<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-28T03:29:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதி தொடர்பில் விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-prisoner-escaped-welikada-prison-1787887596"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-prisoner-escaped-welikada-prison-1787887596</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையிலிருந்து கைதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பியது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 45 வயது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையிலிருந்து கைதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பியது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p>வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 45 வயது கைதி ஒருவர், சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் சிறைச்சாலை வளாகத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.</p><h2>தப்பிச்சென்றுள்ள கைதிகள்</h2><p>
</p><p>
கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற இந்த தப்பித்தல் சம்பவம் குறித்து, சிறை அதிகாரிகளும் பொரளை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e717248-4686-444a-8893-6ae57f62a701/26-6a90ffee2f5d9.webp' /></p><p>

சிறைச்சாலை ஓய்வு விடுதியை சுத்தம் செய்வதற்காக மூன்று கைதிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர்களை மேற்பார்வையிட்டு வந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோத்தர் மதிய உணவுக்காக தனது அலுவல் இல்லத்திற்குச் சென்றபோது கைதி தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>இவர் தனது சிறை அங்கியை கழற்றிவிட்டு, சாரமொன்றை அணிந்துகொண்டு, சுமார் 1,50,000 ரூபாய் மதிப்புள்ள சிறைச்சாலை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, பிரதான வாயிலிலிருந்து லெஸ்லி ரணகல மாவத்தை நோக்கி தப்பிச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.</p><p>

தப்பிச்சென்றுள்ள கைதியை கைது செய்வதற்காக சிறை அதிகாரிகளும் பொரளை பொலிஸாரும் இணைந்து விசேட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T03:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலில் அழகு பராமரிப்பு நிலையமொன்றில் சிக்கிய தம்பதியினர்! விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-with-drugs-worth-rs-70-million-1787886714"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-with-drugs-worth-rs-70-million-1787886714</id>
            <summary type="text">மாத்தறை தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து, சுமார் ஏழு கோடி ரூபா மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து, சுமார் ஏழு கோடி ரூபா மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒரு தம்பதியினர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> இரகசியத்தகவலின் அடிப்படையில் நேற்று (27) தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>அழகு நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
</p><p>
மாத்தறை, வெலகொடவைச் சேர்ந்த 30 வயது சந்தேகநபரிடமிருந்து 2.45 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவரது 26 வயது மனைவியிடமிருந்து 6 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e65ca296-648e-481c-8eb1-96df756ed742/26-6a90fd5e9553b.webp' /></p><p>
மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 625,000 ரூபாய், இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் நான்கு கைபேசிகள் ஆகியவையும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
ஒரு கிராம் ஹெரோயின் 25,000 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. </p><p>மேலும், சந்தேகத்திற்குரிய தம்பதியினர் சில காலமாக இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தம்பதியினர் நாளை (28) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T03:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பயணங்கள் தாமதமாகும்..! பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disruption-to-northern-railway-1787881689"></link>
            <id>https://tamilwin.com/article/disruption-to-northern-railway-1787881689</id>
            <summary type="text">தொடருந்தொன்று தடம்புரண்டமையினால் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்தொன்று தடம்புரண்டமையினால் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.</p><p>

 

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த தொடருந்து பொதுஹெர தொடருந்து நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

 

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர தொடருந்து நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து தொடருந்துகளும் தாமதமாகவே பயணிக்கும் என தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T02:41:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எச்சரிக்கை நிலையில் வெப்பச்சுட்டெண்! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-people-heat-index-warrning-1787884460"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-people-heat-index-warrning-1787884460</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்று (28) பகல் வேளையில் வெப்பச்சுட்டெண் &#039;எச்சரிக்கை&#039; நிலையை எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்று (28) பகல் வேளையில் வெப்பச்சுட்டெண் 'எச்சரிக்கை' நிலையை எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>முக்கிய அறிவுறுத்தல்</h2><p>
அதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8bf0e90-b13b-4852-a2ed-6adaae206628/26-6a90f3ae7f5f5.webp' /></p><p>
</p><p>
சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளியில் இருப்பது சோர்வு மற்றும் தசப்பிடிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என்றும்&nbsp;எச்சரிக்கப்பட்டுள்ளது</p><p>எனவே பொதுமக்கள் போதியளவு நீரைப் பருகுமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T02:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரழிவு ஏற்படலாம்! நேபாள வெள்ளப்பெருக்கையடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-sri-lanka-following-nepal-floods-1787882170"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-sri-lanka-following-nepal-floods-1787882170</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு,
அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என
பேரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு,
அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என
பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர்
அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதிக்கு அருகில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனி மற்றும் பாறைகள் சரிந்து த்ரிசூலி ஆற்றில்
விழுந்ததால் இந்த பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பலரும் அடித்துச்
செல்லப்பட்டு பெருமளவிலான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p>

இத்தகைய இயற்கை பேரழிவுகள் உலகளவில் புதிதல்ல எனக் குறிப்பிட்ட அவர், 1980
களில் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சேற்றுச்சரிவு
ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.</p><h2>ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p>

