<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-05T01:34:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் களத்தில் இறங்கப் போகும் நாமலின் மனைவி லிமினி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-wife-limini-to-enter-politics-1788569495"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-wife-limini-to-enter-politics-1788569495</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுண கட்சியின் மக்கள் போராட்டப் பேரணி நடைபெற ஏற்பாடாகி உள்ளது.</p><h2>நாமலின் மனைவி லிமினி</h2><p>
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும் அவர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56b11e84-cc7b-4d30-ad9d-657108eb69c6/26-6a9b6a17b5f44.webp' /></p><p>
இந்நிலையில் இந்தப் பேரணியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக, அவரது மனைவி லிமினி ராஜபக்ச பிரதான மேடைக்கு வந்து மக்களிடம் உரையாற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அத்துடன் எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவும், ஊடகச் சந்திப்பொன்றை நடத்தவும் அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T01:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் - கலக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜனநாயக முன்னணியின் (Eros) செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,</p><p>


நாமல் ராஜபக்சவின் கைது வரவேற்கத்தக்கது, இது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த அரசு நிரூபிப்பித்துள்ளது.
</p><p>
ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது பல ஊழல் முறைப்பாடுகள் உள்ளன.</p><p> 

ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் செய்த ஊழல், கொள்ளை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
</p><p>
தற்போதைய அரசு இத்தகைய ஊழல்களை விசாரிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D9IttxaXdMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது.. மீண்டும் களமிறங்கும் மகிந்த - ராஜபக்ச அரசியலில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீ லங...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச தரப்பு அரசியல்வாதிகள் பலர் அ ண்மைக்காலமாக வழக்குகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், விளக்கமறியல் உத்தரவுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.</p><h2>மீண்டும் மகிந்த</h2><p>
</p><p>
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அரசியல் செயற்பாடுகளில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அதன் காரணமாக சிறிது காலமாக அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் என்ற ரீதியில் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a99636b-abd5-4d8a-b471-8c284e0853ab/26-6a9b63cd198bb.webp' /></p><p>
அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சியின் முதலாவது மக்கள் போராட்ட பேரணிக்கு அவர் தலைமை தாங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>

முன்னதாக குறித்த பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்த நிலைமையில், இலஞ்ச வழக்கொன்றில் தற்போதைக்கு நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
அவ்வாறான பின்னணியில் அநுராதபுர பேரணி தொடக்கம் எதிர்வரும் 2029ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வரையான கட்சியின் செயற்பாடுகளை தலைமையேற்று முன்கொண்டு செல்ல மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kLhfyZi69CA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-05T00:35:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைதான நாமல் - பொதுஜன பெரமுண முக்கியஸ்தர்களின் அவசர ஒன்று கூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-meeting-of-podujana-peramuna-key-figures-1788567108"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-meeting-of-podujana-peramuna-key-figures-1788567108</id>
            <summary type="text">ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசர ஒன்றுகூடல் ஒன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுண கட்சியின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசர ஒன்றுகூடல் ஒன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.</p><h2>அவசர ஒன்று கூடல்</h2><p>
</p><p>
இதற்கிடையே மொட்டுக் கட்சியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரம் நகரில் மக்கள் போராட்டம் (ஜன சடன) என்ற பெயரில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் பேரணியொன்று நடைபெற ஏற்பாடாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7956ad61-7dca-4132-ab78-004c6311a581/26-6a9b5ff82aaae.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான நிலையில் நாமல் ராஜபக்சவின் கைது விவகாரத்தை எதிர்கொள்வது மற்றும் அநுராதபுர பேரணியை வெற்றிகரமாக நடத்துவது உள்ளிட்ட முக்கிய விடயங்களை கலந்துரையாடுவதற்காக பொதுஜன பெரமுண கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
</p><p>
பத்தரமுல்லை , நெளும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமையகத்தில் இன்று(5) முற்பகல் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்களின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:19:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகியும் கைவிலங்குடன் சிரித்தபடி சிறை சென்ற நாமல்! கைதாவதை முன்கூட்டியே அறிந்தது எப்படி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788566415"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788566415</id>
            <summary type="text">தான் கைது செய்யப்படலாம் என்று நாமல் ராஜபக்ச முன்பே கூறியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தான் கைது செய்யப்படலாம் என்று நாமல் ராஜபக்ச முன்பே கூறியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்முதல் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய விடயத்திலே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இதில் சுமார் 1.4 மில்லியன் யூரோக்களுக்கு மேலான இலஞ்சப் பணம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்ஸ் நாட்டு ஏர்பஸ் (Airbus) நிறுவன அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.</p><p> 

