<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-01T07:24:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்கலனில் பிடிப்பட்ட 'ஐஸ்': திடுக்கிட வைக்கும் பல தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drugs-1788244147"></link>
            <id>https://tamilwin.com/article/drugs-1788244147</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 463 கிலோகிராம் &#039;ஐஸ்&#039; போதை பொருள் இலங்கையை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 463 கிலோகிராம் 'ஐஸ்' போதை பொருள் இலங்கையை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். </p><p>பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குத் துவாய்களுக்கு நடுவே மறைத்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையில் இவற்றை வெளியிலெடுக்க முயன்றபோது சுங்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் கடும் கண்காணிப்பு காரணமாக வெளியிலெடுக்க முடியாமல் போயிருக்கலாம். </p><p>இதனால் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவசர அவசரமாக நிறுவனங்களின் பெயர்களை மாற்றி கெமரூன் நாட்டிற்கு மறு ஏற்றுமதி செய்வது போல ஆவணங்களைத் தயாரித்திருக்கலாம்.
</p><p>எனவே இது பாகிஸ்தானிலிருந்து கெமரூன் செல்ல வந்த சரக்கு என்பதை நம்ப முடியாது. இது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளாகவே இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><h2>
</h2><p></p><h2>திடீரென மாற்றப்பட்ட திட்டங்கள்</h2><p>பாகிஸ்தானில் சமர்ப்பிக்கப்பட்ட மூல ஆவணங்களை பரிசீலித்தால் மட்டுமே இதன் பின்னணியில் உள்ள உண்மையான கடத்தல்காரர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியும்.
இன்னமும் இதன் எடையை அளவிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. </p><p>சுமார் 463 கிலோகிராம் எடைகொண்ட 46 பொதிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் முழுமையாக அளவிட்ட பின்னரே இறுதி எடை தெரியவரும்.
எது எப்படியிருப்பினும்இ இது மிகவும் பாரதூரமான சம்பவமாகும். </p><p>காரணம் கடந்த காலத்தில் கடல் வழியாக இலங்கைக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் பெருமளவில் கொண்டுவரப்படுவது தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. </p><p>அமெரிக்கா-ஈரான் பதற்றநிலை மற்றும் வெளிநாடுகளில் இருந்த முக்கிய குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டமை போன்ற காரணங்களால் தெற்கு பகுதி ஊடாக இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்கள் வருவது நிறுத்தப்பட்டிருந்தது. </p><p>
ஆனால் மீண்டும் பழையபடி கொள்கலன்கள் மூலமாக நாட்டிற்குள் போதைப்பொருள் வருகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கமையவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்து இரகசியத் தகவல் கிடைத்தது.</p><p> பின்னர் கடந்த ஜூன் மாதமளவில் இந்தத் தகவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த இரண்டு கொள்கலன்களும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc54570a-5e07-4768-ad01-75eeda34b866/26-6a9670b626d1e.webp' /></p><p>நீதிமன்ற உத்தரவைப் பெற்றே இவை திறக்கப்படவிருந்தன.
நீதிமன்றத்திற்கு விபரங்கள் அறிக்கையிடப்பட்டு பௌர்ணமி தினத்தை ஒட்டிய காலப்பகுதியில் இவற்றைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>இதனிடையே பொலிஸ் விசாரணைகளின் போது ஒருங்கிணைந்து செயல்படாமையின் விளைவுகளைச் சில நேரங்களில் சந்திக்க வேண்டியேற்படுகிறது. இந்த நிலையில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மீண்டும் ஒரு தகவல் கிடைக்கிறது. </p><p>அவர் உடனடியாகச் செயற்பட்டு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்குத் தெரிவித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று இந்த இரண்டு கொள்கலன்களையும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
</p><p>ஆவணங்களைப் பரிசீலித்தபோது இந்தச் சரக்கு பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்து இங்கிருந்து கெமரூன் (Cameroon) நாட்டிற்கு (மத்திய ஆப்பிரிக்க நாடு) மறு ஏற்றுமதி (Re-export) செய்யப்படவிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>ஆனால் பாகிஸ்தானிலிருந்து கெமரூன் செல்வதற்கு இலங்கையினூடாக இவ்வளவு நீண்ட தூரம் சுற்றி அனுப்ப வேண்டிய&nbsp; அவசியம் என்ன? கெமரூன் நாட்டிற்கு தெற்காசியாவிலிருந்தா அல்லது பாகிஸ்தானிலிருந்தா ஐஸ் போதைப்பொருள் விநியோகிக்கப்படுகிறது?
</p><p>இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தபோது கெமரூன் நாட்டிற்கு 'மெத்தாம்பெட்டமைன்' (ஐஸ்) போதைப்பொருள் முக்கியமாக அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. </p><p>மேலும் கெமரூன் நாட்டிற்குள் இருக்கும் இரசாயனக் கூடங்களிலேயே ஐஸ் தயாரிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக கெமரூனில் ஐஸ் போதைப்பொருளை விட 'கொக்கைன்' பயன்பாடே அதிகம். </p><p>அது கொலம்பியா - பெரு - பொலிவியா போன்ற நாடுகளிலிருந்து வருகிறது. ஆவணங்கள் தொடர்பான ஆழமான விசாரணையின் பொதே முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:18:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/roshan-amarasinghe-new-director-of-the-cid-1788245795"></link>
            <id>https://tamilwin.com/article/roshan-amarasinghe-new-director-of-the-cid-1788245795</id>
            <summary type="text">குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு (CID) புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு (CID) புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க&nbsp; நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சேவைத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநராகக் கடமையாற்றிய ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e06c206-2aae-4eb2-810b-4b670da584b3/26-6a967b5f0f50a.webp' /></p><p>&nbsp;இருப்பினும், ஷானி அபேசேகர தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:14:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/newzealand-commissioner-sports-minister-meeting-1788245148"></link>
            <id>https://tamilwin.com/article/newzealand-commissioner-sports-minister-meeting-1788245148</id>
            <summary type="text">இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைனுக்கும், இளைஞர் விவகார
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கும் இடையிலான விசேட
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைனுக்கும், இளைஞர் விவகார
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கும் இடையிலான விசேட
இருதரப்பு சந்திப்பொன்று நேற்று(31) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.</p><p>

இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க
கிரிக்கெட் போட்டி 1937 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி நடத்தப்பட்ட
நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு 100 ஆண்டுகளை
எட்டியுள்ளதை முன்னிட்டு, 2027 ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள விசேட
நினைவுச் சின்ன கிரிக்கெட் தொடரை ஒழுங்கமைப்பது குறித்து விரிவாகக்
கலந்துரையாடப்பட்டது.
</p><h2>அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டித் தொடரைப் பார்வையிடுவதற்கும் அதில்
கலந்து கொள்வதற்கும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகரினால் அமைச்சர் சுனில் குமார
கமகேவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b2bfc9-bfdc-43b9-8c17-a8697b416a62/26-6a967a807b8cd.webp' /></p><p>
இலங்கையின் ரக்பி விளையாட்டு வளர்ச்சி, இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும்
இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நியூசிலாந்து
அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உயர்ஸ்தானிகர் இதன்போது
உறுதியளித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகரிக்க போகிறதா மின் கட்டணங்கள்..! வெளிவந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/insufficient-rainfall-lead-electricity-tariffs-1788242513"></link>
            <id>https://tamilwin.com/article/insufficient-rainfall-lead-electricity-tariffs-1788242513</id>
            <summary type="text">எதிர்வரும் நாட்களில் இலங்கையில் போதுமான மழை பெய்யாவிட்டால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக எச்சரிக்கை விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நாட்களில் இலங்கையில் போதுமான மழை பெய்யாவிட்டால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

குறைக்கப்பட்ட நீர்மின் உற்பத்தி மற்றும் பிற மின் ஆதாரங்களைச் சார்ந்திருக்கும் நிலையை அதிகரித்து, மின்சார உற்பத்திச் செலவுகளைக் கூட்டக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கட்டண உயர்வால் பாதிப்பு</h2><p> </p><p>

கூடுதலாக விதிக்கப்படும் எந்தவொரு கட்டண உயர்வும் பொதுமக்களையும், சுற்றுலாத்துறையையும் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

தற்போது இலங்கையில் எல் நினோ தாக்கத்தால் வறண்ட வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42719194-6341-4620-a138-93aea6070711/26-6a9677588196e.webp' /></p><p> </p><p>இது நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை, விவசாய பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
எனினும் அக்டோபர் முதல் இரண்டாவது இடைப்பருவ மழைக்காலத்தில் சாதாரண அளவை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர அவசரமாக பெலவத்தை தலைமையகத்துக்குள் முடக்கப்படும் அதிகாரங்கள்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powers-frozen-within-the-pelawatte-headquarters-1788244417"></link>
            <id>https://tamilwin.com/article/powers-frozen-within-the-pelawatte-headquarters-1788244417</id>
            <summary type="text">அவசர அவசரமாக அரசமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவந்து நாட்டின் அனைத்து
அதிகாரங்களையும் தனது தலைமையகத்துக்குள் முடக்கி, ஏனைய அரசியல் கட்சிகளை
அழித்துச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர அவசரமாக அரசமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவந்து நாட்டின் அனைத்து
அதிகாரங்களையும் தனது தலைமையகத்துக்குள் முடக்கி, ஏனைய அரசியல் கட்சிகளை
அழித்துச் சர்வாதிகாரப் பாதையில் செல்ல ஜே.வி.பி. அரசு முற்படுகின்றது என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,</p><h2>ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p>

"ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், மகாநாயக்க தேரர்கள் மற்றும் சிவில்
அமைப்புகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று
எச்சரித்துள்ள நிலையில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற
முற்படாத அரசு, அரசமைப்புச் சீர்திருத்தம் மூலம் அனைத்து அதிகாரங்களையும்
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்துக்குள் முடக்கி ஏனைய கட்சிகளை அழிக்க
முயல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd292be-1031-4d7b-bf94-d33947db7d90/26-6a96751c5e675.webp' /></p><p>
</p><p>
பொருளாதாரம் சீரடைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அத்தியாவசியப் பொருள்களின்
விலைகள் 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளன. </p><p>எரிபொருள் விலையைக் குறைப்பதாகக்
கூறிவிட்டு இன்று லீற்றருக்கு 100 ரூபாவுக்கும் அதிகமாக அரசு உயர்த்தியுள்ளது.</p><h2>&nbsp;வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொய் வாக்குறுதி</h2><p>

கடந்த காலத்தில் ராஜபக்சக்களைப் பற்றியிருந்த 'அதிகார போதை' நோயே இன்று
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசையும் பற்றியுள்ளது.
</p><p>
அமைச்சர்கள் வீதிச் சந்தைகளுக்குச் சென்று மக்களிடம் பேசிப் பார்த்தால் உண்மை
நிலை புரியும்.

வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெற்ற
அரசு, ஜனநாயகத்தின் பிரதான அங்கமான மாகாண சபைத் தேர்தலை நடத்த எந்தவொரு
விருப்பமும் இன்றி மக்களை ஏமாற்றி வருகின்றது.</p><p> மன்னார் எண்ணெய் அகழ்வு போன்ற
கதைகளைப் பரப்புவது தேர்தல்களைக் காலந்தாழ்த்தும் ஒரு முயற்சியே.

எது எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி கிராம மட்டத்தில் அமைதியான முறையில்
மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுத்து, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக
மக்களை அணிதிரட்டும் என்றார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T06:48:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788243401"></link>
            <id>https://tamilwin.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788243401</id>
            <summary type="text">ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் தினசரி வருகையாளர் வரம்புகளுக்கு இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சுற்றாடல் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் தினசரி வருகையாளர் வரம்புகளுக்கு இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி தலைமையில் அண்மையில் ஹோர்ட்டன் சமவெளி பூங்காவில் நடைபெற்ற விசேட களப் பரிசோதனை மற்றும் முன்னேற்ற ஆய்வுச் சந்திப்பின்போதே இந்த யோசனைகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
</p><h2>கட்டண முறையை மாற்றியமைக்க</h2><p>
இதன்படி, இணையவழி நேர முன்பதிவு முறைமைமூலம் பூங்காவுக்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், முகாமையை மேம்படுத்தவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43bdf43b-c181-4c2a-8515-2d5061f76e6d/26-6a96726662028.webp' /></p><p>
அத்துடன், சுற்றாடல் பொறுப்புமிக்க சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கட்டண முறையை மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான இந்தப் பூங்காவின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம்! தன்னுடன் இருக்கும் நபரால் தயக்கம் காட்டும் அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjun-mahendran-s-controversial-statement-1788237488"></link>
            <id>https://tamilwin.com/article/arjun-mahendran-s-controversial-statement-1788237488</id>
            <summary type="text">
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம் ஒன்றின் காரணமாகவே அவரை நாட்டிற்கு அழைத்து வராமல் அநுர தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம் ஒன்றின் காரணமாகவே அவரை நாட்டிற்கு அழைத்து வராமல் அநுர தரப்பு தயக்கம் காட்டுவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். </p><p>


நேற்றையதினம்(31.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

திருடர்களை கைது செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.&nbsp; மாறாக அரசியல் நாடகத்திற்காக அதனை செய்வதையே நாங்கள் எதிர்க்கின்றோம்.</p><h2>தயங்கும் அநுர&nbsp;</h2><p> </p><p>

திருடர்களை கைது செய்வது போல, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதாக இந்த அரசாங்கம் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4af4c1-2fdc-4c49-9551-b586be5b478a/26-6a965efef3221.webp' /></p><p> </p><p> 


எனினும், தற்போது அர்ஜூன் மகேந்திரன் அவருடைய பெயரை அலெக்ஸாண்டர் என மாற்றிக் கொண்டிருப்பதால் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p>

அர்ஜூன் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு சிங்கப்பூரில் எந்த சட்டச் சிக்கல்களும் இல்லை.

அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வர முடியாது என அரசாங்கம் கூறுவதில் எவ்வித உண்மைத்தன்மையும் கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14771ef8-ee61-4022-b9c2-7bac5ef58efb/26-6a965effa90bd.webp' /></p><p> </p><p>மாறாக, பிணைமுறி கணக்கை அதிகரிப்பதற்கு தனக்கு யாரால், எவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து அர்ஜூன் மகேந்திரன் உறுதியான சாட்சியம் ஒன்றை வழங்கியிருந்தார்.
</p><p>
அர்ஜூன் மகேந்திரன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய நபர் தற்போது, ஜனாதிபதி அநுரகுமாரவுடனேயே இருக்கின்றார். இதன் காரணமாகவே, அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:39:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவு - பல பகுதிகள் அதி அபாய வலயங்களாக அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1788242272"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1788242272</id>
            <summary type="text">இலங்கை முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,493ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

நாடு முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் இறப்பு வீதம் 0.076% ஆகப் பதிவாகியுள்ளது.</p><h2>டெங்கு நோயாளர்கள் பதிவு</h2><p> 

இந்த ஆண்டில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 29,964 ஆகும். 

இதற்கு மேலதிகமாக, ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 10,157 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். </p><p>

நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 50,506 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/734b3a61-fd28-4feb-8bfe-25342d3ddc4b/26-6a96728b9299f.webp' /></p><p> </p><p>

அத்துடன் தெற்கு மாகாணத்தில் இருந்து 13,886 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் இருந்து 8,710 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><h2>கம்பஹா மாவட்டத்தில் அதிகளவு நோயாளர்கள்</h2><p> </p><p>

மாவட்ட மட்டத்தில் கருதும் போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அது மொத்த நோயாளர்களில் 21.31% ஆகும். </p><p>

கொழும்பு மாவட்டத்தில் 18,914 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,977 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

அத்துடன் நாடு முழுவதும் உள்ள 50 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் மேலும் அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகள் மாயம் - பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-17-year-old-schoolgirls-missing-1788243589"></link>
            <id>https://tamilwin.com/article/three-17-year-old-schoolgirls-missing-1788243589</id>
            <summary type="text">பலாங்கொடையில் உள்ள பின்னவலா - எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடையில் உள்ள பின்னவலா - எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் நேற்று(31.08.2026) இடம்பெற்றுள்ளது.
</p><h2>
மாயமான 3 பாடசாலை மாணவிகள்</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

காணாமல் போன மூன்று மாணவிகளும் பலாங்கொடை பகுதியில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளனர். </p><p>

இவர்கள் நேற்றைய தினம்(31) வழக்கம் போன்று பயிற்சி வகுப்பிற்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4716864-be85-450e-82bd-826f121d7afc/26-6a9676f30f9d6.webp' /></p><p> </p><p> ஆனால் இதுவரையில், அவர்கள் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

காணாமல் போன மாணவிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பலாங்கொடை பொலிஸாருக்கும் பெற்றோரும் உடனடியாக பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர். </p><ul><li>

பலாங்கொடை பொலிஸ் நிலையம்: 045-2287222 </li><li>

பெற்றோரின் தொலைபேசி எண்கள்: 076-7070913 / 077-1658788</li></ul><p> 

இந்த சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-01T06:35:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக் விவகாரம்! CCIDயில் முன்னிலையான தனசிறி அமரதுங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dhanasiri-amaratunga-to-ccib-1788242396"></link>
            <id>https://tamilwin.com/article/dhanasiri-amaratunga-to-ccib-1788242396</id>
            <summary type="text">தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க&amp;nbsp; மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) முன்னிலையாகியுள்ளார்.போதைப்பொருள் கடத்தல்காரர் எனக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க&nbsp; மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) முன்னிலையாகியுள்ளார்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:17:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டானைச் சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-harini-reached-bhutan-1788242565"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-harini-reached-bhutan-1788242565</id>
            <summary type="text">&#039;உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்&#039; உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டானைச்
சென்றடைந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>'உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்' உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டானைச்
சென்றடைந்துள்ளார்.
</p><p>
பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று(31.09.2026) மாலை பூட்டானின் பாரோ சர்வதேச விமான
நிலையத்தைச் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><h2>பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள்</h2><p>
பூட்டானைச் சென்றடைந்த இலங்கைப் பிரதமரைப் பூட்டான் பிரதமர் டஷோ ஷெரிங் டோப்கே
மற்றும் அந்நாட்டு அரசின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் நேரில் சென்று
வரவேற்றுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c908f5c6-587e-4cea-a33b-1bd29607a40a/26-6a966c22678f4.webp' /></p><p>
பூட்டானில் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறும்
முதலாவது 'உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்' உச்சிமாநாட்டில் உலகின் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அரச பிரதிநிதிகள் மற்றும் உணவு முறைமை தொடர்பான
நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் மற்றும் சஜித் தரப்பு இணைந்து தேர்தலில் களமிறங்க இணக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-is-certain-to-lose-the-election-1788240305"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-is-certain-to-lose-the-election-1788240305</id>
            <summary type="text">தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசு தோல்வியடைவது நிச்சயம்
என்றும், வரவிருக்கும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்
சக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசு தோல்வியடைவது நிச்சயம்
என்றும், வரவிருக்கும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்
சக்தியும் இணைந்து ஒரே பொதுப் பட்டியலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளன
என்றும் முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
</p><p>
கண்டியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,
</p><p>
"மாகாண சபைத் தேர்தலோ அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலோ எது நடத்தப்பட்டாலும்
அரசு அதில் தோல்வியடைவது உறுதி. இந்தத் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே
அரசு தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாகக் காலத்தைக் கடத்தி வருகின்றது.</p><h2>ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்</h2><p>
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை அரசு எந்தவொரு தேர்தலையும் நடத்தப்
போவதில்லை என்பதே எனது கணிப்பு.</p><p>

எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், தேர்தல் என்று
வரும்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கைகோர்க்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17eefa3a-ee5d-48e3-91a6-303a3801a990/26-6a966afdc3685.webp' /></p><p> </p><p>ஐக்கிய தேசியக்
கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து
ஏற்கனவே சுமுகமான தீர்மானத்துக்கு வந்துள்ளன.

அதற்கமைய, வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே
பொதுப் பட்டியலில் களமிறக்கப்படுவார்கள்.
</p><p>
போட்டியிடும் தேர்தல் சின்னம் எது என்பது ஒரு சிறிய விவகாரமே தவிர அது
ஒருபோதும் பிளவை ஏற்படுத்தாது. இரு பிரதான சக்திகளும் ஒன்றிணைவதே இங்கு
முதன்மையானது என்பதால் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இரண்டும் ஒரே அணியாக
இணைந்து செயற்படும்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:04:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788239934"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788239934</id>
            <summary type="text">உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01.09.2026) சற்று சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இவ்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01.09.2026) சற்று சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இவ்வாரம் வெளியிடப்படவுள்ள முக்கிய அமெரிக்க தொழிலாளர் சந்தை தரவுகள் மீது வர்த்தகர்கள் கவனம் செலுத்துவது இதற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்படி, ஒரு அவுன்ஸ் உடனடி தங்கத்தின் விலை 0.3% குறைந்து, 4,437.10 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><h2>தங்க விலையின் மீதான அழுத்தம்</h2><p>
</p><p>இதற்கிடையில், ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6fb3d68-52d0-4c57-a3ae-d76e8b003bd9/26-6a96682620ec9.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்து இரண்டாவது நாளாக எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறிப்பாக, அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WOyADF1TYBM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-01T05:52:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-britain-demanding-justice-disappeared-1788240410"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-britain-demanding-justice-disappeared-1788240410</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.</p><p>

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில்
உள்ள இலங்கை தூதரகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.</p><h2>சர்வதேச நீதியை வலியுறுத்தி</h2><p>

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி” எனும் தொனிப் பொருளுடன்
சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5011adc2-955c-4ed8-b2fc-a251c4fd8c86/26-6a966682ef58e.webp' /></p><p>
இந்த மாபெரும் போராட்டத்தில் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்கள் மற்றும்
செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், உண்மை வெளிப்படுத்தப்பட
வேண்டும், குற்றவாளிகள் பொறுப்புக் கூற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd2ecff-4d2a-4709-8034-a8114c829b69/26-6a966683ca7b7.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணை! 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hearings-on-petitions-against-the-22nd-amendment-1788240798"></link>
            <id>https://tamilwin.com/article/hearings-on-petitions-against-the-22nd-amendment-1788240798</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>&nbsp;அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>குறித்த மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மீதான தீர்மானத்தை அறிவிப்பதற்காக, விசாரணைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.</p><p>இந்த மனுக்கள்,பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஆயத்தின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்&nbsp;</h2><p>



இந்த சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், நீதித்துறை சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa356482-b11d-4ea2-b1d7-6a73f3f97fa5/26-6a9664ba0f26e.webp' /></p><p>இதற்கிடையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணைகளை நீதிமன்ற அறை 501க்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காக 502 ஆம் இலக்க அரங்கில் அழைக்கப்பட்டிருந்த போது, 502 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்குள் போதிய இடவசதி இன்மையால், அதனை 501 ஆம் இலக்க அரங்கிற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>இந்த கோரிக்கையைக் பரிசீலித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. .</p>]]></content>
            <updated>2026-09-01T05:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/67-cases-against-22nd-ammendment-1788240626"></link>
            <id>https://tamilwin.com/article/67-cases-against-22nd-ammendment-1788240626</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 41 மனுக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

இவற்றில் 41 மனுக்கள் இணையவழியில் (Online) தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிமன்ற அமைப்பியல் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரணை செய்வதற்காகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் ஐந்து நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு பெயரிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcde90fc-2010-4d2a-9488-354a0fe1b9e3/26-6a9662f39e0ad.webp' /></p><p>

