<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-14T10:20:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-faces-serious-risk-of-sanctions-1786676889"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-faces-serious-risk-of-sanctions-1786676889</id>
            <summary type="text">சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. </p><h2><b>

விமான போக்குவரத்துகள் </b></h2><p>“ICAO அல்லது ICAO, எனப்படும் சிவில் விமான சேவையின் அதாவது Civil Aviation Organization எனப்படும் அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80ad9b28-1b51-41cb-b8eb-9bc93889fcb1/26-6a7e88824e23c.webp' /></p><p>அது ஸ்தாபிக்கப்படுவது உலகத்தில் விமானப் போக்குவரத்துகள் வளர்ச்சியடையும் போது, அதில் உள்ள அதிகார பலத்தை ஓரிடத்திற்கு மையப்படுத்தி, அதன் நிபந்தனைகளுக்கு இணங்க உலகின் அனைத்து விமானங்களையும் கையாளுவதே அதன் எதிர்பார்ப்பாகும்.
</p><p>
எனவே, நாமும் அதில் ஓர் உறுப்பு நாடாக இருக்கின்றோம். நாமும் அதன் சட்டதிட்டங்களுக்கு இணங்க செயற்பட வேண்டும். இந்த தணிக்கை உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றது. </p><p>

ஒவ்வொரு நாட்டிலும் இது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற அந்தந்த நாட்டின் சிவில் விமான சேவை குறித்த பிரமாணங்களுடன் இருக்கின்றதா, அது சட்டப்பூர்வமாக பேணப்படுகின்றதா என்பது குறித்து ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் பரிசோதனையொன்றை, தணிக்கையொன்றை நடத்துகிறார்கள். </p><h3><b>

ஸ்ரீலங்கன் விமான சேவை</b></h3><p>அடுத்த ஆண்டிற்கான தணிக்கையின் முதற்கட்டப் பணிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவையும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதில் சில முறைக்கேடுகள் கண்டறியப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9b7548-89cf-4ce6-bd78-da23d7773a4c/26-6a7e89306314c.webp' /></p><p>மேலும் தணிக்கை சோதனையில் ஸ்ரீலங்கன் விமான சேவை தோல்வியடைந்துள்ளது. </p><p>இந்த நிலையிலேயே சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T10:03:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மெகசின் சிறைச்சாலை தாக்குதல்: சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் நபர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-prisoners-in-magazine-prison-1786697758"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-prisoners-in-magazine-prison-1786697758</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தாக்குதல் இடம்பெற்ற அன்று முதலில் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சம்பவத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தாக்குதல் இடம்பெற்ற அன்று முதலில் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சம்பவத்தில் நேரில் பார்த்ததாக கூறப்படும் நபரொருவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஒகஸ்ட் 6ஆம் திகதி இரவு கைதிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும்&nbsp;நவோத் தில்ஷான் என்ற நபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>குறித்த நபர் சம்பவம் இடம்பெற்ற போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>கடுமையான தாக்குதல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றைய தினம் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரவு 10 மணியளவில் பெருமளவிலான சிறைச்சாலை அதிகாரிகள் பூட்டப்பட்டிருந்த சிறைக் கதவுகளைப் பலவந்தமாக உடைத்து உள்ளே நுழைந்து, கைதிகளின் பெயர்களை அழைத்து, இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6fe167-b32e-44b9-bcb3-20611bcfd1e7/26-6a7ee5d6aafe2.webp' /></p><p>
</p><p>பின்னர், அவர்கள் உட்பட மேலும் பல கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கேயும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, வான் மூலம் சிறைச்சாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.</p><h2>வைத்தியசாலைக்குள்ளும் தாக்குதல்</h2><p>எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், காயமடைந்த ஏனைய கைதிகளின் இரத்தத்தை உடலில் பூசிக் கொண்டு, இறந்தது போல் நடித்தேன். இதன் காரணத்தினாலேயே நான் மேலும் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தப்பினேன்.</p><p>சிறைச்சாலை வைத்தியசாலைக்குள்ளும் இத்தாக்குதல்கள் தொடர்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூரமாக தாக்கப்பட்டு நடுவீதியில் கைவிடப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/surgery-for-4-year-old-girl-found-missing-1786699208"></link>
            <id>https://tamilwin.com/article/surgery-for-4-year-old-girl-found-missing-1786699208</id>
            <summary type="text">கண்டி - வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில் தாயினால் வீதியில் கைவிடப்பட்டு சென்ற 4 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில் தாயினால் வீதியில் கைவிடப்பட்டு சென்ற 4 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.</p><p>

நேற்று காலை (13) சுமார் 07.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த தாய் ஒருவர் குழந்தையை நடுவீதியில் இறக்கிவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்றிருந்தார்.</p><p></p><h2>சிறுமிக்கு அறுவை சிகிச்சை</h2><p>

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் அவசர எண்ணுக்கு அழைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e7ddf61-1f00-4199-a0d2-233c4bd266bb/26-6a7ee4d43f5c8.webp' />&nbsp;</p><p>
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய தாய் தப்பிச்செல்லும் காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. </p><p>

இதனையடுத்து சிறுமியின் தாயையும் அவரது காதலர் என அடையாளம் காணப்பட்ட நபரையும் இன்று (14) பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

இந்நிலையில்,கொடூரமாக தாக்கப்பட்டிருந்த சிறுமி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். </p><p>

சிறுமி மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:50:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்ட சொத்துக்கள் : தொட்டலங்க பொடிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-lord-who-earned-crores-from-drug-trafficking-1786697465"></link>
            <id>https://tamilwin.com/article/drug-lord-who-earned-crores-from-drug-trafficking-1786697465</id>
            <summary type="text">ஹெரோயின் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தொட்டலங்க பொடியை, 17ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தொட்டலங்க பொடியை, 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டது.</p><p> 

