<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-03T09:15:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/holidays-for-central-province-schools-1785721272"></link>
            <id>https://tamilwin.com/article/holidays-for-central-province-schools-1785721272</id>
            <summary type="text">புதிய இணைப்புநுவரெலியா மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளைய தினமும்(04/07/2026) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.&amp;nbsp;நிலவி வரும் சீரற்ற காலநிலையை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நுவரெலியா மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளைய தினமும்(04/07/2026) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நிலவி வரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக&nbsp; மாவட்ட கல்விப் பிரிவுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின்&nbsp; நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்தமலை மற்றும் ஹகுரங்கெத்த ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. </p><h3>இரண்டாம் இணைப்பு</h3><p>மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலையங்களில் உள்ள பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​</p><p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

​</p><p>இதற்கமைய, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​</p><p> </p><p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>பாடசாலைகளுக்கான விடுமுறை</h2><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f46d3b6-986d-4567-9c08-4e393c93cc7a/26-6a6ff501880ff.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.</p><p>நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6JYetNXTCG8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-03T09:01:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா-வட்டவளை பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/watawala-records-highest-rainfall-severe-weather-1785745287"></link>
            <id>https://tamilwin.com/article/watawala-records-highest-rainfall-severe-weather-1785745287</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்தில் நுவரெலியா-வட்டவளை பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.அத்தோடு,&amp;nbsp; டொலொஸ்பாகே (172.0 மி.மீ), நாவலப்பிட்டி (153.4 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்தில் நுவரெலியா-வட்டவளை பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p>அத்தோடு,&nbsp; டொலொஸ்பாகே (172.0 மி.மீ), நாவலப்பிட்டி (153.4 மி.மீ), ஹட்டன் (148.4 மி.மீ), கிதுல்கல (140.8 மி.மீ), ஹுனுகல் ஓயா (137.8 மி.மீ), கொட்டகலை (137.1 மி.மீ.), 137 மி.மீ. வெவெல்வத்த (112.4 மி.மீ) மற்றும் வலேபொட (101.2 மி.மீ.) ஆகிய இடங்களிலும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p>சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>நிலச்சரிவு அபாயம்</h2><p>
மத்திய உயர்நிலப்பகுதிகள் மற்றும் இரத்தினபுரி, கேகாலை, காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad461e5b-d262-43fd-ad36-420d2b01d1b1/26-6a70571ee47e9.webp' /></p><p>
</p><p>மேலும், நிலச்சரிவு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி - கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extreme-weather-alert-kadugannawa-road-closed-1785745497"></link>
            <id>https://tamilwin.com/article/extreme-weather-alert-kadugannawa-road-closed-1785745497</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால்&amp;nbsp;கண்டி - கொழும்பு பிரதான வீதி, பஹால கடுங்கன்னாவ பகுதியிலிருந்து மூடப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால்&nbsp;கண்டி - கொழும்பு பிரதான வீதி, பஹால கடுங்கன்னாவ பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்தோடு,&nbsp; கண்டி - கணேதன்ன வீதியும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை</h2><p>இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மறுஅறிவித்தல் வரும்வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6145558-958e-4faf-8024-b946d5766a6c/26-6a7053d4ae0e2.webp' /></p><p>மேலும்,ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:36:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பிரசவிக்க தயாரான கர்ப்பிணி தாய் உயிரிழப்பு - இரத்த பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-child-die-from-dengue-fever-1785722563"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-child-die-from-dengue-fever-1785722563</id>
            <summary type="text">களுத்துறை - வாதுவை பகுதியில் கர்ப்பிணி தாயொருவரும் சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை - வாதுவை பகுதியில் கர்ப்பிணி தாயொருவரும் சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. </p><p>

முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், குறித்த கர்ப்பிணி தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

வாதுவையை சேர்ந்த 34 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>பரிசோதனையில் வெளியான தகவல்</h2><p>
</p><p>
குறித்த பெண்ணுக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் மூலம் காய்ச்சல் தணிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345b8b3a-4ec7-43f8-86c7-a6dec8598a78/26-6a7051146290d.webp' /></p><p>

