<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-25T10:27:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-north-slogans-no-more-omb-s-deception-1787651468"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-north-slogans-no-more-omb-s-deception-1787651468</id>
            <summary type="text">ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் என இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு, கிழக்கு வலிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் என இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தப் போராட்டமானது இன்று( 25.08.2026)&nbsp; யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் முன்பாக நடைபெற்றுள்ளது.</p><h2>கவனயீர்ப்பு போராட்டம்</h2><p>காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab15f769-ab5f-46cf-a215-121bd92844f8/26-6a8d689256661.webp' /></p><p>உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடு வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
</p><p>
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3230f466-f888-4146-a125-8f831c571da8/26-6a8d68917de8b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:13:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று இரத உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chariot-festival-of-goddess-durga-in-tellipallai-1787651527"></link>
            <id>https://tamilwin.com/article/chariot-festival-of-goddess-durga-in-tellipallai-1787651527</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று
(25.08.2026) இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது

தெல்லிப்பழை துர்க்கை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று
(25.08.2026) இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது
</p><p>
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2026 மகோற்சவ பெருவிழாவில் இன்று
காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று காலை
வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான்
ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.</p><h2>நாளை தீர்த்த திருவிழா</h2><p>துர்க்கை அம்மன் வசந்த
மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி தேரேறி பக்தர்கள் வடம் பிடித்து
இழுக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ரத உற்சவம் இனிதே நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ee0de33-201c-413b-9890-4a1754eadd7d/26-6a8d6841718eb.webp' /></p><p>

12 நாட்களை கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் கடந்த. 15ஆம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பான மகோற்சவத்தில் 10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் தினமும் நடைபெற்றது.</p><p>இந்நிலையில் 11ஆம் நாளான இன்று (25) இரத உற்சவமும் 12ஆம் நாள் திருவிழாவாக
நாளை (26) தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோன் வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apple-to-increase-iphone-prices-1787649458"></link>
            <id>https://tamilwin.com/article/apple-to-increase-iphone-prices-1787649458</id>
            <summary type="text">புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெமரி சிப்களின் (Memory Chi...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மெமரி சிப்களின் (Memory Chip) விலை மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைச் சமாளிக்கும் வகையில் புதிய விலை நிர்ணயத்தை மேற்கொள்ள அப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>அதிகாரபூர்வ அறிவிப்பு</h2><p>

ஏற்கனவே சாம்சங் (Samsung) மற்றும் கூகுள் (Google) உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன் மொடல்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அப்பிளும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1622ade-71d1-43d2-a735-683d139f9052/26-6a8d6341e1d4f.webp' /></p><p>
எனினும், புதிய ஐபோன் மொடல்களின் விலை உயர்வு தொடர்பில் அப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T09:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பல முக்கிய தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trincomalee-coordination-committee-meeting-1787649119"></link>
            <id>https://tamilwin.com/article/trincomalee-coordination-committee-meeting-1787649119</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பிரதி
அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பிரதி
அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயேந்தலால் ரத்னசேகர
ஆகியோரின் தலைமையில் இன்று (25) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
</p><p>
மாவட்ட அரசாங்க அதிபர் W. G. M. ஹேமச்சந்திரா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற
இக்கூட்டத்தில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி கலந்துகொண்டு விசேட
உரையாற்றினார்.
</p><p>
கூட்டத்தில் உரையாற்றிய சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி, மாவட்டத்தின் சுற்றாடலைப் பாதுகாப்பதற்காகச் சட்டங்கள் மிகவும் கடுமையாக
நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக, முறையற்ற மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு
பல்வேறு கடுமையான சூழல் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றது. இவ்வாறான
செயற்பாடுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61bcc1b3-444c-40d3-98d9-5079303cd72d/26-6a8d5f2d33c8e.webp' /></p><h2>தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகள்</h2><p>
</p><p>
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் தற்போதைய சூழல் மற்றும் அபிவிருத்திச் சவால்கள்
குறித்து ஆராயப்பட்டு, பின்வரும் முக்கிய விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களும்
முன்மொழிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. எல் நினோ மற்றும் அனர்த்த தயார்நிலை: எல் நினோ காலநிலை மாற்ற நிலைம
எதிர்கொள்வது மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் தயார்நிலை குறித்து அனர்த்த
மேலாண்மைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். சுகுணதாசன் தெளிவுபடுத்தினார்.</p><p>

கடந்த ஆண்டுகளில் வன எல்லைகளுக்குள் வழங்கப்பட்ட மணல் அகழ்வு
அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்யவும், அளவுக்கு அதிகமான மற்றும் சட்டவிரோத
மணல் அகழ்வைக் உடனடியாகக் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13befa3-e6cc-40af-8f8a-0b08f340dd2c/26-6a8d5f2e0ee58.webp' /></p><p>
</p><p>
மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித - யானை மோதல்களைக் கட்டுப்படுத்துவது
மற்றும் காணி விடுவிப்பு தொடர்பான எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது
குறித்து ஆராயப்பட்டது.

