<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-27T13:27:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் முற்றாக ஸ்தம்பித்துள்ளது இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-sri-lanka-1787834739"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-sri-lanka-1787834739</id>
            <summary type="text">தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்
என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019ஆம் ஆண்டில்
ஏமாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்
என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019ஆம் ஆண்டில்
ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும் ஏமாந்து இன்று முழு சமூகமும் முற்றாக ஸ்தம்பித்துப் போயுள்ளது என்றார்.
</p><p>
அநுராதபுரத்தில்
நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட
வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>கடுமையான அசௌகரியம்</h2><p>

விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், தொழிலாளிகள், தொழில்முனைவோர்கள், குழந்தைகள், பெண்கள்
உள்ளிட்ட 220 இலட்சம் மக்களும் தற்போது கடுமையான அசௌகரியத்துக்கும் பீதிக்கும்
ஆளாகியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c048c68-9f87-426a-9a49-e8b48e2dbe66/26-6a9034459e75e.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் பிரகாரம் முப்பது நாள்கள்
ஒரு நபர் வாழ்வதற்கு 17 ஆயிரத்து 315 ரூபா போதுமானதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் இதுபோன்ற பொய்யான தரவுகளை அடிப்படையாகக் கொண்டே
அமைந்துள்ளன.</p><h2>நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் நெல் ஒரு கிலோகிராமிற்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக்
கூறிவிட்டு, தற்போது 120 ரூபாவே வழங்கப்படுகின்றது. ஆனால், நெல் ஒரு கிலோகிராமிற்கு உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே நாடாளுமன்றத்தில்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb38665e-b256-4a3c-9124-9eb0ad081fd6/26-6a9034468a5bb.webp' /></p><p>
</p><p>
மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும்
விலைக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் 12 இலட்சத்துக்கு விட்ஸ் ரக கார்
வழங்குதல் போன்ற எவைகளுமே இதுவரை அரசால் நிறைவேற்றப்படவில்லை என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9111f859-6486-4306-ae70-70e8a01b0d61/26-6a90344764d82.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ecde4d-1ee8-40c6-b8d5-77f663665fc8/26-6a9034483f76a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-devanandha-statement-about-disappeared-1787834164"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-devanandha-statement-about-disappeared-1787834164</id>
            <summary type="text">காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும்
அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று ஈழ
மக்கள் ஜனந...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும்
அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தா தெரிவித்தார்.
</p><p>
காணாமல்போன உறவுகளின் வலியையும் வேதனையையும் உணர்ந்து அனைவரும் பொறுப்புடன்
செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக
இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முகம் கொடுக்க நேர்ந்த சம்பவங்கள் தமக்கு
மிகுந்த வேதனையளிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.</p><h2>எதிர்பார்ப்புகள் சுமக்கிறோம்</h2><p>

காணாமல்போனவர்களின் உறவுகள் நீண்டகாலமாகத் தங்களது அன்பானவர்களுக்கு என்ன
நடந்தது என்பதை அறிய முடியாமல், பல்வேறு இன்னல்களையும் எதிர்பார்ப்புகளையும்
சுமந்து கொண்டு வாழ்ந்து வருகின்றமையை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c3c6a9c-6a9a-441d-96ae-d15b06fbbbac/26-6a902f3690e33.webp' /></p><p>

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்களை உடனடியாக அடையாளம்
கண்டு, எந்தவித பாரபட்சமுமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே
தமது உறுதியான நிலைப்பாடு என்றார்.</p><p>

தாமும் காணாமல்போனவர்களின் உறவுகளைப் போன்றே வலிகளை உணர்ந்தவர் என்ற
அடிப்படையில், அவர்களின் உணர்வுகளையும் வேதனைகளையும் முழுமையாகப்
புரிந்துகொண்டு, உரிய தரப்பினர் அவர்களுக்கு நீதி வழங்க முன்வர வேண்டும்
என்றும் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை வெள்ளையாக்க முகப்பூச்சு கொடுத்த கணவர் - உறவினர்கள் கண் முன் நடந்த கொடூரம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549"></link>
            <id>https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549</id>
            <summary type="text">வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நெடுங்கேணி - நைனாமடு பகுதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர்,
தனது மனைவிக்கு 1000 ரூபாய் பெறுமதியான வெள்ளையாகும் முகப்பூச்சு ஒன்றை வாங்கி
கொடுத்துள்ளார். 

