<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-17T21:46:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மோசமாக நடந்து கொண்ட கனேடிய பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பயணப் பையுடன் மருத்துவ மையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண் தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார். </p><p>அவர் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் அவசர உதவி எண் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. </p><h2><b>பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணை</b></h2><p>இந்த முறைப்பாட்டிற்கமைய, சுற்றுலாப் பிரிவுப் பொறுப்பதிகாரி மிலன் ராஜபதிரன தலைமையிலான குழுவினர் அந்த மருத்துவ ஆய்வகத்திற்கு சென்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99912ebe-e67a-47aa-a7d4-a88ed96e73f7/26-6aac11a3a15df.webp' /></p><p>கனேடிய பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் செல்லுபடியாகும் விசா அல்லது கடவுச்சீட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது. </p><p>சந்தேக நபர் பல ஆண்டுகளுக்கு முன்பு அஹங்கம பகுதியில் வசித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. </p><p>

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கனேடிய பெண், நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. </p><p>இந்தக் காலப்பகுதியில் அவரை வெலிசர பகுதியில் உள்ள வெளிநாட்டினருக்கான தடுப்பு முகாமிற்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-17T21:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கோர விபத்து - ஆசிரியர் உட்பட இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-jaffna-1789680322"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-jaffna-1789680322</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.</p><h2>இருவர் பலி</h2><p>

வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311c4dc8-0aae-4cfc-b851-fd997c4be977/26-6aac5aee9cc59.webp' /></p><p>
</p><p>
வேகன் ஆர் காரும், துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T21:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/observance-of-thileepan-s-39th-commemoration-event-1789677769"></link>
            <id>https://tamilwin.com/article/observance-of-thileepan-s-39th-commemoration-event-1789677769</id>
            <summary type="text">திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நேற்று (17.09.2026) சிவன் கோயில் மூன்றலில் மாலை 5 மணியளவில் இந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
</p><p>
நேற்று (17.09.2026) சிவன் கோயில் மூன்றலில் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அகரம் மக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>

இதன்போது, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், பொதுச்சுடரும் ஏற்றிவைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab888768-e940-4a39-b3b1-176c7c4738bf/26-6aac511bd621b.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நினைவஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adf4255-8f6e-4bd7-8b9a-450f354ac7bf/26-6aac511ccff37.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13cf49f-63c3-4670-a6cc-ff24f6b04eb1/26-6aac511da6205.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:44:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பில்லியன் டொலர் பணமோசடி வழக்கில் வங்கி அதிகாரிகளுக்குப் பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-officials-granted-bail-in-1-billion-money-1789677213"></link>
            <id>https://tamilwin.com/article/bank-officials-granted-bail-in-1-billion-money-1789677213</id>
            <summary type="text">பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான சட்டவிரோதப் பணமோசடிக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான சட்டவிரோதப் பணமோசடிக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு தனியார் வங்கி அதிகாரிகளைப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு நேற்று(17.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>

அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரும் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><h2>
பிணை உத்தரவு</h2><p>
அதேவேளை, பிணையாளிகள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தாங்கள் பணிபுரிந்த வங்கி கிளை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/433deeb0-c58d-4543-8fb2-2631e9d2f17e/26-6aac4f2b3e79e.webp' /></p><p>
</p><p>
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் முகமது ஜிஃப்ரியின் பிணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதவான் இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான தொழிலதிபரும் மற்றொரு சந்தேக நபரும் 1ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஸ்வீடன் பிரதமர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/swedish-prime-minister-resigns-election-defeat-1789676804"></link>
            <id>https://tamilwin.com/article/swedish-prime-minister-resigns-election-defeat-1789676804</id>
            <summary type="text">ஸ்வீடனில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததைத்
தொடர்ந்து, அந்த நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவி விலகலை அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்வீடனில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததைத்
தொடர்ந்து, அந்த நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
</p><p>
தேர்தல் திணைக்களத்தினால் இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தீர்மானத்தை எடுத்துள்ளார். </p><p>

மொத்தம் 349 இடங்களைக் கொண்ட ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில்,
எதிர்க்கட்சியான மைய இடதுசாரி கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றி
வெற்றியடைந்துள்ளது. </p><h2>தேர்தலின் பின்னர் பதவி விலகல்</h2><p>

பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தலைமையிலான ஆளும் வலதுசாரி
கூட்டணி 173 இடங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்துள்ளது.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்
பொருட்டு, தமக்கு பிரதமர் பதவியிலிருந்து விலக அனுமதி அளிக்குமாறு நாடாளுமன்ற
சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கேட்டுக்கொண்டுள்ளதாக உல்ஃப் கிறிஸ்டர்சன்
தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1530999a-6eb5-4a83-aef9-730718c54579/26-6aac4d339b7cf.webp' /></p><p>
</p><p>
இந்தத் தேர்தல் முடிவுகளையடுத்து, நான்கு வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்த
சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவியான மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் நாட்டின்
பிரதமராகப் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.</p><p>

எனினும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைய சிறிது
காலம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வருடங்களாக போராடும் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும்..! ஈரோஸ் கட்சியின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/criticism-by-the-eros-party-leader-1789676455"></link>
            <id>https://tamilwin.com/article/criticism-by-the-eros-party-leader-1789676455</id>
            <summary type="text">ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்டாரே அவ்வாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்டாரே அவ்வாறு
தமிழ் மக்களின் அரசியல் ரீதியான செயற்பாட்டுக்காக புனர்வாழ்வு அழிக்கப்பட்ட
விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா இணைந்து செயற்படவுள்ளதாக ஈரோஸ்
கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார். </p><p> 

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று(17.09.2026) தமிழீழ
விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.
பிரபாகரன் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


16 வருடங்களாக போராடும் மக்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

தேசிய தலைவர் பிரபாகரனால் ஒரு ஆயுத சக்தி மௌனிக்கப்பட வேண்டும், ஒரு அரசியல் சக்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் மாபெரும் சக்தி என்ற எண்ணப்பாட்டில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, சர்வதேச நாடுகளும் கூட அவதானித்துக் கொண்டிருந்தன.
</p><p>
இந்த நிலையில், அரசியல் தீர்வு தைப்பொங்கலுக்கு வரும், தீபாவளிக்கு வரும் என காலங்காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு, உச்சகட்ட விளிம்பில் இருந்து கொண்டிருக்கின்றனர்.
</p><p>
ஈரோஸ் பார்வையாளர்களாக இருந்தோம். ஏன் என்றால், தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdecd7e6-16ea-49fb-82c5-3a71d91bbc21/26-6aac4bc00f319.webp' /></p><p>
</p><p>
இன்று 16 வருடங்கள் கடந்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. மக்கள் வறுமையினால் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இனி மக்களின் துன்பங்களையும் கஷ்டங்களையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. </p><p>அதன் காரணமாக, ஈரோஸ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் களம் இறங்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.</p><p>

அதன் காரணமாக, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகள் என அனைவரையும் தொடர்புகொண்டு, இணைந்து செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T20:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் இணைந்து செயற்படுவது மிக முக்கியமானது - மார்க் கார்னி தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/european-union-and-canada-to-work-together-1789672262"></link>
            <id>https://tamilwin.com/article/european-union-and-canada-to-work-together-1789672262</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியமும் (EU) கனடாவும் இணைந்து செயற்படுவதன் மூலமே இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு மேலும்
வலுவடையும் என கனடாப் பிரதமர் மார்க் கார்னி தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியமும் (EU) கனடாவும் இணைந்து செயற்படுவதன் மூலமே இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு மேலும்
வலுவடையும் என கனடாப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராக கனடாவை இணைத்துக் கொள்வது தொடர்பான
முன்மொழிவை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இரு தரப்பினருக்கும் இடையிலான
உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
</p><h2>ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து</h2><p>
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்
உரையாற்றிய போதே கனடாப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8118a1-03ec-41ba-b2d5-e1585cf2a724/26-6aac42149d45f.webp' /></p><p>
"ஐரோப்பாவும் கனடாவும் தனித்தனியாகப் பலமானவை, ஆனால் இரண்டும் ஒன்றாக இணையும்
போது மேலும் பலமடைகின்றன" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>எனினும், கனடாவை இணை உறுப்பினராகச் சேர்ப்பதற்கான ஐரோப்பிய ஆணைக்குழுவின்
தலைவர் உர்சுலா வொன் டேர் லேயனின் இந்த முன்மொழிவை அமெரிக்கக் ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><h2>வர்த்தகங்களை நிறுத்த வேண்டி வரும்</h2><p>

இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு எதிரான பகையான செயலாகக் கருதப்பட்டால்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது மிகக் கடுமையான வரிகளை விதிக்க நேரிடும் அல்லது
சில வர்த்தகங்களை நிறுத்த வேண்டி வரும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ab3f1c-4e3b-47f7-b561-c01c7a182c7e/26-6aac421552ff0.webp' /></p><p>

ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலளித்துள்ள ஐரோப்பிய ஆணைக்குழு,
இந்த முன்மொழிவு எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும், இரு
தரப்பினரின் பொதுவான பலத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே முன்வைக்கப்பட்டது
என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

முக்கிய கனிமங்கள், பாதுகாப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு (AI), ஆற்றல்
பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஐரோப்பிய
ஒன்றியத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றக் கனடா எதிர்பார்ப்பதாகப்
பிரதமர் மார்க் கார்னி தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T20:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூர் பயணம் ஷிரந்திக்கு பாவமா..! சாபமா - நாமலின் ரகசிய MAIL அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/is-the-trip-to-singapore-a-pity-for-shiranthi-1789675640"></link>
            <id>https://tamilwin.com/article/is-the-trip-to-singapore-a-pity-for-shiranthi-1789675640</id>
            <summary type="text">நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மருத்துவ ரீதியிலான பிரச்சினை தொடர்பான பரிசோதனைக்காகவும், அறுவைச் சிகிச்சைக்காகவும் தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்புர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மருத்துவ ரீதியிலான பிரச்சினை தொடர்பான பரிசோதனைக்காகவும், அறுவைச் சிகிச்சைக்காகவும் தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்புரைக்கமைய ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் சென்ற நிலையில், வயதான காலத்தில் இவ்வளவு உடல்நலக் கோளாறுகளுடன் போராடுவதற்கு அவர் கடந்த காலங்களில் செய்த பாவங்கள்தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், பிரபாகரனின் தந்தை மற்றும் தாய் இருவரும் வயதான காலத்தில் இராணுவத்தினரால் சீரழிக்கப்பட்டனர். </p><p>

இவர்களின் பாவம்தான் மகிந்தவை எழுந்து நிற்க முடியாமலும், ஷிரந்தியை வயதான காலத்தில் சிங்கப்பூர் வரை கொண்டு சென்றுள்ளதோ என நினைக்க வைக்கின்றது.
</p><p>
வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள், குடும்பங்கள், குழந்தைகள் என முற்றிலும் இராணுவத்தினரால் சூறையாடப்பட்டபோது, நாட்டின் முதல் பெண்மணியாகப் போற்றப்படும் ஷிரந்தி மௌனம் காத்தார். ஆனால், தற்போது சிறைக்குச் சென்றுவிடுவோமோ என்ற பயத்தில் ஓடி ஒளிய வேண்டிய நிலை வந்துவிட்டது.
</p><p>
எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் கைதான நாமல் ராஜபக்சவின் மின்னஞ்சல் மூலம் மற்றுமொரு நபர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுபோன்று, மனிதாபிமானமற்ற வகையில் நடந்துகொண்ட ராஜபக்சர்களின் நிலை குறித்து உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகின்றது “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3-h8lpvum3c" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:08:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் தீவில் HIV அதிகரிப்பு - வெளியான முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rise-in-hiv-cases-on-island-popular-with-tourists-1789673329"></link>
            <id>https://tamilwin.com/article/rise-in-hiv-cases-on-island-popular-with-tourists-1789673329</id>
            <summary type="text">பிஜி தீவில் எச்.ஐ.வி (HIV) பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து,
அந்த நாடு தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளதுடன் பரிசோதனை, சிகிச்சை
மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிஜி தீவில் எச்.ஐ.வி (HIV) பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து,
அந்த நாடு தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளதுடன் பரிசோதனை, சிகிச்சை
மற்றும் தடுப்புச் சேவைகளை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

