<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-03T03:28:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 பேருக்கு சர்ச்சைக்குரிய விசா வழங்கியது யார்....! பின்னணியில் செயற்பட்ட மறைகரம்! ஆபத்தாக மாறும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/visas-for-60-suspicious-chinese-were-obtained-1785723755"></link>
            <id>https://tamilwin.com/article/visas-for-60-suspicious-chinese-were-obtained-1785723755</id>
            <summary type="text">இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. </p><p>இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வணிக விசா மட்டுமே காணப்பட்டுள்ளது. </p><p>சந்தேகம் எழுந்தமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினால் இந்த விசாக்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அந்த அனுமதிப்பத்திரங்கள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2><b>வதிவிட விசா</b></h2><p> அதன்பின்னர், அவசரமாக சீன பிரஜைகள் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, அத்தகைய விசாக்களை வழங்குவதற்கான நீண்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7eb652-1bf3-4a9c-a087-afc28ca70964/26-6a70051b69747.webp' /></p><p>இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>இந்த நிலையில், எதிர்காலத்தில் இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் ஊடாக விசாரணையொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><h3><b>சீன கும்பல்</b></h3><p>இலங்கையில் செயற்படும் சீன மாபியா குழுக்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இவ்வாறு செயற்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0facd9b4-7fdf-4357-9917-e97247cbfb94/26-6a700590879cc.webp' /></p><p>கடந்த வாரம் கொழும்பில் சீன கும்பல் ஒன்று ஆயுதமுனையில் சீன பிரஜையான கோடீஸ்வரரை கடத்தி கொலை செய்திருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-08-03T03:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள வாகனங்கள் - வெளியான புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-in-sril-anka-1785724338"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-in-sril-anka-1785724338</id>
            <summary type="text">இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p>

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>வாகன இறக்குமதி செலவினம்</h2><p>

மேலும், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வாகன இறக்குமதி செலவினம் 318 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 10,645 மில்லியன் இலங்கை ரூபாய்) குறைந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feb600c2-fc95-4a52-b6cf-920cfff0fdeb/26-6a70026989170.webp' /></p><p>

இதேவேளை, மத்திய வங்கியின் தரவு அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 182 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 6,093 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இது, இந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் வாகன இறக்குமதி செலவினத்தில் 27.1 சதவீதம் அல்லது 2,276 மில்லியன் ரூபாய் குறைவாகும்.</p><p>

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 163 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 5,455 கோடி) மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p>

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டின் வாகன இறக்குமதிச் செலவு ரூ. 638 கோடி அதிகரித்துள்ளது.</p><p>
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 157 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 52,614 கோடி) மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T02:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமடையும் வானிலை! ஆற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949"></link>
            <id>https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளராக பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிகமான மழையும் பதிவு</h2><p>
அதன்படி, மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் அமைந்துள்ள நாவலப்பிட்டிய, நானுஓயா மற்றும் வத்தளை போன்ற பகுதிகளில் சுமார் 200 மி.மீ மழையும், சில இடங்களில் 200 மி.மீ-க்கு அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a4d9a8-60a2-4665-af65-6bc89e790b1d/26-6a6ffd2f897aa.webp' /></p><p>

இதன் காரணமாக, நாவலப்பிட்டிய மற்றும் பேராதெனியாவிற்கு இடையே மகாவலி ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;தற்போது நீர்மட்டம் வேகமாக உயராவிட்டாலும், இயல்பான உயர்வையே கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
வெள்ள நிலைமை பேரிடர் நிலை வரை மோசமடையாது என்று எதிர்பார்ப்பதாகவும், நேற்று இரவு சில இடங்களில் 70 மி.மீ-க்கு மேல் மழை பெய்ததால் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததில் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், சில தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும், கலா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா&nbsp; பகுதிகளில் அதிக மழை பெய்யாததால், அப்பகுதிகளில் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T02:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 20 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-20-injured-1785722481"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-20-injured-1785722481</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் ரம்புக்கனையில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>

