<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-28T11:33:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-jailed-for-89-days-in-australia-1785221608"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-jailed-for-89-days-in-australia-1785221608</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் - பிரிஸ்பேன் ரயிலில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் - பிரிஸ்பேன் ரயிலில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>குழந்தை பருவத்தில் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய சரணீஸ் சிவகுமார் மற்றும் பேட்லி மொஹினி என்பவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி Cleveland வழித்தடப் ரயிலில் வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமராக்களில் பதிவாகியிருந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டமைக்காக மொஹினிக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p> </p><h2><b>இளைஞனுக்கு சிறைத்தண்டனை</b></h2><p>அத்துடன், குழப்பம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சிவகுமார் நேற்று தடுப்பு காவலில் இருந்தவாறே கிளிவ்லாண்ட் நீதிமன்றத்தில் வீடியோ ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b6ad47-83ca-48c8-bca8-a936b0735a66/26-6a68908900727.webp' /></p><p>தனியாகப் பயணம் செய்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மொஹினியும் நெருங்கிப் பேசியுள்ளனர். </p><p>அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இளைஞர்கள் இருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியுள்ளனர். </p><p>மூடப்படும் ரயிலின் கதவுகள் ஊடாக அவரை வெளியே இழுத்துச் சென்று அவர் இறங்குவதைத் தடுத்து, பின்னர் மற்றொரு பெட்டிக்கு சென்றுள்ளனர். </p><h3><b>நபர் மீது தாக்குதல்</b></h3><p>எனினும் அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சிவகுமார் அந்த நபரின் தலையில் கண்ணாடி போத்தலால் தாக்கியதில் அவர் இரத்தம் சிந்தத் தொடங்கியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f19b075b-8306-45cc-867a-f4e35de17c15/26-6a689089c65a4.webp' /></p><p>இந்தத் தாக்குதலால் கடும் அதிர்ச்சிக்குள்ளான பாதிக்கப்பட்ட நபர், அதன் பின்னர் குயின்ஸ்லாந்திலிருந்து வெளியேறிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. </p><p>தான் தற்காப்புக்காகவே செயற்பட்டதாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், நீதிபதி டெபோரா வஸ்தா அவரது வாதத்தை நிராகரித்தார். </p>]]></content>
            <updated>2026-07-28T11:21:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி : ஒருவர் உயிரிழப்பு - நால்வர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampara-three-wheel-accident-women-death-1785231947"></link>
            <id>https://tamilwin.com/article/ampara-three-wheel-accident-women-death-1785231947</id>
            <summary type="text">திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர
வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்திறகு உள்ளானதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர
வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்திறகு உள்ளானதில் ஒருவர்
உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் நேற்று(27.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்
</p><p>விபத்தில் மட்டக்களப்பு வவுணதீவு ச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சாரதி மற்றும் இரு சிறுவர்
உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a52e04e6-9e87-4786-aebd-6ac1aee1bff2/26-6a6885ff4c569.webp' /></p><p>
இதில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c678250-b322-43f3-b9a8-110dc6d36281/26-6a6886006589d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T10:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபைக்கு புதிய உபதவிசாளர் தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-chairman-of-chavakachcheri-urban-council-1785232666"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-chairman-of-chavakachcheri-urban-council-1785232666</id>
            <summary type="text">சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு
மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு
மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம்(28.7.2026) காலை
நடைபெற்ற போதே கோகுல்ராஜ் தெரிவானார்.
</p><p>
சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் , உள்ளூராட்சி
ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி
வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால்
நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின்
பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும்
கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக
வறிதாக்கப்பட்டது.</p><p></p><h2>புதிய உப தவிசாளர்&nbsp;</h2><p>
</p><p>
அதன் அடிப்படையில் , இன்றைய தினம் புதிய உப தவிசாளர்
தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.</p><p>

அதன் போது தமிழரசு கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்தேசிய கட்சி சார்பிலும்
இருவர் போட்டியிட்டனர்.

அதில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு, தமிழரசு கட்சியின் 6
உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1cb3f55-bddd-4ed3-9c4b-4e69720fc8f5/26-6a687fb845ebf.webp' /></p><p>
</p><p>
ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு, அகில இலங்கை தமிழ்
காங்கிரஸின் 06 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு
உறுப்பினரும் வாக்களித்தனர்.</p><p>

தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை
வகித்தனர்.சாவகச்சேரி நகர சபையானது, 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும்.</p><p></p><h2>கோரிக்கை</h2><p> </p><p>அதில் தமிழரசுக்
கட்சியின் 06 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 06
உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்கள்,
அதில் ஞா. கிசோரின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளது. </p><p>அதன் அடிப்படையில்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவரை உறுப்பினர் , தேசிய மக்கள் சக்தியின்
மூன்று உறுப்பினர்கள், அதில் ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f587bf5f-cd53-4543-aede-c7d04d1990f2/26-6a687fb92ab9b.webp' /></p><p> </p><p>அதன்
அடிப்படையில் அவர்களில் இரு உறுப்பினர்கள். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு
உறுப்பினர் என சபையில் தற்போது 16 உறுப்பினர்கள் உள்ளனர்.
</p><p>
இந்நிலையில் இன்றைய தினம் , உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்திற்கு , 16
உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அதேவேளை குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு
மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில்
முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்து இருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T10:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றின் இன்றைய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-s-court-order-regarding-suresh-saleh-1785230647"></link>
            <id>https://tamilwin.com/article/today-s-court-order-regarding-suresh-saleh-1785230647</id>
            <summary type="text">தடுப்புக் காவலில்&amp;nbsp; வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனு ஆகஸ்ட் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவலில்&nbsp; வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனு ஆகஸ்ட் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில்,&nbsp; சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மனு விசாரணைக்கு</h2><p>இந்த நிலையில், பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து சுரேஷ் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1264e1d8-45ee-45d4-987c-4b11f99e4b47/26-6a687b14ee9c5.webp' /></p><p>குறித்த மனு இன்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மன்று தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p>அன்றையதினத்தில்,&nbsp; குறித்த மனு தொடர்பான மேலதிக விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><b><i>&nbsp;you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4sS9jwu2q6A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-28T09:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/south-eastern-university-convocation-1785229428"></link>
            <id>https://tamilwin.com/article/south-eastern-university-convocation-1785229428</id>
            <summary type="text">தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில்
வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில்
வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக
நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.</p><p>பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள் பட்டங்களைப்
பெற்றுக்கொண்டதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஜே. நௌபர்
தெரிவித்தார்.
</p><p></p><h2>01 முதல் 06 வரையிலான அமர்வுகள்</h2><p>
பல்கலைக்கழக வேந்தரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி பாயிஸ் முஸ்தபா
தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34136629-14ff-4ab6-9d1f-b02321955823/26-6a687568a1482.webp' /></p><p>பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்
எஸ்.எம். ஜனைடீன் கலந்துகொண்டதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள்
உபவேந்தரும் மத்திய மாகாண ஆளுநருமான பேராசிரியர் சரத் அபயகோன் தொடக்க
உரையாற்றினார்.</p><p>திங்கட்கிழமை (27) இறுதி நாளில் 07, 08 மற்றும் 09 ஆகிய அமர்வுகளில் மொத்தம்
1,010 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. </p><p>இதில் 07 ஆவது அமர்வில்
வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 272 பட்டதாரிகளும், 08 ஆவது அமர்வில்
அதே பீடத்தைச் சேர்ந்த 474 பட்டதாரிகளும், 09 ஆவது அமர்வில் 264 வெளிவாரிப்
பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.</p><p>