பசுபிக் பிராந்தியத்தில் உள்ள இந்த நாட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 167
பெரியவர்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி இருந்த நிலையில், தற்போது 60 பேரில்
ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><h2>
தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள்</h2><p>
மேலும், எச்.ஐ.வி தொடர்பிலான சிக்கல்களால் உயிரிழக்கும் குழந்தைகளின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
பத்து இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பிஜியில், 2025 ஆம்
ஆண்டில் மட்டும் 2,016 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகப்
சுகாதாரத்துறை அமைச்சர் அந்தோனியோ லலாபலாவு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ef90bb-d2c5-4896-a4de-6b5984aa63b5/26-6aac40cda25a7.webp' /></p><p>
</p><p>
சாதாரண கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இனி போதுமானதாக இருக்காது என்றும் அவர்
எச்சரித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்பாடு, பாதுகாப்பற்ற உடலுறவு, ஒரே ஊசியைப் பகிர்ந்துகொள்ளுதல்
மற்றும் "ப்ளூடூத்திங்" எனப்படும் ஆபத்தான போதைப் பழக்கம் ஆகியவை இந்தத்
தொற்றுப் பரவலுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளதாக வல்லுநர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><h2>
தொற்று ஏற்படுவதற்கான காரணம் இதுவே..</h2><p>
போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்துபவர்கள், ஏற்கனவே போதையில் உள்ள ஒருவரின்
இரத்தத்தை உறிஞ்சித் தங்கள் உடலில் செலுத்திக் கொள்ளும் மிகவும் ஆபத்தான
பழக்கமே "ப்ளூடூத்திங்" அல்லது "ஹொட்ஸ்பொட்டிங்" எனக் குறிப்பிடப்படுகிறது.</p><p>

போதைப்பொருளின் செலவைக் குறைக்கவும், பிஜியில் பற்றாக்குறையாக உள்ள ஊசிகளைச்
சமாளிக்கவும் ஒரே ஊசியைப் பலரும் பகிர்ந்துகொள்ளும் இந்த முறை, வைரஸ் வேகமாகப்
பரவ முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c670b7ea-8c53-4d46-b060-1e66a5eb4b7c/26-6aac40ce6b4c3.webp' /></p><p>
</p><p>
இந்த நெருக்கடியைச் சமாளிக்க பிஜி அரசாங்கம் புதிய ஊசி மற்றும் சிரிஞ்ச்
வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, போதிய
இருப்பு உள்ள ஊசி மற்றும் சிரிஞ்சுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><h2>
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
மேலும், எச்.ஐ.வி குறித்த பயம் அல்லது கூச்சம் காரணமாக மக்கள் ஒதுங்கி
நிற்காமல் தயக்கமின்றி முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும்,
சமூகப் புறக்கணிப்பே மக்களைச் சிகிச்சையிலிருந்து தூரமாக்குகிறது என்றும் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d64990f7-6660-49a9-b26f-7630fb997a5d/26-6aac40cf211ca.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய நாடுகளின் UNAIDS அமைப்பின் தரவுகளின்படி, 2025 இல் பிஜியில் எச்.ஐ.வி
உடன் வாழும் 9,100 பேரில், 39% பேருக்கு மட்டுமே தங்களுக்கு நோய் இருப்பது
தெரியும் என்றும், 22% பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் என்றும்
தெரியவந்துள்ளது.</p><p>

உலகளவில் சராசரியாக 78% பேர் சிகிச்சை பெறும் நிலையில், பிஜியின் இந்த நிலைமை
மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.</p><p>

இந்தத் தீவிரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவரக்
குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் எனத் தேசிய எச்.ஐ.வி பணிக்குழுவின்
தலைவர் ஜேசன் மிட்செல் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T19:34:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் - இலங்கையின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-low-pressure-area-formed-in-the-bay-of-bengal-1789671950"></link>
            <id>https://tamilwin.com/article/a-low-pressure-area-formed-in-the-bay-of-bengal-1789671950</id>
            <summary type="text">மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

பதிவில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,</p><p> 

மத்திய வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு வடக்காக உருவாகியுள்ள தாழமுக்கம், வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும், சில சந்தர்ப்பங்களில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
தாழமுக்கம் ஏற்படும் அபாயம்</h2><p>

