<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-18T05:34:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுகொலை - பின்னணியில் சிக்கிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-among-5-arrested-over-shooting-1787029856"></link>
            <id>https://tamilwin.com/article/woman-among-5-arrested-over-shooting-1787029856</id>
            <summary type="text">பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரானின் உறவினரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்திற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரானின் உறவினரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த குற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்தக் கைது நடவடிக்கைகள், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தையில் கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்ற சுட்டுக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையவையாகும்.</p><p>
</p><h2><b>
பின்னணியில் சிக்கிய பெண் </b></h2><p> கொழும்பு 15 ஐச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரையும் 23 வயதுடைய யுவதி ஒருவரும் இந்த சம்பவத்திற்கு உதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று கொழும்பு வடக்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d15283d3-327f-4380-ab15-9139671cc559/26-6a83ec72d6039.webp' /></p><p>குறித்த இருவரும் ஐஸ் போதைபொருள் 25 கிராம் 840 மில்லிகிராம் போதைப்பொருளை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

மற்றொரு தனித்தனி நடவடிக்கையில், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மட்டக்குளி, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 28 வயதுடைய மேலும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
</p><p>
மூன்று சந்தேகநபர்களிடமிருந்தும் 12 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T05:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான கெஹெலிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keheliya-corruption-eradication-commission-1787029367"></link>
            <id>https://tamilwin.com/article/keheliya-corruption-eradication-commission-1787029367</id>
            <summary type="text">முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் (18) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.தற்போது இடம்பெற்று வரும் விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் (18) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தற்போது இடம்பெற்று வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p>இதேவேளை, 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியதாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T05:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மற்றுமொரு தரப்பினருக்கு விதிக்கப்படும் வரி - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-collection-from-income-online-1787027769"></link>
            <id>https://tamilwin.com/article/tax-collection-from-income-online-1787027769</id>
            <summary type="text">2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

எவ்வாறாயினும், அந்த வருமானத்திற்கு சாதாரண வருமான வரி வீதங்களான 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களின் கீழ் வரி விதிக்கப்படாது என்றும், 15% வரி மட்டுமே விதிக்கப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய தெரிவித்துள்ளார்.</p><h2>தனிநபர்களுக்கான கட்டாய கடமை</h2><p>

எனவே டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் சேவை ஏற்றுமதியிலிருந்து வருமானம் ஈட்டும் தனிநபர்கள், தங்களின் சுய மதிப்பீட்டு வரி அறிக்கையை முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a54aee6-a07f-4d5d-8dd2-f57e0fe1d710/26-6a83e342342f3.webp' />&nbsp;</p><p>

இந்த புதிய வரி விதிப்பு முறையானது, சாதாரண வரி விகிதங்களை விடக் குறைவான வரித் தொகையைக் கொண்டுள்ளது.</p><p>
இந்த முறைமையில் வருமானம் ஈட்டும் அனைத்து தனிநபர்களுக்கும் இது கட்டாய கடமையாக செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T04:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வாகனங்களை இறக்குமதி செய்த உரிமையாளர்களுக்கு மற்றுமொரு சிக்கல்! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-lakh-vehicle-registration-plates-still-missing-1787025807"></link>
            <id>https://tamilwin.com/article/5-lakh-vehicle-registration-plates-still-missing-1787025807</id>
            <summary type="text">கடந்த ஆண்டு (2025) மே 16 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட சுமார் 5 இலட்சம் வாகனங்களுக்கு இதுவரை வாகன பதிவு எண்கள் அச்சிடப்படாமையினால் உரிமையாளர்கள் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஆண்டு (2025) மே 16 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட சுமார் 5 இலட்சம் வாகனங்களுக்கு இதுவரை வாகன பதிவு எண்கள் அச்சிடப்படாமையினால் உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மோட்டார் வாகனப்பதிவு எண்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ​​தற்போதைய அரசாங்கம் புதிய விநியோகஸ்தரின் கீழ் ஜூன் 8 ஆம் திகதி முதல் வாகனப்பதிவு எண்களை அச்சிட தொடங்கியுள்ளது.</p><h2>நிலுவையில் இலட்சக்கணக்கான பதிவு எண்கள்</h2><p>இந்த சூழ்நிலையில், 2025 மே 16 ஆம் திகதி வாகனத்தை பதிவு செய்த வாகன உரிமையாளர், ஒரு வருடம் மூன்று மாதங்கள் கடந்தும், அதற்காக குறைந்தபட்சம் ரூ. 2,000-க்கு மேல் செலுத்தியிருந்தும் பதிவு எண்கள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00702686-ba72-47db-81ca-988a4f773fb3/26-6a83df1b957c2.webp' /></p><p>

