<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-01T22:35:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-visits-mahara-prison-1788293875"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-visits-mahara-prison-1788293875</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மஹர சிறைச்சாலைக்கு
விஜயம் செய்து, அங்குள்ள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மஹர சிறைச்சாலைக்கு
விஜயம் செய்து, அங்குள்ள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
</p><p>குறித்த விஜயத்தினை அவர் நேற்றைய தினம்(01.09.2026) மேற்கொண்டிருந்தார்.</p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்</h2><p>
இதன்போது சிறைச்சாலைகளுக்குள் எதிர்பாராதவிதமாக மோதல்கள் அல்லது பதற்றமான சூழ்நிலைகள்
தோற்றுவிக்கப்படும் போது, அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு
நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e2854b7-d101-4da6-b9f9-6c77d304a701/26-6a97368152d72.webp' /></p><p>அத்துடன் சிறைச்சாலைகளுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு மற்றும் நிர்வாக
மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T22:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை குறிவைத்த மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/damaged-the-memorial-obelisk-of-father-selva-1788297482"></link>
            <id>https://tamilwin.com/article/damaged-the-memorial-obelisk-of-father-selva-1788297482</id>
            <summary type="text">யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத்
திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத்
திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாளந் தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.</p><p>

தந்தை செல்வா குடும்பத்தவரது பரம்பரை இடுகாட்டில் இருந்த தூபியின் மேல்
பகுதியே சூறையாடப்பட்டுள்ளது.</p><h2>தந்தை செல்வா</h2><p>
</p><p>
போரின் பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டபோது அங்கு போரின்
முன்னர் இருந்த தூபியை ஒத்த தூபி ஒன்று 2012 ஆம் ஆண்டு மீண்டும்
புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb2ceac6-a80e-4068-9ced-9d9a3caf67db/26-6a97424093a3d.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் தூபியே
நேற்றுமுன்தினம் மாலை இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் அயலவர்களால் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கவனத்துக்குக்
கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
தூபியின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க அலங்கார வடிவப்
பொருள்களை அபகரிக்கும் நோக்கில் இந்தச் சூறையாடல் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T21:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலையில் அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு – பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-uni-office-assistant-appointments-alleged-1788287449"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-uni-office-assistant-appointments-alleged-1788287449</id>
            <summary type="text">யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர
நியமனத்திற்குள் உள்வாங்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர
நியமனத்திற்குள் உள்வாங்கப்படவில்லை எனவும் புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர்
குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் யாழ். ஊடக அமையத்தில் இன்று(01.09.2026) இடம்பெற்ற ஊடக
சந்திப்பிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.</p><h2>அலுவலக உதவியாளர் பதவி</h2><p>
யாழ் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக அங்கு
தற்காலிகமாக பணியாற்றிவந்த தாம் உள்ளிட்ட 400ற்கும் மேற்பட்டோர் போட்டிப்
பரீட்சை உள்ளிட்ட தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த நிலையில், 71 பேருக்கு
மாத்திரம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a216fa14-f5c6-486c-b65a-08e9915c3699/26-6a971f29e6e6e.webp' /></p><p>எனினும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் அலுவலக
உதவியாளர்களாக பணியாற்றி வந்த தங்களை நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில்
உரிய முறையில் கருத்திற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>

பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
என்ற எதிர்பார்ப்பில் இருந்த போதிலும், தற்போது புதிதாக பலர்
நியமிக்கப்பட்டுள்ளமை தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும்
ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சாதகமான பதில் கிடைக்காமை</h2><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தமது நிலைமை
குறித்து எடுத்துரைத்தபோதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என
பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a4efb2a-b961-4d35-bf30-5a33342cffc5/26-6a971f2aae750.webp' /></p><p>தமது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலம் ஆகியவற்றையும் தமது வாழ்வாதார பொருளாதார ஈட்டலையும் கருத்திற் கொண்டு, நியாயமான தீர்வொன்றை
வழங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>

