<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-08-16T20:06:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குறுதிகளை மீறி மக்கள் மீது வரிச்சுமை: கந்தளாயில் பேரணியுடன் கையெழுத்து வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-burden-on-the-people-rally-in-kantalai-1786909290"></link>
            <id>https://tamilwin.com/article/tax-burden-on-the-people-rally-in-kantalai-1786909290</id>
            <summary type="text">கந்தளாய் நகரில் அரசாங்கத்தின் நியாயமற்ற மற்றும் அநீதியான வரிப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் நகரில் அரசாங்கத்தின் நியாயமற்ற மற்றும் அநீதியான வரிப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் சுமைகளைக்
குறைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 'மக்கள் போராட்ட இயக்கம்'&nbsp; சார்பில் கந்தளாய் நகரில் இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டமும்
கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>போராட்டம் குறித்து மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதி தட்சில
தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில்:


"தற்போதைய ஜனாதிபதி முன்னர் வேட்பாளராக இருந்தபோது சுகாதாரம், உணவு
மற்றும் கல்விக்கான வரிகள் நாகரிகமடைந்த உலகிற்குப் பொருத்தமானவை அல்ல
என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் அவ்வரிகள் முற்றாக நீக்கப்பட்டு
பூஜ்ஜியமாக்கப்படும் என்றும் ஊடகங்கள் வாயிலாக வாக்குறுதி அளித்திருந்தார்.</p><h2>அநீதியான வரி</h2><p>
ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று
ஆட்சியில் இருக்கும் அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சுகாதாரம் மற்றும்
கல்விக்கு மட்டுமன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் தொடர்ந்து வரிகளை
அதிகரித்து வருகிறார்.</p><p>எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் மீண்டும் வரிகள் உயர்த்தப்படவுள்ளதாகச்
சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் பெரிய நிறுவனங்களுக்கும், பெரிய
தொழிலதிபர்களுக்கும், தமக்கு நெருக்கமான செல்வந்தர்களுக்கும் வரி நிவாரணங்களை
வழங்கிவிட்டு, ஏழை எளிய பொதுமக்கள் மீது பல்வேறு வரிகளைச் சுமத்தி அவர்களைத்
தொடர்ச்சியாகப் பீடித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d4113a4-e872-4454-a1bb-8677a8419035/26-6a82133d9b1c4.webp' /></p><p>
</p><p>

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'அநீதியான வரிக்கு எதிரான
வாரத்தின்' ஒரு பகுதியாகவே கந்தளாய் நகரில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோத வரி கொள்கைக்கு எதிராகப் பொதுமக்கள் தங்கள்
எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எதிர்ப்புப் பதாகையில் கையெழுத்துச்
சேகரிக்கும் நடவடிக்கைகளும் இதன்போது இடம்பெற்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரின் தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டப்பட்டது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rooster-flag-hoisted-arches-of-nallur-gate-1786908658"></link>
            <id>https://tamilwin.com/article/rooster-flag-hoisted-arches-of-nallur-gate-1786908658</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு இன்று (16)
சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>
இதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி
நாட்டப்பட்டது. </p><p>தொடர்ந்து நல்லூரன் தெற்கு மற்றும் நல்லூரன் வடக்குவாசல்
வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டன.
</p><p>
நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தின் வெளி
வீதிகள் திருவிழாக் கோலம் பூணும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு பக்தர்களின்
கவனத்தை ஈர்த்தது.
</p><p>
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் பக்தி மற்றும்
திருவிழா உணர்வுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-16T19:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கேதீச்சரத்தில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vihara-at-ketheeswaram-temple-mannar-1786904774"></link>
            <id>https://tamilwin.com/article/vihara-at-ketheeswaram-temple-mannar-1786904774</id>
            <summary type="text">திருக்கேதீச்சரத்திலும் எதிர்காலத்தில் பௌத்த விகாரை ஒன்றை
அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை
நாட்டியுள்ளனர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருக்கேதீச்சரத்திலும் எதிர்காலத்தில் பௌத்த விகாரை ஒன்றை
அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை
நாட்டியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அநுர
அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களம் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் எவரும்
இல்லாத நேரத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதி இல்லாமல் இனி எந்த
அபிவிருத்தியும் செய்ய முடியாது என பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியுள்ளனர்.
</p><p>
ஆலய நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் அரச திணைக்களம் திருட்டுத்தனமாக ஏன்
பெயர்ப்பலகை இட வேண்டும் என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p><h2>சட்டவிரோத செயற்பாடு</h2><p>