எனினும், மலச்சிக்கல் உபாதை காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பதற்கான பரிசோதனைகளின் போது அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

எனினும், குறித்த தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி இல்லாத காரணத்தினால், அரச மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.</p><p>இதன்போது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p>
இதனையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி குழந்தையும், 29ஆம் திகதி மாலையில் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
</p><p>
குறித்த பெண் உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தொடர் மழையின் கோரத் தாண்டவம்! முதலாவது மரணம் நாவலப்பிட்டியவில் பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-dead-in-nawalapitiya-embankment-collapse-1785745207"></link>
            <id>https://tamilwin.com/article/one-dead-in-nawalapitiya-embankment-collapse-1785745207</id>
            <summary type="text">நாவலப்பிட்டிய - சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டிய - சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

கடந்த இரண்டு தினங்களாக மலையகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.</p><p></p><h2> 

ஒருவர் உயிரிழப்பு</h2><p>

இதன்படி, நாவலப்பிட்டிய - சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3e26f6e-3574-4fb4-ac42-044d4d11f358/26-6a7050097bd11.webp' /></p><p> </p><p>இதேவேளை,&nbsp; &nbsp;கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், மலையகத்தில் வாழும் மக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசை கவிழ்க்கும் சதியில் ரணில்! நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-secrete-plan-mystery-photo-released-1785725070"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-secrete-plan-mystery-photo-released-1785725070</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

இந்த பின்னணி குறித்து இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால அம்பலப்படுத்தியுள்ளார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜு அமரசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்ட இரகசியச் சந்திப்பு தொடர்பான புகைப்படம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><h2><b>

மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு</b></h2><p>இந்த புகைப்படம் மூலம் நாட்டின் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக அஜித் தர்மபால சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22e4cb3f-33db-43e3-8ead-c3ec497062d6/26-6a70189894fc2.webp' /></p><p>சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அந்தப் புகைப்படத்தில், ரணில் விக்ரமசிங்க மதுக் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டும், சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறார். </p><p>

அவருடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜு அமரசூரிய உள்ளிட்ட உயர் தரப்பினர் கலந்துரையாடும் காட்சி பதிவாகியுள்ளது.</p><p> 

இந்தச் சந்திப்பானது சாதாரண பாமர மக்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. தங்களைச் சேர்ந்த உயர் வர்க்கத்தினருக்கு ஏதேனும் அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படும்போது, இவ்வாறான கூட்டத்தினர் உடனடியாக ஒன்றிணைந்து அதைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படும் ஒன்றாகும்.</p><p>
</p><h2><b>
அரங்கேறும் குழப்பங்கள்</b></h2><p>மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று நாட்டில் இயங்கிக் கொண்டிருந்தாலும், அதற்குள் அரச அதிகாரிகள், உயர்மட்ட பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களை உள்ளடக்கிய ஒரு மறைமுக சக்தியாக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2061f02-3f3d-4f7e-a275-d987ddc7e2fc/26-6a701abbd3bc0.webp' /></p><p>மஹர மற்றும் நீர்கொழும்பு போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அரங்கேறும் குழப்பங்கள் மற்றும் அசம்பாவிதங்களுக்குப் பின்னால் இந்த மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பின் சூழ்ச்சிகள் உள்ளது. </p><p>

அரசாங்கம் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சமகால அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்தாலும், இந்த உயர்மட்டக் குழாமினர் தங்களது வர்க்கத்தினரை பாதுகாப்பதற்காகவும், வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகவும் தொடர்ந்தும் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-03T08:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farmers-allege-price-of-paddy-has-also-fallen-1785743368"></link>
            <id>https://tamilwin.com/article/farmers-allege-price-of-paddy-has-also-fallen-1785743368</id>
            <summary type="text">தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும்
வழங்குவதாக அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவை இதுவரை
மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும்
வழங்குவதாக அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவை இதுவரை
முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
</p><p>

