<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-13T05:47:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை ஆரம்பிக்க ஆளுநரின் கருத்தையும் மீறி முட்டுக்கட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-advice-ignored-aquaculture-project-stall-1786598896"></link>
            <id>https://tamilwin.com/article/governor-advice-ignored-aquaculture-project-stall-1786598896</id>
            <summary type="text">மக்களுக்கு நன்மை பயக்கும் பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை சிலர் தமது
தனிப்பட்ட பிரச்சினையால் எதிர்ப்பதாகவும், அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால்
ஊர்காவற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்கு நன்மை பயக்கும் பொதுநல மீன்வளர்ப்பு திட்டத்தை சிலர் தமது
தனிப்பட்ட பிரச்சினையால் எதிர்ப்பதாகவும், அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால்
ஊர்காவற்துறை - பருத்தியடைப்பு கிராமமானது வளர்ச்சியுறும் என அந்த பகுதி
மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
</p><p>
அந்த திட்டம் தொடர்பான கூட்டமானது நேற்று(12.08.2026) ஊர்காவற்துறை பிரதேச செயலாளர்
தலைமையில், பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மீன்வளர்ப்பு திட்டம்</h2><p> </p><p>

இதில் ஊர்காவற்துறை பிரதேச
சபையின் தவிசாளர், நக்டா நிறுவனத்தினர், சுற்றுச்சூழல் அதிகாரசபையினர்,
நீரியல் வள திணைக்களத்தினர், ஊர்காவற்துறை பிரதேச செயலக உதவித் திட்டப்
பணிப்பாளர், பருத்தியடைப்பு கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்
கலந்துகொண்டுள்ளனர்.
</p><p>
இருப்பினும் நேற்றைய கூட்டத்திலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது
தொடர்பான தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. 

இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40ae77ec-d3c1-434e-a694-0fe2cccb1118/26-6a7d5672b6c7f.webp' /></p><p> </p><p>பொதுநல மீன்வளர்ப்பு திட்டம் தொடர்பான பிரச்சினை இரண்டரை வருட காலமாக
இடம்பெறுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு இதுவரைக்கும்
எடுக்கப்படவில்லை. </p><p>இதுவரைக்கும் 15 கூட்டங்கள் இது குறித்து இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஆளுநரின் பங்கேற்புடனும் இது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது.
</p><p>இதன்போது ஆளுநர், இந்த திட்டம் தொடர்பான விளக்கத்தை சரியான விதத்தில்
மக்களிடம் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் திணைக்களங்களுக்கு உத்தரவிட்டார்.</p><h2>சுற்று நிருபம்</h2><p> </p><p>ஆனால்
இதுவரை எமது கிராமத்தில் இந்தத் திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பது
தொடர்பான கூட்டம் இடம்பெறவில்லை.

2024 ஆம் ஆண்டு 6ஆம் மாதம் மீன்களை கடலிலேயே வளர்ப்பது தொடர்பான சுற்று நிருபம் எமக்கு
கிடைக்கப்பெற்றது.</p><p> 

தற்போது அதனை மாற்றி தரையில் மீன்களை வளர்க்க
திட்டமிடப்பட்டது. தற்போது பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,
எதிர்வரும் 27ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றினை எமது ஊரில் நடாத்துவதற்கு
திட்டமிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4429ff-7a7d-43c4-9d98-08820f060e86/26-6a7d5671ce27f.webp' /></p><p> </p><p>

இந்த கூட்டத்தினை ஒன்றரை வருடத்திற்கு முன்னரே நடத்தி
இந்த திட்டத்தினை ஆரம்பித்திருக்கலாம். இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம் என
நாங்கள் கருதுகின்றோம்.
</p><p>
இந்தத் திட்டத்தினை செய்வதால் எமது ஊரில் வீதி அமைக்கப்படும், மின்சார வசதி
கிடைக்கும். மேலும் கட்டட வசதிகளும் கிடைக்கின்றன.
</p><p>
 200 வருடங்களாக காடாக இருக்கின்ற
இடத்தையே நாங்கள் கேட்கின்றோம். தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாட்டினாலேயே
இந்த திட்டத்தினை தடுக்கின்றனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எனது
ஊரில் முன்னேற்றம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T05:42:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கும் சீனா : புதிய சீனத்தூதர் வழங்கியுள்ள உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-will-prioritize-sri-lanka-in-diplomacy-1786597547"></link>
            <id>https://tamilwin.com/article/china-will-prioritize-sri-lanka-in-diplomacy-1786597547</id>
            <summary type="text">சீனா எப்போதும் தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை
அளிக்கிறது என இலங்கைக்கான புதிய சீன தூதர் வெய்
ஹுவாக்சியாங் தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா எப்போதும் தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை
அளிக்கிறது என இலங்கைக்கான புதிய சீன தூதர் வெய்
ஹுவாக்சியாங் தெரிவித்துள்ளார்
</p><p>
இலங்கைக்கு நேற்று (12.08) வருகை தந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>இந்திய பெருங்கடலின் முத்து</h2><p>'இந்திய பெருங்கடலின் முத்து' என்று அழைக்கப்படும் ஜனநாயக சோசலிசக்
குடியரசான இலங்கைக்கு, மக்கள் குடியரசு சீனாவின் முழு அதிகாரமும் பொறுப்பும்
கொண்ட தூதுவராக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்களால் நியமிக்கப்பட்டிருப்பது
எனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமும் பாக்கியமும் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b8c99a7-c019-4073-8c75-9bca833cd7b3/26-6a7d566888f93.webp' />&nbsp;</p><p> நீண்ட பாரம்பரியமும்
புகழ்பெற்ற நாகரிகமும், கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகளும், கனிவான
மற்றும் விருந்தோம்பல் பண்பைக் கொண்ட மக்களையும் கொண்டுள்ள இந்த வளமான பூமி
என் உள்ளத்தில் மகிழ்வூட்டுவதுடன், வியப்பையும் ஏற்படுத்துகிறது.
</p><p>
சீனாவும் இலங்கையும் நீண்ட வரலாற்றைக் கொண்டு, காலப்போக்கில் மேலும்
வலுவடைந்து வரும் பாரம்பரிய நட்பைக் கொண்டுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே, பழங்கால 'பட்டுப்பாதை' வழியே கப்பல்கள் வந்து சென்றன. இது நமது இரு
நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் சிறப்பான அத்தியாயத்தைப் பிணைத்தது. </p><p>எழுபது
ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான இறப்பர்-அரிசி ஒப்பந்தம் பேரிடர் காலங்களில்
நாம் ஒருவருக்கொருவர் காட்டிய பரஸ்பர ஆதரவுக்கும் ஒற்றுமைக்கும் சான்றாக
விளங்கியது.</p><p>

