<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-13T09:35:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-team-meets-northern-province-governor-1789289389"></link>
            <id>https://tamilwin.com/article/imf-team-meets-northern-province-governor-1789289389</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை
முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்,
எதிர்நோக்கும் இடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை
முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்,
எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியக்
குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் விரிவாகக்
கேட்டறிந்தனர்.
</p><p>
இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பான
கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய
நிதியக் குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (12.09.2026) மாலை ஆளுநர்
செயலகத்தில் நடைபெற்றது.
</p><p>
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளை வரவேற்ற
ஆளுநர், வட மாகாணத்தின் பொதுவான நிலைமைகள், அபிவிருத்தி முன்னேற்றங்கள்
மற்றும் மாகாணம் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் தொடர்பில் அவர்களுக்கு
விளக்கமளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c0c4852-7d70-4ad8-a4e4-469cacacd5e2/26-6aa66cd5e6eb8.webp' /></p><h2>தடைகள் மற்றும் தாமதங்கள்</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை
ஊக்குவிப்பதற்கான நிலைமை, இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், முதலீடுகளை
ஈர்ப்பதில் காணப்படும் தடைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள
தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஆளுநரிடம்
கேட்டறிந்தனர்.
</p><p>
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர்
இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை
வழங்கப்பட்டுள்ளதுடன், முதலீடுகளுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும்
ஆளுநர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a778702-3375-45c0-8d10-2d64236ad119/26-6aa66cd6ccb60.webp' /></p><p> </p><p>வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்குக் காணப்படும்
வாய்ப்புகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள
நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரித் திட்டங்கள்
தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><h2>கலந்துரையாடல்</h2><p> சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை
உள்ளடக்கிய நலன்புரி நடவடிக்கைகள், அவற்றின் தாக்கம் மற்றும் மக்களின்
வாழ்வாதாரத்துடன் அவற்றுக்குள்ள தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
மேலும், நல்லிணக்கச் செயற்பாடுகள், உலகளாவிய நெருக்கடிகளால் வடக்கு
மாகாணத்தின் அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், நாட்டிலிருந்து
இடம்பெறும் புலம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சர்வதேச நாணய
நிதியப் பிரதிநிதிகள் ஆளுநருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d921ff21-55d7-4013-bef9-1d5e9cc7b66c/26-6aa66cd7a43d0.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் வடக்கு மாகாண மக்களிடையே காணப்படும்
அபிப்பிராயங்கள் மற்றும் பார்வைகள் குறித்தும் பிரதிநிதிகள் ஆளுநரிடம்
கேட்டறிந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம்
சத்தியசீலன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54c521dc-2f7d-46f0-b772-da2cbb91835a/26-6aa66cd881c78.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:32:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈச்சம் குளம் நீர்மட்டம் குறைவு: கால்நடை வளர்ப்பு பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nio-impact-low-water-level-in-eecham-kulam-1789290788"></link>
            <id>https://tamilwin.com/article/el-nio-impact-low-water-level-in-eecham-kulam-1789290788</id>
            <summary type="text">திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட ஈச்சம் குளம்
வற்றி நீர் மட்டம் குறைந்ததால் வறட்சியான கால நிலை நிலவி வருகிறது.

எல் நினோ காலநிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட ஈச்சம் குளம்
வற்றி நீர் மட்டம் குறைந்ததால் வறட்சியான கால நிலை நிலவி வருகிறது.</p><p>

எல் நினோ காலநிலைத் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால்
தம்பலாகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஈச்சம் குளத்தின் நீர்மட்டம்
வெகுவாகக் குறைந்து, குளம் வற்றும் நிலையை அடைந்துள்ளது.
</p><p>
நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம்
தொடர்ச்சியாகக் குறைந்து வருவதால், குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்
விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு
வருகின்றனர்.</p><h2>நீர்ப்பற்றாக்குறை</h2><p>

குறிப்பாக, ஈச்சம் குளத்தின் நீரை நம்பியுள்ள மேட்டு நிலப்
பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் சிரமங்களை
எதிர்நோக்கியுள்ளனர். மிளகாய், கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு மேட்டு
நிலப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு நீர்ப்பற்றாக்குறை பெரும் சவாலாக
மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/646693ed-021b-409f-853e-a97025663f7d/26-6aa66cdd0733f.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, குளத்தை அண்டிய பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் கால்நடை
வளர்ப்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை
வளர்ப்பாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு, அவசர குடிநீர் மற்றும் விவசாயத்
தேவைகளுக்கான நீர் விநியோகம், கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் தேவையான
நிவாரண நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை! கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sale-of-madana-modhagam-in-trinco-law-1789290114"></link>
            <id>https://tamilwin.com/article/sale-of-madana-modhagam-in-trinco-law-1789290114</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை
செய்வதற்காக மதன மோதகங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு கடை
உரிமையாளர்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை
செய்வதற்காக மதன மோதகங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு கடை
உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>சுதேச மருத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர்
இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போதே
குறித்த மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டது.</p><p>

கந்தளாய் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதன மோதகங்கள்
மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, கந்தளாய் பிரதான வீதியில்
அமைந்துள்ள மருந்தகமொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>இதன்போது, பொதி செய்யப்பட்ட
நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86 மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக
விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c44b921-cae7-4026-a88c-23f995fec131/26-6aa6682d24e87.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை அலஸ்தோட்டம், நாளாம் கட்டை மற்றும் பதவிஸ்ரீபுர
உள்ளிட்ட பகுதிகளில் மதன மோதகம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் கடை
உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணப்
பணிப்பாளர் எம்.ஏ. நபீல் தெரிவித்தார்.
</p><p>
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதகங்கள் விற்பனை செய்யப்படுவதைத்
தடுக்கும் வகையில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்
தொடர்ச்சியான சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத் தமிழர் பிரச்சினையை பேரிடருக்குள் சுருக்காதீர்கள் - அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-upcountry-tamils-1789290267"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-upcountry-tamils-1789290267</id>
            <summary type="text">மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை டித்வா புயல் அனர்த்தத்துடன் மட்டும்
மட்டுப்படுத்திப் பார்ப்பது கவலையளிப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,
மலையக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை டித்வா புயல் அனர்த்தத்துடன் மட்டும்
மட்டுப்படுத்திப் பார்ப்பது கவலையளிப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,
மலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல்
தெரிவித்துள்ளார்.</p><p>

