<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-06T04:00:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-message-people-warned-1785987180"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-message-people-warned-1785987180</id>
            <summary type="text">இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி வலைப்பின்னல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி வலைப்பின்னல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இதில் குற்றவாளிகள் போலி வீடியோ அழைப்புத் தொழில்நுட்பத்தை பிரதானமாகப் பயன்படுத்தி, மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றனர்.
</p><p>
இந்த மோசடி செயல்முறையானது Hi போன்ற சாதாரண குறுஞ்செய்தி மூலம் ஆரம்பமாகிறது. 

அனுப்பும் நபர் யார் என்பதை சரியாக சரிபார்க்காமல் பலர் இதற்கு பதிலளிப்பதன் மூலம் பாரிய ஆபத்தில் சிக்குகின்றனர். </p><h2><b>

மோசடி நபர்கள்</b></h2><p>ஆரம்பத்தில் நீண்ட நேரம் உரையாடலைத் தொடராவிட்டாலும், சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் குறுஞ்செய்திகளை அனுப்பப்படுகின்றது. இதன் மூலம் இந்த மோசடி நபர்கள் தொடர்பாடலை புதுப்பிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc7d61c2-bec1-43c6-9f5d-943fee17eb55/26-6a74022f646b1.webp' /></p><p>காலப்போக்கில் படிப்படியாக நம்பிக்கையை கட்டியெழுப்பும் மர்ம நபர், பாதிக்கப்பட்டவர் தம்மீது உணர்வுபூர்வமாக ஈர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்ததும், புகைப்படங்களையும் தனிப்பட்ட செய்திகளையும் அனுப்பத் தொடங்குகின்றனர். </p><p>

மக்கள் அறியாமலேயே இந்த வலையில் சிக்குகின்றனர். அதன் பின்னர் உரையாடலை வட்ஸ்அப் வீடியோ அழைப்புகளுக்கு மாற்றுமாறு மோசடி நபர்கள் வற்புறுத்துகின்றனர்.
</p><p>
சம்பந்தப்பட்ட வீடியோ அழைப்புகளின் போது பொருத்தமற்ற மற்றும் ஆபாசமான முறையில் நடந்து கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்களைத் மோசடி நபர்கள் தூண்டுகின்றனர்.
</p><p>
பின்னர் அச்சுறுத்தும் நோக்கத்திற்காக அந்தச் சந்தர்ப்பங்களின் Screenshots மற்றும் வீடியோ காட்சிகளை இரகசியமாக பதிவு செய்து கொள்கின்றனர். </p><p>

சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நிர்வாணமாக இல்லாவிட்டாலும், அவர்கள் பரிமாறிக்கொண்ட செய்திகளின் Screenshots மற்றும் பரிந்துரைக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கங்கள் கூட அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.</p><h3><b>

சமூக வலைத்தளம்</b></h3><p>பிளாக்மெயில் செய்வதற்கு தேவையான பொருட்கள் கிடைத்தவுடன், அந்தப் பதிவுகள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் சமூக வலைத்தள நண்பர்களுக்கு அனுப்புவதாகக் குற்றவாளிகள் அச்சுறுத்துகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17b114ad-b122-45af-bab6-23a3cdef0c4c/26-6a7404ab34f41.webp' /></p><p>உறவினர்களுக்கு கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான செய்திகள் குறித்து அறியவரும் வரை அல்லது இந்த கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் வரை பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வலையில் சிக்கியுள்ளதை புரிந்து கொள்வதில்லை.
</p><p>
ஆரம்பத்தில் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை சிறிய தொகையை கோரும் மோசடி நபர்கள், அந்தப் பணத்தை செலுத்தியவுடன் தகவல்களை அழித்து விடுவதாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். </p><p>

