<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-13T14:37:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA தலைவருக்கான தேர்தலில் ஆபிரிக்க நாடுகளின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-election-african-votes-uncertain-infantino-1786627392"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-election-african-votes-uncertain-infantino-1786627392</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை நடத்தும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிற்கு ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை நடத்தும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிற்கு ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (CAF) ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், எதிர்வரும் தலைவர் தேர்தலில் ஆபிரிக்க நாடுகளின் அனைத்து வாக்குகளும் இன்ஃபான்டினோவிற்கு முழுமையாகக் கிடைப்பது உறுதியற்ற நிலையிலேயே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><h2>உலகக் கிண்ணப் போட்டி</h2><p>
</p><p>
எதிர்கால உலகக் கிண்ணப் போட்டிகளின் வர்த்தக உரிமைகளை விற்பனை செய்வது
தொடர்பான திட்டங்கள் தொடர்பில் இன்ஃபான்டினோவிற்கு எதிராக விமர்சனங்கள்
எழுந்துள்ளன.
</p><p>
இந்தச் சூழலில் ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு அவருக்கு தனது
உத்தியோகபூர்வ ஆதரவை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1341393a-528f-4841-ba12-e8c041184cc7/26-6a7dcc46c3b6b.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கடந்த கால வரலாறுகளை நோக்கும்போது, ஆபிரிக்க நாடுகள் தமது
பிராந்தியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக வாக்களிக்கும்
போக்கையே கொண்டுள்ளன.
</p><p>
கடந்த 1998 ஆம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவருக்கு CAF ஆதரவளித்த
போதிலும், பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் செப் பிளாட்டருக்கே வாக்களித்தன.
</p><p>
அதேபோன்று 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் CAF வேறு வேட்பாளரை
ஆதரித்த போதும், பல ஆபிரிக்க நாடுகளின் ஆதரவுடனேயே இன்ஃபான்டினோ வெற்றி
பெற்றிருந்தார்.</p><h2>வேட்புமனு தாக்கல்</h2><p>
</p><p>
மேலும், 2026 உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் உரிமையை மொராக்கோவிற்கு வழங்க
CAF தீர்மானித்திருந்த நிலையிலும், 11 ஆபிரிக்க நாடுகள் வட அமெரிக்க கூட்டுப்
பெரும்பான்மைக்கே ஆதரவாக வாக்களித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26496b34-65da-41f9-abbe-11532195aeae/26-6a7dcc47859f3.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் மார்ச் மாதம் மொராக்கோவில் நடைபெறவுள்ள ஃபிஃபா தலைவர் தேர்தலில்
போட்டியிட விரும்புவோர் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதிக்குள் தமது
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். மொத்தமுள்ள 211 உறுப்பு நாடுகளில்
106 வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுவார்.</p><p>
தற்போதைக்கு எகிப்து, மொராக்கோ, நைஜர் மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு
போன்ற சில நாடுகள் இன்ஃபான்டினோவிற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள போதிலும்,
பலமான எதிரணி வேட்பாளர் ஒருவர் களமிறங்கும் பட்சத்தில் ஆபிரிக்க நாடுகளின்
வாக்குகள் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T14:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம் - பல என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-excavation-enters-51st-day-of-phase-three-1786629979"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-excavation-enters-51st-day-of-phase-three-1786629979</id>
            <summary type="text">செம்மணியில் மூன்றாம் கட்டத்தின்&amp;nbsp; 51 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று(13.08.2026) முன்னெடுக்கப்பட்டது.இதன்போது புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் மூன்றாம் கட்டத்தின்&nbsp; 51 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று(13.08.2026) முன்னெடுக்கப்பட்டது.</p><p>இதன்போது புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் இன்று 10 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, நீதிமன்ற&nbsp; காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>51ஆவது நாள் அகழ்வுப் பணி</h2><p>செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம்
மற்றும் மூன்றாம் கட்டங்களாக 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு
பணிகளின் போது, 552 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அவற்றில் 540
என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ed19194-7af5-45ab-884a-93d774ef9029/26-6a7dd0851e62f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T14:20:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்வானில் முடங்கிய வீதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இணையச் சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/streets-deserted-and-internet-service-taiwan-1786628834"></link>
            <id>https://tamilwin.com/article/streets-deserted-and-internet-service-taiwan-1786628834</id>
            <summary type="text">தாய்வானில்
முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு
பகுதியாகத் தலைநகர் தாய்பேயில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்வானில்
முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு
பகுதியாகத் தலைநகர் தாய்பேயில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள்
எழுப்பப்பட்டு, வீதிகள் அமைதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சீன படையெடுப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் 10 நாட்கள் நடத்தப்படும்
இந்தப் பயிற்சியின் போது, தாக்குதல் சூழலை செயற்கையாக உருவாக்கிப்
பரிசோதிப்பதற்காக மொபைல் இணையச் சேவையின் வேகம் அரசாங்கத்தினால் திட்டமிட்டபடி
கட்டுப்படுத்தப்பட்டது.
</p><p>
சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த இணைய வேகக் கட்டுப்பாட்டின் போது,
நிலையான இணைய இணைப்புகள் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் தடையின்றி இயங்கின.</p><p></p><h2>போலி வான்வழித் தாக்குதல்</h2><p>
</p><p>
போலி வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீதிகளில்
பயணித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன்,
வாகனங்களும் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.</p><p>

