<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-13T04:26:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இராணுவ தலைவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-military-leaders-warn-the-us-and-israel-1789272273"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-military-leaders-warn-the-us-and-israel-1789272273</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் இராணுவத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். </p><p>

ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி பேசுகையில், ஈரானிய இராணுவமும் ஈரானிய புரட்சிகர காவல்படையும் (IRGC) இணைந்து எத்தகைய எதிரி நடவடிக்கையையும் முறியடிக்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.</p><h2>இரும்புக் கேடயமாக செயற்படும் படைகளுக்கு இடையிலான ஒற்றுமை</h2><p> 

இரு படைகளுக்கும் இடையிலான ஒற்றுமை, நாட்டின் எதிரிகளின் சதித்திட்டங்களிலிருந்து பாதுகாக்கும் "இரும்புக் கேடயமாக" செயல்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0c9b77-db36-4653-a1e4-f6e1105deb47/26-6aa6237093946.webp' /></p><p> 

இதேவேளை, IRGC தளபதி மேஜர் ஜெனரல் அகமத் வஹீதி தெரிவிக்கையில், எதிரி நாடுகள் ஈரானின் இராணுவ திறனை குறைவாக மதிப்பிட்டு பின்னர் தங்கள் தவறை உணர்ந்து கொண்டதாகக் கூறினார்.</p><p> 

ஈரானிய இராணுவமும் IRGCயும் அமெரிக்க ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் பலத்த அடிகளைக் கொடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனமழை பெய்யக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1789272022"></link>
            <id>https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1789272022</id>
            <summary type="text">நாட்டில் இன்று பல இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 ​வடமத்திய, மத்திய, சபரகமுவ, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இன்று பல இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

</p><p> ​வடமத்திய, மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின்
சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை
பெய்யக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cf9eb9-70b0-48a9-9bb0-0f62a0436166/26-6aa61fd8eeca3.webp' /></p><p>மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை
மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்
திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

​இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களிலும் தற்காலிகமாக
வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய
ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மையப்புள்ளி! மிக் தொடர்பில் மறைக்கப்பட்ட பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-mig-deal-1789257886"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-mig-deal-1789257886</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமானக் கொள்னவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமானக் கொள்னவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் மிக் கொள்வனவு தொடர்பில் பல மறைக்கப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன.
</p><p>பாவித்த 4 மிக்-27 தாக்குதல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கும், அந்த நேரத்தில் இலங்கை விமானப்படையிடம் இருந்த 3 மிக்-27 போர் விமானங்கள் மற்றும் விமானிகளைப் பயிற்றுவிக்கும் 1 மிக்-23 விமானம் ஆகியவற்றை பழுதுபார்ப்பதற்கும் 2006 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி இலங்கை விமானப்படை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது .
</p><p></p><h2>இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம்</h2><p>இவை இரண்டு நாடுகளுக்கு இடையே நேரடியாக நடந்த ஒரு கொடுக்கல் வாங்கல் (G2G) போலக்காட்டப்பட்டுள்ளது. </p><p>உக்ரைன் அரசுக்கு சொந்தமான "உக்ரின்மாஷ்" (Ukrinmash) என்ற அரசு ஏற்றுமதி நிறுவனத்துடன் நேரடியாக நடைபெற்ற கொடுக்கல்வாங்கல் என்றே கூறப்பட்டது. </p><p>மேலும், இதை இரண்டு நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாகக் காட்டவே பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இருப்பினும், இந்த கொடுக்கல் வாங்கல் இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த ஒன்று அல்ல என்பது பின்னர் தெரியவந்திருந்தது. </p><p>கொடுப்பனவுகளும் உக்ரைன் அரசு நிறுவனமான "உக்ரின்மாஷ்" நிறுவனத்திற்குச் செய்யப்படவில்லை; மாறாக "பெல்லிமிஸா ஹோல்டிங்ஸ்" (Bellimissa Holdings) என்ற தனியார் நிறுவனத்திற்கே செலுத்தப்பட்டிருந்தது. </p><p>
 </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5b493f-8d3f-4522-bea5-388ce9f927ab/26-6aa5e8a14aabf.webp' /></p><p>கொள்முதல் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பாக நியாயமற்ற விலைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முழுமையான கொள்முதல் மற்றும் பழுதுபார்ப்பிற்காக இலங்கை செலுத்திய மொத்தத் தொகை 14.67 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.</p><p>விசாரணைகளில் இது 15.66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்தது. 


