<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-01T01:28:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரம் அடையும் எல் நினோ நிலைமை - அபாய கட்டத்தில் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-among-countries-of-concern-1788187941"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-among-countries-of-concern-1788187941</id>
            <summary type="text">ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாடுகளுள் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாடுகளுள் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், நாட்டின் இயல்பான மழை அளவைக் காட்டிலும் அதிகமான மழைவீழ்ச்சி, வெள்ள அபாயம் அதிகரிப்பு மற்றும் எரிபொருள், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் போன்ற தொடர்ச்சியான பொருளாதார சுமை ஆகியவற்றுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><h2>எல் நினோ தாக்கம்</h2><p> </p><p>

புதிய பிராந்திய மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு , உலக உணவுத் திட்டம், ஐநா பெண்கள் அமைப்பு, உலக வானிலை அமைப்பு மற்றும் ஐ.நா மனித உரிமை விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71eaf399-c6b5-484e-8d77-126739a0d32a/26-6a96117dabe19.webp' /></p><p>ஆசிய பசிபிக் பிராந்தியமானது மிகவும் சிக்கலான மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆபத்துக்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. </p><p>

வலுவடைந்து வரும் எல் நினோ, சாதகமான இந்தியப் பெருங்கடல் இருமுனை மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியின் தொடர்ச்சியான பொருளாதாரத் தாக்கங்கள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றது. </p><p>

தற்போதைய எல் நினோ பதிவுகளில் வலிமையான ஒன்றாக அமையக்கூடுவதுடன், 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும்.</p><h2>இலங்கைக்கு முக்கிய அச்சுறுத்தல்&nbsp;</h2><p> இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பப்புவா நியூ கினி போன்ற நாடுகளில் வறட்சி அபாயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 எனினும் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முக்கிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6ebcb69-e56d-415b-bbdb-b33ed740aa62/26-6a96117cdca1a.webp' /></p><p>இந்த மதிப்பீடானது இலங்கையை உயர்ந்த கவலைக்குரிய நாடுகளின் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.</p><p> 

