<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-16T23:13:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து பிரதேசங்களிலும் நிர்வாகத் தீர்மானங்கள் பொறுப்புடன் எடுக்கப்பட வேண்டும்: பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-north-hospital-easten-province-1786913372"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-north-hospital-easten-province-1786913372</id>
            <summary type="text">கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும், பல மதங்களும் ஒன்றாக வாழும்
பிரதேசங்களில் நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நுண்ணுணர்வுடனும் மிகுந்த
பொறுப்புடனும் எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும், பல மதங்களும் ஒன்றாக வாழும்
பிரதேசங்களில் நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நுண்ணுணர்வுடனும் மிகுந்த
பொறுப்புடனும் எடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>கல்முனை
வடக்கு ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில்
ஊடகங்களுக்கு இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp;தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சில விதிமுறைகளும் சுற்றறிக்கைகளும் எமது
அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டவை அல்ல.</p><h2>நிர்வாகப் பிரச்சினை</h2><p> அவற்றில் காலத்திற்கேற்ற மாற்றங்கள்
தேவைப்பட்டால் அவற்றை மீளாய்வு செய்து, சட்டம், தொழில்சார் தேவைகள், மத
உரிமைகள் மற்றும் தனிநபர் மரியாதை ஆகிய அனைத்தையும் சமநிலைப்படுத்தும்
முற்போக்கானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகளையும் கலந்துரையாடல்களையும் நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.
</p><p>ஒரு நிர்வாகப் பிரச்சினையை தமிழ்–முஸ்லிம் அல்லது வேறு எந்த
சமூகங்களுக்கிடையிலான மோதலாக மாற்றுவதற்கும், அதன் மூலம் அரசாங்கத்தின் மீது
அவநம்பிக்கையை உருவாக்குவதற்கும் எவரையும் அனுமதிக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7267aae-2f3f-445b-a609-2f4673d83655/26-6a822783f33ca.webp' /></p><p>
</p><p>
இனவாதத்திற்கும் மத அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் இந்த அரசாங்கத்தில்
எந்தவித இடமும் இல்லை என்பதே எங்களது உறுதியான கொள்கையாகும்.
</p><p>
இந்த விடயத்தில் நாம் ஏற்கனவே செயல்பட ஆரம்பித்துள்ளோம். அனைத்து தரப்பினரின்
உரிமைகளையும், தொழில்சார் தேவைகளையும், தனிநபர் மரியாதையையும், சமூக
நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் முற்போக்கான, நியாயமான மற்றும் நடைமுறைக்கு
ஏற்ற தீர்வை ஏற்படுத்த தேவையான அனைத்தையும் நாம் மேற்கொள்வோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T21:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொனால்டோவின் 1,000 கோல்கள் இலக்கு.. ஓய்வு குறித்து எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cristiano-ronaldo-hints-retirement-at-end-season-1786913789"></link>
            <id>https://tamilwin.com/article/cristiano-ronaldo-hints-retirement-at-end-season-1786913789</id>
            <summary type="text">கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போதைய பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போதைய பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.</p><h2>வரலாற்றுச் சாதனை&nbsp;</h2><p> 20 ஆண்டுகளுக்கும் மேலான தனது கால்பந்து பயணத்தை நிறைவு செய்யவுள்ள 41 வயதான ரொனால்டோ, "இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கலாம், ஒரு வரலாற்றுப் பெருமையுடன் விடைபெற விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதுவரை கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளில் 976 கோல்களை அடித்துள்ள அவர், 1,000 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையை எட்ட இன்னும் 24 கோல்களே தேவைப்படுகின்றன. </p><p>சவுதி அரேபியாவின் அல் நசர் (Al-Nassr) அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் (146) அடித்த சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T21:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குறுதிகளை மீறி மக்கள் மீது வரிச்சுமை: கந்தளாயில் பேரணியுடன் கையெழுத்து வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-burden-on-the-people-rally-in-kantalai-1786909290"></link>
            <id>https://tamilwin.com/article/tax-burden-on-the-people-rally-in-kantalai-1786909290</id>
            <summary type="text">கந்தளாய் நகரில் அரசாங்கத்தின் நியாயமற்ற மற்றும் அநீதியான வரிப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் நகரில் அரசாங்கத்தின் நியாயமற்ற மற்றும் அநீதியான வரிப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் சுமைகளைக்
குறைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 'மக்கள் போராட்ட இயக்கம்'&nbsp; சார்பில் கந்தளாய் நகரில் இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டமும்
கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>போராட்டம் குறித்து மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதி தட்சில
தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில்:


