<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-04T12:22:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்தொழிலாளர்களால் ஏற்படும் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை! அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-announces-talks-on-indian-fishermen-issue-1788519890"></link>
            <id>https://tamilwin.com/article/minister-announces-talks-on-indian-fishermen-issue-1788519890</id>
            <summary type="text">இந்திய கடற்தொழிலாளர்களால் இலங்கை கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 25ம் திகதி பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்தொழிலாளர்களால் இலங்கை கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 25ம் திகதி பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். </p><p> 

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாதம் 25ஆம் திகதி எங்களுடைய அதிகாரிகள் இந்தியாவுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் செல்வது கச்சத்தீவைப் பற்றி பேசுவதற்கு அல்ல; அவர்கள் செல்வது கடற்தொழிலாளர்களின் பிரச்சினை சம்பந்தமாக பேசுவதற்கு.</p><h2>கடற்தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை</h2><p> 

அதன்பொழுது கடற்தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளும், அதேநேரத்தில் இந்திய இழுவைப்படகுகள் மூலமாக எங்களுடைய கடலை அத்துமீறி, எங்களுடைய கடலில் வாழுகின்ற எங்களுடைய கடற்றொழிலாளர்களுடைய வாழ்க்கையையும் நாசம் செய்கின்ற, எங்களுடைய கடல் வளங்களை அழிக்கின்றமை தொடர்பான உரையாடலாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d24a5013-f5b3-4895-9d51-eb04b7559041/26-6a9ab2af8f188.webp' /></p><p> </p><p>

அந்த உரையாடலுக்கான ஆயத்த வேலைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போது, நேற்று நானும் கூட பார்த்தேன், இந்திய தமிழ்நாட்டின் சட்டசபையில் இந்த கச்சத்தீவு பிரச்சினை பற்றி பேசப்படுகின்றது.</p><h2>கச்சத்தீவு பிரச்சினை</h2><p> </p><p>

கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமான தீவு, அதனால் இந்தத் தீவை மீண்டும் இந்தியாவுக்குப் பெற்றெடுக்க வேண்டும் என்கின்ற ஸ்லோகங்கள் நேற்று உருவானது அல்ல. இது கடந்த காலங்களில் இருந்து தொடர்ச்சியாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் பேசப்படுகின்ற, முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விடயமாகும். </p><p>

இருந்தபோதிலும் கூட நாங்கள் இதற்கு முன்னரும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்; இது சர்வதேசத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, சர்வதேச சட்டங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, சர்வதேச எல்லை நிர்ணயிக்கப்படுகின்ற நிறுவனங்களை எடுத்துக் கொண்டாலும் கூட, இந்த கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது. இது யாருக்கும் சொந்தமானது அல்ல என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T12:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்போது அரசாங்கம் நிரூபித்து விட்டது.. அமைச்சர் பிமல் பெருமிதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-anti-business-tax-relief-2027-bimal-1788520885"></link>
            <id>https://tamilwin.com/article/govt-anti-business-tax-relief-2027-bimal-1788520885</id>
            <summary type="text">போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் வணிகத் துறைக்கு எதிரானதல்ல என்பதை நிரூபித்துள்ளதாகத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் வணிகத் துறைக்கு எதிரானதல்ல என்பதை நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். </p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், தற்போது நாட்டின் பெரும்பாலான வர்த்தகர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.</p><h2>ஏற்றுமதி - இறக்குமதி வசதிகள்&nbsp;</h2><p> </p><p>புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு பெரிய மற்றும் சிறு நடுத்தர நிறுவனங்களைக் கேட்டுக்கொண்ட அவர், இத்தகைய வாய்ப்புகளைப் பெறுவதற்கு அரசியல் தொடர்புகளோ அல்லது நட்புறவுகளோ தேவையில்லை என்றும் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ad829c-47ea-4111-bbcc-305030819711/26-6a9ab11396f42.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக நாட்டின் தளவாடப் போக்குவரத்து (Logistics) மற்றும் போக்குவரத்துத் துறைகளில் முதலீட்டுக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், போதிய சேமிப்புக் கிடங்கு வசதியின்மை மற்றும் வீதி சார்ந்தப் போக்குவரத்தை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பது போன்ற குறைபாடுகளால் உள்நாட்டுப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு உயர்வாகவே உள்ளது என்றார்.</p><p> கொள்கலன்கள் மற்றும் மொத்தப் பொருட்களைக் கொண்டு செல்ல தொடருந்து நெட்வொர்க்கை திறம்படப் பயன்படுத்த முடியும் என்றும், அதற்குத் தேவையான முனையங்கள் மற்றும் ஏற்றுமதி - இறக்குமதி வசதிகளை ஏற்படுத்துவதுடன் தொடருந்து திணைக்களத்தில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். </p><p>மேலும், வணிகர்களும் பொதுமக்களும் பெரும் வரிச்சுமையை எதிர்கொள்வதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், 2027 ஆம் ஆண்டில் அவர்களுக்கு வரி நிவாரணம் வழங்குவது குறித்து ஜனாதிபதியும் அமைச்சரவையும் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:55:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-alert-10-districts-meteorological-department-1788521820"></link>
            <id>https://tamilwin.com/article/red-alert-10-districts-meteorological-department-1788521820</id>
            <summary type="text">இலங்கையில் இன்று ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை
மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்று ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை
மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான
வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
விடுத்துள்ளது.

​</p><p>இன்று(4.9.2026) இரவு 11:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில், ஆபத்தை உணர்த்தும்
வகையில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 15 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன் ​குறிப்பிடப்பட்ட ஊவா, மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும்
பொலன்னறுவை முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் பலத்த இடியுடன்
கூடிய மழையும், அத்துடன் கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில்
தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b38fdad2-1424-44ee-8f48-e203d615e4de/26-6a9ab19104c64.webp' /></p><p>எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும்
சேதங்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:55:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114"></link>
            <id>https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச்செ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
 

பொல்கொல்ல மகிந்த ராஜபக்ச மண்டபத்திற்காக நாற்காலிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்காக தகுதியான முறையில் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கி 79 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee9e768-9f18-44da-a4ef-df78de657801/26-6a9ab058e662c.webp' />&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></h2><h2> </h2><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (4) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:50:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-coordination-committee-meeting-1788522575"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-coordination-committee-meeting-1788522575</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. 