இந்த விபத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும், திகணையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>&nbsp;</p><p>
</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">மருத்துவமனையில் அனுமதி</b></p><p>இன்று காலை 6:15 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eba09596-aac5-41dc-a08e-94990821c452/26-6a6ff880ef94d.webp' />&nbsp;&nbsp;<b style="color: inherit; font-size: 1.75rem;"></b></p><p>காயமடைந்தவர்கள் கேகாலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T02:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை! அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/holidays-for-central-province-schools-1785721272"></link>
            <id>https://tamilwin.com/article/holidays-for-central-province-schools-1785721272</id>
            <summary type="text">மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​ நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​</p><p> </p><p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>பாடசாலைகளுக்கான விடுமுறை</h2><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f46d3b6-986d-4567-9c08-4e393c93cc7a/26-6a6ff501880ff.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.</p><p>நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T01:55:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earth-slip-warning-for-4-districts-1785719045"></link>
            <id>https://tamilwin.com/article/earth-slip-warning-for-4-districts-1785719045</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
தேசிய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. </p><p>
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>இந்த அறிவிப்பு நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இன்று (03) இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84750fd-a997-457e-be4c-07f56d5bbc4d/26-6a6fef15992cf.webp' /></p><p>
</p><p>சில பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>கண்டி மாவட்டத்தில் பச்பாகே கோரளே மற்றும் கங்க இஹள கோரளே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல்</h2><p>
கீழ்கண்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிற்ற&nbsp; பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின்&nbsp; நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மேற்கு
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T01:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tea-export-tea-eatate-1785717519"></link>
            <id>https://tamilwin.com/article/tea-export-tea-eatate-1785717519</id>
            <summary type="text">பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கொழுந்து பற்றாக்குறையினால் தேயிலை தூள் உற்பத்தியும் பாதியளவால் குறைவடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கொழுந்து பற்றாக்குறையினால் தேயிலை தூள் உற்பத்தியும் பாதியளவால் குறைவடைந்துள்ளதால் அந்நியச் செலாவணி சுமார் 40 சதவீதம் நாட்டிற்கு இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>

</h2><p></p><h2>மாதாந்த ஏற்றுமதி</h2><p>மாதாந்தம் தேயிலை ஏற்றுமதி மூலம் 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்ட போதிலும் ஏற்பட்டுள்ள கொழுந்து பற்றாக்குறையினால் 50 மில்லியன் டொலர் வரை நாட்டிற்கு இழக்கப்படும் அபாயம் உள்ளதாக சிரேஷ்ட தேயிலை ஆலோசகரும் தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவருமான சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.
</p><p>
கடுமையான வறட்சி மற்றும் உரப் பற்றாக்குறை காரணமாக பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5666a7c-ffde-4cbf-8448-3a279aff2eb9/26-6a6fe3118000b.webp' /></p><p>ஒரு பருவத்தில் ஒரு மரத்தில் இருந்து 03 கிலோகிராம் தேயிலைக் கொழுந்து அறுவடை பெறப்பட்ட போதிலும் அந்த அளவு பாதியளவாகக் குறைந்துள்ளதாகவும் ஒரு ஏக்கரில் இருந்து கிடைக்கப்பெறும் 400 கிலோகிராம் பச்சைத் தேயிலைக் கொழுந்து அறுவடை 200 கிலோகிராம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T00:41:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென அதிகரித்த மகாவலி கங்கையின் நீர்மட்டம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-level-mahaweli-ganga-increased-flood-warning-1785713431"></link>
            <id>https://tamilwin.com/article/water-level-mahaweli-ganga-increased-flood-warning-1785713431</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் ஒரு அறி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை அறிக்கை இன்று (03) முதல் நாளை (04) நள்ளிரவு 12.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, இந்த அறிக்கையில் மகாவலி ஆற்றுப் படுகையில் உள்ள உடுநுவர, உடபாலத்த, யதிநுவர, கங்கைஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்காவத்த கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குச் சொந்தமான தாழ்வான பகுதிகளுக்குப் பொருந்தும்.
</p><p>
எனவே, மகாவலி ஆற்றங்கரையோரம் மற்றும் அப்பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.</p><p>

