<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-12T09:37:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-squad-for-india-announced-1786525441"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-squad-for-india-announced-1786525441</id>
            <summary type="text">இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான தனது அணியை இலங்கை இன்று (12.08.2026) அறிவித்தது.

தனஞ்சய டி சில்வா தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான தனது அணியை இலங்கை இன்று (12.08.2026) அறிவித்தது.
</p><p>
தனஞ்சய டி சில்வா தலைமையிலான இந்த அணியின் துணைத் தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
காயம் காரணமாக குசல் மெண்டிஸ் இந்த அணியில் இடம்பெறவில்லை. இதன் விளைவாக, முதல் போட்டிக்கான துணைத் தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2>இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்</h2><p>

இதற்கிடையில், குசல் மெண்டிஸுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e94e40b6-0a07-4f38-916c-d01d132c04d8/26-6a7c3c720ef3e.webp' /></p><p>

2023 மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை, இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.</p><p>மேலும், கடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் விளையாடாத பல வீரர்களும், இரண்டு புதிய வீரர்களும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><p>இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.</p><p>இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி:

தனஞ்சய டி சில்வா, லஹிரு உதர நிஷான், மதுஷ்க,&nbsp; கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார, சோனால் தினுஷ,&nbsp; நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, கேஷார நுவந்த, மிலன் ரத்நாயக்க</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-12T09:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் பதிவாகியுள்ள நிலவரம்! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1786523657"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1786523657</id>
            <summary type="text">இலங்கையில் இன்றைய தினம் (12.08.2026) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்றைய தினம் (12.08.2026) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>நேற்றைய தினம் (11.08.2026) விற்பனை செய்யப்பட்ட அதே விலையிலேயே இன்று தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>
</p><p>
தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d383c8-e77b-480f-8490-215c37622bae/26-6a7c36c5ba976.webp' /></p><p>
</p><p>
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 43,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T09:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை.. இரகசிய விமானத்தில் தப்பிச் சென்ற ட்ரம்ப்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-confirms-switched-planes-nato-summit-1786523584"></link>
            <id>https://tamilwin.com/article/trump-confirms-switched-planes-nato-summit-1786523584</id>
            <summary type="text">ஈரானின் அச்சுறுத்தல் காரணமாகவே துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் பின்னர், தாம் இரகசியமாக விமானத்தை மாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அச்சுறுத்தல் காரணமாகவே துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் பின்னர், தாம் இரகசியமாக விமானத்தை மாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இரகசிய பிரிவு மற்றும் இராணுவத்தினரின் வழிகாட்டலின்படியே நான் செயற்படுகிறேன், அவர்கள் என்னை வேறு விமானத்தில் பயணிக்குமாறு கேட்டுக்கொண்டனர்" எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், தமது உயிருக்கு வெளியுலகிற்குத் தெரியாத பல அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை 8ஆம் திகதி அன்சாரா விமான நிலையத்தில் ஊடகக் கெமராக்களுக்கு முன்னால் ஏர் போர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் ட்ரம்ப் ஏறியுள்ளார்.&nbsp;</p><h2>ஈரானின் அச்சுறுத்தல்..&nbsp;</h2><p>இருப்பினும், பின்னர் யாருக்கும் தெரியாமல் விமானத்தின் மறுபக்கத்திலிருந்து உணவு விநியோக வாகனத்தின் (Catering Truck) மூலம் இரகசியமாக C-32A என்ற இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7901093-9563-4287-b97a-7adb885e7681/26-6a7c327cdd12b.webp' /></p><p> அதேநேரம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் (Pete Hegseth) சாதாரண பயணி போல வெளிப் படிக்கட்டுகள் வழியாக அந்த இராணுவ விமானத்தில் ஏறியுள்ளார்.</p><p>ஆனால், ஊடகவியலாளர்களும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலேயே இருப்பதாக நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் விமானத்தின் ஜன்னல் திரைச்சீலைகளை மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.</p><p></p><h2>தீவிர பாதுகாப்பு&nbsp;</h2><p> புகைப்படக் கலைஞர் ஒருவர் ஜன்னல் திரையைத் திறக்க முயன்றபோது அது உடனடியாகத் தடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6beb1907-fa73-41fc-ab80-f7c40f353bde/26-6a7c347315db9.webp' /></p><p>
</p><p>
நேட்டோ உச்சிமாநாட்டின் போது ட்ரம்பை இலக்கு வைத்து தோளில் வைத்து இயக்கும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்திருந்த பின்னணியிலேயே இந்த இரகசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும், இந்த ஏமாற்று நடவடிக்கையைத் தொடர்வதற்காக, ஊடகவியலாளர்கள் பயணித்த விமானத்திற்குத் தொடர்ந்து "AF1" என்ற அழைப்புக் குறியீடு (Call sign) பயன்படுத்தப்பட்டதுடன், ட்ரம்ப் பயணித்த C-32A விமானத்திற்கு "Reach 18" என்ற வேறு அழைப்புக் குறியீடு பயன்படுத்தப்பட்டுப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T08:54:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஃபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கணக்கினால் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cert-warns-zero-click-attack-iphone-users-1786521502"></link>
            <id>https://tamilwin.com/article/cert-warns-zero-click-attack-iphone-users-1786521502</id>
            <summary type="text">ஐபோன் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய இணையவழித் தாக்குதல் குறித்து&amp;nbsp;இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவு (Sri Lanka ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபோன் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய இணையவழித் தாக்குதல் குறித்து&nbsp;இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவு (Sri Lanka CERT) அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இந்த எச்சரிக்கை படி, 'ஜீரோ-கிளிக்' என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல், iOS 16 மொபைல் இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்தி&nbsp;இணையவழித் தாக்குதலை மேற்கொள்கின்றது.</p><h2>ஜீரோ-கிளிக்</h2><p>இந்த தாக்குதல் தொடர்பில் பல பயனர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும், 'ஜீரோ-கிளிக்' வாட்ஸ்அப் பாதுகாப்பு மீறல் தற்போது இலங்கையில் உள்ள பயனர்களிடையே பரவி வருவதாகவும் SLCERT வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9561bb-3050-42fe-9d65-8a6f940e3b1f/26-6a7c2f0c3fd0e.webp' />&nbsp;</p><p>'ஜீரோ-கிளிக்' தாக்குதலானது, ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது பாதுகாப்பு இணைப்பு போன்ற பாதுகாப்பு சரிபார்ப்பு நடவடிக்கைகள் தேவையின்றி, பயனர்களை நேரடியாகக் குறிவைக்க முடியும் என கூறப்படுகிறது.</p><p>