அவரால் இன்று(13.09.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.</p><h2>


அரசாங்கத்தின் முயற்சி</h2><p>
மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 63 ஆம்
கூட்டத் தொடரில் வாசிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உயர்
ஸ்தானிகர் வோல்கர் டேக்கின் எழுத்து மூலம் அறிக்கையில் மலையகம் தொடர்பாகவும்
குறிப்பிட்டுள்ளமைக்கு மலைய சமூக ஆய்வு மையம் தனது நன்றியை தெரிவிப்பதோடு
மலையக தமிழர்கள் விடயத்தில் டித்வா பேரிடரை மட்டும் பார்த்திருப்பது
கவலையையும் வேதனையையும் அளிப்பதோடு ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அளித்து
உரையாற்றிய இலங்கை பிரதி "மலையக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை இலக்காக
கொண்டு அரசாங்கம் முற்போக்காக செயற்பட்டு வருவதாக" குறிப்பிட்டார். </p><p>

இது மலையக தமிழர்கள் தொடர்பாக சர்வதேசத்தை ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்
நரித்தன அரசியல் கூற்று என்றே நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றம்.</p><p>

ஆணையாளரின் அறிக்கைக்கேற்ப மலையக தமிழர்களில் டித்வா புயலுக்கு முகம்
கொடுத்தவர்களுக்கு மட்டுமே பிரச்சினை உள்ளது போன்று உலகம் நினைக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0f45e73-5623-4027-8521-35c7304e968a/26-6aa667bab87aa.webp' /></p><p>ஒட்டு
மொத்த மலையக தமிழர்களுக்கு வேறு எந்த விதமான பிரச்சினையும் இல்லாத தொனியே
உள்ளது.இது மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.
</p><p>
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் அவர்கள் தமிழர்கள்
என்பதற்காகவும், தோட்டத் தொழிலாளர்கள் காரணமாகவும், சிங்கள மொழி தெரியாதவர்கள்
என்பதாலும், சொந்த நிலம் இல்லாமையினாலும், பெருந்தோட்ட கம்பெனிகளின்
நிர்வாகத்தின் கீழ் இருப்பதாலும், கம்பனி மற்றும் அரசு நிர்வாக மட்டத்திலும்
தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாதவர்களாக தொடர்ந்தும் உள்ளனர்
என்பதுவே உண்மை. இவ்விடயம் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.</p><p>
மேலும் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் நவீன
அடிமைத்தனம் தொடர்பிலான விசேட செய்தியாளர் மலையகத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்
பின்னர் 2022 இல் நடத்திய ஊடக சந்திப்பொன்றில் "மலையகத் தமிழர்கள் தமிழர்கள்
என்பதற்காகவும், தொழிலாளர்கள் என்பதற்காகவும் ஒடுக்கப்படுகின்றனர்" என ஊடக
சந்திப்பொன்றில் தெரிவித்தார். </p><h2>

அடிமைகளாக இருக்கும் மலையக மக்கள்</h2><p>

அவரின் ஆய்வறிக்கை ஐக்கிய நாடுகள் அவைக்கும் கொடுக்கப்பட்டதாக அறிகின்றோம். அத்தோடு சர்வதேச மன்னிப்பு சபை இவ் வருடம் (2026) ஜூன் மாதம் வெளியிட்ட
அறிக்கையில் "தென் இலங்கையில் மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாக
வைக்கப்பட்டுள்ளனர்" எனும் நீண்ட அறிக்கையை வெளியிட்டது.
</p><p>
 அதுவும் உண்மையே, ஆனால் அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. வடகிழக்கில் நடந்த யுத்த குற்றங்களையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது
நாம் அறிந்ததே.

மலையகத் தமிழர்கள் தொடர்பாக மேற்கூறப்பட்ட இரண்டு அறிக்கைகள் உள்ள போதும்
அறிக்கையின் உள்ளடக்கம் ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில்
உள்ளடக்கப்படாது ஏன்? </p><p>நாட்டுக்காக அனைத்து வகையிலும் உழைக்கும் மலையக
தமிழர்கள் இந்நாட்டில் இன்னொரு தேசிய இனமாக தமக்கே உரிய இன அடையாளத்தை
வளர்த்து பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களை இலங்கையில் வாழும்
இன்னுமொரு இனமாக அல்லது இந்நாட்டின் பிரஜைகளாகவோ மட்டுமல்ல மனிதர்களாகவோ
இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையே தொடர்கின்றது என்பதே உண்மை.
</p><p>
மேலும் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில்
ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அளித்து உரையாற்றிய இலங்கை பிரதிநிதி மலையகத்
தமிழர்கள் என்று குறிப்பிடாது மலையக மக்கள் என்றே குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52dbe43b-7f8d-480b-a04c-6c24e4b0acba/26-6aa667bb8a7b9.webp' /></p><p>
</p><p>
அத்தோடு "அவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முற்போக்காக செயல்படுகின்றது"
என குறிப்பிட்டுள்ளார்.</p><p> 


முற்போக்கு என்பதற்கு இடதுசாரி சிந்தனை கொண்ட தேசிய
மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதி கொடுக்கும் வரைவிலக்கணம் என்ன? என்று
கேட்கின்றோம்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தேர்தல் காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை.</p><h2>

53 வருட ஒப்பந்தம்</h2><p>
 இந்நிலையில் 2042 ல் முடிய போகும்
அரசாங்கத்துக்கும் பெருந்தோட்ட கம்பெனிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சில
திருத்தங்களை செய்து அதை நீடிக்க உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை
மலையக தமிழர்களுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட மலையகம் எனும் தேசத்துக்கும்
இடையிலான இரத்த உரிமையை மறுப்பதற்கே அன்றி வேறில்லை.
</p><p>
 அது மட்டுமல்ல மலையக
தமிழர்களின் ஒரு தொகுதியினரை தொடர்ந்து கம்பெனிகளின் அடிமைகளாகவே
வைத்திருக்கத் துடிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலின் கபடத்தையே
சுட்டி நிற்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35580ef3-fdbb-4dd4-ab81-3aec5cf8dd38/26-6aa667bc45fec.webp' /></p><p>

மேலும் மலையக தோட்ட வீடமைப்பு, மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியினை
மையமாகக் கொண்டு நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அதிகார சபையை
முடமாக்கிவிட்டு மலையகத்துக்கான புதிய அதிகார சபையை உருவாக்கப் போவதாக
ஜனாதிபதி அறிவித்துள்ளார். </p><p>

இது சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் அரசியலை மலையகம்
முழுவதும் வியாபிப்பதற்கான அதிகார சபையாகவே அமையும். இது மலைய தமிழர்களுக்கு
எதிரான இனவாத அதிகார சபையாகவே அமையும். 

