<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-21T12:25:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம்! இதுவரையில் 235 பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143"></link>
            <id>https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் தற்போதுவரை 235 பேர் பாதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் தற்போதுவரை 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>புதிய இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது
நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய
வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின்
விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WQ7bM1YT4SA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது
தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற
திருவிழாவில் அதிகளவு ஒலி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும்
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை
மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு
மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள்
தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று
ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள்
மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55
பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக
வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>
மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும்
தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>இரண்டாவது இணைப்பு&nbsp;</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு
காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
</p><p>இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர்&nbsp; எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.</p><p>
️ கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf0db8c-637c-4ee7-a408-b2a7e2bc8c8e/26-6a880a998b5a2.webp' /></p><p>
</p><p>உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து
கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்
சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களை தேய்க்க வேண்டாம்.
</p><p>சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
</p><p>“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன்
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக
வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை&nbsp;</h2><p>

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
</p><p>அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஆலயத் திருவிழா</h2><p>
</p><p>
மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4f5d61-1510-4a3f-bdb4-a5434702ed78/26-6a87f1b62cc5d.webp' /></p><p>
</p><p>இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>&nbsp;மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
</p><h2>பார்வை பிரச்சினை</h2><p>
இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96d6b16-a4d5-4f7b-9533-87ec33cef535/26-6a87f1b55bdf5.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CFWVi5B8mkE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T12:24:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவாலி ஆலய திருவிழாவால் பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-incident-occurred-where-palm-tree-safety-fence-1787312501"></link>
            <id>https://tamilwin.com/article/an-incident-occurred-where-palm-tree-safety-fence-1787312501</id>
            <summary type="text">நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று(21) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது
பனை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று(21) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> இதன்போது
பனை மரம் ஒன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.</p><h2>ஆலய திருவிழா</h2><p>

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின்
நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க
அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019f66ac-5f15-48a9-9d0c-8af64fc7a396/26-6a883f31dc659.webp' /></p><p>
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப்
பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின்
பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு
தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும்
விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட
அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது
கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட
பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய
நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 நாட்களில் 8 ஆயிரத்தை தாண்டிய நோயாளர்கள் - இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-000-dengue-patients-registered-in-20-days-of-aug-1787311377"></link>
            <id>https://tamilwin.com/article/8-000-dengue-patients-registered-in-20-days-of-aug-1787311377</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கை முழுவதும் மொத்தம் 8,043 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கை முழுவதும் மொத்தம் 8,043 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், இந்த ஆண்டில் இதுவரையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,381ஆக உயர்ந்துள்ளதாகவும், டெங்கு தொடர்பான 71 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் NDCU கூறுகிறது.</p><h2>டெங்கு நோய் தொற்று</h2><p>
</p><p>
தற்போது டெங்கு நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 0.076% ஆக உள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் 8,043 நோய்த்தொற்றுகள் பதிவாகியிருந்தாலும், ஜூலையில் பதிவான 29,964 நோய்த்தொற்றுகள் மற்றும் ஜூன் மாதத்தில் பதிவான 21,533 நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது ஓகஸ்ட் மாதத்தில் ஒரு சிறிய சரிவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கூடுதலாக, மொத்த நோய்த்தொற்றுகளில் 52.94%, அதாவது 49,440 நோயாளிகள், மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.</p><p>

தெற்கு மாகாணத்தில் 13,697 நோய்த்தொற்றுகளும், மத்திய மாகாணத்தில் 8,441 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4c16795-f85a-4a5a-9253-913c9d6ed239/26-6a883aa31b5f8.webp' /></p><p>
</p><p>
மாவட்ட அளவில், கம்பஹாவில் அதிகபட்சமாக 19,888 வழக்குகளும், அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 18,535 வழக்குகளும், கண்டி மாவட்டத்தில் 6,755 வழக்குகளும் பதிவாகியுள்ளன.</p><p>மொத்தம் 76 சுகாதார மருத்துவ அதிகாரப் பகுதிகள் டெங்கு நோய்க்கான அதிக அபாயமுள்ள பகுதிகளாகத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்குமாறும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மணி நேர நீர்வெட்டு..! தமிழர் பகுதி மக்களுக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-hour-water-cut-in-batticaloa-1787309879"></link>
            <id>https://tamilwin.com/article/4-hour-water-cut-in-batticaloa-1787309879</id>
            <summary type="text">எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
நாளை(22) முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
நாளை(22) முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே மக்கள் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய
நீர்வழங்கல் அதிகாரசபை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன்
அறிவித்துள்ளார்.</p><h2>நீர் வெட்டு</h2><p>

