<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-17T13:32:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் நீரில் முழ்கிய மாகாணம் - நீர்மட்டம் உயர்வால் இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flooded-state-in-america-1784294903"></link>
            <id>https://tamilwin.com/article/flooded-state-in-america-1784294903</id>
            <summary type="text">அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணம் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் முழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 

வீதிகளில் இருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணம் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் முழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். </p><p>

வீதிகளில் இருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
இருவர் உயிரிழப்பு</h2><p>

அப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 200-க்கும் மேற்பட்ட பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ad6fc41-7b7c-40f2-9a77-4ff5e5ea202b/26-6a5a2df9cb572.webp' /></p><p> </p><p>

இந்தப் பேரிடரால் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 125 சாலைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 87 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
</p><p>
இருப்பினும், மழை தொடர்ந்தால், ஆறுகளில் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு உயரும் என்று அந்த நாட்டின் வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.</p><p></p><p>[IY3Z2HA<b>]</b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T13:29:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கலப்பட நெய் விற்பனை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sale-of-adulterated-ghee-suspended-prison-sentence-1784293925"></link>
            <id>https://tamilwin.com/article/sale-of-adulterated-ghee-suspended-prison-sentence-1784293925</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு- உடையார்கட்டு
பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட
நெய் மாதிரியில் கலப்படம் இருப்பது உறுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு- உடையார்கட்டு
பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட
நெய் மாதிரியில் கலப்படம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>அத்துடன், அதன் லேபலில்
குறிப்பிடப்பட்டிருந்த உரிமையாளர் விபரமும் போலியானது என விசாரணையில்
தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேகத்திற்கிடமான நெய் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட
நிலையில், அவை கலப்படமானவை என உறுதி செய்யப்பட்டது.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள்</h2><p> மேலும், நெய் போத்தல்களில்
ஒட்டப்பட்டிருந்த லேபலில் இடம்பெற்றிருந்த உரிமையாளர் தொடர்பான தகவல்களும்
உண்மைக்கு புறம்பானவை என கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431cf583-b7c1-41b1-9651-9216da39eadd/26-6a5a2c78272ae.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது
சுகாதார பரிசோதகர் பிரதாஸினால் இன்றையதினம் (17.07.2026) வெள்ளிக்கிழமை
முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.</p><p>
இன்றையதினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மொத்தமாக 30,000
ரூபாய் அபராதம் விதித்தது.</p><p></p><h2>சிறைத்தண்டனை</h2><p> </p><p>மேலும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2
ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90fbf151-f081-47ad-86ec-83050dd77226/26-6a5a2c790b940.webp' /></p><p>
</p><p>
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள குறித்த நெய்
போத்தல்கள் அனைத்தையும் 2 வாரங்களுக்குள் மீளப் பெறுமாறும் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. </p><p>எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில்
ஈடுபடக்கூடாது என கடுமையான எச்சரிக்கையையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T13:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். வலி வடக்கு 6 ஆயிரம் ஏக்கர் வர்த்தமானியை நீக்குங்கள்: ஜான்சன் பிரிடோ தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gazette-notification-acres-in-jaffna-s-valikamam-1784292697"></link>
            <id>https://tamilwin.com/article/gazette-notification-acres-in-jaffna-s-valikamam-1784292697</id>
            <summary type="text">யாழில் 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு
வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானிய உடனடியாக
நீக்க வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் 2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு
வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கான வர்த்தமானிய உடனடியாக
நீக்க வேண்டுமென சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் இணைப்பாளர்
ஜான்சன் பிரிடாரோ தெரிவித்தார்.
</p><p>
இன்று(17.7.2026) யாழ். மயிலிட்டியில் 13 ஆவது வாரமாக இடம் பெற்று வரும்
காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணிகள் மக்களுக்கு என கூறி ஆட்சிக்கு
வந்த தற்போதைய அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிப்பதில் தயக்கம் காட்டுகிறது.</p><p></p><h2>வர்த்தமானி அறிவித்தல்</h2><p>
</p><p>
2013 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்ட வலி வடக்கு
மக்களின் சுமார் 6000 ஏக்கர் காணிக்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை இரத்துச்
செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c7f584b-1c52-402b-ad5b-6255814e4fd9/26-6a5a282cf1507.webp' /></p><p>
</p><p>
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மற்றும் பலாலி மக்கள்
தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் சில மாதங்களுக்கு
முன்னர் கொழும்பிலும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டத்திலும்
ஈடுபட்டனர்.</p><p>

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களுக்கு தற்போதைய அரசாங்கமும் செவி
சாய்க்காமல் கடந்த கால அரசாங்கங்களைப் போல அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு
இயங்கும் அரசாங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய வளமான காணிகளை
கையகப்படுத்தி 35 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்று வரை பாதிக்கப்பட்ட
மக்கள் தமது காணிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec2cdf32-2baa-4ec3-a7b9-217c3de31c40/26-6a5a282c31fad.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்புத் தேவையென காணியை சுவீகரித்துவிட்டு மக்களின் காணிகளில் விவசாயம்
செய்து இராணுவம் மரக்கறிகளை விற்று வருமானம் ஈட்டுகிறார்கள்.இது நாட்டின்
திறைசேரிக்காக செல்கிறது.</p><p>

ஆகவே மக்களின் காணிகள் மக்களுக்கு எனக் கூறிவரும் அரசாங்கம் விரைவாக மக்களின்
காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதோடு வெளியிடப்பட்ட 6 ஆயிரம் ஏக்கருக்கான
வர்த்தமானியையும்
உடனடியாக நீக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T13:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி குற்றவாளியை காட்டிக் கொடுக்க முன்வந்த இராணுவ வீரர் - டக்ளஸ் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-somaratna-confession-clear-epdp-doubts-1784284465"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-somaratna-confession-clear-epdp-doubts-1784284465</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில் குற்றவாளியாக்கப்பட்ட இராணுவ லான்ஸ்
கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அண்மையில் தெரிவித்த கருத்து, ஈழ மக்கள் ஜனநாயக கட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில் குற்றவாளியாக்கப்பட்ட இராணுவ லான்ஸ்
கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அண்மையில் தெரிவித்த கருத்து, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி
மீது சேறு பூசியவர்களுக்கு பதில் வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்று(16.07.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு
பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைக்குழி</h2><p>
</p><p>
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
</p><p>
தமிழ் தேசிய கட்சிகள் எனக் கூறுபவர்கள் தமது சுயலாப அரசியலை முன்னெடுப்பதற்காக
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது
சிறு பூசல்களை மேற்கொண்டார்கள் தற்போதும் மேற்கொண்டு வருகிறார்கள்.</p><p>