வடக்கு கிழக்கில் மகாவலி அதிகார சபை
போன்று சிங்கள பௌத்த பேரினவாதம் மலையகத்திலும் தனது கையை நீட்டுவதற்காக
உருவாக்கப்படவே புதிய அதிகார சபை தொடர்பாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். </p><p>இது
மலையக தமிழர்களுக்கு எதிரானது என்பதே எமது நிலைப்பாடு.</p><h2>



மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வு</h2><p>
மலையகத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு திட்டத்தைத் தீட்டிக்
கொண்டு மலையக தமிழர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முற்போக்கான
செயற்படுகின்றோம் என்பது மலையக தமிழர்களை மட்டுமல்ல முழு உலகத்தையும்
ஏமாற்றுவதற்கேயாகும்.</p><p> 

ஐ.நா மனித உரிமை பேரவை இது தொடர்பாக விழித்துக் கொள்ளாத விடில் இலங்கையில் மலையத் தமிழர்கள் என்போர் இல்லாமல் போய்விடும் அபாய நிலையில் உள்ளது என்பதை எச்சரிக்கையாகவே குறிப்பிடவும் வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5723101d-33ea-45bc-ab80-efb660488153/26-6aa667bced011.webp' /></p><p>
</p><p>
ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்ந்தும் மலைகயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க
வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பதோடு, அடுத்த கூட்டத் தொடரில் மலையகத்
தமிழர் தொடர்பில் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும்
எதிர்பார்க்கின்றோம்.</p><p>

 ஆனால் பேரினவாதத்தின் இன அழிப்பிற்கும் உச்சக்கட்ட
இனப்படுகொலைக்கும் நீதி கேட்டு நிற்கும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான நீதி
கிட்டாத நிலையில், மலையக தமிழர்களுக்கான நீதி என்பது எட்டா கனியாகவே
அமைந்துவிடும். </p><p>

இத்தகைய பின்புலத்தில் வடக்கு-கிழக்கு தமிழர்கள், மலையகத்
தமிழர்கள் என ஒடுக்கப்படும் தமிழர் இனங்களாக ஓரணியில் திரல்வதே காலத்தின்
கட்டாயம் என்பதை வெளிப்படுத்துகின்றோம்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:07:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல வர்த்தக நிலைய காட்சியறைகளில் பாதணிகள் மோசடி விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraudulent-footwear-sales-in-mall-showrooms-1789288396"></link>
            <id>https://tamilwin.com/article/fraudulent-footwear-sales-in-mall-showrooms-1789288396</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல ஆடை மற்றும் நவநாகரிக வர்த்தக நிலைய தொடர் ஒன்றின் காட்சியறைகளில் வெளிநாட்டு தயாரிப்பு பாதணிகள் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல ஆடை மற்றும் நவநாகரிக வர்த்தக நிலைய தொடர் ஒன்றின் காட்சியறைகளில் வெளிநாட்டு தயாரிப்பு பாதணிகள் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
குறித்த வர்த்தக நிலையத் தொடரின் காட்சியறை ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட பாதணிகளுக்கான பற்றுச்சீட்டுகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான தொடர் விசாரணையின் பின்னர், 2026 செப்டெம்பர் 11 அன்று தெஹிவளை, கவுடான பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த பாதணி தயாரிப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.</p><p>

சீன எழுத்துக்கள் மற்றும் “Made in China” என்ற அடையாளத்துடன் கூடிய பெட்டியில் பாதணிகள் வைக்கப்பட்டிருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கும் பாதணிகள் இறக்குமதி செய்யப்பட்டவை என நுகர்வோர் நம்பக்கூடிய நிலையில் பொதிசெய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தன.</p><h2>பாதணிகளுக்கு பொருந்தும் இறக்குமதி வரி</h2><p> எனினும் விசாரணையில் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முடிவுற்ற பாதணிகளுக்கு பொருந்தும் இறக்குமதி வரிகளைத் தவிர்க்கும் நோக்கில், பாதணிகளின் அடிப்பகுதிகள் மற்றும் ஏனைய பாகங்கள் மூலப்பொருட்களாக வகைப்படுத்தப்பட்டு தனித்தனியாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9033955-a761-4d62-a867-e22e845661f4/26-6aa6664f186b2.webp' /></p><p> </p><p>பின்னர் அவை தெஹிவளை, கவுடான பகுதியில் உள்ள இரகசிய இடமொன்றில் ஒன்றிணைக்கப்பட்டு ஒட்டப்பட்டு முழுமையான பாதணிகளாக தயாரிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இவ்வாறு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட பாதணிகளில் உண்மையான உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்படாமல் “Made in China” என அடையாளமிடப்பட்டு, பிரபல வர்த்தக நிலையத் தொடர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இத்தகைய நடவடிக்கைகள் பொருளின் உண்மையான உற்பத்தி மூலத்தைப் பற்றி நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும்.</p><h2>சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p> </p><p>மேலும் பாதணிகளில் குறைபாடு ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பான உண்மையான உற்பத்தியாளரை அடையாளம் காண்பதும் சிரமமாகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dffdde2-ebb4-48bc-a5c8-fef8a5f84b42/26-6aa6664fc86b3.webp' /></p><p> </p><p>அதேவேளை, சட்டபூர்வமாக வரிகளைச் செலுத்தி நியாயமான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் இது நியாயமற்ற வர்த்தகப் போட்டியை ஏற்படுத்தக்கூடும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சுற்றிவளைப்பின்போது சுமார் 1,000 ஜோடி பாதணிகள் மற்றும் அவற்றை தயாரிக்க/ஒன்றிணைக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p> இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:01:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி - சர்வதேச நீதிகோரும் மக்களுக்கு கந்தையா பாஸ்கரன் ஆதரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanthaiya-bhaskaran-supports-people-justice-1789288483"></link>
            <id>https://tamilwin.com/article/kanthaiya-bhaskaran-supports-people-justice-1789288483</id>
            <summary type="text">எங்களுடைய மக்களை கொன்று குவித்த தலைவர்களிடமே சென்று நியாயம் கேட்பது முட்டாள்தனமான செயல். அதனால் தான் எம்முடைய நீதியை சர்வதேசத்திடம் கேட்க முடிவு செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்களுடைய மக்களை கொன்று குவித்த தலைவர்களிடமே சென்று நியாயம் கேட்பது முட்டாள்தனமான செயல். அதனால் தான் எம்முடைய நீதியை சர்வதேசத்திடம் கேட்க முடிவு செய்துள்ளோம் என பிரபல தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.</p><p>

“செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும்” எனக் கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று(13.09.2026) இடம்பெறும் பேரணியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><h2>
செம்மணி மனித புதைகுழி மீதான விசாரணை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

எம்முடைய மக்களை இனவாதம் மற்றும் மதவாதம் என்ற பெயரில் முன்னாள் தலைவர்கள் கொன்று குவித்தார்கள். அதன் எச்சங்களை நாம் செம்மணி மனிதப் புதைகுழியில் காணக்கூடியதாக இருக்கின்றது.

அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். உறவுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் சரியான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0BU_MMhXdq4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இனவாதம் மற்றும் மதவாதம் அற்றதொரு அரசாங்கத்தை உருவாக்குவோம்” என வாக்குறுதியளித்து ஆட்சியைப் பிடித்தவர்கள் தற்போது மௌனமாக இருக்கிறார்கள்.</p><p>
அதேவேளை, ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இரண்டு ஆண்டுகளின் பின்னர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். </p><p>இந்த விடயம் அநுர அரசாங்கத்திற்கான வரவேற்பை அதிகரித்துள்ளது.

அதேபோன்று, எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23f09671-0718-4120-a24f-ecd1a561407c/26-6aa660d5a3e2c.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p></p><p><br></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JK_LVuPuuxE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T08:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாரவில கடல் பகுதியில் நேர்ந்த பெரும் சோகம் - 5 பேரை இழுத்துச்சென்ற இராட்சத அலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-in-the-marawila-sea-giant-waves-5-people-1789285636"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-in-the-marawila-sea-giant-waves-5-people-1789285636</id>
            <summary type="text">மாரவில கடல் பகுதியில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (12) பிற்பகல் அதே பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாரவில கடல் பகுதியில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
நேற்று (12) பிற்பகல் அதே பகுதியில் அலைகளால் 3 பெண்கள், 2 இளைஞர்கள் உட்பட 5 பேர் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
இவ்வாறு இழுத்துச்செல்லப்பட்ட 3 பெண்களை பிரதேசவாசிகள் உடனடியாக செயற்பட்டு மீட்டுள்ளனர்.</p><h2>இளைஞர் மாயம்&nbsp;</h2><p>
</p><p>
இதில் உயர்தர கணிதப் பிரிவில் பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற குளியாபிட்டிய, அனுக்கனையைச் சேர்ந்த வித்தானகே ஷாலித தனுர்தர மதுஷான் என்ற 21 வயது இளைஞர் காணாமல்போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/414b4560-f2fc-408b-9cda-d2e06b413763/26-6aa65c0b2921e.webp' /></p><p>
</p><p>
இவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் குளியாபிட்டியவிலிருந்து மாரவில கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
</p><p>
கடற்கரையில் பாறைகள் அமைக்கப்பட்ட பகுதியில் மணல் திட்டில் நின்றிருந்தபோது, சீறிப்பாய்ந்த இராட்சத அலை ஒன்றில் சிக்கி இவர்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.</p><h2>கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை</h2><p>

பிரதேசவாசிகள் இணைந்து இவரை காப்பாற்ற முயன்றபோதிலும், அவர் கடலில் மாயமாகியுள்ளார். இவரை காப்பாற்றச்சென்ற மற்றொரு இளைஞர் உயிர்தப்பியுள்ளார்.
</p><p>
காணாமல்போன இளைஞரை தேடி கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பகுதியில் கடலில் இறங்குவதையோ, நீராடுவதையோ தவிர்க்குமாறு மாரவில பொலிஸாரால் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T08:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுர பேரணி குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-issued-by-mahinda-1789277615"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-issued-by-mahinda-1789277615</id>
            <summary type="text">
பொதுஜன பெரமுன கட்சியின் நேற்றைய அநுராதபுர போராட்டத்திற்கு வலுச் சேர்த்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பொதுஜன பெரமுன கட்சியின் நேற்றைய அநுராதபுர போராட்டத்திற்கு வலுச் சேர்த்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்றைய(12.09.2026) அநுராதபுர மக்கள் பேரணி குறித்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து தனது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
குறித்த பதிவில், </p><p>

அநுராதபுர இராச்சியத்தில் நிகழ்ந்த கடந்த கால வரலாறு, தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.</p><h2>இலங்கையர்களுக்கு எனது நன்றி..&nbsp;</h2><p> 

படையெடுப்புக்கள், எதிர்ப்புக்கள், துரோகங்கள் மட்டுமின்றி வீழ்ச்சிகளுக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற ஒரு சரித்திரமாக அது இருந்தது. </p><p>

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் பிறந்த மண்ணின் மீது அன்பு இருக்க வேண்டும். நமது நாடு என்ற உணர்வு இருக்க வேண்டும். </p><p>

ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது எனது நம்பிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f068c60-35ac-46ff-8570-7f51a4884b20/26-6aa654cdcd9a9.webp' /></p><p>
</p><p> 
இலங்கை மக்கள் அனைவரது பலத்துடனும், நான் எமது தாய் நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்பினேன்.
</p><p>
எமது மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய ஒரு காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதே எமது நோக்கம். </p><p>

