<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-09T02:20:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலுள்ள நாமலை பார்க்க சென்று சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் நேற்று ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>

அதற்கு பதிலளித்தவர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இருப்பதனால் ஷிரந்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி</b></h2><p><i>“நாமல் ராஜபக்சவை பார்க்க ஷிராந்தி ராஜபக்ச தனது வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்வதை நாங்கள் கண்டோம். அது எப்படி சாத்தியம்? இப்போது ஏனைய கைதிகளையும் அவ்வாறே வாகனத்தில் சென்று பார்க்க முடியுமா..! அல்லது இது நாமலுக்கு மட்டும் கிடைக்கும் விசேட சலுகையா</i>..! என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc742a5-fa7d-4a50-9aef-2c48b5106ee2/26-6aa0c09b01f70.webp' /></p><p>“<i>சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் உள்ளனர். அத்தகையவர்களைப் பார்ப்பதற்காக சிறைச்சாலை திணைக்களத்தின் முறையொன்று உள்ளது. அந்த முறையின் அடிப்படையில்தான் அது நடந்திருக்க வேண்டும், எனக்கு அது குறித்து சரியாகத் தெரியாது</i>” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><i>

வாகனத்தை உள்ளே கொண்டு செல்வது இருக்கட்டும், ஒரு சாதாரண நபர் அங்கு வாகனத்தை நிறுத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லையே </i>என ஊடகவிலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். சரியான காரணத்தை விசாரித்துவிட்டு தகவல்களை வெளிப்படுத்துகிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-09T02:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை தேயிலைத் தோட்டங்களை சொந்தமாக முயற்சித்த முன்னாள் ஜனாதிபதியின் பிள்ளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-s-sons-in-risk-1788916471"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-s-sons-in-risk-1788916471</id>
            <summary type="text">தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு தீர்மானித்துள்ளது. </p><p>

குறித்த இருவரும் மூன்று வர்த்தகர்களை பயன்படுத்தி 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p> </p><h2><b>

 ஊழல், மோசடி</b></h2><p>இந்த மோசடி தொடர்பில் ஊழல், மோசடி மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி சமந்த துஷார என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4ce03ee-f5b5-4aa1-b6d8-09df23d45259/26-6aa0b586b8501.webp' /></p><p> 

முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்தப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஜாமுனி சமந்த துஷாரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-09T02:02:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் டீசல் நெருக்கடி! பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமென அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diesel-crisis-srilanka-1788917242"></link>
            <id>https://tamilwin.com/article/diesel-crisis-srilanka-1788917242</id>
            <summary type="text">லங்கா ஐஓசி நிறுவனம், ஆர்.எம். பார்க் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனம் ஆகியவற்றால் டீசல் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா ஐஓசி நிறுவனம், ஆர்.எம். பார்க் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனம் ஆகியவற்றால் டீசல் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
</p><p>
தற்போது, ​​பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 650 எரிபொருள் நிலையங்களில் மட்டுமே டீசல் விநியோகிக்கப்பட்டு வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.</p><h2>அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலைய விலைகள்&nbsp;</h2><p>அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் விலைகள் குறைக்கப்படும்போது, ​​சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதே அளவிற்கு எரிபொருள் விலையை குறைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a349f9f7-11f9-45dc-ba26-6668951a77f1/26-6aa0bd9a74870.webp' /></p><p> </p><p>தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை ஈடுகட்ட அந்த தொகையை வழங்குவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டு, நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. </p><p>இருப்பினும், ஒப்புக்கொண்டபடி அரசாங்கம் அந்த தொகையை வழங்கத்தவறியதே எரிபொருள் விநியோகக் கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது என்று நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான 250 எரிபொருள் நிலையங்கள், சினோபெக் நிறுவனத்திற்குச் சொந்தமான 150 எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனத்திற்குச் சொந்தமான 100 எரிபொருள் நிலையங்கள் டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை தொடர்ந்து கட்டுப்படுத்தினால், எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பாக பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h2>லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம் கடிதம்</h2><p>
</p><p>
இதற்கிடையில், லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம், லங்கா ஐஓசியின் நிர்வாக பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில்,</p><p>செப்டம்பர் 3 ஆம் திகதி முதல் விநியோகஸ்தர்களுக்கு ஆட்டோ டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சமீபத்திய முடிவு, போக்குவரத்து, தொழில்துறை, நகர கட்டுமானம் மற்றும் பிற அத்தியாவசிய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாததால், விநியோகஸ்தர்களுக்கு ஏற்கனவே கடுமையான சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e783bb10-192b-4577-b65e-2130d228fd12/26-6aa0bd9b2931b.webp' /></p><p>
</p><p>
வாடிக்கையாளர்கள் ஏனைய விநியோகஸ்தர்களுக்கு மாறிவிட்டால், அவர்களின் வணிகத்தை மீண்டும் பெறுவது மிகவும் கடினமாகிவிடும் என்றும், இவை விநியோக வலையமைப்பு மற்றும் டீசல் விற்பனையில் நீண்டகால பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p><p>