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது. </p><h2>17ஆம் திகதி வரை விளக்கமறியல்</h2><p>

14 ஆண்டுகளாக ஹெரோயின் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக 8.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைக் குவித்ததற்காக இந்த சந்தேக நபர் நேற்று (13) கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.</p><p> 

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4458f501-3f09-468b-9d2e-0d32d7bd3c36/26-6a7ee1b91077b.webp' /></p><p>கொழும்புக்கு அருகில் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட மூன்று வீடுகள், மூன்று கடைகள் மற்றும் ஆறு வங்கிக் கணக்குகளைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது முடக்கிச் செயலிழக்கச் செய்துள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், சந்தேக நபரை 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுத்துறை அதிகாரிகள் போர்வையில் சென்ற மர்ம நபர்கள் - ஏழாவது தடவையாக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/undercover-intelligence-officers-1786699093"></link>
            <id>https://tamilwin.com/article/undercover-intelligence-officers-1786699093</id>
            <summary type="text">தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரின் வீட்டிற்கு சில மர்ம நபர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் எனக் கூறிச் சென்று அச்சுறுத்தல் விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரின் வீட்டிற்கு சில மர்ம நபர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் எனக் கூறிச் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>


இந்த சம்பவம் தொடர்பில், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

புலனாய்வுத்துறை அதிகாரிகள் போர்வையில்..</h2><p>
குறித்த முறைப்பாடு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட
அமைப்பாளர் எஸ்.தவபாலன் கருத்து தெரிவிக்கையில்,</p><p>

நான் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும், அது தொடர்பான அறிக்கை
சமர்ப்பிக்குமாறு தமக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கோரப்பட்டதாகக் கூறி, நான்
இல்லாத நேரத்தில் என் வீட்டிற்குச் சென்று எனது மனைவியிடம் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எனக் கூறி மூன்று மர்ம நபர்கள் தகவல்களை பெற்றுச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a60725e1-e1dc-4759-b897-487275420dc3/26-6a7ee013aded3.webp' /></p><p>
</p><p>
அவ்வாறு வீட்டிற்கு வந்தவர்கள் முச்சக்கரவண்டியில் வந்ததாக கூறப்படுகின்றது.
</p><h2>

ஏழாவது தடவையாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
இந்த அச்சுறுத்தலுக்காக முறைப்பாடை பதிவு செய்ய கனகராயன் குளம் பொலிஸ் நிலையம்
சென்ற போது, அங்கு எனது முறைப்பாட்டை பதிவு செய்ய முடியாது என பொலிஸார் மறுப்பு தெரிவித்தனர்.



 நீண்ட விவாதத்தின் மத்தியில் எனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளேன். </p><p>கடந்த 2011க்குப் பின்னர் ஏழாவது தடவையாக இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்கிறேன்.</p><p>


அச்சுறுத்தல்களாலும் எங்கள் பயணத்தை தடுக்க முடியாது. அநுர அரசுக்கும் மற்றைய
அரசுகளுக்கும் தமிழின அடக்கு முறையில் வித்தியாசம் இல்லை என்பதே இந்த சம்பவம் உணர்த்துகின்றது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவோடு இரவாக திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் அத்துமீறிய அரச அதிகாரிகள்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thirukthiswaram-temple-antiquities-sathiyalingam-1786697497"></link>
            <id>https://tamilwin.com/article/thirukthiswaram-temple-antiquities-sathiyalingam-1786697497</id>
            <summary type="text">மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக, தொல்பொருட்திணைக்களம்&amp;nbsp;அத்துமீறல்&amp;nbsp;முயற்சி மேற்கொண்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக, தொல்பொருட்திணைக்களம்&nbsp;அத்துமீறல்&nbsp;முயற்சி மேற்கொண்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p>நேற்றைய தினம் (13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது இது தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>இதன்போது அவர், "திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருட்திணைக்களம் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் இரவு நேரத்தில் 'இது தொல்பொருட்திணைக்களத்திற்குரிய இடம்' என்று பெயர்ப்பலகை நாட்டியுள்ளது.</p><p>
அந்த பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் ஒரு அபிவிருத்தியும் மேற்கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>மறைக்கப்படும் வரலாறு..&nbsp;</h2><p> </p><p>இதனை எவ்வாறு இரவு நேரத்தில் செய்ய முடியும். இந்த ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமாகும். ஆலயச்சூழல் தொல்பொருளுடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/009e4018-7464-467f-9e6a-43a2914b2a3a/26-6a7edb993bf6b.webp' /></p><p>ஆனால், ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைப்பதாக உள்ளன.&nbsp;</p><p>
குறித்த ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படாமல் முற்றிலுமாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியுமா என கேட்க விரும்புகிறேன். </p><p>ஏற்கனவே அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்த இடங்களில் சில பதாகைகள் தொல்பொருட்திணைக்களத்தால் நாட்டப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாகவே இவை தற்போது யாருக்கும் அறியப்படுத்தப்படாமல் நாட்டப்பட்டுள்ளன.
</p><p>
ஆகவே, இந்த விடயத்தினை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரை கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் பகுதிகளில் வெடிக்கும் தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/goverment-against-protest-today-1786696420"></link>
            <id>https://tamilwin.com/article/goverment-against-protest-today-1786696420</id>
            <summary type="text"> இலங்கையின் வடக்கு கிழக்கில் அரச தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை, அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என சம...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலங்கையின் வடக்கு கிழக்கில் அரச தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை, அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ
தெரிவித்துள்ளார்.</p><p>மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (14.08.2026) காலை இடம்பெற்ற போராட்டத்தில்
கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>

தமிழர் பகுதிகளில் வெடிக்கும் போராட்டம்</h2><p>
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், </p><p>நீண்ட காலமாக மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவணை மக்கள் தங்களுடைய
மேய்ச்சல் தரைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கடந்த வெள்ளிக்கிழமை மன்னாரில்
முன்னெடுக்கப்பட்டது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c861753-5b35-4919-acd6-4928e745b29f/26-6a7ee4422f922.webp' /></p><p>அதே போன்று வலிவடக்கு யாழ்ப்பாணத்திலும் தங்களுடைய காணிக்காக போராடிக்
கொண்டிருக்கின்ற மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று
மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்டது.

