<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-20T16:29:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் இலக்கு வைக்கப்படும் சுரேஷ் சலே! சி.டி.விக்ரமரத்னவின் சாட்சிகளை அழிக்கும் மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானியாவிலுள்ள ராணுவ ஆய்வாளர் அரூஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,

இதில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் மிக முக்கியமானது.
</p><p>
சிறைக்குள் இருக்கும் சுரேஷ் சலேவுக்கும் இதே போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஒரு சிறை கலவரத்தை உருவாக்கி அவரைத் தாக்குவதோ அல்லது படுகொலை செய்வதோ இலகுவாகச் செய்யப்படலாம்.
</p><p>
மரணமடைந்தவர்கள் எவரும் தவறான முடிவெடுக்கும் மனநிலையில் இல்லை என்றும், அவர்களது மரணங்களுக்கு முன் குடும்பப் பிரச்சனைகள் அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.
</p><p>

அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான சாட்சிகளை அழிப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயல்வதாகவும், இவ்வாறான கொலைகள் ஒரு 'கொலை கலாச்சாரத்தை' மீண்டும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
</p><p>
அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இந்த விசாரணைகளை எவ்வளவு வேகமாக முன்னெடுக்கிறது என்பதில்தான் இந்த வழக்குகளின் வெற்றி தங்கியுள்ளது. </p><p>

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், விசாரணைகள் மர்மமாகவே முடிந்துவிடும் என குறிப்பிட்டார்.
</p><p>
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D49rkYHSU6A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T15:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பயணத்தைத் ஒத்திவைக்க இந்தியக் குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-citizens-to-postpone-travel-to-iran-1784562022"></link>
            <id>https://tamilwin.com/article/indian-citizens-to-postpone-travel-to-iran-1784562022</id>
            <summary type="text">ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற
சூழல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களைத்
தற்காலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற
சூழல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களைத்
தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

மேலும், ஏற்கனவே ஈரானில் இருக்கும் இந்தியர்கள், அங்கு கிடைக்கக்கூடிய விமானச்
சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்துப்
பரிசீலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு
எண்ணெய் கப்பல்கள் "வெடித்துச் சிதறி" முடக்கப்பட்டதாக ஈரான் அறிவித்ததை
அடுத்து, அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகள்
அதிகரித்துள்ளன.</p><p></p><h2>தாக்குதல்கள்</h2><p>
</p><p>
இதன் பின்னணியில், திங்கட்கிழமை அன்று அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஒன்பதாவது
நாளாக ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4fe63bd-efe2-4e2f-9802-37e0b59a6a44/26-6a5e4168142b9.webp' /></p><p>

ஒரு மாதத்திற்கு முன்பு கையெழுத்தான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம்
முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இந்தத்
தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்குவகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான இந்த மோதல், சர்வதேச அளவில் எரிபொருள்
தட்டுப்பாடு மற்றும் பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T15:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் பயன்படுத்தும் அறிவியல் கையேடு குறித்து மறுஆய்வு செய்ய டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/donald-trump-orders-used-by-judges-1784558946"></link>
            <id>https://tamilwin.com/article/donald-trump-orders-used-by-judges-1784558946</id>
            <summary type="text">பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்குகளில் அமெரிக்காவின் ‘பெடரல் ஜூடிசியல்
சென்டர்’ வழங்கும் அறிவியல் குறிப்புக் கையேடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு
அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்குகளில் அமெரிக்காவின் ‘பெடரல் ஜூடிசியல்
சென்டர்’ வழங்கும் அறிவியல் குறிப்புக் கையேடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.</p><p>

இந்த கையேட்டில் உள்ள "நம்பகத்தன்மையற்ற" தகவல்கள் நாட்டிற்கு "பெரிய
இழப்புகளை" ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இதுகுறித்து ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில்
வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "நமது நாட்டின் மத்திய நீதிபதிகள் உண்மைகளையும் அறிவியலையும் பெற
தகுதியானவர்கள்; பருவநிலை மாற்றம் குறித்த அரசியல் மோசடிகளையோ அல்லது போலி
அறிவியலையோ அல்ல.</p><p></p><h2>விசாரணை</h2><p>

இந்த உண்மையின் அடிப்படையில், மத்திய அரசின் சஸ்பென்ஷன் மற்றும் விநியோகத்
தடை அதிகாரிகளை இந்த நடவடிக்கை குறித்து மறுஆய்வு செய்ய நான் உத்தரவிடுகிறேன்."

ட்ரம்பின் இந்த உத்தரவு எத்தகைய "நடவடிக்கை" அல்லது யாருடைய செயல்பாடுகள்
குறித்த விசாரணைக்கானது என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0de964fb-f848-46e8-901b-32f3cd1e8d5b/26-6a5e3d66292b4.webp' /></p><p>
</p><p>
இது குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகையும் உடனடியாக முன்வரவில்லை.

முன்னதாக, அமெரிக்காவின் மத்திய நீதித்துறை, அறிவியல் சான்றுகள் குறித்த தனது
புதிய கையேட்டில் இருந்து பருவநிலை மாற்றம் தொடர்பான அத்தியாயத்தை
நீக்கியிருந்தது.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்த அத்தியாயம் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக
இருப்பதாக குடியரசுக் கட்சி மாநில வழக்கறிஞர்கள் வாதிட்டதை அடுத்து இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c9cad9e-2ba6-4048-a9a5-7592279e26c4/26-6a5e3d66cbb98.webp' /></p><p>
நீதிமன்ற வழக்குகளில் சமர்ப்பிக்கப்படும் அறிவியல் சாட்சியங்களை மதிப்பீடு
செய்ய நீதிபதிகள் இத்தகைய கையேடுகளையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.</p><p>
கொலம்பியா சட்ட கல்லூரியை சேர்ந்த ஜெசிகா வென்ட்ஸ் மற்றும் ராட்லி ஹார்டன்
ஆகியோரால் எழுதப்பட்ட இந்த சர்ச்சைக்கரிய அத்தியாயம், நீதிபதிகளுக்கு பருவநிலை
அறிவியல் தொடர்பான வழக்குகளைக் கையாள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T15:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மர்மமான மரணம்! சடலம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/for-inspector-general-police-rest-police-honours-1784556864"></link>
            <id>https://tamilwin.com/article/for-inspector-general-police-rest-police-honours-1784556864</id>
            <summary type="text">காலமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொரளை மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றுள்ளன. 