மோட்டார் போக்குவரத்துத்துறை இந்த 5 இலட்சம் உரிமத்தகடுகளுக்காக வாகன உரிமையாளர்களிடமிருந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது.</p><p>

 இந்நிலையில், நிலுவையில் உள்ள இலட்சக்கணக்கான பதிவு எண்கள் விரைவில் அச்சிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p> 

இருப்பினும், போக்குவரத்து அமைச்சகமும் மோட்டார் போக்குவரத்துத்திணைக்களமும், வாகன உரிமத் தகடுகளை அச்சிடுவதற்காக மார்ச் 10 ஆம் திகதி தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p> இந்நிலையில், அந்த திகதிக்கு முன்பு தேங்கியிருந்த உரிமத்தகடுகளை அச்சிடுவது அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தரமற்ற உரிமத்தகடுகளை பயன்படுத்தியதற்காக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் அபராதம் விதித்து வருகின்றமை பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T04:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/many-details-about-easter-attack-case-coming-soon-1786932690"></link>
            <id>https://tamilwin.com/article/many-details-about-easter-attack-case-coming-soon-1786932690</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 25 சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின், தற்காப்புத் தரப்பு சாட்சிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 25 சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின், தற்காப்புத் தரப்பு சாட்சிகளை விசாரிக்கும் நடவடிக்கை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. </p><p>

அரசாங்கத் தரப்பு சாட்சிகளை விசாரிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. 

அரசாங்கத் தரப்பு வலுவான வழக்கினை சமர்ப்பித்துள்ளதாக தீர்மானித்த நீதிபதிகள் குழாம், தற்காப்புத் தரப்பு தமது நிலையை முன்வைக்குமாறு உத்தரவிட்டது. </p><p>

மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமே இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 200 பிரிவின் கீழ் தற்காப்புத் தரப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

குறுக்கு விசாரணை</b></h2><p>இந்த சந்தர்ப்பத்தில், பிரதிவாதிகள் சாட்சிக் கூண்டில் ஏறி குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சாட்சியமளிக்க, பிரதிவாதி கூண்டில் இருந்தவாறு அறிக்கை ஒன்றை வெளியிட, சாட்சிகளை அழைக்க அல்லது மௌனமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c625affb-1e30-4d55-8015-f15bf718734b/26-6a83dac2d60b3.webp' /></p><p>அதற்கமைய, தற்போது இவவழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள 24 பேரில், சட்டத்தரணி பிரதிநிதித்துவம் அற்ற சந்தேகநபரான 6 ஆம் இலக்க பிரதிவாதியான ரிஸ்கான் மௌனமாக இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

ஏனைய 23 பிரதிவாதிகளும் பிரதிவாதி கூண்டில் இருந்தவாறு அறிக்கை வெளியிடவுள்ளனர். </p><h3><b>

தற்காப்புத் தரப்பு வழக்கு</b></h3><p>பிரதிவாதிகள் சாட்சிக் கூண்டில் இருந்து சாட்சியமளிக்காத சந்தர்ப்பத்தில், அவர்களது கூற்றுகள் தொடர்பில் அரசாங்கத் தரப்பு குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b668581-20c6-4fba-83fc-fa1f2e7da566/26-6a83dac38a6f5.webp' /></p><p>எனினும், சாட்சியச் சட்டத்தின் 165 ஆம் பிரிவின் கீழ் நீதிமன்றம் சில தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் குற்றவாளிகளிடம் கேள்விகளை எழுப்பும் அதிகாரம் உள்ளது. </p><p>அத்துடன், சில பிரதிவாதிகள் தமக்கு சாதகமாக சாட்சிகளை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். </p><p>

