<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-10T05:30:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசம் குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-to-appear-before-cid-today-1786338239"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-to-appear-before-cid-today-1786338239</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று(10.08.2026) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்துள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று(10.08.2026) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் கூறப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டார்.&nbsp;</p><h2>வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம்</h2><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9800c54-49f4-41f5-bc89-631f5f5930b1/26-6a7960114cd7d.webp' /></p><p>

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T05:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கும் டெங்கு தொற்று : 09 நாட்களில் 4000இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-292-dengue-patients-as-of-august-9-1786335018"></link>
            <id>https://tamilwin.com/article/4-292-dengue-patients-as-of-august-9-1786335018</id>
            <summary type="text">தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 89,639 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 89,639 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 65 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,973 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 டெங்கு தொற்றாளர்களும், மே மாதத்தில் 8,590 டெங்கு தொற்றாளர்களும், ஜனவரி மாதத்தில் 7,866 டெங்கு தொற்றாளர்களும், மார்ச் மாதத்தில் 6,013 டெங்கு தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><h2>அதிக அபாயம் உள்ள பிரிவுகள்</h2><p>
 ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 4,292 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p> 

நாட்டில் உள்ள மாகாணங்களிலேயே மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்புகளில் 52.93 சதவீதம், அதாவது 47,445 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c66e501c-ecfb-4ba2-a876-eb0384be76cf/26-6a7957f0bbfb4.webp' /></p><p>மாவட்ட அளவில், மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதத்தினராக கம்பஹா மாவட்டம் திகழ்கிறது. இதுவே அதிகபட்ச நோயாளிகளின் எண்ணிக்கையாகும்.
</p><p>
கொழும்பு மாவட்டத்தில் இருந்து 17,765 நோயாளிகளும், கண்டியிலிருந்து 6,366 நோயாளிகளும், மாத்தறையிலிருந்து 5,953 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர். </p><p> 

தற்போதைய இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதும் 119 அதிக அபாயம் உள்ள சுகாதார அலுவலர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T05:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல திடுக்கிடும் தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/who-killed-wasim-thajudeen-namal-rajapaksa-1786321340"></link>
            <id>https://tamilwin.com/article/who-killed-wasim-thajudeen-namal-rajapaksa-1786321340</id>
            <summary type="text">ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல தகவல்களை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.குறித்த தகவல்களை தர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல தகவல்களை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த தகவல்களை தர்க்க ரீதியாக ஒப்புவித்து தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல கருத்துக்கள்...
</p><p>தாஜுதீன் கொலை யோஷிதவில் தொடங்கியது. ஆனால், அந்த நேரத்தில் யோஷித இலங்கையில் இல்லை. பின்னர் அம்மா ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுத்ததாக குறிப்பிட்டனர். </p><p>அவரும் கொழும்பில் இருக்கவில்லை. 
அதற்குப் பிறகு கொழும்பில் இருக்கும் குடும்பத்தினர் யார் என்று பார்த்தார்கள். மஹிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிட முடியாது. அதனால் என் பெயரைப் போட்டார்கள்.</p><h2>

