<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-13T00:22:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் BRICS-ல் வரலாற்று உடன்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/agreement-on-joint-declaration-at-brics-summit-1789257951"></link>
            <id>https://tamilwin.com/article/agreement-on-joint-declaration-at-brics-summit-1789257951</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், புதுடெல்லியில் நடைபெற்று வரும்
பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், புதுடெல்லியில் நடைபெற்று வரும்
பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் கூட்டுப் பிரகடனமொன்றை வெளியிடுவதற்கு
உறுப்பு நாடுகள் உடன்பாட்டை எட்டியுள்ளன.</p><p>

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் ரஷ்ய
ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், ஈரானிய ஜனாதிபதி
மசூத் பெசெஷ்கியான் மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உள்ளிட்ட
பல உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.</p><h2>மோதல் நிலைமை</h2><p>
</p><p>
மாநாட்டின் தொடக்க உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய
தீர்மானங்களை எடுக்கும் தளங்களில் வளரும் நாடுகளுக்கும் சமமான வாய்ப்புகள்
வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மறுசீரமைப்பை இனிமேலும்
தாமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4ddc51-1e1a-4f06-b318-85b958c3a21e/26-6aa5ea30756ba.webp' /></p><p>

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய உறுப்பு நாடுகளுக்கிடையில் மத்திய
கிழக்கு விவகாரம் தொடர்பில் முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும், இந்தியாவின்
தீவிர இராஜதந்திர முயற்சிகள் காரணமாகவே இந்த கூட்டுப் பிரகடனத்திற்கான
இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
எந்தவொரு தனிப்பட்ட நாட்டின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், ஒருதரப்பு
இராணுவ ஆக்கிரமிப்புகளைக் கண்டிக்கும் வகையில் இந்த கூட்டுப் பிரகடனம்
அமையவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளில்
சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், பிரிக்ஸ் அமைப்பின் உலகளாவிய செல்வாக்கை
அதிகரிக்கவும் தலைவர்கள் இதன்போது முக்கிய கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:11:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மையப்புள்ளி! மிக் தொடர்பில் மறைக்கப்பட்ட பல தகவல்கள் கசிவு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-mig-deal-1789257886"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-mig-deal-1789257886</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமானக் கொள்னவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில்,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமானக் கொள்னவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில்,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வௌ்ளிக்கிழமை (11.09.2026) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் மிக் கொள்வனவு தொடர்பில் பல மறைக்கப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன.
</p><p>பாவித்த 4 மிக்-27 தாக்குதல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கும், அந்த நேரத்தில் இலங்கை விமானப்படையிடம் இருந்த 3 மிக்-27 போர் விமானங்கள் மற்றும் விமானிகளைப் பயிற்றுவிக்கும் 1 மிக்-23 விமானம் ஆகியவற்றை பழுதுபார்ப்பதற்கும் 2006 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி இலங்கை விமானப்படை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது .
</p><p></p><h2>இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம்</h2><p>இது இரண்டு நாடுகளுக்கு இடையே நேரடியாக நடந்த ஒரு கொடுக்கல்வாங்கல் (G2G) போலக் காட்டப்பட்டது. உக்ரைன் அரசுக்கு சொந்தமான "உக்ரின்மாஷ்" (Ukrinmash) என்ற அரசு ஏற்றுமதி நிறுவனத்துடன் நேரடியாக நடைபெற்ற கொடுக்கல்வாங்கல் என்றே கூறப்பட்டது. </p><p>மேலும், இதை இரண்டு நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாகக் காட்டவே பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஆனால்,இந்த கொடுக்கல் வாங்கல் இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த ஒன்று அல்ல என்பது பின்னர் தெரியவந்தது. கொடுப்பனவுகளும் உக்ரைன் அரசு நிறுவனமான "உக்ரின்மாஷ்" நிறுவனத்திற்குச் செய்யப்படவில்லை; மாறாக "பெல்லிமிஸா ஹோல்டிங்ஸ்" (Bellimissa Holdings) என்ற தனியார் நிறுவனத்திற்கே செலுத்தப்பட்டிருந்தது. </p><p>
 </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5b493f-8d3f-4522-bea5-388ce9f927ab/26-6aa5e8a14aabf.webp' /></p><p>கொள்முதல் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பாக நியாயமற்ற விலைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முழுமையான கொள்முதல் மற்றும் பழுதுபார்ப்பிற்காக இலங்கை செலுத்திய மொத்தத் தொகை 14.67 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.</p><p>விசாரணைகளில் இது 15.66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்தது. 


