<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-25T20:38:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உடனடியாக பொதுத் தேர்தல்! புதிய பிரதமரின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-general-election-in-britain-1785010270"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-general-election-in-britain-1785010270</id>
            <summary type="text">உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். </p><p>

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், தற்போது நாட்டைச் சிறப்பாக இயங்கச் செய்வதே எங்களுடைய மிகப்பெரிய முன்னுரிமையாகும். இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்தினால் அந்த முக்கியமான பணிகள் தாமதமாகும் வாய்ப்புக்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொதுத் தேர்தல் இப்போதில்லை..</h2><p> 

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றார்.
</p><p>
இந்த நிலையில், புதிய பிரதமர் உனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏனைய கட்சிகள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab2ae4e-d886-4b20-ab29-ea1034279188/26-6a65185fcdb5e.webp' /></p><p>

இது தொடர்பில் பதிலளித்த புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், “நாங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம். கடந்த 2024ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது. </p><p>

அதையே நானும் பின்பற்றுகின்றேன். அதற்குள் எனது கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் முன்னெடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T20:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிணைத்தொகை - அபராதம் செலுத்த பணமின்றி சிறையில் வாடும் 3 ஆயிரம் கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-languishing-in-jail-without-paying-fines-1785005953"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-languishing-in-jail-without-paying-fines-1785005953</id>
            <summary type="text">தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த முடியாமலும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றமை தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த நிலைமை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
திரட்டப்பட்ட தகவல்களின்படி, 28 சிறைகளில் 1,940 கைதிகள் அபராதம் செலுத்த முடியாததாலும், 21 சிறைச்சாலைகளில் 1,431 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாததாலும் வாடி வருகின்றனர்.</p><p></p><h2>ஜனாதிபதியின் பொது மன்னிப்பு&nbsp;</h2><p> </p><p>விடுதலை பெறமுடியாத நிலையில், கடுமையான அழுத்தத்தில் இருப்பவர்களே சிறைச்சாலைப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பிணை வழங்கப்பட்ட பிறகு ஐந்து மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 325 ஆகும். கடந்த ஆண்டு நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள 21 சிறைச்சாலைகளில் இந்த நிலை காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17afe90e-b689-402f-8c68-2b3901ee1a5d/26-6a650defa1cea.webp' /></p><p>
இவ்வாறாக எந்தக் காரணமும் இன்றி சிறையில் இருக்கும் மக்களின் உணவு மற்றும் பிற வசதிகளுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியுள்ளது என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
</p><p>
நிதி வசதியின்மை, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இயலாமை மற்றும் பிணை வழங்க உறவினர்கள் இல்லாதது ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்கள் என கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bf941f2-df7f-474f-b9b2-13cd0430cb75/26-6a650df053295.webp' /></p><p> </p><p>இது குறித்துக் கேட்டபோது, ​​இதுபோன்ற சூழ்நிலைகள் பதிவாகி வருவதாகவும்இ தீர்வுகளைக் கண்டறிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், இத்தகைய கைதிகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படும் என்றும்&nbsp; ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படும்போது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T19:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியைச் சந்திக்க நேர ஒதுக்கீடு கோரும் தமிழ்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-tamil-speaking-parties-request-meet-anura-1785006278"></link>
            <id>https://tamilwin.com/article/six-tamil-speaking-parties-request-meet-anura-1785006278</id>
            <summary type="text">இந்த மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய
விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும்
வலியுறுத்தியுள்ளன.
</p><p>
இதற்கமைய, மேற்படி கட்சிகள் தத்தமது சுயாதீனம், அரசியல் நிலைப்பாடுகள் மற்றும்
கொள்கைகளைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுவான இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில்
தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட
இணக்கம் தெரிவித்துள்ளன.
</p><p>
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
அத்துடன், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாட இந்தக்
கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஜனாதிபதியிடம் நேர ஒதுக்கீடும்
கோரப்பட்டுள்ளது.</p><p>

ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரையும், இலங்கையில்
உள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவும்
அந்தக் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363cb93a-b2fa-4a84-ad18-93a0e655fbaa/26-6a650954dda3e.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் இந்த விடயங்கள் தொடர்பாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, ஜனநாயக
ரீதியிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஊடாக பரந்த இணக்கப்பாட்டை உருவாக்க
முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
</p><p>
தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என நம்பிக்கை
வெளியிட்டுள்ள அந்தக் கட்சிகள், இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தொடர்ந்து
ஒன்றிணைந்து செயற்பட்டு நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல்
தீர்வை நோக்கிப் பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T19:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : 35 பேர் பலி - 30 பேர் காயம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/syria-bus-accident-today-1785005035"></link>
            <id>https://tamilwin.com/article/syria-bus-accident-today-1785005035</id>
            <summary type="text">சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35
பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்து கிழக்கு சிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35
பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர்.
</p><p>
இந்த விபத்து கிழக்கு சிரியாவையும் தலைநகரையும் இணைக்கும் முக்கிய
நெடுஞ்சாலையான 'டீய்ர் அல் சூர் - டமாஸ்கஸ்' வீதியில், அல்-சுக்னா மற்றும்
பால்மைரா ஆகிய இடங்களுக்கு இடையே நேற்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பத் தரம் குறைவு&nbsp;</h2><p>
</p><p>
விபத்துக்குள்ளான ஒரு பேருந்தில் சிரிய உள்நாட்டு பாதுகாப்புப் படை
வீரர்களும், மற்றொரு பேருந்தில் சாதாரண பொதுமக்களும் பயணம் செய்ததாக சிரிய
உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e667c2c1-99f0-4712-8828-de9a7b6cf0db/26-6a6503ed45631.webp' /></p><p>
</p><p>
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக அம்பியூலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>
</p><p>மேலும், காயமடைந்தவர்களை விரைவாக ஹோமரா இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல
பல உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான 'சானா'
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc87092-e9bd-4647-b80c-912111fd54d1/26-6a6503ededfc2.webp' /></p><p>
</p><p>
சிரியாவில் நடந்த நீண்டகால உள்நாட்டுப் போரின் காரணமாக அங்குள்ள
உள்கட்டமைப்புகள் மற்றும் வீதிகள் சீரழிந்து காணப்படுவதால், இந்த
நெடுஞ்சாலையில் பாதுகாப்புத் தரம் மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜுலை நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-commemoration-held-emotion-in-jaffna-1785000872"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-commemoration-held-emotion-in-jaffna-1785000872</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25.7.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25.7.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்
உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தலானது
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இதன்போது ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் நினைவுரைகள் இடம்பெற்றன.</p><p></p><h2>நினைவேந்தல்</h2><p>
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், குரல்
அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன், வேலன்
சுவாமிகள், ஜெபரட்ணம் அடிகளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்
பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர்,
பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், படுகொலை
செய்யப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசியம் சார் செயற்பாட்டாளர்கள் மற்றும்
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03f8aadd-5ffb-41b5-968d-bf9c1a58dd1b/26-6a64f3b2b6094.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவுக்கு புதிய சிக்கலா! அடிக்கடி வெளிநாடு சென்று வந்த முக்கியஸ்தர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-cid-law-and-order-namal-1785002637"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-cid-law-and-order-namal-1785002637</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய சட்டநடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.அத்தோடு, கோட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய சட்டநடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.</p><p>அத்தோடு, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒரு சம்பள மற்றும் அரச நிதி தொடர்பான விவகாரம் தற்போது மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இந்தநிலையிலே,&nbsp;கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் மாலக்க சந்திரதாஸ் என்பவர் கொழும்பு மத்திய புலனாய்வுப்பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.</p><p>முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தொடர்பான சம்பவம் குறித்து சிஐடியினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.</p><p>அத்தோடு, கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில்&nbsp; சுகீஸ்வர பண்டார அடிக்கடி சீனா சென்று வந்துள்ளதாகவும் அந்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்த வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ii4CdKrNkJE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-area-1784992488"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-area-1784992488</id>
            <summary type="text">புதிய இணைப்புபெல்லன்வில பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பெல்லன்வில பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் நவகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><b>மேலதிக தகவல்-அஷ்ரப் அலி</b></p><h2>உயிரிழப்பு</h2><p>களுபோவில மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>துப்பாக்கிச்சூட்டில் 55 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு- பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக&nbsp;பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed98a2c0-9df8-419c-9af4-d3d671702bf3/26-6a64d4b4846ed.webp' /></p><p>இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>மேலதிக தகவல்-ராகேஷ்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிரிஸ்வெவ காட்டுக்குள் விறகு சேகரிக்கச் சென்ற மூவர் கைது: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-arrested-for-collecting-firewood-in-miriswewa-1784999663"></link>
            <id>https://tamilwin.com/article/3-arrested-for-collecting-firewood-in-miriswewa-1784999663</id>
            <summary type="text">மிரிஸ்வெவ காட்டுப் பகுதிக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில்
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிரிஸ்வெவ காட்டுப் பகுதிக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில்
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​</p><p>திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்வெவ காட்டுப் பகுதியில்,
வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட
அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

