<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-16T12:13:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் போது நாமல் வெளியிட்ட விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-namal-said-while-leaving-the-court-1789551409"></link>
            <id>https://tamilwin.com/article/what-namal-said-while-leaving-the-court-1789551409</id>
            <summary type="text">அதிகாரிகளுக்கு பிரச்சினை வரும் என்பதால், உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரிகளுக்கு பிரச்சினை வரும் என்பதால், உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை&nbsp; பேருந்தில் திரும்பிச் செல்லும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொள்முதல் வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p>இதனையடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40a430a5-2c16-4b0b-8727-3bd36e538eed/26-6aaa69d81503e.webp' /></p><p>நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்துச் செல்லப்படும்போது ஊடகவியலாளர்கள்&nbsp; நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.</p><p>இதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச, “உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும், ஆனால், அதிகாரிகளுக்கு(சிறைக்கு அழைத்து வந்த அதிகாரிகள்) பிரச்சினை வரும் என்பதால் பதிலளிக்க முடியவில்லை” என தெரிவித்துச் சென்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T12:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரிலிய சவிய கணக்கு சர்ச்சை - ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லையாம்! மொட்டுக்கட்சி அம்பலப்படுத்திய உண்மை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-siriliya-case-1789558102"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-siriliya-case-1789558102</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி நடத்திச் சென்ற சிரிலிய சவிய அமைப்பின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி நடத்திச் சென்ற சிரிலிய சவிய அமைப்பின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் கொழும்பில் இன்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.</p><h2>சிரிலிய சவிய அமைப்பு</h2><p>
</p><p>
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p>

சர்ச்சைக்குரிய 'சிரிலிய சவிய' கணக்கில் உள்ள பணம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. அது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவாலோ அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராலோ பயன்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce045c5f-5334-48c3-9bd2-3e5257e84cf0/26-6aaa81a1c82e9.webp' /></p><p>
</p><p>
சர்ச்சைக்குட்படுத்தப்பட்ட பணம் இன்னும் கணக்கில் பாதுகாப்பாக இருக்கின்றது. இது தொடர்பாக அரசாங்கம் ஒரு தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றது.

ஸ்கேனரை வாங்குவதற்காகச் சேகரிக்கப்பட்ட இந்த சிரிலிய கணக்கிலிருந்து ஷிரந்தி ராஜபக்ச ஒரு ரூபாயைக் கூட தனது சொந்தப் பயன்பாட்டிற்கோ அல்லது வேறு எந்தப் பயன்பாட்டிற்கோ எடுக்கவில்லை. </p><p>மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாய் உட்பட, சேகரிக்கப்பட்ட அனைத்துப் பணமும் இன்றும் அந்தக் கணக்கில் பாதுகாப்பாக உள்ளது.</p><h2>ராஜபக்சகுடும்பத்தினர்&nbsp;</h2><p>&nbsp;''உதாரணமாக, கிராமக் கோயிலில் ஒரு கோபுரம் கட்டுவதற்காக நன்கொடையாளர்களிடமிருந்து சிறிது பணம் சேகரிக்கப்படுகிறது.</p><p> </p><p>ஆனால், யாராவது வந்து ஒரு கோபுரத்தைக் கட்டியவுடன், அந்தக் கோயிலில் சேகரிக்கப்பட்ட பணம் மீண்டும் நன்கொடையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை. அந்தப் பணம் கோயிலின் அறப்பணிகளுக்காக வைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.''</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0f7d80-070e-4575-aee2-75c1aef3145e/26-6aaa81a27f566.webp' /></p><p>

அதுபோலவே, நன்கொடையாளர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாததால், வசூலிக்கப்பட்ட இந்தப் பணம் புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஒரு வார்டைக் கட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்சஅதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை. </p><p>அந்தப் பணம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. ராஜபக்சகுடும்பத்தினர் இந்தப் பணத்தை உண்பதற்கோ குடிப்பதற்கோ எடுக்கவில்லை.</p><h2>&nbsp;ஷிரந்தி ராஜபக்ச&nbsp;</h2><p>
</p><p>
அதே போன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும் ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற ஊடக அறிக்கைகள் பொய்யானவையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c281d5-b311-4d6c-987c-c548e7e86512/26-6aaa81a337f3d.webp' /></p><p>
</p><p>சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றுவிட்டார் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. ஷிரந்தி ராஜபக்ச சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
</p><p>
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், முன்னாள் முதல் பெண்மணி தனது விமானத்தில் புறப்படுவதற்கு சில கணங்களுக்கு முன்புதான் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அவருக்கு எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வழங்கியது என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T11:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-found-wounds-in-kotmale-passes-away-1789558039"></link>
            <id>https://tamilwin.com/article/youth-found-wounds-in-kotmale-passes-away-1789558039</id>
            <summary type="text">கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

குறித்த இளைஞர் நேற்று (15) வெதமுல்ல சந்திக்கு அருகில், மதுபான விற்பனை நிலையத்தை அண்மித்த பகுதியில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.</p><p>அதனையடுத்து கொத்மலை 1990 அவசர நோயாளர் காவுவண்டி மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்தநிலையில், குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மருத்துவமனை பொலிஸார் இன்று (16) கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06196fc6-6e0b-4ce1-b4dc-523baf1b5726/26-6aaa811ddde68.webp' /></p><p>

