<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-19T22:17:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டும் வீழ்ச்சி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economic-growth-rate-falls-again-1789852296"></link>
            <id>https://tamilwin.com/article/economic-growth-rate-falls-again-1789852296</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கணிசமான அளவில் மீண்டும் வீழ்ச்சியுற்றிருப்பதை சுட்டிக் காட்டும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, சீர்திருத்தங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கணிசமான அளவில் மீண்டும் வீழ்ச்சியுற்றிருப்பதை சுட்டிக் காட்டும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் போனால் பாரிய நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.</p><p>

அட்வகேட்டா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும் பொருளாதார ஆய்வாளருமான தனநாத் பெர்னாண்டோ, அண்மையில் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வுக் கட்டுரையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம்</h2><p>
அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டும் கணிசமான அளவில் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42f274d0-e68f-490c-914e-ca33019829e6/26-6aaefd7d23238.webp' /></p><p>தற்போதைய பொருளாதாரம் 2018ஆம் ஆண்டில் இருந்த நிலையைக்கூட எட்டவில்லை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகளை ஆய்வு செய்யுயும்போது, ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீதமாகப் பதிவான பொருளாதார வளர்ச்சி விகிதம், இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட ஒரு சதவீதப் புள்ளி குறைந்து 4.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p>பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை நாட்டின் எதிர்காலத்திற்கு சாதகமற்ற போக்கு எனலாம்.

குறிப்பாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ​​இரண்டாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (சுமார் 3,029.8 பில்லியன் ரூபா), 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை (3,121.5 பில்லியன் ரூபா) விட கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைவாகவே உள்ளது.</p><p>
பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்றுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
</p><p>
இரண்டாவது காலாண்டில் துறைரீதியாக பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்யும்போது, ​​விவசாயத் துறை 2.3 சதவீதம் சுருங்கியுள்ளது. அதே நேரத்தில் நெல் உற்பத்தி 15.1 சதவீதமும், பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் கிட்டத்தட்ட 15 சதவீதமும் குறைந்துள்ளன.</p><h2>நாடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி</h2><p>தொழில்துறை 7.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முதன்மையாக கட்டிட கட்டுமானத் துறை (13.9மூ) மற்றும் சுரங்கம் மற்றும் கல் குவாரித் துறை (17.4மூ) ஆகியவற்றின் வளர்ச்சியால் ஏற்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e5f468f-425c-4cf1-94c9-a489caa508e8/26-6aaefd7dd0547.webp' /></p><p>
சேவைத் துறை சராசரியாக 2.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இருப்பினும், பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் மந்தநிலை, சாமானிய மக்களின் வருமான ஆதாரங்களையும் ஊதியங்களையும் நேரடியாகப் பாதிக்கிறது. </p><p>இது வறுமையின் அபாயத்தை அதிகரிப்பதோடு, கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு நாடு மீண்டும் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
</p><p>
மேலும், இது சர்வதேச கடன் மதிப்பீடுகளில் முன்னேறுவதற்கு ஒரு தடையாக அமையும்.

நாடு எதிர்கொள்ளும் இந்த அபாயத்தைக் கடக்க, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நீண்ட காலத்திற்கு 6 முதல் 7 சதவிகித அளவில் பராமரிக்க வேண்டும் என்பதுடன், இதற்காக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தாண்டிய விரிவான பொருளாதார சீர்திருத்தங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.
</p><p>
மேலும், சீர்திருத்தங்கள், குறிப்பாக காணிச் சீர்திருத்தங்கள், தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் பொதுத்துறையில் செயல்திறன் மேம்பாடுகள் ஆகியவை உடனடியாகச் செயல்படுத்தப்படாவிட்டால், நாடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்ல நேரிடும் என்றும் தனநாத் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T21:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் சென்ற சொகுசு கார் கைப்பற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/luxury-car-used-to-transport-stolen-cattle-seized-1789849494"></link>
            <id>https://tamilwin.com/article/luxury-car-used-to-transport-stolen-cattle-seized-1789849494</id>
            <summary type="text">திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில்,
திருடப்பட்டதாகக் கூறப்படும் மாடுகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும்
சொகுசு கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில்,
திருடப்பட்டதாகக் கூறப்படும் மாடுகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும்
சொகுசு கார் ஒன்றை சேருநுவர பொலிஸார்&nbsp;கைப்பற்றியுள்ளனர்</p><p>குறித்த நடவடிக்கையானது நேற்று (19.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>கைப்பற்றப்பட்ட சொகுசு கார்</h2><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த கார்
கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனக்
கூறப்படும் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18411d26-57ff-4a2b-a94a-951ac300baad/26-6aaef56a71607.webp' /></p><p>

