<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-12T17:34:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து நாமல், ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-turns-to-mandela-s-words-in-message-1789233170"></link>
            <id>https://tamilwin.com/article/namal-turns-to-mandela-s-words-in-message-1789233170</id>
            <summary type="text">சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
</p><p>அநுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் "ஜன சதன" பேரணியில் கலந்துகொண்டுள்ள ஆதரவாளர்களுக்கு அவர் இவ்வாறு செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
</p><p>அரசாங்கத்தின் அரசியல் அழுத்தங்களுக்குத் தாம் ஒருபோதும் பணியப்போவதில்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb62c33-f760-40b2-8dcc-59333f3268df/26-6aa58813dae07.webp' /></p><p>
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள இந்தச் செய்தியில், தமது ஆதரவாளர்களின் ஒற்றுமை மற்றும் ஆதரவுக்கு நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். </p><p>
அத்துடன் அநுராதபுர பேரணியானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் பயணத்தில் ஒரு "தீர்மானமிக்க புதிய தொடக்கம்" என்றும் அவர் வர்ணித்துள்ளார்.</p><p> 
"கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து நான் உங்களைப் பார்க்கிறேன். இங்கிருந்து, நீங்கள் எனக்குக் காட்டும் சகோதரத்துவத்தின் கதகதப்பை என்னால் உணர முடிகிறது" என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
</p><p>தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின், "கடினமான சூழ்நிலைகள் சில மனிதர்களை உடைத்தெறிகின்றன; ஆனால் சிலரை உருவாக்குகின்றன" என்ற வார்த்தைகளை நாமல் மேற்கோள் காட்டியுள்ளார்.
</p><p>சவால்கள் தமது அரசியல் இயக்கத்தைப் பலப்படுத்தியுள்ளதாகவும், துன்பங்களை எதிர்கொள்ளும்போது மேலும் பலமடைவதற்குக் கற்றுக்கொடுத்தவர் தனது தந்தை என குறிப்பிட்டுள்ளார். </p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>மேலும், வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச் சுமையினால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அரசாங்கம் அரச விசாரணை நிறுவனங்களை அரசியல்மயமாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
 அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமாக விசாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். </p><p>அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மாகாண சபை தேர்தல்கள் தாமதமடைவது மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் இல்லாமை குறித்தும் அவர் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>தமது செய்தியின் நிறைவில், அரசாங்கத்தின் "அரசியல் அதிகாரத்திற்கு" தாம் சரணடையப் போவதில்லை என்றும், தாம் அஞ்சப்போவதில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
</p><p>"எமது மன உறுதியை சிறைவைக்க முடியாது" எனக் குறிப்பிட்ட அவர், சட்டத்திற்கு மதிப்பளித்து, அமைதியாகவும் ஒழுக்கத்துடனும் செயற்படுமாறு ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T17:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹாவில் வான் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: சாரதி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-open-fire-on-van-in-gampaha-1789233560"></link>
            <id>https://tamilwin.com/article/police-open-fire-on-van-in-gampaha-1789233560</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் வான் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி கைது செய்யப்பட்டு வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் வான் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனத்தின் மீதே&nbsp; துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8b7e7c3-261d-498d-8600-c56223755ece/26-6aa58bf89fef8.webp' /></p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:29:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை அதிர வைத்த 9/11 - 25 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346"></link>
            <id>https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346</id>
            <summary type="text">அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்பட்ட பல டஜன் இரகசிய உளவுத்துறை ஆவணங்களை அமெரிக்க மத்திய புலனாய்வு
முகவரகமான சிஐஏ (CIA) பகிரங்கப்படுத்தியுள்ளது.
</p><p>
3,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமான 9/11 தாக்குதலுக்கு
முன்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உள்ளிட்ட நாட்டின்
உயர் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தினசரி இரகசிய உளவு அறிக்கைகளே இவ்வாறு
வெளியிடப்பட்டுள்ளன.</p><h2>இரகசிய ஆவணங்கள்</h2><p>
</p><p>
சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் இதனைத் தனது அமைப்பின் வெளிப்படைத்தன்மைக்கான
முக்கிய நகர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a9df96-2d08-4884-a335-46a1170d0dcb/26-6aa588348cec8.webp' /></p><p>
</p><p>
வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் 1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில்,
பின்லேடனின் முக்கிய இலக்கு அமெரிக்க மண்ணில் உள்ள வொஷிங்டன் நகரைத் தாக்குவதே
என்றும், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட விமானமொன்றை அமெரிக்க நகரம் மீது மோதித்
தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

