<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-25T11:49:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemorate-july-1983-genocide-1784973377"></link>
            <id>https://tamilwin.com/article/commemorate-july-1983-genocide-1784973377</id>
            <summary type="text">இலங்கைத்தீவில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு தாக்குதல் என்பது சடுதியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல. அது நீண்ட திட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத்தீவில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு தாக்குதல் என்பது சடுதியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல. </p><p>அது நீண்ட திட்டமிடலோடும், இன விரோதத்தோடும், தமிழர்களின் பொருளாதாரத்தை கொழும்பில் இல்லாது ஒழிக்கவும், பொருளாதார இலக்குகளை சிங்களவர்கள் கைப்பற்றுவதற்குமான ஒரு நீண்டகால தொடர் இனவிரோத செயல்முறையின் ஒட்டுமொத்த திரட்சியின் வடிவமே ஆகும்.</p><p></p><h2>கறுப்பு ஜூலை படுகொலை</h2><p>
ஆனால் யாழ் திருநெல்வேலியில் ஜூலை 23ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பினர் மேற்கொண்ட கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள படையினர் கொல்லப்பட்டமை என்பது அந்த இனப்படுகொலையை ஆரம்பிப்பதற்கான உடனடி காரணமாக அமைந்துவிட்டது.
</p><p>
கறுப்பு ஜூலை படுகொலை என்பது கொழும்பில்தான் ஆரம்பித்தது என நம்மவர்கள் வரலாற்றை பதிவு செய்ய முற்படுகின்றனர். ஆனால் உண்மையில் அந்த ஜூலை படுகொலை யாழ்ப்பாணத்திலேயே ஆரம்பமானது என்பதுதான் உண்மை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e26b15a2-fadd-4b93-a1a1-8864c3c876ed/26-6a6490a099ee1.webp' /></p><p>ஜூலை 23ஆம் திகதி நள்ளிரவு திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து 24ஆம் திகதி அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள படைமுகாம்களில் இருந்து இராணுவ கவச வண்டிகளில் வந்த படையினர் மக்கள் மீது சரமாரியாக சுட்டு படுகொலை தாக்குதலை ஆரம்பித்தனர். </p><p>

இதில் மானிப்பாய் - சுண்ணாகம் வீதியில் வந்துகொண்டிருந்த பேருந்தையும் இராணுவத்தினர் சுட்டனர். இதில் பல்கலைக்கழக சமூகத்தினால் வெளியிடும் மாதாந்தப் பத்திரிகையான மனிதம் பத்திரிகையின் ஆசிரியர் விமலதாஸ் கொல்லப்பட்டார். </p><p>

அத்துடன் இலக்கியவாதி கலா.பரமேஸ்வரன் பலாலி வீதியில் அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். மேலும் காரைநகரிலிருந்து வந்த பேரூந்தினை மறித்து அதில் வந்த 13 பேரை நிரையில் நிற்கவைத்து 12 பேரைக் சுட்டுக்கொன்றனர்.</p><h2>தமிழர் இனப்படுலை</h2><p>இதில் ஒருவர் ஓடித்தப்பி லண்டனில் வாழ்கிறார். இவ்வாறு ஜூலை 24ஆம் திகதி யாழில் மொத்தமாக 51 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதை பெயர் பட்டியலுடன் TRRO எனப்படும் தொண்டர் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
</p><p> 
திருநெல்வேலி தாக்குதலில் கொல்லப்பட்ட 13 படைவீரர்களும் சிங்கள தேசத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் ஜே.ஆர். அரசாங்கம் கொழும்பு - பொரளையில் அவர்களுக்கான இறுதிக் கிரியைகளை 24ஆம் திகதி செய்யத் திட்டமிட்டதே கொழும்பில் உள்ள தமிழர்கள் மீது இனவழிப்பு செய்வதற்காகத் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac2f5ce1-309a-473c-bee0-e460da3c1f99/26-6a6490a189a57.webp' /></p><p>
</p><p>
 படையினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வன்முறைகளைச் செய்யக் கூடிய காடையர்கள் சிங்கள தேசத்தின் பல பகுதிகளிலும் இருந்து கொண்டுவரப்பட்டு கொழும்பில் விடப்பட்டிருந்தனர். </p><p>அன்று அது ஒரு எசல பௌர்ணமி நாள். பொரளை கனத்தை மயானத்தில் 13 படையினரது தகனக் கிரியை முடிந்ததும் தமிழர்களுக்கெதிரான படுகொலை அரங்கேறத் தொடங்கியது.
</p><p>
அன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பொலிஸ்மா அதிபராக ருத்திரா ராஜசிங்கம் எனும் தமிழர் இருந்தார். அவர் கொலை வெறித்தாக்குதலுக்கான முஸ்திப்புகளின் விபரீதத்தை உணர்ந்து அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் வதிவிடத்திற்கு நேரே சென்று ஊரடங்குச் சட்டம் பிரகடனம் செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உத்தரவு கேட்டார்.</p><h2>கொலைவெறித் தாக்குதல்</h2><p> </p><p>
ஜே. ஆர் அதற்குச் சம்மதிக்கவில்லை. மாறாக “சிங்கள மக்கள் அவர்களின் மனவுணர்வை வெளிப்படுத்தட்டும்“ என்று கூறி மறுத்துவிட்டார். </p><p>

இதன் விளைவாக நாடெங்கும் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட இனப்படுகொலைகள் வேகமாக பரவியது. இதற்கு ஜே. ஆர். ஜெயர்த்தனாவின் வலது, இடது கரங்களாக செயல்பட்ட சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோர் பிரதான சூத்திரதாரிகளாக வீதிகளில் வந்து நின்று தலைமை தாங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54837a9e-822b-47e1-a633-f2b53e3a3e05/26-6a6490a23aed9.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல்களின் இலக்கு பெரும்பாலும் தமிழர்களுடைய பொருளாதார இலக்குகளான வியாபார தளங்கள் மீதும், தொழிற்சாலைகள் மீதும் நடத்தப்பட்டது. அவை தீயிட்டு அழிக்கப்பட்டன. வீதிகளில் நடமாடிய தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். கொழும்பு நகரப்புறங்களில் தமிழர்களின் வீடுகள் தேடித்தேடி தீக்கிரையாக்கப்பட்டன.</p><p>
 இந்தக் கொலைவெறித் தாக்குதல்களினால் 3000க்கு அதிகமான தமிழர்கள் தென்னிலங்கையில் கொல்லப்பட்டார்கள். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டார்கள்.</p><p>

அதே சமயம் ஜூலை 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.</p><h2>மரண தண்டனை தீர்ப்பு&nbsp;</h2><p> </p><p>குட்டிமணி,ஜெகன், தங்கத்துரை ஆகியோருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய போது இறுதி ஆசை என்னவென்று கேட்கப்பட்டது. அப்போது குட்டிமணி தனது கண்களைத் தமிழ் மகன் ஒருவனுக்குத் தானமாக வழங்குங்கள். மலரப் போகும் தமிழீழத்தை அதனூடாகப் பார்ப்பேன் என்றார். </p><p>அதனால் அவரது கண்கள் தோண்டப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலையின் சாட்சியாக டக்ளஸ் தேவானந்தா மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்கள் தற்போதும் உயிருடன் உள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/156b9946-498f-4378-a8d8-9ad8c566c621/26-6a6490a2e52a6.webp' /></p><p>
</p><p>
அதேவேளை வெளிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் சடலங்கள் இரகசியமாக கொழும்பு பொரளை மயானத்தில் 10அடி ஆழத்தில் வெட்டப்பட்ட மூன்று புதைகுழிகளுக்குள் ஐம்பத்து மூன்று உடலங்களும் புதைக்கப்பட்டன.</p><p> 

