<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T03:18:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பில் சிறைச்சாலையிலிருந்து நாடாளுமன்றம் வரும் நாமல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-allowed-attend-parliament-sessio-1788834583"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-allowed-attend-parliament-sessio-1788834583</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, நாமல் ராஜபக்சவை அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள்&nbsp;</h2><p>நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு, நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc83830f-c132-4a17-8cc4-0c77d7f448bd/26-6a9f7cf92950f.webp' /></p><p>&nbsp;எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமையநாடாளுமன்றத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள மரபுகளின்படி, இது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p>
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (08) நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்முதல் மோசடியில் சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T03:14:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி : சஜித் கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judiciary-through-the-22nd-amendment-1788835886"></link>
            <id>https://tamilwin.com/article/judiciary-through-the-22nd-amendment-1788835886</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின்
அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து
வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின்
அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து
வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

மாத்தளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பாரிய அளவிலான முதலீட்டாளர்கள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"ஜனநாயகத்துக்கான வெளியை இந்த அரசு இல்லாமல் செய்துள்ளது. 22ஆவது
திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி கொடுத்து,
நிறைவேற்றுத்துறையின் அதிகாரங்களைப் பலப்படுத்திக்கொண்டு, நீதித்துறையை
ஜனாதிபதியின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்த அரசு முயற்சிக்கின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f807f6c-186e-4803-ba7b-84ac1ace4993/26-6a9f7b2390db5.webp' /></p><p>இது 220
இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைக்குப் பாரிய சவால்களை விடுகின்றது.
</p><p>
இந்த அரச தரப்பினர் பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை, தாம் விசுவாசம் கொள்ளும்
கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றை இல்லாமல் செய்து, நாட்டை ஜே.வி.பியின்
சர்வாதிகார ஆட்சிக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றனர்.&nbsp;</p><p>இந்த அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றுத்துறை நீதித்துறையில் தாக்கம்
செலுத்துகின்றது என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைத்தால், நாட்டுக்கு
வரவிருக்கும் முதலீடுகளும் இல்லாது போய்விடும். </p><p>தற்போதும் கூட அரசால் பாரிய
அளவிலான முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்துவர முடியாமல் போயுள்ளதை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
</p><p>
தேர்தல் காலத்தில் பல கூட்டங்களை நடத்தி மக்களுக்கு வெற்றுப் பொய்
வாக்குறுதிகளை வழங்கி, தற்போது 2 வருட நிறைவைக் கொண்டாடும் இந்த அரசு, மேலும்
பல கூட்டத் தொடர்களை நடத்தி அந்தப் பொய்களை உறுதிப்படுத்திக்கொண்டு
செல்கின்றது.&nbsp;</p><h2>புள்ளடி இட்ட மக்களுக்கு</h2><p>இந்த அடக்குமுறைசார், ஏதேச்சதிகாரம் சார்ந்த அரசை நாம் தோற்கடிக்க வேண்டும்.
விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் என 220 இலட்சம் மக்களையும், மக்களின் நலன்களையும்
பாதுகாக்கும் அரசைக் கொண்டுவர வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8ba3e76-2fe2-4b55-ba93-5bbbb237273e/26-6a9f7b246730c.webp' /></p><p>
தற்போதைய அரசின் பொய் உரைக்கும் கூட்டங்களுக்கு ஏமாந்து நாட்டின் ஒட்டுமொத்த
மக்களும் அநாதரவாகியுள்ளனர். </p><p>வயல் நிலங்கள் செழிப்படையும், தொழிற்சாலைகள்
உருவாகும் யுகம் முடிவடைந்து, தொழிற்சாலைகள் நாட்டை விட்டுச் செல்லும் யுகமே
இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டில் ஏற்கனவே அமைந்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகளைப் பாதுகாத்துக்கொள்ள
முடியாத அரசாக இது காணப்படுகின்றது. முறைமையில் மாற்றத்துக்காகப் புள்ளடி இட்ட
மக்களுக்கு மேற்பார்வைக்கு மாத்திரம் சில விடயங்களைக் காட்டிவிட்டு, உண்மையான
மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்காமல் தடம்மாறிச் செல்கின்றனர்.</p><p>அரசுக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் போயுள்ளது.
வாக்குறுதியளித்தபடி 'விட்ஸ்' ரக கார் கிடைத்தபாடில்லை, 33 வீதத்தால்
மின்சாரக் கட்டணம் குறைந்தபாடில்லை, துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு
எண்ணெய் கிடைத்தபாடில்லை. அஸ்வெசும பயனாளர்கள் கூட இன்று பட்டியல்களிலிருந்து
வெட்டப்படுகின்றார்கள்.
</p><p>
மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணங்களும் துண்டிக்கப்படுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில், ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு 17 ஆயிரத்து 315 ரூபாவை
வைத்துக்கொண்டு 30 நாள்களுக்கு வாழ முடியும் என அரசு கூறுவது வேடிக்கையானது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T03:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள்..! இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-accounts-have-been-stolen-from-the-owners-1788834716"></link>
            <id>https://tamilwin.com/article/bank-accounts-have-been-stolen-from-the-owners-1788834716</id>
            <summary type="text">இலங்கையில் இணையம் வழியாக தனிநபர்களின் ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கு எண்களை பயன்படுத்தி நடந்த பல நிதி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இணையம் வழியாக தனிநபர்களின் ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கு எண்களை பயன்படுத்தி நடந்த பல நிதி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>

குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் மோசடி விசாரணைப்பிரிவும் இணைந்து நடத்திய தீவிர சோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
</p><p>
வாடகை அடிப்படையில் பணம் செலுத்தி வாங்கப்பட்ட வெளிநாட்டு வங்கிக்கணக்குகளிலிருந்து, மோசடிக்காரர்கள் பல மில்லியன் ரூபாய் பணத்தை மாற்றியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><h2>பெரிய அளவிலான நிதிக்குற்றங்களுக்குப் பயன்படுத்தல்</h2><p>இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், தனிநபர்களை இலாபகரமான வணிகங்களுடன் இணைப்பதாகவும், அவற்றிலிருந்து பெறப்படும் பணம் அந்த கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் கூறி, அவர்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f437d11-3fb6-4847-a36f-f196c884273b/26-6a9f786113526.webp' /></p><p>
இதன்பின்னர், அந்த கணக்குகளில் சிறிதளவு தொகையை வரவு வைப்பதன் மூலம், கணக்கு வைத்திருப்பவரின் நம்பிக்கையை பெற்று கணக்கு வைத்திருப்பவரின் 'பின் எண்' மற்றும் பிற இரகசியத் தகவல்களைத் துல்லியமாகப் பெற்று, கணக்கு வைத்திருப்பவருக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படாதவாறு, அந்த கணக்கு எண்களைப் பெரிய அளவிலான நிதிக் குற்றங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். </p><p>

குற்றப்புலனாய்வுத் துறைக்கு இதுபோன்ற சுமார் 500 முறைப்பாடுகள் வந்துள்ளன. </p><p>

வங்கிக் கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பலர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>&nbsp;சமூக ஊடகங்களில் விளம்பர மோசடி</h2><p> </p><p>

வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் தொழில்களில் சேருவதற்காக, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, இணைய மோசடியாளர்கள் இந்த நோக்கத்திற்காக மக்களைத் திரட்டி வருவது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6af1eaa-5f91-4952-b6c7-6d9ffeb7c3c7/26-6a9f7861c2139.webp' /></p><p> 

இந்த மோசடியாளர்கள், தாங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், லாபத்தின் ஒரு பகுதியை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதாகவும் கூறுகின்றனர். </p><p>

இறுதியில், அந்த கணக்கு எண்கள் கிரிப்டோகரன்சிகள் மூலம் வெளிநாட்டு கடத்தல்காரர்களின் கைகளுக்கு செல்கின்றன. </p><p>

கணக்கு வைத்திருப்பவர்கள் தெரிந்தே அல்லது தெரியாமலேயே மோசடிக்கு உடந்தையாகும் பட்சத்தில் அவர்களும் சட்டத்தின் முன் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை கூறியுள்ளது.</p><p>

