<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-16T03:06:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இருந்து சென்றவர் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181"></link>
            <id>https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181</id>
            <summary type="text">இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென உயிரழந்துள்ளார். 

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயது நபர் திடீரென...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென உயிரழந்துள்ளார். </p><p>

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயது நபர் திடீரென மரணம் அடைந்தார். </p><p>

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.</p><p> </p><h2><b>குடிவரவு&nbsp;சோதனை</b></h2><p>விமானத்தில் இருந்து இறங்கியவர் குடிவரவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளை முடித்துவிட்டு, பிராட்வே செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be94a1e-4545-4af1-847b-5edf6154e5b9/26-6a8124e84e5a8.webp' /></p><p>அங்குள்ள டிக்கெட் கவுண்டர் அருகே சென்று கொண்டிருந்த போது, சையத் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். </p><p>இதைக் கண்ட சக பயணிகளும் மெட்ரோ நிலைய ஊழியர்களும் உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். </p><p>அவர்கள் விரைந்து வந்து மயங்கிய நிலையில் இருந்த சையத்திற்கு முதலுதவி அளித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்தார். </p><p>சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-16T02:48:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை நாசப்படுத்திய ரணில் - மைத்திரி: பல தகவல்களை வெளியிட்ட முக்கிய புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asp-liyanage-ranil-wickremesinghe-sirisena-1786842167"></link>
            <id>https://tamilwin.com/article/asp-liyanage-ranil-wickremesinghe-sirisena-1786842167</id>
            <summary type="text">மைத்திரி - ரணி ஆட்சியில் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் அவர்களின் குடும்ப சண்டையால் இழக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கட்சியின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மைத்திரி - ரணி ஆட்சியில் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் அவர்களின் குடும்ப சண்டையால் இழக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று (15.08.2026) தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>நான் கட்டாருக்கான இலங்கை தூதுவராக இருந்தபோது, கட்டார் மன்னரிடம் ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்தது எனக்கு நினைவிருக்கிறது. "மன்னரே, நமது நாட்டிற்கு வந்து நமது எண்ணெய் வளங்களை ஆய்வு செய்யுங்கள்" என்று கோரினேன். </p><p>அன்றைய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தனர். இவர்கள் இருவருக்குள்ளும் மோதல்கள் நிலவியது. ஒருவர் எடுக்கும் தீர்மானத்தை ஒருவர் எதிர்த்தனர்.
</p><h2>
</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைவிட்டுப்போன திட்டங்கள்</span></p><p>மேலும் கட்டார் அரசு இலங்கையில் "கட்டார் சிட்டி" என்ற மிகப்பெரிய திட்டத்தைத் தொடங்க 
முயற்சித்தது. ஆனால், ரணில் - மைத்திரி மோதலால் அதுவும் கைநழுவிப் போனது. அது மட்டுமல்ல அன்றைய மத்திய மாகாணத்தின் பெண் ஆளுநரை நான் கட்டார் மன்னரிடம் அழைத்துச் சென்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10dbc6f2-74d4-45ca-8051-bbc3ce3c6b89/26-6a810c3958f24.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>நுவரெலியாவில் ஒரு அழகிய 'கேபிள் கார்' (Cable Car) திட்டத்தைச் செயல்படுத்துமாறு அவர் யோசனை தெரிவித்தார். ஆனால், இவர்கள் இருவரின் சண்டையினால் அதுவும் நடக்காமல் போனது.இதனால் நாடு மேன்மேலும் பாதாளத்தை நோக்கி நகர்ந்தது.</p><p>எனவே, தற்போதைய ஜனாதிபதி உறுதியான, தனித்து தீர்மானம் எடுக்கக்கூடிய ஒரு நபர் என நான் நினைக்கிறேன்.
இன்று எதிர்க்கட்சி ஒன்றில்லை.</p><p>நமக்கு சுதந்திரம் கிடைத்து சுமார் 75 ஆண்டுகள் ஆகின்றன. பல ஜனாதிபதிகள் இந்நாட்டை ஆட்சி செய்தார்கள், ஆனால் நாளுக்கு நாள் நாட்டை நெருக்கடிக்கே தள்ளினார்கள்.</p><h2>நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு</h2><p>