எனினும் மனைவி அதனை பூசவில்லை. </p><p>இதனால் கோபமுற்ற கணவர்
மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.</p><h2>

9 நாட்கள் உயிருடன் இருந்த குடும்பஸ்தர்</h2><p>

இதனைத் தொடர்ந்து, தம்பி முறையானவரிடம் இருந்த தீ மூட்டும் கருவியை பறிக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக தீ மூட்டப்பட்டு பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25bde6eb-d0e1-4c96-a5cd-1f9eee5c9857/26-6a8ff344f1739.webp' /></p><p> 

இதன்போது விரைந்து செயற்பட்ட அவருடைய உறவினர்கள், இளைஞரை மீட்டு, வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>
இருப்பினும், சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் 9 நாட்களின்
பின் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yHt2Ja-4HYs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T12:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-harshana-nanayakkara-s-promise-1787830787"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-harshana-nanayakkara-s-promise-1787830787</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில்
அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும், இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக
இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில்
அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும், இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக
இரத்து செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர்
ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீக்கம் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட
கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பயங்கரவாதத் தடைச் சட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில், கடந்த 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்
சட்டம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85288d0-4751-43d6-8ef6-a04009381e44/26-6a902a3a67f0b.webp' /></p><p> </p><p>நாட்டின் வரலாற்று ரீதியான பல
முரண்பாடுகளுக்கு இந்த சட்டமே பிரதான காரணியாக அமைந்துள்ளது.

இதன் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான குறைபாடுகள் தேசிய மற்றும் சர்வதேச
மட்டங்களில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p>

ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச்
செய்யப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, தேசிய மற்றும் பொதுமக்கள்
பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சரவை அங்கீகாரம்</h2><p> இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவக் குழுவின் முதனிலைச்
சட்ட வரைவின் அடிப்படையில், 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல்'
எனும் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்துக்குச் சட்டமா அதிபர்
அனுமதி அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/037e3d63-89b9-4193-a116-d50429c9c037/26-6a902a3b3b177.webp' /></p><p> </p><p>வெகுவிரைவில் இது வர்த்தமானி அறிவித்தலில்
பிரசுரிக்கப்பட்டு, முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும்.
</p><p>
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும்
பூகோள பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கருத்தில்கொண்டு, புதிய சட்டத்தை
உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அனைத்துத் தரப்பினரும் வழங்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குதிரையை தாக்கிய இளைஞர் அதிரடி கைது - குதிரையேற்றக்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-arrested-for-attacking-horse-1787832927"></link>
            <id>https://tamilwin.com/article/youth-arrested-for-attacking-horse-1787832927</id>
            <summary type="text">நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே ஒரு குதிரைக்குட்டியைத் தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் உள்ள கிரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே ஒரு குதிரைக்குட்டியைத் தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே குதிரைச் சவாரிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு குதிரைக்குட்டியை இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியது.
</p><p>
இந்த காணொளி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>
இதற்கமைய, குதிரையின் மீது தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 26 வயது இளைஞர் நுவரெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>

குதிரையை தாக்கிய இளைஞர் கைது</h2><p>

 அவர் நுவரெலியாவில் உள்ள ஸ்திரபெட்டா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இந்த மாதம் 28ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09dba731-470c-4a51-a907-34ccf6b06018/26-6a902aff31177.webp' /></p><p>
</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக கிரிகோரி ஏரிக்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத் துறைக்குப் பயன்படுத்தப்படும் விலங்குகள் மீது எந்தவிதமான கொடுமையும் இழைக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
</p><p>
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான குதிரையேற்றம் போன்ற செயல்பாடுகள் இலங்கையின் சுற்றுலா ஈர்ப்பின் ஒரு பகுதியாகும் என்று சுட்டிக்காட்டிய அவர்கள், விலங்குகள் மீதான கொடுமைச் சம்பவங்கள் இலங்கையின் சுற்றுலாப் பிம்பத்தையும் சேதப்படுத்தும் என்று குறிப்பிடுகின்றனர்.
</p><h2>
குதிரையேற்றக்காரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>