இதனை 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொரளை மயானத்தின் இரவு காவல் பணியாளராக பணியாற்றிய அனிஸ் துவான் என்பவர் 2016ஆம் ஆண்டில் சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் உண்மையின் சாட்சியமாக வாய்திறந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>

1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நடுஇரவில் பொரளை மயானத்தில் இராணுவ வண்டிகளில் வந்திறங்கிய இராணுவ வீரர்கள் கனரக மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் பத்து அடி ஆழமுள்ள குழிகளை வெட்டினார்கள்.</p><p></p><h2>தமிழீழ விடுதலை முன்னோடிகள்</h2><p> 

மூடப்பட்ட இராணுவ வண்டியில் கொண்டு வரப்பட்ட 35 ஆண்களுடைய உடலங்களை அதில் புதைத்தனர். அது சம்பந்தமாக மயானத்தின் மேலாளர் கொழும்பு மாநகர மேயருக்கு அறிவித்தபோது “இராணுவத்தினரை தடுக்க வேண்டாம். அதனை அவர்கள் செய்து முடிக்க அனுமதியுங்கள் என கொழும்பு மாநகர மேயர் உத்தரவிட்டார்“ என்றும் அனிஸ் துவான் என்ற அந்த மயான காவலாளி தெரிவித்துள்ளார்.</p><p>

மறுநாள் மேலும் 18 ஆண்களுடைய உடலங்களை இராணுவத்தினர் கொண்டுவந்து நடு இரவில் புதைத்தனர்" எனவும் தெரிவித்தார்.

1983ஆம்ஆண்டில் வெலிக்கட சிறைச்சாலையில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கதுரை, குட்டிமணி, ஜெகன், ராஜசுந்தரம், தேவன், சிவபாதம் மாஸ்டர் உட்பட 53 தமிழர்களுடைய உடலங்கள் அவர்களது குடும்பங்களுக்கோ, அவர்களது அன்புக்கு உரியவர்களுக்கோ எந்தவொரு அறிவிப்பும் செய்யாது சிங்கள அரசு புதைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7edd0529-2d82-4a4b-8f4f-eec7f86b863b/26-6a6490a397e59.webp' /></p><p> </p><p>

இது சம்மந்தமான எந்தவித அறிவிப்பையும் அரசு செய்யாமல் இருப்பது மனித உரிமை மீறலும், போர்க்குற்றமுமாகும். இப்போது அவர்களின் புதைகுழிக்கு மேலாக கார் தரிப்பிடம் ஒன்றையும் அமைத்துவிட்டார்கள். </p><p>சிங்களதேசத்தின் தலைநகரத்தில் தினமும் இலட்சக் கணக்கான மக்கள் கடந்து போகும் ஒரு சுறுசுறுப்பான பகுதியில் நிலத்துக்கு கீழே எங்கள் தேசத்தின் வீரப் புதல்வர்களான தமிழீழ விடுதலை முன்னோடிகள் புதைத்துவிட்டு மறைக்கப்பட்ட கிடக்கிறார்கள்.</p><p> 

இன்றுவரை வெலிக்கட சிறையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் யாரும் எதுவிதமான கவலையோ, கண்டனமோ, மன்னிப்போ கோரவில்லை. அது மட்டுமின்றி வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்டவர்களை மிகவும் கவனமாக திட்டமிட்டு அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை தெரியப்படுத்தாது மறைத்துவருகின்றனர்.</p><h2>நினைவுச் சின்னங்கள்</h2><p>
</p><p>
அவர்கள் சார்ந்த நினைவுச் சின்னங்களை கட்டவிடாது தடுத்து தமிழ் மக்களின் கூட்டுணர்வையும், நினைவு வணக்கங்களையும் செய்ய முடியாமல் தடுத்து வருகின்றது.</p><p> அதன் ஒரு பகுதிதான் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் நினைவுச் சின்னங்கள் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட நிலையில் அதனை திறந்து வைக்க முடியாமல் சிங்கள பொரிஸார் தடுத்திருக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/257e78fa-8932-4ac2-b712-0da8e23086e1/26-6a6490a4497bd.webp' /></p><p>

இங்கே குட்டிமணி, தங்கதுரை ஆகிய இருவரது நினைவு சின்னங்களையும் திறக்க விடாமல் தடுத்திருக்கும் அதே நேரத்தில் உமாமகேஸ்வரன், பத்மநாபா, குகன் போன்றவர்களுடைய சிலைகள் வவுனியாவில் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளன.</p><p> 

அதற்கு இலங்கை அரசு தரப்பு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில் அவர்கள் தமிழர்களாலே கொல்லப்பட்டதனால் அவர்களுடைய சிலைகளை திறப்பதற்கு எந்தத் தடையையும் சிங்களதேசம் விதிக்கவில்லை. </p><p>ஆனால் சிங்களவர்களால் கொல்லப்பட்ட விடுதலைக்கான முன்னோடிகளின் நினைவுச் சின்னங்களை உருவாக்குவதை அரசு தடுக்கிறது என்பதிலிருந்து இலங்கை அரசு தமிழ் மக்களை எவ்வாறு ஒடுக்கவும், அடக்கவும், பிளவுபடுத்தவும், இல்லாத ஒழிக்கவும் சாதுரியமாக செயல்படுவதை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.</p><h2>சிங்கள தேசத்தின் உயிர் அச்சுருத்தல்</h2><p>
</p><p>

இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கும், தமக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கும், அதனுடாக தாம் இழந்துபோன இறைமையை மீட்டெடுப்பதற்குமான தொடர் போராட்டத்தில் தமது இழப்புக்களையும், தமக்கு ஏற்பட்ட அவலங்களையும் நினைவு கூர்வதும் அதன் மூலமாக ஒரு கூட்டு மன உணர்வுடன் ஐக்கியப்படவும், ஒற்றுமைப்படுவதற்குமான இடமாக நினைவுச் சின்னங்களும், நினைவு மண்டபங்களும் பேருதவி புரியும். </p><p>அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வலிகளை, மனக்காயங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஜூலை இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவு சின்னங்கள் வரலாற்று உணர்வோடு அமைக்கப்பட வேண்டியது அவசியமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/254d90ea-3328-49ca-8db8-8262e0697cb3/26-6a6490a4f0a0b.webp' /></p><p>


தமிழ் மக்களுடைய நினைவுச் சின்னங்களை சிங்கள தேசத்தில் அமைக்க முடியாது. ஆகவே 1983 ஜூலை இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள் தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட முடியும். </p><p>உதாரணமாக சிங்கள தேசத்தின் உயிர் அச்சுறுத்தலினால் அகதிகளாக்கப்பட்டு தமிழர் தாயகத்திற்கு கப்பல் வழியாக காங்கேசன்துறைக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் காங்கேசன்துறையில் தங்கவைக்கப்பட்ட இடத்திலோ, அல்லது அதற்கு அண்மித்த இடங்களிலோ வரலாற்று உணர்வோடு அகதியாக வந்து இறங்கிய நினைவைத் தாங்கிய நினைவுச் சின்னத்தை கட்டுவது அவசியமானது. </p><p>அத்தகைய நினைவுச் சின்னங்கள்தான் எதிர்காலத்தில் எமது சந்ததிக்கு வழிகாட்டியாக அமையும்.

