<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-31T21:34:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allow-establishment-chinese-embassy-in-london-1785528477"></link>
            <id>https://tamilwin.com/article/allow-establishment-chinese-embassy-in-london-1785528477</id>
            <summary type="text">மத்திய லண்டனில் சீனாவின் பிரம்மாண்ட தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த
அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது தான் என பிரித்தானிய உயர் நீதிமன்றம்
தீர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய லண்டனில் சீனாவின் பிரம்மாண்ட தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த
அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது தான் என பிரித்தானிய உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
இதன் மூலம் தூதரக கட்டுமானத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>சீனத் தூதரகம்&nbsp;</h2><p>
</p><p>
லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரோயல் மிண்ட் கோர்ட்' குடியிருப்பு
பகுதியில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட தூதரகம் தொடர்பாக, அப்பகுதி
குடியிருப்புவாசிகள் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்திருந்தது.
</p><p>
இந்த தூதரகம் அமைந்தால் சீன எதிர்ப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின்
மனித உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், உளவு
பார்க்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacef4b5-6a2f-42fb-8b99-6616822f0252/26-6a6d01ecdf564.webp' /></p><p>எனினும், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வீடமைப்பு அமைச்சகமும்
உள்ளூர் நிர்வாகமும் அனைத்துக் கவலைகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகே
சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறி குடியிருப்புவாசிகளின் மனுவை
நிராகரித்தது.
</p><p>
சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம்,
பிரித்தானியாவிலேயே மிகப்பரிய தூதரக வளாகமாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக குடியிருப்புவாசிகள்
அமைப்பின் தலைவர் லூக் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:46:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் வெளியான காணொளிகள் - மெட்டா தலைவருக்கு எதிராக வழக்கு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/videos-released-insulting-prime-minister-modi-1785527403"></link>
            <id>https://tamilwin.com/article/videos-released-insulting-prime-minister-modi-1785527403</id>
            <summary type="text">இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, மெட்டாவின் இந்தியத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, மெட்டாவின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸுக்கு எதிராக ஹைதராபாத் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p> பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களுக்கு மத்தியில், பாஜக ஆதரவாளர்களின் முறைப்பாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>வழக்கு பதிவு&nbsp;</h2><p>
இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனத்திற்கு விரைவில் அறிவித்தல் அனுப்ப
உள்ளதாக ஹைதராபாத் பொலிஸ் இணையவழிக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதற்குப் பதிலளித்துள்ள மெட்டா செய்தித் தொடர்பாளர், சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைப்பதாகத்
தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d564cd35-867a-4594-8863-0fc2867f70a4/26-6a6cff5276ee4.webp' /></p><p>சமீபத்தில் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி, சட்டவிரோதமான
உள்ளடக்கங்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்ற நிபந்தனை
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முகப்புத்தகத்தில் பயனர் பதிவிடும் கருத்துகளுக்கு நிறுவன முகாமையாளர்கள்
நேரடியாகப் பொறுப்பாக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[43 சீன நிறுவனங்களின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bans-imports-from-43-chinese-companies-1785525994"></link>
            <id>https://tamilwin.com/article/us-bans-imports-from-43-chinese-companies-1785525994</id>
            <summary type="text">சீனாவின் சின்ஜியாங் பகுதியில் சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகவும், மனித உரிமை மீறல்களில்
ஈடுபடுவதாகவும் கூறி, மேலும் 43 சீன நிறுவனங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் சின்ஜியாங் பகுதியில் சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகவும், மனித உரிமை மீறல்களில்
ஈடுபடுவதாகவும் கூறி, மேலும் 43 சீன நிறுவனங்களின் பொருட்களுக்கு அமெரிக்கா
தடை விதித்துள்ளது.
</p><p>
அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சீனாவின் முன்னணி
மின்தேக்கி தயாரிப்பு நிறுவனமான ஹுனான் ஐஹுவா குழுமம் உட்பட பல நிறுவனங்கள்
இந்தத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>உழைப்புத் தடுப்புச் சட்டம்</h2><p>

