<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-16T04:29:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அடியோடு ஒழிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/executive-presidency-system-completely-abolished-1784174357"></link>
            <id>https://tamilwin.com/article/executive-presidency-system-completely-abolished-1784174357</id>
            <summary type="text">ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடுவதைத்
தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட
ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடுவதைத்
தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட
ஜனாதிபதி முறைமையை ஒழிக்க அரசு முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தின் மூன்று
தூண்கள் என்றும், நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கிய
வகிபாகத்தை ஆற்றி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
</p><p>
சுயாதீன ஊடகங்களும், சிவில் சமூகமுமே ஏனைய இரு முக்கிய தூண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மக்கள் எமக்கு வழங்கிய ஆணை</h2><p>இவ்வாறான சூழலில், தற்போதைய அரசு நீதிமன்றத்துக்குப் பாரிய அழுத்தங்களைப்
பிரயோகிப்பதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், உயர்நீதிமன்ற
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல் மற்றும் உயர்நீதிமன்றங்களில்
நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்பாது விடுதல் போன்ற செயற்பாடுகள்
நீதித்துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் சவால்கள் என தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/052ed914-fb12-4c77-8796-3248aa1ea925/26-6a585a5bc7d76.webp' /></p><p>
நீதியரசர்களை நியமிக்காது வெற்றிடங்களை வைத்திருப்பது நீதிமன்றத்தின் மீதான
மறைமுக அழுத்தமாகும் என்று குறிப்பிட்ட அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை
நிலைநாட்ட ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் உறுதியுடன்
இருக்கின்றன என தெரிவித்தார்.
</p><p>ஜனநாயகத்தையும் நீதிமன்றத்தையும் சீர்குலைக்காது, நிறைவேற்று ஜனாதிபதி
முறைமையை ஒழிக்கக் கூடிய புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதே தற்போதைய
தேவையாகும். </p><p>மக்கள் எமக்கு வழங்கிய ஆணையும் ஜனாதிபதி முறைமையை ஒழித்து
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கே ஆகும். இந்த மக்கள் ஆணையை நிராகரிப்பது,
மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T04:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்பதிக்கு இடையே மோதல் - தலையிட்டவரால் அடித்து கொலை செய்யப்பட்ட கணவர் - மனைவி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-in-a-fight-1784173356"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-in-a-fight-1784173356</id>
            <summary type="text">தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் முற்றியுள்ளது.
</p><p>
இதன் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
முதலில் ஒரே வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>தம்பதியினருக்கு இடையே மோதல்</b></h2><p>அதன் பின்னர் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த நபர் இந்த மோதலில் தலையிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ffe44fe-4237-463b-9d7b-051d21dda35e/26-6a585a2ab0a4c.webp' /></p><p>தலையிட்ட நபர் தடியால் தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய தடியைத் தனது வீட்டின் கூரை மீது வீசியிருந்தது கண்டறியப்பட்டது. பொலிஸாரால் அந்தத் தடி மீட்கப்பட்டது.</p><h2><b>
மேலதிக விசாரணை</b></h2><p>இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்து, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d88d894f-4e0c-40fb-b951-5a6705dde83d/26-6a585a2b692ea.webp' /></p><p>தாக்குதலில் உயிரிழந்தவர் குறித்த பகுதியில் வசித்து வந்த, ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயதுடைய சுனில் ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T04:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிர்ச்சியளிக்கும் செம்மணிப் புதைகுழி! மேலும் இரண்டு சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1784173895"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1784173895</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு சிறு குழந்தைகளின்
என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு சிறு குழந்தைகளின்
என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி
நேற்று (15.07.2026) ஆரம்பமாகியது.</p><p> இதன்போது புதிதாக சிறு குழந்தைகள் இருவருடைய என்புத்
தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><h2>மனித என்பு எச்சங்கள்</h2><p>

அதேவேளை, மேலும் இரண்டு மனித என்பு எச்சங்கள் குவியல்களும் நேற்று அடையாளம்
காணப்பட்டுள்ளன.</p><p>

