<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-25T15:33:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - அடுத்த மாதம் இடைத்தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-court-order-against-trump-1787669885"></link>
            <id>https://tamilwin.com/article/high-court-order-against-trump-1787669885</id>
            <summary type="text">அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தபால் மூல வாக்களிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்பின் நிர்வாகம் பிறப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தபால் மூல வாக்களிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்பின் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.</p><p>

ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு எதிராக 23 மாநிலங்கள் தாக்கல் செய்திருந்த மனுவை
விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட
அமர்வு, மாநிலங்கள் தாக்கல் செய்த சட்டப்பூர்வ கோரிக்கைகள் தற்போதைக்கு
முதிர்ச்சியற்றவை எனக் கூறி, 6-3 என்ற வாக்கு வித்தியாசத்தில் இத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
</p><h2>
தபால் சேவை மூலம் வாக்களிப்பு</h2><p>

எனினும், தபால் சேவை மூலமான வாக்களிப்பு தொடர்பான வேறொரு வழக்கில்
பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்னும் நடைமுறையில் உள்ளதால், ட்ரம்பின்
முழுமையான திட்டமும் உடனடியாக நடைமுறைக்கு வருமா என்பதில் இன்னும் தெளிவற்ற நிலை
காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e4c07b-ff78-4aca-9079-65ceb31be778/26-6a8dae5d18fda.webp' /></p><p>

முன்னதாக, தபால் மூல வாக்களிப்பில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம்
சாட்டியிருந்த ட்ரம்ப் நிர்வாகம், தகுதியான வாக்காளர்களின் பட்டியலை
மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததுடன், அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின்
அடிப்படையில் மட்டுமே தபால் வாக்குகளை விநியோகிக்க வேண்டும் என அஞ்சல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.</p><p>

இந்த உத்தரவு தொடர்பில் எழுந்துள்ள சட்டரீதியான சவால்கள் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த தீர்ப்பு அமெரிக்க
அரசியல் களத்தில் புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T15:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவை எப்படி அழைக்க வேண்டும்..! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுனில் ஹந்துனெத்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sunil-handunetti-statement-about-anura-1787667847"></link>
            <id>https://tamilwin.com/article/sunil-handunetti-statement-about-anura-1787667847</id>
            <summary type="text">அநுரகுமார திசாநாயக்கவை சேர் என அழைப்பதிலும், அவரை ஜனாதிபதி என்று அழைப்பதிலும் என்ன பிரச்சினை என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆவேசமாக வினவியுள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுரகுமார திசாநாயக்கவை சேர் என அழைப்பதிலும், அவரை ஜனாதிபதி என்று அழைப்பதிலும் என்ன பிரச்சினை என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆவேசமாக வினவியுள்ளார்.</p><p> 

அத்துரலிய, திப்போட்டுவாவவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தற்போது நல்ல இளைஞர்கள் குழுவால் ஆளப்படுகிறது என்பதை உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் அங்கீகரிக்கின்றன.</p><h2>என்ன பிரச்சினை?</h2><p> </p><p>

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, ​​நாம் அவரை ஜனாதிபதி என்று அழைத்தோம்; ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது, ​​நாம் அவரை ஜனாதிபதி என்று அழைத்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7312ca2a-f3cc-4087-9264-ddc1b1d4a38c/26-6a8daad16ae4f.webp' /></p><p> </p><p>

ஆனால் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்துள்ள போது, ​​அவரை ஐயா என்று அழைப்பதிலும், ஜனாதிபதி என்று அழைப்பதிலும் என்ன பிரச்சினை? </p><p>

முன்பு போலல்லாமல், இலங்கையில் சில நல்லவர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். சில படித்தவர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். 

அது மட்டுமல்ல, இலங்கையில் இப்போது ஒழுக்கம் இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T14:47:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியொன்றில் மர்மான உயிரிழந்த நபர் - 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199</id>
            <summary type="text">அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இன்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இன்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.</p><p>

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட விகாரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனியாகத் தங்கியிருந்த 67 வயதான ரோகன் அரியதிலகே என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர் பெந்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் சிற்றுண்டி தயாரிப்பாளராக பணிபுரிந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 சடலம் கண்டுபிடிப்பு</b></h2><p>இந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது மிகவும் சிதைந்து, வீங்கி, துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8e5257-b5b8-4ad2-b3dd-528328c76f1d/26-6a8da71160db6.webp' /></p><p>சுமார் 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். </p><p>

கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, உயிரிழந்த நபரின் அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த ஒருவர் சென்று பார்த்தபோது, ​​சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p>]]></content>
            <updated>2026-08-25T14:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெல்பத்தரவின் கைப்பேசியில் நடிகைகள் - அரசியல்வாதிகளின் தகவல்கள்! ஆராயப்படும் பல வங்கிக் கணக்குகள் - வெளிவரும் பகீர் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-contacts-in-kehelbaddara-phones-1787662910"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-contacts-in-kehelbaddara-phones-1787662910</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளிலிருந்து, ஏழு நடிகைகள், மாடல்கள் மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>

சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்தபோது, ​​ஒன்பது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கிடைத்துள்ளதாகவும், மேலும் ஏழு நடிகைகள், மாடல்கள் தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளதாகவும் CID கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>எட்டு கைபேசிகள் மீட்பு&nbsp;</h2><p> 

இது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமிருந்து எட்டு கைபேசிகள் மீட்கப்பட்டன.</p><p></p><p> அந்த சாதனங்களில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், புலனாய்வாளர்களால் அவற்றை மீட்க முடிந்தது. 

மீட்கப்பட்டவைகளில் 8841 தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள், 326000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1101 ஒலிப்பதிவுகள் மற்றும் 5039 காணொளிகள் ஆகியவை அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேர் தொடர்பான தகவல்களையும் புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 

இத்தகவல்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த கருவிகளில் 13 சிறை அதிகாரிகளுக்குச் சொந்தமான தொலைபேசி எண்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e444677-3207-4634-aee7-51f38c1e2af9/26-6a8d96d82facd.webp' /></p><h2>வங்கிக் கணக்குகள் ஆய்வு</h2><p> </p><p>இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் நபர்களுக்குச் சொந்தமான 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், புலனாய்வாளர்கள் 17 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தது.
</p><p>
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, கெஹெல்பத்தர பத்மே 2021 மே மாதம் இலங்கையிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேறியதிலிருந்து சுமார் 15 முறை 13 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் ஆகியவை அந்த நாடுகளில் அடங்கும். 