வெததமுல்ல தோட்டம், ரம்பட பகுதி, லிலீஸ் லேன் பிரதேசத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயகிருஷ்ணா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T11:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/salary-issue-of-unprotected-level-crossing-staff-1789558164"></link>
            <id>https://tamilwin.com/article/salary-issue-of-unprotected-level-crossing-staff-1789558164</id>
            <summary type="text">பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு
கிடைக்காவிட்டால் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு
கிடைக்காவிட்டால் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கடந்த ஜனவரி மாதம் முதல் தொடருந்து திணைக்களத்தின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில், பல
தொழிலாளர்களுக்குச் சரியான முறையில் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
</p><p>
சேவை பாதுகாப்பு: கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுமக்களின் உயிரையும்
சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் ஈடுபட்டு வரும் சுமார் 1,000
ஊழியர்களின் பணிக்கான நிரந்தரத்தன்மை மற்றும் முறையான தினசரி சம்பளம் உறுதி
செய்யப்பட வேண்டும்.</p><p>

அதிகாரிகளின் அலட்சியம்: பிரச்சினை குறித்து தொடருந்து பொது முகவரிடமும்,
ஜனாதிபதி செயலகத்திலும் பலமுறை கடிதங்கள் அளித்தும் இதுவரை எந்தவித சாதகமான
பதிலும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் கிடைக்கவில்லை.:
</p><p>தங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து உடனடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
விடுக்காவிட்டால், பிற தொடருந்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து அடுத்த
மாதத்தின் முதல் வாரத்தில் நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடவுள்ளதாகச் சங்கம் எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-16T11:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பயணத் திகதி! ஷிரந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-s-foreign-trip-pre-scheduled-date-1789556372"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-s-foreign-trip-pre-scheduled-date-1789556372</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்ச முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்பட்ட சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் பயணமாக தீர்மானித்தார்&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்ச முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்பட்ட சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் பயணமாக தீர்மானித்தார்&nbsp; என்று பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். </p><p>

கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

ஷிரந்தி ராஜபக்ச, மருத்துவ ஆலோசனையில் அடிப்படையில் முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த சிகிச்சைக்காகவே வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாறாக எந்தவொரு விசாரணையையும் தவிர்ப்பதற்காக அல்ல.</p><h2>திடீரென கிடைத்த அறிவிப்பு&nbsp;</h2><p> </p><p>

அவர் விமான நிலையத்திற்கு வருகைத் தந்து, அங்கிருந்து புறப்படத் தயாரான நேரம் வரை எந்தவொரு விசாரணைக்குழுவும், அவருக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை. 

விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிய சந்தர்ப்பத்தில்தான் திடீரென அவருக்கு விசாரணைக்கான அழைப்புக் கிடைத்துள்ளது. </p><p>


இதற்கு முன்னர் அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் ஆணைக்குழுக்களின் முன் பிரசன்னமாகியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47a1f748-ad65-464f-9433-7cd7fe3d42fe/26-6aaa7bbc156f2.webp' /></p><p> </p><p>

விசாரணைகளைத் தவிர்த்தார், விசாரணைகளுக்கு இடையூறு செய்தார் என்ற எந்தவொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கவில்லை. </p><p>

ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, அவருக்கான தனியுரிமை என்பது மிகவும் முக்கியமானது. எனவே, அந்தத் தனியுரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.</p><p>
மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில், ஏற்கனவே திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த சிகிச்சையைப் பெறுவதற்காகவே அவர் வெளிநாடு செல்லத் தயாரானார் என்பது தெளிவானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 


 

</p>]]></content>
            <updated>2026-09-16T11:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி - மகன்கள் பெயரில் 180 மில்லியன் பெறுமதியான சொத்து சேர்த்த நபர்.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/180-million-properties-bathala-heen-mahattaya-1789556202"></link>
            <id>https://tamilwin.com/article/180-million-properties-bathala-heen-mahattaya-1789556202</id>
            <summary type="text">பெருந்தொகையான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பத்தல ஹீன்கடயா என அழைக்கப்படும் நபரால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் 180 மில்லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருந்தொகையான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பத்தல ஹீன்கடயா என அழைக்கப்படும் நபரால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் 180 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது. </p><p>சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><h2>பாரிய மோசடிகள்..&nbsp;</h2><p>
</p><p>
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், தம்புத்தேகம, கிராவல்வத்தை மற்றும் மிதெனிய ஆகிய பகுதிகளில் சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட காணிகள், கட்டடங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உட்பட எட்டு சொத்துக்களை இரண்டு வாரங்களுக்கு முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ea83f01-8bdf-4753-b074-39de6a1c8a52/26-6aaa7aafadf8a.webp' /></p><p>

மேலும், சந்தேகநபரின் இரண்டாவது மகனின் பெயரில் 35 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர ஜீப் வண்டி ஒன்றும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த மகனுக்கு எதிராக ஏற்கனவே போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளதுடன், சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தியே இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>அதற்கமைய, 2006ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், அந்த ஜீப் வண்டியும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T11:24:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் பரிதாபப் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-women-killed-train-accident-in-kalutara-1789554664"></link>
            <id>https://tamilwin.com/article/two-women-killed-train-accident-in-kalutara-1789554664</id>
            <summary type="text">களுத்துறை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில்
தாயும் அவரது உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில்
தாயும் அவரது உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த விபத்தானது இன்றையதினம்(16.9.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
அனுராதபுரம் புனித நகரத்தில் நடைபெறவுள்ள மத நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக
மதுகம பகுதியிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும்
உறவுக்கார மகள் ஆகியோர் களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்துக்கு அருகில்
வந்துள்ளனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
அனுராதபுரம் நோக்கிச் செல்லும் தொடருந்தில் ஏறுவதற்காக, தொடருந்து நிலையத்தின் வலது
பக்க நடைமேடைக்குச் செல்வதற்காக இவர்கள் தொடருந்து பாதையில் நடந்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0348c10b-75d1-4ebd-94ee-172ea9ad6d36/26-6aaa748d68a9a.webp' /></p><p>
</p><p>அப்போது மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்து மோதியதிலேயே
இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.</p><p>

