<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-26T18:44:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சித்த பாடசாலை மாணவி.. சந்தேகம் வெளியிடும் பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-girl-trying-to-kill-herself-bogawantalawa-1785085195"></link>
            <id>https://tamilwin.com/article/school-girl-trying-to-kill-herself-bogawantalawa-1785085195</id>
            <summary type="text">பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று ( 27...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் நேற்று ( 27.07.2026) பதிவாகியுள்ளது.
</p><p>
இது குறித்து தெரிய வருகையில், பொகவந்தலாவை - மோரா பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த மாணவி கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்த இரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.</p><p></p><h2>மரணத்தில் சந்தேகம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், பாடசாலையில் வைத்து மாணவி மயக்கமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bea4cf3-6332-455d-8b66-2680b8a4c9e5/26-6a6650b6d74e5.webp' /></p><p>
</p><p>
மாவட்ட வைத்தியசாலையாக இருந்தும் சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் காணப்படும் அந்த வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

இது குறித்து பொகவந்தலாவை பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ஊடகத்திற்கு அறிவித்தனர்.
</p><p>
எனினும், மாணவியின் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T18:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-cooperates-with-the-country-s-dengue-1785084239"></link>
            <id>https://tamilwin.com/article/us-cooperates-with-the-country-s-dengue-1785084239</id>
            <summary type="text">இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.</p><p> 

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.</p><p> 

தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் டெங்கு நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.</p><p></p><h2>நிதியுதவி</h2><p> </p><p>

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் உதவித் திட்டத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, நுளம்புகள் பெருக்கம் அடையும் இடங்களை அழித்தல், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் முன்னறிவிப்பு அடிப்படையிலான தடுப்பு உத்திகள் உள்ளிட்ட இலங்கையின் பரந்த டெங்கு ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d029987-d97c-4f80-92a1-9139749de2c8/26-6a664d4bb279d.webp' /></p><p> </p><p>

இலங்கையிலுள்ள சமூகங்களுக்கு டெங்கு தொடர்ந்து ஒரு தீவிர சவாலாக இருந்து வருகிறது எனச் சுட்டிக்காட்டிய இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹோவெல், இந்தக் கூட்டாண்மையானது உடனடி நோயெதிர்ப்புத் திறன்களையும் நீண்டகால பொதுச் சுகாதாரத் திறன்களையும் வலுப்படுத்த உதவும் எனக் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T18:09:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785078684"></link>
            <id>https://tamilwin.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785078684</id>
            <summary type="text">ஈரான் நிர்ணயித்திருந்த கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற எண்ணெய் டாங்கர், ஹோர்முஸ் நீரிணையில் கடற்படை கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நிர்ணயித்திருந்த கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற எண்ணெய் டாங்கர், ஹோர்முஸ் நீரிணையில் கடற்படை கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்ந்து வெடித்துள்ளதாக ஈரானின் அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, குறித்த டாங்கர் ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்த கடல் வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற பின்னர் கண்ணிவெடியில் மோதி வெடித்துள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>

எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா, எந்தக் கப்பல் தொடர்புடையது, சேதத்தின் அளவு என்ன என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
</p><p>
கடந்த ஜூன் 26ஆம் திகதி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரான் இராணுவம் நிர்ணயித்த பாதைகளில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/688255a9-64c8-4479-9858-436dd1f1bd55/26-6a662c7e8ab6d.webp' /></p><p>
</p><p>
ஈரானின் Mehr செய்தி நிறுவனம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகியதன் காரணமாகவே கப்பல் கடற்படை கண்ணிவெடியில் சிக்கியதாக தெரிவித்துள்ளது.</p><p>
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>இராணுவ எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதற்கிடையில், ஜூலை 8ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்து, அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.</p><p>

இதற்கு முன்னதாக வியாழக்கிழமை, ஹோர்முஸ் நீரிணையின் தென்பகுதியில் அனுமதியற்ற பாதையை பயன்படுத்த முயன்றதாகக் கூறப்படும் மூன்று எண்ணெய் டாங்கர்களை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554776c8-54c0-4bb8-b2c4-1e115014be5c/26-6a662c7f38777.webp' /></p><p>
</p><p>
அதில், ஒரு டாங்கர் வெடிகுண்டில் சிக்கி தீப்பற்றியதாகவும், அதைத் தொடர்ந்து மற்ற இரண்டு கப்பல்களும் திரும்பிச் சென்றதாகவும் IRGC தெரிவித்துள்ளது. அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தக் கப்பலும் இதேபோன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
</p><p>
மேலும், ஜூலை 14ஆம் திகதி, இராணுவ எச்சரிக்கையைப் புறக்கணித்து, தங்களது வழிகாட்டி (Navigation) அமைப்புகளை அணைத்துவிட்டு, கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட பாதைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய் டாங்கர்களை IRGC தாக்கி செயலிழக்கச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T18:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sub-inspector-suspended-for-arguing-with-public-1785087448"></link>
            <id>https://tamilwin.com/article/sub-inspector-suspended-for-arguing-with-public-1785087448</id>
            <summary type="text">பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.
</p><p>
கடந்த 23 ஆம் திகதி காலை 10:45 மணியளவில் வத்துபிட்டிவலை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.</p><p></p><h2>பணி இடைநீக்கம்</h2><p>

