<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-24T14:07:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ம் திகதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attakc-case-verdict-on-22-sep-1787579783"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attakc-case-verdict-on-22-sep-1787579783</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதீர்வரும் செப்டம்பர் மாதம் 22ம் திகதி வழங்கப்பட உள்ளது.உயிர்த்த ஞாயிறு தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதீர்வரும் செப்டம்பர் மாதம் 22ம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கான சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை செய்யப்பட்டது.</p><p>இந்த வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நிரந்தர மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6110a764-4fa0-4c6e-9765-13467eeb3252/26-6a8c4ecd92aa1.webp' /></p><p>கடந்த2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற இந்த தொடர் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 270க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வழக்குகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-24T14:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் 45 கப்பல்களுக்கு ஈரான் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-bans-45-ships-in-the-strait-of-hormuz-1787579287"></link>
            <id>https://tamilwin.com/article/iran-bans-45-ships-in-the-strait-of-hormuz-1787579287</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான புதிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 45
எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் கருப்புப்
பட்டியலில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான புதிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 45
எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் கருப்புப்
பட்டியலில் சேர்த்துள்ளதுடன், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் எச்சரித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும்
சூழ்நிலையில், ஈரான் தனது கடல்சார் எல்லைக் கட்டுப்பாடுகளை
தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>இதன் ஒரு பகுதியாக, ஈரானால் புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள 'பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரசபையினால்' இந்த அதிரடி
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>ஈரான் தடை</h2><p>

குறிப்பிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள கப்பல்கள் ஈரானியப் பிராந்தியத்திற்குள்
நுழையும் பட்சத்தில், அவை தடுத்து வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதுடன்,
அவற்றில் உள்ள சரக்குகளும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், இந்த தடை விதிக்கப்பட்ட கப்பல்களுடன் கடலில் வைத்து சரக்குகளைப்
பரிமாறிக்கொள்ளும் ஏனைய பிற கப்பல்களும் உடனடியாகக் கருப்புப் பட்டியலில்
சேர்க்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/045c942f-7439-4e85-b2c5-d0f508f64444/26-6a8c4d321ad3d.webp' /></p><p>
</p><p>
</p><p>மற்றும் தென்கொரியா, நோர்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின்
கப்பல்களும் அடங்குகின்றன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கு ஈரானிய கடற்படை அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற
வேண்டும் என்றும், பாதுகாப்பு சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்
என்றும் ஈரான் வலியுறுத்தி வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா அழைத்துச் சென்று படுகொலை செய்தாரா? 39 வருடங்களுக்குப் பின் வெளிவரும் உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/did-karuna-take-him-away-and-murder-him-1787578760"></link>
            <id>https://tamilwin.com/article/did-karuna-take-him-away-and-murder-him-1787578760</id>
            <summary type="text">இலங்கையில் இந்திய இராணுவத்தினருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹொட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த சுபாஷ், கருணாவின் பணிப்புரையின் பேரில் படுகொலை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்திய இராணுவத்தினருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹொட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த சுபாஷ், கருணாவின் பணிப்புரையின் பேரில் படுகொலை செய்யப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு முக்கிய காரணிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடுதலைப்புலிகள் அமைப்பில் மட்டக்களப்பு பிரதேசத்திற்குத் தலைமை தாங்கிய கருணாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யுமாறு சுபாஷ், தனது உறுப்பினர்களுக்கு கட்டளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. எனினும், அந்தத் தாக்குதலை அவர்கள் மேற்கொள்ளவில்லை.</p><p>

இதற்குப் பழிவாங்கும் வகையில், கிரான் சந்தியில் வைத்து புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவருடன் ஹொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>

இவ்வாறு கருணா - சுபாஷ் ஆகியோர் அக்காலகட்டத்தில் எவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்டனர் என்பது தொடர்பான பல்வேறு விடயங்களை “உண்மைகள்” நிகழ்ச்சி ஆராய்கிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fzi0rELjLX4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:41:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் : ஆளுநர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/progress-in-police-operations-northern-province-1787575007"></link>
            <id>https://tamilwin.com/article/progress-in-police-operations-northern-province-1787575007</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச்
சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி
போதைப்பொருள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச்
சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய
வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது
தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
</p><p>
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் புதிதாக வடக்கு மாகாண
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ் கருணாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24.08.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த</h2><p>இதன்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு
ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், வடக்கு மாகாணத்தில் சட்டம்,
ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறந்த
சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc31556a-2c53-4f39-b477-a1bf36c1f95f/26-6a8c4156ae1a7.webp' /></p><p>இதன்போது வடக்கு
மாகாணத்தின் நிலைமை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களும்
பரிமாறிக்கொள்ளப்பட்டன.</p><p>