இதற்கு முன்னர் கடந்த இரு நாட்களில் நடைபெற்ற 01 முதல் 06 வரையிலான
அமர்வுகளில் மொத்தம் 2,388 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றிருந்தனர்.</p><h2>மூன்று நாட்கள் நடைபெற்ற</h2><p>முதல் நாளான சனிக்கிழமை (25) நடைபெற்ற 01 ஆவது அமர்வில் பொறியியல் பீடத்தைச்
சேர்ந்த 187 பட்டதாரிகளுக்கும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 285
பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3588b066-dd35-4165-915a-80d9c840ab00/26-6a68756999a30.webp' /></p><p>தொடரந்து நடைபெற்ற 02 ஆவது
அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 368
பட்டதாரிகளும், 03 ஆவது அமர்வில் அதே பீடத்தைச் சேர்ந்த 414 பட்டதாரிகளும்
பட்டங்களைப் பெற்றனர்.
</p><p>
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற 04 ஆவது அமர்வில் பிரயோக
விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 418 பட்டதாரிகளுக்கும், 05 ஆவது அமர்வில் கலை
கலாசார பீடத்தைச் சேர்ந்த 373 பட்டதாரிகளுக்கும், 06 ஆவது அமர்வில் அதே
பீடத்தைச் சேர்ந்த 343 பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
</p><p>
மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த 09 அமர்வுகளின் ஊடாக 3,134 உள்வாரிப்
பட்டதாரிகளும், 264 வெளிவாரிப் பட்டதாரிகளுமாக மொத்தம் 3,398 பேர் பட்டங்களைச்
சூடிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T09:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தில் சிசு செரிய பேருந்து சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sisu-sariya-bus-service-launched-in-mannar-1785230422"></link>
            <id>https://tamilwin.com/article/sisu-sariya-bus-service-launched-in-mannar-1785230422</id>
            <summary type="text">பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும்
நோக்கில், மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை
இன்று (28) கூட்டுறவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும்
நோக்கில், மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை
இன்று (28) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
</p><p>
மன்னார் மாவட்டத்திற்காக முதன்முறையாக இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
மன்னாரிலிருந்து தலைமன்னார் வரை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக
முதலாவது ‘சிசு செரிய’ பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>
2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ திட்டத்தின் கீழ், வடக்கு
மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை.</p><h2>பேருந்து சேவை</h2><p>
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தலையீட்டின்
பேரில், 20 பேருந்துகளை ஈடுபடுத்தி ‘சிசு செரிய’ திட்டத்தின் முதற்கட்டத்தை
ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9395f8f-e755-4132-be2a-2facf2a45f21/26-6a68769f6d055.webp' /></p><p>


மன்னாரில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவைக்கு
மன்னார் மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் பேருந்து ஒன்றே
பயன்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,

‘சிசு செரிய’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,
மன்னார் மாவட்ட மாணவர்கள் பல வருடங்களாக பாடசாலைக்குச் செல்வதற்கான
போக்குவரத்து சேவைகள் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.</p><h2>நிவாரணம்</h2><p>
</p><p>
அத்துடன், கடந்த கால அரசாங்கங்கள் வடபகுதி மாணவர்களைப் புறக்கணித்துச்
செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.

