<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-19T11:19:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுங்கத் திணைக்களத்தில் பாரிய மோசடி - நெருங்கிய நண்பரை காப்பாற்ற அறிக்கையை மறைத்த ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-major-fraud-in-the-customs-department-1787136436"></link>
            <id>https://tamilwin.com/article/another-major-fraud-in-the-customs-department-1787136436</id>
            <summary type="text">இலங்கையின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளதாக நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக நாடாளுமன்றத்தில் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
</p><p>
சுங்கத் திணைக்களத்தின் Red Channel ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 40 அடி கொள்கலன் ஒன்றை சோதனையிட்டபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.</p><h2>பெரிய மோசடி</h2><p>வாகன உதிரிப் பாகங்கள், இயந்திரங்கள் மற்றும் வாகன இருக்கைகள் அடங்கியிருந்த அந்தக் கொள்கலனை முதலாவது மற்றும் இரண்டாவது குழுக்கள் சோதனையிட்டு, எந்தவித பிரச்சினையும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்திருந்தன. </p><p>எனினும், சுங்கத் திணைக்களத்தின் மத்திய விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மூன்றாவது சோதனையின்போது 85 வகையான பொருட்கள் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9c80fc-1aa7-412e-b06c-6e200c0c972c/26-6a858fc10c1c9.webp' /></p><p>
</p><p>
அவற்றில் 45 வகையான பொருட்கள் சுங்கத் திணைக்களத்திடம் அறிவிக்கப்படாதவை எனவும், அவற்றின் கீழ் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 355 பொருட்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

மேலும், இறக்குமதி அனுமதிப்பத்திரம் இல்லாத 122 வாகன இருக்கைகளும், ரிம்களுடன் கூடிய 18 டயர்களும் அந்தக் கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><h2>ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர்&nbsp;</h2><p>
</p><p>இந்த மோசடியில் தொடர்புடையவர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரி ஒருவர் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் உயர் பதவியொன்றை வகிக்கும் ஜனாதிபதியின் நெருங்கிய நபர் எனவும் டி.வி. சானக குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36fd93be-d1ec-445d-afa7-a8ebd1961ba5/26-6a858fc0301cf.webp' /></p><p>

இது தொடர்பான புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை நிதி அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், தனது நெருங்கிய நபரைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அந்த அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
</p><p>
இந்த ஊழல் தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும், நீதித்துறைக்கு கூட அழுத்தம் கொடுத்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T11:15:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் நான்கு சிறைச்சாலைகளை கட்டுக்குள் கொண்டு வந்த நீதி அமைச்சர் - களத்தில் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-frequent-prison-clashes-1787137879"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-frequent-prison-clashes-1787137879</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிகழும் அசாதார நிலை குறித்து எழுப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், கைதிகளின் நலனை உறுதிச் செய்யும் விதமாகவும் நீதி மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நிகழும் அசாதார நிலை குறித்து எழுப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், கைதிகளின் நலனை உறுதிச் செய்யும் விதமாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வை மேற்கொண்டுள்ளார்.</p><p>

இந்த நடவடிக்கை இன்று(19.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>
சிறைச்சாலை மோதல்களை குறைக்கத் திட்டம்</h2><p>
இதற்கமைய, களுத்துறை சிறைச்சாலைக்கு சென்ற ஹர்ஷன நாணயக்கார ஊடகங்களுக்கு உரையாற்றுகையில்,
</p><p>
அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதையும் கைதிகளின் நலனை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு, தீவில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு அமைப்பு நிறுவப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2c91b40-ae6d-4d4e-bcbe-ecaddbdb1ffc/26-6a858fdc2a394.webp' /></p><h2>


புதிய அமைப்பு</h2><p>
அரச அதிகாரிகளால் கூட்டாக நிறுவப்படும் இந்தக் கூட்டு அமைப்பு, பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக மாதத்திற்கு ஒரு முறையாவது கூட வேண்டும்.
</p><p>
தீவில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்தக் கூட்டு அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, இன்று களுத்துறை, காலி, புஸ்ஸா மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளை மையமாகக் கொண்டு பிராந்திய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்புடன் கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன என்றார்.
</p><p>
இந்த நடவடிக்கையில், களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T11:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/06-suspects-arrested-attempting-to-bribe-police-1787135224"></link>
            <id>https://tamilwin.com/article/06-suspects-arrested-attempting-to-bribe-police-1787135224</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில்
காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில்
காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கை இன்று(19.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>சந்தேக நபர்களான&nbsp;டிப்பர் வாகன சாரதிகள் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்விரோத மணலை கொண்டு செல்ல முற்பட்டவேளை இந்த கைது நடவடிக்கை&nbsp;முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4cb9f8-ac54-417e-8fd1-86951a52550f/26-6a8589e9b37df.webp' /></p><p>இந்நிலையில் அவர்களின் ஐந்து
டிப்பர் வாகனங்களும் பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளது.</p><p>
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறுபேரையும் இன்றைய தினம் நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9de3e2d-b2a1-43a7-885d-477a97222f3c/26-6a8589ea91104.webp' /></p><p> </p><p>குறித்த
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:56:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணி விடுவிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/defense-ministry-statement-1787132008"></link>
            <id>https://tamilwin.com/article/defense-ministry-statement-1787132008</id>
            <summary type="text">கிளிநொச்சி - ஏ9 வீதி, காக்கா கடைச் சநதியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும், கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி
ஊடக இல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - ஏ9 வீதி, காக்கா கடைச் சநதியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும், கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி
ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர்
எழுதியிருந்தனர்.
</p><p>
இக்கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில்
கோரியிருந்தது.</p><h2>காணியையும் கட்டடத்தையும் பயன்படுத்தும் இராணுவத்தினர்</h2><p>அதற்கமைவாக பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி செயலகத்திற்கு
வழங்கிய பதிலில்

