<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-20T07:21:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை! அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-split-within-npp-rumors-regarding-pm-1789887193"></link>
            <id>https://tamilwin.com/article/no-split-within-npp-rumors-regarding-pm-1789887193</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர்
சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும்
இல்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர்
சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும்
இல்லை எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.</p><p>

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது
என்றும், பின்னர் தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையே முரண்பாடுகள்
உருவாகியுள்ளன என்றும் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டன.</p><h2>புதிய வதந்திகள்</h2><p> எனினும், அவ்வாறான
எந்தவொரு நிலைமையும் எங்குமே இடம்பெறவில்லை. தற்போது பிரதமர் தொடர்பாகப் புதிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a810966-2c6f-4496-8daa-7fb21724b7c4/26-6aaf848a292db.webp' /></p><p>
</p><p>பிரதமருக்கு எதிராக ஜே.வி.பி. சூழ்ச்சி செய்வதாகக் கூறப்படுகின்றது. இவை
அனைத்தும் முற்றிலுமாக உண்மைக்குப் புறம்பான தகவல்களாகும்.
</p><p>
பைத்தியங்கள் பலவற்றைப் பேசலாம், குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால்,
வைத்தியர்கள் எதற்கும் குழம்பமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்தவர்களின் பெயரில் அஸ்வெசும பணம்..! ரூ.30 மில்லியன் மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/norwood-probe-sri-lanka-s-largest-aswesuma-fraud-1789885741"></link>
            <id>https://tamilwin.com/article/norwood-probe-sri-lanka-s-largest-aswesuma-fraud-1789885741</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு சுமார் 30 மில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தொகை உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடிகளில் மிகப்பெரியதாக இது அமையக்கூடும் என ஆங்கில வாராந்த பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>பாரிய மோசடி</h2><p>
</p><p>
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக, உயிரிழந்த வயோதிபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c16c16-a123-4866-8ec8-afa0499c4cbb/26-6aaf81fabcf20.webp' /></p><p>
</p><p>
நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய இந்த மோசடி தொடர்பில் இதுவரை 20 அரச ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால் சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோர்வூட் பிரதேச செயலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடியில் சுமார் 30 மில்லியன் ரூபாவும், தலவாக்கலை பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய சம்பவத்தில் சுமார் 2 மில்லியன் ரூபாவும் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;10 பேர் பணி நீக்கம்</h2><p>
</p><p>
நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு, நோர்வூட் சம்பவம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. எனினும், இதுவரை இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
</p><p>
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, நோர்வூட் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 18 அரச ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44727423-f910-4e9e-a56e-cd7ec17cbe2c/26-6aaf81fb6f3ce.webp' /></p><p>
</p><p>
அவர்களில் 10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நான்கு ஊழியர்களும் ஆறு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.
</p><p>
மேலும், இரண்டு பெண் அரச ஊழியர்கள் அரச சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பத்திரிக்கை&nbsp; செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு சுகாதாரத்துறையின் சவால்கள் குறித்து அமைச்சர் நளிந்தவுடன் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-northern-health-sector-nalintha-mp-1789886348"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-northern-health-sector-nalintha-mp-1789886348</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை
அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை
அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தலைமையிலான மாகாண அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்று(19.9.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.</p><p>இதன்போது, இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை
நிர்வகித்து வருவதுடன், மாவட்டப் பொது மருத்துவமனைகளும் மாகாண சபையின்
நிர்வாகத்துக்குட்பட்டே இயங்கி வருகின்றமை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக
எடுத்துரைக்கப்பட்டது.</p><h2>நிதி ஒதுக்கீடுகள்&nbsp;</h2><p> இதனைக் கருத்திற்கொண்டு, ஏனைய மாகாணங்களுடன்
ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு அதிகளவான மூலதன மற்றும்
பராமரிப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
குறிப்பாக, நிதி ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக
இல்லாத நிலை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதிகளவான
மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க
வேண்டியிருப்பதால் மாகாண சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நிதிச் சுமையும்
சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37702179-2656-4ad7-a998-84f05d31dd6c/26-6aaf800c0d6a4.webp' /></p><p>
</p><p>
மேலும், மருத்துவமனைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமல்,
மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான ஒதுக்கீடாக ஒருங்கிணைந்த முறையில் நிதி
வழங்கப்படுவதால் நடைமுறையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பிலும்
அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
</p><p>வடக்கு மாகாண சுகாதார சேவையின் தற்போதைய தேவைகள் மற்றும் நடைமுறைச்
சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது தொடர்பிலும், குறிப்பாக மேலதிக
நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் நிதி ஆணைக்குழுவுடன்
கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மருத்துவர் நளிந்த
ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:41:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் என்னால் பொறுப்பேற்க முடியாது! ரணில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-cannot-take-responsibility-if-the-country-ranil-1789885734"></link>
            <id>https://tamilwin.com/article/i-cannot-take-responsibility-if-the-country-ranil-1789885734</id>
            <summary type="text">&quot;நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல்
போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>"நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல்
போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள்
பொறுப்பெடுப்பீர்களா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், என்னால் இனி
நாட்டை பொறுப்பேற்க முடியாது. ஏனெனில் நான் தற்போது நாடாளுமன்றத்தில்
இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களால்
எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>நாட்டுக்குள் கலவரங்கள்&nbsp;</h2><p>