இந்த கூட்டமானது, இன்று(04.09....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த கூட்டமானது, இன்று(04.09.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. </p><p>



கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இ.சந்திரசேகர்
மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில்
நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் நிர்வாக
முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
</p><h2>

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்</h2><p>

இதன்போது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்ட
பல்வேறு திட்டங்கள் தொடர்பிலும், பூநகரி பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனைப் பகுதியில் சுற்றுலா அபிவிருத்திக்காக
அடையாளப்படுத்தப்பட்டுள்ள 300 ஏக்கர் காணியில், முதல் கட்டமாக 113 ஏக்கர்
முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன. </p><p>



இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்
நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a647d02-5631-4506-9e92-4c73a53e6906/26-6a9ab06b64243.webp' /></p><p> </p><p>



அத்துடன், எல்லை நிர்ணயம் தொடர்பில், சில கிராம அலுவலர் பிரிவுகளை இணைப்பதற்கு எல்லை
நிர்ணய ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில்
நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுவிலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தையே
கருத்திற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.</p><p>

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த அபிவிருத்திப் பணிகளுக்கும்,
கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டங்கள் மூன்றிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்ச விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் கீழ், கிளிநொச்சி
டிப்போ சந்தியிலிருந்து பரந்தன் சந்தி வரையிலான ஏ–9 வீதியில் கண்காணிப்புக்
கமராக்களைப் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கும் அனுமதி
வழங்கப்பட்டது.
</p><p>
மேலும், கல்மடுவில் அமைந்துள்ள சேரன் அரிசி ஆலையை முழுத் திறனுடன்
இயக்குவதற்கு பொருத்தமான முதலீட்டாளரிடம் ஒப்படைப்பது தொடர்பிலும்,
கிளிநொச்சியைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவரால் உணவு உற்பத்தித் தொழிற்சாலை
அமைப்பதற்காகக் கோரப்பட்டுள்ள காணியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும், அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T11:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகு விபத்தில் காணாமல் போன இலங்கை கடற்படை அதிகாரியின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-missing-naval-sailor-found-1788519172"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-missing-naval-sailor-found-1788519172</id>
            <summary type="text">அங்குலான கடற்பகுதியில் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரியின் உடல் இன்று
(4.9.2026) இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலான கடற்பகுதியில் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரியின் உடல் இன்று
(4.9.2026) இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக
கடற்படை அறிவித்துள்ளது.

​</p><p>அத்துடன் சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த படகின் உட்பகுதியில் இருந்து
கடற்படை மூழ்காளர்களால் இந்த உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மோசமான வானிலை</h2><p>
</p><p>
இதேவேளை மிக மோசமான வானிலை, குறைந்த பார்வைத் தெளிவு மற்றும் குறுகிய இடங்கள்
காரணமாக தாமதமான இந்த நடவடிக்கை, சூழல் சாதகமானதும் பாதுகாப்பாக நடத்தி
முடிக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c70c3e-93be-41d1-8f3a-68c761edda82/26-6a9aab8b6f59b.webp' /></p><p>

​இதற்கமைய விபத்து நடந்த நாளன்றே அங்குலானா பொலிஸார் மற்றும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் 11 வீரர்கள் மீட்கப்பட்டனர்.</p><p>

அதனைத் தொடர்ந்து பனதுராவிலிருந்து சிலாவ் வரையிலான கடலோரப் பகுதிகளில் வான்
மற்றும் கடல் வழியே தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வந்தது.

​</p><h2>விபத்து</h2><p>மேலும் மீட்கப்பட்ட உடலின் அடையாளத்தை உறுதிப்படுத்தல் மற்றும் பிரேதப்
பரிசோதனைக்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b830900-7316-44bf-be9d-2c546fb50279/26-6a9aab8c232d4.webp' /></p><p>
இந்தநிலையில் நீரில் மூழ்கியிருந்த ஏதேனும் ஒரு சிதைவுப் பொருளின் மீது படகு
மோதியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இருப்பினும், விபத்துக்கான முழுமையான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஒன்று
நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் கைது பின்னணி! மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-arrested-namal-rajapaksa-investigation-1788517954"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-arrested-namal-rajapaksa-investigation-1788517954</id>
            <summary type="text">கடந்த காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) விமான கொள்வனவு ஒப்பந்த ஊழல் மோசடி தொடர்பான நீண்ட வாக்குமூலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) விமான கொள்வனவு ஒப்பந்த ஊழல் மோசடி தொடர்பான நீண்ட வாக்குமூலத்தின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இன்று காலை (04) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><h2>ஏர்பஸ் (Airbus) ஒப்பந்த மோசடி</h2><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யும் ஏர்பஸ் (Airbus) ஒப்பந்த ஊழல் வழக்கில், நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/186a077c-dd0e-4fa7-9b6b-c15575d602a8/26-6a9aa89851952.webp' />&nbsp;</p><p> </p><p>

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த வேளையில், கபில சந்திரசேன மே 08 அன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். </p><p>

கைது செய்யப்பட்ட போது கபில சந்திரசேன நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மற்றும் அதன் பின்னணியில் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.&nbsp;</p><p>இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணை</h2><p>இதற்கிடையில், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6150d8-3b57-448e-8528-ec4ff4a9a091/26-6a9aa8990489a.webp' /></p><p>
மேலும், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு ஆதரவளிப்பதற்காக, பிரான்ஸ் ஏர்பஸ் தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாட்டிற்கு வருகை தந்து ஆணைக்குழுவின் முன்பும் வாக்குமூலங்களை அளித்திருந்தது.</p><p>

