<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-26T13:15:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்படும் - சஜித் முழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leader-sajith-in-anuradhapura-1785070078"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leader-sajith-in-anuradhapura-1785070078</id>
            <summary type="text">விவசாயிகளை இழிவுபடுத்தும் தற்போதைய அரசாங்கத்தை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்போவதும்
இந்த விவசாயிகள்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளை இழிவுபடுத்தும் தற்போதைய அரசாங்கத்தை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்போவதும்
இந்த விவசாயிகள்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
</p><p>
அநுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை தேர்தல் தொகுதி, நாச்சியாதீவு பிரதேசத்தில்
நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நெற்செய்கை உள்ளிட்ட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும்
அதிர்ச்சிக்குள்ளாகி பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல சவால்கள்
மற்றும் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இவர்கள், பிள்ளைகளின்
கல்விக்குக் கூட வலுவூட்ட முடியாதவாறு தற்போதைய அரசு விவசாயத்தை அழிக்கும்
கொள்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p></p><h2>தரமற்ற உரம்</h2><p>

நகைநட்டுக்களை அடகு வைத்து, வட்டிக்குப் பணம் பெற்று விவசாயத்தைத்
தொடங்கினாலும், இன்று விவசாயத்துக்குத் தேவையான தரமான விதைநெல் இல்லை. உரிய
நேரத்தில் உர மானியமும் கிடைப்பதில்லை. கிடைக்கும் உரமும் தரமற்றதாகக்
காணப்படுகின்றது. விவசாய இரசாயனங்கள், உரம் மற்றும் விவசாய உபகரணங்களின்
விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
</p><p>
விவசாயியை இவர்கள் கடவுள் என்று கூறினாலும், விவசாய உபகரணங்களுக்கு அரசாங்கம்
வட் வரியை விதித்து வருகின்றது.

யானை - மனித மோதல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு மத்தியில் அறுவடை செய்தாலும்,
அவ்வாறு பெறப்படும் அறுவடைக்கு நியாயமான நிலையான குறிப்பிட்ட விலை
கிடைப்பதில்லை. இன்று ஒரு கிலோகிராம் நெல் உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக
விவசாய அமைச்சரே கூறிவிட்டு, நிலையான விலையை 120 ரூபாவாக ஆக்கியுள்ளார். </p><p>இந்த
அரசின் அமைச்சர்களுக்குத் தேர்தல் காலத்தில் விவசாயி ராஜாவாகத் தெரிந்தாலும்,
தேர்தலின் பின்னர் விவசாயிகள் நட்டமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

அன்று 5000 ரூபா உரம் வேண்டாம் என்று கூறி அநுரகுமார திஸாநாயக்கவை
ஜனாதிபதியாக்கி இறுதியில் விவசாயிகள் துயரப்படுகின்றனர். அரசின் திறைசேரியில்
பணம் நிரம்பியிருந்தும் உரிய நிவாரணங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p></p><h2>இறக்குமதி செய்யப்பட்ட அரிசி</h2><p> </p><p>விவசாயியை கடவுள் என்று கூறி அதிகாரத்தைக்
கைப்பற்றிவிட்டு, இன்று விவசாயியைக் 'கசிப்புக்காரன்' என அரசு கூறி வருகின்றது.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு வேலையின்றி அவதியுறும் இளைஞர்களைக்
'கரையான்கள்' என அழைத்தமையால், இளைஞர்கள் ஒன்றிணைந்து கரப்பான் பூச்சி மக்கள்
கட்சியை ஆரம்பித்து மேற்கொண்ட புரட்சி புதுடில்லி வரை வந்த காரணத்தால்
இந்தியக் கல்வி அமைச்சர் வேலையை விட்டு சென்றுள்ளதை போல், நமது நாட்டு
விவசாயிகளை 'கசிப்புக்காரன்' என அழைக்கும், செயற்கை விவசாயிகள் என அவமதிக்கும்
இந்த அரசாங்கத்தின் முடிவை இந்த விவசாய சமூகமே ஒருநாள் தீர்மானிக்கும்.
</p><p>
இன்று நெற்களஞ்சியங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியால்
நிறைந்துபோயுள்ளன. நிலையான விலையைப் பேணிப் பாதுகாப்பதற்கு நுண், சிறிய
மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டும். இன்று அவர்கள்
கடன் செலுத்தாதோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தச் சிறிய
அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.</p><p>
உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறிய இந்த அரசு வெளிநாடுகளிலிருந்து
அரிசியை இறக்குமதி செய்து இங்குள்ள களஞ்சியங்களை நிரப்பியுள்ளது.

பெலவத்த கட்சி அலுவலகமே இன்று அரசின் சகல பதவிகளையும் தீர்மானித்து
வருகின்றது. இன்று விவசாய அமைச்சரால் விவசாயிகளைச் சந்திக்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்பம் முதலே விவசாய சங்கங்கள், இளைஞர் கழகங்கள்,
சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான உறுப்புரிமைகள் மற்றும் பதவிகள் என
சகலதையும் பெலவத்த கட்சி அலுவலகத்திலிருந்தே தீர்மானித்து வந்தனர்.</p><p></p><h2>நியாயமான விலையில் மூலதனம்</h2><p>
</p><p>எல்லாவற்றையும் பெலவத்த அரசியலுக்கு உட்படுத்தவே இந்த அரசாங்கம் முற்பட்டு
வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் விவசாயிகளை நவீன தொழில்நுட்பத்தால்
வலுப்படுத்தி, சிறிய பரப்பளவிலான காணியிலிருந்து அதிக அறுவடையைப் பெறத்
தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், நியாயமான விலையில் மூலதனத்தையும்
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.
</p><p>
அன்று ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் விவசாயக் கடன் வழங்கப்பட்ட போதிலும்,
இப்போது அந்தக்கடன் வசதிகள் வழங்கப்படுவதில்லை. கிராமத்திலுள்ள வட்டி
வியாபாரிகளே இன்று விவசாயக் கடன்களை வழங்கி வருகின்றனர். ஆகவே, சொந்த காலில்
நின்று விவசாயத்தை மேற்கொள்ள மூலதனத்தையும் நிதிசார் பக்கபலத்தையும்
பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றும் கூட விவசாயிக்காக ஐக்கிய மக்கள் சக்தியே தொடர்ச்சியாகக் குரல்
கொடுத்து வருகின்றது.
</p><p>
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்காகவும், விவசாயிகளின் உரிமைகள்
மற்றும் நிலையான விலைக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது.
அதனால்தான் இன்றும் மக்கள் தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடம்
முன்வைத்து வருகின்றனர். அதிகாரம் இல்லாவிட்டாலும் இன்றும் எதிர்க்கட்சியில்
இருந்துகொண்டு மக்களுக்குச் சேவை செய்வது ஐக்கிய மக்கள் சக்தியே என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-26T13:01:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விவகாரத்தில் மௌனம் ஏன்..! தட்டிக் கேட்காத அரசியல் தலைவர்களை தரகரென விமர்சித்த கருணாநிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-over-the-chemmani-burial-ground-1785070639"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-over-the-chemmani-burial-ground-1785070639</id>
            <summary type="text">செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மோசமான கருத்துகளுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுப்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மோசமான கருத்துகளுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

செம்மணி மனிதப் புதைக்குழி விவகாரத்தில் தற்போது அதிகாரத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அமைதியாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அதிகாரத்தைப் பெற்ற பின்னரும், சிங்கள அரசியல் தலைமையின் பிடியிலிருந்து விடுபடாமல், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே சில தமிழ் தலைவர்கள் கூட்டணி அமைத்து செயற்பட்டு வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JvYOkpTQT1w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இவ்வாறு செயற்படுபவர்கள் உண்மையான அரசியல்வாதிகள் அல்ல, மாறாக “அரசியல் தரகர்கள்” என்றே கூற வேண்டும்.
</p><p>
செம்மணி விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான அல்லது மோசமான கருத்துகளை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தும் அதிகாரம் அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது.

