<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-03T14:28:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் நீர் குழாய்க்குள் வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் - தமிழர் பகுதியில் வர்த்தகர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/32-year-old-youth-arrested-with-ice-drugs-1785764828"></link>
            <id>https://tamilwin.com/article/32-year-old-youth-arrested-with-ice-drugs-1785764828</id>
            <summary type="text">அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03
பகுதியில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03
பகுதியில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கைது நடவடிக்கை நேற்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

குறித்த பகுதியில் இளைஞர்களைக் குறி வைத்து போதைப்பொருள் விற்பனை
இடம்பெறுவதாகச் சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்
அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே
இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>
32 வயது இளைஞர் கைது</h2><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதுடையவர் என்றும் பிளாஸ்டிக் குழாய்க்குள் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f55b4f-b559-4c88-9698-d70f63bd41ae/26-6a709c72c9d4c.webp' /></p><p>இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம்
ஐஸ் போதைப்பொருள்,மோட்டார் சைக்கிள்,கைப்பேசி ,இலத்திரனியல் தராசு என்பன சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுச் சம்மாந்துறை பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு 3 பிடி விறாந்துகள் உள்ள நிலையில்
தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-sales-fraud-thwarted-in-vinayagapuram-1785764595"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-sales-fraud-thwarted-in-vinayagapuram-1785764595</id>
            <summary type="text">திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின்
போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை, திருக்கோவில் பிரதேச சபையின்
தவிசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின்
போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை, திருக்கோவில் பிரதேச சபையின்
தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் உத்தியோகத்தர்கள் உடனடியாகத்
தலையிட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
</p><p>
இன்று விநாயகபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது நெல் மூடைகளை விற்பனைக்காக
நிறுவை செய்துகொண்டிருந்த வேளையில், தராசில் முறைகேடு நடப்பதை
அவதானித்துள்ளார். </p><p>உடனடியாக இது குறித்துத் திருக்கோவில் பிரதேச சபையின்
தவிசாளருக்குத் தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியுள்ளார்.</p><h2>உடனடி நடவடிக்கை</h2><p>
</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் பிரதேச
சபை உத்தியோகத்தர்கள், அங்கு பயன்படுத்தப்பட்ட தராசின் தரத்தினைப் பரிசோதித்த
போது தராசில் பிழையான அளவீடு (நிறுவை) காட்டப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.</p><p>


பிரதேச சபை தவிசாளரின் இந்த உடனடி நடவடிக்கையினால் குறித்த விவசாயிக்கு
ஏற்படவிருந்த சுமார் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான நிதி இழப்பு
தடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட நெல் கொள்வனவாளர்கள் உடனடியாகப்
பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகத் திருக்கோவில் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நீதிமன்ற நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இச்சம்பவம் குறித்துத் திருக்கோவில் பிரதேச சபை ஊடகம் விடுத்துள்ள அறிவிப்பில்:

"எமது பகுதியில் இதுபோன்ற கண்டறியப்படாத மோசடிகள் பல இடம்பெற்றிருக்கலாம்.
இனிவரும் காலங்களில் இத்தகைய சுரண்டல்களைத் தடுப்பதற்குரிய தீவிர நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
விவசாயிகள் அனைவரும் நெல் விற்பனையின் போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இவ்வாறான தராசு மோசடிகள் அல்லது
சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாகத் திருக்கோவில் பிரதேச
சபையின் 067-2265018 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளவும்.</p><p>
மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நீதிமன்ற நடவடிக்கை
எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T13:43:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து - உயிராபத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passengers-rescued-from-flooded-bus-1785763894"></link>
            <id>https://tamilwin.com/article/passengers-rescued-from-flooded-bus-1785763894</id>
            <summary type="text">கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நாவலப்பிட்டிய - பலாங்கொடை வீதியில் பயணிகளுடன் வெள்ள நீரில் சிக்கியிருந்த பேருந்தானது மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நாவலப்பிட்டிய - பலாங்கொடை வீதியில் பயணிகளுடன் வெள்ள நீரில் சிக்கியிருந்த பேருந்தானது மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை போக்குவரத்து திணைக்களத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்த காணொளியில் வெள்ள நீர் அப்பகுதியை வேகமாக சூழ்ந்தநிலையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்ததால் பேருந்து இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ளது.</p><p></p><h2>இளைஞர்கள் குழு&nbsp;</h2><p>
இந்நிலையில் நாவலப்பிட்டியாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று, பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றி, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4d3e6f9-78de-4ef3-b2f1-7f1719d2ef84/26-6a709838c486b.webp' /></p><p>
</p><p>
இதன்போது பேருந்தின் ஜன்னல்கள் வழியாகப் பயணிகள் வெளியேற்றப்படுவதை காணொளிக் காட்சிகள் காட்டின.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2331-people-from-81-families-affected-nuwara-eliya-1785763105"></link>
            <id>https://tamilwin.com/article/2331-people-from-81-families-affected-nuwara-eliya-1785763105</id>
            <summary type="text">நிலவும் மோசமான காலநிலை காரணமாக நுவரெலிமா மாவட்டத்தில் இன்று (03.08.2026) மாலை நேர
நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் கடுமையாக
பாதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் மோசமான காலநிலை காரணமாக நுவரெலிமா மாவட்டத்தில் இன்று (03.08.2026) மாலை நேர
நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
சமீபத்திய நிலவர அறிக்கையின்படி மாவட்ட செயலாளர் வெளியிட்ட அறிக்கையின்
பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p></p><h2>மழை வெள்ளம் சற்று குறைவடைந்து</h2><p>வெள்ளத்தில் சிக்கி 2
பேரும் மண்சரிவில் சிக்கி 4 பேரும் காணாமல் போயுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4567225f-1919-47f3-9a67-64537dfdc303/26-6a70988741acd.webp' /></p><p>மேலும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும்
இதுவரை 439 குடும்பங்களைச் சேர்ந்த 1734 பேர் இடம்பெயர்ந்து 7 தற்காலிக
இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் </p><p>இவர்களுக்கான சகல
ஏற்பாடுகளையும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஊடாக முன்னெடுத்து வருகிறது எனவும் மாவட்ட
செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹட்டன் , கொட்டக்கலை மற்றும் தலவாக்கலை போன்ற பிரதேசங்களில் பல கிராமங்கள்
தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.</p><p> எனினும் இன்று (03) மாலையில் நுவரெலியா
நகரில் மழை வெள்ளம் சற்று குறைவடைந்துள்ளது. இருந்த போதிலும்
வீடுகளில் வெள்ளநீர் காணப்படுகிறது எனவும் அவர மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T13:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி! உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-who-died-in-maharashtra-prison-clash-1785761655"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-who-died-in-maharashtra-prison-clash-1785761655</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் மரணத்திற்கு அதிகப்படியான இரத்தப்போக்கே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகம மருத்துவமனை சிறப்பு தடயவியல் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் மரணத்திற்கு அதிகப்படியான இரத்தப்போக்கே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ராகம மருத்துவமனை சிறப்பு தடயவியல் குழுவினரால் இன்று மாலை (03) நடாத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p>பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கைதியின் உடல் இன்று மாலை (03) வத்தளை பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c986f7c5-44c1-458c-a15b-1dda8df4555a/26-6a7096538f3e0.webp' /></p><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் வத்தளை- ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கைதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T13:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி - நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-will-decrease-from-tomorrow-1785756823"></link>
            <id>https://tamilwin.com/article/flood-will-decrease-from-tomorrow-1785756823</id>
            <summary type="text">நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனை குறிப்பிட்டார். </p><p>

அதற்கமைய, நாளை நண்பகலின் பின்னர் நிலவும் மழை நிலைமை குறையும் என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2><b>நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்</b></h2><p> 

மேலும் ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f250cb-b451-4fc5-9b6d-401de7b611a4/26-6a707e8ce803e.webp' /></p><p>அது தீவிரமடைவதுடன் எதிர்வரும் 06ஆம் திகதிக்குப் பின்னர் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும் மேலும் தெரிவித்தார். </p><p>அதற்கமைய, சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடைமழை பெய்யக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Qxch2UrB3q4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-03T13:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற தீர்ப்பின் பின் திண்டாடும் பிள்ளையான் - சுரேஷ் சலே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-ruling-on-easter-attacks-1785762984"></link>
            <id>https://tamilwin.com/article/court-ruling-on-easter-attacks-1785762984</id>
            <summary type="text">முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது சிறையில் இருப்பதால், சிறைச்சாலையே மிகவும் மோசமான இடமாக பார்க்கப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது சிறையில் இருப்பதால், சிறைச்சாலையே மிகவும் மோசமான இடமாக பார்க்கப்படுவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகத்தின் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் அடையாளம் காணப்பட்டு, அநுர அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் ஆட்டம் கண்டுள்ளனர். இதனால் வெளியில் இருப்பவர்களிடையே தற்போது ஒருவித அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>அதே சமயம், சிறைச்சாலைகளில் குழப்பங்களை ஏற்படுத்தி, குற்றவாளிகளை மீண்டும் சமூகத்தில் நடமாடவிட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதே சில அரசியல் தலைவர்களின் நோக்கமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆழமாக ஆராய்கிறது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gNzl_D-fZns" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : சஜித் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-must-put-an-end-to-deceitful-politics-sajith-1785762229"></link>
            <id>https://tamilwin.com/article/we-must-put-an-end-to-deceitful-politics-sajith-1785762229</id>
            <summary type="text">நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால்,
மக்கள் அறிவால் பலம் பெற்ற சமூகமாக மாற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால்,
மக்கள் அறிவால் பலம் பெற்ற சமூகமாக மாற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
</p><p>
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று(02) நடைபெற்ற ஐக்கிய கல்வி ஊழியர்
சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><p></p><h2>பாடசாலைகள் மூடப்படும் நிலை</h2><p>மேலும் உரையாற்றுகையில்,

"துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலையிலேயே எரிபொருள்களைப் பெற்றுத்
தருவோம் என்று தேர்தல் காலத்தில் கூறினர். ஆனால் இன்று அது
நிறைவேற்றப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51d5b5b9-f94f-4d64-a009-02bc9a8fd64f/26-6a70942a34daf.webp' /></p><p> உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் நமது
நாட்டில் மாத்திரமே தொடர்ந்து எரிபொருள் மீது வரி விதிக்கப்பட்டு வருகின்றது.</p><p>
மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒன்றால் குறைப்பதாகக் கூறிவிட்டு தற்போது
உயர்த்தியுள்ளனர். புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முன்னுரிமை அளிப்பதாகக்
கூறிவிட்டு, இன்று எரிபொருள் மின் உற்பத்தி நிலைய மாபியாவின் அடிமையாக
அரசாங்கம் மாறியுள்ளது.&nbsp;</p><p>நாட்டில் கல்வித் துறையின் 6 முக்கிய பிரிவுகளிலும் குறைபாடுகள் மற்றும்
ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம்
ஆசிரியர்களும், 15 ஆயிரம் அதிபர்களும், 10 ஆயிரத்து 145 பாடசாலைகளும் உள்ள
நிலையில், பல பாடசாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே பொய் வாக்குறுதிகளை வழங்காது. ஆசிரியர்களுக்கு
வழங்க வேண்டிய எஞ்சிய 2/3 சம்பளப் பங்கைப் பெற்றுக்கொடுக்கவும், அவர்களின்
குறைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கற்பனை
உலகங்களை உருவாக்கி ஆசிரியர்களை அனாதரவாக்க மாட்டோம்.</p><h2>பாரம்பரிய காலாவதியான எண்ணங்கள்</h2><p>உலகளவில் தகவல் தொழில்நுட்பம் முன்பள்ளியிலிருந்தே ஆங்கில மொழியில்
கற்பிக்கப்படும் நிலையில், இங்கு தரம் 6 முதல் 13 வரை தாய்மொழியிலேயே
கற்பிக்கப்படுகிறது.</p><p> திறமைகளை மேம்படுத்தும் முறையான வேலைத்திட்டம் கல்வி
முறையில் இல்லை. ஆங்கில மொழி எழுத்தறிவை மேம்படுத்துவதுடன், பாரம்பரிய
காலாவதியான எண்ணங்களிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d979a183-01e3-4532-bf82-e5fe5c972bd9/26-6a70942b0724c.webp' /></p><p>
குழந்தைகள் பிறந்ததிலிருந்து 5 வயது வரை மூளையின் 75 சதவீத வளர்ச்சி
அடைகின்றது. எனவே, 1 ஆம் வகுப்பிலிருந்து அல்லாமல் முன்பள்ளியிலிருந்தே
கல்வியை நவீனமயமாக்க வேண்டும். மனனம் செய்யும் முறையிலிருந்து விலகி, சவால்களை
எதிர்கொள்ளும் கல்வியை நோக்கிச் செல்ல வேண்டும்.</p><p>கடும்போக்கு இடதுசாரிகள் தனியார் கல்வியை விமர்சித்துவிட்டுத் தமது
பிள்ளைகளைத் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகிறார்கள். அவர்களின்
பிள்ளைகளுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கும்
கிடைக்க வேண்டும். </p><p>அதேவேளை, முதலிடம் நலன்புரி அரசின் இலவசக் கல்விக்கே
வழங்கப்பட்டு அது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டு்ள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T13:14:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை : தீவிரப்படுத்தப்பட்டுள்ள பேரிடர் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministry-defense-disaster-preparedness-bad-weather-1785760379"></link>
            <id>https://tamilwin.com/article/ministry-defense-disaster-preparedness-bad-weather-1785760379</id>
            <summary type="text">நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பேரிடர்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பேரிடர்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் சார்பாக, பேரிடர் மேலாண்மைப் பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலகா இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>பாதுகாப்பான மையங்களுக்கு இடமாற்றம்&nbsp;</h2><p>
</p><p>மேலும் வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம்&nbsp; ஆகியவற்றால் இன்று (03) வெளியிடப்பட்ட வானிலை தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p>
 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்படும் மண்சரிவு எச்சரிக்கைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98711571-ce5f-4d28-b91f-0f8eb5cd8517/26-6a7090c7c33d7.webp' /></p><p>

 

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>மண்சரிவு, வெள்ளம் மற்றும் பிற வானிலை தொடர்பான பேரிடர்களால் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக, கிராம அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழுக்களை அமைத்து, தேவையான திட்டங்களைச் செயல்படுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரிகள் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
 

பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரை உடனடியாகக் கண்டறிந்து, தேவைப்படும்போது அவர்களை நியமிக்கப்பட்ட பாதுகாப்பான மையங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட அல்லது உறவினர் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T13:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/amirthakazhi-mamangeswarar-temple-festival-1785760437"></link>
            <id>https://tamilwin.com/article/amirthakazhi-mamangeswarar-temple-festival-1785760437</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்
பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மூர்த்தி, தலம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்
பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
</p><p>
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி
மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று
நடைபெறுகிறது.
</p><p>
மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை
வழிபாடுகளை அடுத்து, வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ
அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப் பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார்.</p><h2>பெருவிழா</h2><p>
</p><p>
பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள்
நடத்தி வைத்தனர்.

மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத தேவாரப் பாராயணங்கள் இடம்பெற, பக்தர்களின்
அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடந்தேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53b1cc97-1adf-4ff7-9184-33d640146899/26-6a708cff47521.webp' /></p><p>

மாமாங்கேஸ்வரரின் கொடியேற்றத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
</p><p>
அமிர்தகழி மாமாங்கேஸ்வரரின் தீர்த்த உற்சவப் பெருவிழா ஆடி அமாவாசை தினத்தன்று
(12) திகதி நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.</p>]]></content>
            <updated>2026-08-03T12:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத்தில் தொடர் கனமழை - நுவரெலியாவில் 06 குடும்பங்கள் இடப்பெயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-families-displaced-in-nuwara-eliya-1785760378"></link>
            <id>https://tamilwin.com/article/6-families-displaced-in-nuwara-eliya-1785760378</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

நேற்று(02.08.2026) இரவு முதல் பெய்து வரும் கனமழைக்காரணமாக பல வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.</p><p></p><p> </p><h2>

நுவரெலியாவில் தொடர் மலை</h2><p>
இதற்கமைய, நுவரெலியா - சென் அன்றுஸ் பகுதியில் உள்ள 06 வீடுகளில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு நுவரெலியா பம்பரகலையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd2c7fa-5993-43fb-95f7-d0cc64d2897e/26-6a708afd066c7.webp' /></p><p>
</p><p>
நுவரெலியாவில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் பலவற்றின் நீர்மட்டம் துரிதமாக உயர்வடைந்துள்ளதால் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு 
 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8606cefe-7da0-4078-a283-d555efc8c4c1/26-6a708afe15415.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bf0b2f9-d05f-4f3c-b1d0-c797cbda8365/26-6a708afedd8da.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T12:35:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் தீவிரமடைய வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/likelihood-of-bird-flu-intensifying-in-australia-1785758915"></link>
            <id>https://tamilwin.com/article/likelihood-of-bird-flu-intensifying-in-australia-1785758915</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் &#039;எச்5என்1&#039; (H5N1) பறவைக் காய்ச்சல் நோய் மேலும் வேகமாகப்
பரவக்கூடும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் 'எச்5என்1' (H5N1) பறவைக் காய்ச்சல் நோய் மேலும் வேகமாகப்
பரவக்கூடும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
</p><p>
தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் கடற்கரை பகுதிக்கு அருகில் முதன்முறையாக
50க்கும் மேற்பட்ட கடற்பறவைகள் உயிரிழந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அடிலெய்ட் பகுதிக்கு தெற்கே உள்ள கேப் ஜாஃபா பாறைப் பகுதிகளில் 49 இறந்த
பறவைகளும், 35 நோய்வாய்ப்பட்ட பறவைகளும் கண்டறியப்பட்டன.</p><p></p><h2>அபாயம்</h2><p>
</p><p>
அவற்றுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எச்5என்1 வைரஸ் தொற்று இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய விவசாயத் துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், இதுவரை பண்ணைப் பறவைகளிடம் இந்த வைரஸ் பரவவில்லை என்றும், ஜூன்
மாதம் முதல் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/569ac735-f45c-48ab-8e33-158e5f1586c3/26-6a70880c29b80.webp' /></p><p>
</p><p>உலக அளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் பறவைகளும் பாலூட்டிகளும் இந்த நோயால்
உயிரிழந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா இதுவரை இந்த வைரஸால் பெரிய அளவில்
பாதிக்கப்படாமல் இருந்தது.
</p><p>
எச்5என்1 வைரஸ் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவு என்றாலும்,
எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T12:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய படகு விபத்து - காணாமல் போன 28 பேரை மீட்க தீவிர தேடுதல் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indonesian-ferry-catches-fire-1785757334"></link>
            <id>https://tamilwin.com/article/indonesian-ferry-catches-fire-1785757334</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகில்
தீ விபத்து ஏற்பட்டதில், ஐவர் உயிரிழந்ததுடன், 238பேர் மீட்கப்பட்ட நிலையில்
காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகில்
தீ விபத்து ஏற்பட்டதில், ஐவர் உயிரிழந்ததுடன், 238பேர் மீட்கப்பட்ட நிலையில்
காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சுராபாயா நகரிலிருந்து சுலாவேசியில் உள்ள மகசார் நகருக்கு 271 பயணிகளுடன்
சென்று கொண்டிருந்த 'கே.எம். முதியாரா செந்தோசா' என்ற படகில் ஞாயிற்றுக்கிழமை
திடீரென தீப்பற்றியது.
</p><p>
</p><p></p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>இதில் இதுவரை 238 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 28
பேரை இன்னும் காணவில்லை.
</p><p>
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் இந்தோனேசிய கடற்படை, பொலிஸ் மற்றும்
மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f812b38-fb23-4fbf-aabc-b230e11bb455/26-6a70852845bdc.webp' /></p><p> இதற்காக 7 படகுகள் மற்றும் ஒரு
ஹெலிகொப்டர் மூலம் 10 மைல் சுற்றளவில் தேடுதல் நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சுராபாயாவில் உள்ள துறைமுகத்திற்கு அழைத்து
வரப்பட்டுள்ளனர். </p><p>விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை
என்றும், தேடுதல் பணி அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என்றும் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகுப் போக்குவரத்து முக்கியப் பங்கு
வகிக்கும் நிலையில், அங்கு இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T12:16:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் பெண் உயிரிழப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-due-to-inclement-weather-1785758392"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-due-to-inclement-weather-1785758392</id>
            <summary type="text">கினிகத்தேனை - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்து பெய்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கினிகத்தேனை - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது.</p><p></p><h2> 