முன்னாள் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொரளை மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றுள்ளன. </p><p>

முன்னாள் பொலிஸ் மா அதிபர் கடந்த 17 ஆம் திகதி காலை அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p> </p><p>

அவரது மரணம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம்&nbsp; என சந்தேகிக்கப்படுவதுடன், தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் அவர் சுட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>

சி.டி.விக்ரமரத்னவின் சடலம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/455e0262-d3a2-49ca-ac6c-1f4d8dd9c8a7/26-6a5e3607b8e5f.webp' /></p><p> </p><p>

நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன உயிரிழக்கும் போது 63 வயதாகும்.</p><p> 

1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சேவை இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p> 

அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9abd8168-e49e-41a3-bad8-3475fca64dbf/26-6a5e36086ab3e.webp' /></p><p> 

2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டதன் காரணமாக, சி.டி. விக்ரமரத்ன மேலும் சுமார் 8 மாதங்கள் பொலிஸ் மா அதிபர் பதவியில் பணியாற்றினார்.</p><p> 

எனினும் அவர் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் பெரும் பரபரப்பு! நாடாளுமன்றம் முற்றுகை - பிரதமர் மோடி அவசரமாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delhi-battlefield-besieg-parliament-modi-evacuated-1784549845"></link>
            <id>https://tamilwin.com/article/delhi-battlefield-besieg-parliament-modi-evacuated-1784549845</id>
            <summary type="text">நீட் (NEET) உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்ப்பு தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் (NEET) உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து இன்று (20) புது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டன.</p><p>

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், தேசியத் தேர்வு முறையில் வெளிப்படையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><h2>டெல்லியில்&nbsp;பதற்றம்</h2><p>

ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை டெல்லி பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன் தடியடியும் நடத்தினர்.</p><p>

பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் சிதறி ஓடியதுடன், சிலர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0003c8be-e11f-4586-a478-3eb634ab82c5/26-6a5e17228a7f6.webp' /></p><p>
</p><p>
மே மாதத்தில் தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி (CJP), இந்தியாவின் கல்வி முறை, வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான அதிருப்தியை மையமாகக் கொண்டு அண்மைக் காலங்களில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UlpTg2bKG2g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இந்தப் போராட்டம், CJP-க்கு ஆதரவாக 20 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் தீவிரமடைந்தது.
</p><p>
இதற்கிடையில், போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மத்திய டெல்லியின் சில பகுதிகளில் அமலில் இருந்த தடையுத்தரவை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><h2>இணைய சேவைகள்&nbsp;நிறுத்தம்</h2><p>
</p><p>
அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக CJP-யின் இரண்டு பிரதிநிதிகள் மூத்த அமைச்சரொருவரைச் சந்தித்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்ததாக இயக்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனிடையே, போராட்டத்தை ஒட்டி மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280812eb-bac0-4151-b311-a89f5e49cd8f/26-6a5e17236e89d.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதுடன், மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.</p><p>போராட்டம் மிகத் தீவிரமடைந்து, மாணவர்கள் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில்களை நெருங்கியதை அடுத்து, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அனைத்து பாதுகாப்புக் கதவுகளும் அவசரமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.</p><p> பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்குள் இருந்த மூத்த அரசு அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.</p><p></p><h2>பிரதமர் மோடி</h2><p>
</p><p>
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மிக அருகில் திரண்டு முழக்கமிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு, நாடாளுமன்ற வளாகத்தை விட்டு அவசரமாக வெளியேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965c1b5a-9c62-4311-b383-15f35286068f/26-6a5e17242a98f.webp' /></p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ராஜீவ் சவுக், ஜன்பத், படேல் சவுக், மத்திய செயலகம் உள்ளிட்ட 5 முக்கிய டெல்லி மெட்ரோ தொடருந்து&nbsp; நிலையங்களின் நுழைவு வாயில்களும் உடனடியாக மூடப்பட்டன.</p><p> நாடாளுமன்றத்தின் உள்ளேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நீட் முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக கடும் முழக்கங்களை எழுப்பியதால் அவையும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றப் பகுதி பலத்த ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T14:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் - மொராக்கோ போட்டிகள்: ஹோட்டல் கட்டணத்தை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் போர்த்துக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-morocco-matches-1784558076"></link>
            <id>https://tamilwin.com/article/spain-morocco-matches-1784558076</id>
            <summary type="text">ஸ்பெயின் - மொராக்கோ நாடுகளுடன் இணைந்து 2030ஆம் ஆண்டு FIFA உலகக்
கோப்பை கால்பந்து தொடரை நடத்தவுள்ள போர்த்துக்கல், அதற்குள் தனது நாட்டு
ஹோட்டல்களின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் - மொராக்கோ நாடுகளுடன் இணைந்து 2030ஆம் ஆண்டு FIFA உலகக்
கோப்பை கால்பந்து தொடரை நடத்தவுள்ள போர்த்துக்கல், அதற்குள் தனது நாட்டு
ஹோட்டல்களின் படுக்கை வசதிகளை 60,000- ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.</p><p>

இது அந்நாட்டின் தற்போதைய மொத்த கொள்ளளவில் ஐந்தில் ஒரு பங்காகும் (20%) என்று
சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>

2030 -ல் உலகக் கிண்ணக் கால்பந்து&nbsp;</h2><p>

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் மூலம் கிடைக்கும் சர்வதேச கவனத்தைத் தன்
சுற்றுலாத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்காகப் பயன்படுத்த போர்த்துக்கல்
தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6a78e5-1b98-49c7-9fdd-b4c198343cce/26-6a5e3299ef3bf.webp' /></p><p> 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 7% பங்களிப்பை வழங்கும்
சுற்றுலாத்துறை, இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. </p><p>

2030 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, தொடருந்து சாலை, விமான நிலையங்கள்,
விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர நகர்ப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த
போர்த்துக்கல் அரசு 190 பில்லியன் திர்ஹம்களை (சுமார் 20 பில்லியன் டொலர்)
முதலீடு செய்துள்ளது. </p><h2>

நாட்டு வருமானத்தை பல மடங்கு உயர்த்த நடவடிக்கை</h2><p>
கடந்த நான்கு ஆண்டுகளில் 45,000 படுக்கை வசதிகளைக் கூட்டி, தற்போது
போர்த்துக்கல்லில் 3,00,000க்கும் அதிகமான ஹோட்டல் படுக்கை வசதிகள் உள்ளன.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 20 மில்லியன் (2 கோடி) சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து
ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக போர்த்துக்கல் பார்க்கப்படுகின்றது. </p><p> இதனை 2030க்குள் 26 மில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcca988f-bbef-4577-ac23-d844f745ccc5/26-6a5e329ac07b1.webp' /></p><p>
</p><p>
மேலும், சுற்றுலாத்துறை மூலமான வருவாய் 2025ஆம் ஆண்டு, 138 பில்லியன் திர்ஹம்களாக
இருந்த நிலையில், 2027ஆம் ஆண்டில் அதனை சாதனை அளவாக 161 பில்லியன் திர்ஹம்களை எட்டும் என அந்நாட்டின் மத்திய வங்கி கணித்துள்ளது.</p><p>