இலங்கையின் இரண்டாவது இடைப்பருவ காற்று வீசும் காலமான ஒக்டோபர் மாதம் முதல் இந்த ஆபத்து குறிப்பாக முக்கியத்துவம் பெறுவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
இது பாரம்பரியமாக ஆண்டின் அதிக மழை பெய்யும் காலங்களில் ஒன்றாகும், இதனைத் தொடர்ந்து ஈசான் பருவமழையும் ஆரம்பமாகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இந்திய இராணுவம் பழுகாமம் பாலம் புனர்நிர்மான பணி ஆரம்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-army-reconstruction-work-palugamam-bridge-1788223072"></link>
            <id>https://tamilwin.com/article/indian-army-reconstruction-work-palugamam-bridge-1788223072</id>
            <summary type="text">மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில்
முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை (30)
இந்திய இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில்
முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை (30)
இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடிந்து
வீழ்ந்துள்ள மகிழவெட்டுவான், பழுகாமம், மாவடி ஓடை போன்ற 3 பாலங்களை
நிர்மானித்து தருமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.
</p><p>
இந்த கோரிக்கைக்கு அமைவாக 45 பேர் கொண்ட இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர்
இலங்கை இராணவ தொழில்நுட்ப பிரிவினர்கள் மற்றும் இலங்கை வீதி அதிகார சபையுடன்
இணைந்து பழுகாமம் பெரிய போரதீவு இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தை முதற்கட்டமாக
புனர் நிர்மானிக்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; இதனை தொடர்ந்து ஏனைய பாலங்களுக்கான பொருட்கள் வந்தவுடன் தொடர்ந்து இந்திய
இராணுவத்தினர் புனர்நிர்மான பணிகளை முன்னெடுப்பார்கள் என மாவட்ட வீதி அதிகார
சபை பணிப்பாளர் எந்திரி வேதநாயகம் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T00:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இந்திய மசாஜ் நிலையம் அமைக்க 20 ஏக்கர் அரச காணி.. கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vadamaratchi-people-oppose-land-to-indian-firm-1788217328"></link>
            <id>https://tamilwin.com/article/vadamaratchi-people-oppose-land-to-indian-firm-1788217328</id>
            <summary type="text">யாழ் - வடமராட்சி கிழக்கில் 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு மக்கள் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் - வடமராட்சி கிழக்கில் 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p>கடந்த 28 அன்று வடமராட்சி, கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற
உறுப்பினர் ரஜீவன் எம்.பி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த 20 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகை
அடிப்படையில் கொடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நிரந்தர காணி</h2><p> தங்களுடைய மண் பல வரலாற்றை கொண்டது, பல தியாகங்களைச் செய்த மண், ஆகவே
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மசாஜ் நிலையம் தேவை இல்லை என மக்கள் குறித்த
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
வடமராட்சி, கிழக்கில் தற்போதும் பல நூறு குடும்பங்கள் நிரந்தர காணியில்லாமல்
தவிக்கின்ற போதும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரச காணியை தனியார்
நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என மக்கள் கேள்வி
எழுப்பி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c08f19bd-fc01-45eb-a340-c7b8544a0a64/26-6a960cff95ab7.webp' /></p><p>இந்நிலையில் வடமராட்சி, கிழக்கு பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போதும்
அதனை தடுத்து நிறுத்தாமல் இளைய தலைமுறையை சீரழிக்கும் கழியாட்ட விடுதிகளை
அமைப்பதற்கு முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனவே&nbsp; மக்களுக்கு நன்மையற்ற அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிவதை உரியவர்கள் நிறுத்த
வேண்டுமென அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கடத்தி கொடூர செயலில் ஈடுபட்ட நபர் தப்பியோட்டம்.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-sentenced-to-24-years-in-prison-rearrest-1788215640"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-sentenced-to-24-years-in-prison-rearrest-1788215640</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி, தகாத முறைக்குட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தப்பிச்சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி, தகாத முறைக்குட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தப்பிச்சென்ற கைதியை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.</p><p>அவரை, சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றச்சாட்டில் பிறிதொரு வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h2>மேல் நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p> </p><p>குறித்த கைதியால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (28) தீர்ப்பளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af01b8f2-3a2e-49e7-a32d-8f0009321a48/26-6a96077791a28.webp' /></p><p>இந்த நிலையில் மறுநாள் சனிக்கிழமை (29) திடீர் சுகவீனம் என கூறி
கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (31) மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
</p><p>
கைதி தப்பி சென்ற நிலையில், சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதுடன் , யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்ததனை அடுத்து, இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள்
மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:31:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்ட செயலக வீதியிலுள்ள குப்பைகளை அகற்றுமாறு ஈ பி டி பி கட்சி ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/epdp-seeks-garbage-removal-from-batticaloa-road-1788211998"></link>
            <id>https://tamilwin.com/article/epdp-seeks-garbage-removal-from-batticaloa-road-1788211998</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வீதியில் அதிகரித்த குப்பை கூழங்களினால் ஏற்படும் துர்நாற்றம் அந்தப் பகுதி மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வீதியில் அதிகரித்த குப்பை கூழங்களினால் ஏற்படும் துர்நாற்றம் அந்தப் பகுதி மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளதாக&nbsp;ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.</p><p> எனவே இந்த வீதியின் இரு
பக்கமும் கொட்டப்பட்டுள்ள இந்த குப்பைகளை அகற்ற மாநகர சபை நடவடிக்கை எடுக்க
வேண்டும் என நேற்று(31) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>கழிவு அகற்றல்</h2><p> அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த வீதியில் இரு பகுதிகளிலும் தகரங்கள் மற்றும் வீட்டு கழிவுகள் உட்பட
குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07b2af22-c39b-4efc-abbf-8490edeaee7d/26-6a95fadf0fb98.webp' /></p><p> இந்த குப்பைகளை மாதக்கணக்கில்
அகற்றப்படாததால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் மாவட்ட செயலகத்திற்கு
செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p>மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு இந்த வட்டாரத்துக்கு தெரிவான உறுப்பினர்
இது தொடர்பாக கவனம் செலுத்தாமல் உள்ளதுடன் அவர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெற்றி
பெற்றால் வாங்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்வதாக வாக்குறுதி அளித்தார்.</p><h2>வடிகால்களை துப்பரவு செய்தல்</h2><p> </p><p>வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் வாக்களித்த மக்களுக்காவது குறைந்த
பட்சம் புதிய மாவட்டத்திற்கு செல்லும் பாலமீன்மடு வீதி இரு பக்கமும் உள்ள
குப்பைகளை அகற்றிக் கொடுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/437407cc-09f2-4663-8622-c6b2c221f596/26-6a95fae028d06.webp' /></p><p>
அதேவேளை வடக்கு கிழக்கில் பருவபெயர்ச்சி மழை ஐப்பசி மாதத்தில் இருந்து பெய்ய
தொடங்கும். நேபாளத்தில் இன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்று இலங்கையில்
வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே மழை வரும் முன்னர் இந்த மழைநீர் வழிந்தோடும் வடிகால்களை மாநகரசபை
துப்பரவு செய்ய வேண்டும் இல்லாவிடில் மழை வெள்ளத்தில் பாலமீன்மடு கிராமம்
பாதிக்கப்படும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 22இல் இறுதித் தீர்ப்பு..! வியப்பில் ஆழ்த்திய மைத்திரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி என அவர் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல கொடூர சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்க்ள தொடர்பில் அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக, பல உயிர்களை பறித்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்&nbsp;மைத்திரிபாலவின் ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறியது.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களும் உள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>&nbsp;இவ்வாறிருக்கையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பல கேள்விகளை எழுப்புகின்றது எனலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sgq8jMiHzoc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T23:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி ஈட்டிய சிம்பாப்வே அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zimbabwe-team-wins-match-against-namibia-1788210781"></link>
            <id>https://tamilwin.com/article/zimbabwe-team-wins-match-against-namibia-1788210781</id>
            <summary type="text">நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில்
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்
இழப்பிற்கு 195...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில்
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்
இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்து, 196 ஓட்டங்களை வெற்றி இலக்காக
நிர்ணயித்துள்ளது.
</p><p>
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு
செய்தது.</p><h2>சிம்பாப்வே அணி வெற்றி</h2><p>