​</p><p>இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த காணிக்காக. அவர்களுடைய போராட்டத்தினுடைய நியாயத்தன்மைக்கும், அவர்களுடைய
நீதியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
</p><h2>
காணி சுவீகரிப்பு</h2><p>ஆகவே, இந்த போராட்டமானது தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்ற எங்களுடைய
மட்டக்களப்பு மக்களாக இருக்கலாம், மயிலத்தமடு மாதவணை மக்களாக இருக்கலாம்,
வலிவடக்கு யாழ்ப்பாண மக்களாக இருக்கலாம், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களாக
இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37e13e78-9120-4b3c-8f44-4c51e33612d1/26-6a7ee442f2d6a.webp' /></p><p>
</p><p>
இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக காணி இழந்த மக்கள்
தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.</p><p>

இலங்கையின் வடக்கு கிழக்கில் அரச தரப்பினரால் கையகப் படுத்தப்பட்டு இருக்கின்ற
மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என்றார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T08:46:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசியலில் பேசுபொருளாகியுள்ள 22ஆவது சட்டமூல திருத்தம்.. நீதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-harshana-nanayakkara-1786694076"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-harshana-nanayakkara-1786694076</id>
            <summary type="text">இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான விதிகளை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலம், ஒகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான விதிகளை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலம், ஒகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பிலான அறிவிப்பை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார இன்று வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>நீதித்துறை திருத்த சட்டமூலமூம் அதே நாளில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை நீதி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு, தொடக்கத்திலிருந்தே மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் உட்பட பலரிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்தது.</p><h2>தொடர் எதிர்ப்பு&nbsp;</h2><p>

இந்த எதிர்ப்புகளையும் மீறி, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f763cd0a-2b8e-49d5-a18f-59c991da4c2f/26-6a7ed12495d13.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், முன்மொழியப்பட்ட திருத்தத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தி வருகிறார்.&nbsp;</p><p>சட்டத்தரணிகள் சங்க தலைவர் மற்றும் பிற பிரதிநிதிகளுடனான அண்மைய சந்திப்பின்போதும் அவர் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.&nbsp;</p><p>
இந்தப் பின்னணியில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலமூம், நீதித்துறை திருத்த சட்டமூலமூம் ஒகஸ்ட் 18ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஹர்ஷன நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>
அரசியலமைப்பின்படி, ஒரு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன், அதனை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர 14 நாட்கள் அவகாசம் உள்ளது.</p><p>

உயர் நீதிமன்றம் அத்தகைய மனுக்களை விசாரித்து, மூன்று முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்ப்பை நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T08:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/girl-assaulted-left-on-street-mother-arrested-1786692716"></link>
            <id>https://tamilwin.com/article/girl-assaulted-left-on-street-mother-arrested-1786692716</id>
            <summary type="text">கண்டி - வத்தேகம நகரில்,&amp;nbsp;சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.&amp;nbsp;இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - வத்தேகம நகரில்,&nbsp;சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.&nbsp;</p><p>இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் அவரது தாய் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>சிசிடிவி காட்சி&nbsp;</h2><p> </p><p>

</p><p>நான்கு வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் அழைத்து செல்லப்பட்டு நடுவீதியில் விட்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4448a3a-c82a-4d2e-bbd2-bdccb231722e/26-6a7ec8b98a2a0.webp' /></p><p>
</p><p>குறித்த காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிறுமியின் தாயையும் அவரது காதலர் என அடையாளம் காணப்பட்ட நபரையும் இன்று (14.08.2026) கைது செய்துள்ளனர்.
</p><p>
ஹாலிஎல - கெடவல வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது ஹாலிஎல பொலிஸாரினால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் ஹாலிஎல பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T07:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவழியில் மாயமான 19 ஆயிரம் புத்தகங்கள் - அநுர ஆட்சியில் தொடரும் ஊழல் குற்றங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/have-eight-hundred-thousand-textbooks-missing-1786691657"></link>
            <id>https://tamilwin.com/article/have-eight-hundred-thousand-textbooks-missing-1786691657</id>
            <summary type="text">கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், விநியோக மையங்களுக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், விநியோக மையங்களுக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை என அரசாங்கத்தின் மீது புதிய குற்றச்சாட்டொன்று எழுந்துள்ளது. </p><p>இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரே முறைப்பாடு செய்துள்ளார் என்று தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2> 

மாயமான 19 ஆயிரம் புத்தகங்கள்</h2><p> 

 கல்வி அமைச்சின் கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 19,892 முதலாம் வகுப்பு தமிழ் செய்முறைப் பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், திட்டமிட்டபடி விநியோக மையங்களுக்கு ஒப்படைக்கப்படாத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9d0317d-1028-480c-8cfc-5deec9643601/26-6a7ec7d4d338d.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி தலங்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் கடந்த மே மாதம் 4ஆம் திகதி சம்பந்தப்பட்ட புத்தக இருப்பை ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்குக் கொண்டு செல்ல கல்வி வெளியீடுகள் திணைக்களம் அனுமதி பெற்றிருந்தபோதிலும், திட்டமிட்டபடி விநியோகிக்கப்பட வேண்டிய கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 மையங்களுக்கு அந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை என முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; </p><p>இதற்கமைய, சுமார் 8 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள, முதலாம் வகுப்பின் மூன்றாம் பருவத்திற்கான புத்தக இருப்பு, திட்டமிட்டபடி விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MIt-ufvXOUk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T07:47:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள் : முதல் 13 நாட்களில் 6000இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-reported-in-first-13-days-of-august-1786690978"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-reported-in-first-13-days-of-august-1786690978</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
</p><p>நேற்று வரை (13.08.2026) நாடு முழுவதும் மொத்தம் 91,346 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><h2>மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக</h2><p>
 

