<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-10T16:20:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு- கிழக்கு மற்றும் மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-holds-special-talks-mps-from-north-east-1789050727"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-holds-special-talks-mps-from-north-east-1789050727</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்&amp;nbsp; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்&nbsp; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது இன்று(10.9.2026) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
</p><p>
தற்போதைய பொருளாதார நிலைமையுடன் சேர்த்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக
மக்கள் முகங்கொடுத்து வரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள்
குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது இங்கு வருகை
தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்தார்.</p><h2>பணவீக்க நிலைமை&nbsp;</h2><p>
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களினது தற்போதைய வாழ்க்கைத்தரம், பொருளாதார
நிலை மற்றும் குடும்ப வருமான மட்டம் என்பற்றில் நாட்டின் தற்போதைய பணவீக்க
நிலைமை மற்றும் நாளாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன செலுத்தும்
தாக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0c33973-a248-4d24-bc2b-74836e4964dc/26-6aa2c822c4b0f.webp' /></p><p> </p><p>அவ்வாறே, குறித்த பிரதேசங்களில்
நிலவும் அடிப்படை பௌதீக வசதிகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்நோக்கும்
சிரமங்கள் குறித்து இங்கு பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள்,
தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள அணுகல், பாடசாலைக் கல்வி
மற்றும் பிள்ளைகளின் போஷாக்கு மட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள்
குறித்தும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டன.</p><h2>பொருளாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் சமூக,
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளைக் காணவும், அவர்களின்
வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடைமுறை ரீதியிலான
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் இங்கு பரிமாறிக்
கொள்ளப்பட்டன.
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள்
குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும்
வெளியேயும் அவற்றுக்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை
எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மத்தியில் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b855cca-828e-44ed-9454-470acce4bf9a/26-6aa2c823a1401.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து
பிரதேச மட்டத்தில் தகவல்களைத் திரட்டி அவற்றுக்குத் தீர்வுகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நெருக்கமான
ஒருங்கிணைப்பைப் பேணுவது தொடர்பிலும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>இந்தச் சந்திப்பில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற
உறுப்பினர்களான கதிரவேலு சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம்.தாஹிர், டாக்டர்
இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம்.எஸ். உதுமாலெப்பை, செல்வம்
அடைக்கலநாதன், டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான்,
கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T15:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் - பொலிஸார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/assets-worth-over-rs-10-crore-frozen-1789048786"></link>
            <id>https://tamilwin.com/article/assets-worth-over-rs-10-crore-frozen-1789048786</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 10 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களைச் செயலிழக்கச் செய்ய சட்டவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 10 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களைச் செயலிழக்கச் செய்ய சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

இதற்கமைய, 2020 மே 14 ஆம் திகதி ஒரு ஜீப்பில் ஹெரோயின் கடத்திச் சென்ற 7 சந்தேக நபர்களை பெலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2> 


7 சந்தேக நபர்கள் கைது</h2><p>

 மேலும், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த சந்தேக நபர்கள் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது. </p><p>

அந்த விசாரணைகளின் போது, ​​பெலியகொட பகுதியைச் சேர்ந்த ஒரு சந்தேக நபர், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அந்தச் சொத்தை வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளிப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69c812c6-1c53-4c31-b1e3-b4004241eec2/26-6aa2c24a90491.webp' /></p><p> </p><p>

இதன்படி, மஹாராவில் உள்ள கடவத்த பகுதியில் 19.90 பேர்ச்சஸ் நிலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு மற்றும் சின்ஹரமுல்லவில் உள்ள களனியா பகுதியில் 18 பேர்ச்சஸ் நிலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு ஆகியவை குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. </p><h2>

சொத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை</h2><p>
அந்த இரண்டு சொத்துக்களின் மொத்த மதிப்பு தலா ரூ. 50 இலட்சம் ஆகும், மேலும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 10 கோடிக்கும் அதிகமாகும்.</p><p> 

விசாரணைகளின்படி, இந்தச் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. </p><p>

பணமோசடி தடுப்புச் சட்டத்தின்படி, 2026 செப்டம்பர் 10 முதல் 14 நாட்களுக்கு அவற்றைச் செயலிழக்கச் செய்ய உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T14:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-for-applications-foro-l-answer-scripts-1789048895"></link>
            <id>https://tamilwin.com/article/call-for-applications-foro-l-answer-scripts-1789048895</id>
            <summary type="text"> 


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று(10.09.2026) முதல்&nbsp; ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>&nbsp;மதிப்பீடு</h2><p>

இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் செயல்முறை செப்டெம்பர் 23ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c73997c-e2a4-4de8-b52a-496ff578f8ba/26-6aa2bb3d5fdf2.webp' /></p><p>

மேலும், விண்ணப்பங்களை <a href="https://onlineexams.gov.lk/index.php/slogin" target="_blank"><b>onlineexams.gov.lk</b></a> என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T14:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம்: குற்றச்சாட்டுகளை நிராகரித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resolution-against-iran-in-the-un-security-council-1789047698"></link>
            <id>https://tamilwin.com/article/resolution-against-iran-in-the-un-security-council-1789047698</id>
            <summary type="text">ஈரான் தனது அணுசக்தி கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்
சுமத்தி, சர்வதேச அணுசக்தி முகமை அதன் ஆளுநர் சபையில் தீர்மானம் ஒன்றை
நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தனது அணுசக்தி கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்
சுமத்தி, சர்வதேச அணுசக்தி முகமை அதன் ஆளுநர் சபையில் தீர்மானம் ஒன்றை
நிறைவேற்றியுள்ளது.</p><p>அத்துடன், இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின்
கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.</p><p>
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.நா அணுசக்தி முகவரகத்தால் ஈரானுக்கு
எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா,
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆதரவளித்துள்ளன.</p><h2>&nbsp;உடனடி நடவடிக்கை</h2><p>

