<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-05T20:22:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போருக்குப் பிறகு ட்ரம்பின் மிகப் பெரிய திட்டம்! மத்திய கிழக்கில் அடுத்த அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-planning-something-much-bigger-middle-east-1788637650"></link>
            <id>https://tamilwin.com/article/trump-planning-something-much-bigger-middle-east-1788637650</id>
            <summary type="text">ஈரான் போர் முடிவடைந்த பின்னர் மத்திய கிழக்கிற்காக “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை உருவாக்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போர் முடிவடைந்த பின்னர் மத்திய கிழக்கிற்காக “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை உருவாக்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரானை கட்டுப்படுத்துவதற்காக பிராந்திய நாடுகளை ஒன்றிணைப்பதும், இஸ்ரேலை அதன் அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தச் செய்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>மிகப் பெரிய திட்டம்</h2><p>
இதற்காக அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டமைப்பில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6419ffb5-2b6c-483d-af02-84c4878b859c/26-6a9c7472283a0.webp' /></p><p>

மேலும், காஸா உள்ளிட்ட பிராந்திய மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
</p><p>
ட்ரம்பின் காஸா திட்டத்தின் அடுத்த கட்டத்தை முன்னெடுப்பது, இஸ்ரேல்–சிரியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது மற்றும் இஸ்ரேல்–லெபனான் உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது ஆகியவையும் இதில் அடங்கும்.
</p><h2>ஈரான் போர்&nbsp;</h2><p>
அத்துடன், Abraham Accords ஒப்பந்தத்தை விரிவுபடுத்தி, இஸ்ரேல்–சவுதி அரேபியா இடையே இராஜதந்திர உறவை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்கா முயற்சிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d81f73-ba31-4dc4-8088-e58bf8abc3ee/26-6a9c7472d56e3.webp' /></p><p>
</p><p>
இஸ்ரேலில் ஒக்டோபர் 27ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அது சவாலாக அமையலாம் என கூறப்படுகிறது.
</p><p>
எனினும், இஸ்ரேல் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்காமல் ட்ரம்ப் தனது திட்டத்தை முன்னெடுக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்தத் திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதுடன், முழுமையாக தயாராக இன்னும் சில வாரங்கள் தேவைப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T20:18:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா – கைலாய வாகனத்தில் எழுந்தருளிய வேல் பெருமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788637092"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788637092</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம்(5) 20ஆம் திருவிழா
இடம்பெற்றது.
20ஆம் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம்
நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம்(5) 20ஆம் திருவிழா
இடம்பெற்றது.
</p><p>20ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானை சமேதராய் வேல் பெருமான் கைலாய
வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து
வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T19:42:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காப்பாற்ற சென்று சிக்கலில் மாட்டிய உதய கம்மன்பில! மகனை சந்தித்த பின் தடுமாறிய மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276</id>
            <summary type="text">ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவை பாதுகாப்பதற்காகப் பேசிய உதய கம்மன்பில, அந்தப் பணம் அலுவலக மேசையில் வைக்கப்பட்டதாகக் கூறியது, அவர் மீதுள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. </p><p>8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அவர் அங்கு இல்லாதபோது மேசையில் வைக்கப்பட்டதாகவும் உதய கம்மன்பில வெளிப்படையாகக் கூறியது, பணம் நாமல் ராஜபக்சவின் வசம் சென்றதை உறுதிப்படுத்தும் ஆதாரமாக மாறிவிட்டது.</p><p>

இந்த வழக்கில் உதய கம்மன்பிலவின் இந்த கூற்று முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

ஒரு வழக்கறிஞராக உதய கம்மன்பில இவ்வாறான வாக்குமூலங்களை வழங்குவது, நாமல் ராஜபக்ஷவின் தரப்பு வாதத்தையே பலவீனப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.&nbsp; &nbsp; </p><p>மேலும், நாமல் ராஜபக்சவின் கைதுக்கு எதிராக ஊடக சந்திப்புகளை நடத்தி, சட்டவிரோதமான முறையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.</p><p>