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின்
நீர்மட்டம் வெகுவாக குறைடைந்து செல்லுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9a03dc-a5e4-47ce-b824-5b255ed8496c/26-6a883252de40d.webp' /></p><p>இந்த நிலையில் தொடர்ச்சியாக
நீர் வளங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை
நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்ளுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதேவேளை தற்போது உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வரலாற்றில் முதல் தடவையாக 10
அடியாக குறைந்துள்ளதுடன் தற்போது மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என
வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d1d8f8f-28ea-4e59-a323-b730f0aff4dd/26-6a8839a7a6326.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிறப்பு விமான விபத்தில் 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alaska-charter-flight-crash-kills-8-1787307360"></link>
            <id>https://tamilwin.com/article/alaska-charter-flight-crash-kills-8-1787307360</id>
            <summary type="text">அண்மையில் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் நடந்த வாடகை விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் நடந்த வாடகை விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜிலிருந்து சுமார் 725 கிலோமீட்டர் (450 மைல்கள்) மேற்கே அமைந்துள்ள கேப் நியூவென்ஹாம் ரேடார் தள விமான நிலையத்தை அணுகும்போது அந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>விமான விபத்து</h2><p>
</p><p>
இந்த சம்பவத்தின்போது விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு விமானிகளும் இருந்ததாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் கூறியுள்ளார்.
</p><p>
ஆங்கரேஜை தளமாகக் கொண்ட செக்யூரிட்டி ஏவியேஷன் என்ற விமான வாடகை நிறுவனத்தால் இயக்கப்படும் செஸ்னா 441 ரக விமானம் இது என அறிக்கைகள் அடையாளம் காட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54977dd3-5880-4d65-bb85-d9938404ffd2/26-6a88387adb7ee.webp' /></p><p> </p><p>விபத்து குறித்த செய்தியைத் தொடர்ந்து, அலாஸ்கா செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p>
"நான் அலாஸ்கா முழுவதும் செக்யூரிட்டி ஏவியேஷனுடன் விரிவாகப் பயணம் செய்துள்ளேன், மேலும் அவர்களின் அனுபவம் வாய்ந்த பல விமானிகளைச் சந்தித்துள்ளேன்," என அந்தத் தொலைதூரப் பகுதியில் செயல்படும் வாடகை நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.</p><p>விமானப்படை அலாஸ்கன் கட்டளைப் பிரிவு ‘நமது இராணுவக் குடும்பத்திற்கான இழப்பு’ என இரங்கல் தெரிவிக்கிறது.&nbsp; அந்த விமானம் “பொதுமக்களுக்கான ஒப்பந்த விமானம்” என அமெரிக்க இராணுவத்தின் அலாஸ்கன் கட்டளைப் பிரிவு கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் மேற்கோள்காட்டியுள்ளது.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிப்பாய் சபைக்கு தீச்சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/member-arriving-manipay-council-carrying-fire-pot-1787310834"></link>
            <id>https://tamilwin.com/article/member-arriving-manipay-council-carrying-fire-pot-1787310834</id>
            <summary type="text">மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் நா. பகீரதன், தீச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் நா. பகீரதன், தீச்சட்டியுடன் திடீரென சபைக்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>சுகாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
கல்லூண்டாய் குப்பை மேடு தொடர்ச்சியாக தீப்பற்றி எரிவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் சுகாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக உறுப்பினர் நா. பகீரதன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eaca82c-3581-4f2b-a5eb-1bfc92a48a20/26-6a883480a4332.webp' /></p><p>

குறிப்பாக, குப்பை மேட்டில் பொலித்தீன் மற்றும் பம்பஸ் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதால் அப்பகுதி மக்கள் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்தப் பிரச்சினை தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலும் பலமுறை பேசப்பட்டுள்ளதுடன், ஊடகங்கள் மூலமும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><h2>யாழ்ப்பாண மாநகர சபை</h2><p>
</p><p>
எனினும், இதுவரை பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p>

இதனை வெளிப்படுத்தும் வகையில், கல்லூண்டாய் குப்பை மேட்டில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்களை அடையாளப்படுத்தும் விதமாக நெருப்பு சட்டியுடன் சபைக்குள் நுழைந்ததாகவும் நா. பகீரதன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c2cd70b-2b99-4399-991b-88c201cd1d52/26-6a88348189f10.webp' /></p><p>
</p><p>
மேலும், கல்லூண்டாய் குப்பை மேடு தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் க. ஜெசீதனின் நடவடிக்கைகள் தமக்கு திருப்தியளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.</p><p>

யாழ்ப்பாண மாநகர சபையின் நடவடிக்கைகளுக்கு தவிசாளர் துணைபோவதாகவும், இந்த விடயம் தொடர்பில் தாம் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நா. பகீரதன் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-inflation-rises-1787309574"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-inflation-rises-1787309574</id>
            <summary type="text">நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்திற்கமைய, ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

இதற்கமைய, ஜூன் மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்திற்கமைய, ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. </p><p>

இதற்கமைய, ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்கம், ஜூலை மாதம் வரை 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><h2>உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம்</h2><p>

அத்துடன், ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் பணவீக்க விகிதம், ஜூலை மாதத்தில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1fc3a62-941a-46c5-b51e-3972cc40805d/26-6a883641db0ab.webp' /></p><p>

இதற்கிடையில், ஜூன் மாதத்தில் 9.3 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம், ஜூலை மாதத்தில் 9.2 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைவ திருவிழாக்களில் கலந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-devotees-attending-festivals-1787311314"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-devotees-attending-festivals-1787311314</id>
            <summary type="text">நேற்றைய தினம்(20) எமது யாழ். மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினம்(20) எமது யாழ். மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்ட்டிருக்கின்றமை மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்துள்ளது என தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>

சைவ கோயில்களில் இடம்பெற்ற களியாட்டங்கள்</h2><p>

 அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
</p><p>
இந்த சம்பவத்தை போன்று, கடந்த மாதங்களில் சில ஆலய திருவிழாக்களில் மிகவும் விரும்பத்தகாத ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் சைவ சமயங்களிடையே பெறும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8488106b-6459-4dc9-90e9-8198d0cfc59f/26-6a883595465e5.webp' /></p><p>
</p><p>
சைவ பரிபாலன சபை இந்து கலாச்சார திணைக்களம் என்பன சில ஒழுங்குவிதிகளை
கட்டுப்பாடுகளை ஏற்கனவே திருக்கோவில்களிடம் வலியுறுத்தி உள்ளன அது
வரவேற்கத்தக்கது.</p><h2>

பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>

ஆதலினால் அன்புக்குரிய ஆலய அறங்காவலர்களே எக்காரணம் கொண்டும் ஆலய
திருவிழாக்களில் இவ்வாறான எந்த களியாட்டங்களிற்கோ அதிக வெளிச்சம் பாய்ச்சல்
நிகழ்வுகளிற்கோ ஒலி எழுப்புதலுக்கோ இடம் அளிக்காதீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/435be783-98d7-4c09-b0e3-de96be9b6a0a/26-6a88359621188.webp' /></p><p>
</p><p>
இந்த விடயத்தை மிகவும் சிரத்தை எடுத்து தலைமேற்கொண்டு கோவிலை தழுவிய குடிகள்
குடிகளை தழுவிய கோவில் என்பதற்கு உயிர் கொடுக்குமாறு அனைத்து ஆலயம் சார்ந்த
சைவ பெருமக்களையும் கேட்டுக் கொள்கின்றோம். </p><p>

