<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-11T15:23:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் காட்டுத்தீ தீவிரம்: பாடசாலைகள் மூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/forest-fires-in-indonesia-schools-closed-1786461428"></link>
            <id>https://tamilwin.com/article/forest-fires-in-indonesia-schools-closed-1786461428</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் அதிகமான நிலப்பரப்பை அழித்து பரவி
வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 50,000 தீயணைப்பு வீரர்கள்
தீவிர நடவடிக்கைகளில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் அதிகமான நிலப்பரப்பை அழித்து பரவி
வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 50,000 தீயணைப்பு வீரர்கள்
தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

காட்டுத்தீ காரணமாக உருவான அடர்ந்த புகை மற்றும் மோசமான காற்றுமாசு காரணமாக,
மாணவர்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பல பாடசாலைகள்
தொடர்ச்சியாக மூடப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் இணையவழி மூலமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

எல் நினோ (El Nino) காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியான
காலநிலையே இந்தக் காட்டுத்தீ பரவலுக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.</p><p></p><h2>காட்டுத்தீ</h2><p>
</p><p>
சுமாத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் உள்ள ஆறு பிரதான மாகாணங்களில்
காட்டுத்தீ மிக மோசமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இரசாயனத் தெளிப்புகள் மூலம் செயற்கை
மழையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் விசேட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a0a3b45-f8ff-4769-98cb-76a23d0052a0/26-6a7b3cf729469.webp' /></p><p>

இருப்பினும், மழை மேகங்களின் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கைகளில்
சவால்கள் நிலவுவதாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

அதேவேளை, கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள பிரபல தேசிய பூங்கா ஒன்றில் பரவிய
காட்டுத்தீ பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், நாடு
முழுவதும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானங்கள் மற்றும்
ஹெலிகொப்டர்கள் அடங்கிய பெரும் படைகள் தொடர்ந்து மீட்புப் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T15:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க நீதியமைச்சரின் தீர்மானத்திற்கு விடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/funds-allocated-u-s-attorneygeneral-decision-trump-1786460479"></link>
            <id>https://tamilwin.com/article/funds-allocated-u-s-attorneygeneral-decision-trump-1786460479</id>
            <summary type="text">அரசாங்கத் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக
முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய நிதியத்தின் எதிர்காலம் குறித்து, புதிய
அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக
முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய நிதியத்தின் எதிர்காலம் குறித்து, புதிய
அமெரிக்க நீதியமைச்சர் ரொட் பிளான்ச் தீர்மானிப்பார் என அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>ட்ரம்பின் தனிப்பட்ட சட்டத்தரணியாகவும், பிரதி
நீதியமைச்சராகவும் கடமையாற்றிய ரொட் பிளான்ச், அமெரிக்காவின் தலைமைச்
சட்டத்தரணியாக முறைப்படி பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது.</p><p>
அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்களுக்கு
நஷ்டஈடு வழங்குவதற்காக $1.776 பில்லியன் பெறுமதியான நிதியம் ஒன்றை
உருவாக்குவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p></p><h2>அடுத்தகட்ட நகர்வுகள்</h2><p>

இருப்பினும், அமெரிக்க நீதியமைச்சினால் அந்த உத்தரவு அண்மையில் திரும்பப்
பெறப்பட்டதைத் தொடர்ந்தே ரொட் பிளான்ச்சின் நியமனத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல்
கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5722eec4-d250-4b64-8c78-dfe4cec9b68c/26-6a7b3b1e53156.webp' /></p><p>
</p><p>
சுமார் 10 பில்லியன் டொலர் பெறுமதியான வழக்கு ஒன்றைத் தீர்ப்பதற்காகவே இந்த
நிதி ஒதுக்கீடு முன்மொழியப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், இது ஜனாதிபதியின்
ஆதரவாளர்களுக்குச் சாதகமான நடவடிக்கை எனப் பல்வேறு தரப்பினரால்
விமர்சிக்கப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையிலேயே, குறித்த நிதியத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் அதன்
எதிர்கால நடைமுறைகள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் முழு அதிகாரமும்
நீதியமைச்சர் ரொட் பிளான்ச்சிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T15:09:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mstop-fishing-other-districts-mullaithivu-1786456791"></link>
            <id>https://tamilwin.com/article/mstop-fishing-other-districts-mullaithivu-1786456791</id>
            <summary type="text">வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில்
அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர்
நாயகம் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>அதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்
செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில் அமைச்சரிடம் நேரடியாகக்
கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அத்தகைய சட்டவிரோத கடற்றொழில்
செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் கூறினார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp; கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக்
காணப்படுகின்றன.</p><p></p><h2>கடற்றொழில் செயற்பாடுகள்</h2><p>
</p><p>
இவ்வாறு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்
செயற்பாடுகளின் புகைப்பட ஆதாரங்கள் எம்மிடம் கடற்றொழிலாளர்களால் கையளிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06405708-0fd5-48c6-8487-e749c530f2a5/26-6a7b36368c948.webp' /></p><p>
</p><p>அந்த புகைப்பட ஆதாரங்களை நான் ஏற்கனவே தங்களிடம் கையளித்திருக்கின்றேன்.