அத்துடன், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன்
விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T21:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-reject-petition-against-22nd-amendment-1788276373"></link>
            <id>https://tamilwin.com/article/court-reject-petition-against-22nd-amendment-1788276373</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல்
செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களை கொண்ட
முமையான ஆயத்தின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல்
செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களை கொண்ட
முமையான ஆயத்தின் முன்னிலையில் விசாரணை செய்ய வேண்டும் என முன்வைக்கப்பட்ட
கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>இந்த உத்தரவானது இன்று(01.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>மனுக்கள் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட
அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன
ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள்
முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3925e4fb-a8fa-4168-90fa-b54063027a51/26-6a97035583ad8.webp' /></p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன், உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களையும் கொண்ட முழுமையான
ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p> அவருடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி
சப்ரி, ஜெப்ரி அழகரத்னம், எராஜ் டி சில்வா, ஸ்ரீநாத் பெரேரா, அநுர மெத்தேகொட
மற்றும் மைத்ரி குணரத்ன ஆகியோரும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p><h2>22ஆவது அரசமைப்பு திருத்தம்</h2><p>
</p><p>
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசமைப்பின்
132 (3) உறுப்புரையின்படி, உயர்நீதிமன்ற அமர்வின் நீதியரசர்களின் எண்ணிக்கை
மற்றும் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் பிரதம நீதியரசருக்கே
உரித்தானது என வாதிட்டுள்ளார்.
</p><p>
அனைத்துத் தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலிப்பதற்காக 15 நிமிடங்கள்
விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், பின்னர் மனுதாரர்களின் கோரிக்கையை
நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/909ca085-5310-4072-b674-8c0f9d1f398d/26-6a9703fe1e12c.webp' /></p><p>
</p><p>
அதனையடுத்து, தற்போதைய ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்விலேயே மனுக்கள் மீதான
விசாரணைகள் தொடரும் என்று பிரதம நீதியரசர் அறிவித்துள்ளார்.</p><p>

22 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 67 மனுக்களும்,
நீதித்துறைச் சட்டமூலத்துக்கு எதிராக 5 மனுக்களும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T20:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா - ஈரானை அதிரவைத்த ட்ரம்பின் மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-begins-strikes-iran-attacks-on-american-bases-1788290142"></link>
            <id>https://tamilwin.com/article/us-begins-strikes-iran-attacks-on-american-bases-1788290142</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையினர் மீதும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையினர் மீதும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்குப் பின்னர், ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
</p><p>
இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் ஈரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலை ஆரம்பித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே அமைந்துள்ள நகரங்களில் நான்கு ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>
சாபஹார் மற்றும் கொனாரக் மாவட்டங்களில் நான்கு ஏவுகணைகள் தாக்கியதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA, மாகாண அதிகாரி அலி கலீலாபாதியை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bfca67-0596-4bc3-b85a-e02b87c36ed5/26-6a972766a61c3.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.


ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில்,
, ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
</p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பல வாரங்களுக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா தனது முதல் தாக்குதலை நடத்தியது. ஈரானுக்குச் சொந்தமான லாரக் தீவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>&nbsp;ட்ரம்ப் எச்சரிக்கை</h2><p>
</p><p>
கப்பல் போக்குவரத்து பாதையில் ஈரான் தொடர்ந்து கண்ணிவெடிகளைப் பதிப்பதைத் தடுக்கும் நோக்கில், லாரக் தீவில் இருந்த ஈரானிய ரொக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.</p><p>

இதற்குப் பதிலடியாக ஈரான், ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாகவும், அவை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, தனது கடற்பரப்புக்கு மேலாக பறந்த ஈரானிய ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/260ec7a1-29bd-4cc4-969b-f7b1e55e9dc1/26-6a97276849708.webp' /></p><p>


அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்க வேண்டாம் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>

“இந்த மிகவும் நியாயமான தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், அது இன்னும் கடுமையான மற்றும் அதிகளவிலான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும். 