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டு, இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:59:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் கறுப்பு ஜூலை போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-black-outside-in-london-1785069229"></link>
            <id>https://tamilwin.com/article/protest-black-outside-in-london-1785069229</id>
            <summary type="text">கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. 

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.</p><p> 

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜூலை போராட்டம்</h2><p>
</p><p>
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, (MSDTE) சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் ( TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிக ரகத்திற்கு முன்பாக (13 Hyde Park Gardens, Tyburnia, London W2 2LU) இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ba9ae69-cd2b-4fd0-ae29-2f3301595581/26-6a6601b0319cf.webp' /></p><p>

1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ,இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.</p><p>

இந்தப் போராட்டத்தில் கருப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழத் தமிழ் மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமையுடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:53:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூப்பர் எல் நினோவால் 20 பில்லியன் டொலரை இழக்கும் ஆபிரிக்கா - அபிவிருத்தி வங்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/loss-due-to-super-el-nino-african-development-bank-1785065551"></link>
            <id>https://tamilwin.com/article/loss-due-to-super-el-nino-african-development-bank-1785065551</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால்
உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க நாடுகள்
சுமார் 10 பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால்
உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க நாடுகள்
சுமார் 10 பில்லியன் முதல் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச்
சந்திக்க நேரிடும் என ஆபிரிக்க அபிவிருத்தி வங்கியின் காலநிலை மாற்றப்
பிரிவு இயக்குநர் ஆண்டனி நியோங் எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த தீவிர வானிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 1% முதல் 2% வரை குறையக்கூடும் என ஆபிரிக்க
அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>
</p><p>
வரவிருக்கும் காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ள ஆபிரிக்காவுக்கு இந்த ஆண்டு
காலநிலை தழுவல் நிதியாக சுமார் 100 பில்லியன் டொலர் தேவைப்படும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>மக்கள் இடம்பெயரும் சூழல் உருவாகலாம்</h2><p>
</p><p>
வறட்சி மற்றும் கடல் வெப்பநிலை உயர்வால் விவசாயிகளுக்கு சுமார் 330 மில்லியன்
டொலர் வருமான இழப்பும், மீன்பிடித் துறையில் 1% முதல் 4% வரை உற்பத்திக்
குறைவும் ஏற்படும் என ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9769e3-a123-413c-b636-cb628589395f/26-6a65fde8136ea.webp' /></p><p>
</p><p>
உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக சூடான், தெற்கு சூடான், கொங்கோ,
சோமாலியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயரும்
சூழல் உருவாகலாம்.
</p><p>
ஆபிரிக்க நாடுகளின் முக்கிய உணவான சோளத்தின் விலை இருமடங்காக உயரக்கூடும் என
அஞ்சப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிந்துல பகுதியில் இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு: 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iron-bridge-collapses-in-lindula-area-traffic-1785068008"></link>
            <id>https://tamilwin.com/article/iron-bridge-collapses-in-lindula-area-traffic-1785068008</id>
            <summary type="text">லிந்துலை - மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின் போக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிந்துலை - மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இதுவரை போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>

800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு</h2><p>
போக்குவரத்து தேவைகளுக்காக இதுவரை தற்காலிகப் பாலம் கூட அமைக்கப்படாததால், அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bbefe6-c546-421e-a324-b9a340c78b49/26-6a65faa839c82.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, லிந்துலை - ஹென்போல்ட் தோட்டத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மிளகுசேனை, ஊட்டுவெளி, சென்ட்ரல் கிளாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சிறியளவில் மழை பெய்தாலே ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதனால், அவர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றுவழிப் பாதையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

மேலும், மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கிராம மக்கள் முழுமையாக வெளியேற முடியாத அபாய நிலை உருவாகும் என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.</p><h2>

அரச அதிகாரிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை</h2><p>
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அன்றாடப் போக்குவரத்து, பாடசாலைச் செல்லுதல் மற்றும் அவசர மருத்துவ சேவைகளைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ac5505-fb57-44a1-b1bc-62c786f30c64/26-6a65faa907573.webp' /></p><p> </p><p>குறிப்பாக, மாணவர்கள் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பாதணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து, மறுபுறம் கால்களை சுத்தம் செய்து மீண்டும் பாதணிகளை அணிந்து பாடசாலைக்குச் செல்லும் அவல நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் இப்பகுதியை பார்வையிட்டுச் சென்றிருந்த போதிலும், பாலத்தை சீரமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
எனவே, இப்பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு, உடனடியாக தற்காலிகப் பாலம் ஒன்றை அமைப்பதற்கும், நிரந்தரத் தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab71cc53-0486-4fb3-bab9-924e757f91a0/26-6a65faa9c3ea2.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி எண்ணெய் ஆலைகளை இலக்கு வைத்த ஹூதிகள்: விரிவடையும் அமெரிக்க-ஈரான் போர் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/houthis-attack-saudi-oil-facilities-us-iran-war-1785065340"></link>
            <id>https://tamilwin.com/article/houthis-attack-saudi-oil-facilities-us-iran-war-1785065340</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போரின்
எதிரொலியாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஏமனில் செயல்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போரின்
எதிரொலியாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர், சவூதி அரேபியாவின்
செங்கடல் பகுதியில் உள்ள இரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு
வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;வான்வழித் தாக்குதல்கள்</h2><p>
</p><p>
சவூதியின் ஜிஷான் மற்றும் யான்பு நகரங்களில் உள்ள 'அராம்கோ' நிறுவனத்தின்
ஆலைகள் மீது இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஹூதி இராணுவத் செய்தி
தொடர்பாளர் யஹ்யா சாரீ அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32e5a639-66b1-4148-bc80-ca7d7c05603e/26-6a65f572cc89b.webp' /></p><p>
</p><p>
அதேவேளையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணைபகுதியில் ஏற்பட்ட மோதல்களைத்
தொடர்ந்து அமெரிக்கா நடத்தி வந்த தொடர் வான்வழித் தாக்குதல்கள் கடந்த இரண்டு
நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதுவர்கள் மூலமாகப் பேச்சுவார்த்தைகள்
மறைமுகமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி&nbsp;</h2><p>

இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே நிலவும் கடுமையான கருத்து வேறுபாடுகள்
காரணமாக இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த மோதல்கள் தற்போது பிற பிராந்தியங்களுக்கும் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae60483c-d8a9-4914-8eca-0f287154e11b/26-6a65f5737b979.webp' /></p><p> </p><p>கஸ்பியன்
கடலில் உள்ள ஈரான் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் மாலுமி ஒருவர்
உயிரிழந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
இதனிடையே, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தேப்
நீரிணையை ஹூதிகள் முடக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மந்தேப் ஆகிய இரு முக்கியப் பாதைகளும்
முடக்கப்பட்டால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுப் கடுமையான
பொருளாதார நெருக்கடி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-26T11:54:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் தீவிரமாக பரவும் காட்டுத் தீ! சாலைப் பயணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-spreading-rapidly-in-france-1785063362"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-spreading-rapidly-in-france-1785063362</id>
            <summary type="text">பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில், குறிப்பாக ஜிரோன்ட் பிராந்தியத்தில்
தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசரகால மீட்புக்
குழுவினரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில், குறிப்பாக ஜிரோன்ட் பிராந்தியத்தில்
தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசரகால மீட்புக்
குழுவினரும் பாதுகாப்புப் படையினரும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
இதன் காரணமாக, உலகப் புகழ்பெற்ற 'டூர் டி பிரான்ஸ்' சைக்கிள் பந்தயத்தின்
இறுதிச் சுற்றுப் பாதை சுருக்கப்பட்டு, புதிய வழித்தடத்தில் நடத்தப்படுவதாக
அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.</p><p></p><h2>காட்டுத் தீ பரவல்</h2><p>
</p><p>
பாரீஸ் நகரில் நடைபெறவிருந்த இறுதி கட்டப் பந்தயம் திட்டமிடப்பட்ட 133
கிலோமீட்டரிலிருந்து 89 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>

முன்னதாக 'தோய்ரி' என்ற இடத்திலிருந்து தொடங்கவிருந்த இந்தப் போட்டி, தற்போது
நேரடியாக சாம்ப்ஸ்-எலிசீஸ் பகுதியிலிருந்தே தொடங்குகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a013eafc-6710-47db-8872-7368918c3f9e/26-6a65eaa7a312d.webp' /></p><p>பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவலர்கள் காட்டுத்தீ மீட்புப்
பணிகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதால், போட்டிக்கான பாதுகாப்பு
ஏற்பாடுகளின் சுமையைக் குறைக்கும் வகையில் பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் இந்த
முடிவை எடுத்துள்ளது.
</p><p>
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் இந்தக்
கடுமையான காட்டுத்தீ காரணமாக இதுவரை 2,67,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள்
வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சாலைப் பயணங்களுக்கு எச்சரிக்கை</h2><p>
</p><p>
போர்டோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான தொடருந்து மற்றும் சாலைப் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரெஞ்சு அரசு பொதுமக்களுக்கு
எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60fd9db6-c824-46cd-b824-0610d6f7bb6c/26-6a65eaa6f1125.webp' /></p><p>பாதை சுருக்கப்பட்ட போதிலும், புகழ்பெற்ற சாம்ப்ஸ்-எலிசீஸ் சுற்றுகள் மற்றும்
மான்ட்மார்ட்ரே மலைப் பகுதி வழியிலான பந்தயப் பாதையில் சவாரி தொடர்ந்து
நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்த ஆண்டின் டூர் டி பிரான்ஸ் போட்டியில் ஸ்லோவேனியாவின் நட்சத்திர
வீராங்கனை தாடே பொகாச்சர் ஆதிக்கம் செலுத்தி, தனது 5ஆவது சம்பியன் பட்டத்தைக்
கைப்பற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T11:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்! மார்தட்டிக்கொள்ளும் எரங்க குணசேகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eranga-gunasekara-statement-1785061249"></link>
            <id>https://tamilwin.com/article/eranga-gunasekara-statement-1785061249</id>
            <summary type="text">இலங்கை வரலாற்றில் முதன்முறையாகச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள்
என அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களையும் ஒன்றிணைத்து ஒரு இலங்கை
அரசாங்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வரலாற்றில் முதன்முறையாகச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள்
என அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களையும் ஒன்றிணைத்து ஒரு இலங்கை
அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என&nbsp;நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதனைச் சாதிக்க முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
ரணிலின் தலையும், சஜித்தின் உடலும், நாமலின் வாலும் சேர்ந்து ஒரு புதிய
விசித்திரப் பிராணியை உருவாக்க முயல்கிறார்கள். இதனால் மக்களுக்கு எந்தப்
பயனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (26.07.2026) 2026ஆம் ஆண்டின்
சகோதரத்துவ நாளை முன்னிட்டு "இதயங்களின் பிணைப்பு, ஒன்றிணைந்த பயணம்" எனும்
கருப்பொருளிலான நிகழ்வு தொடர்பில் அறிவுறுத்தும் ஊடகவியலாளர்
சந்திப்பு நடைபெற்றது.
</p><p>இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>ஒன்றிணைந்து வாழும் தேசம்</h2><p> </p><p>மேலும் கூறுகையில், நமது நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள், மலாய்க்காரர்கள் என
அனைவரும் ஒன்றாக இணைந்து வாழும் ஒரு தேசமாகும். ஆனால், கடந்த பல தசாப்தங்களாக
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக
முன்னேறுவதற்கு தடையாகச் சில காரணிகள் இருந்தன.</p><p>
சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ஆட்சியில் இருந்த சிங்கள, தமிழ், முஸ்லிம்
தலைவர்கள் அனைவரும் மக்களைப் பிரித்து வைத்தே ஆட்சி செய்தனர். சிங்கள மக்களின்
பிரச்சினைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள்
என தனித்தனியாகக் கையாண்டு, நம்மை ஒன்றிணைப்பதற்குப் பதிலாகப் பிரித்து
ஆண்டனர். இதன் இறுதி விளைவாகவே நாடு பொருளாதார ரீதியாகப் பேரழிவைச் சந்தித்தது.
</p><p>ஆனால், இலங்கை வரலாற்றில் முதன்முறையாகச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள்,
பர்கர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களையும் ஒன்றிணைத்து ஒரு இலங்கை
அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதனைச் சாதிக்க முடிந்துள்ளது.</p><p>
கடந்த ஒன்றரை ஆண்டுகளில், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இனவாதப்
பிரச்சினைகள் ஏதுமின்றி அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படும் ஒரு காலம்
உருவாகியுள்ளது என்பதை மிகவும் பணிவுடனும் மகிழ்ச்சியுடனும் அறியத்தருகிறேன்.
சகோதரத்துவ நாள் என்பது என்ன? 1983 கருப்பு ஜூலை நிகழ்ந்து இன்றுடன் 43
ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்தப் பழைய கசப்பான நிகழ்வுகளையும் வேதனைகளையும்
மீண்டும் தோண்டித் துருவுவதற்காக நாம் இங்கு வரவில்லை.</p><p></p><p> </p><p>மாறாக, ஒரு தேசமாக நாம்
அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, மீண்டும் அத்தகையதொரு நிலைமை ஏற்படாமல்
தடுப்பதற்கே 2008ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சகோதரத்துவ நாளை நாம் நினைவு
கூர்ந்து வருகிறோம்.
கருப்பு ஜூலைக்குப் பிறகு ஏற்பட்ட அந்த கறைபடிந்த வரலாற்றுக்கு மாற்றாக,
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்த சகோதரத்துவ நாளாக மாற்ற வேண்டும் என்பதே எமது
இலக்காகும்.
83 கருப்பு ஜூலை என்பது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல.</p><p> அது அரசியல் ரீதியாகத்
திட்டமிடப்பட்ட ஒரு சதி. உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அரசியல் லாபத்திற்காகத்
திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூர நிகழ்வே ஆகும்.
1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். 1981 இல் மாவட்ட
வளர்ச்சிச் சபை தேர்தல் நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஐந்தில் நான்கு
பெரும்பான்மை பெற்றும் யாழ்ப்பாண மக்களின் மனங்களை ஜே.ஆரினால் வெல்ல முடியாமல்
போனது.</p><h2>தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள்</h2><p> </p><p>அதனாலேயே, 81 தேர்தலில் வரலாற்றிலேயே முதன்முறையாக அரச அனுசரணையுடன்
தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. யாழ்ப்பாணப் பொது
நூலகம் எரியூட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே 1983 ஜூலை 23 அன்று 13 இராணுவ வீரர்கள் படுகொலை
செய்யப்பட்டனர். அந்தப் படுகொலையைச் சிங்கள இனவாதத்தைத் தூண்டுவதற்காக ஜே.ஆர்.
அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது. கொழும்பு பொரளைக்கு உடல்களைக் கொண்டுவந்து
கலவரத்தை உருவாக்கத் திட்டமிட்டனர்.
</p><p>அதன் விளைவாகக் கொழும்பு மற்றும் நாடு முழுவதும் வன்முறை பரவியது. வாக்காளர்
பட்டியலைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள்
அடையாளங் காணப்பட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில்
அடைக்கப்பட்டிருந்த 43 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாகச் நாட்டில் 30 ஆண்டுகாலப் போர் உருவானது. அந்தப் போரின்
முடிவில் நமக்கு எஞ்சியது உடைந்த கட்டடங்களும், பெற்றோரையும் கணவர்களையும்
இழந்த அனாதைகளுமே ஆகும்.</p><p> அரசியல்வாதிகள் மட்டுமே அதில் லாபமடைந்தனர்.
30 ஆண்டுகாலப் போருக்குப் பிறகும் ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
சிங்கள - தமிழ் மோதலுக்குப் பிறகு, சிங்கள - முஸ்லிம் மோதலை உருவாக்க முயன்றனர்.
கடந்த 15 ஆண்டுகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பல நெருக்கடிகள்
அளிக்கப்பட்டன.
ஆனால் இன்று, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சகோதரத்துவமிக்க இலங்கையைக்
கட்டியெழுப்ப உறுதிபூண்டுள்ளோம்.
எமது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், இளைஞர்கள், விவசாயிகள்,
பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறோம்.</p><p></p><p> </p><p>மட்டக்களப்பு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்
வளர்ச்சிக்காகச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
கடந்த காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பல காணிகளை விடுவித்து,
விவசாயத்திற்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வழங்கி வருகிறோம்.
நாம் ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மற்றும் முஸ்லிம்
மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். எமது ஆட்சியில்
சிறுபான்மையினருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட இடமளிக்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாகச் சட்டப்பூர்வ விசாரணைகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளன.</p><p> உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும் நடுநிலையான
விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன.
தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன. வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக அதிக அளவிலான நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை எண்ணிப் பயந்தே
அவர்கள் ஒன்றிணையப் பார்க்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T11:25:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவப் பயிற்சியை இரத்து செய்த பிரித்தானியா - கென்யா உடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/britain-cancels-military-training-in-kenya-1785064918"></link>
            <id>https://tamilwin.com/article/britain-cancels-military-training-in-kenya-1785064918</id>
            <summary type="text">கென்யாவில் நடைபெறவிருந்த கூட்டு இராணுவப் பயிற்சியைப் பிரித்தானியா இரத்து
செய்த நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவில் நடைபெறவிருந்த கூட்டு இராணுவப் பயிற்சியைப் பிரித்தானியா இரத்து
செய்த நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும்
பாதுகாப்பு உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

