<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-24T10:43:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF - ETF நிதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-released-minister-regarding-epf-etf-1784885607"></link>
            <id>https://tamilwin.com/article/information-released-minister-regarding-epf-etf-1784885607</id>
            <summary type="text">ஊழியர் சேமநிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) என்பன நிறுவப்பட்ட பத்தாண்டுகளில், எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத ஆய்வை முதல் முறையாக நடத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழியர் சேமநிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) என்பன நிறுவப்பட்ட பத்தாண்டுகளில், எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத ஆய்வை முதல் முறையாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>புதிய நடவடிக்கைகள்</h2><p>

நிதிகளின் செயல்திறனையும் உறுப்பினர்களின் பலன்களையும் மேம்படுத்துவதற்காக தொழிலாளர் திணைக்களத்தின் மூலம் பல புதிய நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a603740-e2b5-4e03-870d-f0969b27bfd8/26-6a633baca060b.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அறிக்கைகளின் படி, ஊழியர் சேமநிதியில் பதிவு செய்யப்பட்டு பலன்களை பெறும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 22.9 மில்லியனாகும்.
</p><p>
இதில், நிதிகள் மாதந்தோறும் வரவு வைக்கப்படும் செயல்பாட்டில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை 3.1 மில்லியனாகும்.</p><p> 

ஊழியர் நம்பிக்கை நிதியில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று மில்லியன் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், 2025 ஆம் ஆண்டின் இறுதியில், ஊழியர் சேமநிதியின் சொத்துக்களின் மதிப்பு ரூ. 4.9 டிரில்லியனாகவும், ஊழியர் நம்பிக்கை நிதியின் சொத்துக்கள் ரூ. 637.5 பில்லியனாகவும் இருக்கும் என்று தொழிலாளர் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><h2>முதலாளிகளின் எண்ணிக்கை</h2><p>
</p><p>
இதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டில் உள்ள முதலாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரம் என்றும், அதில் பகுதி - அரச துறையை சேர்ந்த முதலாளிகளின் எண்ணிக்கை 376 என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d24b9e4-22d8-4ab3-bea9-eed866f1aa4e/26-6a633bad50543.webp' /></p><p>
</p><p>
கட்டணம் செலுத்தத்தவறிய தனியார் மற்றும் பகுதி- அரச துறை நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் செயல்முறையை தொழிலாளர் அமைச்சு தற்போது விரைவுபடுத்தியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், ஊழியர் பதிவு உட்பட பல EPF சேவைகளை ஊழியர்கள் ஆன்லைனில் செய்ய அனுமதிக்கும் "டிஜிட்டல் EPF" வசதி, கடந்த டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இந்த சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் மூலம், உறுப்பினர்கள் EPF மற்றும் ETF நிதிகள் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே சேவை மூலம் ஒரே இடத்திலிருந்து அணுக முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பண்பாட்டு ஊர்வலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colourful-cultural-procession-in-jaffna-1784886365"></link>
            <id>https://tamilwin.com/article/colourful-cultural-procession-in-jaffna-1784886365</id>
            <summary type="text">தமிழ்மொழித் தினத்தையும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினத்தையும் முன்னிட்டு ஏற்பாடு
செய்யப்பட்ட பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.குறித்த ஊர்வலமானது இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்மொழித் தினத்தையும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினத்தையும் முன்னிட்டு ஏற்பாடு
செய்யப்பட்ட பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த ஊர்வலமானது இன்றையதினம் (24.07.2026) காலை 9.00 மணிக்கு
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி முன்றலில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப
நிகழ்வுடன் ஆரம்பமானது.</p><p></p><h2>பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்</h2><p>அதனைத் தொடர்ந்து, வைத்தீஸ்வராக் கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம்
காங்கேசன்துறை வீதி, சத்திரச் சந்தி, வைத்தியசாலை வீதி, கார்கில்ஸ் சந்தி
மற்றும் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாகச் சென்று காலை 10.30 மணியளவில்
திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்தை வந்தடைந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607030e9-bb5a-4bdd-8966-b9636939cdae/26-6a633c664061d.webp' /></p><p>இந்த ஊர்வலத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலை நிகழ்வுகளுடன் புரவி
நடனம், பொய்க்கால் குதிரை, கும்மி, மயில் நடனம், கோலாட்டம், காவடி நடனம்,
செம்பு நடனம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், உடுக்கு, இன்னியம்,
தவில் - நாதஸ்வர இசை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
</p><p>
மேலும், தமிழ் மொழி மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அலங்கார
கலாசார ஊர்திப் பவனியும் ஊர்வலத்திற்கு தனிச்சிறப்பைச் சேர்த்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொன்மையும் உயிர்ப்பும் கொண்ட மொழி தமிழ் – வடக்கு ஆளுநர் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-are-proud-tamil-alive-among-ancient-languages-1784887582"></link>
            <id>https://tamilwin.com/article/we-are-proud-tamil-alive-among-ancient-languages-1784887582</id>
            <summary type="text">இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக
எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக
எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p><p>

தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் போற்றும் வகையிலான 'தமிழ்மொழித் தினமும்
சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் - 2026' நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர்
பண்பாட்டு மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24.07.2026) கோலாகலமாக நடைபெற்றது.</p><p></p><h2>தமிழ் மொழி</h2><p>
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.</p><p>

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

எங்களுக்குப் பெருமை சேர்ப்பது எமது தமிழ் மொழிதான். திருக்குறளை இந்த
உலகுக்குத் தந்ததும், செறிவான இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றைக்
கொண்டிருப்பதும் எமது மொழிதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3e7534-dcb5-4fbd-ac8d-04fa28c13c89/26-6a633c591c4c1.webp' /></p><p>

சுவாமி விபுலானந்தர் அவர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல
மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும், தனது தாய்மொழியான தமிழின் வளர்ச்சிக்காகவே
தனது பெரும்பாலான நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்தார். </p><p>அவர் தமிழ் மொழியை
நேசித்தது போலவே, பிற மொழிகளையும் மதித்தார். உலக அறிவைப் பெற்றுக்கொண்டு
அதைத் தமிழ் மொழியில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவரது சிந்தனை
இன்று கூடக் கல்வி உலகில் மிகப் பெரிய வழிகாட்டுதலாக உள்ளது.</p><p> அவர் செய்த
மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று 'யாழ்நூல்' ஆகும். பல நூற்றாண்டுகளாக மறைந்து
கிடந்த தகவல்களை ஆராய்ந்து அவர் வெளியிட்ட இந்த நூல், தமிழரின் கலை நாகரிகம்
மற்றும் இசை மரபின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் அரிய ஆய்வு நூலாகும்.</p><p></p><h2>ஆளுநர் நா.வேதநாயகன்</h2><p>
</p><p>
ஒரு மனிதன் தன்னலமின்றி அறிவுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்தால், அவர்
மறைந்த பிறகும் அவரது பெயர் என்றென்றும் வாழும் என்பதற்கு அவரே சிறந்த
உதாரணம். எனவே, அவர் காட்டிய அறிவுப் பாதையில் நாம் அனைவரும் பயணிப்போம்;
தமிழ் மொழியைப் பேணுவோம், நமது கலாசாரத்தைப் பாதுகாப்போம்,' என ஆளுநர் தனது
உரையில் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2f70d15-5749-4260-be91-a54e6aaa2a47/26-6a633c59cee2d.webp' /></p><p>

இந்நிகழ்வில், 'தமிழ் மொழிக்கு இலங்கையர்கள் ஆற்றிய பங்களிப்பு' என்ற விசேட
நூல் வடக்கு மாகாண ஆளுநரால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலின் முதல் பிரதியை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின்
கொன்சியூலர் ஜெனரல் ரீ சாய் முரளி&nbsp; ஆளுநரிடமிருந்து
பெற்றுக்கொண்டார்.</p><p>

