<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-25T18:33:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜுலை நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-commemoration-held-emotion-in-jaffna-1785000872"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-commemoration-held-emotion-in-jaffna-1785000872</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25.7.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25.7.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்
உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தலானது
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இதன்போது ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் நினைவுரைகள் இடம்பெற்றன.</p><p></p><h2>நினைவேந்தல்</h2><p>
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், குரல்
அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன், வேலன்
சுவாமிகள், ஜெபரட்ணம் அடிகளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்
பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர்,
பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், படுகொலை
செய்யப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசியம் சார் செயற்பாட்டாளர்கள் மற்றும்
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03f8aadd-5ffb-41b5-968d-bf9c1a58dd1b/26-6a64f3b2b6094.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவுக்கு புதிய சிக்கலா! அடிக்கடி வெளிநாடு சென்று வந்த முக்கியஸ்தர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-cid-law-and-order-namal-1785002637"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-cid-law-and-order-namal-1785002637</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய சட்டநடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.அத்தோடு, கோட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய சட்டநடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.</p><p>அத்தோடு, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒரு சம்பள மற்றும் அரச நிதி தொடர்பான விவகாரம் தற்போது மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இந்தநிலையிலே,&nbsp;கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் மாலக்க சந்திரதாஸ் என்பவர் கொழும்பு மத்திய புலனாய்வுப்பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.</p><p>முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தொடர்பான சம்பவம் குறித்து சிஐடியினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.</p><p>அத்தோடு, கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில்&nbsp; சுகீஸ்வர பண்டார அடிக்கடி சீனா சென்று வந்துள்ளதாகவும் அந்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்த வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ii4CdKrNkJE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-area-1784992488"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-area-1784992488</id>
            <summary type="text">புதிய இணைப்புதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.களுபோவில மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>களுபோவில மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு- பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக&nbsp;பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed98a2c0-9df8-419c-9af4-d3d671702bf3/26-6a64d4b4846ed.webp' /></p><p>இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிரிஸ்வெவ காட்டுக்குள் விறகு சேகரிக்கச் சென்ற மூவர் கைது: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-arrested-for-collecting-firewood-in-miriswewa-1784999663"></link>
            <id>https://tamilwin.com/article/3-arrested-for-collecting-firewood-in-miriswewa-1784999663</id>
            <summary type="text">மிரிஸ்வெவ காட்டுப் பகுதிக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில்
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிரிஸ்வெவ காட்டுப் பகுதிக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில்
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​</p><p>திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்வெவ காட்டுப் பகுதியில்,
வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட
அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

​</p><p>யுத்த காலத்திற்கு முன்னர் தங்களது மூதாதையர்கள் மிரிஸ்வெவ மற்றும்
புளியங்குளம் ஆகிய பகுதிகளில் விவசாயம் செய்து வந்ததாகப் பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
</p><p>
இந்தக் காணிகளை மீண்டும் தங்களுக்கு மீட்டுத் தருமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கை
விடுத்து வருகின்ற போதிலும், வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களை
அப்பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23a68c6c-fe0a-4f29-aad6-ac17f081bad5/26-6a64eef201b28.webp' /></p><p>பொதுமக்கள் வருடா வருடம் அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த
போதிலும், திணைக்கள அதிகாரிகள் அவர்களை அச்சுறுத்தி, அவர்கள் மீது வழக்குத்
தாக்கல் செய்து நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதாக அப்பாவி மக்கள்
வேதனை வெளியிடுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் யாரும் தங்கவில்லை! ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-outsiders-staying-at-the-presidential-palace-1784999439"></link>
            <id>https://tamilwin.com/article/no-outsiders-staying-at-the-presidential-palace-1784999439</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.</p><h2>உத்தியோகபூர்வ அறிக்கை</h2><p>

'2025 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் சுமார் 3,089 பேரளவிலான பல்வேறு நபர்கள் தங்கியிருந்தனர்' என செய்தியொன்று வெளியாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fee928d-9fbc-484e-87aa-750193f3db30/26-6a64ee10ca2f6.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் குறித்த செய்தியை முற்றிலும் நிராகரித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகங்களில் உள்ள ஏனைய கட்டிடங்களில் பாதுகாப்புப் பிரிவினர், ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளே தமது உத்தியோகபூர்வ தேவைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்த அதிகாரிகளில் எவரும் ஜனாதிபதி மாளிகைகளைத் தங்குவதற்காகப் பயன்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றங்களிலிருந்து தப்பவே ரணில் - சஜித் கூட்டிணைவு! அரசுக்குச் சவாலாகாது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-sajith-alliance-to-escape-crimes-1784997790"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-sajith-alliance-to-escape-crimes-1784997790</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸவும் மீண்டும் ஒன்றிணைவது தற்போதைய அரசுக்கு எந்தவிதமான சவாலையோ
அல்லது தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸவும் மீண்டும் ஒன்றிணைவது தற்போதைய அரசுக்கு எந்தவிதமான சவாலையோ
அல்லது தாக்கத்தையோ ஏற்படுத்தப்போவதில்லை என்று சுகாதார மற்றும் வெகுசன
ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அமைதியாக குறிப்பெடுத்த சஜித்&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>"முன்னர் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோதே எதையும் சாதிக்க முடியாமல்
பிரிந்து சென்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் இணைவதால் புதிதாக எதையும்
சாதித்துவிட முடியாது. இதனை ஒரு சமமான அரசியல் கூட்டிணைவாகப் பார்க்க முடியாது.</p><p>