அதே நேரம் சட்டத்தை மிக இறுக்கமாக
நடைமுறைப்படுத்துமாறு சகல சம்பந்தப்ட்ட தரப்புக்களையும் கோருவதுடன்
அவர்களிற்கு அனைத்து சைவ சமயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு
கொள்கின்றோம்

பாதிக்கப்பட்ட பக்தர்கள் விரைந்து குணம்பெற அன்பே உருவான இறை சிவனை
பிரார்த்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br><br><b><i>you may like this..</i></b></p><hr><p><b><i><br></i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4WCYiz2i_Z4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-21T11:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை கட்டாயம் கவனியுங்கள்..! வாகனம் வைத்திருப்போருக்கு பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-issued-a-warning-regarding-vehicle-thefts-1787308016"></link>
            <id>https://tamilwin.com/article/police-issued-a-warning-regarding-vehicle-thefts-1787308016</id>
            <summary type="text">மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக நிறுத்தி வைப்பதால், அவற்றை குற்றவாளிகள் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக நிறுத்தி வைப்பதால், அவற்றை குற்றவாளிகள் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர், 

வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதுடன், அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களும் திருடப்படுவதாக தெரிவித்துள்ளார்.</p><h2>பொலிஸார் எச்சரிக்கை</h2><p>
</p><p>
சில சந்தர்ப்பங்களில் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், வாகனத்தை இயக்க நிலையில் வைத்துவிட்டு வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியின் சாவியை வாகனத்திலேயே விட்டுச் செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/648d3db6-2d0f-495c-b210-76ff8d4e9209/26-6a882e99f31e5.webp' /></p><p> </p><p>

இவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகள் மிகக் குறுகிய நேரத்தில் வாகனங்களை திருடிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், வீடுகளுக்கு வெளியே வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைப்பதுடன், வீட்டு வளாகத்தின் வாயில் கதவுகளுக்கு பூட்டு போடாமல் இருப்பதால் வாகனங்கள் திருடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>வாகனத் திருட்டு</h2><p>

நெரிசல் அதிகமான இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அருகிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அது தொடர்பில் தெரியப்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> 

வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் அல்லது பணியாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf75c5f-6c97-4927-9434-6555eabf9e47/26-6a882e9ac690e.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
வாகனம் திருடப்பட்டால், உடனடியாக 119 அல்லது 118 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p><br><br><b><i>YOU MAY LIKE THIS..<br><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PjDQ294dN3c" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-21T11:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் FCIDஇலிருந்து வெளியேறிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-appears-before-fcid-1787285911"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-appears-before-fcid-1787285911</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாக்குமூலம் அளித்த பின்னர், சற்று நேரத்திற்கு முன்பு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாக்குமூலம் அளித்த பின்னர், சற்று நேரத்திற்கு முன்பு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார் </p><p>நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, இன்று காலை (21) FCIDஇற்கு வருகை தந்த நிலையில் அந்தப் பிரிவால் நடத்தப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக FCIDஇல் முன்னிலையானார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று காலை (21) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்கவே அவர் முன்னிலையாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb69073-1174-4e36-9868-c4222ca7c000/26-6a87d51ea9aa7.webp' /></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zm1BRBjqgJ4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-21T10:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம் - வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-discussion-led-by-the-mannar-district-1787306524"></link>
            <id>https://tamilwin.com/article/special-discussion-led-by-the-mannar-district-1787306524</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள்
முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான
வட்டியற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள்
முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான
வட்டியற்ற கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், மன்னார்
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (21.08.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில்
நடைபெற்றது.
</p><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கு
அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதம
கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் திணைக்கள அதிகாரிகள், பலநோக்குக்
கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார்
அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><h2>நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகையில், இச்சிறுபோக
அறுவடை ஆரம்பித்தது முதல் அரசாங்கத்தின் மூலம் நெல் சந்தைப்படுத்தல் சபையின்
ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து அறுவடைகளை முடித்து நெல்லை
வைத்திருக்கும் நிலையில், அவர்கள் அதை விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்புடன்
காத்திருப்பதால் அரசாங்கத்தினால் தற்போது புதிய சுற்றுநிருபம்
வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f3e253f-0cab-4fc1-9e0a-b74c93e4eff9/26-6a882a7c541ce.webp' /></p><p> </p><p>அதன்படி பலநோக்குக் கூட்டுறவுச்
சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு
அரசாங்கத்தின் ஊடாக வட்டியற்ற கடன்களை வழங்கி, விவசாயிகள் வைத்திருக்கும்
நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
எனவே எமது மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட
தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லைக் கொள்வனவு செய்து, அதனைச் சேமித்து
அரிசியாக்குவதற்கான வசதிகளை வைத்திருந்தால் உடனடியாக இந்தச் செயல் திட்டத்தில்
இணைந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு அவர்
வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3afc3e-47a0-4cb1-9e41-09016d029674/26-6a882a7d4210c.webp' /></p><h2>நிர்ணயித்த விலையில் கொள்முதல்</h2><p>
</p><p>

இத்திட்டத்தின் கீழ் சந்தையில் நெல்லுக்கான நியாயமான விலையை உறுதி செய்யும்
பொருட்டு 1 kg வெள்ளை நாடு நெல் 120 ரூபாவிற்கும், சிவப்பு நாடு நெல் 120
ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும் அரசு நிர்ணயித்த விலையில்
கொள்முதல் செய்யப்படவுள்ளதுடன், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம்
அதிகபட்சமாக 14% ஆகவும் பதர் நெல்லின் அளவு 9%க்கு மிகாமலும் இருத்தல்
வேண்டும்.</p><p>