ஆனால், அதுவே மிகப்பெரிய தாக்குதலாக இருக்காது.</p><p> மிகப்பெரிய தாக்குதல் இன்னும் காத்திருக்கிறது. அது முடிவடைந்த பின்னர், இஸ்லாமியக் குடியரசு ஈரானில் மிகக் குறைவான பகுதிகளே எஞ்சியிருக்கும்” என ட்ரம்ப் தனது Truth Social பதிவில் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்&nbsp;</h2><p>
</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஈரானை தோல்வியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக ட்ரம்ப் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.
</p><p>
ஈரானின் தலைமை அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இராணுவம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பொருளாதாரம் சீரழிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>

எனினும், மேலும் தாக்குதல்கள் தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09236870-c7c6-4578-8357-39b0b8a48c7c/26-6a97276794173.webp' /></p><p>
</p><p>
“நாங்கள் அவர்களைத் தாக்க மாட்டோம் என்று அதற்கு அர்த்தமல்ல.என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், கடந்த மாதம் ஈரானுக்கு எதிராக பொருளாதார ரீதியான அழுத்தங்களை அதிகரிப்பதில் ட்ரம்ப் நிர்வாகம் கவனம் செலுத்தத் தொடங்கியது.</p><p>

பல தசாப்தங்களாக அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வரும் ஈரானுக்கு எதிராக “பொருளாதார டி-டே” நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.</p><p>

ஈரானின் பொருளாதாரத்தில் சரியான இலக்கைத் தாக்கினால், தெஹ்ரானை முறியடையும் நிலைக்குக் கொண்டு வருவது காலத்தின் கேள்வி மட்டுமே என ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T20:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை கிளப்பியுள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயல் - இணையத்தில் பரவும் காணொளி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216</id>
            <summary type="text">மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரித்திரவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரித்திரவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார்.</p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட அபிவிருத்தி குழுவின் முடிவிற்கமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

இந்த அனுமதிகளைக் கோரி அலுவலகத்திற்குச் சென்ற தேரர், பணியகத்தின் பணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிகாரியை மிரட்டிய காட்சி பதிவாகியுள்ளது.

இந்தச் செயலுக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.</p><p>

 சட்டத்தை நிலைநாட்ட முயலும் அதிகாரியை அச்சுறுத்துவதை அவர்கள் கண்டித்துள்ளனர்.</p><p>

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறான சர்ச்சைக்குரிய மற்றும் இனவாதப் போக்குடைய கருத்துகளை இதற்கு முன்னரும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_taHX-CZ18s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T20:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்புப் பகுதியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-2-year-old-child-in-batticaloa-area-1788286839"></link>
            <id>https://tamilwin.com/article/death-2-year-old-child-in-batticaloa-area-1788286839</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில்
இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம்
வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில்
இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளது.</p><p>இந்த சம்பவமானது இன்று(01.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>குழந்தை உயிரிழப்பு</h2><p>
</p><p>கற்சேனை - முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத்
என்ற குழந்தையே வாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
</p><p>இன்று(01) காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர்
நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே சிறுவன் விளையாடிக்
கொண்டிருந்துள்ளான். இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில்
மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f763826a-8fcd-4e22-8ac5-5a49e0e0e005/26-6a9718b15c1ad.webp' /></p><p>இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு
சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை
அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப்
பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.</p><p>
உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் இன்று (01) மாலை 6.00
மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T18:35:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பதற்றம் : அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-war-live-trump-vows-to-hit-iran-1788284765"></link>
            <id>https://tamilwin.com/article/iran-war-live-trump-vows-to-hit-iran-1788284765</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு, அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

 விமான ரத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு, அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p>

 விமான ரத்துகள், வான்வெளி மூடல்கள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
குறித்த அறிக்கையில்,
</p><p>மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்கள் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாக நிலைமை மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. </p><p>

தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பதுடன், சாத்தியமான விமான ரத்துகள், வான்வெளி மூடல்கள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Middle East: Due to tensions in the Middle East, the security environment remains complex with the potential for unforeseen escalation. Americans currently in the Middle East should exercise heightened vigilance and be aware of potential flight cancellations, airspace closures,… <a href="https://t.co/hiM5RtXNOh">pic.twitter.com/hiM5RtXNOh</a></p>&mdash; TravelGov (@TravelGov) <a href="https://x.com/TravelGov/status/2094837820120772963?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>