எனினும் முதல் கட்டப் பணப் பரிமாற்றத்திற்கு பின்னரும் கோரிக்கைகள் நிற்பதில்லை. மாறாக, அதன் பின்னர் அதிகமான பணத்தைக் கோரி சில பாதிக்கப்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் கப்பம் அறவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென கணினி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T03:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்க விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chavakachcheri-municipal-council-case-1785986148"></link>
            <id>https://tamilwin.com/article/chavakachcheri-municipal-council-case-1785986148</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரை பதவிலிருந்து நீக்கிய&amp;nbsp;வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரை பதவிலிருந்து நீக்கிய&nbsp;வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த மனு மீதான விசாரணைகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் (05) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பு&nbsp;</h2><p>இந்த நிலையில் நேற்று (05) வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது யாழ்.மேல் நீதிமன்றத்தினால் வழக்கிற்கான தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c721a987-712b-4dc4-aeb3-c943d739c311/26-6a7402bc4b5e4.webp' /></p><p>சாவகச்சேரி நகரசபையில் பிரதி தலைவராக பதவி வகித்து வந்த
ஞானப்பிரகாசம் கிஷோரை, வட மாகாண ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் பதவியில்
இருந்து நீக்கியிருந்தார்.</p><p>.இந்த பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது என குறிப்பிட்டும் அதனை இரத்து செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர்
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p>
குறித்த மனு தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண
அமர்வில் பல தடவைகள் இடம்பெற்றிருந்தன.</p><h2>பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ள&nbsp;&nbsp;தீர்ப்பு </h2><p>இதன்போது மனுதாரர் சார்பிலும், பதிலாளிகள்
சார்பிலும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, வழக்கின்
தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என நீதிமன்றத்தினால் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தன.</p><p>இந்நிலையில், யாழ்.மேல் நீதிமன்றத்தினால் வழக்கிற்கான தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த வழக்கின் தீர்ப்பு, சாவகச்சேரி
நகரசபை நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார
நடைமுறைகள் தொடர்பிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், அரசியல்
வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T03:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த இரண்டு வருடங்களில் டெங்குவை முற்றாக ஒழிக்க தேசிய திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-plan-to-completely-eliminate-dengue-1785984985"></link>
            <id>https://tamilwin.com/article/national-plan-to-completely-eliminate-dengue-1785984985</id>
            <summary type="text">அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் டெங்கு நோயை முழுமையாக ஒழிப்பதை
இலக்காகக் கொண்டு, திட்டமிடப்பட்ட தேசிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட
வேண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் டெங்கு நோயை முழுமையாக ஒழிப்பதை
இலக்காகக் கொண்டு, திட்டமிடப்பட்ட தேசிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட
வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தெரிவித்துள்ளார்.</p><p>

அதிக அவதானமிக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தற்போதைய டெங்கு
நிலைமையை மீளாய்வு செய்வதற்கும், நுளம்பு கட்டுப்பாட்டு திட்டங்களை
வலுப்படுத்துவதற்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற விசேட
கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை</h2><p>

முந்தைய டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளை அடையாளம்
காணுதல், அதிக அவதானமிக்க பகுதிகளைக் கண்டறிதல், கூட்டு நுளம்பு கட்டுப்பாட்டு
நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தொழில்நுட்ப ஆதரவை விரிவுபடுத்துதல், சிகிச்சை
சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு தொடர்பான மரணங்களைக் குறைத்தல் ஆகிய
விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a50654f2-24dc-4367-88dd-0be6808892d8/26-6a73f7dfc8260.webp' /></p><p>

அண்மை காலமாக டெங்கு மரணங்கள் குறைந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை எனக்
குறிப்பிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை
குறையும் காலங்களிலும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து
முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
</p><p>
மேலும், சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கிராம உத்தியோகத்தர் பிரிவு
மட்டம் வரை கட்டமைக்கப்பட்ட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும்
அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

