<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-01T20:25:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-tension-sri-lanka-police-curfew-1785608188"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-tension-sri-lanka-police-curfew-1785608188</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை தொடர்ந்து, ராகம பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை தொடர்ந்து, ராகம பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் அங்கு, பெல் 412 ரக விமானத்தையும் ஆளில்லா விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தி&nbsp;நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது 30இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.&nbsp;</p><p>சிறையில் ஏற்பட்ட வன்முறையின் போது&nbsp;பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் நிலைமை கைமீறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், தற்போது&nbsp;மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>இச்சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகு பார்வை நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hkhN7_whyck" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-01T19:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்முறை எத்தனை உயிர்கள்..! சிறைச்சாலை பரபரப்புக்கு மத்தியில் சற்றுமுன் நாமல் வெளியிட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-questions-mahara-prison-unrest-1785611754"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-questions-mahara-prison-unrest-1785611754</id>
            <summary type="text">நாட்டில் மற்றொரு சிறைக் கலவரம், இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் மற்றொரு சிறைக் கலவரம், இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் சற்று முன்னர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சில வாரங்களுக்குள் நடக்கும் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இது. </p><p>இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் பெரும் அழுத்தத்தில் இருக்கும் சிறை அமைப்பின் விளைவாகும்.</p><p>

இது இனி ஒரு தனிப்பட்ட நிகழ்வைப் பற்றியது அல்ல. இது மோசமான நிர்வாகம், தலைமைத்துவமின்மை மற்றும் சீரழிய அனுமதிக்கப்பட்ட சிறை அமைப்பைப் பற்றியது.</p><p></p><h2>முக்கிய பதவி&nbsp;</h2><p> </p><p>கண்முன்னே நெருக்கடி நிகழும் போதிலும், சிறைத்துறை இன்றும் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஆணையர் ஜெனரல் இல்லாமல் தொடர்கிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Another prison unrest. how many lives this time?<br><br>This is the second major prison disturbance in a matter of weeks. It is no longer an isolated incident. It is the result of poor management, neglegence, and a prison system that is under immense strain.<br><br>This is no longer about…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2083608646362296478?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இந்த முக்கியமான பதவி ஏன் இன்னும் முறையாக நிரப்பப்படவில்லை?

கூடுதல் பாதுகாப்பைப் பணியமர்த்துவது ஒரு நாளுக்கு நிலைமையைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அது சிக்கலைத் தீர்க்காது. </p><p>நெரிசல், போதுமான வசதியின்மை, மோசமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அர்த்தமுள்ள மறுவாழ்வு இல்லாமை ஆகியவை அவசரக் கவனத்தைக் கோருகின்றன.</p><p>

சிறைத் தண்டனை ஒருவரின் சுதந்திரத்தைப் பறிக்கிறது, அவரது கண்ணியத்தை அல்ல. அரசாங்கம் தற்காலிகத் தீர்வுகளைக் கைவிட்டு, நிறுவன ரீதியான தோல்வியின் தெளிவான அறிகுறிகளைக் காட்டும் சிறை அமைப்பைச் சரிசெய்யத் தொடங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T19:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்கு முன் குவிந்த கைதிகளின் பெற்றோர் - பாதுகாப்பு அதிகாரிகளிடம் மன்றாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-riot-prisoners-parents-reguest-1785610803"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-riot-prisoners-parents-reguest-1785610803</id>
            <summary type="text">பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மஹர சிறை வளாகத்திற்கு வெளியே கைதிகளின் பெற்றோர் கூடியுள்ளனர்.&amp;nbsp;முன்வைக்கும் கோரிக்கை..வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மஹர சிறை வளாகத்திற்கு வெளியே கைதிகளின் பெற்றோர் கூடியுள்ளனர்.&nbsp;</p><h2>முன்வைக்கும் கோரிக்கை..</h2><p>விரக்தியடைந்த பெற்றோர்கள் பாதுகாப்புப் படையினரிடம் தங்களது பிள்ளைகளை காப்பாற்றுமாறு மன்றாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>

