<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-04T01:30:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு - பெண்கள் மீது துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217"></link>
            <id>https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
துப்பாக்கி சூடு</b></h2><p>துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e0266b-93c9-4a97-a0c7-a527bd40c2f2/26-6a9a1deda8785.webp' /></p><p>இந்தத் துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட காரணத்திற்காக நடத்தப்பட்டதாகவும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கொழும்புப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T01:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் இளைஞர்கள் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் முன்னிலையான பெண் சட்டத்தரணிக்கு இந்த அரசிலும் பாரிய நெருக்கடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyer-achala-seneviratne-attorney-general-1788483145"></link>
            <id>https://tamilwin.com/article/lawyer-achala-seneviratne-attorney-general-1788483145</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இந்த அரசாங்கத்திலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவரைச் சிறையில் அடைத்து, பல்வேறு துன்புறுத்தல்களைச் செய்வதற்கான தீட்டப்பட்ட திட்டம் ஒன்று கசிந்துள்ளது.</p><p>
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவறுகள் குறித்துத் துணிச்சலாக நேருக்கு நேர் பேச கூடிய ஒரு பெண் தான் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன.</p><p>அவருக்கு எதிராக அவரை பாதுகாக்க வேண்டிய தரப்பே செயற்பட முற்படுகிறது. 
சூழ்ச்சிக்கு மேல் சூழ்ச்சி செய்கிறார்கள், ஒரு புறம் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த, மறுபுறம் மக்களைக் கடும் விரக்திக்கு உள்ளாக்க. இதுவும் ஒரு வகையான 'டீப் ஸ்டேட்' (Deep State)ஆக இருக்கலாம். </p><h2>
</h2><p></p><h2>பழிவாங்க காத்திருக்கும் குழுக்கள்</h2><p>“டீப் ஸ்டேட்” என்பது அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சிகளில் மட்டும் இயங்குவதில்லை. இவை பல்வேறு அரச நிறுவனங்களுக்குள், நீதிமன்றங்களுக்குள், பொலிஸ் திணைக்களத்திற்குள், சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் என எந்தவொரு அரச நிறுவனத்திற்குள்ளும் இயங்க முடியும்.
</p><p>கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலைசெய்த வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணவர்தன போன்றவர்களைச் சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்தது.</p><p>ரவீந்திர விஜேகுணவர்தனவிற்குத் தூதுவர் பதவி வழங்கி, மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்திருந்த போது, கடந்த காலங்களில் அச்சலா தனது வழக்கில் ரவீந்திர விஜேகுணவர்தனவை ஒரு சந்தேக நபராகப் பெயரிடுமாறு கோரினார்.
</p><p>அவர் இன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராகப் பேசி, எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததன் விளைவாக,இன்று கடும் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689e707e-e749-49c6-b75a-632fdf092428/26-6a9a164b0c1f9.webp' /></p><p>இன்று அவரைச் சுற்றி வளைத்து, தாக்கத் தொடங்கியுள்ளார்கள். ஏனெனில் சமூக நீதி மற்றும் சட்டத்தைப் பற்றி அவர் பேசுவதால்.அவர் யாருடைய பணத்திற்கும் சோரம் போகாத ஒரு பெண்மணி. </p><p>
கோட்டாபய காலத்தில் எந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்த ஒரு பெண் சட்டத்தரணி.உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் வாழ்க்கையைக் கழித்த ஓர் இரும்புப் பெண்மணி. இன்று என்ன நடந்துள்ளது? அதை விட இன்று மோசமாகியுள்ளது. </p><p>தொழில்ரீதியாக அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பல்வேறு குழுக்களைப் பயன்படுத்தி, முக்கியமாக அதற்கு ஏற்ற சில பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகவும் கேவலமான முறையில் தாக்குதலுக்கு மேல் தாக்குதல் நடத்த, வழக்குகளில் சிக்க வைக்கக் கடுமையான முயற்சி நடக்கிறது.&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You May Like THis Video..<br></i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jnKI70IglD4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T00:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவிற்கு எதிராக கருணாவின் வாக்குமூலம்: நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241</id>
            <summary type="text">தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>திடுக்கிடும் தகவல்கள்</h2><p>

உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஓருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) சிஐடியினருக்கு வழங்கிய மிக உணர்வுபூர்வமான வாக்குமூலத்தின் விபரங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0707941-ee83-4b2a-92aa-c5d979e04cfe/26-6a99b11aacf4d.webp' /></p><p>
</p><p>
அதில், சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இல்லாத நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாகக் காட்டிப் பாரிய நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
</p><p>
கருணா&nbsp; லண்டனுக்குச் செல்வதற்காகச் சிங்களப் பெயர் கொண்ட போலி கடவுச்சீட்டையும், அதற்கான விசா வசதிகளையும் சுரேஷ் சலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 கருணா லண்டன் சென்றடைந்த பின்னர், சுரேஷ் சலேயும் அங்கு சென்று, கருணாவின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், லண்டன் பொலிஸாருக்குக் கருணாவின் போலி கடவுச்சீட்டு விபரங்களை வழங்கி, அவரை அங்கு கைது செய்து சிறையிலடைக்க சுரேஷ் சலே திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருணா&nbsp; தனது வாக்குமூலத்தின் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>கருணாவின் வாக்குமூலம்</h2><p>
</p><p>
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் சட்டமா அதிபர் திணைக்களம்; நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 5 ஆம் திகதி முதல் அவர் உணவை உட்கொள்ள மறுத்து, தனது உடல்நிலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுபோயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd5863b-091f-456f-b846-d4c339dc4875/26-6a9a16233d8ab.webp' /></p><p>
</p><p>
தற்போது விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை, மேலும் அங்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், சுரேஷ் சலே தனது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளின் கடவுச்சொற்களை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தடுப்புக் காவல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சலே தொடர்பில் கருணா அம்மான் நீதிமன்றில் குற்றம் சுமத்தியதாக சிங்கள இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருணா தரப்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MGfXDBgbP70" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-04T00:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று கைது செய்யப்படுவாரா நாமல்..! பாதுகாப்புக்காக கொழும்பில் கூடப்போகும் ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

 இதேவேளை, நாமல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

 இதேவேளை, நாமல் ராஜபக்ச
தனக்கு எதிராக 12-ஆம் திகதிக்கு முன்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இலங்கை விமான சேவை தொடர்பான மோசடி அல்லது அவுஸ்திரேலிய ஊடகமொன்று வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் (அம்பாந்தோட்டை வைத்தியசாலை திட்டம்) தொடர்பாக விசாரணைகளுக்காக இவர் அழைக்கப்பட்டிருக்கலாம்&nbsp; என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகும்போது பதற்றமான சூழல் நிலவக்கூடும் என்றும், அவருடைய ஆதரவாளர்கள் கொழும்பில் கூடத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அவுஸ்திரேலிய ஊடகத்தின் Four Corners ஆவணப்படத்தில், அம்பாந்தோட்டை வைத்தியசாலை கட்டுமானத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

 இதில் பல மில்லியன் டொலர் பணப்பரிமாற்றங்கள் முறையற்ற வகையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p>

 நிமல் பெரேரா (Nimal Perera) என்பவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாயைப் பெற்ற விவகாரம் தொடர்பாக நாமல் ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.</p><p> ரக்பி போட்டித் தொடரை நடத்துவதற்காக இந்தப் பணம் பெறப்பட்டதாக அவர் கூறினாலும், அதில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>&nbsp;கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்துள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்ச இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருவதுடன், இவை அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றும் கூறி வருகிறார்.</p><p>

இன்று(4) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகவுள்ள சூழலில், இவை மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tmeEO-Dq2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவனின் உயிரைப் பறித்த நாவற்பழம் - மட்டக்களப்பில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dies-eating-suspected-venom-tainted-fruit-1788481574"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dies-eating-suspected-venom-tainted-fruit-1788481574</id>
            <summary type="text">நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>11 வயது
சிறுவன்</h2><p>
</p><p>
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த, 37ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி பயின்று வந்த ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15fe789e-d689-42a0-b497-3350e173fcf8/26-6a9a1296dcb04.webp' /></p><p>

