய அரசுடன் கலந்துரையாடி 10 ஆயிரம்
வீட்டுத்திட்டத்துக்கான நிதி ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம். காணி டெல்லியில் இருந்து வராது. இங்குதான் காணியை வழங்க வேண்டும்.
</p><p>

பெருந்தோட்ட மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள்.
அதனை விடுத்து கடந்த காலத்தை விமர்சித்துக் கொண்டிருக்காதீர்கள் என்று அரசிடம்
கேட்டுக்கொள்கின்றேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:55:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒலுவில் துறைமுகத்தை மீளச் செயற்படுத்த துரித நடவடிக்கை - நாடாளுமன்றில் பிரதி அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-action-to-reactivate-oluville-port-1789026673"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-action-to-reactivate-oluville-port-1789026673</id>
            <summary type="text">இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப்
பாதுகாப்பதுடன், நாட்டின் கடல் மற்றும் நீரியல் வளங்களை நிலைபேன்தகு முறையில்
முகாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப்
பாதுகாப்பதுடன், நாட்டின் கடல் மற்றும் நீரியல் வளங்களை நிலைபேன்தகு முறையில்
முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே
தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்றைய தினம்(09.09.2026) நாடாளுமன்ற அமர்வின்போது, துறைமுகங்களின் தற்போதைய நிலை, மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சுருக்கு வலைப்
பயன்பாட்டுக்கான அனுமதிப்பத்திர விதிமுறைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 


அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தகத்
துறைமுகம் நீண்டகாலமாக மணல் படிவத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது பயன்பாடற்ற
நிலையில் காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவக் குடும்பங்கள்
பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><h2>

வர்த்தகக் கப்பல்கள் வருவதில் உள்ள சிரமம்</h2><p>
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, </p><p>

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட
காலப்பகுதியில் அலைகளின் வேகம், காற்றின் வேகம், கடல் நீரோட்டங்களின் தன்மை
மற்றும் மணல் நகர்வு உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் போதுமான அறிவியல் மற்றும்
முறையான சாத்தியக்கூறு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதமையே துறைமுகத்தின்
தற்போதைய நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a45971-91ad-4663-8f3b-085d59e6a722/26-6aa261d75d621.webp' /></p><p>

சுமார் நான்கு தசாப்தங்களாக துறைமுக நிர்மாணம் மற்றும் அபிவிருத்திப் பணிகள்
முன்னெடுக்கப்பட்ட போதிலும், போதிய அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும்
அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்படாததன் காரணமாக துறைமுகத்தின் நுழைவாயிலில் பாரியளவில் மணல் படிந்துள்ளது. </p><p>


மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் மாதிரி ஆய்வுகள், கிடைக்கப்பெற்ற அறிவியல்
தரவுகள் மற்றும் மீனவ சமூகத்தினரின் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து
உரிய முறையில் திட்டமிடப்படாததன் விளைவாக, தற்போது வர்த்தகக் கப்பல்கள்
மற்றும் மீன்பிடிப் படகுகள் துறைமுகத்திற்குள் நுழைவதிலும் வெளியேறுவதிலும்
பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றன.</p><h2>

துறைமுகங்களில் உள்ள மணலை அகற்ற நடவடிக்கை</h2><p>
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள்
முன்வந்துள்ள நிலையில், துறைமுகப் பகுதியில் தேங்கியுள்ள மணலை அகற்றி அதனைப்
பெறுவதில் அவை அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றன. </p><p>எனினும்,
கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த
மணலில் முக்கியமான கனிமப் பொருட்கள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதால்,
அவற்றை வெளிநாடுகளுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்களும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d76dd78-2192-43dc-9f13-1752f6830975/26-6aa261d81dd2a.webp' /></p><p>


இதனால், தற்காலிகத் தீர்வுகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக, ஒலுவில் துறைமுகப்
பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் நிலையானதும் விஞ்ஞானப்பூர்வமானதுமான
தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.</p><p> 