சீனா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை
அதிகரிப்பதன் மூலம் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட போர்த்துக்கல்
திட்டமிட்டுள்ளது.</p><p>

மேலும், பாரம்பரிய சுற்றுலாத் தலங்களைத் தாண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க பிற
நகரங்களையும் கலாச்சாரம் மற்றும் வணிகப் பயணங்களுக்கான முக்கிய மையமாக மாற்ற புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு உறுதியான ஆதரவு தொடரும்: பர்ன்ஹாம் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zelenskyy-support-burnham-confirmed-1784556610"></link>
            <id>https://tamilwin.com/article/zelenskyy-support-burnham-confirmed-1784556610</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு தாம் &quot;துணையாக இருப்பேன்&quot;
என்றும், தனது பிரதமரின் கீழ் உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவு &quot;உறுதியாக&quot;
தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு தாம் "துணையாக இருப்பேன்"
என்றும், தனது பிரதமரின் கீழ் உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவு "உறுதியாக"
தொடரும் என்றும் பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.</p><p>

பதவியேற்ற பிறகு தாம் பேசவிருக்கும் முதல் சில வெளிநாட்டுத் தலைவர்களில்
ஜனாதிபதி ஸெலென்ஸ்கியும் ஒருவராக இருப்பார் என்று அவர் கூறினார்.
</p><p>
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனும் ஆரம்பத்திலேயே தொலைபேசி
வாயிலாக உரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஆதரவு</h2><p>
</p><p>
"இவைதான் எனது முதல் அழைப்புகளாக இருக்கும். பிரித்தானியாவின் கொள்கையில் எந்த
மாற்றமும் இல்லை என்பதை இன்று பிற்பகுதியில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியிடம் நான்
மிகத் தெளிவாகத் தெரிவிப்பேன்," என்று அவர் கூறினார்.
</p><p>
அவர் மேலும் பேசுகையில், "கீர் ஸ்டார்மர் உக்ரைனை ஆதரித்ததுடன் மட்டுமின்றி,
தனிப்பட்ட முறையிலும் துணையாக நின்று ஒரு நம்பமுடியாத பணியைச் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d4a496-4caa-46b3-953f-f36f92aaf54b/26-6a5e2d7a1d346.webp' /></p><p>
</p><p>அவரைப் போலவே நானும் 100 சதவீதம் ஸெலென்ஸ்கிக்கு துணையாக இருப்பேன்.

அரசாங்கத்தில் பர்ன்ஹாமிற்கு வெளியுறவுக் கொள்கை சார்ந்த அனுபவம் குறைவாகவே
உள்ளது. </p><p>இருப்பினும், தாம் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியை நிர்வகித்தபோது,
உக்ரைனிய மேயர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை வெடித்த மோதல்: நீதி அமைச்சர் மீது அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motion-against-the-minister-of-justice-1784552940"></link>
            <id>https://tamilwin.com/article/motion-against-the-minister-of-justice-1784552940</id>
            <summary type="text">

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை(21.07.2026) செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை(21.07.2026) செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. </p><p>


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் தொடர்ச்சியான சம்பவங்களை மையப்படுத்தியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.</p><p></p><h2> 

நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு பொறுப்புடன் செயற்படவில்லை என்றும், நீதி அமைச்சரின் நடவடிக்கைகள் திருப்தியற்றவை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. 

ஜூலை மாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நாளை(21) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24) வரை நடைபெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2000c247-18a8-4631-84a0-8eda97c74508/26-6a5e2f0f2ec6e.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், நாளை பிரேரணையைச் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை கையளிக்க முடியாவிட்டால், இந்த நாடாளுமன்ற வாரத்துக்குள்ளேயே நிச்சயம் கையளிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை அவசரமானதாகக் கருதி, நாடாளுமன்றத்தில் விரைவாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு சபாநாயகரை வலியுறுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்... மகிந்த தரப்பிலிருந்து NPP-க்கு ஆதரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-for-npp-from-mahinda-s-side-1784556246"></link>
            <id>https://tamilwin.com/article/support-for-npp-from-mahinda-s-side-1784556246</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றோம் என்றால் அதற்கான வேலைகளை செய்தவர் மகிந்த ராஜபக்ச என்றும், தற்போது நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றோம் என்றால் அதற்கான வேலைகளை செய்தவர் மகிந்த ராஜபக்ச என்றும், தற்போது நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அநுர என்றும் அக்குறணை பிரதேசம் அரசியல் செயற்பாட்டாளர் ரியாஷ் அகமர் தெரிவித்துள்ளார். </p><p>


லங்காசிறி ஊடகம் வழங்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

நான் மகிந்தவுடன் இணைந்து அரசியல் செய் வந்த பொழுது, எனக்கு சரியானதொரு வாய்ப்பு வழங்கப்படாமல் ஏமாற்றமே கிடைத்தது. </p><p> ஆகையால் மக்களுக்கு சேவை செய்வதற்காக தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன்.

இலங்கை நாட்டில் தற்போது மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் மகிந்த தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82389b91-e09d-4dae-bee0-fe922168d538/26-6a5e2c00aa07d.webp' /></p><p> </p><p>அதே போன்று, அப்போதைய ஆட்சிகளில் நடந்த ஊழல் குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டியவர் என்றால் அது அநுர தான். 

நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறும் பொழுது, மக்களுக்கு தேவையான அனைத்தையும் கலவரம் இல்லாமல் அநுர குமார திஸாநாயக்க செய்துக் கொண்டிருக்கிறார். </p><p>அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தான் நானும் நினைக்கின்றேன்.

ஒன்றும் இல்லாத அரசியல்வாதிகளை பற்றி நான் பேச விரும்பவில்லை. ராஜபக்சர்கள் ஆட்சிக் காலங்களில் ஊழல்வாதிகள் என்ற பெயரில் ஒரு சிலரே அகப்பட்டார்கள் என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K6TyCteP91w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 உலகக் கிண்ணம் இலக்கு: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-world-cup-rohit-sharma-retirement-rumors-1784555095"></link>
            <id>https://tamilwin.com/article/2027-world-cup-rohit-sharma-retirement-rumors-1784555095</id>
            <summary type="text">தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள வதந்திகளை மறுத்துள்ள
முன்னாள் இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா, நாட்டுக்காக விளையாடி அணியின்
வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள வதந்திகளை மறுத்துள்ள
முன்னாள் இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா, நாட்டுக்காக விளையாடி அணியின்
வெற்றிக்கு பங்களிப்பது மட்டுமே தற்போது தனது ஒரே குறிக்கோள் என்று
தெரிவித்துள்ளார்.</p><p>

