<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-07-20T23:43:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் இடம்பிடிக்கப் போகும் சபாநாயகர்.. உடன் கைது செய்யுங்கள்! - கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrest-speaker-immediately-gammanpila-urges-1784585537"></link>
            <id>https://tamilwin.com/article/arrest-speaker-immediately-gammanpila-urges-1784585537</id>
            <summary type="text">சபாநாயகரை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தினார்.சபாநாயகர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகரை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தினார்.</p><p>சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் 10 ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யுமாறும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
கொழும்பில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p></p><h2>பல்வேறு முறைப்பாடுகள்..&nbsp;</h2><p>
</p><p>
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சபாநாயகர் மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகள் வருமாறு:-</p><p>வாசஸ்தல முறைகேடு: தாபன விதிக்கோவைக்கு முரணாக, அரச செலவில் பராமரிக்கப்படும் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைத் தவிர்த்து, லோரிஸ் மாவத்தையில் உள்ள மற்றொரு இல்லத்தில் வசிப்பதுடன், அதற்காகப் பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcbb2b00-487f-4f5b-9185-b6c239809550/26-6a5ea0eae214c.webp' /></p><p>பணிக்குழாம் நியமனம்: உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சேவையாற்றாத 8 பேரைத் தமது பணிக்குழாமில் இணைத்து, அவர்களுக்காக மாதம் 7 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அரச நிதி செலவிடப்படுகின்றது.</p><p>ஊழியர் நியமனத்தில் முறைகேடு: அமைச்சரவை அனுமதி இன்றி தகுதியற்ற நபர்களைத் தனிப்பட்ட பணிக்குழாமில் நியமித்தல்.</p><p>வாசஸ்தல மாற்றம்: அமைச்சரவை அனுமதியின்றி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை ஆராய்ச்சி மையமாக மாற்றத் தீர்மானித்தமை.</p><p>தனிப்பட்ட தேவைக்கு அரச சொத்து: தனிப்பட்ட செயலாளருக்கு அரச செலவில் இல்லம் ஒதுக்கியமை மற்றும் குளிரூட்டி இயந்திரத்தைப் பழுதுபார்க்க நாடாளுமன்றப் பணியாளர்களைப் பயன்படுத்தியமை.</p><p>ஊடகப் பிரிவு மோசடி: அதிகாரப்பூர்வமற்ற ஊடகப் பிரிவுக்காக அரச வாகனங்கள் மற்றும் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை. இது தொடர்பில் ஏற்கனவே முன்னாள் பிரதி செயலாளர் நாயகம் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p></p><h2>வரலாற்றில் இடம்</h2><p>இரட்டை எரிபொருள் மானியம்: சபாநாயகர் பதவிக்கான மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான எரிபொருள் மானியங்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்வது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b909ab6-85fa-45bb-b1ba-7b981276acbd/26-6a5ea0ebd8ef4.webp' /></p><p>இது குறித்து உதய கம்மன்பில மேலும் கூறுகையில்,</p><p>"கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி இந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், அவர் அதனைப் பெட்டியில் பூட்டி வைத்துள்ளார். </p><p>தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பலமுறை கோரியும் எனக்கு அது கிடைக்கவில்லை. தற்போது தபால் மூலம் அந்த அறிக்கை என் கைக்கு கிடைத்துள்ளது. ஒழுக்கக்கேடான சில தகவல்களைத் தற்போதைக்கு வெளிப்படுத்தவில்லை, வெளிப்படுத்தினால் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும்." - என்றார்.</p><p>

"இந்த அறிக்கை ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையே பிளவை ஏற்படுத்தும். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் இந்த அறிக்கையை அடுத்த வாரம் கையளிக்கவுள்ளோம். பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்ட சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன வரலாற்றில் இடம்பிடிப்பார்." என்று அவர் மேலும் எச்சரித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T22:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இது சர்வாதிகாரத்தின் முதல் படி! நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-govt-rajitha-senarathna-condomns-1784582867"></link>
            <id>https://tamilwin.com/article/anura-govt-rajitha-senarathna-condomns-1784582867</id>
            <summary type="text">மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை
நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை
நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறி என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சாடியுள்ளார்.&nbsp;</p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த ஆண்டு 2.3 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, இந்த ஆண்டு
4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.</p><p>&nbsp;</p><p>
</p><p>
பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டிய சூழலில், உலக வங்கி
அதனை 3 சதவீதமாகவே கணித்துள்ளது.</p><p>

ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை விட்டுச் செல்லும்போது இருந்த அதே 6 பில்லியன்
டொலர் மட்டத்திலேயே வெளிநாட்டு கையிருப்பு தேக்கமடைந்துள்ளது.
</p><p>
சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதார நிலை
மோசமடையக்கூடும் என எச்சரித்துள்ள நிலையிலும், அரசு அதற்குத் தீர்வு காணாமல்
அரசமைப்புத் திருத்தங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது.</p><p></p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>
</p><p>
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் ஒன்பது நீதியரசர்
வெற்றிடங்கள் உள்ளன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமல்,
ஏன் பதவிக்காலத்தை நீடிக்க இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்? இது சட்டத்தரணிகள்
சங்கம் மற்றும் நீதிபதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0a4a07a-5f75-4425-98a3-c5f9da737dde/26-6a5e939a6597b.webp' /></p><p> </p><p>இவர்களுக்கு ஒரு
சலுகை வழங்கினால், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் என அனைவரும்
இதே கோரிக்கையை விடுப்பார்கள். </p><p>இவ்வாறான சர்வாதிகாரப் போக்கு நாட்டின்
எதிர்காலத்துக்குப் பெரும் ஆபத்தாகும்.

நிர்வாகத் துறை மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றால் பொதுமக்களிடம் சர்வஜன
வாக்கெடுப்பு கோர வேண்டும். </p><p>தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை
ஒழிப்போம் என்று சொன்னவர்கள், இன்று அதிகாரத்தைப் பலப்படுத்த அரசமைப்பைத்
திருத்த முற்படுகின்றார்கள். </p><p>மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள்
மீது சர்வதேச கண்காணிப்பு உள்ளஇன்றைய சூழலில், இவ்வாறான நடவடிக்கைகள்
நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T21:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கடற்படைத் தளபதி டேமியனுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anua-secretary-congratulates-new-navy-commander-1784580918"></link>
            <id>https://tamilwin.com/article/anua-secretary-congratulates-new-navy-commander-1784580918</id>
            <summary type="text">இலங்கைக் கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ்
அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்
குமாநாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக் கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள வைஸ்
அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்
குமாநாயகவை சந்தித்துக்
கலந்துரையாடினார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(20.7.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>
</p><p>
இலங்கைக் கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ்
அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, ஜனாதிபதியின் செயலாளர் தனது மனமார்ந்த
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p></p><h2>நினைவுப் பரிசு</h2><p>
</p><p>
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் நினைவாக, கடற்படைத் தளபதியால் ஜனாதிபதியின்
செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f48375-57ad-4cb4-92df-2b0161ccf596/26-6a5e91e082eba.webp' /></p><p>
இந்தச் சந்திப்பில் இருவரும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடற்படை சார்
விடயங்கள் குறித்து சுருக்கமாகக் கலந்துரையாடினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T21:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலையில் கருணாவுடன் சென்ற பெண் யார்..! - நான்காவது கோடீஸ்வரரான மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-eelam-karuna-a-woman-1784569691"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-eelam-karuna-a-woman-1784569691</id>
            <summary type="text">முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p> பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு கருணா சென்ற போது நடந்த சம்பம் தொடர்பிலேயே அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>பிரியந்த ஜயகொடி, "எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார்.</p><p>அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>யார் அந்த பெண்? என தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.. இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yBaWqANNAjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T20:51:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்கு தயாராகும் நீண்ட பட்டியல் - அவுஸ்திரேலியாவுக்கு விரைந்த சிஐடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-police-cid-investigation-to-autralia-1784575213"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-police-cid-investigation-to-autralia-1784575213</id>
            <summary type="text">இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக, கைது செய்வதற்கான விரிவான பட்டியலைத் தயாரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக, கைது செய்வதற்கான விரிவான பட்டியலைத் தயாரித்து, குழுக்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த விசாரணை பணச்சலவை, இணையவழி மோசடி மற்றும் சர்வதேச இலஞ்சம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கலாம்.</p><p> 