கடந்த ஆண்டுகளில் இதே போன்ற செயற்பாட்டின் மூலமே முல்லைத்தீவு குருந்தூர் மலை
ஆதிசிவன் ஐயனார் ஆலயம் மற்றும் கன்னியாய் பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு
பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு
உட்படுத்தப்படுவதற்கு தொல்லியல் திணைக்களம் அதன் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள்
நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41bfe139-91a5-45b7-82fa-6a941530a918/26-6a8209fc4d0a5.webp' /></p><p>
</p><p>
திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை
அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை
நாட்டியுள்ளனர்.
</p><p>
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தனது ஆட்சியில் இடமில்லை என கூறும் ஐனாதிபதி
அநுரகுமார திஸநாயக்காவின் பதில் என்ன, இரவோடு இரவாக பெயர்பலகை நாட்டியது
சட்டவிரோதம் இல்லையா,&nbsp; குருந்தூரில் இந்துமாத தொல்லியல் சின்னங்கள் அகற்றப்பட்டு சிங்கள பௌத்த
சின்னங்கள் இருப்பதாக கட்டுகதை ஒன்றை உருவாக்கி விகாரை அமைத்தது போன்ற
செயற்பாடுகள் எதிர் காலத்தில் திருக்கேதீச்சரத்திலும் இடம்பெறலாம் என
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:08:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்து: 12 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-in-hungary-12-polish-tourists-killed-1786903179"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-in-hungary-12-polish-tourists-killed-1786903179</id>
            <summary type="text">ஹங்கேரியின் கிழக்குப் பகுதியில் உள்ள M3 அதிவேக நெடுஞ்சாலையில் போலந்து
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹங்கேரியின் கிழக்குப் பகுதியில் உள்ள M3 அதிவேக நெடுஞ்சாலையில் போலந்து
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த பேருந்தானது&nbsp;வீதியை விட்டு விலகி
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்துடன் இந்த விபத்தில் 10
பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>விபத்து</h2><p>செர்பியாவில் இருந்து போலந்து நோக்கி பயணித்த இப்பேருந்தில் 57 பயணிகளும்
இரண்டு சாரதிகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விபத்து நடந்த இடத்திலேயே 11 பேர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 37 பேர் இலேசான காயங்களுக்கு
உள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/270fb1c1-229c-48ad-bcf5-437d327cd006/26-6a81fe0c958ea.webp' /></p><p>
</p><p>
சாரதி தூங்கியமையினாலேயே இப்பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள
நிலையில், பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் ஹங்கேரி பிரதமர் பீட்டர் மக்யார், போலந்து ஜனாதிபதி
கரோல் நவ்ரோக்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர்
தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T18:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஊடக வரலாற்றில் முதல் முறையாக அதிகளவான ஊடகர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamil-journalists-1786902750"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamil-journalists-1786902750</id>
            <summary type="text">இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் அதிக நாட்டின் பல மாவட்டங்களையும்
சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள், செல்போன்கள்
வழங்கிய வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் அதிக நாட்டின் பல மாவட்டங்களையும்
சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள், செல்போன்கள்
வழங்கிய வரலாற்று சாதனையை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் படைத்துள்ளது.
</p><p>
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்களுக்கு
இலவசமாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை
தனியார் ஹோட்டலில் இன்று 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற போதே
இலண்டனின் பிரபல தொழிலதிபரும் சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின்
நிதி அனுசரணையில் 65 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகளும் 25
ஊடகவியலாளர்களுக்கு செல்போன்களும் என சுமார் 1.5 கோடி ரூபா மதிப்புள்ள
இலத்திரனியல் உபரணங்களை வழங்கியே இந்த வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஸ்ரீகஜன், செயலாளர்
கே.ஜெயந்திரன் ஆகியோர் தலைமையில் நாட்டிய கலைமணி ஸ்ரீமதி பவானி குகப்
பிரியாவின் நெறியாள்கையில் தியாகராஜ கலைக்கோவில் மாணவிகளின் வரவேற்பு
நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலண்டனின் பிரபல
தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸ் பங்கேற்றார்.
</p><p>
சீவரட்ணம் முறேஸின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு ஆளுயர
மலர்மாலைகள்,தலைக்கிரீடம் அணிவிக்கப்ட்டும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டதுட
அவரின் சமூக சேவைகளை பாராட்டி பாராட்டுக் கவிதை காணொலியும் வெளியிடப்பட்டது.
</p><p>
அவர் தனது உரையின்போது தான் சிறு வயதில் பட்டதுன்பங்கள், வறுமையில் வாடிய தனது
தாயார் தன்னை வளர்க்க பட்ட கஷ்டங்களை மிகவும் உணர்வு பூர்வமாக
வெளிப்படுத்தினார்