இருப்பினும் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் எமது முல்லைத்தீவுக்
கடற்பரப்பில் இடம்பெறுவது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களை மீண்டும் தங்களிடம்
கையளிக்கின்றேன்.</p><p>எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்படவேண்டுமென
வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T14:48:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலையின் பிரதான சூத்திரதாரி செவ்வந்தியா..! சட்ட ரீதியாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sevwandi-to-face-forensic-for-facial-examination-1786453621"></link>
            <id>https://tamilwin.com/article/sevwandi-to-face-forensic-for-facial-examination-1786453621</id>
            <summary type="text">பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

எனினும் குறித்த பெண் உண்மையில் தேடும் செவ்வந்தியா என்பது தொடர்பில் சந்தேகம் நீடித்து வரும் நிலையில், முகத்தை அடையாளம் காணும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
</p><p>
இவ்வாறான நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மூலம் செவ்வந்தியை அடையாளம் காண பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><h2><b>விளக்கமறியலில் வைக்குமாறு&nbsp;உத்தரவு </b></h2><p> 

குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd6f5516-25ea-4d49-b298-691d62c7d9f2/26-6a7b21863fb1b.webp' /></p><p>இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருக்குவிதாரண உத்தரவு பிறப்பித்தார்.</p><p> 

சுமார் 09 மாதங்கள் கொழும்பு குற்றப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p> </p><h3><b>சிறப்பு முகம் அடையாளம் </b></h3><p>இதன்போது பொலிஸார் சமர்ப்பித்த விடயங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb56af36-c74a-4bee-bb75-8514aeeece62/26-6a7b21872494a.webp' /></p><p>சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் சிறப்பு முகம் அடையாளம் காணும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் அனுமதி வழங்கினார்.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jqSWT_q16G0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-11T14:24:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமாருடன் இரகசிய பேச்சுவார்த்தை - முடிவை அறிவித்தது தமிழ்த்தேசிய பேரவை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-to-gajendra-kumar-for-party-alliance-1786456973"></link>
            <id>https://tamilwin.com/article/request-to-gajendra-kumar-for-party-alliance-1786456973</id>
            <summary type="text">ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால், தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால், தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p> 



கிளிநொச்சியில் இன்று(11.08.2026) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
</p><h2>


தமிழ் கட்சிகளின் கூட்டணி</h2><p>
தமிழ் கட்சிகள் (ஆறு கட்சிகள் சேர்ந்து) இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம்
மக்களுடைய மற்றும் மலையக மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்று
சேர்ந்திருக்கிறார்கள். அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அழைப்புகள்
விடுக்கப்பட்டிருக்கிறதா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார். </p><p>

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதிலளிக்கையில், </p><p>“ கடந்த வார நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூஃப் ஹக்கீம் நாடாளுமன்றத்திலே
என்னை கண்டு “பேசலாமா?” என்று கேட்டு, "நான் இந்த ஆறு கட்சிகளுடைய இந்த
முயற்சியிலே நானும், அதாவது தமிழ் தேசிய பேரவையும், வந்து சேர்ந்து கொள்ள
வேண்டும்" என்ற கருத்தை என்னிடம் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d315f36e-5805-4054-a079-e09a801ccb8d/26-6a7b2c91377da.webp' /></p><p>
</p><p>
அந்த ஆறு கட்சிகளுக்கும் தான் இந்த விடயத்தைச் சொல்லியிருப்பதாகவும், அந்த
வகையிலே வந்து எவருக்கும் தமிழ் தேசிய பேரவையை இணைத்துக் கொள்வதிலே எதிர்ப்பு இல்லை என்றும், ஆகவே நாங்கள் அதிலே எங்களுடைய அமைப்பு சார்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தேன். </p><p>

அந்த இடத்திலே நாடாளுமன்ற உறுப்பினர்
ராதாகிருஷ்ணனனையும் அந்த இடத்திற்கு அழைத்து, "நான்
கஜேந்திரனிடம் அவருடைய கட்சியை இந்த ஆறு கட்சிகளுடைய முயற்சியிலே வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம்" என்ற கருத்தை சொல்லியிருந்தார்.
</p><h2>
மத்திய குழுவுடன் பேச்சுவார்த்தை</h2><p>
அப்பொழுது நாங்கள் சொன்னது என்னவென்றால், எங்களுக்கு அந்த அழைப்பு
உத்தியோகபூர்வமாக விடுக்கப்படுகின்ற பொழுது, நாங்களும் எங்களுடைய மத்திய
குழுவுக்கு அதனை தெரிவித்து, எங்களுடைய மத்திய குழு அது சம்பந்தமாக ஒரு
தீர்மானம் எடுக்கும்.

அந்த முயற்சி சம்பந்தமாக நாங்கள் அதிலே உத்தியோகபூர்வமாக இருக்கிறோமோ இல்லையோ என்ற முடிவு அதன் மூலமாக தான் தெரிவிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e3f2e3a-0103-4ef0-a089-420da435e841/26-6a7b2c91de45b.webp' /></p><p>

ஏனென்றால் நாங்கள் அதில் இதுவரைக்கும் இந்த விடயம் சம்பந்தமாக எதுவும்
பேசவில்லை. ஊடகத்திலே தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பொறுத்தவரையில் எங்களுக்கு எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை.</p><p>

 
ஆகவே நாங்கள் முதல் அதில் கலந்து கொள்வதா இல்லையா? என்று முடிவு எடுப்பதற்கு முன்னர், எங்களுடைய மத்திய குழு அறிவித்தாலும் கூட, நாங்கள் முதல் அவர்களோடு பேசி, அவர்களுடைய முயற்சியினுடைய நோக்கங்கள் சம்பந்தமாக ஒரு தெளிவடைந்த பின்னரே இது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என நினைக்கின்றோம்” என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9gwcRvWz0D0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-11T14:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: மூன்று பணியாளர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-cargo-ship-in-the-red-sea-killed-1786454807"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-cargo-ship-in-the-red-sea-killed-1786454807</id>
            <summary type="text">செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப்
பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில்
பயணித்த மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப்
பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில்
பயணித்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஏமன் கடலோரப் காவல் படை மற்றும்
இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தன்சானியக் கொடியுடன் ஓமானின் சலாலா துறைமுகத்திலிருந்து ஜிபூட்டி நோக்கிப்
பயணித்த 'திஹாமா' என்ற சிறிய சரக்குக் கப்பலே இவ்வாறு தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த
ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்ற போதிலும், ஹூதி அமைப்பு இதுவரை இதற்கு உத்தியோகபூர்வமாகப்
பொறுப்பேற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55123ee9-c187-44ef-877a-9f6b9c53a9cc/26-6a7b27ace53d3.webp' /></p><p>
</p><p>சவூதி அரேபியாவிற்கு எதிராக ஹூதி அமைப்பினர் செங்கடலில் கடற்படை முற்றுகையை
அறிவித்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன் காரணமாக செங்கடல் வழியிலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் மீண்டும்
பதற்றமும் பாதுகாப்பற்ற சூழலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:46:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 164ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-earthquake-hits-colombia-1786455666"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-earthquake-hits-colombia-1786455666</id>
            <summary type="text">கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இரண்டாவது
நாளாக இன்றும்(11.08.2026) மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இரண்டாவது
நாளாக இன்றும்(11.08.2026) மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளதாகவும், 
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் பல நகரங்களில்
பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>