சீருடையில் இருந்த குறித்த உப பொலிஸ் பரிசோதகர், கடமையில் இருந்தபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்குச் சிறிதும் பொருத்தமில்லாத வகையில் நடந்து கொண்டதுடன், பொதுமக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8366004b-3836-42b7-af78-ed70f5312f8c/26-6a66481579f19.webp' /></p><p>
</p><p>
குறித்த உத்தியோகத்தரின் இத்தகைய செயல் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கும், அரச சேவைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தாபன விதிக் கோவையின் கீழ் அவர் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் இதுபோன்ற ஒழுங்கீனமான அல்லது பொருத்தமற்ற நடத்தைகளில் ஈடுபடுவதைக் சகித்துக் கொள்ள முடியாது என இலங்கை பொலிஸ் திணைக்களம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T17:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் எச்சரிக்கும் நெதன்யாகூ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-warns-iran-1785084756"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-warns-iran-1785084756</id>
            <summary type="text">ஈரானுக்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மீதோ அல்லது தங்களது நட்பு நாடுகள் மீதோ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
</p><p>இஸ்ரேல் மீதோ அல்லது தங்களது நட்பு நாடுகள் மீதோ நேரடியாகவோ அல்லது பிற அமைப்புகள் மூலமாகவோ ஈரானால் தொடுக்கப்படும் எந்தவொரு தாக்குதலும் ஒரு "பயங்கரமான தவறு" ஆக அமையும் என்றும், அதற்கு "மிக மிகக் கடுமையான" பதிலடி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa38a06c-2973-459e-b1ec-5c9604292bb8/26-6a663b55a1218.webp' /></p><p>
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் ஈரானிய அரசு வீழ வேண்டும் அல்லது "பொருளாதார சீரழிவை ஏற்படுத்துவதையும்" சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் மீது "தாக்குதல் நடத்துவதையும்" ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளுக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.</p><p>
உடன்படிக்கை மூலமாகவோ அல்லது அது இல்லாமலோ ஈரானின் அணுசக்தி திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறியுள்ளார்.
</p><p>மேலும், சவுதி அரேபியாவுடனான தூதரக உறவை முறைப்படுத்துவதற்கு பதிலாக, சவுதிக்கு ராணுவ அணுசக்தி திட்டத்திற்குப் பதில் 'சிவிலியன்' அணுசக்தி திட்டத்தை அனுமதிக்கும் டிரம்பின் நிபந்தனையையும் தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இஸ்ரேல் எல்லைப்பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரை 8 முதல் 13 கிலோமீட்டர் வரை பின்னோக்கித் தள்ளியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பிடம் இருந்த சுமார் 1,50,000 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளில் 94 சதவீதத்தை இஸ்ரேலியப் படைகள் அழித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பல தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கான புதிய முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>
இதன்படி, லெபனான் அரசு ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில், இஸ்ரேல் லெபனானிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் எனகுறிப்பிட்டுள்ளார்.</p><p>
எனினும் லெபனான் இராணுவத்தால் அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதை "பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனவும், அதற்கு ஒரு வாய்ப்பளிக்க இஸ்ரேல் தயாராக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
தற்போது லெபனானின் சுமார் 6 சதவீத நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதுடன், அங்கு தீவிரமடைந்துள்ள தாக்குதல்களில் 4,000-க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-26T16:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் வெப்பநிலை.. கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hot-weather-affects-agricultural-lands-1785083423"></link>
            <id>https://tamilwin.com/article/hot-weather-affects-agricultural-lands-1785083423</id>
            <summary type="text">எல் நினோ நிகழ்வால் ஏற்பட்டுள்ள வெப்பமான மற்றும் வறண்ட வானிலையின் காரணமாக, தீவின் பல பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களும் விவசாய நிலங்களும் கடுமையாகப் பாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ நிகழ்வால் ஏற்பட்டுள்ள வெப்பமான மற்றும் வறண்ட வானிலையின் காரணமாக, தீவின் பல பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களும் விவசாய நிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் குளங்கள் கூட வற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கை தற்போது எல் நினோ நிலையை எதிர்கொண்டு வருகிறது, மேலும் இந்த நிலை சுமார் ஒரு வருடத்திற்கு நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் கணித்துள்ளது.</p><p>

2026ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான காலகட்டத்தில் மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வதற்கு 81 வீத வாய்ப்பு இருப்பதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஜூலை 13 அன்று அறிவித்தது.</p><p></p><p>

</p><h2>ஈரப்பதமான வானிலை</h2><p>இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவுகிறது. மேலும், வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் தரவுகளின்படி, இன்று பிற்பகலில் பல பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b0734d-bb50-47df-aa8a-4c3513801eff/26-6a663b4e68207.webp' /></p><p>

வறண்ட வானிலை காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது, மேலும் அதன் பயன்பாட்டு நீர் கொள்ளளவு தற்போது 35.14 வீதமாக குறைந்துள்ளது.</p><p>
வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் தரவுகளின்படி, விக்டோரியா ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்யவில்லை.

இதற்கிடையில், வறண்ட வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல குளங்கள் வற்றிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கந்தலே, அக்போபுரா மற்றும் வான் ஏலா பகுதிகளில் உள்ள குளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அக்குகளிலிருந்து நீர் பெற்று சாகுபடி செய்து வந்த நெல் சாகுபடியை விவசாயிகள் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
அதேபோல், வெப்பமான வானிலை காரணமாக, அனுராதபுரம் மற்றும் இளையபட்டு பகுதிகளில் மாங்காய், கத்தரிக்காய் மற்றும் மிளகாய் உள்ளிட்ட பயிர் சாகுபடியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் இல்லாததால் தங்களது விவசாய நிலங்கள் வறண்டு மறைந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T16:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும்: றஜீவன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/point-pedro-headland-will-be-developed-tourist-1785080957"></link>
            <id>https://tamilwin.com/article/point-pedro-headland-will-be-developed-tourist-1785080957</id>
            <summary type="text">பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி
செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி
தெரிவித்துள்ளார்.

அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி
செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி
தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் இன்றைய தினம் பருத்தித்துறை முனை பகுதியில் வெளிச்சவீடு மற்றும் அதனை
ஆண்டிய பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நான், வடக்கு மாகாண சுற்றுலாத் துறை பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் விவேகானந்தன் அவர்களுடன் இணைந்து பருத்தித்துறை முனைப்பகுதிக்கு நேரில் கள
ஆய்வை மேற்கொண்டோம்.</p><p></p><h2>அபிவிருத்தித் திட்டங்கள்</h2><p>
</p><p>இந்தப் பகுதி இயற்கை எழில், கடற்கரைச் சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை
வெகுவாக ஈர்க்கக்கூடிய தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால், வடக்கு
மாகாணத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உருவெடுக்கும் மிகுந்த
வாய்ப்பைக் கொண்டுள்ளது.
</p><p>
இதனை முன்னிட்டு, சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,
பருத்தித்துறை முனைப்பகுதியை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்ய
நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db56a9ab-0e21-49c1-9a14-c27527e21a04/26-6a663869a58d4.webp' /></p><p>
</p><p>அத்துடன், சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
பொதுக் கழிப்பறையும் விரைவில் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக
கையளிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
</p><p>
வடக்கின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் நோக்கில் இவ்வாறான
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T16:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டின் உலகின் மிக பாதுகாப்பான தீவுகள்: முதலிடத்தில் உள்ள தீவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-safest-islands-2026-rankings-released-touris-1785078831"></link>
            <id>https://tamilwin.com/article/world-safest-islands-2026-rankings-released-touris-1785078831</id>
            <summary type="text">பிரபல சுற்றுலா வழிகாட்டி அமைப்பான &#039;டிராவல் ஒஃப் பாத்&#039;, 2026-ஆம் ஆண்டில்
சுற்றுலா பயணிகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யக்கூடிய உலகின் மிக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சுற்றுலா வழிகாட்டி அமைப்பான 'டிராவல் ஒஃப் பாத்', 2026-ஆம் ஆண்டில்
சுற்றுலா பயணிகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யக்கூடிய உலகின் மிக
பாதுகாப்பான தீவுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
</p><p>
பயணிகளின் நேரடி அனுபவக் கருத்துக்கள், மிகக் குறைந்த குற்ற விகிதம், வலுவான
உள்கட்டமைப்பு மற்றும் புயல் ஆபத்துகள் இல்லாத புவியியல் அமைப்பு ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>
</p><p>
இந்த ஆய்வில் 100-க்கு 98 புள்ளிகளைப் பெற்று கரீபியன் பிராந்தியத்தில் உள்ள
அரூபா தீவு உலகின் மிக பாதுகாப்பான தீவாக முதலிடத்தைப் பிடித்து சாதனை
படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bf457df-8382-46ee-b153-59b77bb5f83b/26-6a66287fa4052.webp' /></p><p>
</p><p>
இந்தத் தரவரிசையில் 94 புள்ளிகளுடன் கேமன் தீவுகள் இரண்டாம் இடத்தையும், 93
புள்ளிகளுடன் அங்குயிலா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.</p><p>

ஐரோப்பிய கண்டத்திலிருந்து மால்டா தீவு 91 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப்
பெற்றுள்ள நிலையில், நெதர்லாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள போனைர் மற்றும் சபா
தீவுகள் தலா 90 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.</p><p></p><h2>சுற்றுலா பயணிகள்</h2><p>
</p><p>
மேலும், பிரித்தானியாவின் ஐல் ஒஃப் மேன், மான்ட்செரட், பார்படோஸ் மற்றும்
தாய்லாந்தின் புக்கெட் ஆகிய தீவுகளும் 2026-ஆம் ஆண்டின் பாதுகாப்பான 10
தீவுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e425b9b-f9bb-4209-b11e-f76e573dd9ab/26-6a6628805a001.webp' /></p><p>

வலுவான சட்ட அமுலாக்கம், சுற்றுலா பயணிகளுக்கான சிறப்புப் பாதுகாப்பு
நடவடிக்கைகள் மற்றும் புயல் மண்டலங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் இயற்கைச்
சூழல் ஆகியவையே இத்தீவுகள் முதன்மை பெற முக்கியக் காரணங்களாகச்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p>
அமைதியான சூழலில் இயற்கை அழகை ரசிக்க விரும்பும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு
இந்த 2026 தரவரிசைப் பட்டியல் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T15:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதிகளில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-genocide-commemoration-event-1785078988"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-genocide-commemoration-event-1785078988</id>
            <summary type="text">நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் வெலிக்கடை சிறைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும்
பல்லாயிரக் கணக்கான பொது மக்களையும் நினைவு கூரும் வகையில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

43ஆம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வு இன்று(26.07.2026) தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2> 

நினைவேந்தல் அனுஷ்டிப்பு</h2><p>

இந்த நிகழ்வு, கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மன்னார் நகர முதல்வருமான டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85115b2-52c0-4933-a1da-e5e92f8b812c/26-6a66257d56aea.webp' /></p><p> </p><p>

இதன்போது குட்டிமணி, தங்கத்துரை உள்ளடங்களாக 53 அரசியல் கைதிகளுக்கும்,பொது மக்களுக்குமான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5c81cbb-8225-4667-9e33-5bc57f7a920f/26-6a66257e41734.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b1ff0a-9b4d-4a69-8874-5f300ced5297/26-6a66257f1702f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/084d3b73-395f-43c6-8c9e-f6ef7c91fffd/26-6a66257fd362b.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T15:20:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்மண்டி டி-டே கடற்கரைகளுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்து..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unesco-world-heritage-normandy-d-day-beaches-1785077125"></link>
            <id>https://tamilwin.com/article/unesco-world-heritage-normandy-d-day-beaches-1785077125</id>
            <summary type="text">இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனியின் படைகளிடம் இருந்து பிரான்ஸை
விடுவிப்பதற்காக நேச நாட்டுப் படைகள் தரையிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க
பிரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனியின் படைகளிடம் இருந்து பிரான்ஸை
விடுவிப்பதற்காக நேச நாட்டுப் படைகள் தரையிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க
பிரான்ஸின் நோர்மண்டி 'டி-டே' (D-Day) கடற்கரைகளை உலகப் பாரம்பரிய தளமாக
யுனெஸ்கோ (UNESCO) அறிவித்துள்ளது.</p><p>

