<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-06T01:36:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியைச் சந்தித்த புதிய இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-army-chief-meets-the-president-1785978740"></link>
            <id>https://tamilwin.com/article/new-army-chief-meets-the-president-1785978740</id>
            <summary type="text">இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட்
ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(5) ஜனாதிபதி அநுரகுமார
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட்
ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(5) ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
</p><p>
புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த
பிரேமரத்ன ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம்
இதுவாகும்.</p><h2>இராணுவத் தளபதி</h2><p>
</p><p>
தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அரச தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாயப்
படி ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுடன் சம்பிரதாய ரீதியாக நினைவுச் சின்னங்களைப்
பரிமாறிக்கொண்டதுடன், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலந்த
பிரேமரத்னவுக்கு ஜனாதிபதி தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca1a7a8e-c2a4-43b5-84ec-e7199739916a/26-6a73e1afe59af.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T01:22:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் திருப்பம்: சாரா ஜஸ்மினின் உடல் தொடர்பில் நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-sunday-attacks-sara-jesmin-alive-1785951605"></link>
            <id>https://tamilwin.com/article/easter-sunday-attacks-sara-jesmin-alive-1785951605</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின் உடல் கிடைக்கப்பெறவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
</p><p>
மேலும், சாரா ஜஸ்மின் விசாரணையாளர்களைத் தவறாக வழிநடத்த முயன்றமை விமான நிலைய சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சாரா ஜஸ்மினின் உடல் சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்டதாகக் காட்டும் நோக்கில் மூன்றாவது முறையாக DNA பரிசோதனை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரி விரிவான சாட்சியங்களையும் வழங்கியுள்ளார்.

சாரா ஜஸ்மின் தற்போது எங்கு சென்றார் என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை இல்லை. </p><p>எனினும், அவர் சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சஹ்ரானின் குடும்பத்தினர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேனில் வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> ஆனால், வெடிப்புக்குப் பின்னர் தீக்கிரையான நிலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

இதனால், மற்றொரு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி சாரா ஜஸ்மின் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணையாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JWvv8rw3YDg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T01:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் டொலர் கடன் தவணை இழப்புக்கு சைபர் பாதுகாப்பு - நிர்வாகப் பலவீனமே காரணம் - சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cybersecurity-weaknesses-2-5-million-installment-1785976242"></link>
            <id>https://tamilwin.com/article/cybersecurity-weaknesses-2-5-million-installment-1785976242</id>
            <summary type="text">சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான பலவீனங்கள்
காரணமாகவே இலங்கை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை இழக்க நேரிட்டது
என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான பலவீனங்கள்
காரணமாகவே இலங்கை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை இழக்க நேரிட்டது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(5) உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை
முன்வைத்தார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p></p><h2>2.5 மில்லியன் டொலர்&nbsp;</h2><p>
</p><p>
"அரசு சுட்டிக்காட்டியுள்ள தொழில்சார் அறிக்கையின்படி, 2.5 மில்லியன் டொலர்
காணாமல் போனமையானது ஒரு சைபர் குற்றம் மாத்திரமன்றி, அது நிர்வாக மற்றும்
நிறுவனச் செயற்பாட்டு நடைமுறைப் பிரச்சினையுமாகும்.</p><p> இந்நாட்டின் வெளிநாட்டுக்
கடன் செலுத்தும் பொறிமுறையில் பலவீனமான நிர்வாகமே காணப்படுவதாகக் குறித்த
அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c8cf6d-2f69-40b2-8bdc-0e311984e1cf/26-6a73da724e17d.webp' /></p><p>
</p><p>
வங்குரோத்தான நமது நாட்டில் மக்கள் மீது வரிகளைச் சுமத்தி, வாழ்க்கைச் சுமை,
வறுமை மற்றும் வேலையின்மை என்பவற்றை அதிகரித்துத் தொழில்துறைகளை
வீழ்ச்சியடையச் செய்துள்ள நிலையில், 25 இலட்சம் டொலர்களைக் கூடச் செலுத்த
முடியாத அரசே ஆட்சியில் உள்ளது.</p><p>

கடன் மீளச் செலுத்தும் நடவடிக்கை முன்னர் மத்திய வங்கியின் மையமாக இருந்த
போதிலும், புதிய சட்டத்தின் ஊடாக அது கடன் செலுத்தும் அலுவலகத்துக்குப்
பாரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>எனினும், இந்தக் காலகட்டத்தில் தேவையான இடைக்கால
ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அரசுக்கு இயலாமல் போயுள்ளது.