4 மிக் விமானங்கள், ஒரு விமானம் 2.462 மில்லியன் டொலர்கள் என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளன. </p><p>2006 இல் இந்த 4 விமானங்கள் வாங்கப்பட்ட அதே கையிருப்பிலிருந்தே (Stock), 2000 ஆம் ஆண்டு மே 25 மற்றும் அக்டோபர் 24 ஆகிய திகதிகளில் பயன்படுத்தப்பட்ட 6 மிக் விமானங்களும், மேலே குறிப்பிடப்பட்ட பயிற்சி விமானமும் வாங்கப்பட்டன. </p><p>2000 ஆம் ஆண்டில் இந்த விமானங்களை வாங்கும் போது அதன் விலை: மே 25 இல் வாங்கும் போது 1.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அக்டோபர் 24 இல் வாங்கும் போது 1.6 மில்லியன் டொலர்கள். மே 25 இல் 4 விமானங்களும், அக்டோபர் 24 இல் 2 விமானங்களும் வாங்கப்பட்டன.</p><h2>
விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்</h2><p>ஆனால், 2000 ஆம் ஆண்டில் விமானங்கள் வாங்கப்பட்ட போது இருந்த அதே கையிருப்பில் எஞ்சியிருந்த 4 விமானங்கள் தான் 2006 ஆம் ஆண்டில் வாங்கப்படுகின்றன. </p><p>அப்படியென்றால், 2000 ஆம் ஆண்டில் வாங்கப்படாமல் 6 ஆண்டுகள் பழமையான இந்த 4 மிக் போர் விமானங்களும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விமானம் 2.462 மில்லியன் டொலர்கள் என இரட்டிப்பு விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. </p><p>இது எப்படி நடந்தது?

