<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-02T19:23:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்நிறுத்தம் நடைமுறையில்... காஸாவில் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்கள் – 1,300க்கும் மேற்பட்டோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/900-people-death-ceasefire-was-announced-in-gaza-1788375893"></link>
            <id>https://tamilwin.com/article/900-people-death-ceasefire-was-announced-in-gaza-1788375893</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 10 அன்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நடைமுறைக்கு
வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 10 அன்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நடைமுறைக்கு
வந்தபோதிலும், காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன.</p><p>

இந்த ஆண்டில் மட்டும் காஸாவில் 900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>போர்நிறுத்தம்&nbsp;</h2><p>

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 1,300க்கும் அதிகமான
பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்; இதில் 301 சிறுவர்களும் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57eda5d0-3fc1-4a44-92cc-a9e250a5597d/26-6a987771e42e3.webp' /></p><p>

குறிப்பாக, ஏப்ரல் முதல் ஒகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் மாதம்தோறும்
100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
ஜூலை மாதத்தில் மட்டும் 21 சிறுவர்கள் உட்பட 152 பேர் பலியாகியுள்ளனர்.
</p><h2>&nbsp;வான்வழித் தாக்குதல்</h2><p>
கடற்கரை உணவகம், அகதிகள் முகாம்கள் மற்றும் இறுதி ஊர்வலங்கள் மீது நடத்தப்பட்ட
ட்ரோன் மற்றும் வான்வழித் தாக்குதல்களின் காணொளிகளை ஆய்வு செய்து பிபிசி
உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fffce18-878f-47e2-ab44-51b60a708db3/26-6a9877729bcb6.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, தற்காப்புக்காகவும் அச்சுறுத்தல்களை நீக்குவதற்காகவுமே தாங்கள்
செயல்படுவதாகவும், பொதுமக்கள் இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும்
இஸ்ரேலிய ராணுவம் (IDF) தெரிவித்துள்ளது.
</p><p>
போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், காஸாவில் தொடரும்
இந்தத் தாக்குதல்கள் சர்வதேச அமைதி முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக
அமைந்துள்ளன என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T19:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்றினால் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3000-people-have-died-from-ebola-in-congo-1788372716"></link>
            <id>https://tamilwin.com/article/3000-people-have-died-from-ebola-in-congo-1788372716</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,000 ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம்
உத்தியோகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,000 ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம்
உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் அதிவேகமாகப் பரவி வரும் இந்த எபோலா
தொற்று, கொங்கோ வரலாற்றில் பதிவான மிக மோசமான நோய்த்தொற்று பேரழிவாக
மாறியுள்ளது.</p><h2>எபோலா&nbsp;வைரஸ் தொற்று</h2><p>

அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 6,186 பேருக்குத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
கடந்த மே மாதம் இதுரி(Ituri) மாகாணத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட
இந்தத் தொற்று, தற்போது நாட்டின் ஆறு மாகாணங்களுக்குப் பரவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5ecbbc-f481-45b7-855f-a7a36966a448/26-6a98717850eb3.webp' /></p><p>
</p><p>
'பண்டிபுக்யோ' (Bundibugyo) எனப்படும் இந்த எபோலா வகைக்கு இதுவரை
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை
என்பது சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
</p><p>
சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை, போதிய பாதுகாப்பின்மை மற்றும்
கிராமப்புற மக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாகவே இந்தத் தொற்றைக்
கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், எபோலாவினால் உயிரிழப்பவர்களில் சுமார் 60 சதவீதமானோர் வைத்தியசாலைகளுக்கு வெளியே மரணிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T19:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து சென்றடைந்த அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-aircraft-arrives-thailand-after-286-days-1788371774"></link>
            <id>https://tamilwin.com/article/us-aircraft-arrives-thailand-after-286-days-1788371774</id>
            <summary type="text">சுமார் 286 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் பயணித்த அமெரிக்க கடற்படையின்
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் என்ற விமான தாங்கி போர்க்கப்பல், ஓய்வு மற்றும்
பராமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 286 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் பயணித்த அமெரிக்க கடற்படையின்
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் என்ற விமான தாங்கி போர்க்கப்பல், ஓய்வு மற்றும்
பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக தாய்லாந்தின் லாம் சபாங் துறைமுகத்தைச்
சென்றடைந்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற ஈரானுக்கு எதிரான போரின் போது, கடற்படை
முற்றுகை மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் இந்தப்போர்க்கப்பல் முக்கிய
பங்காற்றியுள்ளது.</p><h2>அமைதி வழி ஓய்வு நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பயணத்தை ஆரம்பித்த இந்தப் போர்க்கப்பல்,
நவீன கடற்படை வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாகக் கடலில் பயணித்து
புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
சுமார் 5,000 கடற்படை மற்றும் கடல்சார் வீரர்களைக் கொண்ட இந்தப் போர்க்கப்பலின்
ஊழியர்களுக்கு ஓய்வளிக்கும் வகையிலேயே தாய்லாந்தில் இந்த 5 நாட்கள் தங்குமிடம்
ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>1954ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நெருங்கிய ஒப்பந்த கூட்டாளியாக தாய்லாந்து விளங்கி வரும் நிலையில், வழக்கமான அமைதி வழி ஓய்வு நடவடிக்கைகளுக்காகவே இந்தக் கப்பல் வருகை தந்துள்ளதாக தாய்லாந்து அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bee31be8-35d0-4d19-92de-1971b55d3580/26-6a9865824dd7f.webp' /></p><p>