எனவே ஒருவருக்குச் சொந்தமான எந்தவொரு வங்கிக்கணக்கையும் எந்த வகையிலும் வெளித் தரப்பினருக்கு மாற்றக்கூடாது என்று குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T02:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மனைவியின் ஜாதகத்தில் ராஜயோகம் - ராஜபக்சர்களை நிலைகுலைய வைத்துள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. </p><p>

அதில் முக்கியமானதாக நாமல் ராஜபக்சவின் மனைவி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக அதிகளவில் பேசப்பட்ட வந்த நிலையில், அதனை நாமலின் ஊடகப் பிரிவு முற்றாக மறுத்துள்ளது. </p><p>

நாமல் மற்றும் அவரது மனைவி தொடர்பிலான செய்திகள் பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p> </p><h2><b>

லிமினி ராஜபக்சவின் ஜாதகம் </b></h2><p>சமூக வலைத்தளங்களுக்கு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், நாமல் ராஜபக்ச சுகயீனமுற்றுள்ளதாகவும், அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9622954d-3bcf-4cdd-b4cd-634de6ecedc9/26-6a9ec2abbad22.webp' /></p><p>அத்துடன், மற்றுமொரு பேஸ்புக் பக்கம் ஊடாகப் பரவிய பதிவில், நாமல் ராஜபக்சவின் இடத்தை நிரப்புவதற்காக அவரது மனைவி லிமினி ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுரராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் மேடையில் ஏறவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>

மற்றுமொரு செய்தி இணையத்தளம், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவிகளான சிறிமா பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரைப் போல பலத்தன்மை வாய்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் அவரது வருகை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. 

இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டு பகிரப்படும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p> 

குறித்த தகவல்கள் முழுமையாக திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் பொய்யான பிரச்சாரங்கள் என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு மேலும் உறுதிப்படுத்துகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T02:35:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக்கும்பல் தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்! மயானத்திலிருந்து அடுத்தடுத்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/several-guns-bus-lalia-murders-were-recovered-1788831849"></link>
            <id>https://tamilwin.com/article/several-guns-bus-lalia-murders-were-recovered-1788831849</id>
            <summary type="text">டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்&nbsp;சில துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p> ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது.</p><h2>மூன்று சந்தேகநபர்களும் கைது</h2><p>நாடு முழுவதும் 'பஸ் லலியா' செய்த கொலைகளில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டி-56 ரக துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் நேற்று (7) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6df5dd5b-3d07-43d9-b318-3ff93b8dd41c/26-6a9f6ec174619.webp' /></p><p>இந்த ஆயுதங்களுடன், லலித் கண்ணங்கரவின் பாதாள உலகக்கும்பலுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இலங்கையில் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர் டுபாயில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.</p><p>இதனையடுத்து டுபாய் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2026 ஆகஸ்ட் 25 அன்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு, தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T02:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய ஊழல் மோசடியில் சிக்கப் போகும் பிரபல பெண் அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rossy-senanayake-in-investigation-1788755776"></link>
            <id>https://tamilwin.com/article/rossy-senanayake-in-investigation-1788755776</id>
            <summary type="text">கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>

இதனை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளன.</p><p>

குறித்த விசாரணைகளுகளுக்கமைய, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேருக்கு மேற்பட்டோரிடம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.</p><p>
</p><h2><b>
மோசடிகள், முறைகேடுகள்</b></h2><p>விசாரணைகளில் சிக்கியவர்களில் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க முக்கியமானவராக உள்ளவராக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e354273-fbc7-44e6-8086-2f639eb5db6a/26-6a9e4d4eef9bc.webp' /></p><p>அத்துடன், அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.
</p><p>
கொழும்பு மாநகரசபைக்குள் இடம்பெற்ற பல மோசடிச் செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 3,500 வீதம் பணம் வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p> 

எனினும், அங்கு உண்மையான குறைந்த வருமானம் பெறுவோருக்குப் பதிலாக முன்னாள் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட பட்டியலுக்கே வழங்கப்பட்டுள்ளது. </p><h3><b>நிதி மோசடி</b></h3><p>முன்னாள் உறுப்பினர்களின் அரசியல் ஆதரவாளர்களின் பட்டியல்களுக்குரிய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கான சாட்சிகள் வெளிவந்துள்ளன.
 