அவர்களுடைய அரசியலைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் மக்களை தவறான பாதையில்
இட்டுச் சென்று மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அபிலாசைகளையும்
அபிவிருத்திகளையும் தடுப்பது கவலை அளிக்கிறது.
</p><p>
தற்போது செம்மணி மனிதப் புதைக்குழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் பல நூறு
எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ed6c92-3ca4-40c1-8995-3b9dcc081110/26-6a5a07d6e49ae.webp' /></p><p>
</p><p>
செம்மணி புதைகுழி விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஈழ மக்கள் ஜனநாயக
கட்சியையும் இணைத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அது சளிப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>
செம்மணி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது எங்கள் மீது பழி போட்ட சக
தமிழ் கட்சிகளுக்கு செம்மணி விவகாரத்தில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட
இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்ததாக ஊடகங்களில் வெளிவந்த
கருத்தை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.</p><h2>மண்டதீவு மனிதப் புதைக்குழி</h2><p>
</p><p>
அதாவது தனக்கு பொது மன்னிப்பு வழங்கினால் செம்மணியுடன் தொடர்புடைய பல இராணுவ
உயர் அதிகாரிகள் தொடர்பில் உண்மையை கூறுவேன் என்றார் அவருடைய கருத்துக்களில்
ஈபிடிபி தொடர்பில் எந்தக் கருத்துக்களையும் கூறவில்லை.</p><p>

அவருடைய அந்தக் கருத்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது சக தமிழ் கட்சிகள்
சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/569627a1-3db3-4247-bbdc-1c619dfb97f8/26-6a5a07d7977e0.webp' /></p><p>
</p><p>
அதேபோன்று மண்டதீவிலும் மனிதப் புதைக்குழி இருப்பதாகவும் அதற்கும் ஈழ மக்கள்
ஜனநாயக கட்சிக்கும் தொடர்பாக அண்மையில் ஒரு கருத்து வெளிவந்தது.
</p><p>
அது தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவுக்கு கடிதம் எழுதினேன்
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் உண்மையை ஆராயுமாறு தெரிவித்திருக்கிறேன் என்றார்.&nbsp;</p><p></p><h2>கொழும்பு&nbsp;அலுவலகங்கள்</h2><p>
</p><p>
அதேபோன்று கொழும்பில் நாங்கள் பயன்படுத்திய அலுவலகங்களிலும் இவ்வாறு
புதைகுழிகள் இருப்பதாக சில வங்குரோத்து தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

நாங்கள் பயன்படுத்திய அலுவலகங்கள் நாங்கள் கைவிட்டதன் பின்னர் பல மாடிகளை
கொண்ட கட்டடங்களாக மாற்றப்பட்ட போது எந்த தடயங்களும் வெளிவரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40f99430-9dba-4fe0-82f1-d95c6ffc9ef7/26-6a5a07d849648.webp' /></p><p>செம்மணியில் ஒரு அடி அகழ்ந்தெடுக்கும் போது என்புத் தொகுதிகள் வருகிறது
என்றால் கொழும்பில் நாங்கள் பயன்படுத்திய அலுவலகம் இருந்த இடங்கள் இன்று 30
மாடிகளுக்கு மேல் கட்டப்பட்டிருக்கிறது.</p><p>

அவ்வாறு மாடிகளை அமைக்கும் போது ஆக குறைந்தது 15 அடி ஆழமாவது தோண்டி
இருப்பார்கள் அவ்வாறு எந்த தடயங்களும் வரவில்லை.
</p><p>
ஆகவே செம்மணி விவகாரம் எம் மீது கலங்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு சிறந்த ஒரு
பாடமாக இருக்கின்ற நிலையில் எனது அரசியல் தமிழ் மக்களுக்கான அரசியலாகவே
இருக்கும் சுயநல அரசியலாக எக்காலத்திலும் இருக்காது என 
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[டித்வா புயலால் நிர்கதியான கொத்மலை மக்கள் - பாதை புனரமைப்பு கோரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-protest-in-kotmalai-road-reconstruction-1784287679"></link>
            <id>https://tamilwin.com/article/people-protest-in-kotmalai-road-reconstruction-1784287679</id>
            <summary type="text">டித்வா புயலின்போது சேதமடைந்த தமது பகுதி
வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி கொத்மலை - வேவண்டன் தோட்ட மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>டித்வா புயலின்போது சேதமடைந்த தமது பகுதி
வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி கொத்மலை - வேவண்டன் தோட்ட மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
குறித்த போராட்டமானது நேற்றைய தினம்(16.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பாடசாலை&nbsp; சீரமைப்பு</h2><p>இதன்போது, எமது பகுதியில் உள்ள பாடசாலையையும் சீரமைத்துத்தர வேண்டும்.

கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேவண்டன் தோட்டத்தில் சுமார் 48
குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றோம்.</p><p>
கடந்த டித்வா புயலின் போது இந்தத் தோட்டத்திற்கான பிரதான பாதை முழுமையாகச்
சேதமடைந்துள்ளது.</p><p>

இதன் காரணமாக, இந்தத் தோட்டத்தில் உள்ள பாடசாலையின் செயற்பாடுகளும் தற்போது
முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1960b11e-8a57-4243-9c26-e7e0c3731d66/26-6a5a131a7ce77.webp' /></p><p>அனர்த்த காலப்பகுதியில் அருகில் உள்ள பாடசாலைகளில் தற்காலிகமாகத் தங்கியிருந்த
இந்த மக்கள், தற்போது மீண்டும் தங்களது சொந்த இடமான வேவண்டன் தோட்டத்திலேயே 
திரும்பி வசித்து வருகின்றனர்.
</p><p>
தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக கொத்மலை
பிரதேச செயலகம் உறுதியளித்த போதிலும், கடந்த 9 மாதங்கள் கடந்தும் இதுவரை
எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துக்கின்றனர்..</p><p></p><h2>கவனயீர்ப்பு போராட்டம்</h2><p>
</p><p>
தற்போது இந்தத் தோட்டத்திற்குச் செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய பிரதான
பாதையை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு போராட்டத்தில் ஈடுப்பட்ட&nbsp; மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73efee67-527a-434f-97c7-e7fc634ed8eb/26-6a5a1319cbae8.webp' /></p><p>தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு
கோஷங்களை எழுப்பியபடி தோட்டத்திலிருந்து நடை பவனியாக வந்த மக்கள், கண்டி -
நுவரெலியா பிரதான வீதியின் கெரண்டிஎல்ல பகுதியில் வீதியை மறித்து கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் .&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:56:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை பணம் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் வர்த்தகர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-dealer-arrested-with-ice-and-cannabis-1784288423"></link>
            <id>https://tamilwin.com/article/drug-dealer-arrested-with-ice-and-cannabis-1784288423</id>
            <summary type="text">அம்பாறை - இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில்
நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு
வந்த சந்தேக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில்
நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு
வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த கைது நடவடிக்கை நேற்று(16.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைது
நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>
</p><p>
</p><p>அவர்
விற்பனைக்காக ஐஸ் போதைப்பொருளைச் சிறிய பொட்டலங்களாகத் தயாரித்துக்
கொண்டிருந்த வேளையில், பொலிஸாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இதன்போது, 4,400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , கஞ்சா&nbsp; 30 கிராம், 21,000 ரூபா பணம் மற்றும் அளவிடும் தராசு போன்ற பொருட்கள் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2e6eb74-5bce-4f5b-990a-fd3204be2d61/26-6a5a1a8eb2ac1.webp' /></p><p>