இதற்கமைய, பெரைரா மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களில் பல மாடி கட்டிடங்கள்
தரைமட்டமாகியுள்ளதுடன், மணிசாலேஸ் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க
தேவாலயத்தின் கோபுரம் ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.</p><h2>

நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்&nbsp;</h2><p>
காலி நகரில் மட்டும் குறைந்தது 85 பேர் உயிரிழந்துள்ளதுடன், அங்குள்ள பிரதான
வைத்தியசாலை ஒன்றின் மேல் தளங்கள் இடிந்து வீழ்ந்ததால் நோயாளிகள் வீதிகளில்
வைக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf81dab-3ea3-48cd-b93a-accb2b6507f4/26-6a7b26a6d9ecc.webp' /></p><p>
</p><p>
இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை
மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

மீட்புப் பணிகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து
செயற்பட்டு வருகின்றனர்.</p><p>

கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
பொருட்டும் காலி மற்றும் பெரைரா ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்குச் சட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிகப் பாதுகாப்புப் படையினரும்
குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:42:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பாடசாலை ஒன்றில் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஆளுநருக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/letter-to-north-governer-1786452149"></link>
            <id>https://tamilwin.com/article/letter-to-north-governer-1786452149</id>
            <summary type="text">மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகவும், அதிபர் சேவை அதிகாரிகளுக்கான நீதி கோருதல் தொடர்பாகவும் உருத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகவும், அதிபர் சேவை அதிகாரிகளுக்கான நீதி கோருதல் தொடர்பாகவும் உருத்திரசேனை அமைப்பின் பிரதிநிதி சுஜீவன் கடிதம் ஒன்றினை வட மாகாண ஆளுநர்
நா.வேதநாயகனுக்கு அனுப்பியுள்ளார். </p><p>அந்த கடிதத்தில்,

மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் (1AB தர தேசிய பாடசாலை) அதிபர்
நியமனம் தொடர்பில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும், அங்கு
கடமையாற்றும் தகுதியான அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்தும்
தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
</p><p>
பொதுவாக ஒரு தேசிய பாடசாலையில், இலங்கை அதிபர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த ஒருவரே
அதிபராகப் பதவி வகிக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை அதிபர் சேவை
தரம் 3இல் உள்ள அருட்சகோதரர் சந்தியோகு என்பவர் அதிபராகப் பணியாற்றி, கடந்த
ஆகஸ்ட் 3ஆம் திகதியுடன் ஓய்வுபெற்றுள்ளார்.</p><h2>பொறுப்பு வழங்கப்பட்ட அதிபர்</h2><p>அவரது ஓய்வைத் தொடர்ந்து, அதே பாடசாலையில் இலங்கை அதிபர் சேவை தரம் 3இல் உள்ள
தகுதியான மூவர் (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த இரு ஆண்கள்
மற்றும் மன்னாரைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்) கடமையில்
உள்ளனர்.</p><p>இருப்பினும், அவர்களைப் புறக்கணித்துவிட்டு, அதே பாடசாலையில் இலங்கை
ஆசிரியர் சேவை தரம் 3இல் கற்பிக்கும் அருட்சகோதரர் சத்தியன் என்பவருக்கு
அதிபர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407945e5-3de2-4f52-9a22-7dcc8fe2e046/26-6a7b250675272.webp' />&nbsp; &nbsp;</p><p>வலயக் கல்விப் பணிப்பாளரின்
உத்தியோகபூர்வக் கடிதம் மூலம் இந்நியமனம் வழங்கப்பட்டிருந்தாலும், இது வட
மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன் அவர்களின் அறிவுறுத்தலின்
பேரிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
</p><p>
இப்பாடசாலை ஒரு தேசிய பாடசாலையாக இருந்தபோதிலும், "டி லா சால்" (De La Salle)
கிறிஸ்தவ மிஷனரியால் நிர்வகிக்கப்படுவதால், தகுதி வாய்ந்த வேற்று மதத்தவர்கள்
இங்கு அதிபராகப் பதவி வகிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே, தாங்கள் தலையிட்டு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு
கேட்டுக்கொள்கின்றேன்.</p><h2>தகுதிக்கு ஏற்ப நியமனம்</h2><p> தகுதிக்கேற்ற நியமனம்: குறித்த பாடசாலையில் அதிபர் தரத்தில் பணியாற்றும்
தகுதியுடைய இரு இந்து ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்குக்
கீழ்நிலை தரத்தில் (ஆசிரியர் தரம்) உள்ள ஒருவரின் கீழ் பணியாற்றப் பணிப்பது
மிகுந்த அநீதியாகும். </p><p>எனவே, அவர்களின் தகுதிக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் உள்ள
பாடசாலைகளில் அவர்களை அதிபர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு
வேண்டுகின்றேன்.