"அரசியல் செய்யும்போது அதிகளவான பொறுமை இருக்க வேண்டும். அப்போது தான்
தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியுமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d173665-295f-4722-bbb9-bddafff24f93/26-6aaf7fa03a6e2.webp' /></p><p> </p><p>ஆட்சி அதிகாரம் என்பது எப்போதும் ஒரே
மாதிரி இருக்கப்போவதில்லை.

அதிகாரம் கிடைக்கும்போது அதனை நாட்டுக்காக முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ள
வேண்டும். அதேநேரம், எப்போது வேண்டுமானாலும் எதிர்கட்சியில் இருப்பதற்கும்
தயாராக இருக்க வேண்டும்.</p><p> அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியைக்
கைப்பற்றுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

நாட்டுக்குள் கலவரங்கள் ஏற்பட்டு, நாடு முற்றாக வீழ்ச்சியடையும் போது ஆட்சியைப்
பொறுப்பேற்க யாருமே முன்வராத இக்கட்டான நிலையில் தான் நான் முன்வந்தேன். யாரும்
முன்வராவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் ஒன்று இருக்கப்போவதில்லை என்பதாலேயே
நாட்டை பொறுப்பேற்றேன்.</p><h2>இக்கட்டான நிலைமைகளில் அரசாங்கம்</h2><p>

இவ்வாறான இக்கட்டான நிலைமைகளில் அச்சப்பட்டுக்கொண்டு இருக்க முடியாது.
எவ்வாறாவது நாட்டை நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணத்துடனேயே
பொறுப்பேற்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9762fbc-478c-4d5b-9524-5bf9838cef0e/26-6aaf7fa0e34fa.webp' /></p><p>
</p><p>
ஜே.ஆர். ஜயவர்த்தன நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதுடன், நாட்டை
முன்னேற்றுவதற்காக அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை
எடுத்தார்.

அன்று ஜே.ஆர். பாதுகாத்து வந்த ஜனநாயகத்தை யாராவது இல்லாமலாக்க
முற்படுவார்களாகின், அதற்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். </p><p>அன்று
ஏகாதிபத்தியவாதத்துக்கு எதிராக ஜே.ஆர். நாடு பூராகவும் மக்களை ஒன்றிணைத்துச்
சத்தியாக்கிரகப் போராட்டங்களை மேற்கொண்டதைப் போன்று, தற்போதும் அவ்வாறானதொரு
நிலை ஏற்படுமாகின் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:39:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலைக்காக கொட்டும் மழையிலும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-seeks-release-of-anojan-1789884769"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-seeks-release-of-anojan-1789884769</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையை குறைத்து கருணை வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>

