<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-12T19:32:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு..! தாக்குதலாளியை மடக்கிய ‘கதாநாயகன்’ மீதான வழக்குகள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bondi-beach-shooting-dropped-against-self-defence-1786559000"></link>
            <id>https://tamilwin.com/article/bondi-beach-shooting-dropped-against-self-defence-1786559000</id>
            <summary type="text">சிட்னியின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது,
கொடூரத் தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து &#039;கதாநாயகனாக&#039; போற்றப்பட்ட
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிட்னியின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது,
கொடூரத் தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 'கதாநாயகனாக' போற்றப்பட்ட
அகமது அல் அகமது மீதான வழக்குகளை அவுஸ்திரேலிய பொலிஸார் திரும்பப்
பெற்றுள்ளனர்.</p><p>

கடந்த டிசம்பர் மாதம் சிட்னியில் நடந்த யூத சமூக நிகழ்வில் நடத்தப்பட்ட
தீவிரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
</p><h2>கொடூரத் தாக்குதல்&nbsp;</h2><p>
அப்போது, துப்பாக்கி ஏந்திய தாக்குதலாளியை உயிரைப் பணயம் வைத்து அகமது அல்
அகமது தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்தார்.

இந்த மோதலில் அகமது பலத்த காயமடைந்தார்.</p><p> இதனிடையே, கடந்த மார்ச் மாதம் தனது
தந்தையுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அவர் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/324aa324-297f-428a-a8d5-be85092a65f0/26-6a7cc1300b8df.webp' /></p><p>
</p><p>
புதன்கிழமை சிட்னி உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,
தந்தையுடன் 12 மாதங்களுக்குச் சில கட்டுப்பாடுகளுடன் சுமுகமாக நடப்பதாக
ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பொலிஸார் அவர் மீதான குற்றச்சாட்டுகளைத்
திரும்பப்பெற்றுள்ளனர்.
</p><p>
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அகமது, தான் இப்போது
சுதந்திரமான மனிதன் என்றும் அமைதியை மட்டுமே விரும்புவதாகவும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-12T18:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-uni-students-union-missing-relatives-1786558404"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-uni-students-union-missing-relatives-1786558404</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்
ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
சங்க பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்
ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
சங்க பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது இன்றையதினம்(12.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.</p><p></p><h2>மாநாடு</h2><p>

இதற்கான முழுமையான ஆதரவை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் திரட்டும் வகையில்
இன்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் மாணவர் ஒன்றிய
பிரதிநிதிகளுடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க
பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fe191d8-a323-44cb-9619-b94f51d4ade0/26-6a7cb7c674269.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:39:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீசனிங் பவுடரில் போதைப்பொருள்..! 2 நாடுகள் அதிரடி நடவடிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/poppy-seed-blend-seasoning-powder-banned-1786557882"></link>
            <id>https://tamilwin.com/article/poppy-seed-blend-seasoning-powder-banned-1786557882</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான டிரேடர் ஜோஸின் &quot;எவரிதிங் பட் தி
பாகல்&quot; என்ற சீசனிங் பவுடருக்கு சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் தடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான டிரேடர் ஜோஸின் "எவரிதிங் பட் தி
பாகல்" என்ற சீசனிங் பவுடருக்கு சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் தடை
விதித்துள்ளன.

இந்தச் சீசனிங் பவுடரில் சேர்க்கப்பட்டுள்ள பாப்பி விதைகளில் போதைப்பொருளான
மார்பின் மற்றும் கோடீன் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
பொப்பி விதைகள் இயற்கையிலேயே போதைத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், அறுவடைக்
காலங்களில் தாவரத்தின் பாலுடன் தொடர்பு ஏற்படுவதால் போதைப்பொருள்களின் வீரியம்
அதில் கலக்க வாய்ப்புள்ளது.</p><p></p><p>
</p><h2>&nbsp;தென் கொரியாவில் தடை</h2><p>
போதைப்பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இணையதளங்களில் விற்கப்பட்ட
20-க்கும் மேற்பட்ட சீசனிங் பவுடர் விளம்பரங்களை சிங்கப்பூர் போதைப்பொருள்
தடுப்புப் பிரிவு அகற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c3b87ca-4967-4037-82ff-31a939cd4de9/26-6a7cb6bbcf09a.webp' /></p><p>