இச் சேவையின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக
மாணவர்களிடமிருந்து சாதாரண கட்டணத்தில் பாதி மட்டுமே அறவிடப்படும் என்பதுடன்,
மீதித் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7acf4c5-5b8b-475a-a3be-94148a3d990d/26-6a687780c680f.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் கல்விக்காக பயணிப்போருக்கு கணிசமான நிவாரணம் கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.
ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரச அதிபர் கே. கனகேஸ்வரன், வடமாகாண வீதிப்
பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன், மன்னார் மாவட்ட
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஷ் உட்பட
உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும்
பிரதேசவாசிகள்,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T09:35:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹொரணை பகுதியில் பாரியளவிலான இரத்தினக்கல் கடத்தல் முறியடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/large-scale-gemstone-smuggling-attempt-walana-1785228835"></link>
            <id>https://tamilwin.com/article/large-scale-gemstone-smuggling-attempt-walana-1785228835</id>
            <summary type="text">ஹொரணை- களுகே மோதர பிரதேசத்தில் பாரியளவிலான சட்டவிரோத மாணிக்கக் கல் கடத்தல் நடவடிக்கையை வலான பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவினர் முறியடித்துள்ளனர்.அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை- களுகே மோதர பிரதேசத்தில் பாரியளவிலான சட்டவிரோத மாணிக்கக் கல் கடத்தல் நடவடிக்கையை வலான பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவினர் முறியடித்துள்ளனர்.</p><p>அத்தோடு, மூன்று இரத்தினக்கல் வணிகர்கள் உட்பட 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு நடத்திய சோதனையின்போது, ​​11 படகுகள், 5 மோட்டார் பைக்குகள் மற்றும் இரத்தினக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்படும் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68f1e088-7008-42a3-b215-1b872f25c590/26-6a6871a2918b6.webp' /></p><p>மேலும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை&nbsp;வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T09:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கவே 22ஆவது திருத்தம்! கம்மன்பில குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extending-the-term-of-office-of-the-chief-justice-1785228009"></link>
            <id>https://tamilwin.com/article/extending-the-term-of-office-of-the-chief-justice-1785228009</id>
            <summary type="text">பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கும் உள்நோக்கத்துடன், ஒட்டுமொத்த
நீதியரசர்களின் பதவிக்காலத்தையும் நீடிக்கும் வகையில் அரசமைப்பின் 22 ஆவது
திருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கும் உள்நோக்கத்துடன், ஒட்டுமொத்த
நீதியரசர்களின் பதவிக்காலத்தையும் நீடிக்கும் வகையில் அரசமைப்பின் 22 ஆவது
திருத்தத்தைக் கொண்டுவர அரசு உத்தேசித்துள்ளது என்று பிவிதுறு ஹெல உறுமய
கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் நேற்று(27.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>மக்களின் அபிப்பிராயத்தைக் கோருவதற்கு&nbsp;</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன்
சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில், ஆரம்பத்தில் அவரது சேவைக்காலத்தை
நீடிக்க முயன்ற அரசு, எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மற்றும்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உட்பட சகல நீதிபதிகளின்
பதவிக்காலத்தையும் நீடிக்க உத்தேசித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90aec519-371d-4023-8082-050a5df6b6b6/26-6a686e106756f.webp' /></p><p>இதன் ஊடாக பிரதம நீதியரசர் என்ற
தனிநபரை இலக்காகக் கொண்டே இந்த 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
</p><p>அரசிடம் குறுகிய நோக்கங்கள் இல்லாவிடின், பிரதம நீதியரசர் ஓய்வுபெற்றதன்
பின்னர் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கலாம்.</p><p>இந்தத் திருத்தத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரும் பயனாளிகளாக
மாறுவதால், இந்தச் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது.
</p><p>
எனவே, இது தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தைக் கோருவதற்கு ஜனாதிபதி
உடனடியாகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்போது மக்களே இதற்குச்
சிறந்ததொரு தீர்ப்பை வழங்குவார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் குழந்தை பிறந்தால் தந்தையருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paid-leave-scheme-fathers-upon-birth-of-a-child-1785227839"></link>
            <id>https://tamilwin.com/article/paid-leave-scheme-fathers-upon-birth-of-a-child-1785227839</id>
            <summary type="text">அமெரிக்காவின் மின்னிசோட்டா மாநிலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
&#039;சம்பளத்துடன் கூடிய குடும்ப விடுப்புத் திட்டம்&#039; பெரும் வரவேற்பைப்
பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மின்னிசோட்டா மாநிலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
'சம்பளத்துடன் கூடிய குடும்ப விடுப்புத் திட்டம்' பெரும் வரவேற்பைப்
பெற்றுள்ளது.
</p><p>
இதுவரை சுமார் 75,000 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஒப்புதல் பெற்றுள்ள
நிலையில், இந்நடவடிக்கை பணிபுரியும் குடும்பங்களுக்கும், குறிப்பாகப் புதிய
தந்தையர்களுக்கும் பெரும் நன்மையை அளிப்பதாக 'பொருளாதார மற்றும் கொள்கை
ஆராய்ச்சி மையம்' (CEPR) தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த விடுப்புச் சட்டம் இல்லாத சூழலில்,
கலிஃபோர்னியாவைத் தொடர்ந்து மின்னிசோட்டா உட்பட 15 மாநிலங்கள் இத்தகைய
திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.</p><p></p><h2>விடுப்புத் திட்டம்</h2><p>
</p><p>
இத்திட்டத்தின் மூலம் புதிய தந்தையர் தங்கள் குழந்தைகளுடன் தொடக்கக் காலத்தில்
நேரத்தைச் செலவிட முடிகிறது.

இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், மனநல ஆரோக்கியத்திற்கும் மிகவும்
பயனுள்ளதாக அமைகிறது.
</p><p>
மின்னிசோட்டாவில் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 36% பேர் ஆண்கள்
என்பதும், பாதிக்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு 78,000 டொலருக்கும் குறைவாகச்
சம்பாதிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24ab434d-58b5-49a5-acbf-b87aaeb24f0a/26-6a686cdf3c154.webp' /></p><p>
</p><p>
இக்கொள்கை வேலைத்தளங்களில் ஊழியர்களின் உற்பத்தித்திறனையும் மனஉறுதியையும்
அதிகரிப்பதோடு, பாலினச் சமத்துவத்தையும் ஊக்குவிக்கிறது.
</p><p>
அமெரிக்க மக்களில் 76% பேர் இத்தகைய விடுப்புத் திட்டங்களுக்குத் தங்கள்
ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி ரூபாவில் சிக்கிய மகிந்த! சாட்சியாக மாறிய முக்கிய பிரமுகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajin-vaas-give-statement-against-mahinda-1785198091"></link>
            <id>https://tamilwin.com/article/sajin-vaas-give-statement-against-mahinda-1785198091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சாட்சியமளித்துள்ளார்.
</p><p>இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் அவர் மூன்று மணித்தியாலங்கள் சாட்சியமளித்துள்ளார்.</p><p>
இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையின் போது, சுமார் 100 கோடி ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நேற்றைய தினம்(27) லஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0b1143c-9846-4636-a8e5-c671b163f834/26-6a682443ee9c6.webp' />&nbsp;&nbsp;</p><p>
ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அங்கு சென்ற அவர், சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p>
குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவே ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>“இலஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி“ அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.</p><h2>வெளிநாட்டில் உள்ள தொடர்புகள்</h2><p>
சிங்கப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியின் படி, TPL Itma நிறுவனம் மற்றும் Heliat எனும் ஆலோசனை நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7a8c2ff-670c-495c-aa96-dfacc0c0e563/26-6a6824449d8a4.webp' /></p><p>
</p><p>சஜின் வாஸ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>
மேலும், அந்த பணம் தங்கல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் சீ.எஸ்.என். ஊடக வலைப்பின்னலுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை அழைத்திருந்தது.</p><p>
வாக்கு மூலத்தில் எவ்வாறான விடயங்களை சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QT2SMoLBth8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T08:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சுற்றுலாப் பாதையை அறிமுகப்படுத்தி நடைபயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/walk-from-point-pedro-to-dondra-head-tourist-trail-1785225017"></link>
            <id>https://tamilwin.com/article/walk-from-point-pedro-to-dondra-head-tourist-trail-1785225017</id>
            <summary type="text">இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், புதிய சுற்றுலாப் பாதை
(Trail) ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், உள் வீதிகள் வழியாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், புதிய சுற்றுலாப் பாதை
(Trail) ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும், உள் வீதிகள் வழியாக
பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட
நடைபயணத்தின் அடுத்த கட்டம் நேற்யை தினம் ஹற்றன், கொட்டகலை பகுதியிலிருந்து
ஆரம்பமானது.
</p><p>
இதுவரை சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்காத, மறைந்துள்ள அழகிய இடங்கள்,
கடற்கரை பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை உள்ளடக்கி இந்த புதிய பாதையை உலகிற்கு
அறிமுகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2115914356003101%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>