சிறப்பு விருந்தினர்களாக எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டின்
பிரதம நிறைவேற்று அதிகாரியான எம்.செந்தில்நாதன், மூத்த ஊடகவியலாளரும் முரசு
பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.வித்தியாதரன், கொழும்பு தேசிய
வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.வீரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.
</p><p>
அத்துடன் முன்னாள் பிரதம ஆசிரியர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் பலரும்
பங்கேற்றிருந்த இந்நிகழ்விலேயே இலண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல
சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் நாட்டின் பல
மாவட்டங்களையும் சேர்ந்த 90 தமிழ் ,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு
மடிக்கணினிகள் மற்றும் செல்போன்கள் வழங்கப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T17:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-from-canada-drowned-in-the-ocean-1786884513"></link>
            <id>https://tamilwin.com/article/man-from-canada-drowned-in-the-ocean-1786884513</id>
            <summary type="text">கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு
நாயாற்று கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(16.08.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு
நாயாற்று கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த சம்பவம் இன்று(16.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2> 

நண்பர்களுடன் கடலுக்கு சென்ற நபர்</h2><p>யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான சதீசன் என்ற நபர், கனடாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளார்.</p><p>
இந்த நிலையில், அவர் தன்னுடைய 5 நண்பர்களுடன் முல்லைத்தீவினை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3ab7b0-4750-4f55-b015-3b53714651ce/26-6a81b25e9e16d.webp' /></p><p>
</p><p>இதன்போது, நண்பகல் அளவில் நாயாற்று பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையில், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>சடலம் மீட்பு</h2><p>அருகில் நின்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவரின் சடலம், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படும் விவகாரம்.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sheikh-hasina-extradition-case-1786901140"></link>
            <id>https://tamilwin.com/article/sheikh-hasina-extradition-case-1786901140</id>
            <summary type="text">முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவிற்கு வரமாட்டார் என்று பங்களாதேஷில் அரசு உறுதி செய்துள்ளது.

2024ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவிற்கு வரமாட்டார் என்று பங்களாதேஷில் அரசு உறுதி செய்துள்ளது.</p><p>

2024ஆம் ஆண்டு போராட்டங்களில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமரை, இந்திய அரசு அவரது நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் வரை, பிரதமர் இந்தியாவிற்கு வரமாட்டார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
</p><p>
ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தைக் கவிழ்த்த, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு அவர் அண்டை நாடான இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார்.&nbsp;</p><p>
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பங்களாதேசில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரை நாடு கடத்துமாறு பங்களாதேஷ் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.</p><h2>வெளியான தகவல்..&nbsp;</h2><p>
</p><p>
பங்களாதேஷில் ஒப்படைக்கக் கோரிய அதன் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என்று இந்தியா முன்னதாகக் கூறியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5138997e-f792-4eaa-ad7d-9ef8e8417eaf/26-6a81f529d00bf.webp' /></p><p>

கடந்த பெப்ரவரியில் பதவியேற்ற பிரதமர் தாரிக் ரஹ்மான், பங்களாதேஷ தலைவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மரபை மீறி, மலேசியா மற்றும் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
</p><p>
கடந்த வாரம் இந்திய உயர் ஆணையர் பிரதமர் ரஹ்மானை சந்தித்த பிறகு சில முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கைகள் இருந்தபோதிலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் தொடர்ச்சியான ஊடக சந்திப்புகளால் இந்த செயல்முறை தடைபட்டுள்ளதாக பங்களாதேஷ் கூறுகிறது.&nbsp;</p><p>
தனது 15 ஆண்டு கால ஆட்சியில் சர்வாதிகாரியாக இருந்ததாக விமர்சிக்கப்பட்ட ஹசீனா, சிறைத்தண்டனையை எதிர்கொண்டாலும் டிசெம்பரில் பங்களாதேஷிற்கு திரும்புவதாக இந்த மாத தொடக்கத்தில் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:38:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தளம் வாயிலாக பண மோசடியில் ஈடுபடும் கும்பல்: பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gang-involved-in-financial-fraud-construction-1786899800"></link>
            <id>https://tamilwin.com/article/gang-involved-in-financial-fraud-construction-1786899800</id>
            <summary type="text">கட்டுமானத் துறை சார்ந்த பொருட்களை இணையத்தளம் வாயிலாக விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஸ்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுமானத் துறை சார்ந்த பொருட்களை இணையத்தளம் வாயிலாக விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>அஸ்பெஸ்டாஸ், சீமெந்து அல்லது பிற பொருட்களைச் சந்தை விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரங்களை வெளியிட்டு முன்பதிவுகளை பெறுவது இதன் முதற்கட்டமாக அமைகின்றது. </p><p>