பாதுகாப்பு காரணங்கள் காரணமாக குறித்த காணியையும், கட்டடத்தையும்
விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிக்கையளித்துள்ளதாக
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P.
வீரசிங்க கிளிநொச்சி ஊடக அமையத்திற்கு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb0f73f-48c0-48dd-9011-8ed03b5f68d6/26-6a858c0e981d9.webp' /></p><p>

2009இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த காணியும்
கட்டத்தையும் தற்போது இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். </p><p>இந்த
காணிக்கு ஒரு புறமாகவுள்ள நிலம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு
விடுவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் யோகர் சுவாமிகள் நிலையத்திறகும்
விடுவிக்கப்பட்ட நிலையில் ஊடக அமையத்தின் காணியும் கட்டடமும் மாத்திரம் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாஸா எரிப்பு விவகாரம்: நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆராயக் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muslim-bodies-during-the-covid-19-period-included-1787134128"></link>
            <id>https://tamilwin.com/article/muslim-bodies-during-the-covid-19-period-included-1787134128</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை, நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>மனித உரிமை மீறல்</h2><p>

இந்நிலையில், குறித்த பிரேரணையை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரி, 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baac3fa2-7d2d-4644-81a4-f2841a118fac/26-6a85891038f22.webp' /></p><p>
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து இந்தக் கோரிக்கை கடிதத்தைக் கையளித்தனர்.
</p><p>
முன்னாள் அரசாங்கத்தின் காலத்தில், சுகாதார வழிகாட்டல்களை மீறியும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு முரணாகவும் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனை மனித உரிமை மீறலாகவும் அநீதியாகவும் சுட்டிக்காட்டியுள்ள கோரிக்கை கடிதம், இந்த விவகாரம் தொடர்பில் முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:44:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாராதிபதி ஒருவரின் இரட்டை வேடம் அம்பலம்: மனைவிக்கு சொகுசு காரும் இருமாடி வீடும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778"></link>
            <id>https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778</id>
            <summary type="text">கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் தேடிப்பார்த்ததில் இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது.
ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் நல்ல கணவராகவும் இருந்துள்ளார். </p><p>தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு விசித்திரமான இரட்டை வேடம் தரித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>விகாராதிபதி போட்ட இரட்டை வேடம்</h2><p>சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில் இருந்துள்ளார். இவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
</p><p>குருநாகலையில் அமைந்துள்ள மணமகளின் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது. 
தான் திருமணம் செய்தது ஒரு பௌத்த துறவியை என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்தே இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb84cbb-d298-47cf-8a06-5c19944c3a63/26-6a857fa964808.webp' /></p><p>அனைத்தும் தெரிந்தே இந்த காரியத்தை செய்துள்ளனர். பின்னர் குருநாகலை பகுதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டில் அப்பெண்ணை அவரது பெற்றோருடனும் தனது குழந்தையுடன் குடியமர்த்தியுள்ளார்.
</p><p>ஊர் மக்களுக்குச் சந்தேகம் வராதிருக்க விக் அணிந்து கொண்டு பிரதேச செயலகத்தின் அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என்று அப்பெண்ணின் வீட்டாரிடமும் ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.</p><h2>நான்கு இலட்சம் ரூபா</h2><p>
</p><p>மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விகாரையிலிருந்தும் தான தர்மங்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று 5-6 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.</p><p>பின்னர் விகாரையிலிருந்து கொண்டு வந்த உணவை ஊர் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f939cb-0b09-4af8-a318-2a1feaf9251d/26-6a857faa1a28f.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டில் இருக்கும் பரோபகாரிகளிடம் விகாரையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி 2-3 இலட்சம் ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார். </p><p>அந்தப் பணத்தையே இந்தப் பெண்ணுக்குச் செலவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி விகாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார். </p><p>இவை தெரியவந்ததை அடுத்து குறித்த தேரர் விகாரைக்கு வந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/O8f4RVu6rWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-19T10:04:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-against-a-trading-center-in-jaffna-1787131225"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-against-a-trading-center-in-jaffna-1787131225</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு
வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து
செய்யுமாறு யாழ்ப்பாணம் மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு
வைத்திருந்த வர்த்தக நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து
செய்யுமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிறப்பித்துள்ளது.
</p><p>பலாலி வீதி, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில்
காலாவதியான சொக்லேட், பால் போத்தல் உள்ளிட்ட மூன்று வகையான பொருட்கள்
விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின்
பரிசோதனையின்போது கண்டறியப்பட்டது.
</p><p>இதையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்
நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><h2>பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்துமாறு&nbsp;கட்டளை</h2><p>இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வர்த்தக
நிலையம் இதேபோன்ற குற்றச்செயலில் முன்னரும் ஈடுபட்டிருந்தமை தொடர்பான
முற்குற்றம் ஒன்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47818a73-b174-458a-b833-87440a9e85d3/26-6a857a0fe2d38.webp' /></p><p>வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி உசைன்,
குற்றத்திற்காக 7,500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், குறித்த நிறுவனத்தின்
வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறு உரிய பிரதேச சபைக்கு நீதிமன்ற பதிவாளர்
ஊடாக அறிவித்தல் அனுப்புமாறும் உத்தரவிட்டார்.
</p><p>மேலும், குறித்த தண்டனை விபரங்கள், எதிரியின் பெயர், நிறுவனத்தின் பெயர்
மற்றும் குற்றம் தொடர்பான விபரங்களை இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம்
ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகும் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்துமாறும்
நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
</p><p>அதற்கான அனைத்து செலவினங்களையும் எதிர்த்தரப்பினர் ஏற்க வேண்டும் எனவும்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலாவதியான உணவுப்
பொருட்களை விற்பனைக்கு வைப்பது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
என்பதற்கான முக்கிய முன்னுதாரணமாக இந்த நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T09:41:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலியை ஏமாற்றிய தமிழர் பகுதி முன்னாள் முதல்வர்- நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-man-who-deceived-him-marrying-her-1787131404"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-man-who-deceived-him-marrying-her-1787131404</id>
            <summary type="text">அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறித்
துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று
மாநகர சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறித்
துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று
மாநகர சபையின் முன்னாள் முதல்வரை விளக்கமறியலில்
வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு, நேற்று(18.08.2026) அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் 
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
திருமணம் செய்வதாக கூறி மோசடி</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக செயற்பட்டு வந்த குறித்த நபர் , அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச்
சேர்ந்த அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாக வாக்குறுதி
அளித்துத் தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குறித்த பெண்
அண்மையில் முகநூல் நேரலை ஊடாக நியாயம் கேட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c86d7f0-1197-4d90-9c99-246c6d7ac4f2/26-6a8577c47e5d0.webp' /></p><p>
</p><p>
அத்துடன், இந்த சம்பவம்
தொடர்பில் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் அப்பெண் முறைப்பாடு
செய்திருந்தார்.
</p><p>
முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால்
தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக
அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.
</p><p>
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான
குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.</p><h2>

