<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-20T22:39:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி போரில் ஈடுபடவில்லை..! இத்தாலி அரசு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-italian-government-war-1789933470"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-italian-government-war-1789933470</id>
            <summary type="text">செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என 
துணைப் பிரதமரும், வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சரும் அன்டோனியோ தஜான...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என 
துணைப் பிரதமரும், வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சரும் அன்டோனியோ தஜானி தெரிவித்துள்ளார்.</p><p>

இருப்பினும், அந்த முக்கிய கடல் வழியில் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்கும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் இத்தாலியப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாக வெளியான செய்திகள் மற்றும் இத்தாலியுடன் தாங்கள் போரில் ஈடுபடவில்லை என்ற ஹூதி
அமைப்பினரின் அறிக்கைகள் குறித்து இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய
நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.</p><h2> 


சவூதி அரேபியாவில் தாக்கப்பட்ட விமானம்</h2><p>சவூதி அரேபியாவிலுள்ள தாயிஃப் விமானப் படைத்தளத்தின் மீது ஹூதி
அமைப்பினர் நடத்திய தாக்குதலில், தரையிறக்கப்பட்டிருந்த இத்தாலியின் F-2000
(Eurofighter) ரகப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படும்
நிலையிலேயே வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70862ac1-3489-4f61-b9ba-ed509420575f/26-6ab037fd50f97.webp' /></p><p>
</p><p>
செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணை ஊடாகப் பயணிக்கும் வர்த்தகக்
கப்பல்களை ஹூதி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் “அஸ்பைட்ஸ்” பாதுகாப்புக் கடற்படை நடவடிக்கை உருவாக்கப்பட்டது.
</p><p>
இந்த நீரிணைப் பகுதியில் நிலைமை மோசமடைந்து வரும் பின்னணியில், இத்தாலி
தொடர்ந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர்,
இந்த திட்டத்தைப் புதுப்பித்து வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இத்தாலியின் ஒட்டுமொத்த கடல்சார் வர்த்தகப் போக்குவரத்தில் 40 சதவீதமானவையும்,
ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 60 சதவீதமானவையும்
செங்கடல் வழியாகவே கடந்து செல்வதால், இந்தப் பிராந்தியத்தில் தமது நாட்டிற்கு
பலமான மூலோபாய நலன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T22:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 நாட்களாகியும் இலங்கை திரும்பாத ஷிரந்தி ராஜபக்ச..! சிங்கப்பூர் சென்ற பெண் நாடு திரும்பியதால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-has-not-returned-to-sri-lanka-1789942632"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-has-not-returned-to-sri-lanka-1789942632</id>
            <summary type="text">சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷிரந்தி ராஜபக்ச செப்டம்பர் 19 ஆம் திகதி இலங்கை திரும்புவார் என்று முன்னர் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷிரந்தி ராஜபக்ச செப்டம்பர் 19 ஆம் திகதி இலங்கை திரும்புவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் இதுவரை நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த தகவலை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார். </p><h2>

தலைமறைவான ஷிரந்தி</h2><p>

செப்டம்பர் 16 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்சவுடன் சிங்கப்பூருக்குச் சென்றிருந்த பெண் உறவினர் ஒருவர் நேற்று இரவு இலங்கை திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>

ஷிரந்தி ராஜபக்ச ஏன் திரும்பவில்லை என்பது குறித்தோ அல்லது அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ எந்தவொரு தகவலையும் வெளியிட அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை என்று மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03403a5c-27c7-4c31-90aa-9e497898f0d6/26-6ab05ba2a5d2c.webp' /></p><p> </p><p>

இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி ராஜபக்ச, மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக செப்டம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றதாக கமகே முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
</p><p>
தனது தலைமையின் கீழ் இயங்கிய “சிரிலிய சவிய” (Siriliya Saviya) அமைப்பின் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 24 ஆம் திகதி நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் (FCID) முன்னிலையில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T22:18:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்காக அம்பாறையில் திரண்ட மக்கள் - இளைஞரின் உயிரை காப்பாற்றுமா அநுர அரசு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-gathered-in-ampara-for-anojan-1789934320"></link>
            <id>https://tamilwin.com/article/people-gathered-in-ampara-for-anojan-1789934320</id>
            <summary type="text">&amp;nbsp;சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை,
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு விடுவிக்க உரிய
இராஜதந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை,
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு விடுவிக்க உரிய
இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில்
கையெழுத்து சேகரிப்பும், கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, நேற்று(20.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><h2>

அனோஜனுக்காக திரண்ட மக்கள்</h2><p>சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5
வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும்
விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில் இத் தண்டனை மரண
தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினருக்குத் தகவல்
கிடைத்துள்ளது. </p><p>

எனினும், இது தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு
இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1f65fad-1dda-4675-a9ca-d8a88f98c3b0/26-6ab03b79edb87.webp' /></p><p>

இந்த பின்னணியில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு
அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி இக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>




இன, மத வேறுபாடின்றி மக்கள் ஆதரவு</h2><p>
“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற
தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் இன, மத, மொழி
வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உட்படப் பெருந்திரளான தமிழ்,
முஸ்லிம் பொதுமக்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b1ea29-2ab5-4ba7-a933-1dc17a5f9b89/26-6ab03b7b18eac.webp' /></p><p>
</p><p>
இலங்கை வெளிவிவகார அமைச்சு, சவூதி அரேபியாவில் உள்ள அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில்
தொடர்புகளை ஏற்படுத்தி, அனோஜனின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக நாடளாவிய ரீதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம்
அரசியல்வாதிகள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இலங்கையராக ஒன்றிணைந்து
பல்வேறு மனிதாபிமான முன்னெடுப்புகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/424def38-ed1a-4b55-bd04-db9b4c8cfbae/26-6ab03b7bea057.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acb14a41-5ca5-4ff4-a1b6-3482a4f39c0e/26-6ab03b7d01665.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe014708-34eb-488b-99fd-4b8cbcb01286/26-6ab03b7dcf3ca.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T21:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை விடுதலை செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் மெழுகுவர்த்திப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-updates-tamil-1789909411"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-updates-tamil-1789909411</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்த போராட்டமானது, நேற்று(20.09.2026) திருகோணமலை - கடற்கரை பகுதியில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பின்னால் இடம்பெற்றுள்ளது. </p><p>




திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள்
மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுன் சிவராசா அனோஜனுக்கு
மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4caafbe-0e84-4f1d-b775-23f997f347f2/26-6ab034b771121.webp' /></p><p>
</p><p>
இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட்டு, சவூதி அரேபிய அரசாங்கத்துடன்
உரிய ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சிவராசா அனோஜனின்
உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள்
வலியுறுத்தினர்.
</p><p>
இந்த கவனயீர்ப்பில் சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும்
வகையிலும், அவரின் விடுதலைக்காக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும்
இளைஞர்கள் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5990e4a-bfb1-4a53-8d65-eba72db7ecdc/26-6ab034b8673b3.webp' /></p><p><b><i>மேலதிக தகவல் - ரொசான்</i></b></p><h2>யாழ்ப்பாணம்&nbsp;</h2><p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி, நாளை (21) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்திப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NaZHCffaXtk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மெழுகுவர்த்திப் போராட்டம்</h2><p>
</p><p>
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77821797-d74f-424a-a7e0-180eefb09cd2/26-6aafdc1030ec4.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் இந்த மெழுகுவர்த்திப் போராட்டத்தில் கலந்துகொண்டு அனோஜனுக்கான ஆதரவை வெளிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6e5fdd-e0dc-45fa-bbb7-389dc45e56d6/26-6aafdc1106713.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T20:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் பெற்றமைக்காகவே நாமல் ராஜபக்ச கைது..! அரசு மீதான விமர்சனங்களுக்கு சுசில் ரணசிங்க பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/susil-back-at-criticisms-of-the-government-1789935383"></link>
            <id>https://tamilwin.com/article/susil-back-at-criticisms-of-the-government-1789935383</id>
            <summary type="text">இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய
அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு
விளக்கமறியலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய
அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எவ்வாறு அரசியல் பழிவாங்கலாக குறிப்பிட முடியும் என வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க கேள்வி
எழுப்பியுள்ளார்.
</p><p>