கெஹல்பத்ர பத்மே இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, சர்வதேச நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yjDbOIN7TvI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-25T14:38:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தடைகள் மற்றும் கடன் பத்திர மீள் கொள்வனவு: அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-sanctions-and-bond-buybacks-us-dollar-rises-1787666360"></link>
            <id>https://tamilwin.com/article/iran-sanctions-and-bond-buybacks-us-dollar-rises-1787666360</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானுக்கு எதிரான தடைகளை அமெரிக்கா விரிவுபடுத்தியதைத் தொடர்ந்தும்,
நீண்டகாலக் கடன் பத்திரங்களின் வட்டி வீதங்களைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்க
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானுக்கு எதிரான தடைகளை அமெரிக்கா விரிவுபடுத்தியதைத் தொடர்ந்தும்,
நீண்டகாலக் கடன் பத்திரங்களின் வட்டி வீதங்களைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்க
திறைசேரி மீள் கொள்வனவுகளை அறிவித்துள்ளதைத் தொடர்ந்தும், உலகளாவிய நிதிச்
சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு மீண்டும் வலுவடைந்துள்ளது.
</p><p>
ஈரானுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் உடனடியாக அத்தொடர்புகளைத்
துண்டிக்க வேண்டும் எனவும், தவறினால் டொலர் அடிப்படையிலான நிதி
அமைப்பிலிருந்து அவர்கள் நீக்கப்படுவர் எனவும் அமெரிக்கத் திறைசேரிச் செயலர்
ஸ்கொட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><h2>டொலரின் மதிப்பு உயர்வு</h2><p>
இதன் காரணமாக, எதிர்காலத்தில் டொலரைப் பயன்படுத்த முடியாமல் போவதைத்
தவிர்க்கும் நோக்கில் பல நாடுகளும் முதலீட்டாளர்களும் டொலர்களைக் கொள்வனவு
செய்யத் தொடங்கியுள்ளமை டொலரின் எழுச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
</p><p>
அதேவேளை, கடன் பத்திரச் சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைப்பதற்காக,
நீண்டகாலக் பிணைப் பத்திரங்களை மீளக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை
இரட்டிப்பாக்க அமெரிக்கத் திறைசேரி தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e1b3029-0307-4bfd-86e9-459618a4376e/26-6a8da18f0affe.webp' /></p><p> </p><p>இந்த நடவடிக்கை
அமெரிக்கக் கடன் பத்திரச் சந்தையில் தற்காலிக ஸ்திரத்தன்மையை
ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, யூரோ மற்றும் கனேடிய டொலர் ஆகிய நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க
டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது</p><p>அத்துடன் ஜப்பானிய யென்னுக்கு எதிராகவும் டொலர்
159.34 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், டொலரின் வீழ்ச்சி குறித்த அச்சம் காரணமாக கிரிப்டோகரன்சி சந்தையில்
பிட்கொயின் (Bitcoin) மதிப்பு மீண்டும் எழுச்சி பெற்று 80,000 டொலர்களைக்
கடந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T14:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-intend-hold-provincial-elections-1787667405"></link>
            <id>https://tamilwin.com/article/government-intend-hold-provincial-elections-1787667405</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(25.08.2026) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்
போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மாகாண சபைத் தேர்தல்</h2><p>

இதன்போது, மாகாண சபை தேர்தல் நடத்தப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி
கொட்டஹச்சி சமீபத்தில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி
எழுப்பப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a2f1f57-bc54-46ae-b09a-ad17f381865e/26-6a8da535557f9.webp' /></p><p>அதற்கு அவர் பதிலளிக்கையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றக் குழு
ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டக் கட்டமைப்பு மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்தவுடன் நிச்சயமாக
மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T14:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் இலங்கைக்கு ஏற்படவுள்ள தாக்கம்! அவசர கலந்துரையாடலில் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-impact-of-el-nino-on-sri-lanka-1787665508"></link>
            <id>https://tamilwin.com/article/the-impact-of-el-nino-on-sri-lanka-1787665508</id>
            <summary type="text">எல் நினோவின் பாதிப்பால் இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகள் மீதான தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், எந்தவொரு இடையூறுகளையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோவின் பாதிப்பால் இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகள் மீதான தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், எந்தவொரு இடையூறுகளையும் சமாளிப்பதற்கான தயாரிப்புகளை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் இன்றைய தினம் (25.08.2026) விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
</p><p>
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார்.</p><h2>அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு</h2><p> </p><p>

இந்த மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் இறக்குமதியாளர்களிடம் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்புகளை ஆய்வு செய்ததோடு, இலங்கை சுங்கத்துறையிடமிருந்து பெறப்பட்ட தொடர்புடைய தரவுகளையும் ஆராய்ந்தனர். </p><p>

நிலையான சந்தை விலைகளைப் பராமரிக்கும் அதேவேளையில், பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், உலர்ந்த மீன் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்தும் இறக்குமதியாளர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd2905a-8a34-4c58-8768-fb0748132585/26-6a8da1c8cd1a7.webp' /></p><h2>மாற்றங்களால் ஏற்படக்கூடிய பற்றாக்குறை</h2><p> </p><p>

மோசமான வானிலை மற்றும் உலகளாவிய விநியோக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படக்கூடிய பற்றாக்குறைகள் மற்றும் விலை உயர்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தியது. </p><p>

சந்தை நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், உருவாகும் பற்றாக்குறைகள் அல்லது விலை அழுத்தங்களைச் சமாளிக்கத் தேவையான முடிவுகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T14:09:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி யுத்தத்தில் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கிய நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-aids-families-of-war-victimsv-1787665129"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-aids-families-of-war-victimsv-1787665129</id>
            <summary type="text">&amp;nbsp;2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு
உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று(25.08.2026)&amp;nbsp; இடம்பெற்றுள்ளது.&amp;nbsp;உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு
உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று(25.08.2026)&nbsp; இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><h2>உதவித்தொகை வழங்கும் நிகழ்வு&nbsp;</h2><p>
</p><p>
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில், 2009ஆம் ஆண்டு யுத்த
காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கான உதவித்தொகை வழங்கும்
நிகழ்வு கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகைகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற நீதி
அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, குடும்பத்தினருடன் கலந்துரையாடி
அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன், உதவித்தொகைக்கான
காசோலைகளையும் வழங்கி வைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a984545-62f6-4dc1-bc9f-fa31c2775a44/26-6a8d9cf9245a0.webp' /></p><p>காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போதைய அரசு மிகவும் கரிசனையுடன்
செயற்பட்டு வருகின்றது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வழிகளிலும்
உதவுவதற்கு அரசு தயாராக இருக்கின்றது என்றும் நீதி அமைச்சர் இதன்போது
தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன், 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்ட இணைப்பாளர் மருங்கன்
மோகன் மற்றும் கிளிநொச்சி அபிவிருத்திக் குழு இணைப்பாளர் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T14:07:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம் எங்கள் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் - கிண்ணியா பிரதேசசபை உறுப்பினர் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-cloth-issue-threaten-1787656888"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-cloth-issue-threaten-1787656888</id>
            <summary type="text">கல்முனை வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் ஆடை பிரச்சினையானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் ஆடை பிரச்சினையானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல்
ஹாதி தெரிவித்துள்ளார்.</p><p>


நேற்று (24.08.2026) நடைபெற்ற கிண்ணியா பிரதேச சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சிறுபான்மை சமூகத்தின் உரிமை</h2><p>
</p><p>


அவர் மேலும் தெரிவிக்கையில், அமைதியான சூழலில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை பறிக்கும்
வகையில் வைத்தியசாலை நிர்வாகத்தின் அதிகாரம் படைத்த சில அதிகாரிகளால்
மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, நாட்டில் சமத்துவத்தையும் ஊழலற்ற
நல்லாட்சியையும் ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின்
வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதாக அமைகின்றது.
</p><p>

இலங்கை முஸ்லிம் சமூகம் பழங்காலம் தொட்டே இந்த நாட்டிற்கும் அதன்
தலைவர்களுக்கும் என்றும் விசுவாசமாகவே செயற்பட்டு வந்துள்ளது என்பதை வரலாறு
சான்றளிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5d1da79-8589-4fcf-a137-62d96a420cb9/26-6a8d7edba5e69.webp' /></p><p>போர்த்துக்கேயரின் மதக் கெடுபிடிகளினாலும் இன அழிப்பு நடவடிக்கைகளினாலும்
கரையோரப் பகுதி முஸ்லிம் சமூகம் துரத்தப்பட்டபோது, கண்டி மன்னன் இரண்டாம்
ராஜசிங்கன் சுமார் 4000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை பாதுகாப்பாக மீட்டு
கண்டி மற்றும் கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று பகுதியில் குடியேற்றி
அரவணைத்தான்.</p><p>

1818ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக வெடித்த கிளர்ச்சியில் கண்டி
மன்னனின் விசுவாசிகளாக சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம்கள் தியாகங்களை
செய்தனர். </p><p>

