<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-28T17:32:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் விவகாரத்தால் தூக்கத்தை இழந்த மகிந்த குடும்பம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judicature-act-to-extend-judges-tenure-1785258121"></link>
            <id>https://tamilwin.com/article/judicature-act-to-extend-judges-tenure-1785258121</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராஜபக்ச தரப்புக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராஜபக்ச தரப்புக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
</p><p>
இந்தநிலையில், தற்போதைய உச்சநீதிமன்றத்தில் இன்னும் கோட்டாபய ராஜபக்ச நியமித்த நீதிபதிகள் இருப்பதால், வயது நீட்டிப்பு மூலம் அரசியல் பழிவாங்கல் நடக்கும் என்ற வாதத்திற்கு போதிய ஆதாரம் இல்லை என்று அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் தெரிவித்தார்.</p><p>


லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளில் 7 பேரை கோட்டாபய ராஜபக்சவும், 5 பேரை அநுர குமார திஸாநாயக்கவும் நியமித்துள்ளனர்.
</p><p>
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும்பாலானவை நாமல் ராஜபக்ச குடும்பத்தினர் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களைச் சார்ந்தவை என்பதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசப்படுகிறது.</p><p>

இலங்கையில் 11 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித்துறையின் பெரும் சவாலாக உள்ளது. 

ஓய்வு வயதை நீட்டிப்பதால் மட்டும் இந்தச் சிக்கல் தீர்ந்துவிடாது; நிர்வாக மட்டத்திலிருந்தே நீதித்துறையைச் சீரமைக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/g8EqX1Vihpc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T17:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க-இஸ்ரேல் போரில் 350 அரசு ஊழியர்கள் பலி: ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/350-government-employees-killed-in-us-israel-war-1785255408"></link>
            <id>https://tamilwin.com/article/350-government-employees-killed-in-us-israel-war-1785255408</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் தொடங்கிய கடந்த ஐந்து மாதங்களில்,
தாக்குதல்களுக்கு இலக்காகி 350-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்
உயிரிழந்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் தொடங்கிய கடந்த ஐந்து மாதங்களில்,
தாக்குதல்களுக்கு இலக்காகி 350-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்
உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஃபாதேமே மொஹஜேரானி
தெரிவித்துள்ளார்.

​</p><p>உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களைச் சந்தித்துப் பேசிய பின் அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p></p><h2>அதிகாரப்பூர்வ அறிவிப்பு</h2><p> மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்காகப் பணியாற்றிய
போதே இவர்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b22d87ca-62a3-4257-af0d-65920f206d31/26-6a68d793f38f6.webp' /></p><p>குறிப்பாக, ஹோர்மோஸ்கான் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளைப் பராமரிப்பதற்காக
கோபுரங்களில் பணியாற்றிய பொறியாளர்கள், மின் விநியோகத்தைச் சீராக வைக்க
உயிரைத் தியாகம் செய்த மின்சாரத் துறை ஊழியர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன்
பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலில்
பலியாகியுள்ளனர்.
</p><p>
அவர்களின் இந்தத் தியாகத்திற்கும் சேவைக்கும் நாடு என்றும் கடமைப்பட்டுள்ளது
என்றும் அவர் தனது அஞ்சலி செய்தியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T16:23:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வு வயதை கூட்டுவது நீதித்துறைச் சுதந்திரத்தில் தலையிடும் செயல் - சுமந்திரன் காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-retirement-age-threaten-independence-1785251892"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-retirement-age-threaten-independence-1785251892</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசமைப்புத் திருத்தத்தை இந்த
நேரத்தில் கொண்டு வந்து செய்ய நினைப்பது நீதித்துறையின்
சுயாதீனத்தில் கைவைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசமைப்புத் திருத்தத்தை இந்த
நேரத்தில் கொண்டு வந்து செய்ய நினைப்பது நீதித்துறையின்
சுயாதீனத்தில் கைவைக்கும் ஒரு விடயமாக நாங்கள் காண்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் நடவடிக்கையை ஆட்சேபித்து
கொழும்பில் நேற்று(27.07.2026) மூத்த சட்டத்தரணிகள் நடத்திய ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p></p><h2>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது&nbsp;நீடிப்பு</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பது மிக மிக மோசமான விடயம்.