மேலும், தற்போது நெல்லின் கொள்வனவு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால்,
தங்களது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>
இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள விவசாயிகள், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக
நிறைவேற்றுமாறும் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67b92cc8-f705-4816-ad7e-dca41c8d4101/26-6a704e3d2e475.webp' /></p><p>அத்துடன், நெல்லுக்கு நியாயமான உத்தரவாத விலையை நிர்ணயித்து
விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை அரசு விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:16:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நடைமுறைக்கு வரும் ஊடகவியலாளருக்கான திட்டங்கள் - பிரதியமைச்சர் கௌசல்யா உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/various-schemes-journalists-to-implemented-soon-1785744663"></link>
            <id>https://tamilwin.com/article/various-schemes-journalists-to-implemented-soon-1785744663</id>
            <summary type="text">ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக
வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வவுனியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக
வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>

வவுனியாவில் நேற்று(02.08.2026) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் 
வவுனியா ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின் போது எதிர்நோக்கும் துன்பங்கள்
தொடர்பில் எமக்கு தெரியும்.</p><p> ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊடக
நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற முடியும். 

ஏனைய ஊடக நிறுவனங்களும் சரியான முறையில் ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa08ced2-785f-4b89-af64-dd2e0235e1d7/26-6a704dee6883e.webp' /></p><p>
</p><p>
ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதற்கான
அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் கொண்டுவரவுள்ளேன். </p><h2>

கோரிக்கைகளை நிறைவேற்ற தீர்மானம்</h2><p>
இதனை ஒரு வருடத்திற்கு
மட்டும் வழங்காது தொடர்ச்சியாக வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளது.

 ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில்கள், கடன் திட்டங்கள
வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நாம்
பரிசீலித்து சிறந்த தீர்வினை வழங்கவுள்ளோம்.
</p><p>
கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள நடைமுறைப்படுத்தும் போது
ஊடகவியலாளர்களுக்கும் வீட்டுத்திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/995479ad-1c84-4117-afe7-7d22f1b0fbb5/26-6a704def32888.webp' /></p><p>
</p><p>
 எமது அரசாங்கம் 2029 ஆம் ஆண்டுக்குள் வீடற்ற அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை வழங்க
நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக ஊடகவியலாளருக்கும் ஏதோவொரு வகையில்
வீட்டுத்திட்டம் கிடைக்கும்.
</p><h2>

20 வருடங்களுக்கு மேலாக நிகழும் படுகொலை</h2><p>
அத்துடன், கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்
தொடர்பான பிரச்சனைகள் 20 வருடங்களுக்கு மேலாக உள்ளது. </p><p>நாம் பல வழக்குகளை
தற்போது துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோம். 

தேங்கியுள்ள
வழக்குளை துரிதமாக முடிப்பதற்காகவே நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க யோசனை
முன்வைத்துள்ளோம்.</p><p> கடத்தப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான
பிரச்சனைகளுக்கு நீதியைப் பெற ஆதாரங்கள் பல இல்லை. 

அவற்றை திரட்ட
வேண்டியுள்ளது. அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறும். ஆதாரங்கள் தேவை. அதன்
மூலமே நீதியைப் பெற முடியும்.</p><h2>
சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்</h2><p>

இருப்பினும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் வேறு வகையிலும் பல
சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்கள் அதில் தண்டனை பெறுவார்கள்.</p><p> அந்த
வகையில் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன்
தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள். 

வடக்கில் மட்டுமன்றி
தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டும் உள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7da0801-c7f7-4642-a2af-c0ab7c746d56/26-6a704defd96a4.webp' /></p><p>
எனவே இதனை நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து
ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம்.
</p><p>
எமது அரசாங்கம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஊடக
நிறுவனங்களுடனும் பேசி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வைப் பெற
நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:14:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நிறுத்தம் - சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-colombo-road-blocked-by-landslides-stop-1785742554"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-colombo-road-blocked-by-landslides-stop-1785742554</id>
            <summary type="text">தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின்&amp;nbsp;போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&amp;nbsp;ஹட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின்&nbsp;போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>&nbsp;ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அவ்வீதியூடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்</h2><p>இதன் காணரமாக ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2bad670-4815-45ff-b52e-4d64bb3884fa/26-6a704a32e6966.webp' /></p><p>இதன் காரணமாக வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், மண்மேடுகளை அகற்றும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச மக்களும் இணைந்து செயற்படுகின்றனர். 