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருந்த கடற்றொழில், நீரியல்
மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்&nbsp; இ.சந்திரசேகர் தவிர்க்க முடியாத
காரணங்களால் நேரில் கலந்துகொள்ளவில்லை. எனினும், நிகழ்வுக்கான அவரது
பிரத்தியேக உரை ஒலிவடிவில் சபையில் ஒலிக்கச் செய்யப்பட்டது.</p><p>

முன்னதாக, காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரி முன்றலில் இருந்து
ஆரம்பமான பிரம்மாண்டமான தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலம், காங்கேசன்துறை வீதி
மற்றும் வைத்தியசாலை வீதி ஊடாக யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை
வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுவாமி விபுலானந்தர், இயல், இசை மற்றும் நாடக
உருவகங்களைக் கொண்ட சிறப்பு ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன.</p><p></p><h2>அரசகரும மொழிகள்&nbsp;</h2><p> </p><p>அத்துடன், புரவி
நடனம், பொய்க்கால் குதிரை, வசந்தன் கும்மி, மயில் நடனம், கோலாட்டம், காவடி,
கரகாட்டம் உள்ளிட்ட பல பாரம்பரியக் கலை நிகழ்வுகளும் ஊர்வலத்துக்குச்
சிறப்பூட்டின.
</p><p>
அரசகரும மொழிகள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு
செய்திருந்த இந்நிகழ்வுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன்
தலைமை தாங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebc611b8-9361-485d-8531-445a26b5e261/26-6a633c5aa9047.webp' /></p><p> </p><p>யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர்
அருணாசலம் சண்முகதாஸ் வரவேற்புரையை நிகழ்த்தினார். அரசகரும மொழிகள்
திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன கெட்டியாராச்சி, பேராசிரியர்
பாரதி கெனடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.</p><p>சிவபூமி அறக்கட்டளையின் நிறுவுனர்
கலாநிதி ஆறுதிருமுருகன் சுவாமி விபுலானந்தர் நினைவஞ்சலி உரையை வழங்கினார்.</p><p>
நூல் வெளியீட்டு உரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளர்
சுவாமிநாதன் விமல் நிகழ்த்தினார். பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான பல்வேறு
கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T10:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை! மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது - காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/can-t-forget-can-t-forgive-bhaskaran-1784880533"></link>
            <id>https://tamilwin.com/article/can-t-forget-can-t-forgive-bhaskaran-1784880533</id>
            <summary type="text">&quot;1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலிசுமந்த ஈழத்தமிழர்களின்
இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்&quot; என காரைதீவு
பிரதேச சபையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>"1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலிசுமந்த ஈழத்தமிழர்களின்
இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்" என காரைதீவு
பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்று(23.07.2026) கல்முனையில் நடைபெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43ஆவது ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>

மறக்கவும் மன்னிக்கவும் முடியாத துயர நாள்</h2><p>அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

"1983 ஜூலை 23 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் பேரினவாத சக்திகளால் தமிழ்
மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்முறைகள் மறக்கவும் முடியாத,
மன்னிக்கவும் முடியாத துயர நாளாகும். </p><p>

43 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதன்
வடு இன்னமும் ஆறாமல் காணப்படுகின்றது.

அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட இனப்படுகொலையில் குறைந்தது
3,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0850526d-cc44-446d-9d52-0530c3bd5677/26-6a63219b5b828.webp' /></p><p>

குறிப்பாக கண்டி, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வாழும்
தமிழர்களின் உயிர்களும், உடமைகளும், சொத்துக்களும் முற்றிலும் சூரையாடப்பட்டுள்ளன.</p><p>

அன்றைய தினத்தில் வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக அப்பாவித் தமிழ் இளைஞர்கள்,
யுவதிகள் மற்றும் குழந்தைகள் எரியூட்டப்பட்டும், கொதிக்கும் தார்
பீப்பாய்களுக்குள் போடப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்கள்
பதிவாகியுள்ளன.</p><p></p><h2>தமிழர் அழிப்பு</h2><p> 

இலங்கையை ஒரு சிங்கள நாடாக அறிவித்து, தமிழினத்தை முழுமையாக
அழிக்கும் முனைப்புடன் அன்றைய சிங்கள ஆட்சியாளர்களின் ஆதரவுடனேயே இந்தக் கொடூரம்
அரங்கேற்றப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e667c52-bc81-4867-bdb1-677c539e2a0b/26-6a63219aacadb.webp' /></p><p>

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற
இந்த நிகழ்வில், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளுக்கு
எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும்
வகையிலும் கருத்துரைகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இந்த நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்,
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ. தர்மதாச (தொண்டமான்), தமிழரசுக்
கட்சியின் கல்முனை தொகுதிக்கான இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான அ.
நிதான்சன் ,ஈபிஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட
அமைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணியநாதன்( கரன்) உட்பட பிரதேச மக்கள் பலரும்
கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T10:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-crackdown-to-curb-illegal-liquor-production-1784875765"></link>
            <id>https://tamilwin.com/article/police-crackdown-to-curb-illegal-liquor-production-1784875765</id>
            <summary type="text">மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை பிரதேச சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர். </p><p>

இதன்போது சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச்சென்றதுடன் அங்கிருந்த பெருமளவான சட்டவிரோத மதுபான போத்தல்களையும் மதுபான உற்பத்திக்கான கோடாவினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>மதுபான உற்பத்தியை தடுத்தல்</h2><p>
</p><p>
முழுநாடும் ஒன்றாக எனும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பகுதியில் அதிகரித்துச் செல்லும் சட்டவிரோத மதுபான உற்பத்தியை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19985373-e097-4302-9b98-8a846a5c76fb/26-6a6311201e6c7.webp' />&nbsp;&nbsp;</p><p> 


இது தொடர்பில் வவுணதீவு பிரதேசபையின் பிரதி தவிசாளர் த.டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இணைந்து கரையாக்கன்தீவு பகுதியில் உள்ள வாவிக்கரையோரம் முற்றுகையிட்டனர்.</p><p>இவ்வாறு கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபான பொருட்கள் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-24T10:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/students-protest-neet-exam-in-india-and-taminadu-1784884473"></link>
            <id>https://tamilwin.com/article/students-protest-neet-exam-in-india-and-taminadu-1784884473</id>
            <summary type="text">நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் அதனை தடுக்க தவறிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் அதனை தடுக்க தவறிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 5-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>

அவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.</p><p></p><h2>தமிழகத்தில் போராட்டங்கள்</h2><p>
</p><p>

நீட் தேர்வில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேட்டை கண்டித்தும், அதனை தடுக்கத் தவறியதாக குற்றஞ்சாட்டப்படும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இன்று(24) பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db7408bc-e46e-4370-9724-6421ab16adef/26-6a6332af99ed3.webp' /></p><p>
</p><p>
டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
</p><p>
சென்னையில் இந்திய மாணவர்கள் சங்கம் மற்றும் இளைஞர் சங்கம் சார்பில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. </p><p>

மேலும், பச்சையப்பன் கல்லூரி முன்பு அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.</p><p></p><h2>&nbsp;நீட் தேர்வு</h2><p>
</p><p>
மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், லயோலா கல்லூரி மற்றும் மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக பொலிஸார் குவிக்கப்பட்டனர்.</p><p>

இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் எதிரே மாவட்டச் செயலாளர் செல்வா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a23af23-6223-4315-a3c2-36ccb0865446/26-6a6332aea720c.webp' /></p><p>
</p><p>
சேலம் அரசு கலைக் கல்லூரியிலும் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கியதாக கூறப்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
பின்னர் பொலிஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p><p>

இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாணவர் அமைப்புகள் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்தன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T09:37:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் குற்றங்கள் தொடர்பில் முக்கிய கருத்துக்களை வெளியிட்டிருக்கும் கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nimalka-fernando-sri-lankan-civil-war-1784882134"></link>
            <id>https://tamilwin.com/article/nimalka-fernando-sri-lankan-civil-war-1784882134</id>
            <summary type="text">ஈழப் போரின் இறுதி தறுவாயில் போர் குற்றங்கள் நடைபெற்றதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் ஆனால் இவை அச்சந்தர்ப்பங்களில் அழிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி நிமல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழப் போரின் இறுதி தறுவாயில் போர் குற்றங்கள் நடைபெற்றதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் ஆனால் இவை அச்சந்தர்ப்பங்களில் அழிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
நல்லாட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கு முன்னிலையில் செயற்பட்டவர்.</p><p>மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஜே. ஆர். ஜெயவர்தன அரசாங்கக் காலத்தில் இருந்து குரல் கொடுத்தவர்.
</p><h2>
யுத்தப் பிரகடனம்</h2><p>ஒரு யுத்தம் (War) நிலவுவதாக பிரகடனம் செய்யப்பட்டது. எனவே, பயங்கரவாதத்தை அடக்கும் விவகாரத்தில் குற்றம் நடந்திருந்தால், அந்த குற்றம் குறித்து நாம் விசாரணை நடத்த வேண்டும். 'அவர் பயங்கரவாதி என்பதால் தான் கொன்றேன்' என்று கூற முடியாது.</p><p>அவர் ஒரு பயங்கரவாத அமைப்பில் இருந்திருக்கலாம்.
நேரடி மோதலின் போது (Direct conflict) ஒருவரையொருவர் கொல்வதற்கும், அதற்குப் பின்னரான நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. </p><p>போர்க் குற்றம் என்பதற்கு சில வரைவிலக்கணங்கள் உள்ளன. ஒரு போரை நடத்துவதற்குக் கூட ஒரு சட்டக் கட்டமைப்பு இருக்க வேண்டும், அதில் பரஸ்பர தன்மை இருக்கலாம் என்று எல்.ஆர். (LR) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6979d5b3-15d4-486f-9274-431774c8e649/26-6a6323d8213bc.webp' /></p><p>ஆயுதமற்ற பொதுமக்கள் மீது குண்டுவீசி அவர்களைக் கொல்வது போன்ற சம்பவங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால், அவை குற்றங்களாகும். </p><p>அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் வழக்கு தொடரும் உரிமை உள்ளது.
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை. அவையும் போர் குற்றங்களே.நிராயுத பாணிகளாகவே அவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><h2>
போருக்கு பின்னரான குற்றங்கள்</h2><p>அதேபோல், நமது தரப்பால் ஆயுதமற்ற நபர்களைக் காணாமல் போகச் செய்தல், ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தல் மற்றும் உயிரிழந்த போர்க் கைதிகளின் உடல்களைப் புதைத்த பின்னர் அவர்களின் கல்லறைகளை உடைத்துச் சேதப்படுத்துதல் போன்றவை போர்க் குற்றங்களாகும். </p><p>போர்க் குற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நடப்பது மட்டுமல்ல, போருடன் தொடர்புடைய அனைத்து வன்முறைகளும் அதில் அடங்குகின்றன.
</p><p>மனிதநேய நடவடிக்கையாக இருந்தாலும், அந்த மனிதநேய நடவடிக்கையின் போது குற்றங்கள் நடந்திருக்கலாம். அது இரு தரப்பிலிருந்தும் நடந்திருக்கலாம். </p><p></p><p>ஒரு மோதலின் போது யாருக்கும் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
உலகில் உள்ள அனைத்து மோதல்களையும் பார்த்தால், ஒரு அரசால் பயங்கரவாதத்தை அடக்குவது தொடர்பான சட்டங்கள் இருக்கும்.</p><p> அதே வேளையில், மனித உரிமைகள் சார்ந்த ஒரு கட்டமைப்பும் (Framework) உள்ளது. பயங்கரவாதிக்கும் மனித உரிமை உண்டு.
தற்காப்பு உரிமை என்பது எனக்கு மட்டுமல்ல, </p><p>எனக்கு அருகில் இருப்பவர் ஒருவரின் உயிரைப் பறிக்க ஒருவர் வருகிறான் என்றால், அந்த நபரைத் தற்காப்புக்காகக் கொலை செய்வதற்குக்கூட சட்டப் பாதுகாப்பு குறிப்பிட்ட அளவுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:54:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான செய்தி! இன்று பதிவாகியுள்ள பெறுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784881209"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784881209</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 24 கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று (24) அதன் விலை 3000 ரூபா குறைந்து 374 ,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>ஆபரண தங்கத்தின் பெறுமதி</h2><p>
</p><p>
இதேவேளை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2800&nbsp;ரூபா குறைந்து 344,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8efdc614-79b4-4342-bf14-0cc785fe88d7/26-6a6325bede985.webp' /></p><p>
</p><p>அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.46,750 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,000 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:44:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். </p><p>
இந்த வாக்குமூலத்தில் அடங்கியுள்ள தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரியவந்துள்ளது.
</p><p>கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார். </p><p>அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>கோட்டாபயவின் இரு வாக்குமூலங்கள்</h2><p>இந்தச் சம்பவம் தொடர்பிலும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடமும் வாக்குமூலம் பெற்றிருந்தது. </p><p>தற்போது சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
இது தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடம் இரண்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. </p><p>முதல் வாக்குமூலத்தில், சுகீஸ்வர பண்டாரவிற்குத் தனிப்பட்ட செயலாளர் என்ற முறையில் இந்தச் சம்பளம் வழங்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். </p><p>ஆனால், இரண்டாவது வாக்குமூலத்தில், அந்தச் சம்பளம் சுகீஸ்வரவிற்கு வழங்கப்படவில்லை என்றும், தவறுதலாக வேறு ஒரு செயலாளருக்கு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df624e24-2ddf-4df3-9a16-2bd553354c65/26-6a62e26654f56.webp' /></p><p>அவர் குறிப்பிட்ட அந்த செயலாளர் நந்தசேன மற்றும் மஹிந்த ஆகியோரின் இளைய சகோதரியான பிரீதி ராஜபக்சவின் மூத்த மகன், முன்னாள் கடற்படை அதிகாரியான மாலக சந்திரதாச. அவருடைய தந்தை வைத்தியர் லலித் பிரியலால் சந்திரதாச.</p><p> மாலக சந்திரதாச, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது செயலாளராகப் பணியாற்றியதாகவும், அந்தச் சம்பளம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது என்றும் இரண்டாவது வாக்குமூலத்தில் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
</p><p>முதலில் சுகீஸ்வர பண்டாரவிற்கு சம்பளம் கொடுத்ததாகச் சொல்கிறார், இரண்டாவது வாக்குமூலத்தில் "இல்லை, அவருக்குக் கொடுக்கவில்லை, தவறுதலாக எனது செயலாளராக இருந்த மாலக சந்திரதாசவிற்குத்தான் கொடுத்தேன்" என்கிறார்.
</p><h2>மாலக சந்திரதாச வழங்கிய வாக்குமூலம்</h2><p>இதனைத் தொடர்ந்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாலக சந்திரதாசவை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது. </p><p>ஆனால் மாலக சந்திரதாச வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"நான் ஒரு சதம் கூட வாங்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்!" என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
</p><p>"நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. வேறு எந்தவொரு பதவியிலோ பணியாற்றவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a7f3e78-60ea-45e3-b5a6-3c55e9c862e3/26-6a62e26704bfc.webp' /></p><p>எந்தவொரு சம்பளமோ, பணமோ, கொடுப்பனவோ, வாகனமோ அல்லது வேறு எதுவும் நான் பெறவில்லை. அப்படி ஏதேனும் சொல்லியிருந்தால், கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்" என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.</p><p>அதனால் இது குறித்துத் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தான் இந்த விசாரணைகள் நடைபெறுகின்றன. </p><p>இதன் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டது போலவே கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்ய வாய்ப்புள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T08:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சொல்லை மறந்தாலும் கூகுள் கணக்கை மீட்டெடுக்கலாம் : அறிமுகமான புதிய வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/google-new-selfie-video-sign-in-feature-1784879478"></link>
            <id>https://tamilwin.com/article/google-new-selfie-video-sign-in-feature-1784879478</id>
            <summary type="text">கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய அல்லது மறந்த கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p> 

இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய அல்லது மறந்த கடவுச்சொற்கள் அல்லது தங்களுக்கு விருப்பமான சாதனங்களை அணுக முடியாமல் கணக்கு முடக்கப்பட்டால், அவற்றை மீட்டெடுக்க மற்றொரு வழியை வழங்குகிறது.</p><p>

ஆல்ஃபபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனம், பயனர்கள் பல கோணங்களைப் படம்பிடிக்கும் வகையில், வழிகாட்டப்பட்ட தலை அசைவுகளைச் செய்யும் ஒரு சிறிய வீடியோவைப் பதிவு செய்வதன் மூலம் சரிபார்ப்பை அமைக்க அனுமதிக்கும். </p><p></p><h2>தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சமயங்களில்</h2><p>கூகுள் அந்தப் பதிவைச் சேமித்து, பயனர்கள் பின்னர் உள்நுழைய முயற்சிக்கும்போது பதிவேற்றும் நேரடி வீடியோக்களை அங்கீகரிக்க அதைப் பயன்படுத்தும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228eefc7-a7e1-4aeb-8814-2cc82a9beb4a/26-6a631d511b358.webp' /></p><p>
இந்த புதிய அம்சம், குறிப்பாக சாதனங்கள் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சமயங்களில், மோசடிக்கு எதிராக வலுவான பாதுகாப்பையும், பயனர்களுக்கு சிறந்த கணக்கு மீட்பு விருப்பங்களையும் வழங்கக்கூடும் என்றாலும், இது தனியுரிமை மற்றும் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு குறித்து சில கவலைகளையும் எழுப்பியுள்ளது.</p><p>இருப்பினும், இந்தச் செல்ஃபி வீடியோ பயனரின் சம்மதத்துடன் மட்டுமே சேமிக்கப்படுவதாகவும், பயனர்கள் தங்களின் கூகுள் கணக்கிலிருந்து இதை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக்கொள்ளலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், பயனர் பிற தேவைகளுக்காகப் பகிர விருப்பம் தெரிவித்தால் தவிர, இந்த வீடியோ உள்நுழைவு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
</p><h2>தரவுப் பாதுகாப்பு</h2><p>
புதிய பதிவை சேமிக்கப்பட்ட வீடியோவுடன் ஒப்பிடுவதுடன், வீடியோ நேரலையானதுதானா என்பதை உறுதிப்படுத்த பயனர்களைச் சில அசைவுகளைச் செய்யக் கோருவதன் மூலம், ‘டீப்ஃபேக்’ (Deepfakes) உட்பட ஆள்மாறாட்ட முயற்சிகளைக் கண்டறிய பல பாதுகாப்புச் சோதனைகளைப் பயன்படுத்துவதாகக் கூகுள் மேலும் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad0b0ea-9c61-4cae-94c6-00ff62ce58ae/26-6a631d51d5465.webp' /></p><p>

தகுதியுள்ள கூகுள் கணக்குப் பயனர்களுக்கு இந்த வசதி ஜூலை 23 முதல் கிடைக்கிறது.

தற்போது நிறுவனங்கள் கணக்கு மீட்பு நடைமுறைகளுக்கு நம்பகமான சாதனங்கள், பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்கள், மீட்புத் தொடர்புகள் மற்றும் இருபடிச் சரிபார்ப்பு (Two-factor authentication) ஆகியவற்றையே நம்பியுள்ளன. </p><p>உயிரியல் அளவீடு மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பங்கள் (Facial Recognition) நீண்டகாலமாகவே தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்குரிய தலைப்பாக இருந்து வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:17:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - சிசிடிவி கமராக்களில் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727</id>
            <summary type="text">புதிய இணைப்புவத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸார் தற்போது பல விபரங்களை வெளியிட்டுள்ளனர்.நேற்று இரவு ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸார் தற்போது பல விபரங்களை வெளியிட்டுள்ளனர்.</p><p>நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டை, மட்டக்குளியாவை சேர்ந்த மனோஜ் என்ற நபர் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் குடு ரோஷன் என்ற நபரை குறிவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ள காட்சி</h2><p>கொலை நடந்த இடத்திற்கு வந்த துப்பாக்கித்தாரி நடனமாடியபடியே வந்து பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளமை&nbsp;மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf20b4f3-95e3-4185-99ff-6c62e141ffd9/26-6a63194e2ed44.webp' /></p><p>இருப்பினும், குடு ரொஷன் அணிந்திருந்ததை போன்ற உடையை அணிந்திருந்தமையினால் உயிரிழந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது</p><p>இதன்போது பொரள்ளை, வானத்தமுல்லை பகுதியை சேர்ந்த வானத்தே சுமேத என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், தாக்குதலுக்கு பிறகு துப்பாக்கிதாரி தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.</p><p>இச்சம்பவம் குறித்து&nbsp;5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கருப்பு நிற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜா-எல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இரண்டு குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முரண்பாடே இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு&nbsp;சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். </p><p>குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>விசாரணையில் வெளியான தகவல்</h2><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 'மட்டக்குளிய குடு ரொஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e836449-438e-4cdb-9f75-1fce1e8c67c6/26-6a62d844db0e8.webp' /></p><p>

ரொஷனின் சகோதரர்களில் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவின்போதே ​​நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் தலையில் முக்காடு அணிந்த ஒருவர் காரில் வந்து மண்டபத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இருப்பினும், குறி தவறியதால் ரொஷனுக்கு அருகில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்</h2><p>இதன்போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொரள்ளையை சேர்ந்த 39 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ff3d35-e313-4f6c-85f3-a9e154de2e22/26-6a62d9a86af72.webp' /></p><p>கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியை கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p>இச்சம்பவம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கி வரும் எல்நினோ தாக்கம்..! விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/use-water-sparingly-intensity-the-el-nino-impact-1784878399"></link>
            <id>https://tamilwin.com/article/use-water-sparingly-intensity-the-el-nino-impact-1784878399</id>
            <summary type="text">இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா&nbsp;கேட்டுக்கொண்டார்.</p><p>பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை
மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(24) காலை 10.00 மணியளவில்
நடைபெற்றது.</p><p>




இந்த செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய&nbsp;போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><h2>எல்நினோ தாக்கம்</h2><p>
</p><p>



செய<b>லமர்வில் பேராசிரியர் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள் ஒன்றான வெப்பத்
தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக அவர் கூறுகையில் ம</b>த்திய பசுபிக் பிராந்தியக்
கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள
எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை
ஏற்படுத்தும்.</p><p>


மற்றும் வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை
விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afcb3efa-5da1-437b-9a75-a014c20ed2f7/26-6a63184845784.webp' /></p><p> </p><p>இதனால் இந்து
சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக
வேகமாகப் பரவி வருகிறது.


அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப
ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது.</p><p>
இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார்
மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது
உருவாக்கும்.
</p><h2>பிரதீபராஜா கோரிக்கை</h2><p>

மற்றும் வறட்சியும் மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான
காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, ஒக்டோபர் மற்றும்
நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2679771f-0f41-488b-8d51-72649595d570/26-6a631848ed7e1.webp' /></p><p>ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான
சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.</p><p>


"எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர்
முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய
நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என
பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலந்து கொண்டோரை கேட்டுக்கொண்டார்.</p><p>இந்தநிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின்
முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும்
இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-24T07:46:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை - சபையில் ஏற்பட்ட குழப்பநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-court-1784875780"></link>
            <id>https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-court-1784875780</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,&amp;nbsp; இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,&nbsp; இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.&nbsp;&nbsp;</p><p>இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி&nbsp; கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.&nbsp;</p><p>



இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சபை அமர்வின்போது அர்ச்சுனா இராமநாதன்&nbsp;கூறியுள்ளார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ReoRet7REMg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>சபையில் பதற்றமான சூழல்</h2><p>இந்த நிலையில்,&nbsp;அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் இருந்தபோது, ​​அவரை கைது செய்ய நீதிமன்றம் எவ்வாறு பிடியாணை பிறப்பித்தது என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9411092a-4657-42a4-a8c8-2c0744b3ca1d/26-6a630f5c9587e.webp' /></p><p>
</p><p>ஹர்ஷவின் கேள்வியை அடுத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபையில் கடும் கூச்சலிட்டதன் காரணமாக, சபையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. </p><p>இதன்போது, சபையில் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,&nbsp;</p><p>“இந்த சபையில் பங்கேற்பது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு ஒரு சிறப்புரிமையாகும். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.

