<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-22T19:10:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசுர வேகத்தில் கோடீஷ்வரர்களாக மாறும் அநுர அரசாங்கத்தின் அமைச்சர்கள்! வெளியாகும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministers-who-became-millionaires-1787421887"></link>
            <id>https://tamilwin.com/article/ministers-who-became-millionaires-1787421887</id>
            <summary type="text">ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகத் தெரிவித்த அநுர அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது அப்படி எந்த வாக்குறுதியும் வழங்கவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகத் தெரிவித்த அநுர அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது அப்படி எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை என தப்பியோடப் பார்க்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், அரசாங்கத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் இன்று அசுர வேகத்தில் கோடீஷ்வரர்களாக மாறி வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>ஏமாற்றமடைந்த அரச ஊழியர்கள்</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மக்களுக்கு அழகான வாழ்க்கையைத் தரப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c623f26-bae3-4258-beac-cbe4681af9ff/26-6a89e5c150213.webp' /></p><p> </p><p> 

விவசாயிகளின் நெல்லுக்கு, நியாயமான உத்தரவாத விலையை வழங்கி அவர்களைக் கௌரவிப்பதாகக் கூறியவர்கள், இன்று அவர்களின் சுயமரியாதையை அடியோடு அழித்துள்ளனர்.</p><p> </p><p>


அரச ஊழியர்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிப்பதாகக் கூறியவர்கள் இன்று அதனை மறுக்கின்றனர். </p><p> 


 ஜனாதிபதி அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் வாக்களித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad27dd2-345b-4cbb-b233-890873552754/26-6a89e5c204887.webp' /></p><p> ஆனால் இன்று மக்கள் ஏமாற்றப்பட்டுள்ள அதேவேளையில், அரசாங்கத்தின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் மட்டுமே அசுர வேகத்தில் கோடீஸ்வரர்களாக உருவெடுத்துள்ளனர்.</p><p>

நாடாளுமன்றச் சலுகைகளை அனுபவிக்கமாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று நாடாளுமன்ற உணவுக்காக மட்டும் 80 சதவீதத்துக்கும் அதிகமான கூடுதல் செலவை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T18:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; ஜன்னல் வழி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள்..! எழுப்பப்பட்டுள்ள கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1787411716"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1787411716</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றம்சாட்டியுள்ளது. </p><p>

அத்துடன் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சேனக பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இந்த நிலையில் நேற்றைய தினம் (21) குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>உண்மையான சிக்கல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அங்கு உயிரிழந்த கைதிகளைக் கொலை செய்தது யார் என்பது தொடர்பான உண்மையான சிக்கல் எழுந்துள்ளது. 

ஏனெனில், உயிரிழந்த கைதிகளில் பெரும்பாலானோர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாகவே மரணமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df3da57d-bfe9-4a8b-9842-22bb8320c7ea/26-6a89c94486c90.webp' /></p><p> எனவே, இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்? அல்லது கைதிகளே தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டார்களா? அப்படியில்லை எனில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? போன்ற கேள்விகளை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

அத்துடன், சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? அவர்கள் நாட்டின் குற்றவியல் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் இல்லையா? என்பதையும் நாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தோம். </p><p>