ஈரானின் 'Fordow', 'Natanz' மற்றும் 'Isfahan' ஆகிய முக்கிய அணுசக்தி மையங்களை
ஆய்வு செய்ய சர்வதேச அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில்
இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள ஈரான், அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
காரணமாகவே அணுசக்தி மையங்களை ஆய்வு செய்வதற்கான பாதுகாப்பான சூழல் இல்லையெனத்
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4453918-3af1-4923-963d-cdce7938edeb/26-6aa2b70a5b711.webp' /></p><p>

அத்துடன், அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே இத்தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

அதேவேளை, ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஈரானின் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும்
சீனா ஆகிய வல்லரசு நாடுகள் வீட்டோ (Veto) அதிகாரத்தைக் கொண்டுள்ளதால்,
ஈரானுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுப்பது கடினம் என சர்வதேச அரசியல்
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T14:08:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவின் மேடையில் அர்ச்சுனா எம்.பி..! நாமலின் மோசடி தொடர்பில் சபையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307"></link>
            <id>https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307</id>
            <summary type="text">


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நாமலுக்காக மேடை ஏறுவேன்..</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

சமூக வலைத்தளங்களில் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறுவது குறித்து பல பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p> </p><p>

அது, மகிந்த ராஜபக்ச அல்ல, நாளை ரணில் விக்ரமசிங்க அழைத்து அவருடயை மேடையில் ஏறச் சொன்னாலும் அந்த மேடைக்குச் செல்வேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eefc24be-d809-4d3e-b204-a7971f9dcf2d/26-6aa28e4f082cd.webp' /></p><p>
</p><p>
எமது அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச, அவர் அழைத்தாலும் அவருடைய மேடைக்கும் நான் செல்வேன். எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசியல்வாதிக்கும் எனது ஆதரவு இருக்கும். அதேபோலத்தான் நாமல் ராஜபக்சவும். </p><p>

நாமல் ராஜபக்ச மோசடியில் ஈடுபட்டிருந்தாலோ, அவர் மீதான தனிப்பட்டக் குற்றங்களையோ நான் ஆதரிக்கவில்லை. அது எனக்குத் தொடர்பற்றது. </p><p> எதிர்க்கட்சி உறுப்பினராக அவரை நான் ஆதரிக்கின்றேன்.

நாமல் ராஜபக்ச அல்ல, எனது மக்களுக்காக யாருடைய மேடையிலும் ஏறத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FxHDUaTrx9Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-10T13:53:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு விசேட சலுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/compensation-of-foreign-workers-die-1789045586"></link>
            <id>https://tamilwin.com/article/compensation-of-foreign-workers-die-1789045586</id>
            <summary type="text">வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் நிவாரணம் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>

வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழந்த 50 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ரூ. 70 மில்லியன் இழப்பீடு வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2> 


இழப்பீடு தொகை அதிகரிப்பு</h2><p>
முன்னதாக, வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் ஒருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரூ. 6 லட்சம் வழங்கி வந்தது.</p><p> 

இந்த தொகை, போதுமானதாக இல்லாத காரணத்தால் குறித்த தொகையை ரூ. 2 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

ஆண்டுதோறும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 250 பேர் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான காரணத்தால் அந்த நாட்டிலேயே உயிரிழக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8ef468-3418-46a3-b65d-b32caca65032/26-6aa2b516902b8.webp' /></p><p> 

இந்த நிலையைக் குறைக்கவும், குழுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்குப் பணமாக அனுப்புகின்றனர். 

பணியகம் ஏற்கனவே அவர்களுக்காகப் பெரிய அளவிலான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.</p><h2> 

வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட திட்டம்</h2><p>

மேலும், நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் பணியாற்றி வருகிறோம். இந்தத் திட்டங்களில் ஒன்று, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபாயை வீட்டுக் கடனாக வழங்குவதாகும்.
</p><p>
 இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன என்றும், அந்த வட்டியின் ஒரு பகுதியை பணியகமும் செலுத்துகின்றது என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார். </p><p>

 இது தவிர, பணியகம் தற்போது தொழிலாளர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களையும் வழங்கி வருகின்றது என்பதையும் அமைச்சர் நினைவூட்டியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T13:48:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-s-independent-refineries-purchase-crude-oil-1789046497"></link>
            <id>https://tamilwin.com/article/china-s-independent-refineries-purchase-crude-oil-1789046497</id>
            <summary type="text">சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரானிய மற்றும் ரஷ்ய
விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா
மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரானிய மற்றும் ரஷ்ய
விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா
மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய
முற்பட்டு வருகின்றன.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.</p><p>இதனால்,
ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பிரெண்ட் ரக மசகு
எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத்
தாண்டியுள்ளது.</p><h2>எரிபொருள் தேவை</h2><p>
</p><p>
இந்நிலையிலேயே சீன நிறுவனங்கள் மாற்று வழிகளில் எண்ணெயைக் கொள்வனவு செய்ய
நடவடிக்கை எடுத்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87dc5f96-cd4a-4b77-85f0-b0d1a084d17f/26-6aa2b1c7574e4.webp' /></p><p>