நீதிமன்ற உத்தரவு</h2><p>

அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது
செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்
பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/882f4736-6381-4dfe-afbe-f6fb30906a99/26-6a8577c3c8b15.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில், அவரை ஒகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும்
சிறுவர் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You May Like This..</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CZ1SZtjvHMI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-19T09:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை - மாவட்டச் செயலாளரின் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787131068"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787131068</id>
            <summary type="text">வவுனியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை
தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வவுனியா மாவட்ட
அனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை
தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வவுனியா மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
கடந்த இரண்டு நாட்களில் நாட்டிலேயே அதிகூடிய வெப்பநிலை வவுனியா மாவட்டத்திலேயே
பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.</p><h2>அபாயகரமான வெப்பமான காலநிலை</h2><p>
</p><p>
வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விவசாயக் கூட்டத்தில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவித்த அவர், இந்த அபாயகரமான வெப்பமான காலநிலை நிலைமை எதிர்வரும்
இரண்டு மாதங்களுக்கு தொடரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17e46657-6b60-49b4-a7d8-07beec81bda1/26-6a85761903841.webp' /></p><p>

இக்கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றிய வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ.
சரத்சந்திர, நிலவும் கடும் வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில்
கொண்டு, எதிர்வரும் பருவத்திற்கான விவசாய நடவடிக்கைகளை மிகக் கவனமாக
திட்டமிட்டு முன்னெடுக்குமாறு விவசாய அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும்
அறிவுறுத்தினார்.</p><h2>பெரும்போக பருவ நெல் அறுவடை</h2><p>
</p><p>
அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் தற்போதைய பெரும்போக பருவ நெல் அறுவடை மற்றும்
நெல் கொள்வனவு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகக் கூட்டத்தில்
சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/248f8f74-6e37-48b6-9b22-9203ca25320c/26-6a857619e1d3d.webp' /></p><p>
</p><p>
மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்டச் செயலாளர்
என். கமலதாசன், பிரதேச செயலாளர்கள் உட்பட விவசாயம், நீர்ப்பாசனம், கமநல
சேவைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும்
கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a31d9a2-8cac-4053-a542-6b92c7041d16/26-6a85761ab69ca.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af83ed23-5d64-42a5-8ac6-d97be9aae040/26-6a85761b924fb.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af83ed23-5d64-42a5-8ac6-d97be9aae040/26-6a85761b924fb.webp' /></p>]]></content>
            <updated>2026-08-19T09:26:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிந்தவூர் பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-official-arrested-ninthavur-police-1787128973"></link>
            <id>https://tamilwin.com/article/government-official-arrested-ninthavur-police-1787128973</id>
            <summary type="text">நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p>கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால் மயங்கி
விழுந்த நிலையைத் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸாரால் கைது</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமையின் போது குறித்த பெண்
உத்தியோகத்தர் காணொளி எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை
சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர்
பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db891b1f-a0e1-46f7-901c-c719e313dc5e/26-6a857360d779a.webp' /></p><p>முறைப்பாட்டிற்கு அமைவாக, செவ்வாய்க்கிழமை (18) மாலை வாக்குமூலம் ஒன்றைப்
பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் பொலிஸ்
நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><h2>அவசர சிகிச்சை</h2><p>

விசாரணைகளின் பின்னர் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்ட வேளையில், திடீரென
மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/556eab1f-7f9e-4d3f-a265-a1a25a29c670/26-6a8573618f260.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு
அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> தற்போது அவருக்குப் பெண்
பொலிஸாரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன்,
நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T09:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மற்றொரு பொருளாதார நெருக்கடி : ரணிலின் கூற்றுக்கு அநுர தரப்பு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-statement-anura-side-respond-1787114622"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-statement-anura-side-respond-1787114622</id>
            <summary type="text">2028இற்குப் பிறகு இலங்கை மற்றொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு, நாடு மீண்டும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2028இற்குப் பிறகு இலங்கை மற்றொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு, நாடு மீண்டும் திவாலாவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பதிலடி கொடுத்துள்ளார்.
</p><p>
2028ஆம் ஆண்டுக்குப் பிறகு கடன் திருப்பிச் செலுத்துதல் அதிகரிக்கும்போது இலங்கை ஒரு பெரும் சவாலை எதிர்கொள்ளும் என்று எச்சரித்திருந்த விக்ரமசிங்க, நாடு தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பை சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
</p><h2>8 பில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>
2026ஆம் ஆண்டின் இறுதியில் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என்று மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும், மதிப்பிடப்பட்ட 15 பில்லியன் அமெரிக்க டொலர் அளவை எட்டுவதற்குத் தேவைப்படும் கூடுதல் 7 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை எவ்வாறு திரட்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb58815-17bc-4c9a-9f36-3f7d2ae964e1/26-6a853da7d6ee7.webp' /></p><p>
இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த அபேசிங்க, இலங்கையின் கடன் பொறுப்புகள் குறித்து விக்ரமசிங்க தவறான கூற்றுகளை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p>இலங்கை 2025ஆம் ஆண்டில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பொறுப்புகளைச் செலுத்தியதாகவும், அதே நேரத்தில் தனது வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்து, 2026ஆம் ஆண்டில் ஏறத்தாழ 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பொறுப்புகளைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.</p><p>
2027இல் செலுத்தப்பட வேண்டிய தொகை குறைவாக, சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்று அவர் கூறினார்.
</p><p>
</p><h2>அந்நியச் செலாவணியைத் திரட்ட தவறினால்</h2><p>மத்திய வங்கி முதலீட்டாளர்களுக்கு வழங்கிய புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய அபேசிங்க, இலங்கை தனது கையிருப்பை வலுப்படுத்திக்கொண்டே தனது கடனைத் தொடர்ந்து திருப்பிச் செலுத்த முடியும் என்பதை அவை நிரூபிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2fbd9f-4da2-4865-aa94-55adb2a4c6a4/26-6a853da88cee4.webp' /></p><p>
</p><p>
2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கையிருப்பை உருவாக்கும் அதே வேளையில் கடன் திருப்பிச் செலுத்துதலைத் தொடர்வதில் எந்தச் சிரமமும் இருக்காது என்றும் அவர் வாதிட்டார்.</p><p>