தூதரகத் தொடர்புகள் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, நமது இரு நாடுகளும்
எக்காலத்திலும் இக்கட்டான சூழ்நிலைகளில் தோளோடு தோள் நின்று, கை கோர்த்து
முன்னேறி வந்துள்ளன. </p><p>'பட்டுப்பாதை மற்றும் சாலை' திட்டத்தின் கீழும், பல்வேறு
துறைகளிலும் ஒத்துழைப்பை நாங்கள் உறுதியுடன் வளர்த்து ஆழப்படுத்தியுள்ளோம்.
இதன் மூலம் சீனா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் பயன்
பெற்றுள்ளனர்.</p><h2>இரு நாடுகளுக்கான நீண்ட வரலாறு</h2><p>

நீண்ட வரலாற்று நெடுகிலும் திரும்பிப் பார்த்தால் பௌத்த நூல்களைத் தேடி
மேற்கு நோக்கிப் பயணம் செய்த துறவி பாஹியனின் தனிநேயப் பயணம் முதல், அலைகளைப்
பிளந்து சென்ற அட்மிரல் ஜெங் ஹேவின் மாபெரும் கடற்படை வரை சீனாவில் உள்ள
புஜியான் மாகாணத்தின் குவாங்சௌ நகரில் குடியேறி அந்நாட்டையே சொந்த நாடாக்கிக்
கொண்ட சிலோன் இளவரசன் முதல், சீனக் குழந்தைகளுக்கு மூன்று குட்டி யானைகளைப்
பரிசளித்த இலங்கை மக்களின் உண்மையான பாசம் வரை, மேலும் சீனாவின் இலங்கை கூட்டு
நீர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மாதிரி நிலையம் உயிரின் மூலத்தைப்
பாதுகாப்பது முதல், தீவு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்களுக்குப்
பயனளிக்கும் பாடசாலைச் சீருடைத் துணிகள் வரை— மலைகளையும் கடல்களையும் கடந்து,
காலத்தின் சோதனைகளைத் தாண்டி நிலைத்திருக்கும் சீனா - இலங்கை நட்பு எப்போதும்
மிக அரவணைப்பான மற்றும் இதயத்திற்கு நெருக்கமான ஒளியை வீசி வருகிறது.
</p><p>
இந்த நல்வேளையில், சீனா - இலங்கை நட்பைப் பேணிப் பாதுகாத்து ஆதரித்த இரு
நாடுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும்
மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e48bcb5b-0e9d-4568-b341-71dcbb6bbc72/26-6a7d56693911a.webp' /></p><p>

சீனா - இலங்கை நட்புறவின் எதிர்காலம் பரந்ததாகவும் நம்பிக்கைக்குரியதாகவும்
உள்ளது. 2025 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் இலங்கைக்குப் பயணம்
மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரணி அமரசூரிய ஆகியோரைத்
தனித்தனியாகச் சந்தித்து, முக்கியமான ஒருமித்த கருத்துகளையும் பலனளிக்கும்
ஒத்துழைப்பு விளைவுகளையும் எட்டினார்கள். </p><p>இந்த உயர்மட்டப் பரிமாற்றங்கள் நமது
இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய மூலோபாய வழிகாட்டலை வழங்கியுள்ளன.
சீனா-இலங்கை உறவுகள் இப்போது கடந்த கால வெற்றிகளின் மீது கட்டமைப்பதற்கும்
எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கும் ஒரு வரலாற்றுச் வாய்ப்பை
எதிர்கொண்டுள்ளன.
</p><p>
சீனா எப்போதும் தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை
அளிக்கிறது. நமது இரு நாடுகளும் வளர்ச்சி மற்றும் புத்துயிர் பெறும் பாதையில்
சக பயணிகளாகவும், வெற்றி - வெற்றி ஒத்துழைப்புக்கான நல்ல பங்காளிகளாகவும்
திகழ்கின்றன.</p><p> நாம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல சகோதரர்களாகவும்
நண்பர்களாகவும் இருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் மத்தியக் குழுவின் உறுதியான தலைமையின் கீழும், பொதுச் செயலாளர் ஷி
ஜின்பிங் அவர்களை மையமாகக் கொண்டும், சீன நவீனமயமாக்கல் மூலம் அனைத்துப்
பரிமாணங்களிலும் ஒரு மாபெரும் நாட்டை உருவாக்குவதற்கும் தேசிய புத்துணர்ச்சியை
மேம்படுத்துவதற்கும் சீன மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இலங்கையும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தி, 'செழிப்பான நாடு, அழகான வாழ்க்கை' என்ற தொலை நோக்குப் பார்வையை
அடைவதற்குப் பாடுபட்டு வருகிறது.

