<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-02T17:31:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மனித உரிமை மீறல் வழக்குகள்: அரசின் நடவடிக்கையில் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hrw-alleges-delay-in-prosecuting-anura-right-cases-1788364243"></link>
            <id>https://tamilwin.com/article/hrw-alleges-delay-in-prosecuting-anura-right-cases-1788364243</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள்
தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என மனித
உரிமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள்
தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என மனித
உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொலை
செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் எந்தவித முன்னேற்றமுமின்றி
உள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>நீதியை நிலைநாட்டல்</h2><p>
</p><p>
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் பாதுகாவலர்களும்
தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு,
லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, 11
இளைஞர்கள் கடத்தப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள்
போன்றவற்றில் சில வரம்புக்குட்பட்ட முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>என்றபோதிலும்,
மூத்த அதிகாரிகள் தொடர்புபட்ட மற்றைய முக்கிய வழக்குகளில் (உதாரணமாக, 17
உதவிப் பணியாளர்கள் படுகொலை மற்றும் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம்)
எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28c8418c-d1ce-48d3-9a3d-04d852e2f00d/26-6a984cf79d288.webp' /></p><p>
</p><p>
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறுவப்பட்ட Sri Lanka Accountability
Project திட்டத்தை தற்போதைய அரசு ஏற்றுக்கொள்ளாததுடன், சுயாதீனமாக வழக்குத்
தொடரும் அமைப்பையும் இதுவரையில் நிறுவவில்லை.
</p><p>
பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து,
உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு
விரைவுபடுத்த வேண்டும்.
</p><p>
நீதியை நிலைநாட்டுவதற்கான தனது உறுதிப்பாட்டைச் செயற்பாடுகள் மூலம்
வெளிப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் உயர் ஆணையாளரும் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை வலியுறுத்த வேண்டும்&nbsp; என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T17:01:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்பின் பெயர்: ட்ரம்பின் அதிரடி பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565"></link>
            <id>https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
“இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை ‘ட்ரம்ப் நீரிணை’ என மாற்றலாமா? அமெரிக்காவைப் போலவே இதுவும் முன்னெப்போதையும் விட சூடாக இருக்கும்!” என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ட்ரம்ப் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117202132375758936/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> 

முன்னதாகவும் இந்த நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T16:36:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்: அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கும் கனடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-canada-trade-war-canadians-boycott-us-goods-1788364855"></link>
            <id>https://tamilwin.com/article/us-canada-trade-war-canadians-boycott-us-goods-1788364855</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி வர்த்தகக் கொள்கைகள் மற்றும்
கனடாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி வர்த்தகக் கொள்கைகள் மற்றும்
கனடாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான
பல தசாப்த கால உறவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.</p><p>

அண்மையில் கனடியப் பொருட்களுக்கு மேலதிக வரிகளை விதித்த ட்ரம்ப், லேக்
ஒன்டாரியோ (Lake Ontario) ஏரியின் பெயரை "லேக் அமெரிக்கா" (Lake America) என
மாற்றி நிர்வாக உத்தரவிலும் கையெழுத்திட்டார்.</p><h2>வர்த்தகப் போர்</h2><p>

இந்த சம்பவங்கள் கனடிய மக்களிடையே கடும் அதிருப்தியையும் தேசப்பற்றையும்
தூண்டியுள்ளது.

இதன் எதிரொலியாக, ஒட்டாவாவில் உள்ள 'ட்ரம்ப் அவென்யூ' (Trump Avenue) வீதியின்
பெயரை மாற்றுவதற்கு மாநகரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>
அத்துடன், கனடிய மக்கள் அமெரிக்க சுற்றுலாப் பயணங்கள், அமெரிக்கப் பொருட்கள்
மற்றும் சேவை சந்தாக்களை (Subscriptions) பெருமளவில் புறக்கணிக்கத்
தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9100c77f-ca65-4b69-bec9-3e54512f937f/26-6a984a7129a74.webp' /></p><p>

