<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-30T07:30:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[GovPay மூலம் பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-through-fake-govpay-websites-1785391505"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-through-fake-govpay-websites-1785391505</id>
            <summary type="text">உத்தியோகபூர்வ GovPay அமைப்பை ஒத்த போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றிப் பணமோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தியோகபூர்வ GovPay அமைப்பை ஒத்த போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றிப் பணமோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
சாரதிகள் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும்போது பொலிஸாரால் வழங்கப்படும் வீதி அபராதப் பத்திரங்களுக்கான தொகையை GovPay மூலம் செலுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, போலி இணையதள முகவரிகளை உருவாக்கி மோசடி கும்பல்கள் பணத்தைக் கொள்ளையடித்து வருவது பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h2>போலியான குறுஞ்செய்திகள்&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாகக் கடந்த சில நாட்களாக, 'இலங்கை பொலிஸ்' எனும் பெயரில் வேகக்கட்டுப்பாட்டை மீறியமை உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி, அபராதத்தைச் செலுத்துமாறு போலியான குறுஞ்செய்திகள் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பாக பொலிஸாரின் அறிவிப்பில், இலங்கை பொலிஸார் வீதிப் போக்குவரத்து விதிமீறல்களின் போது, சம்பந்தப்பட்ட நபருக்குச் சம்பவ இடத்திலேயே தவறைச் சுட்டிக்காட்டி அபராதப் பத்திரத்தை வழங்குவர் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வர். அதுவே தற்போதைய நடைமுறையாகும்.</p><p>அதேபோன்று, கண்காணிப்பு கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும் கூட, குறுஞ்செய்தி மூலம் வங்கி கணக்கு விபரங்களைக் கோரும் நடைமுறை பொலிஸாரிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இல்லை என்றும், எனவே பொதுமக்கள் இதுபோன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59f320d1-9a3d-4ce5-833f-8602bd43a13b/26-6a6afb652e887.webp' />&nbsp; &nbsp;</p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
இவ்வாறான போலி இணைப்புக்களைப் பயன்படுத்திப் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்துள்ள பொலிஸார், ஏற்கனவே இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

</p><p>GovPay என்பது உங்களது அதிகாரப்பூர்வ வங்கி செயலிகள் அல்லது நிதித் தொழில்நுட்ப செயலிகள் மூலமாக மட்டுமே இயங்கும் ஒரு கட்டணச் சேவையாகும்.

குறுஞ்செய்தி அல்லது பிற உத்தியோகபூர்வமற்ற வழிகளில் வரும் எந்தவொரு கட்டண இணைப்புகளையும் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T07:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணிக்கு சர்வதேச நீதி வேண்டும்..! அமைதி வழிப் போராட்டத்தில் குதித்த அருட்தந்தையர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-jaffna-demanding-justice-in-chemmani-1785395354"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-jaffna-demanding-justice-in-chemmani-1785395354</id>
            <summary type="text">செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, இன்று(30.07.2026) காலை அரியாலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(30.07.2026) காலை அரியாலையில் இடம்பெற்றுள்ளது. </p><p>

யாழ் மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ அருட்தந்தையர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது, அதிகாலை புனித யூதாதேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக நடைபெற்றுள்ளது.</p><p></p><p>
</p><h2>
அவசர கோரிக்கை</h2><p>

இதன்போது “மனித மாண்பை மதிப்போம் உண்மையை நிலை நாட்டுவோம்” “செம்மணிக்கு சர்வதேச நீதி வேண்டும்”, “உலகமே செம்மணியை மறந்து விடாதே!” உள்ளிட்ட கோஷங்களை அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு அமைதி வழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df5a3f71-3b28-4e04-b390-50fbd205b884/26-6a6af98597918.webp' /></p><p>அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச நீதியை வலியுறுத்த வேண்டும் என்றும் யாழ் மறை மாவட்டத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e845866-4cde-4149-afec-8b5fd90194b6/26-6a6af9869cdb2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/533bc88b-ca69-4b25-8d38-f55457a0087d/26-6a6af987ab5aa.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7988fc9a-52eb-4e67-b505-7e68466722df/26-6a6af9888675e.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T07:18:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-attempts-suicide-anuradhapura-1785395099"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-attempts-suicide-anuradhapura-1785395099</id>
            <summary type="text">ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழிப்பறையில் தவறான மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழிப்பறையில் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முயன்றுள்ளார்.</p><p>திறப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், கவலைக்கிடமான நிலையில் தற்போதைக்கு அநுராதபுர பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>இந்தநிலையில், அவர் சிறைச்சாலைக் கழிப்பறையில் துணித் துண்டுகளால் செய்யப்பட்ட கயிற்றின் உதவியுடன் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
</p><p>
அப்போது அங்கிருந்த மற்ற கைதிகள், இந்தச் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a61325f3-3f43-4b8c-852d-143460619c89/26-6a6af9f640ee7.webp' /></p><p> உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், பின்னர் அந்த கைதியை மீட்டு சிகிச்சைக்காக அநுராதபுர பொது மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர்.</p><p>
அவர் தவறான முடிவெடுக்க முயன்றதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அநுராதபுர பொலிசார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T07:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி - மக்களின் கொந்தளிப்பால் வன்முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-kills-2-youngsters-in-negombo-1785393511"></link>
            <id>https://tamilwin.com/article/accident-kills-2-youngsters-in-negombo-1785393511</id>
            <summary type="text">நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன், வாகனம் ஒன்று தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. </p><p>

கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சம்பவித்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p> </p><h2><b>இரண்டு இளைஞர்கள் பலி</b></h2><p>போட்டிப் போட்டுக்கொண்டு அதிக வேகத்தில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வாகனம் ஒன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c66c1a27-0969-45d0-a549-b8514713d31b/26-6a6af4fe37779.webp' /></p><p>நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திச் சென்ற இரண்டு இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். </p><p>விபத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராமவாசிகள் வாகனத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதனையடுத்து கட்டான பொலிஸ் நிலைய அதிகாரிகளும் நீர்கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும்&nbsp;சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.</p><p>வாகனத்தின் தீயை கட்டுப்படுத்தியதுடன், வன்முறை கட்டுப்படுத்தவும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-07-30T06:53:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-maid-death-case-latest-info-revealed-1785388801"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-maid-death-case-latest-info-revealed-1785388801</id>
            <summary type="text">கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. </p><p>

கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் சுவசெரிய முதலுதவி அதிகாரி அஸலி உபேக்ஷா நேற்று சாட்சியமளித்தார்.</p><p> மேலதிக நீதவான் லிலான் வருசூவிதாரன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.</p><p></p><p>
</p><h2><b>
சிறுமியின் மர்ம மரணம்</b></h2><p>“கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறுமியைத் தேடி அந்த வீட்டின் கராஜ் பகுதியினூடாக நுழைந்தேன். அங்கே படிகளில் சிறுமி ஒருவர் இருத்தப்பட்டிருந்தார். அவர் மீது படுக்கை விரிப்பு ஒன்று போர்த்தப்பட்டிருந்தது.

அத்துடன், சிறுமியின் உடலில் ஆடைகள் இருக்கவில்லை. </p><p>அந்த நேரத்தில் எரியும் ஒரு வாசனை உணரப்பட்டது. அது, எரியும் போது தோலில் இருந்து வெளிவரும் வாசனையாகும். எனினும் அது எவ்வகையான வாசனை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd0871e6-1df7-4dbf-a4e5-c4bd00c5dbaf/26-6a6aec218e1b9.webp' />&nbsp;&nbsp;</p><p>

கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதை என்னால் அடையாளம் காண முடிந்தது. சிறுமி என்னிடம் தண்ணீர் கேட்டார். அதற்கு மேல் வேறு எதையும் அவர் என்னிடம் கூறவில்லை.</p><p> உடனடியாக சிறுமியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமி இறந்த பின்னரே பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்.
</p><h2><b>
பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் </b></h2><p>சுவசரிய அவசர சேவை தொலைபேசி இலக்கமான 119 க்கு இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆரம்ப அழைப்புக்குப் பதிலளிக்கும் போது தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை உடனடியாகக் குளிப்பாட்டுவது உள்ளிட்ட அடிப்படை முதலுதவிகள் குறித்து அறிவுறுத்தினோம். </p><p>இருந்த போதிலும், நாங்கள் அங்கே சென்றடையும் போது குறித்த தரப்பினரால் அவை பின்பற்றப்பட்டிருக்கவில்லை.
</p><p>
மேலும், இந்த வழக்கில் சாட்சியமளிப்பது தொடர்பில் பொலிஸார் எங்களுக்கு எந்தவிதமான முறையற்ற அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b996e3c-5ff3-48a9-9558-7a2f9ac1669b/26-6a6af4af733ba.webp' />&nbsp;&nbsp;</p><p>
சம்பவம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டில் எரிவாயு காரணமாக தீப்பற்றிய ஒருவர் வீட்டில் உள்ளதாக சுவசரிய சேவைக்கு ஆரம்ப அழைப்பின் மூலம் பெறப்பட்டதாக&nbsp; தெரிவித்து, அதே ஆண்டில் தான் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
</p><p>
சுவசரிய சேவைக்கு பொதுவாகக் கிடைக்கும் அனைத்து அழைப்பு விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், இச்சம்பவமும் அவ்வாறே அமைந்திருக்கும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். </p><p>

தீக்காயங்களை தவிர, எரிவாயு காரணமாக தீப்பற்றி காயமடைந்த நபர் ஒருவர் குறித்தும் இச்சம்பவம் தொடர்பான ஆரம்ப சுவசரிய அழைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என எதிர்த்தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-30T06:52:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுகீஸ்வர பண்டார]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-bandara-produced-before-court-1785392358"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-bandara-produced-before-court-1785392358</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டார, இன்று காலை (30.07.2026) கோட்டை நீதவான...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டார, இன்று காலை (30.07.2026) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>


இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சுகீஸ்வர பண்டார ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>நிதி முறைகேடு தொடர்பாக</h2><p>


இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் ஊழல் தடுப்புக் குழு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCIB) முறைப்பாடு அளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb885555-65d6-4fbb-828b-ea8e0b5f2125/26-6a6af23bc5bfb.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், சுகீஸ்வர பண்டார 2022இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் இயக்குனர் பதவியையும் வகித்ததும் தெரியவந்தது.
</p><p>

இதன் அடிப்படையில், அவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.


அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:43:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களில் பொருத்தப்பட்ட ஆபத்தான பாகங்கள்..! பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-traffic-operation-orders-issued-drivers-1785383991"></link>
            <id>https://tamilwin.com/article/special-traffic-operation-orders-issued-drivers-1785383991</id>
            <summary type="text">வீதிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் பழுதுபட்ட நிலையிலிருந்த வாகனங்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீதிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் பழுதுபட்ட நிலையிலிருந்த வாகனங்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p>வெல்லவாய மற்றும் ஊவா குடாஓயா பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்கள் இணைந்து விசேட வாகனத்தணிக்கை நடவடிக்கையினை&nbsp;முன்னெடுத்துள்ளது.</p><p></p><h2>24 வாகனங்களுக்கு தடை உத்தரவு</h2><p>இதன்போது வீதி போக்குவரத்திற்குப் பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 24 வாகனங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/918821a2-2af7-4d86-8e33-26ef2a3cd421/26-6a6af14f38cb0.webp' /></p><p>குறைபாடுகளுடன் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் சட்டவிரோத பாகங்களை பொருத்தியிருந்த 24 வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராகவே இவ்வாறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>குறித்த சாரதிகளுக்கு வாகனங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p> குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் குறைபாடுகளைச் சரிசெய்ய தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:38:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுத்தர வருமானம் பெறும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/house-scheme-for-low-income-families-1785390112"></link>
            <id>https://tamilwin.com/article/house-scheme-for-low-income-families-1785390112</id>
            <summary type="text">நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபேயில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் 85 சதவீதத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபேயில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;கடுவலை - மாலபே பகுதியில் அமைந்துள்ள இந்த திட்டம், 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கொண்டுள்ளது.</p><p></p><p>

இதில் 920 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும், 700 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும் அடங்கலாக மொத்தம் 256 வீடுகள் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><h2>இடைநிறுத்தப்பட்ட திட்டம்</h2><p>
</p><p>
இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae6798e6-bae2-4499-9a03-cc9b629b15bf/26-6a6af006a517d.webp' /></p><p>

பின்னர், உரிய ஒப்பந்தக்காரர்களுடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதையடுத்து, 2025 ஆம் ஆண்டில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
</p><p>
4,375 மில்லியன் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் உருவான வீடுகளை, இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்கம்பத்தில் ஏறிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! மின்சார சபைக்கான நட்டத் தொகையை செலுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-climbs-electric-pole-over-family-dispute-1785391315"></link>
            <id>https://tamilwin.com/article/man-climbs-electric-pole-over-family-dispute-1785391315</id>
            <summary type="text">குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நபருக்கு இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நபருக்கு இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாத்தறை , கம்புறுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கே மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

​</p><p>கடந்த 21 ஆம் திகதி பிற்பகல் தனது குடும்பத் தகராறு ஒன்றைத் தீர்த்துக் கொள்வதற்காக குறித்த நபர் உயர் அழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p></p><h2>நட்டத் தொகை</h2><p>
</p><p>
இதனால் திஹகொட, கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெஹியந்தறை, மாவரல, தெனியான உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.</p><p>

​மின்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களைப் பொலிஸார் வரவழைத்து சமரச முயற்சிகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து அவர் கீழே இறங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa67ef81-cf37-4bea-a3c4-209b791d418d/26-6a6aed3ab6acf.webp' /></p><p>
</p><p>
பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டம் 201,059.90 ரூபா எனப் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;அதனையடுத்து குறித்த அபராதத் தொகையை மின்சார சபைக்குச் செலுத்துமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 ஆண்டுகள் கடந்தும் மூதூர் படுகொலைக்கு நீதி இல்லை : மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-justice-for-mudur-massacre-even-after-20-years-1785389452"></link>
            <id>https://tamilwin.com/article/no-justice-for-mudur-massacre-even-after-20-years-1785389452</id>
            <summary type="text">சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட
மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப்
பொறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட
மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப்
பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை
என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, மூதூர் படுகொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஒரு
சுயாதீன சட்டவாதியை நியமிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசு தனது
தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
</p><p></p><h2>தப்பிச் செல்ல முயன்ற</h2><p>
இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு
இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp;</p><p>போரின் தீவிரத்துக்கு உள்ளாகியிருந்த திருகோணமலைக்கு அருகில் அமைந்துள்ள
மூதூர் நகரில், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி பாரிஸ் நகரைத் தளமாகக் கொண்டு
இயங்கிய 'அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்' அமைப்பைச் சேர்ந்த 17 இலங்கைத் தன்னார்வ
உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79000486-30ef-46ba-8493-4bf860bf1f63/26-6a6ae8f505d6a.webp' /></p><p>அலுவலக வளாகத்துக்குள் 15 பணியாளர்களின் உடல்கள் தலையிலும் கழுத்திலும் மிக
அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காயங்களுடன் கண்டறியப்பட்டன.
</p><p>தப்பிச் செல்ல முயன்ற மேலும் இருவரின் உடல்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த
வாகனத்திலிருந்து மீட்கப்பட்டன.</p><p></p><h2>பாதிக்கப்பட்ட சகலருக்குமான நீதி</h2><p>இது தொடர்பாக அடுத்தடுத்து ஆட்சிப்பீடமேறிய அரசுகள் விசாரணைகளை முன்னெடுப்பதாக
உறுதியளித்த போதிலும், தன்முனைப்புடன் செயற்படாத முக்கிய 12 மனித உரிமை
வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb710d8-ba92-49ae-ae26-824491e44eb1/26-6a6ae8f5bd310.webp' /></p><p> </p><p>கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும்,
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் பல்லாண்டுகளாக நீதிக்காகக்
காத்திருக்கின்றனர்.
</p><p>
யுத்த கால வன்முறைகள் மற்றும் அதன் பின்னரான மீறல்களால் பாதிக்கப்பட்ட
சகலருக்குமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு சர்வதேச
நாடுகள் இலங்கை மீது தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று அந்த
அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர சிவப்பு எச்சரிக்கை! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-weather-warning-1785390008"></link>
            <id>https://tamilwin.com/article/red-weather-warning-1785390008</id>
            <summary type="text">கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (30) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் </h2><p>இந்த எச்சரிக்கை, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9f2696-4af8-4118-93fa-7a81d006caf3/26-6a6ae8ec99b05.webp' /></p><p>
இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 - 70 கி.மீ. வரை அதிகரிக்கும், மேலும் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மன்னார் முதல் கொழும்பு வரையிலும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரப்பகுதிகளில் 2.0 - 2.5 மீட்டர் வரை கடல் அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>

எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து மீன்பிடி மற்றும் கடற்படைத்தரப்பினர் விழிப்புடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-30T06:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-case-adjourned-1785388747"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-case-adjourned-1785388747</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை</h2><p>
</p><p>


குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6987005-81d0-4e2e-8730-e7e044806518/26-6a6ae24e7d3e3.webp' /></p><p>



இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மூன்று மாதங்களுக்கான நீர் விநியோகம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-3-months-water-supply-1785387969"></link>
            <id>https://tamilwin.com/article/next-3-months-water-supply-1785387969</id>
            <summary type="text">மழை இல்லாத போதிலும், நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் கொள்ளளவு அடுத்த 3 மாதங்களுக்குத் தொடர்ச்சியாக நீர் வழங்கப் போதுமானதாக இருக்கும் என்று வீடமைப்பு, நிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மழை இல்லாத போதிலும், நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் கொள்ளளவு அடுத்த 3 மாதங்களுக்குத் தொடர்ச்சியாக நீர் வழங்கப் போதுமானதாக இருக்கும் என்று வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகங்களிடம் பேசியபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c40a95c4-ebe7-4527-8aa9-fb03022de25e/26-6a6ade7f712c0.webp' /></p><p>

இருப்பினும், மாறிவரும் வானிலையால் தற்போது நிலவும் சூழ்நிலைகளில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T05:18:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி.விக்ரமரத்னவின் இறுதி நிமிடங்களில் இடப்பட்ட உத்தரவு.. ஒரு சில நிமிடங்களில் பிரிந்த உயிர்! உணர்ச்சிவசப்பட்ட 16 வருட கால விசுவாசி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cd-wickramaratnes-body-gourd-tells-the-story-1785375186"></link>
            <id>https://tamilwin.com/article/cd-wickramaratnes-body-gourd-tells-the-story-1785375186</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை சாட்சியாளரான மெய்ப்பாதுகாவலர் நீதிமன்றில் வெளியிட்டுள்ளார்.
சி.டி. விக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை சாட்சியாளரான மெய்ப்பாதுகாவலர் நீதிமன்றில் வெளியிட்டுள்ளார்.</p><p>
சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையில், அவரது மெய்ப்பாதுகாவலர் அதிகாரியான பொலிஸ் சார்ஜன்ட் ஆர்.எம். பிரசன்ன கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றில் சாட்சியம்</h2><p>
மேற்கு தெற்கு விசேட விசாரணைப் பிரிவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த பாதுகாப்பு அதிகாரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது துப்பாக்கியை பயன்படுத்தி தானே சுட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.</p><p>தான்,16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b99cedb-8eec-4e36-bbda-3639061e9ed0/26-6a6ab86c1c9c3.webp' />&nbsp; &nbsp; &nbsp;</p><p> இந்த நீண்ட காலத்தில் அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் துப்பாக்கியைக் கேட்டதில்லை. உடற்பயிற்சி செய்யச்செல்லும் போது தண்ணீர் போத்தல் எடுத்துச்செல்வதுமில்லை. என்னை எடுத்து வரச்சொல்வதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆனால், சம்பவம் நடந்த அன்று அவர் உடற்பயிற்சிக்கான ஆடைகளை அணிந்திருந்தார். வழக்கமாக உடற்பயிற்சிக்கு ஆயத்தமாகும் போது காலணி அணிவது வழக்கம், ஆனால் அன்று அவர் காலணி அணிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அப்போது அவர் என்னிடம், 'பிரசன்ன, உனது துப்பாக்கியை பரிசோதித்து பார்க்க வேண்டும், அதைக்கொடு' எனக்கேட்டார். நான் துப்பாக்கியை மட்டும் கொடுத்தேன், தோட்டாக்களைக் கொடுக்கவில்லை. பின்னர், 'பரிசோதிப்பதற்கு தோட்டாக்கள் அடங்கிய மெகசினையும் கொடு' என கேட்டதால், அதையும் வழங்கினேன்.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு&nbsp;</h2><p>துப்பாக்கியையும் மெகசினையும் கையிலெடுத்த அவர், 'பிரசன்ன, உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும், ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வா' என்று கூறியுள்ளார்.</p><p>நான் தண்ணீர் போத்தல் எடுக்கச்சென்ற கணத்தில் துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டது. ஓடிவந்து பார்த்தபோது அவர் துப்பாக்கிச்சூட்டுடன் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை முல்லேரியாவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறியக்கிடைத்தது என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/306bc7f0-2be6-4c26-b043-59df16f9e671/26-6a6aa9d8d0fc9.webp' />&nbsp; &nbsp;</p><p><span style="color: inherit;">இதன்போது சாட்சியமளிக்கும் வேளையில், பொலிஸ் சார்ஜன்ட் பிரசன்ன பலமுறை உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குள்ளானார்.</span></p><p>மேற்கு தெற்கு விசேட விசாரணைப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முன்னாள் பொலிஸ் மா அதிபரின் சாரதி மற்றும் சமையல்காரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.</p><p>மேலும், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மெகசின் மற்றும் வெற்றுத்தோட்டா உறை ஆகியவற்றை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>&nbsp;&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cSwrc3ik3Jo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-30T05:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையின் தலைவர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resign-library-and-documentation-board-chairman-1785386608"></link>
            <id>https://tamilwin.com/article/resign-library-and-documentation-board-chairman-1785386608</id>
            <summary type="text">தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையின் தலைவராக பணியாற்றிய மூத்த இலக்கியவாதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மூத்த இலக்கியவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையின் தலைவராக பணியாற்றிய மூத்த இலக்கியவாதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
</p><p>
மூத்த இலக்கியவாதி, கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, புத்தசாசனம், சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியால் 2024 டிசம்பர் 16 திகதியன்று தேசிய நூலகம் மற்றும் ஆவணச்சேவைகள் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.</p><p></p><h2>அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள&nbsp;பதவி விலகல் கடிதம்</h2><p>
இந்நிலையில் தற்போது அவர் திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78bf616-7a2b-4fe8-9044-be35c215a794/26-6a6ad8fce25e9.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்களின்படி, எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவரது பதவி விலகல் கடிதம் ஏற்கனவே அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
</p><p>
எனினும் இதுவரை அவரது பதவி விலகலுக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே தனது பொறுப்பில் உள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களையும் உடைமைகளையும் சபை அலுவலத்தில் முறைப்படி ஒப்படைப்பதற்காக அவர் இன்று (30) தனது அலுவலகத்திற்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிப்பு : முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muslim-representation-ignored-boundary-commission-1785385358"></link>
            <id>https://tamilwin.com/article/muslim-representation-ignored-boundary-commission-1785385358</id>
            <summary type="text">புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்
முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்
முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது
என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
தெரிவித்துள்ளார்.</p><p>