இந்த அரசு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாக கொடுத்திருந்த வாக்குறுதி ஒரு
புதிய அரசமைப்பைக் கொண்டு வருவோம் என்பதாகும். அதைக் கூறி, ஆட்சிக்கு வந்து 2
வருடங்கள் ஆகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b7d67b-f0db-4ad8-8317-17c6476fd197/26-6a68cd140527a.webp' /></p><p>
இந்த இடைப்பட்ட காலத்தில் இதற்கான சம்பாசணை ஆரம்பிக்குமாக இருந்தால் அதிலே
நீதியரசர்களின ஓய்வு பெறும் வயது எல்லை என்னவாக இருக்க வேண்டும் என்பது
தொடர்பிலும், அது எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பாகவும் ஒரு
கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கும். ஆனால் நடைபெறவில்லை.</p><p>

அவசரமாக அரசமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வரவேண்டுமாக இருந்தால் கடந்த
அரசில் அவர்கள் (ஜே.வி.பியினர்) கொண்டு வந்த தனி நபர் பிரேரணையாகத்தான் இருக்க
வேண்டும்.</p><p> அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதான ஒரு தனி நபர்
பிரேரணையாக இருக்க வேண்டும். அதை விட வேறு விடயமாக இருக்க முடியாது.</p><p></p><h2>அரசின் வீழ்ச்சி</h2><p> </p><p>தாங்களே
முன்னர் கொண்டு வந்த ஒரு திருத்தத்தை இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் எந்த
வாக்குறுதியிலும், எந்த விஞ்ஞாபனத்திலும் இல்லாத ஒரு விடயத்தை இந்த நேரத்தில்
கொண்டு வந்து செய்ய நினைப்பது நிச்சயமாக நீதித்துறையின் சுயாதீனத்தில்
கைவைக்கும் ஒரு விடயமாக நாங்கள் காண்கின்றோம்.
</p><p>
அரசு இவ்வாறு செய்கின்றபோது ஏன் இவ்வளவு காலம் பொறுத்திருந்தார்கள் என்ற ஒரு
கேள்வி எழுகின்றது. சில நீதியரசர்கள் இளைப்பாறுகின்றார்கள், சிலர் இளைப்பாற
இருக்கின்றார்கள். சிலரை இளைப்பாற விட்டு, மற்றும் சில இளைப்பாற இருப்பவர்கள்
இளைப்பாற முன்பு, குறித்த நேரத்தில் இதைக் கொண்டு வருவது ஏன் என்பதும்
எல்லோருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e681fc0-1dfc-4326-b6e1-cee57db7764f/26-6a68cd14c0668.webp' /></p><p>

முழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைப்பதுபோல மக்களுடைய வாழ்க்கை வயது கூடிவிட்டது
ஆகையினால் நாம் இதனை நீடிக்கின்றோம் எனக் கூறுவது அனைவரையும் முட்டாளாக்கும்
ஒரு செயற்பாடு.</p><p> இப்படித்தான் வீழ்ச்சி அடைகின்ற அரசுகளின் முதல் சறுக்கல்
தொடங்குவது. ஆகையினால் நாங்கள் இந்த அரசுக்கு ஓர் எச்சரிக்கையையும்
கொடுக்கின்றோம்.</p><p></p><h2>சட்டத் திருத்தம்&nbsp;</h2><p>அத்தோடு எதிர்க்கட்சியில் இருக்கின்ற யாராவது ஓர் உறுப்பினர் சென்ற
நாடாளுமன்றத்திலே அவர்கள் (விஜித ஹேரத்) கொண்டு வந்த தனிநபர் பிரேரணையை
இப்போது கொண்டு வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.</p><p>

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கின்ற அதே சட்ட திருத்தத்தைக்
கொண்டு வர வேண்டும்.

அத்தோடு நீதி அமைச்சருக்கும் ஒரு கோரிக்கை. இந்தச் சட்டத் திருத்தம்
திருத்தப்படுமாக இருந்தால் நீங்கள் பதவி விலக வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c538717-ed1e-4271-b26f-067fb49f22ad/26-6a68cd1576d20.webp' /></p><p>ஏனென்றால் இலங்கை
சட்டத்தரணிகள் சங்கத்தில் நீங்கள் ஆயுள்கால உறுப்பினர். அச்சங்கம் இதனை
ஒட்டுமொத்ததாக எதிர்க்கின்றது. </p><p>அது மட்டுமல்ல, ஆரம்ப நிலை நீதிபதிகள், இடைநிலை
நீதிபநிகள் மட்டுமல்ல, சட்டத்துறையில் இருக்கும் அனைவரும் எதிர்க்கும்
வேளையில் சட்டத்தரணியான நீங்கள் இந்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. அது
கொண்டு வரப்படுமானால் நீங்கள் பதவி விலக வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-28T16:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்: இருக்கைகளைப் பரிசோதிக்க அமெரிக்க வான்வெளி நிர்வாகம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-authority-issues-warning-to-inspect-seats-1785253944"></link>
            <id>https://tamilwin.com/article/us-authority-issues-warning-to-inspect-seats-1785253944</id>
            <summary type="text">அமெரிக்காவின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் பயணிகளின் இருக்கைகள்
தவறாகப் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவற்றை உடனடியாக ஆய்வு செய்ய
வேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில் பயணிகளின் இருக்கைகள்
தவறாகப் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவற்றை உடனடியாக ஆய்வு செய்ய
வேண்டும் என்றும் அமெரிக்கக் கூட்டாட்சி வான்வெளி நிர்வாகம் (FAA)
எச்சரித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட 453 போயிங் விமானங்களில் இந்தப் பிரச்சினை
இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
அவசரக் காலத்தில் விமானங்கள் தரையிறங்கும்போது இந்த இருக்கைகள் தளர்ந்து
கழன்று விழக் கூடும் என்றும், இதனால் பயணிகள் மற்றும் விமானப்
பணியாளர்களுக்குக் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், அவசர காலங்களில் மக்கள்
வெளியேறும் வழியையும் அடைக்கக்கூடும் என்று FAA தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பரிசோதனை</h2><p>