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம்
காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின்
பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார்.</p><p>மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல்
மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, அத்துடன் வீதிகளில் அதிவேகமாக
மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்
இளையோரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம்
செலுத்தப்பட்டது.
</p><p>
இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு,
பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில்
தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும்
கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்ச வீட்டுப் பொருட்களுடன் வீதியில் காத்திருந்த நிலை..! பின்னணியில் நடந்த இரகசிய பேச்சுவாரத்தை அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asp-liyanage-mahinda-maithripala-sirisena-1787533188"></link>
            <id>https://tamilwin.com/article/asp-liyanage-mahinda-maithripala-sirisena-1787533188</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொழும்பில் தங்குவதற்காக தொழிலதிபரும், தொழிற் கட்சியின் தலைவரான ஏ.எஸ்.பி.லியனகே நிர்மாணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொழும்பில் தங்குவதற்காக தொழிலதிபரும், தொழிற் கட்சியின் தலைவரான ஏ.எஸ்.பி.லியனகே நிர்மாணித்த சொகுசு வீடான பீகொக் மென்சன் (Peacock Mansion) வழங்குவதாக அறிவித்திருந்தார்.</p><p>இறுதியில் அதை வழங்க முடியாத சூழ்நிலையில் வீட்டுப் பொருட்களுடன் தங்காலையில் இருந்து கொழும்புக்கு வந்த மகிந்த ராஜபக்ச வீதியில் நின்ற ஒரு கதையை ஏ.எஸ்.பி.லியனகே, வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.</p><p>அவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்..</p><h2>
</h2><p></p><h2>மைத்திரி லியனகேவிடம் என்ன கூறினார்</h2><p>மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் ஒரு வீடு வழங்குவதாக அறிவித்திருந்தேன். அதை அறிந்த அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை அழைத்திருந்தார்.</p><p>நான் மைத்திரியின் வீட்டுக்கு சென்றபோது ராஜித சேனாரத்தினவும் இருந்தார். அந்த வீட்டை மகிந்தவுக்கு கொடுத்தால் சிறைச்செல்ல நேரிடலாம் என்றனர்.</p><p>நான் கேட்டேன், " நான் ஏன் சிறைக்குச் செல்ல வேண்டும்? அக்காலத்தில் எதற்கெடுத்தாலும் சிறையில் அடைத்து அரசியல் பகையை தீர்த்துக்கொண்ட ஒரு கலாசாரம் இருந்தது.
</p><p>"உங்களுக்கு நாங்கள் ஒரு ஆளுநர் பதவி தருகிறோம்" என்று சொன்னார்கள். வீட்டை கொடுக்க வேண்டாம் என்று கூறினர். நான் யோசித்தேன், சிறைக்குச் செல்வதை விட ஆளுநராவது நல்லது தானே என்று.</p><p>ஆனாலும் நான் சொன்னேன், " தூதுவர் பதவி வேண்டாம்" என்று. இல்லை, ஆளுநர் பதவியை தருகிறோம், நாளை முதலே வீட்டின் கதவை மூடுங்கள் என்று எனக்கு சொன்னார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f20bb47-2c4f-4452-9adf-1842b8a1d296/26-6a8b97864362d.webp' /></p><p>ஆனால் மகிந்த வீட்டுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் என்னை பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரின் மனைவியும் பல அழைப்பு எடுத்திருந்தார்.</p><p>ஆனால் என்னால் அழைப்பை எடுக்க முடியாமல் இருந்தேன். கடைசியில் வேறு வழியின்றி நான் சொன்னேன், "சேர், இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. என்னை மன்னிக்க வேண்டும்" என்று. </p><p>அதற்கு மகிந்த ராஜபக்ச என்னிடம் சொன்னார், "நீங்கள் பயப்பட வேண்டாம். பயமில்லாமல் இதை திறந்துவிடுங்கள், நான் இப்போது எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்" என்றார். ஒன்றும் செய்ய வழியில்லாம் வீட்டை கொடுத்தேன். அதன்பின் சுமார் நான்கு மாதங்கள் சென்றன ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:27:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-of-exam-dates-1787575403"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-of-exam-dates-1787575403</id>
            <summary type="text"> 




2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p> 




2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, தரம் 5- க்கான புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறும்.
</p><h2>
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்</h2><p>
 க.பொ.த உயர்தர பரீட்சை (A/L) 2027ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3 முதல் ஓகஸ்ட் 28 வரை நடைபெற உள்ளது. 

பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் திகதி நடத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b3829e9-5971-4dae-a9fa-91a70e26cd0c/26-6a8c404026d14.webp' /></p><p> இதற்கிடையில், க.பொ.த சாதாரண பரீட்சை (O/L) 2027 டிசம்பர் 7 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும்.</p><p> 

பரீட்சை திகதிகளைத் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்தார். </p><p>

அறிவிக்கப்பட்ட திகதிகளை குறித்துக்கொண்டு, பரீட்சைகளுக்குத் தேவையான தயாரிப்புகளைச் செய்யுமாறு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-government-1787575218"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-government-1787575218</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய
அவதிக்குள்ளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய
அவதிக்குள்ளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்களினால் இலட்சக்கணக்கான நாட்டு மக்கள்
ஏமாற்றப்பட்டுத் திசைதடுமாறியுள்ளனர் என்றும், நாளாந்தம் மூன்று வேளை
உணவைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பாரிய
பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அநுராதபுரம் - மதவெச்சிய, யகாவெவ பிரதேசத்தில் நேற்று (23.08.2026) மாலை நடைபெற்ற ஐக்கிய
மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட வேலைத்திட்டத்தின் கீழ்
முன்னெடுக்கப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே
எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை கூறியள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/976c34b5-bb6f-4b09-a60e-725c4fef9238/26-6a8c3df206cf2.webp' /></p><h2>நாட்டிலுள்ள ஒரேயொரு மாற்றுத்தரப்பு</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் காணப்படும் ஒரேயொரு மாற்றுத் தரப்பாக ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே
விளங்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87feeb7c-d18c-4cb1-94e4-318af5f27cbe/26-6a8c3df2e644d.webp' /></p><p> </p><p>விவசாய வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள மக்களின் விவசாயத்தை
மேம்படுத்தி, கைத்தொழில் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, உற்பத்தித் தொழில்களை
ஏற்படுத்தி விரைவான அபிவிருத்தியை ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்திரமே
சாதிக்க முடியும்.</p><p>