தற்போது இடம்பெற்றுவரும் இந்த விசாரணைகளில் எந்தவொரு நடுநிலைமையையும் எங்களால் காண முடியவில்லை. கைதிகளை படுகொலை செய்த நபர்களுக்கு எதிராகவும் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நீதிமன்றில் நமது பிரதான கோரிக்கையாக இருந்தது என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T18:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா: 16,000க்கும் அதிகமான தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-over-16-000-vaccines-1787418798"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-over-16-000-vaccines-1787418798</id>
            <summary type="text">கொங்கோவில் மிக மோசமான எபோலா வைரஸ் பரவல் பதிவாகி வரும்
நிலையில், அந்நாட்டிற்கு 16,250 &#039;எர்வெபோ&#039; தடுப்பூசிகள் முதற்கட்டமாக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோவில் மிக மோசமான எபோலா வைரஸ் பரவல் பதிவாகி வரும்
நிலையில், அந்நாட்டிற்கு 16,250 'எர்வெபோ' தடுப்பூசிகள் முதற்கட்டமாக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளி அமைப்புகள் இணைந்து
அறிவித்த 70,000 தடுப்பூசி அளவுகளில் இந்த முதற்கட்டத் தொகுதி வெள்ளிக்கிழமை
இரவு நாட்டின் தலைநகரான கின்சாசாவைச் சென்றடைந்துள்ளது.
</p><p>
எஞ்சிய தடுப்பூசிகள் வரும் வாரங்களில் நாட்டின் பிற பகுதிகளுக்கு
அனுப்பப்படவுள்ளன.</p><h2>தடுப்பூசிகள்</h2><p>
</p><p>
தற்போது பரவி வரும் 'புண்டிபுக்கியோ' வகை எபோலா வைரஸுக்கு அதிகாரப்பூர்வமாக
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e57c3939-24e9-4386-b3cd-abb36630ae15/26-6a89d8b043dc5.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், எர்வெபோ தடுப்பூசி ஓரளவிற்கு பாதுகாப்பை வழங்கக்கூடும் என
விலங்கு சோதனைகளின் ஆரம்பகட்ட தரவுகள் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம்
தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
</p><p>
கடந்த மே மாத நடுப்பகுதியில் இருந்து பரவி வரும் இந்த நோய்த்தொற்றினால் இதுவரை
5,300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,500 க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர். இந்நோய்ப்பரவல் "அதிவேகமாக" தீவிரமடைந்து வருவதாக ஐக்கிய
நாடுகள் சபை எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T17:55:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை விளக்கமறியலில் வையுங்கள்! மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944</id>
            <summary type="text">குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அநுரகுமார திசாநாயக்கவிடம் அவசர எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p>அத்தோடு, தனது கணவரை&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பாமல் சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>விசாரணை என்ற பெயரில் சிஐடியினர்&nbsp;சுரேஷ் சலேவை கொடுமைப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும்&nbsp;மனோரி சலே சுட்டிக்காட்டினார்.</p><p>எனவே சுரேஷ் சலேவின் உடல்நிலைநிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்&nbsp;மனோரி குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp; நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Na6vJ8cRq8s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T17:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அனுரவிடம், நாமல் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-urges-president-to-act-on-allegations-1787417333"></link>
            <id>https://tamilwin.com/article/namal-urges-president-to-act-on-allegations-1787417333</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>குளியாப்பிட்டியவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
</p><p>குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான தனது நிலைப்பாட்டை நிரூபிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4348e130-3168-4155-ae0f-80c898ab46ab/26-6a89d2f7707ae.webp' /></p><p>
</p><p>திருடர்களைப் பிடிப்பது மற்றும் நேர்மையை உறுதி செய்வது குறித்து ஜனாதிபதி தொடர்ந்து பேசுகிறார். அந்த உறுதிப்பாட்டை நிரூபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
</p><p>தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த பல்வேறு வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>நெல் கொள்வனவு விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
அத்துடன், பொதுமக்கள் எதிர்கொள்ளும் வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். </p><p>தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது, குறிப்பாக இளம் தொழில் முனைவோருக்கு, மேலும் சிரமமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
அரச நிறுவனங்களைச் சார்ந்ததாகக் கூறப்படும் பாதுகாப்பு மற்றும் இணையவழி சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>இச்சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>விவசாயிகள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசியல் முரண்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
“அரசாங்கம் மோதல்களை ஒதுக்கி வைத்து மக்களுக்காக பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையே தவிர, மேலும் அரசியல் முரண்பாடுகளை அல்ல” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
</p><p>கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு எதிர்க்கட்சியே பொறுப்பு என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
</p><p>துறைமுகத்தின் செயற்பாடுகளில் தலையிடும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அனைத்து முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:50:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-in-jaffna-for-abducting-girl-1787414912"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-in-jaffna-for-abducting-girl-1787414912</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில்&amp;nbsp; இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில்&nbsp; இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை
காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><h2>விசாரணை</h2><p>

