<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-22T20:45:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பயங்கர தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-threatens-target-iran-bridges-power-plants-1784751304"></link>
            <id>https://tamilwin.com/article/trump-threatens-target-iran-bridges-power-plants-1784751304</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழிக்கும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். </p><p>தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களும் இலக்க வைக்கப்படும் எனத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.</p><p></p><h2>ட்ரோன் தாக்குதல்கள்&nbsp;</h2><p>
</p><p>
ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe5da706-6312-42b9-8a67-0d7ddfa1c8e1/26-6a6126918a476.webp' /></p><p> </p><p>இந்நிலையில், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் ஈரானின் ட்ரோன் தாக்குதல்களை இடைமறித்து அழித்துள்ளன.</p><p>

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்த மோதல் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பரப்பரப்பாக உயர்ந்து பீப்பாய் ஒன்று 94 டொலரை எட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T20:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷிதவிற்கு தொடரும் வழக்கு.. மகிந்தவின் சகா 3 இலட்சம் டொலருடன் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-colleague-absconds-300-000-case-yoshitha-1784748476"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-colleague-absconds-300-000-case-yoshitha-1784748476</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp; தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;வெளிநாட்டு தொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்தததாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.&nbsp;</p><p>இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதேநேரம், அவர்களின் தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா தொடர்பிலும் பாரிய நிதிக் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/niK56A5Pubw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T19:55:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதி இளஞ்செழியனின் 1998 - முடிவுகளால் 2026இல் மீண்டும் அதிரும் செம்மணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-judge-ilancheliyan-tamils-1784743346"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-judge-ilancheliyan-tamils-1784743346</id>
            <summary type="text">செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில்,&nbsp;&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட பல உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,&nbsp;செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் ஆய்வு நடவடிக்கைகளை பார்வையிட சென்றிருந்தனர்.&nbsp;</p><p>அதேநேரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுவையும் பெற்றுக்கொண்டனர்.</p><p>ஈழத்தமிழ் மக்கள், தாங்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் இந்த அவலத்திற்கு சர்வதேச நீதி கோரி நிற்கின்றனர். இவ்வாறிருக்கையில் இந்த உயர்மட்ட அதிகாரிகளின் வருகை நீதிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை இங்கு எழுப்புகின்றது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JyFA36TF8eY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T18:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் போதைப்பொருள் கும்பல்.. இலங்கையில் பணச் சலவை - அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999"></link>
            <id>https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&amp;nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&amp;nbsp;இந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இவற்றில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LONAVRmADOc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T17:58:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-surrenders-police-killing-disabled-brother-1784737294"></link>
            <id>https://tamilwin.com/article/man-surrenders-police-killing-disabled-brother-1784737294</id>
            <summary type="text">தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது மாற்றுத்திறனாளி சகோதரனைக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்த நபர் ஒருவர், கத்தியுடன் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் இன்று (22) சரணடைந்துள்ளார்.</p><p> </p><p>நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் கையில் கத்தியுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த சந்தேகநபர், தனது சகோதரனைக் கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p></p><h2>பலத்த வெட்டுக்காயங்கள்&nbsp;</h2><p>

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வீட்டில் உள்ள கட்டிலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05919402-8018-4b7f-83cd-b9a293e0f504/26-6a60f27c765bd.webp' /></p><p>ராஜகடலுவ பகுதியைச் சேர்ந்த டுலேன் அசங்க என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p> </p><p>குறித்த சந்தேகநபரே பாதிக்கப்பட்ட நபரைப் பகல் நேரத்தில் பராமரித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிவான் பரிசீலனைகளின் பின்னர் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p> </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T16:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் பிரான்சில் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-person-linked-to-epstein-dies-in-france-1784733681"></link>
            <id>https://tamilwin.com/article/another-person-linked-to-epstein-dies-in-france-1784733681</id>
            <summary type="text">மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான
டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான
டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக்
கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
</p><p>
திங்கட்கிழமை மாலை இவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பிற்கான
சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக
நன்டேர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எப்ஸ்டீனுடன் தொடர்பு</h2><p>
</p><p>
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டேனியல்
சியாட்டின் பெயர் சுமார் 2,000 முறை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b94f81c-51b6-4e25-80eb-ea4dd9b29973/26-6a60e489156e3.webp' /></p><p>
</p><p>
பிரெஞ்சு ஊடகங்களின்படி, சியாட் மீது குறைந்தது ஐந்து பெண்கள் பாலியல் துர்நடத்தை மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர்.

இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சியாட்
மறுத்திருந்தார்.
</p><p>
இது குறித்து சியாட்டின் வழக்கறிஞர் மெய்னா அரப்-டிக்ரைன் தெரிவிக்கையில்,
"டேனியல் சியாட் தனது நிரபராதித்தனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார், எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பிரான்சில் உயிரிழப்பு</h2><p>
</p><p>
மேலும், அவர் மீது இதுவரை எந்தவொரு முறையான நீதிமன்ற வழக்குகளும்
தொடரப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eb80e58-d984-48bb-aa73-9882d1b6051a/26-6a60e489e505e.webp' /></p><p>
</p><p>பிரான்சில் எப்ஸ்டீனுடன் தொடர்புடை நபர்களில் உயிரிழக்கும் இரண்டாவது நபர்
சியாட் ஆவார்.</p><p>

இதற்கு முன்னர், 2020இல் கைதுசெய்யப்பட்ட மோடலிங் முகவர் ஜீன்-லூக் புருனல்
என்பவர் 2022ஆம் ஆண்டு தனது சிறை அறையில் தூக்கிட்டுத் தவறான முடிவெடுத்து கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் இலங்கை நபர் வலையில் சிக்கிய பெண்..! 7 இலங்கையர்கள் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-sri-lankans-human-trafficker-arrest-malaysia-1784729680"></link>
            <id>https://tamilwin.com/article/7-sri-lankans-human-trafficker-arrest-malaysia-1784729680</id>
            <summary type="text">மலேசியாவின் செலாங்கூர் மாநிலம், ஜென்ஜாரம் (Jenjarom) உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சக இலங்கையரை கட்டாயத் தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவின் செலாங்கூர் மாநிலம், ஜென்ஜாரம் (Jenjarom) உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சக இலங்கையரை கட்டாயத் தொழிலாளராக சுரண்டியதாக சந்தேகிக்கப்படும் இலங்கை நபர் ஒருவரை மலேசிய குடிவரவு திணைக்களம் கைது செய்துள்ளது.</p><p>

பொதுமக்கள் அளித்த முறைப்பாடு மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மலேசியாவில் கைது</h2><p>

இலங்கைப் பெண் ஒருவர் தனது முதலாளியால் தொழிலாளர் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மனிதக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய இலங்கை நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இன்றி தங்கியிருந்ததாகக் கூறப்படும் 21 முதல் 51 வயதுக்குட்பட்ட மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2acc6286-7f92-4170-a0de-eec645540ec4/26-6a60d4fc7d23a.webp' /></p><p> </p><p>

இவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
</p><p>
மலேசிய குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டத்துக் சகாரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயத் தொழிலாளர் சுரண்டலுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் இந்த நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>7 இலங்கையர்கள்</h2><p>
</p><p>
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், வேலைவாய்ப்பு மற்றும் வேலை அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் குறித்த பெண் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

மேலும், அந்தப் பெண் எந்தவித சம்பளமும் வழங்கப்படாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதுடன், போதுமான உணவும் வழங்கப்படவில்லை. </p><p>

அவரது சுதந்திரமான நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டதுடன், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்காக உடல் ரீதியான வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b0b23b5-f286-4557-b230-df46b7ee0862/26-6a60d4fd2dbed.webp' /></p><p>