இந்த தாழமுக்கம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் பிரம்மபூர் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது புயலாக மாறினால், பங்களாதேஷ் வழங்கியுள்ள அர்னாப் (Arnap) என்ற பெயர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76b99c42-b900-43d4-a548-4b438e586550/26-6aac3b01ae1fd.webp' /></p><p>

இந்த புயலால் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் நேரடியான பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவித்துள்ள பேராசிரியர் பிரதீபராஜா, எனினும் இதன் காரணமாக அரபிக்கடலில் இருந்து ஈரப்பதன் மிக்க காற்று இலங்கையின் மேற்குப் பகுதியூடாக வங்காள விரிகுடாவை நோக்கி ஈர்க்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் காரணமாக எதிர்வரும் 19.09.2026 முதல் 23.09.2026 வரை இலங்கையின் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>
 19ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகள் கனமழை</h2><p>
அதேவேளை, தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் பதிவாகி வரும் வெப்பச்சலன மழை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவக்கூடும் எனவும், இந்த நிலை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d208dc64-3715-4298-ba68-cfdca6d324ce/26-6aac3b02beecd.webp' /></p><p>
</p><p>
உருவாகியுள்ள தாழமுக்கத்தின் காரணமாக எதிர்வரும் 20.09.2026 முதல் 23.09.2026 வரை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

மேலும், எல் நினோ மற்றும் இந்து சமுத்திர இருமுனை (IOD) ஆகியவற்றின் தாக்கம் காரணமாக வங்காள விரிகுடாவில் தாழமுக்கங்கள் உருவாகுவதற்கான சாதகமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f1cf889-29fc-4d46-aa0c-e93428d365e6/26-6aac3b038cd50.webp' /></p><p>

வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதால், முன்னர் குறிப்பிடப்பட்டதைப் போன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 7 தாழமுக்க நிகழ்வுகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதன் ஆரம்பகட்டமாக தற்போது உருவாகியுள்ள தாழமுக்கத்தை கருதலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெருமழையுடன் கூடிய வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதையே பல்வேறு வானிலை மாதிரிகள் வெளிப்படுத்துவதாகவும், எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருப்பது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T19:10:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தினருக்கு சஹ்ரான் குடும்பத்தை கைது செய்ய வாய்ப்பிருந்தும் தவறவிட்டது ஏன்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-arrested-1789670877"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-arrested-1789670877</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவும் இருந்தனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவும் இருந்தனர். எனினும், குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
நல்லாட்சி அரசாங்கத்தின் போது முக்கிய பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே, யாருடைய பணிப்புரைக்கமைய இவ்வளவு குற்றங்களைச் செய்தார் என்ற சந்தேகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சில மணி நேரங்களில் சஹ்ரான் குடும்பத்தினர் அவரது வீட்டில் இருந்ததாகவும், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நினைத்திருந்தால் அவர்களைக் கைது செய்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால், அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களைத் தப்பிக்க வைப்பதற்காகவே பொறுமையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சஹ்ரானின் மனைவி சம்பவத்திற்குப் பின்னரும் உயிருடன் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வரும் 22ஆம் திகதி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், 100 நாட்களைக் கடந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலே இந்த விடயங்கள் தொடர்பில் வாய் திறப்பாரா என குற்றப்புலனாய்வு அதிகாரிகள் காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான கடந்தகால அரசாங்கங்களால் மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் பல விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது News Inside நிகழ்ச்சி.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OaFyBHp3CoU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T18:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹூதி அமைப்பினரைக் கட்டுப்படுத்த ஈரானிடம் சீனா இரகசிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-makes-secret-request-iran-rein-in-houthis-1789667630"></link>
            <id>https://tamilwin.com/article/china-makes-secret-request-iran-rein-in-houthis-1789667630</id>
            <summary type="text">யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ நடவடிக்கைகள் அண்மைய நாட்களில்
தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ நடவடிக்கைகள் அண்மைய நாட்களில்
தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம்
சீனா இரகசியமாகக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஈரான் விவகாரங்களை அறிந்த மூன்று
உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

சவூதி அரேபியா விடுத்த அவசர வேண்டுகோளின் பேறாகவே சீனா இந்த நடவடிக்கையை
எடுத்துள்ளது.
</p><h2>கப்பல் போக்குவரத்து கடுமையான அச்சுறுத்தல்</h2><p>செங்கடல் கடலோரப் பகுதிகள் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணைப் பகுதிகளில் ஹூதி
அமைப்பினர் வேகமான முன்னேற்றங்களை அடைந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/417ab670-67ba-42b5-b203-9ec06fd4cd97/26-6aac2f1a4bbcb.webp' /></p><p>இதன் காரணமாக சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்து
கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. </p><p>இந்த நிலையிலேயே சவூதி அரேபியா
சீனாவின் உதவியை நாடியுள்ளது.