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அச்சுவேலி பகுதியை
சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில்
வைத்துள்ளார் என்பதனை அறிந்த பொலிஸார் , இளைஞனை கைது செய்ததுடன் ,
சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29362eda-d1e7-4737-81ac-801d41142181/26-6a89ce07426b6.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ள பொலிஸார் , சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T16:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு நல்ல நோக்கில் மேற்கொள்ளப்படுகிறதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pension-age-extension-is-not-fair-1787414472"></link>
            <id>https://tamilwin.com/article/pension-age-extension-is-not-fair-1787414472</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு நல்ல நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றதா என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு நல்ல நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றதா என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சாலிய பிரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பானது ஏற்புடையது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
நாட்டு மக்களின் ஆயுட்காலத்தை கருத்தில் கொண்டு வயதெல்லை நீடிக்கப்படுமாயின் அரச சேவையின் ஏனைய துறைகளிலும் ஓய்வு பெறும் வயதெல்லை உயர்த்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bde07d66-e4c4-4f03-a561-07ded5983792/26-6a89c7c98cbd9.webp' /></p><p>
தெரிவு செய்யப்பட்ட ஒரு தரப்பினருக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கங்களுக்கு கிடைக்கப்பெறும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெறும் அரசாங்கங்கள் அதிகார துஷ்பியோகத்தில் ஈடுபட முனைவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>ஆயுட் காலத்தின் அடிப்படையில் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பினை நிர்ணயம் செய்வதானது அவர்கள் பிறந்த ஆண்டின் ஆயுட்கால அடிப்படையில் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
</p><p>கீழ் நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பினை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது பொருத்தமற்றது என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.</p><p>
பதவி வெற்றிடங்கள் நிலவும் நிலையில் எதற்காக ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகின்றது என அவர் மேலம் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர் தீவிரம்: கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-canada-trade-war-intensifies-1787412085"></link>
            <id>https://tamilwin.com/article/us-canada-trade-war-intensifies-1787412085</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் கனடா இடையே வொஷிங்டனில் நடைபெற்ற மூன்று நாள் வர்த்தக
பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து,
கனடாவின் $...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் கனடா இடையே வொஷிங்டனில் நடைபெற்ற மூன்று நாள் வர்த்தக
பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து,
கனடாவின் $20 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை
விதித்துள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த காலக்கெடு இன்று(22) அதிகாலை
12:01 மணிக்கு முடிவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம்
எட்டப்படவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி,
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக கனடாவும் "டொலருக்கு டொலர்" என்ற
அடிப்படையில் அதே அளவு வரியை விதிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆதரவு நடவடிக்கை</h2><p>
</p><p>
அத்துடன், வர்த்தகப் போரினால் பாதிக்கப்படும் நாட்டின் தொழிலாளர்கள் மற்றும்
வணிகங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான புதிய ஆதரவு நடவடிக்கைகள் விரைவில்
அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2721fad4-7cc2-4560-ab10-73c5db3b8c99/26-6a89be77aaad7.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீர், பேச்சுவார்த்தை
தோல்வியடைந்ததற்கு கனடாவே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
இந்த புதிய வரியானது அமெரிக்காவிற்கான கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 5
சதவீதத்தைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலத்திரனியல்
பொருட்கள், தொழிற்துறை இயந்திரங்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை இதனால்
பெரிதும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T15:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளுக்கு தந்தையால் நேர்ந்த கதி: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-gets-15-year-jail-term-for-abusing-daughter-1787404390"></link>
            <id>https://tamilwin.com/article/father-gets-15-year-jail-term-for-abusing-daughter-1787404390</id>
            <summary type="text">தனது சொந்த மகளை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சொந்த மகளை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

வவுனியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் குற்றச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h2>&nbsp;அதிரடி தீர்ப்பு</h2><p> 