​</p><p>யுத்த காலத்திற்கு முன்னர் தங்களது மூதாதையர்கள் மிரிஸ்வெவ மற்றும்
புளியங்குளம் ஆகிய பகுதிகளில் விவசாயம் செய்து வந்ததாகப் பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
</p><p>
இந்தக் காணிகளை மீண்டும் தங்களுக்கு மீட்டுத் தருமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கை
விடுத்து வருகின்ற போதிலும், வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களை
அப்பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23a68c6c-fe0a-4f29-aad6-ac17f081bad5/26-6a64eef201b28.webp' /></p><p>பொதுமக்கள் வருடா வருடம் அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த
போதிலும், திணைக்கள அதிகாரிகள் அவர்களை அச்சுறுத்தி, அவர்கள் மீது வழக்குத்
தாக்கல் செய்து நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதாக அப்பாவி மக்கள்
வேதனை வெளியிடுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் யாரும் தங்கவில்லை! ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-outsiders-staying-at-the-presidential-palace-1784999439"></link>
            <id>https://tamilwin.com/article/no-outsiders-staying-at-the-presidential-palace-1784999439</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.</p><h2>உத்தியோகபூர்வ அறிக்கை</h2><p>

'2025 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் சுமார் 3,089 பேரளவிலான பல்வேறு நபர்கள் தங்கியிருந்தனர்' என செய்தியொன்று வெளியாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fee928d-9fbc-484e-87aa-750193f3db30/26-6a64ee10ca2f6.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் குறித்த செய்தியை முற்றிலும் நிராகரித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகை வளாகங்களில் உள்ள ஏனைய கட்டிடங்களில் பாதுகாப்புப் பிரிவினர், ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளே தமது உத்தியோகபூர்வ தேவைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்த அதிகாரிகளில் எவரும் ஜனாதிபதி மாளிகைகளைத் தங்குவதற்காகப் பயன்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T17:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றங்களிலிருந்து தப்பவே ரணில் - சஜித் கூட்டிணைவு! அரசுக்குச் சவாலாகாது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-sajith-alliance-to-escape-crimes-1784997790"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-sajith-alliance-to-escape-crimes-1784997790</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸவும் மீண்டும் ஒன்றிணைவது தற்போதைய அரசுக்கு எந்தவிதமான சவாலையோ
அல்லது தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸவும் மீண்டும் ஒன்றிணைவது தற்போதைய அரசுக்கு எந்தவிதமான சவாலையோ
அல்லது தாக்கத்தையோ ஏற்படுத்தப்போவதில்லை என்று சுகாதார மற்றும் வெகுசன
ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அமைதியாக குறிப்பெடுத்த சஜித்&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>"முன்னர் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோதே எதையும் சாதிக்க முடியாமல்
பிரிந்து சென்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் இணைவதால் புதிதாக எதையும்
சாதித்துவிட முடியாது. இதனை ஒரு சமமான அரசியல் கூட்டிணைவாகப் பார்க்க முடியாது.</p><p>

