<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-21T23:20:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்! அரிசி இறக்குமதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/do-not-hit-farmers-where-it-hurts-rice-sajith-1787351795"></link>
            <id>https://tamilwin.com/article/do-not-hit-farmers-where-it-hurts-rice-sajith-1787351795</id>
            <summary type="text">விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.</p><p>

2026ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசுக்குத் தேவையான
7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகச்
சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் நேற்று(21) பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p>

76 ஆண்டு கால விவசாயிகளின் சோகத்தைச் சுபீட்சமான நிலைக்கு மாற்றித் தருவோம்
எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளின் வாழ்க்கை மற்றும்
ஜீவனோபாயத்தைப் பொருளாதாரப் படுகொலையாக மாற்றியுள்ளனர் என்று அவர் குற்றம்
சாட்டினார்.</p><h2>அரிசி இறக்குமதி</h2><p>
</p><p>
அரசின் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி, சிவப்பு நாடு மற்றும்
வெள்ளை நாடு போன்றவற்றுக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது,
விவசாயிகளுக்குக் கிடைக்கும் குறைந்த இலாபத்தைக் கொண்டு எவ்வாறு வாழ முடியும்
என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07371cad-ebd8-4e07-8358-73611577f5f6/26-6a88d9281333f.webp' /></p><p>

கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்கு உரிய கட்டுப்பாட்டு விலைகள்
பிறப்பிக்கப்படாததற்குக் காரணம், அத்துறையுடன் தனவந்தர்கள்
சம்பந்தப்பட்டிருப்பதே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>நாட்டின் உண்மையான அரிசித் தேவை 2.5 மில்லியன் மெற்றிக் தொன்னாக இருக்க, 3.2
மில்லியன் மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்படுகின்றது.</p><p>5 இலட்சம்
மெற்றிக் தொன் மேலதிக கையிருப்பு உள்ள நிலையிலும் 3 இலட்சத்து 40 ஆயிரம்
மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை விவசாயிகளின் வயிற்றில்
அடிப்பது போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் வதந்தியை பரப்பிய நபர் மகிந்த வீட்டின் செல்லப் பிள்ளையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rumor-of-an-ltte-training-camp-in-palai-1787348906"></link>
            <id>https://tamilwin.com/article/rumor-of-an-ltte-training-camp-in-palai-1787348906</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் புலிகள் பயிற்சி முகாம் இயங்கி வருவதாகவும் ,ஆறுமாடி கட்டடம் இருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.</p><p>ஒருவேளை, விடுதலைப்பிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் அவ்வாறான கட்டடங்கள் இருக்கின்றதோ தெரியாது என்று கூறப்பட்டது.</p><p>இந்த தகவலை வெளியிட்டவர் தென்னிலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சங்கீத் ஜயசேகர என்பவராவர்.</p><p>தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதிகள் அத்தியாவசியத் தேவையாக இருப்பது உடனடியாக வடக்கு, கிழக்கில் ஏதாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.</p><p>மேலும், பளைப்பகுதியிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமாக மாற்றப்போகின்றார்களா, அல்லது, வெடிகுண்டுகள் தயாரிக்கப்போகின்றார்களா என அங்கிருக்கும் அதிகாரிகள் தமக்கு தெரிவிப்பதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த வதந்தியை பரப்பிய பின்னணியில் இருப்பது யார், அவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் வீட்டோடு தொடர்புடையவரா என்பது தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mhuzVa404WY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படவில்லை: நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் மீறியதாகக் குடும்பத்தினர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787344002"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787344002</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாகிஸ்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாகிஸ்தான் அரசு பின்பற்றத் தவறிவிட்டதாக அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட
மருத்துவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 73 வயதான இம்ரான்
கானுக்கு, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக சிறப்பு மருத்துவ
சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவக் குழு பரிந்துரைத்திருந்தது.</p><h2>&nbsp;மீண்டும் சிறைக்கு</h2><p>

இதன் அடிப்படையில், அவரை 'அடியாலா' சிறையிலிருந்து 'ஷிஃபா சர்வதேச
மருத்துவமனைக்கு' உடனடியாக மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.
</p><p>
எனினும், இம்ரான் கான் ஷிஃபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல்,
அரசினால் நிர்வகிக்கப்படும் 'பிம்ஸ்' மருத்துவமனைக்கு நள்ளிரவில் அழைத்துச்
செல்லப்பட்டு சில மணிநேர பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கே
கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d483971-2cf0-4d68-90d6-fd2411a9f1d8/26-6a88b4840fa4a.webp' /></p><p>
</p><p>
வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட
இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் மற்றும் அவரது தனிப்பட்ட மருத்துவர் பைசல்
சுல்தான் ஆகியோர், அரசாங்கம் நீதிமன்ற உத்தரவை முழுமையாக மீறியுள்ளதாகக்
குறிப்பிட்டனர்.
</p><p>
ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டதால்
ஏற்பட்ட பாதுகாப்புச் சூழல் காரணமாகவே அவர் பிம்ஸ் மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டதாக பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார்
விளக்கமளித்துள்ளார்.
</p><p>
அத்துடன், அவர் தகுதிவாய்ந்த மருத்துவக் குழுவினால் பரிசோதிக்கப்பட்டு
ஆரோக்கியமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரே மீண்டும் சிறைக்கு
அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
</p><p>
இருப்பினும், அரசின் இந்த நடவடிக்கையானது நீதிமன்ற அவமதிப்பு எனத்
தெரிவித்துள்ள இம்ரான் கானின் 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' கட்சி, இதற்கு
எதிராக உச்ச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T21:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பியின் இறுதி நாடாளுமன்ற உரை..! பகிரங்க மன்னிப்பும் கோரினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-mp-s-final-parliamentary-speech-1787343796"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-mp-s-final-parliamentary-speech-1787343796</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப்
பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அவைக்கு வராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப்
பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அவைக்கு வராமல் தட்டிக் கழிக்கின்றனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத்
தவறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