இதன்படி, இன்று (01) காலை 10.00 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் இம்மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-01T05:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-september-5th-1788237226"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-september-5th-1788237226</id>
            <summary type="text">நாடு முழுவதும் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.</p><p>அனைத்து மதிப்பெண் தாள்களும் ஏற்கனவே கணினி மயமாக்கப்பட்டுவிட்டன, மேலும் தொடர்புடைய ஆவணங்களை மறுபரிசீலனை செய்யும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மையங்கள்</h2><p>நாடு தழுவிய அளவில் 2,723 மையங்களில், 9ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சையில் 294,089 பரீட்சாத்திகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/114ed4b9-8709-4251-99f7-fa8909a59f81/26-6a965f7d10437.webp' /></p><p> </p><p>தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மையங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி 20ஆம் திகதி தொடங்கியது. </p><p>380 மதிப்பீட்டுக் குழுக்களின் கீழ், 6,000இற்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T05:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய விசாரணையில் அதிரடியாக முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-liquor-factory-blockaded-1788239387"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-liquor-factory-blockaded-1788239387</id>
            <summary type="text">குளியாப்பிட்டிய அருகே நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பொலிஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குளியாப்பிட்டிய அருகே நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் தியதொர, மாதரவத்த பிரதேசத்தில், இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><h2>சந்தேகநபர் கைது</h2><p>
</p><p>
இதன்போது, அங்கு சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக, வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72ecb301-125c-4bbc-bc1a-50580ef14ce1/26-6a965e1da03e3.webp' />&nbsp;</p><p>
</p><p>
வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, நேற்று (31) விசேட பொலிஸ் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, சட்டவிரோத மதுபான காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 7,560,000 மில்லி லீட்டர் கோடா அடங்கிய 40 பீப்பாய்கள், 187,500 மில்லி லீட்டர் கள்ளச் சாராயம் அடங்கிய 250 போத்தல்கள், 07 சுருள்களைக் கொண்ட 02 செப்புச் சுருள்கள், 02 எரிவாயு அடுப்புகள் மற்றும் 12.5 கிலோகிராம் கொண்ட 04 எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p>மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:09:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strait-of-hormuz-in-very-good-condition-trump-1788238342"></link>
            <id>https://tamilwin.com/article/strait-of-hormuz-in-very-good-condition-trump-1788238342</id>
            <summary type="text">முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்சமயம் &quot;மிகவும் நல்ல நிலையில்&quot;
உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்சமயம் "மிகவும் நல்ல நிலையில்"
உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில் அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன் தினமும் சராசரியாக 30
கப்பல்கள் அந்தப் பகுதி வழியாகப் பாதுகாப்பாக பயணித்து வருவதாகக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சீர்குலைந்துள்ள தலைமைத்தும்</h2><p>இதேவேளை ஈரானின் பொருளாதாரம், இராணுவம் மற்றும் தலைமைத்துவம்
சீர்குலைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db908289-feeb-4209-8099-d8d5d98b2494/26-6a965c0f5e1f0.webp' /></p><p>அத்துடன், ஈரான் மீதான தாக்குதல்களை
அமெரிக்கா தவிர்க்காது என்றும் சூழலுக்கு ஏற்ப தக்க பதிலடி கொடுக்கப்படும்
என்றும் எச்சரித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும் ஹோர்முஸ் நீரிணையின் லாராக் தீவில் அமைந்திருந்த ஈரானிய ஏவுகணை
தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் அண்மையில் தாக்குதல் நடத்தியதால்
அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:01:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளை எளிதாக்க குரல் தட்டச்சு செயலி அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/voice-typing-app-introduced-for-court-in-sri-lanka-1788236744"></link>
            <id>https://tamilwin.com/article/voice-typing-app-introduced-for-court-in-sri-lanka-1788236744</id>
            <summary type="text">இலங்கை நீதித்துறை அமைப்பில் நிலவும் வழக்கு தாமதங்களைக் குறைக்கும் நோக்குடன்இ திறந்த நீதிமன்ற அமர்வுகளில் வழங்கப்படும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நீதித்துறை அமைப்பில் நிலவும் வழக்கு தாமதங்களைக் குறைக்கும் நோக்குடன்இ திறந்த நீதிமன்ற அமர்வுகளில் வழங்கப்படும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு சிறப்பு புதிய மென்பொருள் செயலி அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய தொழில்நுட்ப அமைப்பை பரீட்சார்த்த ரீதியில் ஆரம்ப கட்டத்தில் நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் மட்டத்தில் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.</p><h2>மென்பொருள் பேச்சு-தட்டச்சு&nbsp;</h2><p>
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து சாட்சிப் பதிவுகளையும் சரியாக படியெடுப்பதற்காக இந்த மென்பொருள் பேச்சு-தட்டச்சு தொழில்நுட்பத்தை (Voice-typing technology) பயன்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae822752-09a0-46df-aa8d-a82bd69d97ee/26-6a9658d985da3.webp' /></p><p> அதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு சாட்சியாளரின் குரலையும் தனித்தனியாக அடையாளம் காணும் திறன் ஆகும்.