இது தொடர்பாகத் தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பேரிடர் மேலாண்மைத் திணைக்களங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
வரும் காலத்தில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் அதீத எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a54b07a2-8451-4809-a4ce-921a7ddae7b8/26-6a6fded586e75.webp' /></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாவலபிட்டி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை&nbsp;பெய்து வருகின்றது.&nbsp;</p><p>இதன் காரணமாக, மகாவலி கங்கையின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்திற்கு மேல் தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மக்கள் அவதானம்..&nbsp;</h2><p>எனவே, தாழ்நிலப் பகுதிகள் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2baae454-a126-4c46-b8fa-4e389f0c4244/26-6a6fd4306153a.webp' /></p><p>அத்துடன், தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அதிகாரிகளால் வெளியிடப்படும் அவசரகால அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T00:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச தரப்பில் நிலவும் நீண்ட தாமதங்கள்.. 15,000 கைதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-15-000-drug-test-reports-prison-overcrowding-1785714812"></link>
            <id>https://tamilwin.com/article/delay-15-000-drug-test-reports-prison-overcrowding-1785714812</id>
            <summary type="text">நாடு முழுவதும் உள்ள 22 சிறைகளில், போதைப்பொருள் சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதங்கள் காரணமாக 15,117 சந்தேக நபர்கள் விடுதலை பெற முடியவில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் உள்ள 22 சிறைகளில், போதைப்பொருள் சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதங்கள் காரணமாக 15,117 சந்தேக நபர்கள் விடுதலை பெற முடியவில்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p> மேலும், நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட சிறிய அபராதங்களைக் கூட செலுத்த முடியாததால், 28 சிறைகளில் உள்ள 1,940 கைதிகள் மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடரும் சிக்கல்..&nbsp;</h2><p>
</p><p>
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் கடுமையான நெரிசலுக்கு இந்தப் பிரச்சினைகளே முக்கிய காரணங்கள் என்று தேசிய தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6ff58dc-0d06-41fe-af50-72723c296eea/26-6a6fdae5da302.webp' /></p><p> போதைப்பொருள் பயன்பாடு, வைத்திருத்தல் மற்றும் விற்பனைக்காகக் கைது செய்யப்பட்ட கைதிகளை மற்ற கைதிகளிடமிருந்து பிரிக்கத் தவறியதையும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
</p><p>
போதைப்பொருள் குற்றவாளிகள் பாதாள உலகச் செயல்பாட்டாளர்களுடன் ஒன்றாகத் தடுத்து வைக்கப்படுவதால், சிறைகளுக்குள் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்து, இது சமூகத்தில் ஒரு கடுமையான நெருக்கடியை உருவாக்க வழிவகுத்துள்ளது என்றும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T00:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் வழங்கிய விளக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attorney-general-department-1785714446"></link>
            <id>https://tamilwin.com/article/attorney-general-department-1785714446</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரித்தல் மற்றும் அது தொடர்பான திருத்த மசோதா அரசியலமைப்புக்கு அமைவானது என சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரித்தல் மற்றும் அது தொடர்பான திருத்த மசோதா அரசியலமைப்புக்கு அமைவானது என சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
</p><p>
அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் கட்டமைப்புச் சட்டம், அரசாங்க மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வூதியக் கட்டளைச் சட்டம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
இத்திருத்தங்களின் மூலம் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல்நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆகவும், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆகவும் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்</h2><p>அத்துடன், நீதித்துறை கட்டமைப்பில் பெரும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பதிலாக அத்தகைய இரு மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. </p><p>மேலும், மூன்று வணிக மேல்நீதிமன்றங்கள் ஐந்து வணிக மேல்நீதிமன்றங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்காக எட்டு மேல்நீதிமன்றங்கள் பதினொன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், கொழும்பு மேல்நீதிமன்றத்தின் இலக்கம் 06, 10, 11 ஆகிய அறைகளில் லஞ்ச ஊழல் வழக்குகள் தினமும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ede323-5787-47ef-9433-4bff593a0715/26-6a6fd710ca31d.webp' /></p><p>இதற்கு முன்னர் லஞ்ச ஊழல் வழக்குகள் ஒரேயொரு நீதிமன்றத்திலேயே விசாரணை செய்யப்பட்டு வந்தன.