“மனிதாபிமான வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><h2>கொட்டும் மழை</h2><p>
</p><p>
கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62cc88b-cbc6-4a21-99cf-b930b9f6d953/26-6aaf7bcfc49db.webp' /></p><p>
</p><p>
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அவருக்கு கருணை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864</id>
            <summary type="text">புதிய இணைப்புமகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் &#039;சிவப்பு&#039; எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனவே மகாவலி ஆற்று பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.&nbsp;</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1ae49f-8eaa-4bde-b72a-cfbc97e155f0/26-6aaf512bc1da2.webp' /></p><p>

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T06:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடம்பர வீடுகளை கட்டித்தருவதாக பெருந்தொகை பணமோசடி - சிஐடியிடம் சிக்கிய பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-by-promising-to-build-houses-1789870247"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-by-promising-to-build-houses-1789870247</id>
            <summary type="text">இலகுவான கட்டண முறையில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி ஒரு தனியார் நிறுவனமொன்று பெருந்தொகை பணமோசடியை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலகுவான கட்டண முறையில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி ஒரு தனியார் நிறுவனமொன்று பெருந்தொகை பணமோசடியை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மிரிஹான சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

பணம் பெற்ற பின்னரும் வீடுகளை கட்டித்தராதது குறித்து அப்பிரிவினருக்கு வந்த 245 முறைப்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>நிதி மோசடிக்கு உடந்தை</h2><p>

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2929dfa1-6389-437a-bc5f-563a7f89984f/26-6aaf75f99ffc2.webp' /></p><p>

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்த 4 கார்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
30 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்களும் முறையே கஹவத்த மற்றும் கடுவெல பகுதியை சேர்ந்தவர்களாவர்.
</p><p>
இதற்கமைய, சந்தேகநபர்கள் நேற்று (19) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் 29ஆம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவுக்கு சிறீதரன் எம்பி அனுப்பியுள்ள அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sivarasa-anojan-sritharan-mp-president-anura-1789883113"></link>
            <id>https://tamilwin.com/article/sivarasa-anojan-sritharan-mp-president-anura-1789883113</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா
அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது
குடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா
அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது
குடும்பப் பின்னணியைக் கருத்திற்கொண்டு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க
இராஜதந்திர அழுத்தங்களை வழங்குமாறு நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியிடம் கடிதம்
மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
மத நிந்தனைக் குற்றச்சாட்டில் சவூதி நீதிமன்றத்தால் முன்னர் தண்டிக்கப்பட்ட
அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை
விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் ஜனாதிபதிக்கு இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.&nbsp;</p><p> அந்தக் கடிதத்தில், "சிவராசா அனோஜன் குற்ற நோக்கத்துடன் சவூதிக்குச் செல்லவில்லை. பெற்றோர்
சிவராசா மற்றும் யோகேஸ்வரி அடங்கிய குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப்
பகிர்ந்து, வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கத்துடனேயே அவர் அங்கு புலம்பெயர்
தொழிலாளராகப் பணியாற்றினார்.</p><h2>அனோஜன் விவகாரம்..&nbsp;</h2><p>
</p><p>
பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல்
ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில் இந்தக் குடும்பமும்
ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126b8a6c-f2ea-4403-922c-da3f056de2c0/26-6aaf73e01fc02.webp' /></p><p>

இவ்வாறான கடுமையான தண்டனை, ஏற்கனவே இன்னல்களை எதிர்கொண்டுள்ள ஒரு
குடும்பத்தின் எதிர்கால வாழ்வை முற்றாகச் சீர்குலைத்து மேலும் கீழ்நிலைக்குத்
தள்ளும் விளைவை ஏற்படுத்தும்.

