<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-07T22:15:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு சர்ச்சை! 2 மில்லியன் டொலர் இழப்பு - 200 மில்லியன் டொலர் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 16.84 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சுமார் 16.84 மில்லியன் டொலர் லஞ்சம் பெற முயற்சிக்கப்பட்டதாகவும், அதில் 2 மில்லியன் டொலர் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
விமானக் கொள்வனவு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இலங்கைக்கு சுமார் 200 மில்லியன் டொலர் (65.6 பில்லியன் ரூபா) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விவகாரத்தில், 16.84 மில்லியன் டொலர் இலஞ்சமாகப் பெற முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இறுதியில் சுமார் 2 மில்லியன் டொலர் மட்டுமே இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், கொள்வனவு ஒப்பந்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட ரத்து கட்டணங்கள் (Cancellation fees), விமான பராமரிப்பு செலவுகள் மற்றும் லீசிங் செலவுகள் போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு NewsInsightTamil...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AdsYi1CP5b0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு முன்னாள் - இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692"></link>
            <id>https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பில்&nbsp; இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>ஊழல் மற்றும் மோசடி&nbsp;</h2><p>
</p><p>
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும், சட்டம் தனது கடமையை சுயாதீனமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b2cb381-ccb6-4956-a056-80da9170dc42/26-6a9f34620bb13.webp' /></p><p>
</p><p>
விசாரணைகளின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கந்தசாமி பிரபு கூறினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதிகள், ஆளுநர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ச சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>&nbsp;ராஜபக்ச குடும்பத்தினர்</h2><p>

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிடுவது குறித்து கந்தசாமி பிரபு விமர்சனம் முன்வைத்தார்.</p><p>

ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சித்த போதிலும், பின்னர் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்ததாகவும், தற்போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9378d683-be9d-42d2-9ff5-f6e879190905/26-6a9f34638e8e6.webp' /></p><p>
</p><p>
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் கந்தசாமி பிரபு மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:06:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029க்கு முன் அனைவரும் சிறையில்! நடுநடுங்கும் ராஜபக்ச குடும்பம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/everyone-jail-before-2029-rajapaksa-family-tremble-1788814458"></link>
            <id>https://tamilwin.com/article/everyone-jail-before-2029-rajapaksa-family-tremble-1788814458</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 

இதேவேளை, யோஷித ராஜபக்ச தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
</p><p>
கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அழுத்தம் அதிகரித்து வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>

நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் யோஷித ராஜபக்ச எதிர்கொண்டுள்ள சட்ட நெருக்கடிகள், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.</p><p>

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

அதனால் இது ராஜபக்ச குடும்பத்தினருக்கு உறக்கமில்லாத இரவுகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுகின்றது லங்காசிறியின் நாட்டுநடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/M1HrfKLwrlc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T21:07:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மனித உரிமைகள் விவகாரம்: ஜெனிவாவில் ஆரம்பமான முக்கிய அமர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/63rd-session-un-human-rights-council-begins-geneva-1788807653"></link>
            <id>https://tamilwin.com/article/63rd-session-un-human-rights-council-begins-geneva-1788807653</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின்
ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின்
ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
வோல்கர் துர்க் தொடக்க உரையாற்றினார். </p><p>இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மனித
உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைமைகள் குறித்தும் அவர் விசேடமாகக்
குறிப்பிட்டார்.</p><h2>ஜெனிவாவில் ஆரம்பம்</h2><p>
</p><p>
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள
நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள்
தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் தனது அண்மைய அறிக்கையில்
சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aeafe51-dcca-4039-bc3c-10653f6a0875/26-6a9f13359ade5.webp' /></p><p>

இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கை இந்த வாரம் பேரவையில்
உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், இலங்கை
விவகாரங்களுக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான
ஒடுக்குமுறைகள், சூடான், வெனிசுலா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பாரிய
மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>

இந்த விவகாரங்கள் தொடர்பான விரிவான அறிக்கைகளைப் பரிசீலித்து, உரிய
தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T19:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தடைக்கு பதிலடி! ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560"></link>
            <id>https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவரத்து பாதையையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஈரான் அரசாங்கம்
தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சேன் ரெசாய் இது
குறித்துத் தெரிவிக்கையில், புதிய தடை மண்டலத்திற்குள் நுழையும் கப்பல்கள்
அனைத்தும் உடனடியாகத் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்படும் எனக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;மசகு எண்ணெய் விலை</h2><p>

