<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-21T13:01:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 தொண்டு நிறுவனங்களை குறி வைத்த இஸ்ரேல் - ஊடகங்கள் கையில் சிக்கிய முக்கிய ஆவணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-targets-15-charities-1784638453"></link>
            <id>https://tamilwin.com/article/israel-targets-15-charities-1784638453</id>
            <summary type="text">உலகளவில் செயல்பட்டு வரும் முன்னணி மனிதநேய மற்றும் தொண்டு நிறுவனங்களை
இஸ்ரேலிய அரசு எவ்வாறு நுணுக்கமாகக் கண்காணித்து ஆய்வு செய்தது என்பதை
அம்பலப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் செயல்பட்டு வரும் முன்னணி மனிதநேய மற்றும் தொண்டு நிறுவனங்களை
இஸ்ரேலிய அரசு எவ்வாறு நுணுக்கமாகக் கண்காணித்து ஆய்வு செய்தது என்பதை
அம்பலப்படுத்தும் இரகசிய ஆவணம் ஒன்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


2013ஆம் ஆண்டு இஸ்ரேலின் நலன்புரி மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சக இணையத்
தளத்திலிருந்து பெறப்பட்ட இந்த இரகசிய ஆவணத்தில், உலகம் முழுவதும் செயல்படும்
150க்கும் மேற்பட்ட சர்வதேச தன்னார்வ அமைப்புகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு
பட்டியலிடப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>

குறி வைக்கப்படும் 15 தொண்டு நிறுவனங்கள்</h2><p>
இந்த ஆவணத்தில் “ஒக்ஸ்ஃபாம்“, பிரான்ஸின் “பிரீமியர் அர்ஜென்ஸ்” மற்றும்
ஜெர்மனியின் “மெடிகோ இன்டர்நேஷனல்” போன்ற சுமார் 15 சர்வதேச தொண்டு
நிறுவனங்கள் பிரத்தியேகமாகக் குறி வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdf88a7-22e8-48fb-8a67-114806530810/26-6a5f6cc4318e6.webp' /></p><p>
</p><p>
இஸ்ரேலுக்கு எதிரான “பாய்காட், டைவெஸ்ட்மென்ட், சாங்க்ஷன்ஸ்” (BDS)
இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுதல், இஸ்ரேலை விமர்சித்தல் மற்றும்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அனுமதியின்றி திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆகிய குற்றச்சாட்டுகள் அந்த ஆவணத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
</p><p>
இருப்பினும், ஒக்ஸ்ஃபாம் உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் குற்றச்சாட்டுகளை
முற்றிலுமாக மறுத்துள்ளன.</p><h2>

மனித உரிமை ஆர்வலர்களின் சுட்டிக்காட்டல்</h2><p>
பாலஸ்தீனத்தில் உயிர்காக்கும் பணிகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களை இஸ்ரேல்
பல ஆண்டுகளாகக் கண்காணித்து வந்ததற்கு இந்த ஆவணம் ஒரு தெளிவான சான்றாகும் என
மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05a2d6f5-6b53-47c6-b31b-cb19365489b7/26-6a5f6cc4e7021.webp' /></p><p> 

BDS இயக்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கும்
சட்டத்தை 2017ஆம் ஆண்டு இஸ்ரேல் இயற்றுவதற்கு முன்பாகவே, இத்தகைய அமைப்புகளைப்
பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை அந்நாடு தீவிரமாகத்
தொடங்கியிருந்ததை இந்த அறிக்கை வெளியில் கொண்டு வந்துள்ளது.&nbsp; </p><p></p><p></p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T12:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sales-petition-adjourned-1784637136"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sales-petition-adjourned-1784637136</id>
            <summary type="text">ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக தன்னை கைது செய்து தடுத்து வைப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக தன்னை கைது செய்து தடுத்து வைப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு திகதியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>மனு பரிசீலனை</h2><p>

 

இம்மனு இன்று (21.07.2026) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தனது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5be7222-5c21-4d2e-9fc5-5d0d9b755d44/26-6a5f6a84815e4.webp' /></p><p>
</p><p>
 

இதனைத் தொடர்ந்து, மேலதிக மனு பரிசீலனையை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் - செம்மணியில் களமிறங்கும் போராட்டக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protesters-taking-to-the-streets-in-chemmani-1784637343"></link>
            <id>https://tamilwin.com/article/protesters-taking-to-the-streets-in-chemmani-1784637343</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப்
பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை(22....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப்
பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை(22.07.2026) 
காலை செம்மணியில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்தப்
போராட்டத்தில், அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>

454 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்</h2><p>

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் இதனுடன் தொடர்புடைய உண்மைகள்
வெளிவந்த வண்ணமுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af6495b-fb1e-4446-b1a5-b543cff902f7/26-6a5f67d529fb7.webp' /></p><p>
</p><p>
எனவே, இந்தப் புதைகுழியைப் பார்வையிட நாளை(22) வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப்
பிரதிநிதிகள் குழுவினர் ஊடாக சர்வதேச விசாரணைக்கு வழியேற்படுத்த வேண்டும் எனக்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, நாளை காலை 8 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமடையும் டெங்கு தாக்கம்! பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-outbreak-intensifies-death-toll-rises-1784634643"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-outbreak-intensifies-death-toll-rises-1784634643</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் இந்த வாரம் மேலும்
தீவிரமடைந்துள்ளதுடன், 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின்
மொத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் இந்த வாரம் மேலும்
தீவிரமடைந்துள்ளதுடன், 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின்
மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
நாடளாவிய ரீதியில் இதுவரை 77 ஆயிரத்து 28 பேர் இந்நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளமை தற்போதைய சுகாதார நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக
அமைகின்றது.</p><p></p><h2>56 ஆக உயர்வு</h2><p>
</p><p>
டெங்கு நோயாளர்களின் மரண வீதம் 0.07 சதவீதம் என்ற ஒப்பீட்டளவில் குறைந்த
மட்டத்தில் காணப்பட்ட போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து
வருவதால் வைத்தியசாலைகளில் கடுமையான நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என்று
சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe114859-0ead-4390-b1ab-de55bf4073da/26-6a5f6669478a3.webp' /></p><p>
</p><p>
மாகாண ரீதியில், மேல் மாகாணம் தொடர்ந்து டெங்கு பரவலின் பிரதான மையப்
பகுதியாகத் திகழ்கின்றது. </p><p>இங்கு மாத்திரம் 40 ஆயிரத்து 573 டெங்கு நோயாளர்கள்
பதிவாகியுள்ள நிலையில், அதிகூடிய எண்ணிக்கையாகக் கம்பஹாவில் 16 ஆயிரத்து 164
பேரும், கொழும்பில் 15 ஆயிரத்து 341 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறையில் படுகொலைச் செய்யப்பட்டவர்களுக்கு சிலை வைக்க நடவடிக்கை - நீதிமன்றில் வழக்கு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murdered-in-welikada-prison-1784636305"></link>
            <id>https://tamilwin.com/article/murdered-in-welikada-prison-1784636305</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின்
உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை
நீதவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின்
உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு நேற்று(20.07.2026) திங்கட்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது, ஏற்பாட்டு குழுவை சேர்ந்த வல்வெட்டித்துறை நகர
சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

இதனைத் தொடர்ந்து அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதி வழக்கு திகதியிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