மலேசியப் பிரஜையை திருமணம் செய்ததன் மூலம் நீண்டகால சமூக வருகை அனுமதிப்பத்திரம் (Long-Term Social Visit Pass) பெற்றுள்ள சந்தேகநபர், மனிதக் கடத்தல் மற்றும் குடியேறியவர்களை கடத்தல் தடுப்பு சட்டம் (ATIPSOM) பிரிவு 12 மற்றும் 1959/63 குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தொழிலாளர் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என மலேசிய குடிவரவு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தொழில்நுட்பங்களில் 'கில் ஸ்விட்ச்' பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க தூதுவர்களுக்கு ரூபியோ உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rubio-orders-us-envoys-put-end-to-talk-kill-switch-1784731489"></link>
            <id>https://tamilwin.com/article/rubio-orders-us-envoys-put-end-to-talk-kill-switch-1784731489</id>
            <summary type="text">அமெரிக்கா உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்ப
தயாரிப்புகளில் அமெரிக்க அரசுக்கு கட்டுப்பாடு வைக்கும் &#039;கில் ஸ்விட்ச்&#039; (Kill...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்ப
தயாரிப்புகளில் அமெரிக்க அரசுக்கு கட்டுப்பாடு வைக்கும் 'கில் ஸ்விட்ச்' (Kill
Switch) வசதி இருப்பதாக வெளியாகும் தகவல்களை மறுக்குமாறு, அந்நாட்டின்
வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உலகெங்கிலும் உள்ள அமெரிக்க
தூதுவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் முன்னணி ஏஐ மாதிரிகளுக்கான
வெளிநாட்டுப் பயன்பாட்டு அணுகலை அமெரிக்க அரசு தற்காலிகமாகத் தடை செய்ததைத்
தொடர்ந்து, சர்வதேச அளவில் எழுந்த பலத்த எதிர்ப்புகளையும் கவலைகளையும்
தணிக்கும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தத் தூதரக நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.</p><p></p><h2>கில் ஸ்விட்ச்' பேச்சு</h2><p>

அமெரிக்க அரசு தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள இந்த இரகசிய வழிகாட்டுதலில்,
அமெரிக்காவின் ஏஐ தொழில்நுட்பங்களைத் தங்களுக்குச் சாதகமாக விற்பனை செய்யவும்,
பிற நாடுகள் சொந்தமாக "ஏஐ இறையாண்மை" அல்லது "டிஜிட்டல் இறையாண்மை" என்ற
பெயரில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்
தடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f5d97e-d5f4-40ae-bdb6-206a492fab51/26-6a60de67a9f1e.webp' /></p><p>
</p><p>
தொழில்நுட்பப் பாதுகாப்பு காரணங்களுக்காக 30 நாட்கள் சோதனைக்குட்படுத்துவது
என்பது 'கில் ஸ்விட்ச்' அல்லது அரசின் 'மாய பொத்தான்' (Magic button) கிடையாது
என்றும், அமெரிக்க கொள்கைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு இந்தச் செய்திகள்
பரப்பப்படுவதாகவும் தூதுவர்கள் வாயிலாக அமெரிக்கா தெளிவுபடுத்த முயல்கிறது.</p><p>

இருப்பினும், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வழங்கப்பட்ட
தொழில்நுட்ப அணுகலைத் துண்டித்துவிடும் என்ற அச்சம் காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய
நாடுகளும் ஆசிய நாடுகளும் அமெரிக்க தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பத்தைக்
குறைத்து, சொந்தமாகத் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை உருவாக்க தீவிரம் காட்டி
வருகின்றன.</p><p>அமெரிக்க அரசு பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளைப் பயன்படுத்தி பிற நாடுகளைக்
கட்டுப்படுத்த நினைப்பதே, இத்தகைய நம்பிக்கையின்மைக்கு முக்கியக் காரணம் என
சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:16:32+00:00</updated>
        </entry>
    </feed>
