<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-23T08:47:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்துள்ள பதற்றம்! அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-to-americans-around-the-world-1784794866"></link>
            <id>https://tamilwin.com/article/warning-to-americans-around-the-world-1784794866</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களும் &quot;மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு&quot;&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களும் "மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு"&nbsp;அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p></p><h2>விமான இரத்துகள் மற்றும் பயண இடையூறுகள்&nbsp;&nbsp;</h2><p><span style="font-size: 14px;">"மத்திய கிழக்கில் உள்ள சிக்கலான பாதுகாப்புச்சூழல் காரணமாக எதிர்பாராத விதமாக பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fea2138a-4854-4ff6-b461-4c2f341afb32/26-6a61d2ee45121.webp' /></p><p>
</p><p>
மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், முக்கிய இடங்களை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.</p><p><span style="font-size: 14px;">தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் விமான இரத்துகள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.</span></p><p> மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதி வழியாகப் பயணம் செய்வதையோ அல்லது பார்வையிடுவதையோ மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க அரசாங்கம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு - பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/250-000-sri-lankans-find-employment-abroad-1784794429"></link>
            <id>https://tamilwin.com/article/250-000-sri-lankans-find-employment-abroad-1784794429</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. 

இந்த வேலைவாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. </p><p>

இந்த வேலைவாய்ப்புகள், இலங்கை அரசாங்கம் மற்றும் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><h2>


மத்திய கிழக்கில் அதிகரித்த போர் பதற்றம்</h2><p>
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவச் சூழல் காரணமாக, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் சற்றுக் குறைவு ஏற்பட்டிருந்தாலும், அதிக ஊதியம் தரும் வேலைகளுக்காகப் பாதுகாப்பான இடங்களுக்குத் தொழிலாளர்களை வழிநடத்த பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2497ab2-9eec-4734-b7d3-830406f40d14/26-6a61cfcd46b53.webp' /></p><p> 

இதற்கமைய, 2026ஆம் ஆண்டில் இதுவரை 143,087 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், இவர்களில் 92,590 பேர் ஆண் தொழிலாளர்கள் மற்றும் 50,497 பேர் பெண் தொழிலாளர்கள் உள்ளடங்குகின்றனர். </p><h2>


அந்நிய செலாவணி அதிகரிப்பு</h2><p>


இதற்கிடையில், இலங்கைத் தொழிலாளர்களின் விருப்பமான இடமான இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்ப பணியகம் திட்டமிட்டு, இதுவரை அவர்களில் 7,873 பேர் வேலைக்குச் சென்றுள்ளனர். </p><p>

அத்துடன், 8,000 தொழிலாளர்களை தென் கொரியாவிற்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p>இதுவரை 4,794 பேர் அங்கு பணிக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e32d12c6-fdbb-4e10-bdd3-7004216f0129/26-6a61cfcdecbde.webp' /></p><p>

 பணியகத் தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 73,623 தொழிலாளர்கள் திறன் சார்ந்த பணிகளுக்காகவும், 69,494 தொழிலாளர்கள் திறன்சாரா பணிகளுக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். </p><p>

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-accidents-in-the-factory-homagama-1784790683"></link>
            <id>https://tamilwin.com/article/fire-accidents-in-the-factory-homagama-1784790683</id>
            <summary type="text">ஹோமாகம, கட்டுவான பகுதியில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம, கட்டுவான பகுதியில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
நேற்று முன்தினம் (21) காலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவு தீயில் எரிந்திருந்தன.</p><p></p><h2>பரிசோதனை முடிவுகள்</h2><p>
</p><p>
இதனையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94463200-3018-4a30-8f64-9a7ac1bf3265/26-6a61c9dbbbdbe.webp' /></p><p>இந்த தீ விபத்தில் பன்னிப்பிட்டியவை சேர்ந்த 55 வயதுடைய மரியோ எட்வர்ட், தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார, அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19) , அட்டகலம்பன்ன பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான், ஹட்டன் - மஸ்கெலியாவை சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.</p><p>
இந்நிலையில், 26 வயதான வரதராஜன் தமயந்தியின் உடல் இன்று ( 23) ஆம் திகதி அதிகாலை 3:00 மணியளவில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
</p><p>
குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான வரதராஜன் தமயந்தியின் குடும்பத்தில், மூத்த சகோதரர் ஒருவர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள், பெற்றோர் உள்ளடங்களாக ஆறு பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>குடும்பத்தின் நிதி நெருக்கடி</h2><p>
அவரது தந்தை தோட்டத்தொழிலாளி என்றும், குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக, அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be58f707-6d7f-4f4b-8d93-9161aa6341b2/26-6a61c9db18c0f.webp' />&nbsp;&nbsp;</p><p>சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக இரண்டு நாட்கள் விடுப்பில் அவர் கடைசியாக வீட்டிற்கு சென்று மீண்டும் பணிக்கு திரும்பியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
இந்நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று ( 23) தோட்ட பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜீலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் - ஐங்கரநேசன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-p-ayngaranesan-statement-1784793164"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-p-ayngaranesan-statement-1784793164</id>
            <summary type="text">ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை இனக்கலவரம்
அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன, இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில்
1...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை இனக்கலவரம்
அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன, இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில்
1983 ஜீலையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவாக ஒரு முறையான
நினைவுச்சின்னம் அமைக்கப்படாமல் இருப்பது பெரும் வரலாற்றுத் தவறு ஆகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். </p><p>இது
இறந்த காலத்தை நினைத்து அழுவதற்கானது அல்ல இது ஆக்கிரமிப்புக்கு எதிரான
எதிர்கால போராட்டத்தின் ஒரு வடிவமும் ஆகும். அந்த வகையில் 2027 ஜீலைக்கு
முன்னதாகவாவது 1983 இனக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ்
மக்களையும் நினைவுகூரும் வகையில் பொது நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்படல்
வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கோரிக்கையை
முன்வைத்துள்ளார்.</p><h2>திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை</h2><p> </p><p>ஊடக அறிக்கையில் மேலும்,

