<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-24T08:41:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். </p><p>
இந்த வாக்குமூலத்தில் அடங்கியுள்ள தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரியவந்துள்ளது.
</p><p>கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார். </p><p>அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>கோட்டாபயவின் இரு வாக்குமூலங்கள்</h2><p>இந்தச் சம்பவம் தொடர்பிலும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடமும் வாக்குமூலம் பெற்றிருந்தது. </p><p>தற்போது சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
இது தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடம் இரண்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. </p><p>முதல் வாக்குமூலத்தில், சுகீஸ்வர பண்டாரவிற்குத் தனிப்பட்ட செயலாளர் என்ற முறையில் இந்தச் சம்பளம் வழங்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். </p><p>ஆனால், இரண்டாவது வாக்குமூலத்தில், அந்தச் சம்பளம் சுகீஸ்வரவிற்கு வழங்கப்படவில்லை என்றும், தவறுதலாக வேறு ஒரு செயலாளருக்கு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df624e24-2ddf-4df3-9a16-2bd553354c65/26-6a62e26654f56.webp' /></p><p>அவர் குறிப்பிட்ட அந்த செயலாளர் நந்தசேன மற்றும் மஹிந்த ஆகியோரின் இளைய சகோதரியான பிரீதி ராஜபக்சவின் மூத்த மகன், முன்னாள் கடற்படை அதிகாரியான மாலக சந்திரதாச. அவருடைய தந்தை வைத்தியர் லலித் பிரியலால் சந்திரதாச.</p><p> மாலக சந்திரதாச, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது செயலாளராகப் பணியாற்றியதாகவும், அந்தச் சம்பளம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது என்றும் இரண்டாவது வாக்குமூலத்தில் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
</p><p>முதலில் சுகீஸ்வர பண்டாரவிற்கு சம்பளம் கொடுத்ததாகச் சொல்கிறார், இரண்டாவது வாக்குமூலத்தில் "இல்லை, அவருக்குக் கொடுக்கவில்லை, தவறுதலாக எனது செயலாளராக இருந்த மாலக சந்திரதாசவிற்குத்தான் கொடுத்தேன்" என்கிறார்.
</p><h2>மாலக சந்திரதாச வழங்கிய வாக்குமூலம்</h2><p>இதனைத் தொடர்ந்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாலக சந்திரதாசவை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது. </p><p>ஆனால் மாலக சந்திரதாச வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"நான் ஒரு சதம் கூட வாங்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்!" என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
</p><p>"நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. வேறு எந்தவொரு பதவியிலோ பணியாற்றவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a7f3e78-60ea-45e3-b5a6-3c55e9c862e3/26-6a62e26704bfc.webp' /></p><p>எந்தவொரு சம்பளமோ, பணமோ, கொடுப்பனவோ, வாகனமோ அல்லது வேறு எதுவும் நான் பெறவில்லை. அப்படி ஏதேனும் சொல்லியிருந்தால், கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்" என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.</p><p>அதனால் இது குறித்துத் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தான் இந்த விசாரணைகள் நடைபெறுகின்றன. </p><p>இதன் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டது போலவே கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்ய வாய்ப்புள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T08:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சொல்லை மறந்தாலும் கூகுள் கணக்கை மீட்டெடுக்கலாம் : அறிமுகமான புதிய வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/google-new-selfie-video-sign-in-feature-1784879478"></link>
            <id>https://tamilwin.com/article/google-new-selfie-video-sign-in-feature-1784879478</id>
            <summary type="text">கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய அல்லது மறந்த கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p> 

இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய அல்லது மறந்த கடவுச்சொற்கள் அல்லது தங்களுக்கு விருப்பமான சாதனங்களை அணுக முடியாமல் கணக்கு முடக்கப்பட்டால், அவற்றை மீட்டெடுக்க மற்றொரு வழியை வழங்குகிறது.</p><p>

ஆல்ஃபபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனம், பயனர்கள் பல கோணங்களைப் படம்பிடிக்கும் வகையில், வழிகாட்டப்பட்ட தலை அசைவுகளைச் செய்யும் ஒரு சிறிய வீடியோவைப் பதிவு செய்வதன் மூலம் சரிபார்ப்பை அமைக்க அனுமதிக்கும். </p><p></p><h2>தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சமயங்களில்</h2><p>கூகுள் அந்தப் பதிவைச் சேமித்து, பயனர்கள் பின்னர் உள்நுழைய முயற்சிக்கும்போது பதிவேற்றும் நேரடி வீடியோக்களை அங்கீகரிக்க அதைப் பயன்படுத்தும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228eefc7-a7e1-4aeb-8814-2cc82a9beb4a/26-6a631d511b358.webp' /></p><p>
இந்த புதிய அம்சம், குறிப்பாக சாதனங்கள் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சமயங்களில், மோசடிக்கு எதிராக வலுவான பாதுகாப்பையும், பயனர்களுக்கு சிறந்த கணக்கு மீட்பு விருப்பங்களையும் வழங்கக்கூடும் என்றாலும், இது தனியுரிமை மற்றும் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு குறித்து சில கவலைகளையும் எழுப்பியுள்ளது.</p><p>இருப்பினும், இந்தச் செல்ஃபி வீடியோ பயனரின் சம்மதத்துடன் மட்டுமே சேமிக்கப்படுவதாகவும், பயனர்கள் தங்களின் கூகுள் கணக்கிலிருந்து இதை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக்கொள்ளலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், பயனர் பிற தேவைகளுக்காகப் பகிர விருப்பம் தெரிவித்தால் தவிர, இந்த வீடியோ உள்நுழைவு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
</p><h2>தரவுப் பாதுகாப்பு</h2><p>
புதிய பதிவை சேமிக்கப்பட்ட வீடியோவுடன் ஒப்பிடுவதுடன், வீடியோ நேரலையானதுதானா என்பதை உறுதிப்படுத்த பயனர்களைச் சில அசைவுகளைச் செய்யக் கோருவதன் மூலம், ‘டீப்ஃபேக்’ (Deepfakes) உட்பட ஆள்மாறாட்ட முயற்சிகளைக் கண்டறிய பல பாதுகாப்புச் சோதனைகளைப் பயன்படுத்துவதாகக் கூகுள் மேலும் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad0b0ea-9c61-4cae-94c6-00ff62ce58ae/26-6a631d51d5465.webp' /></p><p>

தகுதியுள்ள கூகுள் கணக்குப் பயனர்களுக்கு இந்த வசதி ஜூலை 23 முதல் கிடைக்கிறது.

