<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-03T18:32:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிட்னியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-people-injured-in-sydney-building-collapse-1785771570"></link>
            <id>https://tamilwin.com/article/2-people-injured-in-sydney-building-collapse-1785771570</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த சம்பவமானது இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முதலுதவி சிகிச்சை</h2><p>
</p><p>
சிட்னியின் மத்திய வணிகப் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள அல்டிமோ என்ற பகுதியில் காலை 11 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புப் படையினர், அங்கிருந்த 7
பேருக்கு முதலுதவி சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b006bc4e-7944-4b5f-afc3-fcca882c38c3/26-6a70b792ebc95.webp' /></p><p>
</p><p>
அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக்
கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>அத்துடன் கட்டுமானப் பணி நடப்பெற்று வந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தின்
சுவர்ப் பகுதி இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீஃபா தலைவருக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/english-football-association-withdraw-support-1785779402"></link>
            <id>https://tamilwin.com/article/english-football-association-withdraw-support-1785779402</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து
கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்யும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து
கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ மீண்டும் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஆதரவைத் திரும்பப் பெற&nbsp; இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு செய்துள்ளது.
</p><p>
உலகக் கிண்ணப் போட்டிகள் உள்ளிட்ட தொடர்களை நிர்வகிக்கும் புதிய அமைப்பில் 20
சதவீத பங்குகளை விற்று 4.2 பில்லியன் டொலர் நிதி திரட்ட ஃபீஃபா
திட்டமிட்டிருந்தது.</p><p></p><h2>பீஃபா தலைவர்</h2><p>

ஆனால், பல்வேறு கால்பந்து அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் இத்திட்டம்
அண்மையில் கைவிடப்பட்டது.</p><p>

முன்னதாக, இன்பான்டினோவிற்கு அளித்து வந்த ஆதரவை முறைப்படி திரும்பப் பெறுவதாக
வேல்ஸ் நாட்டின் கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3487379d-310c-468f-a6bf-b2b1299b49b7/26-6a70d6a100212.webp' /></p><p>
</p><p>
சிறந்த நிர்வாகமின்மை, தவறான தலைமைத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை
ஆகிய காரணங்களால் இன்பான்டினோ மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக வேல்ஸ்
கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
2016-ஆம் ஆண்டு முதல் ஃபீஃபா தலைவராக இருக்கும் இன்பான்டினோ, 2027 முதல் 2031
வரையிலான அடுத்த தவணைக்கும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.</p><p>

எனினும், ஐரோப்பிய கால்பந்து அமைப்பான UEFA உள்ளிட்ட முக்கிய அமைப்புகள்
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மீண்டும் தலைவராவதில் அவருக்கு
பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் கனமழை..! மண் சரிந்து விழுந்ததில் பலியான 4 உயிர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodies-4-people-trapped-buried-in-the-landslide-1785776127"></link>
            <id>https://tamilwin.com/article/bodies-4-people-trapped-buried-in-the-landslide-1785776127</id>
            <summary type="text">ஹட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.</p><p></p><h2>சீரற்ற காலநிலை</h2><p> </p><p>

அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b402435-31a9-4eb6-9b37-41ed5ae708fe/26-6a70cae9de4d2.webp' /></p><p> </p><p>