சீனா பகிரங்கமாக அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கே அழைப்பு விடுத்து வரும்
போதிலும், ஈரானுக்கு அனுப்பிய தனியாத செய்தி மூலம் தனது அழுத்தத்தை
அதிகரித்துள்ளது.
</p><h2>செங்கடலிலும் தாக்குதல்கள் தொடர்ந்தால்&nbsp;</h2><p>
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, தனது எரிபொருள்
தேவைகளுக்கு பெரிதும் நம்பியிருக்கும் கடல்சார் வர்த்தக வழிகளில் இந்த மோதல்
பரவுவதைத் தடுக்கவே ஈரானின் செல்வாக்கைப் பயன்படுத்த விரும்புகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a218614-536a-45d9-9068-7820023191a4/26-6aac2f1b6a485.webp' /></p><p>

சீனாவின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரான், பிராந்தியத்தில் அமைதியும்
ஸ்திரத்தன்மையும் ஏற்பட வேண்டுமெனில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்
நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
</p><p>
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனாவே
கொள்முதல் செய்து வரும் நிலையில், ஈரானை வலியுறுத்தக்கூடிய ஒரு சில நாடுகளில்
சீனாவும் ஒன்றாகும்.
</p><p>
அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கடலிலும்
தாக்குதல்கள் தொடர்ந்தால் அது உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை கடுமையாகப்
பாதிக்கும் எனக் அஞ்சப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளப் பதிவுக்காக கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-anojan-arrested-over-social-media-post-1789667060"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-anojan-arrested-over-social-media-post-1789667060</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. </p><p> 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(17.09.2026) அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2>

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு</h2><p>
அவருக்கான தண்டனையைக் குறைப்பதற்காக அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518a39ea-fb8d-49c9-9eca-1884c69c8058/26-6aac27c08d854.webp' /></p><p>
</p><p>
இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாகவும், அனோஜனுக்காக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் பிற முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் இன, மத அடிப்படையிலான இழிவான அல்லது தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் இலங்கை மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பயணச்சீட்டுக்களி்ல் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/online-train-tickets-1789664454"></link>
            <id>https://tamilwin.com/article/online-train-tickets-1789664454</id>
            <summary type="text">இனிவரும் காலங்களில் இணையவழியினூடாக தொடருந்து பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் தொடருந்து திணைக்க பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனிவரும் காலங்களில் இணையவழியினூடாக தொடருந்து பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கைப் தொடருந்து திணைக்க பொதுமுகாமையாளர் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இன்று(17.09.202) தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.</p><h2>பயணச்சீட்டுக்களை இணையவழியில்</h2><p>

