<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-01T12:32:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் கட்டாயம் போட்டியிடுவேன்..! முன்னாள் எம்.பி தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-provincial-council-elections-i-contest-1788263777"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-provincial-council-elections-i-contest-1788263777</id>
            <summary type="text">கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் நானும் கட்டாயம் போட்டியிடுவேன் என&amp;nbsp; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்&amp;nbsp;சீ.யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று(...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் நானும் கட்டாயம் போட்டியிடுவேன் என&nbsp; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;சீ.யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று(01.09.2026) வாழைச்சேனையில் அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தேர்தலில் வேட்பாளராக</h2><p>
</p><p>
பல்வேறு சமகால அரசியல், தொடர்பாக கருத்துக்களை கூறிய அவர் மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d7bdfc-4796-4033-a906-08ca72b2089a/26-6a96c226b6933.webp' /></p><p>

மாகாணசபை தேர்தல் நடத்தும் திகதி அறிவிப்பு, வேட்புமனு கோரல் அறிவிப்பு வருமானால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவதாகவும் அது இந்த ஆண்டில் நடைபெ வாய்புகள் இல்லை என குறிப்பிட்டார். </p><p>

அடுத்த ஆண்டு(2027) நடைபெறலாம் என எதிர்பார்க்கிறேன் </p><p>அப்படி நடந்தால் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டாயம் கிழக்கு மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குவேன். என்னை எவரும் தடுக்கமுடியாது எனவும் உறுதியுடன் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரியும் அபாயம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-rockfalls-on-the-hatton-colombo-main-road-1788261062"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-rockfalls-on-the-hatton-colombo-main-road-1788261062</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் பிரதான வீதியில் சரிந்து விழும் கடும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>

கடந்த நாட்களில் கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த இடத்திலிருந்து பிரதான வீதிக்கு மண்ணும் பாறைகளும் சரிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.</p><h2>கோரிக்கை</h2><p> 

பின்னர் வீதியில் சரிந்து விழுந்த மண்ணையும் பாறைகளையும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், கீழே சரிந்து விழும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஏனைய பெரிய பாறைகளையும் மரங்களையும் அகற்றுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d16e5d7-ab00-4565-9000-297cc2aebfc4/26-6a96c08e6ecc7.webp' /></p><p> </p><p>

தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த பரபரப்பான வீதியில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக, அச்சுறுத்தலாக உள்ள பாறைகளையும் மரங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு தலையிடுமாறு சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேவிபியினரின் ஆயுதக் கலவரங்களால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களே அதிகம் - துமிந்த திஸாநாயக்க கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/duminda-tissanayake-statement-1788260662"></link>
            <id>https://tamilwin.com/article/duminda-tissanayake-statement-1788260662</id>
            <summary type="text">இலங்கையின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜேவிபி நடத்திய ஆயுதக்
கலவரங்களால் பேருந்து தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு,
அபிவிருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜேவிபி நடத்திய ஆயுதக்
கலவரங்களால் பேருந்து தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு,
அபிவிருத்தித் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரச்
சேதங்களே அதிகம் என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>நாட்டுக்கு அவர்கள் இழைத்த வரலாற்று அழிவுகள் குறித்த
உண்மைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (01.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய
போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகள், வழக்குகள் மற்றும்
அச்சுறுத்தல்கள் காரணமாகவே நாட்டில் வலுவான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி இயங்க முடியாத சூழல் நிலவுகின்றது.

அரசியல்வாதிகளுக்கும் குடும்பமும் குழந்தைகளும் இருப்பதால், அவர்கள் பயத்தில்
வெளியே வர முடியாத நிலை காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f053dc88-faf7-442d-8123-0d478a567228/26-6a96be1680610.webp' /></p><p> இருப்பினும் அரசின் இந்த
அழுத்தங்களுக்கு உள்ளாகும் பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் மிக
விரைவில் ஒன்றுதிரண்டு போராட்டங்களில் ஈடுபடுவர்.

1951 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி, தனது பெருமைமிக்க 75ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில்,
2026 செப்டெம்பர் 2ஆம் திகதி கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா
தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது.
</p><p>
கடந்த 76 ஆண்டுகளில் நாட்டில் எதுவும் நடக்கவில்லை எனத் தற்போதைய அரசு கூறுவது
முற்றிலும் தவறானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசுகள்
எட்டிய வரலாற்றுச் சாதனைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை இந்த மாநாட்டின்
மூலம் மக்களிடம் வெளிப்படுத்தவுள்ளோம்.</p><p>

மேலும், தற்போதைய அரசு பெருமையுடன் பேசும் கனிம எண்ணெய் மற்றும் எரிபொருள்
ஆராய்ச்சித் திட்டங்கள், காஸ் கண்டறிதல் மற்றும் மொரட்டுவையிலிருந்து போர்ட்
சிட்டி வரையிலான அதிவேகப் போக்குவரத்துப் பாதை திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொழில்நுட்பங்கள்
கொண்டுவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் இறுதிப் கட்டங்களே தவிர, இந்த
அரசால் புதிதாகக் கொண்டுவரப்பட்டவை அல்ல.</p><h2>சர்வாதிகார நிர்வாகத்திற்கு தேவையான சூழல்</h2><p>
</p><p>
அரசால் முன்னெடுக்கப்படும் 22ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அது
தொடர்பான செயற்பாடுகள் ஆபத்தானவை. இவை ஒரு சர்வாதிகார நிர்வாகத்துக்குத்
தேவையான சூழலை உருவாக்கவே செய்யப்படுகின்றன. இவை அரசியல்வாதிகளுக்கு
மட்டுமல்லாது ஊடகங்கள், விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின்
சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் மிகவும் ஆபத்தானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/872bd9d7-af1f-4fe8-98e0-7605f7625be2/26-6a96be176f4f5.webp' /></p><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நிதி அமைச்சு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள்
மற்றும் அறிக்கைகள் குறித்துப் பேசும் ஆட்சியாளர்கள், முதலில் தம்மை
நிரபராதிகள் என நிரூபிக்க வேண்டும்.