"தற்போதைய ஜனாதிபதி முன்னர் வேட்பாளராக இருந்தபோது சுகாதாரம், உணவு
மற்றும் கல்விக்கான வரிகள் நாகரிகமடைந்த உலகிற்குப் பொருத்தமானவை அல்ல
என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் அவ்வரிகள் முற்றாக நீக்கப்பட்டு
பூஜ்ஜியமாக்கப்படும் என்றும் ஊடகங்கள் வாயிலாக வாக்குறுதி அளித்திருந்தார்.</p><h2>அநீதியான வரி</h2><p>
ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று
ஆட்சியில் இருக்கும் அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சுகாதாரம் மற்றும்
கல்விக்கு மட்டுமன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் தொடர்ந்து வரிகளை
அதிகரித்து வருகிறார்.</p><p>எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் மீண்டும் வரிகள் உயர்த்தப்படவுள்ளதாகச்
சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் பெரிய நிறுவனங்களுக்கும், பெரிய
தொழிலதிபர்களுக்கும், தமக்கு நெருக்கமான செல்வந்தர்களுக்கும் வரி நிவாரணங்களை
வழங்கிவிட்டு, ஏழை எளிய பொதுமக்கள் மீது பல்வேறு வரிகளைச் சுமத்தி அவர்களைத்
தொடர்ச்சியாகப் பீடித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d4113a4-e872-4454-a1bb-8677a8419035/26-6a82133d9b1c4.webp' /></p><p>
</p><p>

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'அநீதியான வரிக்கு எதிரான
வாரத்தின்' ஒரு பகுதியாகவே கந்தளாய் நகரில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோத வரி கொள்கைக்கு எதிராகப் பொதுமக்கள் தங்கள்
எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எதிர்ப்புப் பதாகையில் கையெழுத்துச்
சேகரிக்கும் நடவடிக்கைகளும் இதன்போது இடம்பெற்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரின் தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டப்பட்டது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rooster-flag-hoisted-arches-of-nallur-gate-1786908658"></link>
            <id>https://tamilwin.com/article/rooster-flag-hoisted-arches-of-nallur-gate-1786908658</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு இன்று (16)
சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>
இதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி
நாட்டப்பட்டது. </p><p>தொடர்ந்து நல்லூரன் தெற்கு மற்றும் நல்லூரன் வடக்குவாசல்
வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டன.
</p><p>
நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தின் வெளி
வீதிகள் திருவிழாக் கோலம் பூணும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு பக்தர்களின்
கவனத்தை ஈர்த்தது.
</p><p>
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் பக்தி மற்றும்
திருவிழா உணர்வுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-16T19:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கேதீச்சரத்தில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vihara-at-ketheeswaram-temple-mannar-1786904774"></link>
            <id>https://tamilwin.com/article/vihara-at-ketheeswaram-temple-mannar-1786904774</id>
            <summary type="text">திருக்கேதீச்சரத்திலும் எதிர்காலத்தில் பௌத்த விகாரை ஒன்றை
அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை
நாட்டியுள்ளனர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருக்கேதீச்சரத்திலும் எதிர்காலத்தில் பௌத்த விகாரை ஒன்றை
அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை
நாட்டியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அநுர
அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களம் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் எவரும்
இல்லாத நேரத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதி இல்லாமல் இனி எந்த
அபிவிருத்தியும் செய்ய முடியாது என பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியுள்ளனர்.
</p><p>
ஆலய நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் அரச திணைக்களம் திருட்டுத்தனமாக ஏன்
பெயர்ப்பலகை இட வேண்டும் என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p><h2>சட்டவிரோத செயற்பாடு</h2><p>