4 மிக் விமானங்கள், ஒரு விமானம் 2.462 மில்லியன் டொலர்கள் என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளன. </p><p>2006 இல் இந்த 4 விமானங்கள் வாங்கப்பட்ட அதே கையிருப்பிலிருந்தே (Stock), 2000 ஆம் ஆண்டு மே 25 மற்றும் அக்டோபர் 24 ஆகிய திகதிகளில் பயன்படுத்தப்பட்ட 6 மிக் விமானங்களும், மேலே குறிப்பிடப்பட்ட பயிற்சி விமானமும் வாங்கப்பட்டன. </p><p>2000 ஆம் ஆண்டில் இந்த விமானங்களை வாங்கும் போது அதன் விலை: மே 25 இல் வாங்கும் போது 1.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அக்டோபர் 24 இல் வாங்கும் போது 1.6 மில்லியன் டொலர்கள். மே 25 இல் 4 விமானங்களும், அக்டோபர் 24 இல் 2 விமானங்களும் வாங்கப்பட்டன.</p><h2>
விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்</h2><p>ஆனால், 2000 ஆம் ஆண்டில் விமானங்கள் வாங்கப்பட்ட போது இருந்த அதே கையிருப்பில் எஞ்சியிருந்த 4 விமானங்கள் தான் 2006 ஆம் ஆண்டில் வாங்கப்படுகின்றன. </p><p>அப்படியென்றால், 2000 ஆம் ஆண்டில் வாங்கப்படாமல் 6 ஆண்டுகள் பழமையான இந்த 4 மிக் போர் விமானங்களும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விமானம் 2.462 மில்லியன் டொலர்கள் என இரட்டிப்பு விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. </p><p>இது எப்படி நடந்தது?

2000 ஆம் ஆண்டில் 6 விமானங்களை வாங்கச் சென்ற போது, விமானங்களைத் தேர்வு செய்யும் தரப் பரிசோதனைகளில் இந்த 4 விமானங்களும் நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5abe18d-dc27-47b6-91bd-ec275aa26812/26-6aa5e8a1f3c8d.webp' /></p><p>அந்த 4 விமானங்கள் தான், 2006 ஆம் ஆண்டில் அதிக விலை கொடுத்து இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவும் தற்போது வெளிடைவாகியுள்ளது.
</p><p>
விமானிகளைப் பயிற்றுவிக்கும் மிக்-23 என்ற விமானம் 2000 ஆம் ஆண்டில் 900,000 அமெரிக்க டொலர்களுக்கு (9 லட்சம் டொலர்) வாங்கப்பட்டது. </p><p>ஆனால், புதிய ஒப்பந்தத்தின் பின்னர் இந்த விமானத்தைப் பழுதுபார்க்க செலவிடப்பட்ட தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள். விமானத்தை வாங்கியது 0.9 மில்லியன் டொலருக்கு, ஆனால் அதை பழுதுபார்க்க 1.1 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.</p><p>ஒரு புதிய விமானத்தை வாங்குவதை விட, பழைய விமானத்தைப் பழுதுபார்க்க அதிக பணம் செலவிடப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல தகவல்கள் இன்னும் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T03:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-colombo-residents-arrested-at-the-airport-1789268954"></link>
            <id>https://tamilwin.com/article/two-colombo-residents-arrested-at-the-airport-1789268954</id>
            <summary type="text">சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கொழும்பு பகுதியில் வசிக்கும் 42 வயதான வணிகர்கள் எனக்கூறப்படும் இரு சந்தேகநபர்களும் நேற்று இரவு (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>விமான நிலைய சுங்க அதிகாரிகளால்&nbsp;விசாரணை</h2><p>