1944-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் திகதி நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த தாக்குதலின் நினைவுகளையும், அப்பகுதியின் தனித்துவமான பண்பாட்டு
நிலப்பரப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த உலகப் பாரம்பரிய தகுதி
வழங்கப்படுவதாக யுனெஸ்கோ தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நோர்மண்டி டி-டே கடற்கரை</h2><p>
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா,
பெல்ஜியம், நோர்வே, போலந்து, கிரீஸ், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து
உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,56,115 நேச நாட்டுப் படை வீரர்கள்
கடல் வழியாகவும் வான்வழியாகவும் நார்மண்டியின் யூட்டா, ஓமஹா, கோல்ட், ஜூனோ
மற்றும் ஸ்வார்ட் ஆகிய கடற்கரை எல்லைகளில் களமிறங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c00b54d8-226c-4b7e-ad05-95b6b23c55f7/26-6a66224698bff.webp' /></p><p>
</p><p>
ஐரோப்பாவை நாஜி படைகளின் பிடியில் இருந்து விடுவிப்பதில் தீர்க்கமான
திருப்புமுனையாக அமைந்த இந்த நோர்மண்டி கடற்கரைப் பகுதிகள், தற்போதும் உலகத்
தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய நினைவு கூரல் நிகழ்வுகளின் மையப்பகுதியாக
விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T15:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்கட்சிகளுக்குள் தஞ்சம் புகும் ஊழல்வாதிகள்- அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sundaralingam-pradeep-accuses-opposition-party-1785077938"></link>
            <id>https://tamilwin.com/article/sundaralingam-pradeep-accuses-opposition-party-1785077938</id>
            <summary type="text">எதிர்க்கட்சி என்ன குற்றச்சாட்டுக்களை அடுக்கினாலும், மக்கள் எப்போதும் அநுர ஆட்சியுடன் இணைந்திருப்பார்கள் என்றும், எதிர்த்தரப்பு ஊழல்வாதிகளால் சூழப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சி என்ன குற்றச்சாட்டுக்களை அடுக்கினாலும், மக்கள் எப்போதும் அநுர ஆட்சியுடன் இணைந்திருப்பார்கள் என்றும், எதிர்த்தரப்பு ஊழல்வாதிகளால் சூழப்பட்டுள்ளது என்றும் 
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
தெரிவித்துள்ளார். </p><p>

ஹட்டன் நகரில் இன்று(26.07.2026) இடம்பெற்ற விசேட நிகழ்ச்சி ஒன்றின் பின்னர்
ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப்
பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


ஊழல்வாதிகளால் சூழப்பட்ட எதிர்க்கட்சி</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத்
தீர்மானத்திற்குப் பின்னர், எதிர்க்கட்சி குழப்பத்தில் உள்ளன என்பது தெளிவாகின்றது.

அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதற்குப் பதிலாக எதிர்க்கட்சித்
தலைவர் ஒரு வலுவான எதிர்க்கட்சியை நிறுவ தேவையான நடவடிக்கைகளையும், பொறுப்புகளையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b89edac-d6dd-4bc9-a884-2b7d17fa0548/26-6a662152b2923.webp' /></p><p> 

மக்களை ஏமாற்றி, தன்னை ஒரு நகைச்சுவை நபர் போன்று காட்டிக் கொள்ளாமல் நான் கூறியதை செய்தால் மாற்றம் நிகழும். 

மேலும், சபையில் இருப்பவர்கள், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளில் ஈடுபட்டவர்களால் எதிர்க்கட்சி இன்று சூழப்பட்டுள்ளது.</p><p>

நாட்டின் மக்கள் குடியரசுத் தலைவருடனும் அரசாங்கத்துடனும்
இருக்கிறார்கள். அவர்களில் 94.4 வீதம் தொழிலாளர்களே இருக்கிறார்கள். </p><h2>

மலையக மாணவர்களுக்கான விசேட திட்டம்</h2><p>

அத்துடன், இலங்கையில் தேசிய கல்வி மட்டத்துடன் ஒப்பிடும்போது மலையகப் பகுதியில்
கல்வி வளர்ச்சி தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இதனால் பல்கலைக்கழக
அனுமதி மற்றும் உயர்கல்வி அடைவு மட்டம் மலையக சமூகத்தில் குறைவாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ebb8bce-60f7-4bf8-9e98-303cd5b658c1/26-6a6621537fbda.webp' /></p><p> </p><p>