கிராமத்தைக் கட்டியெழுப்பி, நகரங்களை உருவாக்கி, நாட்டை முன்னேற்றும் இந்தப்
புதிய வேலைத்திட்டத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க
முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8455f626-b3eb-4bc7-9761-b8123b4c43c4/26-6a8c3df3bcbd6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3adeab5-0b23-460d-8072-2f05cc666deb/26-6a8c3df496d0c.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் நுணுக்கமான முறையில் திருடப்பட்ட பை - சிசிடிவியில் சிக்கிய சில நிமிடங்களில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/passenger-s-bag-at-the-pettha-bus-station-1787574299"></link>
            <id>https://tamilwin.com/article/passenger-s-bag-at-the-pettha-bus-station-1787574299</id>
            <summary type="text">கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணியின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு வலையமைப்பின் உதவியுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணியின் பையைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு வலையமைப்பின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று (23.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் கையில் தடியுடன் அங்கும் இங்கும் நடமாடியுள்ளார். பின்னர், அங்கிருந்த கதிரையொன்றில் அமர்ந்த குறித்த நபர், பயணி ஒருவரின் பையை எடுத்துக்கொண்டு மெதுவாக அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
</p><p>
குறித்த நபரின் நடவடிக்கைகள் அனைத்தும் பெட்டா பேருந்து நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள செயல்பாட்டு மையத்திலிருந்து இயக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு அமைப்பின் ஊடாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
</p><h2>
விரைந்து செயற்பட்ட அதிகாரிகள்</h2><p>
இதனையடுத்து, பையை எடுத்துக்கொண்டு நகர்ந்த சந்தேக நபரை, பணியில் இருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பின்தொடர்ந்து சென்று சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.
</p><p>
சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் உடனடியாக அவதானிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபர் விரைவாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a51bddc0-12fd-409c-a4c5-e819d6e0aa69/26-6a8c3bf252756.webp' /></p><p> </p><p>பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் மிகவும் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றான புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 'தூய்மையான இலங்கை' முன்முயற்சியின் கீழ் புதிதாக நவீனமயமாக்கப்பட்ட செயல்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக இந்த சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.</p><h2>

24 மணிநேரமும் இயங்கும் கமராக்கள்</h2><p>

இந்தக் கண்காணிப்பு வலையமைப்பு 24 மணி நேரமும் இயங்குவதுடன், பேருந்து நிலையத்திற்குள் இடம்பெறும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
திருட்டு மற்றும் பிக்பாக்கெட் போன்ற குற்றச் செயல்களைக் கண்டறிவது மட்டுமன்றி, பயணிகளுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவு, விபத்துகள் மற்றும் உடனடி உதவி தேவைப்படும் அவசரநிலைகளில் விரைவாக நடவடிக்கை எடுக்கவும் இந்தக் கண்காணிப்பு அமைப்பு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:41:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையை காணாது தேடிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-two-year-old-child-recovered-from-canal-1787573403"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-two-year-old-child-recovered-from-canal-1787573403</id>
            <summary type="text">அநுராதபுரம், கல்னேவ - கலேவெவ வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் தந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம், கல்னேவ - கலேவெவ வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.</p><p>குழந்தையைக் காணவில்லை என குழந்தையின் தந்தை நேற்றைய தினம் (23.08.2026) கல்னேவ பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.</p><p>இதனடிப்படையில், அப்பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்னர்.
</p><p>
இதன்போது, வீட்டின் அருகில் கால்வாயொன்றின் பாலத்தின் அடியில் குழந்தை சிக்குண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/647a814e-e3fb-4624-abb8-0d211b4bc7a5/26-6a8c39794e6c3.webp' /></p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>

பின்னர் உடனடியாக கல்னேவ மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட போதிலும், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
குழந்தையின் சடலம் உடற்கூறாய்வு பரிசோதனைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கல்னேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:31:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி - முற்றாக எரிந்து நாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-wheel-suddenly-caught-fire-1787571645"></link>
            <id>https://tamilwin.com/article/three-wheel-suddenly-caught-fire-1787571645</id>
            <summary type="text">மாற்றுத்திறனாளி ஒருவர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானதாக ஹோமகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(24.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றுத்திறனாளி ஒருவர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானதாக ஹோமகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இன்று(24.08.2026) நண்பகல் சுமார் இரண்டு மணியளவில் ஹோமகம, பிட்டிபான, பிரசன்னபுர பகுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><h2>தீ விபத்துக்கான காரணம்&nbsp;</h2><p>

தீப்பிடித்த உடனேயே, வாகனத்தை ஓட்டிச் சென்ற மாற்றுத்திறனாளி வாகனத்திலிருந்து குதித்துத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb5e4a67-4456-4f8d-a15a-a7ba2372b118/26-6a8c3363383ea.webp' /></p><p>
பிரதேசமக்கள் தீயை அணைக்க கடுமையாக முயன்றும் பலனளிக்கவில்லை, </p><p>தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.</p><p>ஹோமகம தலைமையக பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி மீதான தடை நீக்கத்தால் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/restrictions-on-vehicle-imports-eased-1787569030"></link>
            <id>https://tamilwin.com/article/restrictions-on-vehicle-imports-eased-1787569030</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
பல ஆண்டுகளுக்கு பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>அரச வருமானம்</h2><p> 

நிதி அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.
</p><p>
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce394a9-b953-4de3-bf0b-95694b0581b4/26-6a8c3267ca600.webp' /></p><p> </p><p>

இது 2026ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.</p><h2>நேரடி வருமானம்</h2><p> </p><p>

மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
</p><p>
2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T12:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது திருத்தம் - உயர் நீதிமன்றத்தில் குவிந்த 21 மனுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/21-petitions-against-the-22nd-amendment-1787571592"></link>
            <id>https://tamilwin.com/article/21-petitions-against-the-22nd-amendment-1787571592</id>
            <summary type="text">
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

வெளிப்படைத்தன்மை அறக்கட்டளையின் பொருளாளர் சுனில் ஜயசுந்தர, சட்டத்தரணி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க, இளம் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்டவர்களே இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 


