<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-05T07:31:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் அரசாங்கம் சிறைச்சாலைக்குள் தான் சாத்தியம்! அமைச்சர் வசந்த சமரசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/review-by-minister-vasantha-samarasinghe-1788589935"></link>
            <id>https://tamilwin.com/article/review-by-minister-vasantha-samarasinghe-1788589935</id>
            <summary type="text">ராஜபக்சர்களின் தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பது இனிவரும் காலங்களில் சிறைச்சாலைக்குள் மாத்திரமே சாத்தியப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க விமர்சித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சர்களின் தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பது இனிவரும் காலங்களில் சிறைச்சாலைக்குள் மாத்திரமே சாத்தியப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க விமர்சித்துள்ளார்.
</p><p>
அநுராதபுரம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த மொட்டுக் கட்சியின் எதிர்ப்புப் பேரணியை குழப்பும் வகையில் நாமல் ராஜபக்சவை அரசாங்கம் கைது செய்துள்ளதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
ஆனால் அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை நீதிமன்றம் தான் பிறப்பித்திருந்தது, அரசாங்கத்துக்கு அதில் எந்தவொரு தொடர்பும் இல்லை.</p><h2>பரவும் கருத்துகள் அடிப்படையற்றவை</h2><p>
</p><p>
அதே போன்று ராஜபக்சர்கள் குறித்து அரசாங்கம் அச்சம் கொண்டிருப்பதன் காரணமாக அவர்களின் கூட்டத்துக்கு அநுராதபுரத்தில் மைதானம் ஒதுக்கவில்லை என்று பரவும் கருத்தும் அடிப்படையற்றது.

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் குறித்து அவர்கள் எப்படியோ மோப்பம் பிடித்துள்ளனர். அதனை திசை திருப்பும் நோக்கில் திடீரென அநுராதபுர கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b74ccf35-9e9b-45ea-aa4e-dc7ce1c379b1/26-6a9bc327e9f1d.webp' /></p><p> அத்துடன் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு மைதானங்களை மாத்திரமே அவர்கள் தங்கள் கூட்டத்துக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளனர். அது முடியாத காரியம். ஏனெனில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மைதானங்களை அதே திகதிகளில் வேறொரு விடயத்துக்கு மீண்டும் ஒதுக்க முடியாது.

அவர்களுக்குத் தேவையென்றால் அநுராதபுரத்தில் மேலும் 12 பாரிய மைதாளங்கள் இருக்கின்றது.</p><h2>பொதுமக்களின் ஆதரவு</h2><p> </p><p>அவற்றில் ஒன்றை ஒதுக்கிக் கொள்ளட்டும்.

ஆனால் பெரிய மைதானங்களை நாங்கள் கேட்டும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்கள் சிறிய மைதானமொன்றில் தங்கள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.</p><p> ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காது என்பது அவர்களுக்கே தெரியும். இப்போதைக்கு பொதுமக்கள் அவர்களை ஆதரிக்கப் போவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89f0c0f9-219f-400d-ac23-a4c0da248971/26-6a9bc328ab7af.webp' /></p><p>
</p><p>
அதே போல ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி மீண்டும் இந்த நாட்டில் சாத்தியப்படாது. வேண்டும் என்றால் இந்த நாட்டின் சிறைச்சாலையொன்றில் அவ்வாறான ஆட்சியை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். </p><p>அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. மற்றும்படி பொதுமக்களின் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள அவர்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் திட்டத்தால் கொந்தளிக்கும் Gen-Z தலைமுறை - நாமலின் கைதில் சதி - எச்சரிக்கும் ரணில் தரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-unp-condemns-ranil-anura-kumara-1788588624"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-unp-condemns-ranil-anura-kumara-1788588624</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அவரது கைதுக்குக் கண்டனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அவரது கைதுக்குக் கண்டனம் தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. </p><p>நாமல் ராஜபக்சவின் தலைமையில் செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்கூட்டத்தின் வெற்றியைத் தடுப்பதே இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கம் என்பது தெளிவாகிறது என்று UNP தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p><h2>அரசாங்கத்திற்கு சிக்கல்..&nbsp;</h2><p>
'தேசிய மக்கள் சக்தி' (NPP) கட்சியின் தலைவரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு நாடு முழுவதும் பயணம் செய்து பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு உள்ள ஜனநாயக உரிமையை, நாமல் ராஜபக்சவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று UNP சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac050d71-6923-4e69-90bd-63eeb7a33f34/26-6a9bc1d8de8bb.webp' /></p><p> இத்தகைய நடவடிக்கைகளை நவீன நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்றும், குறிப்பாக 'Gen-Z' எனப்படும் இன்றைய இளம் தலைமுறையினர் இத்தகைய செயல்களை நிராகரிப்பார்கள் என்றும் UNP மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>இத்தகைய தரக்குறைவான செயல்கள் தற்போதைய அரசாங்கத்தின் மோசமான நிலையையே வெளிப்படுத்துவதோடு, மக்களிடையே அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைவதற்கே வழிவகுக்கும் என்று UNP கூறுகிறது. </p><p>மக்கள் தலைவர்களைக் கைது செய்வதன் மூலம் மட்டும் அவர்களின் செல்வாக்கைக் குறைத்துவிட முடியாது என்று அரசாங்கத்தை அக்கட்சி எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் புதிய சட்டத்தரணிகள் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-new-lawyers-to-the-attorney-general-1788591249"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-new-lawyers-to-the-attorney-general-1788591249</id>
            <summary type="text">சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கான புதிய சட்டத்தரணிகள் நியமனம் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கான புதிய சட்டத்தரணிகள் நியமனம் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.</p><p>

