<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-23T05:13:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணியப் போவதில்லை - ஈ.பி.டி.பி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threats-mistakes-of-batticaloa-municipal-council-1784779105"></link>
            <id>https://tamilwin.com/article/threats-mistakes-of-batticaloa-municipal-council-1784779105</id>
            <summary type="text">கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை ஏற்றிச் சென்றதை
சுட்டிக்காட்டியதற்கு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் பல விதத்தில் அச்சுறுத்தி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை ஏற்றிச் சென்றதை
சுட்டிக்காட்டியதற்கு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் பல விதத்தில் அச்சுறுத்தி
வருகின்றார். எனவே எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணிய போவதில்லை என ஈ.பி.டி.பி மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>மட்டக்களப்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஈ.பி.டி.பி மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்</p><p></p><h2>தவறை சுட்டிக் காட்டியதற்காக&nbsp;</h2><p>மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் கதிர்காமம் பாதை யாத்திரை செல்பவர்களுக்கு
உணவு வழங்க உணவு பொருட்களை கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் ஏற்றிச்
சென்ற சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் சுட்டிக் காட்டினேன்.</p><p>
அதற்காக என்னை பழிவாங்க எனக்கு எங்கு காணி இருக்கிறது வீடு இருக்கிறது சொத்து
இருக்கிறது என்ன வியாபாரம் செய்கின்றேன் என என்னை அச்சுறுத்தும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்
தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் எனது வியாபார நிலையத்திற்கு என்னை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04fb590-74a9-439f-84a2-a6488c6c7d30/26-6a6197f543fab.webp' /></p><p>தவறை சுட்டிக் காட்டியதற்காக என்னை அச்சுறுத்தி வீடு, வர்த்தக நிலையங்களின்
ஆவணங்களை எடுத்துக்கொண்டு மாநகரசபைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக
அழைத்தார்கள் அப்போது நான் எழுத்து மூலமாக தருமாறு கோரினால் அதை தருகின்றேன்
என்று தெரிவித்தேன்.</p><p>எத்தனை இடங்களில் வீதி மின்விளக்குகள் இல்லாமல் இருக்கிறது என்னை பழிவாங்க
செலவு செய்த 10 ஆயிரம் ரூபாவுக்கு இந்த வீதி மின்விளக்கு இல்லாததற்கு செலவு
செய்திருக்கலாம்.</p><p>கல்லடி பாலத்தில் பல தடவைகள் மின்சார விளக்குகள் ஒளிராமல் இருந்துள்ளது. இது
தொடர்பாக முகநூல்களிலும் தொலைபேசி ஊடாகவும் ஊடகங்கள் ஊடாகவும் மக்கள், மாநகர
சபை முதல்வரிடம் பல கோரிக்கைகள் முன்வைத்தும் அதற்கான செயற்பாட்டைச் செய்யாமல்
தவறை சுட்டிக் காட்டுபவர்களை பழிவாங்கும் நோக்கோடு தான் மாநகரசபை முதல்வர்
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து கொண்டு இருக்கிறார்.</p><h2>தொடர்ச்சியாக தவறுகள் இடம்பெறும்போது</h2><p>போலி தேசியத்தை பேசிக் கொண்டு பிழைகளை சுட்டிக்காட்டினால் தங்கள்
அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு எதிராக செயற்படாமல் தடுக்க இவ்வாறு
அச்சுறுத்துகின்றனர்.</p><p>இவ்வாறுதான் நான் இன்று கழிவு அகற்றும் உழவு இயந்திர
பெட்டியில் உழவு பொருட்களை ஏற்றிச் சென்றதை சுட்டிக்காட்டியதற்கு பல விதத்தில்
அச்சுறுத்தி பொய்யான வழக்குகள் போட முடியுமா என பார்க்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb62e47-07d4-48c2-868e-c926c662d63e/26-6a6197f63847b.webp' /></p><p>
எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணிய போவதில்லை. இவர்களுக்காக மட்டும் அல்ல
வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும் போது அவர்களுக்காக
எந்த நேரத்திலும் குரல் கொடுப்பேன்.</p><p>எனக்கு எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும்
அதனை எதிர்கொண்டு எங்கு தமிழ் மக்களுக்கு எதிராக தவறு நடக்கின்றதோ தொடர்ச்சியாக தவறுகள் இடம்பெறும் போது அதனை சுட்டிக்காட்டுவேன் என்றும் குறிப்பிட்டு்ள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் ஆட்சியில் ஜனாதிபதி மாளிகைக்குள் நடந்தது என்ன...! அம்பலப்படுத்தும் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/35-crore-rs-spent-on-the-maintenance-1784781382"></link>
            <id>https://tamilwin.com/article/35-crore-rs-spent-on-the-maintenance-1784781382</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். </p><p>