கடந்த வியாழக்கிழமை இருவரும் எதிர்க்கட்சிகளைச் சந்தித்தபோது, ரணில்
விக்ரமசிங்க கட்டளைகளைப் பிறப்பிக்க, சஜித் பிரேமதாஸ அவற்றை அமைதியாகக்
குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதே தெரிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e74ef65-0b34-44bc-b0c9-149f17e564ac/26-6a64e79fa491c.webp' /></p><p> </p><p>ரணில் விக்ரமசிங்க தனது
அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்தி அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தித்
தன்னைத் தலைவராகக் காட்டியுள்ளார். இதன் மூலம் சஜித் பிரேமதாஸவை இரண்டாம்
இடத்துக்கும் கீழே அவர் தள்ளிவிட்டார்.
</p><p>
மேலும், ரணில் - சஜித் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவித்த நபர்களைக் கவனித்தால், அங்கிருந்த அனைவரும் ஏதேனும் ஒரு வழக்கில்
தொடர்புடையவர்களாகவோ, பிணையில் உள்ளவர்களாகவோ அல்லது சந்தேகநபர்களாகவோ மட்டுமே
இருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1663011-8cd8-4c02-8763-87a7b23577e2/26-6a64e7a056de7.webp' /></p><p>
</p><p>
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்கள் மூலம் விசாரணைகள்
தீவிரப்படுத்தப்பட்டு, வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில்,
எதிர்க்கட்சியினரின் சட்டவிரோதச் செயல்களும் குற்றப் பின்னணிகளும்
வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.</p><p> இவ்வாறான குற்றச்சாட்டுக்களிலிருந்து
தப்பிக்கும் நோக்கிலும், பயத்திலுமே சஜித், ரணில் மற்றும் நாமல் உள்ளிட்டோர்
பதற்றமடைந்து ஒன்றாகச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T16:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை எப்போதும் எனது இரண்டாவது தாய்நாடு போன்றது! சீனத் தூதுவர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sl-always-like-a-second-motherland-qi-zhenhong-1784995309"></link>
            <id>https://tamilwin.com/article/sl-always-like-a-second-motherland-qi-zhenhong-1784995309</id>
            <summary type="text">இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிவிட்டுப் பிரியாவிடை பெற்றுச்
செல்லவிருக்கும் கீ சென்ஹொங், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துக் கலந்துரையாடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிவிட்டுப் பிரியாவிடை பெற்றுச்
செல்லவிருக்கும் கீ சென்ஹொங், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><p>

சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய
தூதுவர் கீ சென்ஹொங், எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்குத்
தொடர்ந்து ஆதரவளிக்கத் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.</p><p> மேலும், இலங்கை
மக்கள் தனக்கு வழங்கிய அன்பு, அக்கறை மற்றும் விருந்தோம்பலைத் தான் எப்போதுமே
மறக்க முடியாது எனவும், "இலங்கை எப்போதும் தனது இரண்டாவது தாய்நாடு போன்றது"
எனவும் அவர் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>இருதரப்பு உறவு</h2><p>