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி பதவிக்கான ஆட்சேர்ப்பு நியமனப் பட்டியலை பொதுச்சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
உத்தியோகபூர்வ பட்டியலின்படி 31 விண்ணப்பதாரர்கள் அரசாங்க சட்டத்தரணிகளாக நியமனம் பெறத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c777fdd-a7b4-4770-b529-6d6351619ec8/26-6a9bbde19803b.webp' /></p><p>

எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் அவர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.</p><p>இந்தப் பட்டியலில் நான்கு தமிழர்களும் ஒரு முஸ்லிமும் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T07:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாதாள உலக குழுவின் வெறியாட்டம் - தவறுதலாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-gangs-killed-a-father-1788589723"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-gangs-killed-a-father-1788589723</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியில் பாதாள உலகக் குழுவினரின் பழிவாங்கல் காரணமாக நேற்றிரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியில் பாதாள உலகக் குழுவினரின் பழிவாங்கல் காரணமாக நேற்றிரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கல மாவத்தையிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்றினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. </p><p>

இதில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயதான சுனில் பெர்னாண்டோ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.</p><h2><b>&nbsp;துப்பாக்கிச் சூடு</b></h2><p> 

கொஸ் மல்லி எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் காசாளரையே இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் தவறுதலாக அவரின் தந்தை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c12ae7-c8cf-4c54-af4d-921edf3500a1/26-6a9bb9089fb9b.webp' /></p><p>மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு தாக்குதல்தாரிகள், கைப்பாப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். </p><p> 

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qJDzRCeyXXI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே -ரணில் விக்ரமசிங்க வழக்குகளிலிருந்து திலீப பீரிஸ் நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-solicitor-general-dileepa-peiris-1788589851"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-solicitor-general-dileepa-peiris-1788589851</id>
            <summary type="text">மேலதிக செலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு (Dileepa Peiris) துபாயில் உள்ள பாதாள உலகக் குழுவினரிடமிருந்து உயிரச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவரது பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேலதிக செலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு (Dileepa Peiris) துபாயில் உள்ள பாதாள உலகக் குழுவினரிடமிருந்து உயிரச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அண்மையில் உத்தரவிடப்பட்டிருந்தது. </p><p>இவ்வாறான பின்னணியில், சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளிலிருந்து திலீப பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற சுரேஷ் சலேவின் வழக்கு விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஓஸ்வால் பெரேரா என்ற அரச சட்டத்தரணியே ஆஜரானார்.
</p><h2>
</h2><p></p><h2>சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்</h2><p>அவரை இவ்வழக்குகளில் ஆஜராக வேண்டாம் என உயர் மட்டத்திலிருந்து (சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்கவினால்) அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. </p><p>சட்டமா அதிபருக்குத் தனது அதிகாரிகளை நியமிக்கும் அல்லது மாற்றும் தன்னிச்சையான அதிகாரம் (Discretionary Power) இருந்தாலும், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இவ்வழக்கிலிருந்து அவர் திடீரென நீக்கப்பட்டமை பாதிக்கப்பட்ட தரப்பினர், புலனாய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சந்தேகத்தையும் உரையாடலையும் உருவாக்கியுள்ளது.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேற்றை தினம் இச்சம்பவம் குறித்து ஒரு குழுவினர் சந்தித்து தெரியப்படுத்தியுள்ளனர். அதன் பின்னரே ஜனாதிபதியும் இத்தகவலை அறிந்து கொண்டுள்ளார்.
</p><p>கடந்த 2 ஆம் திகதி சுரேஷ் சலேவின் வழக்கு விசாரணையின் போது கருணா அம்மான் அளித்த சிறப்பு வாக்குமூலம் மற்றும் ஏனைய முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் விரிவாக முன்வைக்கப்படுவதைத் தடுப்பதற்காக திலீப பீரிஸ் நீக்கப்பட்டாரா? </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/361c2256-0921-47eb-bc4f-f58f915d6fd3/26-6a9bb71dbf64a.webp' /></p><p>அல்லது ஓய்வுபெற்ற வான்படை அதிகாரியான சாந்த குமார ஜயதிலக்கவின் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதற்கான நியாயமான காரணத்தை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. </p><p>
சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்கவை இந்த பதவியில் நியமித்தது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலாகும். அந்த நியமனத்தின் போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளான அனிஷா ஜினசேன உட்பட இருவரை விடவும், பாலிந்த ரணசிங்க பெயரே பரிந்துரைக்கப்பட்டு அரசியலமைப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
</p><p>எனவே, அதற்கு நன்றிக்கடனாக ரணில் விக்ரமசிங்கவின் வழக்கில் அவர் பக்கம் சார்ந்து செயற்படுகிறாரா என்ற சந்தேகம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>இது ஒரு பாரிய விடயமாகும். ஏனெனில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்து, அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளதாக அறியமுடிகிறது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T06:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் வாழ்வாதாரத்திற்காக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த இருவருக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-killed-in-elephant-attack-1788586983"></link>
            <id>https://tamilwin.com/article/two-killed-in-elephant-attack-1788586983</id>
            <summary type="text">அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஸ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஸ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம் நேற்று (04.09.2026) மாலை இடம்பெற்றுள்ளது. </p><p>

கெப்பித்திகொல்லாவ - பகலஉஸ்கொள்ளாவ பகுதியைச் சேர்ந்த செனவிரத்னகே ஸ்ரீ பால (70) மற்றும் சமரக்கோன் அப்புஹாமிலாகே சுகத் சுமனரத்ன (51) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.</p><h2>பயிர்ச்செய்கை முன்னெடுப்பு</h2><p> </p><p>

உயிரிழந்த இருவரும் தமது வாழ்வாதாரத்திற்காக சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இந்த நிலையில், சிறிய காட்டுப் பகுதியொன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு அருகில் வந்த யானையொன்று இருவரையும் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8cb0cd-3931-47bc-8c5e-c3ef2ddc9640/26-6a9bb0016857a.webp' /></p><p> 

யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p> </p><p>

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த கெப்பித்திகொல்லாவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். காதர், இரு சடலங்களையும் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். </p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T06:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள்: விடுதலைப் புலிகள் வழங்கிய துல்லியமான தகவல்கள்! அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.</p><h2>
</h2><p></p><h2>தகவல் சேகரிக்கும் புலனாய்வு அதிகாரி</h2><p>இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். </p><p>இந்தியாவின் சிறப்புப் பொலிஸ் பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் "பிரதீப்" எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும். </p><p>இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார். 
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார். </p><p>அவரை நாம் "சார்லஸ்" எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.
</p><p>சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக பொலிஸின் சிறப்புப் பிரிவான 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. </p><p>
சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.
</p><h2>இந்தியாவில் இருந்து வந்து முதல் தகவல்</h2><p>2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.
</p><p>சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள், </p><p>குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.
</p><p>இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய 'Q' பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b2b0ab-d818-42dc-a5e5-70a05eb47d73/26-6a9a0dc927dbc.webp' /></p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார். </p><p>அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. 
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது, </p><p>மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், </p><p>அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "பலமிக்க அரசியல்வாதி ஒருவர்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).
</p><h2>வவுணதீவு சம்பவத்தின் உண்மைத் தன்மை</h2><p>2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார். </p><p>"நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?" என வினவுகிறார். அதற்கு, "தமிழக 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்; </p><p>இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்" எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO - Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.</p><p>அதற்கு சி.ஓ., "இது குறித்து மேலும் ஆராயுங்கள்" எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29894d6f-036d-4834-9f36-2639d5a65830/26-6a9a0dc9e0815.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில் 
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி, </p><p>"இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. 
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார். </p><p>கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், "இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் பொலிஸாரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள். </p><p>இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.
</p><h2>குண்டு வெடிப்பின் பின்னர்</h2><p>குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் "உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்" எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது. </p><p>ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T05:53:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலின் தற்போதைய நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-in-saftey-place-1788573307"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-in-saftey-place-1788573307</id>
            <summary type="text">
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாமலின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>
சிறைச்சாலை வட்டாரங்கள் </b></h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் மேலும் 10 கைதிகள் வரை குறித்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e9f94f8-dc29-46ac-a8de-7b29aedbb92a/26-6a9b7927e0c9f.webp' /></p><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து வழங்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

நாமல் ராஜபக்ச கைது</b></h3><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9161d163-10dc-43ec-a023-590092d8f633/26-6a9b792895028.webp' /></p><p>பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது 8 லட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-05T05:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plain-tea-milk-tea-price-sri-lanka-1788585700"></link>
            <id>https://tamilwin.com/article/plain-tea-milk-tea-price-sri-lanka-1788585700</id>
            <summary type="text">பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;

எரிவாயு விலை குறைப்பு காரணமாக, ஒரு கோப்பை பால் தேநீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.&nbsp;&nbsp;</p><p>

எரிவாயு விலை குறைப்பு காரணமாக, ஒரு கோப்பை பால் தேநீர் மற்றும் ஒரு கோப்பை சாதாரண தேநீரின் விலையை, 5 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>சிற்றுண்டிகளின் விலை</h2><p>அகில இலங்கை உணவக மற்றும் மதுபான விடுதி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி,&nbsp;இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca2a153-fe0b-4538-ae68-304d41fb4de6/26-6a9ba87e3c3c6.webp' /></p><p>இருப்பினும், சிற்றுண்டிகளின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T05:35:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வேலையை விட்டு சென்ற உயர் பொலிஸ் அதிகாரி - தகவல் புத்தகத்தில் சிக்கிய முக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-traffic-oic-reportedly-leaves-post-1788585079"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-traffic-oic-reportedly-leaves-post-1788585079</id>
            <summary type="text">கடுமையான வேலைப்பளு காரணமாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பணியை விட்டுச் சென்றுள்ளார்.
அதிகரித்த வேலைப்பளு மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுமையான வேலைப்பளு காரணமாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பணியை விட்டுச் சென்றுள்ளார்.
</p><p>அதிகரித்த வேலைப்பளு மற்றும் பணி தொடர்பான அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகின்றது.&nbsp;</p><h3>பணி அழுத்தம்&nbsp;</h3><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,&nbsp;</p><p>தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்தவர், தனது பணியை விட்டு விலகி வீட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பணி அழுத்தத்தை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு, பொலிஸ் தகவல் புத்தகத்தில் குறிப்பொன்றைப் பதிவு செய்த பின்னரே குறித்த பொலிஸ் பரிசோதகர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d64dae-158c-423a-9373-503e5a3d9657/26-6a9ba792bc2dc.webp' /></p><p>
</p><p>இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்கிஸை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக குணசேகரவின் உத்தரவின் பேரில், கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><h2>பொலிஸ் தகவல் புத்தகத்தில் இருந்த குறிப்பு</h2><p>
</p><p>குறித்த அதிகாரியின் இந்தச் செயல், ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக் கூடும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கரிசனையை வெளியிட்டுள்ளார்.</p><p>
பொலிஸ் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெற்றதைத் தொடர்ந்து, தெஹிவளை போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் குறித்த பகுதிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:24:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கள பௌத்தர்களுக்கு பாரபட்சம் காட்டும் அநுர அரசு - தயாசிறி பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-against-sinhala-buddhists-1788585345"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-against-sinhala-buddhists-1788585345</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கூறுவதாக வாயளவில் வாதிட்டாலும், நடைமுறையில் சிங்கள- பௌத்த மக்களுக்குத் தொடர்ச்சியாக அநீதிகளையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கூறுவதாக வாயளவில் வாதிட்டாலும், நடைமுறையில் சிங்கள- பௌத்த மக்களுக்குத் தொடர்ச்சியாக அநீதிகளையும் பாரபட்சங்களையும் இழைத்து வருகின்றது என 
எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் நேற்று(04.09.2026) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 