தெய்யந்தர, அங்குணுகொலபெலஸ்ஸ, பிபில, கல்கமுவ போன்ற 08 நீதவான் நீதிமன்றங்களுக்கு மாவட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், </p><p>உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டிருந்த இரத்தினபுரி, கம்பஹா, அனுராதபுரம், அம்பாறை நீதிமன்றங்கள் மீள செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. </p><p>புத்தளம், வெல்லவாய, ஹட்டன் மற்றும் வெலிசர ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தற்போது அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T23:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இடம்பெற்ற சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும் மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-batticaloa-meeting-1785712311"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-batticaloa-meeting-1785712311</id>
            <summary type="text">போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும் எனும் மாநாடு மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றது.&amp;nbsp;இதன்போது வரலாற்றின...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும் எனும் மாநாடு மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றது.&nbsp;</p><p>இதன்போது வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பும் தமிழ்தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில் 2009, மே, 18,க்கு முன்னர் தமிழ்தேசியப்பணிகளை கொள்கை தவறாமல் ஆற்றியதற்காக தமிழ் ஆயுத கும்பல்களால் படுகொலைசெய்யப்பட்ட பற்றாளர்களுக்கும், அந்த காலங்களில் பல்வேறுபட்ட பணிகளை செய்தவர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், போராளிக்கலைஞர்கள் என 25, தேசப்பற்றாளர்களுக்கான வரலாற்று வேர்கள் என்ற மகுடம் சூட்டி பாராட்டப்பட்டது.</p><p></p><h2>பலரின் பங்கேற்பு&nbsp;</h2><p>
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு நகரபிதா சிவம் பாக்கியன், இலங்கை தமிழ் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் யாழ்மாவட்டம், கவிந்திரன் கோடீஷ்வரன் அம்பாறைமாவட்டம், ஞானமுத்து ஶ்ரீநேசன் மட்டக்களப்பு மாவட்டம், வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத், மேனாள் பா.உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7275ea96-8ead-4c39-bbb8-a7b5216e1389/26-6a6fd08c70b20.webp' /></p><p>மேலும், சீனித்தம்பி யோகேஷ்வரன்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.சுரேஷ்,மேனாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா, மட்டக்களப்பு மேற்கு பிரதேச சபை தவிசாளர் த. கோபாலபிள்ளை,
ஆன்மீகத்தலைவர்களான கொக்கட்டிச்சோலை ஶ்ரீதான்தோன்றீஷ்வரர ஆலய பிரதம குரு சிவசிறி சச்சிதானந்தக்குருக்கள், சிவஶ்ரீ வேலன்சுவாமி, மூத்த அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், அருட்தந்தை லூத் அடிகளார்,மேனாள் போராளிகள், தமிழ்தேசிய பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள் என நூறுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
</p><p>இந்த மாநாட்டு நிகழ்வில் முக்கியமாக தியாச்சுடர் அன்னைபூபதி அரங்கம் என நிகழ்வு மேடையில் குறிப்பிட்டு தமிழ்தேச விடுதலைக்காக உழைத்து தமிழ் ஆயுதக்குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்ட 
மாமனிதர்களான ஜோசப்பரராசசிங்கம் பா.உ, சந்திரநேரு மேனாள் பா.உ, ஊடகவியலார் தராகி சிவராம், நாட்டுப்பற்றாளர்களான் ஊடகவியலாளர் ஐ. நடேசன், மனித உரிமை செயல்பாட்டாளர் சந்திரா பெர்னான்டோ, அருட்தந்தையர்களான சுட்டுக்கொல்லப்பட்ட அமரிக்க துறவி அருட்தந்தை இயுனின் ஜே ஹபர், சவரிமுத்து செல்வராசா, மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா ஆகிய ஒன்பது பேரின் படங்களும் விசேடமாக பார்வைக்காக வைத்து அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T23:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரத்தை திட்டமிட்ட கைதிகள்.. அரசாங்கத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clashes-mahara-prison-150-million-damage-1785689826"></link>
            <id>https://tamilwin.com/article/clashes-mahara-prison-150-million-damage-1785689826</id>
            <summary type="text">நேற்று (1) மஹர சிறையில் நடந்த மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூபா 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்திற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று (1) மஹர சிறையில் நடந்த மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூபா 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இச்சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறிய தொடங்கப்பட்டுள்ள விசாரணைகளின் போது இத்தகவல் மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

