<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-30T06:23:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றம் எங்களுக்குள் இருந்து வர வேண்டும்! சிறிநாத் எம்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srinath-mp-statement-about-economy-1788068461"></link>
            <id>https://tamilwin.com/article/srinath-mp-statement-about-economy-1788068461</id>
            <summary type="text">பொருளாதாரமாக இருந்தாலும் சரிதான், தொழில் துறையில்
இருந்தாலும் சரிதான், அரசியலில் இருந்தாலும் சரிதான் மற்றவர்களைக் குற்றம்
சாட்டுவதை அல்லது மற்றவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதாரமாக இருந்தாலும் சரிதான், தொழில் துறையில்
இருந்தாலும் சரிதான், அரசியலில் இருந்தாலும் சரிதான் மற்றவர்களைக் குற்றம்
சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து
எங்களுக்குள் இருந்து மாற்றம் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
</p><p>மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
இடையிலான “குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல்” என்ற விசேட கலந்துரையாடல் நேற்று (29.08.2026) மட்டக்களப்பில் நடைபெற்றது.
</p><p>இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>பொருளாதார பிரச்சினை</h2><p>மேலும் தெரிவிக்கையில், மிக முக்கியமாக இந்த அரசியல் உரிமையும், பொருளாதார உரிமையும் ஒன்றோடொன்று
பின்னிப் பிணைந்தவை. இந்த அரசியல் உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுது, அதாவது
அதிகாரப் பரவலாக்கம் - நீங்கள் மாகாண சபை என்று கேட்ட விடயம் - பொதுவாக அதிகாரப்
பரவலாக்கம், ஏனென்றால் எங்களுடைய அதிகாரத்தை எல்லா மட்டங்களுக்கும் கொண்டு
செல்கின்ற பொழுது, இந்த பொருளாதாரப் பிரச்சினைகளை மிக இலகுவாக முன்னெடுத்துத்
தீர்க்கக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d45354-854d-467f-9a69-020f7bd2eadb/26-6a93c7fdc431a.webp' /></p><p>
</p><p>ஒரு நாட்டில் வந்து பல அபிவிருத்தி அடைந்த நாடுகளிலே இந்த பொருளாதாரப்
பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்பட்டிருக்கின்றன என்றால், அங்கு அரசியல்
பிரச்சினைகள், அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கின்ற பொழுதுதான் அங்கு பொருளாதார
ஸ்திரத்தன்மை இருக்கும்.
</p><p>முக்கியமாக எங்களது நாட்டில் வந்து மிக முக்கியமாகத் தேவையாக இருக்கின்ற இந்த நாடாளுமன்றத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட வேண்டிய, கடந்த காலங்களிலே பொருளாதார
நெருக்கடியிலே சிக்கித் தவித்த நாடு இப்போது தற்காலிகமாக ஒரு நிலைக்கு
வந்திருக்கின்றது என்றாலும் கூட, அது நிரந்தரமாக உங்களுடைய இந்த நீங்கள்
முன்னிலைப்படுத்திய அல்லது முகவரியிட்ட விடயங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்
என்றால், மிக முக்கியமாக அந்தச் சமத்துவமும் எல்லாரும் இங்கு பல்லினம்
வாழுகின்ற சமூகச் சமத்துவம் அது பெரும்பான்மையாக இருந்தாலும் சரிதான்,
சிறுபான்மையாக இருந்தாலும் சரிதான் எல்லோருக்கும் உரிய சமத்துவம் இருக்க
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a04d7c-9d81-447b-8c64-a85ce263438f/26-6a93c7febd4bd.webp' /></p><h2>பொருளாதார ஸ்திரத்தன்மை</h2><p>
</p><p>இளைஞர், யுவதிகளுக்கான சமத்துவம், மதங்களுக்கான சமத்துவம், இன்னும் எல்லா
வகையிலும் அந்தச் சமத்துவம் ஆண், பெண் சமத்துவம் இருக்க வேண்டும் என்ற
அடிப்படையிலே இந்த அரசியல் உரிமைகள் வந்து உண்மையாக அதிகாரப் பரவலாக்கங்கள்
மூலம் கொண்டு செல்லப்படுகின்ற பொழுது, பொருளாதார ஒரு ஸ்திரத்தன்மை அங்கு
அடையப்படும்.</p><p>
பல விடயங்கள் வேலைவாய்ப்பு அல்லது போதைப்பொருள் கட்டுப்பாடு, மற்றது
விளையாட்டு இந்த விடயங்களெல்லாம் நீங்கள் சொன்னதில் எனக்கு நிறைய உடன்பாடு
இருக்கின்றது. மாகாண சபைகள் பலப்படுத்தப்படுகின்ற பொழுது, அந்த விடயங்களை
ஒவ்வொன்றும் ஒரு கள நிலைகளிலும் பிரதேச சபை என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட
அதிகாரம், மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட அதிகாரம், மாகாணங்களின் ஊடாக இந்த