</h2><p></p><h2>சோடிக்கப்பட்ட சிசிரிவி (CCTV) காட்சிகள்&nbsp;</h2><p>
2015 ஆம் ஆண்டில் எனக்கு நினைவிருக்கும் வகையில் ஊடகங்களில் பெரியளவில் பேசப்பட்ட ஒரு விடயம் தான் அம்மாவின் 'சிரிலிய சவிய' சமூக சேவை அமைப்பிற்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டி ஒன்று தாஜுதீனின் காரை பின்தொடர்ந்ததாக வெளியான சிசிரிவி (CCTV) காட்சிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். </p><p>பின்னர் அந்த ஜீப் வண்டி கைப்பற்றப்பட்டதாகவும் அந்த ஜீப் வண்டியின் நிறம் பலமுறை மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நாட்டின் ஒவ்வொரு சம்பவம் தொடர்பாகவும் சிசிரிவி காட்சிகள் குறித்து பல நாடுகளிடம் அறிக்கை கோரப்பட்டது.</p><p>சமீபத்திய வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து சம்பவங்களின் சிசிரிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
இப்போது இந்தக் காட்சிகள் இருந்தால், யாரோ ஒருவர் பின்னால் துரத்திச் சென்றார் என்று தெளிவாக சிசிரிவி இருந்தால், அரசாங்கத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ இந்தக் காட்சிகளைத் தெளிவாக ஊடகங்களுக்கு முன்வைக்க முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e21a122-f33c-437a-8bba-6a06897c0013/26-6a7919bf0f102.webp' /></p><p>ஏன் செய்யவில்லை?
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதைச் செய்யவில்லை. சமூக ஊடகங்களில் இந்த விடயத்தைப் பேசும்போதும் கூட இந்த சிசிரிவி காட்சிகள் குறித்துக் குறிப்பிடப்படுவதில்லை.
</p><p>ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இறுதியில் தாஜுதீன் மோதிய வாகனம் வேறு ஒன்று என்றார்கள். ஆனால் இப்போது பின்னால் சென்ற வாகனம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படியானால் பின்னால் சென்ற வாகனத்தைத் தேடும்போது இது சிக்கவில்லையா?
</p><p>ஆனால் அன்று அந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய நபர் இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார். அதாவது முதலில் குற்றச்சாட்டு சுமத்தியவர் இப்போது தான் சொன்னது பொய் என்று சொல்கிறார்.
</p><p>அந்த காலத்தில் அரசியல் மேடைகளில் குற்றச்சாட்டு சுமத்தியவர்கள் இன்று ஊடகச் சந்திப்புகளில் சொல்கிறார்கள், அவை அந்த காலத்தில் அரசியல் மேடைகளில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்று. </p><p>ஏனென்றால் அவர்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள்.
இதெல்லாம் அரசியலுக்காக சோடிக்கப்பட்ட காரணங்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T04:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காலமான யாழ். ஊடகவியலாளரின் இறுதி சடங்குகள் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/funeral-of-jaffna-journalist-passed-away-in-canada-1786336019"></link>
            <id>https://tamilwin.com/article/funeral-of-jaffna-journalist-passed-away-in-canada-1786336019</id>
            <summary type="text">கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம்
சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம்
சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. </p><p>

அத்துடன், இந்த இறுதி சடங்குகள் அனுஷ்டிப்பு கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில்
நடைபெறவுள்ளது.
</p><h2>
இறுதி சடங்குகள்</h2><p>
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள்
ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள்
விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த
ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில், தனது
47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார்

அவரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, நாளை மறுதினம்(12) புதன்கிழமை
அஞ்சலிக்காக கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abe199fe-b158-4488-af91-e04617dd2205/26-6a79537e4ec06.webp' /></p><p> </p><p>

மறுநாள் வியாழக்கிழமை இறுதி கிரியைகள் இடம்பெற்று, தகன கிரியைகளுக்காக
பூதவுடல், கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என
குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/instructions-issued-to-al-examination-students-1786334628"></link>
            <id>https://tamilwin.com/article/instructions-issued-to-al-examination-students-1786334628</id>
            <summary type="text">துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று(10.08.2026)
முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காய...</summary>
            <content type="html"><![CDATA[<p>துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று(10.08.2026)
முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை
ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர்
இடைநிறுத்தப்பட்டிருந்தது. </p><p>

இதனால் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள்
நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.</p><p></p><p>
</p><p>
பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைவாக, துணுக்காய் பிரதேச
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில்,
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும்
ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
</p><h2>
பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்</h2><p>

இதன் பயனாக, குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின்
பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e816342-641d-4ede-b6b9-82ee1904a04f/26-6a79504444913.webp' /></p><p>
பேருந்து புறப்படும் நேரங்கள்,
</p><p>
* காலை 6.00 மணி - துணுக்காய்
</p><p>* காலை 6.10 மணி - மல்லாவி
</p><p>* காலை 7.00 மணி - மாங்குளம்
</p><p>* காலை 7.10 மணி - மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்

மேலும், குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும்
துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/981d6f4b-a40d-4417-add2-4ae64d5fa503/26-6a795045363e0.webp' /></p><p>

இன்று நடைபெற்ற பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர்
செல்லத்தம்பி திலகநாதன், துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்
உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p>

நீண்டகாலமாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வாக இந்த பேருந்து
சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, துணுக்காய் பிரதேச மக்களின்
போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:15:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-weather-warning-sri-lanka-1786331977"></link>
            <id>https://tamilwin.com/article/red-weather-warning-sri-lanka-1786331977</id>
            <summary type="text">நாட்டைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை அறிவிப்பு, இன்று (10) காலை 07.00 மணி முதல் நாளை (11) காலை 07.00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

அதன்படி, மாத்தறையிலிருந்து பொத்துவில் வரை அம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60 கிலோமீட்டரைத் தாண்டக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d46bd3-dab9-4731-bc9a-b5b461ae6843/26-6a794e65db1c6.webp' /></p><p>மேலும் கடற்பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

எனவே, மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குக் கப்பல் பயணம் செய்ய வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்குத் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.</p><p>அதே நேரத்தில், அந்தக் கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. 