கடந்த வியாழக்கிழமை இருவரும் எதிர்க்கட்சிகளைச் சந்தித்தபோது, ரணில்
விக்ரமசிங்க கட்டளைகளைப் பிறப்பிக்க, சஜித் பிரேமதாஸ அவற்றை அமைதியாகக்
குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதே தெரிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e74ef65-0b34-44bc-b0c9-149f17e564ac/26-6a64e79fa491c.webp' /></p><p> </p><p>ரணில் விக்ரமசிங்க தனது
அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்தி அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தித்
தன்னைத் தலைவராகக் காட்டியுள்ளார். இதன் மூலம் சஜித் பிரேமதாஸவை இரண்டாம்
இடத்துக்கும் கீழே அவர் தள்ளிவிட்டார்.
</p><p>
மேலும், ரணில் - சஜித் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவித்த நபர்களைக் கவனித்தால், அங்கிருந்த அனைவரும் ஏதேனும் ஒரு வழக்கில்
தொடர்புடையவர்களாகவோ, பிணையில் உள்ளவர்களாகவோ அல்லது சந்தேகநபர்களாகவோ மட்டுமே
இருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1663011-8cd8-4c02-8763-87a7b23577e2/26-6a64e7a056de7.webp' /></p><p>
</p><p>
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்கள் மூலம் விசாரணைகள்
தீவிரப்படுத்தப்பட்டு, வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில்,
எதிர்க்கட்சியினரின் சட்டவிரோதச் செயல்களும் குற்றப் பின்னணிகளும்
வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.</p><p> இவ்வாறான குற்றச்சாட்டுக்களிலிருந்து
தப்பிக்கும் நோக்கிலும், பயத்திலுமே சஜித், ரணில் மற்றும் நாமல் உள்ளிட்டோர்
பதற்றமடைந்து ஒன்றாகச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T16:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை எப்போதும் எனது இரண்டாவது தாய்நாடு போன்றது! சீனத் தூதுவர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sl-always-like-a-second-motherland-qi-zhenhong-1784995309"></link>
            <id>https://tamilwin.com/article/sl-always-like-a-second-motherland-qi-zhenhong-1784995309</id>
            <summary type="text">இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிவிட்டுப் பிரியாவிடை பெற்றுச்
செல்லவிருக்கும் கீ சென்ஹொங், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துக் கலந்துரையாடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிவிட்டுப் பிரியாவிடை பெற்றுச்
செல்லவிருக்கும் கீ சென்ஹொங், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><p>

சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய
தூதுவர் கீ சென்ஹொங், எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்குத்
தொடர்ந்து ஆதரவளிக்கத் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.</p><p> மேலும், இலங்கை
மக்கள் தனக்கு வழங்கிய அன்பு, அக்கறை மற்றும் விருந்தோம்பலைத் தான் எப்போதுமே
மறக்க முடியாது எனவும், "இலங்கை எப்போதும் தனது இரண்டாவது தாய்நாடு போன்றது"
எனவும் அவர் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>இருதரப்பு உறவு</h2><p>

இலங்கையில் தூதுவராக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளுக்கும், இரு
நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும்
வலுப்படுத்த அவர் வழங்கிய பங்களிப்புக்கும் சபாநாயகர் மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்தார். </p><p>அரசு முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தும், தேசிய ஒற்றுமையை
மேம்படுத்துதல், இனவாதத்திற்கு இடமளிக்காமல் அனைத்துப் பிரஜைகளையும் சமத்துவம்
மற்றும் கண்ணியத்துடன் நடத்துவதற்கான அரசின் உறுதிப்பாடு தொடர்பிலும்
சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde07ce0-db8e-496b-b8f2-9b1772829fe2/26-6a64e01ed3baa.webp' /></p><p>
</p><p>
இந்தச் சந்திப்பின்போது, இலங்கை - சீனா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்துவது குறித்துக் கருத்துப் பரிமாறப்பட்டது.</p><p> </p><p>குறிப்பாக, இலங்கையின்
போக்குவரத்துத் துறை மற்றும் வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தை தொடர்பிலும்
விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டின் நிலையான அபிவிருத்திக்குச் சீனாவின்
தொடர்ச்சியான ஆதரவையும் சபாநாயகர் கோரினார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T16:25:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி கருணாநாயக்க விரைவில் கைதாகலாம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-karunanayake-will-be-arrested-soon-1784992178"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-karunanayake-will-be-arrested-soon-1784992178</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;
நாடாளுமன்ற உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>&nbsp;விரைவில் கைது</h2><p>
</p><p>
2015 முதல் 2019 வரை, தேசிய லொத்தர் சபையின் மூன்று ஊழியர்களை ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர்களாகப் பணியாற்ற சட்டவிரோதமாகப் பணியமர்த்திய குற்றச்சாட்டின் பேரில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/542d8ce8-5ae9-4abd-a23c-1050225a68a2/26-6a64d3feb6500.webp' /></p><p>
</p><p>
வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவராக இருந்த சட்டத்தரணி ஷர்மிலா பெரேரா, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்னதாக அழைக்கப்பட்டிருந்தார்.</p><p></p><h2>நெருக்கமான வட்டாரங்கள்</h2><p> </p><p>அதன்போது சம்பவம் இது தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அதே நாளில் அவருக்குப் பிணை வழங்கியது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d679725-c89f-43bc-be2f-858b10f3a59e/26-6a64d3fe032f2.webp' /></p><p> </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, மேற்குறித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அழைக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் அவரைக் கைது செய்யவும், பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூகுள் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டொலர் அபராதம் : ட்ரம்ப் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1-billion-fine-for-google-trump-european-union-1784987736"></link>
            <id>https://tamilwin.com/article/1-billion-fine-for-google-trump-european-union-1784987736</id>
            <summary type="text">கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை
அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் 1
பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை
அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் 1
பில்லியன் டொலர் (சுமார் 890 மில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தை சட்டத்தை கூகுள் மீறியதாக இந்த அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கூகுள் நிறுவனம்</h2><p>