சிறைக்கு வெளியே நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், "ஐயா, தயவுசெய்து எங்கள் பிள்ளைகளை அவர்கள் கொன்றுவிட அனுமதிக்காதீர்கள்" என்று உணர்ச்சிவசப்பட்ட பெற்றோர்கள் பாதுகாப்புப் படையினரிடம் மன்றாடியுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0OZU82G3o28" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T19:05:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக்கு விரைந்த பாதுகாப்பு செயலாளர்.. கண்ணீர்ப்புகை வாகனங்களும் வரவழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-issue-high-security-stf-police-1785610250"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-issue-high-security-stf-police-1785610250</id>
            <summary type="text">மஹர சிறை வளாகத்தில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.&amp;nbsp;கண்ணீர்ப்புகை வாகனங்கள்மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறை வளாகத்தில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2>&nbsp;கண்ணீர்ப்புகை வாகனங்கள்</h2><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6702e762-fe28-4b78-a319-c080d3872467/26-6a6e4eb1b624d.webp' /></p><p>
</p><p>அதே நேரத்தில், மீட்பு நடவடிக்கை தொடர்வதால், அதிக கவசங்கள் கொண்ட கண்ணீர்ப்புகை வாகனங்கள் சிறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><p>தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகள் இன்னும் மேலதிக விபரங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T18:54:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அதிரடி போக்குவரத்துச் சோதனை - 187 வழக்குகள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/akkaraipattu-traffic-crackdown-187-cases-filed-1785599535"></link>
            <id>https://tamilwin.com/article/akkaraipattu-traffic-crackdown-187-cases-filed-1785599535</id>
            <summary type="text">அக்கரைப்பற்று பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது 187 போக்குவரத்து வழக்குகள்
பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 23 மோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது 187 போக்குவரத்து வழக்குகள்
பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 23 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன.
</p><p>இந்த அதிரடி போக்குவரத்து சோதனை நடவடிக்கையானது நேற்றைய தினம்(31.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>போக்குவரத்து சோதனை நடவடிக்கை</h2><p>
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் வழிகாட்டலில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் தந்தநாராயணவின்
நெறிப்படுத்தலிலும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில்
திசாநாயக்க ஒத்துழைப்பிலும் "போக்குவரத்துச் சட்டத்தை வலுப்படுத்தும் விசேட
பணி" என்ற பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d487d45-6bc8-48c9-b629-1284700d5e0d/26-6a6e1d711bc75.webp' /></p><p>நேற்று மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்திட்டத்தில், அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
அக்கரைப்பற்று, இறக்காமம், சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், கல்முனை,
சாய்ந்தமருது, பெரியநீலாவணை மற்றும் சவளக்கடை ஆகிய பொலிஸ் நிலையங்களைச்
சேர்ந்த 82 போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேசங்களை மையப்படுத்திய இந்தச் சோதனையின் போது தலைக்கவசம் அணியாமை, மதுபோதையில் வாகனம்
செலுத்துதல், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல், சாரதி
அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், வீதி ஒழுங்கு மீறல், சமிக்ஞை
விளக்குகள் இன்றிப் பயணித்தல், வீதிச் சமிக்ஞைகளைப் பின்பற்றாமை, ஏனைய
போக்குவரத்து மீறல்கள் போன்றவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p></p><h2>போக்குவரத்து விதிமீறல்</h2><p>


