<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-13T20:30:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் கவனத்தை ஈர்க்கும் ஹோர்முஸ் – ஈரானின் அதிரடி நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-unlikely-to-give-up-control-strait-of-hormuz-1789329532"></link>
            <id>https://tamilwin.com/article/iran-unlikely-to-give-up-control-strait-of-hormuz-1789329532</id>
            <summary type="text">ஈரான் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான நிபுணரும், முன்னாள் அமெரிக்க இராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான நிபுணரும், முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியுமான அலன் ஐர் தெரிவித்துள்ளார்.</p><p>

மத்திய கிழக்கு நிறுவகத்தின் உறுப்பினரான அலன் ஐர், அல் ஜசீராவிடம் கருத்து தெரிவிக்கையில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் தனது முக்கிய மூலோபாய தடுப்பு நடவடிக்கையாகக் கருதத் தொடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்குதல்களைத் தடுப்பதே ஈரான் தலைமையின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அதைச் செய்வதற்கான ஒரே வழியாகவே நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் பார்க்கிறது. </p><p>எனவே, பேச்சுவார்த்தையில் விட்டுக்கொடுக்கக்கூடிய ஒரு விடயமாக அதை ஈரான் கருதாது” என அலன் ஐர் தெரிவித்துள்ளார்.</p><p>

உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த விரும்பினால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் குறுகிய காலத்திலாவது ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஒரு நடைமுறை நிலையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b476c1e-a675-4c7d-843e-9f2b924bf70d/26-6aa7007ee0a2b.webp' /></p><p>
</p><p>
மேலும், இராஜதந்திர நடவடிக்கைகள் தற்போது வாஷிங்டனில் இருந்து விலகி வளைகுடா நாடுகள் மற்றும் ஈராக்கை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அலன் ஐர் தெரிவித்துள்ளார்.</p><p>

தேவையான அளவிலான இராஜதந்திர நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமெரிக்கா “விருப்பமும் திறனும் அற்ற நிலையில் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:03:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 21 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - அம்பலமான ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/joseph-pararajasingham-death-1789324601"></link>
            <id>https://tamilwin.com/article/joseph-pararajasingham-death-1789324601</id>
            <summary type="text">2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை வெளிவராததாகக் கூறப்படும் பல்வேறு தகவல்களை ஊடகவியலாளர் நீராஜ் டேவிட் வெளியிட்டுள்ளார்.</p><p>

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி நடைபெற்ற நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம், நற்கருணை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
</p><p>
இந்தப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், வழிபாட்டுத் தலத்தையே இலக்காகத் தேர்ந்தெடுத்ததன் ஊடாக பொதுமக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், இந்தப் படுகொலைக்கு கருணா குழுவினர் மாத்திரமே காரணம் என பொதுவாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தமது தகவல்களின் அடிப்படையில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் தொடர்புபட்டிருந்ததாக நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, கருணா குழு, ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் மற்றும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழு இதில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தேவாலயத்தின் வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் நள்ளிரவுத் திருப்பலி நடைபெறும் நேரம் உள்ளிட்ட விடயங்களை அறிந்துகொள்வதற்காக கத்தோலிக்க பின்னணியைக் கொண்ட மூவர் அந்தக் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்தப் படுகொலைக்கான தயாரிப்புகள் மற்றும் அதில் பங்கேற்றதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பில், அக்குழுவில் பணியாற்றிய ஒருவர் தற்போது வெளிநாட்டில் இருந்து தகவல்களை வழங்கியுள்ளதாகவும் நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தப் படுகொலை தொடர்பான மேலும் பல நேரடி அனுபவங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் வெளியிடவுள்ளதாகவும் நீரஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துவருகின்றது உண்மைகள் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mf5NlT3f33E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T18:57:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை தட்டிச் சென்ற இந்திய மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-vs-sri-lanka-live-womens-asia-cup-2026-final-1789322581"></link>
            <id>https://tamilwin.com/article/india-vs-sri-lanka-live-womens-asia-cup-2026-final-1789322581</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

துபாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.</p><p>

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.</p><h2>&nbsp;இந்திய அணி</h2><p>

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.</p><p>

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைச்சதங்களைப் பதிவு செய்தனர்.