எனவே, இது தொடர்பாக பொருத்தமான வழிமுறையை வகுக்குமாறு லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T02:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-not-planning-to-get-dollar-1788916460"></link>
            <id>https://tamilwin.com/article/govt-not-planning-to-get-dollar-1788916460</id>
            <summary type="text">அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக &#039;சர்வஜன பலய&#039; கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக 'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
</p><p>நாட்டின் டாலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்குப் பேரணிகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b3ed18-a99b-4c83-ac83-35cb07580736/26-6aa0b2ed679b3.webp' /></p><p>
நாடாளுமன்றத்தின் 1,500 ஊழியர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினாலே நாட்டின் பொதுமக்களின் அபிப்பிராயத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>பேரணிகளுக்கு யாரைக் கொண்டு வந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை எனவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நீண்டகால, நடுத்தரகால மற்றும் குறுகியகால முறையான வேலைத்திட்டங்களே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>நாட்டின் டொலர்களைச் செலவழித்துப் பேருந்துகள் மூலம் ஆட்களைத் திரட்டி அரசாங்கம் பேரணிகளை நடத்தி வருகின்ற போதிலும், பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பட்டினியால் தவித்து வருவதாக திலித் ஜயவீர மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற துடிக்கும் ரணில்! நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்சர்களுடன் நடந்துள்ள டீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரைமறைவு அரசியல் நகரவுகளும் அம்பலமாகின்றன.</p><p>
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் தற்போது கருத்துக்கள் வெளியாகின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு ஒரு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தநிலையில்,அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மக்கள் கூட்டத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>

நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை,
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய 22 மில்லியன் அமெரிக்க டொலர் ஹொங்காங் வங்கி கணக்கு விவகாரத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க அம்பலப்டுத்தியுள்ளார்</p><p>.

 நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் இந்த ஹாங்காங் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தில் இருந்த சிலர் தலையிட்டு அந்த நடவடிக்கைகளைத் தடுத்ததாக ஆசு மாரசிங்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

 இந்தத் தகவல்கள் மூலம், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் 'டீலிங்' (Deal) குறித்த விடயங்களை ஆசு மாரசிங்க வெளிப்படுத்தியுள்ளார் .</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/twa6VY8TL_U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T01:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2028 இல் இலங்கைக்கு ஆபத்தா.. நாமலை காப்பாற்ற புது வியூகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-economy-crisis-namal-arrest-1788913753"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-economy-crisis-namal-arrest-1788913753</id>
            <summary type="text">2022 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் (பொதுக்கடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை) தற்போது நாடு இல்லை. இலங்கை ஒரு மீட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2022 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் (பொதுக்கடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை) தற்போது நாடு இல்லை. இலங்கை ஒரு மீட்சிப் பாதையில் நகர்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த 2028 ஆம் ஆண்டுக்கான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையின் பொருளாதார நிலை என்பது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை முறையாகப் பூர்த்தி செய்வதிலும், சட்டப்பூர்வமாக டொலர் வருமானத்தை ஈட்டுவதிலும், அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்துவதிலும் தங்கியுள்ளது.</p><p>

