<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-06T22:23:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் முடிவுக்கு வரும் ஈரான் போர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-says-he-thinks-iran-war-to-end-pretty-soon-1786051631"></link>
            <id>https://tamilwin.com/article/trump-says-he-thinks-iran-war-to-end-pretty-soon-1786051631</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மற்றும் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
</p><p>
உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிசக்தி விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "இந்தப் போர் இன்னும் நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது விரைவில் முடிவுக்கு வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முடிவுக்கு வரும்</h2><p>

இதற்கிடையில், முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில், ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88602a34-b960-4d22-9276-cd348aef2c2d/26-6a74ff42d84e3.webp' /></p><p> </p><p>இரு தரப்புக்கும் ஏற்ற ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அதேவேளை, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபடவில்லை என்று ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T22:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: ஊதியம் கோரி சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-escalates-congo-health-workers-1786047460"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-escalates-congo-health-workers-1786047460</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை
உடனடியாக வழங்குமாறு வலியுறுத்திப் பெருந்திரளான சுகாதாரப் பணியாளர்கள்
பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இட்டுரி மாகாணத்தின் புனியா நகரில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனைக்கு முன்பாக
ஒன்றுதிரண்ட சுகாதாரப் பணியாளர்கள் வியாழக்கிழமை இந்த எதிர்ப்பைப்
பதிவுசெய்துள்ளனர்.</p><p></p><h2>சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்</h2><p>
</p><p>
கடந்த மே மாதம் நடுப்பகுதியில் எபோலா தொற்று பரவத் தொடங்கியது முதல் தமக்குரிய
கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
</p><p>
நாட்டில் பதிவாகும் மொத்த எபோலா தொற்றாளர்களில் சுமார் 90 சதவீதமானோர் இட்டுரி
மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61b5857f-f8b0-4ad9-a867-4fb5a9a69317/26-6a74f6bf16d79.webp' /></p><p>
</p><p>
அரசாங்கத்தின் அண்மைய தரவுகளின்படி, இதுவரை 3,973 பேருக்குத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன், 1,801 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 674 நோயாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு
வருகின்றனர்.</p><p>

கிளர்ச்சிக் குழுக்களின் மோதல்கள் மற்றும் தொலைதூர கிராமங்களுக்கான
போக்குவரத்து வசதியின்மை என்பன தொற்றுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப்
பெரும் சவாலாக அமைந்துள்ளன.
</p><p>
சுகாதாரப் பணியாளர்களின் இந்தப் பணிப்புறக்கணிப்பு நோயாளிகளுக்கான சிகிச்சைகள்
மற்றும் தொற்றாளர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளைப் கடுமையாகப் பாதிக்கும் எனக்
கவலை வெளியி்ட்டுள்ள சர்வதேச நிவாரண அமைப்புகள், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த
உடனடி நடவடிக்கைகள் அவசியமென வலியுறுத்தியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T21:44:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருளில் நடந்த ரகசிய சந்திப்பு..! சந்தித்தது மொஜ்தபா கமெனிதானா என ஈரான் ஜனாதிபதிக்கு சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-president-met-mojtaba-khamenei-in-darkness-1786046532"></link>
            <id>https://tamilwin.com/article/iran-president-met-mojtaba-khamenei-in-darkness-1786046532</id>
            <summary type="text">ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இருளில் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் சந்தித்ததாக Iran International வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.</p><p>

அந்த சந்திப்பு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், மொஜ்தபா கமெனியின் பாதுகாப்பு அதிகாரிகள் பெசெஷ்கியானுக்கு கை குலுக்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மொஜ்தபா கமெனி</h2><p> 

இருள் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத சூழல் இருந்ததால், பின்னர் "நான் பேசியவர் உண்மையில் மொஜ்தபா கமெனிதானா?" என்று ஜனாதிபதி தனது அலுவலகத்தில் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>
இந்த சந்திப்புக்காக பெசெஷ்கியான் பலமுறை கோரிக்கை வைத்ததுடன், பதவி விலகுவதாக எச்சரித்த பிறகே காமெனியின் அலுவலகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20174468-4839-43f8-b5e5-a87ebfa20c2a/26-6a74e9f81cec9.webp' /></p><p>
</p><p>
 ஆனால் வழக்கம்போல் உச்சத் தலைவரின் இல்லத்தில் அல்லாமல், ரகசிய இடத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், கடந்த மே மாதத்தில் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோது, மொஜ்தபா கமெனியுடன் இரண்டரை மணி நேரம் "நட்பான சூழலில்" பேச்சுவார்த்தை நடத்தியதாக பெசெஷ்கியான் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>இறுதி எச்சரிக்கை</h2><p>