இந்த உத்தரவு அமெரிக்கப் பதிவெண் கொண்ட விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்
என்றாலும், பிற நாட்டு வான்வெளி அமைப்புகளும் அமெரிக்காவின் இந்த
வழிகாட்டுதலைப் பின்பற்றிப் பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8322e10-a2c4-45a2-b4d3-1e38b353f139/26-6a68d03a68ab8.webp' /></p><p>

இது குறித்து போயிங் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனம் ஏற்கனவே கடந்த
டிசம்பர் 2025-இல் விமான நிறுவனங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை
வழங்கிவிட்டதாகவும், அதைத் தற்போது FAA கட்டாயமாக்குவதை வரவேற்பதாகவும்
தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T16:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் காட்டுத்தீ: ஸ்பெயினில் புதிய வெப்ப அலை எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/intensifying-wildfires-heatwave-warning-in-france-1785250772"></link>
            <id>https://tamilwin.com/article/intensifying-wildfires-heatwave-warning-in-france-1785250772</id>
            <summary type="text">மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஒரு புதிய வெப்ப அலை வீசக்கூடும் என
எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பரவி
வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஒரு புதிய வெப்ப அலை வீசக்கூடும் என
எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பரவி
வரும் பயங்கர காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப்
போராடி வருகின்றனர்.
</p><p>
வரலாறு காணாத இந்த வெயில் மற்றும் காட்டுத்தீ காரணமாக பிரான்ஸ் மற்றும்
ஸ்பெயின் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு
வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

பிரான்சின் போர்டோ பிராந்தியத்திலும், ஸ்பெயினின் மாட்ரிட் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளிலும் காட்டுத்தீ கட்டுப்பாடற்ற முறையில் பரவி வருகிறது.</p><p></p><h2>காட்டுத்தீ&nbsp;</h2><p>
</p><p>
நிலைமையின் தீவிரத்தைக் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல்
மேக்ரான், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்ஸ் சந்திக்கும் மிகக்
கடுமையான காட்டுத்தீ அசம்பாவிதம் இதுவே என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5da83f31-159c-4a0b-8632-71650b361919/26-6a68cb6b42d8a.webp' /></p><p>
</p><p>
ஸ்பெயினில் இதுவரை 73,000-க்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து
வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 66,000 பேர் பாதுகாப்பான இடங்களில்
அடைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
பாரிஸில் வெப்பநிலை 38°C வரையிலான புதிய உச்சத்தை எட்டும் என்றும், ஸ்பெயின்
இந்த கோடைகாலத்தின் 4ஆவது வெப்ப அலையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது
என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர வெப்பம்</h2><p>

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இத்தகைய தீவிர
வெப்பத்திற்கும், வறட்சிக்கும், காட்டுத்தீ வேகமாகப் பரவுவதற்கும் காரணம் என
விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e827fc9-3ddc-4941-b932-c60fa4c2a6ad/26-6a68cb6bec46c.webp' /></p><p>