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை: ஈரான் அதிரடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-says-no-talks-are-under-way-1785777226"></link>
            <id>https://tamilwin.com/article/iran-says-no-talks-are-under-way-1785777226</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான்&amp;nbsp; அதிரடியாக அறிவித்துள்ளது.
அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான்&nbsp; அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>தாக்குதல்களைத் ஒத்தி வைப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறிவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கூற்றுக்கு முற்றிலும் மாறாக ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>மிகப்பெரிய தாக்குதல்</h2><p>
</p><p>கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து வரும் போக்கைப் போலவே, ஈரானின் மீது "மிகப்பெரிய தாக்குதல்களை" நடத்தத் திட்டமிடுவதாக அறிவிப்பதும், பின்னர் கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்வதும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் வாடிக்கையாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fde1b28-ef8a-44ed-95cf-7a0889a25bd3/26-6a70cc4c51289.webp' /></p><p>
நான் மக்களைக் கொல்வதை விரும்பவில்லை; மாறாக ஒப்பந்தம் செய்வதையே விரும்புகிறேன். தற்போது நாங்கள இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.</p><p> திங்கள்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும்" என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த அறிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சு பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக நிராகரித்தார்.
</p><p>அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தச் சந்திப்புகளும் அட்டவணைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கவோ அல்லது தூதுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவோ ஈரானுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை.
ஈரானியப் பிரதிநிதிகள் அனைவரும் நாட்டிற்குள்ளேயே உள்ளனர்; </p><p>வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மட்டும் ஈராக்கிற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில், ஹோர்முஸ் நீரிணை மேலாண்மை குறித்து 'ஓமன்' நாட்டுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பாகேய் தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d75ae0a2-613a-4864-90c3-d9e7a257977b/26-6a70d8abe467e.webp' /></p><p>
</p><p>ஈரானின் மறுப்பைத் தொடர்ந்து, தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஈரானியத் தலைமையை "நம்பமுடியாத வஞ்சகம் நிறைந்தது" என்று கடுமையாகச் சாடினார். 
ஈரான் தரப்பிலிருந்து தான் சந்திப்பு கேட்கப்பட்டதாகவும், மிக விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.</p><p>
மேலும், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கக் கடற்படை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ட்ரம்ப் கூறினார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-woman-died-in-the-kilinochchi-area-1785770016"></link>
            <id>https://tamilwin.com/article/a-woman-died-in-the-kilinochchi-area-1785770016</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று(03.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விபத்தில்&nbsp;உயிரிழந்தவர்</h2><p>
</p><p>

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி - பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/284edddd-e1b8-4a5c-8917-f5145ae0d432/26-6a70b147297ad.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:14:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வொஷிங்டன் காட்டுத்தீ: 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/washington-wildfires-600-buildings-damaged-1785775530"></link>
            <id>https://tamilwin.com/article/washington-wildfires-600-buildings-damaged-1785775530</id>
            <summary type="text">அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக
இதுவரை 60...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது.</p><p> இதன்காரணமாக
இதுவரை 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>வொஷிங்டன் காட்டுத்தீ</h2><p>
</p><p>
மேலும் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட
கட்டிடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9cc0b05-9d2c-4b1e-964a-58c68140752c/26-6a70c77132d74.webp' /></p><p>

வொஷிங்டன் மாநிலம் முழுவதும் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தீ
பரவியுள்ள நிலையில், ஸ்போக்கேன் பகுதியில் மட்டுமே 21 சதுர கிலோமீட்டர் பரப்பு
பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நிறுவனங்கள்
தீவிரமாகப் போராடி வருகின்றன.</p><p></p><h2>&nbsp;600 கட்டிடங்கள் சேதம்</h2><p> </p><p>இருப்பினும் சில இடங்களில் தீ இன்னும்
கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

இதுவரை உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். </p><p>எனினும், வரும் நாட்களில் வறண்ட காலநிலை நீடிக்கும் என
எதிர்பார்க்கப்படுவதால் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று செனட்டர் மரியா
கேன்ட்வெல் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d9207cb-6975-4666-b8ce-7a39c3023797/26-6a70c771d83a6.webp' /></p><p>
</p><p>
காட்டுத்தீ ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
</p><p>
இதேபோல், இடாஹோ, ஓரிகான் மற்றும் உடா ஆகிய பிற மாநிலங்களிலும் காட்டுத்தீ
வேகமாகப் பரவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலை! கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-imposed-on-fishers-fishing-bad-weather-1785770337"></link>
            <id>https://tamilwin.com/article/ban-imposed-on-fishers-fishing-bad-weather-1785770337</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
தீவைச் சுற்றியுள்ள மோசமான காலநிலை ஓரளவுக்கு தணிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
</p><p>
எவ்வாறாயினும், புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>காலநிலை அறிக்கை</h2><p>