சம்பவ தினமான நேற்று மாலை, சிறுவனின் வீட்டிற்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த நாவற்பழம் ஒன்றை சிறுவன் எடுத்து உண்டுள்ளார்.
</p><p>
இதனையடுத்து சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><h2>ஆரம்பகட்ட விசாரணைகள்</h2><p>
</p><p>
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நிலத்தில் கிடந்த நாவற்பழத்தின் மீது பாம்பின் விஷம் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c380020e-4cea-4b28-b24f-37cbca7ec364/26-6a9a1297b44ee.webp' /></p><p>
</p><p>
சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்: தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய துல்லியமான தகவல்கள்!அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்... -]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>நேற்று முன்தினம் இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.</p><h2>
</h2><p></p><h2>தகவல் சேகரிக்கும் புலனாய்வு அதிகாரி</h2><p>இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். </p><p>இந்தியாவின் சிறப்புப் பொலிஸ் பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் "பிரதீப்" எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும். </p><p>இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார். 
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார். </p><p>அவரை நாம் "சார்லஸ்" எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.
</p><p>சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக பொலிஸின் சிறப்புப் பிரிவான 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. </p><p>
சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.
</p><h2>இந்தியாவில் இருந்து வந்து முதல் தகவல்</h2><p>2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.
</p><p>சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள், </p><p>குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.
</p><p>இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய 'Q' பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b2b0ab-d818-42dc-a5e5-70a05eb47d73/26-6a9a0dc927dbc.webp' /></p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார். </p><p>அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. 
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது, </p><p>மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், </p><p>அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "பலமிக்க அரசியல்வாதி ஒருவர்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).
</p><h2>வவுணதீவு சம்பவத்தின் உண்மைத் தன்மை</h2><p>2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார். </p><p>"நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?" என வினவுகிறார். அதற்கு, "தமிழக 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்; </p><p>இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்" எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO - Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.</p><p>அதற்கு சி.ஓ., "இது குறித்து மேலும் ஆராயுங்கள்" எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29894d6f-036d-4834-9f36-2639d5a65830/26-6a9a0dc9e0815.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில் 
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி, </p><p>"இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. 
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார். </p><p>கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், "இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் பொலிஸாரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள். </p><p>இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.
</p><h2>குண்டு வெடிப்பின் பின்னர்</h2><p>குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் "உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்" எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது. </p><p>ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலத்தமடு - மாதவனை பகுதியில் கண்டனப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-the-mayilathamadu-madhavan-area-1788467670"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-the-mayilathamadu-madhavan-area-1788467670</id>
            <summary type="text">மயிலத்தமடு - மாதவனை பகுதியில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள்
முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மயிலத்தமடு - மாதவனை பகுதியில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள்
முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்து செங்கலடி பிரதேச செயலகத்திற்கு
முன்பாக போராட்டம் ஒன்று&nbsp; முன்னெடுக்கப்பட்டது.</p><p>இந்தப் போராட்டமானது நேற்றைய தினம்(03.09.2026) நடைபெற்றுள்ளது.</p><h2>ஆராயப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>நேற்று ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவிருந்த
நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கூட்டமானது தேசிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் அரச மற்றும்
அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cadc2069-032b-4947-b2b4-cb07ad92db99/26-6a99fc4d68445.webp' /></p><p>கல்வி, சுகாதாரம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாக
இங்கு ஆராயப்பட்டுள்ளதுடன் குறிப்பாக ஏறாவூபற்று பிரதேச எல்லைக்குள் இடம்பெறும் சட்ட விரோத மணல்
அகழ்வு தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் ஏறாவூர் நகர சபையால் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் விலங்கு கழிவுகளினால் மக்கள் பாதிப்படைகிற விடயம்
தொடர்பாகவும், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் முன்வைத்த
பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும் எதிர்வரும் மாரி மழைக்காலத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும்
அசௌகரியங்களுக்கான முன் ஏற்பாடுகள் மற்றும் கஷ்டப் பிரதேசங்களுக்குச் செல்லும்
அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை
சீரமைப்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள்
வழங்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் மாயமான குடு சலிந்துவின் வழக்கு ஆவணங்கள் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kudu-salindu-s-missing-case-files-1788479887"></link>
            <id>https://tamilwin.com/article/kudu-salindu-s-missing-case-files-1788479887</id>
            <summary type="text">“குடு சலிந்து” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சலிந்து மல்ஷித குணரத்னேவுக்கு எதிராக பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>“குடு சலிந்து” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சலிந்து மல்ஷித குணரத்னேவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரு தனித்தனி வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்ரப ஏற்படுத்தியது.</p><p>

இந்த விடயம் தொடர்பில், நீதிமன்ற ஊழியர்கள் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>காணாமல் போன வழக்கு ஆவணங்கள்</h2><p>
</p><p>
இவர்களுள் ஏழு பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>

காணாமல் போன வழக்கு ஆவணங்கள் தொடர்பில் பாணந்துறை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கடந்த செப்டெம்பர் 1ஆம் திகதி பாணந்துறை தெற்கு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6f50ed-4a05-4038-adda-a276ac32166d/26-6a9a0b9a7b987.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கை மூலம் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் பாணந்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
காணாமல் போன ஆவணங்களில், குடு சலிந்துவின் உத்தரவின் பேரில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்களும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கின் ஆவணங்களும் அடங்குகின்றன.
</p><p>
கடந்த ஒகஸ்ட் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் மொஷன் மூலம் அழைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பான அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கண்டுபிடிக்க முடியாததால், அந்த வழக்கு ஒகஸ்ட் 31ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுவதற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.</p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>

இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த வழக்கு ஆவணங்கள் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.
</p><p>
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில், குறித்த ஆவணங்கள் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அலுவலக உதவியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவை ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec3344c5-9e62-497c-91c3-e2855a4c0383/26-6a9a0b9b2fe93.webp' /></p><p>
</p><p>
எனினும், பின்னர் அந்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமரா காட்சிகளையும் எதிர்காலத்தில் பொலிஸார் பரிசோதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You May Like This Video..</i></b></p><p><br></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jnKI70IglD4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T00:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி – கிளிநொச்சியில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-young-man-died-after-colliding-with-a-tree-1788461516"></link>
            <id>https://tamilwin.com/article/a-young-man-died-after-colliding-with-a-tree-1788461516</id>
            <summary type="text">கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பனை மரத்துடன் மோதுண்டதால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பனை மரத்துடன் மோதுண்டதால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவமானது நேற்று(03.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><h2>22 வயது இளைஞன் உயிரிழப்பு</h2><p>அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக
கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதுண்ட
நிலையில் படுகாயம் அடைந்து இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dae6db87-bc47-4bb3-88fc-81b7cbabe9a2/26-6a99c44ef2513.webp' /></p><p>இவ்வாறு உயிரிழந்தவர் கிளிநொச்சி -&nbsp;உதய நகர் பகுதியைச் சேர்ந்த புஷ்பராசா சமர்நிலவன் எனும் 22
வயதுடைய இளைஞன் என அடையாளங்காணப்பட்டுள்ளது.</p><p>உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத
பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T23:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vadamaratchi-east-coordination-meeting-debate-1788457653"></link>
            <id>https://tamilwin.com/article/vadamaratchi-east-coordination-meeting-debate-1788457653</id>
            <summary type="text">வடமராட்சி - கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன்
ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் வடமராட்சி கிழக்கு
பிரதேச செயலக மாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமராட்சி - கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன்
ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் வடமராட்சி கிழக்கு
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>இந்தக் கூட்டமானது இன்று(03.09.2026) காலை 9:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><h2>பிரதேச அபிவிருத்தி</h2><p>
</p><p>இதன்போது றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், நாட்டின் வருமானதிற்கு
சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.</p><p>அதற்கு நியாயமற்ற எதிர்ப்புக்களும் பொய் பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. வெற்றிலை கேணி கடற்கரையை ஒரு நீல கடற்கரையாக மாற்ற
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b056de1c-fc89-48a0-9412-f875d6b8a833/26-6a9a08d11405b.webp' /></p><p>அத்துடன் பிரதேச அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல விடயங்கள் நடந்தால் நான் ஏற்றுக் கொள்வேன். எதிரான
விடயங்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.</p><p>மக்களிற்கு கிடைக்க வேண்டிய
நன்மைகளை யாரும் தடுக்க கூடாது. மக்களின் நலன்கள் சார்ந்தே முடிவுகள்
எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட வேண்டிய வீதிகள், மற்றும்
செயற்றிட்டங்களுக்கான அனுமதிகள், வழங்கப்பட்டுள்ளன.</p><h2>மக்கள் எதிர்ப்பு&nbsp;</h2><p>
</p><p>இந்திய நிறுவனம் ஒன்றிற்கு முதலீட்டுக்காக ஆழியவழையில் காணி வழங்குவதற்கு
சபையில் அனுமதி கோரப்பட்டிருந்தது.</p><p>அதனையடுத்து ஆழியவழையில் இடம் பொருத்தமில்லாத நிலையில் உள்ளதாலும், ஆழியவழை,
வெற்றிலைக்கேணி ஆகிய பகுதி மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கும் என்ற காரணத்தையும் முன்வைத்து மக்கள் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac51c317-51fe-4556-9c28-4d212dd90b82/26-6a9a08d1d4825.webp' /></p><p>பின்னர் குறித்த இந்திய முதலீட்டு திட்டத்திற்கு ஆழியவழையில்
 காணி வளங்குவதில்லை என்றும் அதனை நாகர்கோவில் கிராமத்திற்கு மாற்றுவது என்றும்
தீர்மானிகப்பட்டுள்ளது.</p><p>மேலும் அவசர வெளியேற்ற பாதைகள் புனரமைப்பை துரிதப்படுத்துதல், டித்வா புயலால்
பாதிக்கபட்ட வீதிகளை புனரமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் வனஜீவராஜிகள் திணைக்களத்தால்
அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கும் மக்களின் கோரிக்கைகள் தொடர்பி்ல் வன ஜீவராஜிகளின் திணைக்களத்தின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T23:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சுங்கவரியை குறைக்க உதவிய இலங்கையின் முக்கிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-tax-cuts-reason-is-forced-labor-abolition-plan-1788464938"></link>
            <id>https://tamilwin.com/article/us-tax-cuts-reason-is-forced-labor-abolition-plan-1788464938</id>
            <summary type="text">இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க சுங்கவரியை குறைக்க கட்டாய உழைப்பு
ஒழிப்புத் திட்டமே உதவியதாக விவசாய பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க
தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க சுங்கவரியை குறைக்க கட்டாய உழைப்பு
ஒழிப்புத் திட்டமே உதவியதாக விவசாய பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க
தெரிவித்துள்ளார்.

​</p><p>இலங்கையில் கட்டாய உழைப்பை ஒழிக்கும் திட்டம் காரணமாக, இலங்கை ஏற்றுமதிகள்
மீதான அமெரிக்க வரிகள் 12.5% இலிருந்து 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஐ.நாவின் அபிவிருத்தி இலக்கு</h2><p>
இந்த நிலையில் ​ நாட்டின் சில தோட்டப் பகுதிகளில் இன்னமும் கட்டாய உழைப்பு
பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், அதை முழுமையாக ஒழிக்க
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

​அத்துடன் 2030ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி
வருமானத்தை அடைவதையும், ஐ.நா-வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதையும்
இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

​</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc9436b6-5011-4094-8ee7-d61a1cf042de/26-6a99d369c6b9f.webp' /></p><p>இதனால் இலங்கை தற்போது ஐ.நா. 'கூட்டணி 8.7' (Alliance 8.7) உலகளாவிய
அமைப்பின் துணைத் தலைமைப் வகிப்பதால், குழந்தை உழைப்பு, நவீன அடிமைத்தனம்
மற்றும் கட்டாய உழைப்பை ஒழிப்பது இன்றியமையாதது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