இதன் காரணமாக, சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச ஆற்றல் மாநாட்டிற்கு சீன
நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் சென்றுள்ளதுடன், சந்தையில் மசகு
எண்ணெய்க்கான கூடுதல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
</p><p>
அதேவேளை, சீனாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், ஆண்டின்
இறுதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட இறக்குமதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி
முடிக்கவும் இத்தகைய அவசர கொள்வனவுகள் தீவிரமடைந்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T13:36:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senthil-thondaman-met-indian-defence-minister-1789047246"></link>
            <id>https://tamilwin.com/article/senthil-thondaman-met-indian-defence-minister-1789047246</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பு இன்று(10.09.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்துள்ளார்.</p><p> 

இந்த சந்திப்பு இன்று(10.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன்போது, கடந்த டிசம்பர் மாதம் முழு இலங்கையையும் புரட்டிப் போட்ட டித்வா புயலின் போது, இந்திய இராணுவம் இலங்கை மக்களை பாதுகாக்க விரைந்து செயற்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f34b5510-3abd-4db2-a69e-24eebe357895/26-6aa2b203c65a8.webp' /></p><p> </p><p>

அத்துடன், டித்வா புயலினால் சேதமடைந்த பாலங்களை நிர்மாணித்தல், பாதைகளை சீர்செய்தல் போன்ற நடவடிக்கைகளை இந்திய இராணுவம் விரைந்து செய்து கொடுத்தமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ceb6c05-fe64-43b9-878e-0075be7e957f/26-6aa2b2216f71d.webp' /></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8Ad2INaUfJ4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் பின்னர் ஈரான் போர் நிறைவுக்கு வரும் : ட்ரம்ப் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-conflict-end-after-us-midterm-elections-trump-1789045119"></link>
            <id>https://tamilwin.com/article/iran-conflict-end-after-us-midterm-elections-trump-1789045119</id>
            <summary type="text">அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின்
பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி
டொனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின்
பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஈரானிய தரப்பு பாதிக்க முற்படுவதாகக் குற்றம்
சுமத்தியுள்ள அவர், போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில்
ஈரானிய தரப்பு தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>செங்கடலின் முக்கிய கடல் வழி</h2><p>
இருப்பினும், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான 'பிக்எக்ஸ் மவுண்டன்' பகுதியை
இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அவர்
எச்சரித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31c0e7a5-6e55-42b3-bca5-b65b79a1d13d/26-6aa2abf99e596.webp' /></p><p>
அத்துடன், செங்கடலின் முக்கிய கடல் வழியான பாப் அல்-மந்தேப் நீரிணைப்
பகுதியில் ஹூதி அமைப்பினரின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதியில்
பதற்றமான சூழல் நிலவுகின்றது.
</p><p>
மறுபுறம், சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலையானது பீப்பாய்
ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T13:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் 8 ஆண்டுகளாக மாயம் - உறவினர் விடுக்கும் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-who-went-to-work-in-kilinochchi-is-a-fake-1789046114"></link>
            <id>https://tamilwin.com/article/person-who-went-to-work-in-kilinochchi-is-a-fake-1789046114</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக குடும்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குடத்தனை கிழக்கு, மளிகைத்திடலை வதிவிடமாகக் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
</p><p>
இவர், கிளிநொச்சி பகுதிக்கு வேலைக்குச் செல்வதாக தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
ஒரு வாரம் வேலைச் செய்த தொலைபேசி</h2><p>
குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பில் 10.03.2018 அன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0df8099-f4af-4286-88c3-27c94fe9540e/26-6aa2ad9a11a8e.webp' /></p><p>
</p><p>
மேலும், அவர் காணாமல்போன தினத்திலிருந்து சுமார் ஒரு வார காலம் வரை அவரது தொலைபேசி இயங்கியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டபோது, அவர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