அத்துடன், அமெரிக்க உதிரிப்பாகங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான தேவையை 70
சதவீதத்தால் குறைத்து, அவுஸ்திரேலியா மற்றும் சிலி போன்ற நாடுகளிலிருந்து
பொருட்களை இறக்குமதி செய்ய முன்னணி கனடிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதற்கு
கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) எடுத்த தீர்மானத்திற்கு 70
சதவீதத்திற்கும் அதிகமான கனடிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T16:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தரப்பை பழிவாங்கிய அநுர அரசு - ஏமாற்றத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்த பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்த பகுதி மாநகர சபை மறுத்துள்ளது. </p><p>

குறித்த நாட்களில் வேறு தரப்பினரால் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் சல்காது விளையாட்டு மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அன்றைய தினம் அவற்றை வழங்க முடியாது என அனுராதபுரம் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். </p><p>

அத்துடன், இதற்கு பொருத்தமான வேறொரு தினத்தை ஒதுக்கிக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறும் அறிவித்துள்ளார்.</p><h2><b> 

கோரிக்கை நிராகரிப்பு</b></h2><p>எனினும், சல்காது மைதானத்தை பெறுவதற்காக தங்களால் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. </p><p>இருந்த போதிலும், விண்ணப்பித்த வேறு ஒரு தரப்பினருக்கு குறித்த மைதானத்தை வழங்குவதற்கு மாநகர சபை செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SIg-Zv7vr2I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>

அத்துடன் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் மூன்றாவது தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி தங்களுக்கு வழங்குவது மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர். </p><p>

இது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேயரின் அறிவுறுத்தலுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும் மொட்டுக்கட்சியின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T15:01:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் போர் தாக்குதல்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/escalating-hostilities-between-the-us-and-iran-1788358526"></link>
            <id>https://tamilwin.com/article/escalating-hostilities-between-the-us-and-iran-1788358526</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர்
மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர்
மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர்
தீவிரமடைந்துள்ளது.
</p><p>
ஈரானிய புரட்சிகரக் காவல் படையின்(IRGC) வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்
நிலையங்கள், தொடர்பாடல் மையங்கள் மற்றும் கடல்சார் கடற்படை இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
</p><p>
இந்த தாக்குதலில் தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் திருமண நிகழ்வொன்று
இடம்பெற்ற வீடு தாக்கப்பட்டதில் சிறுவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன்,
68 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
</p><h2>
ஈரான் ஏவுகணை தாக்குதல்..</h2><p>
இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்தான், குவைத் மற்றும் ஈராக்கில் உள்ள
அமெரிக்க இராணுவ முகாம்கள் மற்றும் இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும்
ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c39277-2ebb-4594-a963-5a7708f392c1/26-6a98397f405ae.webp' /></p><p>
</p><p>
 அமெரிக்கப் படைகளை பிராந்தியத்தில்
இருந்து முற்றாக வெளியேற்றுவதே தமது முதன்மை நோக்கம் என ஈரானிய இராணுவத் தலைமை அறிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் முடக்கியுள்ள நிலையில்,
அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட இரு எண்ணெய்க் கப்பல்கள் கடலில் வீசப்பட்ட
கண்ணிவெடிகளில் சிக்கி சேதமடைந்துள்ளன.</p><p>

இந்த தீவிரப் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள்
மீண்டும் உச்சமடைந்துள்ளதுடன், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும்
கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>YOU MAY LIKE THID VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HWFRn2b_AbA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:58:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை நிறைவு - உயர் நீதியரசர்கள் குழாம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-concluded-1788360704"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-concluded-1788360704</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) உயர் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

இதனையடுத்து, சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு, அனுப்பி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
</p><h2>
உயர் நீதிமன்றத்தின் முடிவு</h2><p>

