<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-27T01:36:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றனர் – பிரதீப்குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-are-with-npp-govt-says-pratheep-1785115105"></link>
            <id>https://tamilwin.com/article/people-are-with-npp-govt-says-pratheep-1785115105</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்க்கட்சியினர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனும் தற்போதைய அரசாங்கத்துடனுமே நிற்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47cbd9e8-fc6f-48cb-8cff-f155664c4fc3/26-6a66b1e2aaf45.webp' /></p><p>
</p><p>அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து எதிர்க்கட்சி முற்றிலும் அரசியல் ரீதியாக நலிவடைந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது என தெரிவித்துள்ளார்.
</p><p>அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பலமானதொரு எதிர்க்கட்சியை உருவாக்கவே முயல வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
இன்று எதிர்க்கட்சியைச் சுற்றி சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பிணையில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களே சூழ்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் இருக்கிறார்கள் எனவும், குறிப்பாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்களில் 95 சதவீதமானோர் அரசாங்கத்துக்கே ஆதரவாக உள்ளனர் எனவும் பிரதி அமைச்சர் பிரதீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T01:18:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளும் கட்சி உறுப்பினர் ஹசித நிரோசனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-stand-clearifiy-about-basl-prisident-1785114121"></link>
            <id>https://tamilwin.com/article/npp-stand-clearifiy-about-basl-prisident-1785114121</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராகி வருவதாக நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
</p><p>இந்த கருத்து , கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>நாடாளுமன்றத்தில் இவ்வாறான உரைகளை நிகழ்த்தும்போது அவை தனிப்பட்ட முறையில் இடம்பெறுவதாகவும், அந்த கூற்றுகளுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரையே சாரும் என்றும் அபேசிங்க சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/891abf95-202d-47cf-8df5-8577a6736292/26-6a66ae0bb01c9.webp' /></p><p>
இவ்விவகாரம் தொடர்பாக கட்சிக்குள் எவ்வித பொதுவான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் பயணம் எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் திகதி களுத்துறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும், அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மக்களுடன் இணைய எதிர்பார்ப்பதாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.</p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாக தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அது குறித்து மேலும் விவாதித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்து வரும் எதிர்ப்புகள் குறித்தும் கட்சியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T01:02:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையின் பயன்பாடு குறித்து வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-didnt-use-the-prisident-house-1785112631"></link>
            <id>https://tamilwin.com/article/anura-didnt-use-the-prisident-house-1785112631</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்தாத போதிலும் அதனை வேறும் நபர்கள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்தாத போதிலும் அதனை வேறும் நபர்கள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி அறுர தங்கவில்லை என்ற போதிலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் தங்கியிருந்ததாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. </p><p>
கடந்த 2025ம் ஆண்டில் இவ்வாறு ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 பேர் தங்கியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af450456-4464-4273-b160-462fc8500144/26-6a66a83927cdc.webp' /></p><p>
அந்அலுவலகம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில், இக்காலப்பகுதியில் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை 3 ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>நாடு முழுவதிலும் காணப்படும் 7 ஜனாதிபதி மாளிகைகளது மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
</p><p>கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டில் எந்தவொரு கூட்டமோ அல்லது தங்குதலோ இடம்பெறவில்லை என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எனினும், 2025 ஆம் ஆண்டில் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக ரூபா 2,447,754 செலவிடப்பட்டுள்ளது.</p><p>
ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்ட 7 மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
தேர்தல் காலத்திலுயே ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்தப் போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>இதேவேளை, இந்த ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருந்த நபர்கள் யார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T00:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் புதிய திட்டத்தை கடுமையாக விமர்சித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/private-bus-owners-association-criticizes-govt-1785111743"></link>
            <id>https://tamilwin.com/article/private-bus-owners-association-criticizes-govt-1785111743</id>
            <summary type="text">இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (SLTB) 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (SLTB) 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விமர்சித்துள்ளது.</p><p> இந்த நடவடிக்கை தனியார் பேருந்துத் தொழிலை மேலும் பாதிக்கும் ஒரு தேசியக் குற்றம் என்றும் அச்சங்கம் கூறியுள்ளது.</p><p>

