<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-31T23:28:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி ஈட்டிய சிம்பாப்வே அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zimbabwe-team-wins-match-against-namibia-1788210781"></link>
            <id>https://tamilwin.com/article/zimbabwe-team-wins-match-against-namibia-1788210781</id>
            <summary type="text">நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில்
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்
இழப்பிற்கு 195...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில்
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்
இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்து, 196 ஓட்டங்களை வெற்றி இலக்காக
நிர்ணயித்துள்ளது.
</p><p>
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு
செய்தது.</p><h2>சிம்பாப்வே அணி வெற்றி</h2><p>

இதேவேளை ரியான் பர்ல் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில்;(7 பவுண்டரிகள், 1
சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p> பென் கரண் 38 ஓட்டங்களும், பிராட்
ஈவன்ஸ் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்கள், பிரையன் பென்னட் 32 ஓட்டங்களும்
எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31375803-a84b-4ebe-b5e3-8ef492d88b58/26-6a95f0ac3ed41.webp' /></p><p>

இதனையடுத்து கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பெர்னார்டு, ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் ஹெய்ங்கோ தலா ஒரு விக்கெட்டைப்
பெற்றனர்.</p><p>

இந்த நிலையில் தற்போது நமீபியா அணி 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் விளையாடி வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T22:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் – இஸ்ரேல் ஆயுத ஒப்பந்தம்: மாறுபட்ட அபிப்பிராயங்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/greece-israel-arms-deal-1788208852"></link>
            <id>https://tamilwin.com/article/greece-israel-arms-deal-1788208852</id>
            <summary type="text">கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள ஆயுதக்
கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் பிராந்திய நாடுகளிடையே மாறுபட்ட எதிர்வினைகள்
தோன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள ஆயுதக்
கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் பிராந்திய நாடுகளிடையே மாறுபட்ட எதிர்வினைகள்
தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஏதென்ஸ் நகரில் இருந்து
வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>குறிப்பாக, இந்த ஒப்பந்தம் குறித்து துருக்கியிடம் இருந்து நேர்மறையான
கருத்துக்கள் வெளிவர வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.</p><h2>வான் பாதுகாப்பு உதவி</h2><p>
</p><p>
இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்வதன் மூலம், ஆக்கிரமிக்கப்பட்ட
மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அனைத்து
நடவடிக்கைகளுக்கும் கிரீஸும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என
துருக்கிய ஊடகப் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
</p><p>இருப்பினும், பல்கேரியா, வட மெசிடோனியா மற்றும் அல்பேனியா போன்ற
நாடுகளிடமிருந்து இதற்கு சாதகமான பதிலளிப்புகள் கிடைக்கக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3d53887-d2c5-419b-9462-483964cc1735/26-6a95ed68ddda4.webp' /></p><p>தற்போதைய போர்க் காலத்தில் பல்கேரியா கிரீஸிடம் வான் பாதுகாப்பு உதவியைக்
கோரியிருந்த நிலையில், பல்கேரிய வான்வெளியைப் பாதுகாப்பதற்காக கிரீஸ் தனது
'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு அமைப்புகளை அங்கு நகர்த்தியிருந்தது. இதேபோன்று சவூதி அரேபியாவிலும் கிரீஸ் இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகளை
நிலைநிறுத்தியுள்ளது.</p><p>
இதன் காரணமாக, கிரீஸ் மற்றும் துருக்கி இடையிலான பாரம்பரிய போட்டித்தன்மை
காரணமாக அங்காராவிலிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் எழக்கூடும் அதேவேளை,
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து இதற்கு
ஆதரவான கருத்துக்கள் வெளிவரக்கூடும் எனக் கருதப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T22:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அழுத்தத்தை பிரயோகிக்க நாடுகளுடன் இணைந்து செயற்பட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-g7-unite-to-pressure-iran-1788207783"></link>
            <id>https://tamilwin.com/article/eu-g7-unite-to-pressure-iran-1788207783</id>
            <summary type="text">ஈரான் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஜி-7
அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து நெருக்கமாக செயற்படவுள்ளதாக
ஐரோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஜி-7
அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து நெருக்கமாக செயற்படவுள்ளதாக
ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானின் அணுசக்தி திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் வலயத்தில்
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அந்த நாடு உடனடியாகக் கட்டுப்படுத்த
வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
வலியுறுத்தியுள்ளது.</p><h2>ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை</h2><p>