பயனர்கள் தங்கள் சாதனங்களையும் மென்பொருள்களையும் சமீபத்திய பாதுகாப்புப் புதுப்பிப்புகளுடன் புதுப்பித்துக்கொள்ளவும், தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளில் இரு-படி சரிபார்ப்பு இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T08:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வு வயது குறித்த அரசாங்கத்தின் தீர்மானம்.. ஜனாதிபதியுடன் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bar-association-hold-discussions-with-president-1786522411"></link>
            <id>https://tamilwin.com/article/bar-association-hold-discussions-with-president-1786522411</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.</p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பல எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.</p><h2>வெளியான வர்த்தமானி&nbsp;</h2><p>

அதன்படி, தொடர்புடைய இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் சட்டமூல திருத்தம் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51fb910b-50fc-4720-a7bb-7db97e6dfbb5/26-6a7c2e817fb87.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான பின்னணியில், நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்த தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.
</p><p>
மேலும், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுடன் இவ்விடயம் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது.
</p><p>
அதன்படி, இது தொடர்பான முன்மொழிவை விவாதிப்பதற்கு, இலங்கை சட்டத்தரிகள் சங்கத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாய்ப்பளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T08:29:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aadi-amavasya-theerthotsavam-at-mamangeswarar-1786521072"></link>
            <id>https://tamilwin.com/article/aadi-amavasya-theerthotsavam-at-mamangeswarar-1786521072</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
இன்று (12.08.2026) மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
</p><p>
கடந்த 03ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10ஆம்
நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.</p><h2>மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம்</h2><p>
</p><p>ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த
மண்டப பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து வேத பாராயணங்கள் முழங்க,
பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்
கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53dd21bf-e710-4035-8f04-6d7cf96ba96f/26-6a7c2a0d71690.webp' /></p><p>

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடு
செய்தனர்.</p><h2>ஆத்ம சாந்தி பிரார்த்தனை</h2><p>
</p><p>
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, ஸ்ரீ இராம
பிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மையும் புகழும் மிக்க இப் புண்ணிய
தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதிர்கடன் செலுத்தி
ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609ea8f0-9beb-4f5c-a7d2-2baab9d75b91/26-6a7c2a0e575af.webp' /></p><p>
</p><p>
இத்தீர்த்தோற்சவ நிகழ்வில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த
பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு
மாமாங்கேஸ்வரரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cccdf5a9-dc60-467a-89f4-3c3f8f7e6d31/26-6a7c2a0f3ee36.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46ca2bcf-8c98-4714-98aa-9045d34330b3/26-6a7c2a101002a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f835bf74-2fb7-4aee-9110-e0d9fb283679/26-6a7c2a10dd3ef.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b23219f-b8e5-455c-87f8-942bed8b4b17/26-6a7c2a11b41b4.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef9e0921-e1ce-4ee6-88bc-f373eb69e59e/26-6a7c2a1286e26.webp' /></p><p></p><p></p><p><b><i>மேலதிக தகவல் - ஆஷிக்</i></b></p><p>மன்னார் - திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம்(12) காலை ஆடி
அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த
குருக்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><p>

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை வசந்த மண்டபத்தில்
கௌரியுடை திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்றுள்ளது.</p><h2>ஆடி அமாவாசை விசேட பூஜை</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து சுவாமி உள் வீதி எழுந்தருளி பாலவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாட
சென்றார். பாலாவி தீர்த்தம் இடம் பெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலா
வந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb240145-3e32-4dea-b87c-70cfa28ca581/26-6a7c33aac2338.webp' /></p><p>அதனை தொடர்ந்து பாலாவி தீர்த்த கரையில் இறந்த முன்னோரை நினைவு கூர்ந்து
எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்யப்பட்டது.</p><p>