கைதிகளால் படுகொலை</h2><p>
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ
விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு
தினமான எதிர்வரும் 25ஆம் திகதி அவர்களின் சிலை வல்வெட்டித்துறையில் திறந்து
வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8367a3c2-3a2b-446c-883f-06343f1bfc58/26-6a5f63c92f242.webp' /></p><p>

 இந்நிலையிலேயே வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்சக் கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல்
கைதிகள், ஜூலை 25மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளால் மோசமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்! உரிய தீர்வு அவசியம் - குமார் ஜெயக்குமாரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanyya-hot-spring-issue-1784634368"></link>
            <id>https://tamilwin.com/article/kanyya-hot-spring-issue-1784634368</id>
            <summary type="text">கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கவலைக்கு உரிய தீர்வு
அவசியம் என இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார்
ஜெயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கவலைக்கு உரிய தீர்வு
அவசியம் என இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார்
ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.</p><p> இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்&nbsp; அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம்
வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல்
நாட்டும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள்
மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>முக்கிய மரபுரிமைச் சின்னம்</h2><p>இது தொடர்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினரான குமார் ஜெயக்குமாரனின் அறிக்கையில் மேலும், கன்னியா என்பது ஒரு மதத் தலம் மட்டுமல்ல; அது திருகோணமலையின் வரலாறு,
பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்களின் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு
முக்கிய மரபுரிமைச் சின்னமாகும்.</p><p>இதுபோன்ற வரலாற்று மற்றும் மத உணர்வுகள்
சம்பந்தப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் அனைத்து
தரப்பினருடனும் கலந்தாலோசித்து, சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும், தொல்லியல்
மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p></p><p>இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும்
முன்வைக்கும் கவலைகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய முறையில்
கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து இனங்களும் மதங்களும் பரஸ்பர மரியாதையுடனும்
நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.</p><h2>நடவடிக்கை எடுக்க வேண்டும்</h2><p>
மேலும், கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகள்
குறித்து வெளிப்படையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்
என்றும், எந்தவொரு அபிவிருத்தி அல்லது கட்டுமான நடவடிக்கைகளும் சட்ட
நடைமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அனைத்து சமூகங்களின் மத, பண்பாட்டு
உணர்வுகளை மதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21d1bd0-db2a-49aa-9b60-680474d1a08e/26-6a5f6136e645d.webp' /></p><p>

அதேவேளை, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி,
மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

</p><p>இது யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்பட்ட கோயிலைப் போன்றது அல்ல. இப்போது
அவர்கள் அதைக் கட்டப் போகிறார்கள். எனவே, அரசியல் பிரமுகர்கள் யாரும் ஏன்
இதைப் பற்றிப் பேசவில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தீ விபத்தில்5 பேர் பலி..! விசாரணையை தீவிரப்படுத்திய பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-killed-in-homagama-fire-accident-1784633367"></link>
            <id>https://tamilwin.com/article/5-killed-in-homagama-fire-accident-1784633367</id>
            <summary type="text">ஹோமாகம - கட்டுவன தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம - கட்டுவன தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, தொழிலாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் இன்று(21.07.2026) இடம்பெற்ற நிலையில், இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>

அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விபத்து தொடர்பில் தீவிர விசாரணை</h2><p> </p><p>

உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதி அமைச்சர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a301b8c1-d123-4f5f-b225-98a54b2a0f62/26-6a5f61a1b8a20.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் சில அறிவுரைகளை பிரதி அமைச்சர் வழங்கியுள்ளதாக தெரவிக்க்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, தீ விபத்துக்கு வழிவகுத்த உடனடிக் காரணிகள், தொழிற்பேட்டையில் தீ பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்புத் தரநிலைகள் பேணப்பட்டதா என்பது,&nbsp; ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால வெளியேறும் நடைமுறைகளுக்கான தேவையான வசதிகள் இருந்தனவா என்பது,&nbsp; தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் அது தொடர்பான தொழில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும், ஏதேனும் அலட்சியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் விசாரிக்குமாறு, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் நதீக வத்தலியத்தவுக்கு பிரதியமைச்சர&nbsp;் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>மேலும், அபாயகரமான மற்றும் இடர் நிறைந்த பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர்&nbsp; குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தில் ஏற முயன்ற சிறுமி பரிதாபமாக பலி - தாய் மற்றும் சகோதரனுடன் சென்றபோது துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-kid-dies-in-an-accident-1784631711"></link>
            <id>https://tamilwin.com/article/school-kid-dies-in-an-accident-1784631711</id>
            <summary type="text">மாத்தறை, திக்வெல்ல - கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, திக்வெல்ல - கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>இன்று தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து, பாடசாலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயரிழந்துள்ளார். </p><p>இவ்வாறு உயிரிழந்தவர், கொடஉட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2><b>சிறுமி பரிதாபமாக பலி</b></h2><p> திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் அவர், காலையில் பாடசாலை செல்வதற்காக தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். </p><p>மாத்தறையில் இருந்து மித்தெனிய நோக்கிச் சென்ற தனியார் பேருந்துக்கு கை காட்டி, அவர்கள் அதன் முன்கதவு வழியாக அதில் ஏற முயன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f86ced4-4502-4787-a724-2fcf6bc84a76/26-6a5f59f410d9f.webp' />&nbsp;&nbsp;</p><p>முதலில் தாயாரும் சகோதரனும் பேருந்தில் ஏறியதை அடுத்து, இரண்டாவதாக சிறுமி பேருந்தில் ஏற முற்பட்டவுடன் பேருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. </p><p>இதன் போது அவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து அதே பேருந்தின் பின் சக்கரத்திற்குள் சிக்கியதாகவும் ஆரம்ப கட்டப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இந்த விபத்தில் சிறுமியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:06:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைக்குடா நாடுகளை குறி வைத்து தாக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-targets-gulf-countries-1784634979"></link>
            <id>https://tamilwin.com/article/iran-targets-gulf-countries-1784634979</id>
            <summary type="text">பஹ்ரைன் - ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் இன்று(21.07.2026) தாக்கதல்களை ஆரம்பித்துள்ளது. 


தெற்கு ஈரானைக் குறிவைத்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஹ்ரைன் - ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் இன்று(21.07.2026) தாக்கதல்களை ஆரம்பித்துள்ளது. </p><p>


தெற்கு ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p></p><h2> 

வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்</h2><p>
மேலும், தாக்கப்பட்ட கப்பல்களில் இரண்டு, ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e28d8ef-7d2a-4fdc-814a-af5ad0a371f1/26-6a5f5f05cb8c6.webp' /></p><p>