இலங்கையுடன் தோளோடு தோள் நின்று நடக்க சீனா தயாராக உள்ளது. </p><p>நமது வளர்ச்சி
உத்திகளை வலுப்படுத்தி, பரஸ்பர வெற்றி மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான பரந்த
வாய்ப்புகளைத் திறக்கவும், உண்மையான பரஸ்பர உதவியும் என்றென்றும் நீடிக்கும்
நட்பும் கொண்ட நமது மூலோபாய கூட்டுறவுக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும்,
பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சீனா - இலங்கை சமூகத்தை இணைந்து
கட்டமைக்கவும் சீனா தயாராக உள்ளது.</p><h2>சீனா, இலங்கை தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 70 ஆவது ஆண்டு</h2><p>அடுத்த ஆண்டு, சீனாவும் இலங்கையும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 70 வது ஆண்டு
நிறைவையும், இறப்பர்-அரிசி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 75 வது ஆண்டு
நிறைவையும் கொண்டாடவுள்ளன.</p><p> இந்த முக்கியமான திருப்பு முனையில், இலங்கைக்கான
தூதுவராகப் பணியாற்ற எனது தாய் நாட்டாலும் அதன் மக்களாலும் நான்
நியமிக்கப்பட்டுள்ளேன். இது எனக்கு வழங்கப்பட்டுள்ள புகழ்பெற்ற பணியும்
குறிப்பிடத்தக்க பொறுப்புமாகும் என்பதை நான் ஆழமாக உணர்கிறேன்.</p><p>

வரவிருக்கும் ஆண்டுகளில், எனது சகாக்களும் நானும் எங்களது கடமைகளை முழு
மனதுடன் அர்ப்பணித்து, உறுதியுடன் முன்னேறுவோம். எங்களது பாரம்பரிய நட்பை
முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை
விரிவுபடுத்தவும், சீன நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகள்
மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.</p><p>

இந்த முயற்சியில், சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு
துறைகளைச் சேர்ந்த நண்பர்களின் ஆதரவும் உதவியும் இல்லாமல் எனது பணியைச் செய்ய
முடியாது. </p><p>உங்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளவும், நெருக்கமான உரையாடல்களை
நடத்தவும், ஆழமான நட்பைப் பேணவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். </p><p>மேலும்
உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். சீனா-இலங்கை
உறவுகளுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் கை கோர்த்து
அயராது பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T05:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா - கித்துள்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-recovered-in-nuwara-eliya-1786597198"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-recovered-in-nuwara-eliya-1786597198</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(12.08.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்று(12.08.2026) கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
சந்தேகத்திற்கிடமான முறையில் கைகுண்டு ஒன்று காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல்
கிடைத்துள்ளது.
</p><p>
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கித்துள்கலை பொலிஸார், குறித்த கைகுண்டு
தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், அதிரடிப்படையினருக்கும்
தகவல் வழங்கியுள்ளனர்.</p><h2>கைகுண்டு மீட்கப்பட்ட பகுதி</h2><p>இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து சம்பவ இடத்தை
பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மீட்கப்பட்ட கைகுண்டை
உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e07da03-9b27-4fa3-b0ae-e8232b876e9c/26-6a7d55a1ba1e7.webp' /></p><p>

இதனால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எவ்வாறாயினும், குறித்த கைகுண்டு எவ்வாறு அப்பகுதிக்கு வந்தது, அது எவ்வளவு
காலமாக அங்கு இருந்தது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள்
வெளியாகவில்லை.
</p><p>
சம்பவம் தொடர்பாக கித்துள்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p>

கைகுண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும்
ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது
தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T05:29:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் கணவன் - இலங்கையில் இளம் மனைவியின் மோசமான செயலால் ஏற்பட்டுள்ள விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-threatening-1786596707"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-threatening-1786596707</id>
            <summary type="text">இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கம்பஹாவின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
திக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, இளம் மனைவி இணைய விளையாட்டுகள் ஊடாக அறிமுகமான சந்தேக நபருடன் முறையற்ற காதலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
இளம் மனைவியின் செயல்</b></h2><p>அத்துடன், அந்த இளைஞருடன் அவர் பயணங்கள் மேற்கொண்ட போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a287d2f-7a81-44a6-a467-086dc99c19d1/26-6a7d50496edd5.webp' /></p><p>வெளிநாட்டில் வசிக்கும் தனது கணவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்ற தகவலைத் தொடர்ந்து, குறித்த பெண் காதலை கைவிட்டுள்ளார். </p><p>