இதற்கிடையில், கிரிகோரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில், பரிந்துரைக்கப்பட்ட உரிமங்களின் கீழ் குதிரையேற்ற சேவைகளில் ஈடுபட்டுள்ள குதிரையேற்றக்காரர்களும் இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/084d42fd-72db-49c4-8dc1-f8767caf8ec7/26-6a902b001bbaf.webp' /></p><p>

சட்டப்பூர்வமாக குதிரையேற்ற சேவையை இயக்குவதன் மூலம் தாங்கள் சுற்றுலாத் துறைக்கு பங்களிப்பதாகவும், ஒருவர் விலங்கை வன்முறையாகத் தாக்கியதன் காரணமாக அனைத்து குதிரையேற்றக்காரர்களும் எதிர்மறையாக சித்தரிக்கப்படுவது நியாயமற்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
</p><p>
உரிமம் பெற்ற சேவைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து குதிரையேற்றக்காரர்களுக்கும் விலங்குகளின் ஆரோக்கியம், உணவு, ஓய்வு நேரங்கள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான தெளிவான தரநிலைகளை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T12:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழப்பு 332ஆக அதிகரிப்பு - இரண்டாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-death-toll-rises-to-270-1787824086"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-death-toll-rises-to-270-1787824086</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாளம் - திபெத் எல்லையைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாளம் - திபெத் எல்லையைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அத்துடன், நேற்று(26.08.2026) நாட்டைத் தாக்கிய திடீர் வெள்ளத்தின் பின்னர், நேபாளத்தில் 800க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
</p><p>
காணாமல் போனவர்களில் சுமார் 100 பேர் சீன நாட்டவர்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

இதற்கிடையில், திபெத்தில் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் புவியியல் இருப்பிடம் காரணமாக மீட்புப் பணிகள் சிக்கலாகியுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மேலும், 1,500க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>அபாயம் இருப்பதாக</h2><p>
காணாமல் போனவர்களில் 517 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும், 127 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0078d0ef-4ae2-45b3-bb6a-023b71c2141f/26-6a900eb12e96e.webp' /></p><p>
இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் பேரிடர் ஆய்வு மையத்தின் இயக்குநரான பசந்த ராஜ், இன்று அல்லது நாளை "இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள்" ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>அதிக மழைப்பொழிவு இல்லை, ஆனால் மண்சரிவு ஏற்படக்கூடும். அவர்கள் இமயமலை ஆபத்துக்களைக் கண்காணித்து வருவதாகவும், இங்கு காலநிலை மாற்றம் உண்மையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Gh9SC8_v0ms" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T12:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் ஹரால்ட்டின் உடல்நிலை குறித்து வெளியான அறிவிப்பு - அவசரமாக நாடு திரும்பிய மதத்தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-health-of-king-harald-of-norway-1787831672"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-health-of-king-harald-of-norway-1787831672</id>
            <summary type="text">நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று(2...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று(27.08.2026) வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

இரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக ஓகஸ்ட் 17 ஆம் திகதி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் ஹரால்ட், 1991 ஆம் ஆண்டு முதல்
நோர்வேயின் தலைவராக கடமையாற்றி வருகிறார்.
</p><p>
மன்னரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, இளவரசர் ஹாகோன் மற்றும் அரசி சோன்யா
ஆகியோர் தமது அனைத்து உத்தியோகபூர்வ நிகழ்வுகளையும் இரத்துச் செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
பதவியை துறக்க மறுப்பு</h2><p>
மன்னர் சிகிச்சை பெற்று வரும் ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு அரச குடும்ப
உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதையடுத்து, அந்நாட்டில் பதற்றமான சூழல்
நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb5c004c-2026-45ce-b880-9a740b6eec08/26-6a9025d3c05a3.webp' /></p><p>
</p><p>
இந்த நிலைமை காரணமாக நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே தனது ஜெர்மனிக்கான
பயணத்தை இரத்துச் செய்துள்ளதுடன், மன்னருக்கும் அரச குடும்பத்தினருக்கும்
ஒட்டுமொத்த தேசத்தினதும் பிரார்த்தனைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நோர்வே நாடாளுமன்ற சபாநாயகர் தனது ஐஸ்லாந்து பயணத்தை பாதியிலேயே
கைவிட்டு நாடு திரும்பியுள்ளதுடன், ரோம் நகருக்கு விஜயம் செய்திருந்த நோர்வே
மதத்தலைவர்களும் அவசரமாக நாடு திரும்ப தீர்மானித்துள்ளனர்.
</p><p>
தனது வயது முதிர்வு காரணமாக உத்தியோகபூர்வ செயற்பாடுகளை குறைத்துக்கொண்ட
போதிலும், நாட்டின் மீதான தனது உறுதிமொழி ஆயுட்காலம் வரை நீடிக்கும் எனக் கூறி
மன்னர் ஹரால்ட் தனது பதவியை துறக்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நுவரெலியாவுக்கு படையெடுக்கும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/domestic-tourists-to-nuwara-eliya-1787831063"></link>
            <id>https://tamilwin.com/article/domestic-tourists-to-nuwara-eliya-1787831063</id>
            <summary type="text">பாடசாலை விடுமுறை மற்றும் மாத இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு, நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில்
நுவரெலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை விடுமுறை மற்றும் மாத இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு, நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில்
நுவரெலியாவை நோக்கி வருகை தருகின்றனர்.</p><p>