இதற்காக ஜனாதிபதி அலுவலகம், சுற்றாடல் அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில்
விமான சேவைகள் அமைச்சு, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை கடற்றொழில்
துறைமுகக் கூட்டுத்தாபனம், கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட
தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு அமைப்பொன்று
உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசாரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கொடுத்த சலுகை! இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gnanasara-thero-s-court-order-1789019313"></link>
            <id>https://tamilwin.com/article/gnanasara-thero-s-court-order-1789019313</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், இன்று (10.09.2026) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன&nbsp;</h2><p>
 

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43cb4fc-f2ab-45c5-96b8-21ddbc9583ba/26-6aa248a136726.webp' /></p><p>
</p><p>
 

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை அடுத்து, ஞானசார தேரர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
</p><p>இந்நிலையில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை நிலைநிறுத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடு : ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றை நாடிய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-buddhist-worship-at-vedukkunaari-malai-1789022227"></link>
            <id>https://tamilwin.com/article/special-buddhist-worship-at-vedukkunaari-malai-1789022227</id>
            <summary type="text">வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள
நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார்
நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள
நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார்
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

​</p><p>1979 ஆண்டு இலக்கம் 15ஆம் குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை சட்டத்தின் 106 (1)இன் பிரகாரம் வவுனியா நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒரேநேரத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள இருப்பதால்</h2><p>
</p><p>உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp;2026/09/12ஆம், திகதி நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் நைனாமடு காட்டு பகுதியில்
அமைந்துள்ள புராதன பெறுமதி வாய்ந்த எச்சங்கள் கொண்ட பூமி பிரதேசத்தினுள் இந்து
சமய வழிபாட்டாளர்கள் மூலமாகவும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் மூலமாகவும்
சமய வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மற்றும் பூஜை நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார்
செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb767c9-7446-4051-a78b-240fd641c5fe/26-6aa25854a0af9.webp' /></p><p>இவ் இந்து மத வழிபாட்டாளர்கள் மற்றும் பௌத்த மத
வழிபாட்டாளர்கள் ஒரே திகதியில் ஒரேநேரத்தில் ஒரே பூமியில் இத்தொல் பொருள்
அமைந்துள்ள இடத்தில் சமய வழிபாடுகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அக்காரணத்தினை
அடிப்படையாக கொண்டு இரு தரப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் வன்முறைகள்
மற்றும் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.</p><h2>விசேட பௌத்த வழிபாடுகள்&nbsp;</h2><p>இருவர்களின் சமய
வழிபாடுகளுக்கும் இடையூறு ஏற்படவும் பிரதேசத்தில் சமாதான சீர்குலைவு ஏற்படவும்
இவ்வாறாக இடப்பிரச்சனைகள் தொடர்ந்தும் ஏற்படுவதாலும் இத் தளத்தினை பிரதான
மையமாக கொண்டு நாட்டிற்குள் இன மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளமையினால் நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால்
நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d46691-0176-4235-a961-1d2a16a2a6cb/26-6aa258555b8fb.webp' /></p><p>அதன் பிரகாரம் மேலதிக காரணங்கள் தொடர்பான விசாரணைக்கு10.09.2026அன்று மாலை 03.00 மணிக்கு இந் நீதிமன்றத்தில் பிரசன்னமாகுமாறு உத்தரவு
பிறப்பிக்கப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு மாகாண தலைமை பௌத்த சங்கத்தின்
ஏற்பாட்டில் வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T07:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துமிந்த திஸாநாயக்க எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bail-for-thumintha-dissanayake-1789023035"></link>
            <id>https://tamilwin.com/article/bail-for-thumintha-dissanayake-1789023035</id>
            <summary type="text">
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோரை பிணையில் செல்ல அனுமதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவத்தில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் இன்று(10.09.2026) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.</p><p> 

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><h2>

குற்றப்பத்திரிகைகள் தாக்கல்</h2><p>
 தற்போது, பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் அய்குல் ஷெர்கசினா என்ற கசாக் நாட்டவர், நீதிமன்றத்தால் முன்னதாக விடுக்கப்பட்ட அறிவிப்பின்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe9dfe0b-25fd-4870-81b6-86fac99b4e4c/26-6aa256a76d936.webp' /></p><p> </p><p>

அப்போதைய தினம், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் பகிரங்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. </p><p>