அதனால் கோபமடைந்த சந்தேக நபர் இவ்வாறு பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு புகைப்படங்களை சமூக வலைத்தளத்திற்கு அனுப்புவதற்கு முன்னர், தன்னுடன் மீண்டும் இணையாவிட்டால் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
</p><h3><b>
பழி வாங்கும் நடவடிக்கை</b></h3><p>அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை விடுத்ததுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

இளைஞனின் அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் குறித்த பெண் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0a1c6a3-7325-45db-9cd0-432c40e34099/26-6a7d504a21607.webp' /></p><p>இதன் காரணமாக பழி வாங்கும் நோக்கில் சந்தேக நபர் பெண்ணின் புகைப்படத்துடன் “<b>காதலி காணாமல் போயுள்ளார் கண்டுபிடித்துத் தாருங்கள்</b>” என சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், கணவருக்கும் வட்ஸ்அப் குறுஞ்செய்திகள் ஊடாக மனைவியின் தகாத புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
தனது தகாத புகைப்படங்கள் சமூக வலைத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் திக்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்தார். </p><p>

அதற்கமைய பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், சந்தேக நபரை முன்தினம் கைது செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T05:15:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில் செயற்படுத்தப்படுகின்றன! பிரதேசசபை தவிசாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praise-for-government-and-the-president-1786594703"></link>
            <id>https://tamilwin.com/article/praise-for-government-and-the-president-1786594703</id>
            <summary type="text">இந்த நாட்டின் கொள்கைகள் சரியான சட்ட திட்டங்களுக்கு அமைய ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில்
செயற்படுத்தப்படுகின்றன என&amp;nbsp;மண்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த நாட்டின் கொள்கைகள் சரியான சட்ட திட்டங்களுக்கு அமைய ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில்
செயற்படுத்தப்படுகின்றன என&nbsp;மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பில் நேற்றைய தினம் (12.08.2026) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும்
தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 600 மில்லியன் ரூபா வரவு
செலவுத் திட்டத்தை எனது பிரதேசசபையில் நாங்கள் கொண்டு வந்திருந்தோம். அதில்
சுமார் நூறு மில்லியன் ரூபா நிதியை நாம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு
செய்திருக்கின்றோம்.</p><h2>ஆயுர்வேத மருத்துவ சேவை</h2><p>
</p><p>


பெரியகல்லாரிலும், இதே போன்று ஓர் ஆயுர்வேத வைத்தியசாலை அமைந்துள்ளது.
இப்பிரதேசத்தில் இருக்கின்ற இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு எமது பிரதேச
சபையால் வருடத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபாய்க்கு பெறுமதியான
மருந்துகளை நாங்கள் வழங்குகின்றோம். </p><p>இந்த சேவையை நாம் நேரடியாகவே கிழக்கு மாகாண
ஆளுநர் ஊடாக இந்த ஓந்தாச்சிமடம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நாம்
ஒப்படைக்கின்றோம்.



ஏனெனில் சிறந்த ஒரு ஆயுர்வேத மருத்துவ சேவையினை ஓந்தாச்சிமடம் வைத்தியசாலை
வழங்குவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53b9f1ab-7a75-40b2-b7f5-6037219ceb3b/26-6a7d4c7b4f971.webp' /></p><p> இலங்கையில் முதன் முதலாக
இலத்திரனியல் ஆயுள்வேத வைத்தியசாலையாக இந்த ஆயுள்வேத வைத்தியசாலை
செயற்படுகின்றது. சாதாரணமாக 10 மில்லியன் ரூபாய் நிதி ஒரு பிரதேச சபையினால்
வழங்கப்படுகின்ற பணம் சிதைந்து போகின்றது. அதனை சரியான முறையில் நோயாளிகளுக்கு
பயன்படுத்தப்பட வேண்டும். அதனை நாம் இந்த கிழக்கு மாநகர ஆளுநர் ஊடாக
வழங்குவதற்குள்ளோம்.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>





இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது அவர்
கூறியவிடயம் சுகாதாரத்துறை அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டவர்களின் வருகை
தொடர்பிலும் தெரிவித்திருந்தார். அது நல்ல விடயம் அதற்காக வேண்டி
ஓந்தாச்சிமடம் கடற்கரையை அழகுபடுத்தி நவீனமயப்படுத்தி தருவதற்கு கிழக்கு மாகாண
சபை எனக்கு 12 மில்லியன் ரூபாய்க்களை ஒதுக்கீடு செய்திருக்கின்றது.</p><p> அதற்காக
நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.