2027-2028 காலகட்டத்திற்குப் பிறகு, பழையபடி மானியங்களை வழங்குதல் அல்லது வரி வருமானத்தைக் குறைத்தல் போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு அரசு திரும்புவது மட்டுமே ஆபத்தை ஏற்படுத்தும்.
</p><p>
மேலும், நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக சட்ட ரீதியான நடைமுறையாகும்.
</p><p>
எதிர்க்கட்சிகள் இதனை 'அரசியல் பழிவாங்கல்' என்று கூறுவது மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு இலகுவான முயற்சியே தவிர, அது சட்ட ரீதியான குற்றச்சாட்டு அல்ல என்று தெரிவித்தார்.</p><p>

இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UpUevpnIwz4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T00:34:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிக்கு இலஞ்சம் கொடுத்த நீதிமன்ற ஊழியர்! சரண குணவர்தன வழக்கில் ஏற்பட்ட திருப்பம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sarana-gunawardena-bribery-and-corruption-1788913857"></link>
            <id>https://tamilwin.com/article/sarana-gunawardena-bribery-and-corruption-1788913857</id>
            <summary type="text">முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இலஞ்ச -ஊழல் வழக்கில்,ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இலஞ்ச -ஊழல் வழக்கில்,ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு உதவி செய்வதாக கூறி ரூ. 750,000 இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர், இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று (08.09.2026) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"></span></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எவ்வாறு இலஞ்சம் கொடுக்கப்பட்டது</span></p><p>மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் தற்போது மீண்டும் விசாரிக்கப்பட்டு வரும் "மாதிவெல வீடுகள்" ஊழல் வழக்கே இந்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுக்குப் பின்னணியாக அமைந்துள்ளது. </p><p>

இந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கியமான டிஜிட்டல் சான்றுகளும் புலனாய்வாளர்களிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பரிமாறப்பட்ட செய்திகள் மற்றும் பணச் செலுத்தல்களை உறுதிப்படுத்தும் ரசீதுகளும் அடங்குவதாக கூறுகின்றனர்.
</p><p>
இங்கு மிக முக்கியமான விடயம் என்னவெனில், வழக்கினை விசாரணை செய்யும் மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இந்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புப் பட்டுள்ளாரா என்பதில் இதுவரை எந்தவொரு சான்றும் வெளிவரவில்லை. இச்சம்பவம் குறித்து நீதிபதியே முறைப்பாடு செய்துள்ளார்.
</p><h2>
வழக்கின் பின்னணி
</h2><p>
2006-2007 காலப்பகுதியில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பானது.
</p><p>
மாதிவெலவில் அமைந்துள்ள வீடு ஒன்றை அபிவிருத்தி லொத்தர் சபைக்கு வாடகைக்கு எடுக்கும் போது, அதன் உரிமையாளருக்கு ரூ. 1,980,000 (19.8 இலட்சம்) குத்தகை முன்பணத்தை சட்டவிரோதமாக விடுவிக்க சபையின் அதிகாரிகளைத் தூண்டியதன் மூலம் சரண குணவர்தன இலஞ்ச சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2022 இல் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
முறைப்பாட்டாளரின் சாட்சியங்களின்படி, அந்த வீடு சரண குணவர்தனவின் முன்னாள் மனைவியான குமாரி அபேவிக்ரம என்பவருக்குச் சொந்தமானது என்றும், பின்னர் அது வேறொருவருக்கு மாற்றப்பட்டு, அவரிடமிருந்து அபிவிருத்தி லொத்தரை் சபைக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3124f060-49c8-4eeb-a987-807ced4533bd/26-6aa0a8c35aafe.webp' /></p><p>2026 ஜூன் 9 அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால், நான்கு தனித்தனி வழக்குகளில் சரண குணவர்தனவைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார். </p><p>18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்குப் பெயரளவில் 72 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவை ஒவ்வொரு வழக்கிற்குள்ளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தண்டனை 16 ஆண்டுகளாக மாறியது. </p><p>ரூ. 1.8 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பிற்கு எதிராக சரண குணவர்தன 2026 ஜூலை 1 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு தனித்தனி மேன்முறையீடுகளைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய கப்பல்கள் தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு பறந்த செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-vessels-anchored-in-international-waters-1788913598"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-vessels-anchored-in-international-waters-1788913598</id>
            <summary type="text">சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் நடமாடி வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் நடமாடி வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p> 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறியுள்ளார்.
</p><p>அமெரிக்க தூதரகத்தின் இந்த அறிவிப்பையடுத்து, இது குறித்து பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சுக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52da0fcc-1b9d-42a2-b5c3-1a0d39845b6b/26-6aa0a7bfc34a4.webp' /></p><p>
</p><p>குறிப்பிட்ட கப்பல்கள் பயணிக்கக்கூடிய பாதைகள் குறித்து இலங்கை கடற்படை தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.</p><p>
அந்தக் கப்பல்கள் எவையும் இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்குள் நுழையவில்லை என அமைச்சர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில், இலங்கையின் பிராந்திய கடற்பரப்பில் இருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>இவற்றில் ஈரானியக் கொடி ஏந்திய கப்பல்களும், பிற வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் அடங்கும். எனினும், அவை எவையும் இலங்கையின் உள்நாட்டு கடற்பரப்பிற்குள் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இக்கப்பல்கள் இலங்கை அரசாங்கத்திடம் எந்தவித வசதிகளையோ அல்லது உதவிகளையோ கோரவில்லை; அரசாங்கமும் அத்தகைய வசதிகள் எதையும் வழங்கவில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பொதுவாக வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தங்கியிருப்பது சாதாரணமான ஒரு விடயமாகும்.
</p><p>குறித்த கப்பல்கள் குறித்துத் தொடர்ந்து அவதானம் செலுத்துவதைத் தவிர, அவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வேறு எந்தவித தலையீடுகளையோ அல்லது நடவடிக்கைகளையோ மேற்கொள்ளவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் தெளிவுபடுத்தினார்.&nbsp;&nbsp;</p><p>கடந்த மார்ச் மாதம் இலங்கையின் தென் கடற் பரப்பில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்க கடற்படை மேற்கொண்ட தாக்குதல்களில் பல ஈரானிய படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T00:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை விடுவிக்க சர்வதேசத்தின் அழுத்தமா..! ஜெனிவாவில் நாமலுக்காக ஒலித்த குரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-issue-discuss-in-geneva-un-1788912168"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-issue-discuss-in-geneva-un-1788912168</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றதா என்ற கேள்வி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
மேலும், ராஜபக்ச ஆதரவாளரான மிலிந்த ராஜபக்ச என்பவர் நாமல் ராஜபக்சவின் விவகாரத்திற்காக ஐநா சபைக்கு சென்று உரையாற்றியுள்ளார்.
</p><p>
கடந்த காலங்களில், ஈழத் தமிழர் விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் (ஐநா சபை) இலங்கையை விமர்சித்தபோது, ராஜபக்ச குடும்பத்தினர் அந்த அமைப்புகளைத் தாழ்வாகப் பேசி வந்தனர். </p><p>