அறிவிப்பின்றி அவர்கள் சிகரெட் பொதியை நாட்டிற்குள் கொண்டு வந்து வெளியேற முயன்றபோது, ​​சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64b85470-f8e4-4fa8-8d8b-b2dc6fd7123b/26-6aa6186055323.webp' /></p><p>
</p><p>
4 சூட்கேஸ்களில், 106,600 வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கொண்ட 533 அட்டைப் பெட்டிகள் இவ்வாறு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சிகரெட்டின் மதிப்பு சுமார் ரூ. 159,990,000 என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இரு சந்தேகநபர்களும் காவலில் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T03:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையை உலுக்கிய வன்முறைகளின் பின்னணியில் யார்.....! மூளையாக செற்பட்ட நபர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099"></link>
            <id>https://tamilwin.com/article/information-revealed-about-crimes-in-dehiwala-1789205099</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதிகளான தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெற்ற குற்றச்செயல்களின் பின்னணியில் செயற்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

குற்ற செயல்களில் மூளையாகச் செயற்பட்டவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதிவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><h2><b>தெஹிவளை தாக்குதல்</b></h2><p> 

தற்போது வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825c92c3-b244-4e18-82d4-15bab348c8f8/26-6aa51f4f8e104.webp' /></p><p>நேற்று அதிகாலை தெஹிவளை - கௌடான, சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், இரு மாணவர்கள் குறித்த வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் அவர்களின் தந்தையின் கால்கள் காயமடைந்தன.</p><p>காயமடைந்தவரின் சகோதரன், படோவிட்ட அஸங்க என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h3><b>
கைக்குண்டுத் தாக்குதல்</b></h3><p>அதற்கமைய, இந்த கைக்குண்டுத் தாக்குதலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்மள்ளி என்பவர் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1318c143-7470-43a0-82cf-97f65e7fc22a/26-6aa522f512073.webp' /></p><p>கடத்தலுடன் தொடர்புடைய குறித்த நபரின் வீடு மீதே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வீடு மாறியமையால் அதற்கு அருகில் இருந்த சகோதரரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபருக்கு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-13T03:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் புதிய மோசடி - சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-smart-key-thefts-at-hambantota-port-1789267408"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-smart-key-thefts-at-hambantota-port-1789267408</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை' (Smart keys) திருடி விற்பனை செய்த சட்டவிரோத குழுவைச் சேர்ந்த துறைமுக ஊழியர் ஒருவரும் தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>விசாரணையில்&nbsp;தொழிலதிபரும் கைது&nbsp;</h2><p>வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை திருடிய துறைமுக ஊழியரை துறைமுக பாதுகாப்புப் பிரிவினர் அடையாளம் கண்டு நடத்தப்பட்ட விசாரணையில் மற்றுமொரு தொழிலதிபரும் சிக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04dab22-8cd3-4e20-a2e2-08417f270be2/26-6aa6132667801.webp' /></p><p>அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த ஊழியர், குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு சாவியை 6000 ரூபாய் முதல் விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>
அத்துடன் பல மாதங்களாகச் சுமார் 45 ஸ்மார்ட் சாவிகளை விற்பனை செய்து அந்த ஊழியர் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து குருநாகல் பகுதியை சேர்ந்த தொழிலதிபரை பொலிஸார் கைது செய்து அவரிடமிருந்த ஸ்மார்ட் சாவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T03:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றினை திடீரென சுற்றிவளைத்த சிஐடியினர்..! சிக்கிய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-was-arrested-with-hand-gun-1789266104"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-was-arrested-with-hand-gun-1789266104</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன்&amp;nbsp;சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப்பிரிவு கைது செய்துள்ளது. இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன்&nbsp;சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப்பிரிவு கைது செய்துள்ளது. </p><p>இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கி, ஒரு வெடிக்காத கையெறி குண்டு மற்றும் 06 BMG ரக தோட்டாக்கள் ஆகியவற்றுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை</h2><p>குற்றப்புலனாய்வுப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின்படி, கந்தகெதரவில் உள்ள வலக்கும்புரமுல்ல பகுதியில் நேற்று (12) வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7a17742-9e5e-4d67-873c-2a3ef10ab90a/26-6aa60cd49544d.webp' />&nbsp;</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், வலக்கும்புரமுல்ல, குளியாபிட்டியவைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T02:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மோசமான நிலையில் இலட்சக்கணக்கான வீடுகள் - வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/40-year-old-housing-complexes-in-colombo-1789264853"></link>
            <id>https://tamilwin.com/article/40-year-old-housing-complexes-in-colombo-1789264853</id>
            <summary type="text">கொழும்பு நகர எல்லைக்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வகிக்கப்பட்ட&amp;nbsp; மோசமான நிலையில் உள்ள வீடமைப்புத் திட்டங்களைப் புனரமைப்பதற்கான வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகர எல்லைக்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வகிக்கப்பட்ட&nbsp; மோசமான நிலையில் உள்ள வீடமைப்புத் திட்டங்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக&nbsp;பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் தகவலின்படி, கொழும்பிலுள்ள வீடமைப்புத் திட்டங்களில் 40 சதவீதமானவை 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய வீடமைப்பு திட்டங்கள்</h2><p>இதன்படி, கொழும்பு நகர எல்லைக்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும் 96 வீடமைப்புத் திட்டங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94698ae0-8cc3-47ef-aeda-9be14a76bf4d/26-6aa606f9bd4aa.webp' /></p><p>