இருப்பினும், நேற்று புதிதாக மனித என்புத் தொகுதிகள் எதுவும் அகழ்ந்து
எடுக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5514f160-d993-41e2-a27f-28b12293c60b/26-6a5858981e066.webp' /></p><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும்
இரண்டிலிருந்து, இதுவரை மொத்தமாக 414 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளன. </p><p>அவற்றில் இதுவரை 409 என்புத் தொகுதிகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T04:06:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்க இரு ரஷ்ய நிறுவனங்கள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-willing-to-distribute-fuel-1784173824"></link>
            <id>https://tamilwin.com/article/russia-willing-to-distribute-fuel-1784173824</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக இரண்டு ரஷ்ய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக இரண்டு ரஷ்ய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூரி நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
</p><p>இதன்படி, எதிர்காலத்தில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இலங்கைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக அழைக்கப்படும் விலை மனுக் கோரல்களைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டுக்காக கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல் ஒன்று திறக்கப்படவுள்ள நிலையில், அதற்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பு இந்த இரண்டு ரஷ்ய நிறுவனங்களுக்கும் கிடைக்கும் என்றும் மயூரி நெத்திகுமார மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e3e1d2d-a978-4c8f-87e2-5790db67e9ad/26-6a585501da4f9.webp' /></p><p>
</p><p>இதேவேளை, இலங்கைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய மற்றும் சீன நிறுவனங்கள் உட்பட சுமார் 15 நிறுவனங்கள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T03:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்திய சந்தேகநபர் மினுவாங்கொடையில் சிக்கினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-who-shot-and-wounded-police-officer-1784172013"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-who-shot-and-wounded-police-officer-1784172013</id>
            <summary type="text">கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்திய
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்திய
சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.</p><p>

மினுவாங்கொடை - தேவொலபொல பகுதியில் வைத்து மேற்படி சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதைப்பொருள்
கடத்தல்காரர் ஒருவரை, பொலிஸ் அதிகாரிகள் இருவர் பின்தொடர்ந்து சென்று,
தேவமொட்டாவ பகுதியில் வைத்து வழிமறித்தனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p> </p><p>அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட
அதிகாரிகள், அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல
நடவடிக்கை எடுத்தனர்.</p><p>

இதன்போது, சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக பொலிஸ் அதிகாரி
ஒருவர் சற்றுத் தூரம் சென்றுள்ளார்.</p><p>அந்தச் சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக்கொண்ட சந்தேகநபர், மற்றுமொரு அதிகாரியிடம் இருந்த கடமைநேரத்
துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு வேறொரு
மோட்டார் சைக்கிளில் தப்பியோடியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da948fb-e131-459c-bf84-0045c66e5b01/26-6a58517a1d1c3.webp' />&nbsp; &nbsp;</p><p>
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக நீர்கொழும்பு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>

சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த சந்தேகநபரைத் தேடி பொலிஸார்
மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, மினுவாங்கொடை பகுதியில் வைத்து
அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T03:35:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புகையிலை கலந்த வெற்றிலை பாக்கு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/betel-banned-in-srilanka-1784172007"></link>
            <id>https://tamilwin.com/article/betel-banned-in-srilanka-1784172007</id>
            <summary type="text">புகையிலை கலந்த வெற்றிலை பாக்கு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பதிவாகும் பிரதான புற்றுநோய் வகைகளுள் வாய் புற்றுநோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகையிலை கலந்த வெற்றிலை பாக்கு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>இலங்கையில் பதிவாகும் பிரதான புற்றுநோய் வகைகளுள் வாய் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளதால், புகையிலை கலந்த வெற்றிலை பாக்கு பயன்படுத்துவது, விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பதைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இது குறித்து அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/843d937f-1b96-4057-bec0-0d71857c09f3/26-6a584df1ecfa8.webp' /></p><p>
</p><p>இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், இந்நாட்டு மக்கள் வாய் புற்றுநோய்க்கு ஆளாவதற்கு புகையிலை கலந்த வெற்றிலை பாக்கு மற்றும் பல்வேறு மெல்லும் புகையிலை தயாரிப்புகளைப் பயன்படுத்துவதே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இலங்கையிலுள்ள சட்டத்தின்படி வெற்றிலை பாக்கில் புகையிலை உள்ளடக்கப்பட முடியாது எனவும், புகையிலை கலந்த வெற்றிலை பாக்குகளை விற்பனை செய்வது, விநியோகிப்பது, கைவசம் வைத்திருப்பது, விற்பனைக்காக காட்சிப்படுத்துவது மற்றும் சேமித்து வைப்பது முற்றிலும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு, இலங்கை முழுவதுமுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பில் தொடர்ச்சியான சோதனைகளையும் சுற்றிவளைப்புகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதன் காரணமாக, புற்றுநோய் அபாயத்திலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக பொதுமக்களும், சட்ட சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களும் இந்த விடயம் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T03:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-accept-npp-govt-1784171065"></link>
            <id>https://tamilwin.com/article/people-accept-npp-govt-1784171065</id>
            <summary type="text">தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் ஆளுமைத் திறன் குறித்து பொதுமக்கள் அதிக திருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் ஆளுமைத் திறன் குறித்து பொதுமக்கள் அதிக திருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
</p><p>
சமூகக் காட்டி அலகு நடத்திய அண்மைய ஆய்வில், 
அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் விதம் குறித்து மக்களிடையே கலவையான கருத்துக்கள் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79ec4a97-eb94-49b5-9dca-1746fc02c1f4/26-6a584a3a7d693.webp' /></p><p>