ஆனால் தற்போது, நாமல் ராஜபக்சவின் விவகாரத்திற்காக அதே ஐநா சபையை அவர்கள் நாடியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.</p><p>

ஒரு அரசியல்வாதியின் கைதுக்காக சர்வதேச மட்டத்தில் இவ்வளவு தூரம் சென்று குரல் கொடுப்பது, பொதுவான நீதிக்காக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே நடப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
</p><p>
ஜெனீவாவில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது, வெறும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான காலமே பேசும் வாய்ப்பைப் பெற்றதாகவும் அல்லது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு மேலோட்டமான செயலாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இந்தவிடயங்கள் பற்றி கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sNebaLlHbak" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டும் – நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciaboc-must-follow-the-laws-says-court-1788912438"></link>
            <id>https://tamilwin.com/article/ciaboc-must-follow-the-laws-says-court-1788912438</id>
            <summary type="text">லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் முன்னிலையில் ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
</p><p>
நீதிமன்றத்தின் முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு என தனியான சட்டம் எதுவும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளது.
</p><p>நீதித்துறை நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு ஆணைக்குழுவிற்கு உள்ளது என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7344f7-cb96-4f3e-9076-82e41e282693/26-6aa0a337b48b2.webp' /></p><p>லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்குத் துல்லியமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதைத் தவிர்த்து, "மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன" என்று மட்டும் வெறுமனே குறிப்பிடுவதைத் தவிர்க்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>
விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் அல்லது சாட்சியங்களின் சுருக்க அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பாக ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும்போதே தலைமை நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் இரு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, அவர்கள் முழு ஆணைக்குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே நீதிமன்றம் கருதுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பாகத் தேவையான சரியான தகவல்களையும் சான்றுகளையும் சமர்ப்பிக்க அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>அவ்வாறு தகவல்கள் சாட்சியங்களை சமர்ப்பிக்காமல் இருக்கக் கூடாது என நீதவான் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T00:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய ஐ.நா. அறிக்கையை வரவேற்ற சுமந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-criticizes-government-tamil-issues-1788910653"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-criticizes-government-tamil-issues-1788910653</id>
            <summary type="text">ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்ப அமர்வில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் எந்தவித முன்னே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்ப அமர்வில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை வரவேற்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மா.ஆ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சுமந்திரன் வரவேற்பு</h2><p>
</p><p>
அத்துடன், மாகாண சபைத் தேர்தல்கள் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருப்பது தொடர்பில் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளதையும் அவதானித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3035f94-87be-4290-ac38-6721d652fa63/26-6aa09e059d281.webp' /></p><p>

இலஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்பதாக கூறிய அவர், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து கடும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால் விவசாயிகள் மத்தியில் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farmers-alarmed-as-fires-are-set-in-fields-night-1788909419"></link>
            <id>https://tamilwin.com/article/farmers-alarmed-as-fires-are-set-in-fields-night-1788909419</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலாகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட சில
விவசாயப் பகுதிகளில் இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ
மூட்டப்படுவதனால் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலாகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட சில
விவசாயப் பகுதிகளில் இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ
மூட்டப்படுவதனால் அதனூடாக பயணிக்கும் பாதசாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.
</p><p>
வயல் நிலங்களில் காணப்படும் களைகள் மற்றும் விவசாயக் கழிவுகளை அகற்றும்
நோக்கில் சிலர் தீ மூட்டுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கட்டுப்பாடின்றி
பரவும் தீ காரணமாக அருகிலுள்ள விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.</p><h2>&nbsp;விவசாயிகள் மத்தியில் அச்சம்</h2><p>

குறிப்பாக இரவு நேரங்களில் தீ மூட்டப்படுவதால், தீ பரவும் திசையை உடனடியாக
அவதானித்து கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும் விவசாயிகள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0abcd827-d416-465b-a68c-4cb74dcd428e/26-6aa098d445f29.webp' /></p><p>

மேலும், வறட்சியான காலநிலை நிலவி வரும் நிலையில் வயல் பகுதிகளில் தீ
மூட்டப்படுவது தீ வேகமாக பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும்
சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p>

எனவே, வயல் நிலங்களுக்கு தீ மூட்டும் நடவடிக்கைகளை பொறுப்புடன் மேற்கொள்ள
வேண்டும் என்றும், தீயை கட்டுப்பாடின்றி விட்டுச் செல்லாமல் உரிய பாதுகாப்பு
நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சத்தில் நாமலின் மனைவி! ரங்க திஸாநாயக்காவால் திணறும் மகிந்த குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-issu-namal-arrest-mahinda-family-tiuble-1788898965"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-issu-namal-arrest-mahinda-family-tiuble-1788898965</id>
            <summary type="text">&amp;nbsp;ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினரிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக ரங்க திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், விசாரணைகளில் அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அவர் பதவியேற்றபோது சுமார் 8,000 வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், தற்போது அவற்றில் 44 சதவீதமான வழக்குகள் முடிவுறும் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 29-க்கும் மேற்பட்ட வழக்குகள் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடையவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், 'சிரிலிய சவ்வியா' அமைப்பு மற்றும் மகரகம அபேக்ஷா வைத்தியசாலை தொடர்பான நிதி விவகாரங்கள் குறித்து குற்றத்தடுப்பு புலனாய்வுத் துறையினர் (CID) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் பல உறுப்பினர்கள் சட்ட ரீதியான விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, குடும்பம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p>