இக்காரணத்தால், கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு்ள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T04:08:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவாலான காலநிலைக்கு மத்தியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மலையக மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gce-al-exam-in-upcountry-1786333760"></link>
            <id>https://tamilwin.com/article/gce-al-exam-in-upcountry-1786333760</id>
            <summary type="text">க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் (10.08.2026) நாடளாவிய ரீதியில்
ஆரம்பமாகிறது.இன்று ஆரம்பமாகும் இந்தப் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் (10.08.2026) நாடளாவிய ரீதியில்
ஆரம்பமாகிறது.</p><p>இன்று ஆரம்பமாகும் இந்தப் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி
வரை நடைபெறவுள்ளதுடன், நாடு முழுவதும் 2532 பரீட்சை நிலையங்களில் பரீட்சை
நடைபெறவுள்ளது.
</p><p>
இம்முறை பரீட்சைக்கு பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனிப்பட்ட
விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் என மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள்
தோற்றவுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>சீரற்ற காலநிலை</h2><p>
</p><p>
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும்
மாணவர்கள், பரீட்சைக்கு தயாராக வேண்டிய சவால்களுக்கு மேலதிகமாக, தற்போது
நிலவும் சீரற்ற காலநிலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e39a21-62c7-478e-a8ea-16382891e59a/26-6a794d6b4c784.webp' /></p><p>

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து
வரும் அடைமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிவு, வீதிகளில்
சேறும் சகதியும் மற்றும் பாறைகள் சரிந்து விழும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
</p><p>
குறிப்பாக ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கண்டி உள்ளிட்ட
பிரதான வீதிகளிலும், தோட்டப்புறங்களை நகரங்களுடன் இணைக்கும் பல உள்வீதிகளிலும்
மழையின் தாக்கம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதனால் தொலைதூர தோட்டப்புறங்களில் இருந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்ல
வேண்டிய மாணவர்கள் அதிகாலை நேரத்திலேயே தங்களது பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15808fa3-0e55-4348-9a89-3ea8014c597e/26-6a794d6c3bafd.webp' /></p><p>
</p><p>
அத்துடன், மலைப்பாங்கான பகுதிகளில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக காலை
நேரங்களில் வாகனங்களின் பார்வைத்திறன் குறைவடைவதுடன், வீதிகள் வழுக்கும்
தன்மையையும் கொண்டுள்ளன.
</p><p>
இதன் காரணமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகன
சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>சவால் நிலைமை</h2><p>
</p><p>
குறிப்பாக தோட்டப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களை
அடைவதற்கு பொதுப் போக்குவரத்து சேவைகளையே பெரிதும் நம்பியிருக்க
வேண்டியுள்ளதால், மழை மற்றும் வீதி நிலைமைகளால் ஏற்படக்கூடிய தாமதம்
அவர்களுக்கு மேலதிக சவாலாக அமையக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61c55ca2-600a-413a-bd3d-23701683d239/26-6a794d6d0c312.webp' /></p><p>
</p><p>
எனவே, மாணவர்கள் பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்தை கருத்தில் கொண்டு, வழக்கத்தை
விட முன்னதாகவே தங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு பரீட்சை நிலையங்களை
சென்றடைவது பாதுகாப்பானதாகும்.
</p><p>
பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு
முன்னதாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய
அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு
போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்
என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>இதேவேளை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்
வகையில், நுவரெலியா மாவட்டத்தின் அபாயம் காணப்படும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72b980e9-8b0c-4f0c-a271-a31adab24b11/26-6a794d6dde71a.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக மண்சரிவு அபாயம் காணப்படும் தோட்டப்புறங்கள், மலைச்சரிவுகள் மற்றும்
மழையினால் பாதிக்கப்படும் வீதிகளில் பரீட்சைக் காலப்பகுதியில் விசேட
கண்காணிப்பும், தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்
எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aedc71fe-a48b-42a8-ba72-43f4e7d08f47/26-6a794d6eb9317.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1952dd6-34ff-4de5-9bfb-1dddbbb6250f/26-6a794d6f8fe76.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T04:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் தம்பதி மீது அசிட் தாக்குதல் - கணவன் மரணம், ஆபத்தான நிலையில் மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/acid-attack-on-couple-husband-dead-1786332436"></link>
            <id>https://tamilwin.com/article/acid-attack-on-couple-husband-dead-1786332436</id>
            <summary type="text">காலியில் தம்பதியினர் மீது வீசப்பட்ட அசிட் தாக்குதலில், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார். 