கடந்த காலத்தைப் போன்று, எமது கலாசாரம், அடையாளம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, அபிவிருத்தியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPresidentRajapaksa%2Fposts%2Fpfbid0ep7tV3PyYS3j3uxSmcmxFumTkSWN7o7Lm4G8zAZSPK19BgjKSNrc7xAWtBxgEAwDl&show_text=true&width=500" width="500" height="250" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p> </p><p>

அத்துடன், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த, என்னுடைய நீண்ட கால அரசியல் சகாக்கள், மகா சங்கத்தினர், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நன்றி.</p><p> 

எப்போதும் எமக்கு பலமாக இருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் எனது நன்றி என மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-13T08:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வாதிகாரியாக செயற்படுகிறாரா அநுர..! சுமந்திரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-levels-allegations-against-anura-1789286144"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-levels-allegations-against-anura-1789286144</id>
            <summary type="text">ஊழல் மற்றும் முறைகேடு விவகாரங்களில் கடந்த அரசுகளை விட மும்முரமாகச்
செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு
பிரச்சினையையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் மற்றும் முறைகேடு விவகாரங்களில் கடந்த அரசுகளை விட மும்முரமாகச்
செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு
பிரச்சினையையும் தீர்க்கத் துளியளவும் முன்வரவில்லை என இலங்கை தமிழரசுக்
கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்
கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>

சாவகச்சேரியில் நேற்று(12.09.2026) நடைபெற்ற அநுர அரசுக்கு எதிரான உணவு தவிர்ப்புப்
போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

சர்வாதிகாரியாக செயற்படுகிறாரா அநுர</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டை ஆட்சி செய்பவர்கள் அதிகாரங்கள் பகிரப்பட்டதாகக் கூறினாலும், மாகாண
சபைகள் அற்ப சொற்ப அதிகாரங்களோடு இயங்காமல் கிடக்கின்றன. </p><p>மத்திய அரசுக்கு
இல்லாத அதிகாரங்களையும் தன் முகவர்கள் மூலம் ஒன்பது மாகாணங்களிலும்
நிறைவேற்றும் முழுச் சர்வாதிகார நிறைவேற்று அதிகாரியாகவே தற்போதைய ஜனாதிபதி
செயற்படுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/552a85f1-aefe-427d-a6db-ab31c9569b95/26-6aa6574961eec.webp' /></p><p>
</p><p>
இந்த அரசு ஊழல், இலஞ்சம், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள்
வியாபாரிகளுக்கு எதிராகத் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதை நாங்கள்
வரவேற்கின்றோம்.</p><p> இதற்கு முன்னர் மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளைப் போலன்றி,
இரு தரப்புக்கும் எதிராக அவர்கள் எந்தவித சமரசமுமின்றி நடவடிக்கை எடுத்து
வருவது பாராட்டத்தக்கது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக அவ்வளவு மும்முரமாகச் செயற்படும் இந்த அரசு, தமிழ்
மக்களுக்குரிய எந்தவொரு விடயத்தையும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. </p><p>

எங்களது
வாழ்வாதாரத்துக்கு அத்திவாரமான நிலங்களை விடுவிப்பதாகக் கூறிவிட்டு, ஏற்கனவே
2024ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட 700 ஏக்கர் காணிகளையும், ஏற்கனவே திறக்கப்பட்ட
பலாலி வீதியையுமே மீளவும் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். வடக்கில் இதுவரை ஓர்
அங்குல நிலம் கூட புதிதாக விடுவிக்கப்படவில்லை.
</p><h2>

காணி விடுவிப்பு கோரிக்கை</h2><p>

எதிர்க்கட்சியில் இருந்தபோது எங்களுடன் இணைந்து தனியார் காணிகள் விடுவிக்கப்பட
வேண்டும் என்று வாய் கிழியக் கத்தியவர்கள், இப்போது ஜனாதிபதியாகிவிட்டு
இராணுவத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்று கூறுகின்றார்கள்.</p><p>

அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள முதலாவது வாக்குறுதியான புதிய அரசமைப்பு
உருவாக்கம் தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71cddb2c-d668-4b9f-aedd-a3fd78dd59ef/26-6aa6574a779e3.webp' /></p><p>
</p><p>
பௌத்த மதபீடங்களின் எதிர்ப்பையும் மீறி அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைக்
கொண்டுவரும் துணிவைக் காட்டும் அரசு, அதிகாரப் பகிர்வு குறித்துச்
சிந்திப்பதில்லை. </p><p>

எல்லாவற்றையும் தங்களுடைய கைக்குள்ளே கொண்டு வந்து ஒரு கட்சி
ஆட்சியாக மாற்றும் நடவடிக்கைகள்தான் நடக்கின்றன. எனவே, இவற்றை எதிர்த்துத்
தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:57:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் மஹாவலி கங்கை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-sand-mining-in-the-mahaweli-river-1789282574"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-sand-mining-in-the-mahaweli-river-1789282574</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

திருகோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (12.09.2026) இரவு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.</p><h2>தப்பிச் சென்ற வாகனச் சாரதிகள்</h2><p> </p><p>

இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி கங்கையில் இறங்கி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும், ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fafc77cd-2f09-4d2c-994f-705cb17c906e/26-6aa64fda8a906.webp' /></p><p> </p><p>

இதன்போது வாகனச் சாரதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c81a66-5162-4447-b830-d2706db2f9f8/26-6aa64fdb6ef5f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T07:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் புதிய சாகச சுற்றுலாத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/adventure-tourism-project-in-nuwara-eliya-district-1789281060"></link>
            <id>https://tamilwin.com/article/adventure-tourism-project-in-nuwara-eliya-district-1789281060</id>
            <summary type="text">உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தில்
சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், புதிய சாகச சுற்றுலா
நிகழ்ச்சித் திட்டமொன்று முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தில்
சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், புதிய சாகச சுற்றுலா
நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
இதன் ஒரு பகுதியாக, நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா, நல்லதண்ணி மற்றும்
மவுசாகலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு, நீர் மற்றும் சாகச சுற்றுலா நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
</p><p>
இந்த நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில்,
நுவரெலியா மாவட்டத்தின் பிரபலமான மோஹினி அருவியை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1fda8e-4a4e-403a-a4c0-3c6a1881611c/26-6aa64728c3371.webp' /></p><h2>பல்வேறு கலாசாரங்களின் இணைவு</h2><p>