அதேபோல தென்னிலங்கையில் இருந்து ஏராளமான மலையகத் தமிழர்கள் தென்னிலங்கையில் வாழமுடியாது என பயந்து உயிருக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய தமிழர் தாயகத்தில் வந்திறங்கி ஏ9 வீதியில் ஓமந்தை, புளியங்குளம், கனராயன்குளம், முறிகண்டி, இரணமடிச் சந்தி, மற்றும் தர்மபுரம், நெடுங்கேணி ஆகிய இடங்களில் அகதிகளாக தங்கி இருந்தனர்.</p><h2>தமிழ் மக்களின் வரலாறு</h2><p>
</p><p>
 பின்னாளில் அந்த இடங்களில் அவர்கள் குடியேறினர். அந்த இடங்களில் ஜூலை அவலத்தை குறிக்கின்ற நினைவுச் சின்னங்கள் கட்டப்பட வேண்டும். அது எங்களின் அடுத்த சந்ததிக்கு வரலாற்றைக் கடத்துவதற்கான இலகுவான வழியாகவும் அமையும்.
</p><p>அந்த அடிப்படையில்தான் இப்போது குட்டிமணி, தங்கதுரை ஆகியோருடைய நினைவு சின்னங்கள் வல்வட்டித் துறையில் அமைக்கப்பட்டன. 

அதேபோல ஏனையவர்களுடைய பிறந்த இடங்களிலும் வெளிக்கடை சிறையிலே கொல்லப்பட்ட தமிழர் தேசத்தின் மைந்தர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/472802eb-fb21-42b2-af7e-cebed53e7ea2/26-6a6490a5a1c57.webp' /></p><p> </p><p>இந்தக் கூட்டு மனவுணர்வும், வரலாற்று உணர்வுமே ஒரு இனத்தை வழிநடத்த வல்லது.

அந்த அடிப்படையில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத்தூபி தமிழர் தாயகம் எங்கும் அமைக்கப்படுவது அவசியமானது. </p><p>அதுவே தமிழ் மக்களை ஒன்று திரட்டவும், ஐக்கியப்படுத்தவும், ஒருங்கிணைப்பதற்குமான வழியாகவும் அமையும். அதுவே தமிழ் மக்களின் வரலாற்றை காவிச் செல்வதற்கான உந்து சக்தியாகவும், அமையும்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T11:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் கடற்பரப்பில் அதிரடி தாக்குதல்! பாதுகாப்பாக மீட்கப்பட்ட 28 இந்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-ship-near-iran-iranian-coast-guard-rescues-1784977276"></link>
            <id>https://tamilwin.com/article/attack-ship-near-iran-iranian-coast-guard-rescues-1784977276</id>
            <summary type="text">ஈரான் கடற்பரப்பிற்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் நாட்டுக்
கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலில் இருந்த 28 இந்தியப் பணியாளர்களும்
பாதுகாப்பாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் கடற்பரப்பிற்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான மொசாம்பிக் நாட்டுக்
கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலில் இருந்த 28 இந்தியப் பணியாளர்களும்
பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
'திஷா' என்ற அந்த மசகு எண்ணெய் கப்பல் ஈரானிய கடற்பகுதிக்குள் நுழைந்தபோது,
எதிரிப் படைகளால் தாக்குதலுக்கு உள்ளானது. உடனடியாக அந்த கப்பலில் இருந்து
ஆபத்து குறித்த அவசர உதவிச் செய்தி அனுப்பப்பட்டது.</p><p></p><h2>&nbsp;கப்பல் மீது தாக்குதல்</h2><p>
</p><p>
செய்தி கிடைத்தவுடனே ஈரானிய கடல்சார் மற்றும் மீட்பு அதிகாரிகள் உடனடியாகச்
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d092dc2-e230-4b1d-90fe-b575a389cb08/26-6a649a0482b12.webp' /></p><p>

கப்பலில் இருந்த 28 இந்தியர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக
மீட்கப்பட்டு, தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக இந்தியாவிற்கான ஈரான்
தூதுவர் முகமது ஃபதாலி தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வெளிநாட்டு கடற்படைகளின் தலையீடு குறித்து
எச்சரித்துள்ள ஃபதாலி, பிராந்தியத்திற்கு வெளியே உள்ள ராணுவப் படைகளின் வருகை
இப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தாது என்றும், மாறாக பதற்றத்தையும் சீரற்ற
சூழலையுமே அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T11:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: விசா நடைமுறையில் புதிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-commission-india-clarification-on-indian-visa-1784961663"></link>
            <id>https://tamilwin.com/article/high-commission-india-clarification-on-indian-visa-1784961663</id>
            <summary type="text">இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமூகமாக விசாக்களை வழங்குவது எமது
நிலையான கொள்கையாகும் என இந்திய
உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமூகமாக விசாக்களை வழங்குவது எமது
நிலையான கொள்கையாகும் என இந்திய
உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
</p><p>இந்தியாவிற்குப் பயணிக்கும்
இலங்கையர்களும் இ-விசா வசதியைப் பெற முடியும். எனினும், இந்திய
உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விண்ணப்பிக்க விரும்பும் இலங்கைப் பிரஜைகள்,
ஆன்லைனில் விண்ணப்பித்து இந்திய துணைத்தூதரக விண்ணப்ப
மையங்களில் தங்களது
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்திய
உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>இந்திய உயர்ஸ்தானிகராலயம்</h2><p>குறித்த உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையில்,</p><p>
இந்தியாவிற்குப் புனித யாத்திரைக்காக, குறிப்பாக பௌத்த புனிதத்
தலங்களுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு, விசாக்கள் விரைவாக
வழங்கப்படுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5d5263-bdd8-4c9a-abc7-9d7ff9aab321/26-6a645ff70a27e.webp' /></p><p>இயன்றவரை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட
யாத்திரிகர்களைக் கொண்ட குழுக்களுக்கு கட்டணமின்றி (Gratis) வழங்கப்படுகின்றன.
</p><p>
இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்காகச் செயல்பட்ட விசா சேவை வழங்குநர் நிறுவனம்
மாற்றப்பட்டிருந்த காரணத்தால், குறுகிய காலத்திற்கு இந்த நடைமுறை
நிறுத்தப்பட்டிருந்தது.</p><p></p><h2>இந்திய அரசின் புதிய விதிமுறைகள்</h2><p> </p><p>தற்போது, 2026 ஜூலை 7 ஆம் திகதி முதல் புதிய சேவை
வழங்குநர் தனது பணிகளைத் தொடங்கியுள்ளதையடுத்து, இலங்கை யாத்திரிகர்களுக்கான
கட்டணமில்லா விசா வழங்கும் நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.</p><p>
</p><p>
முன்னர் இருந்த நடைமுறையைப் போலவே, இவ்வாறான கோரிக்கைகள் புத்தசாசன, சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக அனுப்பப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/250b602d-31f2-451c-a8b2-f27b0e967887/26-6a645ff7b07f8.webp' /></p><p> </p><p>10 அல்லது
அதற்கு மேற்பட்டோர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்க முடியும். 