இந்த விபத்தில் தாயும் உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
என்று களுத்துறை தொடருந்து நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>தொடருந்து பாதையின் வழியே கவனக்குறைவாக நடந்து சென்றமையே இத்தகைய விபத்துக்குக்
காரணம் எனக் கூறப்படுகின்றது.</p><p>

உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுத்துறை தெற்கு தொடருந்தில் நிலையத்தில்
வைக்கப்பட்டுள்ளன.அவற்றை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் களுத்துறை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae05eed4-6575-4974-ae58-323746f7c1df/26-6aaa7852ce03b.webp' /></p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:07:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக வெப்பநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/climate-change-in-sri-lanka-1789555024"></link>
            <id>https://tamilwin.com/article/climate-change-in-sri-lanka-1789555024</id>
            <summary type="text">தற்போதைக்கு நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் வெப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைக்கு நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் வெப்பநிலை அதிகரிப்பால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகளும் ஏற்படுவதாக மனநல வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
தொடர்ந்து அதிக வெப்பநிலைக்கு ஆட்படுவது கோபத்தை அதிகரிக்கிறது என்பதை மனநலம் குறித்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><h2>வெப்பமான காலநிலை</h2><p> </p><p>சாலையில் வாகனம் ஓட்டும்போது மற்றும் பாதசாரிகளாக நடந்து செல்லும்போது ஏற்படும் பல்வேறு மோதல்களில் அதீத கோபம் உண்டாகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மனநல வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f2a3a7-91fc-43e8-9e8c-042c1c3d9dce/26-6aaa748a89286.webp' /></p><p>
</p><p>
மேலும், வெப்பத்திற்கு ஆட்படுவதால் குழந்தைகளால் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் மற்றும் அவர்களின் நினைவாற்றல் குறையலாம் என்று மனநல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>அத்துடன், அதிக வெப்பநிலையானது குடும்பச் சண்டைகளையும், குடும்ப வன்முறையையும் கூட அதிகரிக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் பரிதாப நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pitiful-situation-for-shiranthi-rajapaksa-1789534564"></link>
            <id>https://tamilwin.com/article/pitiful-situation-for-shiranthi-rajapaksa-1789534564</id>
            <summary type="text">இலங்கையின் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, சமகால அரசாங்கத்தின் கீழ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதியாகி உள்ளது.

நோயினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, சமகால அரசாங்கத்தின் கீழ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதியாகி உள்ளது.
</p><p>
நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்ச இன்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகி உள்ளார். </p><p>

மேலதிக வைத்திய நடவடிக்கைக்காக இன்று அதிகாலை 1.30 மணியளவில் உறவினர் என தெரிவிக்கப்படும் பெண்ணுடன் அவர் சென்றுள்ளார்.</p><p> </p><h2><b>

ஷிரந்தியின்&nbsp;பரிதாப நிலை</b></h2><p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் செல்லும் பாதை ஊடாக பயணித்த ஷிரந்தி, தனது உடமைகளை தானே தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. </p><p>கடந்த ஆட்சிக்காலத்தின் தீவிர பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ வலம் வந்த ஷிரந்தியின் இன்றைய நிலை பரிதாபமாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8751322-2f45-49a4-bf3e-1fc16d53ba92/26-6aaa21e43b441.webp' />&nbsp;&nbsp;</p><p>

அதிகாரம் மற்றும் நிதி துஷ்பிரயோகங்களில் சிக்கியுள்ள ராஜபக்ச குடும்பம், தற்போது பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் குடும்பமாக சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறான நிலையில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக அழைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ச இன்றையதினம் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் சுற்றுலாப் பயணிகள் செய்த நெகிழ்ச்சி செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-tourists-respect-for-local-islamic-culture-1789553091"></link>
            <id>https://tamilwin.com/article/young-tourists-respect-for-local-islamic-culture-1789553091</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம் பொத்துவில், அருகம்பை பகுதிக்குச் சுற்றுலா வருகை தந்த
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுலாப் பயணிகள் இருவர், உள்ளூர்
இஸ்லாமிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம் பொத்துவில், அருகம்பை பகுதிக்குச் சுற்றுலா வருகை தந்த
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுலாப் பயணிகள் இருவர், உள்ளூர்
இஸ்லாமியக் கலாச்சாரத்தை மதித்து ஹிஜாப் ஆடை அணிந்து மகிழ்ந்த நெகிழ்ச்சியான
சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>

அருகம்பையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடல் பயண மேற்கொண்டு பொழுதைக் கழித்துள்ளனர்.</p><h2>நெகிழ்ச்சி சம்பவம்</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, இஸ்லாமியர் ஒருவர் வீட்டிற்கு விஜயம் செய்த அவர்கள், அவரது
குடும்பத்தினரின் உபசரிப்பிலும், விருந்தோம்பலில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea880de-a310-4eb6-8824-cf15def12b31/26-6aaa6d86a50a9.webp' /></p><p>
</p><p>
இதன்போது, பொத்துவில் மக்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும்
ஆச்சரியத்துடன் நோக்கிய அந்த இளம் பெண்கள், உள்ளூர் கலாச்சாரத்தின் மீதான
விருப்பத்தினால் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ‘ஹிஜாப்’ ஆடையைக் கேட்டு வாங்கி
அணிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துத் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து
கொண்டனர்.</p><p>