அவர் தனது கடமைகளைச் செய்வதிலிருந்து எந்தவொரு நிறுவனமும் அவரை தடுக்க முடியாது. உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறி நீங்கள் ஒரு தீர்ப்பை வழங்கக்கூடாது” என்று சுட்டிக்காட்டினார்.&nbsp;&nbsp;</p><h2>பிரதி சபாநாயகர் வழங்கியுள்ள உறுதி</h2><p>இதனையடுத்து,&nbsp; குறுக்கிட்ட பிரதியமைச்சர் சுனில் வட்டகல,&nbsp;&nbsp;</p><p>“நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் விசேட தேவைகள் இருந்தால் அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எனினும், ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேசிங்க, “இது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பொதுவான பிரச்சினையென்றும்,&nbsp; இது குறித்து பொதுவான தீர்மானமொன்றை நாடாளுமன்றம் எடுக்க வேண்டுமென்றும்” கோரிக்கை விடுத்தார்.</p><p>எவ்வாறாயினும்,&nbsp; அந்த சமயம் சபைக்குத் தலைமைத் தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, “இந்த நேரத்தில் தன்னால் ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும்,&nbsp; விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய கவனத்தை செலுத்துமென” உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xWDAmdLlq94" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:23:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் டொலராக வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-exchange-reserves-fall-to-6-4-billion-1784873971"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-exchange-reserves-fall-to-6-4-billion-1784873971</id>
            <summary type="text">இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p>
முன்னர் 6.8 பில்லியன் டொலர்களாக இருந்த கையிருப்பு குறைந்ததற்கு, இறக்குமதி தேவை அதிகரித்ததே முக்கிய காரணம் என நிதி அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p></p><h2>டொலர் வீழ்ச்சி</h2><p>
</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, </p><p>ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுப்பதற்காக மத்திய வங்கி சந்தையில் டொலர்களை வெளியிட்டதாலேயே கையிருப்பு குறைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821f03bc-5bdb-4c47-9371-1b4ffc48b7b5/26-6a63078d37064.webp' /></p><p>சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ், ஆண்டு இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட 8.9 பில்லியன் டொலர் கையிருப்பு இலக்கிலிருந்து இலங்கை விலகிச் செல்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillayan-remanded-again-1784876966"></link>
            <id>https://tamilwin.com/article/pillayan-remanded-again-1784876966</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> 

இது தொடர்பான வழக்கு இன்றைய&nbsp;தினம் (24.07.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p>இதன்போதே, எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்</h2><p> 

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb90fd7-ae1f-42fe-94e9-b0f616f4b713/26-6a631149e1ddf.webp' /></p><p> </p><p>

இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>பிள்ளையான் இணையவழி மூலமாக வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ள செய்யப்படடார்.&nbsp;ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். </p><p>

இந்த நிலையில், “பிள்ளையானை வெலிசரை கடற்படை முகாமில் எப்படி வைத்திருக்க முடியும்? எனவே இந்த வழக்கிற்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும்” என அவரின் சட்டத்தரணிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>மேலதிக தகவல் - பவன்</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/x9v6HB_g5cY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல்கள் ஏன் இன்னும் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/why-are-provincial-council-elections-still-delayed-1784874110"></link>
            <id>https://tamilwin.com/article/why-are-provincial-council-elections-still-delayed-1784874110</id>
            <summary type="text">அண்மையில் வெளியிடப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்புகள் இலங்கையின் அரசியல்
நிலைமையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான படிமத்தை வெளிப்படுத்துகின்றன. ஜனாதிபதி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் வெளியிடப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்புகள் இலங்கையின் அரசியல்
நிலைமையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான படிமத்தை வெளிப்படுத்துகின்றன.</p><p> ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க சுமார் 75வீத மக்களின் திருப்தியையும் ஆதரவையும்
பெற்றிருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. </p><p>பொதுமக்களின் திருப்தி
வாக்கு நோக்கத்துடன் முற்றிலும் ஒப்பிட முடியாவிட்டாலும், எந்த ஜனநாயக அரசும்
பெருமையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான மக்கள் நம்பிக்கையை அது
பிரதிபலிக்கிறது.</p><p>
இந்நிலையில் ஒரு முக்கியமான அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கேள்வி எழுகிறது.</p><p></p><h2>ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்&nbsp;</h2><p>

அரசாங்கம் இவ்வளவு வலுவான மக்கள் ஆதரவை அனுபவித்து வருமானால், மாகாண சபைத்
தேர்தல்கள் ஏன் இன்னும் நடத்தப்படவில்லை?

1987 ஆம் ஆண்டு இந்தியா–இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அரசியலமைப்பின் 13வது
திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் நிறுவப்பட்டன. </p><p>அவற்றின் செயல்திறன் அல்லது
அதிகார வரம்புகள் குறித்து பல்வேறு அரசியல் கருத்துக்கள் இருந்தாலும், அவை
இன்னும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் ஒரு பகுதியாகவே உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d80270c-2e14-4e8c-93f5-3f096a4f836e/26-6a630c6cce3e4.webp' /></p><p>இன்று தேசிய மட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மட்டத்தில்
மாநகர, நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். </p><p>ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட முக்கியமான
நிர்வாகத் தளமான மாகாண சபைகள் பல ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகள் இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. </p><p>ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட
ஆளுநர்கள் மாகாணங்களை நிர்வகித்து வருகின்றனர். ஆனால், மக்களிடமிருந்து
கிடைக்க வேண்டிய ஜனநாயக ஆணை இல்லாமல் அந்த நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
</p><p>
மக்கள் ஆதரவு பெற்ற அரசாங்கம் தேர்தலை அஞ்ச வேண்டியதில்லை.

தேர்தல்கள் என்பது மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள
அரசாங்கங்களுக்கு கிடைக்கும் ஜனநாயக வாய்ப்பாகும். </p><p>குறிப்பாக, அரசாங்கம்
உயர்ந்த மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் நேரத்தில், தேர்தல்கள் அதன் அரசியல்
நம்பகத்தன்மையையும் ஜனநாயகச் சட்டப்பூர்வத்தையும் மேலும் வலுப்படுத்தும்.</p><p></p><h2>மக்களின் தீர்ப்பை மீண்டும் பெறுவதற்கு&nbsp;</h2><p>அண்மைய கருத்துக் கணிப்புகள் உண்மையில் மக்களின் மனநிலையை
பிரதிபலிக்கின்றனவெனில், தேசிய மக்கள் சக்தி (NPP) தேர்தல் ரீதியாக மிகவும்
சாதகமான நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ff4178c-e36a-44a0-9f6f-8d9e7a5c690d/26-6a630c6d9d8a9.webp' /></p><p>அப்படியானால், மாகாண சபைத்
தேர்தல்கள் மூலம் மக்களின் தீர்ப்பை மீண்டும் பெறுவதற்கு அரசாங்கம் தயங்க
வேண்டிய காரணம் என்ன?