இத்தகைய பின்னணியில், ஏர்பஸ் ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பாணையை தொடர்ந்து நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; </p><p>எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்வனவு ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் (CIABOC) 2013 ஆம் ஆண்டும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T11:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் - எதிர்வாதத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-bill-to-the-constitution-1788519493"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-bill-to-the-constitution-1788519493</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான
விசாரணைகளுக்காக பூரண அல்லது முழுமையான நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தை நியமிப்பதற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான
விசாரணைகளுக்காக பூரண அல்லது முழுமையான நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொதுநலவாய 
நாடுகளின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அதே சமயம் இந்தச் சட்ட மூலம் தொடர்பான விசாரணைகளின் போது அரசுத் தரப்பின் வாதத்துக்கு மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகள் எதிர்த்துப் பதில் வாதம் செய்வதற்கு இடமேயளிக்காமல் விசாரணையை முடித்துக் கொண்டமை குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.</p><p>

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரு , அரசமைப்பின் 22ஆவது
திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணையை அவதானிப்பதற்காக நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றில் பிரசனமாகியிருந்தார்.</p><p>

இந்த வழக்கு தொடர்பான கவலைகள் குறித்து சட்டத்துறையைச் சேர்ந்த பலருடனும் தாம் கலந்துரையாடினார் என்று அவர் கூறினார்.
</p><h2>

அதிருப்தி வெளியிட்ட சட்டத்தரணிகள்</h2><p>

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p> 

 நீதித்துறையின் சுதந்திரத்துக்கு
இது மிகவும் முக்கியமானது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க ஏன் ஒரு விரிவான அமர்வு அல்லது பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயம் நியமிக்கப்படவில்லை என்பது
சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b72b559-6f9c-42da-aba2-b6b01abeba54/26-6a9aa6367c781.webp' /></p><p>


முக்கியமான அரசமைப்பு மற்றும் நீதித்துறை சார்ந்த வழக்குகள் வழக்கமாகப் பெரிய அமர்வுகளாலேயே விசாரணை செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பூரண
ஆயத்துக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p>

நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கவலைக்குரிய விடயமாக இதைக் குறிப்பிட்ட
ஸ்டீவன் திரு, விரிவான அல்லது முழுமையான அமர்வை அமைக்காமைக்கான காரணங்கள் குறித்தும் கேள்வியெழுப்ப தயார்.</p><p>

இந்த விசாரணைகளின் போது அரசு தரப்பினால் நேற்று முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு
மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகள் பதில் வாதம் செய்ய வாய்ப்பு
அளிக்கப்படவில்லை.</p><p> 

நேற்றுமுன்தினம், மாலை 5:30 மணியோடு இந்த வழக்கு விசாரணைகளை
முடிவுறுத்துவதாக அறிவித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களின் எதிர்வாதம் ஏதேனும் இருக்குமாயின் அவற்றை நேற்று(03) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முன்னர்
உயர்நீதிமன்றத்தில் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்யும்படி கூறி விசாரணையை
முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
</p><p>
உயர்நீதிமன்ற ஆயத்தின் இந்த முடிவை பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்
விசனத்துடன் விமர்சித்தார்.

வழமையாக இது போன்ற முக்கிய விடயங்களில் மனுதாரர் தரப்பின் பதில் வாதம் முக்கிய
விவகாரமாகக் கருதப்படும். அதற்கு வாய்ப்பளிக்க மறுத்தமை கவலைக்குரியது என்றார்.</p><h2>&nbsp;22ஆவது திருத்தச் சட்டமூலம்</h2><p>
இதேவேளை, அரசால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பின்
22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட
மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம்(02) நிறைவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45249746-7d11-4ff0-9c0e-549b09f08e6e/26-6a9aa637430ea.webp' /></p><p>
</p><p>
அந்தச் சட்டமூலத்தின் அரசமைப்பு அமைவுடைமை தொடர்பான வியாக்கியானத்தை
நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றம்
அறிவித்தது.
</p><p>
அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்
சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இரண்டு
நாள்களாக இடம்பெற்றிருந்தது.
</p><p>
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சசூரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர,
சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட
உயர்நீதிமன்ற நீதியரசர் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்பான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p>