சட்டமூலத்திற்கு எதிராகவும், அதற்கு ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களையும், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e52ff3-aa9b-4d59-bb12-cb05cfce5c5c/26-6a98386e12d81.webp' /></p><p>
</p><p>
மேலும், மனுக்கள் தொடர்பில் ஏதேனும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருந்தால், அவற்றை நாளை பிற்பகல் 3 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை, நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, நீதிமன்ற செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்கும் நோக்கிலேயே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், நீதித்துறை அமைப்பு தொடர்பான திருத்தச் சட்டமூலமும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம்</h2><p>
சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயரத்ன இந்த விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d3326fe-3318-48b3-aee3-4572bb05d56a/26-6a98386edca35.webp' /></p><p>
</p><p>
குறித்த சட்டமூலங்கள் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில், இன்று(02) விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
</p><p>
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பவுள்ள இரகசிய வியாக்கியானம், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமையவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:53:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் - சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்க போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/struggle-to-rescue-people-trapped-in-mines-nepal-1788356592"></link>
            <id>https://tamilwin.com/article/struggle-to-rescue-people-trapped-in-mines-nepal-1788356592</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து,
காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து,
காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திபெத்தின் பேரழிவுப் பகுதிக்கு செல்லும் பிரதான பாதையை சீனா மீண்டும்
திறந்துள்ளது.
</p><p>
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு காரணமாக உருவான
வெள்ளப்பெருக்கில் இதுவரை 1,114 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார்
4,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
</p><h2>
தீவிரப்படுத்தப்படும் மீட்பு நடவடிக்கை</h2><p>

எனினும், நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கியுள்ள பல
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில்
மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32614a1-122b-475a-8d1b-e384db973aec/26-6a982865f10f7.webp' />&nbsp;&nbsp;</p><p>

சுரங்கங்களுக்குள் தேவையான காற்று, உணவு மற்றும் நீர் வசதிகள் இருக்கும்
என்பதால் அவர்கள் உயிருடன் மீட்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.</p><p>இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுக்கள் இந்த
அபாயகரமான மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.</p><h2>
 திபெத் பேரழிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்</h2><p>
இதனிடையே, எல்லையோரப் பகுதியான கிராங் கணவாய்க்கான பிரதான வீதியை சீனா
திறந்துள்ளதைத் தொடர்ந்து, கனரக இயந்திரங்கள் மற்றும் உயிர்மீர்ப்பு
சாதனங்களுடன் மீட்புக் படையினர் திபெத் பேரழிவுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.</p><p>