அத்துடன், ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பின்லேடனை ஒப்படைக்க தலிபான்கள்
மறுத்தமை, நியூயோர்க் விமான நிலையத்தில் சந்தேகநபர்கள் மேற்கொண்ட பாதுகாப்புப்
சோதனை ஒத்திகைகள் மற்றும் கதிரியக்கப் பொருட்களைப் பயன்படுத்தி குண்டுகளைத்
தயாரிக்கும் முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்களும் இந்த ஆவணங்கள் மூலம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்து இணைப்பு குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பிரித்தானியா பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/britain-responds-to-trump-s-remarks-on-the-ireland-1789230957"></link>
            <id>https://tamilwin.com/article/britain-responds-to-trump-s-remarks-on-the-ireland-1789230957</id>
            <summary type="text">பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன்
இணைவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன்
இணைவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள்
குறித்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தனது விளக்கத்தை அளித்துள்ளது.</p><p>

டப்ளினில் அயர்லாந்து பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அயர்லாந்து குடியரசும் வட அயர்லாந்தும்
ஒன்றிணைவதை தான் விரும்புவதாகவும், அது காலப்போக்கில் நடக்கும் என்றும்
குறிப்பிட்டிருந்தார்.</p><h2>புதிய வாக்கெடுப்பு&nbsp;</h2><p>

ட்ரம்பின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய
பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் ஊடகப் பேச்சாளர், வட அயர்லாந்தின் அரசியல்
நிலைப்பாடு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும்
ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4869f4a8-5779-44cc-8b0a-305cf2a5af1a/26-6aa584c862ccc.webp' /></p><p>
</p><p>
முன்னதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய பிரதமர், வட அயர்லாந்தில்
மற்றுமொரு எல்லைக் வாக்கெடுப்பை நடத்துவதற்குப் பெரும்பாலான மக்களின் ஆதரவு
இருப்பதாகத் தெரியவில்லை என்றும், மக்கள் விருப்பத்தில் மாற்றம் ஏற்படும் வரை
புதிய வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwela-attack-condemn-by-un-1789231593"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwela-attack-condemn-by-un-1789231593</id>
            <summary type="text">&amp;nbsp;தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.</p><p>இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே, இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த இச்சம்பவம் குறித்துத் தாம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ac02d5e-2e3e-4a0a-a0c8-d686d30fd29b/26-6aa581eb2ce94.webp' /></p><p>
</p><p>தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டிலிருந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>
தாக்குதல் நடத்துவதற்காகச் சந்தேகநபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்று பாதுக்கை, பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட போதிலும், சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
</p><p>இதனிடையே, இந்த குண்டுத்தாக்குதல் இலக்கு மாறி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>தாக்குதலில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், உயிரிழந்த சிறுவர்களின் தந்தையுடைய சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே குற்றவாளிகள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதாலேயே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களும் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டதாக 'அட தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T16:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நேரத்தில் முடங்கிய முக்கிய எண்ணெய் வழித்தடங்கள்! சவூதி எடுத்த அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-shuts-down-its-main-oil-pipeline-1789230091"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-shuts-down-its-main-oil-pipeline-1789230091</id>
            <summary type="text">ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது
பிரதான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகளை தற்காலிகமாக
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது
பிரதான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகளை தற்காலிகமாக
இடைநிறுத்தியுள்ளது.</p><p> இது உலகளாவிய சக்தி வள சந்தையில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சவூதி அரேபியா</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவின் அப்கேக் எண்ணெய் வயலிலிருந்து செங்கடலின் யான்பு துறைமுகம்
வரை 1,200 கிலோமீட்டர் தூரம் வரை பரந்து விரிந்துள்ள இந்த எண்ணெய் குழாய்
தொகுதி, ரியாத் மற்றும் மதினா பகுதிகளில் வைத்து தாக்குதலுக்கு
இலக்காகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dc1a216-b841-4075-8792-90c3a895f481/26-6aa57e7d431e0.webp' /></p><p>

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதன் செயல்பாடுகள் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டுள்ளதாக சவூதி ஆற்றல் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