அத்துடன் ஆதாரங்கள் இல்லாமல் பெயர்களைக் குறிப்பிட்டு கைது செய்யும் தற்போதைய முறையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
</p><p>

இந்தநிலையில், சிறையில் உள்ள தனது மகனைச் சந்தித்த பிறகு மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, அவர் மிகுந்த மன உளைச்சலுடனும், பதற்றத்துடனும் காணப்பட்டார். </p><p>பேசும்போது அவரது வார்த்தைகள் தடுமாறியதாகவும், சொற்கள் வெளிப்பட சிரமப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aUuUMhWwpcs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T18:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை சீண்டிய ஈரான் - அதிரடியாக பதிலடி கொடுத்த ட்ரம்ப் படைகள் - வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-strikes-3-iranian-oil-tankers-tehran-targete-1788628287"></link>
            <id>https://tamilwin.com/article/us-strikes-3-iranian-oil-tankers-tehran-targete-1788628287</id>
            <summary type="text">அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>ஈரானின் பல தாக்குதல்கள்</h2><p>

அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலும் ஈரானின் பல தாக்குதல்களை வெற்றிகரமாகத் தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதையடுத்து, Kharg தீவு மற்றும் Jask கடற்பகுதிக்கு அருகில் இருந்த M/T Downy மற்றும் M/T Stark 1 ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/Xo0Vj0t2AJ">https://t.co/Xo0Vj0t2AJ</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2096231596449767452?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
மேலும், சரக்கு ஏற்றப்படாத மற்றொரு எண்ணெய் கப்பலும் ஓமன் வளைகுடாவில் செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மூன்று கப்பல்களும் IRGC மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கு நிதியளிக்கும் இரகசிய எண்ணெய் வர்த்தக வலையமைப்புடன் தொடர்புடையவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;அமெரிக்கா ஈரானிய எண்ணெய் கப்பல்</h2><p>
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/361904fb-395f-4e74-9ba5-88de23a46c79/26-6a9c511cc6a69.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, Kharg தீவு அருகே அமெரிக்கா ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றைத் தாக்கியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பல் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் ஈரானிய செய்தி நிறுவனமான Tasnim தெரிவித்துள்ளது.</p><p>

ஈரான் OPEC அமைப்பில் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளதுடன், அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளில் பெரும்பகுதி Kharg தீவு வழியாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T18:11:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது.. மீண்டும் களமிறங்கும் மகிந்த - ராஜபக்ச அரசியலில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீ லங...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச தரப்பு அரசியல்வாதிகள் பலர் அ ண்மைக்காலமாக வழக்குகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், விளக்கமறியல் உத்தரவுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.</p><h2>மீண்டும் மகிந்த</h2><p>
</p><p>
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அரசியல் செயற்பாடுகளில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அதன் காரணமாக சிறிது காலமாக அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் என்ற ரீதியில் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a99636b-abd5-4d8a-b471-8c284e0853ab/26-6a9b63cd198bb.webp' /></p><p>
அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சியின் முதலாவது மக்கள் போராட்ட பேரணிக்கு அவர் தலைமை தாங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>