சம்பவம் இடம்பெற்றபோது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்த நிலையில், சிறுமி தனது தந்தையின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார்.
</p><p>
 சம்பவத்தன்று தந்தை மதுபோதையில் வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7889fb5-efe0-465a-82ef-5525396cbfbd/26-6a89aafc1f17d.webp' /></p><p>
</p><p>
இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகை கடந்த 2021ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><p>

வழக்கின் விசாரணைகளின் அடிப்படையில், எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தண்டனை வழங்கும்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, குற்றம் அவரது சொந்த தந்தையினால் மேற்கொள்ளப்பட்டமை, சிறுமிக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களைத் தடுக்கும் அவசியம் உள்ளிட்ட விடயங்களை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.</p><h2>அபராதத் தொகை</h2><p>

இதன்படி, குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலதிகமாக ஒரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36033d7a-0572-417f-9aad-b136ba31c89c/26-6a89aafcc5553.webp' /></p><p> </p><p>

அந்த நட்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலதிகமாக இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிறுமியின் நலனைப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் இவ்வாறான பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T15:40:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் - குருசுநகர் பகுதியில் திடீரென எரிக்கப்பட்ட குப்பைகள்: வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/garbage-burning-continues-in-kurusu-nagar-area-1787412179"></link>
            <id>https://tamilwin.com/article/garbage-burning-continues-in-kurusu-nagar-area-1787412179</id>
            <summary type="text">மன்னார் - சின்னக்கடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட குருசு நகர் பகுதியில், நகரசபைக்கு சொந்தமான தினசரி கழிவகற்றல் நிலையத்தில் இன்று (22.08.2026) மாலை
கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - சின்னக்கடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட குருசு நகர் பகுதியில், நகரசபைக்கு சொந்தமான தினசரி கழிவகற்றல் நிலையத்தில் இன்று (22.08.2026) மாலை
குப்பைகள் திடீரென எரிக்கப்பட்டமையால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை
எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
திடீரென குப்பைகள் எரியூட்டப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக புகை வெளியேறி,
குடியிருப்பு பகுதிகளுக்குள் புகை பரவுவதால், பலர் தங்களது வீடுகளை விட்டு
வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி
மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>பல்வேறு உடல்நலப் பிரச்சினை</h2><p>
</p><p>
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் உள்ளிட்டோர்
புகையினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட
பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/491d837e-dc01-47d2-84b5-5ef92160304e/26-6a89c192c96b9.webp' /></p><p>

இதனிடையே, குப்பைகள் தொடர்ந்து எரிவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னார் நகர
சபையின் தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்ட
போதிலும், அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
குப்பைகள் முழுமையாக அகற்றப்படாமல் மீண்டும் மீண்டும் தீப்பற்றுவதால்,
தீயணைப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட பின்னரும் புகை வெளியேறும் நிலை
தொடர்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>நிரந்தர தீர்வு</h2><p>
</p><p>
மேலும், பொலித்தீன் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும்
புகை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், குடியிருப்பாளர்களின்
அன்றாட வாழ்க்கையையும் பெரிதும் பாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca4ca5bb-4278-4820-8798-d08e2539aad1/26-6a89c193c5872.webp' /></p><p>
</p><p>
பல ஆண்டுகளாக தொடரும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படாத
நிலையில், மன்னார் நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக
தலையிட்டு குப்பை எரிப்பை முற்றாகத் தடுத்து, முறையான கழிவு முகாமைத்துவ
நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
தொடர்ச்சியாக வெளியேறும் புகையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை
ஏற்பட்டுள்ள போதிலும், தீயணைப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால்
பிரச்சினையின் அடிப்படை காரணம் தீர்க்கப்படவில்லை என மக்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1d453d1-16fb-4744-8bd6-5bfc05be889e/26-6a89c1949e739.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T15:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் - பொலிஸாரின் அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-sri-lankan-criminals-arrested-in-dubai-1787409980"></link>
            <id>https://tamilwin.com/article/four-sri-lankan-criminals-arrested-in-dubai-1787409980</id>
            <summary type="text">டுபாயில் தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான கொண்ட ரஞ்சீ, அல்டோ தர்மே, பஸ் லலித் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான கொண்ட ரஞ்சீ, அல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாத்தே சத்து ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் படையினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>