இதற்கிடையில், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதித்ததால், வளைகுடாப் பகுதியில் ஒரு புதிய போர்முனை உருவாகும் அபாயம் நிலவி வருகின்றது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் அபாய நிலை.. அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-infection-risk-continues-for-three-weeks-1784631780"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-infection-risk-continues-for-three-weeks-1784631780</id>
            <summary type="text">அடுத்த மூன்று வாரங்களுக்கு டெங்கு அபாய நிலை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மூன்று வாரங்களுக்கு டெங்கு அபாய நிலை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே&nbsp; அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>டெங்கு அபாயம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>டெங்கு தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரையிலான அபாய நிலை தொடரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/217d3f73-2ad9-4ecc-be42-28151d50f452/26-6a5f5d6f3429f.webp' /></p><p>கடந்த சில வாரங்களை விட தற்போது பதிவாகி வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிலைமை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.&nbsp;</p><p>எனினும்,&nbsp; டெங்கு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர வேண்டும்.&nbsp; அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>டெங்கு என்பது ஒரே நாளில்&nbsp; தீர்க்கக்கூடிய ஒன்று அல்ல.&nbsp; எனவே தொடர்ச்சியான அவதானம் தேவை. டெங்கு நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T11:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கலாக மாறிய புதிய குடியேற்ற விதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-visa-rule-f-1-j-1-students-return-by-sept-15-1784631856"></link>
            <id>https://tamilwin.com/article/us-visa-rule-f-1-j-1-students-return-by-sept-15-1784631856</id>
            <summary type="text">அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்தியர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள்,தற்போது விடுமுறைக்காக தங்கள் சொந்த நாடுகளில் இருந்தால், செப்டம்பர் 15-க்கு முன்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்தியர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள்,தற்போது விடுமுறைக்காக தங்கள் சொந்த நாடுகளில் இருந்தால், செப்டம்பர் 15-க்கு முன்பாக அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
</p><p>
புதிய குடியேற்ற விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள சலுகைகளை இழக்காமல் இருக்க இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மாணவர் விசா</h2><p>



இதுவரை F-1 மாணவர் விசா மற்றும் J-1 பரிமாற்ற விசா வைத்திருப்பவர்கள், தங்கள் கல்வி தொடரும் வரை "Duration of Status (D/S)" என்ற முறையின் கீழ் அமெரிக்காவில் தங்க அனுமதி பெற்றிருந்தனர்.
</p><p>
ஆனால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ள புதிய "Final Rule" படி, செப்டம்பர் 15 முதல் மாணவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654020ed-bf51-4c5c-a271-4d0752a0271a/26-6a5f5864c346b.webp' /></p><p> </p><p>அதற்கு மேல் தங்க வேண்டுமெனில், USCIS-இன் (Form I-539) மூலம் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

மேலும், படிப்பு முடிந்த பிறகு நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்டிருந்த 60 நாட்கள் அவகாசம், இனி 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
</p><p>


இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வரும் நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில்,

புதிய விதிமுறை 60 நாட்களில் நடைமுறைக்கு வருகிறது.</p><p></p><h2>&nbsp;புதிய குடியேற்ற விதி</h2><p> </p><p>எனவே, வகுப்புகள் தொடங்கும் செப்டம்பர் 8-க்கு முன்பாகவே அனைத்து மாணவர்களும் நியூயார்க்கு திரும்ப வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.</p><p>

DHS விளக்கத்தின் படி, செப்டம்பர் 15-ஆம் திகதி அமெரிக்காவில் D/S முறையின் கீழ் ஏற்கனவே இருக்கும் மாணவர்கள், தங்கள் Form I-20-ல் குறிப்பிடப்பட்டுள்ள படிப்பு முடியும் நாள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட OPT/STEM OPT பயிற்சி காலம் முடியும் வரை தங்கலாம்.

ஆனால், இந்த சலுகைக்கும் ஒரு வரம்பு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5abfc22-5dcc-4b6b-bb02-a4946acd58ba/26-6a5f5865ae8a2.webp' /></p><p> புதிய விதியின் கீழ் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், எந்த சூழ்நிலையிலும் 2030 நவம்பர் 14-க்கு பிறகு இந்த சலுகை நீடிக்காது.



இந்த புதிய விதிமுறை இந்திய மாணவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

குறிப்பாக முனைவர் பட்டம் (PhD), மருத்துவப் பயிற்சி மற்றும் நீண்டகால ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>Foundation for India and Indian Diaspora Studies (FIIDS) அமைப்பின் கொள்கை மற்றும் திட்டப் பிரிவு தலைவர் கந்தேராவ் கந்த் கூறுகையில்,

"நான்கு ஆண்டுகள் என்ற வரம்பு, தற்போதைய உயர்கல்வி அமைப்பின் நடைமுறைக்கு பொருந்தாது.</p><p></p><h2>அமெரிக்க அரசு </h2><p>இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க சராசரியாக 52 மாதங்களும், முனைவர் பட்டத்திற்கு சுமார் 5.7 ஆண்டுகளும் தேவைப்படுகிறது.

 இதனால் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை உருவாகலாம். </p><p>ஆராய்ச்சி திட்டங்களும், அமெரிக்காவின் கண்டுபிடிப்பு வளர்ச்சியும் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/583de604-b071-4d1b-bd94-472615f1c0bd/26-6a5f58665ea14.webp' /></p><p>
</p><p>
அதேபோல், ஆராய்ச்சி ஆய்வகங்கள் திறமையான மாணவர்களை இழக்கும் அபாயம் இருப்பதுடன், பட்டமளிப்பு தாமதம், ஆசிரியர் நியமனங்களில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் உருவாகலாம் என FIIDS எச்சரித்துள்ளது.</p><p>

புதிய விதிமுறையை உடனடியாக நடைமுறைபடுத்தாமல், மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பாதிக்கப்படாத வகையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-21T11:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வை அறிவித்த இலங்கையின் அதிவேக வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yupun-abeykoon-announces-retirement-1784633722"></link>
            <id>https://tamilwin.com/article/yupun-abeykoon-announces-retirement-1784633722</id>
            <summary type="text">&amp;nbsp;100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 10 செக்கன் இலக்கை முதன்முறையாகக் கடந்த தெற்காசியாவின் அதிவேக வீரரான இலங்கையின் யுபுன் அபேகூன், சர்வதேச தடகளப் போட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 10 செக்கன் இலக்கை முதன்முறையாகக் கடந்த தெற்காசியாவின் அதிவேக வீரரான இலங்கையின் யுபுன் அபேகூன், சர்வதேச தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். </p><p>செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உருக்கமான அறிக்கையொன்றில், 31 வயதான அவர், தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிவிட்ட மனநிறைவுடன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தாய் நாட்டுக்குத் தான் எதையும் நிலுவையில் வைக்கவில்லை என்றாலும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தெற்காசியாவில் 10 செக்கன்களுக்குள் 100 மீற்றரைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை எட்டியது எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; அது முழு தேசத்திற்குமான வரலாற்றுத் தருணம் என அவர் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p> 
தமது விளையாட்டுப் பயணத்தில் உறுதுணையாக இருந்த பெற்றோர், படித்த பாடசாலைகள், இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படைப்பிரிவு, இலங்கை தடகள சங்கம் மற்றும் கிளாடியோ லிச்சியார்டெல்லோ தலைமையிலான இத்தாலிய பயிற்றுவிப்பாளர் குழு ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p> 
அத்துடன், தனது சர்வதேசப் பயணத்தின் போது தொடர்ச்சியாக ஆதரவளித்த கோடிக்கணக்கான இலங்கை மக்களுக்கும் தனது நன்றிகளை உரித்தாக்கினார். </p><p>
2022 ஆண்டு சுவிட்சர்லாந்தின் லா சோ-டி-ஃபோன்ஸில் (La Chaux-de-Fonds) நடைபெற்ற போட்டியில் 100 மீற்றர் தூரத்தை 9.96 செக்கன்களில் கடந்து, 10 செக்கன் எல்லைக்குக் கீழ் ஓடிய ஒரே தெற்காசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.</p><p> 
2022ம் ஆண்டில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 100 மீற்றர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, பல தசாப்தகால இலங்கையின் பதக்க வறட்சியைப் போக்கினார். </p><p>
2020ம் ஆணடி்ல் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் 100 மீற்றர் பிரிவில் தகுதிபெற்றுப் போட்டியிட்ட முதல் தெற்காசிய ஆண் ஓட்டப்பந்தய வீரரானார். </p><p>
இன்னமும் போட்டிகளில் பங்கேற்கும் திறன் தமக்கு இருக்கும் நிலையிலும், இலங்கை தடகள கட்டமைப்பில் நிலவும் சவால்கள் மற்றும் பின்னடைவுகள் காரணமாகவே இந்த கடினமான முடிவை எடுக்க நேரிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 
மேலும், இலங்கை விளையாட்டுத் துறையின் தற்போதைய நிலைமை மற்றும் தனது அனுபவங்கள் குறித்த விரிவான தகவல்களை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாகவும் யுபுன் அபேகூன் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T11:35:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச வைத்தியசாலையில் பறிப்போன தாயின் உயிர் - ஊழியரை தாக்கி சடலத்தை கொண்டு செல்ல முயன்ற மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hospital-management-and-staff-protest-in-kinniya-1784632580"></link>
            <id>https://tamilwin.com/article/hospital-management-and-staff-protest-in-kinniya-1784632580</id>
            <summary type="text">கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை
உறுதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தக் கோரியும் போராட்டம் ஒன்று வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(21.07.202) காலை 11 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2> 