இலங்கையிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என
எச்சரித்த அவர், டித்வா சூறாவளி காலத்தில் சரசவிகம பகுதியில் நிலச்சரிவு
காரணமாக நீர் செல்லும் வாய்க்கால்கள் அடைபட்டு, பின்னர் சேற்றுடன் கூடிய
வெள்ளம் கிராமத்திற்குள் பாய்ந்ததால் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த
சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86159bb0-79c2-4bf5-85d2-1143a64309cc/26-6a90f1964aca2.webp' />&nbsp;</p><p>
</p><p>
இலங்கையில் தளர்வான பாறை அடுக்குகள் கொண்ட மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு
ஏற்படும் போது, அருகில் உள்ள ஆறுகள் அல்லது ஓடைகள் அடைபட்டு, பின்னர் நீர்
தேங்கி திடீரென உடைந்து பெருக்கெடுக்கும் போது பெரும் வெள்ளப்பெருக்கும்
பேரழிவும் ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p>
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான பேரழிவுகளிலிருந்து தப்பிக்க சாதாரண நிலச்சரிவு
மண்டலங்களை மட்டும் வரைபடமாக்குவது போதாது என்றும், நிலச்சரிவால் ஆறுகள்
அடைபட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுள்ள அபாயகரமான
பகுதிகளைக் கண்டறிந்து வரைபடமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>

இத்தகைய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மூலம் எதிர்காலத்தில் சரசவிகம
போன்ற பேரழிவுகளைத் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T02:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரிடம் கோடிக்கணக்கில் பணம்பெற்ற பெண்கள் உட்பட பல அரசியல்வாதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-politicians-to-investigate-1787879134"></link>
            <id>https://tamilwin.com/article/10-politicians-to-investigate-1787879134</id>
            <summary type="text">மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் விசாரணை பிரிவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p>