குறிப்பாக ரஷ்யாவின் உக்ரைன் மீதான போருக்கு ஈரான் வழங்கி வரும் இராணுவ ஆதரவு
மற்றும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை
நிறுத்துமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a1d651-9a0e-4168-9383-4d3438f33df2/26-6a95e4d3ceb1f.webp' /></p><p>அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை
உறுதிப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் நன்மைகளைப் பாதுகாக்கவும்
தேவை ஏற்படின் மேலதிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை
என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T22:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrest-in-shooting-at-swiss-music-concert-1788207149"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrest-in-shooting-at-swiss-music-concert-1788207149</id>
            <summary type="text">&amp;nbsp;சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதான சுவிஸ் நாட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதான சுவிஸ் நாட்டவர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
சூரிச் நகருக்கு மேற்கே அமைந்துள்ள குதிரைப் பந்தய திடலில் இடம்பெற்ற இசை
நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 22 வயதான
இத்தாலியப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.</p><h2>பொலிஸ்&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 24 மணி நேர தீவிர தேடுதலின் பின்னரே
சந்தேகநபர் நேற்று(31) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e078085d-a79e-467b-8505-b2cfca1efa1a/26-6a95e2386ffeb.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்,
இந்தத் தாக்குதலைத் தனி நபர் ஒருவரே நடத்தியிருக்கலாம் எனக் கருதுவதுடன்,
தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை
முடுக்கிவிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு நெதர்லாந்தில் திருயாத்திரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netherlands-pilgrimage-marks-mary-s-nativity-feast-1788205803"></link>
            <id>https://tamilwin.com/article/netherlands-pilgrimage-marks-mary-s-nativity-feast-1788205803</id>
            <summary type="text">தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் முன்னெடுக்கும் 24ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை, நெதர்லாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் முன்னெடுக்கும் 24ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை, நெதர்லாந்தில் அமைந்துளள சிறிய லூர்து அன்னை திருத்தலத்தை நோக்கி நடைபெறவுள்ளது.</p><p>இந்தப் புனித யாத்திரையானது எதிர்வரும் (06.09.2026)ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளது.</p><h2>யாத்திரை தொடர்பான விபரம்</h2><p>
</p><p>குறித்த திருத்தலத்தின் முகவரி்: Kloosterstraat 1, 5865 AA Tienray, Netherlands&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0aa33dc-3233-4d59-a62a-c40ff829efd3/26-6a95ddc3f35b1.webp' /></p><p>
நிகழ்ச்சி நிரல்:&nbsp; காலை 11.00 மணிக்கு திருநாள் திருப்பலி</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம்</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: அதனைத் தொடர்ந்து அன்னையின் திருசொரூப பவனி </p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: சிறிய லூர்து கெபியில் இறுதி ஆசியுடன் விழா நிறைவு
</p><p>
இந்தத் திருயாத்திரையில் அனைவரும் கலந்துகொண்டு இறை அருளைப் பெற்று, விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 600 உயிர்களை காப்பாற்ற போராடும் மீட்புக்குழுவினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-rescuers-blast-hillside-search-families-1788209970"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-rescuers-blast-hillside-search-families-1788209970</id>
            <summary type="text">நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில், சேறு மற்றும் சகதி நிறைந்த பகுதிக்குள் 600க்கும் மேற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில், சேறு மற்றும் சகதி நிறைந்த பகுதிக்குள் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை உயிரோடு மீட்கும் தீவிர நடவடிக்கைகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p> திங்கட்கிழமை வரை நீடித்த இந்த மீட்புப் பணியில், மலைப் பகுதியை வெடிவைத்துத் தகர்த்துச் சுரங்கத்தினுள் காற்றைச் செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளதுடன், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,925 ஆகப் பதிவாகியுள்ளது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p> இதில் 592 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். காணாமல் போனவர்களில் ஏழில் ஒருவர் நீர்மின் நிலையத் தொழிலாளி எனக் கருதப்படும் நிலையில், இதுவரை நீர்மின் நிலையங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c07fa2-c4a1-4f7f-ac41-b1f978d20595/26-6a95f0e45dc0c.webp' /></p><p>
</p><p>
நேபாள மற்றும் சீன இராணுவத்தின் கூட்டுத் தலைமையில், இந்தியா, கொரியா மற்றும் அவுஸ்திரேலிய நிபுணர்களின் பங்களிப்புடன் இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>சுரங்கத்திற்குள் பிராணவாயு அமைப்பு உள்ளதால் தங்கள் உறவினர்கள் உயிரோடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். அதேவேளை, தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் தங்களது நம்பிக்கை குறைந்து வருவதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> இதுவரை 11,379 பேர் ஒட்டுமொத்தமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் 11 நீர்மின் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:26:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று முறை சீ.வி.கேவின் வீடு தேடி சென்ற தாய் வெளியிட்ட பகீர் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330</id>
            <summary type="text">இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நியாயவழி போராட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சிறுபிள்ளைதனமான காரணத்தை கூறி இலங்கை தமிழரசுக் கட்சி போராட்டம் மற்றும் மகா நாட்டை புறக்கணித்துள்ளது.</p><p>இது தொடர்பில் கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரனும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p>
ஒட்டுமொத்த தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு அரசு தரப்பில் பல தடைகள் விதிக்கப்பட்டன. </p><p>ஆனால் தற்பொழுது தமிழ் கட்சிகள் தரப்பே இவ்வாறான காரணங்களை கூறி தமிழர்களின் உணர்வுபூர்மான போராட்டங்களை புறக்கணிக்கின்றன.</p><p>இவ்வாறிருக்கையில், வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உபதலைவி அமலநாயகி, சி. வி. கே. சிவஞானத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தமை தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p> </p><p>

