<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-13T20:37:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்பின் 'ட்ரூத் சோஷியல்' செயலி மீது தொடரப்பட்டுள்ள வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-truth-social-faces-lawsuit-over-100-000-news-1786649713"></link>
            <id>https://tamilwin.com/article/trump-truth-social-faces-lawsuit-over-100-000-news-1786649713</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் &#039;ட்ரூத் சோஷியல்&#039; சமூக வலைத்தளத்தில்,
அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் &#039;Truth API&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளத்தில்,
அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் 'Truth API'
எனும் புதிய சேவைக்கு எதிராக நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.</p><p>

'தி இன்டர்செப்ட்' (The Intercept) மற்றும் 'ஃபிரீடம் ஒஃப் தி பிரஸ்
ஃபவுண்டேஷன்' (Freedom of the Press Foundation) ஆகிய இரண்டு அமெரிக்க ஊடக
அமைப்புகள் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.</p><h2>&nbsp;ட்ரம்பின் 'ட்ரூத் சோஷியல்'</h2><p>

மாதத்திற்கு 100,000 டொலர் (சுமார் 74,000 பவுண்டுகள்) வரை கட்டணம்
வசூலிக்கும் இந்தச் சேவையின் மூலம், சந்தைப் பொருளாதாரத்தை பாதிக்கும்
ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்புகள் சிலருக்கு மட்டும் முன்கூட்டியே கிடைப்பதாக
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e76574fc-96ea-41e8-b950-6aa272671e6c/26-6a7e1e816b366.webp' /></p><p>

இது "மிகவும் ஊழல் நிறைந்தது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது"
என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ள 'ட்ரம்ப் மீடியா எண்ட் டெக்னாலஜி குரூப்' (TMTG),
ஜனாதிபதியை தணிக்கை செய்யும் நோக்கத்துடன் "இடதுசாரி செயற்பாட்டாளர்கள்"
நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

தற்போது வரை 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த அதிவேக சேவைக்கு சந்தா
செலுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை இதற்கான அதிகாரப்பூர்வ
விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-13T20:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் சர்ந்சையை ஏற்படுத்தியுள்ள ஆடை விவகாரம்..! யாரும் அறியாத திடுக்கிடும் தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877"></link>
            <id>https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
 
இந்த நிலையில், அரசு ஊழிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p> 
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் கடமையின் போது அனுமதிக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும், இது குறித்து 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் (RDHS) இருப்பதன் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் வைத்தியசாலைப் பெயர்களில் உள்ள மாற்றங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.</p><p>

இந்த விவாதம் எந்த ஒரு மதத்திற்கும் அல்லது இனத்திற்கும் எதிரானது அல்ல என்றும், சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதே அவசியம் எனவும் சமூக மட்டங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அரச ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளை (Uniform) மட்டுமே பணி நேரத்தில் அணிய வேண்டும் என்று இலங்கையின் பொது நிர்வாக மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகள் வலியுறுத்துகின்றன.

 குறிப்பாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை (கடித இலக்கம்: 2/176/212), சுகாதாரப் பணி உதவியாளர்கள் மற்றும் கனிஷ்ட தர ஊழியர்கள் முழங்கால் வரை இருக்கும் ஆடைகளை (Cream colour gown) அணிய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது.</p><p>

 எந்தவொரு மத அல்லது இன ரீதியான அடையாளங்களையும் அல்லது உடைகளையும் பணி நேரத்தில் அணிய அனுமதி இல்லை என்றும், அரசியலமைப்பு மத சுதந்திரத்தை வழங்கினாலும், அரச கடமைகளில் சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுவது கட்டாயம் என்றும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 குறித்த சீருடைகளை அணியத் தவறும் ஊழியர்களுக்கு எதிராக அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இந்தச் சுற்றறிக்கையின் கட்டாய விதிமுறையாக உள்ளது.
</p><p>
இந்த விதிமுறைகள் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் பொதுவானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mqj0Hav3DsQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T19:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் ‘படுகொலை சதி’ எச்சரிக்கை: ட்ரம்பின் விமான மாற்றத்தின் அதிரவைக்கும் பின்னணி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-jet-switch-after-israel-s-iran-warning-1786643461"></link>
            <id>https://tamilwin.com/article/trump-jet-switch-after-israel-s-iran-warning-1786643461</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பியபோது, ஈரான் தரப்பிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பியபோது, ஈரான் தரப்பிலிருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து ரகசியமாக விமானம் மாற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இஸ்ரேல் வழங்கிய உளவுத்தகவலின்படி, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை நோக்கி ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>ட்ரம்பின் பாதுகாப்பு</h2><p>