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போன்ற ஒரு தலைவர் 30 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தோன்றியிருந்தால், இன்று நாமும் சிங்கப்பூரைப் போன்ற ஒரு நாடாக மாறியிருப்போம். </p><p>அதனால் நான் நினைக்கிறேன், இவர் மிகவும் நன்றாக அரசு நிர்வாகத்தைச் செய்கிறார். இன்று ஊழல், மோசடி இல்லை. மாயாஜாலக்காரரைப் போல திடீரென இந்நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. </p><p>நிச்சயமாக இந்த அரசு தான் இந்நாட்டை இன்னும் 10 ஆண்டுகள் வரை ஆட்சி செய்யும்.
நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பை எடுத்துக் கொண்டால் உதாரணமாக இங்கிலாந்தில் 75 வயது வரை நீதிபதிகளுக்கு பணியாற்ற முடியும். </p><p>அமெரிக்காவில் வயதாகும் வரை செய்ய முடியும். அப்படியென்றால், ஏன் நம் நாட்டில் அப்படிச் செய்வதில் என்ன தவறு உள்ளது? என தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T02:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் சுற்றித்திரியும் ஆபத்தான நபர்கள் - ஏற்பட்டுள்ள பெரும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dangerous-persons-roaming-the-country-1786846847"></link>
            <id>https://tamilwin.com/article/dangerous-persons-roaming-the-country-1786846847</id>
            <summary type="text">2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.</p><p> சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை இதனை அறிவித்துள்ளது.</p><h2>பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்</h2><p>இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அலுவலகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65145ea2-fed8-44e6-b2f0-43f606b7b561/26-6a811f5225b87.webp' /></p><p>கடந்த 6 ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிவதற்குள் சட்டவிரோதமாக சிறைகளில் இருந்து தப்பிச் சென்ற அல்லது தலைமறைவான கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை 1, 181 ஆக காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 709 பேர் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டில் மட்டும் 825 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், மெகசின் மற்றும் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வசதிகளின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அதிகாரிகளும் கைதிகளும் கடும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T02:24:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவீதியில் திடீரென பேருந்தை மறித்து சாரதியை வாளால் தாக்க முயற்சித்த பெண் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-attack-the-bus-driver-with-sword-1786844269"></link>
            <id>https://tamilwin.com/article/woman-attack-the-bus-driver-with-sword-1786844269</id>
            <summary type="text">திவுலப்பிட்டிய நகரில் பேருந்து சாரதி ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திவுலப்பிட்டிய நகரில் பேருந்து சாரதி ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>திவுலப்பிட்டிய நகரில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றிற்கு பின்னால் வந்த கார் ஒன்று, திடீரென பேருந்து மறித்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்து இறங்கிய பெண் ஒருவரும் இரு ஆண்களும் வாளுடன் பேருந்து சரதியை தாக்க முயன்றுள்ளனர்.</p><h2>விளக்கமறியல் உத்தரவு</h2><p>இச்சம்பவத்தை பேருந்திலிருந்த பயணி ஒருவர் முழுமையாகத் தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்ததுடன், அக்காணொளி சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07102a68-b28c-4d08-a7b6-84d2a07369cb/26-6a81178a64b48.webp' /></p><p>இந்த காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த திவுலப்பிட்டிய பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (14) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 18 வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>

</p>]]></content>
            <updated>2026-08-16T01:51:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்கின் தொலைபேசியில் ஈரான் தாக்குதல் காணொளிகள்..! கிடைக்கப்பெற்றுள்ள பகீர் வாக்குமூலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-kingpin-shiran-basik-brought-sri-lanka-1786829185"></link>
            <id>https://tamilwin.com/article/drug-kingpin-shiran-basik-brought-sri-lanka-1786829185</id>
            <summary type="text">நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு அழைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>

அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகள் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

ஷிரான் பாசிக் தனது ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தில், துபாயில் இருந்தபோது ஈரானுடன் தொடர்புடைய தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
துபாயில் உள்ள பிரபலமான, மிகப்பெரிய வர்த்தக வளாகம் ஒன்றில் இருந்தபோது, அந்நாட்டு பொலிஸார் தன்னை சோதனை செய்ததாக பாசிக் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில், ஈரானிலிருந்து துபாய், ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னணியில் தன்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், விசாரணை அதிகாரிகளிடம் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அவரது கையடக்கத் தொலைபேசியை துபாய் பொலிஸார் பரிசோதித்தபோது, ஈரானால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அதில் இருந்ததாகவும், அதன் பின்னரே தான் கைது செய்யப்பட்டதாகவும் பாசிக் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் பின்னர், இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரையிலும், துபாய் பொலிஸார் தன்னிடம் ஈரான் தொடர்புகள் குறித்து தினமும் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mB0MsAFzV9E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T00:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி கப்பல் கொள்முதல் மோசடி - ஜனாதிபதிக்கு தொடர்பு..! கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/patali-champika-ranawaka-anura-videos-1786839252"></link>
            <id>https://tamilwin.com/article/patali-champika-ranawaka-anura-videos-1786839252</id>
            <summary type="text">நிலக்கரி கப்பல்களைக் கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியில் ஜனாதிபதிக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவதற்குத் தேவையான போதுமான ஆதாரங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலக்கரி கப்பல்களைக் கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியில் ஜனாதிபதிக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவதற்குத் தேவையான போதுமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இணையதளமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மோசடியான முறை</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இரண்டு முறைப்பாடுகளைத் தான் சமர்ப்பித்துள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>

அதில் முதலாவது முறைப்பாடு, ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

“தங்கள் ஆட்களை விடுவிப்பதற்கும், பழையவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கும்” ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று டில்வின் சில்வா கூறிய கூற்றின் மூலம் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்குக் பாதிப்பு ஏற்படுவதாக அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இரண்டாவது முறைப்பாடாக, 30 நிலக்கரி கப்பல்களை மோசடியான முறையில் கொள்முதல் செய்தமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராகக் காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xAPDZdUa59c" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>

இந்தச் செயற்பாட்டின் காரணமாக நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு மற்றும் மின்வெட்டுக்கு வழிவகுத்த காரணங்கள் குறித்து அறிவியல் பூர்வமான மற்றும் இதர ஆதாரங்களை ஆணைக்குழு முன் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
“இது குறித்து நான் பொலிஸாரிடமும் வாக்குமூலம் அளித்துள்ளேன். இது வெறும் வதந்தி அல்ல, அறிவியல் பூர்வமான தரவுகளைக் கொண்ட முறைப்பாடு. ஆணைக்குழுவின் ஆறு மாத கால அவகாசம் முடிந்த பிறகு அவர்களின் அறிக்கை வெளியாகும் வரை காத்திருக்கிறேன்.</p><p> 