உறுப்பினர்கள் பலரும் தமது உத்தியோகபூர்வ அலுவலகங்களை நடத்திச் செல்வதாகக் கூறியும் ஏமாற்றியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea52bc21-b4d4-4fdb-a21f-eafb7aa2460d/26-6a9e4d4fc344b.webp' /></p><p>கொழும்பு பிரதான நகரங்களை அண்மித்த வர்த்தக மதிப்புமிக்க இடங்களில் வாகனத் தரிப்பிடத்திற்காகக் காணிகளை ஒதுக்கியுள்ளனர்.
</p><p>
பின்னர் அந்த இடங்களை பெருமளவு பணத்திற்குத் தனியார் வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்து நிதித் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் மற்றும் முறைகேடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படும் முன்னாள் உறுப்பினர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்க சாட்சி விசாரணை ஒன்றை நடத்துவதற்கும் ஆணைக்குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-09-08T01:27:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நட்சத்திர வீரருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-about-dilantha-1788830405"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-about-dilantha-1788830405</id>
            <summary type="text">இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>
கொழும்பு பகுதியில் போலி ஆவணங்களைத் தயாரித்து காணிகளை விற்பனை செய்யும் மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாக டிலந்த உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இக்கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, குறித்த நபர்களை முதலில் இவ்வழக்கின் சந்தேகநபர்களாகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் அறிவுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ad2af7-f0f6-4554-867d-a8ffba8a5efa/26-6a9f62c7209e8.webp' /></p><p>
போலி ஆவணங்கள் மூலம் கொழும்பிலுள்ள காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி விற்பனை செய்யும் பாரிய மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் போது இவர்கள் வெளிநாடு சென்றால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் எனவும் கூறி இந்த பயணத்தடையைக் கோரப்பட்டது.
</p><p>டிலந்த மாலகமுவவைத் தவிர சாந்த விதானகமகே, டெஸ்மண்ட் அமரசிங்க மற்றும் சமன் ஜெயவீர ஆகிய நால்வருக்கு எதிராகவே இப்பயணத்தடை கோரப்பட்டிருந்தது.
</p><p>கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் இலக்கம் 18 இல் அமைந்துள்ள 43 பேர்ச் காணியொன்றை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து, பிரபல வாகன விற்பனை நிறுவனமொன்றிற்கு 1 பில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>
இக்காணியின் உண்மையான பெறுமதி 250 கோடி ரூபாய்க்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பன்னிபிட்டியவைச் சேர்ந்த 80 வயதான ஆரியபால திஸாநாயக்க என்ற நபர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>காணி விற்பனை மூலம் கிடைத்த பணம் குறித்த நால்வரில் மூவருக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், டிலந்த மாலகமுவ என்பவருக்குப் பணத்திற்குப் பதிலாக 14 ஆடம்பர சொகுசு மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்ட மேலதிக நீதவான், விளக்கமறியலில் உள்ள ஆரியபால திஸாநாயக்கவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
</p><p>மேலும், வெளிநாட்டு பயணத்தடை கோரப்பட்டுள்ள நபர்களை இச்சம்பவத்தின் சந்தேகநபர்களாகப் பெயரிட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண தர மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/speedy-re-correction-exam-results-requested-1788829589"></link>
            <id>https://tamilwin.com/article/speedy-re-correction-exam-results-requested-1788829589</id>
            <summary type="text">&amp;nbsp;2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்மதிப்பீட்டு முடிவுகளை விரைவாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்மதிப்பீட்டு முடிவுகளை விரைவாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
இப் பரீட்சை முடிவுகள் தாமதமாவதால், வேறு பாடசாலைகளுக்கு மாற எதிர்பார்க்கும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 
 இதன் காரணமாகவே இக்கோரிக்கையை மாணவர்கள் முன்வைப்பதாக என தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34885aa3-92ee-43a4-ac07-61788da7b238/26-6a9f5f96d22d1.webp' /></p><p>
</p><p>2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையானது 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்றதுடன், அதற்கான முடிவுகள் 2026 ஜூன் 19 அன்று பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன.</p><p>
அதனைத் தொடர்ந்து, குறித்த பரீட்சை முடிவுகளின் மீள்மதிப்பீடு செய்வது தொடர்பில் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 08 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
</p><p>இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையும் நிறைவடைந்து தற்போது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், சாதாரண தர மீள்மதிப்பீட்டு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752</id>
            <summary type="text">வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. </p><p>

இது இன ரீதியான மோதல்களைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்று
கூறப்படுகின்றது,
 
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
இந்தக் கிராமம் வரலாற்று ரீதியாகவே விவசாய நிலமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. 