அதன் பிரகாரம் தொடருந்துப் பயணிகள் பயணச்சீட்டுப் பெற்றுக் கொள்வதற்காக இனிவரும் காலங்களில் தொடருந்து நிலையங்களுக்குச் செல்லத் தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c51f9b-1f91-42f5-8e85-aa964039cd13/26-6aac228ebc63c.webp' /></p><p>
</p><p>
அதற்குப் பதிலாக தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தொடருந்து பயணச்சீட்டுக்களை இணையவழியினுடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>அதன்பிரகாரம் www.pravesha.lk எனும் இணையத்தளத்தை அணுகுவதன் ஊடாக பயணிகள் தங்கள் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
</p><p>
அதேபோன்று pravesha மொபைல் செயலி ஊடாகவும் தங்களுக்கான பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T17:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் புலிதான் ஆனால் விடுதலைப் புலி அல்ல: சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை கிளப்பும் அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-m-a-tiger-but-not-an-ltte-tiger-1789663763"></link>
            <id>https://tamilwin.com/article/i-m-a-tiger-but-not-an-ltte-tiger-1789663763</id>
            <summary type="text">&amp;nbsp;மேடையில்&amp;nbsp; தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி&amp;nbsp; தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேடையில்&nbsp; தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி&nbsp; தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
</p><p>‘புலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியமை மற்றும் புலம்பெயர் மக்கள் தொடர்பான பேச்சு குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
</p><p>தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.</p><h2>புலனாய்வுப் பிரிவினரை சந்திக்க தயார்..</h2><p>சிங்கள மக்கள் தங்களை ‘சிங்கம்’ எனக் கூறிக்கொள்வது போல, தான் ‘புலி’ எனக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை எனவும், அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் குறிக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3889a67-7240-4207-89f1-1dbd9e60eb87/26-6aac1a1537951.webp' />&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>தாம் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p>நாட்டின் மறுசீரமைப்பிற்கு அவர்கள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் ஒரு மருத்துவராக களுபோவில, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றி, சிங்கள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>
</p><p>ஆயுதம் ஏந்தும் எண்ணம் கொண்டவன் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கோ அல்லது கைதுக்கோ தான் அஞ்சவில்லை எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தன்னை விசாரிக்க விரும்பினால் வாட்ஸ்அப் மூலம் இருப்பிடத்தை அனுப்பினால் போதுமானது எனவும், செருப்பு மற்றும் சாதாரண உடையில் தானாகவே நேரில் வரத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாதாரண மனிதர்களை இலக்கு வைப்பதை விட்டுவிட்டு, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரன் போன்ற பெரிய குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்ததற்காகத் தற்போது வெட்கப்படுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xed1HPmRx3w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-17T16:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரச அலுவலக காலதாமதங்களை குறைக்க அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-for-people-of-jaffna-1789663298"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-for-people-of-jaffna-1789663298</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களில் ஏற்படும் காலதாமதங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, இன்று (17.09.2026) முதல் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.</p><h2>

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>

இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b149eb57-6225-4c67-8dab-eadb06dc8a69/26-6aac187425811.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பொதுமக்கள் அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை 076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நேரடி அழைப்பின் ஊடாகப் பதிவு செய்யலாம்.
</p><p>
அத்துடன், WhatsApp அழைப்பு மூலமாகவும் தொடர்புகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு விரைவாக உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0VExnTldYAE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஹோட்டலில் போதைப்பொருளுடன் பிடிபட்ட பிரபல நடிகர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/actor-fined-rs-5-000-over-cocaine-1789661401"></link>
            <id>https://tamilwin.com/article/actor-fined-rs-5-000-over-cocaine-1789661401</id>
            <summary type="text">கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார&amp;nbsp; கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார&nbsp; கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான வழக்கு இன்று(17.09.2026)&nbsp; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கல்கிஸ்ஸ பிரதான நீதவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><h2>போதைப்பொருளுடன் கைது</h2><p>
வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தை கடற்கரை வீதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c819c88d-8d6e-4740-8734-a26cd9a8a0ea/26-6aac152bdb945.webp' /></p><p>
</p><p>கைதான போது விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கோகோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டால், எவ்வித மன்னிப்பும் இன்றி நேரடியாகப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் என நீதவான் சந்தேகநபர்களுக்குப் பகிரங்க நீதிமன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>விஷ்வ கொடிகார பல்வேறு சிங்களத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் என்பனவற்றில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T16:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் சேமிப்பில் கடும் கட்டுப்பாடு - பாகிஸ்தான் மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-government-s-drastic-spending-cuts-1789661242"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-government-s-drastic-spending-cuts-1789661242</id>
            <summary type="text">பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இந்த விடயம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் இன்று(17.09.2026) அமைச்சரவையில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவு 50% குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வரம்பு ஆயுதப் படைகள், சட்ட அமலாக்க முகமைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் மத்திய வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.</p><h2>