1983 ஜீலையில் நிகழ்ந்தது இரு சமூகங்களுக்கிடையே வெடித்த ஒரு சாதாரண கலவரம்
அல்ல. அது, அப்போதைய பேரினவாத அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதத்தோடும்,
அனுசரணையோடும் அரச இயந்திரங்களையும், வாக்காளர் பட்டியல்களையும் பயன்படுத்தித்
தமிழ் மக்களை இனங்கண்டு மிகத் துல்லியமாக நடாத்தப்பட்ட திட்டமிடப்பட்ட ஓர்
இனப்படுகொலை ஆகும்.</p><p> </p><p>கொழும்பில் ஆரம்பித்துத் தென் இலங்கையின்
பிறபகுதிகளுக்கும் மலையகத்துக்கும் பரவிய பேரினவாத வெறியாட்டத்தில்
வெலிக்கடைச் சிறையில் கைதிகளாக இருந்த 53 பேர் உட்பட 3000 தமிழர்கள் வரையில்
படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஜீலை இனக்கலவரம் தமிழ் மக்களின் உயிர்களை மாத்திரம் பலியெடுக்கவில்லை.</p><p></p><p>
</p><p>அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் திட்டமிட்டுத்
தீக்கிரையாக்கப்பட்டன. ஈழத்தமிழர்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்து
விடக்கூடாது என்பதற்காகத் தமிழர்களின் பல தசாப்தகாலப் பொருளாதாரக்
கட்டமைப்புகள் ஒரே வாரத்துக்குள் முற்றாகச் சிதைக்கப்பட்டன. தமிழ் மக்கள்
வெறும் கையினர்களாக அங்கிருந்து கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு
அனுப்பிவைக்கப்பட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/120c21a0-fe31-42d3-ae79-2b3d9c55f282/26-6a61ce1fcfba5.webp' /></p><h2>வரலாற்றுப் பேரவலம்</h2><p> இந்த வரலாற்றுத் துயரங்களை மறப்போம் மன்னிப்போம்
என்று கூறிவிட்டு நாம் கடந்து செல்ல முடியாது.

எமது நெஞ்சில் ஆறாத வடுவாக இருக்கும் இந்த வரலாற்றுப் பேரவலத்தின்
பின்னணியையும், அதன் மூலம் தமிழ் இனம் கற்றுக்கொண்ட அரசியல் பாடங்களையும் எமது
அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவது முதன்மையான தேசியக் கடமையாகும். </p><p>இந்த
வரலாற்றுக் கடத்துகைக்கு நினைவேந்தல்களும், நினைவுச் சின்னங்களும் அவசியமானவை
ஆகும். எனவே, கறுப்பு ஜீலையில் எமது இனம் இழந்த உயிர்களின் சாட்சியாகவும்,
எமது தேசிய விடுதலைப் பயணத்தின் வழிகாட்டியாகவும் பொருத்தமானதொரு இடத்தில்
1983 கறுப்பு ஜீலை நினைவுச்சின்னம் நிறுவப்படல் வேண்டும் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-day-water-cut-1784792438"></link>
            <id>https://tamilwin.com/article/two-day-water-cut-1784792438</id>
            <summary type="text">தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பல பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தம் செய்வது குறித்து அறிவிப்பு ஒன்றை&amp;nbsp; வெளியிட்டுள்ளது.

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பல பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தம் செய்வது குறித்து அறிவிப்பு ஒன்றை&nbsp; வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த நீர் விநியோகத்&nbsp;தடை திகன மற்றும் மெனிகின்ன பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p></p><h2>அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள்&nbsp;</h2><p>
அந்த அறிவிப்பின்படி, இன்று (23ஆம் திகதி) காலை 8.30 மணி முதல் 25ஆம் திகதி வரை 48 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e34228-3f23-4280-a92b-36651d2c9a9c/26-6a61cc34015a1.webp' /></p><p>
இதற்கிடையில், அப்பகுதிகளில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நீர் விநியோகம் தடைப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:14:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் நீதிமன்றத்தில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச - திரண்டுள்ள முக்கிய ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-gotabaya-rajapaksa-to-the-high-court-1784792622"></link>
            <id>https://tamilwin.com/article/president-gotabaya-rajapaksa-to-the-high-court-1784792622</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச&nbsp; முன்னிலையாகியுள்ளார். </p><p>


இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று(23.07.2026) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மனு விசாரணை</h2><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தும் விசாரணைகள் சம்பந்தமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4VW5UHVnOlE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இது தொடர்பான விசாரணைகளை இன்றைய தினத்திற்கு(23) மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது</p><p>
இந்த நிலையில், இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்ச அவருடைய ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், நாமல் ராஜபக்சவின்,&nbsp; வருகையை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/558f2c9d-08b8-4291-9ffd-6413b86a649f/26-6a61c903ec998.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:46:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழினத்தின் சாபக்கேடு அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-bimmal-slams-archchuna-1784789983"></link>
            <id>https://tamilwin.com/article/minister-bimmal-slams-archchuna-1784789983</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் அவசியமற்ற, கேவலமான மற்றும் வக்கிரமான முறையில் நடந்துகொள்ளும் உறுப்பினர்கள் ஒன்றிரண்டு பேர் உள்ளனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் அவசியமற்ற, கேவலமான மற்றும் வக்கிரமான முறையில் நடந்துகொள்ளும் உறுப்பினர்கள் ஒன்றிரண்டு பேர் உள்ளனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்கள் மனநோயாளி என்பதால் பொறுமையுடன் இருக்கிறேன் என நாடாளுமன்றத்தில் இன்று(23.07.2026) உரையாற்றும் போது அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஒழுங்கு தொடர்பான பிரச்சினை ஒன்றை எழுப்ப முயற்சித்த போதே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
</p><h2><b>
தமிழ் மக்களுக்கே அவமானம் </b></h2><p>அதற்கு பதிலளித்த அமைச்சர், 