அடிப்படை விடயங்கள் உண்மையாக உங்களுடைய குரலாக வருகின்ற பொழுது நிச்சயமாக
வரவேற்கப்பட வேண்டிய விடயம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/512540bd-156b-4a2e-9f8f-fa8a8b3be9de/26-6a93c7ff946a6.webp' /></p><p>
இந்த எண்ணக்கருக்கள் பலப்படுத்தப்படுகின்ற பொழுது, அந்த நாட்டில அந்த
மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் ஊடாக குரலாக இந்த
எண்ணப்பாடுகளை நாங்களும் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது,
வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
</p><p>ஆகவே, உண்மையாக ஒரு வலுவான நிலையில் இருக்கின்ற அரசு நான் அரசாங்கக் கட்சியைப்
பற்றிச் சொல்லவில்லை, அரசாங்கம் இந்த இளைஞர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வருடமும்
நீங்கள் தான் அந்த வாக்குகளைச் செலுத்துகின்ற தீர்மானிக்கின்ற சக்திகளாக
வருகின்றீர்கள். உங்களுடைய எண்ணப்போக்கு எவ்வாறு இருக்கின்றதோ அதைச் சார்ந்து
செயல்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c07b43-0970-4c16-ace4-2f5a1c73f6a5/26-6a93c8006ae1f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T06:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங்கை திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-plans-to-send-relief-team-1788069820"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-plans-to-send-relief-team-1788069820</id>
            <summary type="text">&amp;nbsp;பாரிய வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவும் வகையில், எதிர்வரும் நாட்களில் அவசரகால நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பாரிய வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவும் வகையில், எதிர்வரும் நாட்களில் அவசரகால நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>
நேபாளத்திற்கு அனுப்பப்படும் நிவாரணக் குழுக்களில் இலங்கை பாதுகாப்புப் படையினரின் உறுப்பினர்கள் உள்ளடங்குவர் என அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
நேபாளத்தின் தற்போதைய தேவைகளின் அடிப்படையில் நிவாரணக் குழுக்களின் எண்ணிக்கை மற்றும் எந்த வகையான குழுக்களை அனுப்புவது என்பது குறித்துத் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில நாட்களில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee80a01c-0394-4fcc-a456-9314723f8d46/26-6a93c7bd8f496.webp' /></p><p>.
நிவாரணக் குழுக்களுடன் சேர்த்து, பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க இலங்கை அரசாங்கம் பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T06:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் யாழில் ஆரம்பமான நீதிக்கான நீள் பயண கவனயீர்ப்பு பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111"></link>
            <id>https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, &quot;நீதிக்கான நீள்
பயணம்&quot; எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி
நடைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள்
பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி
நடைபெற்று வருகின்றது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட
குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில்
சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து ஆரம்பமானது.</p><p>இந்த பேரணி தற்போது யாழ்ப்பாணம் தந்தை
செல்வா கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.</p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் பேரணியின்
முன்னிலையில் சென்றதுடன், உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை
ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.</p><h2>உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணி</h2><p>
</p><p>
பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள்,
உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணியில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197f43f3-3b8c-4f3c-83ae-34df0549769a/26-6a93c66a82665.webp' /></p><p>