இதையடுத்து, ட்ரம்பின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவு, அவரை பெரிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து சிறிய ராணுவ விமானத்திற்கு ரகசியமாக மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால், இந்த அச்சுறுத்தல் தொடர்பான இஸ்ரேலிய உளவுத்தகவல் குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d734b81d-7149-4481-8c42-9a82a8ee265c/26-6a7e1252a5f71.webp' /></p><p>

 CIA ஆய்வாளர்கள் இந்தத் தகவல் போதுமான ஆதாரங்களைக் கொண்டதாக இல்லை என மதிப்பிட்டதுடன், தங்களது சந்தேகத்தையும் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக Washington Post செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும், அச்சுறுத்தல் தொடர்பான தகவல் ஒரே ஒரு ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதும், உறுதிப்படுத்தப்படாததும், குறைந்த நம்பகத்தன்மை கொண்டதுமாக இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
துருக்கி பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியதாகவும், அங்காராவில் ட்ரம்பை படுகொலை செய்யும் குறிப்பிட்ட சதித்திட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கை</h2><p>
</p><p>

ட்ரம்பின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் முக்கிய அதிகாரியான ஸ்காட் பெசென்ட் ஆகியோர் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே பயணித்ததாகவும், ட்ரம்ப் மட்டும் வேறு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரூபியோ விமான மாற்றம் மற்றும் அதற்குப் பின்னிருந்த அச்சுறுத்தல் குறித்து அறிந்திருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

இஸ்ரேல் வழங்கிய இந்த எச்சரிக்கை, ட்ரம்பின் பாதுகாப்புக்காக மட்டுமே வழங்கப்பட்டதா அல்லது அமெரிக்காவின் பிராந்திய கொள்கை மற்றும் ட்ரம்பின் முடிவெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருந்ததா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d67e216-9616-405d-b512-85ca7fd6a93e/26-6a7e12535784e.webp' /></p><p>
</p><p>
சில அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், இந்த “படுகொலை சதி” எச்சரிக்கை உண்மையான அச்சுறுத்தலைத் தெரிவிப்பதைவிட, ட்ரம்பின் முடிவெடுப்பையும் மத்திய கிழக்கு தொடர்பான அமெரிக்க கொள்கையையும் பாதிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
துருக்கியில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ட்ரம்ப், புதிய கத்தார் பரிசாக வழங்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட விமானத்தை அங்கிருந்து முன்கூட்டியே அனுப்பிவிட்டு, பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஒரு பகுதி பயணத்தை மேற்கொள்வதாக கூறியிருந்தார்.</p><p>