ஈராக்கின் மைசான் மாகாணத்திலிருந்தே இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈராக் பிரதமர்
அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தனது எல்லைப் பகுதியை
தாக்குதல்களுக்கு பயன்படுத்த அனுமதித்த குற்றச்சாட்டில் அப்பகுதி இராணுவத்
தளபதியை ஈராக் அரசு பதவி நீக்கம் செய்துள்ளதுடன், ஈரான் எல்லையையும்
மூடியுள்ளது.
</p><h2>ஹோர்மூஸ் நீரிணை</h2><p>
சவூதியின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 4 முதல் 5 சதவீதம் வரை இந்த
குழாய் பாதை மூலமே கொண்டு செல்லப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc72110-1034-4e6f-9fb0-888b0bfedfd7/26-6aa57e7c8fa30.webp' /></p><p>

ஹோர்மூஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி அரேபியா பயன்படுத்திய
பிரதான மாற்றுப் பாதையான இதுவும் தற்போது மூடப்பட்டுள்ளதால், உலக சந்தையில்
பிரெண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 104 டொலர்களைக் கடந்து
உயர்ந்துள்ளதுடன், உலகளாவிய எரியபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடி
உருவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-in-congo-who-warning-1789224125"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-in-congo-who-warning-1789224125</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000 ஐக் கடந்துள்ளது.அத்துடன், இந்தநோய் தற்போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000 ஐக் கடந்துள்ளது.</p><p>அத்துடன், இந்தநோய் தற்போது
நாட்டின் புதிய மாகாணமொன்றிற்கும் பரவியுள்ளதாக அரசாங்கத் தரவுத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
</p><p>
புண்டிக்புக்யோ ரக எபோலா வைரஸினால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பினால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,398 ஆக உயர்ந்துள்ளது.</p><h2>நோயாளி அடையாளம்</h2><p>

இதுவரை நாட்டின் ஏழு மாகாணங்களில் 7,022 பேருக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலின் மையப்பகுதியிலிருந்து வெகு தொலைவில்
உள்ள தெற்கு உபங்கி மாகாணத்திலும் முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d50ebe2-cca1-40f7-b943-9b24fdd9294f/26-6aa56de0bbe7b.webp' /></p><p>
</p><p>
தெற்கு கிவு மாகாணத்திலிருந்து பயணித்து, கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த 23
வயதுடைய வாலிபர் ஒருவருக்கே எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகள்
தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>போதிய நிதி</h2><p>
</p><p>
பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை, போதிய நிதி வசதியின்மை
மற்றும் செயல்பாட்டாளர்களின் குறைபாடு காரணமாக நோய் பரவலைக்
கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம்
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94bba71f-a0d5-40a0-9b20-e41805182502/26-6aa56de1700e4.webp' /></p><p>

கொங்கோ வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மோசமான எபோலா பரவலாக இது
பதிவாகியுள்ளதுடன், உலகளவில் மேற்கு ஆப்பிரிக்கப் பரவலுக்கு அடுத்தபடியாக
இரண்டாவது பெரிய பாதிப்பாகவும் உருவெடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T15:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதிபதி நாமல்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-2029-sl-president-archchuna-1789224913"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-2029-sl-president-archchuna-1789224913</id>
            <summary type="text">எத்தகைய தடைகள் வந்தாலும் அல்லது சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச தான் நாட்டின் ஜனாதிபதியாவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எத்தகைய தடைகள் வந்தாலும் அல்லது சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச தான் நாட்டின் ஜனாதிபதியாவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.</p><p>அனுராதபுரத்தில் இன்று(12.9.2026) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p>அத்தோடு, வடக்கில் பிறந்த தாம், என்றும் சிங்கள மக்களுடன் இணைந்தே நிற்பதாகக் குறிப்பிட்டார். </p><p>தற்போதைய நிர்வாகம் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் ஏமாற்றமளிப்பதாகக் விமர்சித்த அவர், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனக் கூறினார்.</p><p>மேலும், தாம் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை என்றும், தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் வலியுறுத்தினார். </p><p>அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளால் தன் மீது பல வழக்குகள் தொடரப்பட்ட போதிலும், தனது கணிப்பின்படி 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவே நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பேற்பார் என அவர் உறுதியளித்துப் பேசினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JdO5NxKUdtg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T15:17:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வரலாறு படைக்க வரும் போராட்டம் திரைப்படம் - யாழில் இன்று இசை வெளியீட்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056"></link>
            <id>https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;“போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா&amp;nbsp;இன்று பிரமாண்டமாக&amp;nbsp; இடம்பெற்றது. இந்த நிகழ்வு, இன்று (12.09.2026) யாழ்ப்பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p><span style="color: inherit; font-size: 1.75rem;"><b>புதிய இணைப்பு&nbsp;</b></span></p><p>“போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா&nbsp;இன்று பிரமாண்டமாக&nbsp; இடம்பெற்றது.</p><p> இந்த நிகழ்வு, இன்று (12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></span></p><p>ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5MFc9ATcE18" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>

