<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-06T00:33:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணல் திட்டில் சிக்கித் தவித்த 11 இலங்கை ஏதிலிகள் - அதிரடியாக மீட்ட கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-navy-rescues-11-people-including-1788652927"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-navy-rescues-11-people-including-1788652927</id>
            <summary type="text">தலைமன்னார் அருகே உள்ள தொலைதூர மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 5
குழந்தைகள் உட்பட 11 இலங்கை ஏதிலிகளை கடற்படையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 5)
மீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் அருகே உள்ள தொலைதூர மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 5
குழந்தைகள் உட்பட 11 இலங்கை ஏதிலிகளை கடற்படையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 5)
மீட்டு மனிதாபிமான உதவி வழங்கியுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் ​அதிகாலை வழக்கமான கடல் ரோந்துப் பணியின் போது, முதற்கட்டமாக
நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்கிய 8 பேர் கொண்ட
குழுவை கடற்படையினர் கண்டறிந்த நிலையில்
அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக இருப்பிட வசதிகள்
உடனடியாக வழங்கப்பட்டன.

​</p><h2>மனிதக் கடத்தல்</h2><p>அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அடுத்தகட்ட ரோந்துப் பணியில், அதே பகுதியில்
தவித்துக் கொண்டிருந்த ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் என மேலும்
மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதன் மூலம் மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக (5 குழந்தைகள், 4
பெண்கள், 2 ஆண்கள்) உயர்ந்துள்ளது.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/590e093a-fbaa-478d-8106-1576f4836e81/26-6a9cb089b516d.webp' /></p><p>
மேலும் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து
கடல் வழியே பயணம் செய்ததும், சந்தேகத்திற்கிடமான மனிதக் கடத்தல் கும்பலால்
மணல் திட்டில் கைவிடப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

அத்துடன், இவர்கள் தென்னிந்தியாவில் உள்ள அனயூர் மற்றும் ஒக்கூர் அகதிகள்
முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் என நம்பப்படுகிறது.</p><p>

​மீட்கப்பட்ட 11 பேரும் மேலதிக சட்டப்பூர்வ விசாரணைகள் மற்றும்
நடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக
கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காட்டிக்கொடுத்த நபருக்கு உயிரச்சுறுத்தல் - வெளிநாடுகளில் இருந்து தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788651523"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788651523</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏர்பஸ் (Ai...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு நிமல் பெரேரா என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
</p><p>
அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சி அவுஸ்திரேலியாவிலிருந்து விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலிய சட்டத்தின் கீழ் சத்தியப் பிரமாண அறிக்கையையும் வழங்கியுள்ளார்.</p><p>

இந்த விசாரணை இலங்கை அதிகாரிகளால் மட்டுமல்லாது, பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>


சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்த பணத்தில் இருந்து, 100 மில்லியன் ரூபாய் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த பிறகு, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அஞ்சுவதால் தான் இலங்கை வரத் தயங்குகிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RFwKvZNB2Yo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:45:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காப்பாற்ற சென்று சிக்கலில் மாட்டிய உதய கம்மன்பில! மகனை சந்தித்த பின் தடுமாறிய மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276</id>
            <summary type="text">ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவை பாதுகாப்பதற்காகப் பேசிய உதய கம்மன்பில, அந்தப் பணம் அலுவலக மேசையில் வைக்கப்பட்டதாகக் கூறியது, அவர் மீதுள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. </p><p>8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அவர் அங்கு இல்லாதபோது மேசையில் வைக்கப்பட்டதாகவும் உதய கம்மன்பில வெளிப்படையாகக் கூறியது, பணம் நாமல் ராஜபக்சவின் வசம் சென்றதை உறுதிப்படுத்தும் ஆதாரமாக மாறிவிட்டது.</p><p>

இந்த வழக்கில் உதய கம்மன்பிலவின் இந்த கூற்று முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

ஒரு வழக்கறிஞராக உதய கம்மன்பில இவ்வாறான வாக்குமூலங்களை வழங்குவது, நாமல் ராஜபக்ஷவின் தரப்பு வாதத்தையே பலவீனப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.&nbsp; &nbsp; </p><p>மேலும், நாமல் ராஜபக்சவின் கைதுக்கு எதிராக ஊடக சந்திப்புகளை நடத்தி, சட்டவிரோதமான முறையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.</p><p>


அத்துடன் ஆதாரங்கள் இல்லாமல் பெயர்களைக் குறிப்பிட்டு கைது செய்யும் தற்போதைய முறையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
</p><p>

இந்தநிலையில், சிறையில் உள்ள தனது மகனைச் சந்தித்த பிறகு மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, அவர் மிகுந்த மன உளைச்சலுடனும், பதற்றத்துடனும் காணப்பட்டார். </p><p>பேசும்போது அவரது வார்த்தைகள் தடுமாறியதாகவும், சொற்கள் வெளிப்பட சிரமப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aUuUMhWwpcs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் சோகம்! நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788649420"></link>
            <id>https://tamilwin.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788649420</id>
            <summary type="text">நுவரெலியா – நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில்
குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக
மீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில்
குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த துயரச் சம்பவம் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் நேற்று(5) இடம்பெற்றுள்ளது.</p><h2>இரு இளைஞர்கள்</h2><p>
</p><p>
நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்களும்
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக
ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a85d6ea-2d27-476e-9576-8872db878d7c/26-6a9ca1c5023f9.webp' /></p><p>உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23
வயதுடைய அன்பழகன் நிக்சன்