இதன்போது, தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே மற்றும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட
வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அவசர மருத்துவ முகாமாக மாற்றப்பட்ட இடங்கள்
மற்றும் உணவுப் பொருட்கள் விநியோக மையங்களைப் பார்வையிட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bff562e-4c26-4390-93e0-adbd62ae3695/26-6a7dcec17161b.webp' /></p><p>இதேவேளை, சீனாவின் முற்றுகை முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில் தாய்வான்
கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து முதல்முறையாக கப்பல்களுக்குப்
பாதுகாப்பு அளிக்கும் கூட்டுப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளன.
</p><p>
பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு சர்வதேச
சமூகத்தின் ஆதரவுடன் தாய்வான் பதிலளித்து வருவதாக அதிபர் லாய் சிங்-தே
தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T14:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை பிறந்த நாள் கொண்டாட்டத்தில் படுகொலை - இந்தியாவில் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-suspects-of-wattala-murder-arrested-in-india-1786622918"></link>
            <id>https://tamilwin.com/article/two-suspects-of-wattala-murder-arrested-in-india-1786622918</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடரடபில் இரண்டு சந்தேகநபர்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடரடபில் இரண்டு சந்தேகநபர்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>

கதிரன பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றின் போது நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>
இருவர் கைது</b></h2><p>இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85a6ef59-1dea-4fb4-ad66-d5bcd05c1fba/26-6a7dc9bc6feb2.webp' /></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-13T13:42:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்! அரசியலுக்குள் இருக்கும் படுகொலையாளிகள் அச்சத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288"></link>
            <id>https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288</id>
            <summary type="text">படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளார்கள்.</p><p> நீதித்துறை மற்றும் விசாரணை கட்டமைப்பு தொடர்பில் எவ்வழியிலாவது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தி அதனூடாக தம்மை பாதுகாத்துக்கொள்ளவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.</p><h3>எதிர்க்கட்சியினரின் விமர்சனம்&nbsp;</h3><p>முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தி சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கியவர்கள் இன்று நீதித்துறையின் சுயாதீனம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. </p><p>நீதித்துறைக்கு எதிராக செயற்பட்டால் அதன் பாதிப்பு எவ்வாறானதாக அமையும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே எதிர்க்கட்சியினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5669b0-40f0-4b8e-b2f4-25a925f77b50/26-6a7d92c5e01bc.webp' /></p><p>ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படப் போவதில்லை.</p><p>

படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது கலக்கமடைந்து விசாரணை அதிகாரிகள் மீதும், நீதித்துறை கட்டமைப்பின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:40:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூளைச்சாவடைந்தவர்களின் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி யாழில் விழிப்புணர்வு நடை பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-walk-promotes-kidney-donation-1786626249"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-walk-promotes-kidney-donation-1786626249</id>
            <summary type="text">உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை
மற்றும் வட மாகாண உறுப்பு மாற்று சிகிச்சை சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை
மற்றும் வட மாகாண உறுப்பு மாற்று சிகிச்சை சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைப்பயணம் ஒன்று நடைபெற்றுள்ளது.
</p><p>
மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்புகளை தானமாக வழங்குவதன் முக்கியத்துவம்
தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைப்பயணம்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>மூளைச்சாவு</h2><p>

விபத்து ஒன்றின் காரணமாக ஏற்படும் கடுமையான தலைக்காயம் அல்லது மூளையில்
திடீரென ஏற்படும் இரத்தக்கசிவு, மூளைச் சிதைவு போன்ற காரணங்களால் சில
சந்தர்ப்பங்களில் மூளையின் அனைத்து முக்கிய செயல்பாடுகளும் நிரந்தரமாக செயலிழக்கக்கூடும்.
</p><p>
இவ்வாறு மூளையின் செயற்பாடுகள் முழுமையாகவும் நிரந்தரமாகவும்
நிறுத்தப்பட்டிருப்பது மருத்துவ ரீதியான உரிய பரிசோதனைகள் மூலம் உறுதி
செய்யப்பட்டால், அந்த நிலை மூளைச்சாவு (Brain Death) என அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/682fc2ce-8a10-4fc4-a4ed-8b6dd1cac6e9/26-6a7dc33d1f8db.webp' /></p><p>

மூளைச்சாவடைந்த ஒருவரின் இதயம் உள்ளிட்ட சில உறுப்புகள், செயற்கை சுவாசம்
மற்றும் தீவிர சிகிச்சை உதவிகளின் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
தொடர்ந்து இயங்கக்கூடும்.</p><p> 

இதனால் அவர் உயிருடன் இருப்பது போன்ற தோற்றம்
ஏற்படலாம். ஆனால் மூளைச்சாவு என்பது மீள முடியாத நிலையாகும். மூளை மீண்டும்
செயல்பட செய்வதற்கான சிகிச்சை இல்லை.</p><p>