2000 ஆம் ஆண்டில் 6 விமானங்களை வாங்கச் சென்ற போது, விமானங்களைத் தேர்வு செய்யும் தரப் பரிசோதனைகளில் இந்த 4 விமானங்களும் நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5abe18d-dc27-47b6-91bd-ec275aa26812/26-6aa5e8a1f3c8d.webp' /></p><p>அந்த 4 விமானங்கள் தான், 2006 ஆம் ஆண்டில் அதிக விலை கொடுத்து இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவும் தற்போது வெளிடைவாகியுள்ளது.
</p><p>
விமானிகளைப் பயிற்றுவிக்கும் மிக்-23 என்ற விமானம் 2000 ஆம் ஆண்டில் 900,000 அமெரிக்க டொலர்களுக்கு (9 லட்சம் டொலர்) வாங்கப்பட்டது. </p><p>ஆனால், புதிய ஒப்பந்தத்தின் பின்னர் இந்த விமானத்தைப் பழுதுபார்க்க செலவிடப்பட்ட தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள். விமானத்தை வாங்கியது 0.9 மில்லியன் டொலருக்கு, ஆனால் அதை பழுதுபார்க்க 1.1 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.</p><p>ஒரு புதிய விமானத்தை வாங்குவதை விட, பழைய விமானத்தைப் பழுதுபார்க்க அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது.இவ்வாறான பல தகவல்கள் இன்னும் வெளிவரவுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-chemmani-maas-grave-1789254680"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-chemmani-maas-grave-1789254680</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம்
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம்
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்பாணத்தில் இன்று(13) ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்றுப்
பொருள்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள்
குறித்து உள்நாட்டு விசாரணைகளில் நம்பகத்தன்மை இருக்காது எனவும், எனவே சர்வதேச
மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியே
இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.</p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>
</p><p>
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்துக்கு அருகில் இன்று காலை
ஆரம்பமாகும் இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் ஊடாகச் சென்று கிட்டு பூங்கா
பகுதியைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் நிறைவடையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58d41da5-1500-480d-9368-814a2d546961/26-6aa5e0e258bc9.webp' /></p><p>
</p><p>
இந்தப் பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய பேரவையினாரால் நேற்று துண்டுப்
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள்
கலந்துகொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை
வழங்கிவைத்து பேரணிக்கு ஆதரவு கோரினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T23:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள்! நிழல் உலகம் குறித்து அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-underworld-groups-operating-in-sri-lanka-1789253206"></link>
            <id>https://tamilwin.com/article/major-underworld-groups-operating-in-sri-lanka-1789253206</id>
            <summary type="text">இலங்கையில் செயற்படும் முக்கிய நிழல் உலகக்குழுக்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் செயற்படும் முக்கிய நிழல் உலகக்குழுக்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,</p><h2>நிழல் உலகக்குழுக்கள்</h2><p>
</p><p>
அண்மைக்காலமாக இலங்கையின் முக்கிய நிழல் உலகக்குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் கொலை மற்றும் கப்பம் போன்ற குற்றச் செயல்களை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23617885-a29d-4ab9-ac84-afb048390453/26-6aa5d94b51f06.webp' /></p><p>
</p><p>
அதற்குத் தேவையான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை படகுகள் வழியாக வெளிநாடுகளில் இருந்து தருவித்துக் கொள்வதாக பொலிசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது.
</p><p>
கடந்த காலங்களில் போதைப் பொருட்களுடன் பெருமளவு ஆயுதங்களும் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T22:59:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள முக்கிய பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kamzy-gunaratnam-named-norway-s-transport-minister-1789242707"></link>
            <id>https://tamilwin.com/article/kamzy-gunaratnam-named-norway-s-transport-minister-1789242707</id>
            <summary type="text">இலங்கை உள்நாட்டுப் போரின்போது தனது மூன்று வயதில் அகதியாக நோர்வே சென்ற கம்சி குணரத்னம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உள்நாட்டுப் போரின்போது தனது மூன்று வயதில் அகதியாக நோர்வே சென்ற கம்சி குணரத்னம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

38 வயதான கம்சி குணரத்னம், நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராவார். </p><p>ஒஸ்லோவை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அன்றைய தினமே பதவியை பொறுப்பேற்றுள்ளார்.</p><h2>போக்குவரத்து அமைச்சர்</h2><p>

இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல்&nbsp; போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த ஜோன்-இவர் நிகார்டை பதிலாக கம்சி குணரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d2287bd-4a69-4543-b69d-d6a46729340d/26-6aa5b13b3df2d.webp' /></p><p>
கம்சி குணரத்னத்தின் பொறுப்பின் கீழ் நோர்வேயின் வீதிகள், தொடருந்து, பொது போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வருகின்றன.

அவரது நியமனம் தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>கம்சி குணரத்னத்திடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதுடன், அவர் பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறார். </p><p>கடந்த சில தசாப்தங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது நபர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், நாடாளுமன்றத்தின் போக்குவரத்துக் குழுவில் 11 மாதங்கள் பணியாற்றிய அனுபவத்தைத் தவிர, போக்குவரத்துத் துறையில் அவருக்கு விரிவான அனுபவம் இல்லை என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2>ஈழத்தமிழர்</h2><p>
இலங்கையில் இருந்து நோர்வேக்கு

கம்சி குணரத்னம் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிய அவரது குடும்பம், 1991ஆம் ஆண்டு நோர்வேக்கு சென்றது.
</p><p>
அவர்கள் ஆரம்பத்தில் நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள ஹம்மர்ஃபெஸ்ட் நகரில் குடியேறிய பின்னர், ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரோருட்டலன் பகுதியில் கம்சி குணரத்னம் வளர்ந்தார்.
</p><p>
அவர் ஒஸ்லோ நகர சபையில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் பிரதி மேயராகவும் பதவி வகித்துள்ளார்.</p><p>