மனுதாரர்களின் கோரிக்கை</h2><p>
அத்துடன், முன்னதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன மற்றும் பிறர் இந்த மசோதாவை எதிர்த்து மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c41ee107-33b1-4705-a134-2ed3450ab0c8/26-6a8c307d5cac5.webp' /></p><p> 

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த மசோதாவானது, மக்களின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கிறது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். </p><p>

எனவே, இந்த மசோதாவை நிறைவேற்றுவதாயின், அது ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/s80Zng68ZKk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-24T11:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 வருடங்களுக்கு முன் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் - காணிகளை விடுவிக்குமாறு கோரி தமிழர் பகுதியில் தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-protest-at-the-jaffna-vayavilan-junction-1787568883"></link>
            <id>https://tamilwin.com/article/people-protest-at-the-jaffna-vayavilan-junction-1787568883</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கத்தினுடைய இராணுவ இயந்திரத்தினால் இந்த இடத்தில் இருந்த மக்கள் மிக மோசமான முறையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கத்தினுடைய இராணுவ இயந்திரத்தினால் இந்த இடத்தில் இருந்த மக்கள் மிக மோசமான முறையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று(23) யாழில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>துரத்தியடிக்கப்பட்ட மக்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>இங்கிருந்து மோசமான முறையில் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் 36 வருடங்களாக தமது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fde6da-d9c2-46e2-a290-d6808e17da8a/26-6a8c2814e5d9d.webp' /></p><p>இந்தப் போராட்டமானது மயிலிட்டி, வசாவிளான், பலாலி மற்றும் தெல்லிப்பளை போன்ற இடங்களிலும் நடைபெற்று வருகின்றது.&nbsp;</p><p>முந்தைய அரசாங்கங்கள் போன்று இவர்களும் நடந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவார்கள் என&nbsp; &nbsp;இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1071497925235485%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.330 மில்லியன் செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு நிர்மாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/construction-at-a-cost-of-rs-330-million-1787568750"></link>
            <id>https://tamilwin.com/article/construction-at-a-cost-of-rs-330-million-1787568750</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு
அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24.08.2026) காலை, பிரதேச
சபையின் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு
அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24.08.2026) காலை, பிரதேச
சபையின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
</p><p>பிரதேச சபையின் நிதியில் 330 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள
இந்த உள்ளக விளையாட்டு அரங்கு, வலிகாமம் தெற்கு பிரதேசத்தில்
விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில்
அமையவுள்ளது.
</p><h2>முக்கிய உட்கட்டமைப்பு திட்டம்</h2><p>வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற
அடிக்கல் நாட்டு நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.
சிவஞானம், பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்,
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு மாகாண சபையின் முன்னாள்
உறுப்பினர் எஸ். சுகிர்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள்
கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89f08a4-7bf6-4414-8013-471b4ab5c594/26-6a8c2acd38fc7.webp' /></p><p>அத்துடன், யாழ்ப்பாண மாநகர முதல்வர், வடக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேச
சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும்
பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
</p><p>வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்திலேயே இந்த பாரிய
விளையாட்டு உட்கட்டமைப்பு நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்திக்
கொடுப்பதுடன், பிரதேச மட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான
முக்கிய உட்கட்டமைப்பு திட்டமாகவும் இந்த உள்ளக விளையாட்டு அரங்கு
அமையவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T11:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பெண் அதிபர் கொடூரமாக கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/old-teacher-killed-shocking-reason-revealed-1787536896"></link>
            <id>https://tamilwin.com/article/old-teacher-killed-shocking-reason-revealed-1787536896</id>
            <summary type="text">இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 69 வயதான ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. 

நபர் ஒருவர் தனது பிள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 69 வயதான ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. </p><p>

நபர் ஒருவர் தனது பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வாங்குவதற்காகப் பணம் திரட்ட முயன்ற போது, வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் 22 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

கொடூரமாக கொலை</b></h2><p>வீடு வீடாக சென்று தேங்காய் பறிக்கும் நபர் ஒருவரும், 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுமே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f649e6dd-62ca-4d90-a410-6e6dbdd688e5/26-6a8bc57085de0.webp' /></p><p>இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹிட்டிய, பெலவத்தை பகுதியை சேர்ந்த விமலானி என்ற ஓய்வுபெற்ற பெண் அதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கடந்த 21ஆம் திகதி மாலை, தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உயிரிழந்த பெண்ணின் ஒரே மகன், இரவு 7.45 மணியளவில் வீடு வந்து தனது தாயை தேடியுள்ளார். </p><p>

இதன்போது தாயின் நிர்வாணமான சடலம் வீட்டின் அறை ஒன்றின் தரையில் கிடப்பதைக் கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து அயலவர்களுக்கு தெரிவித்து, தாயின் மர்ம மரணம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p> 

சம்பவம் நடந்த நாளின் பகல் வேளையில் கூலிக்குத் தேங்காய் பறிக்கும் நபர் ஒருவர் நடமாடியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>அன்று மாலை வேளையில் ஆசிரியை கொல்லப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் பிரதான சந்தேக நபர் நடமாடியுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. </p><p>

அடுத்த நாள் அதிகாலை மூன்று மணியளவில் சந்தேக நபரை கைது செய்து விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட ஆசிரியைக்கு சொந்தமான தங்க மோதிரம் ஒன்று சந்தேக நபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h3><b>