​</p><p>எவ்வாறாயினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:58:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வைப் படுகொலை 37வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37th-anniversary-of-valvai-massacre-commemorated-1785743779"></link>
            <id>https://tamilwin.com/article/37th-anniversary-of-valvai-massacre-commemorated-1785743779</id>
            <summary type="text">வல்வைப் படுகொலை 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வல்வெட்டித்துறை நகரில் தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த்தேசியப் பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வைப் படுகொலை 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வல்வெட்டித்துறை நகரில் தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த்தேசியப் பேரவை ஏற்பாட்டில் வல்வைப் படுகொலை 37ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

1989.08.02 அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை பகுதியில்
நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது 72 பொது மக்கள் சுட்டுப் படுகொலை
செய்யப்பட்டிருந்தனர்.</p><p>படுகொலைசெய்யப்பட்ட 72 பொது மக்களினதும் நினைவேந்நல் நிகழ்வில், தமிழ்த் தேசிய
கட்சியின் தலைவர் என்.ஶ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட கட்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.</p><p>

இதன்போது, பொதுச் சுடரேற்றப்பட்டுள்ளதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T07:56:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள நீரில் மூழ்கிய ஹட்டன் - டிக்கோயா தோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-level-of-castlereagh-reservoir-rises-1785743098"></link>
            <id>https://tamilwin.com/article/water-level-of-castlereagh-reservoir-rises-1785743098</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் - டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் - டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.</p><p>

ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக இன்று(03.08.2026) இந்த வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
நீரில் மூழ்கிய டிக்கோயா தோட்டம்</h2><p> 

கால்வாயின் இருபுறமும் உள்ள பல வீடுகளும் ஒரு வாகனம் திருத்தும் நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/795c0ccf-b39f-4ed1-be93-20405cbc05bd/26-6a70475bf35b5.webp' /></p><p>
</p><p>
2013ஆம் ஆண்டிலும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக, இதேபோன்று ஒரு பேரழிவு ஏற்பட்டதாகவும், மீண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடுவதால் தங்களது வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 

இதற்கிடையில், மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் பெய்து வரும் அடைமழை - வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rains-in-sainthamaruthu-1785741817"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rains-in-sainthamaruthu-1785741817</id>
            <summary type="text">சாய்ந்தமருது மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில்
தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற
வீதிகளில் வெள்ளநீர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில்
தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற
வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
</p><p>நேற்று(02.08.2026) மாலை மழைநீரானது வடிகான்கள் வழியே முறையாக வழிந்தோட
வழியின்மையினாலேயே பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகப் பிரதேசவாசிகள்
தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>விரைந்து நடவடிக்கை எடுக்க&nbsp;</h2><p>இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச் சாரதிகள் பாரிய
அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு, அன்றாடக் காரியங்களை மேற்கொள்வதிலும்
பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6273f5da-e159-4ad6-8c29-a24d4c821caa/26-6a7044485af18.webp' /></p><p>