நீண்டகாலப் போர்ப் பயிற்சியின் காரணமாக கப்பலின் வெளிப்பகுதி துருப்பிடித்த
நிலையில் காணப்பட்ட போதிலும், அதன் தளத்தில் அதிநவீன எஃப்-35 (F-35) போர்
விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினரின் இந்த வருகை காரணமாக, அருகில்
உள்ள பட்டாயா சுற்றுலா நகரத்தின் உள்ளூர் வியாபாரம் மற்றும் பொருளாதார
நடவடிக்கைகளில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அதேநேரம், படையினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சில ஆபத்தான
விளையாட்டுகளுக்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணிகளும்
பலப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T18:48:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகில இலங்கை ரீதியில் முதலிடம்: புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாணவன் சாதனை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122"></link>
            <id>https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை படைத்துள்ளார்.
</p><p>யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி
கற்று வரும் மாணவன் சு. சபின், புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப்
பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.</p><h2>அகில இலங்கை முதலிடம்&nbsp;</h2><p>
</p><p>மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலை
சமூகத்திற்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக
கல்விச் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197570-8255-44dd-94e8-86061f262ff9/26-6a986c8f2f563.webp' /></p><p>2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று(2) வெளியானமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T18:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்பின் பெயர்: ட்ரம்பின் அதிரடி பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565"></link>
            <id>https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
“இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை ‘ட்ரம்ப் நீரிணை’ என மாற்றலாமா? அமெரிக்காவைப் போலவே இதுவும் முன்னெப்போதையும் விட சூடாக இருக்கும்!” என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ட்ரம்ப் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117202132375758936/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> 

முன்னதாகவும் இந்த நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T18:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-salambaikulam-in-vavuniya-one-dead-1788369257"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-salambaikulam-in-vavuniya-one-dead-1788369257</id>
            <summary type="text">வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக் கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில்
ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக் கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில்
ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம்
பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

