<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-04T07:50:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Diasa</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதப் புதைகுழிகளில் மீட்கப்படும் என்புகள்: அறிவியல் அடையாளம் அவசியம்..! பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statement-issued-by-british-tamil-association-1788506698"></link>
            <id>https://tamilwin.com/article/statement-issued-by-british-tamil-association-1788506698</id>
            <summary type="text">மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் என்புகளை அறிவியல் ரீதியாக
அடையாளம் காணவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் நடவடிக்கை
எடுக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் என்புகளை அறிவியல் ரீதியாக
அடையாளம் காணவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. </p><p>


இந்த விடயம் தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2> 

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கோரிக்கை</h2><p>
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>


இலங்கையின் நீண்டகால ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் கைது
செய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம்
சரணடைந்தவர்கள் அல்லது அரச படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை வெளிக் கொணர்வது இனியும் தாமதிக்க
முடியாத அவசரக் கடமையாகும்.
</p><p>
கிடைக்கப் பெறும் ஆவணங்கள், சர்வதேச அமைப்புகளின் பதிவுகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் இலங்கையின் காணாமல் போனோர்
அலுவலகத்தின் (OMP) தரவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, போரின்
இறுதிக் கட்டத்துடன் தொடர்புடைய காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,000க்கும்
அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db54c752-4792-47e4-b303-a88d30edd8d4/26-6a9a74e8ec261.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பெயர்ப் பட்டியலை
உடனடியாக வெளியிடுவது நீதிக்கான தேடலின் அத்தியாவசியமான முதல் படியாகும்.
</p><p>
இந்தச் செயல்முறை, இக்குற்றங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக்
கண்டறிவதற்கும், குற்றவாளிகளை
அடையாளம் காண்பதற்கும், நீதித்துறை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், உறவினர்கள்
தங்கள் இறுதி மரியாதையைக் கண்ணியமான முறையில் செலுத்துவதற்கும் முதல் படியாக
அமையும்.</p><h2>விவரங்களை சரிப்பார்க்க தளவுத்தளம்</h2><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்கள், காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட திகதிகள்,
சரணடைந்த இடங்கள், கடைசியாகக் காணப்பட்ட இடங்கள் மற்றும் இரத்த உறவினர்களின்
தொடர்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட, சரிபார்க்கக் கூடிய
தரவுத்தளமாக உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.</p><p>


 மனித என்புகளை அடையாளம் காண்பதில் இனியும் தாமதம் கூடாது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் தொடர்ந்து
கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8ba3459-bb98-4743-8de5-82806055a8fc/26-6a9a74e9b14d6.webp' /></p><p> </p><p>

இவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை அறியும் வாய்ப்பை வழங்கக் கூடிய முக்கியமான தடயவியல் ஆதாரங்களாகும்.
</p><p>
ஒவ்வொரு மனித என்புகளையும் அறிவியல் ரீதியாக அடையாளம் காண்பதற்கு,

காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பெயர்ப் பட்டியல்

இரத்த உறவினர்களிடமிருந்து பெறப்படும் DNA மாதிரிகள்

பாதுகாப்பாகப் பராமரிக்கப்படும் மனித என்புகளில் இருந்து பெறப்படும் DNA
மாதிரிகள்

சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடயவியல் நடைமுறைகள் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.</p><h2>

இறுதி மரியாதைக்காக கொடுக்கப்பட வேண்டிய மனித எச்சங்கள்</h2><p>

ஒரு மனித எச்சம் அடையாளம் காணப்படுவது வெறும் அறிவியல் செயல்முறை அல்ல. அது
ஒரு குடும்பத்திற்கு பல தசாப்தங்களாக மறுக்கப்பட்ட உண்மையை வழங்கும் நீதிச்
செயல்முறையாகும்.
</p><p>
அடையாளம் காணப்பட்டவர்களின் உடல் எச்சங்களை அவர்களின் குடும்பங்களிடம்
கண்ணியத்துடன் ஒப்படைத்து, அவர்கள் விரும்பும் மத மற்றும் கலாசார மரபுகளின்படி
இறுதி மரியாதை செலுத்துவதற்கான உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.&nbsp;</p><h2>கிடைக்கப்பெறும் ஆவணங்கள் என்ன கூறுகின்றன</h2><h4>
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC)</h4><p>


சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பதிவுகளின்படி, 2011 டிசம்பர் 31 நிலவரப்படி
இலங்கையில் 15,780 பேரைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதில் பெரும்பான்மையினர் ஆண்கள் என்றும், 1,494 குழந்தைகள் மற்றும் 754
பெண்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கியிருந்ததாக அந்தக் காலகட்டத்தின் ICRC தரவுகள்
குறிப்பிடுகின்றன. </p><p>

136 நபர்கள் மட்டுமே அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்த்து
வைக்கப்பட்டிருந்தனர்.</p><p>

மேலும், ஐ.சி.ஆர்.சி (ICRC) அமைப்பு முந்தைய ஆண்டில்
17,741 சிறைக் கைதிகளைச் சென்று பார்வையிட்டிருந்தது.</p><h4>

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு (AHRC)</h4><p>

2012 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் 15,780 காணாமல் போனோர் தொடர்பான
எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான வழக்குகளும் அடங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d04ad15f-b2b1-48c2-af9e-c342d6212878/26-6a9a74ea69e89.webp' /></p><p>
</p><h4>

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (AI)</h4><p>

இலங்கை, உலகில் அதிகளவிலான ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற
நாடுகளில் ஒன்றாகும். 1980களின் பிற்பகுதியிலிருந்து 60,000 முதல் 100,000
வரையிலான ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகள் நிலுவையில்
உள்ளன.

இந்த சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல் இல்லாத நிலையைக் கருத்திற் கொண்டு,
இலங்கையில் நீதி மறுக்கப்பட்டதற்கான சான்றுகளுக்குப் பஞ்சமில்லை என அம்னெஸ்டி
இன்டர்நேஷனல் (Amnesty International) சுட்டிக்காட்டியுள்ளது.
</p><h4>



காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழுக்கள்</h4><p>

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக் குழுக்களுக்கு 18,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததாக 2014ஆம் ஆண்டில்
தெரிவிக்கப்பட்டது.</p><h4>


இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகம் (OMP)</h4><p>இலங்கையில் 17,000 காணாமல் போனோர் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில்
பெரும்பாலானவை சிறிலங்கா - விடுதலை புலிகள் (LTTE) போருடன் தொடர்புடையவை.</p><h4>


இலங்கை காணாமல்போன ஆட்களைப் பற்றிய அலுவலகம் (OMP)</h4><p>எங்களது தரவுத் தளத்தில் 23,352 வழக்குகள் கையாளப்பட்டு வருகின்றன" என்று
ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச
தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தலைவரான மகேஷ் கட்டுலந்த கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். </p><p>