பிட்டிகல, ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலியில் தம்பதியினர் மீது வீசப்பட்ட அசிட் தாக்குதலில், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார். </p><p>

பிட்டிகல, நியாகம, உடகங்வத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்லத் தயாரான போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்தச் சம்பவத்தில் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான காரியவசம மாஜுவான கமகே நுவன் சுரங்க டயாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><h2><b>&nbsp;கணவன் மரணம்</b></h2><p> 

கடந்த முதலாம் திகதி இந்தத் தம்பதியினர் மீது நடத்தப்பட்ட அசிட் தாக்குதலில் பலத்த காயமடைந்த, உயிரிழந்தவரின் மனைவியான குமாரி எதித்சிங்க கொடித்துவக்கு என்ற 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6beeaf25-c3cf-48c6-97b1-178e98c3b738/26-6a7949f2d85db.webp' /></p><p>அசிட் தாக்குதலுக்கு இலக்கையான இந்தத் தம்பதி, தமது வீட்டிலிருந்து பிட்டிகல பிரதேசத்திலுள்ள நண்பரின் வீட்டிற்கு கடந்த முதலாம் திகதி இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். </p><p>

அந்த வீட்டில் சிறிது நேரம் தங்கியிருந்துவிட்டு தமது வீட்டிற்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற முயன்றபோதே அவர்கள் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

இந்தத் தம்பதியினர் மீதான அசிட் தாக்குதல் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h3><b>மேலதிக சிகிச்சை</b></h3><p>அசிட் தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் முதலில் நியாகம, வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்னர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84cdb5d7-8a3d-409c-bf7c-e586e24f4928/26-6a794b721d4d0.webp' /></p><p>அங்கு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தம்பதியினரில் கணவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p> 

தம்பதியினர் மீது அசிட் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, விசாரணைக்காக கைது செய்வதற்கான முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய இதுவரை இருவர் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சில சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பியோடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>

தனிப்பட்ட பணத் தகராறே இந்த அசிட் தாக்குதலுக்குக் காரணம் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-10T03:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை துப்பாக்கிச்சூடு: கைதான 23 வயது இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/23-year-old-arrest-attempted-shooting-in-dehiwala-1786329218"></link>
            <id>https://tamilwin.com/article/23-year-old-arrest-attempted-shooting-in-dehiwala-1786329218</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் துப்பாக்கியால் நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சியில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் துப்பாக்கியால் நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சியில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 

அத்துருகிரிய பொலிஸ் பிரிவின் ஹபரகட பகுதியில் உள்ள ஜெயவர்தனபுர சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால், சந்தேக நபர் நேற்று (10.08.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு</h2><p>

 

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவின் கடவத்த வீதிப் பகுதியில் ஒருவரைச் சுட முயன்ற சம்பவத்தில் சந்தேக நபர் ஈடுபட்டதாகக் கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e8f759-33e8-42c1-9eeb-a2c4d3f40317/26-6a793c9b7eede.webp' /></p><p>சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

பொலிஸாரின் தகவல்படி, சந்தேக நபர் ஹோமாகமவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
 

தெஹிவலா பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T02:52:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு! உண்மையை அம்பலப்படுத்தினால் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630</id>
            <summary type="text">இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடராதிருப்பதற்கு அல்லது வழக்குகளை மீளப் பெறுவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. </p><p>

இந்தத் திருத்தமானது, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 விசாரணை ஆணைக்குழு</b></h2><p>திருத்தங்களுக்கமைய, இதுவரை மேல்நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக மட்டுமே காணப்பட்ட அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04921074-3974-4a86-a40e-d6d45f0e8a31/26-6a7938852d7b5.webp' /></p><p>அத்துடன், ஊழல் மூலம் பெறப்பட்ட அல்லது ஊழல் மூலம் வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பினை அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>

மேலும், ஊழல் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது பிற இலாபங்கள் என்பவற்றை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாக கருதுவதற்கும் இத்திருத்தங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது தவிர, மாகாண அரச சேவையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இத்திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-10T02:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-phone-nos-for-al-exam-students-1786328223"></link>
            <id>https://tamilwin.com/article/special-phone-nos-for-al-exam-students-1786328223</id>
            <summary type="text">&amp;nbsp;கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் சீரற்ற வானிலையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கினால் அறிவிப்பதற்கு அவசர இலக்கங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் சீரற்ற வானிலையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கினால் அறிவிப்பதற்கு அவசர இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
</p><p>தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் தடைகள் அல்லது பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கங்களையோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>சீரற்ற வானிலையால் உயர்தரப் பரீட்சைக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்கும் நோக்கில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் பரீட்சைகள் திணைக்களமும் இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றைச் செயற்படுத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feeb5f11-f67d-49d9-a470-9d70fa9730b4/26-6a7935507f609.webp' /></p><p>பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அனர்த்தங்கள் காரணமாக ஏற்படும் தடைகளை நீக்கி, விரைவாகச் செயற்படுவதற்காக இந்த ஒருங்கிணைப்பு முறைமை பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அவசர இலக்கம்: 117
</p><p>விசேட கூட்டு அவசர செயற்பாட்டு அறை: 0113 668119, 0113 668026, 0113 668032, 0113 668087, 076 3 117 117
</p><p>பரீட்சைகள் திணைக்கள அவசர இலக்கம்: 1911
</p><p>அனர்த்தங்கள் காரணமாகப் பரீட்சைக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் மேற்கண்ட இலக்கங்களுக்கு உடனடியாகத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளையும் ஒருங்கிணைப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T02:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் இன்று முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805"></link>
            <id>https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805</id>
            <summary type="text">பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.</p><p> 