தங்க மோதிரம்</b></h3><p>பெண் அதிபரின் வீட்டின் காணிக்குள் சென்று மறைந்திருந்து வீட்டின் பின்பக்க கதவூடாக வீட்டிற்குள் நுழைந்து, குளிக்க தயாராக இருந்த அவரது தலையில் கட்டையால் பலமுறை தாக்கியதாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66367a69-b77a-48cc-8714-a81086f1f2d4/26-6a8bc57149717.webp' /></p><p>இதன்பின்னர் அவர் கீழே விழுந்ததும், அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியையும் தங்க மோதிரத்தையும் கழற்றிக்கொண்டு தப்பியோடியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>

இந்த செயலுக்கு உதவியாக முச்சக்கர வண்டி ஓட்டுநரான தனது நண்பரையும் ஈடுபடுத்திக்கொண்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். </p><p>தனது பிள்ளையின் பிறந்த நாளுக்கு கேக் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்குவதற்கு பணம் தேடுவதற்காகவே இதனை செய்ததாக சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார். </p><p>

திருடப்பட்ட தங்கச் சங்கிலியை கொடகெவல நகரில் உள்ள தனியார் அடகு மையமொன்றில் 90,000 ரூபாவிற்கு அடகு வைத்து பணம் பெற்றுக்கொண்டதாகவும், அன்றைய இரவில் நண்பர்களுடன் சேர்ந்து விருந்து வைத்து கொண்டாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதற்கமைய, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருடன் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் இருவரிடமும் சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VcH0r9Aub-A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T11:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தில் தவறவிட்ட ரூ.10 இலட்சம் தங்கச் சங்கிலி: சாரதி - நடத்துனரால் கிடைத்த நெகிழ்ச்சி தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-chain-missing-from-bus-1787568856"></link>
            <id>https://tamilwin.com/article/gold-chain-missing-from-bus-1787568856</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் 10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் இருவரும் மீட்டு, உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் 10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் இருவரும் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் நேற்று(23.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2> 

ஆசனத்தில் சிக்கிய தங்க சங்கிலி</h2><p>
குறித்த தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை
செல்லும் 767 வழித்தட (4241 இலக்க) இ.போ.ச பேருந்தின் மதிய சேவையின் போது பயணித்த பெண் வட்டுக்கோட்டையில் மரணச் சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு, இன்னொரு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/223e0f1f-abb6-4310-80ab-4770b3b4d1cb/26-6a8c245b3c5c7.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
 அங்கு சென்ற பின்னரே அவரது கழுத்தில் இருந்த இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி இல்லாததை உணர்ந்தார்.

அதன்பின்னர் அவர் வழிநெடுகிலும் சென்றுபார்த்தபோதும் சங்கிலியைக்
கண்டுபிடிக்கமுடியவில்லை.</p><p> “இனிச் சங்கிலி கிடைக்காது” என்ற கவலையோடு, மீண்டும் வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்தித்துறை நோக்கிச் செல்வதற்கான மீண்டும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். </p><h2>

பெண்ணிற்கு உதவிய சாரதி - நடத்துனர்</h2><p>
இதன்போது, கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை காணவில்லை என தெரியப்படுத்திய வேளையில், அவர்கள், “ நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் இந்தச் சங்கிலி இருந்தது” என ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/011113d3-1556-424f-8ae4-388cab8a72b4/26-6a8c245be51bd.webp' /></p><p>அதன் பின்னர் பருத்தித்துறை டிப்போவுக்கு சென்று பேருந்தை சுத்தம் செய்த பொழுது சங்கிலியின் எஸ் வடிவிலான இணைப்புப் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனைத் தொடர்ந்து, அதனையும் குறித்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு தாம் கண்டெடுத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான நகையினைக் கண்டெடுத்து
உரியவர்களிடம் சேர்த்த பருத்தித்துறை டிப்போவை சேர்ந்த சாரதி - மனோகரன் சயந்தன் மற்றும் நடந்துனர் - இராசநாயகம் பிறின்சிராஜா இருவருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T11:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாட்சியங்கள் அழியும் முன் சர்வதேச விசாரணை அவசியம்! கனகரத்தினம் சுகாஸ் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-probe-need-before-evidence-destroy-1787566713"></link>
            <id>https://tamilwin.com/article/international-probe-need-before-evidence-destroy-1787566713</id>
            <summary type="text">சர்வதேச பொறிமுறையிலான விசாரணை முன்னெடுக்கப்படாமல் செம்மணியின் முழுமையான உண்மைகளை வெளிக்கொணர முடியாது என&amp;nbsp;தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச பொறிமுறையிலான விசாரணை முன்னெடுக்கப்படாமல் செம்மணியின் முழுமையான உண்மைகளை வெளிக்கொணர முடியாது என&nbsp;தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் நடத்திய ஊடக சந்திப்பொன்றில் வைத்தே இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>சாட்சியங்கள் அழியும் அபாயம்</h2><p>சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த் தேசியப் பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.</p><p>
இந்த நிலையில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்டோருக்கான நீதிப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல
வேண்டிய அவசியம் எமக்குள்ளது.</p><p>காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான நேரடி சாட்சிகளாக இருந்த
தாய்மார்கள் மற்றும் வயோதிப பெற்றோர்கள் வயது முதிர்வு மற்றும் இயற்கை மரணம்
காரணமாக உயிரிழந்து வருகிறார்கள். காலம் மேலும் கடந்து செல்லும் நிலையில், முக்கியமான சாட்சியங்களும்
ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UQTZQbqOCRo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இதனால் எதிர்காலத்தில் சர்வதேச
விசாரணைக்கான வாய்ப்பு உருவானாலும் சாட்சியங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால்
நீதியைப் பெற்றுக்கொள்வது கடினமாகிவிடும்.

இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்காகவோ தனிப்பட்ட நலன்களுக்காகவோ
காணாமல் ஆக்கப்படவில்லை. </p><p>அவர்கள் தமிழ் மக்களின்
உரிமைகள் மற்றும் விடுதலைக்கான போராட்டத்தின் பின்னணியில் காணாமலாக்கப்பட்டவர்கள்.