இரட்டிப்பாகப் பதிவானவை மற்றும் போரில்
காணாமல் போன இராணுவத்தினரின் (missing in action) கோப்புகளை நீக்கிய பின்னர்,
தற்போது 16,966 காணாமல் போனோர் வழக்குகள் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
</p><p>
அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, 1,00,000க்கும் அதிகமான மனித உயிர்களைப்
பலி வாங்கிய
போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சுமார் 20,000 பேர் காணாமல் போயுள்ளதாகக்
கருதப்படுகின்றது.</p><h4>




பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)</h4><p>

நம்பகமான ஆவணச் சான்றுகளின் அடிப்படையில், போரின் இறுதிக் கட்டத்தில் கைது
செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 18,000க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்
உறவுகள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறும், அவர்களிற்கு என்ன நடந்ததது என்பதைத்
தெளிவுபடுத்துமாறும் பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) ஒரு தசாப்தத்திற்கும்
மேலாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.</p><h2>சர்வதேச சமூகத்திற்கான உடனடி கோரிக்கைகள்</h2><p>
01. முழுமையான பெயர்ப் பட்டியலை வெளியிடுதல்: சிறிலங்கா அரசும் ஏனைய
பங்குதாரர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியல், காணாமல்
ஆக்கப்பட்ட திகதிகள் மற்றும் இரத்த உறவினர்களை தொடர்பு கொள்ளும் விபரங்கள்
அடங்கிய விரிவான பட்டியலை வெளியிடுவதற்கு சர்வதேச சமூகம் அவர்கள் மீது
அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.</p><p>

02. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்: பாதிக்கப்பட்ட அனைவரினதும்
மேற்குறித்த விபரங்கள் 1) ஒரே விரிவான *பொது தரவுத்தளத்தில் (centralised
database) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யவும், 2) தம்மிடம் கைவசம் உள்ள
பட்டியல்களை ஐ.நா (UN) நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நம்பகமான
முழுமையான பெயர் பட்டியலை விரைவாக வெளிக் கொண்டு வருவதற்கு அனைவரையும் இணைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60734200-b7d3-489e-9ccf-dbcfe68e82b4/26-6a9a74eb1ce04.webp' /></p><p>
</p><p>
03. சர்வதேச டி.என்.ஏ தரவு வங்கி - பொது தரவுத்தளம் (centralised database):
செம்மணியில்
கண்டெடுக்கப்பட்ட 583 மனித எலும்புக்கூடுகள் மற்றும் பிற இடங்களில்
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை, டி.என்.ஏ தரவு வங்கியைக் கொண்டு விரைவாக
அடையாளம் காண மேற்படி பொது தரவுத்தளம் (centralised database)
வழிவகுக்கும்.
</p><p>
 இந்தப் பட்டியல் இல்லையெனில், இந்த மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்து விடும்.
</p><p>
சர்வதேச மேற்பார்வையின் கீழ் டி.என்.ஏ தரவு வங்கியை நிறுவுதல், இலங்கையிலும்
மற்றும் உலகளாவிய புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் DNA ஒப்பீட்டு
மாதிரிகளை (reference
samples) சேகரித்தல், மனித எச்சங்களிலிருந்து பெறப்படும் DNA மாதிரிகளுடன் இவை
ஒப்பிடப்பட்டு, அடையாளம் காணும் செயல்முறை வெளிப்படையாகவும் சுயாதீனமாகவும்
மேற்கொள்ளப்பட வேண்டும். 

DNA ஒப்பீட்டுச் செயல்பாட்டை (DNA matching process) ஐக்கிய
இராச்சியம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றில்
மேற்காள்ளுதல்.
</p><p>
04. டி.என்.ஏ சேகரிப்பிற்கான அனுமதி: குற்றங்கள் நடைபெற்ற இடங்களிலிருந்து
சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எலும்புக்கூடுகள் மற்றும் பிற உடல்
எச்சங்களுடன் ஒப்பீடு செய்வதற்கும், டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிப்பதற்கும்
இலங்கை அரசு ஐக்கிய இராச்சியம் (UK) அல்லது ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு
நாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும்.</p><p>
05. தடயவியல் நிபுணர்களைப் பணியமர்த்துதல் (Forensic Experts Deployment): மினசோட்டா
நெறிமுறை (Minnesota Protocol) மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டத்
தரநிலைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை உறுதி செய்வதற்காக, கண்டறியப்பட்ட
அனைத்து மனிதப் புதைகுழி இடங்களுக்கும் அங்கீகாரம் பெற்ற தடயவியல்
மானுடவியலாளர்கள் (Forensic Anthropologists), நோயியல் நிபுணர்கள்
(Pathologists) மற்றும் சட்ட நிபுணர்களை உடனடியாகப் பணியமர்த்துதல்.
</p><p>
06. புவிசார் மற்றும் செயற்கைக்கோள் பகுப்பாய்வு (Geospatial &amp; Satellite Analysis)
: மோதல் காலம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய காலப் பகுதிகளைச் சேர்ந்த, அறியப்பட்ட
மற்றும் சந்தேகிக்கப்படும் அனைத்து மனிதப் புதைகுழி இடங்களிலும் செயற்கைக்கோள்
படத் தொகுப்பு மற்றும் புவிசார் பகுப்பாய்வை மேற்காள்ளுதல்.</p><p>
</p><p>
07. மனிதப் புதைகுழிகளின் பாதுகாப்பும் உடனடி அகழ்வாராய்ச்சியும்: உடனடியான
அகழாய்வுபணிகளை (Immediate Excavations) மண்டைதீவு மற்றும் சாட்சிகளின்
வாக்குமூலங்கள், தடயவியல் சான்றுகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்ட பிற இடங்கள்
உட்பட மனித புதைகுழிகள் கண்டறியப்பட்ட அனைத்து இடங்களிலும் உடனடியாகத் அகழ்வு
பணிகளைத் தொடங்குதல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eea105f-c55c-492c-88aa-d21213d75660/26-6a9a74ebc6f52.webp' /></p><p>
</p><p>
08. சான்றுகளைப் பாதுகாத்தல் (Evidence Protection): சான்றுகள் அழிக்கப்படுவதையோ
மாற்றப்படுவதையோ தடுக்கும் வகையில் அனைத்து தடயவியல் சான்றுகளையும் சம்பவ
இடங்களையும் (குற்றவியல் இடங்கள்) பாதுகாத்து பராமரித்தல்.</p><p>

09. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான பங்கேற்பு (Victim Family Involvement)
: அனைத்து விசாரணைச் செயல்பாடுகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான
பங்கேற்பை உறுதிசெய்தல். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் வெறும் தகவல்
பெறுபவர்களாக அல்லாமல், விசாரணை மற்றும் அடையாளம் காணும் செயல்முறையின்
முக்கிய பங்குதாரர்களாக கருதப்பட வேண்டும்.
</p><p>
மேலும் அவர்களுக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த தகவல், DNA பரிசோதனை
முடிவுகள், மனித எச்சங்களின் அடையாளம் தொடர்பான தகவல், சட்ட உதவி, உளவியல்
மற்றும் சமூக ஆதரவு வழங்கப்பட வேண்டும்.</p><p></p><p>