இதனிடையே, டெங்கு அபாயம் தொடர்ந்தபோதிலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
காரணமாக தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,300 இலிருந்து 350
முதல் 400 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில்
பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T02:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்..! சிறைச்சாலையில் தற்போதைய நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-minister-akila-viraj-kariyawasam-remanded-1785981940"></link>
            <id>https://tamilwin.com/article/former-minister-akila-viraj-kariyawasam-remanded-1785981940</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள&nbsp; அகிலவிராஜ்</span></p><p>இதற்கமைய, தற்போது அகில விராஜ் கரியவசம் ஏனைய கைதிகள் குழுவுடன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c27a7f46-81a8-4bb0-9fd6-28de4dde95ec/26-6a73f1f299941.webp' />&nbsp;</p><p>
இருப்பினும், ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் மாத்திரமே அவருக்கும் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.</p><p>ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு 4 ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று (05) முற்பகல் முன்னலையான போது அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp;</p><h2>ஊழல் குற்றச்சாட்டு</h2><p>குறித்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 2,768,836.14 சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக வழங்கப்பட வழிவகுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, 'ஊழல்' குற்றத்தைச் புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு&nbsp;கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T02:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tm-app-a-pyramid-scheme-central-bank-1785980684"></link>
            <id>https://tamilwin.com/article/tm-app-a-pyramid-scheme-central-bank-1785980684</id>
            <summary type="text">இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;இலங்கையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டு, அதனை நடத்தி விளம்பரப்படுத்தியதாக ‘TM App’ என்ற செயலி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இந்த விசாரணை, 1988 ஆம் ஆண்டின் 30-ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்டபடி) 83C பிரிவின்படி நடத்தப்பட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை அறிவித்தல்</h2><p>

அதன்படி, இதுவரை 26 நிறுவனங்கள் அல்லது செயலிகள் “TM App’ ”யுடன் இணைந்து தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை இயக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b403a577-1652-4565-96f4-69213b73596b/26-6a73ea8736018.webp' /></p><p>இதனையடுத்து, வங்கிச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட நிதித்திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலில் ‘TM App’ செயலியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறான தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில், இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>எனவே முதலீடுகளை செய்வதற்கு முன்னர் பொர்மக்கள் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T01:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் –இந்தியா வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-urges-sri-lanka-to-hold-provincial-elections-1785980626"></link>
            <id>https://tamilwin.com/article/india-urges-sri-lanka-to-hold-provincial-elections-1785980626</id>
            <summary type="text">&amp;nbsp;இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.</p><p>
மேலும் தமிழர் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளை முழுமையாக அமல்படுத்துமாறு மேலும் கோரியுள்ளார்.
</p><p>இந்த விடயங்களை இலங்கை அரசுத் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ff771c9-2531-4621-9293-e198c78cd115/26-6a73e6d3a3595.webp' /></p><p>
</p><p>விக்ரம் மிஸ்ரியின் இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கான இந்தியாவின் உதவி, எரிசக்தித் துறையில் இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.</p><p>
மேலும், இந்தியாவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டம், திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது, மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்து நவீனமயமாக்குவது போன்ற திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளும் இருதரப்பும் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதற்கிடையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு விவாதமும் இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
</p><p>அதேவேளை, போதைப்பொருள் கடத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை இலங்கை நாடியதாகவும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் சவால்களை சமாளிப்பதில் பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 முதல் 2019 காலப்பகுதிக்குள் முடிவடைந்த போதிலும், தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் தேர்தல்களை நடத்தாமல் ஒத்திவைத்து வந்துள்ளன.
 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T01:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியைச் சந்தித்த புதிய இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-army-chief-meets-the-president-1785978740"></link>
            <id>https://tamilwin.com/article/new-army-chief-meets-the-president-1785978740</id>
            <summary type="text">இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட்
ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(5) ஜனாதிபதி அநுரகுமார
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட்
ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(5) ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
</p><p>
புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த
பிரேமரத்ன ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம்
இதுவாகும்.</p><h2>இராணுவத் தளபதி</h2><p>
</p><p>
தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அரச தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாயப்
படி ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுடன் சம்பிரதாய ரீதியாக நினைவுச் சின்னங்களைப்
பரிமாறிக்கொண்டதுடன், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலந்த
பிரேமரத்னவுக்கு ஜனாதிபதி தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca1a7a8e-c2a4-43b5-84ec-e7199739916a/26-6a73e1afe59af.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T01:22:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் திருப்பம்: சாரா ஜஸ்மினின் உடல் தொடர்பில் நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-sunday-attacks-sara-jesmin-alive-1785951605"></link>
            <id>https://tamilwin.com/article/easter-sunday-attacks-sara-jesmin-alive-1785951605</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின் உடல் கிடைக்கப்பெறவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
</p><p>
மேலும், சாரா ஜஸ்மின் விசாரணையாளர்களைத் தவறாக வழிநடத்த முயன்றமை விமான நிலைய சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சாரா ஜஸ்மினின் உடல் சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்டதாகக் காட்டும் நோக்கில் மூன்றாவது முறையாக DNA பரிசோதனை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரி விரிவான சாட்சியங்களையும் வழங்கியுள்ளார்.