காணாமல் போனமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>

காணாமல் போன செல்வராசா அருந்தவச்செல்வன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0774323487 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெண்கள் கடுமையாகப் புறக்கணிப்பு: குகதாசன் எம்.பி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-in-sri-lanka-neglect-mp-kugathasan-1789044655"></link>
            <id>https://tamilwin.com/article/women-in-sri-lanka-neglect-mp-kugathasan-1789044655</id>
            <summary type="text">உலக அளவில் நாடாளுமன்றப் பெண்
பிரதிநிதித்துவ வரிசையில் 193 நாடுகளில் இலங்கை 135 ஆவது இடத்தில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக அளவில் நாடாளுமன்றப் பெண்
பிரதிநிதித்துவ வரிசையில் 193 நாடுகளில் இலங்கை 135 ஆவது இடத்தில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் இன்று (10.09.2026)இடம்பெற்ற அமர்வின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;இலங்கையின் குடித் தொகையில் 52 சதவீதமும் வாக்காளர் தொகையில் 56 சதவீதமும்
பெண்கள் ஆவர். எனினும் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 22 பெண்
பிரதிநிதிகளே உள்ளனர். இது 9.8 வீதம் ஆகும்.</p><h2>பெண் பிரதிநிதித்துவம்&nbsp;</h2><p>ரூவாண்டா நாட்டின் நாடாளுமன்றம் 61 வீதத்துக்கும் அதிகமான பெண்
பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளமையை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக
இருக்கும் என நம்புகின்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01fae99d-a39c-47e1-8e56-5b36fe90d442/26-6aa2ad76656a8.webp' /></p><p> </p><p>நமது அயலில் உள்ள இந்திய மாநிலமான
தமிழ் நாட்டில் இது 50 சதவீதமாக உள்ளமை குறிப்பிடத் தக்கது.
நாட்டில் உள்ள அமைச்சரவை அமைச்சர்கள் 25 பேரில் இருவர் மட்டுமே பெண்களாவர்.இது
எட்டு சதவீதமாகும்.</p><p>கனடா நாட்டு அமைச்சரவையில் 50 சதவீதமானோர் பெண்கள் ஆவர்.
இந்தநிலை 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நிலவி வருகின்றது என்பதனை
இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.</p><h2>பொருளாதார மீட்சி</h2><p>
நாட்டில் உள்ள 25 அமைச்சுச் செயலாளர்களில் நால்வர் மாத்திரமே பெண்களாவர்.இது
16 சதவீதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01f7b7eb-6876-4c6e-90bd-84f0e034dfec/26-6aa2ad771a2f6.webp' /></p><p>குடும்பப் பொறுப்புகள் காரணமாக பெண்கள் வேலைகளைக் கைவிடுவதைத்
தடுக்க; குறைந்த செலவிலான குழந்தை காப்பகங்கள், முன்பள்ளிகள், நெகிழ்வுத்தன்மை
கொண்ட பணி நேரங்கள் மற்றும் மகப்பேறு விடுப்பு வசதிகளைச் சட்ட
அடிப்படையிலானதாக்க வேண்டும்.
</p><p>இலங்கையில் மகளிர் வலுவூட்டல் என்பது ஏதோ ஒரு சாராரருக்கு வழங்கப்படும் சலுகை
அல்ல. மாறாக அது நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் சனநாயக முதிர்ச்சிக்கும்
இன்றியமையாத ஒரு முதலீடாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-10T13:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் அறிமுகமாகும் இலங்கை பொலிஸ் செயலி - பொதுமக்கள் பயன்படுத்துவது எப்படி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/app-to-provide-police-of-emergency-1789043091"></link>
            <id>https://tamilwin.com/article/app-to-provide-police-of-emergency-1789043091</id>
            <summary type="text">


அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் தெரிவிப்பதற்காக இலங்கை பொலிஸார் ஒரு புதிய தொலைபேசி செயலியை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் தெரிவிப்பதற்காக இலங்கை பொலிஸார் ஒரு புதிய தொலைபேசி செயலியை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

 தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் எந்தவொரு இலங்கை பிரஜையும், Sri Lanka Police App-ஜ பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப். யூ. உட்லர் தெரிவித்துள்ளார். </p><h2>


SOS பொத்தான்</h2><p>
மேலும், அவசர காலங்களில் இந்தச் செயலியில் உள்ள SOS பொத்தானை 10 விநாடிகளுக்கு அழுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடம் குறித்த தகவலை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுவரை காலமும், 119 என்ற அவசர எண் மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. மாறாக, தற்போது நடைமுறைக்கு வரும் இந்த புதிய செயலி மூலம், உங்களுடைய பிரச்சினைகளை விரைவாக பொலிஸாருக்கு தெரியப்படுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01a77550-b5d6-400c-812e-0b0882e7e741/26-6aa2a7b5e9ee8.webp' /></p><p> </p><p>

அதே போன்று, ஒரு குழந்தைக்கு ஏதேனும் விபத்து அல்லது சிக்கல் ஏற்பட்டால் கூட, இந்தச் செயலி மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்றும் இது தொடர்பாக பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2> 


செயலியை பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள்</h2><ul><li>
 இலங்கை பொலிஸ் செயலியை பொலிஸ் ஸ்டோர் மூலமாக அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
</li><li>
தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் குழந்தைகளுக்கும் இதில் பதிவு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</li><li> 

இந்த பொலிஸ் செயலியைத் தவறாகப் பயன்படுத்துவது சாத்தியமற்றது. </li></ul><p>

 2025-ஆம் ஆண்டில் 119 என்ற அவசர எண்ணைத் தவறாகப் பயன்படுத்திய 91 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து! இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-lorry-carrying-coconuts-overturns-1789042314"></link>
            <id>https://tamilwin.com/article/accident-lorry-carrying-coconuts-overturns-1789042314</id>
            <summary type="text">குருநாகல் - கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப்
பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் கவிழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப்
பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தானது இன்று(10.09.2026) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த லொறியானது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்த விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில்
உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7499da5-698e-41c0-a9e6-72cc4298cd5a/26-6aa2a44ac9d2e.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கலகெதரப் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T12:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எங்கே..! நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/how-did-coal-worth-4-62-billion-rupees-namal-1789041425"></link>
            <id>https://tamilwin.com/article/how-did-coal-worth-4-62-billion-rupees-namal-1789041425</id>
            <summary type="text">சிறையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களிலிருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களிலிருந்து சுமார் 4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான 120,000 மெற்றிக்தொன் நிலக்கரி கணக்கின்றி மாயமாகியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் இன்று (10.09.2026) உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த</h2><p>
குறித்த 19 நிலக்கரி கப்பல்கள் தொடர்பான பதிவுகளில் சுமார் 120,000 மெற்றிக்தொன் பற்றாக்குறை காணப்படுவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fba240dd-ad0a-4094-ae5c-6ac14cf1a56a/26-6aa2a26d04f62.webp' /></p><p>
இந்த அளவு நிலக்கரியானது ஏறத்தாழ இரண்டு கப்பல் சுமைக்குச் சமமானது எனக் குறிப்பிட்ட அவர், இவ்வளவு பெரிய அளவு எவ்வாறு மாயமாகியிருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
</p><p>இந்த அறிக்கைகளின்படி, 120,000 மெற்றிக்தொன் காணாமல் போயுள்ளது. இந்த இரண்டு நிலக்கரி கப்பல்களையும் விழுங்கியது யார்?" எனவும் அவர் நாடாளுமன்றத்தில் வினவினார்.</p><p>