சவூதி அரேபியாவின் மதப் பாரம்பரியம், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் சட்ட
ஆட்சியை முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
</p><p>
இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய
விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன. அந்த அறவிழுமியங்களின்
அடிப்படையில் அனோஜனின் வயது, குடும்பப் பின்னணி மற்றும் சமூக-பொருளாதாரச்
சூழலைக் கருத்திற்கொள்ள வேண்டும்.</p><p>

எனவே, தர்மம் மற்றும் அறத்தின் அடிப்படையில் இவற்றுக்குச் சாதகமான தீர்வொன்றை
வழங்குவதற்காகச் சவூதி அரேபிய அரசுடன் இணைந்து அவசியமான இராஜதந்திர
நடவடிக்கைகளையும் அழுத்தங்களையும் வழங்குமாறு உங்களைத் தயவுடன்
கேட்டுக்கொள்கின்றேன்." என்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T05:49:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் காலநிலை - இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notification-disaster-management-rain-situation-1789877761"></link>
            <id>https://tamilwin.com/article/notification-disaster-management-rain-situation-1789877761</id>
            <summary type="text">


நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதாகவும், 100 மி.மீ க்கு மேல் மழை பெய்யக்கூடும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரும், ஊடகப்பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.</p><h2>பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை</h2><p> </p><p>

எனவே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதால், இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83dbbbd2-25ff-47db-8f2c-369fac76a611/26-6aaf65e59c197.webp' /></p><p>

"நிலச்சரிவுக்கான அறிகுறிகளை சிறப்பு கவனத்துடன் கவனியுங்கள். உங்கள் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்திருந்தாலோ, தரையில் விரிசல்கள் இருந்தாலோ, பதிய மண் ஊற்றுகள் உருவானாலோ, அல்லது ஏற்கனவே உள்ள ஊற்றுகள் வற்றிப்போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் அந்த பகுதிகளை விட்டு தற்காலிகமாக வெளியேறுவது மிக அவசியம்." என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p> 




 </p>]]></content>
            <updated>2026-09-20T05:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று பெண்கள் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-thai-women-arrested-in-katunayake-1789873416"></link>
            <id>https://tamilwin.com/article/three-thai-women-arrested-in-katunayake-1789873416</id>
            <summary type="text">சட்டவிரோதமாக பாங்கொக்கிலிருந்து நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக பாங்கொக்கிலிருந்து நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களிடமிருந்து 5 கிலோகிராமிற்கும் அதிகமான 'குஷ்' மற்றும் 2.4 கிலோகிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளன.</p><h2>போதைப்பொருள்&nbsp;&nbsp;ஒழிப்புப்பிரிவினர்&nbsp;விசாரணை</h2><p>பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் (PNB) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் அத்துமீறி போதைப்பொருட்களை கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc75cc1-3d15-459c-b211-204967abfb79/26-6aaf6baa0a44b.webp' /></p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 31, 36 மற்றும் 38 ஆகிய வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் 
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T05:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்கள் எதிர்பார்த்து நிற்கும் அனோஜனின் விடுதலை.. தமிரசுக் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srineshan-mp-anojan-sivarasa-death-sentence-saudi-1789875338"></link>
            <id>https://tamilwin.com/article/srineshan-mp-anojan-sivarasa-death-sentence-saudi-1789875338</id>
            <summary type="text">அனோஜனின் விடுதலை அல்லது அவர்கள் தண்டனை குறைப்பு தொடர்பில் இஸ்லாமியமாக சகோதரர்கள்,
அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமான முறையில் பரிசோதனை செய்து அவருட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜனின் விடுதலை அல்லது அவர்கள் தண்டனை குறைப்பு தொடர்பில் இஸ்லாமியமாக சகோதரர்கள்,
அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமான முறையில் பரிசோதனை செய்து அவருடைய
விடுதலைக்கு அவருடைய தண்டனை குறைப்புக்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று (19.09.2026)
மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில், "இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவில் தொழில் நிமித்தமாக சென்று பணியாற்றிய
அம்பாறை மாவட்டம் நற்பட்டிமுளை கிராமத்தைச் சேர்ந்த சிவராஜா அனோஜனது நிலைமை
தொடர்பாக அண்மையில் வேதனையான தண்டனை தொடர்பான விடயம் பரவலாகியுள்ளது.</p><h2>முன்வைக்கப்படும் கோரிக்கை..&nbsp;</h2><p>
</p><p>