இதன்படி, கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட பஸ் லலித் என்பவரை எதிர்வரும் திங்கட்கிழமை (24) இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>இலங்கை குற்றவாளிகள் நால்வர்</h2><p>
</p><p>
கொண்ட ரஞ்சீ, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அல்டோ தர்மே என்பவர் குற்றச்சாட்டு எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/523f0b33-22bf-408f-936e-e5dc35e617de/26-6a89ba8c96029.webp' /></p><p>
மேலும், கொழும்பு பொரளை – வனாத்தமுல்லை பகுதியில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள வனாத்தே சத்து என்பவரும் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் தரப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், பஸ் லலித்தை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>&nbsp;அழைத்து வர நடவடிக்கை</h2><p> 

இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியவை டுபாய் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி கண்காணிப்பிலும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் வழிகாட்டுதலிலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/730a7120-a639-4e3f-b676-082dd5e8d1c5/26-6a89ba8d93a77.webp' /></p><p>
</p><p>
மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பஸ் லலித்தை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக டுபாய் சென்றுள்ளனர்.
</p><p>
ஹங்வெல்ல பகுதியில் பல்வேறு கொள்ளை, கப்பம் பெறுதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் பஸ் லலித் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T15:06:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் சுற்றித்திரியும் ஷிரான் பாசிக்கின் தொடர்புடைய நெருக்கமான பெண்..! அழைப்பினால் அடுத்தடுத்து சிக்கவுள்ள பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-support-activities-arrest-4-people-1787369055"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-support-activities-arrest-4-people-1787369055</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு&amp;nbsp;கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு&nbsp;கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.</p><p>

கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் தற்போது உள்ள ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி, அவரது போதைப்பொருள் கடத்தல் வணிக நடவடிக்கைகளுக்கு உதவிவரும் நான்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தேகநபர்களும் அடுத்த சில நாட்களில் பொலிஸ் காவலில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>டுபாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்</h2><p>
</p><p>
இந்த சந்தேகநபர்களில் தற்போது டுபாயில் உள்ள ஒரு பெண்ணும் அடங்குவதாக&nbsp;கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be7a6bd-5742-4319-aeb3-299ea79089e8/26-6a893cc424f5c.webp' /></p><p>

குறித்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய தோழி என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த பெண் குறித்து டுபாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
</p><p>
இதற்கிடையில், பாசிக்கின் சொத்துக்களுக்கு பொறுப்பாளராக உள்ள அவருக்கு நெருக்கமான ஒருவரையும் கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், அவர் தனது வசிப்பிடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>

இதற்கிடையில், பாசிக் பயன்படுத்திய தொலைப்பேசி எண்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புடைய பல நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸ் புலனாய்வுக்குழுக்கள் பெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:47:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணி: பிரதமரிடம் மனு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/release-the-people-s-lands-north-east-1787408928"></link>
            <id>https://tamilwin.com/article/release-the-people-s-lands-north-east-1787408928</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள
பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள
பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த
மக்கள் குரல் அமைப்பினர் பிரதமர் ஹரிணி அமர சூரியவிடம் மனுவொன்றை கையளித்தனர்.</p><p>அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள்
அமைப்பின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ,

யாழ் மாவட்ட செயலகத்தில்&nbsp; பிரதமரை சந்தித்து பேசினோம்.
</p><p>
வடக்கு–கிழக்கு பகுதிகளில் தமது பூர்வீகக் காணிகளை இழந்து, நீண்டகாலமாக அவற்றை
மீட்டெடுப்பதற்காக வீதி வீதியாக போராடுகிறார்கள்.</p><h2>காணி உரிமை</h2><p>

யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலி ,வசாவிளான் , மயிலிட்டி பாதுகாப்பு தரப்பினரின்
கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு கேப்பாப்புலவு ,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு ,மாதவனை உள்ளிட்ட வடக்கு–கிழக்கு
பகுதிகளில் காணி உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02850199-820f-45cb-b957-d6a8c733075d/26-6a89b59fe83ea.webp' /></p><p>