சிறைக்கைதிகள், சிறையில் உள்ள பல பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>மஹர சிறைக்குள் பல கட்டிடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், சிறை மறுவாழ்வுத் திட்டங்களில் தையலுக்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களைச் சிறைக்கைதிகள் அழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>திட்டமிட்ட கைதிகள்..&nbsp;</h2><p>
</p><p>நேற்று நள்ளிரவு வரை சிறை வளாகத்திற்கு வெளியே இருந்து சிறைக்கைதிகள் கற்களை வீசி வந்தனர். கல் தாக்குதல்களால் சிறையைச் சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b41fe369-720f-4db0-bb66-702f346d4536/26-6a6f88aed1d72.webp' /></p><p>
சாத்தான், அசார், பெட்டா மற்றும் மற்றொரு கைதியால் இந்தக் கலவரம் திட்டமிடப்பட்டது என்று பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கலவரத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கைதிகளை இன்று பிற்பகல் அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரை பூசா உட்பட 7 பிற சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
4,100க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்ட மஹர சிறையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கலவரம் வெடித்தது.</p><p> 13 மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை சுமார் 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.

இருப்பினும், இந்தக் கலவரத்தில் ஒரு கைதி உயிரிழந்தார் மற்றும் 9 கைதிகள் காயமடைந்தனர்.</p><p></p><h2>உயிரிழந்த கைதி..&nbsp;</h2><p> உயிரிழந்தவர், வத்தளை, ஹெண்டலாவைச் சேர்ந்த 33 வயது நபர் ஆவார். அவர் ஒரு மோட்டார் சைக்கிளைத் திருடியமை மற்றும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14262489-7ba2-402c-83db-0a303508f4e6/26-6a6f88afc3814.webp' /></p><p>

சிறையில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால், இப்போதெல்லாம் போதைப்பொருள் தட்டுப்பாடு நிலவுவதே இந்தக் கலவரத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
</p><p>
நேற்று காலை, நான்கு கைதிகள் ஒரு கூரையின் மீது ஏறி சிறை நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ​​ஒரு மூத்த சிறை அதிகாரி அங்கு சென்று இது குறித்து கைதிகளிடம் விசாரித்துள்ளார்.&nbsp;</p><p>

இருப்பினும், அங்கிருந்த கைதிகள் சிறை அதிகாரிகள் மீது கற்களை வீசியுள்ளனர். இதனை தொடர்ந்து, ​​அதிகாரிகள் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.</p><p>சிறை மருத்துவமனையில் இருந்த மருந்துகள், சமையலறையில் இருந்த கூர்மையான ஆயுதங்கள், மற்றும் துப்பாக்கிக் கிடங்கில் இருந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை அந்த இடங்களிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.</p><p></p><h2>&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
இதற்கிடையில், சுமார் 1,500 பிற கைதிகள், சிறையின் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டு வரும் சுவரை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாகவும் அந்த முயற்சியை முறியடிப்பதற்காக சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5824defc-f9d0-41c5-9c4c-3009632289d7/26-6a6f88b082b81.webp' /></p><p>
இருப்பினும், அப்போது, ​​மற்றொரு குழுவினர் ஒரு சிறைக் கட்டிடத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதுகுறித்த அறிக்கைகள் மீதான முதற்கட்ட விசாரணையில், அவர்களில் ஒரு குழுவினர் பின்னர் போதைப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் புகுந்து, சிறைக் கைதிகளின் வசம் இருந்த போதைப்பொருட்களைப் பயன்படுத்தியமை தெரியவந்தது.
</p><p>
இத்தகைய சூழலில், மற்றொரு கைதிகள் குழு, அந்தக் குழுவினர் அடைக்கப்பட்டிருந்த வார்டுகளுக்குச் சென்று, பூட்டுகளை உடைத்து, அந்த அறைகளிலிருந்து வெளியேற வழிவகுத்துள்ளனர்.
</p><p>
அவர்களில் ஒரு குழுவினர் அறைகளிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​மற்றொரு கைதிகள் குழுவினர் அவ்வாறு செய்ய மறுத்து, தாங்கள் தங்கியிருந்த அறைகளிலேயே இருந்துள்ள நிலையில், ​​கலவரத்தை ஏற்படுத்தி வந்த கைதிகள் வந்து அவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-02T23:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பலியான பல்கலைக்கழக மாணவன்.. பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-trincomalee-uni-boy-died-youngman-died-1785711574"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-trincomalee-uni-boy-died-youngman-died-1785711574</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர், 59ஆம் கட்டை பகுதியில் நேற்று (02) மாலை ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு
இளைஞர்கள் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர், 59ஆம் கட்டை பகுதியில் நேற்று (02) மாலை ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு
இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார்
சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>சரணடைந்த&nbsp;சாரதி </h2><p>

