<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-20T21:23:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பிரதிவாதிகளினுடைய வாக்குமூலத்தில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/funeral-of-renowned-singer-nanda-malini-1787244957"></link>
            <id>https://tamilwin.com/article/funeral-of-renowned-singer-nanda-malini-1787244957</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இருக்கின்ற 23270 குற்றச்சாட்டுக்கள் இதுவரை விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இருக்கின்ற 23270 குற்றச்சாட்டுக்கள் இதுவரை விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.</p><p>நேற்றையதினம்(19) பிரதிவாதிகள் தற்காப்பு வாக்குமூலங்களை வழங்கினர்.இந்தநிலையிலே, நெளபர் மெளலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் இதுவரையில் சாட்சியல் அளித்துள்ளனர்.</p><p>குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தங்களை தாக்கி கட்டாய வாக்குமூலம் பெற முயன்றதாகவும், சஹ்ரானுடன் தொடர்பு இல்லை என்றும் சில பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>அத்துடன் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் முக்கிய சாட்சியான முரளியின் சாட்சியம் இன்று பதிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-Q7Q47e-ps0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T21:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்! தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-enter-kalmunai-base-hospital-health-ministry-1787249944"></link>
            <id>https://tamilwin.com/article/cid-enter-kalmunai-base-hospital-health-ministry-1787249944</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையின் முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரத்தில் சுற்றுநிருபத்தை பின்பற்றுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையின் முஸ்லிம் பெண்களினுடைய ஆடை விவகாரத்தில் சுற்றுநிருபத்தை பின்பற்றுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.</p><p> ஆடை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.</p><p>அத்தோடு,&nbsp; ஆடை விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலை ஊழியர்கள், ஏனைய பணியாளர்களையும் இலக்கு வைத்து பதிவுகள் வெளியாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.</p><p>இந்த விவகாரத்திலே தமிழரசுக்கட்சி பாராமுகமாக இருந்து விட்டார்களோ என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டபோது இதற்கு பதிலளிக்கும் முகமாக சிறிநேசன் அரச சுற்றுநிருபம் பின்பற்றப்பட்டு இருக்கின்றது. நாம் மக்களை குழப்ப கூடாது என்ற நோக்கத்துடன் கண்ணியமாக இருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RkNsFChSL3w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T21:10:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[175 நாள்களைத் தாண்டிய தடுப்புக்காவல் : சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/petition-seeking-justice-for-suresh-sallay-1787259946"></link>
            <id>https://tamilwin.com/article/petition-seeking-justice-for-suresh-sallay-1787259946</id>
            <summary type="text">அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே,
ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 175 நாள்களுக்கு
மேலாகச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே,
ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 175 நாள்களுக்கு
மேலாகச் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டி,
அவருக்கு நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒன்று கொழும்பிலுள்ள
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>

சலேவுக்கு ஆதரவளிக்கும் ஒரு குழுவினரால் இந்த கோரிக்கை மனு இன்று வியாழக்கிழமை ஐக்கிய
நாடுகள் சபையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதி வழங்குவதற்கான நடவடிக்கை</h2><p>
</p><p>
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின்
விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, அவருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை
உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc43126-bca5-4563-ae74-c0d3663110ca/26-6a876c2bed086.webp' /></p><p>

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய இந்த ஆவணம், அவரது
தடுப்புக்காவல் தொடர்பான கவலைகளைச் சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லும்
நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கோரிக்கை மனு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T21:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/peru-earthqake-today-1787254722"></link>
            <id>https://tamilwin.com/article/peru-earthqake-today-1787254722</id>
            <summary type="text">
பெரு நாட்டின் தெற்கு அண்டிஸ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  


 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பெரு நாட்டின் தெற்கு அண்டிஸ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. </p><p> 


 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சேத விபரங்கள் குறித்த தகவல் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.
</p><p>
உள்ளூர் நேரப்படி, மதியம் 1 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><h2>சேத விபரங்கள்..</h2><p> </p><p> 

பெருவின், அயகுச்சோ பிராந்தியத்தின் பரினகோச்சாஸ் மாகாணத்தில் உள்ள உபஹுவாச்சோ நகரத்திற்கு வடமேற்கே 38 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e82511d-52df-4924-835a-3a75a7f37407/26-6a875b83afdbe.webp' /></p><p> </p><p> 

இகா மற்றும் அரேகிபா உள்ளிட்ட தெற்கு பெருவின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.</p><p>