புத்தளம், ஹலவத்தை, நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கரையோர கடற்பரப்பில் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடி படகுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்.</p><p>

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, கடலின் தன்மை மேம்பட்டவுடன், இந்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93eb2d5f-41d3-497b-8b4c-01936dae1cda/26-6a70b16356760.webp' /></p><p>
</p><p>
காலநிலை அறிக்கைகளை மீறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலுக்குச் சென்ற மன்னார், கல்பிட்டி, ஹலவத்தை, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் 5 கடற்றொழிலாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில் பணிப்பாளர் நாயகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன் காரணமாக கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும், எந்தப் பகுதியில் பணிபுரியும் போது லைஃப் ஜாக்கெட்டை அணிய வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T15:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏடன் வளைகுடாவில் இருந்து பயணப் பாதையை மாற்றிய சவூதி எண்ணெய் தாங்கிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-oil-tankers-that-diverted-their-route-gulf-1785768493"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-oil-tankers-that-diverted-their-route-gulf-1785768493</id>
            <summary type="text">யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக, சவூதி அரேபியாவை
சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள் ஏடன் வளைகுடாவில் தங்கள் பயணப்
பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக, சவூதி அரேபியாவை
சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள் ஏடன் வளைகுடாவில் தங்கள் பயணப்
பாதையை மாற்றி தெற்கு ஆப்பிரிக்காவை நோக்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
ஆசியாவில் இருந்து வெறுமனே திரும்பிய இந்த தாங்கிகள், பப் எல்-மந்தேப் நீரிணை
வழியாகச் செங்கடலைக் கடப்பதற்குப் பதிலாக, தெற்கு ஆப்பிரிக்காவை நோக்கி
அணிவகுத்துச் சென்றுள்ளதாக எல்.எஸ்.இ.ஜி மற்றும் மரைன் டிராபிக் ஏ.ஐ.எஸ் (AIS)
கப்பல் கண்காணிப்புத் தகவல்கள் காட்டுகின்றன.</p><p>

சவூதி அரேபியாவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என யேமனின் ஈரான்
ஆதரவு ஹூதி அமைப்பினர் எச்சரித்ததைத் தொடர்ந்து, செங்கடலில் வணிகக் கப்பல்
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மசகு எண்ணெய் விலை</h2><p>
</p><p>
சவூதி கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் மீதான முற்றுகைக்குப் பதிலடியாகவே
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹூதி இயக்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e499de-b956-4452-bf26-60586c3a5f45/26-6a70ae6ee4be2.webp' /></p><p>
</p><p>
இந்தப் பிராந்தியத்திலான புதிய பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலையும்
உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T15:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-cut-in-many-parts-of-the-country-tomorrow-1785768708"></link>
            <id>https://tamilwin.com/article/water-cut-in-many-parts-of-the-country-tomorrow-1785768708</id>
            <summary type="text">கந்தானை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை(04.08.2026) நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தானை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை(04.08.2026) நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பான அறிவிப்பு இன்று(03.08.2026) வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>

இதற்கமைய, நீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் மற்றும் கால அளவு பின்வருமாறு, </p><ul><li>

மொரட்டுவ (காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை - 5 மணி நேரம்)
கொரலவெல்ல, கட்டுக்குருந்த, மொதறை, மதம்பவந்த, பொல்வத்த, ஸ்ரீய பிளேஸ், க்ளோவ்ஸ் மாவத்த, குணவர்தனராம வீதி, லேக் வல, புனித பீட்டர்ஸ் லேன், பி. எம். பெர்னாண்டோ மாவத்த, பஹவிதான மாவத்த, ஜனஜய வீதி, புனித பீட்டர்ஸ் வீதி, பிரான்சிஸ்கோ பிளேஸ், எகோடௌயன மற்றும் மெல்வில் வத்த.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57452e68-7ac3-4b34-9eeb-907496249273/26-6a70ab56cd2fe.webp' /></p><ul><li>

பனதுறை (காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை - 5 மணி நேரம்)
</li><li>பனதுறை, கிரிபெர்ரி, ஹிரானா, கேசல்வத்த மற்றும் பின்னவத்த.</li><li>

பண்டாரகம (காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 12 மணி நேரம்)
பண்டாரகம, ரைகம, மில்லேனிய, வால்மில்ல, கிடெல்பிட்டிய, அலுபோபுல்ல மற்றும் மொரோந்துடுவ.