அதனை தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை,மோச்ச விளக்கு
ஏற்றப்பட்டு,பக்த அடியார்கள் இறந்த தமது முன்னோர்களை நினைவு கூறி வழிபட்டுள்ளனர்.</p><p></p><p><b><i>மேலதிக தகவல் -&nbsp; தீபன்</i></b></p><p>ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் கீரிமலை கண்டகி
தீர்த்த கரையில் இன்றைய தினம்(12) புதன்கிழமை நடைபெற்றது.</p><h2>ஆடி அமாவாசை&nbsp;பூசை</h2><p>
</p><p>
தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை
முன்னிட்டு, தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்.
</p><p>
அதேவேளை மாவிட்டபுர கந்தனின் தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்த கரையில்
இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ce40386-839b-42f7-94a6-2d078e4b58b5/26-6a7c38099d635.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/997759e1-f42c-499f-9a03-b5955659bd3a/26-6a7c380b6767a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb9d259-bac3-40e1-a88d-65087360ce3e/26-6a7c380a88fac.webp' /></p><p><b><i></i></b></p>]]></content>
            <updated>2026-08-12T08:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைமாற்றப்பட்ட தங்காலை கால்டன் இல்லம்: மகிந்தவால் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786499235"></link>
            <id>https://tamilwin.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786499235</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி
இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,</p><p>
எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான்&nbsp; நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். </p><h2>

</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ராஜபக்சக்களின் பரம்பரை சொத்து</span></p><p>அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே சமர்ப்பித்துள்ளேன்.எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/117ff23c-0c4a-41cd-a780-d0f378af5dfc/26-6a7bd0a5159b5.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>ஏனெனில் சிலர் ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள் என்கின்றனர்.நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை.
எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன. </p><p>அதேபோல் நான் ஒரு
காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். அதைத்
தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட
அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
</p><p>மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக
அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020
வரை. மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.</p><p>எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன்.
மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும்&nbsp; சுட்டிக்காட்டியுள்ளேன். அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.
</p><h2> கால்டன் இல்லம் கைமாற்றப்பட்ட விதம்</h2><p>மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து
அவருக்குக் கிடைத்தவை. மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல்
ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.</p><p>இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.ஏனென்றால் அப்பா
அதை எனக்குக் கொடுத்து விட்டார்.கடந்த வாரமே எழுதப்பட்டது.
</p><p>அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம்
அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். ஏனென்றால் ஆயுட்கால
உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும்
ஒருவன் நான்.</p><p>ஆனால் அப்பா மறுபடியும் வலியுறுத்தி இது அரசியல் இல்லம்
என்பதாலும் தொடர்ந்து அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும்&nbsp; நிச்சயமாகத் உனக்கு தரப்பட வேண்டும் என்று கூறினார். அதனாலே தங்காலை கால்டன் இல்லம் எனக்கு வழங்கப்பட்டமைக்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>&nbsp;&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T08:04:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று வானில் நிகழப் போகும் அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meteor-shower-from-midnight-tomorrow-morning-1786518458"></link>
            <id>https://tamilwin.com/article/meteor-shower-from-midnight-tomorrow-morning-1786518458</id>
            <summary type="text">இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசித் துகள்கள் வழியாக பூமி பயணிக்கும் போது உருவாகிறது.</p><h2>ஒளி மாசு குறைந்த பகுதிகளில்</h2><p>

இந்தச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் மிக வேகமாக நுழையும்போது, வளிமண்டலத்துடனான உராய்வினால் வெப்பமடைந்து ஒளிர்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48a1e5b-dc2a-4b5b-9c58-80fa4d69b71b/26-6a7c237f1d78b.webp' /></p><p>இரவு வானில் காணப்படும் இந்த ஒளிரும் தடங்களே பொதுவாக ‘விண்கல் மழை’ என அழைக்கப்படுகின்றன.
</p><p>
இன்றைய பெர்சீட் விண்கல் மழையின் போது, வானிலை மற்றும் வானத்தை மறைக்கும் நிலைமைகள் சாதகமாக இருந்தால், ஒரு மணி நேரத்தில் 50 முதல் 100 வரையிலான விண்கற்களைக் காணக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் வானியல் பிரியர்களுக்கு இது வானில் காணக்கூடிய குறிப்பிடத்தக்க இயற்கைக் காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

ஒளி மாசு குறைந்த பகுதிகளிலிருந்து, நகர்ப்புற விளக்குகளிலிருந்து விலகி, திறந்த வானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:41:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் சீரமைக்கப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் சேதமடைந்த சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/repairs-to-damaged-negombo-prison-begin-next-week-1786514865"></link>
            <id>https://tamilwin.com/article/repairs-to-damaged-negombo-prison-begin-next-week-1786514865</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் சொத்துக்களை, இலங்கை விமானப்படையின் ஆதரவுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் சீரமைக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் சொத்துக்களை, இலங்கை விமானப்படையின் ஆதரவுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் சீரமைக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தின் போது சேதமடைந்த சொத்துக்களே இவ்வாறு சீரமைக்கப்படவுள்ளன.&nbsp;</p><p>

சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாக&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>புனரமைப்புப் பணிகள்</h2><p>
</p><p>
இதற்கிடையில், வர்த்தமானி அறிவிப்பின் மூலம் மீண்டும் அதிகாரபூர்வமாக சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் போகம்பரா சிறைச்சாலையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66339987-57fb-45c9-bd80-990d5ca6b4ee/26-6a7c1286af238.webp' /></p><p>
</p><p>
அடுத்த வார தொடக்கத்திலேயே கைதிகளை இவ்விடத்திற்கு மாற்றும் பணியைத் திணைக்களம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரியவருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வறட்சி - வனவிலங்குகளுக்கு பௌவுசர்கள் மூலம் நீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-supply-to-wildlife-in-national-parks-1786519382"></link>
            <id>https://tamilwin.com/article/water-supply-to-wildlife-in-national-parks-1786519382</id>
            <summary type="text">வனவிலங்குகளுக்கு பௌசர்கள் மூலம் நீரைக் கொண்டு சென்று விநியோகிக்கும் விசேட திட்டத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. 

நாட்டில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவிலங்குகளுக்கு பௌசர்கள் மூலம் நீரைக் கொண்டு சென்று விநியோகிக்கும் விசேட திட்டத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. </p><p>

நாட்டில் நிலவிவரும் கடும் வறட்சியான வானிலையால் தேசிய பூங்காக்களிலுள்ள நீர்நிலைகள் வற்றி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வறட்சியால் கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>

யால, வில்பத்து, குமண மற்றும் புந்தல ஆகிய தேசிய பூங்காக்களில் உள்ள குளம் மற்றும் நீர்நிலைகள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p> 

பிரதான தேசிய பூங்காக்களில் சூரிய சக்தியால் இயங்கும் நீர் மற்றும் குழாய் அமைப்புகள் மூலம் தொடர்ந்து நீர் நிலைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4964705c-b399-4f82-b64d-579d350b0510/26-6a7c23118435b.webp' /></p><h2>பௌசர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் நீர்</h2><p> 

குழாய் அமைப்புகள் சென்றடைய முடியாத பகுதிகளுக்குப் பௌசர்கள் மூலம் நேரடியாக நீர் கொண்டு செல்லப்பட்டு விலங்குகளின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. </p><p>

வானிலை மாற்றத்திற்கு ஏற்ப நீர் விநியோகத்தின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! பிணையில் சென்ற சந்தேகநபர் மீண்டும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-suspect-released-on-bail-1786516904"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-suspect-released-on-bail-1786516904</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 32 பேர் உயிரிழந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரின் பெயரை வெளியிட குற்றப்புலனாய்வுத்துறை (சிஐடி) நீதிமன்றத்திடம் அனுமதி கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 32 பேர் உயிரிழந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரின் பெயரை வெளியிட குற்றப்புலனாய்வுத்துறை (சிஐடி) நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.</p><p>

இது தொடர்பான வழக்கு நேற்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அனுமதி கோரப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபரின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்</h2><p>
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது அவர் சிறையில் இருந்துள்ளதுடன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52a9cf0a-3bde-4c8e-b197-d87fbc903e52/26-6a7c21e1c101a.webp' /></p><p>
</p><p>
எனவே, சந்தேகநபர் தலைமறைவாகி இருந்த நிலையில் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் சிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p> 

இதனையடுத்து வழக்கில் 32 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட நபர் நேற்று (11) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.</p><p>இதற்கமைய, அடையாள அணிவகுப்பிற்காக அவரை 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, இவ்வழக்கில் இதுவரை 62 சந்தேகநபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன, அவர்களில் 38 பேர் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>பெயர்ப் பட்டியல் மற்றும் 'பி' அறிக்கை&nbsp;</h2><p>
பாதுகாப்பு காரணங்களுக்காக சந்தேகநபர்களின் பெயர்கள் பகிரங்கமாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவில்லை என்றும், மேலும் பெயர்ப் பட்டியல் மற்றும் 'பி' அறிக்கை ஆகியவை குற்றப் புலனாய்வுத் துறையால் நீதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dddc9846-c9bb-4682-a432-ecb97e6fbc44/26-6a7c22be8c971.webp' />&nbsp;</p><p>

அதன்படி, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட 62 கைதிகளும் ஆகஸ்ட் 21 திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.</p><p> 

கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 சிறை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:34:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது சட்டத்திருத்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு தொடர் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-letter-by-mahanayaka-theros-anura-1786518077"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-letter-by-mahanayaka-theros-anura-1786518077</id>
            <summary type="text">மகா நாயக்க தேரர்கள்,&amp;nbsp;அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகா நாயக்க தேரர்கள்,&nbsp;அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்த தமது கருத்துக்கள் தொடர்பாக மகா தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று(12) ஒரு செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>ஜனாதிபதியிடம் கோரிக்கை..&nbsp;</h2><p>
அந்தக் கடிதத்தின் மூலம், மூன்று பீடங்களை சேர்ந்த மகா நாயக்க தேரர்கள், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03f32b35-2429-45be-8f18-ed84e2c5281f/26-6a7c2025975ee.webp' /></p><p>இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், ”இந்தக் கடிதத்தை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எப்படியோ எனக்கு தற்போது கிடைத்துவிட்டது. இதில், நீதியரசர்கள், நாடு எந்தப் பாதையில் செல்கிறது என்பதை நேரடியாகப் புரிந்துகொண்டுள்ளனர்.</p><p> தற்போது, ​​அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது முறையே 63 மற்றும் 65 ஆண்டுகள் ஆகும்.
</p><p>
அந்த வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் இந்த வழியில் செயல்படுவது பொருத்தமானது அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஐடியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-to-cid-investigation-1786509266"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-to-cid-investigation-1786509266</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.இன்று (12) காலை சுமார் 10 ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.</p><p>இன்று (12) காலை சுமார் 10 மணியளவில் முன்னிலையான நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் மேலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>நடைமுறைக்கு மாறாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வாகனம் தொடர்பான விசாரணையில் யோஷித ராஜபக்சவிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, ​​குற்றப்புலனாய்வுத்துறை இதற்கு முன்னர் பல சந்தேகநபர்களைக் கைது செய்திருந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யோஷித ராஜபக்சவிடம் வாக்குமூலம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபரால் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மேலும் பல வாகனங்கள் குறித்தும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UefV_hZW4AM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ச இன்றைய தினம் (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.</p><p>வாக்குமூலமொன்று வழங்குவதற்காக&nbsp;குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T06:56:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையும் நாளை மறுதினமும் காட்சிப்படுத்தப்படவுள்ள ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வுப் பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anaikottai-excavations-to-be-exhibited-tomorrow-1786513579"></link>
            <id>https://tamilwin.com/article/anaikottai-excavations-to-be-exhibited-tomorrow-1786513579</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல்
அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல்
அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் பொதுமக்களின்
பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.</p><p>இந்தக் காட்சிப்படுத்தல் நிகழ்வானது நாளை(13.08.2026) மற்றும் நாளை மறுதினம் (14.08.2026) ஆகிய இருதினங்கள் தொல்லியல் ஆய்வுத்தளத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தொல்லியல்&nbsp;கண்காட்சி</h2><p>இந்தக் கண்காட்சியில் நமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய
பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் இடம்பெறவுள்ளன.
</p><p>இதன்போது ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின்
தொன்மைச் சிறப்பையும் சான்றுகளுடன் மக்கள் நேரில் கண்டு உணர்ந்துகொள்ள
முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8b26ac-38de-4409-8021-818e32fe953a/26-6a7c0c0f99899.webp' /></p><p>பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தமது
வரலாற்று மற்றும் தொல்லியல் அறிவை மேம்படுத்திக்கொள்ள இதுவொரு
சிறந்தவாய்ப்பாகும்.
</p><p>
எனவே மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட இரு
தினங்களிலும் வருகை தந்து இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு நமது பண்டைய
வரலாற்று சிறப்புகளை அறிந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் .</p>]]></content>
            <updated>2026-08-12T06:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் 80 உத்தியோகத்தர்களை பணி நீக்கம் செய்ய சதி - உயர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conspiracy-to-dismiss-80-officers-in-north-1786511984"></link>
            <id>https://tamilwin.com/article/conspiracy-to-dismiss-80-officers-in-north-1786511984</id>
            <summary type="text">வட மாகாண சபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, 80ற்கும்
மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண சபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, 80ற்கும்
மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு
மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் தீவிரமாக முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.</p><p>வடமாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித்
திட்டங்களை நேரடியாகக் கண்காணிப்பதற்காக கடந்த 2006ஆம் ஆண்டு 82 அபிவிருத்தி
உத்தியோகத்தர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.</p><h2>அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்</h2><p>
</p><p>
கடந்த 2013ஆம் ஆண்டு வட மாகாணசபை இயங்க ஆரம்பித்த நிலையில், 2017ஆம் ஆண்டு
அப்போதைய பிரதம செயலாளர் நா.பத்திநாதனால் 82 பேருக்கு இந்த நியமனங்கள்
வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
போரால் பாதிக்கப்பட்ட இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்
செயற்பாடுகள் தவிர்க்க முடியாததாக அமைந்தது. எனினும், அதன் பின்னர் இந்த ஆளணியின்
எண்ணிக்கை 20ஆகக் குறைக்கப்பட்டதுடன், அவர்கள் எந்த நோக்கத்துக்காக நியமனம்
பெற்றனரோ அதற்கு முற்றிலும் பொருத்தமற்ற மத்திய நிர்வாக அலகுகளுடன்
இணைக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc108547-712f-430e-8c67-1dac690b5085/26-6a7c062e52554.webp' /></p><p>இந்த இணைப்புக்குப் பின்னர் மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரிகள் சிலர்
குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் மிகவும் தரக்குறைவாக விமர்சிப்பதுடன்,
பொருத்தமற்ற துறைகளுக்கும், திணைக்களங்களுக்கும் இடமாற்றம் வழங்கி
வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
போதிய ஆளணி உள்ள திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதால் அந்தத்
திணைக்களங்கள் அவர்களை ஏற்காத நிலையும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால்
மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடமாற்றங்களைச்
சந்திக்க நேர்ந்துள்ளது.</p><p>
வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களில் மிக வினைத்திறனாக செயற்பட்ட அபிவிருத்தி
உத்தியோகத்தர்களை தற்போதைய உயர் அதிகாரிகள் இவ்வாறு அலைக்கழிக்க வைப்பதும்,
அவர்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்குவதும் பல்வேறு தரப்பினர்களிடத்தில் கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:37:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் தீர்மானத்திற்கு எதிராக அதிரடியாக களமிறங்கிய எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-file-case-on-court-1786513574"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-file-case-on-court-1786513574</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை (12.08.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த அரசாங்கத்தின் முன்மொழிவு பற்றி பிரித்தானிய உயர் ஆணையருக்குத் தெரிவிக்க, கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><h2>நிலுவையிலுள்ள வழக்குகள்..&nbsp;</h2><p>
</p><p>இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் பேசிய ஜி.எல். பீரிஸ், "நாங்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்திற்குச் செல்வோம். இந்தப் பணியால் தேங்கியுள்ள வழக்குகளின் தேக்கத்தை இது தீர்க்காது என்பதை உயர் நீதிமன்றத்திற்கு எவ்வித சந்தேகமுமின்றிப் புரிய வைப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d8c71da-c914-44e1-80dc-fa2e71970246/26-6a7c11b291822.webp' /></p><p> </p><p>மொத்த வழக்குகளில் 1 சதவீதம் மட்டுமே உயர் நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் உள்ளன.