முன்னதாக குறித்த பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்த நிலைமையில், இலஞ்ச வழக்கொன்றில் தற்போதைக்கு நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
அவ்வாறான பின்னணியில் அநுராதபுர பேரணி தொடக்கம் எதிர்வரும் 2029ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வரையான கட்சியின் செயற்பாடுகளை தலைமையேற்று முன்கொண்டு செல்ல மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kLhfyZi69CA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-05T17:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுர கூட்டத்தில் நாமல், மக்களிடம் கூறவிருந்த விடயங்களை கூறுவார் : விடுக்கப்படும் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-speak-at-parliment-1788629614"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-speak-at-parliment-1788629614</id>
            <summary type="text">&amp;nbsp;எதிர்வரும் 12 ஆம் திகதி மக்களிடம் கூற வேண்டிய விடயங்களை நாம் ராஜபக்ச நிச்சயம் கூறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எதிர்வரும் 12 ஆம் திகதி மக்களிடம் கூற வேண்டிய விடயங்களை நாம் ராஜபக்ச நிச்சயம் கூறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பேரணியில் நாமல் ராஜபக்ச ஆற்றவிருந்த விசேட உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்துவார் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் செயல் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d783867-9047-49ec-a0a7-30c7c93888db/26-6a9c526fef0ad.webp' /></p><p>
</p><p>இந்த கைதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஊடகங்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
கடந்த காலத்தில் தமது அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவற்றை தாம் அங்கீகரிக்கப் போவதில்லை எனவும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஒரு ஜனநாயக நாட்டிற்குப் பொருத்தமானவை அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
அநுராதபுரக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷவின் மனைவி உரையாற்றுவார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள், வெறும் ஆதாரமற்ற வதந்திகளே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகை தருவார் எனவும் அநுராதபுரத்தில் மக்கள் முன் வைக்கவிருந்த அந்த சக்திவாய்ந்த உரையை அன்று பாராளுமன்றத்தில் நாட்டு மக்கள் முன் வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>அதைப் பார்த்துக்கொண்டிருக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T17:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிவாங்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-not-taking-revenge-from-anyone-1788627948"></link>
            <id>https://tamilwin.com/article/govt-not-taking-revenge-from-anyone-1788627948</id>
            <summary type="text">அரசாங்கம், பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குற்ற இராச்சியமாக மாறியிருந்த இலங்கையை சரியான பாதைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம், பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
குற்ற இராச்சியமாக மாறியிருந்த இலங்கையை சரியான பாதைக்குக் கொண்டுவருவதற்கும், திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும் கிடைத்த மக்கள் ஆணையையே அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது என என தெரிவித்துள்ளார்.
</p><p>தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/733c86a1-872f-421d-9270-11cb448d13b9/26-6a9c4bed893fa.webp' /></p><p>
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
நிலக்கரி இறக்குமதி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போது, அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகியமை அரசாங்கம் சட்டத்திற்கு அளிக்கும் மரியாதையைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
அமைச்சர் குமார ஜயகொடி 100% நிரபராதி என்பதில் முழு நம்பிக்கை உள்ளபோதிலும், சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவிட்டு சுயாதீனமாக விசாரணைகள் நடக்கவே அவர் பதவியிலிருந்து விலகினார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போதைய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 160 உறுப்பினர்கள் மீதும் எந்தவித ஊழல் அல்லது குற்றச்சாட்டுகளும் கிடையாது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T17:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/laugfs-gas-prices-1788626069"></link>
            <id>https://tamilwin.com/article/laugfs-gas-prices-1788626069</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, த...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, தற்போதைய விலைகளிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>லாஃப்ஸ் எரிவாயு விலை</h2><p>

இறுதியாக கடந்த ஜூலை மாதத்திலேயே லாஃப்ஸ் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டிருந்தன.
</p><p>
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,280 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 4,965 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a881cf-98ba-47ec-9b1a-65a733d32633/26-6a9c471d93eb3.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 512 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 1,988 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, செப்டெம்பர் மாதத்திலும் குறித்த விலைகளிலேயே லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-05T16:45:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP அரசாங்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு! நாளை 2 பிரமாண்ட பேரணிகளில் உரையாற்றும் ஜனாதிபதி அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/second-anniversary-the-national-people-power-npp-1788624892"></link>
            <id>https://tamilwin.com/article/second-anniversary-the-national-people-power-npp-1788624892</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்
நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை( 6) இரண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்
நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை( 6) இரண்டு முக்கிய பொதுக்கூட்டங்களில்
கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் “நமது அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகள் — நாட்டிற்கு நல்லது” (අපේ
ආණ්ඩුවට වසර දෙකයි – රටට සුබයි) எனும் கருப்பொருளின் கீழ் இந்த பேரணிகள்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><h2>&nbsp;2 பிரமாண்ட பேரணிகள்</h2><p>
</p><p>மேலும் இந்த கூட்டங்கள் முறையே
புலத்சிங்களவில் பிற்பகல் 2:00 மணி மணிக்கும்,
பேருவளையில் பிற்பகல் 3:30 மணி மணிக்கும் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4574c41a-2e90-4b12-b69a-f9402a2071e2/26-6a9c428135d05.webp' /></p><p>

