<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-09T09:38:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.வடமராட்சி கிழக்கில் வீட்டை சுத்தம் செய்தபோது மீட்கப்பட்ட அபாயமான பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/found-while-recovery-cleaning-house-1786266798"></link>
            <id>https://tamilwin.com/article/found-while-recovery-cleaning-house-1786266798</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த
போது கோல்சர் என்று சொல்லப்படும் பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த
போது கோல்சர் என்று சொல்லப்படும் பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>இது
தொடர்பில் குறித்த வீட்டு உரிமையாளரால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்குத்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அழிப்பதற்குரிய நடவடிக்கை</h2><p> </p><p>இதனையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் குறித்த
பொருள் தொடர்பில் ஆய்வு செய்துள்ளநிலையில் அதில் நீண்ட நாள் பட்ட வெடிக்க
கூடிய பொருட்கள் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1effbe5-adde-41e2-9b41-8b0ffb0a0a25/26-6a784963d7935.webp' /></p><p> இந்நிலையில் நீதிமன்றத்தின் உரிய
அனுமதியை பெற்று குறித்த பொருளை அழிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T09:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்.. நிதி அமைச்சு எடுத்துள்ள புதிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/30-year-old-government-payroll-system-modernized-1786263633"></link>
            <id>https://tamilwin.com/article/30-year-old-government-payroll-system-modernized-1786263633</id>
            <summary type="text">30 ஆண்டுகள் பழமையான அரச ஊதிய முறைக்கு (GPS) மாற்றாக, ஒரு நவீன தகவல் தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>30 ஆண்டுகள் பழமையான அரச ஊதிய முறைக்கு (GPS) மாற்றாக, ஒரு நவீன தகவல் தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.</p><p>நிதி அமைச்சகத்தின் பொதுக் கணக்குகள் திணைக்களம் (DSA), “அரச நிறுவனங்களுக்கான ஊதிய முறையின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயலாக்கம்” என்ற தலைப்பில் இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>குறித்த திணைக்களம், தற்போதைய முறை தொழில்நுட்ப ரீதியாக காலாவதியானதுடன், நவீன செயல்பாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை அல்லது வளர்ந்து வரும் தகவல் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><h2>ஏற்படும் சிக்கல்கள்..&nbsp;</h2><p>அதன்படி, 1996இல் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய அரச ஊதிய முறையானது, அரச அமைச்சகங்கள், துறைகள், சிறப்புச் செலவினப் பிரிவுகள், மாகாண சபைகள், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பூர்வ சபைகள் உள்ளிட்ட ஏராளமான அரச நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eebc315e-b934-479f-aaf2-c54cd14b2fdd/26-6a7844940ad54.webp' /></p><p> இருப்பினும், அதன் காலாவதியான தொழில்நுட்பக் கட்டமைப்பு மேலும் மேம்படுத்தல்களைத் தடுத்துள்ளது, மேலும் அதன் பலவீனமான பாதுகாப்பு வழிமுறைகள் மோசடி, ஊழல் மற்றும் தரவு மாற்றம் போன்ற அபாயங்களுக்கு அதை உள்ளாக்கியுள்ளன.</p><p> இது அரச நிதிகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், தற்போதைய அமைப்பானது ஒரு ஒருங்கிணைந்த மனிதவள மற்றும் ஊதிய மேலாண்மைத் தளமாகச் செயல்படுவதற்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையையோ அல்லது விரிவாக்கத் திறனையோ கொண்டிருக்காததால், அரசாங்க நிறுவனங்களின் உற்பத்தித்திறனும் செயல்திறனும் பாதிக்கப்படுகின்றன. </p><p>உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போக்குகளுக்கு ஏற்ப, பாதுகாப்பான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஒருங்கிணைந்த ஊதிய அமைப்புக்கு மாற வேண்டிய அவசரத் தேவை இருப்பதாக பொதுக் கணக்குத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.</p><p></p><h2>போலி ஊழியர்கள்</h2><p>

ஒப்பந்த விவரக்குறிப்புகளின்படி, புதிய அமைப்பானது ஸ்தாபனங்கள் சட்டம், அரசாங்க நிதி ஒழுங்குமுறைகள், திறைசேரி, பொது நிர்வாகம் மற்றும் வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கைகள் போன்ற பொதுத்துறை கொள்கைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d160cc44-60b5-416b-93aa-f41578acd72d/26-6a784494c5cde.webp' /></p><p> </p><p>மேலும், இது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தரவுகளை உள்ளீடு செய்யவும், மென்பொருளைப் பயன்படுத்தவும், உத்தியோகபூர்வ பதிவுகளைப் பராமரிக்கவும் கூடிய ஒரு பன்மொழி அமைப்பாக இருக்க வேண்டும். </p><p>உயர் மட்ட நிதிப் பொறுப்புக்கூறலைப் பராமரிக்க, பல காரணி அங்கீகாரத்தைச் செயல்படுத்துவதும், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களுக்கு மாறும் பாதுகாப்பு நீர்முத்திரைகளைச் சேர்ப்பதும், அனைத்துப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான தணிக்கைப் பதிவுகளைப் பராமரிப்பதும் கட்டாயமாகும். </p><p>கூடுதலாக, இந்த புதிய அமைப்பானது போலி ஊழியர்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.