</p><p>இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, "SLTB 6,000 பேருந்துகளைப் பெறுவதில் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.</p><p>ஆனால் வெறுமனே பேருந்துகளைச் சேர்ப்பது அரசால் நடத்தப்படும் போக்குவரத்துச் சேவையின் நிதி மற்றும் செயல்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்குமா?&nbsp;</p><p></p><h2>பிரச்சினைகளுக்கு தீர்வு&nbsp;</h2><p>அவர்கள் 600 பேருந்துகளைக் கொண்டு வந்தாலும் சரி, 6,000 பேருந்துகளைக் கொண்டு வந்தாலும் சரி, எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அதிக பேருந்துகளைக் கொண்டு வருவதால் மட்டும் SLTB ஒருபோதும் மீண்டு வராது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/098725da-25b5-4c2f-a3e9-465e89c40db0/26-6a66ab8391cfb.webp' /></p><p>
பொதுப் போக்குவரத்துப் பயணிகளில் கணிசமான பங்கை தனியார் பேருந்துகளே தொடர்ந்து ஏற்றிச் செல்கின்றன, முறையான சாத்தியக்கூறு மதிப்பீடு இல்லாமல் SLTB பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தனியார் நடத்துனர்களைப் பாதகமாகப் பாதிக்கும்.</p><p>

SLTB கிட்டத்தட்ட ரூபா தினசரி 2 கோடி பயணிகள் பயணம் செய்வதுடன், 2025ஆம் ஆண்டில் தொடருந்து திணைக்களமானது 47 பில்லியன் ரூபாய் செலவினத்திற்கு எதிராக 17 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் புள்ளிவிவரங்கள்&nbsp;சமர்ப்பிக்கப்பட்டன.&nbsp;</p><p>

கூடுதல் பேருந்துகளை வாங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், மாநிலப் போக்குவரத்தில் உள்ள செயல்திறன் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும்.&nbsp;</p><p>மேலும், பேருந்து சேவைகளின் விரிவாக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சங்கம் பரிசீலித்து வருகின்றது” என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T00:51:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-arrested-run-over-young-women-car-1785107240"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-arrested-run-over-young-women-car-1785107240</id>
            <summary type="text">இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>சந்தேக நபரான அந்த பிரதம ஆய்வாளர், நேற்று முன்தினம் இரவு (25) இரண்டு இடங்களில் இந்த விபத்துக்களை ஏற்படுத்தியதாகத் கூறப்படுகின்றது.</p><p></p><h2>தப்பிச் செல்ல முயற்சி..</h2><p>
</p><p>
பொலிஸ் தகவலின்படி, முதல் விபத்து ஹை லெவல் சாலையில் உள்ள மீகோட பெட்ரோல் நிலையம் அருகேயும், இரண்டாவது விபத்து வத்தரேக்க 20ஆவது தூண் பகுதியிலும் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07afb96d-deaf-4024-8b33-d7e19595a9c8/26-6a6696b649e1a.webp' /></p><p> சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி முதல் 11.57 மணிக்குள் இந்த இரண்டு விபத்துக்களையும் நிகழ்த்தி, இளம் பெண்கள் மீது மோதிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபரான பிரதம ஆய்வாளர் மதுபோதையில் காரை ஓட்டியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T23:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயானத்திற்குள் வெள்ளை ஆடையுடன் திடீரென நுழைந்த மர்ம நபர்கள்.. வெளியான திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-cemetery-guard-shooter-rider-arrested-1785104117"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-cemetery-guard-shooter-rider-arrested-1785104117</id>
            <summary type="text">தெஹிவலயில் உள்ள பொது மயானம் ஒன்றில் காவலரை மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவலயில் உள்ள பொது மயானம் ஒன்றில் காவலரை மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் என குற்றம் சாட்டப்படும் குறித்த நபர், நுவகொடவில் உள்ள டெல்கந்த சந்திப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
சந்தேக நபரிடமிருந்து 7,200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல்காரர்&nbsp;</h2><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான திஸநாயக்க முதியன்செலகே அவிஷ்க ஹெஷான் என்றழைக்கப்படும் போதியா வட்டே அவிஷ்காவின் நெருங்கிய கூட்டாளி என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98de6714-2831-4818-b6a5-bf8d02013d17/26-6a668a942f29e.webp' /></p><p>குறித்த மயானத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என்று நம்பப்படும் ஒருவரின் தந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்போது, ​​வெள்ளை உடை, பாதுகாப்பு தலைக்கவசங்கள் அணிந்திருந்த இருவரில் ஒருவர் கால்நடையாக வந்து பலமுறை சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T22:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பிக்கு நீரில் மூழ்கி பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-monk-drowns-a-tragic-death-1785099094"></link>
            <id>https://tamilwin.com/article/young-monk-drowns-a-tragic-death-1785099094</id>
            <summary type="text">&amp;nbsp;மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில்
நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று
பொலிஸார் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில்
நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில்
இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பௌத்த பிக்குகள்
சிலர், கிரிந்தி ஓயாவுக்கு நேற்று நீராடச் சென்றுள்ளனர்.</p><p> இவ்வாறு
நீராடிக்கொண்டிருந்த போதே மேற்படி பிக்கு எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிக்
காணாமல்போயுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
உடனடியாகப் பிரதேச மக்கள் அவரை மீட்டுத் தணமல்வில ஆதார வைத்தியசாலையில்
அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26615cfc-21e8-46fc-ba79-aedf9524124c/26-6a667e6d4290e.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தில் 18 வயதுடைய பிக்குவே உயிரிழந்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் ஊவா குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T21:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் - சஜித் - நாமல் அணியின் திட்டம்.. கடுமையாக சாடும் டில்வின் சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-ranil-namal-alliance-tilvin-critisized-1785101362"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-ranil-namal-alliance-tilvin-critisized-1785101362</id>
            <summary type="text">நீதிமன்ற வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ரணில், சஜித், நாமல்
தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கலாம் என மக்கள்
விடுதலை முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ரணில், சஜித், நாமல்
தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கலாம் என மக்கள்
விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
</p><p>
அவர் மேலும், 
"ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட
எதிர்க்கட்சியினர் புதிதாக ஒன்றிணையவில்லை. கடந்த காலங்களிலும் அவர்கள்
ஒன்றிணைந்தே செயற்பட்டார்கள். எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்த போதிலும் மக்கள்
அரசுடன்தான் இருக்கின்றார்கள்.</p><p></p><h2>எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவு&nbsp;&nbsp;</h2><p> </p><p>அண்மைய காலத்தில் வெளிவந்த தேர்தல் கருத்துக்
கணிப்பு முடிவுகளும் அதனைத்தான் உறுதிப்படுத்துகின்றன. தோல்வியடைந்த
அரசியல்வாதிகளின் கூட்டமாகவே எதிர்க்கட்சி காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32dc7a05-808a-48ee-989b-0e4ae0f6d558/26-6a667e5fc8d64.webp' /></p><p> </p><p>இதனால் எந்த
மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சியால் எங்களுக்கு எவ்வித சவாலும் இல்லை.
எதிர்க்கட்சியினர் தங்களை மாற்றிக்கொள்ள ஆயத்தமாக இல்லை, பழைய அரசியல் மற்றும்
பழைய சிந்தனைகளையே இன்னமும் பின்பற்றுகின்றார்கள்.</p><p> கடந்த வியாழக்கிழமை
எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பலருக்கு
எதிராக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் இருந்து
தப்பித்துக்கொள்வதற்காகவே அவர்கள் ஒன்றிணைந்திருக்கக்கூடும்.
</p><p>
எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்த போதிலும் நாட்டின் முன்னேற்றம் குறித்தோ அல்லது
எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தோ எவ்வித கலந்துரையாடல்களும்
நடத்தப்படவில்லை.</p><p> </p><p>மாறாக, வழக்குகளில் இருந்து எவ்வாறு தப்புவது மற்றும்
மீண்டும் எவ்வாறு அதிகாரத்துக்கு வருவது என்பது குறித்தே பேசினார்கள்.