அத்துடன் செப்டம்பர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க
வெற்றியைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள்
மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இக்கூட்டங்களில் ஜனாதிபதி
விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T16:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளர்ச்சி அடையும் துருக்கியின் இராணுவத் திட்டம்: ஐரோப்பா-இஸ்ரேல்-இந்தியா ஆபத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/europe-israel-india-at-risk-turkey-military-plan-1788620502"></link>
            <id>https://tamilwin.com/article/europe-israel-india-at-risk-turkey-military-plan-1788620502</id>
            <summary type="text">ஐரோப்பாவின் எல்லையில் மிக அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.அந்த இராணுவ சக்தி ஐரோப்பாவையும், இந்தியாவையும், இஸ்ரேலையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவின் எல்லையில் மிக அமைதியாக ஒரு புதிய இராணுவ சக்தி உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.</p><p>அந்த இராணுவ சக்தி ஐரோப்பாவையும், இந்தியாவையும், இஸ்ரேலையும் அச்சுறுத்தும் படியாக உருவாகிக் கொண்டு இருக்கின்றது.அது வேறு எந்ந நாடுமல்ல துருக்கி.</p><p>ஒரு காலத்தில் முக்கிய ஆயுதங்களுக்காக துருக்கி வெளிநாடுகளை நம்பிக் கொண்டு இருந்தது.இன்று ட்ரோன்கள் முதல் நவீனக் கப்பல்கள் வரை தனக்கு தேவையாக ஆயுதங்களை தானே உருவாக்கும் வகையில் வேகமாக வளர்ந்து வருகின்றது.</p><p>துருக்கின் இந்த வளர்ச்சியை தடுக்க அல்லது சமாளிக்க ஐரோப்பாவும், இந்தியாவும், இஸ்ரேலும் என்ன செய்யப்போகின்றன என்பது தொடர்பான விரிவான தகவல்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SVpGhwMEKis" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T15:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/explosives-recovery-operations-in-the-palaly-area-1788621567"></link>
            <id>https://tamilwin.com/article/explosives-recovery-operations-in-the-palaly-area-1788621567</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில்
அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பலாலி அந்தோனிபுரம் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில்
அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>பலாலி அந்தோனிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும் போது
கிணற்றினுள் வெடி பொருட்கள் காணப்பட்டுள்ளன.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு
சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdde7b98-b2b1-4fb9-a70e-5b23b1cb58ac/26-6a9c33e1c1379.webp' /></p><p>அத்துடன், கிணற்றினுள் காணப்படும் வெடி
பொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மல்லாக நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற
நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T15:23:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதினால் கதிகலங்கியுள்ள தென்னிலங்கை - அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-namal-rajapaksa-s-arrest-1788616644"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-namal-rajapaksa-s-arrest-1788616644</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p> 

நாமலின் கைது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கை, சாதாரண சட்டச் செயல்முறைக்கு அப்பால் ஆழமான அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. </p><p> 