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்த ஜனாதிபதி மாளிகைகள் அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p> </p><h2><b>ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு</b></h2><p>ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு, பூங்காப் பராமரிப்பு, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகபூர்வ தங்குமிடக் கட்டடப் பராமரிப்பு என்பவற்றுக்காகவே இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89be99e2-3847-4e49-a419-840d922c4c2b/26-6a619cc4ef926.webp' /></p><p>ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் 15 மில்லியன் ரூபாவும், கட்டடத் திருத்தச் செலவுகளாக 110 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், 2019 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவாக 15 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 62 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.</p><p> கடந்த 2020 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 12 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 22.7 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது. </p><h3><b>உத்தியோகபூர்வ இல்லங்கள்</b></h3><p>கடந்த 2021 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 10 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 18.8 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05eb846e-f686-4a5d-91b6-a24bb0e198b4/26-6a619cc5b0659.webp' /></p><p>2022 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவாக 12 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 13 மில்லியன் ரூபாவும், செலவிடப்பட்டுள்ளது. </p><p>கடந்த 2023 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 26.04 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 11 மில்லியன் ரூபாவாகவும் இருந்ததாக பிரதமர் கூறினார். </p><p>கடந்த 2024 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 13.09 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 10.05 மில்லியன் ரூபாவாகவும், 2025 ஆம் ஆண்டில் பராமரிப்பு செலவு 7.05 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 3 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளன. </p><p>நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பராமரிப்புச் செலவாக 3 மில்லியன் ரூபாவம், திருத்தச் செலவாக 0.4 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
இதேவேளை சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மக்களின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடதக்கது. 
</p>]]></content>
            <updated>2026-07-23T04:48:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் கைதிகள் தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-information-regarding-political-prisoners-1784780277"></link>
            <id>https://tamilwin.com/article/minister-information-regarding-political-prisoners-1784780277</id>
            <summary type="text">சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் &#039;அரசியல் கைதி&#039; என்ற பதத்துக்கு எத்தகைய
பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல்
கைதிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய
பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல்
கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான
வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்
பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>சிறைச்சாலை கட்டளை சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள்</h2><p>
</p><p>
"சிறைச்சாலை கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய ஒழுங்குவிதிகளில் 'அரசியல் கைதிகள்'
என எந்தவொரு தனிக் குழுவும் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்றங்களின் ஊடாக கைதிகள் சந்தேகநபர்களாகவோ அல்லது குற்றவாளிகளாகவோ அடையாளப்படுத்தப்பட்டு
விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக்காவலிலோ வைக்கப்படுகின்றார்களே தவிர, அரசியல்
கைதிகள் என எவரும் நீதிமன்றத்தால் சிறைப்படுத்தப்படவில்லை.சர்வதேச
மட்டத்திலான பொருள் கோடல்களையே நாம் ஏற்கின்றோம் என்றும்&nbsp;தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/006c45ae-c352-4d18-983d-aaf64c0a1ff3/26-6a619b6d808f0.webp' /></p><p>இதன்போது தேர்தல் காலத்தில் வடக்கு -
கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதாக உறுதியளித்தாரே, அந்த நிலைப்பாட்டில் அரசு இன்றும் உள்ளதா என
அஜித் பி. பெரேரா எம்.பி. மேலதிக கேள்வியாக எழுப்பியுள்ளார்.</p><h2>கைதிகளின் பட்டியல்</h2><p>

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,</p><p> கைதிகளின் பட்டியலை தான்
பலமுறை ஆராய்ந்துள்ளதாகவும், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் நீதிமன்றங்களில்
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பலர் குற்றவாளிகளாகவும்
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

"நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்துக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அப்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு சிறைச்சாலைகளில்
நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்துள்ள
அறிக்கைக்கு அமைய, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவும் பொதுமன்னிப்பு
வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு என முழு நாடும்
உள்ளடக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:41:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூர்மையான ஆயுதத்தினால் தாக்கி நபரொருவர் பலி - மற்றொருவர் பலத்த காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-died-after-being-attacked-sharp-weapon-1784778545"></link>
            <id>https://tamilwin.com/article/person-died-after-being-attacked-sharp-weapon-1784778545</id>
            <summary type="text">அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதாக&nbsp;பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>சந்தேகநபரை கைது செய்வதற்காக விசாரணை</h2><p>இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் லாதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/218626ce-a12e-4814-9fb2-4942c34b62c9/26-6a6194851b922.webp' /></p><p>சந்தேகநபருக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்த கொலையை செய்துள்ளமை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>

தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக உஹன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T04:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renewable-energy-sajith-premadasa-1784779317"></link>
            <id>https://tamilwin.com/article/renewable-energy-sajith-premadasa-1784779317</id>
            <summary type="text">பேச்சை செயலுக்குக் கொண்டு வந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தி
வலுப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேச்சை செயலுக்குக் கொண்டு வந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தி
வலுப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பந்தாரநாயக்க சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22.07.2026) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நிறுவனங்களுக்கு இடையே பாரபட்சம்</h2><p></p><p>அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மின்சாரத் தீர்வை விகிதத்தைக் கணக்கிடும்போது மூலதனச் செலவினங்களில் பாரிய
மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுகின்றது.
பெரிய நிறுவனங்கள் வரிச் சலுகைகளைப் பெறும் நிலையில், நுண், சிறிய மற்றும்
நடுத்தர அளவிலான சூரிய சக்தி உற்பத்தியாளர்களும் முயற்சியாளர்களும்
பாதுகாக்கப்பட வேண்டும்.
</p><p>
சூரிய பலகைகள் மற்றும் பேட்டரி சேமிப்பு உபகரணங்களில் பெரிய நிறுவனங்களுக்குச்
சாதகமான சூழல் காணப்பட்டாலும், சிறிய நிறுவனங்களுக்கு அது பாதகமாக அமைகின்றது.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிக் கடன்களை நம்பியுள்ள நிலையில்,
பெரிய நிறுவனங்களுக்குப் பசுமை நிதிகளுக்கான எளிதான அணுகல் கிடைப்பதையும்,
நாணய மாற்று வீதங்களைப் பயன்படுத்தி அவை சாதகமான பலன்களைப் பெறுவதையும்
சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p>
அதிகப்படியான எரிசக்தி உற்பத்தி இல்லாத பகுதிகளில் பேட்டரி முறைமைகள்
நிறுவப்படாமல், தேவை உள்ள பகுதிகளில் சமூக பேட்டரி முறைமைகள் மற்றும்
மெய்நிகர் மின் நிலையக் கருத்துருவைக் கொண்டு விநியோக துணை நிலையம் மட்டத்தில்
அவற்றை இணைக்க வேண்டும்.</p><h2>சூரிய சக்தித் துறையில் கடுமையான வீழ்ச்சி</h2><p>