நாங்கள் இந்த நாட்டிற்கான பிரித்தாினிய உயர் ஆணையர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்தோம். </p><p>இலங்கை நீதித்துறைக்கும் பிரித்தாினிய பொதுநலவாயத்திற்கும் இடையே மிக நீண்ட மற்றும் ஆழமான உறவு இருந்து வருகிறது. இன்று எங்கள் நாட்டில் நடப்பவற்றை எங்களால் நம்ப முடியவில்லை என்று அவரிடம் கூறினோம்.&nbsp;</p><p>சட்டத்தீர்வையாளர் சங்கம் ஜனாதிபதியைச் சந்திப்பது பயனற்றது. எல்லாம் முடிந்த பின்னரே அவர்கள் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:31:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்காலையில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786511505"></link>
            <id>https://tamilwin.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786511505</id>
            <summary type="text">கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம்&nbsp;நேற்று(11.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37154665-dd24-4e94-8e34-d507d512a553/26-6a7c04ae335f1.webp' /></p><p>இந்நிலையில், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:29:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக ஆபத்துள்ள சுகாதார அதிகாரி பிரிவுகள் அடையாளம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-patients-in-the-country-increasing-1786514433"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-patients-in-the-country-increasing-1786514433</id>
            <summary type="text">நடப்பாண்டில் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.



ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பாண்டில் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும் பதிவான நிலையில், ஓகஸ்ட் 11 ஆம் திகதி நள்ளிரவு வரை மேலும் 5,348 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p>


நாட்டில் டெங்கு நோய்ப்பரவலின் மையமாக மேல் மாகாணம் தொடர்ந்து காணப்படுவதுடன், மொத்த நோயாளர்களில் 52.9 சதவீதம் இம்மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.</p><h2>அதிகளவு நோயாளர்கள் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>


கம்பஹா மாவட்டத்தில் 19,291 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 16,909 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இவ்விரு மாவட்டங்களிலும் பதிவான நோயாளர்கள் தேசிய மொத்த எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1581ae2-44be-4e77-bb99-dfece99157f5/26-6a7c10704fbca.webp' />&nbsp;</p><p>


அதேவேளை, கண்டியில் 6,466, மாத்தறையில் 5,990 மற்றும் களுத்துறையில் 5,416 நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.



தென் மாகாணத்தில் 12,206 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 7,475 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>சபரகமுவவில் 5,114, வடமேல் மாகாணத்தில் 4,050 மற்றும் ஊவா மாகாணத்தில் 4,137 நோயாளர்கள் பதிவாகியுள்ளன.
</p><p>


வடக்கு மாகாணத்தில் 1,287 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 2,799 நோயாளர்களும் பதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>அதிக ஆபத்துள்ள பிரிவுகள் அடையாளம்</h2><p>


இதேவேளை, இந்த ஆண்டு டெங்கு நோயினால் 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f89059-3808-494c-9aaf-517d92de55cd/26-6a7c107102966.webp' />&nbsp;</p><p>


31ஆவது வாரத்தில் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 119 ஆக காணப்பட்டதுடன், நாளாந்தம் சராசரியாக 1,509 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகமாகக் காணப்படும் நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் சமூக மட்டத்திலான டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/avRYwlXb7_s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-12T06:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரம்! உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuruwita-prison-clash-post-mortem-report-1786503881"></link>
            <id>https://tamilwin.com/article/kuruwita-prison-clash-post-mortem-report-1786503881</id>
            <summary type="text">&amp;nbsp;குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.</p><p>