திபெத் பகுதியில் மாத்திரம் 104 இந்தியர்கள், 49 நேபாளிகள் உட்பட
நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக சீன அதிகாரப்பூர்வத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5cd4a08-d9d3-4c72-9051-3c4790044a4f/26-6a982866a5132.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பேரழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், பேரழிவின் நினைவுகளினாலும் இழப்புகளினாலும் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் உளவியல் பாதிப்புகளுக்கு
உள்ளாகியிருப்பதாக சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்.. பெற்றோருக்கு அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-results-dont-punish-ministry-warns-1788354460"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-results-dont-punish-ministry-warns-1788354460</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பிள்ளைகளை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பிள்ளைகளை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
</p><p>
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
பரீட்சைப் பெறுபேறுகளைக் காரணம் காட்டி பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது அவர்களை உளரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதையோ தவிர்க்குமாறு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ea3202-45e6-4406-93da-03711d0bbd70/26-6a98235e497da.webp' /></p><p>
</p><p>
மேலும், பிள்ளைகளுக்குத் அசௌகரியம், மன உளைச்சல் அல்லது அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான செய்திகள் மற்றும் பதிவுகளை வெளியிடுவதையோ அல்லது பரிமாறுவதையோ தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இத்தகைய செயல்கள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களாகக் கருதப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சு, இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சாத்தியமான அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் : அநுர அரசுக்கு எதிராக கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threats-tamil-media-strong-condemnation-anura-govt-1788353381"></link>
            <id>https://tamilwin.com/article/threats-tamil-media-strong-condemnation-anura-govt-1788353381</id>
            <summary type="text">தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும்
அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் ஊட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும்
அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் இன்று(02.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்கள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"தமிழர் தாயகப் பகுதியில் அரச ஊடகமொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவர்,
அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக அவதூறுகள்,
விசாரணைகள் மற்றும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b339ebac-8f3b-4dd3-a5da-74957aa18231/26-6a98231b5f503.webp' /></p><p>
மக்களுடைய ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாகச் சர்வதேசத்துக்குக் கூறும் தற்போதைய
தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் தனது
உண்மையான முகத்தை வெளிப்படுத்துகின்றது.
</p><p>
அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும்
நாம் எப்போதும் அரணாக நிற்போம். </p><h2>வாக்களித்த மக்கள் வெட்கப்பட வேண்டிய நிலை</h2><p>வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் காணி
ஒன்றின் மீது கல்லெறிந்து சிசிரிவி கமரா சேதப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a10e916-3615-406a-96b7-c98f53de2a5a/26-6a98231c18063.webp' /></p><p>சிசிரிவி
காணொளிகள் மற்றும் மேற்படி நபர் ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கிய ஒப்புதல்
வாக்குமூலம் ஆகியவை இருந்த போதிலும், பொலிஸார் அவரை 24 மணி நேரத்துக்குள்
நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் அதிகாலை 3 மணியளவில் விடுவித்துள்ளமை
அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
</p><p>
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் தற்போது வெட்கப்பட வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு, கிழக்கில் தமிழர்களின் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளைத்
தடுப்பதற்குச் சிங்களக் கட்சிகளை வடக்கு, கிழக்கில் இருந்து ஜனநாயக ரீதியாக
வெளியேற்றுவதே தமிழர்களின் இருப்பை நிலைநாட்டுவதற்கான வழி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:24:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடித்து நொறுக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவுத் தூபி - கொந்தளிப்பில் தமிழர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/memorial-obelisk-of-samadhi-of-beaten-father-selva-1788354396"></link>
            <id>https://tamilwin.com/article/memorial-obelisk-of-samadhi-of-beaten-father-selva-1788354396</id>
            <summary type="text">தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின்
நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின்
நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி
அடையாளம் தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. </p><h2>

அடித்து நொறுக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவுத்தூபி</h2><p>

வல்லை - அராலி வீதியில் அமைந்துள்ள தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில்,
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

போருக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை ஒத்த வடிவில்,
போர் முடிவடைந்த பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து
கடந்த 2012ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb980c4-144e-411c-b21b-6cafd38d2e26/26-6a981fb795d91.webp' /></p><p>
</p><p>
தந்தை செல்வாவின் சமாதியில் அவரது நினைவாக அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகப்
பாதுகாக்கப்பட்டு வந்த அந்த நினைவுத் தூபியே அடையாளம் தெரியாத நபர்களால் திட்டமிட்டு இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.</p><h2> 


மக்களின் கோரிக்கை</h2><p>
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஒரு
தலைவரின் நினைவுச் சின்னம் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளமை பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b7bb2a-47f9-49e4-b747-1a17c17ce0a9/26-6a981fb87f9d6.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களும் அயலவர்களும் வலி.வடக்கு பிரதேச சபையின்
கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக அடையாளம் கண்டு
சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், நினைவுத் தூபியை மீளப் புனரமைக்க நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6c974b-b30d-40ff-a1b9-aa2d3e26ad39/26-6a981fb95cdcb.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f010d42f-984e-4a2a-913b-9d212e50f183/26-6a981fba3513e.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:09:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவை தேடிய அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம் - ஷிரான் பாசிக்குடன் தொடர்பா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/azad-sali-may-be-arrested-soon-shiran-basik-1788349236"></link>
            <id>https://tamilwin.com/article/azad-sali-may-be-arrested-soon-shiran-basik-1788349236</id>
            <summary type="text">அண்மையில், மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்&amp;nbsp;அசாத் சாலி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து பேசுபொருளானது.&amp;nbsp;&quot;இப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில், மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்&nbsp;அசாத் சாலி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து பேசுபொருளானது.&nbsp;</p><p>"இப்போது அநுர எங்கே? அநுர காணாமல் போய் விட்டார்." என இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>இந்த விமர்சனம் பேசுபொருளாகிய அதேவேளை, கண்டனத்திற்கும் உள்ளாகியிருந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சமூகச் செயற்பாட்டாளர் தாஹா ஐன்ஸ்டீன், அவர் கைது செய்யப்படுவாரா என்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம், இச்சம்பவத்தை தொடர்ந்து, அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர்&nbsp;ஷிரான் பாசிக் தொடர்பிலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு&nbsp;ஐன்ஸ்டீன் வெளியிட்ட கருத்துக்கள் பின்வரும் காணொளியில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WfPcy3u9XX0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் - காணி உரிமையாளர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/14-year-old-boy-dies-1788353644"></link>
            <id>https://tamilwin.com/article/14-year-old-boy-dies-1788353644</id>
            <summary type="text">பொலன்னறுவை - சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் காட்டு
யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில்
அமைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை - சிரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் காட்டு
யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில்
அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(01.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