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், ரோஹித்
சர்மா 110 பந்துகளில் 138 ஓட்டங்கள் விளாசினார்.</p><p></p><p>
</p><h2>ரோஹித் சர்மா</h2><p>
இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த
இப்போட்டி ரோஹித்தின் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என்று பரவலாகப்
பேசப்பட்டது.
</p><p>
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே 39 வயதான ரோஹித் சர்மாவின் இந்த அறிக்கை
வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6cc8a49-a07f-4eb3-9a50-c413736ffca9/26-6a5e2ae2e276f.webp' /></p><p>
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும்
2027 ஐசிசி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடத் திட்டமிட்டுள்ளதாக ரோஹித் ஏற்கனவே
பலமுறை தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்த ரோஹித்தின் ஃபார்ம்
குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த சதம் அதற்கு முற்றுப்புள்ளி
வைத்துள்ளது.</p><p>

எனினும், இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறது.</p><p></p><h2>இந்திய அணி</h2><p>

இதுகுறித்து பிசிசிஐ (BCCI) இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் ரோஹித் சர்மா
கூறியிருப்பதாவது:
"பேட்டிங் செய்வது, களமிறங்கி விளையாடுவது, எனது நாட்டை மற்றும் அணியை
பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே எனது வேலை.
</p><p>
கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் முதல் எனக்கு இதுதான் சொல்லிக்
கொடுக்கப்பட்டுள்ளது, அதைத்தான் நான் தொடர்ந்து செய்யப் போகிறேன்.

நான் அறிமுகமான காலத்தில் இருந்தே என்னைச் சுற்றி இந்த சலசலப்புகள் (Noise)
இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

நான் விளையாடும் வரை இது இருக்கத்தான் செய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fbecbff-de72-42c2-aaf1-a43e4e776cb9/26-6a5e2ae3ab1af.webp' /></p><p> </p><p>எனவே, இதைப் பற்றி நான்
கவலைப்படுவதில்லை. களத்தில் நான் என்ன செய்கிறேன், அணியின் வெற்றிக்கு
எப்படிப் பங்களிக்கிறேன் என்பது மட்டுமே முக்கியம்.

சலசலப்புகள் இருக்கட்டும், அது இல்லையென்றால் சுவாரஸ்யமே இருக்காது."
</p><p>இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் சிறப்பான சதத்தையும் மீறி, இந்திய அணி
தோல்வியைத் தழுவி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது.

அடுத்ததாக, இந்திய அணி ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட
டி20 தொடரில் பங்கேற்கிறது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி
விளையாட உள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய கதவுகள் திறப்பு: அமெரிக்கக் கனவை கைவிடும் இந்திய மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-students-abandoning-american-dream-1784555597"></link>
            <id>https://tamilwin.com/article/indian-students-abandoning-american-dream-1784555597</id>
            <summary type="text">இந்திய மாணவர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த &#039;அமெரிக்கக் கனவு&#039; மெல்லக்
குறைந்து, தற்போது அவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத்
திருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய மாணவர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த 'அமெரிக்கக் கனவு' மெல்லக்
குறைந்து, தற்போது அவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத்
திருப்பத் தொடங்கியுள்ளனர்.</p><p>

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் விசா விதிமுறைகளைக்
கடுமையாக்கியுள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்திய மாணவர்களுக்கான
புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளது.
</p><p>
சென்னை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கல்வி ஆலோசகர்கள் மற்றும் மாணவர்களின்
கூற்றுப்படி, அமெரிக்கா மற்றும் கனடாவை விட ஐரோப்பிய நாடுகளில் கல்விச் செலவு
50% முதல் 80% வரை குறைவாக இருப்பதுவே இதற்கு முக்கியக் காரணமாகும்.</p><p></p><h2>மாணவர்களுக்கான விசா</h2><p>

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு
மாணவர்களுக்கான விசா கால அளவை அமெரிக்க அரசு அண்மையில் குறைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78c25db-58fc-45b2-bfdc-62ca2f6aa52c/26-6a5e2aaf3c4a3.webp' /></p><p>

இதனால், இந்தியாவிலிருந்து கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின்
எண்ணிக்கை 2023-ல் 9 இலட்சமாக இருந்த நிலையில், 2025-ல் 6 இலட்சமாகக்
குறைந்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டு ஜனவரியில் கையெழுத்தான இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக
ஒப்பந்தம், இந்திய மாணவர்கள் மற்றும் திறமையாளர்கள் விசா பெறுவதை
எளிதாக்கியுள்ளது.</p><p></p><h2>ஐரோப்பிய ஒன்றியம்</h2><p> படிப்பை முடித்த பிறகு அங்கு வேலை செய்வதற்கான தெளிவான
வழிகளையும் இது உருவாக்கியுள்ளது.

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் தொழிலாளர்
பற்றாக்குறையை ஈடுகட்ட, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியத் திறமையாளர்களை வரவேற்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af1f9a14-d5af-4bee-a5af-fb58812c4261/26-6a5e2aafe3ab7.webp' /></p><p>
</p><p>
கல்வி ஆலோசகர்களின் கணிப்புப்படி, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில்
இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 60% முதல்
70% வரை உயரக்கூடும்.</p><p>

பொறியியல் படிப்புக்கு ஜெர்மனி, சிறந்த வாழ்க்கை முறைக்கு நெதர்லாந்து,
குறைந்த கட்டண ஆராய்ச்சிப் படிப்புகளுக்குப் போர்த்துக்கல் மற்றும்
முகாமைத்துவ படிப்புகளுக்குப் பிரான்ஸ் ஆகிய நாடுகளை இந்திய மாணவர்கள் அதிகம்
தேர்வு செய்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:03:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி அகழ்வு பணிகள்! சிறுவர்களுடைய என்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excavation-work-at-the-chemmani-mass-grave-1784553495"></link>
            <id>https://tamilwin.com/article/excavation-work-at-the-chemmani-mass-grave-1784553495</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(20.7.2026) நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம்(20.7.2026) நடைபெற்றது.</p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p>
</p><p>
நேற்றைய தினம்(19) உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை
சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203a4536-e600-4e0e-81bd-b88ace009841/26-6a5e2356bd2c0.webp' /></p><p>
</p><p>
அதவேளை பெரிய என்புக்கூட்டிற்கு அருகில் சிறிய என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட
நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T13:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leader-pays-tribute-to-former-igp-1784552212"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leader-pays-tribute-to-former-igp-1784552212</id>
            <summary type="text">இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ இன்றைய தினம்(20.07.2026) நேரில் சென்று இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ இன்றைய தினம்(20.07.2026) நேரில் சென்று இறுதி அஞ்சலி
செலுத்தியுள்ளார்.
</p><p>
இதன்போது அன்னாரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும்
கவலையையும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி</h2><p>அத்துடன் முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சேவைகளையும் அவர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bab90e5-e5f1-4544-b954-d8172af2af19/26-6a5e24893a5f2.webp' /></p><p>இந்தநிலையில்,&nbsp;முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என அவரது நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது குறித்த இறுதி நீதிமருத்துவ அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T13:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-chairman-eastern-transport-authority-1784553289"></link>
            <id>https://tamilwin.com/article/new-chairman-eastern-transport-authority-1784553289</id>
            <summary type="text">கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக, காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக, காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று(20.07.2026)இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><h2> புதிய தவிசாளர் நியமனம்</h2><p>

