<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-17T05:42:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்திற்குள் ஊடுறுவியுள்ள புதிய நோய்! கடும் மன அழுத்தத்தால் திக்கித் திணறும் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-new-ailment-emerging-within-the-rajapaksa-family-1789622436"></link>
            <id>https://tamilwin.com/article/a-new-ailment-emerging-within-the-rajapaksa-family-1789622436</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தில் இன்று பலர், உணவில் கவனம் செலுத்த முடியாமல், சரியாக உறங்க முடியாமல், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று பிரதி அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தில் இன்று பலர், உணவில் கவனம் செலுத்த முடியாமல், சரியாக உறங்க முடியாமல், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். </p><p>

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நமது நாட்டில் பணத்தைக் கொள்ளையடித்து, இலஞ்சம் பெற்றுக்கொண்டு தப்பித்தவர்கள், பாதாள உலகத்தினரிடம் இருந்தும் இலஞ்சம் பெற்றவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பலர் நாட்டை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.</p><h2>அதிகரித்துள்ள நோய்&nbsp;</h2><p> </p><p>

இதில் பாரதூரமான விடயங்கள் அனைத்தும் தற்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன. 

எனவே, இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை உரிய அலுவலகங்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
சட்டத்தில் இருந்து தப்புவதற்காக பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி, மறைந்திருந்த அனைவரும் தற்போது&nbsp; அடுத்தடுத்து சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9e31f5-4d94-4422-bc29-c2ea053da45f/26-6aab7b644ac80.webp' /></p><p>
</p><p>
அதனால், அது நாமல் ராஜபக்சவாக இருந்தாலும் சரி, வேறு எந்த ராஜபக்சவாக இருந்தாலும் சரி, விக்ரமசிங்கவாக இருந்தாலும் அது சட்டத்திற்கு முக்கியமல்ல. சட்டம் அனைவருக்குமே சமமானதுதான். </p><p>

ராஜபக்ச குடும்பத்தைப் பொறுத்தவரையில், ஒருவருக்கேனும் வழக்குகள் இல்லாமல் இல்லை. டேசி ஆச்சி முதல், ஷிரந்தி ராஜபக்சவின் மைத்துனன் மற்றும் ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் ஆகியோர் வரை வழக்குகள் உள்ளன.

இப்படி முழு குடும்பத்திற்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன. </p><p>இப்படியான நிலையில், அவர்கள் சிங்கப்பூர் அல்ல, அமெரிக்காவுக்கும் சென்று சிகிச்சைப் பெற வேண்டிய நிலை ஏற்படுமா என்று எமக்கு&nbsp; சொல்ல முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74294ca-1013-495e-b1f5-05b1a1a5fa5e/26-6aab7b6533b97.webp' /></p><p>

எது எப்படியிருப்பினும் இன்று, வழக்குகள் தொடரப்பட்டு, சந்தேகத்தின் பேரில் அல்லது&nbsp; பிணையில் வெளியில் இருக்கும் பலருக்கு தற்போது உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதை நாம் அறிவோம்.</p><p>

அவர்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு சரியான தூக்கம் இல்லை. அவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்.
</p><p>
அந்த மன அழுத்தத்தின் காரணமாக, அவர்கள் சில நேரங்களில் பொதுவெளிகளில் உளறுகின்றனர். அதனைத் தான் நாங்கள் இப்போது ஊடங்களில் காண்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓராண்டு ஆகியும் ஜனாதிபதியை சென்றடையாத முக்கிய அறிக்கை.. கல்வி அமைச்சுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/futa-says-talks-pm-harini-yield-no-solution-1789620981"></link>
            <id>https://tamilwin.com/article/futa-says-talks-pm-harini-yield-no-solution-1789620981</id>
            <summary type="text">பல்கலைக்கழக அமைப்பில் தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரியவுடன் நேற்று மாலை நடைபெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழக அமைப்பில் தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரியவுடன் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.</p><p>

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாணவர் சேர்க்கை, விரிவுரையாளர் பற்றாக்குறை மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நீண்ட காலம் செலவிட வேண்டிய நிலை உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய FUTA தலைவர் ருசிக பெர்னாண்டோ, மாணவர் சேர்க்கை கணிசமான காலத்திற்கு ஒத்திவைக்கப்பட வேண்டியிருக்கும் என்பதைத் தங்கள் சங்கம் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முக்கிய ஆவணங்கள்..&nbsp;</h2><p>

மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதியுடன் ஏற்கனவே எட்டப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் துணைவேந்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் இருந்தபோதிலும், அந்த முன்மொழிவுகள் இன்னும் ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடையவில்லை என்று பிரதமர் நேற்று தங்களுக்குத் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2604a8aa-2a83-4823-bf94-bd1f6bf33759/26-6aab79833ddcb.webp' /></p><p>

"நாங்கள் ஆச்சரியமடைந்தோம். சுமார் ஓராண்டாக நாங்கள் காத்திருக்கும் இவ்வளவு முக்கியமான ஒரு விடயம், இன்னும் உரிய இடத்தைச் சென்றடையவில்லை" என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.</p><p>அதேவேளை, நெருக்கடிக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதிலுமிருந்து விரிவுரையாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றதாகவும், அது இரவு 10 மணி வரை நீடித்ததாகவும் FUTA செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449ae3d9-7e5e-4832-bf86-f0c8f2814400/26-6aab798404aab.webp' /></p><p>
</p><p>மேலும் அவர், கல்வித் துறையில் அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டிய அவர், "இத்தகைய கலந்துரையாடல்கள் வைக்கோல் போரில் முள்ளைத்தேடுவதைப் போன்றவை. </p><p>அரசாங்கத்திற்கு அக்கறை இல்லாததால், அதனால் கல்வி குறித்துப் பேச முடியாது. எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நாங்கள் நிச்சயமாக முடிவெடுப்போம்" என்று கூறியுள்ளார்.
</p><p>
அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மாணவர் சேர்க்கையில் மேலும் தாமதம் ஏற்படும் என்றும், இது உயர்கல்வி அமைப்பின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் FUTA எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:27:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து: சாரதி தொடர்பில் வைத்திய பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி&amp;nbsp; விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி&nbsp; விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p>போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>விபத்து தொடர்பிலான விசாரணைகளின் போது, ​​சாரதியின் உடலில் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இருந்ததை தடயவியல் வைத்திய பரிசோதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்து குறித்த மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.</p><p>

நேற்றிரவு (16) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>இந்த விபத்து தொடர்பான பொலிஸாரின் கூற்றுப்படி, செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d3ee77c-9573-4a2b-bf46-f178827de425/26-6aab66b2ce044.webp' /></p><p>
இதனைத்தொடர்ந்து அந்த கார் இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.</p><h2>உயிரிழந்தவர்களின் விபரம்</h2><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளிவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் இருவர் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36267214-b0a9-4fd5-86e5-d238a7e8d490/26-6aab66b3814c0.webp' /></p><p> 

மூன்றாவது நபரின் வயது கண்டறியப்படாத நிலையில் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த விபத்து தொடர்பில் மட்டக்குளியை சேர்ந்த 52 வயதான கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> </p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T05:20:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் பலியான நெருங்கிய தோழிகள் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalutara-train-accident-to-girls-death-1789611973"></link>
            <id>https://tamilwin.com/article/kalutara-train-accident-to-girls-death-1789611973</id>
            <summary type="text">களுத்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி உயிரிழந்த இரு பெண்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று அதிகாலை ( 16) அநுராதபுரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி உயிரிழந்த இரு பெண்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
நேற்று அதிகாலை ( 16) அநுராதபுரம் நோக்கி தொடருந்தில் பயணிப்பதற்காக, தாய், மகள் மற்றும் தாயின் தோழி ஆகியோர் களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடைக்கு வருவதற்காக தொடருந்து பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே இருவரும் தொடருந்தில் மோதி உயிரிழந்தனர்.</p><h2>உயிரிழந்த பெண்கள்&nbsp;</h2><p>

தொடருந்து தண்டவாள பழுதுபார்ப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏற்றிச்சென்ற தொடருந்தே அவர்கள் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/871d3bef-a417-4afb-bf58-74715fcc6ded/26-6aab60323abca.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் குருகே ஸ்ரீயானி, ரேணுகா தமயந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p><b>

இந்த விபத்து தொடர்பில் உயிரிழந்த ஸ்ரீயானியின் மகள் சித்துமினி ஜெயநெத்தி சாட்சியமளிக்கையில்,
</b></p><p>
இந்த விபத்தில் உயிரிழந்தவர் என் தாயார், இரண்டாவது குருகே ஸ்ரீயானி. நாங்கள் ஒரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக அநுராதபுரம் செல்லவிருந்தோம். அந்த பயணத்தில் என் தாயார், நான், மற்றும் என் தாயாரின் தோழி ரேணுகா அத்தையும் சென்றோம்.