இந்த விசேட நடவடிக்கையின் போது பொதுமக்கள் பலரும் பொலிஸ் உத்தியோகத்தர்களை
நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்ததுடன், விபத்துகளைத் தடுக்கும்
பொருட்டு இவ்வாறான விசேட சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்
கோரிக்கை விடுத்துள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவான் தந்தநாராயண
தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7445ac0-ee14-46ff-bd22-28dbcc6fa2b9/26-6a6e1d70659ea.webp' /></p><p>அத்துடன், பொதுமக்கள் அனைவரும் வீதிப் போக்குவரத்துச் சட்டங்களைச் சரியாகப்
பின்பற்றி நடப்பதன் மூலம் சட்டம், ஒழுங்கு, உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து, அனைவருக்கும் பாதுகாப்பான வீதிச் சூழலை உருவாக்க ஒத்துழைக்க
வேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வேண்டுகோள்
விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T17:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.. மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-taken-curfew-ragama-police-station-area-1785601257"></link>
            <id>https://tamilwin.com/article/police-taken-curfew-ragama-police-station-area-1785601257</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் கோட்டங்களில் மறு அறிவிப்பு வரும் வரை உடனடி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் கோட்டங்களில் மறு அறிவிப்பு வரும் வரை உடனடி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் அறிவித்தார்.</p><p>அதன்படி,&nbsp;பின்வரும் கிராம அலுவலர் கோட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது,&nbsp;</p><p>246 கெண்டலியத்த வீதி மேற்கு</p><p>
246 சி கெண்டலியத்த வீதி வடக்கு
</p><p>181 ஜி தம்புவ</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0OZU82G3o28" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>மறு அறிவிப்பு வரும் வரை ராகம பொலிஸ் எல்லைக்குள் பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.</p><p>
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்த பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T17:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மை.. அதிரடியாக களமிறக்கப்பட்ட பெல் 412 ரக விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-incident-1785602239"></link>
            <id>https://tamilwin.com/article/bell-412-aircraft-monitor-mahara-prison-incident-1785602239</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நிலவும் அமைதியின்மையைக் கண்காணிக்க, பெல் 412 ரக விமானத்தையும் ஆளில்லா விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக விமானப்படை தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நிலவும் அமைதியின்மையைக் கண்காணிக்க, பெல் 412 ரக விமானத்தையும் ஆளில்லா விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று பிற்பகல் (01) மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் ஏழு கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்தார்.</p><p></p><h2>ஒருவர் உயிரிழப்பு&nbsp;</h2><p>

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bdcf300-bbb3-4e82-86b8-2e3db878c28c/26-6a6e24fd20c13.webp' /></p><p>

கைதிகளின் உறவினர்களும் சிறையைச் சுற்றித் திரண்டுள்ளதாகவும், அவர்களிடையே சில அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போதைய சூழ்நிலைகளில் சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைக் கண்காணிப்பதற்காக, ஒரு விமானத்தையும் ஒரு ட்ரோனையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், சிறைக்குள் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0OZU82G3o28" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-01T16:55:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன் ஜென்ம பாவத்தினால் மரண தண்டனைக்கு உள்ளான பூஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-sins-for-past-sins-pujitha-1785597019"></link>
            <id>https://tamilwin.com/article/death-sins-for-past-sins-pujitha-1785597019</id>
            <summary type="text">எந்தவொரு தவறும் செய்யாத போதும், முன்ஜென்மத்தில் செய்த தவறுக்காக தற்போது தண்டடை கிடைத்துள்ளதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எந்தவொரு தவறும் செய்யாத போதும், முன்ஜென்மத்தில் செய்த தவறுக்காக தற்போது தண்டடை கிடைத்துள்ளதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். </p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், நிரந்த மேல் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் அவரின் கருத்தினை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். </p><p> 

திட்டமிட்டு எந்தவொரு காரியத்தையும் செய்யவில்லை. பொலிஸ் சேவையில் இணைந்த நாளிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.</p><p> </p><h2><b>மிகுந்த வேதனை</b></h2><p>பல அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றியதாக குறிப்பிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf257dc-fceb-49ff-b998-105b858856a1/26-6a6e10755c776.webp' /></p><p>பொறுப்புகூற வேண்டிய சிலரை விடுவித்தமைக்கான அந்த சந்தர்ப்பங்களின் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

அடிப்படை உரிமை வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் மூலம் எனக்கும் மனைவிக்கும் எனது பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. 
</p><p>
நான் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது பொலிஸ் அதிகாரிக்கோ ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் இழைக்கவில்லை.</p><h3><b> முன்ஜென்ம வினை</b></h3><p>நான் பின்பற்றும் பௌத்த தர்மத்தின்படி இதனை எனது முன்ஜென்ம வினையின் பயன் என்றே கருதுகிறேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b46190b-cdd3-47dc-9f31-e56d57a659be/26-6a6e107655007.webp' /></p><p>வழக்கு தீர்ப்பினை பரிசீலிக்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். பொலிஸ் மா அதிபராகச் சேவையாற்றிய என்னை மட்டும் இவ்வாறு நடத்துவது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என நீதிமன்றத்தில் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T16:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் சந்திரசேகரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandrasekaran-inspected-of-palali-airport-person-1785598007"></link>
            <id>https://tamilwin.com/article/chandrasekaran-inspected-of-palali-airport-person-1785598007</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய
அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய
அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக
துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
</p><p>
வட மாகாணத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய
பங்காற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும்
நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து
அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>பலாலி விமான நிலையம்</h2><p>

