<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-11T13:23:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தேர் திருவிழாவில் பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chain-snatched-woman-mamangeswarar-temple-1786453350"></link>
            <id>https://tamilwin.com/article/chain-snatched-woman-mamangeswarar-temple-1786453350</id>
            <summary type="text">மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின்
போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின்
போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியாதோரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(11.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>

குறித்த ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா சம்பவ தினமான இன்று காலை 8:30
மணியளவில் ஆலயத்தில் தேர் வீதி உலாவின் போது, ஆயிர்க்கணக்கான மக்கள்
திரண்டிருந்த நிலையில் அதனை தரித்துக் கொண்டிருந்த மூதூரைச் சேர்ந்த 63 வயது
பெண்ணின் கழுத்தில் இருந்த (2½) பவுண் தங்க சங்கிலியை இனம்தெரியாதோரால்
அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டையடுத்து பொலிசார் தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9165e7e-5721-4eae-bfe4-1fe3b5183152/26-6a7b220d380d6.webp' /></p><p>இதேவேளை, ஆலயப் பெருவிழா நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருவதால்,
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தமது ஆபரணங்கள், பணப்பைகள் உள்ளிட்ட உடைமைகளின்
பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலையின் பிரதான சூத்திரதாரி உண்மையான செவ்வந்தியா......! சட்ட ரீதியாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sevwandi-to-face-forensic-for-facial-examination-1786453621"></link>
            <id>https://tamilwin.com/article/sevwandi-to-face-forensic-for-facial-examination-1786453621</id>
            <summary type="text">பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

எனினும் குறித்த பெண் உண்மையில் தேடும் செவ்வந்தியா என்பது தொடர்பில் சந்தேகம் நீடித்து வரும் நிலையில், முகத்தை அடையாளம் காணும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
</p><p>
இவ்வாறான நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மூலம் செவ்வந்தியை அடையாளம் காண பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><h2><b>விளக்கமறியலில் வைக்குமாறு&nbsp;உத்தரவு </b></h2><p> 

குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd6f5516-25ea-4d49-b298-691d62c7d9f2/26-6a7b21863fb1b.webp' /></p><p>இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருக்குவிதாரண உத்தரவு பிறப்பித்தார்.</p><p> 

சுமார் 09 மாதங்கள் கொழும்பு குற்றப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p> </p><h3><b>சிறப்பு முகம் அடையாளம் </b></h3><p>இதன்போது பொலிஸார் சமர்ப்பித்த விடயங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb56af36-c74a-4bee-bb75-8514aeeece62/26-6a7b21872494a.webp' /></p><p>சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் சிறப்பு முகம் அடையாளம் காணும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் அனுமதி வழங்கினார். </p>]]></content>
            <updated>2026-08-11T13:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூட்டுக்குள் சிக்கியிருந்த மர்மப் பொருள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-update-on-the-chemmani-mass-grave-1786453807"></link>
            <id>https://tamilwin.com/article/today-update-on-the-chemmani-mass-grave-1786453807</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 15 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 15 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்று(11.08.2026) இடம்பெற்ற போதே குறித்த மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><h2>
15 மனித எலும்பு கூடுகள் அடையாளம்</h2><p>

யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e0cdcd3-af7e-42e8-a3a3-b4137fac7db8/26-6a7b1f7c4efdc.webp' /></p><p>
</p><p>
இதுவரை மொத்தமாக 539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில், 524 மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
516 வது இலக்கமிடப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில்
மீட்கப்பட்ட தாயத்து தகடு போன்ற ஒன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய்
நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701d1e1d-46e9-48f5-b9ce-e1270fc17cc7/26-6a7b1f7d5f77d.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b89f75f-08c9-44e1-bd4b-da0f35399943/26-6a7b1f7e36765.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a97881-0ea2-4b93-b4f1-8ae8b92c9775/26-6a7b1f7f161a1.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் ஆணையினை நிறைவேற்றும் நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு - ஆளும் தரப்பு பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judges-act-of-fulfilling-the-people-s-mandate-1786451268"></link>
            <id>https://tamilwin.com/article/judges-act-of-fulfilling-the-people-s-mandate-1786451268</id>
            <summary type="text">மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை
நீடிப்பு என&amp;nbsp;கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை
நீடிப்பு என&nbsp;கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கையில் நீதியரசர்களின் காலநீடிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர்களின் இரண்டு
ஆண்டுகால நீடிப்பு தொடர்பில் இன்று எதிர்கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a1886a-1d1c-429a-8b08-789786b95281/26-6a7b1cbf2058d.webp' /></p><p>கடந்த 76
ஆண்டுகளாக நாட்டினை குற்றச்செயல்கள் நிறைந்த நாடாக இவர்கள் மாற்றி
இருக்கின்றார்கள். அதனால் தான் 40ஆயிரத்திற்கும் அதிகமான சிறைக்கைதிகள்
இருக்கின்றார்கள்.</p><p> 20 ஆயிரம் கைதிகள் இருக்கும் இடத்தில் 40 ஆயிரம் கைதிகள்
காணப்படுகின்றார்கள்.&nbsp;</p><p>இலஞ்சஊழல் மோசடிக்கு எதிராக போதைப்பொருளுக்கு எதிராக இவ்வாறான
குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் சட்டநடவடிக்கைகளும் வேகமாக
முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றபோது அனுபவம் உள்ள
நீதியரர்கள், அதிகாரிகள், சட்டத்தரணிகள் தேவை. இவை அனைத்தினையும் கருத்தில்
கொண்டுதான் இந்த கால எல்லை நீடிப்பிற்கான அனுமதியினை பெற்றுக் கொடுக்கின்றோம்.</p><p>இதில் எந்தவிதமான தனிப்பட்ட லாபங்கள் கிடையாது. நாட்டு மக்கள் ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று ஆணை
வழங்கியிருக்கின்றார்கள்.</p><h2>குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுபவர்களாக&nbsp;</h2><p>அந்த மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு
நடவடிக்கையையே இந்த நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு.</p><p>
இது குறித்து தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது விமர்சனம் செய்து
வருகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316c0afe-94c7-4735-a9d4-d8fc6b1b284b/26-6a7b1cbff0252.webp' /></p><p>இதனால் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்ற வேகத்தினை பார்க்கின்ற
போது தங்கள் குடும்பமே உள்ளே சென்று கம்பி எண்ண வேண்டிய நிலை வரும் என்று
அவர்களுக்கு தெரியும்.</p><p>இவர்கள் சிறைக்கு செல்கின்ற வரிசையினை பார்க்கின்றபோது
கடந்த 26 ஆண்டுகளாக இந்த நாட்டினை நாசம் செய்து கொள்ளையடித்த ராஜபக்ச கும்பல் கூட்டாக சேர்ந்து ஆட்டம் காணுக்கின்ற நிலை இருக்கின்றது.</p><p>இந்த ராஜபக்சக்களுக்கு வால்பிடிக்கின்றவர்களை தேடிப்பாக்கின்றபொழுது
எல்லாருமே இன்று குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுபவர்களாக
இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு: ஈழத் தமிழர்களுக்கான காய் நகர்த்தல் தொடர்பான திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/project-related-to-the-movement-crops-eelam-tamils-1786452723"></link>
            <id>https://tamilwin.com/article/project-related-to-the-movement-crops-eelam-tamils-1786452723</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக, சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக, சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் இயங்கும் வள்ளுவன் தமிழ்ப் பாடசாலையின் முதல்வர் முருகவேள் தெரிவித்துள்ளார்.</p><p>