​</p><p>மேலும் பெந்தர-எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பயிலரங்கில் சர்வதேச தொழிலாளர்
அமைப்பின்(ILO) பிரதிநிதி ஜானி சிம்ப்சன் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின்
உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T23:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறுத்தப்படுமா புலமைப்பரிசில் பரீட்சை - தீவிர ஆலோசனையில் அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-exam-results-2026-1788474918"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-exam-results-2026-1788474918</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்த பரீட்சை 10 வயது சிறுவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்த பரீட்சை 10 வயது சிறுவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. </p><p>இது பல வீடுகளில் 'பெற்றோர்களுக்கான பரீட்சையாக' மாறி, பிள்ளைகளை அதிக நேர வகுப்புகளில் ஈடுபட வைப்பதாகக் கூறப்படுகிறது

 இதனால், கல்வி அமைச்சு மற்றும் அரசாங்கம் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில் மாற்று முறைகளை ஆராய்ந்து வருகிறது.
</p><p>
 2028-ல் ஆய்வு செய்யப்பட்டு, 2029 அல்லது 2030-ல் கொள்கை மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
 பரீட்சையை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, அதன் அணுகுமுறையை மாற்றி, மேலதிக வகுப்புகளின் சுமையைக் குறைப்பதும், மாணவர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதும் அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
</p><p>
 பரீட்சை முடிவுகளைக் காரணம் காட்டி பிள்ளைகளை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தும் பெற்றோர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RV4fNTh4Cps" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T22:42:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்புத் திருத்தம் செய்யத் தயங்க மாட்டோம்: ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923"></link>
            <id>https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்கம் தயங்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கை பொலிஸ் சேவையின் 160வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>போதைப்பொருள் சோதனை</h2><p>
</p><p>சந்தேகநபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடைமுறையை அரசாங்கம் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும், கைது செய்யப்படுவதற்கும் தண்டனை வழங்கப்படுவதற்கும் இடையிலான காலதாமதம் இருப்பதாக ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>
</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் பொலிஸார் சாதனை அளவிலான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/537f0ecd-cdc9-46a5-a6a4-3850801afe26/26-6a99abf8cfc67.webp' /></p><p>எனினும், வழக்கு விசாரணைகளும் தண்டனை வழங்குவதும் நீண்ட காலம் நீடித்தால், இந்தக் கைதுகளால் பெரிய பலன் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தண்டனை கிடைக்கத் தாமதமாகும் என்பது குற்றவாளிகளுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதிச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் மேலும் திறம்படச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இந்த நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஏற்கனவே புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T22:41:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் உறவுகளின் போராட்டத்திற்கு வெற்றிலைத் தட்டோடு அழைப்பிதழா: பதில் தலைமைகளின் போலி அரசியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-persons-day-tamil-protest-1788435678"></link>
            <id>https://tamilwin.com/article/missing-persons-day-tamil-protest-1788435678</id>
            <summary type="text">சிறிலங்கா படைத்தரப்புக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் கண்ணீரும், வலியும் போராட்டமும், மாநாடும் கடந்த (30.08.2026) அன்று உணர்வெழுச்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா படைத்தரப்புக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் கண்ணீரும், வலியும் போராட்டமும், மாநாடும் கடந்த (30.08.2026) அன்று உணர்வெழுச்சியோடு நடந்து முடிந்துள்ளது.</p><p> ஆனால், இந்தப் புனிதமான மக்கள் போராட்டக்களத்திற்கு 'எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை' என்று சிறுபிள்ளைத்தனமான காரணத்தைக் கூறிப் போராட்டம் மற்றும் மாநாட்டைப் புறக்கணிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தனர். </p><p>ஒட்டுமொத்தத் தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>போராட்டம்</h2><p> </p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் என்பது திருவிழாவா அல்லது விளையாட்டு விழாவா, வெற்றிலை பாக்கு வைத்துத் தட்டோடு வந்து அழைப்பதற்கு இது என்ன கல்யாண வீடா, இது ஓர் இனத்திற்கு நீதி வேண்டிய போராட்டம். உணர்விருப்பவர்கள் பங்குகொள்வார்கள், உணர்வற்றவர்கள் ஒதுங்கியிருப்பார்கள்.</p><p>தமிழினப் படுகொலைக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் எதிராக உள்ளத்தில் உணர்வில்லையெனில், காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் சிறிலங்கா அரசைப் பன்னாட்டு அரங்கில் பொறுப்புக் கூற வைப்பதற்குத் திராணியில்லையெனில், அன்று முதல் இன்றைய அநுர அரசு வரையுள்ள சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் உள்நோக்கத்தோடு பச்சைத் துரோகம் செய்யும் எண்ணம் இருப்பின், தாராளமாக ஒதுங்கியிருங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d15b075-f24b-42b8-9484-3125f860dd30/26-6a996363f3f35.webp' /></p><p> அதைவிட்டுவிட்டு, மக்கள் திரளும் போராட்டக்களத்தைப் பார்த்து 'எங்களை யாரும் கூப்பிடவில்லை' என்று அறிக்கை விடுவது என்ன நியாயம்.