<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-07T12:29:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும திட்டத்தில் நடந்த கோடிக்கணக்கான மோசடி - விரைவில் கைது செய்யப்படவுள்ள அரச அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraud-of-crores-in-the-ashwesuma-project-1786104518"></link>
            <id>https://tamilwin.com/article/fraud-of-crores-in-the-ashwesuma-project-1786104518</id>
            <summary type="text">தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும
பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது
உறவினர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும
பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது
உறவினர் ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில், தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத்தால், 
இன்று(07.08.2026) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>

முறைப்பாடு</h2><p>
தங்களுக்கு உரிமையுள்ள நிவாரணம் தொடர்பான பணம் கிடைக்கவில்லை என பயனாளிகள்
பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் நடத்திய
முதற்கட்ட விசாரணையில், அந்தப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7839f422-1a25-4d46-b6e6-a9773193379e/26-6a75cb798f3de.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் அந்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p>

குறிப்பிட்ட கணக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அது குறித்த
அறிக்கை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தலவாக்கலை பிரதேச செயலாளர்
பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல்
தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><h2>
அஸ்வெசும பணத்தை மோசடி செய்த அதிகாரிகள்</h2><p>
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடித்
தொகை 1 கோடியே 62 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட
கணக்காய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45845d92-53d9-427c-9800-d710568e142e/26-6a75cb7a754b6.webp' /></p><p>
</p><p>
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின்
அடிப்படையில் இரண்டு சந்தேகநபர், காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>

மேலும் மூன்று அதிகாரிகள் ஹட்டன் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளதாக விசாரணை மேற்கொள்ளும்
தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae7239f7-a48d-4dc4-9d8a-daad52665128/26-6a75cb7b4a7cf.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1178096-5611-46e4-87c9-9af838898689/26-6a75cb7c1db2a.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T12:11:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கல்சியம் நீக்கியை குடித்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-man-in-jaffna-dies-after-consuming-descaler-1786102865"></link>
            <id>https://tamilwin.com/article/family-man-in-jaffna-dies-after-consuming-descaler-1786102865</id>
            <summary type="text">யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(6.8.2026) இடம்பெற்றுள்ளது. இதன்போது அத்தியடி - ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(6.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>இதன்போது அத்தியடி - யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை</h2><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக
கல்சியம் நீக்கியை குடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b7b20b-1293-417d-9046-1db2a4d70925/26-6a75c790146f7.webp' /></p><p> </p><p>பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை
பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
</p><p>
இது குறித்து மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா
மேற்கொண்டார். யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:59:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயை பிரிந்து தந்தையுடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி - பொலிஸாருக்கு தகவல் கொடுத்த அயலவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-dies-in-jaffna-1786103747"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-dies-in-jaffna-1786103747</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில்
தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. 

இந்த சம்பவம் இன்று(07.08.2026)இடம்பெற்றுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில்
தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. </p><p>

இந்த சம்பவம் இன்று(07.08.2026)இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன்போது நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><h2> 

தந்தை வீட்டில் நடந்த சோகம்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர்.
சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும்
நிலையில், அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.</p><p>

வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து
செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1afb858a-f198-4ba9-a3ac-34ab154c619d/26-6a75c80ddd53b.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் நபர் ஒருவர் இன்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில்,
குறித்த இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியமை அவதானிக்கப்பட்டது. </p><p>அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.</p><p>

இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:57:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[46 வருடங்களாக புனரமைக்கப்படாத பாலம் : உடைந்து விழும் நிலையில் மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bridge-that-hasn-t-been-renovated-for-46-years-1786101759"></link>
            <id>https://tamilwin.com/article/bridge-that-hasn-t-been-renovated-for-46-years-1786101759</id>
            <summary type="text">கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரும்பு பாலம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் குறித்த பாலத்தை திருத்தி
தரும்படி&nbsp;இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>குறித்த போராட்டமானது இன்று (07.08.2026) பாலத்தினுள் இடம்பெற்றுள்ளது.</p><h2>பாலத்தின் அடித்தளங்கள்</h2><p>