பல்லேகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன், இரவு
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கிய
நிலையில் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><h2>
சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சிய நபர்</h2><p>

காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்த நபர், தனது வீட்டிலிருந்தே அதற்குச்
சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9c5d05a-5036-4dde-8ab2-236640a390ab/26-6a981d0a4cb1a.webp' /></p><p>
</p><p>
அந்த வேலிக்கு அருகில் சென்ற வேளையிலேயே குறித்த சிறுவன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத மின்சார வேலியை அமைத்த நபர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சிரிபுர பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த Trailer - இன்று வெளியானது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/poraattam-movie-trailer-released-1788352535"></link>
            <id>https://tamilwin.com/article/poraattam-movie-trailer-released-1788352535</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) இன்று(02.09.2026) வெளியாகவுள்ளது.

ஈழத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) இன்று(02.09.2026) வெளியாகவுள்ளது.</p><p>

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
</p><h2>
போராட்டம் திரைப்படம்</h2><p>

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். 

“போராட்டம்” திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
</p><p>
போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de57758-5d90-4ccc-a34f-47219cdd1b62/26-6a98185641a93.webp' /></p><p> 

ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக “போராட்டம்” உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><h2>
புலம்பெயர் தமிழர்களின் எதிர்பார்ப்பபு</h2><p>
ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
“போராட்டம்” திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p> 

ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IcgPF0UtlUc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:36:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது - சாதனை படைத்த 56 000 மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட (Cut-off Mark) அதிக மதிப்பெண்களைப் பெற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p><span style="font-size: 14px;">2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட (Cut-off Mark) அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</span></p><p>மேலும், இப்பரீட்சைக்கு மொத்தம் 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் 289,867 மாணவர்கள் மாத்திரமே பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;&nbsp;<span style="font-size: 14px;"></span></h2><p><span style="color: inherit;">2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</span></p><h2>முதலாம் இணைப்பு&nbsp; &nbsp;</h2><p>2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது</p><h3>



பரீட்சைக்கான முடிவுகள்</h3><p>
இதற்கமைய, <a href="www.doenets.lk" target="_blank"><b>www.doenets.lk</b></a> அல்லது <a href="http://www.results.exams.gov.lk/home.htm" target="_blank"><b>www.results.exams.gov.lk</b></a> ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda0bf8d-2bb9-4d35-8afd-566baf2a7d38/26-6a98015dc06e8.webp' /></p><p> 

இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் தேர்வு ஒகஸ்ட் 9 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 தேர்வு மையங்களில் இடம்பெற்றுள்ளன.</p><p> 

சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் உட்பட மொத்தம் 294,089 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் பங்கேற்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mc60PmHrlxM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:20:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : சாதனை படைத்த 56000 மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-cut-off-mark-above-56000-1788350256"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-cut-off-mark-above-56000-1788350256</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சையில் மொத்தம் 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர், </p><p>இவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சையில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be94974e-cbf4-4af4-afef-17c6029bd243/26-6a9812a7dccb4.webp' /></p><p>
</p><p>
அதன்படி, வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளில், 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட அடையாள கவனயீர்ப்புப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-university-of-jaffna-1788345705"></link>
            <id>https://tamilwin.com/article/protest-university-of-jaffna-1788345705</id>
            <summary type="text">அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்
அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று மதிய உணவு இடைவேளையின்
போது அடையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில்
அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று மதிய உணவு இடைவேளையின்
போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>
இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் இன்று(02.09.2026) மதிய
உணவு இடைவேளையில் அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். </p><h2>ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள்&nbsp;</h2><p>பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும்
அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் பல்கலைக்கழக
விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல்
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc4e586-d3e3-4c09-8444-5d85b4f345f8/26-6a980a389a378.webp' /></p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப்
போராட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
</p><p>இதன்போது அரசாங்கத்திற்கு தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான பதாதைகள்
மற்றும் கோச அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்
சங்கத்தின் தலைவர் விக்னேஸ்வரன், தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து
அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை
உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
</p><p>மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள், ஆய்வுகூட வசதிகள்
உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாமல் மேலதிக
மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்</h2><p>எனவே, இந்த விடயங்களில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்தி,
பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c98d8bb-b688-45d9-9b00-30bc8e4f24f6/26-6a980a3986c6c.webp' /></p><p>இதனிடையே, போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சர்வேஸ்வரன், தற்போதைய அரசாங்கம்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும்
அதற்கு ஆதரவு வழங்கியதாகத் தெரிவித்தார்.
</p><p>உயர்கல்வித் துறையை தற்போதைய அரசாங்கம் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு
இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>குறிப்பாக, உயர்கல்வி தொடர்பான பொறுப்புகளைக் கொண்டுள்ள நாட்டின் தற்போதைய
பிரதமர் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்பதால், பல்கலைக்கழகங்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர் நன்கு புரிந்துகொண்டு தீர்வு காண்பார் என்ற
எதிர்பார்ப்பு காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>எனினும், தற்போதைய நிலைமைகளைப் பார்க்கும்போது, தாம் கொண்டிருந்த அந்த
நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்
செயலாளர் சர்வேஸ்வரன் கவலை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/162db934-47ae-4601-bfe7-3a1c5813ef2c/26-6a980ab29f227.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85ddf1e-3625-40cd-ad71-d327f80fbacb/26-6a980ab3ad649.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01db9fdc-3f3b-4640-aad5-47c2cf0e3a43/26-6a980ab48cdc3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e22d616-0e05-4114-b821-021e14d8062b/26-6a980ab56898c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6032faee-a9fa-4196-9d63-e89e132b6327/26-6a980ab654f43.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விழிப்புணர்வுடன் கூட்டுச் செயல்பாடும் அவசியம்..! பூட்டானில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-harini-amarasooriya-in-bhutan-1788348761"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-harini-amarasooriya-in-bhutan-1788348761</id>
            <summary type="text">இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை
எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச்
செயல்பாடாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய காலக்கட்டத்தில் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் பல்வேறு நெருக்கடிகளை
எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல என்றும், அதனைச்
செயல்பாடாகவும் அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என்றும் இலங்கைப்
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

பூட்டானில் இடம்பெற்ற "உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின்"
உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><h2>
காலநிலை நிதி உதவி</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p> 

 காலநிலை நடவடிக்கைகள், விவசாயத் துறைப் புத்தாக்கம், பொறுப்புமிக்க
நுகர்வு, உணவு விரயத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கான ஆதரவு மற்றும்
ஊட்டச்சத்துக்கான சம வாய்ப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் அனைவரையும்
உள்ளடக்கிய உணவு முறைமையை உருவாக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8b7f7e-9e3d-4c72-b071-76bbf1cf43d2/26-6a98095b5c320.webp' /></p><p> </p><p> 

மேலும் அபிவிருத்தியும் நிலைத்தன்மையும் இணைந்து பயணிக்கக்கூடிய
எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உலகளாவிய ஒத்துழைப்பு, காலநிலை நிதி உதவி மற்றும்
தொழில்நுட்ப அணுகலை வலுப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:32:53+00:00</updated>
        </entry>
    </feed>
