<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-31T02:24:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச அதிகாரி மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-government-officer-died-jaffna-holiday-duty-1788137548"></link>
            <id>https://tamilwin.com/article/female-government-officer-died-jaffna-holiday-duty-1788137548</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில் பங்கேற்பதற்காக உடுவில் பிரதேச செயலகமும் அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.</p><h2>மின் கசிவு</h2><p>இன்று போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3da1739c-f050-4de6-a457-181f5f01a781/26-6a94d0d9e17e3.webp' /></p><p>
</p><p>

இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புபட்ட நிலையில், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரையும், சக உத்தியோகத்தர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பற்ற மின் இணைப்பு அல்லது மின் கசிவே இந்த உயிரிழப்புக்குக் காரணமா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T02:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் பட்டதாரி யுவதியை கடத்திய காதலன்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-students-kidnapped-colombo-1788141106"></link>
            <id>https://tamilwin.com/article/university-students-kidnapped-colombo-1788141106</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச்சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச்சென்ற காதலனை கைது செய்ய&nbsp;இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>சந்தேகநபரான, அப்பெண்ணின் காதலனை கைது செய்வதற்காக, நாரஹேன்பிட்ட மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களால் நேற்று (30 ஆம் திகதி) இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>காரை நோக்கி துப்பாக்கிச்சூடு&nbsp;</h2><p>இதன்படி, நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef91a40b-06a5-4d9f-a16f-a17c54976805/26-6a94e063840a2.webp' /></p><p>
</p><p>
எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> 

இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே&nbsp; யுவதியின் காதலனால் கடத்தப்பட்டமை தெரியவந்திருந்தது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வெளியான காரணம்</span></p><p>யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நிலையில், அவர் கடத்தப்படுவதாக யுவதியின் தந்தை பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>இதன்படி, சந்தேகநபரை , கைது செய்வதற்காக, நாரஹேன்பிட்ட மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களால் நேற்று (30 ஆம் திகதி) இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p>இச்சம்பவம் தொடர்பாக குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T02:01:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அரியணை ஏற துடிக்கும் ராஜபக்ச அணி.. ரில்வின் சில்வாவின் கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-allaince-npp-government-tilwin-silva-1788136764"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-allaince-npp-government-tilwin-silva-1788136764</id>
            <summary type="text">பெரும் ஊழல்வாதிகளும் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களுமான ராஜபக்ச அணியினர்
மீண்டும் இந்த நாட்டின் அரியணை ஏறுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரும் ஊழல்வாதிகளும் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களுமான ராஜபக்ச அணியினர்
மீண்டும் இந்த நாட்டின் அரியணை ஏறுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க
மாட்டார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா
தெரிவித்தார்.
</p><p>
சிறந்த திட்டமிடலுடன் தற்போதைய அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
என்றும், வெளியகத் தாக்கங்களினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை
ஏற்றுக்கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள்
தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் உருவாக்கிய தேசிய மக்கள் சக்தி
அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது.</p><h2>பொருளாதார நிலை&nbsp;</h2><p> </p><p>எனினும், சகல
வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதை
ஏற்றுக்கொள்கின்றோம்.

வங்குரோத்து நிலையடைந்து வீழ்ச்சியடைந்த அரச கட்டமைப்புடனான அரசையே ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b8d6caa-bd83-4343-9ef5-fb5b163bf94a/26-6a94cd3e60e93.webp' /></p><p>
</p><p>
கடந்த காலங்களில் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் பாதாளக் குழுக்களுக்கும் அரச
அனுசரணை வழங்கப்பட்டிருந்ததுடன் செல்வந்தர்கள் எவ்வித அச்சமுமின்றி ஊழல்,
மோசடிகளில் ஈடுபட்டனர்.
</p><p>
தற்போது அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டு சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக
ஆக்கப்பட்டுள்ளது. பிரபுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த
விசேட சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள் இன்று கூட்டணியாக
ஒன்றிணைந்துள்ளனர்.</p><p> ஊழல், மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அது அவர்களின்
தனிப்பட்ட பிரச்சினையே தவிர தேசிய பிரச்சினை அல்ல.

