<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International  The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. தமிழ்வின் - உடனுக்குடன் புதிய இலங்கை இந்திய  உலக சர்வதேசம் செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <id>https://tamilwin.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://tamilwin.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/tw/img/logo.png</logo>
            <updated>2026-09-08T01:15:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752</id>
            <summary type="text">வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. </p><p>

இது இன ரீதியான மோதல்களைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்று
கூறப்படுகின்றது,
 
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
இந்தக் கிராமம் வரலாற்று ரீதியாகவே விவசாய நிலமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. 

இத்தகைய சம்பவங்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான ரொஷான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திலித் ஜெயவீர ஆகியோரின் செயற்பாடுகள் இருக்கலாம் எனத் தொடர்ந்து சந்தேகம் வெளியிடப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bPcMV8QJimw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T01:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-people-arrest-attempting-dig-treasure-mullaitivu-1788828694"></link>
            <id>https://tamilwin.com/article/5-people-arrest-attempting-dig-treasure-mullaitivu-1788828694</id>
            <summary type="text">முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட சோதனை
நடவடிக்கையின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றுடன் 5
பேர் சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட சோதனை
நடவடிக்கையின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றுடன் 5
பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.</p><p>வாகனம் ஒன்றில் ஸ்கானர் இயந்திரம் காணப்பட்டுள்ளமையினை தொடர்ந்து வாகனத்தில் இருந்து 5 பேரும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;&nbsp;</p><h2>&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>இவர்கள் வவுனியா,முள்ளிவாய்க்கால்,கொழும்பு,தம்புள்ள பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;&nbsp;</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a27eec9-8df5-4811-b18d-ee1a7aa20274/26-6a9f5cedb994c.webp' /></p><p>
</p><p>இவர்கள் மீதான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலிசார்
மேற்கொண்டு வருகின்றார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T01:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரை நீளும் நாமல் கைது விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-s-milinda-rajapaksha-in-geneva-1788828884"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-s-milinda-rajapaksha-in-geneva-1788828884</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குரல் எழுப்பும் நோக்கில் ஸ்ரீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குரல் எழுப்பும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச சுவிட்சர்லாந்து விஜயம் செய்துள்ளார்.
</p><p>இலங்கையின் முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம், முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சல்லேயின் தடுப்புக்காவல் உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்து குரல் கொடுப்பதற்காக ஜெனிவா சென்றுள்ளார். </p><p>
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இந்த விடயங்களை எழுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9a819f-853a-41c6-be3c-e5fcd23e0996/26-6a9f5cd572950.webp' /></p><p>இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் குறித்தும் கவனத்தை ஈர்க்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>
இது தொடர்பில் எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மிலிந்த ராஜபக்ஷ, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தாம் மீண்டும் ஜெனிவா திரும்பியுள்ளதாகவும், நாட்டில் "அடக்கப்பட்ட எதிர்க்கட்சியின் அரசியல் குரல்களைப்" பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே இம்முறை வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>
மேலும், தாம் சுட்டிக்காட்ட விரும்பும் இந்த விடயங்களை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் பரந்த சூழலில் அணுக வேண்டும் என மிலிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T00:54:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரும் முக்கியஸ்தர்: கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-traffic-plan-in-colombo-1788827357"></link>
            <id>https://tamilwin.com/article/special-traffic-plan-in-colombo-1788827357</id>
            <summary type="text">&amp;nbsp;இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் வியாழக்கிழமை (செப். 10) வரை கொழும்பு பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் வியாழக்கிழமை (செப். 10) வரை கொழும்பு பகுதியில் சிறப்பு போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் அமல்படுத்தப்படும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
பாதுகாப்பு அமைச்சரின் மோட்டார்வாகனப் பேரணி பயணிக்கும் வீதிகளில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகளும், மாற்றுப்பாதை திருப்பங்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தேவைப்படும் இடங்களில் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>
இன்று, பிற்பகல் 1:30 மணி: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமைச்சர் தங்கும் ஹோட்டல் வரையிலான வீதி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba7b1a0a-2aae-4848-b1e8-a48dfbc21059/26-6a9f56e205918.webp' /></p><p> </p><p>
இன்று, இரவு 8:00 - 9:00 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம்&nbsp; வரையிலான பயணம் மற்றும் திரும்பும் வழி.
</p><p>புதன்கிழமை (9), காலை 9:50 - 11:25 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலான பயணம் மற்றும் திரும்பும் வழி.
</p><p>புதன்கிழமை (9), பிற்பகல் 2:00 மணி முதல்: அமைச்சரின் திட்டமிடப்பட்ட ஏனைய பயணங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள்.</p><p> 
புதன்கிழமை (9), இரவு 7:00 - 7:10 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து திட்டமிடப்பட்ட பயணத்திற்கான வீதி. </p><p>
வியாழக்கிழமை (10), காலை 9:00 - 9:10 மணி வரை: அமைச்சரின் புறப்பாட்டின் போது மேற்கொள்ளப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.
</p><p>வாகனப் பேரணியின் நகர்வுகளுக்கு ஏற்ப இக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். எனவே, வீதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முதல் எதிர்வரும் 10 வரை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருகிறார்.</p><p> 
இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கைத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதுடன், கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T00:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய விடுதலைப் புலிகள்! போரின் இறுதிக்கட்டம் குறித்து மனம் திறந்த சவேந்திர சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-war-shavendra-silva-exclusive-interview-1788826651"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-war-shavendra-silva-exclusive-interview-1788826651</id>
            <summary type="text">நாட்டின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கையின் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, நிராகரித்துள்ளார்.
</p><p>
இந்தியாவை தளமாகக் கொண்ட சமூக ஊடகமொன்றுக்கு&nbsp; வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;பதிலளிக்கத் தயார்</h2><p>2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், தமக்கு எதிராக சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான அடிப்படை என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளதாகவும் குறி்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்காவினால் தனக்கும் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் பிரித்தானியாவும் தமக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b58e3908-8738-4ad1-bbab-2c3e352e2a23/26-6a9f568f84636.webp' /></p><p>