இது தொடர்பில் இன்னும் பல விடயங்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/adOL5hITeAk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T20:24:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவில் திருவிழாக்களில் கவர்ச்சி நடனங்களை நடாத்துவது சில புலம்பெயர் மக்களின் சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diaspora-plot-behind-sexy-temple-dances-1788200948"></link>
            <id>https://tamilwin.com/article/diaspora-plot-behind-sexy-temple-dances-1788200948</id>
            <summary type="text">தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்களங்களில் காணக்கூடியதாக இருந்தது .
</p><p>
இந்த விடயம் தொடர்பில் எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி லங்காசிறியின் நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், இது புலம்பெயர் தமிழர்கள் செய்யும் ஒருவகையான சதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு காலத்தில் வேங்கைகளால் வளர்க்கப்பட்ட மந்தைகள் தற்பொழுது நரிகளாலும் குள்ளநரிகளாலும் வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறானவர்களால் இந்த சமூகம் சீர்குழைக்கப்படுகிறது.
</p><p>
இது தொடர்பில் மக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். இவ்வாறானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் குறித்த கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.</p><p>கோயில்களிலும் தேவாலயங்களிலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது என்பது பிழையான ஒரு விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இது குறித்து மேலதிக தகவல்களை&nbsp;நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியின் ஊடாக&nbsp; விரிவாகப் பார்ப்போம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z9FgzuDkV8o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:55:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 22இல் இறுதித் தீர்ப்பு..! வியப்பில் ஆழ்த்திய மைத்திரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி என அவர் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல கொடூர சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்க்ள தொடர்பில் அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக, பல உயிர்களை பறித்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்&nbsp;மைத்திரிபாலவின் ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறியது.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களும் உள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>&nbsp;இவ்வாறிருக்கையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பல கேள்விகளை எழுப்புகின்றது எனலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sgq8jMiHzoc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:18:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிட்லராக மாறும் ஜனாதிபதி அநுர குமார..! அச்சத்தில் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-kumara-becomes-like-hitler-sl-politicians-1788201236"></link>
            <id>https://tamilwin.com/article/anura-kumara-becomes-like-hitler-sl-politicians-1788201236</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வாதிகாரி ஹிட்லரை போல செயற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.</p><p>இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வாதிகாரி ஹிட்லரை போல செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 22ஆவது அரசியலமைப்பின் திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.</p><p>குறித்த சட்டமூல திருத்தத்திற்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p>குறிப்பாக, இந்த மனுக்களை தாக்கல் செய்தவர்கள் ராஜபக்சக்களின் ஆதரவாளர்களாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MJfnii76r0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகத்தைக் கொலை செய்யும் அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-is-killing-democracy-sajith-alleges-1788191597"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-is-killing-democracy-sajith-alleges-1788191597</id>
            <summary type="text">இலங்கையில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என பெருமை பேசி ஆட்சிக்கு
வந்த தற்போதைய அரசு, 22ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஜனநாயகத்தை தலைகீழாக
மாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என பெருமை பேசி ஆட்சிக்கு
வந்த தற்போதைய அரசு, 22ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஜனநாயகத்தை தலைகீழாக
மாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
மகாமான்ய டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தின் டிப்ளோமாதாரிகளுக்கான
பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சோசலிச முறை</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வை சீர்குலைக்கும் வகையில் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம்
நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து, நீதி வழங்கும் செயற்பாட்டைப்
படுகொலை செய்து சட்டத்தின் ஆட்சியை அரசு மீறி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58af608b-611e-44f3-a940-aad670ade7f5/26-6a95b3b2cb3f6.webp' /></p><p>