</p><p>தற்போது அவற்றில் மோசமான நிலையில் உள்ள வீடமைப்புத் திட்டங்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், தற்போதுள்ள சில வீடமைப்புத் திட்டங்களுக்குப் பதிலாகப் புதிய வீடமைப்புத் திட்டங்களைக் நிர்மாணிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T02:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்க திரைமறைவில் நடைபெறும் டீல்! பிரபல தொழிலதிபர் ஒருவரும் சம்பந்தமாம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133</id>
            <summary type="text">இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் இப்போது அந்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. </p><p>ஆனால் இப்போது அந்தப் பெயர் கேட்பதில்லை. தேர்தல் காலங்களில் அந்தப் பெயர் அதிகமாகக் கேட்கும். அவர்தான் பசில் ராஜபக்ச.
அவர் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p> ஆனால் அவர் அந்த வழக்குகளுக்கு முன்னிலையாகக் கூட இலங்கைக்கு வரவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதாகவே கூறப்படுகிறது. சில வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உடல்நலக் குறைவு என அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.</p><h2>
</h2><p></p><h2>தொழிலதிபருடனான டீல்</h2><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் சம்பவங்களில் கூட அவர் இலங்கைக்கு வரவில்லை. முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச என்ன செய்கிறார்? </p><p>இலங்கையிலிருந்த பிரபல நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் பின்னணியில், பசில் ராஜபக்சவை ஏன் கைது செய்யவில்லை? அவரை ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை? போன்ற விடயங்களும் அரசியல் மேடைகளிலும் திரை மறைவிலும் பேசப்பட்டு வருகின்றன.</p><p>
புதிய தகவலின்படி, பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் "டீல்" (Deal) ஒன்றைச் செய்துகொண்டுள்ளதாகப் பேசப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e398dff-20d8-4a4c-a974-42c34e9c4867/26-6aa5f54f84faa.webp' /></p><p>தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், ஒரு டீல் மூலமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் மேடைகளின் திரை மறைவில் பேசப்படுகிறது.
</p><p>பொதுவாக எப்போதும் பல்வேறு டீல்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த டீல் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. </p><p>அந்தத் தொழிலதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் தொடர்புகளைப் பேணி வருபவர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>எப்படியோ, பசில் ராஜபக்ச அவருடன் ஒரு டீல் போட்டுக்கொண்டு, தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T01:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாதம் 2000 ரூபா வாடகையில் தங்கியிருக்கும் 111 நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monthly-2000-rupees-rent-for-111-mps-1789261809"></link>
            <id>https://tamilwin.com/article/monthly-2000-rupees-rent-for-111-mps-1789261809</id>
            <summary type="text">தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 111 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 2,000 ரூபா வாடகை அடிப்படையில் வீடுகள் ஒது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 111 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 2,000 ரூபா வாடகை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p>கோட்டே, மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடமைப்புத் தொகுதியில் உள்ள 111 வீடுகளே இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன.</p><h2>மாதாந்த வாடகை</h2><p>
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உதவிப் பொதுச் செயலாளரும் தகவல் அதிகாரியுமான ஹன்ஸ அபேரத்ன இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425a990f-5aa6-48e8-b20a-ad18187ea195/26-6aa5f7f3346f9.webp' /></p><p>
</p><p>10ஆவது நாடாளுமன்றத்தின் 4 அமைச்சர்கள், 9 பிரதி அமைச்சர்கள் மற்றும் 98 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் மாதாந்த வாடகையாக 2,000 ரூபா மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
</p><p>தற்போதைய நிலையில் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய வாடகை நிலுவைத் தொகை எதுவுமில்லை.
மாதிவெல வீடமைப்புத் தொகுதி தொடர்பில் 10ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தனியாக வீட்டு வாடகைப்படி எதுவும் வழங்கப்படவில்லை.</p><h2>வீடுகளை பெற்றுள்ளவர்கள்</h2><p>
</p><p>மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் கே. வி. சமந்த வித்யாரத்ன, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க ஆகியோர் இவ்வாறு வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.</p><p>
வசந்த பியதிஸ்ஸ, நலின் ஹேவாகே, கமகேதர திசாநாயக்க, நாமால் சுதர்ஷன, ஆர். எம். ஜெயவர்தன, ரத்ன கமகே, அருண் ஹேமச்சந்திர, வி. பி. சரத் மற்றும் நாமால் கருணாரத்ன உள்ளிட்ட பலர் வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
</p><p>ஆளும்கட்சி உறுப்பினர்கள் தவிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிவஞானம் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், இராமநாதன் அர்ச்சுனா, பழனி திக்காம்பரம், வி. எஸ். இராதாகிருஷ்ணன், ரிஷாட் பதியுதீன், எச். எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, காதர் மஸ்தான், இம்ரான் மஹ்ரூஃப், சாமர சம்பத் தசநாயக்க, தயாசிரி ஜெயசேகர, ஜே. சி. அலவத்துவல, ரொஹான பண்டார, திலீப் வேதஆரச்சி, நலின் பண்டார, கின்ஸ் நெல்சன், கவிந்த ஜெயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, ரோஹிணி குமாரி விஜேரத்ன உள்ளிட்ட பலரும் இவ்வீடுகளைப் பெற்றுள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T01:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 ஆண்டுகளை கடந்த வீடுகள்… கொழும்பில் வருகிறது அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/housing-construction-and-water-supply-1789258610"></link>
            <id>https://tamilwin.com/article/housing-construction-and-water-supply-1789258610</id>
            <summary type="text">கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில்
100-க்கு 40 வீடுகள் 40 வருடங்களுக்கும் மேல் பழமையானவை
என வீடமைப்பு, நிர்மாணத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில்
100-க்கு 40 வீடுகள் 40 வருடங்களுக்கும் மேல் பழமையானவை
என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பு மாநகர எல்லைக்குள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால்
நிர்வகிக்கப்படும் 96 அடுக்குமாடி வீட்டுத்திட்ட வளாகங்கள் காணப்படுவதாக பிரதி
அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.</p><h2>அடுக்குமாடி குடியிருப்பு</h2><p>
</p><p>
இதன்படி, மோசமான நிலையில் உள்ள இவ்வாறான வீட்டுத்திட்ட வளாகங்களை
புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்
கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b114a6a1-6268-4082-b75a-2f3d08b50eba/26-6aa5edb14a583.webp' /></p><p>