“அகளகம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடம் தமிழர்களின் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் முருகவேள், வெளிநாடுகளில் தமிழ் மாணவர்களுக்காக விசேட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தமிழர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயணங்களின் போது தமிழ்நாடு மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பல தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு, ஈழத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அவரது முழுமையான கருத்துக்களை காணொளியில் தொடர்ந்து காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u9zfHVtj19g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானப் பயணம் - நிர்வாகம் எடுத்த திடீர் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-toronto-flight-cancelled-1786451599"></link>
            <id>https://tamilwin.com/article/canada-toronto-flight-cancelled-1786451599</id>
            <summary type="text">கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் PD444 விமானம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புறப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>


ஒரு குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானம்</h2><p>
இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
</p><p>
விமானம் முனையத்திலிருந்து புறப்பட்டு ஓடுபாதையை நோக்கிச் சென்றது, ஆனால் உடன் வந்த பெற்றோர் மற்றும் விமானப் பணியாளர்கள் முயன்றும், இருக்கையில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87d2e127-1590-4c1c-9c68-88b0bbf5e056/26-6a7b1799dd746.webp' /></p><p> </p><p>

இந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையால் விமானத்தால் புறப்பட முடியவில்லை, எனவே விமானப் பணியாளர்கள் முனையத்திற்கே திரும்பிச் சென்று பயணிகளை இறக்கிவிட முடிவு செய்தனர்.</p><p>

விமானத்தை மீண்டும் தயார் செய்வதற்கும், குழந்தையையும் பெற்றோர்களையும் விமானத்திலிருந்து இறக்குவதற்கும், அவர்களின் உடமைகளை மீட்டெடுப்பதற்கும், ஆவணங்களை மீண்டும் தாக்கல் செய்வதற்கும் தேவைப்பட்ட நேரத்தால், விமானம் மிகவும் தாமதமாக புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக விக்டோரியா விமான நிலையத்தின் ஓடுபாதை நள்ளிரவு 12:30 மணிக்கு மூடப்பட்டுள்ளது. ஒரு குழந்தையால் மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நாங்கள் வருந்துகிறோம். அவர்கள் மறுநாள் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hh-Q7I2Hjmg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-11T12:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்! சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-university-of-jaffna-1786451462"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-university-of-jaffna-1786451462</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை (DELT)
ஏற்பாடு செய்யும் “ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்” எனும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை (DELT)
ஏற்பாடு செய்யும் “ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்” எனும்
தொனிப்பொருளிலான 2வது சர்வதேச மாநாடு (ICDE – 2026), முன்னாள் ஆங்கில மொழிக்
கற்பித்தல் துறைத் தலைவரும், தற்போதைய பென்ஸ்டேட் (ஐக்கிய அமெரிக்கா)
பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஈவான் பஃப் பேராசிரியருமான சுரேஷ் கனகராஜாவின் அனுசரணையில், எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் திகதி வரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி மற்றும் நூலக அரங்குகளில்
நடைபெறவுள்ளது.</p><p>

ஆங்கில மொழிக் கற்பித்தல், சமூக மொழியியல் மற்றும் காலனித்துவமய நீக்கச்
சிந்தனைகள் தொடர்பான முக்கியமான உரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு
இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>மாநாடு</h2><p>
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் மூத்த பேராசிரியர் திருநாவுக்கரசு
வேல்நம்பியின் தலைமையில், பேராசிரியர் நா.பிரதீபராஜா மற்றும்
பேராசிரியர் தி.கருணாகரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இம்மாநாடு
இடம்பெறவுள்ளது.
</p><p>
இம்மாநாட்டில் பேராசிரியர் சுரேஷ் கனகராஜா, பேராசிரியர் பிமாலி இந்திரரத்ன,
பேராசிரியர் ரோண்டா ஒலிவர், டாக்டர் வைதேகி ராஜபிள்ளை, பேராசிரியர் செண்டர்
தோவ்சின் மற்றும் இணைப் பேராசிரியர் மேக்ஸ் ஸ்பாட்டி உள்ளிட்ட பல சர்வதேச
புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/770739a0-0aad-4f1a-9f91-7b026fd07d5a/26-6a7b16091eee1.webp' /></p><p>
</p><p>
ஆகஸ்ட் 12ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் தொடக்க விழா உள்ளிட்ட
மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு பேராசிரியர்கள்,
ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன்
அழைப்பதாக ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் சிக்கிய ரத்மலானை சைமா : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ratmalane-saima-held-for-48-hours-for-questioning-1786447014"></link>
            <id>https://tamilwin.com/article/ratmalane-saima-held-for-48-hours-for-questioning-1786447014</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் 'ரத்மலானை சைமா' என்பவரை, விசாரணைக்காக 48 மணி நேரம் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>ரத்மலனே சைமா மேலதிக விசாரணைகளுக்காக நேற்று இரவு (10) பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.</p><p>