அதேபோல், இலங்கை தேசிய காங்கிரஸில் இணைந்த முஸ்லிம் தலைவர்கள்
(டி.பி. ஜாயா போன்றோர்), "இலங்கை எனது நாடு, சிங்கள மக்கள் எனது மக்கள்" என
பிரகடனப்படுத்தி, முழு சுதந்திர இயக்கத்திற்கும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர்.
</p><h2>
தேசிய ஒருமைப்பாடு</h2><p>

நாட்டை சூறையாடிய கொடூர யுத்த காலத்திலும், நாட்டின்
தனித்துவத்தை பாதுகாக்கவும் "ஒரே இலங்கை" என்ற கொள்கையை நிலைநாட்டவும்
கீழ்மட்டம் முதல் உயர் அதிகாரிகள் வரை முஸ்லிம் சமூகம் பாரிய பங்களிப்பை
செய்துள்ளது.
</p><p>

இவ்வளவு வரலாற்றுச் சான்றுகளையும் அர்ப்பணிப்புகளையும் கொண்ட ஒரு
சமூகத்திற்கு, இன்று ஒரு சாதாரண நிறுவன மட்டத்திலான சுற்றறிக்கையை காரணம்
காட்டி, மத சுதந்திரத்தையும் தான் விரும்பிய இடத்தில் தொழில் புரியும்
உரிமையையும் மறுப்பது எமது மக்களைப் பாரிய அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f8ca531-0db7-4368-a62e-13b8aecc04f0/26-6a8d7edae9a6d.webp' /></p><p>அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்குக்கூட பாரிய அதிகாரத்தை
கொண்டிருக்கும் இந்த அரசாங்கம், இந்தச் சிறிய சுற்றறிக்கை சிக்கலை ஒரு சாட்டாக
வைத்து இன முரண்பாடுகள் உருவாவதை தடுக்க உடனடியாக தலையிட வேண்டும்.
</p><p>
எனவே, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தான் விரும்பிய இடத்தில் தொழில் புரியும்
உரிமையையும் மதச் சுதந்திரத்தையும் உடனடியாக உறுதிசெய்வதுடன், இன
நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை மிகவும் அழுத்தமாக வலியுறுத்திக்
கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T13:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை அதிகரிப்பு தொடர்பில் மக்கள் கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-opinion-increasing-age-three-wheel-drivers-1787662471"></link>
            <id>https://tamilwin.com/article/public-opinion-increasing-age-three-wheel-drivers-1787662471</id>
            <summary type="text">முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வயதெல்லை தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்போது இந்தத் தொழிலை நம்பியுள்ளவர்கள் வருமானத்தை
இழக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வயதெல்லை தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்போது இந்தத் தொழிலை நம்பியுள்ளவர்கள் வருமானத்தை
இழக்கும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அத்துடன் இன்னும் சிலர் அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் வரவேற்கத்தக்கது என குறிப்பிடுகின்றனர்.</p><h2>முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வயதெல்லை</h2><p> </p><p>இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில், இன்றைய சூழ்நிலையில் பல இளைஞர்கள் கல்வியை இடைநிறுத்திய பின்னர், விரைவாக
சுயதொழிலில் ஈடுபடும் நோக்கில் முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்து சாரதிகளாக
பணியாற்றத் தொடங்குகின்றனர்.</p><p>

எனினும், குறைந்த வயதிலேயே வீதிப் போக்குவரத்தில் ஈடுபடும் சிலரிடம் போதிய
பொறுமை, பக்குவம், அனுபவம் மற்றும் பொறுப்புணர்வு இல்லாத நிலை
காணப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c569873-2829-4c67-b422-f552a9bd1f14/26-6a8d9682a61b4.webp' /></p><p>இதன் காரணமாக வீதி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள்
மற்றும் நிரந்தர உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், பெற்றோரின் பணத்தை பயன்படுத்தி முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்து
தொழிலில் ஈடுபடும் சில இளைஞர்கள், எதிர்பார்த்த வருமானத்தை பெற முடியாமல்
பொருளாதார ரீதியிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
</p><p>
40 வயதுக்கு பின்னர் ஒருவரிடம் வாழ்க்கை அனுபவம், பொறுமை, பக்குவம் மற்றும்
பொறுப்புணர்வு அதிகரித்திருக்கும் என்பதால், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான
வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் வீதி பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.
</p><p>
அத்துடன், எவரும் நினைத்தவுடன் முச்சக்கரவண்டியை கொள்வனவு செய்து சாரதியாக
தொழிலில் ஈடுபடுவதால், வீதிகளில் முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.</p><h2>மாற்றுத் தொழில் வாய்ப்புகள்&nbsp;</h2><p> </p><p>அத்துடன் தொழிலை
நம்பி வாழும் சாரதிகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். 