இதன்படி, 45.3% பேர் இது குறித்து திருப்தி தெரிவித்துள்ள அதேவேளை, 44.0% பேர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.</p><p> 

குறிப்பாக, நகர்ப்புறங்களில் வாழும் மக்களிடையே வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது குறித்த திருப்தி குறைவாகவே (34.8%) காணப்படுகிறது. </p><p>பொருளாதாரக் நெருக்கடிகள் நிலவியபோதிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயல்பாடுகள் குறித்து 75.5% என்ற மிக உயர்ந்த அளவிலான மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கு ஒப்பீட்டளவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது 29.4% மக்களே திருப்தி கொண்டுள்ளனர்.

 மேலும், தேசிய மக்கள் சக்தி திறம்பட ஆட்சி நடத்தும் திறன் கொண்டது என 62.8% பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். </p><p>
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 64.1% பேர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
</p><p>எனினும், அதனை உடனடியாக செய்யப்பட வேண்டிய முன்னுரிமைப் பணியாக 23.6% பேர் மட்டுமே கருதுகின்றனர்.</p><p> பெரும்பாலானோர் (40.5%) அது ஒழிக்கப்பட வேண்டும் என்றாலும், இத்தருணத்தில் அது அவசர முன்னுரிமை அல்ல என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.</p><p> 

'தித்வா' பேரிடர் நிவாரணச் சேவைகளின் போது அரசாங்கம் செயல்பட்ட விதம் குறித்து 68.6% மக்கள் திருப்தியடைந்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு 51.6% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p><p>