எதிர்க்கட்சிகளின் இந்த நகர்வுகளால் அரசு ஒருபோதும் பின்வாங்காது, நாங்கள்
முன்னோக்கிச் செல்லும் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.</p><p></p><h2>மக்களின் தீர்மானம்&nbsp;&nbsp;</h2><p> </p><p>எதிர்க்கட்சியினர்
பின்நோக்கிச் சென்ற போதிலும், அரசு தான் வைத்த அடியை ஒருபோதும் பின்னுக்கு
வைக்காது நாட்டை கட்டியெழுப்பும் பணியைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa1bcd4-7e74-4183-8480-ced655b6970d/26-6a667e60812f6.webp' /></p><p>
</p><p>
நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எவருக்கும் பேரணி செல்லவோ,
ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ முழு உரிமை உண்டு. கடந்த காலங்களைப் போல்
அடக்குமுறைகள் ஏதும் பிரயோகிக்கப்பட மாட்டாது. இறுதியாக எதனை செய்வது என்பதை
மக்களே தீர்மானிப்பார்கள்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு முழுமையாகத் தயாராகவே உள்ளது.
</p><p>எனினும், சில சட்டப் பிரச்சினைகள் நிலவுகின்றன, அவை தீர்க்கப்பட்டவுடன்
தேர்தல்கள் நடத்தப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குக் கிடைக்கும்
தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவது இயல்பான ஒன்று. அது தவறான தகவல்
எனின், அதனை மறுப்பதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு.</p><p> நாடாளுமன்றத்தில்
எதிர்க்கட்சியினர் பல பொய்யான தகவல்களைத் தெரிவித்திருந்த போதிலும், தமக்குக்
கிடைக்கும் தகவல்களை வெளியிடும் உரிமை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு உண்டு." என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T21:38:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் - விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-150th-anniversary-of-victoria-college-1785101181"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-150th-anniversary-of-victoria-college-1785101181</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின்
இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் சனிக்கிழமை (25.07....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின்
இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் சனிக்கிழமை (25.07.2026) நடைபெற்றது.
</p><p>
பாடசாலை முதல்வர் திருமதி க.சுலபாமதியின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம
விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.</p><p>