ஆனால் பின்னர் வெளியான தகவலின்படி, ட்ரம்ப் அந்த பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கவில்லை. பத்திரிகையாளர்களும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப் அதே விமானத்தில் இருப்பதாக நம்ப வைக்கப்பட்ட நிலையில், அவர் ரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T19:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சட்டத்தரணி மணிவண்ணன் குறிப்பிட்ட விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-sudhumalai-amman-temple-dismissed-1786645361"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-sudhumalai-amman-temple-dismissed-1786645361</id>
            <summary type="text">சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காக
தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காக
தொடர்ந்து முன் நிற்பேன் என்று சட்டத்தரணியும் தமிழ் மக்கள் கூட்டணியினுடைய
துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். </p><p>வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;சுதுமலை அம்மன் கோவில் என்பது தமிழ் மக்கள் மத்தியிலே மிகவும் பிரபல்யமான
ஒருஆலயமாக இருக்கிறது.</p><p></p><h2>வேலைத்திட்டங்கள்</h2><p>தற்பொழுது அந்த ஆலயத்தினுடைய தர்ம கர்த்தார்கள் அந்த ஆலயத்தை முற்று முழுதாக
இடித்து அதனை அழித்துவிட்டு புதிதாக அதிலே கட்டடங்களை கட்டுவதற்கு
வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d71e040b-99f0-4171-a31b-3049f85a554d/26-6a7e0efbd55e6.webp' /></p><p>அதன் அடிப்படையிலேயே ஆலயத்தினுடைய பின்பகுதி முற்று முழுதாக இடித்து
அழிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்தக் கட்டுமானங்கள் பிரதேச சபையினுடைய எந்த விதமான அனுமதியும்
இல்லாமல் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.</p><p>குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் உடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
பொதுமக்கள் எல்லோரும் அமர்ந்திருந்து பார்த்த ஆலயத்தினுடைய முன் பகுதி
அதனுடைய கூரைகள் ஏறி இருந்து பார்த்தது எல்லாம் நீங்கள் பத்திரிகைகளில்
பார்த்திருப்பீர்கள்.</p><p></p><h2>வழக்கு தள்ளுபடி</h2><p> தேர் முட்டி போன்றவற்றையும் இடித்தழிக்க
முற்படுகிறார்கள். தீர்மானம் எடுத்திருக்கிறார்கள் என்ற வகையிலே தமிழ்
தேசியத்தை நேசிக்கின்ற தரப்புக்கள் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று
என்னோடு அணுகினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509a266a-4a06-4040-9f5d-7596017f3dc5/26-6a7e0efc9545f.webp' /></p><p>ஆகவே அதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை அம்மன் கோவில் உடைய
முன்பகுதியை காப்பாற்றுகின்ற நோக்கத்தோடும், மேலதிகமாக இடித்து அழிப்பதை
தடுத்து நிறுத்துகின்ற நோக்கத்தோடும் இந்த வழக்கை நாங்கள் தாக்கல்
செய்திருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு
இருக்கின்றார் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:07:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தூதுவரை வெளியேற்றக் கோரி கனடாவில் 70,000 பேர் கையெழுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-sign-petition-expulsion-of-us-ambassador-1786642349"></link>
            <id>https://tamilwin.com/article/canada-sign-petition-expulsion-of-us-ambassador-1786642349</id>
            <summary type="text">கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி
நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி 70,000-க்கும் மேற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி
நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி 70,000-க்கும் மேற்பட்ட
கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>கனடாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கூடுதல் வரி</h2><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கனடாவை அமெரிக்காவின் '51-வது
மாநிலமாக' இணைப்பது குறித்துப் பேசிய கருத்துகளைத் தூதுவர் ஹோக்ஸ்ட்ரா
நியாயப்படுத்திப் பேசியதே இந்த எதிர்ப்பிற்குக் முக்கியக் காரணம் எனக்
கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca377534-424e-4067-9052-6fb6b7bb30ab/26-6a7e020f17b6d.webp' /></p><p>

கனடாப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதால்
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த மனு
விரைவில் கனடா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நடைபெற்ற கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-coordination-committee-meeting-1786640449"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-coordination-committee-meeting-1786640449</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.</p><p>

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில், மாவட்ட பழைய செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (13.08.2026) இந்த கூட்டம் நடைபெற்றது.</p><h2>&nbsp;ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்</h2><p>
</p><p>
மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9432c1c-8e38-44c6-b2a3-3d226b24cba1/26-6a7dfd43b2633.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, சட்டவிரோத கடற்றொழில், காலநிலை மாற்றத்தால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல், மானிய முறையில் எரிபொருள் வழங்குதல் மற்றும் கடற்றொழில் வளங்களை ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
</p><p>
இதன்போது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T17:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைக்கு எதிரான முன்மொழிவை நிராகரிக்க வலியுறுத்திய சுவிஸ் அரசு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/swiss-government-urged-parliament-european-1786637701"></link>
            <id>https://tamilwin.com/article/swiss-government-urged-parliament-european-1786637701</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான புதிய
உடன்படிக்கையைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘கொம்பாஸ்’ முன்மொழிவை
நிராகரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான புதிய
உடன்படிக்கையைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘கொம்பாஸ்’ முன்மொழிவை
நிராகரிக்குமாறு சுவிஸ் அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.</p><p>