தற்காப்புத் தரப்பு வழக்கு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சாட்சிகளை முன்வைக்கும் குற்றவாளிகள் தமது சாட்சிகளின் பட்டியலை நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.</p>]]></content>
            <updated>2026-08-18T04:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்படவில்லை! உறுதிப்படுத்திய பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanchipani-imran-has-not-been-arrested-1787023145"></link>
            <id>https://tamilwin.com/article/kanchipani-imran-has-not-been-arrested-1787023145</id>
            <summary type="text">
பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்படவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். 

கஞ்சிப்பானி இம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்படவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p> 

கஞ்சிப்பானி இம்ரான் விரைவில் இத்தாலியில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என்ற பிரதி அமைச்சர் பொதுக் கூட்டம் ஒன்றில் வெளியிட்ட கருத்தின் ஊடாக கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.</p><h2>கைது செய்யும் நடவடிக்கை&nbsp;</h2><p> 

இந்தநிலையில், இது குறித்து தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/875cd30f-a975-4f94-bb25-8d320340cb14/26-6a83d778b56cb.webp' /></p><p> </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக தன்னை மேற்கோள்காட்டி வெளியிடப்படும் செய்திகளில் உண்மையில்லை.</p><p> 

எனினும், கஞ்சிப்பானி இம்ரானை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p> 



</p>]]></content>
            <updated>2026-08-18T03:58:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு பாதாள உலகப் புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-red-notified-criminal-brought-into-the-country-1787021657"></link>
            <id>https://tamilwin.com/article/a-red-notified-criminal-brought-into-the-country-1787021657</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த சமித்புர சது என்ற பாதாள உலகக் குற்றவாளி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

சிவப்பு அறிவிப்பு வழங்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த சமித்புர சது என்ற பாதாள உலகக் குற்றவாளி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> 

சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டிருந்த திமுது சதுரங்க என்ற சமித்புர சது, ஓமானில் இருந்து இன்று(18.08.2026) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். </p><p>

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FgRD-e-rsUc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கொலைக் குற்றச்சாட்டு..</h2><p>

குறித்த சந்தேகநபர், மட்டக்குளியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>

மேலும், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்து இவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7484e127-8b9f-4e67-acc7-0c842e7ab57e/26-6a83e2440a8ee.webp' /></p><p> </p><p>

மேலும், மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் நடந்த கொலை ஒன்றுக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்து இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கையெறிக் குண்டொன்றை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. </p><p> 