இதற்கமைய, 22ஆவது திருத்ததைச் சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 79
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் 41 மனுக்கள் இணைய வழி மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. </p><p>அரசமைப்பு
திருத்தம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அதிகூடிய
எண்ணிக்கை இதுவேயாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்தில் பசில் - யோஷித வரிசையில் நாமல்! வரலாற்றில் பதிவான 4ஆவது கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-4-times-in-sri-lankan-history-1788516687"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-4-times-in-sri-lankan-history-1788516687</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;இதற்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் (2016இல் இருமுறையும் 2017இல் ஒருமுறையும்) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, தற்போது மீண்டும் இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் திட்டவட்டமாக மறுப்பதுடன், இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p></p><h2>முதல் கைது..&nbsp;</h2><p>
</p><p>
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus A330 மற்றும் A350) விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604d05b3-6e4f-4f36-a4c8-3b78d150f6d8/26-6a9aa36c3625f.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தத்தின் போது ராஜபக்ச குடும்பத்தினர் 60 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐந்து மணி நேர விசாரணையின் பின்னரே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. </p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் முன்னரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்ததுடன், எந்தவொரு சுயாதீன விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.
</p><p>
நாமல் ராஜபக்ச முதன்முதலில் 2016 ஜூலை 11 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (FCID) கைது செய்யப்பட்டார். </p><p>கொழும்பு கோட்டையில் முன்மொழியப்பட்ட 650 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பரக் கட்டிடத் திட்டத்துடன் தொடர்புடையதாக, ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்காக இந்திய நிறுவனமான 'கிரிஷ்' நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாயை (அக்காலகட்டத்தில் சுமார் 480,000 அமெரிக்க டொலர்) தவறாகப் பயன்படுத்தி, அதைத் தன் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்..&nbsp;</h2><p> </p><p>பசில் மற்றும் யோஷித ராஜபக்சவுக்குப் பிறகு இக்குடும்பத்தின் மூன்றாவது கைதான இச்சம்பவத்திற்குப் பிறகு அவர் சுமார் ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9a7343-a31e-4f4c-838e-dc83659e3649/26-6a9aa36d0a978.webp' /></p><p> </p><p>மேலும், சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பின்னர், 2016 ஒகஸ்ட் 15 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார். </p><p>அங்கு, நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடைய 'கவர்ஸ் கோப்பரேஷன்' (Gowers Corporation) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி 125 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 'ஹெலோ கோப்' (Hellocorp) நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்து பணமோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் ஒகஸ்ட் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><p>இந்த வழக்கில் வங்கிப் கணக்குகளை முடக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், பின்னர் 2023 நவம்பரில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.</p><p></p><h2>வரலாற்றுச் சம்பவம்..&nbsp;</h2><p>
</p><p>
அவரது மூன்றாவது கைது நடவடிக்கை 2017 ஒக்டோபர் 10 அன்று ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90de9b21-127e-46f5-986b-b694c709170e/26-6a9aa36dbbfec.webp' /></p><p> </p><p>மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்திய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிராக ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, சட்டவிரோதமாகக் கூடுதல், கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இது நடந்தது. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருடன் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவர் ஒக்டோபர் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது ஆதரவாளர்கள் டயர்களை எரித்து சிறை வாகனத்தை மறிக்கவும் முயன்றனர்.
</p><p>
பின்னர், 2025 ஜூலையில், மாலைதீவில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றதால் 2017 போராட்ட வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. எனினும், மறுநாள் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து அந்த பிடியாணை திரும்பப் பெறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ece776bd-1b15-4649-8f75-a3a0f6a649ec/26-6a9aa36e7c460.webp' /></p><p> </p><p>இவ்வாறிருக்கையில், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணிகள் சேர்க்கையில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தி வருகிறது, மேலும் பல பணமோசடி புகார்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனான, 1986இல் பிறந்த நாமல் ராஜபக்சஈ முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் (2020 - 2022), 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மிக இளைய வேட்பாளரும் ஆவார்.</p><p> தற்போது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது அரசியல் தொகுதி ஹம்பாந்தோட்டை ஆகும். 2015 முதல், மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கங்களின் கீழ் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பல விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MKWUl_Wo_0w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-04T11:03:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு இந்தியத் தூதுவர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-ambassador-s-explanation-mahanayake-theros-1788518244"></link>
            <id>https://tamilwin.com/article/indian-ambassador-s-explanation-mahanayake-theros-1788518244</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய
பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய
பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆசிகளைப் பெற்றுள்ளார்.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்த மகாநாயக்க
தேரர்களுக்கு மரியாதை செலுத்தினார் என்றும், அவர்களின் ஆசிகளைப் பெற்றார்
என்றும் இந்தியத் தூதுவர் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு&nbsp;</h2><p>
</p><p>
டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா
அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்து அவர் பௌத்த பீடாதிபதிகளுக்கு
விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7486d5b7-e5b4-4db4-8039-ec8c58651c81/26-6a9aa21002891.webp' /></p><p>

இலங்கை மக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படும்,
திட்டமிடப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல இருதரப்புத் திட்டங்கள் குறித்தும்
அவர் மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d15290aa-1fe4-4e7b-b9a8-456dd63dab04/26-6a9aa21102698.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலுக்கு சென்ற தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195"></link>
            <id>https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195</id>
            <summary type="text">மட்டக்களப்பு-கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவமானது இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு-கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்று(4.9.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கடற்றொழில் சங்க தலைவர் மற்றும் விஷ்ணு கோவில் வீதியைச்
சேர்ந்த 48 வயதுடைய நபர் இருவருமே உயிரிழந்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

குறித்த கடல் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 11.00 மணியளவில் மீன்
பிடிப்பதற்கு தோணி ஒன்றில் 3 பேர் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும்
நீரில் மூழ்கினர்.
</p><p>
இதில் ஒருவர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இரு கடற்றொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டது.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[20ஆவது வாரத்திலும் தொடரும் மயிலிட்டி காணி உரிமைப் போராட்டம் - முன்வைக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mylitti-land-rights-struggle-1788517035"></link>
            <id>https://tamilwin.com/article/mylitti-land-rights-struggle-1788517035</id>
            <summary type="text">எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட
வேண்டும்?, எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?, அரச உயர் அதிகாரிகளே, அரசே
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட
வேண்டும்?, எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?, அரச உயர் அதிகாரிகளே, அரசே
பதில் சொல்!" என்ற உருக்கமான கோஷங்களுடன், மயிலிட்டி காணி இழந்த மக்கள் தமது
காணி உரிமைக்கான போராட்டத்தை இன்று 20ஆவது வாரமாகவும் தொடர்ந்துள்ளனர்.
</p><p>
மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்தப்
போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்
என்று மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>வாழ்க்கையில் மாற்றம் இல்லை</h2><p>