இவ்விழாவின் பிரதான அம்சமாக விக்டோரியா கல்லூரியின் 150 ஆண்டு கால வரலாற்றைப்
பறைசாற்றும் 'விக்ரோறிய வித்தகம்' எனும் சிறப்பு மலர் உத்தியோகபூர்வமாக
வெளியிட்டு வைக்கப்பட்டது. </p><p>இந்நிகழ்வில் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின்
தவிசாளர் விக்ரோறியன் ச.ஜெயந்தன் மற்றும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர்
திருமதி ஜமுனா ராஜசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்
கலந்துகொண்டிருந்தனர்.</p><p>

மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்பு
நடனம், குழு இசை, 'பதம்' நடனம், சிங்களப் பாடல், 'காலிங்க நர்த்தனம்' நாட்டிய
நாடகம் மற்றும் 'துப்பல் பரிசு' நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள்
அரங்கேறிச் சபையோரைச் சிறப்பித்தன. </p><p>அத்துடன், மாணவர்களுக்கும்,
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய மாணவர்களுக்கும் இதன்போது விசேட பரிசில்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-07-26T21:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுக்கு இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-media-photographer-shanmugalingam-surendran-1785097832"></link>
            <id>https://tamilwin.com/article/senior-media-photographer-shanmugalingam-surendran-1785097832</id>
            <summary type="text">மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஷ்ட
உறுப்பினருமான சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஷ்ட
உறுப்பினருமான சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும்
ஆழ்ந்த வேதனையையும் தருகின்றது என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள
இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.
</p><p>
அதில், "சுமார் 40 வருடங்களுக்கு மேலாகச் சண்முகலிங்கம் சுரேந்திரன் பத்திரிகையின் புகைப்படப் பிடிப்பாளராகக் கடமையாற்றி, அண்மையில் தனது உடல்நிலை
காரணமாக ஓய்வு பெற்றிருந்த நிலையிலேயே, தனது 69 ஆவது வயதில் திருகோணமலையில் நேற்று காலமானார்.
</p><p>
திருகோணமலை, சாம்பல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சுரேந்திரன், கொழும்பு
மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்டே தனது புகைப்பட ஊடகப் பணியைச் செவ்வனே ஆற்றி
வந்தார்.</p><p></p><h2>பூதவுடல் நல்லடக்கம்&nbsp;</h2><p>

ஊடகத்துறையில் தன்னை இணைத்துக்கொண்டது முதல் தனது இறுதிமூச்சு வரை ஊடகப் பணியை
உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் எவ்வாறிருக்க
வேண்டும் என்பதற்கு அவர் சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7463538d-4806-4cd1-8f9b-d85592676069/26-6a6672ba3abaa.webp' /></p><p>
</p><p>
தனது புகைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்த சுரேந்திரன்,
தான் பணிபுரிந்த ஊடகத்தின் மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை
முன்னெடுத்தவர். யுத்த காலச் சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால்மிக்க
காலகட்டங்களில் கூட ஊடக நேர்மை தவறாமல் அயராது பணியில் ஈடுபட்டார்.
</p><p>
தனது துணிச்சலான, தனித்துவமான புகைப்படப் பணியின் மூலம் தமிழ் ஊடகங்களில்
தனிமதிப்பும் தமிழ் மக்களின் மனங்களில் தனி இடமும் பிடித்திருந்த
சுரேந்திரனின் மறைவு, தமிழ் ஊடகத்துறைக்கும் தமிழ் ஊடகவியலாளர்
ஒன்றியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக உள்ளது. </p><p>அன்னாரின் இழப்பால்
துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன்,
அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்." - என்று அதில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10
மணியளவில், இலக்கம் 08, நித்தியபுரி, மூன்றாம் கட்டை, திருகோணமலை என்ற
முகவரியில் நடைபெற்று, சாம்பல்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்
செய்யப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T20:49:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைளை தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-decides-political-actions-sajith-1785098488"></link>
            <id>https://tamilwin.com/article/government-decides-political-actions-sajith-1785098488</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக அவருக்கு எதிரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>