அத்துடன் ஓமான் நாட்டின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பினூடாக அமைக்கப்படும்
புதிய சர்வதேச கப்பல் பாதையை ஈரானே நிர்வகிக்கும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடற்பகுதியில் பரஸ்பர தாக்குதல்கள்
தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மசகு எண்ணெய் கொண்டு செல்லும்
கப்பல்களின் நடமாட்டம் பெருமளவில் குறைடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/966e7bc0-ebdf-4b2b-b4f2-5a844de3eb61/26-6a9ef570b3f80.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 97
டொலரைக் கடந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில்
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக
ஈரானிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T19:19:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலர் பற்றாக்குறையால் நெருக்கடியில் இலங்கை - அநுர ஆட்சியில் தொடரும் ஊழல் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861</id>
            <summary type="text">இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும் முறைகேடான நிர்வாகமுமே முதன்மைக் காரணம் என இடதுசாரி கேந்திர
அமைப்பின் செயற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இன்று(07.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாமல் ராஜபக்ச தனக்கு எதுவுமே தெரியாது எனப் பொறுப்பற்ற முறையில் நடந்து
கொள்கின்றார்.</p><p> இருப்பினும், கைதான நபர் ஒருவரின் வாக்குமூலங்களும், கேமன்
தீவுகளில் நடைபெற்ற விருந்தொன்றில் தொழிலதிபர் நிமால் பெரேராவுடன் நாமல்
ராஜபக்ச இணைந்து இருக்கும் புகைப்படங்களும் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றன.
</p><h2>
கப்பம் பெறும் ஊழல்வாதிகள்</h2><p>
கப்பம் பெறுபவர்களுடனும் ஊழல்வாதிகளுடனும் கேமன் தீவுகளில் சூதாட்டத்தில்
ஈடுபட்டது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
</p><p>
ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச, சஜித் பிரேமதாஸ மற்றும் உதய கம்மன்பில
போன்ற அரசியல்வாதிகள் வெளிநாட்டு ஒப்பந்தங்களில் பெருமளவு நிதி முறைகேடுகளைச் செய்துவிட்டு, தற்போது ஏதும் அறியாதவர்கள் போல் நடிக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b81c9f-fc88-44e6-998c-fb372ca9f59f/26-6a9eb91841043.webp' /></p><p>

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளின்படி, நாட்டுக்காகப் பெறப்பட்ட
கடன்களுக்கு இணையான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது
தெளிவாகின்றது.
</p><p>
 எனவே, கடனாகப் பெறப்பட்ட பல மில்லியன் டொலர்களுக்கு என்ன
நடந்தது என்பதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். ஜே.வி.பி. இந்தியாவுக்கு முன் மண்டியிட்டுள்ளது என்று விமல் வீரவன்ச கூறுவது
அறியாமையாகும். </p><h2>

எரிபொருள் வாங்க டொலர் இன்மை...</h2><p>

நாட்டில் எரிபொருள் வாங்குவதற்குக் கூட டொலர் இல்லாத நிலையை
உருவாக்கி, நாட்டை இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளியது
யார்?</p><p> தரமற்ற மற்றும் கழிவு உரக் கப்பல்களை நாட்டுக் குள் கொண்டுவந்து
நாட்டின் விவசாயத் துறையை முற்றாக அழித்தது யார் என்பதை விவசாயிகள் நன்கு
அறிந்து வைத்துள்ளனர். 