இந்த நிகழ்வு, இன்று(12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h3>இசை வெளியீட்டு விழா</h3><p>

இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் 070 341 4565 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவுச் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03754d7-ee3e-493a-85e7-43abd9f3eda2/26-6aa5128d83584.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், தாங்களும் கலந்து கொண்டு “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்க முடியும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதேவேளை, ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T14:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர விடுத்துள்ள கடும் மிரட்டல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-s-warning-for-criminals-1789221204"></link>
            <id>https://tamilwin.com/article/anura-s-warning-for-criminals-1789221204</id>
            <summary type="text">நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக அரசாங்கம் ஒதுபோதும் செயற்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். 

பாதாள உலகம் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக அரசாங்கம் ஒதுபோதும் செயற்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். </p><p>

பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். </p><p>

பொலநறுவையில் இன்று நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.</p><h2><b>குற்றக் கும்பல்கள்&nbsp;</b></h2><p>

நாட்டில் இயங்கி வரும் ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என அவர் சூளுரைத்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516526da-680e-47d8-a33e-699e2f119a5f/26-6aa55c9457cee.webp' /></p><p>அத்துடன் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் 70இற்கும் மேற்பட்டவர்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G3U3ZMS8rOA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இவ்வாறான நிலையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என சில தரப்பினர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.</p><p> 