மேலும், தற்போதுள்ள சில பழைய வீட்டுத்திட்ட வளாகங்களுக்குப் பதிலாக புதிய
வீடுகளை நிர்மாணிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி
அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:36:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவழ்ந்து வந்த மகிந்த - தலைமறைவான கருணா! அநுரவிற்கு பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-holds-rally-in-anuradhapura-1789240676"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-holds-rally-in-anuradhapura-1789240676</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார். </p><p>உடல்நலக் குறைவு காரணமாக அவர் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், உதவியாளர்களின் உதவியுடன் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை முன்னிறுத்தியே மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் பங்கேற்றதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதேவேளை, கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாக செயற்பட்ட கருணா, பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இந்தக் கூட்ட மேடையில் காணப்படவில்லை.</p><p>அதற்கு பதிலாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த மேடையை அலங்கரித்தார்</p><p>
</p><p>
மேலும், ராஜபக்ச ஆட்சிக்காலம் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கடந்தகால யுத்தம் தொடர்பான அரசியல் விவகாரங்கள், அந்தக் குடும்பத்தின் தற்போதைய அரசியல் செல்வாக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ymh_aupQIR4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் BRICS-ல் வரலாற்று உடன்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/agreement-on-joint-declaration-at-brics-summit-1789257951"></link>
            <id>https://tamilwin.com/article/agreement-on-joint-declaration-at-brics-summit-1789257951</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், புதுடெல்லியில் நடைபெற்று வரும்
பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், புதுடெல்லியில் நடைபெற்று வரும்
பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் கூட்டுப் பிரகடனமொன்றை வெளியிடுவதற்கு
உறுப்பு நாடுகள் உடன்பாட்டை எட்டியுள்ளன.</p><p>