எனவே, மூளைச்சாவு உறுதி செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து வழங்கப்படும் தீவிர
சிகிச்சையின் நோக்கம் மூளையை மீண்டும் செயல்பட செய்வது அல்ல.</p><h2>உறுப்பு தானம்&nbsp;</h2><p> 

சட்டரீதியான
நடைமுறைகளுக்கும் குடும்பத்தினரின் சம்மதத்திற்கும் அமைவாக, தானம்
செய்யக்கூடிய உறுப்புகளை பாதுகாத்து, அவற்றை உறுப்பு மாற்று சிகிச்சை
தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே முக்கிய
நோக்கமாக அமைகிறது.</p><p>
ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாத துயரமான தருணத்திலும், அவரது உறுப்புகள்
மூலம் பலருக்கு புதிய வாழ்வை வழங்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0681b62b-e93a-4036-8746-b0850621686f/26-6a7dc33ded15a.webp' /></p><p>

ஒருவரின் சிறுநீரகம் மற்றொருவருக்கு புதிய வாழ்க்கையை வழங்கலாம். இதயம்
ஒருவரின் வாழ்க்கையை மீண்டும் துடிக்கச் செய்யலாம். கல்லீரல், நுரையீரல்
உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு நம்பிக்கையாக
அமையலாம்.</p><p>

“நாம் மறைந்தாலும் நமது உறுப்புகள் மூலம் இன்னொருவர் வாழட்டும்” என்ற உயரிய
எண்ணத்துடன் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில்
ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.</p><p>
உறுப்பு தானம் என்பது வெறும் தானம் அல்ல, அது ஒரு மனிதன் மறைந்த பின்னரும்
மற்றொரு மனிதனின் வாழ்க்கையில் தொடர்ந்தும் வாழ்வதற்கான உன்னதமான மனிதநேயச்
செயல்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ரிஷாட் எம்.பி – ஜெகதீஸ்வரன் எம்.பி இடையே வாக்குவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-jagadeeswaran-argument-mannar-coordination-1786627085"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-jagadeeswaran-argument-mannar-coordination-1786627085</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(13)நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன்
மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(13)நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன்
மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் மக்கள்
எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது,
“மின்வெட்டை பற்றி நாங்கள் கதைக்கக் கூடாதா என ரிஷாட் பதியுதீன் கேள்வி
எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

இதன்போது பதிலளித்த ஜெகதீஸ்வரன், கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும்
அபிவிருத்திக் குழுத் தலைவர்களாகவும் இருந்தவர்கள், தற்போதைய நிலைமை தொடர்பாக
கேள்வி எழுப்புவது குறித்து கருத்து தெரிவித்தார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வாக்குவாதம்</span></p><p>

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம்
தீவிரமடைந்ததுடன், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61057bfb-594e-4e43-84be-d733a1da3658/26-6a7dc6a8b855c.webp' /></p><p>

நிலைமை மேலும் தீவிரமடையாத வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும்
சமரசப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்சாரத் தடைக்கு நிரந்தரத்
தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள நிலையில்,
இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும்
சூடுபிடித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சை மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட உயர்தர பரீட்சை வினாத்தாள் பொதிகள் தொடர்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-packets-tomorrow-s-al-question-paper-today-1786624615"></link>
            <id>https://tamilwin.com/article/6-packets-tomorrow-s-al-question-paper-today-1786624615</id>
            <summary type="text">அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு உயர்தர பரீட்சை மையத்தில், நாளை (14) நடைபெறவிருந்த முதல் இயற்பியல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு உயர்தர பரீட்சை மையத்தில், நாளை (14) நடைபெறவிருந்த முதல் இயற்பியல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>

இருப்பினும், வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
</p><h2>மற்றொரு பாடத்திற்கான 6 வினாத்தாள்</h2><p>
தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f37d02-27e5-432a-ba32-2c34b794179d/26-6a7dc73ddcef1.webp' /></p><p>
இந்நிலையில், அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு பாடசாலையில், இன்று நடைபெறும் பாடங்களைத் தவிர, நாளை நடைபெறவிருந்த மற்றொரு பாடத்திற்கான 6 வினாத்தாள் பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்டெடுக்கப்பட்டடுள்ளது.</p><p>நாளை நடைபெறவிருக்கும் இயற்பியல் பாடத்தின் முதல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள், இன்று நடைபெற்று வரும் இசை, நடனம் மற்றும் விவசாய விஞ்ஞான பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் இருந்த கொள்கலன்களில் கண்டெடுக்கப்பட்டன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mitchell-starc-sets-new-record-in-test-cricket-1786622258"></link>
            <id>https://tamilwin.com/article/mitchell-starc-sets-new-record-in-test-cricket-1786622258</id>
            <summary type="text">அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