“அர்ச்சுனா எம்.பி தமிழ் மக்களுக்கே அவமானம் சேர்க்கும் ஒரு நபர். எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது நடந்துகொண்ட விதத்தை அவதானித்தீர்களா? அவை மைக் மூலம் கேட்காமல் இருக்கலாம். காணொளிகளிலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த நாடாளுமன்றத்தின் நான்கு சுவர்கள் தான் சாட்சியாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f003da0-5dfb-4469-923f-d6b7c8d0512b/26-6a61c1b2cbf1b.webp' /></p><p>அவர் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, வெளியே செல்லும்போது நடந்துகொள்வதும் இப்படித்தான். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை இன்று நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>

அவருக்கு அருகில் இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார் பொன்னம்பலம், சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். </p><p>முன்னர் சபாநாயகர் கரு ஜெயசூரியவை இங்கிருந்த நாற்காலிகளால் தாக்கியுள்ளனர். ஆனாலும், இந்தளவுக்குக் கேவலமான முறையில் யாரும் பேசியதில்லை&nbsp;என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><h2><b>
நிலையியற் கட்டளை</b></h2><p>இதன்போது அர்ச்சுனா இராமநாதன் ஏதோ கூற முயற்சித்துள்ளார். மடையனைப் போன்று நடந்துகொள்ள வேண்டாம். நாடாளுமன்றத்தை நகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அர்ச்சுனா எம்.பி. என்னை குறித்து இதற்கு முன்பும் அவதூறான முறையில் பேசியுள்ளார் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c8c008-c40e-4a62-a252-c332b610ae46/26-6a61c1b37afab.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில், அங்கு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,&nbsp; உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியற்ற வகையில் பேசுவது பொருத்தமானதல்ல என&nbsp; &nbsp;தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>அத்துடன், “மடையனைப் போன்ற கதைகளைக் கூற வேண்டாம் எனக் கூறுவதைத் தவிர்க்கவும். நீங்கள் நிலையியற் கட்டளைகளைத் தெரிந்து கொண்டு வாருங்கள். </p><p>பிமல் ரத்நாயக்க, குமார் பொன்னம்பலம் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் பற்றிக் கூறினார். இங்கு அத்தகையதொரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. </p><p>இங்குள்ளவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, குமார் பொன்னம்பலத்தின் மகனாவார்”&nbsp; என சஜித் மேலும்&nbsp; குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனையடுத்து குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி, நான் சைக்கோவாக இருக்கலாம். ஆனால், ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என சபையில் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கோணேஸ்வரம் ஆலய அங்கத்துவப் பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல் - திருத்தம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thirukoneswaram-temple-registration-1784791662"></link>
            <id>https://tamilwin.com/article/thirukoneswaram-temple-registration-1784791662</id>
            <summary type="text">திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவப் பதிவு நடைமுறையால் பாதிக்கப்பட்ட பக்தர்கள், தற்போதைய நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவப் பதிவு நடைமுறையால் பாதிக்கப்பட்ட பக்தர்கள், தற்போதைய நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு எளிமையான, வெளிப்படையான மற்றும் மக்கள் நட்பு முறையை அறிமுகப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அவர்கள் விடுத்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் ஆயுள் அங்கத்துவத் திட்டம் பாராட்டத்தக்க ஒன்றாக
இருந்தாலும், தற்போது நடைமுறையில் உள்ள விண்ணப்ப முறை பக்தர்களுக்கு தேவையற்ற
அலைச்சல், நேர விரயம் மற்றும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துவதாகும்.</p><p></p><p>

தற்போதைய நடைமுறையின்படி, விண்ணப்பப் படிவங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில்
மட்டுமே வழங்கப்படுவதுடன், விண்ணப்பதாரர் நேரில் வந்து மட்டுமே விண்ணப்பத்தைப்
பெற்றுக்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>

சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்</h2><p>
 பின்னர் மீண்டும்
நேரில் வந்து விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டியதுடன், கிராம அலுவலரின்
பரிந்துரையையும் பெற்றிருக்க வேண்டும். </p><p>அதன் பின்னர் உறுப்பினர் அடையாள
அட்டையைப் பெறவும் கட்டணத்தைச் செலுத்தவும் மீண்டும் ஆலயத்திற்கு அல்லது ஆலய
அலுவலகத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382d4760-8a40-4ac9-8de7-61fde86a5d3b/26-6a61c34e4746b.webp' /></p><p>
</p><p>
இதனால் ஒரு பக்தர் ஆயுள் அங்கத்துவத்தைப் பெறுவதற்காக குறைந்தபட்சம் மூன்று
தடவைகள் ஆலயத்திற்கு அல்லது ஆலய அலுவலகத்திற்கு வர வேண்டியுள்ளதாகவும், இது
குறிப்பாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும்
திருகோணமலைக்கு வெளியே வசிப்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஆலய யாப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர்
ஆயுள் அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என
குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது விண்ணப்பங்கள் ஜூலை 15 ஆம் திகதிக்குப்
பின்னர் பெறப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டால், ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர்
உறுப்பினர் பட்டியலை எவ்வாறு தயாரித்து காட்சிப்படுத்த முடியும் என்பது
தொடர்பாக பக்தர்கள் நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளனர்.
</p><p>
அத்துடன், ஆயுள் அங்கத்துவ விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே
வழங்குதல், விண்ணப்பதாரர் பல தடவைகள் நேரில் வர வேண்டும் எனக்
கட்டாயப்படுத்துதல், கிராம அலுவலரின் பரிந்துரையை கட்டாயமாக்குதல் போன்ற
நடைமுறைகளுக்கு ஆலய யாப்பில் எந்தவொரு ஏற்பாடும் இல்லை என்றும், அவ்வாறான
நடைமுறைகள் எந்த அடிப்படையில் அமுல்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில்
சம்பந்தப்பட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
</p><h2>