இதன் மூலம், ஒரு சாட்சியாளர் பின்னர் மீண்டும் சாட்சியமளிக்கும் சந்தர்ப்பங்களில் கூட எந்தவித குழப்பமும் ஏற்படுவது தடுக்கப்படும்.
</p><p>
நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் வழக்கு அறிக்கைகள் மற்றும் சட்டப் பதிவுகளைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால், வழக்கு அமர்வுகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவது இந்த நாட்டின் நீதித்துறை அமைப்பில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு தீவிரமான பிரச்சினையாகும்.</p><p>

இந்த புதிய செயலியை நீதவான் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், தொடர்புடைய தாமதங்களைக் குறைத்து, நீதித்துறை செயல்முறையின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:48:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ள தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protection-illegally-constructed-temple-kurundur-1788237525"></link>
            <id>https://tamilwin.com/article/protection-illegally-constructed-temple-kurundur-1788237525</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற
உத்தரவுகளை மீறி அமைக்கப்பட்ட விகாரையின் பாதுகாப்புக்காக
வழங்கப்பட்டிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற
உத்தரவுகளை மீறி அமைக்கப்பட்ட விகாரையின் பாதுகாப்புக்காக
வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி,
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சருக்கு குறித்த விகாரையின்
விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
</p><p>
குருந்தூர் விகாரை பூமியில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள்
ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அங்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள்
பாதுகாப்பிற்காக நிலைநிறுத்தப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>விலக்கப்பட்டுள்ள பாதுகாப்பு</h2><p>
</p><p>
விகாரைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, தொல்லியல் தலம் மற்றும்
தொல்பொருட்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர்கள் அங்கு கடமையில்
ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bd20cd0-600d-4698-85ef-cea5d784906c/26-6a96587dab15c.webp' /></p><p>
</p><p>
எனினும், தற்போது அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அப்பகுதியிலிருந்து
விலக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள தொல்லியல் விகாரை, பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதி மற்றும் அங்கு வருகை தரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கடும் அபாயத்தை
எதிர்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, விகாரைக்கான பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக மீள பணியமர்த்துமாறு அவர்
சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடைய பெண் சட்டத்தரணி தொடர்பில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shocking-details-about-lawyer-arrested-1788235273"></link>
            <id>https://tamilwin.com/article/shocking-details-about-lawyer-arrested-1788235273</id>
            <summary type="text">கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>சந்தேகத்திற்கிடமான வழக்கறிஞர் 1970 ஆம் ஆண்டு பிறந்திருந்த போதிலும், அவர் 1972 ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டுப் போலியான தேசிய அட்டையைத் தயாரித்துள்ளார். </p><p>அதனை பயன்படுத்தி கஹவத்தை அரச வங்கி கிளையில் கணக்குகளை ஆரம்பித்து, பல சந்தர்ப்பங்களில் இலட்சக்கணக்கில் கடன்களை பெற்றுள்ளார்.</p><p> </p><h2><b>நீதிமன்றத்திடம் கோரிக்கை </b></h2><p>அத்துடன், சில கடன் தொகைகளை திருப்பிக் செலுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97126076-28a8-415e-99f0-d09c1912775f/26-6a9653017dd26.webp' /></p><p>இதன்போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும் சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை தொடர்பான விபர அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவொன்றை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்ட பதில் நீதவான், விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விபர அறிக்கையை வழங்குமாறு கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T04:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்! அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remove-mosquito-school-dengue-control-unit-1788233880"></link>
            <id>https://tamilwin.com/article/remove-mosquito-school-dengue-control-unit-1788233880</id>
            <summary type="text">புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர்&amp;nbsp;அரச மற்றும் தனியார் பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்து நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர்&nbsp;அரச மற்றும் தனியார் பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்து நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு&nbsp;தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு&nbsp;வலியுறுத்தியுள்ளது.</p><p>இது தொடர்பில்&nbsp;தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அனைத்து&nbsp;கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.</p><h2>அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>குறிப்பாக, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதும், மீண்டும் பரவும் வாய்ப்பை முழுமையாக கட்டுப்படுத்துவதும் அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6422359-8070-4841-84ae-17db2be474dd/26-6a9652b9abb7f.webp' />&nbsp;</p><p>