பங்களாதேஸுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
</p><p>
பங்களாதேஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், அவ்வணியின் தொடக்க வீரர் ஷாட்மான் இஸ்லாமை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஸ்டார்க் தனது 434ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.</p><h2>டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு</h2><p>
</p><p>
இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் 433 விக்கெட்டுகள் என்ற சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a6ab1c-395c-4c60-aad1-3adc42873176/26-6a7db8332425a.webp' /></p><p>ஸ்டார்க் தற்போது 106 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வுடன் 11ஆவது இடத்தை சமப்படுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், அடுத்த கட்டமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் அனைத்து காலத்திற்குமான முதல் 10 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இடம்பிடிக்க ஸ்டார்க்கிற்கு இன்னும் சில விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகின்றன.
</p><p>
ரங்கன ஹேரத் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

2018ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஹெரத், நீண்ட காலமாக அதிக விக்கெட் எடுத்த இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையை தக்க வைத்திருந்தார்.</p><p>தற்போது அந்த சாதனை ஸ்டார்க் வசம் சென்றுள்ளது. ஸ்டார்க் தனிப்பட்ட முறையில் வரலாறு படைத்தாலும், டார்வின் டெஸ்டின் முதல் நாள் அவுஸ்திரேலியா அணிக்கு சிறப்பாக அமையவில்லை.</p><h2>பங்களாதேஸின் பந்து வீச்சு</h2><p>
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா வெறும் 198 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

பங்களாதேஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளை 55 ஓட்டங்களுக்கு வீழ்த்தி அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வரிசைக்கு சவால் விடுத்துள்ளார்.
</p><p>
மேலும் அவுஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் போராடி 71 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

அவுஸ்திரேலியாவை 198 ஓட்டங்களுக்கு சுருட்டிய பின்னர், பங்களாதேஸ் அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc364ed-7f4f-410f-97cb-39c334ab3979/26-6a7db833d543e.webp' /></p><p>முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 1 விக்கெட்டை இழந்து 96 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதனால் அந்த அணி அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 102 ஓட்டங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.
</p><p>
இதனால், டார்வின் டெஸ்டில் முதல் நாளிலேயே பங்களாதேஸ் அவுஸ்திரேலியாவுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:10:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகத் தடை: அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதினரின் கணக்குகளை முடக்கியது மெட்டா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/social-media-ban-meta-suspends-accounts-australia-1786625461"></link>
            <id>https://tamilwin.com/article/social-media-ban-meta-suspends-accounts-australia-1786625461</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப்
பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்து, அங்குள்ள 7,56,000 க்கும்
அதிகமான ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப்
பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்து, அங்குள்ள 7,56,000 க்கும்
அதிகமான பதின்ம வயதினரின் கணக்குகளை நீக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம்
அறிவித்துள்ளது.</p><p>

சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த
டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க தடைச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.</p><p>

இதற்கமைய, மெட்டா நிறுவனம் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், இன்ஸ்டாகிராம்
தளத்தில் 4,62,000 கணக்குகளும், பேஸ்புக் தளத்தில் 2,94,000 கணக்குகளும்
நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கம் நடவடிக்கை</h2><p>
</p><p>
கணக்குகளின் உரிமையாளர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள், பாடசாலைக் கல்வி குறித்த
தகவல்கள் மற்றும் இணையச் செயற்பாடுகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவு (AI)
தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்தே இந்தக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டு
நீக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/261ef039-eeb9-4f20-982a-c333c81f87f2/26-6a7dc0fecd7dc.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ஒருமுறை கணக்கு நீக்கப்பட்ட பயனர் மீண்டும் புதிய கணக்கை உருவாக்க
முனையும் முயற்சிகளும் முடக்கப்பட்டுள்ளன.</p><p>

சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறினால், அதிகபட்ச அபராதத் தொகையை 99
மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக (சுமார் 69.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள்)
உயர்த்த அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p>

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அரசின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக,
இளைஞர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கத் தாம் தொடர்ந்து
அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் கழிப்பறைக்குள் மர்மான முறையில் கையடக்க தொலைபேசி - அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-taking-secrete-photos-1786592021"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-taking-secrete-photos-1786592021</id>
            <summary type="text">இரத்தினபுரியில் இயங்கும் நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களை தகாத முறையில் புகைப்படங்களைப் பெற முயன்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரியில் இயங்கும் நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களை தகாத முறையில் புகைப்படங்களைப் பெற முயன்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

பெண்களின் கழிப்பறைக்குள் சூட்சுமான முறையில் கையடக்க தொலைபேசி ஒன்றை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றிலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது குற்றத்தை ஒப்புக் கொண்டமையினால் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

கையடக்கத் தொலைபேசி</b></h2><p>இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியராகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c49c733-4522-41a2-bf08-01115c2eebe0/26-6a7dba55444ae.webp' /></p><p>குறித்த நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் மலசலகூடத்திற்குள் சுவரில் கையடக்கத் தொலைபேசி ஒன்றை பொருத்தி, பெண்களை தவறான முறையில் புகைப்படங்களைப் பெற முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. </p><p>