உடனடியாக நடைமுறைக்கு வரும் விதிமுறைகள்</h2><p>
எனவே, பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒரே தடவையில் விண்ணப்பத்தைப்
பெற்று, பூர்த்தி செய்து, கட்டணத்துடன் சமர்ப்பிக்கும் நடைமுறையை
அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், தேசிய அடையாள அட்டையை அடையாள ஆவணமாக
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கிராம அலுவலரின் பரிந்துரை பெறும் கட்டாயத்தை
நீக்க வேண்டும் என்றும், உறுப்பினர் அடையாள அட்டையை பின்னர் பதிவுத் தபால்
மூலம் அனுப்புதல் அல்லது தயாரானதும் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை
அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7082c2fa-bf01-429c-b454-e5b614932df0/26-6a61c34f1b680.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கையொப்பங்களுடன் கூடிய
முறைப்பாட்டு மனுக்கள் கிழக்கு மாகாண ஆளுநர், திருகோணமலை மாவட்ட அரசாங்க
அதிபர், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், இந்து சமய கலாசார அலுவல்கள்
திணைக்களப் பணிப்பாளர், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. சு. குகதாசன் ஆகியோருக்கும்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடி
தலையீடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும்
பாதிக்கப்பட்ட பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

மேலும், தற்போதைய நடைமுறைகள் ஆலய யாப்பிற்கு அமைவானவையா என்பது தொடர்பில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையான விசாரணை நடத்தி, தேவையான திருத்தங்களை
உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், பக்தர்களின் வசதிக்கும் ஆலய யாப்பின்
விதிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் நிர்வாக நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்
என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதை தடுக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் - காணி உரிமையாளர்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-problem-in-kilinochchi-1784789356"></link>
            <id>https://tamilwin.com/article/land-problem-in-kilinochchi-1784789356</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோயில் வயல்
பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதற்கு வன
ஜீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோயில் வயல்
பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதற்கு வன
ஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாகவும், அவற்றை சுவீகரிப்பதற்கான முயற்சிகளை
மேற்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோயில் வயல்
பகுதியில் அதாவது ஆனையிறவு வெற்றிலைக்கேணி பிரதான வீதியில் மேற்கு புறத்தில்
உள்ள குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தலைமுறை தலைமுறையாக பயிர்செய்கை
மேற்கொண்டும் வசித்தும் வந்துள்ளனர்.</p><p></p><h2>மக்கள் இடம்பெயர்வு</h2><p> இவ்வாறான தனியார் காணிகளுக்கு ஆவணங்கள் கடந்த 1911ஆம் ஆண்டுகளிலும்
வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு ஆனையிறவில் இடம்பெற்ற யுத்தம் மற்றும்
வெற்றிலைக்கேணியில் இருந்து ஆனையிறவை நோக்கி மேற்கொள்ளப்பட்ட இராணுவ
நடவடிக்கை காரணமாக இப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து தமது
வாழ்வாதாரங்களை கைவிட்டு சென்றனர்.</p><p>
கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைபெற்றதன் பின்னர் வெடி பொருள் ஆபத்தான
பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு 2020ஆம் ஆண்டு வரையும் வெடிப்பொருள்
அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தற்போது குறித்த காணிகளை துப்புரவு செய்து மக்கள் குடியேறுவதற்கு அல்லது
பயிர் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால்
தடை ஏற்பட்டு வருகின்றது.</p><p></p><h2>வழக்கு தாக்கல்</h2><p> குறிப்பாக கடந்த 1911ஆம் ஆண்டும் அதற்கு முன்னருமான காணி ஆவணங்கள் கொண்ட
பாதிரியார் தோட்டம், ஆலங்காட்டு பள்ளம், கருப்பங்காடு ஆகிய பெயர்களைக் கொண்ட
தனியாருக்கு சொந்தமான தென்னை பயிர்ச்செய்கை காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம்
கையகப்படுத்தும் நோக்கில் குறித்த காணி உரிமையாளர்களை அவர்களது காணிகளை
துப்புரவு செய்யவிடாது தடுத்து வருவதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
செய்தும் வருகின்றனர்.
</p><p>குறித்த காணிகளில் தொன்று தொட்டு ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்தமைக்கான
காணி ஆவணங்கள் தோட்டச் செய்கைகளுக்காக முண்ணைய காலங்களில் வெட்டப்பட்ட
கிணறுகள், வீடுகள், கட்டடங்கள் குடியிருந்தமைக்கான ஆதாரங்கள் மற்றும் போரில்
எஞ்சியுள்ள பனை தென்னை மா போன்ற பயன்தரும் மரங்கள் என்பன சாட்சியாக உள்ள
போதும் இவ்வாறு வனஜீராசிகள் திணைக்களம் தனது காணிகளை துப்புரவு செய்யவிடாது
தடைகளை ஏற்படுத்தி அவற்றை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருவதாகவும் தமது பூர்வீக காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும்
பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:29:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுர நீங்கள் தவறு செய்கிறீர்கள்... நாமலின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-you-are-making-a-mistake-namal-s-warning-1784789292"></link>
            <id>https://tamilwin.com/article/anura-you-are-making-a-mistake-namal-s-warning-1784789292</id>
            <summary type="text">எதிர்க்கட்சிகளை இலல்லாதொழித்துவிட்டு உங்களது அரசியல் நோக்கங்களை அடைய முடியும் என்று நினைத்தால், ஜனாதிபதி அநுர..,&amp;nbsp; நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சிகளை இலல்லாதொழித்துவிட்டு உங்களது அரசியல் நோக்கங்களை அடைய முடியும் என்று நினைத்தால், ஜனாதிபதி அநுர..,&nbsp; நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>அடக்குமுறை அரசாங்கம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p>எதிர்க்கட்சிகளை இல்லாதொழிக்க அரசாங்கம் நினைத்தால் அது தவறான எண்ணம்.&nbsp; தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதி எதிர்க்கட்சிகளை ஒழித்துவிட்டதாக கூறுகின்றார்.&nbsp; இது ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதியால் சொல்லப்படும் கதை.&nbsp;</p><p>இது ஒரு அடக்குமுறை. இந்த அடக்குமுறையின் தொடர்ச்சியாகவே,&nbsp; ஓய்வு பெறும் நீதிபதிகளின் வயதை நீடிக்கும் செயற்றிட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f30dcc-3322-415a-b699-85af5cc60b16/26-6a61c01abc660.webp' />&nbsp;&nbsp;</p><p>அரசாங்கம் தனது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக இந்த நாட்டின் நீதி அமைப்பை பயன்படுத்த முயல்வது தெளிவாகத் தெரிகின்றது.&nbsp; </p><p>அடக்குமுறை, சிறையில் அடைத்தல், ஒழித்துக்கட்டுதல்&nbsp; ஆகியவற்றின் மூலம் தனது அரசியல் நோக்கங்களை அடைய முடியும் என்று அரசாங்கம் நினைத்தால், ஜனாதிபதி அவர்களே நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரகலய வழக்கில் சிக்கிய தேசபந்து தென்னகோன் - உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-in-against-deshabandhu-tennakoon-1784790474"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-in-against-deshabandhu-tennakoon-1784790474</id>
            <summary type="text">மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வு அதிகாரி நளின் ஸ்ரீயந்தா ஆகிய இருவருக்கும் அடிப்படை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வு அதிகாரி நளின் ஸ்ரீயந்தா ஆகிய இருவருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p> 