கைப்பற்றப்பட்ட சொகுசு காரை அடிப்படையாகக் கொண்டு, மாடுகள் திருட்டுச்
சம்பவத்துடன் குறித்த வாகனத்துக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பிலும்
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா.. அநுர தரப்பிடம் சரத் வீரசேக கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statue-of-prabhakaran-in-the-north-1789847402"></link>
            <id>https://tamilwin.com/article/statue-of-prabhakaran-in-the-north-1789847402</id>
            <summary type="text">
வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசாங்கம் அனுமதியளிக்குமா என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி தொடுத்திருந்தார்.</p><p>
</p><p>
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,</p><p> 

வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும்.</p><h2>நல்லாட்சி அரசாங்கத்தின் தவறு&nbsp;</h2><p>
</p><p>
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகள் தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.
</p><p> 
வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, அதனை திறக்கும் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடைகளுடன் கலந்து கொண்டுள்ளார்கள். கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி இதனை ஏற்றுக் கொள்வாரா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a17b1a-6988-4b5d-b05d-e29ff60986bf/26-6aaeef5d7881e.webp' /></p><p>
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியாக பிரபல்யமடைய வேண்டும்&nbsp; என்பதற்காக அரசாங்கம் பாதுகாப்புசார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்துகின்றது.</p><p> 

நல்லாட்சி அரசாங்கமும் இதே தவறை இழைத்தது. அதன் விளைவு தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. </p><p>

எனவே, அரசியல் வெற்றிக்காக பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அலட்சியப்டுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-19T20:24:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரவு மையங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு : தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்த முயலும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-opposition-data-centers-us-democratic-party-1789845675"></link>
            <id>https://tamilwin.com/article/public-opposition-data-centers-us-democratic-party-1789845675</id>
            <summary type="text">அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேகக்கணி
கணினியியல் (Cloud-computing) தரவு மையங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எதிராக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேகக்கணி
கணினியியல் (Cloud-computing) தரவு மையங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எதிராக
மக்களிடையே கிளம்பியுள்ள எதிர்ப்பு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் முக்கிய
அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
</p><p>
அமேசான் மற்றும் மெட்டா போன்ற பெரு நிறுவனங்களின் தரவு மையங்களுக்கு
வழங்கப்பட்ட வரி விலக்குகள் காரணமாக ஒஹாயோ மாநிலத்திற்கு 2 பில்லியன்
டொலர்களுக்கும் அதிகமான விற்பனை வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில்
வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள்</h2><p>அதேவேளை, விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதுடன், மின்கட்டண உயர்வும்
குடிநீர் தேவையும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70a92cec-727e-46a5-b094-06db90df1f8c/26-6aaee6cb71159.webp' /></p><p>

சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, ஒஹாயோ மாநில மக்களில் 71 சதவீதத்தினர்
புதிய டேட்டா மையங்களின் கட்டுமானத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்க ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைப் பயன்படுத்தி, கிராமப்புறப் பகுதிகளில் பின்தங்கியுள்ள ஜனநாயகக்
கட்சியினர், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகத் தீவிரப்
பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
குறிப்பாக, பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளால் சாதாரண
மக்களின் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
</p><p>
நிலைமை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இரு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்
தலைவர்களும் தரவு மையக் கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கான வரிச்
சலுகைகளைக் குறைக்கவும் புதிய கொள்கை முன்மொழிவுகளை வெளியிட வேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-19T19:47:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மோசமாக செயற்பட்ட இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-canada-1789832251"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-canada-1789832251</id>
            <summary type="text">கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர்&amp;nbsp;கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றிய 62 வயதான சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய சிறுவன் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