அத்தகைய தேர்தல்கள் அரசாங்கத்திற்கு பின்வரும் வாய்ப்புகளை வழங்கும்:</p><p>

* அனைத்து மாகாணங்களிலும் புதிய ஜனநாயக ஆணையைப் பெறுதல்.</p><p>
* மாகாண நிர்வாகத்தை வலுப்படுத்துதல்.
</p><p>* தனது சீர்திருத்தப் பணிகளுக்கு மக்கள் ஆதரவை உறுதிப்படுத்துதல்.
</p><p>* ஜனநாயக நிறுவனங்கள் குறித்து எழும் விமர்சனங்களுக்கு தெளிவான பதிலை
வழங்குதல்.</p><p>ஜனநாயகத்தின் அடிப்படைச் சிறப்பம்சங்களில் ஒன்று, அரசாங்கங்கள்
காலக்கெடுவுக்கு ஒருமுறை மக்களிடம் திரும்பிச் செல்வதுதான். தேர்தல்கள் என்பது
அரசியல் கட்சிகளுக்கிடையேயான போட்டி மட்டுமல்ல. மக்கள் தங்களது ஆட்சிக்கான
ஒப்புதலை புதுப்பிக்கவோ அல்லது திரும்பப் பெறவோ பயன்படும் அரசியலமைப்புச்
செயல்முறையாகும்.
</p><p>
ஒவ்வொரு தாமதமும் சந்தேகத்தை உருவாக்குகிறது.
ஒவ்வொரு ஒத்திவைப்பும் ஊகங்களுக்கு வழிவகுக்கிறது.
ஒவ்வொரு தவறவிடப்பட்ட தேர்தலும் ஜனநாயக அமைப்புகளின் மீதான மக்களின்
நம்பிக்கையைச் சீர்குலைக்கிறது.</p><p>அரசாங்கம் பொருளாதார மீட்பு, ஊழல் ஒழிப்பு மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை
முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் முக்கியமான தேசிய
இலக்குகளாகும். ஆனால் பொருளாதார முன்னேற்றமும் ஜனநாயக பிரதிநிதித்துவமும்
ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.
</p><p>
ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்துவமான தேவைகள் உள்ளன. அவற்றை நேரடியாக
முன்வைத்து தீர்வு காண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணத் தலைமையே மிகவும்
பொருத்தமானது.
</p><p>
தேர்தல்கள் இல்லாத சூழலில் பல்வேறு விளக்கங்கள் அரசியல் வட்டாரங்களில்
பேசப்படுகின்றன. சிலர் தேர்தல் சீர்திருத்தங்கள் இன்னும் நிறைவடையவில்லை எனக்
கூறுகின்றனர். சிலர் புதிய அரசியலமைப்புத் திருத்தங்கள் பரிசீலனையில் உள்ளன என
நம்புகின்றனர். இன்னும் சிலர், விரிவான ஆட்சிச் சீர்திருத்தங்கள் முடிந்த
பின்பே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் விரும்புகிறது எனக்
கருதுகின்றனர்.</p><p> மேலும், 13வது திருத்தத்தின் வரலாற்றுப் பின்னணி அல்லது
அதனுடன் தொடர்புடைய புவிசார் அரசியல் காரணிகள் அரசியல் சிந்தனையை இன்னும்
பாதித்து வருகின்றன என்றும் சிலர் ஊகிக்கின்றனர்.</p><p></p><h2>தேர்தல் நடைபெறாத மாகாணங்களுக்கு&nbsp;</h2><p>இந்த விளக்கங்களில் எது உண்மை என்பதை அரசாங்கமே தெளிவுபடுத்த முடியும்.
அதனால்தான் இவ்விடயத்தில் அதிக வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குப் பொருளாதார நிர்வாக அமைப்பை விட
அதிக அர்த்தமுடையதாக மாகாண சபைகள் உள்ளன. அவை மக்களின் அரசியல் பங்கேற்பின்
அடையாளமாகவும் உள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c07ceb59-0dae-4f53-93a8-21a7fb58f143/26-6a630ec0b57ff.webp' /></p><p>விவசாயம், மீன்பிடி, கல்வி, மாகாண சாலைகள்,
சுற்றுலாத்துறை, சுகாதாரம் மற்றும் உள்ளூர் தொழில்கள் ஆகிய அனைத்திற்கும்
பொறுப்புள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணத் தலைமையின் அவசியம் மறுக்க
முடியாததாகும்.
</p><p>&nbsp;ஜனாதிபதி,

நீங்கள் அரசியல் மாற்றம், தூய்மையான நிர்வாகம் மற்றும் ஜனநாயகப் புதுப்பிப்பை
வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தீர்கள். அண்மைய கருத்துக் கணிப்புகள்,
பெரும்பான்மையான மக்கள் இன்னும் உங்கள் தலைமையை ஆதரிக்கின்றனர் என்பதைக்
காட்டுகின்றன.</p><p>அந்த மக்கள் நம்பிக்கை உண்மையிலேயே இருக்கின்றது என்றால், அதை ஜனநாயக ரீதியில்
வெளிப்படுத்த மக்களுக்கு வாய்ப்பளிப்பதில் எந்த தயக்கமும் இருக்கக் கூடாது.</p><p>

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது உங்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தாது. மாறாக
அது:
</p><p>
* அரசியலமைப்புச் ஜனநாயகத்தின் மீதான உங்கள் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும்.</p><p>
* மாகாண நிர்வாகத்திற்கு புதிய சட்டப்பூர்வமான மக்கள் ஆணையை வழங்கும்.
</p><p>* தேவையற்ற அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
</p><p>* நீண்டகாலமாக தேர்தல் நடைபெறாத மாகாணங்களுக்கு மீண்டும் ஜனநாயகக் குரலை
வழங்கும்.</p><h2>மாகாண சபைத் தேர்தல்</h2><p>தேசிய மக்கள் சக்தி (NPP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB), இலங்கை பொதுஜன பெரமுன
(SLPP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தமிழ் அரசியல் கட்சிகள் அல்லது வேறு எந்த
அரசியல் இயக்கத்தை ஆதரித்தாலும், ஜனநாயகம் சிறப்பாக இயங்குவது தேர்தல்கள்
காலமுறைப்படி, வெளிப்படையாக, அரசியலமைப்பிற்கு ஏற்ப நடைபெறும்போதுதான்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40700985-ab8e-4041-aacc-8d35ff354374/26-6a630ec16ba86.webp' /></p><p>
மாகாண சபைத் தேர்தல்கள் யார் வெல்வார்கள், யார் தோற்பார்கள் என்பதற்காக
மட்டும் அல்ல. அவை மக்களின் ஜனநாயகப் பங்கேற்பை மீட்டெடுப்பதற்கும், ஜனநாயக
நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், ஒவ்வொரு மாகாணத்திற்கும் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட குரலை வழங்குவதற்குமானவை.
</p><p>
அரசாங்கம் உண்மையிலேயே பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்று
நம்பினால், அதை நிரூபிப்பதற்கான மிகச் சிறந்த வழி கருத்துக் கணிப்புகள் அல்ல;
வாக்குப்பெட்டிதான்.
</p><p>
தன்னம்பிக்கை கொண்ட அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைக்காது.
அது தேர்தல்களை வரவேற்கும்.
அதுவே ஜனநாயகத்தின் உண்மையான சாரம்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:12:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடையத் தவறிய இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-fails-to-meet-imf-targets-1784876217"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-fails-to-meet-imf-targets-1784876217</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட அந்நியச் செலாவணிக் கையிருப்பு இலக்கை இலங்கை அடையத் தவறியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட அந்நியச் செலாவணிக் கையிருப்பு இலக்கை இலங்கை அடையத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
இதற்கு முக்கியக் காரணம், வலுவான கடன் வளர்ச்சி மற்றும் செலாவணிக் கையிருப்பு பரிமாற்ற ஒப்பந்தங்கள் (swaps) வழிமுறை மூலம் சந்தையில் செலுத்தப்பட்ட பணப்புழக்கமே ஆகும்.
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் சமீபத்திய அதிகாரிகள் அறிக்கையின்படி, நான்காவது மீளாய்வுக்குப் பிறகு அந்நியச் செலாவணிக் கையிருப்புக்காக ஆரம்பத்தில் 593 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.</p><p></p><h2>அந்நியச் செலாவணிக் கையிருப்பு</h2><p> பின்னர் அந்த இலக்கு 485 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைக்கப்பட்டது. ஆனால் இலங்கை குறித்த காலப்பகுதிக்குள் 426 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பை மட்டுமே திரட்டியுள்ளது.</p><p>