அதே காலகட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 68 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10df779d-4eec-4c1c-b52c-c2e3b51aa24c/26-6a7ec5dc22f6c.webp' /></p><p>
 

இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஜூலை மாதத்தில்தான் அதிகபட்சமாக 29,968 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. </p><p>அதே சமயம், நேற்று வரையிலான ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,004 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
</p><p>
 

இந்த ஆண்டு இதுவரை மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 48,383 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. </p><p>

 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட தரவுகளின்படி, தெற்கு மாகாணத்தில் 13,479 டெங்கு பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 8,160 டெங்கு பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T07:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய பக்கோ சமனின் தாயார் - பின்னணியில் வெளியாகியுள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-shooting-of-backo-samans-mother-1786688688"></link>
            <id>https://tamilwin.com/article/information-shooting-of-backo-samans-mother-1786688688</id>
            <summary type="text">பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிதியாவ பகுதியில் உள்ள வீட்டிற்கு வருகை தந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் (12) துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றனர்.</p><p>

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார், மித்தெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>&nbsp;</p><h2>கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தை</h2><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு, கொலைக்கு பிறகு பக்கோ சமனின் தாயார் தங்குமிடம் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15a56cfa-73ad-49b1-b2f5-2bd0a093b892/26-6a7ec52730275.webp' />&nbsp;</p><p>
நாட்டை விட்டு தப்பிச்செல்வதற்காக இஷாரா செவ்வந்திக்கு யாழ்ப்பாணத்திற்கு பயண வசதிகளை செய்து கொடுத்தவரும் பக்கோ சமன் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>

இதன் விளைவாக, கணேமுல்ல சஞ்சீவவுக்கு விசுவாசமான கரந்தெனிய சுத்தாவின் கும்பலால் அவரது தாயார் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்</p><p>
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பிறகு இஷாரா செவ்வந்தி மாத்தறை மற்றும் வவுனியாவில் தங்கியிருந்ததாகவும், பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதற்கிடையில், கொலைக்காக துப்பாக்கிதாரிகள் வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், நேற்று காலை (13) மாத்தறை பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் கொலை</h2><p>
</p><p>
அதன்படி, கைரேகை பதிவு செய்யும் அதிகாரிகளும், தங்கல்லை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து இவ்விடயம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e3a9bd-b18e-4f54-9de5-b1e0d7a0c539/26-6a7ec527dc959.webp' /></p><p>
</p><p>
இந்தோனேசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன், தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அருணா விதானகமகே என்ற மிதெனியே கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் கொலையிலும் பெக்கோ சமன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மித்தெனிய பகுதியில், முன்னதாக பெக்கோ சமன் மற்றும் பிறருடன் கைது செய்யப்பட்ட லஹிருவின் வீடு, கடந்த மாதம் 8ஆம் திகதி சிலரால் தீக்கிரையாக்கப்பட்டது.</p><p>

வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டபோது லஹிருவின் தாயார் அங்கிருந்ததாகவும், தீ விபத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T07:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF - ETFஐ ஒன்றிணைக்கும் முடிவு! வீதிக்கு இறங்க தயாராகுமாறு ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-to-epf-etf-merger-1786689456"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-to-epf-etf-merger-1786689456</id>
            <summary type="text">EPF மற்றும் ETF ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கும், ஊழியர் சேமநிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்குத் தனியார் ஊழியர் மையம் தனது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>EPF மற்றும் ETF ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கும், ஊழியர் சேமநிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்குத் தனியார் ஊழியர் மையம் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக ஊழியர் அமைச்சரிடம் ஒரு கோரிக்கை மனுவைச் சமர்ப்பிப்பதற்காக, மையத்தின் பிரதிநிதிகள் குழு நாரஹேன்பிட்டவில் உள்ள ஊழியர் அமைச்சகத்திற்கு சென்றுள்ளது.&nbsp;</p><h2>மாதாந்திர ஓய்வூதியம்</h2><p>இதன்போது&nbsp;தனியார் ஊழியர்&nbsp;மையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ கூறுகையில், ஊழியர்கள் 55 வயதை எட்டிய பிறகு பெறும் பெரும் தொகைக்குப் பதிலாக மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் விவாதித்து வருகிறது.</p><p>

இது உழைக்கும் மக்களின் உரிமைகளை மீறுவதாகும். கடந்த ஜூன் மாதம் முதல் அரசாங்கம், EPF மற்றும் ETF ஒரு முத்தரப்பு ஆளுகை கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்க முயன்று வருவதாகவும், இலங்கை கையொப்பமிட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளின் படி அத்தகைய ஒரு செயல்முறைக்கு அரசாங்கம் சட்டபூர்வமாக கட்டுப்பட்டதல்ல என்றும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5835d6e-4695-4a1d-a08a-f816e1c4b3ab/26-6a7ec4f13fd89.webp' /></p><h2>நிதிகளைக் கொள்ளையடிக்க முயற்சி</h2><p>

தற்போதைய அரசாங்கம் உழைக்கும் மக்களுக்குத் துரோகம் செய்து, இந்த நிதிகளைக் கொள்ளையடிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய நாகமுவ, ரணில் விக்ரமசிங்க முன்பு முன்வைத்த அதே கொள்கைகள் இன்று செயல்படுத்தப்படுவதாகக் கூறினார்.</p><p>