இனிமேலும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற அவர்கள் தயாராக இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98606de4-a1af-4d06-9285-5e738fb24868/26-6a9eb91915988.webp' /></p><p>
</p><p>
மக்களின் வரிப்பணத்திலும் வெளிநாட்டுக் கடன்களிலும் சுகபோகம் அனுபவித்த இந்த
ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே. </p><p>தற்போது சட்டமா
அதிபர் திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி
மிகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T19:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைதால் Gen Z தலைமுறை ஆத்திரமடைந்தார்களா..! ரணிலின் கருத்தை நிராகரித்த முக்கியஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranils-statement-about-namals-arrest-is-wrong-1788783437"></link>
            <id>https://tamilwin.com/article/ranils-statement-about-namals-arrest-is-wrong-1788783437</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டதால் 'Gen Z' தலைமுறையினர் ஆத்திரமடைந்துள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>மக்களிடம் பேச இதுவே காரணம்</h2><p>
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் 'Gen Z' தலைமுறையினர் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.</p><p>பழைய அரசியல் கலாசாரத்தை மீண்டும் கொண்டுவர பிற்போக்கு சக்திகள் சதி செய்தால் மட்டுமே 'Gen Z' தலைமுறையினர் அதற்கு எதிராகக் கொதித்தெழுவார்கள் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03576b35-0132-4882-8724-f343c38a70bf/26-6a9eafa7362dc.webp' /></p><p>
நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு இளைஞர் தலைமுறையினரிடம் எதிர்ப்பில்லை என்றும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கே அது தொடர்பில் எதிர்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்ச மீதான விளக்கமறியல் உத்தரவு</h2><p>
</p><p>தற்போதைய அரசாங்கத்திடம் நன்மையும் தீமையும் ஆகிய இரு பக்கங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒருவித குழப்ப நிலையை உணர்ந்ததாலேயே தேசிய மக்கள் சக்தி மக்கள் பேரணிகளை நடத்தத் தீர்மானித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d76a1daa-16fe-4602-b6d9-c63c59dc9881/26-6a9eafa7de73a.webp' /></p><p>நாமல் ராஜபக்‌ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை மட்டுமே பிரதான காரணியாக வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p> எனினும், நாமல் சிறையிலிருப்பது அந்த பேரணியைச் வெற்றிபெறச் செய்ய அவர்களுக்கு ஒருவகையில் உதவியாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.</p><p>
அரசாங்கம் தற்போது அடிமட்ட அழுத்தத்தை உணர்ந்துள்ளதாலேயே மீண்டும் மக்களிடம் சென்று உரையாடலைத் தொடங்கத் தீர்மானித்துள்ளது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T19:07:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752</id>
            <summary type="text">வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. </p><p>

இது இன ரீதியான மோதல்களைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்று
கூறப்படுகின்றது,
 
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
இந்தக் கிராமம் வரலாற்று ரீதியாகவே விவசாய நிலமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. 

இத்தகைய சம்பவங்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான ரொஷான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திலித் ஜெயவீர ஆகியோரின் செயற்பாடுகள் இருக்கலாம் எனத் தொடர்ந்து சந்தேகம் வெளியிடப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bPcMV8QJimw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T18:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-is-losing-the-people-s-trust-1788803306"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-is-losing-the-people-s-trust-1788803306</id>
            <summary type="text">அநுர அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்றும், அரச வளங்கள்
துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய
அமைப்பாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்றும், அரச வளங்கள்
துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய
அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
</p><p>
கொழும்பு, எதுல்கோட்டேயில் இன்று(7) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.</p><h2>கடுமையான விமர்சனம்</h2><p>
</p><p>
தற்போதைய அரசின் நிர்வாக நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு, சுகாதாரம்,
பொருளாதாரம் மற்றும் அரசமைப்பு விவகாரங்கள் தொடர்பில் அவர் கடுமையான
விமர்சனங்களை இதன்போது முன்வைத்தார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்கள்,
கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவோ அல்லது மக்கள்
நலன் சார்ந்த புதிய திட்டங்களை அறிவிக்கவோ நடத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bea7ba-cf56-4a22-9c8d-51a5deb28f6d/26-6a9efdcd0854c.webp' /></p><p> மாறாக, பழைய
பொய்களை மீண்டும் சமூகத்தில் பரப்பி, அரசின் மீதான மக்களின் விரக்தியை
மறைத்து, மக்களை மீண்டும் ஏமாற்றும் நோக்கிலேயே இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
</p><p>
தேசிய மக்கள் சக்தியின் பேருவளைக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு
ஏற்பாடுகள் மிகுந்த விமர்சனத்துக்குரியவை. ஜனாதிபதியின் பாதுகாப்பைக்
கருத்தில்கொண்டு பேருவளை மீன்பிடித் துறைமுகத்துக்குள் படகுகள் நுழைவதற்குத்
தடை விதிக்கப்பட்டதால், அந்தப் பகுதி மீனவர்கள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அரசு கூறிவரும்
நிலையில், ஜனாதிபதியின் கூட்டங்களுக்குப் பெருமளவு பாதுகாப்பு
வழங்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களில் 37 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் 17
உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை நாட்டின் உண்மையான பாதுகாப்பு நிலைமை
தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகின்றது.</p><h2>அநுரகுமார திஸாநாயக்க</h2><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதிகளின் கூட்டங்களை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்த
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அரச வாகனங்கள், பெருமளவிலான
பாதுகாப்புப் படையினர் மற்றும் அரச நிதியைப் பயன்படுத்தித் தனது கட்சியின்
கூட்டங்களை நடத்தி வருகின்றார்.</p><p> இது அரச நிதி மற்றும் அரச வளங்களை நேரடியாகத்
துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும்.