மத்திய மாகாணத்தில் இயற்கை வளங்கள், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பல்வேறு
கலாசாரங்களின் இணைவு காணப்படுவதுடன், இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத பல
சுற்றுலா வளங்களும் காணப்படுகின்றன.</p><p>

இந்த வளங்களை பொறுப்புடனும் நிலையான முறையிலும் பயன்படுத்தி, பிரதேச மக்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், சுற்றுலாத்துறையின் ஊடாக புதிய பொருளாதார
வாய்ப்புகளை உருவாக்குவதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
</p><p>
குறிப்பாக, நொர்வூட் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மவுசாகலை நீர்த்தேக்கம்,
காமோர், மேரே மற்றும் மோஹினி போன்ற நீர்வீழ்ச்சிகள், அத்துடன் புனித
சிவனொளிபாதமலை ஆகியவற்றை மையப்படுத்தி எதிர்காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி
மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a74fa324-6296-470f-bb9d-dcafb2a840f2/26-6aa6472997a11.webp' /></p><h2>சாகச சுற்றுலா</h2><p>

இதனடிப்படையில், சாகச சுற்றுலாவை ஒரு புதிய சுற்றுலா உற்பத்தியாக
அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் இந்த நிகழ்வு
பயன்படுத்தப்படவுள்ளது.
</p><p>
இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக நல்லதண்ணி மற்றும் அதனைச்
சூழவுள்ள பகுதிகளின் சுற்றுலா கவர்ச்சியை மேலும் அதிகரிப்பது
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/528c0995-7a07-42e9-bf54-e1695b59b017/26-6aa6472a6f747.webp' /></p><p>

அத்துடன், பிரதேச மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை
உருவாக்குதல், அவர்களின் வருமான மட்டத்தை உயர்த்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு
புதிய அனுபவங்களையும் சுற்றுலா உற்பத்திகளையும் அறிமுகப்படுத்துதல் ஆகியவையும்
எதிர்பார்க்கப்படுகின்றன.
</p><p>
குறிப்பாக, நல்லதண்ணியை ஒரு முக்கிய சுற்றுலா இலக்காக மேலும் நிலைநிறுத்தி,
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பிரதேசத்தில்
தங்க வைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் திட்டத்தின் மற்றுமொரு
இலக்காகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/377bc3ce-3ace-461c-b29d-37632c783dbe/26-6aa6472b47ecf.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T06:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rally-in-jaffna-demanding-an-international-inquiry-1789281482"></link>
            <id>https://tamilwin.com/article/rally-in-jaffna-demanding-an-international-inquiry-1789281482</id>
            <summary type="text">செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என
கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என
கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(13.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 



 சர்வதேச கவனத்திற்கான பேரணி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் , சான்று
பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. 

அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ad8e520-3af3-4657-9bd0-cf10f93b2f7c/26-6aa6453bd8d7b.webp' /></p><p> </p><p>

இலங்கையில் நடைபெற்றது இன படுகொலை என்பதற்கான
சான்றாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது. அதனால் அது தொடர்பில் சர்வதேச
விசாரணை முன்னெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள , ஐ.நா
காரியாலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, கிட்டு பூங்கா பகுதியில்
நிறைவடைந்துள்ளது.</p><p> 

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சேர்ந்து கூட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31aaaa9a-b0b1-4953-b35e-5f659d1c4edb/26-6aa6453cc8abe.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9068d9de-c500-4c04-bcf8-05fe71f0a170/26-6aa6453da2376.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7c4e9cf-87ee-4b8a-bc99-2acc021eb25c/26-6aa6453e7bd46.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T06:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-drivers-arrested-for-using-kerosene-1789278841"></link>
            <id>https://tamilwin.com/article/bus-drivers-arrested-for-using-kerosene-1789278841</id>
            <summary type="text">திருகோணமலை - கந்தளாய் பொலிஸாரினால்&amp;nbsp;டீசலுக்கு பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கந்தளாய் பொலிஸாரினால்&nbsp;டீசலுக்கு பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p>நேற்று (12) மாலை

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது&nbsp;பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p>குறித்த பேருந்துகளின் இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டு பொலிஸ்
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><h2>சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிப்பு</h2><p>

கண்டியிலிருந்து உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை
நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்துகள், கந்தளாய்
போட்டான்காட்டு சந்தியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

இதன்போது, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி
பேருந்துகள் இயக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவை பொலிஸ்
பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும்,
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T06:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையுடன் IMFஇன் 7ஆவது மீளாய்வு கலந்துரையாடல்கள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-s-7th-review-discussions-with-sri-lanka-begin-1789278839"></link>
            <id>https://tamilwin.com/article/imf-s-7th-review-discussions-with-sri-lanka-begin-1789278839</id>
            <summary type="text">இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள், நிதி அமைச்சு
மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள், நிதி அமைச்சு
மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
இலங்கையின் கடன் திட்டத்தின் 7ஆவது மீளாய்வு தொடர்பான கலந்தாலோசனைகளை
மேற்கொள்வதற்காகவே IMF குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><h2>மேற்கொள்ளப்படவுள்ள கலந்துரையாடல்</h2><p>
</p><p>
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), மின்சாரத் துறை ஒழுங்குமுறை
அமைப்புக்கள் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றின்
அதிகாரிகளுடனும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை
நடத்தவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fa2850-6662-465d-bc39-bab159e4ce49/26-6aa63e759e11a.webp' /></p><p>
</p><p>
இந்த பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T06:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்! அநுராதபுர பேரணி மேடையில் இருந்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-rajapaksa-will-also-face-imprisonment-1789274275"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-rajapaksa-will-also-face-imprisonment-1789274275</id>
            <summary type="text">
சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர், மகிந்தவுக்காகதான் செய்தோம், அவரிடம் தான் பணத்தைக் கொடுத்தோம் என பொய்யாக வாக்குமூலம் வழங்கினால், மகிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர், மகிந்தவுக்காகதான் செய்தோம், அவரிடம் தான் பணத்தைக் கொடுத்தோம் என பொய்யாக வாக்குமூலம் வழங்கினால், மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படுவார்&nbsp;என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p> இன்று இப்படித்தான் நியாயமற்ற முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>அநுராதபுரத்தில் நேற்றையதினம்(12.09.2026) இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>மகிந்தவும் கைது செய்யப்படுவார்..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> 

