<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-01T05:17:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய விசாரணையில் அதிரடியாக முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-liquor-factory-blockaded-1788239387"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-liquor-factory-blockaded-1788239387</id>
            <summary type="text">குளியாப்பிட்டிய அருகே நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பொலிஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குளியாப்பிட்டிய அருகே நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் தியதொர, மாதரவத்த பிரதேசத்தில், இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><h2>சந்தேகநபர் கைது</h2><p>
</p><p>
இதன்போது, அங்கு சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக, வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72ecb301-125c-4bbc-bc1a-50580ef14ce1/26-6a965e1da03e3.webp' />&nbsp;</p><p>
</p><p>
வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, நேற்று (31) விசேட பொலிஸ் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, சட்டவிரோத மதுபான காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 7,560,000 மில்லி லீட்டர் கோடா அடங்கிய 40 பீப்பாய்கள், 187,500 மில்லி லீட்டர் கள்ளச் சாராயம் அடங்கிய 250 போத்தல்கள், 07 சுருள்களைக் கொண்ட 02 செப்புச் சுருள்கள், 02 எரிவாயு அடுப்புகள் மற்றும் 12.5 கிலோகிராம் கொண்ட 04 எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p>மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:09:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strait-of-hormuz-in-very-good-condition-trump-1788238342"></link>
            <id>https://tamilwin.com/article/strait-of-hormuz-in-very-good-condition-trump-1788238342</id>
            <summary type="text">முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்சமயம் &quot;மிகவும் நல்ல நிலையில்&quot;
உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்சமயம் "மிகவும் நல்ல நிலையில்"
உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில் அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன் தினமும் சராசரியாக 30
கப்பல்கள் அந்தப் பகுதி வழியாகப் பாதுகாப்பாக பயணித்து வருவதாகக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சீர்குலைந்துள்ள தலைமைத்தும்</h2><p>இதேவேளை ஈரானின் பொருளாதாரம், இராணுவம் மற்றும் தலைமைத்துவம்
சீர்குலைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db908289-feeb-4209-8099-d8d5d98b2494/26-6a965c0f5e1f0.webp' /></p><p>அத்துடன், ஈரான் மீதான தாக்குதல்களை
அமெரிக்கா தவிர்க்காது என்றும் சூழலுக்கு ஏற்ப தக்க பதிலடி கொடுக்கப்படும்
என்றும் எச்சரித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும் ஹோர்முஸ் நீரிணையின் லாராக் தீவில் அமைந்திருந்த ஈரானிய ஏவுகணை
தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் அண்மையில் தாக்குதல் நடத்தியதால்
அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:01:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளை எளிதாக்க குரல் தட்டச்சு செயலி அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/voice-typing-app-introduced-for-court-in-sri-lanka-1788236744"></link>
            <id>https://tamilwin.com/article/voice-typing-app-introduced-for-court-in-sri-lanka-1788236744</id>
            <summary type="text">இலங்கை நீதித்துறை அமைப்பில் நிலவும் வழக்கு தாமதங்களைக் குறைக்கும் நோக்குடன்இ திறந்த நீதிமன்ற அமர்வுகளில் வழங்கப்படும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நீதித்துறை அமைப்பில் நிலவும் வழக்கு தாமதங்களைக் குறைக்கும் நோக்குடன்இ திறந்த நீதிமன்ற அமர்வுகளில் வழங்கப்படும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு சிறப்பு புதிய மென்பொருள் செயலி அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய தொழில்நுட்ப அமைப்பை பரீட்சார்த்த ரீதியில் ஆரம்ப கட்டத்தில் நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் மட்டத்தில் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.</p><h2>மென்பொருள் பேச்சு-தட்டச்சு&nbsp;</h2><p>
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து சாட்சிப் பதிவுகளையும் சரியாக படியெடுப்பதற்காக இந்த மென்பொருள் பேச்சு-தட்டச்சு தொழில்நுட்பத்தை (Voice-typing technology) பயன்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae822752-09a0-46df-aa8d-a82bd69d97ee/26-6a9658d985da3.webp' /></p><p> அதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு சாட்சியாளரின் குரலையும் தனித்தனியாக அடையாளம் காணும் திறன் ஆகும்.