முறையற்ற விலை நிர்ணயம் மற்றும் கட்டணக் கொள்கைகளால் சூரிய சக்தித் துறையில்
கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் நேரடியாக 1 இலட்சம் வேலைவாய்ப்புகள்
இழக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனங்களின் எண்ணிக்கை 1,150 இல் இருந்து 560 ஆகக்
குறைந்து, மறைமுகமாக 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சூழலுக்கு உகந்த எரிசக்தியை மேம்படுத்துவதற்குப் பதிலாகத் தடைகளை ஏற்படுத்தி,
எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களை வெற்றிபெற அனுமதிக்கக் கூடாது.</p><p></p><p>
</p><p>எந்த அரசியல் கொள்கை சார்ந்தவராகவும் இருந்தாலும், தேசிய நலனைக்
கருத்திற்கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பாதுகாப்பதற்கான முதலீட்டாளர்
உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:10:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் யுவதி உட்பட ஐவர்..! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/homagama-fire-accident-death-details-1784770563"></link>
            <id>https://tamilwin.com/article/homagama-fire-accident-death-details-1784770563</id>
            <summary type="text">ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>குறித்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (21) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலங்கள் மீதான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மரபணு பரிசோதனை</h2><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால், அவை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு&nbsp; மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a5bfbb-1cf4-4538-9088-c8ba66a53387/26-6a6187a2ef917.webp' /></p><p>
</p><p>
இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த, மரியோ எட்வர்ட் என்ற, சுமார் 15 வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த ஒருவரும் அடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்த தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு பணிக்கு சேர்ந்துள்ளதுடன், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19) என்பவர் 4 நாட்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>

உயிரிழந்தவர்களில் நால்வர் அங்கு, பணிக்கு சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h2>உயிரிழந்தவர்களின் விபரம்&nbsp;</h2><p>
</p><p>இந்த சம்பவத்தில் ஹட்டன் - மஸ்கெலியாவைச் சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி என்ற யுவதியும்&nbsp; உயிரிழந்துள்ளதுடன், இவர் குறித்த தொழிற்சாலையில், 6 மாதங்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றையவர் அட்டகலம்பன்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான் என்பவரென கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193e67e8-3d5b-4cd7-80c3-d100831fff0f/26-6a6187a39dbf9.webp' /></p><p>

இவர் ருமேனியா நாட்டுக்கு தொழிலுக்காக செல்வதற்கு விசா கிடைக்கும் வரை தற்காலிகமாக அங்கு பணிபுரிந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p>

வேலைவாய்ப்பு பணியகத்தில் இரண்டு நாட்கள் பயிற்சியை நிறைவுசெய்துள்ள இவர், பணியில் இணைந்து இரண்டு வாரங்களேயாவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இந்த தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையின்போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அங்குள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
குறிப்பாக, தொழிற்சாலையில் முறையான தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பு இன்மையை பிரதானமாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.</p><h2>அதிகாரிகள் வழங்கிய கால அவகாசம்</h2><p>
</p><p>
அத்துடன், 20 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள், கடந்த மாதம் 2 ஆம் திகதியன்று எழுத்துமூலம் குறித்த தொழிற்சாலையில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87577604-9dcd-4293-9726-9ec68de707ab/26-6a6187a44e0d2.webp' /></p><p>
இந்த கால அவகாசம் முடிவடைவதற்கு ஒரு நாள் மாத்திரமே இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>

இதேவேளை,&nbsp; மின்சாரக் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>தொழிற்சாலைகளில் 80 முதல் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த போதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போதிய பாதுகாப்பு வழிமுறைகளும் அவசரகாலத் திட்டங்களும் அங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஹர்ஷ டி சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harsha-de-silva-escaped-from-an-accident-1784777682"></link>
            <id>https://tamilwin.com/article/harsha-de-silva-escaped-from-an-accident-1784777682</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நூலிழையில் உயிர்தப்பியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
</p><p>
தான் முகம் கொடுத்த அவசர ஆபத்தான சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட 1969 என்ற வீதி அவசர உதவிக்குழுவினரின் சிறப்பான சேவையை பாராட்டி, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். </p><p>

தனது X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா&nbsp; இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>வீதி விபத்து</b></h2><p>

கடந்த 20ஆம் திகதி மாலை தனது மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த பயங்கரமான அனுபவத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்ததாக குறிப்பிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ff4324-d95d-4225-87e0-49edcaefaa3c/26-6a618f8f2ae88.webp' /></p><p>மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் என்ற அளவில் அதிக வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் பின் சக்கரத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தான் நூலிழையில் தப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்நேரத்தில் 1969 என்ற உடனடி அழைப்பு இலக்கம் ஊடாக விடுக்கப்பட்ட ஒரே ஒரு அறிவித்தலை அடுத்து, சில நிமிடங்களுக்குள் குறித்த இடத்திற்கு வந்த உதவிக்குழுவினர் சம்பந்தப்பட்ட சிக்கலை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h3><b>