கடந்த அரசாங்கங்களின் காலப்பகுதிகளில் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு
உரிய தீர்வுகள் வழங்கப்படாமல், மக்கள் தொடர்ச்சியாக காலதாமதத்திற்கும்
புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அதன் தொடர்ச்சியாகவே இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது பூர்வீக நிலங்களை
மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
தள்ளப்பட்டுள்ளனர்.</p><h2>கோரிக்கைகள்</h2><p>
</p><p>
புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்த
மக்களுக்கு, ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு
முழுமையானதும் நீதியானதுமான தீர்வு கிடைக்காத நிலை ஆழ்ந்த கவலையை
ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91960f3c-ebf2-4688-8a7e-e962fe2191d2/26-6a89b5a0c4429.webp' /></p><p>

அந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் நீண்டகாலப் போராட்டத்தையும்
கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வை வழங்க
வேண்டுமென பிரதமர் அவர்களிடம் வலியுறுத்தினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், காணி இழந்த மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நீண்டகாலப்
போராட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மனு பிரதமரிடம்
கையளிக்கப்பட்டது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான நீள்பயணம் - அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-in-the-long-journey-for-justice-1787408944"></link>
            <id>https://tamilwin.com/article/support-in-the-long-journey-for-justice-1787408944</id>
            <summary type="text">அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான ஆவணி 30ம் திகதி நீதிக்கான
நீள்பயணம் எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான உண்மை,
நீதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான ஆவணி 30ம் திகதி நீதிக்கான
நீள்பயணம் எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு இடம்பெறவுள்ளது.&nbsp;</p><p>குறித்த மாநாடு வடக்கு - கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகளால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மேற்கொள்ளப்படவுள்ளது.</p><h2>ஆதரவு வழங்குமாறு கோரிக்கை</h2><p>இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம், முல்லைத்தீவு மாவட்ட
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர் றஞ்சினிதேவி சசிக்குமார்,
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க
உபசெயலாளர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி
குறித்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு
கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0254b0a9-67b3-487f-a2cb-cc3860b9e847/26-6a89b5adaa053.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-in-sri-lanka-1787407998"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-in-sri-lanka-1787407998</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அவசரமாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அவசரமாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p>

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழரசுக் கட்சி</h2><p>
</p><p>
இலங்கையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக 20க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7853d5ab-872d-4447-812f-7c1691cb5514/26-6a89b39e55fde.webp' /></p><p>
</p><p>
அந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் எந்த நிலையை அடையவுள்ளன என்பதை தமிழரசுக் கட்சி உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் கடந்த வாரம் Zoom வழியாக கட்சியின் உயர்மட்டக் குழுவினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடியதாகவும், குறித்த கலந்துரையாடலின் அடிப்படையில், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அவசரப்பட்டு எந்தவொரு கருத்தையோ தீர்மானத்தையோ வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இறுதி தீர்மானம்</h2><p>
</p><p>
குறிப்பாக, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழியும் நிலையில், அதே நீதிபதிகளே குறித்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்புகளை வழங்கவுள்ளதாகவும் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c2d1097-f8b4-4b46-9e7e-57cfd41ed14a/26-6a89b39f8896d.webp' /></p><p>
</p><p>
எனவே, பொறுமையுடன் காத்திருந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவதானிப்பதுடன், மக்களின் கருத்துக்களையும் ஆராய்ந்த பின்னரே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கட்சியின் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதுவரை இந்த விடயம் தொடர்பில் பொறுத்திருப்பதே தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சிறிதரன் எம்.பி வலியுறுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-mass-grave-issue-excavations-carried-1787407180"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-mass-grave-issue-excavations-carried-1787407180</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு இதயச்சுத்தியுடன்
வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு இதயச்சுத்தியுடன்
வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(21.8.2026) உரையாற்றும்போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,