இது தொடர்பான வழக்கு இன்று(23.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


நீதிமன்ற தீர்ப்பு</h2><p>
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், </p><p>

கடந்த 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது, ​​மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வு அதிகாரி நளின் ஸ்ரீயந்தா
 ஆகிய இருவரும் அனுருத்த பண்டார என்ற இளம் சமூக ஆர்வலரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9109d79a-636b-4ef0-9852-2f7a8fa9d78c/26-6a61bedf08580.webp' /></p><p> 

இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று (23) உயர் நீதிமன்றம் இவர்கள் செய்தது அடிப்படை உரிமைகளை மீறல் என தீர்ப்பளித்துள்ளது.</p><p> 

அனுருத்த பண்டார என்ற இளைஞர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர் உயர் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1Aj8iSMQzNw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-23T07:18:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் 6.49 கிலோ கேரள கஞ்சா மீட்பு - சந்தேகநபர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-5-kg-of-kerala-cannabis-recovered-in-kilinochchi-1784789342"></link>
            <id>https://tamilwin.com/article/6-5-kg-of-kerala-cannabis-recovered-in-kilinochchi-1784789342</id>
            <summary type="text">கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6.49 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6.49 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (22.07.2026) முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>
சோதனை நடவடிக்கை சிக்கிய கஞ்சா</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, </p><p>

புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவின் கல்லாறு பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தர்மபுரம் பொலிஸார் கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><p>இதன்போது, தேவாலய வளாகத்திற்கு அண்மையில் கைவிடப்பட்டிருந்த உரப்பை ஒன்றை பொலிஸார் மீட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f581dc01-c720-4b3b-a956-817e4ff29655/26-6a61b9cd9e800.webp' /></p><p>

 அதனை சோதனையிட்டபோது, மூன்று பொட்டலங்களாக பொதியிடப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவை கைப்பற்றப்பட்டன.
</p><h2>
சந்தேக நபர்கள் தப்பியோட்டம்</h2><p>