முறைசாரா வடிகான் அமைப்புகள் மற்றும் அடைபட்டுள்ள நீர்வரத்து வழிகளை
உடனடியாகச் சீரமைத்து, தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்குப் பிரதேச சபையும்
உரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:34:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊர்காவற்றுறை – காரைநகர் பயணிகள் பாதை சேதம்: உடனடி சீரமைப்பை வலியுறுத்தும் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/damage-to-kayts-karainagar-passenger-route-1785740630"></link>
            <id>https://tamilwin.com/article/damage-to-kayts-karainagar-passenger-route-1785740630</id>
            <summary type="text">ஊர்காவற்றுறை – காரைநகர் இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பயணிகள் பாதையின்
அடிச்சட்டம் பல இடங்களில் வெடித்து சேதமடைந்துள்ளதால், பயணிகள் மற்றும் வாகன
ஓட்டுந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊர்காவற்றுறை – காரைநகர் இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பயணிகள் பாதையின்
அடிச்சட்டம் பல இடங்களில் வெடித்து சேதமடைந்துள்ளதால், பயணிகள் மற்றும் வாகன
ஓட்டுநர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>குறிப்பாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை பாதையில் ஏற்றி இறக்குவதில்
சிக்கல்கள் ஏற்படுவதுடன், பயணிகளின் கால்களில் காயம் ஏற்படும் அபாயமும்
நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>அவசர நடவடிக்கை</h2><p>
இந்தப் பாதையை நாள்தோறும் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், நீண்டகாலமாக இந்நிலை தொடர்வதாக பயணிகள்
குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31ce9e8c-ff84-4b71-9b96-1f7787a3ae95/26-6a7042e873f51.webp' /></p><p>
</p><p>எனவே, சேதமடைந்துள்ள பகுதிகளை உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பான மற்றும்
இடையூறற்ற சேவையை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் வழக்கு தொடர முடியாது..! ஹரக் கட்டா வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ag-department-will-appeal-against-harak-katta-1785741512"></link>
            <id>https://tamilwin.com/article/ag-department-will-appeal-against-harak-katta-1785741512</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுத் தலைவர் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டா வழக்கில், மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக சட்ட மா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுத் தலைவர் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டா வழக்கில், மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p>
குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹரக் கட்டா உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.</p><p>கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
சந்தேகநபர்களின் பிணை மனுக்கள் தொடர்பில் பரிசீலித்த நீதிபதி, பிணை வழங்குவது குறித்த தனது உத்தரவை ஆகஸ்ட் 20 அன்று அறிவிப்பதாக உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c27971b4-ee24-4c28-a500-934dccb8fd89/26-6a7040ca67324.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால், தற்போது தங்காலை பழைய சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பொருத்தமான வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
முன்னதாக, சிஐடி காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது எனவும், எனினும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கு எந்தவொரு சட்டத் தடையும் இல்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் தொடரும் கனமழை: தோட்டக் குடியிருப்புகள் பெருமளவில் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rains-continue-in-nuwara-eliya-1785741334"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rains-continue-in-nuwara-eliya-1785741334</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் லிந்துலை - நோநாவத்தை தோட்டக் குடியிருப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.</p><p></p><p>
</p><h2>
குடியிருப்புக்கள் சேதம்</h2><p>
இதனைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான வேறு இடங்களுக்கு தற்காலிகமாக குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதானமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்தினால் விபத்தில் சிக்கிய வாகனம்! ஒருவர் பலி - மற்றொருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-accident-one-death-1785739965"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-accident-one-death-1785739965</id>
            <summary type="text">கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>மேலும் இந்த விபத்தில் மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம்</h2><p>



மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்று கொண்டிருந்த சிறிய ரக வாகனம், தாழவட்டுவான் சந்தியை நெருங்கியபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகக கட்டுப்பாட்டை&nbsp; இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதி தலைகீழாக புரண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/727eb22e-df38-45dc-a1a7-4717457ebeca/26-6a703ee8d2655.webp' />&nbsp;</p><p>இதில், லொத்தர் விற்பனை நிலையம் பலத்த சேதமடைந்து கடை தரைமட்டமாகியுள்ளன.</p><p>



இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதியும், லொத்தர் கடை உரிமையாளரும் உடனடியாக மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி வாகன சாரதி உயிரிழந்துள்ளார்.</p><p>



இவ்வாறு உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த கமகே சுனில் சாந்த (63 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>