 இதன் காரணமாக 22 கோரிக்கை அடங்கிய முக்கிய செயல்களைச்
விரைவில் முன்னெடுப்பது தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
</p><p>
அதில், ஆசிரியர் பற்றாக்குறை, பாடசாலைகளுக்கான காணி உரிமை மற்றும் தோட்டப்புறங்களின் உள்ள பாடசாலைகளுக்கு
செல்லும் வீதிகள் அபிவிருத்தி திட்டங்களின் கீழ், வீதிப் புனரமைப்புப் பணிகள்
மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T15:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் அதிர்ச்சியிலிருந்து மீள காசா குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karate-training-for-gaza-children-war-1785075453"></link>
            <id>https://tamilwin.com/article/karate-training-for-gaza-children-war-1785075453</id>
            <summary type="text">மத்திய காசாவில் உள்ள டேர் அல்-பலா இடம்பெயர்ந்தோர் முகாமில் அமைக்கப்பட்ட
தற்காலிகக் கூடாரம் ஒன்று, தற்போது சிறுவர்களுக்கான கராத்தே பயிற்சி மையமாக
மாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய காசாவில் உள்ள டேர் அல்-பலா இடம்பெயர்ந்தோர் முகாமில் அமைக்கப்பட்ட
தற்காலிகக் கூடாரம் ஒன்று, தற்போது சிறுவர்களுக்கான கராத்தே பயிற்சி மையமாக
மாறியுள்ளது.
</p><p>
பயிற்சியாளர் கலீல் அயாத் அங்குள்ள டஜன் கணக்கிலான இடம்பெயர்ந்த
குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.
</p><p>
இஸ்ரேலின் போரினால் தொடர்ந்து அச்சம், கவலை மற்றும் அதிர்ச்சிகரமான சூழலை
எதிர்கொண்டு வரும் குழந்தைகளுக்கு, இந்த நெறிமுறைப்படுத்தப்பட்ட
உடற்பயிற்சிகள் மற்றும் தற்காப்புக் கலை முறைகள் ஒரு பெரிய மன அழுத்த
நிவாரணியாக அமைவதோடு, அவர்கள் போரின் வடுக்களிலிருந்து மீண்டு வரப் பெரிதும்
உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be064b3f-a214-4d51-b231-17156ee0ac87/26-6a661d957d339.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T14:45:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகும் கொழும்பின் அவசர கூட்டம்! அம்பலமான திட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rights-of-the-tamil-people-1785074657"></link>
            <id>https://tamilwin.com/article/the-rights-of-the-tamil-people-1785074657</id>
            <summary type="text">சுமந்திரன் மற்றும் தமிழரசு கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதை விட, சொந்த அதிகாரத்தைத் தக்கவைக்கும் முனைப்பிலேயே இருப்பதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமந்திரன் மற்றும் தமிழரசு கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதை விட, சொந்த அதிகாரத்தைத் தக்கவைக்கும் முனைப்பிலேயே இருப்பதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வின், குறிப்பிட்டார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். </p><p>மேலும் தெரிவித்த அவர்,</p><p>

வடக்கு-கிழக்கு சிவில் சமூகங்களையும் பிற தமிழ் தேசியக் கட்சிகளையும் தவிர்த்துவிட்டு, கொழும்பில் மட்டும் அவசரக் கூட்டங்களைக் கூட்டி அரசியல் செய்வது, மக்களின் நலனைப் புறக்கணிக்கும் செயலாகும்.
</p><p>
மாத்தளையில் கண்டெடுக்கப்பட்ட 154 எலும்புக்கூடுகள் தொடர்பான செய்திகள், இனப்பிரச்சனையின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம்.</p><p>

இலங்கை அரசு முன்வைக்கும் 'அனைவரும் இலங்கையர்கள்' என்ற கோட்பாடு, ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளங்களை அழித்துவிடும்.
</p><p>
தற்போதைய அரசியல் தலைவர்கள் மக்களின் துயரங்களையும் இலக்குகளையும் உணர்ந்து நேர்மையாகப் பயணிக்க வேண்டும், இல்லையெனில் இது சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே அமையும் என்று எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Px5uhLhr89E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T14:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா வைரஸ் தீவிர பரவல்: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-virus-outbreak-congo-death-toll-reaches-1300-1785074265"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-virus-outbreak-congo-death-toll-reaches-1300-1785074265</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,354-ஐக் கடந்துள்ளதாகவும்,
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,354-ஐக் கடந்துள்ளதாகவும்,
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,075 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு
அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த ஐந்து நாட்களில் மட்டும் உயிரிழப்புகள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக
உயர்ந்துள்ளதுடன், இதுவரை பதிவு செய்யப்பட்ட எபோலா பரவல்களிலேயே மிக வேகமான
பரவலாக இது மாறியுள்ளதாக சர்வதேச சுகாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><p>

தற்போது கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ் 'புண்டிபுக்யோ' எனும் அரிதான
வகையைச் சேர்ந்தது.</p><p></p><h2>தடுப்பூசி</h2><p> </p><p>மனிதர்களைப் பாதிக்கும் எபோலா வகைகளில் மிகவும் அரிதான
இந்த வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது நேரடிச்
சிகிச்சைகளோ இல்லை என்பது இதன் தீவிரத்தை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c4771fd-fe2c-4088-80f3-c8facabdac1a/26-6a66155831839.webp' /></p><p>

தடுப்பூசி இல்லாத காரணத்தினால் இந்த வைரஸ் காட்டுத்தீ போலப் பரவி வருவதாக
ஆப்பிரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் முன்னாள் ஆலோசகர்
அப்துல்ஸலாமி நசிதி எச்சரித்துள்ளார்.
</p><p>
ஆயுதமேந்திய தீவிரவாதக் குழுக்களின் மோதல்கள் நிலவும் கிழக்குப் பகுதியில்
இந்த நோய் பரவி வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளை மருத்துவக் குழுக்கள்
சென்றடைவதில் கடும் சவால்கள் நிலவுகின்றன.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>

நோய் பரவலின் மையப்பகுதியான இடூரி மாகாணத்தில் உள்ள பல மருத்துவமனைகளில்,
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமை மற்றும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக்
கண்டித்து சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e7b8406-3cc1-44bd-8b90-ff084eb6f5be/26-6a6615577f36c.webp' /></p><p>
</p><p>
இதுவரை 100-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 35க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள்
உயிரிழந்துள்ளனர்.
</p><p>
சில கிராமங்களில் மக்கள் நோய் பரவல் குறித்த விழிப்புணர்வு இன்றி, சிகிச்சை
மையங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தடுப்புப்
பணிகள் முடங்கியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T14:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விவகாரத்தில் தொடரும் மௌனம் ..! தட்டிக் கேட்காத அரசியல் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-over-the-chemmani-burial-ground-1785070639"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-over-the-chemmani-burial-ground-1785070639</id>
            <summary type="text">செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மோசமான கருத்துகளுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுப்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மோசமான கருத்துகளுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

