<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-25T22:47:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுப் பொய் : பிரேம்நாத் சி தொலவத்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/false-allegations-against-the-bar-association-1785017749"></link>
            <id>https://tamilwin.com/article/false-allegations-against-the-bar-association-1785017749</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும்
கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும்
பொய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும்
கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும்
பொய்யானவை என்று தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த, தைரியமிருந்தால்
இக்குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து பகிரங்கமாகக் கூறுமாறும்
சவால் விடுத்தார்.
</p><p>
கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் முன்மொழிவுக்கு இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது.</p><p></p><h2>நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறை</h2><p>
</p><p>இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் ஒன்றைப்
போட்டுக்கொண்டு, மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப்
போட்டியிடுவதற்காகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இவ்வாறு
செயற்படுகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரால் நாடாளுமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
</p><p>
இத்தகையக் கூற்றுக்கள் மிகவும் வேடிக்கையானவை. நீதியரசர்களின் பதவிக் காலத்தை
அதிகரிக்கும் நடவடிக்கைக்கான எதிர்ப்பானது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்
தலைவரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. மாறாக, களுத்துறை, கொழும்பு உள்ளிட்ட
பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சட்டச் சமூகமும்
ஒன்றிணைந்தே இதற்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8738a75d-2428-4bb1-b3d1-1b809834d304/26-6a65359776ea8.webp' /></p><p>
</p><p>
அத்துடன், அரசின் இந்தத் தீர்மானத்துக்கு நீதிபதிகள் சங்கமும்
உத்தியோகபூர்வமாக எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளது. </p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்
தலைவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவே எதிர்ப்பை வெளியிடுகின்றார்
என்றால், நீதிபதிகள் சங்கத்தில் உள்ள எந்த நீதிபதி பதவி விலகி மாகாண சபைத்
தேர்தலில் போட்டியிடப் போகின்றார்?

நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்களைப் பரப்பாமல்,
இக்குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாகக் கூறுமாறு நான்
சவால் விடுக்கின்றேன்.</p><p> இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிராந்திய சட்டத்தரணிகள்
சங்கங்கள் மற்றும் சர்வதேச சுயாதீன அமைப்புகள் அனைத்தும் அரசியல்
உள்நோக்கத்துக்காக அன்றி, நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறைச்
சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவே குரல் கொடுத்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T22:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட கற்றாழை நிறுவன பணியாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9-employees-of-the-aloe-vera-company-remanded-1785012938"></link>
            <id>https://tamilwin.com/article/9-employees-of-the-aloe-vera-company-remanded-1785012938</id>
            <summary type="text">வனவளத்திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கடமைகளுக்கு
இடையூறு விளைவித்த 9 கற்றாழை நிறுவன பணியாளர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவளத்திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கடமைகளுக்கு
இடையூறு விளைவித்த 9 கற்றாழை நிறுவன பணியாளர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான்
எஸ்.சிவபாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.</p><p>நேற்றுமுன்தினம்(24)கிளிநொச்சி அக்கராயன்
குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் கண்ணகைபுரம் பகுதியில் கற்றாழை
செய்கை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கும் கிராமிய இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட
வாய்த்தக்கம் கைகலப்பாக மாறியிருந்தது.</p><p>இந்தநிலையில் குறித்த பகுதிக்கு
வனவளத்திணைக்களத்தினரும் சென்றிருந்த நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ்
விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>இதன்போது 09சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டிருந்தனர்.ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் 09சந்தேக நபர்களையும் அக்கராயன் குளம் பொலிஸார் நேற்று(25) நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.</p><p>சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி
விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையாகி இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3840e672-e14d-4782-9846-881868204a05/26-6a6524356cda8.webp' /></p><p> </p><p>குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்றில் சந்தேக நபர்களை முற்படுத்திய நிலையில்
எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T21:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உடனடியாக பொதுத் தேர்தல்! புதிய பிரதமரின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-general-election-in-britain-1785010270"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-general-election-in-britain-1785010270</id>
            <summary type="text">உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். </p><p>