அதேவேளை, விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் லொத்தர் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான மூர்த்திதம்பி வேணு தாஸ் (56 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-cricket-grounds-work-to-resume-1785738482"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-cricket-grounds-work-to-resume-1785738482</id>
            <summary type="text">கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தீர்க்கப்பட்டவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தீர்க்கப்பட்டவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். </p><p>பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அரசியல் நோக்கங்களுக்காக</h2><p> உள்ளரங்க விளையாட்டு அரங்கம் அடங்கிய இத்திட்டத்திற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு, ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், செப்டெம்பர் மாதத்திற்குள் இந்த வசதியை நிறைவு செய்யும் நோக்கம் இருந்ததாகவும், ஆனால் அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுக்களால் நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b953a20-e9c3-4094-acf6-cf63fb22b66a/26-6a703bd08743a.webp' /></p><p>மேலும், அரசியல் குழுக்கள் யாழ்ப்பாண இளம் குழந்தைகளின் எதிர்கால வாய்ப்புகளை அழித்துவிட்டன.</p><p>அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளின் கனவுகளையும் விளையாட்டு வாய்ப்புகளையும் அழிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என அமைச்சர் கமகே தெரிவித்துள்ளார். </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன்- போடைஸ் பிரதான வீதியில் கற்பாறை சரிவு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rockfall-on-hatton-bodice-main-road-1785740401"></link>
            <id>https://tamilwin.com/article/rockfall-on-hatton-bodice-main-road-1785740401</id>
            <summary type="text">ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் கற்பாறை சரிந்து விழுந்துள்ளது. 

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது. 

போடைஸ் பிரதான வீதியின் எல்பியன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் கற்பாறை சரிந்து விழுந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

போடைஸ் பிரதான வீதியின் எல்பியன் பகுதியில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>

போக்குவரத்து பாதிப்பு</h2><p>

இந்தக் கற்பாறை சரிவினால் ஹட்டனிலிருந்து போடைஸ், டயகம பகுதிகளுக்குச் செல்லும் குறுக்கு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af59cff3-7d5f-415c-a377-ef634e8972d6/26-6a703cd32ce20.webp' /></p><p>

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பாதுகாப்பு கருதி குறித்த வீதியை பயன்படுத்துவதைத் தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் தலைமையதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
கற்பாறையை அகற்றி வீதியை மீண்டும் போக்குவரத்துக்குத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமடையும் வானிலை! ஆற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949"></link>
            <id>https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949</id>
            <summary type="text">புதிய இணைப்புதற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, களனி ஆற்றுப் படுகைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நிலை 01 விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, களனி ஆற்றுப் படுகைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நிலை 01 விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, இந்த அறிவிப்பு 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த நிலைமை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

இதற்கிடையில், அப்பகுதிகள் வழியாகச்செல்லும், வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளராக பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிகமான மழையும் பதிவு</h2><p>
அதன்படி, மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் அமைந்துள்ள நாவலப்பிட்டிய, நானுஓயா மற்றும் வத்தளை போன்ற பகுதிகளில் சுமார் 200 மி.மீ மழையும், சில இடங்களில் 200 மி.மீ-க்கு அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a4d9a8-60a2-4665-af65-6bc89e790b1d/26-6a6ffd2f897aa.webp' /></p><p>