</p><p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி எனப் பல கட்சிகளும் எந்தவித கட்சி வேறுபாடுகளுமின்றி மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று பங்கெடுத்திருந்தன. அவர்களுக்கு யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்தார்கள், மக்களுக்காக நிற்க வேண்டும், போராட வேண்டும் என்ற இன உணர்வு இருந்ததால் அவர்கள் மனமுவந்து பங்குகொண்டார்கள். </p><p>இதைவிட முக்கியமாக, தமிழரசுக் கட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்த வெற்று அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் மக்களோடு களத்தில் பங்குகொண்டது தான் இங்கு கவனிக்கத்தக்க கூடுதல் விடயமாகும். </p><h2>பதில் தலைவர்கள்</h2><p>தமிழரசுக் கட்சி என்ற பெயரில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டு அறிக்கையை விட்டவர்கள் யார், கட்சியின் பொதுக்குழுவா, மத்திய குழுவா, அரசியற்குழுவா, இவை எதுவுமே இல்லை. </p><p>அறிக்கை விட்ட இருவரும் மக்கள் மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா அல்லது கட்சியில் கட்சி உறுப்பினர்களால் முறைப்படி பதில் பொறுப்புக்களிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா என்றால் அதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae77ab3d-b5ec-4855-82c8-86000503d369/26-6a9963657cb54.webp' /></p><p> தம்மிடம் சட்டம் இருக்கிறது என்பதற்காகச் சட்டத்தின் குறுக்குச் சந்துகள் ஊடாகப் பொறுப்புக்களைக் கைப்பற்றி நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள். </p><p>மக்கள் பிரதிநிதிகளின் வெளிப்படையான பதிலடி இந்த போலியான புறக்கணிப்பு அறிக்கையையும் மீறி, தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்குத் தாயகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதை போராட்ட மற்றும் மாநாட்டு ஒளிப்படங்கள் தெளிவாக உறுதி செய்கின்றன.</p><h2>தமிழரசுக் கட்சி</h2><ol><li>யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் (தமிழரசுக் கட்சியின் தெரிவுநிலைத் தலைவர்)</li><li> மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் </li><li>மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் </li><li>வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் </li><li>அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் </li><li>திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் ஆகியோர் (யாழில் நடைபெற்ற மாநாட்டிற்கு நேரில் வருகை தர இயலாத போதும், ஊடக சந்திப்பினை நிகழ்த்தித் தனது ஆதரவை வெளிப்படுத்தியதோடு, அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்விலே நேரில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடததக்கது)</li></ol><p>தமிழரசுக் கட்சியிலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எவருமே வெற்று அறிக்கையைப் பொருட்படுத்தாது பங்கெடுத்துள்ளனர். இதிலிருந்தே கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது வெட்டவெளிச்சமாகிறது. சட்டத்தின் ஓட்டைகள் வழியே தமிழரசுக் கட்சியின் பதவிகள் மட்டுமே அவர்களிடம் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3e379b0-a0ef-4f83-94c1-00c0fe4ee9f1/26-6a996364c5c77.webp' /></p><p> ஆனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் மக்களும் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது நேற்றைய நிகழ்வில் முழுமையாகத் தெளிவாகிவிட்டது. </p><p>சனநாயகப் பாரம்பரியத்தின் சீரழிவு மக்கள் என்று வந்துவிட்டால் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் போராட்டக்களத்தில் முன்னிற்பதுதான் ஓர் அரசியல் கட்சியின் அடிப்படைப் பண்பு. ஓர் அரசியல் கட்சி மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்ட வேண்டும். அந்த குறைந்தபட்ச அரசியல் சனநாயகப் பண்புகூட இல்லாத நிலையில்தான் தற்போதைய தமிழரசுக் கட்சி உள்ளது. </p><p>அழைப்பிதழ் வைத்தால் மட்டுமே போராட வருவோம் என்பது என்ன மனநிலை, இவர்கள் யாருக்கானவர்கள், இவர்கள் செய்யும் அரசியல் யாருக்கானது.</p><p>வழக்கறிஞர் என்பதால் சிறிலங்காவின் நீதிமன்றங்களுக்குள் மட்டும் தனது சட்ட வித்துவத்தைக் காட்டுவதுதான் அரசியல் என்று எண்ணுபவர்களின் கைகளில் ஒரு சனநாயக இயக்கம் சிக்கியுள்ளது.</p><p> தார்மீக உரிமையற்று, அடிப்படை சனநாயகத்திற்கு முரணாகச் சிக்கித் தனது நீண்ட நெடிய சனநாயகப் பாரம்பரியத்தை தமிழரசுக் கட்சி இழந்து கொண்டிருக்கின்றது என்பதைத் தவிர சொல்வதற்கு ஏதுமில்லை.</p><h2>ஐ.நா. மனித உரிமைகள் பேரவை</h2><p> </p><p>மக்களின் வலியை உணராதவர்கள் யாருக்கானவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 'இனப்படுகொலைக்குச் சான்று இல்லை', 'புலிகளையும் விசாரிக்க வேண்டும்' என்று சிறிலங்கா அரசாங்கத்தை உலக அரங்கில் பிணையெடுக்கத் திரிந்து கொண்டிருந்த சின்னக் கதிர்காமருக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான போராட்டத்தின் வலி எப்படிப் புரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a137a43-5c34-424a-9f43-cce45144fe4c/26-6a9963662f15b.webp' /></p><p>வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள் நடக்கும் போதும், நடந்த பின்னரும் மக்கள் முகாம்கள் மற்றும் ஐ.நா. அலுவலகங்கள் தோறும் கால்கடுக்க நடந்து திரிந்த துயரக் காலங்களில், தமிழினப்படுகொலைப் போரை முன்னின்று நடத்திய மகிந்த ராஜபக்ச, பிள்ளையான், கருணாவின்&nbsp; படங்களுடன் தேர்தல் வாக்குக் கேட்ட மட்டக்களப்பின் இளம் இரத்தத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி எப்படிப் புரியும்.</p><p>தென்னிலங்கையில் ஏதேனும் ஒரு சிறு சனநாயக உரிமை மீறல் என்றால் கூட 'சர்வஜன நீதி' என்ற பெயரில் சிங்கள செயற்பாட்டாளர்களுடன் இணைந்து களமிறங்கி அறிக்கை விடும் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க சிந்தனையாளர்களுக்கு, சொந்தத் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் வலியும்.</p><p> நீதிக்கான போராட்டத்தின் வலியும் புரியாமல் இருக்கிறது என்றால் இவர்கள் யாருக்காக அரசியல் செய்கிறார்கள் அது அவர்கள் தவறல்ல அதை உணர்ந்த தமிழ் மக்கள் அவர்களை மக்கள் மன்றத்திலிருந்து ஏற்கனவே அகற்றிவிட்டார்கள். அதை உணர்ந்த தமிழரசுக் கட்சியினரும் கட்சித் தலைவர் தேர்தலின் ஊடாக அவர்களை ஓரங்கட்டிவிட்டார்கள்.</p><p> தமிழ் மக்கள் எப்போதும் தெளிவானவர்கள். இதற்குப் பிறகும் அவர்களை அந்தப் பதில் பொறுப்புக்களில் நீடிக்க விடுவதா இல்லையா என்பதை தமிழரசுக் கட்சியினரின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T22:06:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-6-admission-online-applications-open-1788462361"></link>
            <id>https://tamilwin.com/article/grade-6-admission-online-applications-open-1788462361</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு எழுதிய மாணவர்களின்
பெற்றோர், 2027ஆம் ஆண்டிற்கான 6ஆம் வகுப்பு சேர்க்கை தொடர்பான
இணையவழி விண்ணப்பச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு எழுதிய மாணவர்களின்
பெற்றோர், 2027ஆம் ஆண்டிற்கான 6ஆம் வகுப்பு சேர்க்கை தொடர்பான
இணையவழி விண்ணப்பச் செயல்முறை தொடர்பில் அறிவுறுத்தல்கள் வரும்
வரை காத்திருக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