அவ்வாறு பெறப்படும் முன்பதிவுக்கு அமைவாக, மோசடி செய்பவர்கள் பதிவு செய்த நபர் வசிக்கும் பகுதியில் உள்ள கட்டிடப் பொருள் விற்பனையாளர்&nbsp; ஒருவர் மூலமாக குறித்த முகவரிக்கு பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்கின்றனர்.</p><h2>பொலிஸாருக்கு முறைப்பாடுகள்</h2><p> 

பொருட்கள் முகவரியைச் சென்றடைந்தவுடன், மோசடிக்காரர்கள் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு தமது வங்கிக் கணக்கிற்குப் பணத்தை உடனடியாக வைப்புச் செய்ய வைக்கின்றனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ad66aa6-4c31-4869-b4d5-3e29e7afb0de/26-6a81f10a498c6.webp' /></p><p> </p><p>

எனினும், பொருட்களைக் கொண்டு வந்த சாரதி அதற்கான பணத்தைக் கேட்கும் போதே, தாம் ஒரு மோசடிக்காரனிடம் ஏமாந்துவிட்டோம் என்பதைப் பாதிக்கப்பட்ட நபர் உணர்ந்து கொள்வதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:22:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-rising-inflation-due-to-el-ni-o-impact-1786898400"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-rising-inflation-due-to-el-ni-o-impact-1786898400</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.அத்தோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.</p><p>அத்தோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கடுமையான அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஓகஸ்ட் மாதத்திற்கான பணவியல் கொள்கை அறிக்கையினூடாக மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.</p><h2>வறட்சியான காலநிலை</h2><p>