சந்தேக நபர் இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கி, இந்த
வியாபாரத்தை மேற்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது. </p><p>இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக
இகினியாகல பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வருடங்களாக தொடரும் போராட்டம் - காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-protest-in-the-northern-region-1784290233"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-protest-in-the-northern-region-1784290233</id>
            <summary type="text">வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ &quot; பங்களா முன்பாக அமைதி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக அமைதி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>இந்த போராட்டமானது இன்று(17.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அமைதிப் போராட்டம்</h2><p>பலாலி - மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத
காலப்பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்,
அந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
</p><p>
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அந்தப் பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத காரணத்தினால், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது..</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66993b38-a972-48e7-952c-85df460fb186/26-6a5a1e2990c40.webp' /></p><p>இந்த நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக
காணி உரிமையாளர்கள் போராடி வருகின்றனர்.</p><p>இதன் அடிப்படையில் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை
முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வழக்குகளில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட சி.டி. விக்ரமரத்ன : வெளிவரும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/c-d-wickramaratne-named-as-defendant-several-cases-1784285448"></link>
            <id>https://tamilwin.com/article/c-d-wickramaratne-named-as-defendant-several-cases-1784285448</id>
            <summary type="text">மர்மமான முறையில் இன்று(17) காலை உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் இன்று(17) காலை உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 தனது உத்தியோகப்பூர்வ தகுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாகவோ அல்லது பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ அதிகாரத்தின் காரணமாகவோ பல்வேறு சட்ட நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனினும் தனது பதவிக்காலத்தில் அவர் எந்தவொரு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளும் இன்றிப் பணியாற்றியதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p></p><h2>சர்ச்சைக்குரிய பதவி உயர்வுகள்</h2><p>தேசபந்து தென்னக்கோன் போன்ற பிற்கால பொலிஸ் மா அதிபர்கள் மீது சுமத்தப்பட்டதைப் போன்ற பெரிய தனிப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் விக்ரமரத்ன மீது பதிவாகவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97f08915-7ab3-4e0b-ac95-fd08c8498840/26-6a5a0e859b212.webp' /></p><p>2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பு விசாரிக்கப்பட்ட வழக்கில், சி.டி. விக்ரமரத்ன ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார். </p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் விருப்பத்துக்கு இணங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் முன்னாள் ஷானி அபேசேகர, அவரது இடைநீக்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உட்பட பல அடிப்படை உரிமை மனுக்களில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்தார்.
</p><p>
பொலிஸ் மா அதிபர் என்ற முறையில், பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பல்வேறு நிர்வாக முடிவுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் பலமுறை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது. </p><p>2020ஆம் ஆண்டில் பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (SSPs) சர்ச்சைக்குரிய வகையில் முன்திகதியிட்டு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் காரணமாக, பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சி. டி. விக்ரமரத்ன மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p>தவறான நியாயப்படுத்தல்களையும், பிற அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் கருத்தில் கொண்டு, அந்தப் பதவி உயர்வு ஆணைகளை இடைநிறுத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.</p><p> இது ஆளும் தரப்பினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி சி.டி.விக்கிரமரத்ன மேற்கொண்ட மோசடி மற்றும் தவறான முன்னுதாரணங்களில் ஒன்றாகும்.</p><p></p><h2>ஊழல், மோசடி முறைகேடுகள்</h2><p>2022 மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகை அருகே போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது, வன்முறைக் ​​கும்பலின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் நடவடிக்கை மற்றும் ஆணைகள் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன, விசேட அதிரடிப்படை (STF)கட்டளைத் தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) வருண ஜயசுந்தர ஆகியோரிடம் குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) 2025-ஆம் ஆண்டில் விசாரணை நடத்தியது.</p><p> இருப்பினும், அந்த விரிவான விசாரணைகளுக்குப் பிறகு அரசியல் அழுத்தம் காரணமாக சி.டி. விக்ரமரத்ன மீது பகிரங்கமாக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b774524-5da8-41ef-9b80-743eecb1848c/26-6a5a0e86726b6.webp' /></p><p>
ஆனாலும் பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் அவரது அலுவலகத்தில் இருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில் அமைந்திருந்த காலிமுகத்திடலில் அப்பாவிப் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக் கும்பலின் வெறியாட்டம் பல மணிநேரம் நீடித்திருந்த நிலையிலும் அதனைக் கட்டுப்படுத்த தனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தவில்லை. </p><p>அதற்குப் பதிலாக வன்முறைக் கும்பலுக்கு மறைமுகமாக ஒத்தாசை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
</p><p>
விக்ரமரத்னவின் பதவிக்காலத்தில் ஓய்வு பெறும் வயதைத் தாண்டி அவர் பலமுறை பதவி நீட்டிப்பு பெற்றதும், அவரது மூன்றாவது பதவி நீட்டிப்பு அரசியலமைப்புச் சபையால் நிராகரிக்கப்பட்டதும் அரசியல் மற்றும் சட்டரீதியான விவாதங்களைத் தூண்டியுள்ளன. </p><p>அவர் சர்ச்சைகளுக்கு மத்தியில் பதவியில் பணியாற்றியுள்ளார் என்பதும் இதில் அடங்கும். ஊழல், மோசடி முறைகேடுகளுக்காக அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்றபோதும், அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் பலவற்றில் அவர் தொடர்புபட்டிருந்தார்.</p><h2>சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக</h2><p>இவருடைய பதவிக்காலத்தில் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு தடயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. </p><p>தெற்கு அதிவேகப் பாதையில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்ற சஹ்ரான் ஹாசிமின் கும்பலை பொலிஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்ய முயன்றபோது அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலையிட்டு அவர்களை விடுதலை செய்வித்திருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdfa877c-ac52-4628-9831-09d218409103/26-6a5a0e8730b2f.webp' /></p><p>அது தொடர்பில் பின்னர் வந்த பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் சி.டி. விக்ரமரத்ன எந்தவொரு விசாரணைக்கும் உத்தரவிடவில்லை.
</p><p>
அதற்குப் பதிலான தன்னுடைய பதவிக்காலத்தில் தேசபந்து தென்னகோனுக்கு முக்கிய பொறுப்புகள் பலவற்றை வழங்கியிருந்தார்.
</p><p>
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) என்பவர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக பல்வேறு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், சாரா ஜெஸ்மின் உயிரிழந்து விட்டதாக காட்டுவதற்கு கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் சி.டி.விக்ரமரத்ன முழு ஒத்துழைப்பும் வழங்கியிருந்தார்.</p><p>