இணைய இணைப்புத் தடங்கல்கள் ஏற்படும் சமயங்களிலும் அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, ஒஃப்லைனில் இயக்கக்கூடிய ஒரு கூடுதல் கருவியையும் இது கொண்டிருக்க வேண்டும்.</p><p> இது, மண்டல சம்பள அலுவலகங்கள் ஒரு எளிய எக்செல் தாள் மூலம் அடிப்படை சம்பளத் தகவல்களைப் புதுப்பிக்கவும், செல்லுபடியாகும் வங்கிப் பரிமாற்றக் கோப்பைத் தயாரிக்கவும் உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T09:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1786265226"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1786265226</id>
            <summary type="text">இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.&amp;nbsp;இதன்படி, டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,39...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>இதன்படி, டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,395ஆக உயர்ந்துள்ளது.</p><p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இன்று (09.08.2026) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.&nbsp;</p><h2>உயிரிழப்புகள்</h2><p>நேற்றைய (08.08.2026) தரவுகளின் அடிப்படையில், இதுவரையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகப் பதிவாகியுள்ளது. </p><p>

கடந்த 6 மாத காலத்தில் பதிவான மொத்த நோயாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். </p><p>மேல் மாகாணத்தில் 47,310 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதன் சதவீதம் 52.92% ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47ff242e-c792-4c6e-8f5f-31f4d3db019c/26-6a784623781e4.webp' /></p><p> </p><p>

அத்துடன், மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டமே தொடர்ந்தும் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அம்மாவட்டத்தில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 19,007 ஆகும்.</p><h2>நோயாளர்கள் பதிவு</h2><p> 

கொழும்பு மாவட்டத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 17,725ஆக உயர்ந்துள்ளதுடன், மூன்றாவது அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 6,341 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். </p><p>

இவ்வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியிருந்தனர். </p><p>அந்த எண்ணிக்கை 29,973 ஆகும். 

எனினும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் 4,048 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T09:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைத் திணைக்களத்தினால் அழிக்கப்பட்ட 1,35,000 புத்தகங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/auditor-general-examination-department-1786262838"></link>
            <id>https://tamilwin.com/article/auditor-general-examination-department-1786262838</id>
            <summary type="text">&amp;nbsp;பரீட்சைத் திணைக்களத்தினால் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக அச்சிட்ட மடக்கைப் புத்தகங்களில் தவறான எண்கள் சேர்க்கப்பட்டிருந்ததன் காரணமாக ஒரு லட்சத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பரீட்சைத் திணைக்களத்தினால் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக அச்சிட்ட மடக்கைப் புத்தகங்களில் தவறான எண்கள் சேர்க்கப்பட்டிருந்ததன் காரணமாக ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் (1,35,000) புத்தகங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>அறிக்கையின்படி அந்தப் புத்தகங்கள் 1997, 1998, 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>அச்சிடப்பட்டுள்ள தவறான எண்கள்</h2><p>புத்தகங்களில் தவறான எண்கள் சேர்க்கப்பட்டிருப்பது 2024 உயர்தரப் பரீட்சையின் போதே உறுதி செய்யப்பட்டதாகக் கணக்காய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் மடக்கைப் புத்தகங்கள் கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி அழிக்கப்பட்டுள்ளன.
</p><p>இதற்கிடையில் பரீட்சைத் திணைக்களத்தால் கொள்முதல் செய்யப்பட்டிருந்த வயர் ஸ்டிச்சிங் (Wire stitching) இயந்திரத்தை இயக்கும் போது காகிதங்கள் கிழிந்ததால் அந்த இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்ட நாளிலிருந்தே பயன்படுத்தப்படாமல் செயலிழந்துள்ளதாகவும் இயந்திரத்தின் பெறுமதி கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கோப்புகளும் திணைக்களத்தில் இல்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/343ca61f-8783-4e0e-8777-04c7d642a439/26-6a7835386f49d.webp' /></p><p>இதற்கிடையில் திணைக்களத்தின் அச்சு இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் 427 டோனர் கார்ட்ரிஜ்கள் (Toner Cartridge - 2011 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையிலுள்ளவை) காலாவதியான இருப்புகளாகக் காணப்பட்டதாகத் கணக்காய்வு அலுவலகம் தெரிவிக்கிறது.
</p><p>இந்தத் தகவல்கள் பரீட்சைத் திணைக்களத்தின் 2025 வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T09:13:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவின் மாபெரும் உணவுத் திருவிழா இடைநிறுத்தம்! நிர்வாகத்தினரின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-reecha-farms-food-festival-suspens-1786200884"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-reecha-farms-food-festival-suspens-1786200884</id>
            <summary type="text">கிளிநொச்சி-&amp;nbsp; இயக்கச்சியில் உள்ள றீச்ஷா வளாகத்தில் கோலகலமாக இடம்பெற இருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. றீச்ஷாவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி-&nbsp; இயக்கச்சியில் உள்ள றீச்ஷா வளாகத்தில் கோலகலமாக இடம்பெற இருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> றீச்ஷாவில் ஓகஸ்ட் 7 முதல் 10 வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரம்மாண்டமான உணவுத் திருவிழா கோலகலமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்து.</p><p>இந்தநிலையிலே, தவிர்க்க முடியாத காரணத்தினால், இன்றையதினமும்(9) நாளையதினமும் (10) நடைபெறவிருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>இடைநிறுத்தம்</h2><p>அத்தோடு, இன்றையதினமும், நாளையதினமும் உணவுத்திருவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கு செலுத்திய முழுத் தொகையும் நிகழ்நிலை வங்கி பரிமாற்றம் மூலம் மீளளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c196de84-5fbb-49dc-a01a-c939baa774b7/26-6a7746ee09385.webp' /></p><p>மேலும், இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் நிர்வாகத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T08:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-results-expected-1786265608"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-results-expected-1786265608</id>
            <summary type="text">
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க குமாரி லியன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார். </p><p>

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026) நாடளாவிய ரீதியில் 2,723 நிலையங்களில் இடம்பெற்றுள்ளன.</p><p>

 பரீட்சைக்கு அமரத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 294,089 என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

