<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-31T00:47:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்.. வெளியான முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-tax-revenue-year-2-71-trillion-1785455353"></link>
            <id>https://tamilwin.com/article/government-tax-revenue-year-2-71-trillion-1785455353</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 வீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.&amp;nbsp;நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 வீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.&nbsp;</p><p>நிதி அமைச்சின் நிதிக்கொள்கை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொது நிதி ஆய்வறிக்கையின்படி, இக்காலப்பகுதியில் வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளது.

</p><p> </p><p>2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியிருந்தது.</p><p> இருப்பினும், இம்முறை உபரி பதிவாகியமைக்கு அரச வருமானம் 27 வீதம் அதிகரித்தமையும், அரச செலவினங்கள் சீரமைக்கப்பட்டமையுமே முக்கிய காரணம் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>பற்றாக்குறை&nbsp;</h2><p>

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருவாய் 2,710.6 பில்லியன் ரூபாவாக (2.71 டிரில்லியன் ரூபா) அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4569de60-2e2e-4638-ab41-70c5e15bca3e/26-6a6be695e552a.webp' /></p><p> </p><p>இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.9 வீதம் அதிகரிப்பாகும். இதன்படி, ஆண்டின் மொத்த வரி வருவாய் இலக்கான 4.91 டிரில்லியன் ரூபாவில் 55.2 சதவீதத்தை முதல் ஆறு மாதங்களிலேயே அரசாங்கம் எட்டியுள்ளது.</p><p> வரி வருவாயில் அதிக பங்களிப்பை இலங்கை சுங்கம் வழங்கியுள்ளதுடன், அது 1,290 பில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. இது மொத்த வரி வருவாயில் சுமார் 48 சதவீதமாகும். இரண்டாவது அதிகபட்ச பங்களிப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கியுள்ளதுடன், அது 1,248 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.</p><p>இது மொத்த வரி வருவாயில் 46 சதவீதமாகும். தவிர, மதுவரித் திணைக்களம் 138 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளதுடன், ஏனைய வருவாய் வழிகளிலிருந்து 35 பில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மொத்த வரி வருவாய்&nbsp;</h2><p>
</p><p>
சுங்க வருவாயில் பிரதான வருவாய் மூலமாக இறக்குமதிகளின் மீது விதிக்கப்பட்ட பெறமதி சேர் வரி (VAT) அமைந்துள்ளதுடன், இதன் மூலம் இந்த 6 மாதங்களில் 443.7 பில்லியன் ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 354 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 25 வீதம் அதிகரிப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22369a50-89d5-4921-87ae-4a08caf94fc9/26-6a6be696edbe0.webp' /></p><p> </p><p>மோட்டார் வாகன வரியிலிருந்தான வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், அது 129.1 பில்லியன் ரூபாவிலிருந்து 106.5 வீதம் அதிகரித்து 266.4 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. </p><p>சுங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருவாயில் 63 சதவீதம் மோட்டார் வாகன இறக்குமதி வரியிலிருந்தே பெறப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் சேகரிக்கப்பட்ட வருவாயில் வருமான வரி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதுடன், அது 568.4 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.</p><p></p><h2>இலங்கை பொருளாதாரம்</h2><p> </p><p>இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16 சதவீத அதிகரிப்பாகும். கார்ப்பரேட் வருமான வரி 26 சதவீதத்தாலும், தனிநபர் வருமான வரி 15 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e04045-67ff-4b0f-8870-b61d00b53314/26-6a6be697a5c70.webp' /></p><p> மேலும், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் பெறமதி சேர் வரி (VAT) வருவாய் 26 சதவீதமும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 15 சதவீதமும் அதிகரித்துள்ளன. </p><p>அதேவேளை, மதுபானங்கள் மீது மதுவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட மதுவரி 27 சதவீதம் அதிகரித்து 137.5 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