அரசின் முக்கிய பதவிகளுக்கு முஸ்லிம்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டு வருவது
கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>அரசமைப்புப் பேரவையினால் தெரிவு</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;"புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான மூன்று உறுப்பினர்கள் அரசமைப்புப்
பேரவையினால் கடந்த 24 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டு பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>எனினும், இதில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்
ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் தேர்தல் ஆணைக்குழுவின்
முன்னாள் தலைவர் சமன்சிறி ரத்நாயக்க, எம்.பி. ரோஹன புஷ்பகுமார மற்றும் கே.
தவலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1192eed-9171-42d3-abe5-0f9499461e85/26-6a6ad78553eab.webp' /></p><p>இக்குழுவில் பெரும்பான்மைச் சமூகத்தைச்
சேர்ந்த இருவரும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தமிழரும்
நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>ஆனால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த யாரும் இதில்
உள்வாங்கப்படவில்லை.

சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூன்று பிரதான இனங்கள் வாழும் இந்நாட்டில்,
இத்தகைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்குச் சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில்
முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஓர் உறுப்பினரை நியமித்திருக்க
வேண்டும். அதுவே முறையானதாகும்.</p><p>குறிப்பாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் போது எல்லை
நிர்ணயம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. </p><h2>செயலாளர்கள் நியமனத்தின் போதும்</h2><p>சில பிரதேச எல்லைகளில் இருந்து பல
உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை காணப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களில்,
தான் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதித்துவம் தொடர்பில் எடுத்துரைப்பதற்கு அந்தச்
சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆணைக்குழுவில் இருப்பது கட்டாயமாகும். </p><p>எனவே, எல்லை
நிர்ணய ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள இந்தக் குறையை அரசு உடனடியாக நிவர்த்தி
செய்ய வேண்டும்.

அத்துடன், தற்போதைய அரசில் முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களின் போதும்
முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4930e284-b612-4281-a0bf-102ff0421b9a/26-6a6ad78618442.webp' /></p><p> அரசின்
அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் நியமிக்கப்படவில்லை. இது
தொடர்பில் பலரும் சுட்டிக்காட்டிய போதிலும், அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை.&nbsp;</p><p>இதேபோன்று, அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் போதும் முஸ்லிம்கள்
யாரும் ஆரம்பத்தில் நியமிக்கப்படவில்லை. பின்னர் அது குறித்துக் கடுமையான
விமர்சனங்கள் எழுந்த பின்னரே, முஸ்லிம் ஒருவர் அமைச்சின் செயலாளராக
நியமிக்கப்பட்டார்.
</p><p>
இவ்வாறு முஸ்லிம் சமூகத்துக்கான அனைத்து உரிமைகளையும் தற்போதைய அரசிடம்
போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.</p><p> இதற்கு முன்னர்
எந்தவொரு அரசிலும் முஸ்லிம்கள் இவ்வாறாகப் புறக்கணிக்கப்பட்டதில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு: அரசின் தீர்மானத்தை முற்றாக எதிர்க்க சட்டத்தரணிகள் சங்கம் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extension-of-retirement-age-of-judges-1785385919"></link>
            <id>https://tamilwin.com/article/extension-of-retirement-age-of-judges-1785385919</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை
இரண்டு வருடங்களால் நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள
தீர்மானத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை
இரண்டு வருடங்களால் நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள
தீர்மானத்தை முற்றாக எதிர்க்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்
விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை
உறுதிப்படுத்தும் மிக முக்கிய விடயமாகும் என்றும், நீதித்துறை சார்ந்த பதவிகள்
தொடர்பான அரசமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு
மற்றும் வெளிப்படைத்தன்மை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மேற்படி
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமைச்சரவை ஒப்புதல்</h2><p>