அரச நிர்வாகக் கட்டமைப்பில் ஒருசில தரப்பினரிடம் குறைபாடுகள் காணப்படுவதை
அவதானிக்க முடிகின்றது.</p><p> கடந்த கால மோசடியான நிர்வாகக்மைப்புக்குப்
பழக்கப்பட்டவர்கள் குறித்தும் நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படும்." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T00:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் விரித்த காபட் விரிப்பில் மிக வேகமாக பயணிக்கும் அநுர!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-wickremesinghe-anura-government-rajitha-1788128918"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-wickremesinghe-anura-government-rajitha-1788128918</id>
            <summary type="text">இலங்கை மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர அரசு,
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரித்த
காபட் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர அரசு,
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரித்த
காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன
தெரிவித்தார்.
</p><p>
காலி நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டு
எதிர்க்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, நீதிபதிகளின்
ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கே அரசு முன்னுரிமை அளிக்கின்றது.</p><h2>நீதிபதிகளின் ஓய்வு வயது..&nbsp;</h2><p> </p><p>இதற்குச்
சட்டத்தரணிகள் சங்கங்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, புத்திஜீவிகள்
மற்றும் அரசின் உள்ளகத் தரப்பினர் கூட எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef4db43-3f4a-4f6b-b082-0be5087d0f1f/26-6a94b07e722f6.webp' /></p><p>
</p><p>
அமைச்சர் லால் காந்த போன்றவர்கள் கூறுவது போல் மாவட்ட செயலாளர்கள், நீதிபதிகள்
மற்றும் ஆளுநர்களை அரசே தேர்ந்தெடுக்கும் கம்யூனிஸ்ட் நாடுகளின் ஆட்சி
முறையைக் கொண்டுவரவே அநுர அரச தரப்பினர் முற்படுகின்றனர். </p><p>இதன் மூலம் காலி
மாநகர மற்றும் பிரதேச சபைகள் பெலவத்தையிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படும்
நிலைக்கு நாடு தள்ளப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றார். </p><p>ரணிலை விட அநுர வேகமாக சர்வதேச
நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நோக்கிச் செல்கின்றார். உலகில் எங்காவது ஒரு
சோசலிச அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இயங்கியது உண்டா?" என்றும்
அவர் கேள்வி எழுப்பினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து சூசகமான முறையில் போதைப்பொருள் விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-sell-drugs-to-students-in-vavuniya-arrested-1788128303"></link>
            <id>https://tamilwin.com/article/man-sell-drugs-to-students-in-vavuniya-arrested-1788128303</id>
            <summary type="text">வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று (30.08.2026)
குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கைது நடவடிக்கை&nbsp;</h2><p>கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள லேகியம்
விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, அங்கு சோதனை
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45346300-5fec-4b20-8348-b046362debe3/26-6a94ad35e3dac.webp' /></p><p>

இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400ற்கும் மேற்ப்பட்ட லேகியப்
பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் வியாபார நிலையத்தில் கடமையாற்றிய 20
வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மேலும், குறித்த லேகியம் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு
விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>இதனை தொடர்ந்து, விற்பனை நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுத் துறையால் மறைக்கப்பட்ட உண்மைகள்.. யாழில் சிறீதரன் எம்பி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-missing-persons-conference-sritharan-speech-1788127925"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-missing-persons-conference-sritharan-speech-1788127925</id>
            <summary type="text">நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது
சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான
நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என்று வலிந்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது
சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான
நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
சர்வதேச மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் நடத்தி வரும்
தொடர் போராட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதியுடன் 10 ஆண்டுகளை நிறைவு
செய்கின்றது. </p><p>இத்தனை ஆண்டு காலப் போராட்டப் பாதையில், "தங்கள் பிள்ளைகள்
நிச்சயம் திரும்பி வருவார்கள்" என்ற பெரும் கனவோடும் நீதிக்கான ஏக்கத்தோடும்
போராடிய 260 இற்கும் மேற்பட்ட தாய்மார்களும் தந்தையர்களும் தம் உயிரைப்
பறிகொடுத்துள்ளனர்.</p><h3>புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்..&nbsp;&nbsp;</h3><p>
</p><p>
நல்லிணக்க ஆணைக்குழு போன்ற அமைப்புகள் மூலமாக உண்மை கண்டறிய முயன்றபோது,
சாட்சியமளிக்கச் சென்ற மக்களை இலங்கை புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a1b843-3584-403b-a3e3-7bf1d132eed6/26-6a94ab9d14d61.webp' /></p><p>
வழியிலேயே கொட்டகைகளை அமைத்து மக்களைத் திசைதிருப்பி, சாட்சியம் அளிப்பதைத்
தடுத்து நிறுத்தினர். இதனால் மக்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாத அச்சச்
சூழ்நிலையிலேயே வாழ நேரிட்டதுடன், முழுமையான சாட்சியங்களை வெளிப்படையாக வழங்க
முடியாமலும் போனது. </p><p>இதன் காரணமாக, உள்நாட்டு விசாரணை மற்றும் நீதி வழங்கும்
முறைகள் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன.