என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
நீரில் மூழ்கியதற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை
கண்டறியும் வகையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1f62a9-65dd-4185-af04-d05eb346ff31/26-6a9ca1c5d2408.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, மலைநாட்டுப் பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில்
மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள்
மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள்
மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்- 10 நாட்களுக்குப் பின் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-worker-trapped-tunnel-10-days-rescued-1788648693"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-worker-trapped-tunnel-10-days-rescued-1788648693</id>
            <summary type="text">நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள்
அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில்
ஈடுபட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள்
அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.

​</p><p>இந்த நிலையில் திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் கடந்த 10 நாட்களாகக்
குடிதண்ணீர் கூட இன்றிச் சிக்கியிருந்த 'லுஹைடாவ்' என்ற சீனத் தொழிலாளியை
நேபாள இராணுவமும் தென் கொரிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து உயிருடன்
மீட்டுள்ளன.

​</p><h2>சிக்கிய தொழிலாளி&nbsp;</h2><p>இதேவேளை நுவாகோட் பகுதியில் இடிந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த
சந்திரிகா ஸ்ரேஸ்தா (64) என்ற நபரும் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் காத்மாண்டுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca3c5c8-d593-4474-8bb5-937766bfc2dd/26-6a9c9f0d1af86.webp' /></p><p>அத்துடன் இதேபோல நேற்றைய தினமும் சுரங்கப் பகுதியில் இருந்து இருவர்
பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்! பல நாடுகளில் வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-of-new-overseas-job-opportunities-1788641859"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-of-new-overseas-job-opportunities-1788641859</id>
            <summary type="text">இலங்கைத் தொழிலாளர்களுக்காக ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் மத்திய
கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை
வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தொழிலாளர்களுக்காக ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் மத்திய
கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை
வழங்கும் விசேட திட்டத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவகம் (SLFEA)
அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக
சந்திப்பில் பேசிய நிறுவகத்தின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி,</p><h2>இலங்கைத் தொழிலாளர்கள்</h2><p> கட்டுமானத் துறை,
திறன் மற்றும் தொழில்நுட்பத் துறைகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் (IT),
பொறியியல், போக்குவரத்து, விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் பிற துறைகளுக்கான
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b20fd3b-3de9-4667-aab4-8d1c12938536/26-6a9c868012b37.webp' /></p><p>அத்துடன் திறன் வாய்ந்த, ஓரளவு திறன் வாய்ந்த மற்றும் தொழில்முறைத்
தொழிலாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்புகளுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த
கட்டணத்தில் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, பாடசாலைக் கல்வியை முடித்தவர்கள் தேவையான ஜப்பானிய மொழித் திறனைக்
கொண்டிருந்தால், ஜப்பானில் உள்ள லொரி ஓட்டுநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கத்
தகுதி பெறுவார்கள் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.</p><h2>வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்</h2><p>

இதேவேளை சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் இருப்பை வலுப்படுத்துவதும்,
திறமையான தொழிலாளர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதுமே இதன்
பிரதான நோக்கமாகும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa819e1-2589-4ba7-af55-a04377e50d58/26-6a9c8680c368f.webp' /></p><p>
</p><p>
மேலும், வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் சந்தை விலையை விடக் குறைந்த
கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக, முகமையின் சார்பில் விசேட
விமான டிக்கெட் விற்பனை மையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய இவ்வாய்ப்புகளைப் பெற விரும்புவோர் மேலதிக தகவல்களைப் பெறவும்
நேரடியாக விண்ணப்பிக்கவும் நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
www.slfea.lk-ஐப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் பேச வேண்டியதை நாடாளுமன்றத்தில் பேசுவார்! நாமல் குறித்து ரோஹித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-speak-at-parliment-1788629614"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-speak-at-parliment-1788629614</id>
            <summary type="text">எதிர்வரும் 12 ஆம் திகதி மக்களிடம் கூற வேண்டிய விடயங்களை நாமல் ராஜபக்ச நிச்சயம் கூறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12 ஆம் திகதி மக்களிடம் கூற வேண்டிய விடயங்களை நாமல் ராஜபக்ச நிச்சயம் கூறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பேரணியில் நாமல் ராஜபக்ச ஆற்றவிருந்த விசேட உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிகழ்த்துவார் என தெரிவித்துள்ளார்.</p><h2>அரசியல் பழிவாங்கல் செயல்</h2><p>
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் செயல் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d783867-9047-49ec-a0a7-30c7c93888db/26-6a9c526fef0ad.webp' /></p><p>
</p><p>இந்த கைதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஊடகங்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
கடந்த காலத்தில் தமது அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவற்றை தாம் அங்கீகரிக்கப் போவதில்லை எனவும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஒரு ஜனநாயக நாட்டிற்குப் பொருத்தமானவை அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்சவின் மனைவி</h2><p>
அநுராதபுரக் கூட்டத்தில் நாமல் ராஜபக்சவின் மனைவி உரையாற்றுவார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள், வெறும் ஆதாரமற்ற வதந்திகளே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45f128d0-586a-47c4-aeac-7443b32154bb/26-6a9cb3d014a7d.webp' /></p><p>
நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகை தருவார் எனவும் அநுராதபுரத்தில் மக்கள் முன் வைக்கவிருந்த அந்த சக்திவாய்ந்த உரையை அன்று நாடாளுமன்றத்தில் நாட்டு மக்கள் முன் வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>அதைப் பார்த்துக்கொண்டிருக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T21:29:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போருக்குப் பிறகு ட்ரம்பின் மிகப் பெரிய திட்டம்! மத்திய கிழக்கில் அடுத்த அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-planning-something-much-bigger-middle-east-1788637650"></link>
            <id>https://tamilwin.com/article/trump-planning-something-much-bigger-middle-east-1788637650</id>
            <summary type="text">ஈரான் போர் முடிவடைந்த பின்னர் மத்திய கிழக்கிற்காக “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை உருவாக்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போர் முடிவடைந்த பின்னர் மத்திய கிழக்கிற்காக “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை உருவாக்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரானை கட்டுப்படுத்துவதற்காக பிராந்திய நாடுகளை ஒன்றிணைப்பதும், இஸ்ரேலை அதன் அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தச் செய்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>மிகப் பெரிய திட்டம்</h2><p>
இதற்காக அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டமைப்பில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6419ffb5-2b6c-483d-af02-84c4878b859c/26-6a9c7472283a0.webp' /></p><p>