இந்த ஆண்டு, நாட்டில் 95,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 07, 2026 அன்று ஆரம்பமாகவுள்ளது.</p><p>அதன்படி, அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 4 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்கு எதிராக பசில் ராஜபக்ச தீட்டிய சதித்திட்டம்! விரைவில் ஜனாதிபதியாகும் கனவால் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-were-sidelined-by-basil-s-conspiracy-1788234229"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-were-sidelined-by-basil-s-conspiracy-1788234229</id>
            <summary type="text">அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்நாட்டின் தேசியவாத
அரசியலை அழித்தொழித்த பசில் ராஜபக்ச&amp;nbsp; சதித்திட்டம் தீட்டி, இரண்டு
வருடங்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்நாட்டின் தேசியவாத
அரசியலை அழித்தொழித்த பசில் ராஜபக்ச&nbsp; சதித்திட்டம் தீட்டி, இரண்டு
வருடங்களுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தி, மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு
அனுப்பிவிட்டு விரைவாக ஜனாதிபதியாகும் கனவில் செயற்பட்டபோது நாம் வேதனையடைந்து
ஒதுங்கிக்கொண்டோம் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான திலித் ஜயவீர சுட்டிக்காட்டினார்.
</p><p>
மொனராகலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் தொகுதி
தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><h2>பசிலின் திட்டம்&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,
</p><p>எங்களை மற்றொரு ராஜபக்சவின் அவதாரம் எனக் கூறிச் சிலர் கூச்சலிடுகின்றனர்.
அமெரிக்காவில் ஒளிந்துகொண்டு தேசியவாத அரசியலை அழித்த பசில் ராஜபக்ச, மகிந்தவை
வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தாமே ஜனாதிபதியாகும் கனவில் சதித்திட்டம்
தீட்டியபோதே நாங்கள் மனவருத்தத்துடன் ஒதுங்கிக்கொண்டோம்.
</p><p>
இன்று நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்டத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மகாநாயக்க தேரர்கள் கூறினாலும் தனக்குத் தேவையானதையே செய்வேன் எனத் தற்போதைய
ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறான சர்வாதிகாரியை மக்கள் கொண்டுவராத போதிலும்
சுயநலமிக்க அரசியல்வாதிகளே கொண்டுவந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd37648-4f7e-42ee-8751-0ec55076dbdc/26-6a964e896f123.webp' /></p><p>
</p><p>
இன்று அனைவரும் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினை பொருளாதாரம் எனில் அதற்கான
தீர்வும் பொருளாதாரமாகவே அமைய வேண்டும்.
</p><p>
பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் பயன்படுத்திய 'தொழில்முனைவோர் அரசு'
கோட்பாட்டையே நாம் முன்மொழிகின்றோம். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள்
பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றிக் பேசாமல் வரிகளை விதிப்பது பற்றியும்
கருவூலத்தை நிரப்புவது பற்றியும் மட்டுமே பேசுகின்றனர். </p><p>2028 இல் செலுத்த
வேண்டிய மிகப்பெரிய கடன் சுமை குறித்து எந்த உரையாடலையும் அவர்கள் நடத்தவில்லை.

செவனகலை சர்க்கரை ஆலையை மூடி அதனை விற்பனை செய்யும் நோக்கிலேயே அரசு
செயற்படுகின்றது.
</p><p>
2029 ஆம் ஆண்டாகும் போது 'தொழில்முனைவோர் அரசை' உருவாக்கி, செவனகலை உள்ளிட்ட
நிறுவனங்களின் இலாபத்தை மும்மடங்காக உயர்த்தும் வேலைத்திட்டத்தை முற்போக்குச்
சக்திகளை ஒன்றிணைத்து வழங்குவோம்&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் திடீரென உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigate-the-death-of-model-chula-padmendra-1788227420"></link>
            <id>https://tamilwin.com/article/investigate-the-death-of-model-chula-padmendra-1788227420</id>
            <summary type="text">பிரபல அழகுக் கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல அழகுக் கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>பத்தரமுல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் பின்னர் நேற்று காலை (31) அவர் அந்த தொழிலதிபருடன் வீட்டிற்கு வந்ததாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>பொலிஸில் முறைப்பாடு </h2><p>

இதன்போது நித்திரையிலிருந்த அவர் நீண்ட நேரம் பதிலளிக்காததால், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f61e0197-b535-4ffd-9e85-06a24823918a/26-6a96389af145b.webp' />&nbsp;</p><p>
</p><p>இதனை்போது சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார பணியாளர்கள் அவரைப் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிசெய்துள்ளனர்.</p><p>இதனையடுத்து தொழிலதிபர் பிலியந்தல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>
</p><p>
எனினும், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பிரேதப் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.</p><p>46 வயதான இவர் அண்மைய கால அழகிப் போட்டி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.&nbsp;</p><p> ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை&nbsp;குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LyjOQmQ_ei8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T04:00:05+00:00</updated>
        </entry>
    </feed>