இதன்போது, மின்சார மற்றும் எரிபொருள் விலைகள், வரிகள், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வாக்குறுதிகள், அரிசி இறக்குமதி மற்றும் கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான முறைகேடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் அரசாங்கத்தை அவர் கடுமையாக விமர்சித்தார்.</p><p>

அதிகாரத்திற்கு வருவதாகத் தெரிவித்து வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியே நாமல் ராஜபக்ச இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DyCd5Oh1q3I" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் சமூகத்தில் அதிகரிக்கும் மரணங்கள் - பொதுமக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-suicide-prevention-1789042607"></link>
            <id>https://tamilwin.com/article/world-suicide-prevention-1789042607</id>
            <summary type="text">இன்றைய தினம்(10.09.2026) நாடளாவிய ரீதியில் உலக தற்கொலை தடுப்புத்தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த தினத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய தினம்(10.09.2026) நாடளாவிய ரீதியில் உலக தற்கொலை தடுப்புத்தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இந்த தினத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன், எம் உறவுகளுக்காக இந்த தினத்தை அனுஷ்டிக்க வேண்டும்.</p><p> 

தமிழ் மாவட்டங்களில் சமீபக்காலமாக தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.</p><h2> 

விவரங்களை பெற..</h2><p>

இதுபோன்ற சம்பவங்களை குறைப்பதற்கு எம்மால் முடிந்த வரையில் முயற்சிப்போம். </p><p>

இந்த நிலையில், சர்வதேச தற்கொலை தடுப்புத்தினத்தை முன்னிட்டு, நாளைய தினம் 3 மணியளவில், சிவகுரு ஆதீனத்தில் உள நல மருத்துவர்களால் பயிற்சியொன்று இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f043ac-094a-4bf2-9092-6cc06240b791/26-6aa29ff54d74a.webp' /></p><p> </p><p>

இதில், சிவ சகோதரிகள், தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துக்கொள்வார்கள்.
</p><p>
அத்துடன், இந்த முயற்சி திட்டம் தொடர்பில் மேலதிக விவரங்களை தெரிந்துக் கொள்ள நிர்வாக உத்தியோகத்தரை <b>0776943179 </b>என்ற இலக்கம் மூலம் தொடர்புக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T12:18:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்புப் பணப் பரிமாற்ற வழக்கில் யோசிதவுக்கு ஆதரவாக வந்த நபருக்கு நேர்ந்த கதி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individuals-who-gave-false-testimony-in-yoshitha-1789040605"></link>
            <id>https://tamilwin.com/article/individuals-who-gave-false-testimony-in-yoshitha-1789040605</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோசித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச்சாட்சியம் வழங்கிய சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோசித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச்சாட்சியம் வழங்கிய சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது தொடர்பான வழக்கு இன்று(10.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>

யோசிதவிற்கு ஆதரவாக பொய் சாட்சியம்</h2><p>

வழக்கு விசாரணையின் போது, சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த கறுப்புப் பணத்தை, முறையான மற்றும் சட்டப்பூர்வமான பணம் போன்று மாற்றும் யோசித வழக்கில், பாலித கமகே என்பவர் முக்கிய சாட்சியாளராக முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a481a1-3473-49d8-957d-b572313bd0ea/26-6aa29ac62f2bc.webp' /></p><p> </p><p>

இவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் முரணான கருத்துக்கள் இருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

இதன் அடிப்படையில், பொய்யாக சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 


அதன் பின்னர், குறித்த சாட்சியாளரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-09-10T11:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல இடங்களில் அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hot-weather-warning-sri-lanka-1789039216"></link>
            <id>https://tamilwin.com/article/hot-weather-warning-sri-lanka-1789039216</id>
            <summary type="text">நாட்டின் பல மாவட்டங்களில் இன்று மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானிக்க வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல மாவட்டங்களில் இன்று மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானிக்க வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அந்த திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் இதனைத் தெரிவித்தார். </p><p>

இதன்படி, இன்றைய தினத்தில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதான நிலையை எட்டியுள்ளதால், அதுகுறித்து பொதுமக்கள் விசேட அவதானம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2>எச்சரிக்கை</h2><p> 

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மட்டுமின்றி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கிடையில், நாடு முழுவதும் நிலவும் வறட்சியான வானிலை தணிவதற்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பெய்யவுள்ள இடைப் பருவமழைக் காலம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b05a27e-80b2-4bb4-920f-456344442bdc/26-6aa2997069965.webp' /></p><p> </p><p>

தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்துள்ளதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்ற போதிலும், அதனால் நிலவும் கடுமையான வறட்சி நிலைமை தணியும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதேவேளை,&nbsp;வரலாற்றில் இதுவரை பதிவான மிக வெப்பமான மாதமாக கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T11:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாணின் எடை குறித்து எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-weight-of-the-bread-to-the-consumer-1789036252"></link>
            <id>https://tamilwin.com/article/the-weight-of-the-bread-to-the-consumer-1789036252</id>
            <summary type="text">விற்பனை செய்யப்படும் பாணின் எடையை வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் நுகர்வோருக்கு தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>விற்பனை செய்யப்படும் பாணின் எடையை வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் நுகர்வோருக்கு தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>

அதன்படி, முழுமையான ஒரு பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை 450 கிராம் ஆகும்.
</p><p>
அதேவேளை, அரை பாணின் நிலையான எடை 225 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f87daad-c669-42d6-a45a-20ec4804dee1/26-6aa28d7f4c301.webp' /></p><p>
எனினும், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவான எடையில் பாண் விற்பனை செய்த வர்த்தகர்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி உறுதிப்பத்திரம் வழங்குவதாக கூறி ஏமாற்றுகின்றதா அநுர அரசு..! ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-provide-to-fake-land-certificates-1789039025"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-provide-to-fake-land-certificates-1789039025</id>
            <summary type="text">அண்மையில் பண்டாரவளை - கபரகலை தோட்டத்தில் வழங்கப்பட்ட 50 புதிய வீடுகளுக்கு இதுவரையில் காணி உரிமைப்பத்திரம் கொடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் பண்டாரவளை - கபரகலை தோட்டத்தில் வழங்கப்பட்ட 50 புதிய வீடுகளுக்கு இதுவரையில் காணி உரிமைப்பத்திரம் கொடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.</p><p> 

நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2> 


கபரகலையில் வழங்கப்பட்ட 50 வீடுகள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

மலையகத்தில் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 50 வீடுகளில் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. மாறாக, அந்த வீடுகளுக்கான காணி உரிமைப்பத்திரம் இதுவரையில் கொடுக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de07192c-49d1-4871-a4e2-24df20873199/26-6aa2968637649.webp' /></p><p> 


அன்று, 163 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த 163 காணி உறுதிப்பத்திரங்களும் 2015 முதல் 2025 வரையான
காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்ட
வீடுகளுக்கான காணி உரிமை ஆவணங்களாகும்.
</p><p>
அப்படியானால், அன்று கபரகலையில் திறந்து வைக்கப்பட்ட 50 புதிய வீடுகளுக்கான
காணி உறுதிப்பத்திரங்கள் எங்கே?

மேலும், அந்த 50 வீடுகளின் பயனாளிகளிடம் வழங்கப்பட்ட ஆவணம் காணி
உறுதிப்பத்திரம் அல்ல, மாறாக ஒப்பந்தம் என்பது போன்றே தெரிகின்றது. 





காணி உறுதிப்பத்திரம் என்பது வேறு, ஒப்பந்தம் என்பது வேறு என்பதை இந்த இடத்தில் பதிவுச் செய்துக் கொள்ள விரும்புகின்றேன்.</p><h2>53 வருட ஒப்பந்தம்</h2><p> 


எனவே, கபரகலை தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளுக்கான காணி
உரிமை எவ்வாறு பயனாளிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது? அவர்கள் பெற்றுள்ள
ஆவணம் உண்மையில் காணி உறுதிப்பத்திரமா அல்லது ஒப்பந்தமா? என்பதை சம்பந்தப்பட்ட
தரப்பினர் மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/335ac5c4-56ae-40a4-9bce-14ebf4f06bd9/26-6aa29686edb20.webp' /></p><p>
</p><p>

தோட்டத்தொழிலாளர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிராக இருப்பது நாங்களோ
நீங்களோ தொழிற்சங்கங்களோ அல்ல தோட்ட நிர்வாகம் தான். இன்றும் காணிகளை
பெற்றுக்கொடுக்க தடையாக உள்ளது.
</p><p>
இந்த நிலையில் ஜனாதிபதி, தோட்ட முதலாளிமார்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம்
2044ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் தற்போது நேரகாலத்தோடு இந்த ஒப்பந்தத்தினை
மீண்டும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>