கொழும்பில் நேற்று (09.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். </p><h2>எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவு</h2><p>கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/747f02ad-a45f-4d2f-9929-b5a307fb7dc1/26-6a79334733501.webp' /></p><p>

2024ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. </p><p>

இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T02:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் ஆடம்பர மாளிகைக்குள் சிக்கிய இலங்கையில் தேடப்படும் குற்றக்கும்பல் - தப்பியோடிய கஞ்சிபானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-s-friends-coming-to-sri-lanka-today-1786326578"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-s-friends-coming-to-sri-lanka-today-1786326578</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்களான ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலக குற்றவாளிகள் இன்று இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்களான ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலக குற்றவாளிகள் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். </p><p>

மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் ஆகியவற்றின் உதவியுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான பொலிஸ் குழுவினராலே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

சிறப்புப் பாதுகாப்புடன் அழைத்து வரப்படும் இந்த 3 குற்றவாளிகளும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p> </p><h2><b>

கைது செய்யும் நடவடிக்கை</b></h2><p>உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான குழுவினர் கஞ்சிபானி இம்ரானை கைது செய்யும் நடவடிக்கையை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாடு திரும்பியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/916d8c72-2f87-4031-b10b-8cfeb88bad84/26-6a79306ff2b58.webp' /></p><p>இருந்த போதிலும், மலேசிய பொலிஸாரும் இன்டர்போல் அமைப்பும் இக்குற்றவாளியைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் தற்போது மலேசியாவிலிருந்து தப்பியோட முடியாதவாறு முற்றுகையிடப்பட்டுள்ளார்.</p><p> 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. விசாரணை அதிகாரிகளின் தகவலுக்கமைய, மலேசியாவில் கைது செய்யப்பட்ட ரத்மலானை சைமா, கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் பெரும்பாலான பாதாள உலக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார். </p><p>

செல்வந்தராகக் கூறப்படும் ரத்மலானை சைமாவுக்கு தாய்லாந்தில் ஐந்து மாடி ஆடம்பர ஹோட்டல் உட்பட பல வணிக நிறுவனங்கள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p> </p><h3><b>போதைப்பொருள் வலையமைப்பு</b></h3><p>இந்த சொத்துக்கள் அனைத்தும் சைமாவினால் கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கியதன் மூலமே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f774d04-9f0b-4207-a6dc-a6ebb3c147b2/26-6a79315728cb7.webp' /></p><p>சைமா கைது செய்யப்பட்டுள்ளமை கஞ்சிபானி இம்ரானுக்கு பெரிய அடியாகக் கருதப்படுவதோடு, மலேசியாவில் அவரது நடவடிக்கைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மலேசியாவில் பதுங்கியிருக்கும் கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்காக ரோஹன் ஒலுகல மற்றும் சட்டப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி வசந்த பிட்டியகும்புற ஆகிய இருவரும் சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவுக்குச் சென்றிருந்தனர்.</p><p> 

மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு பொலிஸார் மற்றும் இன்டர்போல் அமைப்பினது உதவியைப் பெற்ற உதவி ரோஹன் ஒலுகல, கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்கான பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார். </p><p>