வைத்தியசாலையில் நடந்த மோசமான சம்பவம்</h2><p>
சிகிச்சைக்காகத் தனது தாயாரை அழைத்து வந்த நபர் ஒருவரிடம், அவரைப் பரிசோதித்த
வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.</p><p> 

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தாயாரின் உடலை உடனடியாக அங்கிருந்து எடுத்துச் செல்ல
அந்நபர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d277aa6f-3d78-449a-806c-c6372857fd53/26-6a5f55949b20c.webp' /></p><p>
</p><p>
இதன்போது, அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் நடைமுறைகள்
மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே உடலைக் கொண்டு செல்ல முடியும் எனத்
தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர், ஊழியருடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று நண்பகல் 1 மணியளவில் கிண்ணியா தள
வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரத்துறை ஊழியர்கள்
இணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8ce0c4c-1c49-4deb-b6f8-fb9b78c004fb/26-6a5f5595a1158.webp' /></p><p> </p><p> 

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில், வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற
இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.</p><h2> 



வைத்தியசாலை ஊழியர்கள் மீதான நடவடிக்கை</h2><p>
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், 

வைத்தியசாலையில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் பல்வேறு
தியாகங்களுக்கு மத்தியிலேயே பொதுமக்கள் நலன் கருதி நாங்கள் சேவையாற்றி
வருகிறோம். ஆனால், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது
ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும், சேவையில் ஈடுபடுவதில் தயக்கத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0565aab1-8a81-4074-9d2d-fa723197d1b7/26-6a5f55967c8a7.webp' /></p><p>
</p><p>
எனவே, எமக்கான பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். முக்கியமாக,
வைத்தியசாலை வளாகத்தினுள் பொலிஸ் பாதுகாப்புச் சாவடி ஒன்றினை அமைத்துத் தர
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
</p><p>
போராட்டக்காரர்கள் "நிறுத்து நிறுத்து... ஊழியர்கள் மீதான தாக்குதலை
நிறுத்து!", "வேண்டும் வேண்டும்... வைத்திய ஊழியர்களுக்குப் பாதுகாப்பு
வேண்டும்!" போன்ற கோஷங்களை எழுப்பியதுடன், தமது கோரிக்கைகள் அடங்கிய சுலோக
அட்டை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d54fc7-db54-4935-bae8-2785a3d184fb/26-6a5f559760414.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de14725-5335-4d64-9e83-c9b3b23992c8/26-6a5f5598333fc.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-fishermen-requests-tamil-nadu-cm-vijay-1784629285"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-fishermen-requests-tamil-nadu-cm-vijay-1784629285</id>
            <summary type="text">தமிழக மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள்
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கிடையே முரண்பாடுகள் முற்றி
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் எல்லைதாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள்
வரும் தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை, புதிதாக தமிழகத்தை
பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என
யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (21.07.2026) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு
கூறிய அந்த அமைப்பின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா,

சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் குறிப்பாக
புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் எமது தொழிலாளர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர் என குறிப்பிட்டார்.</p><p></p><h2>தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்கு&nbsp;</h2><p>இதை இலங்கையின் கடற்படையினரும் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.</p><p>

இதைவிட கடற்றொழில் அமைச்சரும் கடற்றொழிலாளர் விடயத்தில் ஒரு நழுவல் போக்குடன்
செயற்படுகின்றார் என எண்ணத் தோன்றுகின்றது.

இலங்கை கடற்படையைக் கொண்டு இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றே நாம் அனுர அரசாங்கத்திடம் கோருகின்றோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61894ed3-4b60-4952-97a4-97946f63c4ae/26-6a5f4ced150f6.webp' /></p><p>ஆனால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசித்திரிகின்றாரே தவிர எதையும் இதுவரை செய்யவில்லை.
</p><p>
தேர்தல் காலத்தில் கடற்தொழிலாளர்களிடம் வாக்குக் கொடுத்ததை இந்த சந்திரசேகர் அமைச்சரும் அவர்சார் தரபினரும் மறந்துவிட்டனரென்றே தோன்றுகின்றது.
</p><p>
அப்பாவி கடற்றொழிலாளர்களாகிய நாம் ஏமாற்றத்துடன் எமது இருப்பையும்
இழந்து வருகின்றோம். இனிவரும் நாட்களில் இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையே
முரண்பாடுகள் முற்றி வன்முறையாக மாறுவதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது.</p><p>
எனவே அவ்வாறானதொரு நிலை வரும் முன்னர் எல்லை தாண்டி நெடுந்தீவுக்
கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துவரும் தமிழக கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளைத்
தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T10:54:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Nillanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/things-that-happen-at-the-coordination-meeting-1784630400"></link>
            <id>https://tamilwin.com/article/things-that-happen-at-the-coordination-meeting-1784630400</id>
            <summary type="text">சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக பகட்டாகக் கொண்டாடினார்.

ஊருக்கும் விருந்து கொடுத்தார்.விழா ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக பகட்டாகக் கொண்டாடினார்.

ஊருக்கும் விருந்து கொடுத்தார்.</p><p>விழா நாயகியாகிய பெண்ணை குதிரை தேரில் அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த ஊர்வலத்தில் யானை வந்தது, மாட்டு வண்டி ஊர்வலம் வந்தது&nbsp; “இன்னியம்” என அழைக்கப்படுகின்ற நடை பவனி அணி வந்தது.
</p><p>
 ஒரு யூடியூப்பரை வேலைக்கு அமர்த்தி அந்த நிகழ்வுக்கு டிஜிட்டல் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் தமது தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு யானையை ,குதிரையை, ஹெலிகாப்டரை, பல்லக்கை வாடகைக்கு அமர்த்துவது புதியதல்ல.