வீட்டுக்குள் சிக்கியுள்ள மக்கள்</h2><p>
இந்த சம்பவத்தில், மேலும் பலர் வீட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f76a7ee4-f6c5-47ae-85f6-f90cb7a3684b/26-6a7084061cf5f.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T12:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் ஆளுநரிடம் மனு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-dumping-of-garbage-in-the-keerimalai-1785756889"></link>
            <id>https://tamilwin.com/article/action-dumping-of-garbage-in-the-keerimalai-1785756889</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் , வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் , வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மனு கையளித்துள்ளனர்.
</p><p>வலி வடக்கு பிரதேச சபை அமர்வில் நடைபெற்ற மாதாந்த அமர்வில், கீரிமலை
சுடலைக்கும் கொங்கிறீற் அணைக்கும் இடைப்பட்ட கடலரிப்பு ஏற்பட்ட தாழ்வான
பிரதேசத்தில் உக்கிய மண்ணினை கொட்டுவதற்கு வலி தெற்கு பிரதேச சபைக்கு அனுமதி
வழங்குவதென தீர்மானம் எடுக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டது.</p><p>

மாறாக, தற்போது வலி தெற்கு பிரதேச சபையினரால் மேற்குறிப்பிட்ட பகுதி அல்லது
வேறொரு பகுதியில் உக்காத பொருட்கள் இலத்திரனியல் பொருட்கள், கண்ணாடிப்
பொருட்கள், சிகை அலங்கரிப்பு நிலைய கழிவுகள், நீர் தேங்கும் தகர டப்பாக்கள்
என்பன அனுமதிக்குப் புறம்பான முறையற்ற விதத்தில் தொடர்ச்சியான முறையில்
கொட்டப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பாக பல தடவைகள் வலி வடக்கு பிரதேச பிரதேச சபைத் தவிசாளருக்கு
அறிவித்தும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
</p><p>
அத்துடன், தற்போது குப்பை கொட்டப்பட்டு வருகின்ற இடமானது குடியிருப்பை அண்டிய
இடமாகவும் அதே வேளை பல புனித இடங்கள், ஆலயங்களை அண்மித்ததாகவும் காணப்படுவதால்
இவற்றின் புனிதத் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cfa38b7-0658-4a16-bffe-cd333d92ec45/26-6a7080965a808.webp' /></p><p>

எனவே இது தொடர்பாக தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருவதோடு இது தொடர்பாக
நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, கீரிமலையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க
கோரி, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், சுற்றாடல் அதிகார சபை ஆகியோரிடமும்
முறைப்பாடு செய்ய வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T11:52:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 பேருக்கு சர்ச்சைக்குரிய விசா வழங்கியது யார்..! பின்னணியில் செயற்பட்ட மறைகரம்! ஆபத்தாக மாறும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/visas-for-60-suspicious-chinese-were-obtained-1785723755"></link>
            <id>https://tamilwin.com/article/visas-for-60-suspicious-chinese-were-obtained-1785723755</id>
            <summary type="text">இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. </p><p>இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வணிக விசா மட்டுமே காணப்பட்டுள்ளது. </p><p>சந்தேகம் எழுந்தமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினால் இந்த விசாக்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அந்த அனுமதிப்பத்திரங்கள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2><b>வதிவிட விசா</b></h2><p> அதன்பின்னர், அவசரமாக சீன பிரஜைகள் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, அத்தகைய விசாக்களை வழங்குவதற்கான நீண்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7eb652-1bf3-4a9c-a087-afc28ca70964/26-6a70051b69747.webp' /></p><p>இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>இந்த நிலையில், எதிர்காலத்தில் இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் ஊடாக விசாரணையொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><h3><b>சீன கும்பல்</b></h3><p>இலங்கையில் செயற்படும் சீன மாபியா குழுக்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இவ்வாறு செயற்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0facd9b4-7fdf-4357-9917-e97247cbfb94/26-6a700590879cc.webp' /></p><p>கடந்த வாரம் கொழும்பில் சீன கும்பல் ஒன்று ஆயுதமுனையில் சீன பிரஜையான கோடீஸ்வரரை கடத்தி கொலை செய்திருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-08-03T11:27:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு: சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-risk-in-nawalapitiya-gampola-peradeniya-1785754319"></link>
            <id>https://tamilwin.com/article/flood-risk-in-nawalapitiya-gampola-peradeniya-1785754319</id>
            <summary type="text">மகாவலி கங்கையின் நீர்மட்டம் தற்போது பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி கங்கையின் நீர்மட்டம் தற்போது பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (03) திறக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;இதற்கமைய, மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமையால் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்றும்&nbsp;சம்பத் கொட்டுவேகொட குறிப்பிட்டார்.</p><p></p><h2>வெள்ள அபாயம்</h2><p> </p><p>

உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரளை, பஸ்பாகே கோரளை மற்றும் கங்கவட்ட கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்&nbsp; மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d781d5-04e3-404e-8e33-4a16a166a87d/26-6a7078f61f643.webp' /></p><p> 

தற்போது குறித்த பகுதிகளுக்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் அனுப்பப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறியத்தரப்பட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p> 

ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அவசர நிலைகள் ஏற்பட்டின், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு சம்பத் கொட்டுவேகொட, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T11:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் மூழ்கிய மலையகம் - கொட்டகலை மக்களை மீட்கும் முயற்சியில் இராணுவத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-personnel-in-an-attempt-to-rescue-of-kotagala-1785755788"></link>
            <id>https://tamilwin.com/article/army-personnel-in-an-attempt-to-rescue-of-kotagala-1785755788</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக, மலையகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக, மலையகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, இன்று(03.08.2026) கொட்டகலை - கினிகத்ஹேன பிளாக்வாட்டர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2> 

பொதுமக்கள் கவனத்திற்கு.. </h2><p>

இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை இலங்கை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e55e8d-39b3-4379-81ed-1d1bb701d296/26-6a7078a876659.webp' /></p><p> </p><p>

நேற்று(02) பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பெய்து வரும் கனமழையால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec5ef262-ebd3-42f3-a7f2-842a4a8e961f/26-6a7078fc19c3b.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T11:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-s-writ-petition-on-sep-22-1785754648"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-s-writ-petition-on-sep-22-1785754648</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்துத் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்துத் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.</p><p>அந்த மனுவை விசாரிக்க அனுமதிப்பதா அல்லது மறுப்பதா என்பது குறித்து செப்டெம்பர் 22ஆம் திகதி அன்று உத்தரவு பிறப்பிக்கும் என அறிவித்துள்ளது.</p><p></p><h2>ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c98e681-d16f-4a0b-917a-bc3c0e69d834/26-6a7078691e3dd.webp' /></p><p>இந்த வழக்கு தொடர்பான எழுத்து பூர்வமான வாதங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MlP--TRB6dk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-03T11:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA அமைப்பின் முடிவிற்கு இலங்கை கால்பந்து சம்மேளம் வரறே்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warnings-of-major-floods-along-the-kelani-river-1785750968"></link>
            <id>https://tamilwin.com/article/warnings-of-major-floods-along-the-kelani-river-1785750968</id>
            <summary type="text">FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோவினால் முன்மொழியப்பட்ட FIFA முன்னோக்கு நிறுவன முன்முயற்சியைத் திரும்பப் பெறுவதற்கான முடிவை வரவேற்று, இலங்கை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>FIFA அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோவினால் முன்மொழியப்பட்ட FIFA முன்னோக்கு நிறுவன முன்முயற்சியைத் திரும்பப் பெறுவதற்கான முடிவை வரவேற்று, இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

இந்த முடிவு, FIFA-வின் உறுப்பு சங்கங்களுக்கு இடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை உறுதி செய்வதில் கியானி இன்ஃபான்டினோ கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக FFSL தெரிவித்துள்ளது.</p><p></p><h2>FIFA அமைப்பின் உறுப்பு சங்கங்கள்</h2><p>
</p><p>
FFSL தலைவர் ஜஸ்வர் உமர், இந்த முடிவு இன்ஃபான்டினோவின் உள்ளடக்கிய தலைமைத்துவ பாணியை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>அத்துடன், உறுப்பு சங்கங்களின் கருத்துக்கள் மற்றும் கவலைகளுக்கு செவிசாய்க்கும் அவரது விருப்பத்தையும் இது எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a33c0efd-0051-46da-b6b8-b0a759d1ed36/26-6a7076fbe7da3.webp' /></p><p>
</p><p>
FIFA தனது உறுப்பு சங்கங்கள் மற்றும் முடிவெடுக்கும் அமைப்புகளுடன் தொடர்ந்தும் ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கும் என FFSL நம்பிக்கை தெரிவித்துள்ளது.</p><p>எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் கூட்டு விவாதங்களின் ஊடாகவும், உலகளாவிய கால்பந்தின் சிறந்த நலன்களைக் கருத்திற்கொண்டும் உருவாக்கப்படும் எனவும் FFSL குறிப்பிட்டுள்ளது.</p><p>
மேலும், ஆசியா முழுவதிலும் உள்ள பல உறுப்பு சங்கங்களில் கியானி இன்ஃபான்டினோவுக்கு கிடைத்துள்ள ஆதரவை வரவேற்பதாகவும், மக்களை ஒன்றிணைக்கவும், கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், உலகளாவிய கால்பந்து சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்தவும் கால்பந்தைப் பயன்படுத்துவதற்கான அவரது தொலைநோக்குப் பார்வைக்கு FFSL தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FFFOSL%2Fposts%2Fpfbid0UDTkZjCwLrZWTzatwrFCcuzf6WBUjvAQMPcu4kuPWjmK51iYg3Lh4qrGyvL2bPasl&show_text=true&width=500" width="500" height="679" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T11:09:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் சீரற்ற காலநிலை: நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rains-disrupt-water-supply-1785754440"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rains-disrupt-water-supply-1785754440</id>
            <summary type="text">
நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக, அசுபினி எல்ல மற்றும் மாவநெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் எடுக்கும் இடங்கள் அடைப்பட்டுள்ளதாக தெரிவிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக, அசுபினி எல்ல மற்றும் மாவநெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் எடுக்கும் இடங்கள் அடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன் காரணமாக அந்த நிலையங்கள் வழக்கம் போன்று இயங்குவது கடினமாகியுள்ளதாகவும், மாவநெல்ல மற்றும் அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 