எனினும், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் சில இளைஞர்களுக்கு பாதிப்பை
ஏற்படுத்தக்கூடும்.
</p><p>
கல்வியில் அல்லது பரீட்சைகளில் வெற்றிபெற முடியாத நிலையில், சாரதி
அனுமதிப்பத்திரத்தைப் பெற்று முச்சக்கரவண்டி சாரதிகளாக சுயதொழிலில் ஈடுபட்டு
வரும் பல இளைஞர்கள் உள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52599d24-33dd-40ef-97d5-4ae80c034130/26-6a8d968379bca.webp' /></p><p>இவ்வாறான நிலையில், வயதெல்லை தொடர்பான புதிய கட்டுப்பாடுகள்
நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்போது இந்தத் தொழிலை நம்பியுள்ளவர்கள் வருமானத்தை
இழக்கும் நிலை ஏற்படக்கூடும்.
</p><p>
எனவே, முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வயதெல்லையை அதிகரிப்பதற்கு முன்னர்,
இளைஞர்களுக்காக மாற்றுத் தொழில் வாய்ப்புகள் மற்றும் சுயதொழில் திட்டங்களை
அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும்.
</p><p>
இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, அதனைத் தொடர்ந்து
போக்குவரத்து மற்றும் சாரதி உரிமம் தொடர்பான புதிய சட்டங்களை
நடைமுறைப்படுத்தினால், அது அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T13:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான வயது வரம்பு! அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minimum-age-limit-for-three-wheeler-driver-1787648809"></link>
            <id>https://tamilwin.com/article/minimum-age-limit-for-three-wheeler-driver-1787648809</id>
            <summary type="text">முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவை அரசாங்கம் இன்னும் பரிசீலிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவை அரசாங்கம் இன்னும் பரிசீலிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (25.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p>சமீபத்தில், முச்சக்கரவண்டிகள் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்திருந்தார்.</p><p>இந்த நிலையில் இன்று அமைச்சர் நளிந்த கூறுகையில், பாடசாலை படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அல்லது கபொத உயர்தரம் முடித்தவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பல முன்மொழிவுகள் வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865da93e-e618-4083-b43d-60d4dd440045/26-6a8d6e2ee4170.webp' /></p><h2>தொழிற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள்</h2><p>ஆனால் இது தொடர்பான இறுதி முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்படும். பாடசாலை படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், கபொத உயர்தர தேர்வுக்குப் பிறகு படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் சில குறிப்பிட்ட குழுவினருக்கு தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்குவது தொடர்பாக பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. </p><p>அந்த முன்மொழிவுகளில் சில செயல்படுத்தப்பட்டு வருகின்றன, ஆனால் அரசாங்கம் குறிப்பிட்ட அந்த முன்மொழிவை இன்னும் பரிசீலிக்கவில்லை. </p><p>பல்வேறு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் இந்தத் திட்டங்களில் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கலாம், ஆனால் இறுதியில் என்ன செய்வதென்று அரசாங்கமே முடிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T13:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் அராஜகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-north-slogans-no-more-omb-s-deception-1787651468"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-north-slogans-no-more-omb-s-deception-1787651468</id>
            <summary type="text">புதிய இணைப்புஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் இடம்பெற்ற மாபெரும்
போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் ஒன்று அரங்கேறியுள்ளது.குறித்த போர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் இடம்பெற்ற மாபெரும்
போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் ஒன்று அரங்கேறியுள்ளது.</p><p>குறித்த போராட்டமானது&nbsp;உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின்
இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே நடத்தப்பட்டது.</p><p>இதன்போதே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் அராஜகங்களைப் புரிந்துள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6rlFvYJkhjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் என இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தப் போராட்டமானது இன்று( 25.08.2026)&nbsp; யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் முன்பாக நடைபெற்றுள்ளது.</p><h2>கவனயீர்ப்பு போராட்டம்</h2><p>காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab15f769-ab5f-46cf-a215-121bd92844f8/26-6a8d689256661.webp' /></p><p>உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடு வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
</p><p>
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3230f466-f888-4146-a125-8f831c571da8/26-6a8d68917de8b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T12:43:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழ்வுகளில் மின்விளக்குகள் மற்றும் வாணவேடிக்கைகளை பயன்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-decision-use-of-lights-fireworks-events-1787658549"></link>
            <id>https://tamilwin.com/article/important-decision-use-of-lights-fireworks-events-1787658549</id>
            <summary type="text">திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட
மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை
ஒழுங்குபடுத்துவதற்காக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட
மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை
ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக
உடனடியாக&nbsp; தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று
(25.08.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக்
கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
</p><h2>சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை</h2><p>
கடந்த 20ஆம் திகதி பண்டத்தரிப்பு, பிரான்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள முருகன்
கோயில் திருவிழாவின் போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள் மற்றும்
வாணவேடிக்கைகளின் தாக்கத்தால் 500இற்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான
சம்பவத்தைத் தொடர்ந்து, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில்
முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இக்கலந்துரையாடல்
இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b5259ae-a89e-4702-8e77-a0308c617b31/26-6a8d8a15b5f30.webp' /></p><p>கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொழில்நுட்பம்
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் புதிதுபுதிதாக அறிமுகமாகும்
மின்விளக்குகள், ஒளியமைப்புகள் மற்றும் பிற கருவிகளின் பயன்பாடு தொடர்பில்
உரிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச்
சுட்டிக்காட்டினார். </p><p>பண்டத்தரிப்புச் சம்பவம், இத்தகைய ஒழுங்குமுறைகள்
இனிமேலும் தாமதிக்கப்படக் கூடாது என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக
அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்
அமைச்சர் இ.சந்திரசேகர், குறித்த சம்பவம் சமூகத்தில் பாரதூரமான தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்
இடம்பெறாத வகையில் தேவையான ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.</p><p>யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர்
ம.மலரவன், சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள்
பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் பிரதிகளை இதன்போது
முன்வைத்தார். </p><p>இத்தகைய ஒளிமூலமான பெருமளவிலான கண் பாதிப்பு சம்பவம் இலங்கை
வரலாற்றில் முதன்முறையாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்கள்</h2><p>சம்பவத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை உடனடியாக அவசர
மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொண்டு, கண் சிகிச்சைப் பிரிவு மற்றும் கண்
வெளிநோயாளர் பிரிவை தொடர்ச்சியாக இயக்கியதுடன், சுற்றுவட்டார
மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகளை ஒருங்கிணைத்து சிகிச்சைக்காக அனுப்புவதற்கான
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35843187-9576-4334-bc2b-e6078198fbd6/26-6a8d8a169101d.webp' /></p><p>பாதிக்கப்பட்ட அனைவரும் சுமார் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பில்
இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர் ம.மலரவன் குறிப்பிட்டார்.</p><p>அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே
காணப்படுகின்ற போதிலும், அவை நடைமுறையில் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை என
கண், காது, மூக்கு சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் இந்திரநாத்
சுட்டிக்காட்டினார். </p><p>ஒலி தொடர்பான கட்டுப்பாடுகளும் நடைமுறையில்
வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மேலும், தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளின் கீழ் பொதுத் தொல்லை தொடர்பான
நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்களை முழுமையாகப்
பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸாருடன் விரைவான கலந்துரையாடலை நடத்துவதற்கும்
அமைச்சர் மற்றும் ஆளுநர் இணக்கம் தெரிவித்தனர்.</p><p>எதிர்காலத்தில் எந்தவொரு திருவிழா அல்லது பொது நிகழ்விலும் பாதுகாப்பை விடக்
கொண்டாட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படக் கூடாது என்றும், மக்களின் உயிர்
மற்றும் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாடும் உரிய
பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே முன்னெடுக்கப்பட
வேண்டும் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T12:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாபன விதிக் கோவையை மீறிய சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் - எழுந்துள்ள சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chavakachcheri-council-secretary-violate-1787651004"></link>
            <id>https://tamilwin.com/article/chavakachcheri-council-secretary-violate-1787651004</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில்
இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக
பயன்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில்
இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக
பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.</p><p>இலங்கை நிர்வாக சேவை தரம் 2 இல் உள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியிடத்திற்குச்
செல்வதற்கு தனிப்பட்ட ரீதியில் அரச வாகனங்களை பயன்படுத்த முடியாது என நிர்வாக
அதிகாரிகளுக்கான தாபன விதிக்கோவையில் சொல்லப்பட்டுள்ளது.</p><h2>அதிகாரிகளுக்கான தாபன விதிக்கோவை</h2><p>
</p><p>
அத்துடன் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நிர்வாக சேவை அதிகாரிகள் இணைந்து
நாளொன்றுக்கு 50KMக்கு உட்பட்டு பயன்படுத்தலாம் எனவும் குறித்த விதிக்கோவையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு முரணாக சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி சபை
அனுமதித்தால் தான் வாகனம் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abf97850-2d7f-46c9-8537-654cdf468356/26-6a8d70f3c9dce.webp' /></p><p>

இதன்போது உறுப்பினர்களால் குறித்த தீர்மானம் தொடர்பில் உள்ளூராட்சி
ஆணையாளருக்கு அறிவித்து அவரது அனுதியின் பின்னரே வாகனத்தை பயன்படுத்துமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