பிரித்தானிய சுற்றாடல் ஆர்வலரான ஆரோன் மூர் (Aaron Moore), பிரெஞ்சுக்
குடிமகனான ஜேம்ஸ் மற்றும் இலங்கை இயற்கை வழிகாட்டியான சரத் விஜேவர்தன
ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p></p><h2>நடைபயணம்</h2><p>

கடந்த (01) ஆம் திகதி பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணம்,
கடற்கரையோரமாக குச்சவெளி, ரிடிகல, சீகிரியா மற்றும் நக்கில்ஸ் (Knuckles)
வழியாக 456 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து அண்மையில் கண்டியை சென்றடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0455b272-0d0b-4969-bb92-14bde1d90299/26-6a6868763e463.webp' /></p><p>

அங்கு அவர்களை வரவேற்பதற்காக கண்டி மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு, கண்டி
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஏற்பாட்டில் விசேட
நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
</p><p>
06 வாரங்களுக்குள் மொத்தம் 750 கிலோமீற்றர் தூரத்தைக் கடப்பதே இந்த பயணத்தின்
இலக்காகும்.</p><p></p><h2>கலாச்சார பன்முகத்தன்மை</h2><p>

இதற்கமைய, (27) ஆம் திகதி கொட்டகலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணம்,
இனிவரும் நாட்களில் பொகவந்தலாவ, சிங்கராஜ வன வழியாக சென்று தெற்கு கடற்கரையான
தேவேந்திரமுனையை அடைந்து நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/713bc492-f226-4366-8f71-eb5640131d42/26-6a686876e4000.webp' /></p><p>

இதுவரை வந்த பயணத்தில் இலங்கையின் இயற்கை அழகையும், சிங்கள, தமிழ் மற்றும்
முஸ்லிம் மக்களின் கலாச்சார பன்முகத்தன்மையையும், அவர்களின் சிறந்த மனிதநேயப்
பண்புகளையும் தம்மால் சிறப்பாக அனுபவிக்க முடிந்ததாக பிரித்தானியாவைச் சேர்ந்த
ஆரோன் மூர் தெரிவித்தார்.
</p><p>
குறிப்பாக கிராமமக்களிடமிருந்து கிடைத்த அரிய விருந்தோம்பலை தம்மால் ஒருபோதும்
மறக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magnitude-7-1-earthquake-hits-japan-1785225565"></link>
            <id>https://tamilwin.com/article/magnitude-7-1-earthquake-hits-japan-1785225565</id>
            <summary type="text">ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;அதன்படி இன்றைய தினம் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>அதன்படி இன்றைய தினம் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>
</p><p>
நிலநடுக்கத்திற்குப் பிறகு, 1 மீட்டர் (3.28 அடி) உயர அலைக்கான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c94cdec3-20e2-47a1-ab7a-78c92fb55157/26-6a68659941085.webp' /></p><p>
ஜப்பானின் தெற்கு கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:21:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை சிறைக்கு அனுப்ப இரகசியத் திட்டம்! நாமல் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/secret-plan-to-send-the-rajapaksas-to-prison-1785224991"></link>
            <id>https://tamilwin.com/article/secret-plan-to-send-the-rajapaksas-to-prison-1785224991</id>
            <summary type="text">ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதற்கே அரசு
முயற்சிக்கின்றது என்றும், அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின்
பதவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதற்கே அரசு
முயற்சிக்கின்றது என்றும், அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின்
பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்குக் கிடையாது என்றும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்புகளின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>மக்களின் தீர்மானம்&nbsp;</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும்,
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு எவ்வித நடவடிக்கைகளையும்
இதுவரை முன்னெடுக்கவில்லை. </p><p>மாறாக அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே
செயற்படுகின்றது. நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி
குறிப்பிட்டாலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றமும்
ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3af01ece-f975-4f4b-a750-e1bc26bfa920/26-6a686164c3810.webp' /></p><p> </p><p>விவசாயிகளின் போராட்டங்களுக்கும் இன்றுவரை நியாயமான தீர்வு
கிடைக்கவில்லை.

நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த
அரசு, தற்போது நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றது.
</p><p>
ராஜபக்சக்களைச் சிறைக்கு அனுப்புவதற்காகவே நீதியரசர்களின் பதவிக்காலம்
நீடிக்கப்படுகின்றது என்று ஆளும் தரப்பு உறுப்பினர் பகிரங்கமாகக்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக
உரிமை அரசுக்கு இல்லை. நீதியரசர்களின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின்,
அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களே அதனைத் தீர்மானிக்க
வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T08:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி: எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தீவிர நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approve-extension-of-retirement-age-judges-1785220894"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approve-extension-of-retirement-age-judges-1785220894</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை இரண்டு வருடங்கள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை இரண்டு வருடங்கள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
தலைமையில் நேற்று (27.07.2026) நடைபெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உயர்நீதிமன்ற நீதியரசரின் ஓய்வு வயது</h2><p>
</p><p>
அரசமைப்பின் 107 (5) பிரிவின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் தற்போதைய ஓய்வு
வயது 65 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய முன்மொழிவின் படி அது
67 ஆண்டுகளாக நீடிக்கப்படவுள்ளது. </p><p>அதே பிரிவின் கீழ், மேன்முறையீட்டு நீதிமன்ற
நீதியரசர்களின் ஓய்வு வயது 63 ஆண்டுகளில் இருந்து 65 ஆண்டுகளாகவும்
உயர்த்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7859a38-a2d3-40f0-824c-8bbfedc30a4d/26-6a6860305d637.webp' /></p><p>