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப்
பரீட்சையின் பல பாடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாத இறுதியில் கிடைத்துள்ள
நீண்ட விடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதற்காக பெருமளவானோர் சுற்றுலா
பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.</p><p>

குறிப்பாக நேற்றும் இன்றும்(27) நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வருகை தந்த உள்நாட்டு
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் நுவரெலியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான டெவோன் மற்றும்
சென்கிளையார் நீர்வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில்
திரண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8423151-859f-49e5-9853-76b1d9437bde/26-6a9023721488c.webp' /></p><p>
</p><p>
நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசிப்பதற்கும், இயற்கை எழிலை கண்டு மகிழ்வதற்கும்
வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால், அப்பகுதிகளில் உள்ள பார்வையாளர் மையங்கள்
மற்றும் நடைபாதைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளன.
</p><h2>
சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்</h2><p>
இதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால்,
பிரதான வீதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை அண்மித்த பகுதிகளில் அவ்வப்போது
வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.</p><p>

நுவரெலியாவின் குளிர்ச்சியான காலநிலை, இயற்கை எழில் மற்றும் நீர்வீழ்ச்சிகளை
பார்வையிடும் ஆர்வம் காரணமாக, இந்த விடுமுறைக் காலத்தில் மேலும் அதிகளவான
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16e975de-d3a4-4c30-9fd1-681d978fd199/26-6a9023731b6bb.webp' /></p><p>

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நுவரெலியாவைச் சூழவுள்ள
பகுதிகளில் சிறு வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளன.
</p><p>
குறிப்பாக நடைபாதை வியாபாரிகள், பழங்கள், உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள்
மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை விற்பனை செய்து
வருகின்றனர்.

இதனால், நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்திருந்த சிறு
வியாபாரிகளுக்கும் இந்த விடுமுறைக் காலம் ஓரளவு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும்
வாய்ப்பாக அமைந்துள்ளது.
</p><h2>

களைகட்டும் நுவரெலியா</h2><p>
இதேவேளை, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், சுற்றுலாத் தலங்களில்
சுகாதாரம், போக்குவரத்து ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய
முறையில் பேண வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4b39c48-2c5f-4caf-8eb5-972b8779a54e/26-6a902373e6232.webp' /></p><p>
</p><p>
மொத்தத்தில், பாடசாலை மற்றும் மாத இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு
நுவரெலியா தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் களைகட்டியுள்ளது.
</p><p>
இயற்கையின் அழகை ரசிப்பதற்காக நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் இந்த
சுற்றுலாப் பயணிகளின் வருகையால், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய சிறு
வியாபாரிகளுக்கும் புத்துயிர் கிடைத்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:47:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர் பற்றாக்குறையால் கருகும் பயிர்கள் - விவசாயிகள் விடுத்துள்ள அவசரக் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crops-wilt-due-to-lack-of-water-1787830474"></link>
            <id>https://tamilwin.com/article/crops-wilt-due-to-lack-of-water-1787830474</id>
            <summary type="text">அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டுகஸ்துகிலிய ஈத்துள் வெட்டுனுவேவ
பகுதியில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, விவசாய நிலங்கள்
அனைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டுகஸ்துகிலிய ஈத்துள் வெட்டுனுவேவ
பகுதியில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, விவசாய நிலங்கள்
அனைத்தும் நீரின்றிக் காய்ந்து விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