உலகளவில் அதிகளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள்
பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்படும்
நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீதி கோரிக்கை இதுவரை
நிறைவேற்றப்படவில்லை.
</p><p>
யாழ்ப்பாண நகரின் ஊடாக முன்னேறிய பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச்
சென்றடைந்தது. அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்
என்றும், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற
குடும்பங்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் குறித்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T05:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்..! தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disappeared-relatives-association-question-1788066094"></link>
            <id>https://tamilwin.com/article/disappeared-relatives-association-question-1788066094</id>
            <summary type="text">தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லக் கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லக் கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும் என தமிழர் தாயக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p>அத்துடன், எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய
தமிழ் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும்
கேள்வி எழுப்பியுள்ளன.</p><p>வவுனியாவில் நேற்றைய தினம் (29.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இந்த விடயத்தை கூறியுள்ளனர்.&nbsp;</p><p>மேலும்,

சர்வதேச காணாமலாக்கப்பட்டேர் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த
3478 நாட்களாக, எமது பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் தேடுவதை கைவிடாமல்
வவுனியாவில் வீதியில் நின்று போராடி வருகிறோம்.</p><h2>வேண்டுகோள் முன்வைப்பு</h2><p>
</p><p>
இன்று, பிரித்தானிய பிரதமரிடமும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரிடமும் நாம்
நேரடியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். தமிழர் இறையாண்மையை
மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட வழிமுறைக்கு பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.
</p><p>
இலங்கையில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் தேசியப் பிரச்சினையில்
பிரித்தானியாவுக்கு உள்ள வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, காலனித்துவ
நீக்கம், சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் இறையாண்மை மீட்பு தொடர்பாக சர்வதேச
சட்ட வழிமுறையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியே பின்னர் சுதந்திர சிலோன் பெற்றுக்கொண்ட
மையப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
1948ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரத்தை ஒப்படைத்த போது, ஒரே மையப்படுத்தப்பட்ட
அரசைக் கொண்ட அரசியலமைப்பு ஏற்பாடு தொடர்ந்தது.
</p><p>
அந்த அரசியலமைப்பு ஏற்பாடு தமிழர்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு மற்றும்
அரசியல் எதிர்காலத்திற்கு நிலையான தீர்வை வழங்க தவறிவிட்டது. அதன் விளைவுகளை
தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/367c51cd-8792-4465-8b74-f41fc47db22d/26-6a93c00033c03.webp' /></p><p>
</p><p>
பாகுபாடான அரச கொள்கைகள், இன வன்முறைகள், இடம்பெயர்வுகள், நில இழப்புகள்,
இராணுவமயமாக்கல், போர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படுதல் ஆகியவற்றை
தமிழர்கள் எதிர் கொண்டுள்ளனர். இன்றும் ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள்
தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல்
காத்திருக்கின்றன.

அரசாங்கங்கள் மாறியுள்ளன.</p><h2>நம்பகமான பதில் கிடைக்கவில்லை</h2><p> </p><p>ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணைகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எமது காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நம்பகமான பதில் இன்னும்
எமக்குக் கிடைக்கவில்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளின் முன்னைய தினத்தில்,
பிரித்தானியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் நாம் கேட்கிறோம்.</p><p> எமது
பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை
ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

சிலோனை ஒன்றிணைத்த காலனித்துவ நிர்வாக நடைமுறையிலும், பின்னர் அதன் காலனித்துவ
நீக்கத்திலும் பிரித்தானியா வகித்த பங்கு குறித்து முறையான வரலாற்று மற்றும்
சட்ட ஆய்வை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

மேலும், தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும்.

நேரடி வழக்கிற்கான சட்ட அதிகாரம் பொருந்தாத பட்சத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைக் கோரும் முயற்சிக்கு
பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.</p><p>

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள்,
அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு முயற்சிகள் தமிழர்
தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கவில்லை.</p><p>