இதன்படி ​2026 புலமைப்பரிசில் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், பாடசாலை
இடங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி அமைப்பின் மூலமாகவே பெறப்படும்
என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

​</p><h2>இணையவழி அமைப்பு முறை</h2><p>இதன்படி, அடுத்த ஆண்டு 6ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான
விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் இந்த இணையவழி அமைப்பு முறை
மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

​.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af24941-64ff-4e35-a852-5f7403bdeff8/26-6a99c917af90c.webp' /></p><p>அத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப திகதிகள், கடைசி நாள்
மற்றும் அதற்கான விரிவான வழிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவு நெருங்கிவிட்டது.. விரைவில் வீழ்ச்சியடையவுள்ள ஈரானின் ஆட்சி - நெதன்யாகு திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-says-iran-weaker-than-ever-1788465776"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-says-iran-weaker-than-ever-1788465776</id>
            <summary type="text">ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். </p><p>

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஈரானின் இஸ்லாமிய குடியரசு</h2><p>

இஸ்ரேலிய இராணுவத் தலைவர்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றிய நெதன்யாகு, இந்த ஆட்சி தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக உள்ளது.தனது உயிர்வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.</p><p>
மேலும், இந்த அச்சுறுத்தலை ஒருமுறை மற்றும் நிரந்தரமாக அகற்ற முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதாவது, இந்த ஆட்சியை வீழ்த்த முடியும்.

 அதுதான் எமக்கு இன்னும் முன்னால் இருக்கும் முக்கியப் பணியாகும். ஆனால் அது மிக அருகில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56e4fed-8e0b-4d3e-8254-c03f0fa1dbc7/26-6a99d55e7a213.webp' /></p><p> </p><p>அது சாத்தியமற்றதல் எமது கட்டுக்குள் உள்ளது என அவர் கூறினார்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
</p><p>
தற்போது அமெரிக்கா ஈரான் மீது மேலதிக பொருளாதார அழுத்தங்களை விதித்துள்ளதுடன், இந்த வாரம் மீண்டும் தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.</p><h2>இஸ்ரேல் மீது தாக்குதல்&nbsp;</h2><p> 