மேலும், கைவசம் உள்ள பொருட்களை உடனடியாக அழிக்குமாறு பொதுமக்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் இதை வாங்கி வந்த
நிலையில், ஆய்வில் போதைப்பொருள் கலப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து
சியோல் நிர்வாகமும் இதற்கு முழுமையான தடை விதித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T18:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issues-faced-by-the-marine-fishers-of-mannar-1786554013"></link>
            <id>https://tamilwin.com/article/issues-faced-by-the-marine-fishers-of-mannar-1786554013</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கடற்றொழில், நீரியல்
மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்
இடம்பெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பேசப்பட்டது.</p><p>அத்தோடு, தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு இடை
நிறுத்தி வைக்கப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக அனுமதியை மீண்டும் வழங்குவது
குறித்தும் ஆராயப்பட்டது.</p><p></p><h2>கடற்றொழில் நடவடிக்கை</h2><p>
</p><p>கடற்றொழில் நடவடிக்கைகளின் போது சில தொழில்களுக்கான வழங்கப்படுகின்ற பாஸ்
நடைமுறை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு
அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் குறித்த தொழில்களுக்கு
அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை
விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/836dd8a2-1385-43e1-8836-ad075f405a15/26-6a7cb4d56571a.webp' /></p><p>
</p><p>
மேலும் மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள கண்டல் தாவரங்களை வெட்டி
கடற்றொழில் நடவடிக்கை களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் இதனால் எதிர் காலத்தில்
கடலரிப்பு ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் எனவே குறித்த கண்டல் தாவரங்களை
வெட்டுகின்ற கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என
கலந்து கொண்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்லாஹ்வுக்கே புகழ்..! ஹோர்முஸ் குறித்து ட்ரம்பின் பரபரப்பு பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praise-be-to-allah-i-think-well-keep-it-trump-says-1786555216"></link>
            <id>https://tamilwin.com/article/praise-be-to-allah-i-think-well-keep-it-trump-says-1786555216</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், </p><p>அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைப் பாராட்டிய ட்ரம்ப், அதனை “எஃகு சுவர்” என பலரும் அழைப்பதாகக் குறிப்பிட்டார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>மேலும், ஈரானால் இதற்கு எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கிலிருந்து உலக நாடுகளுக்கு எரிசக்தி உள்ளிட்ட பொருட்களின் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக, அமெரிக்கா கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p> எனினும், ஈரான் இந்தக் கூற்றை கடுமையாக நிராகரித்து வருகிறது.

ஈரானிடம் தற்போது கடற்படை மற்றும் விமானப்படை இல்லை என்றும், அந்நாட்டு வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறினார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117083017680231697/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பெருமளவில் சிதைக்கப்பட்டு பின்வாங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தனது பதிவின் இறுதியில், “ஈரான் இனி மத்திய கிழக்கின் கொடுமைப்படுத்துபவன் அல்ல” என்று கூறிய ட்ரம்ப், “அல்லாஹ்வுக்கே புகழ்!” என குறிப்பிட்டார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானின் நிபந்தனைகள்

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்பட வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.</p><h2>&nbsp;ட்ரம்ப் நிர்வாகம்</h2><p>
</p><p>
ஈரானின் புரட்சிகர காவல்படை, இந்த நிபந்தனைகள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை தனது முற்றுகை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானுடன் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a761fa3-315b-42a7-b701-a74250c99de6/26-6a7cad7eba04a.webp' /></p><p> </p><p>இது நவம்பர் இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்நிலையில், ஈரானுடன் “அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானில் பணவீக்கம் அதிகரித்து வருவதையும், அந்நாட்டிடம் பணம் இல்லை என்பதையும் அமெரிக்கா கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-08-12T17:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் இறுதிக்கட்டம்: நடுக்கத்தில் பிள்ளையான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-law-and-order-1786547574"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-law-and-order-1786547574</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் மிக முக்கியமான பிரதான விசாரணை நிறைவடைந்துள்ளது.நவுஃபர் மௌலவி உட்பட 24 எதிரிகளுக்கு எதிராகக் கொழும்பு மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் மிக முக்கியமான பிரதான விசாரணை நிறைவடைந்துள்ளது.</p><p>நவுஃபர் மௌலவி உட்பட 24 எதிரிகளுக்கு எதிராகக் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையான இருந்தார்கள் என்கின்ற அடிப்படையில் பிள்ளையான், சுரேஸ் சலே போன்றோர் விசாரிக்கப்படுகின்றனர்.அத்தோடு, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் தப்பித்துக் கொ்ணடு இருப்பதாக கூறப்படுகின்றது.</p><p>மேலும்,&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடைமுறைப்படுத்திய ஒரு இராணுவ அதிகாரி இன்னும் தப்பித்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் பின்னணி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றிய முழுமையான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F4tJB1jZvCA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T17:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தின் பெருமை தாய்லாந்தில் – அவுஸ்திரேலிய கராத்தே அணியில் யாழ் வீரர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-athlete-to-represent-the-australian-team-1786551564"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-athlete-to-represent-the-australian-team-1786551564</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகியுள்ளார்.</p><p>