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம், ஏற்றுமதி, முதலீடுகள் மற்றும் சுற்றுலா வருவாய் ஆகியவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக துணை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p>எனினும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அதிக கடன் பொறுப்புகளுக்கு முன்னதாக, போதுமான அந்நியச் செலாவணியைத் திரட்டத் தவறினால், இலங்கை மற்றொரு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p><br><br><b><i>YOU MAY LIKE THIS</i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2rFYnnkx7AQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-19T08:51:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவை காப்பாற்ற நான் தயார்..! யாழ். மக்களிடம் பகிரங்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-member-of-parliament-archuna-1787128908"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-member-of-parliament-archuna-1787128908</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்களுடைய பிள்ளை, அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது, அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் சரிச் செய்கிறேன் என யாழ்ப்பாண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்களுடைய பிள்ளை, அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது, அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் சரிச் செய்கிறேன் என யாழ்ப்பாண மக்களிடம் ஈரோஸ் கட்சித் தலைவர் இரா. பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பில் நேற்று(18.08.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
யாழ்ப்பாணத்து மக்கள் அவர்களுடைய எதிர்காலத்திற்கு ஏதாவது மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனாவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அர்ச்சுனா வெளிநாடுளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபக்சர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்.
</p><p>
அவருக்கு பைத்தியம் முற்றி விட்டது, நாய்களை பிடித்துக் கொண்டுச் செல்லும் வண்டியில் சரி, அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் வைத்தியம் பார்க்க வேண்டும். இல்லாவிடின் அர்ச்சுனாவின் எதிர்காலமே வீணாகி விடும்.
</p><p>
அதுமட்டுமன்றி, அவருக்கு அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும், எனெனின், அவர், சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் குறித்த மிகவும் மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்றார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/550LOoNO5Zw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:43:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1st-test-sri-lanka-vs-india-2026-1787127325"></link>
            <id>https://tamilwin.com/article/1st-test-sri-lanka-vs-india-2026-1787127325</id>
            <summary type="text">இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
</p><p>

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><h2>முதலாவது இன்னிங்ஸ்</h2><p>


இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடந்தது. </p><p>

நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3e8002-4ed0-458b-aee2-d8232a6b8fbe/26-6a856b8e34e79.webp' /></p><p> </p><p>

 
தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்கள் மற்றும் கே.எல். ராகுலின் 82 ஓட்டங்களையும் பெற்று 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்களைக் குவித்தது.</p><p>

 இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும், கேசர நுவன்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54599c14-ed2c-4227-baba-f61faf420b6d/26-6a856b8edceaf.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி,</p><p>சோனல் தினுஷவின் போராட்டமிக்க 100 ஓட்டங்கள் மற்றும் நிரோஷன் திக்வெல்லவின் 80 ஓட்டங்களின் சிறப்பான பங்களிப்பால் 79.4 ஓவர்களில் 284 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

 
இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.</p><h2>2ஆவது இன்னிங்ஸ்</h2><p>
</p><p>
 
முதல் இன்னிங்சில் 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சைத் தொடர்ந்த இந்திய அணிக்கு, ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 66 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களையும் பெற்றுத் தந்தனர்.</p><p> 

 
இலங்கை அணியின் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.


இதன்படி, இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b6d378-594c-4114-add8-560fbfc9a37a/26-6a856b8f92bf6.webp' /></p><p> </p><p>


372 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, போட்டியின் ஐந்தாவது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
</p><p>

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சோனல் தினுஷ 84 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 


பந்துவீச்சில் இந்திய அணியின் மானவ் சுதார் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d35a3680-609c-4995-a7bb-249ee7bd712a/26-6a856b904b77d.webp' /></p><p>


இதன் மூலம், இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் சோதனை வேட்டை - கிலோகணக்கான கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-caught-with-kilograms-of-ganja-1787126752"></link>
            <id>https://tamilwin.com/article/youth-caught-with-kilograms-of-ganja-1787126752</id>
            <summary type="text">பண்டாரகம பொலிஸ் பிரிவின் மஸ்வில பகுதியில் 18 கிலோகிராம் மற்றும் 672 கிராம் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரகம பொலிஸ் பிரிவின் மஸ்வில பகுதியில் 18 கிலோகிராம் மற்றும் 672 கிராம் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை நேற்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஹொரானா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் பொலிஸ் குழுவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>