அருகம்பைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுபோக்குச்
சேவைகளை வழங்குவதுடன் மட்டுமன்றி, பிராந்தியத்தின் தனித்துவமான
கலாச்சாரத்தையும் நற்பண்புகளையும் அவர்களிடம் எடுத்துரைத்து நன்மதிப்பைப்
பெற்று வரும் இந்த செயற்பாடு அப்பகுதி மக்களிடையே பெரும்
பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:24:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச..! மீண்டும் நாடு திரும்புவது தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-details-on-shiranthi-summons-to-fcid-1789548655"></link>
            <id>https://tamilwin.com/article/police-details-on-shiranthi-summons-to-fcid-1789548655</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச செப்டெம்பர் 24 திகதி நிதி குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச செப்டெம்பர் 24 திகதி நிதி குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>ஷிரந்தி ராஜபக்ச இன்று காலை (16) சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்ற நிலையில், விமான நிலையத்தில் வைத்து அவருக்கு&nbsp; அழைப்பாணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>மீண்டும் நாடு திரும்பும்&nbsp;ஷிரந்தி </h2><p>இதற்கமைய, ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b11af81c-1e85-48cd-b1f0-f6e4449e3192/26-6aaa6cdcf055c.webp' /></p><p>ஷிரந்தி ராஜபக்சவுடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச்சென்றுள்ளதுடன், அவர் ஷிராந்தி ராஜபக்சவை சிங்கப்பூரில் சிகிச்சைக்காக பரிந்துரைத்த பின்னர், நாளை மறுநாள் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது.</p><p>பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சிறிலிய சவியா கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>வாக்குமூலம் அளிக்குமாறு&nbsp;அழைப்பாணை </h2><p>
அதன்படி, வாக்குமூலம் அளிப்பதற்காக செப்டெம்பர் 24 ஆம் திகதி தங்கல்லே கார்ல்டன் இல்லத்திற்கு வருமாறு ஷிரந்தி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.</p><p>ஷிரந்தி ராஜபக்ச தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூருக்கு புறப்படுவதற்காக சென்றிருந்தார்.</p><p>
இதன்போது, செப்டம்பர் 24 அன்று முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் விமான நிலையத்தில் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்கங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valikamam-north-resettlement-committee-1789551564"></link>
            <id>https://tamilwin.com/article/valikamam-north-resettlement-committee-1789551564</id>
            <summary type="text">தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு வலி. வடக்கு மீள்
குடியேற்ற குழு சங்கங்களை&amp;nbsp; அழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு வலி. வடக்கு மீள்
குடியேற்ற குழு சங்கங்களை&nbsp; அழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம்(பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ச.
சிறிபவானந்தராசா தலைமையில் நடைபெற்ற போது வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்க பிரதிநிதிகளை கூட்டங்களுக்கு
அழைப்பதில்லை என மயிலிட்டி மீள் குடியேற்ற சங்கம் ஒன்றின் பிரதிநிதி குற்றம்
சாட்டினார்.
</p><p>
அதற்கு , ஒருங்கிணைப்பு குழு தலைவர் , நீங்கள் வந்துள்ளீர்கள் தானே என கூறிய
போது , தான் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் வந்தேன் எனவும் , மீள்
குடியேற்ற குழுக்களை கூட்டங்களுக்கு திட்டமிட்டு புறக்கணிப்பதாக குற்றம்
சாட்டினார்.</p><h2>கூட்டத்திற்கு அழைப்பு</h2><p>அதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் , மீள்
குடியேற்ற குழுக்களை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் , அவர்கள் தமது காணிகளை
விடுவிக்க கோரி கூட்டத்தில் குரல் கொடுத்தால் அவர்களின் மைக்கை பறித்து ,
அவர்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
</p><p>
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மீள்குடியேற்ற
குழுக்களை கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f63c798a-1aaf-4af6-aacb-76668820c9f5/26-6aaa6c90e21ba.webp' /></p><p>&nbsp;அதனை அடுத்து எதிர்வரும் கூட்டங்களில் அவர்களை அழைப்பதாக ஒருங்கிணைப்பு குழு
தலைவர் ச. சிறிபவானந்தராசா உறுதி அளித்தார்.
</p><p>
அதேவேளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும்
வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில்
கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில்
இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள்
அழைக்கப்படவில்லை எனவும் எம்மை கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என கடந்த 11ஆம்
திகதி வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு சங்க பிரதிநிதிகள் தெல்லிப்பழை பிரதேச
செயலரிடம் மனு கையளித்திருந்த போதிலும் , இன்றைய கூட்டத்திற்கு&nbsp; அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:19:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் மணற்கொள்ளை.. ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pudhukudiyiruppu-sand-smuggling-raviharan-mp-1789551867"></link>
            <id>https://tamilwin.com/article/pudhukudiyiruppu-sand-smuggling-raviharan-mp-1789551867</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில்
சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள்
அதிகரித்துள்ளதாக&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில்
சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள்
அதிகரித்துள்ளதாக&nbsp; வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்&nbsp;சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (15.09.2026) இடம்பெற்றது.&nbsp;</p><p>இக்கூட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரால் வெளிப்படுத்தப்பட்டது.&nbsp;&nbsp;</p><h2>பாதுகாப்பற்ற நிலை..&nbsp;</h2><p>இதன்போது,&nbsp; கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், ”பொலிஸாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த
முடியாதெனில் எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுங்களைக் கையளித்தால் அவர்கள்
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6dbc9e4-6038-4993-83e4-65ce04d72937/26-6aaa67c0ae1d6.webp' /></p><p>தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள்
இருந்திருக்கவில்லை, நடுநிசியில் கூட பெண்கள் உலவக்கூடிய
நிலையிலிருந்தது, தற்போது அத்தகைய
நிலை இல்லை" என்றார்.&nbsp;</p><p>இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், "சட்டவிரோத மணல் அகழ்வென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய
பிரச்சினையாகவுள்ளது.</p><p>
விசுவமடு நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல் கெருடமடுவரைக்கும் சட்டவிரோத மணல்
அகழ்வு மிக அதிகளவில் இடம்பெற்று வருகின்றது.
</p><p>
அத்தகைய சில சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளை பொலிசார் கைதுசெய்தாலும்,
அதையும் தாண்டி அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள்
இடம்பெறுகின்றன” என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:58:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-trans-alus-adjourned-1789551482"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-trans-alus-adjourned-1789551482</id>
            <summary type="text">தனியார் நிறுவனமொன்றுக்கு 290 மில்லியன் ரூபா தொகையைச் செலுத்தாத குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் நிறுவனமொன்றுக்கு 290 மில்லியன் ரூபா தொகையைச் செலுத்தாத குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
செய்தித்தாள் அச்சிடுவதற்குத் தேவையான காகிதம் மற்றும் அட்டை இறக்குமதிக்காக கேசர லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 290 மில்லியன் தொகையைச் செலுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><h2>மீண்டும் விசாரணை</h2><p>
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பாக கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (16)வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக, இவ்வழக்கை 2027 மார்ச் 3 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ​​நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பாக, கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று(16) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c381b0-d975-47c3-9de8-ccb46231830c/26-6aaa6597a89e8.webp' /></p><p>
</p><p>&nbsp;டிரான் அலஸ் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து நீதிமன்றத்தில் சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சாட்சியங்களைச் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இச்சம்பவம் தொடர்பாக டிரான் அலஸ் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும், அவரது கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காக ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><h2>&nbsp;பிணையில் செல்ல அனுமதி</h2><p>
</p><p>
இந்தப் பரிவர்த்தனை ஒரு வணிகப் பரிவர்த்தனை என்றும், இது ஒரு குற்றவியல் வழக்கு அல்ல என்றும் தாங்கள் விசாரணை அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளதாகவும், ரிட் மனு எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூறியது.
</p><p>
அதே நேரம் டிரான் அலஸின் சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் ஒரு சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fc56975-cb16-4df8-aec2-bf5d4dfb253e/26-6aaa65985c1f6.webp' /></p><p>
குறித்த வழக்கு தொடர்பில் ஜனவரி 29 ம் திகதி குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, டிரான் அலஸை ஒரு சந்தேக நபராகப் பெயரிட்டு, வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டிருந்தது.
</p><p>
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சிலோன் செய்தித்தாள் நிறுவனத்தின் கணக்காளர் மற்றும் நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி பவானி வீதியினை விடுவிக்க பொலிஸாரை ஒத்துழைக்குமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-cooperate-releasing-thaiyiddy-bhavani-road-1789548677"></link>
            <id>https://tamilwin.com/article/police-cooperate-releasing-thaiyiddy-bhavani-road-1789548677</id>
            <summary type="text">தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு
பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் பிரதேச
சபையினருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு
பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் பிரதேச
சபையினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்&nbsp; நாடாளுமன்ற
உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா தலைமையில் நடைபெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை
உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கை எந்தளவில் தற்போது
காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி
எழுப்பினார்.</p><h2>வீதி விடுவிப்பு</h2><p>

அதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் , அது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட
குழு உருவாக்கப்பட்டு , அந்த குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பதில்
அளித்தார்.
</p><p>
அதன் போது, விகாரை அமைந்துள்ள பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச
சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும்
என்றும் , நீதிமன்றில் குறித்த வீதியை விடுவிக்குமாறு
கட்டளையிடப்பட்டுள்ள நிலையில் ஏன் காலதாமதம் என மீண்டும் அர்ச்சுனா இராமநாதன்
கேள்வி எழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eac39f3-b726-4f1b-b6ff-4fdff12bbd2a/26-6aaa5bf72fee5.webp' /></p><p>
</p><p>
அதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் , நீதிமன்ற கட்டளையை
நடைமுறைபப்டுத்த பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு பலாலி பொலிஸார்
ஒத்துழைக்கவில்லை எனில் , வடமாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர்
பொலிஸ் அதிகாரிகள் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட தரப்பினரை ஒன்றிணைத்து
கூட்டம் ஒன்றினை நடாத்தி , எவ்வாறு வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது என
தீர்மானிப்போம் என தெரிவித்தார்.</p><p>பொலிஸாரை அழைத்து கூட்டம் கூடுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா
இராமநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எதிர்ப்பு
தெரிவித்தனர்.</p><h2>நடவடிக்கை</h2><p>
</p><p>
பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை விடுவிக்குமாறு நீதிமன்றமும்
கட்டளையிட்டுள்ளது. அதனால் நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த பொலிஸார்
ஒத்துழைக்க வேண்டும். இங்கே வீதியினை விடுவிக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க
கூடாது என வழக்கு தொடர்ந்ததே பலாலி பொலிஸார் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d02328e-4326-4c43-a1fe-6aade7ad238d/26-6aaa5bf7df284.webp' /></p><p> </p><p>அதனால் , அவர்கள் நீதிமன்ற
கட்டளையை நடைமுறைப்படுத்த பின்னடிக்கலாம்.