செம்மணி மனிதப் புதைக்குழி விவகாரத்தில் தற்போது அதிகாரத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அமைதியாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அதிகாரத்தைப் பெற்ற பின்னரும், சிங்கள அரசியல் தலைமையின் பிடியிலிருந்து விடுபடாமல், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே சில தமிழ் தலைவர்கள் கூட்டணி அமைத்து செயற்பட்டு வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JvYOkpTQT1w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இவ்வாறு செயற்படுபவர்கள் உண்மையான அரசியல்வாதிகள் அல்ல, மாறாக “அரசியல் தரகர்கள்” என்றே கூற வேண்டும்.
</p><p>
செம்மணி விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான அல்லது மோசமான கருத்துகளை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தும் அதிகாரம் அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது.

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டு, இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T14:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்சீனக் கடலில் கப்பல் விபத்து: 45 பேரை மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ship-accident-in-south-china-sea-vietnam-thanks-1785074035"></link>
            <id>https://tamilwin.com/article/ship-accident-in-south-china-sea-vietnam-thanks-1785074035</id>
            <summary type="text">தென்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த &#039;கோய் நுயென் 18&#039; என்ற சரக்குக் கப்பல்
மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள் அருகே உள்ள யோங்ஷு பாறைப் பகுதியில்
மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த 'கோய் நுயென் 18' என்ற சரக்குக் கப்பல்
மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள் அருகே உள்ள யோங்ஷு பாறைப் பகுதியில்
மூழ்கி விபத்துக்குள்ளானது.
</p><p>
இந்தக் கப்பலில் பயணம் செய்த 62 பேரில் 45 பேர் இதுவரை உயிருடன்
மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீட்புப்
பணிகளில் உடனடியாக உதவி வழங்கி 45 பேரைக் காப்பாற்ற உதவிய சீன அரசு மற்றும்
அதன் மீட்புக் குழுவினருக்கு வியட்நாம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்
பாம் து ஹாங் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தேடும் பணி</h2><p>
</p><p>
சீனா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளின் தேடுதல் மற்றும் மீட்புக்
குழுக்கள் இணைந்து ஹெலிகொப்டர்கள் மற்றும் பல ரோந்துக் கப்பல்கள் மூலம்
எஞ்சியவர்களைத் தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/947c53f3-3b01-4f31-b31c-13720547b62e/26-6a6611758ba0d.webp' /></p><p>
</p><p>
தொடர்ந்து காணாமல் போன மற்றவர்களையும் மீட்பதற்கு இரு நாடுகளும் இணைந்து
திறம்படச் செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்சீனக் கடலில் சீனா திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை: ஃபிலிப்பைன்ஸ் மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-s-sudden-encirclement-operation-south-sea-1785071451"></link>
            <id>https://tamilwin.com/article/china-s-sudden-encirclement-operation-south-sea-1785071451</id>
            <summary type="text">தென்சீனக் கடலில் தனது கடற்படை மற்றும் விமானப் படைகளை உள்ளடக்கிய வழக்கமான
சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

அதேவேளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்சீனக் கடலில் தனது கடற்படை மற்றும் விமானப் படைகளை உள்ளடக்கிய வழக்கமான
சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
</p><p>
அதேவேளை, வெளிநாடுகளுடன் இணைந்து கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்வதன் மூலம் அப்பகுதியின் அமைதியை ஃபிலிப்பைன்ஸ் சீர்குலைப்பதாக சீனா
குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளைப் பீடத்தின்
ஊடகப் பேச்சாளர் கேர்ணல் சாய் ஷிச்சென் இது குறித்துத் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளுடன் இணைந்து ஃபிலிப்பைன்ஸ் நடத்தும் கூட்டு சுற்றிவளைப்பு
நடவடிக்கைகள் தென்சீனக் கடல் பிராந்தியத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும்
பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சீனப் படைகள்&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் எல்லை இறையாண்மையையும் கடல்சார் உரிமைகளையும் சீனப் படைகள்
உறுதியாகப் பாதுகாக்கும் என்றும், பிராந்திய அமைதியை நிலைநிறுத்தும் என்றும்
அவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ca4700-8ab6-4196-8e52-58d98fbc69d7/26-6a660e2e5bfa0.webp' /></p><p>

தென்சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கோரி வருகிறது. இருப்பினும்,
தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும்
நிலையில், 2016-ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் சீனாவின் இந்த உரிமைகோரலை
நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயார்..! பிரித்தானியா பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/britain-s-new-prime-minister-criticizes-trump-1785068478"></link>
            <id>https://tamilwin.com/article/britain-s-new-prime-minister-criticizes-trump-1785068478</id>
            <summary type="text">பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயாராக இருப்பதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயாராக இருப்பதாக 
பிரித்தானிய புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். </p><p>


பதவியேற்ற பின்னர், சர்வதேச ஊடகமொன்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


எதிராகவும் பேச தயார்..
</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
டொனால்ட் ட்ரம்புடன் தனது முதல் தொலைபேசி உரையாடல் மிகவும் சுமுகமாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3503eda-5f0a-4f08-8551-d8bba1e4d878/26-6a660d6490d2d.webp' /></p><p> </p><p>

உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்.</p><p>

 பிரித்தானியாவுக்கு எது சரி என்று நான் உணரும் போதெல்லாம், ட்ரம்பின் கருத்திலிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவும், அதனை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டேன்.</p><p> 

எந்தவொரு தலைவரும் முதலில் தங்களது நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாக்க வேண்டும். அந்தப் பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கு அதுவே அவசியம். 