எதிர்க்கட்சிகளும் சட்டத்துறை சார் அமைப்புகளும் இதற்குைக் கடும் எதிர்ப்புத்
தெரிவித்து வருகின்ற போதிலும், அரசு நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும்
திட்டத்தில் தீவிரமாக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T07:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிர்வாக ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-thiruvalluvar-cultural-centre-agreement-1785224168"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-thiruvalluvar-cultural-centre-agreement-1785224168</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை
நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுவதற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை
நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, 'கூட்டு முகாமைத்துவக் குழு'
கூட்டத்தில் நேற்று(27.7.2026) எட்டப்பட்டுள்ளது.
</p><p>
இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக்
கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு
கலந்து கொண்டனர்.
</p><p>
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநர்
செயலகத்திலிருந்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர்
மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரும் இணைந்திருந்தனர்.</p><p></p><h2>நிதியப் பொறுப்பு</h2><p> அத்துடன்,
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம் மாநகர
சபையின் மேயர் மதிவதனி விவேகானந்தராஜா மற்றும் கொன்சியூலர் ஜெனரல்
ஸ்ரீ சாய் முரளி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c25601bd-c0ae-4308-8145-2d0aa49a2860/26-6a685e31e7029.webp' /></p><p>
</p><p>
இந்த நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையானது பதவி வழி உறுப்பினர்கள் 3 பேரும்,
துறைசார் உறுப்பினர்கள் 4 பேருமாக மொத்தம் 7 பேர் கொண்டதாக அமைக்கப்படுவதற்கு
முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. </p><p>எனினும், இக்கூட்டத்தில் பதவி வழி
உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உடன்படிக்கை</h2><p>

அதன்படி, மாகாண உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் (மாகாண சபை இல்லாத
சந்தர்ப்பத்தில் ஆளுநர்), புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்
செயலாளர், யாழ். மாநகர சபையின் மேயர், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகிய 4 பதவி
வழி உறுப்பினர்களும், துறை ரீதியான 5 உறுப்பினர்களுமாக மொத்தம் 9 பேர்
இச்சபைக்கு நியமிக்கப்படவுள்ளனர்.</p><p>

துறைரீதியாக 5 பேரையும் பெயர் குறித்து நியமிப்பதற்கும் யாழ். மாநகர சபை உட்பட
அனைத்துத் தரப்புக்களும் இக்கூட்டத்தில் இணக்கம் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10a598c0-3342-416c-840c-555028ec3b73/26-6a685e32bd48c.webp' /></p><p>
</p><p>
மேலும், யாழ். மாநகர சபையால் சுட்டிக்காட்டப்பட்ட, ஏற்கனவே
தயாரிக்கப்பட்டிருந்த நம்பிக்கை நிதியப் பொறுப்பு உடன்படிக்கையிலுள்ள 12ஆவது
சரத்தை நீக்குவதற்கும் அனைத்துத் தரப்புக்களும் இணக்கம் வெளியிட்டன.
</p><p>
இந்தச் சுமுகமான இணக்கப்பாடுகளையடுத்து, திருத்தப்பட்ட உடன்படிக்கையில்
அனைத்துத் தரப்புக்களும் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடுவதற்கான திகதியை மிக
விரைவில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T07:47:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வர்த்தகர் உட்பட தமிழர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-business-man-and-two-arrested-1785217080"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-business-man-and-two-arrested-1785217080</id>
            <summary type="text">பல இலட்சம் ரூபாவினை இலஞ்சம் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல இலட்சம் ரூபாவினை இலஞ்சம் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

பேராதனை வைத்தியசாலையின் 2027 ஆம் ஆண்டுக்கான சமையலறைக்கு தேவையான உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான விலை மனுக்கோரல் தொடர்பிலேய இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக&nbsp; ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><h2><b>விலை மனுக்கோரல்</b></h2><p> 

முறையீட்டாளருக்கு தொடர்பான விலை மனுக்கோரலை பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபரால் தனது தந்தையின் மற்றும் மாமாவின் பெயரில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த விலை மனுக்கோரல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு ஆரம்பத்தில் 30 லட்சம் ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டிருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8902866e-20d2-489e-9cde-7695bfdedbe4/26-6a685dfaf2569.webp' /></p><p>அது பின்னர் 25 லட்சம் ரூபாவாகவும், இறுதியில் 20 இலட்சம் ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>அதற்கமைய, 20 லட்சம் ரூபாய் இலஞ்சத்தை பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டுகளின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>கம்பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த அருணகிரிநாத் லோகேந்திரன் மற்றும் லோகேந்திரன் சிவராஜி ஆகிய இருவரும் நேற்று இரவு கம்பளை தபாலகத்திற்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களைக் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-07-28T07:45:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன முறைகேடு வழக்கு - விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sarath-weerawansa-granted-bail-vehicle-misuse-case-1785223221"></link>
            <id>https://tamilwin.com/article/sarath-weerawansa-granted-bail-vehicle-misuse-case-1785223221</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(28.07.2026) முன்னி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(28.07.2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக</h2><p>

பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10583219-90b6-45ac-b7f1-3546a70bc70f/26-6a685c15e7c59.webp' /></p><p>பொலிஸாரின் அறிக்கையின்படி, இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூலை 15 அன்று அவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T07:37:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் வசந்த சமரசிங்க உடனே பதவி விலக வேண்டும் - உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/restaurant-owners-wasantha-samarasinghe-resign-1785221016"></link>
            <id>https://tamilwin.com/article/restaurant-owners-wasantha-samarasinghe-resign-1785221016</id>
            <summary type="text">இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து
வரும் நிலையில், நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய
வர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து
வரும் நிலையில், நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
வசந்த சமரசிங்க உடனடியாகத் பதவி விலக வேண்டும் என்று அகில
இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>

கொழும்பில் நேற்று(27.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>முறைகேடான வணிகக் கும்பலின் ஆதிக்கம்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;"நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் மூலப்பொருள்களும் மிக வேகமாகக் விலை
உயர்ந்து வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e27546f8-2619-43a8-8396-8c232f6d3f47/26-6a6853b5f0075.webp' /></p><p>இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனையான
பெரிய முட்டை ஒன்று தற்போது 46 - 47 ரூபாவாகவும், 45 கிராம் சிறிய முட்டை 42
ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.</p><p>