இந்த முடிவுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் தயாராக வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T07:34:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் தொடரும் குழப்பம்.. நாமலின் அபூர்வ சக்தியை கண்டு அஞ்சுகிறதா அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-final-war-namal-rajapaksa-speech-1786683849"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-final-war-namal-rajapaksa-speech-1786683849</id>
            <summary type="text">போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தி அரசாங்கத்தைப் பாதுகாத்திருந்தால், இன்று நான் உயிருடன் இருந்திருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தி அரசாங்கத்தைப் பாதுகாத்திருந்தால், இன்று நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அத்தனகல்ல பகுதியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இதன்போது அவர், "இந்த நாட்டின் இளைஞர்களை ஒரு சமூகப் பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக, மக்களின் பக்கம் நின்று பின்வாங்குவது அவமானகரமானது என்று அரசாங்கமும் அதில் சம்பந்தப்பட்டவர்களும் கருதினால், அது அவர்களின் தவறு.</p><h2>அரசாங்கத்தின் எண்ணம்..&nbsp;</h2><p>சிறைச்சாலைகளில் நிலவும் அமைதியின்மை, எதிர்க்கட்சியினரின் அல்லது நாமலின் செயல் என்று சித்தரிக்கப்படுகின்றது. மேலும், தன்னைப் பார்க்கும்போது அரசாங்கம் ஒரு சக்திவாய்ந்த நபராகக் கருதுகிறதா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287690a7-ff98-4cfe-91e8-9752e8c857da/26-6a7eaad66c136.webp' /></p><p>அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் குரலை அடக்குவதற்கு எதிர்க்கட்சி அரசியல் சக்திகள், சிவில் சமூக அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மகா சங்கம் ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன.&nbsp;</p><p>மக்களுக்கு அளித்த வரம்பற்ற வாக்குறுதிகளை நாளுக்கு நாள் மீறுவதன் மூலமும், மக்கள் அளித்த வாக்குகளைக் குறைத்து மதிப்பிடுவதன் மூலமும் அரசாங்கம் நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்கிறது.&nbsp;</p><p></p><h2>மக்களின் நெருக்கடி நிலை&nbsp;</h2><p>
இந்த நாட்டு மக்கள் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளனர், அரசாங்கம் தனது வரிக் கொள்கையை நாளுக்கு நாள் மாற்றி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c33a3bc-70c2-4eb6-a4b8-5c163724f5c2/26-6a7eaad73e76a.webp' /></p><p> தனக்கு நட்பானவர்கள், தன்னுடன் இருப்பவர்கள் மற்றும் தனக்குச் சாதகமாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து, வரம்பற்ற வரிச் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.&nbsp;</p><p>இருப்பினும், நாட்டின் சாதாரண மக்கள், உழைக்கும் மக்கள், தினக்கூலி பெறுபவர்கள் மற்றும் மாதக் கூலிக்கு வேலை செய்பவர்கள் மீது அரசாங்கம் வரம்பற்ற வரிச்சுமையை சுமத்துகின்றது.&nbsp;</p><p>
அரச கணக்குகளில் டிரில்லியன் கணக்கான ரூபாய் இருப்பதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்து அறிவித்தபோதிலும், மில்லியன், பில்லியன் அல்லது டிரில்லியன் கணக்கான ரூபாய் சம்பாதிக்கக்கூடிய தொழில்முனைவோரையும் குடிமக்களையும் உருவாக்குவதும், தங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளைச் சமாளித்து மகிழ்ச்சியாக வாழக்கூடிய மக்களை உருவாக்குவதுமே அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-ShAh7Krt_A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T06:57:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் பெருந்தொகை எரிபொருள் மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-mp-boats-fueled-with-fuel-port-on-credit-1786672226"></link>
            <id>https://tamilwin.com/article/former-mp-boats-fueled-with-fuel-port-on-credit-1786672226</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஒருவரின் மீன்பிடிப்படகுகள் மற்றும் வாகனங்களுக்கு மீன்பிடித்துறைமுகமொன்றில் கடனுக்கு டீசல் வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இருப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஒருவரின் மீன்பிடிப்படகுகள் மற்றும் வாகனங்களுக்கு மீன்பிடித்துறைமுகமொன்றில் கடனுக்கு டீசல் வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், இதற்காக செலுத்த வேண்டிய பதினான்கு இலட்சம் ரூபாய் இன்னும் வசூலிக்கப்படவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>கசிவின் காரணமாக வீணான எரிபொருள்&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையில், ஹெந்தல திக்கோவிட்ட துறைமுகத்தின் வடக்கு முனையத்தில் நிலத்தடி எரிபொருள் குழாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட எரிபொருள் கசிவால் ஏற்பட்ட இழப்பு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து இன்னும் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a30c73-23b5-4dc7-b6e6-89d18cc49785/26-6a7ebae40136c.webp' /></p><p>
இந்த கசிவின் காரணமாக சுமார் 2700 லிட்டர் எரிபொருள் வீணானதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவிக்கின்றது.
</p><p>
இந்த நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் இந்த குழாயை அமைத்துள்ளது.</p><p>

இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:53:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்குக் கிழக்குப் பகுதிகளில் செஞ்சோலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20th-anniversary-commemoration-of-students-died-1786689220"></link>
            <id>https://tamilwin.com/article/20th-anniversary-commemoration-of-students-died-1786689220</id>
            <summary type="text">முல்லைத்தீவு - வல்லிபுனம் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி குண்டுவீச்சு
தாக்குதலில் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - வல்லிபுனம் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி குண்டுவீச்சு
தாக்குதலில் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 
உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ் இன்று(14.08.2026) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.</p><h2>நினைவேந்தல் நிகழ்வு&nbsp;</h2><p>வல்லிபுனம் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு
செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்ட குண்டுவீச்சு
தாக்குதலில் பல மாணவர்கள் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49aaeb12-bc79-4b2b-a360-64e45b1ec7e0/26-6a7eb77ee3e0e.webp' /></p><p>
</p><p>
தமிழ் தேசிய பேரவையின் ‘நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு’ ஏற்பாடு
செய்திருந்த இந்த நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதிநிதிகள்
பலர் கலந்துகொண்டுள்ளனர்.
</p><p>
இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் உருவப்படங்களுக்கு
சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b><i>மேலதிக தகவல் -&nbsp; தவசீலன்</i></b></p><p><b><i><br></i></b>செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின்
வள்ளிபுனம் பகுதியில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நினைவேந்தல் நிகழ்வானது இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அஞ்சலி நிகழ்வு&nbsp;</h2><p>

கடந்த 2006ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின்
வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது
இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 53
மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர்.
</p><p>
மேலும், 100ற்கும் அதிகமான மாணவிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் அவயவங்களை
இழந்தனர்.