நீண்டகால வறட்சியான காலநிலை மற்றும் மழைவீழ்ச்சி அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்பன விவசாய உற்பத்தியைப் பாதிப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/948e1817-e132-435d-9087-40a33d1318a7/26-6a81ec78cb556.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பொலன்னறுவை, மிஹிந்தலை, அனுராதபுரம், மொனராகலை உள்ளிட்ட பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p> அத்துடன், ஹிங்குராக்கொட - கிதுல்உத்துவ கிராமத்தின் கிதுல்உத்துவ குளம் வற்றிப்போயுள்ளதால், தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T17:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் தீர்மானத்திற்கு பல நாடுகள் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-war-live-talks-on-hormuz-strait-1786898228"></link>
            <id>https://tamilwin.com/article/iran-war-live-talks-on-hormuz-strait-1786898228</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் &#039;சமாதான சபை&#039; முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'சமாதான சபை' முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p><p>
இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமைதிக்கான விரிவான திட்டத்தை நேரடியாக நிராகரிப்பதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d5a264-bfe5-4a5b-b950-d8812275076e/26-6a81e738cd3bc.webp' /></p><p> </p><p>இது அத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதைப் பாதிப்பதோடு, நியாயமான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் கூட்டு முயற்சிகளையும் சீர்குலைக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> 
இத்தகைய நிராகரிப்பு மூலம் காசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் முழுப் பொறுப்பையும் தற்போது இஸ்ரேலே ஏற்கிறது என்பது உறுதி செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
மத்தியஸ்தர்களின் தீவிர முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டல் வரைபடத்தை பாலஸ்தீன அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன. </p><p>
ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலியப் படைகளை வாபஸ் பெறுதல், சர்வதேச நிலைப்படுத்தும் படையை அமைத்தல், காசாவின் நிர்வாக அதிகாரத்தை காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிடம் ஒப்படைத்தல் மற்றும் காசாவை மறுசீரமைத்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களைக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-16T16:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029ம் ஆண்டிலும் அநுரவே நாட்டின் ஜனாதிபதி - ஆளும் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/in-2029-anura-will-be-prisident-says-npp-1786897685"></link>
            <id>https://tamilwin.com/article/in-2029-anura-will-be-prisident-says-npp-1786897685</id>
            <summary type="text">எதிர்வரும் 2029ம் ஆண்டிலும் அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதி என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2029ம் ஆண்டிலும் அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதி என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும் எனத் தொடக்கத்தில் கணித்த எதிர்க்கட்சிகள், இப்போது 2029 ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f693f21-390d-4abc-ba85-393fd9f6bf27/26-6a81e5173b3e4.webp' /></p><p>
</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குப் போதிய அனுபவம் இல்லை என சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்வைத்த அனைத்து வாதங்களும் தற்போது பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அரசாங்கத்தைக் கவிழ்க்கக் காத்திருந்தவர்கள், இப்போது 2029 ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி மட்டுமே கனவு காண்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எந்தக் பக்கம் திரும்பினாலும் 2029 ஜனாதிபதி வேட்பாளர்கள் உருவாகியுள்ளனர் எனவும் அவர்கள் அனைவரும் ஏற்கனவே பதவிப் பிரமாணம் செய்யத் தயாராக இருப்பது போல் நடந்து கொள்கிறார்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>2024 ஆம் ஆண்டுத் தேர்தலில் தயக்கத்துடனோ அல்லது பயத்துடனோ மாலிமாவிற்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் கூட, தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒன்றிணைந்து வருவதாகவும், அரசு மீதான மக்கள் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சம்பளம் மற்றும் வீடமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் காரணமாக, அந்தப் பிராந்தியங்களிலும் அரசாங்கத்திற்குப் பெருமளவு ஆதரவு கிடைத்து வருகின்றது.
</p><p>மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் மக்கள் ஆதரவுமிக்க அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து பயணிக்கும் எனவும், அதன்படி 2029 ஆம் ஆண்டிலும் அனுர குமார திசாநாயக்க நிச்சயமாக மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் சுசந்த குமார நவரத்ன வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T16:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-approval-of-the-government-declines-1786896997"></link>
            <id>https://tamilwin.com/article/public-approval-of-the-government-declines-1786896997</id>
            <summary type="text">அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் சரிவு பதிவாகியுளள்தாக முன்னணி ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் சரிவு பதிவாகியுளள்தாக முன்னணி ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்த எதிர்மறையான பார்வைகளால், தற்போதைய அரசாங்கத்திற்கான மக்களின் ஆதரவு 50 வீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
‘வெரிடே ரிசர்ச்’ நிறுவனம் நடத்திய ஜூலை 2026 ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h2>&nbsp;50 வீதம் குறைவு&nbsp;</h2><p>
</p><p>தேர்தலுக்குப் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் 65 வீதமாக இருந்த அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு, தற்போது 50 வீதமாகச் சரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/553ee9fd-0e69-4d74-b992-1ddf48b64bd5/26-6a81e266cde4e.webp' /></p><p>
</p><p>தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு 50 வீதமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளையில், 31.4 வீதமானவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். 
நாட்டின் பொருளாதாரம் "மேம்பட்டு வருகிறது" என்று கூறுபவர்களின் விகிதம் 64 வீதத்திலிருந்து 41.63 வீதமாக ஆகக் குறைந்துள்ளது. </p><p>அதேவேளை, நிலைமை "மோசமடைந்து வருகிறது" என நம்புபவர்களின் விகிதம் 15 வீதத்திலிருந்து 40.29 வீதமாக உயர்ந்துள்ளது.
</p><p>கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 55.59 வீதமானவர்கள் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை "மோசமானது" என மதிப்பிட்டுள்ளனர்.</p><p> 38 வீதமானவர்கள் மட்டுமே "நல்லது" அல்லது "மிகவும் சிறப்பானது" எனத் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நம்பிக்கைக் குறியீடு மீண்டும் மறை பெறுமதி நிலைக்குச் சென்று 'மைனஸ் 8' ஆகப் பதிவாகியுள்ளது. </p><p>இக்குறியீடு 2024இன் பாதியில் 39 ஆக இருந்தது, பின்னர் 2025 பெப்ரவரிக்குப் பின்னர் நேர்மறை நிலைக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>இந்தக் கருத்துக்கணிப்பு 2026 ஜூலை 11 முதல் 30 வரை நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 2,013 இலங்கை நபர்கள் இடையே நடத்தப்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T16:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vietnam-flight-makes-emergency-landing-in-germany-1786891455"></link>
            <id>https://tamilwin.com/article/vietnam-flight-makes-emergency-landing-in-germany-1786891455</id>
            <summary type="text">ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலிருந்து ஹனோய் நோக்கிப் புறப்பட்ட
வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானமொன்று சிறிது நேரத்திலேயே
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலிருந்து ஹனோய் நோக்கிப் புறப்பட்ட
வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானமொன்று சிறிது நேரத்திலேயே
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக&nbsp; அவசரமாகத்
திருப்பியனுப்பப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>