உலகளவில் யுத்தம் நடைபெறுகின்றதா அல்லது ஹோர்மூஸ் நீரிணையில் பிரச்சினை உள்ளதா
என வினவும் வகையில் ஒரே அடியில் 20 ரூபா வரை முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
</p><p>முன்னாள் எதிர்க்கட்சியினரான தற்போதைய ஆட்சியாளர்கள் அன்று கூறியது போல்,
முட்டை விற்பனையில் அமைச்சர்களுக்குத் தரகுப் பணம் கிடைப்பதனாலேயே இந்த விலை
உயர்வு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது.
</p><p>
கீரி சம்பா அரிசிச் சந்தையில் நிலவும் முறைகேடான வணிகக் கும்பலின்
ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வசந்த சமரசிங்க அமைச்சரால் முடிவதில்லை.
</p><h2>அரிசித் தட்டுப்பாடு</h2><p>அமைச்சரின் பொறுப்பு திருடர்களைப் பிடிப்பது அன்று. மாறாக, நுகர்வோர் மற்றும்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். அவருக்குப் பொலிஸ் பணியைச் செய்ய
விருப்பமாக இருந்தால், பொலிஸ்மா அதிபர் பதவியை வழங்கிவிட்டுத் தகுதியான ஒருவரை
அமைச்சராக நியமிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aabbfcd-489c-4f25-9580-5d1289bb87e5/26-6a6853b6a518b.webp' /></p><p>அரிசிச் சந்தையின் முறைகேடுகளுக்கு எதிராகத் தாங்கள் குரல் கொடுக்கும்போது,
விவசாய நிலங்களில் சோளம் பயிரிடுமாறு விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த
கூறுவது அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஆலை உரிமையாளர்கள் விலையை உயர்த்தவே
வழிவகுக்கும். </p><p>மேலும், விவசாயிகள் பற்றிப் பேசி நாடாளுமன்றம் சென்ற நாமல்
கருணாரத்ன போன்றவர்கள் இன்று விவசாயிகளுக்கு எதிராகப் பேசுகின்றனர்.</p><p>

தற்போது இந்த முறைகேடான வணிகக் கும்பலினால் நுகர்வோரின் அடிப்படை உரிமைகள்
கடுமையாக மீறப்பட்டுள்ளன. அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட
பொருள்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார
சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T07:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் முதியவரிடம் பணம் பறிக்க முற்பட்ட மர்மநபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-investigate-man-extort-money-man-vavuniya-1785219401"></link>
            <id>https://tamilwin.com/article/police-investigate-man-extort-money-man-vavuniya-1785219401</id>
            <summary type="text">வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்த
முதியவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட சம்வம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்த
முதியவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட சம்வம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (27.07.2026) காலை குறித்த முதியவரின் மனைவி வெளியில் சென்றுள்ளார்.
</p><p></p><h2>பொலிஸார்&nbsp; விசாரணை</h2><p>
இதனையடுத்து துவிச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற மர்மநபர் கத்தியுடன் வீட்டிற்குள்
நுழைந்து அங்கிருந்த முதியவரை மிரட்டி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை தருமாறு
அச்சுறுத்தியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8044a6cd-2814-4488-b1d1-ab567deb937f/26-6a684c1b30b27.webp' /></p><p>
முதியவர் பணத்தை கொடுக்காத நிலையில் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு
தப்பிச் சென்றுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு
சென்ற பொலிஸார் மர்மநபர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2QoqZ1_VZic" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T06:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[400 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு..! அடுத்த சில வருடங்களில் நாடு திவாலாகிவிடும் என பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-bankrupt-1785220052"></link>
            <id>https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-bankrupt-1785220052</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி டொலர்களை வாங்கிக் கொண்டே இருக்கிறது, இதன் காரணமாக டொலரின் மதிப்பு அதிகரித்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாக பிவிதுறு ஹெல உறுமய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி டொலர்களை வாங்கிக் கொண்டே இருக்கிறது, இதன் காரணமாக டொலரின் மதிப்பு அதிகரித்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். </p><p>

சந்தையில் இருந்து இவ்வளவு பெரிய அளவில் டொலர்கள் வாங்கப்பட்டால், டொலரின் மதிப்பு நிச்சயமாக 400 ரூபாயைத் தாண்டும் அபாயம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>கடனை திருப்பிச் செலுத்தல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 2027ஆம் ஆண்டிலிருந்து, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான கடனைத் திருப்பிச் செலுத்த நமக்கு 11.1 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது. நம்மிடம் கையிருப்பில் 5 பில்லியன் டொலர் மட்டுமே உள்ளது. எனவே மீதமுள்ள தொகையை சந்தையிலிருந்து டொலர்களை வாங்குவதன் மூலம் திரட்ட வேண்டும்.</p><p>இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தேவையான டொலர்களைக் கண்டறிய, மத்திய வங்கி அந்நியச் செலாவணி சந்தையிலிருந்து டொலர்களை வாங்க வேண்டும்.</p><p></p><p> மத்திய வங்கி டொலர்களை வாங்கிக் கொண்டே இருக்கிறது, டொலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து வருகிறது.</p><p>

சந்தையில் இருந்து இவ்வளவு பெரிய அளவில் டொலர்கள் வாங்கப்பட்டால், டொலரின் மதிப்பு நிச்சயமாக 400 ரூபாயை தாண்டும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால், ஏற்கனவே வாழ்க்கைச் செலவால் நெருக்கடியில் இருக்கும் மக்களின் வாழ்க்கைச் சுமை மேலும் அதிகரிக்கும். 