இந்தத் தடையின் மூலம் மின்தேக்கி தயாரிப்புத் துறை மட்டுமன்றி, மருந்தாக்கம்,
உலோகங்கள் மற்றும் பருத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பல்வேறு
நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbd210dc-8665-4ed1-a96d-74aa456bfce2/26-6a6cf9b1e3547.webp' /></p><p>'உய்குர் கட்டாய உழைப்புத் தடுப்புச் சட்டத்தின்' கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த
நடவடிக்கையால், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 144-லிருந்து தற்போது
187 ஆக உயர்ந்துள்ளது.</p><p>

சின்ஜியாங் பகுதியில் உய்குர் மற்றும் இதர மத அல்லது இன சிறுபான்மையினரை
சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து மனித உரிமை மீறல்களில் சீனா ஈடுபடுவதாக
அமெரிக்கா தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், தன் மீதான இந்தக்
குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:39:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் அரசு நீதித்துறையை சரியான முறையில் கட்டமைக்கும் - கந்தசாமி பிரபு எம் பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-prabhu-opposition-members-in-panic-mode-1785515358"></link>
            <id>https://tamilwin.com/article/mp-prabhu-opposition-members-in-panic-mode-1785515358</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில்
கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது
என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில்
கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது
என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று (31.07.2026) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தக் கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 10, 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>அதேபோன்று கடந்த மாதம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு
கூட்டத்தில் மயிலத்தமடு மாதவனை காணி தொடர்பில்&nbsp; ஆராயந்துள்ளோம். அந்த காணிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கையை
அரசாங்கம் மேற்கொள்ளும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0793be-2d9f-48a0-a7cc-b20504424281/26-6a6cf1f433dca.webp' /></p><p>

அத்துடன் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற யானை - மனித மோதலை
தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள யானை வேலி தொடர்பாகவும் வாழைச்சேனை கடதாசி ஆலையில்
இருக்கும் தண்ணீர் தாங்கி அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
</p><p>
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு தொடர்பாக கடந்த கால ஆட்சியாளர்கள் எதிர்மறையான சிந்தனையில் செயற்பட்டு வருகின்றனர்.</p><p></p><h2>கூட்டு சேர்ந்த எதிர்க்கட்சி&nbsp;</h2><p>
</p><p>
இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பில் மாறுபாடான கருத்துக்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.
</p><p>
 உதாரணமாக சாரை பாம்புக்கு மண்ணெண்னை ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல பதறியடித்துக் கொண்டு திரிவதை பார்கக்கூடியதாக உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9aee788d-3a1b-4908-964e-9c5f2f8023c1/26-6a6cf1f3812d6.webp' /></p><p>கூட்டு சேர மாட்டோம் என்றவர்கள் இன்று கூட்டு சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பதை எதிர்க்கின்ற நிலை உருவாகியுள்ளது.
</p><p>
இவர்களின் நோக்கம் மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து தாங்களை விடுவித்து கொள்வதே ஆகும்.</p><p>எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:37:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற தீர்ப்பால் கதி கலங்கும் ராஜபக்சக்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-fate-court-ruling-historical-incident-1785528295"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-fate-court-ruling-historical-incident-1785528295</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.&nbsp;</p><p>இந்நியைில், குறித்த ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அத்துடன், பல முக்கிய முன்னாள் அரசியல் மற்றும் அரச தரப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.&nbsp;</p><p>இவ்விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. </p><p>

இலங்கை வரலாற்றிலேயே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருவரும் பதிவாகியுள்ளனர்.</p><p>நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p> 