எனவே, தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பது, அமைதியான மற்றும் ஜனநாயக நடைமுறையின்
மூலம் சுதந்திரமான தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் உள்ளடக்கி, ஒரு
சர்வதேச அரசியல் தீர்வின் பகுதியாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று
பிரித்தானியாவையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தக் கேள்வியை சர்வதேச சட்டத்தின் முன்
கொண்டுசெல்ல பிரித்தானியா உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவின் பரபரப்பு வாக்குமூலம்! சிக்கிய முன்னாள் அமைச்சரின் 5 கோடி ரூபாய் மோசடி - வெளிச்சத்திற்கு வரவுள்ள சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nandun-chinthaka-also-known-as-harak-kata-crime-1788056112"></link>
            <id>https://tamilwin.com/article/nandun-chinthaka-also-known-as-harak-kata-crime-1788056112</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் முன்னாள் அமைச்சரோ அல்லது அவரது செயலாளரோ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>டுபாயிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பரான மிதிகம ருவன் அளித்த வாக்குமூலத்திலேயே இது வெளிவந்துள்ளது. </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பணம் கைமாறப்பட்ட விதம்</span></p><p>
"அமைச்சரிடம் சொல்லி இந்த வேலையை முடித்துக்கொள்ளலாம், அவர் ஜனாதிபதியிடம் பேசி நடவடிக்கை எடுப்பார்" எனக்கூறி இந்த பணம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0a7ab5-1e91-4a39-bfc0-d9c2ebdf9289/26-6a9392327fb09.webp' /></p><p>ஆனால், பணம் பெற்றபோது அந்த நபர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருக்கவில்லை என்றும், ஜனாதிபதியுடன் தனக்குள்ள நெருங்கிய தொடர்பை பயன்படுத்தி இந்த வேலையை செய்வதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், இது முன்னாள் அமைச்சருக்கு தெரிந்தே நடந்ததா அல்லது அவருக்கு தெரியாமல் நடந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>மிதிகம ருவன் மற்றும் ஹரக் கட்டாவின் மனைவி ஆகியோரிடம்&nbsp;தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள "பணம் கேட்கிறார்கள், பணத்தைக் கொடுங்கள்" என்று கூறியவர் ஹரக் கட்டா என்பதும் தெரியவந்துள்ளது.</p><h2>பின்னணியில் நடந்த&nbsp;உண்மைகள்</h2><p> குற்றப்புலனாய்வுத்துறையின் காவலில் இருந்தபோது, அங்கிருந்த தொலைபேசியை பயன்படுத்த ஒரு அழைப்பிற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக முறைப்பாடுகளும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26701233-523e-4902-bf48-5327ba511d1e/26-6a93a1017cfc2.webp' /></p><p> </p><p>இந்த வழக்கில் நதுன் சிந்தகவே முக்கிய சாட்சி என்றும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதுவரை நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் எதுவும் பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>எனவே, ஹரக் கட்டாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலம் இலங்கை வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும், பின்னணியில் நடந்த உண்மைகள், இதில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், தொலைபேசி அழைப்புகள் என அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் என்றும்&nbsp;தெரிவிக்கப்படுகிறது</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T05:24:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண கல்வித்துறை சவால்கள்: ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/education-probes-face-challenges-due-to-delays-1788063255"></link>
            <id>https://tamilwin.com/article/education-probes-face-challenges-due-to-delays-1788063255</id>
            <summary type="text">கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும்
சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்துதல் தொடர்பில்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும்
சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்துதல் தொடர்பில்&nbsp; கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>இந்தக் கலந்துரையாடலானது நேற்று(29.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><h2>கல்வித்துறை விசாரணைகள்</h2><p>

இதன்போது, கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முதலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம்
அடைவதால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p>கடந்த
காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், எதிர்பார்க்கப்பட்ட
அளவுக்கு முன்னேற்றத்தை எட்ட முடியாத நிலை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதற்குத் தீர்வாக தனியான விசாரணைக் குழு உறுப்பினர்களை உருவாக்கும்
யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1546ec6f-2303-44da-98dd-d976498c7986/26-6a93b3175f833.webp' /></p><p>ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றக் கொள்கை தொடர்பிலும் விரிவாக
கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் மாகாணங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் மற்றும் பாட
மாற்றங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, வலயங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் வெளிப்படைத்தன்மையுடனும்
நியாயமான நடைமுறையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
உரிய காலத்தில் ஓய்வூதியங்கள் வழங்குவதற்கு ஏதுவாக, ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு
அமைவாக நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின்
செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>பாடசாலை அபிவிருத்தி</h2><p>
</p><p>
மேலும், ஆசிரியர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றமை , கஷ்ட
மற்றும் அதி கஷ்ட பிரதேசங்களிலிருந்து சில பாடசாலைகள் நீக்கப்பட்டமை தொடர்பாக
கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>
ஆசிரியர்களின் சம்பள உயர்வுடன் தொடர்புடைய மேலதிக கோரிக்கைகள் குறித்தும்
கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதுடன் வட மாகாணத்தில் 19 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தொடர்பில்
வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் யோசனைகள் கோரப்பட்டுள்ளமை குறித்தும்
ஆராயப்பட்டுள்ளது.</p><p>

