<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-24T00:59:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தக் கறையுடன் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம்.. சீன நாட்டவர் படுகொலையில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chinese-kidnaped-killed-one-jeep-found-police-1784850284"></link>
            <id>https://tamilwin.com/article/chinese-kidnaped-killed-one-jeep-found-police-1784850284</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் ஒரு சீன நாட்டவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு ஜீப், பாதுக்க பகுதியில் கைவிடப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் ஒரு சீன நாட்டவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு ஜீப், பாதுக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

பாதுக்கவில் உள்ள பஹால போப் சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனம், கண்டெடுக்கப்பட்டபோது பின்னோக்கிச் செல்லும் கியரில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மீட்கப்பட்ட ஜீப்பின் உள்ளே, பல இரத்தக் கறைகள் காணப்பட்ட நிலையில், தற்போது அந்த வாகனத்தில் கைரேகை சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தப்பியோட்டம்..</h2><p>

குறித்த ஜீப்பில் வந்த மூன்று சீன நாட்டவர்கள், ஒரு முச்சக்கர வண்டியில் கொழும்புப்பிட்டிய நோக்கி தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f49f00d-724d-448c-8428-4773dec79216/26-6a62a90d954e0.webp' /></p><p>
</p><p>
தப்பிச் சென்ற மூன்று சீன நாட்டவர்களில் இருவர் நேற்று (23) கட்டுநாயக்க விமான நிலையம் அருகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சந்தேக நபர்களை கொழும்புப்பிட்டியவுக்கு ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டு, கொழும்புப்பிட்டிய பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.</p><p>

