<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-01T04:39:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்! பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-and-hemasiri-to-welikada-prison-1785548122"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-and-hemasiri-to-welikada-prison-1785548122</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை வெலிக்கடை சிறையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை வெலிக்கடை சிறையில் வைத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் நேற்று (31) மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><h2>கைதிகளாக பதிவு</h2><p>தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு இருவரும் வெலிக்கடை சிறையில் கைதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cd801a2-e1fd-47ab-8b44-0f859d3d68a5/26-6a6d7834244dd.webp' /></p><p>இதனையடுத்து கைதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடைகள் இருவருக்கும் வழங்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>2019 ஏப்ரல் 21 அன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விருந்தங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
</p><p>இது தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தங்களது அதிகாரப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமை, கடமை வீழ்ச்சி, கொலை மற்றும் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு இந்த தீர்ப்பு வழஙக்ப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை - பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-action-to-release-lands-1785555851"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-action-to-release-lands-1785555851</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள
காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான
சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச்
செயலகத்தில் நேற்று(31.07.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>காணிகளை விடுவிக்க நடவடிக்கை</h2><p>
</p><p>மேலும் தெரிவிக்கையில், தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும்
முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. </p><p>நாட்டில் ஏற்படும் அசாதாரண
மற்றும் இடர் நிலைமைகளின் போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர்
களப்பணியாற்றுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce12875-4d09-4914-b23c-38c4ed2b9c78/26-6a6d7254e1e9a.webp' /></p><p>
போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை
9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் ஆட்சிப்
பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள்
விடுவிக்கப்பட்டுள்ளன.</p><p> தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை
விடுவிக்க நடவடிக்கை எடுப்போம், எனத் தெரிவித்துள்ளார்.</p><p>திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக்குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள்
பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதியமைச்சர்
ஏற்றுக்கொண்டார். </p><p>மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை
விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ள நிலையில்,
கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர்
சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதியமைச்சர் இணக்கம்
தெரிவித்தார்.</p><p></p><h2>காணி உரிமையாளர்கள் சார்பில்</h2><p>கடந்த மே மாதம் பாதுகாப்பு பிரதியமைச்சரால் பார்வையிடப்பட்ட இயக்கச்சியிலுள்ள
காணியை இன்னும் 3 மாதங்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
இராணுவத்தினர் இதன்போது தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a9dd1be-10bd-4a1a-9716-3f853705512e/26-6a6d7255ebe35.webp' /></p><p>

வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில்
கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். </p><p>வட்டுவாகல் பகுதியில்
பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி
அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப்
பிரதியமைச்சர் உறுதி அளித்தார்.
</p><p>
கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள்
இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில்
மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து
தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னிப் பிராந்தியக்
கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ;ட
உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு
அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப்
பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-01T04:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணியில் 63 வயது பெண்ணின் சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-s-body-found-on-land-in-weeraketiya-1785555974"></link>
            <id>https://tamilwin.com/article/woman-s-body-found-on-land-in-weeraketiya-1785555974</id>
            <summary type="text">











அம்பாந்தோட்டை - வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>











அம்பாந்தோட்டை - வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

வீரகெட்டியவின் புஹுல்ஹேன பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நிலையில் கிடப்பதாக 
வீரகெட்டிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

63 வயது பெண்ணின் சடலம் மீட்பு</h2><p>
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feb17319-cfcd-46b3-b122-96772a27c8bf/26-6a6d73bf9c1c2.webp' /></p><p> </p><p>

சடலமாக மீட்கப்பட்ட பெண், விதரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளார்.</p><p> 

மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. </p><p>

மேலும், அவரது உடல் தங்கல்லே மருத்துவமனை பிரேச அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இருந்து மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-s-son-escaped-from-country-1785556185"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-s-son-escaped-from-country-1785556185</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த நாட்களில் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. </p><p>

அதற்கமைய, குறித்த முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
பல குற்றச்சாட்டுகள் </b></h2><p>குறித்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அவரது புதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88c6fb8-5e6e-47df-a4c6-9e2b93eea02c/26-6a6d6ed396756.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக சமகால அநுர அரசாங்கம் விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது. </p><p>

இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன. 
</p>]]></content>
            <updated>2026-08-01T03:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 ஆண்டுகளின் பின்னர் தமிழ் அரசியல் கைதியொருவருக்கு பிணை - நிபந்தனைகளால் மீண்டும் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-political-prisoner-bail-after-17-years-1785555151"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-political-prisoner-bail-after-17-years-1785555151</id>
            <summary type="text">கடந்த 17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த உளவுத்தகவல்களை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சமூக ஆர்வலர்களிடையே மீண்டும் பலத்த விவாதம்</h2><p>கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித இறுதித் தீர்ப்புமின்றி விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த செல்லையா பியூபாகரன் என்பவருக்கே நேற்று இவ்வாறு பிணை
அனுமதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c76b6951-4d9b-4d48-808f-897e45ed23ea/26-6a6d6cd0c0b06.webp' />&nbsp;</p><p>

எனினும், நீதிமன்றம் விதித்த கடுமையான பிணை நிபந்தனைகளை பூர்த்தி
செய்வதற்கு போதிய பிணையாளர்களோ அல்லது வசதிகளோ இல்லாத காரணத்தால், பிணை
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் சிறைச்சாலையிலேயே
அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
நீண்ட காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்
மனித உரிமைகள் மற்றும் நீதித்துறை தாமதங்கள் குறித்து இந்த சம்பவம் சமூக
ஆர்வலர்களிடையே மீண்டும் பலத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:49:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - களனி கங்கையின் ஆற்றுப்படுகையை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-of-minor-flooding-along-the-kelani-river-1785552542"></link>
            <id>https://tamilwin.com/article/warning-of-minor-flooding-along-the-kelani-river-1785552542</id>
            <summary type="text">தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக&amp;nbsp;களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக&nbsp;களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்பு</h2><p>இதற்கமைய, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4358fc02-7063-4581-9124-356a43997a6d/26-6a6d65c250459.webp' /></p><p> </p><p>எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளதாக&nbsp;அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:19:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை - வெளிநாட்டு பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massage-centre-raid-in-colombo-1785549202"></link>
            <id>https://tamilwin.com/article/massage-centre-raid-in-colombo-1785549202</id>
            <summary type="text">கொழும்பு, குறுந்துவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத செயற்பாடுகளுக்காக நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, குறுந்துவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத செயற்பாடுகளுக்காக நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
</p><p>
இதன்போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 11 பெண்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்களான பெண்கள் 22 முதல் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><h2><b> 

நுட்பமான நடவடிக்கை</b></h2><p>சுற்றிவளைப்பின் போது குறித்த இடத்தின் உரிமையாளர் அங்கிருந்த தப்பியோடியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a63657d1-414f-4a2e-8f78-59c033f21349/26-6a6d615f2d2e1.webp' /></p><p>குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த விசேட தகவலுக்கமைய நபர் ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நுட்பமான நடவடிக்கையின் பின்னரே இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. </p><p>

விசாரணைகளின் போது, ஒரு மாத கால விசா அனுமதியுடன் நாட்டுக்கு வந்துள்ள சந்தேக நபர்கள், குறித்த மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமான முறையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p><h3><b> 

சட்ட நடவடிக்கை</b></h3><p>இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாவை வருமானமாக பெற்றுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8b9dd57-de82-40a4-a5fd-4ab71b1a4f21/26-6a6d615fd007e.webp' /></p><p>ஒரு பெண்ணிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக 20,000 முதல் 30,000 ரூபா வரை கட்டணம் அறவிடப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

கைது செய்யப்பட்டுள்ள 11 தாய்லாந்து நாட்டுப் பெண்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். </p>]]></content>
            <updated>2026-08-01T03:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-for-7-districts-1785550927"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-for-7-districts-1785550927</id>
            <summary type="text">மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'மஞ்சள்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
 

இன்று (01.08.2026) வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல், நாளை (02) காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
</p><p></p><h2>கனமழை பெய்ய வாய்ப்பு</h2><p>
 

தீவிரமான தென்மேற்குப் பருவமழையின் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்று நிறைந்த சூழல் இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44512c15-2ec4-41aa-829c-78ea7350d39c/26-6a6d5ed416ce3.webp' /></p><p>

 

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
</p><p>
 

இதற்கிடையில், சில இடங்களில் 100 மி.மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T02:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவின் முன்னாள் பாதுகாப்புப்படை உறுப்பினரொருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrest-facebook-post-insulting-anura-1785551088"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrest-facebook-post-insulting-anura-1785551088</id>
            <summary type="text">ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p>&nbsp;</p><h2>மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப்படையில் உறுப்பினர்</h2><p>எம்பிலிப்பிட்டியவில் உள்ள உதவி சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில்&nbsp;சந்தேகநபர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa1418b1-7e1c-4edd-a0ba-bc2e70ec6e76/26-6a6d5ded1ebec.webp' />&nbsp;</p><p>