அத்துடன் நிலப்பரப்பின் அடிப்படையில் 1 ஏக்கர் வரை பயிர்செய்த விவசாயிகளிடம்
இருந்து அதிகபட்சமாக 1000 kg நெல்லும், 1 முதல் 3 ஏக்கர் வரை பயிர்
செய்தவர்களிடம் 2500 kg நெல்லும், 3 முதல் 5 ஏக்கர் வரை பயிர் செய்தவர்களிடம்
4000 kg நெல்லும் அதிகபட்சமாக கொள்முதல் செய்யப்பட உள்ள நிலையில்
நாளொன்றுக்கு அதிகபட்சம் 25 மெட்ரிக் தொன் வரை அரைக்கும் திறன் கொண்ட, மாவட்ட
செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு
அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபாய் வரை வட்டியற்ற கடன் ஒதுக்கப்பட்டு, ஆரம்ப
முன்பணமாக 25% விடுவிக்கப்பட்டு மீதித் தொகை 3 சம தவனைகளில் வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5c04b9-cfa7-4088-9828-488c26abaf8f/26-6a882a7e23cdf.webp' /></p><p>
</p><p>
அரசினால் வழங்கப்படும் இந்நிதியை 240 நாட்களுக்குள் முழுமையாக மீளச் செலுத்த
வேண்டும் என்பதுடன், தவறும்பட்சத்தில் எஞ்சிய தொகைக்கு ஆண்டுக்கு 10% வட்டி
அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும், முந்தைய அரசாங்கம்
கடன்களை மீளச் செலுத்தாத ஆலை உரிமையாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட
மாட்டார்கள் என்றும் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
</p><p>
தொடர்ந்து, தகுதியான பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவுச்
சங்கங்களும் உடனடியாக மாவட்ட செயலகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்
செயற்திட்டத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44e86a3-dd5d-40d0-b251-aa981b7c5826/26-6a882a7ef1402.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்றுமதியாளர்களின் வரிப்பணம் திரும்பப்பெறுவதில் தாமதம் - கோப் குழுவில் ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ird-explains-vat-refund-delays-on-time-1787304320"></link>
            <id>https://tamilwin.com/article/ird-explains-vat-refund-delays-on-time-1787304320</id>
            <summary type="text">சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்டு வரி(VAT) பணத்தைத் திரும்பப் பெறுவதில் சந்திக்கும் தாமதங்கள் தொடர்பில் பொது நிதிக் குழு (CoPF) கே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்டு வரி(VAT) பணத்தைத் திரும்பப் பெறுவதில் சந்திக்கும் தாமதங்கள் தொடர்பில் பொது நிதிக் குழு (CoPF) கேள்வியெழுப்பியுள்ளது.&nbsp;</p><p> 

அத்துடன், சுமார் 95% பணம் திரும்பச் செலுத்துதல்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படுவதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.</p><p>பணம் திரும்பச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவது குறித்து ஏற்றுமதியாளர்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளைக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், IRD-யின் வரி டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்னணு விலைப்பட்டியல் திட்டங்களை CoPF ஆய்வு செய்தபோது இந்தப் பிரச்சினை வெளிவந்துள்ளது.</p><h2>காலகெடுவுக்குள் பணம் செலுத்தப்படுகின்றதா...</h2><p> </p><p>

பணம் திரும்பச் செலுத்துதல் குறித்து சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் முறைப்பாடு அளிப்பதாகவும், தேவையான காலக்கெடுவுக்குள் பணம் செலுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e738f9c4-ebcc-411a-8fcb-534bd91f750b/26-6a882a2490f4c.webp' /></p><p>
</p><p>

மேலும், 14 நாட்களுக்குள் பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்குப் பதிலளித்த IRD அதிகாரிகள், நிலுவையில் உள்ள வரி விவகாரங்கள், வருமான வரி தாக்கல் இணக்கம், ஆவணங்கள் மற்றும் ஒரு கோரிக்கைக்கு ஒதுக்கப்பட்ட இடர் வகைப்பாடு உள்ளிட்ட தனிப்பட்ட கோப்புகளின் சூழ்நிலைகளைப் பொறுத்தே பணம் திரும்பச் செலுத்தும் செயல்முறை அமையும் என்று குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

"சில நேரங்களில், அவர்கள் கையாள விரும்பாத ஒரு நிலுவைத் தொகை இருக்கும். அத்தகைய நேரங்களில், எங்களால் அவர்களுக்கு 14-15 நாட்களுக்குள் பணத்தை வழங்க முடியாது. </p><p>அவர்கள் அதைக் கையாண்ட பின்னர் தான் நாங்கள் அதை வழங்க வேண்டும்," என்று ஒரு IRD அதிகாரி CoPF-இடம் கூறினார்.

பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோப்புகள், இடர் மற்றும் இணக்கக் கருத்தாய்வுகளின்படி வகைப்படுத்தப்படுவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.</p><h2>இரண்டு வாரங்கள் தொடரும்</h2><p>

கோரிக்கைகள் அதிக, நடுத்தர அல்லது குறைந்த இடர் என வகைப்படுத்தப்படுவதாகவும், குறைந்த மற்றும் நடுத்தர இடர் கொண்ட கோரிக்கைகளுக்கான பணம் திரும்பச் செலுத்துதல் பொதுவாக 14-15 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் IRD கூறியது.</p><p> 

அதிக இடர் கொண்ட கோரிக்கைகளுக்குப் பணம் திரும்பச் செலுத்தப்படுவதற்கு முன்பு ஒரு தனி சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cbeab45-7618-4494-b6c7-50ecb607a60d/26-6a882a2543176.webp' /></p><p>
</p><p>
"சுமார் 95% பணம் திரும்பச் செலுத்துதல், கொடுக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படும்," என்று ஒரு IRD அதிகாரி குழுவிடம் கூறினார்.</p><p>