மேலும், கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்ததைப் போன்று வலய மற்றும் மாகாண
மட்டங்களில் வருடாந்த நாட்காட்டியை தயாரிப்பது தொடர்பிலும்
கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96a381ce-96af-4fd2-afcf-3efac5a595cb/26-6a93b31646fae.webp' /></p><p>அத்துடன் பரீட்சைகள் மற்றும் போட்டிகள் ஒரே நாளில் அமையாத வகையில் கல்வி நடவடிக்கைகளை
முறையாக திட்டமிடுவதற்கு இந்த நாட்காட்டி உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>மேலும் வட மாகாணத்தின் கல்வி துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்குவதற்காக அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஊடாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மற்றும்
அதிபர்களின் சேவை நலன்களுடன் மாணவர்களின் கல்வி நலனும் சம அளவில் கவனத்தில்
கொள்ளப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும்
பிரதியமைச்சருமான மகிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநரின்
செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்
டிறஞ்சன், வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜேனட்
மற்றும் வடக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களினதும் கல்விப்
பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-kills-wife-by-attacking-with-sharp-weapon-1788064696"></link>
            <id>https://tamilwin.com/article/husband-kills-wife-by-attacking-with-sharp-weapon-1788064696</id>
            <summary type="text">நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த, விநாயகபுரம் பகுதியில்&amp;nbsp;கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கணவர் கொலை செய்துள்ளார்.இதனையடுத்து கணவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த, விநாயகபுரம் பகுதியில்&nbsp;கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கணவர் கொலை செய்துள்ளார்.</p><p>இதனையடுத்து கணவர் நேற்று மாலை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.

</p><p>குடும்ப தகராறை தொடர்ந்து, 43 வயதுடைய சித்ரா தேவி என்ற
பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரை
மீட்டு சிகிச்சை பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.</p><h2>கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைவு</h2><p>இந்த சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் மனைவி மீது கூரிய
ஆயுதத்தால் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்து நுவரெலியா பொலிஸ்
நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78cce7d1-e774-4aae-8a6f-985912192838/26-6a93b86f658b6.webp' /></p><p>
</p><p>தனிப்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு
இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே
சரணடைந்த சந்தேகநபரை இன்று (30) நுவரெலியா மாவட்ட நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
</p><p>இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிணவறையில்
வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T04:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மதுபான விற்பனை நிலையத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-opposit-relocation-liquor-outlet-vavuniya-1788061589"></link>
            <id>https://tamilwin.com/article/public-opposit-relocation-liquor-outlet-vavuniya-1788061589</id>
            <summary type="text">வவுனியா தொடருந்து நிலைய வீதியில் தற்போது அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம்
ஒன்றை, அதே வீதியில் குட்செட் வீதி சந்திப் பகுதியில் மாற்றுவதற்கு அந்தப் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தொடருந்து நிலைய வீதியில் தற்போது அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம்
ஒன்றை, அதே வீதியில் குட்செட் வீதி சந்திப் பகுதியில் மாற்றுவதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை
தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த பகுதி பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு இடமாக
உள்ளதுடன் வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும் முக்கிய பகுதியாக காணப்படுவதனாலேயே அவர்கள் இந்த மாற்றுத் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><h2>மக்கள் எதிர்ப்பு</h2><p>