18 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது</h2><p>
இதன்போது, 18 கிலோகிராம் மற்றும் 672 கிராம் போதைப்பொருள் மாத்திரைகளைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9607e1-3ef0-4313-8398-8415b47f1ee1/26-6a8566e163597.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஆவார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாநாட்டுக்கு அணிதிரளுங்கள் - காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-do-not-expect-justice-from-murderers-1787126110"></link>
            <id>https://tamilwin.com/article/we-do-not-expect-justice-from-murderers-1787126110</id>
            <summary type="text">எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்
தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்
தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி கனகரஞ்சினி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.</p><h2>சர்வதேச நீதி</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட எமது
உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எமது உறவுகளுக்கு என்ன
நடந்தது என தெரியாத நிலையில் தேடிக் கொண்டிருக்கிறோம்.
</p><p>
எமது உறவுகளை தேடிய போராட்டத்தில் சர்வதேச நீதியை எதிர்பார்த்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகள் ஐநா வரை எமது நீதிக்கான போராட்டத்தை இடைவிடாது தொடர்ந்து
கொண்டிருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea99d8e7-8159-4614-8f1c-0ee3f83bc145/26-6a8564f1d4da2.webp' /></p><p>

தமிழ் மக்கள் மீதான கொடூர இன அழிப்பு இடம்பெற்ற பின் எமக்கான நீதியை இலங்கை
அரசிடம் பல தடவைகள் எழுத்து மூலமாக கோரினோம் பதில் கிடைக்கவில்லை.</p><p>

12 மேற்பட்ட ஆணைக்குழுக்களை சந்தித்தோம் எந்தப் பயனும் இல்லாத நிலையில் இலங்கை
நீதித்துறை என்பது கொலைகாரர்களிடம் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது என்ற
உண்மையை உணர்ந்தோம்.</p><h2>உறவுகளைத் தேடிய போராட்டம்</h2><p>
</p><p>
அதன் காரணமாக எமது உறவுகளைத் தேடிய போராட்டம் சர்வதேசத்தை நோக்கியதாக
மாற்றப்பட்டு ஐநா 36 ஆவது கூட்டத் தடரில் இருந்து எமது உண்மைக்கும்
நீதிக்குமான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
இலங்கையில இடம் பெற்றது இனப்படுகொலை என்ற உண்மையை சர்வதேசத்தின் வாயிலாக மனித
உரிமைகளை மதிக்கின்ற நாடுகளூடாக எமக்கான நீதியை பெற வேண்டும் என்பதே எமது
எதிர்பார்ப்பு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a78d038-4d00-4ad1-8416-1af26cf92fd2/26-6a8564f2a9499.webp' /></p><p>
</p><p>
எமது உறவுகளைத் தேடிய நீதிக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும்
முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் அன்று யாழ் தந்தை
செல்வா அரங்கில் வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
ஒன்றிணைந்து சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
</p><p>
ஆகவே எமது உறவுகளை தேடிய போராட்டத்தின் சர்வதேச மாநாட்டை சிறப்பாக
முன்னெடுப்பதற்கு சகல தரப்பினர்களிடமும் ஆதரவை எதிர்பார்ப்பதோடு உதவிகளையும்
எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.<br><br></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:10:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/work-to-repair-power-outage-in-jaffna-1787125442"></link>
            <id>https://tamilwin.com/article/work-to-repair-power-outage-in-jaffna-1787125442</id>
            <summary type="text">யாழில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை சீரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.யாழில் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை சீரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள்
மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள்
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.</p><h2>மின் தடைக்கான காரணம்</h2><p>
</p><p>
இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படிந்தமையே என
தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38943138-b293-4787-bf1b-7db12cfbf430/26-6a856179a0ab0.webp' /></p><p>
</p><p>இந்த நிலையில் படிந்த தூசியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை
மின்சார சபையினாரல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>அந்தவகையில் நேற்றையதினம் (18.08.2026) வலிகாமம் மேற்கு பகுதியிலும் குறித்த பணி
முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf8e92b-2022-4161-bda1-6fcb812334a7/26-6a85617a7ade5.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f82624-5105-4327-a2f2-b96aa18a71e1/26-6a85617b4bb4d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு அச்சுறுத்தல்: திருநெல்வேலியில் தீவிர சோதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conditions-conducive-spread-dengue-tirunelveli-1787124347"></link>
            <id>https://tamilwin.com/article/conditions-conducive-spread-dengue-tirunelveli-1787124347</id>
            <summary type="text">டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p> 

அந்தவகையில் 03, 06, 08 ஆம் திகதிகளில் வளாக வீதி, கலாசாலை வீதி, பனிக்கர் வீதி பகுதிகளில் பா. சஞ்சீவனால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் வீட்டின் பல்வேறு இடங்களில் குடம்பிகள் காணப்பட்ட 09 வீட்டு உரிமையாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><h2>வழக்கு விசாரணை</h2><p> 

அவர்களிற்கெதிராக நேற்று 18.08.2026ம் திகதி யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பா. சஞ்சீவனால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebd0e4d-88b9-4de5-8de3-adb92100b21c/26-6a8560392a2bc.webp' /></p><p> </p><p>