எனவே, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை தனிப்பட்ட
குடும்பங்களின் பிரச்சினையாக மாத்திரம் கருதாமல், ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின்
நீதிக்கான போராட்டமாக அணுக வேண்டும்.</p><h2>செம்மணி அகழ்வில் முழு உண்மையும் வெளிவருமா?</h2><p>
</p><p>
தமிழ் மக்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள்
மற்றும் அரசியல் தரப்புகள் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து குரல்
கொடுக்க வேண்டும்.</p><p>
செம்மணியில் தற்போது இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகள் மூலமாக மட்டும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான உண்மைகள் வெளிவரும் என நம்ப முடியாது என
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b789965-da07-4a20-b49f-1ee329b753be/26-6a8c1ecb154cc.webp' /></p><p>சர்வதேச பொறிமுறையிலான விசாரணை முன்னெடுக்கப்படாமல் செம்மணியின் முழுமையான
உண்மைகளை வெளிக்கொணர முடியாது.
</p><p>
அதேவேளை, தீவகப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள கிணறுகள், இராணுவ முகாம்கள் மற்றும்
புதிதாக அமைக்கப்பட்டுவரும் விகாரைகள் அமைந்துள்ள பகுதிகளின் கீழ் புதைகுழிகள்
இருக்கக்கூடும் என்ற சந்தேகங்கள் மக்களிடையே காணப்படுவதால், அவை தொடர்பில்
விரிவான விசாரணைகளும் அகழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f287704b-d0a6-42ec-a20e-2dab6f266cb5/26-6a8c1ecbc6772.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:53:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ நிலைமை: இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powercut-in-sri-lanka-1787567225"></link>
            <id>https://tamilwin.com/article/powercut-in-sri-lanka-1787567225</id>
            <summary type="text">எல் நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே.பி.எல்.சந்திரலால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்துள்ளார். </p><p>

நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p><h2>மின்சார கொள்வனவு</h2><p>
</p><p>
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாக கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான விலைகள் வெளியிடப்படுவது தொடர்பில் இன்றைய தினம் (24.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9066e952-3657-485a-92ed-26eac2b8270f/26-6a8c20036b957.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விஷமிகளின் அட்டகாசம் - நீர் வடிகால் மூடிகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strangers-smashed-the-drain-covers-in-jaffna-1787560919"></link>
            <id>https://tamilwin.com/article/strangers-smashed-the-drain-covers-in-jaffna-1787560919</id>
            <summary type="text">பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் உள்ள வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் செய்யப்பட்ட&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் உள்ள வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் செய்யப்பட்ட&nbsp; மூடிகளை&nbsp; அடையாளம் தெரியாத சிலர் அடித்து நொறுக்கியுள்னர்.</p><p>குறித்த சீமெந்து மூடிகளின் இரும்பு கம்பிகளை திருடும் நோக்குடன் அவை அடித்து
நொறுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><h2>அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகள்</h2><p>
</p><p>
அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகளின் இடிபாடுகள் வாய்க்காலுக்குள்
காணப்படுவதனால், மழை காலத்தில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை
ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937e9b8a-4dee-4c86-8a81-a35248a90694/26-6a8c123060bed.webp' /></p><p>அதனால் அவற்றினை அகற்றுவதற்கும், ஏனைய மூடிகளை
உடைக்காது பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>இதேவேளை சம்பவம் தொடர்பில், வலி. வடக்கு பிரதேச சபையின் கீரிமலை வட்டார
உறுப்பினர் முரளிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று
பார்வையிட்ட உறுப்பினர், அது தொடர்பில் தவிசாளருக்கு அறிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:35:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 3 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mango-auctioned-for-3-lakh-rupees-in-vavuniya-1787567301"></link>
            <id>https://tamilwin.com/article/mango-auctioned-for-3-lakh-rupees-in-vavuniya-1787567301</id>
            <summary type="text">வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு
படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு
படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு நேற்று(23.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> 

வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ
திருவிழா இடம்பெற்று வருகிறது.
</p><p>
இதன் ஆறாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று(23) இடம்பெற்றது.
</p><p>
திருவிழாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி
நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
</p><h2>
மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்</h2><p>
மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னர் குறித்த மாம்பழம் ஆலய நிர்வாக
சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு, சில நொடிகளில்
1 இலட்சம் ரூபா வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில்
3 லட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலம் முடிவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12d86260-4af4-42c5-a597-02d2f8b12cb3/26-6a8c1d70c1116.webp' /></p><p>
</p><p>
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில்
வசிக்கும் திருமதி சிந்துஜா உபாரிஸ் ஜெதீஸ்வரன் என்பவர், மூன்று இலட்சம்
ரூபாய்க்கு குறித்த மாம்பழத்தை ஏலத்தில் கொள்வனவு செய்தார்.
</p><p>
குறித்த ஆலய திருவிழாவின் போது மூன்றாவது வருடமாகவும் தொடர்ச்சியாக அவரே
ஆலயத்தில் ஏலம் விடப்பட்ட மாம்பழத்தை கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l9OeDnCTN3k" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகவியலாளர்களுக்கான ஹோமகம வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/applications-open-homagama-housing-scheme-1787563903"></link>
            <id>https://tamilwin.com/article/applications-open-homagama-housing-scheme-1787563903</id>
            <summary type="text">சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, “ஹோமகம பத்திரிகையாளர் வீட்டுவசதித் திட்டத்திற்காக” பத்திரிகையாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