16 ஆம் திகதி அதிகாலையில் களுத்துறையில் பேருந்திலிருந்து இறங்கினோம். பிறகு, வயல்வெளி வழியாக தொடருந்து தண்டவாளம் வரை நடந்தோம். அந்த நேரத்தில் தொடருந்து வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தொடருந்து தண்டவாளம் வழியாக தொடருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம். என் அம்மா தொடருந்து வருவதாக சொன்னபோது, ​​தொடருந்து அருகில் இருந்தது. நான் எனது இரண்டு பைகளையும் நடைமேடையில் வீசிவிட்டு, இரு கைகளாலும் அதன் மீது ஏறினேன். என் அம்மாவையும் ரேணுகா அத்தையும் தூக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை. அதற்கு நேரமில்லை. என் அம்மாவும் ரேணுகா அத்தையும் நடைமேடையைக் கட்டிப்பிடித்துக்கொண்டனர். அந்த நேரத்தில், அவர்கள் இருவரும் தொடருந்தில் மோதி வெகுதூரம் தூக்கி வீசப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில்,
தொடருந்து மோதலில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணங்களுக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட விவகாரம் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vasantha-karannagoda-and-yoshitha-case-heard-today-1789619922"></link>
            <id>https://tamilwin.com/article/vasantha-karannagoda-and-yoshitha-case-heard-today-1789619922</id>
            <summary type="text">இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>
</p><p>இந்த வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்ட நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e75811b5-ba8d-4074-85b6-b5780480786b/26-6aab74afdcf40.webp' /></p><p>முறையான தகுதிகளைப் பெற்றிருக்காத நிலையில், குற்றம்சாட்டப்பட்ட யோஷித ராஜபக்சவை பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம்சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>கடந்த 2006ம் ஆண்டு யோஷித ராஜபக்ச, கடற்படையில் (Sri Lanka Navy) சேருவதற்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பூர்த்தி செய்யாத நிலையில், கடற்படையின் விதிமுறைகளை தளர்த்தி இரண்டாம் லெப்டிணன்ட் பதவிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக யோஷித ராஜபக்ச ஜூன் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்நிலையில், யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொண்டமை மற்றும் அரசு செலவில் அவரை பிரித்தானியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பியமை போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணாமல் போன மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-missing-in-katunayake-airport-1789620426"></link>
            <id>https://tamilwin.com/article/women-missing-in-katunayake-airport-1789620426</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். பிங்கிரிய பகுதியின் வீரபோகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். </p><p>காணாமல் போன அப்பெண் தமரி செவ்வந்திகா விஜேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> முறைப்பாட்டிற்கமைய, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5.12 மணியளவில் அவர் தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.</p><p> </p><h2><b>பெண்ணின் உடைமைகள்</b></h2><p>வீடு திரும்பும்போது தங்கள் ஐந்து பிள்ளைகளுக்கும் சொக்லட் வாங்கி வருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5777e0a-d409-4d34-b288-217120fe2ccd/26-6aab74a31c8c7.webp' /></p><p>குறித்த பெண்ணின் உடைமைகள் காணாமல் போனமை குறித்தும் விமான நிலையப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். </p><p>ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக நாடு திரும்பியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>தனது மனைவியை கண்டுபிடிப்பதில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுத்து உதவுமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


</p>]]></content>
            <updated>2026-09-17T05:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நற்சான்றிதழ் பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-clearance-certificate-srilanka-1789619040"></link>
            <id>https://tamilwin.com/article/police-clearance-certificate-srilanka-1789619040</id>
            <summary type="text">பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி இதன்போது ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி இதன்போது ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>பிரச்சினைகளை தெரிவிக்க முடியும்</h2><p> 