நாளை ஆரம்பமாகவுள்ள பரீட்சை</h2><p>
இதற்கிடையில், ஜி.சி.இ. உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகி செப்டம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,532 நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5557edc3-59c8-44c4-806d-bc36533e29a9/26-6a7841687b20e.webp' /></p><p> </p><p>

மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். </p><p>

பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குச் செல்வதற்கு முன்னர் அனுமதி அட்டையில் கையொப்பம் சான்றளிக்கப்பட வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தினார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T08:59:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரவுள்ள அதிசொகுசு பயணிகள் கப்பல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ultra-luxury-passenger-ship-set-to-arrive-sl-india-1786264397"></link>
            <id>https://tamilwin.com/article/ultra-luxury-passenger-ship-set-to-arrive-sl-india-1786264397</id>
            <summary type="text">இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலானது இலங்கைக்கு
வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த கப்பலானது எதிர்வரும் 14 மற்றும் 21ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலானது இலங்கைக்கு
வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த கப்பலானது எதிர்வரும் 14 மற்றும் 21ஆம் திகதிகளில் இரு தடவைகள்
காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக துறைமுக அத்தியட்சகர் ரி.பகீரதன்
தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும் இந்த கப்பலில் வரும் பயணிகள் யாழில் உள்ள கோவில்கள், சுற்றுலா தலங்கள்
என்பவற்றுக்கு சென்று பார்வையிட்ட பின்னர் மீண்டும் சென்னை நோக்கி
செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T08:43:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடரும் ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/temperatures-may-rise-further-warning-issued-1786261545"></link>
            <id>https://tamilwin.com/article/temperatures-may-rise-further-warning-issued-1786261545</id>
            <summary type="text">நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.</p><p>

காற்றின் வேகம் குறைவதால் உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>நீர்த்தேக்கங்கள் வறண்டுபோதல்</h2><p>

 நிலவும் வறண்ட வானிலையின் காரணமாக, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வறண்டு போனதால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebdb42f1-24ea-44b4-9fe1-d16b6c934784/26-6a783717a26e9.webp' />&nbsp;</p><p>

பல மாவட்டங்களைப் பாதித்துள்ள கடுமையான வறண்ட வானிலையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உடல் வெப்பம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>இன்று காலை 6 மணி நிலவரப்படி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது.</p><p>
இதன்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T08:15:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் அதிரடி தீர்மானம்.. தேரர்களுக்கும் சிக்கலா..! பதற்றத்தில் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-22nd-amendment-mahanayake-theros-1786260814"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-22nd-amendment-mahanayake-theros-1786260814</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரர், திப்பத்துவவ ஸ்ரீ சுமங்கல மகா தேரர் உறுதிப்படுத்தினார். </p><p>இதுவரை அத்தகைய கடிதம் எதுவும் ஜனாதிபதியால் பெறப்படவில்லை என்று அரசாங்கம் கூறியிருந்த சூழலில், தேரர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>

இருப்பினும், சம்பந்தப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டிருந்தாலும், அது ஜனாதிபதியால் பெறப்பட்டதா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை என்று, ஊடகத்தினரிடம் பேசியபோது தேரர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அவசரக் கூட்டம்..&nbsp;</h2><p>
</p><p>
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் எதிர்ப்புப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் குழு ஒன்று, மல்வத்தை மற்றும் அஸ்கிரி உபய மகா விகாரையின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து கலந்துரையாடியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab4c13d-4e02-4383-af13-5dcb7c4cabfc/26-6a78322a62afb.webp' /></p><p>முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து மக்களின் கருத்தை அறிய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது.
</p><p>
இந்தப் பிரதிநிதிகள் குழுவில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், பாட்டாலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, லசந்த அழகியவன்ன மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.</p><p> கலந்துரையாடலின் போது, ​​சம்பந்தப்பட்ட கடிதம் ஊடகங்களுக்கும் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>சிக்கலான பின்விளைவுகள்..&nbsp;</h2><p> இதற்குப் பதிலளித்த மகாநாயக்க தேரர், பிக்குகள் கடிதத்தை அனுப்பியிருந்த போதிலும், அது ஜனாதிபதிக்குக் கிடைத்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc1eb4a-8af8-4628-84d2-dc0f90342a64/26-6a78322b25622.webp' /></p><p> </p><p>மேலும், அக்குழுவினர் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கரான வரக்ககோட ஸ்ரீ ஞானரத்ன மகா தேரோவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
</p><p>
கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜி. எல். பீரிஸ், அரசியல் கட்சிகள், சட்ட சமூகம் அல்லது மதத் தலைவர்கள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரையும் கலந்தாலோசிக்காமல் அரசாங்கம் இந்தத் திருத்தத்தை அவசரமாக அறிமுகப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். </p><p>அரசாங்கம் நீதித்துறையை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிப்பதாகவும், இது ஒருமுறை தொடங்கிவிட்டால், எங்கு போய் முடியும் என்று சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், இது ஒரு சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் செயல்முறை என்றும் அவர் எச்சரித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T08:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gs-trade-union-action-islandwide-1786261605"></link>
            <id>https://tamilwin.com/article/gs-trade-union-action-islandwide-1786261605</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில்&amp;nbsp;கிராம உத்தியோகத்தர்கள்&amp;nbsp;நாளை (10.08.2026) மற்றும் நாளை மறுதினம் (11.08.2026)&amp;nbsp;சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில்&nbsp;கிராம உத்தியோகத்தர்கள்&nbsp;நாளை (10.08.2026) மற்றும் நாளை மறுதினம் (11.08.2026)&nbsp;சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளனர்.&nbsp;</p><p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.&nbsp;</p><h2>கொடுப்பனவு உயர்த்தப்படவில்லை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபா பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3554e51-e1da-4d62-a19b-2c5efc52e1f7/26-6a7832e7a7b82.webp' /></p><p>