அம்பாறை புத்தங்கல பொதுமயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு மரபணு (DNA) பரிசோதனைகளிலும் சாரா ஜெஸ்மின் உடைய மரபணுவுடன் ஒத்துப் போகும் எந்தவொரு சான்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. </p><p>எனினும் சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக காட்டும் நோக்கில் கடந்த 2022 ஏப்ரல் 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்றாவது மரபணு பரிசோதனைக்கான உத்தரவுகளை சி.டி. விக்ரமரத்னவே பிறப்பித்திருந்தார். </p><p>குறித்த மரபணு பரிசோதனையில் ஆச்சரியப்படும் வகையில் சாரா ஜெஸ்மினின் மரபணு மாதிரியுடன் ஒத்துப்போகும் எலும்புத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் மா அதிபரின் மரணம் - பொலிஸ் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-death-police-1784279297"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-death-police-1784279297</id>
            <summary type="text">மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்கிரம வீதத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று(17) அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்கிரம வீதத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று(17) அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) சி.டி. விக்ரமரத்னவின் மரணத்தை இலங்கை பொலிஸ் இன்று ஒரு உத்தியோகப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமரத்ன, அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக பொலிஸாரர் தெரிவித்துள்ளனர். </p><p></p><h2>35வது பொலிஸ் மா அதிபராக</h2><p>இச்சம்பவம் தொடர்பாக மாலபே பொலிஸ் நிலையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27b04fa6-d62e-443c-a37c-7e0cf07ed399/26-6a59f40201907.webp' /></p><p> மேலும், மேற்கு மாகாண தெற்குப் பிரிவு குற்றப்பிரிவு, மாலபே பொலிஸாருடன் இணைந்து இதுகுறித்த மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.
</p><p>
விக்ரமரத்ன, 2020 நவம்பர் 27 முதல் 2023 நவம்பர் 23 வரை இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா சென்ற 20 மாணவர்கள் விபத்தில் உயிரிழப்பு - உகண்டா அரசு விதித்துள்ள முக்கிய தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-students-killed-in-ugandan-school-bus-accident-1784289677"></link>
            <id>https://tamilwin.com/article/20-students-killed-in-ugandan-school-bus-accident-1784289677</id>
            <summary type="text">கல்விச் சுற்றுலா சென்ற மாணவர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு உகண்டாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 20 மாணவர்கள் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விச் சுற்றுலா சென்ற மாணவர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு உகண்டாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>

இந்த விபத்தில் 20 மாணவர்கள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>

20 மாணவர்கள் உயிரிழப்பு</h2><p>

கப்சோர்வா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் பாடசாலை ஊழியர்களும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2be14ec-ad15-400b-acc2-8f174677c383/26-6a5a1bd606916.webp' /></p><p> 

பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு தான் விபத்திற்கு காரணம் என்றும் செக்வாடிட் மலைக்கு அருகிலுள்ள சாலையின் ஒரு பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முடியும் வரை பாடசாலை கல்விச் சுற்றுலாக்கள் ரத்து செய்யப்படும் என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்னா கிங்ஸ் உரிமையாளர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-kings-owner-arrested-1784289328"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-kings-owner-arrested-1784289328</id>
            <summary type="text">இலங்கை பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஜப்னா கிங்ஸ் கழகத்தின் உரிமையாளர் ஒருவரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஜப்னா கிங்ஸ் கழகத்தின் உரிமையாளர் ஒருவரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியப்பிரஜைகள் என்று கூறப்படுகிறது.
</p><p></p><h2>இன்று தொடங்கவிருக்கும் நிலையில்</h2><p>
ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான மன்ஜோத் கல்ரா மற்றும் யுவராஜ் குஷ்வஹா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47590311-eff7-4b7b-8173-c2ccf6e3873f/26-6a5a1a2ae515f.webp' /></p><p>
2026 இலங்கை பிரீமியர் லீக் போட்டிகள் இன்று தொடங்கவிருக்கும் நிலையில் இந்தக் கைது சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.</p><p>

இலங்கை பிரீமியர் லீக் - 2026 போட்டியின் முதல் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி கேலண்ட்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு மணிவண்ணன் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muslim-parties-not-back-tamil-struggle-manivannan-1784277029"></link>
            <id>https://tamilwin.com/article/muslim-parties-not-back-tamil-struggle-manivannan-1784277029</id>
            <summary type="text">முஸ்லிம் கட்சிகளும் தமிழ் தேசிய கட்சிகளும் தற்பொழுது கூட்டாக இணைந்துள்ளனர். இதில் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முஸ்லிம் கட்சிகளும் தமிழ் தேசிய கட்சிகளும் தற்பொழுது கூட்டாக இணைந்துள்ளனர். இதில் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக
இருக்கவில்லை என்பது வரலாற்று ரீதியான ஒரு கசப்பான உண்மை என தமிழ் மக்கள் கூட்டணியினுடைய உப
செயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். </p><p>

நேற்று(16.07.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தமிழ் மக்களுடைய உரிமைக் குரல்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
எதிர்வரும் காலங்களில் மலையக கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும், தமிழ்
மக்களுடைய உரிமை கோரிக்கைகளை ஏற்று அங்கீகரித்து தமிழ் மக்களுடைய உரிமைப்
போராட்டத்திற்கு வலுவான சக்திகளாக இருப்பார்கள் என்றால் அதுவொரு வரவேற்கத்தக்க முற்போக்கான விடயமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd6936a-a944-47a2-b45f-05755af3ee8c/26-6a5a175bab6a1.webp' /></p><p>
</p><p>

ஆனால் இவர்களுடைய நோக்கம் தேர்தலை கணக்கிட்டு 
உருவாக்கப்பட்ட கூட்டாக இருக்கும் என்றால் அது ஒரு தேவையில்லாத கூட்டாக தான்
எதிர்காலத்தில் அமையும்.&nbsp;</p><p>இந்த கூட்டணி நாடாளுமன்றத்திலே தமிழ் மக்களுடைய உரிமைக் குரலாக 
காணப்படும் என்றால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை&nbsp;</h2><p> </p><p>வடக்கு - கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை என்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.</p><p>இந்த விடயம் தொடர்பில் மணிவண்ணனிடம் வினவிய போது,&nbsp;</p><p>இந்தக் கூட்டு அவசியமற்ற கூட்டு என்று நான் திட்டவட்டமாக சொல்ல மாட்டேன்.
ஏனெனில் சிறுபான்மையினர் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பது கட்டாய தேவை.</p><p>

இதனை விமர்சித்து, இந்த கூட்டு அரசியல்
நோக்கத்திற்குத் தேவையில்லை என்று நான் விமர்சிக்க தயாராக இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறான கூட்டுக்கள் சிறுபான்மையின மக்கள் இந்த
நாட்டில் பலமடைவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கும். ஆனால் இந்த கட்சிகளுடைய
கடந்த காலம் எங்களுக்கு நம்பிக்கையீனத்தை தருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d495bb5-211e-45a4-9d60-6a92363f3da7/26-6a59ec0fb7187.webp' /></p><p> </p><p>மலையக கட்சிகளாக
இருக்கலாம், முஸ்லிம் கட்சிகளாக இருக்கலாம், எப்பொழுதுமே ஆளும் பக்கத்தோடு
தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அமைச்சுப் பதவிகளுக்காக தங்களை நளினப்படுத்திக் கொண்டு செயற்பட்ட கட்சிகள் ஆகும்.</p><p>

ஆகவே மலைய கட்சிகளாக இருந்தாலும் முஸ்லிம் கட்சிகளாக இருந்தாலும் கடந்த கால
செயற்பாடுகளுக்கும் ஈழத் தமிழ் மக்களுடைய அரசியல் போக்குக்கும் ஒத்துப் போகாத
தன்மை அல்லது முரண்பாடான தன்மை கடந்த காலங்களிலிருந்து இருந்தது.
</p><p>
தேசிய மக்கள் சக்தியினுடைய ஆட்சியை
தென்னிலங்கையில் தாக்கு பிடிக்க முடியாத காரணத்தினால் இவ்வாறான கூட்டு உருவாக்கப்படுகின்றது என்றால் அது ஒரு தேவையில்லாத கூட்டாகத்தான்
இருக்கும். </p><p>