இனவாதத்திற்குள் சிக்கியுள்ள சிங்கள மக்கள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>


தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சகோதர சமுதாயமாகவே கருதுகின்றோம். எனினும்,
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குச் சென்று இனவாதம் பேச அனுமதிக்க மாட்டோம் எனக்
கூறுவதும், அனுராதபுரத்திற்கு வடக்கே விகாரைகளுக்குச் செல்வோரை இனவாதிகளாகச்
சித்தரிப்பதும் முரணானது.</p><p> 

மேலும், வரலாற்றில் முதன்முறையாகப் புத்தர் சிலை
பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டமை மற்றும் அனுபவமிக்க சிங்கள பௌத்த
நீதிபதிகளான தம்மிக கனேபொல மற்றும் குருசிங்க ஆகியோரின் நியமனங்கள் தடுத்து
நிறுத்தப்பட்டமை போன்ற செயற்பாடுகள் அரசாங்கத்தின் பாரபட்சப் போக்கைக்
காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/651480c5-685a-416e-8b8c-833f58328167/26-6a9ba5ecd76bc.webp' /></p><p>

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா
பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச போன்ற தலைவர்களால்
கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் நாட்டின் முன்னணி
வலுவான அரசியல் கட்சியாக மாற்றும் வரை தங்களது அரசியல் பயணம் ஓயாது.
</p><p>
கட்சியின் மூத்த உறுப்பினரான நிமல் சிரிபால டி சில்வா தனது தனிப்பட்ட அரசியல்
வியாபாரத்தையும் சுயநல நிகழ்ச்சி நிரலையும் உடனடியாக நிறுத்திக்கொள்ள
வேண்டும்.
</p><p>
 அமைச்சுப் பதவிகளுக்காக நாட்டையும் கட்சியையும் காட்டிக்கொடுக்கும்
இழிவான செயல்களில் ஈடுபடாமல், சாதாரண மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு அதிகாரிகள் குறித்து புதிய நடவடிக்கை.. ஜனாதிபதி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-speech-police-event-1788584583"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-speech-police-event-1788584583</id>
            <summary type="text">இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காகச் சரியான பதவி
உயர்வு முறைமை தயாரிக்கப்படுவதுடன், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய
சீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காகச் சரியான பதவி
உயர்வு முறைமை தயாரிக்கப்படுவதுடன், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய
சீருடை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
தெரிவித்தார்.
</p><p>
திம்பிரிகஸ்யாய களப்படை தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற 160ஆவது
பொலிஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் இடர் கொடுப்பனவை வழங்குவதற்கும், அவசியமான
உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஆட்சேர்ப்புகளுக்குத் தேவையான நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
</p><p>
கடந்த 160 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகப் பொலிஸார் ஆற்றிய மகத்தான
பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.</p><h2>அறிமுகப்படுத்தப்பட்ட செயலி&nbsp;&nbsp;</h2><p> </p><p>மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும்
பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் தேசிய பொறுப்பு தற்போது பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதனைச் சமூகப் பொறுப்பாகக்
கருதிச் செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc552925-986c-4800-bd3e-5011cfbb5f3b/26-6a9ba53ddcd58.webp' /></p><p>

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவான போதைப்பொருள் சோதனைகள்
மேற்கொள்ளப்பட்டதையும், வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 74 ஆயுதமேந்திய
குற்றவாளிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதையும் அவர் பாராட்டினார். </p><p>நாட்டை
குற்றங்களின் ராஜ்யத்திலிருந்து அமைதியான நாடாக மாற்றத் தேவையான சட்டங்களை
இயற்றுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களுக்குச் சேவைகளை விரைவாக வழங்குவதற்காக 'SRI LANKA POLICE MOBILE
APP' செயலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நவீனமயமாக்கப்பட்ட <a href="http://www.police.lk&nbsp;" target="_blank">www.police.lk&nbsp;</a>&nbsp;<http: www.police.lk="">இணையதளமும் திறந்து வைக்கப்பட்டது.</http:></p><p><http: www.police.lk=""> மேலும், 160ஆவது
பொலிஸ் தின நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

