<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-30T01:21:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-tragically-dies-motorcycle-on-collision-1788050913"></link>
            <id>https://tamilwin.com/article/youth-tragically-dies-motorcycle-on-collision-1788050913</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து
குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில்
பயணித...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து
குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில்
பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம், பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய
இளைஞர் ஆவார்.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;&nbsp;</h2><p> </p><p>இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d17fd2c-fb70-4275-aaf2-e21f327395db/26-6a937eacc4739.webp' /></p><p>
தம்பலகாமம் பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள
திருகோணமலை - கண்டி பிரதான வீதியிலேயே இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
</p><p>
மேற்படி இளைஞர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கிச்
சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T00:55:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் இன்று மாபெரும் சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-day-of-enforced-disappeared-1788049949"></link>
            <id>https://tamilwin.com/article/international-day-of-enforced-disappeared-1788049949</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும்
நிலையில், &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா
கலையரங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும்
நிலையில், "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா
கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.
</p><p>
மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம்
மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை
நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது உறவினரின்
நினைவுபடுத்தலோடு கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா
கலையரங்கைச் சென்றடையவுள்ளது.</p><h2>முக்கிய நிகழ்வுகள்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவுள்ளதுடன், காணாமல் போனோர்
விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியிடப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a204ea-5f66-4452-ba35-3df80ff64581/26-6a937b41b6aac.webp' /></p><p>

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டுக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்
கட்சிகள், பொது அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவைத்
தெரிவித்துள்ளனர்.</p><p>

இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையாளுவதற்கோ
அல்லது நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகளும்
இல்லை என்பதால், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலுவாக
வலியுறுத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T00:41:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு - சஜித் கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-blames-anura-government-1788034982"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-blames-anura-government-1788034982</id>
            <summary type="text">தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி
உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
</p><p>
அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் கலந்துகொண்ட சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய கலந்துரையாடலை அடுத்து,
அரசு இந்த இரு தரப்பினரையும் கண்டி 'சஹஸ் உயன' பகுதிக்கு அழைத்து கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என பகிரங்கமாகக் கூறியது.</p><h2>அரசின் வாக்குறுதி&nbsp;</h2><p> </p><p>இருப்பினும், அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
எதிர்பார்க்கும் சேவைப் பிரமாணக் குறிப்புகளை நடைமுறைப்படுத்த அரசு
தவறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677fe9b9-9ce4-412f-a455-70f2f8ec4f4f/26-6a933fa789227.webp' /></p><p>
</p><p>
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயரை 'சமூக அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள்' எனப் பெயர் மாற்றுவதை மட்டுமே அரசு செய்துள்ளது. மார்ச்
மாதத்தில் தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், அது
இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.
</p><p>
தேர்தல் சமயங்களில் இவர்களை நெறிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன
சூரிய ஆரச்சியும் இந்த இரு தரப்பினரையும் ஏமாற்றியுள்ளார்.
</p><p>
அரசு இவர்களை மறந்துவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை எப்போதுமே
மறக்காது. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் இவர்களின் உரிமைகளுக்காகத்
தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T22:32:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் ரவி கருணாநாயக்க - பெயரை மாற்றிக்கொண்டு அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-karunanayake-arjuna-mahendran-cid-1788027210"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-karunanayake-arjuna-mahendran-cid-1788027210</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியுள்ளது.பல முறை விசாரணைக்கு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியுள்ளது.</p><p>பல முறை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தும் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் அதிகாரிகள் வீட்டிற்கே அவரை தேடிச் சென்றுள்ளனர்.&nbsp;</p><p>
</p><p>
நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு நேற்று (29) அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் முன்னிலையாக தவறியதால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.</p><p>இதேநேரம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான&nbsp;அர்ஜுன மகேந்திரன்&nbsp;சிங்கப்பூரில் பெயரை மாற்றி தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2ez6PO9vbeA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T22:01:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதலுக்கு மூலகாரணம்! வெளியிடப்படாத பல சர்ச்சைகள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-attorney-general-department-1788007238"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-attorney-general-department-1788007238</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.பூஜித் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.</p><p>பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கடமை தவறியமை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக மரண தண்டனை விதிக்கப்படுமானால் சட்டமா அதிபர் திணைக்களத்தின்அலட்சிய போக்குக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவற்றை நாம் கேள்விக்குட்படுத்தக் கூடாதா? என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் மயிர்க் கூச்செறியும் தகவல் ஒன்றை அவர் வெளியி்ட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்ட தகவல்கள்..
</p><h2>
</h2><p></p><h2>சட்டமா அதிபரிடம் கோரப்பட்ட ஆலோசனை</h2><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக் கோரி அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் சரியான மேற்பார்வையும் ஆர்வமும் காட்டவில்லை என்பதை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஆராய்ந்தது அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு:
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு 2017 ஜூன் 07 திகதியிட்ட கடிதம் மூலம் C18/2017 எனும் கோப்பைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. </p><p>அதில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு சட்டமா அதிபரிடம் கேட்டுக் கொண்ட ஆலோசனையானது: "தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்ய முடியுமா மற்றும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா?" என்பதாகும்.
</p><p>அப்போது அந்தப் துறைக்கு பொறுப்பான மேற்பார்வை அதிகாரியாக இருந்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி அசாத் நவாமிக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b2fb36-e143-4932-a9d4-840ccc352878/26-6a92d348e1528.webp' /></p><p>ஆனால் 15 ஜூன் 2017 ஆகும் போதே இந்தக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற நிலையில் அசாத் நவாமி அதை அராய்ந்து பார்க்குமாறு அரச சட்டத்தரணி மலிக் அஸீசுக்கு குறிப்பொன்றை இட்டு பாரப்படுத்தியுள்ளார்.
</p><p>மீண்டும் (TID) 2018 ஜூன் 14 ஆம் திகதியிட்ட குறுந்தகடு (CD) மற்றும் மற்றொரு ஆவணத் தொகுப்பை அனுப்பும் வரை இந்தக் கோப்பு குறித்து எந்தவொரு கவனமும் செலுத்தப்பட்டதாக குறிப்பில்லை. </p><p>அப்படியானால், 15 ஜூன் 2017 அன்று கிடைத்த கோப்பு, 14 ஜூன் 2018 வரை எந்தவொரு கவனமும் செலுத்தப்படாமல் இருந்துள்ளது என்பது விசாரணை ஆணைக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>
மேலும் அரச சட்டத்தரணி மலிக் அஸீஸ் (TID)யால் அனுப்பப்பட்ட கோப்புக்கு முதலாவது குறிப்பு 12 மார்ச் 2019 அன்றே இடப்பட்டுள்ளது. </p><h2>தாமதத்திற்கான காரணங்கள்</h2><p>அதற்குள் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்குக் கிடைத்து ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. 
இந்த அத்தியாயத்தைப் படிக்க முடியாதவர்களுக்காகவே நான் இதனைக் கூறுகிறேன்: </p><p>இந்தக் கோப்பைக் கையாள்வதில் அரச சட்டத்தரணி அஸீஸ் தரப்பில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக விசாரணை ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களிலிருந்து தெரியவருகிறது.</p><p><span style="color: inherit;">அரச சட்டத்தரணி அஸீஸின் சாட்சியம் மற்றும் ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களைக் கருத்திற்கொண்டு,அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவிற்குப் (Public Service Commission) பரிந்துரைக்கப்பட்டுள்து.</span></p><p>அதேபோல், C18/2017 கோப்பை அஸீஸிடம் ஒப்படைத்த பிறகு அக்கோப்பு தனக்குக் கிடைக்கவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாமி கூறுகிறார். </p><p>ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இக்கோப்பு பற்றி அவர் அறிந்துள்ளாராம். 
சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆரம்பக்கட்ட தாமதத்தை நாம் ஈஸ்டர் விசாரணையில் எங்குமே காணவில்லை.
</p><p>தாக்குதல் நடப்பதற்கு முன்னரே நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தாக்குதல் நடப்பதற்கு முன்னரே அந்த நபர்களைக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஆலோசனை கேட்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T22:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் முக்கிய விருது பெற்ற ஈராக்கிய முன்னாள் அமைச்சரின் அமெரிக்க விசா இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-iraqi-minister-us-visa-revoked-1788035257"></link>
            <id>https://tamilwin.com/article/former-iraqi-minister-us-visa-revoked-1788035257</id>
            <summary type="text">ஈராக்கின் முன்னாள் நிதி அமைச்சரான தாயிஃப் சாமி முகமது அல்-ஷகார்ஜியை
அமெரிக்கக் கூட்டாட்சிப் புலனாய்வுப் பணியகம் (FBI) பயங்கரவாதக் கண்காணிப்புப்
பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கின் முன்னாள் நிதி அமைச்சரான தாயிஃப் சாமி முகமது அல்-ஷகார்ஜியை
அமெரிக்கக் கூட்டாட்சிப் புலனாய்வுப் பணியகம் (FBI) பயங்கரவாதக் கண்காணிப்புப்
பட்டியலில் சேர்த்துள்ளதைத் தொடர்ந்து, அவரது அமெரிக்க விசாவை அமெரிக்க
இராஜாங்கத் திணைக்களம் இரத்து செய்துள்ளது.</p><p>