எந்தவொரு சாட்சியங்களும் இன்றி இந்த அரசாங்கம் நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளது. இதுதான் சட்டமா.</p><p>

தற்போது சிறையில் இருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மகிந்த ராஜபக்சவுக்காகதான் நாங்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டோம், அவரிடம் பெருந்தொகை பணத்தினைக் கொடுத்துள்ளோம் என சாட்சியளித்தால் என்ன நடக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa0595a-c76a-448e-8a78-db4346570b0b/26-6aa634825a506.webp' /></p><p>
</p><p>
அந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் அரசாங்கத்தின் சாட்சியாளர்களாக மாறுவார்கள். எமது தலைவர் மகிந்த சிறையில் அடைக்கப்படுவார். இது மிகவும் ஆபத்தான ஒரு விடயம்.
</p><p>
வாயில் பிட்டு வைத்திருப்பது போல அமைதியாக இருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நான் ஒன்றை கூற விரும்புகின்றேன்.
</p><p>
இந்த லொத்தர் சீட்டிழுப்பில் சிறைக்குச் செல்லப்போகும் அடுத்த அதிர்ஷ்டசாலி நீங்களாக இருக்கலாம். தவறு செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உள்ளே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f944d29c-00e5-487f-bcbb-74c614b8a5de/26-6aa634832ef2e.webp' />&nbsp;</p><p> </p><p>


ஹிட்லர் காலத்து கெஸ்டபோ பொலிஸாரும், அநுர குமார வசம் இருக்கும் பொலிஸாரும் ஒன்றுதான். சட்டம் சமமாக பிரயோகப்படுத்தப்படவில்லை. </p><p>

தற்போது இருக்கும் அநுர குமாரக்களும், விஜித ஹேரத்களும், லால் காந்தக்களும், வசந்த சமரசிங்கக்களும் இன்று கோடீஷ்வரர்களாக மாற கருப்புப் பணமே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T05:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை 243 பேருடன் திடீரென மாயமான கப்பலினால் பரபரப்பு - மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ship-with-243-people-missing-in-indonesia-1789276286"></link>
            <id>https://tamilwin.com/article/ship-with-243-people-missing-in-indonesia-1789276286</id>
            <summary type="text">புதிய இணைப்புகாணாமல்போன ‘Virgo Transport 8’ என்ற பயணிகள் கப்பலில் இருந்து இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>காணாமல்போன ‘Virgo Transport 8’ என்ற பயணிகள் கப்பலில் இருந்து இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



எனினும், மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> இதனால் மேலும் 140 பேரின் நிலை தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தோனேசியாவில் 243 பேரை ஏற்றிச்சென்ற ‘Virgo Transport 8’ என்ற பயணிகள் கப்பல் காணாமல்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> </p><p>தற்போது நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியில் ஜாவா கடல் பகுதியில் கப்பல் தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>துண்டிக்கப்பட்ட கப்பலுடனான தொடர்பு&nbsp;</h2><p>
</p><p>இந்த கப்பல் நேற்று (12) கிழக்கு ஜாவாவின் சுரபயா (Surabaya) நகரிலிருந்து தெற்கு கலிமந்தன் (Kalimantan) மாகாணத்தில் உள்ள பஞ்சார்மாசின் (Banjarmasin) நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த நிலையில், இன்று(13) அதிகாலை சுமார் 2 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42ea2f9-5e12-4796-b202-28bcb5fba597/26-6aa63430d881e.webp' />&nbsp;</p><p> கப்பலின் இறுதி நிலை (பஞ்சார்மாசின்) Banjarmasin பகுதியில் இருந்து சுமார் 80 கடல் மைல் தொலைவில் பதிவாகியிருந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கப்பலை தொடர்புகொள்ள முடியாத நிலையில், உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாக அந்நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><h2>கப்பலின் இறுதி நிலை</h2><p>கப்பல் கடைசியாக தொடர்பை இழந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11241443-5838-4978-99c6-6757c1bf3aeb/26-6aa634318deea.webp' /></p><p>KN SAR Laksmana 241' என்ற மீட்புக் கப்பல் உள்ளிட்ட குழுக்கள் கப்பலின் இறுதியாக பதிவான நிலையை நோக்கி அனுப்பப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை 125 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>


கப்பல் மோசமான வானிலையை எதிர்கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T05:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று உயிர்களை காவுகொண்ட மோஹினி எல்ல பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/security-fence-in-the-mohini-ella-area-1789275172"></link>
            <id>https://tamilwin.com/article/security-fence-in-the-mohini-ella-area-1789275172</id>
            <summary type="text">நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி, மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மோஹினி எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. </p><p>

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe896d6d-626e-4fc7-a478-a0a1be267e68/26-6aa6324abdf6c.webp' /></p><h2>குறித்த பகுதியின் பாதுகாப்பு</h2><p> 

இந்த சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அதே பகுதியில் கார் ஒன்றும் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, குறித்த பகுதியின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடையே கவலை ஏற்பட்டிருந்தது. </p><p>

மோஹினி எல்ல அமைந்துள்ள பகுதி, வளைவுகள் மற்றும் ஆபத்தான நில அமைப்பைக் கொண்டுள்ளதால், வாகனங்கள் வீதியை விட்டு விலகும் சந்தர்ப்பங்களில் பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345aee59-dd8c-4b30-8eb0-1638646a92e0/26-6aa6324bc6851.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, ஆபத்தான இடத்தில் பாரிய பாதுகாப்புத் தடுப்புக் கம்பங்கள் நாட்டப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>வீதிப் பாதுகாப்புச் சமிக்ஞை</h2><p> </p><p>

அத்துடன், வாகன சாரதிகள் அவதானமாக பயணிப்பதற்காக தேவையான வீதிப் பாதுகாப்புச் சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84a392f1-fdc0-48eb-82a1-c5bd84c09da0/26-6aa6324ca1fec.webp' /></p><p> </p><p>

இதன்மூலம், வாகனங்கள் வீதியை விட்டு விலகி ஆபத்தான பகுதிக்குள் செல்வதைத் தடுப்பதுடன், குறித்த பகுதியில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