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, மலேசிய பொலிஸ் மற்றும் இன்டர்போலின் உதவியுடன் அந்த நாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adb1b28-396e-4200-8ca0-fa4ba2b0ab61/26-6a7b0aff94971.webp' /></p><p>அவருடன் இருந்த ரத்மலானை பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பிற்பகல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
</p><p>
பிரதான சந்தேக நபர் ரத்மலானையைச் சேர்ந்த 41 வயதானவர் என்றும், அவர் 2014ஆம் ஆண்டில் பேராதனை பொலிஸ் பிரிவில் ஒருவரைக் கடத்தி, துப்பாக்கி முனையில் காயப்படுத்தியது மற்றும் 2016ஆம் ஆண்டில் ஒருவரைச் சுட்டுக் கொன்றது ஆகிய இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:20:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் கியூபாவில் எரிபொருள் விநியோகம் - கறுப்புச் சந்தை வியாபாரம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-deliveries-in-cuba-amid-sanctions-1786450561"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-deliveries-in-cuba-amid-sanctions-1786450561</id>
            <summary type="text">அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், கியூபாவின்
கறுப்புச் சந்தை மற்றும் தனியார் துறைகளில் அமெரிக்க எரிபொருளின் பயன்பாடு
திடீரெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், கியூபாவின்
கறுப்புச் சந்தை மற்றும் தனியார் துறைகளில் அமெரிக்க எரிபொருளின் பயன்பாடு
திடீரென அதிகரித்து வருகின்றது.
</p><p>
ஆறு தசாப்த கால ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பின்னர், அந்நாட்டின்
கம்யூனிசக் கொள்கை சார்ந்த ஆற்றல் துறையில் முதலாளித்துவ அமைப்பின் தாக்கங்கள்
வெளிப்படத் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><h2>
எரிபொருள் தட்டுபாடு</h2><p>
வெனிசுலா மற்றும் மெக்சிகோ போன்ற பாரம்பரிய நாடுகளிலிருந்து கியூபாவிற்கு
கிடைத்து வந்த எண்ணெய் விநியோகம் முடங்கியதைத் தொடர்ந்து, அந்நாட்டில்
கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சுகாதாரம்,
பொதுப்போக்குவரத்து மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள்
கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/862a1120-2624-4589-a35b-869f5652f147/26-6a7b1352efc1b.webp' /></p><p>

இந்நிலையிலேயே, அமெரிக்க வணிகத் திணைக்களத்தின் சிறப்புத் தளர்வு ஒன்றின்
கீழ், கியூபாவின் தனியார் வணிகங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் எரிபொருளை
ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
</p><p>
இதன் மூலம், கடந்த பெப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில்
சுமார் 900,000 பீப்பாய் அமெரிக்க எரிபொருள் கியூபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
</p><p>
இந்த எரிபொருள் நாட்டின் மொத்தத் தேவையில் சில நாட்களுக்கு மாத்திரமே
போதுமானது என்ற போதிலும், அது கியூபாவின் பொருளாதார நடைமுறைகளில் பாரிய
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>

கறுப்புச் சந்தை வியாபாரம் தீவிரம்</h2><p>
தனியார் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் வாடகை வாகன உரிமையாளர்கள் இந்த
எரிபொருளைப் பயன்படுத்தி தமது சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
அதேவேளை, முறையான விநியோகக் கட்டமைப்பு இன்மையால் அங்கு கறுப்புச் சந்தை
வியாபாரமும் தீவிரமடைந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் ரகசியக் கிடங்குகள் மூலம் அதிக விலைக்கு எரிபொருள்
விற்பனை செய்யப்படுவதால், குறைந்த வருமானம் பெறும் சாதாரண பொதுமக்கள் பெரும்
அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be4fcc3f-7579-46c1-8f7d-7ab47b5e5a98/26-6a7b1353a4a4f.webp' /></p><p>

நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, கியூபா அரசாங்கம் ஆற்றல் துறையில் தனியார்
மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பகுதியளவில் அனுமதி அளிக்கும் வகையில்
பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
</p><p>
இருப்பினும், இது நாட்டின் தேசிய சொத்துக்களைப் பெருமளவில் தனியார் மயமாக்கும்
முயற்சி அல்ல என அந்நாட்டு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், கட்டுப்பாடுகள் நிறைந்த போதிலும் கியூபாவில் தனியார்
துறையினரால் அமெரிக்க எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதும், அது அங்குள்ள
சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களும் சர்வதேச
அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:19:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம்.. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-mahanayake-thero-nalinda-jeyatissa-1786444244"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-mahanayake-thero-nalinda-jeyatissa-1786444244</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது எனத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது எனத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) நடைபெற்ற போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார். </p><p>குறித்த கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, தாமும் நீதி அமைச்சரும் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு..&nbsp;&nbsp;</h2><p>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிச்சேவைச் சட்டத் திருத்தம் ஆகியவற்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாகவே, மகாநாயக்க தேரர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்கள் தொடர்பில் தமது தரப்பு விளக்கங்களை முன்வைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b83f802-136c-4ae7-8311-3864473ebc6c/26-6a7b00348b08e.webp' /></p><p> </p><p>மேலும், மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமன்ன மகா நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உண்மைகளை விளக்கியதாக அவர் கூறினார்.</p><p>