இந்த விடயத்தில் இலங்கை அரசு தனது முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது
எனது வேண்டுகோளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b595717e-8158-4d05-af65-51f6cabe0af2/26-6aaf56122d66e.webp' /></p><p> </p><p>அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து
உரையாடுவதற்கும், தனது மகனுக்கு நேர்ந்துள்ள விடயத்தில் இருந்து தண்டனையை
குறைப்பதற்கு அல்லது விடுவிப்பதற்கு உரிய இராஜதந்திர நடவடிக்கையை மனிதாபிமான
அடிப்படையில் செய்யுமாறு கோரி இந்த ஏற்கனவே ஜனாதிபதிக்கு நாம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெப்பமிட்டு எங்களது வேண்டுகோளை விடுத்து இருக்கின்றோம்.
அதற்குரிய பதில் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. </p><p>இருந்தபோதிலும் அனோஜனின் தண்டனை
தொடர்பில் வெளிய விவகார அமைச்சு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடத்திலும் இந்த விடயம் தொடர்பில் நாங்கள் தெரிவித்து இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c530dc3-9c25-468b-9f4a-0ab2ef2c2968/26-6aaf61b049733.webp' /></p><p> </p><p>அவர்களும் இந்த
விடயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர்கள்
கூறியிருக்கின்றார்கள் அதனை விரைவாக எடுக்க வேண்டும் என நாம் கேட்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம்,&nbsp;சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா
அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சு உடனடியாக உத்தியோகபூர்வமாக
உறுதிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அனோஜனின் விடுதலைக்காகத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவை சார்பில் சவூதி
அரேபிய தூதரக உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திப்பதற்கு நேரம் கோரவுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.</p><h6><b>மேலதிக தகவல் - ராகேஷ்&nbsp;</b></h6><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T04:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்து இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-was-cremated-is-alive-again-1789782914"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-was-cremated-is-alive-again-1789782914</id>
            <summary type="text">அனுராதபுரம் -&amp;nbsp;&amp;nbsp;கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் -&nbsp;&nbsp;கொக்காவெவ பொலிஸ் பிரிவில் இறந்துவிட்டதாக கருதி இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொருவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவமொன்று குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>குறித்த நபர்&nbsp;இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், சுமார் 02 மாதங்களின் பின்னர் திடீரென உயிருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.</p><p>குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியே சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் வராததால் அவரது மனைவி கொக்காவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h2>மீட்கப்பட்டுள்ள சடலம்&nbsp;&nbsp;</h2><p>இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஹபனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காப்பகப்பகுதியில் நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f87b5f9-7e2e-4673-b71d-0adb69fcdaaf/26-6aaf56d48ec32.webp' /></p><p> புத்தாண்டிற்கு மகன் வாங்கிக்கொடுத்த ஆடைகளுடன் அச்சடலத்தின் ஆடைகள் ஒத்துப்போனமையினால், சடலம் தனது கணவருடையது என எண்ணி மனைவி மற்றும் உறவினர்கள் தவறாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, ஓகஸ்ட் 31 ஆம் திகதி பொலன்னறுவையில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் தான சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இவ்வாறான பின்னணியில், குறித்த நபர் திடீரென தனது சகோதரியின் வீட்டை சென்றடைந்துள்ளார்.</p><p>இதன்போது அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து கொக்காவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இந்நிலையில், அடக்கம் செய்யப்பட்ட சடலம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T03:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது வீதியோர மீன் விற்பனைக்கு இறுதி எச்சரிக்கை: மீறினால் நீதிமன்ற நடவடிக்கை எனச் சுகாதாரப் பிரிவு எச்சரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-warning-roadside-fish-sales-health-dept-1789873483"></link>
            <id>https://tamilwin.com/article/final-warning-roadside-fish-sales-health-dept-1789873483</id>
            <summary type="text">பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும்
வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும்
வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொது வீதியோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுவது குறித்து இன்று (19)
அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக் கடுமையான எச்சரிக்கை அறிவித்தல்
வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஏற்கனவே சில வழக்குகள் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள
நிலையில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில்
வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு இன்று இறுதி சந்தர்ப்பமாக
எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e559d641-cde2-467c-8c89-afcbfc615c73/26-6aaf4fa7c76f5.webp' /></p><p>
</p><p>
இனிவரும் நாட்களில் சட்டத்தை மீறிப் பொது வீதியோரங்களில் மீன் விற்பனையில்
ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகத்
தயவுதாட்சணியமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, அனைத்து மீன் வியாபாரிகளும் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் சுகாதார
விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, பொதுச் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும்
பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள்
கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T03:15:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமடையும் காலநிலை - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு&amp;nbsp;தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.நுவரெலியா, காலி, களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு&nbsp;தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98a27f1-9ead-4a8d-8327-4584a5246bc2/26-6aaf4a777695b.webp' /></p><h2>பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை</h2><p>காலி மாவட்டத்தின் நாகொட</p><p>களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர</p><p>கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை</p><p>கேகாலை மாவட்டத்தின் தெரணியகல</p><p>இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T02:52:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-about-substandard-baby-diapers-1789870722"></link>
            <id>https://tamilwin.com/article/warning-about-substandard-baby-diapers-1789870722</id>
            <summary type="text">இலங்கையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்கள் குறித்து&amp;nbsp;நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.டயப்பர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்கள் குறித்து&nbsp;நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>டயப்பர்கள் பயன்படுத்தும்போது அவை கிழிவது மற்றும் மக்கிப்போவது தொடர்பாக நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய , நுகர்வோர் விவகார அதிகாரசபை சிறப்பு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.</p><h2>திடீர் சோதனைகள் </h2><p>
 