அதன்பின்னர், குற்றம் சாட்டப்பட்ட துமிந்த திசாநாயக்கவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரருக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் முன்னரே பிணை வழங்கப்பட்டிருந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p> 

இருப்பினும், குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 2 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஜாமீன் பத்திரங்கள் மூலம் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.</p><h2> 


தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்பு</h2><p>
குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைரேகைகளைப் பெறுவதற்கும், அறிக்கை கோருவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி மற்றொரு உத்தரவையும் பிறப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/385ddbb0-1f2f-4365-be0e-37e974a3a2a6/26-6aa256a81f136.webp' /></p><p>

பின்னர், அக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக இந்த வழக்கை அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p><p> 

2025 ஆம் ஆண்டு மே 20ஆம் திகதி வெல்லவத்தையில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டுவசதி வளாகத்தில் உரிமம் இல்லாமல் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருப்பதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டி, இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:05:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவை துரத்தும் கர்மவினை! கைது செய்வதில் ஏன் தாமதம் - செல்வம் அடைக்கலநாதன் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-in-arresting-gotabaya-selvam-adaikalanathan-1789020673"></link>
            <id>https://tamilwin.com/article/delay-in-arresting-gotabaya-selvam-adaikalanathan-1789020673</id>
            <summary type="text">&quot;முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை அழித்தவர்களை, செம்மணி மனிதப் புதைகுழிகளை
உருவாக்கியவர்களை, தாய், தந்தையரை நிர்க்கதியாக்கியவர்களை கர்மவினை தற்போது
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>"முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை அழித்தவர்களை, செம்மணி மனிதப் புதைகுழிகளை
உருவாக்கியவர்களை, தாய், தந்தையரை நிர்க்கதியாக்கியவர்களை கர்மவினை தற்போது
துரத்த தொடங்கியுள்ளது என்றும், கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில் ஏன் தாமதம் நிலவுகின்றது? என்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்&nbsp;கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>நாடாளுமன்றத்தில் நேற்றுப் நடைபெற்ற பாதுகாப்புப்பணியாள்
தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில்
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><h2>இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள்</h2><p>"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் காணாமல்போனோர்,
எமது இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் செம்மணி மனிதப்
புதைகுழி போன்ற விடயங்களில் விசாரணை நடத்தப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும்
எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e286e09b-fa85-4aff-8b3d-a6bc523fd028/26-6aa24f95db586.webp' /></p><p>ஐ.நா. சபை வெறும் அறிக்கைகளை மட்டும் விடாமல், அதனை
நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது மக்கள் உள்ளக
விசாரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.</p><p>நீதியான சர்வதேச விசாரணையையே
கோருகின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 25 ஆண்டுகளாகச் சிறைகளில் வாடுகின்றனர்.</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகப் போராளிகளின் படங்களை வைத்திருந்ததாகக்
கூறி கைது செய்யப்பட்ட இளைஞர்களும் இன்றும் சிறையில் தான் உள்ளனர்.</p><h2>கோட்டாபயவை கைது செய்வதில் ஏன் தாமதம்</h2><p> எங்களுடைய
தாய், தந்தை உறவுகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பது இன்று ராஜபக்ச குடும்பத்தினருக்கு இப்போது உணர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ராஜபக்சர்கள் இல்லாது ஒழித்துள்ளனர் என்று
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0cb32c-4f43-484e-8491-83a52a9bbd36/26-6aa24f95343f5.webp' />&nbsp; &nbsp;</p><p> மனித உரிமை மீறல்கள் மற்றும் பல்வேறு
குற்றச்சாட்டுகளுக்குள்ளான சந்தேகநபரான கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில்
ஏன் இந்த தாமதம் நிலவுகின்றது என்று தெரியவில்லை? </p><p>ஊழல் மற்றும் மனித உரிமை
மீறல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