சாரா ஜஸ்மின் தற்போது எங்கு சென்றார் என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை இல்லை. </p><p>எனினும், அவர் சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சஹ்ரானின் குடும்பத்தினர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேனில் வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> ஆனால், வெடிப்புக்குப் பின்னர் தீக்கிரையான நிலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

இதனால், மற்றொரு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி சாரா ஜஸ்மின் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணையாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JWvv8rw3YDg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T01:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் டொலர் கடன் தவணை இழப்புக்கு சைபர் பாதுகாப்பு - நிர்வாகப் பலவீனமே காரணம் - சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cybersecurity-weaknesses-2-5-million-installment-1785976242"></link>
            <id>https://tamilwin.com/article/cybersecurity-weaknesses-2-5-million-installment-1785976242</id>
            <summary type="text">சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான பலவீனங்கள்
காரணமாகவே இலங்கை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை இழக்க நேரிட்டது
என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான பலவீனங்கள்
காரணமாகவே இலங்கை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை இழக்க நேரிட்டது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(5) உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை
முன்வைத்தார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p></p><h2>2.5 மில்லியன் டொலர்&nbsp;</h2><p>
</p><p>
"அரசு சுட்டிக்காட்டியுள்ள தொழில்சார் அறிக்கையின்படி, 2.5 மில்லியன் டொலர்
காணாமல் போனமையானது ஒரு சைபர் குற்றம் மாத்திரமன்றி, அது நிர்வாக மற்றும்
நிறுவனச் செயற்பாட்டு நடைமுறைப் பிரச்சினையுமாகும்.</p><p> இந்நாட்டின் வெளிநாட்டுக்
கடன் செலுத்தும் பொறிமுறையில் பலவீனமான நிர்வாகமே காணப்படுவதாகக் குறித்த
அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c8cf6d-2f69-40b2-8bdc-0e311984e1cf/26-6a73da724e17d.webp' /></p><p>
</p><p>
வங்குரோத்தான நமது நாட்டில் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி, வாழ்க்கைச் சுமை,
வறுமை மற்றும் வேலையின்மை என்பவற்றை அதிகரித்துத் தொழில்துறைகளை
வீழ்ச்சியடையச் செய்துள்ள நிலையில், 25 இலட்சம் டொலர்களைக் கூடச் செலுத்த
முடியாத அரசே ஆட்சியில் உள்ளது.</p><p>

கடன் மீளச் செலுத்தும் நடவடிக்கை முன்னர் மத்திய வங்கியின் மையமாக இருந்த
போதிலும், புதிய சட்டத்தின் ஊடாக அது கடன் செலுத்தும் அலுவலகத்துக்குப்
பாரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>எனினும், இந்தக் காலகட்டத்தில் தேவையான இடைக்கால
ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அரசுக்கு இயலாமல் போயுள்ளது.

இது வெறும் சைபர் தாக்குதல் மட்டுமல்ல. இந்தப் பிரச்சினை தொடர்பில்
திறைசேரியும் மத்திய வங்கியின் ஆளுநரும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை.</p><p></p><h2>பொருளாதாரத்தின் நிலை</h2><p>இவ்விரு
முக்கிய நிறுவனங்களும் ஒரே நேர்கோட்டில் நின்று செயற்படத் தவறினால் நாட்டின்
பொருளாதாரத்தின் நிலை என்னவாகும்?