சமத்துவமான நடைமுறை: கிறிஸ்தவப் பாடசாலைகளில் இந்துக்கள் அதிபராக வர முடியாத
நிலைப்பாடு இருப்பது போல, இந்துப் பாடசாலைகளிலும் ஏனைய மதத்தவர்களுக்கு இதைப்
போன்ற நடைமுறைகளே பின்பற்றப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cdbcf76-0254-4f4d-bac4-027d0e6682a4/26-6a7b25073805f.webp' /></p><p>
</p><p>
நிர்வாகக் கட்டுப்பாடு: குறிப்பாக, வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்
பற்றிக் ரஞ்சன் அவர்களின் இந்துக்கள், இந்து மாணவர்கள் மற்றும் இந்துப்
பாடசாலைகளுக்கு எதிரான மறைமுகச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, நடுநிலையோடு
செயற்பட உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
</p><p>
இவ்விஷயத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு, தகுதியுடைய
அதிகாரிகளுக்கு நீதியைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு மிகத் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலா தொற்றின் தாக்கம் தீவிரம் - உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-on-the-rise-1786455085"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-on-the-rise-1786455085</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனம்
உறுதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனம்
உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
இதுவரை ஐந்து மாகாணங்களில் 4,381 பேருக்குத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வரலாற்றில் மிக வேகமாகவும் தீவிரமாகவும் பரவி வரும் எபோலா தொற்றாக இது
பதிவாகியுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><h2>
நோய் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு</h2><p>
தற்போது பரவி வரும் 17 ஆவது எபோலா அலையானது “புண்டிக்புகியோ” வகையைச்
சேர்ந்தது என்றும், இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது
சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6245dcb7-6dcb-4647-a088-c52470fdc307/26-6a7b24b03c4a5.webp' /></p><p>

நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம், நாட்டின்
உட்கட்டமைப்பு பலவீனம் மற்றும் பாதுகாப்பு அற்ற சூழல் என்பன இந்த வைரஸ்
விரைவாகப் பரவுவதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.</p><p>

அண்டை நாடான உகாண்டாவிற்கும் இந்தத் தொற்று பரவியுள்ளதைத் தொடர்ந்து, உலக
சுகாதார நிறுவனம் இதனை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார
அவசரநிலையாக அறிவித்துள்ளது.
</p><p>
கடந்த காலங்களில் ஏற்பட்ட எபோலா பரவல்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை
உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்படைந்துள்ளமை
மருத்துவ உலகிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
</p><p>
நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உதவிகளை
விரைவுபடுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:33:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு கிடைத்த இரகசிய தகவல் - விரைவில் காத்திருக்கும் பெரும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/secret-information-received-the-anura-government-1786454301"></link>
            <id>https://tamilwin.com/article/secret-information-received-the-anura-government-1786454301</id>
            <summary type="text">கடந்த 3 வாரங்களில் பல சிறைகளில் கைதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சிறைகளுக்குள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் 
இனிவரும் வாரங்களில் இது போன்ற சம்பவங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 3 வாரங்களில் பல சிறைகளில் கைதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சிறைகளுக்குள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் 
இனிவரும் வாரங்களில் இது போன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறலாம் என இலங்கையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவங்களுக்கு பின்னால் சில சதி இருப்பதாக மூத்த அரச அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் அரசாங்கம் இது தொடர்பில் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் உள்ளகத்தில் ஒரு பதற்றத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஆனால் அதன் பின்னணியை பார்க்கும் போது இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை உடைக்க சிலர் முற்படுவதாகவும் அங்குள்ள குற்றவாளிகளை வெளியேற்றி தென்னிலங்கையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்....&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9TM-LHWgTAI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தேர் திருவிழாவில் பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chain-snatched-woman-mamangeswarar-temple-1786453350"></link>
            <id>https://tamilwin.com/article/chain-snatched-woman-mamangeswarar-temple-1786453350</id>
            <summary type="text">மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின்
போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின்
போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியாதோரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(11.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>

குறித்த ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா சம்பவ தினமான இன்று காலை 8:30
மணியளவில் ஆலயத்தில் தேர் வீதி உலாவின் போது, ஆயிர்க்கணக்கான மக்கள்
திரண்டிருந்த நிலையில் அதனை தரித்துக் கொண்டிருந்த மூதூரைச் சேர்ந்த 63 வயது
பெண்ணின் கழுத்தில் இருந்த (2½) பவுண் தங்க சங்கிலியை இனம்தெரியாதோரால்
அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டையடுத்து பொலிசார் தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9165e7e-5721-4eae-bfe4-1fe3b5183152/26-6a7b220d380d6.webp' /></p><p>இதேவேளை, ஆலயப் பெருவிழா நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருவதால்,
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தமது ஆபரணங்கள், பணப்பைகள் உள்ளிட்ட உடைமைகளின்
பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூட்டுக்குள் சிக்கியிருந்த மர்மப் பொருள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-update-on-the-chemmani-mass-grave-1786453807"></link>
            <id>https://tamilwin.com/article/today-update-on-the-chemmani-mass-grave-1786453807</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 15 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 15 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்று(11.08.2026) இடம்பெற்ற போதே குறித்த மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><h2>
15 மனித எலும்பு கூடுகள் அடையாளம்</h2><p>

யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e0cdcd3-af7e-42e8-a3a3-b4137fac7db8/26-6a7b1f7c4efdc.webp' /></p><p>
</p><p>
இதுவரை மொத்தமாக 539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில், 524 மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
516 வது இலக்கமிடப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில்
மீட்கப்பட்ட தாயத்து தகடு போன்ற ஒன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய்
நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701d1e1d-46e9-48f5-b9ce-e1270fc17cc7/26-6a7b1f7d5f77d.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b89f75f-08c9-44e1-bd4b-da0f35399943/26-6a7b1f7e36765.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a97881-0ea2-4b93-b4f1-8ae8b92c9775/26-6a7b1f7f161a1.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் ஆணையினை நிறைவேற்றும் நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு - ஆளும் தரப்பு பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judges-act-of-fulfilling-the-people-s-mandate-1786451268"></link>
            <id>https://tamilwin.com/article/judges-act-of-fulfilling-the-people-s-mandate-1786451268</id>
            <summary type="text">மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை
நீடிப்பு என&amp;nbsp;கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை
நீடிப்பு என&nbsp;கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கையில் நீதியரசர்களின் காலநீடிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர்களின் இரண்டு
ஆண்டுகால நீடிப்பு தொடர்பில் இன்று எதிர்கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a1886a-1d1c-429a-8b08-789786b95281/26-6a7b1cbf2058d.webp' /></p><p>கடந்த 76
ஆண்டுகளாக நாட்டினை குற்றச்செயல்கள் நிறைந்த நாடாக இவர்கள் மாற்றி
இருக்கின்றார்கள். அதனால் தான் 40ஆயிரத்திற்கும் அதிகமான சிறைக்கைதிகள்
இருக்கின்றார்கள்.</p><p> 20 ஆயிரம் கைதிகள் இருக்கும் இடத்தில் 40 ஆயிரம் கைதிகள்
காணப்படுகின்றார்கள்.&nbsp;</p><p>இலஞ்சஊழல் மோசடிக்கு எதிராக போதைப்பொருளுக்கு எதிராக இவ்வாறான
குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் சட்டநடவடிக்கைகளும் வேகமாக
முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றபோது அனுபவம் உள்ள
நீதியரர்கள், அதிகாரிகள், சட்டத்தரணிகள் தேவை. இவை அனைத்தினையும் கருத்தில்
கொண்டுதான் இந்த கால எல்லை நீடிப்பிற்கான அனுமதியினை பெற்றுக் கொடுக்கின்றோம்.</p><p>இதில் எந்தவிதமான தனிப்பட்ட லாபங்கள் கிடையாது. நாட்டு மக்கள் ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று ஆணை
வழங்கியிருக்கின்றார்கள்.</p><h2>குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுபவர்களாக&nbsp;</h2><p>அந்த மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு
நடவடிக்கையையே இந்த நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு.</p><p>
இது குறித்து தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது விமர்சனம் செய்து
வருகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316c0afe-94c7-4735-a9d4-d8fc6b1b284b/26-6a7b1cbff0252.webp' /></p><p>இதனால் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்ற வேகத்தினை பார்க்கின்ற
போது தங்கள் குடும்பமே உள்ளே சென்று கம்பி எண்ண வேண்டிய நிலை வரும் என்று
அவர்களுக்கு தெரியும்.</p><p>இவர்கள் சிறைக்கு செல்கின்ற வரிசையினை பார்க்கின்றபோது
கடந்த 26 ஆண்டுகளாக இந்த நாட்டினை நாசம் செய்து கொள்ளையடித்த ராஜபக்ச கும்பல் கூட்டாக சேர்ந்து ஆட்டம் காணுக்கின்ற நிலை இருக்கின்றது.</p><p>இந்த ராஜபக்சக்களுக்கு வால்பிடிக்கின்றவர்களை தேடிப்பாக்கின்றபொழுது
எல்லாருமே இன்று குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுபவர்களாக
இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு: ஈழத் தமிழர்களுக்கான காய் நகர்த்தல் தொடர்பான திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/project-related-to-the-movement-crops-eelam-tamils-1786452723"></link>
            <id>https://tamilwin.com/article/project-related-to-the-movement-crops-eelam-tamils-1786452723</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக, சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக, சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் இயங்கும் வள்ளுவன் தமிழ்ப் பாடசாலையின் முதல்வர் முருகவேள் தெரிவித்துள்ளார்.</p><p>

“அகளகம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடம் தமிழர்களின் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் முருகவேள், வெளிநாடுகளில் தமிழ் மாணவர்களுக்காக விசேட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தமிழர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயணங்களின் போது தமிழ்நாடு மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பல தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு, ஈழத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அவரது முழுமையான கருத்துக்களை காணொளியில் தொடர்ந்து காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u9zfHVtj19g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானப் பயணம் - நிர்வாகம் எடுத்த திடீர் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-toronto-flight-cancelled-1786451599"></link>
            <id>https://tamilwin.com/article/canada-toronto-flight-cancelled-1786451599</id>
            <summary type="text">கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் PD444 விமானம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புறப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>


ஒரு குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானம்</h2><p>
இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
</p><p>
விமானம் முனையத்திலிருந்து புறப்பட்டு ஓடுபாதையை நோக்கிச் சென்றது, ஆனால் உடன் வந்த பெற்றோர் மற்றும் விமானப் பணியாளர்கள் முயன்றும், இருக்கையில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87d2e127-1590-4c1c-9c68-88b0bbf5e056/26-6a7b1799dd746.webp' /></p><p> </p><p>

இந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையால் விமானத்தால் புறப்பட முடியவில்லை, எனவே விமானப் பணியாளர்கள் முனையத்திற்கே திரும்பிச் சென்று பயணிகளை இறக்கிவிட முடிவு செய்தனர்.</p><p>

விமானத்தை மீண்டும் தயார் செய்வதற்கும், குழந்தையையும் பெற்றோர்களையும் விமானத்திலிருந்து இறக்குவதற்கும், அவர்களின் உடமைகளை மீட்டெடுப்பதற்கும், ஆவணங்களை மீண்டும் தாக்கல் செய்வதற்கும் தேவைப்பட்ட நேரத்தால், விமானம் மிகவும் தாமதமாக புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக விக்டோரியா விமான நிலையத்தின் ஓடுபாதை நள்ளிரவு 12:30 மணிக்கு மூடப்பட்டுள்ளது. ஒரு குழந்தையால் மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நாங்கள் வருந்துகிறோம். அவர்கள் மறுநாள் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hh-Q7I2Hjmg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-11T12:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்! சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-university-of-jaffna-1786451462"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-university-of-jaffna-1786451462</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை (DELT)
ஏற்பாடு செய்யும் “ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்” எனும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை (DELT)
ஏற்பாடு செய்யும் “ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்” எனும்
தொனிப்பொருளிலான 2வது சர்வதேச மாநாடு (ICDE – 2026), முன்னாள் ஆங்கில மொழிக்
கற்பித்தல் துறைத் தலைவரும், தற்போதைய பென்ஸ்டேட் (ஐக்கிய அமெரிக்கா)
பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஈவான் பஃப் பேராசிரியருமான சுரேஷ் கனகராஜாவின் அனுசரணையில், எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் திகதி வரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி மற்றும் நூலக அரங்குகளில்
நடைபெறவுள்ளது.</p><p>