திட்டத்தின் முந்தைய கட்டத்தில் இலங்கை மத்திய வங்கி தனது உள்நாட்டுச் சொத்து இலக்கை மாற்றாமல் வைத்திருந்ததால், சர்வதேச நாணய நிதியத்தால் கணிக்கப்பட்ட அந்நியச் செலாவணிக் கையிருப்பை இலங்கையால் திரட்ட முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b03ba181-e85a-45c9-90ce-cce35f0530a2/26-6a630f946a865.webp' /></p><p> </p><p>சர்வதேச நாணய நிதியத்தின் கடைசி இரட்டை ஆய்வுக்குப் பிறகும், மத்திய வங்கியின் உள்நாட்டுச் சொத்துக்கள் 2,510 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மத்திய வங்கியின் டொலர் கொள்முதல் என்பது பணத்தை அச்சிடுவதை உள்ளடக்கியது. இது திறைசேரியின் செயல்பாட்டிலிருந்து வேறுபட்டது. உள்நாட்டுச் சொத்துக்களை விற்பதன் மூலம் புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் திரும்பப் பெறப்படாவிட்டால், மத்திய வங்கியால் திரட்டப்பட்ட கையிருப்பை பாதுகாப்பாகப் பராமரிக்க முடியாது. </p><p>இருப்பினும், மத்திய வங்கி தனது அரசாங்கப் பத்திரத் தொகுப்பில் இருந்து பெறும் கூப்பன் கொடுப்பனவுகள் (வட்டி) மற்றும் கையிருப்புப் பணத்தில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்புக்கும் சமமான அளவிற்கு மட்டுமே கையிருப்பை வைத்திருக்க அனுமதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af348a3-d50e-4cd7-b766-97fa5248af85/26-6a630f951aa09.webp' /></p><p>
</p><p>
மத்திய வங்கிக்கு பதிலாக, வெளிநாட்டுக் கையிருப்பைத் திரட்டும் பணியை திறைசேரி மேற்கொள்ள வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>கையிருப்பைத் திரட்டும்போது திறைசேரி புதிதாக பணத்தை அச்சிடுவதில்லை. இது மத்திய வங்கி பணத்தை அச்சிடுவதற்கான சாத்தியத்தை நீக்குகிறது. </p><p>கடந்த ஆண்டு முழுவதும் நிகழ்ந்ததைப் போல, ரூபாய் நோட்டுகளின் மதிப்பைக் குறைப்பதன் மூலம் உள்ளூர் நாணயத்தின் மதிப்பு குறைக்கப்படும் சாத்தியத்தைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டம்! 840 மில்லியன் ரூபா இழப்பீடு கோரிய ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/japan-demands-rs-840-million-in-compensation-1784875222"></link>
            <id>https://tamilwin.com/article/japan-demands-rs-840-million-in-compensation-1784875222</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டத்திற்கான இழப்பீடாக ஜப்பானிய நிறுவனத்திற்கு ஏறக்குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டத்திற்கான இழப்பீடாக ஜப்பானிய நிறுவனத்திற்கு ஏறக்குறைய 840 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்றைய (23.07.2026) நாடாளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டமைக்கான இழப்பீடாக ஒரே நேரத்தில் 189 மில்லியன் ஜப்பானிய யென், 1.031 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஏறக்குறைய 110 மில்லியன் இலங்கை ரூபாய்கள் இழப்பீடாக வழங்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><h2>இழப்பீடு தாமதிக்கப்பட்ட காலத்துக்கான கூடுதல் வட்டி</h2><p> </p><p>எனினும் ஜப்பானிய நிறுவனம் தற்போது குறித்த இழப்பீடு தாமதிக்கப்பட்ட காலத்துக்கான கூடுதல் வட்டியைக் கோரி வருகிறது.

எனினும் கோரப்பட்ட வட்டித் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், இவ்விடயத்தை விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிடல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன் இலகு&nbsp;தொடருந்து திட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மொத்த இழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றாலும், 2024ஆம் ஆண்டில் வழங்கப்படும் இழப்பீடு குறித்த தகவல் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பின் நகரப் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு இத்திட்டம் பொருத்தமற்றது என அடையாளம் கண்ட பின்னர், அப்போதைய அரசாங்கம் இத்திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தது. 2020 செப்டெம்பர் 18 அன்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், இத்திட்டம் செலவுத் திறனற்றது எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p></p><p> </p><p>மேலும், அப்போதைய ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்திலும், இது செலவுத் திறனற்ற திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போதைய நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்சவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அமைச்சரவைப் பத்திரத்தில், இத்திட்டம் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டிருந்தது.

இத்திட்டம் தொடர்பாக கணக்காயளர் நாயகம் ஒன்பது பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.</p><h2>முடிவு மறுபரிசீலனை</h2><p> </p><p>இத்திட்டத்தை நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்து, அதை மீண்டும் தொடங்க வேண்டும் அல்லது அதன் பொருளாதாரமற்ற தன்மையை பொருளாதார ரீதியாக சாத்தியமாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், கணக்காய்வாளர் நாயகம் அதை மீண்டும் தொடங்க நேரடியாகப் பரிந்துரைக்கவில்லை. மேலும் தற்போதைய அரசாங்கமும் இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்து முன்னைய முடிவுக்கு மாற்றமான முடிவு எதனையும் எடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc9792b5-f158-44ae-8d68-9c19ff019f9b/26-6a630f0383174.webp' /></p><p>
</p><p>
கொழும்பு நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதற்காக, பேருந்துகள் மற்றும் பாரம்பரிய தொடருந்து சேவைகளுடன் கூடுதலாக ஒரு புதிய பொதுப் போக்குவரத்து அமைப்பின் தேவை 2010-களின் முற்பகுதியில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த இலகு தொடருந்து திட்டம் ஒரு தீர்வாக முன்மொழியப்பட்டது. </p><p>கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், பயண நேரத்தைச் சேமித்தல் மற்றும் மேற்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக இருந்தன.</p><p></p><p>
</p><p>
2.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்ட இத்திட்டத்திற்கு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (JICA) 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புக்கொண்டிருந்தது. 40 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய இந்தக் கடனுக்கு, 12 ஆண்டுகள் சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தக் காலத்தில் இலங்கை எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T07:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுத் தம்பதி ஓட்டிச் சென்ற மோட்டார் வாகனத்தால் இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-killed-by-motor-vehicle-driven-by-foreigners-1784872967"></link>
            <id>https://tamilwin.com/article/youth-killed-by-motor-vehicle-driven-by-foreigners-1784872967</id>
            <summary type="text">கந்தளாய் பகுதியில் இருந்து ஹபரணை செல்லும் வீதியில் மோட்டார் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பகுதியில் இருந்து ஹபரணை செல்லும் வீதியில் மோட்டார் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