பல வருடங்களாகத் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் காத்திருக்கும்
தங்களின் நிலை குறித்து மனம் தளர்ந்த நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கள்,
அரசாங்கம் மாறினாலும் தங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கவலை
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047d137f-09f5-4fbb-b8ab-57aedcf59abc/26-6a9a9e009aeec.webp' /></p><p>
</p><p>
தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளைத் தாண்டி, காணிகளை நடைமுறையில்
விடுவிப்பதற்கான நடவடிக்கையே தமக்குத் தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.</p><h2>20ஆவது வாரப் போராட்டம்</h2><p>
</p><p>
தங்களது பிள்ளைகள் தங்கள் சொந்தக் காணியில் வாழ வேண்டும் என்பதற்காகவும்,
முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில் மீண்டும் வாழ்ந்து மடிய வேண்டும்
என்பதற்காகவுமே இந்த 20ஆவது வாரப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும்
மக்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.
</p><p>
தமது காணிகள் தொடர்பில் அரச உயர் அதிகாரிகளும், அரசும் தெளிவான பதிலை வழங்க
வேண்டும் என்றும் வலியுறுத்திய மக்கள், போராட்டம் எத்தனை வாரங்கள் தொடர
வேண்டும் என்பதைத் தாங்கள் தீர்மானிக்கவில்லை என்றும், காணிகளை எப்போது
விடுவிக்கின்றார்கள் என்பதுதான் அதனைத் தீர்மானிக்கும் என்றும் மேலும்
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b055ec-e701-4df0-b76f-59855378e7e3/26-6a9a9e0181c58.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb811187-df33-44f8-9005-03406f9c3051/26-6a9a9e026de97.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T10:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்புப் பாதுகாப்பு குறித்து சஜித் வழங்கியுள்ள அறிவுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-talks-about-constitutional-protection-1788516452"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-talks-about-constitutional-protection-1788516452</id>
            <summary type="text">அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும்
சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப்
பார்வைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும்
சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப்
பார்வையுடனான தேசிய உரையாடல் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ வலியுறுத்தினார்.</p><p>

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுநலவாய சட்டத்தரணிகள்
சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரூவுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற
சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
எந்தவொரு அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசமைப்பு நிறுவனங்கள்
நம்பகத்தன்மையுடனும் சுயாதீனமாகவும் இயங்கக்கூடிய வகையில் நிறுவனக்
கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அரசமைப்பு சீர்திருத்தங்கள்
தற்போதைய அரசியல் தேவைகளுக்காக அல்லாமல், அதிகாரம் மாறும் சந்தர்ப்பத்தில் கூட
மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.</p><h2>ஆட்சி முறை பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
சுயாதீன அரசமைப்புச் சார் நிறுவனங்களைப் பாதிக்கும் சீர்திருத்தங்களுக்குப்
போதுமான பாதுகாப்பு விதிகள், வெளிப்படைத்தன்மை மற்றும் அர்த்தமுள்ள பொதுமக்கள்
கலந்தாலோசனைகள் அவசியம் என்பதுடன், நீதித்துறையின் சுதந்திரம் என்பது
நீதிபதிகளின் சிறப்புரிமை அல்ல, மாறாக மக்களின் மற்றும் அரசமைப்பு ஆட்சி
முறையின் பாதுகாப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edcaf378-e474-4b83-bb5b-4b6a82c86942/26-6a9a9bf703796.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகாரப்
பகிர்வு குறித்து விவாதிக்கும் போது பொதுநலவாயக் கோட்பாடுகளை முக்கியமான
சர்வதேச அளவுகோலாகப் பயன்படுத்தலாம் என அவதானிக்கப்பட்டதுடன், தற்போதைய
நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் செல்வாக்கு செலுத்தாமல் நீண்டகால அரசமைப்பு
சீர்திருத்தமாக விசேட அரசமைப்பு மீளாய்வுப் பொறிமுறை தேவையா என்பதைப்
பரிசீலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட சிறப்புவாய்ந்த சுற்றாடல் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது குறித்தும்
இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
சுற்றாடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் சுற்றாடல் நீதியை
வலுப்படுத்துவதற்கும் பொதுநலவாய நாடுகளின் அனுபவங்களை ஆராய்ந்து பொருத்தமான
மாதிரியைத் தேர்ந்தெடுக்க விருப்பமும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் விடுவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>&nbsp;இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்ச ஐந்து மணி&nbsp; நேரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p>

இதனையடுத்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><h2>ஐந்தாம் இணைப்பு</h2><p>இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நான்காம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>

இதனையடுத்து பல மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lUtyjGkX0qA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSYHOvwD5kc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0103a55-c52f-43c9-bc3c-0cb3e650673b/26-6a9a99952ad37.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:22:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த சிறுத்தை - தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-employee-seriously-injured-leopard-attack-1788516016"></link>
            <id>https://tamilwin.com/article/female-employee-seriously-injured-leopard-attack-1788516016</id>
            <summary type="text">பொகவந்தலாவை பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவை பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் இன்று(04.09.2026) பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது.</p><p> 

 சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த பெண் தொழிலாளி கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில், புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரிய அளவிலான சிறுத்தை ஒன்று அப்பெண்ணின் கழுத்து மற்றும் கை பகுதியில் தாக்கியுள்ளது.
</p><h2>
சிறுத்தை தாக்குதல்</h2><p>
சிறுத்தையின் தாக்குதலால் அந்த பெண் நிலத்தில் விழுந்த நிலையில், அருகிலிருந்த
ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதையடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83b75484-45c9-49c4-bb47-04fd99ff968c/26-6a9a972351189.webp' /></p><p>