இந்த விசாரணைகளின் போது, கொட்டாவை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் உள்ள இரண்டு வணிக இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d77b14d-1a7e-48e8-9c63-eff153d3db6f/26-6aaf45e90b70e.webp' /></p><p>

 

இதன்போது, பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது இணையதள விவரங்களைக் குறிப்பிடாமல், 85ஆம் இலக்க கட்டளையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை மற்றும் மொத்தமாக விநியோகித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
 

குறித்த வழக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொட்டாவை கடையில் உள்ள நிறுவனத்திற்கு 10,000 ரூபாயும், புறக்கோட்டை கடையில் உள்ள நிறுவனத்திற்கு 25,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>முறைப்பாடுகளுக்கு...</h2><p>
</p><p>எனவே குழந்தை டயப்பர்கள் போன்ற சுகாதார பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது, பொதியில் குறிப்பிட்டுள்ள இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட தொடர்புடைய லேபிள் தகவல்களை பரிசீலிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbff5047-08bd-4755-a948-f654c3dc4737/26-6aaf45e9b3921.webp' /></p><p>
</p><p>இவற்றினை பயன்படுத்தும்போது கிழிதல் அல்லது வேறு ஏதேனும் தரக்குறைபாடுகள் ஏற்படுமாயின், அலுவலக நேரங்களில்1977 என்ற உடனடி அழைத்து முறைப்பாடு செய்யுமாறும் அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T02:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகளுக்கு சிறையில் சிறப்பு சலுகைகளா! விளக்கும் அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-special-security-for-politicians-in-prison-1789869772"></link>
            <id>https://tamilwin.com/article/no-special-security-for-politicians-in-prison-1789869772</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறைச்சாலையில் விசேட சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சிறையிலட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறைச்சாலையில் விசேட சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>சிறையிலடைக்கப்படும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு சிறப்புப் பாதுகாப்பினை வழங்குவதற்குச் சிறைச்சாலைகள் திணைக்களம் கடமைப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
சிறைச்சாலையிலுள்ள ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் பொதுவான பாதுகாப்பே அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19893c8c-9955-42d1-a32f-1d1c306d806d/26-6aaf3ece63bde.webp' /></p><p>
</p><p>அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களிலும் எந்தவித சிறப்புச் சலுகையோ அல்லது விசேட மாற்றங்களோ இருக்காது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>
அண்மைய நாட்களாகவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T02:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பினை சூழ எழுந்துள்ள அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/21-iraninan-ships-around-the-lankan-sea-1789869099"></link>
            <id>https://tamilwin.com/article/21-iraninan-ships-around-the-lankan-sea-1789869099</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பிற்கு அருகாமையில் 21 ஈரானிய கப்பல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள பதற்றமான சூழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பிற்கு அருகாமையில் 21 ஈரானிய கப்பல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் 47 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
அவற்றில் 21 கப்பல்கள் ஈரானுக்குச் சொந்தமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சர்வதேச கடல் பகுதியில் 21 ஈரானிய கப்பல்கள்</h2><p> </p><p>
'MarineTraffic.com' இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், மாத்தறையிலிருந்து காலி, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு வரையிலான இலங்கையை அண்டிய சர்வதேச கடல் பகுதியில் இந்த 21 ஈரானிய கப்பல்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/072bf828-085b-4366-b7a9-ffdac9a818d5/26-6aaf3c312cd4a.webp' /></p><p> </p><p>