சந்தேகநபரிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தையும் பல்வேறு சலுகைகளையும் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். </p><p>ஷிரான் பாசிகிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களுக்கமைய, அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p> </p><h2><b>தேர்தல் பிரச்சார நடவடிக்கை</b></h2><p>முன்னாள் பெண் அமைச்சர்கள் இருவர், அமைச்சர்கள் இருவர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c89b6e0c-7287-4e24-a30a-c07baf645852/26-6a90e0d7afab6.webp' /></p><p>விசாரணைகளில் சிக்கியுள்ள 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஷிரான் பாசிக்கினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவிலான பணம் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பிரதான அமைச்சராக செயற்பட்ட ஒருவர் ஷிரான் பாசிக்கிற்கு அனுமதியின்றி காணிகளில் பலமாடி தொடர்மாடிக் குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக குறித்த முன்னாள் அமைச்சர் ஷிரான் பாசிக்கிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் பதிவாகியுள்ளது. </p><p>ஷிரான் பாசிக் நீண்டகாலமாக இந்த அரசியல்வாதிகளுக்காக பாரிய அளவில் பணம் செலவிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T02:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடிய 236 குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-red-notices-for-236-criminals-1787879876"></link>
            <id>https://tamilwin.com/article/international-red-notices-for-236-criminals-1787879876</id>
            <summary type="text">இலங்கையில் செயற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் செயற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். </p><p>236 குற்றவாளிகளில் 110 பேருக்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p>சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளில் 66 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> </p><h2><b> சர்வதேச சிவப்பு அறிவிப்புகள்</b></h2><p>மேலும் 97 சந்தேக நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/271ac9a4-c27c-41c3-8c67-012ab28324dc/26-6a90e3272a262.webp' /></p><p>அவர்களில் 39 பேர் தங்கியுள்ள நாடுகள் மற்றும் இடங்கள் குறித்த தெளிவான தகவல்கள் உள்ளது. எதிர்வரும் வாரத்தில் அவர்களில் ஒருவர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். </p><p>தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். </p>]]></content>
            <updated>2026-08-28T01:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியில் ஏற்பட்ட கோர விபத்தில் பெண் உட்பட இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-including-a-woman-die-in-accident-galle-1787878820"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-including-a-woman-die-in-accident-galle-1787878820</id>
            <summary type="text">காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நடந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும்
ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நடந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும்
ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
</p><p>
அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், எதிரே
கராப்பிட்டியவிலிருந்து அம்பலன்வத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும்
நேருக்கு நேர் மோதியே இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
விபத்தின்போது முச்சக்கரவண்டியின் பின்னாசனத்தில் பயணித்த கனம்பிட்டியைச் சேர்ந்த 59
வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26d10404-eee8-495c-aa85-65bb429ea2b4/26-6a90df4c5b48a.webp' /></p><p> </p><p>மேலும், மோட்டார் சைக்கிளில்
பயணித்த ஹீன்பந்தலையைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண் பலத்த காயங்களுடன் காலி தேசிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று
வந்த நிலையில் உயிரிழந்தார்.
</p><p>
அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை
இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் மோதியதோடு,
மோட்டார் சைக்கிளுடனும் மோதியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி போக்குவரத்துப் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T01:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சை முறைகேடு: அதிரடியாக கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட 461 அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examination-irregularities-461-officials-blacklist-1787878257"></link>
            <id>https://tamilwin.com/article/examination-irregularities-461-officials-blacklist-1787878257</id>
            <summary type="text">பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளின் தகவல்கள், பரீட்சை பணிகளுக்காக அதிகாரிகளை நியமிக்கும் போது முறையாகக் கருத்தில் கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் கணக்காய்வின்போது கிடைக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 461 அதிகாரிகளில் 133 பேரின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களும், 182 அதிகாரிகளின் பரீட்சை பணித் தடையை ஆரம்பித்த திகதியும் பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை என கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சில அதிகாரிகளின் பெயர்கள் கடந்த நவம்பர் 21ஆம் திகதியுடன் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>கறுப்புப் பட்டியல்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
எனினும், குறித்த பெயர்கள் நீக்கப்பட்டமை கறுப்புப் பட்டியலை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c092df-3cfc-417f-b83a-13e3a7b9186f/26-6a90dc8d1282b.webp' /></p><p>
</p><p>
இதனால், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பரீட்சை பணிகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையே, 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய ஐந்து பரீட்சார்த்திகள் போலியான பரீட்சை பெறுபேறுகளை தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிராக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, க.பொ.த. சாதாரண தரம் 2024 (2025) பரீட்சையின் நான்கு பரீட்சை நிலையங்களில், பரீட்சை நடைபெறும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திய ஆறு மேற்பார்வையாளர்களின் தொலைபேசிகள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T00:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது திடீரென வெளியேற்றப்பட்ட பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-suddenly-evicted-nallur-temple-festival-1787854472"></link>
            <id>https://tamilwin.com/article/woman-suddenly-evicted-nallur-temple-festival-1787854472</id>
            <summary type="text">யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.</p><p>இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பெண்ணொருவர் திடீரென வெளியேற்றப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>எதற்காக குறித்த பெண் வெளியேற்றப்பட்டார் என்பதற்கான சரியான காரணம் தெரியாமல் கூட சிலர் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.</p><p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருக்கும் விதிமுறைகளை யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டியது அவசியம்.&nbsp;</p><p>அந்தவகையில், ஆலயத்தின் உட்பகுதியில் இருந்து புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை. எனவே, குறித்த பெண் அதனை மீறியதாகவும் அவரை வெளியில் இருந்து புகைப்படம் எடுக்குமாறு அறிவுறுத்தி வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது உட்பட சர்வதேசத்தில் மற்றும் நாட்டில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RmNDeKRbHN4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T23:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நற்சான்றிதழ் பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-notice-applicants-for-police-credentials-1787861585"></link>
            <id>https://tamilwin.com/article/special-notice-applicants-for-police-credentials-1787861585</id>
            <summary type="text">பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் இணையத்தள கட்டமைப்பு செயலிழந்த தினத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் இணையத்தள கட்டமைப்பு செயலிழந்த தினத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸ் ஊடகப்பிரிவினால் இது தொடர்பான விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படுகின்ற பொலிஸ் நற்சான்றிதழ்கள், பத்தரமுல்ல, சுஹூருபாய கட்டிடத்தின் 17ஆம் மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் நிருவகிக்கப்படுகின்றன.
</p><p>
பொலிஸ் நற்சான்றிதழ் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள், அது தொடர்பான அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் போன்ற செயற்பாடுகள் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு அமைப்பு ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த தரவு அமைப்பானது கடந்த 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதியன்று பிற்பகல் 12.50 மணிக்குச் செயற்பாடற்ற நிலைக்குள்ளானது.</p><h2>ஏற்பட்ட&nbsp;செயலிழப்பு&nbsp;</h2><p> இது குறித்து இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப முகவர்களுக்கு (ICTA) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைப்பை மீள இயங்கச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cae8e36-398d-414e-9947-9a3828f63a01/26-6a909ae35e88e.webp' /></p><p> அதற்கமைய, விண்ணப்பதாரர்கள் தற்போது வழமை போன்று இணையம் ஊடாகக் பொலிஸ் நற்சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
</p><p>
இதற்கிடையே கடந்த 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று தரவு அமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து, அன்றைய தினம் விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நற்சான்றிதழ் தரவு அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.</p><p> எனவே, அந்தத் திகதியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், புதிய விண்ணப்பமொன்றினை மீளவும் இணையவழியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
புதிய விண்ணப்பத்திற்குரிய சம்பந்தப்பட்ட அறிக்கைகள் பெறப்பட்டதன் பின்னர் பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கப்படும். </p><p>மேலும், முந்தைய விண்ணப்பத்திற்காகச் செலுத்தப்பட்ட 5,100 ரூபாய் கட்டணமானது, விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்துவதற்குப் பயன்படுத்திய கடன் அட்டைக்கு (Credit Card) மீளச் (Refund) செலுத்தப்படும் என்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T21:40:10+00:00</updated>
        </entry>
    </feed>