இப்போது வெளிநாட்டுக் கடன்களை அடைக்க டொலர்களே இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f73b1ed-c587-443b-b50f-a316717de605/26-6a684c8922363.webp' /></p><h2>டொலரின் மதிப்பு</h2><p> </p><p>சந்தையில் இருந்து டொலர்களை வாங்கச் சென்றால், டொலரின் மதிப்பு 400ஐத் தாண்டும், பொருட்களின் விலைகள் உயரும், வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும், அரசாங்கம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். </p><p>

நாம் டொலர்களை வாங்கவில்லை என்றால், 2027ஆம் ஆண்டுக்குள், அல்லது 2028-29ஆம் ஆண்டுக்குள், நாட்டினால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மீண்டும் திவாலாகிவிடும்.</p><p> 

2027ல் நாம் 2.5 பில்லியன் டொலர்களை மட்டுமே செலுத்த நேர்ந்தால், நமது டொலர் வருவாயை அதிகரிப்பதன் மூலமும், டொலர் இறக்குமதியின் செலவைக் குறைப்பதன் மூலமும் இந்தச் சூழ்நிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T06:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வு வயது உயர்வு திருத்தம் நிராகரிப்பு - நீதி அமைச்சருக்குக் காட்டமான கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-retirement-age-of-judges-rejected-1785219549"></link>
            <id>https://tamilwin.com/article/increase-retirement-age-of-judges-rejected-1785219549</id>
            <summary type="text">இலங்கையில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை அமைப்பான இலங்கை நீதிச்சேவை சங்கம்,
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை அமைப்பான இலங்கை நீதிச்சேவை சங்கம்,
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள அரசமைப்புத்
திருத்தத் திட்டத்தை முற்றாக நிராகரித்துள்ளது.</p><p>

இந்த முன்மொழிவு தேவையற்றது மட்டுமன்றி, நாட்டின் நீதித்துறை சுதந்திரம்
மற்றும் நடுநிலைமைக்குப் பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறி,
ஒன்பது முக்கிய காரணங்களை முன்வைத்து இந்த சங்கம் தனது எதிர்ப்பை அரசுக்குத்
தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சங்கம்
இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது, கீழ்மட்டங்களில் பணிபுரியும்
தகுதியான இளம் நீதிபதிகளின் தொழில்முறை முன்னேற்றத்தைக் கடுமையாகப் பாதிக்கும்
என்று சங்கம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad49c91b-2b9c-4269-98f3-7676d0803eea/26-6a684a7baecbf.webp' /></p><p>
</p><p>
 இது நீதித்துறையின் இயல்பான மறுமலர்ச்சியைத்
தடுத்து, பதவிகளில் தேக்கநிலையை உருவாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சூழலில் இவ்வாறானதொரு திருத்தம் அவசரசரமாகக்
கொண்டுவரப்படுவதன் பின்னணியிலுள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் நோக்கங்கள்
குறித்தும் இலங்கை நீதிச்சேவை சங்கம் கேள்விகளை எழுப்பியுள்ளது.</p><h2>

நிராகரிப்பதற்கான 9 காரணிகள்</h2><p>
இதற்கமைய, </p><p>

01. நீதித்துறையின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும்
சாத்தியம்.</p><p>

02. இளம் நீதிபதிகளின் பதவி உயர்வுகளில் தேக்கநிலை ஏற்படுதல்.
</p><p>
03. திருத்தச் சட்டமுறைகளில் தெளிவான அணுகுமுறை இல்லாமை.</p><p>

04. நீடிக்கப்பட்ட பதவிக் காலத்தைப் பெறும் நீதியரசர்கள் மீது அரசியல்
செல்வாக்கு செலுத்தப்படக்கூடிய அபாயம்.
</p><p>
05. சட்ட ரீதியான ஓய்வுபெறும் விதிகளில் மாற்றம் செய்வதால் ஏற்படும் பிற
சிக்கல்கள்.
</p><p>
06. நீதித்துறை அமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை பாதிக்கப்படல்.
</p><p>
07. நீதித்துறை சார்ந்த முக்கிய பங்குதாரர்களுடன் பரந்த அளவிலான பேச்சுள்
நடத்தப்படாமை.
</p><p>
08. முன்மொழிவு கொண்டுவரப்படும் காலம் மற்றும் அதன் பின்னணியிலுள்ள நோக்கம்
குறித்த கவலைகள்.</p><p>

09. நீதிமன்றங்களின் வழக்குகளை நிர்வகிக்கும் திறன் மற்றும் ஒட்டுமொத்த
செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய தொய்வு.</p><h2>

திருத்தங்களுக்கு எதிரான போராட்டம்</h2><p>
குறுகிய கால நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொள்ளாமல், நீதித்துறையின் நீண்டகால
நலன் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு
சட்டவாக்காளர்களையும் அரசு அதிகாரிகளையும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/468dae20-0264-4512-abc8-3a10d83057ab/26-6a684a7c78ab1.webp' /></p><p>