போயிங் 787 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் டேக்-ஓஃப் செய்யப்பட்ட போது ரன்வே
எல்லை கடந்து சென்றதால், விமானத்தின் பின்னால் அதிகளவில் தூசிப் படலம்
எழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக காற்றில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமாகச் சுற்றித்
திரிந்து எரிபொருளை வீணடித்த பின்னரே விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><h2>சோதனை</h2><p>

தரையிறங்கிய பின்னர் விமானம் வடக்கு ரன்வேயில் நகர்ந்து செல்ல முடியாமல்
சிக்கியதால், அவ்வழியான விமானப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டு தெற்கு
ரன்வேக்கு மாற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20fa4fa-2898-494d-9178-a5e67f6bda75/26-6a81d10bbab2b.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவத்தின் போது பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழாமினர் அனைவரும்
பாதுகாப்பாக இருந்ததாக அறிவித்துள்ளதுடன், துல்லியமான காரணத்தைக் கண்டறிய உரிய
அதிகாரிகளுடன் இணைந்து சோதனைகளை மேற்கொண்டு வருவதாக வியட்நாம் ஏர்லைன்ஸ்
நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T15:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து சென்றவர் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181"></link>
            <id>https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181</id>
            <summary type="text">இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். 

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான நபரே இவ்வாறு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.</p><p> </p><h2><b>குடிவரவு&nbsp;சோதனை</b></h2><p>விமானத்தில் இருந்து இறங்கியவர் குடிவரவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளை முடித்துவிட்டு, பிராட்வே செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்திற்கு சென்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be94a1e-4545-4af1-847b-5edf6154e5b9/26-6a8124e84e5a8.webp' /></p><p>அங்குள்ள டிக்கெட் கவுண்டர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகளும், மெட்ரோ நிலைய ஊழியர்களும் உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் முதலுதவி வழங்கிய போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p>சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். </p><p>இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T14:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களின் பெருமையை பறைசாற்ற வரும் ஈழத்து நடிகனின் போராட்டம் திரைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-release-date-1786890450"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-release-date-1786890450</id>
            <summary type="text">ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘போராட்டம்’ திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் 2ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘போராட்டம்’ திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p><p>இதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதி தமிழர்களின் கண்களுக்கு விருந்தாக வரவிருகின்றது என்றும் திரைப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p>

ஐபிசி தமிழின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

ராஜ் சிவராஜ் இயக்கும் ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
</p><p>
மேலும், ஈழத் திரையுலகில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் மிக நீளமான திரைப்படமாக போராட்டம் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T14:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-traveling-from-kurikadduvan-accident-1786889069"></link>
            <id>https://tamilwin.com/article/boat-traveling-from-kurikadduvan-accident-1786889069</id>
            <summary type="text">குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த படகானது இன்று(16.8.2026) பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகட்டுவான்
பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது.
</p><p>
இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு
என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு
இருந்தவேளை நயினாதீவு தொடருந்தில் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c265d569-8378-48a1-b09f-dd455e000ae0/26-6a81c94b5f4ca.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் தெரியவரவில்லை.
இந்நிலையில் யாராவது காணாமல் போயுள்ளார்களா என்ற கோணத்தில் தேடுதல்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>விபத்து நேர்ந்தவேளை குறித்த படகில் 10 பயணிகள் பயணித்துள்ளதாகக்
கூறப்படுகிறது.</p><h2>மேலதிக விசாரணைகள்</h2><p>
</p><p>
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், கடற்படையினரின் மற்றும்,
மீனவர்களின் விரைவான நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9785894-8f18-40c4-be3b-b6c536644bb2/26-6a820c881e8f9.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவப்
பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

​</p><p>இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><h2>பாதுகாப்பு நடைமுறைகள்</h2><p>இந்நிலையில், குறித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது
தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.
</p><p>
அத்துடன், படகில் பயணித்தவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள் (Life
Jackets) வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில்
மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தி தகவல் தருமாறு
அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.</p><p>

பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்பயணங்களுக்கான
பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், இவ்வாறான
சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தியுள்ளார்.</p><p><b>மேலதிக தகவல்- தீபன்</b></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T14:29:55+00:00</updated>
        </entry>
    </feed>