கிழக்கு மாகாணத்திலேயே முதலாவது கடற்கரை பிரதேசமாக இந்த ஓந்தாச்சிமடம்
கடற்கரையை மாற்றி அமைக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அதற்கு அனைவரது
ஒத்துழைப்பையும் வேண்டி இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T04:48:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களின் உணர்ச்சிப்பூர்வ முகநூல் பதிவு! புகைப்படம் ஒன்று தொடர்பில் பொலிஸாரின் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-police-emergency-alert-1786594189"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-police-emergency-alert-1786594189</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&amp;nbsp;ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p>மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு இளைஞன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக புகைப்படம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது.&nbsp;&nbsp;</p><p>கொஹூவல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இவ்வாறு பணி முடிந்து,&nbsp; நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் உறங்கிய நிலையில்,&nbsp; தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்து இந்த பதிவு அதிகமாக பகிரப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>பகிராதீர்கள்....</h2><p>இந்தநிலையில், குறித்த புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களுக்கு பொலிஸார் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p>குறித்த எச்சரிக்கை பதிவில்,&nbsp;</p><p>சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான செய்திகள், போலியான தகவல்கள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான தகவல்களை (Fake News) பரப்புவது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd87bc4-29ff-4eba-9151-66898c1863e3/26-6a7d4bd55c328.webp' /></p><p>
</p><p>இவ்வாறான தகவல்கள் சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் அதிகமாகும். எனவே, எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு&nbsp; செய்வதற்கு முன்னர் சரிபார்க்கவும்.</p><p>பகிரப்படும் தகவலின் மூலம் உண்மையானதா,&nbsp; நம்பகமான உத்தியோகபூர்வ செய்தி மூலங்களால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக என்பதை சரிபார்க்கவும்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsrilankapoliceofficial%2Fposts%2Fpfbid0CJyCfrGyKUhUQgThBbTCxUqJFZdy3sLKo6ojbCjmRi2q5dqpoXbYErdpRveUnnnHl&show_text=true&width=500" width="500" height="699" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>உண்மையான தகவல் என உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே இவ்வாறான தகவல்களைப் பகிரவும்.&nbsp; &nbsp;வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி, பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக, தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினிக் குற்றச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் எதையும்&nbsp; பகிராதீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T04:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ஹிஸ்புல்லாஹ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-appears-before-bribery-commission-1786595395"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-appears-before-bribery-commission-1786595395</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (13) முன்னிலையாகியுள்ளார்.சொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (13) முன்னிலையாகியுள்ளார்.</p><p>சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-13T04:37:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை மயக்கத்தில் வைத்து உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை! வைத்தியர்கள் தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-board-to-hospital-to-examine-salley-1786593963"></link>
            <id>https://tamilwin.com/article/medical-board-to-hospital-to-examine-salley-1786593963</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அவரை&nbsp; மயகத்தில் வைத்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஐவரடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
அங்கு வருகை தந்த மருத்துவக் குழுவினர் முற்பகல் 9.00 மணிமுதல் மாலை வரை அவரைப் பரிசோதித்ததாக தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><h2><b>
ஐவரடங்கிய மருத்துவக் குழு</b></h2><p>கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய மருத்துவக் குழுவினரே இவ்வாறு பரிசோதனை செய்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82ee1dc-4226-4243-9925-4796d0410099/26-6a7d456f789d3.webp' /></p><p>அத்துடன், எதிர்வரும் வாரம் சலேயின் குடும்ப உறவினர்களைச் சந்திப்பதற்கும் மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது.
</p><p>
கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p>

சிரேஷ்ட நிபுணத்துவ நீதவான் மனநல மருத்துவர் சுசித் மெண்டிஸின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிபுணத்துவ மருத்துவர் சித்தாஹரி அபயநாயக்க, நிபுணத்துவ மருத்துவர் தசந்தி அக்மீமன, நிபுணத்துவ மருத்துவர் துலைக்கா அமரசிங்க வாஸ், நிபுணத்துவ மருத்துவர் வஜிர தர்மவர்தன ஆகியோர் செயற்படுகின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T04:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-hospital-colombo-1786582167"></link>
            <id>https://tamilwin.com/article/national-hospital-colombo-1786582167</id>
            <summary type="text">கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச்செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச்செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p> 
வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் பகுதியான நொரிஸ் கெனல் வீதியில் கடைகளுக்கு மத்தியில் ஒரு பொதுக்கழிப்பறை அமைந்துள்ளது. </p><p>இருப்பினும், இரவு 7 மணியின் பின்னர் குறித்த இடம் போதைக்கு அடிமையானவர்களின் புகலிடமாக மாறிவிடுகின்றது. 
இந்தக் கழிப்பறை கொழும்பு மாநகரசபையினால் நிர்வகிக்கப்பட்டாலும் இரவு வேளையில் எந்தவொரு வெளிச்சமும் இருப்பதில்லை. </p><h2>