கர்மா என்பதனை நான் நம்புவதில்லை. ஆனால், கர்மா என்பது இருக்கின்றது என்பதனை
தற்போது உணர முடிகின்றது.</p><h2>சர்வதேச விசாரணை&nbsp;</h2><p> எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்கள்,
செம்மணியில் மக்களைப் புதைத்தபோது அவர்கள் பட்ட வேதனைகள் மற்றும்
முள்ளிவாய்க்காலில் தாய், தந்தையின் கண் முன்னே பிள்ளைகள் வீழ்ந்தபோது
எழுப்பட்ட அழுகுரல்கள் இன்று கர்மா என்ற ரீதியில் செயற்பட தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a395703-b80b-42ed-95e6-8191393214b6/26-6aa24f9690c5b.webp' /></p><p>ஐக்கிய நாடுகள் சபை தனது கருத்துக்களை அழுத்தமாகக் கூறினாலும், அதனை
நடைமுறைப்படுத்துவதற்கான இறுக்கமான வாய்ப்புகளை அது கையாள்வதில்லை.</p><p> இதனால்
ஐ.நா. சபை மீது எமது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை படிப்படியாக சிதைவடைந்து
செல்கின்றது.</p><p>
இலங்கை அரசு உள்ளக விசாரணையை நிறுத்திவிட்டு, சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும்
அடிப்படையை உருவாக்க வேண்டும். </p><p>இந்த அரசு இத்தகைய சரியான செயற்பாடுகளில்
ஈடுபடும்போது எமது முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:38:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடி செய்த எவரையும் சிறையில் காணவில்லை! சிறைச்சாலையில் கண்ட காட்சியை வெளிப்படுத்திய சமிந்த விஜேசிறி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-fraudster-not-found-prison-chaminda-wijesiri-1789019182"></link>
            <id>https://tamilwin.com/article/the-fraudster-not-found-prison-chaminda-wijesiri-1789019182</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக அரசு தனக்கு தானே குழி தோண்டிக்
கொள்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக அரசு தனக்கு தானே குழி தோண்டிக்
கொள்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.</p><p>இந்த திருத்தத்தால் நாடும் எதிர்க்கட்சிகளும்
அழியும் அபாயம் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புப்பணியாள்
தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில்
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மத்திய வங்கி பிணைமுறி மோசடி&nbsp;</span></h2><p>

"நான் வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது, மத்திய வங்கி பிணைமுறி மோசடி நபரை காணவில்லை. சிறை முழுவதும் தேடியும் அவர் இருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fb5d8f1-8cfc-4c74-a45a-155d0093743b/26-6aa2442fe1c23.webp' /></p><p> </p><p>உகண்டாவில் பணத்தை
வைத்திருந்ததாக கூறப்பட்டவரோ அல்லது வெள்ளைப்பூடு, சீனி மற்றும்
கடவுச்சீட்டு மோசடிகளுடன் தொடர்புடையவர்களோ எவரையும் சிறையில் காணவில்லை.
அனைவரும் வெளியில் தான் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கின்றார்கள்.
</p><p>
போரை வென்று, அதிக காலத்துக்கு ஆட்சியில் இருக்க முயன்றவர்கள் 2022ஆம் ஆண்டில்
மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். </p><p>மக்களுக்குப் பொருத்தமில்லாமல் ஆட்சியைத்
தக்கவைக்க முயன்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டது. அதேபோன்று,
தற்போதைய அரசு தனது இருப்புக்காகவே 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வருகின்றது.இது அரசு தனக்குத் தானே தோண்டிக் கொள்ளும் குழியாகும்.</p><h2>பொதுமன்னிப்பு நிறுத்தம்</h2><p>

தேசிய பண்டிகைக் காலங்களில் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பொதுமன்னிப்பு
வழங்குவது இந்த அரசு வந்த பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4363948-4278-4a30-99be-7093baf582fa/26-6aa244309bc36.webp' /></p><p> இதனால் குற்றம்
செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டாலும், சில காரணங்களுக்காக அவர்கள்
விடுதலை பெறும் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவது அநீதியாகும்.
</p><p>
இதேவேளை, 70 வயதுக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இருக்கின்றனர். அவர்கள்
நடக்கக்கூடிய முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பெரும் துன்பங்களை
அனுபவிக்கின்றனர். அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.</p><p> 18 வயதில் வந்த
இளைஞர், புனர்வாழ்வு பெற்று வெளியில் விடப்படாமல் 54 வயதில் சிறையிலேயே
உயிரிழந்த சம்பவத்தை நான் சிறையில் அவதானித்தேன். இவ்வாறான விடயங்களில்
மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தனுக்கு இன்று தீர்த்தத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-temple-s-annual-theertha-festival-1789018100"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-temple-s-annual-theertha-festival-1789018100</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தீர்த்தத் திருவிழா
இன்றையதினம்(10.09.2026) காலை நடைபெற்றது.