எனினும் மரண தண்டனை குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-09-12T14:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையிலான பேரணிக்கு சிஐடி சென்றிருக்கலாம்.. பேரணியில் ஜனாதிபதி அதிரடி உரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-speech-in-polonnoruwa-meeting-1789215235"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-speech-in-polonnoruwa-meeting-1789215235</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;பொலன்னறுவையில்&amp;nbsp; நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குடும்ப உறவுகளுக்கு அப்பால் சட்டம் அன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>பொலன்னறுவையில்&nbsp; நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குடும்ப உறவுகளுக்கு அப்பால் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தினரையும், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "இப்போது அழுவதை விட, திருட வேண்டாம் என்று தந்தை முன்பே சொல்லியிருக்க வேண்டும்.&nbsp;</p><p>தாயாரோ அல்லது பாட்டியோ யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த எவர் மீதும் நமக்கு எந்த அனுதாபமும் இல்லை" என தெரிவித்தார்.
</p><p>
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியை இலக்கு வைத்துப் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும் என்றார்.&nbsp;</p><p>"குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் பிடித்துவிடலாம்" என்றும் குறிப்பிட்டதோடு, இந்தப் பேரணி மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>நமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிறது - நாட்டிற்கு நல்லது என்ற கருப்பொருளின் கீழ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களின் தொடரின் ஒரு பகுதியாக விவசாயிகள் பேரணியொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றதுஇ.&nbsp;</p><p>
பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் இடம்பெறும் இந்த பேரணியில் சற்றுமுன்னர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது உரையை ஆரம்பித்தார்.&nbsp;</p><p>இந்த பேரணியானது, இன்று மாலை 4.00 ஆரம்பமானது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G7JuBD-WIBY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T14:37:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அயர்லாந்திற்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/donald-trump-has-arrived-in-ireland-1789221540"></link>
            <id>https://tamilwin.com/article/donald-trump-has-arrived-in-ireland-1789221540</id>
            <summary type="text">ஈரான் போர் பதற்றங்கள் மற்றும் வரவிருக்கும் அமெரிக்க இடைத்தேர்தல்
பிரசாரங்களுக்கு மத்தியிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள்
விஜயமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போர் பதற்றங்கள் மற்றும் வரவிருக்கும் அமெரிக்க இடைத்தேர்தல்
பிரசாரங்களுக்கு மத்தியிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள்
விஜயமாக அயர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
</p><p>
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் தரையிறங்கிய ட்ரம்ப், அந்நாட்டின் தலைவர்களை
சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, டூன்பெக்கில் உள்ள தனது சொந்த ஓய்வு விடுதியில் நடைபெறவுள்ள
கோல்ஃப் தொடரிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
இந்த விஜயத்தின் போது, அயர்லாந்து பிரதமர் மீஹால் மார்ட்டின் மற்றும்
அந்நாட்டின் ஜனாதிபதி கேத்ரின் கொன்னோலி ஆகியோரை ட்ரம்ப் சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
</p><p>
வர்த்தக உறவுகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் ஈரான் போர் குறித்த
அயர்லாந்தின் கவலைகள் இச்சந்திப்பில் முக்கிய இடம்பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa34fbe-b5e5-41e7-af39-7a32d2202165/26-6aa56068508ec.webp' /></p><p>
</p><p>
முன்னதாக 2019-ஆம் ஆண்டு ட்ரம்ப் அயர்லாந்து வந்திருந்தபோது, அதற்கு எதிராக
அப்போதைய அரசியல்வாதியான கேத்ரின் கொன்னோலி போராட்டம் நடத்தியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
</p><p>
அதேநேரம், ட்ரம்பின் இந்த விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டப்ளின்
மற்றும் டூன்பெக் பகுதிகளில் அமைதி வழி போராட்டங்களுக்கு சர்வதேச அமைப்புகள்
அழைப்பு விடுத்துள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T14:23:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமிங்கலத்தின் ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ambergris-2-suspects-arrested-navy-1789218474"></link>
            <id>https://tamilwin.com/article/ambergris-2-suspects-arrested-navy-1789218474</id>
            <summary type="text">மன்னார்- சௌத் பார் கடற்கரைப் பகுதியில்&amp;nbsp; தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார்- சௌத் பார் கடற்கரைப் பகுதியில்&nbsp; தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(11.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p>&nbsp;67
கிலோ எடையுடைய திமிங்கலத்தின் ஆம்பர் கிரீஸ் பல இலட்சம் பெறுமதியானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச்
சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69d5eb68-f375-4d11-b1de-b8519abf00cb/26-6aa5545fd86c1.webp' /></p><p>சந்தேக நபர்கள் மற்றும் ஆம்பர்
கிரீஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள
அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T13:32:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் தொடர்ந்த வழக்கு நவம்பரில் பரிசீலனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-formar-professor-raguram-case-1789213885"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-formar-professor-raguram-case-1789213885</id>
            <summary type="text">யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம்
ரகுராம் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கு, எழுத்துமூல
சமர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம்
ரகுராம் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கு, எழுத்துமூல
சமர்ப்பணத்துக்காக நவம்பர் மாதத்துக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியர் சிவசுப்பிரமணியம்
ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக
இருந்தனர் என குற்றம் சாட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 14
எதிர்மனுதாரர்களுக்கு எதிராக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><h2> நவம்பரில் பரிசீலனை</h2><p>இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/524c3f98-8d77-4df5-9212-85237e7f7b11/26-6aa54fcb9a140.webp' /></p><p>&nbsp;இருதரப்பின் எழுத்துமூல சமர்பணத்திற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T13:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! 17 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/34-shooting-incidents-17-people-dead-1789217390"></link>
            <id>https://tamilwin.com/article/34-shooting-incidents-17-people-dead-1789217390</id>
            <summary type="text">நாட்டின் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
குறித்த தகவல்கள் பொலிஸ் தலைமையகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>

கடந்த 4ஆம் திகதி பொரலஸ்கமுவயில் 74 வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து கொஸ்கொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு முயற்சியும் சமீபத்திய சம்பவங்களாக பதிவாகியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
கடந்த சில மாதங்களில் பதிவான பல துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளுடன் தொடர்புடையதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63635b26-d321-49b5-bfd4-5ba1a587533a/26-6aa54a704910c.webp' /></p><p>
</p><p>
இதன்படி, நாட்டில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறித்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவை தனிமையில் சந்தித்த ரிஷாட்! பதில் கூற மறுத்த முன்னாள் ஜனாதிபதி - காலம் கடந்து வெளிவரும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rizad-badhudeen-statement-about-namal-1789216974"></link>
            <id>https://tamilwin.com/article/rizad-badhudeen-statement-about-namal-1789216974</id>
            <summary type="text">எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் பல்வேறு கோணங்களில், பல்வேறு இடங்களில் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றில் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் பல்வேறு கோணங்களில், பல்வேறு இடங்களில் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றில் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
கிண்ணியாவில் நேற்று (11.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், என்னை கோவிட் உடையுடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தபோது அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அங்கு வந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85a00a8f-af52-4bd5-9944-5b52f019fc81/26-6aa548d0c3b1b.webp' /></p><h2>கோட்டாபயவுடன் சந்திப்பு</h2><p> அப்போது சபாநாயகர் என்னை அழைத்து, ‘ஜனாதிபதியை சந்தித்து ஏதாவது கூற வேண்டுமென்றால் கூறுங்கள்’ என்றார். 