"செம்மணி மனிதப் புதைகுழியின் மதிலைத் தாண்டிய பகுதிகளிலும் மனித
எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், நீதிமன்ற
உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்சவைச் செம்மணிக்கு அழைத்துச் சென்று அவர்
காண்பிக்கும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>அகழ்வுப் பணிகள்</h2><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியில் முதற்கட்டமாக 9 நாள்களும், இரண்டாம் கட்டமாக 45
நாள்களும், மூன்றாம் கட்டமாக 56 நாள்களும் என மொத்தம் 110 நாள்களாக அகழ்வுப்
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f868676-38a1-483b-990a-2ad977c5730d/26-6a89ae628def5.webp' /></p><p> </p><p>இதற்கமைய 584 மனித எலும்புக்கூடுகளும், 170
பிற சான்றுப்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணிப் பகுதிக்குப் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுக்கு அரசு
அனுமதியளித்த போதிலும், கனடா உயர்ஸ்தானிகருக்கும் அவரது குழுவினருக்கும்,
ஆஸ்திரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டமை பாரிய சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசிடம் நிதி இல்லையாயின், இந்தியா,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடி நிதி கோருவதோடு,
தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உண்மையை
வெளிக்கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் இறைமை அபகரிக்கப்பட்டுள்ளது! வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-in-trincomalee-urging-a-federal-solution-1787405837"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-in-trincomalee-urging-a-federal-solution-1787405837</id>
            <summary type="text">இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், வடக்கு - கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளதாக வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், வடக்கு - கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளதாக வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.</p><p> 

சமஷ்டி தீர்வு வேண்டும் என வலியுறுத்தி திருகோணமலையில் இன்றைய தினம் (22.08.2026) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
</p><p>
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன்போது மேலும், நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முறையின் நான்காவது வருட அணிதிரளல் இலங்கையின் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீள்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையை முன்மொழிந்து இவ்வருடத்துடன் 75 வருடங்கள் ஆகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265aff9a-c13d-4780-9ee2-6c453c454852/26-6a89ace1b5119.webp' /></p><h2>வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்</h2><p> 

1900களின் ஆரம்ப முதலே சிங்கள பொதுத்த அரசியல் தலைவர்களின் தமிழ் எதிர்ப்பு பரப்புரைகளும் எழுச்சிகளும், தமிழ் அரசியலில், சமூக நலனுக்காக காப்பாற்றும் தனித்துவமான அரசியல் அமைப்பொன்றின் அவசியத்தை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உணர்த்தியது. 

1921ம் ஆண்டு வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக சேர்.பொன்.அருணாசலம் தலைமையில் “தமிழர் மகாஜன சபை” உருவாக்கப்பட்டது. </p><p>சுதந்திரத்தின் பின் ஆட்சி பொறுப்பேற்ற சிங்கள தலைமைகள் மேற்கொண்ட திட்டமிட்ட அரசியல் ஓரங்கட்டல்கள், நில அபகரிப்புகள், வடக்கு கிழக்கில் அமைவிடத்தி எமது பெருமளவிலான குடியேற்றங்கள் ஆகியன தமிழ் மக்களின் இறைமையை அபகரித்தன. 

இந்த இறைமை மீடலை நிறைவேற்றுவதற்காக அன்றைய தமிழ் தலைமைகள் சமஷ்டிக் கொள்கையை 1951ம் ஆண்டு முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e36000-5443-4fab-ba8e-f800f77f9ee5/26-6a89ace2cdf41.webp' /></p><p> </p><p>ஒரு மக்கள் சமூகம் தனது வாழ்விடப் பிரதேசத்தில் தமக்கான அரசியல் வாழ்வை தாமே தீர்மானித்து, தம்மைத் தாமே நிர்வகித்து, கொள்கைமையாகவும் உரிமைகளுடனும் வாழ்வதற்கு இறைமை அவசியமாகும். 

ஒன்றாக ஆட்சி முறையில் இறைமை பகிர்ந்துகொள்ளப்படல் நடைபெறவில்லை. அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும். மத்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப்பெற முடியும்.</p><h2>13வது திருத்தத்தின் மூலம் ஏமாற்றம்</h2><p> 13வது திருத்தச்சட்டம் இத்தகையாதாகும். இதன் மூலம் வடக்கு கிழக்குக்கு இறைமை பகிரப்படவில்லை. 