இதனுடன், சம்பவ இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. </p><p>தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:51:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து : இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-injured-in-lorry-accident-on-hatton-1784788688"></link>
            <id>https://tamilwin.com/article/two-injured-in-lorry-accident-on-hatton-1784788688</id>
            <summary type="text">ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற
லொறி விபத்தில், அதில் பயணித்த இருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற
லொறி விபத்தில், அதில் பயணித்த இருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா
கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த விபத்து நேற்று (22) சுமார் 11.00 மணியளவில், ஹட்டன் பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p></p><h2>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை</h2><p>கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி, திடீரென
கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f87c4163-f26a-4a5c-a3ee-60e97a3e3a5d/26-6a61b819e8506.webp' /></p><p>விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவினர்
உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, லொறியில் சிக்கியிருந்த இருவரையும்
மீட்டு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
</p><p>லொறி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை மயக்கம் காரணமாக இந்த விபத்து
ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விபத்திற்கான
துல்லியமான காரணத்தை கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab3d4447-b354-4daa-b377-12990925af95/26-6a61b81ad73fc.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:50:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித உரிமைகளை குறுகிய எல்லைக்குள் முடக்கவே கூடாது! எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-rights-not-curtailed-opposition-leader-1784787790"></link>
            <id>https://tamilwin.com/article/human-rights-not-curtailed-opposition-leader-1784787790</id>
            <summary type="text">மனித உரிமைகள் என்பது குறுகிய எல்லைக்குள் வரையறுக்கப்படாமல், சிவில் மற்றும்
அரசியல் உரிமைகளுடன் பொருளாதார, சமூக, மத, கலாசார உரிமைகள், காணிக்கான உரிமை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உரிமைகள் என்பது குறுகிய எல்லைக்குள் வரையறுக்கப்படாமல், சிவில் மற்றும்
அரசியல் உரிமைகளுடன் பொருளாதார, சமூக, மத, கலாசார உரிமைகள், காணிக்கான உரிமை,
கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான உரிமைகளையும் இணைத்து விரிவான பொருள்கோடலுக்கு
உட்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பு JDA Perera கலைக்கூடத்தில் 'Social Justice Commission' அமைப்பினால்
நடத்தப்பட்ட "Act Now" திட்டத்தின் இரண்டாம் கட்டமான "UNCOVER" புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை கதைகள்</h2><p>
</p><p>
இந்த கண்காட்சியானது, இலங்கையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான
முக்கிய பிரச்சினைகளைப் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக் கதைகள்
ஊடாகப் பார்வையாளர்களுக்கு முன்வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3adf64f3-2474-4b83-ab7d-fe430642b810/26-6a61b762e8942.webp' /></p><p> </p><p>பல்வேறு சமூக குழுக்கள்
எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அநீதிகள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்த்து,
உணர்வுபூர்வமான உரையாடலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.இது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>"Act Now திட்டத்தின் மூலம் நமது நாட்டில் வெவ்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்த
சமூகத் துன்பியல் சம்பவங்கள் குறித்தும், பல்வேறு பிரதேசங்களில் உரிமைகளை
இழந்த மக்களுக்காகவும் முக்கியமான முன்வைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>ஒதுக்கப்பட்ட மக்கள், மலையக மக்கள், வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தெற்கில் பல்வேறு துன்பியல்
சம்பவங்களால் அழுத்தங்களுக்கு உள்ளான மக்களின் உரிமைகள் ஆகியவற்றை மீண்டும்
பேசுபொருளுக்கு உட்படுத்தும் இத்தகைய முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்,
அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு புதிய பொருள்கோடல்
வழங்கப்பட்டு இந்தப் பரப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கு
நாட்டின் இளைஞர் சமூகம் கைகோர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elephant-rampage-increases-in-batticaloa-1784788502"></link>
            <id>https://tamilwin.com/article/elephant-rampage-increases-in-batticaloa-1784788502</id>
            <summary type="text">மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம்
கட்டை மற்றும் ஏழாம் கட்டை பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக யானைகளின்
நடமாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம்
கட்டை மற்றும் ஏழாம் கட்டை பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக யானைகளின்
நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சற்று அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

யானை வேலிகள் உடைக்கப்பட்டு, யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய
நிலங்களுக்குள் நுழைவதால் உயிர் மற்றும் சொத்து சேதம் ஏற்படும் அபாயம்
உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><h2>
யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை</h2><p>
இது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச
செயலாளர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கலந்துரையாடியதன்
அடிப்படையில், இன்று(23.07.2026) பிற்பகல் முதல் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து இரண்டு விசேட கண்காணிப்பு அணிகள் நியமிக்கப்பட்டு யானைகளை விரட்டும் தற்காலிக
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24f2385f-0caa-4b8c-a3e5-b7eed6f2226e/26-6a61b658a1931.webp' /></p><p>
</p><p>

இரவு 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை
தவிர்க்குமாறும் யானைகள் தென்பட்டால் அருகில் செல்லாமல் உடனடியாக வனஜீவராசிகள்
அலுவலகத்திற்கு தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், டொர்ச், பட்டாசு போன்றவற்றை தனியாக
பயன்படுத்தி யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
</p><p>
இதேவேளை, இதற்கான நிரந்தர தீர்வாக யானைகளை மாவட்ட எல்லையை கடந்து
அனுப்புவதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-thondaman-meets-british-high-commissioner-1784787606"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-thondaman-meets-british-high-commissioner-1784787606</id>
            <summary type="text">கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய இல்லத்தில், இலங்கைக்கான பிரித்தானிய
உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச்செயலாளரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய இல்லத்தில், இலங்கைக்கான பிரித்தானிய
உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளார்.</p><p>
துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ மஹோனியுடன் இணைந்து நேற்று(22) நடைபெற்ற
இச்சந்திப்பில், மலையகச் சமூகத்தின் முன்னுரிமைகள், டித்வா புயலால் ஏற்பட்ட
தாக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலவிவரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள்
குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ec0675-334c-4d8f-b8b8-89e32affeca4/26-6a61b42b577ce.webp' /></p><p>
இச்சந்திப்புத் குறித்துத் தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான், அவர்களின்
ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இலங்கை மற்றும்
ஐக்கிய இராச்சியம் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் கூட்டாண்மையை மேலும்
வலுப்படுத்தும் வகையில் இந்த உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல
ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்து போக்குவரத்து தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tree-falls-on-hatton-colombo-main-road-1784787584"></link>
            <id>https://tamilwin.com/article/tree-falls-on-hatton-colombo-main-road-1784787584</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பெரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததில், போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பெரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததில், போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவம் இன்று(23.07.2026) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. </p><p>