இதற்கமைய, 2026 செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயிற்சிக்குத் தேவையான
உரிய ஒப்புதல்கள் மற்றும் உரிமங்கள் கிடைக்காததால், பயிற்சிப் பயணம் இரத்து
செய்யப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ்,
கென்யாவில் தங்கியிருக்கும் பிரித்தானியப் படைகளின் சட்ட வரம்பு, குற்றவியல்
நடவடிக்கைகள் மீதான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நிபந்தனைகளில்
எழுந்த கருத்து வேறுபாடே இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணமாகும்.</p><h2>

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தல்</h2><p>
கென்யாவில் உள்ள “பாதுகாப்புப் படைப் பயிற்சி அலகு” மூலம் கூட்டுப் பயிற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அங்குள்ள பிரித்தானிய வீரர்களால் மனித உரிமை
மீறல்கள் அல்லது குற்றச் செயல்கள் கோரப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கும் அதிகாரம் கென்ய சட்ட அமைப்பிற்கு வழங்கப்பட வேண்டும் என அந்நாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bcd71a2-0db1-41db-8a83-a523e9b86370/26-6a65ee2ed107a.webp' /></p><p>

கென்யாவின் இந்தக் கவலைகளுக்குப் பிரித்தானியா தனது வருத்தத்தைப் பதிவு
செய்துள்ள போதிலும், தங்களது கூட்டாண்மை இரு நாடுகளின் பரஸ்பர பாதுகாப்பு
நலன்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது.</p><p>

இருப்பினும், இந்தப் பயிற்சி இரத்து செய்யப்பட்டமை உடனடியாக இரு நாடுகளுக்கு
இடையேயான இராணுவ உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றாலும், எதிர்காலப்
பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் வெளிநாட்டுப் படைகளின் செயல்பாடுகள் மீதான
கென்யாவின் கண்காணிப்பு மேலும் தீவிரமடையும் என்பதையே உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் சீனப் பகுதிகளை தாக்கிய சூறாவளி: 9 பேர் உயிரிழப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-hits-southern-china-1785064198"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-hits-southern-china-1785064198</id>
            <summary type="text">தென் சீனப் பகுதிகள் மற்றும் ஹொங்கொங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் நௌல் சூறாவளிவால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சீனப் பகுதிகள் மற்றும் ஹொங்கொங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் நௌல் சூறாவளிவால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்புகளை சீன தேசிய வானிலை மையம் வழங்கி வருவதுடன், இன்று(26.07.2026) அதிகாலை 3:50 மணியளவில் குவாங்டாங்- ஹுய்ஷோ பகுதியில் இந்த சூறாவளி கரையை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

சீனாவின் கரையைக் கடந்த மிக வலுவான சூறாவளி இது என்றும், அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமொன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றை வீசிய இந்தச் சூறாவளி,
உள்நோக்கி நகர்ந்து படிப்படியாக வலிமை இழந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. </p><h2>

9 பேர் உயிரிழப்பு</h2><p>
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டாங் மாகாணத்தில் மட்டும்
7,15,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e0b2d6-9c80-4ba2-acb3-cfdc990efb27/26-6a65eb56e32d8.webp' /></p><p>
</p><p>
மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு, ஹொங்கொங்கில் பலத்த காற்றினால் கட்டிடப்
பலகைகள் சரிந்து விழுந்தன.

இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக ஹொங்கொங் விமான நிலையத்தில் சுமார் 350
விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
</p><p>
 மேலும், ஹொங்கொங்கில் குறைந்தது 9 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியின் தாக்கம் தாய்வானின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் பலத்த
மழையை பொழிந்துவிட்டுத் தற்போது தாய்வான் கடற்பகுதியை விட்டு விலகிச்
சென்றுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து புறப்பட்ட பேருந்து விபத்து - சாரதி உட்பட இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-injured-in-bus-accident-1785061937"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-injured-in-bus-accident-1785061937</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, இன்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>
குறித்த விபத்தானது, இன்றைய தினம்(26.07.2026) நேர்ந்துள்ளது.</p><p></p><h2>பேருந்து விபத்து</h2><p>
</p><p>விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட இருவர் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c527995-bb85-4125-b913-25bb8c566e83/26-6a65e4b1373c0.webp' /></p><p>

சாரதியின் நித்திரை கலக்கமே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T11:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆம் நாள் அமர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18th-convocation-southeastern-university-1785059244"></link>
            <id>https://tamilwin.com/article/18th-convocation-southeastern-university-1785059244</id>
            <summary type="text">இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொது பட்டமளிப்பு விழாவின்
2ஆவது நாள் அமர்வு இன்று(26.07.2026) ஒலுவில் வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொது பட்டமளிப்பு விழாவின்
2ஆவது நாள் அமர்வு இன்று(26.07.2026) ஒலுவில் வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>
இந்தப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று(25.07.2026) ஒலுவிலில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான
கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியுள்ளது.</p><p></p><h2>18ஆவது பொது பட்டமளிப்பு விழா</h2><p> </p><p>

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும்
இந்தப் பட்டமளிப்பு விழா நாளைய தினம்(27.07.2026) நிறைவடையவுள்ளது.
</p><p>ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் மற்றும்
வெளிவாரி மாணவர்கள் உட்பட மொத்தமாக 3,398 பட்டதாரிகளுக்குப்
பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2258c38d-305d-42f1-9836-f63130d102cf/26-6a65dc7a7618b.webp' /></p><p>இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 18ஆவது பட்டமளிப்பு விழா, தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில்,
வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் நடைபெறுகின்றது.</p><p>
விழாவின் நிர்வாக ஒருங்கிணைப்புப் பணிகளை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர்
மேற்கொண்டு வருகிறார்.
</p><p>இதனைத் தொடர்ந்து, முதலாம் நாள் அமர்வில் பொறியியல் மற்றும்
தொழிநுட்பவியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>அமர்வுகள் தொடர்பான விபரம்</h2><p>இதன்படி, </p><p>1ஆம் அமர்வு: பொறியியல் பீடம் (2018/2019 மற்றும் 2019/2020 கல்வியாண்டுகள்)
மற்றும் தொழில்நுட்பப் பீடம்.</p><p>
2ஆம், 3ஆம் அமர்வுகள்: இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின்
இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகள்.
</p><p>
4ஆம் அமர்வு: பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டு கல்வியாண்டுகளைச் சேர்ந்த
பட்டதாரிகள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca1f368-0092-45bb-9ef4-ac019e9b2ae8/26-6a65dc7b6e18e.webp' /></p><p>
</p><p>
5ஆம், 6ஆம் அமர்வுகள்: கலை மற்றும் கலாசார பீட மாணவர்கள்.
</p><p>
இறுதி நாள்: 7ஆம், 8ஆம் அமர்வுகள்: முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் பட்டதாரிகள்.
</p><p>
9ஆம் அமர்வு: கலை மற்றும் கலாசாரப் பீடம், முகாமைத்துவ மற்றும் வர்த்தகப்
பீடம் ஆகியவற்றின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T10:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருக்கும் பசில் ராஜபக்சவிற்கு சிக்கல்! அதிரடியாக களமிறக்கப்படவுள்ள சர்வதேச பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-arrest-warrant-issue-ali-sabri-1785061065"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-arrest-warrant-issue-ali-sabri-1785061065</id>
            <summary type="text">அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி நாட்டிற்கு திரும்பிக்கொண்டுவர முடியும் என்று முன்னாள் நீதி அமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி நாட்டிற்கு திரும்பிக்கொண்டுவர முடியும் என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
</p><p>
மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை</h2><p>

தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்காவில் உள்ள நிலையில், அவரை நாட்டிற்கு திரும்ப கொண்டுவருவதற்காக அரசாங்கம் சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64ce3a1a-f61a-4927-81f4-585fb816b7f0/26-6a65e36555afd.webp' />&nbsp;</p><p>

மேலும், பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவருவது சாத்தியமே என்றும், ஆனால் அது எளிதான காரியம் அல்ல என்றும் கூறியுள்ளார். </p><p>

இதேவேளை, அமெரிக்க நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்து, இன்டர்போலின் முழு ஆதரவுடன் பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அவரை இங்கு கொண்டுவருவதற்காக இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T10:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்லன்வில துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான பின்னணி! சிக்கிய இரகசிய குரல் பதிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-1785032477"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-1785032477</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவர் என அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய இணைப்பு</span></h2><p>கொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களும் நவகமுவ பொது மயானத்திற்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிப்பு</h2><p>

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், கைபேசிகளை பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70d15d4-6795-412e-9f1f-d991f47d49c2/26-6a65dc30730c3.webp' />&nbsp;</p><p>
</p><p>
இந்த துப்பாக்கிச்சூட்டில் உணவகத்தின் உரிமையாளரான மல்லவ ஆரச்சிகே நெல்சன் சுதத் அமரசிங்க எனப்படும் 55 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்த உணவக உரிமையாளர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் என தெரியவந்துள்ளது.</p><p>

அதற்கமைய, கொஸ் மல்லியின் எதிரியான'சண்டோ' அல்லது 'அசங்க' என்பவர்களே இத்துப்பாக்கிச்சூட்டை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற நிலையில், ஏனைய பகுதி பொலிஸ் சோதனை சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, சந்தேகநபர்களை பின்தொடர்ந்த பொலிஸார் நவகமுவ, நிஸ்சரண சித்பிம பொது மயானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, முகமூடிகள் மற்றும் கையுறைகளைக் கழற்றிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்பட தயாரான போது கைது செய்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், கைபேசிகளை பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></h2><p><span style="font-size: 14px;">கொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</span></p><p>மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உணவகமொன்றின் முன்னால் நின்றிருந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">திட்டமிட்ட கும்பல் மோதல்&nbsp;</span></p><p>துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 55 வயதுடைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f427b786-8cb4-46bd-9732-357602b8eaca/26-6a6573a616a49.webp' />&nbsp;&nbsp;</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட கும்பல் மோதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனவும் அவரது எதிர்த்தரப்பினரால் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>இரண்டு சந்தேகநபர்களும் கைது&nbsp;</h2><p>கடந்த சில காலமாக கொஸ் மல்லி எனப்படும் பிரிவினருடன் மோதலில் ஈடுபட்டுள்ள படோவிட்ட அசங்க மற்றும் சண்டோ பிரிவினரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a576dabb-424f-46d0-a58c-304d03f60d6e/26-6a6573a6bae40.webp' /></p><p>இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், நவகமுவவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளை கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது.</p><p>சம்பவத்தையடுத்து பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல விசாரணைப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில்,இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T10:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்..! ரவிகரன் எம்பி ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/release-tamil-political-prisoners-in-prison-1785057846"></link>
            <id>https://tamilwin.com/article/release-tamil-political-prisoners-in-prison-1785057846</id>
            <summary type="text">சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு
கேட்பது எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு
கேட்பது என தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.</p><p>
நேற்று சனிக்கிழமை(25) தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிகள்
படுகொலை பொது நாள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;தமிழ் அரசியல் கைதிகள்&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் மார்கழி மாதம் ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க இலங்கையர் தினம் கொண்டாடுவதற்காக தமிழரசு கட்சியை சேர்ந்த நான்கு
பேரை கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகம் அழைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04313062-270a-4814-90b5-2f4ea76818d3/26-6a65d42800d33.webp' /></p><p>
</p><p>
குறித்த கலந்துரையாடல் வேறாக இருந்தாலும் ஜனாதிபதியை சந்தித்தபோது இரு கரம்
கூப்பி கேட்டோம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள் அதிலும் இலங்கையர்
தினத்தில் விடுதலை செய்தால் சந்தோசமடைவோம் எனவும் கூறினோம் ஆனால் நடக்கவில்லை.
</p><p>
வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேசி இருக்கிறோம்.</p><p></p><p>
</p><h2>ஜனாதிபதியிடம் கோரிக்கை</h2><p>
அது மட்டுமல்லாது ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தவறாது தமிழ்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி
இருக்கிறோம் ஆனால் நிறைவேறாத ஆசையாக இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e4e7bd8-6afe-464a-8e67-875f783804d3/26-6a65d428c4b90.webp' /></p><p>