தேவையான காசு இருக்கிறது.</p><p></p><p>சினிமாப் பாணியில், சினிமாத் தனமாக நிகழ்வை ஒழுங்கமைத்து படம்பிடித்து படங்காட்டி மகிழ்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தனிப்பட்ட வைபவங்களில் மட்டுமல்ல பொது வைபவங்களில், அரசியலில், குறிப்பாக சமய நம்பிக்கைகளில் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.</p><h2>ஆலங்களை புனரமைக்கும்&nbsp; புலம்பெயர் தமிழர்கள்</h2><p>2009க்குப் பின்னரான பெரும்பாலான ஆலயப் புனரமைப்பு வேலைகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி உண்டு. 

ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரையிலும் அந்த உதவி கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65dcf098-47b2-4ecc-ad3b-1ffaf2f68803/26-6a5f4ed20d4be.webp' /></p><p> வடக்கு - கிழக்கு ஊடாகப் பயணம் செய்த ஓர் அமெரிக்கப் புலமையாளர் என்னிடம் கேட்டார் “வழியெல்லாம் காணப்படும் சிறிய மற்றும் பெரிய கோயில்களைப் புனமைக்கும் நிதி புலம்பெயர்ந்த தமிழர்களுடையதா ?” என்று

தாம் பிறந்து வளர்ந்த அல்லது திருமணம் புரிந்த கிராமங்களில்,திருவிழாக்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தாராளமாக செலவழிக்கப்படுகிறது.</p><p> ஊர்க் கோவில்களின் திருவிழாக் காலங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களோடு தொடர்புடைய உபயகாரர்கள் தமது திருவிழாவை நமது பண பலத்தைக் காட்டும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கிறார்கள். </p><p>

அதனால் இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.தென்னிந்தியாவை நோக்கி பலாலியில் இருந்து திறந்து விடப்பட்டிருக்கும் வான்வழியூடாக இந்திய சினிமாப் பண்பாடு வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே அது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பரவி விட்டது.

கோவில் திருவிழாக்களில் மயிலாட்டம் முதல் கொண்டு பெயர் தெரியாத பலவிதமான ஆட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. </p><p>அவற்றில் சில போருக்கு முந்திய தசாப்தங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சின்ன மேளக் கச்சேரிகளை நினைவூட்டுகின்றன


தமிழகத்திலிருந்து கலைஞர்களைக் கொண்டு வந்து தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் கொண்டாடுவது என்பது புலப்பெயர்ச்சிக்குப் பின்னரான புதிய போக்கு அல்ல.</p><p></p><p>அது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே இருந்தது, தமிழகத்திலிருந்து நடனக் கலைஞர்கள், சின்னமேளக் கச்சேரிகள், பிரபல சினிமாப் பாடகர்கள் இங்கு அழைத்து வரப்பட்டார்கள்.

எனவே அது புலம்பெயர்ச்சியின் விளைவு அல்ல. புலப்பெயர்ச்சியால் மேலும் தூண்டப்பட்ட ஒரு விளைவு.
</p><p>
அதேசமயம்,புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது தனிப்பட்ட வைபவங்களை சினிமாத்தனமாக ஒழுங்கமைப்பதிலும் சமயச் செயற்பாடுகளிலும் அரசியலிலும் மட்டும் தமது செல்வத்தை முதலீடு செய்கிறார்கள் என்பதல்ல. 

மேற்சொன்ன அனைத்தையும் விட முக்கியமாக, தமிழ்ப் பகுதிகளில் தேசத்தை நிர்மாணிக்கத்தக்க செயல் திட்டத்தின் பகுதிகள் என்று வருணிக்கத்தக்க விதத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது நிறுவனங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் தாராளமாகக் காசு கொடுக்கிறார்கள்.</p><p> 

தாயகத்தில் இயங்கும் கணிசமான தொகை தன்னார்வ நிறுவனங்களின் பின்பலமாக புலம்பெயர்ந்த தமிழ் வள்ளல்களை உண்டு.</p><h2>



நிதியுதவி</h2><p>
கடந்த மே மாதம் 20ஆம் திகதி நீர்வேலியில்,”கருவி” நிறுவனத்தின் தலைமைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. “கருவி” என்று அழைக்கப்படுவது விழிப்புலன் மற்றும் செவிப்புலன் இழந்தவர்களுக்கான ஒரு கட்டமைப்பு ஆகும்.

இந்த கட்டமைப்பின் தலைமையகத்தை நிர்மாணிக்கத் தேவையான 60 விகிதமான நிதியை புலம்பெயர்ந்த தமிழர்களே வழங்கினார்கள்.
</p><p>
அதுபோன்றே இந்த மாதம் 14 ஆம் திகதி, தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில், “அரவணை” என்று பெயரிடப்பட்ட நோய்த் தடுப்புச் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6b2ec1-c39b-4501-a751-235e2a058ceb/26-6a5f4ed2b8d91.webp' /></p><p>
</p><p>
நோயாளிகள் தமது இறுதிக் காலத்தை கண்ணியமாகவும் அமைதியாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த வலியோடும் கழிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பு அதுவாகும்.

ஒஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளான “பாலம்”, “வன்னி ஹோப்” ஆகிய இரண்டு அமைப்புகளும் இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கியுள்ளன.
</p><p>
எனவே தொகுத்துப் பார்த்தால் தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழ் நிதியானது ஒருபுறம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிர்மாணப் பணிகளுக்கு உதவுகிறது. ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நிதிப் பலத்தையும் உளவியல் உறுதியையும் கட்டியெழுப்ப உதவுகிறது.</p><h2>யாழ்ப்பாண பாடசாலைகள் புனரமைப்பு</h2><p>
இன்னொருபுறம், தமது பண பலத்தைக் காட்ட விரும்பும் புலம்பெயர்ந்த தமிழர்கள் காசை அள்ளி வீசுகிறார்கள். தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் தங்களுடைய செல்வாக்கை காட்டும் குறிகாட்டிகளாக மாற்றுகிறார்கள்.</p><p></p><p>
</p><p>
ஆலய திருவிழாக்களில், பழைய மாணவர் சங்கங்களில், சன சமூக நிலையங்களில், சமூகத்தின் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்தும் நிதி அதிகாரமுடைய உபயகாரர்களாக காணப்படுகிறார்கள்.
</p><p>
சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறிய பாடசாலைக்கு புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர் ஒருவர் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு நிதி உதவி செய்தார். ஆனால் அந்தக் கண்காணிப்புக் கமராக்களை இயக்குவதற்கு தேவையான கடவுச் சொல் அவரிடம் தான் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c991f509-b087-45f8-96ec-4b31b0d02c06/26-6a5f4ed365b42.webp' /></p><p>
</p><p>
பாடசாலை அபிவிருத்திக் குழுக்களுக்குள்,பழைய மாணவர் சங்கங்களுக்குள், ஆலய அறக்கட்டளைகளுக்குள்,அரசியல் கட்சிகளுக்குள்,சிவில் சமூகங்களுக்குள்,தங்களால் ரிமோட் செய்யப்படக்கூடிய குழுக்களை, நபர்களை உருவாக்கி மேற்படி அமைப்புகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொலை இயக்கி உபயகாரர்களும் உண்டு.
</p><p>

தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் பிரதான விடயங்களில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி காணப்படுகிறது. </p><p>

ஆயுதப் போராட்டத்தின் காசு காய்க்கும் மரமாக அது இருந்தது. ஆனால் 2009க்கு முன்புவரை தாயகத்தை மையமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. தாயகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளும் ஏனைய உதவிகளும் ஒருங்கமைக்கப்பட்டன.
</p><h2>

புலம்பெயர் அமைப்புகளில் ஒற்றுமையின்மை</h2><p>

ஆனால் இப்பொழுது தாயகத்தில் அவ்வாறான ஒன்றிணைந்த மையம் எதுவும் கிடையாது.புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள்.</p><p>அங்கேயும் ஒன்றிணைந்த செயல்பாடுகள் இல்லை.