பொலன்னறுவையில் நேற்று(20.09.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 


எயார்பஸ் கொள்வனவு விவகாரம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ஷ
இலஞ்சம் பெற்றார் என்று நல்லாட்சி அரசின் காலத்தில்தான் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டது. எனினும், அன்றைய ஆட்சியாளர்கள் அது குறித்து எவ்வித
நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2551312-b68f-4ad9-bf38-58f52015cbf0/26-6ab03f4a48147.webp' /></p><p>
</p><p>
தற்போது அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு
விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இதனை
ரணில் தரப்பினரும் சஜித் தரப்பினரும் அரசியல் பழிவாங்கல் எனக் கூறுவதில் எந்த
நியாயமும் இல்லை.
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான தனது வியாக்கியானத் தீர்வை
உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளது. 

இந்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
</p><p>
இந்தத் திருத்தம் மீதான இரு நாள் விவாதமும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில்
நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே 22ஆவது
திருத்தத்தை நிறைவேற்றுவோம் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T20:17:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா தொற்று - சுகாதாரத் தொழிலாளர்களை இலக்கு வைத்து புதிய தீட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-intensifies-in-congo-1789932157"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-intensifies-in-congo-1789932157</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்குள்ள சுகாதாரத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்குள்ள சுகாதாரத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கை நேற்றுமுன் தினம்(19.09.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

தடுப்பூசி வழங்கும் திட்டம்</h2><p>

வடகிழக்கு கொங்கோவின் இதுரி மாகாணத்தின் தலைநகரான புனியாவில் இந்தத் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் கெபி கசோங்கோ முலும்பா தெரிவித்துள்ளார்.</p><p>

எபோலா தொற்றைக் கட்டுப்படுத்தும் களப்பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதாரத்
தொழிலாளர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்வதால் அவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2eda280-342e-478c-afbe-b75a2f9abb01/26-6ab0330a9280d.webp' /></p><p>
</p><p>
உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் எல்லையற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF)
ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ், சுமார் 50,000
முன்னணிச் சுகாதாரப் பணியாளர்களுக்கு “எர்வேபோ” தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.</p><h2>


3 ஆயிரம் பேர் உயிரிழப்பு</h2><p>
தற்போது பரவி வரும் “புண்டிக்புயோ” வகை எபோலா வைரஸுக்கு எதிராகப்
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில்,
பொதுவான ஜைர் எபோலா வைரஸைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் எர்வேபோ
தடுப்பூசி, பரிசோதனை அடிப்படையில் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95672997-dcdb-41ed-9427-7621206eac81/26-6ab0330b659a1.webp' /></p><p>

இதன் செயல்திறன் குறித்து சுமார் 20,000 பேரிடம் ஓராண்டு காலம்
கண்காணிக்கப்படவுள்ளன.
</p><p>
கடந்த மே மாதம் முதல் பரவத் தொடங்கிய இந்த எபோலா தொற்றினால் இதுவரை 7,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தது 3,639 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

மேலும் 1,823 பேர் வரை சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளதாக உள்ளூர்
அதிகாரிகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T20:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் பூர்வீக காணிகளில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி - வனஜீவராசிகள் திணைக்களம் மீது புதிய குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-allegation-against-the-department-of-wildlife-1789931232"></link>
            <id>https://tamilwin.com/article/new-allegation-against-the-department-of-wildlife-1789931232</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் வயல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பரம்பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் வயல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பரம்பரையாக வாழ்ந்து வரும் மக்களை அவர்களுடைய காணிகளில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து மக்கள் வாழ்ந்து வருவதுடன், அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><h2>
காணி உரிமத்துடன் போராடும் மக்கள்</h2><p>
அதற்கான காணி ஆவணங்களையும் அப்பகுதி மக்கள் தம்வசம் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள் 1991ஆம் ஆண்டில் ஆனையிறவில் முன்னெடுக்கப்பட்ட ஆகாயக் கடல் வழி இராணுவ நடவடிக்கை காரணமாக முற்றுமுழுதாக இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/249b1ff4-f092-4e00-9ff6-7033ead813d1/26-6ab02f349d270.webp' /></p><p>
</p><p>
சுமார் 35 வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அப்பகுதிகளில் மக்கள் குடியேறியுள்ளனர்.

தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
மக்களை அச்சுறுத்தும் திணைக்கள அதிகாரிகள்</h2><p>
தலைமுறை தலைமுறையாக பூர்வீகமாக வாழ்ந்த இந்த நிலங்களில் இருந்து இவர்களை வெளியேற்றும் நோக்கில் குறித்த அதிகாரிகள் தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69d334eb-d1ff-4016-af02-d5975a33f2a6/26-6ab02f359757e.webp' /></p><p>
</p><p>
நேற்றுமுன்தினம் (19) குறித்த பகுதிக்கு சிவில் உடையில் சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அந்தக் காணிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறும் அச்சுறுத்தியுள்ளனர்.</p><p>

அவர்கள் குறித்த மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரை மணி நேரம் அநுர மனோவுடன் கதைத்தது என்ன..! அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176"></link>
            <id>https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176</id>
            <summary type="text">அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
அநுர குமார திஸாநாயக்கவுடன் வழக்கமாக அரை மணி நேரம் உரையாடுவது வழக்கம். அனோஜனின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்துள்ளேன்.
</p><p>
விரைவில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அவரது தண்டனையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினேன்.</p><p>

ஊழல்வாதிகளை அநுர அரசாங்கம் தேடித் தேடி கைது செய்வது பாராட்டுக்குரியது. என்றாலும், அநுர அரசாங்கத்திலும் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BhMshQ0voX8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசி டயானா நினைவு தினம் நெருங்கும் நிலையில் மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான சர்ச்சை பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-post-regarding-king-charles-1789930243"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-post-regarding-king-charles-1789930243</id>
            <summary type="text">இளவரசி டயானாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடர்பில் சர்ச்சைக்குரிய செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளவரசி டயானாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடர்பில் சர்ச்சைக்குரிய செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
</p><p>
இந்த தகவலை, இளவரசி டயானாவின் தம்பியான சார்லஸ் ஸ்பென்சர் எழுதிய "ஸ்வான் சாங்: டயானா, மை சிஸ்டர்" என்ற புதிய புத்தகத்தில் உள்ள பல குறிப்புகளை அடிப்படையாக கொண்டு கண்டறியப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம்(19.09.2026) இங்கிலாந்து நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கமைய, இந்தப் புத்தகம் நாளைய தினம்(22.09.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


27 வயதில் வாரிசாக்கப்பட்ட ஸ்பென்சர்</h2><p>


ஏப்ரல் 1992ஆம் ஆண்டு நார்தாம்ப்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில், ஸ்பென்சர் மற்றும் இளவரசி டயானாவின் தந்தையின் இறுதிச் சடங்கின் போது, இந்த உணர்வற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p> 

அப்போது, 27 வயதான ஸ்பென்சர், தனது தந்தையின் உடல் தேவாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டபோது அழுது கொண்டிருந்தார். அந்த சமயத்தில், இளவரசர் சார்லஸ், "நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி" என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42008fce-a2c8-4509-863c-345534e2421b/26-6ab02b8ebb9d6.webp' /></p><p> </p><p>

ஸ்பென்சர் மீண்டும் அவரிடம் கேட்டபோது,“ ​​இவ்வளவு இளம் வயதில் பிரபு என்ற பட்டமும், அதனுடன் வரும் 13,000 ஏக்கர் (52.61 சதுர கிலோமீட்டர்) நிலமும் சொத்துக்களும் வழங்கப்பட்டது ஒரு பெரும் பாக்கியம்” என்று சார்லஸ் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p> 