கடந்த 17ஆம் திகதி கொடியேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தீர்த்தத் திருவிழா
இன்றையதினம்(10.09.2026) காலை நடைபெற்றது.</p><p>

கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று
வரும் நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப
பூஜை ஆரம்பமாகி ,தொடர்ந்து தீர்த்தத் திருவிழா இடம்பெற்றது.</p><h2>பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்</h2><p>
தீர்த்தத் திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர்
தேசங்களிலும் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை
தந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e3da83-bfdb-46e8-bc12-a2e0ba7543e0/26-6aa243405dad7.webp' /></p><p>
காவடிகள், பிரதட்டைகள், கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது
நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T05:43:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கொண்ட ரஞ்சி சிக்கியது எப்படி..! பெருந்தொகை தங்கம் தொடர்பில் பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-s-life-style-1789012666"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-s-life-style-1789012666</id>
            <summary type="text">டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர் கொண்ட ரஞ்சி தான் அணிந்திருந்த தங்கம் சீனாவின் தயாரிப்பான போலியான தங்க ஆபரணங்கள் என வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர் கொண்ட ரஞ்சி தான் அணிந்திருந்த தங்கம் சீனாவின் தயாரிப்பான போலியான தங்க ஆபரணங்கள் என வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட ரஞ்சித் குமார என்ற கொண்ட ரஞ்சி நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார்.</p><p>
</p><h2><b>
பாதுகாப்பு பிரிவினரால் கைது</b></h2><p>அத்துடன், அங்கு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a830c3-b4e2-4371-b37c-76020047ba93/26-6aa23df00f5c5.webp' /></p><p>ரஞ்சித் குமார அல்லது கொண்ட ரஞ்சி கடந்த மார்ச் 29ஆம் திகதி இரவு 7 மணியளவில் ஈரான், டுபாய் மீது தொடுத்த வான்வழித் தாக்குதல்களைத் தனது கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். </p><p>அதனை நண்பர்கள் மூவருக்கு அனுப்பியமையால் டுபாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த காணொளிக் காட்சிகள் பரிமாறப்பட்டு 2 மணி நேரத்திற்குள் டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் அவரைக் கைது செய்திருந்தனர்.</p><p>

கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்த 17 பவுண் எடையுள்ள 2 தங்க மாலைகள், 18,000 திர்ஹம் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பாதுகாப்புப் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட ரஞ்சித் குமார என்ற கொண்ட ரஞ்சி நேற்று அதிகாலை சாதாரண பயணிகள் விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.</p><p>
</p><h3><b>
கோல்டன் விசா</b></h3><p>அத்துடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad23be0-d4d2-4079-89f8-85416bb2fef6/26-6aa23ef12929e.webp' /></p><p>ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது, முன்னொரு சந்தர்ப்பத்தில் டுபாயிலிருந்து இத்தாலிக்கு தப்பியோட முயன்ற போது சர்வதேச பொலிஸார் ஊடாக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவிப்பின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.</p><p>

அங்கு ஒரு வாரம் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்து, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தனது கடவுச்சீட்டையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனினும், அங்குப் பிணை கிடைத்ததைத் தொடர்ந்து அவர் தனது சகாக்கள் குழுவுடன் விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளார்.</p><p>

கொண்ட ரஞ்சி அங்கு தண்ணீர் போத்தல் விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதோடு, அதனால் அவர் கோல்டன் விசா ஒன்றையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 </p>]]></content>
            <updated>2026-09-10T05:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய கொலை - நாற்காலியில் கட்டப்பட்டு மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/brutal-murder-heard-from-ratnapura-1789015894"></link>
            <id>https://tamilwin.com/article/brutal-murder-heard-from-ratnapura-1789015894</id>
            <summary type="text">இரத்தினபுரி - கட்டலியன்பல்ல&amp;nbsp; பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இந்த கொலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - கட்டலியன்பல்ல&nbsp; பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p>இந்த கொலை நேற்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>உயிரிழந்த நபர் நாற்காலியில் கட்டப்பட்டு, தலையில் தாக்கப்பட்டு, கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> இரத்தினபுரி , கஹங்கம, கட்டலியன்பல்லவை சேர்ந்த 61 வயதான ஹல்பவலகே குலரத்னா என்பவரே இவ்வாறு&nbsp; உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3db0cea9-b466-46d3-9ec3-b2946ea35333/26-6aa23d0acc155.webp' /></p><p>கொலை நடந்த வீட்டின் உரிமையாளரின் சகோதரரான 47 வயது நபர், கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.</p><p>