இதற்கிடையில், மொஜ்தபா கமெனியுடன் தொடர்பு கொள்வது தற்போது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இருப்பினும் அவரது இருப்பு நாட்டுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது என்றும் பெசெஷ்கியான் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1970d21-19fc-44be-ae01-0da5c056e3b2/26-6a74e9f8c25c5.webp' /></p><p>
</p><p>
மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான முடிவுகளில் தனது அரசு புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, பெசெஷ்கியான் மே மாதத்தில் பதவி விலக முயன்றதாகவும், அதற்கு பதிலாக மொஜ்தபா கமெனி இறுதி எச்சரிக்கை விடுத்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக, தனது தந்தை அயத்துல்லா அலி கமெனி உயிரிழந்ததைத் தொடர்ந்து பதவியேற்ற மொஜ்தபா காமெனி கடந்த ஐந்து மாதங்களாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை என்றும், எழுத்து மூலமான அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T21:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலைப் போல் திறமைசாலி யாரும் இல்லை! நாமல் புகழாரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/there-is-no-one-as-talented-as-basil-namal-praise-1786049193"></link>
            <id>https://tamilwin.com/article/there-is-no-one-as-talented-as-basil-namal-praise-1786049193</id>
            <summary type="text">பசில் ராஜபக்ச மிகவும் திறமையான ஒரு தலைவர் என்றும், அவரைப் போன்ற ஆளுமைமிக்க ஒருவர் இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசில் ராஜபக்ச மிகவும் திறமையான ஒரு தலைவர் என்றும், அவரைப் போன்ற ஆளுமைமிக்க ஒருவர் இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கிய தலைவரான பசில் ராஜபக்சவின் அரசியல் மற்றும் நிர்வாகத் திறன்களைப் பாராட்டிப் பேசியுள்ளார்.</p><p>


நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்கும் ஆற்றல் பசில் ராஜபக்சவுக்கு மட்டுமே உண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பிலும் இலங்கை அரசியல் பரப்பில் நடந்த முக்கிய விடயங்கள் தொடர்பிலும் பேசுகின்றது லங்காசிறியின் Political Arena நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2eh90AvrUac" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>[A8HKFC8[</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T20:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணப் புறக்கணிப்பு தொடரும்: ஃபிஃபா தலைவரின் முடிவை நிராகரித்தது ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-cup-boycott-to-continue-european-football-1786043277"></link>
            <id>https://tamilwin.com/article/world-cup-boycott-to-continue-european-football-1786043277</id>
            <summary type="text">&amp;nbsp;உலகக் கிண்ணப் போட்டிகளின் சிறுபான்மைப் பங்குகளை விற்பனை செய்யும் யோசனையை
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா (FIFA) திரும்பப் பெற்றுக்கொண்ட
போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகக் கிண்ணப் போட்டிகளின் சிறுபான்மைப் பங்குகளை விற்பனை செய்யும் யோசனையை
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா (FIFA) திரும்பப் பெற்றுக்கொண்ட
போதிலும், உலகக் கிண்ணப் போட்டிகளைப் புறக்கணிக்கும் தீர்மானத்தில்
மாற்றமில்லை என ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யுவேஃபா (UEFA) அறிவித்துள்ளது.</p><p>

உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய ஃபிஃபாவின்
தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து,
ஃபிஃபாவின் அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் விலகுவதாக யுவேஃபாவின் 55 உறுப்பு
நாடுகளும் கடந்த வாரம் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தன.</p><p></p><h2>ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்</h2><p>

கடுமையான எதிர்ப்புகள் காரணமாக ஃபிஃபா தலைவர் தனது முன்மொழிவைத் திரும்பப்
பெற்றுக்கொண்ட போதிலும், யுவேஃபா விதித்த நிபந்தனைகள் முழுமையாக
நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed27e8e5-a183-4df5-aa94-2fb9c862fd06/26-6a74e08f73daf.webp' /></p><p>

எதிர்காலத்தில் இவ்வாறான முயற்சிகள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதியான
வாக்குறுதி வழங்கப்படாமை மற்றும் ஃபிஃபா தலைவர் மீதான நம்பிக்கையை யுவேஃபா
இழந்துள்ளமை ஆகிய காரணங்களால் இந்த புறக்கணிப்புத் தீர்மானம் தொடர்வதாக
யுவேஃபா விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T19:29:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொறளை மெகசின் சிறையில் கைதிகள் குழுவால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-inside-magazine-prison-1786040522"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-inside-magazine-prison-1786040522</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு மெகசின் சிறைச்சாலையின் &#039;ஈ&#039; (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் 'ஈ' (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி வன்முறையில் ஈடுபட்டதையடுத்து அங்கு அமைதியின்மை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்</h2><p> 

எவ்வாறாயினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095c926e-3376-4599-ba39-98f00e360b55/26-6a74d22c46b51.webp' /></p><p> </p><p>