1980 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பாலம் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
சேதமடைந்து விடுதலைப் புலிகளால் தற்காலிக பாலமாக அமைத்து நீண்ட காலமாக
பாவனையில் இருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இராணுவத்தினரின்
ஆளுமைக்குள் இருந்து குறித்த இடத்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல
போராட்டங்களை முன்னெடுத்த பின்னர் பகுதி பகுதியாக குறித்த பிரதேசத்தை 2018 ஆம்
ஆண்டு மீட்டேடுத்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9b53b74-fcb3-4fc7-ac62-e1f07c942199/26-6a75c2bdb081e.webp' /></p><p>அதன் பின்னர் மாவட்டத்துக்கு பல அபிவிருத்திகள்
வந்தபோதும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பரவிப்பாஞ்சான் கிரமத்தின்
வீதிகளை புறம் தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டே காணப்பட்டுள்ளது.</p><p>தற்போது பாலத்தின்
அடித்தளங்கள் பலவீனமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில்
உள்ளது.</p><p> இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கைகள்
இடம்பெறாத நிலையில் குறித்த பாலத்தை திருத்தி தரும்படி போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்
பயத்துடனேயே கடக்க வேண்டிய சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேனாநாயக்க சமுத்திரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக சந்திரசேகர் நேரில் ஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishing-harbour-at-senanayake-samudraya-1786098976"></link>
            <id>https://tamilwin.com/article/fishing-harbour-at-senanayake-samudraya-1786098976</id>
            <summary type="text">சேனாநாயக்க
சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேனாநாயக்க
சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் கள
ஆய்வில் ஈடுபட்டு, கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடலை
மேற்கொண்டார்.</p><p>இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் கடற்றொழிலாளர்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வரும் நியாயமான பிரச்சினை என்பதை அரசாங்கம் நன்கு
உணர்ந்துள்ளது.இது ஒரு சாதாரண நிர்வாகப் பிரச்சினையல்ல.விஞ்ஞான ரீதியாக அணுகப்பட வேண்டிய விடயமாகும்.</p><p>குறித்த இடத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது அல்லது கடற்றொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>எனவே கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்வளப் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் தீர்வையே அரசாங்கம் முன்னெடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51f82b38-a02b-423d-afb9-db796d885f79/26-6a75c25532218.webp' /></p><p>மீன் குஞ்சுகள் மற்றும் இனப்பெருக்கப் பகுதிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. அதேவேளை வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்</p><p>சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களின் பரிந்துரைகளையும் கருத்தில்
கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீன்வள வளங்களின் நிலைத்தன்மை மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் வகையில் நடைமுறைச்
சாத்தியமுள்ள தீர்மானமொன்றை விரைவில் எடுக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்
என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:33:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சிறைச்சாலையில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/security-tightened-in-jaffna-prison-1786099098"></link>
            <id>https://tamilwin.com/article/security-tightened-in-jaffna-prison-1786099098</id>
            <summary type="text">நாடு முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் அமைதியின்மை நிலவுவதாக வந்த தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணச் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் அமைதியின்மை நிலவுவதாக வந்த தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணச் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p>அதன்படி, யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி, மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, சிறைச்சாலையில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.&nbsp;</p><h2>தீவிர பாதுகாப்பு&nbsp;</h2><p>மேலும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக இராணுவ வீரர்கள் குழுவும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64694044-6d39-4c35-80e6-cd8d26b7c86f/26-6a75be91883da.webp' /></p><p>இதற்கிடையில், யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பாண்மை அதிகாரிகள் ஆகியோரும் சிறைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைக்குள் தற்போது ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதற்கிடையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறையிலிருந்து கன உலோகப் பொருட்கள் மற்றும் தளபாடங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:18:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம்.. வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-gazettes-22nd-amendment-constitution-1786099840"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-gazettes-22nd-amendment-constitution-1786099840</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும், அரசியலமைப்பின் 22ஆவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கான சட்டமூலத்தை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.</p><p>இன்று (7) வெளியான இந்த விசேட வர்த்தமானியின்படி, </p><p>உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 67 ஆண்டுகளாகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 65 ஆண்டுகளாகவும் உயர்த்தப்படும்.</p><h2>வர்த்தமானி</h2><p> </p><p>மேலும், பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை எட்டும் போதோ அல்லது ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகோ, இவ்விரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அதன்படி ஓய்வு பெறுவார் என்றும் இந்த சட்டமூலம் குறிப்பிடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94caf3a6-dc95-4fc1-b0f3-65802c1b6280/26-6a75bb331b006.webp' /></p><p>