</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">போதைக்கு அடிமையானவர்களின் ஆதிக்கம்</span></p><p>இரவில் இந்த இருள் சூழ்ந்த பாதையால் பயணிக்கும் ஒரு அப்பாவி மனிதன் தன் ஆடை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.</p><p> கூர்மையான ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்துதல், பணம் பறித்தல், தாக்குதல் நடத்துதல் ஆகியவை இந்த இடத்தில் தினமும் நடைபெறும் சம்பவங்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e745a55-0786-447e-9129-e52e91ab42a4/26-6a7d1499a19d0.webp' /></p><p> </p><p>கடைகளுக்கு வரும் மனிதர்களை பயமுறித்தி கப்பம் பெறுதல் மற்றும் வைத்தியசாலையில் வேலை செய்யும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.</p><p>குறித்த பகுதிகளில் வியாபாரம் செய்யும் பெண்மணிகள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ரூ. 400 - 500 ஐப் பறிக்கிறார்கள். 'இந்தக் கடைப் பக்கத்தில் எங்கும் நிற்காதீர் உன்னை வெட்டிவிடுவேன்' என்று ரூ. 400 - 500 ஐப் பறிக்கிறார்கள்.</p><p>இங்கிருக்கும் 'பாபா' என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி பொலிஸ் அதிகாரி போல் நடித்துக் கப்பம் பெறுவதும் கூர்மையான ஆயுதங்களால் தாக்குவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.</p><h2>பண மோசடி</h2><p>அதுமட்டுமன்றி தேசிய வைத்தியசாலையைச் சுற்றி நடக்கும் மாபெரும் மோசடி என்னவென்றால் தானத்திற்கு எனக் கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் சேகரிப்பதாகும். </p><p>இவ்வாறு சேகரிக்கப்படும் பணம் நேரடியாகவே போதைப்பொருள் வாங்குவதற்குச் செல்கிறது.
 நாளாந்த வருமானம் 10,000 ரூபாவையும் மிஞ்சுவதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c460e9b-a5d3-42e8-885b-2f783bd22878/26-6a7d4d5b0a587.webp' /></p><p> </p><p>இவ்வாறு மோசடியாகப் பணம் சேகரித்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல வருடங்களாகத்தான் இதைச் செய்து வருகிறார்கள். </p><p>மேலும் வைத்திசாலையின் பொலிஸ் காவலரணில் அடையாள அட்டைகள் மற்றும் பணப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
</p><p>பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் தமது கடமையை முறறையாக செய்தபோதிலும் தேசிய வைத்தியசாலை சூழலின் பாதுகாப்புத் தொடர்பாக பெரும் கேள்விக்குறியான சூழ்நிலையே நிலவுகிறது. </p><p>இது குறித்து விரைவான தீர்வை வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேரடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T04:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படாத கோடிக்கணக்கான பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-prime-minister-mp-presidential-fund-issue-1786587624"></link>
            <id>https://tamilwin.com/article/former-prime-minister-mp-presidential-fund-issue-1786587624</id>
            <summary type="text">ஜனாதிபதி நிதியத்திலிருந்து மீள பெறப்படும் என்ற அடிப்படையில் ஒரு முன்னாள் பிரதமருக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் வழங்கப்பட்ட பெருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி நிதியத்திலிருந்து மீள பெறப்படும் என்ற அடிப்படையில் ஒரு முன்னாள் பிரதமருக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் இதுவரை மீட்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.</p><p>

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>செலுத்தப்படாத கோடிக்கணக்கான பணம்</h2><p>
அதன்படி, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மருத்துவ சிகிச்சை வசதிகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து ஒரு முன்னாள் பிரதமருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்கப்பட்ட ( 24,657,015) சுமார் இரண்டரை கோடி ரூபாய் தொகையானது, மே 20, 2026 நிலவரப்படி வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef8ef9c-aa17-436c-bba7-d585fa9140b3/26-6a7d3a2e97859.webp' /></p><p>
</p><p>
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய தணிக்கைச் சட்டத்தின் பிரிவு 12 (j)-இன் படி மேற்கொள்ளப்பட்ட தணிக்கை ஆய்வுகளின் போது இந்த தகவல் வெளிப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட ரூ. 10,908,798 (ஏப்ரல் 04, 2012 அன்று) மற்றும் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட ரூ. 13,748,217 ஆகிய தொகைகள் மே 20, 2026 நிலவரப்படி வசூலிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.</p><p> 

ஜனாதிபதி நிதியத்தின் 2025 ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T03:29:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பதவியேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-us-ambassador-to-sri-lanka-eric-meyer-sworn-in-1786589840"></link>
            <id>https://tamilwin.com/article/new-us-ambassador-to-sri-lanka-eric-meyer-sworn-in-1786589840</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.&amp;nbsp;வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.&nbsp;</p><p>வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.</p><h2>கொழும்பிற்கு வரவேற்பு</h2><p>புதிய தூதுவரை கொழும்பிற்கு வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a115cb-841a-4ea0-8dae-e88a4e37b93d/26-6a7d339fe874d.webp' /></p><p>அதன்படி, எரிக் மேயர் இலங்கைக்கான அமெரிக்கத்தூதராக கடமைகளை தொடங்க உள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T03:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீட்டிழுப்பு இலக்கங்களை பயன்படுத்தி பணமோசடிகள்! பரவும் போலி தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-gambling-using-lottery-numbers-1786585040"></link>
            <id>https://tamilwin.com/article/massive-gambling-using-lottery-numbers-1786585040</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இவ்வாறான சட்டவிரோத சூதாட்டம் காரணமாக சமூகத்தில் பாரிய பேரழிவு உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.
</p><p>
கோப் (COPE) உபகுழு முன்னிலையில் இரு லொத்தர் சபைகளின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்த போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">லொத்தர் சீட்டின் கடைசி இரண்டு எண்களுக்காக பந்தயம்&nbsp;</span></p><p>

அதாவது, 0 முதல் 9 வரையிலான எண் அமைப்புகளிலிருந்து 2 எண்களைத் தேர்ந்தெடுத்து, அன்றைய தினம் வெளியாகும் லொத்தர் சீட்டின் கடைசி இரண்டு எண்களுக்காக இதில் பந்தயம் கட்டப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce84341-17a1-4d7c-9c6f-5354f3a03ab2/26-6a7d2e2f415ae.webp' /></p><p>

தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளால் இரவு 7.30 மணியளவிலேயே சீட்டிழுப்புகள் நடத்தப்படுகின்றன.
</p><p>
இந்நிலையில், ஒரு மாதத்திற்குத் தேவையான அனைத்துக் சீட்டிழுப்புகளும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு தினமும் வெளியிடப்படுவதாக போலி தகவல்களை மக்களிடையே பரப்பி, WhatsApp குழுக்கள் மூலம் ஒழுங்கமைப்பு ரீதியாக இந்த பண மோசடிகள் செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.</p><h2>முறைப்பாடுகள் பதிவு&nbsp;</h2><p>

 இதற்கமைய, பல பகுதிகளில் 30,000 ரூபாய் முதல் அதற்கு மேலதிகமாகவும் பந்தயம் கட்டப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>

இதன் காரணமாகப் பலரும் தங்களது நிலங்கள் மற்றும் சொத்துக்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த சட்டவிரோத சூதாட்டம் மேலும் பரவினால், லொத்தர் சபைகளின் வணிக நிலைத்தன்மை, சாதாரண மக்களின் வாழ்க்கையும் பாதிப்புக்கள்ளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T02:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் விடுதியொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-youth-dies-in-japan-1786585324"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-youth-dies-in-japan-1786585324</id>
            <summary type="text">ஜப்பானின் சிபா மாகாணத்தில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் சிபா மாகாணத்தில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:20 மணியளவில் நிகழ்ந்துள்ளது. </p><p>

ஜப்பானில் கல்வி பயின்று வந்த மாணவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>விசாரணையில் வெளியான தகவல்&nbsp;</h2><p>

இவருடன் விடுதியில் தங்கியிருந்த 18 வயதான இலங்கை மாணவர் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac58c89b-4a02-4165-b50b-fed91aae9c22/26-6a7d27da93848.webp' /></p><p>
</p><p>
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேகநபரான 18 வயதான இளைஞர், ஜப்பான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ​​தன்னையும் தனது தாயையும் அவமதித்ததால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T02:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்..! அரச தரப்பு சாட்சியாக மாறி உண்மைகளை அம்பலப்படுத்திய சஹ்ரான் குழு உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-sunday-terrorist-attack-investigations-1786564751"></link>
            <id>https://tamilwin.com/article/easter-sunday-terrorist-attack-investigations-1786564751</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில், முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சிய விசாரணை நிறைவடைந்துள்ளது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில், முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சிய விசாரணை நிறைவடைந்துள்ளது.
</p><p>
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான முக்கிய வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. </p><p>

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், சஹ்ரான் ஹாஷிமின் தற்கொலைத் தாக்குதல் குழுவில் இருந்த ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளார்.
</p><p>

இந்த விசாரணையில் சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியது வழக்கில் ஒரு பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.
</p><p>

சஹ்ரான் ஹாஷிமின் குழுவோடு இருந்த காலகட்டத்தில், அவர் அவதானித்த பல ரகசியமான உண்மைகளை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.</p><p>

 சஹ்ரான் ஹாஷிம் யாருடைய தேவைக்காகச் செயற்பட்டார் என்பது போன்ற பல மர்மமான விடயங்கள் குறித்து அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>

 சில பிரதிவாதிகள் வழங்கிய வாக்குமூலங்கள், அவர்களால் சுயமாக (தன்னார்வமாக) வழங்கப்பட்டவை என்பது உண்மைத்தன்மை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

மேலும்,
 கடந்த காலங்களில் மெதுவாக நடந்த விசாரணை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தினசரி அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதால், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் NewsInsightTamil நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gyrukzsZj6M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T00:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஏற்றவாறு நீதிமன்றங்களை வழிநடத்த அனுமதிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vasudeva-nanayakkara-bar-association-of-sri-lanka-1786579550"></link>
            <id>https://tamilwin.com/article/vasudeva-nanayakkara-bar-association-of-sri-lanka-1786579550</id>
            <summary type="text">சட்டத்தரணிகள் சங்கம் தங்களுக்கு ஏற்றவாறு நீதிமன்றங்களை கொண்டு செல்வதற்கே முயற்சிக்கின்றன என முன்னனாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டத்தரணிகள் சங்கம் தங்களுக்கு ஏற்றவாறு நீதிமன்றங்களை கொண்டு செல்வதற்கே முயற்சிக்கின்றன என முன்னனாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்து நடக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,</p><p>நீதிமன்றத்தை மக்களின் தேவைக்கேற்ப கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு எமது தரப்பில் இருந்து அழுத்தத்தைக் கொடுப்போம். </p><h2>
</h2><p></p><h2>மக்கள் நலன் சார்ந்த விடயங்கள்</h2><p>அரசாங்கம் கொண்டு வரும் இந்த யோசனை நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றத்திற்குச் சென்று தீர்ப்பு வரும். இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று தேவையா இல்லையா என்று நீதிமன்றம் கூறினால், அப்போது சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லலாம். </p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் விவகாரம் நாடாளுமன்றத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் இடையில் தீர்த்துக்கொள்ளப்படும். </p><p>நாடாளுமன்றத்தில் இப்போது அந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த யோசனையை யார் வேண்டுமானாலும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம். </p><p>அதற்குப் பிறகு ஒரு இறுதித் தீர்ப்பு வரும். எனவே, அந்த இறுதித் தீர்ப்பின்படி நாம் செல்லலாம். அதனால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d9f890-ebb6-4329-ab20-f6d07b052ad5/26-6a7d0a62520eb.webp' /></p><p>வாழ்க்கைச் செலவு கடினமாக உள்ளது. அதுதான் எமது இந்த எதிர்ப்பின் தொனிப்பொருளும் கூட வரிகளைக் குறையுங்கள்.நாங்கள் அரசாங்கத்திற்குச் சொல்வது என்னவென்றால், 'மக்கள் பாதையில், மக்கள் நலன் சார்ந்த பாதையில் செல்லுங்கள்' என்பதுதான். </p><p>இன்று அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று கூடியுள்ள வலதுசாரிகள் மற்றும் பல்வேறு சக்திகள் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கின்றன. </p><p>ஆனால் நாங்கள் முயற்சிப்பது அரசாங்கத்தை மக்கள் நலன் சார்ந்த பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்காகும். இந்த வேறுபாட்டை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T00:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.வடமராட்சி தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் கொடியேற்றம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flag-hoisting-selva-sannithi-murugan-temple-1786581728"></link>
            <id>https://tamilwin.com/article/flag-hoisting-selva-sannithi-murugan-temple-1786581728</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் பெருந்
திருவிழாவின் கொடியேற்றம் இன்று அதிகாலை 1:45 மணியளவில் நூற்றுக் கணக்கான
பக்தர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் பெருந்
திருவிழாவின் கொடியேற்றம் இன்று அதிகாலை 1:45 மணியளவில் நூற்றுக் கணக்கான
பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் இடம்பெற்றுள்ளது.</p><p>&nbsp;செல்வச் சன்நிதியான் கொடியேற்றத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.</p><h2>கொடியேற்றம்</h2><p>