தற்போது இந்த அமைதியற்ற நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OuQjIYXGhm4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/danger-sri-lankan-passport-holders-switzerland-1786037862"></link>
            <id>https://tamilwin.com/article/danger-sri-lankan-passport-holders-switzerland-1786037862</id>
            <summary type="text">சமூகப் பாதுகாப்புத் தொடர்பான &#039;ஆகாபா&#039; (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதாக சோசலிச ஜனநாயக கட்சியை சேர்ந்த கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் ஒருவர், சம்பளத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் தொகையில், ஓய்வுபெற்ற பின் 'ஓய்வூதியப் பணம்' (Pension) மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது.</p><p>

 ஆனால், சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளன.
</p><p>

சுவிஸ் குடியுரிமை உள்ளவர்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்கும், ஆனால் வெறும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உரிய ஒப்பந்தம் இல்லாததால், அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டு செல்ல முடியாமல் போகிறது.</p><p>

 இது சுமார் 10,000 முதல் 15,000 பேரைப் பாதிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் சுவிட்சர்லாந்தில் உள்ள சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புகள் முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளன.</p><p>

 பாதிக்கப்பட்டவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும், விபரங்களைப் பகிர்ந்து உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
 இது ஒட்டுமொத்தப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஒரு கூட்டு முயற்சியாக மாறினால் மட்டுமே அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து உரிமையைப் பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LBHRr5sSAt8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T17:50:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக் கட்டுப்பாடு ஈரானுக்கு..! ஓமானுடன் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/control-of-strait-of-hormuz-iran-new-agreement-1786036084"></link>
            <id>https://tamilwin.com/article/control-of-strait-of-hormuz-iran-new-agreement-1786036084</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஐந்து மாத காலப் போரை முடிவுக்குக்
கொண்டுவரும் நோக்கில் ஓமானுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒப்பந்தத்தின் கீழ்,
ஹோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஐந்து மாத காலப் போரை முடிவுக்குக்
கொண்டுவரும் நோக்கில் ஓமானுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒப்பந்தத்தின் கீழ்,
ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் மீதான
கட்டுப்பாட்டை ஈரானுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஈரானுக்கும்
ஓமானுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p>
</p><p>
வணிகக் கப்பல்கள் ஈரானிய பிராந்திய கடற்பரப்பு ஊடாகவே பயணிக்க வேண்டும் என
ஈரான் நிபந்தனை விதித்துள்ளதுடன், இந்த பேச்சுவார்த்தைகளில் கணிசமான
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.</p><p>

இருப்பினும், உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான இந்தப்
பாதையின் கட்டுப்பாட்டை ஈரான் ஏற்றுக்கொள்வதை தாங்கள் ஒருபோதும்
அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5391f2-8b64-4a28-ac83-5c60c57c2be1/26-6a74c0e1c4ece.webp' /></p><p>

இதேவேளை, தமது நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்தால்,
வளைகுடா பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் முக்கிய எரிபொருள்
உள்கட்டமைப்புகள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர தூதரக
வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்த முன்மொழிவு
வளைகுடா பிராந்தியத்தின் அதிகார சமநிலையை ஈரானுக்கு சாதகமாக மாற்றக்கூடும் என
பிராந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T17:14:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு பற்றாக்குறையா! ட்ரம்ப் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-has-massive-amounts-1786035971"></link>
            <id>https://tamilwin.com/article/us-has-massive-amounts-1786035971</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் கிடையாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பாதுகாப்பு தலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் கிடையாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>அமெரிக்கப் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் ஆயுதக் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊகடங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.</p><h2>ட்ரம்ப் விளக்கம்</h2><p>
</p><p> அமெரிக்காவிடம் பாரிய அளவில் போர்க்கருவிகள் மற்றும் வெடிமருந்துகள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0a67dd-8055-4bd8-b89e-fe739029f884/26-6a74bf06108ef.webp' /></p><p>அமெரிக்காவிடம் குறிப்பாக குறிப்பிட்ட வகையான ஆயுதங்கள் போதியளவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தேவைக்கேற்ப பெருமளவிலான போர்க்கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>நமது நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளை ட்டியெழுப்பி வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், எந்த வகையான போர்க்கருவிகளைக் குறிப்பிடுகிறார் என்பதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
</p><p>அமெரிக்க இராணுவத்தின் முக்கிய வான் பாதுகாப்பு அமைப்பான தாட் (THAAD) ஏவுகணைத் தடுப்பு அமைப்பிற்கான இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை தீர்ந்துவிட்டது என ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஜனாதிபதி டிரம்ப் போலி தகவல்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T17:06:41+00:00</updated>
        </entry>
    </feed>