10. தடையற்ற மேற்பார்வை (Unrestricted Oversight): அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச
தரநிலைகளுக்கு அமைவாக, அடையாளங் காணும் செயல்பாட்டில் ஈடுவதற்கு சர்வதேச
தடயவியல் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு முழுமையான, தடையற்ற
அனுமதியை வழங்குதல். அவர்களுக்கு ஆவணங்கள், தரவுத்தளங்கள், புதைகுழி இடங்கள்
மற்றும் தடயவியல் ஆதாரங்களுக்கு முழுமையான தடையற்ற அணுகல் வழங்கப்பட வேண்டும்.</p><p>

11. காலக்கெடுவுடன் கூடிய வெளிப்படையான அறிக்கையிடல்: பாதிக்கப்பட்டவர்களை
அடையாளம் காணுவது குறித்த முன்னேற்றம், குற்றங்கள் இழைக்கப்பட்ட
விவரங்கள், அடையாளம்
காணப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கட்டளைச் சங்கிலி (chain of command) ஆகியவை
குறித்து வெளிப்படையான அறிக்கையிடலை உறுதி செய்ய அவ்வப்போது அறிக்கைகளை
வெளியிடுதல். அதில் எத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன, எத்தனை பேர்
அடையாளம் காணப்பட்டுள்ளனர், எத்தனை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன, எத்தனை
DNA ஒப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, எத்தனை குடும்பங்களுக்கு முடிவுகள்
அறிவிக்கப்பட்டன என்பது போன்ற தகவல்கள் குறித்த இடைவெளிகளில் பொதுமக்களுக்கு
வெளியிடப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9852aa58-5334-4f54-883c-a35f3a3223ab/26-6a9a74ec78738.webp' /></p><p>
</p><p>
12. பொறுப்புக்கூறல் (Accountability): வலிந்து காணாமல் ஆக்குதல் என்பது ஒரு
குடும்பத்தின் தனிப்பட்ட துயரம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளையும் சட்டத்தின்
ஆட்சியையும் அடிப்படையாகத் தாக்கும் ஒரு தீவிரமான குற்றமாகும்.

 எனவே, விசாரணைகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அறியும் முயற்சியில் மட்டுமே முடிவடையக்
கூடாது. கட்டளைப் பொறுப்பு (command responsibility), நிறுவனப் பொறுப்பு
(institutional
responsibility) மற்றும் அரச பொறுப்பு (state responsibility) குறித்து
விசாரணை நடத்துதல் என தொடர் நடவடிக்கை தேவை.
</p><p>
13. உடல் எச்சங்களை உறவினரிடம் கையளித்தல்: தோண்டி எடுக்கப்பட்ட மனித எச்சங்களை
அவர்களின் இரத்த உறவினர்களிடம் ஒப்படைப்பதை உறுதி செய்வதுடன், குடும்பங்கள்
தங்களது இறுதி மரியாதையைச் செலுத்துவதற்கும், இறுதிச் சடங்குகளைக் கண்ணியமான
முறையில் நிறைவேற்றுவதற்கும் அனுமதித்தல்.

காலம் மிகவும் முக்கியமானது. நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த
செயல்பாடுகளைத் தாமதப்படுத்துவதே தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகளின் நீண்ட
கால உத்தியாகும்.</p><p>தற்காலிக விசாரணைக் குழுக்கள் அமைத்தல், மற்றும் உறுப்பு
நாடுகள், பிராந்திய அமைப்புகள் (ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை), உலக வங்கி, சர்வதேச
நாணய நிதியம் (IMF) போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் போலி
வாக்குறுதிகள் மூலம், ஐ.நா அமைப்புகளின் அழுத்தத்தைத் தணிப்பதே இந்தத்
தாமதத்தின் நோக்கமாகும்.

எனவே, இலங்கை தெளிவான முடிவுகளை வெளிப்படுத்துவதை உறுதி செய்ய, குறிப்பிட்ட
காலக் கெடுவுடன் கூடிய நடைமுறைத் திட்டத்தை சர்வதேச சமூகம் வகுக்க வேண்டும்.</p><h2>சர்வதேச சமூகத்திற்கான அழைப்பு</h2><p>
பல தசாப்தங்களாக உண்மைக்காகக் காத்திருக்கும் குடும்பங்களை மேலும்
காத்திருக்கச் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. 

தற்காலிக ஆணைக்
குழுக்களும், எதிர்கால
நடவடிக்கைகள் குறித்த வெறுமனே வாக்குறுதிகளும் இனிப் போதாது. </p><p>அளவிடக் கூடிய
முடிவுகள், தெளிவான காலக்கெடுக்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பு என்பனவே
தற்போதைய அவசிய தேவைகளாகும்.
</p><p>
ஆகவே, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற
சர்வதேச அமைப்புகள், இலங்கை அரசாங்கத்துடனான இராஜதந்திர, பொருளாதார மற்றும்
நிதி நிறுவனங்கள் சார்ந்த ஈடுபாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முதன்மை நிபந்தனைகளாக முன்னிறுத்த வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8688363d-6334-4606-9932-8e7a3ed87105/26-6a9a74ed2b33e.webp' /></p><h2>எமது முதன்மை முன்னுரிமைகள்</h2><p>
01. குற்றவியல் நீதி (Criminal Justice): இலங்கை, பொறுப்புக்கூறல் மற்றும் OSLAP உட்பட
நீதிச் செயல்பாடுகளில் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பதையும், சர்வதேச
குற்றவியல் நீதி முறைமைக்கு (international criminal justice mechanism)
உடன்படுவதையும்
உறுதிசெய்தல்.
</p><p>
02. மீண்டும் நிகழாமை (Non-Recurrence): உரிய அதிகாரப் பகிர்வு, தமிழ்
தேசத்திற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் மற்றும் தமிழ் மக்களின் நியாயமான
அபிலாசைகளுக்கான அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வைப்
உறுதிப்படுத்துதல்.</p><p>

03.இழப்பீடுகள் (Reparations): தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து வெளியேறிய,
வெளியேற்றப்பட்ட
தமிழர்களை உடனடியாக மீளக் குடியேற்றுவதற்கும் விரும்புவோரின் முழு
சம்மதத்துடன் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கும் உடனடி நடவடிக்கைகளை
எடுத்தல்,&nbsp; போரினால்
பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மறுசீரமைத்து, வடக்கு-கிழக்கு பிராந்தியத்தை தீவின்
ஏனைய பகுதிகளுக்கு இணையான நிலைக்குக் கொண்டு வருதல்.
</p><p>
வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலம்,
வாழ்வாதாரம், சமூக உட்கட்டமைப்பு மற்றும் நீண்டகால மறுசீரமைப்பு தொடர்பான
பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களில் பலர் பல ஆண்டுகளாகத் தங்களது
அன்புக்குரியவர்களின் நிலை குறித்து எந்த உறுதியான தகவலும் இன்றி வாழ்ந்து
வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><h2>நீதி மேலும் தாமதிக்கப்படக் கூடாது..</h2><p>