எனவே, அங்கு மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டால் பல்வேறு சமூகப்
பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்துடன் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் பாதுகாப்பு தொடர்பான
பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/282c419a-f664-409a-b4d6-ad3c7d51a55c/26-6a93ac7002330.webp' /></p><p> இது
தொடர்பாக வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் ஒரு கலந்துரையாடல்
இடம்பெற்ற நிலையில் அதிகமான பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிரான
நிலைப்பாட்டில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, குறித்த இடத்தில் மதுபான விற்பனை நிலையத்தை
மாற்றுவதற்கான நடவடிக்கையை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T04:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கு செல்வோருக்கு விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-train-service-for-those-returning-to-colombo-1788062376"></link>
            <id>https://tamilwin.com/article/bus-train-service-for-those-returning-to-colombo-1788062376</id>
            <summary type="text">வெளிமாவட்டங்களில் உள்ள பொது மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் என்பன இன்று (30.08.2026) முத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிமாவட்டங்களில் உள்ள பொது மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் என்பன இன்று (30.08.2026) முதல் சிறப்புப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.</p><p>நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாறு சிறப்புப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்துள்ளன.&nbsp; &nbsp;</p><h2>கொழும்பிற்கு திரும்பும் பயணிகள்</h2><p>
மாத்தறை, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு திரும்பும் பயணிகளின் தேவையை கருத்திற் கொண்டு மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e93c8d36-0d7e-422d-9924-1eaf09d5f46b/26-6a93affd0013f.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களை இயக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் எச்சரித்துள்ளார்.</p><h2>சோதனை முன்னெடுப்பு</h2><p>
</p><p>
நீண்ட விடுமுறையின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, பயணிகளின் வசதிக்காக அநுராதபுரத்தில் இருந்து மாத்தறை வரை இன்று சிறப்பு தொடருந்து சேவையும் இயக்கப்படுவதாக தொடருந்து ஊடகப் பேச்சாளர் அசாங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T04:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்! தீவிரமடையும் தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-police-officer-1788062365"></link>
            <id>https://tamilwin.com/article/missing-police-officer-1788062365</id>
            <summary type="text">தங்காலை - கிரிந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிந்த அருகே த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்காலை - கிரிந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
கிரிந்த அருகே தெபரவெவ பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>
கடந்த 23 ஆம் திகதி அதிகாலையில் தனது வீட்டில் இருந்து கடமைக்காக புறப்பட்டுச்சென்ற அவர், அதன் பின்னர் காணாமல்போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cf4c46-3c0f-4ec4-8a42-1489c5db5c8b/26-6a93ae6c7cd39.webp' /></p><p>
</p><p>
அவரைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் கிரிந்த பொலிஸ் நிலையத்தில் தற்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தரை தேடிக் கண்டறியும் வகையில் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T04:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bread-and-bakery-item-prices-will-hike-1788063048"></link>
            <id>https://tamilwin.com/article/bread-and-bakery-item-prices-will-hike-1788063048</id>
            <summary type="text">பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
 கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p>
 கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.</p><h2>இறுதி முடிவு</h2><p> 
பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்று&nbsp; முதல் அமலுக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3db67b0-ca56-4d60-87a0-387f37355290/26-6a93ad498b37e.webp' /></p><p>
</p><p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு நாளை ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T04:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788060439"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788060439</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுத்து வருகிறது. </p><p>

அதன்படி, இன்று (30.08.2026) நண்பகல் 12.11 மணியளவில் மன்னார், பெரியமடு, புளியங்குளம், வெலிஓயா மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><h2>இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9512e82-8fc7-430d-bef7-0678ba3891b7/26-6a93a99d038b3.webp' /></p><p> </p><p>

அதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.</p><h2>வறண்ட வானிலை</h2><p> </p><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebcdfd88-935e-4196-90fe-75d8b60d6527/26-6a93a99dcc2c1.webp' /></p><p> </p><p>

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். 