உள்நாட்டில் நீதி மறுக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றம் மூலமாக மட்டுமே
தங்களுக்குப் பூரண நீதி கிடைக்க முடியும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி
வருகின்றனர்.</p><p>

2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
முதன்முதலில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டபோது, அமெரிக்கா
மிகப்பெரிய அளவில் ஆதரவளித்து உதவியது. </p><p>அன்றுமுதல் இன்றுவரை அப்பிரேரணைகள்
வீணாகிவிடாமல், நீதியைப் பெறுவதற்கான முயற்சியில் அமெரிக்க நாடு காட்டிவரும்
கரிசனையையும் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன்
நினைவு கூருகின்றோம்." என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:16:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற இரு கொடூர கொலைகள்.. பல வருடங்களுக்கு பிறகு இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்டனை விதித்துள்ளார்.
</p><p>
திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை
மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்.</p><h2>குற்றச்சாட்டு நிரூபிப்பு&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
குறித்த 09 நபர்களையும் சந்தேகநபர்களாக பெயர் குறிக்கப்பட்டு, மேல் நீதிமன்றில்
சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள்
இடம்பெற்று வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ef98676-cc5a-4e82-9101-b326019060e9/26-6a94598800977.webp' /></p><p> </p><p>இந்நிலையில், குறித்த வழக்கு நேற்றைய வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்து
கொள்ளப்பட்ட வேளை, 09ஆம் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபிக்கப்பட்டமையால், அவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, ஏனைய 08
சந்தேகநபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், 08 பேரையும் மன்று விடுவித்தது.</p><p>

அதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை
கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இளைஞன்
மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால்,
இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து, மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:03:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-mortar-shells-recovered-private-land-kinniya-1788125814"></link>
            <id>https://tamilwin.com/article/two-mortar-shells-recovered-private-land-kinniya-1788125814</id>
            <summary type="text">கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார்
காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

ஆலிம் வீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார்
காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
ஆலிம் வீதியில் அமைந்துள்ள குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக
அத்திவாரத்திற்கான நிலத்தைத் தோண்டியபோதே, இந்த இரு மோட்டார் குண்டுகளும்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
கிண்ணியா ஆலிம் வீதியைச் சேர்ந்த முகம்மட் ராபிக் முகம்மட் ரிபாஸ்
என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/227159bf-87bc-45de-bfb8-beaf12603ba4/26-6a94a3d3860c4.webp' /></p><p>

இதனையடுத்து, காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு
விரைந்த கிண்ணியா பொலிஸார், குண்டுகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (31)
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T21:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தையின் மோசமான செயல் - 8 வருடங்களாக போராடிய மகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-sexually-abused-his-daughter-1788102709"></link>
            <id>https://tamilwin.com/article/father-sexually-abused-his-daughter-1788102709</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. </p><p>

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>

தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeac3f49-1434-44a3-952f-15194a375326/26-6a94492793d0f.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய்
இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T20:41:20+00:00</updated>
        </entry>
    </feed>