கடந்த அரசு உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதிக்குச்
கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை ஸ்திரமடைந்ததாகக் கூறியது போல், தற்போதைய
அரசும் விவசாயிகளை மிதித்து நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை
ஏற்படுத்துகின்றது.</p><p> ஜனநாயக வரலாற்றில் மிகவும் தோல்வியடைந்த அரசாங்கம் இதுவே.

தீவிர சோசலிச முறை மூலம் செல்வத்தை உருவாக்க முடியாது.</p><h2>அரசியல் உரிமைகள்</h2><p> </p><p>முதலாளித்துவத்தினாலேயே
செல்வத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், அது சமூகத்தில் பிளவுகளை
ஏற்படுத்துவதால் மனிதாபிமான முதலாளித்துவமும் சமூகச் சந்தைப்
பொருளாதாரமும் அவசியம்.
</p><p>
ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ஆர். பிரேமதாஸ பின்பற்றிய நடுநிலைப் பாதையைப் போன்று,
இடதுசாரி மற்றும் வலதுசாரி கொள்கைகளின் சிறந்த குணாம்சங்களை ஒன்றிணைக்க
வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97fc0a1b-a651-4671-a049-53b2337ed9ed/26-6a95b3b38413e.webp' /></p><p>நாட்டின் 1978ஆம் ஆண்டு அரசமைப்பில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்
மட்டுமே நீதிமன்றத்தில் சவால் விடுக்கக் கூடியவையாக உள்ளன.</p><p>பொருளாதார,
சமூக, கலாச்சார, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளும் நீதிமன்றத்தில் சவால்
விடுக்கக்கூடிய அடிப்படை உரிமைகளாக மாற்றப்பட வேண்டும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:50:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kaniya-pillayar-temple-issue-court-order-1788195993"></link>
            <id>https://tamilwin.com/article/kaniya-pillayar-temple-issue-court-order-1788195993</id>
            <summary type="text">கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த
இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாண
வேலைகளுக்குத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த
இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாண
வேலைகளுக்குத் திருகோணமலை மேல் நீதிமன்றம்&nbsp; இடைக்காலத் தடை உத்தரவு
பிறப்பித்துள்ளது.</p><p>இந்த உத்தரவானது இன்று(31.08.2026) வழங்கப்பட்டுள்ளது.</p><h2>மேல் நீதிமன்றம் உத்தரவு</h2><p>
</p><p>
கன்னியா பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல்
முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே அப்படியே
இடைநிறுத்துமாறும், மேற்கொண்டு எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம்
என்றும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த இடத்தில் முன்னர் பிள்ளையார் கோயில் இருந்த நிலையில், அங்கு பௌத்த
தூபி இருப்பதாகக் கூறி தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பான
வழக்கில் 2019ஆம் ஆண்டில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்படி, கோயில் வேறொரு
இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், பழைய இடத்தில் உள்ள தூபியை 'பேணிப்
பாதுகாக்க மட்டுமே' தொல்பொருள் திணைக்களத்திற்கு உரிமையுண்டு எனவும்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d511e9-f46b-4325-86f1-70ccfbab7bec/26-6a95b79664df7.webp' /></p><p>ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற இணக்கப்பாட்டிற்கு முரணாகத்
தொல்பொருள் திணைக்களம் அங்கு புதிய கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததை அடுத்து,
காணியின் உரிமையாளர் தரப்பில் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்
செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
வழக்குத் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தொல்லியல்
சட்டத்தின் 20ஆவது பிரிவின் கீழும், நீதிமன்றத்தில் எட்டப்பட்ட
இணக்கத்தின்படியும் அந்த இடத்தில் 'பாதுகாத்தல்' மட்டுமே செய்யப்படலாமே தவிர,