வழக்குகளினை விசாரணை செய்த நீதவான் 08 பேரிற்கு தலா 10,000/= வீதம் 80,000/= தண்டம் அறவிடப்பட்டதுடன், நீதிமன்றிற்கு வருகை தராத நபரிற்கு அழைப்பு கட்டளை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T07:50:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-member-dies-after-falling-from-tree-1787123410"></link>
            <id>https://tamilwin.com/article/family-member-dies-after-falling-from-tree-1787123410</id>
            <summary type="text">வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில்
குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (18....</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில்
குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>நேற்று (18.08.2026) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மரம்வெட்டும் தொழிலை மேற்கொள்கின்ற குறித்த நபர் வவுனியா, நொச்சிமோட்டை
பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறுதலாக மரத்தில் இருந்து
கீழே வீழ்ந்துள்ளார்.
</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>
இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47644259-4278-45e4-a45f-a514b4190316/26-6a855c995f062.webp' /></p><p>எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக
வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவத்தில் ஓமந்தை பகுதியை சேர்ந்த குமார்(வயது 45) என்ற குடும்பஸ்தரே
மரணமடைந்தவராவார். </p><p>சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:36:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்! காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-vavuniya-1787123620"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-vavuniya-1787123620</id>
            <summary type="text">பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம்
முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என தமிழர் தாயக காணாமலாக்கப்பட்டோரின்
உறவுகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம்
முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என தமிழர் தாயக காணாமலாக்கப்பட்டோரின்
உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக வவுனியாவில் நேற்று (18.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><h2>காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவலை</h2><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகள்
தொடர்பான நடவடிக்கைகளுக்காக குடும்பங்களை அழைத்து, ஆவணங்கள், சாட்சிகள்
மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு வருமாறு கோருவது குறித்து
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளான நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8fc02b2-0ffa-42c3-b4cc-8f93fcb6ef1f/26-6a855a9069471.webp' /></p><p>
</p><p>
மேலும், கிராம சேவகர் அதிகாரிகள் மூலம் குடும்பங்களைத் தொடர்புகொண்டு
நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் சில குடும்பங்கள்
அச்சுறுத்தப்பட்டதாக அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாக தாய்மார்கள்
தெரிவிக்கின்றனர்.</p><h2>கட்டாயப்படுத்தக்கூடாது</h2><p>
</p><p>
எந்த கிராம சேவகர் அதிகாரியோ அல்லது வேறு அரச அதிகாரியோ காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஓஎம்பி கூட்டத்திற்குச் செல்லவோ, மரணச்
சான்றிதழை ஏற்றுக் கொள்ளவோ, வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கவோ அச்சுறுத்தவோ,
அழுத்தம் கொடுக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது என தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச விசாரணையே எமக்கு தேவை.. தாயக தாய்மார்கள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-from-mothers-of-the-disappeared-1787124240"></link>
            <id>https://tamilwin.com/article/request-from-mothers-of-the-disappeared-1787124240</id>
            <summary type="text">கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள்
பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் போனோர் விவகாரம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள்
பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியீடு
செய்யப்படவுள்ளது.
</p><p>
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஓகஸ்ட் 30ஆம் திகதி
அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில்
அன்றையதினம் குறித்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் காலை
9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.</p><h2>

சர்வதேச விசாரணையே தேவை..</h2><p>
</p><p>
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்
ஊடக அமையத்தில் நேற்று(18.08.2026) நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/493d5e41-152e-4ef0-96e4-75a99a664512/26-6a855a8341c22.webp' /></p><p> </p><p>

இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாள்வதற்கோ,
நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கை மிகு பொறிமுறைகள் இல்லை, சர்வதேச
விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் ஊடக
சந்திப்பில் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:26:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் வாய்ப்பின்றி இருக்கும் சுமார் 1,800 சுதேச வைத்திய பட்டதாரிகள் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provide-employment-opportunities-graduates-1787122873"></link>
            <id>https://tamilwin.com/article/provide-employment-opportunities-graduates-1787122873</id>
            <summary type="text">சுதேச வைத்தியத்துறையை வலுப்படுத்துவதுடன், தொழில் வாய்ப்பின்றி இருக்கும்
சுமார் 1,800 சுதேச வைத்திய பட்டதாரிகளுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை
அரசாங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதேச வைத்தியத்துறையை வலுப்படுத்துவதுடன், தொழில் வாய்ப்பின்றி இருக்கும்
சுமார் 1,800 சுதேச வைத்திய பட்டதாரிகளுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை
அரசாங்கம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்
கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

எமது உள்நாட்டு வைத்தியத்துறை என்பது பாரம்பரிய அறிவையும் அனுபவத்தையும்
அடிப்படையாகக் கொண்ட முக்கியமான மருத்துவத் துறையாகும் என சுட்டிக்காட்டிய
அவர், இத்தகைய பாரம்பரிய மருத்துவ முறையை பாதுகாத்து, வளர்த்தெடுத்து,
எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வது அரசாங்கத்தின் தார்மிக பொறுப்பு
எனவும் தெரிவித்துள்ளார்.</p><h2>சுதேச வைத்தியர்களின் சேவை</h2><p>

ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி உள்ளிட்ட சுதேச மருத்துவ முறைகள்
தற்போதைய சூழலில் போதிய முக்கியத்துவம் பெறுகின்றனவா என்ற கேள்வி
எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

சுதேச மருத்துவத்துறை சார்ந்த பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளை நிறைவு செய்து,
உள்ளகப் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ள பல பட்டதாரிகள், தொழில்முறை
தகைமைகளை பெற்றிருந்த போதிலும், பல ஆண்டுகளாக தொழில் வாய்ப்பின்றி
காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

2019ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1,800 சுதேச வைத்தியர்கள் தொழில்
வாய்ப்பின்றி இருப்பதாகவும், சிலர் பட்டம் பெற்றும் சுமார் ஏழு ஆண்டுகளாக
தொழில் வாய்ப்பின்றி இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e8dcdcb-355a-44e8-a71a-b865c2b23d0a/26-6a8557cb223f9.webp' /></p><p>

பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளுக்கு சுதேச வைத்தியர்களின் சேவை
அத்தியாவசியமானதாக இருந்த போதிலும், கொள்கை வகுப்பாளர்களால் அவர்களது
பங்களிப்பு போதியளவில் உணரப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.</p><p>துறைசார் விசேட கல்வியை பெற்றுள்ள சுதேச வைத்தியர்கள், தங்களது தகைமைக்கு
பொருத்தமான வேறு தொழில்களை நாடிச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும்,
இதனால் அவர்கள் தொழில் மற்றும் மன அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;கல்விக்காக முதலீடு</h2><p>
அதேவேளை, நாட்டில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து
வரும் நிலையில், இத்தகைய நோய்களை கட்டுப்படுத்துவதிலும் மக்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்துவதிலும் சுதேச மருத்துவத்துறைக்கும் முக்கிய பங்களிப்பை
வழங்கக்கூடிய ஆற்றல் உள்ளதாகவும் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாகாண மட்டத்தில்
சுதேச மருத்துவ சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் போதுமான அளவில்
இல்லாதிருப்பது மற்றுமொரு முக்கிய குறைபாடாகும் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/823ac174-a658-41e2-9d2c-937fd427ec82/26-6a8557cbd13fa.webp' /></p><p>