இந்தத் தீவிர வெப்பம் காரணமாகப் பயிர் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் 2026 விவசாய அறுவடை
கணிப்புகளும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T15:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் சிக்கிய ஆபத்தான நபர் - இலங்கையில் பெண்கள் தமைமையில் செயற்படும் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-malaysia-1785245458"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-malaysia-1785245458</id>
            <summary type="text">இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்மலானே சைமா என்ற பெயருடைய, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p><b>ரத்மலானே சைமா</b> என்ற பெயருடைய, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>வெளிநாட்டில் பதுங்கியிருந்த நிலையில் இலங்கையில் செயல்பட்டு வந்த ஒரு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>போதைப்பொருள் வலையமைப்பு</b></h2><p>குறித்த குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரின் போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbcf140d-4c20-48ef-92f5-fb2bf2175228/26-6a68b6725d770.webp' /></p><p>மேலும் இந்த குழுவில் பெண்கள் உட்பட பல்வேறு குழுக்களும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T14:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலய அரசியல் அதிகாரிக்கும் ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/usa-rachel-hawkins-meet-ravikaran-mp-1785249259"></link>
            <id>https://tamilwin.com/article/usa-rachel-hawkins-meet-ravikaran-mp-1785249259</id>
            <summary type="text">இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல்
ஹக்கின்ஸிற்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரனுக்குமிடையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல்
ஹக்கின்ஸிற்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரனுக்குமிடையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள ரவிகரனின் தலைமை அலுவலகத்தில்இன்றையதினம் (28.07.2026) நடைபெற்றது.</p><p>இந்த சந்திப்பில்
சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89b71624-a269-467e-8e40-67533bc65c41/26-6a68bfab5eff8.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T14:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயக முறைமையையே சீர்குலைக்கும் செயற்பாடு! அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-1785245555"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-1785245555</id>
            <summary type="text">முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று கூறிய திசைகாட்டி அரசாங்கம், தற்சமயம்
ஜனநாயக முறைமையையே சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று கூறிய திசைகாட்டி அரசாங்கம், தற்சமயம்
ஜனநாயக முறைமையையே சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது என்று
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
</p><p>
இன்று (28.07.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்
இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், வெற்றிடமாகியிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை
நிரப்புவதற்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் தவறியுள்ளனர். தற்சமயம் நாட்டில் இருக்கும்
கனம் நீதிபதிகள் இந்தப் பதவிகளுக்குப் பொருத்தமற்றவர்களா அல்லது
தகுதியற்றவர்களா என நாம் கேள்வி எழுப்புகின்றோம்.</p><p></p><h2>வயதெல்லையை மாற்றுவதற்கான அரசமைப்புத் திருத்தம்</h2><p>
</p><p>
இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் இருக்கும் அதேவேளையில், நீதியரசர்களின்
ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவதற்கான அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர
அரசு தீர்மானித்து, அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கும் அனுமதியைப்
பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8853dfd7-63ca-4e71-8d3e-96021fc39525/26-6a68b7089abba.webp' /></p><p> </p><p>இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஏன் செல்கின்றது? ஜனநாயகத்தைப்
பலப்படுத்துவதற்காகவே அரசுக்கு மக்கள் ஆசி கிடைத்த போதிலும், அதற்குப் பதிலாக
அரசு ஏகாதிபத்திய சர்வாதிகாரத்தையும் தனிக்கட்சி நாட்டை ஆளும் கொள்கையையும்
பின்பற்றி வருகின்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய
மக்கள் சக்தியின் முதலமைச்சர் வேட்பாளர் பதவியைப் பெற்றுத் தருவதாகத்
தெரிவித்து, இலஞ்சம் வழங்கி, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவதற்கு
அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டதாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவர் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி வருகின்றார்.
</p><p>
ஜே.வி.பியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அதன் தலைமைச் சபை அங்கத்தவரான
சட்டத்தரணி லால் விஜேநாயக்க மற்றும் சாலிய பீரிஸ் போன்ற அனுபவமிக்க ஜனாதிபதி
சட்டத்தரணிகள் கூட அரசின் இந்த யோசனையை எதிர்க்கின்றனர். இதனையும் நாங்களா
செய்தோம்? ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனையின் காரணமாகவா இவர்களும் இவ்வாறு
பிரஸ்தாபித்துள்ளனர்?</p><p></p><h2>நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்</h2><p> இனியாவது இவ்வாறான பொய்களாலும் ஏமாற்றங்களாலும் நாட்டு
மக்களை ஏமாற்ற வேண்டாம்.