வரி வருவாய்க்கு மேலதிகமாக, வரி அல்லாத வருவாயும் 43.6 சதவீதம் அதிகரித்து 243.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. </p><p>இருப்பினும், அரசாங்கத்தின் மொத்த செலவினம் 7.9 வீதம் அதிகரித்து சுமார் 2.95 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், மீண்டெழுஞ் செலவினம் 6.5 வீதம் மற்றும் மூலதனச் செலவினம் 23.6 வீதம் அதிகரித்துள்ளன. </p><p>இதனிடையே, வட்டி செலுத்துகைகள் 2 வீதம் குறைந்து 1,234.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 4.7 சதவீத வளர்ச்சியை விட, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக பொது நிதியியல் ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.</p>]]></content>
            <updated>2026-07-31T00:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gajendrakumar-meets-valvettithurai-farmers-1785453792"></link>
            <id>https://tamilwin.com/article/gajendrakumar-meets-valvettithurai-farmers-1785453792</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில்
வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுக்கும் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில்
வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுக்கும் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்திப்பபொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள்
தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மக்களின் கோரிக்கை</h2><p>
</p><p>

அத்துடன்&nbsp; புகையிலைச் செய்கை தடையிலிருந்து முழுமையாக மீள 3 - 4 வருட கால அவகாசம்
வழங்கப்பட வேண்டும் என்றும்&nbsp; புகையிலைக்குப் பதிலாகச் சிறந்த மாற்றுப் பயிர் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76a4859d-d3f5-4635-ba16-2416fc467322/26-6a6bdda25b16d.webp' /></p><p>மேலும் மாற்றுப் பயிராகச் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டு சந்தைக்குக் கொண்டுவரும்
வேளையில், அரசாங்கம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதால் ஏற்படும்
நஷ்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.</p><p>இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் விவசாயிகளின் பிரச்சினையை எதிர்வரும்
நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கவுள்ளதாகவும், விசேட பிரேரணை ஒன்றையும்
கொண்டுவர உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T23:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/festival-of-historic-mamangeswarar-temple-1785451746"></link>
            <id>https://tamilwin.com/article/festival-of-historic-mamangeswarar-temple-1785451746</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த
மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகி, 12 ஆம்
திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த
மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகி, 12 ஆம்
திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு
மாநகரசபையினால் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இந்த மஹோற்சவக் காலத்தை ஒட்டி, ஆலயத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான
அடியார்களின் நலன் கருதியும், அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும்
முகமாகவும் மட்டக்களப்பு மாநகர சபை பல்வேறு விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்து
வருகின்றது.
</p><p>இதன் கீழ் இன்றைய தினம் மாநகரசபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்களின்
பங்குபற்றுதலுடன் மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இந்த
சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இந்த சிரமதான பணியில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் மற்றும் மாநகரசபை
உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
</p><p>ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, சுவாமி எழுந்தருளி
தீர்த்தமாடுவதற்காக தீர்த்தக்குளத்திற்குச் செல்லும் வீதி மிகவும்
குறுகியதாகக் காணப்பட்டமையால், அதனை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிகள் மாநகர
சபையினால் பொறுப்பேற்கப்பட்டு, தற்போது அதன் இறுதிக்கட்டப் பணிகள் மிகத்
தீவிரமாக நடைபெற்று வருகின்ற அதேநேரம் இன்று காலை மாபெரும் சிரமதான பணிகள்
முன்னெடுக்கப்பட்டன.</p><p>
தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு நோயின் தீவிரம் மட்டக்களப்பு
மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இதனைக் கருத்திற் கொண்டு, ஆலய வளாகத்தில் அடியார்களுக்கு டெங்குத் தொற்று
ஏற்படாமல் தடுப்பதற்கான விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் இன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு அமைய,
இந்த ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக
மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுதல், நீர்
தேங்கி டெங்கு வீரியமடையக்கூடிய குழிகள் மற்றும் கிடங்குகளை மூடிப்
பராமரித்தல் போன்ற துப்புரவுப் பணிகள் மாநகர சபையின் அனைத்து
உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று
வருகின்றன.</p><p>
இது தவிர, மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 20 வட்டாரங்களிலும் நிலவும்
டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரப் பிரிவினரால்
தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் வாராந்தம் வட்டாரங்கள் தோறும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-30T22:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடமராட்சி காட்டுப் பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crime-division-finds-mystery-packages-vadamaratchi-1785449936"></link>
            <id>https://tamilwin.com/article/crime-division-finds-mystery-packages-vadamaratchi-1785449936</id>
            <summary type="text">வடமராட்சி - நெல்லியடி
பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான
16 kg கேரள கஞ்சா பொதிகள் யாழ் குற்றத்தடுப்பு பிரிவினால்
கைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமராட்சி - நெல்லியடி
பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான
16 kg கேரள கஞ்சா பொதிகள் யாழ் குற்றத்தடுப்பு பிரிவினால்
கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p> இந்த சட்ட விரோத கேரள கஞ்சா இன்றைய தினம்(31.07.2026) கொழும்பிற்கு
கைமாற்றுவதற்கு இருந்த நிலையில்