பலவீனமான கடவுச்சொல் பயன்பாடு, பொறுப்புகள் தெளிவுபடுத்தப்படாமை ஆகியவற்றின்
காரணமாகவே சைபர் பாதுகாப்பு ஆபத்து உருவாகியுள்ளது.</p><p> போலி மின்னஞ்சல்
டொமைன்களின் பயன்பாடு இதற்கு மூலக் காரணமாக இருந்தபோதிலும், அதிலிருந்து
விடுபடுவதற்கான பரிந்துரைகள் கூட சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடன்
ஒப்பந்தங்களைப் பரிசோதித்தல், தொடர்பு வழிகளை உறுதிப்படுத்தல் மற்றும் வங்கிக்
கணக்குத் தகவல்களைச் சரிபார்த்தல் என்பன முறையாக இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/274d30fb-027e-4ab1-b61b-ed4c7881185d/26-6a73da73019c0.webp' /></p><p>
</p><p>
கடந்த 2026 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எக்சிம் வங்கியுடன் தொடர்புடைய
செலுத்துகையின் போதும் இவ்வாறான சந்தேகத்துக்கிடமான பிரச்சினை உருவான போது,
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்தச் சம்பவங்கள் நாட்டின் கடன் செலுத்தும் செயற்பாடுகள் குறித்த
நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்துகின்றன.</p><p>பங்களாதேஷ், ஈக்வடார், வியட்நாம்,
இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் இவ்வாறான சம்பவங்களிலிருந்து பாடங்களைக்
கற்றுக்கொண்டுள்ளதைப் போன்று இலங்கையும் இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள
வேண்டும்.</p><p></p><h2>&nbsp;எல்லையற்ற வரிச்சுமை</h2><p>

நாட்டின் தற்போதைய மிகப்பெரிய பொறி சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த
இலக்குகளையும் தாண்டி அதிகளவில் வரி விதிப்பதாகும். முதன்மை மீதியை 2.3
சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் வரை உயர்த்தி சர்வதேச நாணய நிதியத்தின்
கையாள்களாக அரசு மாறியுள்ளது. </p><p>எதிர்க்கட்சியில் இருந்தபோது பாட்டாளி வர்க்கம்
பற்றிப் பேசியவர்கள், தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பொம்மைகளாக
மாறியுள்ளதால் நாட்டின் வாழ்க்கைச் சுமையோ பணவீக்கமோ குறையவில்லை.

மாதமொன்றுக்கு 17 ஆயிரம் ரூபாவைக் கொண்டு வாழ முடியும் எனத் தொகைமதிப்பு
மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுவது தவறான தரவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ae4f7d3-e8c2-408d-ab6c-149539ca75bc/26-6a73da73a78ee.webp' /></p><p> </p><p>இவ்வாறான பொய்த்
தரவுகளின் அடிப்படையில் செயற்படும் அரசிடம் வறுமையை ஒழிப்பதற்கான எவ்வித
வேலைத்திட்டமும் இல்லை. நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை
நாசமாக்குவதுடன், எரிபொருள் மாபியாவைப் பாதுகாப்பதற்காகச் சூரிய சக்தி மின்
உற்பத்தியையும் அரசு பலவீனப்படுத்தி வருகின்றது.
</p><p>
இவ்வாறான எல்லையற்ற வரிச்சுமையால் பிறக்காத குழந்தை முதல் கர்ப்பிணித்
தாய்மார் வரை அனைத்துப் பிரஜைகளும் கடும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். </p><p>அரசு
வாக்குறுதியளித்த 'வளமான நாடு, அழகான வாழ்க்கை' என்ற நோக்கத்தை மறந்து,
சர்வதேச நாணய நிதியத்தின் வரி இலக்குகளைத் தாண்டி மேலதிக வரிச்சுமையை மக்கள்
மீது சுமத்தி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-06T00:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்ச நாடு திரும்புவதில் தொடரும் சிக்கல்! உடல்நிலை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-seek-usa-support-to-arrest-basil-1785975709"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-seek-usa-support-to-arrest-basil-1785975709</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
பொதுமக்கள் பாதுகாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நீதிமன்றத்தின் உதவி&nbsp;</span></p><p>
</p><p>மாத்தறை நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் பசில் ராஜபக்சவிற்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e469bfc-7f59-4ea7-966c-3674033740ea/26-6a73d6b07c36b.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>இதற்காக சர்வதேச பொலிஸின் (இண்டர்போல்) உதவியைப் பெற்று, அமெரிக்க நீதிமன்றத்தின் ஒத்துழைப்பைக் கோரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>இலங்கைக்குத் தேவையான சந்தேகநபர் ஒருவர் எந்தவொரு நாட்டில் இருந்தாலும், அவர் அந்நாட்டின் பிரஜையாக இருப்பினும், அவரை நாட்டிற்கு அழைத்து வர அந்த நாட்டின் நீதிமன்ற உதவியைப் பெற வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>பசில் ராஜபக்ச நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அதனால் அவரால் விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது எனவும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>எனினும் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T00:21:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய இந்தியாவின் வெளியுறவுச் செயலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-s-foreign-secretary-vikram-misri-harini-met-1785974690"></link>
            <id>https://tamilwin.com/article/india-s-foreign-secretary-vikram-misri-harini-met-1785974690</id>
            <summary type="text">இலங்கைக்கு நேற்று(5) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளியுறவுச்
செயலர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச்
சந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு நேற்று(5) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளியுறவுச்
செயலர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச்
சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட
உறவுகளின் அடித்தளத்தை இருவரும் இந்தச் சந்திப்பின் போது மீண்டும்
உறுதிப்படுத்தினர்.</p><h2>உத்தியோகபூர்வ விஜயம்</h2><p>
</p><p>
அத்துடன், தமது அண்மைய சந்திப்புகளை நினைவுகூர்ந்த அவர்கள், முன்னுரிமை
அளிக்கப்பட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும்
விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T00:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரிபால சிறிசேனவின் மகன் கொழும்பில்..! மருமகள் தப்பியோட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithripala-sirisena-case-easter-attack-issue-1785914995"></link>
            <id>https://tamilwin.com/article/maithripala-sirisena-case-easter-attack-issue-1785914995</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் மனைவி கனடா நாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் மனைவி கனடா நாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