அரசு பொய்களையே கூறி வருகின்றது என்பது வெளிப்படையாகிவிட்ட நிலையில்,
இப்போதாவது ஜனநாயகத்தை அழிக்க வேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/735383fb-981b-4675-bfed-69397fef3ae8/26-6a68b70961f7e.webp' /></p><p> அரசு
ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை ஜனநாயக முறையிலேயே
தோற்கடிப்பதுடன், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சகல பணிகளையும்
முன்னெடுப்போம்.</p><p> ஏகாதிபத்திய சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்ட மேற்கொள்ளும்
முயற்சியைக் கைவிட்டு, "அழகான நாடு - வளமான வாழ்க்கை" எனும் கொள்கை அறிக்கையை
உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி அரசைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T14:08:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் - சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-that-hit-and-fled-vehicles-1785244178"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-that-hit-and-fled-vehicles-1785244178</id>
            <summary type="text">தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகர் பகுதியில்,&amp;nbsp;வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது கப் வாகனம் ஒன்று மோதிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகர் பகுதியில்,&nbsp;வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது கப் வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது.</p><p>குறித்த சம்பவம் இன்று (28.07.2026)
அதிகாலை சுமார் 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p>இந்த விபத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், சிறிய ரக வான்
மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.</p><h2>சிசிடிவி காட்சிகள் பதிவு</h2><p>
</p><p>விபத்தை ஏற்படுத்திய கப் வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும்
காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்புக்
கமராக்களில் பதிவாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>
இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பிச் சென்ற கப் வாகனத்தையும் அதன்
சாரதியையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளைப் பொலிஸார்
தீவிரப்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T13:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரித் அபேசிங்கவிற்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/charith-abeysinghe-remanded-fail-bail-conditions-1785243664"></link>
            <id>https://tamilwin.com/article/charith-abeysinghe-remanded-fail-bail-conditions-1785243664</id>
            <summary type="text">நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், முன்னாள் தேசிய மக்கள் சக்தி ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், முன்னாள் தேசிய மக்கள் சக்தி ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

முன்னதாக, போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் “ஹரக் கட்டாவின்” மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகிதா ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
</p><p></p><h2>பிணை நிபந்தனை</h2><p>ரகித ராஜபக்சவும் மற்றொரு சந்தேக நபரும் தங்களது பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர், அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c214f3cc-0f2a-46bd-882d-3550810c83b5/26-6a68ac8bbbb9e.webp' /></p><p>
இருப்பினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T13:22:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறித்து ஆளுநர் வெளியிட்ட தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/recruitment-process-for-health-assistants-1785243181"></link>
            <id>https://tamilwin.com/article/recruitment-process-for-health-assistants-1785243181</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும்
சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும்
இடமளிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும்
சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும்
இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன்
நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார்.</p><p>

வடக்கு மாகாண சுகாதார உதவியாளர் நியமனத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நேர்முகத்
தேர்வுக் குழு உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில்
இன்று (28) நடைபெற்றது.</p><p> இதன்போது குழு
உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.</p><p></p><h2>வழக்கு</h2><p>ஆளுநர்
மேலும் குறிப்பிட்டதாவது, 2019ஆம் ஆண்டில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் கடமையைப் பொறுப்பேற்க
அனுமதிக்கப்படாத சுகாதார உதவியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6a403de-79f4-45bb-b1f4-ba34bd6b242b/26-6a68a9c203c93.webp' /></p><p> இந்தப் பின்னணியையும், பொதுமக்களின் தீவிர அவதானிப்பிலும்
இந்த விடயம் இருப்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
</p><p>
300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,550 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் எழுத்துப் பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத் தேர்வில்
வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளியும் இறுதித் தெரிவை நேரடியாகப் பாதிக்கும்.</p><p></p><h2>எழுத்துப் பரீட்சை</h2><p> எனவே,
நீங்கள் வழங்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் தெளிவான, நியாயமான மற்றும்
ஆதாரபூர்வமான காரணம் இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/765bcae2-119b-4c31-a9bc-94e99118ba1d/26-6a68a9c2d3aeb.webp' /></p><p>இதேவேளை, எதிர்காலத்தில் சுகாதார உதவியாளர்களுக்கான சேவைப்பிரமாணக் குறிப்பு
கட்டாயம் மாற்றியமைக்கப்பட்டு, இவ்வாறான ஆட்சேர்ப்புகளின்போது எழுத்துப்
பரீட்சையும் உள்வாங்கப்பட வேண்டும் என ஆளுநர் இதன்போது விசேடமாகக்
குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண அரச சேவையின் நம்பகத்தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும்
வகையில் சகலரும் நேர்மையாகச் செயற்பட வேண்டும் என ஆளுநர் மீளவும்
வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T13:08:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/abandon-plan-to-raise-supreme-court-judge-1785240874"></link>
            <id>https://tamilwin.com/article/abandon-plan-to-raise-supreme-court-judge-1785240874</id>
            <summary type="text">மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை செய்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை செய்து கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
</p><p>
மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><p> இது தொடர்பில் ஜனாதிபதிக்கு, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஒப்பமிட்டு இன்றைய தினம் (28.07.2026) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதித்துறை</h2><p>
</p><p>
கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஒரு விரிவான முயற்சியின் பகுதியாகவும் இருக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு கொள்கை அளவில் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் எதிரப்பைக் கொண்டிருக்கவில்லை என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bef9615d-f03f-4e05-8e10-2309cec78758/26-6a68a24fb8f24.webp' /></p><p>