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில் ரஷ்ய
ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங், ஈரானிய ஜனாதிபதி
மசூத் பெசெஷ்கியான் மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உள்ளிட்ட
பல உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.</p><h2>மோதல் நிலைமை</h2><p>
</p><p>
மாநாட்டின் தொடக்க உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய
தீர்மானங்களை எடுக்கும் தளங்களில் வளரும் நாடுகளுக்கும் சமமான வாய்ப்புகள்
வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மறுசீரமைப்பை இனிமேலும்
தாமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4ddc51-1e1a-4f06-b318-85b958c3a21e/26-6aa5ea30756ba.webp' /></p><p>

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய உறுப்பு நாடுகளுக்கிடையில் மத்திய
கிழக்கு விவகாரம் தொடர்பில் முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும், இந்தியாவின்
தீவிர இராஜதந்திர முயற்சிகள் காரணமாகவே இந்த கூட்டுப் பிரகடனத்திற்கான
இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
எந்தவொரு தனிப்பட்ட நாட்டின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், ஒருதரப்பு
இராணுவ ஆக்கிரமிப்புகளைக் கண்டிக்கும் வகையில் இந்த கூட்டுப் பிரகடனம்
அமையவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளில்
சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், பிரிக்ஸ் அமைப்பின் உலகளாவிய செல்வாக்கை
அதிகரிக்கவும் தலைவர்கள் இதன்போது முக்கிய கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T00:11:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-chemmani-maas-grave-1789254680"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-chemmani-maas-grave-1789254680</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம்
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம்
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில்
யாழ்ப்பாணத்தில் இன்று(13) ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்றுப்
பொருள்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள்
குறித்து உள்நாட்டு விசாரணைகளில் நம்பகத்தன்மை இருக்காது எனவும், எனவே சர்வதேச
மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியே
இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.</p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>
</p><p>
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்துக்கு அருகில் இன்று காலை
ஆரம்பமாகும் இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் ஊடாகச் சென்று கிட்டு பூங்கா
பகுதியைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் நிறைவடையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58d41da5-1500-480d-9368-814a2d546961/26-6aa5e0e258bc9.webp' /></p><p>
</p><p>
இந்தப் பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய பேரவையினாரால் நேற்று துண்டுப்
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள்
கலந்துகொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை
வழங்கிவைத்து பேரணிக்கு ஆதரவு கோரினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T23:31:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள்! நிழல் உலகம் குறித்து அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-underworld-groups-operating-in-sri-lanka-1789253206"></link>
            <id>https://tamilwin.com/article/major-underworld-groups-operating-in-sri-lanka-1789253206</id>
            <summary type="text">இலங்கையில் செயற்படும் முக்கிய நிழல் உலகக்குழுக்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் செயற்படும் முக்கிய நிழல் உலகக்குழுக்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,</p><h2>நிழல் உலகக்குழுக்கள்</h2><p>
</p><p>
அண்மைக்காலமாக இலங்கையின் முக்கிய நிழல் உலகக்குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் கொலை மற்றும் கப்பம் போன்ற குற்றச் செயல்களை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23617885-a29d-4ab9-ac84-afb048390453/26-6aa5d94b51f06.webp' /></p><p>
</p><p>
அதற்குத் தேவையான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை படகுகள் வழியாக வெளிநாடுகளில் இருந்து தருவித்துக் கொள்வதாக பொலிசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது.
</p><p>
கடந்த காலங்களில் போதைப் பொருட்களுடன் பெருமளவு ஆயுதங்களும் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T22:59:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள முக்கிய பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kamzy-gunaratnam-named-norway-s-transport-minister-1789242707"></link>
            <id>https://tamilwin.com/article/kamzy-gunaratnam-named-norway-s-transport-minister-1789242707</id>
            <summary type="text">இலங்கை உள்நாட்டுப் போரின்போது தனது மூன்று வயதில் அகதியாக நோர்வே சென்ற கம்சி குணரத்னம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உள்நாட்டுப் போரின்போது தனது மூன்று வயதில் அகதியாக நோர்வே சென்ற கம்சி குணரத்னம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