இந்தப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தாயக
மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் வள்ளிபுனம்
பகுதியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4baa7caa-1fe4-470e-a62e-827ad12eb697/26-6a7ec353879a6.webp' /></p><p>

இந்த நிகழ்வில், பொதுச்சுடரை இந்த படுகொலை சம்பவத்தில்
உயிரிழந்த செல்வம் நிறோஜினியின் தாயார் செல்வம் மேரிபுஸ்பலதா ஏற்றி
வைத்துள்ளார். </p><p>

இதனைத் தொடர்ந்து உறவுகளால் தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களுக்கு
மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4bf1d56-8bec-4053-9fe3-123902076dbd/26-6a7ec35288ced.webp' /></p><p>
</p><p>
இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், புதுக்குடியிருப்பு
பிரதேச சபை தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல்
பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப்
பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T06:50:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூநகரி மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்படும் காற்றாலை விசேட திட்டம் - சிறீதரன் எம்.பி கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/poonagari-wind-farm-sridharan-mp-visits-1786686670"></link>
            <id>https://tamilwin.com/article/poonagari-wind-farm-sridharan-mp-visits-1786686670</id>
            <summary type="text">காற்றாலைத் திட்டத்திற்காக கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காற்றாலைத் திட்டத்திற்காக கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.</p><p>பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தை
அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><h2>மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிப்பு</h2><p>
</p><p>
இந்த நிலையில், இந்த திட்டத்தினால்
பயன் தரும் நிலையிலுள்ள 5000ற்கும் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்படுவதோடு,
அதனை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரமும் முற்று முழுதாக
பாதிக்கப்படும்.
</p><p>
கள விஜயத்தின் பின்னர், கிராஞ்சி ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகள் மற்றும்
பொதுமக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/946a00c5-5230-42bc-a2e6-c444be5c7d57/26-6a7eb0e02bb05.webp' /></p><p>
</p><p>
மேலும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும், தொடர்
நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன்,
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியம்
சுரேன், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் கண்ணதாசன், கட்சியின்
செயற்பாட்டாளர் குபேந்திரன் ஆகியோருடன் ஒருங்கிணைந்த சமூக மட்ட
அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:46:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையடக்க தொலைபேசிக்காக மாணவியின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mobile-phone-issue-school-student-dead-1786675044"></link>
            <id>https://tamilwin.com/article/mobile-phone-issue-school-student-dead-1786675044</id>
            <summary type="text">பதுளை, மஹியங்கனை வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகஹஎல பிரதேசத்திலிருந்து கையடக்கதொலைபேசியைக் கொடுக்கவில்லை என்ற மனவேதனை காரணமாக 16 வயது பாடசாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை, மஹியங்கனை வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகஹஎல பிரதேசத்திலிருந்து கையடக்கதொலைபேசியைக் கொடுக்கவில்லை என்ற மனவேதனை காரணமாக 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
</p><p>
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் தோற்றவிருந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். </p><p>மாணவியின் மரண விசாரணையை யட்டிநுவர திடீர் மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன மேற்கொண்டுள்ளார்.</p><h2><b>மாணவியின் விபரீத முடிவு</b></h2><p> 


பாடசாலை முடிந்து வீடு திரும்பியதும் மகள் எப்போதும் கையடக்கதொலைபேசியுடனேயே பொழுதை கழிப்பதாக சாட்சியமளித்த உயிரிழந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c866d3f-861d-465a-b2e5-a4fd202564de/26-6a7eb7603a02c.webp' /></p><p>கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதால் மாணவி அது தொடர்பில் அடிக்கடி புத்திமதி கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>சம்பவத்தன்று மகள் கையடக்கதொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த போது மாணவி அதனைப் பறித்த நிலையில் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்குச் சென்றுள்ளார்.</p><p>அந்தச் சந்தர்ப்பத்தில் மகள் அறையில் தூக்கிட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் சாட்சியமளித்துள்ளார்.</p><p>

உயிரிழந்த சிறுமி கல்வி நடவடிக்கைகளில் மிகவும் திறமையானவர் என்றும், அவர் பரீட்சைகளின் போது எப்போதும் வகுப்பில் முதலாம் அல்லது இரண்டாம் இடங்களை பெற்றுவந்துள்ளாரென்றும்&nbsp; விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-reported-in-weeraketiya-1786688253"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-reported-in-weeraketiya-1786688253</id>
            <summary type="text">வீரகெட்டியவின் அக்ரஹேர பகுதியில் இன்று(14.08.2026) காலை&amp;nbsp;துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதில் 20 வயதுடையு இளைஞர் ஒருவர் காயமடைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீரகெட்டியவின் அக்ரஹேர பகுதியில் இன்று(14.08.2026) காலை&nbsp;துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>இதில் 20 வயதுடையு இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த இளைஞர் முதலில் வீரகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><h2>மேலதிக விசாரணை</h2><p>பன்றியை நோக்கிச் சுடப்பட்ட இலக்கு இந்த இளைஞர் மீது பாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce7f10e-31ea-4c44-8fc8-3396f1d931df/26-6a7eb706b2cff.webp' /></p><p>
 