அரச வேவுச் சேவையினர்(SIS) அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p></p><h2>சட்டவிரோத செயல்</h2><p> இதன் பின்னணியில் பிரபல
அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக
சந்தேகிப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88d15e4c-8ee1-4425-8991-bd5836a8bcdd/26-6a6bce7a9665e.webp' /></p><p> இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்திதுறை - வல்லிபுரம் கடற்கரை
பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கும் மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே
நெல்லியடி பிரதேசத்தில் கண்டுபிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த சட்டவிரோத செயல் தொடர்பான மேலதிக
விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T22:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள அரசின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-government-project-implemented-in-trincomalee-1785448553"></link>
            <id>https://tamilwin.com/article/new-government-project-implemented-in-trincomalee-1785448553</id>
            <summary type="text">திருகோணமலை சீனக் குடா விமான
நிலையத்தை அபிவிருத்தி செய்யவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள்
மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை சீனக் குடா விமான
நிலையத்தை அபிவிருத்தி செய்யவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள்
மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்று(30.07.2026) திருகோணமலை துறைமுகப் பகுதியை பார்வையிடச் சென்றிருந்த போதே 
அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>சீனக் குடா விமான நிலையம்</h2><p>

இந்த விஜயத்தின் போது அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையிலான
உயர்மட்டக் குழுவினர் முதன்முதலாக சீனக் குடா விமான நிலையத்திற்கு
சென்றுள்ளனர்.
</p><p>
இதன் போது குறித்த குழுவினர் விமான நிலைய முனையத்தில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய
அபிவிருத்தித் தேவைகள் குறித்து டபிள்யூ. பி.
பெரேராவுடன் இணைந்து ஆராய்ந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26529e41-efd4-4b3a-b1a9-4d5c5fc5eb9f/26-6a6bc8ea15766.webp' /></p><p>எதிர்காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை
அதிகரிக்கும் வகையில் இந்தச் சீனக்குடா விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசு
திட்டமிட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான பயன்பாட்டிலில்லாத
பழமையான முனையங்களான சிலோன் ஜெட்டி, ஓல்ட் (Old) ஜெட்டி, டவுன் ஜெட்டி, 1947
ஜெட்டி, மன்கோ ஜெட்டி மற்றும் பொறியியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட
மவுத்தோ ஜெட்டி உள்ளிட்டவற்றின் பௌதிக நிலையை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்
நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்துள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T22:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் இராஜமணிக்கு இறுதி அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-tributes-paid-to-itak-veteran-rajamani-1785445211"></link>
            <id>https://tamilwin.com/article/final-tributes-paid-to-itak-veteran-rajamani-1785445211</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரான இராஜமணியின் இறுதி
அஞ்சலி நிகழ்வில், திருகோணமலை மாவட்டக் கிளையின் உப தலைவர் விஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரான இராஜமணியின் இறுதி
அஞ்சலி நிகழ்வில், திருகோணமலை மாவட்டக் கிளையின் உப தலைவர் விஜயநாதம்
விஜயகுமார் கலந்து கொண்டு தனது இறுதி
அஞ்சலியை செலுத்தியுள்ளார்.</p><p>அவருடைய மறைவு திருகோணமலை மாவட்டத்திற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.</p><p></p><h2>ஆத்மா சாந்தி</h2><p>