ஒவ்வொரு ஆண்டும் தாமதமாகும் போது, சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள்
இழக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், வயதான பெற்றோர்கள் தங்களது
பிள்ளைகளின் உண்மையான நிலையை அறியாமலேயே இறந்து போகும் நிலையும் தொடர்கிறது.
</p><p>
இனி ஒரு குடும்பமும் “என் அன்புக்குரியவர் எங்கே?” என்ற கேள்வியுடன் வாழ
வேண்டிய நிலை ஏற்படக் கூடாது.
</p><p>
எனவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவது உட்பட,
உண்மை, அடையாளம் காணுதல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அனைத்து
நடவடிக்கைகளுக்கும் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய சர்வதேச கண்காணிப்பு
செயல்திட்டம் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
</p><p>
உண்மை மறைக்கப்படக்கூடாது, பெயர்கள் மறைக்கப்படக்கூடாது, சான்றுகள்
அழிக்கப்படக்கூடாது, நீதி மேலும் தாமதிக்கப்படக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T07:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதற்றத்தில் பிரபல அரசியல்வாதிகள்! ஆபத்தான நபரின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கவுள்ள பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-pasik-case-politicians-investigation-cid-1788505093"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-pasik-case-politicians-investigation-cid-1788505093</id>
            <summary type="text">சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பினை பேணி, அவரிடமிருந்து கோடிக்கணக்கான பணம் மற்றும் சலுகைகளை பெற்றதாக முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><h2>சர்ச்சைக்குரிய கட்டுமான அனுமதி</h2><p>
இதன் ஒரு கட்டமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடமும் நேற்று (03) சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0706cd95-c4ac-453a-a79b-ba506fce6f83/26-6a9a743ecd8f2.webp' />&nbsp;</p><p>

ஷிரான் பாசிக் சொந்தமானது என்று கூறப்படும் தெஹிவளை கடற்கரையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கான சர்ச்சைக்குரிய கட்டுமான அனுமதி தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
அவர் முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது குறித்த ஹோட்டல் கட்டப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.</p><h2>பல அரசியல்வாதிகளிடம் விசாரணை</h2><p> 

ஹோட்டல் கட்டப்பட்ட நேரத்தில் பிரதி அமைச்சராக இருந்த அருந்திக பெர்னாண்டோ, அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>இதேவேளை, தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்கவிடமும் மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவு (CCID) (01) திகதி சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததது.</p><p>
இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியில் வராத ஏதோ ஒரு பெரிய குற்றம்! தான் கைது செய்யப்படப் போகும் திகதியை நன்கு அறிந்துள்ள நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788505916"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788505916</id>
            <summary type="text">தான் எப்போது சிறைக்கு செல்வேன் என்று நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தான் எப்போது சிறைக்கு செல்வேன் என்று நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

தான் 12ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்யப்படுவேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் எமக்குத் தொடர்பில்லை.</p><h2>பதற்றத்தில் நாமல்&nbsp;</h2><p> </p><p>

தான் எப்போது கைது செய்யப்படுவேன் என்பது குறித்து நாமல் ராஜபக்சதான் நன்கு அறிந்திருப்பார்.
</p><p>
நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்திற்கு முழுமையாகத் தெரியாது. அவர் தொடர்பான ஒரு சில குற்றச்செயல்கள் குறித்தே நாம் அறிவோம்.

அவற்றுள் சில குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்காக உள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7A33NpQdXfI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இந்த வழக்குகளுக்காக அவர் 12ஆம் திகதிக்கு முன்னர் சிறைக்குச் செல்வாரா, அல்லது எமக்கோ, நீதிமன்றத்திற்கோ தெரியாத வேறு ஏதேனும் பாரிய குற்றச்செயல் தொடர்பில் அவர் கைது செய்யப்படுவாரா என்பது எமக்குத் தெரியாது.</p><p>

கடந்த கால குற்றச்செயல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும்போது, நாங்கள் அனைவரும் அறிந்த பல குற்றச்செயல்களைத் தாண்டி, வெளியில் தெரியாத பல குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவருகின்றன.
</p><p>
அவை, கடந்த கால குற்றங்களை விட பாரதூரமானதாகவும் இருக்கலாம், அதைவிட சிறியதாகவும் இருக்கலாம்.

எனவே, அந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்குத் தான்&nbsp; அதனுடைய பாரதூரம் தெரியும். எத்தனைக் குற்றங்களை தாங்கள் இழைத்துள்ளோம் என்ற வரையறை அவர்களுக்குத் தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7220eb9-442b-47f9-bc2d-2b70fa85a613/26-6a9a727685fdd.webp' /></p><p> </p><p>எனவே ஒவ்வொன்றாக தற்போது வெளிவரும் போது அவர்கள் குழப்பமடைகின்றார்கள். 

இதுதான் தற்போது நாமல் ராஜபக்சவுக்கும் நேர்ந்துள்ளது. </p><p>எம்மைவிட, நீதிமன்றத்தை விட&nbsp; அவருடைய குற்றங்கள் நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும். அவர் செய்த குற்றங்களுக்கு சிறைக்குச் செல்வது குறித்து அவர் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்.
</p><p> 

12ஆம் திகதிக்கு முன்னரா அல்லது அதற்குப் பின்னரா தாம் கைது செய்யப்படப் போகிறோம் என்பது குறித்து அரசாங்கத்தை விட நாமல் ராஜபக்ச நன்கு அறிவார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09008cb1-f7d4-4769-97bf-b2fe88908687/26-6a9a7275aca56.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:26:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் வறட்சி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-people-affected-by-drought-sl-1788504639"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-people-affected-by-drought-sl-1788504639</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் 96,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, வறட்சியான காலநிலை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் 96,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. </p><p>அத்தோடு, வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. </p><p>

இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வறட்சி</span></p><p> </p><p>

மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கமைய அந்த மாவட்டத்தில் மாத்திரம் 11,751 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99057cc4-86be-4ffe-ad1c-8d043040b63b/26-6a9a6d9b74bbc.webp' /></p><p> </p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் விநியோகப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 

இதன்படி, அனர்த்தத்திற்கு உள்ளான 6 மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளில் கடுமையான சோதனைகள்.. பெற்றோருக்கு விரைவில் கிடைக்கவுள்ள கருவிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-investigations-at-schools-police-igp-1788504576"></link>
            <id>https://tamilwin.com/article/drug-investigations-at-schools-police-igp-1788504576</id>
            <summary type="text">பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. </p><p>இதில் பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p> அத்துடன், பிள்ளைகளின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>பரிசோதனை கருவிகள்</h2><p>போதைப்பொருள் பயன்பாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் விரைவுப் பரிசோதனை கருவிகளை (Drug-testing kits) மக்களுக்கு இலகுவாகக் கிடைக்கச் செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான தேசிய குழுவிடம் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76980a23-dbed-45bb-946b-3d7fa19b5c42/26-6a9a6d2081196.webp' /></p><p> </p><p>முதற்கட்டமாக சந்தைகளுக்கும், நீண்டகாலத் திட்டமாக உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமும் இக்கருவிகளை விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. </p><p>பெற்றோர் தங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதைத் தனிப்பட்ட முறையில் பரிசோதிக்க இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:06:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் 12ஆம் திகதி வரப்போகும் மிகப்பெரிய கூட்டம்: நாமலின் தலைவிதியை தீர்மானிக்கும் 159 பேர்..! அவரே தெரிவித்துள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksha-statement-about-investigation-1788503997"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksha-statement-about-investigation-1788503997</id>
            <summary type="text">நான் எந்தத் தவறும் செய்யவில்லை, நாங்கள் எந்தத் தவறும் செய்ய வேண்டிய அவசியமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் எந்தத் தவறும் செய்யவில்லை, நாங்கள் எந்தத் தவறும் செய்ய வேண்டிய அவசியமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் இன்றைய தினம் (04.09.2026)முன்னிலையாகியுள்ளார்.</p><p>