திண்மக்கழிவு முகாமைத்துவம், கடலரிப்புத் தடுப்புக்கான ஒட்டுமொத்த மாவட்டச்
செயல்திட்டம் மற்றும் கடல்/கடலோர சுற்றுலாத் தளங்களைப் பாதிக்கும் கழிவு நீர்
மாசுபாட்டைக் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன.</p><h2>விசேட திட்டங்கள்</h2><p>
</p><p>
சாம்பல்தீவு களப்பு உள்ளிட்ட கண்டல் தாவரங்கள், சதுப்புநிலங்கள், நீலக்
கார்பன் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் புறாத் தீவின் பவளப்பாறைகளைப்
பாதுகாப்பதற்கான விசேட திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c53492-8bc7-4e31-b5ae-9450d8b915ef/26-6a8d5f2ed8f64.webp' /></p><p>

திருகோணமலை புள்ளிமான்களைப் பாதுகாப்பதற்கான விசேட திட்டம் குறித்தும், SLPA
(இலங்கை துறைமுக அதிகாரசபை) வர்த்தமானி அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள்
பொதுமக்கள் பயன்படுத்தும் காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடி
தீர்மானங்கள் எட்டப்பட்டன.
</p><p>
இக்கூட்டத்தில், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்களான, ரொசான் அக்மீமன, எஸ்.
குகதாசன் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்புத்
தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad1fb339-e838-45d6-ad43-3973078c3e29/26-6a8d5f2fce487.webp' /></p>]]></content>
            <updated>2026-08-25T09:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பில் பஸ் லலித்! 72 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-lalith-arrested-dubai-back-to-sri-lanka-1787621689"></link>
            <id>https://tamilwin.com/article/bus-lalith-arrested-dubai-back-to-sri-lanka-1787621689</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த லலித் கண்ணங்கர என்ற &quot;பஸ் லலித்&quot;, 72 மணிநேரம் காவலில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த லலித் கண்ணங்கர என்ற "பஸ் லலித்", 72 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இவர் டுபாயில் கைது செய்யப்பட்டு, இன்று காலை (25) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழு சமீபத்தில் டுபாய்க்கு புறப்பட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு&nbsp; இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a308715-8608-40cc-9d1a-30e14ad34a72/26-6a8d0d80e07ee.webp' />&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கமைய, இன்று காலை சுமார் 5:20 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 226 மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><h2>சர்வதேச சிவப்பு எச்சரிக்கை</h2><p>
 

கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்'&nbsp; சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின்&nbsp; (Red Notice)&nbsp;கீழ் அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2d9aad6-3b14-4d61-9e24-fc79b8557ae1/26-6a8cf56936664.webp' /></p><p>தற்போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதன்பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளார்.</p><p>களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பிடியாணை உத்தரவு</span></p><p>
</p><p>
 

 சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) கீழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0721702-a7f6-4ea4-a304-7d6a2f978ef7/26-6a8cfd7e8f94c.webp' /></p><p>
</p><p>
 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கையும் பெறப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/URucxM82z-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/marshal-fernando-appointed-dmt-chief-1787647664"></link>
            <id>https://tamilwin.com/article/marshal-fernando-appointed-dmt-chief-1787647664</id>
            <summary type="text">ஓய்வுபெற்ற விமானத் துணைத் தளபதி துஷாரா இந்துனில் பெர்னாண்டோவை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (டிஎம்டி) ஆணையாளர் நாயகமாக நியமிப்பதற்கு அமைச்சரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வுபெற்ற விமானத் துணைத் தளபதி துஷாரா இந்துனில் பெர்னாண்டோவை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (டிஎம்டி) ஆணையாளர் நாயகமாக நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
பெர்னாண்டோ தற்போது வெற்றிடமாக உள்ள பதவியை ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக ஏற்கவுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9c8933-01b6-4d7d-b243-9947686c67f6/26-6a8d5c9a04025.webp' /></p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நியமனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T09:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kehelpatara-padme-appears-in-court-1787648051"></link>
            <id>https://tamilwin.com/article/kehelpatara-padme-appears-in-court-1787648051</id>
            <summary type="text">தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.சந்தேகநபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபர்&nbsp; இன்று (25)&nbsp; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><h2>முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>கெஹெல்பத்தர பத்மே மற்றும் மேலும் மூன்று பேர் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26a556ed-235a-4174-ac66-8d72aa070c9a/26-6a8d5af109b7f.webp' /></p><p>இதுவரை சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (25) முதன்முறையாக கெஹல்பத்தர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-25T09:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதங்களுக்கு மத்தியில் சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sale-s-remand-extended-further-1787647958"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sale-s-remand-extended-further-1787647958</id>
            <summary type="text">அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. </p><p>

விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. </p><p>

இந்த நிலையிலே மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.</p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை</h2><p> </p><p>

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/271fd172-2da9-40df-a450-70db63239296/26-6a8d5a2a83f9c.webp' /></p><p> </p><p>

முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>இதேவேளை சுரேஷ் சலேவின் தடுப்புக்காவலை மேலும் நீட்டிக்க வேண்டாம் என வலியுறுத்தி&nbsp;சுரேஷ் சலேவின் தாயாரும், மனைவியும் அடுத்தடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதங்களை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T09:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகை - சந்தேக நபர்கள் மூவருக்கும் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/43-pounds-gold-jewelry-pawned-by-thieves-recovered-1787643799"></link>
            <id>https://tamilwin.com/article/43-pounds-gold-jewelry-pawned-by-thieves-recovered-1787643799</id>
            <summary type="text">யாழ். குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத்
திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத்
திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு
வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த மீட்பு நடவடிக்கையை நேற்று(24.08.2026) சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.</p><h2>மீட்க்கப்பட்ட தங்க நகை</h2><p>
மீட்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஒரு கோடி 50 இலட்சம் ரூபா என
சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி சாவகச்சேரி நகரிலுள்ள நகைக் கடை உரிமையாளரின்
வீட்டிலிருந்து 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளியின் உதவியுடன் சாவகச்சேரிப் பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது யாழ் நகரில் வைத்து நவாலியை சேர்ந்த பிரதான சந்தேக நபர் நேற்று
முன்தினம்(22) கைது செய்யப்பட்டhர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb9a542-833b-4c13-9238-8b1319df3bbf/26-6a8d4e4a6296c.webp' /></p><p>

பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் குறித்த நபர்,
கோப்பாய் பிரதேசத்தில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய
இடங்களில் தலா ஒவ்வொரு வீடுகளிலுமாக ஐந்து வீடுகளில் தங்க நகைகளைத திருடியமை
தெரியவந்துள்ளது. </p><p>அதனையடுத்து சந்தேக நபருக்கு உதவிய ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரையும்,
நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்</h2><p>
</p><p>
அத்துடன் அடகு வைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்
ஒன்றையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
</p><p>இதனையடுத்து சந்தேக நபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14dc91fa-22b6-4e04-aace-94415e274954/26-6a8d4e4b127f2.webp' /></p><p>மேலும், அடகு கடைகளில் வைக்கப்பட்ட தங்க நகைகளை கட்டுக்காவலுக்குள் கொண்டு
வருவதற்கான உத்தரவையும் பொலிஸார் பெற்றுள்ளனர்.
</p><p>
அதற்கமைய ஊர்காவற்றுறையிலுள்ள அரச வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 26 பவுண்
தங்க நகைகளையும், யாழ் நகரிலுள்ள தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட 17
பவுண் தங்க நகைகளையும் சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் சிக்கிய 1000இற்கும் மேற்பட்டோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/betel-spitting-colombo-pettah-bus-stand-1787643342"></link>
            <id>https://tamilwin.com/article/betel-spitting-colombo-pettah-bus-stand-1787643342</id>
            <summary type="text">வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1,029 பேர் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1,029 பேர் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வான்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் நலின் வேவக்கும்புர தெரிவித்துள்ளார்.
</p><p>அடையாளம் காணப்பட்டவர்கள் அந்த இடங்களை சுத்தம் செய்யும் சமூக சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>எளிதில் அடையாளம் காண&nbsp;</h2><p>

வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களில் சில பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a2c3ced-2d1a-482d-a9ed-93fccea1d709/26-6a8d51c092b86.webp' /></p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இலங்கை வான்படையினரால் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
</p><p>
இதன் காரணமாகவே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் காண முடிந்துள்ளதாக வான்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:27:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-sinhala-tamil-new-year-auspicious-times-1787645342"></link>
            <id>https://tamilwin.com/article/2027-sinhala-tamil-new-year-auspicious-times-1787645342</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.&amp;nbsp;இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு புத்தசாசன, சமய மற்றும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, 2027ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதி பிற்பகல் 3:29 மணிக்கு பிறக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சுப நேர பட்டியல் வெளியீடு</h2><p>
 

புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், அடுப்பு மூட்டுதல், உணவு உட்கொள்ளல் மற்றும் கைவிஷேடம் பரிமாறல் உள்ளிட்ட பாரம்பரிய சுப நேரங்கள் அடங்கிய பட்டியல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு இழுத்து வரப்பட்ட ஆபத்தான நபர் - பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-celebrates-the-bus-lalith-s-arrest-1787631988"></link>
            <id>https://tamilwin.com/article/people-celebrates-the-bus-lalith-s-arrest-1787631988</id>
            <summary type="text">ஆபத்தான நபரான லலித் கண்ணங்கர கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபத்தான நபரான லலித் கண்ணங்கர கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
டுபாயில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கண்ணங்கர என்ற பஸ் லலித் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளார்.
</p><p>
இதனை ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.</p><h2><b> 

பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சி</b></h2><p>மேலும், அப்பகுதிகளில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d03d77-9a29-4aed-aed6-0204c9f63f94/26-6a8d1be7d46c2.webp' /></p><p>யாசகர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் பஸ் லலித் லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த நபரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kxV32RGbSIk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-25T08:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/training-aircraft-accident-at-ratmalana-airport-1787645645"></link>
            <id>https://tamilwin.com/article/training-aircraft-accident-at-ratmalana-airport-1787645645</id>
            <summary type="text">இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கும் விமானப் பயிற்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>
இரத்மலானை விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கும் விமானப் பயிற்சி பாடசாலைக்கு சொந்தமான, 4R-DRA என்ற பதிவு இலக்கத்தை கொண்ட Cessna 152 ரக பயிற்சி விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இன்று இரத்மலானை விமான நிலையத்திற்கு தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c36a45db-eb36-4b0a-a860-f38a62ea8c39/26-6a8d4fc25a9b2.webp' /></p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகி்ன்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T08:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் இனத்தின் பிரச்சினையாக பார்க்கவும்! காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தலைவி ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-community-must-see-this-as-their-problem-1787641528"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-community-must-see-this-as-their-problem-1787641528</id>
            <summary type="text">இதை தமிழ் இனத்தின் பிரச்சினையாகப் பாருங்கள், எங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதை தமிழ் இனத்தின் பிரச்சினையாகப் பாருங்கள், எங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகள் சங்கத் தலைவி அ. அமலநாயகி தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (24.08.2026) 
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்</h2><p>
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின்
ஏற்பாட்டில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவியாகவும் வடக்கு - கிழக்கு இணைந்த உப தலைவியாகவும் இருக்கிறேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f26b1d-f964-40f0-902b-c36cd92bb325/26-6a8d41dd8080e.webp' /></p><p>எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வழக்கம்போல சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
தினத்தை வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் பேரணிகளாக செய்து வருகின்றோம்.</p><p>
</p><p>
இந்தமுறை அதனை ஒரு மாநாடாகச் செய்வதற்காக வடக்கு - கிழக்கு இணைந்த தாய்மார்களாக
நாங்கள் ஒன்றிணைந்து இந்த மாநாட்டிற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.</p><h2>சர்வதேச விசாரணை</h2><p>
</p><p>
எதிர்வரும் 30ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இந்த பேரணியானது
ஆரம்பிக்கப்பட இருக்கிறது. 