அதன் பின்னர் என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை மக்கள் முன் பகிரங்கப்படுத்தத் தயராக உள்ளேன்” என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T00:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: சீ.வி.விக்னேஸ்வரனின் பரபரப்பான கருத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/c-v-wigneswaran-anura-kumara-dissanayake-1786839659"></link>
            <id>https://tamilwin.com/article/c-v-wigneswaran-anura-kumara-dissanayake-1786839659</id>
            <summary type="text">அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஆயத்தமாகும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் தீர்மானத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஆயத்தமாகும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் தீர்மானத்திற்கு முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் சாதகமான கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p>தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றுக்கு விளக்கமளித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடரும் அவரின் கருத்தில்
</p><p></p><h2>எதிர்ப்பை வெளியிட்டதற்கான காரணம்</h2><p>இதற்கு முன்னர் சட்ட மா அதிபருக்கு மட்டுமே இதனால் பயன் கிடைக்கும் என்ற செய்தி அறிந்ததால் நான் அதற்கு எதிராக இருந்தேன். இப்போது அனைத்து நீதிபதிகளுக்கும் இதன் நன்மை கிடைக்கிறது. அவர்களுக்கும் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவது நாட்டிற்கு நல்லது என்றே நான் நினைக்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/924626bb-d751-4d36-a3bb-8674d6c012a5/26-6a81026ddcc9b.webp' />&nbsp;&nbsp;</p><p>மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக தற்போது ஒரு சிறிய பிரச்சினை எழுந்துள்ளது. </p><p>அதற்கு எதிராக மக்கள் கூறுவது என்னவென்றால், நீதிபதிகள் தங்களின் சொந்தப் பிரச்சினைகள் குறித்து தாங்களே தீர்மானம் எடுக்கிறார்கள் என்பதாகும். </p><p>அதாவது, உயர் நீதிமன்றம் இது குறித்து ஆராயும்போது, தங்களுக்குச் சாதகமான விடயங்களை தீர்மானிப்பது தவறானது என்ற கருத்தை சிலர் கூறுகின்றனர்.
</p><p>ஆனால், இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வருமான வரி (Income Tax) தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, நீதிபதிகளுக்கு விலக்களிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியபோதிலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உயநீதிமன்றமே தீர்ப்பளித்தது. </p><p>அவர்கள் தங்களுக்கு எதிராகவும் தீர்மானங்களை எடுத்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் தவறான முறையில் தீர்மானம் எடுக்கிறார்கள் என்று நாம் கூற முடியாது.
</p><h2>ஏற்றுக் கொள்வதற்கான காரணங்கள்</h2><p>அடுத்தது, இந்த யோசனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்டுவரவில்லை. இது நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானமாகும்.</p><p>அதனால் இதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
மேலும், கனிஷ்ட நீதிபதிகளின் பதவி உயர்வு (Promotions) தாமதமாகும் என்று கூறப்படுகிறது. </p><p>அவ்வாறு தாமதமானாலும், அவர்களும் உயர் நிலைக்குச் செல்லும்போது மேலும் இரண்டு ஆண்டுகள் கூடுதலாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். </p><p>எனவே அவர்களுக்கு இதனால் எந்தப் பாதகமும் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும், தேங்கிக் கிடக்கும் வழக்கையெல்லாம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் கூறப்படுகிறது.</p><p>அனுபவமிக்க நீதிபதிகளை வைத்துக்கொண்டு இப்பணியைத் தொடர்ந்து செய்வது நல்லது. எனவே இதற்கு நான் எதிரப்பில்லை. 22ஆவது திருத்தத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட முடியாது. </p><p>அவ்வாறு செய்தால் இந்த நீதிபதிகளின் அனுபவம் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T00:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-arrested-with-heroin-in-mullaitivu-1786826234"></link>
            <id>https://tamilwin.com/article/5-arrested-with-heroin-in-mullaitivu-1786826234</id>
            <summary type="text">முல்லைத்தீவு- கொக்கிளாய் பகுதி ஹரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு- கொக்கிளாய் பகுதி ஹரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.</p><p>கொக்கிளாய் வீதியில்
பயணித்துக்கொண்டிருந்தவேளை கொக்குளாய் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>கைது</h2><p>&nbsp;கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களும் கொக்குளாய் பொலிஸ்
நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f43f4dd5-5fe2-48a9-a536-2083b2262a9e/26-6a80ffcb09792.webp' /></p><p>மேலும், சந்தேகநபர்களை நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T00:09:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் சர்ச்சையாகியுள்ள கல்முனை வைத்தியசாலை விவகாரம்..! களத்தில் குதித்த ஹிஸ்புல்லா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-nurse-dress-issue-1786821686"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-nurse-dress-issue-1786821686</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சார உடையான ஹிஜாப் தொடர்பான விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சார உடையான ஹிஜாப் தொடர்பான விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்றப்பட்டு, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான சீருடையையே அணிய வேண்டும் என்பதே விதி எனவும், இது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை எனவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளார்.
</p><p>
வைத்தியசாலை நிர்வாகத்தின் செயற்பாடு இனவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, அவர் கடுமையான கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
எனினும், இந்த விவகாரத்தை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல்வாதிகள் பெரிதுபடுத்துவதாகவும், இதனைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
</p><p>
இதனிடையே, வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர், ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லை எனவும், வெளியிலிருந்து சிலர் இந்த விவகாரத்தைத் தூண்டிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.</p><p>

இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/n-YQkEN0IDc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T23:39:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின அழிப்புக்கான சாட்சிகளே செம்மணி எலும்புக்கூடுகள்..! அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786835789"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786835789</id>
            <summary type="text">சாட்சியங்கள் இல்லாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாட்சியங்கள் இல்லாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இவ்வாறு குடும்பங்கள் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அழிப்பே இனவழிப்பு என்பதனை உறுதிப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>செம்மணிப் புதைகுழி</h2><p>

நேற்றையதினம்(15) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
குறித்த அறிக்கையில்,
</p><p>

தமிழர்கள் இலங்கையில் 1956ஆம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்ட பேரினவாதத்தால் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். 

இதனைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்த உறவுகள், தமிழ்ப் புத்திஜீவிகள் ஆகியோர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உரக்கச் சொல்லி வருகின்றனர்.</p><p>

அதற்கான சாட்சியங்களாக, செம்மணிப் புதைகுழியில் இருந்து கண்கூடான சாட்சியங்களாக எலும்புக்கூடுகள் அகழ அகழ வெளிவந்து கொண்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb218e2-0f0e-45b7-b700-0c2c712c3ac6/26-6a80f5d3cef58.webp' /></p><p> 

இதுவரை 539 எலும்புக்கூடுகள் தமிழின அழிப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


கருவறைக் கருவில் இருந்து குழந்தை, சிறுவர், குமரர், தாய், தந்தையர், வயோதிபர், அங்கவீனர் என எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவரும் செம்மணியில் அரச பயங்கரவாதக் கருவியான இராணுவத்தின் மூலம் அழிக்கப்பட்டுள்ளனர். அதனை எலும்புக்கூடுகள் பேசாமல் பேசுகின்றன.
</p><p>
பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் கூட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இனவழிப்பில் இருந்து தப்ப முடியவில்லை.

இலங்கையில் 1956ஆம் ஆண்டு தமிழின அழிப்பு, இக்கினியாகலையில் பேரினவாதக் குண்டர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

 அதில் 157 அப்பாவித் தமிழர்கள் பேரினவாதக் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.</p><h2>அப்பாவித் தமிழர்கள்</h2><p> </p><p>அதற்கான நீதி வழங்கப்படாததால், அடுத்து 1958ஆம் ஆண்டு 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழின அழிப்புகள் சர்வசாதாரண நிகழ்வுகளாக இடம்பெற்றன.

அவற்றை பேரினவாத அரசு கண்டுகொள்ளவில்லை. </p><p>1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை தமிழினப் படுகொலைக்கான ‘கறுப்பு ஜூலை’ என தமிழ் மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர். அதில் 3,000 முதல் 5,000 வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df9a7258-9d0f-49c4-9833-18bdc936dabb/26-6a80f5d49dade.webp' /></p><p>

1983ஆம் ஆண்டு முதல் தமிழின அழிப்பு என்பது தொடர்ச்சியான நிகழ்வாகி, 2009 மே 18ஆம் திகதி வரை தீவிரமாக நடைபெற்றது.