எனினும் நகரசபையின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்காமல் தினமும் YY 3619
இலக்கமுடைய நகரசபையின் முச்சக்கரவண்டியில் சாவகச்சேரி நகரசபை எல்லை தாண்டி
சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லை தாண்டியும் வலிகாமம் - கிழக்கு பிரதேச
சபைக்குள் உரும்பிராய் வரையும் தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு தடவைகள் சுமார் 80KM வரை பயணித்துள்ளார்.</p><h2>அதிகாரத்தை தவறாக&nbsp;பயன்படுத்தல்</h2><p>
</p><p>
அத்துடன் வாகனப் போக்குவரத்து பதிவேடுகளில் தினமும் இரண்டு தடவைகள் சாவகச்சேரி
நகராட்சி மன்றத்தில் இருந்து உரும்பிராய் சென்று வருகின்றமை தொடர்பில் பதிவு
செய்யாமல் நகரசபை எல்லைக்குள் பல தடவைகள் பயணித்தமையும் எரிபொருள் நிரப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d1bc00b-54aa-4a42-a554-6633b99525fa/26-6a8d70f2d742f.webp' /></p><p>இதேவேளை நகரசபையின் தவிசாளர் தனது அலுவலக கடமைகளுக்கு கூட இதுவரை தனது சொந்த
வாகனத்தினையே பயன்படுத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்
சபையின் செயலாளர் அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துகின்றார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.</p><p>
சாவகச்சேரி நகராட்சி மன்றில் இதுவரை செயலாளர்களாக கடமையாற்றியவர்கள் தூர
இடங்களில் இருந்தாலும் தமது சொந்த வாகனங்களிலேயே அலுவலகத்துக்கு வந்துள்ளதோடு
அலுவலக கடமைகளுக்கு மட்டுமே சபையின் வாகனங்களை பயன்படுத்தியமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T12:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்படவுள்ள நீதிக்கான நீள் பயணம்! விடுக்கப்பட்டுள்ள கோரி்க்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-missing-person-protest-1787659131"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-missing-person-protest-1787659131</id>
            <summary type="text">அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் &#039;நீதிக்கான நீள் பயணம்&#039; என்ற நிகழ்வை காணாமல்
ஆக்கப்பட்ட உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் 'நீதிக்கான நீள் பயணம்' என்ற நிகழ்வை காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி வரும் எங்களுடைய தாய்மார்கள்
முன்னெடுக்கும் செயல்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க
வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளரும், மனித உரிமைகள் ஆர்வலருமான
யே.யாட்சன் பிகிறாடோ கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
மன்னாரில் இன்று (25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>நீதிக்கான நீள் பயணம்</h2><p> அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30. யாழ்ப்பாணத்தில்
“நீதிக்கான நீள் பயணம்” என்ற நிகழ்வை, எங்களுடைய காணாமலாக்கப்பட்ட நீண்ட
காலமாக போராடி வரும் எங்களுடைய தாய்மார்கள் இந்த செயற்பாட்டினை
முன்னெடுக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfe86091-c3aa-4799-8b68-229dc8551a1a/26-6a8d83dc9c298.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா மண்டபத்தில் அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.
அவர்களுக்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் ஆதரவுகள் அவர்களுக்கு பெருகி கொண்டு வருகின்றன.
</p><p>
சிவில் சமூகமாக இருக்கலாம், சமூக ஆர்வலர்களாக இருக்கலாம் மற்றும் சர்வதேச
அமைப்புகளாக இருக்கலாம், இன்னும் பல்வேறு அமைப்புகள் அவர்களுக்கு ஆதரவு வழங்கி
வருகின்றார்கள்.</p><p>அந்த வகையில், சிவில் சமூகமாக நாங்களும் அவர்களுக்கான ஆதரவினை
வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்.

அவர்களுடைய இந்த செயற்பாட்டை நாங்களும் அவர்களுடைய கருத்தை வலுப்படுத்தும்
நோக்கோடு, அவர்களுக்கு ஆதரவை தொடர்ந்து அனைவரும் வழங்க வேண்டும் என்பதை
நாங்களும் வலியுறுத்துகின்றோம்.</p><h2>&nbsp;வடகிழக்கில் யுத்தம் முடிவுற்று&nbsp; நீதி கிடைக்காத பயணம்</h2><p>
</p><p>
ஏனென்றால், இது ஒரு நீதிக்கான பயணம். இன்று வரைக்கும் தங்களுடைய பிள்ளைகளைத்
தேடிய தாய்மாரும், பிள்ளைகள் தங்களுடைய தாய் மார்களைத் தேடியதாகவும், உறவுகள்
சகோதரர்களைத் தேடியதாகவும் இந்த நிகழ்வு எங்களுடைய நாட்டில் வடகிழக்கில்
யுத்தம் முடிவுற்று இன்று வரை நீதி கிடைக்காத ஒரு பயணமாக அவர்கள் இன்று
வரைக்கும் வீதி வீதியாக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
</p><p>
அவர்களுடைய பயணம் நீதி கிடைக்கப்பட வேண்டும், உண்மை நிலைநாட்டப்பட வேண்டும்.
சர்வதேச ரீதியான தலையீடுகளுடன் அவர்களுடைய நீதியை அவர்கள் பெற்றுக் கொள்ள
வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக, அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர்
தினம் இந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>இந்த
தினத்திற்கு எங்களுடைய ஆதரவை நாங்கள் பலமாகத் தெரியப்படுத்துகிறோம்.