2021ஆம் ஆண்டு முதல் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் அவர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9be9014-1359-458e-80fe-806f09fedac4/26-6aa5b13be7e01.webp' /></p><p>
</p><p>
கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் நாடாளுமன்றத்தின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளுக்கான நிலைக்குழுவின் முதலாவது பிரதி தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

போரின் நினைவுகளை பகிர்ந்த கம்சி

இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச் சென்ற தனது அனுபவங்களை கம்சி குணரத்னம் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி மாதம் நோர்வே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் தான் பிறந்ததாகவும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்த தனது தாய் பாதுகாப்புக்காக பதுங்கியதாகவும் நினைவுகூர்ந்திருந்தார்.
</p><p>
அத்துடன், யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p><p><br><br><b><i>You may Like This..</i></b></p><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nukUTGcmH58" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br><br><br><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-12T22:42:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸ் கப்பல் விபத்தில் பெரும் சோகம்: 35 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-toll-from-passenger-ship-fire-philippines-1789246869"></link>
            <id>https://tamilwin.com/article/death-toll-from-passenger-ship-fire-philippines-1789246869</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர
தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதுடன்,
காணாமல்போன 50க்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர
தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதுடன்,
காணாமல்போன 50க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன.
</p><p>
130க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த ‘எம்.வி. ஜூன் ஆஸ்டர்’
என்ற பயணிகள் கப்பல், தனது 20 மணிநேரப் பயணத்தின் இறுதிக்கட்டத்தை
நெருங்கியவேளை பலவானில் உள்ள கோரோன் கடற்பகுதிக்கு அருகில் திடீரென தீப்பற்றி
எரிந்தது.</p><h2>விரிவான விசாரணை</h2><p>

தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்த நிலையில், கப்பலின் பொருளாதாரப் பகுதியில் இருந்து பல உடல்கள்
மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பொருட்டு, தடயவியல் குழுவினர் கோரோன்
துறைமுகப் பகுதியில் தற்காலிக முகாம்களை அமைத்து சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccfe5843-bc92-4b46-a21e-413d06981f01/26-6aa5c20772120.webp' /></p><p>

கப்பலில் ஏற்பட்ட இரண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்தே தீ அதிவேகமாக
பரவியதாகத் தப்பிப்பிழைத்த பயணிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>

சம்பவத்தில் 43 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், கப்பலின் மாலுமி
குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. </p><p>விபத்துக்கான பின்னணி
குறித்து பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் விரிவான விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T22:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வரவுள்ள புதிய நடைமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/big-change-coming-for-sim-card-users-in-sri-lanka-1789244833"></link>
            <id>https://tamilwin.com/article/big-change-coming-for-sim-card-users-in-sri-lanka-1789244833</id>
            <summary type="text">இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சிம் அட்டை
விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிய சிம் அட்டை பெறும்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சிம் அட்டை
விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
</p><p>
புதிய சிம் அட்டை பெறும்போது விண்ணப்பதாரரின் நேரலை (Live) புகைப்படம் எடுத்து
பதிவு செய்யும் நடைமுறை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><h2>சிம் அட்டை விநியோகம்</h2><p>
</p><p>
இதன்படி, போலி அடையாளங்களைப் பயன்படுத்தி குற்றங்கள் மற்றும் சட்டவிரோதச்
செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.</p><p>