கூகுள் நிறுவனம் தனது தேடல் பக்கங்களில் பிற நிறுவனங்களின் சேவைகளை விடத் தனது
ஷொப்பிங், சுற்றுலா மற்றும் பிற சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், பிளே
ஸ்டோர் மூலம் பிற ஆப் உருவாக்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை
நேரடியாக வழங்குவதைத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febeba52-be44-4d87-b42c-3341943cfe9c/26-6a64c1abd37d5.webp' /></p><p>

இந்த முடிவுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைத்துச்
செயல்படுவதாகவும், அமெரிக்கா ஐரோப்பாவிற்கான பணப்பெட்டி அல்ல என்றும்
சாடியுள்ளார்.</p><p>

மேலும், சட்டவிரோதமான இந்த நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய
விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்றும், விரைவில் ஐரோப்பிய பொருட்கள் மீது
கணிசமான வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>வணிக நடைமுறைகள்</h2><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிக நடைமுறைகள் குறித்து விசாரிக்க அமெரிக்க வர்த்தகப்
பிரதிநிதி அலுவலகத்திற்கு உத்தரவிடப் போவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62e778e-9033-4367-90d7-a2e8dfd128e5/26-6a64c1ac87da0.webp' /></p><p>
</p><p>
கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் கென் வாக்கர், இந்தத்
தீர்ப்பு நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தைக் குறைக்கும் வகையில்
உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றிப் பேசுகின்றார்கள் - சாடிய பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-harini-statement-about-black-july-1784980874"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-harini-statement-about-black-july-1784980874</id>
            <summary type="text">இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான் பல
படுகொலைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே
அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான் பல
படுகொலைகள் இடம்பெற்றன, அந்தச் சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற
வேண்டியவர்கள்தான் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றி பேசுகின்றார்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று (24.07.2026) நடைபெற்ற நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில்
உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் மிகவும் கவலைக்குரியது,
துரதிர்ஷ்டவசமானது. இதனை அரசு எப்போதுமே அலட்சியப்படுத்தவில்லை. முறையான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலே இந்த மோதலுக்கும் உயிரிழப்புக்கும் காரணம்
எனக் கூற முடியாது.</p><p></p><h2>அரசியல் நோக்கத்திற்காக கொல்லப்பட்ட சிறைக்கைதிகள்</h2><p> </p><p>சிறைச்சாலை மறுசீரமைப்பை ஒரே இரவில் முன்னெடுத்துவிட
முடியாது. எனினும், கட்டமைப்பில் காணப்படும் நெரிசல் மற்றும் ஆளணிப்
பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் அரச ஆதரவுடன் திட்டமிட்ட வகையில் சிறைச்சாலைகளில் மோதல்கள்
உருவாக்கப்பட்டு, அரசியல் நோக்கத்துக்காகச் சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da555f7-ce91-4abe-bde8-7c6fc53683e3/26-6a64d6cd80f08.webp' /></p><p>
</p><p>2022ஆம் ஆண்டில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரே சிறைச்சாலைக்குள் சென்று
கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த கலாசாரமே அன்று காணப்பட்டது. ஆனால்,
தற்போதைய ஆட்சியில் அவ்வாறான நிலை கிடையாது.
</p><p>
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் சிறைச்சாலை நெரிசல் பிரச்சினை தோற்றம்
பெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர்.
குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது குறைந்தபட்சமாவது நியாயமாக நடந்துகொள்ள
வேண்டும்&nbsp; என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் 36 நாட்கள் தத்தளித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-fishermen-rescued-bay-of-bengal-1784993158"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-fishermen-rescued-bay-of-bengal-1784993158</id>
            <summary type="text">வங்காள விரிகுடா கடலில் 36 நாள்களுக்கும் மேலாகத் தத்தளித்த நிலையில் இருந்த
இலங்கை கடற்றொழிலாளர்கள்&amp;nbsp; இருவர், பங்களாதேஷின் கொக்ஸ் பாசார் மாவட்டம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்காள விரிகுடா கடலில் 36 நாள்களுக்கும் மேலாகத் தத்தளித்த நிலையில் இருந்த
இலங்கை கடற்றொழிலாளர்கள்&nbsp; இருவர், பங்களாதேஷின் கொக்ஸ் பாசார் மாவட்டம் மஹேஷ்காலி
பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில், வங்காள விரிகுடாவின்
சோனாசார் பகுதிக்கு அருகில் படகு ஒன்றில் தத்தளித்த மேற்படி இருவரையும்
பங்களாதேஷ் கடற்றொழிலாளர்கள் கண்டுபிடித்து, தமது படகில் ஏற்றி மஹேஷ்காலி
கடற்கரைக்குப் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.</p><p></p><h2>இலங்கை கடற்றொழிலாளர்கள்</h2><p>