ஏனென்றால், இதை நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த நீதி பயணத்தில்
முன்னெடுப்பதற்கு இணைந்து கொள்வது ஒவ்வொருவருடைய மனிதப் பொறுப்பாகும்.
</p><p>
நாங்கள் மனித உரிமைகளை மதித்தவர்களாக, சிவில் சமூகங்களாக, மனித உரிமை
ஆர்வலர்களாக மற்றும் சமூகத்தைச் சேர்ந்த உங்களுடைய பணிகளை முன்னெடுக்கின்ற
பல்வேறு நபர்களும் அவர்களுக்கு இந்த ஆதரவு வழங்க வேண்டும் என்பதை இந்த
நேரத்தில் வினையமாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T12:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் - உணவு- உறையுள் வழங்கியவரே கொலை செய்த 'பஸ் லலித்'! மறைந்திருக்கும் பல மர்மங்கள் துலக்கம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-reveal-crimes-linked-to-bus-lalith-1787656958"></link>
            <id>https://tamilwin.com/article/police-reveal-crimes-linked-to-bus-lalith-1787656958</id>
            <summary type="text">&amp;nbsp; ஹங்வெல்ல பஸ் நிலையத்தில் மெலிந்த உடலமைப்புடன் வேலைக்காக காத்திருந்தவரை அழைத்து சென்று உணவு உறையுள் வழங்கியது மட்டுமல்ல தனது பஸ்ஸில் நடத்துனராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹங்வெல்ல பஸ் நிலையத்தில் மெலிந்த உடலமைப்புடன் வேலைக்காக காத்திருந்தவரை அழைத்து சென்று உணவு உறையுள் வழங்கியது மட்டுமல்ல தனது பஸ்ஸில் நடத்துனராக தொழில் வழங்கியவரையே இறுதியில் கப்பம் கொடுக்கவில்லை என படுகொலை செய்த படுபாதக கொடுமையை செய்தவர் தான் லலித் கண்ணங்கர என்றழைக்கப்படும் பஸ் லலித் ஆவார்.
</p><p>டுபாயில் பல காலத்திற்கு முன் கைது செய்யப்பட்டவர் இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>இவருக்கு எதிராக எட்டு கொலைக் குற்றச்சாட்டு மற்றும் கப்பம் மற்றும் அச்சுறுத்தல் என பல குற்றங்களை செய்தவராவார்.லலித் கண்ணங்கர என்ற 'பஸ் லலித்' 72 மணிநேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர்&nbsp; உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.பஸ் லலியின் மறைந்துள்ள மர்மங்கள்..</p><p></p><h2>ஹங்வெல்ல பஸ் நிலையத்தில் ஆரம்பமான விதம்</h2><p>ஹங்வெல்ல நகர பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த மெலிந்த உடலமைப்பைக் கொண்ட இளைஞன் மீது வஜிர நிசாந்த என்ற தொழிலதிபர் அவதானித்தார். தனியார் பஸ்களின் ஓட்டுநர்கள் அருகே சென்று அவர்கள் முன்னிலையில் கெஞ்சும் விதத்தைக் கண்ட அவர் நிசாந்தவின் மனதில் ஏதோ ஒரு கவலை ஏற்பட்டது. </p><p>வஜிர இந்த மெலிந்த இளைஞனை அழைத்தார். 'நான் சில நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பிஇ நீ இங்கே டிரைவர்களிடம் குனிந்து நெளிந்து தற்காலிக வேலை கேட்கிறாய். வேலை எதுவும் இல்லையா?' என்று. </p><p>'ஐயோ இல்லை அண்ணா நான் ஒன்று இரண்டு நாட்கள் இந்த பஸ்களில் நடத்துநராக வேலை செய்தேன். ஆனால் அவர்கள் எனக்கு தினமும் வேலை தருவதில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் வாழ்கிறேன். </p><p>அண்ணனுக்கு புண்ணியமாகப் போகும் முடிந்தால் எனக்கு ஒரு வேலை கொடுங்கள்' என்று அந்த மெலிந்த இளைஞன் வஜிரவின் முன்னிலையில் கெஞ்சினான். அப்போது வஜிரவுக்கு அந்த மெலிந்த இளைஞன் மீது மிகுந்த இரக்கம் ஏற்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e2c391b-e8bf-4c54-9cc8-f02bc851fa13/26-6a8d7b01057e5.webp' /></p><p>'சரி தம்பிஇ நீ நாளை முதல் என்னுடைய பஸ்ஸில் நடத்துனர் வேலைக்கு வா. ஆனால் நேர்மையாக வேலை செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் என்னிடம் நிலைத்து நிற்க முடியும்.'
</p><p>வஜிர நிசாந்தவுக்குச் சொந்தமான பஸ்ஸில் நடத்துனர் வேலையைப் பெற்றுக்கொண்ட லலித் கன்னங்கர நீண்ட காலமாக அந்த வேலையைச் செய்து வந்தான். வஜிர நிசாந்த என்பவர் மிகவும் நற்குணங்கள் கொண்ட ஒரு தொழிலதிபர். </p><p>ஹங்வெல்ல நிலுவன்துடவையை வசிப்பிடமாகக் கொண்ட வஜிர இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். ஆறு ஏழு பஸ்களின் உரிமையாளரான அவர் ஹங்வெல்லயில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு பிரபல நபராக இருந்தார். </p><p>பஸ் போக்குவரத்து தொழிலுக்கு மேலதிகமாக வாகன விற்பனை நிலையம் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்து வந்த வஜிர பெரும் சொத்துக்களைக் கொண்ட ஒரு தொழிலதிபராக இருந்தார். </p><h2>
தங்க வைத்து உணவளித்த தொழிலதிபர்</h2><p>ஹங்வெல்ல பஸ் நிலையத்தில் ஆதரவின்றி தவித்துக்கொண்டிருந்த லலித் கன்னங்கரவுக்கு வேலையளித்துஇ அவனுக்கு ஒரு வருமான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்ததுஇ அவன் என்றாவது ஒரு நாள் நல்ல மனிதனாக மாறுவான் என்று நினைத்தே.&nbsp;</p><p>'தம்பி உனக்கு தங்குவதற்கும் இடம் இல்லை அல்லவா? அதனால் எங்கள் வீட்டில் தங்கி வேலை செய். நீ என்னிடம் நன்றாக நடந்து கொண்டால் உனது எதிர்காலம் நன்றாக இருக்கும்.' </p><p>வஜிர நிசாந்த இந்த முகமறியாத நபருக்குத் தனது வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தhர்.ஆனால் லலித் கன்னங்கர ஒரு மிருகத்தனமானவன் என்பதை வஜிர நிசாந்த கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. </p><p>ஹங்வெல்லவுக்கு வரும்போதே இவன் பல மோசமான செயல்களைச் செய்திருந்தது. வஜிரவுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
லலித் கன்னங்கர எம்பிலிபிட்டிய பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமத்தில் பிறந்தவன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a302031d-e265-4d78-97ec-3b6e64ea8256/26-6a8d7b0050f46.webp' /></p><p>சரியான கல்வி கிடைக்காததாலேயே அவனால் நல்லதொரு வேலையைச் செய்ய முடியாமல் போனது. 
எம்பிலிபிட்டியவில் பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட லலித் கன்னங்கரஇ முழு கிராமத்திற்குமே வெறுப்பை ஏற்படுத்திய ஒரு நபராக மாறினான். </p><p>அழகிய பெண்கள் குளிக்கும் இடங்கள் மற்றும் இரவில் பெண்கள் ஓய்வெடுக்கும் அறைகளுக்குள் புகுந்து அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் கிரீஸ் மனிதன் லலித் கன்னங்கர தான் என தெரியவர 
கிராமத்தை விட்டு ஹங்வெல்லவுக்கு தப்பி ஓடினான். </p><p>அதற்கு மேல் அந்த கிராமத்தில் வாழ்வதற்கான சூழல் அங்கு இருக்கவில்லை. லலித்தின் இந்த தவறான நடவடிக்கைகளால் இறுதியில் குடும்பத்தினரும் அந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. </p><p>
வஜிரவின் வீட்டில் அனைவரின் நல்ல எண்ணத்தையும் பெற்று வேலை செய்து வந்த லலித்இ குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டினான். வஜிரவின் தாய் லலித் கன்னங்கரவை தனது சொந்தப் பிள்ளையைப் போலவே நடத்தினார். </p><p>உணவளித்தது மட்டுமன்றி லலித்தின் ஆடைகளைக் கூட வஜிரவின் தாயாரே துவைத்துச் சுத்தம் செய்து கொடுத்துள்ளார். </p><h2>
லலித் ஆரம்பித்த புதிய வியாபாரம்</h2><p>நடத்துனர் வேலை செய்யும் அதேவேளையில் லலித் கன்னங்கர பணத்தைச் சேமிக்கத் தொடங்கினான். பஸ் வருமானத்திலிருந்து தினமும் ஒரு தொகைப் பணத்தைத் திருடிச் சேமித்த லலித் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற கனவோடு அந்தப் பணத்தைச் சேமித்தான்.</p><p>சில வருடங்கள் கழிந்த நிலையில் நான் ஹங்வெல்ல பக்கத்தில் ஒரு சிறிய கடை பார்த்திருக்கிறேன். அதில் ஒரு கம்யூனிகேஷன் தொடங்க வேண்டும் என்று ஒரு நாள் லலித் தனது முதலாளியான வஜிரவிடம் கூறினான்.
</p><p>பஸ் நடத்துனர் வேலைக்கு விடை கொடுத்த லலித் ஹங்வெல்ல நகரில் ஒரு கம்யூனிகேஷன் வர்த்தகத்தை தொடங்கினான். இக்காலகட்டத்தில் கடுவெல பாதாள உலகத்தில் கொடிகட்டிப் பறந்தவன் தான் 'ரணாலே சமயன்'. </p><p>சமயனின் பாதாள உலக ஆதிக்கம் ஹங்வெல்ல பிரதேசம் முழுவதும் பரவியிருந்தது. லலித் கன்னங்கரவுக்கும் இந்த பாதாள உலகத்தைப் பற்றி விவரிக்க முடியாத ஆர்வம் இருந்தது.அதனாலே அவர் மெதுவாக பாதாள உலகத்துடன் இணைந்து கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:56:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹெல்பத்தர பத்மே! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kehelpatara-padme-appears-in-court-1787648051"></link>
            <id>https://tamilwin.com/article/kehelpatara-padme-appears-in-court-1787648051</id>
            <summary type="text">புதிய இணைப்புதடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவை செப்டம்பர்&amp;nbsp; 03 ஆம் திகதி வரை விளக்கமற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவை செப்டம்பர்&nbsp; 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபர்&nbsp; இன்று (25)&nbsp; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><h2>முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>கெஹெல்பத்தர பத்மே மற்றும் மேலும் மூன்று பேர் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26a556ed-235a-4174-ac66-8d72aa070c9a/26-6a8d5af109b7f.webp' /></p><p>இதுவரை சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (25) முதன்முறையாக கெஹல்பத்தர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Lstyt6kDUJU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்களை அழிக்க அரங்கேற்றிய துப்பாக்கிச்சூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shootings-to-destroy-evidence-1787649926"></link>
            <id>https://tamilwin.com/article/shootings-to-destroy-evidence-1787649926</id>
            <summary type="text">