ஹொரணை (மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 5 மணி நேரம்)
ஹொரண, மதுரவல மற்றும் பொருவடந்த.
</li><li>
கும்புகா (மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 5 மணி நேரம்)
கும்புக, கோனபொல, கஹதுடுவ மற்றும் கிரிவத்துடுவ.</li><li>

இங்கிரிய (மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை - 5 மணி நேரம்)
இங்கிரிய மற்றும் நம்பப்பன.
</li><li>
பிலியந்தலா (நாளை மாலை 4.00 மணி முதல் நாளை மறுநாள் (05ஆம் தேதி) காலை 8.00 மணி வரை - 16 மணி நேரம்)
பிலியந்தலா, வேரஹேரா, மடபத்தா, ஹொன்னந்தரா, கெஸ்பேவா, பொல்கசோவிட்ட, கஹபொல, மொரட்டுவ வீதி, கொஸ்பெலென்னா, கங்காராமய வீதி மற்றும் நீலமஹாரா.</li></ul><p>

இந்த நீர் விநியோக நிறுத்தம் காரணமாக நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p> 

இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு, 1939 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T14:53:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனத்தின் சுயத்தைத் தொலைத்த இன்றைய தலைமுறை குற்றவாளிகளே! இரண்டாவது நாளாக தொடரும் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-hindu-college-colombo-hindu-college-debate-1785768018"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-hindu-college-colombo-hindu-college-debate-1785768018</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விவாத மன்றம் தற்போது நடைபெற்று வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விவாத மன்றம் தற்போது நடைபெற்று வருகிறது.</p><p>

"இனத்தின் சுயத்தைத் தொலைத்த இன்றைய தலைமுறை குற்றவாளிகளே!" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விவாதத்தில், இரு கல்லூரிகளின் பழைய மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வாதிட்டு வருகின்றனர்.</p><p></p><p>
</p><p>
விரிவுரையாளர் சிவகுருநாதன் கேசவன் நடுவராக இந்த விவாதத்தை வழிநடத்தி வருகிறார்.
</p><p>
இன்றைய தலைமுறையின் இன அடையாளம், மொழி, பண்பாடு மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான பல்வேறு கருத்துகள் இந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. </p><p>பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று, நிகழ்வை நேரலையில் பார்வையிட்டு வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uzHKeZZQ9oc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T14:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி - நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-will-decrease-from-tomorrow-1785756823"></link>
            <id>https://tamilwin.com/article/flood-will-decrease-from-tomorrow-1785756823</id>
            <summary type="text">நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனை குறிப்பிட்டார். </p><p>

அதற்கமைய, நாளை நண்பகலின் பின்னர் நிலவும் மழை நிலைமை குறையும் என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2><b>நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்</b></h2><p> 

மேலும் ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f250cb-b451-4fc5-9b6d-401de7b611a4/26-6a707e8ce803e.webp' /></p><p>அது தீவிரமடைவதுடன் எதிர்வரும் 06ஆம் திகதிக்குப் பின்னர் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும் மேலும் தெரிவித்தார். </p><p>அதற்கமைய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடைமழை பெய்யக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Qxch2UrB3q4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-03T14:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் நீர் குழாய்க்குள் வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் - தமிழர் பகுதியில் வர்த்தகர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/32-year-old-youth-arrested-with-ice-drugs-1785764828"></link>
            <id>https://tamilwin.com/article/32-year-old-youth-arrested-with-ice-drugs-1785764828</id>
            <summary type="text">அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03
பகுதியில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03
பகுதியில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கைது நடவடிக்கை நேற்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