மீதமுள்ள வழக்குகளில் ஏற்படும் தாமதங்கள், தவறுகள், ஆவணச் சிக்கல்கள் அல்லது வரி செலுத்துவோரின் கோப்பு தொடர்பான குறிப்பிட்ட சூழ்நிலைகளால் ஏற்படக்கூடும் என்று அந்த அதிகாரி கூறினார்.
</p><p>
பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள பிரச்சினைகளை மதிப்பிடுவதற்குத் தரவுப் பகுப்பாய்வு பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-decline-in-us-dollar-selling-rate-in-sri-lanka-1787306006"></link>
            <id>https://tamilwin.com/article/the-decline-in-us-dollar-selling-rate-in-sri-lanka-1787306006</id>
            <summary type="text">அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாவாக குறைந்துள்ளது. அதே சமயம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(21.08.2026) அமெரிக்க டொலருக்கு எதிராக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாவாக குறைந்துள்ளது.</p><p> அதே சமயம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(21.08.2026) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.</p><h2>டொலரின் பெறுமதி&nbsp;</h2><p>
</p><p>
இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 326.05இலிருந்து ரூ. 325.10 ஆகக் குறைந்துள்ளது. மேலும் அதன் விற்பனை விகிதமும் ரூ. 335.01இலிருந்து ரூ. 334.23 ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56be3058-d5b3-45dc-8f26-41d9f7bf2ad9/26-6a882286ee908.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொரிய விமானிகளைக் காப்பாற்றிய இலங்கைத் தொழிலாளர்கள்! கிடைத்துள்ள அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-workers-save-korean-pilots-1787302984"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-workers-save-korean-pilots-1787302984</id>
            <summary type="text">4 ஆண்டுகளுக்கு முன்பு, 3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்&amp;nbsp;தென் கொரிய படகொன்றின் மாலுமியுடன் இணைந்து&amp;nbsp;மஞ்சள் கடலில்&amp;nbsp; தீப்பிடித்து விழுந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 ஆண்டுகளுக்கு முன்பு, 3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்&nbsp;தென் கொரிய படகொன்றின் மாலுமியுடன் இணைந்து&nbsp;மஞ்சள் கடலில்&nbsp; தீப்பிடித்து விழுந்த விமானமொன்றில் இருந்து 2 விமானிகளை காப்பாற்றியுள்ளனர்.</p><p>அவ்வாறு உயிரைக் காப்பாற்றிய 2&nbsp;இலங்கையர்களுக்கு தேசிய நலனுக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை காரணம் காட்டி, அங்கு நீண்ட காலம் தங்குவதற்கான திறன்மிகு தொழிலாளர் விசாக்களை வழங்கியதாக அந்த நாட்டு நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>திறன்மிகு தொழிலாளர் தகுதி&nbsp;</h2><p>மூன்றாவது மீட்பாளர் ஏற்கனவே நீண்ட கால வதிவிடத் தகுதியைப் பெற்றிருப்பதுடன் 2022 ஆகஸ்ட் 12 அன்று, சியோலுக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால் இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது.</p><p> இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து கீழே விழுந்த போர் விமானத்தின் விமானிகளை, கடற்றொழில் படகில் இருந்த இலங்கைத் தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b427d77-16df-48da-a688-fea3f86ba3ba/26-6a881d8da7f5d.webp' /></p><p>அந்த நேரத்தில், அந்த மூன்று பேரும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் துறைகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பொதுவாக வழங்கப்படும் E-9 விசாக்களை வைத்துக்கொண்டு, வேலைவாய்ப்பு அனுமதி முறையின் கீழ் தென் கொரியாவில் இருந்துள்ளனர். </p><p>இந்தத் தகுதி, தொழிலாளர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கும். வெள்ளிக்கிழமை அன்று E-7-4 திறன்மிகு தொழிலாளர் தகுதி வழங்கப்பட்ட அந்த இரு நபர்களும், ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் வரை தென் கொரியாவில் தங்கியிருக்கலாம்.</p><h2>அதிகாரப்பூர்வ அங்கீகாரம்</h2><p> </p><p>அதன் பிறகு, நீட்டிப்புகளின் எண்ணிக்கைக்கு வரம்பின்றி, அவர்களின் விசாக்களை இரண்டு ஆண்டு இடைவெளிகளில் புதுப்பித்துக் கொள்ளலாம். </p><p>இதனையடுத்து "நமது சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்புகளை ஆற்றியுள்ள வெளிநாட்டினர் நாட்டில் நிலையாக வாழ்வதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்" என நீதித்துறை அமைச்சர் ஜங் சங்-ஹோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70a4a7f-f60b-4e4a-be68-5b387715c92c/26-6a881d8e58f5f.webp' /></p><p> </p><p>அந்த வீரர்களின் செயல்களுக்கு கிடைத்த மற்றொரு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த மே மாதம், இரண்டு விமானிகளைக் காப்பாற்ற உதவியதற்காக, விமானப்படைத் தலைமைத் தளபதியிடமிருந்து அவர்கள் ஒரு பாராட்டுக் கடிதத்தைப் பெற்றுள்ளனர். </p><p>4 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்தத் தொழிலாளர்களின் செயல், இறுதியில் 2 உயிர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தென் கொரியாவில் அவர்களின் வாழ்க்கைப் போக்கையும் மாற்றியமைத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:17:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787306661"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787306661</id>
            <summary type="text">உடலநலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி தனது 94ஆவது வயதில் காலமானார்.தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடலநலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி தனது 94ஆவது வயதில் காலமானார்.</p><p>தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><h2>சௌகார் ஜானகி</h2><p> </p><p>இந்த நிலையில் இன்று(21) மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள்கள் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f305b5-6c0d-429a-9abe-fcc503e997a2/26-6a8824aee63f8.webp' /></p><p>கடந்த 1950 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’சவுகாரு’ திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து சௌகார் ஜானகி என அவர் அழைக்கப்பட்டார்.</p><p>சௌகார் ஜானகியின் மறைவு தென்னிந்திய திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:13:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் : எழுந்துள்ள விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/constitutional-rights-not-denied-by-circulars-1787291603"></link>
            <id>https://tamilwin.com/article/constitutional-rights-not-denied-by-circulars-1787291603</id>
            <summary type="text">அரசியலமைப்பு உரிமைகளை சுற்றறிக்கைகளைக் காட்டி மறுக்க முடியாது என&amp;nbsp; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி மு. அஸ்ஸம் தெரிவித்துள்ளார்.கல்முனை - வட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பு உரிமைகளை சுற்றறிக்கைகளைக் காட்டி மறுக்க முடியாது என&nbsp; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி மு. அஸ்ஸம் தெரிவித்துள்ளார்.</p><p>கல்முனை - வடக்கு ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவின்&nbsp; விசாரணைகளை அடுத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல்</h2><p>
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.எம்.எம்.மு.அஸ்ஸம்,
"குறித்த ஆடை அனுமதிக்கப்படாத ஒன்றாக இருந்தால், அதே ஆடையுடன் அவர்கள் வேறு
அரச வைத்தியசாலையில் எவ்வாறு பணியாற்ற முடியும்? அவ்வாறாயின் அரசியலமைப்பை
நடைமுறைப்படுத்த முடியாத தனி மண்டலமாகவா கல்முனை ஆதார வைத்தியசாலை
தொழிற்படுகிறது? எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/873ecbfe-73af-462a-adea-e2db7c391d7d/26-6a87ebbc0ed35.webp' /></p><p>
மேலும், அரச தாபன விதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளை மட்டும் மேற்கோள்காட்டி
அதிகாரிகள் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிவிட
முடியாது என்றும், தாதியர் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களுக்கும் இந்தப் பிரச்சினை
விரிவடையும் முன் சுகாதார அமைச்சு தேசிய மட்டத்திலான நிரந்தர கொள்கைத்
தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