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள்
உள்ளடங்கலாக நாட்டின் சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை உயர்த்துவதற்கான அரசின் யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40064673-a8b8-4748-a9ee-66dee0c8aebf/26-6a6ad3c1bb3dd.webp' /></p><p> இந்த விவகாரம் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள
பின்னணியில், இது பற்றி ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட
பொதுச்சபைக் கூட்டம் நேற்று முற்பகல் 11 மணிக்குக் கொழும்பில் உள்ள
சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.
</p><p>
இதன்போதே நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை
முற்றாக எதிர்க்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><h2>தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்</h2><p> 01. நீதித்துறையின் சுயாதீனத்தன்மை: இலங்கையில் நீதித்துறையின்
சுயாதீனத்தன்மையானது அரசமைப்பின் அடிப்படைத் தூணாகும். அத்தோடு, சட்டத்தின்
ஆட்சி, அரசமைப்பு அடிப்படையிலான ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை
உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இது இன்றியமையாததாகும்.
</p><p>
02. கலந்தாலோசனையின்மை:இந்த யோசனை நீதித்துறை, சட்டத்தரணிகள் சமூகம்,
கல்வியியலாளர்கள், சிவில் சமூகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருடன்
விரிவான கலந்தாலோசனைகள் இன்றியும், சுயாதீன மற்றும் அரசமைப்பு ரீதியிலான
பரிசீலனைகள் இன்றியும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328cb271-e63c-4353-815d-bef20e54aa22/26-6a6ad3c26f464.webp' /></p><p>
</p><p>
03. பரிந்துரைக்கப்படாத திருத்தம்: நீதி அமைச்சால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின்
நீதித்துறை பற்றிய மதிப்பீடு மற்றும் மூலோபாய நடவடிக்கைத் திட்டம்' ஊடாக
பல்வேறு கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் அடையாளங்காணப்பட்டிருந்த போதிலும்,
அதில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்தல் ஒரு முக்கிய
திருத்தமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை.</p><p>
</p><p>
04. உண்மையான பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்துதல்: நீதிபதிகளின்
பதவிக்காலத்தை மாற்றுவதை விடுத்து, நீதிபதி வெற்றிடங்கள், வழக்கு விசாரணைகளில்
தாமதம், போதிய வளமின்மை, தொழில்நுட்ப நவீனமயமாக்கல் இன்மை போன்ற உண்மையான
பிரச்சினைகளுக்கே விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்தோடு, தற்போது நிலவும்
நீதிபதி வெற்றிடங்கள் அரசமைப்புக்கு அமைவாக விரைவாக நிரப்பப்பட வேண்டும்.</p><p>

05. வெளிப்படைத்தன்மையின் அவசியம்: நீதி நிலைநாட்டப்படல் தொடர்பான
பொதுமக்களின் நம்பிக்கையானது நீதித்துறையின் உண்மையான சுயாதீனத்துவத்தில்
மாத்திரமன்றி, அந்த சுயாதீனத்துவம் வெளிப்படையாகப் புலப்படுவதிலும்
தங்கியுள்ளது என்று அந்தத் தீர்மானத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை - மனித மோதலுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-project-aims-to-solve-human-elephant-conflict-1785385507"></link>
            <id>https://tamilwin.com/article/new-project-aims-to-solve-human-elephant-conflict-1785385507</id>
            <summary type="text">இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு ஒரு நிலையான தீர்வாக மூங்கில் &#039;உயிரியல் வேலி&#039; (bio-fences) அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு ஒரு நிலையான தீர்வாக மூங்கில் 'உயிரியல் வேலி' (bio-fences) அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.</p><p>

சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையத்திற்கு (ICBR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆராயப்பட்டுள்ள விடயம்</h2><p>
</p><p>
இந்தச் சந்திப்பின் போது, மூங்கில் பயிர்ச்செய்கை, நவீன பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகள் குறித்து இலங்கைத் தூதுக்குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08fe35af-951c-4a12-8c52-8e2c4405acbf/26-6a6ad3549c3fb.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
யானை - மனித மோதலைக் குறைப்பதற்கு மூங்கில் உயிரியல் வேலிகளை உருவாக்க சீனாவின் உதவியை இலங்கை கோரியிருந்தது.</p><p>இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் ஆதரவளிக்க சீனத் தரப்பு உறுதியளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213</id>
            <summary type="text">கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

