<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-26T01:38:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individual-who-defrauded-sri-lanka-of-700m-usd-1785028322"></link>
            <id>https://tamilwin.com/article/individual-who-defrauded-sri-lanka-of-700m-usd-1785028322</id>
            <summary type="text">இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. </p><p>

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி இந்த பாரிய மோசடி நடவடிக்கையில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மீட்கப்பட்ட&nbsp; பணம் மற்றும் கார்&nbsp;</h2><p> </p><p>

இந்த பாரிய அளவிலான நிதி மோசடியின் ஊடாக, நாட்டின் 21 முன்னணி நிறுவனங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றில் 6 நிறுவனங்களின் தொடர்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் இயக்குநராக நடித்து இந்த மோசடியை வழிநடத்தியதாக தெரிவித்து பெஸ்ஸி முகமது என்ற சந்தேக நபர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/113d312f-70d6-47b1-8e6f-1bdef142ea2c/26-6a65620200cda.webp' /></p><p> </p><p>

குறித்த நபரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு பணம் மற்றும், 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார், தங்கப் பொருட்கள் ஆகியவற்றை குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள 36 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகளில் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

எனினும், அந்தப் பணத்தைக் கொண்டு நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட எந்தபொருட்களும் சுங்கப் பதிவேடுளகிழல் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரிந்தது ராஜபக்ச இராச்சியம்! கண்ணாடி முன்னால் நின்று மகிந்த கேட்க வேண்டிய ஒரே கேள்வி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rajapaksa-kingdom-has-collapsed-1785026442"></link>
            <id>https://tamilwin.com/article/the-rajapaksa-kingdom-has-collapsed-1785026442</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து &#039;&#039;தெங் செபத&#039;&#039;(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து ''தெங் செபத''(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தயாராக இருங்கள்..</h2><p>

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், </p><p>

மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் குடும்பத்தார் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த நாட்டில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ab1e82-725f-472d-8c30-7c93d572cd2e/26-6a65593936de4.webp' /></p><p> </p><p>

கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அரசாங்கங்கள் நாட்டை சீரழித்தனர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>பல அக்கிரமங்களை செய்தமை, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியமை, நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கோடீஸ்வரர்களானமை உள்ளிட்ட செயல்களை மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>

எனவே, உங்களுடைய அக்கிரமங்களின் காலம் முடிவடைந்து விட்டது. மக்களுக்கான காலம் உருவாகியிருக்கின்றது. 

இன்னும் சிறிது காலத்திற்கு நீங்கள் சந்தோஷமாக இருந்து கொள்ள முடியும். எனினும், மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edfd4fc1-3a36-4cfe-a4d0-04dd6c48f848/26-6a655939db153.webp' /></p><p> </p><p>ராஜபக்ச குடும்பத்தில் மேலிருந்து கீழ் வரை, குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

இதனால்தான் மக்கள் உங்கள் ஆட்சியை வீழ்த்தி, புதிய அரசாங்கம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளனர்.
</p><p>
மக்களின் பக்கமே எமது ஆதரவு இருக்கும். எனவே, உங்களுடைய பொருட்களெல்லாம் எடுத்துக் கொண்டு தயாராக இருங்கள்.</p><p> எப்போதும் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே யதார்த்தத்திற்கு முகம்கொடுக்க தயாராக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T00:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 தமிழ்க் கட்சியினரும் ஜனாதிபதி அநுரவுடன் 3 ஆம் திகதி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-tamil-party-members-to-meet-with-president-1785022653"></link>
            <id>https://tamilwin.com/article/6-tamil-party-members-to-meet-with-president-1785022653</id>
            <summary type="text">தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h2>&nbsp;ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு&nbsp;</h2><p>
</p><p>
ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மூன்று பேர் என்ற அடிப்படையில் 18 தலைவர்கள்
வரையில் இந்தச் சந்திப்பில் பங்குபற்றுவர் எனத் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5b4c93-5fa9-4adf-92b5-5e0016439c0e/26-6a6548bf341f6.webp' /></p><p>
</p><p>
இந்த ஆறு கட்சிகளின் பொது மேடையின் சார்பில் அவற்றின் இணைப்பாளர் ஜனாதிபதியின் செயலாளருக்கு மேற்படி சந்திப்புக்கான
கோரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார் என்றும், அதற்கான பதிலை
ஜனாதிபதியின் செயலாளர் நேற்று உடனடியாகவே இணைப்பாளருக்கு வழங்கினார் என்றும்
ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்தப் பதிலிலேயே மேற்படி ஆகஸ்ட் மூன்றாம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி
செயலகத்தில் சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக
அறியவந்தது.</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T23:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warned-tamil-people-in-london-1784985953"></link>
            <id>https://tamilwin.com/article/police-warned-tamil-people-in-london-1784985953</id>
            <summary type="text">பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர்.</p><p> 

திருட்டு சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உட்பட பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இழந்துள்ளனர்.</p><p></p><h2><b> திருட்டு சம்பவங்கள்</b></h2><p>இவ்வாறான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30df7e02-9b25-4915-9e6f-9a6e150aaba7/26-6a64bead2c331.webp' /></p><p>இந்நிலையில் லண்டனின் ஈலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
</p><p>
வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், அங்கு யாரும் இல்லாத சமயங்களில் உள்நுழைந்து கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><b> 