இத்தகைய சம்பவங்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான ரொஷான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திலித் ஜெயவீர ஆகியோரின் செயற்பாடுகள் இருக்கலாம் எனத் தொடர்ந்து சந்தேகம் வெளியிடப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bPcMV8QJimw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T01:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-people-arrest-attempting-dig-treasure-mullaitivu-1788828694"></link>
            <id>https://tamilwin.com/article/5-people-arrest-attempting-dig-treasure-mullaitivu-1788828694</id>
            <summary type="text">முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட சோதனை
நடவடிக்கையின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றுடன் 5
பேர் சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட சோதனை
நடவடிக்கையின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றுடன் 5
பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.</p><p>வாகனம் ஒன்றில் ஸ்கானர் இயந்திரம் காணப்பட்டுள்ளமையினை தொடர்ந்து வாகனத்தில் இருந்து 5 பேரும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;&nbsp;</p><h2>&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>இவர்கள் வவுனியா,முள்ளிவாய்க்கால்,கொழும்பு,தம்புள்ள பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;&nbsp;</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a27eec9-8df5-4811-b18d-ee1a7aa20274/26-6a9f5cedb994c.webp' /></p><p>
</p><p>இவர்கள் மீதான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலிசார்
மேற்கொண்டு வருகின்றார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T01:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரை நீளும் நாமல் கைது விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-s-milinda-rajapaksha-in-geneva-1788828884"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-s-milinda-rajapaksha-in-geneva-1788828884</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குரல் எழுப்பும் நோக்கில் ஸ்ரீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குரல் எழுப்பும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச சுவிட்சர்லாந்து விஜயம் செய்துள்ளார்.
</p><p>இலங்கையின் முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம், முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சல்லேயின் தடுப்புக்காவல் உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்து குரல் கொடுப்பதற்காக ஜெனிவா சென்றுள்ளார். </p><p>
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இந்த விடயங்களை எழுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9a819f-853a-41c6-be3c-e5fcd23e0996/26-6a9f5cd572950.webp' /></p><p>இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் குறித்தும் கவனத்தை ஈர்க்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>
இது தொடர்பில் எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மிலிந்த ராஜபக்ஷ, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தாம் மீண்டும் ஜெனிவா திரும்பியுள்ளதாகவும், நாட்டில் "அடக்கப்பட்ட எதிர்க்கட்சியின் அரசியல் குரல்களைப்" பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே இம்முறை வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>
மேலும், தாம் சுட்டிக்காட்ட விரும்பும் இந்த விடயங்களை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் பரந்த சூழலில் அணுக வேண்டும் என மிலிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T00:54:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரும் முக்கியஸ்தர்: கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-traffic-plan-in-colombo-1788827357"></link>
            <id>https://tamilwin.com/article/special-traffic-plan-in-colombo-1788827357</id>
            <summary type="text">&amp;nbsp;இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் வியாழக்கிழமை (செப். 10) வரை கொழும்பு பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் வியாழக்கிழமை (செப். 10) வரை கொழும்பு பகுதியில் சிறப்பு போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் அமல்படுத்தப்படும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
பாதுகாப்பு அமைச்சரின் மோட்டார்வாகனப் பேரணி பயணிக்கும் வீதிகளில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகளும், மாற்றுப்பாதை திருப்பங்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தேவைப்படும் இடங்களில் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>
இன்று, பிற்பகல் 1:30 மணி: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமைச்சர் தங்கும் ஹோட்டல் வரையிலான வீதி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba7b1a0a-2aae-4848-b1e8-a48dfbc21059/26-6a9f56e205918.webp' /></p><p> </p><p>
இன்று, இரவு 8:00 - 9:00 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம்&nbsp; வரையிலான பயணம் மற்றும் திரும்பும் வழி.
</p><p>புதன்கிழமை (9), காலை 9:50 - 11:25 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலான பயணம் மற்றும் திரும்பும் வழி.
</p><p>புதன்கிழமை (9), பிற்பகல் 2:00 மணி முதல்: அமைச்சரின் திட்டமிடப்பட்ட ஏனைய பயணங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள்.</p><p> 
புதன்கிழமை (9), இரவு 7:00 - 7:10 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து திட்டமிடப்பட்ட பயணத்திற்கான வீதி. </p><p>
வியாழக்கிழமை (10), காலை 9:00 - 9:10 மணி வரை: அமைச்சரின் புறப்பாட்டின் போது மேற்கொள்ளப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.
</p><p>வாகனப் பேரணியின் நகர்வுகளுக்கு ஏற்ப இக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். எனவே, வீதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முதல் எதிர்வரும் 10 வரை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருகிறார்.</p><p> 
இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கைத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதுடன், கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T00:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய விடுதலைப் புலிகள்! போரின் இறுதிக்கட்டம் குறித்து மனம் திறந்த சவேந்திர சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-war-shavendra-silva-exclusive-interview-1788826651"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-war-shavendra-silva-exclusive-interview-1788826651</id>
            <summary type="text">நாட்டின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கையின் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, நிராகரித்துள்ளார்.
</p><p>
இந்தியாவை தளமாகக் கொண்ட சமூக ஊடகமொன்றுக்கு&nbsp; வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;பதிலளிக்கத் தயார்</h2><p>2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், தமக்கு எதிராக சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான அடிப்படை என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளதாகவும் குறி்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்காவினால் தனக்கும் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் பிரித்தானியாவும் தமக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b58e3908-8738-4ad1-bbab-2c3e352e2a23/26-6a9f568f84636.webp' /></p><p>