இன்று (02.09) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
வவுனிய, சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக வீதியோரத்தில்
அமர்ந்து சோளம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரிடம், பிறிதொருவர் சோளம்
வாங்கிக் கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து வந்த டிப்பர் வாகனம் வேகக்
கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d6f662-95de-4117-b99d-81cac140d159/26-6a985dd9ec5ca.webp' /></p><p>விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு
வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும், சோளம் வாங்கிய
நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த ரகீம் மஜீத் ( வயது 31) என்பவரே
பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T17:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மனித உரிமை மீறல் வழக்குகள்: அரசின் நடவடிக்கையில் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hrw-alleges-delay-in-prosecuting-anura-right-cases-1788364243"></link>
            <id>https://tamilwin.com/article/hrw-alleges-delay-in-prosecuting-anura-right-cases-1788364243</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள்
தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என மனித
உரிமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள்
தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என மனித
உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொலை
செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் எந்தவித முன்னேற்றமுமின்றி
உள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>நீதியை நிலைநாட்டல்</h2><p>
</p><p>
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் பாதுகாவலர்களும்
தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு,
லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, 11
இளைஞர்கள் கடத்தப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள்
போன்றவற்றில் சில வரம்புக்குட்பட்ட முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>என்றபோதிலும்,
மூத்த அதிகாரிகள் தொடர்புபட்ட மற்றைய முக்கிய வழக்குகளில் (உதாரணமாக, 17
உதவிப் பணியாளர்கள் படுகொலை மற்றும் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம்)
எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28c8418c-d1ce-48d3-9a3d-04d852e2f00d/26-6a984cf79d288.webp' /></p><p>
</p><p>
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறுவப்பட்ட Sri Lanka Accountability
Project திட்டத்தை தற்போதைய அரசு ஏற்றுக்கொள்ளாததுடன், சுயாதீனமாக வழக்குத்
தொடரும் அமைப்பையும் இதுவரையில் நிறுவவில்லை.
</p><p>
பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து,
உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு
விரைவுபடுத்த வேண்டும்.
</p><p>
நீதியை நிலைநாட்டுவதற்கான தனது உறுதிப்பாட்டைச் செயற்பாடுகள் மூலம்
வெளிப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் உயர் ஆணையாளரும் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை வலியுறுத்த வேண்டும்&nbsp; என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T17:01:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்: அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கும் கனடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-canada-trade-war-canadians-boycott-us-goods-1788364855"></link>
            <id>https://tamilwin.com/article/us-canada-trade-war-canadians-boycott-us-goods-1788364855</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி வர்த்தகக் கொள்கைகள் மற்றும்
கனடாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி வர்த்தகக் கொள்கைகள் மற்றும்
கனடாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான
பல தசாப்த கால உறவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.</p><p>

அண்மையில் கனடியப் பொருட்களுக்கு மேலதிக வரிகளை விதித்த ட்ரம்ப், லேக்
ஒன்டாரியோ (Lake Ontario) ஏரியின் பெயரை "லேக் அமெரிக்கா" (Lake America) என
மாற்றி நிர்வாக உத்தரவிலும் கையெழுத்திட்டார்.</p><h2>வர்த்தகப் போர்</h2><p>

இந்த சம்பவங்கள் கனடிய மக்களிடையே கடும் அதிருப்தியையும் தேசப்பற்றையும்
தூண்டியுள்ளது.

இதன் எதிரொலியாக, ஒட்டாவாவில் உள்ள 'ட்ரம்ப் அவென்யூ' (Trump Avenue) வீதியின்
பெயரை மாற்றுவதற்கு மாநகரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>
அத்துடன், கனடிய மக்கள் அமெரிக்க சுற்றுலாப் பயணங்கள், அமெரிக்கப் பொருட்கள்
மற்றும் சேவை சந்தாக்களை (Subscriptions) பெருமளவில் புறக்கணிக்கத்
தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9100c77f-ca65-4b69-bec9-3e54512f937f/26-6a984a7129a74.webp' /></p><p>

அத்துடன், அமெரிக்க உதிரிப்பாகங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான தேவையை 70
சதவீதத்தால் குறைத்து, அவுஸ்திரேலியா மற்றும் சிலி போன்ற நாடுகளிலிருந்து
பொருட்களை இறக்குமதி செய்ய முன்னணி கனடிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதற்கு
கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) எடுத்த தீர்மானத்திற்கு 70
சதவீதத்திற்கும் அதிகமான கனடிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T16:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தரப்பை பழிவாங்கிய அநுர அரசு - ஏமாற்றத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்த பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்த பகுதி மாநகர சபை மறுத்துள்ளது. </p><p>

குறித்த நாட்களில் வேறு தரப்பினரால் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் சல்காது விளையாட்டு மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அன்றைய தினம் அவற்றை வழங்க முடியாது என அனுராதபுரம் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். </p><p>

அத்துடன், இதற்கு பொருத்தமான வேறொரு தினத்தை ஒதுக்கிக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறும் அறிவித்துள்ளார்.</p><h2><b> 

கோரிக்கை நிராகரிப்பு</b></h2><p>எனினும், சல்காது மைதானத்தை பெறுவதற்காக தங்களால் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. </p><p>இருந்த போதிலும், விண்ணப்பித்த வேறு ஒரு தரப்பினருக்கு குறித்த மைதானத்தை வழங்குவதற்கு மாநகர சபை செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SIg-Zv7vr2I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>