காலையில் 9 மணி போல இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
தந்தை செல்வா மண்டபத்திற்கு பேரணியாக வந்த பிற்பாடு, இந்த மாநாட்டிற்கான
நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்பதை ஊடக வாயிலாக
எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283b6a40-c69d-4052-b9f8-729dc97e8171/26-6a8d438e0a42f.webp' /></p><p>அந்த மாநாட்டின் நோக்கம், இவ்வளவு காலமும் உலகப் பொறிமுறையில்
நம்பிக்கையிழந்து, சர்வதேச நீதிப் பொறிமுறையை வேண்டி, பாதிக்கப்பட்ட தரப்பாக
நீண்டகாலமாக நாங்கள் சர்வதேச விசாரணையின் ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன
நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து, அதற்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின்
முன் நிறுத்தி, அவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தி, 2017ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் இதனை முன்னெடுத்து வருகின்றோம்.</p><p>

ஆனால்,
இதுவரைக்கும் எங்களுக்கான எந்தவொரு நீதியும் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இது ஒரு தமிழர்களின் பிரச்சினையாக பாருங்கள், எங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம். இனிவரும்
சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:16:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிபதிகள் மீது அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது! - சுரேன் ராகவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/defamation-justice-is-condemnable-suren-raghavan-1787644238"></link>
            <id>https://tamilwin.com/article/defamation-justice-is-condemnable-suren-raghavan-1787644238</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன உட்பட சிலர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு, தலைமை நீதியரசர் மற்றும்
நீதிபதிகள் குறித்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன உட்பட சிலர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு, தலைமை நீதியரசர் மற்றும்
நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசுவது முற்றிலும் தவறானது என ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன்
ராகவன் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (24)
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,</p><h2>அதிகபட்ச தண்டனை</h2><p>

"நீதிபதிகள் மற்றும் தலைமை நீதியரசருக்கு எதிரான இத்தகைய அவதூறுகள் தொடர்பில்,
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுக்களும் உடனடி
விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனையை வழங்க
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68d830aa-c6ed-4936-9ac2-bc18b6f80f61/26-6a8d4dfa3038a.webp' /></p><p>

மேலும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 14 நீதிபதிகளையும்
உள்ளடக்கிய விரிவான நீதிபதி அமர்வு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட
வேண்டும்" என்று வலியுறுத்தினார்.</p><p>

நாட்டில் தற்போதைய நிலவரப்படி உணவுப் பணவீக்கம் 11 வீதமாகவும், பொதுப்
பணவீக்கம் 7 வீதமாகவும் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில்
மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவு மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்
அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்தார்.</p><p>

எல் நினோ காலநிலை மாற்றத்தால் நாட்டின் நெல் விவசாயத்திற்கு
ஏற்படவுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள அரசாங்கம் வைத்துள்ள தீர்வுகள் என்ன
என்றும், நெல் கொள்முதலை அரசாங்கம் எவ்வாறு முன்னெடுக்கப் போகின்றது என்றும்
அவர் கேள்வி எழுப்பினார்.</p><h2>இலங்கையின் ஊடகத்துறை வீழ்ச்சி</h2><p>

மேலும், ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின்
(jVP) தீவிர செயற்பாட்டாளர் என்ற ஒரே காரணத்திற்காக, கணேசன் என்பவர்
சென்னையின் துணை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய
அவர், தகுதியான பல நபர்கள் இருக்கும் நிலையில் இந்த நியமனத்தை மாற்றுமாறும்
கோரிக்கை விடுத்தார்.</p><p>இலங்கையின் ஊடகத்துறை வீழ்ச்சியடைந்து வருவது குறித்தும் கவலை வெளியிட்ட அவர்,
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காட்டுவது
ஏன் என வினவினார்.</p><p>
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியிலேயே தாம் இணைந்த எதிரணியில்
அமர்வதாகவும், தனிப்பட்ட சிலரின் கருத்துக்களுடன் தமக்கு உடன்பாடில்லை எனவும்
குறிப்பிட்ட அவர், முன்னாள் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப்
பதவியிலிருந்து நீக்கப் பாடுபட்ட வழக்கறிஞர்கள் சிலர் அங்கு இருப்பதாகவும்,
அத்தகைய செயற்பாடுகளுடன் தம்மால் ஒருபோதும் உடன்பட முடியாது எனவும் சுரேன்
ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு சுமார் 9 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bottled-water-at-an-exorbitant-price-in-nallur-1787643265"></link>
            <id>https://tamilwin.com/article/bottled-water-at-an-exorbitant-price-in-nallur-1787643265</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
வித...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை
செய்யப்படுவதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப் பெற்ற
தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை
செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><h2>தண்டப்பணம் விதிப்பு</h2><p>

அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக, யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்
நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில், இன்றைய தினம் (25.08.2026) நடைபெற்ற
வழக்கு விசாரணையின் போது உணவாக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
தண்டம் விதித்த மன்று , தண்ட பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை
அனுபவிக்க வேண்டுமென கட்டளையிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b670c766-7909-4c6b-8136-2d4e88bc3145/26-6a8d4cdb7bf09.webp' /></p><p>
</p><p>
இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற
குற்றத்திற்காக மன்றினால் தண்டம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே
குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-bandara-further-remanded-1787644292"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-bandara-further-remanded-1787644292</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, செப்டெம்பர் 09 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, செப்டெம்பர் 09 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25.08.2026) சுகீஸ்வர பண்டாராவின் பிணை மனுவை நிராகரித்து, அவரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.</p><h2>அரசு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாக&nbsp;</h2><p> 

அரச சம்பளங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த தொடர் விசாரணையின் தொடர்பில், சுகீஸ்வர பண்டாரா ஜூன் 18 அன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) கைது செய்யப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d73f6dcb-f541-42f4-8c53-8487c2c24736/26-6a8d4c10e54f5.webp' /></p><p>
அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rauff-hakeem-meets-high-commissioner-of-canada-1787643935"></link>
            <id>https://tamilwin.com/article/rauff-hakeem-meets-high-commissioner-of-canada-1787643935</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்
ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை சந்தித்து கலந்துரையாடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்
ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>இந்த சந்திப்பு&nbsp;கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சந்திப்பின் போது, நாட்டின் சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் இரு
தரப்பு உறவுகள் தொடர்பில் இருவரும் சிநேகபூர்வமாக கருத்துக்களை பகிர்ந்து
கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:45:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் புதியவர்கள் களமிறங்குவது ஜனநாயக சூழலை வலுப்படுத்தும் – டக்ளஸ் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-entrants-polls-strengthen-election-1787641736"></link>
            <id>https://tamilwin.com/article/new-entrants-polls-strengthen-election-1787641736</id>
            <summary type="text">மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு புதியவர்கள் பலர் ஆர்வம் காட்டி
வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்
ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு புதியவர்கள் பலர் ஆர்வம் காட்டி
வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்
டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் பல்வேறு தரப்பினரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம்
காட்டி வருவது, மக்கள் மத்தியில் ஜனநாயக ரீதியான அரசியல் பங்களிப்புக்கான
ஆர்வம் அதிகரித்து வருவதையே வெளிப்படுத்துவதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச வட்டார உறுப்பினர்களுடனான
சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>தேர்தலில் போட்டியிடுவதற்கு&nbsp;</h2><p>இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் - மாகாண சபைகளுக்கான தேர்தல்
நடைபெறவுள்ளதாக அடிக்கடி செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், கட்சிகள்
மாத்திரமன்றி சமூகத்தின் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த புதியவர்கள் அரசியல்
களத்தில் களமிறங்குவதற்கு விருப்பம் வெளியிட்டு வருவது வரவேற்கத்தக்க
விடயமாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4256888-4de1-4d17-beba-095d64ecddf5/26-6a8d43457255a.webp' /></p><p>
இதேவேளை அரசியல் என்பது குறிப்பிட்ட சிலருக்கான துறையாக
மட்டுப்படுத்தப்படாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் தமது
பங்களிப்பை வழங்குவதற்கான களமாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும் புதியவர்கள் அரசியலுக்குள் வருவதன் ஊடாக புதிய சிந்தனைகள், புதிய
அணுகுமுறைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதிய
செயற்றிட்டங்கள் முன்வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனவும் டக்ளஸ்
தேவானந்தா சுட்டிக்காட்டினார்.</p><p>அந்தசகையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு தரப்பினரும் ஆர்வம்
செலுத்துவது ஜனநாயக சூழலை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்த அவர்,
மக்கள் தங்களது அரசியல் விருப்பங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும்
தங்களுக்கு பொருத்தமான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கும் சந்தர்ப்பம்
ஏற்படுத்தப்படுவது அவசியம் எனவும் கூறினார்.</p><h2>அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க</h2><p>