இது உட்பட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mr_FJwTDCao" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-court-order-today-1785519190"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-court-order-today-1785519190</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p>இலங்கை வரலாற்றிலேயே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருவரும் பதிவாகியுள்ளனர்.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக இவர்கள் இருவரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>முன்னதாக&nbsp;2022ஆம் ஆண்டில், மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இருவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்துத் தீர்ப்பளித்தது. </p><p>அதனை தொடர்ந்து, இதற்கு எதிராக அரசு தலைமை சட்டத்தரணி தாக்கல் செய்த மேல்முறையீடு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த வழக்கில் எதிர் தரப்பின் சாட்சியங்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமையே இதற்கு ஆரம்பமாகும்.&nbsp;</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tNtQzCV29AI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுடனான தனது ஷெங்கன் தடையற்ற பயண ஒப்பந்தத்தை இடைநிறுத்திய இத்தாலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/italy-suspends-schengen-free-travel-spain-1785526341"></link>
            <id>https://tamilwin.com/article/italy-suspends-schengen-free-travel-spain-1785526341</id>
            <summary type="text">சியூட்டாவிற்குள் பெருமளவில் மக்கள் எல்லையைக் கடந்து வருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளற்ற ஷெங்கன் திட்டத்தின் கீழ் ஸ்பெயினுடனான தனது எல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டாவிற்குள் பெருமளவில் மக்கள் எல்லையைக் கடந்து வருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளற்ற ஷெங்கன் திட்டத்தின் கீழ் ஸ்பெயினுடனான தனது எல்லை ஏற்பாடுகளை இடைநிறுத்துவதாக இத்தாலி அறிவித்துள்ளது.</p><h2>பாரிஸுடன் உடன்பாடு</h2><p>
</p><p>
இத்தாலிக்கு ஸ்பெயினுடன் தரைவழி எல்லை இல்லை என்றாலும், இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே விமானம் அல்லது படகு மூலம் பயணம் செய்பவர்களைப் பாதிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dbc400f-471e-4127-bb10-9986167062ee/26-6a6cfabdc7cf5.webp' /></p><p>
</p><p>
பிராங்கோ - இத்தாலிய தரைவழி எல்லையில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த பாரிஸுடன் உடன்பாடு எட்டியுள்ளதாகவும் இத்தாலியின் உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் காவேரி நீர் விவகாரம்.. தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகாவிலிருந்து வந்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cm-vijay-should-not-come-karnataka-dk-shivakumar-1785523333"></link>
            <id>https://tamilwin.com/article/cm-vijay-should-not-come-karnataka-dk-shivakumar-1785523333</id>
            <summary type="text">தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>
காவேரி நீர் திறப்பு மற்றும் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p>

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது. </p><p>இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p></p><h2>இடம்பெறும் போராட்டங்கள்..&nbsp;</h2><p>இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>
இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecbfa3bf-bb71-4c42-9df5-b3421e94b6d6/26-6a6cf0a4a845a.webp' /></p><p>
</p><p>
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீர்வள மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.</p><p> இதன் பின்னர் பேசிய அவர், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். </p><p>இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம்.


போதிய நீர் இல்லை என்று கூறியும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது வேதனை அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40dafa6-8f24-41eb-b1eb-c335214f2128/26-6a6cf0a599890.webp' /></p><p> </p><p>தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது. </p><p>வேறொரு திகதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:02:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் ஜயசுதந்தர - ஹேமசிறி பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-jayasudantara-prison-hemasiri-fernando-1785515975"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-jayasudantara-prison-hemasiri-fernando-1785515975</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்திலிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><h2>மரண தண்டனை&nbsp;</h2><p>ஈஸ்டர் ஞாயிறன்று நிகழவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்கத் தவறியது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றங்களுக்காக, இருவருக்கும் கொழும்பு நிரந்தர மூவர் உயர் நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் இன்று (31) மரண தண்டனை விதித்தனர்.</p><p>இந்நிலையில், இருவரும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b64c72-1ef2-4930-bf05-3494fd58ab1d/26-6a6cd52a587ac.webp' /></p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tNtQzCV29AI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T16:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து எல்லை மோதல்: 20000இற்கும் அதிகமான கம்போடிய மக்கள் வீடு திரும்ப முடியாது துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thai-border-clash-leave-20-000-cambodians-stranded-1785511714"></link>
            <id>https://tamilwin.com/article/thai-border-clash-leave-20-000-cambodians-stranded-1785511714</id>
            <summary type="text">தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற
மோதல்களால் 20,000க்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற
மோதல்களால் 20,000க்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் இருப்பதாக
ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி டாம் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