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
</p><p>இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர், கொலை நடந்த வீட்டை பராமரித்து வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UCe7V1y21jM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-10T05:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியாக சிக்கப்போகும் ராஜபக்சர்கள்! கைது குறித்து தகவல் அறிந்த குடும்பம் - அரசியலுக்கும் அஸ்த்தமனமா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rajapaksas-have-no-place-in-sri-lanka-anymore-1789014439"></link>
            <id>https://tamilwin.com/article/the-rajapaksas-have-no-place-in-sri-lanka-anymore-1789014439</id>
            <summary type="text">

ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு இனி இலங்கையில் ஒருபோதும் இடமில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு இனி இலங்கையில் ஒருபோதும் இடமில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ''ராஜபக்ச குடும்பத்தில் ஒவ்வொருவரும் தான் செய்த மோசடிகளை நன்கு அறிவர். அதனால்தான்&nbsp; தமது கைது குறித்து பதற்றமடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்'' எனவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><h2>அரசியலில் வாய்ப்பில்லை</h2><p> 

ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாமல் ராஜபக்ச தனது கைது குறித்து தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வந்தமை, தனது கைது குறித்து அவர் நன்கு அறிந்திருந்தமையே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd3f9b5-1079-41f2-9f50-af05b885f74e/26-6aa23b9b54a85.webp' /></p><p> </p><p>

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தான் கைது செய்யப்படுவோம் என்பது நன்றாகவே தெரியும். எனினும், தனது கைது குறித்து பிரசாரம் செய்த நாமல் என்ன காரணத்திற்காக தான் கைது செய்யப்படப் போகின்றோம் என்பதை ஒருபோதும் பகிரங்கப்படுத்தியதில்லை. </p><p>

ஏனைய ராஜபக்சர்களும் தங்களது தவறுகளைத் தாங்களே உணர்ந்திருப்பதால் தான் தங்களுடைய கைதுகளைப் பற்றி பேசுகின்றார்கள். </p><p>

அநுராதபுரத்தில் அல்ல நாட்டில் எந்த இடத்தில் பேரணிகளை நடத்தினாலும், நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0b0c218-5762-4e6d-b340-dcd5bb974049/26-6aa23b9c21ddf.webp' /></p><p> </p><p>

நாமல் ராஜபக்ச வந்ததால் ஆதரவு இரட்டிப்பாகும் என்று கூறுவதெல்லாம் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றது. ராஜபக்சர்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் ஒருபோதும் இடமில்லை.
</p><p>
தங்களுடைய குற்றங்களையும், மோசடிகளையும் மறைப்பதற்காகவே மீண்டும் மக்கள் கூட்டங்களை ராஜபக்சர்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
செப்டெம்பர் 12 அல்ல 13,14,15 ஆகிய எந்த திகதிகளிலும் கூட்டங்களை நடத்தினாலும் அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UOn5fvFKd8Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 