சாரதிகளிடம் கோரிக்கை </b></h3><p>அக்குழுவினரின் தொழில்சார் நிபுணத்துவத்தையும் கனிவான சேவையையும் பாராட்டுக்குரியது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/811d5dac-e200-44c6-ba91-a440d6c92697/26-6a618f8fd56eb.webp' /></p><p>சக்கரத்தை மாற்றுவது அவர்களின் உத்தியோகபூர்வ பொறுப்பிற்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்த போதிலும்,&nbsp; அதற்கு இடமளிக்காது அக்காரியத்தையும் அவர்களே செய்து முடித்ததாக பதிவிட்டுள்ளார். </p><p>

இச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு முன்னர் தமது வாகனங்களின் சக்கரங்களின் நிலை குறித்து முற்கூட்டியே பரிசோதனையில் ஈடுபடுமாறு அவர் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-23T03:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : சாரதி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-motorcycle-head-on-collision-driver-injured-1784776741"></link>
            <id>https://tamilwin.com/article/car-motorcycle-head-on-collision-driver-injured-1784776741</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் நுவரெலியா வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் நுவரெலியா வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>குறி்த்த விபத்தானது&nbsp;நேற்று(22.07.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி கடுமையாக காயமடைந்து டிக்கோயா கிளங்கன்
ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>குறித்த விபத்து கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார்
சைக்கிளும், நுவரெலியா நோக்கி பயணித்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை ஏற்றிச் சென்ற
காரும் நேருக்கு நேர் மோதியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/216563e3-4ed4-40a6-a184-2176eea0cc13/26-6a618dd8b81bb.webp' /></p><p>கார் சாரதி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த
மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகக் சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
</p><p>விபத்து ஏற்பட்டவுடன் 1990 'சுவசெரிய' அவசர மருத்துவ சேவைக்கு
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு முதலுதவி வழங்கி,
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T03:48:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை விவாதத்துக்கு அரசு அனுமதி மறுப்பு: கொழும்பில் அவசர கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-in-colombo-chaired-by-opposition-leader-1784777272"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-in-colombo-chaired-by-opposition-leader-1784777272</id>
            <summary type="text">நீதித்துறை தொடர்பான விடயங்களை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளச்
சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை தொடர்பான விடயங்களை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளச்
சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள்&nbsp; தொடர்பில் கொழும்பில் அவசர கூட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின்
தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் விடயங்கள்</h2><p>
</p><p>
இதன்போது ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படையான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம்
மற்றும் நீதித்துறைக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் 'தடைகள் மற்றும்
சமன்பாடுகள்' ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6012c947-3688-43f8-b4b2-5747e0ea40a6/26-6a618dfb5b703.webp' /></p><p>

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் விடயங்கள் வெளிப்படையாக நாடாளுமன்ற
விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுப்பினர்கள் கவனம்
செலுத்தினர்.
</p><p>
நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்தச்
சந்தர்ப்பம் வழங்காமை ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளைப் பாதிக்கும் செயலாகும் எனக்
குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இது தொடர்பாக
எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நாடாளுமன்ற மற்றும் அரசியல் ரீதியான
நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
</p><p>
இந்த அவசரக் கூட்டத்தில் ரோஹினி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, வி.
இராதாகிருஷ்ணன், சமிந்த விஜேசிறி, கயந்த கருணாதிலக, ஜே. சி. அலவத்துவல, சுஜித்
சஞ்சய பெரேரா, காவிந்த ஜயவர்தன, சதுர கலப்பத்தி, கபீர் ஹாஷீம், ரவி
கருணாநாயக்க, எம். எஸ். ஏ. வாசித், ரோஹண பண்டார, டபிள்யூ. எச். எம். தர்மசேன,
பி. ஆரியவங்ச, தயாசிறி ஜயசேகர, அனுராத ஜயரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ரிஷாத்
பதியுதீன், ரவூப் ஹகீம், இராமநாதன் அர்ச்சுனா, நிசாம் காரியப்பர், எம். எஸ்.
உதுமாலெப்பே, சானக மதுகொட, சுரங்க ரத்நாயக்க மற்றும் செல்வம் அடைக்கலநாதன்
உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T03:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மோசடியில் ஈடுபட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraudster-arrested-over-hanuman-statue-scam-1784773195"></link>
            <id>https://tamilwin.com/article/fraudster-arrested-over-hanuman-statue-scam-1784773195</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழிபாடு செய்யப்பட்டதாக கூறப்படும், தங்க முலாம் பூசப்பட்ட கதாயுதத்துடன் கூடிய அனுமன் சிலை ஒன்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழிபாடு செய்யப்பட்டதாக கூறப்படும், தங்க முலாம் பூசப்பட்ட கதாயுதத்துடன் கூடிய அனுமன் சிலை ஒன்றை தோண்டி எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, </p><p>தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழிபாடு செய்த அனுமன் சிலை 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜா-எல, மெல்வத்தை பகுதிக்கு இரகசியமாக கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மோசடி கும்பல் ஒன்று பணம் பறிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>ஜா-எலயில் புதைக்கப்பட்டுள்ள சிலை</h2><p>அவ்வாறு புதைக்கப்பட்டுள்ள அந்த சிலையை இந்தியாவில் உள்ள பூசகர் ஒருவருக்கு 2 கோடிக்கும் அதிகமான ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அந்த கொடுக்கல் வாங்கல் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் பங்களிப்புடனேயே நடப்பதாகவும் மோசடிக்காரர்கள் தெரிவித்திருக்கிறார்கள். </p><p>சிலையை தோண்டி எடுத்து இந்தியாவிற்கு அனுப்பும் வரை தேவைப்படும் பல்வேறு செலவுகளுக்கு சுமார் இரண்டு கோடி ரூபா பணம் செலவாகும் என்பதால், பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பணக்கார வர்த்தகர்களின் வாட்ஸ்அப் இலக்கங்களுக்கு தகவல்களை அனுப்பி செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
இது குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸ் மா அதிபரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdd4084-c44f-491b-9c6e-0ba28bfed3a5/26-6a617a4d236c6.webp' /></p><p>இவ்வாறானதொரு பின்னணியில், இந்த பிரதான நபர் கொழும்பு பகுதியில் வைத்து கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>
சந்தேகநபரின் தொலைபேசியை பரிசோதித்த போது, மேலும் பெருமளவானோருக்கு வாட்ஸ்அப் ஊடாக இந்த மோசடி தொடர்பான காட்சிகளை அனுப்பியுள்ளமை தெரியவந்தது. </p><p>கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேக
நபர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T02:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டலொன்றில் 500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர் - பின்னணியில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-people-arrested-with-500-pounds-of-gold-1784773812"></link>
            <id>https://tamilwin.com/article/10-people-arrested-with-500-pounds-of-gold-1784773812</id>
            <summary type="text">கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் பெருந்தொகை பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் பெருந்தொகை பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்துள்ள சந்தேகநபர்கள், வத்தேகமவிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோதே நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை</h2><p>
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 930 கிராம் மொத்த எடையுடைய கொண்ட 4 தங்கம் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4711aa3c-7ad4-4c86-903d-e6362032c3e3/26-6a617fcf9efa8.webp' /></p><p>