இதேவேளை ரியான் பர்ல் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில்;(7 பவுண்டரிகள், 1
சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p> பென் கரண் 38 ஓட்டங்களும், பிராட்
ஈவன்ஸ் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்கள், பிரையன் பென்னட் 32 ஓட்டங்களும்
எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31375803-a84b-4ebe-b5e3-8ef492d88b58/26-6a95f0ac3ed41.webp' /></p><p>

இதனையடுத்து கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பெர்னார்டு, ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் ஹெய்ங்கோ தலா ஒரு விக்கெட்டைப்
பெற்றனர்.</p><p>

இந்த நிலையில் தற்போது நமீபியா அணி 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் விளையாடி வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T22:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் – இஸ்ரேல் ஆயுத ஒப்பந்தம்: மாறுபட்ட அபிப்பிராயங்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/greece-israel-arms-deal-1788208852"></link>
            <id>https://tamilwin.com/article/greece-israel-arms-deal-1788208852</id>
            <summary type="text">கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள ஆயுதக்
கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் பிராந்திய நாடுகளிடையே மாறுபட்ட எதிர்வினைகள்
தோன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள ஆயுதக்
கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் பிராந்திய நாடுகளிடையே மாறுபட்ட எதிர்வினைகள்
தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஏதென்ஸ் நகரில் இருந்து
வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>குறிப்பாக, இந்த ஒப்பந்தம் குறித்து துருக்கியிடம் இருந்து நேர்மறையான
கருத்துக்கள் வெளிவர வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.</p><h2>வான் பாதுகாப்பு உதவி</h2><p>
</p><p>
இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்வதன் மூலம், ஆக்கிரமிக்கப்பட்ட
மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அனைத்து
நடவடிக்கைகளுக்கும் கிரீஸும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என
துருக்கிய ஊடகப் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
</p><p>இருப்பினும், பல்கேரியா, வட மெசிடோனியா மற்றும் அல்பேனியா போன்ற
நாடுகளிடமிருந்து இதற்கு சாதகமான பதிலளிப்புகள் கிடைக்கக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3d53887-d2c5-419b-9462-483964cc1735/26-6a95ed68ddda4.webp' /></p><p>தற்போதைய போர்க் காலத்தில் பல்கேரியா கிரீஸிடம் வான் பாதுகாப்பு உதவியைக்
கோரியிருந்த நிலையில், பல்கேரிய வான்வெளியைப் பாதுகாப்பதற்காக கிரீஸ் தனது
'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு அமைப்புகளை அங்கு நகர்த்தியிருந்தது. இதேபோன்று சவூதி அரேபியாவிலும் கிரீஸ் இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகளை
நிலைநிறுத்தியுள்ளது.</p><p>
இதன் காரணமாக, கிரீஸ் மற்றும் துருக்கி இடையிலான பாரம்பரிய போட்டித்தன்மை
காரணமாக அங்காராவிலிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் எழக்கூடும் அதேவேளை,
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து இதற்கு
ஆதரவான கருத்துக்கள் வெளிவரக்கூடும் எனக் கருதப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T22:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அழுத்தத்தை பிரயோகிக்க நாடுகளுடன் இணைந்து செயற்பட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-g7-unite-to-pressure-iran-1788207783"></link>
            <id>https://tamilwin.com/article/eu-g7-unite-to-pressure-iran-1788207783</id>
            <summary type="text">ஈரான் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஜி-7
அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து நெருக்கமாக செயற்படவுள்ளதாக
ஐரோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஜி-7
அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து நெருக்கமாக செயற்படவுள்ளதாக
ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானின் அணுசக்தி திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் வலயத்தில்
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அந்த நாடு உடனடியாகக் கட்டுப்படுத்த
வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
வலியுறுத்தியுள்ளது.</p><h2>ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை</h2><p>