எனவே, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:55:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணச்சலவையை கட்டுப்படுத்தும் மத்திய வங்கியின் வேலைத்திட்டம்! ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-not-have-planl-money-launder-harsha-1788060415"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-not-have-planl-money-launder-harsha-1788060415</id>
            <summary type="text">இலங்கையில் நடைபெறும் பணச்சலவை தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலான தெளிவான வேலைத்திட்டமொன்று மத்திய வங்கியிடம் இல்லை என நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடைபெறும் பணச்சலவை தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலான தெளிவான வேலைத்திட்டமொன்று மத்திய வங்கியிடம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.</p><p>இதுவரையில் நாட்டில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத முயற்சிகளைத் தடுக்க முறையான நடவடிக்கை எதுவும் அரசு எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இதுபோன்ற நிதிக் குற்றங்களைத் தடுக்க, தற்போதுள்ள சட்டங்களை முறையாக நடைமுறைபடுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது.</p><p>இதற்கிடையே இந்த நிலையை சரிசெய்ய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதி நிதிஅமைச்சர் அனில் ஜயந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a945ed-d602-41d1-b7ca-70e9b23c0499/26-6a93a6e037ab6.webp' /></p><p>தற்போதுள்ள சட்டங்கள் குற்றவாளிகளுக்கு அபராதம் மட்டுமே விதிக்க முடியும் என்பதால், இந்தக் குற்றத்தை ஒரு குற்றமாக வகைப்படுத்தி, குற்றவாளிகளுக்கு அதற்கேற்ற தண்டனையை வழங்க புதிய சட்டங்கள் அவசியம்.
</p><p>எனினும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, 2019-ல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களைச் செயல்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.</p><h2>சட்டத்திற்கான&nbsp;வரைவுத் திருத்தம்</h2><p>&nbsp;மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, 2024ஆம் ஆண்டு முதல் சந்தை வழியாக நடைபெறும் பணச்சலவை கும்பல்கள் குறித்த நடவடிக்கை எடுக்கக்கூடிய உளவுத் தகவல்களை வழங்கியிருந்தபோதிலும், இதுபோன்ற சட்டவிரோத முயற்சிகளைத் தடுக்க முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.</p><p>
</p><p>
அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற, சட்டத்திற்கான தொடர்புடைய வரைவுத் திருத்தம், தயாரிப்பிற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக சட்ட மா அதிபர் திணைக்கள அலுவலகம் அதை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb68be4-1263-474f-9c09-a0ac176555ee/26-6a93a71d632fb.webp' /></p><p>கேசினோக்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு நிறுவனம் நிறுவப்பட்டிருந்தாலும், அவற்றை இயக்குவதற்கான முறையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இல்லாததால் அவை முறையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.</p><p>

இறக்குமதித் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 500 நிறுவனங்களிடம் நிறுவனப் பதிவுக்கு அவசியமான சரிபார்க்கப்பட்ட முகவரிகள் மற்றும் சங்க விதிகள் இல்லை என்பதைத் தனது குழுவின் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
அத்துடன் பந்தய சேவைகளில் ஈடுபட்டுள்ள சில கேசினோ நிறுவனங்கள் எந்த வரிகளையும் செலுத்தவில்லை என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>[JQPBR3J</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதங்களுடன் சிக்கிய போதைப்பொருள் வர்த்தகர்! பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-dealer-arrested-with-weapons-1788061517"></link>
            <id>https://tamilwin.com/article/drug-dealer-arrested-with-weapons-1788061517</id>
            <summary type="text">மொனராகலை அருகே ஆயுதங்களுடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கேயாய பகுதியில் நடத்தப்பட்ட சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை அருகே ஆயுதங்களுடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கேயாய பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​35 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>போதைப்பொருள் தொடர்பான வழக்குகள்&nbsp;</h2><p>
</p><p>
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 குழல் தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி ஒன்றும், 5 கிராம் மற்றும் 370 மில்லிகிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b948112c-d013-4dcc-a835-ae4e144a656d/26-6a93a88c67f9c.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. </p><p>சந்தேகநபர் மீது ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் உள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதுடன், தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T03:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliment-on-high-risk-of-cyber-attack-1788060649"></link>
            <id>https://tamilwin.com/article/parliment-on-high-risk-of-cyber-attack-1788060649</id>
            <summary type="text">இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
</p><p>2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த மதிப்பாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடு</h2><p>
2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவினால் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b861472-8b59-44d8-a895-acba8c660619/26-6a93a3eb377e9.webp' /></p><p> 
இதன்போது பரிசோதிக்கப்பட்ட 56 முக்கிய அம்சங்களில், 46 அம்சங்களில் உயர் மட்டத்திலான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>சைபர் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து முக்கியமான ரகசியத் தகவல்களைத் திருடுதல், நாடாளுமன்றத்தின் அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதள உள்ளடக்கங்களைச் சிதைத்து நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல் போன்ற ஆபத்துகள் நிலவுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற நிர்வாகம் உடனடியாகத் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ashwesuma-payment-for-new-beneficiaries-1788060466"></link>
            <id>https://tamilwin.com/article/ashwesuma-payment-for-new-beneficiaries-1788060466</id>
            <summary type="text">அஸ்வெசும கொடுப்பனவு பெற தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது.
சமூகநலன்புரி சேவைகள் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும கொடுப்பனவு பெற தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது.</p><p>
சமூகநலன்புரி சேவைகள் திணைக்களம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><h2>மூன்றாம் கட்ட பயனாளிகளின் தெரிவு</h2><p>
</p><p>
அஸ்வெசும கொடுப்பனவுக்கான மூன்றாம் கட்ட பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான செயற்பாடுகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8de9d98a-63df-4b40-913c-9030bb93240e/26-6a93a334c7d81.webp' /></p><p>
</p><p>
அதன்போது அடையாளம் காணப்பட்ட தகுதியான பயனாளிகளுக்கான கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் பரவும் தகவல்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palma-milk-yogurt-price-1788054406"></link>
            <id>https://tamilwin.com/article/palma-milk-yogurt-price-1788054406</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கமளித்துள்ளது. </p><p>