தமிழ் மக்களின் அரசியல், சமூக மற்றும் பொது சேவைக்காக அர்ப்பணிப்புடன்
பணியாற்றிய இராஜமணியின் சேவைகள் என்றும் மக்களின் நினைவில்
நிலைத்திருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be16a438-4784-4af5-86de-4e3fb476b2fe/26-6a6bc36eabf6a.webp' /></p><p>

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து வாடும்
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவருக்கும்
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.&nbsp;</p><p>இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், கட்சிப் பிரமுகர் குமார் ஜெயக்குமாரன், மாவட்ட மற்றும் பிரதேசக் கட்சி நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மறைந்த இராஜமணிக்கு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தியள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T22:43:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு FIFA விற்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uefa-sends-strong-warning-to-fifa-1785443656"></link>
            <id>https://tamilwin.com/article/uefa-sends-strong-warning-to-fifa-1785443656</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு முன்னோக்கி கொண்டு
சென்றா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு
விற்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு முன்னோக்கி கொண்டு
சென்றால், அதன் அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிப்போம் என ஐரோப்பிய
கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
</p><p>நேற்று(29.07.2026) நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், அதன் 55 உறுப்பினர் நாடுகளும்
ஒருமனதாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளன.</p><p></p><h2>ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு&nbsp;</h2><p>

உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கியமான போட்டிகளின் உரிமைகளைத் தனியார்
முதலீட்டாளர்களுக்கு மாற்றும் ஃபிஃபாவின் திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து
கூட்டமைப்பு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p>

இது குறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"உலகக் கிண்ணத்தை ஒரு வணிக முதலீட்டுப் பொருளாகப் பார்க்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d7ebfe-2458-4b32-a909-1692470eb136/26-6a6bb9322263e.webp' /></p><p> இது
கால்பந்து விளையாட்டின் மிகப்பெரிய வரலாற்றுச் சொத்துக்களில் ஒன்றாகும். இதன்
எந்தவொரு பகுதியையும் தனியார் முதலீட்டாளர்களுக்குக் விட்டுக் கொடுக்கக்
கூடாது. உலகக் கிண்ணம் ஒருபோதும் விற்பனைக்கு உரியது அல்ல," எனத்
திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், இந்தத் திட்டம் கைவிடப்பட்டு, இனி வரும் காலங்களில் போட்டிகளையோ
அல்லது அதன் நிர்வாகத்தையோ தனியாருக்குத் தரமாட்டோம் என்று உறுதியளிக்கும்
வரை, ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் எந்தவொரு தேசிய அணியும் ஃபிஃபா
நடத்தும் எந்தப் போட்டியிலும் பங்கேற்காது என்றும் எச்சரித்துள்ளது.</p><p></p><h2> சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு</h2><p>
ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, 'ஃபிஃபா ஃபார்வர்ட் என்டர்பிரைஸ்' (FFE)
என்ற வணிகச் துணை நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் உலகக் கிண்ணம் மற்றும் பிற
வணிக நடவடிக்கைகளைக் கவனிக்கத் திட்டமிட்டிருந்தார்.
</p><p>
கால்பந்து அமைப்புகளுடன் எந்தவொரு கலந்தாலோசனையும் செய்யாமல், இரகசியமாக இந்த
முடிவை எடுக்க முயன்றதாக ஃபிஃபா மீது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு குற்றம்
சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c7cfb0-4d47-40c1-b4e8-64965b9170ce/26-6a6bb93171795.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இந்த புதிய நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் ஃபிஃபாவிடமே
இருக்கும் என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சிறுபான்மை பங்குகள்
மட்டுமே வழங்கப்படும் என்றும் ஃபிஃபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, தனது
புறக்கணிப்பு முடிவில் உறுதியாக உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T22:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக வெளியே செல்லமுடியாத நிலை ஏற்படும் - அநுர அரசுக்கு கம்மன்பில எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-warns-govt-over-president-s-safety-1785435185"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-warns-govt-over-president-s-safety-1785435185</id>
            <summary type="text">ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது பதிவு செய்யப்பட்டுள்ள பண மோசடி வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது பதிவு செய்யப்பட்டுள்ள பண மோசடி வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் 15 மில்லியன் ரூபா முதலீடு தொடர்பாக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
</p><p>
வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த பண மோசடியானது 'என் கன்சல்டன்ஸ்' நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளானது ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை ஆய்வு செய்து கூடுதல் தகவல்களை பெற புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளனர். </p><p>