இதன் மூலம், ஒரு சாட்சியாளர் பின்னர் மீண்டும் சாட்சியமளிக்கும் சந்தர்ப்பங்களில் கூட எந்தவித குழப்பமும் ஏற்படுவது தடுக்கப்படும்.
</p><p>
நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் வழக்கு அறிக்கைகள் மற்றும் சட்டப் பதிவுகளைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால், வழக்கு அமர்வுகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவது இந்த நாட்டின் நீதித்துறை அமைப்பில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு தீவிரமான பிரச்சினையாகும்.</p><p>

இந்த புதிய செயலியை நீதவான் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், தொடர்புடைய தாமதங்களைக் குறைத்து, நீதித்துறை செயல்முறையின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:48:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ள தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protection-illegally-constructed-temple-kurundur-1788237525"></link>
            <id>https://tamilwin.com/article/protection-illegally-constructed-temple-kurundur-1788237525</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற
உத்தரவுகளை மீறி அமைக்கப்பட்ட விகாரையின் பாதுகாப்புக்காக
வழங்கப்பட்டிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற
உத்தரவுகளை மீறி அமைக்கப்பட்ட விகாரையின் பாதுகாப்புக்காக
வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி,
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சருக்கு குறித்த விகாரையின்
விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
</p><p>
குருந்தூர் விகாரை பூமியில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள்
ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அங்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள்
பாதுகாப்பிற்காக நிலைநிறுத்தப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>விலக்கப்பட்டுள்ள பாதுகாப்பு</h2><p>
</p><p>
விகாரைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, தொல்லியல் தலம் மற்றும்
தொல்பொருட்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர்கள் அங்கு கடமையில்
ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bd20cd0-600d-4698-85ef-cea5d784906c/26-6a96587dab15c.webp' /></p><p>
</p><p>
எனினும், தற்போது அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அப்பகுதியிலிருந்து
விலக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள தொல்லியல் விகாரை, பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதி மற்றும் அங்கு வருகை தரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கடும் அபாயத்தை
எதிர்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, விகாரைக்கான பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக மீள பணியமர்த்துமாறு அவர்
சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடைய பெண் சட்டத்தரணி தொடர்பில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shocking-details-about-lawyer-arrested-1788235273"></link>
            <id>https://tamilwin.com/article/shocking-details-about-lawyer-arrested-1788235273</id>
            <summary type="text">கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>சந்தேகத்திற்கிடமான வழக்கறிஞர் 1970 ஆம் ஆண்டு பிறந்திருந்த போதிலும், அவர் 1972 ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டுப் போலியான தேசிய அட்டையைத் தயாரித்துள்ளார். </p><p>அதனை பயன்படுத்தி கஹவத்தை அரச வங்கி கிளையில் கணக்குகளை ஆரம்பித்து, பல சந்தர்ப்பங்களில் இலட்சக்கணக்கில் கடன்களை பெற்றுள்ளார்.</p><p> </p><h2><b>நீதிமன்றத்திடம் கோரிக்கை </b></h2><p>அத்துடன், சில கடன் தொகைகளை திருப்பிக் செலுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97126076-28a8-415e-99f0-d09c1912775f/26-6a9653017dd26.webp' /></p><p>இதன்போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும் சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை தொடர்பான விபர அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவொன்றை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்ட பதில் நீதவான், விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விபர அறிக்கையை வழங்குமாறு கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T04:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்! அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remove-mosquito-school-dengue-control-unit-1788233880"></link>
            <id>https://tamilwin.com/article/remove-mosquito-school-dengue-control-unit-1788233880</id>
            <summary type="text">புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர்&amp;nbsp;அரச மற்றும் தனியார் பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்து நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர்&nbsp;அரச மற்றும் தனியார் பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்து நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு&nbsp;தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு&nbsp;வலியுறுத்தியுள்ளது.</p><p>இது தொடர்பில்&nbsp;தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அனைத்து&nbsp;கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.</p><h2>அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>குறிப்பாக, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதும், மீண்டும் பரவும் வாய்ப்பை முழுமையாக கட்டுப்படுத்துவதும் அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6422359-8070-4841-84ae-17db2be474dd/26-6a9652b9abb7f.webp' />&nbsp;</p><p>