ஆகவே வீதியினை விடுவிக்க நீதிமன்றம் வழங்கிய கட்டளையை பிரதேச சபை
நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி , அதனை பொலிஸ் உயர்
அதிகாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள் என
கோரினார்கள்.
</p><p>
அதனை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராசா , ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு
அனுப்பி வைக்குமாறு கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:17:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மல்வத்து அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahanayaka-theros-malwathu-asgiriya-chapters-1789547005"></link>
            <id>https://tamilwin.com/article/mahanayaka-theros-malwathu-asgiriya-chapters-1789547005</id>
            <summary type="text">சமூக ஊடகங்கள் மூலம் சில தரப்பினர் மேற்கொள்ளும் ஆதாரமற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்கள் மூலம் சில தரப்பினர் மேற்கொள்ளும் ஆதாரமற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறைக்கு உட்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய உபா மகா விகாரையின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
சமூக ஊடகங்களால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களிலிருந்து நாட்டின் சிறுவர் பரம்பரையைப் பாதுகாப்பதற்காக மதத் தலைவர்களின் தலையீட்டை எதிர்பார்த்து, தேசிய ஊடக அறக்கட்டளை 10 அம்ச முன்மொழிவை தயாரித்துள்ளது.</p><p> 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பான ஊடகத் தரநிலைகள் மற்றும் நெறிமுறை வழிகாட்டுதல்களை உருவாக்குவதன் அவசியத்தை சுட்டிக்காட்டும் இந்த முன்மொழிவு இரு மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.</p><h2>குழந்தைகளின் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
அதன்போதே மகாநாயக்க தேரர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர். அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர், கொரோனா காலத்தில் கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் நடைபெற்றதால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைகளில் கையடக்க தொலைபேசிகள் பரவலாகச் சென்றடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb61071f-9e3a-4194-a7d2-9c0e6e4f04e6/26-6aaa5713d17ac.webp' /></p><p>இணையம் மூலம் நல்லதை விட தீய விஷயங்களை அதிகம் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலைகள் கூட ஏற்பட்டுள்ளன. </p><p>சமூக ஊடக ஒழுங்குமுறை பற்றி பேசக்கூட பலர் அஞ்சும் பின்னணியில், தேசிய ஊடக அறக்கட்டளை இது குறித்து ஒரு உரையாடலை உருவாக்கியது பாராட்டிற்குரிய விடயமாகும் என்றும் குறிப்பிட்டார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர், சில பாடசாலை மாணவர்களின் வாழ்க்கையே கையடக்க தொலைபேசியாக மாறிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>குறிப்பிட்ட தாக்கம்&nbsp;</h2><p> </p><p>இளைஞர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களுக்கு அடிமையாவதற்கும் சமூக ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d894114-0718-4591-97e8-65d270825e1b/26-6aaa57149b142.webp' /></p><p>
</p><p>
மேலும், அஸ்கிரிய பீடத்தின் பிரதி மகாநாயக்கரும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர், சமூக ஊடக அடிமைத்தனம் பொது சமூகத்தையும், பிரிவேனா கல்வி கற்கும் சாமணேர தேரர்கள் உட்பட துறவற சமூகத்தையும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார். </p><p>ஒருவரின் நற்பெயரை ஒரு நொடியில் அழிக்க சமூக ஊடகங்கள் வல்லமை பெற்றுள்ளதால், இந்த அழிவிலிருந்து குழந்தைப் பரம்பரையை விடுவிக்க ஒரு முறையான திட்டம் தேவை என்று அவர் கூறினார்.
</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய ஊடக அறக்கட்டளையின் சிரேஷ்ட ஆலோசகரும், ஸ்ரீ பாலி வளாகத்தின் சிரேஷ்ட பேராசிரியருமான டியூடர் வீரசிங்க, மனிதநேயத்தை மேம்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p> ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், இலங்கையில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்லைன் (நிகழ்நிலைப் பாதுகாப்பு) சட்டம் தற்போது நடைமுறையில் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு மீண்டும் சிறை! சற்று முன்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245"></link>
            <id>https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245</id>
            <summary type="text">புதிய இணைப்புஎதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.மூன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமான கொள்முதல் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் சிறை அதிகாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p>குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dKwGvNWM_k4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.</p><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p>நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவினால் கொழும்பு காவல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்ட உத்தரவின்படி முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.</p><h2>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்&nbsp;</h2><p>
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/054778a2-ae82-4d7a-afef-871a00c2411c/26-6aaa09826bcb0.webp' /></p><p>இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>நீதிமன்றத்திற்கு அறிக்கை </h2><p>

இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.</p><p>

இதற்கமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T09:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள்! பெரும் ஆபத்தில் 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nbro-warns-of-new-risk-landslide-1789544826"></link>
            <id>https://tamilwin.com/article/nbro-warns-of-new-risk-landslide-1789544826</id>
            <summary type="text">‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.</p><p>இதன் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ,இதனை தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடனான வானிலை காரணமாகவே சில இடங்களில் இவ்வாறான ஆபத்து அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.</p><h2>பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்</h2><p>எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுவதுடன், நிலச்சரிவு அபாயம் காரணமாக தற்போது 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிக அபாயகரமான நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8293b79b-2e78-4fda-b4a3-5196768597ad/26-6aaa57513a636.webp' /></p><p>எனவே நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;'டித்வா' சம்பவத்துடன் மேலும் 16,793 குடும்பங்கள் அதிக அபாய நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிக அபாய நிலையில் உள்ளன.</p><p>எனவே வெளியிடப்படும் அனைத்து அறிவிப்புகளையும் கவனத்தில் கொள்ளுமாறும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T08:46:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் 8 மாடி இருதய சிகிச்சை வளாகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-storey-cardiac-treatment-complex-in-trinco-1789546379"></link>
            <id>https://tamilwin.com/article/8-storey-cardiac-treatment-complex-in-trinco-1789546379</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய
சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
ஜனாதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய
சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. </p><p>இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்புடன் இன்று (16) நடைபெற்றது.
</p><p>
திருகோணமலை மாவட்ட மக்களுக்கு நவீன மற்றும் தரமான இருதய சிகிச்சை சேவைகளை
மாவட்டத்திலேயே பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தப் புதிய இருதய சிகிச்சை
வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.</p><h2>இருதய சிகிச்சை சேவை</h2><p>
</p><p>
சுமார் 2,403 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த 8 மாடிக்
கட்டிடத் தொகுதியில், இருதய நோய்களைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும்
அவசரகால மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்குவதற்கான நவீன
வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7ccc78-4add-4c6f-8041-f758a7dfd2d4/26-6aaa4f8d89b5d.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), கெத் லேப் (Cath Lab),
ஆய்வகங்கள், எக்ஸ்-ரே சேவைகள், நூலகம் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட
பல்வேறு வசதிகள் இந்த வளாகத்தில் அமைக்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், பிராந்திய
மட்டத்தில் இருதய சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தும்
நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
</p><p>
இதன் மூலம் திருகோணமலை மாவட்டம் மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் தூரப்
பிரதேசங்களில் வாழும் மக்களும் தமது சொந்தப் பிரதேசத்திற்கு அண்மையிலேயே
உயர்தர இருதய சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T08:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ருமேஷ் தரங்கவின் சாம்பியன் ஈட்டிகள் சேதம்! விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/turkish-airlines-promises-action-and-compensation-1789545665"></link>
            <id>https://tamilwin.com/article/turkish-airlines-promises-action-and-compensation-1789545665</id>
            <summary type="text">துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர், உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர், உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து, அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
உலக தடகளத்தின் Ultimate Championship போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இலங்கை வீரர் ருமேஷ் தரங்க, நாடு திரும்பியபோது அவரது விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தமை தொடர்பில் எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம்</h2><p>
</p><p>
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் தகவலின்படி, நேற்று (15) சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac13ff06-1d51-4225-bc54-c08595d2bda6/26-6aaa4eedc7835.webp' /></p><p>

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற கேணல் ரஞ்சித் ராஜசிங்க மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
</p><p>
இதன்போது, ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் துருக்கி ஏர்லைன்ஸ் பிரதிநிதிகள் தமது வருத்தத்தைத் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் நிறுவன ரீதியான விசாரணைகளை முன்னெடுக்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;இழப்பீடு வழங்க நடவடிக்கை</h2><p>
</p><p>
சேதமடைந்த உபகரணங்களுக்கான இழப்பை முறையாக மதிப்பீடு செய்து, வீரருக்கு ஏற்பட்ட இழப்புக்கு விரைவாக இழப்பீடு வழங்குவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d80700-a170-4568-ac83-128c5745ffcb/26-6aaa4eee81710.webp' /></p><p>
</p><p>உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், சர்வதேச போட்டிகளில் வெற்றிகளைப் பெறவும் ருமேஷ் தரங்க பயன்படுத்திய ஈட்டிகள் சிலவும் போக்குவரத்தின்போது சேதமடைந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