அத்துடன் வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் வழக்கு தொடர்பிலான எந்தவித அறிவித்தல்களும் வெளியிடப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாமல் ராஜபக்ச மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் தொடர்பான மேலதிக விபரங்களை வழங்குகிறது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QADPTrbaP6w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>[2CXIFBY<b>]</b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T22:41:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-being-stung-by-wasp-jaffna-1785450616"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-being-stung-by-wasp-jaffna-1785450616</id>
            <summary type="text">யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.10ஆம் வட்டாரம், புங்குடுத்வைச் சேர்ந்த&amp;nbsp;67 வயதான கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ்
சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>10ஆம் வட்டாரம், புங்குடுத்வைச் சேர்ந்த&nbsp;67 வயதான கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ்
சேர்ச்சில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை</h2><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் புங்குடுதீவு காட்டுக்குள் பனை வெட்டுவதற்காக சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4753c2ea-2548-4f25-a266-e488d8893eff/26-6a6bd1d057c00.webp' /></p><p>
</p><p>இதன்போது கருக்குளவி இவர்மீது கொட்டியுள்ளது. இந்நிலையில் அவரது மகன் அவரை
புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.&nbsp;</p><p>
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு
உயிரிழந்துள்ளார்.</p><p>
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T22:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி நிமிடங்களில் சீன தூதுவரின் கைகளை பிடித்த மகிந்த - கோட்டா: நடக்கப்போவது என்ன..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-gotabaya-chinese-ambassador-final-minutes-1785439433"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-gotabaya-chinese-ambassador-final-minutes-1785439433</id>
            <summary type="text">இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் அண்மையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.&amp;nbsp;இந்நிலையில், அண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் அண்மையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.&nbsp;</p><p>இந்நிலையில், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிரமப்பட்டு நடந்து செல்லும் காணொளி ஒன்று வெளியானது.&nbsp;</p><p>குறித்த காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், அவரின் ஆதரவாளர்கள் அவர் குறித்து வருத்தம் தெரிவித்து வந்தனர்.&nbsp;</p><p>அதேநேரம், பல தமிழ் மக்கள் வெளியிட்ட கருத்துக்கள் குறிப்பாக இறுதி போர் காலத்தில் தனது உறவினர்களை இழந்தவர்களின் வருத்தம் கலந்த கருத்துக்கள் கவனத்தை ஈர்த்தன.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-7HPFvKe7PQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பில் கோர விபத்தில் பலியான இளைஞர்கள்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cctv-footage-2-teens-killed-negombo-crash-1785428597"></link>
            <id>https://tamilwin.com/article/cctv-footage-2-teens-killed-negombo-crash-1785428597</id>
            <summary type="text">அதிவேகத்தில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேகத்தில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><p>
நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியில், போலவலன பகுதியில் நேற்று இரவு இரண்டு இளைஞர்களின் உயிரைப் பறித்த கொடூர வீதி விபத்து தொடர்பான அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p>கன்டெய்னர் முனையத்திற்குள் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்த பிரைம் மூவர் ரக லொறியின் டிரெய்லர் பகுதியில், அதிவேகமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியது அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p></p><h2>தீ வைக்கப்பட்ட வாகனம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த விபத்தின் காரணமாக, மோட்டார் சைக்கிள்களை செலுத்தி வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b30cbb8-6440-4471-9844-ae3d0ae1a643/26-6a6b8023ab3c9.webp' /></p><p>