இந்த ஆண்டு, நாட்டில் 95,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 07, 2026 அன்று ஆரம்பமாகவுள்ளது.</p><p>அதன்படி, அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 4 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்கு எதிராக பசில் ராஜபக்ச தீட்டிய சதித்திட்டம்! விரைவில் ஜனாதிபதியாகும் கனவால் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-were-sidelined-by-basil-s-conspiracy-1788234229"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-were-sidelined-by-basil-s-conspiracy-1788234229</id>
            <summary type="text">அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்நாட்டின் தேசியவாத
அரசியலை அழித்தொழித்த பசில் ராஜபக்ச&amp;nbsp; சதித்திட்டம் தீட்டி, இரண்டு
வருடங்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்நாட்டின் தேசியவாத
அரசியலை அழித்தொழித்த பசில் ராஜபக்ச&nbsp; சதித்திட்டம் தீட்டி, இரண்டு
வருடங்களுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தி, மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு
அனுப்பிவிட்டு விரைவாக ஜனாதிபதியாகும் கனவில் செயற்பட்டபோது நாம் வேதனையடைந்து
ஒதுங்கிக்கொண்டோம் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான திலித் ஜயவீர சுட்டிக்காட்டினார்.
</p><p>
மொனராகலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் தொகுதி
தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><h2>பசிலின் திட்டம்&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,
</p><p>எங்களை மற்றொரு ராஜபக்சவின் அவதாரம் எனக் கூறிச் சிலர் கூச்சலிடுகின்றனர்.
அமெரிக்காவில் ஒளிந்துகொண்டு தேசியவாத அரசியலை அழித்த பசில் ராஜபக்ச, மகிந்தவை
வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தாமே ஜனாதிபதியாகும் கனவில் சதித்திட்டம்
தீட்டியபோதே நாங்கள் மனவருத்தத்துடன் ஒதுங்கிக்கொண்டோம்.
</p><p>
இன்று நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்டத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மகாநாயக்க தேரர்கள் கூறினாலும் தனக்குத் தேவையானதையே செய்வேன் எனத் தற்போதைய
ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறான சர்வாதிகாரியை மக்கள் கொண்டுவராத போதிலும்
சுயநலமிக்க அரசியல்வாதிகளே கொண்டுவந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd37648-4f7e-42ee-8751-0ec55076dbdc/26-6a964e896f123.webp' /></p><p>
</p><p>
இன்று அனைவரும் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினை பொருளாதாரம் எனில் அதற்கான
தீர்வும் பொருளாதாரமாகவே அமைய வேண்டும்.
</p><p>
பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் பயன்படுத்திய 'தொழில்முனைவோர் அரசு'
கோட்பாட்டையே நாம் முன்மொழிகின்றோம். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள்
பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றிக் பேசாமல் வரிகளை விதிப்பது பற்றியும்
கருவூலத்தை நிரப்புவது பற்றியும் மட்டுமே பேசுகின்றனர். </p><p>2028 இல் செலுத்த
வேண்டிய மிகப்பெரிய கடன் சுமை குறித்து எந்த உரையாடலையும் அவர்கள் நடத்தவில்லை.

செவனகலை சர்க்கரை ஆலையை மூடி அதனை விற்பனை செய்யும் நோக்கிலேயே அரசு
செயற்படுகின்றது.
</p><p>
2029 ஆம் ஆண்டாகும் போது 'தொழில்முனைவோர் அரசை' உருவாக்கி, செவனகலை உள்ளிட்ட
நிறுவனங்களின் இலாபத்தை மும்மடங்காக உயர்த்தும் வேலைத்திட்டத்தை முற்போக்குச்
சக்திகளை ஒன்றிணைத்து வழங்குவோம்&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் திடீரென உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigate-the-death-of-model-chula-padmendra-1788227420"></link>
            <id>https://tamilwin.com/article/investigate-the-death-of-model-chula-padmendra-1788227420</id>
            <summary type="text">பிரபல அழகுக் கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல அழகுக் கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>பத்தரமுல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் பின்னர் நேற்று காலை (31) அவர் அந்த தொழிலதிபருடன் வீட்டிற்கு வந்ததாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>பொலிஸில் முறைப்பாடு </h2><p>