“எதற்காக எனக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன? நான் என்ன தவறு செய்தேன் என்பதை தெரிவிக்குமாறு தொடர்ந்து கேட்டு வருகின்றேன். நான் போர்க்குற்றவாளி அல்ல. எனது நாட்டுக்காகவே போராடினேன்” என அவர் தெரிவித்தார்.</p><p>

இராணுவ சட்டங்களை தாம் மீறியிருந்தால், உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

2020ஆம் ஆண்டு அமெரிக்கா, போரின் இறுதிக்கட்டத்தில் கட்டளைப் பொறுப்பு ஊடாக மனித உரிமைகளின் பாரிய மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டதாக நம்பகமான தகவல்கள் இருப்பதாகக் கூறி, அவருக்கும் அவரது நெருங்கிய குடும்பத்தினருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. </p><p>இதேவேளை, 2025ஆம் ஆண்டு பிரித்தானியாவும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சவேந்திர சில்வாவுக்கு தடைகளை விதித்திருந்தது.</p><h2>இராணுவத்தின் நோக்கம்</h2><p>
</p><p>
இராணுவம் திட்டமிட்டு பொதுமக்களை இலக்குவைத்ததாக முன்வைக்கப்படும்&nbsp; இந்த குற்றச்சாட்டுகளையும் சவேந்திர சில்வா நிராகரித்தார்.எனினும், மோதல்களின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.</p><p>
பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவது இராணுவத்தின் நோக்கமாக இருக்கவில்லை என்றும், இராணுவ நடவடிக்கைகளை திட்டமிடும்போது பொதுமக்கள் உயிரிழப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
போரின் இறுதிக்கட்டத்தில் தமது படைப்பிரிவு 123,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டதாகவும், போர் முடிவில் சரணடைந்த சுமார் 12,000 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமது படைப்பிரிவிடம் சரணடைந்ததாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c27ed5c-7edc-47d7-88b8-e1fd252b921f/26-6a9f5690795cd.webp' /></p><p>
</p><p>
சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டதாகவும், ஆயுதங்களை கைவிட்டவர்களிடம் இராணுவம் எவ்வாறு அணுகுமுறையை மேற்கொண்டது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அதேவேளை, இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றையும் அவர் நினைவுகூர்ந்தார். </p><p>அந்த நடவடிக்கையில் பெருமளவான விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் விடுதலைப் புலிகளின் வடக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி ஒருவரும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட சவேந்திர சில்வா, இவ்வாறான சூழ்நிலைகளில் பொதுமக்கள் உயிரிழப்புகள் எனக் குறிப்பிடப்படும் சிலர் உண்மையில் ஆயுதம் தாங்கிய போராளிகளாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
</p><p>
இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுத்ததாகவும் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டினார்.</p><h2>விடுதலைப் புலிகள்</h2><p>
</p><p>
மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் விடுதலைப் புலிகள் இராணுவ வளங்களை நிலைநிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

இலங்கை இராணுவம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச மட்டத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் போதிய விளக்கங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகவும் சவேந்திர சில்வா விமர்சித்தார்.
</p><p>
இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24de3c96-2b3d-4e94-8b47-0936286705bd/26-6a9f56912f66f.webp' /></p><p>

“குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சம்பவத்தில் நீங்கள் இதனைச் செய்தீர்கள் எனக் கூறுங்கள். அதற்கு நாங்கள் விளக்கம் அளிப்போம். ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வோம்” என அவர் தெரிவித்தார்.
</p><p>
விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பு என்ற கருத்தையும் சவேந்திர சில்வா நிராகரித்தார்.மக்களின் குறைகளை ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்ப்பதற்கு பதிலாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>
விடுதலைப் புலிகளின் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கை</h2><p> </p><p>அதேவேளை, ஒரு அமைப்பு அல்லது அதன் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த இன அல்லது மத சமூகத்தையும் குற்றஞ்சாட்டக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களை விடுவிப்பதுமே இராணுவத்தின் நோக்கமாக இருந்ததாகவும், பொதுமக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் திட்டமிட்டு அத்துமீறல்களில் ஈடுபடவில்லை என்றும் சவேந்திர சில்வா மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51e9a4f-11da-4b06-acbb-3bced42484de/26-6a9f5691d7e61.webp' /></p><p>

இலங்கையின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பில் சர்வதேச அளவில் நீண்டகாலமாக விசாரணைகளும் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன. </p><p>இறுதிக்கட்ட மோதலின்போது அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
</p><p>
எனினும், சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள், பொதுமக்களை இலக்கு வைத்து அரச படைகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T00:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரால் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்படாது: ஐக்கிய அரபு இராச்சியம் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-exports-will-not-be-affected-by-iran-conflict-1788824628"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-exports-will-not-be-affected-by-iran-conflict-1788824628</id>
            <summary type="text">வொஷிங்டன் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில்,
தனது எரிபொருள் ஏற்றுமதியும் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிவிடாத வகையில்
மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வொஷிங்டன் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில்,
தனது எரிபொருள் ஏற்றுமதியும் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிவிடாத வகையில்
மாற்று வழிகளை உருவாக்கி வருவதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.</p><p>

அபூதாபியில் நடைபெற்ற ஹிலி உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய அரபு இராச்சிய
ஜனாதிபதி ஆலோசகர் அன்வர் கர்காஷ், நாட்டின் கிழக்கரை துறைமுகங்களின் திறனை
அதிகரிப்பதுடன், புதிய குழாய் வழிகள் மற்றும் தொடருந்து போக்குவரத்து மூலம்
மாற்று வர்த்தக பாதைகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.</p><h2>எரிபொருள் விநியோகம்</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம்
பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நீரிணை
சர்வதேச நல்வழிப் பாதையாகவே தொடர வேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியம்
வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e8f8a7-ddd9-40d1-8ba3-dfd9c694a63a/26-6a9f4ec3b99a7.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளை மட்டும்
முழுமையாக நம்பியிருக்க முடியாது என அக்கூட்டத்தில் உரையாற்றிய கதார் வெளி
விவகார அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.
</p><p>
பிராந்திய பாதுகாப்புக்கு சொந்த தேசிய வல்லமைகளை கட்டியெழுப்புவதே ஒரே வழி என
அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T23:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினி ராஜபக்சவை களமிறக்கி அனுதாப வாக்குகளை பெறும் முயற்சியில் ராஜபக்ச குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-attempting-garner-sympathy-votes-1788817692"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-attempting-garner-sympathy-votes-1788817692</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் கைதுச் சம்பவத்தை ஒரு அரசியல் பழிவாங்கலாகச் சித்தரித்து, பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற முயற்சிக்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் கைதுச் சம்பவத்தை ஒரு அரசியல் பழிவாங்கலாகச் சித்தரித்து, பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
</p><p>
நாமல் ராஜபக்சவால் அநுராதபுரத்தில் 12ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள் முடியாததால் அவரது மனைவி கலந்து கொள்ளுவார் என்று கூறப்படுகின்றது.</p><p>

ஜனநாயக ரீதியாக யாருக்கும் அரசியலில் ஈடுபட உரிமை உண்டு என்பதால், அவர் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. 

ராஜபக்ச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மீது பல ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளது.
</p><p>
அத்தகைய குற்றச்சாட்டுகள் இதுவரை இல்லாத ஒருவராக லிமினி ராஜபக்ச இருப்பதால், அவரை முன்னிலைப்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றது.
</p><p>
இது குடும்பத்தின் ஒரு அரசியல் யுக்தியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.</p><p>

முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jG41FGmsQkI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T23:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு சர்ச்சை! 2 மில்லியன் டொலர் இலஞ்சம் - 200 மில்லியன் டொலர் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 16.84 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சுமார் 16.84 மில்லியன் டொலர் லஞ்சம் பெற முயற்சிக்கப்பட்டதாகவும், அதில் 2 மில்லியன் டொலர் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
விமானக் கொள்வனவு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இலங்கைக்கு சுமார் 200 மில்லியன் டொலர் (65.6 பில்லியன் ரூபா) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விவகாரத்தில், 16.84 மில்லியன் டொலர் இலஞ்சமாகப் பெற முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இறுதியில் சுமார் 2 மில்லியன் டொலர் மட்டுமே இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், கொள்வனவு ஒப்பந்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட ரத்து கட்டணங்கள் (Cancellation fees), விமான பராமரிப்பு செலவுகள் மற்றும் லீசிங் செலவுகள் போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு NewsInsightTamil...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AdsYi1CP5b0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு முன்னாள் - இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692"></link>
            <id>https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பில்&nbsp; இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>ஊழல் மற்றும் மோசடி&nbsp;</h2><p>
</p><p>
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும், சட்டம் தனது கடமையை சுயாதீனமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b2cb381-ccb6-4956-a056-80da9170dc42/26-6a9f34620bb13.webp' /></p><p>
</p><p>
விசாரணைகளின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கந்தசாமி பிரபு கூறினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதிகள், ஆளுநர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ச சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>&nbsp;ராஜபக்ச குடும்பத்தினர்</h2><p>

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிடுவது குறித்து கந்தசாமி பிரபு விமர்சனம் முன்வைத்தார்.</p><p>

ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சித்த போதிலும், பின்னர் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்ததாகவும், தற்போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9378d683-be9d-42d2-9ff5-f6e879190905/26-6a9f34638e8e6.webp' /></p><p>
</p><p>
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் கந்தசாமி பிரபு மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:06:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029க்கு முன் அனைவரும் சிறையில்! நடுநடுங்கும் ராஜபக்ச குடும்பம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/everyone-jail-before-2029-rajapaksa-family-tremble-1788814458"></link>
            <id>https://tamilwin.com/article/everyone-jail-before-2029-rajapaksa-family-tremble-1788814458</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 

இதேவேளை, யோஷித ராஜபக்ச தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
</p><p>
கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அழுத்தம் அதிகரித்து வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>

நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் யோஷித ராஜபக்ச எதிர்கொண்டுள்ள சட்ட நெருக்கடிகள், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.</p><p>

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

அதனால் இது ராஜபக்ச குடும்பத்தினருக்கு உறக்கமில்லாத இரவுகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுகின்றது லங்காசிறியின் நாட்டுநடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/M1HrfKLwrlc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T21:07:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மனித உரிமைகள் விவகாரம்: ஜெனிவாவில் ஆரம்பமான முக்கிய அமர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/63rd-session-un-human-rights-council-begins-geneva-1788807653"></link>
            <id>https://tamilwin.com/article/63rd-session-un-human-rights-council-begins-geneva-1788807653</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின்
ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின்
ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
வோல்கர் துர்க் தொடக்க உரையாற்றினார். </p><p>இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மனித
உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைமைகள் குறித்தும் அவர் விசேடமாகக்
குறிப்பிட்டார்.</p><h2>ஜெனிவாவில் ஆரம்பம்</h2><p>
</p><p>
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள
நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள்
தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் தனது அண்மைய அறிக்கையில்
சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aeafe51-dcca-4039-bc3c-10653f6a0875/26-6a9f13359ade5.webp' /></p><p>

இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கை இந்த வாரம் பேரவையில்
உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், இலங்கை
விவகாரங்களுக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான
ஒடுக்குமுறைகள், சூடான், வெனிசுலா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பாரிய
மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>

இந்த விவகாரங்கள் தொடர்பான விரிவான அறிக்கைகளைப் பரிசீலித்து, உரிய
தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T19:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தடைக்கு பதிலடி! ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560"></link>
            <id>https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவரத்து பாதையையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஈரான் அரசாங்கம்
தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சேன் ரெசாய் இது
குறித்துத் தெரிவிக்கையில், புதிய தடை மண்டலத்திற்குள் நுழையும் கப்பல்கள்
அனைத்தும் உடனடியாகத் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்படும் எனக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;மசகு எண்ணெய் விலை</h2><p>

அத்துடன் ஓமான் நாட்டின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பினூடாக அமைக்கப்படும்
புதிய சர்வதேச கப்பல் பாதையை ஈரானே நிர்வகிக்கும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடற்பகுதியில் பரஸ்பர தாக்குதல்கள்
தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மசகு எண்ணெய் கொண்டு செல்லும்
கப்பல்களின் நடமாட்டம் பெருமளவில் குறைடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/966e7bc0-ebdf-4b2b-b4f2-5a844de3eb61/26-6a9ef570b3f80.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 97
டொலரைக் கடந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில்
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக
ஈரானிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T19:19:18+00:00</updated>
        </entry>
    </feed>