அதன் பின்னரும் கலாசார, வரலாற்று மற்றும் உணர்வு ரீதியான அழிப்புகள் தொடர்கின்றன.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய தமிழ் மக்களுக்கு முதற்கட்ட பதிலாக செம்மணி சிந்துபாத்தி புதைகுழி கண்களைத் திறக்க வைத்துள்ளது.</p><p> இதேபோல் பல புதைகுழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், படுகொலை செய்யப்பட்ட உறவுகளும் எலும்புக்கூடுகளாக எமது இதயக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம், மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மைலந்தனை, வீரமுனை, உடும்பன்குளம், மண்டைத்தீவு, கொக்குத்தொடுவாய், திருகோணமலை போன்ற இடங்களில் பல புதைகுழிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.</p><p>

சட்டம் சமமாகச் செயற்படுமாயின், இப்புதைகுழிகளை அறிவியல் பூர்வமாக இலகுவாகக் கண்டறிய முடியும்.</p><h2>அரச பயங்கரவாதம்</h2><p>
</p><p>
தொல்லியல் அகழ்வுகள் மூலம் கலாசாரத் திரிபுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், மனிதப் புதைகுழிகளைக் கண்டறியும் விடயத்தில் காட்டப்படும் ஆர்வம் மிகமிகக் குறைவாகவே உள்ளது. </p><p>இதனை அரசு முறையாக முன்னெடுத்து, சட்ட சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

இதனைச் செய்தால் இனவழிப்பு, அரச பயங்கரவாதம் என்பவற்றுக்கான கோரமான முகங்கள் வெளியில் தெரிந்துவிடும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, தமது அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பதை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.</p><p>செம்மணி போன்ற பல மனிதப் புதைகுழிகளை அகழ்வு செய்து, முந்தைய அரசாங்கங்களின் முகத்திரையைக் கிழிக்க முன்வர வேண்டும்.

அதன் மூலமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். மேலும், கடந்த கால அரசாங்கங்களின் கோரமான முகங்களை வெளிக்காட்டவும் முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08285f08-7e1d-42c5-bac3-7293e86d1c20/26-6a80f5d54ea20.webp' /></p><p>

ஜே.வி.பி. முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் கொலை தொடர்பாக, அவரது மகன் நீதியைத் தேட முயற்சிப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.</p><p>

யூகோஸ்லாவியாவை ஆட்சி செய்த ஸ்லோபோடான் மிலோசவிக் என்ற ஜனாதிபதி, தனது இனத்தைச் சேர்ந்த சேர்பியப் படையினரைக் கொண்டு சிறுபான்மை குரோஷியர்களை இனவழிப்புக்கும், பெண்களைப் பாலியல் துர்நடத்தைக்கும் உள்ளாக்கினார்.உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.</p><p>
பின்னர் சர்வதேசத் தலையீட்டின் மூலம் குரோஷியர்களுக்கு நீதியின் பார்வையில் நியாயம் கிடைத்தது. </p><p>குற்றம் செய்த ஜனாதிபதி மற்றும் தளபதிகள் பாரிய தண்டனைகளைப் பெற்றனர்.

இவையெல்லாம் சிந்திக்க வேண்டிய படிப்பினைகளாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T23:32:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் வளைகுடா நோக்கி செல்லும் USS George Washington கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uss-george-washington-replace-uss-abraham-lincoln-1786814072"></link>
            <id>https://tamilwin.com/article/uss-george-washington-replace-uss-abraham-lincoln-1786814072</id>
            <summary type="text">அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் மற்றும் கடற்படையினர் நீண்டகால ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் மற்றும் கடற்படையினர் நீண்டகால பணியமர்த்தலால் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
 இதையடுத்து, அவர்களுக்கு மாற்றாக யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வோஷிங்டன் USS George Washington விமானம் தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்படுகிறது.</p><p></p><h2>

260 நாட்களுக்கும் மேலாக கடலில்
</h2><p>
USS Abraham Lincoln கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக கடலில் உள்ளது. சுமார் 200 நாட்களாக எந்த துறைமுகத்திலும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து பயணித்து வருகிறது.