இதற்கிடையில், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்தார்.&nbsp;</p><p>இந்நிலையில், அதற்கு முன்னாளே, தாமும் நீதி அமைச்சரும் மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமன்ன பிரிவுகளின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்துத் தெளிவுபடுத்தியதாக அவர் தற்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விழிப்புடன் இயங்கும் கும்பல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-employment-scam-in-jaffna-1786449214"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-employment-scam-in-jaffna-1786449214</id>
            <summary type="text">வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
யாழ். மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><h2>
மோசடிகள் அதிகரிப்பு</h2><p>
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இவ்வாறான மோசடி சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த மோசடிகளுடன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாகவும், அவற்றில் அதிகபட்சமாக ஒருவரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ec35e1-d4d6-4c11-a0c4-74c71a22a4ed/26-6a7b0d9833c8e.webp' /></p><p>
</p><p>
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் போலியான விளம்பரங்களை நம்பியே பெருமளவானோர் இவ்வாறு பணத்தை இழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
</p><h2>
நள்ளிரவு 12 மணிக்கு பின் நடக்கும் சம்பவம்</h2><p>

கனடா, பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எவ்வித செலவுமின்றி அனுப்பி வைப்பதாகக் கூறியே இந்த போலியான விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35c9809-041a-4d9d-967c-9033c6e93399/26-6a7b0d98eae5f.webp' /></p><p>
</p><p>
இதனை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் முதலில் ஒரு தொகைப் பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு காட்டுமாறு கூறுவதாகவும், பின்னர் அவர்களின் வங்கிக் கணக்கு கடவுச்சொல் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று, நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பணத்தை மோசடியாக எடுத்துக்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனவே, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தொடர்பான போலியான விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்காமல், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T11:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளிகளின் கோடிக்கணக்கான நிதி மோசடி - அதிகாரிகளின் பிணை நிராகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/financial-fraud-asvesuma-beneficiaries-1786447490"></link>
            <id>https://tamilwin.com/article/financial-fraud-asvesuma-beneficiaries-1786447490</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும
பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய அதிகாரிகள் இருவரின் பிணை அனுமதியை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும
பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய அதிகாரிகள் இருவரின் பிணை அனுமதியை நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த வழக்கு இன்று(11.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஹட்டன் நீதவான் நீதிபதி பீட்டர் பால் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். </p><h2>

விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு</h2><p>
எமது நாட்டில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் முழுமையாக இயலாத
குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சமூக நலன்புரித்
திட்டம் அஸ்வெசும என்பதால்,விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/057e6a65-0608-423e-9d99-0e611496fee4/26-6a7b06e0e7304.webp' /></p><p>


இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நோர்வூட் பிரதேச செயலகத்தில்
அஸ்வெசும பிரிவின் பொறுப்பாளராக இருந்த, ஹட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த 31
மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர்.

இரு சந்தேக நபர்களைக் கைது செய்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின், நீதிபதி அவர்களை இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><h2>

பிணை நிராகரிப்பு</h2><p>
இதனைத் தொடர்ந்து இன்று(11) நீதிமன்றத்தில் சந்தேக நபர்களுக்காக ஆதரவாக முன்னிலையான 
வழக்கறிஞர்கள், இரு சந்தேக நபர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மோசடி
செய்யப்பட்ட பணத்தை வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்க ஒப்புக்கொண்டதால்,
அவர்கள் பிணை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று
நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/861bbd10-42cd-4a7d-b6f2-65f45b77adbc/26-6a7b06e1d5dde.webp' /></p><p>

