<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-12T02:19:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் கிடைத்த ஆணின் சடலம் - நீதித்துறை விசாரணைக்கு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-was-recovered-from-the-kelani-river-1789177872"></link>
            <id>https://tamilwin.com/article/body-was-recovered-from-the-kelani-river-1789177872</id>
            <summary type="text">கொழும்பு - ஹங்வெல்ல பொலிஸ் பிரிவின் ஜல்தாரா பகுதியில் உள்ள களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - ஹங்வெல்ல பொலிஸ் பிரிவின் ஜல்தாரா பகுதியில் உள்ள களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் நேற்று(11.09.2026) இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. </p><h2>

ஆணின் சடலம் மீட்பு</h2><p>
 ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc5a5ed8-fda4-4eb7-a7bd-cfd06a2c7fbf/26-6aa4b20a8f2e2.webp' /></p><p> </p><p>


இவ்வாறு உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிச் செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

சடலத்தின் மீது நீதித்துறை விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஹங்வெல்ல பொலிஸ் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p></p><p><br></p><p> 








</p>]]></content>
            <updated>2026-09-12T01:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ வானிலை சீற்றம் தீவிரம் - 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/over-160-000-people-affected-across-8-districts-1789177170"></link>
            <id>https://tamilwin.com/article/over-160-000-people-affected-across-8-districts-1789177170</id>
            <summary type="text">எல் நினோ வானிலையின் தாக்கத்தால், இலங்கையில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள 49,344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 16...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ வானிலையின் தாக்கத்தால், இலங்கையில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள 49,344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, 161,451 மக்கள் காலநிலை மாற்றத்தினால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். </p><h2>

36 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நீர் விநியோகம்</h2><p>
இன்று காலை(12.09.2026) வெளியான பேரிடர் மேலாண்மை மையம் தரவு அறிக்கையின்படி, இலங்கை முழுவதும் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0322b203-cfd6-47f0-9ad9-ad669f934862/26-6aa4afcacec09.webp' /></p><p> 

இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டங்கள் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. </p><p>

அதன்படி, தற்போது அந்த 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 மக்களுக்குக் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்டப்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-12T01:50:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் சிக்கலில் நாமல்: சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-in-trouble-1789176662"></link>
            <id>https://tamilwin.com/article/namal-in-trouble-1789176662</id>
            <summary type="text">&amp;nbsp;எயார் பஸ் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராக பெயரிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எயார் பஸ் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராக பெயரிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
</p><p>இந்த நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கில் நாமலையும் சந்தேக நபராக பெயரிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தீர்மானம்</h2><p>
சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4222491-bea0-4f06-850d-575017e25fe0/26-6aa4ab586b094.webp' />&nbsp;&nbsp;</p><p>
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, இந்த வழக்கின் முதன்மை சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள கபில சந்திரசேன பெற்ற இலஞ்சப் பணம் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>
இதனையடுத்தே அவரை சந்தேகநபராக சேர்க்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது.</p><p> இதற்கமைய, நீதிமன்றில் நகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நாமல் ராஜபக்ச இந்த வழக்கிலும் சந்தேகநபராக பெயரிடப்படவுள்ளார்.</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான கொள்முதல் நடவடிக்கையின் போது 2014–2015 ஆம் காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் 100 இலட்சம் ரூபாவை (10 மில்லியன்) லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவால் கடந்த 04 ஆம் திகதி நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார். </p><p>
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, அவர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T01:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் காணிகளுக்கு மந்திரஜாலம் செய்யும் மந்திரவாதி - பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-cheated-so-many-people-1789098683"></link>
            <id>https://tamilwin.com/article/person-cheated-so-many-people-1789098683</id>
            <summary type="text">
கொழும்பில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் திருடிச் சென்ற கபுவா என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நபர் நுகேகொட பிரிவுக் குற்றத்தடுப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் திருடிச் சென்ற கபுவா என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நபர் நுகேகொட பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேக நபர் அவ்வாறு மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 40 பவுனுக்கும் அதிகமான தங்க ஆபரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
</p><p>
வீடு மற்றும் காணிகள் விற்பனைக்கு உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் பெண்களை இலக்கு வைத்து சந்தேக நபர் நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p>
</p><h2><b>
காணி மற்றும் வீடு விற்பனை</b></h2><p>மிரிஹான பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது காணி மற்றும் வீடு விற்பனைக்கு உள்ளதாக பத்திரிகையில் பல தடவைகள் விளம்பரம் செய்திருந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fccc0397-f9d4-4dcc-b383-ec97b3ba8811/26-6aa3a740061e5.webp' /></p><p>அது தொடர்பில் கவனம் செலுத்திய சந்தேக நபர், குறித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துள்ளார்.</p><p> தொலைதூரப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயம் ஒன்றின் பெயரைக் கூறி, அத்தேவாலயத்தில் நீண்டகாலமாக கபுவாவாக செயற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
</p><p>
அந்த பெண்ணின் வீடும் காணியும் நீண்ட காலமாக விற்பனை செய்யப்படாமல் இருப்பது தனக்குத் தெய்வீக பலத்தால் புலப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அக்காணியை விரைவாக விற்பனை செய்வதற்குச் சடங்கு ஒன்றைச் செய்து தர முடியும் என அந்த பெண்ணிடம் சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபரின் பேச்சுத் திறமையால் ஏமாற்றப்பட்ட பெண், குறித்த நபரை வீட்டிற்கு அழைத்து விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.</p><h3><b> தங்க நகைகள் கொள்ளை</b></h3><p>இதன் போது அவர் அதற்காக 5 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