விபத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் சிலர் அந்த பிரைம் மூவர் லொறிக்கு தீ வைத்துள்ளனர். </p><p>நீர்கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் படையினரும், கட்டான பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
</p><p>
இந்த உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து மற்றும் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஆகிய இரண்டும் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு, தாகொன்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தலிஷ நிம்னெத் சிறிவர்தன மற்றும் 19 வயதுடைய கவிந்து ஹஷான் சோமதிலக்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் உள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளைத் திரும்பப் பெற மியன்மார் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/myanmar-agrees-to-repatriate-5-000-rohingya-1785442661"></link>
            <id>https://tamilwin.com/article/myanmar-agrees-to-repatriate-5-000-rohingya-1785442661</id>
            <summary type="text">மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் திரும்பப்
பெற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார்
இப்ராஹிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் திரும்பப்
பெற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார்
இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மலேசியாவில் உள்ளூர் மக்களுக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கும் இடையே
சமீபகாலமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>5,000 அகதிகள்</h2><p>
</p><p>
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், மியன்மாருடன்
மலேசியா வைத்துள்ள நல்லுறவு காரணமாகவே இந்தப் பேச்சுவார்த்தை சாத்தியமானதாகக்
குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c3c2c7-2f3c-48c1-ae18-eff739ed5a70/26-6a6bb396e9d3b.webp' /></p><p>மியன்மாருக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள 5,000 அகதிகளைக் கண்டறிந்து,
அடையாளம் கண்டு, பரிசீலனை செய்யும் பொறுப்பு தனது அமைச்சகத்திடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில்
தெரிவித்துள்ளார். </p><p>இதன் பின்னரே மியன்மாருடன் வெளியுறவுத்துறை மூலம் இறுதிப்
பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

பெப்ரவரி மாத நிலவரப்படி, மலேசியாவில் உள்ள ஐநா அகதிகள் அமைப்பில் சுமார்
1,26,000 ரோஹிங்கியா அகதிகள் பதிவு செய்துள்ளனர்.</p><p></p><h2>ஐ.நா அகதிகள் அமைப்பு</h2><p>
</p><p>
மலேசியாவில் சட்டப்பூர்வ அகதிகள் சட்டங்கள் இல்லாததால், அவர்கள் அனைவரும்
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்படுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9262c1f8-d9e5-4b74-aaae-79a36563b363/26-6a6bb397a94eb.webp' /></p><p>தற்போது மியன்மாரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அகதிகளை
அங்குத் திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஐநா அகதிகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
</p><p>சர்வதேசச் சட்டங்களின்படி எந்தவொரு நபரும் ஆபத்தான சூழல் நிலவும் நாட்டிற்கு
வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படக் கூடாது என்றும் அது
சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவின் வரைபடம்: ஆப்பிரிக்க நாடுகள் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wrong-african-names-on-us-summit-map-spark-row-1785440802"></link>
            <id>https://tamilwin.com/article/wrong-african-names-on-us-summit-map-spark-row-1785440802</id>
            <summary type="text">பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை
சமர்ப்பித்த வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளின்
பெயர்களும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை
சமர்ப்பித்த வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளின்
பெயர்களும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்க வெளியுறவுத்துறை தனது புதிய சுகாதார ஒப்பந்தங்கள் குறித்துப்
பேசியபோது திரையில் தவறான வரைபடம் தோன்றியுள்ளது.</p><p></p><h2>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்</h2><p>
</p><p>
மாநாட்டில் பங்கேற்றவர்கள் இதன் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில்
பகிர்ந்ததை அடுத்து இந்த விடயம் பூதாகரமானது.
</p><p>
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வில், அந்த வரைபடத்தில் OpenAI
நிறுவனத்தின் வாட்டர்மார்க் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0258641f-4c9d-4d82-ab06-ad176461916d/26-6a6bac6b04a67.webp' /></p><p>இதன் மூலம், அந்த வரைபடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி
வருவதாக ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த குளறுபடி குறித்து முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க
வெளியுறவுத்துறை, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அவசர அவசரமாக ஸ்லைடுகளை
மாற்றியபோது பணியாளர் ஒருவரால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாகக் கூறியுள்ளது.</p><p></p><h2>வரைபடக் குளறுபடி</h2><p>