மாகாண சபைகள் மக்களின் அன்றாட வாழ்வுடன் நேரடியாக தொடர்புபட்ட பல்வேறு
விடயங்களில் முக்கிய பங்காற்றக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பாக இருப்பதால்,
அவற்றின் செயற்பாடுகளில் திறமையானதும் மக்கள் சார்ந்ததுமான பிரதிநிதித்துவம்
அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f215f4c3-bb29-4f7b-a51e-181ad083c6df/26-6a8d43464ff8c.webp' /></p><p>அதேவேளை, தொடர்ச்சியாக நாம் எதை வலியுறுத்தி வந்தோமோ அதுவே இன்று
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>அந்தவகையில் எமது பாதையே நன்மைதரும்
ஒன்றாக இருக்கின்றது என்பதை மக்கள் இன்று உணர்ந்துகொண்டுள்ளனர்.</p><p>கட்சியின் வட்டாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி எந்த
தேர்தல்கள் வந்தாலும் கட்சி உறுப்பினர்கள் தமது பிரதேச மக்களின் தேவைகள்
மற்றும் எதிர்பார்ப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு
அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா
அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
குறித்த கூட்டத்தின் போது கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக் செயலாளர்
ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்,தென்மராட்சி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ,
மேலதிக நிர்வாக செயலாளர் தர்சன், மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்
செயற்பாட்டாகர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cJ9mSCAjMcY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் மற்றும் அரச பேருந்துகளின் போட்டியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/competition-between-buses-impact-students-1787636838"></link>
            <id>https://tamilwin.com/article/competition-between-buses-impact-students-1787636838</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து, தனியார் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் க.பொ.த. உயர்தர
பரீட்சை எழுதும் மாணவர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து, தனியார் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் க.பொ.த. உயர்தர
பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்வோர் பெரும்
சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (24.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>போட்டியாக பயணித்த பேருந்துக்கள்</h2><p>
</p><p>
பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கோவில்
பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடத்தி
வருகின்றது. இதில் நகர பகுதியில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மற்றும் அரச தனியார்
ஊழியர்கள் செல்வது வழமையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a3a3723-aad0-4ee1-aeab-981844f2c289/26-6a8d3328d2493.webp' /></p><p>
ஆனால் நேற்றைய தினம் குறித்த பேருந்தானது வழமையான நேரமான 5:45 மணிக்கு
செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக, தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு&nbsp; போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு
உள்ளாகியுள்ளனர்.
</p><p>
தொடர்ச்சியாக வடமராட்சி - கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும்
தனியார் பேருந்துகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் </h2><p>குறிப்பாக உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில்
நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு
செய்வது, நாகர்கோவில் - பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை,
பருத்தித்துறை - கொழும்பு, பருத்தித்துறை - வவுனியா சேவை உட்பட அரச தனியார்
போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமை ஆகியவை இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/905422a5-a68e-451b-8d0d-ac0175703cbd/26-6a8d3327f2d10.webp' /></p><p>நேற்றைய தினம் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம்
அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து
முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் பயணம் செய்துள்ளனர்.</p><p> குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை சாலை முகமையாளருடன்
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களை தொடர்புகொள்ள
முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T07:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம் - இன்று பதிவாகியுள்ள புதிய நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787638230"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787638230</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (25.08.2026) சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (25.08.2026) சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>இதேவேளை நேற்றைய தினம் (24.08.2026) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபாயால் குறைந்துள்ளது.</p><h2>தங்கத்தின் விலை நிலவரம்</h2><p>
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/150bfe4a-f89f-4041-b717-667aee73ea67/26-6a8d41427c852.webp' /></p><p>அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 44,163 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T07:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதுளை மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/badulla-hospital-specialist-doctar-death-1787625354"></link>
            <id>https://tamilwin.com/article/badulla-hospital-specialist-doctar-death-1787625354</id>
            <summary type="text">காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p><p>

சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே நேற்று காலை (24) சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>மரணம் தொடர்பில் வெளியான தகவல்</h2><p>
</p><p>
மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியரின் உடலுக்கு அருகில் 3 வகையான மருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88999ad3-b352-413f-be75-ef8ebb3b8c95/26-6a8d3be2829f7.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இதற்கிடையில், பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச வைத்தியரின் மரணம் தொடர்பில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

நேற்று காலை சுமார் 10.00 மணியளவில் பிரபாத்துக்கு அறுவை சிகிச்சை இருந்தது. அதன் பிறகு, அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. என்ன நடந்தது என்பதை எங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.தனது கடமையை முறையாகச் செய்தவர்.
</p><p>
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற சிறப்பு வைத்தியர் பிரபாத் அனுராதா, இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்து உட்கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/e-boarding-pass-introduce-in-indian-airports-1787581732"></link>
            <id>https://tamilwin.com/article/e-boarding-pass-introduce-in-indian-airports-1787581732</id>
            <summary type="text">இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் &#039;ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

இதற்கமைய வெளிநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் 'ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.</p><p> 