கடந்த காலங்களில் கபில சந்திரசேன சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>

இந்தநிலையில் அதற்கு முன்னதாகவும் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அப்போதைய நிலை தற்போது மாற்றமடைந்துள்ளதை காண முடிகின்றது.
</p><p>
அதே சமயம் நாமல் ராஜபக்ச காலையிலிருந்து அமைதியான மற்றும் புன்னகைத்த முகபாவனையுடனேயே காணப்பட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தற்போது இலங்கை அரசியலில் பேசுபோருளாகியுள்ள நிலையில், விரிவான விளக்கங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cqqPn-TnFso" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகம் சீரழிகிறது..! அரசுக்கு எதிராக சஜித் போர்க்கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/country-and-democracy-being-destroyed-government-1788562996"></link>
            <id>https://tamilwin.com/article/country-and-democracy-being-destroyed-government-1788562996</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள்
ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும்
சீரழிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள்
ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும்
சீரழிந்து வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்தார்.
</p><p>
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம கொங்வெலான பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை
ஆராயும் மக்கள் சந்திப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>22ஆவது திருத்தம்</h2><p>
</p><p>
இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

"அரசு 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை,
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளின் மீது பெரும் அடியைக்
கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2b7a26f-28c8-43f6-ae72-2b2a4b274635/26-6a9b4fb0bf875.webp' /></p><p> </p><p>நீதித்துறையின் சுதந்திரத்தில் கைவைத்து அரசு ஜனநாயகத்தை
சீரழித்து வருகின்றது.

பொருளாதாரத்தின் மீது அரசு தொடுத்த தாக்குதலால் வாழ்க்கைச் சுமை மற்றும்
செலவுகள் அதிகரித்து காணப்படுகின்றன.</p><p> மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும்
உலகளாவிய விலைக்கு எரிபொருள் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதிகள் எவையும்
நிறைவேற்றப்படவில்லை.</p><h2>சஜித் பிரேமதாஸ</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் அஸ்வெசும தொகை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும்,
தற்போது அஸ்வெசும தொகையும் பயனாளர்களின் எண்ணிக்கையும் அரசாங்கத்தினால்
குறைக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d3bc845-e58e-4d6e-87b7-24f11702ba34/26-6a9b4fb1b5662.webp' /></p><p> </p><p>வறுமையை ஒழிப்பதற்கான காத்திரமான திட்டங்கள்
எதுவும் இவர்களிடம் இல்லை.

விவசாயிகள் விதை மற்றும் உர விலை உயர்வுடன், யானை - மனித மோதல்களுக்கு
மத்தியிலும் உற்பத்தியை மேற்கொண்டாலும் நிலையான விலை கிடைக்கவில்லை. </p><p>150 ரூபா
வாக்குறுதி மீறப்பட்டு, விவசாயிக்கு நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்
மீதான வரித் தாக்குதல்கள் மற்றும் பராட்டே சட்டம் காரணமாக இவர்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T23:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்கு முன் நாமலுக்கு தெரிந்த இரகசியம் - 12ஆம் திகதியின் சூழ்ச்சிகள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-by-bribery-commission-1788554374"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-by-bribery-commission-1788554374</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

 2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 'ஏர்பஸ்' (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான ஊழல் மற்றும் 8 லட்சம் டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

செப்டம்பர் 12-ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த பெரிய பேரணிக்கு முன்னதாகவே இந்தக் கைது நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இது போராட்டத்தை முடக்கும் முயற்சியாக ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது.
</p><p>
ஆனால் ராஜபக்ச தரப்பு போராட்டத்தை ஒரு திசைதிருப்பல் யுக்தியாகவே பயன்படுத்தியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
</p><p>
சிறைச்சாலைக்கு வெளியே திரண்டிருந்த ஆதரவாளர்கள், ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாப்பாளர்களாகச் சித்தரித்து உணர்ச்சிகரமாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.</p><p>

ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gYu0CmEyp28" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T23:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்குப் பின்னர் நாமலின் முகநூலில் வெளியான முக்கிய பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-after-fb-post-1788538032"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-after-fb-post-1788538032</id>
            <summary type="text"> இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் அவர் சார்பில் பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த பதிவில்,</p><h2>அரசியல் பழிவாங்கல்கள்</h2><p>

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். திருடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.</p><p>

என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNamalSL%2Fposts%2Fpfbid02TcCpAA2u9fPZLmmc47wNT1aFyxcJEh147PMkVazPVK7ft2rZa2GqrW49bfA9ed2Gl&show_text=true&width=500" width="500" height="310" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
</p><p>
இன்று, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை என்னை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

நாளை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. 

அங்கு ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார். </p><p>இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைப் புறக்கணிப்பது கடினமாக உள்ளது.</p><h2>&nbsp;மாபெரும் மக்கள் பேரணி</h2><p>
</p><p>
அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள எமது மாபெரும் மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
</p><p>
நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை.மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை. நான் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc59b3ac-aea8-4446-8b4a-d959be46307a/26-6a9aeeb8ed3d3.webp' /></p><p>

எனது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும். ஆனால் எனது குரலையோ, எனது நம்பிக்கைகளையோ அல்லது எனது அன்புக்குரிய தாய்நாட்டு மக்களுக்காக நான் செய்யும் அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது.

அரசியல் அதிகாரம் தற்காலிகமானது.</p><p>

உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.

இந்த அனைத்து சம்பவங்களும் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும்.
</p><p>
இவை அனைத்தையும் நான் அச்சமின்றி எதிர்கொள்வேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>You may Like This video..</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gYu0CmEyp28" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p><br></p><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T22:45:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது அரசின் இயலாமையையே காட்டுகின்றது : முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-exposes-government-s-incompetence-1788558205"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-exposes-government-s-incompetence-1788558205</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது
செய்ததன் மூலம், அரசு தனது இயலாமையை மறைக்க முற்படுகின்றது என்று ஐக்கிய
மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது
செய்ததன் மூலம், அரசு தனது இயலாமையை மறைக்க முற்படுகின்றது என்று ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><h2>நாமல் கைது</h2><p>
</p><p>
"யார் தவறு செய்திருந்தாலும் அது குறித்து விசாரணை நடத்திச் சட்டரீதியாக
நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர்.</p><p>

அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மீது மட்டுமே இலஞ்ச, ஊழல் விசாரணை
ஆணைக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf93668-0831-4b1e-b192-aab4bce1ee44/26-6a9b3cfad4efc.webp' /></p><p> </p><p>மாறாக, துறைமுகத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள்
விடுவிக்கப்பட்டமை மற்றும் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி போன்ற அரசாங்க
தரப்பினர் மீதான முறப்பாடுகள் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறுவதில்லை.</p><h2>முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்</h2><p>
</p><p>
அடுத்த வாரம் அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மக்கள்
கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள நிலையில், நாமல் ராஜபக்சவின் இந்தைக் கைது
அந்தக் கூட்டத்துக்குப் போதுமான இலவசப் பிரசாரத்தையே வழங்கி இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016f8683-a592-41ee-9e3e-b9c433e214a4/26-6a9b3cfbad437.webp' /></p><p>

மக்களுக்குச் செய்ய வேண்டிய பல முக்கியமான விடயங்களை மறந்துவிட்டு,
எதிர்க்கட்சியினரைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கே அரசு முன்னுரிமை
அளித்து வருகின்றது. இதன் மூலம் தனது இயலாமையை மறைக்கவே அரசு
முயற்சிக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T22:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதில் பொலிஸாரிடம் குழப்பம் விளைவித்த ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/supporters-create-chaos-police-namal-s-arrest-1788541284"></link>
            <id>https://tamilwin.com/article/supporters-create-chaos-police-namal-s-arrest-1788541284</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே குழப்பமான சூழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
நாமல் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டிருந்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