அச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, “ஹோமகம பத்திரிகையாளர் வீட்டுவசதித் திட்டத்திற்காக” பத்திரிகையாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
</p><p>
அச்சு, மின்னணு மற்றும் இணைய ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்காக வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
</p><h2>இலங்கையின் நிரந்தரக் குடியிருப்பாளர்கள்</h2><p>
அமைச்சகத்தின்படி, விண்ணப்பதாரர்கள் இலங்கையின் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும் மற்றும் வீடு அல்லது வீடு கட்டுவதற்கு ஏற்ற நிலம் வைத்திருக்கக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f1d268-26f4-4117-aa65-da03f0d8df59/26-6a8c1c549f819.webp' /></p><p> விண்ணப்பதாரர்கள் ஊடகத் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
</p><p>
இத்திட்டத்தின் கீழ், தலா சுமார் 500 சதுர அடி கொண்ட 27 வீட்டு அலகுகள் வழங்கப்படும், மேலும் விண்ணப்பதாரர்கள் 30 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
</p><p>
தொழில்முறை அனுபவம் மற்றும் பிற தொடர்புடைய தகுதிகள் உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தேர்வுகள் செய்யப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்</h2><p>

2026 ஆம் ஆண்டு திட்டத்திற்கான விண்ணப்பங்களை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.media.gov.lk இலிருந்து ஆகஸ்ட் 18 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fd75cb-ea5c-45b1-b714-f989df82c0b8/26-6a8c1c55559ec.webp' /></p><p>
</p><p>
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, எண் 163, “அசிதிசி மெதுரா”, கிருலபொனே மாவத்தை, பொலங்கொட, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.</p><p>

மேலதிக தகவல்களை அமைச்சகத்தின் வெகுஜன ஊடகப் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவும் அதிக வெப்பம்: ஏற்படவுள்ள அபாய நிலை - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-capacity-of-74-reservoirs-drops-1787562157"></link>
            <id>https://tamilwin.com/article/water-capacity-of-74-reservoirs-drops-1787562157</id>
            <summary type="text">உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p>

குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 30 சதவீதத்தை விடவும் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீர் கொள்ளளவு வீழ்ச்சி</h2><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த நீர் கொள்ளளவு 36 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் வறண்ட வானிலை நிலவியபோதிலும், இந்த ஆண்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b55b5a2-55d6-4dda-869b-60d8d746a420/26-6a8c144c579e9.webp' /></p><p>அத்துடன் நிலவும் அதிக வெப்பம் காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் வேகமாக ஆவியாகி வற்றிப்போதல் இடம்பெறுகிறது. 

இந்த நிலைமையின் கீழ் நீர் தேவை அதிகரிக்கும் அதேவேளையில், நீர்வளம் வேகமாகச் சுருங்கி வருகிறது. </p><p>

இதனால் கடும் வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் குடிநீர் தேவை மற்றும் சுற்றாடல் தேவைகளுக்காக நீரை ஒதுக்கீடு செய்ய நேரிடுவதால், விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விநியோகிப்பது கடினமாக அமையக்கூடும்.</p><h2>குடிநீர் விநியோகம்</h2><p> </p><p>குடிநீர் விநியோகம் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், சில பகுதிகளுக்கான விவசாயத்திற்காக விநியோகிக்கப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4ccd6a1-c493-4f1f-88c4-73e6b43039c1/26-6a8c144d0dc51.webp' /></p><p>இந்த சவாலான நிலைமையை எதிர்கொள்வதற்கான ஒரே மாற்று வழி, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் சுற்றாடலுக்கு இணக்கமாக வாழ்வதும் ஆகும். நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதுடன், அது மிக வேகமாகப் பரவும் அபாயமும் காணப்படுகிறது.</p><p> எனவே இது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அவர் பொது மக்களை எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:22:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் தினத்திற்கான மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-association-of-relatives-of-the-disappeared-1787565630"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-association-of-relatives-of-the-disappeared-1787565630</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்டம்
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

மன்னாரில் இன்று (24.08.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>போராட்டங்களுக்கான பலன்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோர்
தினம் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தன்று நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்கள்
துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் இந்த அரசாங்கத்துக்கும், எத்தனையோ
அரசாங்கங்கள் மாறி மாறி வந்த போதிலும் நாங்கள் தெரியப்படுத்திக் கொண்டு
இருக்கிறோம்.</p><p>

காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது? இந்த உறவுகள் இருக்கிறார்களா? அல்லது
அவர்கள் உயிருடன் இல்லையா? என்று சொல்லியே நாங்கள் கேட்டுக்
கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் நாங்கள் செய்து
பார்த்து எங்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கவில்லை.</p><p>அதனால் தான் இந்த சர்வதேச
வலிந்து காணாமலாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நாங்கள் சர்வதேச மாநாடு நடத்த
தீர்மானித்திருக்கிறோம்.

எதிர்வரும் 30ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணத்தில் தந்தை
செல்வா கலையரங்கத்தில் மாநாடு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

உறவுகளைத் தேடித் திரிந்த அம்மாக்கள், வலி சுமந்த இதயத்தோடு எல்லாம்
மரணித்துப் போனார்கள். அவர்களுடைய புத்தகம் நாங்கள் வெளியிடுவதற்கு
இருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0de07a-1b6b-482a-8259-5e025af59432/26-6a8c1b024efe8.webp' /></p><h2>புத்தகம் வெளியிட தீர்மானம்</h2><p> </p><p>காணாமல்போன சிறுவர்கள், தொடர்பாகவும் அவர்களுடைய புத்தகம்
வெளியிடுவதற்கு இருக்கிறோம்.

காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக 17 வருடம் நாங்கள் யார் யாருக்கு
மகஜர் கையளித்தோம், காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நாங்கள் யார்
யாரிடம் கதைத்தோம், எங்கெங்கே நின்று போராட்டம் செய்தோம், என்னென்ன நன்மைகள்
தீமைகள் எங்களுக்கு கிடைத்தது என்றதையும் முன்னிட்டு அதற்கும் ஒரு புத்தகம்
வெளியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
</p><p>
வருகிற 30ஆம் திகதி உங்கள் அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.
காணாமல் போன உறவுகள் உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உறவுகள். 17000 உறவுகள் 8 மாவட்டத்திலும் இந்த காணாமல்போய் உள்ளனர். அவர்களின் அம்மாக்களும்
மரணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த முறை இந்த மகாநாட்டுக்கு
அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம். </p><p>ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னெடுத்து
வருகின்றோம். இந்த முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னிட்டு தான் இந்த
மாநாட்டை செய்கிறோம்.

இந்த முறையாவது இந்த சர்வதேச உலகம் கண்ணை திறந்து எங்களுக்கு வலிசுமந்த
அம்மாக்களுக்கு கண்ணீரோடு இருக்கிற எங்கள் உறவுகளுக்கு ஒரு பதில் தருவீர்கள்
என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் இந்த மகாநாட்டை செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் தொடரும் போலி வாக்குறுதிகள் - ஏமாந்து விட்டார்களா தமிழ் மக்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/false-promises-continue-under-anura-s-rule-1787565468"></link>
            <id>https://tamilwin.com/article/false-promises-continue-under-anura-s-rule-1787565468</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து
வருகின்றார்.
</p><p>
எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுடன் வரப்போகும்
ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு தொடர்பான பொதுசன வாக்கெடுப்புக்கு எதிராக
அனைத்து அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய
மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.
</p><p>
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு
துறைநீலாவணை பிரதேசத்தில் நேற்று(23.08.2026) மாலை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

போலி வாக்குறுதிகள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

“பட்டிருப்பு தொகுதி என்றால் அது ஒரு தமிழ் தொகுதி. இங்கு தேசிய கட்சிகளோ அல்லது மாற்றுக் கட்சிகளோ ஆசனங்களைப் பெற முடியாது. துறைநீலாவணை, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற பகுதிகளில் தமிழ் தேசிய உணர்வுடன், தமிழர்கள் என்ற ஒரு திமிருடன் இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87f0c0db-19f0-4bc7-bad4-3c61b5247f12/26-6a8c163eaa04f.webp' /></p><p>
</p><p>
அந்த உணர்வையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, எங்களுடைய வாக்குகளைச் சூறையாடி, தங்களுடைய சுயலாபங்களுக்காக அந்த வாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
தேர்தல் காலங்களில் இங்கு வந்து போராடினோம், மாவீரர்களை இழந்திருக்கிறோம் என்று கூறி எங்கள் மக்களை நம்ப வைத்து வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்றனர். </p><p>பின்னர் நாடாளுமன்றம் மற்றும் பிரதேச சபைகளில் பிரதிநிதித்துவத்தைப் பெற்று அதிகாரம் கைக்கு கிடைத்ததும், அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்கு யாரும் வருவதில்லை.</p><h2>

76 வருடங்களாக தொடரும் அடக்குமுறை</h2><p>
இதுதான் இன்று வடக்கு, கிழக்கில் காணப்படும் ஒரு துர்ப்பாக்கியமான நிலை. தமிழர்கள் நம்பி வாக்களித்த, தமிழர்களுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய இந்த மண்ணின் தரப்புகள், தமிழர்களுடைய விவகாரங்களைக் கையாளாமல், தங்களுடைய சொந்த நலனுக்காகவும் அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e227e1b0-84bf-431d-a81d-f99cb698d885/26-6a8c163f78f77.webp' /></p><p>

எமது மக்களின் தியாகங்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கும் கிழக்கில் எந்தவொரு தரப்பும் இல்லை.
</p><p>
இந்த மண்ணில் கடந்த 76 வருடங்களாக மிகப்பெரிய இன அடக்குமுறைக்குள் வாழ்ந்து வருகின்றோம். சிங்களப் பேரினவாதம் எங்களை அடக்கி ஒடுக்கி வருகின்றது” என்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் பரபரப்பை ஏற்படுத்திய கைக்குண்டு - சிசிடிவியில் சிக்கிய சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-suspects-in-borella-grenade-incident-1787564505"></link>
            <id>https://tamilwin.com/article/four-suspects-in-borella-grenade-incident-1787564505</id>
            <summary type="text">பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>டுபாயில் கைது செய்யப்பட்ட ‘வனாத்தே சத்து’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகா தட்சிண கப்புகே என்ற ராணாவிற்கு சொந்தமான வீட்டின் மீதே (23) நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>எனினும், வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மோட்டார் சைக்கிள்&nbsp;கண்டெடுப்பு</h2><p>சந்தேகநபர் மோட்டார் சைசைக்கிளில் பிரவேசித்து கைக்குண்டை வீசிச் செல்லும் காட்சி அருகிலிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e829b5-4d5e-45ac-a1e3-441f65b5e5d9/26-6a8c158f77f4f.webp' /></p><p>இதற்கமைய, குண்டுத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததற்காக பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை&nbsp;</h2><p>

குண்டுத் தாக்குதலை நடத்தப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொட்டிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cb2e7b3-1060-4033-b760-856051275432/26-6a8c15902af2d.webp' /></p><p>மோட்டார் சைக்கிளின் பதிவு எண் சிசிடிவி கமராவில் தெரியவந்ததையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>

கைது செய்யப்பட்டவர்களில், மோட்டார் சைக்கிளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர், அதை அடகு வைத்ததாக கூறப்படும் அவரது சகோதரர், மற்றும் அடகு வாங்கியதாக கூறப்படும் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் அடங்குவதாக கூறப்படுகின்றது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/inhdnMV3aNw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-24T09:57:46+00:00</updated>
        </entry>
    </feed>
