<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-18T19:32:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனக் கப்பல் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chinese-ship-collided-with-a-philippine-ship-1789755913"></link>
            <id>https://tamilwin.com/article/chinese-ship-collided-with-a-philippine-ship-1789755913</id>
            <summary type="text">தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான கப்பலொன்றின் மீது
சீனக் கடலோரப் பாதுகாப்புக் குழுவின் கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான கப்பலொன்றின் மீது
சீனக் கடலோரப் பாதுகாப்புக் குழுவின் கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக
மணிலா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
பஜாவான் மாகாணக் கரைக்கு அப்பால் உள்ள சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் பயணித்த
‘பி.ஆர்.பி டட்டு மகத் சலமத்’ என்ற பிலிப்பைன்ஸ் மீன்பிடி மற்றும் நீர்வாழ்
வளங்கள் திணைக்களத்தின் கப்பல் மீது, சீனக் கப்பல் அபாயகரமான முறையில் இராணுவ
நடவடிக்கைகளை மேற்கொண்டு மோதியதாக பிலிப்பைன்ஸ் கடற்கரை பாதுகாப்புப் படை
தெரிவித்துள்ளது.</p><h2>தொடர்ச்சியான மோதல் சம்பவங்கள்</h2><p>உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கச் சென்ற வேளையிலேயே இச் சம்பவம்
இடம்பெற்றுள்ளதுடன், மோதலினால் பிலிப்பைன்ஸ் கப்பலின் ஒரு பகுதி பலத்த
சேதமடைந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d349b569-a299-46fc-8b61-cec5d300f912/26-6aad8dc5e1915.webp' /></p><p>
எனினும் இச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனக்
தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அதேவேளை, இக் குற்றச்சாட்டை சீனா முற்றாக மறுத்துள்ளது. பிலிப்பைன்ஸ் கப்பலே
எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, திடீரெனத் தனது பயணப் பாதையை மாற்றிச் சீனக்
கப்பலுக்கு முன்பாக அதிவேகமாக வந்தமையினாலேயே இச்சேதம் ஏற்பட்டதாகச் சீன
வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>தென் சீனக் கடல் பகுதி முழுவதற்கும் உரிமை கோரிவரும் சீனாவிற்கும், அப்
பகுதியைத் தனது எல்லைக்குட்பட்டதாகக் கருதும் பிலிப்பைன்ஸிற்கும் இடையே கடந்த
சில மாதங்களாக இவ்வாறான தொடர்ச்சியான மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:20:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்ப்புகளை மீறி கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவக் கழிவுகள் - நிர்வாகத்திற்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cancer-medical-waste-dumped-at-rimalai-1789758843"></link>
            <id>https://tamilwin.com/article/cancer-medical-waste-dumped-at-rimalai-1789758843</id>
            <summary type="text">பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள்
கொட்டப்பட்டு வரும் நிலையில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் பெருமளவான ஆபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள்
கொட்டப்பட்டு வரும் நிலையில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் பெருமளவான ஆபத்தான மருத்துவ கழிவுகளும் அங்கு கொட்டப்பட்டுள்ளதாக வலி.
வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் நேற்று(18.09.2026) அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2> 


கீரிமலை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்</h2><p>


இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றி , எவ்வித அனுமதிகளும் இன்றி சுமார் 300
டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு மாத காலத்திற்கு
மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509fe807-1704-446e-89aa-75876b866e18/26-6aad8e21458fd.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, ஒருங்கிணைப்பு குழு
தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா , வலி. வடக்கு பிரதேச சபை
தவிசாளருக்கு கொட்டப்பட்ட கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அள்ள நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பணித்திருந்தார்.</p><h2>

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்</h2><p>
அத்துடன் வலி. வடக்கு பிரதேச சபையினரும் அப்பகுதிகளில் கழிவுகளை கொட்டக்கூடாது
என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