2024ஆம் ஆண்டில், குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. </p><p>

இருப்பினும், இதுவரை அக்கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) சுகயீன விடுமுறை அறிவித்து பணிக்குச் சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T07:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலைச்சறுக்கில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த அவலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-tourist-who-was-surfing-recovered-dead-1786260703"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-tourist-who-was-surfing-recovered-dead-1786260703</id>
            <summary type="text">வெலிகமை கடற்பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிகமை கடற்பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக வெலிகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(9.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்டு வந்த 21 வயதுடைய துனிசியா நாட்டவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

துனிசியா சுற்றுலாப் பயணிகள் சிலர் நேற்று (08) பிற்பகல் வெலிகமை 'பரண கடே' கடற்கரைப் பகுதியில்அலைச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர்.இதன்போது கடலில் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய சீற்றமான நிலையினால், குறித்த சுற்றுலாப் பயணி அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.</p><p>

அவரைத் தேடும் பணியில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தனியார் மூழ்காளர்கள் ஈடுபட்டும் தேடுதல் முயற்சி பலனளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b3ab1cc-937a-42ad-bff5-3e8aa443c9ac/26-6a78326a30170.webp' /></p><p> </p><p>

எனினும், காணாமல் போன சுற்றுலாப் பயணியின் சடலம் இன்று காலை வெலிகமை பரண கடே கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவம் தொடர்பில் வெலிகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T07:56:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டைக்காட்டில் சந்தேகத்திற்குரிய பெல்ட் ஹோல்டர் கண்டெடுப்பு - பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maruthangakeni-police-investigation-1786257879"></link>
            <id>https://tamilwin.com/article/maruthangakeni-police-investigation-1786257879</id>
            <summary type="text">மருதங்கேணி - கட்டைக்காடு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் முற்றத்தை சுத்தம்
செய்த போது சந்தேகத்திற்குரிய பெல்ட் ஹோல்டர் (Belt Holder) ஒன்று
கண்டெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருதங்கேணி - கட்டைக்காடு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் முற்றத்தை சுத்தம்
செய்த போது சந்தேகத்திற்குரிய பெல்ட் ஹோல்டர் (Belt Holder) ஒன்று
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>குறித்த சம்பவம் இன்றைய தினம் (2026.08.08) மதியம் சுமார் 12:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>குறித்த நபர் தனது
வீட்டு முற்றத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த பெல்ட்
ஹோல்டரைக் அவதானித்துள்ளார்.</p><p>இது குறித்து உடனடியாக மருதாங்ககேணி பொலிஸ் நிலையத்திற்குத் தகவல்
வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/473a1886-32c1-4a58-8249-58ef88b2f133/26-6a782f0321842.webp' />&nbsp; &nbsp;</p><h2>சோதனை முன்னெடுப்பு</h2><p>
</p><p>


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருதாங்ககேணி பொலிஸ் நிலைய பொலிஸார்,
மதியம் 1 மணியளவில் அப்பகுதியை பார்வையிட்டு, வெளிப்புறப் பரிசோதனைகளை
மேற்கொண்டனர்.
</p><p>


சோதனையின் போது, அந்த பெல்ட் ஹோல்டருக்குள் சில பொருட்கள் இருப்பது
தெரியவந்துள்ளது.</p><p>சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னர், பெல்ட் ஹோல்டரை மீட்டு
மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்த உள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T07:41:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் மற்றும் மனைவி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slfp-balamandala-chairman-and-wife-arrested-1786258060"></link>
            <id>https://tamilwin.com/article/slfp-balamandala-chairman-and-wife-arrested-1786258060</id>
            <summary type="text">ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
மெதிரிகிரிய பகுதியை சேர்ந்த 44 மற்றும் 34 வயதுடைய சந்தேகநபர்கள் மற்றும் அவரது மனைவியை ஹிங்குரகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>போதைப்பொருள் கடத்தல்</h2><p>
</p><p>
போதைப்பொருள் கடத்தலுக்கான 'இடத்தை' அமைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6f1c00-ea21-4c8a-be5e-2d8d7f0a011b/26-6a782e2bdc566.webp' />&nbsp;</p><p>கைது செய்யப்பட்டபோது, ​​சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் ஐஸ் மற்றும் 12 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>