தற்போது நிறுவனங்கள் கணக்கு மீட்பு நடைமுறைகளுக்கு நம்பகமான சாதனங்கள், பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்கள், மீட்புத் தொடர்புகள் மற்றும் இருபடிச் சரிபார்ப்பு (Two-factor authentication) ஆகியவற்றையே நம்பியுள்ளன. </p><p>உயிரியல் அளவீடு மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பங்கள் (Facial Recognition) நீண்டகாலமாகவே தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்குரிய தலைப்பாக இருந்து வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:17:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - சிசிடிவி கமராக்களில் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727</id>
            <summary type="text">புதிய இணைப்புவத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸார் தற்போது பல விபரங்களை வெளியிட்டுள்ளனர்.நேற்று இரவு ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸார் தற்போது பல விபரங்களை வெளியிட்டுள்ளனர்.</p><p>நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டை, மட்டக்குளியாவை சேர்ந்த மனோஜ் என்ற நபர் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் குடு ரோஷன் என்ற நபரை குறிவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ள காட்சி</h2><p>கொலை நடந்த இடத்திற்கு வந்த துப்பாக்கித்தாரி நடனமாடியபடியே வந்து பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளமை&nbsp;மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf20b4f3-95e3-4185-99ff-6c62e141ffd9/26-6a63194e2ed44.webp' /></p><p>இருப்பினும், குடு ரொஷன் அணிந்திருந்ததை போன்ற உடையை அணிந்திருந்தமையினால் உயிரிழந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது</p><p>இதன்போது பொரள்ளை, வானத்தமுல்லை பகுதியை சேர்ந்த வானத்தே சுமேத என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், தாக்குதலுக்கு பிறகு துப்பாக்கிதாரி தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.</p><p>இச்சம்பவம் குறித்து&nbsp;5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கருப்பு நிற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜா-எல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இரண்டு குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முரண்பாடே இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு&nbsp;சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். </p><p>குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>விசாரணையில் வெளியான தகவல்</h2><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 'மட்டக்குளிய குடு ரொஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e836449-438e-4cdb-9f75-1fce1e8c67c6/26-6a62d844db0e8.webp' /></p><p>

ரொஷனின் சகோதரர்களில் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவின்போதே ​​நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் தலையில் முக்காடு அணிந்த ஒருவர் காரில் வந்து மண்டபத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இருப்பினும், குறி தவறியதால் ரொஷனுக்கு அருகில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்</h2><p>இதன்போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொரள்ளையை சேர்ந்த 39 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ff3d35-e313-4f6c-85f3-a9e154de2e22/26-6a62d9a86af72.webp' /></p><p>கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியை கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p>இச்சம்பவம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கி வரும் எல்நினோ தாக்கம்..! விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/use-water-sparingly-intensity-the-el-nino-impact-1784878399"></link>
            <id>https://tamilwin.com/article/use-water-sparingly-intensity-the-el-nino-impact-1784878399</id>
            <summary type="text">இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா&nbsp;கேட்டுக்கொண்டார்.</p><p>பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை
மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(24) காலை 10.00 மணியளவில்
நடைபெற்றது.</p><p>




இந்த செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய&nbsp;போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><h2>எல்நினோ தாக்கம்</h2><p>
</p><p>



செய<b>லமர்வில் பேராசிரியர் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள் ஒன்றான வெப்பத்
தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக அவர் கூறுகையில் ம</b>த்திய பசுபிக் பிராந்தியக்
கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள
எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை
ஏற்படுத்தும்.</p><p>


மற்றும் வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை
விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afcb3efa-5da1-437b-9a75-a014c20ed2f7/26-6a63184845784.webp' /></p><p> </p><p>இதனால் இந்து
சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக
வேகமாகப் பரவி வருகிறது.


அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப
ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது.</p><p>
இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார்
மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது
உருவாக்கும்.
</p><h2>பிரதீபராஜா கோரிக்கை</h2><p>

மற்றும் வறட்சியும் மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான
காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, ஒக்டோபர் மற்றும்
நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2679771f-0f41-488b-8d51-72649595d570/26-6a631848ed7e1.webp' /></p><p>ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான
சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.</p><p>


"எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர்
முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய
நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என
பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலந்து கொண்டோரை கேட்டுக்கொண்டார்.</p><p>இந்தநிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின்
முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும்
இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-24T07:46:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை - சபையில் ஏற்பட்ட குழப்பநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-court-1784875780"></link>
            <id>https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-court-1784875780</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,&amp;nbsp; இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,&nbsp; இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.&nbsp;&nbsp;</p><p>இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி&nbsp; கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.&nbsp;</p><p>



இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சபை அமர்வின்போது அர்ச்சுனா இராமநாதன்&nbsp;கூறியுள்ளார்.</p><p></p><h2>சபையில் பதற்றமான சூழல்</h2><p>இந்த நிலையில்,&nbsp;அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் இருந்தபோது, ​​அவரை கைது செய்ய நீதிமன்றம் எவ்வாறு பிடியாணை பிறப்பித்தது என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9411092a-4657-42a4-a8c8-2c0744b3ca1d/26-6a630f5c9587e.webp' /></p><p>
</p><p>ஹர்ஷவின் கேள்வியை அடுத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபையில் கடும் கூச்சலிட்டதன் காரணமாக, சபையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. </p><p>இதன்போது, சபையில் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,&nbsp;</p><p>“இந்த சபையில் பங்கேற்பது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு ஒரு சிறப்புரிமையாகும். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.

அவர் தனது கடமைகளைச் செய்வதிலிருந்து எந்தவொரு நிறுவனமும் அவரை தடுக்க முடியாது. உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறி நீங்கள் ஒரு தீர்ப்பை வழங்கக்கூடாது” என்று சுட்டிக்காட்டினார்.&nbsp;&nbsp;</p><h2>பிரதி சபாநாயகர் வழங்கியுள்ள உறுதி</h2><p>இதனையடுத்து,&nbsp; குறுக்கிட்ட பிரதியமைச்சர் சுனில் வட்டகல,&nbsp;&nbsp;</p><p>“நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் விசேட தேவைகள் இருந்தால் அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எனினும், ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேசிங்க, “இது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பொதுவான பிரச்சினையென்றும்,&nbsp; இது குறித்து பொதுவான தீர்மானமொன்றை நாடாளுமன்றம் எடுக்க வேண்டுமென்றும்” கோரிக்கை விடுத்தார்.</p><p>எவ்வாறாயினும்,&nbsp; அந்த சமயம் சபைக்குத் தலைமைத் தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, “இந்த நேரத்தில் தன்னால் ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும்,&nbsp; விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய கவனத்தை செலுத்துமென” உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xWDAmdLlq94" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:23:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் டொலராக வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-exchange-reserves-fall-to-6-4-billion-1784873971"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-exchange-reserves-fall-to-6-4-billion-1784873971</id>
            <summary type="text">இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p>
முன்னர் 6.8 பில்லியன் டொலர்களாக இருந்த கையிருப்பு குறைந்ததற்கு, இறக்குமதி தேவை அதிகரித்ததே முக்கிய காரணம் என நிதி அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p></p><h2>டொலர் வீழ்ச்சி</h2><p>
</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, </p><p>ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுப்பதற்காக மத்திய வங்கி சந்தையில் டொலர்களை வெளியிட்டதாலேயே கையிருப்பு குறைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821f03bc-5bdb-4c47-9371-1b4ffc48b7b5/26-6a63078d37064.webp' /></p><p>சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ், ஆண்டு இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட 8.9 பில்லியன் டொலர் கையிருப்பு இலக்கிலிருந்து இலங்கை விலகிச் செல்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillayan-remanded-again-1784876966"></link>
            <id>https://tamilwin.com/article/pillayan-remanded-again-1784876966</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> 