</p>]]></content>
            <updated>2026-09-10T05:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதன்முறையாக மடிக்கும் திறன்கொண்ட கைபேசியை அறிமுகப்படுத்தியது Apple]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apple-iphone-duo-1789014561"></link>
            <id>https://tamilwin.com/article/apple-iphone-duo-1789014561</id>
            <summary type="text">தனது வரலாற்றில் Apple நிறுவனம் முதன்முறையாக iPhone Duo எனும் புதிய மடிக்கும் கைபேசியை அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் குப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது வரலாற்றில் Apple நிறுவனம் முதன்முறையாக iPhone Duo எனும் புதிய மடிக்கும் கைபேசியை அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
கலிபோர்னியாவின் குப்பெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜோப்ஸ் அரங்கில் நடைபெற்ற Apple event நிகழ்வில் புதிய பிரதம நிறைவேற்று ஜோன் டெர்னஸ் தலைமையில் இந்த கைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><h2>அக்டோபர் 23 ஆம் திகதி முதல் விற்பனைக்கு&nbsp;</h2><p>
இந்த புதிய மடிக்கும் கைபேசியின் வெளிப்புறத் திரை 5.4 அங்குலமாகவும், விரித்தவுடன் ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரியதான 7.6 அங்குலத் திரையைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">This iPhone duo animation <a href="https://t.co/y7NftWpyXS">pic.twitter.com/y7NftWpyXS</a></p>&mdash; Marques Brownlee (@MKBHD) <a href="https://x.com/MKBHD/status/2097782855141335144?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும், இதில் iPad சாதனத்தில் பயன்படுத்தப்படும் Apple Pencil ஸ்டைலஸைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன் ஆரம்ப விலை 1,999 அமெரிக்க டொலர்களில் தொடங்குகிறது. இதன் முன்பதிவுகள் எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி தொடங்கி, அக்டோபர் 23 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T05:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் முன்னாள் விமானப்படை தளபதி FCIDயில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/roshan-gunathilaka-summoned-by-fcid-1789013094"></link>
            <id>https://tamilwin.com/article/roshan-gunathilaka-summoned-by-fcid-1789013094</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.இன்று காலை 9.30 ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>இன்று காலை 9.30 மணிக்கு நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க முன்னிலையாகியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இன்று (10) காலை 9.30 மணிக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவின் (FCID) முன் முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.&nbsp; </p><p>மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள்&nbsp; தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T04:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-arrest-in-dubai-cid-investigation-1789008974"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-arrest-in-dubai-cid-investigation-1789008974</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’ தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’ தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க&nbsp; விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.</p><p> </p><p>

'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.</p><h2>பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர்&nbsp;</h2><p>
</p><p>
கொண்ட ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573437c6-0f0e-412a-85e8-ca199e3f7b26/26-6aa22b707e490.webp' /></p><p>

கோல்டன் விசா’ வசதியின் அடிப்படையில் டுபாயில் தங்கியிருந்தபோது, ​​அவர் இலங்கையில் கொலை, மிரட்டிப்பணம் பறித்தல், மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்களை செய்துள்ளதுடன், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
</p><p>
இவர் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்பது குறித்து அந்நாட்டின் பொலிஸ் அல்லது அரசாங்கமோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>

குடிவரவு மற்றும் குடியகல்வு&nbsp; அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.</p><h2>டுபாயில் வசிப்பதற்காக தங்க விசா</h2><p>
</p><p>டுபாயில் வசிப்பதற்காக தங்க விசா பெற்றிருந்ததால், கொண்டா ரஞ்சிக்கு நாட்டின் சட்டங்களிலிருந்து ஓரளவு விலக்கு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21d4e8d9-2cce-4c8b-bbc9-f2ee61dc2c14/26-6aa22b7132042.webp' /></p><p>

டுபாயில் பெரும் தொகையை முதலீடு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தங்க விசாக்களை, கொண்ட ரஞ்சி பல ஆண்டுகளாக பெற்று வந்துள்ளார்.

 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை அணிவது கொண்ட ரஞ்சியின் பழக்கமாக இருந்துள்ளது.
</p><p>
 பத்து விரல்களிலும் மோதிரங்கள், பல கிலோ எடை கொண்ட தங்க நெக்லஸ்கள், மற்றும் மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வளையல்கள் அணியும் பழக்கம் கொண்ட ரஞ்சிக்கு இருந்துள்ளது.
</p><p>
இவர் தனது தங்க நகைகள், ஆடம்பர வாழ்க்கை காரணமாக, பாதாள உலகக் கும்பல்களிடையே பிரபலமான நபராக இருந்துள்ளார்.

அவருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதுடன், அவர் சில காலமாக இலங்கைக்குப் பல்வேறு போதைப்பொருட்களைக் கடத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் கூறுகிறது.
</p><p>
இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட அவரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p>&nbsp; </p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T04:41:34+00:00</updated>
        </entry>
    </feed>