இதன்போது, இளவரசர் சார்லஸ் ஒரு பிடிவாதமான குழந்தையைப் போன்று, தன்னுடைய கால்களைத் தரையில் தட்டி நடந்து சென்றதாகவும் ஸ்பென்சர் கூறுகிறார்.</p><h2>

 73 வயதில் அரியணை ஏறிய மன்னர் சார்லஸ்</h2><p>
அந்த காலத்தில், தனக்கு 43 வயதாகியும், தனக்குக் கீழ் 50 பேர் பணிபுரிந்தும் வந்தபோதிலும், தனது பெற்றோர் தன்னை ஒரு குழந்தையைப் போலவே நடத்துவதாக இளவரசர் சார்லஸ் முரண்பட்டதாகவும் கூறியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b7ba603-c8b3-4ac9-aead-0467991f907c/26-6ab02b8f71974.webp' /></p><p>
</p><p>
 இரண்டாம் எலிசபெத் மகாராணி 96 வயது வரை ஆட்சி செய்தார், மேலும் மன்னர் சார்லஸ் 2022 செப்டம்பரில் தனது 73 வயதில் பிரிட்டிஷ் அரியணை ஏறினார், இதன் மூலம் அரியணை ஏறிய மிக வயதான பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர் என்றும் அடையாளப்படுத்தபட்டார்.
</p><p>
1997ஆம் ஆண்டு, இளவரசி டயானாவின் மரணத்திற்கு பின்னர், நடந்த மற்றொரு சர்ச்சைக்குரிய சம்பவமும் முன்னர் வெளியிடப்பட்ட பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522"></link>
            <id>https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522</id>
            <summary type="text">கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்&nbsp;</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிரேன்ட்பாஸ், கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/297e803a-1910-4394-9a0a-3c5af0b52e15/26-6aafbcfa51686.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 39 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,&nbsp; குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T18:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஞானசார தேரரின் புதிய நூல் வெளியீடு - நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/launch-of-gnanasara-thero-s-new-book-1789928647"></link>
            <id>https://tamilwin.com/article/launch-of-gnanasara-thero-s-new-book-1789928647</id>
            <summary type="text">பல்தரப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் எழுதிய நூல் ஒன்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்தரப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் எழுதிய நூல் ஒன்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிகழ்வு நேற்று(20.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக இஸ்லாம் மதத்தின் மீது கடுமையான நிந்தனைகளை முன்வைத்து வரும் ஞானசார தேரருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தன.
</p><p>
இஸ்லாம் மதத்திற்கோ வேறு மதங்களுக்கோ எந்தவித நிந்தனையும் செய்யக்கூடாது என்பது குறித்த உத்தரவுகளின் சாராம்சமாகும்.

அவ்வாறான நிலையிலும், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அவர் இஸ்லாமியர் மற்றும் கத்தோலிக்கர்களை பிரதானமாக இலக்கு வைத்து கடுமையான மத நிந்தனைகளை மேற்கொண்டிருந்தார்.</p><h2>

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு</h2><p>
இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனை, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலையீட்டின் கீழ் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு மூலம் எட்டே மாதங்களில் நிறைவுற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01cb7001-849f-48e4-8d55-4203c8086338/26-6ab0252d6c26c.webp' /></p><p>

அதற்கு எதிராக சந்தியா எக்னெலிகொட தொடுத்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் காரணமாக ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், அவரது தண்டனையின் எஞ்சிய காலத்துக்கு சிறைவாசம் அனுபவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலும் ஞானசார தேர்ர் இன்றும் வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று(20) நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, சன்ன ஜயசுமண மற்றும் ஏராளமான தேரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cc91bf5-f567-438b-bbf3-87e821f7f7aa/26-6ab0252e4f598.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a9d380-4033-4882-a276-54cc4e88a684/26-6ab0252f26f9d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T18:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 இலட்சம் ரூபாய் வரை விற்பனையான போலிச் சான்றிதழ்..! 200 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-certificate-printing-press-operating-gampaha-1789924317"></link>
            <id>https://tamilwin.com/article/fake-certificate-printing-press-operating-gampaha-1789924317</id>
            <summary type="text">கம்பஹா - இம்புல்கொட, ராஜசிங்க பகுதியில் வாடகை வீட்டில் இயங்கி வந்த போலி பட்டச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரைகளைத் தயாரிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - இம்புல்கொட, ராஜசிங்க பகுதியில் வாடகை வீட்டில் இயங்கி வந்த போலி பட்டச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரைகளைத் தயாரிக்கும் ஒரு பெரிய அச்சகம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
27 வயது நபர் கைது</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது அம்பாந்தோட்டை - தங்கல்லை பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் முத்திரைகள்&nbsp;</h2><p>