இது தொடர்பான வழக்கு இன்றைய&nbsp;தினம் (24.07.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p>இதன்போதே, எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்</h2><p> 

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb90fd7-ae1f-42fe-94e9-b0f616f4b713/26-6a631149e1ddf.webp' /></p><p> </p><p>

இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>பிள்ளையான் இணையவழி மூலமாக வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ள செய்யப்படடார்.&nbsp;ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். </p><p>

இந்த நிலையில், “பிள்ளையானை வெலிசரை கடற்படை முகாமில் எப்படி வைத்திருக்க முடியும்? எனவே இந்த வழக்கிற்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும்” என அவரின் சட்டத்தரணிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>மேலதிக தகவல் - பவன்</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/x9v6HB_g5cY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல்கள் ஏன் இன்னும் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/why-are-provincial-council-elections-still-delayed-1784874110"></link>
            <id>https://tamilwin.com/article/why-are-provincial-council-elections-still-delayed-1784874110</id>
            <summary type="text">அண்மையில் வெளியிடப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்புகள் இலங்கையின் அரசியல்
நிலைமையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான படிமத்தை வெளிப்படுத்துகின்றன. ஜனாதிபதி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் வெளியிடப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்புகள் இலங்கையின் அரசியல்
நிலைமையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான படிமத்தை வெளிப்படுத்துகின்றன.</p><p> ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க சுமார் 75வீத மக்களின் திருப்தியையும் ஆதரவையும்
பெற்றிருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. </p><p>பொதுமக்களின் திருப்தி
வாக்கு நோக்கத்துடன் முற்றிலும் ஒப்பிட முடியாவிட்டாலும், எந்த ஜனநாயக அரசும்
பெருமையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான மக்கள் நம்பிக்கையை அது
பிரதிபலிக்கிறது.</p><p>
இந்நிலையில் ஒரு முக்கியமான அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கேள்வி எழுகிறது.</p><p></p><h2>ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்&nbsp;</h2><p>

அரசாங்கம் இவ்வளவு வலுவான மக்கள் ஆதரவை அனுபவித்து வருமானால், மாகாண சபைத்
தேர்தல்கள் ஏன் இன்னும் நடத்தப்படவில்லை?

1987 ஆம் ஆண்டு இந்தியா–இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அரசியலமைப்பின் 13வது
திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் நிறுவப்பட்டன. </p><p>அவற்றின் செயல்திறன் அல்லது
அதிகார வரம்புகள் குறித்து பல்வேறு அரசியல் கருத்துக்கள் இருந்தாலும், அவை
இன்னும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் ஒரு பகுதியாகவே உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d80270c-2e14-4e8c-93f5-3f096a4f836e/26-6a630c6cce3e4.webp' /></p><p>இன்று தேசிய மட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மட்டத்தில்
மாநகர, நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். </p><p>ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட முக்கியமான
நிர்வாகத் தளமான மாகாண சபைகள் பல ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகள் இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. </p><p>ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட
ஆளுநர்கள் மாகாணங்களை நிர்வகித்து வருகின்றனர். ஆனால், மக்களிடமிருந்து
கிடைக்க வேண்டிய ஜனநாயக ஆணை இல்லாமல் அந்த நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
</p><p>
மக்கள் ஆதரவு பெற்ற அரசாங்கம் தேர்தலை அஞ்ச வேண்டியதில்லை.

தேர்தல்கள் என்பது மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள
அரசாங்கங்களுக்கு கிடைக்கும் ஜனநாயக வாய்ப்பாகும். </p><p>குறிப்பாக, அரசாங்கம்
உயர்ந்த மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் நேரத்தில், தேர்தல்கள் அதன் அரசியல்
நம்பகத்தன்மையையும் ஜனநாயகச் சட்டப்பூர்வத்தையும் மேலும் வலுப்படுத்தும்.</p><p></p><h2>மக்களின் தீர்ப்பை மீண்டும் பெறுவதற்கு&nbsp;</h2><p>அண்மைய கருத்துக் கணிப்புகள் உண்மையில் மக்களின் மனநிலையை
பிரதிபலிக்கின்றனவெனில், தேசிய மக்கள் சக்தி (NPP) தேர்தல் ரீதியாக மிகவும்
சாதகமான நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ff4178c-e36a-44a0-9f6f-8d9e7a5c690d/26-6a630c6d9d8a9.webp' /></p><p>அப்படியானால், மாகாண சபைத்
தேர்தல்கள் மூலம் மக்களின் தீர்ப்பை மீண்டும் பெறுவதற்கு அரசாங்கம் தயங்க
வேண்டிய காரணம் என்ன?