இந்த கப்பல் சுமார் 260 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e19b98e3-aed4-4e56-aa98-b78b82e05774/26-6a80a11b9135c.webp' /></p><p> இது அமெரிக்க கடற்படையில் கவலையை ஏற்படுத்தியுள்ள நீண்டகால பணியமர்த்தலாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க செனட்டர் ரிச்சர்ட் புளூமென்தால், பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்திடம் கப்பலில் உள்ள நிலைமை குறித்து கடிதம் மூலம் கவலை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதில் அடிப்படை பொருட்களின் பற்றாக்குறை, குடிநீர் மாசுபாடு, கழிவறை மற்றும் குழாய் பிரச்சினைகள், மாலுமிகளின் மோசமடைந்து வரும் மனநலம், கப்பல் தள பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் தபால் சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><h2>
USS George Washington மத்திய கிழக்கு நோக்கி</h2><p>

இந்த நிலையில், USS George Washington கப்பல் ஏற்கனவே மத்திய கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
</p><p>
அது கடந்த வாரம் வியட்நாமின் Da Nang துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436de93e-824c-455f-a751-287b249663a3/26-6a80a11c88447.webp' /></p><p> </p><p>பின்னர் ஒரு க்ரூசர் மற்றும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பலுடன் Singapore Strait வழியாக பயணித்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர், அந்த விமானம் தாங்கிக் கப்பல் தற்போது Malacca Strait பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அங்கிருந்து அது இந்தியப் பெருங்கடல் வழியாக மத்திய கிழக்கு நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

The Wall Street Journal தகவலின்படி, மத்திய கிழக்கில் தற்போது பணியில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான USS Abraham Lincoln-க்கு பதிலாக USS George Washington களமிறக்கப்பட உள்ளது.
</p><h2>
மாலுமிகள் கடுமையான அழுத்தத்தில்</h2><p>

நீண்டகால பணியமர்த்தல் மற்றும் தொடர்ந்து நீட்டிக்கப்படும் பணிக்காலம் காரணமாக மாலுமிகளின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

Military Times வெளியிட்ட தகவலின்படி, சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதிக்க முயன்றதாகவும் அல்லது அதுபற்றி சிந்தித்ததாகவும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
</p><p>
ஒரு மாலுமியின் மனைவி Annabelle Loma, தனது கணவர் பலமுறை பணிக்காலம் நீட்டிக்கப்பட்ட பின்னர் கப்பலில் இருந்து குதிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cb0b310-f4b8-4d1b-aec2-62ea5938c67e/26-6a80a11d3a8ea.webp' /></p><p>
</p><p>
அவர் கடுமையாக சோர்வடைந்திருந்ததாகவும், இந்த சம்பவம் தனது 13 ஆண்டுகால இராணுவப் பணியை பாதித்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் அவர் கூறினார்.
</p><p>
மற்றொரு சம்பவத்தில், கப்பலில் இருந்த ஒருவர் கடலில் குதிக்க முயன்ற சக மாலுமியை பிடித்து இழுத்து மீட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இதற்கிடையில், ஈரானுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க கடற்படை தனது பணிகளைத் தொடர்வதற்காக கப்பல்களை மாறி மாறி அனுப்பும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T22:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-in-mount-lavinia-1786817353"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-in-mount-lavinia-1786817353</id>
            <summary type="text">மவுண்ட் லெவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மவுண்ட் லெவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று (15) இரவு சுமார் 9.50 மணியளவில், ஹுலுதாகொட வீதியில் உள்ள வீடொன்றுக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce9513a-1bf2-4ebf-bf7a-41e46678ff3c/26-6a80ad5f9c637.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-15T22:39:01+00:00</updated>
        </entry>
    </feed>