அவ்வாறான நிலையில், கடந்த வியாழக்கிழமை சபையின் மாதாந்த
கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்து, கீரிமலையில்
கொட்டப்பட்ட குப்பைகள் மீள அள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459be478-0545-4530-a492-19c3af6703d9/26-6aad8e2235c2f.webp' /></p><p>அதேவேளை,&nbsp; உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை
அதிகாரிகள் , வலி.தெற்கு பிரதேச சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்டவர்கள், வலி.
வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுடன் இணைந்து குப்பைகள் கொட்டப்பட்ட
இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அவற்றை உடனடியாக வலி. தெற்கு பிரதேச
சபையினர் மீள அள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.</p><p>

இந்நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்தில்
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் ஆபத்தான வைத்திய கழிவுகள் பெருமளவில்
கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன.</p><p>இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள் அறிவித்ததை
அடுத்து, சம்பவ இடத்திற்கு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்ட போது பெருமளவான
மருத்துவ கழிவுகள் பொதி செய்யப்பட்ட நிலையில் அங்கு
கொட்டப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளனர்.
</p><h2>
மருத்துவ கழிவுகள் அடையாளம்</h2><p>
இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு புகைப்பட மற்றும் ஒளிப்பட ஆதாரங்களுடன்
முறையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22cfc59a-e23e-485b-b907-fd655815342f/26-6aad8e230ade4.webp' /></p><p>

கழிவுகளை இப்பகுதியில் கொட்ட வேண்டாம் என கடந்த இரு மாதங்களாக தாம் குரல்
கொடுத்து வரும் நிலையிலும், பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் கழிவுகள் அள்ள பட
வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, உள்ளூராட்சி ஆணையாளர் கழிவுகளை அள்ள
உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில் , அவற்றையெல்லாம் மீறி வலி. வடக்கு பிரதேச சபையினர்
ஆபத்தான மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளமை படுமோசமான செயற்பாடு என வலி.
வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:16:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dead-in-a-foreign-country-after-7-years-1789754294"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dead-in-a-foreign-country-after-7-years-1789754294</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு பிரிட்டனில் காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தாயின் உடல் எச்சங்கள், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு பிரிட்டனில் காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தாயின் உடல் எச்சங்கள், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலைச் சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த 44 வயதான ஜோன் ஷீனின் உடல் எச்சங்கள், அவர் காணாமல் போன இடத்திலிருந்து 60 மைல்களுக்கும் அதிகமான தொலைவில் உள்ள தென்மேற்கு லண்டனின் ஃபெல்தாம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமான சவுத்தாம்ப்டனைச் சேர்ந்த 56 வயதான ஹாம்ப்ஷயர் என்பவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>


தீ விபத்தில் சிக்கிய உடல் எச்சங்கள்</h2><p>
குறித்த பெண், கடைசியாக டிசம்பர் 5, 2019 அன்று, ஃபேர்ஹாமிலிருந்து தனது சொந்த ஊரான சவுத்தாம்ப்டனுக்கு ஒரு தோழியுடன் சென்ற பொழுது காணாமல் போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebae6b93-1c9e-477e-9828-2163c68b9551/26-6aad7c33e071d.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

அதன் பின்னர், பல மாதங்களாக அவரிடமிருந்து எந்தத் தகவலும் வராததால், குடும்ப உறுப்பினர்கள் பெப்ரவரி 2020ஆம் ஆண்டு பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர்.</p><p>“லிட்டில் ஜோ” என்றும் அறியப்பட்ட, ஐந்து அடி உயரமுள்ள அந்தப் பெண் காணாமல் போனது குறித்து பொலிஸார் ஒரு விரிவான விசாரணையை ஆரம்பித்தனர்.</p><p>

இதன்போது, 4,000-க்கும் மேற்பட்ட தகவல்களும், 300-க்கும் மேற்பட்ட வாக்குமூலங்களும் பெறப்பட்டன. அவர் இருந்த பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முகவரிகளிலும், பல படகுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
</p><p>
பெட்பான்ட் லேக்ஸ் கண்ட்ரி பார்க் அருகே இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 12 அன்று அந்த வழியே சென்ற ஒருவர் அந்த எலும்புக்கூடு எச்சங்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனைத் தொடர்ந்து, டிஎன்ஏ மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம் அந்த உடல் ஷீனுடையது என்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். </p><h2>

