<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-27T10:48:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 49000இற்கும் அதிகமான குடியேற்றவாசிகள் கைது : ட்ரம்ப் ஆட்சியில் உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/more-than-49000-immigrants-arrested-in-the-us-1787826098"></link>
            <id>https://tamilwin.com/article/more-than-49000-immigrants-arrested-in-the-us-1787826098</id>
            <summary type="text">அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க பிரிவினர் (ICE) கடந்த ஜூலை
மாதத்தில் 49,571 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க பிரிவினர் (ICE) கடந்த ஜூலை
மாதத்தில் 49,571 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தைப்
பொறுப்பேற்ற பின்னர் பதிவான மிக அதிகளவிலான மாதாந்த கைது நடவடிக்கை இதுவெனக்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>புதிய ஆளணி சேர்ப்புத் திட்டம்</h2><p>
கலிபோர்னியா பல்கலைக்கழகங்களின் திட்ட தரவுகளை மேற்கோள்காட்டி
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கையானது ஜூன் மாதத்தை விட 15
சதவீதமும், பெப்ரவரி மாதத்தை விட 70 சதவீதமும் அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36370105-efae-48ff-8be2-6a31f4bcbe18/26-6a90124f9f464.webp' /></p><p>

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டமையே இத்தகைய கைதுகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக்
கூறப்படுகின்றது.
</p><p>
குறிப்பாக டெக்சாஸ் மற்றும் புளோரிடா ஆகிய மாநிலங்களில் மட்டுமே சுமார் 20,000
கைதுகள் இடம்பெற்றுள்ளன.</p><p> உள்ளூர் பொலிஸார் குடியேற்ற அமுலாக்கப் பிரிவினருடன்
இணைந்து செயற்படும் ஒப்பந்தங்கள் மூலம் அங்கு அதிகளவிலான கைதுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
அமைச்சரவையின் புதிய ஆளணி சேர்ப்புத் திட்டத்தின்கீழ் சுமார் 12,000 புதிய
அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும்
குடியேற்றவாசிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கைகள் மேலும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T10:34:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெளியேறிய அமைச்சர்கள் - ஊடகவியலாளர்கள் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministers-left-without-answering-journalists-1787825949"></link>
            <id>https://tamilwin.com/article/ministers-left-without-answering-journalists-1787825949</id>
            <summary type="text">ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில்
கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம்
சந்திரசேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில்
கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம்
சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.</p><p>

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற
உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து நேற்று(26) யாழ்ப்பாணம்
அரியாலையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் ஊடகவியலாளர்
சந்திப்புக்கு அழைப்பு விடுத்ததிருந்தனர்.</p><p>

ஆரம்பத்தில் தனது கருத்தை இருபது நிமிடங்கள் வரை சிங்கள மொழியில் அமைச்சர்
பிமல் ரத்நாயக்க முன்வைத்தார்.</p><h2>


இடைநடுவே வெளியேறிய அமைச்சர்</h2><p>
 அதன் பின்னர் சிங்கள உரையின் மொழிபெயர்ப்பைத்
தமிழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20f01c4-b1b2-48ca-ae67-d6bb2d59f087/26-6a900fbb13e63.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>

இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதில் வழங்கிய நிலையில்
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் தமக்கு வேறு
ஒரு பணி இருப்பதாகக் கூறிவிட்டு வெளியேறினர்.</p><p>ஆட்சிக்கு வர முதல் அடிக்கடி ஊடகவியலாளர்களை அழைத்து ஊடக சந்திப்புக்களை
நடத்திய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பின்னர் எப்போதாவது இருந்து
விட்டே ஊடக சந்திப்புக்கு அழைக்கிறார்கள்.</p><p>
 அவ்வாறான நாளிலும் தங்களுடைய கருத்துகளை
முன்வைத்து விட்டு ஊடகவியலாளர்கள் தங்கள் கேள்விகளை முன்வைப்பதற்குப் போதிய
சந்தர்ப்பத்தை வழங்காமல் வேறு பணிகள் இருக்கின்றன எனக் கூறிவிட்டு சென்றமை
ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழப்பு 270ஆக அதிகரிப்பு - இரண்டாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-death-toll-rises-to-270-1787824086"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-death-toll-rises-to-270-1787824086</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மேலும், 1,500க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>அபாயம் இருப்பதாக</h2><p>
காணாமல் போனவர்களில் 517 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும், 127 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0078d0ef-4ae2-45b3-bb6a-023b71c2141f/26-6a900eb12e96e.webp' /></p><p>
இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் பேரிடர் ஆய்வு மையத்தின் இயக்குநரான பசந்த ராஜ், இன்று அல்லது நாளை "இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள்" ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>அதிக மழைப்பொழிவு இல்லை, ஆனால் மண்சரிவு ஏற்படக்கூடும். அவர்கள் இமயமலை ஆபத்துக்களைக் கண்காணித்து வருவதாகவும், இங்கு காலநிலை மாற்றம் உண்மையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Gh9SC8_v0ms" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T10:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றி நாடு திரும்பலாம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-refugees-in-india-can-return-home-1787821798"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-refugees-in-india-can-return-home-1787821798</id>
            <summary type="text">இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்
பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று(26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள்</h2><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோருடன் இணைந்து நடைபெற்ற
இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட
தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில்
விளக்கமளிக்கப்பட்டது.
</p><p>
அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது,&nbsp;யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்
அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்
ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில்
பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக
கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce7ac819-a773-40a9-8c38-f17f005c0f77/26-6a9003bee7900.webp' /></p><p>இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்
க.இளங்குமரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின்
தலையீட்டின் மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய
தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக
முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும்
தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித்
தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும்,
தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவர்களாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக
தேவையான உதவிகள் வழங்கப்படும்.</p><p> அத்துடன், கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி ஜனாதிபதி
தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானங்களுக்கு அமைவாக, தேசிய பாதுகாப்பையும் மக்களின் உரிமைகளையும்
சமநிலையில் பேணியவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை
விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது
தெரிவித்தார்.</p><h2>அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள்</h2><p>மேலும், 2025 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில்
யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கர், கிளிநொச்சியில் 128 ஏக்கர், முல்லைத்தீவில் 615
ஏக்கர், மன்னாரில் 135 ஏக்கர் மற்றும் வவுனியாவில் 150 ஏக்கருக்கும் அதிகமான
காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c390d7b-623d-44a8-85ef-b732bf8d3d17/26-6a9003bfb8d97.webp' /></p><p>
இதனிடையே, பலாலி விமான நிலைய வீதியின் கிழக்குப் பகுதியில் தற்போது விவசாய
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர்
மாதத்திற்குள் வீடுகளை அமைத்து நிரந்தரமாகக் குடியேறுவதற்கு அனுமதி வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இதேவேளை, காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினத்தை முன்னிட்டு
நேற்றுமுன்தினம்(25.08.2026) நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் பங்கேற்புடன் பிரதான
நிகழ்வு நடைபெற்றது.
</p><p>
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றபோது அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில்
11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு
செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின்
அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 565
எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும்,
சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை
முன்னெடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:40:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு வலை வீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigations-regarding-the-politicians-1787808951"></link>
            <id>https://tamilwin.com/article/investigations-regarding-the-politicians-1787808951</id>
            <summary type="text">முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பாசிக் தற்பொழுது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>பாசிக்கிடம், பல கோடி ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.</p><h2>கடந்த அரசாங்கத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்</h2><p>
ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது வெளிவந்த அதிர்ச்சித் தகவல்களின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இந்த அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a668adef-7429-4b00-837e-77d516c92c25/26-6a8fd8ec69dbc.webp' /></p><p>
இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரண்டு முன்னாள் பெண் அமைச்சர்கள், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட பல பிரபல அரசியல்வாதிகள் அடங்குவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>குறிப்பிட்ட 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசாரப் பணிகளின் போது ஷிரான் பாசிக் அவ்வப்போது பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
மேலும், கடந்த அரசாங்கத்தில் இருந்த சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ஷிரான் பாசிக்கு சட்டவிரோதமாக நிலங்களை நிரப்பி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p> இந்த உதவிகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர் ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருந்தொகை பணத்தைப் பெற்றுள்ளார்.</p><h2>சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள்</h2><p>
</p><p>ஷிரான் பாசிக் நீண்டகாலமாகவே இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாகப் பணத்தைச் செலவிட்டுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0721e2-2180-4908-a9d0-f99b6642eb79/26-6a8fccbc714b1.webp' /></p><p>
</p><p>ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், தொடர்பு வைத்துக்கொண்டு பணம் மற்றும் பலதரப்பட்ட சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் குறித்தும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போராட்டக் களத்தில் தாய்மார்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் - சுமந்திரன் கடும் கண்டனம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-attack-mothers-at-protest-site-in-jaffna-1787820259"></link>
            <id>https://tamilwin.com/article/police-attack-mothers-at-protest-site-in-jaffna-1787820259</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும்
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான
எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில்
நேற்றுமுன்தினம்(25.08.2026) நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.</p><h2> 