இந்த மோதல் மற்றும் கடத்தலில் பாதிக்கப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T00:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு உதவ சஜித்திடம் ரணில் முன்வைக்கும் கோரிக்கை.. உருவாகும் புதியக் குழு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-wickremesinghe-sajith-premadasa-npp-govt-1784851515"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-wickremesinghe-sajith-premadasa-npp-govt-1784851515</id>
            <summary type="text">நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதன் மூலம் ஆராயலாம் என்று முன்னாள் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பதன் மூலம் ஆராயலாம் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
நேற்றையதினம் (23) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இடம்பெற்ற கூட்டத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>1.1 மில்லி<span style="color: inherit; font-size: 1.75rem;">யன் வழக்குகள்..&nbsp;</span></h2><p>இதன்போது, "நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை முன்வைத்து, அதை அடுத்த சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் நான் கூறுகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a363c389-c6bd-4813-b225-ac4bd63bab7e/26-6a62ad612508b.webp' /></p><p> இந்த நாட்டில் உள்ள இந்த 1.1 மில்லியன் வழக்குகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்கவும். </p><p>இது பிரித்தானியாவில் எப்படி நடந்தது, மற்ற நாடுகளில் எப்படி நடந்தது, நமக்கு ஒரு டிஜிட்டல் முறை தேவையா, அதை இன்றோ நாளையோ உடனடியாகச் செய்தால், திங்கட்கிழமை ஒப்படைக்கலாம்" என்று அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T00:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் டெங்கு பரிசோதனைக்காக சென்ற அதிகாரிகளிடம் சிக்கிய துப்பாக்கி - பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-recoverd-by-police-dengue-searching-1784848679"></link>
            <id>https://tamilwin.com/article/gun-recoverd-by-police-dengue-searching-1784848679</id>
            <summary type="text">பத்தரமுல்லலையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட சோதனை மற்றும் கள ஆய்வின்போது துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பத்தரமுல்லலையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட சோதனை மற்றும் கள ஆய்வின்போது துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. </p><p>தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்து பத்தரமுல்லை, பெலவத்தவில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, ​​அசுத்தமான நிலையில் இருந்த ஒரு வீட்டில், உயிருள்ள கொசுப் புழுக்களுடன் ஒரு செயல்படும் துப்பாக்கியையும் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
</p><p>
இந்த சோதனை நடவடிக்கையானது, பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார ஆய்வாளர்களால், பொலிசார், இராணுவம், விமானப்படை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>அதிகாரிகளுடன் வாக்குவாதம்..&nbsp;</h2><p>
</p><p>
அதிக எண்ணிக்கையிலான நாய்களுடன் மிகவும் அசுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பொலிசார் அதனைப் பறிமுதல் செய்து, அந்த வீட்டின் உரிமையாளரான ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21791583-7c5e-41e7-8074-5dd3b4632fdd/26-6a62a3dde1404.webp' /></p><p>
</p><p>
மேலும், உயிருள்ள கொசுப் புழுக்கள் இருந்த மற்றொரு வளாகத்தை ஆய்வு செய்தபோது, ​​அதன் உரிமையாளர் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
கொசுப்புழுக்கள் உள்ள இடங்களைப் பராமரித்து வந்த 13 நபர்கள் மீது கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை உடனடியாக அழிக்குமாறும், கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தேவையான உதவியை வழங்குமாறும் சுகாதாரத் துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T23:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் கறுப்பு ஜீலை நினைவேந்தல் - போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/83-black-july-protest-in-london-for-tamils-1784845487"></link>
            <id>https://tamilwin.com/article/83-black-july-protest-in-london-for-tamils-1784845487</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில்
உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை
நினைவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில்
உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை
நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு
போராட்டம்&nbsp;லண்டனில் முன்னெடுக்கப்பட்டன.&nbsp;</p><p>நேற்று (23.07.2026) லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம்
(TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>பலரின் பங்கேற்பு&nbsp;</h2><p>
1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி இலங்கையில் தமிழர்கள் மீது
மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர்
மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68607015-7092-4b7b-9bd9-769ab592202c/26-6a6295d3b5bf0.webp' /></p><p>
</p><p>
குறித்த போராட்டத்தில் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழதமிழ்மக்கள், மனித உரிமை
செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்
இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.&nbsp;</p><p>அத்துடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும்
பதாகைகளை ஏந்தி,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும்
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தனர்.&nbsp;</p><p><b>மேலதிக தகவல் -&nbsp;சண்முகம் தவசீலன்
</b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T22:29:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவை காப்பாற்றுவாரா நாமல்..! அடுத்தடுத்து காத்திருக்கும் அதிர்ச்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-namal-as-lawyer-fcid-1784838013"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-namal-as-lawyer-fcid-1784838013</id>
            <summary type="text">மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்னிலையாகினார்.&amp;nbsp;ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்னிலையாகினார்.&nbsp;</p><p>ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணைக்கே அவர் முன்னிலையாகினார்.&nbsp;</p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், பல முக்கிய உயர் பதவியில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக ராஜபக்சக்கள் தொடர்பில்&nbsp;ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.</p><p>இந்நிலையிலேயே,&nbsp;பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி கோட்டாபய மனு தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b1i-2afGQoM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T21:55:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணை பாகங்களை அனுப்பிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-sent-missile-parts-to-yemen-s-houthi-rebels-1784840889"></link>
            <id>https://tamilwin.com/article/iran-sent-missile-parts-to-yemen-s-houthi-rebels-1784840889</id>
            <summary type="text">ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவ, ஈரான் தன் நாட்டின்
&#039;இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை&#039; தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் மற்றும்
ஏவுகணை-டிரோன் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவ, ஈரான் தன் நாட்டின்
'இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை' தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் மற்றும்
ஏவுகணை-டிரோன் பாகங்களை இரகசிய விமானம் மூலம் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள்
வெளியாகியுள்ளன.</p><p>கடந்த ஜூலை 13 அன்று ஈரானின் 'மஹான் ஏர்' நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம்
ஒன்று தெஹ்ரானில் இருந்து ஏமன் நோக்கிக் கிளம்பியது.
</p><p>
இதில் 10 முதல் 21 வரையிலான ஐ.ஆர்.ஜி.சி இராணுவத் தளபதிகள், நிபுணர்கள்
மற்றும் குறுகிய, நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் உதிரிப்பாகங்கள்
கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஏமன் படைகள் தாக்குதல்&nbsp;</h2><p>
</p><p>
முதலில் ஏமன் தலைநகர் சனாவுக்குச் செல்லவிருந்த இந்த விமானம், சனா விமான
நிலையத்தின் மீது சவூதி ஆதரவு ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியதால், ஹூதிகளின்
கட்டுப்பாட்டில் உள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹோடைடாவிற்கு திருப்பி
விடப்பட்டது.</p><p>