20,000 டொலர்கள் வெகுமதி</h2><p>
அவருக்கு நிலையான முகவரி, வங்கிக் கணக்கு அல்லது கார் எதுவும் இல்லாததால், பொலிஸாரின் விசாரணை கடுமையாகத் தடைபட்டது. </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு, ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/557e3821-fe4d-4279-86de-01757290ac4d/26-6aad7c34ae13c.webp' /></p><p>
</p><p>
அவரது இரண்டு மகள்களான லெய்லா மற்றும் ஹெய்லி, தங்கள் தாயை மிகவும் இனிமையான மற்றும் நட்பான பெண் என்று விவரித்தனர்.

 இருப்பினும், அவர் ஒரு பாலியல் தொழிலாளியாகவும் பணியாற்றியதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். </p><p>

எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது விசாரணைக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளது என்று துப்பறியும் தலைமை ஆய்வாளர் டோபி எல்காக் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், இந்த விசாரணைக்கு உதவும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 20,000 டொலர்கள் வெகுமதி வழங்க கிரைம்ஸ்டாப்பர்ஸ் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:10:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து அகற்றப்பட்ட ஒலிபெருக்கி - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/loudspeaker-removed-from-thileepan-s-memorial-1789757743"></link>
            <id>https://tamilwin.com/article/loudspeaker-removed-from-thileepan-s-memorial-1789757743</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி
பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை
யாழ்ப்பாணம் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி
பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை
யாழ்ப்பாணம் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(18.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

நல்லூரில் அமைந்துள்ள பிரதான நினைவுத் தூபிப் பகுதியில் திலீபனின் நினைவேந்தல்
வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், நினைவேந்தல் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட
போதே பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><h2>
ஒலிபெருக்கிகள் பறிமுதல்</h2><p>

தமக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமையவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகத்
தெரிவித்த பொலிஸார், அங்கு பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்களைப் பறிமுதல்
செய்து பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1c08f24-3f55-4a45-a1b4-b309503fd1fb/26-6aad898106ef0.webp' /></p><p>

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதற்குச் சான்று பகிர்வது போலப்
பொலிஸாரின் இந்தச் செயற்பாடு அமைந்திருக்கின்றது என்று அந்த இடத்தில் இருந்தவர்கள் விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d91a2df2-cf25-4039-b2a8-d24b4dd76752/26-6aad89821484e.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T18:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு வந்த அழைப்பு - பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-received-by-namal-who-is-in-prison-1789757186"></link>
            <id>https://tamilwin.com/article/call-received-by-namal-who-is-in-prison-1789757186</id>
            <summary type="text">எதிர்க்கட்சி தலைவர் நாமல் ராஜபக்சவை தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பிணை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சி தலைவர் நாமல் ராஜபக்சவை தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், பிணை பெறுவதற்காக நாமல் ராஜபக்ச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
</p><p>
சிறையில் இருக்கும் நாமல் ராஜபக்சவிற்கு எசல பெரஹெரவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் சமூகமளிக்காவிட்டால் அது அழைப்பை அவமதிப்பதாக அமையும் என அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதனை ஒரு காரணமாக முன்வைத்து நாமல் ராஜபக்சவிற்கு பிணை கோரப்பட்டுள்ள போதிலும், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அத்துடன், நிமல் பெரேரா அளித்த வாக்குமூலம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, நிமல் பெரேராவின் வங்கிக் கணக்கிற்கு மேலும் பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாமல் ராஜபக்ச வழக்கின் பின்னணியில் இடம்பெறும் பரபரப்பான விடயங்கள் என்ன? பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் பின்னணி என்ன? உள்ளிட்ட பல தகவல்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது “நியூஸ் இன்சைட்” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0e_uB3G-kPs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T18:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறீதரனை சந்தித்த ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/met-with-itak-member-of-parliament-shritharan-1789753078"></link>
            <id>https://tamilwin.com/article/met-with-itak-member-of-parliament-shritharan-1789753078</id>
            <summary type="text">இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானத்தை சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>குறித்த சந்திப்பானது இன்று(18.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmarc.andre.franche%2Fposts%2Fpfbid0CkyvfNcAa58cM9Ca5eEv65LDiJD7hnVVzz3F3XMzSLG2yPTeszEzcUC1rPyu5zfSl&show_text=true&width=500" width="500" height="250" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p> </p><p>இந்த சந்திப்பின் போது நல்லிணக்க முயற்சிகளில் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான கூட்டணிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, வடக்கில் காணிகளை விடுவித்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:58:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் அடுத்தடுத்து வாள் வெட்டு சம்பவங்கள் - போராட்டத்தில் குதித்த வர்த்தகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1789752266"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1789752266</id>
            <summary type="text">கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>