போதைப்பொருள் கடத்தில் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் இந்த சந்தேகநபர் சட்டவிரோதமாக பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் குறித்தும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T03:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா பாணியில் தப்பிக்க முயற்சித்த ஷிரான் பாஷிக்: திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basiks-plan-folied-1787017199"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basiks-plan-folied-1787017199</id>
            <summary type="text">துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக், பொலிஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காகச் சினிமா பாணியில் தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக், பொலிஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காகச் சினிமா பாணியில் தீட்டிய மாபெரும் திட்டம் விமானம் மாறியதால் கைநழுவிப் போயுள்ளதாக&nbsp; &nbsp;திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>ஷிரான் பாஷிக் தன்னை மாதிரியே உருவ அமைப்பைக் கொண்ட வேறு ஒரு நபரைத் தயார் செய்து, தான் பயணிக்கும் அதே விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரத் திட்டமிட்டிருந்தார்.
</p><p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து உண்மையான ஷிரான் பாஷிக்குக்குப் பதிலாக அந்த போலி நபர் பொலிஸாரிடம் சரணடைந்து கைதாவது போலவும், அந்த இடைவெளியில் உண்மையான ஷிரான் பாஷிக் தப்பிப்பது போலவும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.</p><h2>பாரிய சதித்திட்டம்&nbsp;</h2><p>
</p><p>போலி நபர் பிடிபடும் நேரத்தில், உண்மையான ஷிரான் பாஷிக் வேறு ஒரு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி விமான நிலையத்திலிருந்து வெளியேறி, ஐரோப்பிய நாடு ஒன்றுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார். </p><p>இதற்காக அவர் பெருந்தொகை பணத்தைச் செலவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய் பொலிஸார் ஷிரான் பாஷிக்கை நாடு கடத்துவது குறித்து இலங்கை பொலிஸாருக்கு அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வழங்கியிருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5e87bb-00d7-4458-b195-d43bbcbe78f0/26-6a83c3c633331.webp' /></p><p> 
எனினும், துபாயில் உள்ள ஒற்றர் ஒருவர் மூலம் இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
</p><p>ஆனால், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த விமானத்திற்குப் பதிலாக வேறு ஒரு விமானத்தில் ஷிரான் பாஷிக் அழைத்து வரப்பட்டதால், அவர் தயார் செய்து வைத்திருந்த போலி நபரை அந்த விமானத்தில் அனுப்ப முடியாமல் போயுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 
இதனால் குறித்த ஆள்மாறாட்ட சதித்திட்டம் முற்றிலும் தோல்வியடைந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் தனியாக வந்து இறங்கிய ஷிரான் பாஷிக் பொலிஸாரிடம் நேரடியாகச் சிக்கிக் கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ae8ef5f-d537-4764-b02d-0718d761c7d7/26-6a83c3c6ef2e8.webp' /></p><p>
</p><p>ஈரானுக்கு ஆதரவாக துபாயில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தும் காட்சிகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் துபாய் பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டார். </p><p>
இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள ஷிரான் பாஷிச்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T02:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியில் இருந்து விலகினால் அநுரவுக்கு காத்திருக்கும் ஆபத்து! யாராலும் காப்பாற்ற முடியாமல் போகலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-president-anuradha-1786963310"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-president-anuradha-1786963310</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் மீது வழக்குத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் மீது வழக்குத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். </p><p>நேற்றையதினம்(17.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீதித்துறையை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.</p><h2>கடவுள் ஆசீர்வதிக்கட்டும்</h2><p> </p><p>

அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால், உடனடியாக அவருக்கு எதிராக நீதித்துறையை அவமதித்தமைக்காக வழக்குத் தொடர வாய்ப்புள்ளது. </p><p>

இதன்விளைவாக ஜனாதிபதி பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அவற்றிலிருந்து அவரை யாராலும் காப்பாற்ற முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dcd8b6f-cd96-4648-8af9-49ade7a1fb25/26-6a82e8705a1a7.webp' /></p><p> </p><p>

சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு, நாங்கள் மிகக் கவனமாக பேசிய போதும், நீதிமன்ற அவமதிப்புக்காக என் மீது தற்போதைய அரசாங்கம் நான்கு முறை விசாரணைகளை நடத்தியுள்ளது. </p><p>