நாட்டின், குடிமைப் பாதுகாப்புத் தலைவர் லூயிஸ், உள்ளூர் வானொலி ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை எவ்வித சேதமும் பதிவாகவிலலை என்று தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T19:54:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபம் கடலில் படகு கவிழ்ந்து முதியவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-boat-capsizes-in-sea-off-chilaw-1787253473"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-boat-capsizes-in-sea-off-chilaw-1787253473</id>
            <summary type="text">சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகாமையில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற
சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர்
உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகாமையில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற
சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><p>இந்தச் சம்பவம் நேற்றையதினம் (20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சிலாபம் – சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 67 வயதான முதியவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கடலில் ஏற்பட்ட திடீர் சீற்றம் மற்றும் கடுமையான நீரோட்டத்தின் வேகத்தைக்
கட்டுப்படுத்த முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக்
காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த இருவரில் ஒருவர் துரிதமாகச் செயற்பட்டு
உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e2ce5f9-23f9-4535-ad37-417bd2537f53/26-6a87562a2f093.webp' /></p><p>
</p><p>
காப்பாற்றப்பட்ட மேற்படி கடற்றொழிலாளர் காயங்களுடன் உடனடியாகச் சிகிச்சைக்காக சிலாபம்
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள் அமைச்சர்களே காரணம் : மனோ எம்.பி. பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-that-the-anura-government-will-fall-1787253809"></link>
            <id>https://tamilwin.com/article/warning-that-the-anura-government-will-fall-1787253809</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள்
அமைச்சர்களே காரணம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள்
அமைச்சர்களே காரணம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>இந்த ஆட்சி தொடர வேண்டும்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"நண்பர் ஜனாதிபதி அநுரவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

பாதாள உலகக் செயல்களும் போதைப் பொருளும் ஒழியும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும்.

இந்த ஆட்சிக்கு வெளி நபர்களால் எந்த ஆபத்துமில்லை. உள்ளகத்திலேயே ஆபத்து
இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6afd531a-8159-49d1-83a5-815484d737e1/26-6a8754329dff1.webp' /></p><p>
</p><p>
நாங்கள் இன்று எதிர்க்கட்சி இல்லை, தாமே அரசு, அதிகாரம் தம்மிடம்தான் உள்ளது
என்பதை உணராத, ஆளத் தெரியாத முட்டாள் அமைச்சர்கள் காரணமாகச் சிங்கள மக்கள்
மத்தியில் அரசின் செல்வாக்கு சரிந்து வருகின்றது.
</p><p>
இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எம்மைக் குறை
கூறுவதைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத, செய்யாத மந்திரிகள் காரணமாக அரச
செல்வாக்கு குறைந்து வருகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T19:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்த மூன்று நாட்களை துக்க தினமாக பிரகடனப்படுத்திய அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-days-of-mourning-in-sri-lanka-1787248436"></link>
            <id>https://tamilwin.com/article/three-days-of-mourning-in-sri-lanka-1787248436</id>
            <summary type="text">இலங்கையில் நாளை(21) மற்றும் 22, 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அரசாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நாளை(21) மற்றும் 22, 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><h2>துக்க தினம்&nbsp;</h2><p>பிரபல பாடகி நந்தா&nbsp; மாலினியின் மறைவையொட்டி&nbsp; குறித்த மூன்று தினங்களையும் துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான மேலதிக விபரங்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5658160-ac1e-46f0-aa6d-364d11b99937/26-6a8741598112b.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-people-arrested-in-kilinochchi-dig-for-treasure-1787248573"></link>
            <id>https://tamilwin.com/article/8-people-arrested-in-kilinochchi-dig-for-treasure-1787248573</id>
            <summary type="text">கிளிநொச்சி-இரணைமடு 55 ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட&amp;nbsp;8 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி-இரணைமடு 55 ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட&nbsp;8 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(19.8.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><p>கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற
இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார்
குறித்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைது</span></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு சிலாபம், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம்
பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/471099a6-f90e-43db-8e63-c32d4f0f65e7/26-6a8740cdbfce7.webp' /></p><p>குறித்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல்
தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும் சிறிய ரக வாகனம் ஒன்றும்
பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரம் இருக்கும்போது தலைக்கனம் அதிகரிக்கும் : ரோஹித அபேகுணவர்தன எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pride-increases-when-there-is-power-1787245296"></link>
            <id>https://tamilwin.com/article/pride-increases-when-there-is-power-1787245296</id>
            <summary type="text">அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த
பின்னரே தமது தவறுகள் குறித்துச் சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த
பின்னரே தமது தவறுகள் குறித்துச் சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.</p><p>

தாங்கள் தவறு செய்தால் அதனைத் தவறு என ஏற்றுக்கொண்டு உணரக்கூடிய மனப்பக்குவம்
கொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், "அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம்
அதிகரிக்கின்றது. அதிகாரம் கையை விட்டுச் செல்லும்போதுதான், 'நமக்கு என்ன
நடந்தது?' எனச் சிந்திக்கத் தோன்றுகின்றது.</p><p> அதிகாரம் இருக்கும் இடத்தில்
புத்தி இருப்பதில்லை, புத்தி வரும்போது கையில் அதிகாரம் இருப்பதில்லை" என்று
தெரிவித்தார்.</p><h2>வாய்ப்பு இல்லை</h2><p>
</p><p>
தற்போது ஆட்சியில் இருப்பவர்களிடம் உண்மையைச் சொன்னால், சாரைப்பாம்பு மீது
மண்ணெண்ணெய் ஊற்றியது போலத் துடிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டிய அவர்,
கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும்
இருந்து மக்களுடன் பயணித்த அனுபவம் தமக்கு உண்டு என குறிப்பிட்டார்.
</p><p>
எதிர்காலத்தில் ஆளும் தரப்பினருக்கு அதிகாரமும் நாடாளுமன்ற ஆசனங்களும் இல்லாத
நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9153530-9ce6-465a-bf58-f31445a7942b/26-6a8732f29d970.webp' /></p><p>