இலங்கையில் தூதுவராக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளுக்கும், இரு
நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும்
வலுப்படுத்த அவர் வழங்கிய பங்களிப்புக்கும் சபாநாயகர் மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்தார். </p><p>அரசு முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தும், தேசிய ஒற்றுமையை
மேம்படுத்துதல், இனவாதத்திற்கு இடமளிக்காமல் அனைத்துப் பிரஜைகளையும் சமத்துவம்
மற்றும் கண்ணியத்துடன் நடத்துவதற்கான அரசின் உறுதிப்பாடு தொடர்பிலும்
சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde07ce0-db8e-496b-b8f2-9b1772829fe2/26-6a64e01ed3baa.webp' /></p><p>
</p><p>
இந்தச் சந்திப்பின்போது, இலங்கை - சீனா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்துவது குறித்துக் கருத்துப் பரிமாறப்பட்டது.</p><p> </p><p>குறிப்பாக, இலங்கையின்
போக்குவரத்துத் துறை மற்றும் வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தை தொடர்பிலும்
விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டின் நிலையான அபிவிருத்திக்குச் சீனாவின்
தொடர்ச்சியான ஆதரவையும் சபாநாயகர் கோரினார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T16:25:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி கருணாநாயக்க விரைவில் கைதாகலாம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-karunanayake-will-be-arrested-soon-1784992178"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-karunanayake-will-be-arrested-soon-1784992178</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;
நாடாளுமன்ற உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>&nbsp;விரைவில் கைது</h2><p>
</p><p>
2015 முதல் 2019 வரை, தேசிய லொத்தர் சபையின் மூன்று ஊழியர்களை ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர்களாகப் பணியாற்ற சட்டவிரோதமாகப் பணியமர்த்திய குற்றச்சாட்டின் பேரில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/542d8ce8-5ae9-4abd-a23c-1050225a68a2/26-6a64d3feb6500.webp' /></p><p>
</p><p>
வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவராக இருந்த சட்டத்தரணி ஷர்மிலா பெரேரா, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்னதாக அழைக்கப்பட்டிருந்தார்.</p><p></p><h2>நெருக்கமான வட்டாரங்கள்</h2><p> </p><p>அதன்போது சம்பவம் இது தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அதே நாளில் அவருக்குப் பிணை வழங்கியது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d679725-c89f-43bc-be2f-858b10f3a59e/26-6a64d3fe032f2.webp' /></p><p> </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, மேற்குறித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அழைக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் அவரைக் கைது செய்யவும், பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூகுள் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டொலர் அபராதம் : ட்ரம்ப் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1-billion-fine-for-google-trump-european-union-1784987736"></link>
            <id>https://tamilwin.com/article/1-billion-fine-for-google-trump-european-union-1784987736</id>
            <summary type="text">கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை
அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் 1
பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை
அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் 1
பில்லியன் டொலர் (சுமார் 890 மில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தை சட்டத்தை கூகுள் மீறியதாக இந்த அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கூகுள் நிறுவனம்</h2><p>

கூகுள் நிறுவனம் தனது தேடல் பக்கங்களில் பிற நிறுவனங்களின் சேவைகளை விடத் தனது
ஷொப்பிங், சுற்றுலா மற்றும் பிற சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், பிளே
ஸ்டோர் மூலம் பிற ஆப் உருவாக்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை
நேரடியாக வழங்குவதைத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febeba52-be44-4d87-b42c-3341943cfe9c/26-6a64c1abd37d5.webp' /></p><p>

இந்த முடிவுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைத்துச்
செயல்படுவதாகவும், அமெரிக்கா ஐரோப்பாவிற்கான பணப்பெட்டி அல்ல என்றும்
சாடியுள்ளார்.</p><p>