எனினும், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது, நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகார அமைப்பால் வழங்கப்படும் ஒரு சலுகையாகவோ அல்லது நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடும் நடவடிக்கையாகவோ பார்க்கப்படும் சூழலை உருவாக்கக் கூடாது என்பதில் தாங்கள் தீவிர கவனம் செலுத்துவதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p> நீதித்துறையின் சுயாதீனத்தையும், நீதித்துறை மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் தராமல் இருப்பது இன்றியமையாததாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டத்தின் ஆட்சி</h2><p>

தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக இரத்து செய்து, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முனையும் தருணத்தில் மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் விடயத்தைப் பரிசீலிக்க முடியும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d4e8155-df2e-430b-b2b1-08e14a130304/26-6a68a4298d8ee.webp' /></p><p> </p><p>குறுகிய அல்லது குறிப்பிட்ட நோக்கம் கருதிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், அரசியலமைப்பு வாதத்திற்கான மரியாதையைக் குறைப்பதுடன், மக்களாட்சியின் நல்நெறிப் கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் முயற்சிகளை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிட வேண்டும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு படுகொலை வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mandaithivu-murder-case-adjourned-to-september-22-1785241059"></link>
            <id>https://tamilwin.com/article/mandaithivu-murder-case-adjourned-to-september-22-1785241059</id>
            <summary type="text">மண்டைதீவு படுகொலை&amp;nbsp; மற்றும் புதைகுழி வழக்கு&amp;nbsp;மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று(28.07.2026) ஊர்காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மண்டைதீவு படுகொலை&nbsp; மற்றும் புதைகுழி வழக்கு&nbsp;மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p> இன்று(28.07.2026) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான்
அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>குறித்த காணியின் உரித்து</h2><p>இதன்போது யாழ் மாவட்ட
குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து
கிருஸ்ரபெலினாவுடன்
காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய
இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக
முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச
சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில்
நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28d1231b-6355-4975-bbd9-b4f27aaa679b/26-6a68a200df4da.webp' /></p><p>முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப்
பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.
</p><p>
பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின்
போது வழக்காளிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த விடயம் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து
அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கிராம சேவகர், பிரதேச செயலர்,
பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி,
பொலிசார், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு
நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் விசாரணை</h2><p>அத்துடன் சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான
நிதிதிரட்டலுக்கு துறைசார் அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுக்கொள்ள
ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காடியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83aac83b-b8cf-41cd-a71d-34d7f2eb66b5/26-6a68a201ca592.webp' /></p><p>

முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களை அடுத்து குறித்த வழக்கு வரும் செப்ரெம்பர்
22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><p>

முன்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த
சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான
சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டது.</p><p>

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:42:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பு - பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opportunity-to-study-at-foreign-universities-1785237013"></link>
            <id>https://tamilwin.com/article/opportunity-to-study-at-foreign-universities-1785237013</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கமைய கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் திறமைச் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச தரப்படுத்தலுடன் கூடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கமைய கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் திறமைச் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமது முதலாவது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான அரச புலமைப்பரிசில் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

அதன்கீழ் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு உயர்ந்தபட்சம் 20 மில்லியன் ரூபாய் வீதம், பட்டப்படிப்பின் முழுமையான நான்கு ஆண்டுகளுக்கும் உயர்ந்தபட்சம் 80 மில்லியன் நிதி அரசால் வழங்கப்படவுள்ளது. </p><p></p><h2>வெளிநாட்டு நாணய கொடுப்பனவு</h2><p>

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர (உயர்தரப்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முப்பது மாணவர்கள் இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518f2b0c-94e9-4f0a-8194-5cb8cde83cd7/26-6a689cdd6596c.webp' /></p><p>

எஞ்சிய மாணவர்கள் வெளிநாட்டுக் கல்விக்கு அனுப்புவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