அதற்குச் சம்மதம் தெரிவித்த பெண், அதற்காகத் திகதி ஒன்றையும் சந்தேக நபரிடம் ஒதுக்கிச் சடங்கிற்கான அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்ததாக குறித்த பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dc063d1-cf86-4a80-961d-866df24167cf/26-6aa3a740ad2c8.webp' /></p><p>ஒப்புக்கொண்டதற்கமைய, வீட்டிற்கு வந்திருந்த சந்தேக நபர், தான் வழங்கிய பொருட்களின் பட்டியலிலிருந்த சிறிய பானைக்குள் வீட்டின் தங்க ஆபரணங்களில் ஏதேனும் 3 அல்லது 7யை போட்டு, சிவப்பு அல்லது வெள்ளை நிறமான அடிமட்டம் போன்ற நீளமான துணியுடன் கொண்டு வருமாறு கூறியுள்ளார். </p><p>

அதன் பின்னர் அந்தப் பெண் முன்னிலையிலேயே அதனை நன்றாக மறைத்து, தாம்பூலம் மற்றும் மலர்களால் பூசை செய்யத் தயாரிக்கப்பட்டிருந்த மலர் மேடையில் வைத்து சில மணிநேரங்கள் சடங்கு செய்துள்ளார்.
</p><p>
 21 நாட்கள் கடந்ததன் பின்னர் வீட்டிலும் காணியிலும் புனித நீர் தெளித்து, 21ஆவது நாளில் பானைக்குள் போடப்பட்ட தங்க ஆபரணங்களை எடுக்குமாறு அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
</p><p>
அதிலிருந்து 14 நாட்கள் செல்லும்போது நிலத்தைக் கொள்வனவு செய்வதற்காகக் வாங்குபவர் நிச்சயமாக வருவார் எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
வாக்குறுதியளித்த பணத்தையும் பெற்றுக்கொண்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் கூறியவாறே வீட்டுச் சொந்தக்காரரான பெண் செயல்பட்ட போதிலும், புதைக்கப்பட்ட பானையைத் தோண்டி எடுத்தபோது அதற்குள் இருந்த தங்க ஆபரணங்கள் இருக்கவில்லை. </p><p>அத்துடன் வீட்டை கொள்வனவு செய்வதற்காக யாரும் வரவும் இல்லை.

பின்னர் இது தொடர்பில் அப்பெண் மிரிஹான பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது, இது போன்றதொரு சம்பவம் தொடர்பான முறைப்பாட்டு வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலும் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