இந்த முன்மொழியப்பட்ட திருத்தம், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 19இலிருந்து 24ஆக உயர்த்தவும் கோருகிறது.</p><p>

அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தம் எனப் பெயரிடப்பட்ட இந்த சட்டமூலத்தை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வெளியிடுமாறு உத்தரவிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T11:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[புழுக்களுடன் விற்பனை செய்யப்பட்ட பிஸ்கட்டுக்கள் - உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/biscuits-sold-with-worms-1786100509"></link>
            <id>https://tamilwin.com/article/biscuits-sold-with-worms-1786100509</id>
            <summary type="text">மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட
பலசரக்கு கடையொன்றில் புழுக்களுடனும், பூஞ்சணம் பிடித்த நிலையிலும் விற்பனை
செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட
பலசரக்கு கடையொன்றில் புழுக்களுடனும், பூஞ்சணம் பிடித்த நிலையிலும் விற்பனை
செய்யப்பட்ட ஒருவகை பிஸ்கட்டுகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நடவடிக்கை இன்று(07.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>


உரிமையாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>
களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனினால் இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையில், புழுக்களுடனும், பூஞ்சணம் பிடித்த நிலையிலும் விற்பனை
செய்யப்பட்ட ஒருவகை பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d630b-a8e4-4f63-b022-2c16ad0336f1/26-6a75bb6e3292f.webp' /></p><p> </p><p>


இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் பிஸ்கட்டை உற்பத்தி செய்தவர், விநியோகம்
செய்தவர், விற்பனை செய்தவர், ஆகியோருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான்
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதில் உற்பத்தியாளருக்கு பகிரங்க
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>


இந்த வழக்கிற்கு 46,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், இந்த தொகுதி இலக்கத்தையுடைய அனைத்து பிஸ்கட் பைக்கற்றுக்களையும் விநியோகம் செய்த அனைத்து கடைகளிலிருந்தும் உடன் மீளப்பெற்று அழிக்குமாறும் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lakshman-yapa-abeywardena-granted-bail-1786098631"></link>
            <id>https://tamilwin.com/article/lakshman-yapa-abeywardena-granted-bail-1786098631</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இலஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகையை வழங்கிய பின்னர், கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணையில் செல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இலஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகையை வழங்கிய பின்னர், கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணையில் செல்ல&nbsp; அனுமதித்துள்ளது.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.</p><h2>உயர் நீதிமன்றத்தில் வழக்கு</h2><p>
ஜூலை மாதத்தில், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டி, அபேவர்தன மீது&nbsp; கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112ffd01-ff29-4fd0-ba96-c99e398ae136/26-6a75b8610e651.webp' /></p><p>