அத்துடன் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் மூன்றாவது தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி தங்களுக்கு வழங்குவது மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர். </p><p>

இது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேயரின் அறிவுறுத்தலுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும் மொட்டுக்கட்சியின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T15:01:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் போர் தாக்குதல்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/escalating-hostilities-between-the-us-and-iran-1788358526"></link>
            <id>https://tamilwin.com/article/escalating-hostilities-between-the-us-and-iran-1788358526</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர்
மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர்
மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர்
தீவிரமடைந்துள்ளது.
</p><p>
ஈரானிய புரட்சிகரக் காவல் படையின்(IRGC) வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்
நிலையங்கள், தொடர்பாடல் மையங்கள் மற்றும் கடல்சார் கடற்படை இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
</p><p>
இந்த தாக்குதலில் தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் திருமண நிகழ்வொன்று
இடம்பெற்ற வீடு தாக்கப்பட்டதில் சிறுவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன்,
68 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
</p><h2>
ஈரான் ஏவுகணை தாக்குதல்..</h2><p>
இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்தான், குவைத் மற்றும் ஈராக்கில் உள்ள
அமெரிக்க இராணுவ முகாம்கள் மற்றும் இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும்
ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c39277-2ebb-4594-a963-5a7708f392c1/26-6a98397f405ae.webp' /></p><p>
</p><p>
 அமெரிக்கப் படைகளை பிராந்தியத்தில்
இருந்து முற்றாக வெளியேற்றுவதே தமது முதன்மை நோக்கம் என ஈரானிய இராணுவத் தலைமை அறிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் முடக்கியுள்ள நிலையில்,
அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட இரு எண்ணெய்க் கப்பல்கள் கடலில் வீசப்பட்ட
கண்ணிவெடிகளில் சிக்கி சேதமடைந்துள்ளன.</p><p>

இந்த தீவிரப் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள்
மீண்டும் உச்சமடைந்துள்ளதுடன், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும்
கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>YOU MAY LIKE THID VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HWFRn2b_AbA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:58:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை நிறைவு - உயர் நீதியரசர்கள் குழாம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-concluded-1788360704"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-concluded-1788360704</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) உயர் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

இதனையடுத்து, சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு, அனுப்பி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
</p><h2>
உயர் நீதிமன்றத்தின் முடிவு</h2><p>

சட்டமூலத்திற்கு எதிராகவும், அதற்கு ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களையும், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e52ff3-aa9b-4d59-bb12-cb05cfce5c5c/26-6a98386e12d81.webp' /></p><p>
</p><p>
மேலும், மனுக்கள் தொடர்பில் ஏதேனும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருந்தால், அவற்றை நாளை பிற்பகல் 3 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை, நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, நீதிமன்ற செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்கும் நோக்கிலேயே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், நீதித்துறை அமைப்பு தொடர்பான திருத்தச் சட்டமூலமும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம்</h2><p>
சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயரத்ன இந்த விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d3326fe-3318-48b3-aee3-4572bb05d56a/26-6a98386edca35.webp' /></p><p>
</p><p>
குறித்த சட்டமூலங்கள் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில், இன்று(02) விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
</p><p>
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பவுள்ள இரகசிய வியாக்கியானம், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமையவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:53:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் - சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்க போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/struggle-to-rescue-people-trapped-in-mines-nepal-1788356592"></link>
            <id>https://tamilwin.com/article/struggle-to-rescue-people-trapped-in-mines-nepal-1788356592</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து,
காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து,
காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திபெத்தின் பேரழிவுப் பகுதிக்கு செல்லும் பிரதான பாதையை சீனா மீண்டும்
திறந்துள்ளது.
</p><p>
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு காரணமாக உருவான
வெள்ளப்பெருக்கில் இதுவரை 1,114 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார்
4,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
</p><h2>
தீவிரப்படுத்தப்படும் மீட்பு நடவடிக்கை</h2><p>

எனினும், நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கியுள்ள பல
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில்
மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32614a1-122b-475a-8d1b-e384db973aec/26-6a982865f10f7.webp' />&nbsp;&nbsp;</p><p>