சந்தேகநபர் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப்படையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் என்பது தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த நிலையில், தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T02:46:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advanced-level-exam-results-z-marks-released-1785549247"></link>
            <id>https://tamilwin.com/article/advanced-level-exam-results-z-marks-released-1785549247</id>
            <summary type="text">2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்கான மாவட்ட ரீதியாக வெட்டுப்புள்ளிகள் (&#039;Z ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்கான மாவட்ட ரீதியாக வெட்டுப்புள்ளிகள் ('Z -' மதிப்பெண்கள்) வெளியிடப்பட்டுள்ளன.</p><p>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><h2>மறு கணக்கெடுப்பு</h2><p>இது தொடர்பில் பல்கலைக்கழக ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், மறு கணக்கெடுப்பிற்குப் பிறகு இந்த மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12cbf481-9de4-4fd6-96dc-ac86b69770c5/26-6a6d5633a6486.webp' />&nbsp;</p><p>

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சேர்வதற்குத் தேவையான குறைந்தபட்ச 'Z' மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T02:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vegetable-shortage-in-sri-lanka-1785548131"></link>
            <id>https://tamilwin.com/article/vegetable-shortage-in-sri-lanka-1785548131</id>
            <summary type="text">இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடும் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 நிலவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடும் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
 நிலவும் கடுமையான வரட்சியான காலநிலை மற்றும் நிலவும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.ஏ. சிரிவர்தன ஊடகங்களுக்கு இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2><b>
மரக்கறித் தொகை</b></h2><p>அதற்கமைய, அண்மைய நாட்களில் மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் நாளாந்த மரக்கறி சுமார் 200,000 கிலோகிராம்களால் குறைந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8fd65e-6fd7-46ae-963f-696f2270eff5/26-6a6d53fe056fb.webp' /></p><p>முன்னர் நாளாந்தம் கிடைக்கப்பெற்ற 600,000 கிலோகிராம் மரக்கறித் தொகை தற்போது 400,000 கிலோகிராம்களாக குறைந்துள்ளது.
</p><p>
இந்த நிலைமையால் சந்தையில் ஒரு கிலோ கறி மிளகாய் 500 முதல் 550 ரூபாய் வரையான விலையிலும், ஒரு கிலோ கரட் 230 முதல் 250 ரூபாய் வரையான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. </p><p>

அத்துடன், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபாவுக்கும், ஒரு கிலோ முருங்கை 150 முதல் 200 ரூபாய் வரையான விலையிலும், ஒரு கிலோ பூசணிக்காய் 115 ரூபாய்க்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தீவிரமாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் மரக்கறி பயிரிடுவதற்குத் தயக்கம் காட்டுவதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><h3><b>மக்களிடம் பணம் புழங்கும் திறன்</b></h3><p>எனினும், மக்களிடம் பணம் புழங்கும் திறன் குறைந்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கேனும் பணம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0fc240c-0425-4ad3-a8a0-226772612551/26-6a6d53feaaf0a.webp' /></p><p>இந்த நிலைமையை கருத்திற்கொண்டு மரக்கறி விலைகள் உடனடியாக மேலும் அதிகரிக்க முடியாமல் போனது.
</p><p>
எனினும் மரக்கறிகளுக்கான மேலதிக கையிருப்புகளைப் பேண முடியாத நிலை காணப்படுவதால், எதிர்காலத்தில் இந்நிலை கடுமையான மரக்கறி நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T02:04:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகுந்த மகிழ்ச்சியில் மைத்திரி..! நீதிமன்றில் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்த சர்ச்சைக்குரிய கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-be-happy-this-verdict-hemasri-fernando-1785547261"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-be-happy-this-verdict-hemasri-fernando-1785547261</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட&amp;nbsp;முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்ததாக கூறப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட&nbsp;முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ முன்வைத்ததாக கூறப்படும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p></p><h2>மகிழ்ச்சியில் இருவர்..&nbsp;</h2><p>இத்தண்டனை தொடர்பில்&nbsp;இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b7dff74-14ef-4567-ac1e-87744837ceac/26-6a6d4bfae45ca.webp' /></p><p>அதன்படி, நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியைப் பார்த்து ஹேமசிறி பெர்னாண்டோ,</p><p> </p><p>"நீதிபதி ஐயா, இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும்.</p><p> இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன" என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>நேற்றைய தினம்,&nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில்&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T02:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு தங்க பதக்கம்.. ருமேஷ் தரங்கவின் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rumesh-tharanga-commonwealth-gold-20-year-1785545659"></link>
            <id>https://tamilwin.com/article/rumesh-tharanga-commonwealth-gold-20-year-1785545659</id>
            <summary type="text">கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கை வீரரான ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கை வீரரான ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். </p><p>இதன் மூலம் கொமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்வதற்காக இலங்கை காத்திருந்த 20 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.</p><p></p><h2>வரலாற்றுச் சாதனை</h2><p>

இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் ஆனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58657434-4b2e-4621-9195-8a851755c44f/26-6a6d44eaae00d.webp' /></p><p>
</p><p>
கடந்த 2006ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே (Chinthana Vidanage) தங்கம் வென்றதற்குப் பிறகு, கொமன்வெல்த் போட்டிகளில்&nbsp;இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
</p><p>
மேலும், கொமன்வெல்த் விளையாட்டு வரலாற்றுப் பக்கங்களில் இலங்கை பெறும் 5ஆவது தங்கப் பதக்கமும் இது என்பதுடன், சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கை பெற்ற மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T01:04:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் புதிய திருப்பம்.. லொறி உரிமையாளரின் அதிர்ச்சி வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-bike-clash-cctv-bike-race-inquiry-1785542806"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-bike-clash-cctv-bike-race-inquiry-1785542806</id>
            <summary type="text">நீர்கொழும்பில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>விபத்தின் போது அவர்கள் மிக அதிக வேகத்தில் பயணித்ததாகவும் விபத்தில் சிக்கிய கன்டெய்னர் லொறியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். </p><p>விபத்து குறித்து கருத்து தெரிவித்த லொறியின் உரிமையாளர், உதவியாளர் ஒருவர் வீதிப் போக்குவரத்தை நிறுத்தி, வீதி காலியாக இருப்பதை உறுதி செய்த பின்னரே டிரெய்லர் திருப்பப்பட்டதை CCTV காட்சிகள் காட்டுவதாகக் கூறியுள்ளார்.&nbsp;</p><p> "நாங்கள் லொறியைத் திருப்பத் தொடங்கியபோது வீதியில் எந்த வாகனமும் இருக்கவில்லை. எங்கள் உதவியாளர் கீழே இறங்கி போக்குவரத்தைத் தடுத்தார். என்ன நடந்தது என்பதை CCTV காட்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தீவைத்தது யார்..</h2><p>

அவரது கூற்றுப்படி, சுமார் 160 முதல் 180 கி.மீ வேகத்தில் வந்ததாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிள் திடீரென தோன்றி டிரெய்லர் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ead6482-0b9a-4db5-ba65-eba70a00c203/26-6a6d3df204b8b.webp' /></p><p>குறிப்பாக இரவு நேரங்களில் இந்தப் பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இது குறித்து ஏற்கனவே பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>விபத்துக்குப் பிறகு லொறிக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், உள்ளூர்வாசிகளை விட வெளியாட்களே வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். </p><p>"கிராம மக்கள் ஆதரவாகவே இருந்தனர். வெளியிலிருந்து வந்தவர்களே, வாகனத்தைச் சேதப்படுத்தி, பின்னர் தீ வைத்தனர்" என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p> சம்பவ இடத்தில் பல பொலிஸ் அதிகாரிகள் இருந்தபோதிலும், லொறி மீதான தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என்றும் அவர் மேலும் உரிமை கோரினார்.</p><p> ஜூலை 29 அன்று நீர்கொழும்பு-மினுவாங்கொட வீதியில் போலவலன பகுதியில் கன்டெய்னர் லொறியுடன் மோதி இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்த நிலையில், வாகனம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T00:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மாவட்ட செயலகத்திற்குள் இரகசியமாக சென்ற ஊடக பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-media-minister-secretly-enter-secretariat-1785536850"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-media-minister-secretly-enter-secretariat-1785536850</id>
            <summary type="text">யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட
செயலகத்திற்குள் சென்று ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய
நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட
செயலகத்திற்குள் சென்று ஊடக பிரதி அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>ஊடகவியலாளர் போராட்டம் &nbsp;&nbsp;</h2><p>ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்புடன் அரசாங்க தகவல்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வு ஒன்றுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4c33fc-4b88-4665-ae33-6380e1b148f2/26-6a6d22ae8e5c3.webp' /></p><p>இந்நிலையில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு
ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக
நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ்
ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றுள்ளார்.</p><h2>யாழ்.ஊடக அமையத் தலைவர்&nbsp;</h2><p>படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை
சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம்
ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக
கோடிட்டு காட்டியுள்ளதாக , யாழ்.ஊடக அமையத் தலைவர் கே.செல்வக்குமார்
தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை
முன்னெடுத்துள்ளோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90079c79-770d-4f33-9837-484f091fc5fe/26-6a6d25aeda033.webp' /></p><p>எங்களுடன் கூட பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை
முன்னெடுக்கவில்லை.
</p><p>
இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39
ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள்
அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்தோம்.</p><p>

கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும்
எங்களோடு பேசுவதற்க்கு ஒத்துழைப்பு தந்தார்கள்.</p><h2>ஊடகவியலாளர்கள் படுகொலை</h2><p> </p><p>எங்களுடைய பேச்சை கேட்டார்கள்.
எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை சம்பந்தமான,
விசாரணையை சம்பந்தமாக கேட்டார்கள்.

ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார்.</p><p> இந்த
அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது
காட்டுகிறது.

நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில்
முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட
செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/546d7b85-0518-49d5-b35c-9a269e4dae83/26-6a6d252652ca4.webp' /></p><p>இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலாளருக்கு தெரியும். தெரிந்தும் அவர் இந்த
அரசுக்கு வக்காலத்து வாங்குறாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது. </p><p>தமது பதவிகளை
தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துறது உண்மையிலேயே மனதில்
வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும்

இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து
வலிகளோடுதான் இருக்கிறோம். </p><p>ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர்
படுகொலையை விசாரிப்போம். விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி
கூறினார்கள் என</p><p></p><p></p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T23:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற தீர்ப்பால் கதி கலங்கும் ராஜபக்சக்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-fate-court-ruling-historical-incident-1785528295"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-fate-court-ruling-historical-incident-1785528295</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.&nbsp;</p><p>இந்நியைில், குறித்த ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அத்துடன், பல முக்கிய முன்னாள் அரசியல் மற்றும் அரச தரப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.&nbsp;</p><p>இவ்விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. </p><p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருவரும் பதிவாகியுள்ளனர்.</p><p>நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p> 

இது உட்பட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mr_FJwTDCao" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T23:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல முக்கிய கோரிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/key-demands-at-batticaloa-coordination-meeting-1785535121"></link>
            <id>https://tamilwin.com/article/key-demands-at-batticaloa-coordination-meeting-1785535121</id>
            <summary type="text">மயிலத்தமடு–மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை விரவில் விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அன்னம் அதில் தாமதம் நிலவுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மயிலத்தமடு–மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை விரவில் விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அன்னம் அதில் தாமதம் நிலவுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நேற்று(31.07.2026) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை&nbsp;</h2><p> </p><p>


இந்த நிகழ்வானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நடைபெற்றுள்ளது.

​</p><p>இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கருத்து தெரிவிக்கையில், <br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b81206e-9ae5-40a6-b350-2a27cdbbba6f/26-6a6d1d3127e5a.webp' /></p><p>"கடந்த (20.05.2026 ) அன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மயிலத்தமடு–மாதவணை கால்நடை மேய்ச்சல் தரை காணிகளை விடுவிப்பது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்டது. எனினும், இந்த விடயத்தில் தற்போது நிலவும் தாமதத்திற்கான காரணம் என்ன?
</p><p>
உறுகாமம் – கித்துள் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இறங்குதுறை பிரச்சினைகளை நேரில் கள ஆய்வு செய்ததன் அடிப்படையில், நான் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி இருந்தேன், இதற்கு வெகு விரைவில் சுமூகமான முறையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

​</p><p>கோறளைப்பற்று - தெற்கு கிரான் பாலப் புனரமைப்பு மற்றும் கிரான் - பொண்டுகல்சேனை வீதி அபிவிருத்தியில் நிலவும் தாமதங்களைத் தவிர்த்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.</p><p></p><h2>யானை - மனித மோதல்</h2><p>
</p><p>
ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் மயிலவட்டவான் ஆற்றுப் பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டியது அவசியம்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்காக புதிய மாற்றுக் காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p>

யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்தும் வகையில், சேதமடைந்த யானை வேலிகளைப் புனரமைப்பதுடன் புதிய யானை வேலிகளையும் அமைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39bee555-5f37-41da-a93a-4112059dd79a/26-6a6d1d31d9433.webp' /></p><p>

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கழுவன்கேணி பகுதியில் புதிய துறைமுகம் ஒன்றை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது?</p><p>


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக அறுவடை இடம்பெறும் நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு செய்வதில் தாமதம் நிலவுகிறது.
</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட ரீதியில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவதன் அவசியம் என சுட்டிக்காட்டியள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T23:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகளுக்கான கட்டணம் முதல் நீதிக்கான தடைகள் வரை..! திணறும் பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-issues-legal-fees-to-justice-obstruction-1785532438"></link>
            <id>https://tamilwin.com/article/public-issues-legal-fees-to-justice-obstruction-1785532438</id>
            <summary type="text">“எங்களுக்கு சட்ட உதவி தேவை. ஆனால் பணம் இல்லாததால் நீதியை அணுக முடியவில்லை“ என பொதுமக்கள், சட்டத்தரணிகள் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>“எங்களுக்கு சட்ட உதவி தேவை. ஆனால் பணம் இல்லாததால் நீதியை அணுக முடியவில்லை“ என பொதுமக்கள், சட்டத்தரணிகள் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
</p><p>
அத்தாட்சிப்படுத்தல், வாடகை ஒப்பந்தங்கள், நில உடன்படிக்கைகள் மற்றும் சத்தியப் பிரமானங்கள் போன்ற எளிய ஆவணங்களுக்குக்கூட சில சட்டத்தரணிகள் மிக அதிகமான கட்டணங்களை அறவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>வழக்கு நீடிப்புகள், வழக்கு முன்னேற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவல் கிடைக்காமை, அடுத்த விசாரணைத் திகதி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் விளக்கப்படாமை என இன்னும் சில குற்றச்சாட்டுக்களையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.</p><p>
இதே போன்று நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள சாமானிய மக்களிடம் சட்டத்தரணிகள் அளவுக்கு அதிகமான பணத்தை பெறுவதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p>இந்த பிரச்சினை தொடர்பான மேலதிக விபரங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி ஆராய்கின்றது..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hz5LDV8lUD8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T22:55:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு : பொலிஸ் பிரதானி பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seattle-shooting-police-chief-resigns-1785529418"></link>
            <id>https://tamilwin.com/article/seattle-shooting-police-chief-resigns-1785529418</id>
            <summary type="text">அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கையாண்ட விதம் குறித்துக் கேள்விகள்
எழுந்த நிலையில், அந்நகர பொலிஸ் பிரதானி ஷா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கையாண்ட விதம் குறித்துக் கேள்விகள்
எழுந்த நிலையில், அந்நகர பொலிஸ் பிரதானி ஷான் பார்ன்ஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
</p><p>
சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற 'பைட் ஒஃப் சியாட்டில்' உணவுத்
திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2
வயதுக் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்ததுருடன் மேலும் மூவர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூட்டு சம்பவம்</h2><p>சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் 15 வயது சிறுவன்
ஒருவனைக் கைது செய்த நிலையில், தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது சியாட்டில் நகரத்திற்கு வெளியே நடைபெற்ற
கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொலிஸ் பிரதானி பார்ன்ஸ், இதுகுறித்து
பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் உடனடியாகச் சரியான தகவல்களைத் தெரிவிக்கத்
தவறினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a8e4d6b-cfc1-4069-b04e-7ee69a77395f/26-6a6d044d0bd76.webp' /></p><p>துப்பாக்கிச் சூடு நடந்து 5 மணி நேரம் வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும்
வெளியிடப்படாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும்
ஏற்படுத்தியது.
</p><p>
இதனைத் தொடர்ந்து சியாட்டில் மேயர் கேட்டி வில்சன், பார்ன்ஸின் இராஜினாமாவை
அறிவித்துவிட்டு, புதிய இடைக்கால பொலிஸ் பிரதானி 20 ஆண்டுகளுக்கும் மேலாக
அனுபவமுள்ள அண்ட்ரே சேல்ஸ் என்பவரை நியமித்துள்ளார்.
</p><p>
சியாட்டில் நகரில் கடந்த மூன்றாண்டுகளில் நான்கு பொலிஸ் பிரதானிகள்
மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T22:51:51+00:00</updated>
        </entry>
    </feed>