இதில் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த ஹட்டன் குற்றப் புலனாய்வுப்
பிரிவின் அதிகாரிகள் நோர்வூட் பிரதேச செயலகத்தில்
அஸ்வெசும நலன்புரித் திட்ட நிதி மோசடி தொடர்பில் மோசடி செய்யப்பட்ட பணம்
குறித்த முழுமையான விசாரணை அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றும், 
மேலும் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அலுவலகத்தில் உள்ள பல அதிகாரிகள் இந்த
மோசடியில் ஈடுபட்டதாக வந்துள்ள கூடுதல் முறைப்பாடு குறித்தும் விசாரித்து வருவதால்,
சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்குவதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.
</p><p>
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த ஹட்டன் நீதிபதி பீட்டர் பால் குறித்த
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதன் காரணமாகவும் இந்த
பயணம் ஏழைகளுக்கு வழங்கும் பணம் என்றும், இதுபோன்ற அரச பணத்திற்குப்
பொறுப்பான அதிகாரிகளுக்குப் பணத்தை மோசடி செய்ய எந்த உரிமையும் இல்லை என்றும் கூறினார்.
</p><p>
இதற்கமைய, நீதிபதி இரு சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில்
வைக்கவும், இந்த மாதம் மீண்டும் 25ஆம் திகதி வழக்கினை மீண்டும்
விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
</p><h2>
மோசமாகும் மக்களின் நிலை</h2><p>
இரு சந்தேக நபர்களின் சகோதரர்களில் ஒருவர் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர்
பதவியில் உள்ள அதிகாரி எனவும், மேலும் மோசடிப் பணத்தின் ஒரு பகுதி அவரது
கணக்கிலும் வரவு வைக்கப்பட்டிருந்தமை கண்டறிந்து அந்த அதிகாரிக்கு எதிராக
நடத்தப்படும் விசாரணையின் விளைவாக, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி
தென்னக்கோன், அந்த அதிகாரியின் பணியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09694cdc-2182-439c-af4b-7cc423217cd5/26-6a7b06e2aa416.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும கணக்கில் பணம் வரவு
வைக்கப்படாத பயனாளிகள், தங்கள் கணக்குகளைச் சரிபார்க்க தினமும் நோர்வூட்
பிரதேச செயலகத்திற்குச் சென்று வருகின்றனர்.
</p><p>
அங்குள்ள அதிகாரிகள், பயனாளிகளின் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்ணைப் பெற்று, அது குறித்த தகவல்களை வழங்குவதாகக் கூறி, அந்த பொது மக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f406cf81-e520-47b4-ba7a-4b581ea67511/26-6a7b07307adfd.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T11:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச தொழிலுக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-for-government-teacher-vacancies-1786437816"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-for-government-teacher-vacancies-1786437816</id>
            <summary type="text">நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை&nbsp;</h2><p>இதற்கமைய, ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பாடசாலைகள் மற்றும் பிரதேசங்களை உடனடியாக அடையாளம் கண்டு, அங்குள்ள வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb25550-8919-422e-bc02-6c9dd0ededac/26-6a7aeb2cd42ba.webp' />&nbsp;</p><p>மேலும், ஆசிரியர் இடமாற்ற முறைமையை ஒழுங்குபடுத்துவதுடன், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடமாற்றங்களை முன்னெடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p>அத்துடன், பாடசாலைகளை கஷ்டப் பிரதேசங்களாக வகைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவு வழங்கும் முறைமை குறித்தும் மீளாய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/M7NXBI6GGRc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:19:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து முகங்கொடுக்கும் பிரச்சினைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-fishermen-issue-1786446599"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-fishermen-issue-1786446599</id>
            <summary type="text">கடற்றொழிலாளர்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அச்சுறுத்தல் மற்றும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழிலாளர்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். </p><p>குறிப்பாக வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அச்சுறுத்தல் மற்றும் அவர்களின்
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில்
பாதிப்படைகின்றது.</p><p> அதேவேளை கிழக்கில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை பயன்பாட்டால்
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின்
திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.
</p><p>
இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை
தெரிவித்தார். </p><p>அவர் மேலும் கூறுகையில் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தின்
மத்தியில் கடற்றொழில் துறையில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கை இந்த
சட்டவிரோத சுருக்குவலை பயன்பாட்டால் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை
மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சுருக்குவலை கடற்றொழில் பயன்பாட்டால் மீன்களின் இனப்பெருக்கமும் அதன்
வளர்ச்சியும் பாதிப்படைகின்றது.

எனவே சட்டவிரோத கடற்றொழில்&nbsp; நடவடிக்கையை உடனடியாக நிறுத்த கடற்றொழில்த்துறை
அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றார் சின்ன
மோகன்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவி கொட்டுக்கு இலக்கான 10 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-plantation-workers-admitted-to-hospital-1786446474"></link>
            <id>https://tamilwin.com/article/10-plantation-workers-admitted-to-hospital-1786446474</id>
            <summary type="text">நோர்வூட் - அயரபிதோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 10 பேர் தோட்டத்
தொழிலாளர்கள் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் - அயரபிதோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 10 பேர் தோட்டத்
தொழிலாளர்கள் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் இன்று(11.08.2026) 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அயரபிதோட்ட பகுதியில் வழமை போன்று தேயிலை பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு
இலக்காகியுள்ளனர்.
</p><h2>
10 பேர் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடு
கலைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த குளவிகள் திடீரென தொழிலாளர்கள் மீது
தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58517cf0-8604-4a83-aa1f-7a3c500eac5d/26-6a7b02d071146.webp' /></p><p>
</p><p>
குளவிகள் கூட்டமாக தொழிலாளர்களைத் தாக்கியதில் குளவி கொட்டுக்கு
உள்ளனா 10 பேர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதகவும், மூன்று பேர் மாத்திரம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று
வருவதாகவும் ஏனையவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியதாக வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குளவி தாக்குதல் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அச்ச நிலை
ஏற்பட்டதுடன், குளவிக்கூடு அமைந்திருந்த பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை மலையகத்தின் பல்வேறு தேயிலைத் தோட்டப் பகுதிகளில் குளவி மற்றும்
தேனீக்களின் தாக்குதல்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்ற நிலையில்,
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc7cc6fc-9c9a-4f99-a2c7-fc45ccfd8113/26-6a7b02d140ad2.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையா..! இறுதி முடிவு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-drug-traffickers-receive-the-death-penalty-1786443843"></link>
            <id>https://tamilwin.com/article/will-drug-traffickers-receive-the-death-penalty-1786443843</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>

இன்றைய தினம் (11.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான முன்மொழிவு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.</p><h2>பிரச்சினையின் தீவிரத்தன்மை</h2><p>
</p><p>
இது தொடர்பாக சில தரப்பினரால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும்.

இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து விவாதிக்கும்போது, ​​சில தரப்பினரிடமிருந்து முன்மொழிவு, யோசனை வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6e07d5-3a20-46e0-a79d-0441629d65fa/26-6a7afef07e496.webp' /></p><p>
</p><p>
எனினும் அதை எப்படிச் செய்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவோ அல்லது உடன்பாடோ எட்டப்படவில்லை.</p><p>

பாதாள உலகம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இது போன்றவற்றுடன் நடைபெறும் செயல்முறை குறித்து விவாதிக்கும்போது ஒவ்வொரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு மட்டுமே இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T10:58:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை கீரிமலையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-keerimalai-1786444405"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-keerimalai-1786444405</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி
அமாவாசை தினமான நாளைய தினம்(12.08.2026) கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி
அமாவாசை தினமான நாளைய தினம்(12.08.2026) கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல்
அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர் சட்டவிரோதமான
முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான
கழிவுகளை கொட்டியுள்ளனர்.</p><h2>கீரிமலை பகுதியில் பலர் ஒன்று கூடுவார்கள்</h2><p>கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34
உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண
உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்,
தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும்,
இதுவரையில் காத்திரமான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867cff4e-22f9-4205-994f-10d2eee503d7/26-6a7b0042e56f2.webp' /></p><p>இந்நிலையில் ஆடி அமாவசை தினமான நாளைய தினம் புதன்கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட
பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொட்டப்பட்ட
குப்பைகளால் ஏற்படும் சூழல்சார், சமூகம்சார் பிரச்சினைகள் தொடர்பில்
விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வும் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
அதேவேளை, ஆடி அமாவாசை தினத்தன்று தமது முன்னோருக்கு பிதிர்கடன்களை நிறைவேற்ற
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கீரிமலை பகுதியில் பலர் ஒன்று
கூடுவார்கள் என்றும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை
முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாட செல்வார்
என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவசை தினத்திற்கு முன்னர், மீள அள்ள
வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ள எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T10:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seawater-enters-fishermen-s-huts-in-mullaitivu-1786443235"></link>
            <id>https://tamilwin.com/article/seawater-enters-fishermen-s-huts-in-mullaitivu-1786443235</id>
            <summary type="text">கடல்நீர்&amp;nbsp;வாடிகளுக்குள்&amp;nbsp;புகுந்தமையினால்&amp;nbsp;பாதிக்கப்பட்ட&amp;nbsp;முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களை&amp;nbsp;பிரதேச சபை உறுப்பினர்&amp;nbsp;நேரில் சந்தித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடல்நீர்&nbsp;வாடிகளுக்குள்&nbsp;புகுந்தமையினால்&nbsp;பாதிக்கப்பட்ட&nbsp;முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களை&nbsp;பிரதேச சபை உறுப்பினர்&nbsp;நேரில் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.</p><p>முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர்
கரையைத் தாண்டி கடற்றொழிலாளர்களின் வாடிகளுக்குள் இன்று (11.08.2026) காலை
புகுந்ததால், அப்பகுதி கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள
பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன்,&nbsp; அன்றாட நடவடிக்கைகளும்
பாதிக்கப்பட்டுள்ளன</p><p>
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்
தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் நேரில் சந்தித்து நிலைமைகள் தொடர்பிலும்.,
கடற்சீற்றம் தொடரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:41:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மீதான விசாரணை.. ஷானி அபேசேகர - ரவி செனவிரத்னவை நியமிக்க கோரிய கர்தினால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salley-shani-abeysekara-cardinal-malcom-1786430719"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salley-shani-abeysekara-cardinal-malcom-1786430719</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவுடனான இடைக்கால மனுக்கள் நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவுடனான இடைக்கால மனுக்கள் நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், மதத் தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தலையிடுவது பொருத்தமானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>கர்தினாலின் கோரிக்கை..&nbsp;</h2><p>இதன்போது அவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூற்றை சுட்டிக்காட்டிய அவர், ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இரு அதிகாரிகளையும் அந்தந்தப் பதவிகளுக்கு நியமிக்குமாறு பேராயரே (கர்டினல்) கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e882c8ec-8eb5-4d8e-9be4-f4c9eafaa491/26-6a7af830566d8.webp' /></p><p>அத்துடன், குறித்த இரு அதிகாரிகளும் தாம் தீவிர அரசியலில் ஈடுபட்டதாகவும், தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் கூட்டு அமைப்பில் பணியாற்றியதாகவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சத்தியக்கடதாசிகளில் குறிப்பிட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>குற்றவியல் விசாரணைகளில் அரசியல் தலையீடுகளுக்கு அனுமதிக்கக் கூடாது என்றும், நீதித்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மை பாதிக்கப்படக் கூடாது என்றும் ஜானக டி சில்வா ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.</p><p> இருப்பினும், பேராயரால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால மனுவுக்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T10:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ள அபாய முன்னறிவிப்புகள் - உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆளுர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-instructions-to-local-government-councils-1786441528"></link>
            <id>https://tamilwin.com/article/governor-instructions-to-local-government-councils-1786441528</id>
            <summary type="text">குறுகிய காலத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு
ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில்&amp;nbsp; உள்ளூராட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறுகிய காலத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு
ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில்&nbsp; உள்ளூராட்சி மன்றங்கள் தயார்நிலையில் இருக்குமாறு&nbsp;ஆளுர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p> வெள்ள அபாய முன்னறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம்,
நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில்
இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
வலியுறுத்தியுள்ளார்.</p><p>

வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி,
வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம்,
கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும்
போக்குவரத்து அமைச்சுகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (11.08.2026)
ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.</p><h2>&nbsp;உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள்</h2><p>

கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக
ஆராயப்பட்டதுடன், தெருநாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சை வேலைத்திட்டத்தின்
முன்னேற்றம் மற்றும் லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b704d006-fdb3-45b9-bf17-ea475654e8a5/26-6a7af4b9e50ce.webp' /></p><p> </p><p>லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்துவதில்
முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அதனை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை
இருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> இதற்கமைய, 2027ஆம் ஆண்டு தொடக்கம்
மேலும் கடுமையான அமுலாக்க நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக உள்ளூராட்சி
ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசங்களில்
நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளங்களை உள்ளூராட்சி மன்றங்கள்
ஊடாகத் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்
உள்ளூராட்சி ஆணையாளர் ஆளுநருக்கு அறிவித்துள்ளார்.</p><h2>கட்டட அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைபடங்களுக்கும் நடைமுறை</h2><p>