பிரதானமாக வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இலங்கை ரூபாய் எதிர்பாராத வகையில் பணப்பெறுமதி குறைவடைந்தமையால் மாணவர்கள் வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய ஒருசில கொடுப்பனவுகளுக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதியளவாக இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 அதனால், செலாவணி விகிதம் உறுதிப்பாட்டை எட்டும் வரைக்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு 2.5 மில்லியன் ரூபாய்கள் வரை செலாவணி விகிதத்திற்கு சீராக்கல் கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:13:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[A35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் பாலம் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bridge-on-a35-paranthan-mullaitivu-main-road-1785239721"></link>
            <id>https://tamilwin.com/article/bridge-on-a35-paranthan-mullaitivu-main-road-1785239721</id>
            <summary type="text">A- 35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் 12ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள
முதலாவது பாலம் இன்று(28.7.2026) திறந்து வைக்கப்பட்டது.கடந்த 2020
ஆம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>A- 35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் 12ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள
முதலாவது பாலம் இன்று(28.7.2026) திறந்து வைக்கப்பட்டது.</p><p>கடந்த 2020
ஆம் ஆண்டு கடந்த ஆட்சியாளர்களினால் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா
பெருந்தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இடை நடுவே கைவிடப்பட்ட
நிலையில் இருந்த குறித்த பாலம் ஆனது தற்போதைய தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையின் மூலம் நிறைவடைந்தது.</p><p>நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்தப் பாலம் உத்தியோபூர்வமாக கையளிக்கப்பட்டது.</p><p></p><h2>அபிவிருத்தி பணிகள்</h2><p>குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட
அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், கிளிநொச்சி
மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மருங்கன் மோகன் கண்டாவளை பிரதேச செயலாளர்
கிராம சேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a0c1e4-4ffe-46ed-bdd5-9883aa1e4abf/26-6a689b020c637.webp' /></p><p> குறித்த பாலத்தில் அபிவிருத்தி
நடவடிக்கையின் போது பல்வேறு இன்னல்களும் இரண்டு உயிர்கள் பறி கொடுத்ததுடன்
பலர் வீதி விபத்துகளையும் சந்தித்து வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின்
அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த காலத்தில் அபிவிருத்தி
பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e107277-ee67-4b9d-b284-03fe39b9df70/26-6a689b02d3d0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc13243e-e025-4c25-9563-8a6ad57c1ab7/26-6a689b03a978f.webp' /></p><h2>புனரமைப்புப் பணிகள்</h2><p>கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட
இத்தாவில்–கோவில்காடு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று (28.07.2026)
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்&nbsp; பிமல்
ரத்நாயக்க அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
</p><p>
அரசாங்கத்தின் பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்
முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஊடாக, நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில்
காணப்பட்ட இத்தாவில்–கோவில்காடு பிரதான வீதி புனரமைக்கப்படவுள்ளதுடன், இதன்
மூலம் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதோடு கல்வி, சுகாதாரம்,
விவசாயம், வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்கும்
குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe0e975c-eba4-4dd5-a806-ec15eaa10a0f/26-6a68ae17defa3.webp' /></p><p>

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன்,
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு. இ.த. ஜெயசீலன், கிளீன் ஸ்ரீலங்கா –
கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு. மருங்கன் மோகன், பச்சிலைப்பள்ளி பிரதேச
சபையின் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச
செயலகங்களின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சபை
உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த
நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்
பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:06:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் முன்னாள் அமைச்சரை கதற விட்ட மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shantha-bandara-about-his-son-1785212806"></link>
            <id>https://tamilwin.com/article/shantha-bandara-about-his-son-1785212806</id>
            <summary type="text">கொழும்பில் சீன நாட்டவர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சீன நாட்டவர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

இந்நிலையில் தனது மகனான அனுத ஜனாதித் பண்டாரவிற்கு எதிராக எந்தவொரு சாட்சிகளும் இல்லை எனத் தனது சட்டத்தரணிகள் தெரிவித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நேற்று நீதிமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.</p><p> </p><h2><b> 

சட்ட நடவடிக்கை</b></h2><p>“என் மகன் மட்டுமல்ல, தவறு யார் செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a44dc7f-8d75-41f0-871b-a86d6c1b7404/26-6a68324f578ba.webp' /></p><p>ஆனால் கடந்த சில நாட்களாக பல பொய்யான செய்திகள் வெளிவருகின்றமை குறித்து மிகவும் வருத்தத்தில் உள்ளேன்.</p><p> 