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், தற்போது நாட்டைச் சிறப்பாக இயங்கச் செய்வதே எங்களுடைய மிகப்பெரிய முன்னுரிமையாகும். இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்தினால் அந்த முக்கியமான பணிகள் தாமதமாகும் வாய்ப்புக்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொதுத் தேர்தல் இப்போதில்லை..</h2><p> 

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றார்.
</p><p>
இந்த நிலையில், புதிய பிரதமர் உனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏனைய கட்சிகள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab2ae4e-d886-4b20-ab29-ea1034279188/26-6a65185fcdb5e.webp' /></p><p>

இது தொடர்பில் பதிலளித்த புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், “நாங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம். கடந்த 2024ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது. </p><p>

அதையே நானும் பின்பற்றுகின்றேன். அதற்குள் எனது கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் முன்னெடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/k7lBZ1lnYto" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-25T20:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warned-tamil-people-in-london-1784985953"></link>
            <id>https://tamilwin.com/article/police-warned-tamil-people-in-london-1784985953</id>
            <summary type="text">பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர்.</p><p> 

திருட்டு சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உட்பட பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இழந்துள்ளனர்.</p><p></p><h2><b> திருட்டு சம்பவங்கள்</b></h2><p>இவ்வாறான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30df7e02-9b25-4915-9e6f-9a6e150aaba7/26-6a64bead2c331.webp' /></p><p>இந்நிலையில் லண்டனின் ஈலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
</p><p>
வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், அங்கு யாரும் இல்லாத சமயங்களில் உள்நுழைந்து கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><b> 

முக்கியமான வழிமுறை</b></h3><p>பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி, வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02b0380-35fd-486b-816a-3bc2f934b4e0/26-6a64beadf3bf9.webp' /></p><p>திருட்டுச் சம்பவங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T20:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிணைத்தொகை - அபராதம் செலுத்த பணமின்றி சிறையில் வாடும் 3 ஆயிரம் கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-languishing-in-jail-without-paying-fines-1785005953"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-languishing-in-jail-without-paying-fines-1785005953</id>
            <summary type="text">தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த முடியாமலும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றமை தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த நிலைமை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
திரட்டப்பட்ட தகவல்களின்படி, 28 சிறைகளில் 1,940 கைதிகள் அபராதம் செலுத்த முடியாததாலும், 21 சிறைச்சாலைகளில் 1,431 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாததாலும் வாடி வருகின்றனர்.</p><p></p><h2>ஜனாதிபதியின் பொது மன்னிப்பு&nbsp;</h2><p> </p><p>விடுதலை பெறமுடியாத நிலையில், கடுமையான அழுத்தத்தில் இருப்பவர்களே சிறைச்சாலைப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பிணை வழங்கப்பட்ட பிறகு ஐந்து மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 325 ஆகும். கடந்த ஆண்டு நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள 21 சிறைச்சாலைகளில் இந்த நிலை காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17afe90e-b689-402f-8c68-2b3901ee1a5d/26-6a650defa1cea.webp' /></p><p>
இவ்வாறாக எந்தக் காரணமும் இன்றி சிறையில் இருக்கும் மக்களின் உணவு மற்றும் பிற வசதிகளுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியுள்ளது என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
</p><p>
நிதி வசதியின்மை, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இயலாமை மற்றும் பிணை வழங்க உறவினர்கள் இல்லாதது ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்கள் என கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bf941f2-df7f-474f-b9b2-13cd0430cb75/26-6a650df053295.webp' /></p><p> </p><p>இது குறித்துக் கேட்டபோது, ​​இதுபோன்ற சூழ்நிலைகள் பதிவாகி வருவதாகவும்இ தீர்வுகளைக் கண்டறிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், இத்தகைய கைதிகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படும் என்றும்&nbsp; ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படும்போது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T19:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியைச் சந்திக்க நேர ஒதுக்கீடு கோரும் தமிழ்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-tamil-speaking-parties-request-meet-anura-1785006278"></link>
            <id>https://tamilwin.com/article/six-tamil-speaking-parties-request-meet-anura-1785006278</id>
            <summary type="text">இந்த மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய
விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும்
வலியுறுத்தியுள்ளன.
</p><p>
இதற்கமைய, மேற்படி கட்சிகள் தத்தமது சுயாதீனம், அரசியல் நிலைப்பாடுகள் மற்றும்
கொள்கைகளைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுவான இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில்
தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட
இணக்கம் தெரிவித்துள்ளன.
</p><p>
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
அத்துடன், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாட இந்தக்
கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஜனாதிபதியிடம் நேர ஒதுக்கீடும்
கோரப்பட்டுள்ளது.</p><p>

ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரையும், இலங்கையில்
உள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவும்
அந்தக் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363cb93a-b2fa-4a84-ad18-93a0e655fbaa/26-6a650954dda3e.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் இந்த விடயங்கள் தொடர்பாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, ஜனநாயக
ரீதியிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஊடாக பரந்த இணக்கப்பாட்டை உருவாக்க
முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
</p><p>
தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என நம்பிக்கை
வெளியிட்டுள்ள அந்தக் கட்சிகள், இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தொடர்ந்து
ஒன்றிணைந்து செயற்பட்டு நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல்
தீர்வை நோக்கிப் பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T19:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : 35 பேர் பலி - 30 பேர் காயம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/syria-bus-accident-today-1785005035"></link>
            <id>https://tamilwin.com/article/syria-bus-accident-today-1785005035</id>
            <summary type="text">சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35
பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்து கிழக்கு சிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35
பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர்.
</p><p>
இந்த விபத்து கிழக்கு சிரியாவையும் தலைநகரையும் இணைக்கும் முக்கிய
நெடுஞ்சாலையான 'டீய்ர் அல் சூர் - டமாஸ்கஸ்' வீதியில், அல்-சுக்னா மற்றும்
பால்மைரா ஆகிய இடங்களுக்கு இடையே நேற்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பத் தரம் குறைவு&nbsp;</h2><p>
</p><p>
விபத்துக்குள்ளான ஒரு பேருந்தில் சிரிய உள்நாட்டு பாதுகாப்புப் படை
வீரர்களும், மற்றொரு பேருந்தில் சாதாரண பொதுமக்களும் பயணம் செய்ததாக சிரிய
உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e667c2c1-99f0-4712-8828-de9a7b6cf0db/26-6a6503ed45631.webp' /></p><p>
</p><p>
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக அம்பியூலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>
</p><p>மேலும், காயமடைந்தவர்களை விரைவாக ஹோமரா இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல
பல உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான 'சானா'
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc87092-e9bd-4647-b80c-912111fd54d1/26-6a6503ededfc2.webp' /></p><p>
</p><p>
சிரியாவில் நடந்த நீண்டகால உள்நாட்டுப் போரின் காரணமாக அங்குள்ள
உள்கட்டமைப்புகள் மற்றும் வீதிகள் சீரழிந்து காணப்படுவதால், இந்த
நெடுஞ்சாலையில் பாதுகாப்புத் தரம் மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜுலை நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-commemoration-held-emotion-in-jaffna-1785000872"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-commemoration-held-emotion-in-jaffna-1785000872</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25.7.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25.7.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்
உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தலானது
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இதன்போது ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் நினைவுரைகள் இடம்பெற்றன.</p><p></p><h2>நினைவேந்தல்</h2><p>
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், குரல்
அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன், வேலன்
சுவாமிகள், ஜெபரட்ணம் அடிகளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்
பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர்,
பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், படுகொலை
செய்யப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசியம் சார் செயற்பாட்டாளர்கள் மற்றும்
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03f8aadd-5ffb-41b5-968d-bf9c1a58dd1b/26-6a64f3b2b6094.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவுக்கு புதிய சிக்கலா! அடிக்கடி வெளிநாடு சென்று வந்த முக்கியஸ்தர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-cid-law-and-order-namal-1785002637"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-cid-law-and-order-namal-1785002637</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய சட்டநடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.அத்தோடு, கோட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய சட்டநடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.</p><p>அத்தோடு, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒரு சம்பள மற்றும் அரச நிதி தொடர்பான விவகாரம் தற்போது மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இந்தநிலையிலே,&nbsp;கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் மாலக்க சந்திரதாஸ் என்பவர் கொழும்பு மத்திய புலனாய்வுப்பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.</p><p>முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தொடர்பான சம்பவம் குறித்து சிஐடியினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.</p><p>அத்தோடு, கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில்&nbsp; சுகீஸ்வர பண்டார அடிக்கடி சீனா சென்று வந்துள்ளதாகவும் அந்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்த வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ii4CdKrNkJE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-area-1784992488"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-area-1784992488</id>
            <summary type="text">புதிய இணைப்புபெல்லன்வில பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பெல்லன்வில பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் நவகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><b>மேலதிக தகவல்-அஷ்ரப் அலி</b></p><h2>உயிரிழப்பு</h2><p>களுபோவில மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>துப்பாக்கிச்சூட்டில் 55 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு- பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக&nbsp;பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed98a2c0-9df8-419c-9af4-d3d671702bf3/26-6a64d4b4846ed.webp' /></p><p>இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>மேலதிக தகவல்-ராகேஷ்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிரிஸ்வெவ காட்டுக்குள் விறகு சேகரிக்கச் சென்ற மூவர் கைது: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-arrested-for-collecting-firewood-in-miriswewa-1784999663"></link>
            <id>https://tamilwin.com/article/3-arrested-for-collecting-firewood-in-miriswewa-1784999663</id>
            <summary type="text">மிரிஸ்வெவ காட்டுப் பகுதிக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில்
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிரிஸ்வெவ காட்டுப் பகுதிக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில்
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​</p><p>திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்வெவ காட்டுப் பகுதியில்,
வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட
அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