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், துளைகளுடன் கூடிய காகிதம் ஒன்று கழிவறைக்குள் ஒட்டப்பட்டிருந்தமையால் சந்தேகம் அடைந்து பரிசோதித்துள்ளார்.</p><p>
</p><h3><b>
பெண்களின் தகாத புகைப்படங்கள்</b></h3><p>இதன்போது காகிதத்திற்கு உள்ளே கையடக்கத் தொலைபேசி ஒன்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4a08261-a392-40d4-8e42-3a1dc0b893cd/26-6a7dba55edc4d.webp' /></p><p>கையடக்க தொலைபேசியை தனிப்பட்ட மடிக்கணினி ஒன்றில் பொருத்தி பரிசோதித்தபோது, பெண்களின் தகாத புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். </p><p>இது தொடர்பாக இரத்தினபுரி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/n4SpCOueAvA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T12:36:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hot-weather-warning-1786622684"></link>
            <id>https://tamilwin.com/article/hot-weather-warning-1786622684</id>
            <summary type="text">வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அதன்படி, நாளை (14.08.2026) பகல் நேரத்தில் வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p><h2>வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்க</h2><p>நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், அதே சமயம் தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4376539-1535-4ee1-a5e4-756403f1bf6d/26-6a7db8c7d8f95.webp' /></p><p>
 

எனவே, பொதுமக்கள் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T12:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை! பொலிஸ் அதிகாரிகளுக்கு பறந்தது உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attention-to-motorcycles-traveling-on-the-road-1786619451"></link>
            <id>https://tamilwin.com/article/attention-to-motorcycles-traveling-on-the-road-1786619451</id>
            <summary type="text">18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இன்று (13.08.2026) இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>விபரீதமான மனநிலையுடன் வாகனம் செலுத்தல்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோட்டார்சைக்கிள்களில் குழுக்களாக பயணிக்கும் சிலர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விபரீதமான மனநிலையுடன் வாகனங்களைச் செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்தகைய நபர்களுக்கு எந்தவித மன்னிப்பும் அளிக்காமல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76165016-dd6a-413b-bf03-b2ac521729e4/26-6a7db64d418df.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

அத்துடன், 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>
சத்தம் மாற்றியமைக்கப்பட்ட, அசல் வடிவம் மாற்றப்பட்ட, பதிவு செய்யப்பட்ட மற்றும் கொள்ளளவை விட அதிக கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/w62KACkMinM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T12:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடிந்து விழுந்த ஹட்டன் - விக்டன் தோட்ட பாலம் : தடைப்பட்டுள்ள பேருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-000-people-affected-by-collapsehat-wigton-bridge-1786618057"></link>
            <id>https://tamilwin.com/article/5-000-people-affected-by-collapsehat-wigton-bridge-1786618057</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஹட்டன் - விக்டன் பகுதியில் அமைந்துள்ள சீமெந்து பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஹட்டன் - விக்டன் பகுதியில் அமைந்துள்ள சீமெந்து பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.</p><p>

இதனால் பேருந்து சேவை
தடைப்பட்டுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>பாதிக்கப்பட்ட மக்கள்</h2><p>
</p><p>
விக்டன் தோட்டத்தில் 5 பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு அருகிலுள்ள நகரம்
ஹட்டன் ஆகும். மேலும் அந்த வழித்தடத்தில் தினமும் சுமார் 6 தனியார்
பேருந்துகள் இயக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32eb9fba-0e3d-42dd-8d7e-fa5e0559d862/26-6a7da981cf517.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்ட விக்டன் தோட்டத் தொழிலாளர்கள்,
இதற்கு முன்பும் பாலம் இடிந்து விழுந்ததாகவும், அப்போது தோட்டத் தொழிலாளர்களே
தற்காலிகமாக சரிசெய்ததாகவும் தெரிவித்துள்ளதுடன் தற்போது பாலத்தின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்துள்ளதால், தங்களால் அதை சரிசெய்ய முடியவில்லை
என கூறுகின்றனர்.</p><p>

மேலும், விக்டன் பகுதி மக்கள், தங்கள் பகுதியில்தான் ஆண்டு முழுவதும் அதிக மழை
பெய்கிறது என்றும், அந்த மழையின் காரணமாக பல இடங்களில் பெரிய
பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்படைகிறது என்றும்
கூறுகின்றனர்.</p><h2>போக்குவரத்து சிரமம்</h2><p>
</p><p>
உடைந்த பாலம் வரை பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், குழந்தைகளும்
ஆசிரியர்களும் விக்டன் தோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சுமார் 1 கிலோமீட்டர்
தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. </p><p>

மேலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக, தங்கள்
தோட்டத்திலிருந்து இந்த உடைந்த பாலம் வரை செல்வதற்கு ஒரு முச்சக்கர வண்டியில்
பயணித்தால் சுமார் 500 ரூபா கட்டணம் வசூலிப்பதாக கூறுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b8dde14-b728-4d1f-a592-6d1b23e130d4/26-6a7da982eeef7.webp' /></p><p>அத்துடன் தேர்தல் காலத்தில் உடைந்த பாலம் மீண்டும் கட்டப்படும் என்று அரசியல்வாதிகள்
வாக்குறுதி அளித்தபோதிலும், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.</p><p>
எனவே, ஹட்டன் - விக்டன் மக்கள், உடைந்த பாலத்தை சரிசெய்ய வேண்டும் அல்லது
நீடித்து நிலைக்கும் ஒரு புதிய பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EEPrrs2NlUQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T11:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானின் கைது நடவடிக்கை குறித்து பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-explain-challenges-kanjipani-imran-1786618446"></link>
            <id>https://tamilwin.com/article/police-explain-challenges-kanjipani-imran-1786618446</id>
            <summary type="text">மலேசியாவில் பாதாள உலகத் தலைவரான காஞ்சிபானி இம்ரான் என்பவரைக் கைது செய்த சமீபத்திய நடவடிக்கை தோல்வியுற்றது என்ற கருத்துக்களைப் பொலிஸார் நிராகரித்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் பாதாள உலகத் தலைவரான காஞ்சிபானி இம்ரான் என்பவரைக் கைது செய்த சமீபத்திய நடவடிக்கை தோல்வியுற்றது என்ற கருத்துக்களைப் பொலிஸார் நிராகரித்துள்ளனர். </p><p>

அந்த நடவடிக்கையானது ஒரு வெளிநாட்டின் சட்டங்களையும் நடைமுறைகளையும் கையாள்வதை உள்ளடக்கியிருந்தது என்றும் கூறியுள்ளனர்.
</p><h2>மலேசிய நடவடிக்கை</h2><p>
ஊடகங்களிடம் பேசிய உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்கவே நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd88dd0-c183-436f-862d-000542e6a306/26-6a7dac2c298ba.webp' /></p><p>

இலங்கை அதிகாரிகள் தங்கள் சொந்த அதிகார வரம்பில் செயல்படுவது போலவே ஒரு வெளிநாட்டில் செயல்பட முடியாது என்று விளக்கிய அவர், இந்தச் சூழ்நிலையை, ஒருவர் தனது சொந்த வட்டாரத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியின் புவியியல் மற்றும் நடைமுறைகளுடன் பரீட்சயமில்லாமல் இருப்பதற்கு ஒப்பிட்டுள்ளார்.
</p><p>
எனவே, மலேசிய நடவடிக்கையை ஒரு தோல்வியாகக் கருதக்கூடாது என்றும், மாறாக வெளிநாட்டு சட்ட மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுக்கு இது ஒரு கற்றல் அனுபவமாக அமைய வேண்டும் என்றும் ஒலுகலா கூறியுள்ளார்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ARxzvItCz60" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T11:36:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் - உதவிக்கரம் நீட்டிய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/food-packages-with-help-of-the-indian-government-1786618142"></link>
            <id>https://tamilwin.com/article/food-packages-with-help-of-the-indian-government-1786618142</id>
            <summary type="text">சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட 391 குடும்பங்களுக்கு இந்திய
அரசாங்கத்தின் அனுசரணையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட 391 குடும்பங்களுக்கு இந்திய
அரசாங்கத்தின் அனுசரணையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
கண்டி இந்திய உதவி தூதரகத்தின் உதவி தூதுவர் வி.எஸ்.சரண்யா தலைமையில் இந்த
நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (13.08.2026) நடைபெற்றுள்ளது.</p><p>

கொட்டகலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணி பிரசாத் விடுத்த வேண்டுகோளுக்கு
அமைவாகவும், அவரது ஏற்பாட்டிலும் இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு
முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188531c1-a732-4aa8-b884-c5f373fcfe18/26-6a7da120b74f3.webp' /></p><h2>அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்கள்</h2><p>
</p><p>
கடந்த காலங்களில் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட சீரற்ற
காலநிலை காரணமாக கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற
அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுத்திருந்தனர். </p><p>இதனால் பல குடும்பங்களின்
அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த உலர் உணவுப் பொதிகள்
வழங்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8459a0ca-efa7-466f-8960-568945a6d0fb/26-6a7da1216e0e9.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக கொட்டகலை, ரொப்கில், மவுண்ட்வேர்னன், எரின்டன், தலவாக்கலை உள்ளிட்ட
பல பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்த நிவாரண உதவியைப்
பெற்றுக் கொண்டனர்.</p><h2>உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு</h2><p>
</p><p>
ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்
பொதிகள் வழங்கப்பட்டன. சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அயல்நாடான இந்தியா தொடர்ச்சியாக
வழங்கிவரும் மனிதாபிமான உதவிகளின் ஒரு பகுதியாக இந்த நிவாரணப் பொதிகள்
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி
பிரசாத், தலவாக்கலை பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் பத்திநாயக்க, பிரதேச சபை
உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5c6565d-ff8b-4cee-8b08-45ca5e2cf789/26-6a7da12224ce3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc779d25-9210-4981-be26-aa396bb59784/26-6a7da122d115d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd688a8-da48-4a47-af3d-00112ecbd97f/26-6a7da12388099.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:49:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கவுள்ள அநுர! பதவி விலகவும் தயார் என பகிரங்கமாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ready-to-face-consequences-anura-1786604816"></link>
            <id>https://tamilwin.com/article/ready-to-face-consequences-anura-1786604816</id>
            <summary type="text">நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
“எனது நிர்வாக அதிகாரமோ அல்லது எங்களிடம் உள்ள எந்த அதிகாரமோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப்படாது.</p><h2><b>அரசியலமைப்பில் மாற்றம்</b></h2><p> அரசியலமைப்புத் திருத்தங்களின் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி பதவி விலக வேண்டியிருந்தது. 