சுரங்கங்களுக்குள் தேவையான காற்று, உணவு மற்றும் நீர் வசதிகள் இருக்கும்
என்பதால் அவர்கள் உயிருடன் மீட்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.</p><p>இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுக்கள் இந்த
அபாயகரமான மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.</p><h2>
 திபெத் பேரழிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்</h2><p>
இதனிடையே, எல்லையோரப் பகுதியான கிராங் கணவாய்க்கான பிரதான வீதியை சீனா
திறந்துள்ளதைத் தொடர்ந்து, கனரக இயந்திரங்கள் மற்றும் உயிர்மீர்ப்பு
சாதனங்களுடன் மீட்புக் படையினர் திபெத் பேரழிவுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.</p><p>

திபெத் பகுதியில் மாத்திரம் 104 இந்தியர்கள், 49 நேபாளிகள் உட்பட
நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக சீன அதிகாரப்பூர்வத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5cd4a08-d9d3-4c72-9051-3c4790044a4f/26-6a982866a5132.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பேரழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், பேரழிவின் நினைவுகளினாலும் இழப்புகளினாலும் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் உளவியல் பாதிப்புகளுக்கு
உள்ளாகியிருப்பதாக சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்.. பெற்றோருக்கு அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-results-dont-punish-ministry-warns-1788354460"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-results-dont-punish-ministry-warns-1788354460</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பிள்ளைகளை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பிள்ளைகளை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
</p><p>
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
பரீட்சைப் பெறுபேறுகளைக் காரணம் காட்டி பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது அவர்களை உளரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதையோ தவிர்க்குமாறு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ea3202-45e6-4406-93da-03711d0bbd70/26-6a98235e497da.webp' /></p><p>
</p><p>
மேலும், பிள்ளைகளுக்குத் அசௌகரியம், மன உளைச்சல் அல்லது அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான செய்திகள் மற்றும் பதிவுகளை வெளியிடுவதையோ அல்லது பரிமாறுவதையோ தவிர்க்குமாறு ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இத்தகைய செயல்கள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களாகக் கருதப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சு, இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சாத்தியமான அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் : அநுர அரசுக்கு எதிராக கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threats-tamil-media-strong-condemnation-anura-govt-1788353381"></link>
            <id>https://tamilwin.com/article/threats-tamil-media-strong-condemnation-anura-govt-1788353381</id>
            <summary type="text">தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும்
அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் ஊட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும்
அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் இன்று(02.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்கள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"தமிழர் தாயகப் பகுதியில் அரச ஊடகமொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவர்,
அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக அவதூறுகள்,
விசாரணைகள் மற்றும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b339ebac-8f3b-4dd3-a5da-74957aa18231/26-6a98231b5f503.webp' /></p><p>
மக்களுடைய ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாகச் சர்வதேசத்துக்குக் கூறும் தற்போதைய
தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் தனது
உண்மையான முகத்தை வெளிப்படுத்துகின்றது.
</p><p>
அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும்
நாம் எப்போதும் அரணாக நிற்போம். </p><h2>வாக்களித்த மக்கள் வெட்கப்பட வேண்டிய நிலை</h2><p>வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் காணி
ஒன்றின் மீது கல்லெறிந்து சிசிரிவி கமரா சேதப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a10e916-3615-406a-96b7-c98f53de2a5a/26-6a98231c18063.webp' /></p><p>சிசிரிவி
காணொளிகள் மற்றும் மேற்படி நபர் ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கிய ஒப்புதல்
வாக்குமூலம் ஆகியவை இருந்த போதிலும், பொலிஸார் அவரை 24 மணி நேரத்துக்குள்
நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் அதிகாலை 3 மணியளவில் விடுவித்துள்ளமை
அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
</p><p>
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் தற்போது வெட்கப்பட வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு, கிழக்கில் தமிழர்களின் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளைத்
தடுப்பதற்குச் சிங்களக் கட்சிகளை வடக்கு, கிழக்கில் இருந்து ஜனநாயக ரீதியாக
வெளியேற்றுவதே தமிழர்களின் இருப்பை நிலைநாட்டுவதற்கான வழி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:24:43+00:00</updated>
        </entry>
    </feed>