நேற்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.</p><h2>பகிரங்க மன்னிப்பு&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,
</p><p>
"நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களின்
போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்குச் சமூகமளிக்காமல் தட்டிக்
கழிக்கின்றனர்.
</p><p>
கடந்த 2021ஆம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில்
தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டுக்குச் சட்டபூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான
அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள்
காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d112ead-d9f8-47d1-a037-02bd311965e7/26-6a88b3b60250b.webp' /></p><p>
இதுவே நாடாளுமன்றத்தில் தான் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக்
குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தனது பேச்சினால் யாருடைய
மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்துக்கு ஏதேனும் பங்கம்
ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும்
மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்தார்.</p><p>

கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான
குரலாகத் தான் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட
மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்தினார்.
</p><p>
நாட்டின் பொருளாதாரச் சீரழிவு மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்குப்
பொறுப்பானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-08-21T20:23:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு VIP நுழைவாயில்! நீதிமன்றத்தில் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180"></link>
            <id>https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180</id>
            <summary type="text">முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் சென்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p>பல்லேகம ஹேமரத்தன தேரர் தனது சட்டத்தரணியின் காரில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்தநிலையிலே,&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரர் மாத்திரம் எப்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>அத்தோடு, நீதிபதியின் நுழைவாயில் ஊடாக செல்வதற்கு சந்தேகநபரான&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு யார் சிறப்புரிமை வழங்கியது என்பது தொடர்பில் விசாரிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DbqlkAYMDWI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T20:05:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்தத் தவறும் செய்யாத நாமல் நிதிக் குற்றப் பிரிவில்! அரசாங்கத்திற்கு பொறாமையாம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fcid-investigation-into-namal-rajapaksa-1787335761"></link>
            <id>https://tamilwin.com/article/fcid-investigation-into-namal-rajapaksa-1787335761</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசாங்கம், அவரை நிதிக் குற்றப் பிரிவிற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றது என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசாங்கம், அவரை நிதிக் குற்றப் பிரிவிற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிவிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>நாமலின் வெற்றி&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p>நாமல் ராஜபக்சவை தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு அழைப்பது அரசாங்கத்தின் ஒரு தோல்வியுற்ற முயற்சி.&nbsp; நாமல் ராஜபக்சவின் வெற்றியை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கையே இது.&nbsp;&nbsp;</p><p>இந்த சதி நடவடிக்கைகளின் எதிர்விளைவுகள் எதிர்காலத்தில் தெரியவரும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14ae15be-9832-40d0-a9d0-95f2b67d5b98/26-6a88a26a2fd04.webp' /></p><p>மேலும், நானும் எனது குழுவினரும் எந்த தவறும் செய்யவில்லை.&nbsp; விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போதெல்லாம் நாங்கள் வருகின்றோம்.&nbsp; நாங்கள், எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே விசாரணைகளை அச்சமின்றி எதிர்கொள்கின்றோம். இது ஒன்றும் எமக்கு புதிதல்ல.</p><p>நாமல் ராஜபக்சவுக்காக இப்போது மக்கள் பெருமளவில் அணி திரள்கின்றனர். எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாத அரசாங்கத் தரப்பால் இது போன்ற சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருகின்றன. இதற்கான விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T19:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இராணுவ பலம் குறித்து ஆசிய நட்பு நாடுகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asian-allies-us-military-might-middle-east-1787337347"></link>
            <id>https://tamilwin.com/article/asian-allies-us-military-might-middle-east-1787337347</id>
            <summary type="text">ஆசிய பசிபிக்
பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ தளவாடங்கள் மற்றும்
போர்க்கப்பல்கள் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு வருவதால் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிய பசிபிக்
பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ தளவாடங்கள் மற்றும்
போர்க்கப்பல்கள் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு வருவதால் ஆசிய
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மிகுந்த கவலையடைந்துள்ளன.</p><p>

ஜப்பானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் கடைசி விமானம் தாங்கி
போர்க்கப்பலான 'யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வொஷிங்டன்' அங்கிருந்து மத்திய கிழக்கு
பிராந்தியத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், தென் கொரியாவில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ஏவுகணை
அமைப்புகளின் பாகங்களும், அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்புகளும் மத்திய
கிழக்கு போர்த்தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><h2>இராணுவ நடவடிக்கை</h2><p>

அமெரிக்காவின் இந்த நகர்வானது, தென் சீனக் கடல் மற்றும் அதனை ஒட்டிய
பிராந்தியங்களில் சீனாவின் ஆதிக்கத்தையும் இராணுவ நடவடிக்கைகளையும் மேலும்
அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8250a5bb-4c5c-4c46-b2ef-c1cefa02d719/26-6a889f9299d7a.webp' /></p><p>

அமெரிக்காவின் பிராந்தியப் பாதுகாப்பு உத்தரவாதம் பலவீனமடைந்து வருவதாகக்
கருதும் ஜப்பான், தாய்வான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள்,
தங்களது சொந்த பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை கணிசமாக உயர்த்தி வருகின்றன.</p><p>

இருப்பினும், இந்த நகர்வு ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், ஆசிய
பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னமும் பொருளாதார
நலன்களும் தொடர்ந்தும் வலுவாகவே இருக்கும் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T18:57:54+00:00</updated>
        </entry>
    </feed>