கம்போடியாவின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஆய்வு செய்யச் சென்ற ஐ.நா
சிறப்புப் பிரதிநிதி டாம் அண்ட்ரூஸ், அந்நாட்டின் தலைநகர் புனோம் பென்னில்
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.</p><p></p><h2>கம்போடிய மக்கள்&nbsp;</h2><p>
</p><p>
கடந்த ஆண்டின் இறுதியில் எல்லைப் பகுதியில் சுமார் 6,50,000 மக்கள்
இடம்பெயர்ந்த நிலையில், பெரும்பான்மையானோர் திரும்பினாலும் 20,000க்கும்
அதிகமானோர் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவுவதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ea2e8c-a71f-42eb-a796-de9da36dc7b8/26-6a6cc05dc7557.webp' /></p><p>சில நகரங்கள் மற்றும் கிராமங்களை தாய்லாந்து இராணுவத்தினர் இன்னமும் தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறிய அவர், ஆயுத மோதல்களால் இடம்பெயர்ந்த
மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது சர்வதேச சட்டப்படி அவர்களின் உரிமை
என்றும், தாய்லாந்தும் கம்போடியாவும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை
விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

அதேவேளையில், கம்போடிய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கவில்லை என்றும்,
இருதரப்பு போர்நிறுத்த ஒப்பந்தப்படியே செயல்படுவதாகவும் தாய்லாந்து தெரிவித்து
வருகிறது.</p><p> எல்லை மூடல் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் வர்த்தகமும் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கம்போடியாவில் அதிகரித்து வரும் இணைய மோசடி மையங்கள் பெரும் மனித
உரிமைச் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், இதில் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகள்
மற்றும் செல்வாக்குமிக்க நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் ஐ.நா பிரதிநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் மலையேற்றப் பகுதியில் பனிச்சரிவு: 10 பேர் மாயம்! நால்வர் சடலமாக கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/avalanche-in-pakistan-trekking-area-1785511106"></link>
            <id>https://tamilwin.com/article/avalanche-in-pakistan-trekking-area-1785511106</id>
            <summary type="text">பாகிஸ்தானில் உள்ள உலகின் 12ஆவது மிக உயர்ந்த மலையான &#039;பிராட் பீக்&#039; பகுதியில்
ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ் பெற்ற நேபாள மலையேற்ற வீரர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானில் உள்ள உலகின் 12ஆவது மிக உயர்ந்த மலையான 'பிராட் பீக்' பகுதியில்
ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ் பெற்ற நேபாள மலையேற்ற வீரர்
நிர்மல் புர்ஜா உட்பட 10 வீரர்கள் மாயமாகியுள்ளனர்.</p><p> தீவிர தேடுதல்
வேட்டைக்குத் பிறகு 4 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.</p><p></p><h2>பிராட் பீக் மலை</h2><p>
</p><p>
பிரபல நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான "14 Peaks: Nothing Is Impossible" மூலம்
உலகப் புகழ்பெற்ற 43 வயதான நிர்மல் புர்ஜா, உலகின் மிக உயரமான 14
சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் ஏறி உலக சாதனை படைத்தவர் ஆவார்.
</p><p>
நேற்று நண்பகல் வேளையில் 8,051 மீட்டர் உயரமுள்ள பிராட் பீக் மலையில் சுமார்
6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு
ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb93e9f-19dd-40c7-916a-02f268cca9d4/26-6a6cbd8741625.webp' /></p><p>மாயமான 10 பேரில் நேபாளம், பாகிஸ்தான், ஓமன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய
நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் அடங்குவர்.</p><p>இதில் 6 பேர் நேபாளத்தைச்
சேர்ந்தவர்கள்.