சுகாதாரத்துறை தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்று
மீறப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccb5880-9d38-4586-91c0-2d0e65ee3087/26-6a9efdcdb5b4b.webp' /></p><p> தேர்தலுக்கு முன்னர் சுகாதாரத் துறைக்கான 'வட்' வரியை
நீக்குவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி, தற்போது மக்கள் தமக்குத் தேவையான
நேரத்தில் வைத்தியசாலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில்,
மருத்துவரின் பரிந்துரையுடனேயே வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்ற புதிய
முறையை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றார்.</p><p> இவ்வாறான நடவடிக்கைகள் இலவச சுகாதார
சேவையைப் படிப்படியாக இல்லாதொழிக்கும் முயற்சியாகும்.

அதேவேளை, 22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
சபாநாயகருக்குக் கிடைப்பதற்கு முன்னரே ஜனாதிபதி அது தொடர்பில் கருத்து
வெளியிட்டமை தவறான முன்னுதாரணமாகும்.</p><p> நீதிமன்றத் தீர்ப்பை முன்கூட்டியே
கணித்துச் செயற்பட முடியாது. அரசமைப்பு ரீதியான குழப்பங்களைத் தவிர்க்க இந்த
விவகாரம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு நடத்தப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது.</p><h2>மக்களின் வாழ்வாதாரம்</h2><p> </p><p>அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட
தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் காரணமாக சுமார் 10 ஆயிரம் மில்லியன் ரூபா
நட்டம் ஏற்பட்டுள்ளது.</p><p> துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் இரகசியமாக
வெளியேற்றப்பட்டமை மற்றும் திறைசேரிக்கு 2.5 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டமை
உள்ளிட்ட தவறான நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் கறுப்புப்
பொருளாதாரம் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c52877-9301-4206-b5c4-05af9bdba46f/26-6a9efdce6a2e6.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக அத்தியாவசியப் பொருள்களின்
விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சி அரசியலை அழிப்பதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பு
அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் ஜனநாயகத்துக்கு நேரடியான
அச்சுறுத்தலாகும். மக்கள் ஆணையின்றி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் எந்தவொரு
அரசையும் மக்கள் இறுதியில் விரட்டியடிப்பார்கள்.

எதிர்க்கட்சியை அச்சுறுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும்
பதிலளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T18:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷாந்தி படுகொலை இடம்பெற்று 30 ஆண்டுகள் – நினைவுகூரப்படும் செம்மணி படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/krishanthi-commemoration-in-chemmani-1788799887"></link>
            <id>https://tamilwin.com/article/krishanthi-commemoration-in-chemmani-1788799887</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை
மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை
மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
இன்றைய தினம்(7) திங்கட்கிழமை மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.
</p><p>
இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட
ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><h2>கிரிசாந்தி நினைவேந்தல்</h2><p>
</p><p>
1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம்
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த
போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.</p><p>

கிருஷாந்தியை, செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள்
அவதானித்து மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a95ed88-c20b-41f7-ba7d-424a55fdd048/26-6a9ef08d2723a.webp' /></p><p>

இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின்
சகோதரன், குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில்
வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய
சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ
முகாமில் விசாரித்துள்ளனர்.
</p><p>
அதனையடுத்து மாணவியைத் தேடிச் சென்ற மூவரையும் இராணுவத்தினர் படுகொலை
செய்திருந்தனர்.
</p><p>
அன்றைய தினம் நள்ளிரவு கிருஷாந்தி உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட நால்வரின்
உடல்கள் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைத்திருந்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T17:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் வேட்டைத் திருவிழா! குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788797698"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788797698</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா அல்லது ஒருமுகத் திருவிழா இன்று(7) சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா அல்லது ஒருமுகத் திருவிழா இன்று(7) சிறப்பாக இடம்பெற்றது.</p><p>

இதன்போது, முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆலய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
</p><p>
இதனை முன்னிட்டு கட்டியம் சொல்லப்பட்டதுடன், பாரம்பரிய மரபுகளுக்கு அமைவாக இடம்பெற்ற வீதி உலாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81132bdc-c963-4f39-a832-ae1e241a8765/26-6a9ee40eef06c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T16:19:58+00:00</updated>
        </entry>
    </feed>