காணாமல் ஆக்கப்பட்டோர் தாய்மார்கள் விசனம்</h2><p>
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாவட்ட செயலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59408c33-c7b9-42e5-954c-93f8f98a3528/26-6a8ff96187381.webp' /></p><p>
</p><p>
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் பொலிஸார் மூர்க்கத்தனமாக
நடந்து கொண்டதுடன், அவர்களை மாவட்ட செயலகத்துக்கு வெளியே ஆடைகள் கழரும்
நிலையிலும் இழுத்துத் தள்ளி அப்புறப்படுத்தினர்.
</p><p>
இந்த வன்முறையைக் கைபேசியினூடாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
உள்ளிருந்தவாறே அவதானித்தார் என்றும், போராட்டம் பற்றிச் செய்தி சேகரித்த
ஊடகவியலாளர்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாக வசைபாடினார்
என்றும் செய்திகள் வெளியாகின.</p><h2>

நீதி அமைச்சர் செயலுக்கு எழும் கண்டனம்</h2><p>
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தி வரும்
நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p>நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள்
மற்றும் தாய்மார்களை இலங்கைப் பொலிஸார் மிக மோசமாகத் தாக்கி
அப்புறப்படுத்தியதை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b689f00-d319-448b-9198-e27d8eaac00c/26-6a8ff96274246.webp' /></p><p>

 அதேபோன்று, இந்த நிகழ்வுகளை
உள்ளேயிருந்து தனது கைபேசியில் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த நீதி
அமைச்சரின் செயற்பாட்டையும், இந்தச் சம்பவத்தை வெளிப்படுத்திய
ஊடகவியலாளர்களைப் பொதுவெளியில் சபித்த அமைச்சர் சந்திரசேகரின் செயலையும்
வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T08:47:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை வெள்ளையாக்க முகப்பூச்சு கொடுத்த கணவர் - உறவினர்கள் கண் முன் நடந்த கொடூரம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549"></link>
            <id>https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549</id>
            <summary type="text">வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நெடுங்கேணி - நைனாமடு பகுதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர்,
தனது மனைவிக்கு 1000 ரூபாய் பெறுமதியான வெள்ளையாகும் முகப்பூச்சு ஒன்றை வாங்கி
கொடுத்துள்ளார். 

எனினும் மனைவி அதனை பூசவில்லை. </p><p>இதனால் கோபமுற்ற கணவர்
மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.</p><h2>

9 நாட்கள் உயிருடன் இருந்த குடும்பஸ்தர்</h2><p>

இதனைத் தொடர்ந்து, தம்பி முறையானவரிடம் இருந்த தீ மூட்டும் கருவியை பறிக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக தீ மூட்டப்பட்டு பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25bde6eb-d0e1-4c96-a5cd-1f9eee5c9857/26-6a8ff344f1739.webp' /></p><p> 