மேலும், காஸா உள்ளிட்ட பிராந்திய மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
</p><p>
ட்ரம்பின் காஸா திட்டத்தின் அடுத்த கட்டத்தை முன்னெடுப்பது, இஸ்ரேல்–சிரியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது மற்றும் இஸ்ரேல்–லெபனான் உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது ஆகியவையும் இதில் அடங்கும்.
</p><h2>ஈரான் போர்&nbsp;</h2><p>
அத்துடன், Abraham Accords ஒப்பந்தத்தை விரிவுபடுத்தி, இஸ்ரேல்–சவுதி அரேபியா இடையே இராஜதந்திர உறவை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்கா முயற்சிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d81f73-ba31-4dc4-8088-e58bf8abc3ee/26-6a9c7472d56e3.webp' /></p><p>
</p><p>
இஸ்ரேலில் ஒக்டோபர் 27ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அது சவாலாக அமையலாம் என கூறப்படுகிறது.
</p><p>
எனினும், இஸ்ரேல் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்காமல் ட்ரம்ப் தனது திட்டத்தை முன்னெடுக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்தத் திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதுடன், முழுமையாக தயாராக இன்னும் சில வாரங்கள் தேவைப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை! மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-scholarship-examination-batticaloa-first-place-1788640703"></link>
            <id>https://tamilwin.com/article/5-scholarship-examination-batticaloa-first-place-1788640703</id>
            <summary type="text">வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புனித
மைக்கேல் கல்லூரி மாணவன் ஆனந்தநாயகம் அகர்வின் 175 புள்ளிகளைப்பெற்று
மட்டக்களப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புனித
மைக்கேல் கல்லூரி மாணவன் ஆனந்தநாயகம் அகர்வின் 175 புள்ளிகளைப்பெற்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.</p><p>
மட்டக்களப்பு அரசடியை சேர்ந்த ஒய்வுபெற்ற கலால் திணைக்கள உத்தியோகத்தர்
ஆனந்தநாயகம்-நளாயினி தம்பதியினரின் புதல்வரான அகர்வின் இந்த சாதனையினை
படைத்துள்ளார்.</p><h2>மாவட்டத்தில் முதலிடம்</h2><p>
</p><p>&nbsp;குறித்த மாணவனின் இல்லத்திற்கு சென்ற மட்டக்களப்பு வலய கல்வி
பணிப்பாளர் தி.ரவி தலைமையிலான குழுவினர் மாணவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48129911-77b9-4c30-8f56-171f49b21c04/26-6a9c7e848804d.webp' /></p><p>
இதன்போது மட்டக்களப்பு வலயத்தின் கல்வி பணிப்பாளர்,பிரதிக்கல்விப்பணிப்பாளர்
மற்றும் ஆசிரியர்கள்,உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டார்.
</p><p>இந்த நிகழ்வில் வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி மகேந்திரகுமார்
மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி ஆசிரியர்,வலய கல்வி அலுவலகத்தின்
அதிகாரிகள்,பாடசாலையின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T20:48:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா – கைலாய வாகனத்தில் எழுந்தருளிய வேல் பெருமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788637092"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788637092</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம்(5) 20ஆம் திருவிழா
இடம்பெற்றது.
20ஆம் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம்(5) 20ஆம் திருவிழா
இடம்பெற்றது.
</p><p>20ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானை சமேதராய் வேல் பெருமான் கைலாய
வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து
வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T19:42:05+00:00</updated>
        </entry>
    </feed>