அத்துடன், முன்னாள் விடுதலைப்புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கே.பி. (குமரன்
பத்மநாதன்) வசம் கப்பல்களும் பெருமளவு பணமும் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில்,
அவர் எவ்வாறு சுதந்திரமாக நடமாடுகின்றார் என்பது குறித்து உடனடி விசாரணை
நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
</p><p>
நாட்டின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜே.வி.பி நடத்திய ஆயுதக் கலவரங்களால்
பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு, அபிவிருத்தித்
திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களே அதிகம்.
நாட்டுக்கு அவர்கள் இழைத்த வரலாற்று அழிவுகள் குறித்த உண்மைகளை ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலையாகாத பிள்ளையான் - சிறைச்சாலைக்கு சென்ற அழைப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255332"></link>
            <id>https://tamilwin.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255332</id>
            <summary type="text">


புதிய இணைப்புமட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


</p><h2>புதிய இணைப்பு</h2><p>மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட இருவரை எதிர்வரும் செப்டம்பர் 15 திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(01.09.2026) உத்தரவிட்டது.</p><p>


மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கின் 3ம் சந்தேக நபரான சி. சந்திரகாந்தன் பிள்ளையான் - முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள வெலிசர சிறைச்சாலையில் காணப்படும் இணையத்தடங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையவழி மற்றும் வட்ஸ்அப் ஊடாக இணைக்கமுடியவில்லை என சிறைச்சாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. </p><p>

 மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டிருந்தனர்.

இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த வழக்கு தொடர்பான தொடர்ச்சியான மேலதிக அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. </p><h4>
 
 

விசாரணைகள் முன்னெடுக்க நடவடிக்கை</h4><p>
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f5fda2-ca4b-426e-ad07-daa53e4a038c/26-6a96bcf6499bd.webp' /></p><p> இவ்வழக்கு கடந்த ஜூன் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தன், ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியில் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு டி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><b><i>மேலதிக தகவல்- குமார்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு துப்பாக்கியால் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவரும் எதிர்வரும்&nbsp; செப்டம்பர் 15ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(01.09.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே காணொளி ஊடாக இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>பிள்ளையான் உட்பட மூவர்..&nbsp;</h2><p> 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்&nbsp; கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb7e30b-6655-42e3-829b-0ca3ef2ff192/26-6a96a0719f8b6.webp' /></p><p>


 இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிள்ளையான், கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><h2>பிடியாணை உத்தரவு</h2><p> </p><p>இதனைத் தொடர்ந்து, காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரும் கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர்.&nbsp;</p><p> 


இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜுன் 17ஆம் திகதி குற்றப் புலனாய்புத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19000ad1-1560-408c-810e-5e751ba7a471/26-6a96a07254749.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று(01) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் எடுத்துக் கொண்டபோது சந்தேக நபர்களான பிள்ளையான், இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகிய 3 பேரும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். </p><p>

 இதன்போது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன்,&nbsp; லண்டனில் உள்ள முகமட் பாயிஸ் எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/04-youths-arrested-with-high-powered-motorcycles-1788261549"></link>
            <id>https://tamilwin.com/article/04-youths-arrested-with-high-powered-motorcycles-1788261549</id>
            <summary type="text">நிக்கவரெட்டிய பகுதியில் அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிவேகத்துடன் பயணிக்கும் அதிவலு கொண்ட குறித்த மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிக்கவரெட்டிய பகுதியில் அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அதிவேகத்துடன் பயணிக்கும் அதிவலு கொண்ட குறித்த மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

பறிமுதல் செய்யப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்களிலும் போலியான இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டிருந்தமை கண்டறிப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df999720-aa59-4397-9468-1780882c7403/26-6a96bbe28cdcf.webp' /></p><p>
சம்பவம் தொடர்பில் 18, 19, 20 மற்றும் 22 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவெரடிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராக தன்னை நினைத்த கே.பிக்கு கடும் பாதுகாப்பு! தென்னிலங்கையில் இருந்து கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kp-declares-himself-the-next-leader-of-ltte-1788254422"></link>
            <id>https://tamilwin.com/article/kp-declares-himself-the-next-leader-of-ltte-1788254422</id>
            <summary type="text">
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என சொல்லிவந்த குமரன் பத்மநாதன்(கே.பி) இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என சொல்லிவந்த குமரன் பத்மநாதன்(கே.பி) இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் கீழ் இருக்கின்றார். அவருக்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பொருளாதாரத்தை சீரழித்த யுத்தம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

எமது நாடு விடுதலைப் புலிகளின் யுத்தத்திற்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது. ஆனால், 87 மற்றும் 88ஆம் ஆண்டுகளின் போது மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் யுத்தம் காரணமாக, எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d009302-99f0-40fe-8b56-77196dcd467d/26-6a96b59fdc24e.webp' /></p><p>
</p><p>
 ஆனால், இவ்வாறு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்திய யாருக்காவது வழக்குகள் இருக்கின்றதா? மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த யாருக்காவது வழக்கு இருக்கின்றதா என கேட்கின்றோம்.
</p><p>
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் நான்தான் என சொல்லிக் கொண்ட குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் கீழ் இருக்கின்றார். அவருக்கு எதிராக ஒரு வழக்கும் இல்லை. </p><p>