இதற்குப் பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகள், ஜோர்தான் மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகளைத் தாக்கியுள்ளது. </p><p>எனினும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் எங்களைத் தாக்கவில்லை என்றால், அது தற்செயலானது அல்ல. அவர்கள் அனைவரையும் தாக்குகிறார்கள், ஆனால் எங்களைத் தாக்கவில்லை என நெதன்யாகு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e62b7932-5b42-4bd0-b9b3-66d946449821/26-6a99d55f2ea98.webp' /></p><p>எமது சக்தியையும், எமது ஆயுதங்களின் வலிமையையும், எமது உறுதியையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நெதன்யாகுவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.</p><p> 

சில கருத்துக்கணிப்புகளில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரான் விவகாரத்தில் நெதன்யாகு தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு இணையான ஆபத்து இலங்கையிலும்.. வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901</id>
            <summary type="text">எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமர்தலிங்கம் தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,</p><p> 


இதனால் உணவு உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். 

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, பாதுகாப்பற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மலைப் பிரதேசங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.
</p><p>
 குளங்கள் புனரமைக்கப்பட்டாலும், முறையான நீர்வள முகாமைத்துவம் இல்லாததால் ஒரே மாவட்டம் வறட்சியையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

கொழும்பு போன்ற நகரங்களில் நீர் வரத்து குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KY07L6-GGow" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:42:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் குறித்து ஐ.நா. பிரதிநிதி – நீதி அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-representative-holds-talk-with-justice-minister-1788466404"></link>
            <id>https://tamilwin.com/article/un-representative-holds-talk-with-justice-minister-1788466404</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய
அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய
அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்ச், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் விரிவாகக்
கலந்துரையாடியுள்ளார்.
</p><p>இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(03.09.2026) கொழும்பில் நடைபெற்றுள்ளது.</p><h2>மறுசீரமைப்புத் திட்டங்கள்</h2><p>

இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம், சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான
அலுவலகத்தின் பணிகள் என்பன உள்ளடங்கலாக சட்ட ஆட்சி சார்ந்த மறுசீரமைப்புக்கள்
குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி
தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7afb8180-2f0b-47fc-b7c5-69d7728deaa0/26-6a99d5e093b87.webp' /></p><p>அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்டோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சட்டத்தின்
ஆட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக
இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:36:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மூவருக்கு ஒரே நாளில் கடூழிய சிறைத் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-high-court-delivers-swift-verdict-1788464456"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-high-court-delivers-swift-verdict-1788464456</id>
            <summary type="text">16 வயதுக்குக் குறைவான சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துர்நடத்தைகளை மேற்கொண்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 வயதுக்குக் குறைவான சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துர்நடத்தைகளை மேற்கொண்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p>

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து, 14 வயது சிறுமியை பாரிய பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடூழிய சிறைத் தண்டனை</h2><p>
</p><p>
இதனுடன் 50,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு நந்திமித்த கிராமத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3da52002-2c23-4e00-af03-7d18cf702b10/26-6a99e10f057d4.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது மற்றும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 50,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>மூன்று குற்றவாளிகள்</h2><p>

மூன்றாவது சம்பவத்தில், 14 வயது சிறுமியை இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.</p><p>

2022 ஆம் ஆண்டு கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eee9f314-d77c-43f7-842d-1a3b2944865a/26-6a99e10fe6ff1.webp' /></p><p>

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான கடுமையான தண்டனைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-fishermen-arrest-release-on-bail-1788449541"></link>
            <id>https://tamilwin.com/article/india-fishermen-arrest-release-on-bail-1788449541</id>
            <summary type="text">தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால்
கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09
இந்திய கடற்றொழிலாளர்களையும் நிபந்தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால்
கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09
இந்திய கடற்றொழிலாளர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த உத்தரவானது இன்று(03.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில்
வைத்து இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில்
திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa62531-421e-4475-bfec-81b4165e7567/26-6a99accf29f17.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதனையடுத்து குறித்த 9 கடற்றொழிலாளர்களும் தொடர்ச்சியாக விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம் மன்னார்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து நிபந்தனையின் அடிப்படையில் மன்னார்
நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T20:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூச்செப்பரக் கார்த்திகை திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karthigai-festival-at-nallur-kandaswamy-temple-1788463642"></link>
            <id>https://tamilwin.com/article/karthigai-festival-at-nallur-kandaswamy-temple-1788463642</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், கார்த்திகை திருவிழாவான
18ஆம் திருவிழா நடைபெற்றுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், கார்த்திகை திருவிழாவான
18ஆம் திருவிழா நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>இந்த நிகழ்வானது நேற்றைய தினம்(03.09.2026) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.</p><h2>கார்த்திகை திருவிழா</h2><p>
கார்த்திகை திருவிழாவின் போது , வள்ளி தெய்வானையும், முத்துக்குமார சுவாமி
பூச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் ,
தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f05757b-de8c-499d-bbef-b5e81e4b0c1c/26-6a99ccd730f91.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec81ca1-2256-4602-87f4-6e4735473a3d/26-6a99ccd6181fa.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T20:12:30+00:00</updated>
        </entry>
    </feed>