கடலோர நாடான நைஜீரியா, சஹாரா பாலைவனத்திற்குள் இருப்பது போல்
காட்டப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக் நாடு, ஆப்பிரிக்காவின் கொம்பு
பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. </p><p>அதேபோல், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி
கோஸ்ட் நாடு, கண்டத்தின் முற்றிலும் எதிர் திசையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31a50e7b-4ce3-433e-a782-4bda83c2932c/26-6a6bac6babcaa.webp' /></p><p>

இந்த ஸ்லைடை உருவாக்கியவருக்கும், அதை அங்கீகரித்தவருக்கும் ஆப்பிரிக்க
நாடுகள் எங்கு இருக்கின்றன என்பதே தெரியவில்லை என்று சர்வதேச ஆய்வாளர்கள்
விமர்சித்துள்ளனர்.</p><p>

இருப்பினும், இந்த வரைபடக் குளறுபடியைத் தாண்டி மாநாட்டின் விவாதங்கள்
பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாகவும், எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில்
அமெரிக்கா தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை
தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழரசுக் கட்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-against-tamil-nadu-party-adjourned-1785437770"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-against-tamil-nadu-party-adjourned-1785437770</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த கட்டளையானது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
</p><p>இந்த கட்டளையானது நேற்று(30.07.2026) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தினால்&nbsp; பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்கு&nbsp;ஒத்திவைப்பு</h2><p>இந்தக் கட்டளைக்குப் பின்னரே அடுத்த கட்டமாக மூல வழக்கு மீதான விவகாரத்தை
நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

வழக்கில் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி
இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பில் தமது எழுத்துமூல சமர்ப்பணத்தை
தாமே முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ff2ed11-cc6b-4dda-830f-8f9eb127db6c/26-6a6ba58a51c92.webp' /></p><p>