பெருந்தோட்டங்களை பெற்றுக்கொண்டு 20 நிறுவனங்களில், 16 நிறுவனங்கள் தாங்கள்
தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதாகவும் காட்டியுள்ள நிலையில், 
அவர்களுடனான ஒப்பந்தம் நீடிப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை மக்கள்
மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:39:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை - விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/33-year-old-man-hacked-death-vadamarachchi-jaffna-1789027407"></link>
            <id>https://tamilwin.com/article/33-year-old-man-hacked-death-vadamarachchi-jaffna-1789027407</id>
            <summary type="text">புதிய இணைப்புயாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து
வெட்டிப் படுகொலை செய்யப்பட்டமை முன் பகை காரணமாக என தெரியவந்துள்ளது.
வடமராட்சி கிராம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து
வெட்டிப் படுகொலை செய்யப்பட்டமை முன் பகை காரணமாக என தெரியவந்துள்ளது.</p><p>
வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் நேற்றையதினம்(09.09.2026) இரவு
இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன்
(வயது 33) என்பவரே படுகொலை செய்யப்பட்டார்.</p><p>
துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின்
ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிராம கோடு பகுதியில் 33 வயது இளைஞன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த சம்பவம்
நேற்று(09.09.2026) இரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
</p><h2>பொலிஸார் தீவிர விசாரணை</h2><p>
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,&nbsp;</p><p> கொலை செய்யப்பட்ட நபர் கடைக்கு வெற்றிலை வாங்கிக்கொண்டு வெளியே மோட்டார்
சைக்கிளில் ஏறிப் புறப்பட முற்பட்ட போது எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை
வழிமறித்து வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad3956ff-e3ad-4805-af30-9a62a149e0fe/26-6aa265e782e96.webp' /></p><p>குறித்த சம்பவம்
பருத்தித்துறை பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சம்பவம் நடந்த இடத்திற்கு காலை 11:00 மணியளவில் சென்ற பருத்தித்துறை
நீதாவான் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார்.
</p><p>
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டு வருவதுடன் தடயவியல் ஆய்வு பொலிஸாரும் சம்பவ இடத்தை ஆய்விற்கு
உட்படுத்தி வருவதுடன் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் தீவிர
விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.</p><p><b><i>மேலதிக தகவல் - தீபன்</i></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கத்தால் இலங்கையிலும் தீவிரமான மாற்றங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-regarding-el-nino-conditions-1789037416"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-regarding-el-nino-conditions-1789037416</id>
            <summary type="text">உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் &#039;எல் நினோ&#039; (El Niño) வானிலை
நிகழ்வு, இலங்கையிலும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் 'எல் நினோ' (El Niño) வானிலை
நிகழ்வு, இலங்கையிலும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுவதாக&nbsp;புவியல் துறை பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>எல்நினோ நிலைமை தொடர்பாக கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை
இன்று 10.09.2026 மேற்கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை எல்
நினோ மிக வலுவாக இருக்கும் என வானிலை கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><h2>முக்கிய காலகட்டங்கள்</h2><p>

இலங்கையில் இதன் தாக்கத்தை மூன்று முக்கிய காலகட்டங்களாக பிரிக்கலாம்:

ஜூலை முதல் அக்டோபர் தொடக்கம் வரை: வறண்ட வானிலை நிலவும்.
</p><p>
அக்டோபர் முதல் டிசம்பர் முற்பகுதி வரை: தீவிரமடைந்து கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கு ஏற்படும்.</p><p>

டிசம்பர் நடுப்பகுதி முதல் 2027 ஜூன் வரை: மீண்டும் தீவிர வறட்சி தொடரும்.
</p><p>
எதிர்பார்க்கப்படும் முக்கிய பாதிப்புகள்

வெப்பநிலை உயர்வு: இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 3
.
C வரையிலும், நிலப்பரப்பு வெப்பநிலை 2.5
∘
C வரையிலும் அதிகரிக்கும்.</p><h2>வெள்ள அபாயங்கள்</h2><p>
</p><p>
கனமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: அக்டோபர் - டிசம்பர்
காலகட்டத்தில் 3 புயல்கள் மற்றும் 7 குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்
உருவாக வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c21e20-a780-4163-a355-f383aaae03a1/26-6aa2918cc9638.webp' /></p><p>
</p><p>
அதிக மழைப்பொழிவு: வடகிழக்கு மற்றும் இரண்டாவது இடைப்பருவக் காற்று காலத்தில்
வட மாகாணங்களில் சராசரியாக 700 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகலாம்.
குறைந்தபட்சம் 2 பெரிய வெள்ள அபாயங்கள் ஏற்படக்கூடும்.</p><p>
விவசாயம் மற்றும் மீன்பிடித் துறை பாதிப்பு: வட, கிழக்கு மாகாணங்களில் காலபோக
நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டு, விளைச்சல் இழப்பு ஏற்வடையக்கூடிய
சூழல் உள்ளது. மீன்பிடித் தொழிலும் இதனால் கடுமையாக பாதிக்கப்படலாம்.</p><h2>கோரிக்கைகள்
</h2><p>
உலகளாவிய ரீதியில் தானிய உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் என
எதிர்பார்க்கப்படுவதால், இலங்கையின் உணவுத் தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி
செய்ய வேண்டியது அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba10bdd1-c5a5-44ca-9f1e-353b9c0fdb99/26-6aa2918d88d54.webp' /></p><p>
</p><p>
எனவே, விவசாயிகள் நஷ்டத்தால் தொழிலைக் கைவிடாமல் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும். </p><p>காலநிலை மற்றும் விவசாயக் காப்பீட்டுத் திட்டங்களை முறையாக
நடைமுறைப்படுத்துவதுடன், உரிய மானியங்களையும் வழங்கி, விவசாயிகளின்
வாழ்வாதாரத்தையும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLS சான்றிதழ் இல்லாமல் வியாபாரம் செய்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/verdict-against-a-company-sold-extension-cords-1789035621"></link>
            <id>https://tamilwin.com/article/verdict-against-a-company-sold-extension-cords-1789035621</id>
            <summary type="text">பண்டாரவளை பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்று, இலங்கையின் தர நிர்ணய சான்றிதழ் (SLS) முத்திரை இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த குற்றத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரவளை பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்று, இலங்கையின் தர நிர்ணய சான்றிதழ் (SLS) முத்திரை இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் ரூ. 400,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><h2>