மேலும், இவர்களிடமிருந்து 1 கோடியே 69 இலட்சம் ரூபா ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>சந்தேகநபர்கள் தங்க தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளனர்.
</p><p>
எனினும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்துக்கான முறையான உரிமையை நிரூபிக்கும் எந்தவிதமான ஆவணங்களும் அவர்களிடம் இல்லையென்பதும் தெரியவந்துள்ளது.</p><p>இதற்கமைய, வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை இன்று (23) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T02:46:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nimalka-fernando-missing-persons-1784769676"></link>
            <id>https://tamilwin.com/article/nimalka-fernando-missing-persons-1784769676</id>
            <summary type="text">தமிழீழத்திற்கான இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. இவ்வாறு காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கேட்பது &quot;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழத்திற்கான இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. இவ்வாறு காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கேட்பது "என் பிள்ளைக்கு என்ன நடந்தது?" என்றுதான். </p><p>500 பேரை நாங்கள் இராணுவத்தி்டமே ஒப்படைத்தோம். 
அப்படியென்றால் ஒரு நாடாக அந்தத் தாய்மார்களுக்கு நாம் அளிக்கும் பதில் என்ன? எனவே இந்த விடயங்கள் குறித்தும், பொறுப்புக்கூறல் குறித்தான பொறிமுறைகள் (Mechanisms), சட்டக் கட்டமைப்புகள் மற்றும் அரசியல் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல விடயங்களை தெரிவித்திருந்தார்.அது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள்,</p><h2>
 </h2><p></p><h2>இராணுவத்தால்&nbsp; பஸ்களில் ஏற்றப்பட்ட பிள்ளைகள்</h2><p>
இந்த விடயம் ஒட்டுமொத்தமாக சமாதானம் பற்றிய ஒரு விடயம். உதாரணமாக, இப்போது என் மகன் காணாமல் போயிருந்தால் எனக்கு இருக்கும் வேதனை சமாதானத்தைப் பாதிக்கும். </p><p>உங்களால் அதை சாதாரண விடயமெனக் கடந்துபோக முடியாது.
தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக நீதிமன்றத்திலும் கூறியிருக்கிறார்கள். வவுனியா நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று நடக்கிறது.</p><p>
சீ.டீ.பி பஸ்களில் இராணுவத்தினரின் உதவியுடன் ஏற்றினார்கள். நான் இராணுவத்திடம் கேட்கவில்லை. நீதிமன்றத்திலும் பெயர் பட்டியல் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.
</p><p>போர் ஒன்று இருந்ததை நாம் ஏற்றுக்கொண்டோம் தானே, அப்படியென்றால் போர்க் குற்றங்களும் நடந்திருக்கும்.
இப்போது சிலர் சொல்லலாம், இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், ஆனால் சரணடையவில்லை என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a105268-7bfe-4112-9ae2-9a586d3d51dc/26-6a616c8ec580a.webp' /></p><p>அப்போது கைது செய்யப்படும் போது ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை புரிந்து கொண்டுதான் மதகுரு ஒருவர் அனைவரிடமும் கலந்துரையாடி சரணடையுங்கள், கடவுள் பார்த்துக்கொள்வார் என்று பெயர் பட்டியல் ஒன்றையும் எடுத்துள்ளார். அந்த மதகுருவும் இன்றில்லை.
</p><p>எனவே, பயங்கரவாதத்தை அடக்கும் விடயத்திலும் ஒரு குற்றம் நடந்திருந்தால், அந்த குற்றம் குறித்து நாம் விசாரணை செய்ய வேண்டும். போர்க் குற்றம் என்பதற்கு வரும்போது அதில் சில வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. </p><p>போர் செய்வதற்கும் ஒரு சட்டக் கட்டமைப்புக்குள் பரஸ்பரம் இருக்க முடியும் என்ற ஒரு கதை இருக்கிறது. அது எல்.எல்.ஆர்.சி (LLRC) அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
இது குறித்து ஆராய்ந்து பார்த்து, இதன் தகவல்களை வெளிக்கொணர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதும், என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவதும் அவசியம்.
</p><p>அப்படியென்றால் ஒரு நாடாக அந்தத் தாய்மாருக்கு அளிக்கும் பதில் என்ன? எனவே இந்த விடயங்கள் குறித்தும், பொறுப்புக்கூறல் குறித்தான பொறிமுறைகள் (Mechanisms), சட்டக் கட்டமைப்புகள் மற்றும் அரசியல் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T02:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோருக்கு வரும் இரகசிய அழைப்புக்கள்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-financial-frauds-police-officers-1784771030"></link>
            <id>https://tamilwin.com/article/warning-financial-frauds-police-officers-1784771030</id>
            <summary type="text">&amp;nbsp;பொலிஸ் அதிகாரிகளின் படங்களைப் பயன்படுத்தியும், அவ்வாறு போலியாக ஆள்மாறாட்டம் செய்தும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பொலிஸ் அதிகாரிகளின் படங்களைப் பயன்படுத்தியும், அவ்வாறு போலியாக ஆள்மாறாட்டம் செய்தும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