மேலும், சட்டவிரோதமான இந்த நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய
விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்றும், விரைவில் ஐரோப்பிய பொருட்கள் மீது
கணிசமான வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>வணிக நடைமுறைகள்</h2><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிக நடைமுறைகள் குறித்து விசாரிக்க அமெரிக்க வர்த்தகப்
பிரதிநிதி அலுவலகத்திற்கு உத்தரவிடப் போவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62e778e-9033-4367-90d7-a2e8dfd128e5/26-6a64c1ac87da0.webp' /></p><p>
</p><p>
கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் கென் வாக்கர், இந்தத்
தீர்ப்பு நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தைக் குறைக்கும் வகையில்
உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றிப் பேசுகின்றார்கள் - சாடிய பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-harini-statement-about-black-july-1784980874"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-harini-statement-about-black-july-1784980874</id>
            <summary type="text">இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான் பல
படுகொலைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான் பல
படுகொலைகள் இடம்பெற்றன, அந்தச் சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற
வேண்டியவர்கள்தான் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றி பேசுகின்றார்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று (24.07.2026) நடைபெற்ற நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில்
உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் மிகவும் கவலைக்குரியது,
துரதிர்ஷ்டவசமானது. இதனை அரசு எப்போதுமே அலட்சியப்படுத்தவில்லை. முறையான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலே இந்த மோதலுக்கும் உயிரிழப்புக்கும் காரணம்
எனக் கூற முடியாது.</p><p></p><h2>அரசியல் நோக்கத்திற்காக கொல்லப்பட்ட சிறைக்கைதிகள்</h2><p> </p><p>சிறைச்சாலை மறுசீரமைப்பை ஒரே இரவில் முன்னெடுத்துவிட
முடியாது. எனினும், கட்டமைப்பில் காணப்படும் நெரிசல் மற்றும் ஆளணிப்
பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் அரச ஆதரவுடன் திட்டமிட்ட வகையில் சிறைச்சாலைகளில் மோதல்கள்
உருவாக்கப்பட்டு, அரசியல் நோக்கத்துக்காகச் சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da555f7-ce91-4abe-bde8-7c6fc53683e3/26-6a64d6cd80f08.webp' /></p><p>
</p><p>2022ஆம் ஆண்டில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரே சிறைச்சாலைக்குள் சென்று
கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த கலாசாரமே அன்று காணப்பட்டது. ஆனால்,
தற்போதைய ஆட்சியில் அவ்வாறான நிலை கிடையாது.
</p><p>
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் சிறைச்சாலை நெரிசல் பிரச்சினை தோற்றம்
பெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர்.
குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது குறைந்தபட்சமாவது நியாயமாக நடந்துகொள்ள
வேண்டும்&nbsp; என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் 36 நாட்கள் தத்தளித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-fishermen-rescued-bay-of-bengal-1784993158"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-fishermen-rescued-bay-of-bengal-1784993158</id>
            <summary type="text">வங்காள விரிகுடா கடலில் 36 நாள்களுக்கும் மேலாகத் தத்தளித்த நிலையில் இருந்த
இலங்கை கடற்றொழிலாளர்கள்&amp;nbsp; இருவர், பங்களாதேஷின் கொக்ஸ் பாசார் மாவட்டம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்காள விரிகுடா கடலில் 36 நாள்களுக்கும் மேலாகத் தத்தளித்த நிலையில் இருந்த
இலங்கை கடற்றொழிலாளர்கள்&nbsp; இருவர், பங்களாதேஷின் கொக்ஸ் பாசார் மாவட்டம் மஹேஷ்காலி
பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில், வங்காள விரிகுடாவின்
சோனாசார் பகுதிக்கு அருகில் படகு ஒன்றில் தத்தளித்த மேற்படி இருவரையும்
பங்களாதேஷ் கடற்றொழிலாளர்கள் கண்டுபிடித்து, தமது படகில் ஏற்றி மஹேஷ்காலி
கடற்கரைக்குப் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.</p><p></p><h2>இலங்கை கடற்றொழிலாளர்கள்</h2><p>

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இலங்கையின் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய
எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது 30 வயதுடைய மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8a7151e-3a1f-45f5-911f-bf399e06c214/26-6a64d6c771df1.webp' /></p><p>

உணவு மற்றும் குடிதண்ணீர் இன்றி 36 நாள்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்த
அவர்கள், பச்சையாக மீன்களை உணவாக உட்கொண்டு உயிர் தப்பினர் என்று
விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இவர்கள் எவ்வாறு கடலில் தத்தளித்தனர் மற்றும் உண்மையில் 36 நாள்கள் வங்காள
விரிகுடாவில் கழித்தார்களா என்பது குறித்துப் பங்களாதேஷ் அதிகாரிகள் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து,
அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன என்று பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:31:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்தளத்தில் கொலையில் முடிந்த வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-worker-was-beaten-to-death-1784988001"></link>
            <id>https://tamilwin.com/article/a-worker-was-beaten-to-death-1784988001</id>
            <summary type="text">புத்தளம் மாவட்டம், முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதம்குளம் பகுதியில்
நேற்று(24) வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் அடித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் மாவட்டம், முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதம்குளம் பகுதியில்
நேற்று(24) வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் அடித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே
உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
உயிரிழந்தவரும் சந்தேகநபரும் தென்னந்தோட்டமொன்றில் தொழிலாளர்களாகப் பணியாற்றி
வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7bbdbd4-15f7-4527-a7d8-3389689c038e/26-6a64c2d918eb0.webp' /></p><p> </p><p>அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையிலேயே
இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
</p><p>
தாக்குதலின்போது காயமடைந்த சந்தேகநபர், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ்
புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
சம்பவம் குறித்து முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:29:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: சகோதரி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-killed-accident-puliyankulam-sister-injured-1784990961"></link>
            <id>https://tamilwin.com/article/youth-killed-accident-puliyankulam-sister-injured-1784990961</id>
            <summary type="text">வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் அவரது சகோதரி
படுகாயமடைந்த நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p>அத்துடன் அவரது சகோதரி
படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.</p><p>குறித்த விபத்தானது இன்று(25.7.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>&nbsp;விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து வவுனியா நோக்கி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்களில்
பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் சென்று
கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது குறித்த
மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95d9e74b-3d1c-435b-9c50-02164b1c7124/26-6a64ccf3e99e9.webp' /></p><p>