கட்டட அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைபடங்களுக்கும் நடைமுறையில்
நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக
குடிபுகு சான்றிதழ்களை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டட
அனுமதிக்கு முரணாக அமைக்கப்பட்ட கட்டுமானங்களுக்கு எதிராக உள்ளூராட்சி
மன்றங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூட்டத்தில்
தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc958bf9-99d2-4713-95e1-b548a8d5c0e9/26-6a7af4bab727f.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வடகிழக்கு பருவமழை
தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், இடர்நிலை
முகாமைத்துவத்துக்குத் தேவையான அனைத்து முன்னாயத்தங்களையும் மேற்கொள்ளுமாறு
ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி
ஆணையாளர் தெரிவித்துள்ளார். </p><p>அவசரநிலைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள், வாகனங்கள்,
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறும்
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

'பிராஜா சக்தி' வேலைத்திட்டத்தின் கீழ் மாகாண சபைக்குச் சொந்தமான வீதிகள்
மற்றும் கட்டடங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதே
பணிகள் ஏனைய நிதி மூலங்களின் கீழ் மீள இடம்பெறாதவாறு திட்டங்களை ஒருங்கிணைத்து
நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்
வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம்
மீளாய்வு செய்யப்பட்டது.</p><p> இரண்டாம் கட்ட வீடமைப்புத் திட்டம், டிட்வா
மீள்கட்டுமானத் திட்டம், நிரல் அமைச்சு மற்றும் மாவட்டச் செயலகங்கள் ஊடான நிதி
ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் திருப்திகரமாக
முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> அதேவேளை, உள்ளூராட்சி
மன்றங்கள் தங்களது தொழில்நுட்பக் கொள்ளளவை மீறிய அளவில் அபிவிருத்திப் பணிகளை
முன்னெடுத்து வருவதாகவும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

உள்ளூராட்சி மன்றங்களுக்கு சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்களை
கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துமாறு அலுவலர்களுக்கு தெளிவான
அறிவுறுத்தல்களை வழங்குமாறும் ஆளுநர் வலியுறுத்தினார். </p><p>இது தொடர்பாக தனக்குப்
பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற
கலந்துரையாடலில், வீதிப் பணிகளுக்குத் தேவையான தாரைப் பெற்றுக்கொள்வதில்
நிலவும் சிக்கல்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட சிலர்
கடமைகளைப் பொறுப்பேற்காத நிலை குறித்தும் ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வு
நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
</p><p>
தொடர்ந்து கிராமிய அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகாரசபை, வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் மற்றும்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாட்டு முன்னேற்றங்களும்
விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.
</p><h2>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை</h2><p>
தற்போதைய காலப்பகுதி வடக்கு மாகாணத்துக்கு அதிகளவிலான உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் பருவமாக இருப்பதால், தமது
எல்லைக்குட்பட்ட சுற்றுலாத் தலங்களின் தூய்மையை உறுதிப்படுத்துவதில்
உள்ளூராட்சி மன்றங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர்
அறிவுறுத்தியுள்ளார். </p><p>மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டும்
சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி. காணொலிப் பதிவுகளை உரிய பொலிஸ்
நிலையங்களுக்கு விரைவாக அனுப்பி சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும்
அவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/874c69e3-89e9-402e-84b3-edf694e7102a/26-6a7af4bc7f2b7.webp' /></p><p>

இதனுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தூய்மை இலங்கை செயலணி
வழங்கியுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைந்த
கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும்
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,
உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம்,
திட்டமிடல் மற்றும் பொறியியல்), உள்ளூராட்சி ஆணையாளர், திட்டமிடல் பணிப்பாளர்,
மாநகர சபை ஆணையாளர்கள், நகர சபைகளின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள்,
பொறியியலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்
கலந்துகொண்டனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்படவுள்ள இலந்தைக் குளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/40-year-renovation-ilanthai-kulam-rs-20-million-1786440668"></link>
            <id>https://tamilwin.com/article/40-year-renovation-ilanthai-kulam-rs-20-million-1786440668</id>
            <summary type="text">நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் விவசாயத் துறையில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்பட்டு
வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் விவசாயத் துறையில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்பட்டு
வருவதாக வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர்
அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலந்தைக் குளத்தின்
புனரமைப்புப் பணிகளை சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று(11)
உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு
குறிப்பிட்டார்.</p><h2>புனரமைப்புத் திட்டம் முழுமையடையும் போது</h2><p>

குச்சவெளி பிரதேச செயலாளர் U.L. சியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,&nbsp;"நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டிருந்த இலந்தைக் குளத்தைச்
செப்பனிடுவதற்காக அரசாங்கத்தினால் ரூ. 20.1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48476823-28b0-4729-ad90-499cd5468533/26-6a7aefcc669fb.webp' /></p><p>
இப்புனரமைப்புத் திட்டம் முழுமையடையும் போது, சுமார் 120 ஏக்கர் வயல் நிலங்கள்
நேரடி நீர்ப்பாசன வசதியைப் பெறவுள்ளன.</p><p>