</p><p>மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, போலி புகைப்படங்களுடன் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>இரகசிய விசாரணை </h2><p>

இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது பொலிஸ் விசாரணை பிரிவுகளில் இருந்து அழைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d77c08d7-bf2d-46ee-a2d6-7f7c39dd6a76/26-6a61776ea9eb8.webp' /></p><p>

தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்து வங்கிக்கணக்குகள் பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கு தொடரப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக இரகசிய விசாரணை நடத்தப்படுவதாகக்கூறி, அதற்கு உதவி செய்தால் விடுவிப்பதாகக் குறிப்பிட்டு வட்ஸ்அப் ஊடாக போலி பொலிஸ் அடையாளச் சின்னங்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் படங்களை அனுப்புதல். 'Verification' (சரிபார்ப்பு) பணிகளுக்காக முடக்கப்பட்ட (Freeze) கணக்குகளை விடுவிக்கக்கோரி வங்கிக் கணக்குகளில் உள்நுழைவதற்காக OTP இலக்கங்களைப் பெற்றுக் கொள்ளுதல், வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுமாறு பணித்தல் அல்லது USDT போன்ற கிரிப்டோ நாணயங்கள் ஊடாகப் பணத்தைச் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்துதல் போன்ற செயற்பாடுகளில் மோசடியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

எனவே, எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வட்ஸ்அப் ஊடாக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், அட்டை இலக்கங்கள், CVV இலக்கம், கடவுச்சொற்கள் அல்லது OTP இலக்கங்களைக் கேட்பதில்லை என்பதால், இத்தகைய தகவல்களைக் கோரும் அழைப்புகள் மோசடியானவை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2>கணக்கு முடக்கப்படும் அல்லது வழக்கு தொடரப்படும்</h2><p>

எனவே, கணக்கு முடக்கப்படும் அல்லது வழக்குத் தொடரப்படும் போன்ற அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5648e36-f125-4869-9a4b-1b65746b3553/26-6a61776f5ac0f.webp' /></p><p>
</p><p>
 ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கியின் அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> 

இலங்கைக் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலங்கை மத்திய வங்கி ஆகியவை தனிப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை நடத்துவதில்லை என்பதுடன், வங்கிக் கணக்கு இலக்கங்களை வழங்கிப் பணத்தை வைப்புச் செய்யுமாறு கோருவதும் கிடையாது என அறிவித்துள்ளது.</p><h2>சந்தேகத்திற்கிடமான இணைய பயன்பாடுகளை தவிர்க்குமாறும் எச்சரிக்கை</h2><p>
</p><p>
 மேலும், அறியாத நபர்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம் வெளியிடப்படும் இணையவழிப் பரிசுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைய பயன்பாடுகளை தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, ஆள்மாறாட்டம் செய்து பணம் பெற முயற்சிக்கும் மோசடி நபர்கள் அல்லது குழுக்கள் குறித்து கணினி குற்ற விசாரணை பிரிவின் இலக்கங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p><b>

 கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்: 071 - 8592918</b></p><p><b>
கணினி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள்: 071 - 8591765 </b></p><p><b>
கணினி குற்ற விசாரணைப் பிரிவு (அலுவலகம்): 011 - 2300756
</b></p><p>
இதுபோன்ற மோசடிகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரடியாகச் சென்று எழுத்துமூலம் முறைப்பாடு செய்யும் வசதியும் காணப்படுவதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T02:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா - இலங்கைக்கு இடையில் விமான பயணங்களில் ஈடுபடும் பயணிகளுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-australia-sri-lanka-flights-to-be-suspend-1784734702"></link>
            <id>https://tamilwin.com/article/will-australia-sri-lanka-flights-to-be-suspend-1784734702</id>
            <summary type="text">அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையே பயணம் செய்யும் விமானப் பயணிகளின் சுற்றுலாத் திட்டங்களில் திடீர் தாக்கங்கள் ஏற்படக்கூமென அவுஸ்திரேலிய அரசாங்கம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையே பயணம் செய்யும் விமானப் பயணிகளின் சுற்றுலாத் திட்டங்களில் திடீர் தாக்கங்கள் ஏற்படக்கூமென அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது. </p><p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. </p><p>மத்திய கிழக்கு போர் காரணமாக சில நாடுகளின் வான்பரப்பு குறுகிய அறிவித்தலில் மூடப்படலாம். சில நேரம் விமான நிறுவனங்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்தல், வேறு பாதைகளைப் பயன்படுத்த அல்லது விமானச் சேவைகளை ரத்து செய்ய நேரிடலாமென்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் Smartraveller இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p> </p><h2><b>பயணிகளுக்கு எச்சரிக்கை </b></h2><p> இந்த நிலைமையானது குறிப்பாக டுபாய், டோஹா, அபுதாபி உள்ளிட்ட மத்திய கிழக்கு விமான நிலையங்கள் ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கும் இடையில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமானதாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d125075-7976-4410-a55d-0156c456a192/26-6a60fd95a417b.webp' /></p><p>வான்பரப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் விமானங்கள் தாமதமடைதல், பயண வழிகள் நீளுதல் மற்றும் இணைப்பு விமானங்களைத் தவறவிடும் அபாயம் காணப்படுகின்றது. </p><p>எனினும், அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் தற்போது முற்றிலுமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. </p><h3><b> விமானச் சேவை</b></h3><p>கட்டார் எயார்வேஸ் நிறுவனம் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி வரை புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவனையை பராமரித்து வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3ba28b-6ff5-49ce-8c58-beab13eefa2b/26-6a60fd9654fb3.webp' /></p><p>பாதுகாப்பு நிலைமை காரணமாக குவைத்திற்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானச் சேவைகளும் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. </p><p>அதற்கமைய, இலங்கைக்குப் பயணம் செய்ய அல்லது இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வரவுள்ள பயணிகள், விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் தமது விமானப் பயணத்தின் நிலைமையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-23T01:19:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவுக்கு அறுவை சிகிச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salay-under-went-an-surgery-1784765908"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salay-under-went-an-surgery-1784765908</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொ்ளளப்பட்டுள்ளது.
தேசிய வைத்தியசாலையின் இதயவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொ்ளளப்பட்டுள்ளது.
</p><p>தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுரேஷ் சலே கைது</h2><p>
</p><p>கடந்த ஜூன் 7ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சலே, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக இதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e588f091-463f-4ef5-90a5-36c7d2c76525/26-6a615dd64bd0f.webp' /></p><p>
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் சலே நீண்ட நாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.</p><p>
இந்த நிலையில் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புக்களின் அடிப்படையில் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T01:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி.விக்ரமரத்னவின் மரணத்தில் தொடரும் மர்மம்: துப்பாக்கி கைரேகைகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-finger-print-in-cd-wickramatnas-pistol-1784765412"></link>
            <id>https://tamilwin.com/article/no-finger-print-in-cd-wickramatnas-pistol-1784765412</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கியில் இருந்து எந்தவொரு தெளிவான கைரேகையையும் கண்டற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கியில் இருந்து எந்தவொரு தெளிவான கைரேகையையும் கண்டறிவது கடினமாக உள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கினற்ன.</p><p>பெயர் குறிப்பிட விரும்பாத மேல் மாகாண தெற்கு சிறப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.</p><p></p><h2>அதிக வெப்பம்</h2><p>துப்பாக்கியில் சுடும்போது ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக, அதில் பதிந்துள்ள விரல் அடையாளங்கள் அழிந்துபோகும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், இந்தத் துப்பாக்கியிலும் கைரேகைகள் அழிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a2ef0c-5910-4c64-89f3-bda37f25d481/26-6a615bea25ecd.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>ஒரு குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், தோட்டாக்கள் மற்றும் காலம் குறித்து கண்டறிய முடிந்தாலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்று மங்கலாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் வெளியாட்கள் எவரும் சட்டவிரோதமாக நுழைந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.</p><h2>பொலிஸார் தீவிரமாக ஆய்வு</h2><p>
இந்த சம்பவம் தவறதலாக நடந்த துப்பாக்கிச்சூடா அல்லது தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் தற்சமயம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>
சம்பவத்திற்கு முன்னதாக வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வீட்டின் உட்புற சீ.சீ.ரீ.வி. காட்சிகளை பொலிஸார் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 மி.மீ. பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் வழக்கு தொடர்பான ஏனைய பொருட்களை எதிர்வரும் 28ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, மேல் மாகாண தெற்கு சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T00:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதுளையில் தாக்கப்பட்ட தோட்டத் தொழிலாளியின் மகன்.. முகாமையாளருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/badulla-strike-removal-of-manager-unugalle-estate-1784765045"></link>
            <id>https://tamilwin.com/article/badulla-strike-removal-of-manager-unugalle-estate-1784765045</id>
            <summary type="text">பதுளை - உனுகல்ல தோட்ட
முகாமையாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கக் கோரி, அத்தோட்டத்தைச் சேர்ந்த
தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாகத் தொடர் வேலைநிறுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை - உனுகல்ல தோட்ட
முகாமையாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கக் கோரி, அத்தோட்டத்தைச் சேர்ந்த
தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மல்வத்தவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான உனுகல்ல தோட்டத்தின்
உனுகல்ல பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியின் மகனான கோகுலநாத் மனோஜ்காந்த் என்பவர்,
தனது வீட்டுக்கு அருகில் கோழிக்கூண்டு அமைப்பதற்கான அனுமதி கோரி கடந்த ஏப்ரல்
மாதம் தோட்ட முகாமையாளரிடம் கடிதம் வழங்கியுள்ளார்.&nbsp;</p><p>