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இலங்கையின் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய
எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது 30 வயதுடைய மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8a7151e-3a1f-45f5-911f-bf399e06c214/26-6a64d6c771df1.webp' /></p><p>

உணவு மற்றும் குடிதண்ணீர் இன்றி 36 நாள்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்த
அவர்கள், பச்சையாக மீன்களை உணவாக உட்கொண்டு உயிர் தப்பினர் என்று
விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இவர்கள் எவ்வாறு கடலில் தத்தளித்தனர் மற்றும் உண்மையில் 36 நாள்கள் வங்காள
விரிகுடாவில் கழித்தார்களா என்பது குறித்துப் பங்களாதேஷ் அதிகாரிகள் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து,
அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன என்று பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:31:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்தளத்தில் கொலையில் முடிந்த வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-worker-was-beaten-to-death-1784988001"></link>
            <id>https://tamilwin.com/article/a-worker-was-beaten-to-death-1784988001</id>
            <summary type="text">புத்தளம் மாவட்டம், முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதம்குளம் பகுதியில்
நேற்று(24) வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் அடித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் மாவட்டம், முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதம்குளம் பகுதியில்
நேற்று(24) வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் அடித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே
உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
உயிரிழந்தவரும் சந்தேகநபரும் தென்னந்தோட்டமொன்றில் தொழிலாளர்களாகப் பணியாற்றி
வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7bbdbd4-15f7-4527-a7d8-3389689c038e/26-6a64c2d918eb0.webp' /></p><p> </p><p>அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையிலேயே
இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
</p><p>
தாக்குதலின்போது காயமடைந்த சந்தேகநபர், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ்
புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
சம்பவம் குறித்து முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:29:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: சகோதரி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-killed-accident-puliyankulam-sister-injured-1784990961"></link>
            <id>https://tamilwin.com/article/youth-killed-accident-puliyankulam-sister-injured-1784990961</id>
            <summary type="text">வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் அவரது சகோதரி
படுகாயமடைந்த நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p>அத்துடன் அவரது சகோதரி
படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.</p><p>குறித்த விபத்தானது இன்று(25.7.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>&nbsp;விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து வவுனியா நோக்கி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்களில்
பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் சென்று
கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது குறித்த
மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95d9e74b-3d1c-435b-9c50-02164b1c7124/26-6a64ccf3e99e9.webp' /></p><p>

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில்
சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
</p><p>
அவரது சகோதரி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:11:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் சர்ச்சையில் புதிய திருப்பம்! முடிவுக்கு வந்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cockroach-janta-party-withdraws-protest-1784991478"></link>
            <id>https://tamilwin.com/article/cockroach-janta-party-withdraws-protest-1784991478</id>
            <summary type="text">நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்ததாக காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p></p><h2>அடுத்தகட்ட பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் காக்ரோச் ஜனதா கட்சியினர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2c795c-b888-4210-bcc5-6042a46f0e59/26-6a64d10f46add.webp' /></p><p>
</p><p>
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இருதரப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.</p><p>

 மேலும், நான்கு வாரங்களுக்குள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.</p><p></p><h2>நீட் வினாத்தாள் கசிவு</h2><p>
</p><p>
இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நடைபெற்று வந்த போராட்டத்தை முடித்துக் கொள்வதாக காக்ரோச் ஜனதா கட்சியினர் அறிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70a22828-a2c0-4dd4-ba7c-77fc450d6df9/26-6a64d10ff12e1.webp' /></p><p>

இதேவேளை, நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, "அது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை" என தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T15:07:00+00:00</updated>
        </entry>
    </feed>