எனினும் நீதிமன்றம் மீது எங்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. அதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் வந்துள்ளோம்.
</p><p>
எனது மகனுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்துவதற்கு முறையான சாட்சியங்கள் எதுவும் இருக்கவில்லை என எனது சட்டத்தரணிகள் என்னிடம் கூறினார்.
</p><p>
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இந்த வழக்கில் இருந்து நாம் விடுபடுவோம்.</p><p> பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கு எமது கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 
</p>]]></content>
            <updated>2026-07-28T11:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-jailed-for-89-days-in-australia-1785221608"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-jailed-for-89-days-in-australia-1785221608</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் - பிரிஸ்பேன் தொடருந்தில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் - பிரிஸ்பேன் தொடருந்தில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>குழந்தை பருவத்தில் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய சரணீஸ் சிவகுமார் மற்றும் பேட்லி மொஹினி என்பவர்கள் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி Cleveland வழித்தட தொடருந்தில் வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமராக்களில் பதிவாகியிருந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டமைக்காக மொஹினிக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><h2><b>இளைஞனுக்கு சிறைத்தண்டனை</b></h2><p>அத்துடன், குழப்பம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சிவகுமார் நேற்று தடுப்பு காவலில் இருந்தவாறே கிளிவ்லாண்ட் நீதிமன்றத்தில் வீடியோ ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b6ad47-83ca-48c8-bca8-a936b0735a66/26-6a68908900727.webp' /></p><p>தனியாகப் பயணம் செய்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மொஹினியும் நெருங்கிப் பேசியுள்ளனர். </p><p>அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இளைஞர்கள் இருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியுள்ளனர். </p><p>மூடப்படும் தொடருந்தின் கதவுகள் ஊடாக அவரை வெளியே இழுத்துச் சென்று அவர் இறங்குவதைத் தடுத்து, பின்னர் மற்றொரு பெட்டிக்கு சென்றுள்ளனர். </p><h3><b>நபர் மீது தாக்குதல்</b></h3><p>எனினும் அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சிவகுமார் அந்த நபரின் தலையில் கண்ணாடி போத்தலால் தாக்கியதில் இரத்தம் சிந்தத் தொடங்கியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f19b075b-8306-45cc-867a-f4e35de17c15/26-6a689089c65a4.webp' /></p><p>இந்தத் தாக்குதலால் கடும் அதிர்ச்சிக்குள்ளான பாதிக்கப்பட்ட நபர், அதன் பின்னர் குயின்ஸ்லாந்திலிருந்து வெளியேறிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. </p><p>இந்நிலையில், தான் தற்காப்புக்காகவே செயற்பட்டதாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், நீதிபதி டெபோரா வஸ்தா அவரது வாதத்தை நிராகரித்தார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/y-Gw6Xt3L4A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-28T11:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா முழுவதும் அவசர கால எச்சரிக்கை சேவை சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-warning-service-test-across-australia-1785235260"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-warning-service-test-across-australia-1785235260</id>
            <summary type="text">அவுஸ்திரேலியா முழுவதும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘AusAlert’ எனும் புதிய தேசிய எச்சரிக்கை
அமைப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியா முழுவதும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘AusAlert’ எனும் புதிய தேசிய எச்சரிக்கை
அமைப்பின் முதற்கட்டச் சோதனை நேற்று (27) மதியம் 2.00 மணிக்கு
நடைபெற்றது.
</p><p>
இதன் போது நாட்டின் பெரும்பான்மையான தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள்
மற்றும் டெப்ளட்களில் பலத்த சைரன் ஒலியுடன் கூடிய சோதனைச் செய்தி தோன்றியது.
</p><p>
காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது சுகாதார அவசர
நிலைகளின் போது மக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க இந்த புதிய
தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சோதனை</h2><p>
</p><p>
தற்போதைய குறுஞ்செய்தி முறையைப் போலன்றி, தொலைபேசி டவர்கள் மூலமாக நேரடியாகச்
சாதனங்களுக்கு இந்த எச்சரிக்கை ஒளிபரப்பப்படும்.
</p><p>
போன் 'Do Not Disturb' அல்லது 'Silent'&nbsp; இல் இருந்தாலும், சுமார் 10
வினாடிகளுக்கு உரத்த சைரன் ஒலிக்கும்.

மாநிலங்களுக்கு ஏற்ப மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தச் சோதனை
நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7168caae-e3a6-455b-9bf0-758f5bbd3ee6/26-6a6893d19c877.webp' /></p><p>
</p><p>
இது ஒரு சோதனையே என்பதால் பொதுமக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை,
திரையில் தோன்றும் செய்தியைப் படித்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டது.
</p><p>
குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டு இரகசியமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்கள், சைரன் ஒலியால் போன் இருப்பது வெளிப்படாமல் இருக்க சோதனை
நேரத்திற்கு முன்னதாகவே போனை அணைத்து வைக்குமாறு அல்லது 'Airplane Mode'-க்கு
மாற்றுமாறு தேசிய அவசர முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T11:35:16+00:00</updated>
        </entry>
    </feed>