தற்போது சிறையில் 10தமிழ் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள் அவர்களின் விபரம்
அடங்கிய கோவையை குரலற்றவர்களின் குரல் அமைப்பு என்னிடமும் தந்துள்ளார்கள்
என்னால் முயன்றவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியுடன் பேசி
இருக்கிறேன்.
</p><p>
அகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இரு கரம்
கூப்பி விடுவியுங்கள் என கேட்டு விட்டேன் வேறு எவ்வாறு கேட்பது என எனக்கு
தெரியவில்லை என அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் வாங்கும் சமாதான நீதவான்கள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-alleges-jps-have-become-money-hungry-1785051358"></link>
            <id>https://tamilwin.com/article/public-alleges-jps-have-become-money-hungry-1785051358</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான நகரில் உள்ள சமாதான நீதவான்கள் சிலர் சத்தியக் கடதாசி மற்றும்
ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் இலஞ்சம் வாங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான நகரில் உள்ள சமாதான நீதவான்கள் சிலர் சத்தியக் கடதாசி மற்றும்
ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் இலஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>

மக்களுக்கு சேவையாற்றும் நோக்குடன் சமூகத்திலுள்ள கௌரவமான பிரஜைகளுக்கு
வழங்கப்பட வேண்டிய சமாதான நீதவான் பதவிகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டு
வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நுவரெலியா சமாதான நீதவான்கள்</h2><p>
</p><p>
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், </p><p>

பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் பிரமாணப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்
உட்பட பிற சான்றிதழ்களை சான்றளித்தல் மற்றும் அங்கீகரித்தல் ஊடாக
பொது மக்களுக்கு இலவசமான சேவைகளையும் பணிகளையும் வழங்கும் நோக்குடன் நீதி
அமைச்சரால் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
</p><p>
தேசிய நலனுக்காகவும், சமூக மேம்பாட்டிற்கும் பங்காற்ற வேண்டியவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட வேண்டிய இந்த உயர் பதவி இன்று
பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் கட்சி அமைப்பாளர்கள் கையில் இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d386fde3-fb9c-4219-bbc9-cd738c39c43e/26-6a65d11e2f50f.webp' /></p><p>ஆவணங்கள் அத்தாட்சிப்படுத்துவது மாத்திரமின்றி கிராமிய மக்கள் மத்தியில்
சமாதானம் மற்றும் சகவாழ்வு உட்பட அனைத்து பொது நலப்பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் பங்கேற்க வேண்டும் என அனைத்து சமாதான நீதவான்களிடமும் அரசு
எதிர்பார்க்கின்றது.&nbsp;</p><p>இந்த விடயம் நுவரெலியாவில் தலைகீழாக மாறும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பதவியானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பிற்கு முரணின்றியும்,
முற்றிலும் இலவசமாகவும் வழங்கப்பட வேண்டும்.</p><p></p><h2>பண மோசடி</h2><p>

இது தொடர்பில், நீதி அமைச்சின் ஊடாக அனைத்து சமாதான நீதவான்களுக்கும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>அத்துடன் இவர்கள் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெறும் சத்தியப்
பிரமாணத்தின் போதும் உறுதி அளிக்கின்றனர். எனினும், மேற்படி அனைத்து சட்டதிட்டங்கள் மற்றும் உறுதிமொழிகள் அனைத்தையும்
மீறும் வகையில் சமாதான நீதவான்கள் செயற்பட்டு வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab9b0ada-3ce9-48e5-8447-ef8db9ffe0ef/26-6a65d040e33b6.webp' /></p><p>குறிப்பாக, தோட்டபுறங்களில் அல்லது தூர இடங்களிலிருந்து வரும் மக்களின்
பிரச்சினைகளையும் மன நிலைகளையும் நன்கு அறிந்து வைத்துள்ள சமாதான நீதவான்கள்
விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்தும், ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தியும்,
கையொப்பங்களை இட்டும் ஆயிரக்கணக்கான ரூபாக்களை மக்களிடம் சுரண்டும் மோசடியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
எனவே இவ்வாறு நுவரெலியா பிரதான நகரில்
செயற்படும் சமாதான நீதவான்களுக்கு நீதி அமைச்சு சட்ட நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! மூவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-pudukudiyirupu-youth-killed-three-injured-1785048078"></link>
            <id>https://tamilwin.com/article/accident-pudukudiyirupu-youth-killed-three-injured-1785048078</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;இந்த சம்பவம் நேற்றைய தினம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் நேற்றைய தினம்(25.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மோட்டார் சைக்கிள் விபத்து</h2><p>அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ad9adb-1d04-4e11-b31f-ccb9b63b46bb/26-6a65b08768f99.webp' /></p><p>எனினும், அவர்களில் பிரவீன் எனும் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>மற்ற மூவர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
இந்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மகளிர் அணி சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mullaitivu-women-win-northern-judo-title-1785046437"></link>
            <id>https://tamilwin.com/article/mullaitivu-women-win-northern-judo-title-1785046437</id>
            <summary type="text">வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனைகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இந்தப் போட்டியானது முல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனைகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.</p><p>இந்தப் போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் வட மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>வெற்றி பெற்ற பெண்கள் அணி</h2><p>போட்டியின் முடிவில், முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி பதக்க எண்ணிக்கையின் அடிப்படையில் முதலிடத்தைப் பெற்று வட மாகாண சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.&nbsp;</p><p>
ஆண்கள் பிரிவில் வவுனியா மாவட்டம் முதலிடத்தையும், முல்லைத்தீவு மாவட்டம்
இரண்டாம் இடத்தையும், மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20b7457-f702-452b-8b79-275022e791fb/26-6a65a979ec89a.webp' /></p><p>முல்லைத்தீவு மாவட்ட அணியில் புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, வள்ளிபுனம்,
கைவேலி, கள்ளப்பாடு, ஒட்டுசுட்டான், தண்ணீரூற்று, முள்ளியவளை, மாங்குளம்,
பாலிநகர், கொல்லவிளான்குளம், அம்பாள்புரம் மற்றும் வினாயகபுரம் உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் இணைந்து மாவட்டத்தை
பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் இந்த வெற்றிக்கு விளையாட்டு
ஆர்வலர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும்
வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக அருள்வரதராஜா பதவியேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/48th-president-rotary-club-trincomalee-takes-oath-1785055339"></link>
            <id>https://tamilwin.com/article/48th-president-rotary-club-trincomalee-takes-oath-1785055339</id>
            <summary type="text">திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக க.அருள்வரதராஜா உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.