அத்துடன், இந்தச் சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில்
இனவாதக் கருத்துக்களையும் போலிப் பிரசாரங்களையும் பரப்புவதை தவிர்த்து பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T09:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு : தற்காலிக நடைமுறை அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/temporary-procedure-introduce-police-clearance-1787303483"></link>
            <id>https://tamilwin.com/article/temporary-procedure-introduce-police-clearance-1787303483</id>
            <summary type="text">பொலிஸ் அனுமதிப் பிரிவின் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து, பொலிஸ் அனுமதி அறிக்கை விண்ணப்பங்களுக்காக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் அனுமதிப் பிரிவின் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து, பொலிஸ் அனுமதி அறிக்கை விண்ணப்பங்களுக்காக இலங்கை பொலிஸ் ஒரு தற்காலிக நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

பத்தரமுல்லையில் இசுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் அனுமதிப் பிரிவால் இயக்கப்படும் இந்த அமைப்பு, நேற்று(20.08.2026) நண்பகல் முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. </p><h2>மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப</h2><p>விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கும், பின்னணி அறிக்கைகளைப் பெறுவதற்கும், பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களை அச்சிடுவதற்கும் இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc30fa12-5421-48fe-9eb7-1c2f013f59d7/26-6a881c99b999f.webp' /></p><p>
தொழில்நுட்பக் குழுக்கள் அமைப்பைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் தற்காலிக விண்ணப்ப முறையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
விண்ணப்பதாரர்கள், இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையதளமான www.police.lkஇற்குச் சென்று, “விண்ணப்பத்தைப் பதிவிறக்கு” ​​என்பதைத் தேர்ந்தெடுத்து, உரிய படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். </p><p>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் நகல்களுடன் சேர்த்து, clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.</p><h2>பூர்த்தி செய்யப்பட்ட சான்றிதழ்கள்</h2><p>
</p><p>
இந்த ஆரம்பக் கட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

இருப்பினும், கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு மீண்டும் செயல்படத் தொடங்கியவுடன், தற்காலிக நடைமுறையைப் பயன்படுத்திய விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது விண்ணப்பங்களை மீண்டும் இணையவழி மூலமாகச் சமர்ப்பித்து, வழக்கமான நடைமுறையின்படி உரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87562803-ca42-4cb0-b760-2a43a3d672e2/26-6a881c9a6f05e.webp' /></p><p>

இதற்கிடையில், கணினி அமைப்பு செயலிழப்பதற்கு முன்னர் தமது ஆவணங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், தமது சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். </p><p>பூர்த்தி செய்யப்பட்ட சான்றிதழ்களின் குறிப்பு எண்கள்(reference numbers) உத்தியோகபூர்வ இலங்கை பொலிஸ் இணையதளத்தில் வெளியிடப்படும்.
</p><p>
குறிப்பு எண்கள் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், இசுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் தங்களது பொலிஸ்&nbsp; அனுமதிச் சான்றிதழ்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். ஒரு சிறப்பு ஏற்பாடாக, சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இச்சான்றிதழ்கள் வழங்கப்படும்.</p><p>குறிப்பு எண்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்கள், கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு முழுமையாக மீட்டமைக்கப்பட்ட பிறகு தங்களது அறிக்கைகளைப் பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b1K_kqmcymQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T09:38:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சிகரெட் உற்பத்தியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/change-in-cigarette-production-in-sri-lanka-1787301741"></link>
            <id>https://tamilwin.com/article/change-in-cigarette-production-in-sri-lanka-1787301741</id>
            <summary type="text">புகையிலைப் பொருட்கள் மீதான தொடர்ச்சியான வரி உயர்வுகளின் காரணமாக, 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சிகரெட் உற்பத்தி 32% குறைந்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகையிலைப் பொருட்கள் மீதான தொடர்ச்சியான வரி உயர்வுகளின் காரணமாக, 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சிகரெட் உற்பத்தி 32% குறைந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>புகையிலை வரி கொள்கை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் புகையிலை வரி கொள்கையின் தாக்கத்தால், 2022ஆம் ஆண்டில் 2.8 பில்லியனாக இருந்த சிகரெட் உற்பத்தி, 2025ஆம் ஆண்டில் 1.9 பில்லியனாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d10cb6d-42ae-454b-a504-826b377edfd4/26-6a8816cdf3223.webp' /></p><p> </p><p>

அரசாங்க வருவாயை அதிகரிப்பதுடன், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலச் செலவுகள் மற்றும் பிற எதிர்மறையான சமூக - பொருளாதார தாக்கங்களை குறைப்பதற்காகவும் இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.</p><h2>வரி திருத்தம்</h2><p>
</p><p>
2023ஆம் ஆண்டு முதல், சிகரெட்டுகள் மீதான கலால் வரி நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளதுடன், மதிப்புக்கூட்டு வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி விகிதங்களும் திருத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe87c412-ec80-4ac7-8b5d-dfb022c8de9e/26-6a8816ceb0078.webp' /></p><p> 

மேலும், சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ஒரு சிகரெட்டுக்கு ரூ. 26.59 முதல் ரூ. 109.95 வரையிலான கலால் வரி விதிப்பு முறை, ஜனவரி 11, 2025 முதல் நடைமுறையில் உள்ளது. 