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில்
சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
</p><p>
அவரது சகோதரி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:11:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் சர்ச்சையில் புதிய திருப்பம்! முடிவுக்கு வந்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cockroach-janta-party-withdraws-protest-1784991478"></link>
            <id>https://tamilwin.com/article/cockroach-janta-party-withdraws-protest-1784991478</id>
            <summary type="text">நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்ததாக காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p></p><h2>அடுத்தகட்ட பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் காக்ரோச் ஜனதா கட்சியினர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2c795c-b888-4210-bcc5-6042a46f0e59/26-6a64d10f46add.webp' /></p><p>
</p><p>
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இருதரப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.</p><p>

 மேலும், நான்கு வாரங்களுக்குள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.</p><p></p><h2>நீட் வினாத்தாள் கசிவு</h2><p>
</p><p>
இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நடைபெற்று வந்த போராட்டத்தை முடித்துக் கொள்வதாக காக்ரோச் ஜனதா கட்சியினர் அறிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70a22828-a2c0-4dd4-ba7c-77fc450d6df9/26-6a64d10ff12e1.webp' /></p><p>

இதேவேளை, நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, "அது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை" என தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:07:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறை: ஐ.நா அதிகாரி கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-s-violence-against-the-palestinian-people-1784989648"></link>
            <id>https://tamilwin.com/article/israel-s-violence-against-the-palestinian-people-1784989648</id>
            <summary type="text">ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக
அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து பாலஸ்தீனப்
பகுதி்க்கான ஐ.நா சிறப்புப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக
அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து பாலஸ்தீனப்
பகுதி்க்கான ஐ.நா சிறப்புப் பிரதிநிதி பிரான்செஸ்கா அல்பானீஸ் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடிமக்களும் இராணுவமும்
ஒன்றிணைந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><h2>வர்த்தக உறவு</h2><p>
</p><p>
இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அல்பானீஸ், காசா தொடர்
தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சூழலில், மேற்குக் கரையில் பாதுகாப்பற்ற அப்பாவி
மக்களுக்கு எதிராகப் படுகொலைகளும் கொடூர வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டு
வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99809d47-e2c8-432d-83c9-34844bc3a0d0/26-6a64c9e14a682.webp' /></p><p>
</p><p>
மேலும், சர்வதேசச் சட்டங்களின் விதிகளுக்கு உட்பட்டு, இஸ்ரேல் மீது உடனடியாக
ஆயுதத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும், அந்நாடனுடனான வர்த்தக உறவுகளை
நிறுத்த வேண்டும் என்றும் அவர் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் - ஸ்பெயினில் விஸ்வரூபம் எடுத்த காட்டுத்தீ: 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-escalate-in-france-and-spain-1784984828"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-escalate-in-france-and-spain-1784984828</id>
            <summary type="text">பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கட்டுக்கடங்காமல் பரவி
வரும் காட்டுத்தீ காரணமாக, சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள்
வீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கட்டுக்கடங்காமல் பரவி
வரும் காட்டுத்தீ காரணமாக, சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள்
வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
நிலைமையைச் சமாளிக்க பிரான்ஸ் சர்வதேச உதவியைக் கோரியுள்ள நிலையில், ஸ்பெயின்
தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது.
</p><p>பிரான்சின் போர்டோ மற்றும் கேப் ஃபெரட் உள்ளிட்ட தென்மேற்குப் பகுதிகளில்
காட்டுத்தீ அதிவேகமாகப் பரவி வருகிறது.

கிரோண்டே மற்றும் லேண்டெஸ் பிராந்தியங்களில் இருந்து இதுவரை 1,41,000க்கும்
அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தீவிர ஆலோசனை</h2><p>
</p><p>
நிலைமையைக் கட்டுப்படுத்த பிரெஞ்சு அரசு இராணுவத்தைக் களமிறக்கியுள்ளதுடன்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியையும் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b750830d-885c-4a45-91cf-4c9a99ed2a49/26-6a64b8b0226f8.webp' /></p><p>
</p><p>
தலைநகர் மாட்ரிட்டின் மேற்குப் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ தீயணைப்பு
வீரர்களின் கட்டுப்பாட்டைத் தாண்டி எரிகிறது.