கடந்த சில நாட்களாக நாட்டில் ஆங்காங்கே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அனைத்தும் கடந்த கால குற்றங்களுடன் தொடர்புடைய ஆதாரங்களை அழிப்பதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கடந்த சில நாட்களாக நாட்டில் ஆங்காங்கே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அனைத்தும் கடந்த கால குற்றங்களுடன் தொடர்புடைய ஆதாரங்களை அழிப்பதற்காக நடத்தப்பட்ட சம்பவங்களாக இருக்கலாம் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். </p><p>

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
</p><p>
குற்றங்களைத் தடுப்பதற்கும், அவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><h2>சட்டம் ஒழுங்கு சீர்குலைவு</h2><p> 

இந்தக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை பொதுமக்கள் தங்களின் ஆணையின் ஊடாக எமக்கு தந்துள்ளனர். </p><p>


சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட 58 பாரிய குற்றவாளிகளை கடந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வந்துள்ளோம். அவர்கள் அந்த நாடுகளில் பெரிய மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர். சொகுசு வாகனங்கள் அவர்களிடம் உண்டு. </p><p> கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அங்கு சென்ற பல அரசியல்வாதிகள் இந்தக் குற்றவாளிகளுடன் சேர்ந்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311b4e02-b9c0-4a31-ba70-c2e0fd902996/26-6a8d6fbd64b81.webp' /></p><p>

எமது நாட்டில் சட்டம் மிகவும் சீர்குலைந்த நிலையில் இருந்தது. ஒரு அரசியல் தரப்பை மாத்திரம் அல்ல இது போன்ற பல அரசியல் குழுக்களை நாங்கள் அகற்றியுள்ளோம். அவர்களுள் பலர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பில் இருந்தார்கள்.</p><p> 

அழிவடைந்த நிலையில் இருந்த ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். தற்போது நிதி ரீதியக ஓரளவு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கின்றோம்.
</p><p>
அனைத்துத் துறைகளிலும் வருவாயைச் சேகரித்து நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XHniD5m9ays" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:32:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி விடுத்துள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-sunil-handunetti-statement-1787653905"></link>
            <id>https://tamilwin.com/article/minister-sunil-handunetti-statement-1787653905</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்
என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து
தரப்பினரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்
என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து
தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் என அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான
சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.</p><p>மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு
மண்டபத்தில் இன்றைய தினம் (25.08.2026) நடைபெற்றிருந்தது.</p><h2>விசேட மீளாய்வு</h2><p>

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த மே மாதம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு
விஜயம் மேற்கொண்டபோது நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக, நிகழ்நிலை ஊடாக கலந்து
கொண்ட அமைச்சரினால் விசேட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50ed595f-a8cb-4d20-88bc-c8cdc7feaba5/26-6a8d7b8710bbe.webp' /></p><p>
</p><p>
மேலும், பிரஜாசக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு
வரும் அபிவிருத்தித் திட்டங்கள், புதிய வீடமைப்புத் திட்டங்கள், சிறு
குளங்களைப் புனரமைத்தல், மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கான திட்டங்கள், விவசாய நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், மாவட்டத்தில் நீரை மிகவும்
சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப்
பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனத்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6707d9b5-f770-4301-acfe-7fcf1ace18a0/26-6a8d7b882b267.webp' /></p><h2>கலந்துரையாடல்</h2><p>
</p><p>
மேலும், மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல்
தரையை விடுவித்தல், முந்தானை ஆற்றை அபிவிருத்தி செய்தல், கிரான்
பொண்டுகள் - சேனைப் பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், மண்டூர் - குருமண்வெளி
மற்றும் பட்டிருப்பு பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம்,
அம்பிளாந்துறை - குருக்கள்மடம், திக்கிலிவெட்டை - சந்திவெளி மற்றும் நரிப்புல்
தோட்டம் - பங்குடாவெளி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய பாலங்களின்
நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8524a84-3b9a-4ce1-aca7-18664d5ba69b/26-6a8d7b8902683.webp' /></p><p>
</p><p>
அத்துடன், மனித - காட்டு யானை மோதல்கள், நெல் கொள்வனவு, களப்பு வாவியை
தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது மீளாய்வு
மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
மேலும், எல் நினோ தாக்கத்தினால் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை
குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு
இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மக்களை பாதுகாப்பதற்காக முன்னெடுக்க
வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cd80f2d-62c0-48f3-a0b9-c0ddae3dbcc8/26-6a8d7b89cd26e.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட குற்றக்குழு தலைவர்! பொலிஸார் வெளியிட்ட குற்றப்பட்டியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-lalit-police-investigation-1787633868"></link>
            <id>https://tamilwin.com/article/bus-lalit-police-investigation-1787633868</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களின் பட்டியலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் வெளியிட்டுள்ளார்.
</p><p>2013 ஹன்வெல்ல பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஒருவரை தாக்கியமை,2021 நெலுவந்தூடுவ தீவைப்புச் சம்பவம், 2021 துப்பாக்கிச்சூட்டு முயற்சி - கொலை செய்ய முயற்சி.</p><p>



2022 ஹன்வெல்ல தாக்குதல், 2022 ஹரஸ்புர துப்பாக்கிச் சூடு, 2023 பாதுக்க இரட்டைக் கொலை, 2024 ஹன்வெல்ல கொலை, 2024 நெலுவந்தூடுவ வர்த்தகர் கொலை.</p><p>


2025 கொஸ்மம துப்பாக்கிச் சூடு, 2025 கொழும்புத்துறை (கொல்லுப்பிட்டி) துப்பாக்கி வழக்கு, 2025 மீகொட கொலை: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கொலை, 2025 மீகொடவில் தப்பிச்செல்வதற்கு வசதியாக வானத்தை நோக்கி சுட்டமை ஆகிய சம்பவங்களில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இவர் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p> 

டுபாயிலிருந்து இன்று (25) நாட்டிற்கு லலித் கண்ணங்கரா தொடர்பாக பொலிஸ் பிரிவினால் இன்று நடத்தப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>கடுமையான குற்றச்சாட்டுகள்</h2><p>
</p><p>
அக்டோபர் 25, 2025 அன்று பொலிஸ் தலைமை அதிகாரிக்கு (IGP) கிடைத்த ஒரு சிறப்பு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fb55b1f-710a-49af-a3a3-3dcc2b765710/26-6a8d29b983f9d.webp' />&nbsp;</p><p>
</p><p>
போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் கொலை முயற்சி, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்துதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் மத்திய குற்றப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சட்டவிரோத சொத்துக்கள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவும் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>

2024-ஆம் ஆண்டு முதல் இன்டர்போலால் ரெட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை பொலிஸாரால் திரும்ப அழைத்து வர முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிவப்பு அறிவித்தல்</span></p><p>
இதற்கிடையில், ரெட் நோட்டீஸ் பெற்ற மேலும் 109 சந்தேகநபர்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>