நேற்று முன்தினம் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, இரண்டு கைதிகளும் பலத்த துப்பாக்கிச்சூட்டுக்காயங்களால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, ஒரு கைதி தலையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுக் காயத்தாலும், மற்றொருவர் மார்பில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டு காயத்தாலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் நிலை</h2><p>

கடந்த வெள்ளிக்கிழமை குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fee3ee9-e9cf-4aac-bde8-e631ab70ed77/26-6a7bf26b0bf07.webp' />&nbsp;</p><p>

கைதிகளுள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலை தீவிரமடைந்ததாகவும், இதனைக் கட்டுப்படுத்துதவற்காக துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை குண்டுகளும் நடத்தப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கூறியிருந்தார்.
</p><p>
இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, கலவரக் கட்டுப்பாட்டுப்பிரிவு மற்றும் இராணுவமும் வரவழைக்கப்பட்டன.</p><p>

இதற்கு முன்னர் நீர்கொழும்பு, மஹர, மெகசின் மற்றும் பல்லன்சேன சிறைகளிலும் கலவரம் வெடித்தது.</p><p>இதில், நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 சிறை அதிகாரிகளும் 17 கைதிகளும் உயிரிழந்தனர்.</p><p> 

மஹர மற்றும் மெகசின் சிறைகளில் வெடித்த கலவரத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T06:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ்.இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-youth-in-international-karate-competition-1786513700"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-youth-in-international-karate-competition-1786513700</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில்
பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய
தேசிய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில்
பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய
தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகி. தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள, சர்வதேச
கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
</p><p>
யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ். இந்துக்
கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில்
பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார்.&nbsp;</p><h2>ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்</h2><p>அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல்
முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது அவுஸ்திரேலியாவில்
புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f86eef-e71d-42ad-9b95-9f52b4e15ef6/26-6a7c0d5c9ca35.webp' /></p><p>
கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், இலங்கையின் பல்வேறு
பகுதிகளில் இயங்கிவரும் கராத்தே பாடசாலைகளின் ஊடாக, ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeswara-bandara-to-court-gotabaya-rajapaksa-1786512409"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeswara-bandara-to-court-gotabaya-rajapaksa-1786512409</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.&amp;nbsp;அவர், சற்று முன்னர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.&nbsp;</p><p>அவர், சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p>இரு நிறுவனங்களில் இருந்து அரச சம்பளம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 18ஆம் திகதி முதல் இன்று (12.08.2026) வரை காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
</p><p>இந்நிலையில் இன்று இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:41:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவு! இரகசிய உளவுத்தகவலில் ஆபத்தான பொதிகளுடன் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-arrested-underworld-group-member-with-drugs-1786506625"></link>
            <id>https://tamilwin.com/article/one-arrested-underworld-group-member-with-drugs-1786506625</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான &#039;கங்கன&#039; என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கங்கன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் பிரதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஹோமாகமவின் கெண்டலந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​போதைப்பொருள் கையிருப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய உளவுத்தகவல்</h2><p>பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேஷ நடவடிக்கைப்பிரிவு III அதிகாரிகளுக்கு கிடைத்த உளவுத்தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a37f0df-7346-4d93-9f7d-bbe40436b769/26-6a7c06c0ee778.webp' /></p><p>இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் 59 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 800 'எக்ஸ்டஸி' வகை போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹோமகம பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள 'கங்கன' என்பவரின் நேரடி உத்தரவுகளின் கீழ், இவர் நாட்டில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இரகசியமாக இயக்கி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைக்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:38:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவி - எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-government-help-by-inclement-weather-1786509095"></link>
            <id>https://tamilwin.com/article/indian-government-help-by-inclement-weather-1786509095</id>
            <summary type="text">சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத்
தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.</p><p>கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (11) செவ்வாய்க்கிழமை
நடைபெற்றபோது இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி</h2><p>அண்மையில் மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் சீரற்ற
காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக
இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f6ad07-66e3-4b3b-867f-44f49a574cbb/26-6a7bffb39c41c.webp' />&nbsp;</p><p>இதற்கமைய, கடந்த வாரம் கண்டியிலுள்ள இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர்
சரண்யா அம்மையாரை, பிரதேச சபை செயலாளர் விஜயசுந்தரம் மற்றும் உறுப்பினர்
பாஸ்கரன் ஆகியோருடன் சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை
வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.</p><p>அத்துடன், கொட்டகலை பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப்
பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 700 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,
மடிக்கணினிகள் மற்றும் புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கும், இளைஞர்,
யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், விவசாய நடவடிக்கைகளை
ஊக்குவிப்பதற்கும் உதவிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இந்த உதவிகளை வழங்குவதற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை
எடுக்கப்படும் என இந்திய தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக
இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய உதவித் தூதரகத்திற்கும் நன்றி
தெரிவிப்பதாகவும் பிரதேச சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>கொட்டகலை பிரதேசத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 88 விசேட தேவையுடைய
மாணவர்களுக்காக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்
ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர்
உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து, அவற்றை மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச்
சென்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபைத் தலைவர்
தெரிவித்துள்ளார்.</p><h2>விரைவில் புதிய கட்டட நிர்மாண பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தின் பயன்பாடு தொடர்பிலும் புதிய
தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