இந்த கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும்
நிலையில், 400 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

தற்போதைய சிறுபோகச் சாகுபடி காலத்தில் பயிரிடப்பட்ட
நெற்பயிர்கள் அனைத்தும் கதிர் வந்த நிலையில், குளங்களில் போதுமான நீர்
இல்லாததால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. </p><h2>

பயிர் கருகும் நிலை</h2><p>
இந்த நிலை தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், </p><p> 

"நாங்கள் மிகவும் நம்பி இந்தச் சிறுபோக வேளாண்மையை மேற்கொண்டோம். தற்போது
பயிர்கள் கதிர்விட்டு அறுவடைக்குத் தயாராகும் நிலையில் நீர் இல்லாமல் கருகி
வருகின்றன. 

எமது பகுதிக்கு அருகில் சுமார் 9 குளங்கள் உள்ளன. அதிகாரிகளும்
சம்பந்தப்பட்ட நிருவாகமும் அக்கறையெடுத்து அக்குளங்களில் இருந்து எமது விவசாய
நிலங்களுக்குத் தேவையான நீரைத் திறந்துவிட்டிருந்தால், இன்று எங்களுக்கு இந்த
அளவுக்குப் பாதிப்பும் நஷ்டமும் ஏற்பட்டிருக்காது" என்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ea7f0f1-e782-42f1-b7df-c1be94559965/26-6a902113de06f.webp' /></p><p>


மாதக்கணக்கில் உழைத்து, கடன் வாங்கிச் செய்த விவசாயம் பயிர் அறுவடைக்காலத்தில்
நீரின்றிக் கருகி வருவதைப் பார்த்து விவசாயிகள் செய்வதறியாது திகைத்து
நிற்கின்றனர். </p><p>

எனவே, சம்பந்தப்பட்ட விவசாய மற்றும் நீர்ப்பாசனத்துறை
அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, அருகில் உள்ள குளங்களில் இருந்து நீரினைத்
திறந்துவிட்டுப் பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி
விவசாயிகள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் விழும் வரை காத்திருக்காமல் மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி அறைகூவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harshana-rajakaruna-statement-about-government-1787829046"></link>
            <id>https://tamilwin.com/article/harshana-rajakaruna-statement-about-government-1787829046</id>
            <summary type="text">இந்த அரசாங்கம் தானாகவே வீழும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கம் தானாகவே வீழும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தினார்.</p><p>

கம்பஹாவில் நேற்றைய தினம் (26.08.2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு
உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஜனநாயகப் போராட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசை மாற்ற வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விரும்பிய போதிலும், அதனை
யாராவது ஒருவர் செய்து தருவார்கள் என வீட்டில் காத்திருப்பது நடைமுறைக்குச்
சாத்தியமற்றது. ஜனநாயகப் போராட்டத்தில் மக்களே நேரடியாகக் களமிறங்க வேண்டும்.
</p><p>
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைத்தல்,
நெல்லுக்கு 150 ரூபா நியாயமான விலை வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165ef54d-4dc8-44fc-8887-9d4edd2af24d/26-6a901f2c1dc0c.webp' /></p><h2>அவல நிலை</h2><p> </p><p>இதனால்
இன்று விவசாயிகள் நெல்லை 95 ரூபாவுக்கே விற்கும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை அரசியல்மயமாக்குவதன்
மூலம், வடகொரியாவை போன்ற ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் சர்வாதிகார போக்கை நோக்கி அரசாங்கம் நகர முற்படுகின்றது.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளோ அரச நிறுவனங்களின் தலைவர்களோ சுயாதீனமாகச் செயற்பட
முடியாமல், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளின்
உத்தரவுகளுக்கேற்பவே அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.
</p><p>
எனவே, நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிந்துபோவதைத் தடுக்கவும், சர்வாதிகார
ஆட்சியை வீழ்த்தவும் பொது மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் உடனடியாக ஒன்றுபட
வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T11:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 49000இற்கும் அதிகமான குடியேற்றவாசிகள் கைது : ட்ரம்ப் ஆட்சியில் உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/more-than-49000-immigrants-arrested-in-the-us-1787826098"></link>
            <id>https://tamilwin.com/article/more-than-49000-immigrants-arrested-in-the-us-1787826098</id>
            <summary type="text">அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க பிரிவினர் (ICE) கடந்த ஜூலை
மாதத்தில் 49,571 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க பிரிவினர் (ICE) கடந்த ஜூலை
மாதத்தில் 49,571 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தைப்
பொறுப்பேற்ற பின்னர் பதிவான மிக அதிகளவிலான மாதாந்த கைது நடவடிக்கை இதுவெனக்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>புதிய ஆளணி சேர்ப்புத் திட்டம்</h2><p>
கலிபோர்னியா பல்கலைக்கழகங்களின் திட்ட தரவுகளை மேற்கோள்காட்டி
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கையானது ஜூன் மாதத்தை விட 15
சதவீதமும், பெப்ரவரி மாதத்தை விட 70 சதவீதமும் அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36370105-efae-48ff-8be2-6a31f4bcbe18/26-6a90124f9f464.webp' /></p><p>