ஸ்ட்ரீம் (Stream), ஹால்டி (Halti), ட்ரீம் II (Dream II), சீ க்ளிஃப் (Sea Cliff), ஸ்னோ (Snow), ஹெல்ம் (Helm), டைமண்ட் II (Diamond II), டீப் சீ (Deep Sea), டினோ I (Dino I), ஹெர்பி (Herby), செவின் (Sevin), ஆம்பர் (Amber), ஹென்னா (Henna), ஹியூஜ் (Huge), டோர் (Dore), சோனியா I (Sonia I), பெலிசிட்டி (Felicity), டியூன் (Dune), ஹீரோ II (Hero II), டெய்ஸி (Daisy) மற்றும் ஷிபா (Shiba) ஆகிய ஈரானிய கப்பல்களே இவ்வாறு இலங்கையைச் சுற்றியுள்ள சர்வதேச கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>இந்த ஈரானிய கப்பல்கள் கடந்த ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 
மேலும், இலங்கை அருகே நிறுத்தப்பட்டுள்ள இந்த அனைத்து ஈரானிய கப்பல்களும் அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட கப்பல்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>ஏற்கனவே இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T01:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-warns-about-loan-repayment-1789868450"></link>
            <id>https://tamilwin.com/article/imf-warns-about-loan-repayment-1789868450</id>
            <summary type="text">இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும், அது தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும், அது தொடர்பான ஆபத்துக்கள் இன்னும் அதிக மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>
அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்துடன் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நிறைவடையும் போதும் இந்த அதிக ஆபத்துள்ள நிலைமை நீடிக்கும் என நாணய நிதியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>வெளியிடப்பட்ட அறிக்கை</h2><p> </p><p>
கடந்த 2026 மே 28 அன்று இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று வாரியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1790b61-3920-4a90-9fd1-f99e69801e3b/26-6aaf39a966324.webp' /></p><p>
</p><p>கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளபோதிலும் கடன் நிலைபேறுதன்மை குறித்த ஆபத்து அதிகமாகவே உள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.</p><h2>&nbsp;மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி</h2><p> </p><p>
இந்த பின்னணியில், 2027ஆம் ஆண்டில் இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும் என பொருளாதார மற்றும் நிதித் துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8514075d-1036-457e-a86f-d4adc72438f1/26-6aaf5c2d6ecf7.webp' /></p><p> </p><p>
இது குறித்து அரசாங்கத்தின் உள்மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் போதிலும், 2027 இல் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய கடன் வேலைத்திட்டத்திற்குச் செல்வது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
இதேவேளை, நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. </p><p>இதன்போது, நாடு அடைந்துள்ள பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் சுமையைக் குறைக்கவும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என ஜனாதிபதி பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T01:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 24இல் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள சகல பாதைகளையும் முற்றுகையிட அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-to-blockade-all-roads-parliament-september-24-1789866743"></link>
            <id>https://tamilwin.com/article/call-to-blockade-all-roads-parliament-september-24-1789866743</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் நீதித்துறையைத் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் அரசின் முயற்சியை முறியடிப்பதற்காக,
எதிர்வரும் 24ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் நீதித்துறையைத் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் அரசின் முயற்சியை முறியடிப்பதற்காக,
எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பிரதான
பாதைகளையும் முற்றுகையிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய ஒருங்கிணைந்த
தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆனந்த பாலித அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று(19.09.2026)ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><h2>சாதாரண பொதுமக்களுக்கான சிவில் பாதுகாப்பு</h2><p>மேலும் தெரிவித்ததாவது:-"அரசு தனது ஊழல்வாதிகளைப் பாதுகாக்கவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும்
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்ற முயல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d350c6b-f014-4029-bcbf-0d15a1cc0da1/26-6aaf3656ab267.webp' /></p><p>