வீரகெட்டிய பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிப்பு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-mayilathamadu-madhavanai-1786685771"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-mayilathamadu-madhavanai-1786685771</id>
            <summary type="text">மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனைப் பகுதியிலுள்ள கால்நடைகளுக்கான
மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், பாரம்பரிய விவசாய
நிலங்களை மீட்டுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனைப் பகுதியிலுள்ள கால்நடைகளுக்கான
மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், பாரம்பரிய விவசாய
நிலங்களை மீட்டுத்தரக் கோரியும் அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடை
பண்ணையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.</p><p>மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (14.08.2026) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
</p><p>
மன்னார் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற இப்போராட்டத்தில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும்
முதியவர்கள் கலந்து கொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><h2>

மேய்ச்சல்தரை ஆக்கிரமிப்பு மற்றும் கால்நடைகளின் இறப்பு</h2><p>
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், மயிலத்தமடு மற்றும்
பெரியமாதவனை மேய்ச்சல்தரைகளை ஆக்கிரமிக்க வேண்டாம் என்றும்,
ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca17569-1d27-4fa2-94fc-974027ac062d/26-6a7eb32e6a62a.webp' /></p><p>குறிப்பாக, மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக கால்நடைகள்
எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து ஆழமான கவலை தெரிவிக்கப்பட்டது. </p><p>துப்பாக்கிச்சூடு, வெடிபொருட்கள், மின்சார வேலிகள் மற்றும் வாள்வெட்டு போன்ற வன்முறைச்
செயல்களால் பல கால்நடைகள் கொல்லப்பட்டிருப்பது போராட்டக்காரர்களால்
சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>கொல்லப்பட்ட கால்நடைகளின் புகைப்படங்கள் அடங்கிய
பதாகையொன்று "மயிலத்தமடு, பெரியமாதவனை கால்நடைகளின் அவலநிலை" என்ற தலைப்பில்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.</p><p> 2023ஆம் ஆண்டின் பல்வேறு திகதிகளில் நடைபெற்ற
கால்நடை இறப்பு சம்பவங்கள் இதில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdcf8e29-1a57-4106-b782-c177eba884da/26-6a7eb32f6fc50.webp' /></p><p>
</p><h2>
பாரம்பரிய நிலங்களை மீட்க கோரிக்கை</h2><p>

"எமது காணி, எமது குரல்" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற
இப்போராட்டத்தில், இலங்கை அரசாங்கம் தங்களது பாரம்பரிய நிலங்களை உடனடியாகத்
திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. </p><p>வலி வடக்கு (யாழ்ப்பாணம்),
கேப்பாப்பிலவு (முல்லைத்தீவு), மயிலத்தமடு மற்றும் மாதவனை (மட்டக்களப்பு) ஆகிய
பகுதிகளில் நீண்டகாலமாக நிலங்களை இழந்து தவிக்கும் மக்களின் போராட்டத்திற்கு
ஆதரவு கோரும் பதாகையொன்றும் ஏந்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72380898-6985-4596-afed-7bb8c9e01ab1/26-6a7eb3304670c.webp' /></p><p> </p><h2>அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி</h2><p>
இது ஒரு ஜனநாயக ரீதியிலான, கவனத்தை ஈர்க்கும் போராட்டம் என MSEDO நிறுவனம் தெரிவித்தது. போராட்டத்தில்
கலந்து கொண்டவர்கள், "மக்களின் பசி தீர்க்க மக்கள் காணிகளில் படைகள்
பயிரிடுவதா?" என்று கேள்வியெழுப்பும் பதாகையையும் ஏந்தியிருந்தனர்.
</p><p>
மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனை கால்நடை வளர்ப்போர் கமல அமைப்பு, MSEDO உடன்
இணைந்து இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d9f50d4-56cf-4a92-839c-1059bb2c22cf/26-6a7eb33122ad1.webp' /></p><p> </p><p>தங்களது வாழ்வாதாரமாக விளங்கும்
மேய்ச்சல்தரைகளையும், பூர்வீக நிலங்களையும் மீட்கும் வரை தங்களது போராட்டம்
தொடரும் என பண்ணையாளர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். </p><p>அரச அதிகாரிகள்
மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு
நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் பிரதான
கோரிக்கையாகும்.</p><p></p><p></p><p>மேலதிக தகவல் - ருசாத்</p>]]></content>
            <updated>2026-08-14T06:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தின் பின்னர் நடந்த விபரீதம் - மணமகளின் சகோதரனும் பாட்டியும் கோர விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veyangoda-accident-two-death-1786685404"></link>
            <id>https://tamilwin.com/article/veyangoda-accident-two-death-1786685404</id>
            <summary type="text">கம்பஹா - வெயங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்கம்பத்தில் வானொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துளள்னர்.

நேற்று மாலை 5.00 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - வெயங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்கம்பத்தில் வானொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துளள்னர்.
</p><p>
நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வானின் சாரதியான 21 வயதான நவோத் சதுரங்க, அவரது பாட்டியான 80 வயது மூதாட்டி டபிள்யூ.ஏ. விக்கிரமாராச்சி ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>7 பேர் காயமடைந்து&nbsp; மருத்துவமனையில் அனுமதி</h2><p>

இவர்கள் தனது மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று வெயங்கொடை ஹீந்தெனியா பகுதியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c8a219-06f4-4fd6-8e25-91386bbfa550/26-6a7eb36114e61.webp' /></p><p>
</p><p>
மணப்பெண்ணின் சகோதரர் வானை செலுத்திச்சென்ற நிலையில், மணப்பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் தந்தை உட்பட 9 பேர் அந்த வானில் பயணித்துள்ளனர்.</p><p>
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், வானில் பயணித்த ஏனைய 7 பேர் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சாரதி வாகனம் செலுத்தும்போது உறங்கிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T06:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் விசேட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisher-problems-trincomalee-district-meeting-1786686929"></link>
            <id>https://tamilwin.com/article/fisher-problems-trincomalee-district-meeting-1786686929</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கூட்டமானது,நேற்று(13.08.2026) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>