2026 ஜனவரி 1 முதல் அமுலாகும் வகையில், பிரதான பொலிஸ் பரிசோதகர்
தரத்திற்குட்பட்ட 1,489 பொலிஸ் அதிகாரிகளுக்கும், விசேட அதிரடிப்படையைச்
சேர்ந்த 153 அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட பதவி உயர்வுகளுக்கான கடிதங்கள்
ஜனாதிபதியால் அடையாளமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால்
ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.</http:></p><p><http: www.police.lk=""></http:></p><p><http: www.police.lk=""></http:></p>]]></content>
            <updated>2026-09-05T05:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்தில் பசில் - யோஷித வரிசையில் நாமல்! வரலாற்றில் பதிவான 4ஆவது கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-4-times-in-sri-lankan-history-1788516687"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-4-times-in-sri-lankan-history-1788516687</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;இதற்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் (2016இல் இருமுறையும் 2017இல் ஒருமுறையும்) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, தற்போது மீண்டும் இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் திட்டவட்டமாக மறுப்பதுடன், இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p></p><h2>முதல் கைது..&nbsp;</h2><p>
</p><p>
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus A330 மற்றும் A350) விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604d05b3-6e4f-4f36-a4c8-3b78d150f6d8/26-6a9aa36c3625f.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தத்தின் போது ராஜபக்ச குடும்பத்தினர் 60 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐந்து மணி நேர விசாரணையின் பின்னரே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. </p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் முன்னரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்ததுடன், எந்தவொரு சுயாதீன விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.
</p><p>
நாமல் ராஜபக்ச முதன்முதலில் 2016 ஜூலை 11 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (FCID) கைது செய்யப்பட்டார். </p><p>கொழும்பு கோட்டையில் முன்மொழியப்பட்ட 650 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பரக் கட்டிடத் திட்டத்துடன் தொடர்புடையதாக, ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்காக இந்திய நிறுவனமான 'கிரிஷ்' நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாயை (அக்காலகட்டத்தில் சுமார் 480,000 அமெரிக்க டொலர்) தவறாகப் பயன்படுத்தி, அதைத் தன் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்..&nbsp;</h2><p> </p><p>பசில் மற்றும் யோஷித ராஜபக்சவுக்குப் பிறகு இக்குடும்பத்தின் மூன்றாவது கைதான இச்சம்பவத்திற்குப் பிறகு அவர் சுமார் ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9a7343-a31e-4f4c-838e-dc83659e3649/26-6a9aa36d0a978.webp' /></p><p> </p><p>மேலும், சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பின்னர், 2016 ஒகஸ்ட் 15 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார். </p><p>அங்கு, நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடைய 'கவர்ஸ் கோப்பரேஷன்' (Gowers Corporation) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி 125 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 'ஹெலோ கோப்' (Hellocorp) நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்து பணமோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் ஒகஸ்ட் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><p>இந்த வழக்கில் வங்கிப் கணக்குகளை முடக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், பின்னர் 2023 நவம்பரில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.</p><p></p><h2>வரலாற்றுச் சம்பவம்..&nbsp;</h2><p>
</p><p>
அவரது மூன்றாவது கைது நடவடிக்கை 2017 ஒக்டோபர் 10 அன்று ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90de9b21-127e-46f5-986b-b694c709170e/26-6a9aa36dbbfec.webp' /></p><p> </p><p>மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்திய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிராக ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, சட்டவிரோதமாகக் கூடுதல், கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இது நடந்தது. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருடன் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவர் ஒக்டோபர் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது ஆதரவாளர்கள் டயர்களை எரித்து சிறை வாகனத்தை மறிக்கவும் முயன்றனர்.
</p><p>
பின்னர், 2025 ஜூலையில், மாலைதீவில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றதால் 2017 போராட்ட வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. எனினும், மறுநாள் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து அந்த பிடியாணை திரும்பப் பெறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ece776bd-1b15-4649-8f75-a3a0f6a649ec/26-6a9aa36e7c460.webp' /></p><p> </p><p>இவ்வாறிருக்கையில், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணிகள் சேர்க்கையில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தி வருகிறது, மேலும் பல பணமோசடி புகார்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனான, 1986இல் பிறந்த நாமல் ராஜபக்சஈ முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் (2020 - 2022), 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மிக இளைய வேட்பாளரும் ஆவார்.</p><p> தற்போது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது அரசியல் தொகுதி ஹம்பாந்தோட்டை ஆகும். 2015 முதல், மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கங்களின் கீழ் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பல விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MKWUl_Wo_0w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-05T05:04:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட சாட்சியங்கள் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-based-on-nimal-perera-s-affidavit-1788583095"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-based-on-nimal-perera-s-affidavit-1788583095</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ்(Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான ஊழலில் 100 மில்லியன் ரூபாயை தாம் நாமல் ராஜபக்சவிடம் வழங்கியதாக தொழிலதிபர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ்(Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான ஊழலில் 100 மில்லியன் ரூபாயை தாம் நாமல் ராஜபக்சவிடம் வழங்கியதாக தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கிய சத்தியக்கடதாசி உட்பட முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்தே, 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
</p><p>
நிமல் பெரேரா என்பவர் பல வருடங்களாக பல பிரசித்தி பெற்ற நிதி குற்றங்கள் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பெயர் குறிப்பிடப்பட்ட இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராவார். </p><p>சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) ஒப்பந்தம் உட்பட மேலும் பல சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><h2>
</h2><p></p><h2>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு-CID விசாரணை</h2><p>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து நடத்திய கூட்டு விசாரணையைத் தொடர்ந்தே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவித்தது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/444561ea-d9c3-46a4-8e2c-8d7815f91232/26-6a9b9cb9524ee.webp' /></p><p>நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட காரணங்களுக்கமைய, இந்த சர்ச்சைக்குரிய விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பாக ஏர்பஸ் நிறுவனத்தினால் 1.45 மில்லியன் யூரோ பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுத்தர அதிகாரியான கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமலி விஜேநாயக்கவின் முழுமையான உரிமையின் கீழ் இயங்கும் ‘பிஸ் சொல்யூஷன்’ (Biz Solution) என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் ஸ்டேன்டட் சாட்டட் வங்கி கணக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணம், பின்னர் தொழிலதிபர் நிமல் பெரேரா தலைவராகப் பதவி வகித்த நிறுவனத்திற்குச் சொந்தமான சிங்கப்பூரிலுள்ள வங்கிக் கணக்கொன்றிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவித்தது.</p><h2>