பல சர்வதேச பட்டங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னர் அவர் அண்மையில் இலங்கை திரும்பியிருந்தார். </p><p>அவரது இந்த வெற்றிகள் எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக தடகளப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் வெற்றி வாய்ப்புகள் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T08:10:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இல்லையா: விமல் வீரவன்ச கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vasantha-samarasinghe-mp-court-case-wimal-1789544254"></link>
            <id>https://tamilwin.com/article/vasantha-samarasinghe-mp-court-case-wimal-1789544254</id>
            <summary type="text">எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் எல்லோரும் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்றால் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நிலை என்ன என்று விமல் வீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் எல்லோரும் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்றால் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நிலை என்ன என்று விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கேள்வியொன்றை முன்வைத்துள்ளார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டுகின்றது.</p><h2>விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
அரசாங்கத்தின் பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் அமைச்சர் வசந்த சமரசிங்க நின்றார். அவ்வாறெனில் அமைச்சர் வசந்த சமரசிங்க பிணையில் இருப்பவரா அல்லது சந்தேகத்திற்குரியவரா என்ற கேள்வி எழுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9601749-fd36-4007-af79-16131d1262f2/26-6aaa496d7502b.webp' /></p><p>
</p><p>
தங்களுக்கு சவால் விடுக்கக்கூடியவர்களைப் பல்வேறு சம்பவங்களில் சிக்கவைத்து சிறையிலடைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
</p><p>
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் 'கிரிப்டோகரன்சி சொத்துக்கள்' மற்றும் 'மூன்று மாடி வீடுகள்' குறித்து, அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கமே விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றும் விமல் வீரவன்ச தொடர்ந்தும் குறிப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழத்தை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருக்க வேண்டியவர்..! மகிந்தவின் சகா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-must-praise-archchuna-mp-says-udaya-1789544027"></link>
            <id>https://tamilwin.com/article/we-must-praise-archchuna-mp-says-udaya-1789544027</id>
            <summary type="text">தமிழீழத்தை எதிர்க்கும் இராமநாதன் அர்ச்சுனா போன்றவர்கள் தமது மேடைகளில் கட்டாயம் இருக்க வேண்டிய நபர் என முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழத்தை எதிர்க்கும் இராமநாதன் அர்ச்சுனா போன்றவர்கள் தமது மேடைகளில் கட்டாயம் இருக்க வேண்டிய நபர் என முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.</p><p>தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த ஒருவர் எனவும் தற்பொழுது தமிழ் ஈழம் அமைக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் அனுராதபுரம் மேடையில் அர்ச்சுனா கூறியதாக கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அனுராதபுரம் மேடையில் அர்ச்சுனா</h2><p>எதிர்காலத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அர்ச்சுனா கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322367ae-9571-4c67-9ed2-40fea5e4cd9a/26-6aaa465d3814f.webp' /></p><p>தமிழீழத்தை ஆதரித்த, பிரிவினைவாதத்தை விரும்பிய வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எமது மேடையில் ஏறி தொடர்ந்தும் தமிழீழத்திற்காக குரல் கொடுக்கப் போவதில்லை என கூறுகின்றார் என்றால் அவரை நாம் மேடையில் வைத்துக் கொள்ளத்தான் வேண்டும் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.</p><p>
குறிப்பாக தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அர்ச்சுனா கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இவ்வாறான நபர்களை எமது மேடையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்களை பாராட்ட வேண்டும் எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You may Like this..</i></b></p><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Vr_yvoKPUVk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-16T07:34:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் நிதியுதவி! வடக்கு ஆளுநரின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-hospital-financial-india-north-1789542676"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-hospital-financial-india-north-1789542676</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற
உணர்வுடன் இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறிக்
கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற
உணர்வுடன் இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறிக்
கொண்டிருக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்&nbsp; தெரிவித்தார்.</p><p>மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா
நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்
பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16.09.2026) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபா நன்கொடை உதவியுடன் உருவாகவுள்ள இந்தப்
பிரிவு, அவசர நிலைகளில் எமது மக்களுக்கு விரைவானதும் ஒருங்கிணைந்ததுமான
மருத்துவ சேவையை வழங்குவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.</p><h2>நிதியுதவி</h2><p> மன்னார் மாவட்ட
மக்களின் சார்பில், இந்தப் பெறுமதியான உதவிக்காக இந்திய மக்களுக்கும், இந்திய
அரசாங்கத்துக்கும், இந்தியப் பிரதமர் மேன்மைதங்கிய நரேந்திர மோடிக்கும், இங்கு பிரதி நிதித்துவப்படுத்தும் இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மன்னார் மாவட்டத்தின் சுகாதாரத் தேவைகளிலும் இதே அணுகுமுறை காணப்படுகிறது.
ஜனாதிபதி தலைமையின் கீழும், சுகாதார அமைச்சர்&nbsp; நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்களிப்புடனும், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின்
மேம்பாட்டுக்காக நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993f0fb0-48ed-426b-9ac0-2d632827d383/26-6aaa44aa27f72.webp' /></p><p>மன்னார் மாவட்டத்தின் சுகாதாரத் துறையை இன்னும் வலுப்படுத்துவதில் நாம்
அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம். </p><p>இன்று நடுகை செய்யப்படும் இந்த
அடிக்கல் விரைவில் ஒரு நவீன மருத்துவக் கட்டமைப்பாக எழுந்து, ஆயிரக்கணக்கான
எமது மக்களின் உயிருக்கும் நலனுக்கும் பாதுகாப்பாக அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>புதிய கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப்
பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி.
ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய
மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.</p><p> </p>]]></content>
            <updated>2026-09-16T07:26:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-s-medical-report-submitted-to-court-1789542137"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-s-medical-report-submitted-to-court-1789542137</id>
            <summary type="text">தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பான சுரேஷ் சலேவுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>
</p><p>இதற்கு முன்னரான வழக்கு விசாரணையின் போது கடந்த நூறு நாட்களாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d701d964-f5e2-449f-b975-28e5c9a6b911/26-6aaa4434d581b.webp' /></p><p>

எனினும் நேற்றைய வழக்கு விசாரணையின் போது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.</p><p>இதனைக்கருத்திற் கொண்ட நீதிபதி பசன் அமரசேன, மருத்துவ அறிக்கைகள் தொடர்பான விபரங்களை வழங்குவதற்காக 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அறிவித்தல் விடுத்ததுடன், வழக்கு விசாரணையை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.</p><p>
இதற்கிடையே நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கை பிற்பகல் சுமார் 3:15 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p></p><p><br><br><b><u>You May Like This..<br><br><br></u></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AKM1-zC4npI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><u><br></u></b></p>]]></content>
            <updated>2026-09-16T07:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-johnston-adjourned-1789542545"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-johnston-adjourned-1789542545</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 28 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது, சொகுசு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 28 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது, சொகுசு வாகனமொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><h2>இறுதி முறையாக விசாரணை</h2><p>
</p><p>
அதன்போது கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, குறித்த வழக்கை ஒக்டோபர் 28 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
</p><p>
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/873b380b-1273-4807-a7a4-336b2055fafe/26-6aaa42c5a9288.webp' /></p><p>

சந்தேக நபருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இது மோட்டார் வாகனங்கள் அவசரச் சட்டத்தின் கீழ் வரும் வழக்கு என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், இந்த வழக்கு ஒக்டோபர் 28 அன்று இறுதி முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:18:34+00:00</updated>
        </entry>
    </feed>