அத்துடன், மாகாண சபை தேர்தலை நடத்துவது முக்கியமானது என 67% மக்கள் நம்புகின்றனர்.</p><p> தற்போதைய அரசியல் தலைமைத்துவம் மற்றும் நிறுவன மறுசீரமைப்புகள் குறித்து இலங்கை மக்கள் சாதகமான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T03:04:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளுநர்களின் தொடர் பதவி விலகல் : பிரதமரும் பதவியைத் துறப்பாரா.. சீலரத்ன தேரருக்கு சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-resignation-of-governors-1784170165"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-resignation-of-governors-1784170165</id>
            <summary type="text">மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாக பதவி விலகி வரும்&amp;nbsp; சூழலில், தற்போதைய
பிரதமரும் தனது பதவியில் இருந்து விலகுவாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில்
எழுந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாக பதவி விலகி வரும்&nbsp; சூழலில், தற்போதைய
பிரதமரும் தனது பதவியில் இருந்து விலகுவாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில்
எழுந்துள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
மத்திய மாகாண ஆளுநர் தனது பதவியில் இருந்து விலகியமைக்கு செய்தமைக்கு சில தரப்பினரின்
அழுத்தங்களே காரணம் எனச் சந்தேகிப்பதாகத் தெரிவித்த அவர், அரசில் உள்ளவர்கள்
அனைவரும் பதவிகளிலிருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுக்க
வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p></p><h2>பிரதமர் பதவி விலகுவாரா..</h2><p> </p><p>மேலும், அடுத்தடுத்து நியமிக்கப்படும்
ஆளுநர்கள் எத்தனை நாள்கள் பதவியில் நீடிப்பார்கள் என்பது கேள்விக்குறியே
என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் அண்மைய கருத்துகள் குறித்தும் சீலரத்ன
தேரர் விமர்சித்தார்.</p><p> "தங்களுக்கு இன்னும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று
கிராமங்களுக்குச் சென்று கூறிவருவது அரசுன் மீதான நம்பிக்கையைச்
சிதைக்கின்றது. அரசுக்கு முழு அதிகாரமும் இருக்கும்போது, அதிகாரமில்லை என்று
கூறுவது பொய்யானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44fe5eed-0c4a-48ac-a1d9-79713d913b29/26-6a584a07e1c37.webp' /></p><p> </p><p>இளமைக் காலத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்குச்
சிறிதளவேனும் அறிவு இருக்க வேண்டும். போதைப்பொருள்களை உட்கொண்டுவிட்டு
மேடைகளில் பேசுகின்றார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது. இவர்களின் இத்தகைய
பேச்சுகள் ஜனாதிபதியின் கௌரவத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன"
என்று அவர் சாடினார்.
</p><p>
இந்தச் சூழலில், மாகாண ஆளுநர்களைப் போல் கலாநிதியாக இருக்கும் தற்போதைய
பிரதமரும் தனது பதவியில் இருந்து விரைவில் விலகுவாரோ&nbsp; என்ற பலத்த சந்தேகம்
மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T03:03:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கை மூடிமறைத்த முக்கிய புள்ளி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-of-dinesh-schaffter-ruled-a-murder-1784165207"></link>
            <id>https://tamilwin.com/article/death-of-dinesh-schaffter-ruled-a-murder-1784165207</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொலிஸ் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க என்று&nbsp;இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். </p><p>இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர். பிரசாத் ரணசிங்க இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே. தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><h2>
</h2><p></p><h2>தப்பிச் செல்வதற்கான முயற்சி</h2><p>உடனடியாக பிரசாத் ரணசிங்கவை கைது செய்ய வேண்டும் என இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.அது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள்</p><p>பிரசாத் ரணசிங்கவின் மனைவி கொழும்பில் விசா (Agencies) அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இப்போது இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரசாத் ரணசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன் உடனடியாக அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும்.</p><p> அன்று&nbsp; பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவால் (Bribery Commission) கைது செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது. இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.</p><p>ஆனால் விளக்கமறியலில் வைப்பதற்கு முன், அதனைத் தடுத்தார்கள் ராஜபக்ச கூட்டத்தினர். 
இந்த பிரசாத் ரணசிங்க மற்றும் SSP பிரசாந்த ஆகிய இருவரும் இணைந்தே இந்த விசாரணையை மூடிமறைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a691014b-abc9-492b-80df-5335216fc7b5/26-6a58335962c8e.webp' /></p><p>அன்று ஏதேனும் ஒரு வழியில் இதனை வெளிக்கொண்டு வர முடிந்திருந்தால், கொலைகாரர்கள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் (Dinesh Schaffter) கொலை செய்யப்பட்டார். </p><p>இன்று 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதாவது 2022 இலிருந்து 2026 வரை இந்தக் கொலை மூடிமறைக்கப்பட்டது.மேலும் இந்த விசாரணையை மூடிமறைத்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) பொய்க் குறிப்புக்களை எழுதிய, பொய்ச் சாட்சியங்களை உருவாக்கிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T02:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salley-is-not-a-criminal-1784079590"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salley-is-not-a-criminal-1784079590</id>
            <summary type="text">சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கின் பிரதிவாதியாக சுரேஷ் சலே இருந்தாலும், எந்த இடத்திலும் அவரது பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கின் பிரதிவாதியாக சுரேஷ் சலே இருந்தாலும், எந்த இடத்திலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். </p><p>

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் காசிம் பதுங்கி இருந்த இடம்கூட, தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான நிலந்த ஜயவர்தனவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>

எனினும், அவரை கைது செய்ய அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.</p><p> </p><h2><b>

மனு விசாரணை</b></h2><p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வு முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவை செல்லாததாக்கி, உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce9e786-4646-4825-91d0-4950454879b4/26-6a57aff49b0e7.webp' /></p><p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.</p><p> 

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கருத்து வெளியிட்ட சஞ்சீவ ஜயவர்தன, ஈஸ்டர் தாக்குதலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே மத ரீதியான தாக்குதல் ஒன்று இடம்பெற வாய்ப்புள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>

இருந்த போதிலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஸஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களின் செயற்பாடுகள் குறித்து 97 அறிக்கைகளை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><h3><b>

சட்ட நடவடிக்கை </b></h3><p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சத்தியக் கடதாசியில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது. 

பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்கும் 129 பேர் கொண்ட பட்டியலையும் அவர் சமர்ப்பித்திருந்த போதிலும், பிரதிவாதிகள் அது குறித்து முறையான விசாரணைகளை நடத்தவில்லை என சஞ்சீவ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c2853f-3391-4b36-a44f-c73c8d5f8aa7/26-6a57aff54d96a.webp' /></p><p>தனது கட்சிக்காரர் எவ்வித சம்பவத்துடனும் தொடர்புடையவர் என்பது எந்தவொரு விசாரணையிலோ அல்லது ஆணைக்குழு அறிக்கைகளிலோ வெளியாகவில்லை என சஞ்சீவ ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர் ஜயகி டி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையில், தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-16T01:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்.. பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurunegala-child-car-virul-video-police-report-1784160616"></link>
            <id>https://tamilwin.com/article/kurunegala-child-car-virul-video-police-report-1784160616</id>
            <summary type="text">குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கிருந்த 8 வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கிருந்த 8 வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.</p><p> பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறுவன் காரை தீயிட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
கடந்த ஜூலை 3ஆம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.</p><p></p><h2>உரிய ஆதாரங்கள்..&nbsp;</h2><p> இந்த சம்பவத்திற்கு அங்கு நின்ற 8 வயது சிறுவனே காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து, குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d497f69-fb16-4547-a994-191df4aedd2b/26-6a5822e34ff0b.webp' /></p><p>

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவன் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் அந்த காரின் அருகே நடந்து சென்றதும் பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

எனினும், அந்த சிறுவன் தான் காரைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்பதற்கான எந்தவொரு நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> அத்துடன், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மாத்தளை மனிதப் புதைக்குழி விவகாரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784160924"></link>
            <id>https://tamilwin.com/article/the-matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784160924</id>
            <summary type="text">&amp;nbsp;மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியவர் லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச.</p><p>இவர் கஜபா படையணியின் முதலாவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.
அந்த காலத்தில் பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து பொறுப்புக்களும் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தான் அன்று இராணுவ முகாம் இருந்துள்ளதாக நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவத்துடன் கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் வலுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க அன்று முன்னிலையில் செயற்பட்டவராவார்.
</p><h2>
</h2><p></p><h2>2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழி</h2><p>2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாத்தளை மாவட்டத்தில் (Bio Gas) நிலையம் ஒன்றை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>அதன் பின்னர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜயசேன ஆகியோர் விசாரணை நடத்தி ஒரு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். </p><p>
அதன் பின்னர் அன்றைய ராஜபக்ச அரசாங்கம் இதுகுறித்து ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில், இந்த எச்சங்கள் 1950-க்கு முந்தியவை என்று கூறப்பட்டது. </p><p>ஆனால் பேராசிரியர் ராஜ் சோமதேவவும் வைத்தியர் அஜித் ஜயசேனவும் தெளிவாக, இவை 1986 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த கொலைகளுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டனர். </p><p>
இந்த உடல்களில் பலவற்றில் சித்திரவதைக்கான தெளிவான அடையாளங்கள் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உடலின் பல பகுதிகளில் கூர்மையான பொருட்களால் குத்தப்பட்ட அடையாளங்கள் இருந்தன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2877c7-2015-47e4-830c-e0c9862749f0/26-6a58229f7ab11.webp' /></p><p>கழுத்தில் கயிறு போடப்பட்டதைக் காட்டும் தடயங்களும் இருந்தன. பல்வேறு வகையான சித்திரவதைகள் செய்யப்பட்டதற்கான தெளிவான சான்றுகள் காணப்பட்டன.
</p><p>இந்த விவகாரம் குறித்து இன்று நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கமால் குணரத்ன மற்றும் ஷவேந்திர சில்வா போன்ற இராணுவ அதிகாரிகளும் சில காலங்களில் அந்தப் பகுதிகளை பொறுப்பேற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.</p><p>
1988–89 காலப்பகுதியில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கம் நாடு முழுவதும் உத்தியோகப்பூர்வமாக அல்லது உத்தியோகப்பூர்வமற்ற வகையில் கொலைக் குழுக்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஆறுகள், ஏரிகள் போன்ற இடங்களில் மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. </p><p>ஆனால் காலப்போக்கில் சில ஆதாரங்கள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மாத்தளை கூட்டுப் புதைகுழி அவற்றில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக நீதிக்காக மாத்தளை நீதிமன்றத்திற்கும் பல்வேறு அதிகாரிகளிடமும் முறையிட்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.</p><h2>
கிடைக்காத நீதி</h2><p>அண்மையில் சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன, மாத்தளை மனித புதைகுழி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். </p><p>அந்த மனுவில், சுமார் 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்ட எச்சங்களுக்கு DNA பரிசோதனை நடத்தவும், </p><p>இந்த வழக்கில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தேவையான உத்தரவுகளை வழங்கவும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eedb4ef-b575-435e-aef1-a3beec41923c/26-6a58229ec00ed.webp' /></p><p>இந்த மனுவை பரிசீலித்த மாத்தளை நீதிவான், இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கு என்றும், பல விடயங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் உடனடியாக உத்தரவு வழங்க முடியாது என்றும் தெரிவித்தார். </p><p>இதற்காக மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் ஜூலை 16 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
அதனுடன் இந்த விவகாரம் மீண்டும் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. </p><p>அறிக்கைகளின்படி, அந்த கூட்டுப் புதைகுழியில் இருந்து மொத்தம் 154 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T00:17:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் துப்பாக்கியை பிடுங்கி அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-after-shooting-officer-katunayake-1784158410"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-after-shooting-officer-katunayake-1784158410</id>
            <summary type="text">கட்டுநாயக்கவின் கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் (15) மினுவாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்கவின் கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
நேற்று பிற்பகல் (15) மினுவாங்கொடவின் தேவோலபோல பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அதிகாரியின் துப்பாக்கி&nbsp;</h2><p>