பலத்த காற்று காரணமாக இரண்டு பெரிய தீப்பிழம்புகள் ஒன்று சேர்ந்து மாட்ரிட்
பிராந்தியத்தை அச்சுறுத்தி வருகின்றன.அங்கு 25,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>பிரதமர் பெட்ரோ
சான்செஸ் அவசர நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில்
ஈடுபட்டுள்ளார்.</p><p></p><h2>கடுமையான வறட்சி</h2><p>
</p><p>
பிரான்சின் பிரசித்தி பெற்ற கடற்கரை சுற்றுலாப் பகுதியான கேப் ஃபெரட்
தீபகற்பத்தில் இருந்து சாலை வழி அடைக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான மக்கள்
படகுகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1903238b-7626-4198-b0a7-7eba6798303d/26-6a64b8b0c802a.webp' /></p><p>
</p><p>
மே மாதம் முதல் ஐரோப்பாவைத் தாக்கி வரும் தொடர் வெப்ப அலைகள் மற்றும் கடுமையான
வறட்சியே இத்தகைய பெரும் காட்டுத்தீக்கு முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:28:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக்குழு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த பொலிஸ் அதிகாரி! மனைவி தொடர்பில் வழக்குத்தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-police-office-files-case-against-wife-1784940567"></link>
            <id>https://tamilwin.com/article/senior-police-office-files-case-against-wife-1784940567</id>
            <summary type="text">நாட்டை உலுக்கிய பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் பலரை கைது செய்த உயர் பொலிஸ் அதிகாரியொருவர், தனது மனைவியினால் வீட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டை உலுக்கிய பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் பலரை கைது செய்த உயர் பொலிஸ் அதிகாரியொருவர், தனது மனைவியினால் வீட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.</p><p>நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு அண்மையில் தலைமை தாங்கிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு நீதிமன்றின் உதவியை நாடியுள்ளார்.</p><p></p><h2>வீட்டு வன்முறை தொடர்பாக வழக்குத்தாக்கல் </h2><p>
</p><p>குறித்த உயர் பொலிஸ் அதிகாரி, தனது மனைவிக்கு எதிராக தொடர்ந்த வீட்டு வன்முறை வழக்கு தொடர்பாக அவரது மனைவி நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ உரைகளை சமர்ப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf89759-a4d7-44b9-ba69-e59f66bad80b/26-6a64409267cc4.webp' /></p><p>தனது மனைவியிடமிருந்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைச்செயல்கள் காரணமாக பாதுகாப்பு உத்தரவை வழங்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>தான் பணிபுரியும் இடத்திற்கு வந்து இடையூறு விளைவிப்பது, தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்வது மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுப்பது போன்ற காரணங்களால் தான் கடுமையான உளவியல் மற்றும் சுகாதார ரீதியிலான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
எவ்வாறாயினும், குறித்த பொலிஸ் அதிகாரியின் மனைவி, கணவரால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.</p><h2>நீதிமன்றில் எழுத்துப்பூர்வ கடிதம் தாக்கல்</h2><p> 
இது தொடர்பில் தனது சட்டத்தரணி ஊடாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
இது ஒரு வீட்டு வன்முறை அல்ல என்றும், கணவரின் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்காமை போன்ற காரணங்களை அடிப்படையாகக்கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தகராறு மட்டுமே என்றும் மனைவியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளரார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e24f9bf-82ad-47b2-9fba-52d8f39d64a1/26-6a6408191b65e.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>பொலிஸ் அதிகாரி குறிப்பிடுவது போன்ற வன்முறைச்சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்த எந்தவொரு மருத்துவ அறிக்கையோ அல்லது சுயாதீன சாட்சியங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் மனைவியின் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
இதற்கமைய, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு உத்தரவை இரத்து செய்யுமாறு அவர் நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
</p><p>குறித்த உயர் பொலிஸ் அதிகாரியின் தரப்பிலிருந்து இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பளை- மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/male-body-found-floating-in-the-gampola-river-1784988505"></link>
            <id>https://tamilwin.com/article/male-body-found-floating-in-the-gampola-river-1784988505</id>
            <summary type="text">கம்பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய –
பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ள பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய –
பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஆற்றின் கரையோரத்தில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள், உடனடியாக
இது குறித்துக் கம்பளைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>மீட்கப்பட்ட சடலம், நாவலப்பிட்டி சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48
வயதுடைய நபர் ஒருவருடையது என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மரணத்துகான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக
விசாரணைகளுக்கும் பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்துவதற்காகச் சடலம் கம்பளை ஆதார
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8be2ac43-411d-4cc3-8088-c9e4fb54aad7/26-6a64c51b529a7.webp' /></p><p>
</p><p>
சம்பவம் குறித்துக் கம்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warned-tamil-people-in-london-1784985953"></link>
            <id>https://tamilwin.com/article/police-warned-tamil-people-in-london-1784985953</id>
            <summary type="text">பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர்.</p><p> 

திருட்டு சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உட்பட பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இழந்துள்ளனர்.</p><h2><b> திருட்டு சம்பவங்கள்</b></h2><p>இவ்வாறான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30df7e02-9b25-4915-9e6f-9a6e150aaba7/26-6a64bead2c331.webp' /></p><p>இந்நிலையில் லண்டனின் ஈலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
</p><p>
வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், அங்கு யாரும் இல்லாத சமயங்களில் உள்நுழைந்து கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><b> 