இலங்கையர் கைது</b></h2><p>பாதிக்கப்பட்ட 16 வயதான சிறுவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>சந்தேக நபரான இலங்கையர் மீது தகாத வகையில் செயற்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>

குறித்த நபரால் எவராது பாதிக்கப்பட்டிருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9NhzR1qe95s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-19T19:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் சிக்கிய அனோஜன்! இலங்கை அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-1789843480"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-1789843480</id>
            <summary type="text">சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தீவிரமாக கண்காணித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தீவிரமாக கண்காணித்து வருவதாக ஊடகத் துறைய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>

இது குறித்து ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில், </p><p>

சவூதி அரேபியா நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக் கொடுக்க அல்லது அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதற்கு அரசாங்கம் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றது.</p><h2>பல கட்ட கலந்துரையாடல்கள்&nbsp;</h2><p> </p><p>

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

சம்பந்தப்பட்ட அரசாங்கத்துடன் ஏற்கனவே பல கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3113ba48-991e-4090-ad9b-bbb8243f9403/26-6aaedb2b9f157.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் அனைத்தும் சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T18:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரியாத்தில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை : விமான சேவைகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/houthis-claim-attack-on-saudi-capital-1789841114"></link>
            <id>https://tamilwin.com/article/houthis-claim-attack-on-saudi-capital-1789841114</id>
            <summary type="text">சவூதி தலைநகரில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கறுப்புப் புகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி தலைநகரில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கறுப்புப் புகைமண்டலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அண்டை நாடான யேமனில் ஈரான் ஆதரவு ஹூத்தி போராளிகளுடனான மோதல் சமீபத்தில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
 

</p><h2>பதிலடி கொடுக்கப்படாமல் போகாது</h2><p>அதனைத் தொடர்ந்து தலைநகரில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75b2a0b2-5132-4880-a1c0-40ac15a3f52a/26-6aaed84d2c831.webp' /></p><p> மேலும், நீண்ட தாமதங்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக FlightRadar24 என்ற கண்காணிப்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>கடந்த வாரத்தில் சவூதி அரேபியா யேமன் முழுவதும் 300 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹூத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா அல்-சரியா தெரிவித்தார்.
</p><p>
 

சனா மீதான தாக்குதல்கள் குறித்துக் கூறப்படும் செய்திகளுக்குப் பதிலடி கொடுக்கப்படாமல் போகாது என அவர் எச்சரித்தார்.</p><h2>முக்கிய கப்பல் வழித்தடத்தின் நுழைவாயில்</h2><p>

 

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்துடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள ஹூதிகள், சமீபத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மோக்காவையும், பெரிம் தீவையும் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d887528c-ab6a-49ba-816b-991198e94ff3/26-6aaed84dd968d.webp' /></p><p> இந்தத் தீவு, வளைகுடா நாடான யேமன் ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தும் ஒரு முக்கிய கப்பல் வழித்தடத்தின் நுழைவாயிலாகும்.
</p><p>
 

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு யேமனில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சவூதி விதித்த முற்றுகைக்குப் பதிலடியாகவே இந்தக் கடற்படை முற்றுகையிடப்பட்டதாக அக்குழு கூறியது.
</p><p>
 

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்திய போரினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதிலிருந்து, சவூதி கப்பல்கள் எண்ணெய் ஏற்றுமதிக்காக செங்கடலின் அந்தப் பகுதியையே நம்பி இருந்து வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T18:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-s-main-conditions-for-the-us-1789837284"></link>
            <id>https://tamilwin.com/article/iran-s-main-conditions-for-the-us-1789837284</id>
            <summary type="text">போர் முடிவுக்கு வருவதற்கான ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவுக்கு வருவதற்கான ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செயலாளரும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை
பிரதானியுமான மொஹ்சன் ரேசாய் (Mohsen Rezaei), இதனை ஊடகம் ஒன்றிடம்
தெரிவித்துள்ளார்.</p><h2>திருப்திகரமான பதில் வராத வரை</h2><p>