நான் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றபோது அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு இருந்தார். ‘எங்கே வந்தீர்கள்?’ என அவர் கேட்டார். சபாநாயகர் ஜனாதிபதியைச் சந்திக்கச் சொன்னதாகக் கூறினேன். </p><p>பின்னர் ஒருவரை அழைத்து, ‘இவருடன் சென்று ஜனாதிபதியை சந்தியுங்கள்’ என மகிந்த ராஜபக்ச கூறினார். 

ஜனாதிபதியைச் சந்தித்து, ‘சபாநாயகர் உங்களைச் சந்திக்கச் சொன்னார்’ எனக் கூறினேன். ‘என்ன விடயம்?’ என அவர் கேட்டார். ‘என்னை ஏன் பிடித்து உள்ளே போட்டீர்கள்? சஹ்ரானுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?’ என நேரடியாகக் கேட்டேன். அதற்கு அவர், ‘சொல்ல முடியாது; நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன’ என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ce3457-70ba-4ef0-9fdd-6b42564130a9/26-6aa548d17e796.webp' /></p><p> </p><p>

அப்போது, ‘நாடாளுமன்றத்திலும் உங்களுக்கு சவால் விட்டிருக்கிறேன். உங்களிடத்திலும் சவால் விடுகிறேன். எனக்கும் சஹ்ரானுக்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்துக் காட்டுங்கள்’ என்றேன். ஆனால், அவர் வேறு பக்கம் பார்த்துவிட்டு எந்தப் பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். 

அந்தக் காலத்தில் நான் நாடாளுமன்றத்துக்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்ப்பதற்காக எனது இரண்டு பிள்ளைகளும் காத்திருப்பார்கள்.</p><h2>காத்திருந்த பிள்ளைகள்</h2><p> </p><p>ஆனால், நேற்றைய தினம் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, அப்போது அதிகாரத்தில் இருந்த ஒருவரைப் பார்ப்பதற்காக அவரது பிள்ளைகள் அறையில் காத்திருந்ததை அவதானித்தேன். அவர் யார் என்பதை நான் கூறத் தேவையில்லை. உங்களுக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 

இதுதான் இறை நியதி. கண்ணுக்கு முன்னால் அனைத்தும் தெரிகிறது. இன்று சஹ்ரான் தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் நான் விடுவிக்கப்பட்டுள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e5f7ea6-d845-43c2-b63c-a2dad4777a4a/26-6aa548d2390f5.webp' /></p><p> </p><p>அதேபோன்று, பேருந்தில் கைதிகளை அழைத்துச் சென்றதாகக் கூறி மூன்று மாதங்கள் என்னை சிறையில் அடைத்தார்கள். அந்தக் குற்றச்சாட்டிலிருந்தும் நீதிமன்றம் என்னை விடுவித்தது. 

நான் பல அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளேன். 50க்கும் மேற்பட்ட திணைக்களங்களை வழிநடத்தியுள்ளேன். எனக்கு எதிராக நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் பல்வேறு கோணங்களில், பல்வேறு இடங்களில் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றில் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-deployed-in-at-vedukkunaari-malai-1789214874"></link>
            <id>https://tamilwin.com/article/police-deployed-in-at-vedukkunaari-malai-1789214874</id>
            <summary type="text">வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p>இன்று (12.09.2026) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட
பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.</p><p>

அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><h2>மறிக்கப்பட்ட வாகனங்கள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e14b99d8-51b2-4199-a046-5a8c752ea44b/26-6aa542abd7ecf.webp' /></p><p> அதேநேரம் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார்
சைக்கிள்கள் பொலிஸாரால் மறித்து, அவர்களை நீண்ட தூரத்திற்கு
நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.