ஒரு தேசிய அடையாள அட்டையைக் கொண்டு ஒரு தொலைபேசி நிறுவனத்தில் 5 சிம்கள் வரை
(மொத்தம் 3 நிறுவனங்களில் 15 சிம்கள் வரை) பெற முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd05c5e-1caa-4394-81de-a6f7ec9fa621/26-6aa5b7da12cae.webp' /></p><p>
</p><p>
அத்துடன் தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் வேறு சேவைக்கு மாறும் வசதியை
அறிமுகப்படுத்துவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p>
2027-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து சிம் பயனாளர்களின்
அடையாளத்தையும் 100% உறுதிப்படுத்த TRCSL திட்டமிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T21:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை அதிர வைத்த 9/11 - 25 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346"></link>
            <id>https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346</id>
            <summary type="text">அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்பட்ட பல டஜன் இரகசிய உளவுத்துறை ஆவணங்களை அமெரிக்க மத்திய புலனாய்வு
முகவரகமான சிஐஏ (CIA) பகிரங்கப்படுத்தியுள்ளது.
</p><p>
3,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமான 9/11 தாக்குதலுக்கு
முன்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உள்ளிட்ட நாட்டின்
உயர் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தினசரி இரகசிய உளவு அறிக்கைகளே இவ்வாறு
வெளியிடப்பட்டுள்ளன.</p><h2>இரகசிய ஆவணங்கள்</h2><p>
</p><p>
சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் இதனைத் தனது அமைப்பின் வெளிப்படைத்தன்மைக்கான
முக்கிய நகர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a9df96-2d08-4884-a335-46a1170d0dcb/26-6aa588348cec8.webp' /></p><p>
</p><p>
வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் 1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில்,
பின்லேடனின் முக்கிய இலக்கு அமெரிக்க மண்ணில் உள்ள வொஷிங்டன் நகரைத் தாக்குவதே
என்றும், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட விமானமொன்றை அமெரிக்க நகரம் மீது மோதித்
தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

அத்துடன், ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பின்லேடனை ஒப்படைக்க தலிபான்கள்
மறுத்தமை, நியூயோர்க் விமான நிலையத்தில் சந்தேகநபர்கள் மேற்கொண்ட பாதுகாப்புப்
சோதனை ஒத்திகைகள் மற்றும் கதிரியக்கப் பொருட்களைப் பயன்படுத்தி குண்டுகளைத்
தயாரிக்கும் முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்களும் இந்த ஆவணங்கள் மூலம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவழ்ந்து வந்த மகிந்த - தலைமறைவான கருணா! அநுரவிற்கு பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-holds-rally-in-anuradhapura-1789240676"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-holds-rally-in-anuradhapura-1789240676</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார். </p><p>உடல்நலக் குறைவு காரணமாக அவர் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், உதவியாளர்களின் உதவியுடன் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை முன்னிறுத்தியே மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் பங்கேற்றதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதேவேளை, கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாக செயற்பட்ட கருணா, பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இந்தக் கூட்ட மேடையில் காணப்படவில்லை.</p><p>அதற்கு பதிலாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த மேடையை அலங்கரித்தார்</p><p>
</p><p>
மேலும், ராஜபக்ச ஆட்சிக்காலம் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கடந்தகால யுத்தம் தொடர்பான அரசியல் விவகாரங்கள், அந்தக் குடும்பத்தின் தற்போதைய அரசியல் செல்வாக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ymh_aupQIR4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:24:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் மீண்டும் புத்தர் சிலை! சந்தபோதி தேரரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vedukkunari-hill-temple-1789236169"></link>
            <id>https://tamilwin.com/article/vedukkunari-hill-temple-1789236169</id>
            <summary type="text">வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில், சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (12) காலை சென்றிருந்தனர்.</p><h2>&nbsp;பௌத்த வழிபாட்டுத் தலம்</h2><p>

அங்கு சென்ற குழுவினர், சூலம் அமைந்திருந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் பிரித் ஓதி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.</p><p>

இதன்போது, சைவ மக்கள் மலை உச்சிக்கு செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71c921f-339d-43a4-82d2-1d53af89a763/26-6aa595c40fb51.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் வெடுக்குநாறிமலையில் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், அந்த சிலை தற்போது தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், அந்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடு 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் போலியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளில் ஈடுபடுவதாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T18:24:07+00:00</updated>
        </entry>
    </feed>