இதற்கான நிகழ்வு நேற்றைய தினம் (25.07.2026) திருக்கோணமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக க.அருள்வரதராஜா உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.
</p><p>
இதற்கான நிகழ்வு நேற்றைய தினம் (25.07.2026) திருக்கோணமலையிலுள்ள டைக் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.</p><h2>கலந்து கொண்டவர்கள்</h2><p></p><p> 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் க.குணநாதன் பிரதம அதிதியாகவும், பேராசிரியர் வி.கனகசிங்கம் கௌரவ அதிதியாகவும், லங்கா ஐஓசி நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் நவீன் குமார் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.</p><p> 

மேலும், திருக்கோணமலை, கொழும்பு மற்றும் மன்னார் ரோட்டரி கழகங்களைச் சேர்ந்த ரோட்டேரியன்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ரோட்டராக்டர்கள், இன்டராக்டர்கள், ரோட்டேரியன் துணைவியர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் கழகத்தின் நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு ரோட்டரியின் நட்புறவையும் சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்தினர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசியமாக நடந்த போதைப்பொருள் வர்த்தகம்: தமிழர் பகுதியில் இளைஞர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-arrested-in-ampara-1785054217"></link>
            <id>https://tamilwin.com/article/youth-arrested-in-ampara-1785054217</id>
            <summary type="text">அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்
நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்
நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கைது நடவடிக்கை நேற்று(25.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


சகாக்களையும் கைது செய்ய நடவடிக்கை</h2><p>
அந்த பகுதியின் ஏற்கனவே பிரதான போதைப்பொருள் வர்த்தகராக இருந்த நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த நபர் ரகசியமான முறையில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db88ead-dd61-4206-8300-b0db7f607536/26-6a65c4d9e68b0.webp' /></p><p>
</p><p>
இதன்போது, 2050 மில்லிகிராம் ஹெரோயின்
போதைப்பொருள் ஒரு தொகை ரொக்கப் பணம் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த மேலும் மூவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T08:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு பெண்களை காரால் மோதி தப்பிச்சென்ற பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oic-arrested-for-abducting-two-young-women-1785051922"></link>
            <id>https://tamilwin.com/article/oic-arrested-for-abducting-two-young-women-1785051922</id>
            <summary type="text">இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்கள் மீது காரினை செலுத்தி விபத்துக்குள்ளாக்கி தப்பிச்செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விசேட புலனாய்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்கள் மீது காரினை செலுத்தி விபத்துக்குள்ளாக்கி தப்பிச்செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விசேட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p> </p><p>ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும்&nbsp; விபத்து&nbsp;இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ad9207e-64eb-4e6d-8ceb-7bdc9c6a2622/26-6a65c118684d6.webp' />&nbsp;</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மதுபோதை சோதனையில், சந்தேகநபர் மதுபோதையில் காரை செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T08:11:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/web-editors-makeup-artists-police-offers-383-jobs-1785048273"></link>
            <id>https://tamilwin.com/article/web-editors-makeup-artists-police-offers-383-jobs-1785048273</id>
            <summary type="text">இலங்கை பொலிஸ் துணை சேவையில் நிலவும் 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2026 ஜூலை 10 ஆம் திகதியிடப்பட்ட அரச வர்த்தமானி விசேட அறிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸ் துணை சேவையில் நிலவும் 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
2026 ஜூலை 10 ஆம் திகதியிடப்பட்ட அரச வர்த்தமானி விசேட அறிவித்தல் எண் 2497-ன் படி, 177 துணை பொலிஸ் பரிசோதகர் (Sub-Inspector) பதவிகளுக்கும், 206 பொலிஸ் கான்ஸ்டபிள் (Police Constable) பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>&nbsp;விண்ணப்பங்கள்</h2><p>

</p><p>அதற்கான விண்ணப்பங்கள் 2026 ஒகஸ்ட் 14 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் இணையவழி (Online) முறையில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b22ee3c-7746-4e3c-8956-8ed4408ce525/26-6a65bcd8ca27a.webp' /></p><p>
</p><p>
துணை பொலிஸ் பரிசோதகர் பதவிகளுக்காக இணையத்தள வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, முறைமை பகுப்பாய்வு (Systems Analysis), நிரலாக்கம் (Programming), கணினி வன்பொருள் மற்றும் வலையமைப்பு, கிராபிக் வடிவமைப்பு, அளவையியல் (Quantity Surveying), இயந்திரவியல், உணவு வழங்கல் (Catering) மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், மருந்தாளர், மின்சார வரைதொழில்நுட்ப நிபுணர் (Electrical Draftsman), மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தாதியர் (Nurse) ஆகிய பதவிகளுக்கும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p></p><h2>வேலை வாய்ப்புகள்</h2><p>
</p><p>
அதேவேளை, பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்காக குளிர்சாதன மற்றும் காற்றோட்ட தொழில்நுட்ப நிபுணர், சாரதி, மின்னணு தொழில்நுட்ப நிபுணர், இயந்திர நிபுணர், கணினி இயக்குநர், வெல்டிங் தொழில்நுட்ப நிபுணர், ஒலியமைப்பு இயக்குநர் மற்றும் மேடை ஒளியமைப்பு தொழில்நுட்ப நிபுணர் உள்ளிட்ட பல தொழில்நுட்ப துறைகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca9736e-bbde-42e0-9af7-6607c13def1f/26-6a65bcd97b869.webp' /></p><p>