மரம் வீதியின் குறுக்கே விழுந்த காரணத்தினால் வேலைக்குச் செல்லும்
தொழிலாளர்கள், பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளுக்குச் செல்ல முயன்ற பொதுமக்கள்
உள்ளிட்ட பலர் கடும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.</p><p></p><p> 

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும், பிரதேச மக்கள், தோட்ட நிர்வாகத்தினர்
மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><h2> 


பொதுமக்கள் சிரமம்</h2><p>
இயந்திரங்களின் உதவியுடன் மரம் வெட்டப்பட்டு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சில
மணிநேரங்களுக்குப் பின்னர் போக்குவரத்து மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78441b8e-a634-49c5-8fdd-6dfbe7b0f021/26-6a61b31e400e2.webp' /></p><p> </p><p>

மரம் அகற்றப்படும் வரை, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு
பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசலைக்
கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தச் சம்பவத்தில் உயிர்ச் சேதமோ காயமோ எதுவும் ஏற்படவில்லை என
தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அண்மைக்காலமாக நிலவும் மழை மற்றும் பலத்த
காற்று காரணமாக வீதியோரங்களில் உள்ள பழமையான மரங்கள் ஆபத்தான நிலையில்
காணப்படுவதால், அவற்றை உடனடியாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a53d7f9-27c4-46b2-98a8-ed605d76fc29/26-6a61b31f3c325.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5550736f-3d39-43b7-80a5-2d5ea604175e/26-6a61b32014da9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0a8715-7602-4ffe-bb56-b6f50196436a/26-6a61b320e280a.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T06:24:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டம்: இன்று கூட்டு எதிர்க்கட்சிகள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/joint-opposition-meeting-today-1784787048"></link>
            <id>https://tamilwin.com/article/joint-opposition-meeting-today-1784787048</id>
            <summary type="text">நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு
வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராகப் பாரிய
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு
வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராகப் பாரிய
அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டமொன்று
இன்று (23.07.2026) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்
அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.</p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இக்கூட்டத்தில் கலந்துகொள்வதை
உறுதிப்படுத்தியுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ
அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு</h2><p> </p><p>அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும்
இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதுடன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்
கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும்
பிரதிநிதித்துவப்படுத்தாத சகல எதிர்க்கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில்
கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு
வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையானது நாட்டின்
நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் எனச்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f17330e-5243-4674-906a-612f6e4db6fe/26-6a61b20b1b30f.webp' /></p><h2>அவதானம் செலுத்தப்படவுள்ள விடயம்</h2><p> இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் சிவில் மற்றும்
அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களை உருவாக்குவது தொடர்பில் கூட்டத்தில்
அவதானம் செலுத்தப்படவுள்ளது.
</p><p>
அரசின் இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும்
ஒன்றிணைத்துச் செயற்படுவது குறித்துக் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தொலைபேசி வாயிலாகத்
தனித்தனியாகக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/devendramunai-vihara-perahara-procession-safety-1784785661"></link>
            <id>https://tamilwin.com/article/devendramunai-vihara-perahara-procession-safety-1784785661</id>
            <summary type="text">மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையின் 769வது பெரஹர ஊர்வலம் இன்று (23) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகவுள்ளது. 

இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையின் 769வது பெரஹர ஊர்வலம் இன்று (23) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகவுள்ளது. </p><p>

இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>தேவேந்திரமுனை துப்பாக்கிச்சூடு</h2><p> </p><p>

குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்றுமுன் தினம் (21) இரவு துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிசென்ற நிலையில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0b4969-12c3-4322-a52f-49e7a068783c/26-6a61af2babcc6.webp' /></p><p>
</p><p>
கடற்தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த துப்பாக்கிச்சூடானது 'தெஹிபாலே மல்லி' எனும் நபரின் தரப்பினரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
</p><p>
தெஹிபாலே மல்லி' மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய திட்டமிட்ட பாதாள உலகக்குழுக்கள் இம்மோதலுக்குப் பின்னணியில் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

தேவேந்திரமுனை விகாரை பெரஹரவில் கலந்துகொள்ளும் காவடி நடனக்குழுக்களை குறைப்பது தொடர்பாக கஞ்சிபானை இம்ரானால் பயன்படுத்தப்படும் 'KPI' என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவியிருந்தது.</p><h2>சந்தேகநபர் வந்த கார் மீட்பு</h2><p>
</p><p>
இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றிற்கு காரில் வந்து நபர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச்சென்றமை அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கமராவிலும் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e01d340-a89d-437d-8de3-00f6b42f4990/26-6a61af2c5947d.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து துப்பாக்கிதாரி தப்பிச்சென்ற கார் திக்வெல்ல பகுதியில் வைத்து நேற்று (22) இரவு கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள தேவேந்திரமுனை விகாரை பெரஹரவிற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இன்று (23) ஆரம்பமாகும் பெரஹர நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 05 திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T06:05:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-arrested-in-bia-1784786030"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-arrested-in-bia-1784786030</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையொன்றை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையொன்றை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து, அவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற விமானப் பயணியே கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இன்று அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>வெளிநாட்டு பயணி கைது</b></h2><p>வெளிநாட்டவர் கொண்டு சென்ற பயணப் பொதிகளுக்குள், சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 33,000 சிகரெட்டுகள் அடங்கிய 165 சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43882ed2-bc34-4476-86c6-9feece92a515/26-6a61ae8797897.webp' /></p><p>இவற்றின் மதிப்பு சுமார் 49 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாரதியாக பணியாற்றும் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. </p><p>சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-23T06:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் ராணி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடம் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-years-since-yarl-rani-train-service-began-1784785092"></link>
            <id>https://tamilwin.com/article/four-years-since-yarl-rani-train-service-began-1784785092</id>
            <summary type="text">யாழ் ராணி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு நேற்று (22) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அந்தப் தொடருந்தில் தினந்தோறும் பயணம் செய்யும் அரச உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் ராணி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு நேற்று (22) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அந்தப் தொடருந்தில் தினந்தோறும் பயணம் செய்யும் அரச உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் 4ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.</p><p>குறித்த நிகழ்வானது கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் நேற்று பி.ப
4.00மணிக்கு இடம்பெற்றது. </p><p></p><h2>பல அரச உத்தியோகத்தர்கள்</h2><p>குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர்
எஸ்.முரளிதரன், தொடருந்து திணைக்களத்தின் வடமார்க்கத்திற்கான மேற்பார்வையாளர்
வி.எம்.என். நிரந்த விசுந்தர ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a8063aa-188e-468c-bb2f-3a9ddfd40de0/26-6a61acb3d95af.webp' /></p><p>யாழ்.மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கடமைகளுக்காக செல்லும் பல அரச
உத்தியோகத்தர்களுக்கு பொருளாதார நிலைமையில் பிரயாண செலவை குறித்த தொடருந்து சேவையில் ஈடுபடுவதன் மூலம் குறைக்கின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:57:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் களத்தில் ரணில்! அடுத்த ஜனாதிபதி வேட்பாளராம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-to-contest-as-presidential-candidate-1784784051"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-to-contest-as-presidential-candidate-1784784051</id>
            <summary type="text">எதிர்வரும் 2029ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடலாம் என்று ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2029ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடலாம் என்று ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 3 வருடங்கள் இருக்கின்றன. எனவே அது தொடர்பான தீர்மானங்கள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>சஜித்தா.. ரணிலா..!!</h2><p>

அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு நாங்கள் முகம்கொடுக்க வேண்டும். நான் நினைக்கின்றேன் மிக விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறலாம் என்று. </p><p>எனவே அந்த தேர்தலுக்கு நாங்கள் தயாராக வேண்டும். 

2029ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ஐக்கியத் தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1404a05-0804-4a7f-925f-6085a279da8c/26-6a61aa204c973.webp' /></p><p> </p><p>

ஒன்றாக இணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும். அதற்கு பிறகே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியும்.</p><p> 

தற்போதைய நிலவரத்தின்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் முன்னிலையில் இருக்கின்றனர். 

எனவே, இவர்களுள் இருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க கோரும் மனு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-rejects-bid-to-postpone-sri-lanka-s-a-l-exam-1784784830"></link>
            <id>https://tamilwin.com/article/court-rejects-bid-to-postpone-sri-lanka-s-a-l-exam-1784784830</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி ஒரு மாணவர் குழு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp; 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி ஒரு மாணவர் குழு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> 

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (23.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கை மேற்கொண்டு நடத்த அனுமதி மறுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது.&nbsp;</p><p></p><h2>வழங்கப்பட்ட உத்தரவு</h2><p>
</p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85963500-6378-4089-813f-b1487918bd8b/26-6a61aae53c0aa.webp' /></p><p>
</p><p>
நீதிபதி பெர்னாண்டோவின் ஒப்புதலுடன் நீதிபதி அபேசூரிய இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:41:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: முன்னாள் கடற்படை தளபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravindra-granted-bail-1784770560"></link>
            <id>https://tamilwin.com/article/ravindra-granted-bail-1784770560</id>
            <summary type="text">கடந்த 2008 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபருக்கு தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2008 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபருக்கு தலைமறைவாக இருக்க உதவினார் எனக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
முன்னதாக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையிலேயே அவருக்கு இந்த பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது.
</p><p>தமது கட்சிக்காரர் முன்னர் இவ்வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு, பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டவர் என முன்னாள் கடற்படை தளபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c61d22e5-ad42-4637-8ee7-044f40adfdc5/26-6a617002315c5.webp' /></p><p>
</p><p> எனினும், நீதிமன்ற அழைப்பாணையை மதித்து அவர் மீண்டும் முன்னிலையாகியுள்ளார் எனவும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டத்திற்குப் புறம்பானவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம்&nbsp; மேற்கொண்ட முறையான விசாரணைகளுக்குப் பின்னரே இந்த புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, தெரிவித்துள்ளார்.</p><p>தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன, தான் நிரபராதி எனத் தெரிவித்துள்ளார்.</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, சந்தேகநபரான ரவீந்திர விஜேகுணரத்னவை தலா 10 இலட்சம் ரூபா மதிப்பிலான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
</p><p>இவ்வழக்கின் பிரதான சாட்சி அரசியல் புகலிடம் பெற்று சுவிட்சர்லாந்தில் வசிப்பதாக தெரிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், சுவிட்சர்லாந்து தூதரகம் மூலம் அவருக்கு சான்றழைப்பாணை அனுப்ப உத்தரவிடுமாறு கோரியுள்ளனர்.</p><p> அதனடிப்படையில், ஆங்கில மொழியில் சான்றழைப்பாணையை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T05:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் காலநிலையில் ஏற்படவுள்ள சடுதியான மாற்றம் - எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1784781472"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1784781472</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றமானது முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை மாற்றமானது முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக பட்டபெந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,'எல் நினோ'வின் உச்சகட்ட தாக்கம் நவம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும்.</p><h2>காலநிலை மாற்றங்கள்</h2><p>
</p><p>
இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கும் வகையில், அரச நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0995cd60-a0e8-4016-ae4f-b2b4f537a8fb/26-6a61a6f28df79.webp' /></p><p>

'எல் நினோ' என்பது ஒரு உலகளாவிய மோசமான காலநிலை தாக்கமாகும். அதன் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T05:30:37+00:00</updated>
        </entry>
    </feed>