ஹூதிகளின் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்காக விமானத்தில் தங்கமும் கொண்டு
செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b353790-366d-47a7-8d49-0fb5ec220edf/26-6a62849bac205.webp' /></p><p>

தளபதிகள் ஏமன் வந்தடைந்த சில நாட்களில், செங்கடல் பகுதியில் சவூதி
அரேபியாவிற்கு எதிராகக் கடல்சார் முற்றுகையை ஹூதி அமைப்பு அறிவித்தது.</p><p></p><h2>பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், வியாழக்கிழமை அன்று சவூதியின் இரு மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்
மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அறிவித்துள்ளனர்.
</p><p>
ஏமன் தகவல் தொடர்பு அமைச்சர் முஅம்மர் அல்-இர்யானி கருத்து:

"ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ பலத்தைப் பெருக்கவும், செங்கடல் மற்றும்
பாப் அல்-மந்தேப் ஜலசந்தியில் சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
ஏற்படுத்தவுமே ஈரானியத் தளபதிகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824f7fb8-002d-42e5-9d0e-81956abb7e1a/26-6a62849c5b688.webp' /></p><p>"

ஈரான் வழக்கம்போல் ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இருப்பினும், இந்த புதிய நடவடிக்கை சவூதி அரேபியா மற்றும் ஹூதி அமைப்பினரிடையே
நான்கு ஆண்டுகளாக நிலவி வந்த அமைதியை சீர்குலைத்து, உலகளாவிய மசகு எண்ணெய்
விநியோகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T21:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அனுசரணையில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் - நீதி கிடைக்க கொஞ்சம் காலம் செல்லும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-chemmani-npp-government-1784825970"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-chemmani-npp-government-1784825970</id>
            <summary type="text">தமிழின வரலாற்றில் முந்தைய அரச கட்டமைப்பு ரீதியாகவும் நடந்தேறிய அநீதிகளும் வன்முறைகளும் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல. தலைமுறை தலைமுறையாகச் சுமக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின வரலாற்றில் முந்தைய அரச கட்டமைப்பு ரீதியாகவும் நடந்தேறிய அநீதிகளும் வன்முறைகளும் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல.</p><p> தலைமுறை தலைமுறையாகச் சுமக்கப்படும் இந்த வலியும் இழப்பும், நீதிக்கான எதிர்பார்ப்பை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.</p><p>வரலாற்று ரீதியான இந்த நீதிக்கான பயணத்தில், சர்வதேச அமைப்புகளின் பங்கு, வரலாற்று நிகழ்வுகளின் ஆவணப்படுத்தல் அல்லது அரசியல் தீர்வுகள் குறித்து தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>இந்நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையால் தான் இன்னமும் லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்த வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் உட்பட பல தகவல்கள் குறித்து கலந்துரையாடுகின்றது நேருக்கு நேர் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PuqfCeSztBs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T21:12:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு வழக்கில் அதிரடி திருப்பம்! சுரேஷ் சலே முன்வைத்த முக்கிய வாதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-arrested-cid-easter-attack-1784832224"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-arrested-cid-easter-attack-1784832224</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் சுரேஷ் சலே இந்தியாவில் இருந்ததாகவும் அதனால் அவர் தாக்குதலை திட்டமிட்டு நடாத்தினார் என்பது சாத்தியமற்ற வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் சுரேஷ் சலே இந்தியாவில் இருந்ததாகவும் அதனால் அவர் தாக்குதலை திட்டமிட்டு நடாத்தினார் என்பது சாத்தியமற்ற விடயமாகும் என சட்டத்தரணிகள் வாதித்துள்ளனர்.</p><p>அத்தோடு, பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகளை முன்வைத்ததன் பின்னர் அரசியல் தலையீட்டின் காரணமாக சுரேஷ் சலே தனது பதவியிலிருந்து மாற்றப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டதாக&nbsp;சட்டத்தரணிகள் வாதங்களில் தெரிவிக்கின்றனர்.</p><p>மேலும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் மற்றும் பிற அமைப்புக்களை இணைக்கும் திட்டம் ஒன்றை சுரேஷ் சலே முன்வைத்ததாகவும் ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.</p><p>பிரான்ஸில் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பெறச் சென்ற சிஐடி அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து சுரேஷ் சலே தரப்பு கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lliAp_CzpKc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T19:31:02+00:00</updated>
        </entry>
    </feed>