ஏனைய மாகாணங்களில் சுதேச மருத்துவ வைத்தியசாலைகள் இயங்கி வரும் நிலையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வாறான வசதிகள் போதியளவில்
இல்லாதிருப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
ஊவா மாகாணத்திற்கான சுதேச மருத்துவ வைத்தியசாலை தியத்தலாவையில் இயங்கி வருவதாக
குறிப்பிடப்பட்டாலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்களின் தேவைக்கு ஏற்ப
சுதேச மருத்துவ சேவைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பல்கலைக்கழகங்களில் சுதேச மருத்துவத்துறைக்காக பெருமளவு அரச நிதி
செலவிடப்பட்டு பட்டதாரிகளை உருவாக்கிய பின்னர், அவர்களுக்கு தொழில்
வாய்ப்புகளை வழங்காமல் இருப்பது நாட்டின் மனித வளத்தையும் கல்விக்காக முதலீடு
செய்யப்பட்ட வளங்களையும் வீணடிப்பதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;பொருத்தமான தொழில் வாய்ப்பு</h2><p>

மேலும், நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை ஓரளவாவது நிவர்த்தி
செய்வதற்கு சுதேச வைத்தியர்களின் பங்களிப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும்
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலைத்தேய மருத்துவத்துறையில் கல்வி பயிலும் பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளில்
தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும்,
சுதேச மருத்துவப் பட்டதாரிகளுக்கு அவ்வாறான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும்
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இதன் காரணமாக, சுதேச மருத்துவத்துறையில் கல்வி பயின்ற பல பட்டதாரிகள் தங்களது
கல்வித் தகைமைக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பின்றி, மாற்றுத் துறைகளில் வேலை
தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44516b6c-7907-4ac2-bf6a-efe1dcc9338a/26-6a8557cc84deb.webp' /></p><p>
</p><p>
எனவே, சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு, துறைசார் தகைமை
பெற்றுள்ள சுதேச வைத்தியர்களுக்கு முறையான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து
சிறிநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

'வளத்தை காப்போம், வளமாக வாழ்வோம்' மற்றும் 'கிளீன் ஸ்ரீலங்கா' போன்ற தேசிய
வேலைத்திட்டங்களிலும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும்
சுதேச வைத்தியர்களின் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்கும், தொற்றா நோய்கள்
உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான மருத்துவ
சேவைகளை வழங்குவதற்கும் சுதேச மருத்துவத்துறையின் பங்களிப்பு அவசியமானது
என்பதை அரசாங்கம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக
உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:17:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாப்பிட மட்டும் வாய் திறக்கும் அரசாங்க தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மனோ கணேசன் விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mano-ganesan-statement-1787120410"></link>
            <id>https://tamilwin.com/article/mano-ganesan-statement-1787120410</id>
            <summary type="text">தமது அதிகாரத்தை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறுகிறதா? இன்னமும் தாம் எதிரணியில் இருப்பதாக ஜேவிபி நினைக்கிறதா? என்ற கேள்வியை எழுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமது அதிகாரத்தை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறுகிறதா? இன்னமும் தாம் எதிரணியில் இருப்பதாக ஜேவிபி நினைக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சமூக ஊடக பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்திடம் தான் அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தொடர்புள்ள எல்லோரையும், மாவட்ட செயலகத்தில் கூட்டி, சுகாதார அமைச்சர், ஒரே நாளில் முடிக்க வேண்டிய பிரச்சினை தான் இந்த, கல்முனை சீருடை பிரச்சினை!</p><h2>தற்காலிக தீர்வு</h2><p>

இதை செய்யாமல், தமிழ்
பேசும் தரப்புகள் சமூக தளங்களில் அடித்து கொண்டு நாறட்டும், சாகட்டும், என ஆகஸ்ட் 8ம் திகதி முதல் சுமார் 10 நாட்களாக, காலம் கடத்தி, விட்டு இப்போது "தற்காலிக தீர்வு" என்ற ஒன்றை அறிவித்து இருக்கிறது, அரசாங்கம். 
 
இந்த நடவடிக்கைக்கு கூட ஏன் இத்தனை தாமதம்?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f63f296-5ead-4903-bd79-8fc62125d25d/26-6a8556e830ea4.webp' /></p><p> </p><p>

இதற்குள் எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரை சந்தித்தது ஒரு புறம் இருக்க, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள், இது வரை?</p><h2>வெற்று சமத்துவ கோஷம்</h2><p> </p><p>

உண்மையில், அரசாங்க தமிழ், முஸ்லிம், கால் - அரை - முக்கால் - அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியே தத்தமது ஈழத்து - மலையக - முஸ்லிம் - தமிழ் மக்களிடம் சும்மா, சும்மா, வாய் சவடால் அடிக்கிறார்களே தவிர, உள்ளே "சாப்பிட" மட்டும் தான் வாய் திறக்கிறார்கள், என்ற உண்மையும், அரசாங்க அதிகார மையத்தின் பக்கத்தில் கூட, இவர்கள் எவருமே இல்லை என்ற நடப்பும், மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b24ca2d4-26af-4b79-97f5-459f7d2f589f/26-6a8556e8f0320.webp' /></p><p> 

இதற்குள், "நாம் இலங்கையர்" என்ற வெற்று சமத்துவ கோஷம் வேறு! எல்லோருக்கும் அதிகாரம் இருந்தால் தான் "சமத்துவம்"! இது தான் உண்மை!