மேலும்,
விண்ணப்பதாரர்கள் தங்களது உயிரியல் அடையாளத் தகவல்களை (Biometrics) பதிவு
செய்வதற்காக குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ தமக்குச் சௌகரியமான முறையில் ICAC
மையங்களுக்கு வரலாம்.</p><p>இது இந்திய அரசின் புதிய விதிமுறைகளின் கீழ்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், 12 வயது முதல் 70 வயது வரையிலானவர்களுக்கே
உயிரியல் அடையாளப் பதிவு அவசியமாகும்.</p><p></p><h2>உயிரியல் அடையாளப் பதிவு</h2><p>
உயிரியல் அடையாளப் பதிவுக்காக ICAC மையங்களுக்கு வருகை தரும் ஏனைய மூத்த
குடிமக்களுக்காக, அவர்களின் காத்திருப்பு நேரத்தை இயன்றவரை குறைக்கும் வகையில்
சிறப்பு மற்றும் விரைவுபடுத்தப்பட்ட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>


உயிரியல் அடையாளத் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், அவர்கள் இந்தியாவிற்கு
வந்தடைந்தபோது குடிவரவு செயல்முறைகளை சுலபமாகவும் வசதியாகவும் நிறைவு செய்ய
முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/151e969a-a376-4111-bf41-c8c6abec3ea4/26-6a6462b35f99a.webp' /></p><p>

மேலே குறிப்பிடப்பட்ட நடைமுறையின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்
இலங்கை யாத்திரிகர்களுக்கு எந்தவித விசா கட்டணமும் இல்லை. எனவே, இலங்கை
யாத்திரிகர்களுக்கான விசா கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியே
எழுவதில்லை. </p><p>இருப்பினும், ICAC வழங்கும் சேவைகளுக்காக, விண்ணப்பதாரர்கள்
இலங்கை ரூபாய் 1,855/- சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T10:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2011 போருக்குப் பிறகு முதல்முறையாக அந்தோனியோ குட்டேரஸ் சிரியா பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/antonio-guterres-visits-syria-first-time-2011-war-1784975375"></link>
            <id>https://tamilwin.com/article/antonio-guterres-visits-syria-first-time-2011-war-1784975375</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் சனிக்கிழமை
சிரியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.

2011ஆம் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் சனிக்கிழமை
சிரியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.
</p><p>
2011ஆம் ஆண்டு சிரியாவில் போர் தொடங்கிய பிறகு, பதவியில் இருக்கும் ஐ.நா.
தலைவர் ஒருவர் அந்நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.</p><p></p><h2>&nbsp;அந்தோனியோ குட்டேரஸ்&nbsp;</h2><p>

சிரியாவில் கடந்த 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கிளர்ச்சியாளர்களின்
தீவிரப் போராட்டத்தைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்
பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2dcc165-2440-49e9-bbef-01db649db63f/26-6a6491c39d729.webp' /></p><p>
</p><p>
அதன் பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் கீழ், உலக நாடுகளுடனான உறவைச்
சிரியா மீண்டும் புதுப்பித்து வரும் சூழலில் இந்த விஜயம் முக்கியத்துவம்
பெறுகிறது.
</p><p>
முன்னாள் தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், 2025 நவம்பர் வரை ஐ.நா.வின்
தடைப்பட்டியலில் இருந்தவருமான தற்போதைய சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாராவை
குட்டேரஸ் நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

</p><p>அத்துடன், சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர் அசாத் அல்-ஷைபானி, பிற அரசு
அதிகாரிகள் மற்றும் சிரிய சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p></p><h2>பெரும் கவனம்</h2><p>

சிரியா போரிலிருந்து மீள்வது மட்டுமன்றி, அனைத்து மக்களுக்கும் அமைதியான,
அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை
அமைப்பதற்கான வாய்ப்பை இந்நாடு பெற்றுள்ளது என்பதை குட்டேரஸ் தனது பயணத்தின்
போது வலியுறுத்துவார் என ஐ.நா. செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba367e8-5697-40a2-8321-f4ee24544914/26-6a6491c44dee5.webp' /></p><p>
</p><p>திங்கட்கிழமை சிரியாவின் புதிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள குட்டேரஸ்,
இஸ்ரேல்-சிரிய எல்லைப் பகுதியில் அமைதியைப் பராமரித்து வரும் ஐ.நா. அமைதிப்
படையினரையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி அசாத் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு, அமெரிக்கா உள்ளிட்ட
பல நாடுகள் சிரியா மீதான தடைகளைத் தளர்த்தி வரும் வேளையில், ஐ.நா. தலைவரின்
இந்த சிரிய விஜயம் சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T10:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமை தவறிய முக்கிய அதிகாரிகள்! பின்னணியில் திடீரென மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/officials-dereliction-of-duty-leads-cyber-theft-1784956876"></link>
            <id>https://tamilwin.com/article/officials-dereliction-of-duty-leads-cyber-theft-1784956876</id>
            <summary type="text">நிதி அமைச்சகத்தின் கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் தத்தமது கடமைகளை முறையாக செய்யத்தவறியதன் காரணமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிதி அமைச்சகத்தின் கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் தத்தமது கடமைகளை முறையாக செய்யத்தவறியதன் காரணமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இணையவழித்திருட்டு நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
இலங்கை மத்திய வங்கி அரச நிதிக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>

மேலும், இலங்கை மத்திய வங்கி தொடர்பாக நிதி அமைச்சகம் பல உண்மைக்குப்புறம்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித்திருட்டு</h2><p>

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித்திருட்டு தொடர்பாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தின் அரச நிதிக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதுடன் அவற்றில் ஒன்றில் இந்த தகவல் உள்ளடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91edf81d-1bc1-44a2-a51c-42b3bf69ec38/26-6a644ef7afd4d.webp' /></p><p>

 மேலும், நிதி அமைச்சகத்தில் இருந்த அடிப்படை செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு பலவீனங்களின் காரணமாகவே, இணையவழி மோசடி குழு திரைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை திருடுவதற்கு தேவையான பின்னணி உருவாக்கப்பட்டது என்றும் அறிக்கை குறிப்பிடுகின்றது.</p><p>

நிதி அமைச்சகத்தின் வெளிநாட்டுக்கடன் செலுத்தும் செயல்முறையில் ஏற்பட்ட தோல்வியும் இந்த திருட்டுக்கு தேவையான பின்னணியை உருவாக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.</p><h2>நிதி அமைச்சகத்தின் மின்னஞ்சல் பாதுகாப்பு</h2><p>
</p><p>
இலங்கை மத்திய வங்கியால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், நிதி அமைச்சகத்தின் வெளி வளங்கள் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் கடன் பதிவேடுகளின்படி, பெறப்பட்ட செலுத்துகை அறிவுறுத்தல்கள் சரியானவையா என்பதை சரிபார்க்கும் மிக முக்கியமான கடமை ஒப்படைக்கப்பட்டிருந்த அமைச்சக அதிகாரிகள், தத்தமது கடமைகளை முறையாக செய்யவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், நிதி அமைச்சகத்தின் மின்னஞ்சலின் பாதுகாப்பை ஊடுருவல்காரர்களால் உடைக்க முடிந்ததாலும், அந்த கடமை ஒப்படைக்கப்பட்டிருந்த அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் சரியானவையா என்பதை சரிபார்க்க தவறியதாலும் இந்த திருட்டு நிகழ்ந்துள்ளது என்பது தெளிவாகின்றது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T10:29:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் குளத்தின் கீழ் 22000 ஏக்கரில் சிறுபோக நெல் அறுவடை தீவிரமாக ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/beginning-paddy-harvest-under-the-kanthalai-pond-1784971329"></link>
            <id>https://tamilwin.com/article/beginning-paddy-harvest-under-the-kanthalai-pond-1784971329</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின்
நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இம்முறை சிறுபோக நெற்செய்கையின் அறுவடைப்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின்
நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இம்முறை சிறுபோக நெற்செய்கையின் அறுவடைப்
பணிகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
</p><p>
சுமார் 22,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நெற்செய்கையின்
அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தற்போது மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p>
</p><h2>அறுவடைப் பணிகள்
கந்தளாய் குளத்தின் கீழ் நீர்ப்பாசனம் பெறும் முக்கிய பகுதிகள்</h2><ul><li>
பரட்டைக்காடு
</li><li>
செட்டிக்காடு
</li><li>
வான் எல
</li><li>
வட்டுகச்சி
</li><li>
நாலாம் வாய்க்கால்</li><li>தம்பலகாமம்