</p><p>
இந்நிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர்
சட்டத்தரணி ந.காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன்
உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடிய நிலையில் அனுராதபுர பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வருகை தந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த பேரணியானது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் தந்தை தலைமை தாங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று குறித்த பேரணியில் கலந்து கொள்வார் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், மீ்ண்டும் அரசியல் களத்தில் இறங்கும் மகிந்த என்னும் பாணியில் தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/loEKA2X6YC0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T12:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-power-cuts-expected-in-coming-months-1789211312"></link>
            <id>https://tamilwin.com/article/no-power-cuts-expected-in-coming-months-1789211312</id>
            <summary type="text">எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

எல் நினோவின் தாக்கம் ஏற்பட வாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>
எல் நினோவின் தாக்கம் ஏற்பட வாய்ப்பிருந்தாலும், நீர்த்தேக்கங்களில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு திட்டத்தை அரசாங்கம் விரைவுபடுத்தி வருவதாலும் இது தொடர்பில் உறுதியளிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், செப்டம்பர் 10ஆம் திகதி நிலவரப்படி, நீர்த்தேக்கங்களில் சுமார் 750 ஜிகாவாட்-மணிநேர (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு நீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58.7% ஆகும்.</p><h2>மழைப்பொழிவு தொடர்பான கணிப்பு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f6cc5e-3e41-4327-afda-3a742ee14a95/26-6aa53ecb65f51.webp' /></p><p> </p><p>

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் மூலம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் சுமார் 1000 ஜிகாவாட்-மணிநேர நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவையான நீர் இருப்பை அரசால் உருவாக்க முடியும்.</p><p> </p><p>

கணிப்புகளின்படி, ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் 1000 ஜிகாவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போதுமான நீர் இருப்பை வைத்திருப்பது அவசியமாகும்.
</p><p>
தற்போது சுமார் 3000 மெகாவாட்டாக (MW) உள்ள உச்சகட்ட மின்சாரத் தேவை, அதிக வெப்பநிலை காரணமாக ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுமார் 3,350 மெகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individual-arrested-by-special-task-force-ice-drug-1789213335"></link>
            <id>https://tamilwin.com/article/individual-arrested-by-special-task-force-ice-drug-1789213335</id>
            <summary type="text">அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் விசேட
அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் விசேட
அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்
அடிப்படையில், கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் மீது இந்தத் திடீர்
சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (11) மாலை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும்
அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சான்றுப்பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd45e841-5772-47cd-ac62-8e5b2982b442/26-6aa53e8d817c2.webp' /></p><p>
</p><p>சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் விருந்து என்ற பெயரில் இளைஞர், யுவதிகளின் வெறியாட்டம் - பின்னணியில் ஆபத்தான மர்மநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627"></link>
            <id>https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627</id>
            <summary type="text">பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்குவதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>பொலிஸாரின் கவனம்</b></h2><p>

இது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9d4d8a-fbe6-4315-9bf1-a1c33ff7a876/26-6aa519f58eb59.webp' /></p><p>இந்த வேலைத்திட்டத்தின் பலனாக தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எதிர்காலத்திலும் இது போன்ற இடங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுபோன்ற விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. </p><p>அவை வலையமைப்புக் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வணிகங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-12T11:38:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-commercial-establishment-in-akkaraipattu-1789211771"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-commercial-establishment-in-akkaraipattu-1789211771</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்
ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, அக்கரைப்பற்று மாநகர சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்
ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இதனையடுத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப்
பிரிவினரின் விரைவான நடவடிக்கையினால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டுள்ளது.
</p><p>
அக்கரைப்பற்று பிரதான வீதி, லங்கா ஸ்ரோருக்கு அருகாமையில் இயங்கி வரும் 'LU
LU' நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அதன் மேல்தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><h2>தீ விபத்து</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின்
தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல்
முழுமையாகக் கட்டுப்படுத்தினர். </p><p>இருப்பினும் இத்தீ விபத்தினால் குறித்த
கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a144a6ff-4565-4800-8be0-6cdad286af6b/26-6aa539514d20d.webp' /></p><p>
</p><p>
தீ விபத்தின் போது உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்த மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கும், அச்சேவையை
அக்கரைப்பற்றுக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய
மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கும் அங்கு கூடியிருந்த
வர்த்தகர்களும் பொதுமக்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:37:07+00:00</updated>
        </entry>
    </feed>