எதிராளிகளான தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின்
நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் முன்னைய பொதுச்செயலாளர் மருத்துவர்
சத்தியலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் எழுத்து மூல
சமர்ப்பணங்களை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.
</p><p>அத்துடன் ஏனைய எதிராளிகளான சிறீதரன் எம்.பி, குகதாசன் எம்.பி, சீ.யோகேஸ்வரன்
ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரனும், வழக்காளி தரப்பில்
வழக்காளியின் சட்டத்தரணியும் இந்த விவகாரத்தையொட்டி தமது எழுத்து மூல
சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.</p><p>இதனையடுத்து இந்த விவகாரத்தையொட்டி
நீதிமன்றின் கட்டளை ஓகஸ்ட் 28ஆம் திகதி வழங்கப்படும் எனத் தெரிவித்து நீதிபதி
வழக்கை ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சுகாதார அமைப்பை முற்றிலுமாக ஒதுக்கிய ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-administration-quits-who-completely-1785436462"></link>
            <id>https://tamilwin.com/article/trump-administration-quits-who-completely-1785436462</id>
            <summary type="text">அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) வழங்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) வழங்கப்பட்ட நிதியை முழுமையாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. </p><p>இதனால் WHO-க்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><h2>தடுப்பூசி விநியோகம்</h2><p>
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுப்படி, சுகாதாரத்துறை அமைச்சர் ரொபர்ட்
கென்னடி ஜூனியர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் காவி
அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதை அமெரிக்க நிதியுதவிக்கான
நிபந்தனையாக முன்வைத்துள்ளனர்."</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c09b60-c7f7-4c4f-9cfe-58c8763ceeb9/26-6a6b9c24965b3.webp' /></p><p> உலகெங்கிலும் தடுப்பூசி விநியோகத்தை விரிவுபடுத்தும் இந்த சர்வதேச
திட்டத்திற்கு மீண்டும் நிதியுதவி வழங்குமாறு வலியுறுத்தி வந்த குடியரசுக் கட்சி
செனட்டர் சூசன் காலின்ஸ், இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
</p><p>
மேலும், தடுப்பூசிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து, மாற்று
முறைகளை நோக்கிய கூட்டாண்மையை உருவாக்க காவி அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உலக சுகாதார அமைப்பு</h2><p>
</p><p>
உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால மோதல் போக்கின்
தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9ffd61f-8492-437f-8467-875be28e3472/26-6a6b9c23c90f6.webp' /></p><p>ஏற்கனவே கடந்த 2025 ஜனவரியில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, உலக
சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும் என்றும், அதற்கான நிதி
நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படுவதால், போலியோ,
காசநோய், எச்.ஐ.வி (HIV), மலேரியா மற்றும் தட்டம்மை போன்ற நோய்களைத் தடுக்கும்
திட்டங்களும், காசா, சூடான் போன்ற போர் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் அவசர
மருத்துவ உதவிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என நிபுணர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து அதிரடியாக இருவர் கைது - சந்தேக நபர்களிடம் இருந்த மீட்கப்பட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-held-in-batticaloa-with-stolen-goods-1785426076"></link>
            <id>https://tamilwin.com/article/two-held-in-batticaloa-with-stolen-goods-1785426076</id>
            <summary type="text">மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்வையிடுவதற்காக வந்த அவரது சகோதரன் மற்றும் நண்பர் ஆகிய இருவரையும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்வையிடுவதற்காக வந்த அவரது சகோதரன் மற்றும் நண்பர் ஆகிய இருவரையும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த கைது நடவடிக்கையானது நேற்றை தினம்(19.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைது செய்யப்பட்டோர்</h2><p>
</p><p>

குறித்த சிறைக்கைதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவராவார். </p><p>இவரை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்த நிலையிலேயே அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய இருவரும் போதைப்பொருட்களுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb44ca16-5cec-4ff0-97d1-c95e0f647cc3/26-6a6b8b722a86b.webp' /></p><p>

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி 7 அரைக் கிலோ கொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலை சம்பவத்தை அடுத்து அவர் உட்பட அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>போதைப்பொருள் வியாபரி</h2><p>இதனையடுத்து குறித்த சகோதரனை பார்வையிட அவரது தம்பியும் அவரின் நண்பன் ஆகிய இருவரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.</p><p> </p><p>

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமைய பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c3427d-3754-4304-a4a1-3381a6c6bbbb/26-6a6b8b72cf602.webp' /></p><p> </p><p>

இதன்போது அங்கிருந்த தொட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிக்கிராம் ஹெரோயின் 500 மில்லி கிராம் ஐஸ் போதைபொருட்களுடன் கைது செய்துள்ளனர். </p><p>

இதில் போதைப்பொருள் வியாபரியின் சகோதரன் ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் வெளியே வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p> 



</p>]]></content>
            <updated>2026-07-30T20:49:21+00:00</updated>
        </entry>
    </feed>