24 மணி நேரமும் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸ் தலைமையகத்தின் விசேட செயல்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p> 

மேலும், இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், 071 8595946, 071 8595947 மற்றும் 071 8595948 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad971356-9a54-47a5-a2c9-d599d0c5eaa5/26-6aab6e895b785.webp' /></p><h2>விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதேவேளை கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழியில் பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை, பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக நற்சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T04:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை மேடைக்கு அழைத்து வர திட்டமிடும் மொட்டுக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-continues-to-attend-public-meetings-1789616948"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-continues-to-attend-public-meetings-1789616948</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து வருவோம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

வலுவான தலைவர்களைக் காண வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் மக்களிடம் உண்டு. எனவே எதிர்காலத்திலும் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்னிலையில் கொண்டு வருவோம்.</p><h2>மிகச்சிறந்த தலைவர்&nbsp;</h2><p> </p><p>

சக்கர நாற்காலியில் வைத்தேனும் அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.
</p><p>
மகிந்த ராஜபக்சவின் தற்போதைய உடல்நிலையைக் கருத்திற் கொண்டு ஏன் அவரை தொடர்ந்து மேடைக்குக் கொண்டு வருகின்றீர்கள் என கேள்வி எழுப்பப்படுகின்றது. </p><p>

அவர் எங்கள் அரசியல் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர். ஆகவே, அவர் உயிருடன் இருக்கும் வரை அவரை மக்கள் முன்னிலைக்கு கொண்டு வருவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acd114bc-bc3f-403a-a1c7-6738072e87c0/26-6aab6ad6e3c73.webp' /></p><p>
</p><p>
மேலும், அநுராதபுர பேரணி குறித்து விமர்சனங்களை முன்வைக்கும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஆட்சியாளர்கள் தங்கள் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.
</p><p>
ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்களால் நாட்டிற்கு ஒரு பாரதூரமான மற்றும் ஆபத்தான நிலை உருவாகி வருகின்றது. </p><p> 

அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதிலும், தாங்கள் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தை அடையவில்லை என்று கூறும் இவர்கள், மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8ed4DHFgaf0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-17T04:21:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[துமிந்த வழியில் தப்பியோடிய ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-s-singapore-visit-and-current-situation-1789616371"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-s-singapore-visit-and-current-situation-1789616371</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
</p><p>தற்போது அங்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிகிச்சையின் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளவே இந்த வழிமுறையை பின்பன்றியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> </p><h2><b>

நிதி முறைகேடுகள் </b></h2><p>ஏனெனில் சிரிலிய சவிய அறக்கட்டளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab705890-ef7b-47ea-af6e-6a55ac316671/26-6aab64a56ba72.webp' /></p><p>கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய உடனேயே நேரடியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
</p><p>
ஆரம்பத்தில் அவருக்கான அறிவித்தல் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருந்தாலும், அவர் வெளிநாடு செல்லவிருப்பதை அறிந்த நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர். </p><h3><b>

அழைப்பாணை </b></h3><p>அவர் விமானத்தில் ஏறவிருந்த தருணத்தில் அந்த அழைப்பாணை அவரிடம் கையளிக்கப்பட்டது. அவருடன் சென்ற உறவினர் ஒருவர் அவருக்குப் பதிலாக அந்த ஆவணத்தைப் பெற்றுக்கொண்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04a49a7f-5207-4280-a476-c78f690d2081/26-6aab64a624818.webp' /></p><p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரா படுகொலைக்கு தொடர்புடைய துமிந்த சில்வா, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் நீண்ட காலம் தங்கியிருந்தார். </p><p>