பாகிஸ்தான் இராணுவத்தின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் சிறப்புத் தேடுதல்
குழுவினர் கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் உள்ள கடினமான நிலப்பரப்பில் தீவிர
மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்களில் இருவரின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள
நிலையில், நிர்மல் புர்ஜா உட்பட மாயமான எஞ்சிய 6 வீரர்களை மீட்க பாகிஸ்தான்
அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:33:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA தலைவரின் மூத்த ஆலோசகர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-president-s-senior-advisor-resigns-1785510388"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-president-s-senior-advisor-resigns-1785510388</id>
            <summary type="text">&amp;nbsp;FIFA தலைவர் ஜியானி
இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கர்லோஸ் கோர்டேரோ உடனடியாகத் தனது பதவி விலகியுள்ளார்.
FIFA உலகக் கிண்ணம் மற்றும் பிற தொடர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;FIFA தலைவர் ஜியானி
இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கர்லோஸ் கோர்டேரோ உடனடியாகத் தனது பதவி விலகியுள்ளார்.</p><p>
FIFA உலகக் கிண்ணம் மற்றும் பிற தொடர்களை நடத்த 'FIFA Forward Enterprise'
என்ற 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள துணை நிறுவனத்தை உருவாக்கி, அதில் 20
சதவீத பங்கை தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு விற்க FIFA திட்டமிட்டுள்ளது.</p><p></p><h2>FIFA தலைவர் பதவி விலகல்</h2><p>
</p><p>
இந்தத் திட்டத்திற்கு செப்டெம்பர் 19-க்குள் அனுமதி அளிக்கும் ஒவ்வொரு
உறுப்பினர் சங்கத்திற்கும் தலா 40 மில்லியன் டொலர் வழங்கப்படும் என
இன்ஃபான்டினோ அறிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் அமெரிக்க சாக்கர் சம்மேளன துணைத் தலைவரான கர்லோஸ் கோர்டேரோ, இது
கால்பந்து விளையாட்டின் எதிர்காலத்தை அடகு வைக்கும் மோசமான ஒப்பந்தம் எனக்
கூறி பதவி விலகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ecbc1d5-bd40-45d4-ba6b-26feee778619/26-6a6cbb4345783.webp' /></p><p>

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) இத்திட்டத்திற்கு மிகக் கடுமையான
எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

FIFA விளையாட்டின் ஆன்மாவை விற்பனை செய்ய முயல்வதாகக் கூறி, உலகக் கிண்ணம்
உள்ளிட்ட FIFA தொடர்களைப் புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது.</p><p>

இதேபோல் வட அமெரிக்க மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்புகளும் (AFC)
இத்திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையிலும், 211 உறுப்பினர் சங்கங்களின்
ஜனநாயகப்பூர்வ வாக்களிப்பு மூலமே முடிவு எடுக்கப்படும் என FIFA
தெரிவித்துள்ளது.</p><p>
மேலும், நாங்கள் கால்பந்தையோ அல்லது உலகக் கிண்ணத்தையோ விற்பனை செய்யவில்லை
என்றும், விளையாட்டின் வணிக வாய்ப்புகளை உலக அளவில் மேம்படுத்தவே முயல்கிறோம்
என்றும் FIFA தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு.. ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-mirissa-one-injured-1785513191"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-mirissa-one-injured-1785513191</id>
            <summary type="text">மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் இன்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.&amp;nbsp;வைத்தியசாலையில் அனுமதி&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் இன்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.&nbsp;</p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p>
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec199fe-dd52-44ff-bec7-4c1d7ce45f62/26-6a6cc879f0e7b.webp' /></p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p> 

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T16:08:31+00:00</updated>
        </entry>
    </feed>