ஆங்கில மொழிக் கற்பித்தல், சமூக மொழியியல் மற்றும் காலனித்துவமய நீக்கச்
சிந்தனைகள் தொடர்பான முக்கியமான உரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு
இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>மாநாடு</h2><p>
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் மூத்த பேராசிரியர் திருநாவுக்கரசு
வேல்நம்பியின் தலைமையில், பேராசிரியர் நா.பிரதீபராஜா மற்றும்
பேராசிரியர் தி.கருணாகரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இம்மாநாடு
இடம்பெறவுள்ளது.
</p><p>
இம்மாநாட்டில் பேராசிரியர் சுரேஷ் கனகராஜா, பேராசிரியர் பிமாலி இந்திரரத்ன,
பேராசிரியர் ரோண்டா ஒலிவர், டாக்டர் வைதேகி ராஜபிள்ளை, பேராசிரியர் செண்டர்
தோவ்சின் மற்றும் இணைப் பேராசிரியர் மேக்ஸ் ஸ்பாட்டி உள்ளிட்ட பல சர்வதேச
புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/770739a0-0aad-4f1a-9f91-7b026fd07d5a/26-6a7b16091eee1.webp' /></p><p>
</p><p>
ஆகஸ்ட் 12ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் தொடக்க விழா உள்ளிட்ட
மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு பேராசிரியர்கள்,
ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன்
அழைப்பதாக ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் சிக்கிய ரத்மலானை சைமா : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ratmalane-saima-held-for-48-hours-for-questioning-1786447014"></link>
            <id>https://tamilwin.com/article/ratmalane-saima-held-for-48-hours-for-questioning-1786447014</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் 'ரத்மலானை சைமா' என்பவரை, விசாரணைக்காக 48 மணி நேரம் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>ரத்மலனே சைமா மேலதிக விசாரணைகளுக்காக நேற்று இரவு (10) பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.</p><p>

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, மலேசிய பொலிஸ் மற்றும் இன்டர்போலின் உதவியுடன் அந்த நாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adb1b28-396e-4200-8ca0-fa4ba2b0ab61/26-6a7b0aff94971.webp' /></p><p>அவருடன் இருந்த ரத்மலானை பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பிற்பகல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
</p><p>
பிரதான சந்தேக நபர் ரத்மலானையைச் சேர்ந்த 41 வயதானவர் என்றும், அவர் 2014ஆம் ஆண்டில் பேராதனை பொலிஸ் பிரிவில் ஒருவரைக் கடத்தி, துப்பாக்கி முனையில் காயப்படுத்தியது மற்றும் 2016ஆம் ஆண்டில் ஒருவரைச் சுட்டுக் கொன்றது ஆகிய இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:20:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் கியூபாவில் எரிபொருள் விநியோகம் - கறுப்புச் சந்தை வியாபாரம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-deliveries-in-cuba-amid-sanctions-1786450561"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-deliveries-in-cuba-amid-sanctions-1786450561</id>
            <summary type="text">அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், கியூபாவின்
கறுப்புச் சந்தை மற்றும் தனியார் துறைகளில் அமெரிக்க எரிபொருளின் பயன்பாடு
திடீரெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், கியூபாவின்
கறுப்புச் சந்தை மற்றும் தனியார் துறைகளில் அமெரிக்க எரிபொருளின் பயன்பாடு
திடீரென அதிகரித்து வருகின்றது.
</p><p>
ஆறு தசாப்த கால ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பின்னர், அந்நாட்டின்
கம்யூனிசக் கொள்கை சார்ந்த ஆற்றல் துறையில் முதலாளித்துவ அமைப்பின் தாக்கங்கள்
வெளிப்படத் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><h2>
எரிபொருள் தட்டுபாடு</h2><p>
வெனிசுலா மற்றும் மெக்சிகோ போன்ற பாரம்பரிய நாடுகளிலிருந்து கியூபாவிற்கு
கிடைத்து வந்த எண்ணெய் விநியோகம் முடங்கியதைத் தொடர்ந்து, அந்நாட்டில்
கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சுகாதாரம்,
பொதுப்போக்குவரத்து மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள்
கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/862a1120-2624-4589-a35b-869f5652f147/26-6a7b1352efc1b.webp' /></p><p>

இந்நிலையிலேயே, அமெரிக்க வணிகத் திணைக்களத்தின் சிறப்புத் தளர்வு ஒன்றின்
கீழ், கியூபாவின் தனியார் வணிகங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் எரிபொருளை
ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
</p><p>
இதன் மூலம், கடந்த பெப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில்
சுமார் 900,000 பீப்பாய் அமெரிக்க எரிபொருள் கியூபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
</p><p>
இந்த எரிபொருள் நாட்டின் மொத்தத் தேவையில் சில நாட்களுக்கு மாத்திரமே
போதுமானது என்ற போதிலும், அது கியூபாவின் பொருளாதார நடைமுறைகளில் பாரிய
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>

கறுப்புச் சந்தை வியாபாரம் தீவிரம்</h2><p>
தனியார் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் வாடகை வாகன உரிமையாளர்கள் இந்த
எரிபொருளைப் பயன்படுத்தி தமது சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
அதேவேளை, முறையான விநியோகக் கட்டமைப்பு இன்மையால் அங்கு கறுப்புச் சந்தை
வியாபாரமும் தீவிரமடைந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் ரகசியக் கிடங்குகள் மூலம் அதிக விலைக்கு எரிபொருள்
விற்பனை செய்யப்படுவதால், குறைந்த வருமானம் பெறும் சாதாரண பொதுமக்கள் பெரும்
அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be4fcc3f-7579-46c1-8f7d-7ab47b5e5a98/26-6a7b1353a4a4f.webp' /></p><p>

நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, கியூபா அரசாங்கம் ஆற்றல் துறையில் தனியார்
மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பகுதியளவில் அனுமதி அளிக்கும் வகையில்
பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
</p><p>
இருப்பினும், இது நாட்டின் தேசிய சொத்துக்களைப் பெருமளவில் தனியார் மயமாக்கும்
முயற்சி அல்ல என அந்நாட்டு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், கட்டுப்பாடுகள் நிறைந்த போதிலும் கியூபாவில் தனியார்
துறையினரால் அமெரிக்க எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதும், அது அங்குள்ள
சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களும் சர்வதேச
அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:19:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம்.. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-mahanayake-thero-nalinda-jeyatissa-1786444244"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-mahanayake-thero-nalinda-jeyatissa-1786444244</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது எனத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது எனத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) நடைபெற்ற போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார். </p><p>குறித்த கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, தாமும் நீதி அமைச்சரும் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு..&nbsp;&nbsp;</h2><p>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிச்சேவைச் சட்டத் திருத்தம் ஆகியவற்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாகவே, மகாநாயக்க தேரர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்கள் தொடர்பில் தமது தரப்பு விளக்கங்களை முன்வைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b83f802-136c-4ae7-8311-3864473ebc6c/26-6a7b00348b08e.webp' /></p><p> </p><p>மேலும், மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமன்ன மகா நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உண்மைகளை விளக்கியதாக அவர் கூறினார்.</p><p>

இதற்கிடையில், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்தார்.&nbsp;</p><p>இந்நிலையில், அதற்கு முன்னாளே, தாமும் நீதி அமைச்சரும் மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமன்ன பிரிவுகளின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்துத் தெளிவுபடுத்தியதாக அவர் தற்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விழிப்புடன் இயங்கும் கும்பல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-employment-scam-in-jaffna-1786449214"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-employment-scam-in-jaffna-1786449214</id>
            <summary type="text">வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
யாழ். மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><h2>
மோசடிகள் அதிகரிப்பு</h2><p>
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இவ்வாறான மோசடி சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த மோசடிகளுடன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாகவும், அவற்றில் அதிகபட்சமாக ஒருவரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ec35e1-d4d6-4c11-a0c4-74c71a22a4ed/26-6a7b0d9833c8e.webp' /></p><p>
</p><p>
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் போலியான விளம்பரங்களை நம்பியே பெருமளவானோர் இவ்வாறு பணத்தை இழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
</p><h2>
நள்ளிரவு 12 மணிக்கு பின் நடக்கும் சம்பவம்</h2><p>

கனடா, பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எவ்வித செலவுமின்றி அனுப்பி வைப்பதாகக் கூறியே இந்த போலியான விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35c9809-041a-4d9d-967c-9033c6e93399/26-6a7b0d98eae5f.webp' /></p><p>
</p><p>
இதனை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் முதலில் ஒரு தொகைப் பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு காட்டுமாறு கூறுவதாகவும், பின்னர் அவர்களின் வங்கிக் கணக்கு கடவுச்சொல் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று, நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பணத்தை மோசடியாக எடுத்துக்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனவே, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தொடர்பான போலியான விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்காமல், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T11:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளிகளின் கோடிக்கணக்கான நிதி மோசடி - அதிகாரிகளின் பிணை நிராகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/financial-fraud-asvesuma-beneficiaries-1786447490"></link>
            <id>https://tamilwin.com/article/financial-fraud-asvesuma-beneficiaries-1786447490</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும
பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய அதிகாரிகள் இருவரின் பிணை அனுமதியை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும
பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய அதிகாரிகள் இருவரின் பிணை அனுமதியை நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த வழக்கு இன்று(11.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஹட்டன் நீதவான் நீதிபதி பீட்டர் பால் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். </p><h2>

விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு</h2><p>
எமது நாட்டில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் முழுமையாக இயலாத
குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சமூக நலன்புரித்
திட்டம் அஸ்வெசும என்பதால்,விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/057e6a65-0608-423e-9d99-0e611496fee4/26-6a7b06e0e7304.webp' /></p><p>


இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நோர்வூட் பிரதேச செயலகத்தில்
அஸ்வெசும பிரிவின் பொறுப்பாளராக இருந்த, ஹட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த 31
மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர்.

இரு சந்தேக நபர்களைக் கைது செய்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின், நீதிபதி அவர்களை இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><h2>

பிணை நிராகரிப்பு</h2><p>
இதனைத் தொடர்ந்து இன்று(11) நீதிமன்றத்தில் சந்தேக நபர்களுக்காக ஆதரவாக முன்னிலையான 
வழக்கறிஞர்கள், இரு சந்தேக நபர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மோசடி
செய்யப்பட்ட பணத்தை வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்க ஒப்புக்கொண்டதால்,
அவர்கள் பிணை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று
நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/861bbd10-42cd-4a7d-b6f2-65f45b77adbc/26-6a7b06e1d5dde.webp' /></p><p>