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை நகரில் அமைந்துள்ள வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த புதிய தவிசாளர், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.</p><p>இதன்போது,&nbsp; அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்துள்ளதுடன், மாகாணத்தின் போக்குவரத்து நிலவரங்கள் தொடர்பில் முதற்கட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ad2cb5-76b2-4b54-9c92-7fe2005472a2/26-6a5e219a9e5cb.webp' /></p><p> </p><p>

பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த புதிய தவிசாளர் பிர்தௌஸ் நளீமி,</p><p>கிழக்கு மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவைகளை மேலும் வினைத்திறனானதாகவும், மக்களுக்கு அசௌகரியங்களற்ற பாதுகாப்புமிக்க சேவையாகவும் மேம்படுத்துவதற்குத் தேவையான புதிய திட்டங்களை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்துவேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளராகவும், சுற்றாடல் அமைச்சின் மாவட்ட இணைப்பாளராகவும் பணியாற்றி வரும் பிர்தௌஸ் நளீமி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசின் அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-20T13:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாவட்ட காணி மற்றும் அபிவிருத்தி மேலதிக அரசாங்க அதிபராக பாலசிங்கம் தேவரதன் கடமையேற்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/balasingam-devarathan-assumes-duties-agent-1784553825"></link>
            <id>https://tamilwin.com/article/balasingam-devarathan-assumes-duties-agent-1784553825</id>
            <summary type="text">வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான புதிய மேலதிக அரசாங்க அதிபராக (Additional Government Agent – Land &amp;amp; Developmen...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான புதிய மேலதிக அரசாங்க அதிபராக (Additional Government Agent – Land &amp; Development) பாலசிங்கம் தேவரதன், இன்று (20.07.2026) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><p>

இதற்கு முன்னர், கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக (Deputy Commissioner) நீண்டகாலம் பணியாற்றிய அவர், அப்பகுதியின் விவசாய மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.</p><h2>மேலதிக அரசாங்க அதிபர்</h2><p>
</p><p>
அவரது பணிக்காலத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் பந்தன் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளில் புதிய கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான முன்மொழிவுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைத்து, அதற்கான அனுமதிகளைப் பெற்று இரு கமநல சேவை நிலையங்களையும் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24f33a6e-d4c0-4ae3-a982-69421c64678c/26-6a5e2388c60f1.webp' /></p><p>
</p><p>
மேலும், கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நெற்காணி பதிவேட்டை (Paddy Land Register – PLR) முழுமையாகப் பூர்த்தி செய்த சாதனையும் அவருடைய பணிக்காலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
</p><p>
வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற எளிய கடமையேற்பு நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு, புதிய மேலதிக அரசாங்க அதிபருக்கு தங்களது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-20T13:33:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029 இல் அரசை வீட்டுக்கு விரட்டியடிப்போம்! மனோ கணேசன் எம்.பி. சபதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-drive-government-home-in-2029-mano-ganesan-1784550501"></link>
            <id>https://tamilwin.com/article/we-drive-government-home-in-2029-mano-ganesan-1784550501</id>
            <summary type="text">&quot;நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>"நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் நேற்று(19.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>ஜனாதிபதித் தேர்தல்
</h2><p>
2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தி இந்த அரசை வீட்டுக்கு அனுப்பத் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
</p><p>
தற்பொழுது நிகழும் மரணங்கள் தொடர்பில் எம்மால் தீர்க்கமாகக் கூற முடியாது என்றாலும், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணத்தில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f6233dd-d112-4ade-aeaf-69a151e347e4/26-6a5e19a6196ff.webp' /></p><p>
</p><p>
 நிஷாந்த போன்ற திறைசேரி அதிகாரிகள் சாதாரணமானவர்கள் அல்லர். எனவே, இந்த விவகாரங்கள் குறித்து நீதிமன்றம் முறையான விசாரணைகளை நடத்த வேண்டும்.</p><p>

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசின் தீர்மானம் முறையற்றது. 
மக்கள் இறுதியாக நம்பிச் செல்லும் ஒரே இடம் நீதிமன்றம் தான். </p><p>அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.


அரசுகள் வரும், போகும் ஆனால் நீதித்துறையின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p></p><h2>அரசை வீட்டுக்கு அனுப்புவோம்</h2><p> </p><p>அரசியல் காரணங்களுக்காக நீதித்துறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.

இது ஒரு அரசியல் கூட்டணி மட்டுமல்ல, நாட்டின் பிரச்சினைகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் பொதுவான மேடை. </p><p>

தற்போது ஆறு கட்சிகள் இணைந்துள்ளன, எதிர்காலத்தில் இன்னும் பல கட்சிகள் இதில் இணையும். அரசைக் கவிழ்க்கும் நோக்கம் எமக்கில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47fa35ac-bb83-43df-ac16-d95ee27a54b4/26-6a5e19a563e92.webp' /></p><p> </p><p>

அவர்கள் தமது பயணத்தைத் தொடரட்டும். ஆனால், வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தி அரசை வீட்டுக்கு அனுப்பத் தயாராக இருக்கின்றோம்.</p><p>



எதிர்க்கட்சிகள் நாட்டைச் சீர்குலைக்கப் பார்க்கின்றன என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்வைக்கும் குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.

பிரதமர் பொய்களைக் கூறக்கூடாது.</p><p> அன்று நாட்டைச் சீர்குலைக்கும் வேலைகளைச் செய்தது நீங்கள்தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் 

தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்குத் எனது முழுமையான ஆதரவை வழங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T12:59:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்ம மரணங்களை முன்னரே அறிந்த அநுர அரசு..! சாகர காரியவசம் புதிய குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-accusation-government-1784551951"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-accusation-government-1784551951</id>
            <summary type="text">இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும், அரசு அதனைத்
தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது, அரசியல் பிரசாரங்களிலேயே
கவனம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும், அரசு அதனைத்
தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது, அரசியல் பிரசாரங்களிலேயே
கவனம் செலுத்தி வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர
காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

பத்தரமுல்லையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(20.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> 

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

இந்த வருடத்தில் இதுவரை 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. 