மேலும், ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் ஒப்பனை கலைஞர் (Makeup Artist) மற்றும் உடற்தகுதி பயிற்றுநர் (Fitness Instructor) பதவிகளுக்கும் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், 2026 ஒகஸ்ட் 14 ஆம் திகதிக்கு முன்னர் இணையவழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:53:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின படுகொலையின் சாட்சியே செம்மணி மனித புதைகுழி: அருட்தந்தை மா. சத்திவேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-community-burial-witness-to-tamils-1785050280"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-community-burial-witness-to-tamils-1785050280</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழி இலங்கையில் இடம்பெற்ற தமிழின படுகொலையின் முக்கிய
சாட்சியாக அமைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வருகை வெறும்
கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழி இலங்கையில் இடம்பெற்ற தமிழின படுகொலையின் முக்கிய
சாட்சியாக அமைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வருகை வெறும்
கண்துடைப்பாகவோ அல்லது அரசியல் நாடகமாகவோ அமையக்கூடாது என மனித நீதிக்கான
செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்
இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவரால் இன்று (26.07.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p></p><h2>தமிழின படுகொலையின் சாட்சி</h2><p>செம்மணி மனித புதைகுழி இலங்கையில் நடந்தேறிய தமிழின படுகொலையின் சாட்சியாகும்.
ஒவ்வொரு நாளும் அங்கு அகழப்படும் போது எம்மவரின் அவல குரல் மட்டுமல்ல நீதிக்கான
குரலும் ஓங்கி ஒலிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1352c7c1-902a-4563-80f7-24c990e1408c/26-6a65b966d6fc9.webp' />&nbsp;</p><p> </p><p>இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின்
வருகை வெறும் கண்துடைப்பானதாகவோ, மேற்குலக நாடுகளின் அரசியல் நாடகத்தின் ஓர்
அங்கமாகவோ, தூது குழுவினரின் சுற்றுலாவாகவோ அமைந்துவிடக்கூடாது.
</p><p>
குழுவினர் கண்ட சாட்சிகள், பெற்றுக்கொண்ட அறிக்கை, மக்களின் நீண்ட கால குரல்
என்பவற்றை ஏற்று இலங்கையில் யுத்த குற்றங்களோடு இனப்படுகொலையும்
நிகழ்ந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதுவே
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கௌரவமாக அமையும்.
</p><p>
இலங்கையில் கடந்த 78 ஆண்டு காலமாக தொடர்ந்த தமிழின அழிப்பு 2009
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையாக உச்சம் தொட்டது என்பதை சர்வதேசம் அறியும்.
ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும், தற்போதை ஆட்சியிலும் இன அழிப்பு
தொடர்கின்றது என்பதுவே உண்மை.</p><p>

தமிழர்கள் முகம் கொடுத்தது மனித உரிமை மீறல்களுக்கு மட்டுமல்ல. இங்கு நன்கு
திட்டமிட்ட இனப்படுகொலையே நிகழ்ந்தது. இது பிராந்திய அரசியலுக்காகவும்,
சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கத்திற்காகவும் அவர்களின் ஆயுத மற்றும் வழிகாட்டல்
பங்களிப்புடனும் அவர்களின் மேற்பார்வையுடனுமே நிகழ்ந்தன என்பது ஐரோப்பிய
ஒன்றியத்திற்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.</p><p>

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாகவே ஐ.நா பொதுச் செயலாளர்
பாங்யூ மூன் இலங்கைக்கு வந்தது மட்டுமல்ல. யுத்தம் தொடர்பான கருத்தாடல்கள்
ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்றைய நாள் வரை தொடர்ந்து நடைபெறுகின்றன.</p><p></p><h2>நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள் </h2><p> மனித உரிமை
பேரவையால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் ஆலோசனைகள் என்பவற்றை இலங்கை
ஆட்சியாளர்கள் திரும்பியும் பார்க்காத நிலை தொடர்கின்றது. இதனால் இலங்கை அரசு
மீதும் ஆட்சியாளர்கள் மீதும் தமிழர்கள் நம்பிக்கை இழந்த நிலையிலேயே ஐரோப்பிய
ஒன்றிய தூத்துக்குழுவினரின் வருகை நிகழ்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f67ba8a3-8742-4f3e-a7d5-e2a7c47d4ef2/26-6a65b96796501.webp' /></p><p> கடந்த வருடம் ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க செம்மணிக்கு வருகை தந்த போதும் அதனால்
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நன்மையும் இதுவரை கிட்டவில்லை என்பதையும்
வெளிப்படுத்துகின்றோம்.</p><p>

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பேரினவாத அரசு முன்னெடுத்த கொடிய யுத்தத்தின்
போது யுத்தக்குற்றங்களோடு திட்டமிட்ட இனப்படுகொலையே நிகழ்ந்தது என்பதற்கு
தமிழர் தாயகத்தில் இதுவரை அகழப்பட்டதும் தற்போது அகழப்பட்டு கொண்டிருக்கின்ற
செம்மணி மனித புதைகுழியும் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பாரிய
இனப்படுகொலையும் போதுமான சாட்சி.</p><p> சர்வதேச தயவோடு இயங்கும் ஐ.நா
மனித உரிமை பேரவை உட்பட அனைத்து அமைப்புகளும் "யுத்தக்குற்றம், இனப்படுகொலை"
எனும் சொற்களை வேண்டுமென்றே தவிர்த்து இலங்கை தொடர்பில் கடந்த 17
வருடங்களாக உரையாடல்கள் நிகழ்வதை நாம் அறிவோம். </p><p>இச்சந்தர்ப்பத்தில் மானிட
கௌரவம் கருதியும் தமிழ் மக்களின் எதிர்பார்க்கும் நீதியை
முன்னிலைப்படுத்தியும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் யுத்த குற்றங்களோடு,
இனப்படுகலையும் நிகழ்ந்தது என்பதை உடனடியாக சர்வதேசத்திற்கு தெரிவித்து இது
தொடர்பில் விசேட கவனம் செலுத்த அழுத்தம் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.</p><p>

சர்வதேச வல்லரசுகளின் அரசியல் நலன் சார்ந்தும், பிராந்திய நாடுகளின் நலன்
காரணமாகவுமே "யுத்த குற்றம்", "இனப்படுகொலை" எனும் சொற்கள் வேண்டும் என்று
தவிர்க்கப்படுவதன் காரணமாக தமிழர்களுக்கான நீதி செயற்பாடுகள் ஐ.நா மனித உரிமை
பேரவைக்குள் மட்டும் முடங்கியுள்ளது.</p><p> ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் அதற்கு
சவால் விடுத்து ஐ.நா மனிதர்கள் பேரவைக்கு வெளியில் தமிழர்களுக்கான நீதி
செயற்பாடுகள் தொடர வழி திறக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களின் குரலுக்கு செவிமடுக்காது வல்லரசுகளின் அரசியல்
தேவையை கருத்தில் கொண்டு இலங்கை அரசினை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினை
தொடர்ந்தால் தமிழர்கள் தமது நீதிக்கான செயற்பாட்டிற்கு மாற்று வழிகளையும்,
மாற்று சக்திகளையும் அணுக வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர் என்பதையும்
கூற விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் ஆறாவது வாரமாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-palali-junction-for-release-lands-1785051166"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-palali-junction-for-release-lands-1785051166</id>
            <summary type="text">வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய
தினம் (26.07.2026) ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 36...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய
தினம் (26.07.2026) ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை
விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.</p><h2>போராட்டக்காரர்கள் அனுபவிக்கும் துன்பநிலை</h2><p>
அதேவேளை கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்தினார்கள் என பலாலி பொது
நோக்கு மண்டபத்தில் காணப்பட்ட வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான குடிநீர்
தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அவ்விடத்தில்
இருந்து எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்திருப்பதனால், இன்றைய தினம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் மற்றும் மலசலகூடங்கள் இன்றி பல்வேறு
இன்னல்களையும் அனுபவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p></p><p>
அத்துடன், தற்காலிக கொட்டகை அமைக்கவும், தரப்பாள் கட்ட இரண்டு தடிகளை நாட்ட
கூட பொலிஸார் அனுமதிக்காததால், கைகளினால் தரப்பாளை பிடித்தவாறு வெயிலின்
கொடுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு முதியவர்கள் உள்ளிட்டவர்களும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:40:14+00:00</updated>
        </entry>
    </feed>