இதில் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த ஹட்டன் குற்றப் புலனாய்வுப்
பிரிவின் அதிகாரிகள் நோர்வூட் பிரதேச செயலகத்தில்
அஸ்வெசும நலன்புரித் திட்ட நிதி மோசடி தொடர்பில் மோசடி செய்யப்பட்ட பணம்
குறித்த முழுமையான விசாரணை அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றும், 
மேலும் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அலுவலகத்தில் உள்ள பல அதிகாரிகள் இந்த
மோசடியில் ஈடுபட்டதாக வந்துள்ள கூடுதல் முறைப்பாடு குறித்தும் விசாரித்து வருவதால்,
சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்குவதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.
</p><p>
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த ஹட்டன் நீதிபதி பீட்டர் பால் குறித்த
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதன் காரணமாகவும் இந்த
பயணம் ஏழைகளுக்கு வழங்கும் பணம் என்றும், இதுபோன்ற அரச பணத்திற்குப்
பொறுப்பான அதிகாரிகளுக்குப் பணத்தை மோசடி செய்ய எந்த உரிமையும் இல்லை என்றும் கூறினார்.
</p><p>
இதற்கமைய, நீதிபதி இரு சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில்
வைக்கவும், இந்த மாதம் மீண்டும் 25ஆம் திகதி வழக்கினை மீண்டும்
விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
</p><h2>
மோசமாகும் மக்களின் நிலை</h2><p>
இரு சந்தேக நபர்களின் சகோதரர்களில் ஒருவர் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர்
பதவியில் உள்ள அதிகாரி எனவும், மேலும் மோசடிப் பணத்தின் ஒரு பகுதி அவரது
கணக்கிலும் வரவு வைக்கப்பட்டிருந்தமை கண்டறிந்து அந்த அதிகாரிக்கு எதிராக
நடத்தப்படும் விசாரணையின் விளைவாக, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி
தென்னக்கோன், அந்த அதிகாரியின் பணியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09694cdc-2182-439c-af4b-7cc423217cd5/26-6a7b06e2aa416.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும கணக்கில் பணம் வரவு
வைக்கப்படாத பயனாளிகள், தங்கள் கணக்குகளைச் சரிபார்க்க தினமும் நோர்வூட்
பிரதேச செயலகத்திற்குச் சென்று வருகின்றனர்.
</p><p>
அங்குள்ள அதிகாரிகள், பயனாளிகளின் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்ணைப் பெற்று, அது குறித்த தகவல்களை வழங்குவதாகக் கூறி, அந்த பொது மக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f406cf81-e520-47b4-ba7a-4b581ea67511/26-6a7b07307adfd.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T11:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச தொழிலுக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-for-government-teacher-vacancies-1786437816"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-for-government-teacher-vacancies-1786437816</id>
            <summary type="text">நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை&nbsp;</h2><p>இதற்கமைய, ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பாடசாலைகள் மற்றும் பிரதேசங்களை உடனடியாக அடையாளம் கண்டு, அங்குள்ள வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb25550-8919-422e-bc02-6c9dd0ededac/26-6a7aeb2cd42ba.webp' />&nbsp;</p><p>மேலும், ஆசிரியர் இடமாற்ற முறைமையை ஒழுங்குபடுத்துவதுடன், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடமாற்றங்களை முன்னெடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p>அத்துடன், பாடசாலைகளை கஷ்டப் பிரதேசங்களாக வகைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவு வழங்கும் முறைமை குறித்தும் மீளாய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/M7NXBI6GGRc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:19:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து முகங்கொடுக்கும் பிரச்சினைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-fishermen-issue-1786446599"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-fishermen-issue-1786446599</id>
            <summary type="text">கடற்றொழிலாளர்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அச்சுறுத்தல் மற்றும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழிலாளர்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். </p><p>குறிப்பாக வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அச்சுறுத்தல் மற்றும் அவர்களின்
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில்
பாதிப்படைகின்றது.</p><p> அதேவேளை கிழக்கில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை பயன்பாட்டால்
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின்
திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.
</p><p>
இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை
தெரிவித்தார். </p><p>அவர் மேலும் கூறுகையில் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தின்
மத்தியில் கடற்றொழில் துறையில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கை இந்த
சட்டவிரோத சுருக்குவலை பயன்பாட்டால் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை
மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சுருக்குவலை கடற்றொழில் பயன்பாட்டால் மீன்களின் இனப்பெருக்கமும் அதன்
வளர்ச்சியும் பாதிப்படைகின்றது.

எனவே சட்டவிரோத கடற்றொழில்&nbsp; நடவடிக்கையை உடனடியாக நிறுத்த கடற்றொழில்த்துறை
அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றார் சின்ன
மோகன்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவி கொட்டுக்கு இலக்கான 10 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-plantation-workers-admitted-to-hospital-1786446474"></link>
            <id>https://tamilwin.com/article/10-plantation-workers-admitted-to-hospital-1786446474</id>
            <summary type="text">நோர்வூட் - அயரபிதோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 10 பேர் தோட்டத்
தொழிலாளர்கள் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் - அயரபிதோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 10 பேர் தோட்டத்
தொழிலாளர்கள் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் இன்று(11.08.2026) 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அயரபிதோட்ட பகுதியில் வழமை போன்று தேயிலை பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு
இலக்காகியுள்ளனர்.
</p><h2>
10 பேர் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடு
கலைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த குளவிகள் திடீரென தொழிலாளர்கள் மீது
தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58517cf0-8604-4a83-aa1f-7a3c500eac5d/26-6a7b02d071146.webp' /></p><p>
</p><p>
குளவிகள் கூட்டமாக தொழிலாளர்களைத் தாக்கியதில் குளவி கொட்டுக்கு
உள்ளனா 10 பேர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதகவும், மூன்று பேர் மாத்திரம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று
வருவதாகவும் ஏனையவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியதாக வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குளவி தாக்குதல் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அச்ச நிலை
ஏற்பட்டதுடன், குளவிக்கூடு அமைந்திருந்த பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை மலையகத்தின் பல்வேறு தேயிலைத் தோட்டப் பகுதிகளில் குளவி மற்றும்
தேனீக்களின் தாக்குதல்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்ற நிலையில்,
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc7cc6fc-9c9a-4f99-a2c7-fc45ccfd8113/26-6a7b02d140ad2.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையா..! இறுதி முடிவு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-drug-traffickers-receive-the-death-penalty-1786443843"></link>
            <id>https://tamilwin.com/article/will-drug-traffickers-receive-the-death-penalty-1786443843</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>

இன்றைய தினம் (11.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான முன்மொழிவு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.</p><h2>பிரச்சினையின் தீவிரத்தன்மை</h2><p>
</p><p>
இது தொடர்பாக சில தரப்பினரால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும்.

இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து விவாதிக்கும்போது, ​​சில தரப்பினரிடமிருந்து முன்மொழிவு, யோசனை வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6e07d5-3a20-46e0-a79d-0441629d65fa/26-6a7afef07e496.webp' /></p><p>
</p><p>
எனினும் அதை எப்படிச் செய்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவோ அல்லது உடன்பாடோ எட்டப்படவில்லை.</p><p>

பாதாள உலகம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இது போன்றவற்றுடன் நடைபெறும் செயல்முறை குறித்து விவாதிக்கும்போது ஒவ்வொரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு மட்டுமே இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T10:58:31+00:00</updated>
        </entry>
    </feed>