புனர்நிர்மாணம் அல்லது புதிய கட்டுமானங்கள் எதையும் செய்ய முடியாது என வாதாடியுள்ளார்.
</p><p>
தொல்பொருள் திணைக்களம் அங்கு என்ன வகையான நிர்மாணங்களை மேற்கொள்கின்றது என்பது
குறித்த எழுத்துமூல அறிக்கையைச் சமர்ப்பிக்க அரச தரப்பு சட்டத்தரணி அவகாசம்
கோரியதை ஏற்று, வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அன்றைய தினம் வரை தற்போதைய நிலையே தொடர
வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:50:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபோதையில் வீடு புகுந்து தாக்கிய பிரதேச சபை உறுப்பினர்கள்.. எழுந்துள்ள கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-sabha-member-drunken-assault-condemned-1788190106"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-sabha-member-drunken-assault-condemned-1788190106</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான
குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான
குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்றேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீதியை பெற்றுக்கொடுத்தல்</h2><p>அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நெல்லியடியில் வயதான ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரின் வீட்டின்
மீது தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தெற்கு மேற்கு மற்றும் நல்லூர் பிரதேச
சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் மேற்கொண்ட அடாவடித்தனமான
தாக்குதல் சமூகத்தில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நள்ளிரவில்
மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தச் சம்பவம் கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான நடவடிக்கைகளை மீண்டும்
நினைவூட்டுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46a2cc14-2df8-4460-8d9c-64cc17fa0b95/26-6a95a2bea041d.webp' /></p><p>தற்போதைய ஆட்சியிலும் நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற
சம்பவங்கள் தொடர்கின்றன.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸார் எத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கும்
அடிபணியாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க
வேண்டும்.</p><p>

நாட்டின் ஜனாதிபதி இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு
வடக்கில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.</p><p>
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி
தொடர்ந்து குரல் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் பானதுர நிலங்கவின் உறவினர் சுட்டுப் படுகொலை.. குடு சலிந்து குழுவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-near-kalutara-one-person-injured-1788198799"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-near-kalutara-one-person-injured-1788198799</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்புபயகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய&nbsp;இணைப்பு</h2><p>பயகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முக்கிய சந்தேக நபரான&nbsp;பானதுர நிலங்கவின்&nbsp;மைத்துனர்&nbsp;திலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்ஷிதா என்ற "குடு சலிந்து" என்பவரின் குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2> </h2><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>களுத்துறை அருகே சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><h2>வைத்தியசாலை அனுமதி</h2><p>

களுத்துறை மாவட்டத்தின் பயாகல அருகே கொஸ்ஹேன பிரதேசத்தில் குறித்த சம்பவம் இன்றிரவு பத்து மணியளவில் நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:13:44+00:00</updated>
        </entry>
    </feed>