ஆகிய பிரதேசங்களில் நவீன அறுவடை இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யும்
பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</li></ul><p></p><p>
</p><h2>
அரசாங்கத்தின் நியாயமான உத்தரவாத விலைக்கு விவசாயிகள் வரவேற்பு</h2><p>
இம்முறை சிறுபோகச் செய்கையில் சாதகமான விளைச்சல் கிடைத்துள்ள நிலையில்,
விவசாயிகள் தங்கள் கடின உழைப்பிற்கு ஏற்றவாறு நியாயமான உத்தரவாத விலையை
அரசாங்கம் நிர்ணயித்து பெற்றுக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
</p><p>
"தற்போது சந்தையில் நிலவும் விலையினை விட, எமது கடின உழைப்பிற்கு ஏற்றவாறு
நெல்லுக்கு நியாயமான உத்தரவாத விலையை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது" பிரதேச விவசாயிகள்

நல்ல விளைச்சலுடன் சேர்த்து, அரசாங்கம் உரிய நியாயமான உத்தரவாத விலையையும்
உறுதி செய்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.</p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-25T10:28:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி எண்ணெய் ஆலைகளை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகள் - நடுவானில் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missiles-target-saudi-oil-refineries-attack-1784972196"></link>
            <id>https://tamilwin.com/article/missiles-target-saudi-oil-refineries-attack-1784972196</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் யான்பு நகரில் உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறிவைத்து ஏமனில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதியின்
வான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் யான்பு நகரில் உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறிவைத்து ஏமனில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதியின்
வான் பாதுகாப்பு அமைப்பு இன்று சுட்டுவீழ்த்தியுள்ளது.</p><p>

ஈரான் மீது அமெரிக்க படைகள் புதிய வான்வழி தாக்குதல்களை நடத்திய அடுத்த
நாளே இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p></p><h2>ஆபத்து நீங்கிவிட்டதாக அறிவிப்பு</h2><p>
</p><p>
செங்கடல் பகுதியில் அமைந்துள்ள யான்பு நகருக்குச் சவூதி சிவில் பாதுகாப்புத்துறை பல எச்சரிக்கைகளை விடுத்திருந்த பின்னர் ஆபத்து நீங்கிவிட்டதாக
அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee98c0d-0e8c-4aa3-b3f3-4256c7809d02/26-6a648cead8264.webp' /></p><p>
</p><p>
தெற்கே ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள ஜிசான் துறைமுக நகரத்திற்கும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டது.

இந்த தாக்குதல்களில் உடனடி சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ
தகவல்கள் இல்லை.
</p><p>
2021-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, சவூதியின் எரிசக்தி உள்கட்டமைப்பைப்
பாதுகாக்க உதவி வரும் கிரேக்க இராணுவப்பணியாளர்களால் இந்த அமெரிக்க தயாரிப்பு
'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு அமைப்பு இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
செங்கடலில் இரண்டு சவூதி மசகு எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக
ஹூதி கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் மற்றும்
அதன் நட்பு அமைப்பான ஹூதிகளுக்குக் "கடுமையான இராணுவத் தண்டனை" வழங்கப்படும்
என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>சவூதி அரேபியாவிற்கு எதிராக கடல்சார் முற்றுகை</h2><p>

ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவிற்கு எதிராக கடல்சார் முற்றுகையை
அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2990045-f877-4d93-8335-25d06fe8324f/26-6a648ceb8859d.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முற்றுகையிட்டுள்ளதால், சவூதி அரேபியா தனது
கோடிக்கணக்கான பெரல் மசகு எண்ணெயைக் குழாய் வழியாகச் செங்கடலுக்குத் திருப்பி
அனுப்பி வருகின்றது.
</p><p>அதன்படி, கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் போரினால்
பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், உலகளாவிய பணவீக்கமும்
அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த வாரம் பிரெண்ட் கச்சா மசகு எண்ணெய் விலை மே மாதத்திற்குப் பிறகு
முதன்முறையாக ஒரு பேரலுக்கு 100 டொலராக உயர்ந்துள்ளது.</p><p>

நிலைமையைக் கட்டுப்படுத்த சீனாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் அமெரிக்கா-ஈரான்
இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முயற்சி செய்து வருகிறது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T10:16:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்லுண்டாய் வெளி பிரிதொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது! எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kakaitivu-sewage-problem-1784964322"></link>
            <id>https://tamilwin.com/article/kakaitivu-sewage-problem-1784964322</id>
            <summary type="text">கல்லுண்டாய் வெளி வேறொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ளதனால் எங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளதென&amp;nbsp;யாழ் மாநகர சபையின் குழுத் தலைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்லுண்டாய் வெளி வேறொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ளதனால் எங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளதென&nbsp;யாழ் மாநகர சபையின் குழுத் தலைவர் ஜெகதீஸ்வரன் மயூரன் தெரிவித்துள்ளார்.</p><p> நேற்று(24.07.2026) நடைப்பெற்ற யாழ் மாநகர சபையின் கல்லுண்டாய் வெளி மற்றும் காக்கைதீவு கழிவகற்றல்
தொடர்பில்&nbsp; விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>யாழ் மாநகர சபையின் சுகாதாரக் குழுவின் தலைவர் சாரூபன் மற்றும் யாழ் மாநகர சபையின் மராமத்துவ குழுவின் தலைவர் மயூரன் ஆகியோர் இணைந்து இந்த ஊடக சந்திப்பினை நடத்தியுள்ளனர்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

கல்லுண்டாய் வெளியானது எமது மாநகர சபையின் எல்லைக்கு அப்பாற்பட்டு வேறொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது.</p><p> இதனால் எங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. 

என்றாலும் கூட நாங்கள் இந்த பிரச்சினை தொடர்பாக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F861149336849276%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T10:04:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - பதவி விலகிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/neet-protest-india-1784952262"></link>
            <id>https://tamilwin.com/article/neet-protest-india-1784952262</id>
            <summary type="text">புதிய இணைப்புநீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்.

 ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்.
</p><p>
 நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பதவி விலகியுள்ளார்.
</p><p>
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று(25.07.2026) முடிவெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

நீட் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் திகதியில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.</p><p></p><h2>இன்று நண்பகலுக்குள் முடிவு</h2><p>ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும் இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று வருகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33128aeb-11c7-4a19-aa4e-76e67644a2aa/26-6a643ab13ca93.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடக் கோரி தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானர். </p><p>மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>

இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்தே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
</p><p>
இதனையடுத்து, அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் அவகாசம் கோரியதுடன், தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் குறித்து இன்று (ஜூலை 25) நண்பகலுக்குள் முடிவெடுப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T09:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-on-the-matara-tissa-main-road-1784958878"></link>
            <id>https://tamilwin.com/article/accident-on-the-matara-tissa-main-road-1784958878</id>
            <summary type="text">புதிய இணைப்புமாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியில் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியில் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகியோரும் சிகிச்சைக்காக தெபராவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4f506b0-eb93-45dc-9438-95aa92fb6400/26-6a648320acf4d.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியில் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிச்சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, வீரவில பிரதேச செயலகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி, பின்னர் வீதியிலிருந்து விலகிச்சென்று அருகிலிருந்த மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbdf8be-f640-4109-9c48-8b7cda052a22/26-6a64536093cd2.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>