இரு சந்தேகநபர்களும் ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபரின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
இதற்கமைய, சந்தேகநபர்களிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T07:37:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்மாந்துறையில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-sale-of-illicit-liquor-sammanthurai-1786258910"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-sale-of-illicit-liquor-sammanthurai-1786258910</id>
            <summary type="text">சம்மாந்துறையில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்
ஒருவர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது
செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறையில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்
ஒருவர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்,
சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கு அருகில் அதிகாலை நேரத்தில்
மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது
செய்யப்பட்டுள்ளார். </p><p>இதன்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில்
வைக்கப்பட்டிருந்த 5 கேன்கள் கொள்ளளவு கொண்ட 25 கசிப்பு போத்தல்களை பொலிஸார்
கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p>அண்மைக்காலமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கசிப்பு
விற்பனை அதிகரித்து வரும் நிலையில், அதனை முற்றிலும் ஒழிப்பதற்குப் பொலிஸார்
தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf14c1e-d3b4-4f5f-981b-298fcf0603a5/26-6a782ac64f2dd.webp' /></p><p> </p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T07:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பை ஏற்படுத்திய துண்டிக்கப்பட்ட மனிதத்தலை - பின்னணியில் மறைந்துள்ள மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-head-without-a-trunk-is-found-in-wellawaya-1786256061"></link>
            <id>https://tamilwin.com/article/human-head-without-a-trunk-is-found-in-wellawaya-1786256061</id>
            <summary type="text">எல்ல - வெல்லவாய வீதியில் வெல்லவாய பகுதியில், துண்டிக்கப்பட்ட மனிதத்தலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியருகே உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல - வெல்லவாய வீதியில் வெல்லவாய பகுதியில், துண்டிக்கப்பட்ட மனிதத்தலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த வீதியருகே உள்ள வனப்பகுதியில் அந்த மனிதத்தலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இந்த சந்தேகத்திற்கிடமான மனிதத்தலை தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90547d25-613a-4f0b-8735-2738d68838d5/26-6a7820f2b3b7e.webp' />&nbsp;</p><p>
</p><p>
மேலும், சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவருடைய தலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T07:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு.. அவதியுறும் மக்கள் குறித்து கேள்வி எழுப்பிய எம்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/power-cut-issue-in-mannar-jegadheeswaran-mp-1786259072"></link>
            <id>https://tamilwin.com/article/power-cut-issue-in-mannar-jegadheeswaran-mp-1786259072</id>
            <summary type="text">கடந்த ஆட்சிக் காலங்களில் அதிகாரங்களில் காணப்பட்ட&amp;nbsp; நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மன்னாரில் ஏற்படும் மின் தடை பிரச்சினைக்கு ஏன் நிரந்தர தீர்வை பெற்றுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஆட்சிக் காலங்களில் அதிகாரங்களில் காணப்பட்ட&nbsp; நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மன்னாரில் ஏற்படும் மின் தடை பிரச்சினைக்கு ஏன் நிரந்தர தீர்வை பெற்றுக்
கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன்
கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
மன்னாரில் நேற்று (8) நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் குறித்த மின்தடை பிரச்சினை தொடர்பாக வினா எழுப்பப்பட்ட போது
கருத்து தெரிவிக்கையில்,&nbsp;</p><p>"மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு வருவது குறித்து தொலைபேசி
வாயிலாகவும், நேரடியாகவும் பலர் தெரிவித்து இருக்கிறார்கள்.</p><h2>உடன் தீர்வு&nbsp;</h2><p> இதற்கு உடனடியாக
தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்கிறோம்.

அந்த வகையில், இது இந்த விடயம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக
இடம்பெறுவதாக மக்கள் கூறுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0042b8b1-f4a8-483f-8693-961af3d20569/26-6a782954a0b91.webp' /></p><p>
</p><p>
ஆனாலும், நான் இது கேள்விப்பட்ட உடனேயே அரசாங்க அதிபரோடு தொலைபேசி தொடர்பு
கொண்டு, அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட மின்சார சபையினுடைய நிறைவேற்று
பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடைய மன்னார் மாவட்ட
பொறியியலாளர், அதேபோல் இது தொடர்பான அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடனடியாக
இது தொடர்பாக நான் வினவி இருந்தேன்.
</p><p>
தற்பொழுது மின்சார சபையினுடைய நிறைவேற்று பொறியியலாளர் கூறியிருந்தார். இந்த
மின்சார இணைப்பு உயிலங்குளத்தில் இருந்து மன்னார் தீவு பகுதிக்கு வருகின்ற
மின்சார இணைப்பில் உடைய கம்பிகளில், இரவு நேரங்களில் இந்த காற்று கூடுதலாக
இருக்கின்ற காலப்பகுதியில் அந்த மணல் அல்லது துகள்கள் ஈரத்துடன் அந்த மின்
கம்பிகளில், மின்சாரம் வழங்குகின்ற விநியோக கம்பிகளில் படிவதால் அடிக்கடி
மின்சாரம் தடை படுவதாக காரணம் கூறியிருந்தார்.
</p><p>
நான் கூறியிருந்தேன், தொடர்ச்சியாக இவ்வாறு இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள
முடியாது. எனவே, ஒரு நிரந்தரமான தீர்வு நிச்சயமாக மக்களுக்கு வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T07:16:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய சிறைச்சாலைகளை உலுக்கிய மோதல்கள் - நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-attack-in-issue-investigation-1786242527"></link>
            <id>https://tamilwin.com/article/person-attack-in-issue-investigation-1786242527</id>
            <summary type="text">குருவிட்ட, பல்லன்சேன மற்றும் மெகசின் சிறைகளில் மோதல்களில் ஈடுபட்ட கைதிகள் தொடர்பான அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட, பல்லன்சேன மற்றும் மெகசின் சிறைகளில் மோதல்களில் ஈடுபட்ட கைதிகள் தொடர்பான அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
சிறை நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட விசாரணையின் அறிக்கை பின்வருமாறு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப். யு. உட்லர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>கட்டுப்பாட்டுக்குள் சிறைச்சாலை கலவரம்</h2><p>குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் கடந்த (07) திகதி அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில், இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40c8eef3-1f4e-48aa-a90d-a49c1862e76d/26-6a7813ff238fd.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, குறித்த சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.</p><p>இந்நிலையில், குருவிட்ட சிறைச்சாலையின்&nbsp; மோதல்களில் 13 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போது இருவர் உயிரிழந்தனர்.
</p><p>இதேவேளை, நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T06:45:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வன்முறையை தூண்டும் முயற்சி! காரணத்தை வெளியிட்ட பிரதியமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-minister-pradeep-media-meeting-1786254348"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-minister-pradeep-media-meeting-1786254348</id>
            <summary type="text">போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்வதாக பிரதியமைச்சர் சுந்தரலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்வதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். </p><p>

நேற்றைய தினம் (08.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலை வன்முறை மற்றும் அரசாங்க நடவடிக்கை நாட்டில் சமீபத்தில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.</p><h2>போதைப்பொருள் கடத்தலுக்கான மத்தியஸ்த நிலையம்</h2><p> </p><p>

கடந்த காலங்களில் இலங்கை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு முக்கிய மத்தியஸ்த நிலையமாக விளங்கியது. 