இவ்வாறான நிகழ்வுகளின் போது போதை மாத்திரைகளை விநியோகிக்கும் இளம் கடத்தல்காரர் ஒருவர், 23,000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் தொகையுடன் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஷாந்த டி சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>போதை மாத்திரை விநியோகம்</b></h2><p>கைதான இளைஞரிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய, இந்த போதை மாத்திரைகளும் ஹெரோயினும் நாளாந்தம் இளைஞர், யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக இரகசியமாக வரவழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6026ede3-5dd9-4a15-a76d-b04996354a8f/26-6a6acf0c9c639.webp' /></p><p>இசை நிகழ்ச்சிகளில் நடனமாடும் இளைஞர் யுவதிகளை இலக்காக கொண்டு இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த போதை மாத்திரைகள் கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் பல மாகாணங்களுக்கும் விநியோகிப்பதற்காக கடத்தல்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>ஒரு போதை மாத்திரையின் மதிப்பு 100 ரூபாவாகும், எனினும் இக்கூட்டத்தினர் அந்தப் போதை மாத்திரைகளை 200 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்றுள்ளனர். </p><p>இந்த போதை மாத்திரைகளுக்கு மேலதிகமாக, சந்தேக நபரிடமிருந்த சுமார் 800 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T04:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் கைக்குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-to-be-from-colonial-era-recovered-1785381944"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-to-be-from-colonial-era-recovered-1785381944</id>
            <summary type="text">கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கழ்மலை பன்சலைக்கு
அருகிலுள்ள பாறைக் குன்றுப் பகுதியில், காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக
நம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கழ்மலை பன்சலைக்கு
அருகிலுள்ள பாறைக் குன்றுப் பகுதியில், காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக
நம்பப்படும் கைக் குண்டு ஒன்று நேற்று (28) கந்தளாய் பொலிஸாரால்
கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ
இடத்துக்குச் சென்ற கந்தளாய் பொலிஸார், குறித்த கைக்குண்டை பாதுகாப்பாக
மீட்க, அப்பகுதியில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
</p><p></p><h2>நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து</h2><p>
சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வது தற்காலிகமாகத்
தடைசெய்யப்பட்டதுடன், சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d1544a9-007a-4b65-90cf-8042b7791a1c/26-6a6aca76d286e.webp' /></p><p>மேலும், கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, விசேட
அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு அகற்றும் மற்றும் ஆய்வுப் பிரிவினரின்
உதவியுடன் குறித்த கைக் குண்டு பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில்
செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைக் குண்டு மீட்கப்பட்ட பாறைக் குன்றுப் பகுதியில் காலனித்துவ ஆட்சிக்
காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் பழமையான கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன.</p><p>
மேலும், கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் காலனித்துவ
ஆட்சிக் காலத்தில் சிறிய விமான தரையிறக்குத் தளம் ஒன்று இயங்கியிருந்ததாக
உள்ளூர் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், மீட்கப்பட்ட கைக் குண்டு உண்மையில் காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததா,
அதன் வகை மற்றும் செயல்பாட்டு நிலை என்ன என்பது தொடர்பான இறுதி
உறுதிப்படுத்தல், விசேட தொழில்நுட்ப ஆய்வுகளின் பின்னரே அறிவிக்கப்படும் என
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T03:52:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தீர்மானம்: ஜனாதிபதியை சந்திக்கவும் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judges-retirement-age-extension-meet-president-1785382256"></link>
            <id>https://tamilwin.com/article/judges-retirement-age-extension-meet-president-1785382256</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசு
முன்மொழிந்துள்ள தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசு
முன்மொழிந்துள்ள தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
நேரடியாக தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன், இந்த விடயம் குறித்து ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச்
செய்து தருமாறும் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>30000 மேற்பட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்பு</h2><p>
</p><p>
நாடளாவிய ரீதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்புடன்
நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட
பொதுச்சபை கூட்டத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும்
அரசின் தீர்மானம் தூரநோக்கற்றது என்றும், அதனை முற்றாக எதிர்ப்பது என்றும்
ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0eec53d-818b-4592-a6c4-dfc1d623ee59/26-6a6ac9bf238b3.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணிக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்காரவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ்
அமரசூரிய தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.</p><p>

இந்தச் சந்திப்பின்போது, அரசின் இந்த யோசனை நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக்
கடுமையாகப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் சங்கப்
பிரதிநிதிகள், நீதி அமைச்சரிடம் பின்வரும் முக்கிய கேள்விகளை முன்வைத்தனர்.</p><h2>அவசரப்படுத்துவது ஏன்? </h2><p>இது குறித்துக் கலந்தாலோசிக்க முன்னரே சந்திப்பொன்றைக் கோரியிருந்த நிலையில்,
அதற்கு இடமளிக்காமல் அவசரமாக இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி
பெறவேண்டிய அவசியம் என்ன?</p><h2>ஆலோசனையின்மை</h2><p> இதுவரை காலமும் புதிய சட்டங்கள் அல்லது திருத்தங்களைக் கொண்டுவரும்போது
சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனை பெறப்படுவது வழக்கம். ஆனால், இந்த முக்கிய
விடயத்தில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை?&nbsp;</p><p>தனிநபரை பாதுகாக்கும் நடவடிக்கையா?&nbsp;</p><p> ஏற்கனவே ஓய்வுபெறும் வயதை எட்டிய நீதியரசர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில்,
தற்போது அவசரமாக இத்திருத்த யோசனை முன்வைக்கப்படுவதானது, குறிப்பிட்ட ஒரு
நீதிபதியை மாத்திரம் இலக்குவைத்து (அல்லது பாதுகாப்பதற்காக)
மேற்கொள்ளப்படுகின்றதா என்ற நியாயமான சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.</p><h2>அமைச்சரின் விளக்கமும் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான கோரிக்கையும்</h2><p> சட்டத்தரணிகள் சங்கத்தின் கடுமையான கேள்விகளுக்குப் பதிலளித்த நீதி அமைச்சர்
ஹர்ஷன நாணயக்கார, "இந்தச் சட்டத் திருத்த யோசனை தனிப்பட்ட ஒருவருக்கானதல்ல.
அனைத்து நீதிபதிகளுக்கும் பொதுவானதாகவே கொண்டுவரப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c950149-3a6d-4497-8feb-b9e838957929/26-6a6ac9c00daef.webp' /></p><p> கட்சி மற்றும்
அமைச்சரவையின் தீர்மானங்கள் உள்ளிட்ட கூட்டுப் பொறுப்புக்குக் கட்டுப்பட்டே
நான் செயற்படுகின்றேன்" என்று தெரிவித்தார்.