இலங்கை முதலீட்டு சபை தொடர்பான ஒரு பணியை நிறைவேற்றுவதற்காக ஒரு தொழிலதிபரிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக இந்த வழக்கில் பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uBdLsK4FJC8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-07T11:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வழக்கு தள்ளுபடி: வலிகாமம் வடக்கு தவிசாளருக்கு பொலிஸார் அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palali-police-dismissed-by-mallakam-court-1786095874"></link>
            <id>https://tamilwin.com/article/palali-police-dismissed-by-mallakam-court-1786095874</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிஸார் தொடர்ந்த வழக்கு
மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டு பிரதேச சபை தவிசாளர்
மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிஸார் தொடர்ந்த வழக்கு
மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டு பிரதேச சபை தவிசாளர்
மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் கூட
நீதிமன்றத்திற்கு வெளியே தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பொலிஸாரால்
அச்சுறுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பாதையை விடுவித்தால் உங்களை கைது செய்வோம் என நீதிமன்றத்தில் வழக்குக்கு முன்னிலையான
உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வெளியே
தவிசாளர் சுகிர்தனை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விரைவில் விடுக்க நடவடிக்கை</h2><p>
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள
பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட
வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த
வழக்கினை நீதிமன்று நேற்றைய தினம் தள்ளுபடி செய்து தவிசாளரையும் சபை
செயலாளரையும் வழக்கில் இருந்து முற்றாக விடுத்திருந்தது. </p><p>இந்நிலையில் குறித்த
சம்பவம் இடம்பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c66a6b0b-1154-4b42-86ee-ddbe3832fe0f/26-6a75b0fb060d5.webp' /></p><p>நீதிமன்றத்திற்கு வெளியே தான் அச்சறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பாக தவிசாளர்
சோ.சுகிர்தனால் எழுத்து மூலம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடளிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த
வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தையிட்டி விகாரை
பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T10:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்தினால் அது ஜனநாயகத்தை மதிக்கும் செயலாகும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/local-government-election-cafeee-organization-1786096956"></link>
            <id>https://tamilwin.com/article/local-government-election-cafeee-organization-1786096956</id>
            <summary type="text">மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்துவது ஜனநாயகத்தை மதிக்கும்
செயலாகும் என கெபே
அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்துவது ஜனநாயகத்தை மதிக்கும்
செயலாகும் என கெபே
அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.</p><p>ஊடகவியலாளர்
ஒருவர் இது தொடர்பில் இன்று (07) வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>அவர், மேலும், "2017இல் இருந்து இது வரைக்கும் இருந்த அரசாங்கங்கள்
ஒவ்வொரு சாட்டுப் போக்குகளையும் சொல்லி எப்படி மாகாண சபை தேர்தலை நடத்தாமல்
பிற்போட்டார்களோ அது போல தற்கால அரசாங்கமும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும்.</p><p>
</p><p>மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஒரே அரசாங்கத்தையும் குற்றம்சாட்ட முடியாது ஏன்
எனில் மாகாண சபை தேர்தல் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டதால் முதலாவதாக 2017ல்
சப்ரகமுவ மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய மூன்று
மாகாணங்களும் முடிவுற்றது.</p><p>2017இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தலைமையில்
நல்லாட்சி அரசாங்கம், 2019இல் கோட்டபாய அரசாங்கம் போன்றன மாகாண சபை தேர்தலை
நடத்துவதில் அக்கரை காட்டவில்லை. </p><p>அது போன்று 2022இல் ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதியாக இருந்த போதிலும் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.</p><p>ஆனால், இந்த அரசாங்கம் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தெளிவாக சொல்லப்பட்ட விடயம் தான்
அரசாங்கத்தை கையில் எடுத்து ஒரு வருடத்திற்குல் நடத்துவதாக சொன்னார்கள் ஆனால்
இருபது மாதங்களை கடந்து இரு வருடங்களை அண்மித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T10:18:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் ஒரு நாளில் 508 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-operations-508-people-have-been-arrested-1786096418"></link>
            <id>https://tamilwin.com/article/drug-operations-508-people-have-been-arrested-1786096418</id>
            <summary type="text">நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த ஒரு நாளில் மட்டும் 508 பேர் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த ஒரு நாளில் மட்டும் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>நேற்று (06) மேற்கொண்ட சோதனைகளின் போது 27,054 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>கைது&nbsp;</h2><p>கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 20 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 142 பேரும் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176e4e04-e337-406e-9293-8f0518cc1b76/26-6a75aff372930.webp' /></p><p>
 

இது தவிர, மதுபோதையில் வாகனம் செலுத்திய 65 பேரும், கவனக் குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 122 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T10:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறைச்சாலையில் நிலவிய பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்..! அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-at-pallansena-prison-1786079920"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-at-pallansena-prison-1786079920</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய இணைப்பு&nbsp;</span></p><p>நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சிறைக்கைதிகள் காலை உணவு நேரத்தில் சிறையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த வந்த பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
</p><p>
இதன்போது சுமார் 30 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சில மணி நேரங்களுக்கு பின்னர், பாதுகாப்புப் படையினர் அவர்களை கீழே இறக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p>இதனையடுத்து சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><span style="font-size: 28px;">மூன்றாம் இணைப்பு</span></p><p>நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
கைதிகள் தற்போது அதிகாரிகள் மீது கற்களை வீசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிற்கதவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;&nbsp;</p><p>சிறையில் இடப்பற்றாக்குறை மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததாலும், வழக்குகளை விரைவாக முடிக்கக்கோரியும் தமக்கு விரைவில் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இன்று (07) வெள்ளிக்கிழமை காலை முதல் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>&nbsp;<span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு&nbsp;</span></p><p>கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மாவட்டம் தலுபோத்தாவில் உள்ள பல்லன்சேன திறந்தவெளிச் சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பணிக்காக பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மாடியில் கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a5aae64-61a7-4f1f-a445-2a26f2f96f69/26-6a758d346ae30.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் வெடித்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். </p><p>

காயமடைந்த 11 கைதிகளை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதில் ஒரு கைதி உயிரிழந்தார்.