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருளை முழுமையாக ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p> போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போதைய சம்பவங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01d17a42-991e-46c8-940a-e2c0f04eeed5/26-6a78176e0d9a0.webp' /></p><h2>வன்முறையை ஏற்படுத்தும் முயற்சி</h2><p> போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர். 

சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது.</p><p> இதில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்று அவசர கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். </p><p>

சிறைச்சாலை அமைதியின்மைகளை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டின் அமைதியை குலைக்க முயலும் நபர்களுக்கு எதிராக மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T06:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்து..! அரசின் காணி கையகப்படுத்தலுக்கு எதிராக கண்டனம் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-against-government-land-acquisition-1786254881"></link>
            <id>https://tamilwin.com/article/protest-against-government-land-acquisition-1786254881</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற
அனுமதிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று 8ஆவது வாரமாகவும் தொடர்
அமைதிவழிப் போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற
அனுமதிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று 8ஆவது வாரமாகவும் தொடர்
அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p>

பலாலி சந்தியில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், நீண்டகாலமாக தமது காணிகள் அரச
படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களால் சொந்த நிலங்களுக்குத் திரும்ப
முடியாத நிலை தொடர்வதாக மக்கள் தெரிவித்தனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">காணி சுவீகரிப்பிற்கு எழும் கண்டனம்</span></p><p>
“எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும்”, “பூர்வீக நிலங்களில் மீள்குடியேற
அனுமதிக்க வேண்டும்”, “மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்”
உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது
கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பல ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாத காரணத்தால்,
குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a81a4e8e-0b34-495c-ac18-0291b613d9bd/26-6a78168612515.webp' /></p><p>தமது காணிகளை விடுவிப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால்
உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவை முழுமையாக
நடைமுறைப்படுத்தப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p> 


இதன் காரணமாகவே தமது காணிகளை மீட்பதற்காக தொடர்ச்சியான போராட்டத்தை
முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். </p><h2>


மக்களின் கோரிக்கை</h2><p>
தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறி, இயல்பான வாழ்க்கையை முன்னெடுப்பதே
தங்களது பிரதான கோரிக்கை என தெரிவித்த மக்கள், எந்தவித வன்முறையுமின்றி
அமைதியான முறையில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும்
குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58b1b70c-9b4d-460a-9b1a-1fc2438f1993/26-6a781686e84e9.webp' /></p><p> </p><p>

எனவே, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளித்து,
அவர்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். </p><p>

“நிலம் எங்களின் உரிமை; எங்கள் பூர்வீக நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்”
என்ற கோரிக்கையுடன், 8ஆவது வாரமாகவும் பலாலி சந்தியில் மக்கள் தமது அமைதிவழிப்
போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693d5d1d-ba04-473f-9e38-0fefbb56f862/26-6a781706b55e1.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21c97e87-5348-4ce2-bff7-aa1b224e93a2/26-6a781707a31b6.webp' /></p><p><br></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T05:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-mandur-sri-kanthaswamy-temple-1786253953"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-mandur-sri-kanthaswamy-temple-1786253953</id>
            <summary type="text">இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு, நேற்று(08.08.2026) இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக
மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவமும் கப்புறாளைகளினால்
வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெற்றுள்ளது.</p><h2> 


மண்டூர் கந்தசுவாமி ஆலய உற்சவம்</h2><p>

கிழக்கிலங்கையில் மிகவும் பழமையும், பிரசித்தமாகவும் இருந்த முருகன் கோயில்கள் திருப்படைக் கோயில்கள் என்றும் அழைக்கப் பெற்றன. </p><p>

பண்டைய அரசனின் மதிப்பு, மானியங்களும், சீர்வரிசைகளும், நிருவாக அமைப்பும் பெற்ற கோயிலே இது என்பதால் இதனை “தேசத்துக்கோயில்” என்றும் அழைக்கப்படுகின்றது. 

இவ்வாறான பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்றிரவு
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef19ab69-4c28-4836-88b0-d5b969869dd7/26-6a7812e5573ad.webp' /></p><p> </p><p>

போரதீவுற்று பிரதேச செயலாளர் இ.ரங்கநாதன், ஆலயத்தின் தேசத்துக்கு குருவான
சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள், ஆலய வண்ணக்குமார்கள் தலைமையில் திருவிழா
அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி ஆலயத்தின் உட்
பகுதிக்குள் கொடியேற்றம் இடம்பெற்றது.</p><h2> 

20 நாட்கள் நடக்கும் மாபெரும் திருவிழா</h2><p>இதனைத் தொடர்ந்து, வள்ளியம்மன் ஆலயம் மற்றும் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கு
முன்பாகவும் இந்த பாரம்பரிய கொடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p> 

தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும் இத் திருவிழா காலத்தில் தினமும் வேல் தாங்கிய
பேழை உள்வீதி வெளிவீதி கொண்டுவரப்பட்டு வீதியுலா நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7809dee-3bcd-4a29-9d5b-23d070cd6f8d/26-6a7812e6647ae.webp' /></p><p>

அதன் பின்னர், திருவிழாவின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி
வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வாவியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p>