 மாவட்ட அரசாங்க அதிபர் 
டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமாரவின் ஒருங்கிணைப்பில், கடற்றொழில், நீரியல்
மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/564f67d5-76c5-4d2f-81a9-846a2108d2f7/26-6a7eb2990e0e5.webp' /></p><p>
</p><p>

இதில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார
மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா
மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர்
கலந்துகொண்டு, மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் தேவைகள்
குறித்துத் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
</p><p>
கூட்டத்தின் தொடக்கத்தில், இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் இதன் மூலம்
எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
விரிவாக விளக்கமளித்தார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கடந்த மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.
</p><p>
குறிப்பாக, திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும்
சிக்கல்களுக்கு விரைவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப்
பெற்றுக்கொடுப்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

இந்தக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின்
செயலாளர், திருகோணமலை மாவட்ட மீன்பிடி கூட்டுத்தாபன அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள், மாவட்ட மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T06:16:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் ரூ.52 இலட்சம் மதிப்புள்ள சிகரெட் பொதியுடன் சிக்கிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrest-imported-cigarette-katunayake-1786685954"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrest-imported-cigarette-katunayake-1786685954</id>
            <summary type="text">சட்டவிரோதமாக சிகரெட் பொதிகளைக் நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் இன்று (14.08.2026) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக சிகரெட் பொதிகளைக் நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் இன்று (14.08.2026) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த பின்னர், காலை சுமார் 6:15 மணியளவில், அறிவிக்க வேண்டிய விவரங்கள் ஏதுமில்லாத பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 'பசுமை வழித்தடம்'(Green Channel) வழியாகக் கடந்து செல்ல முயன்ற அப்பெண் கைது செய்யப்பட்டார்.</p><h2>நான்கு பயணப் பைகளில் மறைத்து</h2><p>கண்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதான, கைது செய்யப்பட்ட அந்தப் பெண், சவூதி அரேபியாவில் இரண்டு ஆண்டுகள் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிறகு இலங்கைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91b9fe79-89b7-4d69-8311-01f636cca057/26-6a7eb19a5f09a.webp' /></p><p>

 

சுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் தனது பணியை முடித்து இலங்கை திரும்புவதற்கு முன்பு ஷார்ஜாவில் சிகரெட் பொதிகளை வாங்கியுள்ளார்.
</p><p>
 

அந்தப் பெண் எடுத்துச் சென்ற நான்கு பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 35,200 சிகரெட்டுகள் அடங்கிய 176 அட்டைப் பெட்டிகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். </p><p>சிகரெட் பொதிகளின் மதிப்பு சுமார் ரூ.52.8 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

முறையான சுங்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து, அந்தச் சரக்கு பறிமுதல் செய்யப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு ரூ.100,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் அனுஷ்டிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவு நாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veeramunai-massacre-memorial-day-celebration-1786683618"></link>
            <id>https://tamilwin.com/article/veeramunai-massacre-memorial-day-celebration-1786683618</id>
            <summary type="text">அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை
கிராமத்தில் வீரமுனை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று(13.08.2026) வீரமுனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை
கிராமத்தில் வீரமுனை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று(13.08.2026) வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள
படுகொலை நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.</p><h2>வீரமுனை படுகொலை</h2><p>
</p><p>
12.08.1990ஆம் ஆண்டு வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயம், வீரமுனை இராம
கிருஸ்ண வித்தியாலயம் ஆகியவற்றில் தங்கியிருந்த மக்கள் மீது விசேட
அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரால் இந்த
மிலேச்சத்தனமாக படுகொலை நடத்தப்பட்டது.
</p><p>
வெட்டியும் சுட்டும் தாக்கியும் சுமார் 85க்கும் அதிகமானோர் இதன்போது
படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்து அம்பாறை வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a616b88f-817b-449d-ae29-8fb0e2450f32/26-6a7ea2bd437f4.webp' /></p><p>

அவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரையில் தெரியாத நிலையில், இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்று
36 வருடங்களை கடந்துள்ள போதிலும் இதுவரையில் எந்த
விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.
</p><p>
இந்த நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் வீரமுனை படுகொலை நினைவேந்தல்
நிகழ்வுகள் வீரமுனை மக்களால் நடாத்தப்பட்டுள்ளது.
</p><p>
இன்று காத்தான்குடி படுகொலை மற்றும் ஏறாவூர் படுகொலை தொடர்பில் பேசும் மனித
உரிமை செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் வீரமுனை படுகொலை தொடர்பில்
பேசுவதற்கு முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்குப் பகுதியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் அதிரடியாகக் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrest-a-young-man-in-eastern-1786684863"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrest-a-young-man-in-eastern-1786684863</id>
            <summary type="text">இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 3,920 மில்லிகிராம்
&#039;ஐஸ்&#039; போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 3,920 மில்லிகிராம்
'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டம பகுதியில் அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப்
பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்</h2><p>
</p><p>
தொட்டம கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

இவர் தொட்டம மற்றும் பன்னல்கம ஆகிய பகுதிகளில்
நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ்
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/046d06ff-6a07-49fe-a5c1-5fa538e1e175/26-6a7ea80f78bb9.webp' /></p><p>

அம்பாறை மாவட்டப் பிரிவின் பதில் அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
வீரசிங்க மற்றும் அம்பாறை மாவட்டப் பிரிவு அதிகாரி சம்பத் விக்ரமரத்ன
ஆகியோரின் மேற்பார்வையில், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின்
பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரா தலைமையிலான குழுவினரால்
இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தமன பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பொலிஸார் சந்தேக நபரை
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T06:00:50+00:00</updated>
        </entry>
    </feed>