திருடப்பட்ட அரச நிதிகளைக் கண்டறியவும், சர்வதேச குற்றக் குழுக்களைக் குறிவைக்கவும் CID, அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்நிலையில், ஏர்பஸ் விமான ஒப்பந்தங்கள் தொடர்பான பெரும் வெளிநாட்டு நிதி முறைகேடுகள் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் புலனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p>

இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wDwDUkPZbmU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p> 

</p>]]></content>
            <updated>2026-07-20T19:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/measures-to-reduce-prison-overcrowding-anura-1784573675"></link>
            <id>https://tamilwin.com/article/measures-to-reduce-prison-overcrowding-anura-1784573675</id>
            <summary type="text">சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும்
அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும்
அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது</p><p>குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று(20)முற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் உயர் அதிகாரிகள்
கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.</p><p></p><h2>ஆலோசனை&nbsp;</h2><p> </p><p>குறிப்பாக, சிறைச்சாலை வசதிகளை நவீனமயப்படுத்துதல் மற்றும்
அவற்றை விரிவுபடுத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளால்
முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து ஜனாதிபதி விரிவாகக்
கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bfcff50-cf24-4843-a473-4ef371b127d2/26-6a5e6ef43b538.webp' /></p><p>
</p><p>
இந்தச் சந்திப்பில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன
நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்
(ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்
செயலாளர் அயேஷா ஜினசேன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த
குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>
சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைத்தல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை
முன்னெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விரைவாகச் செயற்படுத்துமாறு
ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கூட்டணியின் பின்னணியில் பரபரப்பு! கட்சியின் முக்கியஸ்தர்கள் பற்றிய இரகசிய பேச்சுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-alliance-ranil-sajith-namal-sjb-slpp-1784570042"></link>
            <id>https://tamilwin.com/article/new-alliance-ranil-sajith-namal-sjb-slpp-1784570042</id>
            <summary type="text">தற்போது இலங்கையில் புதிய அரசியல் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகள் தீவிரமான நடைபெற்று வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.இந்தநிலையிலே, ரணில் விக்ரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது இலங்கையில் புதிய அரசியல் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகள் தீவிரமான நடைபெற்று வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.</p><p>இந்தநிலையிலே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச ஆகியோர் தங்களது அரசியல் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் பரந்த கூட்டணிகளை உருவாக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்தோடு, ஐக்கியதேசியக்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இரு தரப்பினரின் தலைமைத்துவத்திலும் அதற்கான ஆர்வம் மந்தமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>குழுஅமைப்பு, செயலாளர் பதவி, பொருளாளர் நியமனம் போன்ற விடயங்களில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>புதிய கூட்டணியின் பின்னணி தொடர்பான விடயங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m2EEUQnaLBg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T18:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் இலக்கு வைக்கப்படும் சுரேஷ் சலே! சி.டி.விக்ரமரத்னவின் சாட்சிகளை அழிக்கும் மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானியாவிலுள்ள ராணுவ ஆய்வாளர் அரூஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,

இதில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் மிக முக்கியமானது.
</p><p>
சிறைக்குள் இருக்கும் சுரேஷ் சலேவுக்கும் இதே போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஒரு சிறை கலவரத்தை உருவாக்கி அவரைத் தாக்குவதோ அல்லது படுகொலை செய்வதோ இலகுவாகச் செய்யப்படலாம்.
</p><p>
மரணமடைந்தவர்கள் எவரும் தவறான முடிவெடுக்கும் மனநிலையில் இல்லை என்றும், அவர்களது மரணங்களுக்கு முன் குடும்பப் பிரச்சனைகள் அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.
</p><p>

அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான சாட்சிகளை அழிப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயல்வதாகவும், இவ்வாறான கொலைகள் ஒரு 'கொலை கலாச்சாரத்தை' மீண்டும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
</p><p>
அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இந்த விசாரணைகளை எவ்வளவு வேகமாக முன்னெடுக்கிறது என்பதில்தான் இந்த வழக்குகளின் வெற்றி தங்கியுள்ளது. </p><p>

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், விசாரணைகள் மர்மமாகவே முடிந்துவிடும் என குறிப்பிட்டார்.
</p><p>
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D49rkYHSU6A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:43:59+00:00</updated>
        </entry>
    </feed>