இது வெறும் சைபர் தாக்குதல் மட்டுமல்ல. இந்தப் பிரச்சினை தொடர்பில்
திறைசேரியும் மத்திய வங்கியின் ஆளுநரும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை.</p><p></p><h2>பொருளாதாரத்தின் நிலை</h2><p>இவ்விரு
முக்கிய நிறுவனங்களும் ஒரே நேர்கோட்டில் நின்று செயற்படத் தவறினால் நாட்டின்
பொருளாதாரத்தின் நிலை என்னவாகும்?

பலவீனமான கடவுச்சொல் பயன்பாடு, பொறுப்புகள் தெளிவுபடுத்தப்படாமை ஆகியவற்றின்
காரணமாகவே சைபர் பாதுகாப்பு ஆபத்து உருவாகியுள்ளது.</p><p> போலி மின்னஞ்சல்
டொமைன்களின் பயன்பாடு இதற்கு மூலக் காரணமாக இருந்தபோதிலும், அதிலிருந்து
விடுபடுவதற்கான பரிந்துரைகள் கூட சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடன்
ஒப்பந்தங்களைப் பரிசோதித்தல், தொடர்பு வழிகளை உறுதிப்படுத்தல் மற்றும் வங்கிக்
கணக்குத் தகவல்களைச் சரிபார்த்தல் என்பன முறையாக இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/274d30fb-027e-4ab1-b61b-ed4c7881185d/26-6a73da73019c0.webp' /></p><p>
</p><p>
கடந்த 2026 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எக்சிம் வங்கியுடன் தொடர்புடைய
செலுத்துகையின் போதும் இவ்வாறான சந்தேகத்துக்கிடமான பிரச்சினை உருவான போது,
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்தச் சம்பவங்கள் நாட்டின் கடன் செலுத்தும் செயற்பாடுகள் குறித்த
நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்துகின்றன.</p><p>பங்களாதேஷ், ஈக்வடார், வியட்நாம்,
இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் இவ்வாறான சம்பவங்களிலிருந்து பாடங்களைக்
கற்றுக்கொண்டுள்ளதைப் போன்று இலங்கையும் இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள
வேண்டும்.</p><p></p><h2>&nbsp;எல்லையற்ற வரிச்சுமை</h2><p>

நாட்டின் தற்போதைய மிகப்பெரிய பொறி சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த
இலக்குகளையும் தாண்டி அதிகளவில் வரி விதிப்பதாகும். முதன்மை மீதியை 2.3
சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் வரை உயர்த்தி சர்வதேச நாணய நிதியத்தின்
கையாள்களாக அரசு மாறியுள்ளது. </p><p>எதிர்க்கட்சியில் இருந்தபோது பாட்டாளி வர்க்கம்
பற்றிப் பேசியவர்கள், தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பொம்மைகளாக
மாறியுள்ளதால் நாட்டின் வாழ்க்கைச் சுமையோ பணவீக்கமோ குறையவில்லை.