எண்ணிக்கையில்
சிறுபான்மையினராக இருக்கக்கூடிய மக்களுடைய அரசியல் பலத்தை கூட்டுவதற்கான ஒரு
அடிப்படை மனச்சாட்சியுடன் கூடிய ஒரு கூட்டாக இருந்தால் நன்மையளிக்கும் என்றார்.</p><p></p><h2>தவிசாளர் பதவி நீக்கம்&nbsp;</h2><p>
</p><p>
உள்ளூர் ஆட்சி மன்றங்களின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் பதவி நீக்கப்பட்ட
விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணி என்ற வகையிலும் அரசியல்வாதி என்ற வகையிலும்
அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளர் வினவிய போது,
</p><p>“குறிப்பாக கிஷோரினுடைய விவகாரத்திலே எல்லை தாண்டி தனது அதிகாரத்தை
துஸ்பிரயோகம் செய்திருக்கிறாரோ என்று சிந்திக்க தோன்றுகின்றது.</p><p> ஏனெனில் ஆளுநர் உடைய கருத்தை விமர்சிப்பதற்கு
உள்ளூர் ஆட்சி மன்ற உறுப்பினருக்கு உரிமை இல்லை என்றால் வேறு எவருக்கு
விமர்சிக்க முடியும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f66e36f-a945-4b12-b0ad-778e15ec34bb/26-6a59ec108a3c2.webp' /></p><p>
</p><p>
ஆகவே
ஆளுநருடைய தலையீடு என்பது சர்வாதிகாரியாக சித்தரிக்கின்ற போக்காகத்தான் பார்க்க முடிகிறது. இதற்கான
கடிவாளங்கள் இடப்பட வேண்டும். </p><p>

ஆனால் ஒரு விடயத்தில் நான்
தெளிவாக இருக்கிறேன். ஆளுநருடைய அதிகாரம் என்பது உள்ளூர் ஆட்சி மன்றங்களினுடைய&nbsp; ஆங்கிலத்தில் மிஸ் மேனேஜ்மென்ட் என்று சொல்லக்கூடிய
பிறள் முகாமைத்துவத்தை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமாகவே இருக்கிறது.
</p><p>
அந்த வகையில் பிரயோகிக்கப்பட வேண்டுமே ஒழிய உள்ளூராட்சி மன்றங்களின் உடைய
சுயாதீனத்தில் அல்லது உள்ளூராட்சி மன்றத்தினுடைய உறுப்பினர் ஒருவருடைய
கருத்துச் சுதந்திரத்தில் தலையீடு செய்கின்ற அளவிற்கு ஆளுநருக்கு அதிகாரம்
இல்லை என்பது என்னுடைய கருத்தாக உள்ளது“ என பதிலளித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T11:54:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரங்க குணசேகர மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோருக்கு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrest-warrant-eranga-gunasekara-jagath-manuwarna-1784287193"></link>
            <id>https://tamilwin.com/article/arrest-warrant-eranga-gunasekara-jagath-manuwarna-1784287193</id>
            <summary type="text">நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதிபதி கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி&nbsp;உத்தரவிட்டுள்ளார்</p><p>குறித்த உத்தரவானது இன்று (17.07.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலையாகாது</h2><p>
நீதிமன்ற உத்தரவுகளை மீறி, சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாகப் போராட்டம் நடத்தியதற்காக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாகப் பிணையில் உள்ள அவர்கள், நீதிமன்றத்தில் முன்னிலையாகாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff8a680d-f31b-47be-b313-0861a015a975/26-6a5a1445e6a57.webp' /></p><p> </p><p>

இதன்படி, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி டானிஸ் அலி, அமல் சாலிந்த அல்லது அமி அமில, உதயங்க குமார மற்றும் கொஸ்வத்தகே மஹாநாம தேரர் ஆகியோருக்கே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T11:41:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹா பகுதியில் 2 கைக்குண்டுகளுடன் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு - ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-hand-grenades-recovered-in-gampaha-area-1784287657"></link>
            <id>https://tamilwin.com/article/2-hand-grenades-recovered-in-gampaha-area-1784287657</id>
            <summary type="text">கம்பஹா அருகே, யக்கல பிரதேசத்தில் 2 கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா அருகே, யக்கல பிரதேசத்தில் 2 கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று இரவு(16.07.2026) யக்கல பொலிஸ் பிரிவில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>

பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு</h2><p>

இதன்போது, ​​02 வெளிநாட்டுத் தயாரிப்பு கையெறி குண்டுகள், 32 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், எம்-16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டாக்கூடு, 11 தோட்டாக்கள் மற்றும் 06 சுழல் துப்பாக்கி தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5927f1aa-c866-4019-901c-53904de4acd1/26-6a5a120adbdd6.webp' /></p><p> 


அத்துடன், சட்டவிரோதமான முறையில் சுங்க வரியின்றி நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 34,000 சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T11:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராஜதந்திர பொருளாதாரப் பாலமாக அமையும் இலங்கை - நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-on-sri-lankan-economy-1784286647"></link>
            <id>https://tamilwin.com/article/namal-on-sri-lankan-economy-1784286647</id>
            <summary type="text">ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கக் கண்டங்களை இணைக்கின்ற ஒரு நம்பகமான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற்றம் பெற வேண்டும் என நாமல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கக் கண்டங்களை இணைக்கின்ற ஒரு நம்பகமான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற்றம் பெற வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.</p><p>

உலகப் பொருளாதாரக் ஒத்துழைப்புக்கான கிழக்கு உச்சி மாநாடு அண்மையில் சிங்கப்பூரில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற்றுள்ளது. 

சர்வதேச பொருளாதார நிபுணர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் முக்கிய கலந்துரையாடல் குழுவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், மில்கன் இன்ஸ்டிடியூட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான கேர்டிஸ் எஸ்.சின் ஆகியோருடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிராந்தியத்தின் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>



 பொருளாதாரப் பாலமாக மாறும் இலங்கை</h2><p>


அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 


நாம் இந்தியப் பெருங்கடலின் ஒரு தசாப்தத்துக்குள் மாத்திரம் நுழையவில்லை. மாறாக, ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடலின் நூற்றாண்டுக்குள்ளேயே நாம் கால் தடம் பதிக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea811139-e102-4f87-bd3c-41720f7db4b8/26-6a5a0df969812.webp' /></p><p>
</p><p>பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாகரிகங்களை ஒன்றிணைத்த பெருமை இந்த இந்தியப் பெருங்கடலுக்கு உண்டு.