மூன்று உயிர்களை காவுகொண்ட மோஹினி எல்ல பகுதியில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக முறையாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde3024d-dffe-45bb-afb8-e922d56bf370/26-6aa6324d7e04b.webp' /></p><p>	
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06a50021-2721-4cfe-aad0-6757d054a707/26-6aa6324e5b28d.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22bd8044-9f5d-493c-aff5-81282a98f0c2/26-6aa6324f34cc9.webp' />&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T05:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையலுக்குள் சிக்கிய ராஜபக்ச குடும்பம் - அணைக்கட்டுக்குள் இருந்து வெளிவரும் பூதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/moneragala-tank-treasure-hunt-probe-intosasheendra-1789271664"></link>
            <id>https://tamilwin.com/article/moneragala-tank-treasure-hunt-probe-intosasheendra-1789271664</id>
            <summary type="text">மொனராகலை குளம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ராஜபக்சர்களின் புதையல் தேடும் நடவடிக்கை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து தீவிர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை குளம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ராஜபக்சர்களின் புதையல் தேடும் நடவடிக்கை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உரையாற்றும் போது பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

புதையல் தோண்டும் நடவடிக்கை</b></h2><p>மொனராகலை மாவட்டத்தின் மதகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்கமுவ கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பாலேகந்த குளத்தை புனரமைப்பதற்காக, அதன் அணைக்கட்டு 2020 மே மாதத்தில் உடைக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/106edf31-b623-4fa0-bbeb-5e36ebdc9f58/26-6aa6410daf427.webp' /></p><p>குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக ஆரம்பத்தில் 82.2 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும் பின்னர் அது 167.26 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. </p><p>அரசாங்கம் இதுவரை இத்திட்டத்திற்காக 70.5 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
அலவலக அறிக்கைகளின்படி, குளத்தின் புனரமைப்புப் பணிகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p> 

எனினும் சமகால அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் குமார தெரிவிக்கையில், அண்மையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்படி, இதுவரை செலவிடப்பட்டுள்ள 70.5 மில்லியன் ரூபாய்க்கு இணையான எந்தவொரு பணியும் அங்கு நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டார்.</p><p>
</p><h3><b>
 ஷஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம்</b></h3><p>முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்படும் இந்த புதையல் தேடும் மோசடியை மறைப்பதற்காகவே இந்த புனரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அது குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b12b633f-e030-4f6c-be93-92218e2f78dd/26-6aa6227befe84.webp' /></p><p>இத்திட்டம் சுமார் ஆறு வருடங்களாக முடங்கியுள்ளதால், தமது வாழ்வாதாரத்திற்காக இக்குளத்தை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-13T04:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/instruction-patients-national-eye-hospital-colombo-1789271006"></link>
            <id>https://tamilwin.com/article/instruction-patients-national-eye-hospital-colombo-1789271006</id>
            <summary type="text">கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலை நிர்வாகம் முக்கிய அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது.சிகிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலை நிர்வாகம் முக்கிய அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது.</p><p>சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கான அடுத்த சிகிச்சை திகதியை கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி (S.M.S.) மூலம் தெரிவிக்கும் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இந்த முறைமை நோயாளிகளுக்கு அடுத்த சிகிச்சை திகதியை எளிதாக கண்டறிய உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><h2>80000 நோயாளிகளுக்கு குறுஞ்செய்தி</h2><p>

இதன்படி, சிகிச்சை மையம் 80000 நோயாளிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3a83a4-faa9-4fa3-aebf-69a8be56eef4/26-6aa62d5f4b52d.webp' /></p><p>
</p><p>
தினமும் சுமார் 600 நோயாளிகள் சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு வருவதாகவும், தினமும் சுமார் 100 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

மேலும், 24 மணி நேரமும் செயல்படும் கண் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை சேவையும் செயல்பாட்டில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் நாளன்று நடைமுறைகள் முடிந்த பிறகு, வைத்தியசாலை பதிவேட்டை அறை எண் 10 ல் ஒப்படைக்க வேண்டும் என்றும், பின்னர் அதே நாளில் அடுத்த சிக்கிச்சை திகதியை குறிப்பிடும் குறுஞ்செய்தி நோயாளிகளின் கைபேசிகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இராணுவ தலைவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-military-leaders-warn-the-us-and-israel-1789272273"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-military-leaders-warn-the-us-and-israel-1789272273</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் இராணுவத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். </p><p>

ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி பேசுகையில், ஈரானிய இராணுவமும் ஈரானிய புரட்சிகர காவல்படையும் (IRGC) இணைந்து எத்தகைய எதிரி நடவடிக்கையையும் முறியடிக்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.</p><h2>இரும்புக் கேடயமாக செயற்படும் படைகளுக்கு இடையிலான ஒற்றுமை</h2><p> 

இரு படைகளுக்கும் இடையிலான ஒற்றுமை, நாட்டின் எதிரிகளின் சதித்திட்டங்களிலிருந்து பாதுகாக்கும் "இரும்புக் கேடயமாக" செயல்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0c9b77-db36-4653-a1e4-f6e1105deb47/26-6aa6237093946.webp' /></p><p> 

இதேவேளை, IRGC தளபதி மேஜர் ஜெனரல் அகமத் வஹீதி தெரிவிக்கையில், எதிரி நாடுகள் ஈரானின் இராணுவ திறனை குறைவாக மதிப்பிட்டு பின்னர் தங்கள் தவறை உணர்ந்து கொண்டதாகக் கூறினார்.</p><p> 

ஈரானிய இராணுவமும் IRGCயும் அமெரிக்க ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் பலத்த அடிகளைக் கொடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனமழை பெய்யக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1789272022"></link>
            <id>https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1789272022</id>
            <summary type="text">நாட்டில் இன்று பல இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 ​வடமத்திய, மத்திய, சபரகமுவ, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இன்று பல இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

</p><p> ​வடமத்திய, மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின்
சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை
பெய்யக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cf9eb9-70b0-48a9-9bb0-0f62a0436166/26-6aa61fd8eeca3.webp' /></p><p>மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை
மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்
திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

​இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களிலும் தற்காலிகமாக
வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய
ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:00:33+00:00</updated>
        </entry>
    </feed>