எனவே, ஜனாபதிபதி பதவியில் இருந்து அநுர குமார விலகியதும் அவர் மீது வழக்குத் தொடரப்படும் சாத்தியக்கூறுகள் மிக அதிகம். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p><br><br><b><i>You may Like This..</i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9aWib39Foq4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><hr><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T01:53:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளைப் பகுதியில் புலிகளின் முகாமா! பொலிஸ் மா அதிபர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-explains-about-pallai-camp-1787016355"></link>
            <id>https://tamilwin.com/article/igp-explains-about-pallai-camp-1787016355</id>
            <summary type="text">&amp;nbsp;கிளிநொச்சி - பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் மா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிளிநொச்சி - பளைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>
சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குறிப்பிட்ட வனப்பகுதியில் பயங்கரவாத முகாமோ அல்லது வெடிபொருள் உற்பத்தி நிலையமோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>பளைப் பகுதியில் உள்ள காணி ஒன்றில் விவசாயப் பண்ணை மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது என்பது கிளிநொச்சிக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a55d24e1-fd2b-4cfc-abda-b72a271bd63c/26-6a83b4a5308a3.webp' /></p><p> இதில் கற்றாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று மாடிகளைக் கொண்ட இந்த ஆடைத் தொழிற்சாலையில் தையல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவரால் நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>
இந்த விவசாயப் பண்ணை மற்றும் தொழிற்சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் பணியாற்றுகின்றனர்.
</p><p>காணியை முறையற்ற வகையில் பயன்படுத்தி அனுமதி பெறாமல் கட்டடங்களை நிர்மானம் செய்தமை தொடர்பில், அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p>
போலித் தகவல்களைப் பரப்பி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்வோர் மீது கடுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அனைத்து கண்டங்களுக்கான மனித உரிமை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜயசேகரவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஓர் இடத்தை பயங்கரவாத முகாம் என சர்ச்சையை கிளப்பும் தரப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T01:28:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் முடிவுக்கு வர உள்ள ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-cid-1786995183"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-cid-1786995183</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய விசாரணைகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தான் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.வழக்கின் முறைப்பாட்டு தரப்பு சாட்சி விசாரணை 547 நாட்கள் நடைபெற்று இருக்கின்றன.</p><p>அந்தக் காலப்பகுதியில் 309 பேரிடம் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பொருட்கள் தடவியல் அறிக்கைகளும் சாட்சியங்களாக இதுவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>மிக விரைவிலே இந்த வழக்கு முடிவுக்கு வர உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp;நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F1l_ko6A4l8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை.. மத்திய வங்கி ஆளுநர் முன்வைத்துள்ள முக்கிய யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inflation-crude-oil-prices-maintained-at-around-1787012060"></link>
            <id>https://tamilwin.com/article/inflation-crude-oil-prices-maintained-at-around-1787012060</id>
            <summary type="text">இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.
</p><p>அவுஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு ஊடக நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நிலைமையை கட்டுப்படுத்தலாம்..&nbsp;</span></p><p>
</p><p>இதன்போது அவர், "இந்த ஆண்டு இறுதி வரை எண்ணெய் விலை சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் நீடித்தால், நாம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும். இருப்பினும், ஏதேனும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டால், அது நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6407947f-7ecf-475b-aad2-9f15e8d5a192/26-6a83a7c24a3c1.webp' /></p><p>இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டிலும் இலங்கையின் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 வீத இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p>
மே மாதத்தில் மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை இந்த நிலைமை சாதகமாக மாறுவதற்குப் பங்களித்துள்ளன.
</p><p>
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்தாலும், இறுக்கமான நிதி நிலைமைகளும் அதிக விலைகளும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது" என்று மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:32:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள்.. வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-bars-to-be-closed-till-28th-1787010993"></link>
            <id>https://tamilwin.com/article/some-bars-to-be-closed-till-28th-1787010993</id>
            <summary type="text">இன்று முதல் 28ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.&amp;nbsp;எடுக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று முதல் 28ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.&nbsp;</p><h2>எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை&nbsp;</h2><p>இன்று (18) முதல் கண்டி எசல பெரஹேராவின் முதல் கும்பல் பெரஹேரா வீதிகளில் வலம் வரவுள்ள நிலையில் பெரஹேரா முடியும் நாள் (28) வரை மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16792a0d-0d58-4264-8997-133e82806eb4/26-6a83a1aa9e087.webp' /></p><p>
எனவே, கண்டி கடவத்த சதாரா மற்றும் கங்காவத்த கோரள பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

மேலும், குண்டசாலை பிரதேச செயலகத்தின் நத்தாரம்போத்த கிராம அலுவலர் கோட்டத்தில், பிரதான சாலையை ஒட்டியுள்ள எரிபொருள் நிலையம் வரையிலான அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:08:19+00:00</updated>
        </entry>
    </feed>