38 வயதான கம்சி குணரத்னம், நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராவார். </p><p>ஒஸ்லோவை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அன்றைய தினமே பதவியை பொறுப்பேற்றுள்ளார்.</p><h2>போக்குவரத்து அமைச்சர்</h2><p>

இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல்&nbsp; போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த ஜோன்-இவர் நிகார்டை பதிலாக கம்சி குணரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d2287bd-4a69-4543-b69d-d6a46729340d/26-6aa5b13b3df2d.webp' /></p><p>
கம்சி குணரத்னத்தின் பொறுப்பின் கீழ் நோர்வேயின் வீதிகள், தொடருந்து, பொது போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வருகின்றன.

அவரது நியமனம் தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>கம்சி குணரத்னத்திடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதுடன், அவர் பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறார். </p><p>கடந்த சில தசாப்தங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது நபர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், நாடாளுமன்றத்தின் போக்குவரத்துக் குழுவில் 11 மாதங்கள் பணியாற்றிய அனுபவத்தைத் தவிர, போக்குவரத்துத் துறையில் அவருக்கு விரிவான அனுபவம் இல்லை என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2>ஈழத்தமிழர்</h2><p>கம்சி குணரத்னம் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிய அவரது குடும்பம், 1991ஆம் ஆண்டு நோர்வேக்கு சென்றது.
</p><p>
அவர்கள் ஆரம்பத்தில் நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள ஹம்மர்ஃபெஸ்ட் நகரில் குடியேறிய பின்னர், ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரோருட்டலன் பகுதியில் கம்சி குணரத்னம் வளர்ந்தார்.
</p><p>
அவர் ஒஸ்லோ நகர சபையில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் பிரதி மேயராகவும் பதவி வகித்துள்ளார்.</p><p>

2021ஆம் ஆண்டு முதல் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் அவர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9be9014-1359-458e-80fe-806f09fedac4/26-6aa5b13be7e01.webp' /></p><p>
</p><p>
கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் நாடாளுமன்றத்தின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளுக்கான நிலைக்குழுவின் முதலாவது பிரதி தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
</p><p>
போரின் நினைவுகளை பகிர்ந்த கம்சி

இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச் சென்ற தனது அனுபவங்களை கம்சி குணரத்னம் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி மாதம் நோர்வே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் தான் பிறந்ததாகவும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்த தனது தாய் பாதுகாப்புக்காக பதுங்கியதாகவும் நினைவுகூர்ந்திருந்தார்.
</p><p>
அத்துடன், யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p><p><br><br><b><i>You may Like This..</i></b></p><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nukUTGcmH58" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br><br><br><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-12T22:42:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் மீண்டும் புத்தர் சிலை! சந்தபோதி தேரரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vedukkunari-hill-temple-1789236169"></link>
            <id>https://tamilwin.com/article/vedukkunari-hill-temple-1789236169</id>
            <summary type="text">வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில், சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (12) காலை சென்றிருந்தனர்.</p><h2>&nbsp;பௌத்த வழிபாட்டுத் தலம்</h2><p>