அத்தகைய தேர்தல்கள் அரசாங்கத்திற்கு பின்வரும் வாய்ப்புகளை வழங்கும்:</p><p>

* அனைத்து மாகாணங்களிலும் புதிய ஜனநாயக ஆணையைப் பெறுதல்.</p><p>
* மாகாண நிர்வாகத்தை வலுப்படுத்துதல்.
</p><p>* தனது சீர்திருத்தப் பணிகளுக்கு மக்கள் ஆதரவை உறுதிப்படுத்துதல்.
</p><p>* ஜனநாயக நிறுவனங்கள் குறித்து எழும் விமர்சனங்களுக்கு தெளிவான பதிலை
வழங்குதல்.</p><p>ஜனநாயகத்தின் அடிப்படைச் சிறப்பம்சங்களில் ஒன்று, அரசாங்கங்கள்
காலக்கெடுவுக்கு ஒருமுறை மக்களிடம் திரும்பிச் செல்வதுதான். தேர்தல்கள் என்பது
அரசியல் கட்சிகளுக்கிடையேயான போட்டி மட்டுமல்ல. மக்கள் தங்களது ஆட்சிக்கான
ஒப்புதலை புதுப்பிக்கவோ அல்லது திரும்பப் பெறவோ பயன்படும் அரசியலமைப்புச்
செயல்முறையாகும்.
</p><p>
ஒவ்வொரு தாமதமும் சந்தேகத்தை உருவாக்குகிறது.
ஒவ்வொரு ஒத்திவைப்பும் ஊகங்களுக்கு வழிவகுக்கிறது.
ஒவ்வொரு தவறவிடப்பட்ட தேர்தலும் ஜனநாயக அமைப்புகளின் மீதான மக்களின்
நம்பிக்கையைச் சீர்குலைக்கிறது.</p><p>அரசாங்கம் பொருளாதார மீட்பு, ஊழல் ஒழிப்பு மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை
முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் முக்கியமான தேசிய
இலக்குகளாகும். ஆனால் பொருளாதார முன்னேற்றமும் ஜனநாயக பிரதிநிதித்துவமும்
ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.
</p><p>
ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்துவமான தேவைகள் உள்ளன. அவற்றை நேரடியாக
முன்வைத்து தீர்வு காண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணத் தலைமையே மிகவும்
பொருத்தமானது.
</p><p>
தேர்தல்கள் இல்லாத சூழலில் பல்வேறு விளக்கங்கள் அரசியல் வட்டாரங்களில்
பேசப்படுகின்றன. சிலர் தேர்தல் சீர்திருத்தங்கள் இன்னும் நிறைவடையவில்லை எனக்
கூறுகின்றனர். சிலர் புதிய அரசியலமைப்புத் திருத்தங்கள் பரிசீலனையில் உள்ளன என
நம்புகின்றனர். இன்னும் சிலர், விரிவான ஆட்சிச் சீர்திருத்தங்கள் முடிந்த
பின்பே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் விரும்புகிறது எனக்
கருதுகின்றனர்.</p><p> மேலும், 13வது திருத்தத்தின் வரலாற்றுப் பின்னணி அல்லது
அதனுடன் தொடர்புடைய புவிசார் அரசியல் காரணிகள் அரசியல் சிந்தனையை இன்னும்
பாதித்து வருகின்றன என்றும் சிலர் ஊகிக்கின்றனர்.</p><p></p><h2>தேர்தல் நடைபெறாத மாகாணங்களுக்கு&nbsp;</h2><p>இந்த விளக்கங்களில் எது உண்மை என்பதை அரசாங்கமே தெளிவுபடுத்த முடியும்.
அதனால்தான் இவ்விடயத்தில் அதிக வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குப் பொருளாதார நிர்வாக அமைப்பை விட
அதிக அர்த்தமுடையதாக மாகாண சபைகள் உள்ளன. அவை மக்களின் அரசியல் பங்கேற்பின்
அடையாளமாகவும் உள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c07ceb59-0dae-4f53-93a8-21a7fb58f143/26-6a630ec0b57ff.webp' /></p><p>விவசாயம், மீன்பிடி, கல்வி, மாகாண சாலைகள்,
சுற்றுலாத்துறை, சுகாதாரம் மற்றும் உள்ளூர் தொழில்கள் ஆகிய அனைத்திற்கும்
பொறுப்புள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணத் தலைமையின் அவசியம் மறுக்க
முடியாததாகும்.
</p><p>&nbsp;ஜனாதிபதி,

நீங்கள் அரசியல் மாற்றம், தூய்மையான நிர்வாகம் மற்றும் ஜனநாயகப் புதுப்பிப்பை
வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தீர்கள். அண்மைய கருத்துக் கணிப்புகள்,
பெரும்பான்மையான மக்கள் இன்னும் உங்கள் தலைமையை ஆதரிக்கின்றனர் என்பதைக்
காட்டுகின்றன.</p><p>அந்த மக்கள் நம்பிக்கை உண்மையிலேயே இருக்கின்றது என்றால், அதை ஜனநாயக ரீதியில்
வெளிப்படுத்த மக்களுக்கு வாய்ப்பளிப்பதில் எந்த தயக்கமும் இருக்கக் கூடாது.</p><p>

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது உங்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தாது. மாறாக
அது:
</p><p>
* அரசியலமைப்புச் ஜனநாயகத்தின் மீதான உங்கள் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும்.</p><p>
* மாகாண நிர்வாகத்திற்கு புதிய சட்டப்பூர்வமான மக்கள் ஆணையை வழங்கும்.
</p><p>* தேவையற்ற அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
</p><p>* நீண்டகாலமாக தேர்தல் நடைபெறாத மாகாணங்களுக்கு மீண்டும் ஜனநாயகக் குரலை
வழங்கும்.</p><h2>மாகாண சபைத் தேர்தல்</h2><p>தேசிய மக்கள் சக்தி (NPP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB), இலங்கை பொதுஜன பெரமுன
(SLPP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தமிழ் அரசியல் கட்சிகள் அல்லது வேறு எந்த
அரசியல் இயக்கத்தை ஆதரித்தாலும், ஜனநாயகம் சிறப்பாக இயங்குவது தேர்தல்கள்
காலமுறைப்படி, வெளிப்படையாக, அரசியலமைப்பிற்கு ஏற்ப நடைபெறும்போதுதான்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40700985-ab8e-4041-aacc-8d35ff354374/26-6a630ec16ba86.webp' /></p><p>
மாகாண சபைத் தேர்தல்கள் யார் வெல்வார்கள், யார் தோற்பார்கள் என்பதற்காக
மட்டும் அல்ல. அவை மக்களின் ஜனநாயகப் பங்கேற்பை மீட்டெடுப்பதற்கும், ஜனநாயக
நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், ஒவ்வொரு மாகாணத்திற்கும் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட குரலை வழங்குவதற்குமானவை.
</p><p>
அரசாங்கம் உண்மையிலேயே பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்று
நம்பினால், அதை நிரூபிப்பதற்கான மிகச் சிறந்த வழி கருத்துக் கணிப்புகள் அல்ல;
வாக்குப்பெட்டிதான்.
</p><p>
தன்னம்பிக்கை கொண்ட அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைக்காது.
அது தேர்தல்களை வரவேற்கும்.
அதுவே ஜனநாயகத்தின் உண்மையான சாரம்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:12:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடையத் தவறிய இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-fails-to-meet-imf-targets-1784876217"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-fails-to-meet-imf-targets-1784876217</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட அந்நியச் செலாவணிக் கையிருப்பு இலக்கை இலங்கை அடையத் தவறியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட அந்நியச் செலாவணிக் கையிருப்பு இலக்கை இலங்கை அடையத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
இதற்கு முக்கியக் காரணம், வலுவான கடன் வளர்ச்சி மற்றும் செலாவணிக் கையிருப்பு பரிமாற்ற ஒப்பந்தங்கள் (swaps) வழிமுறை மூலம் சந்தையில் செலுத்தப்பட்ட பணப்புழக்கமே ஆகும்.
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் சமீபத்திய அதிகாரிகள் அறிக்கையின்படி, நான்காவது மீளாய்வுக்குப் பிறகு அந்நியச் செலாவணிக் கையிருப்புக்காக ஆரம்பத்தில் 593 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.</p><p></p><h2>அந்நியச் செலாவணிக் கையிருப்பு</h2><p> பின்னர் அந்த இலக்கு 485 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைக்கப்பட்டது. ஆனால் இலங்கை குறித்த காலப்பகுதிக்குள் 426 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பை மட்டுமே திரட்டியுள்ளது.</p><p>