முக்கிய செய்தி என குறிப்பிட்டு, பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><h2>முக்கிய அறிவுறுத்தல்</h2><p>இவை உண்மைக்கு புறம்பானவை என்றும், அவ்வாறான செய்திகளை உறுதிப்படுத்தாமல் பகிர்வதை தவிர்க்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1029140-4007-4fde-8aa3-52ef58897d8a/26-6a9397ea35538.webp' />&nbsp;</p><p>இவ்வாறான&nbsp; போலி அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதன் மூலம் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படவும், சந்தையில் தவறான புரிதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>

எனவே, சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T02:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற யுவதியை கடத்திய காதலன்! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-students-kidnapped-the-colombo-1788054603"></link>
            <id>https://tamilwin.com/article/university-students-kidnapped-the-colombo-1788054603</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதன்போது யுவதியை கடத்திச்சென்ற காதலனின் காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிறுத்தியுள்ளனர்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த இளம் யுவதியை கடத்த முயன்றவர், அப்பெண்ணின் காதலரே என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸ் அவசர அழைப்பு</h2><p>நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a6f085-9f02-4328-8995-52d3484801be/26-6a9391783fcd0.webp' /></p><p> இந்த தகவலின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><p>நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

&nbsp;&nbsp;</p><p>இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிழலயில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>கடத்தப்பட்டமைக்கான காரணம்</h2><p>அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த யுவதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29b89631-0285-42e8-83be-f6c5e15df985/26-6a939178e5051.webp' /></p><p>அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும், மாத்தறையில் உள்ள வெலிகம மற்றும் மிடிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக யுவதி தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நிலையில், அவர் கடத்தப்படுவதாக யுவதியின் தந்தை பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>யுவதியை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட யுவதி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.</p><p>


குறித்த கார் கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞருக்கு சொந்தமானது எனவும், அந்த காரை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவுக்கு ஓட்டிச்சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T02:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! இளைஞர் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-tragically-dies-motorcycle-on-collision-1788050913"></link>
            <id>https://tamilwin.com/article/youth-tragically-dies-motorcycle-on-collision-1788050913</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து
குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில்
பயணித...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து
குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில்
பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம், பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய
இளைஞர் ஆவார்.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;&nbsp;</h2><p> </p><p>இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d17fd2c-fb70-4275-aaf2-e21f327395db/26-6a937eacc4739.webp' /></p><p>
தம்பலகாமம் பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள
திருகோணமலை - கண்டி பிரதான வீதியிலேயே இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
</p><p>
மேற்படி இளைஞர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கிச்
சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T01:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் இன்று மாபெரும் சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-day-of-enforced-disappeared-1788049949"></link>
            <id>https://tamilwin.com/article/international-day-of-enforced-disappeared-1788049949</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும்
நிலையில், &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா
கலையரங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும்
நிலையில், "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா
கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.
</p><p>
மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம்
மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை
நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது உறவினரின்
நினைவுபடுத்தலோடு கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா
கலையரங்கைச் சென்றடையவுள்ளது.</p><h2>முக்கிய நிகழ்வுகள்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவுள்ளதுடன், காணாமல் போனோர்
விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியிடப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a204ea-5f66-4452-ba35-3df80ff64581/26-6a937b41b6aac.webp' /></p><p>

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டுக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்
கட்சிகள், பொது அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவைத்
தெரிவித்துள்ளனர்.</p><p>

இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையாளுவதற்கோ
அல்லது நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகளும்
இல்லை என்பதால், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலுவாக
வலியுறுத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T00:41:04+00:00</updated>
        </entry>
    </feed>