அவர் தற்போது அமெரிக்காவில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதிகாரிகள்,
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளனர்.</p><h2>முக்கிய விருது..&nbsp;</h2><p>
</p><p>
ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் பாலின சமத்துவப் பணிகளுக்காக கடந்த நான்கு
ஆண்டுகளுக்கு முன்னர் (2022 இல்) அமெரிக்காவால் 'சர்வதேசத் தைரியமிக்க பெண்'
விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒருவருக்கு, தற்போது விசா இரத்து
செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a81e9d6-54a1-447d-beb8-b7513d2abf08/26-6a9340bac0047.webp' /></p><p>

ஈராக்கின் நிதியமைச்சராகப் பணியாற்றிய தாயிஃப் சாமி, நாட்டின் வரவு செலவுத்
திட்ட ஊழல்களைத் தடுத்தமைக்காக 'இரும்புப் பெண்மணி' என அழைக்கப்பட்ட போதிலும்,
ஈராக்கிய நிதி அமைப்பின் மூலம் பயங்கரவாத நிதியுதவிகளுக்கு வழிவகுத்ததாக
அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
</p><p>
இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள
முன்னாள் நிதியமைச்சர் தாயிஃப் சாமி, பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில்
தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் ஆதாரமற்றவை எனக்
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T21:50:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்: ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 37 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russian-attack-ukraine-37-killed-depot-explosion-1788035554"></link>
            <id>https://tamilwin.com/article/russian-attack-ukraine-37-killed-depot-explosion-1788035554</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது
ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய
வெடிவிபத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது
ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய
வெடிவிபத்தையும் அடுத்து, குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
கீவ்வின் மேற்குப் புறநகர்ப் பகுதியான மைலா (Myla) எனும் இடத்தில் அமைந்துள்ள
குறித்த கிடங்கு மீது வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலால் அங்கு பாரிய
தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இதன்போது ஏற்பட்ட அதிர்வுகளினால் அப்பகுதியிலுள்ள சுமார் 50 குடியிருப்பு
வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், நிலவிய அசாதாரண சூழல் காரணமாக 400க்கும் மேற்பட்ட
மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>கடுமையான விசாரணைகள்</h2><p>
</p><p>
உயிரிழந்தவர்களில் டிமிட்ரிவஸ்கா கிராமத்தின் மேயரான தராஸ் டிடிச் என்பவரும்
அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b65aed-58b1-4d94-bc77-28dd96d908f3/26-6a9341e3ce2b8.webp' /></p><p>

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே ஆபத்தான ஆயுதங்கள் சேமித்து
வைக்கப்பட்டிருந்தமையே அதிகளவிலான உயிர்ச்சேதங்களுக்குக் காரணம் எனச்
சுட்டிக்காட்டியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, இது தொடர்பில்
கடுமையான குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.</p><p>

பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராகக்
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமரும்
எச்சரித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, உக்ரைனைக் இலக்கு வைத்து ரஷ்யா ஒரே இரவில் இரண்டு ஏவுகணைகளையும் 267
ட்ரோன்களையும் ஏவித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளிலும் உக்ரைன் பதிலடித்
தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T21:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள - சீன பேரழிவு வெள்ளம்: உயிரிழப்புகள் 600 கடந்ததுடன் தேடுதல் பணிகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-china-flood-disaster-death-toll-passes-600-1788034751"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-china-flood-disaster-death-toll-passes-600-1788034751</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 633 ஆக அதிகரித்துள்ள நிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>

நேபாளப் பகுதியில் இதுவரை 626 பேர் உயிரிழந்துள்ளதுடன், 517 வெளிநாட்டவர்கள் உட்பட 2,426 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பேரழிவு மேலாண்மை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p>
அதேவேளை, திபெத் எல்லைப் பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 554 பேர் காணாமல் போயுள்ளதாகச் சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><h2>இடைநிறுத்தப்பட்டிருந்த மீட்பு பணிகள்..&nbsp;</h2><p>

பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து உருவான புதிய செயற்கைக் குளம் உடையும் என்ற அச்சத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தேடுதல் பணிகள், தற்போது ஆபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d042f0f-48f3-4bb6-9fef-dd3cba618eb1/26-6a933ec0e0d5b.webp' /></p><p>
</p><p>
மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து சுரங்கப் பாதை மீட்புக் குழுக்கள் உட்பட சிறப்பு உதவிகளை நேபாள அரசாங்கம் கோரியுள்ளது.
</p><p>
இமயமலைப் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை சரிந்து விழுந்ததில் உருவான இந்த வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் பல மாவட்டங்களைச் சூறையாடியுள்ளது.</p><p>