ஷபாலி வர்மா 39 பந்துகளில் 68 ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a3f0703-5e7b-4fc6-8324-a0aeb92df66d/26-6aa6e7f3d973a.webp' /></p><p> </p><p>இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 129 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து 184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தினர்.</p><p>

இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளிகளில் வீழ்த்தப்பட்ட நிலையில், இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீ சரணி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><h2>ஆசியக் கிண்ண வரலாறு</h2><p>
</p><p>
இதன் காரணமாக இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் போனதுடன், 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

இதன் மூலம் மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
</p><p>
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்திருந்த இந்திய அணிக்கு, இந்த வெற்றி குறிப்பிடத்தக்க மீள்வெற்றியாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4acad18-cffd-47f9-a374-2edfc989f2df/26-6aa6e7f48ebec.webp' /></p><p>

மேலும், இறுதிப் போட்டியில் 68 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்த ஷபாலி வர்மா, மகளிர் T20 ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிவேக அரைச்சதத்தை பதிவு செய்தார். அவர் வெறும் 24 பந்துகளில் அரைச்சதத்தை எட்டினார்.
</p><p>
அதிரடியான துடுப்பாட்டம் மற்றும் சிறப்பான பந்துவீச்சுடன் இலங்கையை வீழ்த்திய இந்திய மகளிர் அணி, ஆசியக் கிண்ணத்தை கம்பீரமாகக் கைப்பற்றியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T18:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களின் நிலைமை மோசம்! ஆபத்தை தடுக்க முடியாத கையறு நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் எனத் தெரிவித்துள்ளார் .</p><p>லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்தோடு, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>அரச வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி குற்றம் செய்திருந்தால் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மேலும், நியாயமான கைதுகளை தாம் வரவேற்பதாகவும், பக்கச்சார்பான பழிவாங்கும் கைதுகள் இடம்பெறுமான இருந்தால் நிச்சயமாக எதிர்த்து நிற்போம் எனவும் அவர் கூறினார்.</p><p>மேலும், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், ஆபத்துகளைத் தடுப்பதில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்தும் ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BbNQPnS1qrA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமன் மோதல்களில் ஒரே மாதத்தில் 1,500க்கும் அதிகமான வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1500-soldiers-killed-yemen-conflicts-single-month-1789318534"></link>
            <id>https://tamilwin.com/article/1500-soldiers-killed-yemen-conflicts-single-month-1789318534</id>
            <summary type="text">ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாட்டின்
மேற்கு கடலோரப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில், கடந்த ஒரு மாத
காலத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாட்டின்
மேற்கு கடலோரப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில், கடந்த ஒரு மாத
காலத்தில் மாத்திரம் இருதரப்பையும் சேர்ந்த 1,500 க்கும் அதிகமான போர்
வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
கடந்த ஒகஸ்ட் 9 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரையிலான
காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில், அரசாங்க ஆதரவு தேசிய எதிர்ப்புப்
படையைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 1,500 பேர்
காயமடைந்துள்ளதாக அல்ஜும்ஹூரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>1,500க்கும் வீரர்கள் பலி</h2><p>
</p><p>
இதேவேளை, இதே காலப்பகுதியில் 1,000 க்கும் மேற்பட்ட ஹூதி கிளர்ச்சியாளர்கள்
கொல்லப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9755f26b-2eb3-40f7-9867-122e7ac1a0b6/26-6aa6dbd00b449.webp' /></p><p>
</p><p>
இருப்பினும் இச்சேத விபரங்களை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என
தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் தெற்கு மற்றும்
வடக்கு பிராந்தியங்களில் உள்ள முக்கிய முகாம்களைக் கைப்பற்றும் நோக்கில்
ஹூதிகள் முன்னேறி வரும் நிலையில், அங்கு தொடர்ந்தும் தீவிர மோதல்கள்
இடம்பெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் மூலம் வெளிப்பட்ட பிரிக்ஸ் அமைப்பின் எல்லைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/limits-brics-grouping-revealed-iran-conflict-1789319311"></link>
            <id>https://tamilwin.com/article/limits-brics-grouping-revealed-iran-conflict-1789319311</id>
            <summary type="text">புதுடில்லியில் நிறைவடைந்த பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பொருளாதார
ஒத்துழைப்பு மற்றும் அமைப்பின் விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்ட
போதிலும், அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுடில்லியில் நிறைவடைந்த பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பொருளாதார
ஒத்துழைப்பு மற்றும் அமைப்பின் விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்ட
போதிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்டு வரும் போரைக்
கண்டித்து நேரடி அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமை அமைப்பின் புவிசார்
அரசியல் எல்லைகளை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