இதன் காரணமாக, நாவலப்பிட்டிய மற்றும் பேராதெனியாவிற்கு இடையே மகாவலி ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;தற்போது நீர்மட்டம் வேகமாக உயராவிட்டாலும், இயல்பான உயர்வையே கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
வெள்ள நிலைமை பேரிடர் நிலை வரை மோசமடையாது என்று எதிர்பார்ப்பதாகவும், நேற்று இரவு சில இடங்களில் 70 மி.மீ-க்கு மேல் மழை பெய்ததால் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததில் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், சில தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும், கலா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா&nbsp; பகுதிகளில் அதிக மழை பெய்யாததால், அப்பகுதிகளில் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XROoBlpm-0s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-03T06:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்குள் பூஜித் - ஹேமசிறியின் பரிதாப நிலை! சிறப்பு சலுகைகள் மறுப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-job-given-to-pujitha-in-prison-1785735659"></link>
            <id>https://tamilwin.com/article/the-job-given-to-pujitha-in-prison-1785735659</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைச்சாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைச்சாலையில் எவ்வித சிறப்பு வசதிகளும் வழங்கப்படவில்லை என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அனுருத்த கஜநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>போதிய உளவுத் தகவல்கள் இருந்தும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து கடந்த 31ஆம் திகதி இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.&nbsp;</p><h2>வெளியில் இருந்து உணவில்லை..</h2><p>இந்தநிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் (ஜம்பர்)ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் இருக்கும் அறைகளுக்கு பூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மாற்றப்பட்டுள்ளதாகவும், சிறை விதிமுறைகளுக்கு அமைவான சட்டத்திட்டங்கள் அவர்களுக்குப் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc80c48-1112-49ee-927c-111d420b0f5d/26-6a7032e332c9d.webp' /></p><p>மேலும், சிறைக்கு வெளியே இருந்து உணவுகளைப் பெற்றுக்கொள்ள இருவருக்கும் அனுமதி இல்லை என்பதுடன், சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாக வாரத்திற்கு ஒரு முறை அவர்களுடைய குடும்பத்தார் அவர்களை சந்திப்பதற்கு&nbsp; அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&nbsp; எனினும், எவ்வித சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படாது எனவும், இந்த சட்டத்திட்டங்கள் குறிப்பாக மரண தண்டனைக் கைதிகளுக்குப் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட&nbsp; பிறகு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும்&nbsp; முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவரும் மருத்துப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டதாக சிறை்ச்சாலை ஊடகப் பேச்சாளர் அனுருத்த கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T06:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய மலையகம் - இன்று 40 குடும்பங்கள் பாதிப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flooding-in-hatton-area-1785737497"></link>
            <id>https://tamilwin.com/article/flooding-in-hatton-area-1785737497</id>
            <summary type="text">ஹட்டன் மற்றும் கொட்டக்கலை பகுதியில் நேற்று(02.08.2026) இரவு முதல் பெய்த அடை மழையால் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கொட்டகலை லொக்கில் பகுதியில் சுமார் 40 கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் மற்றும் கொட்டக்கலை பகுதியில் நேற்று(02.08.2026) இரவு முதல் பெய்த அடை மழையால் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கொட்டகலை லொக்கில் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், பாதசாரிகள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2> 

பொதுமக்கள் கவனத்திற்கு.. </h2><p>

மேலும், தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8327e94c-aa21-4c3c-8071-545c6d281b90/26-6a703158f362b.webp' /></p><p> </p><p>

அந்த வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 இதேவேளை, தொடர் கனமழையின் காரணமாக ஹட்டன், நுவரெலியா மற்றும் ஹட்டன், கொழும்பு போன்ற பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் மலையகப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T06:14:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-students-of-university-of-peradeniya-1785735082"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-students-of-university-of-peradeniya-1785735082</id>
            <summary type="text">மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் &quot;சரசவி மெதுர&quot; விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு குறித்து விழிப்புடன் இருக்குமாறு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தர் பேராசிரியர் தெரன்ஸ் மதுஜித் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d0dd1d-9b26-4f9e-b452-eb2bc3a7b318/26-6a7031433d26b.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொண்டு, ஏற்படக்கூடிய பேரழிவுகளைத் தடுப்பதற்காக, மகாவலி படுக்கையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என துணைவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள்</h2><p>
நேற்று இரவு (02) முதல் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.</p><p> நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக, பேராதனைapy; உள்ள 'கறுப்புப் பாலம்' அருகே அமைந்துள்ள பாலம் சீரமைக்கும் தளமும் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1ffdd79-bbb0-4543-a409-faa45699efae/26-6a703143eb99b.webp' /></p><p>இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>எனவே, மகாவலி ஆற்றங்கரையிலும், அப்பகுதிகளிலுள்ள தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T06:12:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opening-3-sluice-gates-upper-kotmale-reservoir-1785736740"></link>
            <id>https://tamilwin.com/article/opening-3-sluice-gates-upper-kotmale-reservoir-1785736740</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும்
வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும்
வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று
வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.</p><p>