 வள்ளல்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.உபயகாரர்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca00dd4-ae6c-4d1d-bdaa-929befd83b4b/26-6a5f4ed4175ab.webp' /></p><p> 

இந்தப் பாரதூரமான வெற்றிடம் உள்ளவரை ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல் வாழ்வெனப்படுவது,சினிமாப் பண்பாட்டின் வீச்செல்லைக்கு வெளியே வராது உருப்படாது.
</p><p>
இந்த நிலை தொடரும்வரை,தமிழ் மக்கள் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் சட்ட லீலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது மயிலாட்டத்தை,சின்ன மேளக் கச்சேரிகளை,டிஜே கும்மிகளைப் பார்த்துப் ரசிக்கலாம் அல்லது,ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடக்கும் சண்டைக்கு காட்சிகளை அல்லது நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துச் சிரிக்கலாம் அல்லது குருதி அழுத்தத்தை உயர்த்திக் கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T10:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் டெங்குத் தொற்று! பெற்றோருக்கு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-warning-issued-to-parents-1784629872"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-warning-issued-to-parents-1784629872</id>
            <summary type="text">நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தொற்று குறித்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோரை எச்சரித்துள்ளது.தொடர்ந்து பரவி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தொற்று குறித்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோரை எச்சரித்துள்ளது.</p><p>தொடர்ந்து பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்&nbsp; சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் இயக்குனர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>ஆவணங்களை கொண்டு வாருங்கள்&nbsp;</h2><p>இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு உடனடி&nbsp; சிகிச்சையை வழங்குவதற்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>எனவே, சிகிச்சைக்காக தங்களுடைய பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர் வைத்தியசாலையால் கோரப்படும் ஆவணங்களை சரிவர கொண்டுவருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60847fc6-c758-46c1-af1c-3fad3ccb9bf9/26-6a5f4e83649ba.webp' />&nbsp;</p><p>இதன்படி, தனிநபர் சுகாதார எண், குழந்தையின் சுகாதார மேம்பாட்டுக் குறிப்பேடு(எடை குறிப்பேடு),&nbsp; உணவு ஒவ்வாமை அல்லது மருத்துவ பதிவுகள்,&nbsp; இதற்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை சரிவர எடுத்து வருமாறு பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>அத்துடன் மேலுதிக தகவல்களுக்கு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்&nbsp;<b> 011 2693711&nbsp;</b>என்று அலுவலக இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T10:49:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரணவாய் கிராமம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-eradication-campaign-across-karanawai-1784629873"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-eradication-campaign-across-karanawai-1784629873</id>
            <summary type="text">கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கரணவாய் கிராம சேவையாளர்
பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கரணவாய் கிராம சேவையாளர்
பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>நாடு முழுவதும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள
நிலையில் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு பகுதிகளில் டெங்கு நோயின் பரவல்
அதிகரித்துள்ளது.</p><h2>&nbsp;டெங்கு ஒழிப்பு</h2><p>
</p><p>
கடந்த இரண்டு மாதத்தில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சுமார் 60
வரையான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51d74d2-da70-4265-a992-a99ab5e93552/26-6a5f4b31ede07.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த டெங்கு நோய்
கட்டுப்படுத்தும் நடவடிக்கை காரணவாய் பகுதியில் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
</p><p>
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கரவெட்டி
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும்
உத்தியோகத்தர்கள், நெல்லியடி போலீசார், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் வீடு வீடாக சென்று டெங்கு நோயை
காட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன் வீட்டுக் காரர்களுக்கு
டெங்கு நோயிலிருந்து வருமுன் காத்தல் தொடர்பான சுகாதார விழிப்புணர்வு
அறிவுறுத்தல் வழங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/566840bc-f536-4504-ad1c-29f93f27bffd/26-6a5f4b32cadc8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f78d477-83d9-419e-a81d-b46cc0d8dcb0/26-6a5f4b33a0e2e.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T10:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவிற்கு மீண்டும் பிடியாணை உத்தரவு! பிணையாளர்களுக்கும் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-s-arrest-warrant-extended-1784625762"></link>
            <id>https://tamilwin.com/article/basil-s-arrest-warrant-extended-1784625762</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு இன்று (21) மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை எளியகந்த பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு இன்று (21) மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>

மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து மீண்டும் பிடியாணை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>

மேலும், முன்னாள் அமைச்சரின் நான்கு பிணையாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள தலைமை நீதவான், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50632bdf-aa7b-4853-908d-29ef56e574d1/26-6a5f3e72437e0.webp' /></p><p>

மாத்தறை பிரதான நீதிபதி சத்துர திசாநாயக்க முன்னிலையில் இன்று (21) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9CicqDIELO8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-factory-in-katuwana-1784611083"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-factory-in-katuwana-1784611083</id>
            <summary type="text">புதிய இணைப்புஹோமாகம, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஹோமாகம, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 குறித்த தொழிற்சாலையின் மூன்று மாடி கட்டடம் முழுவதும் தீ பரவிய நிலையில், நீண்ட நேர தேடுதல் நடவடிக்கைகளின் போது தீக்காயங்களுடன் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4VvL9Wbm4w8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>அடையாளம் காண முடியாத தீக்காயங்கள்</h2><p>
</p><p>
மேலும், அவர்களில் மூன்று பேர் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீக்காயங்களுக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0312b32a-d12a-4494-a5c6-c0a68c37d99f/26-6a5f412830ea4.webp' /></p><p>
</p><p>
தீ வேகமாக பரவியதால், மக்கள் சிக்கியிருந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்றடைவது கடினமாக இருந்ததாகவும் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்காக 6 தீயணைப்புத்துறைகள் வந்திருந்த நிலையில், தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், தீ விபத்தில் காயமடைந்த ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தீயை அணைப்பதற்காக, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.</p><p>

</p><p>இந்த நிலையில், தொழிற்சாலையிலிருந்து 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் இளம் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 </p><p>இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

</p><p>இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p> </p><p>இந்நிலையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 இற்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>தீ பரவிய நேரத்தில் ஒரு குழுவினர் காப்பாற்றப்பட்ட நிலையில், மேலும் சிலர் பின்புற வாயில் வழியாக வெளியேறியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.</p><p>தீ விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த பல மணி நேரமாக தீயணைப்பு பிரிவினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffe9e3a9-a01e-4441-ac2c-36a5e8873d81/26-6a5f1c6e26e5c.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> 

தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தீயணைப்பு பிரிவினர் அழைப்பு</h2><p>இந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0193f6a-d83e-44f0-b29f-e75eaf0aead2/26-6a5f02b47a61c.webp' /></p><p>தீ தொடர்ந்து பரவி வருவதாகவும், தீயை அணைக்க கோட்டை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T09:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுமி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-four-year-old-girl-dies-1784619877"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-four-year-old-girl-dies-1784619877</id>
            <summary type="text">டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.காலி தேசிய வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>காலி தேசிய வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியே நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் திக்வெல்ல, நில்வெல்ல, அதுலஸ்ஸவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பிரேதப்பரிசோதனையில் வெளியான தகவல்</h2><p>