இந்தநிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் அவரது இல்லாத குறையை ஈடுசெய்யும் வகையில், லிமினி ராஜபக்சவை அரசியல் களத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லிமினி ராஜபக்ச மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p> இது தொடர்பாக குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் வழக்கு விசாரணை! இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளுக்கு நீதவான் கடும் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-regarding-the-purchase-of-airbus-aircraft-1788903667"></link>
            <id>https://tamilwin.com/article/case-regarding-the-purchase-of-airbus-aircraft-1788903667</id>
            <summary type="text">ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே வழக்கின் விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p>அதன்போதே வழக்கின் விசாரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கத் தவறிய இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை நீதவான் அசங்க எஸ் போதரகம கடுமையாக கண்டித்துள்ளார்.
</p><h2>கடுமையான உத்தரவு</h2><p>
இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், விசாரணைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் வாய்மூலமாக நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc21afa3-fa89-42eb-8b83-c83d3c6a4966/26-6aa083651b925.webp' /></p><p>
</p><p>
அதன்போது கடுமையாக ஆத்திரமுற்ற நீதவான் அசங்க எஸ். போதரகம, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு தனியான சட்டங்களோ அதிகாரங்களோ இல்லை என்றும், நீதிமன்றத்தின் முன்னர் குறித்த ஆணைக்குழுவும் பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அத்துடன் வழக்கொன்றின் விசாரணையின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஒவ்வொரு தவணையின் போதும் எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியது பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து விசாரணையளார்களின் பொறுப்பாகும் என்றும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன் அவ்வாறான விசாரணை அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றத்தில் முன்னிலையாகும் அதிகாரிகள் வழக்கு விசாரணை தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்து கொண்டே நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் அவர் கடுமையான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T21:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – இந்திய சுகாதார அமைச்சர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-india-health-ministers-hold-talks-1788900436"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-india-health-ministers-hold-talks-1788900436</id>
            <summary type="text">இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே
இருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே
இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று(8) நடைபெற்றது.</p><p>

கிழக்கு திமோரின் திலி நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின்
தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள
நிலையிலேயே, இம்மாநாட்டின் பக்க அம்சமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
</p><h2>இலங்கையின் சுகாதாரத் துறை</h2><p>
இலங்கை எதிர்கொண்ட அனைத்துக் கடினமான தருணங்களிலும் இந்திய அரசாங்கம் வழங்கிய
ஆதரவுக்கும் நட்புறவுக்கும், இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பில் தனது
நன்றியைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ
தெரிவித்துக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9cf69d7-b1c1-41e4-87aa-25c1fda8f7c1/26-6aa078be737ec.webp' /></p><p>
</p><p>
இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும்
திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, குறிப்பாகக் காசநோய் ஒழிப்பு
நடவடிக்கைகளை மேலும் வெற்றியடையச் செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும்
ஏனைய உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைச்சர் இதன்போது
இணக்கம் தெரிவித்தார்.</p><p>

இதற்கு இணையான வகையில், இலங்கையின் ஆரம்ப சுகாதாரச் சேவை அமைப்பை மேலும்
வலுப்படுத்துதல் மற்றும் அதன் தரத்தை உயர்த்துதல் தொடர்பிலும் இங்கு விரிவாகக்
கலந்தாலோசிக்கப்பட்டது.
</p><p>
கிராமப்புற மட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகளை மேலும்
விரிவாக்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது குறித்தும், அது
தொடர்பில் இரு நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும் இதன்போது
மேலதிக கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T21:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்பிலிப்பிட்டியவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-near-embilipitiya-one-person-injured-1788895289"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-near-embilipitiya-one-person-injured-1788895289</id>
            <summary type="text">எம்பிலிப்பிட்டிய அருகே இன்று(8) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிப்பிட்டிய அருகே இன்று(8) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் இலக்கு வைக்கப்பட்ட நபர் படுகாயமடைந்துள்ளார்.</p><h2>&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
அதனையடுத்து அவர் தனமல்வில மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/400e09f0-a2ff-4b19-8fcb-faf69f666e86/26-6aa0617f3272b.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்இதுவரை கண்டறியப்படவில்லை. போதைப் பொருள் வர்த்தகம் காரணமாக ஏற்பட்ட போட்டியே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T21:01:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் தாக்குதல் வரப்போகிறது...ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னரே நெதன்யாகுவுக்கு நேரடியாக தகவல் வழங்கிய UAE ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-was-warned-about-hamas-2023-attack-1788887397"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-was-warned-about-hamas-2023-attack-1788887397</id>
            <summary type="text">2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வார் பாரிய தாக்குதலொன்றைத் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரடியாக எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இஸ்ரேலிய ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>மிகப்பெரிய தாக்குதல்&nbsp;</h2><p>
சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது, காசாவில் இருந்து “சில்சால்” எனப்படும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பின் சயீத் எச்சரித்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் இரத்தக்களரியையும் ஸ்திரமின்மையையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், இந்தத் தாக்குதல் ஆபிரகாம் ஒப்பந்தங்களையும் பாதிக்கக்கூடும் என பின் சயீத் கவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