அக்காலகட்டத்தில், வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிப்பதற்காக மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் அறிக்கைகளைப் பயன்படுத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T03:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பதிவாகும் 80 வீத மரணங்களுக்கான ஏது குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/non-communicable-decease-are-main-cause-of-death-1789614391"></link>
            <id>https://tamilwin.com/article/non-communicable-decease-are-main-cause-of-death-1789614391</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் பதிவாகும் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களினாலேயே ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் பதிவாகும் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களினாலேயே ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களே முதன்மை பெறுகின்றன என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சை வளாகத்தின் கட்டுமானப் பணிகளைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fb03bcb-c364-41a3-8b90-9e93ee7def9a/26-6aab5938bdaa0.webp' /></p><p> உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய இரண்டும் இணைந்து செயற்படும்போது உடலில் பல கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதன் மிக மோசமான மற்றும் முக்கிய விளைவாகவே மாரடைப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
நாட்டில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதமானவர்களே நோயைச் சரியாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.</p><p> அதேபோன்று, நீரிழிவு நோயாளிகளில் 25 சதவீதமான மிகக் குறைந்த அளவினரே நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.</p><p>
தொற்றா நோய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை புதிய தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T03:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பெருமளவிலான வழக்கு கோப்புகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-court-case-files-1789613539"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-court-case-files-1789613539</id>
            <summary type="text">கொழும்பு நகரில் பெய்த கனமழை காரணமாக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பெருமளவிலான வழக்குக் கோப்புகள் நீரில் நனைந்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகரில் பெய்த கனமழை காரணமாக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பெருமளவிலான வழக்குக் கோப்புகள் நீரில் நனைந்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>பழைமையான கொழும்பு மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்தின் ஒரு பகுதி அண்மையில் இடிந்து விழுந்தன.&nbsp;</p><h2>கொள்கலன்களில் சேமித்து&nbsp;வைக்கப்பட்டிருந்த&nbsp;கோப்புகள் </h2><p>இந்த வழக்குக் கோப்புகள் கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கனமழையில் சிக்கி நனைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a9c1592-6e47-4218-8318-fb881d0a0ed0/26-6aab55e4dfcb5.webp' /></p><p>
இவ்வாறு நீரினால் நனைந்த வழக்குக் கோப்புகளை வெயிலில் போட்டு உலர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிமன்ற வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.&nbsp; &nbsp;</p><p>நேற்று முன்தினம் பெய்த கன மழையின் போது இந்த வழக்கு கோப்புகள் இவ்வாறு நனைந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T02:52:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-singapore-visit-reson-1789609659"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-singapore-visit-reson-1789609659</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச&amp;nbsp;நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச&nbsp;நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்துள்ளது.</p><p>எதிர்வரும் 24 ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகும் செய்தி</span></p><p>ஷிரந்தி ராஜபக்‌ச நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce7bfad7-b73f-4e3c-bcb7-11c6ee6c24c2/26-6aab536a4fa8d.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

மேலதிக சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளார்.</p><p> அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒருசில ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான அவசியம் ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு கிடையாது. நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னிலையாகுவார்.</p><h2>அதிகாரம் நிலையற்றது</h2><p>
</p><p>
அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். ஆகவே போலியான கருத்துக்களை சமூகமயப்படுத்தி உண்மையை மறைக்க முடியாது. சகல சவால்களையும் நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p>சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (16) அதிகாலை சுமார் 1:10 மணியளவில் அவர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc9e132-5f5c-4988-bd12-28d16a0a22d1/26-6aab4cc92ee89.webp' /></p><p>அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இதேவேளை, ஷிரந்தி தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாகவும், நேற்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் FCID இன் கடிதத்தை திடீரென வழங்கியதாகவும் குடும்ப உறுப்பினர் விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T02:34:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் முற்றிய வாக்குவாதம்! விடுதியொன்றின் மேல் தளத்திலிருந்து தள்ளப்பட்ட நபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotel-employee-thrown-from-upper-floor-to-death-1789608641"></link>
            <id>https://tamilwin.com/article/hotel-employee-thrown-from-upper-floor-to-death-1789608641</id>
            <summary type="text">கம்பஹா&amp;nbsp; - சீதுவ நகருக்கு அருகிலுள்ள ஒரு விடுதியின் மேல் தளத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா&nbsp; - சீதுவ நகருக்கு அருகிலுள்ள ஒரு விடுதியின் மேல் தளத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விடுதியின் மேல் தளத்தில் தங்கியிருந்த 49 வயதுடைய ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>அவர் இரவு மது அருந்திக்கொண்டிருந்தபோது, ​​மற்றொரு ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து மேல் தளத்திலிருந்து தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என்று இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e50fb6-d291-4a7f-a543-eb898765451f/26-6aab496950366.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் குறித்து சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T01:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-rain-intermittently-after-1-pm-1789605985"></link>
            <id>https://tamilwin.com/article/will-rain-intermittently-after-1-pm-1789605985</id>
            <summary type="text">மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