முக்கியமான வழிமுறை</b></h3><p>பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி, வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02b0380-35fd-486b-816a-3bc2f934b4e0/26-6a64beadf3bf9.webp' /></p><p>திருட்டுச் சம்பவங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T23:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுப் பொய் : பிரேம்நாத் சி தொலவத்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/false-allegations-against-the-bar-association-1785017749"></link>
            <id>https://tamilwin.com/article/false-allegations-against-the-bar-association-1785017749</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும்
கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும்
பொய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும்
கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும்
பொய்யானவை என்று தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த, தைரியமிருந்தால்
இக்குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து பகிரங்கமாகக் கூறுமாறும்
சவால் விடுத்தார்.
</p><p>
கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் முன்மொழிவுக்கு இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது.</p><p></p><h2>நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறை</h2><p>
</p><p>இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் ஒன்றைப்
போட்டுக்கொண்டு, மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப்
போட்டியிடுவதற்காகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இவ்வாறு
செயற்படுகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரால் நாடாளுமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
</p><p>
இத்தகையக் கூற்றுக்கள் மிகவும் வேடிக்கையானவை. நீதியரசர்களின் பதவிக் காலத்தை
அதிகரிக்கும் நடவடிக்கைக்கான எதிர்ப்பானது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்
தலைவரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. மாறாக, களுத்துறை, கொழும்பு உள்ளிட்ட
பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சட்டச் சமூகமும்
ஒன்றிணைந்தே இதற்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8738a75d-2428-4bb1-b3d1-1b809834d304/26-6a65359776ea8.webp' /></p><p>
</p><p>
அத்துடன், அரசின் இந்தத் தீர்மானத்துக்கு நீதிபதிகள் சங்கமும்
உத்தியோகபூர்வமாக எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளது. </p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்
தலைவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவே எதிர்ப்பை வெளியிடுகின்றார்
என்றால், நீதிபதிகள் சங்கத்தில் உள்ள எந்த நீதிபதி பதவி விலகி மாகாண சபைத்
தேர்தலில் போட்டியிடப் போகின்றார்?

நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்களைப் பரப்பாமல்,
இக்குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாகக் கூறுமாறு நான்
சவால் விடுக்கின்றேன்.</p><p> இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிராந்திய சட்டத்தரணிகள்
சங்கங்கள் மற்றும் சர்வதேச சுயாதீன அமைப்புகள் அனைத்தும் அரசியல்
உள்நோக்கத்துக்காக அன்றி, நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறைச்
சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவே குரல் கொடுத்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T22:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட கற்றாழை நிறுவன பணியாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9-employees-of-the-aloe-vera-company-remanded-1785012938"></link>
            <id>https://tamilwin.com/article/9-employees-of-the-aloe-vera-company-remanded-1785012938</id>
            <summary type="text">வனவளத்திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கடமைகளுக்கு
இடையூறு விளைவித்த 9 கற்றாழை நிறுவன பணியாளர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவளத்திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கடமைகளுக்கு
இடையூறு விளைவித்த 9 கற்றாழை நிறுவன பணியாளர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான்
எஸ்.சிவபாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.</p><p>நேற்றுமுன்தினம்(24)கிளிநொச்சி அக்கராயன்
குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் கண்ணகைபுரம் பகுதியில் கற்றாழை
செய்கை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கும் கிராமிய இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட
வாய்த்தக்கம் கைகலப்பாக மாறியிருந்தது.</p><p>இந்தநிலையில் குறித்த பகுதிக்கு
வனவளத்திணைக்களத்தினரும் சென்றிருந்த நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ்
விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>இதன்போது 09சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டிருந்தனர்.ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் 09சந்தேக நபர்களையும் அக்கராயன் குளம் பொலிஸார் நேற்று(25) நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.</p><p>சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி
விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையாகி இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3840e672-e14d-4782-9846-881868204a05/26-6a6524356cda8.webp' /></p><p> </p><p>குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்றில் சந்தேக நபர்களை முற்படுத்திய நிலையில்
எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T21:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உடனடியாக பொதுத் தேர்தல்! புதிய பிரதமரின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-general-election-in-britain-1785010270"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-general-election-in-britain-1785010270</id>
            <summary type="text">உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். </p><p>

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், தற்போது நாட்டைச் சிறப்பாக இயங்கச் செய்வதே எங்களுடைய மிகப்பெரிய முன்னுரிமையாகும். இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்தினால் அந்த முக்கியமான பணிகள் தாமதமாகும் வாய்ப்புக்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொதுத் தேர்தல் இப்போதில்லை..</h2><p> 

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றார்.
</p><p>
இந்த நிலையில், புதிய பிரதமர் உனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏனைய கட்சிகள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab2ae4e-d886-4b20-ab29-ea1034279188/26-6a65185fcdb5e.webp' /></p><p>

இது தொடர்பில் பதிலளித்த புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், “நாங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம். கடந்த 2024ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது. </p><p>

அதையே நானும் பின்பற்றுகின்றேன். அதற்குள் எனது கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் முன்னெடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/k7lBZ1lnYto" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-25T20:59:32+00:00</updated>
        </entry>
    </feed>