எனினும், நெதன்யாகு இந்த எச்சரிக்கைக்கு ஒப்பீட்டளவில் அமைதியாக பதிலளித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/379db03b-6a88-4337-b651-92c606f05986/26-6aa0487fd4d4d.webp' /></p><p>
</p><p>
ஹமாஸ் மேற்கு கரையில் நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம் என தான் கருதுவதாக நெதன்யாகு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த இந்த முக்கியமான எச்சரிக்கை குறித்து ஷின் பெட், மொசாட் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நெதன்யாகு அறிவிக்கவில்லை என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்&nbsp;</h2><p>
</p><p>
பின் சயீத் பின்னர் இந்த உரையாடல் குறித்து சிஐஏ இயக்குநர் வில்லியம் ஜே. பேர்ன்ஸிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்ரேலின் ஷின் பெட் மற்றும் ஹமாஸ் இடையே இரகசிய நேரடி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு இரு தரப்பும் நெருங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆனால், அந்த ஒப்பந்தம் இஸ்ரேல் தரப்பில் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட காலமாக காத்திருந்த சின்வார், 2023 செப்டெம்பரில் இடைத்தரகர் ஊடாக தான் “சில்சால்” எனப்படும் தாக்குதலைத் தயாரித்து வருவதாக எச்சரித்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6df83d-79ff-4d52-a4cf-382914bf8dfb/26-6aa04880890d5.webp' /></p><p>

அந்தத் தாக்குதலை “மிகப்பெரிய ஆச்சரியம்” மற்றும் “பயங்கரமான நடவடிக்கை” என அவர் விவரித்ததாகவும் கூறப்படுகிறது.

செப்டெம்பர் 15ஆம் திகதி சின்வாரின் எச்சரிக்கை ஷின் பெட்டை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதனைத் தொடர்ந்து, அப்போதைய ஷின் பெட் தலைவர் ரோனென் பார், நெதன்யாகுவுக்கு அது குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், இஸ்ரேல் “மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது” என ரோனென் பார் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>&nbsp;கடும் எதிர்வினை</h2><p>
காசா மற்றும் மேற்கு கரையில் தாக்குதல் அல்லது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

எனினும், அந்தக் கூட்டத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இதன்பின்னர், எகிப்திய புலனாய்வுத் தலைவர் அப்பாஸ் கமெலும் ஹமாஸ் “வழக்கத்திற்கு மாறானதும் பயங்கரமானதுமான நடவடிக்கை” ஒன்றைத் திட்டமிடுவதாக நெதன்யாகுவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

காசா நிலைமையை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நெதன்யாகு அவரிடம் தெரிவித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8742e07e-7c74-4322-97f3-4d6dda4b2629/26-6aa048813a4be.webp' /></p><p>

இதனையடுத்து, 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி அதிகாலை 6.29 மணியளவில் ஹமாஸின் தாக்குதல் ஆரம்பமானது.

இந்தத் தாக்குதலின்போது சுமார் 251 பேர் கடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், ‘ஹாரெட்ஸ்’ வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நெதன்யாகுவின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.
</p><p>
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் நெதன்யாகு குறித்த காலப்பகுதியில் பேசவில்லை என்றும், அவரிடமிருந்து எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் இஸ்ரேலில் அரசியல் ரீதியாகவும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னெட், ஐக்கிய அரபு அமீரக மற்றும் எகிப்திய தரப்புகளிடமிருந்து எச்சரிக்கைகள் கிடைத்தபோதும் நெதன்யாகு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஒக்டோபர் 7 பேரழிவுக்கு நெதன்யாகு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T20:45:18+00:00</updated>
        </entry>
    </feed>