அதன் பின்னர் குறித்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
குறித்த சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இவ்வாறு மோசடியாக பெறப்பட்ட அனைத்துத் தங்க ஆபரணங்களையும் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
இதனை அடுத்து, அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T01:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகாலமாக நடந்த கொலை வழக்கு! 11 வருடங்களுக்கு பின்னர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2015-murder-case-death-sentence-in-sri-lanka-1789170751"></link>
            <id>https://tamilwin.com/article/2015-murder-case-death-sentence-in-sri-lanka-1789170751</id>
            <summary type="text">பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
</p><p>
கண்டி பகுதியைச் சேர்ந்த விந்துவ ராஜ் சந்திர மோகன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h2>மரண தண்டனை</h2><p>
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி, மிரிஸ்வத்த பகுதியில் மாணிக்கம் மோகன் என்பவரைத் தடியால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தி கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e34bdc-d8ad-4cdf-8d71-833ac17b6590/26-6aa4953ac4194.webp' /></p><p>

வடக்கு பிட்டிகல பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் கிருஷ்ணகுமார் என்பவர் பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
இந்த வழக்கு CRI 2264/2019 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் தீர்ப்பு நேற்று (10) அறிவிக்கப்பட்டது.
</p><p>
இதன்போது, தண்டனைச் சட்டக்கோவையின் 32ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 296ஆம் பிரிவின் கீழ் பிரதிவாதி கொலைக் குற்றத்திற்கு குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரை காட்டி கோட்டாபய ராஜபக்ச செய்த மிக் டீல்! உண்மைகளை அம்பலப்படுத்தியவர்கள் மரணம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789168115"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789168115</id>
            <summary type="text">மிக்-27 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிக்-27 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொள்முதல் நடவடிக்கையின் போது, கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் பதவி வகித்திருந்தனர்.</p><p> 

இந்த கொள்முதல் நடவடிக்கையால் அரசுக்கு சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பங்கு குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

கொள்முதல் நடவடிக்கையில் முறைகேடான கொடுப்பனவுகள் மற்றும் கமிஷன் தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இதேவேளை, மிக்-27 கொள்முதல் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்திருந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க , பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p>

மிக்-27 கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னாள் விமானப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்த விசாரணைகளும் தற்போது தீவிரமடைந்துள்ளன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U28cBjQXzNE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T23:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் குரலாக அனுராதபுரத்தில் பிரம்மாண்ட பேரணி! அரசுக்கு எதிராக களமிறங்கும் பொதுஜன பெரமுன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-to-hold-mass-rally-in-anuradhapura-1789169577"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-to-hold-mass-rally-in-anuradhapura-1789169577</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்
தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை
வெளிப்படுத்தும் வகையிலும் அனுராதபுரத்தில் பிரம்மாண்டமான
எதிர்ப்புப் பேரணி நடத்தப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) வெள்ளிக்கிழமை நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பெரும் பேரணி</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><p>
"அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதால், உள்ளூர் விவசாயிகள்
தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்றுக்கொள்ள முடியாமலும், அவசியமான உரத்தைப்
பெற்றுக்கொள்ள முடியாமலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். </p><p>அதேபோன்று,
தொடரும் எரிபொருள் விலை உயர்வின் காரணமாக கடற்றொழிலாளர்கள் தங்களது அன்றாட
வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e0d150-d09c-45a7-933e-20d7b2e92a86/26-6aa49176a4143.webp' /></p><p>
</p><p>
பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசு,
தற்போது அவர்களை முற்றாகப் புறக்கணித்துள்ளது. நாட்டில் வேலையின்மை, வறுமை
மற்றும் வாழ்க்கைச் செலவு என்பன பாரியளவில் அதிகரித்துள்ளன. </p><p>அரச ஊழியர்களுக்கு
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் வழங்குவதாகக் கூறிய அரசு, தற்போது அவர்கள்
வாழ முடியாத சூழலையே உருவாக்கியுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக் காலத்திலேயே நாட்டின் பிரதான பாதாள உலகக்
குழுக்கள் ஒடுக்கப்பட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினர். ஆனால், தற்போதைய
ஆட்சியில் தினமும் துப்பாக்கிச்சூடுகளும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்று
வருகின்றன.</p><h2>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க</h2><p> வரலாற்றில் இல்லாத வகையில் தற்போது கொள்கலன்களில் போதைப்பொருள்கள்
நாட்டுக்குள் கைப்பற்றப்படுகின்றன. அண்மையில் கொண்டுவரப்பட்ட 323
கொள்கலன்களில் போதைப்பொருள்களும் ஆயுதங்களுமே இருந்தனவா என்ற நியாயமான
சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
</p><p>
துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற நீண்டகால
பொருளாதாரப் பலன்களைத் தரும் திட்டங்களே உண்மையான அபிவிருத்தித்
திட்டங்களாகும். வீதியில் மெட்ரோ பஸ்களை இறக்குவது மக்களுக்கு வசதிகளை
வழங்கும் ஒரு சேவையே தவிர, அது அபிவிருத்தித் திட்டம் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d058e251-9c13-4384-867e-58ffc1373f05/26-6aa4917797423.webp' /></p><p> அபிவிருத்தி
பற்றிய அறிவோ திறமையோ இல்லாததால், பஸ்களை வீதியில் விட்டுவிட்டு அதையே
அபிவிருத்தி எனக் கூறி அரசு மக்களை ஏமாற்றுகின்றது.</p><p>