உயிரிழந்தவர்கள் மூதூர் - கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ்
(21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fe9260d-9fd7-4a01-b204-28b56d2c34d8/26-6a6fccec001ed.webp' /></p><p>

இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவரும், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக
இருந்த இளைஞரும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்தையடுத்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில்
சரணடைந்துள்ளார்.</p><p>

உயிரிழந்த இருவரின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T23:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் பயங்கர குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி - 21 பேர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bombing-moscow-italian-restaurant-russia-1785711050"></link>
            <id>https://tamilwin.com/article/bombing-moscow-italian-restaurant-russia-1785711050</id>
            <summary type="text">ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் உள்ள இத்தாலிய உணவகம் ஒன்றில்
மேற்கொள்ளப்பட்ட வெடிபொருள் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர்
படுகாயமடைந்தனர்.

மொஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் உள்ள இத்தாலிய உணவகம் ஒன்றில்
மேற்கொள்ளப்பட்ட வெடிபொருள் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர்
படுகாயமடைந்தனர்.
</p><p>
மொஸ்கோ நகர மையப்பகுதியில் அமைந்துள்ள 'பல்சி ரோசி' என்ற உணவகத்தில்
ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 08:00 மணியளவில் இந்த பயங்கர சம்பவம்
நிகழ்ந்துள்ளது.
</p><p>
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தகவலின்படி, வெடிபொருட்களைச் சுமந்து வந்த
பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றபோது, அங்குள்ள பாதுகாப்பு ஊழியரால்
தடுக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h3>பெண் ஒருவர்..&nbsp;</h3><p>
</p><p>
அப்போது அந்த வெடிபொருள் வெடித்ததில், வெடிபொருளைக் கொண்டுவந்த பெண்,
பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் என மூன்று
பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/160beebb-73ee-4433-9b10-852e12dc8cde/26-6a6fc9cc26576.webp' /></p><p>
இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்கு யார் என்பது குறித்து இதுவரை தெளிவான
தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>
இந்தச் சம்பவத்தை ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் என மொஸ்கோ மேயர் செர்ஜி
சோபியானின் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் மொஸ்கோவில் இந்தத் தாக்குதல்
நடந்துள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T22:50:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக நீண்ட நாட்களின் பின்னர் பெய்து உற்சாகத்தை ஏற்படுத்திய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rains-after-long-days-kinniya-1785710660"></link>
            <id>https://tamilwin.com/article/rains-after-long-days-kinniya-1785710660</id>
            <summary type="text">மிக நீண்ட கால வரட்சியான கால விலையின் பின்னர் கிண்ணியாவில் நேற்று (02) மாலை
மழை பெய்துள்ளது.
எல்நினோ கால நிலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஓரளவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிக நீண்ட கால வரட்சியான கால விலையின் பின்னர் கிண்ணியாவில் நேற்று (02) மாலை
மழை பெய்துள்ளது.
</p><p>எல்நினோ கால நிலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஓரளவான மழை பெய்தமை
மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது சிறு போக நெல் அறுவடையும் இடம் பெற்று வருகின்றன.</p><p> தற்போதைய மழையிலும் இன்று கிண்ணியா இளைஞர்கள் கடும் மழையிலும் மைதானத்தில்
உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.</p>]]></content>
            <updated>2026-08-02T22:44:26+00:00</updated>
        </entry>
    </feed>