தற்போதைய சூழலில், அது உலகத்தின் எதிர்காலத்தை இணைக்கும் மையப்புள்ளியாக மாற வேண்டும்.
</p><p>
அதே போன்று ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கக் கண்டங்களை இணைக்கின்ற ஒரு நம்பகமான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற வேண்டும். </p><p>இதற்கான மூலோபாயத் திட்டமிடல்களை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T11:12:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் வீடு புகுந்து கொடூரத் தாக்குதல் : இரு பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mullaitivu-attack-five-people-admit-hospital-1784283131"></link>
            <id>https://tamilwin.com/article/mullaitivu-attack-five-people-admit-hospital-1784283131</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ)
பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25இற்கும்
மேற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ)
பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25இற்கும்
மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர்
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்றையதினம்(16.07.2026) மாலை இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட
வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த தாக்குதல்
சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>
தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் முல்லைத்தீவு
மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>அதில்
ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F912591798539843%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>தாக்குதலின் போது வீட்டின் கூரையை உடைத்து உள்நுழைந்த கும்பல், வீட்டின்
கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பெறுமதியான மரத்
தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0532fb1-596b-497a-8ad8-ee10f46ff072/26-6a5a03eda4a24.webp' />&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T10:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[திசைகாட்டி அரசை வீட்டுக்கு அனுப்பும் காலம் கனிந்துவிட்டது - சஜித் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-time-has-come-to-send-npp-government-home-1784278947"></link>
            <id>https://tamilwin.com/article/the-time-has-come-to-send-npp-government-home-1784278947</id>
            <summary type="text">தற்போதைய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு,
அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு,
அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். </p><p>இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை
விவசாயிகளே தொடங்கிவிட்டனர் என்றும், கடந்த காலங்களில் மக்கள் எவ்வாறு
தங்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஜனாதிபதிகளை விரட்டியடித்தார்களோ, அதே கதி
இவர்களுக்கும் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>அம்பாந்தோட்டை, வீரவில பிரதேசத்தில் நேற்று(16) நடைபெற்ற விவசாயிகளுடனான
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே&nbsp; இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>அரசின் போலியான வாக்குறுதிகள்</h2><p>மேலும் உரையாற்றுகையில்,&nbsp;"நெல் ஒரு கிலோவை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகும் நிலையில், அரசு 120
ரூபாவையே உத்தரவாத விலையாக வழங்குகின்றது. </p><p>இதனால் ஒரு கிலோவுக்கு 17 ரூபா
நட்டம் ஏற்படுகின்றது. தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 150 ரூபா
உத்தரவாத விலை வழங்கப்படவில்லை.

தரமற்ற உரம் மற்றும் கிருமிநாசினிகளின் இறக்குமதி, உர மானியம் சரியான
நேரத்தில் கிடைக்கப்பெறாமை மற்றும் உர உபகரணங்களின் விலை உயர்வு காரணமாக
விவசாயிகள் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a77fc34-6c3c-460a-a143-b631402d7cb8/26-6a59f5d937c97.webp' /></p><p>நாட்டின் 30வீதம் முதல் 40வீதம் மக்கள் வறுமையில் வாடுவதற்கு அரசின் தவறான கொள்கைகளே காரணம்.&nbsp;விவசாயப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும்
வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. </p><p>விவசாய அமைச்சர் ஊடகவியலாளர்களைப் பார்த்து
விரல் நீட்டும் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றார்.&nbsp;கடந்த காலங்களில் மக்கள் எவ்வாறு
தங்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஜனாதிபதிகளை விரட்டியடித்தார்களோ, அதே கதி
இவர்களுக்கும் ஏற்படும்.
</p><p>
எத்தகைய தடைகள் வந்தாலும், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்
விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இந்த அரசின்
போலியான வாக்குறுதிகளை நம்பி இனியும் ஏமாற வேண்டாம் என விவசாயிகளிடம்
கேட்டுக்கொள்கின்றேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T09:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-easter-attack-1784268227"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-easter-attack-1784268227</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலைமையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலைமையில் செயற்பட்ட பிரதான குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவும் இருந்துள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.</p><p>&nbsp;அதன் முழு விபரங்கள்...</p><p>
அன்றைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சுக் கட்டடத்தின் மேல் மாடியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், காலை ஒன்பது மணிக்கு குறித்த குழு கூடியுள்ளது. </p><p>அந்தக் குழுவில் சரத் வீரசேகர, ஜெனரல் ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன, சி.டி. விக்ரமரத்ன அன்று பொலிஸ் மா அதிபர் (IGP) ஆகியோரே முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலங்கையின் பொலிஸ் மா அதிபர் அன்று குற்றவாளிகளைப் பிடிக்கும் இடத்தில் இருக்கவில்லை. </p><h2>


</h2><p></p><h2>சாட்சியங்களை அழித்த விதம்</h2><p>சீருடையை அணிந்து கொண்டு சரத் வீரசேகர போன்றவர்களுடன் இணைந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பெருமளவிலான சாட்சியங்களை அழித்துள்ளார்.</p><p>அதில் முக்கியமானது உயிருள்ள சாட்சியாக இருந்த 'சாரா ஜஸ்மின்' இறந்துவிட்டார் என்று காட்டுவதற்காக, மூன்றாவது டி.என்.ஏ (DNA) பரிசோதனையைச் செய்வதற்கு முன்பு முதலாவது, இரண்டாவது என்று சிலவற்றை செய்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b50a0300-9b43-4df3-aab4-59da944ebf33/26-6a59f3f0b5af8.webp' />&nbsp;</p><p> </p><p>
இந்தக் கும்பல் நடத்தும் கூட்டத்திற்கு வேறு யாருமே செல்ல முடியாது. அன்றைய தினம் அந்தக் கட்டடத்திற்கு சுரேஷ் சலே வந்தவுடன், அனைத்துக் கதவுகளும் முழுமையாக மூடப்படும். இராணுவம் நிறுத்தப்படும். </p><p>இந்தக் கலந்துரையாடல் முடியும் வரை கமாண்டோக்கள் (Commandos) கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். அந்தக் கலந்துரையாடலில்தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. </p><p>சாரா ஜஸ்மின் இறந்துவிட்டார் என்பதை காட்ட வேண்டும் என்பதுதான் சுரேஷ் சலேயின் தீர்மானமாக இருந்தது. 
எந்த வழியில் இவர்கள் சூழ்ச்சி செய்தாலும், </p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துச் சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன்னும் மிக வலுவான, உறுதியான சான்றுகளாக இருக்கின்றன. இதனால் தான் சலேயின் மனைவி இப்போது காணாமல் போயுள்ளார்.</p><h2>
 ஜகத் அல்விசின் வெள்ளை வான் கடத்தல்</h2><p>மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். வெள்ளை வான் கடத்தல்களைச் செய்தவர் தான் இவர். ஜகத் அல்விஸ்தான் நேரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். </p><p>ஜகத் அல்விஸ்தான் கோட்டாபயவின் தேவைக்கேற்ப போத்தல ஜயந்த போன்றவர்களின் கை-கால்களை உடைக்க உத்தரவிட்டார். கோட்டாபயவின் மிக நெருங்கிய நண்பன், அத்தனை விசுவாசி.
</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எந்தெந்தச் சாட்சியங்களை அழிப்பது? எந்தச் சாட்சியங்களை நாம் புதிதாகக் கொண்டு வருவது என்று ஒவ்வொறு திங்கட்கிழமையும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e331bf-ad28-4213-b6c8-3c315a717561/26-6a59c5c54a462.webp' /></p><p>இப்படித்தான் நௌபர் மௌலவி போன்றவர்களை முழுமையாக கோர்த்து விட்டு, 33 ஆயிரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். அதற்குப் பொருத்தமாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தும் அவர்களுக்கு தேவையான ஆட்களை கண்டு பிடித்தார்கள். </p><p> சுரேஷ் சலே போன்றவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சென்று விரிவுரைகள்நடத்தினார்கள். விரிவுரைகள் நடத்திய ஆட்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வரவழைத்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். </p><p>இதை ஒரு மிக கட்சிதமான நாடகமாக உருவாக்கினார்கள். 
 குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுரேஷ் சலே, சி.டி. விக்ரமரத்ன, ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன ஆகியோர் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் திங்கட்கிழமை காலையில் நடத்திய அந்த இரகசியக் கலந்துரையாடல்கள் என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_2SIDUbs3cs" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T09:08:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-mayor-of-colombo-municipal-council-1784277488"></link>
            <id>https://tamilwin.com/article/former-mayor-of-colombo-municipal-council-1784277488</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க நியமிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று(17.07.2026) முன்னிலையாகியுள்ளார். </p><p>

கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​அவர் மேயராக இருந்த காலத்தில், சதொச எனும் அரசாங்க நிறுவனம் மூலம் குறைந்த வருமானம் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கிய திட்டம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு</h2><p>
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், </p><p>


"நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​நாங்கள் சதொச மூலம் ஏழைகளுக்கு உணவு வவுச்சர்களை வழங்கினோம். 

அந்தத் திட்டம் தொடர்பான அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே நான் அழைக்கப்பட்டேன் என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c4dd44-1b81-48d2-94e0-ef78236da308/26-6a59e9f2b8518.webp' /></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dl6pEb__B7U" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-17T08:39:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாடசாலை மாணவனை மிரட்டி போதைப்பொருள் கடத்திய கும்பல்..! விசாரணையில் சிக்கிய பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-threatens-school-student-in-colombo-1784276481"></link>
            <id>https://tamilwin.com/article/gang-threatens-school-student-in-colombo-1784276481</id>
            <summary type="text">கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவரொருவரை மிரட்டி போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திக் கொண்ட கும்பலொன்று தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவரொருவரை மிரட்டி போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திக் கொண்ட கும்பலொன்று தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. </p><p>

கொலை அச்சுறுத்தல் விடுத்து 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவரைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான தகவல் கடலோரப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>


கொழும்பில் சிக்கிய மாணவன்</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கொழும்பு வடக்கு பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பொலிஸ் போர் மோட்டார் சைக்கிள் பிரிவு குழுவினர், புதுச் செட்டித் தெரு பகுதியில் அண்மையில் விசேட ரோந்து நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மாணவன் தொடர்பில் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது. 

இதனையடுத்து, குறித்த மாணவனை விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b2a314-5513-4912-9404-42ba40916e85/26-6a59e715a3b5c.webp' /></p><p>
</p><p>
குறித்த மாணவர் வைத்திருந்த மெழுகுப் பையில் அதிக அளவிலான பண நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீது வலுவான சந்தேகம் எழுந்ததால் பொலிஸ் நிலையத்திற்குக் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
அதன் பின்னர் நடத்தப்பட்ட உடல் சோதனையின்போது, ​​அவர் அணிந்திருந்த உள்ளாடைக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><h2> 

மிரட்டிப் போதைப்பொருள் கடத்தல்</h2><p>

கைது செய்யப்பட்ட மாணவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை வெளியிடப்படாத பல முக்கிய தகவல்கள் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/323b2104-5b88-4bf5-bc6a-7def5a803299/26-6a59e7166fd35.webp' /></p><p> 

சந்தேகத்திற்குரிய மாணவரின் பெற்றோர் பேலியகொட மீன் சந்தையில் ஒரு உணவகத்தை நடத்தி வருகின்றனர், மேலும் மாணவரும் அவரது தங்கையும் மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர்.
</p><p>
சில மாதங்களுக்கு முன்பு, பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இந்த மாணவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அணுகி, அவரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.</p><h2>


பணம் கொடுத்து நபர்</h2><p>
பின்னர் மாணவரின் கைபேசி எண்ணைப் பெற்ற அந்த நபர், அவரிடம் ஒரு பொதியைக் கொடுத்து, அதை வீட்டில் மறைத்து வைக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

தொலைபேசி அழைப்புகளில் அறிவுறுத்தப்பட்டபடி, மட்டக்குளி, கிராண்ட்பாஸ் மற்றும் பேலியகொட போன்ற பகுதிகளுக்கு அவ்வாறான பொதிகளை எடுத்துச் செல்லுமாறு மாணவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

மரண பயத்தின் காரணமாக அந்தப் பொதிகளைத் தான் திறந்து பார்க்கவே இல்லை என்று அந்த மாணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c2530ee-bf78-47e0-9ee1-3862a14462dd/26-6a59e7171d0a8.webp' /></p><p>

கடத்தல்காரர்கள் இந்த செயற்பாடுகளுக்காக மாணவருக்கு அவ்வப்போது பல்வேறு தொகைகளைக் கொடுத்துள்ளனர். </p><p>கொத்து ரொட்டி போன்ற உணவுகளை வாங்கிச் சாப்பிட அந்தப் பணத்தைப் பயன்படுத்தியதாக அந்த மாணவர் கூறியுள்ளார்.
</p><h2>
விசாரணையில் சிக்கிய 2 பெண்கள்</h2><p>
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பணப்பை தொடர்பில் விசாரணை செய்தபோது, ​​இரண்டு பெண்கள் அந்தப் பணப் பையை மாணவரிடம் கொடுத்து, அதனுள் இருக்கும் போதைப்பொருள் பொட்டலத்தைத் தன் உடலில் மறைத்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இலக்காகியுள்ள குறித்த மாணவர் கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாணவர் என்பதுடன், அவர் க.பொ.த. உயர்த் தரப் பரீட்சை எழுதி, அதில் ஒரு 'ஏ' (A) தேர்ச்சியும், இரண்டு 'பி' (B) தேர்ச்சிகளும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a78c901e-fa75-4db0-b363-2e98fd80bd7a/26-6a59e717c2dd3.webp' /></p><p>சந்தேகத்திற்குரிய அந்த மாணவர், கடலோரப் பொலிஸ் நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியான விவேகானந்த மாவத்தையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் கடலோர பொலிஸ் நிலையப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T08:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் கைதிகள் அல்ல! வெளிவந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-violence-1784258790"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-violence-1784258790</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் &#039;தண்டனை பெற்ற கைதிகள்&#039; என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் 'தண்டனை பெற்ற கைதிகள்' என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர். </p><p>
ஆனால், உயிரிழந்த 21 பேரும் சந்தேக நபர்கள் ஆவர்.
அதாவது, உயிரிழந்த அதிகாரிகளைத் தவிர ஏனைய 21 பேரும் சந்தேக நபர்கள் என தென்னிலங்கை ஆங்கில பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமிந்தர பேர்டினென்டோ (Shamindra Ferdinando) கண்டுபிடித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>சிறைச்சாலைத் திணைக்களம் வழங்கிய&nbsp; தகவல்</h2><p>இவ்விடயம் தொடர்பில் அவர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் குறிப்பிட்ட விடயங்கள்.
</p><p>கைதிகளுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். ஆனாலும் கைதிகள் என்ற வரையறைக்குள் தடுத்து வைத்திருப்பவர்களும் அடங்குகின்றனர்.</p><p>ஆனால் அரசாங்கம் இவர்களை சந்தேக நபர்கள் என்று ஏன் சொல்லவில்லை. இவர்கள் சந்தேக நபர்களா அல்லது தண்டனை கைதிகளா என்பது தொடர்பில் சிறைச்சாலை ஆவணங்களில் குறிப்பெடுக்கப்படும்.ஆனால் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5521889e-affb-43ae-890a-0dc68d3e51a3/26-6a59a0e8859c9.webp' /></p><p>சிறைச்சாலைத் திணைக்களத்திலிருந்து கிடைத்த விசேட தகவல்கள் மூலம் நாம் இதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.
'சந்தேக நபர்' என்பவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் அல்ல. </p><p>நீதிமன்ற விசாரணை செயல்முறையின் மூலம் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை, அவர் குற்றம் செய்யாத ஒரு நிரபராதியாகவே கருதப்படுவார். அதேபோல காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சந்தேக நபர்கள் தான்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T08:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரகித ராஜபக்ச மற்றும் சரித உள்ளிட்ட மூவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rakitha-rajapakshe-charith-abeysinghe-remanded-1784273636"></link>
            <id>https://tamilwin.com/article/rakitha-rajapakshe-charith-abeysinghe-remanded-1784273636</id>
            <summary type="text">முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி(SJB) ஹொரன அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி(SJB) ஹொரன அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகியோரை ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) சமீபத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.</p><p></p><h2>குரல் பதிவுகள் கசிவு</h2><p>