11 உறுப்பு நாடுகளையும் 10 பங்களிப்பு நாடுகளையும் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில்,
ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
</p><p>
எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்தியப் போட்டியும் பாதுகாப்பு
குறித்த மாறுபட்ட நிலைப்பாடுகளும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு
எதிராக அமைப்பாக இணைந்து குரல் கொடுப்பதற்குப் பெரும் தடையாக அமைந்துள்ளன.</p><h2>இராணுவ மோதல்</h2><p>
</p><p>
அத்துடன், இந்தியாவைப் பொறுத்தவரையில் பிரிக்ஸ் அமைப்பை அமெரிக்காவிற்கு
எதிரான கூட்டணியாகப் பார்க்காமல், தனது மூலோபாய சுயாட்சியைப் பேணுவதற்கான ஒரு
தளமாகவே கருதுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5996f75f-4e2e-4741-b23b-89d31a9d48f6/26-6aa6db1d9f61d.webp' /></p><p>

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அமெரிக்காவுடன் நேரடி இராணுவ மோதல்களில்
ஈடுபடுவதைத் தவிர்த்து, பல்துருவ உலக அமைப்பை நோக்கிய மெதுவான மாற்றங்களையே
விரும்புகின்றன.
</p><p>
எனவே, பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்கா தலைமையிலான உலக அமைப்பை உடனடியாகத்
தகர்க்கும் ஒரு இராணுவ அல்லது அரசியல் கூட்டமைப்பாகச் செயற்பட முடியாது
என்றபோதிலும், டொலர் அல்லாத வர்த்தகம், மேம்பாட்டு நிதியுதவிகள் மற்றும்
சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தங்கள் மூலம் உலகளவில் ஒரு பலமிக்க
பேச்சுவார்த்தைக் கூட்டணியாகத் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தும் எனக்
கருதப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுர்வேத கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை: சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-for-selling-ganja-lehyam-1789317936"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-for-selling-ganja-lehyam-1789317936</id>
            <summary type="text">ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(1...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(13.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
அம்பாறை- அக்கரைப்பற்று வன்னியர் வீதியில் விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியம்
கைப்பற்றப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த லேகியம்
கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/319fa91e-95c5-4418-b006-215a9b451e06/26-6aa6d3cb5e572.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T16:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓரணியில் திரண்ட தமிழர்கள்! செம்மணி பிரகடனம் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1789316636"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1789316636</id>
            <summary type="text">தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பில் ஈழத்தமிழ் குடிசார் அமைப்புக்களும் பொது
மக்களும் நல்லூர் கிட்டு பூங்காவில் 13 சரம்பர் 2026 அன்று ஓரணியில் திரண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பில் ஈழத்தமிழ் குடிசார் அமைப்புக்களும் பொது
மக்களும் நல்லூர் கிட்டு பூங்காவில் 13 சரம்பர் 2026 அன்று ஓரணியில் திரண்டு செம்மணி பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ்
இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களான வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி
ஒற்றுமையாக நாம் ஒன்றுபட்டு இங்கு கூடி கீழ்வரும் பிரகடனங்களை
வெளியிடுகின்றோம்.</p><h2>செம்மணி</h2><p>
</p><p>
செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை
வேண்டும்.</p><p>செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ்
இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன.
</p><p>
இந்த சான்றுப் பொருட்களானவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா
அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை
நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய கூடிய ஆபத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f1d87f3-bac5-487a-a93a-6bae45f97538/26-6aa6d03fef509.webp' /></p><p>

எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற
வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப்
புதைகுழி, மன்னார் மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும்
அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான
சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல்
அகழ்தெடுக்கப்படும் தடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும்
ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு
விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
</p><p>
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக
நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை
உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசினால் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள்
தொடர்பாக சில அமைப்புக்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும், ஆதாரங்களும், சர்வதேச
குற்றவியில் விசாரணை ஒன்றுக்காக பாரப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படல்
வேண்டும்.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரும் உள்ளகப் பொறிமுறைகளை நாம்
முற்றாக நிராகரிப்பதுடன், அதற்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உடனடியாக
உருவாக்கப்பட வேண்டும்.
</p><h2>
அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை</h2><p>
 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்
நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் அனைவரும் உடன்
விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம்
உடனடியாக நீக்கப்படவும் வேண்டும்.