கஞ்சிபானி கைது செய்யப்படுவதற்கு முன்னர், ரத்மலானை சைமாவைக் பிடிக்க விசாரணை அதிகாரிகள் வெற்றிகரமாகச் செயற்பட்டனர். </p><p>சைமா சிக்கிய செய்தி கசிந்தவுடன், கஞ்சிபானி இம்ரான் தான் பதுங்கியிருந்த இடங்களை மாற்றிக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்று இரகசியமாகத் தலைமறைவாகியுள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-10T02:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scanners-will-be-fixed-for-jails-1786326416"></link>
            <id>https://tamilwin.com/article/scanners-will-be-fixed-for-jails-1786326416</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
இதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த இயந்திரங்கள் சிறைச்சாலைகளில் நிறுவப்பட்டதன் பின்னர், கைதிகளுக்குக் கொண்டு வரப்படும் உணவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலமாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9936cef3-5f2d-4bfe-b807-591b87afb199/26-6a792d91aec31.webp' /></p><p>
</p><p>இந்த ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்படுவதன் மூலம், தற்போது முன்னெடுக்கப்படும் உடற்பரிசோதனைகளை நவீன முறையில் செய்ய முடியும் எனவும், இதன் மூலம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சிறைச்சாலைச் சுவர்களுக்கு வெளியே இருந்து உள்ளே எறியப்படும் சட்டவிரோதப் பொதிகளைத் தடுப்பதற்கு, சிறைச்சாலை நிர்வாகத்துடன் இணைந்து புதிய பாதுகாப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷண மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T01:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஹண விஜேவீரவின் குடும்பத்திற்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச செய்த அநியாயங்கள் : மகன் வெளியிட்ட தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rohana-wijeweera-ranasinghe-premadasa-1786325377"></link>
            <id>https://tamilwin.com/article/rohana-wijeweera-ranasinghe-premadasa-1786325377</id>
            <summary type="text">ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் குடும்பத்தினரை 48 நாடுகள் அழைத்துச் சென்று சகல வசதிகளையும் வழங்க முன்வந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி பிரேமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் குடும்பத்தினரை 48 நாடுகள் அழைத்துச் சென்று சகல வசதிகளையும் வழங்க முன்வந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச தனது நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி அவை அனைத்தையும் தடுத்ததாக ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.
</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர், நாங்கள் கணேமுல்ல முகாமில் இருந்தபோது அம்மாவும் எம்மீது அன்புகாட்டியவர்களும் அப்பாவின் ஆதரவாளர்களும் எங்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல நிறைய முயற்சி செய்தார்கள். </p><p>பல வெளிநாட்டுத் தூதரகங்கள் இதில் தலையிட்டன. எனக்குத் தெரிந்தவரையில் 13 நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் எங்களை ஒப்படைக்குமாறு கேட்டிருந்ததாகப் பின்னர் எங்களுக்குத் தெரியவந்தது.</p><h2>பிரேமதாசவின் அதிகார அழுத்தம்</h2><p>எங்களுக்கு முழுப் பாதுகாப்பையும் கல்வியையும் வழங்குவதாக தெரிவித்திருந்தனர். அரசியல் புகலிடம் வழங்கப்பட்டால் ஓய்வூதியம் கூட வழங்குவார்கள். </p><p>அப்படி முழுமையான பாதுகாப்புடன் 13 நாடுகள் எங்களைக் கேட்டிருந்தன. 43க்கும் மேற்பட்ட நாடுகள் விசாரித்திருந்ததாகவும் சுமார் 48 நாடுகள் வரை விசாரித்து 13 நாடுகள் எங்களை ஏற்றுக் கொள்ளச் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்பட்டது. </p><p>ஆனால் ஜனாதிபதி பிரேமதாச எங்களைப்போக அனுமதிக்கவில்லை. தனது அதிகாரமிக்க தன்னிச்சையான முடிவினால் எங்களைத் தடுத்து வைத்திருந்தார்.
அந்த நேரத்தில் அம்மாவின் அண்ணன் ஒருவர் இருந்தார். டாக்டர் சந்திராபானு என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e89765-091e-497e-9fd6-dcda8a36eb3f/26-6a792983e84f0.webp' /></p><p>அவரும் ஒரு சர்ச்சைக்குரிய நபர். அவரும் எங்களை விடுவிப்பதற்காக வந்தார். அந்த நேரத்தில் சர்வதேச அளவில் அரசாங்கத்திற்கு வந்த முக்கிய அழுத்தம் கல்வி தொடர்பானது. </p><p>அதாவது கல்வி என்பது எவராலும் மறுக்க முடியாத அடிப்படை உரிமை. அதனால் இந்த குடும்பத்தின் குழந்தைகளுக்குக் கல்வி இல்லை என்பதால் இவர்களை முகாமில் இருந்து விடுவித்து வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கேட்டார்கள். </p><p>அதற்கு ஜனாதிபதி பிரேமதாச சம்மதிக்கவில்லை.
அப்போது கணேமுல்ல என்பது கொழும்புக்கு மிக அருகில் உள்ளது. அதனால் கணேமுல்ல முகாமிற்கு முன்னால் மனித உரிமைகள் அமைப்புகள் அடிக்கடி வரும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd946995-f1ca-46b9-9779-c33423adf0c3/26-6a7929849c97d.webp' /></p><p>தூதரக அதிகாரிகள் வருவார்கள். அப்பாவின் ஆதரவாளர்கள் வருவார்கள். அதுவும் அவர்களுக்கு ஒரு தொல்லையாக மாறியது. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மோதல்கள் நிலவிய திருகோணமலைப் பகுதிக்கு எங்களை அனுப்ப ஜனாதிபதி தீர்மானித்தார். </p><p>அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு அப்போது இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று ஆரம்பமாகும் 2026 உயர்தரப் பரீட்சை..! மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2026-advanced-level-examination-1786324043"></link>
            <id>https://tamilwin.com/article/2026-advanced-level-examination-1786324043</id>
            <summary type="text">2026 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) இன்று (10) ஆரம்பமாகிறது. 