நேற்று கூட 16 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அரசின் கிளின் சிறிலங்கா
திட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. </p><p>இதில் வீதிப் பயனாளிகளின்
வாகனங்களைச் சோதனையிடுவதும், அரச நிறுவனங்களுக்குள் தமது ஆதரவாளர்களை
உள்வாங்குவதுமே நடக்கிறதே தவிர, நாடு சுத்தப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7066cf9e-eadc-4d86-ba49-e13fe758925c/26-6a5e1aa797bc4.webp' /></p><p> </p><p>

இவ்வாறான அலட்சியப்போக்கினால் நிகழும் ஒவ்வொரு மரணத்திற்கும் அரசே பொறுப்புக்கூற வேண்டும் என்றார். 

நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மர்ம மரணங்கள் குறித்து கடும்
சந்தேகத்தை வெளியிட்ட அவர், சில உயிரிழப்புகள் தற்கொலை என முன்னரே
அறிவிக்கப்படுவது விந்தையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
</p><h2>
தொடர் மர்ம மரணங்கள்</h2><p>
323 கொள்கலன் திருட்டு விவகாரத்தில் முறைப்பாடு செய்த நபர், நந்தன குணதிலக,
கபில சந்திரசேன, திறைசேரி அதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் எனப் பலர்
மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து செய்தி வருவதற்கு முன்பே, அது
தற்கொலை எனப் பொலிஸ் அதிகாரி ஒருவர் அறிவித்தமை பெரும் சந்தேகத்தை
ஏற்படுத்துகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3f1b632-a192-444a-8d79-fe4beabb98cd/26-6a5e1aa862ebd.webp' /></p><p> அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மர்மமாக இறப்பதும்,
பின்னர் அவை தற்கொலை எனப் பிரச்சாரம் செய்யப்படுவதும் ஜனநாயகத்துக்குப்
பொருத்தமற்றது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>


அரசு டெங்கு மற்றும் கோவிட் 19 நோயைக் கட்டுப்படுத்திய அனுபவமுள்ளவர்களின்
ஆலோசனைகளைப் பெறாது, தனது அகந்தையுடன் செயற்படுகின்றது என்று தெரிவித்த சாகர காரியவசம், இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பிரதம நீதியரசரின்
பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசு ஏன் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கின்றது
என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதும் என்றார். </p><p> 


அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் தள்ளிவிட்டு, மக்களின் உயிரைக் காக்க அரசு
முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:55:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- கோட்டையில் தொடருந்து தடம்புரள்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-derailed-at-colombo-fort-1784550832"></link>
            <id>https://tamilwin.com/article/train-derailed-at-colombo-fort-1784550832</id>
            <summary type="text">கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் சற்றுமுன்னர் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.இதனால் தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் சற்றுமுன்னர் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.</p><p>இதனால் தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p> </p><p>கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மாலை 04.45 க்கு ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த 1164 இலக்க தொடருந்து, தாமதமாகி மேடையை வந்தடைய முற்பட்ட போது மாலை 04.35 அளவில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.</p><p></p><h2>அதிகாரிகள் நடவடிக்கை&nbsp;</h2><p> 

இந்த விபத்தின் காரணமாக தொடருந்தின் ஒரு பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதற்கு முன்னர் கடந்த 7 ஆம் திகதியும் இதே தொடருந்து தடம்புரண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/012d528e-fa8e-4852-a41e-576d65ba6d81/26-6a5e1924b2182.webp' /></p><p> 

இந்த தடம்புரள்வு காரணமாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதுடன், தொடருந்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> 

இந்தநிலைமையினால் மாலை வேளையில் பயணிக்கும் ஏனைய சில அலுவலக தொடருந்துகளும் சற்று தாமதமடையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T12:49:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயிர்களை அழித்ததாக தகராறு : கால்நடை உரிமையாளர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cattle-owner-brutally-hacked-to-death-1784550501"></link>
            <id>https://tamilwin.com/article/cattle-owner-brutally-hacked-to-death-1784550501</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை , ஹுங்கம பகுதியில் கால்நடைகள் பயிர்களை அழித்தது
தொடர்பான தகராறு முற்றியதில், கால்நடை உரிமையாளர் ஒருவர் வெட்டிக் கொலை
செய்யப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை , ஹுங்கம பகுதியில் கால்நடைகள் பயிர்களை அழித்தது
தொடர்பான தகராறு முற்றியதில், கால்நடை உரிமையாளர் ஒருவர் வெட்டிக் கொலை
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் கால்நடைகள், மற்றொருவர் பயிரிட்டிருந்த
மரக்கறி பயிர்களை அழித்துள்ளன. </p><p>இது குறித்த இழப்பீட்டைப் பேசுவதற்காக,
சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர் நேற்று(19.07.2026) சந்தேகநபரின் வீட்டுக்குச்
சென்றுள்ளார். இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்,
பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.</p><p></p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த பயிர்ச்செய்கை மேற்கொண்ட நபர் மற்றும்
அவரது சகோதரர் ஆகிய இருவரும் இணைந்து, கால்நடைகளின் உரிமையாளரை கூரிய
ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f98c3a-23fd-4d3a-93ba-c356c5bb2d79/26-6a5e16364070c.webp' /></p><p>படுகாயமடைந்த நபர் உடனடியாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்
சென்றுள்ளனர். </p><p>அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஹுங்கம பொலிஸார்
தீவிரப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T12:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rs-14-6-million-fine-for-not-follow-regulations-1784550458"></link>
            <id>https://tamilwin.com/article/rs-14-6-million-fine-for-not-follow-regulations-1784550458</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 2006-ஆம் ஆண்டின் 6-ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 2006-ஆம் ஆண்டின் 6-ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் (FTRA) விதிகளுக்கு இணங்கத் தவறிய 11 நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவிப்பை இன்று(20.07.2026) இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) வெளியிட்டுள்ளதுடன், 11 நிறுவனங்களுக்கு அபராதத் தொகை 14.6 மில்லியன் இலங்கை ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2> 

14.6 மில்லியன் ரூபாய் அபராதம்</h2><p>
இலங்கையின் பணமோசடித் தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்தல் (AML/CFT) ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்படும் நிதிப் புலனாய்வுப் பிரிவு, அச்சட்டத்தின் 19(1) மற்றும் 19(2) பிரிவுகளின் கீழ் நிர்வாகத் தண்டனைகளை விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ef8d37-de43-4ca2-ac6f-7d99c8d50e42/26-6a5e164ac2d87.webp' /></p><p> </p><p>