மூன்று மாதங்கள் கடந்தும் பதில் கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் திகதி
அது குறித்து வினவுவதற்காகச் சென்ற இடத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத்
தொடர்ந்து, தோட்ட முகாமையாளர் சாணக்க தன்னைத் தாக்கியதாக மனோஜ்காந்த் ஹாலிஎல
பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p> அத்துடன், தாக்குதலுக்குள்ளான இளைஞர்
அன்றைய தினமே ஹாலிஎல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac4707f6-7cba-42d6-8674-fd2f78c86777/26-6a615bbd9546a.webp' /></p><p>

இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், முகாமையாளர் சாணக்கவை உடனடியாக
அப்பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும், உனுகல்ல தோட்டத்தின் 4 பிரிவுகளைச்
சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூலை 18ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப்
போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். </p><p>அத்துடன், தோட்டக் காரியாலயத்தில் உள்ள அதிகாரிகள்
மக்களுக்குச் சரியான சேவைகளை வழங்குவதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம்
சுமத்துகின்றனர்.</p><p>

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூலை 20ஆம் திகதி தோட்டத்தின்
உயர்மட்ட முகாமையாளரான சமிந்த பெரேரா சம்பவ இடத்திற்கு வருகை தந்து
தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
</p><p>
இந்நிலையில், தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, நிலவும் பிரச்சினை
குறித்து ஆராய்வதற்காகப் பதுளை மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில்,
உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று
இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T00:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9-fishermen-arrested-in-thalaimannar-1784763904"></link>
            <id>https://tamilwin.com/article/9-fishermen-arrested-in-thalaimannar-1784763904</id>
            <summary type="text">தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை
மீறிச் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழில் படகு ஒன்றும்,
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை
மீறிச் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழில் படகு ஒன்றும்,
அதில் இருந்த 9 இந்திய கடற்றொழிலாளர்களும் இலங்கைக்
கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>கடற்படையினரின் நடவடிக்கை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இந்த நடவடிக்கையின்போது இரணைதீவுக்குத் தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள்
சட்டவிரோதமாக நுழைந்த 50 இற்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழில் படகுகள்
கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7142532b-15f0-4a25-a722-f5b8b4ca6262/26-6a615735de36c.webp' /></p><p> </p><p>அதனைத் தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஒரு இந்திய கடற்றொழில் படகு
கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களும் கைப்பற்றப்பட்ட கடற்றொழில் படகும் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T23:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற 15 வயது சிறுவன் மாயம்.. தேடுதல் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/15-year-old-boy-missing-swimming-in-mahaweli-river-1784764421"></link>
            <id>https://tamilwin.com/article/15-year-old-boy-missing-swimming-in-mahaweli-river-1784764421</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவன் ஒருவர்
தண்ணீரில் மூழ்கிக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவன் ஒருவர்
தண்ணீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
</p><p>
நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம்
இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>&nbsp;பொலிஸார் விசாரணை</h2><p>இதன்போது, ஏனைய மூன்று சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றிப்
பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c5e390a-aa43-4898-8ea4-25973cedb6d2/26-6a6158d22f9ff.webp' /></p><p>எனினும், காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் பிரதேச மக்களும், கம்பளைப் பொலிஸாரும்
இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்துக் கம்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T23:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து நடத்துனர்.. யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாரதியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-driver-carrying-60-passengers-dies-in-jaffna-1784760242"></link>
            <id>https://tamilwin.com/article/bus-driver-carrying-60-passengers-dies-in-jaffna-1784760242</id>
            <summary type="text">யாழில் தனியார் பேருந்தை செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம், புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் தனியார் பேருந்தை செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>நேற்றையதினம், புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதான முருகேசு
ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த தனியார் பேருந்து, புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம்
நோக்கி பயணித்துள்ளது. அதன்போது அந்த பேருந்தில் 60 பயணிகள் இருந்துள்ளனர்.</p><p></p><h2>திடீர்&nbsp;மாரடைப்பு </h2><p>

பேருந்தானது வேலணை - அராலி சந்தியால் பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதி
ஆசனத்தில் சாய்ந்தபடியே மயக்கமுற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a98d0d4a-e1db-4c31-a727-34535d30ddf2/26-6a6154a977598.webp' /></p><p> </p><p>இதன்போது பேருந்து அவ்வாறே சுமார்
ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பேருந்து மெதுவாக வீதியை விட்டு ஓரமாக செல்வதை நடத்துனர் அவதானித்து
விட்டு சாரதியை பார்த்தவேளை அவர் மயக்கமுற்ற விடயம் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p>இந்நிலையில், சாதுரியமாக செயற்பட்ட நடத்துனர் பேருந்தை நிறுத்திவிட்டு சாரதியை
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக
உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T23:41:23+00:00</updated>
        </entry>
    </feed>