இப்பகுதிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அமெரிக்கர்கள், விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கண்காணிக்க வேண்டும்.</p><p> 

ஈரான் மற்றும் ஈரானுக்கு ஆதரவான குழுக்கள், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களையோ அல்லது அமெரிக்க வணிகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களையோ குறிவைக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T18:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rain-likely-in-several-districts-tomorrow-1788283636"></link>
            <id>https://tamilwin.com/article/rain-likely-in-several-districts-tomorrow-1788283636</id>
            <summary type="text">இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை
(செப்டம்பர் 02) நாட்டின் காலை வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்,
காலி, மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை
(செப்டம்பர் 02) நாட்டின் காலை வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்,
காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடையிடையே மழை
பெய்யக்கூடும்.
</p><p>
அத்துடன் பிற்பகல் 2:00 மணிக்கு பின் ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு
மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>மழை பெய்யக்கூடும்</h2><p>
</p><p>
இதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள்இ வடமத்திய, வடமேல்
மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில்
மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821ca550-12f4-4cb1-9207-d02eb8eb274d/26-6a970d0142820.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, நாளை நண்பகல் 12:10
மணிக்கு ஆனமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை மனம்பிட்டி மற்றும் வாழைச்சேனை
ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
</p><p>
எனவே இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிக பலத்த
காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T17:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஈரானில் தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா : IRGC இலக்குகள் மீது அதிரடி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-says-striking-targets-in-iran-1788282041"></link>
            <id>https://tamilwin.com/article/us-says-striking-targets-in-iran-1788282041</id>
            <summary type="text">ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சென்ட்காம் (C...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளது.</p><h2>ஈரானில் உள்ள இலக்கு</h2><p> </p><p>இந்தத் தாக்குதல்கள் கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கியுள்ளன.&nbsp;</p><p>இன்று கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு, அமெரிக்கப் படைகள் ஈரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) இலக்குகள் மீது தாக்குதலைத் தொடங்கின.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Today at 12 p.m. ET, U.S. forces began striking Islamic Revolutionary Guard Corps (IRGC) targets in Iran. The strikes follow recent attempted attacks by the IRGC against commercial shipping in the Strait of Hormuz and against American service members deployed to the region.</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2094826294466810366?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மீதும் IRGC சமீபத்தில் நடத்திய தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என&nbsp; சென்ட்காம் பதிவிட்டுள்ளது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kUbf_ZpMm_Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-01T17:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மொத்த பொதுக் கடன் ரூ. 33 டிரில்லியனாக அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankas-public-debt-rises-to-nearly-rs-33-trill-1788282814"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankas-public-debt-rises-to-nearly-rs-33-trill-1788282814</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் மொத்த பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
 2026 ஜூன் மாத இறுதியளவில் இவ்வாறு கடன் தொகை அதிகரித்துள்ளதாக பொதுக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் மொத்த பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
 2026 ஜூன் மாத இறுதியளவில் இவ்வாறு கடன் தொகை அதிகரித்துள்ளதாக பொதுக் கடன் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளியியல் கடன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
2026 ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி, நாட்டின் மொத்த பொதுக் கடன் 32.977 டிரில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p> 
இது மார்ச் மாத இறுதியில் 32.233 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் மட்டும் சுமார் 744 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f16c10bd-899a-4f86-a69c-c0213555694a/26-6a9707c03ed97.webp' /></p><p> 