“எதற்காக எனக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன? நான் என்ன தவறு செய்தேன் என்பதை தெரிவிக்குமாறு தொடர்ந்து கேட்டு வருகின்றேன். நான் போர்க்குற்றவாளி அல்ல. எனது நாட்டுக்காகவே போராடினேன்” என அவர் தெரிவித்தார்.</p><p>

இராணுவ சட்டங்களை தாம் மீறியிருந்தால், உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

2020ஆம் ஆண்டு அமெரிக்கா, போரின் இறுதிக்கட்டத்தில் கட்டளைப் பொறுப்பு ஊடாக மனித உரிமைகளின் பாரிய மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டதாக நம்பகமான தகவல்கள் இருப்பதாகக் கூறி, அவருக்கும் அவரது நெருங்கிய குடும்பத்தினருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. </p><p>இதேவேளை, 2025ஆம் ஆண்டு பிரித்தானியாவும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சவேந்திர சில்வாவுக்கு தடைகளை விதித்திருந்தது.</p><h2>இராணுவத்தின் நோக்கம்</h2><p>
</p><p>
இராணுவம் திட்டமிட்டு பொதுமக்களை இலக்குவைத்ததாக முன்வைக்கப்படும்&nbsp; இந்த குற்றச்சாட்டுகளையும் சவேந்திர சில்வா நிராகரித்தார்.எனினும், மோதல்களின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.</p><p>
பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவது இராணுவத்தின் நோக்கமாக இருக்கவில்லை என்றும், இராணுவ நடவடிக்கைகளை திட்டமிடும்போது பொதுமக்கள் உயிரிழப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
போரின் இறுதிக்கட்டத்தில் தமது படைப்பிரிவு 123,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டதாகவும், போர் முடிவில் சரணடைந்த சுமார் 12,000 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமது படைப்பிரிவிடம் சரணடைந்ததாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c27ed5c-7edc-47d7-88b8-e1fd252b921f/26-6a9f5690795cd.webp' /></p><p>
</p><p>
சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டதாகவும், ஆயுதங்களை கைவிட்டவர்களிடம் இராணுவம் எவ்வாறு அணுகுமுறையை மேற்கொண்டது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அதேவேளை, இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றையும் அவர் நினைவுகூர்ந்தார். </p><p>அந்த நடவடிக்கையில் பெருமளவான விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் விடுதலைப் புலிகளின் வடக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி ஒருவரும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட சவேந்திர சில்வா, இவ்வாறான சூழ்நிலைகளில் பொதுமக்கள் உயிரிழப்புகள் எனக் குறிப்பிடப்படும் சிலர் உண்மையில் ஆயுதம் தாங்கிய போராளிகளாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
</p><p>
இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுத்ததாகவும் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டினார்.</p><h2>விடுதலைப் புலிகள்</h2><p>
</p><p>
மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் விடுதலைப் புலிகள் இராணுவ வளங்களை நிலைநிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