இந்த உயர்த்தப்பட்ட புகையிலை வரிகள், பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கும் பங்களித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T09:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒக்டோபர் 2ஆம் திகதி திரைக்கு வருகிறது போராட்டம் திரைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-ibc-production-1787302839"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-ibc-production-1787302839</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ஈழத்து கலைஞர்களை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>

 திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4b55884-e51f-4eb3-84b0-6168d564d8a9/26-6a881693d7473.webp' /></p><p> </p><p>

திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) புகைப்படத்தில் அவர் உதைப்பந்தாட்ட வீரராக தோன்றியுள்ளமை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
</p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><h2>பெரும் வரவேற்பு</h2><p>

ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்நிலையில், திரைப்படத்தின் பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8359243e-63d6-4bf4-86e9-d0dda0750d69/26-6a881694bb94c.webp' /></p><p>
</p><p>
‘போராட்டம்’ திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. </p><p>


ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T09:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலைக்குப் பின்னரும் தொடரும் அபாயம் - ஆபத்தான நிலையில் பிரதான வீதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-continuing-after-inclement-weather-1787302988"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-continuing-after-inclement-weather-1787302988</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக
ஏற்பட்ட மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்தல் போன்ற
பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக
ஏற்பட்ட மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்தல் போன்ற
பாதிப்புகளின் தாக்கம் இன்னும் தொடர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் பிரதான வீதிகளில்
போக்குவரத்து தடைப்பட்டதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
</p><h2>
ஆபத்தான நிலையில் மலையகம்</h2><p>

மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பல்வேறு உடைமைகளுக்கும் சேதங்கள்
ஏற்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

எனினும், அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்ட போதிலும், அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொள்ள
வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மக்கள்
குற்றம் சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/622f498c-7806-4960-9512-783c636a8393/26-6a88155a7e6cc.webp' /></p><p>

சீரற்ற காலநிலையின் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதியோரங்களில்
மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் அரிப்பினால் வேர்கள் வெளிப்பட்ட நிலையில் பல
மரங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
</p><p>
குறிப்பாக, வீதிகளுக்கு அருகாமையில் சாய்ந்த நிலையில் காணப்படும் இம்மரங்கள்
சிறிய காற்று அல்லது மழை ஏற்பட்டாலும் முறிந்து வீதியில் விழக்கூடிய அபாயம்
காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால் எதிர்காலத்தில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு
ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.</p><p>
</p><h2>பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உரிய முறையில் அடையாளம் கண்டு, அவற்றுக்கு
கேபிள்கள் பொருத்துவது அல்லது ஏனைய பாதுகாப்பு முறைகளை கையாள்வதன் மூலம்
மரங்கள் சரிந்து விழுவதைத் தடுக்க முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2edce0f3-64a5-4b00-9370-1b8f06890cd6/26-6a88155b977b6.webp' /></p><p>
</p><p>
அதன் மூலம் உயிர் மற்றும் உடைமை சேதங்களை குறைப்பதுடன், மரங்களையும் பாதுகாக்க
முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறுப்பு வாய்ந்த
அதிகாரிகள் இதுவரை போதியளவு முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும்
முன்வைக்கப்படுகிறது.</p><p>

எனவே, எதிர்வரும் காலங்களில் மீண்டும் சீரற்ற காலநிலை ஏற்படுவதற்கு முன்னர்,
நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதியோரங்களில் ஆபத்தான நிலையில் காணப்படும்
மரங்கள் மற்றும் மண்சரிவு அபாயப் பகுதிகளை அடையாளம் கண்டு, உடனடியாக உரிய
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b61d5794-f0d3-4ee9-99d0-d505a2d386aa/26-6a88155c6ef9b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/388a3396-f9ca-4dc7-b7b2-919b656fed5a/26-6a88155d4c87e.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T09:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/compensation-was-provided-families-officers-1787299012"></link>
            <id>https://tamilwin.com/article/compensation-was-provided-families-officers-1787299012</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இன்று (21) இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த இழப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இன்று (21) இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.</p><p>

இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு சிறைச்சாலை தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.</p><h2>&nbsp;குடும்பங்களுக்கு இழப்பீடு</h2><p>
</p><p>
இதன்போது உயிரிழந்த ஒவ்வொரு சிறைச்சாலை அதிகாரிக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் அவர்களின் உறவினர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது, சிறைச்சாலை அவசர பதில் மற்றும் தந்திரோபாயப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/490191b2-f07b-49b6-9da3-ef782eedfef8/26-6a8811ba1ca57.webp' /></p><p>
இதன்படி, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.</p><p>

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யுஷான் தரங்க, எதிர்பாராத இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, அவர்களின் அனைத்து தகவல்களையும் முழுமையாக சேகரிக்கும் செயல்முறைக்காக காத்திருக்காமல், இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.
</p><p>
மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சிறைச்சாலை பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் மட்டுமல்லாமல், மேலும் பல நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தையும் சிறைச்சாலை திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SRItUiqIk-Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T08:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் யாழில் இறுதி நாளாக வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/efforts-obtain-statements-from-relatives-disappear-1787300046"></link>
            <id>https://tamilwin.com/article/efforts-obtain-statements-from-relatives-disappear-1787300046</id>
            <summary type="text">காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமலாக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21.08.2026) இறுதிநாளாக
யாழ்ப்பாணம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமலாக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21.08.2026) இறுதிநாளாக
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், விசாரணைக்
குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு
வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
</p><p>இதன்போது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர்
பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன், வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு
உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும்
அதிகளவில் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd878789-d8a8-4a94-8fb1-10f74b06d6f3/26-6a880c45bcd0c.webp' /></p><h2>விசாரணை</h2><p>
வாக்குமூலம் பெறும் நடவடிக்கையின்போது, காணாமலாக்கப்பட்டவர்களின் பெயர்,
வயது, காணாமலாக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் மற்றும் அது
தொடர்பான ஏனைய முக்கிய தகவல்கள் குறித்து உறவினர்களிடம் விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டன.
</p><p>காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும்,
அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய விசாரணைகள்
முன்னெடுக்கப்படுவதற்கும் இந்த வாக்குமூலம் பதிவு நடவடிக்கை முக்கியத்துவம்
வாய்ந்ததாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66d832bd-3a6c-46d7-8770-b6c1942c93e0/26-6a880c46b23b7.webp' /></p><p>
</p><p>இதன்போது நீண்டகாலமாக தமது உறவுகளின் நிலை தொடர்பில் எதிர்பார்ப்புடன்
காத்திருக்கும் குடும்பங்கள் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை
அதிகாரிகளிடம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T08:32:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையான பல்லேகம ஹேமரத்தன தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/venerable-pallegama-hemaratne-thero-in-court-1787299920"></link>
            <id>https://tamilwin.com/article/venerable-pallegama-hemaratne-thero-in-court-1787299920</id>
            <summary type="text">முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு விசாரணை இன்று(21.08.2026) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p> 