ஆனால், விடுதலைப் புலிகளின் சாதாரண உறுப்பினர்கள் சிலரே இன்று சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-01T11:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடைய பெண் சட்டத்தரணி தொடர்பில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shocking-details-about-lawyer-arrested-1788235273"></link>
            <id>https://tamilwin.com/article/shocking-details-about-lawyer-arrested-1788235273</id>
            <summary type="text">கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>சந்தேகத்திற்கிடமான வழக்கறிஞர் 1970 ஆம் ஆண்டு பிறந்திருந்த போதிலும், அவர் 1972 ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டுப் போலியான தேசிய அட்டையைத் தயாரித்துள்ளார். </p><p>அதனை பயன்படுத்தி கஹவத்தை அரச வங்கி கிளையில் கணக்குகளை ஆரம்பித்து, பல சந்தர்ப்பங்களில் இலட்சக்கணக்கில் கடன்களை பெற்றுள்ளார்.</p><p> </p><h2><b>நீதிமன்றத்திடம் கோரிக்கை </b></h2><p>அத்துடன், சில கடன் தொகைகளை திருப்பிக் செலுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97126076-28a8-415e-99f0-d09c1912775f/26-6a9653017dd26.webp' /></p><p>இதன்போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும் சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை தொடர்பான விபர அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவொன்றை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்ட பதில் நீதவான், விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விபர அறிக்கையை வழங்குமாறு கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/T3tVooix_3g" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தால் ஜனநாயகம் சீரழிகின்றது! எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கக் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/democracy-is-being-undermined-by-22nd-amendment-1788260929"></link>
            <id>https://tamilwin.com/article/democracy-is-being-undermined-by-22nd-amendment-1788260929</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்பட்டு, நீதித்துறை
அவமதிக்கப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்தார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்பட்டு, நீதித்துறை
அவமதிக்கப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்தார்.</p><p>

கட்சித் தலைமையகங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நியமனங்கள் வழங்கும் போக்கு
உருவாகியுள்ளது என்றும், நாட்டின் பொருளாதாரம் மாத்திரமின்றி ஜனநாயகமும்
சமூகமும் சுருங்கிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>

சிவில் அமைப்புகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(31.08.2026) மாலை
நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

22ஆவது திருத்தம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கட்சித் தலைமையகங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இளைஞர் சங்கங்கள் மற்றும்
சிவில் பாதுகாப்புக் குழுக்களை நியமிப்பது போன்ற மக்கள் உரிமைகள் மீறப்படும்
காலம் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ddd69d4-6fc2-4deb-bbd7-4ce917a5dca7/26-6a96b2d02729f.webp' /></p><p>
</p><p>
22ஆவது திருத்தத்தின் மூலமாக இந்த நிலை மேலும் தீவிரமடைந்து நீதி வழங்கும்
செயல்முறையின் மீது செல்வாக்கு செலுத்தப்படுகின்றது.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் பேரிடர் காலங்களில் சிவில் அமைப்புகளும் அரச
சார்பற்ற நிறுவனங்களும் பிரதான பங்குதாரர்களாகச் செயற்படுகின்றன.
</p><p>
அரச இயந்திரத்தை விட மக்கள் அவற்றை அதிகமாக நம்புவதால், சர்வதேச தரத்துக்கு
ஏற்ப முறைப்படுத்தல் நடக்க வேண்டுமே தவிர பலவந்தமாக அவற்றை முடக்கக் கூடாது.
</p><p>
முறையை மாற்றப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று விவசாயிகள்,
கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களைத் தமது அரசியல் தேவைகளுக்காகப்
பயன்படுத்துவதோடு அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
</p><h2>
மக்களின் பிரச்சினை</h2><p>

தரமான விதை நெல், உரங்கள், கிருமிநாசினிகள் இன்றித் தவிப்பதோடு, யானை - மனித
மோதல்களால் பாதிப்பு ஏற்படும் சூழலில் மேலதிகப் பயிர்ச் செய்கைகளை
மேற்கொள்ளவும் அரசு அனுமதி மறுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de9bdcd6-7571-47df-8252-2f4183bc4eea/26-6a96b2d0ed13d.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் நீதிபதிகளைப் பாதுகாத்தது. ஷிராணி
பண்டாரநாயக்கவைப் பதவியிலிருந்து நீக்கிய தரப்பு நாங்கள் அல்லர்.