இதன்போது ஆதரவாளர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பின்னர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xHhKh4l_Rqw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T22:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக விரைவில் தாக்குதல்..! ஈரானின் முக்கிய தளத்தை குறிவைக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-says-us-may-hit-iran-pickaxe-mountain-soon-1788557211"></link>
            <id>https://tamilwin.com/article/trump-says-us-may-hit-iran-pickaxe-mountain-soon-1788557211</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் “Pickaxe Mountain” பகுதியை அமெரிக்கா “வெகு விரைவில்” தாக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் “Pickaxe Mountain” பகுதியை அமெரிக்கா “வெகு விரைவில்” தாக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p>

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><h2>குறிவைக்கும் ட்ரம்ப்</h2><p>
ஈரானில், கடுமையாக சேதமடைந்துள்ள Natanz யுரேனியம் செறிவூட்டல் நிலையத்திற்கு அருகில் Pickaxe Mountain அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab84a2af-636f-4a82-b3f0-4a920bfde6aa/26-6a9b388122cd7.webp' /></p><p>

இந்தப் பகுதி மிகவும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டதாக தெரிவிக்கப்படுவதுடன், ஆழமாக பூமிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு சுரங்கத் தொகுதிகள் அங்கு இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T21:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[286 நாட்கள் கடலில்… அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பலுக்கு நேர்ந்த நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/after-months-in-hormuz-uss-abraham-lincoln-1788551786"></link>
            <id>https://tamilwin.com/article/after-months-in-hormuz-uss-abraham-lincoln-1788551786</id>
            <summary type="text">அமெரிக்காவின் USS Abraham Lincoln போர்க்கப்பல் தாய்லாந்து துறைமுகத்தை வந்தடைந்தபோது, அதன் தோற்றம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் USS Abraham Lincoln போர்க்கப்பல் தாய்லாந்து துறைமுகத்தை வந்தடைந்தபோது, அதன் தோற்றம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சான் டியாகோவிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் தாங்கிக் கப்பல், சுமார் 1,100 அடி நீளமுடையது. 

286 நாட்கள் கடலில் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டதன் பின்னர், அதன் நீர்மட்டப் பகுதியில் முழுவதும் துருப்பிடித்த தடங்கள் காணப்பட்டன.
</p><h2>பல மாத கால போர்&nbsp;</h2><p>
இந்தக் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தாலும், கடற்படை நிபுணர்கள் இதை எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாகவே தெரிவித்துள்ளனர்.</p><p> 

அமெரிக்க கடற்படையின் தகவலின்படி, இந்தக் கப்பல் 286 நாட்கள் கடலில் இருந்ததுடன், மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான பல மாத கால போர் மற்றும் முற்றுகைப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52885aee-a1b6-4521-81b2-385fbb495055/26-6a9b246cb344e.webp' /></p><p>
</p><p>
முன்னாள் அமெரிக்க கடற்படை கப்டன் கார்ல் ஷஸ்டர் CNN-க்கு கருத்து தெரிவிக்கையில், 60 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ச்சியாக கடலில் செயல்பட்ட கப்பலில் நீர்மட்டப் பகுதியில் துருப்பிடிப்பது அசாதாரணமானது அல்ல எனக் கூறியுள்ளார்.
</p><p>
கப்பல் கடலில், குறிப்பாக போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இந்தத் துருப்பிடிப்பை சரிசெய்வது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் அவர் விளக்கியுள்ளார்.</p><p>

இதனை சரிசெய்ய, பணியாளர்கள் கப்பலின் நீர்மட்டப் பகுதிக்கு கீழே சென்று துருவை அகற்றி, துருப்பிடிப்பைத் தடுக்கும் இரண்டு அடுக்கு பூச்சுகளைப் பூசி, அதன் பின்னர் கடற்படை பயன்படுத்தும் சாம்பல் நிற பெயிண்டின் இரண்டு அடுக்குகளை பூச வேண்டும்.</p><h2>குறுகிய கால பயண இடைநிறுத்தம்</h2><p>

கார்ல் ஷஸ்டரின் கூற்றுப்படி, துருவை முழுமையாக அகற்றி கப்பலை சீரமைக்க சுமார் 30 நாட்கள் தேவைப்படலாம்.