சேறு மற்றும் சிதைவுகளுக்கு அடியில் பலர் புதையுண்டுள்ளமையால் உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T20:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பாப்வேயில் ஏற்பட்ட வீதி விபத்தில் 27 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/27-killed-in-zimbabwe-road-accident-1788033329"></link>
            <id>https://tamilwin.com/article/27-killed-in-zimbabwe-road-accident-1788033329</id>
            <summary type="text">சிம்பாப்வேயின் மத்திய பகுதியில் சிறிய ரக பேருந்து ஒன்றும் கனரக லொறி ஒன்றும்
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 27 பேர்
உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிம்பாப்வேயின் மத்திய பகுதியில் சிறிய ரக பேருந்து ஒன்றும் கனரக லொறி ஒன்றும்
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 27 பேர்
உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

தலைநகர் ஹராரேக்கு தெற்கே அமைந்துள்ள சீவு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இந்த
விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் பயணித்தவர்கள் பயணித்த பேருந்தை, முந்திச்
செல்ல முயன்ற கனரக லொறி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p>
விபத்து இடம்பெற்ற இடத்திலேயே 23 பேர் உயிரிழந்ததுடன், ஏனையோர் உள்ளூர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98cd1f31-96c7-4f27-b33c-99f87dec49e6/26-6a93393395a7a.webp' /></p><p>
</p><p>
விபத்துக்குள்ளான பேருந்து முற்றிலும் தீப்பற்றி எரிந்துள்ளதை சமூக வலைத்தளங்களில்
வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.
</p><p>
முறையான பராமரிப்பின்மை, வீதிகளில் காணப்படும் குழிகள் மற்றும் அதிகளவு
பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்ற காரணங்களால் சிம்பாப்வே வீதிகளில்
தொடர்ச்சியாகப் பாரிய விபத்துகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T19:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பகிரங்க சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadasa-local-government-election-1788031409"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadasa-local-government-election-1788031409</id>
            <summary type="text">அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர்
சஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.</p><p> இதன் மூலம் அரசின் மீது மக்களுக்குள்ள
செல்வாக்கினை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம விஜிதபுர பிரதேசத்தில் நடைபெற்ற
விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

"விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் என அனைவரும்
மாகாண சபைத் தேர்தல் வரும் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
</p><p>இந்நாட்டின் புதிய பயணத்தின் புதிய பாதை, ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவே
உருவாக்கப்படும்.

நாட்டில் எண்ணற்ற பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும், அரசு உயர்நீதிமன்ற
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க முயல்கின்றது.</p><h2>மக்கள் தெரிவு&nbsp;</h2><p>

நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழித்து, சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தி,
நாட்டில் தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்கவே அரசு முற்படுகின்றது.

கடந்த மூன்று தேர்தல்களிலும் பெரும்பான்மையான மக்கள் தெரிவு செய்த ஜே.வி.பி.
அரசு தொடர்ச்சியாக வாக்குறுதிகளை மீறி, நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3b07c07-b0d3-49ea-917b-7438f9839c57/26-6a9337f56b933.webp' /></p><p>
</p><p>இந்த அரசு கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறத்தக்க அளவுக்கு விருது
பெற்ற பொய்யாளர்களாக மாறியுள்ளது.

தற்போது கோதுமை மா ஒரு கிலோகிராம் 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்
பாண், பேக்கரி தயாரிப்புகள் மற்றும் மா சார்ந்த தயாரிப்புகள் பாதிக்கப்பட்டு,
மக்கள் மேலும் துயரத்தின் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
சர்வதேச நிறுவனம் ஒன்று குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் 130 நாடுகளை
அடிப்படையாகக் கொண்டு நடத்திய கணக்கெடுப்பில், இலங்கை 120ஆவது இடத்திலுள்ளது.
பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளும் இலங்கைக்கு முன்னிலையில்
உள்ளது.
</p><p>
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின்படி ஒரு நபர் 30 நாள்கள்
வாழ்வதற்கு 17 ஆயிரத்து 315 ரூபா போதும் என்ற தவறான தரவுகளின் அடிப்படையிலேயே
அரசு கொள்கைகளை வகுக்கின்றது.</p><p> நாட்டின் 30 முதல் 40 சதவீதமான மக்கள் ஏழ்மையில்
வாடுவதுடன், அஸ்வெசும திட்டமும் வெட்டப்பட்டு வருகின்றது.

புற்றுநோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் 900 ரூபா ஊசி மருந்து கள்ளச்சந்தையில்
25 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுவதால் சுமார் 75 ஆயிரம் நோயாளர்கள் ஆபத்தான
நிலையில் உள்ளனர்.
</p><p>
மேலும், ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள்
மூடப்பட்டு வருவதால் பல்லாயிரக்கணக்கான இளையோர்கள் வேலைவாய்ப்பின்றி வீதிக்கு
இறங்கி வருகின்றனர்." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T19:50:22+00:00</updated>
        </entry>
    </feed>