மாகாண சபைத் தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள்
தீர்ப்பளித்தபோது அவர்களைத் தெரிவுக்குழுவுக்குக் கொண்டு செல்வதை
எதிர்க்கட்சியாக நாமே எதிர்த்தோம்.
</p><p>
தற்சமயம் உருவாகியுள்ள எல் நினோ மற்றும் லா நினோ காலநிலை நிலைமைகளுக்கு அரசால் மாத்திரம் தீர்வு காண முடியாது என்பதால், சிவில் சமூகங்கள் மற்றும் அரச
சார்பற்ற நிறுவனங்களின் பங்கும் அவசியம் என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8653154a-0da6-4d90-b315-88a3368f2bd7/26-6a96b2d1bdc47.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடமராட்சி கிழக்கு- மணக்காடு சவுக்கந்தோப்பில் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-in-manakkadu-vadamarachchi-1788258578"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-in-manakkadu-vadamarachchi-1788258578</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மணக்காடு பகுதியில் அமைந்துள்ள
சவுக்கந்தோப்பில் இன்றும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மணக்காடு பகுதியில் அமைந்துள்ள
சவுக்கந்தோப்பில் இன்றும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப்பரம்பல் விமான படையை உலங்கு
வானூர்த்தி மூலம் நீர் பாய்ச்சப்பட்டு கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினமும் மீண்டும் தீ பரம்பல்
ஏற்பட்டிருக்கிறது.</p><h2>தீப்பரவல்</h2><p> தீயணைப்பதற்காக பருத்தித்துறை பிரதேச சபையின் நீர் தாங்கி
உழவு இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2538301-96fd-4ee4-b182-3b45d89a6098/26-6a96aef87b1f2.webp' /></p><p> யாழ். மாவட்டத்தின் அனர்த்த
முகாமைத்துவ பிரிவு அதிகாரி ஒருவரும் இங்கே சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:06:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 12இற்கு முன் நான் சிறையில் அடைக்கப்படலாம் : நாமல் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-him-ahead-of-sept-12-1788257783"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-him-ahead-of-sept-12-1788257783</id>
            <summary type="text">செப்டெம்பர் 12அன்று அனுராதபுரத்தில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்தால், 12ஆம் திகதிக்கு முன்பாகவே தன்னைச் சிறையில் அடைக்கக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் 12அன்று அனுராதபுரத்தில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்தால், 12ஆம் திகதிக்கு முன்பாகவே தன்னைச் சிறையில் அடைக்கக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.</p><p>இன்று(01.09.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
</p><h2>நாடு தழுவிய பேரணிகள்</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணிகளால் உருவாக்கப்பட்ட பெருகிவரும் அரசியல் உத்வேகத்திற்கு பதிலளிக்கும் விதமாகவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் செப்டம்பர் 5 முதல் நாடு தழுவிய பேரணிகளின் தொடரை அரசாங்கம் தொடங்க முடிவு செய்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமீபத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நாமலின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a22776f-5f39-4f68-950f-7d7138733a03/26-6a96ab84e06be.webp' /></p><p>
அரசாங்கம் தனது சொந்த பலவீனங்களை மறைக்க முயற்சிப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களுடைய ஆடையை கழற்றுவது அவ்வளவு சுலபமல்ல! நாமல் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksha-statement-1788258398"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksha-statement-1788258398</id>
            <summary type="text">ஜனாதிபதி கூறும் பொய்கள் மக்களுக்கு பழகிவிட்டது, ஜனாதிபதிக்கு புதிதாக கூற பொய்கள் எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி கூறும் பொய்கள் மக்களுக்கு பழகிவிட்டது, ஜனாதிபதிக்கு புதிதாக கூற பொய்கள் எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்று (01.09.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி கொழும்பு - 07 ஏசி அறையில் இருந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர் கிராமங்களுக்கு செல்ல தயாராகி வருகிறார். 

மக்கள் சந்திப்பு மேடைகளில் ஏறி வாக்குறுதிகள் எப்போது நிறைவேறும் என கூற வேண்டும். </p><p>

கடந்த காலத்திலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஒரு தலைவர் தேர்தலின் போது ஒரு ஆடையை அணிந்தார், வென்ற பிறகு அதை கழற்றிப்போட்டார். 

சிலர் வெல்லும்போது ஒரு ஆடை, தோற்கும்போது வேறு ஒரு ஆடை. நாங்கள் நேர்மையாக சரியானதை செய்தோம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_4rpMXe2U4c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>இது எங்கள் அடையாளம்</h2><p> அதனால், எதிர்காலத்திலும் எங்களுடைய ஆடையை கழற்றுவது அவ்வளவு சுலபமல்ல. 

அதுதான் எங்கள் அடையாளம், நாங்கள் எங்கள் அடையாளத்தைப் பாதுகாக்கிறோம்.</p><p> அதேபோல், இந்த நாட்டு மக்கள் அந்த பொய்ப் பரப்புரைகள், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இன்று நல்ல புரிதலுடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்ற முயற்சி செய்கின்றன. ஆனால் அது இனிமேலும் பலிக்காது என்று நாங்கள் நினைக்கிறோம்.
</p><p>
அதனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் அதிகாரத்தைப் பெறுவதற்காக ஆடைகளை மாற்றுபவர்கள் அல்ல. சில தலைவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன் அணிந்த ஆடையை, அதிகாரத்திற்கு வந்த பின் அணிவதில்லை. அதனால்தான் சொல்கிற ஒன்றை செய்வதில்லை. </p><p>வரம்பற்ற பொய்களைச் சொல்லி அதிகாரத்திற்கு வந்து, மீண்டும் பொய்களையே சொல்கிறார்கள் என தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/abroad-for-first-time-for-jobs-in-japan-romania-1788257157"></link>
            <id>https://tamilwin.com/article/abroad-for-first-time-for-jobs-in-japan-romania-1788257157</id>
            <summary type="text">&amp;nbsp;ஜப்பான் மற்றும் ருமேனியாவில் பணிபுரிய முதன்முறையாக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்காக பயிற்சி திட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜப்பான் மற்றும் ருமேனியாவில் பணிபுரிய முதன்முறையாக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்காக பயிற்சி திட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, முதல் கட்டமாக இந்த பயிற்சித்திட்டம் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பணியகத்தின் பன்னிப்பிட்டிய பயிற்சி மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;பயிற்சி திட்டங்களுக்கான பதிவு</h2><p>