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து குறித்த சந்தேகநபர்கள் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85007df0-0ab9-40ae-9f36-5ed9c5b9e25f/26-6a59df487ec93.webp' /></p><p>

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வெளியான குரல் பதிவுகள் கசிந்தமையை அடுத்து சந்தேகநபர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அண்மையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p> 

'ஹரக் கட்டா' தடுப்புக் காவலில் இருந்தபோது அவருக்குச் சலுகைகளை வழங்குவதற்காக இந்த இலஞ்சப் பணம் பெறப்பட்டதாக சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சந்தேகநபர்கள் முன்னதாக விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T07:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பெண் கைதிக்கு சிறையில் நடந்த கொடுமை! ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்த கவலைக்குரிய சம்பவம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hirunika-premachandra-welikada-prison-1784271401"></link>
            <id>https://tamilwin.com/article/hirunika-premachandra-welikada-prison-1784271401</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தான் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த போது நடந்த சம்பவங்கள் தொடர்பில் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தான் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த போது நடந்த சம்பவங்கள் தொடர்பில் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பல கொடூரமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
</p><p>அதில் தமிழ் பெண் கைதி ஒருவர் தனது கையை பிடித்து கொண்டு விம்மி விம்மி அழுது கொண்டு சொன்ன கதை தன்னை மிகவும் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>“அவள் ஒரு அமைதியான அப்பாவிப் பெண், நிதிமோசடி ஒன்றில் அவரை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளனர். அந்த குற்றத்திற்காகவே அவர் சிறைக்கு வந்திருந்தார்.</p><h2>
</h2><p></p><h2>அழுதுகொண்டு கூறிய விடயம்</h2><p>ஒரு நாள் நீதிமன்றத்திற்குச் சென்று வந்துவிட்டு எனது கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார், "எனக்கு முடியாது, என்னை இதிலிருந்து எப்படியாவது காப்பாற்றுங்கள். </p><p>நீங்கள் வெளியில் சென்றாலும் எனக்கு உதவி செய்யுங்கள். "நான் ஒருபோதும் எனது கணவர் முன்னிலையில் கூட உடைகளை முழுமையாகக் களைந்தவள் அல்ல. </p><p>எனக்கு இப்படி செய்துவிட்டார்கள் என்று அழுதார் " அவருக்குச் சிங்களம் தெரியாது. அவர் என்னிடம் ஆங்கிலத்தில்தான் கூறினார்.
தமிழ் பெண்கள் கூச்ச சுபாவத்துடன் வாழும் மிகவும் நாகரீகமானவர்கள். </p><p>பாவம் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார்.
என்னை சிறைச்சாலை பொலிஸார் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசியதாகவும் மிகவும் அருவருக்கத்தக்க கேலிகளை செய்து கருப்பு, அசிங்கம் என்று பேசியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07beb29b-d62b-419c-af31-c2819aafc2e7/26-6a59d22b4a975.webp' /></p><p>அப்போது அவர் அதைச் சொல்லும் போது எனக்கும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இப்போது அந்த பெண் வெளியில் வந்து விட்டார்.
</p><p>அதாவது சிறைச்சாலைக்குள் போதைப் பொருட்களை தங்களின் மறைவிடங்களில் வைத்து கடத்துவதை தடுப்பதற்காகவே சிறைச்சாலை பொலிஸார் இவ்வாறான சோதனைகளை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
சிறைச்சாலை பொலிஸாரின் கொடுமைகள்</h2><p>வழக்கு இருக்கும் நாளில், அதிகாலையில் விழித்துக்கொண்டு வழக்குக்குச் செல்கிறார்கள். வழக்குக்குச் சென்று அங்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வருகிறார்கள், சாப்பிட ஒன்றும் கொடுப்பதில்லை. </p><p>வழக்கு முடிந்து, மற்றவர்களின் வழக்குகளும் எல்லாம் முடிந்து, திரும்பி வரும்போது மாலை நான்கு ஐந்து மணி ஆகிவிடும். சிறைக்கு வந்த உடனே அங்கு தினமும் செய்யும் பரிசோதனையின் போது உடைகள் அனைத்தையும் களைந்து, டார்ச் லைட் (Torch) அடிக்கிறார்கள். இருமச் சொல்கிறார்கள்.</p><p>எனவே, அந்த நேரத்தில் அது, கடமை என்று கூறலாம். ஆனால் ஒரு பெண்ணின் உடலை இன்னொரு பெண் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்றால் அதுதான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் என்கிறார்.
</p><p>பத்து பேர் இருக்கும் இடத்தில் 50 பேர் நெரிசலாக அடைபட்டு, கழிவறைக்குச் செல்ல முடியாது, கழிவறைக்கு நீண்ட வரிசை. இது போன்ற பல பிரச்சினைகளுடன் இருக்கும் கைதிகள் பெரும் மன அழுத்தத்தில்தான் இருக்கிறார்கள். </p><p> ஒழுங்கான உணவும் இல்லை. நாம் முதலில் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். நீர்கொழும்பில் நடந்த சம்பவத்தின் போது கைதிகள் இவ்வாறான சம்பவங்களை மனதில் வைத்திருந்திருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T07:39:16+00:00</updated>
        </entry>
    </feed>