இந்த கும்பல், மாதம் ரூ. 35,000க்கு வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளது. 

சுற்றிவளைப்பின் போது, 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட்போன்கள், ஒரு வண்ண அச்சுப்பொறி, 35 போலிச் சான்றிதழ்கள், நிறுவனத் தலைவர்களின் 51 அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் 3 புடைப்பு முத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e8975f-d803-4244-a797-783672988e4e/26-6ab01463abfe8.webp' /></p><p> 

பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களின் அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் கடிதத் தலைப்புகள் இந்த இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இவற்றில் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம், இலங்கைத் தேர்வுகள் திணைக்களம், ஒரு தனியார் வங்கி மற்றும் பேராதெனிய, ஸ்ரீ ஜெயவர்தனபுர, களனி, மொரட்டுவ, ருஹுனு, ராஜரட்ட, வயம்ப, ஊவ வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><h2>
4 இலட்சம் வரை விலைப்போன போலிச் சான்றிதழ்</h2><p>

இந்த மோசடி சுமார் ஒரு வருடமாக இடம்பெற்று வந்த நிலையில், சந்தேக நபர் சாதாரண சான்றிதழ்களை ரூ. 25,000 முதல் 50,000 வரையிலான விலையில் விற்பனை செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a97874a4-c17e-462c-879b-ea1397c37acc/26-6ab0146480218.webp' /></p><p> </p><p>

இருப்பினும், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குத் தேவையான கள்ளச் சான்றிதழ்கள் ரூ.400,000 விலைக்குத் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p>

இவ்வாறு தயாரிக்கப்பட்ட கள்ள ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 200பேர் வெளிநாடு சென்றுள்ளதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். யக்கல பொலிஸார், இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன், விசாரணைகள் நிறைவில், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NaZHCffaXtk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T18:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் அத்துமீறி கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் - உடனடி நடவடிக்கை கோரி மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-keerimalai-1789922276"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-keerimalai-1789922276</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழையிலும் அப்பகுதி மக்களால் போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழையிலும் அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(20.09.2026) கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.</p><p> 

 வலி. வடக்கின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச
சபையின் இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள்
உள்ளிட்ட சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.</p><p>

அவற்றினை மீள அள்ள வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள்
தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.
</p><h2>
மருத்துவ கழிவுகள்</h2><p>
இதேவேளை, தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொட்டப்பட்ட
கழிவுகள் மாத இறுதிக்குள் மீள அள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, அது
தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச.
சிறிபவானந்தராசா, வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e0fd4a-83b5-43c6-ba2d-fb84b3a14173/26-6ab00c52009f5.webp' /></p><p>
</p><p>
அத்துடன், உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சனும் கழிவுகளை மீள அள்ள வேண்டும் என
பணித்துள்ளார்.</p><p>

இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை புற்றுநோய்
வைத்தியசாலையின் மருந்தேற்றும் ஊசிகள், இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்ட
ஆபத்தான மருத்துவ கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.
</p><p>
இதுபோன்ற கழிவுகள் அப்பகுதி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், குப்கைகளை அகற்றும் நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21d4807-c140-42d9-9cb2-c7c369b2561a/26-6ab00c5302a9e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d8ab59b-a6e1-4b2b-b7f5-8a45001edd6e/26-6ab00c53d65f0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eacd8e0-93fd-4bea-a2cc-4eb94178f534/26-6ab00c54b6c8d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