எதிர்காலத்தில், நாட்டின் பரப்பளவைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் அமைந்துள்ள பணியகத்தின் பிற பயிற்சி மையங்களிலும் இது தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c0ed422-45f2-4b3f-abe0-92e0e3f30c2d/26-6a96a6d0b080c.webp' /></p><p>செப்டம்பர் 15ஆம் திகதி முதல் இந்த பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றிருப்பது கட்டாம் என்றும், இவை இல்லாமல், பணியகத்தில் பதிவு பெற முடியாது என்றும் பணியகம் தெரிவிக்கின்றது.
</p><p>
இந்த வழிகாட்டுதல் பயிற்சித்திட்டத்தின் மூலம், அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், பணியிடப் பாதுகாப்பு, பணத்தை கையாளுதல், சுகாதாரம் போன்றவை குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகின்றது.
</p><p>
இந்த வழிகாட்டுதல் பயிற்சித் திட்டங்களுக்கான பதிவை, நாடு முழுவதும் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கிளை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Rjrfq2YmTtU" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-01T10:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்ட வானிலை: சுமார் 8000 ஏக்கர் பயிர்கள் சேதம் - அமைச்சர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/revelation-about-crop-damage-caused-by-dry-weather-1788255851"></link>
            <id>https://tamilwin.com/article/revelation-about-crop-damage-caused-by-dry-weather-1788255851</id>
            <summary type="text">வறண்ட வானிலை காரணமாக சுமார் 8000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் (01.09.2026) இடம்பெற்ற ஊடக சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறண்ட வானிலை காரணமாக சுமார் 8000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>இன்றைய தினம் (01.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், பயிர் சேதங்களுக்கான அவசரத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ. 3000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>அவசரத் திட்டம்</h2><p>அதன்படி, அவசரத் திட்டத்தின் கீழ் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். நெல், மக்காச்சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.</p><p>இதுவரை அநுராதபுரம் மாவட்டத்தில் 1,923 ஏக்கர் பயிர் சேதம் பதிவாகியுள்ளது. அந்த மாவட்டமே பயிர் சேதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நிலவும் வறண்ட வானிலையால் சேதமடைந்த பயிர்களுக்கு முதல் கட்டமாக ரூ. 3,00 கோடி இழப்பீடு வழங்கும் அவசரத் திட்டம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aac0ab89-f1f7-415b-90d5-fefdc40d483e/26-6a96a501e24b7.webp' /></p><h2>இழப்பீடு</h2><p> அதன்படி, நெல், மக்காச்சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் போன்ற பயிர்களுக்கு, அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1,00,000 இழப்பீடு வழங்கப்படும். </p><p>சேதமடைந்த நிலப்பரப்புகளையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அருகிலுள்ள விவசாய சேவைகள் திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரையோ அல்லது விவசாய அபிவிருத்தி அல்லது கள அலுவலர்களையோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலகை ஆலை அமைக்கும் முயற்சி – தொழிலாளர்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attempts-to-set-up-a-board-mill-temporarily-halted-1788255771"></link>
            <id>https://tamilwin.com/article/attempts-to-set-up-a-board-mill-temporarily-halted-1788255771</id>
            <summary type="text">கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட
நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின்
எதிர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட
நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின்
எதிர்ப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>ரொப்கில் தோட்டத்திற்கு நுழைவாயில் பகுதியில் குறித்த பலகை ஆலையை அமைப்பதற்கான
அடித்தளத்தை நிர்மாணிக்கும் நோக்கில், அப்பகுதியில் காணப்பட்ட தேயிலைச்
செடிகளை அகற்றும் நடவடிக்கையை தோட்ட நிர்வாகம் இன்று(01.09.2026) முன்னெடுக்க
முற்பட்டுள்ளது.
</p><h2>வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு</h2><p>
இதன்போது, அப்பகுதியில் ஒன்றுகூடிய தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல்
அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bf3971d-62c1-4c91-af49-0e59857c12af/26-6a96a346293a3.webp' /></p><p>தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆலையை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தோட்ட
நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இதனிடையே, கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சீரற்ற காலநிலையின்போது ரொப்கில்
தோட்டப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தொழிலாளர்களின் வீடுகள் மற்றும்
உடைமைகள் பாதிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின்போதும் கொட்டகலையில் அதிகளவில்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரொப்கில் பகுதியும் ஒன்றாக இருந்ததாக அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக காணிகளை வழங்குமாறு தோட்ட
நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தபோது, தேயிலைச் செடிகளை அகற்ற முடியாது
என்றும், உரிய அறிக்கை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுவதாக
தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.</p><h2>தேயிலைச் செடிகளை அகற்ற</h2><p>எனினும், தற்போது பலகை ஆலையை அமைப்பதற்காக தேயிலைச் செடிகளை அகற்ற முடிவது
எவ்வாறு என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6427d18-c5cb-4dc8-817a-1a7a4a28e878/26-6a96a3470df33.webp' /></p><p>
தாங்கள் வியாபார நடவடிக்கைகளுக்காக காணிகளை கோரவில்லை என்றும், தங்களது
குடும்பங்களுடன் வாழ்வதற்காகவே காணிகளை கோருவதாகவும் தெரிவித்துள்ள
தொழிலாளர்கள், இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தர
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, பலகை ஆலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதியில் இந்து
ஆலயம் ஒன்றும் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.
</p><p>
தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தங்களது வழிபாட்டு நடவடிக்கைகள்
பாதிக்கப்படக்கூடும் என கவலை வெளியிட்டுள்ள மக்கள், தொழிலாளர்கள் மற்றும்
பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுத்த பின்னர்,
பொருத்தமான இடத்தில் ஆலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:10:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கம்: வற்றிப்போகும் திருகோணமலை- புளிஊத்து குளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/puli-oothu-pond-is-drying-el-nino-1788256031"></link>
            <id>https://tamilwin.com/article/puli-oothu-pond-is-drying-el-nino-1788256031</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் காரணமாக நிலவும் கடும் வறட்சியான காலநிலையால்
புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் காரணமாக நிலவும் கடும் வறட்சியான காலநிலையால்
புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் தற்போது வறண்டு
வரும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>

நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம்
நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இப்பகுதியை நம்பி விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வரும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
அத்துடன், குளத்து நீரை கால்நடைகளுக்காக பயன்படுத்தி வந்த கால்நடை
வளர்ப்பாளர்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.</p><h2>கோரிக்கை</h2><p> குளம்
முற்றாக வறண்டு போகும் நிலை ஏற்பட்டால், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு
நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/940951c6-c9ea-4110-932d-abccbedae1b2/26-6a969f25626a4.webp' /></p><p>
</p><p>
எனவே, நிலவும் வரட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட
மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் மற்றும் நீர் வசதிகளை
ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:59:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு மணி நேரம் வாக்குமூலம்! CCIDயிலிருந்து வெளியேறிய தனசிறி அமரதுங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dhanasiri-amaratunga-to-ccib-1788242396"></link>
            <id>https://tamilwin.com/article/dhanasiri-amaratunga-to-ccib-1788242396</id>
            <summary type="text">புதிய இணைப்புதெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (CCID) வெளியேறியுள்ளார்.&amp;nbsp;&amp;nbsp;சுமார் நா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (CCID) வெளியேறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் மத்திய குற்றப்பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.</p><p>சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க, இன்று (01) அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க&nbsp; மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) முன்னிலையாகியுள்ளார்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:59:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் 52 கோயில்களில் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-52-temples-tamil-nadu-effective-from-today-1788253979"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-52-temples-tamil-nadu-effective-from-today-1788253979</id>
            <summary type="text">தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களில் செப்டம்பர் 1ஆம் திகதி முதல்
செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயில்களின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களில் செப்டம்பர் 1ஆம் திகதி முதல்
செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில் கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மீக சூழலைப்
பாதுகாக்கவும்; ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதால் பிற
பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தடை விதிக்கப்பட்டுள்ள முக்கிய கோயில்கள்</h2><p>

இதற்காக கோயில்களின் நுழைவு வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்
பெட்டகங்களில் ரூ.5 கட்டணம் செலுத்தி செல்போன்களைப் பாதுகாப்பாக
ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ea7028-d043-4e40-a297-043f0da8422b/26-6a969ae2ea218.webp' /></p><p>
அத்துடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வருகை தரும் போது
முன்னறிவிப்பு இன்றி வீடியோ புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தடை விதிக்கப்பட்டுள்ள சில முக்கிய கோயில்களில் சென்னை மற்றும் அதன்
சுற்றுவட்டாரத்தில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர்,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு
தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன்,
குன்றத்தூர் முருகன், வல்லக்கோட்டை முருகன் ஆகிய கோயில்களும்,</p><p>காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்,
வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், திருத்தணி முருகன், திருவள்ளூர் வீரராகவர்
போன்ற கோயில்களும்,
</p><p>
மேலும் தென் மத்திய மாவட்டங்களில் திருச்செந்தூர் முருகன், பழனி முருகன்,
திருப்பரங்குன்றம் முருகன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சமயபுரம்
மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை அழகர், ராமேசுவரம் ராமநாதசாமி,
நெல்லையப்பர், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, கோவை கோணியம்மன், சேலம் கோட்டை
மாரியம்மன் உள்ளிட்ட 52 கோயில்கள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக் காவல் திட்டம்..! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-under-house-arrest-instead-of-incarceration-1788253790"></link>
            <id>https://tamilwin.com/article/people-under-house-arrest-instead-of-incarceration-1788253790</id>
            <summary type="text">சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக் காவல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் நளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக் காவல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் (01.09.2026) இடம்பெற்றிருந்தது.&nbsp;</p><p>இதில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில், பல சட்ட சீர்திருத்தங்கள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான சட்ட விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.</p><h2>சட்ட சீர்திருத்தம்</h2><p>நீதிமன்ற அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணற்ற சீர்திருத்தங்களில், சட்ட சீர்திருத்தமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a014fa28-2a79-4fa4-9aca-44f32bf7092f/26-6a969bffa43e6.webp' /></p><p> சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளைத் துரிதப்படுத்துதல், பிணை வழங்க முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்கும், அத்தகையவர்களை சிறைக்கு வெளியே வீடுகளில் தங்க வைத்து தண்டனையை அனுபவிப்பதற்கும் தேவையான சட்ட சீர்திருத்தங்களைச் செய்தல் போன்ற பல சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.</p><p> இந்தச் சூழலில்தான் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:33:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-commissioner-general-appointed-motor-traffic-1788254061"></link>
            <id>https://tamilwin.com/article/new-commissioner-general-appointed-motor-traffic-1788254061</id>
            <summary type="text">மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ நியமிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

புதிய ஆணையாளர் நாயகம் இன்று (01) முற்பகல் கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தனது உத்தியோகபூர்வ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய ஆணையாளர்</span></p><p>

 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98be47c3-886b-4b22-93c8-1d2074d44f49/26-6a969915601a1.webp' /></p><p>

 