கடுமையான காய்ச்சல் காரணமாக திக்வெல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் மாத்தறை பொது வைத்தியசாலைக்கும், பின்னர் அதே நாளில் மேலதிக சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db91d0b-9494-4df8-86e5-ba581f5ac9a0/26-6a5f2b856544e.webp' /></p><p>இதன்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><p>
டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சலால் ஏற்பட்ட சிக்கல்களே மரணத்திற்குக் காரணம் என, காலி தேசிய வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T09:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/whitefly-control-operation-begins-in-mullaitivu-1784624541"></link>
            <id>https://tamilwin.com/article/whitefly-control-operation-begins-in-mullaitivu-1784624541</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில்
தென்னம்பிள்ளைகளைத் தாக்கும் வெண் ஈக்களைக் கட்டுப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில்
தென்னம்பிள்ளைகளைத் தாக்கும் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருந்து
தெளிக்கும் நடவடிக்கை இன்று (21.07.2026) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
</p><p>
இந்நடவடிக்கையை வடக்கு மாகாண தென்னைப் பயிர்ச்செய்கையின் பிராந்திய
முகாமையாளரும், வடக்கு மாகாண தென்னை முக்கோண வலய திட்டமிடல் பணிப்பாளருமான
தேவராஜா வைகுந்தன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.</p><p></p><h2>வெண் ஈக்களினால் ஏற்படும் பாதிப்புகள்</h2><p>

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்காக
முன்னெடுக்கப்படும் முதலாவது ஆரம்ப நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd9579a-9715-4a40-b7ff-28f2fe5ddd36/26-6a5f395caca4e.webp' /></p><p>தென்னைப் பயிர்களைப் பாதுகாத்து, விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும்
நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
</p><p>
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், தென்னைப் பயிர்ச்செய்கை சபை பணியாளர்கள்,
கற்பக சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டனர்.
</p><p>
தென்னைப் பயிர்ச்செய்கையில் வெண் ஈக்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து,
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் இந்நடவடிக்கை
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T09:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயிப் நகர் – கோவிலடி பிரதான வீதியை புனரமைப்புப் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு கோரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-immediate-completion-reconstruction-work-1784625149"></link>
            <id>https://tamilwin.com/article/request-immediate-completion-reconstruction-work-1784625149</id>
            <summary type="text">தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட தாயிப் நகரிலிருந்து கோவிலடிக்குச் செல்லும்
பிரதான வீதியான வெட்டாத்துப்பாலம் வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூன்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட தாயிப் நகரிலிருந்து கோவிலடிக்குச் செல்லும்
பிரதான வீதியான வெட்டாத்துப்பாலம் வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூன்
13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.</p><p>

எனினும், இன்று வரை (21.07.2026) அப்பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படாமல்
காணப்படுகின்றன.</p><h2>&nbsp;கோரிக்கை</h2><p> </p><p>இதன் காரணமாக பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களையும்
அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/665c8a2e-2dcc-45c6-8ac1-1e7111801f48/26-6a5f38ccc8e7b.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக முள்ளிப்பொத்தானை, மீரா நகர், சிராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச்
சேர்ந்த பொதுமக்கள் கிண்ணியா நகருக்குச் செல்வதற்கு அதிகளவில் இந்த வீதியையே
பயன்படுத்தி வருகின்றனர்.</p><p> தற்போது வீதியின் மோசமான நிலை காரணமாக போக்குவரத்து
சிரமம், பயண நேர தாமதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அபாயங்கள் அதிகரித்துள்ளன.
</p><p>
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும்
பொறுப்புடைய தரப்பினரும் உடனடி நடவடிக்கை எடுத்து, வெட்டாத்துப்பாலம் வீதியின்
புனரமைப்புப் பணிகளை அவசரமாக நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு
ஒப்படைக்குமாறு பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T09:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் அணிக்கு கிடைத்த ரோயல் வரவேற்பு! மாட்ரிட்டில் குவிந்த 18 இலட்சம் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-s-world-cup-heroes-welcomed-millions-madrid-1784622446"></link>
            <id>https://tamilwin.com/article/spain-s-world-cup-heroes-welcomed-millions-madrid-1784622446</id>
            <summary type="text">நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 கால்பந்து உலகக் கோப்பையை வென்று
 தாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 கால்பந்து உலகக் கோப்பையை வென்று
 தாயகம் திரும்பிய ஸ்பெயின் தேசிய அணி,வீரர்களுக்கு மாட்ரிட்டில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><p>

26 வீரர்களும் பயிற்சியாளர் குழுவினரும் முதலில் ஸ்பெயின் அரச குடும்பத்தினரையும், பின்னர் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸையும் சந்தித்தனர்.</p><p></p><h2>ஸ்பெயினின் உலகக் கோப்பை நாயகர்கள்</h2><p>
</p><p>
உங்களின் ஆட்ட பாணி, அர்ப்பணிப்பு மற்றும் இந்த வெற்றிக்காக நன்றி. உங்கள் ஆட்டத்தை நாடு முழுவதும் பெருமையுடன் ரசித்தது, என்று பிரதமர் சாஞ்சஸ் பாராட்டினார்.</p><p>

அதனைத் தொடர்ந்து திறந்த மேல் தள பேருந்தில் ("Stars Shine Together" என்ற வாசகத்துடன்) வீரர்கள் மாட்ரிட் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Spain’s World Cup victory parade has started in Madrid. Just look at the number of fans who came out to welcome the champions of the world! 🔥🇪🇸 <a href="https://t.co/H0TCyVM9Fk">pic.twitter.com/H0TCyVM9Fk</a></p>&mdash; Cleverly 💐 (@Cleverlydey4u) <a href="https://x.com/Cleverlydey4u/status/2079289698711687608?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

 "Somos Campeones" (நாங்களே சாம்பியன்கள்) என்று எழுதப்பட்ட சீருடைகளை அணிந்திருந்த வீரர்கள் உலகக் கோப்பையுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.</p><p>

பயிற்சியாளர் லூயிஸ் டெ லா ஃபுவென்டே, இந்த அற்புதமான நாட்டையும், உணர்ச்சிமிக்க ரசிகர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியது பெருமையான அனுபவம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார்.
</p><p>
மாட்ரிட்டின் சிபிலெஸ் (Cibeles) சதுக்கத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் சுமார் 1.2 இலட்சம் ரசிகர்கள் நேரில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மொத்தமாக 18 இலட்சம் மக்கள் அணியை வரவேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;மீண்டும் உலகக் கோப்பை</h2><p>
</p><p>
வீரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி இசையுடன் மேடைக்கு அழைக்கப்பட்டனர். 25-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அலெக்ஸ் பயேனா உலகக் கோப்பையுடன் மேடையேறினார். </p><p>

பயிற்சியாளர் டெ லா ஃபுவென்டேவை வீரர்கள் தோளில் தூக்கி கொண்டாடினர். முன்னணி வீரர் போர்ஹா இக்லேசியஸ் டிஜேவாக மாறி இசையமைத்த நிலையில், சக வீரர்கள் மேடையில் நடனமாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa4bb3e0-f33e-46a9-8fa6-27b7f599f2d1/26-6a5f34f9e8a59.webp' /></p><p> </p><p>

இறுதியில், முழு அணியும் மீண்டும் உலகக் கோப்பையை உயர்த்தி ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடியது.