இதன்போது நித்திரையிலிருந்த அவர் நீண்ட நேரம் பதிலளிக்காததால், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f61e0197-b535-4ffd-9e85-06a24823918a/26-6a96389af145b.webp' />&nbsp;</p><p>
</p><p>இதனை்போது சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார பணியாளர்கள் அவரைப் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிசெய்துள்ளனர்.</p><p>இதனையடுத்து தொழிலதிபர் பிலியந்தல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>
</p><p>
எனினும், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பிரேதப் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.</p><p>46 வயதான இவர் அண்மைய கால அழகிப் போட்டி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.&nbsp;</p><p> ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை&nbsp;குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T04:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் துயரம் - நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-boys-missing-in-water-1788233081"></link>
            <id>https://tamilwin.com/article/3-boys-missing-in-water-1788233081</id>
            <summary type="text">ஹொரணை, நாரகல பாலம் அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.

காணாமல் போன மூவரில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை, நாரகல பாலம் அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.</p><p>

காணாமல் போன மூவரில் ஒரு இளைஞரை தேடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>நண்பர்கள் மூவரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

இவ்வாறு காணாமல் போனவர் 19 வயதுடைய, யால பிரதேசத்தைச் சேர்ந்த சிரான் சஸ்மித என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது.</p><h2><b>

காணாமல் போன இளைஞர் </b></h2><p>நேற்று மாலை 7.30 மணியளவில் நீராடுவதற்காக குறித்த இடத்திற்கு வருகை தந்த 3 இளைஞர்களில் ஒருவர் நீரில் குதித்து நீந்த முயன்ற போது நீரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/753d214a-afc8-423c-9251-fcd9c2d3a1c1/26-6a96496863cb3.webp' /></p><p>இதன் போது ஏனைய 2 இளைஞர்கள் அவரை மீட்க நீரில் குதித்துள்ளனர்.

காப்பாற்ற முயன்ற இளைஞர்களும் நீரில் சிக்கிக்கொண்டதுடன், அவர்கள் கடும் சிரமத்தின் மத்தியில் பின்னர் கரையேறியுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து இது குறித்து ஹொரணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
களு கங்கையின் நீரோட்டம் பலமான பகுதியில், இன்று காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் மீட்புக் குழுவினரை ஈடுபடுத்தி காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p>

அத்துடன், அப்பகுதியில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதால் ஆற்றங்கரையில் தீ மூட்டுவதற்கும் பிரதேசவாசிகளும் நண்பர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T03:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பச்சுட்டெண்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-index-at-warning-level-in-sri-lanka-warrning-1788231306"></link>
            <id>https://tamilwin.com/article/heat-index-at-warning-level-in-sri-lanka-warrning-1788231306</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு, இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வெப்பமான வானிலைக்கான &#039;அம்பர்&#039; எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இயற்கை பேரிடர்கள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு, இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வெப்பமான வானிலைக்கான 'அம்பர்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இயற்கை பேரிடர்கள் முன்னெச்சரிக்கை மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>
</p><p>இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மொணராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் வெப்பச்சுட்டெண் 'கவனம்' (Caution) செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டும் என அறிவுறுத்தியுள்ளது.</p><h2>விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்</h2><p>எனவே பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், அதிக சிரமமான வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறும், முடிந்தவரையில் நிழலான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c59cd64-3c1c-414b-b3c0-3990d1205c81/26-6a96440f3cc3c.webp' />&nbsp;</p><p>


அத்துடன், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>


பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், நிலவும் வானிலை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:18:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் ஆரம்பமாகும் நடவடிக்கை! மீறினால் கடும் நடவடிக்கையென பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-announcement-from-the-ministry-of-defense-1788228488"></link>
            <id>https://tamilwin.com/article/special-announcement-from-the-ministry-of-defense-1788228488</id>
            <summary type="text">&amp;nbsp;2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் இன்று (01) முதல் ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.