அதன் ஒரு கட்டமாக அவருக்கு எதிரான முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
</p><p>
அதன் மூலம் 'நீங்கள் அரசாங்கத்துக்கு எதிராக தீவிரமாக செயற்பட முயற்சித்தால் இதுதான் உங்களுக்கு நடக்கும்...' என்று சஜித்துக்கு ஒரு சமிக்ஞையை விடுக்க அரசாங்கம் நாட்டம் கொண்டுள்ளது.</p><p></p><h2>குற்றச்சாட்டு&nbsp;</h2><p> 2015-2019 நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பாக 3 விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/299e85b1-9a61-44dc-adb7-252d58c2ea7d/26-6a66724068bd3.webp' /></p><p> </p><p>அவற்றில் ஒன்று, சஜித்தின் பாரியார் ஜலனி பிரேமதாசவுக்குச் சொந்தமான அழகுநிலையத்தில் பணியாற்ற வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு முக்கியமானது.
</p><p>
இது தொடர்பாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அனைத்து வாக்குமூலங்களும் பெறப்பட்டிருந்தாலும், ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட 'சிவப்பு சமிக்ஞை' காரணமாக விசாரணை அப்படியே இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
தற்போது குறித்த விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கத் தரப்பு உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a228cccc-ec9e-4fba-a1d8-b586f43d620d/26-6a667241171e4.webp' /></p><p>

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு எதிராக கடந்த 23ம் திகதி எதிர்க்கட்சியின் சகல தலைவர்களையும் தனது அலுவலகத்தில் ஒன்றுகூட்டிய எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடு அரசாங்கத்துக்கு ஆழ்ந்த மன உளைச்சலைக் கொடுத்துள்ளது.</p><p> அதன் காரணமாகவே சஜித் பிரேமதாசவுக்கு எதிரான விசாரணைகளை தூசுதட்ட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T20:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் தேர்வு முறைகள் குறித்து முக்கிய நடவடிக்கை.. மோடி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-modi-task-force-exam-under-infosys-co-founder-1785093931"></link>
            <id>https://tamilwin.com/article/pm-modi-task-force-exam-under-infosys-co-founder-1785093931</id>
            <summary type="text">இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் சிறப்பு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், "மாணவர்களின் எதிர்காலத்திற்காக இந்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>புதிய சட்டம்..&nbsp;</h2><p> </p><p>இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடுமையான சட்டப் பிரிவுகளுடன் கூடிய புதிய சட்டத்தைக் கொண்டுவரும் திசையிலும் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc66099e-f4af-40f1-aab3-a933871b6617/26-6a6665d6ef11f.webp' /></p><p>
</p><p>
எனினும், நாம் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகளவில் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.</p><p>இதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநரான நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்டப் பணிக்குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:54:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனம் நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kavadi-dance-removed-dondra-vishnu-perahera-1785090319"></link>
            <id>https://tamilwin.com/article/kavadi-dance-removed-dondra-vishnu-perahera-1785090319</id>
            <summary type="text">இரண்டு பாதாள உலகக்கும்பல்களின் மோதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்கம் செய்யுமாறு பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு பாதாள உலகக்கும்பல்களின் மோதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்கம் செய்யுமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>&nbsp;தெவிநுவரவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தில் 769வது வருடாந்திர எசல மகா பெரஹெர விரைவில் நடத்தப்படவுள்ளது.</p><p>

இந்நிலையில் குறித்த பெரஹெரவில் காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பரிந்துரைத்துள்ளார்.</p><p></p><h2>காவடி நடனம் நீக்கம்</h2><p>
</p><p>
ஜூலை 25 ம் திகதியிட்ட கடிதத்தில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய இந்த உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அறிவுறுத்தலின் பேரில், மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே- ஆரச்சிகே திலின மதுசங்க ஆகியோரிடம் சம்பந்தப்பட்ட காவடி பெரஹெர அம்சத்தை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894ee7d7-bb9a-40e0-87b4-d2df9f8ddcd1/26-6a66630ccc1d0.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுத் பிரதானி, அரச புலனாய்வு சேவை, பொலிஸ் விசேட பணியகம் மற்றும் தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் வழங்கிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:42:12+00:00</updated>
        </entry>
    </feed>