மாதமொன்றுக்கு 17 ஆயிரம் ரூபாவைக் கொண்டு வாழ முடியும் எனத் தொகைமதிப்பு
மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுவது தவறான தரவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ae4f7d3-e8c2-408d-ab6c-149539ca75bc/26-6a73da73a78ee.webp' /></p><p> </p><p>இவ்வாறான பொய்த்
தரவுகளின் அடிப்படையில் செயற்படும் அரசிடம் வறுமையை ஒழிப்பதற்கான எவ்வித
வேலைத்திட்டமும் இல்லை. நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை
நாசமாக்குவதுடன், எரிபொருள் மாபியாவைப் பாதுகாப்பதற்காகச் சூரிய சக்தி மின்
உற்பத்தியையும் அரசு பலவீனப்படுத்தி வருகின்றது.
</p><p>
இவ்வாறான எல்லையற்ற வரிச்சுமையால் பிறக்காத குழந்தை முதல் கர்ப்பிணித்
தாய்மார் வரை அனைத்துப் பிரஜைகளும் கடும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். </p><p>அரசு
வாக்குறுதியளித்த 'வளமான நாடு, அழகான வாழ்க்கை' என்ற நோக்கத்தை மறந்து,
சர்வதேச நாணய நிதியத்தின் வரி இலக்குகளைத் தாண்டி மேலதிக வரிச்சுமையை மக்கள்
மீது சுமத்தி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-06T00:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவை நாடு திரும்பச் செய்ய அமெரிக்க நீதிமன்றத்தை அணுகவுள்ளது அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-seek-usa-support-to-arrest-basil-1785975709"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-seek-usa-support-to-arrest-basil-1785975709</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
பொதுமக்கள் பாதுகாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;நீதிமன்றத்தின் உதவி&nbsp;</h2><p>
</p><p>மாத்தறை நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் பசில் ராஜபக்சவிற்கு பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதற்காக சர்வதேச பொலிஸின் (இண்டர்போல்) உதவியைப் பெற்று, அமெரிக்க நீதிமன்றத்தின் ஒத்துழைப்பைக் கோரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e469bfc-7f59-4ea7-966c-3674033740ea/26-6a73d6b07c36b.webp' /></p><p>
</p><p>இலங்கைக்குத் தேவையான சந்தேகநபர் ஒருவர் எந்தவொரு நாட்டில் இருந்தாலும், அவர் அந்நாட்டின் பிரஜையாக இருப்பினும், அவரை நாட்டிற்கு அழைத்து வர அந்த நாட்டின் நீதிமன்ற உதவியைப் பெற வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>பசில் ராஜபக்ச நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அதனால் அவரால் விமானப் பயணம் மேற்கொள்ள முடியாது எனவும் அவரது தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>எனினும் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T00:21:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய இந்தியாவின் வெளியுறவுச் செயலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-s-foreign-secretary-vikram-misri-harini-met-1785974690"></link>
            <id>https://tamilwin.com/article/india-s-foreign-secretary-vikram-misri-harini-met-1785974690</id>
            <summary type="text">இலங்கைக்கு நேற்று(5) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளியுறவுச்
செயலர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச்
சந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு நேற்று(5) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளியுறவுச்
செயலர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச்
சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட
உறவுகளின் அடித்தளத்தை இருவரும் இந்தச் சந்திப்பின் போது மீண்டும்
உறுதிப்படுத்தினர்.</p><h2>உத்தியோகபூர்வ விஜயம்</h2><p>
</p><p>
அத்துடன், தமது அண்மைய சந்திப்புகளை நினைவுகூர்ந்த அவர்கள், முன்னுரிமை
அளிக்கப்பட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும்
விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T00:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரிபால சிறிசேனவின் மகன் கொழும்பில்..! மருமகள் தப்பியோட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithripala-sirisena-case-easter-attack-issue-1785914995"></link>
            <id>https://tamilwin.com/article/maithripala-sirisena-case-easter-attack-issue-1785914995</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் மனைவி கனடா நாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் மனைவி கனடா நாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

 
 மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன கொழும்பில் இருப்பதாக நம்பகமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பிரபல தொழிலதிபரின் மகனின் திருமணத்திற்கு மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையான தோற்றத்தில் இருந்துள்ளமை பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது மைத்திரிபாலவை நன்கு அறிந்தவர்கள் திருமணத்தில் பாடலொன்றினை பாடுமாறு வற்புறுத்திய நிலையில், அவர் அங்கு தந்தை மகனை பற்றிய பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் மருமகளும்</h2><p>