அந்த நிறுவனங்களில் கண்டறியப்பட்ட விதிமீறலின் தன்மை மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையில் இந்தத் தண்டனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும், தண்டனையாக வசூலிக்கப்பட்ட அனைத்துப் பணமும் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்த நடைமுறைப்படுத்தல் நடவடிக்கை, அறிக்கை நிறுவனங்களிடையே இணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நிதி அமைப்பின் நேர்மையை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/abjO4wfTafk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-20T12:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களோடு தொடர்புபடும் சர்ச்சைக்குரிய மரணங்கள்! மீண்டும் போர் வெற்றியை கையிலெடுக்கும் மகிந்த தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-deaths-linked-to-rajapaksa-family-1784549427"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-deaths-linked-to-rajapaksa-family-1784549427</id>
            <summary type="text">இன்று நாட்டில் அடிக்கடி நிகழும் உயர் அதிகாரிகளின் சர்ச்சைக்குரிய மரணங்களை ராஜபக்சர்களோடு தொடர்புபடுத்த அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக பொதுஜன பெரமுனவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று நாட்டில் அடிக்கடி நிகழும் உயர் அதிகாரிகளின் சர்ச்சைக்குரிய மரணங்களை ராஜபக்சர்களோடு தொடர்புபடுத்த அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டில் தற்போது நிகழும் எந்தவொரு பாதகமான சம்பவத்திற்கும் ராஜபக்ச குடும்பமே காரணம் என கூறும் அரசாங்கம், ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி பேச மறுக்கின்றது.</p><p></p><h2>அரசியல் பழிவாங்கல்&nbsp;</h2><p> </p><p> 


நாட்டில் நிகழும் சர்ச்சைக்குரிய மரணங்களை ராஜபக்சர்களுடன் இந்த அரசாங்கம் தொடர்புபடுத்துகின்றது.
</p><p>
ஆனால், மகிந்த ராஜபக்ச அவருடைய ஆட்சிக்காலத்தில், போரை முடிவுக்குக் கொண்டு வந்தமை, நெடுஞ்சாலைகள், மற்றும் மாபெரும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்து கவனம் செலுத்தவில்லை.

மாறாக, எல்லாத் தீமைகளுக்கும் ராஜபக்ச குடும்பமே காரணம் என கூறுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a34dd99-8533-47e6-a9b6-2bde0dd849a1/26-6a5e124494d45.webp' /></p><p> </p><p>

மேலும், போரில் வெற்றிபெற தங்களை அர்ப்பணித்த போர் வீரர்களையும், புலனாய்வு அதிகாரிகளையும் சிறையில் அடைத்து, அரசியல் பழிவாங்கலில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.</p><p> 

அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான கோப்புக்களை மறைத்த அதிகாரிகள், தற்போது அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்து கொண்டு, உண்மையான குற்றவாளிகளைத் தேடுவதற்குப் பதிலாக அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e91d4b0-b0a3-4b66-8a31-f35af36c3eaf/26-6a5e124557617.webp' /></p><p> </p><p>


இதேவேளை, தற்போது நாட்டு மக்களின் மீது அதிக வரிச்சுமையை சுமத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளில் இந்த அரசாங்கம் ஈடுபடுகின்றது. </p><p>

ஒருபுறம், ஜனாதிபதியின் திட்டத்தன் கீழ் 75 சதவீதமானோர் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், மறுபுறம் நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் அதிகரித்த வாழ்க்கைச் சுமையால் நெருக்கடியான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0nxZdnsn4AE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-20T12:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்னவிற்கு இரங்கல் தெரிவித்த ஜீவன் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-thondaman-condolences-to-c-d-wickramaratne-1784549853"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-thondaman-condolences-to-c-d-wickramaratne-1784549853</id>
            <summary type="text">இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
ஜீவன் தொண்டமான், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி அஞ்சலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
ஜீவன் தொண்டமான், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று(20.07.2026) இடம்பெற்றுள்ளன.</p><p>


இதற்கமைய, பல அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்த நிலையில், 
முன்னாள் பொலிஸ் மா அதிபர்
சி.டி. விக்ரமரத்னவின் மறைவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>

அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு
தனக்குக் கிடைத்ததாகவும், அமைதியான, பணிவான, கடமையுணர்வுமிக்க அதிகாரியாக அவர்
நாட்டிற்கு கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர் என்றும் அவரது சாதனைகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ba3bcf4-be8b-4c8e-98cd-a3e019884b54/26-6a5e128259176.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கை பொலிஸ் 
அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த ஜீவன்
தொண்டமான், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண கடற்படைத் தளபதி மற்றும் அரசாங்க அதிபர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-province-navy-commander-transferred-1784548867"></link>
            <id>https://tamilwin.com/article/northern-province-navy-commander-transferred-1784548867</id>
            <summary type="text">பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல்
புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபனை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல்
புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>குறித்த சந்திப்பானது இன்றைய தினம்(20.07.2026) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச்
செயலகத்தில் மரியாதை நிமித்தமாக இடம்பெற்றது.</p><p></p><h2>கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது, வட மாகாணத்தில் தனது பணிக்காலத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து
பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக
அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df5ec7c-8cad-42ae-8697-0948da17c419/26-6a5e0fe4ed559.webp' /></p><p>
அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகேயின் சேவையைப்
பாராட்டிய அரசாங்க அதிபர், அவரின் புதிய பொறுப்புகள் சிறப்புற அமைய மனமார்ந்த
வாழ்த்துகளையும் தெரிவித்தார்.</p><p>ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே , கொழும்பு கடற்படை தலைமையகத்தின்
மூன்றாம் நிலையிலுள்ள பிரதி பிரதானியாகப் பொறுப்பேற்கவுள்ளதுடன், கிழக்கு
மாகாண கடற்படைத் தளபதியாக மேலதிக கடமைகளையும் பொறுப்பேற்கவுள்ளார்.
</p><p>
வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய காலப்பகுதியில், புனித கச்சதீவு அந்தோனியார்
திருவிழா, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம் உள்ளிட்ட முக்கிய மத
நிகழ்வுகளுக்கான கடல் வழிப் போக்குவரத்து ஏற்பாடுகளை திறம்பட
ஒருங்கிணைத்ததுடன் நெடுந்தீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான பயணிகள்
கடற்போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்கும் முழுமையான ஒத்துழைப்பை
வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இச்சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க
அதிபர் (காணி) பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன்
மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T12:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழலற்ற சிறந்த நாட்டை உருவாக்குவோம் - ஆளும் தரப்பு தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-corruption-free-politics-pm-arun-hc-1784546798"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-corruption-free-politics-pm-arun-hc-1784546798</id>
            <summary type="text">ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் இல்லாத சிறந்த அரசியல் கலாசாரம் கொண்ட நாடாக இலங்கையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையின் கீழ் நாம் கட்டியெழுப்பி வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் இல்லாத சிறந்த அரசியல் கலாசாரம் கொண்ட நாடாக இலங்கையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையின் கீழ் நாம் கட்டியெழுப்பி வருகின்றோம் என&nbsp;பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.</p><p> இன்று(20.07.2026)&nbsp; திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைப்பெற்ற நீண்ட காலமாக நிலவி வந்த காணி சம்மந்தமான பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி கச்சேரி
நடமாடும் சேவையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>காணி கச்சேரி நடமாடும் சேவை</h2><p>


இந்த நடமாடும் சேவையில் நீண்டகாலமாக நிலவி வந்த பொது மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், </p><p>

காணிக்கான ஆவணங்களை பெற பலமுறை முயற்சித்த போதிலும் தீர்வு கிடைக்கவில்லை.