இதற்கமைய வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் விமான பயணிகள் குடிவரவு கவுன்ட்டர்களில் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்&nbsp; (Boarding Pass) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகம் விடுத்துள்ளது.</p><h2><b> 

ஈ-போர்டிங் பாஸ்</b></h2><p>புதிய நடைமுறையின் கீழ் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களுக்கு பதிலாக, கையடக்க தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்களில் உள்ள ஈ-போர்டிங் பாஸ்களையும் குடிவரவு கவுண்டர்களில் பயணிகள் பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be7ecb5-9405-4414-b968-f5def711eae7/26-6a8c5d9f0d848.webp' /></p><p>அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ் மூலம் முத்திரை குத்தப்படுவதால் விமான பயணிகளுக்கு நேர விரயம் ஏற்படுவதுடன் தாமதங்களும் ஏற்படுகிறன. </p><p>

இந்நிலையில் ஈ-போர்டிங் பாஸ் நடைமுறையால் அந்த குறைபாடு தீர்த்து வைக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h3><b> 

குடியேற்ற முத்திரை</b></h3><p>அதேவேளை பயணிகள் விரும்பினால் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அவற்றில் குடியேற்ற முத்திரை குத்தப்பட மாட்டாது.
</p><p>
இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qPWROuU1fwc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-25T06:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பெரும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் - அதிரடியாக முடக்கப்படும் சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-lalit-police-investigation-1787633868"></link>
            <id>https://tamilwin.com/article/bus-lalit-police-investigation-1787633868</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவின் சட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p> 

டுபாயிலிருந்து இன்று (25) நாட்டிற்கு லலித் கண்ணங்கரா தொடர்பாக பொலிஸ் பிரிவினால் இன்று நடத்தப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>கடுமையான குற்றச்சாட்டுகள்</h2><p>
</p><p>
அக்டோபர் 25, 2025 அன்று பொலிஸ் தலைமை அதிகாரிக்கு (IGP) கிடைத்த ஒரு சிறப்பு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fb55b1f-710a-49af-a3a3-3dcc2b765710/26-6a8d29b983f9d.webp' />&nbsp;</p><p>
</p><p>
போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் கொலை முயற்சி, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்துதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் மத்திய குற்றப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சட்டவிரோத சொத்துக்கள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவும் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>

2024-ஆம் ஆண்டு முதல் இன்டர்போலால் ரெட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை பொலிஸாரால் திரும்ப அழைத்து வர முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிவப்பு அறிவித்தல்</span></p><p>
இதற்கிடையில், ரெட் நோட்டீஸ் பெற்ற மேலும் 109 சந்தேகநபர்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>

ரெட் நோட்டீஸ் இல்லாத 38 சந்தேகநபர்கள் ஏற்கனவே நாட்டிற்கு திரும்ப அழைத்து வர முடிந்துள்ளது என்றும், வரும் நாட்களில் மேலும் பல சந்தேகநபர்களைத் திரும்ப அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a839f3-63ba-45ff-86e1-69785a8a1303/26-6a8d29ba32ab6.webp' /></p><p>
கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ள ரூ. 3,878 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.
</p><p>
2025-ஆம் ஆண்டில் மேலும் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைக் கையகப்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
 உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, இந்த சொத்துக்கள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டு, அரசாங்கத்தால் முழுமையாக கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/URucxM82z-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:39:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுடைமையாகும் சொத்துகள்! உள்நாட்டில் - வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் இலங்கை பொலிஸாரின் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nationalize-illegal-assets-worth-rs-3878-million-1787638408"></link>
            <id>https://tamilwin.com/article/nationalize-illegal-assets-worth-rs-3878-million-1787638408</id>
            <summary type="text">உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால் 1818 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால் 1818 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். </p><p>

எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

இன்றைய தினம் (25.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசுடைமையாகும் சொத்துக்கள்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 3878 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்க தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு பின் அவை முழுமையாக அரசுடைமையாக்கப்படவுள்ளன. </p><p>

இதனிடையே, கடந்த 2025 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நாடளாவிய விசேட நடவடிக்கையின் கீழ் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a1f9824-1b02-42d8-919d-6c208b6e8104/26-6a8d3688b4a4b.webp' /></p><h2>பிரத்தியேகத் தொலைபேசி இலக்கம்</h2><p> </p><p>

இதேவேளை, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால், 1818 என்ற பிரத்தியேகத் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். </p><p>

பெறப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:30:48+00:00</updated>
        </entry>
    </feed>