நேற்றைய கொடியேற்ற நிகழ்வினை கண்டுகளிப்பதற்கான கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T05:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோய் தீவிரமடைந்துள்ள பின்னணி! அடையாளப்படுத்தப்பட்டுள்ள அதிஅபாய வலயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengu-fever-warrning-srilanka-people-1786249747"></link>
            <id>https://tamilwin.com/article/dengu-fever-warrning-srilanka-people-1786249747</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ள பின்னணியில் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ள பின்னணியில் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.</p><h2>டெங்கு நோயாளர்கள் பதிவு&nbsp;</h2><p> இதற்கமைய, 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,&nbsp;மொத்த நோயாளர்களில் 52.94 சதவீதமானோர் 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff657d3-1ead-41fc-b061-16ed3cc40e10/26-6a7809293289b.webp' /></p><p>இதன்படி, மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டம் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p>கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3,569 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்</p><p>அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 3,686 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T04:59:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு எச்சரிக்கையுடன் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786248333"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786248333</id>
            <summary type="text">காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகளை அவதானிப்பில் கொள்ளுமாறு கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகளை அவதானிப்பில் கொள்ளுமாறு கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கடற்பரப்புகளில் காற்றின் வேகம்</h2><p> </p><p>

அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89c22882-5492-459d-82b5-79ece6ed7f6f/26-6a7801ff7c287.webp' /></p><p> </p><p>

எனவே, மறுஅறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்படுகின்றது. </p><p>

மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p> 

எனவே, இந்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78bd4dad-e203-4977-a237-9a41b320673f/26-6a7802006d30b.webp' /></p><p> </p><p>

கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக் கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T04:29:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் - இரகசிய நடவடிக்கையில் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arrested-for-printing-counterfeit-notes-1786247364"></link>
            <id>https://tamilwin.com/article/person-arrested-for-printing-counterfeit-notes-1786247364</id>
            <summary type="text">போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டை வீதி பகுதியில் நேற்று (8) நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
</p><p>
கோட்டையை சேர்ந்த 53 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/704fca85-6411-40ff-9bcc-39071cb1eb55/26-6a78000c7bdba.webp' /></p><p>
</p><p>
இதன்போது சம்பவ இடத்திலிருந்து ஏழு போலி ரூ. 5,000 நாணயத்தாள்கள், ஆறு ரூ. 1,000 நாணயத்தாள்கள், ஒரு ரூ. 500 நாணயத்தாள், ஒரு கணினி, ஒரு ஸ்கேனர் மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் மீட்கப்பட்டன.
</p><p>
இதற்கமைய, இன்று (09) சந்தேகநபரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T04:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-and-government-officials-arrested-1786245444"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-and-government-officials-arrested-1786245444</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட ஏறக்குறைய ஐம்பது அரச உயர் அதிகாரிகள் இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்பட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட ஏறக்குறைய ஐம்பது அரச உயர் அதிகாரிகள் இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>நாடு இழந்த பெருந்தொகை பணம்</h2><p>
</p><p>
மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளால் நாடு இழந்த பணத்தின் தொகை 5000 கோடி ரூபாவிற்கும் அதிகம் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c5707c7-3ac1-41a5-a80b-dfaab169c390/26-6a77f80742123.webp' />&nbsp;</p><p>

கடந்த காலங்களில் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசியல்வாதிகள் பல்வேறு தண்டனைகளைப் பெற்று சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதேவேளை, அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு புலனாய்வுத்திணைக்களங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த நபர்களை கண்காணிக்க சிறப்பு உளவுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

​​</p><h2>மீண்டும் வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் திட்டம்</h2><p>நாட்டில் பொதுச்சொத்துக்களை வீணடித்த அரசியல்வாதிகள் மற்றும் ஏனையவர்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bdc4480-63ab-40af-bcaf-04b0290abb9e/26-6a77f807ea9e2.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதனிடையே, பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளை சுட்டிக்காட்டி சில வழக்குகளில் இருந்து தப்பிய பல அரசியல்வாதிகள் குறித்த தகவல் வெளியாகி, தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து மீண்டும் வழக்குப்பதிவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
எதிர்வரும் முக்கியமான தேர்தலுக்கு முன்னர் இந்த விசாரணைகளை முடிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T04:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பலப்படுத்தப்படும் பொலிஸ் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-examination-1786246952"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-examination-1786246952</id>
            <summary type="text">நாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026)
இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 


நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026)
இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. </p><p>


நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள்
இந்த பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.</p><p> 

மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களின் வாழ்த்துகளுடன் பரீட்சைக்கு தயாராகி பரீட்சை நிலையங்களுக்கு
சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/336f4cde-3df7-4397-b9d0-43d8aadf09bf/26-6a77f7a2d6731.webp' /></p><p>


மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்
பரீட்சை சுமுகமாகவும் அமைதியான முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
</p><p>

பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல
பெறுபேறுகளைப் பெற வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்
சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><h2>நுவரெலியா&nbsp;</h2><p>நுவரெலியா மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் மழையையும் பொருட்படுத்தாது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை
நிலையங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சை இன்று(09.08.2026) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதல் மழை பெய்து வந்த
போதிலும், மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை
தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76c12fb2-f7d3-41ca-95d1-c46fec3aa8c6/26-6a77fbe33fe84.webp' /></p><h3> 


மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவை</h3><p>
மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு,
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களில்
அழைத்துச் சென்று பரீட்சை நிலையங்களில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக
அரசாங்கத்தினால் விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a677f04c-c6e7-43f6-8976-72fd357f7c01/26-6a77fbe4445e2.webp' /></p><p>
இதன் காரணமாக மாணவர்கள் பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்திருந்தனர். அத்துடன், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.</p><p>

சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாது, நுவரெலியா மாவட்டத்தின் பல
பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44f23a7-3f73-41f4-b20e-c7b3e77a59dc/26-6a77fbe5292ff.webp' /></p><p><b><i>மேலதிக தகவல் - மலைவாஞ்சன்</i></b></p><h2>கந்தளாய்&nbsp;</h2><p>நாடளாவிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று(09.08.2026)
ஆரம்பமாகியுள்ள நிலையில், கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலும்
பரீட்சை நடவடிக்கைகள் சுமுகமாகத் தொடங்கியுள்ளன.</p><p>