நாட்டில் நிலவும் வரிச்சுமை குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், சாதாரண
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண விருந்துக்காக விடுதிக்குச் சென்று
உணவருந்தும்போது கூட அந்த உணவுக்கும் 18 சதவீத பெறுமதி சேர் வரி
விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.</p><p> வியாபாரிகளுக்குச் செலுத்திய வரியை
மீளப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளபோதிலும், சாதாரண நுகர்வோருக்கு அந்த
வாய்ப்பு இல்லை என்றார்.
</p><p>
வரிச்சுமையின் தாக்கம் காரணமாக மக்கள் படும் துயரத்தைக் குறிப்பிட்ட அவர்,
திருமண விருந்துக்குச் சென்றுவிட்டு பின்னர் விவாகரத்து செய்ய வேண்டிய
நிலைக்குச் சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று நகைச்சுவை கலந்த தொனியில்
தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T17:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை உயர்வு: நாமல் எம்.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raising-the-retirement-age-limit-for-judges-1787241774"></link>
            <id>https://tamilwin.com/article/raising-the-retirement-age-limit-for-judges-1787241774</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின்
முன்மொழிவானது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும்,
தங்களது பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின்
முன்மொழிவானது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும்,
தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>இன்றையதினம்(20.8.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து நீதிமன்ற நடவடிக்கைகளில்
செல்வாக்கு செலுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த
நடவடிக்கைக்கு மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய
நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>முறைப்பாடுகள்</h2><p>அவர் மேலும் உரையாற்றுகையில்,

"16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை
அதிகரிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4545d2f4-bfd7-4822-ad10-2ee84ac5f657/26-6a872d462966a.webp' /></p><p> எனினும், இது தொடர்பாக
இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள
நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைக்காத சூழ்நிலை
நிலவுகின்றது.</p><p>தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, விவசாயிகள் மற்றும்
கடற்றொழிலாளர்கள் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும்
சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/v9WLT_Ja8gI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மருந்துகளுக்கு தட்டுப்பாடு</h2><p>
</p><p>
அரச வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும்
தட்டுப்பாடு நிலவுகின்றது எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84cacef-17b8-4684-a95d-0c2ea4b743cc/26-6a872d46d2370.webp' /></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த
கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்
தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு உடனடியாகத்
தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statements-were-recorded-cid-1787239511"></link>
            <id>https://tamilwin.com/article/statements-were-recorded-cid-1787239511</id>
            <summary type="text">மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம்
மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம்
வாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம்
மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம்
வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த
புதைகுழி முகாம் அமைந்துள்ள பகுதியில் அகழ்வுப்பணிகளை
முன்னெடுக்குமாறும் கடந்த ஆண்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில்&nbsp; நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர் வைரமுத்து
குழந்தை வடிவேல் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.</p><p>

இதனடிப்படையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கடந்த
14ஆம் திகதி குற்றப்புலனாய்வுத்துறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த
நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக தன்னால் பாதுகாப்பு காரணங்களினால்
அங்கு வரமுடியாது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பில் இன்றைய தினம்
குற்றப்புலனாய்வுத்துறையினரால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.</p><h2>படுகொலை&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சத்துருக்கொண்டான் படுகொலை
நினைவேந்தல் குழு உறுப்பினர் தயாளகௌரி,சிவில் சிவில் சமூக செயற்பாட்டாளர்
கண்டுமணி லவகுகராசா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்
சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார் ஆகியோரும்
வருகை தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2aaeac6-6f2b-46bb-84af-ee27d13473ca/26-6a87222d86a27.webp' /></p><p>
</p><p>வாக்குமூலம் வழங்கிய பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் இது தொடர்பான ஊடக
சந்திப்பும் நடைபெற்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அதிரடி சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raid-in-london-tamil-people-arrested-1787232646"></link>
            <id>https://tamilwin.com/article/raid-in-london-tamil-people-arrested-1787232646</id>
            <summary type="text">பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
சட்டவிரோதமாக தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

2026 ஆம் ஆண்டின் கடந்த மாதம் வரையான காலப்பகுதியில் லண்டன் முழுவதும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

பெருந்தொகையானவர்கள் கைது</b></h2><p>உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிரித்தானியாவில் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான சோதனைகளின் எண்ணிக்கை 7,270 ஆக உயர்ந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d6e08b-9667-4b0b-9dbb-677d35188e6b/26-6a87168605130.webp' /></p><p>இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத அதிகரிப்பாகும். இச்சோதனைகள் மூலம் 4,756 கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன், 2024 ஜூலைக்குப் பின்னரான மொத்தக் கைதுகளின் எண்ணிக்கை 17,000 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதம் பிரித்தானியா முழுவதும் குடிவரவு குற்றங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கூட்டுச் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:40:24+00:00</updated>
        </entry>
    </feed>