​</p><p>யுத்த காலத்திற்கு முன்னர் தங்களது மூதாதையர்கள் மிரிஸ்வெவ மற்றும்
புளியங்குளம் ஆகிய பகுதிகளில் விவசாயம் செய்து வந்ததாகப் பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
</p><p>
இந்தக் காணிகளை மீண்டும் தங்களுக்கு மீட்டுத் தருமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கை
விடுத்து வருகின்ற போதிலும், வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களை
அப்பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23a68c6c-fe0a-4f29-aad6-ac17f081bad5/26-6a64eef201b28.webp' /></p><p>பொதுமக்கள் வருடா வருடம் அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த
போதிலும், திணைக்கள அதிகாரிகள் அவர்களை அச்சுறுத்தி, அவர்கள் மீது வழக்குத்
தாக்கல் செய்து நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதாக அப்பாவி மக்கள்
வேதனை வெளியிடுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் யாரும் தங்கவில்லை! ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-outsiders-staying-at-the-presidential-palace-1784999439"></link>
            <id>https://tamilwin.com/article/no-outsiders-staying-at-the-presidential-palace-1784999439</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.</p><h2>உத்தியோகபூர்வ அறிக்கை</h2><p>

'2025 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் சுமார் 3,089 பேரளவிலான பல்வேறு நபர்கள் தங்கியிருந்தனர்' என செய்தியொன்று வெளியாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fee928d-9fbc-484e-87aa-750193f3db30/26-6a64ee10ca2f6.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் குறித்த செய்தியை முற்றிலும் நிராகரித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகங்களில் உள்ள ஏனைய கட்டிடங்களில் பாதுகாப்புப் பிரிவினர், ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளே தமது உத்தியோகபூர்வ தேவைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்த அதிகாரிகளில் எவரும் ஜனாதிபதி மாளிகைகளைத் தங்குவதற்காகப் பயன்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:10:56+00:00</updated>
        </entry>
    </feed>