இந்த முறை கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட மொத்தம் 37 பாடசாலைகளைச் சேர்ந்த
மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
</p><p>
இதற்கமைய, சிங்கள மொழிமூலப் பாடசாலைகள்- 29 மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகள் - 08 ஆகியவற்றில் இந்த பரீட்சை இடம்பெறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94ce4b63-b811-48bc-9a7b-8d6069ee5a25/26-6a7810064d47f.webp' /></p><p>

கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலை உள்ளிட்ட முக்கிய பரீட்சை மையங்களில்
பரீட்சைக்கான அனைத்துக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலயக்
கல்வி அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>

மாணவர்கள் அமைதியான சூழலில் பரீட்சை எழுதுவதற்கான அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa742ae3-1402-46b4-90de-34b8471366b9/26-6a78100745546.webp' /></p><p><b><i>மேலதிக தகவல் -யூசுப்</i></b></p><p>&nbsp;இலங்கை முழுவதும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09)
காலை நாடு தழுவிய ரீதியில் அமைதியாகவும், சுமுகமான முறையிலும் ஆரம்பமாகி
நடைபெற்று வருகின்றது.
</p><p>
அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் மிகவும்
உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர்.</p><p>
வினாத்தாள்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் பரீட்சை எழுதுவதை அவதானிக்க முடிந்தது.

பரீட்சை நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி மிகவும் நேர்த்தியாக
நடத்துவதற்காக, நாட்டின் அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும் பலத்த பொலிஸ்
பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><h3>
பாடசாலைகளில் பலப்படுத்துப்படும் பொலிஸ் பாதுகாப்பு</h3><p>

 பரீட்சார்த்திகளின் போக்குவரத்துச் சௌகரியங்கள்
மற்றும் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் பொலிஸார் தீவிரக்
கடமையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db961abc-d046-488b-b3a9-c54bc8e5cbdf/26-6a781e065446e.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும்
வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.பரீட்சை காலை 09.30 மணிக்கு
ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை
மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.
</p><p>

இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை
கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு
சமூகமளித்திருந்தனர்.
</p><p>
மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் பொலிஸாரின் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது, பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி பாதுகாப்பாக இடம்பெறுதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe0a25cb-548b-4a13-ac88-79bb9281cf90/26-6a781e0734eaa.webp' /></p><p><b><i>மேலதிக தகவல் - சிஹான் பாரூக்</i></b></p><p>ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி
வலயங்களிலும் பெற்றோரின் பெரும் எதிர்பார்ப்புடன் இடம்பெற்றுள்ளது. </p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம்,மட்டக்களப்பு மத்தி கல்வி
வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்,பட்டிருப்பு கல்வி வலயம்,கல்குடா கல்வி
வலயம் ஆகியவற்றில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம்(09) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbae5ef7-8b06-47c6-91e2-b90b63958fe3/26-6a782e914aef4.webp' /></p><p>
</p><p>

இன்றைய தினம் மாணவர்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.
</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமான முறையில் பரீட்சைகள்
நடைபெற்றுள்ளதுடன், பரீட்சை நிலையங்களுக்கு முன்பாக பெற்றோர் பெரும் எதிர்பார்ப்புடன் நின்றுகொண்டிருப்பதை காணமுடிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0aba81-a85d-4f59-af61-41be5bf2af85/26-6a782e92552e8.webp' /></p><p><b><i>மேலதிக தகவல் - குமார்</i></b></p><h2>முள்ளிப்பொத்தானை</h2><p>&nbsp;தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09.08.2026) நாடளாவிய ரீதியில்
நடைபெற்று வருகின்ற நிலையில் புள்ளிப் பொத்தானை கோட்டத்தில் உள்ள மாணவர்களும்
பரீட்சைக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர்.</p><p>முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில்
உள்ள பரீட்சை மண்டபத்துக்கு இம் மாணவர்களின் வருகையை அவதானிக்க கூடியதாக
இருந்தது.
</p><p>பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன்
பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்தனர்.

காலை முதலே மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பரீட்சை நிலையங்களுக்கு
வருகை தந்ததுடன், பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து
பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>

மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படும்
இப்புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும்
எதிர்பார்ப்புடன் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.</p><p>
</p><p>
பரீட்சை நிலையங்களில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், பரீட்சை சுமுகமாக நடைபெற்று வருகின்றது.</p><p><b>செய்தி-றொசான்</b></p><h2>கிண்ணியா</h2><p>கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சை இன்று (09) சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்றது.
</p><p>
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட
மூன்று கோட்டங்களிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றினர்.
</p><p>
பரீட்சை நிலையங்களுக்கு அதிகாலை முதலே மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களுடன் வருகை தந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/374db041-e54e-4c2f-a844-fff7970d107a/26-6a783883f1077.webp' /></p><p>

தங்களது பிள்ளைகளின் எதிர்கால கல்விப் பயணத்தில் முக்கியமான பரீட்சையாகக்
கருதப்படும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு பெற்றோர்கள் மிகுந்த அக்கறையுடன்
மாணவர்களை அழைத்து வந்ததை காணக்கூடியதாக இருந்தது.</p><p>

கிண்ணியா கல்வி வலயத்தில் மூன்று கோட்டங்களைச் சேர்ந்த பரீட்சை நிலையங்களில்
இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, பரீட்சை நடவடிக்கைகள் உரிய பாதுகாப்பு
ஏற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டன.</p><p><b><i></i></b></p><p><b><i></i></b></p>]]></content>
            <updated>2026-08-09T03:49:17+00:00</updated>
        </entry>
    </feed>