இந்த போராட்டமானது, இன்று(18.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>


கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த
கவனயீர்ப்பு பேரணி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று மாவட்ட மேலதிக
அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ்விடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்த்தகரங்களால் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dacad13-1970-45e5-9037-29e903d75804/26-6aad744d55968.webp' /></p><p> </p><p>

கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும்
வகையில் வாள் வெட்டுக்குழுக்கள் வாள் வெட்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த வாரங்களில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b07e5b-3f7a-43c4-b76e-3cce230607e2/26-6aad744e54de5.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a61c2b0c-3a6c-44e2-8d24-daab569952c1/26-6aad744f29fb8.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T17:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பொலிஸ் வளாகப் பள்ளிவாசல் மீது தாக்குதல் : 16 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suicide-attack-police-complex-mosque-in-pakistan-1789751033"></link>
            <id>https://tamilwin.com/article/suicide-attack-police-complex-mosque-in-pakistan-1789751033</id>
            <summary type="text">பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் வளாகமொன்றின் மீது
மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன்,
57...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் வளாகமொன்றின் மீது
மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன்,
57 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் நகரில் அமைந்துள்ள பொலிஸ்
வளாகத்திற்குள் வெள்ளிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும்
அவர்களின் குடும்பத்தினரைக் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலை</h2><p>வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வளாகத்தின் வெளிச்சுவர் மீது மோதி
வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகத்திலும்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03d428ae-6b66-42e7-a241-a0bc73d64ace/26-6aad716740e10.webp' /></p><p>
இந்தத் தாக்குதலில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர்
உயிரிழந்துள்ளதுடன், பொலிஸாரின் பதில் தாக்குதலில் தாக்குதலில் ஈடுபட்ட ஏழு
பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக மாகாணப் பொலிஸ் தலைமை அதிகாரி
தெரிவித்துள்ளார்.
</p><p>
தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தானிய
தலிபான் (TTP) இயக்கம் இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என
அறிவித்துள்ளது.</p><p>எல்லைப் பகுதிகளில் தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வரும்
நிலையில், பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தே இவ்வாறான
தாக்குதல்களைத் திட்டமிடுவதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தி வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 மணி நேர அடையாளப் போராட்டம் நிறைவு - கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக அரசாங்கம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/48-hour-symbolic-protest-concludes-1789751559"></link>
            <id>https://tamilwin.com/article/48-hour-symbolic-protest-concludes-1789751559</id>
            <summary type="text">தொடருந்து பொது மேலாளரைப் பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட 48 மணி நேர அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து பொது மேலாளரைப் பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட 48 மணி நேர அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(18.09.2026) நள்ளிரவு முதல் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. </p><h2>