இதன்போது விரைந்து செயற்பட்ட அவருடைய உறவினர்கள், இளைஞரை மீட்டு, வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>
இருப்பினும், சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் 9 நாட்களின்
பின் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yHt2Ja-4HYs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T08:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை தொடர் முடக்கம் - தற்காலிக பாதை அமைக்க ஈரான் அதிரடி திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continued-blockade-of-the-strait-of-hormuz-1787817556"></link>
            <id>https://tamilwin.com/article/continued-blockade-of-the-strait-of-hormuz-1787817556</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
</p><p>
இதன் மூலம் கப்பல் போக்குவரத்திற்கான தற்காலிகப் பாதையொன்றை விரைவில்
அறிவிக்க முடியும் என ஓமான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய
தாக்குதல்களுடன் ஆரம்பித்த போர் சூழல் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய்
மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாளிப் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை
வகிக்கும் ஹோர்முஸ் நீரிணைப் பாதை முடங்கியுள்ளது.
</p><h2>
பொருளாதார ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா</h2><p>
இந்த நிலையில், பாதுகாப்பான கடற்பயணத்தை மீளமைக்கும் பொருட்டு கூட்டுத்
தற்காலிகப் பாதையொன்றை அமைப்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை
அகற்றுவது குறித்தும் இரு நாடுகளும் உடன்பாடு கண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db83750-d0d7-41f5-9839-03ae99754945/26-6a8feea0044bf.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, ஈரான் மீது தற்போதைக்கு புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தும்
திட்டம் அமெரிக்காவிடம் இல்லை என்றும், பொருளாதார ரீதியிலான அழுத்தங்களையே
தீவிரப்படுத்த அமெரிக்கா முயல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதன் ஒரு பகுதியாக ஈரானால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கப்பல்கள்
மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகச் சந்தையில் மசகு
எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
</p><p>
இருப்பினும், அமெரிக்கா - ஈரான் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், ஹோர்முஸ் நீரிணை
வழியூடான பயணம் இன்னும் ஆபத்து நிறைந்ததாகவே காணப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டம் : சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தோற்கடிப்பார்கள்! முன்னாள் அமைச்சர் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-people-will-defeat-in-referendum-1787814772"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-people-will-defeat-in-referendum-1787814772</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும்
சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத்
தோற்கடித்து மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும்
சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத்
தோற்கடித்து மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என முன்னாள் அமைச்சர்
ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>
இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,"22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டும்.</p><p> அவ்வாறு நடத்தப்பட்டால் மக்கள் அதனை நிச்சயம் தோற்கடிப்பார்கள்.</p><h2>ஆதரவாளர்கள் மத்தியில்</h2><p>

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தாங்கள் தோல்வியடைவோம் என்பது அரசுக்கு
நன்றாகத் தெரியும் என்பதாலேயே தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9810fb-76b2-4ed5-82db-5d7bd08abeda/26-6a8fe8fec47b0.webp' /></p><p>

அன்று இருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கும் இன்று இருக்கும் கட்சிக்கும்
இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.</p><p> இதனால் அவர்களின் சொந்த ஆதரவாளர்கள்
மத்தியிலேயே தற்போது பெரும் அதிருப்தி நிலவி வருகின்றது.
</p><p>
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு
வரும் போராட்டங்களின் பின்னணியில் தற்போதைய அரசே செயற்பட்டு வருகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T07:41:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசியப் பூங்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yala-national-park-temporarily-closed-1787812370"></link>
            <id>https://tamilwin.com/article/yala-national-park-temporarily-closed-1787812370</id>
            <summary type="text">யால தேசியப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்நினோ தாக்கத்தின் காரணமாக யால தேசியப் பூங்காவை அண்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசியப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எல்நினோ தாக்கத்தின் காரணமாக யால தேசியப் பூங்காவை அண்டியுள்ள அபகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
அதன் பிரகாரம் யால தேசியப் பூங்காவின் தொகுதி 1 மற்றும் 2 ஆகியவை தற்போதைக்கு எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு மூடப்படவுள்ளது.
</p><h2>வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம்</h2><p>எதிர்வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 15 வரை யால தேசியப் பூங்கா பொதுமக்களுக்குத் தற்காலிகமாக மூடப்படும் என்று வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/069f68bc-b143-4b1b-8957-4a320187007c/26-6a8fdfcaee573.webp' /></p><p>
விலங்குகள் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VsZZRd9fRRY" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T06:57:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கந்தனை காண குவியும் பக்தர்கள் - சிறப்பாக நடந்து முடிந்த 10ஆம் நாள் மஞ்சத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-devotees-gather-to-see-kanthan-1787813558"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-devotees-gather-to-see-kanthan-1787813558</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 நாள் நிகழ்வுகள் நேற்று(26.08.2026) சிறப்பாக நடந்து முடிந்தது. 

நல்லூர் கந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 நாள் நிகழ்வுகள் நேற்று(26.08.2026) சிறப்பாக நடந்து முடிந்தது. </p><p>

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூஜைகள் இடம்பெறுவது வழக்கம்.
</p><h2>
சிறப்பாக நடந்த 10ஆம் நாள் கொண்டாட்டம்</h2><p>
இதற்கமைய நேற்றைய தினம், மஞ்சத் திருவிழா வெகு சிறப்பாக, பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9cd01a-fb68-4160-b1e5-6bc75617a22a/26-6a8fdf228a232.webp' /></p><p> </p><p>

சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி, கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப்
பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமார சுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி
அருள் பாலித்துள்ளார்.</p><p> 

இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்
பாலித்த காட்சியினை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff09afa2-dcd8-456f-ac98-31e971e33105/26-6a8fdf2381e63.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8012db2e-7c2b-4fe3-aed2-7fc3f3293315/26-6a8fdf24572c9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f681cd5b-6887-476e-8aed-083d494ced78/26-6a8fdf568f582.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் டிரக்டர் மோதி 7 வயது சிறுமி உயிரிழப்பு - சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-year-old-girl-dies-after-being-hit-by-tractor-1787812171"></link>
            <id>https://tamilwin.com/article/7-year-old-girl-dies-after-being-hit-by-tractor-1787812171</id>
            <summary type="text">மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை
வீதி ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை
வீதி ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(25.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>


டிரக்டர் மோதி பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><h2> 

7 வயது சிறுமி உயிரிழப்பு</h2><p>
விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமியே இந்தச் சம்பவத்தில்
பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389c2153-4467-4b42-b031-67ea7dc5e64f/26-6a8fd9c51e718.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய 32 வயதுடைய டிரக்டரின் சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் குறித்து அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் சோகம் : கோர விபத்தில் இளம் தாய் - பிறந்த குழந்தை உட்பட மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-dies-in-an-accident-1787805343"></link>
            <id>https://tamilwin.com/article/3-dies-in-an-accident-1787805343</id>
            <summary type="text">அனுராதபுரம் கெபிதிகொல்லாவ - மெதவச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் கெபிதிகொல்லாவ - மெதவச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக்கொண்ட விபத்தில், இவ்வாறு 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் தாய், அவரது மகள் மற்றும் பிறந்து 10 நாட்களான குழந்தை ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2><b>

கோர விபத்து</b></h2><p>சிகிச்சைக்காக அனுராதபுர போதனா மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று கொண்டிருந்த போது, ​​இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47ae5cb9-afad-407b-9fcf-2f7b6debb289/26-6a8fd6ee63fde.webp' /></p><p>உயிரிழந்தவர்கள் பதவிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>

விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mhT43bDUsNQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:18:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டைதீவு படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவு : கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/36th-anniversary-of-the-mandaitivu-massacre-1787809080"></link>
            <id>https://tamilwin.com/article/36th-anniversary-of-the-mandaitivu-massacre-1787809080</id>
            <summary type="text">1990களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36ஆவது
ஆண்டு நினைவு நாள் நேற்று(26.08.2026) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக
அனு...</summary>
            <content type="html"><![CDATA[<p>1990களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36ஆவது
ஆண்டு நினைவு நாள் நேற்று(26.08.2026) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக
அனுஸ்டிக்கப்பட்டது.
</p><p>
36 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இலங்கையின் இராணுவத்தால் மண்டைதீவில்
நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்திலேயே இன்றையதினம் தீவக மக்கள்
ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.
</p><h2>படுகொலை செய்யப்பட்ட ஒருவரது தாயார்</h2><p>
தீவக நினைவேந்தல் குழு மற்றும் தீவக முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்
நடைபெற்ற குறித்த நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வில் இராணுவத்தால் படுகொலை
செய்யப்பட உறவுகளின் வாழும் உறவான ஸ்பன் மற்றில்டா முதன்மைச் சுடரேற்றிவைத்து
நினைவு நினைவு கூரலை ஆரம்பித்து வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a916eab-356c-489f-a95b-055e44256aa5/26-6a8fd364c4ec8.webp' /></p><p>தொடர்ந்து அருட்தந்தை வசந்தன் மற்றும் தீவக முன்னேற்றக் கழக தலைவர் பிரகலாதன்
ஆகியோரால் நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்விவேந்தல்
நடைபெற்றது.
</p><p>இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும்
படுகொலைசெய்யப்பட்ட ஒருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும்
வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.</p><h2>புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்று</h2><p>இதன்போது மகன இழந்த தாயார் கூறுகையில், 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில்
இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.

இதில் தனது மகன் இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்படு எனது உறவினர்
ஒருவரது வீடின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffad327c-5808-4e15-98ad-aa85d221e926/26-6a8fd365a2b61.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான்
சாட்சி.

அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர்
மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.</p><p>&nbsp;அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு.

இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன என கண்ணீர் மல்க
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T06:04:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000க்கும் அதிகமான வாகனங்கள் ஏலத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hambantota-port-vehicles-will-sale-on-auction-1787809937"></link>
            <id>https://tamilwin.com/article/hambantota-port-vehicles-will-sale-on-auction-1787809937</id>
            <summary type="text">&amp;nbsp;அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் முறையில் விற்பனை செய்து, சுங்க வரி மற்றும் களஞ்சியக் கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இது குறித்து இறக்குமதியாளர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
</p><p>வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் சுங்க வரி வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சுங்கத் திணைக்களத்தின் மொத்த இலக்கான 190.2 பில்லியன் ரூபாயில் இதுவரை 176.7 பில்லியன் ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 13 பில்லியன் ரூபாயை வரும் நாட்களில் ஈட்ட முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84501924-0550-4a00-bc08-e38d739972a9/26-6a8fd093681de.webp' /></p><p>
</p><p>வாகன வரி வருவாய் குறைந்ததையடுத்து, கூடுதல் கட்டணத்தை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வாகன இறக்குமதி மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>செலாவணி வீத உயர்வு வாகனங்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,000-க்கும் அதிகமான வாகனங்கள் சுமார் மூன்று மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளன. சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ், இந்த வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனை செய்து சுங்க வரியை முதன்மையாக வசூலிக்கவும், பின்னர் துறைமுகத்திற்கான களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்தவும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p>
விற்பனைக்குப் பின்னர் ஏதேனும் பணம் மீதம் இருந்தால், அதை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்குத் திருப்பி வழங்கவும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இவ்விவகாரம் தொடர்பாக இறக்குமதியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HKQDQbfk26E" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T05:52:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் மடக்கிப் பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/19-indians-arrested-to-smuggle-gold-into-india-1787805837"></link>
            <id>https://tamilwin.com/article/19-indians-arrested-to-smuggle-gold-into-india-1787805837</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற
இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான
போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற
இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான
போது இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சந்தேகநபர்கள்</h2><p>
</p><p>
காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவின் நாகப்பட்டினத்துக்குப்
புறப்படத் தயாராக இருந்த 19 பயணிகளையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில்
தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83715aec-e40e-4633-a8d0-28c37ddb8d9a/26-6a8fc86f634ff.webp' /></p><p>
விசாரணைகளின் அடிப்படையில், இவர்கள் தங்கத்தை நூதனமான முறையில் மறைத்து வைத்து
கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.</p><p> இதையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள 19
சந்தேகநபர்களையும் ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெயரை மாற்றிக் கொண்டு சிங்கப்பூரில் வாழும் அர்ஜுன மகேந்திரன் - அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-hurdle-to-extraditing-arjuna-mahendran-1787806168"></link>
            <id>https://tamilwin.com/article/legal-hurdle-to-extraditing-arjuna-mahendran-1787806168</id>
            <summary type="text">சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாக பொதுப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான சட்ட வழிகள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார். </p><p>
சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.</p><h2>அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கை</h2><p>
</p><p>அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்ட பூர்வமான தடைகள் உள்ளன. ஆனால், சாத்தியமான அனைத்து சட்டபூர்வ வழிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6903a2d5-9764-4055-9e4c-9bde99259417/26-6a8fc1d93c549.webp' /></p><p>அதேவேளையில், மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p> 
இலங்கை அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கையானது, சிங்கப்பூரின் 'நாடுகடத்தல் சட்டத்தின்' கீழ் தேவையான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்கும் கோரிக்கையை சிங்கப்பூர் அரசு முன்னதாக நிராகரித்திருந்தது. </p><p>
மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்காக அர்ஜுன மகேந்திரன் இலங்கையில் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார். </p><p>
அரசுக்கு 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 2019 ஜூன் மாதம் 'மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தில்' இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.</p><h2>39பேரின் இருப்பிடங்கள்</h2><p> </p><p>
இதற்கிடையில், பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களை இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக சர்வதேச பொலிஸாரிடமிருந்து மொத்தம் 236 சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார். </p><p>
இவற்றில் 110 சிவப்பு எச்சரிக்கைகள் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னரே பெறப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b46739b-6c9f-4a3f-8710-8f16a8949e7e/26-6a8fca9351651.webp' /></p><p> </p><p>
தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் 66 பேர் ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 97 பேரிடம் விசாரணைகள் தொடர்வதாகவும் அமைச்சர் கூறினார். </p><p>இதில் 39 பேரின் இருப்பிடங்களை அதிகாரிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.</p><p> 
அத்துடன், தேடப்பட்டு வரும் மேலும் ஒரு நபர் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T04:50:27+00:00</updated>
        </entry>
    </feed>