</h2><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட வாக்குமூலம்</span></h2><p>விசாரணையாளர்கள் தற்போது நிமல் பெரேரா வசித்து வரும் அவுஸ்திரேலியாவிற்குச் சென்று அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
</p><p>
முறைப்பாட்டாளர் தரப்பின் கூற்றுப்படி, “ பேஸ் சொல்யூஷன்” கணக்கிலிருந்து தனது நிறுவனத்திற்குப் கிடைத்த 800,000 அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாயாக மாற்றி நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாக நிமல் பெரேரா இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சத்தியக்கடதாசி வழங்கியுள்ளார்.
</p><p>
அந்தப் தொகை அக்காலகட்டத்தில் சுமார் 100 மில்லியன் இலங்கை ரூபாய்க்கு சமமானது என முறைப்பாட்டாளர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
</p><p>
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நிமல் பெரேரா மீண்டும் இலங்கைக்கு வர மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/070d0086-cbd7-484c-97b3-d0e8df51f607/26-6a9baa20f28c2.webp' /></p><p>
</p><p>
விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்கு ஏர்பஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஏர்பஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மூன்று முறை இலங்கைக்கு வருகை தந்து நான்கு வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். </p><p>ஏர்பஸ் நிறுவனத்திற்கும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையே&nbsp; இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்த தகவல்களையும் விசாரணையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
</p><p>
இதன்போது நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரருக்கு பிணை கோரியதுடன், பிரதானமாக நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
</p><h2>
நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணியின் வாதம்</h2><p>பிரான்ஸ் விசாரணையாளர்களோ அல்லது ஏர்பஸ் அதிகாரிகளோ நாமல் ராஜபக்சவிற்கு பணம் கொடுத்ததாக எந்தவொரு வாக்குமூலமும் அளிக்கவில்லை என பிரதிவாதி தரப்பு வாதிட்டது.
</p><p>
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான பிற நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நிமல் பெரேரா வழங்கிய சாட்சியங்களை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மெண்டிஸ், அவரது நம்பகத்தன்மையையும் கேள்விக்குட்படுத்தினார்.
</p><p>
குறிப்பிட்ட நிறுவனத்துடன் தொடர்புடைய கணக்கின் உரிமையை நிமல் பெரேரா முன்னர் நிராகரித்திருந்ததாகவும், அது இத்தாலி நாட்டவரான தனது நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது என அவர் கூறியிருந்ததாகவும் பிரதிவாதி தரப்பு வாதிட்டது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a14375-b6d6-4b81-94ff-e0c31807e2cf/26-6a9b9cba059a0.webp' /></p><p>2019 ஆம் ஆண்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிமல் பெரேராவின் வாக்குமூலங்களை விசாரணையாளர்கள் இப்போது எவ்வாறு நம்புகிறார்கள் என்றும் சட்டத்தரணி மெண்டிஸ் கேள்வி எழுப்பினார்.
</p><p>
இருப்பினும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவின் கீழ் அதன் பணிப்பாளர் நாயகத்தினால் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், பிணை வழங்குவதற்கு விசேட காரணங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தது.</p><p>
நிமல் பெரேராவின் நம்பகத்தன்மை குறித்து பிரதிவாதி தரப்பு எழுப்பும் சவாலானது வழக்கு விசாரணையின் போதே தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றும், இந்த சந்தர்ப்பத்தில் பிணை வழங்குவதற்கான விசேட காரணியாக அதைக் கருத முடியாது என்றும் கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ்.போதரம தீர்ப்பளித்தார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T04:47:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனப்பிரஜை கடத்திப் படுகொலை: மாறுவேடமிட்டிருந்த முக்கிய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/port-city-chinese-national-murderer-arrested-1788583177"></link>
            <id>https://tamilwin.com/article/port-city-chinese-national-murderer-arrested-1788583177</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்து சீனப் பிரஜை ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபர் மாறுவேடமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்து சீனப் பிரஜை ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபர் மாறுவேடமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>சீனப் பிரஜையை காரில் கடத்திச் சென்று படுகொலை செய்து, அவரது உடலைக் கற்களால் மூடிவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே இவ்வாறு செயற்கை முடி (விக்கு) அணிந்து மாறுவேடத்தில் இருந்தபோதே 43 நாட்களுக்குப் பின்னர் நேற்றைய தினம் (04.09.2026) துறைமுக நகரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>சந்தேகநபர் அணிந்திருந்த செயற்கை முடியும் பொலிஸ் பாரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. இக்குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு சீன தேசியவாதிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>எஹெலியகொட பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கரதன பொலிஸ் சோதனைச் சாவடி அதிகாரிகள் குழுவொன்று, சோதனைச் சாவடியிலிருந்து கெட்டஹெத்த வீதியில் அமைந்துள்ள ரம்புட்டான் தோட்டம் ஒன்றிலுள்ள இடிந்த வீடொன்றில் இருந்து கடந்த ஜூலை 23 ஆம் திகதி நபரொருவரின் சடலத்தைக் கண்டெடுத்தது.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>அச்சடலம் கபொக் கற்களால் மூடப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்குரிய சொகுசு கார் ஒன்றும் அன்றைய தினமே நுகதண்ட கோவில் அருகிலுள்ள வீதியிலிருந்து மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6007c3-d671-4ccb-9221-af68798f2eec/26-6a9b9d0adacc6.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இதுவொரு படுகொலை என்பதும், உயிரிழந்தவர் சீன பிரஜை என்பதும் தெரியவந்தது. </p><p>அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவர் கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சீன தேசியவாதி என்பது உறுதிசெய்யப்பட்டது.</p><p>கடந்த ஜூலை 23 ஆம் திகதி இக்குற்றம் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே, சந்தேகத்திற்குரிய இரு சீன பிரஜைகள் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.</p><p>ஏனைய இரு சீனப் பிரஜைகளும் சம்பவத்தின் பின்னர் கொழும்புப் பகுதியை விட்டுத் தப்பி, சீகிரியா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஒளிந்திருந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
</p><p>கைது செய்யப்பட்டுள்ள 54 வயதான முக்கிய சந்தேகநபரான சீனப் பிரஜையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவல் உத்தரவைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T04:44:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூஆர் குறியீட்டு எரிபொருள் விநியோக முறைமை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-distribution-under-qr-code-system-to-continue-1788580721"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-distribution-under-qr-code-system-to-continue-1788580721</id>
            <summary type="text">கியூஆர் குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கில் நிலவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கியூஆர் குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. </p><p>

மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மயூர நெட்டிகுமார தெரிவித்துள்ளார்.</p><h2>விலை குறைப்பு</h2><p>
</p><p>
இதேவேளை இன்றைய தினம் (05.09.2026) முதல் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நாப்தாவின் (Naphtha) விலைகள் குறைக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, ஒரு லீட்டர் உலை எண்ணெயின் விலை 38 ரூபாவும், ஒரு லீட்டர் நாப்தாவின் விலை 35 ரூபாவும் குறைக்கப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரா குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0448df-c20f-4294-9401-50b6f6686683/26-6a9b97d0736bd.webp' /></p><p> </p><p>

அதன்படி, ஒரு லீட்டர் உலை எண்ணெயின் விலை 248 ரூபாவிலிருந்து, 210 ரூபாவாக குறைக்கப்படும்.</p><h2>மக்களுக்கு நிவாரணம்</h2><p> </p><p>

இதற்கிடையில், உலை எண்ணெய் மற்றும் நாப்தாவின் விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு அந்த நிவாரணத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், வரவிருக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் பொதுமக்களுக்கு அந்த நிவாரணத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T04:17:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை - அநுர அரசின் போலி முகம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/repression-of-tamil-journalists-1788581508"></link>
            <id>https://tamilwin.com/article/repression-of-tamil-journalists-1788581508</id>
            <summary type="text">தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும்
வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்
ச.சுகிர்தன் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும்
வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்
ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2>

வெளிச்சத்திற்கு வரும் அரசின் போலி முகங்கள்</h2><p>
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

ஆட்சி அதிகாரங்கள் இல்லாத காலகட்டத்தில் தங்களை ஜனநாயகவாதிகள் போலவும்
ஊடகங்களின் நண்பர்கள் போலவும் காட்டிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி, தற்போது
ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த கால அரசுகளை விட மிக மோசமாக ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் ஏவிவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a15191-80d9-4ce6-ab93-e39baf416dc4/26-6a9b9763e302f.webp' /></p><p>
</p><p>
தங்களின் இயலாமை, ஊழல்கள் மற்றும் செயற்திறனற்ற தன்மைகளை ஊடகவியலாளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், தங்கள் போலி முகங்கள் மக்களிடம்
அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சத்திலே இந்த அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
</p><p>அரச தரப்பு இந்த வன்முறைப் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்.

வடக்கில் நீண்டகாலமாகச் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன், கொள்கை ரீதியில் பிழைவிடும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராகக் கூட துணிந்து கருத்துக்களைப் பதிவு செய்தவர். </p><p>அத்தகைய ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசால் பழிவாங்கப்பட்டுள்ளார்.
</p><h2>

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை</h2><p>
கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகப் போலியாகக்
கண்ணீர் வடித்தவர்கள், இன்று அதிகாரம் கிடைத்தவுடன் ஊடகவியலாளர்களைக் காலால் எடையும் மிலேச்சத்தனமான சூழலை உருவாக்கியுள்ளனர்.
</p><p>
நாடளாவிய ரீதியில் இன்று மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை விடவும் மோசமான,
சர்வாதிகார மற்றும் மிலேச்சத்தனமான ஆட்சி முறைக்குள் இலங்கை மக்கள்
தள்ளப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6d1aa2-1179-4206-8c69-f2993c284d19/26-6a9b9764aeee8.webp' /></p><p> </p><p>

இத்தகைய ஆபத்துக்களை மக்கள் மத்தியில்
கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாரிய பொறுப்பு
ஊடகவியலாளர்களுக்கே உள்ளது. </p><p>அதனை அவர்கள் சிறப்பாகச் செய்து வருவதை ஒடுக்கும் நோக்கிலேயே அரசு இந்த அடக்குமுறைகளைக் கையிலெடுத்துள்ளது.
</p><p>
எனவே, நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய வதைகள் தொடராதவாறு அரசு
தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன்
மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறையை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T04:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடி நடவடிக்கை - கொழும்பில் சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotels-to-be-removed-from-colombo-1788580151"></link>
            <id>https://tamilwin.com/article/hotels-to-be-removed-from-colombo-1788580151</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதியிலுள்ள கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களை அகற்ற சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதியிலுள்ள கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களை அகற்ற சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p> 

அதற்கமைய பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத கட்டுமானங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரசாங்க அதிகாரிகளின் தலையீட்டுடன் போலி ஆவணங்களை தயாரித்து இந்த ஹோட்டல்கள் தன்னிச்சையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
சட்டவிரோத ஹோட்டல்</b></h2><p>இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இடித்து அகற்றுவதற்கு கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617f8b19-d9b5-433c-a6cd-9e8565fd0a75/26-6a9b93072286c.webp' /></p><p>இந்த கடற்கரை பகுதிகளை மிகவும் உணர்திறன் வாய்ந்த மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் வகையில் மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-05T03:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 20ஆம் திருவிழா - பக்தி பரவசத்தில் பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20th-festival-of-nallur-kandaswamy-temple-1788578777"></link>
            <id>https://tamilwin.com/article/20th-festival-of-nallur-kandaswamy-temple-1788578777</id>
            <summary type="text">நல்லூர் ஆலயத்தின் 20ஆம் திருவிழா இன்று (05.09.2026) காலை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் ஆலயத்தின் 20ஆம் திருவிழா இன்று (05.09.2026) காலை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றுள்ளது.
</p><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் 20ஆம் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.</p><p>

இதன்போது சந்தன கோபாலர் உற்சவமும், பட்டித் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூரானை தரிசித்து வழிபட்டனர்.
</p><p>
வாத்திய இசை முழங்க, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற காலை உற்சவம் பக்தி உணர்வை மேலோங்கச் செய்தது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கோர விபத்து - 22 வயது இளைஞர் பரிதாப உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-kilinochchi-1788578183"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-kilinochchi-1788578183</id>
            <summary type="text">கிளிநொச்சி - உருத்திரபுரம் டி - 7 பகுதியில் மோட்டார் சைக்கிள் பனை மரத்தில்
மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - உருத்திரபுரம் டி - 7 பகுதியில் மோட்டார் சைக்கிள் பனை மரத்தில்
மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த சம்பவம் நேற்று(04.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார்
சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலிருந்த பனை
மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>