நீர்விநியோகம் தடை</h2><p>
மாவநெல்ல முதல் கரந்தன சந்திப்பு வரையிலும், மாவநெல்ல - ரம்புக்கான சாலை நெடுகிலும் உள்ள பகுதிகளுக்குக் குறைக்கப்பட்ட அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57ba987f-e04e-483f-bc14-910c18eebdfc/26-6a707540394d6.webp' /></p><p> </p><p>

வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், நீர் எடுக்கும் இடங்களைச் சுத்தம் செய்து, நிலையங்களை மீண்டும் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கூடிய விரைவில் இயல்பான நீர் விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-03T11:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறைமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்: சிறிதரன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/struggle-continue-sovereignty-is-reclaimed-1785751703"></link>
            <id>https://tamilwin.com/article/struggle-continue-sovereignty-is-reclaimed-1785751703</id>
            <summary type="text">இறமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பில் நேற்று(2.8) இடம்பெற்ற நிகழ்வொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.</p><p>மட்டக்களப்பில் நேற்று(2.8) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இறமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.அது ஆயுதப் போராட்டமா, அறவழிப் போராட்டமா என்பதை எங்களுக்கு எதிராக யார் போர் தொடங்குகிறாரோ, அவர் தான் தீர்மானிக்க வேண்டும்.</p><p></p><h2>போராட்டம்&nbsp;</h2><p>&nbsp;நாங்கள் என்ன
ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை இப்பொழுதும் இலங்கை அரசு தான் தீர்மானிக்க
வேண்டும்.அது அறவழியா, ஆயுதமா என்பதை காலம் தான் அதற்குரிய பதிலையும்
சொல்லும்.</p><p>போர் என்பதும்
போராட்டத்தினுடைய வலி என்பதும் எங்களுக்குள் இருக்கிறது.நாங்கள் ஒரு தேசத்தின் விடுதலைக்காகப் போராடினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70dc825d-ddc8-4b15-ab41-b74c73bd133d/26-6a7070fb1c865.webp' /></p><p> </p><p>எங்களுடைய கைகளிலே
துப்பாக்கி இருந்தது, பெரிய பீரங்கிகள் இருந்தது, விமானங்கள் இருந்தது,
கப்பல்கள் இருந்தது. நாங்கள் போராடினோம்; உலகத்தின் கண்களை நிமிர்ந்து பார்க்க
வைத்தோம். </p><p>ஆனால், மௌனிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் நாங்கள்
பேசப்படுகிறோம், ஒரு இனமாக இந்த உலகத்திலே அங்கீகரிக்கப்படுகிறோம்.
காலமும் சூழலும் இயற்கையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. </p><p>இயற்கை தான்
விரும்பும் பொழுது, அந்த நேரத்தில் உள்ள ஒரு தலைவனை இயற்கை தெரிவு செய்கிறது.
ஆகவே தலைவர்கள் பிறந்து வருவதில்லை இருப்பவர்களில் ஒருவரை இயற்கை தானாகத்
தெரிவு செய்கிறது எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T10:44:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பறிமுதல் - சிறிநாத் எம்.பி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lands-of-the-tamil-people-through-archaeology-1785750461"></link>
            <id>https://tamilwin.com/article/lands-of-the-tamil-people-through-archaeology-1785750461</id>
            <summary type="text">வடக்கு கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியானது என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட
முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியானது என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட
முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார
நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து
வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (03)
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மக்களின் பொருளாதார நிலைமை</h2><p>