இவர், இன்று(12) புதன்கிழமை தாய்லாந்தில் ஆரம்பமாகியுள்ள நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய அணியின் சார்பில் பங்கேற்றுள்ளார்.</p><h2>கராத்தே பாடசாலைகள்</h2><p>
</p><p>
சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த ரத்னம் ரோஸி ஹரிந்த், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்து, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e82499-1bd9-4cba-97de-9b0ec16f4746/26-6a7ca18a8f2dd.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிரிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.</p><p>

தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வரும் இவர், கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ளதுடன், சென்செயாகவும் செயற்பட்டு வருகின்றார்.
</p><p>
மேலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கராத்தே பாடசாலைகள் ஊடாக 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சிகளை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-12T16:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கனரக வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-killed-tipper-truck-three-wheeler-in-vavuniya-1786552662"></link>
            <id>https://tamilwin.com/article/one-killed-tipper-truck-three-wheeler-in-vavuniya-1786552662</id>
            <summary type="text">வவுனியா-&amp;nbsp; சூடுவெந்தபுலவு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்று(12.8.2026) மால...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா-&nbsp; சூடுவெந்தபுலவு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது இன்று(12.8.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>

வவுனியாவில் இருந்து சென்று கொண்டிருந்த கனரக வாகனம் சூடுவெந்தபுலவு
பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில்
இந்த விபத்து இடம்பெற்றது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/630f94b4-b010-4307-ba36-4d11f4764e17/26-6a7ca158e2010.webp' /></p><p> மேலும் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
விபத்து தொடர்பாக வவுனியா, உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T16:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஸ்கெலிய ஓல்டன் தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/leopard-carcass-recovered-at-maskeliya-1786544986"></link>
            <id>https://tamilwin.com/article/leopard-carcass-recovered-at-maskeliya-1786544986</id>
            <summary type="text">மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்டத்தின்
கிங்கோரா பிரிவில், சிறுத்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(12...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்டத்தின்
கிங்கோரா பிரிவில், சிறுத்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இன்று(12) பிற்பகல் சுமார் 2 மணியளவில் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த
தொழிலாளர்கள் குழுவினர், வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில்
கிடப்பதை அவதானித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, தொழிலாளர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர், தோட்ட முகாமையாளர் சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமாரவிற்கு அறிவித்துள்ளார்.</p><p></p><h2>சடலம் கண்டெடுப்பு</h2><p>
</p><p>
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் வனவிலங்கு
அதிகாரிகள் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed1ae3d3-7804-49d8-938b-7f2ec8c31cb6/26-6a7c88b2ed527.webp' /></p><p>

நல்லத்தண்ணியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளின் தலையீட்டுடன், இறந்த நிலையில்
காணப்பட்ட சிறுத்தையின் சடலம் தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச்
செல்லப்பட்டுள்ளது.
</p><p>எவ்வாறாயினும், சிறுத்தை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை
உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T15:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு கும்பலுடன் தொடர்புடைய நபரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-at-peko-saman-s-mother-mitheniya-1786542777"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-at-peko-saman-s-mother-mitheniya-1786542777</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.</p><p>

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8.2026) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4cd45d-559a-4438-89d9-b556e587d15c/26-6a7c7fed2b8bb.webp' /></p><p>கேஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், பெக்கோ சமன் என்ற நெதுன்கொட நிர்மல பிரசன்ன என்பவரும் அக்குழுவில் இருந்தார்.</p><p>பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>இதேவேளை, பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T14:07:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூற்றாண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய போர்க்கப்பலின் சிதைவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wreckage-of-a-british-warship-discovered-1786541666"></link>
            <id>https://tamilwin.com/article/wreckage-of-a-british-warship-discovered-1786541666</id>
            <summary type="text">கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான
&#039;ஹெச்.எம்.எஸ் டைகர்&#039; என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான
'ஹெச்.எம்.எஸ் டைகர்' என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழு
கண்டுபிடித்துள்ளது.
</p><p>
1908-ஆம் ஆண்டு கடற்படைப் பயிற்சியின் போது, மற்றொரு போர்க்கப்பல் மீது
தற்செயலாக மோதியதில் 'ஹெச்.எம்.எஸ் டைகர்' இரண்டாகப் பிளந்து கடலில்
மூழ்கியது.

இதில் 57 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>சிதைவுகள்&nbsp;</h2><p>

'புரோஜெக்ட் எக்ஸ்ப்ளோர்' என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த லியோ ஃபீல்டிங்
மற்றும் டான் மெக்முலன் ஆகியோர் ஐந்து ஆண்டுகள் வரலாற்று ஆவணங்களை ஆய்வு
செய்து, வைட் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் இந்த போர்க்கப்பலின்
எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701ffd79-4e0d-4689-88d6-bb364ba6064d/26-6a7c7968ca0e1.webp' /></p><p>

தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள 'ஆயுதப் படைகள்
சட்டத்தின்' கீழ், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க போர்க்கப்பல் சிதைவுகள்
சேதப்படுத்தப்படாமல் 'பாதுகாக்கப்பட்ட பகுதியாக' அறிவிக்கப்பட்டு
பராமரிக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியில் 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/day-50-third-phase-of-semmani-mass-grave-1786540493"></link>
            <id>https://tamilwin.com/article/day-50-third-phase-of-semmani-mass-grave-1786540493</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(12.08.2026) நடைபெற்றுள்ளது.