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டமையே இத்தகைய கைதுகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக்
கூறப்படுகின்றது.
</p><p>
குறிப்பாக டெக்சாஸ் மற்றும் புளோரிடா ஆகிய மாநிலங்களில் மட்டுமே சுமார் 20,000
கைதுகள் இடம்பெற்றுள்ளன.</p><p> உள்ளூர் பொலிஸார் குடியேற்ற அமுலாக்கப் பிரிவினருடன்
இணைந்து செயற்படும் ஒப்பந்தங்கள் மூலம் அங்கு அதிகளவிலான கைதுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
அமைச்சரவையின் புதிய ஆளணி சேர்ப்புத் திட்டத்தின்கீழ் சுமார் 12,000 புதிய
அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும்
குடியேற்றவாசிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கைகள் மேலும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T10:34:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெளியேறிய அமைச்சர்கள் - ஊடகவியலாளர்கள் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministers-left-without-answering-journalists-1787825949"></link>
            <id>https://tamilwin.com/article/ministers-left-without-answering-journalists-1787825949</id>
            <summary type="text">ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில்
கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம்
சந்திரசேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில்
கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம்
சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.</p><p>

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற
உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து நேற்று(26) யாழ்ப்பாணம்
அரியாலையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் ஊடகவியலாளர்
சந்திப்புக்கு அழைப்பு விடுத்ததிருந்தனர்.</p><p>

ஆரம்பத்தில் தனது கருத்தை இருபது நிமிடங்கள் வரை சிங்கள மொழியில் அமைச்சர்
பிமல் ரத்நாயக்க முன்வைத்தார்.</p><h2>


இடைநடுவே வெளியேறிய அமைச்சர்</h2><p>
 அதன் பின்னர் சிங்கள உரையின் மொழிபெயர்ப்பைத்
தமிழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20f01c4-b1b2-48ca-ae67-d6bb2d59f087/26-6a900fbb13e63.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>

இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதில் வழங்கிய நிலையில்
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் தமக்கு வேறு
ஒரு பணி இருப்பதாகக் கூறிவிட்டு வெளியேறினர்.</p><p>ஆட்சிக்கு வர முதல் அடிக்கடி ஊடகவியலாளர்களை அழைத்து ஊடக சந்திப்புக்களை
நடத்திய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பின்னர் எப்போதாவது இருந்து
விட்டே ஊடக சந்திப்புக்கு அழைக்கிறார்கள்.</p><p>
 அவ்வாறான நாளிலும் தங்களுடைய கருத்துகளை
முன்வைத்து விட்டு ஊடகவியலாளர்கள் தங்கள் கேள்விகளை முன்வைப்பதற்குப் போதிய
சந்தர்ப்பத்தை வழங்காமல் வேறு பணிகள் இருக்கின்றன எனக் கூறிவிட்டு சென்றமை
ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றி நாடு திரும்பலாம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-refugees-in-india-can-return-home-1787821798"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-refugees-in-india-can-return-home-1787821798</id>
            <summary type="text">இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்
பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று(26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள்</h2><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோருடன் இணைந்து நடைபெற்ற
இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட
தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில்
விளக்கமளிக்கப்பட்டது.
</p><p>
அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது,&nbsp;யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்
அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்
ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில்
பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக
கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce7ac819-a773-40a9-8c38-f17f005c0f77/26-6a9003bee7900.webp' /></p><p>இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்
க.இளங்குமரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின்
தலையீட்டின் மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய
தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக
முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும்
தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித்
தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும்,
தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவர்களாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக
தேவையான உதவிகள் வழங்கப்படும்.</p><p> அத்துடன், கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி ஜனாதிபதி
தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானங்களுக்கு அமைவாக, தேசிய பாதுகாப்பையும் மக்களின் உரிமைகளையும்
சமநிலையில் பேணியவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை
விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது
தெரிவித்தார்.</p><h2>அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள்</h2><p>மேலும், 2025 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில்
யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கர், கிளிநொச்சியில் 128 ஏக்கர், முல்லைத்தீவில் 615
ஏக்கர், மன்னாரில் 135 ஏக்கர் மற்றும் வவுனியாவில் 150 ஏக்கருக்கும் அதிகமான
காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c390d7b-623d-44a8-85ef-b732bf8d3d17/26-6a9003bfb8d97.webp' /></p><p>
இதனிடையே, பலாலி விமான நிலைய வீதியின் கிழக்குப் பகுதியில் தற்போது விவசாய
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர்
மாதத்திற்குள் வீடுகளை அமைத்து நிரந்தரமாகக் குடியேறுவதற்கு அனுமதி வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இதேவேளை, காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினத்தை முன்னிட்டு
நேற்றுமுன்தினம்(25.08.2026) நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் பங்கேற்புடன் பிரதான
நிகழ்வு நடைபெற்றது.
</p><p>
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றபோது அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில்
11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு
செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின்
அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 565
எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும்,
சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை
முன்னெடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:40:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு வலை வீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigations-regarding-the-politicians-1787808951"></link>
            <id>https://tamilwin.com/article/investigations-regarding-the-politicians-1787808951</id>
            <summary type="text">முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பாசிக் தற்பொழுது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>பாசிக்கிடம், பல கோடி ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.</p><h2>கடந்த அரசாங்கத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்</h2><p>
ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது வெளிவந்த அதிர்ச்சித் தகவல்களின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இந்த அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a668adef-7429-4b00-837e-77d516c92c25/26-6a8fd8ec69dbc.webp' /></p><p>
இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரண்டு முன்னாள் பெண் அமைச்சர்கள், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட பல பிரபல அரசியல்வாதிகள் அடங்குவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>குறிப்பிட்ட 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசாரப் பணிகளின் போது ஷிரான் பாசிக் அவ்வப்போது பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
மேலும், கடந்த அரசாங்கத்தில் இருந்த சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ஷிரான் பாசிக்கு சட்டவிரோதமாக நிலங்களை நிரப்பி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p> இந்த உதவிகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர் ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருந்தொகை பணத்தைப் பெற்றுள்ளார்.</p><h2>சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள்</h2><p>
</p><p>ஷிரான் பாசிக் நீண்டகாலமாகவே இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாகப் பணத்தைச் செலவிட்டுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0721e2-2180-4908-a9d0-f99b6642eb79/26-6a8fccbc714b1.webp' /></p><p>
</p><p>ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், தொடர்பு வைத்துக்கொண்டு பணம் மற்றும் பலதரப்பட்ட சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் குறித்தும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போராட்டக் களத்தில் தாய்மார்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் - சுமந்திரன் கடும் கண்டனம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-attack-mothers-at-protest-site-in-jaffna-1787820259"></link>
            <id>https://tamilwin.com/article/police-attack-mothers-at-protest-site-in-jaffna-1787820259</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும்
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான
எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில்
நேற்றுமுன்தினம்(25.08.2026) நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.</p><h2> 

காணாமல் ஆக்கப்பட்டோர் தாய்மார்கள் விசனம்</h2><p>
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாவட்ட செயலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59408c33-c7b9-42e5-954c-93f8f98a3528/26-6a8ff96187381.webp' /></p><p>
</p><p>
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் பொலிஸார் மூர்க்கத்தனமாக
நடந்து கொண்டதுடன், அவர்களை மாவட்ட செயலகத்துக்கு வெளியே ஆடைகள் கழரும்
நிலையிலும் இழுத்துத் தள்ளி அப்புறப்படுத்தினர்.
</p><p>
இந்த வன்முறையைக் கைபேசியினூடாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
உள்ளிருந்தவாறே அவதானித்தார் என்றும், போராட்டம் பற்றிச் செய்தி சேகரித்த
ஊடகவியலாளர்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாக வசைபாடினார்
என்றும் செய்திகள் வெளியாகின.</p><h2>