இன்று காலை (07) குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை நிலவியது. </p><p>

இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் குழு ஒன்று சிறை மருத்துவமனையையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு&nbsp;</span></p><p>நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="font-size: 14px;">சம்பவ இடத்திற்கு பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</span></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மெகசின் மற்றும்&nbsp;&nbsp;குருவிட்ட சிறையிலும் பதற்றம்</span></p><p>இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99e3076-6fae-4b15-8a6e-0a1381b05b1b/26-6a7571ed9c29f.webp' />&nbsp;</p><p>
இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p>

இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rzXep8D5we4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T10:11:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் கரையொதுங்கிய ஆணின் சடலம் - விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-a-man-washed-ashore-in-mannar-1786097097"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-a-man-washed-ashore-in-mannar-1786097097</id>
            <summary type="text">மன்னார் - வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் இன்று(07.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்றைய தினம் காலையில், கடற்றொழிலுக்காக கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில், சடலம் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. </p><h2>

சடலம் மீட்பு</h2><p>
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுச் சென்றுள்ளனர். 

குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதோடு இதுவரை அடையாளம்
காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd25bcc-c179-41b2-bea2-5b4777b5f4fa/26-6a75ae6c72ada.webp' /></p><p> </p><p>

குறித்த சடலம் இந்திய கடற்றொழிலாளரா? அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளரா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T10:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-mahotsavam-1786096452"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-mahotsavam-1786096452</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை
வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(07.08.2026) காலை
கல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை
வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(07.08.2026) காலை
கல்வியங்காட்டில் நடைபெற்றுள்ளது. </p><p>

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் இடம்பெற்று, 
பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி
மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச்
செல்லப்பட்டது.</p><p>

அதன் பின்னர், கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும்
காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48954cda-9754-4b21-984f-007862a05c09/26-6a75ab6694a6c.webp' /></p><p>

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி காலை 10
மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T09:54:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பதற்றமான சூழல்! தீவிரமடையும் சிறைச்சாலை கலவரம் - ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-attack-emergency-meeting-by-the-president-1786094155"></link>
            <id>https://tamilwin.com/article/prison-attack-emergency-meeting-by-the-president-1786094155</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.பொதுப் பாதுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.</p><p>பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெடித்த மோதல்கள்</h2><p>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மெகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02fd628e-515b-4590-895a-1484c115f74f/26-6a75a7bb72225.webp' />&nbsp;</p><p>நேற்று இரவு (06) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p>

இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நாட்டில் பதற்றமான சூழல்&nbsp;</h2><p>இதனையடுத்து இன்று காலை முதல்&nbsp;நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bd50e0f-b08c-4f1f-930d-0bb8e4df4249/26-6a75a7bc2a8fd.webp' /></p><p>இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.</p><p>இதன் காரணமாக நாட்டில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில்,&nbsp;ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p>

</p>]]></content>
            <updated>2026-08-07T09:39:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் - வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-fog-in-nuwara-eliya-district-1786095023"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-fog-in-nuwara-eliya-district-1786095023</id>
            <summary type="text">நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மத்திய மாகாணத்தின்
பல பகுதிகளில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக நுவரெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மத்திய மாகாணத்தின்
பல பகுதிகளில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகிறது.</p><p> 

இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் வாகனப்
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்</h2><p>
குறிப்பாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கலுகல, பிட்டவலை, கினிகத்தேனை,
கடவல, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம்
அடிக்கடி காணப்படுகிறது.</p><p>அதேபோன்று நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை,
சென்கிளையார், தலவாக்கலை, லிந்துலை, ரதல்ல, நானுஓயா மற்றும் நுவரெலியா நகரை
அண்மித்த பகுதிகளிலும் பார்வைத் தூரம் மிகவும் குறையும் அளவிற்கு கடுமையான
பனிமூட்டம் நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b86c0f7-2752-4df1-8145-d72870ce17fd/26-6a75a61dcba13.webp' />&nbsp; &nbsp;</p><p>
இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும்
சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p> குறிப்பாக மலைப்பாங்கான வளைவுகள் நிறைந்த
சாலைகளில் எதிரே வரும் வாகனங்களை தெளிவாகக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த பிரதான வீதிகளை பயன்படுத்தும் அனைத்து வாகன ஓட்டிகளும்
மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.</p><h2>