வடமேற்கு மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல சுற்று மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0be33a-ce79-42a8-b0cd-1ea38cab2bbc/26-6aab3bd0d8500.webp' /></p><p>
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.</p><p>

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T01:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 IPL ஏலம் மீண்டும் இந்தியாவில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-again-1789603986"></link>
            <id>https://tamilwin.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-again-1789603986</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.</p><p> 

கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது. </p><h2>வீரர்கள் மாற்றம் இருக்காது</h2><p>

2023ஆம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ced56da0-af9c-459e-a5c8-909117f2e68a/26-6aab355542ac3.webp' /></p><p>

2024ஆம் ஆண்டு டுபாயிலும், 2025ஆம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026ஆம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது. 

தற்போது 2027ஆம் ஆண்டு ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.&nbsp;</p><p>ஐபிஎல் 2027 ஏலம் மினி ஏலமாக நடைபெற உள்ளது. இதனால் மெகா ஏலத்தைப் போன்று அணிகளில் மிகப்பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இருக்காது என .தெரிவிக்கப்பட்டுளளது.</p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T00:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் 'மிக்' விமான கமிஷன் பணத்திற்கு நடந்தது என்ன! அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;மிக்&#039; விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'மிக்' விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பல மணிநேர வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.</p><p>இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் மறைந்துள்ள கமிஷன் பணம் யாருடைய கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது? எங்கே சென்றது?
'டி.எஸ். அலையன்ஸ்' (DS Alliance) நிறுவனம் ஒரு போலி நிறுவனமாக உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய 'பெலிமிசா' (Bellimissa) நிறுவனத்திற்கு இலங்கையின் விமானப்படை 15.66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அனுப்பியுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கொடுக்கல் வாங்கல் எப்படி நடந்தது</h2><p>அதில் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கலுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டுள்ளது 7.83 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
அப்படியானால் எஞ்சிய பணம் எங்கே சென்றது? யாருடைய கணக்கில் வைப்பிலிடப்பட்டது?
மேலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் விசாரணைகள் நிறுத்தப்பட்ட விதம் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கொள்முதல் கொடுக்கல் வாங்கலானது குளிர் அறைகளில் இருந்த சில நபர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி அவர்களின் சுகபோகத்திற்காகவே தீர்மானிக்கப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கலா? </p><p>
இந்தக் கொடுக்கல் வாங்கலானது உண்மையிலேயே இலங்கை விமானப்படையின் தாக்குதல் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்திலா செய்யப்பட்டது? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பைகளை நிரப்பும் நோக்கத்திலா செய்யப்பட்டது? எனும் கேள்வி எழுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d646032-44b9-4263-bd4a-e36548308477/26-6aaa830b491f4.webp' /></p><p>2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இந்த மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் விசாரணையை நிறுத்தினார். அவ்வாறு நிறுத்துவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சில முக்கிய தடயங்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
</p><p>இந்த 'டி.எஸ். அலையன்ஸ்' எனும் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தினரால் சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வங்கிப் கணக்கிலிருந்து குறைந்தபட்சம் 4,39,000 டொலர்கள் பணம் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் கம்பஹா கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
</p><p>கம்பஹா கிளையில் லெலும் துமிந்த மான்னப்பெரும எனும் கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் இவ்வளவு பாரிய தொகையா யார் இந்த லெலும் துமிந்த?.
</p><p> சிங்கப்பூர் 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனம் தங்களது கணக்கொன்றின் மூலமாகவே இலங்கையின் கம்பஹா கொமர்ஷல் வங்கி கிளைக்கு இந்தப் பணத்தை அனுப்புகிறது.&nbsp;</p><h2>டுபாயில் வாங்கப்பட்ட சொத்து</h2><p>இந்த லெலும் துமிந்த மான்னப்பெரும என்பவர் உதயங்க வீரதுங்கவின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். உறவுமுறையின் படிஇ இந்தப் பணம் வைப்பிலிடப்பட்ட நபர் உதயங்க வீரதுங்கவின் மைத்துனர் ஆவார்.
</p><p>இந்த மான்னப்பெரும என்பவரின் வங்கிப் கணக்கில் வீழ்ந்த பணத்திற்கும் மிக் கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்களால் முடியாமல் போகிறது.
</p><p>ஆனால் மிக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்கிலிருந்தே பணம் வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இந்த மான்னப்பெரும என்பவர் இந்தப் பணத்திலிருந்து 324,971.6 டொலர்களை
ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாய் நகரில் சொத்து விற்பனை செய்யும் 'டார்கெட் எஸ்டாப்ளிஷ்மென்ட்' (Target Establishment) எனும் நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார். </p><p>
ஐக்கிய அரபு இராஜியத்தின அஜ்மான் நகரில் உள்ள 'கோல்ட் கிரஸ்ட் வியூஸ் 2' (Goldcrest Views 2) எனும் சொகுசு வீட்டுத் தொகுதியின் 'பென்ட் ஹவுஸ்' (Penthouse) அடுக்குமாடி குடியிருப்பு இலக்கம் 3403 ஐக் கொள்முதல் செய்வதற்காகவே இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. </p><p>2018 ஆம் ஆண்டு இந்த வீட்டிலிருந்து டுபாய் பொலிஸாரால் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்படுகிறார்.இந்த பிரம்மாண்டமான கமிஷன் தொகையில் மிகச்சிறிய ஒரு பகுதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களாகவே இவை கிடைத்துள்ளதாக நம்புகின்றனர். </p><p>
இந்த கமிஷன் தொகையில் கணிசமான ஒரு பகுதி லத்வியாவில் (Latvia) உள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விடயமும், அதற்கு மேலதிகமாக நியூசிலாந்து, பனாமா, உக்ரைன், ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands) ஆகிய நாடுகளிலுள்ள பல வங்கிக் கணக்குகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T00:26:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரம் வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சைத் தொகுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/modern-cardiac-treatment-anuradhapura-hospital-1789600917"></link>
            <id>https://tamilwin.com/article/modern-cardiac-treatment-anuradhapura-hospital-1789600917</id>
            <summary type="text">நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில்,
இலவச சுகாதாரச் சேவையை மக்களுக்கு நெருக்கமாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில்,
இலவச சுகாதாரச் சேவையை மக்களுக்கு நெருக்கமாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுகாதாரத் துறை
வலுப்படுத்தப்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
தெரிவித்தார்.</p><p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதய நோய் மற்றும் இருதய மார்பு
அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும்
நிகழ்வு நேற்று(6.09.2026) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடை பெற்றபோதே இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.</p><h2>அவசர நிலைகளை எதிர்கொள்ள</h2><p>
மேலும் உரையாற்றுகையில்,

"கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி, தற்போது
நாடு ஸ்திரமான பொருளாதார நிலையை எட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c173da-2509-4d89-b67c-06cf8b593c47/26-6aab2b5f7700a.webp' /></p><p> சுகாதாரத் துறையின் மனித வளத்தை
மேம்படுத்தும் முகமாக, வரலாற்றில் முதன்முறையாக குறுகிய காலத்தில்
ஆயிரக்கணக்கான வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள்
இணைக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p>சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
உரையாற்றும்போது, நாட்டின் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களால்
ஏற்படுகின்றன என்றும், குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு
நோய்களால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அவசர நிலைகளை எதிர்கொள்ள இத்தகைய நவீன
சிகிச்சைத் தொகுதிகள் மிக அவசியமானவை என்றும் தெரிவித்தார்.&nbsp;</p><h2>உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க</h2><p>இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் உரையாற்றும்போது, இலங்கையின் நீண்டகால மற்றும்
நம்பிக்கைக்குரிய பங்காளியாகத் திகழ்வதில் ஜப்பான் பெருமை கொள்கின்றது
என்றும், இருதய நோய்களால் ஏற்படும் இறப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்காக
ஜப்பானின் அனுபவத்தையும் பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதில்
மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் தெரிவித்தார்.
</p><p>[DE8NZU</p><p>
இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த
ஜயதிஸ்ஸ, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல்
அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார
விமலசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, ஜப்பான் சர்வதேச
ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கை அலுவலகப் பிரதிநிதி மற்றும்
வைத்தியசாலைப் பணிக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T23:51:05+00:00</updated>
        </entry>
    </feed>