பல்லேகம ஹேமரத்தன தேரர் நீதிமன்ற வளாகத்திற்கு எப்படி வந்தார் என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு நீதவான் நீதிமன்றத்தின் பொறுப்பதிகாரருக்கு நீதவான் உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48750a73-3d3a-4d66-8f66-ce07fcf7752f/26-6a8808ad6c419.webp' /></p><p>

பல்லேகம ஹேமரத்தன தேரர் தனது சட்டத்தரணியின் காரில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/05w8InWKO7w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-21T08:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவன் உயிரிழப்பு : 3 ஆண்டுகளாக வெளியாகாத விசாரணை அறிக்கை - கேள்வி எழுப்பிய முஜுபுர் ரஹுமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dying-after-treatment-mujubur-rahman-question-1787296104"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dying-after-treatment-mujubur-rahman-question-1787296104</id>
            <summary type="text">கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி&amp;nbsp; சிகிச்சை பெற்ற மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி&nbsp; சிகிச்சை பெற்ற மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஸ்டென்ட் (Stent) மாற்றப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஸ்டென்ட்கள் அகற்றப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இந்த சிகிச்சையுடன் தொடர்புடைய மருத்துவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்ட சிலர், சம்பவத்திற்குப் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><h2>மரணம் தொடர்பான விசாரணை</h2><p>சிறுவனின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அதன் அறிக்கை இதுவரை பெற்றோரிடம் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ac2d150-20c0-415e-8d1c-aa715b3b1f3d/26-6a88002caf356.webp' /></p><p>

குறித்த விசாரணை அறிக்கை மருத்துவர் ரத்னபத்துவிடம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடம்பெற்று சுமார் மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த அறிக்கை பெற்றோருக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இதுவரை மூன்று முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னதாக பொலிஸ் மற்றும் சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய தரப்பினரிடம் இது குறித்து வினவப்பட்ட போதிலும், விசாரணையின் முடிவுகள் அல்லது உரிய பதில்கள் முறையாக வெளிப்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை, அறிக்கை பெற்றோரிடம் வழங்கப்படாததற்கான காரணம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து உரிய விளக்கமும் நடவடிக்கையும் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T07:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவப் பரிசோதனை முடிந்தது..மீண்டும் அடியாலா சிறைக்கு சென்ற இம்ரான் கான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-taken-back-to-jail-after-check-hospital-1787295492"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-taken-back-to-jail-after-check-hospital-1787295492</id>
            <summary type="text">பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் செய்தித் தொடர்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>மீண்டும் சிறை</h2><p> 

வைத்தியசாலையில் கண் வைத்தியர், இதயநோய் நிபுணர் மற்றும் பொது வைத்தியர் உள்ளிட்ட வைத்தியர்கள் அடங்கிய குழு அவரை விரிவாகப் பரிசோதித்ததாகவும், அவர் சிறையில் தொடர்ந்து இருப்பதற்கு மருத்துவ ரீதியாக தகுதியானவர் என வைத்தியவர்கள் தெரிவித்ததாகவும் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார்.
</p><p>
73 வயதான இம்ரான் கான், உடல்நல பிரச்சினைகள் காரணமாக வைத்திய சிகிச்சை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஒகஸ்ட் 20ஆம் திகதி நள்ளிரவில் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93fe9e99-81f8-43dc-986b-fe5c6e6050ea/26-6a8800e0cb7ce.webp' /></p><p>
</p><p>
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், அங்கிருந்து மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

தற்போது அவர் மீண்டும் சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>இதற்கிடையில், இம்ரான் கானின் உடல்நிலை சிறையில் மோசமடைந்துள்ளதாகவும், அவரது வலது கண்ணின் பார்வை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>இம்ரான் கானின் உடல்நிலை</h2><p>
செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், இம்ரான் கானை 48 மணி நேரத்திற்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும் என்றும், அவரது தனிப்பட்ட வைத்தியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவை அணுகுவதற்கு அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
</p><p>
ஆனால், இம்ரான் கானுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் எதுவும் தெரிவிக்கவில்லை என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/BREAKING?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BREAKING</a><br><br>Imran Khan shifted to hospital<br><br>Former Pakistan PM Imran Khan has been moved from Rawalpindi’s Adiala Jail to Shifa International Hospital in Islamabad under heavy security<br><br>The transfer came after Pakistan’s Supreme Court ordered a medical examination by a panel… <a href="https://t.co/hAn6BnkKMJ">pic.twitter.com/hAn6BnkKMJ</a></p>&mdash; Nabila Jamal (@nabilajamal_) <a href="https://x.com/nabilajamal_/status/2090656262136729675?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

மேலும், தனியார் வைத்தியசாலைக்கு பதிலாக அரசு வைத்தியசாலையிலேயே அவரது மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என சட்ட அமைச்சர் அசாம் நசீர் தாரார் வலியுறுத்தியிருந்தார்.
</p><p>
உயர்நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்போவதாக PTI எச்சரித்ததைத் தொடர்ந்து, இம்ரான் கான் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>

இம்ரான் கான் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் முதல் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T07:40:26+00:00</updated>
        </entry>
    </feed>