இறுக்கமான நடைமுறைகள்</h2><p>
தொடர்புடைய அறிக்கையின்படி, 2026/27 நிதியாண்டிற்கான திரும்பத் திரும்ப வராத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்திலிருந்து மாதத்திற்கு 5% குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bac8803-2aaa-4dba-862a-bd692cb58400/26-6aac13219b0a8.webp' /></p><p>
</p><p>
புதிய வாகனங்கள் மற்றும் சில நீடித்த பொருட்கள் வாங்குவதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுப்பாடுகள் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பொருந்தாது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. </p><p>

வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் தேவைப்பட்டால், அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் விமானங்களில் சாதாரண பயணிகளுடன் ஒரே வகுப்பில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><h2>
மட்டுப்படுத்தப்படும் அரசக் கூட்டங்கள்</h2><p>
அரசு நிறுவனங்களின் கூட்டங்களை முடிந்தவரை காணொளிக் கருத்தரங்குகள் மூலம் நடத்தவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுக்கள் வருகை தரும்போது தவிர, அதிகாரப்பூர்வ அரசு விருந்துகளை நடத்த வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00aa8c1f-f227-4d08-9251-9b7eca7593c8/26-6aac132269084.webp' /></p><p>
</p><p>

அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ மாநாடுகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அரங்குகள், குழு அறைகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ வசதிகளை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கூடுதலாக, திருமணங்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் ஒரே ஒரு வகை உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான கடைகளின் தற்போதைய மூடும் நேரங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><h2>

இரவு 10 மணிக்கு பின்னர் மூடப்படும் சேவைகள்</h2><p>
அதன்படி, பொதுக் கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9 மணி வரையிலும், பொழுதுபோக்கு இடங்கள் இரவு 10 மணி வரையிலும் மூடப்பட வேண்டும்.</p><p>

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம், ஆனால் பார்சல் மற்றும் வீட்டு விநியோக சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e407e2cd-9717-4ea5-9b06-80bd52d86352/26-6aac13231c0e1.webp' /></p><p>
</p><p>
மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள், மருத்துவப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள், மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போது, ​​தேவைப்படும் பட்சத்தில் ஒவ்வொரு வழக்கையும் பொறுத்து விலக்குகள் பரிசீலிக்கப்படலாம் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா- ஈரான் போர் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. கண்டனம் - விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-condemns-us-iran-military-actions-1789660336"></link>
            <id>https://tamilwin.com/article/un-condemns-us-iran-military-actions-1789660336</id>
            <summary type="text">ஈரானில் உள்ள பாடசாலை மற்றும் விளையாட்டு மையமொன்றின் மீது அமெரிக்கா நடத்திய
இராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், அதேவேளை அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள பாடசாலை மற்றும் விளையாட்டு மையமொன்றின் மீது அமெரிக்கா நடத்திய
இராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், அதேவேளை அரச
எதிர்ப்புப் போராட்டங்களை அடக்குவதற்கு ஈரான் மனிதகுலத்திற்கு எதிரான
குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக
ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த பெப்ரவரி மாதம் ஈரானின் மினாப் நகரில் அமைந்திருந்த பாடசாலையொன்றின்
மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 120 பாடசாலை சிறுவர்கள் உட்பட
150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
</p><p>
குறித்த பாடசாலை பொதுமக்கள் பயன்படுத்திய கட்டிடம் என்பதை உறுதிப்படுத்தாமல்
அமெரிக்கா நடத்திய இந்த இலக்குத் தவறான தாக்குதல், சர்வதேசச் சட்டத்தின் கீழ்
போர்க்குற்றமாகும் என ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>

மக்கள் மீதான சித்திரவதை</h2><p>

இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் ஈரானில் வெடித்த அரச எதிர்ப்புப்
போராட்டங்களின் போது, பொதுமக்கள் மீது ஈரான் அரசாங்கம் மேற்கொண்ட
அடக்குமுறைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27df25f9-cd13-402f-aac3-b45eba15a574/26-6aac0dc132ad0.webp' /></p><p>
</p><p>
இதில் சட்டவிரோதப் படுகொலைகள், சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும்
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் போன்றவை உள்ளடங்குவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஈரான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விடவும், இந்த
அடக்குமுறைகளில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக
இருக்கும் என ஐ.நா குழு கவலை வெளியிட்டுள்ளது.</p><p>

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்
சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T15:57:07+00:00</updated>
        </entry>
    </feed>