திட்டத்தின் முந்தைய கட்டத்தில் இலங்கை மத்திய வங்கி தனது உள்நாட்டுச் சொத்து இலக்கை மாற்றாமல் வைத்திருந்ததால், சர்வதேச நாணய நிதியத்தால் கணிக்கப்பட்ட அந்நியச் செலாவணிக் கையிருப்பை இலங்கையால் திரட்ட முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b03ba181-e85a-45c9-90ce-cce35f0530a2/26-6a630f946a865.webp' /></p><p> </p><p>சர்வதேச நாணய நிதியத்தின் கடைசி இரட்டை ஆய்வுக்குப் பிறகும், மத்திய வங்கியின் உள்நாட்டுச் சொத்துக்கள் 2,510 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மத்திய வங்கியின் டொலர் கொள்முதல் என்பது பணத்தை அச்சிடுவதை உள்ளடக்கியது. இது திறைசேரியின் செயல்பாட்டிலிருந்து வேறுபட்டது. உள்நாட்டுச் சொத்துக்களை விற்பதன் மூலம் புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் திரும்பப் பெறப்படாவிட்டால், மத்திய வங்கியால் திரட்டப்பட்ட கையிருப்பை பாதுகாப்பாகப் பராமரிக்க முடியாது. </p><p>இருப்பினும், மத்திய வங்கி தனது அரசாங்கப் பத்திரத் தொகுப்பில் இருந்து பெறும் கூப்பன் கொடுப்பனவுகள் (வட்டி) மற்றும் கையிருப்புப் பணத்தில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்புக்கும் சமமான அளவிற்கு மட்டுமே கையிருப்பை வைத்திருக்க அனுமதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af348a3-d50e-4cd7-b766-97fa5248af85/26-6a630f951aa09.webp' /></p><p>
</p><p>
மத்திய வங்கிக்கு பதிலாக, வெளிநாட்டுக் கையிருப்பைத் திரட்டும் பணியை திறைசேரி மேற்கொள்ள வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>கையிருப்பைத் திரட்டும்போது திறைசேரி புதிதாக பணத்தை அச்சிடுவதில்லை. இது மத்திய வங்கி பணத்தை அச்சிடுவதற்கான சாத்தியத்தை நீக்குகிறது. </p><p>கடந்த ஆண்டு முழுவதும் நிகழ்ந்ததைப் போல, ரூபாய் நோட்டுகளின் மதிப்பைக் குறைப்பதன் மூலம் உள்ளூர் நாணயத்தின் மதிப்பு குறைக்கப்படும் சாத்தியத்தைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டம்! 840 மில்லியன் ரூபா இழப்பீடு கோரிய ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/japan-demands-rs-840-million-in-compensation-1784875222"></link>
            <id>https://tamilwin.com/article/japan-demands-rs-840-million-in-compensation-1784875222</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டத்திற்கான இழப்பீடாக ஜப்பானிய நிறுவனத்திற்கு ஏறக்குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து (LRT) திட்டத்திற்கான இழப்பீடாக ஜப்பானிய நிறுவனத்திற்கு ஏறக்குறைய 840 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்றைய (23.07.2026) நாடாளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டமைக்கான இழப்பீடாக ஒரே நேரத்தில் 189 மில்லியன் ஜப்பானிய யென், 1.031 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஏறக்குறைய 110 மில்லியன் இலங்கை ரூபாய்கள் இழப்பீடாக வழங்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><h2>இழப்பீடு தாமதிக்கப்பட்ட காலத்துக்கான கூடுதல் வட்டி</h2><p> </p><p>எனினும் ஜப்பானிய நிறுவனம் தற்போது குறித்த இழப்பீடு தாமதிக்கப்பட்ட காலத்துக்கான கூடுதல் வட்டியைக் கோரி வருகிறது.

எனினும் கோரப்பட்ட வட்டித் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், இவ்விடயத்தை விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிடல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன் இலகு&nbsp;தொடருந்து திட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மொத்த இழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றாலும், 2024ஆம் ஆண்டில் வழங்கப்படும் இழப்பீடு குறித்த தகவல் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பின் நகரப் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு இத்திட்டம் பொருத்தமற்றது என அடையாளம் கண்ட பின்னர், அப்போதைய அரசாங்கம் இத்திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தது. 2020 செப்டெம்பர் 18 அன்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், இத்திட்டம் செலவுத் திறனற்றது எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p></p><p> </p><p>மேலும், அப்போதைய ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்திலும், இது செலவுத் திறனற்ற திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போதைய நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்சவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அமைச்சரவைப் பத்திரத்தில், இத்திட்டம் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டிருந்தது.

இத்திட்டம் தொடர்பாக கணக்காயளர் நாயகம் ஒன்பது பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.</p><h2>முடிவு மறுபரிசீலனை</h2><p> </p><p>இத்திட்டத்தை நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்து, அதை மீண்டும் தொடங்க வேண்டும் அல்லது அதன் பொருளாதாரமற்ற தன்மையை பொருளாதார ரீதியாக சாத்தியமாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், கணக்காய்வாளர் நாயகம் அதை மீண்டும் தொடங்க நேரடியாகப் பரிந்துரைக்கவில்லை. மேலும் தற்போதைய அரசாங்கமும் இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்து முன்னைய முடிவுக்கு மாற்றமான முடிவு எதனையும் எடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc9792b5-f158-44ae-8d68-9c19ff019f9b/26-6a630f0383174.webp' /></p><p>
</p><p>
கொழும்பு நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதற்காக, பேருந்துகள் மற்றும் பாரம்பரிய தொடருந்து சேவைகளுடன் கூடுதலாக ஒரு புதிய பொதுப் போக்குவரத்து அமைப்பின் தேவை 2010-களின் முற்பகுதியில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த இலகு தொடருந்து திட்டம் ஒரு தீர்வாக முன்மொழியப்பட்டது. </p><p>கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், பயண நேரத்தைச் சேமித்தல் மற்றும் மேற்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக இருந்தன.</p><p></p><p>
</p><p>
2.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்ட இத்திட்டத்திற்கு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (JICA) 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புக்கொண்டிருந்தது. 40 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய இந்தக் கடனுக்கு, 12 ஆண்டுகள் சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தக் காலத்தில் இலங்கை எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T07:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுத் தம்பதி ஓட்டிச் சென்ற மோட்டார் வாகனத்தால் இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-killed-by-motor-vehicle-driven-by-foreigners-1784872967"></link>
            <id>https://tamilwin.com/article/youth-killed-by-motor-vehicle-driven-by-foreigners-1784872967</id>
            <summary type="text">கந்தளாய் பகுதியில் இருந்து ஹபரணை செல்லும் வீதியில் மோட்டார் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பகுதியில் இருந்து ஹபரணை செல்லும் வீதியில் மோட்டார் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