விசாரணைக்கு செல்வதற்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>சுதந்திரமான விசாரணை</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எந்த நேரத்திலும் சுதந்திரமான விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பயந்தால், விசாரணைக்கு வரமாட்டோம். என்னை வரச் சொன்னால் நான் எப்போதும் வருவேன். </p><p>ஏனென்றால், அதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. 

இன்று, துரதிஷ்டவசமாக, இந்த நாட்டில் பொலிஸார் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். </p><p>எதிர்வரும் 12ஆம் திகதி நாமல் ராஜபக்ச வந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த நாட்டின் விவசாயிகளுக்காகவும், நாட்டிற்காகவும், நமது படையின் வெற்றிக்காகவும் ஒரு பெரிய கூட்டம் வரும். 

நான் எந்தத் தவறும் செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74faa9dc-9774-4fe9-9bd8-6ba668d511d7/26-6a9a6ceae64bb.webp' /></p><h2>திரிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள்</h2><p> </p><p>நாம் தவறுகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் எந்த நேரத்திலும் சுதந்திரமான விசாரணைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனென்றால், ஆதாரங்களைத் திரித்தவர் ஜனாதிபதிதான். </p><p>திரித்த ஆதாரம் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியும். 

ஆகவே, திரித்த ஆதாரம் என்று சொல்பவர்தான் நாடாளுமன்றத்தில் முடிவைத் தீர்மானிக்கிறார்.</p><p> எனவே, நாமல் ராஜபக்சவின் தலைவிதி அந்த 159 பேரால் தீர்மானிக்கப்பட்டால், அந்த 159 பேரின் தலைவர்தான் ஆதாரங்களைத் திரித்தவர் என குறிப்பிட்டுள்ளார்</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:03:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்காக மீட்புக் குழுவை அனுப்பிய அவுஸ்ரேலியா - நேபாளத்தில் 5000 வெளிநாட்டவர்கள் மாயமானதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australia-sends-rescue-team-for-its-people-1788504766"></link>
            <id>https://tamilwin.com/article/australia-sends-rescue-team-for-its-people-1788504766</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவை தொடர்ந்து, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக அவுஸ்ரேலிய அரசு சிறப்பு மீட்புக் குழுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவை தொடர்ந்து, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக அவுஸ்ரேலிய அரசு சிறப்பு மீட்புக் குழுக்களை நேபாளத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

கடந்த ஒகஸ்ட் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு
காரணமாக திரிசூலி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கொடிய திடீர் வெள்ளமும்
நிலச்சரிவும் ஏற்பட்ட நிலையில், இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், 583 வெளிநாட்டினர் உட்பட சுமார் 5,000 பேர் இதுரையில் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.
</p><h2>

அவுஸ்ரேலிய மீட்புக் குழு</h2><p>
இந்த நிலையில் நேபாள அரசின் அவசர உதவி கோரிக்கையை ஏற்று, அவுஸ்திரேலிய பேரிடர் உதவி மீட்புக் குழு (ADART) களமிறக்கியுள்ளது.
</p><p>
இதில் நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த சிறப்பு ட்ரோன் விமானிகள் உட்பட 15 பேர் உள்ளடக்கப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c874ee7-eae1-4f9e-bf73-0d4515f58fbf/26-6a9a6b1c145aa.webp' /></p><p> </p><p> 

மேலும், வானில் இருந்து பரந்த நிலப்பரப்புகளை ஆய்வு செய்யவும், மீட்புக்
குழுவினர் நேரடியாகச் செல்ல முடியாத குறுகிய மற்றும் ஆபத்தான இடங்களுக்குள் சென்று தேடவும் கூடிய அதி நவீன ட்ரோன்கள் இந்த குழுவினரிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிருடன் இருக்கக்கூடும் என்ற
நம்பிக்கையில் இந்த தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>

“Life360” செயலியின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை</h2><p>
இதற்கமைய, ட்ரோன் குழுவைத் தவிர, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் (DVI) அவுஸ்திரேலிய கூட்டாட்சி 7 பொலிஸாரும், நிபுணர்களும் எதிர்வரும் சனிக்கிழமை நேபாளம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் தூதரக அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் என ஏற்கனவே 19
அவுஸ்திரேலியர்கள் அங்கு முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1a28a2-1fe1-45f6-af8e-5ba8e3455734/26-6a9a6b1cd0ba7.webp' /></p><p>

காணாமல் போன 36 அவுஸ்திரேலியர்கள், வெள்ளத்தில் சிக்கியிருந்த இருவர் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 36 அவுஸ்திரேலியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.</p><p>

இதனால் அவுஸ்திரேலிய அரசு மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் இடையே தீவிர கவலை நிலவி வருகின்றது.</p><p> 

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் சில உறவினர்கள் “Life360”போன்ற செயலிகளின் இருப்பிடத் தரவுகளைக் கொண்டு நேபாளத்திற்கே நேரில் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T06:55:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிற்சாலையொன்றில் இரவில் ஏற்பட்ட பெரும் அனர்த்தம்! மூன்று ஊழியர்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-factory-in-biyagama-1788502952"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-factory-in-biyagama-1788502952</id>
            <summary type="text">கம்பஹா - பியகம வர்த்தக மண்டலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் உற்பத்தி ஆலைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - பியகம வர்த்தக மண்டலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

தொழிற்சாலையின் உற்பத்தி ஆலைக்கு இரசாயனங்கள் விநியோகிக்கப்படும் இடத்தில் நேற்றிரவு இரவு பணியின் போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><h2>தீ விபத்திற்கான காரணம்</h2><p>
</p><p>
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc29e22-648c-4023-8a21-936d7d7bf1b4/26-6a9a670577c2d.webp' /></p><p>
</p><p>
இந்த தீ விபத்தில் இரசாயனங்களும் கட்டடமும் முற்றிலுமாக தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், விபத்து நேரத்தில் ஊழியர்களிடையே ஏற்பட்ட பீதியின் காரணமாக மூன்று ஊழியர்கள் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:37:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-coordinating-committee-meeting-1788502467"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-coordinating-committee-meeting-1788502467</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (206.09.04) காலை
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (206.09.04) காலை
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம்
சந்திரசேகர் வடமாகான ஆளுனர் நாகலிங்கன் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில்
ஆரம்பமாகியுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
</p><p>
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால்
மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள்
தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.
</p><p>
ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற
போது நாடாளுமன்ற உறுப்பினர் அரசன் இராமநாதன் கடற்தொழில் அமைச்சர் ஆகியோரிடையே
ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கூட்டம் இன்று ஆரம்பி
ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும்: தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-disappered-peoples-request-1788496667"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-disappered-peoples-request-1788496667</id>
            <summary type="text">தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