தோட்டத் தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வதால், அந்நாய்களை இரையாக்கிக் கொள்ளவே சிறுத்தைகள் அப்பகுதிக்கு வருகின்றன என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
நாய்களை வேட்டையாட முயலும் போது ஏற்படும் தடைகள் காரணமாகவே, அருகில் இருக்கும் மனிதர்கள் மீது சிறுத்தைகள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e75b6e-a495-43e7-a933-05ef2f25df28/26-6a9a972434b2b.webp' /></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7LWdNCPVI2k" width="640" height="360" class="note-video-clip"></iframe><b></b></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட நாமல்.. ஆணைக்குழுவிற்கு முன் கண்ணீர் மல்க நிற்கும் ஆதரவாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-update-1788514338"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-update-1788514338</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க திரண்டுள்ளனர்.&amp;nbsp;இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க திரண்டுள்ளனர்.&nbsp;</p><p>இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில், ஆணைக்குழு வளாகத்தில் கூடியுள்ள அவரின் ஆதரவாளர்கள், கண்ணீர் சிந்தி வருத்தம் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம், விசாரணைகளின் பின்னர்,&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F875241888859624%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T09:55:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனரக வாகனம்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-injured-in-accident-involving-tipper-motorcycle-1788513475"></link>
            <id>https://tamilwin.com/article/2-injured-in-accident-involving-tipper-motorcycle-1788513475</id>
            <summary type="text">கனரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து இன்று(4.9.2026) முற்பகல் கிளிநொச்சியில் A9 பிரதான வீதியில் இடம்
பெற்றுள்ளது. </p><p>வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம்
கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து
இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>கணவன் மனைவி இருவரும் ஆலயத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa6b7b1e-2653-4bf3-8256-93cba97b6457/26-6a9a92736ceed.webp' /></p><p>
</p><p>
விபத்தில் படுகாயமடைந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் உடனடியாக
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T09:42:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் நீதிமன்றின் இரகசிய தீர்மானம் ஜனாதிபதிக்கு.. வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anti-corruption-bill-supreme-court-to-president-1788510148"></link>
            <id>https://tamilwin.com/article/anti-corruption-bill-supreme-court-to-president-1788510148</id>
            <summary type="text">அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஊழல் தடுப்புத் திருத்த சட்டமூலத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஊழல் தடுப்புத் திருத்த சட்டமூலத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், அதன் அரசியலமைப்புச் சாத்தியக்கூறு குறித்த தனது இரகசிய வியாக்கியானத்தை சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த சட்டமூலத்தை எதிர்த்து 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.&nbsp;</p><p>நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, மஹிந்த சமரவர்தன மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டது.</p><h2>விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்..&nbsp;</h2><p>
</p><p>
இன்று (04) வாய்மொழி வாதங்களை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏதேனும் எழுத்துப்பூர்வமான சமர்ப்பிப்புகளைச் செய்ய விரும்பினால், அவற்றை நண்பகல் 12.00 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2bc3685-1307-4f32-818f-591f894dca3f/26-6a9a8ad8245e0.webp' /></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து, அம்மசோதாவின் அரசியலமைப்புச் சாத்தியக்கூறு குறித்த உயர் நீதிமன்றத்தின் இரகசிய வியாக்கியானம் எதிர்காலத்தில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.
</p><p>
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஊடகச் சட்ட மன்றம் (Media Law Forum) மற்றும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை (Transparency International Sri Lanka) உள்ளிட்ட 15 தரப்பினர் இந்த சட்டமூலத்தை எதிர்த்து மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
</p><p>
திருத்தப்பட்ட இந்த சட்டமூலம் நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைப்பதாகவும், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் அம்மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
அதற்கிணங்க, குறித்த சட்டமூலத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு (referendum) மூலம் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.</p><p></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vYm5XRE_Gx4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-04T09:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா பேரழிவின் விளிம்பில் உள்ளது: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/britain-us-president-trump-1788512418"></link>
            <id>https://tamilwin.com/article/britain-us-president-trump-1788512418</id>
            <summary type="text">பிரித்தானியா பேரழிவின் விளிம்பில் உள்ளதாகக் எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் கட்டுப்பாடற்ற சட்டவிரோத குடியேற்றங்கள்
மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா பேரழிவின் விளிம்பில் உள்ளதாகக் எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் கட்டுப்பாடற்ற சட்டவிரோத குடியேற்றங்கள்
மற்றும் அதிகப்படியான எரிபொருள் செலவினங்கள் குறித்து தனது கடும் கவலையை
வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்துக்களைப்
பகிர்ந்துள்ளார்.
</p><p>
மன்னர் சார்லஸ் மீது தாம் மிகுந்த மரியாதையும் நேசமும் வைத்திருப்பதாகக்
குறிப்பிட்ட ட்ரம்ப், பிரதமர் அண்டி பர்ன்ஹாம் தலைமையிலான பிரித்தானிய
அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.</p><h2>சட்டவிரோதக் குடியேற்றங்கள்</h2><p>
</p><p>
உலகளவில் இருந்து மக்கள் தங்குதடையின்றி நாட்டுக்குள் நுழைவதைக்
கட்டுப்படுத்தத் தவறினால், பிரித்தானியா என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என
அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7f592d-910b-4612-bcbb-af077bece139/26-6a9a8b3580265.webp' /></p><p>
</p><p>
அத்துடன், காலநிலை மாற்றக் கொள்கைகள் காரணமாக பிரித்தானியாவில் ஆற்றல்
செலவுகள் இயல்பான அளவை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக
உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
இருப்பினும், சட்டவிரோத படகு வருகைகள் மற்றும் மனித கடத்தல் கும்பல்களுக்கு
எதிராக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக பிரித்தானியாவுக்கான
சட்டவிரோதக் குடியேற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் பிரித்தானிய அரசாங்கம்
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T09:11:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசிடம் புதிய அறிக்கை ஊடாக ஐ.நா. மனித உரிமை ஆணையகம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-human-rights-council-request-sl-government-1788509818"></link>
            <id>https://tamilwin.com/article/un-human-rights-council-request-sl-government-1788509818</id>
            <summary type="text">மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம்
மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும்
செயற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம்
மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும்
செயற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் புதிதாக வெளியிடப்பட்ட ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை கோரியுள்ளது.</p><p>

ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப் பகுதியை உள்ளடக்கிய இந்த
அறிக்கை ஊழலை எதிர்கொள்ளல், அரசியல் படுகொலைகள் தொடர்பாக உயர்மட்ட கைதுகள்
மற்றும் புலன்விசாரணைகள், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும்
2019 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் என்பனவை தொடர்பான நடவடிக்கைகளை
கவனத்தில் எடுக்கின்றது. </p><p>இதே காலப்பகுதியில் இலங்கை டித்வா சூறாவளி மற்றும்
உலகளாவிய எரிசக்தி விலையேற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட சவால்களையும்
எதிர்கொண்டது.</p><h2>நடவடிக்கை</h2><p>