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேல்
கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று உபரிநீர் வழித்தடங்கள் இன்று காலை (03)
தானாகவே திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை&nbsp;</h2><p>

தற்போது காணப்படும் மோசமான மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தால் மீதமுள்ள வான்
கதவுகளும் தானாகவே திறக்கப்படலாம் எனவும் குறிப்பட்டுள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2206198696590053%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>மேலும் சென் கிளைய்ர் (St.
Clair's) மற்றும் டெவன் (Devon) நீர்வீழ்ச்சிகளின் நீர்வரத்தும் கணிசமாக
அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர் .</p><p>

கொத்மலை ஓயா நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதி இரு கரைகளிலும் வசிக்கும்
மக்கள் மற்றும் நீர் நிலைகளைப் பயன்படுத்துபவர்கள் அவதானமாக இருக்குமாறு
அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89009905-8aca-4040-a3cb-7f835411ae99/26-6a702fae88791.webp' />&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T06:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/burnt-body-identified-in-kilinochchi-forest-1785733569"></link>
            <id>https://tamilwin.com/article/burnt-body-identified-in-kilinochchi-forest-1785733569</id>
            <summary type="text">கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அன்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண்
ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

குறித்து சடலம் இன்றைய தினம் (0...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அன்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண்
ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது
</p><p>
குறித்து சடலம் இன்றைய தினம் (03)&nbsp; அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> சம்பவம் தொடர்பில் அப்பகுதி கிராம அலுவலரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c988342-0ac6-4fa2-87bd-8ddbb2c66f58/26-6a702698e5547.webp' />&nbsp;</p><p>இச்சம்பவம்
தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T05:26:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறப்பாக இடம்பெற்ற பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pongal-festival-old-chemmalai-neeraviyadi-pillaya-1785733406"></link>
            <id>https://tamilwin.com/article/pongal-festival-old-chemmalai-neeraviyadi-pillaya-1785733406</id>
            <summary type="text">முல்லைத்தீவு பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான
வருடாந்த பொங்கல்விழா நேற்று(02.08.2026) இடம்பெற்றது.


பல்வேறு சர்ச்சைகளின...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான
வருடாந்த பொங்கல்விழா நேற்று(02.08.2026) இடம்பெற்றது.
</p><p>

பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் இவ் ஆலயத்தில் நெருக்கடிகள்
இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆலய வழிபாடுகள் இடம்பெற்று வருகிறது.</p><p></p><h2>பூசைவழிபாடுகள்</h2><p>நேற்று காலை விசேட அபிசேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மதிய பூசை
வழிபாடுகளின் பின்னர் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615c95ae-f0ca-4141-84f6-f6ec6b2128a9/26-6a7025420865a.webp' /></p><p>

குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்விழா பூசைவழிபாடுகளில்
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பெருந்திரளான
அடியவர்களும் பங்கேற்றனர்.</p><p>தொடர்ந்து மாலை வேளையிலே நாயாறு முனியப்பர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம்
எடுத்து வரப்பட்டு கச்சை நேர்ந்து மடைபரவி வளர்ந்து நேர்ந்து பொங்கல்
இடம்பெற்று அதனை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று பரிகளம் வழிவிடுதலோடு இன்று
(03) அதிகாலை வருடாந்த பொங்கல் நிறைவடைந்தது.</p><p>
குறித்த பொங்கல் நிகழ்விற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை அங்கு
காட்சிப்படுத்திய கொக்கிளாய் பொலிசார் அங்கு கடமையிலும் ஈடுபட்டிருந்தனர்.</p><p>எனினும் எவ்வித இடையூறும் இன்றி 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா சிறப்பாக இடப்பெற்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T05:25:25+00:00</updated>
        </entry>
    </feed>