வவுனியாவில் 3483 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

இந்த நிலையில் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குறித்த கொட்டகைக்கு முன்பாக நேற்று (03.09) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது காணாமல்போன தமது உறவுகளின் படங்களையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கையில் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a66eb33c-f46e-4a88-a703-efbde2b56163/26-6a9a603375a21.webp' /></p><h2>உண்மையைத் தேடி காத்திருக்கிறோம்</h2><p> </p><p>

இதன்போது போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில், பேச்சு வேண்டாம் - நடவடிக்கை வேண்டும். காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க கனடா உதவ வேண்டும். 

வவுனியாவில் ஏ9 வீதியோர போராட்டக் கொட்டகையில், காணாமலாக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தேடி 3483வது நாளாக நாங்கள் தொடர்ந்து காத்திருக்கிறோம். </p><p>

பல ஆண்டுகளாக வாக்குறுதிகளையும், அரசியல் பேச்சுகளையும் கேட்டுவிட்டோம். ஆனால் எங்கள் பிள்ளைகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. எங்களுக்கு இனி வெறும் பேச்சுகள் தேவையில்லை. </p><p>

சர்வதேச சமூகத்திடமிருந்து நடைமுறை நடவடிக்கை வேண்டும். எங்கள் பார்வையில், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் நிலையான தீர்வு, காலனித்துவ நீக்கத்தின் அடிப்படையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட வழிமுறையை முன்னெடுப்பதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e528ef4-b689-4639-abc7-94e6d4d5afe4/26-6a9a6034606b5.webp' /></p><p> 

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடுகள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் தீர்வை வழங்கத் தவறி விட்டன என்பதைக் கூறி, இந்தப் பிரச்சினையை சர்வதேச சட்டத்தின் கீழ் நீதிமன்ற வழிமுறைக்கு எடுத்துச் செல்ல பிரித்தானியா தனது வரலாற்றுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அண்மையில் லண்டனிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.</p><h2>கனடாவிற்கு அனுப்பப்படும் கடிதங்கள்</h2><p> 

இப்போது எங்கள் அழைப்பு கனடாவுக்கு இன்று, செப்டம்பர் 3, 2026 கனடாவின் பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் எங்கள் தாய்மார்களின் சார்பில் முறையான கடிதங்களை அனுப்புகிறோம். 

தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ளாமல், காலனித்துவ நீக்கம், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான சர்வதேச சட்ட வழிமுறைகளை முன்னெடுக்க கனடா உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98a1738-f746-43f8-b337-158a39a373bd/26-6a9a60353d0dc.webp' /></p><p> </p><p>பிரித்தானியாவிடம் நாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு கனடாவும் ஆதரவளித்து, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு தீர்வைத் தேடுவதற்கு உதவ வேண்டும். எங்கள் செய்தி தெளிவானது. பேச்சு மட்டும் போதாது - நடவடிக்கை வேண்டும்.</p><p> எங்கள் பிள்ளைகளுக்கு உண்மை மற்றும் நீதி வேண்டும். தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் எதிர்காலம் வேண்டும். காலனித்துவ நீக்கத்தின் மூலம் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட நடவடிக்கை வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe8749cf-edd5-40e1-b250-ed6b1b083fa1/26-6a9a603620465.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T06:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மேயரின் திடீர் மரணத்தின் சந்தேகம்! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eraj-fernando-body-samples-further-examination-1788488312"></link>
            <id>https://tamilwin.com/article/eraj-fernando-body-samples-further-examination-1788488312</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பின் நீதித்துறை வைத்திய அதிகாரியால் நேற்று (3) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த பரிசோதனையின் போது, ​​மேலதிக விசாரணைகள் மற்றும் சோதனைகளுக்காக எராஜ் பெர்னாண்டோவின் உடலிலிருந்து மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு நீதித்துறை வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.</p><h2>முன்னாள் மேயரின் திடீர் மரணம்</h2><p>
</p><p>
திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில், முன்னாள் மேயரின் உடல் நேற்று முன் தினம் (2) காலை கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbe9b078-4470-4c09-ab70-435bbbd43934/26-6a9a5fc533350.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையின் படி, குடியிருப்பில் உள்ள அறைகளில் ஒன்றின் அருகே கதவில் கட்டப்பட்டிருந்த பட்டியினால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
முன்னாள் மேயருடன் மற்றொரு நபரும் அந்த குடியிருப்பில் தங்கியிருந்ததாக பொலிஸ் மேலும் கூறியுள்ளது.
</p><p>
இருப்பினும், அந்த நபர் முந்தைய நாள் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு பயணம் செய்திருந்த நிலையில், நேற்று காலை அந்த நபர் தொலைபேசி மூலம் பெர்னாண்டோவை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் விளைவாக, அந்த நபர், குடியிருப்பில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணைத் தொடர்புகொண்டு, குடியிருப்பை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.</p><p>
இதன்போதே முன்னாள் மேயரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><h2>பல சர்ச்சைக்குரிய வழக்குகள்</h2><p>இந்த பின்னணியில் எராஜ் பெர்னாண்டோ மீது பல சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp; &nbsp;</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27aae27-235a-447a-8f85-706199dd6237/26-6a9a5fc480a31.webp' /></p><p>
</p><p>இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச்சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இவர் துப்பாக்கி மேயர் என்று பரவலாக அறியப்பட்டார்</p><p>

இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>இதனையடுத்து பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/selection-urban-council-for-vavuniya-town-north-1788501687"></link>
            <id>https://tamilwin.com/article/selection-urban-council-for-vavuniya-town-north-1788501687</id>
            <summary type="text">வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு இன்று இடம்பெற்றது.