ட்ரம்ப் ஈரானுடன் உருவாக்கியுள்ள மோதல் சூழ்நிலை கவலையளிக்கின்றது என்றார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-26T13:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண விதிவிலக்கினால் தண்டனையிலிருந்து தப்பிய லியோனல் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/messi-escaped-suspension-world-cup-rule-exception-1785071462"></link>
            <id>https://tamilwin.com/article/messi-escaped-suspension-world-cup-rule-exception-1785071462</id>
            <summary type="text">அர்ஜென்டினா (Argentina) கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, வரவிருக்கும்
மேஜர் லீக் சாக்கர் (MLS) ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்காத போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினா (Argentina) கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, வரவிருக்கும்
மேஜர் லீக் சாக்கர் (MLS) ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்காத போதிலும், எந்தவித
இடைநீக்கம் அல்லது ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பியுள்ளார்.
</p><p>
வழக்கமாக எம்.எல்.எஸ் ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்கத் தவறினால் ஒரு
போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.</p><p></p><h2>உலகக் கிண்ண விதி</h2><p>

ஆனால், 2026-ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பாகவே எம்.எல்.எஸ் நிர்வாகம் மற்றும்
வீரர்கள் சங்கம் (MLSPA) இடையே எட்டப்பட்ட சிறப்பு ஒப்பந்தத்தின்படி, உலகக்
கிண்ணத் தொடரின் இறுதிச் சுற்றுகள் வரை விளையாடிய வீரர்களுக்குப் போதிய ஓய்வு
மற்றும் பயிற்சியில் மீண்டும் இணைவதற்கான அவகாசம் வழங்குவது குறித்து
அணிகளுடன் பேசி முடிவெடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09981427-2699-475a-87d1-6b186264bc34/26-6a660b5c12559.webp' /></p><p>இதன் காரணமாக, சமீபத்தில் முடிவடைந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி
வரை அர்ஜென்டினா (Argentina) அணிக்காக விளையாடிய லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது சக வீரர்
ரோட்ரிகோ டி போல் ஆகிய இருவருக்கும் சார்லட்டில் நடைபெறவுள்ள 30ஆவது
ஆல்-ஸ்டார் போட்டியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2025-ஆம் ஆண்டு போதிய மருத்துவக் காரணங்களின்றி கடைசி நேரத்தில்
போட்டியில் இருந்து விலகியதற்காக மெஸ்ஸிக்கு ஒரு போட்டித் தடை
விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை முன்கூட்டியே முறைப்படி பெறப்பட்ட
விலக்கு காரணமாக ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இன்றி அவர் தப்பியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள் - இலங்கை சகோதரர்களுக்கு நேர்ந்த கதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/64-pigeons-rescued-from-katunayake-flight-1785071688"></link>
            <id>https://tamilwin.com/article/64-pigeons-rescued-from-katunayake-flight-1785071688</id>
            <summary type="text">கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க பிரிவினரால் 5 இலட்சம் ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க பிரிவினரால் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது.</p><p> 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>கட்டுநாயக்க&nbsp; விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர இரண்டு சகோதரர்கள் முற்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK652 விமானம் மூலம் நேற்று( 25.07.2026) சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.
</p><h2>
திருப்பி அனுப்பப்பட்ட புறாக்கள்</h2><p>
இதன்போது, கிரீன் சேனல் வழியூடாக வெளியேற முயன்ற நிலையில், அவர்களின் 8 பயணப் பெட்டிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதற்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c8c4457-5a83-425c-ba88-654d69eeb290/26-6a66099091664.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 3,431,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், கடத்தி வரப்பட்ட புறாக்களில் 8 புறாக்கள் கூண்டுகளுக்குள்ளேயே உயிரிழந்திருந்துள்ளன.</p><p>

சுங்கப் விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு சகோதரருக்கு 4,00,000 ரூபாய், மற்றையவருக்கு 100,000 ரூபாய் என மொத்தம் ரூ. 5,00,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:21:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்படும் - சஜித் முழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leader-sajith-in-anuradhapura-1785070078"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leader-sajith-in-anuradhapura-1785070078</id>
            <summary type="text">விவசாயிகளை இழிவுபடுத்தும் தற்போதைய அரசாங்கத்தை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்போவதும்
இந்த விவசாயிகள்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளை இழிவுபடுத்தும் தற்போதைய அரசாங்கத்தை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்போவதும்
இந்த விவசாயிகள்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
</p><p>
அநுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை தேர்தல் தொகுதி, நாச்சியாதீவு பிரதேசத்தில்
நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நெற்செய்கை உள்ளிட்ட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும்
அதிர்ச்சிக்குள்ளாகி பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல சவால்கள்
மற்றும் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இவர்கள், பிள்ளைகளின்
கல்விக்குக் கூட வலுவூட்ட முடியாதவாறு தற்போதைய அரசு விவசாயத்தை அழிக்கும்
கொள்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p></p><h2>தரமற்ற உரம்</h2><p>

நகைநட்டுக்களை அடகு வைத்து, வட்டிக்குப் பணம் பெற்று விவசாயத்தைத்
தொடங்கினாலும், இன்று விவசாயத்துக்குத் தேவையான தரமான விதைநெல் இல்லை. உரிய
நேரத்தில் உர மானியமும் கிடைப்பதில்லை. கிடைக்கும் உரமும் தரமற்றதாகக்
காணப்படுகின்றது. விவசாய இரசாயனங்கள், உரம் மற்றும் விவசாய உபகரணங்களின்
விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
</p><p>
விவசாயியை இவர்கள் கடவுள் என்று கூறினாலும், விவசாய உபகரணங்களுக்கு அரசாங்கம்
வட் வரியை விதித்து வருகின்றது.