த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் இன்று (01) முதல் ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.</p><p>



துப்பாக்கி உரிமங்களைக் கொண்டுள்ள அனைத்து தனிநபர்களும் நிறுவனங்களும் 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது உரிமங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இதற்கமைய, செல்லுபடியாகும் உரிமம் இன்றி துப்பாக்கியை வைத்திருப்பது, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளுக்கு அமைய குற்றமாகும் என அமைச்சு எச்சரித்துள்ளது.</p><h2>உரிமையாளர்களுக்கு&nbsp;&nbsp;எதிராக&nbsp;சட்ட&nbsp;நடவடிக்கை </h2><p> </p><p>



எனவே, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d2875f8-bf2c-40a1-a488-9cdb780dcb5c/26-6a96338b0ae4f.webp' /></p><p>


இதனிடையே, 2026.09.01 முதல் 2026.12.31 வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்குத் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எனவே காலக்கெடுவுக்கு முன்னர் உரிய புதுப்பித்தல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T02:08:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பித்தலில் ஈடுபட ஆசிரியர்களுக்கு அனுமதிப்பத்திர முறை அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/licenses-for-teachers-1788227505"></link>
            <id>https://tamilwin.com/article/licenses-for-teachers-1788227505</id>
            <summary type="text">&amp;nbsp;ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பத்திரமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் வகுப்புகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பத்திரமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
தனியார் வகுப்புகள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தேசிய கல்விச் சபையின் ஊடாகக் கற்பித்தல் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
ஒருவர் மருத்துவராகப் பணியாற்றுவதற்கு மருத்துவச் சபையின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவதைப் போன்றதொரு நடைமுறையே இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும்</h2><p>
</p><p>தேசிய கல்விச் சபையை அமைப்பதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>இதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக குறித்த பணி தற்போது சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1f6d44b-e924-45d0-9e0b-3858e6336276/26-6a965aaabcfa0.webp' /></p><p>சட்ட வரைஞர் திணைக்களத்தால் வரைவு தயாரிக்கப்பட்ட பின்னர், அது மீண்டும் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த முழுமையான நடைமுறைகளை நிறைவுசெய்து சட்டத்தைக் நடைமுறைக்குக் கொண்டுவர குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T01:51:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரம் அடையும் எல் நினோ நிலைமை - அபாய கட்டத்தில் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-among-countries-of-concern-1788187941"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-among-countries-of-concern-1788187941</id>
            <summary type="text">ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாடுகளுள் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாடுகளுள் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், நாட்டின் இயல்பான மழை அளவைக் காட்டிலும் அதிகமான மழைவீழ்ச்சி, வெள்ள அபாயம் அதிகரிப்பு மற்றும் எரிபொருள், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் போன்ற தொடர்ச்சியான பொருளாதார சுமை ஆகியவற்றுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><h2>எல் நினோ தாக்கம்</h2><p> </p><p>

புதிய பிராந்திய மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு , உலக உணவுத் திட்டம், ஐநா பெண்கள் அமைப்பு, உலக வானிலை அமைப்பு மற்றும் ஐ.நா மனித உரிமை விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71eaf399-c6b5-484e-8d77-126739a0d32a/26-6a96117dabe19.webp' /></p><p>ஆசிய பசிபிக் பிராந்தியமானது மிகவும் சிக்கலான மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆபத்துக்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. </p><p>

வலுவடைந்து வரும் எல் நினோ, சாதகமான இந்தியப் பெருங்கடல் இருமுனை மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியின் தொடர்ச்சியான பொருளாதாரத் தாக்கங்கள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றது. </p><p>

தற்போதைய எல் நினோ பதிவுகளில் வலிமையான ஒன்றாக அமையக்கூடுவதுடன், 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும்.</p><h2>இலங்கைக்கு முக்கிய அச்சுறுத்தல்&nbsp;</h2><p> இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பப்புவா நியூ கினி போன்ற நாடுகளில் வறட்சி அபாயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 எனினும் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முக்கிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6ebcb69-e56d-415b-bbdb-b33ed740aa62/26-6a96117cdca1a.webp' /></p><p>இந்த மதிப்பீடானது இலங்கையை உயர்ந்த கவலைக்குரிய நாடுகளின் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.</p><p> 