இலங்கை இராணுவம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச மட்டத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் போதிய விளக்கங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகவும் சவேந்திர சில்வா விமர்சித்தார்.
</p><p>
இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24de3c96-2b3d-4e94-8b47-0936286705bd/26-6a9f56912f66f.webp' /></p><p>

“குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சம்பவத்தில் நீங்கள் இதனைச் செய்தீர்கள் எனக் கூறுங்கள். அதற்கு நாங்கள் விளக்கம் அளிப்போம். ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வோம்” என அவர் தெரிவித்தார்.
</p><p>
விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பு என்ற கருத்தையும் சவேந்திர சில்வா நிராகரித்தார்.மக்களின் குறைகளை ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்ப்பதற்கு பதிலாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>
விடுதலைப் புலிகளின் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கை</h2><p> </p><p>அதேவேளை, ஒரு அமைப்பு அல்லது அதன் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த இன அல்லது மத சமூகத்தையும் குற்றஞ்சாட்டக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களை விடுவிப்பதுமே இராணுவத்தின் நோக்கமாக இருந்ததாகவும், பொதுமக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் திட்டமிட்டு அத்துமீறல்களில் ஈடுபடவில்லை என்றும் சவேந்திர சில்வா மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51e9a4f-11da-4b06-acbb-3bced42484de/26-6a9f5691d7e61.webp' /></p><p>

இலங்கையின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பில் சர்வதேச அளவில் நீண்டகாலமாக விசாரணைகளும் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன. </p><p>இறுதிக்கட்ட மோதலின்போது அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
</p><p>
எனினும், சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள், பொதுமக்களை இலக்கு வைத்து அரச படைகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T00:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரால் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்படாது: ஐக்கிய அரபு இராச்சியம் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-exports-will-not-be-affected-by-iran-conflict-1788824628"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-exports-will-not-be-affected-by-iran-conflict-1788824628</id>
            <summary type="text">வொஷிங்டன் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில்,
தனது எரிபொருள் ஏற்றுமதியும் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிவிடாத வகையில்
மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வொஷிங்டன் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில்,
தனது எரிபொருள் ஏற்றுமதியும் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிவிடாத வகையில்
மாற்று வழிகளை உருவாக்கி வருவதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.</p><p>

அபூதாபியில் நடைபெற்ற ஹிலி உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய அரபு இராச்சிய
ஜனாதிபதி ஆலோசகர் அன்வர் கர்காஷ், நாட்டின் கிழக்கரை துறைமுகங்களின் திறனை
அதிகரிப்பதுடன், புதிய குழாய் வழிகள் மற்றும் தொடருந்து போக்குவரத்து மூலம்
மாற்று வர்த்தக பாதைகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.</p><h2>எரிபொருள் விநியோகம்</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம்
பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நீரிணை
சர்வதேச நல்வழிப் பாதையாகவே தொடர வேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியம்
வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e8f8a7-ddd9-40d1-8ba3-dfd9c694a63a/26-6a9f4ec3b99a7.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளை மட்டும்
முழுமையாக நம்பியிருக்க முடியாது என அக்கூட்டத்தில் உரையாற்றிய கதார் வெளி
விவகார அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.
</p><p>
பிராந்திய பாதுகாப்புக்கு சொந்த தேசிய வல்லமைகளை கட்டியெழுப்புவதே ஒரே வழி என
அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T23:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினி ராஜபக்சவை களமிறக்கி அனுதாப வாக்குகளை பெறும் முயற்சியில் ராஜபக்ச குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-attempting-garner-sympathy-votes-1788817692"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-attempting-garner-sympathy-votes-1788817692</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் கைதுச் சம்பவத்தை ஒரு அரசியல் பழிவாங்கலாகச் சித்தரித்து, பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற முயற்சிக்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் கைதுச் சம்பவத்தை ஒரு அரசியல் பழிவாங்கலாகச் சித்தரித்து, பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
</p><p>
நாமல் ராஜபக்சவால் அநுராதபுரத்தில் 12ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள் முடியாததால் அவரது மனைவி கலந்து கொள்ளுவார் என்று கூறப்படுகின்றது.</p><p>