தற்போதைய நிலையில் காணிக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b342af55-9e4c-4ae7-8025-59852a995faf/26-6a5e0a0f3219d.webp' /></p><p> இதற்காக பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் தம்பலகாமம்
பிரதேச செயலாளருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.


முன்னர் நடைபெற்ற காணி நடமாடும் சேவையில் கடந்த கால அரசாங்கம் மூலமாக எதுவும்
கிடைக்கவில்லை. </p><p>ஆனால் இன்றைய காணி நடமாடும் சேவையினர் எதிர்வரும் திங்கட்கிழமை காணி உரிமை பத்திரத்தை பெற்று தருவோம்
என கூறினார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><h2>ஊழல் மோசடி அற்ற நாடு&nbsp;</h2><p>
</p><p>
இதன் போது உரையாற்றிய பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர, </p><p>

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றன.
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் மூவின சமூகங்களை சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c3ce111-412a-4c67-8ecd-54f228a1b607/26-6a5e0a0fe3e7d.webp' /></p><p>
</p><p>
இங்கு பல காணி பிணக்குகள் காணப்படுகின்றன இதனை தீர்க்க முயற்சித்து வருகிறோம். 

இலங்கை பல்வேறு
தரப்பட்ட பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி உலகளாவிய ரீதியில் தலைசிறந்த
நாடாக மாறிவருகிறது.</p><p>

ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் இல்லாத சிறந்த அரசியல் கலாசாரம்
கொண்ட நாடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க&nbsp; தலைமையின் கீழ் நாம் கட்டியெழுப்பி
வருகின்றோம்.</p><p></p><h2>மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு</h2><p> </p><p>

அத்துடன் சிறந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரினதும் ஒத்துழைப்புடன் முன்னேற
வேண்டும். 

எந்த சவாலாக இருந்தாலும் அதற்கு முகங்கொடுத்து முன்னேறி வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98fc8ebf-29f7-4492-8102-dbf5afea14a9/26-6a5e0a0e70e19.webp' /></p><p>
</p><p>பல பிரச்சினைகள் இருந்தாலும் சரியான முகாமைத்துவத்தின் ஊடாக அவற்றை கொண்டு செல்ல
வேண்டும். 

நாங்கள் நிச்சயமாக மக்களுடைய
அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண தயாராக உள்ளோம் என
தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த நடமாடும் சேவையில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள்
பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர கலந்து கொண்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான பொது மக்கள், காணி ஆணையாளர் என். அருள் செல்வன், தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப்
பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் காணி உத்தியோகத்தர் என பலரும் கலந்து
கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T12:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலிமுகத்திடலில் அதிரவைத்த கால்பந்து உற்சாகம்! இறுதிப் போட்டியை நேரலையாகக் கண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-vs-argentina-world-cup-final-colombo-1784548678"></link>
            <id>https://tamilwin.com/article/spain-vs-argentina-world-cup-final-colombo-1784548678</id>
            <summary type="text">ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணக் கால்பந்து
தொடரின் இறுதிப் போட்டியை இராட்சத திரைகளில் நேரலையாகக் காண்பதற்கு,
நள்ளிரவைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணக் கால்பந்து
தொடரின் இறுதிப் போட்டியை இராட்சத திரைகளில் நேரலையாகக் காண்பதற்கு,
நள்ளிரவையும் பொருட்படுத்தாது கொழும்பு காலிமுகத்திடலில் பல்லாயிரக்கணக்கான
இரசிகர்கள் திரண்டதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.</p><p>

தங்களது ஆதரவு அணிகளின் ஜெர்சிகளை அணிந்தவாறும், கொடிகளை ஏந்தியவாறும்
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த
இரசிகர்கள் எழுப்பிய உற்சாக ஒலி நள்ளிரவிலும் ஒட்டுமொத்த மைதானத்தையும்
அதிரவைத்தது.</p><p></p><h2>கால்பந்து உற்சாகம்</h2><p>
</p><p>
சாதாரண இரசிகர்களின் இந்த அதீத உற்சாகக் கொண்டாட்டத்தில், விளையாட்டுத்துறை
அமைச்சரும் ஒரு சாதாரண பார்வையாளராகக் கலந்துகொண்டமை அங்கிருந்தோரை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa5434f-7067-4591-8f97-7c3728ba5086/26-6a5e105c975af.webp' /></p><p> விசேட பிரமுகர்களுக்கான எவ்வித ஆடம்பரங்களுமின்றி,
சாதாரண மக்களுடன் அமர்ந்து அவரும் போட்டியின் ஒவ்வொரு விறுவிறுப்பான
கணத்தையும் ஆவலோடு இரசித்துப் பார்த்தார்.
</p><p>
இலங்கையில் கால்பந்து விளையாட்டுக்கான உத்வேகத்தையும், இளைஞர்களின் விளையாட்டு
ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விசேட நேரலை ஒளிபரப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>

நள்ளிரவையும் தாண்டி நீடித்த இந்தப் பிரம்மாண்ட நிகழ்வு காரணமாகக்
காலிமுகத்திடல் சூழலிலுள்ள நடமாடும் உணவகங்கள் மற்றும் வியாபார நிலையங்கள்
பெரும் வருமானத்தைப் பெற்றுக்கொண்டன.</p><p></p><h2>&nbsp;பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்</h2><p>அத்தோடு, கொழும்பில் தங்கியிருந்த
கணிசமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்தக் கால்பந்து திருவிழாவில்
இணைந்துகொண்டு மகிழ்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf47ac8-67a2-427a-a22d-4ed73a2c22af/26-6a5e105d4c1c9.webp' /></p><p>
</p><p>
பெருந்திரளான மக்கள் கூடியதால் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாதிருப்பதைத்
தவிர்க்க, காலிமுகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பொலிஸ்
பாதுகாப்பும், போக்குவரத்து ஒழுங்குகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.</p><p>

நள்ளிரவையும் பகலாக்கிய இந்தக் கால்பந்து உத்வேகம், இலங்கையில்
கிரிக்கெட்டுக்கு இணையாகக் கால்பந்து விளையாட்டும் மக்கள் மத்தியில் எவ்வளவு
பலமாக வேரூன்றியுள்ளது என்பதை மீண்டும் நிரூபிப்பதாக அமைந்திருந்தது.</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1018416397707770%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-20T12:11:17+00:00</updated>
        </entry>
    </feed>