விபத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
வெளிநாட்டுத் தம்பதி, திருகோணமலை நோக்கி பயணித்த காரும் கந்தளாய் பகுதியிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளிலுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.</p><p>
</p><h2><b>
 இளைஞன் பலி</b></h2><p>இதன்போது 148ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் கித்துல்உத்துவ பிரதேசத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9310e83b-01a4-4585-aafe-01dd71bd2b07/26-6a6301dc91a67.webp' /></p><p>விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கவலைக்கிடமான நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-24T07:03:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தில் அரசியல் தலையீடு! குற்றச்சாட்டு வைக்கும் முன்னாள் இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahesh-senanayaka-anuradhapura-npp-1784876351"></link>
            <id>https://tamilwin.com/article/mahesh-senanayaka-anuradhapura-npp-1784876351</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அரசியல் தலையீடு செய்வதாக உள்ளக தகவல்கள் மூலம் தெரிவந்துள்ளதாக முன்னாள் இராணுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அரசியல் தலையீடு செய்வதாக உள்ளக தகவல்கள் மூலம் தெரிவந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>'திவிதென ரணவிரு' (Dividena Ranu) அமைப்பால் அநுராதபுரத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த போது,</p><p></p><h2>உள்ளக தகவல்களில் தெரியவந்துள்ளவை</h2><p>இராணுவத்தில் அரசியல் தலையீடு குறிப்பிட்ட அளவிற்கு இருப்பதை நாம் சமூக வலைத்தளங்கள் மூலமாக தீர்மானிக்க முடியாது. இருப்பினும், நாம் ஓய்வு பெற்ற போதிலும் இராணுவத்திற்குள் உள்ள தொடர்புகள் இன்னமும் இருக்கவே செய்கின்றன. </p><p>பல்வேறு அதிகாரிகள்- உறவினர்கள், நண்பர்கள் , சீடர்களும் இருக்கிறார்கள். அவர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களில், சில நேரங்களில் அவர்களால் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிகிறது. </p><p>வருத்தத்துடன் தான் அதைக்கூற வேண்டியுள்ளது.
ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடவோ, காலை வாரவோ எந்தவொரு எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை என்பதை மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறோம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4aab12-417d-47ff-9e47-d959842526f2/26-6a630d41366f0.webp' /></p><p>நாங்கள் மரணித்தாலும் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையும் பொறுப்பும் இந்நாட்டில் எமக்கு இன்னமும் உள்ளது. அதனால் தான், சரியான நேரத்தில், சரியான விடயங்களை செய்வதற்காக நாம் ஒன்று கூடியுள்ளோம். </p><p>அந்த நம்பிக்கையை மக்கள் இராணுவ வீரர்கள் மீது வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த சில காலங்களில் நாம் நாடு முழுவதும் உள்ள மாவீரர்களை ஒன்றிணைத்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:01:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/debate-begin-no-confidence-motion-justice-minister-1784875675"></link>
            <id>https://tamilwin.com/article/debate-begin-no-confidence-motion-justice-minister-1784875675</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.</p><p>

இன்றைய(24) நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமானது.
</p><p>
நிலையான விதிகள் 22, 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ளபடி, இன்று காலை 9.30 மணி முதல் 10 மணி வரையிலான நேரம் நாடாளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>விவாதம் ஆரம்பம்</h2><p>

வாய்மொழி பதில்கள் தேவைப்படும் கேள்விகளுக்காக காலை 10 மணி முதல் 11 மணி வரையிலான நேரமும், நிலையான விதிகள் 27ஃ2-இன் கீழ் உள்ள கேள்விகளுக்காக காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலான நேரமும் ஒதுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0df98c0-fe25-446b-a374-5ff4c95f8217/26-6a630c2ce8328.webp' /></p><p>
அதன்பிறகு, நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதிக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்திருந்தது. அதன் பிரகாரம் குறித்த தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போதைக்கு ஆரம்பமாகியுள்ளது.</p><p>

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், எதிர்க்கட்சியால் கடந்த 21ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த சம்பவத்தின்போது கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதற்காக நீதி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>

அதேநேரம் இன்று விவாதிக்கப்படவிருந்த தனிநபர் தீர்மானங்கள் எதிர்காலத்தில் வேறொரு திகதியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:54:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளையில் சந்தேகநபரை மிரட்டி பணம் பறித்த பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/si-arrested-for-extorting-80-000-from-suspect-1784873735"></link>
            <id>https://tamilwin.com/article/si-arrested-for-extorting-80-000-from-suspect-1784873735</id>
            <summary type="text">திருட்டு வழக்கொன்றில் சந்தேகநபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாய் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட்டு வழக்கொன்றில் சந்தேகநபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாய் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களனி பிரிவு குற்றப்புலனாய்வுப்பணியகம் தெரிவித்துள்ளது.</p><p>

வத்தளை பொலிஸில் பணியாற்றும் உதவி பொலிஸ் ஆய்வாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>சந்தேகநபர் மிரட்டல்&nbsp;</h2><p>
</p><p>
கொழும்பு 15 பகுதியை சேர்ந்த நபரொருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c77d0bf0-386c-4531-8950-801b435b81cb/26-6a6309011dc1d.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை தேடுவதாகக்கூறி, சந்தேகத்திற்குரிய உதவி பொலிஸ் ஆய்வாளர் உட்பட ஒரு குழுவினர், அவரை கைது செய்யாமல் வத்தளை பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.</p><p>

இதனையடுத்து சந்தேகநபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாய் பணத்தை பறித்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்நிலையில், கைது செய்யப்பட்ட உதவி பொலிஸ் ஆய்வாளர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:41:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-after-motorcycle-catches-fire-1784866652"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-after-motorcycle-catches-fire-1784866652</id>
            <summary type="text">திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தின் போது காயமடைந்த இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
இந்த விபத்தானது நேற்று(23.07.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>வாகன விபத்து</h2><p> </p><p>

கித்துலூத்துப் பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகமாகப் பயணித்த உயர் ரக ரேசிங் (Racing) மோட்டார் சைக்கிளும், திருகோணமலையிலிருந்து கபரணை நோக்கி பயணித்த இந்தியத் தம்பதியினரின் காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. </p><p>காரில் மோதிய மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறியதுடன், கணப்பொழுதில் தீப்பற்றி எரிந்து முற்றாகச் சாம்பலாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac8077f9-eead-41c4-a4f8-22388b7fedd7/26-6a62f1ab819f1.webp' /></p><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான கந்தளாயைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர், உடனடியாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p>

அத்துடன், காரை ஓட்டி வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

காயங்களுக்கு உள்ளான கார் ஓட்டுநரின் மனைவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கல் ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்! அதிரடியாக அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784871900"></link>
            <id>https://tamilwin.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784871900</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>

இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைக் கடந்து அதிகரித்துள்ளது.
</p><p>
இதன்படி, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100.60 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>மத்திய கிழக்கு பிராந்திய பதற்றம்</h2><p>அதேபோன்று, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலையும் அதிகரித்து 92.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd19db8b-5300-4510-a57f-c42f15c739c7/26-6a63026dd1f64.webp' /></p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான அபூர்வ கல்லுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-arrested-with-rare-stone-worth-rs-2-5-crore-1784871949"></link>
            <id>https://tamilwin.com/article/two-arrested-with-rare-stone-worth-rs-2-5-crore-1784871949</id>
            <summary type="text">கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபாய் (2.5 கோடி) பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் (இராவண கல்) ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபாய் (2.5 கோடி) பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் (இராவண கல்) ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
நேற்று (2026.07.23) இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிண்ணியா - கண்டி வீதியில் அமைந்துள்ள புடவைக்கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இக்கல் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff70fdf6-c469-4ebf-a703-bacc72d81263/26-6a630103e07b5.webp' /></p><p>
</p><p>
550 கிராம் நிறை உடைய இந்த கல் 4 அங்குலம் நீளமும், 6 ½ அடி சுற்றளவும் கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மீட்கப்பட்ட கல்லையும் இன்று ( 24) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு மரணங்கள் 59 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-59-1784871642"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-59-1784871642</id>
            <summary type="text">தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை இன்று (24) நிலவரப்படி 59 ஆக அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை இன்று (24) நிலவரப்படி 59 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,114 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
</p><p></p><h2>அதிகளவான நோயாளர்கள்</h2><p>
நேற்றைய (23) நிலவரப்படி, 57 இறப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 79,016 ஆக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93ba1c6b-96c3-4746-933c-0cc4ad330af7/26-6a62fff722a3a.webp' /></p><p>

இருப்பினும், இன்று இறப்பு விகிதம் 0.07வீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>அறிக்கையின்படி, ஜூன் (21,534) மற்றும் ஜூலை (24,739) மாதங்களில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> 

 

</p><h2>தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு</h2><p>கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 16,950 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். </p><p> 

 

அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,021 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c21c13-e59d-42fc-a25a-9e977c6ebd49/26-6a62fff7cd18f.webp' /></p><p> 

 

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5534 பேரும், கண்டியில் 5437 பேரும், களுத்துறையில் 5245 பேரும் இரத்தினபுரியில் 4482 பேரும், காலியில் 4430 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p> 

 

2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shocking-green-chilli-prices-1784869654"></link>
            <id>https://tamilwin.com/article/shocking-green-chilli-prices-1784869654</id>
            <summary type="text">சந்தையில் பச்சை&amp;nbsp; மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 1,200 ரூபாவிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;வறண்ட வானிலை மற்றும் பல்வேறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தையில் பச்சை&nbsp; மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 1,200 ரூபாவிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>வறண்ட வானிலை மற்றும் பல்வேறு பூச்சித் தொற்றுக்கள் காரணமாக&nbsp; பச்சை மிளகாயின் சந்தை வரத்து குறைவடைந்துள்ளதால்&nbsp; அதன் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என்று தம்புத்தேகம பொருளாதார மைய வர்த்தக சங்கத்தின் தலைவர் எல்.எஸ்.கே.லியனகே தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>அதிகரித்த விலை&nbsp;</h2><p>அதிகரித்துள்ள விலையேற்றத்தின்படி,&nbsp; பச்சை மிளகாய் ஒன்றின் விலை 15 ரூபாயை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும், “தற்போதைய வறட்சியான காலநிலை, அநுராதபுரம்,&nbsp; நொச்சியாகம,&nbsp; கஹடகஸ்திலிய போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மிளகாய் செய்கையை கடுமையாகப் பாதித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d851582-282d-4ee1-b1b8-f575a2ababdc/26-6a62fcb18f8a7.webp' /></p><p>அத்துடன், கல்நேவ, மீகலேவ, எப்பாவல போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மிளகாய் செய்கையிலும் விளைச்சல் அதி குறைவாகவே உள்ளதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார்.&nbsp;&nbsp;</p><p>இதேவேளை, அதிகமான விவசாயிகள் மிளகாய் செய்கையில் இருந்து படிப்படியாக விலகிச் செல்வதும் மிளகாயின் சந்தை வரத்து குறைவதற்கு&nbsp; காரணமாக இருப்பதாகவும், இதனாலும் மிளகாயின் விலை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-has-been-found-in-a-gampaha-1784869735"></link>
            <id>https://tamilwin.com/article/body-has-been-found-in-a-gampaha-1784869735</id>
            <summary type="text">கம்பஹா - கட்டுகஸ்தர பகுதியில் வீடொன்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு நேற்று (23) கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - கட்டுகஸ்தர பகுதியில் வீடொன்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸாருக்கு நேற்று (23) கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

கட்டுகஸ்தர சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு சடலமாக காணப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0921b7b7-ed4e-4fc8-88df-4a694ab53d40/26-6a62f8becdf1b.webp' /></p><p>
</p><p>
இதன்போது சடலத்திற்கு அருகில் இரத்தக்கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து நீதவானின் விசாரணைக்கு பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் குறித்து கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணை மட்டுமே தீர்வு - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-university-students-union-1784870074"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-university-students-union-1784870074</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது, ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண பல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது, ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் கண்ணதாசன் சுடரோன் தெரிவித்துள்ளார். </p><p>

சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><p> 

இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த உள்ளப் பொறிமுறை மூலம் இற்றைவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை. இங்கே செயற்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம் சரி, அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறைகள் சரி வெறும் தரவுகளை அறிக்கையிடும் வகையிலேயே அமைகிறது.</p><h2>முறையான சர்வதேச பொறிமுறை</h2><p> </p><p>அரசாங்கத்தின் இயந்திரமாக செயல்படும் நீதித்துறையினால் எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை ஒருபோதும் பெற்றுக் கொடுக்க முடியாது. ஒரு முறையான சர்வதேச பொறிமுறை ஊடாகவே எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு கிடைக்க முடியும்.</p><p></p><p> </p><p>2010ஆம் ஆண்டு நீக்கப்பட்ட GSP+ வரிச் சலுகை மீண்டும் 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. </p><p>அதன்போது பயங்கரவாத தடைச் சட்டமானது நீக்கப்பட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு வரை மக்களை அடக்குகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள் நீக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58d9b832-369e-4fc2-baee-f947f557dcde/26-6a62f95ab56c9.webp' /></p><p> </p><p>இது இவ்வாறு இருக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினர் இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சரியாக சந்திக்காமல் செல்வது ஒரு கண்துடைப்பு விடயமாகவே பார்க்கப்படுகிறது.</p><p> அந்தவகையில் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்பது யாதெனில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட அநீதியை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தட்டிக் கேட்காது. எனவே இதற்கு முறையான ஒரு சர்வதேச பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசுப் பேருந்துகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அறிவிக்கலாம் - பொது மக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fine-for-a-bus-that-approved-national-transport-1784865571"></link>
            <id>https://tamilwin.com/article/fine-for-a-bus-that-approved-national-transport-1784865571</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு
மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப்
பேருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு
மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப்
பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகார சபைக்குப் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என
அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அத்துடன்,
அதிகார சபையின் சோதனையின் அடிப்படையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்
அனுமதி பெற்ற பேருந்து ஒன்றுக்கு 20,000 ரூபா தண்டப்பணம்
விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில்,</h2><p>
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகளிலும் சோதனை
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையின் திடீர் பரிசோதகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01d8a58c-ef2c-4423-8d49-f7d807e8d684/26-6a62ef50940cd.webp' /></p><p>
இதற்கமைவாக, மன்னார் - கற்பிட்டி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட
பேருந்தில் அதிகார சபையின் திடீர் பரிசோதகர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p>
இதன்போது குறித்த பேருந்து செல்லுபடியான வழித்தட அனுமதிப்பத்திரத்தைக்
கொண்டிருக்கவில்லை என்பதுடன், பயணிகளுக்குப் பயணச்சீட்டுகளும்
வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. </p><p>இக்குற்றச்சாட்டுகள்
தொடர்பில் அதிகார சபையால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம்
அறிவிக்கப்பட்டது. </p><p>இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்
முடிவில், உரிய அனுமதி நிபந்தனைகளை மீறியமைக்காக குறித்த பேருந்துக்கு 20,000
ரூபா நிர்வாகத் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து
ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள்</h2><p>எதிர்காலத்தில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணம் முழுவதும் மேலும்
தீவிரப்படுத்தப்படும். </p><p>அண்மைக் காலமாகச் சில சொகுசுப் பேருந்துகளின் சேவைகள்
தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் அதிகார சபைக்குக்
கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3708e28-0fd5-4bb2-aabe-bb0eba509740/26-6a62f8e52d0d8.webp' /></p><p>குறிப்பாக, பேருந்தின் ஆசனங்களைச் சரிப்படுத்த முடியாத
நிலை காணப்படுதல், ஆசனங்களில் மூட்டைப்பூச்சிக் கடிக்கு உள்ளான சம்பவங்கள்
மற்றும் குளிரூட்டி (A/C) முறையாகச் செயற்படாமை போன்ற பல குறைபாடுகள்
தொடர்பில் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.</p><p>