திருவிழாவிற்கு வருகை தருகின்ற அடியவர்களின் நலன் கருதி சுகாதார, குடிநீர்
உட்பட்ட வசதிகளை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3182aa4-c2fa-411a-896b-fbbe4395643c/26-6a7d13854b466.webp' /></p><p>&nbsp;மேலும், விசேட
போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இந்த வருடத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 27 ம் திகதியும் 28/08/2026 தீத்த
திருவிழாவும் இடம்பெறவுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-13T00:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறையில் பூஜித் - ஹேமசிறி: சிறைக்குள் நடப்பது என்ன..! வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-jayasundara-hemasiri-fernando-in-prison-1786580482"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-jayasundara-hemasiri-fernando-in-prison-1786580482</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பலத்த பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இருவருக்கும் சிறையில் எவ்வித சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>சிறைச்சாலைத் தகவல்கள்&nbsp;</h2><p>பூஜித் ஜயசுந்தர 33176 என்ற கைதி இலக்கத்திலும், ஹேமசிறி பெர்னாண்டோ 3317 என்ற கைதி இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p> சிறை நிர்வாக நடவடிக்கைகள் கைதி இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20891bc-a53f-4310-812a-e19a3075d481/26-6a7d10f33477c.webp' /></p><p>

சிறைக்குள் அவர்களுக்கு தென்னைநார் தலையணை, பாய், தகரத்தட்டு மற்றும் தகரக் கோப்பை உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>அவற்றைப் பெற்றுக்கொண்ட போது ஹேமசிறி பெர்னாண்டோ உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாகவும், பூஜித் ஜயசுந்தரவும் கண்களில் கண்ணீரை மறைத்தபடி அவற்றைப் பெற்றுக்கொண்டதாகவும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இருவரும் மரண தண்டனை கைதிகள் தடுத்து வைக்கப்படும் H1 சிறை அறையில், நிமல் என்ற மற்றொரு கைதியுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கடுமையான மன அதிர்ச்சி</h2><p>
</p><p>
ஆரம்பத்தில் சிறை வாழ்க்கை காரணமாக கடுமையான மன அதிர்ச்சிக்கு உள்ளான இருவரும், தற்போது நிமலுடன் இணைந்து தியானம் மற்றும் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனிடையே, ஹேமசிறி பெர்னாண்டோ தான் எந்தத் தவறும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி வருவதுடன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மேல்முறையீட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

வயது மற்றும் உடல்நிலை காரணமாக சிறை வாழ்க்கைக்கு பழகுவதில் அவருக்கு கூடுதல் சிரமங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740d966f-c3bc-4c89-a2be-49427f071276/26-6a7d10f3dfd8a.webp' /></p><p>
</p><p>

பூஜித் ஜயசுந்தரவை சிறைக்கு சென்ற முதல் நாளிலேயே அவரது மகனும், ஹேமசிறி பெர்னாண்டோவை அவரது மனைவியும் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>


ஏற்கனவே இவர்களை போலவே முன்னாள் அரசியல்வாதிகள் பலரும் சிறைச்சாலையில் இருக்கின்றார்கள். 

குறிப்பாக மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ,&nbsp; துமிந்த சில்வா, சமிந்த வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் சிறைக்குள் இருக்கின்றனர்.&nbsp; இவர்கள் யாரையுமே ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோர் சந்திக்கவில்லை என்று கூறப்படுகின்றது.</p><p>


சிறை விதிகளின்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை உறவினர்கள் பொதுவாக மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும். எனினும், கிறிஸ்மஸ், வெசாக் மற்றும் சிங்கள-தமிழ் புத்தாண்டு போன்ற விசேட நாட்களில் இதற்கு விதிவிலக்குகள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gyrukzsZj6M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T00:37:00+00:00</updated>
        </entry>
    </feed>