மக்கள் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு
பெரும்பான்மைக்கு மேலாக இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்பட
வேண்டும்.
</p><p>
இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும்
நாடாளுமன்றத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதே செப்டெம்பர் 24ஆம்
திகதி நடக்கவுள்ள போராட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p>
இதற்காகச் சட்டத்தரணிகள் சங்கம், 54 தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள்
அனைவரும் திரண்டு வர வேண்டும்.</p><p>

நாட்டில் பாதாள உலகக் குற்றங்களும் போதைப்பொருள் புழக்கமும் பாடசாலைகள் வரை
ஊடுருவியுள்ள நிலையில், சாதாரண பொதுமக்களுக்கான சிவில் பாதுகாப்பு முற்றாகச்
சீர்குலைந்துள்ளது.</p><h2>குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல்</h2><p>அண்மையில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இரு அப்பாவிச் சிறுவர்கள் இரவில்
உறங்கிக்கொண்டிருந்தபோது கொடூரமாகக் கொல்லப்பட்ட போதிலும், அரசு அது குறித்து
எவ்வித அனுதாபமும் தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446b9139-1b73-447f-aecd-4de6af0420d1/26-6aaf3657628d4.webp' /></p><p> பாதாள உலகத்தையும் குற்றங்களையும்
ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று குற்றச் செயல்களைக்
கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
</p><p>
இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு
விடுக்கப்படவில்லை. இந்தியா மற்றும் சீனாவிடம் பெருமளவிலான கடன்களைப்
பெற்றுள்ள போதிலும், இவ்வாறான சர்வதேச மாநாடுகளில் இலங்கை புறக்கணிக்கப்படுவது
தற்போதைய அரசுக்குச் சர்வதேச அளவில் எவ்வித இராஜதந்திர அங்கீகாரமும் இல்லை
என்பதையே காட்டுகின்றது.
</p><p>
மேலும், எரிபொருள் விலைச்சூத்திரத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாமல் கனிம
எண்ணெய் கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ள போதிலும்,
புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்காமல், திருகோணமலை தொட்டிகளையும்
வெளிநாடுகளுக்கு வழங்கிவிட்டு மீண்டும் சட்டவிரோதமான முறையில் எரிபொருள்
விலையை உயர்த்த அரசு ஆயத்தமாகி வருகின்றது" என்றும் குறிப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-20T01:27:12+00:00</updated>
        </entry>
    </feed>