அரசமைப்பு ரீதியாக நீதித்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும்போது, சட்டச்
சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் விரிவான கலந்தாலோசனைகளை நடத்திய பின்னரே 
முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டில் அரச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை உணர்வுபூர்வமான
விவாதமாக உருவெடுத்துள்ள நிலையில், நீதித்துறையில் மறைமுகமாகத் தலையிடும்
எந்தவொரு முயற்சியும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் விமர்சனங்களைச்
சந்திக்கும் என்று தெரிவித்துள்ள இலங்கை நீதிச்சேவை சங்கம், தங்களது
கவலைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்தத் திருத்தத்துக்கு எதிரான
போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T06:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாவட்ட வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-players-records-youth-sports-festival-1785216935"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-players-records-youth-sports-festival-1785216935</id>
            <summary type="text">தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் விளையாட்டு
விழாவின் இவ்வாண்டுக்கான 36ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழா குழுப்
போட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் விளையாட்டு
விழாவின் இவ்வாண்டுக்கான 36ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழா குழுப்
போட்டிகள் இடம்பெற்று வருகின்றது.</p><p>
அந்த வகையில் 36ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டு விழாவின் கபடி போட்டிகள்
இம்மாதம் 11,12 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்றது.
</p><h2>தேசிய ரீதியாக இரண்டாம் இடம்</h2><p>
தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட இவ் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில்
மொத்தமாக 26அணிகள் பங்குபற்றியதுடன், அப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள்
அணி சிறப்பாக விளையாடி தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf82b7e6-500e-4e91-85e6-bffeaaf41e9b/26-6a6843d107607.webp' /></p><p>வீரர்களை கௌரவிக்கும் முகமாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் தேசிய
இளைஞர்கள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட அரசாங்க
அதிபர் தலைமையில் நேற்றையதினம்(27) மாவட்டச் செயலக மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>இந்நிகழ்வில் தேசிய மட்ட கபடிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்
கொண்ட கிளிநொச்சி மாவட்ட வீரர்கள் பாண்ட் வாத்தியத்தியத்துடன் மாவட்ட செயலக
நுழைவாயிலிருந்து மாநாட்டு மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு பதக்கம்
அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
</p><p>நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற
கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,தேசிய சம்மேளன உபதலைவர், இளைஞர் கழக
சம்மேளனத்தின் உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள்,
விளையாட்டு துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T05:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிடமாக உள்ள 8 நீதியரசர் பதவிகளையும் நிரப்புங்கள் : அரசிடம் அஜித் பி பெரேரா எம்.பி. வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-vacant-judicial-posts-1785217521"></link>
            <id>https://tamilwin.com/article/8-vacant-judicial-posts-1785217521</id>
            <summary type="text">அரசு தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நீதித்துறையின் சுயாதீனத்தில்
தலையிடுவதைத் தவிர்த்து, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நீதித்துறையின் சுயாதீனத்தில்
தலையிடுவதைத் தவிர்த்து, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் வெற்றிடமாக உள்ள நீதியரசர்களின் பதவிகளை உடனடியாக நிரப்ப
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.
</p><p>
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவானது, நீதித்துறையின்
திறனை மேம்படுத்துவதற்காக அல்லாமல் அரசின் குறுகிய அரசியல் நோக்கங்களை
நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கொண்டுவரப்படுகின்றது.</p><p></p><h2>வெற்றிடங்களை நிரப்புங்கள்..</h2><p> </p><p>கீழ் நீதிமன்ற நீதிபதிகளைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிச்சேவை அதிகாரிகள் சங்கம், இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் என்பன இந்தத்
திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும், அரசு எதிர்வரும்
டிசம்பர் 1ஆம் திகதிக்கு முன்னர் இதனை நிறைவேற்றத் துடிப்பது பெரும்
சந்தேகங்களை எழுப்புகின்றது.
</p><p>
அரசும் ஜனாதிபதியும் உண்மையிலேயே நீதித்துறையின் சுயாதீனத்தையும் வழக்கு
விசாரணைகளின் வேகத்தையும் உறுதிப்படுத்த விரும்பினால், தற்போது உயர்
நீதிமன்றத்தில் வெற்றிடமாக உள்ள 4 பதவிகளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்
வெற்றிடமாக உள்ள 4 பதவிகளையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b42f63c9-617e-4d6e-9347-3e14985b38c5/26-6a684438e4f70.webp' /></p><p> வரலாற்று ரீதியாக
இவ்வளவு அதிகமான நீதிமன்ற வெற்றிட பணியிடங்கள் நிரப்பப்படாமல்
வைக்கப்பட்டதில்லை.
</p><p>
ஓய்வுபெறும் வயதை இரு வருடங்களால் உயர்த்துவது, ஓய்வுபெறும் நிலையிலுள்ள
குறிப்பிட்ட ஒரு நீதியரசரைப் பாதுகாப்பதற்காகவே செய்யப்படுவதாக விமர்சனங்கள்
எழுந்துள்ளன. </p><p>அவ்வாறு ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் அத்தியாவசியம் எனக்
கருதுவது, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள ஏனைய
தகைமை வாய்ந்த, அனுபவமிக்க நீதியரசர்களின் திறனைக் கேள்விக்குள்ளாக்கும்
செயலாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/162cbb3f-1939-48c2-9530-1fbf5bead048/26-6a6844383f106.webp' /></p><p>

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கான சட்ட திருத்தங்கள், வழக்கு விசாரணைகளை
விரைவுபடுத்துவதற்கான சிபாரிசுகள் மற்றும் தேர்தல் காலத்தில் வாக்குறுதி
அளிக்கப்பட்ட புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் அனைத்தும் வரைவு
செய்யப்பட்டுத் தயார் நிலையில் உள்ள போதிலும், அவற்றை ஓரமாகத் தள்ளிவிட்டு
இந்த ஒரு குறிப்பிட்ட திருத்தத்தை மட்டும் அவசர அவசரமாகக் கொண்டுவருவது
நியாயமற்றது.</p><p>

கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர்கள் மற்றும் அரசியல்
நெருக்கடிகளின்போது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்த வரலாற்றுச்
சிறப்புமிக்க நீதித்துறையில் அரசு நியாயமற்ற முறையில் தலையிடுவதால், இதுவரைக்
காலம் தமது கௌரவத்தைப் பாதுகாத்துச் சேவை செய்த நீதியரசர்கள் தமது பெயரைக்
கெடுத்துக்கொண்டு ஓய்வுபெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>எனவே, இந்த அவசர
அரசமைப்புத் திருத்தத்தைக் கைவிட்டு, வெற்றிடமாகவுள்ள 8 நீதியரசர் பதவிகளையும்
உடனடியாக நிரப்பி, அரசு தனது நல்லெண்ணத்தை நிரூபிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:55:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliamentarian-chaminda-wijesiri-sentenced-1785217599"></link>
            <id>https://tamilwin.com/article/parliamentarian-chaminda-wijesiri-sentenced-1785217599</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் வழிமறித்தமை, பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

சட்டவிரோதமான முறையில் வழிமறித்தமை, பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவரது சாரதி மற்றும் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p>
</p><h2><b>
பொலிஸாருடன் வாய்த்தர்க்கம்</b></h2><p>வழக்கை விசாரித்த பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெய்ராம் ட்ரொட்ஸ்கி, சமிந்த விஜேசிறி மற்றும் சாரதி பந்துல ரத்நாயக்க ஆகிய இரு பிரதிவாதிகளையும் 4 குற்றச்சாட்டுகளுக்கும், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ரசிக்க கருணாதிலகவை 3 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளியாகத் தீர்ப்பளித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f9cb4c5-b4b6-486c-983a-ae405702ed29/26-6a6843ce7f6ca.webp' /></p><p>எனினும், சாரதி பந்துல ரத்நாயக்க உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதியன்று பண்டாரவளை நகரின் வட்டவளைக்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்டோர் ஜீப் வண்டிகளில் பயணித்துக்கொண்டிருந்தனர். </p><p>

இதன்போது, அவரது ஜீப் வண்டியை பொலிஸ் ஜீப் ஒன்று முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே குற்றச்செயலுக்கான காரணமாக அமைந்தமை வழக்கு விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>சமிந்த விஜேசிறி, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T05:54:16+00:00</updated>
        </entry>
    </feed>