4 பிரிவுகளில் வழக்குப் பதிவு</h2><p>
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
</p><p>
கடந்த ஒகஸ்ட் 28 அன்று நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​கட்டாய SLS சான்றிதழ் தேவைப்படும் நீட்டிப்புக் கம்பிகள், SLS முத்திரை இல்லாமல் ரூ. 2,790 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f407e13-64dd-4183-9d64-ea0816be6526/26-6aa28d5812f6e.webp' /></p><p>
</p><p>
மேலும், குறைந்தபட்ச உத்தரவாதக் காலத்தை வழங்காதது மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து சட்டப்பூர்வ ரசீதுகள் இல்லாமல் பொருட்களை விற்பனைக்கு வைத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
</p><h2>
சட்டப்பூர்வ ரசீதுகள் இன்மை</h2><p>
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து, பிரதிவாதி நிறுவனத்திற்கு ரூ. 400,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2017 டிசம்பர் 7 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு அரசிதழ் எண் 2048/39-இன் ஆணை எண் 63-இன் கீழ், 250 வோல்ட்டுகளுக்கு மிகாத பல மின் சாதனங்களுக்குக் கட்டாய SLS தரச் சான்றிதழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1aca49f-3bcf-4b5d-9a89-9b5047e6b835/26-6aa28d58d1a2f.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, பிளக்குகள், சாக்கெட் அவுட்லெட்டுகள், மின் நீட்டிப்புக் கம்பிகள், அடாப்டர்கள், உருகி இணைப்பு அலகுகள், மாற்றி பிளக்குகள் மற்றும் கேபிள் ரீல்கள் ஆகியவை தொடர்புடைய SLS தரச் சான்றிதழைக் கொண்டிருப்பது கட்டாயமாகும்.</p><p>

மின் விபத்துகள் மற்றும் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக, நுகர்வோர் விவகார ஆணையம், அத்தகைய மின் சாதனங்களை வாங்கும் போது SLS தரச் சின்னம் மற்றும் உத்தரவாதக் காலத்தைச் சரிபார்த்து, சட்டப்பூர்வ ரசீதைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T10:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scanning-machines-for-palaly-airport-and-harbour-1789036469"></link>
            <id>https://tamilwin.com/article/scanning-machines-for-palaly-airport-and-harbour-1789036469</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றில் உடல் பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றில் உடல் பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அதற்கமைய, இலங்கைச் சுங்கம் இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
அண்மைய காலமாக பயணிகள் பரிமாற்றம் அதிகரித்துள்ளமையை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><h2><b>
 உடல் பரிசோதனை </b></h2><p>கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe374ab-5990-4252-bd0c-ad6df0ac4041/26-6aa28a6ab0abf.webp' /></p><p>புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியாவில் இருந்தும் பெருமளவு சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக பயணங்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T10:46:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுகாதாரத்துக்கு முரணாக தயிர் விற்பனை: இருவருக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curd-sold-in-violation-48-000-fine-1789033810"></link>
            <id>https://tamilwin.com/article/curd-sold-in-violation-48-000-fine-1789033810</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>சன்னதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி
1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலன் மற்றும் பொதுச் சுகாதார
பரிசோதகர்களான உதயபாலா, சால்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட
பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை
செய்தமை கண்டறியப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு எதிராக அச்சுவேலி 1ஆம்
பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50875538-0471-4cee-88f0-bd7beac7638f/26-6aa284933a7bd.webp' /></p><p>
</p><p>குறித்த வழக்கு இன்று (10.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு
எதிரிகளுக்கும் மன்றினால் தலா 24,000
ரூபா வீதம் மொத்தம் 48,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:26:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொன்ற சம்பவம்! சிசிடிவி காட்சியில் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-and-killing-kanjipanis-cousin-in-kotahena-1789033973"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-and-killing-kanjipanis-cousin-in-kotahena-1789033973</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போதைப்பொருட்களுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இந்த துப்பாக்கிச்சூடு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் ஒரு கடைக்கு முன்பாக ஆகஸ்ட் (10) பிற்பகல் நடைபெற்றுள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் மட்டக்குளியை சேர்ந்த 23 வயதுடையவர் ஆவார்.</p><h2>பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்</h2><p> </p><p>இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர், கொழும்பு 05, கிருலப்பனையை சேர்ந்த 33 வயதான முகமது அஸ்மின் மொஹிதீன் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13b8f37-db31-4c9c-b381-d3594e78f172/26-6aa2857f673e9.webp' />&nbsp;</p><p> 

இவர் கஞ்சிபானி இம்ரானின் மாமா என்று பொலிஸ் விசாரணையில் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.</p><p>துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததை சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் கூறுகின்றது.</p><h2>சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலை&nbsp;</h2><p>

சந்தேகநபரை கைது செய்த நேரத்தில், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 12 கிராம் மற்றும் 470 மில்லிகிராம் போதைப்பொருட்களும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைபேசிகளும் வழக்கு ஆதாரங்களாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது. </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (10) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவிருந்தார்.
</p><p>
மேலும், கொட்டாஞ்சேனை பொலிஸ் மற்றும் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:25:27+00:00</updated>
        </entry>
    </feed>