அரசு தனது திறமையின்மையை மறைப்பதற்காக, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித்
தங்களுக்கு எதிராகச் செயற்படும் அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைக்கும்
அடக்குமுறையையே செய்கின்றது.
</p><p>
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அபிவிருத்திகளைச்
செய்யாமல் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றார். அனுராதபுரத்தில்
நடத்தப்படும் எமது பேரணிக்கு எதிர்க்கட்சியிலுள்ள பெரும்பாலான அரசியல்
கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T23:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sl-w-vs-pak-w-sri-lanka-enters-second-final-1789165207"></link>
            <id>https://tamilwin.com/article/sl-w-vs-pak-w-sri-lanka-enters-second-final-1789165207</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
</p><p>
டுபாயில்&nbsp; நேற்று(11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.</p><h2>வெற்றி இலக்கு</h2><p>
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் தலைவி ஃபாத்திமா சனா&nbsp; ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05daf22-9e9e-4f15-b6b2-26c95429ad14/26-6aa480cf282f0.webp' /></p><p>

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து மற்றும் சாமுடி பிரபோதா&nbsp; ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.</p><p>

இதனையடுத்து, 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
</p><h2>இறுதிப் போட்டி</h2><p>
இலங்கை அணியின் வெற்றிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரம&nbsp; 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/463adf97-da31-4998-b6a4-6e33cc15f168/26-6aa480cfd6587.webp' /></p><p>
</p><p>
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஃபாத்திமா சனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
</p><p>
இதன்மூலம் மகளிர் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T22:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772"></link>
            <id>https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களினால் 06 கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் 3 தாக்குதல்கள் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே பதிவாகியுள்ளன. 
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்ட கைக்குண்டுகளே இவ்வாறான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><h2>குற்றவியல் பின்னணி</h2><p>
</p><p>இதன்காரணமாக, பாதாள உலகக் குற்றங்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் முப்படைகளின் உதவியைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11) அதிகாலை 3.00 மணியளவில், தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் கதவை அடையாளம் தெரியாத நபர் தட்டியுள்ளார். </p><p>வீட்டார் கதவைத் திறந்ததும் அந்நபர் கைக்குண்டை வீட்டிற்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 வயதுடைய கசுன் ரஷ்மிக மற்றும் அவரது 11 வயதுடைய சகோதரரான துமிந்த கீஹான் ஆகிய இரு சிறுவர்களும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165ea34e-213d-4db0-905c-cfee39a99058/26-6aa42ec60c3a0.webp' /></p><p>
</p><p>இச்சிறுவர்களின் தந்தையான 55 வயதுடைய நளின் துசாந்த பெரேரா என்பவரின் காலில் காயமேற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இவர் மீது எவ்வித குற்றவியல் பின்னணியோ குற்றச்சாட்டுகளோ இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் உறவினர்கள் சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "படவிட்ட அசாங்க" என்ற பாதாள உலகக் கும்பல் தலைவனின் நெருங்கிய சகாக்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><h2>விசாரணைகள்</h2><p> 
நேற்று முன்தினம் களுபோவில பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது படவிட்ட அசாங்கவின் சகாக்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், தாக்குதல் நடத்தியவர் இலக்கை மாற்றி, தவறுதலாக இச்சிறுவர்களின் வீட்டின் மீது குண்டை வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0203a34-7e85-4344-ba5d-cda7eee17aa3/26-6aa4348c25f6a.webp' /></p><p> </p><p>
இச்சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p> மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T22:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயம் இல்லாவிட்டால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! அரசிடம் சஜித் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fear-provincial-council-elections-immediately-1789141132"></link>
            <id>https://tamilwin.com/article/fear-provincial-council-elections-immediately-1789141132</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது
தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் செயலாகும் எனவும், இது மக்களின் அடிப்படை
உரிமைகளைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது
தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் செயலாகும் எனவும், இது மக்களின் அடிப்படை
உரிமைகளைப் பறிப்பதுடன் நாட்டின் இறைமையை மீறும் செயலாகும் எனவும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று(11) வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;சஜித் வலியுறுத்து</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><p>
"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே மாகாண சபைகள் தேர்தல் முறைமை
தொடர்பான குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் குழுவின் கால அவகாசத்தை
எந்தக் காரணம் கொண்டும் நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். </p><p>கால
அவகாசத்தை நீடிப்பது என்பது மக்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும் வாய்ப்பை
முற்றாக இழக்கச் செய்வதாகும்.