இதன்போது 05 மனித எலும்புக்கூடு இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(12.08.2026) நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன்போது 05 மனித எலும்புக்கூடு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><h2>அகழ்வு பணிகள் முன்னெடுப்பு</h2><p>
அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007248ea-719e-4e6a-ab86-e8f4346417c2/26-6a7c74eb9693c.webp' /></p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 544 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13de944-ebe8-47f2-bd59-5c7ac3866e9a/26-6a7c74ec73893.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d946238e-7dbd-4ec9-a514-1d05471703d3/26-6a7c74ed536d6.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ துறைசார் கற்கைநெறிகளுக்கான கல்வி நிறுவனம் ஏறாவூரில் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/educational-institute-medical-courses-in-eravur-1786535944"></link>
            <id>https://tamilwin.com/article/educational-institute-medical-courses-in-eravur-1786535944</id>
            <summary type="text">தாதிய உதவியாளர் கல்வி நிலையம், திறந்து வைக்கப்படுவது சேவை
செய்யத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு நல்வாய்ப்பாய் அமையும் என
மட்டக்களப்பு போதனா வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாதிய உதவியாளர் கல்வி நிலையம், திறந்து வைக்கப்படுவது சேவை
செய்யத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு நல்வாய்ப்பாய் அமையும் என
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்&nbsp; எஸ்.எல்.
தாஹிறா சபியுதீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு 
புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் மருத்துவ துறைசார் பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தாதியர் பயிற்சி நெறி</h2><p>
</p><p>
கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் தராதரத்துடன் கூடிய இந்தப் பயிற்சி நெறிக்கு
நாடெங்கிலுமிருந்தும் 35 தாதிய உதவியாளர் பயிலுநர்கள் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்கள்.
</p><p>
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தாஹிறா,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb79388c-c93b-4afd-9500-c2b762cd72e6/26-6a7c69e7b510b.webp' /></p><p> </p><p>மூன்றாம் நிலைக் கல்வி
தொழில்சார் கல்விச் சான்றிதழுடன் கூடிய இந்த தாதிய உதவியாளர் பயிற்சியைப்
பூர்த்தி செய்வதற்குரிய பணியிடப் பயிற்சிகளுக்கு சகல உதவிகளையும் வழங்க
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
</p><p>
இந்தப்
பயிற்சி நெறி அரச, தனியார் வைத்தியசாலைகளிலோ
அல்லது வெளிநாடுகளிலுள்ள வைத்தியசாலைகளிலோ பணியாற்றுவதற்கும், உங்கள்
வாழ்க்கையை பொருளாதார ரீதியில் வளப்படுத்திக் கொள்வதற்கும் 
உங்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.</p><h2>மனித நேயம் மிக்க கற்கை</h2><p>

சூம் தொழிநுட்பத்தின் வாயிலாக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு
புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் தவிசாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.எம். பௌஸ், 

தாதிய சேவை என்பது வெறும்
சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றுவதல்ல. </p><p>அது அன்பு, மனித நேயம் ஆகியவற்றின்
ஊற்றாக இருக்கும்.

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அன்பு, பண்பு, கருணை, கனிவு,
மனித நேயம், சேவை மனப்பான்மை ஆகியவற்றுடன் பராமரிப்பு செய்யக்கூடியதாக
இருந்தால் அது பெரும் பாக்கியமாக இருக்கும். அதனாலேயே நாம் இந்தக் கல்வி
நிலையத்தை ஏறாவூரில் ஆரம்பிக்கிறோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b6cab31-21dd-4fb3-b51f-34aae50e60a3/26-6a7c69e8892d9.webp' /></p><p>எதிர்காலத்தில் இந்தக்
கல்வி நிலையம் மனித நேயத்தின் கலங்கரை விளக்காகத் மிளிர்ந்து முழு
நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழும் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த நிகழ்வில், ஏறாவூர் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்
வானதி கிரிதரன், கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய முகாமையாளர் யூ.எல்.
நூகுலெப்பை, திட்ட ஆலோசகர் யூ. முஜிபுர்றஹ்மான், கற்கை நெறிகளுக்கான
இணைப்பாளர் இஸ்ஸத் முஸ்தபா, காதி நீதிவான் அலிமுஹம்மத், முன்னாள் அதிபர்
எம்.எம்.ஜலால்தீன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:33:41+00:00</updated>
        </entry>
    </feed>