இளைஞர் உயிரிழப்பு</h2><p>
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22
வயதுடைய இளைஞர், உடனடியாகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b23c03-d2e4-4003-9a5a-22672840206b/26-6a9b89d0c69bd.webp' /></p><p>

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம்
ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தம்பதி மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் - பின்னணி குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-police-officers-son-shoots-couple-1788577058"></link>
            <id>https://tamilwin.com/article/former-police-officers-son-shoots-couple-1788577058</id>
            <summary type="text">கொழும்பு, கொள்ளுப்பிட்டி 6வது தெருவில் உள்ள பாம் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மகனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொள்ளுப்பிட்டி 6வது தெருவில் உள்ள பாம் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மகனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தம்பதி காயமடைந்துள்ளனர்.</p><p>

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதய குமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த தம்பதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>தம்பதி மீது துப்பாக்கி </b></h2><p>துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் 51 வயதுடைய திருமணமாகாத நபர், பயன்படுத்திய துப்பாக்கி, அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு வெற்று தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd494c72-9801-48e5-9b15-0f53dc5f9287/26-6a9b875b8ec10.webp' /></p><p>காயமடைந்த பெண் சந்தேகநபருடன் நீண்ட காலமாக நெருங்கிய உறவை பேணிவந்துள்ளார்.
</p><p>
நேற்று, முன்தினம் இரவில் வேறு ஒரு யுவதியையும் சந்தேகநபரின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
காயமடைந்த குறித்த தம்பதி கிருலப்பனை பகுதியை சேர்ந்தவர்களாகும். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T03:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக குறைந்த லிட்ரோ எரிவாயு விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/litro-gas-prices-down-1788576547"></link>
            <id>https://tamilwin.com/article/litro-gas-prices-down-1788576547</id>
            <summary type="text">இன்று(05.09.2026)&amp;nbsp; நள்ளிரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய வீட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று(05.09.2026)&nbsp; நள்ளிரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.</p><h2>விலை குறைப்பு</h2><p>
</p><p>
இதன்படி, அதன் புதிய விலை ரூ.4,365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.42 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1157c9c-7d8c-4fc3-b65d-581f2899b3a7/26-6a9b84ca2f719.webp' /></p><p>
</p><p>
மேலும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.20 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.815 ஆக குறைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T02:56:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை - சந்தேக நபரின் சடலமும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-killed-in-colombo-suspects-body-found-1788572187"></link>
            <id>https://tamilwin.com/article/women-killed-in-colombo-suspects-body-found-1788572187</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை - பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

18 வயதான குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை - பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
18 வயதான குறித்த யுவதி கழுத்து அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு நேற்று முன்தினம் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்த கனகசபை மீகா என தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
இளம் யுவதி கொலை</b></h2><p>இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் உடுபுஸ்ஸல்லாவை, சென்ட் வத்தையைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3a0324-d51b-44de-bc42-e3c9ecec0fa9/26-6a9b73f9dad6f.webp' /></p><p>குறித்த சந்தேகநபர் 2020ஆம் ஆண்டு கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவசகவெல்ல பிரதேசத்தில் நபரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவராகும்.</p><p>

தற்போது அது குறித்த வழக்கு விசாரணையில் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட யுவுதி சந்தேகநபருடன் காதல் உறவைப் பேணி வந்துள்ளார்.
</p><p>
சந்தேகநபர் அவரைத் தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து, வீட்டில் இருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தறுத்து, கண்களைத் தோண்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
யுவதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>

இவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T02:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்வெட்டு தொடர்பில் பரவும் வதந்திகள் - அரசத்தரப்பு வெளியிட்ட விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-power-cut-1788573726"></link>
            <id>https://tamilwin.com/article/no-power-cut-1788573726</id>
            <summary type="text">மின்வெட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை தட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்வெட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
</p><p>நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை தடையின்றி தொடர்ச்சியாக வழங்குவதற்கு எந்தவொரு தடையும் இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.</p><h2>அனுர கருணாதிலக்க விளக்கம்&nbsp;</h2><p>இந்த அறிவிப்பை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f83a51-b2c2-429c-bb56-25dbe49990fd/26-6a9b807bbb3a1.webp' /></p><p>
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்றும் அவர் இதன்போது ஊடகங்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T02:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை..! வெளியில் செல்வோர் அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-weather-report-1788575319"></link>
            <id>https://tamilwin.com/article/today-weather-report-1788575319</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றும்(05.09.2026) குறிப்பிட்ட சில மாகாணங்களில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றும்(05.09.2026) குறிப்பிட்ட சில மாகாணங்களில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

இதற்கமைய, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

அதிலும் குறிப்பாக சில இடங்களில், 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
</p><p>
 இதற்கு மேலதிகமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><h2>
மழைக்கு வாய்ப்பிலிருந்தாலும் உச்சம் கொடுக்கும் சூரியன்</h2><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d9b1f7-f7b5-4060-9c89-d7b9ff9ab25c/26-6a9b7eec51a55.webp' /></p><p>
</p><p>
சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
</p><p>
 
இதன்படி, இன்று(05) நண்பகல் 12.08 அளவில் மொரட்டுவ, கெஸ்பேவ, பொல்கஸ்ஓவிட்ட, ஹந்தபாங்கொட, ஸ்ரீ பலாபத்தல, பொகவந்தலாவ, இதல்கஸ்சின்ன, யுதகனாவ, கொட்டியாகல மற்றும் பாணம ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T02:31:48+00:00</updated>
        </entry>
    </feed>