நீங்களும் பதவி விலக வேண்டியிருக்கும்&nbsp;என சட்டத்தரணிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.</p><p>நான் பதவி விலகத் தயாராகவே உள்ளேன். மக்களின் ஆணையை மீறி ஆட்சியில் இருக்க ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0a38cea-bae6-4cbb-b57e-0c667e69bf07/26-6a7d82698a140.webp' /></p><p> </p><p>

மேலும், அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆபத்தை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> ஆபத்துக்கள் இல்லாமல் மாற்றம் நிகழும் என்று நான் நினைக்கவில்லை. மாற்றம் எப்போதும் ஆபத்துக்களுடன் ஏற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது. </p><h3><b>

அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கை</b></h3><p>இதன்போது நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.</p><p>இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48bf7657-e35f-4b64-ab91-33c7a8eb2a45/26-6a7d826a43de6.webp' /></p><p>
</p><p>
நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மட்டுமே இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும்.</p><p>அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். </p><p>மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p></p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1046735007716312%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-08-13T10:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/road-accident-in-sri-lanka-1786616197"></link>
            <id>https://tamilwin.com/article/road-accident-in-sri-lanka-1786616197</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

அதன்படி சுமார் 1605 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநரகத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி. டபிள்யூ.பி.ஜே. சேனதீரா தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (13.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>விபத்துக்களில் உயிரிழப்பு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விபத்துக்களில் 1693 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகள், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 119 பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள், 115 சைக்கிள் ஓட்டுநர்கள், 136 ஓட்டுநர்கள் மற்றும் 162 பயணிகள் அடங்குகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba8d780-ca08-421b-bb21-979db731ffca/26-6a7d9d4212e89.webp' /></p><h2>வீதி விபத்துகளில் சற்று குறைவு</h2><p>

மேலும், இதுவரை 3125 கடுமையான விபத்துகள், 6477 சிறிய விபத்துகள் மற்றும் 2388 இழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன. </p><p>

இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது வீதி விபத்துகளில் சற்று குறைவு காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T10:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையை நடுவீதியில் விட்டு தப்பியோடிய தாய்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-abandons-daughter-in-wattegama-town-1786614177"></link>
            <id>https://tamilwin.com/article/mother-abandons-daughter-in-wattegama-town-1786614177</id>
            <summary type="text">கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.</p><p>

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><h2>பொலிஸார்&nbsp;&nbsp;விசாரணை</h2><p>

இன்று காலை (13) சுமார் 07.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த தாய் ஒருவர் குழந்தையை இறக்கிவிட்டு சென்றுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/971c2ec9-5da3-4a03-93b6-5c88cd90a7be/26-6a7d96655b9d5.webp' />&nbsp;</p><p>

தமிழ்மொழியில் பேசும் குழந்தைக்கு தான் வசிக்கும் கிராமம் மற்றும் மாகாணம் குறித்த எந்த தகவலும் தெரியாது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
</p><p>
இருப்பினும், குழந்தையை இறக்கிவிட்ட முச்சக்கர வண்டியின் எண் தெளிவாக தெரியாததால், நகரில் உள்ள ஏனைய கண்காணிப்பு கமரா அமைப்புகளை சரிபார்த்து தகவல்களை பெற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VoKkF8qg2CA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T10:09:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் 93 சந்தேக நபர்களை மீட்டுவர சிவப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-notices-issued-93-suspects-hiding-abroad-1786612939"></link>
            <id>https://tamilwin.com/article/red-notices-issued-93-suspects-hiding-abroad-1786612939</id>
            <summary type="text">இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 93 சந்தேக நபர்களை இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவருவதற்காக, இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். </p><p>இன்று (13.08.2026) நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் வெளியிட்டுள்ளார்.</p><h2>35 முக்கிய குற்றவாளிகள்</h2><p>

மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், 2024, 2025 மற்றும் இந்த ஆண்டில், இந்த சிவப்பு அறிவிப்புகள் மூலம் 38 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7604dc3b-a73e-49e4-b2d4-279379c86f3a/26-6a7d94b306d87.webp' /></p><p>கூடுதலாக, பொலிஸ் மா அதிபரின் (IGP) நேரடித் தலையீட்டின் மூலம் மேலும் 35 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் நிலங்கள் உள்ளிட்ட பெரும் அளவிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு சிறப்புத் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.</p><p>