இதன்போது, விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை நவீன தரத்திற்கு ஏற்ப
விரிவுபடுத்தும் பணிகள், பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை
மேம்படுத்தும் திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை
வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித்
திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களை
பெற்றுக்கொண்டார்.</p><p>

அதேவேளை, திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும்,
எதிர்காலத்தில் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை
கையாளக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் உயர்தரத்தில் அமைக்கப்பட வேண்டியதன்
முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a74e7d9-30ed-42ae-bb13-492698ae9387/26-6a6e11f35d108.webp' /></p><p>
</p><p>
பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில்
வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும்
என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.</p><p>அந்தக் கோரிக்கைகளை
கருத்திற்கொண்டு, புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின்
ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது
துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின்
சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும்
பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச
பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-01T15:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய இரட்டை சகோதரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/twin-sisters-in-jaffna-made-a-rash-decision-fire-1785597044"></link>
            <id>https://tamilwin.com/article/twin-sisters-in-jaffna-made-a-rash-decision-fire-1785597044</id>
            <summary type="text">யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே
தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே
தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம்
இன்றையதினம்(1.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம்
வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc8bec8-abe2-4ca5-81ba-27149829540a/26-6a6e11518525a.webp' /></p><p>
</p><p>இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T15:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2009 - 2026 வரை ஈழத்தமிழர்கள் உணராமல் போன ஆபத்தின் பக்கங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/danger-eelam-tamils-did-not-realize-from-2009-2026-1785596906"></link>
            <id>https://tamilwin.com/article/danger-eelam-tamils-did-not-realize-from-2009-2026-1785596906</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் தமிழர்களிடையே ஒரு பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தென்னிலங்கை சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் தமிழர்களிடையே ஒரு பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தென்னிலங்கை சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகவும் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க ஊடக இயக்குநரான அருட்தந்தை அன்டன் ஸ்டீபன் குறிப்பிட்டார்.</p><p>

மேலும், சர்வதேசம் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும், அவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காகவே இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.</p><p>

தமிழ் சமூகம் தனது பிழைகளை உணர்ந்து, ஒற்றுமையுடன் தங்களை சுய மீளாய்வு செய்து கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழலில், முறையான மற்றும் இதய சுத்தியுடன் செயல்படக்கூடிய தலைமைத்துவங்கள் இல்லாமையே இந்த வெற்றிடத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் என அனைவரும் தங்களின் தனிப்பட்ட சுயநலங்களைக் கைவிட்டு, ஒரு பொதுவான இலக்கை நோக்கி ஓரணியில் திரள வேண்டும்.
</p><p>
தங்களை தாங்களே வழிநடத்தக்கூடிய, பொதுநலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் புதிய தலைமைகளை உருவாக்க வேண்டும். </p><p>வெளியில் இருந்து ஒரு தீர்வு வரும் என்று காத்திருக்காமல், நாமே அந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்களை விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fenqfCMRWy8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T15:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-extra-classes-for-senior-students-1785595169"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-extra-classes-for-senior-students-1785595169</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

இதற்கமைவாக, குறித்த பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இக்காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் என்பனவற்றை மேற்கொள்ள முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முற்றாகத் தடை</h2><p> 

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்கள் வழங்கப்படும் அல்லது அதற்கு நிகரான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மின்னணு அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறான பொருட்களைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965b9841-ac1d-4a4f-bdd5-96978f56f6dc/26-6a6e0b3b0cf28.webp' /></p><p> </p><p>

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T15:06:10+00:00</updated>
        </entry>
    </feed>