இந்தப் பரீட்சை செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) இன்று (10) ஆரம்பமாகிறது. </p><p>

இந்தப் பரீட்சை செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>&nbsp;உயர்தரப் பரீட்சை</h2><p>

இம்முறை பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 264,496 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 107,814 பேரும் உள்ளடங்கலாக மொத்தம் 372,310 பேர் தோற்றவுள்ளனர்.</p><p>

பரீட்சை ஆரம்பிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c36e97-7fae-4c0c-a962-89a18e74f175/26-6a7925aa88959.webp' /></p><p>

அதேவேளை, கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள், புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரீட்சை மோசடி</h2><p>
</p><p>
பரீட்சை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66601b92-1488-439c-bffd-38e7e503af0d/26-6a7925ab4625d.webp' /></p><p> </p><p>

கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த - கோட்டாபய - பசிலுக்கு பெரும் அதிர்ச்சி..! நீதிமன்றத்தின் ஆபத்தான தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-brothers-trouble-dangerous-court-verdict-1786309718"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-brothers-trouble-dangerous-court-verdict-1786309718</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இவர்கள் தான் காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உயர்மட்ட அரசியல்வாதிகள் சட்ட ரீதியான சிக்கல்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
</p><p>
இவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக, 'வீட்டுக்காவலில்' வைப்பதற்கான சட்ட நடைமுறைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
</p><p>
 இது இத்தகைய உயர் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dhCViA6wjKI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:18:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து! விசாரணைக்காக அழைக்கப்பட்ட சாகர காரியவசம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-comment-regarding-igp-priyantha-1786322225"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-comment-regarding-igp-priyantha-1786322225</id>
            <summary type="text">பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

இந்த அழைப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம், தான் தெரிவிக்காத விடயங்களைத் திரித்து தவறான அர்த்தங்களை வழங்கி, அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
தான் கூறிய கருத்துகளைத் திரிபுபடுத்தி காண்பிப்பதன் மூலம் எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
கடந்த காலங்களில் இதுபோன்ற அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்ட உலகத் தலைவர்களுக்கு இறுதியில் துரதிர்ஷ்டவசமான நிலையே ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அதே பாதையில் பயணிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f431daf-1d10-4335-bcb9-d0670ae482c6/26-6a791eb4ee185.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்ததும் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு எதேச்சதிகாரமாக செயற்பட்டதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் சரியான புரிதலுடன் இருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்கள் இதற்கு உரிய பதிலை வழங்குவார்கள் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது பதவி விலகல் தொடர்பில் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க வெளியிட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-samarasinghe-posts-about-his-resignation-1786316583"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-samarasinghe-posts-about-his-resignation-1786316583</id>
            <summary type="text">பதவி விலகுமாறு அரசாங்கம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட காரணிகளுக்காக பதவி விலகியுள்ளேன் என அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதவி விலகுமாறு அரசாங்கம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட காரணிகளுக்காக பதவி விலகியுள்ளேன் என அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

தனது பதவி விலகல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பதவி விலகிய மகிந்த சமரசிங்க</h2><p> </p><p> 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் 31 ஆம் திகதி தூதுவர் பதவியில் இருந்து விலகி, நாட்டுக்கு வந்துள்ளேன். பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை.
</p><p>
சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தனிப்பட்ட காரணங்களினாலேயே பதவி விலகினேன். ஐந்து ஆண்டுகாலத்தில் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் சேவையாற்றியுள்ளேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328fda07-c371-47b8-9f7b-dc4224db5bc4/26-6a79091229703.webp' /></p><p>சிறந்த முறையில் செயற்படுவதால் எவரும் என்னுடன் முரண்படவில்லை.