இவ்வேளையில் நிகழ வேண்டியது இந்தக் குழுவின் கால அவகாசத்தை நீட்டிப்பதல்ல,
மாறாக மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d70e99ca-fdb8-4ba5-861f-baed402e0a62/26-6aa423feee81a.webp' /></p><p> </p><p>அரசுக்கு மக்கள் மத்தியில்
பயம் இல்லாவிட்டால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு
கேட்டுக்கொள்கிறேன். புதிய முறைமை தாமதமானால், குறைந்தபட்சம் பழைய முறையின்
கீழாவது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்.</p><p>

மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைப்பதற்காக இந்தக் குழுவின் கால
அவகாசத்தை நீடிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளது</p><p>
நாட்டு மக்களின் இறைமையை இது கடுமையாக மீறுவதால், ஜனநாயகத்துக்கு எதிரான இந்த
நடவடிக்கையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LVliSlgYppE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T22:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஆளுநர் அநுர அரசின் ஆளுநரா ஹிஸ்புல்லாவின் ஆளுநரா..! எழும் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-anura-is-government-s-governor-1789140014"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-anura-is-government-s-governor-1789140014</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதேச சபை உறுப்பினர் கி. வதனகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் ஆளுநர் மற்றும் தவிசாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.</p><p>

அவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது, அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நடவடிக்கைகளைப் போன்று அல்லாமல், வேறு சில தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
</p><p>
அதேபோன்று, மேலதிக கல்வி நடவடிக்கைகளைக்கூட ஆசிரியர்கள் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலை தற்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது.
</p><p>
இவ்வாறு, கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4eZuwiThywg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T21:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் களமிறங்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேசிய அமைப்பாளர் டி.வி. சாணக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>
மேலும், அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதும் இந்தப் பேரணியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தப் பேரணி சனிக்கிழமை (12) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T21:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின் அரசுக்கு அழுத்தமா - நெருக்கடியா.. பாய்ச்சலுக்கு தயாராகும் அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-sri-lanka-government-trouble-1789159322"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-sri-lanka-government-trouble-1789159322</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கைது மற்றும் அதனுடன் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள அரசியல் சூழலில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் தொடர்பில் வெவ்வேறு சட்டரீதியான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மிக்-27 போர் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானதும் இதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இந்தநிலையில், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை, ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த விவகாரம் நாட்டின் அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.</p><p>இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dsr0jV9T7Cw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் மகிந்த - கோட்டாபய வைத்தியசாலையில்! சுரேஸ் சலே உடைத்த பரம இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET ஸ்கேனர் கருவியை வழங்குவதாகக் கூறி, ‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக நிதி திரட்டப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த நிலையில், சிரந்தி ராஜபக்ச தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>
அவரது உடல்நிலை காரணமாக விசாரணைகளில் இருந்து விலகி இருக்கிறாரா அல்லது உண்மையான உடல்நலப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.</p><p>

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் அடுத்த கட்டமாக விசாரணைகள் தீவிரமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
எனவே அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் உண்மையான காரணங்கள் மற்றும் அதற்குப் பின்னால் செயற்பட்ட சக்திகள் தொடர்பிலும் சுரேஸ் சலே வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


இது தொடர்பான விரிவான தகவல்களை ஆராய்கிறது ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CP_Y7qU4Swk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:44:42+00:00</updated>
        </entry>
    </feed>