கடந்த ஆண்டுகளில் இதே போன்ற செயற்பாட்டின் மூலமே முல்லைத்தீவு குருந்தூர் மலை
ஆதிசிவன் ஐயனார் ஆலயம் மற்றும் கன்னியாய் பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு
பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு
உட்படுத்தப்படுவதற்கு தொல்லியல் திணைக்களம் அதன் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள்
நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41bfe139-91a5-45b7-82fa-6a941530a918/26-6a8209fc4d0a5.webp' /></p><p>
</p><p>
திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை
அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை
நாட்டியுள்ளனர்.
</p><p>
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தனது ஆட்சியில் இடமில்லை என கூறும் ஐனாதிபதி
அநுரகுமார திஸநாயக்காவின் பதில் என்ன, இரவோடு இரவாக பெயர்பலகை நாட்டியது
சட்டவிரோதம் இல்லையா,&nbsp; குருந்தூரில் இந்துமாத தொல்லியல் சின்னங்கள் அகற்றப்பட்டு சிங்கள பௌத்த
சின்னங்கள் இருப்பதாக கட்டுகதை ஒன்றை உருவாக்கி விகாரை அமைத்தது போன்ற
செயற்பாடுகள் எதிர் காலத்தில் திருக்கேதீச்சரத்திலும் இடம்பெறலாம் என
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:08:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்து: 12 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-in-hungary-12-polish-tourists-killed-1786903179"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-in-hungary-12-polish-tourists-killed-1786903179</id>
            <summary type="text">ஹங்கேரியின் கிழக்குப் பகுதியில் உள்ள M3 அதிவேக நெடுஞ்சாலையில் போலந்து
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹங்கேரியின் கிழக்குப் பகுதியில் உள்ள M3 அதிவேக நெடுஞ்சாலையில் போலந்து
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த பேருந்தானது&nbsp;வீதியை விட்டு விலகி
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்துடன் இந்த விபத்தில் 10
பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>விபத்து</h2><p>செர்பியாவில் இருந்து போலந்து நோக்கி பயணித்த இப்பேருந்தில் 57 பயணிகளும்
இரண்டு சாரதிகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விபத்து நடந்த இடத்திலேயே 11 பேர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 37 பேர் இலேசான காயங்களுக்கு
உள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/270fb1c1-229c-48ad-bcf5-437d327cd006/26-6a81fe0c958ea.webp' /></p><p>
</p><p>
சாரதி தூங்கியமையினாலேயே இப்பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள
நிலையில், பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் ஹங்கேரி பிரதமர் பீட்டர் மக்யார், போலந்து ஜனாதிபதி
கரோல் நவ்ரோக்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர்
தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T18:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஊடக வரலாற்றில் முதல் முறையாக அதிகளவான ஊடகர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamil-journalists-1786902750"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamil-journalists-1786902750</id>
            <summary type="text">இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் அதிக நாட்டின் பல மாவட்டங்களையும்
சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள், செல்போன்கள்
வழங்கிய வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் அதிக நாட்டின் பல மாவட்டங்களையும்
சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள், செல்போன்கள்
வழங்கிய வரலாற்று சாதனையை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் படைத்துள்ளது.
</p><p>
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்களுக்கு
இலவசமாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை
தனியார் ஹோட்டலில் இன்று 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற போதே
இலண்டனின் பிரபல தொழிலதிபரும் சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின்
நிதி அனுசரணையில் 65 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகளும் 25
ஊடகவியலாளர்களுக்கு செல்போன்களும் என சுமார் 1.5 கோடி ரூபா மதிப்புள்ள
இலத்திரனியல் உபரணங்களை வழங்கியே இந்த வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஸ்ரீகஜன், செயலாளர்
கே.ஜெயந்திரன் ஆகியோர் தலைமையில் நாட்டிய கலைமணி ஸ்ரீமதி பவானி குகப்
பிரியாவின் நெறியாள்கையில் தியாகராஜ கலைக்கோவில் மாணவிகளின் வரவேற்பு
நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலண்டனின் பிரபல
தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸ் பங்கேற்றார்.
</p><p>
சீவரட்ணம் முறேஸின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு ஆளுயர
மலர்மாலைகள்,தலைக்கிரீடம் அணிவிக்கப்ட்டும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டதுட
அவரின் சமூக சேவைகளை பாராட்டி பாராட்டுக் கவிதை காணொலியும் வெளியிடப்பட்டது.
</p><p>
அவர் தனது உரையின்போது தான் சிறு வயதில் பட்டதுன்பங்கள், வறுமையில் வாடிய தனது
தாயார் தன்னை வளர்க்க பட்ட கஷ்டங்களை மிகவும் உணர்வு பூர்வமாக
வெளிப்படுத்தினார்

சிறப்பு விருந்தினர்களாக எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டின்
பிரதம நிறைவேற்று அதிகாரியான எம்.செந்தில்நாதன், மூத்த ஊடகவியலாளரும் முரசு
பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.வித்தியாதரன், கொழும்பு தேசிய
வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.வீரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.
</p><p>
அத்துடன் முன்னாள் பிரதம ஆசிரியர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் பலரும்
பங்கேற்றிருந்த இந்நிகழ்விலேயே இலண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல
சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் நாட்டின் பல
மாவட்டங்களையும் சேர்ந்த 90 தமிழ் ,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு
மடிக்கணினிகள் மற்றும் செல்போன்கள் வழங்கப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T17:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-from-canada-drowned-in-the-ocean-1786884513"></link>
            <id>https://tamilwin.com/article/man-from-canada-drowned-in-the-ocean-1786884513</id>
            <summary type="text">கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு
நாயாற்று கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(16.08.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு
நாயாற்று கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த சம்பவம் இன்று(16.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2> 