குறிப்பாக ரஷ்யாவின் உக்ரைன் மீதான போருக்கு ஈரான் வழங்கி வரும் இராணுவ ஆதரவு
மற்றும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை
நிறுத்துமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a1d651-9a0e-4168-9383-4d3438f33df2/26-6a95e4d3ceb1f.webp' /></p><p>அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை
உறுதிப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் நன்மைகளைப் பாதுகாக்கவும்
தேவை ஏற்படின் மேலதிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை
என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T22:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrest-in-shooting-at-swiss-music-concert-1788207149"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrest-in-shooting-at-swiss-music-concert-1788207149</id>
            <summary type="text">&amp;nbsp;சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதான சுவிஸ் நாட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதான சுவிஸ் நாட்டவர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
சூரிச் நகருக்கு மேற்கே அமைந்துள்ள குதிரைப் பந்தய திடலில் இடம்பெற்ற இசை
நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 22 வயதான
இத்தாலியப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.</p><h2>பொலிஸ்&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 24 மணி நேர தீவிர தேடுதலின் பின்னரே
சந்தேகநபர் நேற்று(31) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e078085d-a79e-467b-8505-b2cfca1efa1a/26-6a95e2386ffeb.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்,
இந்தத் தாக்குதலைத் தனி நபர் ஒருவரே நடத்தியிருக்கலாம் எனக் கருதுவதுடன்,
தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை
முடுக்கிவிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு நெதர்லாந்தில் திருயாத்திரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netherlands-pilgrimage-marks-mary-s-nativity-feast-1788205803"></link>
            <id>https://tamilwin.com/article/netherlands-pilgrimage-marks-mary-s-nativity-feast-1788205803</id>
            <summary type="text">தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் முன்னெடுக்கும் 24ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை, நெதர்லாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் முன்னெடுக்கும் 24ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை, நெதர்லாந்தில் அமைந்துளள சிறிய லூர்து அன்னை திருத்தலத்தை நோக்கி நடைபெறவுள்ளது.</p><p>இந்தப் புனித யாத்திரையானது எதிர்வரும் (06.09.2026)ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளது.</p><h2>யாத்திரை தொடர்பான விபரம்</h2><p>
</p><p>குறித்த திருத்தலத்தின் முகவரி்: Kloosterstraat 1, 5865 AA Tienray, Netherlands&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0aa33dc-3233-4d59-a62a-c40ff829efd3/26-6a95ddc3f35b1.webp' /></p><p>
நிகழ்ச்சி நிரல்:&nbsp; காலை 11.00 மணிக்கு திருநாள் திருப்பலி</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம்</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: அதனைத் தொடர்ந்து அன்னையின் திருசொரூப பவனி </p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: சிறிய லூர்து கெபியில் இறுதி ஆசியுடன் விழா நிறைவு
</p><p>
இந்தத் திருயாத்திரையில் அனைவரும் கலந்துகொண்டு இறை அருளைப் பெற்று, விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 600 உயிர்களை காப்பாற்ற போராடும் மீட்புக்குழுவினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-rescuers-blast-hillside-search-families-1788209970"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-rescuers-blast-hillside-search-families-1788209970</id>
            <summary type="text">நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில், சேறு மற்றும் சகதி நிறைந்த பகுதிக்குள் 600க்கும் மேற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில், சேறு மற்றும் சகதி நிறைந்த பகுதிக்குள் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை உயிரோடு மீட்கும் தீவிர நடவடிக்கைகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p> திங்கட்கிழமை வரை நீடித்த இந்த மீட்புப் பணியில், மலைப் பகுதியை வெடிவைத்துத் தகர்த்துச் சுரங்கத்தினுள் காற்றைச் செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளதுடன், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,925 ஆகப் பதிவாகியுள்ளது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p> இதில் 592 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். காணாமல் போனவர்களில் ஏழில் ஒருவர் நீர்மின் நிலையத் தொழிலாளி எனக் கருதப்படும் நிலையில், இதுவரை நீர்மின் நிலையங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c07fa2-c4a1-4f7f-ac41-b1f978d20595/26-6a95f0e45dc0c.webp' /></p><p>
</p><p>
நேபாள மற்றும் சீன இராணுவத்தின் கூட்டுத் தலைமையில், இந்தியா, கொரியா மற்றும் அவுஸ்திரேலிய நிபுணர்களின் பங்களிப்புடன் இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>சுரங்கத்திற்குள் பிராணவாயு அமைப்பு உள்ளதால் தங்கள் உறவினர்கள் உயிரோடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். அதேவேளை, தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் தங்களது நம்பிக்கை குறைந்து வருவதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> இதுவரை 11,379 பேர் ஒட்டுமொத்தமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் 11 நீர்மின் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:26:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று முறை சீ.வி.கேவின் வீடு தேடி சென்ற தாய் வெளியிட்ட பகீர் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330</id>
            <summary type="text">இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நியாயவழி போராட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சிறுபிள்ளைதனமான காரணத்தை கூறி இலங்கை தமிழரசுக் கட்சி போராட்டம் மற்றும் மகா நாட்டை புறக்கணித்துள்ளது.</p><p>இது தொடர்பில் கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரனும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p>
ஒட்டுமொத்த தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு அரசு தரப்பில் பல தடைகள் விதிக்கப்பட்டன. </p><p>ஆனால் தற்பொழுது தமிழ் கட்சிகள் தரப்பே இவ்வாறான காரணங்களை கூறி தமிழர்களின் உணர்வுபூர்மான போராட்டங்களை புறக்கணிக்கின்றன.</p><p>இவ்வாறிருக்கையில், வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உபதலைவி அமலநாயகி, சி. வி. கே. சிவஞானத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தமை தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p> </p><p>