நான் அமைச்சராக இருக்கும் போது, அடிக்கடி, நான் அமைச்சரவையில், எழுப்பிய கூச்சல், மேசையில் அடித்த அடி, போட்ட சண்டை, என்பன என் ஞாபகத்தில் வந்து போகின்றன என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5JHRVyP2ukw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:10:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட சோதனை நடவடிக்கை : சிக்கிய வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/28-vehicles-suspended-from-service-1787121398"></link>
            <id>https://tamilwin.com/article/28-vehicles-suspended-from-service-1787121398</id>
            <summary type="text">தலவாக்கலை பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்த 28 வாகனங்களைத் தற்காலிகமாகச் சேவையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்த 28 வாகனங்களைத் தற்காலிகமாகச் சேவையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டப் பிரதம மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய
பண்டார தெரிவித்துள்ளார்.</p><p>

குறித்த பகுதி வழியாகச் செல்லும் 40 பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் மற்றும் லொறிகள் வீதிப் போக்குவரத்திற்கு உகந்த நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, நுவரெலியா பொலிஸ் பிரிவின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளும் வாகனப் பரிசோதகர்களும் அவற்றில் அவசரகாலப் பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
</p><h2>ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை&nbsp;</h2><p>
பல்வேறு குறைபாடுகளுடன், வீதிப் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இயங்கிக்கொண்டிருந்த 28 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அந்த வாகனங்களின் வருமான&nbsp; வரிப்பத்திரங்கள் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் மோட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d894832-b981-44a1-8e69-960c88d5f9cf/26-6a8553a6d2af7.webp' /></p><p>

வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, ​​4 தனியார் பேருந்துகள் மற்றும் 15 மூன்று சக்கர வாகனங்கள் உட்பட 28 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாகவும்,
அந்த வாகனங்களில் கண்டறியப்பட்ட பல்வேறு குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மற்றொரு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை அவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:02:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெலிய ரம்புக்வெல்ல ஏன் கைது செய்யப்பட்டார்.. CIABOC ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/why-keheliya-rambukwella-arrested-ciaboc-reveals-1787118673"></link>
            <id>https://tamilwin.com/article/why-keheliya-rambukwella-arrested-ciaboc-reveals-1787118673</id>
            <summary type="text">ஊழல், ஊழலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல், ஊழலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டார் என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று(18) காலை சுமார் 11.30 மணி மற்றும் பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சியாபோக் தெரிவித்துள்ளது.</p><h2>இரு குற்றச்சாட்டுக்கள்</h2><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கெஹெலிய ரம்புக்வெல்ல, மீது இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.</p><p>

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதிக்கு அப்பாற்பட்டு ஆறு பணியாளர்களை நியமித்தது மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடக அமைச்சராகப் பணியாற்றியபோது அவர்களை சட்டவிரோதமாக அவரது அமைச்சரவைப் பணியாளர்களுடன் இணைக்க சதி செய்ததாகக் கூறப்படுவது ஒரு முதலாவது குற்றச்சாட்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67396a9b-24d0-43ab-adde-d37e6c3c2c93/26-6a8550467bd62.webp' /></p><p>
</p><p>
அமைச்சுப் பணியாளர் பிரிவு ஏற்கனவே நிரம்பியிருந்ததாகவும், கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடவடிக்கைகளால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 14.32 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><h2>கெஹெலிய ரம்புக்வெல்ல</h2><p>

குண்டசாலை உடமலுவ தொல்பொருள் தளத்திலிருந்து சந்தகடா பஹானா (நிலாக்கல்) என அறியப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் திருட்டு தொடர்பான விசாரணையில் தலையிட்டதாகக் கூறப்படுவது இரண்டாவது குற்றச்சாட்டாகும்.
</p><p>
கண்டி இராச்சியத்தின் சிங்கள வம்சத்தின் கடைசி மன்னராக அடையாளம் காணப்பட்ட ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்கனின் அரண்மனை நுழைவாயில் படிகளுக்கு அருகில் அந்த கலைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe23fe2f-fdf7-4f31-8016-ca534764a1bf/26-6a8550474ca8a.webp' /></p><p>
</p><p>
திருட்டு குறித்து முறையாக விசாரிக்க நடந்த முயற்சிகளில் கெஹெலிய ரம்புக்வெல்ல, தலையிட்டதன் மூலம், அவர் ஊழல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றம் சாட்டுகின்றது.</p><p>

கெஹெலிய ரம்புக்வெல்ல பின்னர் இரு வழக்குகளிலும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அவரைத் தலா ரூ. 500,000 மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.<br><br></p><p></p><hr><p>you may like this..<br><br><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2rFYnnkx7AQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><hr><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு மரண எண்ணிக்கை 69ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-death-toll-rises-to-69-1787117602"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-death-toll-rises-to-69-1787117602</id>
            <summary type="text">தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தகவல்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.அதே நேரத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தகவல்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.</p><p>அதே நேரத்தில் மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 92,854 ஆக உயர்ந்துள்ளது.
</p><h2>டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சி</h2><p>சமீபத்திய புள்ளிவிவரங்கள் டெங்கு இறப்பு விகிதத்தை 0.07வீதமாகக் காட்டுகின்றன என்றும், இது நுளம்புகளால் பரவும் இந்த நோயால் ஏற்படும் தொடர்ச்சியான சுகாதாரச் சுமையை எடுத்துக்காட்டுகிறது என்றும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48a35eb-faaa-4884-88d3-c835ef951d14/26-6a8547413f0b8.webp' /></p><p>

 

இந்த ஆண்டில் டெங்கு பாதிப்புகள் கணிசமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் 29,964 பாதிப்புகளும், அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 21,533 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. </p><p>ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 7,516 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.</p><p>

 

கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 19,778 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த பாதிப்புகளில் 21.30வீதம் ஆகும். </p><p>டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நாடு முழுவதும் அதிக அபாயம் உள்ள 96 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T06:13:47+00:00</updated>
        </entry>
    </feed>