மேலும், சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம்
எடுத்துரைப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.</p><p>

இதற்குப் பதிலளித்த சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள், தமது நிலைப்பாட்டைத்
தாமே நேரடியாக ஜனாதிபதியிடம் விளக்க விரும்புவதாகவும், அதற்காக அவருடனான
சந்திப்பொன்றுக்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.</p><p>

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதி அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதியுடன்
பேசி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T03:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கர்தினால் கடும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/technology-addiction-eroding-family-values-1785382822"></link>
            <id>https://tamilwin.com/article/technology-addiction-eroding-family-values-1785382822</id>
            <summary type="text">&amp;nbsp;மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
அளவுக்கு அதிகமான அலைபேசி பயன்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>அளவுக்கு அதிகமான அலைபேசி பயன்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக சமூகத்தில் மனித உறவுகளும் குடும்ப பிணைப்புகளும் சீர்குலைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சீதுவையில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01e7220a-52c5-42fa-a7cb-09d674622805/26-6a6ac7a7c0d48.webp' /></p><p>
</p><p>தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து வளர்ந்துள்ள நுகர்வோர் கலாச்சாரம், மக்களிடையே தேவையற்ற ஆசைகளை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p>
பணத்தின் பின்னால் ஓடுவதே நவீன சமூகத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.</p><p> சந்தை சார்ந்த இக்கலாச்சாரம், மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் நற்பண்புகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவசியமற்ற ஆடம்பரப் பொருட்களைத் தேடி ஓடத் தூண்டுகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
ஆரம்பத்தில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட்ட சாதனங்கள், இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குக் கட்டுப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இரவு நேரங்களில் நீண்ட நேரம் கைபேசிகளைப் பயன்படுத்துவது உட்பட அளவுக்கு அதிகமான பயன்பாட்டினால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான ஆரோக்கியமான உரையாடல்கள் குறைந்து, குடும்ப பிணைப்புகளும் பாரம்பரிய விழுமியங்களும் பலவீனமடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மேலும், சமூக முன்னேற்றமும் உயர்கல்வியும் மனிதனிடம் அகந்தையை ஏற்படுத்திவிடக் கூடாது எனவும், அதிவேகமாக மாற்றமடைந்து வரும் இந்த உலகளாவிய சூழலில் பணிவையும் மனிதநேயத்தையும் பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியம் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T03:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் காதலால் பொலிஸ் காவலருக்கு ஏற்பட்ட விபரீதம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-love-police-officer-dead-1785381905"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-love-police-officer-dead-1785381905</id>
            <summary type="text">வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் காவலர் தனது சேவை துப்பாக்கியால் நேற்று அதிகாலை சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணத்தை பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் காவலர் தனது சேவை துப்பாக்கியால் நேற்று அதிகாலை சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். </p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் பேராதனை முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் நேற்று பிரதான வாயில் கடமைக்காக மற்றுமொரு அதிகாரியுடன் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.</p><p></p><p>
</p><h2><b>
விபரீத முடிவு</b></h2><p>இந்த நிலையில் இயற்கை உபாதையை கவனிப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் வந்து, அதிகாலை 4.05 மணியளவில் T56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cbd151-be9c-437c-b338-95bfab253fb9/26-6a6ac67a15beb.webp' /></p><p>குறித்த பொலிஸ் காவலர் உடனடியாக பாணந்துரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

உயிரிழப்புக்கான காரணம்</b></h3><p>நான்கரை வருட சேவைப் காலத்தைக் கொண்டுள்ள காவலர், பேஸ்புக் ஊடாக அறிமுகமான யுவதி ஒருவருடன் உறவில் இருந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/560467da-aa19-409b-843d-09a1eb9f733f/26-6a6ac67abee6c.webp' /></p><p>இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே இவ்வாறு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-30T03:35:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் கைதான பாதாள உலகக்கும்பலை சேர்ந்த மூவர்! விரைவில் வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrest-underworld-1785381814"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrest-underworld-1785381814</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்கள் மூவர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்கள் மூவர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பிரபல பாதாள உலகக்கும்பல் தொடர்பு&nbsp;</h2><p>
</p><p>கைது செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நபர்களில், பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவரான 'கஞ்ச்பானி இம்ரானின்' நெருங்கிய சகா ஒருவரும் அடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b197a8c0-9064-4fe3-83ad-b31e6aa3c1d5/26-6a6ac3b847f32.webp' /></p><p>
</p><p>மேலும், இவர்கள் மலேசியாவில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்தான தெளிவான தகவல்கள் இன்று அல்லது நாளைக்குள் வெளிவரக்கூடும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T03:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drinking-alcohol-during-el-nino-heatwave-is-deadly-1785379299"></link>
            <id>https://tamilwin.com/article/drinking-alcohol-during-el-nino-heatwave-is-deadly-1785379299</id>
            <summary type="text">எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்சார் சுகாதாரப்பிரிவு எச்சரித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் இந்த பிரிவின் வைத்திய நிபுணர் இனோகா சுரவீர மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>உயர்ந்த நிலையை எட்டியுள்ள&nbsp;வெப்பநிலை </h2><p>
</p><p>
இந்த நாட்களில் சுற்றுப்புற வெப்பநிலை உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகவும், மது அருந்துவது நீரிழப்பு மற்றும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d17fe01b-2604-4eab-97cd-a7f977070a81/26-6a6ac0c2b709a.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் நாட்களில் இந்த வெப்பமான சூழல் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும், உடல் நீரிழப்புக்கு உள்ளாவதை தடுக்க சுத்தமான தண்ணீர், ஆரஞ்சு, தர்பூசணி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
எல் நினோவால் வளிமண்டல வெப்பநிலை அதிகரித்துள்ளதால், சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>சுகாதார அமைச்சின் முக்கிய அறிவுறுத்தல்கள்</h2><p>
</p><p>
மேலும், சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், பக்கவாத நோயாளிகள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருந்துகளை முறையாக எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், வெப்பத்தாக்கம் உயிரிழப்புக்குக்கூட வழிவகுக்கக்கூடும் என்பதால், சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EyAnzIa2jus" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-30T03:11:13+00:00</updated>
        </entry>
    </feed>