முக்கியமான வழிமுறை</b></h3><p>பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி, வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02b0380-35fd-486b-816a-3bc2f934b4e0/26-6a64beadf3bf9.webp' /></p><p>திருட்டுச் சம்பவங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:</p>]]></content>
            <updated>2026-07-25T13:49:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் தலைவராக வோல்கர் டர்க் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/volker-t-rk-selected-as-un-human-rights-chief-1784986586"></link>
            <id>https://tamilwin.com/article/volker-t-rk-selected-as-un-human-rights-chief-1784986586</id>
            <summary type="text">அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு
மத்தியிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்த சர்வதேச வழக்கறிஞரான வோல்கர் டர்க் ஐக்கிய
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு
மத்தியிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்த சர்வதேச வழக்கறிஞரான வோல்கர் டர்க் ஐக்கிய
நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையராக இரண்டாவது முறையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>

1993-ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பதவி உருவாக்கப்பட்ட பிறகு,
தொடர்ச்சியாக இரண்டாவது முழு பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல்
நபர் என்ற பெருமையை வோல்கர் டர்க் பெற்றுள்ளார்.
</p><p>
ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் சமர்ப்பித்த முன்மொழிவின்
அடிப்படையில் ஐ.நா பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
இந்த வாக்கெடுப்பில் 144 நாடுகள் வோல்கர் டர்க்கிற்கு ஆதரவாகவும், 10 நாடுகள்
எதிராகவும் வாக்களித்தன. 13 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea6ea6cb-5b23-4415-9c9d-5f8eee343f8c/26-6a64bdd4eede6.webp' /></p><p>
</p><p>
வாக்கெடுப்பை அடுத்த வாரம் வரை ஒத்திவைக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியும்,
அவரது பதவிக் காலத்தை இந்த ஆண்டின் இறுதி வரை மட்டுமே நீட்டிக்க வேண்டும் என்ற
ரஷ்யாவின் கோரிக்கையும் பொதுச்சபையால் நிராகரிக்கப்பட்டன.
</p><p>
மனித உரிமைகள் ஆணையர் என்ற முறையில், உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீறல்களைப்
பகிரங்கமாக விமர்சித்ததே இவரது தேர்வுக்கு வல்லரசு நாடுகள் எதிர்ப்புகளைப்
பதிவு செய்ய முக்கியக் காரணமாக அமைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பல்கலைகழக முகாமைத்துவ கற்கைகள் பீட விரிவுரையாளர் பேராசிரியராகப் பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-university-lecturer-promoted-professor-1784984588"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-university-lecturer-promoted-professor-1784984588</id>
            <summary type="text">முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை
அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாதனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை
அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாதனா வைகுந்தவாசன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p>நேற்றைய தினம்(24) பல்கலைக்கழகப் பேரவையினால் வழங்கப்பட்ட ஒப்புதலை அடுத்தே இவர் இன்று(25.07.2026) பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பேராசிரியராக பதவி உயர்வு</h2><p>பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று 25 ஆம் திகதி சனிக்கிழமை,
துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c4191b-378e-4f9b-aa86-670ec7012355/26-6a64b832dd241.webp' /></p><p>
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை
அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சுற்றுலா மற்றும்
விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட
விரிவுரையாளருமான சாதனா வைகுந்தவாசனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத்
தேர்வு முடிவுகள் நேற்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அவற்றின்படி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும்,
சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாதனா
வைகுந்தவாசன், சந்தைப்படுத்தல் துறையில் பேராசிரியராகப் பதவி
உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ தளத்தில் உளவு! சீன வம்சாவளி கனடா பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-citizen-arrested-in-belgium-1784983787"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-citizen-arrested-in-belgium-1784983787</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ தளத்தில் பயிற்சிப் பணியாளராக பணியாற்றிய சீன
வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின்
பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ தளத்தில் பயிற்சிப் பணியாளராக பணியாற்றிய சீன
வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பெல்ஜியம் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மூன்றாம் நாடு ஒன்றிற்காக உளவு பார்த்ததாகவும், குற்றவியல் அமைப்பு ஒன்றில்
உறுப்பினராக இருந்ததாகவும் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அரசு வழக்கறிஞர்
தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கைது செய்யப்பட்டப் பெண்</h2><p>
</p><p>
இருப்பினும், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தற்போது
வெளிவிடப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5298fd9-6fe7-49bc-8b4b-7fce15de98bd/26-6a64b220a1adc.webp' /></p><p>பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள 'ஷேப்' எனப்படும் நேட்டோ இராணுவத்
தலைமையகத் தளத்தில் அந்தப் பெண் பயிற்சிப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:35:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுவாஞ்சிகுடி பகுதியில் பாரிய விபத்து - 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-kaluvanchigudi-10-people-injured-1784981797"></link>
            <id>https://tamilwin.com/article/accident-kaluvanchigudi-10-people-injured-1784981797</id>
            <summary type="text">மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட பத்துப்பேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட பத்துப்பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>