போராட்டம் நிறைவு</h2><p>
இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதாகவும், முந்தைய தொழிற்சங்கங்கள் செய்தது போன்று, மக்களைத் துன்புறுத்தி சீர்குலைக்கும் போராட்டத்தை நடத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அதன் தலைவர் சுமேத சோமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107cd0c5-e8ac-4939-b1d3-ccb82336a5a1/26-6aad7138df729.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T17:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் அனோஜனிற்கு இறுதி நிமிடங்களில் நடந்த மறைக்கப்பட்ட உண்மைகள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970"></link>
            <id>https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவுக்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றும், மாறாக 5 வருட சிறைத்தண்டனையும் 3,000 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
</p><p>
இவ்வாறு இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உண்மை என்ன என்பது தொடர்பில் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.</p><p>

இந்நிலையில், அனோஜன் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரி முகநூலில் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p>

அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன? அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களுடன், செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jPMCFUTKFaI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T17:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடுபிடிக்கும் எயார்பஸ் விவகாரம்.. தப்பியோடிய நாமலின் உறவினர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-interpol-cid-1789735331"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-interpol-cid-1789735331</id>
            <summary type="text"> எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p> எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு செப்டம்பர் 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>அதுவரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டதுடன், பாதுகாப்புத் தரப்பு செப்டெம்பர் 22க்குள்ளும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 25க்குள்ளும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் எனப் பணித்தார்.</p><p>

வழக்கு விசாரணையின் போது முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலும் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.</p><h2>சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம்</h2><p> </p><p>அத்துடன், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுக்குத் தப்பியோடிய ஷசீந்திர ராஜபக்ச மற்றும் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக இன்டர்போல் மூலம் 'சிவப்பு எச்சரிக்கை' (Red Notice) விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbddea59-2f6a-4f04-b5a6-9ca52b707b98/26-6aad3cdca58dd.webp' /></p><p> </p><p>மேலும், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்குரிய முக்கியமான சூழ்நிலைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் நாமலின் பெயர் இடம்பெறவில்லை என்றும், நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச பிடியாணை&nbsp;</h2><p> </p><p>அத்துடன், இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்குச் செல்லவிருந்த விஜயம் இரத்தாகின்றமை மற்றும் செப்டெம்பர் 26 அன்று ஹங்குரன்கெத்த விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க முடியாமை ஆகியவற்றை சிறப்புச் சூழ்நிலைகளாகக் கருதி பிணை வழங்குமாறு கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a2d4b1-6e37-472a-944f-4d2f6d1f88f2/26-6aad3cdd9806e.webp' /></p><p>

எனினும், இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்கான சிறப்புச் சூழ்நிலைகளாக அமையாது என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> மேலும், "வெலிகம பே" சம்பவம் தொடர்பிலும் நிமல் பெரேராவின் கணக்கில் 175 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சந்தேகத்திற்கிடமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பின்னர் நீதிவான், நாமல் ராஜபக்சவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_7gpEcJPq9g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T16:56:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழரக் கட்சியிடம் கோரிக்கை - அனோஜனின் உயிரைக் காப்பாற்ற போராடும் இலங்கை மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-regarding-anojan-s-death-1789745713"></link>
            <id>https://tamilwin.com/article/request-regarding-anojan-s-death-1789745713</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞன் சிவராசா அனோஜன் தொடர்பில் இலங்கை
அரசாங்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞன் சிவராசா அனோஜன் தொடர்பில் இலங்கை
அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p> 

இந்த விடயம் தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இலங்கையின் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலாகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
 ஊடகங்களுக்கு இன்று(18.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

அனோஜனுக்கு மரண தண்டனை</h2><p>
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>


அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக
வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43a74cbe-f331-4acf-8706-143226ec3a72/26-6aad61a39ba1b.webp' /></p><p> </p><p>ஒரு இலங்கையரின் உயிர்
தொடர்பான விடயம் என்பதால், இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக
வேண்டியது அவசியமாகும்.
</p><p>
அனோஜனின் குடும்பத்தினரின் நிலைமையையும் கருத்தில் கொண்டு, அவருக்கு சட்ட உதவி
கிடைப்பதற்கும், மரண தண்டனையை தவிர்ப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர
முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
</p><p>
சவூதி அரேபிய அரசாங்கத்துடன் தேவையான இராஜதந்திர மட்டத்திலான
பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, இந்த விடயத்திற்கு சாத்தியமான மனிதாபிமான
தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். </p><p>அனோஜனின் குடும்பத்தினர் அனுபவித்து வரும் துயரமான சூழ்நிலையை கருத்தில்
கொண்டு, அவர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும். இந்த
விடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T16:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம்- கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ: மக்கள் தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-jaffna-s-kallundai-garbage-dump-protest-1789743732"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-jaffna-s-kallundai-garbage-dump-protest-1789743732</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்று மாலை 6 மணி
முதல் தீப்பற்றி எரிந்து வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலை
ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்று மாலை 6 மணி
முதல் தீப்பற்றி எரிந்து வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
தீ பரவி நீண்ட நேரமாகியும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல்
தீயணைப்புப் படையினர் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.
</p><p>
குப்பை மேட்டிலிருந்து எழும் அடர்ந்த புகையின் காரணமாக, அந்த வீதியால்
பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி
வருகின்றனர்.</p><h2>போராட்டம்</h2><p> </p><p>இதன் காரணமாக, மாநகர சபைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்
எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec7cfd8-f636-4ca4-a807-f0cb866fbead/26-6aad54704ecba.webp' /></p><p>

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்
கந்தையா யெசீதன், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்று தான் செயற்படப் போவதாக
உறுதியளித்தார்.
</p><p>
மேலும், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை
தந்து நிலைமையை நேரில் பார்வையிட்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T15:23:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடைந்துள்ள ஈரான் போர்: உலகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ள ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-involving-iran-donald-trump-un-1789742345"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-involving-iran-donald-trump-un-1789742345</id>
            <summary type="text">ஈரானுடனான போர் ஏழாவது மாதமாக நீடித்து வரும் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உலகத்
தலைவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் ஏழாவது மாதமாக நீடித்து வரும் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உலகத்
தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
</p><p>
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்த
போதிலும், அப்பிராந்தியத்தில் தொடரும் பதற்ற நிலைமை உலக நாடுகளிடையே பெரும்
சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் விநியோகத்தை ஈரான் கட்டுப்படுத்தி வரும்
அதேவேளை, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தங்கள் பிடியை
இறுக்கியுள்ளனர்.</p><h2>எரிபொருள் விலைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன் காரணமாக உலக அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதுடன், செங்கடல்
பகுதியில் அமெரிக்கக் கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5f4109-b50c-4015-a099-654b00d19149/26-6aad4f793e236.webp' /></p><p>
</p><p>
ஹூதிகளுக்கு எதிராக நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்குவது,
வளைகுடா பிராந்திய நட்பு நாடுகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.</p><p>

அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் காரணமாக
ஜனாதிபதி ட்ரம்பின் செல்வாக்கு சரிவடைந்து வரும் நிலையில், வரவிருக்கும்
இடைக்காலத் தேர்தலிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><h2>பேச்சுவார்த்தை&nbsp;</h2><p>
</p><p>
ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகளின் ஆதரவின்றி ஆரம்பிக்கப்பட்ட இந்தப்
போர், தற்போது இருதரப்புக்கும் இடையே இழுபறி நிலையாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/634f602b-d659-4787-aba6-de751831fa0b/26-6aad4f79e9fa6.webp' /></p><p>
எதிர்வரும் வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின்
போது, வளைகுடா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த
ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
</p><p>
எனினும், போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்காவிற்குப் பெரும்
சவாலாகவே அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T14:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appeals-court-to-rule-on-suresh-sallay-s-1789741127"></link>
            <id>https://tamilwin.com/article/appeals-court-to-rule-on-suresh-sallay-s-1789741127</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
குறித்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்குவதா என்பது தொடர்பான உத்தரவை நவம்பர் 27ஆம் திகதி பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
</p><h2>&nbsp;ரிட் மனு</h2><p>
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (18) இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
</p><p>
இதன்போது, வழக்கு தொடர்பான வாய்மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறித்த உத்தரவு நவம்பர் 27ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bb72dcc-db6e-4d74-8c9d-2a76fea99668/26-6aad4d16bf6e2.webp' /></p><p>
</p><p>மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, இன்று தனது பதில் சமர்ப்பணங்களை நிறைவு செய்தார்.</p><p>