பதவிக்காலத்தில் இலங்கை-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறவும்&nbsp;அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.</p><p>மேலும் அமெரிக்காவால் விதிக்கப்படும் வரிகளை 10 சதவீதமாக கட்டுப்படுத்தவும் அமெரிக்காவிடமிருந்து ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பல ஹெலிகொப்டர்களைப் பெற்றுக்கொடுக்கவும் பெரிதும் துணை புரிந்தேன்.</p><p>
 27 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். அரசியலில் முக்கிய பதவிகளை வகித்துள்ளேன். 

இனி அரசியலில் ஈடுபடும் நோக்கம் கிடையாது. இருப்பினும், சர்வதேச விவகாரங்களில் ஆதரவளிக்குமாறு கோரப்பட்டால் அரசாங்கத்திற்கு உதவத் தயாராகவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் சிறுவன் ஒருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-boy-was-arrested-without-permission-in-mannar-1786304714"></link>
            <id>https://tamilwin.com/article/a-boy-was-arrested-without-permission-in-mannar-1786304714</id>
            <summary type="text">&amp;nbsp;மன்னார் - சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து புகைப் படங்களையும்
காணொளிகளையும் எடுக்க உதவும் கருவியான ட்ரோன் கேமராவை அனுமதியின்றி
பறக்க விட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மன்னார் - சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து புகைப் படங்களையும்
காணொளிகளையும் எடுக்க உதவும் கருவியான ட்ரோன் கேமராவை அனுமதியின்றி
பறக்க விட்ட சிறுவன் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(09.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>கைது செய்யப்பட்ட சிறுவன்</h2><p>
</p><p>
பாதுகாப்பு அமைச்சினால் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி பறக்க
விட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார்
பொலிஸ் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே
மன்னார் - சௌத்பார், பனங்கட்டுகொட்டு பகுதியில் குறித்த சிறுவன் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72be78ac-22f5-4376-a55c-1faa3ecbde7c/26-6a78dc2f76932.webp' /></p><p>

கைது செய்யப்பட்டவர் சிறுவனிடமிருந்து DJI Mini 4 Pro ரகத்தைச் சேர்ந்த ஒரு ட்ரோன்
கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-kuma-invite-people-namal-political-culture-1786298275"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-kuma-invite-people-namal-political-culture-1786298275</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை
உருவாக்க மட்டக்களப்பு மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை
உருவாக்க மட்டக்களப்பு மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்
சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மட்டக்களப்பில் நேற்று(08.08.2026) இடம்பெற்ற
ஊடக மாநாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளராக பதவி
ஏற்றுக் கொண்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவின் அரசியல் பணி&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், 
அமைப்பாளர் பதவி என்பது ஒரு அதிகாரமிக்க பதவி அல்ல இது மக்களுக்கான
பொறுப்பாகவே நான் கருதுகின்றேன். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டமானது
பல சமூக, இன, மதம் சார்ந்த ஒரு கட்டமைப்பைக் கொண்ட மக்கள் வாழும் பிரதேசமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe7bb53f-6087-4c45-92e2-86fb4f296e12/26-6a78c60550617.webp' /></p><p>நாமல் ராஜபக்சவின் அரசியல் பணி எந்தவித சமூகத்துக்கும் முரண்பாடு இல்லாமல்
அனைத்து சமூகத்தையும் இணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டது. </p><p>

அதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு உலகளாவிய ரீதியில் தொழிநுட்பம் சார்ந்த பல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.
</p><p>
அது மட்டுமல்லாது
கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வு இல்லாமல்
நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் தயாராகவுள்ளோம்.</p><p></p><h2>அபிவிருத்தித் திட்டங்கள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன் கல்வி , அடிப்படை வசதி, உட்கட்டமைப்பு போன்ற பல அபிவிருத்தி
விடயங்களை சரியாக கொண்டு செல்வதற்கு இலகுவான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவுள்ளோம்.
</p><p>
அதேவேளை எதிர்கால நாட்டின் வளர்சிக்காகவும் இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும்
மட்டக்களப்பின் வளர்ச்சிக்காகவும் புதியதொரு சூழலை உருவாக்கும் பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb2ac4b-841e-42b0-a8ea-c682834b893d/26-6a78c604a04d6.webp' /></p><p>எனவே கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து
அதற்குரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவே நான் இந்த
பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
</p><p>
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அந்த கருத்து வேறுபாடு எந்தவொரு
சமூகத்தையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுடன் வார்த்தைகளால் மட்டும்
அல்லாது செயல்கள் மூலமாக மக்களுக்கு சேவை செய்யவே இந்த அரசியல் பயணத்தை நான்
ஆரம்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T23:35:25+00:00</updated>
        </entry>
    </feed>