ஜனநாயக ரீதியாக யாருக்கும் அரசியலில் ஈடுபட உரிமை உண்டு என்பதால், அவர் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. 

ராஜபக்ச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மீது பல ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளது.
</p><p>
அத்தகைய குற்றச்சாட்டுகள் இதுவரை இல்லாத ஒருவராக லிமினி ராஜபக்ச இருப்பதால், அவரை முன்னிலைப்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றது.
</p><p>
இது குடும்பத்தின் ஒரு அரசியல் யுக்தியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.</p><p>

முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jG41FGmsQkI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T23:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தடைக்கு பதிலடி! ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560"></link>
            <id>https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவரத்து பாதையையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஈரான் அரசாங்கம்
தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சேன் ரெசாய் இது
குறித்துத் தெரிவிக்கையில், புதிய தடை மண்டலத்திற்குள் நுழையும் கப்பல்கள்
அனைத்தும் உடனடியாகத் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்படும் எனக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;மசகு எண்ணெய் விலை</h2><p>

அத்துடன் ஓமான் நாட்டின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பினூடாக அமைக்கப்படும்
புதிய சர்வதேச கப்பல் பாதையை ஈரானே நிர்வகிக்கும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடற்பகுதியில் பரஸ்பர தாக்குதல்கள்
தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மசகு எண்ணெய் கொண்டு செல்லும்
கப்பல்களின் நடமாட்டம் பெருமளவில் குறைடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/966e7bc0-ebdf-4b2b-b4f2-5a844de3eb61/26-6a9ef570b3f80.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 97
டொலரைக் கடந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில்
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக
ஈரானிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T23:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு சர்ச்சை! 2 மில்லியன் டொலர் இலஞ்சம் - 200 மில்லியன் டொலர் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 16.84 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சுமார் 16.84 மில்லியன் டொலர் லஞ்சம் பெற முயற்சிக்கப்பட்டதாகவும், அதில் 2 மில்லியன் டொலர் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
விமானக் கொள்வனவு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இலங்கைக்கு சுமார் 200 மில்லியன் டொலர் (65.6 பில்லியன் ரூபா) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விவகாரத்தில், 16.84 மில்லியன் டொலர் இலஞ்சமாகப் பெற முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இறுதியில் சுமார் 2 மில்லியன் டொலர் மட்டுமே இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், கொள்வனவு ஒப்பந்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட ரத்து கட்டணங்கள் (Cancellation fees), விமான பராமரிப்பு செலவுகள் மற்றும் லீசிங் செலவுகள் போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு NewsInsightTamil...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AdsYi1CP5b0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு முன்னாள் - இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692"></link>
            <id>https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பில்&nbsp; இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>ஊழல் மற்றும் மோசடி&nbsp;</h2><p>
</p><p>
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும், சட்டம் தனது கடமையை சுயாதீனமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b2cb381-ccb6-4956-a056-80da9170dc42/26-6a9f34620bb13.webp' /></p><p>
</p><p>
விசாரணைகளின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கந்தசாமி பிரபு கூறினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதிகள், ஆளுநர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ச சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>&nbsp;ராஜபக்ச குடும்பத்தினர்</h2><p>

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிடுவது குறித்து கந்தசாமி பிரபு விமர்சனம் முன்வைத்தார்.</p><p>

ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சித்த போதிலும், பின்னர் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்ததாகவும், தற்போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9378d683-be9d-42d2-9ff5-f6e879190905/26-6a9f34638e8e6.webp' /></p><p>
</p><p>
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் கந்தசாமி பிரபு மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:06:42+00:00</updated>
        </entry>
    </feed>