சில அவசர சீரமைப்புப் பணிகள் தாய்லாந்தில் கப்பல் தரித்திருக்கும் காலத்திலேயே ஆரம்பிக்கப்படலாம். </p><p>இருப்பினும், குறுகிய கால பயண இடைநிறுத்தம் என்பதால் மிக அவசரமான பகுதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7943da85-9ba9-45ca-8c50-084f3ceeacee/26-6a9b246d6c0b6.webp' /></p><p>

USS Abraham Lincoln, பாங்கொக்கிற்கு தெற்கே தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள லேம் சபாங் துறைமுகத்தை புதன்கிழமை சென்றடைந்தது.</p><p>

 இந்தப் பயணம் சில நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நீண்ட கால கடற்படைப் பணிக்குப் பின்னர் கப்பல் பணியாளர்களுக்கு கிடைக்கும் முதல் முறையான ஓய்வு காலமாகவும் இது அமைந்துள்ளது.</p><h2>யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்</h2><p>

கப்பல் தொடர்ந்து கடலில் பயணிக்கும் போது உப்பு நீர் மற்றும் கடல் அலைகளின் தாக்கத்தால் முன்பகுதி மற்றும் நீர்மட்டப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், எனவே அந்தப் பகுதிகளுக்கு முதலில் சீரமைப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
துருப்பிடிப்பை அப்படியே விட்டுவிட்டால், அது மேலும் பரவி கப்பலின் கட்டமைப்பை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee004bc6-6eb5-4bb2-8c63-2ae65287e304/26-6a9b246e2946c.webp' /></p><p>

இதனிடையே, USS Abraham Lincoln-ன் நீண்டகால பணியுடன் தொடர்புடையதாக மேலும் சில பிரச்சினைகளும் வெளியாகியுள்ளன. </p><p>

விநியோகப் பற்றாக்குறையால் பணியாளர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது ஒரு பணியாளர் கப்பலில் இருந்து கடலில் விழுந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கப்பலில் நிலவும் சூழ்நிலை தொடர்பான கவலைகளை நிராகரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T20:05:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் திடீரென பற்றி எரிந்த பனந்தோப்பு! களத்தில் பொலிஸார் - கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-in-banana-grove-in-katukkaraman-1788548286"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-in-banana-grove-in-katukkaraman-1788548286</id>
            <summary type="text">தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில்
காணப்பட்ட பனந்தோப்பில் தீப்பரவல் இன்று(4) மாலை திடீரென
தீப்பரவல் ஏற்பட்டது.உட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில்
காணப்பட்ட பனந்தோப்பில் தீப்பரவல் இன்று(4) மாலை திடீரென
தீப்பரவல் ஏற்பட்டது.</p><p>உடனடியாக பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த தீயை கட்டுப்படுத்த
நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.</p><h2>தீப்பரவல்</h2><p>

எனினும் தீ பரவ ஆரம்பித்துள்ளமையினால் தொடர்ந்து பொலிஸார் மற்றும்
கடற்படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68415ebb-780d-4a52-9523-0c4d4f380819/26-6a9b1a02ac2fb.webp' /></p><p>
</p><p>
அருகில் மக்களின் குடியிறுப்புகள் காணப்படுகின்ற மையினால் மக்களின்
குடியிருப்புகளுக்கு தீ பரவாத வகையில் கட்டுப்படுத்த தலைமன்னார் பொலிஸார்
மற்றும் கடற்படையினர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T20:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/travel-ban-imposed-on-three-individuals-1788547606"></link>
            <id>https://tamilwin.com/article/travel-ban-imposed-on-three-individuals-1788547606</id>
            <summary type="text">மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

கடந்த 2015ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது இரத்தினபுரியில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.</p><h2>வெளிநாட்டுப் பயணத்தடை</h2><p>

முன்னதாக, இரத்தினபுரி மேல் நீதிமன்றம் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர், அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்திருந்தது.</p><p>

தற்போது, அந்த விடுதலைத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f8c2ba-9eca-4bf2-ab7e-7cfc957cd7b6/26-6a9b13f38cb3e.webp' /></p><p>
அதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> அத்துடன், அவர்களுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T19:34:52+00:00</updated>
        </entry>
    </feed>