இச்சம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T09:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-was-commemorated-at-the-valikamam-1784968980"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-was-commemorated-at-the-valikamam-1784968980</id>
            <summary type="text">கறுப்பு ஜூலை இனப்படுகொலை மற்றும் அதனோடுனைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை
செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளையும்
நின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜூலை இனப்படுகொலை மற்றும் அதனோடுனைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை
செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளையும்
நினைவுகூறும் நிகழ்வு உணர்வுபூர்வமாக யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்
தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.</p><p>

தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் காலை 10 மணிக்கு பிரதான
ஈகைச்சுடரேற்றப்பட்டது.</p><p></p><h2>கறுப்பு ஜூலை</h2><p> அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன்
மற்றும் சபை உறுப்பினர்களால் வெலிக்கடை சிறையில் படுகொலை குட்டிமணி, ஜெகன்,
தங்கத்துரை உள்ளிட்ட அரசியல் கைதிகளின் அடையாளமாக 53 தீபங்கள்
ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டன. </p><p>தொடர்ந்து மலரஞ்சலி இடம்பெற்றதையடுத்து&nbsp; அஞ்சலி உரை இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac83baec-312d-4bc3-adcf-62659d0e37df/26-6a6478f16dd51.webp' /></p><p> பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் அரச
சேவையாளருமான செல்வதிசைநாயகம் தவநாயகம் கறுப்பு யூலை தமிழர் வரலாற்றில் மாறாத
வடு என்ற தலைப்பில் வரலாற்று உதாணங்களுடன் அஞ்சலியுரையாற்றினார். </p><p>தொடர்ந்து
சபை வளாகத்தில் கறுப்பு ஜூலை கோரத்தாண்டவத்தினை நினைவுகூர்ந்து புகைப்பட
தொகுதி காட்சிப்படுத்தலும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T08:51:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் திருமண ரூ.2.68 மில்லியன் மின்கட்டண வழக்கு: டிசம்பர் 4இல் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-rs-2-68mn-wedding-bill-sparks-petition-1784965915"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-rs-2-68mn-wedding-bill-sparks-petition-1784965915</id>
            <summary type="text">2019-ஆம் ஆண்டில்&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது ஏற்பட்ட ரூ. 2.68 மில்லியன் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாதது தொடர்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019-ஆம் ஆண்டில்&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது ஏற்பட்ட ரூ. 2.68 மில்லியன் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாதது தொடர்பான அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 4-ஆம் திகதிக்கு நிர்ணயித்துள்ளது.
</p><p>
அவரது திருமணத்திற்காக வீரகெட்டியாவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை வசூலிக்கத் தவறியது, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் எனத் தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவின் திருமணம்</h2><p>
</p><p>
இந்த மனு, வெள்ளிக்கிழமை (24) அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேய்கூன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள் அமர்வு, இலங்கை மின்சார சபை தற்போது மறுசீரமைப்புப் பணிகளுக்கு உட்பட்டுள்ளதால், அதற்குப் பதிலாக தொடர்புடைய வாரிசு நிறுவனத்தை பிரதிவாதியாக பெயரிட மனுதாரருக்கு அனுமதி வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/771e2657-fe6b-4b90-8215-f9b4574b5986/26-6a6470fcc3732.webp' /></p><p>
சட்டத்தரணி விஜயகுமார தாக்கல் செய்துள்ள மனுவில், நாமல் ராஜபக்சவின் திருமணக் கொண்டாட்டங்கள் 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை வீரகெட்டிய இல்லத்தில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மனுதாரரின் கூற்றுப்படி, அந்த நிகழ்விற்காக வழங்கப்பட்ட மின்சாரத்திற்கான தொகை ரூ. 2,682,246.57 ஆகும்.

கொண்டாட்டங்களின் போது இல்லத்திற்கும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் பாதுகாப்பு விளக்குகளை வழங்குமாறு அப்போதைய மின்சாரம் மற்றும் சக்தித்துறை அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சனகா கோரிக்கை விடுத்திருந்ததாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.</p><p>அதற்கான கட்டணங்களைச் செலுத்த குடும்ப உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேவையான மின்சார விநியோகத்தை வழங்குமாறு அமைச்சர் மின்சார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>மின்சாரக் கட்டணம்</h2><p>
இருப்பினும், அந்தக் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என்றும், மின்சார விநியோகத்தைப் பெறுவதற்கும் கட்டணத்தைத் தவிர்ப்பதற்கும் எதிர்மனுதாரர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>

மேலும், மாதந்தோறும் ரூ. 2,682,246.57 கட்டணத்தைச் செலுத்தாததால், சமஸ்தான மின்சார சபை (CEB) தனது இல்லத்திற்கான மின்சார இணைப்பைத் துண்டித்துவிட்டதாகவும் மனுதாரர் குறிப்பிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ba70c2-d00e-462c-8837-807accc2d435/26-6a6470fd755af.webp' /></p><p> </p><p>

வீரகெட்டிய இல்லம் தொடர்பான கணிசமாகப் பெரிய தொகையான 7,390 ரூபாய் மசோதா மீது அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.</p><p>

இது சட்டத்தின் முன் சமமற்ற நடத்தையாகும் என்று கூறி, அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிக்கக் கோரி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தனது மரணத்திற்கு முன்பு, நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்காக ஏற்பட்ட மின்சாரக் கட்டணத்தைச் செலுத்திவிட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T08:17:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த மாணவி கல்குவாரியிலிருந்து சடலமாக மீட்பு - தொடரும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/girl-s-body-is-found-in-a-quarry-1784960434"></link>
            <id>https://tamilwin.com/article/girl-s-body-is-found-in-a-quarry-1784960434</id>
            <summary type="text">பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவலதென்ன, கஜுவத்த பகுதியில் கற்குழியொன்றிலிருந்து 17 வயது மாணவியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவலதென்ன, கஜுவத்த பகுதியில் கற்குழியொன்றிலிருந்து 17 வயது மாணவியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>பொலிஸாருக்கு நேற்று (24)

கிடைத்த தகவலின் அடிப்படையில், மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>
மஹவலதென்ன பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1647bfbb-13a5-4af6-83f3-c4b60839c7fd/26-6a645ceea6441.webp' /></p><p>
</p><p>
குறித்த மாணவி வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த நிலையில், அவரது தந்தை பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, அவரது சடலம் கற்குழியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சடலம் மீதான பிரேத பரிசோதனை</h2><p>
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,&nbsp;பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (25) பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T08:07:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகை தொடர்பில் வெளியான முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-000-outsiders-shelter-in-presidential-palaces-1784963891"></link>
            <id>https://tamilwin.com/article/3-000-outsiders-shelter-in-presidential-palaces-1784963891</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது</p><p> தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>
</p><p>ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், அக்காலகட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களின் எண்ணிக்கை மூன்று ஆகும்.</p><p></p><h2>ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் செலவு&nbsp;</h2><p>2025 ஆம் ஆண்டில் கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டில் எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை என்பதுடன், எவரும் தங்கியிருக்கவும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d0b244-595c-4780-b356-3604fdf66eb7/26-6a646af305bad.webp' /></p><p>இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக 2,447,754 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்டா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T07:59:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/professor-against-former-vice-chancellor-dismisse-1784963381"></link>
            <id>https://tamilwin.com/article/professor-against-former-vice-chancellor-dismisse-1784963381</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.
சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.
சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடு பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><p>

கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகத் தான் செயற்பட்ட வேளையில்
பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றது என பகிரங்கப்படுத்தியமை
பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு அமைவாகத் தவறானது எனக் காரணம் காட்டி அப்போதைய
பேரவை தன்னைத் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது.</p><p></p><h2>வழக்கு தள்ளுபடி</h2><p>அது தவறு எனத்
தீர்பளித்து, தன்னை மீளவும் 27.08.2022 முதல் செல்லுபடியாகும் வகையில் அப்
பதவியில் நியமிக்கக் கட்டளையிடுமாறு கோரி யாழ். பல்கலைக்கழக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடே பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9cb8d0b-4c93-4e3d-b240-875ae5fdf82d/26-6a6466a59d97d.webp' /></p><p>
இந்த வழக்கு மீதான கட்டளை கடந்த ஜூன் 30 ஆம் திகதி பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> முறைப்பாட்டாளரினால்
முன்வைப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆராயும் நியாயாதிக்கம் மேன்முறையீட்டு
சபைக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஜூரிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து கட்டளை
பிறப்பித்தனர்.
</p><p>
இதே பேராசியர் பல்கலைக்கழகத்துக்கெதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த
வழக்குகளைக் கடந்த வருடம் மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T07:32:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேர்மையான அரச சேவைக்கான தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clean-sri-lanka-programme-1784962885"></link>
            <id>https://tamilwin.com/article/clean-sri-lanka-programme-1784962885</id>
            <summary type="text">நேர்மையான அரச சேவைக்கான &quot;நேர்மைக்கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா&quot; தேசிய
செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேர்மையான அரச சேவைக்கான "நேர்மைக்கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய
செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரனின் தலைமையில் நேற்றைய தினம் (24.07.2026) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல்
மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>

இதன்போது, 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரமாக”
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், நேர்மை வாரத்தை முன்னிட்டு
மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p>
</p><p>
மேலும், ஜூலை 28ஆம் திகதி காலை 9 மணிக்கு நேர்மை கலாசாரத்தை ஊக்குவிக்கும்
நோக்கில் நடைபவனி நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும்
கலந்துரையாடப்பட்டது.</p><h2>ஜனாதிபதி செயலக&nbsp;சுற்றறிக்கை</h2><p>
அந்தவகையில் ஜூலை 27 நிறுவன ரீதியாக நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை
28 நிதி, டிஜிட்டல், தொழில் முயற்சியாண்மை மற்றும் தொழிநுட்ப நேர்மையை
மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 29 ஆன்மீக, நெறிமுறை, கலாசார மற்றும் சமூக
நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 30 செயற்பாட்டு, உட்கட்டமைப்பு, சேவை
வழங்கல் மற்றும் உழைப்பு நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 31 சுற்றாடல், வள முகாமைத்துவ, கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மையை
மேம்படுத்தும் நாளாகவும் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள
சுற்றறிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி,மாவட்ட
செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T07:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்தில் உள்நாட்டு உற்பத்தியின் பங்கு குறைவாகவே உள்ளது - ஆளுநர் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-production-share-remains-low-gov-vedanayagan-1784958371"></link>
            <id>https://tamilwin.com/article/north-production-share-remains-low-gov-vedanayagan-1784958371</id>
            <summary type="text">உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய
மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு&amp;nbsp; மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய
மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு&nbsp; மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
 நேற்றுமுன்தினம்(23.07.2026) ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையின் தேசிய உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பைக் கணிசமான
அளவில் அதிகரிப்பது தொடர்பாக துறைசார் வல்லுநர்கள் மற்றும்
பங்குதாரர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி</h2><p>
</p><p>
தற்போது இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி இலக்கு 7 சதவீதமாக
நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், வட மாகாணம் தனது பொருளாதாரத்தை
மீட்டெடுப்பதற்கு 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதை முக்கிய இலக்காகக் கொண்டு
அதற்குரிய செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் இதன்போது
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad73f1b2-bde7-4968-9d61-e4ab5d15ccb7/26-6a64538591df6.webp' /></p><p>

இந்தக் கலந்துரையாடலில், 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா
பெருந்தொற்று மற்றும் 2022ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால்
பொருளாதாரத் தரவுகளில் பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டமையை ஆளுநர்&nbsp;சுட்டிக்காட்டியயுள்ளார்.</p><p>மேலும் வட மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்குக் கூடுதல்
கவனம் செலுத்த வேண்டிய துறைகள் தொடர்பிலும் அவர் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.</p><p></p><h2>விவசாயம் மற்றும் கடற்றொழில்</h2><p>

இதன்போது பின்வரும் முக்கிய துறைகள் மற்றும் அவற்றுக்கான திட்டங்கள் குறித்து
ஆராயப்பட்டுள்ளன:
</p><p>
நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் புதிய காணிகளைத் தேடுவதை விட, நவீன
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தற்போதைய உற்பத்தியின் வினைத்திறனை
அதிகரிப்பதில் அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும். </p><p>

சிறுதானியங்கள், பயறு வகைகள்,
பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை விரிவுபடுத்துவது அவசியமாகும்.
மேலும், பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக, பால் மா
இறக்குமதிக்காகச் செலவிடப்படும் சுமார் 400 மில்லியன் டொலர்களை மீதப்படுத்த
முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/923ae33d-67a1-4bfb-82b3-d06c3ce73df3/26-6a645386455af.webp' /></p><p>

அறுவடை செய்யப்படும் விவசாயப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யாமல், அவற்றை
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக
இலாபத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
</p><p>
வட மாகாணத்தின் பொருளாதாரத்தில் கடற்றொழில் சுமார் 3.7 சதவீத பங்களிப்பை
வழங்குகின்றது. கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி மற்றும் கடல் அட்டை வளர்ப்பு
போன்றவற்றை மேலும் ஊக்குவிப்பது முக்கிய தேவையாகும்.
</p><p>
தகவல் தொழில்நுட்பம் 1.12 சதவீதமும், சுற்றுலாத்துறை 0.3 சதவீதமும் என
இந்தத் துறைகளின் தற்போதைய பொருளாதாரப் பங்களிப்பு மிகக் குறைவாகவே
காணப்படுகின்றதன. இந்தத் துறைகளை மேம்படுத்துவதற்குப் உட்கட்டமைப்பு வசதிகள்
மற்றும் அரச-தனியார் துறை பங்குபற்றல் மிகவும் அவசியமாகின்றன.</p><p></p><h2>டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தரவுகள்&nbsp;</h2><p>வட மாகாணத்தில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, அரச கட்டடங்களில் கூரை மேல் சூரிய சக்தித் தகடுகளை பொருத்துதல் மற்றும் மின்கல சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.</p><p>
அதிக விளைச்சல் ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை
என்பதோடு, இடைத்தரகர்களே அதிக இலாபம் பெறுகின்றனர். </p><p>இதற்குத் தீர்வாகப் பெறுமதி
சேர் மையங்களை நிறுவுதல் மற்றும் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்துதல்
அவசியமாகும். 