நீண்ட கால சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்பான உறுதிமொழி
அளித்திருந்தாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் அடக்குமுறைக்கு வழிவகுக்கும்
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றது என்றும், அது எதேச்சதிகார
கைதுகளுக்கும் குற்றச்சாட்டின்றிய தடுத்துவைப்புக்களுக்கும் கொண்டு செல்லும்
என்றும் அறிக்கை கூறுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d78637d9-daa1-49a8-a28a-f282a5c43ec0/26-6a9a85e09ca5a.webp' /></p><p>இலங்கை தனது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைத்
தீவிரப்படுத்துமாறும் குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது
தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்தச் சட்டத்தை
பயன்படுத்துவதற்குத் தற்காலிகத் தடை விதித்தல் மற்றும் அதன் கீழ்
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் போன்ற நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறும் ஆணையாளர் வலியுறுத்தினார்.</p><h2>மனித உரிமை மீறல்கள்</h2><p>
</p><p>
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான
நபர்கள், அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையான முறையில் கையாளப்பட்டுத்
தீர்க்கப்படும் வரை, அரசு, பாதுகாப்புத்துறை அல்லது இராஜதந்திரப் பணிகளில்
உள்ள உயர் பதவிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/930bb76a-7ed6-45dd-982a-a39ce9ef96f7/26-6a9a85e1512bf.webp' /></p><p>


பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரல் முயற்சிகளுக்கும், இராணுவத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பதற்கும் அரசு ஆதரவளிக்க வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:49:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதிகம சூட்டியின் மில்லியன் கணக்கான சொத்துக்கள் அதிகாரிகளால் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mithikama-sooti-s-rs-15-million-assets-frozen-1788510175"></link>
            <id>https://tamilwin.com/article/mithikama-sooti-s-rs-15-million-assets-frozen-1788510175</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரபாத் மதுசங்க,“மிதிகம சூட்டி” என அழைக்கப்படுபவருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரபாத் மதுசங்க,“மிதிகம சூட்டி” என அழைக்கப்படுபவருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சட்டவிரோத சொத்துக்கள் தடை&nbsp;</span></p><p>


அதன்படி, வெலிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீட்டை பயன்படுத்துதல், உரிமை மாற்றம் செய்தல் அல்லது விற்பனை செய்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5914f233-6fab-4784-9b33-f10ad1a59a25/26-6a9a83816f8b7.webp' /></p><p>



குறித்த வீடும் அது அமைந்துள்ள காணியும் சேர்த்து சுமார் ரூ.15 மில்லியன் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த சொத்தை இனிமேல் பயன்படுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தடை விதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:43:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் - ஆணையாளர் ஆகியோர் இலங்கை விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commissioner-us-federal-maritime-commission-1788510237"></link>
            <id>https://tamilwin.com/article/commissioner-us-federal-maritime-commission-1788510237</id>
            <summary type="text">அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்திலுள்ள
சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்திலுள்ள
சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம்
மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க - இலங்கை ஒத்துழைப்பை
மேம்படுத்துவதற்காக, அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர்
லோரா டிபெல்லா மற்றும் அதன் ஆணையாளரான ரொபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம்
செய்யவுள்ளனர்.</p><p>

தமது விஜயத்தின் போது, இலங்கை அரச மற்றும் கடல்சார் துறையிலுள்ள சிரேஷ்ட
தலைவர்களுடன் தலைவர் டிபெல்லா மற்றும் ஆணையாளர் ஹார்வி ஆகியோர் சந்திப்புகளை
மேற்கொள்வர்.
</p><p>
எட்டாவது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் ஏற்பாட்டில் மாநாட்டில் டிபெல்லா
உரையாற்றுவதுடன், அதன் குழுவொன்றில் ஆணையாளர் ஹார்வி பணியாற்றுவார்.</p><h2>இலங்கையின் வகிபாகம்</h2><p>

“உலகெங்கிலுமுள்ள பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் கொள்கலன்களில் 80
சதவீதத்துக்கும் அதிகமானவை கொழும்பினூடாக பயணிப்பதானது, இந்து
சமுத்திரத்தினூடாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்தின் மையத்தில் இலங்கை
கொண்டிருக்கும் வகிபாகத்துக்கான ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாக விளங்குகின்றது”
என்று அமெரிக்கத் தூதுவர் எரிக் எஸ். மயர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20c7538-890c-4b6a-b5cf-777e1df3d184/26-6a9a83ed6835e.webp' /></p><p>
</p><p>
“தலைவர் டிபெல்லாவின் விஜயமானது, அந்தப் பங்கின் முக்கியத்துவத்தை
அங்கீகரிப்பதுடன், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்த முக்கிய
வர்த்தகத்தைத் தடையின்றி நடைபெறச் செய்யும் மக்கள் மற்றும் நிறுவனங்களுடனான
எமது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்குகின்றது.
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான கப்பல் போக்குவரத்தானது, அமெரிக்க
வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றது, பிராந்தியத்தின் ஒரு கேந்திர
மையமாக இலங்கையின் நிலையைப் பலப்படுத்துகின்றது மற்றும் எமது இரு
பொருளாதாரங்களின் செழிப்புக்கும் உதவி செய்கின்றது” என்றும் அவர் மேலும்
கூறினார்.</p><p>

1961ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவானது,
அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக
அமெரிக்க சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதற்குப்
பொறுப்பான சமஷ்டி அரசின் ஒரு சுயாதீன முகவரமைப்பாகும்.</p><h2>சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பு</h2><p>
</p><p>
போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நம்பகமான ஒரு சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக்
கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கப்பற் போக்குவரத்துத் துறையிலுள்ள நியாயமற்ற
அல்லது ஏமாற்றும் நடைமுறைகளிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கும்
அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழு பணியாற்றுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f03bad-e179-45cf-ab4f-078a9ec71bcf/26-6a9a83ee219ec.webp' /></p><p>