இறுதிப்போட்டியில் கூடுதல் நேரத்தில் பெர்ரான் டோரெஸ் அடித்த கோல் மூலம் ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையையும், 2010க்குப் பிறகு முதல் உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
</p><p>
இந்த வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
</p><p>
2023 மகளிர் உலகக் கோப்பையையும், 2026 ஆண்கள் உலகக் கோப்பையையும் வென்றுள்ளதால், இரு உலகக் கோப்பைகளையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கும் முதல் நாடாக ஸ்பெயின் வரலாறு படைத்துள்ளது.</p><p>

எனினும், கொண்டாட்டத்தின் போது வடமேற்கு ஸ்பெயினின் சலமாங்காவில் நீரூற்றின் மீது ஏறியிருந்த 13 வயது சிறுவன் ஒருவர் நீரூற்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1018416397707770%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-21T09:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் செல்லும் மாகாண சபை முதலமைச்சர்கள்..! டக்ளஸ் முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-opini-onprovincial-council-chief-ministers-1784623684"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-opini-onprovincial-council-chief-ministers-1784623684</id>
            <summary type="text">நாட்டின் அரசியலமைப்பை செம்மைப்படுத்தி, மாகாண சபை தேர்தல் மூலம் தெரிவுச் செய்யப்படும், முதலமைச்சர்களும் அமைச்சர்கள் போன்று நாடாளுமன்றத்திற்குச் செல்ல வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அரசியலமைப்பை செம்மைப்படுத்தி, மாகாண சபை தேர்தல் மூலம் தெரிவுச் செய்யப்படும், முதலமைச்சர்களும் அமைச்சர்கள் போன்று நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் உள்ளடக்கிய அரசா சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் தரப்புகளுக்கிடையில் பொது நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில், ஈ.பி.டி.பி. கட்சியுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நாடாளுமன்றத்தில் முதலமைச்சர்களுக்கு அங்கம்</span></p><p>

இதன்போது டக்ளஸ் கருத்து தெரிவிக்கையில், </p><p>

மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செழுமைப்படுத்துவதற்கும்,
இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கும்,
சீரான வளர்ச்சியை வேகமாக ஏற்படுத்துவதற்கும், மாகாணங்களின் முதலமைச்சர்கள்
நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும் ஏற்பாடு அர்த்தபூர்வமான
களத்தினை ஏற்படுத்தும்.
</p><p>
அதேபோன்று, யுத்தம் காரணமாக 18 வயதினை அடைந்த பின்னர் புலம்பெயர்ந்து
சென்றவர்களுக்கும், தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் தங்கி இருப்போருக்கும்
வாக்குரிமையை வழங்க வேண்டும்.
</p><p>
அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வே புதிய அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்க
வேண்டுமே தவிர, ஒற்றையாட்சி, சமஸ்டி என்ற பெயர் பலகையில் கவனத்தினை குவிப்பது,
பிடிவாதமாக இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bba011f-29d7-4afd-8924-1b2e521949d0/26-6a5f32d647442.webp' /></p><p>
கடந்த காலங்களில் மத்திய அரசினால் எடுக்கப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்களை
மீளக் கையளிப்பதுடன், பொலிஸ் மற்றும் காணி உட்பட்ட மாகாண சபை அதிகாரங்கள்
முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.</p><h2>


மாகாண சபை அதிகார பகிர்வு</h2><p>
அதேபோன்று, மாகாணங்களுக்கான அதிகார பகிர்வில் உள்ள இணைப்பு பட்டியல்
நீக்கப்பட்டு, அதில் இருக்கின்ற விடயங்களுள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
சிலவற்றை தவிர்த்த அனைத்தும், மாகாண பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.</p><p>

மாகாண சபைகளுக்கான அதிகார பகிர்வானது, வடக்கு - கிழக்கு மக்களுக்காக
உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில் குறித்த இரண்டு மாகாணங்களுக்கும் விசேட
அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af9e8840-039c-415e-9a70-4222a8c7e584/26-6a5f32d712e2c.webp' /></p><p>
</p><p>
அத்துடன், மாகாண சபை என்பது மாகாண அரசு என்று
அடையாளப்படுத்தப்பட வேண்டும். தேசிய நிதி ஆணைக்குழு என்பது நிதி ஒதுக்கீடுகளில் காத்திரமான தாக்கம்
செலுத்தும் நிலையில், ஒவ்வொரு மாகாணங்களினதும் எதிர்பார்ப்புக்களை
உணர்வுபூர்வமாக புரிந்து கொண்ட அதே மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் நிதி
ஆணைக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பதனையும்,&nbsp; அதேபோன்று, அந்தந்த மாகாணங்களை
பூர்வீகமாக கொண்டவர்களையே ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவதும்
அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.</p><p>

அதேபோன்று, தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு, ஜனாதிபதி
நாடாளுமன்றால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது போன்ற மேலும் பல விடயங்களை
உள்ளன.

 இதுதொடர்பான எழுத்து மூல ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:50:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் நகரில் தற்காலிக கடைகளை அகற்ற முயன்றபோது பதற்றநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tensions-rise-in-hatton-town-as-temporary-shops-1784617444"></link>
            <id>https://tamilwin.com/article/tensions-rise-in-hatton-town-as-temporary-shops-1784617444</id>
            <summary type="text">ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவின் பணிப்புரையின்
பேரில், ஹட்டன் - டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட சந்தை
வளாகத்தில் நிரந்தர வர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவின் பணிப்புரையின்
பேரில், ஹட்டன் - டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட சந்தை
வளாகத்தில் நிரந்தர வர்த்தக நிலையங்களின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த
அனுமதியற்ற தற்காலிக கடைகளை அகற்றுவதற்காக நகர சபை அதிகாரிகள்
நடவடிக்கை மேற்கொண்டபோது இன்று(21) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>நகர சபை ஊழியர்கள், வருவாய் பரிசோதகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இடையே
ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை</h2><p>
இந்த பதற்றநிலைக்கு முக்கிய காரணமாக, சந்தை வளாகத்தில் இதுபோன்ற அனுமதியற்ற
தற்காலிக கடைகள் பல இருந்தபோதிலும், அவற்றில் ஐந்து கடைகளை மட்டும் குறிவைத்து
அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடை உரிமையாளர்கள்
குற்றஞ்சாட்டியதே என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af8fab0f-8935-4460-b5f1-0b7bdfad6cd9/26-6a5f2ecc760e1.webp' /></p><p>இதன்போது, நகர சபை அதிகாரிகள் தனிநபர்களைத் தெரிவுசெய்தும் பக்கச்சார்பாகவும்
அரசியல் அல்லது தரப்புவாத அடிப்படையிலும் இந்த அகற்றும் நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருவதாக வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின்
உப தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை
பார்வையிட்டனர். </p><p>பின்னர் அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர்கள்,
எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து வர்த்தகர்களுக்கும் சமமாகவும் நியாயமான
முறையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
</p><p>இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்திருந்த ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் வருவாய்
பரிசோதகர் ஜி.ஜி.யூ.பி. கமகே உள்ளிட்ட அதிகாரிகள், இது தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YPv8yWZq55A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:33:46+00:00</updated>
        </entry>
    </feed>