அன்று தொட்டு இன்றுவரையிலும் வடக்கு - கிழக்கில் ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள அரசியல் தலைமைகள் இறைமையைப் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை. காலம் நீடிப்பதால் 13வது திருத்தத்தின் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்.</p><p> ஒரு நாட்டின் இறைமை என்பது அந்த நாட்டு மக்களுக்குள்ள உரிமைகள், மக்கள் தமக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அவர்களைக் கொண்டு தமக்கேற்ற அரசியல் சமூக பொருளாதார கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கி… தமக்கான முன்னேற்றத்தை எட்டுவதற்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/523d2ed3-6f71-47c4-9460-4105079c18b4/26-6a89ace39d55d.webp' /></p><p> 

சுருங்கக் கூறின் தமது அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு மக்களுக்குள்ள அதிகாரமாகும். இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் இறைமையை வெறுமனே நிலைத்துடன் குறுக்கிக்கொண்டுள்ளனர். இலங்கையின் நிலைத்தொடர்ச்சியை பாதுகாப்பது தான் நாட்டின் இறைமையை பாதுகாப்பது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளனர். </p><p>

இறைமை என்பது மக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். தமது நாட்டிலோ மாநிலத்திலோ தமக்கான அரசாங்கத்தை தெரிவுசெய்யவும், தமக்கான வாழ்வியலை தீர்மானிக்கவும், உரிமைகளை பிரயோகிக்கவும் மக்கள் கொண்டுள்ள அதிகார பலமே இறைமையாகும். மக்களைத் தவிர்த்துவிட்டு நிலத்தை மாத்திரம் பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd464216-cdf0-4005-b596-5a1ac4531cbc/26-6a89ace46b56f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகமான போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/life-imprisonment-for-youth-found-in-heroin-1787403574"></link>
            <id>https://tamilwin.com/article/life-imprisonment-for-youth-found-in-heroin-1787403574</id>
            <summary type="text">அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை
ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள்
தண்டனை விதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை
ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள்
தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா
தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம்
பிரதேசத்தில் குறித்த இளைஞன் 2கிராமிற்கும் அதிகமான போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்துள்ளார்.</p><p>

இது தொடர்பான வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் 2021 ஆம் ஆண்டு வவுனியா மேல்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.</p><h2>ஆயுள் தண்டனை</h2><p>
</p><p>
எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு ஆயுள்தண்டனை தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a53a8f9d-2879-4ea0-85b5-741decbc6b75/26-6a89a9735a352.webp' /></p><p>
</p><p>
இலங்கை முழுதும் பெருகி வரும் போதைப்பொருள் பழக்கத்தினை கட்டுப்படுத்தும்
நோக்கில் குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
போதைப்பொருள் சார் குற்றச்செயல்களுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை
வழங்கும் என்ற எண்ணப்பாட்டை குறித்த தீர்ப்பும் தண்டனையும் மக்கள் மத்தியில்
உருவாக்கியுள்ளது.
</p><p>
குறித்த வழக்கின் சாட்சிகள் அரச சட்டவாதி ஸ்ரீசிவஸ்கந்த ஸ்ரீயால்
நெறிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் கடுமையான வறட்சி! நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irrigation-department-amid-drought-1787401265"></link>
            <id>https://tamilwin.com/article/irrigation-department-amid-drought-1787401265</id>
            <summary type="text">நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி.ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>நாடளாவிய ரீதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்தளவை எட்டியுள்ளது.</p><p>
 

தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், நிலவும் நீரின் அளவு அந்த பயிர்ச்செய்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0bbcbcd-9565-46f2-acaf-fd1f1876252b/26-6a89a0b18bef7.webp' /></p><h2>காலநிலை</h2><p>இருப்பினும், அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். </p><p>எனவே, அன்றாடத் தேவைகளுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