யானை - மனித மோதல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு மத்தியில் அறுவடை செய்தாலும்,
அவ்வாறு பெறப்படும் அறுவடைக்கு நியாயமான நிலையான குறிப்பிட்ட விலை
கிடைப்பதில்லை. இன்று ஒரு கிலோகிராம் நெல் உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக
விவசாய அமைச்சரே கூறிவிட்டு, நிலையான விலையை 120 ரூபாவாக ஆக்கியுள்ளார். </p><p>இந்த
அரசின் அமைச்சர்களுக்குத் தேர்தல் காலத்தில் விவசாயி ராஜாவாகத் தெரிந்தாலும்,
தேர்தலின் பின்னர் விவசாயிகள் நட்டமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

அன்று 5000 ரூபா உரம் வேண்டாம் என்று கூறி அநுரகுமார திஸாநாயக்கவை
ஜனாதிபதியாக்கி இறுதியில் விவசாயிகள் துயரப்படுகின்றனர். அரசின் திறைசேரியில்
பணம் நிரம்பியிருந்தும் உரிய நிவாரணங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p></p><h2>இறக்குமதி செய்யப்பட்ட அரிசி</h2><p> </p><p>விவசாயியை கடவுள் என்று கூறி அதிகாரத்தைக்
கைப்பற்றிவிட்டு, இன்று விவசாயியைக் 'கசிப்புக்காரன்' என அரசு கூறி வருகின்றது.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு வேலையின்றி அவதியுறும் இளைஞர்களைக்
'கரையான்கள்' என அழைத்தமையால், இளைஞர்கள் ஒன்றிணைந்து கரப்பான் பூச்சி மக்கள்
கட்சியை ஆரம்பித்து மேற்கொண்ட புரட்சி புதுடில்லி வரை வந்த காரணத்தால்
இந்தியக் கல்வி அமைச்சர் வேலையை விட்டு சென்றுள்ளதை போல், நமது நாட்டு
விவசாயிகளை 'கசிப்புக்காரன்' என அழைக்கும், செயற்கை விவசாயிகள் என அவமதிக்கும்
இந்த அரசாங்கத்தின் முடிவை இந்த விவசாய சமூகமே ஒருநாள் தீர்மானிக்கும்.
</p><p>
இன்று நெற்களஞ்சியங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியால்
நிறைந்துபோயுள்ளன. நிலையான விலையைப் பேணிப் பாதுகாப்பதற்கு நுண், சிறிய
மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டும். இன்று அவர்கள்
கடன் செலுத்தாதோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தச் சிறிய
அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.</p><p>
உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறிய இந்த அரசு வெளிநாடுகளிலிருந்து
அரிசியை இறக்குமதி செய்து இங்குள்ள களஞ்சியங்களை நிரப்பியுள்ளது.

பெலவத்த கட்சி அலுவலகமே இன்று அரசின் சகல பதவிகளையும் தீர்மானித்து
வருகின்றது. இன்று விவசாய அமைச்சரால் விவசாயிகளைச் சந்திக்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்பம் முதலே விவசாய சங்கங்கள், இளைஞர் கழகங்கள்,
சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான உறுப்புரிமைகள் மற்றும் பதவிகள் என
சகலதையும் பெலவத்த கட்சி அலுவலகத்திலிருந்தே தீர்மானித்து வந்தனர்.</p><p></p><h2>நியாயமான விலையில் மூலதனம்</h2><p>
</p><p>எல்லாவற்றையும் பெலவத்த அரசியலுக்கு உட்படுத்தவே இந்த அரசாங்கம் முற்பட்டு
வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் விவசாயிகளை நவீன தொழில்நுட்பத்தால்
வலுப்படுத்தி, சிறிய பரப்பளவிலான காணியிலிருந்து அதிக அறுவடையைப் பெறத்
தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், நியாயமான விலையில் மூலதனத்தையும்
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.
</p><p>
அன்று ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் விவசாயக் கடன் வழங்கப்பட்ட போதிலும்,
இப்போது அந்தக்கடன் வசதிகள் வழங்கப்படுவதில்லை. கிராமத்திலுள்ள வட்டி
வியாபாரிகளே இன்று விவசாயக் கடன்களை வழங்கி வருகின்றனர். ஆகவே, சொந்த காலில்
நின்று விவசாயத்தை மேற்கொள்ள மூலதனத்தையும் நிதிசார் பக்கபலத்தையும்
பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றும் கூட விவசாயிக்காக ஐக்கிய மக்கள் சக்தியே தொடர்ச்சியாகக் குரல்
கொடுத்து வருகின்றது.
</p><p>
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்காகவும், விவசாயிகளின் உரிமைகள்
மற்றும் நிலையான விலைக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது.
அதனால்தான் இன்றும் மக்கள் தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடம்
முன்வைத்து வருகின்றனர். அதிகாரம் இல்லாவிட்டாலும் இன்றும் எதிர்க்கட்சியில்
இருந்துகொண்டு மக்களுக்குச் சேவை செய்வது ஐக்கிய மக்கள் சக்தியே என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-26T13:01:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் கறுப்பு ஜூலை போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-black-outside-in-london-1785069229"></link>
            <id>https://tamilwin.com/article/protest-black-outside-in-london-1785069229</id>
            <summary type="text">கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. 

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.</p><p> 

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜூலை போராட்டம்</h2><p>
</p><p>
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, (MSDTE) சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் ( TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிக ரகத்திற்கு முன்பாக (13 Hyde Park Gardens, Tyburnia, London W2 2LU) இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ba9ae69-cd2b-4fd0-ae29-2f3301595581/26-6a6601b0319cf.webp' /></p><p>

1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ,இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.</p><p>

இந்தப் போராட்டத்தில் கருப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழத் தமிழ் மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமையுடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:53:27+00:00</updated>
        </entry>
    </feed>