எனவே, பயணிகள் இத்தகைய சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது
மேற்கண்டவாறான குறைபாடுகளையோ அல்லது முறைகேடுகளையோ எதிர்கொண்டால், அதற்கான
தகுந்த ஆதாரங்களுடன் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குத் தமது
முறைப்பாடுகளைத் தாமதமின்றி அனுப்பி வைக்க முடியும் எனவும் மேலும்
தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-1784868758"></link>
            <id>https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-1784868758</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் ஒரு வழக்கு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நடைபெற்று வரும் ஒரு வழக்கு தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்&nbsp;அவர் இன்று (24)முன்னிலையாகத் தவறியதையடுத்து, இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p></p><h2>வழக்கு விசாரணைக்கு வந்தபோது</h2><p>நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​அவரது பிணையாளர்களும் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d1648b1-dbf1-4ecc-8735-5d89b9687b2c/26-6a62f344c2d36.webp' /></p><p>கோட்டை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தபோது, ​​அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LxzsNrEDDvE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-24T05:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களுடைய காணிகள் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் - ஆளும் தரப்பு தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-temple-lands-to-be-divided-h-sunil-mp-1784863715"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-temple-lands-to-be-divided-h-sunil-mp-1784863715</id>
            <summary type="text">மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எடுத்து வருகிறோம் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் தையிட்டி காணி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தற்போது விரிவான
பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றதெனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தையிட்டி விவகாரம்</h2><p>
</p><p>


மேலும் தெரிவிக்கையில், </p><p>

அனைத்து தரப்பினரையும் அழைத்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

குறிப்பாக, நீதி அமைச்சர், வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் அமைச்சர், ஆளுநர், மாவட்டச்
செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும்
நாடாளுமன்றத்திற்கும் எமது அமைச்சுக்கும் பலமுறை அழைத்து இந்தப்
பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.</p><p> 

அத்துடன் அந்தப் பகுதியின் காணி உரிமையாளர்களான
மக்களையும் நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காணி
அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து அதிகாரிகளும் வலிகாமம் - தையிட்டி
பகுதிக்குச் சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965d66b6-3830-4898-9117-71c520ff8ff6/26-6a62de918ce31.webp' /></p><p> </p><p>ஆனால் அங்கு ஏற்பட்ட சிறிய சிக்கல் காரணமாக அதை
முழுமையாகச் செய்ய முடியாமல் போனது.

எங்களின் நோக்கம் என்னவென்றால், இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து, காணி
உரிமையாளர்களான எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடம்
ஒப்படைக்க வேண்டும் என்பதே ஆகும்.
</p><p>
அதேநேரம், 1972ஆம் ஆண்டின் காணி அளவீட்டு ஆவணங்களிலேயே இந்த விகாரை பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது. விகாரையின் ஜின்தோட்ட நந்தாராம நாயக்க தேரர் மிகவும்
தெளிவான புரிதலோடு இருக்கிறார்.</p><p></p><h2>அரசியல் சுயநலன்கள்</h2><p> </p><p>அந்தப் பகுதி மக்களோடு இணைந்து, மிகவும்
நல்லிணக்கத்தோடு பணியாற்றக்கூடிய ஒரு மத குருவாக அவர் உள்ளார்.

நாங்கள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. </p><p>மக்களுக்குச் சொந்தமான
நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கும் பிரித்துக்
கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். 

மிக
விரைவில் எமது அதிகாரிகளுடன் மீண்டும் அப்பகுதிக்குச் செல்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c79aea9-79a9-4fbf-8976-e91d8646b420/26-6a62de90ce97d.webp' /></p><p>இரு தரப்பினரிடையேயும்
உண்மையான நல்லிணக்கம் ஏற்கனவே நிலவுகிறது. 

அரசியல் காரணங்களுக்காகவும் சுயநல
அரசியல் தேவைகளுக்காகவுமே அங்கு நல்லிணக்கம் இல்லை என்பது போன்ற தோற்றம்
சித்தரிக்கப்படுகிறது.</p><p>
</p><p>அந்த அரசியல் சுயநலன்களுக்குப் பலியாகாமல், எமது மக்களுக்குரிய காணிகளையும்
விகாரைக்குரிய காணிகளையும் சரியாக அளவீடு செய்து, உரிய ஆவணங்களை மக்களிடம்
ஒப்படைப்பதே எமது திட்டமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-restricted-1784869311"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-restricted-1784869311</id>
            <summary type="text">இந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வாகன இறக்குமதி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வாகன இறக்குமதி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகள் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வாகனங்களின் இறக்குமதிக்கான வரி</h2><p>
</p><p>தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாகன வகைகளின் இறக்குமதிக்கான தீர்வை வரிகளை மூன்று மாத காலத்திற்கு அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். அந்த நடவடிக்கையின் பலனாக, இந்த ஜூலை மாதத்தில் வாகன இறக்குமதி வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6469fb49-76b6-4622-8448-2b2dd53be67f/26-6a62f1c09d557.webp' /></p><p>இம்மாதத்தின் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் முறையே 1.81 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 1.19 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்களே வழங்கப்பட்டுள்ளன.
</p><p>இந்த ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில், வாகன இறக்குமதிக்காக நாளொன்றுக்கு வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் சராசரிப் பெறுமதி 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்தில் பேணப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.
</p><p>நிலவும் சூழலில் 7 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:07:02+00:00</updated>
        </entry>
    </feed>