அதன்படி, சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, 2024இல் ரூ.1,490 மில்லியனும், 2025இல் ரூ. 1,549 மில்லியனும் கோரப்பட்டுள்ளது.</p><p>

மேலும், ஜனவரி 1, 2026 முதல் இன்று வரை ரூ. 839 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடக ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G-Ex4PCcjWs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T10:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு கட்டித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி : பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/housing-scam-worth-crores-through-facebook-1786610401"></link>
            <id>https://tamilwin.com/article/housing-scam-worth-crores-through-facebook-1786610401</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, குறிப்பாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>மேற்கொள்ளப்பட்ட விசாரணை</h2><p>
அந்த விளம்பரங்களை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ள நிலையில், வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e86fb7-abeb-4f17-896e-553f34984e42/26-6a7d87ef0e033.webp' /></p><p>
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/J-XJgIZxg7g" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிய ஜீவன் தொண்டமான் நேரடி விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-visits-maskeliya-district-hospital-1786609860"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-visits-maskeliya-district-hospital-1786609860</id>
            <summary type="text">மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று
பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற
உறுப்பினரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று
பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நோயாளர்களுக்கு தடையற்றதும் தரமானதுமான
சுகாதார சேவையை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை விரைவில் பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (12.08.2026) கண்காணிப்பு விஜயமொன்றை
மேற்கொண்ட ஜீவன் தொண்டமான், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, அங்கு
காணப்படும் அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் மற்றும் நோயாளர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
</p><p>
இதன்போது, வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர்
யு.சு.யு. ரிஷான் உள்ளிட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் அவர் விரிவான
கலந்துரையாடலில் ஈடுபட்டார்.</p><h2>மஸ்கெலியா வைத்தியசாலையின் செயற்பாடு</h2><p>
</p><p>
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் சீரான செயற்பாட்டிற்கு மொத்தமாக 27
ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 14 ஊழியர்கள் மாத்திரமே கடமையில்
இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனால் 13 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதுடன், இந்த நிலைமை
வைத்தியசாலையின் அன்றாட சேவைகளிலும் நோயாளர்களுக்கான சிகிச்சை
நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23323dd5-2508-4901-b94a-2bd9ea4a14e6/26-6a7d89544f914.webp' /></p><p>
</p><p>
நோயாளர்களுக்கு தடையின்றி மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு இந்த ஊழியர்
பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜீவன் தொண்டமான்
வலியுறுத்தினார்.
</p><p>
நான்கு மாடிகளைக் கொண்ட மஸ்கெலியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு
மின்தூக்கிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்காத நிலையில் இருப்பதும் இந்த
விஜயத்தின்போது தெரியவந்தது.
</p><p>
இதனால் வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும்
பொதுமக்களை ஒரு மாடியிலிருந்து மற்றொரு மாடிக்கு மாற்றுவதில் பாரிய சிரமங்கள்
ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
குறைந்த மின் அழுத்தமே மின்தூக்கிகள் இயங்காததற்கான முக்கிய காரணமாக
தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்சார இணைப்பை சீரமைத்து இரண்டு
மின்தூக்கிகளையும் விரைவில் இயங்கச் செய்வதற்கான நடைமுறைத் தீர்வை
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
</p><p>
70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் வைத்தியசாலையாக
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை காணப்படுகின்ற போதிலும், முறையான வைத்திய
ஆய்வுக்கூட வசதி இல்லாதிருப்பது பாரிய குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டது.
</p><p>
இரத்த மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாதிரிகளை
டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d0fa46-1227-4b9a-ba44-72614761ab9f/26-6a7d8955229a9.webp' /></p><h2>நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை</h2><p>
</p><p>
அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நோயாளர்கள் நீண்ட நேரம்
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், சிகிச்சை வழங்குவதிலும் தாமதம்
ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, மஸ்கெலியா வைத்தியசாலையிலேயே தேவையான அடிப்படை ஆய்வுக்கூட வசதிகளை
ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜீவன்
தொண்டமான் வலியுறுத்தினார்.</p><p>

இதனுடன், வைத்தியசாலையில் காணப்படும் நோயாளர் காவுவண்டி அடிக்கடி பழுதடைவதால்,
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக ஏனைய
வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
</p><p>
நோயாளர்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், நோயாளர்
காவுவண்டியை முறையாக பராமரிப்பதுடன், அவசர தேவைகளின் போது பயன்படுத்தக்கூடிய
மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர்
ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8370ab4b-4771-4de5-9701-27a8d02dbba3/26-6a7d8955eca41.webp' /></p><p>
</p><p>
வைத்தியசாலையில் நேரில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட
செயலாளருக்கு உடனடியாக தொலைபேசி ஊடாகத் தெரியப்படுத்தியுள்ளதாக ஜீவன்
தொண்டமான் தெரிவித்தார்.
</p><p>
மேலும், குறித்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும்
நோக்கில் மாவட்ட செயலாளரை இன்றைய தினம் (13.08.2026)&nbsp; நேரடியாக சந்தித்து
கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:09:01+00:00</updated>
        </entry>
    </feed>