மேலும், வழக்கில் தொடர்புடைய தரப்பினர் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்குவதா என்பது தொடர்பான உத்தரவுடன், இடைக்கால நிவாரணம் கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பான தீர்மானமும் நவம்பர் 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T14:39:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரோஸ் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eros-and-tamil-liberation-tigers-hold-key-meeting-1789739216"></link>
            <id>https://tamilwin.com/article/eros-and-tamil-liberation-tigers-hold-key-meeting-1789739216</id>
            <summary type="text">ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மற்றும்
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா
ஆகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மற்றும்
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா
ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(17) இரவு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
</p><p>
வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் தழுவிய ரீதியில் தமிழ் பேசும் மக்களின்
வாழ்வாதாரம், இருப்பு மற்றும் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான தர்க்க
ரீதியான முன்னெடுப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.</p><h2>சந்திப்பு</h2><p>
</p><p>
குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் இரு கட்சிகளும் ஒருமித்து
பயணிப்பது தொடர்பிலும், மக்களுக்கான பயணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி
இரு கட்சிகளும் ஒருமித்து செயற்படுவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6bfc026-43ce-49f8-afd0-7aa338aaa010/26-6aad427bd1321.webp' /></p><p>
</p><p>
முதற்கட்டமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள முன்னாள் போராளிகளின்
வாழ்வாதாரம் குறித்த விடயத்தில் முயற்சிகள் மேற்கொள்வதெனவும், அதனைத்
தொடர்ந்து வடக்கு கிழக்கு மலையக மக்களின் இருப்பு தொடர்பிலான பிரச்சனைகளுக்கு
உரிய தீர்வினை கண்டறிதல், கல்வி விவசாய நடவடிக்கைளை ஊக்குவித்தல் போன்ற
விடயங்களைக் கையாள்வதன் ஊடாக அரசியல் இருப்பு தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக
இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p>

குறித்த சந்திப்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின்
செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் நாமலுக்கு இந்திய அரசிடமிருந்து அழைப்பு.. பிணைக்காக போராடும் மொட்டுதரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-airbus-case-bail-application-reasons-given-1789726135"></link>
            <id>https://tamilwin.com/article/namal-airbus-case-bail-application-reasons-given-1789726135</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று (18) கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டார்.</p><p>நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்த நிலையில், தற்போது விதிவிலக்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>முக்கிய நிகழ்வுகள்..&nbsp;</h2><p> இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடம் இருந்து ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அந்த விஜயத்தை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a284b1dc-f852-4c3a-882e-7b6c823e1bd4/26-6aad1844cca28.webp' /></p><p> </p><p>அதுமாத்திரமன்றி, வருடாந்த ஹிங்குராக்கொட எசல பெரஹரவின் போது இடம்பெறும் மதச்சடங்கில் கலந்துகொள்ளுமாறும் பிரதம பௌத்த மதகுரு ஒருவரால் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் பாதுகாப்புத் தரப்பின் கூற்றுப்படி, செப்டெம்பர் 26ஆம் திகதி அன்று இரவு 7:42 மணிக்கு விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க நாமல் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்றும், அதில் கலந்துகொள்ள முடியாமை அழைப்பு விடுத்த மதகுருவை அவமதிப்பதாக அமையும் என்றும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1efba68a-9014-4cdb-88e6-c9207a51ed19/26-6aad1845bb5a3.webp' /></p><p> மேலும், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்றும், தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியும் சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.</p><p> இந்தச் சமர்ப்பிப்புகளுக்குப் பதிலளித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்குரிய விதிவிலக்கான சூழ்நிலைகளாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0ZMklSZuEVo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-18T13:48:37+00:00</updated>
        </entry>
    </feed>