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மைத்திரிபாலவின் பாடல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf444d5a-9f2f-4ade-acac-4f75659d87e1/26-6a72fbb614f80.webp' /></p><p>

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன் காரணமாக அவர் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><h2>பிரபல அரசியல்வாதியின் மகனும் தொடர்பு</h2><p>

இருப்பினும், இந்த மோசடியில் பிரபல அரசியல்வாதியின் மகனும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.</p><p>2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்த நிலையில்,முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு&nbsp; மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், மகன் தொடர்பில் பரவும் தகவல் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரம் போன்ற விடயங்களினால்&nbsp;மைத்திரிபால சிறிசேன பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T23:54:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருகம்பே - சாவாலை வீதியில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-elephant-enters-arugambai-road-midnight-1785972832"></link>
            <id>https://tamilwin.com/article/wild-elephant-enters-arugambai-road-midnight-1785972832</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதிப் பகுதிக்குள் நேற்று முன்தினம் (04.08.2026) இரவு 10.30 மணிக்கும் 11.00 மணிக்கும்
இடைப்பட்ட காலப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதிப் பகுதிக்குள் நேற்று முன்தினம் (04.08.2026) இரவு 10.30 மணிக்கும் 11.00 மணிக்கும்
இடைப்பட்ட காலப்பகுதியில் காட்டு யானையொன்று புகுந்தமையால் அப் பகுதியில்
பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.
</p><p>
கிராமத்திற்குள் புகுந்து மக்கள் நடமாடும் வீதிகளில் சுற்றித்திரிந்த இக்
காட்டு யானையைக் கண்ட பிரதேச வாசிகள் பீதியடைந்ததுடன், ஊரார் ஒன்றுதிரண்டு
அதனை ஊரை விட்டு வெளியேற்ற முயன்றனர்.</p><h2>காட்டு யானை</h2><p> இதன்போது ஆத்திரமடைந்த காட்டு யானை,
மக்களை நோக்கிப் பாய்ந்து துரத்த முற்பட்டதால் பொதுமக்கள் நாலாப்பக்கமும்
சிதறியோடினர்.
</p><p>
இருப்பினும், அதிர்ஷ்டவசமாகப் பெரிய அளவிலான உயிர்ச் சேதங்களோ அல்லது
வீடுகளுக்கான உடைமைச் சேதங்களோ எதுவுமின்றி யானை பாதுகாப்பாக மீண்டும்
காட்டுப் பகுதிக்குத் திரும்பிச் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2274c645-2902-4a18-883c-a24542ad90f0/26-6a73c8e539471.webp' /></p><p>