இது தொடர்பில் இன்னும் பல விடயங்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/adOL5hITeAk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T20:24:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவில் திருவிழாக்களில் கவர்ச்சி நடனங்களை நடாத்துவது சில புலம்பெயர் மக்களின் சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diaspora-plot-behind-sexy-temple-dances-1788200948"></link>
            <id>https://tamilwin.com/article/diaspora-plot-behind-sexy-temple-dances-1788200948</id>
            <summary type="text">தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்களங்களில் காணக்கூடியதாக இருந்தது .
</p><p>
இந்த விடயம் தொடர்பில் எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி லங்காசிறியின் நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், இது புலம்பெயர் தமிழர்கள் செய்யும் ஒருவகையான சதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு காலத்தில் வேங்கைகளால் வளர்க்கப்பட்ட மந்தைகள் தற்பொழுது நரிகளாலும் குள்ளநரிகளாலும் வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறானவர்களால் இந்த சமூகம் சீர்குழைக்கப்படுகிறது.
</p><p>
இது தொடர்பில் மக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். இவ்வாறானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் குறித்த கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.</p><p>கோயில்களிலும் தேவாலயங்களிலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது என்பது பிழையான ஒரு விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இது குறித்து மேலதிக தகவல்களை&nbsp;நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியின் ஊடாக&nbsp; விரிவாகப் பார்ப்போம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z9FgzuDkV8o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:55:24+00:00</updated>
        </entry>
    </feed>