அத்துடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவானது என்னும் பெயரில் வேறு எந்தவொரு புதிய
சட்டத்தையும் உருவாக்கக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d15d660-e465-4f4f-9dbd-37c0ef1ee075/26-6aa6d040a3b24.webp' /></p><p>
</p><p>வடக்கு–கிழக்கு தமிழர் தாயகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும்
வகையிலான இராணுவமயமாக்கல் அகற்றப்படல் வேண்டும்.

அம்பாறை தொடக்கம் மன்னார் வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின்
தொன்மையான வரலாறு. கலை. பண்பாடு மற்றும் மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p>

தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, பௌத்த கலாசார
திணைக்களம், வனவள, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களின் ஊடாக
மேற்கொள்ளப்பட்டிருந்த மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார்
இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உடனடியாக அகற்றப்படவும்
நிறுத்தப்படவும் வேண்டும்.

தமிழினப் படுகொலை மீள நிகழாமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும், தொடரும்
கட்டமைப்புசார் இனவழிப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும், நிலையான
இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் - சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு
முற்றாக நீக்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை
அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு எட்டப்படுவதனை சர்வதேச சமூகம்
உறுதிப்படுத்த வேண்டும் என் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T16:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவடிப்பள்ளி ஆற்றில் கரையொதுங்கிய ஆணின் சடலம் - அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/male-body-washes-ashore-in-mavadippalli-river-1789295882"></link>
            <id>https://tamilwin.com/article/male-body-washes-ashore-in-mavadippalli-river-1789295882</id>
            <summary type="text">புதிய இணைப்புஅம்பாறை - மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13.09.2026) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அம்பாறை - மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13.09.2026) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, குறித்த சடலம் சாய்ந்தமருது, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய அஸ்ஜத் என்ற இளைஞனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், இன்று (13) மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>அம்பாறை- மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின்
சடலம் இன்று(13.9.2026) கரையொதுங்கிய நிலையில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ
இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார், சடலத்தை மீட்டு விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>அத்துடன்,
அவர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பிலும்
பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/784f47df-d4e5-4311-9dd7-ce75403b3cb7/26-6aa67d0cdcb46.webp' /></p><p>

சடலம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்கான
ஏற்பாடுகளைக் காரைதீவு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்க திரைமறைவில் நடைபெறும் டீல்! பிரபல தொழிலதிபரும் தொடர்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133</id>
            <summary type="text">இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் இப்போது அந்த ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. </p><p>ஆனால் இப்போது அந்த பெயர் கேட்பதில்லை. தேர்தல் காலங்களில் அந்தப் பெயர் அதிகமாகக் கேட்கும். அவர்தான் பசில் ராஜபக்ச.
அவர் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p> ஆனால் அவர் அந்த வழக்குகளுக்கு முன்னிலையாகக் கூட இலங்கைக்கு வரவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதாகவே கூறப்படுகிறது. சில வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உடல்நலக் குறைவு என அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.</p><h2>
</h2><p></p><h2>தொழிலதிபருடனான டீல்</h2><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் சம்பவங்களில் கூட அவர் இலங்கைக்கு வரவில்லை. முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச என்ன செய்கிறார்? </p><p>இலங்கையிலிருந்த பிரபல நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் பின்னணியில், பசில் ராஜபக்சவை ஏன் கைது செய்யவில்லை? அவரை ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை? போன்ற விடயங்களும் அரசியல் மேடைகளிலும் திரை மறைவிலும் பேசப்பட்டு வருகின்றன.</p><p>
புதிய தகவலின்படி, பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் "டீல்" (Deal) ஒன்றைச் செய்துகொண்டுள்ளதாகப் பேசப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e398dff-20d8-4a4c-a974-42c34e9c4867/26-6aa5f54f84faa.webp' /></p><p>தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், ஒரு டீல் மூலமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் மேடைகளின் திரை மறைவில் பேசப்படுகிறது.
</p><p>பொதுவாக எப்போதும் பல்வேறு டீல்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த டீல் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. </p><p>அந்தத் தொழிலதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் தொடர்புகளைப் பேணி வருபவர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>எப்படியோ, பசில் ராஜபக்ச அவருடன் ஒரு டீல் போட்டுக்கொண்டு, தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>you may like this video</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BLkNC88_Llw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:38:44+00:00</updated>
        </entry>
    </feed>