சாலைகளில் குவிந்திருக்கும் பனிமூட்டம்</h2><p>
பனிமூட்டம் நிலவும் பகுதிகளில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை கட்டாயமாக
ஒளிரச் செய்து பயணிக்க வேண்டும் என்றும், தங்களுக்குரிய போக்குவரத்து
பாதையிலேயே ஒழுங்காகச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 மேலும் தேவையற்ற முறையில் வேகமாக வாகனம் செலுத்துவதைத் தவிர்த்து, முன்னால் செல்லும் வாகனத்துடன் போதுமான இடைவெளியைப் பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/702670be-02c0-4c31-bf08-46004b73fed2/26-6a75a61eb1dcc.webp' /></p><p>
</p><p>
அத்துடன், மழை காரணமாக சாலைகள் வழுக்கலாக காணப்படுவதால் திடீர் பிரேக்
பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், மலைப்பாதைகளில் கூடுதல் கவனத்துடன்
பயணிக்கவும் போக்குவரத்து பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
சீரற்ற காலநிலை தொடரும் என வானிலை ஆய்வு நிலையம் முன்னறிவிப்பு விடுத்துள்ள
நிலையில், மத்திய மலைநாட்டு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்
பயணத்திற்கு முன் வானிலை நிலவரங்களை அறிந்து, பாதுகாப்பு வழிமுறைகளைப்
பின்பற்றி செயற்படுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியான மழையுடன் இணைந்து நிலவும் இந்த கடுமையான
பனிமூட்டம் காரணமாக அடுத்த சில நாட்களிலும் போக்குவரத்தில் பாதிப்புகள்
ஏற்படக்கூடும் என்பதால், அனைத்து வாகன ஓட்டிகளும் பொறுப்புடனும் அதிகபட்ச
அவதானத்துடனும் பயணிப்பது அவசியம் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34304913-b490-4d5c-8dca-1c02b9a608af/26-6a75a61f9a4de.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e246df-acc7-459b-8e12-ce625394da44/26-6a75a620674c7.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடரும் சீரற்ற வானிலை: நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warning-for-four-districts-1786093553"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warning-for-four-districts-1786093553</id>
            <summary type="text">தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. அதற்கமைய, கண்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.</p><p> அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> 

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நுவரெலியா, நோர்வுட் மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை&nbsp;</h2><p> </p><p>

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, தெரனியகல மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8da3b03-a2ab-425a-ad41-b10c0f94fcfa/26-6a75a562985c2.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தின் தொலுவ, பன்வில, மெததும்பர, உடபலாத, கங்க இஹல கோரள, உடுதும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T09:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ்மா அதிபரின் இல்லத்தை காணொளி எடுத்த நபர் - தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-after-filming-roads-near-igp-s-1786088606"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-after-filming-roads-near-igp-s-1786088606</id>
            <summary type="text">பொலிஸ்மா அதிபர் (ஐஜிபி) மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரின் அதிகார பூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளைப் காணொளி எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ்மா அதிபர் (ஐஜிபி) மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரின் அதிகார பூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளைப் காணொளி எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை சின்னமன் கார்டன்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>காணொளிகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைபேசியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.</p><h2>பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து</h2><p>

பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ஒரு சொகுசு வாகனத்தில் வந்து இறங்கியுள்ளார். </p><p>மேலும், பொலிஸ்மா அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தின் நுழைவாயில் அருகே அவர் காணொளி பதிவு செய்து கொண்டிருந்ததை, பணியில் இருந்த சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/564fbb27-35cc-4708-8a54-6a5514055b69/26-6a75931070b51.webp' /></p><p>
சிறப்பு அதிரடிப்படை அதிகாரி அப்பகுதியில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளார். </p><p>அதனைத் தொடர்ந்து, கொழும்பு அவசரகாலப் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில் சின்னமன் கார்டன்ஸ் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை நடத்திய பின்னர் சந்தேக நபரை கைது செய்தனர்.
</p><h2>முரண்பட்ட தகவல்களை அளித்ததாக</h2><p>
சந்தேக நபரின் கைபேசியை முதற்கட்டமாக ஆய்வு செய்ததில், பொலிஸ்மா அதிபரின் அதிகார பூர்வ இல்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகள் அத்துடன் தலைமை நீதிபதியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் ஆகியவற்றின் காணொளிகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e80e3e9e-7257-4fd1-a482-58c656884be8/26-6a75a3b6a4277.webp' /></p><p>
ஆரம்பகட்ட விசாரணையின்போது, ​​சந்தேக நபர் பொழுதுபோக்கிற்காக அந்த காணொளிகளை பதிவு செய்வதாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இருப்பினும், மேலதிக விசாரணையின்போது அவர் தனது வசிப்பிடம் மற்றும் பிற விவரங்கள் குறித்து முரண்பட்ட தகவல்களை அளித்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
சந்தேக நபர், அலுபோமுல்ல, அருகொடவைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T09:22:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீட்டிற்குள் புகுந்து தங்கநகைகள் மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/robbery-of-jewellery-and-money-in-house-colombo-1786070155"></link>
            <id>https://tamilwin.com/article/robbery-of-jewellery-and-money-in-house-colombo-1786070155</id>
            <summary type="text">கொழும்பு - கல்கிஸ்ஸை பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து பெருந்தொகை பணம் மற்றும் தங்க நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கல்கிஸ்ஸை பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து பெருந்தொகை பணம் மற்றும் தங்க நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கடந்த ஜூலை 18 ஆம் திகதி ஒரு வீட்டிற்குள் புகுந்து 1,41,00,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது</h2><p>இதன்போது இரண்டு பெண் சந்தேகநபர்களும், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஒரு சந்தேகநபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dd81797-d8b1-45ac-a3eb-1f12e0cc2e85/26-6a75a08309c2b.webp' /></p><p>&nbsp;அதன்படி, இந்த குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு பெண் சந்தேகநபர்களும் நேற்று (6) தெஹிவளை பகுதியிலும், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சந்தேகநபரும் ஹட்டன் , பத்தனை பகுதியிலும் கைது செய்யப்பட்டனர்.</p><p>
8 ஜோடி தங்கக் காதணிகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு கை வளையல், 10 தங்க நெக்லஸ்கள், ஒரு கைக்காப்பு, 2 தங்க மோதிரங்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட திருடப்பட்ட பொருட்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
சந்தேகநபர்களுக்கு 28, 46, மற்றும் 53 வயது என்றும், அவர்களில் ஒருவருக்கு 28 வயது என்றும், அவர்கள் ஹட்டன், பத்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T09:08:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல் - உயிரிழந்த கைதி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magazine-prison-clash-prison-dies-1786089075"></link>
            <id>https://tamilwin.com/article/magazine-prison-clash-prison-dies-1786089075</id>
            <summary type="text">கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>&nbsp;</p><h2>பாதாள உறுப்பினரின் ஆதரவாளர் உயிரிழப்பு</h2><p>சிறைச்சாலைக்கு வௌியில் இருந்து பொதியொன்று எறியப்பட்ட நிலையில், அதனை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியமையினால் பதற்றம் நிலவியதாக கூறப்படுகின்றது. 
&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a882a2-5172-424e-8697-e08ccc0606fa/26-6a7597f541f95.webp' />&nbsp;</p><p>இந்நிலையில், நேற்று (06) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்து உயிரிழந்தவர் ‘கொஸ் மல்லி’ எனப்படும் பாதாள உறுப்பினரின் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் தடுப்புக்காவல் கைதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


மோதலில் படுகாயமடைந்த கைதி, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>இது தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளைப் பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gcTssiVF6MY" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-07T08:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tipper-truck-driver-arrested-for-ice-drug-1786090901"></link>
            <id>https://tamilwin.com/article/tipper-truck-driver-arrested-for-ice-drug-1786090901</id>
            <summary type="text">அம்பாறையில் பொலிஸாரின் கடமைக்கு
இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட கனரக சாரதி ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.அத்துடன், அவர் &#039;ஐஸ்&#039; போதைப்பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறையில் பொலிஸாரின் கடமைக்கு
இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட கனரக சாரதி ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p>அத்துடன், அவர் 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமையும்
மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் பணிப்புரைக்கு
அமைவாக, அம்பாறை தலைமையகப் பொலிஸாரினால் அம்பாறை நகரில் விசேட போக்குவரத்துச்
சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>விசாரணைகள்&nbsp;</h2><p>இதன்போது
சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் 'ஐஸ்' போதைப்பொருளைப்
பயன்படுத்தியுள்ளமை உறுதியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6618da67-9fbc-429f-bb32-4cc80ac99beb/26-6a75996a67bfb.webp' /></p><p>

அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்த குறித்த கனரக சாரதியிடம்
மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவருக்கு எதிராக 4 தாக்குதல் வழக்குகள்
நிலுவையில் உள்ளமையும், மேலும் ஒரு தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம்
தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும்
தெரியவந்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T08:39:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திராய்க்கேணிப் படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/traikani-massacre-1786090374"></link>
            <id>https://tamilwin.com/article/traikani-massacre-1786090374</id>
            <summary type="text">&amp;nbsp;அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம்
ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம்
ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம்(05.08.2026) மாலை அந்த கிராமத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது.</p><p> 


கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில்
இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப்
படுகொலை செய்யப்பட்டனர். </p><p>

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து
அந்த கிராமத்து மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
</p><h2>
நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு</h2><p>
இதற்கமைய, இந்த முறையும் படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன்போது கிராம மக்கள், இளைஞர்கள்
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீபமேற்றி, சிறப்புப் பூஜைகள் வழிபாடுகளை
மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f06e76ce-ee45-4135-9b78-bd0149ffd37b/26-6a7593f60e0b0.webp' /></p><p> </p><p>

நினைவேந்தல் நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர்களான திரு. காந்தன், தாமோதரம்
பிரதீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T08:14:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெடித்த மோதல்கள்! முக்கிய சிறைச்சாலைகளில் களமிறங்கிய புலனாய்வாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/series-of-prison-clashes-emergency-alert-1786087302"></link>
            <id>https://tamilwin.com/article/series-of-prison-clashes-emergency-alert-1786087302</id>
            <summary type="text">புதிய இணைப்புகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் முக்கிய சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் காரணமாக&amp;nbsp;பதுளை சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் முக்கிய சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் காரணமாக&nbsp;பதுளை சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>சமீபத்தில் மோதல்கள் காரணமாக மஹர சிறையிலிருந்து கொண்டுவரப்பட்ட பத்து கைதிகளும் பதுளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், புலனாய்வு அதிகாரிகள் 24 மணி நேரமும் காவலில் உள்ளனர் என்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"></span></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p>முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>நாட்டில் இடம்பெறும் தொடர் சிறைக்கலவரங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>தொடர் சிறை மோதல்கள்...</h2><p>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில்,&nbsp; மெகசின், குருவிட்ட,&nbsp; பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p>இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/167ad430-63c5-49d3-b485-7dc5de1f7a28/26-6a758a7db81a5.webp' /></p><p>மேலும், கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நீர்கொழும்பு, மஹர உள்ளிட்ட சிறைச்சாலைகளையும் சேர்த்து மொத்தம் 5 சிறைச்சாலைகளில் இதுபோன்ற கலவரங்கள் ஏற்பட்டு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், சிறைச்சாலைகளில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்த ஒரு தரப்பு தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள்&nbsp; கிடைத்துள்ளன என்று&nbsp; நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார அண்மையில் அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed9bc201-50cd-4552-b98c-112d8d0491e4/26-6a758a7e92dd1.webp' /></p><p>இந்தநிலையில், குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில தினங்களுக்குள்ளாக கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் 3 சிறைச்சாலைகளில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.&nbsp;</p><p>இதனை தடுக்கும் நோக்குடன் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளினது பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு முப்படையினருக்கும்,&nbsp; பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T08:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவின் மாபெரும் உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786089280"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786089280</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்று(07.08.2026) கோலாகலமாக ஆரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்று(07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இந்த மாபெரும் உணவுத் திருவிழா இன்று 7ஆம் திகதி ஆரம்பமாகி, 8 ,9 மற்றும் 10ஆம் திகதிகள் உட்பட நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் 10 வரை&nbsp; நடைபெறவுள்ளது.
</p><h2>
நீங்களும் இணைந்து கொள்ளலாம்... </h2><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், 
சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f8dfb9-03c3-46d4-bb86-c007de721666/26-6a758f4295747.webp' /></p><p>அத்துடன், உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>
மேலும், றீச்சாவின் உணவுத் திருவிழாவிற்கு <b>QICK FOOD </b>அனுசரணை வழங்குவதுடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளன.</p><p>உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:56:29+00:00</updated>
        </entry>
    </feed>