மேலும், சரியான திட்டமிடலுக்குத்
தற்போதைய பொருளாதாரத் தரவுகள், குறிப்பாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தரவுகள்
மிகவும் அவசியமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/672183dd-bb51-4b11-8d27-f0d8870f96ea/26-6a645386e8dbe.webp' /></p><p>அத்துடன், நவீன விவசாய
தொழில்நுட்பங்கள் குறித்து சுமார் 800 இளம் விவசாயிகளுக்குப் பயிற்சி
வழங்குவதற்கான திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.
</p><p>
விவசாயம், கடற்றொழில், கால்நடை மற்றும் சிறு கைத்தொழில் என அடையாளம் காணப்பட்ட
ஒவ்வொரு துறைக்குமான விரிவான திட்ட அறிக்கைகள் மற்றும் முதலீட்டு
முன்மொழிவுகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் தயாரித்து நிதி
ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்பட வேண்டும்
என இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இந்த விசேட கலந்துரையாடலில், வட மாகாண ஆளுநரின் செயலாளர், வட மாகாண
விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயப் பீடாதிபதி,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடத்தின் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல்&nbsp;திணைக்களத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T06:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18th-convocation-ceremony-southeastern-university-1784958160"></link>
            <id>https://tamilwin.com/article/18th-convocation-ceremony-southeastern-university-1784958160</id>
            <summary type="text">இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா,
பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் இன்று(25.07....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா,
பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் இன்று(25.07.2026) ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
பல்கலைக்கழகத்தின் வேந்தர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில்,
துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும்
பல்கலைக்கழகப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><h2>சான்றிதழ்கள் வழங்கி வைப்பு</h2><p>
இளமானி மற்றும் முதுமாணி பட்டங்கள் வழங்கல்

இன்றைய பட்டமளிப்பு விழாவில் கலை, கலாசாரம், மேலாண்மை, வர்த்தகம், பொறியியல்,
பயன்பாட்டு அறிவியல் மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களைச்
சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இளமானி (Undergraduate), முதுமாணி (Postgraduate) மற்றும் கலாநிதி பட்டங்கள் அதிகார பூர்வமாகச் சான்றிதழ்களுடன்
வழங்கி வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/434f6c13-8463-4641-a66a-b93323bbf6d9/26-6a6456e65b841.webp' /></p><p>பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T06:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-for-sri-lankan-foreign-workers-1784954292"></link>
            <id>https://tamilwin.com/article/land-for-sri-lankan-foreign-workers-1784954292</id>
            <summary type="text">
வெளிநாட்டில் பணி புரிந்து சேவைக் காலம் நிறைவடைந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் தொழிலாளர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, காணிகள் வழங்க சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வெளிநாட்டில் பணி புரிந்து சேவைக் காலம் நிறைவடைந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் தொழிலாளர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, காணிகள் வழங்க சமகால அநுர அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, திட்டமிட்ட சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>இதுதொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p></p><h2><b>

அநுரவின் அதிரடி அறிவிப்பு</b></h2><p>இதன்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் காணிகள் தொடர்பில் வலுவான ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டடியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e207c0b4-2fae-4da4-8f1b-0cef0bcd7b15/26-6a6445512b6af.webp' /></p><p>மேலும் அது குறித்து ஆராய்வதற்காக நிதி அமைச்சு ஊடாக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்தார்.</p><p>

அத்துடன், மலையக மக்களுகு்கு 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
வெளிநாட்டு உதவி மற்றும் கடன் திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக சில ஒதுக்கீடுகள் திருப்பிச் செல்வதை தவிர்ப்பதற்காக வினைத்திறனான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-25T06:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! இந்தியாவில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-suspected-wattala-shooting-arrested-in-india-1784949761"></link>
            <id>https://tamilwin.com/article/two-suspected-wattala-shooting-arrested-in-india-1784949761</id>
            <summary type="text">வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இருவரை இராமேஸ்வரம் கடலோர காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இருவரை இராமேஸ்வரம் கடலோர காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளையை சேர்ந்தவர்கள் என்றும் 30 மற்றும் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது.</p><p>கடந்த வியாழக்கிழமை வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸ் சந்தேகிப்பதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>கடவுச்சீட்டின்றி சட்டவிரோதமாக ஊடுருவல்</h2><p>இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (23) இரவு மன்னார் பேசாலை கடற்கரையிலிருந்து ரூ.3 இலட்சம் பணம் கொடுத்து படகில் புறப்பட்டு, நேற்று (24) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8de0bfc-e2a5-4164-a20d-985111b69f0e/26-6a64334658e62.webp' /></p><p>கடவுச்சீட்டு இன்றிச் சட்டவிரோதமாக ஊடுருவியதற்காக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைக்க மரைன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>மேலும், இருவர் மீதும் இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p>இதன் காரணமாக, இருவரையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து 'கியூ' பிரிவு பொலிஸார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><h2>5 பொலிஸ் குழுக்கள் விசாரணை</h2><p>இதேவேளை, வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நேற்று இரவு பிறந்த நாள் வரவேற்பு மண்டபமொன்றில் நடைபெற்ற விருந்தொன்றிற்குள் புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய நபரொருவர் உயிரிழந்திருந்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1b6e75-6cc3-4253-af31-1a0b278342db/26-6a6433470954c.webp' /></p><p>இந்த சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரைக் இலக்கு வைத்தே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், இலக்குத் தவறியதால் அவருக்கு அருகில் இருந்தவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>மேலும், துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T06:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 ஆண்டுகளுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி - அநுர ஆட்சியிலும் தொடரும் அவலம்.. மக்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/road-reconstruction-in-koslanda-estate-area-1784958904"></link>
            <id>https://tamilwin.com/article/road-reconstruction-in-koslanda-estate-area-1784958904</id>
            <summary type="text">கொஸ்லந்தை - மீரியபெத்த தோட்டப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை எதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஸ்லந்தை - மீரியபெத்த தோட்டப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சினை தொடர்பில் அலட்சியமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
சந்திரபுரம், கொஸ்லந்தை எஸ்டேட், மீரியபெத்த, அம்பராகல உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 6,000க்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கை இந்த வீதியின் மோசமான நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>

100 வருடங்களுக்கு மேல் புனரமைக்கப்படாத வீதி</h2><p>
100 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு புனரமைப்பும் இன்றி, குறித்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55432ca0-7d40-4f96-91c5-9da550d9d118/26-6a645049b7cad.webp' /></p><p>

இதுவரை பல அரசாங்கங்கள் மாற்றமடைந்த போதிலும், இந்த பிரச்சினை தொடர்பில் அரசியல் அலுவலகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும், பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஆனால் இதுவரை எவரும் உரிய தீர்வோ அல்லது பதிலோ வழங்கவில்லை என்றும், தங்களது வாக்குகளால் உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளால் கூட எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது தங்களுக்கு எதிராக செயற்படுவதாகவும், இதனால் அப்பகுதி இளைஞர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
மக்களின் கோரிக்கை</h2><p>
இதற்கிடையில், கடந்த மே 18ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார குறித்த பகுதிக்கு விஜயம் செய்து, “இரண்டு வாரங்களுக்குள் அனுமதி பெறப்படும்; இந்தத் திட்டத்திற்காக ரூ.500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது” என உறுதியளித்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc39541-49a7-42e8-8021-58f8b30f81ac/26-6a64504adb18a.webp' /></p><p>
</p><p>
எனினும், இரண்டு மாதங்கள் கடந்தும் எந்தவித நடவடிக்கையோ பதிலோ இல்லாத நிலையில், சில பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களது சொந்த பகுதிகளுக்கே முன்னுரிமை வழங்கி வீதி புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
இதனால், வீதி புனரமைப்பு பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பெண்கள், மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட பலர் தினமும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதால், ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82625241-7e46-4bb0-8b55-0061f26dba19/26-6a64504ba860d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b1d96aa-8324-4733-9182-aea34f4bde2c/26-6a64504c73fa6.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:59:34+00:00</updated>
        </entry>
    </feed>