வவுனியா, பூந்தோட்டம் பொது நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கல்வி, உயர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு இன்று இடம்பெற்றது.
</p><p>
வவுனியா, பூந்தோட்டம் பொது நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
</p><p>
கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில், வட்டார சபையின் தலைவராக கோணேஸ்வரலிங்கம் தெரிவு
செய்யப்பட்டார்.</p><p>

செயலாளராக கிறிஸ்ரலாவும் உறுப்பினர்களாக கிருபாநிதி, றயிந்தன், சுகுமார்,
நற்குணசீலி, ரஜனி, சுப்பிரமணியம், ஶ்ரீரஞ்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சருடனான பொதுமக்கள் சந்திப்பும் இடம்பெற்றது. </p><p>இந்
நிகழ்வில் வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.கிருஸ்ணதாஸ், சு.விஜயகுமார்,
மற்றும் தேசியமக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது மாணவி கடத்தல் - இளைஞனை தேடும் பொலிஸார் - தாய் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-kidnapped-mother-arrested-1788492882"></link>
            <id>https://tamilwin.com/article/student-kidnapped-mother-arrested-1788492882</id>
            <summary type="text">எல்ல, கினலன்வத்தையை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல, கினலன்வத்தையை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். </p><p>இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
</p><p>
சந்தேகநபரின் தாயார் குற்றத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2><b> மாணவி கடத்தல்</b></h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பண்டாரவளை, பூனாகல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bc7fa56-c627-4f14-805c-789c967bd48e/26-6a9a5d54c3e38.webp' /></p><p>கடத்தப்பட்டவர் எல்லப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவியாவார். </p><p>பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> கடந்த ஜூலை 18 ஆம் திகதி குறித்த மாணவி பண்டாரவளையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். </p><p>தந்தை வீட்டின் அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்த போது சந்தேகநபரான இளைஞன் அவரை கடத்திச்சென்றுள்ளார். </p><p>சந்தேகநபர் எல்.ஜி. பிரிவைச் சேர்ந்த 18 வயதுடைய கூலித்தொழிலாளியாவார். அவர் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொழும்பு பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். </p><p>கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் சட்டபூர்வமான பொறுப்பாளர் அனுமதியின்றி சில வாரங்கள் மாணவியை தடுத்து வைத்துள்ளார். </p><h3><b>தாய் கைது</b></h3><p>இந்நிலையில் மகள் காணாமல்போனமை குறித்து தந்தை எல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/406ca794-f71a-48c4-b44b-d25e90eeb83d/26-6a9a5d557749d.webp' /></p><p>இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரின் வீட்டிலிருந்த மாணவியை மீட்டுள்ளதுடன், அதற்காக உதவி புரிந்த சந்தேகநபரின் தாயாரையும் பொலிஸார் கைது செய்தனர்.</p><p>சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான இளைஞன் பிரதேசத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். </p><p>அவரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-04T05:56:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-human-rights-office-about-srilanka-1788499853"></link>
            <id>https://tamilwin.com/article/un-human-rights-office-about-srilanka-1788499853</id>
            <summary type="text">இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும்,
நல்லிணக்கத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த
வேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும்,
நல்லிணக்கத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த
வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

​</p><p>அக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த
அறிக்கையில், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அரசியல் படுகொலைகள் மற்றும் 2019
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அடைந்த முன்னேற்றங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன.</p><h2>தன்னிச்சையான கைது, நீண்டகால தடுப்புக்காவல்கள்</h2><p>
</p><p>
இருப்பினும், அடக்குமுறையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) பயன்பாடு
தொடர்ந்து நீடிப்பதாகவும், தன்னிச்சையான கைதுகளும் நீண்டகால
தடுப்புக்காவல்களும் தொடர்வதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebdaffdb-4463-4646-a8d3-78bef6439cdb/26-6a9a5b3ea9c01.webp' /></p><p>
இந்தநிலையில்,​ இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 2025இல்
602 சித்திரவதை சம்பவங்களும், 18 காவல் மரணங்களும் பதிவாகியுள்ளதுட ன், 2026
ஏப்ரல் வரை மேலும் 138 சித்திரவதைகளும், 3 மரணங்களும் நடந்துள்ளன.

​</p><p>மேலும் ஜூலை மாதம் நீரகொழும்பு சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 32 பேர்
உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அவசர சிறை சீர்திருத்தங்களின்
அவசியத்தை அறிக்கை வலியுறுத்துகிறது.</p><h2>கண்காணிப்புகளும் அச்சுறுத்தல்களும்</h2><p>
</p><p>
இதேவேளை ​சிவில் சமூகப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜெனீவா ஐ.நா
கூட்டங்களில் பங்கேற்போர் மீதான இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினரின்
கண்காணிப்புகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/359cc228-2c1a-4c8d-b729-98102736212d/26-6a9a5b3f5ceec.webp' /></p><p>

அத்துடன் ​ பேராசிரியர் சுப்பிரமணியன் ரவீந்திரநாத் படுகொலை வழக்கில்
'பிள்ளையான்' மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்றாலும், 17
உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட முத்தூர் வழக்கு போன்ற முக்கிய குற்றங்கள் பல
ஆண்டுகளாகத் தேக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​</p><p>இதேவேளை, நீடித்து வரும் நிறைவேற்று அதிகார துஷ்பிரயோகம் மற்றும்
தண்டனையின்மையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், பயங்கரவாதத்
தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும், மனித உரிமை
மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளை உயர் பதவிகளிலிருந்து விலக்கி
வைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:46:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனின் கொடூர செயல் - கர்ப்பிணிப்பெண் குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-wife-and-baby-1788486637"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-wife-and-baby-1788486637</id>
            <summary type="text">புத்தளம் கல்பிட்டி, எஸ்.பி.ஆர்.வத்தை, தலவில பகுதியில் கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். 

இரண்டு பிள்ளைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் கல்பிட்டி, எஸ்.பி.ஆர்.வத்தை, தலவில பகுதியில் கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். </p><p>

இரண்டு பிள்ளைகளின் தாயான கர்ப்பிணி பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பொலிஸாரின் அவசர தொலைபேசி சேவையான 119 இற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், உடனடியாக செயற்பட்ட கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.</p><p> </p><h2><b>

கர்ப்பிணிப்பெண் குத்திக் கொலை </b></h2><p>45 நிமிடங்களுக்குள் துரத்திச்சென்று சந்தேகநபரையும் குற்றத்திற்கு பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55acc1bb-8c19-4f11-a391-5d0218e60078/26-6a9a33b7d0e6e.webp' /></p><p>இவ்வாறு உயிரிழந்தவர் களாப்பள்ளி, தலவில முகவரியை சேர்ந்ததிலினி தில்ருக்ஷி என்ற 26 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114"></link>
            <id>https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114</id>
            <summary type="text">புதிய இணைப்பு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு </h2><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (4) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு கடுமையாகப் பாதிப்பு! நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-electricity-system-movement-warns-1788496802"></link>
            <id>https://tamilwin.com/article/national-electricity-system-movement-warns-1788496802</id>
            <summary type="text">தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. 

அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. </p><p>

அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பில் மேலும்,

பட்டங்கள் மற்றும் நூல்கள் உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கியதன் காரணமாக பல மின் பாதைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளன.</p><h2>கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>

அத்துடன், இது தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddbbf00e-cda1-427e-8981-75fd7fdf3dcd/26-6a9a4dff357aa.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அவசரகால நடவடிக்கையாக சில மின் விநியோகப் பாதைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட வேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குப் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டை பெற வரிசையில் காத்திருந்த முக்கியஸ்தர்! அதிகாரிகள் தொடர்பில் வெளியிட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-ambassador-mahinda-queues-passport-1788495909"></link>
            <id>https://tamilwin.com/article/former-ambassador-mahinda-queues-passport-1788495909</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதர் மஹிந்த சமரசிங்க பாராட்டியுள்ளார்.