 
 மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன கொழும்பில் இருப்பதாக நம்பகமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பிரபல தொழிலதிபரின் மகனின் திருமணத்திற்கு மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையான தோற்றத்தில் இருந்துள்ளமை பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது மைத்திரிபாலவை நன்கு அறிந்தவர்கள் திருமணத்தில் பாடலொன்றினை பாடுமாறு வற்புறுத்திய நிலையில், அவர் அங்கு தந்தை மகனை பற்றிய பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் மருமகளும்</h2><p>

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மைத்திரிபாலவின் பாடல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf444d5a-9f2f-4ade-acac-4f75659d87e1/26-6a72fbb614f80.webp' /></p><p>

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன் காரணமாக அவர் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><h2>பிரபல அரசியல்வாதியின் மகனும் தொடர்பு</h2><p>

இருப்பினும், இந்த மோசடியில் பிரபல அரசியல்வாதியின் மகனும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.</p><p>2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்த நிலையில்,முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு&nbsp; மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், மகன் தொடர்பில் பரவும் தகவல் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரம் போன்ற விடயங்களினால்&nbsp;மைத்திரிபால சிறிசேன பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T23:54:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருகம்பே - சாவாலை வீதியில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-elephant-enters-arugambai-road-midnight-1785972832"></link>
            <id>https://tamilwin.com/article/wild-elephant-enters-arugambai-road-midnight-1785972832</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதிப் பகுதிக்குள் நேற்று முன்தினம் (04.08.2026) இரவு 10.30 மணிக்கும் 11.00 மணிக்கும்
இடைப்பட்ட காலப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதிப் பகுதிக்குள் நேற்று முன்தினம் (04.08.2026) இரவு 10.30 மணிக்கும் 11.00 மணிக்கும்
இடைப்பட்ட காலப்பகுதியில் காட்டு யானையொன்று புகுந்தமையால் அப் பகுதியில்
பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.
</p><p>
கிராமத்திற்குள் புகுந்து மக்கள் நடமாடும் வீதிகளில் சுற்றித்திரிந்த இக்
காட்டு யானையைக் கண்ட பிரதேச வாசிகள் பீதியடைந்ததுடன், ஊரார் ஒன்றுதிரண்டு
அதனை ஊரை விட்டு வெளியேற்ற முயன்றனர்.</p><h2>காட்டு யானை</h2><p> இதன்போது ஆத்திரமடைந்த காட்டு யானை,
மக்களை நோக்கிப் பாய்ந்து துரத்த முற்பட்டதால் பொதுமக்கள் நாலாப்பக்கமும்
சிதறியோடினர்.
</p><p>
இருப்பினும், அதிர்ஷ்டவசமாகப் பெரிய அளவிலான உயிர்ச் சேதங்களோ அல்லது
வீடுகளுக்கான உடைமைச் சேதங்களோ எதுவுமின்றி யானை பாதுகாப்பாக மீண்டும்
காட்டுப் பகுதிக்குத் திரும்பிச் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2274c645-2902-4a18-883c-a24542ad90f0/26-6a73c8e539471.webp' /></p><p>