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால்
பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவுக்கு டிபெல்லா
தலைமை தாங்கி வழிநடத்துகின்றார்.</p><p>

2026ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால்
பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் ஆணையாளராக
ரொபர்ட் ஹார்வி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-04T08:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவிற்கு எதிராக கருணாவின் வாக்குமூலம்: நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241</id>
            <summary type="text">தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>திடுக்கிடும் தகவல்கள்</h2><p>

உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஓருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) சிஐடியினருக்கு வழங்கிய மிக உணர்வுபூர்வமான வாக்குமூலத்தின் விபரங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0707941-ee83-4b2a-92aa-c5d979e04cfe/26-6a99b11aacf4d.webp' /></p><p>
</p><p>
அதில், சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இல்லாத நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாகக் காட்டிப் பாரிய நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
</p><p>
கருணா&nbsp; லண்டனுக்குச் செல்வதற்காகச் சிங்களப் பெயர் கொண்ட போலி கடவுச்சீட்டையும், அதற்கான விசா வசதிகளையும் சுரேஷ் சலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 கருணா லண்டன் சென்றடைந்த பின்னர், சுரேஷ் சலேயும் அங்கு சென்று, கருணாவின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், லண்டன் பொலிஸாருக்குக் கருணாவின் போலி கடவுச்சீட்டு விபரங்களை வழங்கி, அவரை அங்கு கைது செய்து சிறையிலடைக்க சுரேஷ் சலே திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருணா&nbsp; தனது வாக்குமூலத்தின் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>கருணாவின் வாக்குமூலம்</h2><p>
</p><p>
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் சட்டமா அதிபர் திணைக்களம்; நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 5 ஆம் திகதி முதல் அவர் உணவை உட்கொள்ள மறுத்து, தனது உடல்நிலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுபோயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd5863b-091f-456f-b846-d4c339dc4875/26-6a9a16233d8ab.webp' /></p><p>
</p><p>
தற்போது விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை, மேலும் அங்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், சுரேஷ் சலே தனது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளின் கடவுச்சொற்களை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தடுப்புக் காவல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சலே தொடர்பில் கருணா அம்மான் நீதிமன்றில் குற்றம் சுமத்தியதாக சிங்கள இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருணா தரப்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MGfXDBgbP70" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-04T08:35:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதற்றத்தில் பிரபல அரசியல்வாதிகள்! ஆபத்தான நபரின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கவுள்ள பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-pasik-case-politicians-investigation-cid-1788505093"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-pasik-case-politicians-investigation-cid-1788505093</id>
            <summary type="text">சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பினை பேணி, அவரிடமிருந்து கோடிக்கணக்கான பணம் மற்றும் சலுகைகளை பெற்றதாக முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><h2>சர்ச்சைக்குரிய கட்டுமான அனுமதி</h2><p>
இதன் ஒரு கட்டமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடமும் நேற்று (03) சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0706cd95-c4ac-453a-a79b-ba506fce6f83/26-6a9a743ecd8f2.webp' />&nbsp;</p><p>

ஷிரான் பாசிக் சொந்தமானது என்று கூறப்படும் தெஹிவளை கடற்கரையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கான சர்ச்சைக்குரிய கட்டுமான அனுமதி தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
அவர் முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது குறித்த ஹோட்டல் கட்டப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.</p><h2>பல அரசியல்வாதிகளிடம் விசாரணை</h2><p> 

ஹோட்டல் கட்டப்பட்ட நேரத்தில் பிரதி அமைச்சராக இருந்த அருந்திக பெர்னாண்டோ, அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>இதேவேளை, தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்கவிடமும் மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவு (CCID) (01) திகதி சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததது.</p><p>
இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மேயரின் திடீர் மரணத்தின் சந்தேகம்! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eraj-fernando-body-samples-further-examination-1788488312"></link>
            <id>https://tamilwin.com/article/eraj-fernando-body-samples-further-examination-1788488312</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பின் நீதித்துறை வைத்திய அதிகாரியால் நேற்று (3) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த பரிசோதனையின் போது, ​​மேலதிக விசாரணைகள் மற்றும் சோதனைகளுக்காக எராஜ் பெர்னாண்டோவின் உடலிலிருந்து மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு நீதித்துறை வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.</p><h2>முன்னாள் மேயரின் திடீர் மரணம்</h2><p>
</p><p>
திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில், முன்னாள் மேயரின் உடல் நேற்று முன் தினம் (2) காலை கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbe9b078-4470-4c09-ab70-435bbbd43934/26-6a9a5fc533350.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையின் படி, குடியிருப்பில் உள்ள அறைகளில் ஒன்றின் அருகே கதவில் கட்டப்பட்டிருந்த பட்டியினால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
முன்னாள் மேயருடன் மற்றொரு நபரும் அந்த குடியிருப்பில் தங்கியிருந்ததாக பொலிஸ் மேலும் கூறியுள்ளது.
</p><p>
இருப்பினும், அந்த நபர் முந்தைய நாள் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு பயணம் செய்திருந்த நிலையில், நேற்று காலை அந்த நபர் தொலைபேசி மூலம் பெர்னாண்டோவை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் விளைவாக, அந்த நபர், குடியிருப்பில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணைத் தொடர்புகொண்டு, குடியிருப்பை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.</p><p>
இதன்போதே முன்னாள் மேயரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><h2>பல சர்ச்சைக்குரிய வழக்குகள்</h2><p>இந்த பின்னணியில் எராஜ் பெர்னாண்டோ மீது பல சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp; &nbsp;</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27aae27-235a-447a-8f85-706199dd6237/26-6a9a5fc480a31.webp' /></p><p>
</p><p>இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச்சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இவர் துப்பாக்கி மேயர் என்று பரவலாக அறியப்பட்டார்</p><p>

இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>இதனையடுத்து பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T08:31:45+00:00</updated>
        </entry>
    </feed>