இந்த விபத்து இன்று(25.07.2026) காலை சம்பவித்துள்ளது.</p><p></p><h2>10 பேர் காயம்</h2><p>
</p><p>

மட்டக்களப்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற காரும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதியூடான போக்குவரத்து சுமார் அரை மணித்தியாலத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் போக்குவரத்தினை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/103e85ff-3f74-4935-ba8e-3a529868fb8e/26-6a64acd613caa.webp' /></p><p>

இந்த விபத்தில் கதிர்காமத்திற்கு சென்று கொண்டிருந்த குடும்பத்தினரே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேரும் காயமடைந்துள்ளனர்.
</p><p>
அத்துடன் லொறியில் பயணித்த மூன்று பேரும் படுகாயமைடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்! அதிகரிக்கும் மரணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-61-1784983752"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-61-1784983752</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது என்றும், இதுவரை பதிவான மொத்த டெங்கு
நோயாளர்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது என்றும், இதுவரை பதிவான மொத்த டெங்கு
நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது என்றும் தேசிய
டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
</p><p>
இந்த மாதத்தில் மாத்திரம் (ஜூலை 24ஆம் திகதி வரை) 25 ஆயிரத்து 530 டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>டெங்கு மரணம்</h2><p>
</p><p>
இந்த ஆண்டில் இதுவரை பதிவான தரவுகளின் அடிப்படையில், அதிகளவிலான டெங்கு
நோயாளர்கள் பதிவான மாவட்டங்கள் வருமாறு,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/805cb1d2-3315-4c3e-bc9a-f74b6b98f3d5/26-6a64b553d7fff.webp' /></p><p>
01. கம்பஹா மாவட்டம் - 17,135 நோயாளர்கள் (அதிகபட்சம்
02. கொழும்பு மாவட்டம் - 16,140 நோயாளர்கள்
03. மாத்தறை மாவட்டம் - 5,574 நோயாளர்கள்</p><p>

மாகாணங்களின் அடிப்படையில் பதிவான பாதிப்புகள் வருமாறு,</p><p>

01. மேல் மாகாணம் - 42,835 நோயாளர்கள் (அதிகளவான பாதிப்பு)
02. தென் மாகாணம் - 12,260 நோயாளர்கள்
03. மத்திய மாகாணம் - 6,924 நோயாளர்கள்</p><p>

டெங்கு நோய்ப் பரவலைக் தீவிரமாகக் கட்டுப்படுத்தப் பொதுமக்கள் அனைவரும்
தங்களது சுற்றுப்புறங்களைத் தொடர்ந்து தூய்மையாகப் பேணிப் பாதுகாக்குமாறு
சுகாதாரப் பிரிவினர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:09:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட சீனாவில் மண் சரிவு: 5 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-landslide-5-people-death-1784983180"></link>
            <id>https://tamilwin.com/article/china-landslide-5-people-death-1784983180</id>
            <summary type="text">வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில்
வீடு ஒன்று புதையுண்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில்
வீடு ஒன்று புதையுண்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர்
என சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா இன்று(25) செய்தி
வெளியிட்டுள்ளது.
</p><p>
ஹாங்டோங் கவுண்டியில் உள்ள ஹாவோயி கிராமத்தில் ஏற்பட்ட இந்த மண் சரிவில்
சிக்கிய 8 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அவசரக்கால முகாமைத்துவ அலுவலகம்
தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மண்சரிவில் சிக்கி ஐவர் உயிரிழப்பு</h2><p>மீட்கப்பட்டவர்களில் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதுடன் காயமடைந்த 3 பேர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
வெள்ளிக்கிழமை(24) மாலை 6:49 மணியளவில் ஏற்பட்ட இந்த மண் சரிவு வீட்டின் மீது விழுந்து அதை மூடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9608f1cc-0a19-46a9-a8e9-6bf0391aedca/26-6a64b011b73ea.webp' /></p><p>சம்பவ இடத்தில் பொலிஸார்,&nbsp; தீயணைப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர்
உட்பட 550-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும், லோடர்கள், கிரேன்கள், ட்ரோன்கள் மற்றும் உயிர் கண்டறியும் கருவிகள்
உட்பட 130க்கும் மேற்பட்ட உபகரணங்கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T12:51:16+00:00</updated>
        </entry>
    </feed>