சட்டவாட்சிக்கும் அரசியல் பழிவாங்கல்களுக்கும் இடையிலான ஆழமாக கோடு இந்த கைதின் மூலம் தெளிவாக வெளிப்படுவதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.</p><p></p><p>
</p><h2><b>
எதிர்கால அரசியல் </b></h2><p>எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, நாட்டின் எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக குறிப்பிடப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8505e1-6fc5-463f-9dc7-e73b6e8fbc64/26-6a9c23aceccf8.webp' /></p><p>இது தனிநபருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமல்ல எனவும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் வழங்கப்பட்ட ஒரு தீவிரமான செய்தியாகவும் இதனை பார்க்கப்படுகிறது. </p><p> 

இந்தக் கைது நடவடிக்கையின் முக்கிய அடிப்படை காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் பிரபல வணிகருமான நிமல் பெரேராவினால் வழங்கப்பட்ட சாட்சியமே பிரதான காரணமாக குறிப்பிடப்படுகிறது. </p><p> 

குற்றவியல் முறைப்பாட்டுச் கோவையின் 127 வது பிரிவின் கீழ் நீதவான் முன்னிலையில் இரகசியமாக வழங்கப்பட்ட இந்த வாக்குமூலம் மிகமிக கடுமையானதாகக் கருதப்படுகிறது. </p><h3><b>

 பாரிய நிதிப் பரிமாற்றம்</b></h3><p>சிங்கப்பூரை சேர்ந்த சேப்ரே விஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கு ஊடாக 8 லட்சம் அமெரிக்க டொலர் நாமல் ராஜபக்சவிற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfa6a93b-5c96-4389-940a-68ed9f685567/26-6a9c23adbaa1d.webp' /></p><p>இந்த பாரிய நிதிப் பரிமாற்றம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன், இது நேரடியாக லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாற்றாக ஆணைக்குழுவினால் கருதப்பட்டுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-05T15:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடுத்த காசுக்கு மேல் கூவிய நாமலின் ஆதரவாளர்கள் - அநுர செய்வது அரசியல் பழிவாங்கலா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-anura-kumara-revenge-1788618359"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-anura-kumara-revenge-1788618359</id>
            <summary type="text">நேற்றைய தினம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.&nbsp;</p><p>இதனை தொடர்ந்து, நாமலின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தனர்.&nbsp;</p><p>இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.&nbsp;</p><p>மேலும், அரசாங்கம், ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முன் கூடிய ஆதரவாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு அவ்வாறு நடந்து கொண்டதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர், சிதம்பரம் கருணாநிதி குறிப்பிடுகின்றார்.&nbsp;</p><p>அவர், லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் குறிப்பிட்டதாவது,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5h_RMGWkyT4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T14:39:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள்.. வெளிநாடொன்றில் அவசரநிலை பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-cyclones-in-the-pacific-ocean-1788617731"></link>
            <id>https://tamilwin.com/article/three-cyclones-in-the-pacific-ocean-1788617731</id>
            <summary type="text">எல் நினோ உலகம் முழுவதும் பல நாடுகளைப் பாதித்துள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ உலகம் முழுவதும் பல நாடுகளைப் பாதித்துள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
இந்தச் சூறாவளிகளால் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக ஹவாய் தீவுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>எல் நினோ</h2><p>

எல் நினோ காரணமாக இந்த ஆண்டில் சீனாவைப் பாதிக்கும் ஏழாவது சூறாவளியாகப் பெயரிடப்பட்டுள்ள 'சௌடல்' (Soudal) சூறாவளி, அந்நாட்டைக் கடுமையாகப் பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4ba4e2-e29f-49a4-a49d-efb61e93dc7f/26-6a9c24efdf4c6.webp' /></p><p>
</p><p>
எல் நினோ தாக்கத்தால் கொலம்பியாவில் மழைப்பொழிவு குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள வீடுகளுக்குத் தண்ணீர் லொறிகள் (bowsers) மூலம் நீர் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்தோனேசியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கடந்த சில வாரங்களாக அங்குள்ள காடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவியுள்ளது.

உலகைப் பாதித்துள்ள எல் நினோ நிகழ்வு இலங்கையையும் பாதித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:24:55+00:00</updated>
        </entry>
    </feed>