இலங்கையின் இரண்டாவது இடைப்பருவ காற்று வீசும் காலமான ஒக்டோபர் மாதம் முதல் இந்த ஆபத்து குறிப்பாக முக்கியத்துவம் பெறுவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
இது பாரம்பரியமாக ஆண்டின் அதிக மழை பெய்யும் காலங்களில் ஒன்றாகும், இதனைத் தொடர்ந்து ஈசான் பருவமழையும் ஆரம்பமாகிறது.</p><p></p><p></p><p>மேலதிக தகவல் - ராகேஷ்</p>]]></content>
            <updated>2026-09-01T00:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இந்திய இராணுவம் பழுகாமம் பாலம் புனர்நிர்மான பணி ஆரம்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-army-reconstruction-work-palugamam-bridge-1788223072"></link>
            <id>https://tamilwin.com/article/indian-army-reconstruction-work-palugamam-bridge-1788223072</id>
            <summary type="text">மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில்
முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை (30)
இந்திய இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில்
முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை (30)
இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடிந்து
வீழ்ந்துள்ள மகிழவெட்டுவான், பழுகாமம், மாவடி ஓடை போன்ற 3 பாலங்களை
நிர்மானித்து தருமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.
</p><p>
இந்த கோரிக்கைக்கு அமைவாக 45 பேர் கொண்ட இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர்
இலங்கை இராணவ தொழில்நுட்ப பிரிவினர்கள் மற்றும் இலங்கை வீதி அதிகார சபையுடன்
இணைந்து பழுகாமம் பெரிய போரதீவு இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தை முதற்கட்டமாக
புனர் நிர்மானிக்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; இதனை தொடர்ந்து ஏனைய பாலங்களுக்கான பொருட்கள் வந்தவுடன் தொடர்ந்து இந்திய
இராணுவத்தினர் புனர்நிர்மான பணிகளை முன்னெடுப்பார்கள் என மாவட்ட வீதி அதிகார
சபை பணிப்பாளர் எந்திரி வேதநாயகம் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T00:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இந்திய மசாஜ் நிலையம் அமைக்க 20 ஏக்கர் அரச காணி.. கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vadamaratchi-people-oppose-land-to-indian-firm-1788217328"></link>
            <id>https://tamilwin.com/article/vadamaratchi-people-oppose-land-to-indian-firm-1788217328</id>
            <summary type="text">யாழ் - வடமராட்சி கிழக்கில் 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு மக்கள் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் - வடமராட்சி கிழக்கில் 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p>கடந்த 28 அன்று வடமராட்சி, கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற
உறுப்பினர் ரஜீவன் எம்.பி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த 20 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகை
அடிப்படையில் கொடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நிரந்தர காணி</h2><p> தங்களுடைய மண் பல வரலாற்றை கொண்டது, பல தியாகங்களைச் செய்த மண், ஆகவே
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மசாஜ் நிலையம் தேவை இல்லை என மக்கள் குறித்த
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
வடமராட்சி, கிழக்கில் தற்போதும் பல நூறு குடும்பங்கள் நிரந்தர காணியில்லாமல்
தவிக்கின்ற போதும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரச காணியை தனியார்
நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என மக்கள் கேள்வி
எழுப்பி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c08f19bd-fc01-45eb-a340-c7b8544a0a64/26-6a960cff95ab7.webp' /></p><p>இந்நிலையில் வடமராட்சி, கிழக்கு பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போதும்
அதனை தடுத்து நிறுத்தாமல் இளைய தலைமுறையை சீரழிக்கும் கழியாட்ட விடுதிகளை
அமைப்பதற்கு முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனவே&nbsp; மக்களுக்கு நன்மையற்ற அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிவதை உரியவர்கள் நிறுத்த
வேண்டுமென அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கடத்தி கொடூர செயலில் ஈடுபட்ட நபர் தப்பியோட்டம்.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-sentenced-to-24-years-in-prison-rearrest-1788215640"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-sentenced-to-24-years-in-prison-rearrest-1788215640</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி, தகாத முறைக்குட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தப்பிச்சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி, தகாத முறைக்குட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தப்பிச்சென்ற கைதியை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.</p><p>அவரை, சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றச்சாட்டில் பிறிதொரு வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h2>மேல் நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p> </p><p>குறித்த கைதியால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (28) தீர்ப்பளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af01b8f2-3a2e-49e7-a32d-8f0009321a48/26-6a96077791a28.webp' /></p><p>இந்த நிலையில் மறுநாள் சனிக்கிழமை (29) திடீர் சுகவீனம் என கூறி
கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (31) மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
</p><p>
கைதி தப்பி சென்ற நிலையில், சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதுடன் , யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்ததனை அடுத்து, இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள்
மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (01.09.2026) மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தாவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:31:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்ட செயலக வீதியிலுள்ள குப்பைகளை அகற்றுமாறு ஈ பி டி பி கட்சி ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/epdp-seeks-garbage-removal-from-batticaloa-road-1788211998"></link>
            <id>https://tamilwin.com/article/epdp-seeks-garbage-removal-from-batticaloa-road-1788211998</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வீதியில் அதிகரித்த குப்பை கூழங்களினால் ஏற்படும் துர்நாற்றம் அந்தப் பகுதி மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வீதியில் அதிகரித்த குப்பை கூழங்களினால் ஏற்படும் துர்நாற்றம் அந்தப் பகுதி மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளதாக&nbsp;ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.</p><p> எனவே இந்த வீதியின் இரு
பக்கமும் கொட்டப்பட்டுள்ள இந்த குப்பைகளை அகற்ற மாநகர சபை நடவடிக்கை எடுக்க
வேண்டும் என நேற்று(31) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>கழிவு அகற்றல்</h2><p> அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த வீதியில் இரு பகுதிகளிலும் தகரங்கள் மற்றும் வீட்டு கழிவுகள் உட்பட
குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07b2af22-c39b-4efc-abbf-8490edeaee7d/26-6a95fadf0fb98.webp' /></p><p> இந்த குப்பைகளை மாதக்கணக்கில்
அகற்றப்படாததால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் மாவட்ட செயலகத்திற்கு
செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p>மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு இந்த வட்டாரத்துக்கு தெரிவான உறுப்பினர்
இது தொடர்பாக கவனம் செலுத்தாமல் உள்ளதுடன் அவர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெற்றி
பெற்றால் வாங்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்வதாக வாக்குறுதி அளித்தார்.</p><h2>வடிகால்களை துப்பரவு செய்தல்</h2><p> </p><p>வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் வாக்களித்த மக்களுக்காவது குறைந்த
பட்சம் புதிய மாவட்டத்திற்கு செல்லும் பாலமீன்மடு வீதி இரு பக்கமும் உள்ள
குப்பைகளை அகற்றிக் கொடுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/437407cc-09f2-4663-8622-c6b2c221f596/26-6a95fae028d06.webp' /></p><p>
அதேவேளை வடக்கு கிழக்கில் பருவபெயர்ச்சி மழை ஐப்பசி மாதத்தில் இருந்து பெய்ய
தொடங்கும். நேபாளத்தில் இன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்று இலங்கையில்
வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே மழை வரும் முன்னர் இந்த மழைநீர் வழிந்தோடும் வடிகால்களை மாநகரசபை
துப்பரவு செய்ய வேண்டும் இல்லாவிடில் மழை வெள்ளத்தில் பாலமீன்மடு கிராமம்
பாதிக்கப்படும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 22இல் இறுதித் தீர்ப்பு..! வியப்பில் ஆழ்த்திய மைத்திரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி என அவர் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல கொடூர சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்க்ள தொடர்பில் அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக, பல உயிர்களை பறித்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்&nbsp;மைத்திரிபாலவின் ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறியது.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களும் உள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>&nbsp;இவ்வாறிருக்கையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பல கேள்விகளை எழுப்புகின்றது எனலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sgq8jMiHzoc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T23:46:13+00:00</updated>
        </entry>
    </feed>