நண்பர்களுடன் கடலுக்கு சென்ற நபர்</h2><p>யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான சதீசன் என்ற நபர், கனடாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளார்.</p><p>
இந்த நிலையில், அவர் தன்னுடைய 5 நண்பர்களுடன் முல்லைத்தீவினை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3ab7b0-4750-4f55-b015-3b53714651ce/26-6a81b25e9e16d.webp' /></p><p>
</p><p>இதன்போது, நண்பகல் அளவில் நாயாற்று பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையில், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>சடலம் மீட்பு</h2><p>அருகில் நின்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவரின் சடலம், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படும் விவகாரம்.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sheikh-hasina-extradition-case-1786901140"></link>
            <id>https://tamilwin.com/article/sheikh-hasina-extradition-case-1786901140</id>
            <summary type="text">முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவிற்கு வரமாட்டார் என்று பங்களாதேஷில் அரசு உறுதி செய்துள்ளது.

2024ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவிற்கு வரமாட்டார் என்று பங்களாதேஷில் அரசு உறுதி செய்துள்ளது.</p><p>

2024ஆம் ஆண்டு போராட்டங்களில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமரை, இந்திய அரசு அவரது நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் வரை, பிரதமர் இந்தியாவிற்கு வரமாட்டார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
</p><p>
ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தைக் கவிழ்த்த, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு அவர் அண்டை நாடான இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார்.&nbsp;</p><p>
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பங்களாதேசில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரை நாடு கடத்துமாறு பங்களாதேஷ் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.</p><h2>வெளியான தகவல்..&nbsp;</h2><p>
</p><p>
பங்களாதேஷில் ஒப்படைக்கக் கோரிய அதன் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என்று இந்தியா முன்னதாகக் கூறியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5138997e-f792-4eaa-ad7d-9ef8e8417eaf/26-6a81f529d00bf.webp' /></p><p>

கடந்த பெப்ரவரியில் பதவியேற்ற பிரதமர் தாரிக் ரஹ்மான், பங்களாதேஷ தலைவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மரபை மீறி, மலேசியா மற்றும் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
</p><p>
கடந்த வாரம் இந்திய உயர் ஆணையர் பிரதமர் ரஹ்மானை சந்தித்த பிறகு சில முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கைகள் இருந்தபோதிலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் தொடர்ச்சியான ஊடக சந்திப்புகளால் இந்த செயல்முறை தடைபட்டுள்ளதாக பங்களாதேஷ் கூறுகிறது.&nbsp;</p><p>
தனது 15 ஆண்டு கால ஆட்சியில் சர்வாதிகாரியாக இருந்ததாக விமர்சிக்கப்பட்ட ஹசீனா, சிறைத்தண்டனையை எதிர்கொண்டாலும் டிசெம்பரில் பங்களாதேஷிற்கு திரும்புவதாக இந்த மாத தொடக்கத்தில் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:38:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தளம் வாயிலாக பண மோசடியில் ஈடுபடும் கும்பல்: பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-involved-in-financial-fraud-construction-1786899800"></link>
            <id>https://tamilwin.com/article/gang-involved-in-financial-fraud-construction-1786899800</id>
            <summary type="text">கட்டுமானத் துறை சார்ந்த பொருட்களை இணையத்தளம் வாயிலாக விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஸ்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுமானத் துறை சார்ந்த பொருட்களை இணையத்தளம் வாயிலாக விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>அஸ்பெஸ்டாஸ், சீமெந்து அல்லது பிற பொருட்களைச் சந்தை விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரங்களை வெளியிட்டு முன்பதிவுகளை பெறுவது இதன் முதற்கட்டமாக அமைகின்றது. </p><p>

அவ்வாறு பெறப்படும் முன்பதிவுக்கு அமைவாக, மோசடி செய்பவர்கள் பதிவு செய்த நபர் வசிக்கும் பகுதியில் உள்ள கட்டிடப் பொருள் விற்பனையாளர்&nbsp; ஒருவர் மூலமாக குறித்த முகவரிக்கு பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்கின்றனர்.</p><h2>பொலிஸாருக்கு முறைப்பாடுகள்</h2><p> 

பொருட்கள் முகவரியைச் சென்றடைந்தவுடன், மோசடிக்காரர்கள் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு தமது வங்கிக் கணக்கிற்குப் பணத்தை உடனடியாக வைப்புச் செய்ய வைக்கின்றனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ad66aa6-4c31-4869-b4d5-3e29e7afb0de/26-6a81f10a498c6.webp' /></p><p> </p><p>

எனினும், பொருட்களைக் கொண்டு வந்த சாரதி அதற்கான பணத்தைக் கேட்கும் போதே, தாம் ஒரு மோசடிக்காரனிடம் ஏமாந்துவிட்டோம் என்பதைப் பாதிக்கப்பட்ட நபர் உணர்ந்து கொள்வதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:22:38+00:00</updated>
        </entry>
    </feed>