கொழும்பு, ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி நாய்மி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் புதிய ஆணையாளர் நாயகம் தனது கடமைகளை ஆரம்பித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் மூன்றாவது முறையாக நீர்க் கண்காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-exhibition-held-for-the-third-time-in-nallur-1788251886"></link>
            <id>https://tamilwin.com/article/water-exhibition-held-for-the-third-time-in-nallur-1788251886</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள நிலத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி
மூன்றாவது முறையாக நாளைய தினம் (02.09.2026) நல்லூரில் ஆரம்பமாகிறது.
</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக,
வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம்
நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.
</p><p>நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி
நிறுவன வளாகத்தில், செப்டெம்பர் 2ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு
கண்காட்சி ஆரம்பமாகவுள்ளது.</p><h2>பாரம்பரிய நிகழ்வுகள்</h2><p>
</p><p>தொடர்ந்து செப்டெம்பர் 11ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி
முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஊருணி ஆற்றுகைக் களத்தில் தினமும் மாலை 7 மணி முதல்
கருத்துரைகள், கலை, பண்பாட்டு மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
</p><p>இது தொடர்பாக இன்றைய தினம் (01.09.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த
குறித்த நீர்வளம் பேணும் செயற்றிட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர்
சிறிஸ்கந்தராஜா, கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட நீர் சார்ந்த ஆய்வுச்
செயற்றிட்டங்களின் பெறுபேறுகளும், மக்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம்
கிடைத்த அனுபவங்களும் இந்தக் கண்காட்சியில் தொகுத்து வழங்கப்படுவதாகத்
தெரிவித்தார்.
</p><p>தொடர்ச்சியாக பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீரியல் ஆய்வுகளின்
பெறுபேறுகளுடன், சமூகத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் இதில்
காட்சிப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c87143fa-6f6f-4a70-897c-6c735fd79630/26-6a96958453495.webp' /></p><h2>நீர்வளப் பாதுகாப்பு</h2><p>
</p><p>குறிப்பாக, வழுக்கையாற்றை சமூகத்தின் பேசுபொருளாக மாற்றும் நோக்கில்
முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள், ஊரவர்களின் கற்பனைகள் மற்றும் பிரதேச சபைகளின்
ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நீர்வளப் பாதுகாப்பு
தொடர்பில் மேலதிக தெளிவு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>கிணறுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலில் தங்கியிருக்கும் சமூகமாகிய வடமாகாண
மக்களுக்கு நிலத்தடி நீரைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றும், அதற்காக
கிணறுகளை முறையாகப் பராமரிப்பதுடன், நீர் சேமிப்புக்கு உகந்த ஊர்க் குளங்களைத்
தூர்வாரி பயனுள்ள வகையில் நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்
அவர் வலியுறுத்தினார்.
</p><p>கிராமிய குளங்களை மக்களின் பங்களிப்புடன், தொழில்நுட்ப அறிவு மற்றும் நவீன
கருவிகளைப் பயன்படுத்தி முறையாகத் தூர்வாருவது தொடர்பான அனுபவங்கள் மற்றும்
அதன்மூலம் பெறப்பட்ட பாடங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முப்பரிமாண
வடிவங்கள், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் ஊடாக கண்காட்சியில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>கடந்த ஆண்டுகளை விட இம்முறை நிலத்தடி நீர் தொடர்பான தெளிவை மக்களிடையே
ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு புதிய காட்சிப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன.
நிலத்தடி நீர் மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களின்
கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் பங்களிப்புடன் தீர்மானங்களை
எடுக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் ஆற்றில் இருந்து கைக்குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-recovered-from-river-in-kantale-1788252898"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-recovered-from-river-in-kantale-1788252898</id>
            <summary type="text">கந்தளாய்- யூனிட் 15 வயல் பகுதியில் உள்ள ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள
ஆற்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று(31.8.2026) மாலை 4.00 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய்- யூனிட் 15 வயல் பகுதியில் உள்ள ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள
ஆற்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்று(31.8.2026) மாலை 4.00 மணியளவில், கந்தளாய் புதிய ரஜஎல பாலத்தின் கீழ் ஆற்றில்
கைக்குண்டொன்று கிடப்பதை மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் அவதானித்துள்ளார்.
</p><p>இதனையடுத்து, அவர் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸாருக்கு தகவல்
வழங்கியுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, ரஜஎல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்
நடவடிக்கையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
மீட்கப்பட்ட கைக்குண்டு ஜேயார் (JR) வகையைச் சேர்ந்தது என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a514648c-4119-49df-a5d9-ecb3b9b79020/26-6a9692e3e0ee8.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான விடயங்கள் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில்
அறிக்கையிடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், குறித்த கைக்குண்டு
சர்தாபுர இராணுவத்தினரால் இன்று பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:10:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண கொண்டாட்டத்தில் மணமகளுக்கு அதிர்ச்சி - திடீரென மாயமான தங்க நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wedding-gift-stolen-by-helper-1788242587"></link>
            <id>https://tamilwin.com/article/wedding-gift-stolen-by-helper-1788242587</id>
            <summary type="text">குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் திருமணத்தின் இரண்டாவது நாள் கொண்டாட்டத்தில் மணமகளுக்கு சீதனமாக வழங்கப்பட்ட 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் திருமணத்தின் இரண்டாவது நாள் கொண்டாட்டத்தில் மணமகளுக்கு சீதனமாக வழங்கப்பட்ட 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.</p><p> 

இந்த நிலையில், சந்தேகநபரையும் தங்க நகைகளையும் பொலிஸார் இரண்டு மணித்தியாலங்களுக்குள் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

திருமண நிகழ்விற்கு வந்திருந்த விருந்தினர்கள் கலைந்து செல்லும் நேரத்தில் மணமகளுக்கு பெற்றோரால் சீதனமாக வழங்கப்பட்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p> </p><h2><b>

திடீரென மாயமான தங்க நகைகள்</b></h2><p>இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார், உறவினர்களைத் தவிர வெளியில் இருந்து வந்த சமையற்காரர்கள், இசை மற்றும் ஒலிப்பெருக்கி சேவைக்காக வந்த அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b53fa0f-0c38-4721-a027-bb39fc6b9355/26-6a969553a799e.webp' /></p><p>இறுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> 

சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. </p><p>

சந்தேக நபரின் நடமாட்டங்களை கண்காணித்த பொலிஸார், காணாமல் போன 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை, திருமண நிகழ்விற்கு உதவியாக வந்த நபர் திருடிச் சென்றமை தெரிய வந்துள்ளது. </p><p> 

குறித்த நகைகளை பிரதான வீதியொன்றின் அருகில் மறைத்து வைத்திருந்த நிலையில், பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T09:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் சிக்கலில் அரச ஊழியர்கள்! 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ள இலங்கையர்களின் வாழ்க்கைச் சுமை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-government-employees-in-trouble-1788244389"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-government-employees-in-trouble-1788244389</id>
            <summary type="text">
அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த மாதாந்தம் 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த மாதாந்தம் 150,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது என ஐ.ம.சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். </p><p>


கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>சிக்கலில் மக்கள் மற்றும் அரச, தனியார் ஊழியர்கள்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p>அரசாங்கம், திறைசேரியில் பணம் நிறைந்து வழிவதாக தெரிவித்தாலும், அவை அனைத்தும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட அநியாய வரியின் ஊடாக ஈட்டப்பட்டதேயாகும். இதனால், மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. </p><p>