அனைத்து முனைகளிலும் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை
உடனடியாக நிறுத்துவது,

முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகளை விடுவிப்பது,&nbsp;ஈரான் மீதான பொருளாதார மற்றும் பிற தடைகள் / முற்றுகைகளை (Blockade)
முடிவுக்குக் கொண்டுவருவது என்பன இந்த நிபந்தனைகளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c1f836-b282-4188-a95d-910fc3a94952/26-6aaec9084d2a3.webp' /></p><p>
இந்த நிபந்தனைகள் கட்டார் நாட்டின் மத்தியஸ்தம் மூலமாக
அமெரிக்காவிற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>
இந்த முன்மொழிவுகள் தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பரிசீலனை மற்றும் பதிலுக்காகக் காத்திருப்பதாக மொஹ்சன் ரேசாய் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்க தரப்பில் இருந்து முறையான மற்றும் திருப்திகரமான பதில் வராத வரை
பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் அவர்
தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தடையை மீறி புதிய உச்சம் தொட்ட ஈரானின் எண்ணெய் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-oil-sales-reach-two-year-high-1789838757"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-oil-sales-reach-two-year-high-1789838757</id>
            <summary type="text">ஈரானிய ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள தடையையும் மீறி, நாட்டின் எண்ணெய் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிலான புதிய உச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள தடையையும் மீறி, நாட்டின் எண்ணெய் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிலான புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஈரானின் திட்டமிடல் மற்றும் வரவுசெலவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>
ஈரானின் முக்கிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான 'மெஹர்' வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
செப்டம்பர் மாதத்தில் ஈரானின் எண்ணெய் விற்பனை 3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச மாதாந்த வருவாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ddfb920-ab34-4694-9b8f-311ac897c558/26-6aaec5aa2e155.webp' /></p><p>
ஆயினும், அமெரிக்க தடையை மீறி ஈரான் எவ்வாறு தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.</p><p>
கடற்படைத் தடை அமலில் இருந்தபோதிலும், ஈரானிய அரசு ஏற்கனவே கடலில் நிலைகொள்ளச் செய்திருந்த தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் விற்பனையைத் தொடர்ந்து பராமரித்து வந்திருக்கலாம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். </p><p>
எனினும், தற்போதும் அதே நடைமுறைதான் தொடர்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
</p><p>அதேவேளையில், ஈரானிய எண்ணெயைச் சுமந்து செல்லும் ஈராக்கியக் கப்பல்கள், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணை வழியே பயணிக்க தெஹ்ரான் அனுமதித்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T17:26:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-white-washed-by-england-1789838115"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-white-washed-by-england-1789838115</id>
            <summary type="text">இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடரைல் இலங்கை அணி படுதோல்வியைத் தழுவியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டித் தொடரில் இலங்கை மூன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடரைல் இலங்கை அணி படுதோல்வியைத் தழுவியுள்ளது.
</p><p>இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டித் தொடரில் இலங்கை மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதன் மூலம், இங்கிலாந்து வைற்வொஷ் முறையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
</p><p>மான்செஸ்டர் ஓல்ட் டிரப்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று, இலங்கையைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce9a02b-5636-4824-98f4-7b875cbcb4ac/26-6aaec32529a2d.webp' /></p><p>இதன்படி களமிற்கிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இதில் பெத்தும் நிஷ்ஷங்க 36 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.</p><p>பந்து வீச்சில் சோனி பேகர், ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜெக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
</p><p>பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அணி வெறும் 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கினை எட்டிப்பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
</p><p>இதில், இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், ஹரி புரூக் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
</p><p>பந்து வீச்சில் இலங்கை அணியின் சார்பில் தரிந்து ரட்னாயக்க ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக சோனி பேகரும், தொடரின் ஆட்டநாயகனாக ஹரி புருக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T17:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-son-found-dead-in-vavuniya-1789836788"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-son-found-dead-in-vavuniya-1789836788</id>
            <summary type="text">வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய&amp;nbsp; மகனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய&nbsp; மகனின் சடலம்
மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
குறித்த சடலங்கள் இன்று (19.09.2026) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பாக
மேலும் தெரியவருகையில்,</p><p>
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும்
இருந்துள்ளனர்.

இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த
காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை&nbsp;</h2><p>

இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய
நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec25deb-840f-4d6e-a9e2-2f6c0df6ad2e/26-6aaec2abd186d.webp' /></p><p> </p><p>சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்,&nbsp; சம்பவ இடத்திற்கு
சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த அலஸ்கிறின்(வயது 60) என்ற
பெண்ணும் அவரது மகனான அயந்தன்(வயது 35) என்ற இளைஞருமே சடலமாக
மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு
பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்த முன்னாள் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pramodya-files-rs-75-mn-lawsuit-against-slc-1789836800"></link>
            <id>https://tamilwin.com/article/pramodya-files-rs-75-mn-lawsuit-against-slc-1789836800</id>
            <summary type="text">&amp;nbsp;ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திடமிருந்து 75 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி முன்னாள் கிரிக்கட் வீரரும், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திடமிருந்து 75 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி முன்னாள் கிரிக்கட் வீரரும், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவருமான பிரமோதய விக்கிரமசிங்க வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>தமது பதவி நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டதாகக் கூறி, 75 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார். </p><p>
செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலுடன் 2025 டிசம்பர் 17 ஆம் திகதி தொடங்கிய தமது இரண்டு ஆண்டு காலப் பதவி, கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவினால், பதவிக் காலம் முடிய முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52959ebc-6569-427f-a17b-ac38e6834b8d/26-6aaebe028aed4.webp' /></p><p> </p><p>
முன் அறிவிப்பு, போதுமான நியாயமான காரணங்கள் அல்லது முறையான சட்ட நடைமுறைகள் எதுவுமின்றி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>நடைமுறையிலிருந்த ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததன் மூலம், அக்குழு பகுத்தறிவற்ற முறையிலும், இலங்கை கிரிக்கெட்டின் நலன்களுக்கு எதிராகவும் செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 
ஒப்பந்த மீறல், வருமான இழப்பு மற்றும் தனது தொழில்முறை நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு, உரிய வட்டி மற்றும் சட்டச் செலவுகளுடன் சேர்த்து 75 மில்லியன் ரூபாயை நட்டஈடாக வழங்க வேண்டும் என அவர் இந்த வழக்கின் மூலம் கோரியுள்ளார். </p><p>
இரண்டு ஆண்டு காலப் பதவியை ஏற்ற பிறகு, இலங்கை கிரிக்கெட்டுக்காகத் தனது நேரத்தையும் அனுபவத்தையும் முழுமையாக அர்ப்பணிக்கும் நோக்கில், தனது பிற தொழில்முறை ஈடுபாடுகளையும் வணிக நலன்களையும் ஒதுக்கி வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
இதன் காரணமாக, ஒப்பந்த அடிப்படையில் பெற வேண்டிய ஊதியத்தை இழந்ததுடன், கைவிட்ட வணிக வாய்ப்புகளினால் மேலதிக நிதி இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p> மேலும், இச்செயல் தனது தொழில்முறைத் தகுதி, நம்பகத்தன்மை மற்றும் நற்பெயருக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்வுக்குழுத் தலைவராகத் தனது முந்தைய பதவிக் காலத்தில் இலங்கை அணி அடைந்த முக்கிய வெற்றிகளையும் இந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தெரிவுக்குழு தலைவராக பதவி வகித்த காலத்தில், 2022 ஆம் ஆண்டு டி20 ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி வென்றமை, 2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியமை மற்றும் 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் ஒரு போட்டியில் கூடத் தோல்வியடையாமல் சாம்பியன் பட்டம் வென்றமை போன்ற சாதனைகளை பிரமோதய விக்ரமசிங்க பட்டியலிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T16:53:26+00:00</updated>
        </entry>
    </feed>