இந்த சம்பவத்தின் போது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மிகவும் துணிச்சலுடனும்
பொறுப்புடனும் செயற்பட்டு, காட்டு யானைக்கு எவ்வித ஆபத்தும் அல்லது காயங்களும்
ஏற்பட்டு விடாத வகையில் அதனை மிகச் பாதுகாப்பான முறையில் காட்டுப் பகுதிக்குள்
விரட்டியடிக்க உதவினர்.
</p><p>
அருகம்பே மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு
யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதனால், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-05T23:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி: மொத்த என்புக் கூடுகள் 491 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-more-skeletons-found-in-chemmani-today-1785971759"></link>
            <id>https://tamilwin.com/article/8-more-skeletons-found-in-chemmani-today-1785971759</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நேற்று (5) 44ஆவது நாள் அகழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>அதன்படி, நேற்று (5) 44ஆவது நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் புதிதாக 8 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><h2>செம்மணி புதைகுழி</h2><p>ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4834fbb0-fd5e-4c39-b846-1d5465878081/26-6a73c57b73ed8.webp' /></p><p>
</p><p>இதன் அடிப்படையில், செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>
இதுவரை மொத்தமாக 491 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 489 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T23:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பளத்துடன் கூடிய குடும்ப விடுமுறை! வரிச் சலுகைகளை விரிவாக்க அமெரிக்க திறைசேரி திணைக்களம் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paid-family-leave-us-treasury-moves-expand-tax-1785970986"></link>
            <id>https://tamilwin.com/article/paid-family-leave-us-treasury-moves-expand-tax-1785970986</id>
            <summary type="text">ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய குடும்ப மற்றும் மருத்துவ விடுமுறைகளை
வழங்கும் தொழில் வழங்குனர்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை மேலும்
விரிவாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய குடும்ப மற்றும் மருத்துவ விடுமுறைகளை
வழங்கும் தொழில் வழங்குனர்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை மேலும்
விரிவாக்குவதற்கான புதிய வழிகாட்டல்களை அமெரிக்க திறைசேரி திணைக்களம்
வெளியிடவுள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படும்
இந்த புதிய கொள்கையின் மூலம், ஊழியர்களின் விடுமுறைக் காலத்தில் காப்பீட்டுக்
கொடுப்பனவுகளை ஈடுசெய்யும் வகையில் காப்பீட்டுக் தவணைக் கட்டணங்களை செலுத்தும்
நிறுவன உரிமையாளர்களும் இனி வரிச் சலுகைகளைக் கோர முடியும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>குடும்ப விடுமுறை</h2><p>
</p><p>
குறைந்தது இரண்டு வார கால குடும்ப மற்றும் மருத்துவ விடுமுறையை ஊழியரின்
வழக்கமான சம்பளத்தில் 50 வீதத்திற்கு குறையாத தொகையுடன் வழங்கும்
நிறுவனங்களுக்கு இந்த வரி விலக்கு உரித்தாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ef1b2ab-2103-4942-8d4b-22d78750f5dc/26-6a73c259a0ecc.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் தங்களது குடும்பத்தினரைப் பராமரிப்பதற்கும்
வருமானத்தைப் பெறுவதற்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையைத்
தவிர்க்கும் நோக்கிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரிச்
செயலாளர் ஸ்கொட் பெஸன்ட் தெரிவித்துள்ளார்.
</p><p>
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பில் (OECD) அங்கத்துவம்
வகிக்கும் 38 நாடுகளில் கட்டாயச் சம்பளத்துடன்கூடிய விடுமுறைக் கொள்கை இல்லாத
ஒரே நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.
</p><p>
இந்நிலையில், கூட்டாட்சி அரசாங்கத்தின் நேரடி நிதிப் பங்களிப்பின்றி வரிச்
சலுகைகள் மூலம் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T23:08:14+00:00</updated>
        </entry>
    </feed>