மிக முக்கியமாக சமகால அரசு பல வாக்குறுதிகளை தந்திருந்தது இருந்தபோதும் தமிழ்
மக்களுக்கு அரசியல் உரிமை சம்மந்தமாக இந்த அரசு ஆட்சியை பொறுப்பேற்று
ஒன்றரை வருடம் ஆகியும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாத ஒரு
நெருக்கடியான சூழ்நிலை இருக்கிறது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30df54b4-f2e9-47e7-8988-d980dbcbd2a2/26-6a706dfad7e92.webp' /></p><p>இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலைமைகளை
மேம்படுத்துவதற்கு பல விடயங்கள் கூட இன்று பாரியளவில் கொண்டு செல்லப்படாமல்
இருக்கிறது.
</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அண்மையில் மாவட்ட அபிவிருத்திக்குழு
கூட்டத்தில் பல விடயங்கள் முன்வைக்கின்ற முக்கியமாக கித்துள் முந்தனை ஆறு நீர்
பாசன திட்டம் சம்பந்தமாக மாவட்டத்தில் அடிப்படையாக விவசாயம் பொருளாதாரத்தையும்
அதோடு மீன்பிடி வெள்ள தடுப்பு நடவடிக்கை எதிர்கால குடிநீர் தேவைகொண்டு செல்ல
வேண்டிய திட்டம் ஒதுக்கப்பட்ட ஆய்வுகளுக்கான நிதியில் ஒரு வீதம்
பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை காட்டப்பட்டது.</p><p>இது மிக மனவருத்தமான விடயம் அது மட்டுமல்ல அது சம்மந்தமாக கேள்வி எழுப்பி
இருந்தோம் அதற்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.</p><h2>&nbsp;தமிழ் மக்களின் பாரிய வாக்குகள்</h2><p>கடல்சார் அபிவிருத்தியை கொண்டுவருவதற்கு களுவங்கேணி பகுதியில் ஒரு மீன்
பதப்படுத்தும் தொழிற்சாலை கோரியிருந்தோம் அதற்கான நிதி ஆரம்ப காலங்களில்
கொடுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தும் எமக்கு அறிவிக்கப்படாமல் பிரதேச
அபிவிருத்தி கூட்டங்களில் உறுதிமொழி அளித்தனர்.</p><p> அதனை வேறு தேவைக்கு
மாற்றப்பட்டதாக கடந்த மாவட்ட அபிவிருத்தி குழுவில் கூறப்பட்டது

இவ்வாறு மேய்ச்சல் தரை, விவசாயம், மீன்பிடித்துறை போன்றவற்றை அபிவிருத்தி
செய்வதற்கான எந்த ஒரு சிறந்த திட்டமிடல் முறைமையும் இல்லாது தமிழ் மக்கள் மீது
பல நெருக்கடிகளை கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd7ba15a-e7cd-432f-809e-cef76fa40634/26-6a706dfbcb3fb.webp' /></p><p>ஆகவே இவ்வாறான விடயங்களை அரசு மிக பொறுப்பான முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை
கொள்ளக் கூடிய வகையில் கையாள வேண்டும் தென்னிலங்கையில் இருக்கின்ற இனவாத
சக்திகளுக்கு பயந்தே அதனை கைவிட்டு தற்போது துணிச்சலாக பல சந்தர்ப்பங்களில்
நடவடிக்கை எடுப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p>
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல விசாரணைகளை முன்னெடுத்து பல பேரை கைது
செய்வதுடன் போதைப்பொருள் பாதாள குழுக்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஊழல்
மற்றும் இலஞ்சம் விடயங்களை முன்னெடுத்து செல்கின்ற இந்த அரசாங்கத்துக்கு ஏன்
தென்னிலங்கையில் இருக்கும் இந்த இனவாத சக்தி சக்திகளுக்கு பயந்து கொண்டு இந்த
விடயங்களை மெதுவாக மந்தமாக கையாளுகின்றதா?

அல்லது அரசுக்கும் அடிப்படையாக தமிழ் தேசியம் சார்ந்த விடயங்கள் வளர்ந்து
விடக் கூடாது என்ற எண்ணம் இருக்கிறதா? என சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய
நிலைமை இருக்கின்றது.</p><p>எனவே இதனை நீக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் காலங்களில்
தமிழ் மக்களின் பாரிய வாக்குகளை பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசுக்கும்
இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-08-03T10:37:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-regarding-electricity-tariff-changes-1785752524"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-regarding-electricity-tariff-changes-1785752524</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு மின்சார கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு மின்சார கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) சமர்ப்பித்த மின்சார விநியோக செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>இரண்டாவது காலாண்டில் நடைமுறை</h2><p>அதன்படி, நடப்பு காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் அவசியமில்லை என அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894e266f-3e4a-4d16-a3c2-d37eec1ae573/26-6a706e3ecf23f.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதற்கமைய, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண முறைமையே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YoydhtVzwHM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-03T10:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களு கங்கை நீர்மட்டம் உயர்வு: இரத்தினபுரி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalu-ganga-water-level-rises-1785752492"></link>
            <id>https://tamilwin.com/article/kalu-ganga-water-level-rises-1785752492</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
களு கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வரும் நீரியல் அளவீட்டு நிலையங்களில் பதிவாகியுள்ள நீர்மட்டத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதன்படி, களு கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்கள் கவனத்திற்கு..&nbsp;</h2><p>

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகலை, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91cfa037-6e38-4188-84de-7e3023972835/26-6a706c79dfa8e.webp' /></p><p>
</p><p>
எனவே, இரத்தினபுரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களும், சாரதிகளும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், நிலைமையை கருத்திற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T10:25:24+00:00</updated>
        </entry>
    </feed>