இந்த சம்பவத்தின் போது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மிகவும் துணிச்சலுடனும்
பொறுப்புடனும் செயற்பட்டு, காட்டு யானைக்கு எவ்வித ஆபத்தும் அல்லது காயங்களும்
ஏற்பட்டு விடாத வகையில் அதனை மிகச் பாதுகாப்பான முறையில் காட்டுப் பகுதிக்குள்
விரட்டியடிக்க உதவினர்.
</p><p>
அருகம்பே மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு
யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதனால், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-05T23:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி: மொத்த என்புக் கூடுகள் 491 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-more-skeletons-found-in-chemmani-today-1785971759"></link>
            <id>https://tamilwin.com/article/8-more-skeletons-found-in-chemmani-today-1785971759</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நேற்று (5) 44ஆவது நாள் அகழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>அதன்படி, நேற்று (5) 44ஆவது நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் புதிதாக 8 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><h2>செம்மணி புதைகுழி</h2><p>ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4834fbb0-fd5e-4c39-b846-1d5465878081/26-6a73c57b73ed8.webp' /></p><p>
</p><p>இதன் அடிப்படையில், செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>
இதுவரை மொத்தமாக 491 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 489 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T23:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பளத்துடன் கூடிய குடும்ப விடுமுறை! வரிச் சலுகைகளை விரிவாக்க அமெரிக்க திறைசேரி திணைக்களம் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paid-family-leave-us-treasury-moves-expand-tax-1785970986"></link>
            <id>https://tamilwin.com/article/paid-family-leave-us-treasury-moves-expand-tax-1785970986</id>
            <summary type="text">ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய குடும்ப மற்றும் மருத்துவ விடுமுறைகளை
வழங்கும் தொழில் வழங்குனர்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை மேலும்
விரிவாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய குடும்ப மற்றும் மருத்துவ விடுமுறைகளை
வழங்கும் தொழில் வழங்குனர்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை மேலும்
விரிவாக்குவதற்கான புதிய வழிகாட்டல்களை அமெரிக்க திறைசேரி திணைக்களம்
வெளியிடவுள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படும்
இந்த புதிய கொள்கையின் மூலம், ஊழியர்களின் விடுமுறைக் காலத்தில் காப்பீட்டுக்
கொடுப்பனவுகளை ஈடுசெய்யும் வகையில் காப்பீட்டுக் தவணைக் கட்டணங்களை செலுத்தும்
நிறுவன உரிமையாளர்களும் இனி வரிச் சலுகைகளைக் கோர முடியும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>குடும்ப விடுமுறை</h2><p>
</p><p>
குறைந்தது இரண்டு வார கால குடும்ப மற்றும் மருத்துவ விடுமுறையை ஊழியரின்
வழக்கமான சம்பளத்தில் 50 வீதத்திற்கு குறையாத தொகையுடன் வழங்கும்
நிறுவனங்களுக்கு இந்த வரி விலக்கு உரித்தாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ef1b2ab-2103-4942-8d4b-22d78750f5dc/26-6a73c259a0ecc.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் தங்களது குடும்பத்தினரைப் பராமரிப்பதற்கும்
வருமானத்தைப் பெறுவதற்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையைத்
தவிர்க்கும் நோக்கிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரிச்
செயலாளர் ஸ்கொட் பெஸன்ட் தெரிவித்துள்ளார்.
</p><p>
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பில் (OECD) அங்கத்துவம்
வகிக்கும் 38 நாடுகளில் கட்டாயச் சம்பளத்துடன்கூடிய விடுமுறைக் கொள்கை இல்லாத
ஒரே நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.
</p><p>
இந்நிலையில், கூட்டாட்சி அரசாங்கத்தின் நேரடி நிதிப் பங்களிப்பின்றி வரிச்
சலுகைகள் மூலம் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T23:08:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து வெடிப்பு சத்தங்கள்..! துபாயில் பெரும் பரபரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-blasts-in-20-minutes-explosion-dubai-amid-iran-1785959123"></link>
            <id>https://tamilwin.com/article/7-blasts-in-20-minutes-explosion-dubai-amid-iran-1785959123</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபெல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபெல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
 சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், இரவு வானத்தை மூடும் அளவுக்கு கரும்புகை எழுவது போல் உள்ளது.</p><p></p><h2>ஏழு வெடிப்புகள்&nbsp;</h2><p>

ஈரானின் Mehr செய்தி நிறுவனம், எமிரேட்ஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்ட தகவலின்படி, சுமார் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது ஏழு வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ததாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த வெடிப்புகள் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது தொழிற்சாலை விபத்தா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f332434-84ce-4f7f-bd22-eb934c1aa03e/26-6a7396f5734b0.webp' /></p><p>

ஈராக் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில், யேமனிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.</p><p> 

இருப்பினும், இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் எமிரேட்ஸ் அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.</p><p>மேலும், NASA-வின் வெப்பப் படிம (Thermal Imagery) தகவல்களை மேற்கோள்காட்டிய Mehr செய்தியின்படி, ஜெபெல் அலி துறைமுகத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் சேமிப்பு மற்றும் பரிமாற்றக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு எச்சரிக்கை</h2><p>

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகளில், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே கரும்புகை அடர்த்தியாக எழுவது காணப்படுகிறது.</p><p> எனினும், அந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