இதன் மூலம் அப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதோடு, பல
விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கணிசமாக வலுப்பெறும்.
</p><p>
தற்போது திருகோணமலை மாவட்டத்திலும், குச்சவெளி பிரதேசத்திலும் பல்வேறு
உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்தினால்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சி</h2><p>அதன் ஒரு முக்கிய அங்கமாகவே இக்குளப் புனரமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இது மாவட்டத்தின் நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சிக்கு பெரும் வழிகோலும்" எனத்
தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a385c02-5c98-4ba1-86fb-0483cfb27d84/26-6a7aefcd6c2e6.webp' /></p><p>
குச்சவெளி பிரதேச மக்களின் நீண்டகால அபிவிருத்தி எதிர்பார்ப்புகளில் ஒன்றாக
இருந்த இக்கோரிக்கைக்கு இப்புனரமைப்புப் பணியின் மூலம் தீர்வு
காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்,
இத்திட்டத்தினைத் துரிதமாக முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குச்சவெளி
பிரதேச செயலாளர் மற்றும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அரச
அதிகாரிகளுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
</p><p>
இந்நிகழ்வில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் என்.
விஸ்ணுதாசன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள்
மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af5e9c4-d198-4eb0-a702-8263553ca8ed/26-6a7af00f9f52b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ef73ba-7464-48c9-a3e5-1fd932c32fc8/26-6a7af010b57fb.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T10:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளை முகாமை செய்வது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-waste-management-1786440725"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-waste-management-1786440725</id>
            <summary type="text">மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தில்
சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமை செய்து அவற்றை அகற்றுவது
தொடர்பில் துறைசார்ந்த அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தில்
சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமை செய்து அவற்றை அகற்றுவது
தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும்
கூட்டம் இன்று (11.08.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.</p><p>மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்
தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கரையோரம்
பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பொலிஸார், கடற்படை, பிரதேச
செயலகம், சுற்றாடல் பிரிவு, உள்ளிட்ட பல திணைக்களைங்களைச் சேர்ந்த அதிகாரிகள்
இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867375ae-35b8-4d30-944b-632ead9dba22/26-6a7af0361983a.webp' /></p><h2>நாளாந்தம் சேகரிக்கப்படும் கழிவுகள்</h2><p>


மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபையினால் நாளாந்தம் சேகரிக்கப்படும்
கழிவுகள் இதுவரைகாலமும் களுவாஞ்சிகுடி கடற்கரைப் பகுதியில் கொட்டப்பட்டு
வருவதானல் அப்பகுதியைச் சூழவுள்ள மக்கள் பெரும் சுகாதாரப் பிரச்சினைகளை
எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c1e5c33-c7c1-40f0-850f-28ec1ab151f5/26-6a7af036e6960.webp' /></p><p> </p><p>அவற்றைத் தடுக்கும் முகமாகவும், எதிர்காலத்தில்
இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுளை சிறந்த முறையில் முகாமை செய்வதற்காக வேண்டி
இதன்போது கலந்து கொண்டிருந்த திணைக்கள அதிகாரிகள் கருத்துக்களையும்,
ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
</p><p>


அதற்கிணங்க அனைத்து திரணைக்கள அதிகாரிகளும் தற்போது கழிவுகள் கொட்டப்படும்
இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின் அவற்றை முகாமை செய்வது
தொடர்பில் மிகக் குறுகிய காலத்திற்குள் தீர்க்கமான முடிவெடுக்கப்பட்டு
அதற்குரிய திட்டம் தயாரிக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச
சபைக்கு வழங்குவது என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5150e81-47ab-41c5-a071-297765dbba43/26-6a7af037b9bca.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/907390a8-802f-437a-8ddf-f27a48ee3e60/26-6a7af038922b9.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T09:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்ச இரதமேறி வீதியுலா வந்த மாவைக் கந்தன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maavaikandhan-pancha-ratham-1786434548"></link>
            <id>https://tamilwin.com/article/maavaikandhan-pancha-ratham-1786434548</id>
            <summary type="text">மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம்(11.08.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்பத்தில் முருகப்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம்(11.08.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது.
</p><p>
ஆரம்பத்தில் முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை
வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன.</p><h2>நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி</h2><p> அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான்
பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51d8a6d9-8371-4c85-aa2a-ee34432e204c/26-6a7ad9685511a.webp' /></p><p>
இந்த திருக்காட்சியை காண்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து
மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து
முருகப் பெருமானை தரிசித்தனர்.</p><p>

அத்துடன் பக்தர்கள் காவடிகள், அங்கம் பிரதிஷ்டைகள், கற்பூரச் சட்டிகளை
எடுத்துவந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5d4f380-451d-4e9d-9715-ab0128021a2f/26-6a7ad969638ab.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9470c0fa-2a58-42ad-815d-c50083598ec2/26-6a7ad96a3edba.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0f1e3e-6699-4faa-85fc-c280d35e398e/26-6a7ad96b2078a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-11T09:16:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chargesheet-former-minister-rajitha-senaratne-1786438808"></link>
            <id>https://tamilwin.com/article/chargesheet-former-minister-rajitha-senaratne-1786438808</id>
            <summary type="text">முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஊழல் குற்றச்சாட்டு&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><h2>ஊழல் குற்றச்சாட்டு&nbsp;</h2><p>ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>ராஜித சேனாரத்ன, கடற்றொழில் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், கிரிந்த கடற்றொழில் துறைமுகத்தில் மணல் அகழும் பணியை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் குற்றம் சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T09:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் கொள்முதல் தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-decision-petrol-crude-oil-and-diesel-1786438225"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-decision-petrol-crude-oil-and-diesel-1786438225</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருள் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருள் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பெட்ரோல் 92 யு.என்.எல் (Petrol Octane 92 - UNL),மர்பான் வகை கச்சா எண்ணெய் மற்றும் டீசல்&nbsp; (0.05% M.S.) ஆகியவற்றை நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2>அமைச்சரவை ஒப்புதல்</h2><p> 

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து, வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி கொள்முதல் நடைமுறையின்படி ஏலங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39bb28d6-2e55-4104-bca7-461b1d6fef08/26-6a7ae55e97233.webp' /></p><p> 

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட ஏலங்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர் மட்ட நிலைக்கொள்முதல் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. </p><p>

அதன்படி, குறைந்த விலைக்கு ஏலம் கோரியவர்களுக்கு உரிய கொள்முதல்களை வழங்குவது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T09:03:37+00:00</updated>
        </entry>
    </feed>