 அரச, தனியார் மற்றும் சிறு, நடுத்தர வியாபாரிகள் உள்ளிட்டோர் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b808d736-d6c2-418f-bf3b-39e887b0e7b4/26-6a96935874da4.webp' /></p><p> 

தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் படி நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சாதாரணமாக குடும்பத்தினைக் கொண்டு நடத்த மாதாந்தம் 150,000 ரூபா வரையில் தேவைப்படுகின்றது. </p><p> 

பால்மா, கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயரும் சாத்தியம் உள்ளது. </p><p> 

பாடசாலை உபகரணங்கள், குடிநீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதியும் சரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89da996-c675-4b76-a2c4-d75721eacb1f/26-6a9693579c40b.webp' /></p><p> </p><p> 

மேலும், சர்வதேச சந்தையில், எரிபொருளின் விலை கணிசமாக சரிந்துள்ள போதிலும், இலங்கையில் வெறும் 15 ரூபாவால் மாத்திரமே பெட்ரோலின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. </p><p> 

ஏனைய, டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட்டவில்லை. மக்களுக்கான சலுகைக் கூட வழங்கப்படவில்லை. </p><p>

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை மிதக்க விட்டு, பொதுமக்கள் பேரழிவைச் சந்திக்க வழிவகை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T08:57:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேருவில மங்கள ராஜமகா விகாரையில் நடைபெற்ற பாரம்பரியத் தேன் பூஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/honey-ceremony-seruvila-mangala-raja-maha-vihara-1788251805"></link>
            <id>https://tamilwin.com/article/honey-ceremony-seruvila-mangala-raja-maha-vihara-1788251805</id>
            <summary type="text">கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ் மொழியைப் பேசும் கடலோர வேடர் சமுதாய
மக்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சேருவில ஸ்ரீ லலாட தாது மகா பெரஹரா விழாவை
முன்னி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ் மொழியைப் பேசும் கடலோர வேடர் சமுதாய
மக்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சேருவில ஸ்ரீ லலாட தாது மகா பெரஹரா விழாவை
முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரியத் தேன் பூஜை சேருவில மங்கள ராஜமகா
விகாரையில் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
</p><p>
கடலோர வேடர்களின் தலைவரான நடராஜா கனகரத்தினம் தலைமையிலான பழங்குடியின மக்கள்
பக்தி சிரத்தையுடன் எடுத்துவந்த தேன் குடம், சேருவில மங்கள ராஜமகா விகாராதிபதி
வணக்கத்திற்குரிய அலுதெனியே சுபோதி நயினாக தேரரிடம் சடங்குபூர்வமாகக்
கையளிக்கப்பட்டது.
</p><p>
பழங்குடியின மக்கள் மங்கள மகா ஸ்தூபியை வலம் வந்து வழிபட்டதைத் தொடர்ந்து தேன்
பூஜை இடம்பெற்றது. இப் பூஜையானது பழங்குடியின மக்களுக்கு இலகுவில் புரியும்
வகையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுவதற்காக
விகாராதிபதி தேரரால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.</p><h2>தேன் பூஜை</h2><p>
</p><p>
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில்,
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு
ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e308f9e8-1810-4038-bdec-c0eb477427fb/26-6a968fa01413b.webp' /></p><p> நிகழ்வின் நிறைவில், விகாராதிபதி தேரர் உள்ளிட்ட
மகா சங்கத்தினர் பிரீத் நூல் வழங்கி கடலோர வேடர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

சாதி, மதம் மற்றும் மொழி காரணங்களால் சமூகங்களால் ஓரங்கட்டப்பட்ட ஒரு
தனித்துவமான குழுவினரான இவர்கள், வெருகல் மற்றும் மூதூர் போன்ற பகுதிகளில்
உள்ள 27 கிராமங்களில் பரந்து வாழ்கின்றனர்.</p><p>

சேருவில பெரஹராவில் தங்களின் பாரம்பரிய நடனங்களையும் கலைகளையும்
வெளிப்படுத்தும் இவர்கள், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கும்
சேருவில விகாராதிபதி தேரருடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதும்
குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-01T08:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஷேசத்திற்கு சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வீட்டில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jewelry-worth-rs-5-lakh-stolen-1788251603"></link>
            <id>https://tamilwin.com/article/jewelry-worth-rs-5-lakh-stolen-1788251603</id>
            <summary type="text">கந்தளாய் - பேராற்றுவெளி பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு, ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள்
திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் - பேராற்றுவெளி பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு, ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள்
திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

இந்த சம்பவம் நேற்று(31.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


5 இலட்சம் பெறுமதியான நகை திருட்டு</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p> 

வீட்டு உரிமையாளர் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வீட்டை விட்டு
வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்தத் திருட்டுச் சம்பவம்
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், வீட்டினுள் இருந்த
அலுமாரியையும் உடைத்து, அதிலிருந்த பெறுமதியான தங்க நகைகளை திருடிச்
சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f516cf-1e82-4d99-b100-e70723a33015/26-6a968eefab28d.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருவதுடன், கைவிரல் அடையாளப் பிரிவு பொலிஸாரும் சம்பவ
இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.</p><h2>


அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம்</h2><p>
இதேவேளை, குறித்த பகுதியில் அண்மைக்காலமாக சந்தேகத்திற்கிடமான நபர்களின்
நடமாட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள வீடொன்றில் சூதாட்ட
நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் தகவல்கள்
கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
இதன் காரணமாக பேராற்றுவெளி பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து
வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறிப்பாக இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் அதிகளவில்
காணப்படுவதாகவும், இதனால் பொலிஸார் இரவு நேரங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T08:38:36+00:00</updated>
        </entry>
    </feed>