குறித்த பகுதியில் இளைஞர்களைக் குறி வைத்து போதைப்பொருள் விற்பனை
இடம்பெறுவதாகச் சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்
அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே
இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>
32 வயது இளைஞர் கைது</h2><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதுடையவர் என்றும் பிளாஸ்டிக் குழாய்க்குள் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f55b4f-b559-4c88-9698-d70f63bd41ae/26-6a709c72c9d4c.webp' /></p><p>இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம்
ஐஸ் போதைப்பொருள்,மோட்டார் சைக்கிள்,கைப்பேசி ,இலத்திரனியல் தராசு என்பன சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுச் சம்மாந்துறை பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு 3 பிடி விறாந்துகள் உள்ள நிலையில்
தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-sales-fraud-thwarted-in-vinayagapuram-1785764595"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-sales-fraud-thwarted-in-vinayagapuram-1785764595</id>
            <summary type="text">திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின்
போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை, திருக்கோவில் பிரதேச சபையின்
தவிசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின்
போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை, திருக்கோவில் பிரதேச சபையின்
தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் உத்தியோகத்தர்கள் உடனடியாகத்
தலையிட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
</p><p>
இன்று விநாயகபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது நெல் மூடைகளை விற்பனைக்காக
நிறுவை செய்துகொண்டிருந்த வேளையில், தராசில் முறைகேடு நடப்பதை
அவதானித்துள்ளார். </p><p>உடனடியாக இது குறித்துத் திருக்கோவில் பிரதேச சபையின்
தவிசாளருக்குத் தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியுள்ளார்.</p><h2>உடனடி நடவடிக்கை</h2><p>
</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் பிரதேச
சபை உத்தியோகத்தர்கள், அங்கு பயன்படுத்தப்பட்ட தராசின் தரத்தினைப் பரிசோதித்த
போது தராசில் பிழையான அளவீடு (நிறுவை) காட்டப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.</p><p>


பிரதேச சபை தவிசாளரின் இந்த உடனடி நடவடிக்கையினால் குறித்த விவசாயிக்கு
ஏற்படவிருந்த சுமார் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான நிதி இழப்பு
தடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட நெல் கொள்வனவாளர்கள் உடனடியாகப்
பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகத் திருக்கோவில் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நீதிமன்ற நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இச்சம்பவம் குறித்துத் திருக்கோவில் பிரதேச சபை ஊடகம் விடுத்துள்ள அறிவிப்பில்:

"எமது பகுதியில் இதுபோன்ற கண்டறியப்படாத மோசடிகள் பல இடம்பெற்றிருக்கலாம்.
இனிவரும் காலங்களில் இத்தகைய சுரண்டல்களைத் தடுப்பதற்குரிய தீவிர நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
விவசாயிகள் அனைவரும் நெல் விற்பனையின் போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இவ்வாறான தராசு மோசடிகள் அல்லது
சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாகத் திருக்கோவில் பிரதேச
சபையின் 067-2265018 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளவும்.</p><p>
மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நீதிமன்ற நடவடிக்கை
எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T13:43:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து - உயிராபத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passengers-rescued-from-flooded-bus-1785763894"></link>
            <id>https://tamilwin.com/article/passengers-rescued-from-flooded-bus-1785763894</id>
            <summary type="text">கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நாவலப்பிட்டிய - பலாங்கொடை வீதியில் பயணிகளுடன் வெள்ள நீரில் சிக்கியிருந்த பேருந்தானது மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நாவலப்பிட்டிய - பலாங்கொடை வீதியில் பயணிகளுடன் வெள்ள நீரில் சிக்கியிருந்த பேருந்தானது மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை போக்குவரத்து திணைக்களத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்த காணொளியில் வெள்ள நீர் அப்பகுதியை வேகமாக சூழ்ந்தநிலையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்ததால் பேருந்து இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ளது.</p><p></p><h2>இளைஞர்கள் குழு&nbsp;</h2><p>
இந்நிலையில் நாவலப்பிட்டியாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று, பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றி, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4d3e6f9-78de-4ef3-b2f1-7f1719d2ef84/26-6a709838c486b.webp' /></p><p>
</p><p>
இதன்போது பேருந்தின் ஜன்னல்கள் வழியாகப் பயணிகள் வெளியேற்றப்படுவதை காணொளிக் காட்சிகள் காட்டின.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2331-people-from-81-families-affected-nuwara-eliya-1785763105"></link>
            <id>https://tamilwin.com/article/2331-people-from-81-families-affected-nuwara-eliya-1785763105</id>
            <summary type="text">நிலவும் மோசமான காலநிலை காரணமாக நுவரெலிமா மாவட்டத்தில் இன்று (03.08.2026) மாலை நேர
நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் கடுமையாக
பாதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் மோசமான காலநிலை காரணமாக நுவரெலிமா மாவட்டத்தில் இன்று (03.08.2026) மாலை நேர
நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
சமீபத்திய நிலவர அறிக்கையின்படி மாவட்ட செயலாளர் வெளியிட்ட அறிக்கையின்
பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p></p><h2>மழை வெள்ளம் சற்று குறைவடைந்து</h2><p>வெள்ளத்தில் சிக்கி 2
பேரும் மண்சரிவில் சிக்கி 4 பேரும் காணாமல் போயுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4567225f-1919-47f3-9a67-64537dfdc303/26-6a70988741acd.webp' /></p><p>மேலும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும்
இதுவரை 439 குடும்பங்களைச் சேர்ந்த 1734 பேர் இடம்பெயர்ந்து 7 தற்காலிக
இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் </p><p>இவர்களுக்கான சகல
ஏற்பாடுகளையும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஊடாக முன்னெடுத்து வருகிறது எனவும் மாவட்ட
செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹட்டன் , கொட்டக்கலை மற்றும் தலவாக்கலை போன்ற பிரதேசங்களில் பல கிராமங்கள்
தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.</p><p> எனினும் இன்று (03) மாலையில் நுவரெலியா
நகரில் மழை வெள்ளம் சற்று குறைவடைந்துள்ளது. இருந்த போதிலும்
வீடுகளில் வெள்ளநீர் காணப்படுகிறது எனவும் அவர மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T13:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி! உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-who-died-in-maharashtra-prison-clash-1785761655"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-who-died-in-maharashtra-prison-clash-1785761655</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் மரணத்திற்கு அதிகப்படியான இரத்தப்போக்கே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகம மருத்துவமனை சிறப்பு தடயவியல் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் மரணத்திற்கு அதிகப்படியான இரத்தப்போக்கே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ராகம மருத்துவமனை சிறப்பு தடயவியல் குழுவினரால் இன்று மாலை (03) நடாத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p>பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கைதியின் உடல் இன்று மாலை (03) வத்தளை பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c986f7c5-44c1-458c-a15b-1dda8df4555a/26-6a7096538f3e0.webp' /></p><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் வத்தளை- ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கைதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T13:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற தீர்ப்பின் பின் திண்டாடும் பிள்ளையான் - சுரேஷ் சலே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-ruling-on-easter-attacks-1785762984"></link>
            <id>https://tamilwin.com/article/court-ruling-on-easter-attacks-1785762984</id>
            <summary type="text">முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது சிறையில் இருப்பதால், சிறைச்சாலையே மிகவும் மோசமான இடமாக பார்க்கப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது சிறையில் இருப்பதால், சிறைச்சாலையே மிகவும் மோசமான இடமாக பார்க்கப்படுவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகத்தின் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் அடையாளம் காணப்பட்டு, அநுர அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் ஆட்டம் கண்டுள்ளனர். இதனால் வெளியில் இருப்பவர்களிடையே தற்போது ஒருவித அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>அதே சமயம், சிறைச்சாலைகளில் குழப்பங்களை ஏற்படுத்தி, குற்றவாளிகளை மீண்டும் சமூகத்தில் நடமாடவிட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதே சில அரசியல் தலைவர்களின் நோக்கமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆழமாக ஆராய்கிறது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gNzl_D-fZns" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : சஜித் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-must-put-an-end-to-deceitful-politics-sajith-1785762229"></link>
            <id>https://tamilwin.com/article/we-must-put-an-end-to-deceitful-politics-sajith-1785762229</id>
            <summary type="text">நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால்,
மக்கள் அறிவால் பலம் பெற்ற சமூகமாக மாற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால்,
மக்கள் அறிவால் பலம் பெற்ற சமூகமாக மாற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
</p><p>
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று(02) நடைபெற்ற ஐக்கிய கல்வி ஊழியர்
சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><p></p><h2>பாடசாலைகள் மூடப்படும் நிலை</h2><p>மேலும் உரையாற்றுகையில்,

"துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலையிலேயே எரிபொருள்களைப் பெற்றுத்
தருவோம் என்று தேர்தல் காலத்தில் கூறினர். ஆனால் இன்று அது
நிறைவேற்றப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51d5b5b9-f94f-4d64-a009-02bc9a8fd64f/26-6a70942a34daf.webp' /></p><p> உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் நமது
நாட்டில் மாத்திரமே தொடர்ந்து எரிபொருள் மீது வரி விதிக்கப்பட்டு வருகின்றது.</p><p>
மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒன்றால் குறைப்பதாகக் கூறிவிட்டு தற்போது
உயர்த்தியுள்ளனர். புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முன்னுரிமை அளிப்பதாகக்
கூறிவிட்டு, இன்று எரிபொருள் மின் உற்பத்தி நிலைய மாபியாவின் அடிமையாக
அரசாங்கம் மாறியுள்ளது.&nbsp;</p><p>நாட்டில் கல்வித் துறையின் 6 முக்கிய பிரிவுகளிலும் குறைபாடுகள் மற்றும்
ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம்
ஆசிரியர்களும், 15 ஆயிரம் அதிபர்களும், 10 ஆயிரத்து 145 பாடசாலைகளும் உள்ள
நிலையில், பல பாடசாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே பொய் வாக்குறுதிகளை வழங்காது. ஆசிரியர்களுக்கு
வழங்க வேண்டிய எஞ்சிய 2/3 சம்பளப் பங்கைப் பெற்றுக்கொடுக்கவும், அவர்களின்
குறைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கற்பனை
உலகங்களை உருவாக்கி ஆசிரியர்களை அனாதரவாக்க மாட்டோம்.</p><h2>பாரம்பரிய காலாவதியான எண்ணங்கள்</h2><p>உலகளவில் தகவல் தொழில்நுட்பம் முன்பள்ளியிலிருந்தே ஆங்கில மொழியில்
கற்பிக்கப்படும் நிலையில், இங்கு தரம் 6 முதல் 13 வரை தாய்மொழியிலேயே
கற்பிக்கப்படுகிறது.</p><p> திறமைகளை மேம்படுத்தும் முறையான வேலைத்திட்டம் கல்வி
முறையில் இல்லை. ஆங்கில மொழி எழுத்தறிவை மேம்படுத்துவதுடன், பாரம்பரிய
காலாவதியான எண்ணங்களிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d979a183-01e3-4532-bf82-e5fe5c972bd9/26-6a70942b0724c.webp' /></p><p>
குழந்தைகள் பிறந்ததிலிருந்து 5 வயது வரை மூளையின் 75 சதவீத வளர்ச்சி
அடைகின்றது. எனவே, 1 ஆம் வகுப்பிலிருந்து அல்லாமல் முன்பள்ளியிலிருந்தே
கல்வியை நவீனமயமாக்க வேண்டும். மனனம் செய்யும் முறையிலிருந்து விலகி, சவால்களை
எதிர்கொள்ளும் கல்வியை நோக்கிச் செல்ல வேண்டும்.</p><p>கடும்போக்கு இடதுசாரிகள் தனியார் கல்வியை விமர்சித்துவிட்டுத் தமது
பிள்ளைகளைத் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகிறார்கள். அவர்களின்
பிள்ளைகளுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கும்
கிடைக்க வேண்டும். </p><p>அதேவேளை, முதலிடம் நலன்புரி அரசின் இலவசக் கல்விக்கே
வழங்கப்பட்டு அது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டு்ள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T13:14:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை : தீவிரப்படுத்தப்பட்டுள்ள பேரிடர் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministry-defense-disaster-preparedness-bad-weather-1785760379"></link>
            <id>https://tamilwin.com/article/ministry-defense-disaster-preparedness-bad-weather-1785760379</id>
            <summary type="text">நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பேரிடர்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பேரிடர்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் சார்பாக, பேரிடர் மேலாண்மைப் பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலகா இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>பாதுகாப்பான மையங்களுக்கு இடமாற்றம்&nbsp;</h2><p>
</p><p>மேலும் வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம்&nbsp; ஆகியவற்றால் இன்று (03) வெளியிடப்பட்ட வானிலை தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p>
 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்படும் மண்சரிவு எச்சரிக்கைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98711571-ce5f-4d28-b91f-0f8eb5cd8517/26-6a7090c7c33d7.webp' /></p><p>