சமூக வலைத்தள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதர் மஹிந்த சமரசிங்க பாராட்டியுள்ளார்.</p><p>

சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினையிட்டு அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,</p><h2>பாராட்டு</h2><p>
அண்மையில் இலங்கை கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சென்றிருந்தேன். அங்கு பணியாற்றிய அனைத்து அதிகாரிகளும் மிகவும் உதவிகரமாகவும் திறமையாகவும் செயற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/815bf8be-2cd3-4845-9426-1de037153dc3/26-6a9a4c41a065f.webp' />&nbsp;</p><p> </p><p>

எனவே அனைவருக்கும் தனது நன்றியை சமூக ஊடகப்பதிவின் மூலம் வெளிப்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T04:43:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பள அதிகரிப்பு! நாட்டை விட்டு வெளியேறும் அரச ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employees-leaving-the-country-1788494836"></link>
            <id>https://tamilwin.com/article/government-employees-leaving-the-country-1788494836</id>
            <summary type="text">

உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைச் சரியாகப் பராமரிப்பதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 50 முதல் 70 ரூபா வரை குறைப்பதற்கான சாத்தியங்கள் இருந்தும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது.</p><h2>உரிய சம்பள அதிகரிப்பு இல்லை</h2><p> </p><p>

பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன் காரணமாக, பொதுமக்கள் இரட்டைச் சுமைகளுக்குள் உள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6e52409-7a13-4288-8d0d-5335f9c2d3e9/26-6a9a4baf5b6ea.webp' /></p><p>

மேலும், உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமையினால், வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றனர். </p><p>

இவ்வாறான பல்வேறு நெருக்கடி நிலைகளைப் பொருட்படுத்தாமல், அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன் அவர்களது சம்பளத்தையும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AyVMfG2ngNk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-04T04:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல்! குவிந்துள்ள ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்புசற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSYHOvwD5kc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T04:07:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-oil-and-naphtha-prices-change-1788492118"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-oil-and-naphtha-prices-change-1788492118</id>
            <summary type="text">எரிபொருள் எண்ணெய் (Fuel Oil) மற்றும் நாஃப்தாவின் (Naphtha) விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (04) நள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் எண்ணெய் (Fuel Oil) மற்றும் நாஃப்தாவின் (Naphtha) விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.</p><h2>விலை விபரம்</h2><p>
</p><p>
அதன்படி, ஒரு லீற்றர் நாஃப்தாவின் விலை 210 ரூபாயிலிருந்து 35 ரூபாய் குறைக்கப்பட்டு 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df023be-7004-4922-bc45-1220ae4484d3/26-6a9a3d9b6dade.webp' /></p><p>

மேலும், ஒரு லீற்றர் எரிபொருள் எண்ணெயின் விலையை 248 ரூபாயிலிருந்து 38 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை ,210 ரூபாயாக நிர்ணயிக்கவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:48:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரிப்பு: இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-import-amount-hiked-1788488532"></link>
            <id>https://tamilwin.com/article/oil-import-amount-hiked-1788488532</id>
            <summary type="text">நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
</p><p>2025 ஆம் ஆண்டின் ஜனவரி - ஜூலை காலத்தில் 2,265.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த எரிபொருள் இறக்குமதி செலவு, 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 3,621.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.</p><h2>கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு</h2><p>
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்தமையே இந்த உயர்வுக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae63d40f-0e27-4bfd-baac-7f0baa76847e/26-6a9a2b55bbf38.webp' /></p><p>
</p><p>2026 ஜூன் மாதத்தில் 465 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான மாதாந்த எரிபொருள் இறக்குமதி செலவு, ஜூலை மாதத்தில் 453 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்றே குறைந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு - பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217"></link>
            <id>https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
துப்பாக்கி சூடு</b></h2><p>துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e0266b-93c9-4a97-a0c7-a527bd40c2f2/26-6a9a1deda8785.webp' /></p><p>இந்தத் துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட காரணத்திற்காக நடத்தப்பட்டதாகவும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து கொழும்புப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடிக்குள் சிக்கவேண்டாம்! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warn-public-fake-traffic-fine-payment-1788486106"></link>
            <id>https://tamilwin.com/article/police-warn-public-fake-traffic-fine-payment-1788486106</id>
            <summary type="text">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு கோரும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.

போக்குவரத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு கோரும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.
</p><p>
போக்குவரத்து பொலிஸார் தரப்பிலிருந்து அழைப்பதாக கூறி மோசடியாளர்கள் இந்த மோசடியை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் (Traffic Control and Road Safety Range) பொறுப்பதிகாரி டி.ஐ.ஜி. செனதீர விளக்கமளிக்கையில்,</p><h2>போக்குவரத்து விதிமீறல்கள்</h2><p>

பெறுநர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும் கூறி செய்திகள் பரப்பப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad810053-6dbf-4ad6-952a-7a64e15f575c/26-6a9a29aeeb448.webp' /></p><p>
</p><p>
சில நாட்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால் அபராதம் அதிகரிக்கும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அச்சுறுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

இதன்பின்னர், பெறுநர்கள் மோசடி இணையதளங்களுக்கு வழிநடத்தப்பட்டு, அங்கு அவர்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகின்றார்கள்.
</p><p>
இதுபோன்ற இணைப்புகள் மூலம் மக்கள் தங்கள் வங்கி விவரங்களை உள்ளிட்டு, பின்னர் தங்கள் கணக்குகளிலிருந்து பணத்தை இழந்ததாக பொலிஸார்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
</p><p>
போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக வாகன சாரதிகளை இணையதளங்களுக்கு வழிநடத்தும் நடவடிக்கையை இலங்கை போக்குவரத்து பொலிஸார் அனுப்புவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அபராதங்களை செலுத்துவதற்கான&nbsp;ஒரே இணையவழி வழிமுறை</h2><p>
</p><p>
போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு தற்போது கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒரே இணையவழி வழிமுறை GovPay ஆகும்.
</p><p>
இதில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஒரு பொலிஸ் அதிகாரியால் வழங்கப்படும் தகவல்களை பயன்படுத்தி பணம் செலுத்தப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f25b7cfa-55d0-4bde-84b2-74e4f7beddfc/26-6a9a29afa6c82.webp' />&nbsp;</p><p>

"இலங்கை போக்குவரத்து பொலிஸ் துறையினால் அனுப்பப்படும் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்குத் தனி இணையதளம் எதுவும் இல்லை.

எனவே சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், வங்கி மற்றும் பிற இரகசியத் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த மோசடிக்கு பலியானவர்கள், விசாரணைக்காகத் தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
போக்குவரத்து அபராதங்கள் எனக்கூறப்படும் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறு வரும் அழைப்புகளை புறக்கணிக்குமாறு பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:15:15+00:00</updated>
        </entry>
    </feed>