கடந்த தலைமுறையில் இரு தரப்பு பொருளாதார உறவுகளில் மேற்கொள்ளப்படும்
மிகப்பெரிய மாற்றமாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகின்றது.
</p><p>
சுவிட்சர்லாந்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரச உடன்படிக்கைகள்
மீதான கட்டாய சனநாயக வாக்கெடுப்புகளின் அளவுகோலை விரிவுபடுத்துவதை இந்த
முன்மொழிவு இலக்காகக் கொண்டுள்ளது.</p><p></p><h2>சர்வதேச உடன்படிக்கை</h2><p>
</p><p>
எனினும், இந்த முன்மொழிவானது சட்ட நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதுடன்,
சுவிட்சர்லாந்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என ஆளும் பெடரல்
பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c2a4e37-edf5-4cb2-b31d-2805b9b584c1/26-6a7def2ca447f.webp' /></p><p>
</p><p>
சர்வதேச உடன்படிக்கைகளுக்கு வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவு மட்டுமின்றி,
26 கன்டன் மாநிலங்களின் பெரும்பான்மை ஆதரவும் பெறப்பட வேண்டும் என்ற நிலையை
இந்த முன்மொழிவு கோருகிறது.
</p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த ஐரோப்பிய
ஒன்றிய-சுவிஸ் ஒப்பந்தம் தற்போது சுவிஸ் நாடாளுமன்றத்தில் விவாதத்தில்
உள்ளதுடன், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் இது மக்கள் வாக்கெடுப்புக்கு
விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T16:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அரிதான நிகழ்வு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-sentences-carried-3-people-us-a-single-day-1786638861"></link>
            <id>https://tamilwin.com/article/death-sentences-carried-3-people-us-a-single-day-1786638861</id>
            <summary type="text">அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, ஒரே நாளில் மூன்று
பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

வெவ்வேறு கொலை வழக்குகளில் குற்றவாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, ஒரே நாளில் மூன்று
பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
</p><p>
வெவ்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அந்தோணி டாரெல்
ஹைன்ஸ் (66), ஜெரமி வில்லியம்ஸ் (41) மற்றும் கார்லோஸ் குயஸ்டா-ரோட்ரிக்ஸ்
(71) ஆகிய மூவருக்கும் முறையே டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய
மாநிலங்களில் ஊசி மூலம் விஷம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.</p><h2>அரிதான நிகழ்வு</h2><p>
</p><p>
அமெரிக்காவில் சமீபகாலமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது கணிசமாக அதிகரித்து
வருவதையே இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக சமூக ஆர்வலர்களும் சட்ட
நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b7d6db0-399d-42ba-b30d-3da6b32fd43c/26-6a7df44908dee.webp' /></p><p>
</p><p>
கடந்த 2021ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.</p><p>

கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மொத்த மரண தண்டனைகளில் சுமார் 40 சதவீதம்
புளோரிடா மாநிலத்தில் மட்டுமே நடந்துள்ளது.</p><h2>அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகள்&nbsp;</h2><p>
</p><p>
அம்மாநில ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கொண்டுவந்த சட்டத் திருத்தங்களே இதற்குக்
காரணம் எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/513bf0bb-fb5f-43c9-885e-fedcf04cd3c7/26-6a7df449b037d.webp' /></p><p>

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக் காலத்தில் மரண தண்டனைகளுக்கான தடைகளை
நீக்கி, கடுமையான தண்டனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததும் இதன் பின்னணியாகப்
பார்க்கப்படுகிறது.
</p><p>
அதேவேளையில், அமெரிக்க பொதுமக்களிடையே மரண தண்டனைக்கான ஆதரவு 52 சதவீதமாகக்
குறைந்துள்ளதாகவும், நீதிமன்ற நடுவர் மன்றங்கள் மரண தண்டனைத் தீர்ப்புகளை
வழங்குவது கணிசமாகக் குறைந்து வருவதாகவும் அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகள்
தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-13T16:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா - அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-rights-watch-urges-the-taliban-to-release-un-1786636083"></link>
            <id>https://tamilwin.com/article/human-rights-watch-urges-the-taliban-to-release-un-1786636083</id>
            <summary type="text">ஆப்கானிஸ்தானில் தலிபான் நிர்வாகத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள்
சபை மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்களை உடனடியாக
விடுவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்கானிஸ்தானில் தலிபான் நிர்வாகத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள்
சபை மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்களை உடனடியாக
விடுவிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>

பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளுக்காகச் செயற்படும் WCLRF அமைப்பின்
அலுவலகத்தை சோதனைக்குட்படுத்திய தலிபான் படையினர், அங்கிருந்த 6 ஆண் ஊழியர்களை
வலுக்கட்டாயமாகக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அத்துடன், ஹேராட் பகுதியில் ஐக்கிய நாடுகளின் உதவிப் பணிமனையின் இரு
ஆப்கான் ஊழியர்களும் தலிபான் உளவுத்துறையினரால் தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>கைதுகள்&nbsp;</h2><p>
</p><p>
இந்தக் கைதுகள் தொடர்பில் தமக்கு இதுவரை தெளிவான விளக்கங்கள் எதுவும்
வழங்கப்படவில்லை எனவும், கைது செய்யப்பட்டவர்களைச் சந்திப்பதற்கு
அனுமதிக்கப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவங்கள் மனிதநேய உதவிகளைப் பாதிக்கும் என மனித உரிமைகள்
கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b2272ef-e2d6-4d93-a3a3-e318b983e590/26-6a7de9b6ece55.webp' /></p><p>

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி 5 ஆண்டுகள்
பூர்த்தியடையவுள்ள நிலையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இருப்பினும், இந்தக் கைதுகள் குறித்து விரிவான தகவல்களைத் திரட்டி வருவதாக
தலிபான் அரசாங்கத்தின் தலைமைப் பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T16:01:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கடலில் மூழ்கி இலங்கை இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-dies-in-britain-1786636213"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-dies-in-britain-1786636213</id>
            <summary type="text">பிரித்தானியாவில் கடலில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பிரபல சுற்றுலாத் தலமான ஈஸ்ட் சசெக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சேண்ட்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் கடலில் மூழ்கி இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

பிரபல சுற்றுலாத் தலமான ஈஸ்ட் சசெக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சேண்ட்ஸ் கடற்கரையில் நேற்று முன்தினம் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.</p><p> 

லண்டனில் இருந்து குழுவாக சுற்றுலா சென்ற நிலையில், மூன்று பேர் கடலில் மூழ்கிய நிலையில் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 மீட்பு குழுவினர் </b></h2><p>எனினும் 18 வயதான பதின்ம வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8062e490-1145-4139-ac91-09934e06ebf3/26-6a7dea1e9f6e4.webp' /></p><p>16 வயதுச் சிறுவன் மற்றும் 24 வயது நபர் ஆகிய இருவர் பாதுகாப்பாகக் கரை திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் இளைஞனை காப்பாற்ற போராடினர். </p><p>

நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் இளைஞன் மீட்கப்பட்ட போதும், சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். </p><p>
 
இந்த உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். </p>]]></content>
            <updated>2026-08-13T16:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்: Mosab Yousef அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/usa-isreal-iran-mosab-yousef-1786631950"></link>
            <id>https://tamilwin.com/article/usa-isreal-iran-mosab-yousef-1786631950</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன.குறிப்பாக காஸா தொடர்பான ட்ரம்பின் 15 அம்ச சமாதான திட்டத்தை&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன.</p><p>குறிப்பாக காஸா தொடர்பான ட்ரம்பின் 15 அம்ச சமாதான திட்டத்தை&nbsp;இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பகிரங்கமாக நிராகரித்து விட்டதை தொடர்ந்து ட்ரம்பிற்கும்&nbsp; இஸ்ரேலிற்கும் இடையிலான உறவு மிகுந்த நெருக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது.</p><p>தாம் இல்லை எனறால் இஸ்ரேல் என்ற நாடு இருக்காது என்று ட்ரம்ப் கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் குறிப்பிட்டு இருந்தார்.</p><p>அத்தோடு, அமெரிக்காவின் உதவிகள் இல்லாமல் இஸ்ரேலினால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ட்ரம்ப் எச்சரித்து இருந்தார்.</p><p>இப்படிப்பட்ட பின்னணியில் தான் ஈரான் விடயத்திலும், உக்ரைன் சமாதான விடயத்திலும் ஒரு வெற்றியை அறிவிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்ற ட்ரம்ப் காசா விடயத்திலாவது ஒரு சமாதான வெற்றியை அறிவிக்க எதிர்பார்த்திருந்தார்.</p><p>இந்தநிலையிலே,&nbsp;காஸா தொடர்பான 15 அம்ச சமாதான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளதை அடுத்து&nbsp;நெதன்யாகுவிற்கும் ட்ரம்பிற்கும் தனிப்போர் ஆரம்பித்து விட்டது.</p><p>இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gJwLWLiY9mM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T15:27:20+00:00</updated>
        </entry>
    </feed>