விபத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
வெளிநாட்டுத் தம்பதி, திருகோணமலை நோக்கி பயணித்த காரும் கந்தளாய் பகுதியிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளிலுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.</p><p>
</p><h2><b>
 இளைஞன் பலி</b></h2><p>இதன்போது 148ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் கித்துல்உத்துவ பிரதேசத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9310e83b-01a4-4585-aafe-01dd71bd2b07/26-6a6301dc91a67.webp' /></p><p>விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கவலைக்கிடமான நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-24T07:03:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தில் அரசியல் தலையீடு! குற்றச்சாட்டு வைக்கும் முன்னாள் இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahesh-senanayaka-anuradhapura-npp-1784876351"></link>
            <id>https://tamilwin.com/article/mahesh-senanayaka-anuradhapura-npp-1784876351</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அரசியல் தலையீடு செய்வதாக உள்ளக தகவல்கள் மூலம் தெரிவந்துள்ளதாக முன்னாள் இராணுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அரசியல் தலையீடு செய்வதாக உள்ளக தகவல்கள் மூலம் தெரிவந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>'திவிதென ரணவிரு' (Dividena Ranu) அமைப்பால் அநுராதபுரத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த போது,</p><p></p><h2>உள்ளக தகவல்களில் தெரியவந்துள்ளவை</h2><p>இராணுவத்தில் அரசியல் தலையீடு குறிப்பிட்ட அளவிற்கு இருப்பதை நாம் சமூக வலைத்தளங்கள் மூலமாக தீர்மானிக்க முடியாது. இருப்பினும், நாம் ஓய்வு பெற்ற போதிலும் இராணுவத்திற்குள் உள்ள தொடர்புகள் இன்னமும் இருக்கவே செய்கின்றன. </p><p>பல்வேறு அதிகாரிகள்- உறவினர்கள், நண்பர்கள் , சீடர்களும் இருக்கிறார்கள். அவர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களில், சில நேரங்களில் அவர்களால் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிகிறது. </p><p>வருத்தத்துடன் தான் அதைக்கூற வேண்டியுள்ளது.
ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடவோ, காலை வாரவோ எந்தவொரு எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை என்பதை மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறோம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4aab12-417d-47ff-9e47-d959842526f2/26-6a630d41366f0.webp' /></p><p>நாங்கள் மரணித்தாலும் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையும் பொறுப்பும் இந்நாட்டில் எமக்கு இன்னமும் உள்ளது. அதனால் தான், சரியான நேரத்தில், சரியான விடயங்களை செய்வதற்காக நாம் ஒன்று கூடியுள்ளோம். </p><p>அந்த நம்பிக்கையை மக்கள் இராணுவ வீரர்கள் மீது வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த சில காலங்களில் நாம் நாடு முழுவதும் உள்ள மாவீரர்களை ஒன்றிணைத்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:01:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/debate-begin-no-confidence-motion-justice-minister-1784875675"></link>
            <id>https://tamilwin.com/article/debate-begin-no-confidence-motion-justice-minister-1784875675</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.</p><p>

இன்றைய(24) நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமானது.
</p><p>
நிலையான விதிகள் 22, 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ளபடி, இன்று காலை 9.30 மணி முதல் 10 மணி வரையிலான நேரம் நாடாளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>விவாதம் ஆரம்பம்</h2><p>

வாய்மொழி பதில்கள் தேவைப்படும் கேள்விகளுக்காக காலை 10 மணி முதல் 11 மணி வரையிலான நேரமும், நிலையான விதிகள் 27ஃ2-இன் கீழ் உள்ள கேள்விகளுக்காக காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலான நேரமும் ஒதுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0df98c0-fe25-446b-a374-5ff4c95f8217/26-6a630c2ce8328.webp' /></p><p>
அதன்பிறகு, நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதிக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்திருந்தது. அதன் பிரகாரம் குறித்த தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போதைக்கு ஆரம்பமாகியுள்ளது.</p><p>

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், எதிர்க்கட்சியால் கடந்த 21ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த சம்பவத்தின்போது கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதற்காக நீதி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>

அதேநேரம் இன்று விவாதிக்கப்படவிருந்த தனிநபர் தீர்மானங்கள் எதிர்காலத்தில் வேறொரு திகதியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:54:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளையில் சந்தேகநபரை மிரட்டி பணம் பறித்த பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/si-arrested-for-extorting-80-000-from-suspect-1784873735"></link>
            <id>https://tamilwin.com/article/si-arrested-for-extorting-80-000-from-suspect-1784873735</id>
            <summary type="text">திருட்டு வழக்கொன்றில் சந்தேகநபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாய் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட்டு வழக்கொன்றில் சந்தேகநபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாய் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பிரிவு குற்றப்புலனாய்வுப்பணியகம் தெரிவித்துள்ளது.</p><p>

வத்தளை பொலிஸில் பணியாற்றும் உதவி பொலிஸ் ஆய்வாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>சந்தேகநபர் மிரட்டல்&nbsp;</h2><p>
</p><p>
கொழும்பு 15 பகுதியை சேர்ந்த நபரொருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c77d0bf0-386c-4531-8950-801b435b81cb/26-6a6309011dc1d.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை தேடுவதாகக்கூறி, சந்தேகத்திற்குரிய உதவி பொலிஸ் ஆய்வாளர் உட்பட ஒரு குழுவினர், அவரை கைது செய்யாமல் வத்தளை பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.</p><p>

இதனையடுத்து சந்தேகநபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாய் பணத்தை பறித்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்நிலையில், கைது செய்யப்பட்ட உதவி பொலிஸ் ஆய்வாளர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:41:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-after-motorcycle-catches-fire-1784866652"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-after-motorcycle-catches-fire-1784866652</id>
            <summary type="text">திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தின் போது காயமடைந்த இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
இந்த விபத்தானது நேற்று(23.07.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>வாகன விபத்து</h2><p> </p><p>

கித்துலூத்துப் பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகமாகப் பயணித்த உயர் ரக ரேசிங் (Racing) மோட்டார் சைக்கிளும், திருகோணமலையிலிருந்து கபரணை நோக்கி பயணித்த இந்தியத் தம்பதியினரின் காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. </p><p>காரில் மோதிய மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறியதுடன், கணப்பொழுதில் தீப்பற்றி எரிந்து முற்றாகச் சாம்பலாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac8077f9-eead-41c4-a4f8-22388b7fedd7/26-6a62f1ab819f1.webp' /></p><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான கந்தளாயைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர், உடனடியாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p>

அத்துடன், காரை ஓட்டி வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

காயங்களுக்கு உள்ளான கார் ஓட்டுநரின் மனைவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கல் ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அரசினால் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-assets-worth-15-billion-rupees-are-frozen-1784857136"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-assets-worth-15-billion-rupees-are-frozen-1784857136</id>
            <summary type="text">தென் மாகாணத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1,500 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று தடை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் மாகாணத்தில் நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1,500 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளன.
</p><p>
தென் மாகாணத்தின் முன்னணி பாதாள உலகக் குழுத் தலைவனும் போதைப்பொருள் வர்த்தகருமான ரத்கம விதுர என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சொத்துக்கள் ரத்கம விதுரவின் சித்தியின் பெயரில் விலைக்கு வாங்கப்பட்டவை என விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
சட்டவிரோதச் செயல்கள்</b></h2><p>போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டிய பணத்திலிருந்தே ரத்கம விதுர இந்தச் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1356b7ae-467b-4afd-9444-8b2314dd85a5/26-6a62c6bf8710b.webp' /></p><p>அதற்கமைய, தடை செய்யப்பட்டுள்ள சொத்துக்களுக்குள் 4 நிலங்கள், 3 மாடிகளைக் கொண்ட 2 வீடுகள் மற்றும் ஒரு மாடி வீடு ஒன்று அடங்குவதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ரத்கம விதுரவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மேலும் பல சொத்துக்கள் எதிர்காலத்தில் தடை செய்யப்படவுள்ளது.
</p><h3><b>
நீதிமன்ற நடவடிக்கை</b></h3><p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ரத்கம விதுரவிற்கு எதிராக 18 கொலைகள் உட்பட 24 குற்றச்சாற்றுகள் உள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b5f7d2-9209-4c27-880a-c80bfe8d36d0/26-6a62c6c03871c.webp' /></p><p>அவர் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தச் சொத்துக்கள் எதிர்காலத்தில் அரசமயமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-24T06:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்! அதிரடியாக அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784871900"></link>
            <id>https://tamilwin.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784871900</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>

இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைக் கடந்து அதிகரித்துள்ளது.
</p><p>
இதன்படி, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100.60 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>மத்திய கிழக்கு பிராந்திய பதற்றம்</h2><p>அதேபோன்று, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலையும் அதிகரித்து 92.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd19db8b-5300-4510-a57f-c42f15c739c7/26-6a63026dd1f64.webp' /></p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:13:12+00:00</updated>
        </entry>
    </feed>