அங்கு சென்ற குழுவினர், சூலம் அமைந்திருந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் பிரித் ஓதி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.</p><p>

இதன்போது, சைவ மக்கள் மலை உச்சிக்கு செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71c921f-339d-43a4-82d2-1d53af89a763/26-6aa595c40fb51.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் வெடுக்குநாறிமலையில் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், அந்த சிலை தற்போது தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், அந்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடு 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் போலியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளில் ஈடுபடுவதாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T22:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து நாமல் ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-turns-to-mandela-s-words-in-message-1789233170"></link>
            <id>https://tamilwin.com/article/namal-turns-to-mandela-s-words-in-message-1789233170</id>
            <summary type="text">சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
</p><p>அநுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் "ஜன சதன" பேரணியில் கலந்துகொண்டுள்ள ஆதரவாளர்களுக்கு அவர் இவ்வாறு செய்தி அனுப்பி வைத்துள்ளார்.</p><h2>அரசியல் அழுத்தங்கள்</h2><p>
</p><p>அரசாங்கத்தின் அரசியல் அழுத்தங்களுக்குத் தாம் ஒருபோதும் பணியப்போவதில்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb62c33-f760-40b2-8dcc-59333f3268df/26-6aa58813dae07.webp' /></p><p>
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள இந்தச் செய்தியில், தமது ஆதரவாளர்களின் ஒற்றுமை மற்றும் ஆதரவுக்கு நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். </p><p>
அத்துடன் அநுராதபுர பேரணியானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் பயணத்தில் ஒரு "தீர்மானமிக்க புதிய தொடக்கம்" என்றும் அவர் வர்ணித்துள்ளார்.</p><p> 
"கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து நான் உங்களைப் பார்க்கிறேன். இங்கிருந்து, நீங்கள் எனக்குக் காட்டும் சகோதரத்துவத்தின் கதகதப்பை என்னால் உணர முடிகிறது" என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><h2>கடுமையான விமர்சனம்</h2><p>
</p><p>தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின், "கடினமான சூழ்நிலைகள் சில மனிதர்களை உடைத்தெறிகின்றன; ஆனால் சிலரை உருவாக்குகின்றன" என்ற வார்த்தைகளை நாமல் மேற்கோள் காட்டியுள்ளார்.
</p><p>சவால்கள் தமது அரசியல் இயக்கத்தைப் பலப்படுத்தியுள்ளதாகவும், துன்பங்களை எதிர்கொள்ளும்போது மேலும் பலமடைவதற்குக் கற்றுக்கொடுத்தவர் தனது தந்தை என குறிப்பிட்டுள்ளார். </p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5f7f6f3-4040-4a75-a9e2-3b5722cc9e4e/26-6aa59511e7403.webp' /></p><p>
</p><p>மேலும், வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச் சுமையினால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், விவசாயிகள்,&nbsp; கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அரசாங்கம் அரச விசாரணை நிறுவனங்களை அரசியல்மயமாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
 அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமாக விசாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆதரவாளர்களுக்கு கோரிக்கை</h2><p> </p><p>அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மாகாண சபை தேர்தல்கள் தாமதமடைவது மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் இல்லாமை குறித்தும் அவர் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da2e53cb-87ba-4388-abfd-f0ab9182ac2f/26-6aa5951104d5c.webp' /></p><p>
</p><p>தமது செய்தியின் நிறைவில், அரசாங்கத்தின் "அரசியல் அதிகாரத்திற்கு" தாம் சரணடையப் போவதில்லை என்றும், தாம் அஞ்சப்போவதில்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>"எமது மன உறுதியை சிறைவைக்க முடியாது" எனக் குறிப்பிட்ட அவர், சட்டத்திற்கு மதிப்பளித்து, அமைதியாகவும் ஒழுக்கத்துடனும் செயற்படுமாறு ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You May Like This..</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/H-ZfRTsra7M" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><hr><p><br></p><hr><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T22:30:26+00:00</updated>
        </entry>
    </feed>