இதற்கமைய, உள்ளூர் விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளுக்கான மைதான வாடகையாக 10
ஆயிரம் ரூபாயும், வைப்புப் பணமாக மேலும் 10 ஆயிரம் ரூபாயும் அறவிடப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996ff3a9-273a-48f5-a5b4-cc16f9a5bfcd/26-6a7bffb470ce0.webp' />&nbsp;</p><p>
</p><p>
பிரதேசத்திற்கு வெளியேயுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளுக்கு 15 ஆயிரம்
ரூபாயும், 10 ஆயிரம் ரூபாய் வைப்புப் பணமும் அறவிடப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டது.</p><p>

எனினும், கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் நிகழ்வுகளுக்கு
மைதானத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மைதானத்தைப் பயன்படுத்துவோரின் வசதிக்காக மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகளும்
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab32374-8df7-486b-95ae-372cf7e8a200/26-6a7bffb545d59.webp' /></p><p>அத்துடன், கொட்டகலை பிரதேச சபைக்குச் சொந்தமான புதிய கட்டிடத்தின் நிர்மாணப்
பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்காக மத்திய மாகாண ஆளுநர், உள்ளூராட்சி
ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பைப்
பெற்றுக்கொள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் ராஜமணி பிரசாந்த்
கூறியுள்ளார்.</p><p>உறுப்பினர் சுதர்ஷன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, வட்டகொடை நகரில் யுவுஆ
இயந்திர சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிரபல வங்கிகளுடன் தொடர்பு கொண்டு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் அவரவர்
வட்டாரங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை விரைவாக நிறைவு
செய்து, அவற்றின் முழுமையான விபரங்களை நவம்பர் மாத இறுதிக்குள்
சமர்ப்பிக்குமாறும் பிரதேச சபைத் தலைவர் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் செல்லாத வகையில்,
அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய அனைத்து
உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், விசேட தேவையுடைய
பிள்ளைகளுக்கான கல்வி வசதிகள், விளையாட்டு மைதான அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு
விடயங்கள் தொடர்பில் கொட்டகலை பிரதேச சபையின் இன்றைய அமர்வில் கவனம்
செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T05:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்! அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employee-salary-sri-lanka-1786508674"></link>
            <id>https://tamilwin.com/article/government-employee-salary-sri-lanka-1786508674</id>
            <summary type="text">
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p> 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>சம்பளம் அதிகரிக்கப்படும்</h2><p> </p><p> 2027ஆம் ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச வருமானம் ஒப்பீட்டளவில் உயர்வடைந்து வருகின்றது. </p><p> இவற்றுள் கணிசமான பகுதி அரச அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருகின்றது. </p><p>

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர் மட்டத்தில் அரசாங்கம் அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2026இல் சம்பளம் அதிகரிக்கப்பட்டதோடு 2027இலும் அதிகரிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9eb5e55-5811-4cce-afbc-86dba2a24061/26-6a7bff97883a9.webp' /></p><p> 

மிகச் சிறந்த பொருளாதார நிலையில் இருந்து நாம் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை. பொருளாதார நிலை படிப்படியாக முன்னேறுகின்றது. அதற்கு ஏற்பவே அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலும் அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>

யாருக்கேனும் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்காணிப்பு கமராவை சேதப்படுத்தியவர்களிடம் தண்டப்பணம் அறவிட்ட நல்லூர் பிரதேசசபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-pradeshiya-sabha-fines-damaged-camera-1786508760"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-pradeshiya-sabha-fines-damaged-camera-1786508760</id>
            <summary type="text">நல்லூர் பிரதேசசபையினால் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் பிரதேசசபையினால் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

நல்லூர் பிரதேசசபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை</h2><p> 

இதன்மூலம் சட்டவிரோதமாக வீதிகளில் கழிவுகளை வீசி செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேசசபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d00b9c8c-3547-4fe3-9216-91dfe10c878e/26-6a7bfd235d861.webp' /></p><p> 

இதன் காரணமாக வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. </p><p>

இந்நிலையில், நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ஒன்று அண்மையில் சிலரினால் அடித்து நாசமாக்கப்பட்டது.</p><h2>சந்தேகநபர்கள் அடையாளம்</h2><p> </p><p>

எனினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏனைய கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளை பயன்படுத்தி குறித்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d14c1cb6-f491-4ba2-a78d-de67aa664add/26-6a7bfd244d90f.webp' /></p><p> 

இதனையடுத்து, சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கமராவின் பெறுமதியுடன் தண்டப்பணத்தையும் சேர்த்து ரூபா 80,000 தொகையை குறித்த நபர்களிடமிருந்து நல்லூர் பிரதேச சபையினால் அறவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b3b6de-e62b-44d0-acc4-4ac2fef9c7a1/26-6a7bfd2522952.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:01:27+00:00</updated>
        </entry>
    </feed>