போதைப்பொருள் கடத்தல்காரரான அந்த சந்தேக நபர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது இரண்டு பொலிஸ் அதிகாரிகளால் துரத்திப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1dbc784-858f-40ad-b3ed-76da052cca9f/26-6a581b1364fbf.webp' /></p><p>
</p><p>
பின்னர், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர் சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்துவர ஒரு அதிகாரி சென்றுள்ளார்.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ​​தன்னுடன் இருந்த அதிகாரியின் பணித் துப்பாக்கியைப் பறித்து, அவரைச் சுட்டுவிட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:48:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/district-agriculture-committee-mannar-meeting-1784157039"></link>
            <id>https://tamilwin.com/article/district-agriculture-committee-mannar-meeting-1784157039</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க
அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில்
மன்னார் மாவட்டச் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க
அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில்
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.</p><p>

எல்நினோ (EL Nino) காலநிலை தாக்கம் விவசாயத் துறையில் ஒரு பாதிப்பை
ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள்
மேற்கொண்டு, விவசாயிகளுக்கு போதிய அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வையும்
வழங்கி, அதன் ஊடாக இந்த கால நிலைக்கு சவாலை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ற
பயிர்ச்செய்கை திட்டமிடலை மேற்கொள்வதற்கான கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>முக்கிய நடவடிக்கைகள்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த கால நிலைத் தாக்கமானது 2026,2027ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிர்வு
கூறப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3834f3b-a92d-40af-a95c-a592b12b48aa/26-6a581439a8855.webp' /></p><p> அதன் அடிப்படையில் இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள்
தேசிய மட்டத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று
வருகிறது.
</p><p>
வட மாகாணத்தில் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து எவ்வாறு காலநிலை
தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஒரு விசேட கலந்துரையாடல்
விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்கள் அழைக்கப்பட்டு
ஏற்கனவே ஒரு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p><p>

அதனடிப்படையில் மாவட்ட ரீதியாக ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சூழ்நிலை,
அதற்குரிய நிலப் பயன்பாடு, அந்த நிலச் சூழ் நிலைக்கு ஏற்ற வகையில் மாவட்ட
விவசாயத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு
மாவட்டத்துக்கும் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதன்
ஊடாக அந்த விவசாயத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்,
மன்னார் மாவட்டத்தின் முதலாவது கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகளின் கால பிக்குகள் குறித்து பலருக்கும் தெரியாத உண்மைகள் - அம்பிட்டிய தேரர் பற்றிய ஆதாரமும் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-final-war-monks-real-faces-1784147164"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-final-war-monks-real-faces-1784147164</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.&nbsp;</p><p>அவர் அண்மையில், "விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா?
</p><p>
இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியிருந்தார்.&nbsp;</p><p>

இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் ஈழத்தமிழர்கள் மத்தியில், கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>அதேநேரம்,&nbsp;மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் தமிழர்கள் தொடர்பில் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை முன்வைத்தவர் தான்.&nbsp;</p><p>தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் இவர் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இவை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qGn__FhhhGc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T22:43:16+00:00</updated>
        </entry>
    </feed>