அருகிலுள்ள அல் ஃபுர்ஜான் (Al Furjan) பகுதியில் வசிப்பவர்களும், வெடிப்புகள் பதிவான அதே நேரத்தில் பலத்த அதிர்வு மற்றும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="tr" dir="ltr">BAE Dubai Cebel Ali Sanayi Bölgesi&#39;nde bir sanayi kazası meydana geldi ve 20 dakika içinde 7 patlama gerçekleşti. <a href="https://t.co/fptaxokRqy">pic.twitter.com/fptaxokRqy</a></p>&mdash; Ruslan (روسلان ﻡ) (@93Rsln) <a href="https://x.com/93Rsln/status/2084974452895252664?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

துபாய் நகர மையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள ஜெபெல் அலி, உலகின் மிகப்பெரிய செயற்கை துறைமுகங்களில் ஒன்றையும், முக்கிய சுதந்திர வர்த்தக மண்டலத்தையும் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக மையமாகும்.
</p><p>
அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக, பிராந்தியத்தில் அமெரிக்காவின் கூட்டாளி நாடாக உள்ள ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில மாதங்களாக உயர்மட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில் இருந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T21:55:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சின் அறிவிப்பால் மகிந்த உட்பட பலர் கலக்கத்தில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approved-expediting-drafting-new-bill-1785966646"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approved-expediting-drafting-new-bill-1785966646</id>
            <summary type="text">சிறைச்சாலைகளிலுள்ள அதிக நெருக்கடிக்கு மாற்றுத் தீர்வாக சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் (House Arrest) வைப்பதற்கான புதிய சட்ட மூலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளிலுள்ள அதிக நெருக்கடிக்கு மாற்றுத் தீர்வாக சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் (House Arrest) வைப்பதற்கான புதிய சட்ட மூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்பட்ட, வரைவு சட்ட மூலத்தைச் பரிசீலிக்கும் யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p>

இதற்கான சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான மேலும் சில புதிய விதிகளை உள்ளடக்கி, வரைவு சட்டமூலத்தை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
</p><p>
இதனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பல அரசியல்வாதிகள் பயத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EhVtcM946RU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T21:54:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மனி மாநிலத் தேர்தல்களுக்கு முன்னர் ரஷ்யாவின் போலிப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதாக எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-russian-disinformation-campaigns-1785961004"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-russian-disinformation-campaigns-1785961004</id>
            <summary type="text">ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக,
ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பொய்ப் பிரசாரங்கள் மற்றும் தவறானத் தகவல் பரப்பும்
முயற்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக,
ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பொய்ப் பிரசாரங்கள் மற்றும் தவறானத் தகவல் பரப்பும்
முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு வட்டாரங்கள்
எச்சரித்துள்ளன.
</p><p>
இந்த போலித் தகவல் பிரசாரங்கள் பிரதானமாக ஆளும் கூட்டணி மற்றும்
எதிர்க்கட்சிகளான சி.டி.யூ, எஸ்.பி.டி, கிரீன்ஸ் மற்றும் சுதந்திர ஜனநாயகக்
கட்சிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>தீவிரமடைந்துள்ளதாக எச்சரிக்கை</h2><p>
அதேவேளை, ரஷ்யாவுடனான உறவுகளை மீண்டும் சீரமைக்க உறுதிபூண்டுள்ள தீவிர
வலதுசாரி AfD கட்சிக்கு ஆதரவாக இந்த நகர்வுகள் அமையக்கூடும் எனக்
கருதப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192afe72-af6e-4525-b542-26d0741c3542/26-6a73a45679415.webp' /></p><p>

"மாட்ரியோஷ்கா" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பிரசாரப் பொறிமுறை குறித்து
ஜெர்மன் உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் கண்காணித்து வருவதாக அதன் பேச்சாளர்
ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
பிபிசி மற்றும் ஏஆர்டி போன்ற புகழ்பெற்ற ஊடகங்களின் போலிச் சின்னங்களைப்
பயன்படுத்தி, அரசியல்வாதிகள் மீதான தவறான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய
காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T21:00:11+00:00</updated>
        </entry>
    </feed>