எனினும், ரூபாய் மதிப்பில் கடன் தொகை அதிகரித்துள்ள போதிலும், அமெரிக்க டொல மதிப்பில் அளவிடும் போது நாட்டின் கடன் இருப்பு குறைந்துள்ளது. </p><p>
மார்ச் மாத இறுதியில் 102.27 பில்லியன் டொலராக இருந்த கடன் தொகை, ஜூன் இறுதியில் 97.95 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.</p><p>
ஜூன் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 336.6623 ரூபாவாகக் கணக்கிடப்பட்டதே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
நாட்டின் மொத்தக் கடனில் பெரும்பகுதியை மத்திய அரசின் கடனே வகிக்கிறது. இது மார்ச் மாத இறுதியில் 31.193 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் இறுதியில் 31.999 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. </p><p>உள்நாட்டுக் கடன்: 19.203 டிரில்லியன் ரூபாவாகவும், வெளிநாட்டுக் கடன்: 12.796 டிரில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடனில் பன்முகக் கடன்கள் 38 சதவீதமாகவும், வணிகக் கடன்கள் 34 சதவீதமாகவும், இருதரப்புக் கடன்கள் 28 சதவீதமாகவும் உள்ளன. </p><p>
சீனா, இலங்கைக்கு 5.01 பில்லியன் அமெரிக்க டொலரையும், ஜப்பான் 2.27 பில்லியன் அமெரிக்க டொலரையும், இந்தியா 853.9 மில்லியன் அமெரிக்க டொலரையும் கடனாக இலங்கைக்கு வழங்கியுள்ளன.</p><p>
மேலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் அரசாங்க உத்தரவாதக் கடன் 971 பில்லியன் ரூபாயாகவும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான கடன் சுமார் 7 பில்லியன் ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T17:14:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனான் இராணுவத்திற்கு பயிற்சியளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-planning-new-mission-to-train-lebanese-1788282103"></link>
            <id>https://tamilwin.com/article/eu-planning-new-mission-to-train-lebanese-1788282103</id>
            <summary type="text">&amp;nbsp;லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் தெரிவித்துள்ளார். </p><p>
ஐநா அமைதிப்படைக்கு மாற்றாகச் செயல்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமல்ல. </p><p>மாறாக, லெபனான் தனது நாட்டின் பாதுகாப்பைத் தானே உறுதிசெய்து கொள்வதற்கான திறனை அதிகரிப்பதே எங்கள் இலக்கு" என்று காஜா கலாஸ் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813432b7-a10f-405e-8173-36c529798fc8/26-6a9704f8bb5e4.webp' /></p><p>இந்தச் சிறப்புப் பயிற்சியில் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை முதன்மையாகச் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>1978 ஆம் ஆண்டு இஸ்ரேல், தெற்கு லெபனான் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து அமைக்கப்பட்டு, கடந்த 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஐநா அமைதிப்படையின் பணிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டு வருகிறது.
</p><p>லெபனானின் ஆயுதப் படைகள் மற்றும் தனது சொந்தப் பிராந்தியத்தைப் பாதுகாக்கும் லெபனான் அரசின் திறனை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். </p><p>
இதற்கான திட்டமிடல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் அக்டோபர் மாதத்தில் ஐரோப்பிய பேரவையின் முறையான ஒப்புதலுடன் இத்திட்டத்தைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
லெபனான் இராணுவம் மற்றும் அந்நாட்டின் பொலிஸ் படைகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கான இராணுவ மற்றும் சிவிலியன் திட்டம் தொடர்பான முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜதந்திர சேவைப் பிரிவு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T17:13:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/putin-says-iran-us-ceasefire-1788281467"></link>
            <id>https://tamilwin.com/article/putin-says-iran-us-ceasefire-1788281467</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா வரவேற்ற போதிலும் அந்த போர்நிறுத்தம் நிலையற்றதாகவும் மிகவும் பலவீனமானதாகவும் காணப்படுவது நிரூபணமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><h2>போர்நிறுத்தம் நீடிப்பு</h2><p> </p><p>
அதேவேளையில், ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p>
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே புடின் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>
இந்த மாநாட்டின் இடையே அவர் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de2a520-c5a6-44d1-9d66-53d5849b3962/26-6a97027cdd08d.webp' /></p><p>
கடந்த ஜூன் மாத மத்தியில், பாகிஸ்தான் மற்றும் கடார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, 60 நாட்கள் காலக்கெடுவுடன் கூடிய போர்நிறுத்த நீடிப்பு அதில் வழங்கப்பட்டிருந்தது.</p><p> 
அந்த காலக்கெடு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், தற்போதைய போர்நிறுத்தச் சூழல் குறித்து ரஷ்ய அதிபர் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:51:13+00:00</updated>
        </entry>
    </feed>