ரெட் நோட்டீஸ் இல்லாத 38 சந்தேகநபர்கள் ஏற்கனவே நாட்டிற்கு திரும்ப அழைத்து வர முடிந்துள்ளது என்றும், வரும் நாட்களில் மேலும் பல சந்தேகநபர்களைத் திரும்ப அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a839f3-63ba-45ff-86e1-69785a8a1303/26-6a8d29ba32ab6.webp' /></p><p>
கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ள ரூ. 3,878 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.
</p><p>
2025-ஆம் ஆண்டில் மேலும் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைக் கையகப்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
 உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, இந்த சொத்துக்கள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டு, அரசாங்கத்தால் முழுமையாக கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/URucxM82z-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - பொலிஸ் சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-jeep-motorcycle-accident-driver-arrest-1787655147"></link>
            <id>https://tamilwin.com/article/police-jeep-motorcycle-accident-driver-arrest-1787655147</id>
            <summary type="text">மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள்
மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்தவர் படுகாயமடைந்த நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள்
மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவம் நேற்று(24.08.2026) இரவு இடம்பெற்றதையடுத்து பொலிஸ் சாரதியை கைது செய்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>பொலிஸார்&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் ஜீப் வண்டி சம்பவ
தினமான நேற்று இரவு சிறைச்சாலை நோக்கி பிரயாணித்து கொண்ட போது சிறைச்சாலை
சந்தியில் கோவிங்டன் வீதி ஊடாக சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி
விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a386b480-50bc-4e70-a53b-551e0462a7ca/26-6a8d7b01b5065.webp' /></p><p>இதில் படுகாயமடைந்தவர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p>
இதனையடுத்து பொலிஸ் வண்டியை செலுத்தி சென்ற பொலிஸ் சாரதியை கைது செய்து
அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிசார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T11:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் QR குறியீடு முறைமை பயன்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/qr-system-of-issuing-fuel-1787654467"></link>
            <id>https://tamilwin.com/article/qr-system-of-issuing-fuel-1787654467</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மோதல்கள் இன்னும் முடிவடையாததால், எரிபொருள் வழங்குவதற்கான கியூஆர் (QR) முறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மோதல்கள் இன்னும் முடிவடையாததால், எரிபொருள் வழங்குவதற்கான கியூஆர் (QR) முறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (25.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>எரிபொருள் வழங்குவதற்கு கியூஆர் முறை</h2><p>
</p><p>
மத்திய கிழக்கில் மோதல்கள் இன்னும் தீர்க்கப்படாததால், எரிபொருள் வழங்குவதற்கு கியூஆர் முறையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டியிருக்கும்

இருப்பினும், எரிபொருள் வழங்குவதற்கு கியூஆர் முறை பயன்படுத்தப்பட்டாலும், எரிபொருள் நுகர்வு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24d23f5-a42b-4052-b296-ae3ba360cd76/26-6a8d78671be87.webp' /></p><p>
</p><p>
மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

போர்ச்சூழல் இன்னும் முடிவடையவில்லை. ஹோர்முஸ் நீரிணையில் பல பிரச்சினைகள் உள்ளன. எண்ணெயின் விலை ஏறியும் இறங்கியும் வருகின்றது.</p><p>எண்ணெய் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒரு நாடாக, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, இந்த சூழல் முடிந்தவரை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
எண்ணெய் விலை அதிகரித்திருந்தாலும், கியூஆர் குறியீடு (QR code)நிறுவப்பட்டிருந்தாலும், டீசல் நுகர்வு 10% குறைந்துள்ளது.பெட்ரோல் நுகர்வு 9% குறைந்துள்ளது. அவை அத்தியாவசிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dCYiQVKA128" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி! பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/financial-fraud-norwood-divisional-secretariat-1787655356"></link>
            <id>https://tamilwin.com/article/financial-fraud-norwood-divisional-secretariat-1787655356</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது
செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம்
திகதிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது
செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம்
திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர்
போல் இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வசும பிரிவுக்குப் பொறுப்பாக செயற்பட்ட
ஹட்டன் - டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணொருவரும், ஹட்டன்-டிக்கோயா
காபெக்ஸ் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்</h2><p>

சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையான சட்டத்தரணிகள்,
சந்தேகநபர்களில் ஒருவர் கர்ப்பிணி தாயெனவும், அவரது சுகாதார நிலையைக்
கருத்திற்கொண்டு எந்தவொரு பிணை நிபந்தனையின் அடிப்படையிலும் இருவரையும்
பிணையில் விடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf050f6-5253-47d9-aef8-245d5d934816/26-6a8d74be75bac.webp' /></p><p>

முறைப்பாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் கருத்துகளை முன்வைத்த, ஹட்டன்
பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்,
“மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் மோசடி செய்யப்பட்ட தொகை தற்போது 250
இலட்சம் ரூபாயைக் (2.5 கோடி) கடந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டனர்.
</p><p>
அத்துடன், இந்த நிதி மோசடி தொடர்பில் நோர்வுட் பிரதேச செயலகத்தினால்
மேற்கொள்ளப்பட்டு வரும் தணிக்கை நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையாததால்,
சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><h2>பிரதேச செயலக அதிகாரிகள் வழங்கிய உறுதி</h2><p>

இருதரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும்
மீண்டும் செப்டம்பர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c35c692-7ec0-4425-b4dd-da7698201aa7/26-6a8d74bf2d5fb.webp' />&nbsp;</p><p>

இதனிடையே, நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும கணக்கில் பணம் வைப்பிலிடப்படாத
பயனாளிகள் நேற்று (24) நோர்வுட் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமது
கணக்குகளைப் பரிசோதிப்பதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.</p><p>

இதன்போது, அஸ்வெசும பயனாளிகளின் பெயர் பட்டியல் விரைவில் தமது அலுவலகத்திலும்
கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
எனப் பிரதேச செயலக அதிகாரிகள் பயனாளிகளிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:56:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் அக்டோபருக்கு பின் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/danger-await-sri-lanka-due-to-the-el-nino-effect-1787654860"></link>
            <id>https://tamilwin.com/article/danger-await-sri-lanka-due-to-the-el-nino-effect-1787654860</id>
            <summary type="text">எல் நினோவின் தாக்கம் காரணமாக எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்&amp;nbsp;சாதாரண மழைவீழ்ச்சியை விடவும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோவின் தாக்கம் காரணமாக எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்&nbsp;சாதாரண மழைவீழ்ச்சியை விடவும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின்&nbsp;பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தரவுப் பகுப்பாய்வில் வெளியான தகவல்</h2><p>அடுத்த 6 மாதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சாதாரண ஆண்டின் 30% மழைவீழ்ச்சி இந்த இரண்டு மாதங்களில் கிடைக்கிறது. அப்படியிருக்கும் போது இது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், பலத்த மழை பெய்து குளங்கள் நிரம்பிச் சிலவேளைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04558ec0-d9c4-46bc-bd65-df5b0d15df30/26-6a8d72cec7ee3.webp' /></p><h2>மழை பரவலாகப் பெய்யும்</h2><p> </p><p>அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஆகும்போது இலங்கை முழுவதும் மழை பரவலாகப் பெய்யும். பலத்த மழை பெய்யக்கூடும். வெள்ளப்பெருக்கு நிச்சயமாக வரும் என்று கூற முடியாது, எனினும் எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். </p><p>வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

 

இதேவேளை, டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதிகளில் எல் நினோ நிலைமை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:49:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று இரத உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chariot-festival-of-goddess-durga-in-tellipallai-1787651527"></link>
            <id>https://tamilwin.com/article/chariot-festival-of-goddess-durga-in-tellipallai-1787651527</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று
(25.08.2026) இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது

தெல்லிப்பழை துர்க்கை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று
(25.08.2026) இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது
</p><p>
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2026 மகோற்சவ பெருவிழாவில் இன்று
காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று காலை
வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான்
ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.</p><h2>நாளை தீர்த்த திருவிழா</h2><p>துர்க்கை அம்மன் வசந்த
மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி தேரேறி பக்தர்கள் வடம் பிடித்து
இழுக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ரத உற்சவம் இனிதே நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ee0de33-201c-413b-9890-4a1754eadd7d/26-6a8d6841718eb.webp' /></p><p>

12 நாட்களை கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் கடந்த. 15ஆம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பான மகோற்சவத்தில் 10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் தினமும் நடைபெற்றது.</p><p>இந்நிலையில் 11ஆம் நாளான இன்று (25) இரத உற்சவமும் 12ஆம் நாள் திருவிழாவாக
நாளை (26) தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:07:26+00:00</updated>
        </entry>
    </feed>