 

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>மண்சரிவு, வெள்ளம் மற்றும் பிற வானிலை தொடர்பான பேரிடர்களால் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக, கிராம அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழுக்களை அமைத்து, தேவையான திட்டங்களைச் செயல்படுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரிகள் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
 

பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரை உடனடியாகக் கண்டறிந்து, தேவைப்படும்போது அவர்களை நியமிக்கப்பட்ட பாதுகாப்பான மையங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட அல்லது உறவினர் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T13:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/amirthakazhi-mamangeswarar-temple-festival-1785760437"></link>
            <id>https://tamilwin.com/article/amirthakazhi-mamangeswarar-temple-festival-1785760437</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்
பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மூர்த்தி, தலம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்
பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
</p><p>
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி
மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று
நடைபெறுகிறது.
</p><p>
மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை
வழிபாடுகளை அடுத்து, வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ
அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப் பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார்.</p><h2>பெருவிழா</h2><p>
</p><p>
பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள்
நடத்தி வைத்தனர்.

மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத தேவாரப் பாராயணங்கள் இடம்பெற, பக்தர்களின்
அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடந்தேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53b1cc97-1adf-4ff7-9184-33d640146899/26-6a708cff47521.webp' /></p><p>

மாமாங்கேஸ்வரரின் கொடியேற்றத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
</p><p>
அமிர்தகழி மாமாங்கேஸ்வரரின் தீர்த்த உற்சவப் பெருவிழா ஆடி அமாவாசை தினத்தன்று
(12) திகதி நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.</p>]]></content>
            <updated>2026-08-03T12:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத்தில் தொடர் கனமழை - நுவரெலியாவில் 06 குடும்பங்கள் இடப்பெயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-families-displaced-in-nuwara-eliya-1785760378"></link>
            <id>https://tamilwin.com/article/6-families-displaced-in-nuwara-eliya-1785760378</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

நேற்று(02.08.2026) இரவு முதல் பெய்து வரும் கனமழைக்காரணமாக பல வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.</p><p></p><p> </p><h2>

நுவரெலியாவில் தொடர் மலை</h2><p>
இதற்கமைய, நுவரெலியா - சென் அன்றுஸ் பகுதியில் உள்ள 06 வீடுகளில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு நுவரெலியா பம்பரகலையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd2c7fa-5993-43fb-95f7-d0cc64d2897e/26-6a708afd066c7.webp' /></p><p>
</p><p>
நுவரெலியாவில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் பலவற்றின் நீர்மட்டம் துரிதமாக உயர்வடைந்துள்ளதால் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு 
 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8606cefe-7da0-4078-a283-d555efc8c4c1/26-6a708afe15415.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bf0b2f9-d05f-4f3c-b1d0-c797cbda8365/26-6a708afedd8da.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T12:35:14+00:00</updated>
        </entry>
    </feed>