நீதி அமைச்சர் செயலுக்கு எழும் கண்டனம்</h2><p>
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தி வரும்
நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p>நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள்
மற்றும் தாய்மார்களை இலங்கைப் பொலிஸார் மிக மோசமாகத் தாக்கி
அப்புறப்படுத்தியதை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b689f00-d319-448b-9198-e27d8eaac00c/26-6a8ff96274246.webp' /></p><p>

 அதேபோன்று, இந்த நிகழ்வுகளை
உள்ளேயிருந்து தனது கைபேசியில் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த நீதி
அமைச்சரின் செயற்பாட்டையும், இந்தச் சம்பவத்தை வெளிப்படுத்திய
ஊடகவியலாளர்களைப் பொதுவெளியில் சபித்த அமைச்சர் சந்திரசேகரின் செயலையும்
வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T08:47:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை தொடர் முடக்கம் - தற்காலிக பாதை அமைக்க ஈரான் அதிரடி திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continued-blockade-of-the-strait-of-hormuz-1787817556"></link>
            <id>https://tamilwin.com/article/continued-blockade-of-the-strait-of-hormuz-1787817556</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
</p><p>
இதன் மூலம் கப்பல் போக்குவரத்திற்கான தற்காலிகப் பாதையொன்றை விரைவில்
அறிவிக்க முடியும் என ஓமான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய
தாக்குதல்களுடன் ஆரம்பித்த போர் சூழல் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய்
மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாளிப் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை
வகிக்கும் ஹோர்முஸ் நீரிணைப் பாதை முடங்கியுள்ளது.
</p><h2>
பொருளாதார ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா</h2><p>
இந்த நிலையில், பாதுகாப்பான கடற்பயணத்தை மீளமைக்கும் பொருட்டு கூட்டுத்
தற்காலிகப் பாதையொன்றை அமைப்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை
அகற்றுவது குறித்தும் இரு நாடுகளும் உடன்பாடு கண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db83750-d0d7-41f5-9839-03ae99754945/26-6a8feea0044bf.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, ஈரான் மீது தற்போதைக்கு புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தும்
திட்டம் அமெரிக்காவிடம் இல்லை என்றும், பொருளாதார ரீதியிலான அழுத்தங்களையே
தீவிரப்படுத்த அமெரிக்கா முயல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதன் ஒரு பகுதியாக ஈரானால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கப்பல்கள்
மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகச் சந்தையில் மசகு
எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
</p><p>
இருப்பினும், அமெரிக்கா - ஈரான் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், ஹோர்முஸ் நீரிணை
வழியூடான பயணம் இன்னும் ஆபத்து நிறைந்ததாகவே காணப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டம் : சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தோற்கடிப்பார்கள்! முன்னாள் அமைச்சர் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-people-will-defeat-in-referendum-1787814772"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-people-will-defeat-in-referendum-1787814772</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும்
சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத்
தோற்கடித்து மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும்
சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத்
தோற்கடித்து மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என முன்னாள் அமைச்சர்
ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>
இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,"22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டும்.</p><p> அவ்வாறு நடத்தப்பட்டால் மக்கள் அதனை நிச்சயம் தோற்கடிப்பார்கள்.</p><h2>ஆதரவாளர்கள் மத்தியில்</h2><p>

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தாங்கள் தோல்வியடைவோம் என்பது அரசுக்கு
நன்றாகத் தெரியும் என்பதாலேயே தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9810fb-76b2-4ed5-82db-5d7bd08abeda/26-6a8fe8fec47b0.webp' /></p><p>

அன்று இருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கும் இன்று இருக்கும் கட்சிக்கும்
இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.</p><p> இதனால் அவர்களின் சொந்த ஆதரவாளர்கள்
மத்தியிலேயே தற்போது பெரும் அதிருப்தி நிலவி வருகின்றது.
</p><p>
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு
வரும் போராட்டங்களின் பின்னணியில் தற்போதைய அரசே செயற்பட்டு வருகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T07:41:01+00:00</updated>
        </entry>
    </feed>
